கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: போதிதர்மர் பற்றிய அற்புதமான விஷயங்கள்

Page 1
he Miraculous Adve
 


Page 2
ாேதர்மர் பு
Nڑڑتی حر OICIU. Gd
மணிமேக தபால் பெட்டி 7 (U.OIGior 4), தியாகராயநக தொலைபேசி மின்அஞ்சல் : மின் இணைய
 
 
 

Mu
65694 Iril 56ft
entures of Bodhidharmar
حصص صنعقعs Gح
பாதம்
லைப் பிரசுரம்
எண் : 1447 தணிகாசலம் சாலை, ர், சென்னை - 600 017. : 2434.2926, 2434 6082 manimekalai 1G)dataone.in Jub : WWW..tamilvanan.Com
లిఐ/@లి@/@లిఐ/@లిఐ

Page 3
நூல் விவரம்
நூல் தலைப்பு : போ,
ඡමip)
Title of the book : The
Of BC
ஆசிரியர் ; செல் Name of Author : Selv E-mail : guruj Residence : 180
TOTO Onta
Cover Design, Typeset, : Glgu Pictorial images & Editing : Jeyajc
Type set by : Nada Language : Tami Year of Publication 2014 Edition : First Copyright reserved : Auth Paper : 70 G Book Size : Dem Point Size 11 P மொத்த பக்கங்கள் : XViNo. of Pages : XVi - Price RS.
D.T.P. : P.S. Printing : SCr Publisher : Mar
அட்டைப்பட விளக்கம்: ஒளி
ஞானஒளி போதிதர்மரின் தே
Cover page illustration: Radiance Image of Bodhidharmar
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

BOOK - DETAL
தர்மர் பற்றிய தமான விஷயங்கள் liraculous Adventures dhidharmar வத்துரை குருபாதம் durai Gurupatham ayaG)ymail.Com Bonspiel Drive, ito, MIE 5K4 io, Canada.
ஜோதி (ஜெயா) குருபாதம் thy(Jeya) Gurupatham (nee Paramsothy) rajah Nanthakumar
Edition
Or
SM
i Size (14 x 21 Cm.)
oint
288 = 304 பக்கங்கள்
288 = 304
200.00
Muthu Graphics, Chennai- 15.
t Offset, Chennai-94 mekalai Prasuram, Chennai - 17
ற்றம்

Page 4
அணிந்துரை நூல் அறிமுகம் என் பார்வையில் இந்நூல் “என் நூலைப்பற்றி “நான்
ஒரு கண்
(At a
அத்தியாயம்
1.
1 O.
*பெளத்தம் இந்து மதத்தில் - சுவாமி விவேகானந்தர்
பெளத்தம் ஒரு கண்ணோ *பெளத்த மதம் ஊடாக இ - பிரதமர் நேரு தமிழ்மொழி பேசும் இடத் – đơOIög)Ip66ì Xuan Huang பெண்ணைக் குரு'வாக 6 பெருமைப்படுத்திய ஞானி மதங்கள் பெண்கள் கையி மதங்கொள்ளாது மதங்கள் சென் (Zen) பெளத்தத்தின் முதலாவது குருவும் பெளத்தம் பொலிவிழந்தது
п шшохлub
சீன எல்லையில் அரசவரே GUggi 'g' (Wu Tai) 2 ஷோலின் ஆலயத்திலிருந் மலைக்குகையினுள்ளிருந்து

Do so blo
LD 1
(3600 ITILib glance)
ன் நிறைவு? r
ட்டம்
உள்ளே
பக்கம் vi viii
xiv
இந்திய - சீன நல்லுறவு”
2O
தில் மாபெரும் புத்தஞானி
ஏற்று பெண்களைப்
லிருந்தால்
29
33
மதங்களாகவே இருக்கும் 44
2260IOOTOpub
, போதிதர்மர்
வற்பில் உடன் முரண்பாடு
57
65
து வெளியேற்றப்பட்டார்!
து தியானித்தார்!
76

Page 5
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
2O.
21.
22.
23.
24.
25.
சீனாவில் நிலவிய பீயின்
கோட்பாடுகளுடன் ‘சா6 தான் ஒரு மாபெரும் ம அறியாத மாபெரும் மக தற்காப்புக்கலையின் தந் இலங்காவத்திர சூத்திர சீனாவில் விதைத்தார் கௌதம புத்தரின் பாதை பயணித்தார் போதிதர்மர் போதனைகளில் மொழி
பேரசர் வெய் (Wei) தன் உட்குரலைக் கேட்டார்
போதிதர்மர் ஒரு மருத் அக்கியூபங்சர் (Acupunct மருத்துவத்தின் தந்தைய மேற்கே அறிவியலுக்கு கிழக்கே போதிதர்மர்
சீடர்களின் சில கேள்வி போதிதர்மரின் சில பதி உயிர்த்தெழுந்தார் போதி இமயத்தின் மடியில் த உடலுறுப்புத் தானம் ப சிந்தனையின் முன்னே சென் புனித ஏடு "கோ *Görfile),6ör” (Kung-an)
சீனாவில் போதிதர்மர் திடீர் விழிப்புணர்வடை (Attaining sudden enligh

' (Yin), ʻuLJIIrÄiʼ (Yang) ro (Chan)
ான் என்பதை ன்
యెర్తి
ஞானத்தைச்
யில்
பிரச்சினை
துவ விஞ்ஞானி: ure) JII?
சோக்கிரட்டிஸ்
களுக்குப்
ல்கள்
நிதர்மர்
iIooool ஒப்படைத்தார்!!
ற்றிய
TILQ
obro (Koan) /
UILFIT60)6O
உதல் (ஞானம்) tenment)
87
98
1 O7
13
1 16
131
145
152
158
165
17 Ο
189
193
196
2O3

Page 6
26.
27.
28.
29.
3O.
31.
ஞானிகளைப் பைத்தியக்
என்கிறார்களே. ஏன்?
ஒளிவட்டம் (தேஜஸ்) Au
T
விதிமுறைகள் இ இந்த ஞானிகளி
(Living without are the precepts of
GogomDIILITuij (Hotei): சிரிப்பால் மக்கள் மனதை சிரிப்பால் விழிப்புணர்வை ísloöIFIuliu ((Rinzai): “ஒரு கை ஓசையைக் கே தியோஜினிஸ் (Diogenes): *மனிதனைத் தேடுகிறேன் இந்தியாவின் நல்லெண்ை (Goodwill Ambassador)
எல்லாமானவராகவும் எல் (Be Empowered as we 'aitbudir SOD (Be Non-Sel சில ஆய்வு நூல்கள் (Sele

காரர்
2O7
ra of light 215
5Lib 2
ல்லாது வாழ்வதே ன் விதிமுறைகள்
t any precepts the following saints)
ஒருமைப்படுத்தியவர் த் தூண்டியவர்!! 218
ளுங்கள்?? 237
9 242 னத் தூதுவர்
264
b. 3 லாமற்றவராகவும் இரு
as Unempowered...)
274
ted Bibiliography) 285

Page 7
அணி
635635D
போதிதர்மர், தென்னிந் தோன்றிய ஞானப் பேரொளி. மட்டுமல்லாது, உலகம் முழுச் செய்த பெருமை இவருடை தற்காப்புக்கலை, மருத்துவ மானுடநேயப் பணியின் எல்ை அற்புதஜோதியான புத்தபெரு போதிதர்மர் உலக அறிஞர்கள
போதிதர்மர் பற்றி, "ஏழா இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ஈர்ப்பினை நிகழ்த்தினார் என் என்றபோதிலும், மணிமேகே *போதிதர்மர்பற்றிய அற்புதம நூல் வெளிச்சத்திற்குக் கொ போதிதர்மர் பற்றிய வரல உள்ளனவா? என நம்மை பி
ஆசிரியர் எஸ். குருபா விரிவான ஆராய்ச்சிகள் அறிவார்ந்த கடின உழை அத்தியாயத்திலும் புலப் அத்தியாயங்கள் உள்ளன. ஒ எழுதத்தக்க அளவு ஆழமான

ந்துரை
நீலாம்பரன்
தியாவில் - தமிழ் மண்ணில் சீன தேசத்தை ஆட்கொண்டது கத் தமது அருள் மணம் கமழச் யது. "ஜென் (Zen) தத்துவம், அறிவியல் என இவருடைய ல மிக விரிவானது. ஆசியாவின் நமானின் மறு அவதாரமாகவே ால் பேசப்படுகிறார்.
வது அறிவு திரைப்படம் மூலம் அவர்கள்தான் வெகுஜன கவன பது மறுக்க முடியாத உண்மை லைப் பிரசுரம் வெளியிடுகின்ற ான விஷயங்கள்? என்கிற இந்த ண்டுவரும் செய்திகள் ஏராளம். ற்றுச் செய்திகள் இவ்வளவு மிக்க வைக்கிறது இந்த நூல்.
தம், இந்த நூலை எழுத மிக Iசய்திருக்கிறார். அவருடைய பு இந்த நூலின் ஒவ்வொரு டுகின்றது. மொத்தம் 32 வ்வொன்றும் ஒரு தனி நூலாக விஷயங்களைப் பேசுகின்றன.

Page 8
போதிதர்மர் பற்றி ஜவ செய்தி தொடங்கி, ஏராளமா முன் வைக்கிறார் குருபாதம் நெறியை ஒளிரச் செய்த போதிதர்மர் பற்றி மட்டுமல்ே குமாரஜீவா, பரமார்த்தா, ஜின இந்திய ஞானிகளைப் பற்றி ே
இந்த நூல் பெண் ஞா கருத்தினை முன்வைக்கிறது நிலைப்பாட்டினை விவரிக்கி தத்துவம், சைதன்யர்கள் மற் சிரிக்கும் புத்தர் பற்றியெல் நமக்களிக்கிறது.
சமய தத்துவ உலகில் இடத்தினைப் பெறும் எ எனக்கில்லை. ஆன்மிக ஞ இந்நூல் ஒரு தத்துவஞானச் 8 அரிய விஷயங்கள் பல வந்து
தவறவிடாமல் இந்நூலி பாக்கியவான்கள்!
(P.60) belli Ibsly,66 M.A) 123-6, 4-D-IL3 (& II62usi 100 அடி புறவழிச் சாலை, வேளச்சேரி, சென்னை-600 042 செல் : 9444034080

vii
றர்லால் நேரு குறிப்பிட்டுள்ள ன வரலாற்றுத் தகவல்களை நம் உலக சரித்திரத்தில் பெளத்த மிகப்பெரிய தமிழ்ஞானியான ாது, தர்மரட்சகா, புத்தபத்திரா, நப்தா, குணபத்ரா என ஏராளமான விவரிக்கிறார்.
னியர்கள் பற்றி மிக உயரிய பெளத்த நெறியின் பல்வேறு 1றது. சூஃபி மார்க்கம், ஜென் றும் ஹொடாய் (Hotai) எனும் லாம் ஏராளமான செய்திகளை
இந்த நூல் மிக உயரிய ன்பதில் எவ்வித அய்யமும் ானத்தேடல் உள்ளவர்களுக்கு ஈரங்கம் எனலாம். அள்ள அள்ள கொண்டே இருக்கின்றன.
லை வாங்கி வாசிப்பவர்கள்
ഞു. ޗަހި//ޒުد ്
(தினத்தந்தி ஆதித்தனார் விருதுபெற்ற வரலாற்று நாவலாசிரியர்)

Page 9
జ్ఞ్య مسٹر ۔ہ
Ty South Eastern -}ị ශ්‍රී ලංකා අග්නිදිග විශේවවිද්‍යායාදාස இலங்கை தென்கிழக்குப் ப
நூல் அ
இந்நூல் பல்வேறு எழுதப்பட்டுள்ளது. ‘போதித விடையளிக்கிறது. பாரத முதற் அவர்களின் உலகப் புகழ்பெற் Discovery of India (SuToirp ps குறிப்பிட்டுள்ள விஷயங்கை காட்டி இந்நூலின் அத்தியா யுள்ளார். போதிதர்மரைப் பற்றி மூலம் ஆராய்ந்துள்ளது இ பெளத்தத்தின் உள்டாக நிலவி மகான் போதிதர்மரது சீன வி அந்நல்லுறவு மீண்டும் கட்டாயமென இந்நூல் கோடி
சென் பெளத்தத்தையும், ! ஊடாக அறியக்கூடியதாகவு தகவல்களையும், உதாரணங் இந்நூல், மத போதனைக மக்களைச் சென்றடைவத முக்கியம் " என்ற ΦΟΙ மதங்களைப்பற்றிக் கற்க வி பொது ஆர்வமுள்ளவர்களும் மதத்தினர் மற்றைய மதம் நல்லிணக்கத்துடன் வாழே கருப்பொருளாகக் கொண்டு என்ற பெண் ஞானியைத் த ஞானம் அடைந்ததை மு காலத்துக்குக் காலம் வாழ்ந்
 
 

University of Sri Lanka
கலைக்கழகம்
றிமுகம்
ஆய்வுகளின் அடிப்படையில் மர் யார்? என்ற வினாவிற்கு பிரதமர் திரு. ஜவகர்லால் நேரு D Glimpses of World History, The ல்களில் போதிதர்மரைப் பற்றிக் ளை ஆசிரியர் மேற்கோளாகக் யங்களைச் சிறப்பாக நகர்த்தி ப் பிரதமர் நேருவின் நூல்களின் இந்நூலுக்கு வலுவூட்டுகிறது. பிய இந்திய - சீன நல்லுறவை ஜயம் வெளிக்காட்டுவதாகவும் மலரவேண்டியது காலத்தின் ட்டுக் காட்டுகிறது.
சென் ஞானிகளையும் இந்நூலின் ள்ளது. வாசிக்கத் துண்டும் பல களையும் கொண்டமைந்துள்ள ளின் உட்பொருள் மாறாமல் கு மொழிகளின் அமைப்பும் த்தையும் முன்வைக்கிறது. ரும்பும் மாணவர்களும் மற்றும் வாசிக்கவேண்டிய நூல். ஒரு களைப் புரிந்துகொண்டு மத வண்டும் என்பதை இந்நூல் ாளது. போதிதர்மர், பிரக்ஞதாரா எது ‘குரு?வாக ஏற்று அவர்முன் ன் உதாரணமாகக் கொண்டு,
பெண் ஞானிகளின் ஆன்மிக

Page 10
ஞானத்தை சுட்டிக் காட்டுவதே அமைப்புகள் இருந்தால் மதங்களாகவே இருக்கும் என மிக அழகாகக் கூறுகிறார்.
போதிதர்மர் ஒரு தூய தங் அறிவியல், தற்காப்புக்கலை விஞ்ஞானம் என மனித மேம்ப சென்றுள்ள செல்வங்களைப் ப காணக்கூடியதாக உள்ளது. சோக்ரட்டிசுடன் கிழக்கே ே ஆசிரியர். இவரைக் கெளதம பு புத்தராகவே இந்நூல் விளக்குகிற புதிராக இருப்பது போலவே இ புதிராகவே உள்ளது.
போதிதர்மர் கடின உழைப் புத்திக்கூர்மை, விவேகம், ஆன்மிகமாகப் பார்க்கிறார். **உ உங்களை அறியுங்கள். உங்கை ஏனையவை முக்கியமற்று மறை போதனைகளை இந்நூல் உள் மதங்களும், அதன் போதனை படைத்து அவை மனிதன் மன வாழ்வதற்குத் துணை நிற்கின்ற6 இந்நூலாசிரியர் பல்வேறுபட்ட மனிதகுலம் சிறப்பாக வாழ்வ கிறேன்.
f
66OTs (6 சிரேஷ்ட வி தென்கிழக்குப்

டு, பெண்களின் கைகளில் மத தங்கள் மதம் கொள்ளாது ஆசிரியர் இந்நூலின் ஊடாக
கச்சுரங்கம். அவர் ஆன்மிகம், அக்கியூபங்சர், மருத்துவ ட்டுக்காக உலகுக்கு வழங்கிச் றிய விவரங்களை இந்நூலில் அறிவியலில் மேற்கே பாதிதர்மரை இணைக்கிறார் ந்தர் பாதையில் பயணித்த ஒரு து. இவரது வாழ்க்கை புரியாத வரது இறுதிக்கால நிகழ்வும்
பு, விடாமுயற்சி, சுறுசுறுப்பு,
ஆற்றல் போன்றவற்றை ங்களுக்குள் உள்ளே சென்று, ஊ நீங்கள் அறிந்துகொண்டால் ]ந்துவிடும்? போன்ற அவரது ளடக்கியுள்ளது. ஒவ்வொரு களும் உலகிற்கு அழகைப் ரித நேயத்துடன் மனிதனாக எ என ஆசிரியர் கூறுகின்றார். பல நூல்களை வெளியிட்டு ற்குப் பணிசெய்ய வாழ்த்து
னுசியா சேனாதிராஜா வுரையாளடிர் (வரலாற்றுப் பிரிவு) ஸ்கலைக்கழகம், ஒலுவில், இலங்கை

Page 11
சீமேன்மைகொள் சைவரி
ஆ என் பார்6ை
போதிதர்மர் பண்டை தாக்கத்தை ஏற்படுத்தி இந்நூலினுடாகக் காணக் தெரியாத ஓர் அரிய சரித்தி அவர்கள் எமக்குத் தருகி எல்லோரும் வாசித்து அ தந்துள்ளது தனிச்சிறப்பு கருத்துக்களைத் துணிந்து இருக்கிறது. இவ்விடத்தி செயல்படுவதை நான் கான்
புத்த மதத்தின் வர6 மற்றைய தேசங்களுக் விளக்குகின்றார். இந்நூை நாட்டில் பிறந்து (காஞ்சி) ஞானி போதிதர்மர் அ நாகரிகமான சீனாவில் என்பதைத் தெளிவாகப் பு பல பரிமாணங்களில் பரிை மிளிர்ந்தவரும், ஏழாம் அ ஞானியான போதிதர்மர் அறியும்போது நாம் ! கொள்வோமாக.
 

தி விளங்குக உலகமெல்லாம்?
ய சீன நாகரிகத்தில் பெரும் ULIJ தமிழ்ஞானி என்பதை கூடியதாக உள்ளது. பலருக்கும் ரத்தை இந்நூலாசிரியர் குருபாதம் ன்ெறார். எளிய வசனநடையில் றிந்துகொள்ளக்கூடிய விதத்தில் என்பேன். ஆசிரியர் தனது கூறுவதை நான் காணக்கூடியதாக ல் இவர் போதிதர்மர் போல் எகிறேன்.
ாற்றையும், அம்மதம் எவ்வாறு குப் பரவியது என்பதையும் ல வாசிப்பதன் மூலம் எமது தமிழ் தமிழ் நாட்டிலேயே ஞானம் பெற்ற வர்கள் எவ்வாறு ஒரு பழைய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினார் ந்துகொள்ளக்கூடியதாக உள்ளது. மித்தவரும், பல்வேறு துறைகளில் றிவைப் பெற்றவருமான பெளத்த அவர்கள் ஒரு தமிழன் என்பதை மிழர் எல்லோரும் பெருமை

Page 12
அனைத்துத் தமிழரும் ப சிறந்த நூல் இது என்பேன்.
Kg ,
Dr. So
பகுதி நேர
ரெ
2 fool கனடா முரவி தலைவர், ஆதி அறங்காவலர், 2191, Warden A
Θ

டித்துப் பெருமைப்படக்கூடிய
| -3ς gീക്ഷത്രഗ്ര 2
கணபதி சோமசுந்தரம்
Dental Surgeon விரிவுரையாளர், பல் வைத்தியபீடம், ாறன்ரோ பல்கலைக்கழகம், மயாளரும் பிரதம ஆசிரியரும், சாலி பத்திரிகை, ரொறன்ரோ, கனடா அருள்நெறிமன்றம், ரொறன்ரோ, கனடா ரொறன்ரோ ஆதிசிவன் ஆலயம், கனடா Ve, Toronto, MIT 3N9, Ontario, Canada. mail: draathy(0gmail.com
17/03/2014

Page 13
“என்னைப்
மலேஷியாவின் தலைநக எனது தந்தை அங்கு பு Superintendent 95 u60ofils யுத்த அசம்பாவிதங்கள் க யாழ்ப்பாணம் சென்று கற்பிப்பவராகப் பணியை ஆ ஆர்வம் காரணமாக யா வெளிவந்துகொண்டிருந்த ஒ (National Daily) "rippsITL Lq6) பணிபுரிந்தேன். பின்பு சவுதி உள்ள ஒரு ஸ்தாபனத்தில் ஸ்தாபனத்தின் செய்தி இதழி: (Managing Editor) பணிபுரி நாட்டில் ரொறன்றோ (Toront சட்ட நிறுவனத்தில் "Paral J9360)600TuUIT56)qLib (Commis தற்போது எழுத்துப் பணியில்
நான் எனது மாணவ ஏராளமான பலதுறை சார்ந்த
அவற்றிலிருந்து பெற்றுச்
 

xii
பற்றி நான்”
5ரான கோலாலம்பூரில் பிறந்தேன். கையிரத இலாகாவில் Section ரிந்தார். அப்போது அங்கு நிலவிய காரணமாக சிறுபிராயத்திலேயே அங்கு வாழ்ந்து, ஆங்கிலம் ரம்பித்து, பத்திரிகைத் துறையில் ழ்ப்பாணத்திலிருந்து அப்போது ஒரேயொரு தேசியத் தினசரியான 256's 93-flutyrs (Sub-Editor) அரேபியா சென்று Yanbu நகரில் நூலகராகவும் (Librarian), அந்த ன் (Bulletin) நிர்வாக ஆசிரியராகவும் ந்தேன். பின்பு கனடா (Canada) ) மாநகரில் குடியேறி, அங்கு ஒரு 9gal ஆகவும், சத்தியப்பிரமாண ioner of Oaths) sL60)LouTpgól
ஈடுபட்டுள்ளேன்.
பிராயத்திலிருந்து இன்றுவரை bIT6ò56T (Non fictions) 6ITé55 கொண்ட அறிவு, சிந்தனை,

Page 14
xii
அனுபவங்களை ஒருங்கே திரட் ஆக்குகின்றேன்.
யாழ்ப்பாணம் வேம்படி மகள் பணியாற்றிப் பின்பு கனடாவில் கல்விச் சபையின்கீழ் (TorontC ஆசிரியராகப் பணியாற்றிக்கொன் Lum LGBÓGOuluů (Principal's Qualific தொடர்ந்து கற்பிக்கும் பணியில் g|60d6OOT Goggu u T (Jeyajothy) g உயிரூட்டமாக உள்ளார்.
‘என்னைப்பற்றி நான்’ என்ற ‘எங்களைப் பற்றி நாங்கள்’ என் செய்து இந்நூலை உங்கள் கரங்கள்
வெளிவந்துவிட்ட நூல்: மறுபிறப்பு பற்றிய ஆச்சர்யமான த
வெளிவரும் நிலையிலுள்ள நூல்க
குழந்தைகளை வளர்க்காதீர்கள்; மனமே மகிழ்ந்திரு மதமற்ற மதம் வழிகாட்டும் தந்திரா (Tantra) பரீட்சையில் பெற்ற புள்ளி நூர் உலக சமாதானத்தை நோக்கி.
'யாதும் ஊரே யாஸ்
gurujeyaeymail.com 28/12/2013

அவைகளை நூல் வடிவம்
Iர் கல்லூரியில் ஆசிரியராகப் உள்ள ரொறன்றோ மாவட்ட
District School Board) ாடும், அதிபருக்கான தராதர ation Program) sig5 (olefugs இருக்கும் எனது வாழ்க்கைத் வர்கள் எழுத்துப் பணிக்கு
அறிமுகத்துடன் ஆரம்பித்து ற அறிமுகத்துடன் நிறைவு ரில் தவழவிடுகின்றோம்.
வளரவிடுங்கள்
Djës(E5 TgO 1OO/1OO Towards The World's Peace...)
ரும் கேளிர்
மனிதநேயத்துடன், எஸ். குருபாதம் ஜெ. குருபாதம்

Page 15
*Oído
பரத முத அவாகளது உ Discovery of ஆகிய நூல்கt (45) வருடங்க பருவத்தில் போதிதர்மரை கொண்டேன்.
பின் ந சொற்பொழிவ வாசிக்கும்போ பற்றிய நிை கொண்டேன்.
கதாநாயகனா அவர் எனது அவரைப் ப பகிர்ந்து கெ ‘போதிதர்மர் என்ற இந்நூ6
 
 

kiv
நூலைப்பற்றி நான்”
ல் பிரதமர் திரு. ஜவகர்லால் நேரு லகப்புகழ் பெற்ற நூல்களான The India, Glimpses of world History ளைக் கிட்டத்தட்ட நாற்பத்தைந்து ளுக்கு முன் நான் எனது மாணவப் மேலோட்டமாக வாசித்தபோது ப்பற்றி முதன் முதலில் அறிந்து
ாட்களில் ஓஷோ அவர்களின் கள் அடங்கிய நூல்களை து மகான் போதிதர்மர் அவர்களைப் றய விடயங்களைத் தெரிந்து மகான் போதிதர்மர் அவர்கள் எனது கிவிட்டார். இல்லை! இல்லை!!
மானசீகக் குருவாகிவிட்டார். றிய விவரங்களை உங்களுடன் ள்வது மகிழ்ச்சியைத் தருகிறது. பற்றிய அற்புதமான விஷயங்கள்’ ல எழுதி வெளியிடுவதன் மூலம்

Page 16
நல்லதொரு பணி செய்ததாக ஆத் செய்யப்பட வேண்டிய இந்த மாெ நூல்கள் வெளிவரவேண்டும். அறியவேண்டும்.
புத்தர், பேதிதர்மர், லா-சூ ே ஷோலின் ஆலயத்தினதும் கால ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன திட்டவட்டமாகக் கூறப்படவில்லை ஆண்டு என்று என்னால் கூறமுடி பொறுத்தவரை ஒரே குழப்பமாக 2 கூறக்கூடியவர்கள் சரித்திர ஆய்வா6 கதைகள் எழுதுவதற்கு எடுத்துக்கெ எழுதுவதற்கு எடுத்துக்கொள்ளப் அபிப்பிராயம்.
நான் ஒரு நூல் வாசகனா இந்நூல்மூலம் பகிர்ந்துகொள்கிறேன் களில் காணப்படும் பல L சித்திரிப்பதற்காகவே பிரசுரமாக் முழுமையாகப் பொருத்தமானவைய
2013 ஆடி மாதத்தில் அச்சுப் ஆச்சரியமான தகவல்கள் என்ற என உயிர்த்தெழல்’ என்ற அந்த அ போதிதர்மர் பற்றிய அற்புதமான ெ அவரது வரலாற்றை நூலாக வெளி
என் வாழ்நாளில் உணராத வெளியிடுவதன் மூலம் உண பார்க்கும்போது எனக்கு மனநிறைவு நீங்கள் ஞானஒளி போதிதர்மர் அல உங்களை அறியாமல் சிறகடித்து தொட்டுவிடுவீர்கள்.

மதிருப்தி ஏற்படுகிறது. ஆய்வு பரும் மகானைப்பற்றி நிறைய இந்த உலகம் அவரை நன்கு
போன்ற பல ஞானிகளினதும் ங்கள் பற்றிய தகவல்களில்,
எந்த நூல்களிலும் காலங்கள் . அதனால் இதுதான் சரியான யவில்லை. காலக்கணிப்பைப் உள்ளது. இதைத் தெளிவாகக் ார்களே. சமயக் கதைகள், உப ாள்ளப்பட்ட அக்கறை வரலாறு படவில்லை என்பதே எனது
ாகத் திரட்டிய தகவல்களை ா. இப்புத்தகத்தின் அத்தியாயங் LIbl&56T 98F8FLDLu65J56061T கின்றனவே தவிர அவை பல்ல.
பதிவாகிய 'மறுபிறப்பு பற்றிய னது நூலில் உள்ள "போதிதர்மர் த்தியாயத்தை விரிவுபடுத்தி விஷயங்கள் என்ற தலைப்பில் யிடுகின்றேன்.
ஒரு மகிழ்வை இந்நூல் ார்கிறேன். என்னை நான்
ஏற்படுகிறது. வாசகர்களாகிய வர்களை அறிய அறிய நீங்கள் ப் பறந்து பல சிகரங்களைத்

Page 17
போதிதர்மர் மனிதநே மனிதரா? சிந்தனையாளரா? மானிடவியல் விஞ்ஞானியா" சித்தரா? யோகியா? மகானா? அப்பாலா..?
போ
11.11.2013
பிற்குறிப்பு: இந்தியாவி ஞானியை நாம் மறந்துவ இந்தியா மீது படையெடுத் ஞானி மாவீரன் அலெக்ச உணர்த்தியது மாத்திரம் விழிப்புணர்வைக் கொடுத் ஆராயப்பட வேண்டும்.
E-mail : grujeyaG)ymail.com 180 Bonspiel Drive Toronto, MIE 5K4 Ontario, Canada.
*யாதும் ஊ

Xvi
பம் நிறைந்த விழிப்புணர்வுள்ள புரட்சியாளரா? அறிவியல் மேதையா? மருத்துவ விஞ்ஞானியா? ரிஷியா? ஞானியா? புத்தரா? அனைத்திற்கும்
நிதர்மர் யார்?
மனித நேயத்துடன், என்றென்றும் போதிதர்மரின் எண்ணத்துடன்,
Q (NQAN *>',
66 பாதம்
ல் வாழ்ந்த தந்தமெஸ் (Dantemus) பிட முடியாது. அலெக்சாண்டர் தபோது இவரைச் சந்தித்தார். இந்த ாண்டரின் ஆணவத்தை அவருக்கு ) ல்ல மரணத்தை நோக்கிய தவர். இந்த ஞானியின் வரலாறும்
ரே யாவரும் கேளிர்??

Page 18
ITL
ஒரு கண்ே (At a gla

DOTTLD
nce)

Page 19
அத்தி
பெளத்தம் இந்து
(11.09.1893ல் இருந்து வரை அமெரிக்காவில் உள்: நகரில் இடம்பெற்ற GuT606) Juigi) (World's parliame சுவாமி விவேகானந்தர் 26.09.1893 அன்று புத்த ம
ஆற்றிய உரை இது மடம், மயிலாப்பூர் வெளியீடு
நான் பெளத்தன் அல்ல இருப்பீர்கள். ஆனாலும் ந ஜப்பானும், இலங்கையும் பின்பற்றுகின்றன. இந்தியா என்று போற்றி வணங்குகி விமர்சிக்கப் போவதாக ச பொருள்ை நீங்கள் சரிய கடவுளின் அவதாரம் எனக் விமர்சிப்பது என்பது என் முடியாத ஒன்று. ஆனா சீடர்கள் சரியாகப் புரிந் எங்கள் கருத்து. இந்து மத குறிப்பிடுவது வேத மதத்தை என்று குறிப்பிடுகிறதே அ கிறஸ்தவ மதத்திற்கும் உள்

பாயம் 1
மதத்தின் நிறைவு
- சுவாமி விவேகானந்தர்
27.09. 1893 ா சிக்காகோ JFri6j JFLD LI nt of religions) அவர்கள் தத்தைப்பற்றி ராமகிருஷ்ண ,ெ தமிழ்நாடு.)
என்பதை நீங்கள் கேள்விப்பட்டு ான் ஒரு பெளத்தன். சீனாவும், புத்த மகானின் உபதேசங்களைப் அவரைக் கடவுளின் அவதாரம் றது. நான் பெளத்த மதத்தை ற்றுமுன் கூறினார்கள். அதன் ாகப் புரிந்துகொள்ளவேண்டும். கூறி நான் வழிபடுபவரை நானே னால் நினைத்துக்கூடப் பார்க்க 0 புத்தர் பெருமானை அவரது கொள்ளவில்லை என்பதுதான் திற்கும் (நான் இந்து மதம் எனக் ந்தான்) இந்நாளில் பெளத்தமதம் 1ற்கும் உறவு, யூத மதத்திற்கும்
உறவுதான.

Page 20
எஸ். குரு
ஏசு கிறிஸ்து ஒரு யூதர், யூதர்கள் கிறிஸ்துவை ஒதுக்கித்த சிலுவையிலும் அறைந்தார்கள். கடவுள் என்று ஏற்று வணங் நாங்கள் எடுத்துக்கூற விரும்பும், புத்த பகவானின் உண்டை முக்கியமான வேறுபாடு என்ன எதையும் புதிதாக உபதேசிக் அவரும் ஏசுநாதரைப்போன்று, அழிக்க வரவில்லை.
ஏசுநாதர் விஷயத்தில் யூதர்கள்தானும் அவரைச் சரி புத்தர் விஷயத்தில், அவரைப் உபதேசங்களின் கருத்தை உண நிறைவு செய்யப்படுவதை பூ போன்று, இந்துமத உண்மைக பெளத்தர்கள் அறிந்து ( சொல்கிறேன். சாக்கிய முனிவ அழிக்க வரவில்லை, ஆனால் இ சரியான முடிவு, அதன் சரியா
இந்துமதம் இரு பாகங்கள கர்மகாண்டம், மற்றொன்று காண்டத்தைத் துறவிகள் சிறப்ப கிடையாது. மிக உயர்ந்த ஜ தாழ்ந்த ஜாதியில் பிறந்தவருப் அந்த இரண்டு ஜாதிகளும் சம
மதத்திற்கு, ஜாதி இல்லை. ஏற்பாடு. சாக்கிய முனிவரே ஐ மறைந்து கிடந்த உண்மை அவற்றை உலகம் முழுவத பரவச்செய்த பெருமைக்கு உரி முதன்முதலாக சமயப் பிரசாரத்ை மதமாற்றம் என்ற கருத்தை உ(
எல்லாரிடமும், குறிப்பா எளியவர்களிடமும், ஆச்சரியப்ப

UIrg5th 1 3
சாக்கிய முனிவர் ஒர் இந்து. ள்ளியது மட்டுமின்றி, அவரைச் இந்துக்கள் சாக்கிய முனிவரைக் குகிறார்கள். இந்துக்களாகிய
தற்கால பெளத்த மதத்திற்கும் ) உபதேசத்திற்கும் உள்ள னவென்றால் சாக்கிய முனிவர் க வரவில்லை என்பதுதான்.
நிறைவு செய்யவே வந்தார்,
Lu 60 pull மக்களாகிய பாகப் புரிந்துகொள்ளவில்லை. பின்பற்றியவர்களே அவரது ாரவில்லை. பழைய ஏற்பாடு யூதர்கள் புரிந்துகொள்ளாதது 1ள் நிறைவு செய்யப்படுவதை கொள்ளவில்லை. மீண்டும் ர் இந்து மதக்கொள்கைகளை இந்து மதத்தின் நிறைவு, அதன் ன வளர்ச்சி எல்லாம் அவரே.
ாகப் பிரிந்து உள்ளது. ஒன்று ஞானகாண்டம். ஞான ாகக் கற்கின்றனர். இதில் ஜாதி ாதியைச் சேர்ந்தவரும் மிகத் துறவியாகலாம். அப்போது மாகிவிடுகின்றன.
ஜாதி என்பது வெறும் சமுதாய ரு துறவிதான். வேதங்களில் களை வெளிக்கொணர்ந்து ற்கும் தாராள மனத்துடன் யவர் அவர். உலகத்திலேயே தைச் செயற்படுத்தியவர், ஏன், நவாக்கியவரே அவர்தான்.
5, பாமரர்களிடமும் ஏழை டும் வகையில் பரிவு காட்டிய

Page 21
4 a போதிதர்மர் பற்றி
பெரும் புகழுக்கு உரியவர் பிராமணர்கள். புத்தர்
சமஸ்கிருதம் பேச்சு மொ நூல்களில் மட்டுமே அற பிராமணச் சீடர்களில் சி சமஸ்கிருதத்தில் மொழிபெ **நான் ஏழைகளுக்காக
மொழியிலேயே பேசவிட் வட்டமாகக் கூறிவிட்டார். போதனைகளில் பெரு மொழியிலேயே உள்ளது.
தத்துவ சாஸ்திரத் இருக்கட்டும், மெய்ஞான நீ உலகத்தில் மரணம் என் இதயத்தில் பலவீனம் என்ப பலவீனம் காரணமாக, கூக்குரல் இருக்கும்வரை தீரும்.
தத்துவ சாஸ்திரத்தை சீடர்கள் நிலையான மலை பார்த்தார்கள். ஆனால் மற்றொரு புறம் அவர்க பாசத்தோடு பற்றிக்கொண் நாட்டினின்று எடுத்துச் ெ பெளத்தமதம் இந்தியாவி அது பிறந்த நாட்டிலேயே, ஒருவர்கூடி இன்று இல்6ை
அதே வேளையில், இழப்புக்கள் ஏறபட்டன. வியக்கத்தக்க வகையில் பக்குவமாய் மாற்றியமை பெளத்தப் பண்புகளைப் இந்தப் பண்புகள்தாம் செய்திருந்தது. அந்நாளை வரலாற்று ஆசிரியர், ெ

யெ அற்புதமான விஷயங்கள்
அவர். அவரது சீடர்களுள் சிலர்
உபதேசம் செய்த காலத்தில், ாழியாக இல்லை. பண்டிதர்களின் ந்த மொழி இருந்தது. புத்தரின் சிலர் அவரது உபதேசங்களைச் யர்க்க விரும்பினர். அதற்கு அவர், வாழ்பவன், என்னை மக்களின் ட்டு விடுங்கள்?? என்று திட்ட அதனால்தான் இன்றளவும், அவரது ம்பகுதி, அந்நாளைய பேச்சு
தின் நிலை என்னவாகவும் நிலை என்னவாகவும் இருக்கட்டும், ற ஒன்று உள்ளவரையில் மனித து இருக்கும் வரையில், மனிதனின் அவன் இதயத்திலிருந்து எழும் கடவுள்மீது நம்பிக்கை இருந்தே
ப் பொறுத்தவரை, புத்ததேவரின் போன்ற வேதங்களோடு மோதிப் அவற்றை அழிக்க முடியவில்லை. 5ள் ஆண், பெண் அனைவரும் டு இருந்த அழிவற்ற இறைவனை சென்றுவிட்டார்கள். அதன் பயன், ல் இயற்கை மரணம் எய்தியது.
பெளத்தன் என்று கூறிக்கொள்ள
l).
பிராமண சமுதாயத்திற்குச் சில சீர்திருத்தும் ஆர்வம், எல்லாரிடமும் பரிவும் இரக்கமும் காட்டல், க்கும் இங்கிதப் பாங்கு முதலிய பிராமண சமுதாயம் இழந்தது. இந்தியாவைப் பெருமையுறச் ப இந்தியாவைப்பற்றி, ஒரு கிரேக்க பாய் சொல்லும் இந்துவையோ,

Page 22
எஸ். குரு
கற்பிழந்த இந்துப் பெண்ணை என்று கூறுகிறார்;.
புத்த மதமின்றி இந்து மதம் இந்து மதமின்றி புத்த மதமும் 85 ITU 60OILDIT85 σΙσδΙσΟΙ நேர்ந் பிராமணர்களின் நுண்ணறிவு பெளத்தர்கள் நிலைத்து வாழ இதயமின்றி பிராமணர்களும் வா பிராமணர்களும் பிரிந்ததுதான் காரணம். அதனால்தான் இந்தி காரர்களின் இருப்பிடமாகிவி ஆண்டுகளாக நாடு பிடிப்பவர்களி ஆகவே பிராமணனின் அற்பு புத்தரின் இதயம், உயர்ந்த உ மனிதாபிமானம் இவற்றையும் ஒே
குறிப்பு:
இப்பேரவையில் இலங்
கையைச் சேர்ந்த அனாகரிக 5iLDLJIT6Ivont (Anagarika Dharmapala) தேரவாத பெளத்தத்தைப்பற்றியும் சென் பெளத்த மதசார்பில்; ஜப்பானைச் சேர்ந்த சோஜன்ஷகு (Soyan Shaku) 6, Lió 56opÉg/ கொண்டு புகழ்பெற்ற பேருரை ஆற்றினார்கள். அந்த இருவரும் சுவாமி விவேகான்ந்தருடன் இப்ப

ாதம்
யோ நான் பார்க்கவில்லை’
வாழ முடியாது. அவ்வாறே வாழமுடியாது. பிரிவின் 55 στσότρΟΙ பாருங்கள்! தத்துவ ஞானமுமின்றி முடியாது. பெளத்தர்களின் ழ முடியாது. பெளத்தர்களும் இந்தியாவின் வீழ்ச்சிக்குக் பா முப்பது கோடி பிச்சைக் ட்டது. கடந்த ஆயிரம் ன் அடிமையாக இருக்கிறது. தமான நுண்ணறிவையும், உள்ளம், வியப்பிற்கு உரிய ன்றுசேர்ப்போமாக.
Chicago 26.09.1893
த்தில் காணப்படுகிறார்கள்.

Page 23
அத்திய
பெளத்தம் ஒரு
Shaky3 Frisii 錢綫綫
A 56 Centify
&&&
* 錢錢 箏綫義 3.
×श्छू छे है 萎
ళ t్యభిష్ట శకశ 線※
3簽終懿谷 :::::::: *ist i. {}్యష్ట శిశ}
鑿。終。義淡※※ 羲·繆
3888:33
錢錢
$$$$$ | },
遂 鬆綫
線打登\※毛r*容 {};
jiř833č8ě
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

IIIulib 2
கண்ணோட்டம்
DoRJE CHANG Bij DO - A
४४{{438
3 it is
*{red {3635 22-113:28 శ్లో
šķas šarg FFB ********* wi33:83.sk
攀
縫、義、黎r錢據 鷺 rigsår: Ri ********** gas-cxh:8:
萎 భీష్టంగ}
జ్ఞ ప్రళ బిబిజి گر 談* 雛 *isškt: 3:3*
8irg:8 畿 黏

Page 24
எஸ். கு(
சித்தாத்தர் (புத்தர்) நேபாளத்தின் தெற்குப் பகுதி நகரில் அரச குடும்பத்தில் இ அரசர் சுத்தோதனருக்கும் பிள் போது உள்ளங் கையிலும் அடையாளத்துடன் பிறந்தா குறிப்பில் காணப்படுகிறது.
அக்கால அரசர்கள், இள (Polygamy) செய்துகொள் அவ்வழக்கத்திற்குப் பின்வருவன எனலாம்.
O அரச வாரிசாக அ சந்தாப்பங்கள் அதிகம்
ற மனைவிகளின் இரு தங்குவதால் எதிரிகளில் தப்பிவிடலாம்.
0 எந்த ஒரு இராணி ஏகபோக உரிமைகொ விடலாம்.
9 அரசனுக்குப் பின்னால் செல்லாமல் தவிர்த்தும் பலதாரத் திருமணம் ஆண் அதாவது பெண்ணின் குரல் பலதாரத் திருமணம் உதவி விதிவிலக்கல்ல, அக்கால வழன திருமணம் பெற்றோர்கள் முதலாவது திருமணம் 16-ஆவ GBerliğ5 u(39/13/TT (Yashodhara, G5ITL_IIT (Gopa), LDGaOTITagbu IT (1 என வேறு மூன்று பெண்க இவரது 18-ஆவது வயதில் யே என்ற மகன் பிறந்தான்.

நபாதம் 7 ܐ
566 BCE காலப்பகுதியில் பில் உள்ள லும்பினி (Lumbini) MUTTGOo? LDITULusTGớibGg5 Lib (Maya) ளையாகப் பிறந்தார். பிறக்கும்
உள்ளங் காலிலும் சக்கர ர் என அவரது வாழ்க்கைக்
வரசர்கள் பலதாரத் திருமணம் ரூம் வழக்கம் இருந்தது.
ா காரணங்களாக அமைகின்றன
ஆண்குழந்தை பிறக்கக்கூடிய
ஏற்படலாம்.
ப்பிடங்களில் மாறி மாறி ன் கண்காணிப்பிலிருந்து அரசர்
யும் இராச்சியத்தின் மேல் ள்ளாது அவர்களைத் தவிர்த்து
ஆட்சி உரிமை பெண்ணுக்குச் விடலாம்.
ா மேலாதிக்கத்திற்கு உதவியது. ஆட்சியில் ஒலிக்காமல் தடுக்க பது. சித்தார்த்தரும் இதற்கு மப்படி இவருக்குப் பலதாரத்
செய்துவைத்தனர். அவரது து வயதில் அரச குடும்பத்தைச்
வுடன் நடந்தேறியது. பின்பு Manodhara), (ypring?IT (Murgaja) ளைத் திருமணம் செய்தார். Fாதரா மூலம் இராகுல் (Rahul)

Page 25
8 a போதிதர்மர் பற்றிய
மூப்பு, பிணி, இறப்பு, சித்தார்த்தருக்கு மனதில் தே ஆசான்களால் பதில் அளிக்க விடைதேடி சித்தாத்தர் துறவி முனிவர்களாய் இருந்தவர் அணுகினார். அவர்களில் அ உத்தரகா-இராமபுத்திராவும் செய்துபார் என்றனர். அ ஆனால் அவரது வினா பதிே இருந்தது. சில வருடங்களிc முயற்சியால் மனதை வெ தோன்றாமல் நிறுத்தவும் அறி உண்மையைத் தேடிச்சென்ற
ஞானமடைந்த பின் 4 திரிந்து தர்மபோதனைகள் ெ தனது 80 வயதில் வட இந் Nagar) தனது இறுதிப் பிர இரண்டு மரங்களிற்கு (Pee தியான முறையில் அமர்ந்: மரங்களிற் கிடையில் படுத்தி தனது உடலிருந்து தான் வெ யாரும் வணங்கக் கூடாது எதையும் வைத்திருக்கக்கூ இல்லை எனவும் கூறிய மரணப் படிநிலைகளை வி இறந்தது. உடல் தகனம் செ சாம்பலைத் தூபிக்குள் (S வணங்க ஆரம்பித்துவிட்டார். ஆரம்பமாகியது.
புத்தருடன் ஒத்துப்போகாத6 போதனை குறித்து சர்ச்சை
புத்தருடன் ஒத்துப்பே களின் முக்கியத்துவம் அடி அளவிற்கு வியாக்கியானம் ( நுட்பமான தந்திரம் ஆகும்.

அற்புதமான விஷயங்கள்
துறவறம் இவைகளைப் பார்த்த ான்றிய வினாக்களுக்கு இவரது முடியவில்லை. தன் வினாவிற்கு பானார். அவர் காலத்தில் பெரும் 5ளைத் தன் வினாக்களுடன் BogDII-@mpoo omroquio (Alara-Kalama), (Udraka-Ramaputra) 5luJITOOIb வர்களிடம் தியானம் கற்றார். D காணவே முடியாத வினாவாக ன் பின் அவர் தனது முயற்சியற்ற றுமையாக்கவும், எண்ணங்கள் ந்துகொண்டார். தானே தனக்குள் ார், ஞானமடைந்தார்.
15 வருடங்கள் ஊர் ஊராகத் Fய்தார். 485 BCE காலப்பகுதியில் தியாவில் குஷின் நகரில் (Kushin சங்கத்தை நிகழ்த்திவிட்டு அங்கு pal Tree / Saal Tree) 5G67) திருந்தார். (சில ஏடுகள் அந்த ருந்தார் எனக் குறிப்பிடுகின்றன.) 1ளியேறப் போவதாகவும் தன்னை எனவும், தனது ஞாபகார்த்தமாக டாது எனவும், தான் கடவுள் பின்பு சீடர்கள் முன்னிலையில் ாக்கிக்கொண்டே அவரது உடல் ப்யப்பட்ட பின்பு அந்த உடலின் upas) வைத்துச் சில சீடர்கள் 5ள். புத்த வழிபாடு அன்றிலிருந்து
பர்கள்:-
காதவர்கள் புத்தரின் வார்த்தை யோடு இல்லாமல் போய்விடும் சய்ய ஆரம்பித்தார்கள். இது ஒரு புத்தர் புதிதாக ஒன்றும் சொல்லி

Page 26
எஸ். குருட
விடவில்லை, அவர் கூறிய அ6 வேதங்களிலும் காணப்படுகின்றன இல்லை அவர் ஒரு டுப்பிளி ஏற்றுக்கொண்டவர்கள் புத்தர் இ பெளத்த தத்துவங்களை முன் புத்தரை ஏற்றுக்கொள்ளாதவர் செய்யத் தொடங்கி அதைச் சு முக்கிய செய்திகளைத் திரித்து வி வெடித்த மதக் கலவரங்களால் ெ வெளியேற வேண்டியதாகப் போ வியாக்கியானம் செய்து பு வேதங்களிலும் இருப்பதைத் த சொல்லவில்லை என்று தரப்படுத் அதிகாரக் கை உயர ஓங்கிய செய்யப்பட்டவைகளை புத்த டே ஒரிஜினல் இல்லை என்று வ கொன்றவர்கள் அவரது வார்த்ை எழுதவில்லை. ஆனால் இங்கு புத் வியாக்கியானம் எழுதப்பட்டுவிட்ட
கெளதம புத்தரது உயிர் பி BCE காலப் பகுதியிலே முதலாவது Council) TTg 6)/p/TT (Raja சீனாவிலிருந்து புத்த துறவிக பிரசன்னமாகியிருந்த முதலாவது சீ சென் பெளத்தத்தின் முன்னோ போதனைகளைத் தொடர்ந்து பி துறவிகள் அதன் பிரகாரம் ஒ இவைகளைத் தநுங்கள் எல்லோரு வேண்டும் எனவும் சபை ஒன்ை புத்த போதனைகள் அனைத்தும் என வலியுறுத்தினார். ஒரு து பின்வருமாறு கூறினார்: “புத்தர் : அவர் இல்லாதது மகிழ்ச்சிக்கு வாழவேண்டும், என்னென்ன கூறினாரோ அவைகள் அனைத்ை இத்துறவியின் பேச்சு சற்று சலசலி

தம் தி 9
னத்தும் உபநிடதங்களிலும்,
என்றனர். புத்தர் ஒரிஜினல் கேற் என்றனர். புத்தரை றந்த பின்பு 33 வகையான றப்படுத்தி வைத்தார்கள். 5ள் எதிர் வியாக்கியானம் னாமி வேகமாக்கி, புத்தரது த்தியாசப்படுத்திவிட்டார்கள். பளத்தம் இந்தியாவை விட்டு ப்விட்டது. எதிராளிகள் எதிர் ந்தர் உபநிடதங்களிலும், விர வேறெதுவும் புதிதாகச் தல் செய்தனர். அவர்களது து. எதிர் வியாக்கியானம் ாதனைகளாகக் கூறி புத்தர் ாதிட்டனர். இயேசுவைக் தைகளுக்கு வியாக்கியானம் தரது வார்த்தைகளுக்குப் புது -து.
ரிந்த அடுத்த ஆண்டு 486 | Ligg, FGOL (First Buddhist Grha) நகரில் கூடியது. ளுடன் சென்று அங்கு டன் காசியப்பா (இவர்தான் டியாவார்.) புத்தபிரானின் ன்பற்ற வேண்டும் எனவும், ழுக வேண்டும் எனவும் ம் சேர்ந்தே முன்னெடுக்க ) நிறுவி அதன் ஊடாகப் தொகுக்கப்பட வேண்டும் றவி வெளிப்படையாகப் ன் உடலை நீக்கிவிட்டார். யதே. துறவிகள் எப்படி சய்ய வேண்டும் என்று தயும் தளர்த்த வேண்டும்” ப்பை ஏற்படுத்தியது.

Page 27
1 o N போதிதர்மர் பற்ற
ஞானி காசியப்பா அவரது போதனைகள் அன எழுதப்பட வேண்டும் எ காசியப்பா அவர்கள் சற்று இயற்கை எய்திவிட்டார்.
ஒரு இழுபறி நிலை சபைகள் கூடுவதும் கலை எந்த நிலைப்பாடும் ஏற்பட எழுத முயற்சி செய்தனர் போதனைகள் எழுதப்ட ஆரம்பத்திலிருந்து கேட் கூடினர். தங்களுக்கு ஞா அங்கே இணக்கங்கள், பிரதிவாதங்கள் இடம்பெ அந்த 33 பிரிவினரும் புத் எழுதினர். புத்தர் மக்களது யாக்கியவர். மகாயன ( முதன்மை பெற்றது.
புத்தர் இறந்தபின்பு அங்குப் பிரவேசியாமல் ( கடைசி மனிதன் ஞான பிரவேசியாமல் வெளிே போன்ற கற்பனைக் கன கதைகள் பலரை இன்றும் மக்கள் கற்பனைக் கதை கற்பனையாக இருக்கும் அப்படியசான சிந்தனை சகல மதங்களும் கற்பனை கற்பனைக் கதைகளைC பார்க்கிறார்கள், அவைகள்
தன்னுணர்வும், விழி விதிவிலக்கு இல்லை. “ப மனிதனைச் சுதந்திரம விழிப்புணர்வுடனும், த வளர்ச்சி அடைந்துவிட்

lய அற்புதமான விஷயங்கள்
அவர்கள் புத்தர் கூறியவைகள், னத்தும் எதுவித மாற்றமுமில்லாமல் னக் கேட்டுக்கொண்டார். பின்பு ஒதுங்கியவர் போலவே வாழ்ந்து
ஏற்பட்டு காலம் உருண்டு ஓடியது. வதுமான நிலையில் ஆக்கபூர்வமாக டவில்லை. புத்தரின் போதனைகளை
புத்தர் இறந்த பின்பே புத்தரது பட்டன. புத்தரது பிரசங்கத்தை ட சீடர்கள் எல்லோரும் ஒன்று பகமாக இருப்பதை ஒப்புவித்தனர்.
முரண்பாடுகள், வாதங்கள், ற்றன. 33 பிரிவுகளாகப் பிரிந்தனர் ந்தபோதனையடங்கிய 33 ஏடுகளை சாதாரண மொழியைப் போதனை Mahayana) பீடமே பெளத்தத்தில்
மோட்சத்திற்குச் சென்றதாகவும், வெளியிலே நின்றுவிட்டார் எனவும், மடையும்வரை மோட்ச உலகில் ய நின்று ஞானம் கொடுக்கிறார் தகள் பரவின. இந்தக் கற்பனைக்
கவர்ந்து கொண்டே இருக்கின்றன. களில் நம்பிக்கை வைக்கிறார்கள்.
என்று சிந்திக்க விரும்புவதில்லை. த நிந்தனை எனக் கருதுகிறார்கள். க் கதைகளில் வேர் ஊன்றுகின்றன. ய மக்கள் மதங்களாக இன்றும் ளக் கொண்டாடுகிறார்கள்.
புணர்வுமற்ற சமூகம் இவைகளுக்கு தப்பிரச்சாரங்கள், மதப் போதனைகள் க வளரவிட விரும்புவதில்லை? ன்னுணர்வுடனும் தனி மனிதன் டால் மதங்கள் மறைந்து விடும்.

Page 28
எஸ். குரு
(தன்னுணர்வில் அமைதிய இந்தக் குழப்பத்திலிருந்து
ஒவ்வொருவரும் சுயமாகத் ஆரம்பிக்க வேண்டும். வள கருப்பையில் ஒரு குழந்தை வி தனிமனிதருக்குள்ளும் ஒரு புதி மாயைகள், உண்மைகளைப் ெ விழிப்புணர்வு கொண்டவ உள்ளவர்களிடமும் தோற்றுவிடு
புத்தர் மக்களின் தன்னுை வளர்த்தவர். அவர் காலத்தில் தவர்கள் புத்தர் இறந்தபின்பு கிரியைகள், கடவுள் என மக்க புது வியாக்கியானங்களை அ தெளிவானவர், புத்தர் புதிய சித்தாத்தராக இருந்தபோது அ ஞானம் அடைந்தபின் கெள களையும் சேர்த்துப் பார்க்கக் மனிதர்தான் கூறியிருந்தாலும் வித்தியாசமானவை, அவர் புத்தராகக் கூறியவைகளை மா களாக எடுத்துக்கொண்டால் இருக்கும் என்பது இந்நூல் ஆ
புத்தர் ஞானமடைந்த பி முதன்முதலில் கூறியது: “மை அவரிடம் பேச விரும்புகின்றே கூறினார்கள். உங்களைப்பற்றி பிரிந்து 12 வருடங்கள், ஏன் ஏற்பட்டது?’ என்றார்கள். நன்றியைத் தெரிவிக்கவேண்டு பட்டிருக்கிறேன்” என்றார்.
புத்தர் அரண்மனைக்குத் சந்தித்தார். யசோதரா புத்தர்மீ கோபம் அது, தன்னையும் கைவிட்டு, சொல்லிக்கொள்ள

5UIgbub 1 11
ாக வளர்ச்சியடைவதுதான் விடுபடுவதற்கு ஒரே வழி. தானாகவே வளர்ச்சியடைய ர்ச்சியென்பது ஒரு தாயின் ாளர்வது போன்றது. ஒவ்வொரு யெ மனிதன் பிறக்க வேண்டும். பாய்மையாக்குதல் அனைத்தும் ார்களிடமும், தன்உணர்வு ம்ெ.)
ணர்வையும், விழிப்புணர்வையும் தலைகாட்டாது மறைந்திருந் சடங்குகள், சம்பிரதாயங்கள், ளைக் குழப்பிவிட்டனர். தங்கள் அரங்கேற்றிவிட்டனர். புத்தர் ப பாதையைக் காட்டியவர். வர் கூறியைவைகளையும் அவர் தமபுத்தரான பின் கூறியவை கூடாது. இரண்டையும் ஒரே அவரது இரண்டு நிலைகளும் ஞானமடைந்தபின் கெளதம த்திரம் நாம் புத்த போதனை அவைகள் ஒரிஜினலாகத்தான் சிரியரின் அபிப்பிராயம்.
ன் அவர் தன் சீடர்களிடம் னவி யசோதராவைச் சந்தித்து ண்” என்றார். புத்தரின் சீடர்கள் என்ன நினைப்பார்கள்? நீங்கள்
இப்போது அந்த நினைப்பு புத்தர் “நான் என்னுடைய ம், அவளுக்கு நன்றிக்கடன்
திரும்பினார், யசோதராவைச் கோபப்பட்டாள், 12 வருட
பிள்ளையையும் திடீரென மல் பிரிந்து சென்ற கோபம்

Page 29
12 a போதிதர்மர் பற்றிய
அது. புத்தர் “அப்பொழுது தவறை உணர்ந்து மன்னிட் புரிந்தநிலையில் இருக்கிே விழிப்புணர்வில் நான் அனுபவத்தை உன்னோடு ப என்றார். புத்தரின் தலையை light), தனது கணவர் இந் விட்டார் என்பதை உணர்ந் விழுந்து தன்னைச் சீ வேண்டினார். (புத்தரின் இராகுலும் பின்னாளில் துற6
புத்தர் - யசோதரா சந்திப் அவர்கள் ஒரு அழகான யசோதரா - புத்தரிடம் கேட்சி மட்டும் கூறுங்கள், அடைந்திருக்கிறீர்களோ, அ கவனிக்க முடிகிறது, ஒே சொல்லுங்கள்; இங்கேயே உங்களால் அடைய முடி முடியாது என்று சொல்ல அங்கேயே நிகழ முடியும் எ காட்டிலோ, குளத்திலோ, ம கரையிலோ, மரத்திற்குக் கீே எந்த சம்பந்தமும் கிடைய தன்மை எங்கேயும் இ உணர்ந்திருப்பதால் முடியாது கவிதையில் தாகூர் கூறுகிற
ஒரு நூற்றாண்டிற்குப் கூடிய பெளத்த சபையி ஹீனஜான பெளத்தம் (Hi GLUGITš5Lib (Mahayana Buddh
பாட்டாளிபுரத்தை (Pa ஆண்ட அசோக சக்கரவா போதனைகள் இந்தியாவிற்கு பெரும் பங்காற்றினார். ஆ

அற்புதமான விஷயங்கள்
புரியாமல் செய்துவிட்டேன், பு கேட்கிறேன். இப்பொழுது றன், அப்பொழுது இந்த இருக்கவில்லை, என்னுடைய கிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்" |ச் சுற்றி ஒளிவட்டம் (Aura of த ஒளிவட்டத்தினுள் மறைந்து த யசோதரா புத்தரின் காலில் -UITé95 ஏற்றுக்கொள்ளும்படி மனைவியும் ஒரே ஒரு மகன் வியாகிவிட்டார்கள்.)
பைப் பற்றி இரவீந்திரநாத் தாகூர் கவிதை எழுதியிருக்கின்றார். கிறார் “நீங்கள் ஒரு விஷயத்தை
நீங்கள் எதையெல்லாம் 9ΙσΟo)Ιδ5 σOοπ στουου Πιb στοότοOI που ர ஒரு விஷயத்தை மட்டும்
இந்த வீட்டிலேயே அதை பாதா??? அதற்குப் **புத்தரால் முடியாது?’ என்கிறார் தாகூர். ன்பது புத்தருக்குத் தெரியும், ஒரு லை அடிவாரத்திலோ, ஆற்றங் ழா வசிப்பதற்கும் ஞானத்திற்கும் ாது. அந்தப் பேரியக்க உயிர்த் ருக்கிறது என்பதைப் புத்தர் என்று சொல்லமுடியாது எனக்
II.
பின் வைசாலி (Vaishal) நகரில் ன் கூட்டத்தைத் தொடர்ந்து layana Buddhism) LDampIT gaOT sm) என இரண்டுபட்டது.
aliputra) தலைநராகக் கொண்டு த்தி (268 - 239 BCE) புத்த ாளும் வெளியிலும் பரவுவதற்குப்
பிரம் கல்விமான்களைக் கூட்டி

Page 30
எஸ். குரு
பெளத்த மத வளர்ச்சிக்கு ம (பாட்டாளிபுரம் தற்போது பட்6 இதன் விளைவாக இவரது சங்கமித்தை இருவரும் புத்த Lanka) சென்றனர். அப்போது மத்திய ஆசியாவிலும் பெளத்தப்
இந்தியப் படையெடுப்புக்கு 327 -325 BCE காலப் பகுதி இராஜ்ஜியத்தின் (Helenic Ki l flaslig Tayub (Milinda / Menander
குப்த வம்ச அரசாட்சியிலும் (Harsha) (606- 646 CE) ejefII கலாச்சாரத்தின் ஆணிவேரானது நாகரிக வளர்ச்சிக்குப் பெளத்தம்
மடாலயங்கள் LỊGOT JooLDä5&5Ů நிர்மாணிக்கப்பட்டு, தத்துவம், இலக்கணம், அறிவியல் க.
நூற்றாண்டு காலப்பகுதியில் பெc விரிவடைந்து ஒன்றுக்கொன்று படையெடுப்புக்களாலும் பெளத்த பெளத்தம் முற்றாக இந்திய மண் நூற்றாண்டளவில் மியன்மாரும், பெளத்த வழிகாட்டலைப் பெறமு அணுகின. இலங்கை தேரவா கொண்டிருந்ததை முன் உதார மாக எடுத்து தாய்லாந்தும், மிய மாரும் தேரவாத பெளத்தத்தை பின்பற்றின. »
திபெத்தில் ஏழாம் நூற்றாண் காலப்பகுதியில் (7h Century C பெளத்தம் பரவிவிட்டது. 8 நூற்றாண்டில் (8h Century C திபெத்தில் Samye நகர் முதலாவது பெளத்த மடாலய இந்தியக் கல்விமான் சாந்தகசித்

ாதம்
நாடு கூட்டி ஆராய்ந்தார். T Patna பகுதியாக உள்ளது.) மகன் மஹிந்தா, மகள் றவிகளுடன் இலங்கை (Sri ஆப்கானிஸ்தான் மற்றும் பரவியிருந்தது.
ப் பின் அலெக்சாண்டரால் யில் உருவான ஹெலனிக் gdom) கிரேக்க அரசரான
பெளத்தத்தைத் தழுவினார்.
(320- 540 CE), omoñ6)9-I ட்சியிலும் பெளத்தம் இந்திய மாத்திரமல்ல ஆசியாவின் அடித்தளமானது. பெளத்த பட்டு, கல்விக்கூடங்கள்
மருத்துவம், வானியல், ற்பிக்கப்பட்டன. 13-ஆம் ாத்த - இந்து முரண்பாடுகள் பகையாகிவிட்டன. முஸ்லிம் மடாலயங்கள் அழிவுற்றன. னில் ஸ்தம்பித்தது. 11-ஆம் தாய்லாந்தும் இந்தியாவின் pடியாமல் வேறு நாடுகளை பெளத்தத்தை பின்பற்றிக்
XOT
ன்
டு
)
ம்
)
i)
Padmasambhava ־ך

Page 31
14) போதிதர்மர் பற்றி
(Shantakashita) 6ílaoigilib (i. (Tantric Saint) LujLDSFLübLIGJIT அங்கு ஆரம்பிக்கப்பட்டது.
முதலாவது நூற்றாண் பரவத் தொடங்கியது. மியன்மார், ஆப்கானிஸ்தா பெளத்தத்தைத் தங்கள் ! முறையில் சிறு மாற்றங்கள் UTTIš gyUFGnuLibF (Tang Dynas CE) பெளத்தம் சீனக் கலாச் பங்கு வகித்தது. இக்க பாடசாலைகள், தியான நிை பட்டன. நான்காம் நூற்ற பெளத்தம் கொரியாவிலு ஜப்பானிலும், வியட்னா நூற்றாண்டு CE காலப்பகு பரவியபோதும் சீனபெளத்த தழுவினார்கள்).
1893 இல் அமெரிக்க இடம்பெற்ற சர்வசமயப் ே Religions) தேரவாதப் பெளத் (இந்தப் பேரவையில்தான் இந்து மதப் பிரதிநிதியாக நிகழ்த்தியிருந்தார்.) இம் பெளத்த பிரதிநிதியாகக் கள் (Anagarika Dharmapala) பேருரையை நிகழ்த்தியிரு நாடுகள் சுவாமி விவே பெளத்த நாடுகள் அன படுத்தின. சென் பெளத் சேர்ந்த சென்குரு சோே
கொண்டார்.
தேரவாத பெளத்த பு மொழியில் இலங்கை அ முயற்சியால் 29 BCE கால

அற்புதமான விஷயங்கள்
ந்திய தந்திரா பெளத்த ஞானி Padmasambhava) வின் உதவியுடன்
டல் (CE) பெளத்தம் சீனாவில் பெத், தாய்லாந்து, இலங்கை, ன், போன்ற நாடுகள் இந்திய ாடுகளுக்குப் பொருந்தக்கூடிய செய்துகொண்டன. சீனாவில் y) ஆட்சிக் காலத்தில் (618 - 907 சாரத்திலும் நாகரிகத்திலும் முக்கிய ாலத்தில் மஹாஜன பெளத்த லயங்கள் வேகமாக நிர்மாணிக்கப் ாண்டில் (CE) சீனமுறையிலான ம் ஆறாம் நூற்றாண்டில் (CE) மிலும் பரவியது. (இரண்டாம் தியில் வியட்னாமில் பெளத்தம் முறையை 6-ஆம் நூற்றாண்டில்
ாவில் உள்ள சிக்காகோ நகரில் JJoooJuGlóo (World's Parliament of தத்தைப் பற்றிய கேள்வி எழுந்தது. சுவாமி விவேகானந்தர் அவர்கள் த் தன் புகழ்மிக்க பேருரையை மாநாட்டில் இலங்கையிலிருந்து ந்துகொண்ட அனாகரிக தர்மபாலா அவர்கள் பதிலளித்து புகழ்மிக்க ந்தார். பாராட்டுதல்களில் இந்து கானந்தரை முக்கியப்படுத்தின. கரிக தர்மபாலாவை முக்கியப் தத்தின் பிரதிநிதியாக ஜப்பானைச் Lu Gör Gn(g5 Soyen Shaku 35 Gvjög
த நூலான திரிபீட (Tripita) பாலி Fri Guip5QupGofluolair (Vatagamuni) பகுதியில் எழுதப்பட்டது. ஐந்தாம்

Page 32
எஸ். குரு
நூற்றாண்டில் (CE) இந்தியாவில் ஹோஷா இலங்கை சென்று தேரவாத பெளத்தத்தைச் சமஸ்கி g) j55 GJG “Visuddhbimagga’ புனிதத்திற்கான பாதை என்பதே தேரவாத பெளத்தத்திற்கு வழிக மியன்மார், தாய்லாந்து ஆகிய ந பெளத்தத்தைத் தொடர்ந்தும் பி
முதலாம் நூற்றாண்டில் பெளத்த கருத்துக்கள் நன்கு நூற்றாண்டளவில் (CE) சமஸ்கிரு ஏடுகள் சீனமொழிக்கு மாற் GILbefTG)J6lf (Song Dynasty) gy பெளத்த நூல்கள் அச்சுப் ப பெளத்த நூல்கள் சீனாவில் பீ நூற்றாண்டு ஆரம்பகாலத்தில் அ
மஹாஜன பெளத்தத்தில் (Bodhisattva) சூத்திரா புத்தபி மற்றும் பொதுமக்களுக்குமான கருணை, ஞானம் இவைகள் எ உலகில் உள்ள அனைத்து உயி நிலையை அடைவோம்’ எனக் என்பது விழிப்புணர்வு. ஞா சமஸ்கிருதத்தில் பொருள்படும்.
போதிதர்மர் தன் சீடர்களு புத்தரை அறியுங்கள், நீங்கள் கொண்டால் உங்கள் சுயத்தை (Being) தெளிவாக அறிந்துகொள் முக்கியமல்ல" என்றார்.
(குறிப்பு: புத்த தன்மை, என்றால் ஞானம் என்ற பொரு
தேரவாதப் பெளத்தத்தில் ெ காமம், பாதகமான செயல்கள் தோன்றக்கூடாதெனவும் வலியுறுத்

ாதம்
ருெந்து பெளத்த துறவி புத்த பாலி மொழியில் உள்ள ருதத்தில் மொழிபெயர்த்தார். எனப்படுகிறது. அதாவது இந்த ஏட்டின் பெயர். இது ாட்டி நூலானது. இலங்கை, ாடுகள் ஹீன ஜான, தேரவாத ன்பற்றினார்கள்.
(CE) சீனாவில் மஹாஜன பரவிவிட்டன. இரண்டாம் தத்திலிருந்த மஹாஜன புனித ]றப்பட்டுவிட்டன. சோங் சிக் காலத்தில் (972 -983 CE) திவாகியுள்ளன. திபெத்திய ஜிங் (Beijing) நகரில் 5-ஆம் ச்சுப் பதிவாகின.
) உள்ள போதிஸற்வா க்குகளுக்கு, பிக்குனிகளுக்கு ா நெறிமுறைகள், அன்பு, ல்லாவற்றையும் போதிக்கிறது. ரினங்களுக்காக நாம் புத்தர்
(9,075/05/. Liggiri (Buddha) னம் அடைந்தவர் எனச்
குே “உங்களுக்குள் இருக்கும் புத்தர் என்பதை அறிந்து (Self - Nature) gobligolgi ண்டால் ஏனையவை எதுவும்
Lög, loa0)6) (Buddhahood) iபடும்.)
பாய், கொலை, களவு, கள், எனவும் இவைகள் மனதில் துவதோடு துறவிகள் மேலும்

Page 33
16 a போதிதர்மர் பற்றி
கடைப்பிடிக்க வேண்டியன உணவு தவிர்க்க வேண்டு அணியக்கூடாது, கேளிக்கை இன்பங்களைத் தூண்டக் கூடாதெனவும், பணம் மென்மையான படுக்கை
வலியுறுத்திக் கூறுகிறது.
பெளத்த நாடுகள் இருக்கின்றன. ஜப்பான், 8 மஹாஜன (Mahayana) பா நாடுகளில் Zen சென் மதி ஒரு பெளத்த நாடு. ஆன தெரியாமல் இருக்கலாம். பாதையைப் பின்பற்றுகிற: தெரியாமல் இருக்கலாம் பாதையை நாடியவர். அ கொரியா போன்ற நாடுகள் போல் ஹினஜானவை பின் இல்லாமல் இருக்கலாம்.
மஹாஜன பெளத்தத் அவர்கள். அவருக்கு மு உயிரோட்டத்துடன் வெளி முதன் முதல் மஹாஜன மதத்தைப் பரப்பியதாகக் க(
போதிதர்மர் அவர்க மஹாஜன பாதையைப் பி றின்சாய் (Rinzai) ஞானிகளாவார்கள். இலங் (Hinayana) Gô)Lu 6ITğöğ5 lib செல்கின்றன. போதி இடையிலான முரண்பாடு உள்ளது. அகற்றா என்பது (Self - Nature),560.5 g) சுயத்தை அறிந்தவுடன் ஞ

ய அற்புதமான விஷயங்கள்
வகளாக மத்தியானத்திற்கு பின்பு ம், எக்காலத்திலும் ஆபரணங்கள் களில் கொண்டாட்டங்களில் புலன் கூடிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கக்
கையாளக் கூடாதெனவும், கள் பாவிக்கக் கூடாதெனவும்
இரண்டாகப் பிளவுபட்டு சீனா, கொரியா போன்ற நாடுகள் தையைப் பின்பற்றுகின்றன. அந்த நம் நிலைபெற்றுள்ளன. இலங்கை ால் அங்கு சென் பெளத்த மதம் இலங்கை ஹீன ஜான (Hinayana) து. இலங்கையில் போதிதர்மரைத்
காரணம் அவர் மஹாஜனப் அதனால் அவர் சீனா, ஜப்பான், ரில் பிரபல்யமானவாராக இருப்பது ன்பற்றும் நாடுகளில் பிரபல்யமாக
ந்தைப் பரப்பியவர் போதிதர்மர் ன்பு அதை யாரும் அவர்போல் க்கொணராததால் போதிதர்மர் தான்
UIT 6005uéSloôr LogDJ6)Jlq-6)Jud IIGOL Zen ருதப்படுகிறார்.
ள் போதிஸற்வா (Bodhisattva), ன்பற்றியவர், சிரிப்பு புத்தர் (Hotei) அவர்களும் சென் பெளத்த கை போன்ற நாடுகள் ஹின ஜான அகற்றா (Arhata) பாதையில் சத்வாவிற்கும் அகற்றாவிற்கும் இருபத்தைந்து நூற்றாண்டுகளாக ஞானம் அடைந்த பின்பு ‘சுய’ றிவது, போதிஸற்வாஸ் என்பது நானம் அடைவது.

Page 34
எஸ். கு(
எந்த மதத்தை எடு ஏற்பட்டிருக்கும் உப பிரிவு விரோதங்களும் இருக்கின் கிறிஸ்தவம், இஸ்லாம், மதங்களுக்குள் இருக்கும் உட் ஒன்று கெளரவமாகப் பார்ப்பதி
இந்து சமயத்திற்குள் சில கொண்ட சைவம், விஷ்ணு கொண்ட வைஷ்ணவம், சக்தி சாக்தம், சூரிய வழிபாட்டை செளரம், கணேசரைப் பிரதான முருக வழிபாட்டை முன்னி6ை உட்பிரிவுகள் ஒருவரையொ தங்களுக்குள் மோதி இரத்தக்க பூமியாக்கினர்.
சமணமதத்திற்குள் ஸ்வற் திகம்கராஸ் (Digamgaras) எ ஒருவரை ஒருவர் முழுமைய ஸ்வற்றம்பராஸ் பிரிவினர் தங்க ஆடை அணிந்துகொண்டன கோட்பாடுகளை எழுதிப் பாது உறுதியானவர்கள். திகம்கராவி தில்லை, மத்க்கோட்பாடுகள் தில்லை, பெண்கள் முக்திய நிலைப்பாடுகளைக் கொண்டவ
பெளத்தத்தில் மஹாஜ கத்தோலிக்கர் கத்தோலிக் கிறிஸ்தவத்திலும் யூதர்களது யுட ஏற்பாடு போல இரண்டாகட் பிறிதொரு பிரிவே சூஃபி ம: ஒருவருக்குள் ஒருவர் முரண்பட் மோதல்கள் உண்டு
ஒவ்வொரு மதமும் தா "உண்மை? தங்களுக்கு மட்

பாதம் 17 ܐ
த்தாலும் அவைகளுக்குள் களுக்குள் முரண்பாடுகளும், றன. பெளத்தம், சமணம், ஜுடயிஸ்ம், இந்து ஆகிய பிரிவுகள் தங்களுக்குள் ஒன்றை O60)6).
னை முழுமுதற் கடவுளாகக் வை முழுமுதற் கடவுளாகக் வழிபாட்டை மேற்கொள்ளும் முதன்மையாகக் கொண்ட மாக வழிபடும் காணாபத்தியம், லப்படுத்தும் கெளமாரம் ஆகிய ாருவர் ஏற்றுக்கொள்ளாமல் ளரியை ஏற்படுத்தி மதக்கலவர
bplbugT6ň) (Sevetambaras), ான இரு பிரிவாகப் பிரிந்து ாக ஏற்றுக்கொள்ளவில்லை. ள் அடையாளமாக வெள்ளை ‘ர். இவர்கள் சமணமதக் காக்கப்படவேண்டும் என்பதில் 0 பிரிவினர் ஆடை அணிவ
என்று எழுதிப் பின்பற்றுவ டைய முடியாது போன்ற ர்கள்.
6ÕT, ஹினஜன என்றும் ர் அல்லாதவர்கள் என ஸ்யம் புதிய ஏற்பாடு, பழைய
பிரிந்துள்ளது. இஸ்லாமின் iம். பிரிவுகளால் அவர்கள் டார்கள். மத உட்பிரிவுகளில்
Iகள் மாத்திரம் உயர்ந்தது, டும்தான் உரியது என்றே

Page 35
18 a போதிதர்மர் பற்றிய
போதிக்கின்றன. பிற மதங்க தெளிவாக நேரடியாகக்
நம்பிக்கைகளை மதியுங்க போதிக்கவில்லை. ஒவ்வெ
*உண்மை’ என்று ஏகபோக உ
கிறிஸ்தவர்கள் இயேசுை பெளத்தர்கள் புத்தரைப்பற்றி மகாவீரரைப் பற்றிப் பேசுகிற நாயகத்தைப் பற்றிப் பேசுகிறா (Rabiah Aladawiyah) 60aulit மதத்தினர் போதிதர்மர் றின்சு (Hotei) GO) Gulču LusiðmóLÜ G3Lu கிருஷ்ணர் பற்றிப் பேசுகிறார்
ஒரு மதத்தினர் மற்ற வேண்டும். தன் மதத்தைப் பே வேண்டும், மற்ற ஞானிகளை பார்க்க வேண்டும். ஆனால் இ ஆன்மிகவாதிகளோ, பிரசங்கி தலைவர்களோ, மதகுருமார்ச சகல மதத்தின் ஞானமை சேர்த்துப் பார்க்கத் தவறுகி0 ஞானமடைந்த மகான்கள்தாே எந்த ஒரு மதம் சார்ந்தவராக மேற்கோள் காட்டி சொற்பெ தயக்கம் காட்டுகிறார்கள். கொண்டு, தடை போடாத அத்தனை ச ஞானிகளதும் படலாம், போதனைகள் வி வித்தியாசப் படலாம், அவர்க படலாம், அவர்கள் தனித் ஆனால் அத்தனை ஞானிக மனமற்ற நிலையை அடைந் இருந்தனர். தாங்கள் அறிந்த தான் என்றும் இருந்தார்கள் உள்ளவர்களாகவும் இரு

v:
ற்புதமான விஷயங்கள்
ளை ஏற்கும்படி எந்த மதமும் கூறுவதில்லை. பிற மத என்று எந்த மதமும் ாரு மதமும் தாங்கள்தான் ரிமை கோருகின்றன.
வப் பற்றிப் பேசுகிறார்கள், ப் பேசுகிறார்கள், சமணர்கள் ர்கள், இஸ்லாமியர்கள் நபிகள் "கள், சூஃபி மதத்தினர் றாபியா பற்றிப் பேசுகிறார்கள், சென் ய், சிரிக்கும் புத்தர் ஹொடாய் கிறார்கள். இந்து மதத்தினர் 95GT.
மதத்தினை ஏற்றுக்கொள்ள ால மற்ற மதத்தினையும் மதிக்க த் தன் மத ஞானிகளைப்போல் இன்று இந்த உலகத்தில் உள்ள களோ, மதவாதிகளோ, மதபீடத் ளோ, பொதுமக்களோ எவரும் டந்த ஞானிகளை ஒன்றாகச் எறனர். அவர்கள் எல்லோரும் ன மதச் சொற்பொழிவாளர்கள் இருந்தாலும், மற்ற மதங்களை ாழிவு பிரசங்கங்கள் செய்வதில் தங்களுக்குள் தடை போட்டுக் வர்கள் போல் இருக்கிறார்கள். அணுகுமுறைகள் வித்தியாசப் த்தியாசப்படலாம், செயல்கள் i பேசிய மொழிகள் வித்தியாசப் துவங்கள் வித்தியாசப்படலாம், நம் மனதைக் கடந்து (No-mind) து அவர்கள் ஒரே நிலையில்தான் *உண்மையில் ஒரே நிலையில்
எவரும் எந்த மத நம்பிக்கை கலாம், அந்த ஞானிகளை

Page 36
எஸ். கு
அனைவரும் ஒன்றாக இணை படிப்படியாக நீங்கிவிடும். ந மனிதம் மலர்ந்துவிடும்.?
ஏற்றுக்கொண்ட ஆன்மிக ஒவ்வொருவரும் மாற மத ஐக்
ஞானம் அடைந்தவர்கள் அனைவரும் ஞானம் அடைந்த இணைத்து சமமாகப்பார்க்க ே 'ஒருமை" (Oneness) உண்டு. மானவர்கள், அவர்களது வித்தி தனித்துவம், அந்த விஷேட : அழகு எல்லோரிலும் உண் ஒருமைப்படுத்துகிறது (Οι இரசிப்போம், அவைகளை வர்ணத்தில் பலவித வடிவத் மலர்கள் இருப்பதே பூங்கான வித்தியாசம் தரும் அழகை இ மனிதர்களை ஒருமைப்படுத்துகி
மக்கள் பிரச்சனை இல்லை
மதங்கள் பிரச்சனை இல்ை
உலகம் பிரச்சனை இல்ை
நாம் விழிப்புணர்வு அற்று ஏற்படுகின்றது.
ஒரு மதத்தினர் மற்ற முயல்வதில்லை. ஒவ்வொரு முறைகளில் வாழ்க்கை முன் வித்தியாசங்களை முதலில் முழுமையான புரிந்துகொள்ளல்
-
ܐܚܝ

நபாதம் _19 سے
ாத்துப் பார்க்க மத வேற்றுமை ாம் எல்லோரும் ஒன்றே என்ற அனைத்து மதங்களையும் τρσΟττώ உடையவர்களாக
கியம் ஏற்பட்டுவிடும்.
பலவிதமானவர்கள். நாம் வர்கள் எல்லோரையும் ஒன்றாக வண்டும். அந்த ஞானிகளுக்குள் அதேபோல் மக்களும் பலவித யாசங்கள் அவர்களது விஷேட தனித்துவமே அழகானது. அந்த டு. அந்த அழகே எங்களை eness). வித்தியாசங்களை ஏற்போம். பூங்காவில் பல ந்தில், பலவித நறுமணத்தில் வை அழகுபடுத்துகிறது. அந்த ரசிக்கிறோம். அந்த இரசித்தல் )ng (Oneness).
و(
)6O,
இருப்பதால்தான் பிரச்சனை
தத்தினரைப் புரிந்துகொள்ள மதத்தினரதும் வழிபாட்டு றைகளில் இருக்கும் சிறுசிறு புரிந்துகொண்டால் அங்கே மலர்ந்துவிடும்.
-

Page 37
அத்திய
“பெளத்த ம இந்திய - சீன
பாரத முதல் பிரதமர் திரு. நேரு அவர்கள் எழுதி Gojosfloubg. The Discovery Of நூலிலிருந்து எடுக்கப்பட்ட சி 5606 இங்குக் குறிப்பி இந்நூலானது அக்காலத்தி முழுவதும் விற்பனையில் ( முன்னணியிலிருந்தது. இன் புகழ்வாய்ந்த நூலாகவேயிருக்கி நூலிலிருந்து எடுக்கப் இவ்அத்தியாயத்தில் கூறப்பட்(
பெளத்த மதத்தின் ஊடா அருகாமையில் வருகின்றன தொடர்புகள், ஏற்பட்டன. கட இருந்திருக்கின்றது. தரைமார் நடைபெற்ற அடையாளங்கள் ஆகிய இடங்களில் எளிதாக சீனாவிலிருந்து “பட்டு” இந்தி
பெளத்த மதம் இந்தியா இந்தியாவிற்கும் - சீனாவி
உள்ள ஞானிகள், சிந்தனைய

நம் ஊடாக
நல்லுறவு
- பிரதமர் நேரு
ஜவஹர்லால் 1946 இல் India 6IGisip ல விஷயங் டுகின்றேன். ல் உலகம் Best Seller) றும் உலகப் கிறது. அந்த பட்டவையே உள்ளன.
க இந்தியாவும் - சீனாவும் மிக s அதன் ΦΘΙι Πτέ5ι ι LIGN) ல்வழி மார்க்கமாக வர்த்தகமும் கமாக மக்கள் போக்குவரத்து நேபாளம், அசாம், வங்காளம் க் காணக்கூடியதாக உள்ளது. பாவை வந்தடைந்தது.
பிற்குள் பரவத் தொடங்கியதும் கும் இடையில் இருநாட்டில் ார்கள், மற்றும் யாத்திரீகர்களின்

Page 38
எஸ். குரு
போக்குவரத்தும் தொடங்கிய மலையடிவாரத்தாலும், கோட (Gobi Desert), UGT6755/TäGg5ć ஆபத்தானதும் உயிர் அச்சுறுத்த பிரயாணத்தை மேற்கொண் பயங்கரமான பிரயாணத்தில்
வீதத்திற்கு மேற்பட்டோர் இறந்
உயிரைப் பயணம் வைத் வந்தவர்கள் இங்கேயும், இந்தியா அங்கேயும் தங்கள் சொந்த நாடு சுவீகாரம் செய்துகொண்ட அந்தந் போல் ஏற்றுக்கொண்டு தங்கிவி கேற்ற இன்னொரு மார்க்கம இருந்தது. யாவா, சுமாத்திரா, ஊடாக இந்தியாவுக்கும் சீன கடல்வழிப்பாதையும் பாதுகா கடல்வழியும், தரைவழியும் மா மத்திய ஆசியாவில் புத்தமதமு வேகமாக பரவத் தொடங்கின.
இந்தியாவிற்கும் சீனாவுக்கும் மடாலயங்களும், பாடசாலை டே அங்கொன்றும், இங்கொன்று இந்தியாவிலிருந்து செல்பவர்களை வருபவர்களையும் இந்த ம வரவேற்றன. சீனாவிலிருந்து ஞானிகள், சிந்தனையாளர்கள் வில் இந்தியர்கள் செறிந்து கணக்காகத் தங்கியிருந்து சமஸ்கி பிரவேசித்தனர்.
சீனப் பேரரசரான மிங்ரா அவர்களின் அழைப்பில் 67 பகுதியில் காசியப்பா மாதங் Matanga) GTGỗTAD (G 5 IT Gof (Up, இந்தியாவிலிருந்து சீனா செ6 அங்கு லோஜாங் (Loa Y

ாதம் 12
து. ஹிமாலய பாலைவனம் ள் ஊடாகவும் லுமான இந்தப் டனர். இந்தப் தொண்ணுாறு தேவிட்டனர்.
து சீனாவிலிருந்து இந்தியா விலிருந்து சீனா சென்றவர்கள் களுக்குத் திரும்பாமல் தாங்கள் த நாடுகளை தங்கள் தாய்நாடு ட்டார்கள். போக்குவரத்துக் ான கடல்வழிப் பாதையும் மலேயா, நிக்கோபார் தீவுகள் ாாவுக்குமிடையிலான இந்த ப்பானதாக இருக்கவில்லை. ாறிமாறிப் பாவிக்கப்பட்டன. ம் இந்தியக் கலாச்சாரமும்
இடையே உள்ள நாடுகளில் ான்ற கற்கும் நிலையங்களும்; மாக ஆரம்பிக்கப்பட்டன. ாயும், சீனாவிலிருந்து இந்தியா டாலயங்கள், நிலையங்கள்
இந்தியா நோக்கி வந்த போன்றோர் இந்தோனாசியா வாழும் பகுதிகளில் மாதக் ருதம் கற்று இந்தியாவிற்குள்
ij (Ming Ti) fit A.D காலப் 'ல்
(Kasyappa ன் முதலில் றடைந்தார். | ng) என்ற

Page 39
LD[Tტ5[T60 குடியே (Dharm சென்றி புத்தபத் (Jinabh i jiva),
ஜினகுட (Bodhi( காலப் ( சீனா எல்லே Kumara jiva களையு நூற்றா மாத்திரம் 3,000 இந்திய பு குடும்பங்களும் இருந்ததாகக்
இந்திய ஞானிகள் தங்க கையேடுகளைக் கொண்டு மொழியில் மொழிபெயர்த் தங்கள் ஞான அனுபவங்கை இந்திய மகான்கள் சீன இல Qafiugj6iroIIITiaisoir. 401 A.C குமாரஜீவா எழுதிய நூல் இந்தியாவிற்கு கிடைத்த6 சிறப்புமிக்க ஆற்றல் பெற்றி
இந்திப்ாவின் மிகப் ெ (Nagarjuna) 63uITypéj560),5 62 மொழிபெயர்த்தார். ஆறாட பகுதியில் சீனா சென்ற சமஸ்கிருத நூல்களைச் 8 எழுதியுள்ளார். இவரது சீன பேரரசர் ராங் (Tang) இவ
இந்தியாவிற்கும் - சீன இரு வழிப்பாதை போன்று
 
 

அற்புதமான விஷயங்கள்
த்தில் லோ (LO) ஆற்றங்கரையில் றினார். அவருடன் தர்மறக்சா l rakSha) என்ற துறவியும் ]ந்தார். இவர்களைத் தொடர்ந்து GNITIT (Buddhabhadra), gela OTL ujë.GANTIT dra), (g5 LDITUT gejolu IT (Kumara பரமார்த்தா (Paramartha), தா (Jinagupta), போதிதர்மா harma), ஆகிய ஞானிகள் போக்கில் இந்தியாவிலிருந்து சென்றடைந்தனர். இவர்கள் ாரும் தங்களுடன் பல துறவி ம் கூட்டிச் சென்றனர். ஆறாம் ண்டில் லோ மாகாணத்தில் த்த துறவிகளும் 10,000 இந்தியக்
கூறப்படுகிறது.
ளுடன் சமஸ்கிருதத்தில் இருந்த சென்று காலப்போக்கில் சீன தெழுதினார்கள். சில ஞானிகள் ள சீன மொழியில் எழுதினார்கள். க்கியத்திற்கும் பெரும் பங்களிப்பு
காலப்பகுதியில் அங்கு சென்ற களில் 47 நூல்கள் மாத்திரம் 1. அவர் சீனமொழியில் தனிச் ருந்தார்.
பரும் ஞானியான நாகர்யுனாவின் ரலாற்றை அவர் சீனமொழியில் நூற்றாண்டின் (6 A.C) மத்திய gj86OTIT (5L'g5IT (Jinagupta) 37 னமொழியில் மொழி பெயர்த்து மொழிப் புலமையால் கவரப்பட்ட து சீடன் ஆனார்.
விற்கும் இடையிலான பிரயாணம் அமைந்தது. பல சீன ஞானிகளும்

Page 40
எஸ். குழு
இந்தியா வருகை தந் அவர்களில் மிக முக்கியமான Lungnólalöt (Fahien/ Fahsien) é (Sung Yun), (g5 g6õT - G3FGóT; ( Tsane, Chwen Chuag) i (1-Tsing, Yi-Tsing) ஆவா பாஹின் அவர்கள் 5நூற்றாண்டில் இந்தியா வ இவர் சீனாவில் குமாரஜீவா களின் மாணவனாக இருந் இவர் இந்தியாவிற்குப் பிர மாவதற்கு முன்பு தனது குமாரஜீவாவிடம் சென்றார்.
அவர் பாஹினிடம் “இந்தி தேடவேண்டாம், அதில் ம செலவழிக்காமல் இந்திய மக் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க் கொள்ள வேண்டும் என்று குமா &ểGOTIT QUp (IgGODLD UITG5 SbśSluU IIIC அறிய உன் பிரயாணம் பயன் அவரை குமாரஜீவா ஆசீர் பாஹின் (Fahien) இந்தியான பல்கலைக் கழகத்தில் (Pataliput
சீனாவிலிருந்து இந்திய பிரபல்யமானவர் சூஆன்-சேன் நூாற்றாண்டைச் சேர்ந்தவா இந்தியாவை சி அடைந்தார். பிரயாணமாகும்போது அரசன் வைத்தார். இவர் இந்தியா பூ இவர் போகுமிடமெல்லாம் அவருக்கு மரியாதை செலுத் 5!pé556)a) (Nalanda Univers புத்ராவும் பலவிதமான கல் இருந்தது. அங்கு 10,000 மாண கொண்டிருந்தார்கள். குஆ

தனர். வர்கள் ங்யுன் HSuanபி-சிங் ‘ர்கள். ஆவது நதாா.
அவர் தவர். யாண
குரு
பாவில் ஆன்மிகத்தை மாத்திரம் ாத்திரம் உனது காலத்தை $களையும், இந்திய மக்களது கை முறைகளையும் அறிந்து ரஜீவா ஆலோசனை கூறினார். வையும் இந்திய மக்களையும் எபடவேண்டும்?" என்று கூறி வதித்து அனுப்பிவைத்தார். வையடைந்து பட்டாளிபுத்ரா a University) கல்வி கற்றார்.
T வந்தவர்களில் மிகவும் (Hsuan-Tsang) gaiti 7-gyb . இவர் தரைமார்க்கமாக சீனாவிலிருந்து இந்தியா ா ராங் (Tang) வழியனுப்பி ராவும் பிரயாணம் செய்தார். மதிக்கப்பட்டார். மக்கள் தினர். நாலந்தா பல்கலைக் ty) கல்வி கற்றார். பாடலி வித்துறைக்குப் பிரபல்யமாக வர்கள் வரையில் கல்வி கற்றுக் ன்-சேன் சட்டத்துறையில்

Page 41
24 a போதிதர்மர் பற்றிய
(
முதுமானிப்பட்டம் பெற்று பி கழகத்தின் உப அதிபரானார்
இவர் எழுதிய சி-யூ-கி ( பற்றிக் குறிப்பிட்டிருந்தார். முறையைப் பாராட்டுகிறார். பc (Grammar) soooo oscó565IIGOIL மருத்துவம் (Medicine) தர் (Philosophy) egyésluU UGDo gJGOD கூறுகிறார். இந்திய மக்கள் கல் எனவும் கல்வியை நேசிக்கி இந்திய மக்களைப்பற்றிக் குறி கொண்டவர்கள், கண்ணிய பணவிசயத்தில் கபடத்தனமி கருணையுள்ளவர்கள், சத்திய அரச நிர்வாகத்தில் நேர்ை இனிமையானவர்கள், குற் குற்றவாளிகளோ அல்லது கலி என்கிறார். அவர் மேலும் கு நிர்வாகம் கருணையினதும், அமைந்திருக்கிறது. மக்கை செய்விப்பதில்லை. இலகுவான உள்நாட்டு வெளிநாட்டு வர்த் போவதுமாகத் தங்கள் கடை யிருக்கிறார்கள் என்கிறார்.
(5-gait-Gayair (Hsuan-T தன்னுடன் பல சுவடிகள், சென்றார். இவர் சீனா சென் மக்களாலும் வரவேற்கப்பட்ட ஏடுகளைச் சீனமொழியில் ே எழுதினார், தன் அனுபவ இந்தியா நோக்கி அன்று பிர இவருக்கு வழங்கிய குளிர்பா கலந்து கொடுத்து கூறினா பெறுமதியான தங்கத்தைவி சிறந்தது” எனக் கூறினார் எ

அற்புதமான விஷயங்கள்
ன்னாளில் நாலந்தா பல்கலைக் (Vice Principal).
iyu-ki) என்ற நூலில் இந்தியா
குறிப்பாக இந்தியக் கல்வி கலைக் கழகத்தில் இலக்கணம் (Science of Arts and Crafts) க்கவியல் (Logic) தத்துவம் றகள் திறம்பட இயங்குவதாகக் வி கற்பதில் ஆர்வமுள்ளவர்கள் றவர்கள் எனவும் கூறுகிறார். ப்பிடும்போது இலகுவான மனம் ாமாக நடந்துகொள்வார்கள், ல்லை, நீதி பரிபாலனத்தில் பத்திற்குக் கட்டுப்பட்டவர்கள், மையானவர்கள், பழகுவதற்கு றவியலைப் பொறுத்தவரை 0வரக்காரர்களோ மிகக் குறைவு றிப்பிடுவதாவது இந்திய அரச
அன்பின்தும் அடிப்படையில் ள அடிமைப்படுத்தி வேலை ன முறையில் நிர்வாகம் உள்ளது. தகர்கள் நாட்டுக்குள் வருவதும் மகளில் ஈடுபட்டுக்கொண்டே
sang) சீனா திரும்பும்போது JG 56ir (Manuscripts) 6TGggld டைந்ததும் சீனப் பேரரசராலும், ார். தன்னுடன் எடுத்துச் சென்ற மாழிபெயர்த்தார். பல நூல்கள் வ்களை நூலாக்கினார். இவர் ாணமாகும்போது அரசன் (Tang) னத்தில் ஒரு சில மண் துகள்கள் ராம் “வெளிநாட்டின் கோடி சொந்த நாட்டின் மண்ணே
ன ஒரு கதை உண்டு. சூஆன்

Page 42
எஸ். குருப
GFIi (Hsuan-Tsang) அவர்கள் சீனாவிலும், இந்தியாவிலும் நன்கு மதிக்கப்பட்டார். இவ ரது பிரயாணத்தால் இரு நாடுகளுக்குமிடையில் அரசியல் தொடர்பு ஏற்பட்டது. சீன மன்னர் JITrisi (Tang) -96).jff களும் வடஇந்தியாவில் Hsua அரசாட்சி செய்து கொண்டிருந்த அரசன் ஹர்சவர் KanauJ) அவர்களும் இரு தூதர்களைப் பரிமாற்றம் செய் காலப்பகுதியில் இந்தியாவைச் சே бlugooi (3,56. (Sthavira Prajnadeva சேன் (HSuan-Tsang) க்கு எழுதிய பாதுகாக்கப்படுகின்றன. சூஆன்அனுப்பிய பதில் கடிதம் ஒன்றில் *நான் என்னுடன் கொண்டுவந்த சாஸ்திராக்களிலும் (Shastras) யே மொழிபெயர்த்துவிட்டேன் அத் மொழிபெயர்த்துள்ளேன். எல்லாமா வரையில் இருக்கும். சீனாவுக்குத் பல புனித நூல்களைத் தொcை பட்டியலை இத்துடன் அனுப்பு எனக்கு அனுப்பிவையுங்கள், அன்பளிப்புகள் இத்துடன் அனு அவற்றை ஏற்றுக்கொள்ளுங்கள். இருந்து நண்பர்கள் அவருக்கு ஒரு தங்கள் ஞாபகமாக அனுப்பி இந்தியாவிலிருந்து ஏதாவது பூ அறிவிக்கவும், நாங்கள் அவற்ை அன்பு மடல் எழுதியிருந்தார்கள்.
g-gait-Gygör (Hsuan-Tsang) -gri (1-Tsing Or Yi-tsing) a Tail
ற
 

In Tsang in Nalanda, India
5g56OIII (Harshavardhana of நாடுகளுக்குமான தங்கள் துகொண்டனர். 654 A.C ர்ந்த புத்தமத மேதை ஸ்தவிர ) சமஸ்கிருதத்தில் சூஆன்ப இரு கடிதங்கள் சீனாவில் சேன் இந்தியாவிற்குத் தான் ) இவ்வாறு குறிப்பிடுகிறார். சூத்திராக்களிலும் (Sutras) ாகசார்யபூமி - சாஸ்திராவை துடன் ஏனைய நூல்களும் கக் கிட்டத்தட்ட 30 நூல்கள் திரும்பி வரும் பாதையில் லத்துவிட்டேன். அவற்றின் கின்றேன், முடியுமானால் நான் உங்களுக்குச் சிறு புகின்றேன். தயவு செய்து ஏற்கனவே இந்தியாவில் சோடி வெள்ளை வஸ்திரம் பிருந்தார்கள். அத்துடன் ால்கள் தேவை என்றால் ற அனுப்பிவைப்போம் என
இறந்த பின்பு சீனாவிலிருந்து சீனக் கல்வியாளர் 671 AC

Page 43
26 a போதிதர்மர் பற்றி
காலப் பகுதியில் இரண்( இந்தியத் துறைமுகமான
வந்தடைந்தார். இந்தியா வ சிறிபோகா (Shribhoga) ந சமஸ்கிருதம் கற்றார். இ பகுதியில் மத்திய ஆசிய நடந்துகொண்டிருந்தன. 1 இடம் தெரியாமல் மறைந்து இந்தியா, மலாயா, சுமாத் கடல் போக்குவரத்தும், வா யி-சிங்(-Tsing) பாரசீகக் க இருந்து சுமாத்திரா சென்று
நாலந்தா பல்கலை மாணவனாக இருந்து கல்வி நூற்றுக்கணக்கான சமஸ்கி சென்றார். இவர் இந்தியா6 என்றும் சீனாவைத் தெய்6 கூறுகிறார். இவர் சமஸ்சி உடையவராக விளங்கின நேசித்தார். சீனாவில் கற்பிக்கப்பட்டது. டாங் ( GSFIGörGoodJ6öI (Shonwen) e சீனமொழியுடன் இை உருவாக்கினார். சீன மன்ன (Deva Putra) seig5Iong மேலோகத்தின் மகன் இந்தியாவில் புத்தமதம் ம உறவும் மறையத் தொடர்
புத்தமதம் கற்க வரு வருகையும் நின்றுவிட்ட தொடங்கிய அரசியல் ஞானிகள் புத்தமத மேை கணக்கானோர் ஆயிர அனைத்தையும் எடுத்துக் கடந்து நேபாளத்திற்கு

ய அற்புதமான விஷயங்கள்
வருடப் பிரயாணத்தின் பின் 5 Lil Sustaig (Tamralipti-Hooghly) நம் வழியில் சுமாத்திராவில் உள்ள ரில் பல மாதங்கள் தங்கியிருந்து வர் பிரயாணம் செய்த காலப் வில் பல அரசியல் மாற்றங்கள் பல புத்த மடாலயங்கள் இருந்த கொண்டிருந்தன. ஈரான்(பேர்சியா) திரா, சீனா இவற்றிற்கிடையிலான த்தகமும் அதிகரிக்கத் தொடங்கின. ப்பலில் குவாங்ருவங்ல் (Kwangtung) பின்பு இந்தியா அடைந்தார்.
க்கழகத்தில் பல வருடங்கள் பி கற்றார். சீனா திரும்பும்போது பல ருத நூல்கள் தன்னுடன் எடுத்துச் oooOJŮ UqoöoIGOoífluUGSg5Fúb (Noble Land) Sla5 GS5Fůb (Divine Land) GIGörgpjúb ருெதத்தில் பெரும் பாண்டித்தியம் னார். அந்த மொழியை மிகவும் சமஸ்கிருதம் சில இடங்களில் Tang) மன்னர் காலத்தில் வாழ்ந்த ான்ற புத்த பிக்கு சமஸ்கிருதத்தைச் னத்து, புதிய சொற்களை எனைச் சமஸ்கிருதத்தில் தேவபுத்திர கடவுளின் மைந்தன் அல்லது ான்ற அர்த்தத்தில் அழைத்தனர். றையத் தொடங்க இந்திய - சீனா கியது.
ம் சீனதேசத்துக் கல்வியாளர்களின் து. 11 A.C நூற்றாண்டிலிருந்து புரட்சிகளால் ஏராளமான புத்த தகள், துறவிகள் எனப் பல்லாயிரக் கணக்கான ஏடுகள், சுவடிகள் கொண்டு இமயமலைச் சாரலைக்
ாளும், திபெத் நாட்டிற்குள்ளும்

Page 44
எஸ். குரு
சென்றுவிட்டனர். இவர்களில் சென்றுவிட்டனர்.
புத்தமதம் சம்பந்தமான வானசாஸ்திரம், கணிதம், மரு ஏடுகளும் அடங்கும். இவைகள் மொழிபெயர்க்கப்பட்டன. இ egyéFai) (Original) g) Görg) lib கூறப்படுகிறது. சீனாவில் சுங்-( Collection) 8,000 gigs/id,6it g திபெத் பூராகவும் இந்திய ஏ( சீனா - திபெத் ஆகிய நாடுகளு துறவிகள் மேதைகளுக்கிடையி சமஸ்கிருத - சீனமொழி அகரா மொழி அகராதியும் 9ஆவது, 1 பகுதியில் உருவாகின. இது ப
அழைக்கப்பட்டது.
சீனாவில் 8-ஆம் நூற்றால் புராதன நூல் ஒன்று கண் சமஸ்கிருதத்தில் இருந்தது. பதிக்கப்பட்டிருந்தது (Printed Fr நூற்றாண்டில் இம்பீரியல் பி ஆரம்பிக்கப்பட்டு துரித கதியில் அக்காலப்பகுதியில் இந்தியாவி இருந்தது என்பது தெரியவில் நுட்பம் சீனாவிலிருந்து ஜெர்ம நூற்றாண்டில் உலகில் பல நா
1000 வருடங்களுக்கு மே தத்துவம், கலை, அறிவியல், இரு நாடுகளும் பரஸ்பரம் சீனாவின் செல்வாக்கு இந் இந்தியாவின் செல்வாக்கு சீன சீனா தான் இந்தியாவிலிருந்து ஞானத்தை சீனா நாட்டிற்கும் வாழ்க்கை முறைக்கும் ஏற்ப சிந்தனைகள், கருத்துக்கள், சீன

பாதம் 1 27
o பெரும்பாலோர் சீனாவிற்குள்
ா ஏடுகளைவிட இவற்றில் த்துவம் சம்பந்தமான ஏராளம் அந்தந்த நாட்டு மொழிகளில் இவற்றின் பல மூலப்பிரதிகள் அங்குப் பேணப்படுவதாகக் BLIT 606).Ilul J555ai) (Sung Pao இருப்பதாகக் கருதப்படுகின்றது. டுகளே உள்ளன. இந்தியா - நக்கிடையிலான கல்வியாளர்கள், ல் ஒத்துழைப்பு நிலவியதினால் தியும், சமஸ்கிருத - திபெத்திய 0ஆவது AC நூற்றாண்டு காலப் D5ITGųLug) (Mahavyutpatti) GTGOT
ண்டைச் சேர்ந்த (A.C) மிகப் டுபிடித்தார்கள். அந்த நூல் அந்த நூல் மர அச்சில் om the Wooden Block). 10-yb ரிண்டிங் கொமிசன் சீனாவில் இத்துறை வளர்ச்சியடைந்தது. பில் எப்படியான அச்சுப்பதிவு லை. அச்சுப்பதிவுத் தொழில் னிக்கு சென்று பின்பு 15-ஆம் டுகளுக்குப் பரவிவிட்டது.
லாக இந்தியாவும் - சீனாவும் வாழ்வியல், விஞ்ஞானம் என பகிர்ந்துகொண்டிருந்தனர். தியாவில் இருந்ததை விட ாவில் அதிகம் பரவியிருந்தது. பெற்றுக்கொண்ட அறிவியல் , மக்களுக்கும், அவர்களின் மாற்றியமைத்தது. புத்தரது ஞானிகளான கொன்பியூசியஸ்,
讓

Page 45
28 a போதிதர்மர் பற்றி
லாகு அவர்களின் கருத்துக் கருத்துக்களில் உபநிடதம் ட
QG)g-6ör (Wuchen) பிரபல்யமாகக் கருதப்பட்ட சீன நூலில் சூஆங்-சேன் செல்லும்போது அவருக்கே களையும் இந்தியா அடை அறிவியல் ஞானத்தையும் அந்த நூலை அதன் ஆசி (Dedication) Gay-Lig/GirGTITsi.
இந்தியாவிற்கும் சீனா பல நூற்றாண்டுகளாகத் து கிழக்கிந்திய கொம்பனி (B ஆதிக்கம் இந்த இரண்டு இந்தியாவிற்குள் அதிக கா சீனாவில் அதிக காலம் நீடி
இந்தியாவும் சீனாவு நட்புறவையும், பரஸ்பர மலரவிட்டு, தொலைந்த அ நாடுகளும் இணைந்து வேண்டும். இரு நாட்டு ம இரு நாட்டுக் கலைத்துறை நட்பும், நல்லுறவும் ஏற்கனே வேண்டும். அது கால இந்நூலாசிரியரின் அபிப்பிர

ய அற்புதமான விஷயங்கள்
களில் பிரதிபலிக்கின்றன. புத்தரது பிரதிபலிப்பதாகக் கூறப்படுகிறது.
எழுதிய 16-ஆம் நூற்றாண்டில் - குரங்கு (Monkey) என்ற அந்த T (Hsung - Tsang) 9055 unit ற்பட்ட திகிலூட்டும் அனுபவங் டந்த பின் அவருக்குக் கிடைத்த மையமாக வைத்து எழுதப்பட்ட ரியர் இந்தியாவிற்குச் சமர்பணம்
விற்கும் இடையில் தொடர்புகள் எண்டிக்கப்பட்ட பின் பிரிட்டிஷ் ritish East Indian Company) uSait நாட்டுக்குள்ளும் புகுந்துவிட்டது. லம் ஆதிக்கம் நீடித்தது. ஆனால் டக்கவில்லை.
ம் ஆதியில் நிலவிய அந்த
நல்லெண்ணத்தையும் மீண்டும் அந்த உறவை மீட்டெடுத்து இரு புதிய சக்தியாகப் பரிணமிக்க க்களையும் இணைக்கக்கூடிய சக்தி ]க்கும், ஊடகங்களுக்கும் உண்டு. வே நிலவியது. அது மீண்டும் மலர த்தின் கட்டாயம் என்பதே ITULDITGylb.

Page 46
அத்தியா
தமிழ்மொழி பே மாபெரும் பு
சீனக் கல்விமானும், பெளத்த துறவியுமான சுவான் FIIIñ1 (Xuan Zang) 596 - 664 CE காலப் பகுதியைச் சேர்ந்த இவர் இந்தியாவில் பத்து வருடம் தங்கியிருந்து புத்த மதத்தை ஆய்வு செய்தார். இந்தியா முழுக்க பிரயாணம் செய்தார். தென்னிந்தியாவில் தமிழ்மொழி பேசும் இடத் திற்குச் சென்றபோது ஒரு மிகப்பெரிய புத்த ஞானியைப் பற்றி அறியக்கூடியதாக இருந்தது எனத் தனது பிரயாணக் குறிப்பில் (Travel Diary) எழுதியிருந்ததாக கிழக்கத்தைய மதங்கள் (Eastern Religions) oIobip நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் குறிப்பிடும் அந்த புத்தஞானி போதிதர்மராகத் தான் இருக்கவேண்டும். போதிதர்மர் தென் இந்தியாவில் கொண்டு ஆண்ட பல்லவ மன்ன இவர் துறவியாகுமுன் இளவரசர
 

யம் 4
சும் இடத்தில் த்த ஞானி
சீனத்துறவி சுவான் சாங்
Xuan Zang
காஞ்சியைத் தலைநகராகக் ரின் வம்சத்தைச் சேர்ந்தவர். க இருந்தவர்.

Page 47
3o a போதிதர்மர் பற்றி
பல்லவரின் கட்டடக்கலை:
பல்லவ மன்னர்கள்
காஞ்சி போன்ற இடங்க பல்லவ மன்னர்களில் ஒ 12-ஆவது நூற்றாண்டின் மிகப் பெரிய இந்து ஆ உள்ள அங்கோரில்
நூற்றாண்டிலிருந்து இந்த (Angkor Wat) GT60T gy60. -gau up 5 Tlf (Temple C சமஸ்கிருதச்சொல் நோஹா (Khmer) சொல்லாக மருவி என்ற ஹமர் சொல்லுடன் Wat) உருவாகியுள்ளது.
 

அற்புதமான விஷயங்கள்
வடித்த சிற்பங்கள் மாமல்லபுரம், ளில் இன்றும் காணப்படுகின்றன. ருவரான 2-ஆவது சூரியவர்மன் ஆரம்பகாலத்தில் உலகத்திலேயே பயம் ஒன்றைக் கம்போடியாவில் நிர்மாணித்தார். 16-ஆவது ஆலயப்பிரதேசம் அங்கோர்வற் ழக்கப்படுகிறது. இதன் பொருள் ty) என்பதாகும். நஹர் என்ற ர் (Nokor) என்ற கம்போடிய ஹமர் ஆலயத்தைக் குறிக்கும் வற் (Wat) G35Fij5) gyšIGg/DITfi Gyb (Angkor

Page 48
எஸ். குருப
15-ம் நூற்றாண்டில் இ பெளத்தர்களினால் (Theravada Bu அதனால் பெளத்தத்தின் சின் அங்கு உண்டு. 1586-இல் அ பெளத்ததுறவியான அன்ரோனிே Magdalena) ““855eboouUb of புலப்படாத முறையில் அமை கட்டிடக்கலை உலகில் வேறு எா
குறிப்பிட்டுள்ளார்.
19ம் நூற்றாண்டின் மத்தியி சென்ற பிரான்ஸ் நாட்டைச் ஆய்வாளர் ஹென்றி மெளஹ Mouhot) GIGöIU6OJň 56og ú6JuUITGOOI **அங்ஹோர் வற்றைப் LUT மைக்கல் அஞ்சலோவின் (Mich சிற்பங்களையும் கிரேக்க I ரோமாபுரியிலும் காணப்படும் கலையைப் புகழ்வார்கள்?? எனக் டுள்ளார்.
பல்லவ மன்னனான சூரிய செய்யக் கட்டிய நினைவாலயம் 6Ioo6OIñi LDoofflé685 (Eleaner Mannikk *சூரிய, சந்திரனின் சுழற்சிக் க0 (Sacred Space) uDodor Luć56lg எனவும், பிறிதொரு மண்ட இடம்பெற்ற இராமர் - இராவணி குருஷேத்திரத்தில் இடம்பெற் சித்தரிக்கப்பட்டுள்ளன எனவும், Solstice) வசந்த காலத்துக்கும் (S 91 நாட்களைக் குறிக்கும் அடை காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்
இந்தியக் கலாச்சாரத்தை, தத் philosophy) தழுவியதே அங்கோ ஹமர் சாம்ராச்சியம் (Khmer உள்ளடக்கியதாகவே இருந்

தம்
ந்த ஆலயம் தேரவாத ddhist) LDIȚsibsmojigJjGg5GiTGITTTGOlg. ானங்கள் அடையாளங்கள் ங்கு சென்ற போத்துக்கேய LUI upd5LooooIII (Antenio Da தாரண மனித அறிவுக்குப் ந்துள்ளது. இது போன்ற
வ்கும் பார்த்ததில்லை?? என்று
சில் அங்கு
சேர்ந்த Ip (Henri க் குறிப்பில் ாராதவர்கள் ael Angelo) நாட்டிலும்,
கட்டிடக் W47
gifty Shi' Henri Mouhot
வர்மன் தன்னை அடக்கம்
என்ற கருத்தும் நிலவுகிறது. (a) என்ற பெண் ஆய்வாளர் விப்பு முறை புனித பிரபஞ்ச ரள் அமைக்கப்பட்டுள்ளது டபத்தில் இலங்காபுரியில் எரது போரும், இந்தியாவில் ற மகாபாரதப் போரும் குளிர் காலத்துக்கும் (Winter pring Equinox) SIGODLŮULL டயாளங்களும் மண்டபத்தில் ΟΠΠή.
gj6.5605 (Indian Culture and ’ (Angkor) கலாச்சாரமாகும். Empire) gjögl - GOL u GMTjö35 Lib திது. அங்கோர்வற்றில்

Page 49
32 a போதிதர்மர் பற்றி
சமஸ்கிருதத்தில் வாசகங் 'பொக்கற்றோர் எனும் கம்ே நுட்பங்கள் பற்றிய விளக் Bokator) செதுக்கப்பட்டள்ள ஆலயங்கள் அங்கே உண் (Polpot) ஆட்சிக் காலத்தில் Rouge) படையினரால் சேதாரத்துக்குள்ளானது.
இவை பல்லவர் காலத்தி கலையையும் எடுத்துக்காட்டு மருத்துவம், வானசாஸ்திரம், கவனம் செலுத்தியவர்கள்.
Ar
 

அற்புதமான விஷயங்கள்
கள் பொறிக்கப்பட்டுள்ளன. பாடிய தற்காப்புக் கலையின் பல 515.56it (Various techniques of ன. விஷ்ணுவுக்கும் சிவாவுக்குமான டு. சர்வாதிகாரி பொல்பொட் (1975 - 1979) gampLDmoI (Khmer அங்கோர்வற் ஆலயம் பெரும்
lன் சிற்பக் கலையையும் கட்டிடக் கிென்றன. அத்துடன் பல்லவர்கள் ஆன்மிகம் போன்ற துறைகளிலும்
gkor Wat

Page 50
அத்தியா
பெண்ணைக் கு பெண்களைப் பெருை
போதிதர்மர் அவர்கள் பெண் ஒரு பெண்ணைத் தன் தியா வழிகாட்டியாகவும் ஏற்று அவ முன்னிலையில் ஞானமடைந்தா ஆசானாக்கி பெண்கள் பற்றிய உலகில் பெண்ணுக்கு அதி உ பெண்களைப் பெருமைப்படுத்திய
போதிதர்மர் என்ற பெயர் வெவ்வேறு விதமாகக் கூறப்படு -gÉ16)a&Sá Bodhidharma, FLD (Po-Taj- Tamo) g. Tillaumbai/GlLDпуб GALDITyfu Glav B-d-d-t-mo, gÜLuíTGO, (Daruma Daishi) 6T60Talib. sITGLD தாமு’ (Dhamu), போதி (B GLInggriGLDITög.T (Bodhi Dharn படுகின்றார்.
பல்லவ வம்சத்தைச் சே இளவரசராக தென் இந்தியாவில் காலப்பகுதியில் வாழ்ந்தவர் எனச் மன்னனின் மூன்றாவது மகனான குறிப்புகளும் கூறுகின்றன. இ பெற்று அரசனாக இருப்பதற். புத்திக்கூர்மையும், அறிவும், உடையவராக விளங்கினார்.

யம் 5
நவாக ஏற்று மப்படுத்திய ஞானி
அடிமை நிலவிய காலத்தில் [ன குருவாகவும் ஆன்மிக ாரது நேரடி சீடராகி அவர் ர். ஒரு பெண்ணைத் தனக்கு
ஒரு விழிப்பை ஏற்படுத்தி உயர் கெளரவம் கொடுத்து
வர்
ர் வெவ்வேறு மொழிகளில் கிறது. தமிழில் போதிதர்மர், ஸ்கிருதத்தில் பூ-ராய்-தாமோ u Glav Tak mor, 6ýluLuL "GOTTLóuLu ய மொழியில் தரும தேசி, r (Tamo) எனவும், சீனாவில் dhi) எனவும், திபெத்தில் ottara) எனவும் அழைக்கப்
ந்த சாடிலி குடும்பத்தில் உள்ள காஞ்சியில் 452 AD சில குறிப்புகளும் கந்தவர்வ இளவரசர் என வேறு சில ாவரசருக்குரிய பயிற்சிகள் ான முழுத் தகமையுடன் பராற்றலும், ஆளுமையும்

Page 51
34 Na போதிதர்மர் பற்றிய
ஆன்மிகத் தேடல்:
போதிதர்மர் அவர்கள் அ நிர்வாகம், குதிரையேற்றம், தற்காப்புக்கலை, ஆன்மிகம் அட்டாங்கயோகாக்கலை ( விளங்கினார். இளமையிே 2-6T6II6).JJII8585 85II600IUULLIII. Nature) sigibli,5IIóo DJGOOIth அறிந்துகொள்ளலாம் என் சுயத்தை உணரலில் (Self - லெளகீக வாழ்வு அர்த்தமற்ற
உலகுக்கு எதிரானவராக உலகத்தைத் துறக்கக் கூ மரணத்துக்கு எதிராகப் ே
போதிதர்மர் கேள்வியும் பதிலு
போதிதர்மர் இளவரசர் குறுக்கிட்டார். **மரணத்தி காப்பாற்ற முடியுமா? மரணத் 35 IůUJIT bgo Qypiququom ? ur உள்ளதென்பதை அறியப் என்னைத் தடுக்காதீர்கள்?? தந்தை ஒரு கணம் ே தடுக்கவில்லை, காரணம் முடியாது. மரணத்திற்கு அ எனக்குத் தேரியாது, நீ அந்த ஆசீர்வாதம், நான் குடும்பப் இளவரசன், அரசருக்குரிய உண்டு, நீ இந்தப் பல்ல உயர்ந்த ஒன்றைத் தெரிவி சாம்ராச்சியத்தையும் விட கேள்வி கேட்பாய் என் மரணத்தைத் தடுக்க முடி வேண்டாம் என்று கூறுகிற துறவியானார்.

அற்புதமான விஷயங்கள்
விெயல், வானசாஸ்திரம், அரச பானையேற்றம், போர்க்கலை, மருத்துவம், அட்டமாசித்தி, பான்ற துறைகளில் சிறந்து ல விழிப்புணர்வும் ஞானமும் ஒருவர் தனது சுயத்தை (Selfவாழ்வின் முடிவல்ல என்பதை பதால் தன்னை அறிதலில், Realization) Sprilésloo II.ii. Sibgs து என்பதால் அவர்
இருக்கவில்லை றவில்லை UITUITLoShoooooo
றுமானார்:
அந்தஸ்தைத் துறந்தார். தந்தை லிருந்து உங்களால் என்னைக் திலிருந்து உங்களால் உங்களைக் ரணத்துக்கு அப்பால் என்ன போகின்றேன், தயவு செய்து என்றார் போதிதர்மர் அவர்கள். பாசித்தார். **உன்னை நான் மரணத்தை என்னால் தடுக்க பால். என்ன உள்ளதென்பதும் உண்மையைத் தேடுவதற்கு என் பிணைப்பால் யோசிக்கின்றேன், நீ அத்தனை தகுதிகளும் உனக்கு சாம்ராச்சியத்தை விட அதி செய்துவிட்டாய், உன் தேடல் உயர்ந்தது. மரணத்தைப் பற்றி நான் எதிர்பார்க்கவில்லை. ாதென்றால் உன்னைத் தடுக்க ப?? என்றார் தந்தை. போதிதர்மர்

Page 52
எஸ். குரு
ஆன்மிகக் குரு:
காஞ்சியில் இளவரசு இருந்தபோது இவருக்கு மணி திடீரெனக் கேள்வி தோன்றி மரணத்தைத் தடுக்கலாமா? மர துக்கு அப்பால் உள்ளது. எ6 இந்த வினாக்களுக்கு விடை ே முற்பட்டார். பல துறவிச அணுகினார் ஆனால் இ6 கேள்வி, கேள்வியாகவே இரு விடை தேடும் வினாவாக இவர் மனதில் வளர்ந்துகொ? கடந்து மரணத்துக்கு அப்பால் மூலம் அறிய பிரகியத்ரா (Pragy அணுகினார். இவர் பெளத்த குருவானவர். ஒருவர் 'தன் இருப்பை (Being), தான் யார்? மரணத்துக்கு அப்பால் உள்ள:ை அறியாதவரை மரணம்தான் மு என்றார். - பிரக்ஜத்ரா,
பெளத்த மதத்தின் 27-ஆ6 ஞானி பிரக்ஞத்ரா (27th Pal வினாவுக்கு விடை அளித்து, சந்தேகங்களைத் தீர்த்து, இவரு தியானமூலம் மனதைக் கடந்து அந்த ஒன்றுமற்ற வெறுமைக்க அறிய வழிகாட்டினார். மனதை நிலையையும் உணர்ந்துகொண் 5irudni (Bodhi Dharma) oroo longi) ஞானம் போதிதர்மா என்றால் சு Awareness) 6I 6öIgDJ GUIT QU56IL Gumó5lgmuni (Bodhitara) oIooIoith (Dharmadeshi) 6165IUG35 g கூறுவோரும் உண்டு. இவர் அழைக்கப்பட்டுள்ளார்

பாதம் 135
FДTпгдѣ
யது, ாணத் ன்ன?
Di Gði
3 6Ꮱ ᎧT
வரது ந்தது. அது ண்டேயிருந்தது. மரணத்தைக் என்ன என்பதைத் தியானம் atara) என்ற பெண் ஞானியை பீடத்தின் 27-ஆவது பிரதான
என்பதை அறிந்தால் ஒருவர் த அறியலாம், ஒருவர் தன்னை டிவு என்று ஏற்கவேண்டிவரும்”
Pragnatara
வது பிரதான குருவான பெண் riarch of Buddhism) Soisg)
தியானம் கற்பித்து, இவரது க்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி து, மனதை வெறுமையாக்கி, ப்பால் மரணத்தை அனுபவித்து க் கடந்து அதற்கப்பால் உள்ள டார். இவரது பெயரைப் போதி றினார். போதி (Bodhi) என்றால் (U6$gliju60orfio (Self Nature Of ாடும். இவரது இயற்பெயர்
சிலர் இது தவறு தருமதேசி }வரது இயற்பெயர் என்று

Page 53
36 Na போதிதர்மர் பற்றிய
பெண்ஞானி முன்னிலையில் 6
இவர் தன் சுயத்தை (Se உணர்ந்துகொண்டார் (Self தியான ஆசான் பெண் ஞான யில் ஞானம் அடைந்தார். இ பணித்தார். பெளத்தம் அங்கு போதிதர்மரைச் சீனா சென் அதன் உப பிரிவான சரஸ்வத் பணித்தார். (மகாஜன ெ பின்பற்றக்கூடிய வழிமுறைக துறவு வாழ்க்கைைையப் பற்ற
போதிதர்மரைச் சீனாவுக் கூறியது "சீனாவில் மக்கை பெளத்தத்தை விளக்கவும். புரிந்துகொண்டால் உலகில் ஒருவர் புரிந்துகொண்டதற்கு ஜனத்தொகையைக் கவன: கூறியிருந்தார்.
போதிதர்மருக்கு முன் அழைப்பில் ஆயிரக்கணக்கான பண்டிதர்கள், சீனா சென் பெளத்த சாசனங்களை, சீனமொழியில் மொழிபெய போதனைகளைக் கற்பித்தன களைக் கிராமம் கிராமமாகச் எல்லாம் ஞானமடையாதவர் சீனா காணவில்லை. போதி எல்லாம் வாசித்து அறிந்த கூறினர், கற்பித்தனர். அ அனுபவமல்ல.
போதிதர்மர் சீனாவில் மக்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினார். சீனாவில் இல துணிச்சல், வீரம், அமைத்

அற்புதமான விஷயங்கள்
நானமடைந்தார்:
f - Nature) அறிந்தார், தன்னை - Realized). போதிதர்மர் தன் யான பிரஜ்னதாரா முன்னிலை இவரைச் சீனா செல்ல ஆசான் தளர்ந்த நிலையில் இருந்தபோது று மஹாஜன பெளத்தத்தையும் தத்துவத்தையும் போதிக்கும்படி பளத்தம் பொதுவாக மக்கள் ளையும் ஹினயான பெளத்தம் யுெம் கூறுகிறது.)
த அனுப்பும்போது அவரது குரு ளக் குழப்பாதபடி மஹாஜன
சீனாவில் மக்கள் இதைப் உள்ள மக்களில் ஐந்து பேரில் தச் சமன்’ என்றார். சீனாவின் த்தில் எடுத்துதான் இப்படிக்
பு சீனாவின் பேரரசர்களின்
பெளத்த அறிஞர்கள், துறவிகள், ாறுள்ளனர். அவர்களில் பலர் ஏடுகளை, புனித நூல்களை, ர்த்து வழங்கியுள்ளார்கள். பலர் ார். பலர் பெளத்த போதனை சென்றே போதித்தனர். இவர்கள் களாவர். ஞானமடைந்தவர்களைச் தர்மருக்கு முன் போனவர்கள் வைகளைதான் போதித்தனர், னைத்தும் அவர்களின் சொந்த
தன் ஞான அனுபவங்களை வேண்டும் என்று அவரது குரு ரது தோற்றம், பார்வை, நேர்மை, , அன்பு, கருணை, தெளிவு

Page 54
எஸ். குழு
இருந்தது. சீன மக்கள் போதிதர்மரால்தான் முடியும் எ6 உழைப்பு, விடாமுயற்சி, சுறு என்றார்.
இதே கருத்தை குருநானக்
சீக்கிய மதம்:
மாநிலத்தில் 8 இம்மதத்தின் உபதேசம் செ இவரது கால பட்டுள்ளது.
புனித நூல் கி என அழைக்க
சீக்கிய மதம் 3 முக்கிய கிறது. *
1. கடவுளின் நாமத்தை அனு 2. கடின உழைப்பு, சுறுசுறுப்ட
ஆதாரங்கள்.
3. தன்னலமற்ற உதவி,
என்பனவற்றைக் கடைப்பி
 
 

UIIg5ub 37 ܐ t
என்பன மக்களை இவர் பக்கம் நோக்கச் செய்தது. மக்கள் முதன் முதலாக ஞானமடைந்தவரைப் பார்த் தார்கள். இவரூடாகக் கெளதம புத்தரைப் பார்த்த Gori. “GBITootb’ (Enlightenment) என்ற சொல்லைக் கேட்டதும் மக்களுக்குள் மின்சாரம் பாய்ந்தது போல் தங்கள் ஐயங்களைத் தீர்க்க எ நம்பினர். போதிதர்மர் கடின சுறுப்பு இவைகளேயே ஞானம்
கும் கூறுகிறார்.
ந்தியாவில் பஞ்சாப் (Punjab) க்கிய மதம் (Sikhism) பிறந்தது.
பிரதான குருவாக இருந்து ய்தவர் குருநானக் (GuruNamak). ம் 1469-1539 எனக் கணிக்கப்
இவரது போதனைகளடங்கிய TQi)ı", 6)DTöğ (Sahip Granth) ப்படுகிறது.
போதனைகளை மையப்படுத்து
தினமும் ஜெபித்தல்.
முயற்சி இவைகள் வாழ்வின்
சேவை, ஈகை, பகிர்தல்
த்து வாழ்தல்.

Page 55
38 a போதிதர்மர் பற்றிய
சீனாவில் பல நூற்றால் நன்கு பரவியிருந்தது. அங் 55glalub (Confucianism) L தத்துவத்தில் மக்கள் சலிப்பை பரவியிருந்தது. பெளத்தம் உண்மை (Truth), மனம், தன் மனதைக் கடத்தல், மர6 மறுபிறப்பு, பிரக்ஞை (con தெளிவாகக் கூறின. ( பெரும்பாலும் மனம் சார் காட்டின. கொன்பியூசிய கோட்பாட்டில், காணாததை
சீனாவில் ஏற்பட்ட முதல் மா
கொன்பியூசியஸ் காலத்தி (Lich Tzu) Gustairp (alsTc அப்போது கொன்பியூசியஸின் கிறிஸ்தவ மிஷனரி தங்கள் ஏழைகளுக்கு உணவு, உை னார்கள். ஆன்மிகம் நிகழுவதாகும், அதனால் அ மதமாற்றமென்பது “உள்ளே நிகழ்வதால் அது “வெள ஆன்மிக மாற்றம் நிகழ் மதமாற்றம் என்பது வேறு.
சீனாவில் ஏற்பட்ட ( இருந்தது. பெளத்தத்தை ம அப்படியான ஒரு மாற்ற கொன்பியூசியசின் கோட்ப செய்துவிட்டது. உலகில் நாடாக மாறிப் பல நூற்ற சீனா சென்றடைந்தார். 30 ஆயிரம் (30,000) பெள இருந்தன. இருபது இலட்

அற்புதமான விஷயங்கள்
டுகளுக்கு முன்பே பெளத்தம் த முதலில் கொன்பியூசியசின் வியிருந்தது. கொன்பியூசியசின் டந்த படியால் பெளத்தம் அங்கு
JFulb (Self), goirLDIT (Soul), 6060T gynggi) (Self - Realization) எத்திற்கு அப்பால் செல்லல், sciousness) போன்றவைகளைத் கான்பியூசியசின் கருத்துக்கள் ந்தவைகளில் அதிகம் அக்கறை சின் தத்துவத்தில், கருத்தில்,
மக்கள் பெளத்தத்தில் கண்டனர்.
ற்றம் மதமாற்றமே:
ல் சீனாவில் லா-சூ (Lao-tzu) வீசு னிகள் சீனாவில் இருந்தார்கள். தத்துவமே மேலோங்கியிருந்தது. மதத்தை சீனாவில் பரப்பினார்கள். ட, இருப்பிடம், கல்வி, வழங்கி ஒருவருக்கு உள்ளே "உள்? து வெளியில் தெரியாது, ஆனால் ** நிகழ்வதல்ல, அது வெளியில் யே? தெரியும். ஒருவருக்குள் வது வேறு, அதே நேரத்தில்
தல் மாற்றம் மதமாற்றமாகவே கேள் இலகுவாக விளங்கினார்கள், மக்களுக்குத் தேவைப்பட்டது. டுகளும் மக்களைச் சலிப்படையச் பெரிய நாடான சீனா பெளத்த ண்டுகளுக்குப் பின்பே போதிதர்மர் அவர் அங்குச் சென்றபோது 5 விகாரைகளும், மடாலயங்களும் ம் (20,0000) பெளத்த துறவிகள்

Page 56
எஸ். கு
இருந்தார்கள். இந்த எண்ணி தொகையில் இது ஐந்து சதவி
இந்தியாவிலிருந்து சீன மதப்பண்டிதர்கள், சமஸ்கிருத கல்விமான்கள், துறவிகள், போ ஆவார்கள். ஞானம் அடை சென்றதில்லை எனலாம். புத்த முதலாவது சீடனாகக் கரு சென்றவர். ஆனால் அவர் எ அமைதியாக காலத்தைக் க மக்களை எதுவும் சென்றடைய சென்பெளத்த குருவுமாவார். மனங்களில் இடம்பிடிக்கவில்ை
சீனாவில் கால் பதித்த
துறவியாக போதிதர்மர்
அடைந்தவரை சீனா தேச எனலாம். இவரது சீனா வி பெரும் தாக்கத்தை ஏற் தேவைப்பட்டதெல்லாம் இன் தன் அனுபவத்தில் தான் மக்களிடம் பகிர்ந்துகொள்ளு தாங்கள் கேள்விப்பட்டவற் அறிந்தவற்றைப் போதிப்பை நிறைந்திருந்தார்கள். உண்டை வர்கள், சுயத்தை உணர்ந்தவர் (Being) அறிந்துகொண்டவர்க களைப் போதனையாகக் கூ
இருக்கவில்ல்ை.
ஞானத்தில் ஆண் - பெண் வே
சீனா ஞானத்தைப் பெற அடைந்த ஞானத்தை விதைச் இடம் தேவைப்பட்டது. போதிதர்மர் அவர்கள் அல்ல, பிரஜ்னதாரா அவர்களே.

ருபாதம் 139
ைேக அப்போதிருந்த சீனமக்கள் தமாகும்.
rா சென்றவர்கள் எல்லாம் ப் பண்டிதர்கள், வித்துவான்கள், தனையாளர்கள், தத்துவவாதிகள் ந்தவர்கள் யாரும் அதுவரை ர் முன்னிலையில் ஞானமடைந்த தப்படும் காசியப்பா அங்கு ந்தவித செயற்பாடும் இல்லாமல் ழித்துவிட்டார். இவரிலிருந்து வில்லை. காசியப்பா முதலாவது ஆனால் இவர் சென் பெளத்த DᎶu).
முதலாவது ஞானம் அடைந்த கருதப்படுகிறார். ஞானம் ம் அதுவரை கண்டதில்லை ஜயம் அங்கு முக்கியமடைந்து படுத்தியது. சீனதேசத்திற்கு னொரு கெளமத புத்தர்தான். அடைந்ததை (ஞானத்தை) ம் ஒருவர் தேவைப்பட்டார். றைக் கூறுபவர்கள், வாசித்து பர்கள் சீனாவில் அப்போது மயை உண்மையாக அடைந்த sait (Self - Nature), go, GOLI ள் தங்கள் நேரடி அனுபவங் ற அப்போது அங்கு யாரும்
ற்றுமை இல்லை:
த் தயாராக இருந்தது. தான் கப் போதிதர்மர் அவர்களுக்கு
சீனாவைத் தெரிவுசெய்தது அவரது வழிகாட்டியான மூவி

Page 57
40) போதிதர்மர் பற்றிய
இதேபோல்தான் (ତ) சேர்ந்த ஞானி திலோ நடந்தது. தான் பெற்ற ( வழங்க சீடர்களைத் ( அவருக்கு ஞானமார்க்கத்து காட்டிய அவரது குருவா ஞானியான தாகினி திலோபாவுக்கு “ஊர் ஊராக திரிந்து ஞானத்தைப் பெறத் உள்ளவரைக் கண்டு பிடி கூறினார். தேடி அலைந்து திபெத் நாட்டைச் சென்ற இந்தியாவிலிருந்து பெளத்த துடனான நிகழ்வே திலே மகான்கள் வெளியேற்றமும் அங்கு மஹாமுத்ரா ஞானத் போன்றே இவரும் இள துறவியானவர்.
போதிதர்மருக்கு தீட்சை
திலோபாவுக்கு தீட்சை ெ
ஞானம் அடைந்த பல போதிதர்மர் அவர்கள் தனக் ஆசானாக, ஒரு பெண்ணை
பெண்களும் ஞானம் அ வெளிப்படுத்துவதற்காகவும், இருப்பதை அறியப்படுத்துவ வழிகாட்டSல் ஆண் துற எனபதறகாகவும, ஆன - இல்லை என்பதற்காகவும் பெண்களுக்குக் கெளரவம் பெண் அடிமை நிலவிய ஆசானாக ஏற்றுக்கொள்ளும்
போதிதர்மரின் சீனாப் பயண
527 AD யில் போதி கடல்மார்க்கமாகவும், தரைப

அற்புதமான விஷயங்கள்
ங்கத்தைச் பாவுக்கும் நானத்தை தடினார். க்கு வழி ன பெண் (Dakini) அலைந்து தகுதியாக
’ எனக் XX திரிந்தவர் జిభ ...& டைந்தார். Thilopa
ம் படிப்படியாக வெளியேறிய ாபா, போதிதர்மர் போன்ற ஆகும். திபெத் சென்ற திலோபா தை விதைத்தார். போதிதர்மர் வரசர் அந்தஸ்தைத் துறந்து
கொடுத்தது ஒரு பெண்ணே! காடுத்ததும் ஒரு பெண்ணே!
ஆண்கள் இருந்தபோதும் ஏன் $கு வழிகாட்டியாக, குருவாக,
தெரிவு செய்தார்?
HOOD LULJä58FG quLJ6Jň856T 6I 6öI Uoo 5 ஞானமடைந்த பெண்ஞானிகள் தற்காகவும், பெண் ஞானிகளின் விகளும் ஞானம் அடையலாம் பெண் வேற்றுமை ஞானத்தில் இருக்கலாம். போதிதர்மர் கொடுத்த மகா மனிதராவார். காலத்தில் பெண்ணைத் தன் பக்குவம் அவருக்கு இருந்தது.
D
ர்ம்ர் தென் இந்தியாவிலிருந்து ார்க்கமாகவும் பிரயாணம் செய்து

Page 58
எஸ். குரு
மலேசியா, சுமாத்திரா, இந் (PalemBang) தாய்லாந்து, விய gaOTIT66) 15 ITGörgy (Nan-Yueh தென்சீனாவில் பேரரசர் 'வூ கொண்டிருந்தார். அவர் வம்சாவளியைச் சேர்ந்தவர்.
போதிதர்மர் சீனா அடை நாடுகளில் எல்லாம் மஹாயன கலையையும் பரவச் செய்தார். தர்மா (Dharma) என்றும் தாே அழைத்தனர். இந்தியாவிலிருந்து நாடுகளுக்கு சென்ற முதல் மன
ஞானி போதிதர்மர், ( ஸ்தானத்தில் வைத்து மக்களா கெளதம புத்தர் வழியில் ெ பிரதான குருவாகவும் (பீடாதி பீடத்தின் முதலாவது பீடா: இவருக்கு முன்பு இருந்த 27 அந்த ஞானிகளையும் மக்
 

பாதம் 1 41
தோனேசியா, பலேம்பாங்க் ட்னாம், கம்போடியா ஊடாக பகுதியில் கால்வைத்தார். JTui” (Wu-Ti) 9 JJEIT6öTG) லியாங் (Liang Dynasty)
புமுன் தான் கடந்து சென்ற பெளத்தததையும், தற்காப்புக் இவரது பெயரைச் சுருக்கி மா (Ta-Mo) என்றும் மக்கள் மதப் பிரதிநிதியாகப் பல றஞானி இவரே.
கெளதமபுத்தருக்கு அடுத்த ல் பார்க்கப்பட்டார். இவர் பளத்த பீடத்தின் 28-ஆவது பதியாகவும்) சென் பெளத்த பதியாகவும் விளங்கினார். பிரதான பீடாதிபதிகளையும் கள் தெரிந்திருக்கவில்லை.

Page 59
42 a போதிதர்மர் பற்ற
போதிதர்மர் மூலம் தான் பீடாதிபதியாகவும் இருந் தெரியவருகிறார். போதித மக்கள் மத்தியில் நிலைக்க போதிதர்மர் அவர் இன்றுவரை கெளதமடத்த ஆனால் இவர் கெளதமட உள்ளடக்கிய புத்தராகிவிட் என்று அழைக்கப்படுகின்ற பொருள் உண்டு.
கொடிய G) 60. லிருந்தும் புயல், சூறாவளி சீற்றங்களிலிருந்தும் உயிர் gFlftal/36fló) (Land Slide) உயிருடன் மீண்டு வந் புயலினதும் (Blizzard) 356fgylb (Avalanche) g மூன்று வருட உயிர் பிரயாணத்தின் பின் தென்
காஞ்சி இராச்சியப் போதிதர்மரது விஜயத் படுத்தியது. போதிதர்ம மன்னன் வூ பெருமகிழ் ஞானியினது கால்கள் : போவதை பெரும் ே ‘g TrTuiù” (Wu Ti) @ தொண்ட்ாற்றிக்கொண்ட மடாலயங்கள் ஏராளம் ந அன்னதானம் வழங்கிக்( சமஸ்கிருதத்தில் இருந்த மொழியில் மாற்றிக்ெ பாடசாலைகள் அமைத் கொண்டிருந்தார். "அரச பெற்ற ஞானி எவ
சந்தித்தவர்கள் எல்லா

ய அற்புதமான விஷயங்கள்
27-ஆவது பிரதான குருவாகவும், 5 ஞானி பிரக்ஞதாரா அவர்கள் மரை வழிநடத்திய அவரது குரு வில்லை.
ளைத் தவிர வேறு எவராலும் ர் அளவுக்கு உயர முடியவில்லை. த்தரைத் தாண்டி பல துறைகளை டார். ஞானம் உள்ளவர்கள் புத்தர் னர். புத்தர் என்றால் ஞானம் என்ற
விலங்குகளி ரி, இயற்கை தப்பி மண் புதையுண்டு தும் பனிப்
பணிச்சரிவு உயிர் தப்பி
ஆபத்தான ா சீனா சென்றடைந்தார்.
) வடஇந்திய அரசர் ஊடாக தை சீன அரசருக்குத் தெரியப் து தென்சீனா வருகையை அறிந்த ச்சி அடைந்தார். ஞானம் பெற்ற 5ன் ஆட்சிப்பிரதேசத்தில் பதியப் றாகக் கருதினார். மன்னர் பளத்த வளர்ச்சிக்காகப் பெரும்; ருந்தார். பெளத்த விகாரைகள், ! ர்மாணித்திருந்தார். பலதுறவிகளுக்கு காண்டிருந்தார். பாலிமொழியில், பெளத்த போதனைகளைச் சீன 5ாண்டிருந்தார். பெளத்த மத புத்த போதனைகள் கற்பித்துக் தன் வாழ்வில் இதுவரை ஞானம் ரயும் சந்தித்ததில்லை’ அவர் பண்டிதர்கள், வித்துவான்கள்,

Page 60
எஸ். குரு
கல்விமான்கள், தாங்கள் வா மதச்சொற்பொழிவாளர்கள், உட களைத் தங்கள் விளக்கத்திற் செய்தவர்களைத்தான். அவ "உண்மையை அறியாதவர் அனுபவிக்காதவர்கள், தங்கள் எதையும் கண்டவர்கள் அல்ல ஆதாரம் காட்ட பிறர் கூறிய உரைப்பவர்களாகத்தான் இருந்: எதையும் உணராதவர்கள்.
தென் சீன எல்லையில் ப அவர்களை வரவேற்கத் தன் ட துறவிகளுடனும் பேரரசர் வூர

பாதம் 1 43
சித்து அறிந்தவற்றைக் கூறும் பநியாசகர்கள், புத்த போதனை கேற்ப அப்படியே பிரசங்கம் பர்கள் அனைவரும் அந்த கள், அந்த "உண்மையை” ர் சொந்த சுய தரிசனத்தில் ர். தங்களுக்குச் சாட்சியாக உண்மைகளைத் தந்திரமாக தார்கள். சொந்த அனுபவத்தில்
மாபெரும் மகான் போதிதர்மர் பரிவாரங்களுடனும் பத்தாயிரம் ாய் ( Wu-Tai) புறப்பட்டார்.

Page 61
அத்த
மதங்கள் பெண்க
LD மதங்கொள்ளாது ம
புத்தர், மஹாவீரர், இ இவர்களது பயணத்தில் ெ உண்டு. துறவறம் பூண்ட ஆகாரம் உண்ணாமல் கடும் உடல் தளர்ந்தநிலையில் இரு (Niranjana) gibsmó)6) pÈŠTITL அலையினால் இழுத்துச் ஆற்றங்கரையிலிருந்த மரத் காப்பாற்றிக் கரையேறினார். சற்று தூரத்தில் ஒரு பெண்ண இவரது காதில் விழுந்தது.
*யாழின் தந்தி இறுக்கம தந்தி தளர்ச்சியாக இரு தந்தி சரியாக இருந்தால் நாம் ஆடலாம், பாடலா
இவரின் வாடிய
அவதானித்த அக்கிராமப் டெ (Sujata) பால்கஞ்சியுடன் (M இவரை நோக்கி ஓடிவரும்ே இசைத்த கிராமியப் பாடல் அக்கஞ்சியைக் பருகியதும் புத்துயிர் பெற்றார். அப்பெ அக்கிராமத்தில் ஒதுக்க ஆவார்.

யாயம் 6
ஸ் கையில் இருந்தால் தங்கள் தங்களாகவே இருக்கும்!
யேசு, திலோபா, போதிதர்மர் பண்களின் ஆன்மிகப் பங்களிப்பு சித்தாத்தர் (புத்தர்) பலநாட்கள் ) விரதமிருந்து நலிந்து, மெலிந்து நந்தார். அச்சமயத்தில் நிரஞ்சனா - இறங்கிய சித்தாத்தர், ஆற்று செல்லப்பட்ட போது, அவர் தின் வேரைப்பிடித்து தன்னைக் அந்த பசுமையான ஆற்றங்கரையில் ரின் ரீங்காரமான கிராமியப்பாட்டு
க இருந்தால் இசைமீட்டாது தால் இசை மீட்டாது இன்னிசை மீட்டிட
fo”
நிலையை ண் சுஜாதா Ik Porridge) பாது அவள் தான் அது. சித்தாத்தர் ண சுஜாதா Jul Louri Siththarthar with Sujata

Page 62
எஸ். குருப
அவர் கல்வி, கேள்வி எதுவுமி உண்மையை அறிய உணவை நிரா செய்தி சித்தாத்தருக்கு (புத்தர்) ச வயதில் துறவறம் பூண்டவர் 36 அவரைச் சுற்றியுள்ள பசுமையைட உணவை நிராகரிக்காமல் மு( கண்கூடாகப் பார்த்தார். பின்பு தனது 36 வயதை அண்மிக்கும்போ கெளதம புத்தரானார். புத்தர் ஞ தெரியாமலோ கயாவில் (Gaya) உ (Uruvilva-Senani) SITITLD5605 Gaffil அவர்களும் ஒரு வழிகாட்டியாகி பெயர் காலப்போக்கில் "சுஜாதா" (
சமண மத மாபெரும் ஞானி இளவரசராக இருந்தபோது மானவர் எனவும் அவருக்கு ஒரு பு இருந்தார் எனவும் கூறப்படுகிறது. இல்லையேல் அவர் அடைந்தி அடைய முடியாமல் இருந்தி( என்பது என் அபிப்பிராயம். இளவரசர், மஹாவீரரும் இ இருவருக்கும் தங்கள் தன்முை (Egotism) நீக்க 12 ஆண்டுகள் ! அரச செளகரியங்கள், அரண்மனை, சூழல், சிறுபிராயத்தில் மனதில் ப கற்றவை, கேள்விப்பட்டவை எ மனதில் பதிந்திருந்தன. அந்த அ அற்றுப்போக அவ்வளவு கால வெறுமையாக்க கிட்டத்தட்ட 12 வி
போதிதர்மரும் இளவரசரே. அ அரண்மனை வாழ்வு, இளவர கெளரவங்கள், வசதிகள், செளக தியானமூலம் நீக்கி மனதை வெறு பெண்ஞானி பிரக்ஞதாராவே. இ மக்கள் அறிந்து கொண்டனர்.

நம் 1 45
ல்லாதவர். ஞானம் அடைய, கரிக்கத் தேவையில்லை என்ற ஜாதாமூலம் கிடைத்தது. 29 வயதில் இதை உணர்ந்தார்.
பார்த்தார். அவை எதுவும் ழமையாக வாழ்வதையும் முயற்சியற்ற முயற்சியினால் து சித்தாத்தர் ஞானமடைந்து ானமடைவதற்கு தெரிந்தோ ள்ள உறுவில்வ - செனானி த பெண் சுஜாதா (Sujatha) யுள்ளார். அக்கிராமத்தின் என மாற்றமடைந்துவிட்டது.
மஹாவீரர் திருமண தல்வனும் மனைவி ருப்பதை ருக்கலாம் புத்தரும் ளவரசா, னைப்பை பிடித்தன. και
வசதிகள், குடும்பம், சுற்றுச் கிந்துவிட்ட அரச அந்தஸ்து, ல்லாம் பல அடுக்குகளாக டுக்குகள் மனதில் இருந்து பகள் எடுத்தன. மனதை ருடங்கள் தேவைப்பட்டன.
வரது மனதில் பதிந்திருந்த FIT அநதஸ்து, அவரது ரியங்கள் அனைத்தையும் மையாக்க வழிகாட்டியவர் வர் மூலம் போதிதர்மரை

Page 63
46 a போதிதர்மர் பற்றி
இயேசு அவர்கள்
வயதில் போதனைகள் செ ஆரம்பித்தார். இவர் ஒரு ச1 ரண எளிமையான குடும்பத் பிறந்தவர். கல்வி அ இல்லாத குடும்பப் பின்ன இவருக்கு தன்முனைப் (Egotism) (5.d3 LD60T வெறுமையாக்க 30 நாட்க போதுமானதாக இருந்த காரணம் பல அடுக்குகள் ஆ புத்தருக்கு கிராமப் பெண் கபடமற்ற இயேசு நாதரி0 மக்டலீனினால் வெளி உல தூய்மையாக நோக்கத் த கொடுத்த ஆகாரத்தை புத்த சீடர்கள் சிலர் தூய்மையாக புத்தர், மகாவீரர் போன் புனிதமானவர்கள், கள்ளம் பெற்றவர்கள். அவர்கள்
அதனால் வித்தியாசங்கள் களுக்கு உலகில் உள்ள அ
தந்திரா தத்துவத்தை ஒரு பெண் ஞானிதான். இந்துமதத்தில் தோன்றிய கூறியதாக வாசித்த ஞாப பெண் ரிஷிகளும் இந்து காலப்பீேர்க்கில் ஆண் ே மறைத்து விட்டது.
தந்திரா ஞானி திலே வங்காளப் பகுதியில் வாழ் ஆன்மீக வழிகாட்டியாக பெண்ஞானியே. அவர சென்றடைந்து "மகாமுத்தி போதிதர்மருக்கு பெண்

ப அற்புதமான விஷயங்கள்
வுெ
து. * அவரது மனதில் பதியவில்லை. தூய சுஜாதா உதவியது போல் கள்ளம் எ துாய்மை கிராமப் பெண் மேரி குக்குத் தெரியவந்தது. சில சீடர்கள் வறினார்கள். அதேபோல் சுஜாதா ர் பெற்றுக் கொண்டதால் புத்தரின் நோக்கத் தவறினார்கள். இயேசு, றோர்கள் கருணையானவர்கள், கபடமற்ற வெறுமை மனதைப் “g?QU56ODUD” UTGOI GJửa56ir (oneness) ரிற்கு அப்பாற்பட்டவர்கள். அவர் த்தனை மக்களும் ஒன்றே.
ஹாறா முனிவருக்கு போதித்ததும் சுவாமி விவேகானந்தர் அவர்கள் முதல் ஞானியும் பெண் என்று 5ம் உண்டு. பெண் ஞானிகளும், மதத்தில் நிறைந்து இருந்தனர். லாதிக்கம் தந்திரமாக அவர்களை
ாபா ஞானியாகுமுன் இளவரசராக து வந்தவர். (988 -1069 CE) இவரது இருந்தவர் தக்கினி (Dakini) என்ற ஆலோசனையில் திபெத்தைச் " வை அங்கு அறிமுகப்படுத்தினார். ஞானி பிரக்ஞதாரா ஆன்மிக

Page 64
எஸ். குருபா
வழிகாட்டியாக இருந்தது போல தக்கினி (Dakini) ஆன்மிக வழிகா
றாபியா ஆல்அத்வியா (Rabiah
றாபியா என்னும் பெண்ம6 (Sufi) மதத்தின் முதலாவது மறை இவரது காலம் 717 - 801 CE ஆகு மதத்திலிருந்து தோன்றிய ஒரு கூறலாம் என்பது என் அபிப்பிர ஈராக்கில் (Iraq) உள்ள பஸ்ரா ( ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். ஞானம் எதுவுமில்லாதவர், ஆரம்ப கூடப் பெறாதவர். இவர் அடிமையாக விற்கப்பட்டார். வித்தியாசமானவராக இருந்தா செய்கைகளில் விழிப்புணர்வும் இருப்பதை அவதானித்த எஜமானி றாபியா அடிமையாக இருக்கும்பே இப் பெண்ணுக்கு என்ன நடந்த குடிகொண்டுவிட்டதா? என யோகி
அடிமையாக வைத்திருந்து வே முதலாளி றாபியாவை விடுதலை
இவரில் இருந்த மாற்றத்தை கொள்ள முடியாத ஆண் சமூகம் ெ “சூனியக்காரி”, “பெண் பேய்" என தொடர்ந்தும் தான் உணர்ந்த உண் றாபியா ‘நரகஒோகத்திற்கு பயந் புண்ணிய லோகத்தை அடைவத இரண்டுமே சுயநலம் தான் என்றார் எதிர்பார்ப்புடனோ, சுயநலத்துடே ளாது, எதுவித தூண்டுதலும் இல் இல்லாமல், எதுவித நோக்கமு தொழவேண்டும்" என போதனை
இவரது போதனையால் அ மதப்பிரச்சாரகர்கள் இவருடன் வ

47 سےر ___________tbظ
திலோபாவுக்கு பெண்ஞானி ட்டியாக இருந்தார்.
Aladawiya)
ணியே சூஃபி ஞானியாவார். ம். இஸ்லாமிய பிரிவு என்று ாயம். றாபியா Basra) நகரில் கல்வி, கேள்வி பக் கல்வியைக்
சிறுமியாக இருந்தபோது ஏனைய அடிமைகளைவிட ர். இவரது பேச்சுக்கள், , தெளிவும், மாற்றமும், ற்கு சற்று அச்சம் ஏற்பட்டது. ாது ஞானமடைந்துவிட்டார். து? இப்பெண்ணில் பிசாசு சித்தார் எஜமான். தொடர்ந்து லைவாங்கப் பயந்த அந்த செய்துவிட்டார்.
யும் ஞானத்தையும் புரிந்து பழமை போலவே இவரையும் ன்று கூறியது. ஆனால் இவர் மையை உரைத்தார். ஞானி து கடவுளை தொழாதீர்கள், ற்காக தொழாதீர்கள், இந்த . எந்தக் குறிக்கோளுடனோ, னா தொழுகை மேற்கொள் லாமல், எதுவித காரணமும் ம் இல்லாமல் கடவுளை செய்தார்.
சமடைந்த கல்விமான்கள், வாதித்தனர். கல்வி கற்காத

Page 65

அற்புதமான விஷயங்கள்
மும் ஆண் மேலாதிக்கத்தின் .டல்களுக்கும் முகம் கொடுத்துக் இன்னல்களுக்கு மத்தியில் தன் இருந்தார். நரகலோகத்தை புண்ணியலோகத்தை முன்வைத்து கு முன் இவர் பிரகாசமாக ஒளி
து உன்னை வணங்கினால் ல் எரித்து விடு,
உன்னை வணங்கினால் ந்து என்னைத் துரத்திவிடு, ண்டுமென்பதற்காக வணங்கினால்
து படரவிடாமல் இருந்து விடு*
ரலில் சுழன்று, சுழன்று வேகமாக தங்கள் மனதைக் கடந்து செல்லும் வர்கள். உலக அதிசயங்களில் ாள "தாஜ்மஹாலை" வடிவமைத்
உடல் இயக்கத்தை தியானம் எனக் சொற்பொழிவுகளிலும் (Sufism) றை கொள்வதில்லை. இவர்கள் Dச் செயற்பாடுகளிலும் அக்கறை வீகத்தைக் காண்பவர்கள் அவர்கள். நூலின் பெயர் நூல்கள் எல்லாம் setb (The Book of The Books). த்தைகளும் இல்லை. உலகிலே எந்த ஒரு எழுத்தோ அல்லது எந்த நூல் இதுதான்.
வெள்ளை வெற்றுத்தாள்கள் இதைப் பல நூற்றாண்டுகளாக ஒரு நற்கடுத்த ஞானிக்கு பொக்கிஷம்

Page 66
எஸ். குரு
போல் கைமாற்றப்பட்டுக் கொ மரியாதையுடன் பாதுகாக்கப்படு
எல்லாம் அடங்கிய நூல் மி இதைப் படிக்க முடியுமா வெளியீட்டாளரும் முன்வர வார்த்தைகள் இல்லை. அது ஒரு மட்டுமே.
மனித மனம் வெள்ளை எழுதப்பட்ட வார்த்தைகளைத்தா எண்ணங்களைத்தான் சொற்க எழுதப்படுகிறது. எண்ணங்கள் எ எல்லோரும் நூல்கள் எல் விடுகிறோம். அதாவது 'ஒன்று
தான் “கடவுளின் நிலை? என்கிற
கடவுள் ஆணா அல்லது ( இல்லாமல் ஒன்றுமற்ற உயிர்த்த கொண்டு இருப்பதே இதன் 6 அபிப்பிராயம். உலகில் உள்ள Golago6oLD6puL (Non- Self) G5Té6
பெண் - ஆண் விழிப்புணர்வு:
ஓர் ஆணின் விழிப்புணர்வு
பெண்மையின் குணங்கள் மிகு பெரியவர்கள், மகாத்மாக்கள், பெருமதிப்புக் கொடுக்கும் உன் பெண்ணின் குண்ங்கள்தான். இரா இவர்கள் பெண்மையின் குணங் அந்தப் பெண்மை அவர்களு வணக்கத்துக்கும் வழிபாட்டிற்கும் நிலையை அடைய அவர்கள் L வேண்டியிருந்தது.
அன்பு, பொறுமை, மென்ன சாந்தம், அமைதி, காருண்யம், ந

ாதம் 29
ண்டிருக்கிறது. இந்நூல் மிகுந்த கிறது.
5வும் முக்கியத்துவம் வாய்ந்தது. ? இதை அச்சிட எந்த வில்லை. காரணம் அதில் வெறும் வெற்றுத்தாள் புத்தகம்
த்தாளில் கறுப்பு மையால் ன் புரிந்துகொள்ளும். காரணம் ளர்க, வசனங்களாக தாளில் ல்லாம் மறைந்த பிறகு நாங்கள் லாம் அடங்கிய நூலாகி? ம் அற்ற நிலை? அந்த நிலை து சூஃபி மதம்.
பெண்ணா? அப்படி எதுவும் ன்மையாக (Being) இயங்கிக் விளக்கமாகிறது என்பது என் அனைத்து மதங்களும் அந்த த்ெதான் செல்கின்றன.
அதிகரிக்கும்போது அவரிடம் தியாகின்றன. மகான்கள்,
ஞானிகள் என்று நாம் னதமானவர்களின் குணங்கள் மர், புத்தர், மஹாவீரர், இயேசு களால் மேலோங்கியவர்கள். நக்குள் மேலோங்கியதால் உரியவர்களாகிறார்கள். அந்த ல பரிமாணங்களை தாண்ட
ம, கருணை, பரிவு, பாசம், ம்பகத்தன்மை, நீதி, நியாயம்,

Page 67
போதிதர்மர் பற்றிய
நேர்மை இவைகள் பொதுவா இக்குணங்களை அடைய ஆ ஈடுபடுகிறார்கள். மனோதத் பெற்றும் பாாக்கிறார்கள், ெ என்று தங்கள் மனதில் பெண் தாங்கள் அடைய தங்களை அ நூற்றாண்டுகளாக ஈடுபடுகி மென்மை, அன்பு, கருை பலவீனங்கள் என்ற கருத்தை மனதில் உருவேற்றி வை: காணப்படும் பெண்ணின் இ கருணை இவைகளை 6 மிஞ்சுவது அரக்க குணங்க உலகை ஆளுகிறது, யுத்தத்ை
மனித இனத்தை தலை பரிணாம வளர்ச்சியில் ட காட்டுகின்றன. மனித இனப் பதிலாக அரசு பெருமைப்பட தங்கப்பதக்கம், பதவிஉயர்வு வழங்குகிறது. இறந்த தொகை
பெருமைப்பட்டுக் கொள்கிற
உலகில் தலைமைப் பொறுப்புகளில், ஆட்சிப் ெ இருந்தால் போர் அதிகள் தளபதிகளாக, பொலிஸ்மா : அநாவசியமான துப்பாக்கிச் குறிக்கோளாகும்போது அது ஆயுதங்களை ஆதரிக்காது, சுற்றாது.
ஆண் ஆதிக்க சமுதாய உருவாக்குகிறான். அவைக என எதிர்பார்க்கிறான். பெண் என்று கூறியவன் ஆண் 9Lo-OOLD60) U அமுல்படுத்திய

அற்புதமான விஷயங்கள்
பெண்களின் குணங்கள் ஆகும். ண்கள் பலவிதமான பயிற்சியில் துவ டாக்டரிடம் ஆலோசனை தய்வ வழிபாடு, பூசை, விரதம் களின் பொதுவான குணங்களை றியாமலே அந்த முயற்சியில் பல )ார்கள். ஆனால் பெண்களின் ன, இவைகளை பெண்களின் ஆண்கள் தந்திரமாக பெண்களின் திருக்கிறார்கள். ஆண்களில் யல்பான குணங்களான அன்பு, tடுத்துவிட்டால் ஆண்களிடம் ள்தான். அந்த ஆண்குணங்கள் தை ஆண்குணம் தீர்மானிக்கிறது.
குணிய வைக்கும் வலிமை இது. பின்தங்கியிருப்பதையே இவை ம் வெட்கப்பட வேண்டியதிற்குப் ட்டு அழிவில் ஈடுபட்டவர்களுக்கு , உயர்விருதுகள், கெளரவங்கள் யைப் பார்த்து, அழிவைப் பார்த்து TTBGT.
பொறுப்புகளில், நிர்வாகப் ாறுப்புகளில், பெண்கள் அதிகம் வில் இருக்காது. இராணுவத் அதிபர்களாக பெண்கள் இருந்தால் சூடுகள் இடம் பெறாது. அன்பு பாருக்கு முடிவெடுக்காது, அணு இறப்பை மையமாகக் கொண்டு
ம் இது, ஆண் விதிமுறைகளை )ள பெண்கள் பின்பற்ற வேண்டும் னை கணவனின் சிதையில் குதி
மிகக் கொடூரமான பெண்
ருந்தான்.

Page 68
எஸ். கு(
மென்மையான பெண்ணு தைரியம் இருந்திருக்கிறது. அ அவளிடம் அதற்கே உரிய பல உருவாக்குவது ஆண்கள். பெண்கள்தான். தன் கணவ6 இழந்தாள், தன் சுயமரியாதை உடல்ரீதியான, பெரும் ப முற்றுகையிடப்பட்ட நகரத்ை தாக்குதலுக்கு உள்ளாவது பெண் விதத்திலும் போருடன் ெ பெண்மையின் குணங்களுக்( வேண்டும். இந்த முழு உலக உடையதாய் மாறினால் பே கருணைமிக்க உலகம் கிை பெண்கள் கையில் இருந்தால் மலர்ந்து விடும், போர்கள் தான கருணையும் மேலோங்கிய உல பெண்கள் கையில் இருந்த மோதல்கள், பூசல்கள், மதக் (
இருந்து உலகம் தப்பிவிடும்.
உலகில் அமைதி நிலவ தாய்ை
அரசியலும், மதங்களும் இராச்சியமும் ஆண்கள் மயப உருவாக்கிய சமுதாயத்தில் கொள்கிறாள். புதிய மண்ணில் மலரத்தயாராக இல்லை, ஆ உடனே மலர்கிறாள். பெண்கள் மதகுருவாக இருப்பதற்கான தன் வழங்கியுள்ளது. ஆனால் ஆ6 தால் அவர்கள் அதற்கான பயி
பெண்ணின் வாழ்வே கொண்டது. அவளிடமிருந்து வேண்டும். ஆனால் ஆண்கள் தாண்ட வேண்டியிருக்கும் ஆண்களைவிட பெண் ஞானி

க்கு சிதையில் குதிக்கும் அந்த ன்புக்கும், கருணைக்கும் உரிய மும் இருந்திருக்கிறது. போர்களை ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் னை இழந்தாள், குழந்தைகளை யை இழந்தாள், உளரீதியான, ாதிப்புக்குள்ளானாள். போரில் த வென்றுவிட்டால் முதலில் ண்கள்தான். ஆனால் பெண் எந்த தொடர்பு உள்ளவள் அல்ல. கு பெரும் மரியாதை செலுத்த மும் பெண்மைக் குணங்களை ார்கள் மறையும். அன்பான, டக்கும். அனைத்துலகமும் நாடுகள் அனைத்தும் நல்லரசாக ாகவே மறைந்துவிடும் அன்பும், கமாகிவிடும். மத அமைப்புகள் ால் உலகில் மதப் போர்கள், கொலைகள் போன்றவைகளில்
LD LD6DDT (3a)Haßbr(6nib:
மார்க்கங்களும், கடவுளின் )ாகத்தான் இருக்கிறது. ஆண் பெண் தன்னை இணைத்துக் புதிதாக நடப்பட்ட செடி கூட னால் இவள் புதிய மண்ணில் அனைத்து மதங்களிலும் பிரதம எமையை இயற்கை அவர்களுக்கு ண்களுக்கு அத்தன்மை இல்லாத ற்சியைப் பெற்றிட வேண்டும்.
அன்பை அடிப்படையாகக் ஆண் இதைக் கற்றுக்கொள்ள அதை அடைய பல படிகளைத் அதனால்தான் உலகில் கள், பெண் மகான்கள், பெண்

Page 69
52 Na போதிதர்மர் பற்றிய
ரிஷிகள், பெண் முனிவர்கள் இருந்தார்கள். ஆண் மேலா மறைத்து விட்டது. இதே முற்காலத்தில் ஆண் சமூகம் விஞ்ஞானிகள் பயத்தின்
பிடிப்புக்களை தங்கள் தந்ை கிறார்கள். சிலர் தங்கள் ெ பாவித்திருக்கிறார்கள். பல உலகத்துக்கே தெரியாமல் ம
உதாரணம்:
முற்கால (ancient) எகிட் விஞ்ஞானிகளாகவும் டாக்ட அப்பெண்களின் வரலாற்றை எழுதாமல் அப்பெண்களை ஆவணப்படுத்தியதாக The நூல் கூறுகிறது.
அ. எகிப்தில் வாழ்ந்த பெே 370-415) நட்சத்திரங்கள் நிலைகளை அளக்கும் including plane astro மேலாதிக்கத்தின் விமர்சி இவர் காலப்போக்கில் விட்டார்.
gy g|LIT (Ada Countess of இங்கிலாந்தில் வாழ்ந்த6 கருவியை வடிவமைத்த இக்கருவி அமைந்தது இவரே முதலாவது com இவர் தனது ஆய்வை மேலாதிக்கத்தால் தடுக் 6TCupg5 605 (initial) பாவித்தார். இந்தப் தெரியாத விஞ்ஞானிய 56.65i Lord Byron -

அற்புதமான விஷயங்கள்
, பெண் யோகிகள் அதிகளவில் திக்கம் பெண் மெய்ஞானிகளை போல் பெண் விஞ்ஞானிகளை ஏற்றுக்கொள்ளவில்லை. பெண் காரணமாக தங்கள் கண்டு தயின் பெயரில் வெளியிட்டிருக் பயரின் முதல் எழுத்தை மாத்திரம் பெண் விஞ்ஞானிகள் வெளி
றைந்துவிட்டார்கள்.
தில், கிரேக்கத்தில் பல பெண்கள் டர்களாகவும் இருந்திருக்கிறார்கள். ) எழுதிய ஆண்கள் உண்மையை
விமர்சித்து இழிவுபடுத்தி எழுதி Usborne Book of Scientists 6Tailso
öI 6ứì6565 TGofìurraöI Hypatia (A.D. , கிரகங்கள், சூரியன் இவைகளின் 35(56560)GIT (Scientific Instruments abe) கண்டுபிடித்தார். ஆண் னத்திற்கு உள்ளானது மட்டுமல்ல, படிப்படியாக மறைக்கப்பட்டும்
lovelae (1815-1852) காலப்பகுதியில் ார். இவர் Calculator போன்ற ஒரு Ti. Computer-dig5 (p6ör G360TITLquLunTags எனலாம். அதுமாத்திரம் அல்ல, puter programmer 6TøörpJub grsp6vntlb. வெளியிட முன்வந்தபோது ஆண் ப்பட்டதால் தனது பெயரின் முதல் ாத்திரம் தனது வெளியீடடில் பெண் விஞ்ஞானி உலகத்துக்குத் க மறைக்கப்பட்டுவிட்டார். அவர்
னது மகள் என அறியப்படுகிறது.

Page 70
எஸ். கு(
இ.
Russia-வைச் சேர்ந்த பெ கணித மேதை. இவர் A சேர்ந்தவர். இவர் ஜேர் குடியேறியவர். அந்நகரி கல்வி கற்கச் சென்றபோ அனுமதி மறுக்கப்பட்டது தனிப்பட்டமுறையில் ஆ Gottingen University-g)6iv கலாநிதிப்பட்டம் பெற்ற பல்கலைக்கழகமும் முன்வரவில்லை. இறுதி Stockholm, Sweden gy6. வழங்கியது.
GLDf. 3.f (Marie Curie) egy தாண்டியபின் 1903-இல் இரசாயனவியலுக்குமாக இ Prize) Luffs, Guibo) மேலாதிக்கத்தை தகர்த்திய விஞ்ஞானியென இவரை பிரபல்யமான பல்கலைக் [535f26JGřTGMT Sorbonne Univ பேராசிரியரும் இவரே.
நாட்டின் பிரதமர்களாக பெ ஆசியாதான். இ’ இகரத் இலங்கை, இந்தியா, இஸ் ஐரோப்பாவிலுள்ள இங்கில இவர்கள் அனைவருக்குப் சேர்ந்த திருமதி பெரோன் பிரதமராக வரும் வாய மேலாதிக்கச் சூழ்ச்சியா முடியவில்லை.
பிரித்தானியப் படைகளை விடுதலைக்காகப் போராடி Arc) என்ற இளம் பெல

5UIIgstb 153
oTGOOTITGOT Sophia Krukovsky (5 D. 1850-1891 காலப்பகுதியைச் மனியிலுள்ள Heidelberg நகரில் b உள்ள பல்கலைக்கழகத்திற்கு து பெண் என்ற காரணத்தால் . அதனால் பிரத்தியேகமாக பூய்வு மேற்கொண்டு 1874-இல் தனது ஆய்வைச் சமர்ப்பித்து ார் ஆனால் அவருக்கு எந்தப் தவி நியமனம் வழங்க uSci) 1884-ggi) University of பருக்குப் பேராசிரியர் பதவி
ம்மையாருக்கு பல தடைகளைத் பெளதிகவியலுக்கும் 1911-இல் ரண்டு தடவை நோபல் (Nobel விஞ்ஞான உலகில் ஆண் முதலாவது அதியுயர் பெண் உலகிலுள்ள கழகங்களில் ஒன்றான Paris ersity-யில் முதலாவது பெண்
ண்களை முன்னிலைப்படுத்தியது தில் ஆரம்பிக்கும் நாடுகளான வேல் இவற்றைத் தொடர்ந்து ாந்திலும் அம்மாற்றம் நடந்தது.
முன்பே ஆர்ஜன்ரீனாவைச் அவர்கள் உலகின் முதல் பெண் ப்பு இருந்தபோதும் ஆண் ல் அவர் அதை அடைய
எதிர்த்து பிரான்சு நாட்டின் ஜோன் ஒவ் ஆர்க் (Joan of ா வீராங்கனை ஆண் மாறு

Page 71
போதிதர்மர் பற்றிய அற் ܢ 54
வேடத்தில் போராடி 14.05 வயதில் எதிர்ப்படைகளினால் "சாத்தான்', 'சூனியக்காரி
உயிருடன் தீயிட்டுக் கொல்ல
இது விடுதலைக்கு எதிரான எதிரானதல்ல, இது பெ0 கொடூரமான வன்முறையாகு உலகம் வலுவேகமாக முன்ே நாகரிகத்தில் மாற்றங்கள் ஏ ஆண் மேலாதிக்கத்தின் வன்முறையை இன்றும் பென்
ஒரு தகவல்:
சுதந்திர இந்தியாவின் முதல் p(TGil egy6).Iris Gir (Renuka Rao) கன்னிப்பேச்சில் பாராளுமன்றத்தி "பெண்களுக்கான ஒதுக்கீட்டை கிறேன், ஏனெனில் அது பெண்கள் இழுக்கு." பின்பு அவர் தனது ( நம்பினோம் கிடைத்தது ஏமாற்ற
ஒரு செய்தி:
2008-இல் அமெரிக்காவி அமெரிக்க ஜனாதிபதி வேட்ட நடைபெற்றபோது அக்கட்சிக்கு ஒஸ்மான் ஒபாமாவும் (O! ஜனாதிபதியின் மனைவி ஹிலார போட்டி போட்டார்கள். உட் வேட்பாளராகி இறுதியில் 0 தேர்தலில் வெற்றி பெற்று அெ
உட்கட்சி வேட்பாளராக உட்கட்சித்தேர்வில் தோல் போகும்போது தனது தேர்தல் மல்க 'ஆண் சமூகம் என்னை வேலை செய்கிறது. ஒரு டெ

தமான விஷயங்கள்
1431-இல் தனது 19-ஆவது கைது செய்யப்பட்டு பிசாசு", ான குற்றம் சாட்டப்பட்டு ப்பட்டார்.
öooo, S5 Joan of Arc-ö(5 ணகளுக்கு எதிரான மிகக் ம். அறிவியல் வளர்ச்சியில் னறிக்கொண்டு சென்றாலும், )பட்டுக் கொண்டிருந்தாலும்
சதியை, சூழ்ச்சியை, எகள் சந்திக்க வேண்டியுள்ளது.
பெண் மந்திரியான றேணுகா 1947-ஆம் ஆண்டு தனது Gல் இவ்வாறு குறிப்பிட்டார். நான் வன்மையாக எதிர்க் ரின் திறமைக்கும் ஆற்றலுக்கும் இறுதிக் காலத்தில் "ஆண்களை ம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
0 ஜனநாயகக் கட்சிக்குள் ாளர் தேர்வுக்கான தேர்தல் ள் இறுதி வேட்பாளர்களாக man Obama) (typ 6ör6öTTGir 66flairugjub (Hilary Clinton) ட்சித்தெரிவில் ஒபாமா கட்சி .11.2008-இல் ஜனாதிபதித் ரிக்க ஜனாதிபதியானார்.
நின்ற ஹிலாறி கிளின்ரன் பியைத் தழுவிக்கொண்டு பிரச்சாரத்தின்போது கண்ணிர் தோற்கடிக்க இரகசியமாக ண் ஜனாதிபதியாக வருவதை

Page 72
எஸ். (5CIE
அவர்கள் விரும்பவில்லை. மு ஆண்கள், நான் ஜனாதிபதியான முப்படைத் தளபதியாக (com உத்தரவுகளைப்பெற ஆண்கள் (
பாராட்டுதல்களில் ஆண் - பெண்
ஆணை முதன்மைப்படுத் முற்காலத்தில் மறைத்துக் கொண் காலமாக கைக்கொள்ளப்பட்டே நடந்த மாபெரும் இழப்புக்களி தங்கள் திறமைகளை வெளிக்( மட்டுப்படுத்தப்பட்ட பாராட்ட வெற்றியை மனித குலத்தின் ே அளிக்கப்படுகின்றன.
ஒரு நிகழ்வு:
2002-ஆம் ஆண்டு அமெரிக் நகரில் குளிர்கால ஒலிம்பிக் (Wi போட்டியில் கனேடிய பெண்க Women's Hockey Team) (pg56 எடுத்தது. அதே நேரத்தில் ஆன Team தங்கப்பதக்கம் எடுத்தது. ஆண் அணியின் தங்கப் முக்கியத்துவம் கொடுக்கப்பட் முக்கியத்துவம் அடையவில்லை போது விமான நிலைய வரவேற். தெரிந்தது.
2006-ஆம்சஆண்டு குளிர்க போட்டி இத்தாலியில் உள்ள Canadian Women's Hockey T. பெறறது. ஆண் அணி எந்தப் வில்லை. தொலைக்காட்சி, வா( 2002-ஆம் ஆண்டு ஆண்கள் அன பற்றியே புகழாரம் சூட்டிக்கொ தங்கப்பதக்கம் பெற்ற பெண்

UIrg5th 1 55
ப்படைத் தளபதிகள் எல்லாம் ால் நான் ஒரு பெண் பிரதம mader in chief) Gd5(TG) digilb விரும்பமாட்டார்கள்’ என்றார்.
ண் பேதம்:
த பெண் தன் திறமைகளை ாடாள். இது பல நூற்றாண்டு வருகிறது. மனித சரித்திரத்தில் ல் இதுவும் ஒன்று. பெண்கள் கொண்டுவந்த போதெல்லாம் ாகத்தான் இருக்கிறது. ஆணின் வெற்றிபோல் பாராட்டுதல்கள்
distashai) go Gitat Sault Lake city nter Olympics) 660)6TuLIT GL Git Go@ADITj 6) gyGOo? (Canadian ல்முறையாகத் தங்கப்பதக்கம் ioT35Git gyGOoîuqub (Men's Hockey கனேடிய ஊடகங்களில் (Media) பதக்கத்துக்குத்தான் அதிக டது. பெண் அணி அதிக 0. கனடாவுக்குத் திரும்பிய பிலும் வரவேற்பில் வித்தியாசம்
ால ஒலிம்பிக் விளையாட்டுப் Turin நகரில் இடம்பெற்றது. }am மீண்டும் தங்கப்பதக்கம்
பதக்கமும் பெற்றுக்கொள்ள னொலி, பத்திரிகைகள் எல்லாம் ரி பெற்ற தங்கப் பதக்கத்தைப் ண்டு இருந்தார்கள். மீண்டும் அணிக்கு அதிக முக்கியத்துவம்

Page 73
56 sெ போதிதர்மர் பற்றிய அறி
கொடுக்கவில்லை. அந்த Winter Curling Team 5.ii.5l illug,55lb GTG புகழாரம் சூட்டின.
பெண்ணின் வெற்றிக்குக் ( படுகிறது. ஆண்களிற்கு ஏதாவ சூட்டப்படுகிறது.
மத அமைப்புகளின் நுட்பமான
ஒரு காலத்தில் மத அமை உள்ள, வீரம் உள்ள பெண்களை மாத்திரமல்லாமல் பெண்கள் கொலை செய்யப்பட்ட பெண் கொண்டவர்களாகவே இருந்த எதிரானதல்ல, பெண்களுக்கு எ; களும் ஆண் ஆதிக்கத்தில்தான் அப்படித்தான் இருக்கின்றன. ெ இடங்களிலும் பிரதம மதகுருவ வேற்றுமைகள் சுலபமாக நீங்காது
பெண் ஆன்மிகமானவள்:
பொதுவாகப் பெண்கள் இ ஆன்மிகமாகவே வாழ்கிறார்கள். பண்புகள் பிரதிபலிக்கின்றன. கிடைத்த "வரம்."
ஆண் - பெண் வேற்றுமை உலகில் பிரக்ஞதாரா என்ற பெண் பெண்ணின் நுண்ணறிவில் கொண்டவர் ஞானி போதிதர் வருடங்களுக்கு முன்பே தா அறிவித்து ஆண் - பெண் பே பெண்களைப் கெளரவப்படுத்
வெளியுலகிற்கு வெளிப்படுத்தி

புதமான விஷயங்கள்
Olympics-g)6iv Canada Men's த்தது. ஊடகங்கள் மிகுந்த
5றைத்தே மதிப்பு அளிக்கப் து ஒரு இடத்தில் புகழாரம்
தந்திரம்:
ப்புகள் அறிவுள்ள, விவேகம் சூனியக்காரி என்று கூறியது
எரிக்கப்பட்டனர். அப்படி கள் மிகுந்த தீர்க்க தரிசனம் ார்கள். இது சூனியக்காரிக்கு திரானதாகும். மத அமைப்புக் இருந்தன, இப்பொழுதும் பண்கள் சகல மதவழிபாட்டு ாகாதவரை மதரீதியான இந்த 5].
யல்பாகவும், இயற்கையாகவும் அவர்கள் வாழ்வில் ஆன்மிகப் இவைகள் அவர்களிற்குக்
சகல துறைகளிலும் நிலவிய ண்ணைத் தனது குருவாக ஏற்று தன்னைப் புடம் போட்டுக் மர். அதே நேரத்தில் 1500 ரணியைத் தனது சீடராக நத்தைத் தகர்த்தியவர். இவர் தி அவர்களது ஞானத்தை
மாபெரும் மகான்.

Page 74
அத்தியா
சென் பெளத் ஜனனமும் முதல
சென்மதத்தை நிறுவியவ LDT T6uulut (Maha Kashyap. முன் பேசியதில்லை, போதனை திறந்து அதிகம் பேசாதவர். அத விட்டார். புத்தரின் முன்னிலை அடைந்து புத்தரது முதலாவது பி
ஒரு நிகழ்வு
வைசாலி (Vaishal) கிராமத்தி ஏழைத் தொழிலாளி ஒருவரது வீ பூத்தது. அந்த நேரம் தாமரைப் பூ பகுதியில் எங்கும் தாமரைப்பூ ( வீட்டுக்குளத்தில் மாத்திரம் ஒே இதைப் பார்த்ததும் அந்த சந்தோசம். இதை நல்ல விலைக்கு வாங்குவார் என்று தாமரை L நோக்கிச் சென்றார். போகும் வழி தங்க இரதத்தில் வந்து கொண் கரத்தில் தாமரைப் பூவைப் ப நிறுத்தினார்.
செல்வந்தர் : தாமரைப் பூ என்ன
ஏழைத் தொழிலாளி எனக்கு விலைமதிக்க பணத்தை ஏற்றுக்ெ

ub 7
தத்தின் வது குருவும்
ர் போதிதர்மர் அல்ல 2) அவர்கள். இவர் மக்கள் செய்ததில்லை, இவர் வாய் னால் இவர் மறக்கப்பட்டு யில் முதலாவதாக ஞானம் பிரதம சீடரானவர் இவர்.
ல் உள்ள பாதணி தைக்கும் ட்டின் குளத்தில் தாமரைப்பூ பூவுக்குரிய காலமல்ல. அந்தப் இல்லை. இந்த ஏழையின் ா ஒரு பூ மலர்ந்திருந்தது. ஏழைக்குடியானவனுக்குச் 5 விற்கலாம் இதை அரசன் லருடன் அரண்மனையை பில் அந்த ஊர்ச் செல்வந்தர் Lருந்தார். இந்த ஏழையின் ார்த்தார். தன் இரதத்தை
விலை?
த் தெரியாது. நீங்கள் தரும் ாள்கிறேன்.

Page 75
5s a போதிதர்மர் பற்றிய
செல்வந்தர் - நீ புத்தரைப்
மாட்டாய் தங்கியிருக்கிறா பருவத்தில் கிை புத்தரது கால இந்த மலர் அதனால் நாள் தருகிறேன்.
ஏழைத்
தொழிலாளி : திகைப்புற்றார் நேரத்தில் அ பூவை அரசர்
அரசர் தாமரைப்
செல்வந்தர் அதைவிட ந
ஏழைத்
தொழிலாளி : மேலும் குழ
2000 தங்க 6 T6ს)T அரச கேட்டார்.
செல்வந்தர் : (அரசனைவிட
அரசனுக்கு ளார். தான் கொடுத்து தீர்மானித்து ap கூறினார்.
GLIITL'-L-u IIT தருகிறார்க பூவைக் Gର, இருந்து ே தருகிறேன்.
ஏழைத் தொழிலாளி : குழப்பமை நாலு ம!

அற்புதமான விஷயங்கள்
பற்றி கேள்விப்பட்டிருக்க அவர் அயல் கிராமத்தில் ர். தாமரைப் பூ இல்லாத இந்தப் டைத்த இந்தத் தாமரைப் பூவைப் டியில் வைக்கப் போகின்றேன். புத்தரிடம் செல்லப்போகிறது ன் உனக்கு 500 தங்க நாணயம்
இதை நம்பமுடியவில்லை அந்த ரசனின் தேர்வந்தது. தாமரைப்
பார்த்தார்.
பூ என்னவிலை? சரி! அந்த எவ்வளவு தருகிறேன் என்றாரோ ான்கு மடங்கு தருகிறேன்.
>ப்பமடைந்தார். இந்த மலருக்கு நாணயம் ஏன் இவ்வளவு பெறுமதி னை மிகவும் பெளவியமாகக்
- செல்வம் குவித்து வைத்துள்ளார். கடனாகவும் செல்வம் கொடுத்துள் அரசனை விட கூடுதலாக விலை வாங்கி அரசனைத் தோற்கடிக்க பிட்டார்). ஏழை வியாபாரியிடம்
"இப்பொழுது நானும் அரசனும் ார்கள். யார் உனக்கு அதிகவிலை ளா அவருக்கே உன் தாமரைப் ாடுத்து விடு, அரசரது விலையில் }லும் நான்கு மடங்கு அதிகம்
ந்தார். இந்தப் போட்டியால் நாலு ங்காக விலை ஏறிக்கொண்டே

Page 76
எஸ். குரு
செல்வந்தர்
அரசர்
கெளதம புத்தர்
ஏழைத் தொழிலாளி :
போகிறது. அந்: கணக்குப் பார்க்க மெளனமாக இ மாறி மாறிப் ட நான் இந்தப் பூ நீங்கள் இருவரு புத்தருக்குக் ெ போடுகிறீர்கள். ட கேள்விப்பட்டதி சென்று இந்த வைத்திருங்கள். இதனால் பெரும் என்று கூறிப் போகின்றேன்’ எ
வேண்டாம்” என்
(வேகமாகப் புத்த
சேர்ந்தார்.) ப தொழிலாளியால் தாமரைப் பூவுக்கு
(வேகமாக புத்த
சேர்ந்தார்.) என் ே முன்வந்தேன். ஆ தோற்கடித்துவிட்ட
(ஏழைத் தொழிலா இடம் போய்ச் தொட்டு வணங் ஆத்தரின் காலடியி
உனக்கு இவர்கள்
வேண்டும். ஆனா?
போவதில்லை.
(கண்ணீர் மல்க நீங்கள் பெற்று

பாதம் 159
5 ஏழைத் தொழிலாளியால் முடியவில்லை, திகைப்புற்று ருவரையும் மிக அடக்கமாக ார்த்துக்கொண்டேயிருந்தார். பூவை விற்க விரும்பவில்லை. ம் யாரோ ஒரு கெளதம காடுப்பதற்காகப் போட்டி த்தரை நான் பார்த்ததில்லை, ல்லை, நானே அவரிடம் தத் தாமரைப் பூவை எனக்கு இது வேண்டாம் போட்டியே உருவாகிவிட்டது புத்தரிடம் ஒப்படைக்கப் ான்றார். எனக்குப் பணமும் றார்.
ர் இருக்கும் இடம் போய்ச் ாதணி தைக்கும் ஏழைத் தோற்கடிக்கப்பட்டேன். காசு பெற மறுத்துவிட்டார்.
ர் இருக்கும் இடம்போய்ச் செல்வம் அனைத்தும் கொடுக்க னால் அந்த ஏழை என்னைத்
Trij.
ளி கெளதம புத்தர் இருக்கும் சேர்ந்தார். புத்தரின் காலைத் கினார். தாமரைப் பூவை ல் வைத்தார்.)
ா தந்ததை நீ பெற்றிருக்க ) உனக்கு நான் எதுவும் தரப்
கூறினார்) “இந்தப் பூவை க்கொண்டால் மாத்திரம்

Page 77
6o a போதிதர்மர் பற்றி
எனக்குப் பே இருந்த அை அவர்கள் த கணக்குப் கூலிவேலை நான் செல்வ இந்தப் பூவை வாழ்ந்தால் ே தான் எனக்கு பூவுடன் நான்
(கெளதம பு எடுத்தார். அ நின்றார்.)
(ஏழைத் தெ நிகழ்வதை புத்தரினால்
(கெளதம பு: பெறத் தயா இந்த நிகழ் துறவிகள், ! பெருந்திரள விநாடிகள் மணித்தியால கொண்டே (
மகாகாசியப்பா (Ma சீடர்களில் ஒருவர். ஒருநா இவரைப்பற்றி எவருக்குப் இவருடையதாக அமைகிற இதற்குப் பின்பும் கொண்டதில்லை. பெளத்த அரிதாகவே உள்ளது.

ய அற்புதமான விஷயங்கள்
ாதும். அதுவே எனக்கு கிடைக்க னத்துச் செல்வங்களிலும் பெரிது. ர இருந்த செல்வம் எனக்கு பார்க்கத் தெரியாது. நான் செய்து திருப்தியாக வாழ்கிறேன். ந்தராக வரவேண்டும் என்பதற்காக விற்கச் செல்லவில்லை, உழைத்து பாதும். உழைப்புக்கேற்ற ஊதியம் குத் தேவை. பணச் சர்சைக்காக ா தெருவுக்குச் செல்லவில்லை.”
த்தர் தாமரைப் பூவைக் கையில் ந்த மலரை உற்றுப்பார்த்தபடியே
ாழிலாளி தனக்குள் உள் மாற்றம் உணர்ந்து கொண்டிருந்தார். ஆசீர்வதிக்கப்பட்டார்)
த்தர் காலை பிரார்த்தனை நடை ராகிக் கொண்டிருந்த வேளையில் வு நடந்து கொண்டிருக்கிறது. பின்பற்றுபவர்கள், பொதுமக்கள் ாக அங்குக் கூடியுள்ளார்கள்.
நிமிடங்களாகி நிமிடங்கள் ங்களாகி மணத்தியாலங்கள் நகர்ந்து செல்கிறது.)
hakashyapa) - g)6Nuri Lö35 f6ör ாளும் வாய்திறந்து பேசியதில்லை, தெரியாது. இன்றைய நிகழ்வு து. இன்றைய நிகழ்வுக்கு முதலும், வரைப்பற்றி யாரும் அறந்து 5 நூல்களிலும் இவரைக் காண்பதே

Page 78
எஸ். குருபா,
புத்தர் தாமரைப் 60 G கையில் வைத்து உற்றுநோக்!
கொண்டிருப்பதைப் பார்த்தது என்றும் வாய் திறக்காத காசியப் கடகடவென வாய்விட்
வெகுளித்தனமாகச் சிரிக்கலானா கெளதம புத்தர் இவரைத் தன கருகாமையில் அழைத்து அந்த பூவை அவரது 60్యuaు கொடுத்தா கொடுக்கும்போது ஞானத்தையு பூவின் ஊடாக அவருக்கு மாற்றி புத்தரை வணங்கி தனது இருக் கண்களை மூடிக்கொண்டார். புத்தரின் முதலாவது பிரதம சீடர
গু** 察狱 “LD  (T35 T&G). | ஞானத்தைப் ( என்பதை இன்று * சிரிப்பு வெ * தனக்குள்ளே உ அறிந்துவிட்டார்
அவருக்கு இந் கொடுத்தேன்” 6
கெளதம புத்தர் தோற்றுவித்த சென் மதமாகியது. தியான் தியானத்தைக் குறிக்கும். தியான் திரிபடைந்து சான்’ (Chan) ஆகிப் மகாகாசியப்பா சி அவர்களே தோற்றுவித்தவர். இந்த நிகழ்விலி வருடங்களுக்குப் பின்பு தோன்றி சென்மதத்தை தோற்றுவித்தவர் பே
அறிவு, ஆற்றல், திறமை, வீரம்,ஞானம், தியானம், புத்தி எல்லாம் சேர்ந்தவர் போதிதர்மர். தூண்டியவர். பலருக்கு ஞானப்பா6 சுயத்தை அறிய வழிகாட்டியவர். ம
 

னார். காசியப்பா கெளதம கையில் போய் அமர்ந்து காசியப்பா ஞானம்பெற்று TGOTITIi.
LI LI L u IT (Mahakashyapa) பெற தகுதியாகிவிட்டார் று அவரது வெகுளித்தனச் ளிக்காட்டியது. அவர் ஊடுருவிச்சென்று தன்னை அதன் அடையாளமாக தத் தாமரைப் பூவைக் ான்றார் புத்தர்.
தியான் (Dyan) முறைகள் என்ற சமஸ்கிருதச்சொல் (Dhyan) என்ற சொல்லே பின் சென் (Zen) ஆகியது. ான் சென் மதத்தை ருந்து கிட்டத்தட்ட 1000 ய போதிதர்மா அவர்கள் ல் அமைந்துவிட்டது.
சுறுசுறுப்பு, துணிச்சல், கூர்மை, விழிப்புணர்வு பலரது விழிப்புணர்வைத் தயை, தங்களை உணர, ாகாசியப்பா சென்மதத்தை

Page 79
62 a போதிதர்மர் பற்றி
தோற்றுவித்ததுடன் மக்களு தெரியாமல் மறைந்துவி பரப்பியவர் போதிதர்மர். முதலாவது குருவாகக் இந்தியாவில்தான் பிறந்தது பிறந்ததாகத்தான் கருதப்பட
சீனப்பேரரசர் மிங் - அழைப்பில் காசியப்பா (! சென்றார். இவர்தான் முத ஞானி. இவர் லோ-யான் லோ (Lo) ஆற்றங்கரையில் (Dhyan - 3FLD6io905555)6) பெளத்தம், போதி ஸத்வா போதித்தார்.
இந்தியாவில் தோன்றிய இன்று சீனா, ஜப்பான், நிலைபெற்று சீனாவில்தான் கருத்து நிலவுகிறது. சீனா மலர்ந்தது உண்மை. இந்த இருந்தபோது போதிதர்மர் சென்மதம் சீனாவில் புதிய இதுவரை காணாத மிகப் பெரும் ஞானி போதிதர்ம
சென்மத ஆன்மிகவாதி பாவிக்கும் தனித்துதவமு பாவிக்கும் பொருட்களில் இருக்காமல் இருப்பதற்கா பொருட்களை உடைத்து உண்டு, ஏனெனில் அதை வித்தியாசமான வடிவமாகி
(உதாரணம்) தேனிர் அதைப் பொருத்திப் பா
வடிவத்தில் வேறு தேை அல்லவா?

அற்புதமான விஷயங்கள்
க்கு தெரியாமல் உலகத்திற்குத் டார். சென் பெளத்தத்தைப் அவர்தான் சென் பெளத்தத்தின் கருதப்படுகிறார். சென் . இது தமிழகத்தில் காஞ்சியில் வேண்டும்.
டை (Ming - Ti) அவர்களின் கி.மு. 5-ஆம் நூற்றாண்டு )சீனா ன்முதலில் சீனா சென்ற இந்திய (Lo- Yang) 6T6ip LDIT5T601556) குடியேறினார். இவர் தியானம் தியான்) பழக்கினார். மகாஜன ாஸ் (Bodhisatvas) இவைகளைப்
இந்த தியான் - சான் - சென்' கொரியா, ஆகிய நாடுகளில் ன் இந்த மதம் தோன்றியதாகக் "வில்தான் இந்த மதம் முதலில் மதம் சீனாவில் உறக்க நிலையில் அவர்கள் அங்குச் சென்ற பின்பே உத்வேகம் பெற்றது. உலகமே பெரும் மதப் புரட்சியாளரான ST.
கள் தாங்களே எதையும் தயாரித்து டையவர்கள். அவர்கள் தாங்கள்
இன்னொன்று அதே பிரதியில் த் தாங்களே வாங்கிப் பாவிக்கும் ஒட்டிப் பொருத்திப் பாவிப்பது உடைத்து ஒட்டிய பின்பு அது ஒரு பிடும்.
கோப்பையை (Tea Cup) உடைத்து ப்பார்கள். அந்த வித்தியாசமான ர் கோப்பை இருக்க முடியாது

Page 80
எஸ். குருபா
போதிதர்மரது ஊன்றுகோ மாதிரியே சென் மத ஆன்மிகவா
போதிதர்மர் சீனாவில் தி மக்களுக்கு எடுத்துக் கூறினார். கொடுத்தது. சீனாவில் முதலில் இ என்றனர். தியான் காலப்போக்கி பரவியபோது "சென்’ (zen) எ பெளத்தம் ஆக நிலைபெற்றுவிட் மாறி மொழிப்புரட்சியை செய்து என்பது மனதுக்கு அப்பால் ( அப்பால் சென்று வெறுமையை இதனது ஆரம்பமாகும். நேரடி Go) 5 TG) &6)pg/. Chan, Zen 6 TGor அடிப்படைக் கருத்தை மொழி ப
சென் பெளத்த மதம் ஏற்படுத்தும் விழிப்புணர்வில் ஒரு கண்ணோட்ட 0 சுறுசுறுப்பாக இயங்கிக்ெ
நிறுத்துங்கள். O கண் விழித்தபடியே பாரு
கண்களுக்கு தெரியக்கூடாது.
ஒரு கை ஓசையைக் கேளுங் பூமியின் சுழற்சி ஓசையைக் கி சொற்கள் இல்லாமல் கருத்ை
எந்த வடிவமும் இல்லாமல்
சென்மத ஆசான்கள் தங்கள் எளிதில் காணமுடியாத விஷ அவற்றைத் தொடர்ந்து முய தெளிவேற்பட்டு, புதிய
சமைக்கிறார்கள்.
0 சென் ஆசான்கள் கண் இை தங்கள் உடலுக்கு அதிர்ை

தம் 63
"லில் தொங்கின பாதணி திகள் அணிகின்றனர்.
யான் dhyan னைப்பற்றி Chan என்ற உச்சரிப்பும் இதை தியான் (Dhyan) மதம் ல் "சான்’ ஆகி, ஜப்பானில் ன உச்சரிக்கப்பட்டு சென் -Lég. Dhyan-Chan-Zen GTGOT ள்ளது. தியான்’ (தியானம்) செல்லல், எண்ணங்களுக்கு அடைதல். தியான் என்பதே யாக அந்த அர்த்தத்தைக் கூறும்போது அது அதன் மாற்றத்தால் இழந்துவிட்டது.
D
D
காண்டே எண்ணங்களை
ருங்கள். எதுவும் உங்கள்
கள்.
5ாது கொடுத்துக் கேளுங்கள்.
த விளக்குங்கள்.
சித்திரம் வரையுங்கள்.
ா மாணவர்களுக்கு விடை யத்தை வினாவாக வழங்கி, ற்சிக்கும்போது அவர்களுக்கு
சிந்தனை பிறக்க வழி
மக்காமல் உற்று நோக்கியும், வ ஏற்படுத்தி நடுங்கியும்,

Page 81
54 Na போதிதர்மர் பற்றிய
தங்கள் சக்தியை இன் நெற்றிப் புருவத்தை டே முன்னின்று தொடர்ந்: சக்தியை மாற்றினார்கள் களுள் உள்மாற்றம் நீ நோக்கும்போது 9. சந்தித்தவர்களது கண் அவர்களுக்குள் ஊடுருவி மாற்றம் அடைந்தனர்.
O ஜப்பானில் வாழ்ந்த சிரி Go@ADITILTuiů (Hotei) 35% மூலம் விழிப்புணர்வை மாற்றினார்.
O இதே போலவே இந் வாழ்ந்த லத்திகான் ஞ அதிர்வின் மூலம் மாற்றினார்.
O தகுதியானவர் கிடைக்கு
களுக்காகத் தங்கள் மகான்கள் காத்திருக்கும்

அற்புதமான விஷயங்கள்
னொருவருக்கு மாற்றுகிறார்கள். லும் கீழும் அசைத்தல், ஒருவர் து சிரித்தல் மூலமும், தங்கள் 1. இவைகளை அனுபவித்தவர் கழ்ந்தன. போதிதர்மர் உற்று வரது கண்களை நேராக rகள் ஊடாக போதிதர்மர் விடுவார். அதைப் பெற்றவர்களும்
க்கும் புத்தர் சென் ஞானியான ன் உடல் குலுங்கச் சிரிப்பதன் ஏற்படுத்தி, சக்தியைப் பிறருக்கு
தோனேசியாவில் பாலித்தீவில் ானியான பபக்சுபுத் தன் உடல் சக்தியை இன்னொருவருக்கு
ம்வரை அதாவது தகுதியுள்ளவர் கொடையைக் கொடுப்பதற்கு
வழக்கம் உடையவர்கள்.

Page 82
அத்தியா
பெளத்தம் பொ போதிதர்மர் சீன
LJ M (Ig, முதல் பிர ஜவஹர்லால் நேரு அவர்கள் த மகள் இந்திராகாந்தி அவர்களது ஆவது பிறந்த தினத்திற்கு மத் SAGOMou? 6iv (Central Prison, Na இந்திய சுதந்திர போராட்ட ை யாக இருந்து எழுதிய கடிதத்ை தொடர்ந்து அடுத்த 2% வருடங் எழுதிய அனைத்துக் கடிதங்களை Gog (T(g55gil Glimpses of World his என்ற பெயரில் நூலாக 1934வெளிவந்தது. இந்த நூல் உள பிரபல்ய நூல்களில் ஒன்ற சீனாவிற்குமிடையில் பெளத்த நல்லுறவைப் பற்றியும் போதிதர்ம மகள் சிறுமியான இந்திராகார் கடிதங்களில் குறிப்பிட்டுள்ளா மாத்திரம் ஒரு தகவலுக்காகப் பி பதிவு செய்கின்றேன்.
இந்தியாவும் சீனாவும் தங்க நல்லுறவாக இருந்தனர். இந்தியக் நுழைந்தது. சீனாவின் அரச நிர்6 பற்றிய தத்துவக் கருத்துக்களும் பரவியது. ஜாவாவில் உள்ள .ெ

*
· . ඊ. ෆෆ · கைதி ' *థకేరళ
ᏊᎧᏓ) 槛蓋蓋翡
S NEHRU ΠΘ, Lib. இந்தியாவிற்கும் மதம் ஊடாக நிலவிய * அவர்களைப்பற்றியும் தன் தி அவர்களுக்கு எழுதிய . அதன் சாராம்சத்தை ன்வரும் பத்திகளில் இங்கு
ரூக்குள் ஒற்றுமை கண்டு கட்டிடக்கலை சீனாவிற்குள் ாக முறையும், வாழ்வியல்
அண்டை நாடுகளுக்கும் ாரோபோதர் (BoroBodur)

Page 83
66 a போதிதர்மர் பற்றிய
நகரில் உள்ள புராதன புத் கட்டப்பட்டது. அந்த
புத்தருடைய முழு வாழ்க்கை இது புத்தருடைய ஞாட இந்தியாவின் உடைய சிற்ப உள்ளது. பிலிப்பைன்ஸ் நாட் செதுக்கப்பட்ட சிற்பங்களில் மனுவையும் (Manu) புராதன (Lao Tzu) செதுக்கியுள்ளார்க
தென் இந்தியாவில் பெ( பிரதேசம் பல்லவ மன்னர்க காஞ்சியை தலைநகராகக் ெ பல்லவர் காலத்தில் மலே சுமத்திராவில், ஜாவாவில் குட நடந்த இடங்கள் இந்தியப் இந்தியாவினதும், சீனாவின் கம்போயா. தற்போது இதன் பெளத்தமதம் படிப்படியா: இஸ்லாம் பரவியது. மலா இந்தியாவினதும் சீனாவின இந்துமதம், சமணமதம், ெ இந்தியாதான். கிறிஸ்தவ ஐரோப்பாவில் பரவ முதல் : வில் பரவிவிட்டது. மிஷன பிரவேசித்தனர்.
குப்த மன்னர்கள் இல நட்புறவு கொண்டனர். இ பெளத்த மதம் செழித்து இலங்கை மகாவர்ண சமுத்திரகுப்தாவுக்குத் தங்க அன்பளிப்பாக அனுப்பி சிங்கள மாணவர்கள் : LDLITG) u ulb (Monastary) (சமுத்திரகுப்த மன்னன் ( நெப்போலியன் GT60T

அற்புதமான விஷயங்கள்
விகாரை இந்திய சிற்பிகளால் விகாரையின் உட்சுவர்களில் வரலாறு செதுக்கப்பட்டுள்ளது. கார்த்தமாக மாத்திரமில்லை கலையின் ஞாபகார்த்தமாகவும் டில் நிர்மாணித்த சட்டசபையில் புராதன இந்திய ஞானியான சீனஞானியான லா-சூவையும்
T.
நம்பகுதி குறிப்பாகத் தமிழர்கள் iளின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. 5ாண்டு பல்லவர்கள் ஆண்டனர். சியாவில், போர்ணியோவில், டியேற்றம் நடந்தது. குடியேற்றம்
பெயர்களையே தாங்கியுள்ளன. னதும் குடியேற்ற நாடானது ன் பெயர் கம்போடியா. அங்கு கப் பரவியது, காலப்போக்கில் பாவில் (தற்போது மலேசியா) தும் கலவை அங்கே உண்டு. பளத்தமதம் இவைகளின் ஊற்று ம் ரோம் (Rome) உட்பட 5டல் மார்க்கமாகத் தென்இந்தியா ரிமார்கள் கடல் மார்க்கமாகவே
ங்கையுடன் லங்கையில் வளர்ந்தது. மன்னன் ம், வைரம் கயாவில் Iš GU5 Gu35,sið (g5 NSV நிறுவினார். ந்தியாவின்
அ ழைக்கப் 雛

Page 84
எஸ். குழு
பட்டார்.) சீனாவிலிருந்து பா சுற்றுப்பிரயாணம் செய்துவிட்( வருடங்கள் தங்கினார். அத அங்கிருந்து கடல் மார்க்கமா 6JG5606T (Scriptures) 567g)IL
தென் இந்தியாவில் கப்பல் திறம்பட இயங்கியது. கப்ட நாடுகளுடன் இடம்பெற்றது காலத்தில் விஜயன் இந்தியா இலங்கையைக் கைப்பற்றி இலங்கைக்கு குதிரைகளுடனுட பிரயாணம் செய்வது போன்ற உள்ள ஒவியத்தில் காணட் குறிப்பிடுகிறார்.
சீனாவில் பெளத்தமதம் பெளத்தத் துறவிகள், ஞ தொடங்கினார்கள். இந்தியாவி கல்வி ஆராய்ச்சி மைய இடம ஆராய்ச்சி மைய இடமாக ஆராய்ச்சி மையங்களும், புனி: அருகாமையில் இருந்தன. ஆ பெளத்தம் தன் மகிமையை ஞானிகளும் இந்தியாவை வி சாரலைக் கடந்து சீனாவுக் விட்டனர்.
இக்காலப் பகுதியில் தோன்றலான இளவரசர் போதி கப்பலில் சீனாவில் உள்ள கன்( காலப்பகுதியில் சென்றடை குறிப்பிடுகிறார்கள். இவர்
illn5u5umab (Head And Pa சென்றதற்குப் பெளத்தமதம் இ காரணமாக இருக்கலாம் என இவர் சீனாவையடைந்தபோ
திருந்தார். இவருடன் பெளத்த

நபாதம் 67 ܐ
-ஹீன் (Fa-Hien) இந்தியாவில் டு இலங்கை சென்று இரண்டு iன் பின்பு இந்தியா திரும்பி கச் சீனா திரும்பும்போது சில -ன் எடுத்துச் சென்றுவிட்டார்.
கட்டும் (Shipbuilding) தொழில் 1ல் மூலமாக வர்த்தகம் பிற து. கெளதமபத்தர் வாழ்ந்த "விலிருந்து இலங்கை சென்று
அரசாண்டான். விஜயன் ம், யானைகளுடனும் கப்பலில் ) காட்சி அஜந்தா குகைகளில் படுவதாக நேரு அவர்கள்
பரவப்பரவ இந்தியாவிலிருந்து ானிகள் அங்குச் செல்லத் ல் நாலந்தாவில் பெளத்த மதக் ாகவும், காசி இந்துமதக் கல்வி வும் இருந்தது. இந்த இரு த இடங்களும் ஒன்றுக்கொன்று னால் நல்லுறவு நிலவவில்லை. இழக்க பெளத்தத் துறவிகளும், ட்டு வெளியேறி இமயமலைச்
கும், திபெத்துக்கும் சென்று
பல்லவ மன்னனின் வழித் தர்மர் தென்இந்தியாவிலிருந்து SLIrois (CanTon) bisoog 526 A.C ந்தார் என நேரு அவர்கள்
புத்தமதத்தின் 28-ஆவது iarch) இருந்தவர். அவர் சீனா ந்தியாவில் குன்றிவருவது ஒரு நேரு அவர்கள் குறிப்பிடுகிறார். து நடுத்தர வயதை கடந் துறவிகளும் சென்றிருந்தனர்.

Page 85
58 hA போதிதர்மர் பற்றிய அ
இவருக்குப் பின்பும் பல பெ விலிருந்து சீனா சென்றிருந்தனர் (LO-Yang) udII5IIGOO1556,o LDI155.J. பெளத்த துறவிகளும் பத்தாயிரம் குடும்பங்களும் அந்தக் காலப் ஞானம் அடைந்தது இந்தி நேபாளத்தில் உள்ள லும்பினி போதனை செய்தது இந்தியாவி அனைத்தும் இருந்ததும் இந் மகிமை இந்தியாவை விட்டுப் ப சீனதேசம் முக்கிய பெளத்த நாட
பேரரசர் டாங்’ (Tang) பல பிளவுபட்டு இருந்த சீனாவை மதம் பரப்பச் சென்ற இஸ்லா கெளரவித்தார். அவர்களுக்கு ட கூறுவதைச் செவிமடுத்துக் கேட் கிறஸ்தவர், நெஸ்டோரியன்ஸ் இல்லாமல் நடந்துகொண்டா (Canton) பள்ளிவாசல் கட்ட அ உள்ள பழமை வாய்ந்த (140 மசூதியில் அதுவும் ஒன்று. அ. தேவாலயம் அமைக்கவும் அனு
இக்காலப் பகுதியில் சீனா உயர்ந்தது. கலை, தத்துவம், போன்ற வழிகாட்டலுக்கு ஆசிய எதிர்பார்த்தன. இந்தியாவில் ( மகிமை மங்கத் தொடங்கிவி யாலும், உயர்வாலும், அங்கு என்ற வாழ்வும் ஏற்பட்டத சுமத்தியது. மக்கள் டாங் (Tang) ஆட்சிக்கு முடிவு வைத்தனர். வரை நீடித்திருந்தது. அக்கால கருதப்பட்டது. சீனாவுடன் எவ்வளவோ பின்தங்கியிருந் ஜரோப்பா பல வளர்ச்சிகளைக்

புதமான விஷயங்கள்
எத்தத் துறவிகள் இந்தியா . சீனாவில் உள்ள லோ-ஜாங் ) மூவாயிரம் (3,000) இந்திய
(10,000) பெளத்த இந்தியக் பகுதியில் வசித்தனர். புத்தர் பாவில், புத்தர் பிறந்தது
நகரில் (Lumbini), புத்தர் ல், பெளத்த புனித நூல்கள் தியாவிலே. பெளத்தத்தின் டிப்படியாக வெளியேறியதால் ாக மாறியது.
) குறுநில ஆட்சி நிலங்களாக ஒன்றாக இணைத்தார். அங்கு மிய, கிறிஸ்தவத் துறவிகளை மதிப்புக் கொடுத்து அவர்கள் -டார். மன்னர் இஸ்லாமியர், (Nestorians) 6 TGöAD LIITGg5 LuntG) ர். அராபியர் கன்டோனில் ஆனுமதித்தார். இன்று உலகில் 0 வருடங்களுக்கு மேலான) ரசர் டாங் (Tang) கிறிஸ்தவ மதி வழங்கினார்.
வின் செல்வாக்கு ஆசியாவில் நாகரிகம், தொழில் வளர்ச்சி பாவில் பல நாடுகள் சீனாவை குப்தர்களது ஆட்சிக்குப் பின் ட்டது. சீனாவின் வளர்ச்சி ஆடம்பரமும், ஏனோதானோ ால் அரசு அதிக வரியைச் வம்சாவளியினரின் 300 வருட இவர்களது ஆட்சி 907 AC சீனாவின் பொற்காலமாகக் ஒப்பிடும்போது ஜரோப்பா தது. சீனாவிடமிருந்துதான் கண்டறிந்தது. அச்சு யந்திரம்,

Page 86
எஸ். குரு
காகிதத்தாள் (Paper) துப்பாக்கி தொழில் நுட்பம், பொறியிய துறைகளில் உலகத்துக்குச் சீன
வட இந்தியாவை ஹர்ச் (Harsha-Vardhana) 629 A.C 5 ஆண்டுகொண்டிருக்கும்போது எ (Hiuen Tsang) gi5u IIT God இலங்கை சென்றார். பின்பு திரும்பும்போது இந்தியா ஏராளமான புனித ஏடுக Scriptures) 56öTg)/L–6öT GTG3
**இடுப்6 (Copper இவரைட் கதைகள் கூர்மை
ஞானமு
Hiuen Tsang
 

UII5lb 169
Qolqi Uolli, (GunPowder), ல், விஞ்ஞானம் போன்ற பல ா முன்னோடியாகத் திகழ்ந்தது.
Fா-வர்த்தனா ாலப்பகுதியில் ஹையூன் சாங் Fன்று பின்பு இவர் சீனா சென்று 3) GT (Holy 8 துச் சென்று 8 韃婁 di uen Tsang) Kirg Harshawardham
பிரயாண அனுபவங்களை னொர். அந்த நூலில் இவர் ர்மாவைப்பற்றி கூறும்போது பைச் சுற்றி செம்பிலான தகடு Plate) அணிந்திருப்பார். பற்றிய பல சுவாரஷ்யமான ா உண்டு. இவர் புத்திக் பும், மதியூகமும், அறிவும், ம் உள்ளவர்?" என்கிறார்.
Ꮥs

Page 87
ෙජ්
சீன எல்லையின் பேரரசர் “வு (Wu
போ திதர்மர் தென் சென்றபோது அரசர் Wu-Tai சந்திப்பு பேரரசருக்குத் ( முடிந்தது. ஏனெனில் சாதாரணமாக வரையறுக்கட் வும் போதிதர்மர் உண்மைை உண்மையானவராகவும் இருவருக்கும் இடையில் ஒ நிலவவில்லை.
அந்தச் சந்திப்பைப்பற்ற அவர்களைப்பற்றி இந்திய ( நேரு அவர்கள் தனது பிரப India வில் என்ன கூறுகிறா
ஹையான் (hyan) அர வழித்தோன்றலான Wu-T அரசாண்டார். இவர் கால கும் இடையில் முதன் என்றும் சீனா பெரும் எனவும் குறிப்பிட்டுள்ளார். வளர்ந்ததும் அரசர் 'வூ' க களிலும் திருப்பணிகளிலும் பல்லாயிரம் மடாலயங்க
இவருக்கு முதல் 5-ஆவது

யாயம் 9
) அரச வரவேற்பில் Tai) உடன் முரண்பாடு
T சீனா
9DLGÕTTT6ÕT தோல்வியில் அரசர் பட்டவராக ய உணர்ந்த இருந்ததால் ரு சமநிலை
King Wu Ti
அறியுமுன்பு, பேரரசர் வூ (WU) மதல் பிரதமரான திரு. ஜவகர்லால் sivu ILDITGOT (5ITG)ITGOT The Dicovery of ர் என்பதை இங்குப் பார்ப்போம்.
Gilberg,56) (Hyan Dynasty) 66 g5! 0 வருடம் மகா சக்கரவர்த்தியாக ந்தில்தான் சீனாவுக்கும் இத்தாலிக் முதல் வர்த்தகம் ஆரம்பமானது பாருளாதார வளர்ச்சி கண்டது அங்குப் பெளத்த மதம் மேலோங்கி லத்தில்தான். அவர் திருத்தொண்டு தர்ம காரியங்களிலும் ஈடுபட்டார். விகாரைகள் நிர்மாணித்தார். வழித்தோன்றலாக அரசாண்டவர்

Page 88
எஸ். குருப
ஒரு பெண். சீனாவின் முதல் குறிப்பிடுகிறார் நேரு அவர்கள்.
ஞானம்:
சுறுசுறுப்பு, விடா முயற்சி, ஆக்கம், ஆற்றல், அறிவு, அனைத்தையும் ஆன்மிகமாக இவை அனைத்தையும் “ஞானப் கூறினால் ஞானி போதிதர்ம spirituality, Intellect, and Phys உள்ளடக்குகிறது. அவர் தான் அறிந்தவைகளையோ கூறவில் அளுபவங்களையே கூறினார். சிறந்தும் விளங்கினார். தன் ( செயல் வடிவம் கொடுத்து மக்க
எல்லையில் போதிதர்மருக்குப் ெ
காஞ்சி அரசர் ஒரு வட போதிதர்மர் வருகையைத் த்ெ திருந்தார். கி.பி. 527-இல் சென்றபோது புத்தமதத்தின் ஆ 'வூ' (Wu) தனது இராச்சியத் துறவிகளுடனும், அரச உயர் பரிவாரங்களுடனும் சகல அர
வரவேற்றார். மற்றயதைத் இடுப்பைச்சுற் (Copper Be துணியும், ை விசித்திரமான
காணப்பட்டா
போதிதர்மர் அப்படியான யாரும் எதிர்பார்த்து இருச் போதிதர்மரைப் பார்த்ததும் தன்னை சுதாகரித்துக்கொண் பைத்தியமோ? இவர் என்ன
 

ாதம் 1 71
பெண்அரசி என அவரைக்
கடின உழைப்பு, விவேகம், புத்திசாலித்தனம் இவை க் கருதுகிறது சென்மதம். ம்? என்கிறது. சுருக்கமாகக் ர் கூறும் ஞானம் என்பது ical Excellence Soodojö5606IT கேள்விப்பட்டவைகளையோ ல்லை. அவர் தன் சொந்த அத்துறைகளில் போதிதர்மர் சொந்த அனுபவங்களுக்கே ளுக்கு ஊக்கம் கொடுத்தார்.
பரும் அரச வரவேற்பு:
இந்திய அரசர் ஊாடாக தன்சீன அரசருக்கு அறிவித் போதிதர்மர் தென்சீனா ம்ந்த ஈடுபாடுடைய பேரரசர் தின் எல்லையில் 10,000 அதிகாரிகளுடனும், தனது ச மரியாதையுடன் இவரை ஒரு கமலில் ஒரு பாதணியும் தலையிலும் வைத்திருந்தார். ]றி செம்பினாலான பட்டியும் :It), இடுப்பில் ஒரு சிறு கையில் ஒரு தடியும், ஒரு ா கிறுக்குத் தோற்றத்துடனும்
IT.
தோற்றத்தில் வருவார் என்று
கமாட்டார்கள். பேரரசர் திகைப்படைந்தார். ஆனால் டார். இவருக்கு என்ன
விசித்திரமான மனிதராய்

Page 89
72 a போதிதர்மர் பற்றிய அ
இருக்கிறார் என நினைத்தார். உணர்ந்துகொண்ட போதிதர்மர்
“இந்த ஆள் என்ன
நினைக்கலாம், கண்டிப்பாய் இருந்திருப்பீர், நான் அதைக் ச உம்மால் எதையும் கணிக்க மு நீர் அதை வாய்விட்டுச் செ கணிக்க முடியும்’ என்றார் ( அரசர் அமைதியாகத் தன் ஐய
அரசர் புத்தமதத்தின் வ
செய்கிறேன். விகாரைகள் ந போதனைகளை பெயர்த்து, G தினமும் பத்தாயி கிறேன். தர்ம பெளத்தம் வ6
இல்லையென்று
தானங்கள்’ செ கிடைக்கும்?
போதிதர்மர் : எதுவும் இல்லை
இருக்குமானால் அங்கே கொண் தானங்களுக்குள்ளு பெரும் பேராை கிறது அவற்றுட
வரும்.
அரசர் என்ன சொல்கிறி புண்ணியச் செ கிறேன்!!.
போதிதர்மர் : உமது புண்ணிய குழியில்தான் வி புனிதம் என்று (

|ற்புதமான விஷயங்கள்
அரசர் வூ வின் ஆச்சரியத்தை
சிரித்தார்.
பைத்தியமோ என்று நீர் அப்படித்தான் நினைத்தும் கணித்துச் சொல்வேன். ஆனால் டியாது. அதுதான் வேறுபாடு. ால்லாவிட்டாலும் என்னால் போதிதர்மர். திகைப்படைந்த ங்களை வினவினார்.
1ளர்ச்சிக்குப் பெரும் செலவு பல ஆயிரம் மடாலயங்கள், நிர்மாணித்துள்ளேன். புத்த ச் சீனமொழியில் மொழி பாதனை செய்விக்கிறேன். பிரம் துறவிகளுக்கு உணவளிக்
காரியங்கள் செய்கிறேன். ார்வதற்கும் துறவிகளுக்கும்
சொல்லாமல் பெரும் Fய்கிறேன். எனக்கு என்ன
, நரகலோகம் என்று ஒன்று
உமது செய்கைகள் உம்மை டுபோய் விழச்செய்யும். உன் நம், தர்ம காரியங்களுக்குள்ளும் சயும் சுயநலமும் மறைந்திருக் ன் சேர்ந்து உனக்கு அழிவும்
ர்கள்? நான் செய்வதெல்லாம் பல்கள், புனிதமாகவே வாழ்
ம், புனிதம் உம்மை நரகக் ழ்த்தும் தர்மம், புண்ணியம், ாதுவுமில்லை. -

Page 90
எஸ். குரு
அரசர்
போதிதர்மர் :
அரசர்
போதிதர்மர் :
அரசர்
போதிதர்மர் :
அரசர்
போதிதர்மர் :
g|UTFrit
போதிதர்மர் :
அரசர்
: நான் கூறுவது உ
இருவருக்குமிடை தொடர்பு இல்ை உங்களுக்குப் புரிய
உமக்கும் எனக்குட பரிவர்த்தனை இ வரவேண்டும். வேண்டும். அப்ே முடியும். நீர்தான் முயற்சித்துப்பாரும்
"பேருண்மை"யின்
(What is the highe
பேருண்மை என்று
: நீங்கள் யார்?
தெரியாது.
: நான் யார்?
தெரியாது.
முன்னோர்கள் செ
பெரும் துறவிகள் காரியங்களும், தா செய்கிறேன். உங் உள்ளன. எனக்கு மேலோகம் கிடை லாம் புண்ணியம் தனர்.)
ஒன்றுமில்லை!
உங்களுடன் தொ
மில்லை. நான் வில்லை. எனது வந்துள்ளீர்கள். நீங் அரச விருந்தினராக

ாதம் 7 ܐs
ங்களுக்குப் புரியவில்லை. நம் யில் சரியான மொழித் ல. அதனால் நான் கூறுவது வில்லை.
இடையில் எப்படித் தகவல் டம்பெறமுடியும். நீர் மேலே அல்லது நான் கீழே வர பாதுதான் நாம் பொருந்த மேலே வரவேண்டும். அதற்கு
அதிஉயர் கருத்து என்ன? st meaning of noble truth?)
ஒன்றும் இல்லை.
ான்ன பிரகாரம் நடக்கிறேன், கூறுவது போலெல்லாம் தர்ம னங்களும் புண்ணியங்களும் 5ள் பதில்கள் வித்தியாசமாக ப் புண்ணியம் கிடையாதா? யாதா? (அரசர் செய்வதெல்
எனத் துறவிகள் கூறியிருந்
டர்ந்து கதைப்பதில் அர்த்த உங்களை ஏற்றுக்கொள்ள நாட்டுக்கு விருந்தினராக கள் எனது அரண்மனையில் த் தங்கலாம்.

Page 91
போதிதர்மர் பற்றிய அழ ܢ 72
போதிதர்மர் :
அரசர்
போதிதர்மர் :
உங்கள் இராச்சியத் எல்லைக்கப்பால் எல்லையை நீர் உமக்கு மரணம் ெ வரும். மரண ப போலி நம்பிக்கை புண்ணியங்களை, எல்லாம் தகர்த்தெ பார்க்கிறீர். Կoc செய்பவராக எண் கற்பனைகளை வ6 இல்லை?, அரச ப உமது பத்தாயிரம்
*நீ யார்?? நீ கூறி விட்டால் நீ யார்? அறியாதவரையில்
இருக்கும். நீங்கே என்னை எப்போது (நாட்டை ஆளு துணிச்சல் எப்படி ஏற்பட்டது? அரச தான் நம்புகிறான் அல்லவா நம்புகி அவரது வலிமை. வேறு எதுவும் உண்மையே அவ
(தன்னை ஒரு கி
கருதியதால் G திரும்பினார்.)
தென்சீனாவுக்குள் River) ஆற்றைக்
சில வருடங்களின் பின்:
தென் சீனாவில் அரசர் சாம்ராஜ்யத்தை கோஜிங் (Hou
அரண்மனை
அமைந்திருந்த

புதமான விஷயங்கள்
திற்குள் வரமாட்டேன், இந்த வரமாட்டேன். D - LDg/ தீர்மானித்துக்கொள்ளும். நருங்கும்போது என் நினைவு பமும், தனிமையும் உமது களை எதிர்பார்ப்பு களை, மேலோக கற்பனை களை மியும். உம்மை நீர் அரசராகப் ண்ணியங்கள், நன்மைகள் ணிக்கொள்கிறீர். மேலோக ார்த்துக்கொள்கிறீர். “நீ நீயாக தவியை எடுத்தால் “நீ யார்?? துறவிகளை எடுத்துவிட்டால் lய அத்தனையையும் எடுத்து '”. “ s uUITñi?” GIGöIUGOog5 * ßo உனக்குள் குழப்பம் விரும்பிய போதெல்லாம் ம் சந்திக்கலாம். நம் பேரரசரை எதிர்க்கும் த் துறவி போதிதர்மருக்கு *ன் படைப்பலத்தை மட்டும் இவர் தன் ஆத்ம பலத்தை றார். அவரது ஆத்ம பலமே இவர் உண்மையைத் தவிர பேசத் தெரியாதவர். து பலம்.)
ாமானியராகப் போதிதர்மர் காபத்துடன் அரண்மனை
செல்லாது யாங்கிஸ் (Yangtze டந்து வடசீனா சென்றார்.
* Q' (Wu-Ti) அரசாண்ட ling) U6O)L856iI 6Oo85ÜUgibgiÖloOIñi. IIGörgrầI (Nan Jing) bab Júb

Page 92
எஸ். குருப
வீழ்ச்சியடைந்தது. அரசர் சிை வழங்கப்படவில்லை சகலதை இருந்தவர்கள் தூர விலகினர்.
அரசர் தனி மனிதர் ஆனார். து தான் “யார்?" எனச் சிந்திக்கத் ெ
சிறையிலிருந்து நரகலோ புலம்பினார். நோய்வாய்ப்பட்டு பட்டு, மரணம் நெருங்கும்போ வந்தது. தனது குடும்பத்தைச் கூறினார் “போதிதர்மர் எங்கிரு எனக்கு உதவக்கூடியவர் அவர்
இவரது உறவினர் போதிதா அவர்களுக்கு அதிர்ச்சிச் செய்தி இல்லை’ என்பதை அறிந்தனர். செய்தியைச் சீடர்களிடம் விட் தெரியவந்தது. அச்செய்தி **இறக்கும்போது என்னை நீ மறுவுலகக் கற்பனை இப்போ தொடங்கிவிட்டது. மரணபயம் தகர்த்துவிட்டது. மரணத்தை கொள்ளுங்கள் - காரணம் மரண
அரசர் 'வூ'க்கு இச்செய்தி பேரரசராக, தலைவணங்காதவரா கூறியவை. அன்று எனக்குப் எண்ணத்திலே இருந்துவிட்டேன் காரராக நினைத்துவிட்டேன். காப்பாற்ற முயற்சி செய்தார். கொள்ள முடியவில்லை. எனக் அன்றே கணித்துவிட்டார். இந்த அவர் என்று நினைத்தேன். பார்க்கத் தவறிவிட்டேன். புரி மாபெரும் மகான் அவர்” என்ற

ாதம்
றவைக்கப்பட்டார், உணவு யும் இழந்தார், அவருடன் பல இன்னல்களைச் சந்தித்த ன்பத்தில் மூழ்கினார். அரசர் தாடங்கினார்.
கம், நரக லோகம்’ என்று , எல்லோராலும் கைவிடப் து போதிதர்மரின் ஞாபகம் சேர்ந்தவர்களை அழைத்துக் நந்தாலும் கூட்டிவாருங்கள். ஒருவரே” என்றார்.
ர்மரைத் தேடிச்சென்றபோது, காத்திருந்தது. போதிதர்மர் அவர் அரசர் வூ க்கு ஒரு டுச் சென்றுள்ளார் என்பது பின்வருமாறு இருந்தது. னைவுகொள்வீர், உங்கள் து உடைந்து நொறுங்கத் உங்கள் நம்பிக்கைகளை ஆனந்தமாக ஏற்றுக் ம் தர்க்கமற்றது.??
தெரிவிக்கப்பட்டது. “நான் க இருந்தபோது போதிதர்மர் புரியவில்லை. மறு உலக போதிதர்மரைப் பயித்தியக் அன்று அவர் என்னைக் அதை என்னால் புரிந்து கு நடக்கப்போவதை அவர் நேரத்தில் உதவக்கூடியவர் அந்த மகானைப் போய்ப் ந்துகொள்ள முடியாத ஒரு
ITIT.

Page 93
அத்திய
ஷோலின் ஆலயத்திலிரு மலைக் குகையினுள்
போதிதர்மர் தென் சீனா உடன் முரண்பட்டு வட சீன G6OTITooló) go Giront Yedu (Waide) போதனைகள் பற்றிய கொண்டிருந்ததை அவதானி கூடியிருந்தனர். அம்மண்டபத் அந்த விளக்க உரைகளை ம விட்டார். உரை நிகழ்த்தி இடையில் கடும் வாக்குவ மோதல்நிலை உருவானது. அ வெளியேறும்படி கூச்சலிட்ட வெளியேறும்போது அந்த அங்கு விளக்கவுரை நிக இரகசியமாகப் போதிதர்மறை
போதிதர்மர் யாங்கிஸ் ஆற்றைக் கபூந்து வட சீனா படகில் ஏற முற்பட்டடே பட்டார். படகோட்டி அவ ஏற அனுமதிக்கவில்லை. முரடன், பயித்தியக்காரன் இருந்தவர்கள் கூச்சலிட்( படகில் ஏறாமல் தடுத்து அவரை ஆற்றங்கரையில் படகு சென்றது. ஆற்றங்

Tunib 10
ந்து வெளியேற்றப்பட்டார்! ளிருந்து தியானித்தார்
வில் அரசர் வூ டாய் (Wu Tai) ா நோக்கிச் செல்லும்போது தென் நகரில் ஒரு மண்டபத்தில் புத்த விளக்கவுரை நடைபெற்றுக் த்தார். அங்கு ஏராளமானோர் தினுள் பிரவேசித்த போதிதர்மர் றுத்து உரைக்க வேண்டியவராகி யவருக்கும் போதிதர்மருக்கும் ாதம் ஏற்பட்டது. அங்கு ஒரு ங்கு இருந்தவர்கள் போதிதர்மரை னர். அவர் மண்டபத்தை விட்டு மண்டபத்தில் இருந்த சிலரும் ழ்த்திக்கொண்டு இருந்தவரும் ப் பின் தொடர்ந்தார்கள்.
Yangtze River) செல்வதற்காகப் ாது தடுக்கப் ரைப் படகில் மோடன், என்று அங்கு ) அவரைப் விட்டார்கள். விட்டுவிட்டு ரையிலிருந்த

Page 94
எஸ். குருபாத
நாணல் புற்களை (Reed) ஆற்றி ஏறிநிற்க அது படகுபோல் டிருந்தபோது மறு படகை அண்மித் sesiogólcsöI (Yangtze-River) Gud Goma படகுக்கு முன் மறுகரையை அடை ஆற்றைக் கடந்து சென்றுவிட்டா தொடர்ந்தவர்கள் மேலும்; அவ சென்றார்கள். ஆனால் போதித பார்வையைச் செலுத்தவில்லை.
பஞ்சைப்போல் இலேசாதலும், நீரின்மேல் நடத்தலும் போன்ற அட் கலையும் தெரிந்த ஒரு மாபெரும்
இவர் வட சீனா சென்று ஷாவி (Shaoshi), ஷோங் (Shong) மலையடிவாரத்தில் உள்ள ஷோலின் (Shaolin) ஆலயத்தில் தங்கி இருந்தபோது இவரது அஞ்சாமை நடவடிக்கை யினால் மோடன் எனக் கூறி அங்கிருந்தும் வெளியேற்றப் பட்டார்.
அதனால் அவர் மலையின் மே இருந்த குகையினுள் 9 வருடம் சு (Wall Gazing) Sunofljig, IIf.
Shaolin Temple
 
 

77ے _ ?
மேல் போட்டு அதன்மீது மிதந்து சென்றுகொண் தும் போதிதர்மர் யாங்கிஸ் ப் பறந்து சென்று மற்றப் தார். போதிதர்மர் Yangtze
Yedu நகரிலிருந்து பின் * பின்னால் தொடர்ந்து ர்மர் அவர்கள் மீது தன்
ஆகாயத்தில் பறத்தலும், டமா சித்தியான இலகிமா கித்தர் போதிதர்மர்.
லே ஏறிச்சென்று அங்கு வரை உற்றுப் பார்த்தபடி

Page 95
போதிதர்மர் பற்றி
ஷோலின் ஆலயம்
கொடுத்த நிலத்தில் இ வியாவோ ஷெங் (Xiao
 

ப அற்புதமான விஷயங்கள்
GŠUJJ&Fň GS60ą II GQ6J6öI (Shaowen) ந்தியாவிலிருந்து சீனா சென்று heng) பெளத்தம் போதித்த இந்திய

Page 96
எஸ். குருப
பெளத்த துறவியான பற்றுவோ என்பவரால் 495 A.D. யில் நிர்ம போதிதர்மர் 527 A.D. காலப் பகுதி கூறுகின்றன.
இந் நூலாசிரியராகிய என் கதைகள் எல்லாம் எழுத எடுத் எழுதிவைக்க எடுக்கப்படவில்ை எப்போது பிறந்தார்? எப்போது சரியாகத் தெரியாது. எல்( கூறப்படுகிறது. போதிதர்மர் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன எழுதப்படவில்லை. வரலாறுகள் காலத்துக்குக் காலம் காலத்துக்கு மல்லாமல் அவற்றைக் கூ ஏற்றவிதமாகக் கூறிவிடுகிறார்கள் மாற்றம் அடைந்துவிட்டது. ச கருச்சிதைவு நடந்துகொண்டுதான் வரலாறும் அப்படி அமைவது வரலாறும் அவர் பற்றிய தக வேறுபட்டு காணப்படுகின்றன. தன்-ஞானத்தை விதைக்கவில்ை காணப்படவில்லை.
சுவரைப் பார்த்துப் போதனை:
போதிதர்மர் குகையினுள் சுவரைப் பார்த்தே உபதேசம் செய்துகொண்டே இருப்பார். அங்கு செல்பவர்கள் அவ ரது முதுகுக்குப் பின்னால் உட்கார்ந்து இருந்து அத னைக் கேட்பார்கள். அங்கு ஆட்கள் இருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன அதை கவனத்தில் கொள்ளாது சுவை பிரசங்கம் (Sermon) செய்து கொ

தம்
Batuo (Buddha Bhadra) ாணிக்கப்பட்டதாகவும் அங்கு தியில் சென்றதாகவும் ஏடுகள்
ா அபிப்பிராயம் புராணக் த அக்கறை வரலாறுகளை ல என்பதே! போதிதர்மர் இறந்தார் என்பதெல்லாம் லாம் நூற்றாண்டுகளிலே பற்றிக் கூறும் நூல்கள் 1. காரணம் வரலாறு சரியாக வாய்வழி மூலம் பரவியவை. ஏற்ற மாதிரி திரிபுபட்டது றுபவர்களும் தங்களுக்கு ள். இவ்வாறாகப் பொருள் ாலத்துக்குக் காலம் இந்த இருக்கிறது. போதிதர்மரின் துர்பாக்கியமே. அவரது வல்களும் ஒன்றுக்கொன்று இவர் ஏன் இந்தியாவில் ல என்பது எந்த நூலிலும்
στά5
ரப் பார்த்தபடி தொடர்ந்து ண்டேயிருப்பார்.

Page 97
so a போதிதர்மர் பற்றிய
Yedu நகரில் இருந்து பி தியானம் செய்துகொண் மறைந்திருந்து அவர் எ அவதானித்தனர். அவர்களில் வாக்குவாதப்பட்டவரும் இ னத்தைப் பார்த்து ஆச்சர்யட் ஏற்றுக்கொள்ளும்படி கேட்ட இல்லை, அவரைத் திரும்பி நீண்டகாலமாக குகைக்கு ெ
சீடனின் செயல்:
ஒரு நாள் அவர் த6 விசுவாசத்தைக் காட்டுவத காகத் தனது இடது கரத்தை துண்டித்து போதிதர்மர் மு: எறிந்து விட்டு “நீங்க திரும்பி என்னைப் பார்க்க விட்டால் என் தலைை கொய்யப் போகின்றேன் என்றார். போதிதர்மர் திரு பிப் பார்த்துச் சொன்னார் உன் தலையை வெட்ட வே சரியாகப் பாவிக்க வேண்டு திரும்பி அவரைக் கண் இ போதிதர்மரது கண்கை கட்டுப்பாட்டை இழந்தார் அவர் தன்வசம் இல்லை, போல் ஆகிவிட்டார். அ தொடங்கியது.
இது எப்பழச் சாத்தியமானது
போதிதர்மரது நெற்றிப்பு (Third Eye) gauco dig ad 6 சமஸ்கிருதத்தில் அஜ்னா (ஒ இதை 3-ஆவது கண் எனவு நெற்றிக்கண் ஆகும். நெ

அற்புதமான விஷயங்கள்
ன் தொடர்ந்தவர்கள் போதிதர்மர் டிருந்த குகைக்கு வெளியில் "ன்ன செய்கிறார் என்பதை b ஒருவராகப் போதிதர்மருடன் இருந்தார். போதிதர்மரது தியா பட்ட அவர் தன்னைச் சீடனாக டார். போதிதர்மர் பதிலளிக்கவும் பிப் பார்க்கவும் இல்லை. அவர் வளியில் காத்து இருந்தார்.
:
பண்டியதில்லை, உன் தலையை நீ டும்” என்று கூறி அவன் பக்கம் மைக்காமல் உற்று நோக்கினார். MTL i பார்த்த அவர் தன் , தன் ஆணவத்தை இழந்தார், மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பு வருக்குள் உள்மாற்றம் நிகழத்
፱?
ருவத்தின் மத்தியில் 3-ஆவது கண் ாடு. இந்தச் சக்ராவை (Chakra) ம்) Ajma என அழைக்கப்படுகிறது. ம் அழைப்பர். இதுதான் சக்திமிக்க ]றிக்கண்ணிலிருந்து வெளிவரும்

Page 98
எஸ். குருப்
ஒளிக்கதிர் Indigo நிறம் உை (3ஆவது கண்) திறக்கப் ஊடுருவிப்பார்க்கும் சக்தியும், பார்க்கக்கூடிய வலிமையும், நட அறியக்கூடிய உள்ளுணர்வும்
தங்கள் உள்ளுணர்வால் மாத்தி இவர்கள் தெளிவான உட்பார்6ை காந்தப் பார்வையை நேருக்கு
கட்டுப்பாட்டை இழந்துவிடுவார் இருக்கமாட்டார்கள். glgill Dl 'உள்'மாற்றம் நிகழத் தொடங்கிவி வலிமைமிக்க நோக்குவர்ம சக்திய
த gjJ GOOI I ఆరోుOD போதி மாறிய கூறுகி i Shen
மார்க்க புத்த அடுத் - பின்பு பிரதம குருவாகவும் இருந்தா கரத்தைத் தன் நெஞ்சில் வைத்து செலுத்தி வரவேற்பது வழக்கம் வலது கையைச நெஞ்சில் ை சம்பிரதாயமாக மாறிவிட்டது. இந் மரபாக மாறி இன்றும் கடைப்பிடி
போதிதர்மர் நீண்டகாலம் தி வராமல் இருக்க தன் கண் மடை அதனால்தான் அகண்ட கண்கtை
அவரது உற்றுநோக்கலின்
பார்த்த இடத்தில் சுவரில் துவா நீண்ட உட்கார்
 

தம் _____ 31 سے
டயது. இந்த Ajna சக்ரம் பட்டவர்கள் தெளிவாக தொலைவில் உள்ளதைப் க்கப்போவதை முற்கூட்டியே கொண்டவர்கள். இவர்கள் ாம் வழிநடத்தப்படுவார்கள். ப உடையவர்கள். இவர்களது நேர் சந்திப்பவர்கள் தங்கள் கள். அவர்கள் தங்கள் வசம் ாத்திரமல்ல அவர்களுக்குள் டும். இக்கண் உடையவர்கள் |டையவர்கள். -
ன்ே இடது கரத்தைத் டித்த அவர் வேறு யாரும் - அவர்தான் பின்பு தர்மரின் பிரதம சீடராக I - Huiko (Huike) GIGOI GJ6Q856T lன்றன. இவரது இயற்பெயர் Guang. இவர் சீன சென் நத்தில் 2-ஆவது குருவாகவும், பீடத்தின் போதிதர்மருக்கு த 29-ஆவது குருவாகவும், சோலின் ஆலயத்தின் 计。 இவர் தனது வலது தலை குனிந்து மரியாதை இதுவே காலப்போக்கில் வத்து வரவேற்கும் ஒரு த ‘ஒரு கை? வணக்கமுறை க்கப்பட்டு வருகிறது.
பானம் இருந்ததால் தூக்கம் ல வெட்டி எறிந்துவிட்டார். உடையவராகி விட்டார்.
வலிமையினால் அவர் ம் ஏற்பட்டுவிட்டது. இவர் ந்தபடியே தியானத்தில்

Page 99
82 a போதிதர்மர் பற்றிய
இருந்ததால் இவருக்குக் கால்களே @య606ు என்று நினைத்து அக் காலத்தில் போதிதர்மரது உருவத்தைப் ULIŠi களாக வரைந்தபோது கால்கள் இல்லாமலேயே வரைந்து விட்டார்கள்.
இவரது ஞானத்தை அறிந்த சோலின் ஆல ஆலயத்துக்கு அழைத்து வந் துறவிகள் பலவீனமாகக் க தற்காப்புக்கலையும் பழக்கின
தியானம்:
இவரது ஆழமான தியா ஏழு சக்கரங்களும் திறந்து அடைந்திருந்தார். ஏழு சக்ச பற்றிய சிறு விளக்கம் குறிப்பிடுகிறேன்.
1. மூலாதர் (லம் - பூட Kundalini: ggl d LLGÓla இச்சக்கரம் திறக்கப்ட (Strength, Vitality, Stal (Individuality) d 60Lu அதனால் தங்கள் கரு பேசும் ஆற்றல் உடை இருப்பார்கள், வினாடி உடலுடனும் மிக நெ இந்தச் சக்கரம் திறக்க ஒளிக்கதிர் செங்கதிர்
2. ஸ்வழஸ்தான (வம் - இது உடலின் நாபிப் உடல் உணர்வுகளுடனு feeling and sexuality)

அற்புதமான விஷயங்கள்
யத்துறவிகள் இவரை அந்த து குருவாக அமர்த்தினர். அங்குத் ாணப்பட்டதால் உடற்பயிற்சியும் II.
னத்தால் உடலின் உள்ளே உள்ள புத்தர்நிலையை (ஞானநிலை) Jisait (Chakras / Body of light)
ஒரு தகவலுக்காக இங்குக்
Ó) Muladhar / Root Chakra / ண் ஆசனப்பகுதிக்கு மேல் உள்ளது. ட்டவர்கள் சக்திமிக்கவர்களாக ility) இருப்பார்கள். தனித்துவம் வர்கள், சுய நம்பிக்கை அதிகம். த்தைத் துணிந்து பக்கசார்பற்றுப் யவர்கள், என்றும் சமநிலையில் கு வினாடி வாழ்வார்கள், தங்கள் ருக்கமான தொடர்புடையவர்கள். ப்பட்டவர்களிலிருந்து வெளிவரும் Red Ray) நிறம் உடையது.
fŠ) Swadisdana / Sacral Chakra: குதியில் உள்ளது. இந்தச் சக்கரம் Lb, D_600Trigg)upl-G9|Lb (Deals with
தொடர்புடையது. இயல்பாக,

Page 100
எஸ். கு
THE C
SAHASRARA The seventh chakra
AJNA The sixth chakra 3t
WISHUDDHA The fifth chakra ham ether
ANAHATA The fonth chakra
ylan Nܓ݁ܶ
MANURA/
ಙ್ಞ! chakrad yram ཧ་ A fire f
A
swApHISHfHANA 1 The seု႔ chaka
محصير
/MULAPHARA first chakra 17 """~--سسسسس .γ. E پ2 * Ալ Q) / earth
ད།ܪܓܜS_つ
RRT: ck
rébuti SnagIntri
ccc
இயற்கையாக பாலியல் வீழ்ச்சியடைய இயற்கைய விடுவார்கள். ஆண் பெண் நிலையில் இருப்பார்கள். இ
 
 
 
 

பாதம் 183
HAKIRAS
(ksimic cxiisuihlstyess, irieric6 pace.
Јпапа уода Rex's grizing and accepting destiny, Kreffsidense 1 v MnKr’s own Fatuiiicra.
Marstra yoga
warck &qFlch ifankages,
'Bhakti yuga tyve i vitality. *xingoise with nature.
'.
W '.
Hatha, karma
'.
y
- %,
-- Tanèira yega \,
༠གས་སྐད།: Piས་
~ "
,v - - - سند
~്യ Hatha and kindalini yoga X
Wiiality. ྾ “གང་།། stability libd strength. i\ , T
འོག་མས་གང་ Yg リ
tystk:äk Yg: LÈär beri:s
, உணர்ச்சி அவர்களுள்
ாக அதைக் கடந்தவர்களாகி ா வித்தியாசம் மறைந்து சம ந்தச் சக்கரம் திறக்கப்பட்டவர்

Page 101
84 a போதிதர்மர் பற்றிய
4.
5。
களிலிருந்து வெளிவரும் ray) நிறம் உடையது.
மணிபுறா (ரம் - தீ) M
இது வயிற்றுப் ப(
LD60TGIG560)LD (Power / W தாங்களே வழிநடத்தி அடைவார்கள். எந்த நிலையைத் தங்கள் கட் ஜனத்திரள் மத்தியிலும் dignity) இருப்பார்கள். செயல்படக் கூடியவர் பட்டவர்களிலிருந்து ே (Yellow ray) 15nolb d 60L
அனஹரா (யம் - காற்று இருதயப் பகுதியைச் சா அழைக்கப்படுகிறது. இ கருணை, காருண்யம், ! caring, endearment...)
புடையது. மக்களால் மக்களை நேசிப்பவர்கள திறக்கப்பட்டவர்களிலிரு (Green ray) 15/Dib d 60).
விசுத்தா (கம் - ஆகா இது தொண்டைப் ப( சொற்பொழிவு, உபே றுடனும், தன்னை ே expression and Com இவர்கள் தங்களை
9)(I5 Loŭ 60) Lu (being),
இருப்பார்கள். இந்தச் வெளிவரும் ஒளிக்கதிர் அஜ்நா (ஓம்) Ajma நெற்றிப்புருவ மத்தியில்
கண் எனவும் அன

அற்புதமான விஷயங்கள்
ஒளிக்கதிர் செம்மஞ்சள் (Orange
anipura / Solar Plexus Chakra: 3தியுடன் தொடர்புடையது. l) உடையவர்கள். தங்களைத் இலக்கை (Goal) சுலபமாக நிலைமையானாலும் தங்கள் டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். 1566)|GOOTrial air (Good feeling of ஆக்ரோஷமாகவும் (Aggresive) கள். இந்தச் சக்கரம் திறக்கப் வெளிவரும் ஒளிக்கதிர் மஞ்சள் டயது.
p) Anahata / Heart Chakra: ggl ர்ந்ததால் இருதயச் சக்ரா எனவும் து அன்பு, நேசம், இணக்கம், Jifa (Love, compassion, harmony, போன்றவைகளுடன் தொடர் நேசிக்கப்படுவார்கள். இவர்களும் ாக இருப்பார்கள். இந்தச் சக்கரம் ந்து வெளிவரும் ஒளிக்கதிர் பச்சை —lI g5luLib) Visuddha I Throat Chakra: நதியைச் சார்ந்தது. இது பேச்சு, தசம், போதனை போன்றவற் வளிப்படுத்துதலுடனும் (self - munication) தொடர்புடையது. உணர்ந்தவர்களாகவும், தங்கள் சுயத்தை அறிந்தவர்களாகவும், க்கரம் திறக்கப்பட்டவர்களிலிருந்து fia) (Blue ray) 15fplb d 60LLg).
Brow I 3rd Eye Chakra: gg. அமைந்துள்ளதால் இதை 3ஆவது ழப்பர். இதுதான் சக்திமிக்க

Page 102
எஸ். கு
நெற்றிக்கண் ஆகும். இ உண்டு. நுண்ணறிவு Perception) gyöL45 5Fj: நன்கு அறிந்தவர்கள். இந்தச் சக்கரம் திறக்கப்ட ஒளிக்கதிர் இன்டிகோ (In
7. 6muda56iuoJLJT Sahasrara /
உச்சமான சக்கரம். இது உடையது. இது ஆன்மிக and Wisdom) Gaugil'il IITL (Consciousness) gä56it இருப்பார்கள். தங்கள் சுய (Being) தங்கள் உயிர் பிரபஞ்சத்துடன் (Cosmic இருப்பார்கள். இவர்கள் ( மனதைக் கடந்து சுயத்தை செல்பவர்கள். இந்தச் களிலிருந்து வெளிவரும் நிறம் உடையது.
இந்தியப் பெளத்த மதத்ை இந்தியத் தற்காப்புக் கலையை வெளி நாடுகளில் பரப்புவதற் இந்தியாவிலிருந்து பிற ! களுக்கு முதலில் சென்றவ இவரே. அதே நேரத்தில் இந் வின் நல்லெண்ணத் தூதுவராக ஆன்மிகத் தூதுவராகவும் செ பட்டுக்கொண்டவர். இன்றுவி ஒரு மனிதன் பல துறைகளு முன்னோடியாக இருந்தவரென் அது போதிதர்மர் ஒருவரேத உலகில் இருந்த மிகப்டெ ஞானி இவர். ஆனால் இவ6 பல ஏடுகள் குறிப்பிடும்போது அகண்ட கண்காரன், நீலக்க

5UIIgbub 185
க்கண்ணிற்கு மகத்தான சக்தி , உள்ளுணர்வும் (Intuition/ யும் மிக்கவர்கள். பிரபஞ்சம் திர்காலத்தை உணர்ந்தவர்கள். ட்டவர்களிலிருந்து வெளிவரும் igo ray) நிறம் உடையது.
Crown Chakra: gg, LÉ).56 lb தலை உச்சியுடன் தொடர்பு த்திற்கும், ஞானத்தின் (Spiritual -டிற்கும் உரியது. பிரக்ஞையை கட்டுப்பாட்டிற்குள் வைத்து த்தை (self), தங்கள் இருப்பை த்தன்மையை அறிந்தவர்கள். consciousness) (95Tl fil îloi) வெறுமைக்குள்ளால் (Emptiness) ié, 5L sbg5 9 il IT6) (Non Self) சக்கரம் திறக்கப்பட்டவர் 66flig5ri dong, IT (Violet ray)
ரும் ரப் மோடன், கிறுக்குப்பிடித்தவன், ண்காரன், பயித்தியக்காரன்,

Page 103
86 a போதிதர்மர் பற்றி
பொல்லாதவன் என்றுதான் என்ற பெயர் மிக அரிதாக உள்ளன. இவரது வரலாறு ( முன்னுக்குப்பின் முரண்பா படுகிறது. காரணம் சாதாரண உட்படமாட்டார். இவர்
குள் உட்படாமல் எட்டமும்
செல்கிறார்.

அற்புதமான விஷயங்கள்
குறிப்பிட்டுள்ளன. போதிதர்மர் வே ஏடுகளில் குறிப்பிடப்பட்டு "ங்கும் முழுமையாக இல்லாமலும் டு உள்ளதாகவும்தான் காணப் மனங்களின் புரிதலுக்குள் இவர் சாதாரண மனங்களின் அறிதலுக் டயாத உயரத்தில் மேலே நகர்ந்து

Page 104
அத்த
சீனாவில் நிலவிய “ கோட்பாடுகளு
இந்தியாவை ஆன்மிக சீனாவைப் பண்பாடும் நா Civilization) God, IT@soTL 5T (Rationale) G.5/76-77 sp/T (7 (Philosophical Culture of the
சீனாவின் தத்துவம், அ சட்டம், கலாச்சாரம் முன்னோடி கொன்பியூசிய ஆவார். அவர் தத்துவத்தில் சற்றும் குறைந்தவர் அல்ல. லா-சூ (Lao-Tzu) வும் சீனா இவர் லாசி (laOzi), எனவு (Laotzu, கொன்பி சிறந்த
யாளருப்
G6) IT தாவேஜ கோட்ட
மதமாக Lao-TZu அடிப்ப அதாவது (Femininity) gerTjögbl b (Passi என்கிறார். கொன்பியூசியஸ்
 

uulib 11
Lîngör” “uum mı?” “Yin” “Yang” LGT “FITGör” “Chan’
51TL LT-35GayLib (Land Of Spirituality), assissCuplb (Land Of Ethics and டாகவும், மேற்கை பகுத்தறிவு கவும் உலக தத்துவ கலாச்சாரம்
World) பிரித்துப் பார்த்தது.
அரச நிர்வாகம், இவைகளின் Giv (Confucius) சோக்கிரடீசுக்கு அக்காலத்தில் வில் இருந்தார். ம் லாவோட்சு
எனவும் அழைக்கப்பட்டார். யூசியஸ் போலவே இவரும் ஒரு தத்துவ மேதையும் சிந்தனை
ஆவார்.
சி (லாவோட்ஸ்) அவர்கள் ஸெம் (Da Oi Sm / Taoism) ாட்டை நிறுவினார். இது ஒரு மருவியது. இவர் வாழ்வின் டை யின்’ (Yin) என்றார். மென்மை (softness) பெண்மை reness) gCD 650TGOLD (Darkness) வாழ்வின் அடிப்படையை "யாங்’

Page 105
88 a போதிதர்மர் பற்றிய
(Yang) என்றார். அதாவது Masculinity) Digion ill (a என்கிறார்.
கொன்பியூசியசின் கே தொடர்புடையது. லா-சூவி சேர்ந்த வாழ்தலுடன் தொ இருந்து Yang தத்துவமும் ( உருவாகின.
இவர்கள்; 5/6-ஆம் நூ சேர்ந்தவர்கள் எனக் கரு சம்பந்தமான ஆவணங்களைச் (Archivist) ஆரம்பத்தில் அக்காலத்தில் இருந்த புத்திச
இந்தப் பிரபஞ்சத்திற்கு யாங்" (yang) தான் குறியீடு ஞானிகள் கூறுகிறார்கள். இந் ஒரு வட்டமானது. இத கோட்டில் ஒரு வெள்ளை கறுப்பு மீனும் உண்டு. வாலை மற்ற மீன் இணைந்து பூரண பிரபஞ் அரைவாசி வட்டம் வெ அடுத்த அரைவாசி வட்ட "யாங் (Yang) இயற்கையில் 'யின்" (yin) இயற்கையில் ( கிறது. யின்னும் யாங்கும் படைக்கிறது,
இந்தப் பிரபஞ்ச அ எதிர்நிலை (Negative) இ6 முடியாது. நேர் மின்ே சேர்ந்தால்தான் மின்சா ஒன்றிணையும் பூரண ஒருண் பெறுகிறது.

அற்புதமான விஷயங்கள்
வலுமை (Strongness) ஆண்மை .iveness) பிரகாசம் (Brightness)
ட்பாடு அரச நிர்வாகத்தோடு ன் கோட்பாடு இயற்கையுடன் டர்புடையது. கொன்பியூசியசில் பா-சூ விலிருந்து 'Yin' தத்துவமும்
பற்றாண்டு (BCE) பகுதியைச் தப்படுகிறது. லா-சூ சரித்திர
சேகரித்து ஆவணப்படுத்துபவராக வேலை செய்தார். உலகத்தில் எலிகளில் இவரும் ஒருவர் ஆவார்.
'யின்' (yin) எனச் சீன ந்தக் குறியீடு ன் சுற்றுக் மீனும், ஒரு ஒரு மீனின் கவ்வியபடி சமாக்கிறது. ள்ளை மீன் ம் கறுப்பு மீன், வெள்ளை மீன் D ஆண்தன்மையும், கறுப்பு மீன் பெண்தன்மையையும் கொண்டிருக் ஒன்றிணைந்து எல்லாவற்றையும்
மைப்பில் நேர்நிலை (Positive) மலாமல் எதுவும் முழுமை பெற எற்றத்துடன் எதிர்மின்னேற்றம் ம் பெறமுடியும். Yin, Yang மப்பாட்டில்தான் வாழ்வு முழுமை

Page 106
எஸ். குழு
GUIT-Gg5 (lao Tzu) singpy6împsT) செயல்பட வேண்டும், சொற்க வேண்டும். இதன் பொருள் இ அது அது அதன் வழியில் செ செயல்படாதீர்கள்” என்கிறார். சேர்ந்து வாழுதலாகும்.
லா-சூவின் சீடனிடம் சீன மறைஞானியின் அற்புதங்கை அவர் தண்ணிரின் மேல் நட அவரைப் புவியீர்ப்பு விசையா என்றார். உன் குரு லா-சூ இ செய்வாரா?” என்று கேட்டார்.
லா-சூவின் சீடன் ஆம், அ
அரசர் அவர் இதுவை செய்யவில்லையே!
சீடன் “அவர் அதிசயங் செய்யும் தகுதியைப் பெற்றுள்ள இருப்பதற்கான தகுதியையும் ெ
புத்தர் எந்த அற்புதங்களை சிறந்த அற்புதமாகும்.
oom-Göb (lao Tzu) arGagpJáslg மக்கள் இயல்பாக இருந்தபே இருந்தபோது புத்திசாலிகளாக இல்லாத காலத்தில் மக்கள் சொர்க்கத்தைப் பற்றியும் நரகத் இல்லை. செரிக்கத்தையும் மனப்பிரிவினைதான், ஆதி சிந்தனைகளும் உருவாகவே விதியும் சட்டமும் இல்லை. குற்றவாளியாகி விட்டார்கள். ஒழுக்கம் குறைந்தது. அதிகம1 மீறல்களையும், குற்றங்களையும்

பாதம் a7 89
சாதுக்கள் செயல் இல்லாமல் i இல்லாமல் ஞானம் விளக்க பற்கையுடன் சேர்ந்து வாழ்தல், ல்லல், "இயற்கைக்கு முரணாக இதன் பொருள் இயற்கையுடன்
ப் பேரரசர் கேட்டார்: “ஒரு ளப்பற்றி கேள்விப்பட்டேன். -ப்பார், வானில் பறப்பார், ானது ஒன்றும் செய்வதில்லை இது போன்ற அற்புதங்களைச்
அவரால் செய்யமுடியும்.
ர எந்த அற்புதங்களையும்
களையும், அற்புதங்களையும் தால்தான் அதைச் செய்யாமல் பறுகிறார்” என்றார்.
யும் செய்யவில்லை. அதுவே
ார்: “மிகமிக ஆதிகாலத்தில் து அதாவது இயற்கையாக இருந்தார்கள். *மதமே? இயல்பாக இருந்தபோது தைப் பற்றியும் நினைக்கவே நரகத்தையும் காட்டுவதே 5ாலத்தில் நீதி நெறிச் இல்லை. அப்பொழுது எந்த சட்டத்தினால்தான் மக்கள் நீதியை வலியுறுத்துவால் ன பண்பாட்டின் விளைவுகள் உருவாக்கியது? என்கிறார்.

Page 107
go a போதிதர்மர் பற்
கொன்பியூசியஸ் 330 ஒரு சட்டவாதியும் ஆவ நீக்கினார். “எந்த விதியு என்றார்” மேலும் லா-சூ “எது சுலபமானதோ அது 3,6LILDITGOlgii” (Easy is Rig
கொன்பியுசியஸ் - லாக 8
கொன்பியூசியஸ்
லா-கு
கொன்பியூசியஸ் :
லா-சூ
கொன்பியூசியஸ்
லா-கு
எது
வரைய
: GNIG0)D l
வாக்கு பார்த்த யற்றன வேண் என்று
என்ன ஒழுக்கி வும் (
வழிகr
கும்,
&56Ծ6IT
எப்பட
இயற்
ஒழுக் UJILLஒழுக் வெகு போது ஒருவ ஒழுக 9(Կ2ռ அது

யெ அற்புதமான விஷயங்கள்
விதிகளை எழுதியிருந்தார். அவர் "ர். லா-சூ எல்லா விதிகளையும் ம் இல்லாமலிருப்பதே விதியாகும் அவர்களின் முக்கியமான போதனை சரியானது, எது சரியானதோ அது ht, Right is Easy).
சந்திப்பு:
நல்லது, எது கெட்டது என்று றுத்துச் சொல்லுங்கள்.
பறைகள் குளறுபடிகளை உரு ம், வரையறை என்பது பிரித்துப் நல், வரையறை செய்வது உண்மை த உருவாக்கும். வரையறை செய்ய டாம். எது நல்லது எது கெட்டது
சொல்லாதீர்கள்.
சொல்கிறீர்கள்? எப்படி மக்களை $முள்ளவர்களாகவும், நல்லவர்களாக இருக்கக் கற்றுக் கொடுப்பது?
ாட்டுதல்கள் குழப்பங்களை உருவாக் வழிநடத்த நீங்கள் யார்? அவரவர் அவரவர்களிடமே விட்டு விடுங்கள்.
?
கையே போதுமானது, எந்த கமும் தேவையில்லை, திணிக்கப் சட்டங்கள், விதிகள், முறைகள், கப் பயிற்சிகள் தேவையில்லை. ளித்தன்மை போதுமானது, இயற்கை மானது. **புரிந்துகொள்வதற்கு ருடைய மனம் தடையாக உள்ளது. கத்தை யாரும் உருவாக்க முடியாது. கு அதன் இயல்பாகவே உள்ளது. எப்பொழுதும் இருக்கிறது. ஒருவர்

Page 108
எஸ். கு
ஒழுங்கை போது அ கிறார். கின்றன. இல்லை, இல்லை, அது அது தோன்றிய தோன்றின பின் சட் தோன்றின பின்பு ஒ( என்றார் (கொன்பியூசியஸ் திரும்பி கேட்டனர். "என்ன நடந்தது? அவரைச் சந்திக்காதீர்கள்” என
ஞானி கொன்பியூசிய “மகிழ்ச்சியாக பேரானந்தத்துட
ஞானி : மகனே உன் ே ஒவ்வொருவராலும் அப்ப பேரானந்தமாகவும், மகிழ்ச்சிய பயிற்சியோ, பிரார்த்தனையோ கோட்பாடுகளோ எதுவுமே நிலை அது.
சீடன் : மகிழ்ச்சியும் என்பது புரிகிறது. அத, தேவையில்லைதான். அது இருக்கிறது. அதனுடன் த வேண்டும் என்பது புலனாகிற நீதிபதியாக நியமனம்:
சீனச் சக்கரவர்த்தி லா-கு அந்தப் பதவிக்குத் தான் தகு ஏற்கவில்லை. லா-கு உங்கள்
நான் சரியான ஆள் இல்

ருபாதம் l191
உருவாக்க முயற்சிசெய்யும் வரே சீர்குலைவை உருவாக்கு ஒழுங்குகள் இயல்பாக இருக்
ஆதிகாலத்தில் மதங்கள் சட்டம் இல்லை, கோட்பாடு அக்காலத்தில் எது எதுவாகவோ வாகவே இருந்தது. மதங்கள் பின் மதச்சண்டைகள் ா, சட்டங்கள் உருவாக்கப்பட்ட ட மீறல்கள், ஒழுங்கீனங்கள் எ. ஒழுக்கம் வலியுறுத்தப்பட்ட ழக்கக் கேடுகள் தோன்றின?*
ச் சென்றார். அவரது சீடர்கள் லா-சூ அபாயமானவர் நீங்கள் iறார்.)
சிடம் சீடன் கேட்டான் டன் இருப்பது எப்படி?” கள்வி வினோதமாக இருக்கிறது. டித்தான் இருக்க முடியும். ாகவும் இருப்பதற்கு கல்வியோ, , தியானமோ, வழிமுறைகளோ, தேவையில்லாத ஒரு இயற்கை
பேரானந்தமும் இயற்கைநிலை ற்கு எந்தவித முயற்சியும் 5ம்மை அறியாமல் நம்முடன் ான் நாம் என்றும் இருக்க து என்றார்.
தவை நீதிபதியாக நியமித்தார். கியில்லை என்றார். சக்கரவர்த்தி சட்டத்திற்கும் அமைப்பிற்கும்
லை’ என்றார். சக்கரவர்த்தி

Page 109
92 a போதிதர்மர் பற்றி
“உங்களை விட்டால் வே
நீதிபதியாக லா-கு நியமிக்க
ஒரு நிகழ்வு
முதல் நாள் ஒரு வழக நகரிலேயே முதல் தரமான செல்வங்களைக் கொள்ளை துறையினர் கைது செய்து நிறுத்தினார்கள். நீதிபதி லா அவர் திருடனுக்கு 3 செல்வந்தருக்கு 6 மாதச் தீர்ப்புக் கூறினார். இதை செல்வங்களை இழந்துள்ளே
நீதிபதி லா-கு "நீங்கள் சேர்த்து வைத்துள்ளீர்கள். உ உருவாக்கியது, அதற்கு நீ உங்களுடையது. அதனா இருக்கவேண்டும்” என்றா சக்கரவர்த்தியைப் பார்க்க சட்டத்தின்படி, நிர்வாக அமைப்பின்படி உங்கள் ! “அரசியல் சாசனத்தின்ப விதிமுறைகளின்படி பிை அவைகளே பிழையான6 உருவாக்கப்பட்டவை. ம பொறுப்பல்ல, நீங்கள் போ என்றார்.
செல்வந்தர் சக்கரவர்த அந்தப் பதவியிலிருந்து நீச் பொருத்தமான ஆள் இல்ை உங்களையும் சிறைக்கு ஜாக்கிரதையாக இருக்க ( லா-சூக்கு கூறினார் “நீங் ஆள் இல்லை” அதற்கு இல்லை என்று உங்களுக் எனக்கு கூறுகிறீர்கள். உன்

அற்புதமான விஷயங்கள்
று ஆள் கிடையாது’ என்றார். ப்பட்டார்.
கு விசாரணைக்கு வந்தது. அந்த ா செல்வந்தரின் அரைப் பங்கு யடித்த ஒரு திருடனை காவல் கொண்டுவந்து நீதிமன்றத்தில் -கு முன் விசாரணைக்கு வந்தது. மாதச் சிறைத்தண்டனையும் சிறைத்தண்டனையும் வழங்கித் க் கேட்ட செல்வந்தர் “நான் ன். இது என்ன தீர்ப்பு” என்றார். அளவுக்கு மீறிய செல்வங்களை ங்கள் பேராசுைதான் திருடர்களை நீங்கள்தான் பொறுப்பு, குற்றம் ல் அதிக காலம் சிறைவாசம் ர். செல்வந்தர் “நான் போய் க வேண்டும். இந்த நாட்டின் அமைப்பின்படி, அரசியல் தீர்ப்பு பிழை” என்றார். லா-கு டி, சட்டத்தின்படி, நிர்வாக ழயாக இருக்கலாம். காரணம் வை. அவைகள் அரசருக்காக க்களுக்காக அல்ல. அதற்கு நான் ய்ச் சக்கரவர்த்தியை பார்க்கலாம்”
தியிடம் சென்று “அந்த ஆளை குங்கள். அந்தப் பதவிக்கு அவர் ல. அவர் மிகவும் ஆபத்தானவர்.
அனுப்பிவிடுவார். இவரிடம் வண்டும்” என்றார். சக்கரவர்த்தி ள் இந்தப் பதவிக்கு தகுதியான லா-சூ “நான் தகுதியான ஆள் 5 நான் கூறியதைத்தான் நீங்கள் ாமை என்னவென்றால் உங்களது

Page 110
எஸ். குழு
சமூகம், உங்களது சட்டம், ஆகியவை சரி இல்லை. உங் ஆள், சரியான ஆள் அல்ல. நடத்திச் செல்வதற்கு உங்களுக் என்றார்.
புத்தர், மகாவீரர், கன்பியூ இருந்தபோது உலகம் இய6 தொகை மிகக் குறைவு இருக்கலாம், அக்காலத்தில் வ உணர்வுகளுக்கு அதிக முக் இருக்கலாம். இவை எல்லா காரணமாக புத்தர், மகாவீரர், எல்லாம் தங்கள் கருணையை உலகத்துக்கு அனுப்பிக்கொ கருணை, செயற்பாடுகள் பிற செயலிழக்க செய்யவல்லவை ஞானிகள், சித்தர்கள் போன் மனதின் வழியாகச் செய்வதி இயல்பாகத் தானாகவே நி செயல்கள் இல்லை. அவர்க இல்லை. ஆனால் எல்லாம் நிக
லா-சூ தன் சத்தியத்ை போவதில்லை, எழுதப்போவ
இருந்தார். அரச தொந்தரவு
 

பாதம் 193
உங்களது அரசியல் சாசனம் களுக்குத் தேவை பிழையான தவறானதொரு வழிமுறையை கு ஒரு தவறான ஆள் தேவை”
சியஸ், லா-சூ போன்றவர்கள் ஸ்பாகவே இருந்தது. மக்கள் என்பதும் ஒரு காரணமாக ாழ்ந்தவர்கள் சக மனிதர்களது கியத்துவம் கொடுத்ததாகவும் வற்றையும் விட மிகமுக்கிய
லா-சூ போன்ற மகான்கள் ப, அலைவரிசையாக வெளி ண்டிருந்தவர்கள். இவர்களது ரது எதிர்மறை எண்ணங்களை களாக இருந்தன. மகான்கள், ாறவர்கள் எதைச்செய்தாலும் தில்லை. அதனால் எல்லாம் கழ்ந்தன. அவை எல்லாம் ள் அதைப்பற்றி நினைப்பதே ழ்கின்றன.
தப் பற்றி என்றும் கூறப் தில்லை என்பதில் உறுதியாக காரணமாகச் சீனாவை விட்டு வெளியேற விரும்பினார்/ இவரது ஞானம் விளங்கிக் கொள்ள முடியாதது. இவர் குழந்தையாகப் பிறந்தபோது இவரது வயது 80 என்று கூறுவார்கள். அவ்வளவுக்கு சிறுபிராயத்தில் ஞானத்தில் முதிர்ச்சி அடைந்தவராகக் காணப்பட்டார். பிறக்கும் போதே நரைமுடி, வயதான பின்பு மனிதர்கள் இல்லாத இயற்கைச் சூழலில் இறக்க

Page 111
94 n போதிதர்மர் பற்றி
விரும்பினார். எருமை ம எல்லையை அடைந்தார். சீ எல்லையை கடக்க முயற்சி ஆணை பிறப்பித்தார். அவரைப் போகவிடாதீர்க வேண்டும்” எல்லைக் காவல்
நீங்கள் அறிந்த ஞ உங்களைப் போகவிடமா வாரங்களுக்குள் திருக்குறள் 81 சூத்திரங்கள் எழுதியி( ஞான நூல் தாவோதி அழைக்கப்படுகிறது. ஞான கொடுத்த பின்பு போக பட்டவர் பின்பு சீனா திரு தெரியவில்லை. அவர் இற போதிகயாவைத் தரிசி பழனியில் இருந்த சித்தர் எனச் சில ஏடுகள் கூறுகி சமாதி நிலையிலும் கூடு பாய்ந்தும் பல வருடங்கள்
அறியவருகிறது.
கைது செய்யப்பட்டு ை மிரட்டிப் பலவந்தப்படுத்தி எழுதிப்பெறப்பட்ட ஞான (Daodejing) sex,85ĝ5ĝ5IT6ör ĝC
லா-சூ (லாசி) அவர் முடியுமென்றால் அது சத்தி அந்த ஞான நூலில் ஞானநூலும் இப்படி சொல்லிவிடமுடியாது சத்தியமாகாது என்பதுதான் என்பது சொல்ல முடியா என்றுதான் லா-சூ சொல் படத்தான் சமண மத ஞ எளிமையானது என்கிறார்.

ப அற்புதமான விஷயங்கள்
ட்டில் பிரயாணம் செய்து சீன ன கன்கூ (hanku) மலைப்பிரதேச செய்யும்போது சீனச் சக்கரவத்தி லா-சூவை தடுத்து நிறுத்துங்கள், ள், அவரது ஞானத்தை அறிய ர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். ானத்தை எழுதித் தாருங்கள், ட்டோம் என மிரட்டினர். 2-3 வடிவில் எழுதி ஒப்படைத்தார். ருந்தார். இந்த ஜிங்" என்று த்தை எழுதிக் அனுமதிக்கப் ம்பி வந்ததாகத் ந்தியா சென்று த்து பின்பு போகர் இவர் ன்ெறன. இவர் \
விட்டுக் கூடு வாழ்ந்ததாக
%క్ష• ! గోస
கதியாக தடுப்புக் காவலில் வைத்து , ஆயுத முனையில் பயமுறுத்தி நூல் உலகிலே தாவோதிஜிங்? நக்க முடியும்.
கள் “சத்தியத்தைச் சொல்லிவிட யமாகாது? என முதல் வாக்கியமாக எழுதியுள்ளார். உலகிலே எந்த ஆரம்பித்ததில்லை. சொல்லில் அப்படிச் சொன்னால் அது அதன் பொருளாகிறது. சத்தியம் ளவிற்கு மிகவும் எளிமையானது ாமல் சொல்கிறார். இதே கருத்துப் னி மகாவீரரும் உண்மை மிக தேவையில்லாமல் வார்த்தைகளைப்

Page 112
எஸ். குரு
பிடித்துக் தொங்கத் தே6ை கருத்தாகிறது. ஒரு “உண்மை’ ( அது "உண்மையாக இருக்க வேண்டியதில்லை, உண்மைக்கு உண்மை என்றும் எளிமையான சந்தேகிக்கிறது. “உண்மை? இ இவ்வளது சாதாரணமானதாக இருக்கமுடியுமா என மனம் கே ஒரு விசித்திரமானதுதான். *சத்தியம்? சத்தியம்தான்.
இஸ்லாமியர்கள் குரான் கூ யூதர்கள் தங்கள் புனித நூல் உண்மை என்கின்றனர். கிறிஸ் உண்மை என்கின்றனர். இந்து உபநிடதம் கூறுவது உண்மை தம்மபதம்/திரிபீட* கூறுவது சமணர்கள் தங்கள் புனிதநூல் உண்மை என்கின்றனர். தாவே உண்மை என்கின்றனர். சூஃபிகள் நூல் கூறுவது உண்மை என்கி கூறுவது உண்மை என்கின்றனர். கூறுவது உண்மை என்கின்றன புனித நூல் அவஸ்ரார் கூறுவது
σΙg) 2 6öooooo? στοότι கொலைவெறியாகிவிட்டது. இந் போராகிவிட்டது. இந்த “உண்ை கொள்ளைகள், கீற்பழிப்புகள், ! அழிவுகள், நாசகாரவேலைக நிகழ்கின்றன. இதற்குப் பெயர்
எவருக்கும் தெரிந்திருப்பதும், அவைகள் எல்லாம் மனம் சா புரிந்துகொண்டால் மனிதாபிமா? இருப்போம். பரந்த மனப்பான்ன மற்றவர்களின் உணர்வுகளைப் பு

ாதம் 195
பயில்லை என்பது இதன் ாளிமையாக இல்லை என்றால்
முடியாது. இதற்கு அறிவு த் தர்க்கம் வேண்டியதில்லை. துதான். உண்மைகளை மனம் இவ்வளவு எளிமையானதாக,
இவ்வளது இலகுவானதாக ள்வி கேட்கிறது. இந்த மனம்
*உண்மை? உண்மைதான்,
றுவது உண்மை என்கின்றனர், ரல்மட் (Talmud) கூறுவது தவர்கள் “பைபிள் கூறுவது க்கள் பகவத்கீதை, வேதம், என்கின்றனர். பெளத்தர்கள் உண்மை என்கின்றனர், 'கல்பசூத்திரா கூறுவது ாஸிற் தாவோதிஜிங் கூறுவது நூல்கள் எல்லாம் அடங்கிய ன்றனர். சீக்கியர் "கிராந்த்' சென் பெளத்தர்கள் "கோன்' ர். சொராஸ்திரியர் தங்கள்
உண்மை என்கின்றனர்.
து இரத்தக் களரியாகி த உண்மை? உலகில் மதப் ம"யின் பேரால் கொலைகள், 5லவரங்கள், வன்முறைகள், ள் எத்தனை, எத்தனை *புனிதப்போர்.
தெரிந்துகொள்ள முடிந்ததும் ர்புடையவையே. இதைப் ாம் உள்ளவராகவே என்றும் ம கொண்டவராகி விட்டால் ரிந்துகொள்ளலாம். "உண்மை”

Page 113
96 a போதிதர்மர் பற்
எல்லையற்றது. இந்த நிரப்பப்பட்டுள்ளது.
*உண்மை? சத்திய *உண்மையில் “சத்திய *உண்மையும்? “சத்தியழு தாகத்தான் இருக்கிறது, அ அக்கறையில்லை.
35 TG36 urtGħviib (Taoism தாவோ (Tao) என்றால் இயற்கையுடன் சேர்ந்து இ வலியுறுத்துகிறது. இயற்ை இந்த மதத்தினுள் கால மந்திரவித்தைகளும் கலந்: காலப்போக்கில் மறைந் தத்துவங்கள் சென் பெ விட்டதாக வரலாறில் காலப்பகுதியில் ஹான் ( காலப் பகுதியில் கொன் தாவோஸ்ம், பெளத்த போதிதர்மா சென்ற பின் பெளத்தம் உயிர்பெற ஏன
சென்பெளத்தத்தின் போதிதர்மர் (460-534 C Philosophy GT Görggyib படுகிறது. சென்மத போதிதர்மீரில் ஆரம்பித்து வாழ்ந்த Huineng அ6 குருவாகி காலப்போக்கி என சீனாவில் அழை ஜப்பானில் வாழ்ந்த ஞா பெயரில் ரின்ஷாய் சென் யப்பானிலும் அழைக்கப்
சென் பெளத்தம் (ம கொரியா, வியட்னாம்,

லிய அற்புதமான விஷயங்கள்
பிரபஞ்சம் உண்மையால்
ம் எப்போதும் இலகுவானது. நதில் எந்தச் சிக்கலும் இல்லை Dம்? என்றும் மிக எளிமையான தனால்தான் யாருக்கும் இதைப்பற்றி
) தத்துவமாகி மதமாக மாறியது. பாதை என்பது அதன் பொருள். இயல்பாக வாழ்தலையே இந்த மதம் கயையும் இயல்பையும் வலியுறுத்திய ப்போக்கில் மூடநம்பிக்கைகளும், து கலப்படமாகிவிட்டது. இம்மதம் துவிட்டது. தாவோஸ்ம்’ன் சில 16ITg555gjL–6öT (Zen/Chan) 56l)Jög5) காணப்படுகிறது. சீனாவில் இதே fuayen) தத்துவமும் இருந்தது, ஒரு "பியூசியசின் தத்துவம் வலுவடைய ம், எல்லாம் மறைந்துவிட்டன. | அங்கு உறக்க நிலையில் இருந்த னயவை மறைந்துவிட்டன.
முதலாவது குரு E) a TGOT Eastern
நூலில் காணப்
பெளத்தம் பின்பு சீனாவில் பர்கள் 5-ஆவது i) “Huineng Zen' க்கப் பட்டது. னி ரின்கூடிஷாயின் (Rinzai Zen) GTGOT Iட்டது. سیار
ஹாஜன பெளத்தம்) சீனா, ஜப்பான், ஆகிய நாடுகளுக்குள் ஊடுருவி

Page 114
போதிதர்மர்வற்றிகு(
வேகமாக வளர்ந்தன. சீன கோட்பாடுகளுடன் போதிதர் (அல்லது) Zen சேர்ந்துெ (Confucius) oom- (5, ee)16ooo! இவர்களுக்குப் பின்பே போதி பதித்தார். அங்கு அப்போது தளர்த்தி புதிய உத்வேகத்ை அவர்கள். அவர் விதைத்த ஞ மக்கள் போதிதர்மரின் சான்/சுெ ஊடாகச் செழிப்படைந்தார்கள் தினால் சோர்வடைந்திருந்த விட்டமின் போலானார்.
སོ། །
Not thinking a 2en, Once y CU ki g | tti n0, Cr | y in yCU N0
ം -

ஒற்துத்மான விஷயங்கள் 97 ܐ
6Si6o 6l6o 6ÍSluU “ yin’ o yang o DJII6o 6floog5éis 85ú UL lL - *chan ' கொண்டது. கொன்பியூசியஸ் 5J oom (36)JI" 6ïo (Lao-TZu) தர்மர் அவர்கள் சீனாவில் கால்
நிலவிய சோர்வு நிலையை தக் கொடுத்தவர் போதிதர்மர் ானம் அங்கு வேரூன்றிவிட்டது. *6öI (Chan or Zen) g535gbJ6)Jg55loöI 1. கொன்பியூசியஸின் தத்துவத் 5 மக்களுக்குப் போதிதர்மர்
bCut anything is
TC, this, aking,
O (Cwn, everythn C.
is 2n,
帽*

Page 115
தான் ஒரு என்பதை அறிய
போதிதர்மர் போன் பற்றி தெரிந்துகொள்வ காரணம் அவர்கள் 9 (U) பகுதியாவதில்6ை சமுதாயம் இயங்கும்போ! இயங்குவதில்லை. ஆசை மனித குலம் இயங்கும்ே போன்றோர்கள் ஆசையி நுழைகிறார்கள். சமுதா வரலாற்றுக்குள் அவர்க றோர்கள் வரமாட்டார்கள் காலத்தைக் கடந்து வாழ்வதால் இந்த நிலை plb(p6oLuJ 8 Ig5IIJ6ooI அவர்கள் நமக்குப் புல களை மறைப்பதற்காகச் *உண்மையைப் பேசுவத
போதிதர்மர் அற்புத அதைப் பயன்படுத்தா வல்லமையாகும். உண்ை அற்புதம் எதுவும் நிகழ் சிறந்த அற்புதமாகும். ஒ என்று எண்ணுவதைவிட

நியாயம் 12
மாபெரும் மகான் ாத மாபெரும் மகான்
றவர்களைப் து சிரமம். வரலாற்றின் O. மனித து அவர்கள் யின் மூலம் பாது அவர் ன்மைக்குள் பம் தேடும் ள் போன் ஏனெனில் நித்தியத்தில் ஏற்படுகிறது. நிலையிலிருந்து பார்க்கும்போது படமாட்டார்கள். இவர் விஷயங் சொற்களைப் பாவிப்பவர் அல்ல காகவே சொற்களைப் பாவிப்பவர்.
கள் நிகழ்த்தும் வல்லமை இருந்தும் ல் இருப்பதென்பது மிகச்சிறந்த மயில் இது மிகவும் கடினமானது. தாமல் இருப்பதே அனைத்திலும் அற்புதத்தை மிகப் பெரிய அற்புதம்
அது குறித்துச் சற்றும் நினையா

Page 116
orofo. (g
திருப்பதும் அற்புதமே. அற பொருந்தாத எதையும் ஏற்க
GSU சுரங்கம் (36)Ισόστις வேண்டி கவனிக் வாங்கிச் துணிச்ச
9IU I TIJ சக்திமி மக்கள் குரல் சி அவரது பேச்சு நீர்வீழ் போன்றது. தான் என்ன சொ6 வேண்டுமோ அதைப் பயமின் சொல்லிவிடுவார். தன்6ை பற்றி என்ன நினைப்பார் என்ற எண்ணம் அறவே இல் தவர், அதைப்பற்றி அக்கை கொள்ளாதவர். அவர் பே
குகை ஒன்றில்; சுவரைப்
அங்குச் செல்பவர்கள் உட்கார்ந்திருப்பார்கள், அவ. ஆனால் அவர் சுவை
சொல்லிக்கொண்டிருப்பார். போகிறார்கள் என்பது போதி கேட்பவர்களைத் திரும்பிப்
 
 

ருபாதம் 99ےر
நெறி என்ற பெயரில் அறிவுக்குப்
தவர்.
ாதிதர்மர் ஒரு தூய தங்கச் அவர் விளங்கிக் கொள்ளப்பட -யவர், அவர் அவதானிக்கப்பட டயவர், அவர் சொல்வதைக் க வேண்டும், அவரை உள் கொள்ளவேண்டும், போதிதர்மர் ல் மிக்கவர். பயம் அறியாதவர்,
ஆளுமை கொண்டவர், க்கவர், அவர் முன்னிலையில் அமைதியாகிவிடுவர், அவரது சிங்கம் கர்ஜிப்பது போலானது.
ზ6o றிச் ΟΙύ Ббіт
6DT
றை சும் T(Կ2Ց] ஒரே பூரண அமைதி வும், போதிதர்மர் தனிமையில் சுவது போல் இருக்கும் அங்கு று யாரும் இருப்பது போல் ன்ேறாது.
சீனாவில் சோலின் (Shoalin) யத்திற்கு அருகாமையில் உள்ள பார்த்துக்கொண்டேயிருப்பார்.
அவருக்குப் பின்னால் fகள் கேள்விகள் கேட்பார்கள். ப் பார்த்துத்தான் பதில் யார் அங்கு வருகிறார்கள், தர்மருக்குத் தெரியாது. கேள்வி பார்க்காமலே பதில் சொல்வார்.

Page 117
1 Oola போதிதர்மர் பற்றி
கேள்வி கேட்பவர் இருந்தாலும் அக்கறை என்ன கேள்வி G55 L
சுவரைப் பார்த்தே பதில் வார், கேள்விகள் கேட் அவரது முதுகைப் பா பினனால் இருப் சுவருடன்தான் பேசிக்ெ யிருப்பார் போதிதர்மா சொந்த உட்பார்வையில் insight) LDTö5JLb 9ä560) களில் அல்ல.
சுவரை உற்று நோக்கும் தி
போதிதர்மர் அவர்கள் நோக்கும் தியானம் மே அவர் தனது அகண்டு விரி ஒருவரை உற்று நோக்கி பார்வையைப் பெற்றவர்கள் உள்மாற்றம்’ நிகழ்வதை உ
போதிதர்மர் 2کb பேசிக்கொள்ளாதவர், அப்ட மில்லை, உண்மையைத்த உண்மையைப்பற்றித்தால் அதனால்தான் தனது முன் இல்லை என்பதைப்பற்றி இனம் மீது மதிப்பும், மரி அதனால்தான் சில 6ே கொள்கிறார். கருணையி மறுபக்கம் கோபம். ஆே இருப்பது கருணை. ே மிஞ்சுவது அன்பு.
—ge4JJ L bLuğ596)gi) (Shoalin தான் இருந்தார். அங்கி நடந்துகொண்டதால் வெ அருகாமையில் இருந்த கு

ப அற்புதமான விஷயங்கள்
uLI [TJJTITa95 பில்லை. டாலும் சொல் பவர்கள் ர்த்தபடி JITI TG5 G6T. пт6јотC3ц— . தன்
றகொண்டவர், கேள்வி கேட்பவர்
uTaib (Wall Gazing Meditation):
சுவரை உற்று ற்கொள்பவர். ந்த கண்களால் னால் அந்தப் ா தங்களுக்குள் உணர்ந்தனர். ட்களைப்பற்றி டிச் சிந்திப்பது ன் சிந்திப்பார், பேசுவார். னிலையில் யார் இருக்கிறார், யார் அக்கறை கொள்வதில்லை, மனித பாதையும், அன்பும், கொண்டவர். ளைகளில் கடுமையாக நடந்து ன் மறுபக்கம் ஆவேசம், அன்பின் வசத்தைக் குறுக்கினால் அங்கே ாபத்தைக் குறுக்கினால் அங்கே
Temple) சோலின் தேவாலயத்தினுள் ருந்த துறவிகளுடன் கடுமையாக ரியேற்றப்பட்டார். அதன் பின்பே கை ஒன்றினுள் போய் இருந்தார்.

Page 118
στου. G
கெளதம புத்தர் வரிசை இருந்தபோதும் போதிதர்ப கொரியா, வியட்னாம், தா மலேசியா, சியாம், சுமாத்ர பிரபல்யமாக விளங்குகிறா அமைப்பே அதைச் சாத்திய நாடுகளில் போதிதர்மரை கூடியதாக இருக்கிறது. அ ஊடுருவிவிட்டார். வித்திய போதிதர்மர் இந்த நாடுக
எனலாம்.
கடின உழைப்பும், விடா சுறுப்பான உடல் செய முயற்சியையும், உழைப்பைய அவர்கள் கூறுவதால் சென்ெ கொரியா, ஜப்பான் போன்ற நாடாக இன்று உலகத்தில் ஞானத்தை முழுமையாக உழைப்பும் இயல்பாக மாறிலி
புத்தர் வரிசையில் போதி
28-ஆவது குரு, இவருக்கு ( யாரும் தெரியாமலேயே போ
1. 55/TGAuLuLu Lunt (Mahakas 3. 5F60T6)u ğFIT (Sanavasa), 5. 5/Trig.5IT (Dhrtaka), 6. L (Vasumitra), ĝ, L/35 IT[5ĵ535) (Buddhamitra), 10. urtiGň)6). (Punyayasas), 12. gyGOTG3Lu (Kapimala), 14. நாகர்யுனா (Kanadeva), 16. Gg5(5 Gö351 (Sanghanandi), 18. Fil-35uLuITFG (Kumarata), 20. Jugg/T (Say 22. மனோறித்தா (Man ( Haklenayasas), 24. GALb55G sy9iprt (Vasi Asita), 26.

ருபாதம் _1ےo1
பில் ஞானம் அடைந்தோர் பலர் ர் அவர்கள் சீனா, ஜப்பான், ப்லாந்து, திபெத், கம்போடியா, ா, போன்ற நாடுகளில் மிகவும் ர். அந்த நாடுகளின் மொழி மாக்கிவிட்டது. அதனால் அந்த
எளிதாகப் புரிந்துகொள்ளக் வர் அந்த நாட்டு மனங்களில் ாசமான மொழியமைப்பினால், ளில் முக்கியத்துவம் பெற்றார்
முயற்சியும், சோம்பல் அற்ற சுறு ற்பாடும் ஞானம் என்றார். |ம் ஞானம் எனப் போதிதர்மர் பளத்த மதம் பரவியுள்ள சீனா, நாடுகள் தொழில் வளம் மிக்க உயர்ந்து நிற்கின்றன. அந்த நம்புகிறார்கள். முயற்சியும், பிட்டது.
தெர்மர் அவர்கள் பெளத்தத்தின் முன்பும் பின்பும் இருந்தவர்கள் "ய்விட்டார்கள்.
yapa), 2. gy60Ifö5T ( Ananda), 4. od Lu Gg5 Lg5 T U pagupta), க்ெககா (MicCaka), 7. வசுமித்ரா Buddhanandi), 9. L5/TLÉlöJIT ா (Parsva), 11. புண்ணியாஸ் ாதி (Anabodhi), 13. கபிமலா (Nagarjuna), 15. 35 GOTGö35 GJIT (Rahulata), 17. gFšas Tbiš5) (Sanghayasas), 19 g5LDITU35IT ta), 21. GIITL u jibg] (VaSubandhu) rhita), 23. g) pä6ó|5ITegrtoň) Jng) (Simhabodhi), 25. GurrgìLGðoTGOo?uLuLójöUTIT (Punyamitra),

Page 119
102a போதிதர்மர் பற்றி
27. பிரஜ்னதரா (Pranjnatara 29. nóų4GB5IIT (Huike / Hui
சென் பெளத்தத்தின் 6 ஆனால் அவரைப் பற்றி அளவுக்கு அவர் இருந்து அவர்கள் தான் (Zen) செ6 சீனா, ஜப்பான், கொரியா, சிங்கப்பூர், இந்தோனேசி நிலைத்துள்ளார். கெளத ஞானியாக இவர் திகழ்ந்த அத்துடன் இவரது காரணமாகிறது. கடினப் டே சீற்றம் கொண்டவரா காணாதவராகவும், அவ சாந்தப்படுத்த முயல்வதில் உண்மை பேசுபவர், உ உண்மையைச் சிந்திப்பவர், அல்லது ஆறுதல் பெற்றா பொறுத்தது.
ஆறுதல் வார்த்தைகை காரணம் ஆறுதல் வார்த் என்பதை அறிந்தவர். இத பார்க்கும் காட்டுமிராண்டி விட்டனர். அவர் அப் தனமானவர்தான் ஆன வார்த்தைகள் பேசத்தெரிய Truth) எதுவிதக் கலப்ப உண்மையை நெற்றிக்கு பொய் எதுவும் அறியாத மனம் காயப்படக் கூறி தூண்டிவிடுவார். அதில் புரிந்துகொள்ளவில்லை.
போதிதர்மர் மிகள் விளங்கிக்கொள்வது 6 இருந்தவர்களில் சிலர்

ப அற்புதமான விஷயங்கள்
, 28. GLumi 635 riu Dri (Bodhidharma), p), 30. GoIFIšJFITGöT Seng T'san
தாபகர் மகாகாசியப்பா அவர்கள். 0க்கள் தெரிந்துகொள்ள முடியாத மறைந்துவிட்டார். போதிதர்மர் ா பெளத்தத்தை நிறுவியது போல தாய்லாந்து, வியட்னாம், சியாம், பா பர்மா, போன்ற நாடுகளில் ம புத்தருக்கு அடுத்து பெரிய துதான் அதன் காரணம் ஆகிறது. குண இயல்பும் இன்னொரு பாக்குடையவராகவும் மூர்க்கத்தனம், கவும், எளிதில் இணக்கம் ர் இருந்தார். அவர் யாரையும் ல்லை. உண்மையாக இருப்பவர், ண்மையைச் செயல்படுத்துபவர். இவரால் யாரும் காயப்பட்டால் ால் எல்லாம் அவர் அவர்களைப்
ளத் தேடிக் கண்டுபிடிப்பதில்லை. தை என்பது ஒருவித தாலாட்டு னால் போதிதர்மரை பயங்கரமாகப்
மனிதராக ஒவியங்களில் வரைந்து படியானவர் இல்லை. மூர்க்கத் ால் போலித்தனமான ஆறுதல் ாதவர். இவர் உண்மையை (Naked டமுமில்லாமல் அப்படியே அந்த நர் கூறிவிடுவார். அச்சம், போலி, வர். தெரிந்ததெல்லாம் உண்மை."
அதன் மூலம் விழிப்புணர்வைத் மறைந்திருந்த உண்மையைப் பலர்
ம் தனித்துவமானவர். அவரை ளிதல்ல. அவரது சீடர்களாக அவரைச் சரியாகப் புரிந்து

Page 120
στου. Ο
கொள்ளமுடியாமல் போனது தனக்குப் பின்னால் ஒருவ 56TLll illust35 (Very Strict) 15L கண்டிராத மிகவும் கண்டிப் போன்ற ஆசான் உலகில் எனக்குத் தெரியாது. இவ அந்தளவு காருண்யம் மிக்கவி கருணையின் அடிப்படையி இருந்த வியாபாரிகளை இே எடுத்து துரத்தியது கோபத் அன்பின் அடிப்படையிலே.
அனைத்தும் அன்பின் அடிப்
தான் ஒரு பெரிய போதிதர்மர் அவர்கள். உண் தங்களுக்கு ஞானம் உ( பிறரால்தான் அதைக் க உண்மையான ஆன்மிக மணி இருப்பதை ஏற்றுக்கொள்ள பேரியக்க உண்மையைக் அமைதியாக உட்கார்ந்திரு அனுபவத்தை அடைந்திரு களுக்குள் அடக்க முடியாது புத்தரிடம் உங்கள் தெய்வி என்றால் அதற்கு பதிலாக தன்னுடைய உள் உண்மை அதை அனுபவிப்பதைத் அத்தாட்சியும் இல்லை. யா அனுபவங்களை அடைந்துவி ஒரு மயக்கத்தில் தன்னைத் தி 5f53urt (UpGaiari (Tantric Sa
ஒரு ஞானி தான் ஒரு ( ஒரு யோகி தான் ஒரு ஒரு சுவாமி தான் ஒரு
போதிதர்மரும் அத்தகை

குருபாதம் l103
துர்பாக்கியமே. இறுதி நாளில் ரை நியமிக்கும்போது மிகவும் டந்துகொண்டார். உலகம் என்றும் பான ஆசான் இவர். இவரைப்
வேறு எங்கும் இருந்தனரோ ர் எவ்வளவு கண்டிப்பானவரோ ார். அவரது கண்டிப்பு அனைத்தும் பிலே. கோயிலின் முன்றிலில் யசு கிறிஸ்து நாதர் சாட்டையை தின் அடிப்படையில் இல்லை, போதிதர்மரின் சீற்றம், ஆவேசம், UGoLuó05oo.
மகான் என்பதை அறியாதவர் ாமையிலே ஞானம் உள்ளவர்கள் ள்ளதை உணர மாட்டார்கள். ண்டுகொள்ள முடியும். ஒரு தன் தனக்கு ஆன்மிக அனுபவம் மாட்டார். புத்தரிடம் அந்தப் கூறுங்கள் என்றால் புத்தர் ப்பாராம். உண்மையில் அந்த ந்ததால்தான் அதை வார்த்தை என்பதால்தான் அமைதி காத்தார். க அனுபவங்களைக் கூறுங்கள் புன்முறுவல் பூப்பாராம். “ஒருவர் நிலையை அறிந்துகொண்டால் தவிர அதற்கு வேறு எந்த "ர் ஒருவர்தான் அந்த தெய்விக ட்டேன் என்று கூறினால் அவர் ானே ஏமாற்றிக்கொள்கிறார் என ge) சஹாறா கூறுகிறார்.
சூானி என்பதை அறியமாட்டார். யோகி என்பதை அறியமாட்டார். சுவாமி என்பதை அறியமாட்டார். UGIJGSy.

Page 121
1 o4a போதிதர்மர் பற்றி
இவர் ஒரு மெய்ஞ்ஞ் தற்காப்புக்கலையின் தந்தை நிறைந்தவர். கிழக்கிற்குக் உலகத்தில் எந்தவொரு நா துறைகளில் ஞானம் நிறை இல்லை.
போதிதர்மர் அவர்கள் கண்டுபிடித்துவிட்டால் அ கருத்து என்று சொல்லிவி கூடும் என்ற எண்ணத் உபநிடதங்கள், கீதை, பிரம் குரான், தம்மபதம் போன்ற ஆதாரங்களாகவோ அவைக உண்மைக்கு நிரூபணமாக 6
வேதம், உபநிடதம், முத்திரை, குண்டலியம், ே தங்கள் “அறிதலை நிலை அழைக்கவில்லை. அவர்க சுயதரிசனத்தில் அறிந்த உ யாக அழைக்கவில்லை.
பிறநாட்டில் உள்ளவர்க ஒருங்கே ஒத்துப்போகிற கூறவில்லை. தன் அறிதலி கருத்து துணிச்சலானவை, அ இருந்த துணிச்சல் இவருக்கு பின் தன் அறிதலை துை அறிதலுக்கு இவர் அறி: சாட்சியாக விளங்கினார், உ இவரது மனம் மரபிற்கு முறைகளுக்கும், வழிமுை அதனால் சுதந்திரமானவரா!
ஆரம்பத்தில் இந்தியாவி மஹாஜன, சர்வஸ்ரிவடா, ஊடாகவும், மேலும்

அற்புதமான விஷயங்கள்
நானி, மருத்துவ விஞ்ஞானி, ), புத்தருக்கு ஈடான ஆன்மிகம்
கிடைத்த அறிவியல் மேதை. பட்டிலும் இவரைப் போன்று பல ந்த மாபெரும் மகான் இருந்ததே
சுயமாக ஓர் உண்மையைக் தைத் துணிவுடன் தன்னுடைய டுவார். அது தவறாக இருக்கக் தினால் வேதங்கள், யோகா, மசூத்திரம், மந்திரங்கள், பைபிள், வைகளை மேற்கோள்களாகவோ, ளைத் தன் சுயதரிசனத்தில் கண்ட எடுப்பதில்லை.
பிரம்மசூத்திரம், யோகா, மகா பான்றவைகளை அருளியவர்கள் நாட்ட ஆதாரங்களுக்கு எதையும் ள் போலவே போதிதர்மரும் தன் ண்மைகளுக்கு யாரையும் சாட்சி
ள் கூறிய கருத்தும் தன் கருத்தும் தென்று போதிதர்மர் சாட்சி ல் தெளிவாக இருந்தார். இவர் புழுத்தமானவை, ஆதிஞானிகளுக்கு 5 இருந்தது. ஆதி ஞானிகளுக்குப் Eந்து கூறியவர் இவரே. இவர் 5லே ஆதாரம், தனக்குத்தானே ண்மைக்குக் கவசம் தேவையில்லை. ம், சம்பிரதாயத்திற்கும், விதி றகளுக்கும் கைதியாகவில்லை. வே இருந்தார்.
ல் கற்ற பெளத்த போதனையில் லங்கவத்தர சூத்திரா, இவைகள் யோகாகலை, அட்டமாசித்தி,

Page 122
οποίο Θ
வர்மக்கலை, கலரிப்பட்டு இல் தன்னை அடையாளப்படுத் இவர் நகர்ந்து மேலே உயர்ந் உணர்ந்த உண்மையையும் வெளிப்படுத்திய மகான் இவர் மேற்கோள்களும் தேவைப்ப சாட்சி இவரே, இவருக்கு ஆதாரம் இவரே.
தங்களைத் தாங்களே என்றும் "கடவுள்' என்றும் வேதங்களுக்கும், உபநிடதங்க் பிரம்மசூத்திரத்திற்கும், கீை முத்திரைக்கும், குண்டலி தம்மபதத்திற்கும், புனித நூே கொள்கிறார்கள்? இவர்களால் புத்தம் புதிய ஒன்றை வெளி கூறியவைகளை வெளிப்படு புதிதாகவே தங்கள் சுயதரிசன் அந்த மகான்கள் எதல் கொள்ளவில்லை. அவர்கட்குச் எந்தக் கோட்பாட்டையும், எ சாட்சியாக இழுத்ததில்லை. சுவாமிகளும், இந்த அவதா புராதன ஏடுகளில் கூறியை எதையும் தங்கள் சொந்த அறியவில்லை. அரைத்த மா உணவை புதிய பாத்திரத்தி புதிது பாத்திரம்தான். வேெ ஆன்மிகத் தந்திரம். இவர்கள் அரைத்துத் தரவில்லை என்ப இவர்கள் வெறும் சொறி வியாபாரிகள், ஆன்மிக தந்தி நன்கொடைகளையும், தங்கா பேராசைக்காரர்கள், சுயதf காணாதவர்கள்.

ருபாதம் 1105 .
வைகள் ஊடாகவும் போதிதர்மர் தியிருந்தாலும் காலப்போக்கில் து தன் சொந்த சுயதரிசனத்தில் ), அறிந்த ஞானத்தையும் இவருக்கு எந்த ஆதாரங்களும் டவில்லை, காரணம் இவருக்கு மேற்கோள் இவரே, இவருக்கு
சுவாமி என்றும் அவதாரம்’ பிரகடனப்படுத்துபவர்கள் ஏன் 5ளுக்கும், யோகஞானத்திற்கும், தக்கும், பைபிளுக்கும், மகா யத்திற்கும், 'குரானிற்கும்", ல்களுக்கும் பின்னால் பதுங்கிக் ) ஏன் தங்கள் சுயதரிசனத்தில் ப்படுத்த முடியவில்லை? மேற் த்ெதிய மகான்கள் எல்லாம் னத்தில் வெளிப்படுத்தினார்கள். பின்னாலும் மறைந்து சாட்சி அவர்கள்தான். அவர்கள் ந்த அறிவியலையும் தங்களுக்குச் சுயபிரகடனம் செய்யும் இந்த ரங்களும் இந்த 'கடவுள்களும்’ வகளைத்தான் கூறுகிறார்கள். அனுபவத்தில், சுயதரிசனத்தில் வை அரைக்கிறார்கள், பழைய ல் வழங்குகிறார்கள். இங்குப் றான்றும் இல்லை. இது ஒரு ஏதாவது புதிய மாவைக் கூட துதான் விந்தையிலும் விந்தை. பொழிவாளர்கள், ஆன்மிக ரக்காரர்கள், வசூல்களையும், களையும் நோக்கிப் போகும் சனத்தில் எந்த அறிதலையும்

Page 123
1oea போதிதர்மர் பற்
இப்படியான OT போதிதர்மருக்குப் பல இ மிக உயரத்தில் நகர்ந்து அவரை எட்டித் தொடே உதித்து கிழக்கில் மறைந் சிகரத்தைச் சிறிதாக்கிய உ மாபெரும் மகான் என்பை
ஆவார்.

ய அற்புதமான விஷயங்கள்
மிகளாலும், அவதாரங்களாலும் டையூறுகள் நேர்ந்தபோதும் அவர் கொண்டேயிருந்தார். இவர்களால் பமுடியவில்லை. இவர் கிழக்கில் 5 ஞானசூரியன். இவர் எவரெஸ்ட் யர் ஞானச்சிகரம். இவர் தான் ஒரு த அறியாத ஒரு மாபெரும் மகான்

Page 124
அத்திய
தற்காப்புக் கன்
போதிதர்மர் தரைமார்க்கம கொடிய மிருகங்களிலிரு வேண்டியிருந்தது. அதனா6 இயல்புகளை அவதானித்து எதிர்கொள்ளும்போது அத ஏற்ப தன்னைப் பாதுகாத்து கரத்தில் எப்போதும் இருக்கு பட்ட அந்தத் தற்காப்புக் ே
மையமாக வைத்து ஷோலின் உருவாக்கினார். இக்கலை ஆ Art என அழைக்கப்பட்டது.
(Kung Fu) ஆக மாற்றமடைந்த தற்காப்புக்கலையான ஷோ6 Martial Art)gguqúb áf6OIT6f66ò és கராத்தே கலையை முதன் (
இவரே.
 

ாயம் 13
லையின் தந்தை
ாகப் பிரயாணம் செய்தபோது பல ђgy தன்னைப் பாதுகாக்க ல் பல மிருகங்களின் குண
அதற்கேற்ப மிருகங்களை ன் குண இயல்புகளுக்கு த் தப்பிக்கொண்டார். அவரது ம் விசேடமாக வடிவமைக்கப் காலும் அவருக்கு உதவியது. அந்த அனுபவங்களுடன் புலி, சிறுத்தை, குரங்கு, பாம்பு, நாரை ஆகிய இந்த 5 பிராணிகளின் குண இயல்பு களையும் சேர்த்து இந்தியா வில் தான் பெற்ற வர்மக் கலை, கலரிப்பட்டு, யோகா
பயிற்சி, வச்சிரமுஸ்திக் கலை, பொக்கடோர் (Bokator) 1 போன்ற 5606)560) 6.
ா குவான் தற்காப்புக்கலையை „JúbUğöğSl6o Shaolin Quan Martial
இது பிற்காலத்தில் குங்-பு து. நோக்கு வர்மக்கலையையும், SloöI Lomữosốo <ạkửL” (Shaolin அறிமுகப்படுத்தினார். உலகில் முதலில் அறிமுகப்படுத்தியவர்

Page 125
1 Oa போதிதர்மர் பற்ற
பொக்கடோர் (Bokator):
பொக்க டோர் வலி மிக்க கம்போடிய தற்காட கலையாகும் (Cambo ( Martial Art). 9)5 9)ñ60)s 1700 வருடங்களுக்கு முந் LIġbl. இந்தக் ᏯᏏ ᎶᏈᎠ Ꮚu) ‘லபோக்கடோ (Labokk என உள்ளூர் மக்கள் அை தனர். பொக்கடோர் (Bok என்றால் சிங்கத்தை அடித் (Pounding a Lion) 6T கருத்தைக் கொடுக்கிற கம்போடியாவில் சிங்கத் அச்சுறுத்தல் அதிகப இருந்தபடியால் அதிலிரு தப்புவதற்காக உருவ தற்காப்புக் கலையே இ வெறும் கரங்களால் கத்தை எதிர்கொண்டு டே முழங்காலால் வேகமாக ஒ இடித்துக் கொல்லும் க யாகும். அங்கோர் அ காலத்திலே இக்க மேலோங்கி இருந்தது. கலை வளர்ச்சிக்கு இந்தி Martial Art) Cyp GöIGSGOI III தற்காப்புக்கலையின் முன் முதலாவதாக அரசாட்சி சேர்ந்த இராணி சோமா
Bokator 5pib85II t'ju ës கையால், தலையால் அடித்தல் போன்றவைகள் போன்றவைகளை ஆயுத போன்ற விலங்கினங்கs

யெ அற்புதமான விஷயங்கள்
கியாவின் தற்காப்புக்கலை (Indian டியாக இருந்திருக்கிறது. உலகில் ானோடி இந்தியாவே. அங்கோரை
செய்தது முதலாம் நூற்றாண்டைச் என்ற பெண்ணே.
கலையில் முழங்காலால், முழங் வேகமாக இடித்தல், மோதுதல், பிரதான யுத்தியாகவும் மூங்கில், தடி வ்களாகவும் குதிரை, நாரை, கழுகு சின் அசைவுகளையும் இணைத்தே

Page 126
எஸ். கு
இக்கலை வடிவமைக்கப்பட் 10,000 வித்தியாசமான யுத்தி styles) உள்ளன. முற்காலத்தி Khamer warriors) Sibgs5 விளங்கினர். A.D. 800 கா6 600 வருடங்கள் தென்கி அரசர்களது கை? மேலோ நீண்டகாலப் பாரம்பரியமான asooooutb (Cambodians' Long
ஒன்றாக இருக்கலாம்.
grioum995mm Polpot -g பாரம்பரிய Bokator தற்காப் rouge படையினரால் ெ சம்பந்தமான ஏடுகளும் அழி தற்காப்புக் கலைப் பயிற்சியா அயல்நாடான வியட்நாமிற்குத் வீழ்ச்சியின் பின்பு வியட்நாய கட்டுப்பாட்டிற்குள் கொள் இத்தற்காப்புக்கலை முற்றாகத்
கம்போடியாவிலிருந்து அ San Kim Sean GT6õTLu GurŤ பெயரில் அங்குப் பயிற்சி வ கம்போடியா திரும்பிய அவர் புத்துயிர் கொடுத்துப் பரப்பில் இக்கலை பற்றித் தெரியவந் GoF6Jjöga "G3L. Bokator L ஆரம்பிக்கிறார்துள்.
பல்லவ மன்னர்களுள் போதிதர்மர் அவர்கள் Bokator இருந்தார். இந்தக் கலைை குவான் தற்காப்புக்கலைை பரப்பினார். இலைமறை க இருந்த தற்காப்புக்கலைகை சக்திமிக்க, ஆற்றல்மிக்க, பொதுமக்களுக்காக

ருபாதம் l1 Og
டுள்ளது. இதில் கிட்டத்தட்ட asoir gll Unilesoir (Techniques and தில் ஹமூர் போராளிகள் (Ancient தற்காப்புக் கலையில் சிறந்து oப்பகுதியிலிருந்து கிட்டத்தட்ட ழக்கு ஆசியாவில் அங்கோர் ங்கி இருந்ததற்கு அவர்களது எ போர்க்கலையும் தற்காப்புக் Martial Heritage) asnyoorislasofloo
ஆட்சிக்காலத்தில் (1975-1979) புக்கலை விற்பன்னர்கள் Khmer கால்லப்பட்டனர். அக்கலை க்கப்பட்டன. அதனால் Bokator ளர்கள், அக்கலை தெரிந்தவர்கள் 5 gill 5 gig 60Ti. Khmer Rouge பியர் கம்போடியாவைத் தங்கள் ண்டு வந்தனர். அவர்களால்
தடை செய்யப்பட்டது.
அமெரிக்காவிற்குத் தப்பி ஓடிய இக்கலையை Hapkido என்ற குப்புகள் நடாத்தினர். 1992-இல்
Bokator தற்காப்புக் கலைக்குப் னார். அதன்பின்பே உலகத்திற்கு தது. பிரம்மாவிற்கு மரியாதை பயிற்சியைக் கம்போடியாவில்
Bokator a5ooooo 6ooofiluUgJ. கலையில் தேர்ச்சி பெற்றவராக பயும் உள்ளடக்கியே ஷோலிங் ய வடிவமைத்து சீனாவில் ாய் போல் அரசர்கள் கைவசம் இணைத்து வலிமைமிக்க, புதிய தற்காப்புக் கலையாக வடிவமைத்து உலகுக்கு

Page 127
1 1 Oa போதிதர்மர் பற்ற
அறிமுகப்படுத்தியவர் பே கலையின் தந்தையும் அவ
ஷோலின் குவான் தற்காப்
போதிதர்மரால் ஷோ6 Gö56)JIT6öI (Shaolin Qu தேவாலயத்தில் தான் மு முதலில் ஷோலின் குவ தற்காப்புக்கலை (Shaolin C Martial Art) oqB 6)Jqபெற்றது. இந்த தேவால *வெய்" (Wei) அரசபரம்ப ஆட்சியில் (386-534 A வட சீனாவில் ஹொ நிர்மாணிக்கப்பட்டது. பிரபல்யமானதாக உள்ளது ஆன்மிகவாதிகளாக இ குன்றியவர்களாக இரு தாக்குதலுக்கு உள்ளாகி உணர்ந்தார். இதனால் அ பயிற்சியையும் பின்பு தற்ச
ஒக்கினாவா (Okinawa) தீவு
வர்த்தகம் நிமித்தப் உள்ள ஒக்கினாவா தீ6ை சென்றபோது சோலின் பயிற்சியைக் கண்டனர். ஒக்கினாத் தீவைச் சென்ற ஜப்பானில் உள்ள சமூ தங்களைப் பாதுகாத்துக்ெ வளர்த்தனர் அப்போது தடை இருந்தது. சமுர மாத்திரம் ஆயுதம் பா பாவிக்கக்கூடாது என்ற தங்களைப் பாதுகாக்க காட்டினார்கள். சமுரா

lய அற்புதமான விஷயங்கள்
ாதிதர்மர் அவர்களே. தற்காப்புக்
rO voJ.
disabØD6D (Shaolin Quan Martial Art)
னான் (Honan) மாகாணத்தில் இந்தத் தேவாலயம் இன்றும் து. அங்கிருந்த துறவிகள் சிறந்த ருந்தபோதும் உடல் வலிமை ப்பதால் கொள்ளைக்காரர்களின் றார்கள் என்பதை போதிதர்மர் அவர்களுக்கு முதலில் யோகாசனப் ாப்புக்கலையையும் பயிற்றுவித்தார்.
ஜப்பானின் தெற்குப்பகுதியில் பச் (Okinawa) சேர்ந்தவர்கள் சீனா தேவாலயத்தில் தற்காப்புக்கலைப் அவர்கள் ஊடாக இந்தக்கலை டைந்தது. இத்தீவில் உள்ள மக்கள் க அடக்கு முறைகளில் இருந்து காள்ள இக்கலையைத் தங்களுக்குள் ஜப்பானில் ஆயுத பாவனைகளுக்குத் Tuij GTri 35 Git (Samurai Warriors) விக்கலாம், மற்றவர்கள் ஆயுதம் தடையினால் ஒக்கினா தீவு மக்கள் ற்காப்புக்கலையில் மிகுந்த ஆர்வம் ப் வீரர்களால் ஒக்கினாவா மக்கள்

Page 128
எஸ். குரு
அடக்கப்பட்டார்கள். சமுரா தங்களைப் பாதுகாப்பதற்கும் , தேவைப்பட்டது. சோலின் :ே மையமாக வைத்து தங்களு வடிவமைத்தார்கள். ஒக்கினா வீடுகள் தோறும் பயிற்சிகள் ஒவ்வொரு கிராம மக்களும் தங்களது தற்காப்புக் கலைக்குட்
சீனாவில் நீண்ட காலம் சென்சிஹிகசியோணா (Ser
& Higashic தன் ே தீவுக்குத் இருந்த பயிற்சிை கிராமப பெயை மொழி சொல்ல தே வடிவை
shionna Kanryu sense ப்ெயரிட கோஜ" வதற்கு அடித்தளமானது. 20-ஆ ஒக்கினா தீவும் ஜப்பானுடன் மாகாணமாகிவிட்டது.
Higa
凸 பலவி தற்கா வந்தன “д5ртпт” ‘கராத் பெயன
ԱՄn 6ւ மாற்ற
 
 
 

பாதம் 1 11
ப் மக்களை எதிர்ப்பதற்கும் அவர்களுக்கு ஒரு மாற்று வழி வாலய தற்காப்புக் கலையை க்கு ஒரு தற்பாதுகாப்பை தீவிலுள்ள குக்கிராமங்கள், ஆரம்பித்தார்கள். அங்குள்ள தங்களது கிராமப் பெயரால்
பெயரிட்டார்கள்.
வசித்த ஜப்பானைச் சேர்ந்த sei-Higashionna / Kanryo nna) 1800 காலப் பகுதியில் சாந்த இடமான ஒக்கினா திரும்பினார். இவர் சீனாவில் போது தற்காப்புக் கலைப் யைப் பழகியிருந்தார் அவரது ான நாகா (Naha)வின் дтд: சேர்த்தும் தங்கள் பில் 'கைகளை’க் குறிக்கும் ான “தே’ ஐயும் சேர்த்து நாக(Naha-Te) at airp தான் மத்த தற்காப்புக் கலைக்குப் ட்டார். இது காலப்போக்கில் -றியு (Goju-Ryu) தோன்று பூம் நூற்றாண்டு ஆரம்பத்தில் இணைக்கப்பட்டு அது ஒரு
ற்போது ஜப்பான் பூராவும் 5மான Te? இருப்பதால் ப்புக்கலை சீனாவிலிருந்து தக் குறிக்கும் சொல்லான (Kara) என்பதையும் சேர்த்து தே? (Kara-Te) என்ற ரக் கொடுத்தார்கள். உலகம் ம் தற்காப்புக்கலை பலவித ம் அடைந்து நவீனமயப்

Page 129
112 a போதிதர்மர் பற்ற
படுத்தப்பட்டாலும் தற் போதிதர்மர் அவர்களே!
Higashion
IWAH W.
KOJO ISei AR
8 x
KOJO Taitei
KOJO Family se se noe som o se
ஒக்கினாவா தீவு
சிறந்து விளங்குகிறது. துரோணாச்சாரியாரின் சி குருவாக ஏற்று ஏக6ை அதேபோல போதிதர்மரி3 அவரை மானசீகக்குருவாக தற்காப்புக்கலையைப் பழ வழிபடுகிறார்கள். அங்கு g5Q5LDCég5éfa (Darumadeshi) அங்குதான் இறந்ததாக அ ஐதீகம் உண்டு.

ய அற்புதமான விஷயங்கள்
காப்புக் கலையின் பிதாமகன்
na Kanryu Lineage
Xei Zhongxian Liu liu KO
A Xinxian
NAKAIMA Norisato
AGAK Seisho NAKAIMA Family
s
HIGASHIONNA
Kanryu
தற்காப்புக்கலையில் இன்றும் மகாபாரதக் கதையில் எப்படி லைக்குமுன் அவரை மானசீகக் 0வன் வில்வித்தை பழகினாரோ ன் உருவச்சிலைக்குமுன் வணங்கி 5 ஏற்று ஒக்கினா தீவில் அம்மக்கள் ஓகினார்கள், கோயில் அமைத்தும் இவரை தருமா (Daruma) என்றும், என்றும் அழைக்கிறார்கள். இவர் ந்த மக்கள் மத்தியில் இன்றும் ஒரு

Page 130
அத்திய
இலங்காவத்திர க சீனாவில் வ
மகாயன பெளத்தத்தின் போதிசத்வாஸ் (Bodhisattva
இலங்காவத்திர சூத்திர (Lankava என்பர்
இந்த “சூத்திரம் செ சொற்களால் விளங்கப்படுத்த உள்ளுணர்தலில் நம்பிக்கை உணர்தல் தன்னைத்தானே அறி செயற்படுங்கள், முயற்சியில்லி கூறுகிறது. அதாவது இயல்புத்
தனது பிரதான சீடனான ஹியூக்கிடம் (Huike) போதிதர்ம கூறினாராம் "தான் சீனாவை கவனித்தபோது இலங்காவத்தி சூத்திரம் இந்த நாட்டுக்கு பொருத்தமானது. இதன் உட பொருளை சீனமக்கள் விளங்கி கடைப்பிடித்தால் உலகை தாண்டிவிடுவார்கள். சீனாவிற் மிகப் பொருத்தமானது இந் சூத்திரமே." போதிதர்ம அவர்கள் ஹியூக்கிடம் இவ்வ பற்றிக் கூறும் ஏடுகளில் காண

sub 14
த்திர ஞானத்தைச்
தைத்தார்
(Mahayana Buddhism) 3) சூத்திரம் போலல்லாது tras sutra) blasolub élá556onog)
ாற்பிரயோகத்தில் அல்லது லில் அக்கறை கொள்ளாது கொள்கிறது. “உண்மையை” யுெம் மார்க்கமாகும் என்கிறது. ாமல் செயற்படுங்கள் எனக் தன்மையை வலியுறுத்துகிறது.
று கூறியதாக ஹியூக்கைப் படுகிறது.

Page 131
114a போதிதர்மர் பற்
இலங்காவத்திர கு கொள்ளாது செயல்களில் அதாவது இயல்புத்தன்டை வலியுறுத்துகிறது. தியான செயல்கள் நான்கு (Two நூலில் போதிதர்மரின் “க நோக்கும் தியான முறைை பெளத்தத்தின் உயர் : படுகிறது. இவ்வாறு குறிப்புகள் இங்கொன்று சிதறிக் காணப்படுகின்றன
அமர்ந்து இருந்து தி & GOI IT6Si6o “ FIIF GöI” (Zaz காலப்போக்கில் இது C ஆகவும் மருவிவிட்டது. விட்டது. இதன் பிரதான கற்றுக் கொடுக்கும் பாடச இலங்காவத்திர பாடசா படுகின்றன. போதிதர் உட்கார்ந்து இருந்து தியா இல்லாதவர் என்று நினைத்து விட்ட இவரைப் பற்றிய ஒவிய கால்கள் இல்லாமல் அக கண்களுடன் இன் வரையப்படுகின்றன. ( தியானத்திலிருப்பது ே முட்டை வடிவத்திலான தாமோ-பொம்மைகள்’ Mo Dol) கால்கள் இல்ல ஜப்பானில் இன்றும் விற் யாகின்றன. இதைப் போல ஆகாயத்தில் அது எறிந்தவரையே நே திரும்பி வரக்கூடியது.

lய அற்புதமான விஷயங்கள்
த்திரம் சொற்களில் அக்கறை மாத்திரம் அக்கறை கொள்கிறது. யையும், இயல்பான செயலையும் த்தைப் பற்றிய வழிகள் இரண்டு, entrances and four acts) 6T6ölsp ண் இமை மூடாமல் சுவரை உற்று uLu (Wall-Gazing Meditation) LD5/TgọGOT $யானமுறை எனக் குறிப்பிடப் போதிதர்மர் அவர்களைப்பற்றிய ம் அங்கொன்றுமாகப் பரவலாகச்
LuII6of 5560)ood (Sitting meditation) :en) என ஆரம்பத்தில் அழைத்து han o GT GOI6qúb ú66öIỊ Gol&F6öI (Zen) இது சென் பெளத்தமதம் ஆகி குரு போதிதர்மரே. தியானத்தைக் ாலைகள் சான்’ பாடசாலை என்றும் லை’ என்றும் சீனாவில் அழைக்கப் மர் அவர்கள் ஒன்பது வருடம் னம் செய்தபடியால் இவர் கால்கள் பலர் னர். வ்கள் ண்ட ாறும் இவர்
- Ι Π6)

Page 132
அவை விரிந்த கண்களுடன் தியானநிலையை பிரதிபலிக்கி
 

ருபாதம் l1 15
சிறுவர்களுக்கு மகிழ்வு
ஊட்டும் விளையாட்டுப் பொம்மையாக இது உள்ளது. முட்டையின் அளவில்
முட்டை வடிவமாக உள்ள இந்தச் சிறு பொம்மையை அசைத்துவிட்டால் தஞ்சாவூர்ப் பொம்மை போல ஆடிக் கொண்டேயிருக்கும். போதி தர்மருடைய அகண்ட விரிந்த கண்கள், கோரமான பார்வை கொண்ட முகஅமைப்பைக் கொண்டதுதான் அந்தத் தாமோ’ப் பொம்மைகள். சுவரை உற்று நோக்கும் இவரது ன்றன.

Page 133
அத்தி
கெளதம புத் பயணித்த
புத்தர் தனது 29-ஆ வயதில் அரச மாளிகை விட்டு வெளியேறினார். சி ஆன்மிக ஆசிரியர்களைச் ச தார். தன் சந்தேகங்கள் தீர்ப்பதற்கு அவர்களை நாடி அவர்கள் கூறிய வழிமு களை, போதனைகளைப் பற்றினார். தனது ஆ6 ஆசிரியர்களை விட திற அவற்றை வாழ்வில் க பிடித்தார். அவரது ஆசிரிய கூட அந்தளவுக்கு இதய யுடன் ஈடுபட்டிருக்க டார்கள். அந்தளவுக்கு *உண்மை”யை அனுபவிக்க ஆன்மிக விழிகாட்டிகள், எல்லோரும் கூறியபடி ஒழு **நான் ஆரம்பத்தில் எப்படி இருந்தேனோ அதேபோ6 கற்றுக்கொண்ட வழிமுறை யார் என்பதை”, “உண்ை அதே நேரத்தில் விழிப்புல புத்தர்.

யாயம் 15
தரின் பாதையில் ார் போதிதர்மர்
புத்தர் தன்னை அர்ப்பணித்து , உணரத் தலைப்பட்டார். தனது வேத, உபநிடதப் பண்டிதர்கள் கியும் எதுவும் நடைபெறவில்லை. ஒன்றுமே தெரியாத அறிவிலியாக வே இப்போதும் இருக்கிறேன். sள் மூலம் என் இருப்பை”, “நான் யை உணரவும் முடியவில்லை, ார்வையும் தரவில்லை?" என்றார்

Page 134
எஸ்.
புத்தர் சந்தித்த ஆசிரியர்கள் இவரது தேடலைப் பா அறியாமையை நினைத்து அவர்கள் தாங்கள் அப்படி வர்கள். அவர்கள் தாங்கள் கொண்டவற்றிலிருந்து பிரச போதனைகளும் செய்தன ரீதியாக உணர்ந்தவர்கள் அ உணரத் தன் தேடலில் இ மாணவனை அவர்கள் எதி புத்தரின் கேள்விகளுக்கு மழுப்பியே வந்தனர். ஆசிரியரிடமிருந்து வேறொரு ஆசிரியரிடம் இவ்வாறே கொண்டேயிருந்தது.
அவர் சந்தித்த ஆ Gu(Ibigilang5IIQ)|Lb (Torturing th (abstainig from food) (at SL65,556) (Fire Walking), கொண்டு மிதந்தபடியே திய Crossed legs), 6sbGospigs. Tai) தலைகீழாக நிற்றல் (St 6.f555CD556i (Vigilance wit (Chanting of mantras), G வழிநடத்தலில் இதய சுத் ஆசான்கள். திகைப்புற்றனர். 8 அவர்களால் புரிந்துகொள்ள உணர அது மார்க்கமில்லி உணர்ந்துகொண்டார்.
பிறிதொரு ஆசானிடம் pilgglgigi) (stopping Though கவலை, துன்பம், துக்கம் அமைதி அடையலாம் (Supr இது எதுவுமே சிந்திக்காமல் nothing) தியானம் என்றா

குருபாதம் 117ے
த்த இவரது ஆசிரியர்கள், தங்கள் வெட்கப்பட்டனர். ஏனெனில் ான ஒரு தேடலை நினைக்காத படித்து, வாசித்து, மனனம் செய்து ங்கங்களும், சொற்பொழிவுகளும், ரேயொழிய எதையும் அனுபவ Iல்லர். புத்தர் அனுபவ ரீதியாக இறங்கினார். இப்படியான ஒரு பார்க்கவில்லை. முடிந்தவரையில் அவர்கள் பதில்கூற முடியாமல்
<9ԱԱ) வருடங்களாக
ஆசிரியரிடம், பின்பு பிறிதொரு ஆசிரியர் தேடல் தொடர்ந்து
சான்களில் சிலர் 9Ꭰ - L - ᎶᏡᎧ Ꭷu) e body), உணவை ஒறுத்தலாலும் ானமடையலாம் என்றார்கள். நீரின்மீது சப்பாணிகொட்டிக் TGoiá56) (Floating on water with Suit GOTlib (Standing on one leg), inding on Head), sójö9660) UT nout sleeping), LDjögôTLİb gÐgl356) பான்றவைகளை ஆசான்களின் தியுடன் திறம்படச்செய்தார். த்தார்த்தர் தேடும் உண்மையை’ முடியவில்லை. உண்மையை’ ல என்பதை விரைவிலேயே
சென்றார். “எண்ணங்களை s) மூலம் மனதில் பீடித்துள்ள பான்றவைகள் நீங்க அதியுயர் me joy of tranquility) 6Tai DITsi. !CD5, Ligsb5ITGOT (Mediation to think ஆசான். வேறொரு ஆசான்

Page 135
1 18 a போதிதர்மர் பற்றி
'asaling,556) (Debating ski ஞானம் அடையலாம் என உண்மையை அறியும் பான
புத்தர் காலத்திலிருந்த (Alara Kalama) gọ6öIg)Judgibgo of nothingness) 5u IIoori உத்றகா-இராமபுத்திரா (U எண்ணங்கள் எழாமல் தியானத்தைக் கற்றுக் கொ மன அமைதியடைந்தார். (state of mind) Orobiugin வெளியேறி e odorooD o தலைப்பட்டார். புத்தருடைய
புத்தர் காலத்திலிருந்த 1 சந்தித்தார். அவர் புத்தருக்( வீணாக்குகிறாய், எந்த ஆசி பதில் கூற முடியாது. நீய வேண்டும், உன் மனதை நீ பாடமோ போதனைகளே இல்லை" என்றார்.
கோட்பாடு, வழிபா அனுட்டானம், விதிமுறை வருடங்களாகப் பின்பற்றி முடியாமல் ஒரு தேக்க நி இறுதியாகச் சந்தித்த ஆன் மீண்டும் நினைவுபடுத்தி சித்தார்த்தர். (இவர் ஞான அழைக்கப்பட்டார்.) அந் உள்ளார்ந்தத்தையும், பக்குலி மாணவராகச் சேர்த்துக்ெ மனதை உன்னால்தான் அனுஷ்டானம், சடங்கு, ச கோட்பாடு என்று எதுவும் ே கோட்பாடுகளை நாடும் உனக்கில்லை, உன் மன6

அற்புதமான விஷயங்கள்
S) வெற்றி அடைவதன் மூலம் ாறார். எதுவுமே இவர் தேடும்
தயைக் காட்டவில்லை.
மகா ரிஷிகளான அலரா-கலமா sloooouldo (meditation in the state செய்யக் கற்றுக்கொடுத்தார், draka -Ramaputra) uDoorsl6o எண்ணங்கள் வீழ்ச்சியடையும் டுத்தார். இத் தியானங்களினால் ஆனால் இவை ஒரு மனநிலை ல், அவ் ஆசான்களிடமிருந்து DULU அனுபவித்து உணரத்
தேடலே அதுதானே!
மிகப் பெரும் ஆன்மிகக் குருவை குக் கூறினார் “நீ உன் நேரத்தை ரியராலும் உன் கேள்விகளுக்குப் ாக அனுபவித்து அறிந்துகொள்ள கவனி, அதைத் தவிர வேறு எந்த ா, வழிகாட்டலோ என்னிடம்
ாடு, விரதம், கட்டுப்பாடு, கள் அனைத்தையும், கடந்த 6 எதையும் அறியவோ உணரவோ லையில் காலம் கடந்துவிட்டது. மிகக் குரு கூறியதை மீண்டும், கொண்டார் அந்த வாலிபரான மடைந்தபின் கெளதமபுத்தர் என த ஆன்மிகக் குரு இவரது நிலையையும் உணர்ந்து இவரை ாள்ள மறுத்துவிட்டார். **உன்
கவனிக்க முடியும், இதற்கு ம்பிரதாயம், நெறிகள், விதிமுறை, தவையில்லை. இவைகள் எல்லாம் }னம் உடையவர்களுக்குத்தான், தக் கண்காணித்து உன்னையே நீ

Page 136
616flo. (e
அறிந்து கொள். மனதைக் பிரவேசிக்க உன்னால்தா அடையும்போது உன் கேள்வி கிடைத்துவிடும், ஞானமடை கோட்பாடுகளும், பயிற்சிகளு
என்று கூறினார்.
நீ எந்த மத நம்பிக்கைை
நீ எந்தக் கோட்பாட்டை
நீ எந்த ஏட்டையும் நா
நீ "உண்மையாக இ 'உண்மை’!
ஒளியில் தகதகவென்று ஜொ வணங்கும் மரத்தின் கடவ நேர்த்திக்கடனை ஏற்க வ மகிழ்ந்தார், வீழ்ந்து வணங்கி e
 

ருபாதம் 119ےر |
கடந்து மனமற்ற வெறுமைக்குள் Gò முடியும். நீ ஞானம் சிகளுக்கான பதில்கள் உனக்குக் ப எந்த விதிகளும், முறைகளும், நம், வழிமுறைகளும் இல்லை?
யையும் சாராதே! டயும் தழுவாதே!
டாதே! ருப்பதே உன் உண்மையான
பீகாரிலுள்ள நிரஞ்சனா ஆற்றங்கரையில் உள்ள போதிமரத்துக்குக் கீழ் நீண்ட காலமாக அமர்ந்திருந்தார். தன் மனதைக் கண்காணித்து தன்னை உணர ஆரம்பித்தார். அங்கே மரங்களை வணங்கும் வழக்கம் இருந்தது. சுஜாதா என்ற பெண்மணி தான் – கருவுற்றதும் அந்த மரத்திற்கு உணவு படைப்பதாக ஒரு நேர்த்தியை வைத்திருந்தாள். தான் கருவுற்றதால் உணவுடன் போதிமரத் தடிக்குச் சென்றார். இது ஒரு பெளர்ணமி தினம், நிலா ஒளி பிரகாசமாக இருந்தது. அந்த மரத்துக்கு கீழ் ஒருவர் அமர்ந்திருப் - பதைக் கண்டார். நிலா லித்துக்கொண்டிருந்தார். தான் ள் இவர்தான், கடவுள் தன் ந்திருக்கிறார் என நினைத்து
ΟΤΠΠ.

Page 137
12Oa போதிதர்மர் பற்றிய
சித்தார்த்தர் ஏற்கனவே சற்றுப் பசியுடன் பலவீனம ஆறு வருடத்தில் அன்று உட்கொண்டார். துறவிகள் இவர் அன்று உண்டார். ஆ கண்காணி’ என்று கூறியி அனுஷ்டானம், விதிமுறைகள் துறந்துகொண்டிருந்தார். அ தொடங்கியிருந்தார். அன்று நிலையில் இருந்தார், நிம் தூக்கத்திலும் தன்மனதை அ மனம் கடந்து, அதற்கும் அட (Authentic being) gypsigisTri. பிராமணர்கள் இவரைப் பி SalioILITGOLD (untochables) உணவை இவர் உட்கொ விலகிச் சென்றார்கள்.
பொதுவாக மார்க்கவாதி கடும் தவம் இருந்ததால் பா என்று கூறுகிறார்கள் - திடீரென்று ஏற்படும், ஞான பயிற்சி எதுவும் தேவையில் சூழலிலும் திடீரென்று ஏற்ட
போதிதர்மரும் புத்த அந்தஸ்தைத் துறந்தவர். ஆசான்களை அணுகியபோது மூலம் மனதைக் கடந்து கிடைக்கும் என்று வழி: அனுபவிக்கலாம் என்றார். 1 போதிதர்மா திடீரென்று ஞ
ஸ்தாபகர் காசியப்பா திடீ(
இயேசுகிறிஸ்து காலத்
அடைந்தது. கெளதம புத்த முதல் ஞானி காசியப்பா

அற்புதமான விஷயங்கள்
விரதம் மேற்கொண்டிருந்தபடியால் ானவராகவும் இருந்தார். அந்த தான் ஒரு பூரண உணவு இரவில் உண்பதில்லை, ஆனால் ண்மிக ஆசிரியர் நீ "உன் மனதைக் ருந்தார். அன்றிலிருந்து விரதம், T எல்லாவற்றையும் படிப்டியாகத் த்துடன் துறவறத்தையும் துறக்கத் று உணவு உட்கொண்டு ஒய்வு மதியாகத் தூங்கினார். ஆழந்த வதானித்தார், உடல் உறக்கத்தில், ப்பால் சென்றார். தன் இருப்பை
அவர் ஞானமடைவதற்கு முன்பு lன்பற்றுபவர்களாக இருந்தார்கள். பெண்ணான சுஜாதா கொடுத்த ண்டதால் சித்தார்த்தரை விட்டு
கெள் **சித்தார்த்தர் 6 வருடங்கள் டிப்படியாக ஞானம் அடைந்தார்?? ஆனால் போதிதர்மர் **ஞானம் த்திற்கு காரணம் இல்லை, அதற்கு லை, ஞானம் எந்த நேரமும், எந்த டும்?? என்கிறார்.
ர் போன்று தனது இளவரசர்
தன் கேள்விகளுடன் பல Iம் பிரக்ஞதாராதான் நீ தியானம் செல்ல உன் கேள்விக்குப் பதில் ாட்டியவர். நீயே நேரடியாக ல காலம் துறவியாக இருந்தாலும் ானம் அடைந்தவர்தான். Zen மத ரன்று ஞானம் அடைந்தவர்தான்.
தில்தான் பொளத்தம் சீனாவை ன் முன்னிலையில் ஞானமடைந்த சீனா சென்றாலும் அவர் மக்கள்

Page 138
எஸ். கு
முன் செல்லவில்லை, அவர் அவரால் அங்குப் பெளத்தம்
கௌதம புத்தர் உடலை சீனாவிற்குச் சென்று ஞான போதிதர்மா அவர்கள் க சென்றவர்கள் மதப் பிரச்சாரா தான். அதனால் போதிதர்ம மாற்றத்தை ஏற்படுத்தியது. 8 செல்ல வேண்டும் என பிரக் அந்த மண்ணிற்குத் தேவை ஞானத்தைப் பருகத் தயாராகி
சீனா கொன்பியூசியசில் கொளதமபுத்தரை நோக்கி நக என்பது படிப்படியாகத்தா அபிப்பிராயம் சீனாவில் நி படிகளைத் தாண்டி ஞான வருடங்கள் கடும் தவத்தில் என்றும், விரதம் இருந்து பட அரசாட்சியைத் துறந்து பல கடைப்பிடித்துதான் ஞா6 அபிப்பிராயம்தான் இன்று சீனாவிலும் அதே கருத்து நில அரண்மனையையும் சகல ( உண்மைதான், 6 வருடங்கள் உணவு - உறக்கம் எல்லாம் எல்லாம் நிகழ்ந்தவைதான், பரிசோதனைழைத் துறந்ததும்
புத்தர் ஞானத்தைப் ப 'திடீரென அடைந்தார். அ பலனாகத்தான் ஞானம் அ விவாதமாகாது. அந்த 6 வ விட்டார். பண்டிதர்களும் சாஸ்திரிகளும் (புத்தருக்கு அவர்களது சொந்த அனுபவம் அறிந்தவைகள். ஆனால் சித்

ருபாதம் 121ےر
மக்களை நாடவில்லை. அதனால் பரப்ப முடியவில்லை.
நீக்கி 1000 வருடங்களின் பின் மடைந்த முதல் ஞானியாகப் ருதப்படுகிறார். அதற்கு முதல் களும், தத்துவப் பேச்சாளர்களும் ரது விஜயம் சீனாவில் பெரும் னாவிற்கு ஞானம் அடைந்தவர் g5UT (Pragyatara) grašaraolosti. ஞானமடைந்தவரே. அந்த மண் கியிருந்தது.
* கருத்துக்களிலிருந்து விலகி ர்ந்து கொண்டிருந்தது. ஞானம் ன் ஏற்படக்கூடியது என்ற லவியது. கெளதமபத்தர் பல rம் அடைந்தவர் என்றும் 6 ஈடுபட்டு ஞானம் அடைந்தவர் ட்டம் பதவி செளகரியங்களை, விதிமுறைகளை, ஒழுக்கங்களைக் Lb அடைந்தவர் என்ற ம் உலகத்தில் நிலவுகிறது. வியதில் ஆச்சரியமில்லை. அவர் செளகரியங்களையும் துறந்தது கடும் தவமிருந்தது சரிதான், துறந்தது, தன்னை ஒடுக்கியது ஆனால் அந்த 6 வருட திடீரென்று ஞானமடைந்தார்.
டிப்படியாக அடையவில்லை ந்த 6 வருட கடும் தவத்தின் டைந்தார் என்று கூறுவது ருடங்களை அவர் வீணாக்கி
தத்துவ மேதைகளும்,
கூறியவை அனைத்தும் கள் அல்ல. தாங்கள் வாசித்து ார்த்தர் (புத்தர்) கோட்பாடுகளை

Page 139
122a போதிதர்மர் பற்றி
வாசித்து அறியவோ அல் செய்யவோ விரும்பவில்ை உணர முற்பட்டார். அவ வழிகாட்டிகளும், ஆசிரிய அல்ல, சொந்த அனுபவ: புத்தர் தன் முயற்சிகை முயற்சியாக, இயல்பா இருந்தபோது ஞானம் ஞானம்தான் இது. Սւգմ முடியும் என்று சீனாவில் உ பாடசாலைகள் கூறிக்கெ அவர்கள் “ஞானம்’ திடீரெ
ஆன்மிகம் என்பது வி விழித்திருத்தலில், எளிய ஆ செய்வதில் இல்லை. ! இயற்கையாகவே எளிமை அடைந்தவர்களாக அல்லவ சில தினங்கள் உணவைத் எளிமையாக வாழ அத பார்த்தால் இயற்கையாகே அனைத்து ஏழைகள் அல் ஆன்மிகவாதிகளாகவும், ! உணவில், உடையில், அ இந்நூலாசிரியரின் அபிப்பி
போதிதர்மர் கூறுகி 2_60LIGODI ప్రయ6000. ఆ உங்கள் மனதைக் கண்க களுக்கு இடம் கொடா தோன்றும்போது அந்த கொடுக்காது விடுங்கள். அழிந்துவிடும். மனதைச் அப்பால் சென்றுவிடுவீர் என்கிறார். விரதங்களு கட்டுப்பாடுகளுடனோ, ( களுடனோ, கிரிகைகளு *விழிப்புணர்வுடன்’, ‘

ய அற்புதமான விஷயங்கள்
லது அவற்றைக் கேட்டு மனனம் ல. தனது சொந்த அனுபவத்தில் நாடிய அனைவரும் ஆன்மிக ர்களும் ஞானம் அடைந்தவர்கள் தில் போதனை செய்யவில்லை. )ளக் கைவிட்டு முயற்சியற்ற தளர்வாக, இயற்கையாக و ز அடைந்தார். திடீரென ஏற்பட்ட JquUö555õ (obob eooluU ள்ள பெளத்த போதனை கற்பிக்கும் ாண்டு இருந்தன. போதிதர்மர் ன ஏற்படக்கூடியது என்றார்.
ரதம் கடைப்பிடித்தலில், தூங்காமல் டைகள் அணிதலில், மதக்கிரிகைகள் இவைகள் ஆன்மிகம் என்றால் யாக வாழும் ஏழைகள் “ஞானம்’ ா இருக்கவேண்டும். பிறர் தாங்கள்
தவிர்த்து விரதம் கடைப்பிடித்து ற்காக நடிக்கிறார்கள். இதன்படி வ அப்படி வாழும் உலகில் உள்ள பலவா சிறந்த மதவாதிகளாகவும், ஞானிகளாகவும் இருக்கவேண்டும். ஆன்மிகம் தங்கவில்லை என்பதே UTTTULU İLD.
றார் “ஞானம் உணவிலோ, தற்காகப் பயிற்சியும் செய்யமுடியாது. rணியுங்கள், விபரீதமான எண்ணங் தீர்கள். அத்தகைய எண்ணங்கள் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் அந்த எண்ணங்கள் தாங்களாகவே
கண்காணித்துவர மனதைக் கடந்து 5ள். 'வெறுமையாகி விடுவீர்கள் டனோ, விதிமுறைகளுடனோ, காட்பாடுகளுடனோ, மதச் சடங்கு னோ ஞானம் சம்பந்தப்பட்டதல்ல. விழிப்புணர்வான செயல்களுடன்?

Page 140
எஸ். கு(
சம்பந்தப்பட்டது. *பயிற் வரையறைகள், முறைகள், வி தொடர்புடையதல்ல. உங்க அழிக்காமல் உங்களுக்குள் உ உங்களை உணர்வீர்கள், உ நீங்கள் யார்? என்பதற்கு உண்மையை அடைந்துவி( எதனுடனும் இணக்கம் காண எதனுடனும் ஒப்பீடு செய்யமு உணரத்தான் முடியும். அந் அனுபவத்தைச் சொற்களி *உண்மையை விளக்க எடுக் அந்த “உண்மையுடனான
செய்துவிடும்.
போதிதர்மர் சீனாவில் நன்கு விதைத்துவிட்டார். அவ
 

ருபாதம் 23ے 1ےر
சிகளுக்கு? உட்பட்டதல்ல. விதிமுறைகள், வழிபாடுகளுடன் 5ள் தனித்துவத் தன்மையை ஊடுருவி உள்ளே செல்லுங்கள். உங்கள் இருப்பை அறிவீர்கள். 5 விடை கிடைத்துவிடும். டுவீர்கள். அந்த “உண்மை’ முடியாதது. அந்த “உண்மை’ pடியாதது. அந்த உண்மையை த **உண்மையை** உணரும் ல் அடக்கமுடியாது. அந்த $கும் எந்தவிதமான முயற்சியும்
உயிரோட்டத்தை இழக்கச்
புத்தபகவானின் செய்திகளை Iர் ஊடாகப் புத்த பகவானைப் பார்த்தனர். போதிதர்மர் புத்த பகவானின் செய்திகளை சீனா வில் மாத்திரமல்ல தாய்வான், கொரியா, வியட்னாம், ஜப்பான் போன்ற நாடுகளிலும் வேரூன்றச் செய்தார். புத்தர் ஞானமடைய முன்பு சித்தார்த் தராகச் சொன்ன செய்திகள், சித்தார்த்தர் ஞான மடைந்த பின்பு புத்தராகச் சொன்ன செய்திகள், அந்த இரண்டு செய்திகளும் புத்தருடைய கூற்றுத்தான். ஆனால் ஞான மடைந்த பின்பு கூறியவற்றுக் குத்தான் நாம் முக்கியத்துவம் கொடுத்துக்கொள்ள வேண்டும்.

Page 141
124a போதிதர்மர் பற்
ததகத்தா அல்லது ததகற்
கெளதம புத்தர் இ அதற்கு இரண்டு கொடுக்கிறது.
1. ஆனந்தமோ, துன்படே ஆனந்தத்தில் குதூகலி தில் துவண்டு போக அப்படி அப்படித்தால் சாதாரணமாக எடுத்து
2. எப்படி வந்ததோ அ thus gone) 613/ 6T ஏற்றுக்கொள்ளுங்கள்.
மேற்கூறிய இரண்டு இருந்தாலும் அந்த இரண் கொடுக்கிறது. அதுபோ விட்டுச்சென்ற அனுபவம் (Calmness), 's Tig, Lib’ ( போன்றவையாகும்
இந்த உலகத்தில் ந வேண்டிய மிகப் பெரும்
ஒருவர் ஒரு மதப்ட அல்லது ஒரு கோட்பா அல்லது ஒரு மரபைச் ச தாங்கள் தார்ந்ததற்கு ம எதிராக தங்கள் மரபை செயற்படவும் முடியா வட்டத்தின் ஊடாகத்தி பார்வைதான் இன்று களுக்கும் இரத்தக்களரிக்கு
புத்தரும் போதிதர்மரும்
எதைப் பயிற்சி செய் செல்ல வேண்டும். பயிற்

லிய அற்புதமான விஷயங்கள்
pT (Tatha gata)
தைக் கூறும்போது கருத்துக்களைக்
Dா எது நடந்தாலும் க்காமலும் துன்பத் 5ாமலும் எல்லாமே ன் (Suchness) என்று அவைகளைச் க்கொள்ளல்.
ப்படிப் போய்விட்டது (Thus Came, தோ அதன்படியே நடக்கின்றன.
வசன அமைப்பும் வித்தியாசமாக டும் ஒரே விதமான அனுபவத்தைக் ல அப்படி வாழந்தவர்கள் எமக்கு பொறுமை’ (Coolness) அமைதி” Tranquility), 'tigligib' (Silence)
ாம் எல்லோரும் தெரிந்துகொள்ள செல்வம் “நிசப்தம்’ ஆக இருப்பதே!
பிரிவைச் சார்ந்தவராக இருந்தால் ட்டைச் சார்ந்தவராக இருந்தால் ார்ந்தவராக இருந்தால், அவர்களால் ாறாகத் தங்கள் கோட்பாடுகளுக்கு மீறி எதுவும் சொல்லவும் முடியாது, து. அவர்கள் தங்களை அந்த ான் பார்ப்பார்கள். இத்தகைய உலகில் நடைபெறும் மதப்போர் ம் காரணமாகிற்து.
கூறுகிறார்கள்:
தாலும் அது மனதின் ஊடாகத்தான் சி மூலம் அடையக்கூடியதெல்லாம்

Page 142
எஸ். கு
அவை மனதின் உற்பத்தித முடியாதது “ஞானம். மன மனதினால் ஏற்படும் எதுவும் ஏற்படும் எதுவும் காலப்போ மனம் மறைந்து மனதைக் ஏற்படுவது ஞானம். மன ஞானநிலை தொடர்கிறது. ம ஞானம். மனம் மறைய ஞ ஒளியாகவும், மனம் - அ அறிவாகவும், மனம் - இருட்
மனைவி, பிள்ளை பெ துறந்து, குடும்பத்தைத் : செளகரியங்களைத் துறந்து, இருப்பிடங்களைத் துறந்து, உ துறந்து, உலகத்தைத் துறந்து ஒதுங்கினாலும் துறக்கப்பட்ட அனைத்தும் கண்ணுக்குள் இரு மலைச் சிகரத்துக்குப் போகலாப் மனித நடமாட்டமற்ற தனித் gd 65lb (Visual World), 6Tilgé ஒளி கசியாத இருட்டுக்குள் ஊடகமாக மாறிப் பார்வை கொண்டிருந்தாலும் மனஉலக கொண்டிருக்கும். அறம், எதிர்பார்ப்பு எதுவுமற்ற நிபந்தன ஒரு “பகிர்தல்" ஆகும். எது இ பகிர்தல் வேண்டும். இல்லாமலிருப்பதில் ஏதாவெ பகிர்ந்துகொள்ளுங்கள். பசி பொதுச் சேவை என்பது ஐ நேரத்தை, ஆற்றலை, அர்ப்பணிப்பை எல்லாம் ( கொள்ளுதல்தான். Charity என்
அறியாமை எங்கிருந்து கேட்டார்கள். இருட்டு* எ

ருபாதம் 1125
ன். பயிற்சியினால் அடைய ம் மறைய ஞானம் ஏற்படும்.
மறக்கக்கூடியது, மனதினால் $கில் ஆற்றலை இழக்கலாம்.
கடந்து மனதிற்கு அப்பால் நிற்கு அப்பால் ஏற்படுவதால் னதிலிருந்து தோன்ற முடியாதது [னம் ஒளிர்விடும். ஞானம் - றியாமையாகவும், ஞானம் - டாகவும் (Darkness) மாறுகிறது.
ற்றோர்கள், சகோதரர்களைத் துறந்து, உறவைத் துறந்து, சொத்துக்களைத் துறந்து, உணவைத் துறந்து, உடையைத் I, அனைத்தையும் கைவிட்டு அனைத்தும், கைவிடப்பட்ட க்கும். குகைக்குள் போகலாம், b, வனாந்தரத்துக்குப் போகலாம், தீவுக்குப் போகலாம். பார்வை சென்றாலும் அங்கேயிருக்கும். இருந்தாலும் அந்த இருட்டு யாகிவிடும். கண்ணை மூடிக் ம் தன் வேைைலயை செய்து அருள், ஆன்மிகம் என்பன pனயற்ற, தன்னையே அறியாத இருக்கிறதோ அந்த இருப்பைப் எதுவுமேயில்லையென்றால் தான்று இருக்கும். அதைப் Iர்தல் (Sharing) அழகானது. ரு பகிர்தல்தான், அதாவது அறிவை, பொறுமையை, சேவை ஊடாகப் பகிர்ந்து பதும் ஒரு பகிர்தல் ஆகும்.
வருகிறது எனப் புத்தரைக் படியிருக்கிறதோ அதுபோல

Page 143
126a போதிதர்மர் பற்றி
அறியாமையும் இருக்கிறது மறைகிறது. வெளிச்சம் காணப்படுகிறது. இரு அதுபோலத்தான் அறியா அவை, அவை அவ்வாறே கூறுகிறார். ஏனெனில் இ இருக்கிறது. வெளிச்சம்தா கேள்வியைப் போதிதர்ம போதிதர்மர் இக்கேள்: சொல்லவில்லை. தன்
மக்களையோ குழப்பத்தில் அதே நேரத்தில் புத்தரின் அவர்கள் அதற்கான பதின் கூற விரும்பியிருக்கலாம், காலப்போக்கில் பதில் அ அத்தியாயம் 19-இல் உள்ள எல்லாம் தெரியும் என்ற 6 இருக்கிறது. ஞானம் என் ஞானம் அடைந்தவர் *த
என்பது 616ooon b G என்பதல்ல?.
போதிதர்மர் இ?
Sub5ITUTIT (Dipamkara) பற்றிக் குறிப்பிட்டுள்ளார். சிறு பையனாக இருக்கு வாழ்ந்த ஞானி அவர்.
அடைந்த ஞானியான அவ பார்த்தார். இந்த ஞானி இருப்பவர்களுக்கு அெ ஊடுருவுகிறது (எரியும் மெழுகுதிரிக்கு ஒளியேற் பெற்றார்கள்). ஒளி ஊ அடைந்தவர்களானார்கள் இருளை நீக்கியது என் தீபம்காரா காலத்தில் வா ஞானி. இவரும் கெளத

ப அற்புதமான விஷயங்கள்
. வெளிச்சம் ஏற்ற இருட்டு
மறைய இருட்டு அங்கே ட்டு எப்படி இருக்கிறதோ மையும் இருக்கிறது என்றார். (Suchness) என்ற கருத்துப்படக் ருட்டு எப்போதும் அப்படியே ன் வருகிறது, போகிறது. அதே ரிடம் சீனாவில் கேட்டார்கள். விக்கு உடனடியாகப் பதில் சீடர்களையோ அல்லது சீன ஆழ்த்த விரும்பாமல் இருக்கலாம். பதிலையும் இவர் கூறவில்லை. லைப் பெறப் பக்குவமாகும்போது அதனால்தானோ என்னவோ ளித்து இருந்தார். (இதன் பதில் ாது.) ஞானம் அடைந்தவர்களுக்கு ாதிர்பார்ப்பு பொதுவாக மக்களிடம் எபது தன்னைத் தான் அறிவது. ன்னைத்தான் அறிவார். ஞானம் தரியும்
னாவில் Dipamkara
Buddha
வைப் புத்தர் )போது ஞானம் ரைச் சிறுவன் சித்தார்த்தர் (புத்தர்) $கு முன் அமைதியாக உட்கார்ந்து ரிலிருந்து வெளிவரும் ஒளி மெழுகுத்திரியில் இருந்து அடுத்த றுவது போல இந்த ஒளியைப் டுருவப் பெற்றவர்கள் மாற்றம் அந்த ஒளி அவர்களில் இருந்த Tri. Dorjechang GLTig95Tši, ந்த பிறிதொரு ஞானம் அடைந்த
புத்தருக்கு முந்தியவரே.

Page 144
எஸ். கு(
விகாரைகள் நிர்மாணித்த6 ஊதுபத்திகள் எரித்தல், மலர் 6 ஸ்தூபியைச் சுற்றிச் சுற்றி வி நடுநிசி என வணங்குதல் போ உதவும் என்ற கருத்து நிலவுக் எந்த ஞானமடைந்த மகான்கே உதவியாக அன்னதானம் நிர்மாணிக்கவில்லை, வாசை விரதம் அனுஷ்டிக்கவில்லை, 6 வலம் வரவில்லை.
சீனாவில் தனது இறுதி ! வணங்கவேண்டாம் தான் எது இறக்கும்போது “தனக்குச் சி "தன்னை வணங்க வேண்டா என்று கூறியிருந்தார். புத்தரின் பட்டு புத்தருக்குச் சிலை அ6 பட்டுவிட்டார். வேதங்களை அப்படிக் கூறுவதற்கு மிகப் ( இருக்கவேண்டும். அவதாரம், போன்ற கருத்துக்களை முற்றா
ஆலயங்கள், சிலைகள், தந்திரமான மனதினால் உரு புத்தர். ‘வழிபாடு, ஆலய எங்கேயும் இட்டுச் செல்லாது” இன்று புத்தரின் வேண்டு ( விகாரைகள், வழிபாடுகள் நடைபெறுகின்றன. தனக்கு வழிபடுதல் வேண்டாம் என எங்கும் இட்டுச்செல்லாது போதிதர்மரான புத்தரும் போதிதர்மரை சீனாவிலும் ஒக் வழிபடுகிறார்கள். கெளதம ஒழுங்காற்றப்பட்ட மதம், ஸ் அதற்கான கட்டமைப்புகள் 6 தனக்குச் சிலை அமையாதீர்க தான் 'கடவுள் இல்லை என

நபாதம் 1127
ஸ், உணவு அளித்தல், வாசனை
ாறிதல், விரதம் கடைப்பிடித்தல்,
பலம் வருதல், காலை மாலை ன்ற முறைகள் ஞானம் அடைய றது. புத்தரோ, போதிதர்மரோ ளா தாங்கள் ஞானமடைவதற்கு வழங்கவில்லை, ஆலயங்கள் னப் பத்திகள் எரிக்கவில்லை, எந்த தூபியையும் சுற்றிச் சுற்றி
நாளன்று போதிதர்மா தன்னை /வும் இல்லை’ என்றார். புத்தர் சிலை அமைக்க வேண்டாம்", ம்", "தான் கடவுள் இல்லை” வேண்டுகோள் புறக்கணிக்கப் மைத்து வணங்கி கடவுளாக்கப் ாக் குப்பை என்றார் புத்தர். பெரும் துணிச்சலும், தெளிவும் 'கடவுள் மனிதாராகப் பிறத்தல்" க நிராகரித்தார்.
கடவுளர் கதைகள் எல்லாம் வாக்கப்பட்டவை” என்கிறார் நிர்மாணங்கள் மனிதர்களை என்றார் போதிதர்மர். ஆனால் கோளுக்கு மாறாகவே சில எல்லாம் புத்தரின் பேரால் ச் சிலை, கோயில், தன்னை ாறார். வழிபடுதல் உங்களை என்றார். கெளதம புத்தரும் அதையே கூறினார்கள். கினாவா தீவிலும் (ஜப்பானில்) L55si 'Organized Religion' தாபன ரீதியான செயல்பாடு, 1ற்படக்கூடாது என்பதற்காகத் ள், தன்னை வணங்காதீர்கள், ாறார். மதம் வியாபாரமாகக்

Page 145
128a போதிதர்மர் பற்றி
கூடாது, மதம் அரசியலாக கூடாது என்பதற்காகத் த அப்பால் சென்று ஒருவர்
பற்றியே புத்தரும் போதிதா
ஸ்தாபன ரீதியாக ஒழு Religion) எப்போதும் நீங்க பயம் காட்டிக்கொண்டே மீட்சி பெற, காப்பாற்றட வியாபாரமாகிவிடக்கூடாது, என்பதற்காகவே புத்தர் வளரக்கூடாது எனக் கூறி
'நன்கொடைகள் உங் இப்போது தாரக மந்திரமாகி மதம் கட்டமைப்புடன், (Organized Religion) "Guang மாறாது தடுக்க முடியவில்ை g)aipauntLDai) Scriptural g5 L (political religion) LDITsfasil 'L
குழந்தை பிறந்த திக பின்பு மரணம் வரை, அ கிரிகைகள் இப்படி பூசா முடியாமல் இருந்த மக்கை இறக்க, பூசாரிகள் ஆதிக்க பூசாரிகளின் பிடிக்குள் நழு
புத்தமதம் இந்திய ப பெளத்தர்கள் தாக்கப்பட் கொல்லப்பட்டனர். புத்த அமைக்கப்பட்ட போதி இல்லாதபடி விரட்டப்ப குடும்பமே 2500 வருட பரம்பரையாக அந்த நினை அவர்கள்தான் அதன் உரின் புத்தமதத்திலோ, புத்தரிலோ பாகங்களிலிருந்து நி சுற்றுலாக்காரர்கள் அங்குத்

அற்புதமான விஷயங்கள்
* கூடாது, மதம் மதங்கொள்ளக் னது பிரசங்கங்களில் மனதிற்கு தன்னை அறியும் தியானத்தைப் மரும் கூறினார்கள்.
ங்காற்றப்பட்ட மதம் (Organized ர் துன்பத்தில் விழுவீர்கள் என்று ட இருக்கும், அவற்றிலிருந்து படப் பரிகாரம் கூறும். மதம் மதம் மக்களைச் சுரண்டக்கூடாது கட்டமைப்புகள் ஊடாக மதம் வந்தார்
களைக் காப்பாற்றும்’ என்பதே விெட்டது. போதிதர்மா காலத்தில்
ஒழுங்காற்றப்பட்ட மதமாக தமும், சென்னும் படிப்படியாக லை. காலப்போக்கில் Spiritual ஆக ாறிப் பின்பு மதம் அரசியலாகவே -gil.
தியிலிருந்து திருமண வைபவம், அதன் பின்பு அதற்காப்பாலுள்ள ரிகளின் பிடியிலிருந்து விடுபட ாப் புத்தர் மீட்டெடுத்தார். புத்தர் ம் தலைதூக்கி மக்கள் மீண்டும் வி விழுந்தார்கள்.
ண்ணிலிருந்து விரட்டப்பட்டது. டனர், வெளியேற்றப்பட்டனர், ர் ஞானம் அடைந்த நினைவாக காயாவை பராமரிக்கக்கூட ஆள் ட்டனர். ஒரு இந்து பிராமணக் ங்களுக்கு மேலாகப் பரம்பரை வாலயத்தைப் பராமரித்துவருகிறது. மயாளர்கள். ஆனால் அவர்களுக்கு நம்பிக்கையில்லை. உலகத்தின் பல ,பெளத்தமதத்தினர்கள் שמ]י தினமும் செல்கிறார்கள்.

Page 146
எஸ். கு
இந்தியாவிலிருந்து விெ பெளத்தர்கள் சீனா, தி சென்றடைந்து தாங்கள் வா மரபுகள், சம்பிரதாயங்களுடன் கண்டனர், உடன்பாடு கண்ட நாட்டுக்கு நாடு சற்று வித்திய பர்மா, ஜப்பான், வியட்னாம், புனித ஏடுகளில் “சூத்திரங் அந்தந்த நாடுகளுக்கேற்ப கண்டுவிட்டன. புத்தமதம் நாடுகளுடன் ஒத்துப்போய் இ நிலைத்துவிட்டது. இந்தியா இணக்கம் கண்டிருந்தால் நி6 போதிதர்மரது உபதேசங்கள் உபதேசங்கள் எல்லாம் நாட் மாற்றங்களுடன் சென் ட சேர்க்கப்பட்டுள்ளன.
வேதம், உபநிடதம், பைபி கோன், கிறான்த், அக்ஸ்ரா யூ (Talmud) இவைகள் எல்லாம் காலத்துக்கு பொருத்தமானதா திற்கு ஏற்ப இவைகளில் 8 வேண்டும். பூமி உருண்ை புனிதநூல் ஒன்று கூறுகிறது இன்னொரு புனித நூல் சூரிய கூறுகிறது. பூமி தன்னை சுற்றுகிறதென்று விஞ்ஞான நிலைப்பாடு மாற்றப்படவில்: மதக் கருத்துக்கள் செல்லவே
சீனாவில் புத்தரது கொண்டதில் சில குழப்பங் அவதானித்தார். புத்தரது : மாற்றமடைந்திருப்பதையும் ( முடியாது. போதிதர்மர் தா மக்கள் வித்தியாசமாக 6

ருபாதம் 29ے 1ے |
1ளியேறிய வெளியேற்றப்பட்ட பெத் போன்ற நாடுகளைச் ழும் நாட்டில், அந்த நாட்டின்
ஒத்துப்போனார்கள். இணக்கம் னர். அதனால் புத்தபோதனைகள் ாசமாக உள்ளன. சீனா, திபெத்,
இலங்கை போன்ற நாடுகளில் கள்? வித்தியாசப்படுகின்றன.
அவைகள் சில மாற்றங்கள்
முரண்படாமல் அந்த அந்த இணக்கம் கண்டதால் பெளத்தம் வில் பெளத்தம் முரண்படாமல் லைத்திருக்கலாம். இதுபோன்றே , மற்றும் சென் ஞானிகளது டுக்கு நாடு ஏற்றாற்போல் சிறு புனித நூலான கோன்களில்
பிள், குரான், தம்மபதம், திரிபீட, தமதத்தின் புனிதநூலான ரல்மட் அந்த நூல்கள் எழுதப்பட்ட க இருந்திருக்கலாம். இக்காலத் சில மாற்றங்கள் செய்யப்பட ட என்கிறது விஞ்ஞானம். பூமி தட்டையானது என்று, பன் பூமியைச் சுற்றுகிறது என்று யும் சுற்றிச் சூரியனையும் ம் நிரூபித்த பின்பும் பழைய லை. விஞ்ஞானத்தோடு சேர்ந்து ண்டும்.
போதனைகளை விளங்கிக் கள் இருப்பதை போதிதர்மர் உபதேசங்களின் 'சூத்திரங்கள் பாதிதர்மர் அறியாமல் இருக்க ா அறிந்திருந்த பெளத்தத்தை, ளங்கியிருப்பதைப் பார்த்து

Page 147
13oa போதிதர்மர் பற்றி
ஆச்சரியப்பட்டிருப்பார். பெளத்தர்களுடனும், பே களுடனும், மன்னர்களு "உண்மையை உணர்த் ஏராளமானவற்றை மறுத்து சீனாவில் பார்த்தனர். "உ செயல்பட முடியவில்6ை ஒத்துப்போகாமல் உட6 செயற்பாட்டில், நை முரடனாகவும், கிறுக்குப் பி தெரிந்தது. உண்மையாக இ
உலகிலேயே முதன்(
செயற்படுத்தியவர் புத்தரே உருவாக்கியவரே புத்தர் எ
இந்தியாவிலிருந்து மு மதப்பிரச்சாரம் செய்தவர் தோன்றிய முதல் சமூகப் புத்தரே! என்பதும் இந்நூ

ப அற்புதமான விஷயங்கள்
போதிதர்மர் சீனாவில் உள்ள தனையாளர்களுடனும் ஆசிரியர் டனும் முரண்பட்டேயிருந்தார். 5 முயன்றார். துணிச்சலாக ரைத்தார். அவரை முரடனாகவே ண்மைக்கு விரோதமாக இவரால் . இணக்கம் காண மறுத்தார். ாபடாமல் இருந்தார். இவரது டமுறையில் மோடனாகவும், டித்தவனாகவும் பிறர் கண்களுக்குத் இருப்பதே உண்மையான உண்மை!
முதலாகச் சமயப் பிரச்சாரத்தை ஏன், மதமாற்றம் என்ற கருத்தை ான்கிறார் சுவாமி விவேகானந்தர்.
தன்முதல் வெளிநாடுகள் சென்று போதிதர்மரே! என்பதும், உலகில் LUT 'Sustaitri (Social Revolutionist)
லாசிரியரின் அபிப்பிராயம் ஆகும்.

Page 148
அத்தி
போதனைகளில்
ஞான நூல்களில் கருத்துச் 8
ஞானம் அடைந்த ஞா ஞானிகளின் போதனைகளை கொள்ளும் வளக்கம் உள்ளவி கூறப்படும் அனைத்து நூல்க லிருந்து சீடர்கள் எடுத்த கு குருவின் கருத்து என்பதால் ( பெயர்களைப் பாவித்ததால் எழுதியதாக ஒரு மாயை இந்நூலாசிரியரின் கருத்தாகு ஒன்றாக இருக்க அதை விளக்கத்திற்கு ஏற்ப பிறிதொ நூல்களில் ஒன்றுக்கொன்று மு அதே கருத்துக்கள் மூலம் குழம்பிவிடுகிறார்கள். குழ அல்ல. ஞானிகள் சொல் சொல்லாத போதனைகள்தான் *ܫ
சீடர்கள் தங்கள் குரு கொண்டவர்கள். ஆனால் தங்கள் குருவைத், தங்கள் ஆ புரிந்துகொள்ள முடிவதில்லை ஏற்ப எழுதியவை மொழி( பெயர்ப்பாளர்கள் தங்கள் வி எழுதியபடியால் பல இடங்க

யாயம் 16
மொழிப்பிரச்சினை
சிதைவு :
னிகள் நூல்கள் எழுதியதில்லை. ச் சில சீடர்கள் குறிப்பெடுத்துக் பர்கள். ஞானிகள் எழுதியதாகக் 5ளும் அவர்களது போதனைகளி நறிப்புக்களே. அவைகள் தங்கள் ஞான நூல்களில் தங்கள் குருவின் ) ஞான நூல்களை ஞானிகள் உருவாகிவிட்டது என்பதே 5ம். ஞானியின் கருத்து ஏதோ எழுதிய சீடர்கள் தங்கள் ரு கருத்தில் எழுதியதால் ஞான Dரண்பாடுகள் காணப்படுகின்றன. ஞானிகளைப் பார்ப்பவர்கள் ப்பத்திற்குக் காரணம் ஞானிகள் Uாத கருத்துக்கள், ஞானிகள்
காரணம்.
மீது அன்பும், மரியாதையும் சில வேளைகளில் அவர்களால் சானை, தங்கள் வழிகாட்டியைப்
சீடர்கள் தங்கள் விளக்கத்திற்கு பெயர்க்கப்படும்போது மொழி ாக்கத்திற்கேற்ப மொழிபெயர்த்து ளில் மகான்களின், ஞானிகளின்

Page 149
132a போதிதர்மர் பற்றி
கருத்துக்கள் சிதைவடை போதனைகள் சிதைவை போதனைகளாக வெளிவர உள்ளன என்பது என் அட்
*புத்த பெருமானை அ கொள்ளவில்லை. இயேசு ளாகிய யூதர்கள் அவரைப் விசயத்தில் அவரைப் பின் களின் கருத்தை உணரவி கானந்தர்.
சீன மொழியில் போதனை:
போதிதர்மர் விசயத் விட்டன. இவர் சீனெ செய்தார். இவர் இந்தியாவி பிறந்து வளர்ந்தவர். தமிழை சீன, ஜப்பானிய, கொரிய (Pictorial Language). S ஏனெனில் பேசும்போதோ உருவப்படங்களை ஞாட அதனால் இந்த மொழிச நாட்டவர்களுக்குச் &I சென்றடைய 3 வருடங்க மொழியை அறிந்துகெ தாய்லாந்து, வியட்னாம் தங்கிப் பிரயாணம் செய்தத சீன மொழியை வேகமாகக்
போதிதர்மர் தனது அg மொழியில் மாற்றம்செய்து அனுபவ உண்மை மொழி பிறமொழிகளில் மெ சொற்களுக்குச் சில ே கிடையாது. அந்த இடம் கருத்தைக் கொடுக்கிறது.

ப அற்புதமான விஷயங்கள்
-ந்து விட்டன. அவர்களின் டந்த போதனைகள் அவைகள் த நூல்களும் ஞான நூல்களாக ப்பிராயம்.
அவரது சீடர்கள் சரியாகப் புரிந்து நாதர் விடயத்திலும் பழைய மக்க
புரிந்துகொள்ளவில்லை. புத்தர் பற்றியவர்களே அவரது உபதேசங் ல்லை என்கிறார் சுவாமி விவே
திலும் இவ்வாறுதான் நடந்து மாழியில் சீனாவில் போதனை பில் தமிழ் நாட்டிலுள்ள காஞ்சியில் ழத் தாய்மொழியாகக் கொண்டவர். மொழிகள் சித்திர வடிவமானவை இவைகள் சிக்கலான மொழிகள், எழுதும்போதோ ஒவ்வொன்றுக்கும் கப்படுத்திக்கொள்ள வேண்டும். sள் பேசுவதோ எழுதுவதோ பிற
மமானது. போதிதர்மர் சீனா ள் எடுத்தன. அக்காலத்தில் அந்த ாண்டார். சியாம், மலேசியா,
ஆகிய நாடுகளில் பல மாதங்கள் ால் சீனமொழியை அறிந்திருந்தார்.
கிரகித்துக்கொண்டார்.
னுபவத்தைத் தமிழில் சிந்தித்து, சீன கூறும்போது அவரின் அடிப்படை பால் மாற்றமடைகிறது. அவைகள் ாழிபெயர்க்கப்படும்போது சில மாழிகளில் நேரடிச் சொல்லே களில் மொழிபெயர்ப்பு பிறிதொரு

Page 150
i
எஸ். (
ஆங்கில மொழிபெயர்ப்பு:
Mind என்ற ஆங்கிலச்செ சிந்தனையை, எண்ணங்களை மனமற்ற எனும்போது Beyo) என்றும் ஆங்கிலத்தில் பொது போதிதர்மரோ, கெளதம GTL/GLungJub No-Mind (abser emptiness, absence of self) நிலையைப்பற்றித்தான் பே அல்லது பிற மதங்களைச் மொழிபெயர்ப்பு செய்யும்பே பதிலாக Mind? மனம் என்ற ஆங்கில இலக்கியங்களோ, அ என்ற நிலையை துல்லியமாகக் "மனம் அற்ற நிலை" அதாவ குறைவாகிறது. எனவே N இடங்களில் Mind என்றே பொதுவாக மொழிபெயர்ப்புக மூலக்கருத்திலிருந்து வேறுபட்(
மொழி முரண்பாட்டால் மோத
போதனைகளில் புத்தர், ! விதத்தில் முரண்படுகிறார்கள். என்பதை அறிதல் இறுதியா * தான்? என்பதன் மீது நம்பி என்கிறார். இங்கு மொழி மு உணர்த்தும் பொருள் இ முரண்பாட்டின் அடிப்படையி சமணரும், புத்தரும் நூற்றா கொண்டிருக்கிறார்கள். உபநி மேல்நோக்கிச் செல்லுங்கள், இறுதியை அடையுங்கள், உண்மையை உணருங்கள்’ எ( மற்றும் முடிவு என்ற இரண் கிடையாது. உண்மையில் எர் ஏனெனில் ஒவ்வொரு முடி

ருபாதம் 1133
ல்லிற்குப் பிறிதொரு கருத்தாகச் சிந்தித்தலை உள்ளடக்குகிறது. d thinking process, Beyond mind பாக உபயோகப்படுத்தப்படுகிறது. புத்தரோ, இந்துமத ரிசிகளோ ce of mind, void, nothingness, அதாவது மனமற்ற வெற்றிட சுகிறார்கள். ஆங்கிலேயர்கள் சார்ந்தவர்கள் ஆங்கிலத்தில் து அந்த No-Mind என்பதற்குப் வார்த்தை பாவிக்கப்படுகிறது. நேகமான மதங்களோ No-mind கூறாததால் மனதுக்கு அப்பால் து No-mind என்பது விளக்கக் No-Mind என்று வரவேண்டிய நேரடியாகப் பாவிக்கப்படுவது ளில் காணப்படுகிறது. அதனால் தி கருத்துச்சிதைவு ஏற்படுகிறது.
ல்:
காவீரர் இருவரும் சொல்லும் மகாவீரர் ‘ஒருவர் தான் யார் ன அறிவு" என்றார். புத்தர் க்கை வைத்தல் அறியாமை?? "ண்படுகிறது, ஆனால் அவை ாண்டும் ஒன்றே மொழி ல் ஏற்பட்ட விரோதத்தினால் ண்டுகளாய்ச் சண்டையிட்டுக் தங்கள் இறுதி சாத்தியம்வரை மறைந்துள்ள உண்மையான மறைந்துள்ள முற்றிலுமான று கூறுகின்றன. தொடக்கம் டும் தனித்தனியான கூறுகள் ஒரு முடிவும் முடிவாகாது. னையும் அடையும் போது

Page 151
134a போதிதர்மர் பற்
மீண்டும் அது தொடக்க ஒரு முடிவின் முடிவிலிரு.
உபநிடதங்களில் 'மு தெய்விகம் என்பதற்கா பெளத்தர்கள் இதே நிலை வார்த்தையைப் பயன்ப பொறுத்தவரை எதிர்ப்ப பொறுத்தவரை ஒரே 'முடிவானது', 'இல்லாை கின்றன.
கபிலர், புத்தர், இே யரதுஸ்டிரர், லா-சூ எல் பேசியிருக்கிறார்கள். அ6 இருப்பினும் அவை அலி விதம் ஆகியவற்றைக் எப்போதும் "மேலாக' அடையாளம் தீ ஆகும். (Laz0) லா-சூ தோன்றுவ அடையாளம் நீர் நீர் 8
Taoism-g)aör “8ụpT9.” ஒரே அர்த்தத்தையே ( மட்டும் வேறுபடுகின்றன களில் வார்த்தைப் பி உணர்த்தும் விசயம் ஒன்
சொற்களுக்குப் பதிலாக
ஒரு சொல்லுக்குப் என்ன அடிப்படைக் கரு வேளைகளில் விளங் அறிவியலுக்குத் திட்ட6 மொழி அமைப்பு தேை சொற்களைக் கைவிட் குறியீடுகளால் கருத்தை (Technology) -915 obrep சொற்களைவிட இ

ய அற்புதமான விஷயங்கள்
ாகிறது. ஒரு தொடக்கம் என்பது து மட்டுமே தொடங்குகிறது.
டிவானது" என்ற வார்த்தையைத் கப் பயன்படுத்தப்படுத்துகிறது. யைக் குறிப்பிட இல்லாமை" என்ற நித்துகிறார்கள். வார்த்தைகளைப் தமாய் இருக்கிறது. உணர்தலைப் அர்த்தத்தையே கொண்டுள்ளன. ) இரண்டும் எல்லையைக் குறிக்
பசு, போதிதர்மர், நபிகள்நாயகம், லோரும் சுருக்கத்தின் தன்மையில் வர்களின் வார்த்தைகள் சுருக்கமாய் ரர்களின் தனித்தன்மை சொல்லும் காண்பிக்கின்றன. உபநிடதங்கள்
பற்றியே சொல்கிறது. அதன்
தீ மேல்நோக்கி வானில் அடக்கம். வித்த தாவோ (Taoism) மதத்தின் கீழ்நோக்கி சமுத்திரத்தில் அடக்கம். உபநிடதங்களில் மேலாக இரண்டும் 1றிப்பிடுகின்றன. வார்த்தைகளில் எல்லா மதங்களினதும் போதனை யோகம் மாறுபடுகிறது, ஆனால் )ாகிறது.
குறியீடுகள்:
பல கருத்துக்கள் உள்ள மொழியில் த்தில் சொல்லப்பட்டது என்பது சில கிக்கொள்வதில் சிரமமாகிவிடும். ட்டமான, தெளிவான துல்லியமான . விஞ்ஞான வளர்ச்சி படிப்படியாக டு கணித சூத்திரங்கள் போன்ற விளக்குகிறது, தொழில்நுட்பவியலும் ம் தன்னை வெளிப்படுத்துகிறது. த sooLuJITOIT rs1856 ooloouD

Page 152
எஸ். கு
வாய்ந்தவையாக இருக்கின்ற மொழியை விட, சொற்ெ அடையாளங்களும் சின்னங் என்பது என் அபிப்பிராயம் பாவனை குறைந்து அவற்ற sloo LuIIoIslö56IIIT6o, Oofoo மேலோங்கும். அவைகள் கொடுக்கும். சைகைகள்? வேலையைச் செய்யும். கை (Facial expressions) Sloopibgs பேச்சுக் குறைந்து செயல்க அமைந்துகொண்டு வருகி சொற்களைவிட குறியீடுகளு சின்னங்களும், சைகைகளு அவைகள் சொற்களால் ஏற் குறைத்துச் செயல்களை மொழிகளை மையப்படுத் மறைந்துவிடும்.
உலகப் பொது மொழிய முழுவதும் முற்காலத்தில் வடிவம்தான் இருந்தது. அதுத மருத்துவ நூல்கள்கூட கவி முன்பு தலைமுறை தலைமு முறையில் புகட்டப்பட் நினைவாற்றலுக்குக் கவிதை ( நிற்பது சிரமம். எழுதுவது அதனால்தான் வேதங்கள், ஆதிகால மருத்துவ நூல்கள் கவிதை வடிவில் எழுதப்ட வீண்விரயம் செய்யவில்லை.
திருக்குறள் இரண்டு அ பெறுமதியை உணர்த்துகிற, பற்றிய சொற்பொழிவாளர்கள் திருக்குறளை இரண்டு மணித் செய்வது நாகரிகமாகிவிட்டது சொற்களைக் கையாண்டு

ருபாதம் l135
ன. எதிர்காலத்தில் அறிவியலுக்கு 0ாடர்களைவிட குறியீடுகளும், களுமே உபயோகப்படுத்தப்படும்
காலப்போக்கில் மொழியின் ற்ெகுப் பதிலாக குறியீடுகளால், ககளால் உணர்த்தும் கலையே நேரத்தையும் மிச்சம் பிடித்துக் (Sign Languages) Golaf II giba56f6öI *கைகளுழ் முகபாவனைகளும் எதிர்காலமாக அமையப்போகிறது. ள் அதிகரிக்கும் எதிர்காலமாக றது. வருங்கால அறிவியலில் b (Symbols), 9IOOLuUIIGIIIü185(Obb, நம்தான் அதிகமாக இருக்கும். படக்கூடிய நேர விரயத்தையும் இலகுவாக்கிவிடும். அப்போது தும் அரசியலும் தானாகவே
ானது சைகைகள்தான். உலகம் அறிவியலுக்கு ஒரே மொழி ான் கவிதை" வடிவம். பழைய தை நடையில்தான் இருந்தன. மறையாக அறிவியல் கவிதை டு வந்ததன் காரணம் வசதியானது. உரைநடை மனதில் பிற்காலத்தில்தான் தோன்றியது. உபநிடதங்கள், கீதை, குரான், அறிவியல் நூல்கள் எல்லாம் ட்டன. அவை நேரத்தையும்
டிகளில் அமைந்து நேரத்தின் து. ஆனால் திருவள்ளுவரைப் இரண்டு அடிகளில் சொன்ன நியாலம் பேசி நேரத்தை விரயம் திருவள்ளுவர் மிகக் குறுகிய
நேரத்தின் பெறுமதியை

Page 153
136a போதிதர்மர் பற்
வெளிக்காட்டியிருக்கிறார். மில்ரன் போன்றோர்களும் இருக்கிறார்கள்.
முன்பு புனித நூல்கள் முலம் தெரிவிக்கும் மர சொற்பொருளில் பல சேர்க்கைகளும் சேர்ந்துவ மறையத் தொடங்கிவி மனப்போக்கின்படி வி விட்டார்கள். பல வி போடட்டும் என்று வருங் சுமத்திவிடக்கூடாது. ச பின்போடக்கூடாது. ஆ விஞ்ஞானம். மெய்ஞான கடவுளுக்கும் தொடர்பு ! போலிக் கொண்டாட்டங் மறைக்கின்றன. தேட உண்மைத்தன்மை வெளி தெரியவேண்டியது. தே வாழ்வில் அமையக்கூடாது
மகான்களும் இயற்கைக்
இயற்கையான வ விலக்கல்ல. இளமை, ( தவிர்க்க முடியாதது. மு சிதைவுதானே! யோகிக்கு ஏற்படும். இவற்றைச் நோயை, "மரணத்தை புனைந்துவிடுவார்கள். மரணமானார். நோய் இருந்தாலும் சரி, ஒரு மரணம் சீடர்களைக் கு மகாவீரருக்குப் பில்லி கருணையுடன் ஏற்றுக்ெ காணப்படுகிறது. புத்த புத்தருக்கு பழைய காள

ய அற்புதமான விஷயங்கள்
ஆங்கிலக் கவிகளான ஷேக்ஸ்பியர், சொற்களை அவ்வாறே கையாண்டு
)ள எழுத்தில் இல்லாமல் வாய்வழி இருந்ததனால் காலப்போக்கில்;
குழப்பங்களும் பல இடைச் Iட்டன. 'உண்மை’ படிப்படியாக ட்டது. ஒவ்வொருவரும் தம் ளக்கம் சொல்ல ஆரம்பித்து ஷயங்களை எதிர்காலம் எடை காலத் தலைமுறையினரின் தலையில் ரியா, தப்பா என்று கூறுவதை ன்மிகம் ஒரு பூரண வாழ்வியல் ாத்திற்கும் வணக்க ஸ்தலங்களுக்கும் இல்லை. போலிச் சமாச்சாரங்களும், களும், உபகதைகளும் உண்மையை” -ல் உள்ளவர்களுக்கு என்றும் ச்சம். இந்த உண்மை இயல்பாகத் டிக் கண்டுபிடிக்க வேண்டியதாக jJ•
த விதிவிலக்கில்லை:
ாழ்வின் தன்மைக்கு யோகியும் முதுமை, நோய், மரணம் எல்லாம் துமை என்பது என்ன? உடலின் ம், ஞானிக்கும், மகானுக்கும் நோய் டர்கள் ஏற்காததால் அவர்களின் )றைத்து ஏகப்பட்ட கதைகளைப் மகாவீரர் வயிற்றுப்போக்கினால் வந்தாலும் சரி, சுகதேகியாக யோகி யோகிதான். மகாவீரரின் ப்பிவிட்டது. கெளசல்கர் என்பவர் சூனியம் வைத்தும் அதைக் ாண்டர் என சமணக் கதைகளில் ரை ஏற்றுக்கொள்ளாத ஒருவர் னை சமைத்துக் கொடுத்ததால், அந்த

Page 154
எஸ். கு
உணவு நஞ்சாகி இருந்: உட்கொண்டு தன் உடலுக்கு கதைகளும் உண்டு. இப்ப ஞானிகள், மகான்கள் கரு நோய்நொடிகளை ஏற்றுக்கொ உண்டு. இப்படிப்பட்ட கல் நம்பவைத்துள்ளன.
பிறந்தவர் இறக்கத்தான் பெற்றோருக்குப் பிறக்கும் குழ வழியில்லை. உடல்கள் கட்டுப்பட்டது. இயற்கை மரண வைக்கவில்லை. பிறப்பை தோன்றுதல் என்றும் இறப்ை இறைவனடி சேர்தல், G சொற்பிரயோகம் செய்ய6 ஒன்றேதான். இங்கு G வேறுபடுகிறதேயொழிய பிற
பொதுவானவை. மொழி அமைப்பு:
கொறியா, வியட்னாம், ஆகிய நாடுகளில் உள்ள வித்தி புத்தர், போதிதர்மர் இந்த பெற்றார்கள் எனலாம். புத் போதனைகளுக்குப் பொரு மொழிகள் இருந்தன. இ இரண்டாகப் பிரிக்கவில்லை. பிரெஞ்சு, இலத்தின், கிே சமஸ்கிருதம், ஐரோப்பிய மெ மொழிகள், ஆபிரிக்காவில் உ களின் அமைப்பைவிட ம உடையவையாக இருப்பவைத் பர்மிய மொழிகள் எனலாம்.
புத்தர் பர்மிய, சீனா, ஜ உடனடியாக ஊடுருவிவிட்ட

ருபாதம் 1ܐs7
தை அறிந்திருந்தும் அதை மரணத்தைக் கொடுத்தார் என்ற டப்பட்ட கதைகள் ஏராளம். ணையால் தங்கள் சீடர்களின் ண்டதாகவும் நிறையக் கதைகள் தகள் காலம்காலமாக மக்களை
வேண்டும். மரணமாகப்போகும் ந்தை மரணத்திலிருந்து விடுபட இயற்கையின் விதிகளுக்குக் னத்தைப் பிறப்பிலிருந்து பிரித்து க் குறிப்பிட அவதரித்தல், பக் குறிப்பிட சமாதி எய்தல், ஜாதிப்பிழம்பாகல் என்றும் 0ாம். ஆனால் நிகழ்வுகள் சொற்பிரயோகம் மாத்திரம் ]ப்பும் இறப்பும் சகலருக்கும்
ஜப்பான், சீனா, மியன்மார் யாசமான மொழியமைப்பினால்
நாடுகளில் முக்கியத்துவம் நரினதும், போதிதர்மரினதும்; துகிற மொழியாக அத்தேச ம்மொழிகள் கருத்துக்களை ஆனால் ஆங்கிலம், ஜெர்மன், க்கம், இந்திய மொழிகள், ழிகள், சில கீழத்தேய நாட்டு ள்ள மொழிகள் போன்றவை றுபட்ட மொழியமைப்பை ான் சீன, கொரிய, ஜப்பான்
பான், கொரிய Loakad . அதனால் போதிதர்மறையும்

Page 155
138a போதிதர்மர் ப
புரிந்துகொண்டார்கள். அ அதை சாத்தியம் ஆக் போதிதர்மரை எளிதாக ஜப்பான், கொரிய பர் (Pictorial language) S. பிரிக்கவில்லை.
மொழியின் ஊடாக மதப் (அ) மியன்மார் மொழி
பைபிளை (Bible) ப முதல் மொழிபெயர்த்தே சில வாக்கியங்களைக் பெயர்க்க முடியாதநிை கணத்திலேயே முழுட் விட்டதாம். உதாரணம் மொழியில் மொழிபெய பொருள் வருகிறதாம். மொழியில் வளர்ச்சியற் இருக்கும் தன்மையைக் என்றால் பர்மீய மொ கருத்து கொடுக்கும். மர முற்றிலும் வேறுபடுகிற: பர்மீய மொழியில் அது எனவே 'மரம் ஆகிறது’ 'மரம் ஆகிக்கொண்டு’ மியன்மார் (பர்மீய) அர்த்தத்தைக் கொடுக்கி
ஆறு இருக்கிறது என்றுதான் சொல்லலாட என்பது சரியான பிரே
கடவுள் இருக்கிறா என்று சொல்ல முடிய அன்று. கடவுளுக்கு வி காரணம் அவர் ஏற்கன

றிய அற்புதமான விஷயங்கள்
த மக்களது மொழியின் அமைப்பே விட்டது. அவர்களால் புத்தரை, புரிந்துகொள்ள முடிந்தது. சீன, யெ மொழிகள் சித்திர மொழிகள் எமொழி எதையும் இரண்டாகப்
மிய மொழியில் (மியன்மார்) முதன் பாது மிகவும் கடினமாக இருந்ததால் கூட பர்மிய மொழியில் மொழி ல ஏற்பட்டதாம். மொழிபெயர்த்த பொருளும் காணாமல் போய் "கடவுள் இருக்கிறார் என்று பர்மீய பர்த்தால் 'கடவுள் ஆகிறார் என்று இருக்கிறார் என்ற சொல் பர்மீய று இயங்காமல் தேங்கிய நிலையாக குறிக்கிறதாம். 'மரம் இருக்கிறது’ ழியில் 'மரம் ஆகிறது" என்றுதான் ம் இருக்கிறது எனும்போது பொருள் து. ஆகிக்கொண்டிருக்கிறது என்றால் வளர்ச்சி நிலையைக் காட்டுகிறது. என்றுதான் சொல்லமுடியும் அல்லது எனலாம். இருக்கிறது’ என்ற சொல் மொழியில் அது வளர்ச்சியற்ற து.
என்பதை ஆறு இயங்குகிறது’ அல்லது ஆறு இயங்கிக்கொண்டு’ ாகம் ஆகிறது.
என்பதைக் கடவுள் ஆகிக்கொண்டு நல்லவா. கடவுள் ஒரு வளர்ச்சிப்படி ார்ச்சி என்றும் சாத்தியமே இல்லை. வே முற்றிலும் எல்லாம் அடைந்தவர்,

Page 156
எஸ். கு
முழுமையானவர். ஆகுத விடுவார். முழுமையற்றவருக்கு
கடவுள் இருக்கிறார் நிலையானவர் என்ற பொரு ஆகிறார் என்றால் கடவு காண்பித்து கருத்துப்பிழைக்கி மொழிபெயர்ப்பதில் சிக்கல்
வாழ்க்கை என்பது நிக புத்தர் ‘வாழ்க்கை’ என் ஒவ்வொன்றும் வினைச்சொல் நிலையில் நிலையாக இல்லை
ஒய்வே ஒய்வாக இல்லையே!
ஒய்வு என்ற சொல் த ஒருபோதும் ஓய்வாக இல்ை கூட அது ஒய்வு அல்ல. ஏே சிந்திக்கிறீர்கள், பார்க்கிறீர் கொண்டு இருக்கிறீர்கள். போன்றவை ஒய்வு அன் கொண்டிருக்கின்றது, பல 6 கின்றன.
இறந்திருக்கும்போது படிகளைத் தொடர்கிறது. சி தலைமுடி வளர்வதையும், உடல் வியர்த்து இருப்பதை கேள்விப்பட்டிருக்கிறோம். இவை நிகழ்கின்றன. இறந்த தொடர்கிறது. உடலில் இரு SudiGO)(3) (Consciousness) L தொடர்கிறது. பிறப்புக்குள் மறைந்து உள்ளன.
(ஆ) ஐப்பான் மொழி
ஜப்பான் மொழியின் மதக்கருத்துக்களுக்கு ஏற்று

ருபாதம் 139ےر |
ல் மூலம் முழுமையற்றவராகி தத்தான் ஆகுதல் சாத்தியமாகும்.
என்றால் கடவுள் தேக்க ளைக் கொடுத்துவிடும். கடவுள் ளை வளர்ச்சி நிலைகளாகக் றது. இதனால் பர்மீய மொழியில்
ஏற்பட்டதாம்.
ழ்ச்சிகள் அடங்கியது என்கிறார் றால் ‘வாழ்தல்", வாழ்தலில் ல்தான் அங்கு எதுவும் தேங்கிய
).
வறானதாகும், காரணம் ஓய்வு' லை. ஒய்வாக இருக்கும்போது தா ஒன்று நிகழ்கிறது. அதாவது கள், காதால் ஏதோ கேட்டுக் படுத்திருத்தல், தளர்வாயிருத்தல் று. அங்கு மனம் இயங்கிக் விஷயங்கள் நடந்துகொண்டிருக்
கூட உடல் தன் வளர்ச்சிப் ல சமயம் தாடி வளர்வதையும், நகங்கள் வளர்ந்திருப்பதையும், யும் செய்திகளாக, தகவல்களாக
இறந்துவிட்டார் இருந்தாலும் ாலும் உடல் வள்ச்சிப்படிகளைத் ந்து வெளியேறிய சுயம் (self), றுபிறப்பு எடுக்கிறது, வாழ்க்கை இறப்பும், இறப்புக்குள் பிறப்பும்
அமைப்பே சென் (Zen) றாற்போல அமைந்துவிட்டது.

Page 157
போதிதர்மர் பற்றி
அதனாலே அவர்கள் பெளத்தத்தையோ விளங்கி அந்த மொழியின் அை இலகுவாக உள்வாங்கிவி Gundigo personal pronoun s மொழியில் அந்த persona வெளிப்படுத்தக்கூடிய மாத் அமைந்துள்ளது. அவர்க வாழ்க்கை முறைகளிலு அவர்களது வாழ்க்கை மு effacemento Gum GöIgD GODGJ85 அதிகம் மையப்படுத்துகிற
பசி எடுக்கிறது என சாப்பிடுதல் அங்கு உள்ள அப்புறம் நிறைவு கிடைச் உள்ளது. பசி திருப்தி செ நன்றாகக் கவனியுங்கள், Goung GunTas personal pror எல்லாம் மறைகிறது ஆ நிகழ்கிறது.
உங்களுக்குப் பசிக்கும் என்று சொல்கிறீர்கள். ெ உருவாக்குகிறது. "பசி என் 'பசி ஒரு உணர்வு. அப்ப அங்கே இருப்பது 'ட அமைப்புத்தான் இரண்ட
மொழியின் ஊடாக செல்லுகின்றன. கோட்ப ஆகியவை ஓரளவு மொ கொண்டுள்ளன.
இந்துமதப் புனித நூ இந்து ஞானிகள் அ sLD66qö55S6) (Sanskri மகாவீரர் பேசியது எல்ல

ய அற்புதமான விஷயங்கள்
பெளத்தத்தையோ, சென் கிக்கொள்வது சுலபமாக இருந்தது. மப்பே சென்? கருத்துக்களை ட்டது. ஆங்கிலத்தில் ‘1’ (நான்) அதிகம் பாவிக்கப்படுகிறது. ஜப்பான் l pronoun பாவிக்காமலே கருத்தை திரி அந்த மொழியின் இலக்கணம் வின் மொழி அமைப்பு அவர்களது Iம் பிரதிபலிக்கிறது. அதாவது GoogDB56f6o 20 ciroIII “ modesty’ ‘selfளையே சென் (zen) மத உபதேசம்
5.
உணர்கிறோம், சாப்பிடுகிறோம். து. "பசி திருப்தி செய்யப்படுகிறது. கிறது. அதாவது திருப்தி அங்கு ய்யப்படுகிறது. சாப்பிடும் ஒருவரை
அங்குச் சாப்பிடுபவர் இல்லை. houns-l, you, he, she, it, We, they ஆனால் சாப்பிடுதல் தானாகவே
போது நான் பசியாக இருக்கிறேன்" Dாழிதான் நான்’ என்னும் கருத்தை றுதானே சொல்லி இருக்கவேண்டும். டியானால் பசித்தவர் யார்? ஆனால் சி" மட்டும்தான். மொழியின் கப் பிரித்து உரைக்கிறது.
வே போதிதர்மரின் போதனைகள் ாடுகள், கருத்துக்கள், தத்துவங்கள் ழியமைப்பின் அடிப்படைகளையும்
ல்கள் உபநிடதம், வேதம் உட்பட நேகமாக பேசியது எல்லாம் . சமண புனித நூல்கள் உட்பட Tub L9gáš63).fll " (Prakrit) GILDmiÄ?u flai).

Page 158
எஸ். கு
பெளத்த நூல்களும் கெளத மொழியில், இயேசுகிறிஸ்து மொழி. யூதரின் புனித நூ (Hebrew) மொழியில் உள்ள மொழி, ஸரதுஸ்ர்றா பேசியது அவர்கள் எல்லோரும் தங்கள் கண்ட உண்மைகளை, எடுத் அந்த மொழிகளில் சரியான இருந்துள்ளன.
புனித நூல்கள் வேறு ெ படும்போது நாம் மொழிபெ கூடுமானவரை மூலக்கருத் சொற்செல்வத்திலும், இலக் தங்கியுள்ளன, வேதம், உபநி பார்ப்பதெல்லாம் மொழிபெயர் நாம் பார்ப்பது மொழிபெயர்ப்டே
சமஸ்கிருதத்தில் ஆசிரிய பிரிவுகளாகப் பிரித்து உரைதுள்
சிக்சாக் (Sikshak); தகவலைத்
சரியானதா, தவ தெரியாது. தகவல் கருத்து சிதைவை தெரிவிப்பவர்.
glöguLunt Luis (Adhyapak): g)6. சென்றவர். வெ. இல்லை. இவ அனுபவத்தின் அ 2-Lungö8urtu (Upadhyay): 9)
சென்றவர். மேே விட தெளிவாக
ஆச்சாரிய (Acharya): இவர்
சொந்த அனுப கூறும் விசயங்களு

நபாதம் 1 1 14ܐ
புத்தர் பேசியது பாலி (Pali) 1ாதர் பேசியது அரமிக் (Aramic) ல் ரால்மட் (Talmud) ஹீப்புறு 1. நபிகள் பேசியது அரபிக் பக்லவி (Pahlav) மொழியில். து அனுபவங்களைத் தாங்கள் து உரைக்கக்கூடிய அளவிற்கு வார்த்தைகளும் சொல்வளமும்
மாழிகளில் மொழி பெயர்க்கப் யர்ப்பைத்தான் நம்புகிறோம். தைக் கூற முயன்றாலும் கண அமைப்பிலும் பொருள் டதம் போன்றவைகளில் நாம் ப்பே போதிதர்மர் விசயத்திலும்
பர்’ என்ற சொல்லை நாலு Tளார்கள்.
தெரிவிப்பவர், அந்தத் தகவல் றானதா என்பது அவருக்குத் லை எவ்விதப் பிழையுமில்லாமல் டயாமல் உள்ளவாறு உள்ளபடி
ர் சிறிதளவு அனுபவத்தினுள் லும் தகவல்கள் சொல்லுபவர் ர் சொல்வதில் சிறிதளவு டிப்படையில் உரைப்பவர்.
வர் ஒரளவு அனுபவத்தினுள் ல கூறிய அந்த இருவரையும்
உள்ளவர்.
-ண்மையை அறிந்தவர். தன் த்தினைக் கூறுபவர், தான் க்கு அவரே சாட்சியானவர்.

Page 159
142a போதிதர்மர் பற்
ஆங்கிலத்தில் பொது போன்ற சொற்கள்தான் பாவிக்கப்படுகிறது. அதில் முடியாத நிலை நிலவுகிற
மொழிபெயர்ப்பில் ஏற்பட் இரவீந்திரநாத்தாகூரின்
இரவீந்திர நாத்த உலகப்புகழ் பெற்ற க தனது தாய்மொழியான ெ மொழியில் “கீதா கவிதைத் தொகுதியைப் தார், இவர் இங்கில படித்தவர். வங்காளத்தில் பெரிய செல்வந்த குடும் சேர்ந்தவர். British gF சியம் இவரது தாத்த ராஜா (King) என்ற ெ அந்தஸ்தை வழங்கியி இவரது நண்பர்கள் சலியை ஆங்கிலத்தில் பெயர்க்கும்படி வற் னார்கள். இக்கவிதைச் என்றனர். இக்கவிதையி இரவீந்திரநாத்தாகூர் அ6 மொழிபெயர்த்தார். ஆங்கிலேயரிடம் காட்டு இரவீந்திரநாத்தாகூர் அ. இருந்தபடியால் அந்த
சி.எவ். அண்ட்ரு அப்போது கல்கத்தாவில் கொண்டிருந்தார். அவர் வங்காள மொழியும் ெ பிழை பார்க்க அவர்த செய்தனர். அவர் ஆங்

|ய அற்புதமான விஷயங்கள்
»usT5 Teacher, Master, instructor மேலே குறிப்பிட்டவர்களுக்குப் துல்லியமாகப் பிரித்துச் சொல்ல
l.
குழப்பம்:
கீதாஞ்சலி’
Π 3η Πί விஞர். 1ங்காள ஞ்சலி படைத் ாந்தில் ) மிகப் பத்தைச் ாம்ராச் ாவுக்கு களரவ ருந்தது. கீதாஞ் மொழி புறுத்தி கு நோபல் பரிசு கிடைக்கலாம் ன் உயிரோட்டத்தை விளங்கியவர் ர்கள்தான். அவர் தனது கவிதையை அந்த மொழிபெயர்ப்பை ஒரு ம்படி ஆலோசனை வழங்கப்பட்டது. Iர்கட்கும் அடிமனதில் ஒரு தயக்கம் லோசனையை ஏற்றுக்கொண்டார்.
(C.F. Andrew) என்ற ஆங்கிலேயர் கிறிஸ்தவ மிசனரியாகப் பணிபுரிந்து தாகூரின் நண்பரும் கூட அவருக்கு ரியும். இந்த மொழிபெயர்ப்பைச் சரி, ன் பொருத்தமானவர் என முடிவு Iல மொழிபெயர்ப்பையும் வங்காள

Page 160
எஸ். குரு
மொழியிலுள்ள கவிதையை தாகூரின் மொழிபெயர்ப்பி செய்தார்.
ஆங்கிலக் கவிஞர் கீட்ஸ்
25 ஆங்கிலக் கவிஞர்கை இரவீந்திரநாத் தாகூர் அவர்கை தனது ஆங்கில மொழிபெய இசைத்தார். நோபல்பரிசு ெ சிறந்த கவிதை எனச் சிபாரி இந்தக் கவிதையில் நான்கு ( தடைப்படுகிறது எனத் த்ெ அவர்கள் ஆச்சரியப்பட்டார்.
C.F.Andrew LDmibió uLu gyG கீட்சும் சுட்டிக் காட்டினார். " ஆனால், கவிதை ஓட்டத்து உள்ளன. அந்த நாலு சொ கவிதைக்கு ஏற்றமாதிரி மாற்றி கூறினார் “நீங்கள் சொல்வது Andrew திருத்திய இடங்கள்” விட்டார்.
நோபல் பரிசு குழுவுக்குக் அங்கு ஏகமனதாக அக்கவிை வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தாகூருக்குக் கெளரவ கலாநிதி
“நீங்கள் வழங்கவுள்ள ( அல்ல, நான் பெற்ற நோட வழங்குகிறீர்கள். எனது கீதா எனது தாய்மொழியில் உ நிலையத்தில் எவ்வித அங்கீகா இருக்கிறது. பல்கலைக்கழகத்து பல காலமாக வாழ்ந்துகொண் தாகூர் பட்டமேற்க மறுத்தேவி

நபாதம் 148
பும் பார்வையிட்டார். அவர்
ஸ் நாலு இடத்தில் மாற்றம்
(Keats) இலண்டன் மாநகரில் ள வீட்டிற்கு வரவழைத்து ள அறிமுகப்படுத்தினார். தாகூர் ர்ப்பைக் கவிதை நயத்துடன் தெரிவுக்கு அனுப்பப்படக்கூடிய சு செய்தனர். ஆனால் கீட்ஸ் இடத்தில் கவிதையின் ஒட்டம்
நளிவாகக் கூறினார். தாகூர்
த நான்கு இடங்களைத்தான் அவை இலக்கண ரீதியாகச் சரி. |க்கு அவை தடைக்கல்லாக ற்களையும் தாகூர் அவர்கள் னால் நல்லது” என்றார். தாகூர் சரி, அந்த நாலு இடமும் C.F. என்று கூறி அவற்றை மாற்றி
கீதாஞ்சலி அனுப்பப்பட்டது. த ஏற்கப்பட்டு நோபல்பரிசு
கல்கத்தா பல்கலைக்கழகம் ப் பட்டம் வழங்க அறிவித்தது.
கெளரவம் எனது கவிதைக்கு பிள் (Nobel) பரிசுக்குத்தான் ஞ்சலி கவிதைத் தொகுதி நூல் வ்கள் பல்கலைக்கழக நூல் ரமும் இல்லாமல் பலகாலமாக க்கு அண்மையில்தான் நானும் டிருக்கிறேன்” என அறிவித்து
ட்டார்.

Page 161
144a போதிதர்மர் பற்
பொதுவாக Gର நூல்களானாலும் சரி, எந் எந்தப் புனித நூல்களான ஏற்பட சாத்தியக் கூறு மொழிபெயர்ப்பானாலும் உபதேசங்கள் செவிவழி தங்கள் விளக்கத்துக்கேற் சந்தர்ப்பம் உண்டு. அன வெளிவரும்போதும் “கரு உண்டு, அதனால்தான் முரண்பாடுகளாக அமைகி உள்ளாகின்றன.
புத்தர் மக்கள் மொழியிே மொழிபெயர்ப்பை ஏற்கவி
சுவாமி விவேகானந் சர்வசமயப் பேரவையில் என்ற தலைப்பில் பேரு5 செய்த காலத்தில் சமஸ்கி புத்தரின் சீடர்களில் சமஸ்கிருதத்தில் மொழி புத்தர் தான் மக்களின் மொழிபெயர்ப்பு ஆலோ என்று குறிப்பிட்டிருந்தார்

றிய அற்புதமான விஷயங்கள்
மாழிபெயர்ப்புக்குள்ளான எந்த தப் போதனை நூல்களானாலும் சரி, ாலும் சரி கருத்துக்களில் தவறுகள் கள் உள்ளன. எந்த மொழியின்
பல குழறுபடிகள் ஏற்படலாம். மூலம் பரவும்போது ஒவ்வொருவரும் ப கருச்சிதைவாகவும் பரப்பியிருக்க வகள் மொழிபெயர்ப்பு நூல்களாக ச் சிதைவடைந்துவிட வாய்ப்புக்கள் சில புனித நூல்களின் கருத்துக்கள் ன்றன. அதனால் விமர்சனத்துக்கும்
ல பேசினார்: வில்லை
தர் 26.09.1893 அன்று சிக்காகோ புத்தமதம் இந்து மதத்தின் நிறைவு ரை ஆற்றும்போது ‘புத்தர் உபதேசம் கிருதம் பேச்சு மொழியாக இல்லை. சிலர் அவரது உபதேசங்களை பெயர்க்க விரும்பினார்கள். அதற்கு
மொழியிலே பேசுவதாகக் கூறி
சனையை ஏற்றுக்கொள்ளவில்லை?

Page 162
அத்தி
G&LDULJIJF Ghaouủ (Wei) ag
பேரரசர் வூ (Wu) முரண்பட்டு பலதடைகளைத் தென்சீனாவை விட்டு ெ வடசீனா வந்தடைந்தார் டே அங்கு வட ‘வெய்" (We gц"3600 шај (Northern Wei சேர்ந்த அரசர் "வெய்" (We புரிந்துகொண்டிருந்தார். புத்தா பூமியிலிருந்து ஞானமடைந் ஒருவர் தன் இராச்சிய வந்திருப்பதை அறிந்தார் அர. அதுவரை ஞானமடைந்த ஞா சென்றதில்லை. விச மடாலயங்கள் நிர்மாணித்தல் நடைபெற்றுக் கொண்டிரு சீனமொழிக்கு மாற்றம் செ பாலிமொழிப் பண்டிதர்கள் புத்தபோதனை, உபந்நியாசச ஏற்கெனவே இந்தியாவின் குடியேறியிருந்தனர். இவர்கள் உண்மையை உணர்ந்தவர்கள் பவங்களை அங்கு கூறவில்லை இரவல் அறிவைப் பிரயோ அவர்கள் கூறிய வழிமுறைகள் இந்த அரசர் வாழ்ந்துவந்தார்.

பாயம் 17
ன் உட்குரலைக் கேட்டார்
வுடன் தாண்டி வளியேறி ாதிதர்மர். i) வம்ச Dynasty) i) ஆட்சி ர் வாழ்ந்த த ஞானி | த்திற்குள் Fர் வெய். னி அங்கு Emperor Wei ாரைகள்,
இந்த மன்னரது பணிப்பில் ந்தன. புத்த போதனைகள் ப்யப்பட்டிருந்தன. சமஸ்கிருத, ா, மொழிபெயர்ப்பாளர்கள் ர்கள், பிரசங்கிகள், துறவிகள் ருந்து அங்குச் சென்று யாரும் தங்கள் தரிசனத்தில் அல்ல. தங்கள் சொந்த அனு அவர்கள் தாங்கள் படித்தறிந்த த்துக் கொண்டு இருந்தனர். விதிகள், பிரமாணங்களின்படி

Page 163
146a போதிதர்மர் பற்றி
ஞானமடைந்த ஞானி மகிழ்ந்து அவரது இருப்பிட
அரசர் Gauulu (Wei) : “5TGör
வழிமுறை போதிதர்மர் : ஒன்றுமில்
அரசர் வெய் : நான் எது துறவிக6ை கிறேன். யும் முை
போதிதர்மர் : உன் உள் கேட்டா (up Lq-uLu fTg பெளத்த உன் உட் அப்படிக் முட்டா செய்திரு பேராை புண்ணிய எங்கிரு மனதில் புத்தரின்
என்பதில்
LDLITG).
அன்னத்
மனதில்
கொண்
உணரவி
சந்திக்க
உணர்ந்
அரசர் என் ! தோன்

|ய அற்புதமான விஷயங்கள்
போதிதர்மர் வருகை தந்ததையிட்டு டம் சென்று சந்தித்தார்.
வாழ்வில் உன்னதம் அடைய கள் ஏதும் கூறுங்கள்” என்றார்.
லை! எதுவுமே கிடையாது!
வும் தப்பாகச் செய்யவில்லை, புத்த ளக் கேட்டுத்தான்; எல்லாம் செய் அவர்கள் கூறுவதுபோல் அனைத்தை றப்படி செய்கிறேன்.
rGalt 826ölöG5ub SLT606v (inner Voice) லன்றி உனக்கு யாரும் உதவ il. அதுபெளத்தரோ அல்லது ர் அல்லாதவராகவும் இருக்கலாம். குரலை நீ இன்னும் கேட்கவில்லை,
கேட்டிருந்தால் நீ இப்படி ஒரு ள்தனமான காரியங்களை இதுவரை க்கமாட்டாய். புண்ணியம் என்பது ச, அதுமனதின் கண்டுபிடிப்பு. பம் கிடைக்க வேண்டும் என்ற ஆசை து வந்தது? பேராசை கொண்ட இருந்துதானே அது தோன்றியது. பாதையில் ‘புண்ணியம்’
lᎶᏈᎠᎶᏓᎧ.
ங்கள், விகாரைகள் நிர்மாணிப்பது, ானம் போன்றதெல்லாம் உன் ஒர் ஆசையை மறைத்து வைத்துக் டு செய்கிறாய். அதை நீ சரிவர ல்லை என்றால் பெரும் இழப்பை நீ வேண்டி வந்துவிடும். இவற்றை ால் உனக்கு எல்லாமே புரிந்துவிடும்.
னதில் குழப்பமான எண்ணங்கள் கின்றன. நான் சில சமயம்

Page 164
66io. (g
போதிதர்மர்
பாதிப்படை துக்கம், கல் உட்குரலைட இது புதிதா பற்றி எதுவு
அப்படியான மெய்க்காப் எவரும் இல் சந்திக்கவும். துக்கம், தொல்லைகள் நான் மை அந்தக் கே மனதை ஆ கோலால் கேட்க வை:
அரண்மனை துறவிகளை அரண்மனை போகிறார்கள் இந்த ஆள மோடனாக ஆளாகவும்
சில வேளை தெரிகிறார். கோலால் 6 அரசரால் து வேண்டாம
மனிதர் பே
சலுகைகள், பேசவில்லை. நான் ஒரு கணக்கில் முன்னிலைய போல் நின்(
 

5ருபாதம் 147ےر
டகிறேன். எனக்குக் கவலை, ஷ்டம் அதிகமாக ஏற்படுகிறது. ப் பற்றிக் கூறுகிறீர்கள். எனக்கு க இருக்கிறது. எனக்கு இதைப் ம் தெரியாது.
ால் நாளை காலை 4.00 மணிக்கு பாளர்களோ, பரிவாரங்களோ லாமல் தனியாக வந்து என்னைச் அப்போது உங்கள் கவலை, துன்பம், பிரச்சினைகள், எல்லாம் கொண்டு வாருங்கள். லயடிவாரத்தில் அமைந்துள்ள ாயிலில் தங்கியிருப்பேன். உன் அமைதியாக்கி, அதை இந்த ஒருவழிப்படுத்தி உட்குரலை க்கிறேன் என்றார்.
ா திரும்பினார். நான் பல ப் பார்த்திருக்கிறேன். என் ாக்கு துறவிகள் தினமும் வந்து ர். அவர்களது அடக்கம், பணிவு ரிடம் இல்லை. இந்த ஆள் s முரடனாக, ஆபத்தான இருப்பார் போல தெரிகிறது. களில் வேடிக்கையானவராகவும் தன் கையில் வைத்திருக்கிற ாப்படி எனக்கு உதவமுடியும்? ாங்க முடியவில்லை! போவதா? ா? எனச் சிந்தித்தார். அந்த ாலியானவராகத் தெரியவில்லை.
வசதிகள் பெறுவதற்காக இவர் ஒரு வித்தியாசமானவர். பேரரசன் என்பதைக்கூடக் எடுகக்காதவர். அந்த மனிதர் பில் நான் ஒரு பிச்சைக்காரன் றேன்.

Page 165
148a போதிதர்மர் பற்றிய
போதிதர்மர்
அரசர்
போதிதர்மர்
அரசர்
இந்தியாவிலி கிறார்கள், முறைகளைச் சிந்தித்தார். உரையாடி போதிதர்மர் சந்திக்கச் ச்ெ
நிற்பதைக் க
நீ பெரும் ! பின்பு, ே குழப்பத்துட எனக்குத் தொந்தரவுக கூட்டி வந்த
அவைகள் இல்லை.
நீங்கள் 6 உங்களுக்கு இங்கு எவ சூழல், உ உங்கள் மு கோலுடன் செய்யவேல் அமைதியா நீங்கள் பிர மனதைக்
பிடித்ததும் நான் இந்த பார்க்கிறேன் மூடுங்கள் (
பெளவியம உட்கார்ந்த எதுவித யே

அற்புதமான விஷயங்கள்
ருந்து பல துறவிகள் வந்திருக் அவர்கள் எல்லாம் சிலவழி சொன்னார்கள். பலவாறாகச் தனது ஆலோசகர்களுடனும் ஒரு முடிவுக்கு வந்தார். தன்னை வைகறைப்பொழுதில் Fான்ன இடத்துக்குச் சென்றார். பாதிதர்மர் தன் கோலுடன் ண்டார்.
சிந்தனைக்கும், ஆலோசனைக்கும் பாவதா? விடுவதா? என்ற -ன் இங்கு வருவாய் என்பது தெரியும். உன் பிரச்சினைகள், ள், துன்பங்கள் அவைகளையும்
IUTo
வெளிப்படையான ஆட்கள்
எங்கேயிருந்தாலும் அவர்கள் ) முக்கியமானவர்கள்தானே! ருமே இல்லை, அமைதியான ங்கள் கண்களை மூடுங்கள். ன்னிலையில் நானும் இந்தக் உட்கார்ந்து இருப்பேன். நீங்கள் ண்டியது ஒரேயொரு வேலை. க உள்நோக்கி உங்களுக்குள் யாணம் செய்யுங்கள். உங்கள் குழப்பும் அவர்களைக் கண்டு எனக்கு உடனே சொல்லுங்கள். க் கோலால் மிச்ச வேலையைப் 1. உட்கார்ந்திருந்து கண்களை ான்றார்.
ாக போதிதர்மர் முன்னிலையில்
ர். கண்களை மூடியபடி வேறு ாசனையுமில்லாமல் அமைதியாகத்

Page 166
எஸ். கு
போதிதர்மர்
அரசர் வெய் :
போதிதர்மர்
தனது அ οΟΤΠΠ. பின்னோக்கி கொண்டிருந் வந்தார். 8 சென்றார்.
மனமற்ற (N இல்லாத ெ உதயமாகும் தொடங்கியது
அரசனின்
சாந்தமாகவு பிரகாசித்தது. மெதுவாகத் த என்று கேட்ட
கண்களை ெ தர்மரை வன அமைதியை ! (Inner Voice உள்மாற்றத்ை OBS 6 IO காரணம். ந1
oI6ooomb
*உள்ளே?
வெளியேறிவு அற்புதத்தை வெளியில் எதையும் தே வேண்டும் கூடாது. நf மாற்றிவிட்டீ கூறினார்.
உரக்கச் சிரி வில்லை, எப் அது ஏற்கெ6

ருபாதம் ܦ14ܐ
கப் பிரயாணத்தை தொடங்கி மனம் அரச பதவியிலிருந்து ஒவ்வொரு பருவமாகப் போய் தது. சிறுபிராயம் வரை று பிராயத்தையும் கடந்து மனதிற்கு அப்பால் சென்று -mind) நிலையானார். எதுவுமே வறுமையானார். காலை சூரிய நேரம் அரசரின் முகம் மலரத் .
மாற்றத்தை அவதானித்தார். ம், அமைதியாகவும் முகம்
அரசரைத் தன் கைகளால் நட்டியபடி “கண்டுபிடித்தீர்களா?”
_TTTT.
மதுவாகத் திறந்தார். போதி எங்கினார். எனக்குள் சாந்தம், உணர்ந்தேன். என் உட்குரலைக் ) கேட்டேன். எனக்குள் தை ஏற்படுத்தி விட்டீர்கள். னம்தான் எல்லாவற்றுக்கும் ான் ‘உள்ளே? இல்லாதபோது உள்ளே இருந்தன. நான்
நுழைந்ததும் στου ου Πτο îlLLOOI. நீங்கள் பெரிய செய்துவிட்டீர்கள். எங்களுக்கு எதுவும் இல்லை. வெளியில் டமுடியாது. மனதைக் கடக்க மனதால் எதையும் பார்க்கக் ன் மாறிவிட்டேன் என்னை ர்கள் என்று பணிவுடன்
தார். உங்களை நான் மாற்ற படியாக மாற விரும்பினிர்களோ, வே உங்களுக்குள் இருந்தது.

Page 167
15Oa போதிதர்மர் ப
அரசர்
போதிதர்மர்
உள்ளே
LD II (DCUp! மாற மு விடுவீர் ஒன்றாக சொல்லி கர்ஜை
 

றிய அற்புதமான விஷயங்கள்
ருக்கும் ஒன்றாக எப்படி மீண்டும் யும்? இல்லாத ஒன்றாக நீங்கள் யற்சி செய்தால் நீங்கள் தோற்று 5ள். ஏற்கெனவே இருக்கின்ற மீண்டும் மாற முடியாது என்று ச் சிரித்தார். அந்தச் சிரிப்பு சிங்க ா போல் இருந்தது. எதுவாகவும் தேவையில்லை. நமது உண்மை
Ll உணர்ந்தால் நமக்குள் ருப்பதை உணரமுடியும். நீங்கள் ஒரு Tசமானவர், உங்களை எனக்கு
விளங்குகிறது. ஓர் அமர்வில் நீங்கள் ா அறிந்துகொண்டீர்கள்.
அரண்மனைக்கு வாருங்கள் என்று ாகவும் மிக்க மரியாதையுடனும்
Ts T.
வரப்போவதில்லை. நான் பைத்தியக் நிமிடத்துக்கு நிமிடம் எப்படி பன் என்பது எனக்குத் தெரியாது. துக்கு நிமிடம் புதிதாக வாழ்பவன் உனக்குத் தொந்தரவு செய்துவிடுவேன். என் வழியில் பைத்தியக்காரனாக வன். (போதிதர்மரின் செயல்கள் த்தும் தனித்துவமானது, வித்தியாச அவ்வப்போது எது தோன்றுகிறதோ அவரது வழிமுறைகள். திடமான றைகள், அதாவது இதுதான் வழிமுறை எதுவுமில்லாதவர். அவர் எதையும் னவே தயார் செய்து வைத்திருப்ப 0.) அரசர் வெய் அவர்களை மனைக்கு அனுப்பிவிட்டு மலைச் உள்ள குகை ஒன்றினுள் உட்கார்ந்து உற்றுப் பார்க்கத் தொடங்கினார். டியாக அவரது பார்வை கூர்மையாகி ஒரு புள்ளியாகியது. அவரது மனம்

Page 168
எஸ். (
சுவரைப் உற்று நோ ஏற்பட்டது. சென்றது. சீடர்களாக முன்னால் உட்காருங் மாட்டேன் யாரென்று செய்யவேண்
உட்கார்பவ தெரிவு ( கூட்டம் விட்டாலெ தொடர்ந்து யிருப்பார்.
 

குருபாதம் l151
போன்று வெறுமையாகியது. க்கிய இடத்தில் சுவரில் துவாரம் அவரது பார்வை ஊடுருவிச் “யாராவது என்னுடைய இருக்க விரும்பினால் எனக்கு உட்காராமல் எனக்குப் பின்னால் கள்’ நான் ஆட்களைப் பார்க்க r. எதிரில் உட்கார்பவர்களை கண்ணால் பார்த்துத் தெரிவு ண்டியிருக்கும். எனக்குப் பின்னால் ர்களை யாரென்று பார்க்காமல் செய்யலாம் என்றார். மக்கள் இருந்தாலென்ன, இல்லாமல் Uன்ன, சுவரைப் பார்த்து
சொற்பொழிவாற்றிக்கொண்டே

Page 169
ෙtණි.
போதிதர்மர் ஒரு அக்கியழபங் மருத்துவத்
போதிதர்மர் அவர்கள் குறிப்புகளைச் சீடர்கள் ெ தங்கள் குருவுக்கு உரியை அவர்களே எழுதியதாகவும் தாகவும் ஏடுகள் கூறுகி மரியாதை ஆயிரக்கணக்கா இருக்கிறது. அக்கருத்து ச ஞானிகள் பெரும்பாலும் நு வர்களே! ஞான நூல்கை வில்லை.
பகவத் கீதையை ப வில்லை.
திரிபீடம் அல்லது த வைக்கவில்லை.
குரானை நபிகள்நாயக
ஷாஹிப்ஹிராந்த் புனி
வைக்கவில்லை. பைபிளை இயேசுபிரா கல்ப சூத்திராவை ஞ
கோன்களை போதிதr

யாயம் 18
மருத்துவ விஞ்ஞானி: Ji (Acupuncture)
தின் தந்தையா?
மருத்துவம் தொடர்பாக கூறிய தாகுத்து எழுதியபின், இவைகள் வ என்று சிந்தித்து, போதிதர்மர் அவரின் பெயரைப் பாவித்துள்ள ன்றன. சீடர்களால் இத்தகைய ன வருடங்களாகப் பேணப்பட்டு ரியானதாக இருக்கலாம், காரணம் ால்கள் எழுதுவதில் நாட்டமில்லாத ளயும் மகான்கள் எழுதி வைக்க
கவான் கிருஷ்ணர் எழுதிவைக்க
மபதத்தை கெளதமபுத்தர் எழுதி
ம் எழுதிவைக்கவில்லை.
5 நூலை ஞானி குருநானக் எழுதி
ன் எழுதிவைக்கவில்லை. னி மகாவீரர் எழுதிவைக்கவில்லை.
மர் எழுதி வைக்கவில்லை.

Page 170
எஸ். குரு
இன்று உலகில் தத்துவக் கி கும் சோக்கிரடீஸின் கருத்து படுகிறது. ஆனால் சோக்கி எழுதவில்லை. அவர்கள் சீடர்க நூலாக்கியவர்கள். பெரும் ஞ கூறியவைகளை அவர்களது காத்தனர். அனேகமான சீடர்க ஞானிகளின் கருத்துக்களாக இ யில்லை என்பதால், தங்கள் கு னர். இதனால்தான் "ஞானிக எழுதியதாகக் கருதப்பட்டு வரு
போதிதர்மர் அவர்களின் மருத்துவ ஏடாகக் கருதப்படும் XI SUI JING db s T000TTLDG போய்விட்டது. தசை, ரிசு (Fles and Tissue) LDITsiboj605, Luibnju 6JLIT60T YI JIN JING Gg)6ö1gpj6)J60)L பாதுகாக்கப்பட்டு வருகிறது இவரது மருத்துவ நூலான X SUl JING 66pLDL LDé6o) (Marrow) மாற்றத்தைப்பற்றி போதிதர்மரது பிரதம சீடரா ஆலயத்திலிருந்து எடுத்துச் செ அந்நூலை யாரும் பார்க்க ( gyGuri 35Git GBIFITGóliši (Shaolin Ten பெட்டகத்திலே அவரது இரு நம்பப்படுகிறது.
»
நூல்கள் இயற்றினாரா?
போதிதர்மர் ஒரு செய6 யில்லாதவர், செயலில் அக்கை எழுதியதாகக் கூறப்படுகிறது. நூ தன் எந்தவித அடையாளங்களு நூல்கள் எழுதி அதனை விட் நூல்கள் அவரது ஞாபகச் சில குரியதாகிவிடும் அல்லவா!

பாதம் 1153
ருத்துக்களுக்கும், தர்க்கவியலுக் களே மேற்கோள் காட்டப் ரடீஸ் எந்த நூல்களையும் ள்தான் அவரது கருத்துக்களை ானிகள், பெரும் மகான்கள் சீடர்கள்தான் எழுதிப் பாது ள் அந்நூல்களின் கருத்துக்கள் ருப்பதால், தங்களுக்குரியவை ருவின் பெயரையே பாவித்த ள்’, ‘மகான்கள்’ நூல்களை கின்றன.
T
F
குறிப்பிடுகிறது, இந்நூலை ன ஹியூக் (Huike) சோலிங் ன்றுவிட்டார். அதன் பின்பு முடியவில்லை. போதிதர்மர் ple) தேவாலயத்தில் பாவித்த ஏடுகளும் இருந்தன என
வீரன். பேச்சில் அக்கறை றயுள்ளவர். மூன்று நூல்கள் கள் எழுதச் சந்தர்ப்பமில்லை. ம் இருக்கக்கூடாது என்பவர் நிச் செல்லமாட்டார். அந்த "ணமாகிவிடும், வணக்கத்துக் அந்த நூல்களும் LIG)

Page 171
154a போதிதர்மர் ப
நூற்றாண்டுகளாகப் ( கூறப்பட்டுவருகிறது.
“போதனைகள் 4 பரவியுள்ளன. பின்பு பிரதம சீடர்கள் எழு பெயர்களைக் குறிப்பிடு அவர்களுக்குரியதல்ல. அதனால் தங்கள் குருவி போதிதர்மர் விடயத்தி புத்தக உள் விடயங்கள் சீடர்கள் போதிதர்மரி என்கிறார் ஒசோ (Osho
மருத்துவக் கண்டுபிடிப் அக்கியுபங்சர் சிகிச்சை
தகவல்கள் முரண்ப மையால் இதை யார் அ படுத்தியது என்பதை செய்ய முடியவில்லை ஏடுகள் ‘போதி" பொதுவாகக் கூறுவதா இந்தக் குழப்பம் உருவ அக்காலத்தில் போதி பெயருடன் ஆரம்பிக்கு ஞானிகள் இருந்தார்கள் காலத்திலிருந்த GL (Bodhgifti) என்ற போதிதர்மரின் குணஇ கொண்டவர். ஆனால் ஈடுபாடு இல்லாதவர். என்று ஆரம்பிக்கும் கொண்ட எல்லோ போதிதர்மர் உட்பட, என்று அழைக்கப்ப போதிதர்மர் அவர்கள் என்று மட்டுமல்ல தா

றிய அற்புதமான விஷயங்கள்
பாதிதர்மர் எழுதியவை என்றே
படுதலாக செவிவழி மூலம்தான் அவைகள் நூல்களாகியிருக்கின்றன. னால் தாங்கள் எழுதியதாக தங்கள் வதில்லை. ஏனெனில் அக்கருத்துக்கள் அது அவர்கள் குருவுக்கு உரியவை. பின் பெயரைப் பாவித்திருக்கிறார்கள். லும் இப்படித்தான் நடந்திருக்கும். அவருக்கு உரியவை என்றபடியால் ன் பெயரைப் பாவித்திருக்கலாம்;
(ACupuncture)
டுகின்ற றிமுகப் உறுதி . சில என்று ல்தான் ாகிறது. என்ற ம் பல அதே ாதிரூசி ஞானி ல்பைக் ருத்துவ போதி பெயர் ரையும், போதி டனர்.
போதி
) என்றும் அழைக்கப்பட்டார். பலர்

Page 172
எஸ். கு
இவரது இப்பெயர்கை ‘பைத்தியக்காரன், நீலக்கண்க இவரைக் குறிப்பிட்டுள்ளார்க
இவருக்கு மருத்துவத் அக்கியூபங்சர் சிகிச்சை முe இருக்கலாம் என்பதே என் மாபெரும் சித்தர். மருத்து மருத்துவ ஆராய்ச்சியில் ஈ செய்துகொண்டே இருப்பவர்
இன்று மருத்துவத்துறைய siósóslyUG58ff (Acupuncture)
రచ
--
C
(6*
மனிதர்களுக்கு மெய் ( (பார்த்தல்) மூக்கு (முகர் glplagirs6T (Five Senses) காலமாக உலகம் பூராவும் ! ஐம்புலன்கள்தான் என்ற கரு
போதிதர்மர் அவர்கள் ம ஆறு புலன்கள் (Six Senses) புலன் காதுக்குள்ளே உள்ள உள்ள திரவம் ஆகும். அ LIG5g/Lib Lalait (Sense of B
 

ருபாதம் l155
ளப் பாவியாது "மோடன்”, ாரன், அகண்ட கண்காரன்” என
த்தில் ஞானம் இருப்பதால் றையை இவர் அறிமுகப்படுத்தி அபிப்பிராயம். போதிதர்மர் ஒரு துவத்தில் கைதேர்ந்தவர்களும் ஈடுபட்டு புதுக்கண்டுபிடிப்புகள் களும் சித்தர்களே.
பில் சிறந்த சிகிச்சை முறையான போதிதர்மரால் சீனாவில் அறி முகப்படுத்தப்பட்டு படிப்படியாக உலகம் பூராவும் பரவி உள்ளதாக ஊகிக்கப்படுகிறது.
மனிதர்களுக்கு ஆறு புலன்கள் T6 ბyT மருத்துவ விஞ்ஞான அறிவிப்பு:
ஸ்பரிசம்) வாய் (ருசித்தல்) கண் தல்) செவி (கேட்டல்) என மாத்திரமே உண்டு எனக் காலம் கருதப்பட்டுவந்தது. மருத்துவமும் த்தையே வலியுறுத்தியிருந்தது.
னிதர்களுக்கு ஐம்புலன்கள் அல்ல என அறிவித்தார். அந்த ஆறாவது நத்தை சுருளுக்குள் (Cochlea) துதான் உடலைச் சமநிலைப் alance) என விளக்குகிறார்.

Page 173
போதிதர்மர் ஐந்தாட் ஆறு புலன்கள் உண்டு நூற்றாண்டுகளுக்குப் பின் ஆராய்ச்சி, பரிசோத6ை வந்துள்ளது. போதிதர்ப அன்றே அதைப்பற்றிக் க
நோக்கு வர்மம்:
"உற்றுநோக்குதல்’ Hypnotism epavlb LD6.
 

lய அற்புதமான விஷயங்கள்
நூற்றாண்டிலேயே மனிதர்களுக்கு என்று கூறிவிட்டார். இதைப் பல பே மருத்துவ விஞ்ஞானம் விரிவான ாகளுக்குப் பின்பு இம் முடிவுக்கு ர் அவர்கள் சர்வ சாதாரணமாக றியிருப்பது வியப்பாக உள்ளது.
நாக்குவர்மக் கலையாக மாறியது. க் குழப்பமானவர்களுக்கு இன்று

Page 174
στου. Θ5
gymógiu Glav (Hypnosis) DGAILLIT சித்தர்கள் இதில் கைதேர்ந்தவ மூலிகைத் தேயிலை (Herbal T
இவர் (Tai) ராய் ம மூலிகைத் தேயிலைச் செடியை அத்தேயிலையை Tai என்றே ராய் என்பது Tea என ஆங்கி 9)fögs Tai L96öTLI Chai 3Tui 6 மாறியது. வேறு சில மொழிக என அழைக்கப்படுகிறது. இவ நீக்க தேனீரைக் கண்டுபிடித்த உலகம் பூராகவும் உள்ள சென் துறவிகள் நிறைய தேனிர் பழக்கமுடையவர்களாக இரு போதிதர்மர் தேனிர் அருந் முடையவர். மூலிகைத் தேயிை முதன்முதலில் அறிமுகப்படுத்தி
போதிதர்மரது வரலாற்ற படுத்த முடியாத பல விவர சரித்திர ஆய்வாளர்கள் குறி காலப்பகுதியில் வெளிவந்த நாவல்தான் போதிதர்மரது தற அவரைப் பற்றியும் வெளி உ6 படுத்திய நூலாகும்.

பாதம் a157
ச் சிகிச்சை வழங்கப்படுகிறது. ர்களாக இருந்திருக்கிறார்கள்.
а):
லைச்சாரலில் பயிரிட்டார். அழைத்தனர். லத்தில் மாறி
Ff6) FIT” cha h சோம்பலை ார். இன்றும் T” Zen L535 குடிக்கும் நக்கிறார்கள். தும் பழக்க லயை இவரே னார்.
Iல் உறுதிப்
ங்கள் இருப்பதாக இக்காலச் ப்பிடுகிறார்கள். 1904 -1907 The travels of Laot's 6Tailso காப்புக் கலையைப் பற்றியும் குக்கு முதன்முதலில் தெரியப்

Page 175
மேற்கே அறிவ கிழக்
போதிதர்மர் அவர்க பிறந்து வாழ்ந்தவர். ஞ இந்தியாவில். சகல இந்தியாவிலே கற்று மிகப்பெரிய ஞானியானது தன்னை முழுமையாக ெ சீனாவில். தன் அ கூறியது, தன் LD ծ: அர்ப்பணித்தது எல்லாம் ஞானப் போதனைகளைக் வலிமையைக் கடந்து, ம மருத்துவம், தத்துவம், தியானம், தற்காப்புக்கலை அறிவியல், இவைகள் கடந்து உலகில் உயர்ந் ஒருவர் போதிதர்மர்த சோக்கிரட்டிசை மேற்கோள் காட்டப்படு விட அறிவியலில் விஞ்சி போதிதர்மர் காணப்ப கிழக்கு போதிதர்ம கொள்ளவே இல்லை. ே செல்லும் பொறுப்பு இ உண்டு.

ந்தியாயம் 19
யலுக்கு சோக்கிரட்டீஸ் க போதிதர்மர்
ள் இந்தியாவில் நானமடைந்தது கலைகளையும் க்கொண்டவர். து இந்தியாவில். வளிப்படுத்தியது னுபவங்களைக் 5. ΠΓ சக்தியை சீனாவில்தான். கடந்து உடல் னதைக் கடந்து, ஆரோக்கியம், ), ஞான நிலை, அனைத்தையும் து நின்ற ஒரே ான். மேற்கில் அறிவியலுக்கு கிறார். அவரை பவராக கிழக்கே டார். ஆனால் ரைக் கண்டு ாதிதர்மரை உலகம் முழுக்க எடுத்துச் தியாவுக்கும் சீனாவுக்கும் கூட்டாக

Page 176
எஸ். குரு
வாழ்க்கையின் புரியாத புதி போதிதர்மரிடம் இருந்தது. அவரது தூய்மையான சொ வந்தவையாகும். ஆயிரக்கணக் சூழ்ந்தனர். போதிதர்மரின் செய்தனரே தவிர அதன் விட்டுவிட்டனர். அவர்களே ( நூலாக்கினர். மகான்களும் ஞ சீடர்களும் சீடர்களின் சீடர்க எழுதியுள்ளார்கள். அதனால் தடுமாற்றங்களும் நூல்களில் தங்கள் விளக்கங்களுக்கு ஏற்ப கூறியதால் எவ்வளவு கலப்பட இருந்தனவோ தெரியாது. பெயர்க்கப்பட்டு வெளிவரு மொழிபெயர்ப்பில் ஏற்படுகிற நோபல் பரிசு பெற்ற கீதாஞ்சலி ஏற்கெனவே பிறிதொரு அ யுள்ளேன்.
கெளதம புத்தரின் போதன எழுதப்பட்டன. அப்பொழுது ஏற்பட்டது. புத்தர் இறந்த பின் முப்பத்துமூன்று (33) பாட முரண்பாடுகள் நிலவின. புத்த இவ்வாறு கூறவில்லை. இதை அவர் தெரிவிக்கவில்லை, இப்பு அதன் பொருள் இல்லை, இந்: இந்த அர்த்தத்தில் கூறவில்லை ஒன்றுக்கொன்று வித்தியாசமான ஒன்றுக்கொன்று முரண்பட்டுக்ே பிறிதொரு அத்தியாயத்தில் கூறி பேசாதவர் புத்தர் மனதின் ! LD60TLDsbD (No-mind, absence of மனதைக் கடந்து அப்பால் கெளதமபத்தரோ, போதித்தர்ம கடந்த அப்பால் நிலை தெ

UIg5th 1159
ரைத் திறப்பதற்குத் திறவுகோல் இவர் அருளிய அனைத்தும் ந்த அனுபவத்தில் இருந்து கான புத்த துறவிகள் அவரைச் போதனைகளை மனனம் உள் அர்த்தங்களை தவற போதிதர்மரின் போதனைகளை ானிகளதும் போதனைகளைச் 5ளும்தான் குரு கூறியதாக தான் பல குழப்பங்களும் உள்ளன. ஒவ்வொருவரும் செவிவழியாகக் கேட்டதைக் மில்லாமலும் தூய்மையாகவும் இந்த நூல்கள் மொழி ம்போது அடுத்த சிக்கல் து. இரவீந்திரநாத்தாகூரின் க்கு என்ன நடந்தது என்பதை த்தியாயத்தில் சுட்டிக்காட்டி
னகள் அவர் இறந்த பின்பே சீடர்களுக்கிடையில் குழப்பம் பு பெளத்தமதத்தை விளக்கும் டசாலைகளுக்கு இடையில் ர் இவ்வாறு கூறினார், அவர் த்தான் தெரிவித்தார், இதை படித்தான் பொருள், இப்படி த அர்த்தத்தில்தான் கூறினார், என 33 பாடசாலைகளும் ா வியாக்கியானம் கொடுத்து கொண்டன என ஏற்கெனவே யுள்ளேன். மனதின் ஊடாகப் ஊடாகப் பாராதவர் புத்தர்.
mind) நிலையின் ஊடாகவே சென்ற நிலையிலிருந்துதான் ரோ போதித்தார்கள். மனம் ளிவானது. "மனம் என்றும்

Page 177
16Oa போதிதர்மர் பற்றி
குழப்பமானது. இந்த 33 அப்பால் உள்ள நிலையில் ஊடாகவே பர்த்தார்கள். அதனால்தான் அந்தத் தடுப
உலகத்தில் தோன்றிய மிகப்பெரிய ஞானி ே என்பதில் சந்தேகமில்லை. சீடர்களாக இருக்கக்கூடி மிகப் பேறு பெற்றவர்கள்.
ஹை-கோவை (Huik பிரதம சீடராகப் G3 நியமிக்கும்போது தனது போதனை என்ன என்று (
ஹை-கோ எவ்விதப் சொல்லாமல் அவரது விழுந்து அழத்தொடங்கிவிட
போதிதர்மர் அவர்கள் கைத்தாங்கலாகத் தூக்கி நி சொன்ன பதிலை நான் ஏ எனக்குப் பதிலைத் தந்து கொண்டாய். நான் உன் மெளனம் எனக்குப் புரிகி எனக்குப் பதில் அளித்துவ சீனாவை விட்டுப் போ படுத்துவாய்” என்றார்.
தோத்திரங்கள் இன உபந்நியாசம் செய்வதனா உணவு ஆகாரம் உட்ெ அபிசேகம் செய்வதால், கணக்கான முறைகளை? ஞானத்தையோ விழிப்பு உங்கள் இருப்பை (Being) மூலம் ஞானம் (Enlightenme கூறினார். இதையே அரச

ப அற்புதமான விஷயங்கள்
பாடசாலைகளும் "மனம் கடந்து இல்லாமல் அவர்கள் மனதின்’ அவர்கள் ஞானமடையாதவர்கள். ாற்றம்.
ஞானிகளில் பாதிதர்மர்
அவருக்கு யவர்களே
O) தனது பாதிதர்மர் முக்கிய
கேட்டார்?
பதிலும் காலடியில் ட்டார். 察
N.
அவரைக்
ற்க வைத்தார். "நீ மெளனமாகச் ற்றுக்கொண்டேன். உன் கண்ணிர் விட்டது. நீ என்னைப் புரிந்து னைப் புரிந்துகொண்டேன். உன் றது. உன் மெளனத்தின் மூலம் ட்டாய். நீ என் ஆன்மா. நான்
னபின்பு என்னை நீ பிரதிநிதிப்
சப்பதால், புனித நூல்களை ல், ஆலயங்கள் நிர்மாணிப்பதால், காள்ளாமல் இருப்பதால், பூசை தானம் வழங்குவதால், நூற்றுக் மனனம் செய்து பின்பற்றுவதால், ணர்வையோ அடைய முடியாது. Öiušoog5 (self nature) sigilolgoir nt) அடையலாம் என்று போதிதர்மர் வூ (Wu) வுக்கும் அரசன் வெய்

Page 178
στου. ΘδO
("Wei)க்கும் எடுத்துரைத்தார். : (Buddha) அறியுங்கள் என்றார்.
இந்தியா உலகுக்குக் ெ பெரிய கொடை ‘தியானம்? ஆகும். பாடசாலைகளில் "தி பாடமாக்கப்பட வேண்டும். பழக்கப்பட வேண்டும். தியான வளர்ச்சிக்கு மிக முக்கியம்.
போதிதர்மரின் முக்கிய ஒவ்வொருவரும் தங்கள் சு வேண்டும் என்பதே. ‘சுயப (undivided). சுயம் என்பது ஆ ஆன்மிகமானதுமல்ல, ஆன்மிக வெறுப்பு அற்றது, பாவபுண்ணி தெரியாதது, நரகலோகம் மேல் தெரியாதது, வேற்றுமை ப உணராதது என விளங்கப்படுத் முயற்சி அற்ற முயற்சி ஊடாக
போதிதர்மர் தனித்துவமா துறைகளில் ஞானம் நிறைந் இருந்ததில்லை. இவருக்கு இனிமேலும் இருக்க முடியாது. உயரத்தில் நகர்கிறார். இவரது ே நடைமுறைகள், தியானம், சீட எடுத்தாலும் எல்லாம் தனித்து முறைகள் அனைத்தும் நேரடிய
8- Seeking nothing and pi வாழுங்கள், தர்மம் என்றால் குளிர்மை, நெருப்பின் தர்ம அவனது "இயற்கைத்தன்மை” ( GT6öp/T6v 6T6ör607? "No-selfness" தான் இல்லை என்ற நிலை. உங்களை உங்களிடமிருந்து இதுதான் போதிதர்மரின் முக்
 

பாதம் 1161.
உங்களுக்குள் இருக்கும் புத்தரை
ாடுத்த மிகப் (Meditation) யானம் ஒரு *தியானம்? ம் மனித மன
போதனையும் வழிகாட்டலும் பத்தை (self nature) அறிய ) பிரிக்கப்பட முடியாதது ணுமல்ல, பெண்ணுமல்ல, அது விரோதமானதுமல்ல, விருப்பு யம் அறியாதது, நன்மை தீமை 0 உலகம் தெரியாதது, மதம்’ ாராதது, துன்பம் மகிழ்ச்சி 5/5DTri. Jill 13605 (self nature) அறியவேண்டும் என்கிறார்.
5016.jf. இவரைப்போல் U 6VD த ஒருவர் இவருக்கு முதல் ப் பின்பும் இருந்ததில்லை. இவர் எட்டித் தொடமுடியாத வாழ்வு, போதனை, செயல்கள், ர்களைத் தேர்ந்த விதம் எதை வமானவை. இவரது அணுகு
60606).
acticing Dharma 5il D55Il 65T
என்ன? தண்ணிரின் தர்மம் ம் 'சூடு. மனிதனின் தர்மம் ef nature). இயற்கைத்தன்மை
- நான் இல்லை’ என்றதில் தேடல் எனும்போது நீங்கள் îGvji (g56möri 35 Git Non-seeking. ய போதனை. உங்களுக்குள்

Page 179
162a போதிதர்மர் பற்றி
செல்லுங்கள், உங்கள் தர் நீங்கள் அறிவீர்கள். உங் தன்மையையும் அறிவீர்கள் என்பது போலச் செயற்பட் you were no body).
Οι {X-
Φ
Φ
X
«Ο
Х»
«Ο
Х•
வெற்றி, தோல்வி சந்ே கனவுகள் போல வந் தந்திரங்கள். எண்ண வேண்டும். சுயத்ை துன்பத்திலும் அடிப இயல்பாகவும்,
தொடர்வார்கள்.
All phenomena are emp சம்பவிக்கும் எதுவ காலியானவையே.
இயற்கை தூய்மைய தோற்றம் பொய்யாகிற பரிவு, கடமை, கருட natures are pure, by ti Defilement and attach
Whatever you are pra எதுவும் ஒன்றுமே இ
To seek is to Suffer,
துன்பத்தைத் தரவல்ல பேரான்ந்தமாகும்.
You are unaware that Won't look for a bud ஞானத்துக்கு உரியது. நீயே புத்தன் என் வெளியில் புத்தரைத்
புத்தர் புத்தர்களை ட ஒரு புத்தரை வணங்

அற்புதமான விஷயங்கள்
மம் (Dharma) என்ன என்பதை 356ít (Self Nature) (2) uusÖ60) 355 r. நீங்கள் எதுவுமே “இல்லை” Bd;GO)5(TGirafis, Git. (Then act as if
தாசம், துக்கம் இவைகள் எல்லாம் து போகும். இவைகள் மனதின் ங்களை நீங்கள் கண்காணிக்க த அறியுங்கள். மகிழ்ச்சியிலும் ட்டுப்போகாமல் இருப்பவர்கள் யற்கையாகவும் பாதையைத்
ty. வாழ்வில் உங்களுக்கு வெளியே ாயினும் எல்லாம் வெற்றுக்
ானது, இந்த உண்மையினால் து. மாசு, கறை, அசுத்தம், பிரிவு, மம் என்று எதுவும் இல்லை. AII his truth all appearances are empty. ment, subject and object don't exist.
cticing is nothing. 15iisait Gafujuylb DG60) Gol).
to seek nothing is bliss. G5L6) ஏ. எதையும் தேடாமல் இருப்பதே
Our Own mind is the Buddha. You a Outside your mind. D 65T LD607 G5 வெளியே ஞானத்தைத் தேடாதே. தை நீ அறியவில்லை. உனக்கு தேடாதே.
ாதுகாப்பது இல்லை. புத்தர் மூலம் ாதீர்கள். ஒவ்வொருவருக்குள்ளும்

Page 180
எஸ். கு
புத்தர் இருக்கிறார். G புத்தரை வணங்கத் தே Buddhas. Don't use a (தன்னை வழிபடாதீர் போதனையில் வலியு கொண்டு பாராதீர்கள் மாட்டார்கள், விதி மாட்டார்கள், எதையும் மாட்டார்கள், நல்ல செ செய்ய மாட்டார்கள் கோட்பாடுகள், முன் மாட்டார்கள். விழிப்பு
Your nature is the Buddh who is free, free of plat your nature and run arO else you will never finc தன்மையே புத்த தன் இயற்கையானவர், இலகு அப்பாற்பட்டவர். ( தேடாதீர்கள் உங்களுக் இயற்கைத் தன்மையை தன்மையை உணராவி
தேடினாலும் கண்டுபிடிச்
Even if you have mou servants as there are gi you can see them when about when your eyes a take With himself / herse own nature. 5.ii.5dig56.u. கரையின் மணல் போல இருந்தாலும் கூட க மட்டுமே அவைகளை மூடியிருக்கும்போது பார் செல்வமோ, புகழோ விழிப்புணர்வைத் தவிர.

நருபாதம் 168
ானவே ஒரு புத்தர் இன்னொரு O)6) iugia.06). “Buddhas don't save Buddha to worship a Buddha’ கள்’ என போதிதர்மர் தனது றுத்துகிறார். “புத்தரை மனது ர். புத்தர் சூத்திரங்கள் ஒத முறைகளை கைக்கொள்ள ம் கடைப்பிடிக்கவோ, மீறவோ யல், தீய செயல் என்று எதுவும் , கோட்பாடுகள் இல்லை. றகள் எதையும் பின்பற்ற ணர்வைப் பின்பற்றுவார்கள்).
na and the Buddha is the person ns, free of cares. If you don't see und all day looking some where d enlightenment. g) Gör gulu6v Lj rமையாகும். புத்தர் என்பவர் வானவர், செயற்கைத் தன்மைக்கு ஞானத்தை வேறு எங்கும் குள் கண்டுபிடியுங்கள். உங்கள் உணருங்கள். உங்கள் இயற்கைத் Iட்டால் ஞானத்தை எங்குத் iՅ5 (ԼՔւգ-Ամո3յl.
ntains of jewels, and as many ains of sand along the Ganges, your eyes are open only. What e closed? All that a person can f is his/her awareness of his/her ல் இருந்தாலும் கூட, கங்கைக் எண்ணிலடங்கா பணியாட்கள் ண் விழித்து இருக்கும்போது ப் பார்க்க முடியும். கண்கள் க்க முடியுமா? சாம்ராஜ்யமோ, எதுவும் சேர்ந்து வராது

Page 181
164a போதிதர்மர் பற்றிய
«Ο
Ҳ»
(போதிதர்மர் ‘புத்தர்? எ குறிப்பிடவில்லை. விழி (Enlightenment), Ushgjo நிலைகளைத்தான் ‘புத்தர் என்பது யாருடைய பெய அந்த நிலையை அடை படுகின்றனர்.
A Buddha does not O விதிமுறைகளையும் பின்ட கணம் வாழ்பவர், வியூ வர்கள், ஏடுகளின் கு தயாரிக்கப் பட்ட விதி மாட்டார்கள். அவர்க ufløól(5ög (Emptiness) 5 விதிமுறைகள் இல்லா விதிமுறைகளாகும்.

அற்புதமான விஷயங்கள்
னும்போது கெளதம புத்தரைக் ly looolfo (awareness) (O5IIoortb எ விடுதலை (Liberation), இந்த ? எனக் குறிப்பிடுகிறார். ‘புத்தர்? ரும் இல்லை. இது ஒரு நிலை.)
ந்தவர்கள் புத்தர் என அழைக்கப்
bserve precepts. Lég5f† 6Tßg5 பற்றுவதில்லை. அவர் கணத்துக்கு Nப்புணர்வின் வழியில் செல்ப றிப்பின்படியோ, ஏற்கெனவே முறைகளின்படியோ செயற்பட ளுக்குள் இருக்கும் வெறுமை ணத்துக்குக் கணம் வாழ்வார்கள். து இருப்பதே அவர்களின்

Page 182
அத்திய
சீடர்களின் சில
போதிதர்மரின்
The Oneness of Mortal ar
பாவியும், துறவி குற்ற உணர்வால் மற்றவர்களைவிட தேவையற்ற அகங்க
இயல்புத் தன்மையுடன் இ ஆனால் நீங்கள் இல்லை. 15606). Remain unmoved €
சொற்களின் தளையிலிரு கொள்ளுதலே விடுதலை Words is liberation)
உலகிலிருந்து ஒதுங்கு கணவனையோ, குடும் கடமைகலுையோ கைவிட விடுதலை அல்ல. சொற் யாகிக் கொள்ளுதலே சொற்களை மனதிலிருந் கொள்ளுதலே விடுதலை.
மனத்துக்கு அப்பால்
அறிந்தவர்களால்தான் மர என்ன என்பது தெரியும் ஒரே அனுபவத்தைக் கெ
 

ாயம் 20
கேள்விகளுக்குப் சில பதில்கள்
Id Sage
பும் ஒன்றே. பாவி தேவையற்ற
பீடிக்கப்படுகிறார். துறவி தான் பரிசுத்தமானவர் என்ற
ாரத்தால் பீடிக்கப்படுகிறார்.
இருங்கள். நீங்கள் இருக்கிறீர்கள், நீங்கள் இல்லாதது போன்ற ven by scriptures.
ந்து ஒருவர் தன்னை நீக்கிக் ITGylb. (Freeing oneself from
தலோ, மனைவியையோ, உறவுகளையோ வீட்டுக் டு தூர விலகி ஒதுங்குவதோ 5ளிலிருந்து ஒருவர் விடுதலை விடுதலையாகும். அதாவது து நீக்கி வெறுமையாக்கிக்
உள்ள நிலை என்னவென்று னதுக்கு அப்பால் உள்ள நிலை இந்த இரண்டு நிலைகளும்
ண்டவை.

Page 183
166a போதிதர்மர் பற்றி
* வாழ்க்கை (Life), ! தொடர்புடையது.
* திருமணப் பந்தத்தில் உ
எனச் சீடர் கேட்டார். என்றுதான் கூறுகின்றே இருப்பை (Being) நீ எல்லா விசயங்களும் மு
* ஒருவரது அடிப்பை
தூய்மையானது. அது தன்மையை (self na என்கிறார்.
«Ο
Ҳ»
"நீங்கள் இல்லாதபோ படிப்படியாக ஏற்படு ஏற்படுகிறது. (Enlighten gradual).
«Ο
தியானம் உங்களுக்குள் (Meditation opens inside
V அறியாமையின் வேர் ignorance? gp5uT60). does the ignorance ( அவர்களைக் கேட்டா
கெளதம புத்தர் கூறு இல்லை. ஆனால் முடிவு ! உண்டு, னால் ‘முடி? கொண்டேபோகும். LSTe உண்டு ஆனால் முடிவு ( ஆரம்பம் அறியமுடியா முடிவையும் அறிய தெரியாததாகவும் இந்த காலம்காலமாக இருக்குப் (Existence) (updi Su JLDITGOT306) விளக்கினார் என ஏடுகள்

அற்புதமான விஷயங்கள்
பிழிப்புணர்வுடன் (awareness)
ள்ளவர் ஞானமடைய முடியுமா? “உங்கள் இயற்கையை அறியுங்கள் ண், உங்கள் இயற்கையை (Nature), பகள் அறிந்துகொண்டால் மற்ற }க்கியத்துவத்தை இழந்துவிடும்.
- goblil (intrinsic being) மாசுபடாதது. உங்கள் இயல்புத் ure) அறிதலே “புத்தர் நிலை
து ஞானம் நிகழ்கிறது. ஞானம் வெதில்லை. ஞானம் திடீரென ment is always Sudden, it is never
ர், "மனம் உங்களுக்கு வெளியே. , Mind opens outside).
எது? What iS the rOOt Of ம எதிலிருந்து வருகிறது? Where come from? GT6öīgo GunT635 riu Drif
சீடர்.
கிறார்: அறியாமைக்கு ஆரம்பம் டண்டு. விழிப்புணர்வுக்கு ஆரம்பம் இல்லை. அது தொடர்ந்து 60(aljó(5 (Consciousness) gulbulb }ல்லை என்றார். அறியாமை"யின் தது போல் “விழிப்புணர்வின்’ முடியாது. இந்த ஆரம்பம்
முடிவு புதிராகவும் (Mystery) இந்த இரண்டும் இருத்தலில்’
என்ற புத்தரின் கூற்றைப் பதிலாக கூறுகின்றன.

Page 184
στου. (ε
அறியாமை மனம் (ign (Delusion), கோபத்தில், ! வேர்விட்டு முளைக்கிறது எ எங்கிருந்து வருகிறது? (W கோபம், பேராசை எங்கிருந்: and greed Come from?) g).5 என்றுதான் கூறப்போகின்றி கேள்வி “அறியாமை” எங் egyólaíliaól (ignorant) egy6)J6ófiai) அமைகிறது. மனிதன் அறிய கோபம், பேராசை, மாயை எங்கிருந்து வருகிறதென்றா? என்றே ஆயிரக்கணக்கான இந்தப் பதில்கள் மூலம் முட்டாளாக்கிக்கொண்டேயிரு இருப்பது போலவே அறி புத்தரின் பதிலைப் போதி கூறுகின்றன.
* சொற்களிலோ, எழுத்துக் கொள்ளாது உங்கள் இ அதிலிருந்து எழுங்கள்.
A special transmission out Words or letters, a direct that you might see in to
« guitair' (Dyan/chanize
நேரடியாக ஊடுருவி போதனைகளிலோ இல்ல
1Dyan' (Zen/Chan) has be and has nothing at all doctrines.
Ҳ»
இது குருவிலிருந்து செல்கிறது.
It powers directly from m mind'

ருபாதம் 167ےر
)rant mind) 6 TGöTL ug LDTGOuLuulav 'Anger) GLUT60) fuSci) (greed) ன்று கூறிக்கொள்ளலாம். மாயை nere does delusion come from?) 51 6u(55pg|? (Where do anger ற்குப் பதில் அறியாமையிலிருந்து ர்கள். எனவே மீண்டும் அதே கிருந்து வந்தது? மனிதன் ஒரு
இருந்து வந்தது என்றே பதில் பாமையானவனாக இருப்பதால்
உள்ளவனாகிறான். அறியாமை ல் கோபம், மாயை, பேராசை வருடங்களாகக் கூறப்படுகிறது. மனிதன் தன்னைத்தானே நக்கிறான், இயற்கையில் இருட்டு யாமையும் இருக்கிறது என்ற தர்மர் விளக்கியதாக ஏடுகள்
க்களிலோ, பேச்சிலோ அக்கறை யல்புத் தன்மையை கண்டறிந்து
Side the scriptures, Not based on pointing to the heart of reality so your Own nature and Wake up.
n) புத்தரிலிருந்து சீடர்களுக்கு யது. இது ஏடுகளிலோ, ாத ஒரு செயல்முறை.
en transmitted directly by Buddha to do with the scriptures and
மாணவனுக்கு மனவழியாகச்
asters' to students from "mind to

Page 185
168a போதிதர்மர் பற்றிய
«Ο
Х•
«Ο
Ҳ»
சென்’ (தியான்) என்பது பாவனை செய்யவில்லை.
Zen (dyan) is Life, it doe
உண்மை என்பது ஒரு கொண்டு நின்றால் உண்
Truth is not a concept, if reality.
ஒருவரது இயல்புத் தன் இயல்புத் தன்மையூடாக
Seeing into one's own na
எது, எது, எப்படி இ அதன்படி அப்படியே ப
Seeing things as they a
நடக்கும்போது நடக்கிற (Mindfulness), Đ_6örg09)IL தன்னுணர்வுடன் உட்ெ தன் உணர்வுடன் ெ ஓடுவது, சாப்பிடுவது, இருந்தாலும் அங்கே தன் mindfulness) gD Jäu<9560)6IT aware of What you are செயல்கள் எல்லாம் த சென்’ செயல்களில் அக் (In Zen everything Contemplating) 56ir goal செயற்பாட்டின் அடிநாத be aware that you are be aware that you are { actions, Words, and thO mindfulneSS. Mindfuln
- practice, Buddhist practic

அற்புதமான விஷயங்கள்
வாழ்க்கை, இது பிறிதொன்றை
S not imitate
கருத்தல்ல, கருத்தில் தொங்கிக் மையைத் தவறவிடுவோம்.
we cling to our concepts we lose
மையைக் கண்டறியுங்கள். அந்த ப் பாருங்கள்.
ature.
இருக்கின்றனவோ அவைகளை ாருங்கள்.
re.
ரீர்கள் என்ற தன் உணர்வுடன் ம்போது உண்ணுகிறீர்கள் என்ற காள்ளுங்கள். எது செய்தாலும் Fய்யுங்கள், நீங்கள் நடப்பது, இருப்பது, எழுவது எதுவாக it d600Trial gaiGoa). (absence of அறியாமலே செய்கிறீர்கள் (not doing) எண்ணங்கள், சொற்கள், ன் உணர்வுடனே இருக்கட்டும். கறை கொள்கிறது பேச்சில் அல்ல s in the doing, not in the ார்வைப் பற்றியதே சென் (Zen) LDITGylb. When you walk, you must Malking, when you eat, you must ating, you must be aware of your ights, you must live your life in SS is at the base of all Zen
Y AV

Page 186
στου. Θδ(
முக்கிய குறிப்பு : இங்குக் எல்லாம் நான் வாசித்து எடுக்கப்பட்டவையே. இ6ை எழுதப்பட்டவையே. இவைய மொழிபெயர்ப்புக்களே.
 

5UIrg5th 169
காணப்படும் கேள்வி, பதில்கள்
அறிந்த நூல்களிலிருந்து என் விளக்கத்திற்கு ஏற்ப னைத்தும் மொழிபெயர்ப்பின்
- ஆசிரியர்
雛
i parie & tis dixxa unxiarsiadi kx w is tickix xiini. ðixxx xx kxr mxixsxd x x xxxx xx xxxii x uxkrxikini w x xxix wikili tei is six ~ë&xixixixixirsiais

Page 187
உயிர்த்தெழு இமயத்தின் மழயி
சீடர்கள் தேர்வு முறை:
மக்கள் போதி உபதேசங்களைக் கேட் அவரது இடத்துக்குச் செ ஆனால் போதிதர்மர் ப பார்க்காது சுவரைப் பேசிக்கொண்டிருப்பார். அவர் பின்னால் உட்கா அவர் போதனைகளை பார்கள். அப்போது மக்களைத் திரும்பிப் பr டார். மக்கள் அவருக்கு களைக் கொடுப்பதால் ே பார்ப்பதைத் தவிர்த்து பார்த்துக்கொண்டேயிருப் மாத்திரமல்ல மக்களின் தனங்களைப் பார்க்கல் பார்த்துப் பேசவும் வி பேசிக்கொண்டிருப்பதா பேசத் தேவையில்லாத
"கேள்வி கேட்பவர். உட்கார்ந்திருந்தே கேள் பார்த்தே கூறுவேன். ே

தியாயம் 21
2ந்தார் போதிதர்மர்! ல் தன்னை ஒப்படைத்தார்!
நிதர்மரது பதற்காக ல்வார்கள் )க்களைப் பார்த்தே LD diggit ர்ந்திருந்து க் கேட் அவர் "ர்க்கமாட் பாதிப்புக் நரடியாகப் ஈவைைரப் பார். அது முட்டாள் భ ம் அதே நேரத்தில் எவரையும் ரும்பவில்லை. சுவரைப் பார்த்துப் ) அங்குள்ள எவரையும் பார்த்துப் சூழலை உருவாக்கிக் கொண்டார்.
ள் என் முதுகுக்குப் பின்புறமாகவே கள் கேட்கலாம். பதில்கள் சுவரைப் ள்வி கேட்பவரை நேரடியாக நான்

Page 188
எஸ். கு
பார்க்க விரும் பதில்கள் சொ அவர்கள் சீட
உள்ளார்கள் மட்டுமே ந என்றார்.
பிரதம சீடர் தெரிவு விஷமான
போதிதர்மர் சீனாை விட்டு வெளியேறத் தீர்மானித் போது தனது நாலு சீட களையும் அழைத்தார். "எ போதனைகளில் நீங்க விளங்கிக்கொண்டதின் சார சத்தை இரத்தினச் சுருக்கமாக கூறுங்கள் என்றார். நாை நான் இமயமலையை நோக்கி பயணமாகப் போகிறேன். அத
எனக்கு அடுத்தவராக நியமிக்க
டா-பியூ (Daofu): "உங்கள் ே அதற்கப்பாடு தாண்டிப் ட தானாக இt கிறது. உங்க இதுவே” என் போதிதர்மர் : "நீ விளங்கி ஆனால் G இடமிருக்கிற உடல் சரு என்றார். LIT-ų (Daoyu) : “[5ITGöT g) GvG
இருக்கிறேன். அடிப்படைய
 

நபாதம் 1 1 17ܐ
பவில்லை. என் கேள்விகளுக்குப் ல்பவர்களது பதில்களை வைத்து iகளாக மாறத் தழார் நிலையில் என எனக்குத் தோன்றினால் ான் திரும்பிப் பார்ப்பேன்’
5?
5)
ற்கு முதல் உங்களில் ஒருவரை ப் போகின்றேன்” என்றார்.
பாதனை மனதைத் தாண்டி i) செல்கிறது. மனதைத் ரவெளியாகும்போது எல்லாம் பல்பாகச் சம்பவிக்க ஆரம்பிக் ள் போதனையின் அடிப்படை றார்.
க்கொண்டது பிழை இல்லை விளங்கிக்கொள்ள இன்னும் து. நான் இறந்தபின் என் த்தை skin நீ பெறுவாய்”
லை என்பதை நான் அறிதல், ஆனால் இல்லை, என்பதையே ாக் கொள்கிறேன் என்றார்.

Page 189
172a போதிதர்மர் பற்
போதிதர்மர் : இது "ஓ
(Bone)
தாரணி (Dharan): “எதுவுப் (பெண்துறவி) சொல்லு
போதிதர்மர் “நல்லது யிருக்கி பெறுவ
6FGOT “GoF6öT” (Chan/ பிக்குணி போதிதர்மரது ட என சென் ஏடுகள் தெர் ஒரே ஆளாக இருக்கலி மயோரின் (Myoren) ஆகள்
ஹியூக்
(Hui-kelHuiko) : GIg/6|Lb காலடிய மெளனி
போதிதர்மர் : “சொற்.
எனது பெறுவ நியமிக்
உயிர்த்தெழுந்தார் (Res
சீடர் தெரிவின்பின்
உட்கொண்டார். போதி Poison) தன்மையாக இ போன்ற ஒரு நிலையை தன்னுணர்வு, பிரக்ஞை
அவரது உடல் சார்ந்தே புத்தருக்கும் நடந்தது. கை வழங்கப்பட்ட காள இருந்ததால் புத்தரது உ அதில் இருந்து மீண்டு

லிய அற்புதமான விஷயங்கள்
ரளவு பறவாயில்லை என் எலும்பை
பெறுவாய்”
சொல்லமுடியாது, சொல்வதற்கு க்கு வலிமையில்லை” என்றார்.
இதுபோன்று ஏற்கெனவே கூறி ராய் எனது தசையை (Flesh) நீ "ய்" என்றார்.
en) மதத்தின் முதலாவது பெண் பிரதான சீஷையான சோங்" (Zongh) விக்கின்றன. தாரணியும் "சோங்கும் ாம் இவரது பிக்குணிப் பெயர் பும் இருக்கலாம்.
சொல்லாது போதிதர்மரின் பில் வீழ்ந்து தேம்பித்தேம்பி அழுது iu μποΟΤπri. கள் பாவியாது கூறிவிட்டாய். நீ 616JubL4 LDé603F6)u (Marrow) ாய். உன்னை எனக்கு அடுத்தவராக கிறேன்” என்றார்.
Irrected):
அன்று இரவு வழமைபோல் உணவு தர்மர் உண்ட உணவு விஷத் (food ருந்ததால் அவரது உடல் இறந்தது அடைந்தது, ஆனால் அது அவரது Consciousness) sFITrifögögöl egyGbGl), egygöl i ஆகும். இதேபோல்தான் கெளதம னடா (Cunda) என்பவரால் புத்தருக்கு ன் உணவு விஷத்தன்மையாக -ல் இதே அனுபவத்தை அடைந்தது. வந்து பின்புதான் தன்னுணர்வுடன்

Page 190
எஸ். குரு
புத்தர் தன் உடலை விட்டுப் விட்டதாக எண்ணி அவரை , புதைகுழியில் இடும்போது இவர் இருந்தார். போதிதர்மருக்கு அட்டமா சித்தியும், அட்டாங்க மண் சரிவுகளில் அகப்பட்டு மண்டூபம் தவளை போல் ம மண்ணைத் துளைத்துக் கொண் தெரிந்தவர். அவர் சீனா செல் அகப்பட்டு ஏற்கெனவே இ பெற்றிருந்தார். அவரது மய உயிர்த்தெழுந்தது போல் (Resurr வெளியே வந்தார். தான் அ அடையாளமாக அங்கு தனது சென்றார். இயேசு கிறிஸ்து உயிர்த்தெழல் நிகழ்ந்ததால் முக்கியத்துவம் அடையவில்லை.
உலகில் பல மகான்கள் ம அந்த அனுபவத்தைப் பெற்று துள்ளனர். இதைப்பற்றிய ட பற்றிய ஆச்சரியமான தகவல்கள் பிட்டுள்ளேன்.
மூன்று வருடத்தின் பின், தாண்டும்போது சீன எல்லையில் Wei) யின் அரச எல்லை அதிக Songyun இவரைக் கண்டார்.
அதிகாரி நீங்கள் எங்கே
போதிதர்மர் : நான் இட சென்று என் உ போகின்றேன்.
அதிகாரி நீங்கள் கே
பாதணியைக்
கொண்டு டே அதன் அர்த்தம்

ாதம் 173ܐ
பிரிந்தார். போதிதர்மர் இறந்து அடக்கம் செய்துவிட்டார்கள். LDu 155 Baoavu76) (Comatose) உயிர்த்தெழும் கலையும் யோகமும் நன்கு தெரியும். மண்ணினால் மூடப்பட்டால் ண்ணுக்கு அடியில் இருந்து டு வெளியில் வரும் கலையும் லும்போது மண் சரிவுகளில் ந்த அனுபவத்தை அவர் க்கநிலை தெளிந்து அவர் ected) புதை குழிக்குள்ளிருந்து 1ங்கிருந்து வெளியேறியதன் ஒரு பாதணியை விட்டுச் நாதருக்குப் பின்பே இந்த இந்த நிகழ்வு உலகில்
ரணத்துக்கு அப்பால் சென்று வ மீண்டும் உயிர்த்தெழுந் பல விவரங்கள் 'மறுபிறப்பு என்ற எனது நூலில் குறிப்
அவர் சீன எல்லையைத் ) GLuTUgi "Gaulli' (Northern rரி சோங்யுன்
செல்கிறீர்கள்?
யமலைக்குச் டலை நீக்கப்
லில் ஒரு
கொழுவிக்
ாகின்றீர்கள்,
என்ன?

Page 191
174a போதிதர்மர் பற்
போதிதர்மர் : உனக்கு
என்னைக் மாட்டிக்ே
இந்த அதிகாரி பே சென்று தான் கண்ட நி பேரரசர் "வெய்யுக்கும் ( மூர்க்கத்தனமானவராகவும், கண்கள் gD 60)L ULI 6)1 JJTIT கூர்மையாக உற்று நோக் அதேபோல் காணப்பட்ட வதந்தி பரப்புவதாக அர அடைத்துவிட்டார்.
புதைகுழியில் உடல் காண
சீடர்கள் உடனடியா Mountain) dairat gyalug, அங்கு போதிதர்மரின் உட பாதணி மாத்திரம் இருந் பாதணிக்குப் பதில் விரை கூறியிருந்தார். அவருக்கு அரசர் அவரை விடுத6ை வில்லங்கத்திலிருந்து அ விட்டது.
போதிதர்மர் அணிந்தி வடிவமைத்து உலகம் மதத்துறவிகள் இன்றும்
சென் பெளத்தம் வீடுகளின், வியாபார 6 செருப்பை, பாதணியை இன்றும் இருக்கிறது. அ இந்த வழக்கம் போதி ஏற்பட்டு இருக்கலாப் அபிப்பிராயமாகும்

ய அற்புதமான விஷயங்கள்
விரைவில் பதில் கிடைக்கும். கண்டதாகக் கூறி வில்லங்கத்தில் காள்ளாதே.
திதர்மர் இருந்த ஆலயத்திற்குச் கழ்வைக் கூறினார். இச்செய்தியை சென்று தெரிவித்தார். போதிதர்மர் ஆக்ரோஷமானவராகவும், பயங்கரக் கவும், வலிமையானவராகவும், குபவராகவும், எப்படி இருந்தாரோ ர் எனவும் கூறினார். இவர் பொய் சர் எச்சரித்து இவரைச் சிறையில்
ாப்படவில்லை:
ாக பாமிர் மலைச்சாரலில் (Pamir
புதைகுழியைத் தோண்டினார்கள். -ல் காணப்படவில்லை, அவரது ஒரு தது. அந்த அரச அதிகாரிக்கு ஒரு வில் கிடைக்கும் என்று போதிதர்மர் அதற்கான பதில் கிடைத்துவிட்டது. ) செய்தார். அவருக்கு ஏற்பட்ட வருக்கு விடுதலையும் கிடைத்து
ருந்த அதே மாதிரி பாதணியைத்தான் முழுவதும் உள்ள சென் zen அணிகின்றனர்.
பரவியுள்ள நாடுகளில் உள்ள தாபனங்களின் வாசலில் சப்பலை, தொங்கவிடும் சம்பிரதாய வழக்கம் தைப் புனிதமாகவே கருதுகிறார்கள். தர்மரது நடைமுறையில் இருந்து என்பது இந்நூல் ஆசிரியரது

Page 192
எஸ். குரு
ஊர்ஜிதம் செய்யப்படாத இவர இறப்பைப் பற்றிய தகவல்கள்:
அ)
இ)
ஈ)
உ)
N
வட சீனாவில் 150 வய சுறுசுறுப்பாகவும் வாழ் மலைச்சாரலில் (Mount ) செய்யப்பட்டார்.
LuntLiS)ri (Pamir Mountain செய்யப்பட்டார்.
லாவூ ஆற்றங்கரையில் (La ஒன்றினுள் சீடன் ஹியூக் எனச் சீன ஆய்வாளர் ரா Daoxuan போன்றோர் குற அரசனின் வீழ்ச்சியின்ே கலவரத்தில் இவர் 8 நம்பப்படுகிறது.
இவர் தியானத்திலிருந்தடே பறந்து ஆகாயத்தில் மறைந் தெரிவிக்கின்றன.
இமயமலை நோக்கிப் போ எல்லையில் கண்டதாகவும் இறக்கப்போவதாக கூறியத
இவர் SLouLoooooö ö II j6 இருப்பார் என்பது இந்நூல் மரணத்தைத் தன் கட்டுப்ப விருப்பாற்றலில் உடலைவி பல ஞானிகள் மேற்கொ அத்தகையவரே.
ஊ) சீனாவிலிருந்து புறப்பட்டு
தீவில் (Okinawa) இறந்ததாக அங்கு போதிதர்மரை அழைக்கின்றனர்.

UIT5ub 175ܐ
துவரை ஆரோக்கியமாகவும் ந்து இறந்து ஹியோங்க்
iong) சீடர்களால் அடக்கம்
) மலைச்சாரலில் அடக்கம்
u River Beach) go airGT g5605 (Huike) அடக்கம் செய்தார் ன்லிங் (Tanin) டாவோசுவான் ப்ெபிட்டுள்ளார்கள். அன்றைய பாது ஏற்பட்ட பெரும் சிக்குண்டு மரணமானதாக
ாது அதே நிலையில் மேலே துவிட்டார் எனச் சில ஏடுகள்
வதை அரச பிரதிநிதிகள் சீன தான் இமயமலையில் போய்
ாகவும் ஒரு பதிவு உண்டு. ல்ெ தன் உடலைத் துறந்து ஆசிரியரின் அபிப்பிராயம்.
ாட்டில் வைத்திருந்து தங்கள் ட்டுப் பிரியும் அனுபவத்தைப் ண்டவர்கள். போதிதர்மரும்
ஜப்பானிலுள்ள ஒக்கினாவா
அத்தீவில் கருத்து நிலவுகிறது. 5C5LDT (Daruma) GTGörp)

Page 193
176a போதிதர்மர் பற்றி
ஜப்பானை அடைந்தே Taishi A.D. 574 - 622 போதிதர்மரைச் சந்தித்த தழுவியதாகவும் பின்பு இ பெளத்தம் அறிமுகமான போதிதர்மரைப் புத்தர் வ புத்தராக வணங்குகின்றனர். Zatori" என்கின்றனர்.
இவரது வாழ்வு எவ்வ குழப்பம் அவரது இறப்பிலு தோண்டத் தோண்ட எவ்வ விஷயங்கள் வெளிவருகி ஆச்சரியமுமான விஷயங்க வெளிவருகின்றன. எவ்வ வாழ்வின் ஆரம்பத்திலிருந்: மர்மம் அவர் வாழ்ந்து இறந் நிலவுகிறது.
குழியில் இருந்து உயி
ஒரு நிகழ்வு: மண்குழிக்குள் முகத்தைப்
கனடாத் தொலைக்
Channel) FGOT656) Sill பார்த்த என் நினைவிலுள்
வட இந்தியாவில் சித் தனது முகத்தை மண்குழி தார். அவரது கழுத்துச் மண்ணால் மூடப்பட்டு ( நடப்பட்டது போன்று யிலிருந்து மூச்சுத்திணற6 வந்தார். அவர் 12 மணி எனத் தொலைக்காட்சி எந்தவித மாற்றமும் இல்ல

ப அற்புதமான விஷயங்கள்
பாது அவரை இளவரசர் Shotoku ந்தித்ததாகவும் அந்த இளவரசர்
பின் சென் பெளத்தத்தைத் ாவரசர் மூலம் ஜப்பானில் சென் 5 Taj, Medieval Sect J, DJ Spg/. ரிசையில் வைத்து ஞானம் பெற்ற
ஜப்பானில் ஞானம் அடைதலை
5ாவு குழப்பமாக உள்ளதோ அதே ம் ஏற்படுகிறது. இவரது வாழ்வைத் ளவு அதிசயமான, ஆச்சரியமான, றதோ அதே அளவு அதிசயமும், ள் இவரது மரணம் தொடர்பாகவும் 1ளவுக்கெவ்வளவு மர்மம் இவரது து இறுதிவரை நிலவுகிறதோ அதே ந்து 1500 வருடங்களுக்குப் பின்பும்
ருடன் மீண்ட சில நிகழ்வுகள்:
தைத்து தலைகீழாக நின்ற துறவி:
5 ITL' guai T.L.C. (The Learning ந்தட்ட 20 வருடங்களுக்கு முன் ா ஓர் சம்பவம்:
தர் ஒருவர் தலைகீழாக நின்றபடி ஒன்றினுள் புதைத்து வைத்திருந் குச் சற்று மேல்மட்டம் வரை ருந்தது. அவர் குழிஒன்றில் மரம் காணப்பட்டார். அவர் அக்குழி எதுவும் இல்லாமல் வெளியே நேரம் வரை அவ்வாறு நின்றார் நிருபர் குறிப்பிட்டார். உடலில் Tமல் காணப்பட்டார்.

Page 194
எஸ். குரு
மேலும் இவர் கனடாவில் பனி வாவியில், சிறிது நேர இருந்ததையும் தொலைக்கா இவரைப்பற்றிக் கூறிக்கொண்டி இவர் ஒரு மருத்துவ டாக்ட எனக் குறிப்பிட்டார்.
ஒரு சம்பவம்:
உயிருடன் மீண்டார்:
Woman found alive in rubble factory C
பங்களா தேசத்தில் ஆடை மாடிக் கட்டடம் ஒன்று தி விழுந்ததால் இடிபாட்டில் சிக்கு மரணமானார்கள். பதினேழு 10.05.2013 அன்று 40 வயதுடை ஆரோக்கியமான நிலையில் மீட
இப்படியான அதிசயங்கள் கொண்டுதான் இருக்கின்றன. கலையோ அல்லது அட்டமா தெரியாதவர்.
ஒரு தகவல்:
எந்தச் சூழலிலும் உயிர் வாழும் மீன்
பிரிக்காவிலள்ள மட்ஸ்கி s2. லு நீரில் மாத்திரமல்ல, வறட்சியா
 

பாதம் 177ܐ
ஒருநாள் கடும்குளிரில், உருகிய ம் உடல்பூராவும் அமிழ்ந்து ட்சியில் காண்பித்தார்கள். ருந்த தொலைக்காட்சி நிருபர் ராக இருந்து துறவியானவர்
17 days after Bangladesh ollapse
தைக்கும் நிறுவனமுள்ள உயர் டீரென உடைந்து, சரிந்து, ண்டு மொத்தமாக 1100 பேர் நாட்களின் பின் அதாவது ய பெண் ஒருவர் உயிருடன் கப்பட்டார்.
உலகம் பூராவும் நடந்து இப்பெண்மணிக்கு உயிர்க்கும் சித்திக் கலையோ எதுவும்
'Luri (Mudskipper) LiSaoilaOTLb ன நிலத்திலும், குழிகளிலும்,

Page 195
178 போதிதர்மர் பற்
கற்பாறைகளிலும் வாழச் குறைந்த அளவு ஆக்சிஜ அது தன் தோலாலும் ச சூழலிலும் உயிருடன் வ
ஒரு செய்தி:
உயிர்த்தெழுதல் இவரது பொ
பாகிஸ்தானின் ஆ பகுதியில் உள்ள ஒரு கிர தோட்டத்திலும், வயலிலு ஒரு தொழிலாளியின் அ
1987-ஆம் ஆண்டு மூன்றாவது தடவைய உறவினருக்குச் சந்தேகம். இரண்டு தடவை இற பரிசோதனை செய்து மரணச் சான்றிதழ் வழ விழித்தார், சிரித்தார். தா பண்ணியது போல் இந் கூறினார். அடுத்த தட தந்திரம் செய்யமாட்டே
காஷ்மீரில் மூன்று : உறுதிப்படுத்தப்பட்ட இ உயிர்ப்பதுமான மனிதன நீங்கள் எப்படி இதைச் ெ கூறினார் **நான் என்
 
 
 

றிய அற்புதமான விஷயங்கள்
கூடியது. இந்த மீன் வாழ மிகக் ன் போதுமானது. அதுமாத்திரமல்ல வாசிக்கும் தன்மையுடையது. எந்தச் ாழக்கூடிய தன்மை கொண்டது.
ாழுதுபோக்கு: க்கிரமிப்புக்குள் உள்ள காஷ்மீர் ாமத்தைச் சேர்ந்த 135 வயதையுடைய லும், கழனியிலும் வேலை செய்யும் னுபவத்தைப் பாருங்கள்.
ஆனி மாதப் பிற்பகுதியில் இவர் ாக அந்த வயதில் இறந்தார். ஏனெனில் இதற்கு முன்பும் இப்படி ந்திருக்கிறார். மூன்று டாக்டர்கள் இறந்ததை உறுதிப்படுத்தினார்கள். ங்கினார்கள். இறந்த மனிதன் கண் ன் முன்பு இரண்டு தடவை தந்திரம் த முறையும் தந்திரம் செய்ததாகக் வை தான் நிச்சயமாக இறப்பேன் எ என நம்பிக்கையாகக் கூறினார்
டவையும் இறந்ததாக டாக்டர்களால் ந்தப் பொழுதுபோக்காக இறப்பதும் ரப் பத்திரிகையாளர்கள் சந்தித்தனர். சய்தீர்கள்? எனக் கேட்டனர். அவர்
உடம்பல்ல, நான் அதை நன்கு

Page 196
οποίο.
அறிவேன், நான் எனது இ அறிவேன், நான் இதற்கு அ நகர்ந்து உடலுக்கு அப்பால்
செயல் இழக்கிறது, நாடி
சிறிது நேரத்தில் நான் மீண் என் உடலுக்குள் பிரவேசிக் ஒடத் தொடங்குகிறது. ந இருதயம் அடிக்கத் தொட யோகி இல்லை. இவர் ஒ எந்தவித ஆன்மிகப் பயற்சிக
இவர் ஏழுவயதுச் சிறு தற்செயலாக ஒரு சூஃபி (St ஞானி இவருக்குக் கூறி6 இல்லை, அது ஒரு பொய் வாது, பொய் எதுவும் தெரி முழுமையாக நம்பினார். சூல் கூறினார் **உடம்பிலிருந்து முறைகள் இருக்கின்ற்ன. உ 2-oor 2-L-6006OU UITII, 2-60IöE வெற்றிடம் ஏற்படும். அ கொண்டே போகும். அப்டே வெளியேறிவிட்டாய். அதே நான்தான் உடல், நான்தாc நான்தான் இதயத் துடிப்பு எ அந்த இடைவெளி மறைந்து மரணம் என்பது பொய்" எ6 சிறுவன் அதைக் குழந்தை முழுமையாக நம்பினான். விவாதமாக்கவில்லை, அ கொண்டது.
ஒரு நிகழ்வு:
இறுதி நிலையைத் தன் கட்டுப்பா வைத்திருந்தார் மார்பா (Marba)
இவர் திபெத்திய நாட்டி ஒரு தந்திரா ஞானி (Tan

ருபாதம் 179ے
ருதயமல்ல நான் அதை நன்கு ப்பாற்பட்டவன். நான் மெதுவாக செல்கிறேன் அப்போது இருதயம் நிற்கிறது, சுவாசம் மறைகிறது. டும் நழுவி, போன பாதையால் கிறேன். இரத்தம் உடலுக்குள் ாடி துடிக்கத் தொடங்குகிறது, வ்குகிறது? என்றார். இவர் ஒரு ரு சாதாரண விவசாயி. இவர் ளையும் அறியாதவர்.
றுவனாக இருந்தபோது இவர் f) ஞானியைப் பார்த்தார். அந்த னார் ‘மரணம் என்று ஒன்று த் தோற்றம்.? அப்போது சூது, யாத பாலகனான இவர் அதை ஃபி ஞானி அந்தப் பாலகனுக்குக் நழுவிச் செல்வதற்கு வழி டம்புக்குள் உள்நோக்கிச் சென்று கும் உன் உடலுக்குமிடையில் ந்த வெற்றிடம் அதிகரித்துக் ாது நீ உன் உடலில் இருந்து
பாதையால் மீண்டும் பிரவேசி. ன் மனம், நான்தான் சுவாசம், ன்று-கூறு. அந்த வெற்றிடம், விடும், நீ உடலாகிவிடுவாய், எறு விளக்கினார் அந்த ஞானி.
பிள்ளைத்தனமாக அப்படியே அவன் மனது அதைத் தர்க்க தை அவன் மனம் ஏற்றுக்
pdio
11-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த tic Sage). giggit (Tantra)

Page 197
18Oa போதிதர்மர் பற்றிய
மதங்களுக்கு அப்பாற்பட்ட நீ பெளத்தத்தை இந்தியாவிலிரு ஒருவரான இவர் அங்கு படுத்தினார்.
ஞானி மார்பா மரணத் வைத்திருந்தார். தன் உட சீடர்களுக்குக் கூறினார். சீடர்ச இறந்துகொண்டிருக்கையில் கண்டதும் தன் மரணத்தை LoIIU II எழுந்து உரக்கக் நிறுத்துங்கள்! கொண்டாட்டத் ஏன் அழுது புலம்புகிறீர்கள்?*
56Igorooliol (Soo (Self-CC தழுவி உபசரித்தவர் ஞானி இறக்கவில்லை, தங்களுக்கு மக்கள் நம்புகிறார்கள். நம் LoTňUIT OoooOJ திபெத்திய “நம்பிக்கையுள்ள மார்பா? என்ே
ஒரு நிகழ்வு :
மரணத்திலிருந்து மரணமற்ற நிை அடைந்தவர் பொகூயூ (Bokuju)
ஜப்பானைச் சேர்ந்த செ (Bokou) தன் சீடர்கள் அனை அவர்களைப் பார்த்து “எ6 கொடுக்க உள்ளேன். உ போகிறேன். என் உடலுக்கு கொடுக்க வேண்டும். தன கூறுங்கள்” என்றார்.
ஒரு சீடன் ‘நீங்கள் உட்கார்ந்திருந்து மரணமாக சீடன் குறுக்கிட்டார் “பல தங்கள் உடலைவிட்டுப்

ற்புதமான விஷயங்கள்
லையில் உள்ளது. திபெத்திற்கு து எடுத்துச் சென்றவர்களில் மகாமுத்திராவை அறிமுகப்
தைத் தன் கட்டுப்பாட்டில் 0 இறக்கப்போவதாகத் தன் ள் கூடிவிட்னர். அவரது உடல் சீடர்கள் அழுதனர், அதைக் மார்பா உடனே நிறுத்தினார்.
கூறினார் **అigరయెర్రరుU
துக்குரிய இந்தத் தருணத்தில்
nscious) மரணத்தை வரவேற்று, | மார்பா அவர்கள். அவர் }ள் வாழ்வதாகவே திபெத்திய பிக்கையின் அடையாளமாக Discboir பார்க்கிறார்கள். றே அழைக்கப்படுகின்றார்.
6D6)
ன் (Zen) ஞானியான பொகூயூ வரையும் வருமாறு அழைத்தார். ா உடலுக்கு இன்று மரணம் லை விட்டு நான் பிரியப் ஒரு தனித்துவமான மரணத்தைக் த்துவமான முறை ஒன்றைக்
ாமரைப் பூ வடிவம் போன்று லாம்?? என்றார். இன்னொரு நானிகள் அந்த முறையில்தான் பிரிந்துள்ளார்கள்?" என்றார்.

Page 198
எஸ். (
தொடர்ந்து வேறொரு சீட உடலை விட்டுப் பிரியுங்க *"ஏற்கனவே ஒரு ஞானி < அடுத்தவர் தான் ஒரு சொல்கிறேன் என்றார். எல்ே போகும் முறைக்காக காத் இறப்பீர்களா? இது தனித்து அதற்கு ஞானி இணங்கி தலைகீழாக நின்று தன் இறப்பைக் கொடுத்தார்.
இந்தத் தனித்துவம தனித்துவமான இறுதி ப தெரியாமல் சீடர்கள் விழித் வந்தனர். ஞானி பொகூயூ அவரிடம் ஆலோசனை புறப்பட்டு அருகாமையில் சென்று அவரிடம் கேட்டன மிக உயர்ந்த தனித்துவமான வேண்டும், நாங்கள் உங் வந்துள்ளோம்” என்றனர். இ உடல் இருந்த இடத்திற்கு உடலுக்கு முன் நின்று உர வாழ்நாள் முழுக்க முட்டாள்த இறுதி நாளிலும் கூட இ தனங்களையும் விட ஒரு இறப்பை உன் உடலுக்கு அடைந்திருந்தாலும் உன் விட்டுப் போகவில்லை. இந் வெளியே வா! பிறர் எதிர்பா எதிர்பார்ப்புக்கேற்ப செயற்பட நிலையில் உன் உடலை உயிர்த்தெழு’ என்று உரக்க அவரது உடல், இருதயம் நி இயங்கத் தொடங்கியது. த6 ஞானி எழுந்து நிலத்தில் நி6 மரணமான படுத்திருந்து இ

குருபாதம் l181
டன் **நீங்கள் நிலத்தில் நின்று ள்?? என்றார். பிறிதொரு சீடன் அப்படித்தான் பிரிந்தார் என்றார்,
வித்தியாசமான முறையைச் லாரும் ஆவலாக அவர் சொல்லப் திருந்தனர். “தலைகீழாக நின்று ரவமானதாக இருக்கும்? என்றார். னார். சீடர்கள் முன்னிலையில்
உடலுக்குத் தன்னுணர்வுடன்
TGT மரணத்துக்கு எப்படி 0ரியாதை கொடுப்பது என்று தனர். சீடர்கள் ஒரு முடிவுக்கு அவர்களின் அக்கா ஒரு ஞானி. கேட்போம் என்று அவர்கள் இருந்த அவரது ஆசிரமத்துக்குச் ார். "நாங்கள் எங்கள் குருவுக்கு இறுதி மரியாதையை கொடுக்க கள் ஆலோசனையைப் பெற தைக் கேட்டதும் தன் தம்பியினது கு அக்கா விரைந்தார். அவரது த்த குரலில் கூறினார் **நீ உன் தனமாக நடந்துகொண்டாய், உன் துவரை நீ செய்யாத முட்டாள் மிகப் பெரிய முட்டாள் தனமான க் கொடுத்துள்ளாய். நீ ஞானம் முட்டாள் வேலைகள் உன்னை த முட்டாள்தனத்தைக் கைவிட்டு iப்பது போல் இறவாதே! பிறரின் டாதே! நீ படுத்திருந்து சாதாரண விட்டுப் பிரி, பொகூயூ. நீ க் கூறினார். சுவாசம் நின்றிருந்த ன்றிருந்த அவரது உடல் மீண்டும் Dலகீழாக நின்று மரணமான அந்த எறார். பின்னர் “உலகின் பொது றப்பது?? என்ற அந்த நிலையை

Page 199
182a போதிதர்மர் பற்றிய அ
அவர் ஏற்று, அதனையே இவ்வுடலைவிட்டுப் பிரிகிறேன் விட்டுப் பிரிந்தார். பழையபடி இதயத்துடிப்பு நின்றது, சீ செலுத்தினர்.
இந்த ஞானி முதலில் ஏற்ப தன் சீடர்களுக்கு மரணத்தை தத்துவார்த்தமாகச் செயல்முை அவர்கள் என்ன செய்வெ திகைப்பையும் கவனித்திருக்கி சீடர்களுக்கு அழகான அனுபவி ஒரு சாதாரண அழகான நிகழ் வழங்கிச் சென்றுள்ளார். இவர் Bloooooou (From death to deat
புத்தர் தனது இறுதி நிலையை
புத்தர் (கி.மு. 566 - 48 தனது இறுதிப் போதனையையு கொண்டு “என் உடல் பிரிந் தான்” எனக் கெளதம புத்தர் எதைக் குறிப்பிடுகிறார் என்ட குழப்பமானதாக இருந்தது. புத் பிரிந்து செல்லப்போகின்றேன். மனிதர்கள், விலங்கினங்கள் இ என்றார். அங்கு உயர்ந்து நின் Saal Tree சுட்டிக்காட்டி, என்னுடலை விட்டுச் செல் உகந்த இடமாகத் தெரிகிறது”
மரணத்தை ஒரு தீர்மான புத்தர் எடுத்தார். புத்தர் பே வருவதில்லை, இவர்கள் த அர்ப்பணிக்கத் தயாராகிறா மரணமானது அவரது தெரி மரங்களுக்கிடையில் அவர் 'நீங்கள் ஞானம் அடைந்

ற்புதமான விஷயங்கள்
தன்னுடலுக்கு அனுமதித்து என்றார். அப்படியே உடலை
அவரது சுவாசம் நின்றது, டர்கள் இறுதி மரியாதை
ட்ட மரண நிலையில் இருந்து ப் பற்றிய ஒரு தெளிவைத் Dறயில் விளக்கியிருக்கிறார். தன்று தெரியாமல் நின்ற நிறார். தன் மரணம் மூலம் ாத்தைக் கொடுத்து மரணத்தை ச்சியாக மாற்றி உலகத்துக்கு மரணத்திலிருந்து மரணமற்ற hlessness) 96OL-b56)Jss.
த் தீர்மானித்தார்:
5) (56; Jofrbsidi) (Kushinagar) ம், தியானத்ததையும் முடித்துக் துபோவதற்குரிய நேரம் இது தன் சீடர்களுக்குக் கூறினார். பது சீடர்களுக்குக் கொஞ்சம் நர் “நான் என் உடலைவிட்டுப் மலைகள், ஆறுகள், மரங்கள், வற்றுடன் வாழ்ந்துவிட்டேன்” ற இரண்டு அரச மரங்களை “அந்த மரங்களுக்கிடையில் }ப்போகிறேன், அந்த இடம் என்றார். ம் (Decision) எடுப்பதுபோல் ன்றவர்களை மரணம் நோக்கி பகள் உடலை மரணத்துக்கு ர்கள். கெளதம புத்தருக்கு ாக அமைகிறது. அந்த Saal போய் அமர்ந்துகொண்டார். ஒருவரைச் சந்திப்பீர்கள்.

Page 200
எஸ். கு
என்னை இனிமேல் பார்க்க பிரிய முதல் ஏதாவது கேள் என்றார். சீடர்கள் அழுதன பதிலளித்துவிட்டீர்கள். எங்கள் நீங்கள் காட்டிய பாதைை என்றனர்.
புத்தர் கண்களை மூடினா புத்தர் மரணப்படிநிலைகளைச்
O ‘‘CypgöOOITOOJg5J ULqOODUU
உடலாக இல்லை?
O ** இரண்டாவது படி
UD60ILDIC5 இல்லை?
O) ** ep6öIgDII6)JğjI ULqOR இதயமாக இல்லை?
O ʻʻpbII6öIö5II6)Jg5J ULq-6O)I úlJöoo(obó5g5óro (Con என்று கூறும்போது !
தியானமானது எப்படிப் ட மனதைக் கடந்து, உணர்ை பிரவேசிக்கிறதோ, அதே உடலைவிட்டு பிரிவதைச் தியானமும், மரணமும் மனித செல்கின்றன. இதனால்தா அனுபவித்து மீண்டும் உயிர்ெ இறுதிநிலை அச்சமுள்ள வருகிறது. மரணம் முடிவல் ஆரம்பம்.
‘சுயத்தை இமயத்தின் மடியில் காற்றோடு காற்றாகக் கலந்தா
போதிதர்மர் இமயத்தில்
ஒப்படைத்தார். அதைத் எடுத்திருந்தார்.

ருபாதம் 183ے
மாட்டீர்கள். உடலை விட்டுப் ாவிகள் இருந்தால் கேளுங்கள்” ர். "நீங்கள் 42 வருடங்களாகப் ஐயங்களைத் தீர்த்துவிட்டீர்கள். ய நாங்கள் தொடருவோம்’
ர், தியானிப்பது போல் இருந்தது:
சீடர்களுக்கு விளக்குகிறார்.
எடுக்கிறேன் - நான் இப்போது
யை எடுக்கிறேன் - **நான்
யை எடுக்கிறேன் - **நான்
ப எடுக்கிறேன் - நான் எனது sciousness) பிரவேசிக்கிறேன் - நிசப்தமானார்.??
படிப்படியாக உடலைக் கடந்து, வைக் கடந்து வெறுமைக்குள் படிமுறைகளில்தான் உயிரும் சீடர்கள் அவதானித்தனர். னை ஒரே நிலைக்குக் கொண்டு ன் ஞானிகள் மரண நிலையை பற்றுள்ளார்கள்.
நிலையாகவே கருதப்பட்டு
ல, இது ஒரு புதிய வாழ்வின்
r (Himalaya) மடியில் தன்னை தீர்மானம் எடுப்பது போல்

Page 201
184a போதிதர்மர் பற்றிய
தான் சீனாவை விட்டு சீனாவைக் கடந்தார்.
இமயமலை அன்னையின் உறுதியாக இருந்தார். தா? அடையாளங்களை வைத்து கோயில் அமைக்கக்கூடாது, என்பதில் திடமாக இருந்தா
இமயமலையில் போய் கூறியிருந்ததால், தன் மர வைத்திருந்து அவர் த6 ஒப்படைத்து தனது ‘சுயத் காற்றோடு காற்றாகக் கலந்து என்பதே இந்நூல் ஆசிரியரது வாழ்க்கையை புரிந்துகொ6 மரணமும் புரிந்துகொள்ள மு
O வரலாற்று ஆராய்ச்சி மர்மத்தின் முடிச்சை அவிழ்க்க
இந்திய ஞான ஒளியான இந்தியாவிற்குள் மரணித்துவி வரலாற்றுக்குப் பிறப்புக் கொ உயிர்பெற்றுவிட்டால் ே அதிசயமாகிவிடுவார்.
ஆரோக்கிய ஆன்மிகம், மனதை இலகுவாக்கும் சுெ விஞ்ஞானம், அக்கியூபஞ்சர், நோக்கு வர்மம், புத்துயிர் என உலகுக்குப் பல உண்ை இவர் பல பீடங்களைக் ெ போன்றவர்.
புத்தர் நேபாளத்திலும் பிறந்து பின் போதிகயாவி போதிதர்மர் பிறந்தது காஞ்! மதத்தை உலகுக்குக் கொடு

அற்புதமான விஷயங்கள்
வெளியேறும் திட்டத்தின்படி
மடியில் தனது உடலை நீக்க ா வணங்கப்படக்கூடாது தன்
வணங்கக்கூடாது, தனக்குக் தனக்கு சமாதி இருக்கக்கூடாது
இறக்கப்போவதாக உறுதியாக ணத்தைத் தன் கட்டுப்பாட்டில் எனை இமயத்தின் மடியில் 5தை" (Self) இமயமலையில் பிரபஞ்சத்தில் ஒளியாகிவிட்டார் அபிப்பிராயம் ஆகும். இவரது ாள முடியாதது போல இவரது டியாததாக அமைந்துவிட்டது.
பாளர்கள் ஆய்வு செய்து இந்த
வேண்டும்.
போதிதர்மர் அவர்களது வரலாறு ட்டது. இந்திய அன்னை அவரது டுக்க வேண்டும். அவரது வரலாறு பாதிதர்மர் அவர்கள் உலக
துணிச்சலைத் தரும் தத்துவம், யல்முறை, உளவியல், மருத்துவ வீரியம் தரும் தற்காப்புக்கலை, கொடுக்கும் அறிவியல் உபதேசம், மகளை அளித்த உன்னத ஞானி. காண்ட ஒரு பல்கலைக்கழகம்
ள லும்பினி நகரில் (Lumbini) ஸ் (இந்தியா) ஞானமடைந்தார். , ஞானமடைந்தது காஞ்சி, சென் தது காஞ்சி மாநகரமாகும்.

Page 202
oIoञo• (€
**மரணத்துக்கு அப்பா அப்பால் செல்லவேண்டு களிடம் மரணம் தோற்று
**உங்கள் இருப்பை (t Nature) sibg 2 odioIOOLD மரணம் இறுதியானது எ
ஒரே பார்வையில் போதிதர்மர்
இவர் ஒரு பெளத்த துற
இவர் தற்காப்புக்கலையில்
இவர் ஒரு மருத்துவ விஞ் உண்டு என்றும் அந்த இருக்கிறது எனவும் அது வைத்திருக்கும் புலன் கூறினார்.
அக்கியூபஞ்சர் (Acupur முறையை கண்டுபிடித் தகவல்கள் தெரிவிக்கின்ற6 அதன் தந்தை!
உடல் உறுப்புகள் வேெ Transplant) Libs) 2-65 போதிதர்மர் அவர்களே.
எலும்பு மச்சை ரிசு, இன் மருத்துவநூல் எழுதியதாக
சீன Tai மலைச்சாரலில்
tea) பயிரிட்டு அறிமுகப்

ருபாதம் l185
ல் வாழ்வை உணர மனதுக்கு ம். மனதுக்கு அப்பால் செல்பவர் ரவிடும்.*
- போதிதர்மர்
eing), உங்கள் சுயத்தை (Self
களை நீங்கள் அறியாவிட்டால்
ன ஏற்றுக்கொண்டு விடுவீர்கள்??
- போதிதர்மர்
r:
வி.
தந்தையாவார்.
நஞானி மனிதருக்கு 6 புலன்கள் 6ஆவது புலன் காதுக்குள்
துதான் உடலைச் சமநிலையில் (Sense of Balance) 6T60Talib
cture) மருத்துவச் சிகிச்சை
தாக உறுதிப்படுத்தமுடியாத ன. அப்படியானால் அவர்தானே
)ாருவருக்கு மாற்றுவது (Organ ல் முதன் முதல் சொன்னவர்
னொருவருக்கு மாற்றுவது பற்றி
ஏடுகள் தெரிவிக்கின்றன.
மூலிகை தேயிலையை (Herbal டுத்தினார்.

Page 203
போதிதர்மர் பற்றிய அ ܢܦ136
மூலிகை வைத்தியத்தின் தரத்தை உயர்த்தியவர்; சுவரை உற்றுநோக்கும் அறிமுகப்படுத்தினார்.
நோக்குவர்மக் கலையில் (M
இவர் ஒரு அறிவியல் மே
கொண்ட ஒரு பல்கலைக்க
தமிழ் நாட்டில் பிறந்து, கொண்டு, தமிழ் நாட்டிலே
இவரது செயல்முறைகள், அனைத்தும் தனித்துவமான
சென் பெளத்தத்தை தே மதக்கோட்பாட்டை ஆசிய
வெளிநாடு சென்று ஆன்மி இந்திய ஞானி (தமிழ் ம தூதுவரும் நல்லெண்ணத் து ஒரு புரட்சிகர ஞானி (A
Gibsistidis, Gior (3rd eye) d 6
கெளதம புத்தருக்குப் பின்
இந்தியச்சுடர் போதிதர்மர்:
இந்தியா பூராவும் போ!
வேண்டும். அவரைப்பற்றிய களுக்கும் ஏனையோருக்கு போதிதர்மர் ஒரு இந்திய ஞான முழுவதும் பிரகாசிக்க வேண் மாநில அரசுகளும் இதில் கவ
போதிதர்மர் அவர்களைப்
முழுக்க ஏற்படவேண்டும். இவ

)புதமான விஷயங்கள்
(Herbal Medical treatment)
Wall Gazing) guita015605
esmerism) 605G5iig6)Ji.
தை. இவர் பல பீடங்களைக் ழகம் போன்றவர். தமிழைத் தாய்மொழியாகக் ) ஞானம் அடைந்தவர்
நடைமுறைகள், பேச்சுக்கள்
δύ)(ο) Ι.
ாற்றுவித்தவர். சென் புதிய ாவில் நிறுவியவர்.
கப் போதனை செய்த முதல் கன்) இந்தியாவின் ஆன்மிகத் தூதுவரும் ஆவார்.
rebellious saint).
டையவர்.
உலகு கண்ட புத்தர் இவர்.
தர்மர் ஞாபகப்படுத்தப்பட விழிப்புணர்வை மாணவர் ) ஏற்படுத்த வேண்டும். ச்சுடர். இந்தச் சுடர் இந்தியா டும். இந்திய அரசும், சகல ாம் செலுத்தவேண்டும்.
ாற்றிய விழிப்புணர்வு இந்தியா
பெயரால் பரிசுகள், விருதுகள்

Page 204
எஸ். குரு
வழங்கப் களில் கு வரலாறு 96)J.6OJ கல்லூரி டும்,
கழகங்க வேண்டு உலகத்தி
ஒரு மின் கொள்கிே
GšUģ தமிழ்நாடு அரசும், இந்திய L கூட்டாக ஆய்வு மேற்கொ வெளியுலகிற்குக் கொண்டுவர சகல ஆற்றல்கொண்ட ஞானி இன்றுவரை தோன்றவில்6ை சோக்கிரடிசை அடையாளம் தோன்றிய போதிதர்மர் அவை பட்டார். இருந்தும் இன்றுவி படாதவராக இருக்கிறார்.
போதிதர்மர் ஒரு புரட்சி அவரிடத்தில் ஞானமும், புர இருந்தது. ஒரு ஞானி புர நன்றாகச் சுருக்கிப்பார்த்தால் அ ஞானியை விரிவுபடுத்திக்கொண் இருக்கும். ஞானி ஒரு புரட்சிவ
 

பாதம் 1187
படவேண்டும். பாடப் புத்தகங் தானி போதிதர்மர் அவர்களது
சேர்க்கப்படவேண்டும். பற்றி பாடசாலைகளில், 5ளில் கற்பிக்கப்பட வேண்
இவரைப்பற்றி பல்கலைக் ரில் ஆய்வு மேற்கொள்ளப்பட ம். இவர் அனைத்து
ற்கும் பொதுவானவர்.
pநாடு அரசு இந்தச் சுடரை இந்தியா பூராகவும் தீபமாக்க ம். இந்திய அரசு இந்தத்
உலகத்திற்கு ஒளியாக்க ம் என்பதை இந் நூலாசிரியர் எமினியாக இருந்து கேட்டுக் றேன்.
நிதர்மரைப் பற்றிய வரலாற்றை மத்திய அரசும், சீன அரசும் ண்டு அவரது வரலாற்றை வேண்டும். போதிதர்மர் போல் , இவருக்கு முன்பும் பின்பும் ). அறிவியலில் மேற்கில்
காட்டினாலும் கிழக்கில் ரயும் விஞ்சியவராக காணப் soo sooLumoIb 85II6ooIU
g5LDIT (Rebellious Soul).
ட்சியும்; ஒருங்கே சேர்ந்து ட்சிவாதிதான். புரட்சியை ங்கு ஞானம் இருக்கும். ஒரு டு போனால் அங்குப் புரட்சி தியே!

Page 205
igsჭ8 போதிதர்மர் பற்றி
போதிதர்மருடைய வா கேட்பவர்களுக்கும் எப்ப முடியாமல் குழப்பமாகத் அவரது இறுதி நிலையும் அ
கெளதம புத்தர் வரிை
இவரும் ஒருவர். கிழக்கில் இவர் தமிழ்நாட்டின் தவப்புத

அற்புதமான விஷயங்கள்
ழக்கையைப் பார்ப்பவர்களுக்கும் டி அவரைப் புரிந்துகொள்ள தெரிகிறாரோ அதேபோலத்தான் மைந்துவிட்டது.
சயில் தோன்றிய புத்தர்களில் தோன்றிய அறிவியல் மேதை. ல்வன் ஆவார்.

Page 206
அத்தியா
உடலுறுப்புத்த சிந்தனையின்
உடலுறுப்புகள் பிறருக்கு சிந்தனை போதிதர்மர் அவர்ச விட்டது. இவர் உடலுறுப்புகள் (organ Transplant) dasai) (upg யாவார். அது மாத்திரமல்ல தி (Bone marrow) LDITib06ugi un கருத்தும் நிலவுகிறது.
போதிதர்மர் சீனாவில் இறந்தபின் தன் உடலுறுப்புக்கல பெறுவார்கள் என்று கூறுகிறா ஹோவிற்கு (Hui-ko) தனது எலுப் பிக்குனியான தாரணிக்கு (Dhar டா-பியூவிற்கு (Daofu) தன் ே (Daoyu) தன் எலும்பும் (Bone) தனது ஒவ்வொரு சீடர்களுக்குள் மச்சையும், தோலுமாக கலந்தி பொருளாகிறது. அதாவது தா விடுவேன் என்கிறார். உடலுறு அற்புத சிந்தனையின் முன்னோ
உடல் உறுப்புக்கள் பிறருக் முதன்முதல் கூறியவர் கி.பி. 56 போதிதர்மர் என்பதே இந்நூ போதிதர்மரின் சிந்தனைகளை சென், பெளத்த நாடுகள் இயல்

பம் 22
ானம் பற்றிய முன்னோடி
வழங்கல் பற்றிய உயர் ளுக்கு அப்போதே உதித்து மாற்றத்தைப் பற்றிய கருத்தை iன்முதல் கூறிய முன்னோடி சு (Tissue), எலும்பு மச்சை ற்றி நூல் எழுதியதாக ஒரு
தனது சீடர்களிடம் தான் ரில் எதை எதை யார் யார் ர். பிரதம சீடரான ஹை)L LDé60)Fulb (Bone Marrow), ani) 56ër gj605uqub (Flesh), 5IIIlb (Skin), LIT-gafibe கிடைக்கும் என்று கூறினார். நம் தான் எலும்பும் தசையும் ருப்பேன் என்பதே அதன் ன் உடலுறுப்பாகக் கலந்து 'ப்புகள் தானத்தைப்பற்றிய டயல்லவா அவர்
கு வழங்கல் பற்றி உலகில் -ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ாசிரியரின் அபிப்பிராயம். அடிப்படையாகக் கொண்ட பாக உடலுறுப்புகள் தானம்

Page 207
19o. போதிதர்மர் பற்றி
செய்யும் நாடுகளாக மாறி ே உறுப்புகள் வழங்கலுக்கு உ
ஒரு மனித உடல் உறுப்புக்க 1-8 உயிர்களைக் காக்க வ:
இருதயத்துடிப்பு முற் Gafuailpigl (Brain Death வைத்திய ரீதியாக உறுதி (Corneas), gCD.g5ulb (Heart, (Tissue), எலும்புமச்சை (Bo (Liver), G5ITG) (Skin), g5ul (Kidneys), G3LGi) (Intestir வழங்கலாம். தன் உடல் விரும்புபவர் (Donor) தன முற்கூட்டியே பதிவு செய்து
உறுப்புக்கள் செயலிழந் உயிர்களைக் காப்பாற்ற உ மருத்துவ தகவல்படி ஒரே உயிர்களைக் காப்பாற்ற எழுபத்தைந்து (1 - 75) ஆ பாதுகாக்கவும் முடியும். ெ Tissue Donor) gig, LDGoig, உதவுகின்றது. இத்தகையவ மனித உடல் வீணாக அ தானம் செய்து அந்த த மனிதர்கள் ஊடாக இறந்து இறந்தும் , இறவாநிலை தானத்தினால் மரணத்ை மனிதனுக்கு மரணமென்ப
மனித மேன்மை உணர்வு:
ஒரு மனிதன் இ காப்பாற்றுவது போன்ற த ஒன்றும் இருக்கமுடியா செய்தவர்களுக்குத் தாங் செய்துள்ளோம் என்ற பு

அற்புதமான விஷயங்கள்
பாதிதர்மரின் சிந்தனையான உடல் பிர் கொடுக்க வேண்டும்.
ள் தானம் ஒரே நேரத்தில் )லது:
றாக நின்று, மூளை முற்றாகச் ஒருவர் இறந்துவிட்டார் என ப்படுத்திய உடலிலிருந்து கண் Valves), so IITFLIGOLu (Lungs), 53, he Marrow), 613)|LibL (Bone), FFJai) ), கணையம் (Pancreas), சிறுநீரகம் es) ஆகியவைகளைத் தானமாக ) உறுப்புகளைத் தானம் செய்ய து சம்மதத்தை உரிய இடத்தில் துகொண்டால் சரி.
து படிப்படியாக இறக்கும் மனித உடல் உறுப்புத்தானம் உதவுகிறது. நேரத்தில் ஒன்று முதல் எட்டு ]வும் (1 - 8), ஒன்று முதல் ஆட்களுக்குப் பாதிப்பு நிகழரமல் 5TGOLutofluigj60Lu (Organ and நேயச் செய்ல் பிறரின் உயிர் காக்க ர்கள் வணக்கத்துக்கு உரியவர்கள். ழியுமுன் உடல் உறுப்புக்களைத் னத்தைப் பெற்று உயிர் வாழும் உறுப்புகள் தானம் செய்தவர்கள்
எய்துகிறார்கள். உறுப்புகள் தத் தடுத்து நிறுத்தவதன் மூலம் த இல்லை!
எனொரு மனிதரது உயிரைக் எனலமற்ற செயல் உலகில் வேறு 1. உடல் உறுப்புக்கள் தானம் கள் சரியான செயலொன்றைச் னநிறைவு அவர்களது வாழ்வை

Page 208
எஸ். கு(
முழுமைப்படுத்துகிறது. (A F ஆன்மிக உணர்வையும், ம Qa5m(6ösásgDg5J (A feeling of bei human decency and goodnes *காசு", "பணம்’, ‘பொருள்? **வியாபாரம்?? எதுவுமற்ற தூய >செயலாகும்.
உறுப்புக்கள் தானமாக வழ மீண்டும் உயிர் வாழக்கூடியத பிறரை இறப்பிலிருந்து செய்துள்ளார்கள். தன் ‘உயிர்? கொடுக்கும் மகிமை உறுப்புத் மாற்று உறுப்பு இல்லாமல் ஏராளமானோர் இறக்கிறார்கள். அ உடல்கள் நல்ல நிலையிலுள் அழிந்துபோகின்றன. உயிர்வ சாதாரண சம்மதம் (Consent) ப
இயல்பாக உடல் உறுப்புக்கள் த ஐரோப்பிய பிரஜைகள்:
பெல்ஜியம் (Belgium), போ (Portugal), L GUTTGöT 6ŕv (Franc ஆஸ்டிரியா (Austria) போன் ஒவ்வொருவரும் உடல் உறுப்புத் தெரிவித்தவர்களாக (Presumer கருதப்படுகிறார்கள். அந்த நாட்டு இயல்பாக உறுப்புத்தானம் செய் automatically an organ donor). “உரிமம்” இயல்பாகக் கொடுத்து உரிமம் பிறரை வாழவைக்கிறது
இறப்பைப் போல் உறுப்புத்தான இயற்கையாக வேண்டும்:
இறப்பு எப்படி இயற்கையே தானமும் இறப்புடன் சேர்ந்த 6

UIrg5th 191
isitive Moral Outlook). Sg னிதமேன்மை உணர்வையும் g in the presence of Spirituality, ). உடலுறுப்புத் தானமானது
*உபகாரம்”, “சலுகைகள்?, booOooooooord (A Goodwill Act)
pங்கப்படுவதால், பல உயிர்கள் ாக உள்ளது. இறந்தவர்கள் ாப்பாற்றி உயிர்வாழச் இழப்பிலும் பிறருக்கு “உயிர்' தானத்துக்கு உண்டு தினமும் இறுதிவரை வாழப் போராடி அதே நேரத்தில் ஏராளமானோரது ள உறுப்புக்களுடன் இறந்து ாழும்போது கொடுக்கும் ஒரு
ல உயிர்களைக் காக்கும்
தானம் செய்யும்
லண்ட் (Poland), போத்துக்கல் :e), laita GoTL (Finland), ற நாடுகளில் உள்ளவர்கள் தானம் செய்வதற்குச் சம்மதம்
Consent) gig, 15ITG).56fai) ப் பிரஜைகள் ஒவ்வொருவரும் தவர்களாவார்கள் (Everyone is ருவர் தன் இறப்புக்கு அந்த பிடுகிறார். இறந்தவுடன் அந்த
மும்
அதேபோல் உடலுறுப்புக்கள் யற்கையாக மாறவேண்டும்.

Page 209
192a போதிதர்மர் பற்
(The organ donation need of the process of dyi செயலாற்றும் தினம் உத இன, மொழி, நிற, கி வேற்றுமைகள் அற்ற சகே டன் சேர்ந்து மனிதே மலர்ந்துவிடும்.
உறுப்புக்கள் தானத்தைப்
நாட்டுத் தலைவர்க தலைவர்கள், மக்கள் தை மத்தியில் செல்வாக்கு மரணத்திற்குப் பின் உடே உதாரணமாக நடந்துகெ பொதுமக்கள் மத்தியில் ஆன்மிகம், மதங்கள், சி கவிதைகள், கல்விப் பாட பட்டிமன்றங்கள், வானொலிகள், தொலை போன்றவை உடல் விழிப்புணர்வை மக்கள் அவைகளின் சமுதாயப்ப பொறுப்புமாகும்.

மிய அற்புதமான விஷயங்கள்
to be thought of as a Natural part 9). அவ்வாறு உலகம் பூராவும் பமாகும்போது அன்றுமுதல் மத, மூக, ஆண் - பெண், பிரதேச ாதரத்துவமும், சமத்துவமும், அதனு நயமும் உலகில் இயற்கையாக
பற்றிய விழிப்புணர்வு
ள், அரசியல் தலைவர்கள், மதத் லவர்கள், பிரபலமானவர்கள், மக்கள் ள்ளவர்கள் (celebrities) தங்கள் ல் உறுப்புக்கள் தானம் செய்து முன் ாண்டால் அச்செயல் இயல்பாகவே விழிப்புணர்வைக் கொடுக்கும். னிமாக்கள், நாடகங்கள், கதைகள், உத்திட்டங்கள், சமூக அமைப்புக்கள், ருத்தரங்குகள், பத்திரிகைகள், க்காட்சி, அரசியல் கட்சிகள், அரசு உறுப்புக்கள் தானம் பற்றிய மத்தியில் ஏற்படுத்தவேண்டியது கணி மாத்திரமல்ல அது ஒரு தார்மீகப்

Page 210
அத்தியா
சென் புனித ஏடு குங்-ஆன்
சென் மதத்தின் புனித ஏ 'கோன் உள்ளது என்று கூறல் இந்திய மஹாஜன பெள திலிருந்து தோன்றியதே ே பெளத்தம். இம்மதத்தை மக்க நடைமுறை வாழ்வுக்கு ஏற்றம மாற்றியமைத்து அதை வாழ்வியல் விஞ்ஞானமாக மாற் வர் போதிதர்மர்.
( களுக்
95[TGoDL செவி இவற் தொ னர்.
ტ60)(6N] “KOa
அழை மொழியில் Kung - an என GLITCD56it "A Public Document/ F
。 ॐ
Tran Thai Tong
13-ஆம் நூற்றாண்டில் வி gHTair Tran Thai Tong Garait கோன்களாக (Koan) வெளியிட
 

பம் 23
G8a5ITGör” Koan / Kung-an
露|イ2、 未 ளின் Kung"
"A r* ாதிரி (koan) - cument 26. له : أطرةF || (ج6
றிய (eigeria (ஆe
சென் ஞானிகளுக்கும் சீடர் கும் இடையில் காலம் )ாக நடந்த உரையாடல்கள் வழி மூலமாகவே பரவியது. றில் 1700 உரையாடல்களைத் குத்து ஜப்பானில் நூலாக்கி அதாவது சென் உபதேசங் க் கொண்ட இப்புனித நூல் 99 GTGT ஜப்பானில் க்கப்படுகிறது. இதைச் சீன அழைக்கப்படுகிறது. இதன் cord’ என்பதாகும்.
ட்னாமில் வாழ்ந்த சென் .பதேசங்களைத் திரட்டி 43 டார். இவர் வியட்னாமில்

Page 211
194. போதிதர்மர் பற்றி
பேரரசராக இருந்தபோே தெடுத்தார். தனது 41-ஆவ துறந்து சென் ஆசானா8 கருத்துக்களை மக்களுக்குச்
மக்களின் மொழியில் உபே
சீன மொழியில் "கே விளக்கும் நூலான Mu வெளியிட்ட சென்-கோன் கூறுகிறது. இந்நூல்கள் கின்றன.
Kung-an (Golfgör L/6of5 உண்மையை உணரவேண் (5pll olaiîG)ă 5oit (Do crea சீடர்களது மனநிலை, அவர்களுக்குப் பொருத்தமா உட்படுத்தி தங்களது செ1 GuGOLuu (awakening) LITGo:
Kung-an கருத்துக்க நடைமுறைகளிலும் அதிக திரட்டப்பட்டுத் தேங்கிக் அதைத் தாண்டிச் செல்ல6
ஒரு நிகழ்வு : மனதிலிருந்
(65[T6of? Tien Huang காலமாகயிருந்தார். சென்
an) பற்றி எதுவுமே புரிய
தனது குருவிடம் “உங் இருக்கிறேன். ஆனால் கொள்ளாமலே இருக்கிற் வேண்டுகிறேன்” என்றா மடாலயத்திற்கு வந்த கொண்டு வந்து என்ரு தலைவணங்கி “நன்றி” கூ குங்-ஆன் கூறும் அன்

ப அற்புதமான விஷயங்கள்
த சென் கோன்களை தொகுத் து வயதில் தனது அரசாட்சியைத்
(Zen - Master) Gafair LD5d. சென்றடையக்கூடிய மாதிரி பொது தசித்தார்.
ன்’களைப்பற்றி இலகு நடையில் monkan போன்றதே பேரரசர் நூலும் என Zen keys என்ற நூல் மனித நேயத்தை மையப்படுத்து
நூல்) "சொந்த அனுபவத்தில் அந்த டும், அதை அடைய நிலமையை te a Crisis) என்கிறது. ஒவ்வொரு
உளவியல் நிலைகளுக்கேற்ப ான சூழலில் நேரடியாக அவர்களை ாந்த அனுபவ மூலம் விழிப்புணர் தயைக் காட்டவேண்டும்” என்கிறது.
ளைவிட செயல்முறைகளிலும்,
நம்பிக்கை கொள்கிறது. அந்நூல் கிடக்கும் அறிவு விழிப்புணர்வுக்கும் ம் தடையாகவிருக்கிறது என்கிறது.
து மனதிற்கு
g) Gör SFL GOTT35 Lung Tan pỂ6ðoTL “G5ITair I gil-gair (Koan / kungாதவராகவே இருந்தார். ஒரு நாள் களுடன் பல்லாண்டு காலமாக நீங்கள் என்னைக் கண்டு iர்கள். உங்கள் கருணையை நான் அதற்கு ஞானி “நீங்கள் இந்த 2தல்நாள் எனக்கு இரவு உணவு ன் நின்றபோது நான் எழுந்து உணவைப் பெற்றபோது "கோன்’/ கருணை, பணிவு, மனிதநேயம்

Page 212
οποίο. Θδι
(Humility and Humanity) -96). D air LD601g/dig5 (Mind Seal) கொடுத்துவிட்டேன். நீயும்
சென்கோன் உனக்குள் வியா
ஒரு நிகழ்வு: "இயல்புத் தன்ன
Gæ6ör ger/T6ör Chao-Chou “போதிதர்மர் சீனா வந்ததன் சீடர் ஒரு கருத்தை உருவா செய்கிறார். “ஒருவரது இயல்ட உருவாக்காதே’ என்கிறது - ஒருவரது இயல்புத்தன்மையை nature" என்கிறார். இந்த நோக்குவதால் உண்மை 6 நிற்கிறார் என்பதையே அந்த வதற்காக அவருக்குப் பதில் cypress மரத்தைப் பார்” என் கிறதோ - அதை, அதை அப்
(Zen teachings never attem serve as methods to guide reality.)
கை விரலால் நிலாவை காட்டிய விரலையும், நிலா கொள்ளாது நிலாவை மட்டுப் நிலா அல்ல. ஆனால் அந்: சுட்டுவதற்கு உதவியது போன் காணப்படுகிறது,
"சந்தேகப்பட்டால் முன்ன விடும். எவ்வித சந்தேகமில்லா உலகம் கண்முன் வியாபித்து போதனை.
சென் ஆசான்களும் சீட தொகுத்து எழுதப்பட்டவையே

ருபாதம் 1195
ற்றை நான் என் மனதிலிருந்து gigs/Tallgil From mind to mind தலைவணங்கிச் சென்றபோது பித்துவிட்டது” என்றார்.
மயைப் பார்”
விடம் ஒரு சீடர் கேட்டார் நோக்கம் என்ன? இங்கு இந்த i5 (Conceptualization) (pubs த் தன்மையைப் பார் கருத்தை Koan. இதையே போதிதர்மர் L LJITri See in to One's Own
மாணவர் தேவையற்றதை விடயத்திலிருந்து தூர விலகி ஞானி அவருக்கு உணர்த்து கூறாமல் “வெளியே தெரியும் றார். "எது, எது எப்படியிருக் படியே பார்” என்கிறார் புத்தர்.
pt to describe reality, they only practitioners in the direction of
சுட்டிக் காட்டலாம். சுட்டிக் வையும் சேர்த்துக் குழப்பம் பார். சுட்டிக்காட்டிய விரல் த விரல் நிலாவை நோக்கிச் றவை "கோன்’ உபதேசங்களில்
னால் உள்ள உலகம் மறைந்து தபோது இந்த பரந்து விரிந்த வரவேற்கிறது” என்கிறது "சென்'
"களும் உரையாடியவைகளைத்
"கோன் ஞான நூலாகும்.

Page 213
அத்தி
சீனாவில் போ
சீனாவில் 8-ஆம் நூற் LuIIL&FIT606) (Zen School) s9950)(95 (LD6ổTL! Leng Chia அத்தகைய பாடசாலைகள் சாலைகள் பெரும்பாலும் Tradition) தியானத்தையும் (8
8, 9-ஆம் நூற்றாண் சம்பந்தப்பட்ட ஏடுகள் சீ Tunhuang பாலைவனப் பிர கண்டெடுக்கப்பட்டது. அ இருந்த Wu வம்சத்தைச் லிருந்தே நிகழ்வுகள் பதிய தனது பிரதம சீடனான அவருக்கு அங்கி (Robe) வ sha ஒவ்வொரு சென் பி தலைமுறையாகக் கைமாறி விவரம் காணப்படவில்லை
இந்தியத் துறவியான லங்காவத்ர சூத்திரத்தை மொழிபெயர்த்தார். அ LITTL-ớEIT60)6)65)ILJ (leng Chia லங்காவத்ர சூத்திரமே போதனையாகும்.
கெளதம புத்தரைப்பற்ற பதிலுமாக இவ்வாறு கூறுகி

unuLib 24
திதர்மர் பாடசாலை
றாண்டின் பிற்பகுதியில் சென் என்ற பெயர் பாவிக்கப்பட்டது. sung போன்ற பல பெயர்களால் அழைக்கப்பட்டன. இப்பாட பெளத்த மரபுகளையும் (Buddhist Sitting meditation) 66td;35; dist5607.
எடில் எழுதப்பட்டுள்ள சென் னாவில் Kadsu பகுதியில் உள்ள rதேசத்தில் உள்ள குகை ஒன்றில் தில் A.D. 700 காலப்பகுதியில் சேர்ந்த பேர் அரசியின் காலத்தி பப்பட்டு உள்ளன. போதிதர்மர் Huiku(Huike) GOGu puLuLóë35 , 96ör ழங்கியதாகவும், அந்த அங்கி Chiaரதம குருவாக படிப்படியாக 4 பின்பு அந்த அங்கியைப் பற்றிய என ஏடுகள் கூறுகின்றன. குணபத்திரா (கி. பி 394-468) Lankavtara Sutra) 86.7GlupПу)uildi) பரது சீடர்கள் லங்கா வத்ர Tsung) சீனாவில் ஆரம்பித்தனர். சென் பெளத்தத்தின் முக்கிய
சென் பாடசாலைகள் கேள்வியும் ன்றன.

Page 214
எஸ். குழு
புத்தர் இறவாமை (immortal) உடையவர் என்றால் அவர் எப்படி குஷி நகரில் 2 Saal tree மரங்களுக்கிடையில் தனது உடலை நீக்க முடியும்? இவ்வுலகில் பிறந்த அனைவரும் உடல் ரீதியான இறப்பு என்ற இயற்கை விதிக்கு உட்பட்டவராகிறார்கள். என உட்பட்டவரே. புத்தர் அற் கொண்டவரா? ஆம் அற்புத ச அற்புத சக்தி கொண்டவர்களே. புத்தர் என்று கூறலாமா? அடையாததால் தங்களது பிரயோகிப்பவர்கள். ஞானம் DITG) ITIT35GT.
புத்தரது அற்புத சக்தி அவர்,
கட்டமைப்புள்ள உலகத்தி எவ்வித கட்டமைப்புமில்லாமல்
புத்தரது அற்புத சக்தி அவர்,
சப்தம் நிரம்பிய உலகத்தில் கேளாது அவரை நிசப்தமாக இ
புத்தரது அற்புத சீக்தி அவர்,
வாசனை, நறுமணம் நிரம்ட அவரை எதையும் முகராமல் இ
புத்தரது அற்புத சக்தி அவர்,
சுவைகள் நிரம்பிய உலகி அவரை எதையும் ருசிக்காமல்
 

UITg5lb 1197
வே புத்தரும் அவ்விதிகளுக்கு 15 Jó5 (miraculous power) க்தி கொண்டவர். அசுரர்களும்
அப்படியானால் அசுரர்களைப் இல்லை. அவர்கள் ஞானம்
சக்தியைக் கீழ்நிலைக்குப் ம் அடைந்தவர்களே புத்த
ல் பிரவேசித்தபோது, அவரை
இருக்க அனுமதித்தது.
பிரவேசித்தபோது எதையும் ருக்க அனுமதித்தது.
ய உலகில் பிரவேசித்தபோது, ருக்க அனுமதித்தது.
ல் அவர் பிரவேசித்தபோது இருக்க அனுமதித்தது.

Page 215
198്പ போதிதர்மர் பற்றிய அ
புத்தரது அற்புத சக்தி அவர்,
ஊகங்கள் நிரம்பி பிரவேசித்தபோது அவரை ஊ: அப்பால் இருக்க அனுமதித்தது. புத்தரது அற்புத சக்தி அவர்,
எண்ணங்கள் நிரம்பிய 2
பிரவேசித்தபோது அவருக்கு ணங்கள் எழாது இருக்க அனுட
இத்தகைய அற்புதங்களுட இப்பூமியில் நடமாடினார் என்
7-ஆம் நூற்றாண்டில் Tas s g6JGTGT Tung shan LDGO)GUL'IL GT( ஆரம்பித்தார், இதனைத் :ெ துறவிகளால் பெளத்த பாட தியானமும் கற்பிக்கப்பட்ட பாடசாலைகளில் ஒருவர் படிட் (uplquy OLD 667 Oilb (gradual enli அமைந்த பாடசாலைகள் ஒருவ (Sudden enlightenment) 6Tai Ojib
Northern Zen School 6) L Tsung) gTLDL 95.56). If She இப்பாடசாலையிலே சீனாவின் நூலான Kung - An பற்றி விள சென் பெளத்தத்தின் போதல் களோ, சொற்களோ எதுவும் ட or letters) 615) il 1600Trio GJIb கருத்து முக்கியமாக ஆய்வு ெ
வடசென் பாடசாலைகள் GolgF6öTGö5C5 GTGCTG)qub, Huiko(Huike (இறந்தது A.D 651) 3-ஆவது எனவும், Hung-Jen (இறந்தது HSiu 6--g6ug)I 6TGöT6ìịLb, Pu

ற்புதமான விஷயங்கள்
உலகில் 1ங்களுக்கு
உலகத்தில் ள் எண் 2தித்தது.
ன் புத்தர் கிறது சென் பாடசாலை.
hin என்ற சீனத் துறவி Honan தேசத்தில் பெளத்த பாடசாலை தாடர்ந்து பல பாகங்களில் டசாலைகளில் பெளத்தமும் 607. வடக்கே அமைந்த படியாகத்தான் ஞானம் பெற ghtenment) G565T gaOTT6ai) ர் திடீரென ஞானம் பெறலாம்
கூறின.
GoFGóT LIITL5FITGOGvGDouu (Pei n Hsiu என்ற துறவியே. ) முதன்முதலாக Zen புனித பகப்படுத்தப்பட்டது, அத்துடன் னகளில் ஒன்றான எழுத்துக் Tourig) (Doctrine of no words படுத்தப்பட வேண்டும் என்ற சய்யப்பட்டது.
போதிதர்மரை முதலாவது 2-gaugh GTGOTGylib, Seng Tsan 6T60T6sib, Tao-Hsin 4-246)5 574) 5-ஆவது எனவும், Shenhi (இறந்தது 739) 7-ஆவது

Page 216
στου. G
எனவும், 1-Fu (இறந்தது 7 படுத்துகின்றனர். இந்த
பெயர்களாலும் அழைக்க் வித்தியாசங்ங்கள் காணப்படு
சென்பெளத்தமத பீடாதிபதிக
B fhe Firs Tfie Twerkty
hii Koto
(The 3rs: Patriarch of chira: fikt 3 «
 
 

நருபாதம் 199ےر
32) 8-ஆவது எனவும், வரிசைப்
ஞானிகளில் சிலர் வேறு படுவதால் பெயர்களில் சில கின்றன.
ள் (dfвопт)
dițillarriță
t Patriarrh of thina) -se-á jĦt résis in Pstršetr&th
°。拳
S. *... . ';് '&് 昌 f. ܓܰܠ 雛醬
|リ/- \。
Seng Ts’an Tao Hsin
| Patriarch of China. The 5th Patriarch of China)
Hui Neng Shef Hsit fhei &th Patriare:h of Čihins

Page 217
2OOa போதிதர்மர் பற்றிய அ
சென் பெளத்தத்தின் வ எழுதிப் பாதுகாக்கப்பட 6T6öTLu6)ai) Shen Hui (668-76 துறவி கவனம் செலுத்தினார். தீடீர் ஞானமடைதல் Enlightenment) Lusib móluu G335 TL மிக்க உறுதியாகவும் g போதிதர்மர் பற்றியும், போதனைகள் பற்றியும் முடிந்தளவுக்கு ஆவணப்படு போதிதர்மர் சென் பெள போதிதர்மரின் சீடன் Huiko குரு என்றும் வரிசைப்படுத்தி வரிசையில் Shen Hui 7-ஆவது உள்ள பாடசாலைகள் காலப்ே UmLaFIIoodoo (Bodhidharma Sch இதைச் சீனமொழியில் Tam போதிதர்மரைச் சீனாவில் தாமே தெற்கே உள்ள பெளத்த பாட பெளத்த பாடசாலைகளும் ** கொன்று முரண்பட்டு, வடக் மோதிக்கொண்டன.
வடக்கேயுள்ள பெளத்த ப 'படிப்படியாகவே ஒருவர் Enlightenment) 6Tailso Gs, IT கவர்ந்தது. பொதுமக்கள் காலப்போக்கில் தன் வலிமைை
தெற்கே நில்விய போதிதர் சூழலிலும், எந்த நிலையிலும் (Obloorudool lujoomb (Sudden Enli பூராவும் UpoSlug. ஒருவர் ஊடாகவும் ஞானமடையல சுறுசுறுப்பும், முயற்சியும் செய் ஈடுபாடான தொழிற் பக்தியுமே கருத்தைத் தெற்கேயுள்ள செ6 சீனா உட்பட சீனா முழுக்க ப

|ற்புதமான விஷயங்கள்
ரலாற்றை வேண்டும் 0) என்ற அத்துடன் (Sudden ட்பாட்டில் இருந்தார். அவரது தன்னால் த்ெதினார். த்தத்தின் தந்தை என்றும், சென் பெளத்தத்தின் 2-ஆவது னார். சென் பெளத்தத்தின் குருவானவர் ஆனார். தெற்கே பாக்கில் போதிதர்மா (தாமோ) hool) என அழைக்கப்பட்டன. ) Tsung என அழைத்தனர். ா (Tamo) என்றே அழைத்தனர். சாலைகளும் வடக்கே உள்ள ஞான விளக்கத்தில் ஒன்றுக் கும் தெற்கும் “ஞானத்தில்?
ாடசாலைகளின் நிலைப்பாடான ஞானமடையலாம் (gradual பாடு அரச வம்சத்தினரைக்
மத்தியில் இக் கருத்து ய இழந்ததது.
மரின் கருத்தான ஒருவர் எந்தச் , எந்த நேரத்திலும் திடீரென ghtenment) OIGöID 85QD5ğöğJ bII (6) தான் செய்யும் தொழிலின் ாம் என்றார் போதிதர்மர். யும் தொழிலின் முழுமையான தியானம் என்ற போதிதர்மரின் ன பாடசாலைகளிலிருந்து வட ரவிவிட்டது. வடக்கேயிருந்த

Page 218
எஸ். கு(
பாடசாலைகள் செயல் இழந்த வேகமாக வளர்ந்தன. இவ்வை கல்விமானும் துறவியுமான F ஆவார்கள். இக்கருத்துக்களு (G5/T6fl Shen Hui GTGöTLu இப்பாடசாலைகள் Ho Tso எ அழைக்கப்பட்டன.
Shen Hui sig L GilaöTL: G35 பாடசாலைகளை வெவ்வேறு இப்பாடசாலைகள் காலப்பே கொரியா போன்ற நாடுக வியட்னாமில் 8-ஆம் நூற்றாண் Chang (720-817) staggai) போதிக்கும் சென் பாடசாை சென் தத்துவம் பரவிய அ நாடுகளுக்கேற்ற மாதிரி போதி மிகச் சிறு மாற்றம் செய்து ஏற் வியட்னாமில் PO chang போதனைகளை மையப்படுத் Glbpölasoo6II (Zen Monastic சீனாவில் நிலவும் சென்மதம் அவர்களது கலாச்சாரத்திற்கும் போலத்தான் அமைந்துள்ளது.
*சென் மதம் கடைப் இடையில் சென் மதம் கடை சிறு வித்தியாசங்கள் அந்தந் அமைந்திருந்தாலும் சீனாவில் மதத்தின் நடைமுறைகள் மஹாஜன பெளத்தம்தான் ெ போதிதர்மரால் மருவியது. நாடுகளுக்குள் பரவிவிட்டது பரவியிருந்தாலும் போதிதர்ம அடைந்தபடியால் சென் பெளத் ஊற்றாகிறது எனலாம்.

UIT5ub 12O1
ன. தென் சென் பாடசாலைகள் ர்ச்சியில் மிக முக்கியமானவர் -Hin (A.D. 714-792) 96 IrisGir க்கு உயிர் ஊட்டியவர் Zen பரே. இவர் இறந்தபின்பு ன அவரின் ஊரின் பெயரால்
ான்றிய 5 பெரும் துறவிகள் 5 பெயர்களில் ஸ்தாபித்தார்கள். "க்கில் ஜப்பான், வியட்னாம், ளிலும் ஆரம்பிக்கப்பட்டன. டில் வாழ்ந்த சென் ஞானி Po வியட்னாமில் சென் தத்துவம் லகள் அதிகம் ஆரம்பமாகின. னைத்து நாடுகளும் தங்கள் தர்மரின் சில உபதேசங்களில் றுக்கொண்டன. அதேபோல் அவர்கள் போதிதர்மரின் தி சென் துறவிகளுக்கான rules) எழுதி நூலாக்கினார். அந்த நாட்டு மக்களுக்கும் அந்த நாட்டுக்கும் ஏற்றாற்
பிடிக்கப்படும் நாடுகளுக்கு பிடிக்கப்படும் விதத்தில் சிறு த நாடுகளுக்கேற்ற மாதிரி கடைப்பிடிக்கப்படும் 'சென்' பிரதிபலிக்கின்றன. இந்திய ன் பெளத்தமாகச் சீனாவில் பின்பு அது பல ஆசிய சென் மதம் எங்குப் காஞசிபுரத்திலே ஞானம் தத்தின் ஊற்று தமிழ்நாட்டின்

Page 219
ர்மர் பற்றி
போதித
ļozu!?) 3 souļųƆsoos sezugȚ
\–J
\vuelonaľogså
事
章· ņēļųLuəfinÊN ‘soļÅ
UɛTŪñēļT '}ēļÀ
o
m:{eqŮfuòųLuỢồNJA, I '\ēļÅ
uÙS Uɛ3-40%|
3;{n + 35}UļųƆ
*>{n+ 3s3uedɛŋJ
uɛÅų3325 uus-o
5, suu-lo q} \,+Pvz:
 

ங்கள்
விஷய
அறபுதமான
OOdz 0031 003. DO, COŽ OOdı 008 003 Odo odz i oöz 00$ 00$ pɛɛų-XƠ ••Ķ]';J'8 buongoeųı şeļa „-s“”“”“”“”Te !ųƆ, nTeqĻŅfilosoļà...| -fi 春Ợļ0$ 35ðuļųƆļuñUue noseqSeuppng ởļở5 *sāueden珊朗euɛ fie uļH| 事嘎如■■■} E:3: uɛpɑħx! O quesofiḥ|lo!!!!!!!!-44 og* 事下—{
ļozu!?, ësəuedes
ļēzuļ& fil-le3
ίχεδuεM
小
Uēļpu|
BuļųƆ Uļ Ļe kļ_I_IĘ

Page 220
அத்தி
திடீர் விழிப்புணர் (Attaining sudden aw
**விழிப்புணர்வோ, ஞாே
தில்லை. எந்தச் சூழலி திடீரென ஏற்படலாம்.??
"நீயே உனக்கு ஒளிவி
ஒரு நிகழ்வு:
வியட்னாமில் Hsiang ஆசான்களுக்கு மாணவனாக கிட்டவில்லை. அவரது ஆசா6 ஆசானைத் தேடுவதே தொட
Wei shan a Taip Gafair - தன்னை மாணவனாகச் சேர்த் அந்த ஆசான் இவரிடம் பெற்றோர்கள் பிறப்பதற் எப்படியிருந்தது?" இவர் பதி முடியவில்லை. நீண்டகாலம செய்துகொண்டேயிருந்தார், ! தனது ஆசானிடம் சென் முடியவில்லை தயவு செ
கூறுங்கள்” என்றார். ஆசான்

Tub 25
வடைதல் (ஞானம்) akening/enlightenment)
னமோ, படிப்படியாக வந்தடைவ லுெம் விழிப்புணர்வும் ஞானமும்
- போதிதர்மர்
ளக்காக இரு.??
- புத்தர்
/en என்ற சென் துறவி பல இருந்தும் அவருக்கு ஞானம் ண்கள் இறந்த பின்பு புதியதொரு ர்நிலையாகவிருந்தது.
g|Taoil lib (Zen master) Goggin) துக்கொள்ளும்படி வேண்டினார். கேட்ட முதற்கேள்வி "உனது கு முன் உனது முகம் ல் கூற முனைந்தார். ஆனால் ாக பதில் கண்டறிய முயற்சி பதில் கண்டறிய முடியவில்லை. று “என்னால் பதில் காண து எனக்குரிய விடையைக் "நான் என் பதிலைக் கூறினால்

Page 221
2O4a போதிதர்மர் பற்றிய
நீ உனக்கான பதிலை அறியலாம்” என்று வினவின ஆசான் உதவ மாட்ட
மனமுடைந்து துறவற வா ஒதுங்கி விவசாயத்தில் ஈடுப
ஒரு நாள் பயிரிடுவதற்க மூங்கிலினால் கிண்டிக் கிள கொண்டிருக்கும்போது ஒ( அந்த மூங்கிலில் வெடிப்டை விட்டது. அந்தத் துவாரத்தி காற்று உள்ளே நுழைந்தபோ ஏற்பட்ட இசை இவருக்கு: விழிப்புணர்வை ஏற்படுத்தி பெற்றோர்கள் பிறப்பதற்கு முகம் எப்படியிருந்தது என் குரிய விடை மின்னல்பே மனதில் தோன்றியது.
இவர் தனது ஆசானி பதிலைக் கூறினார். ஆனா கொள்ளவில்லை. ஏன்? தனக்குத்தானே பொறுப்ெ 56blood udoodu (Own Nature காகவே ஆசான் இவரை செய்துள்ளார். இதையே ட இரு என்றார். ஞானி கைவிடப்பட்டு தனித்திருந் பிற்காலத்தல் மிகப்பெரும்
*உன் இயல்புத் தன்ை
ஒரு நிகழ்வு:
Hsiang yen 356öT GF Lirie35 மனிதர் தனது பற்களால் தொங்கிக்கொண்டிருந்தார். எதையும் பிடித்துக்கொண்டி

அற்புதமான விஷயங்கள்
எப்படி ார். தனக்கு
Trij GT6OT (, ழ்விலிருந்து
ட்டடார்.
ாக நிலத்தை றி தூய்த்துக் ந சிறு கல் I/ I ஏற்படுத்தி И. ன் ஊடாகக் I) து திடீரென (N. , த் திடீரென |\ நியது. உன் முன் உனது ற வினாவிற் ால் இவரது
டம் சென்று தான் கண்டறிந்த ால் ஆசான் இவரைச் சேர்த்துக் இவர் UIoo Juub சாராது படுத்து தனது சொந்த இயல்புத் கண்டறிய வேண்டுமென்பதற் த் தூர விலக்கிப் பக்குவப்படச் த்தர் உனக்கு நீயே ஒளிவிளக்காக Hsiang yen 6T6i) G36) fTJTrT6Jj lib தபோதுதான் ஞானமடைந்தவர். சென் ஆசான் ஆனார்.
மயைக் கண்டறி.??
- போதிதர்மர்
ளுக்குக் கூறினார்: “ஒரு நாள் ஒரு மரக்கிளையொன்றில் கவ்வியபடி
அவரது கைகளோ, கால்களோ நக்கவில்லை. மரத்துக்குக் கீழ்நின்ற

Page 222
எஸ். கு(
ஒரு மாணவன் மரத்தில் த்ெ பார்த்துக் கேட்டார். “ஏன்
சீனா வந்தார்?” வாயைத் திற வீழ்ந்து பலத்த காயத்துக்கு “மரத்தில் தொங்குபவர் எப்படி என்று கூறுங்கள்’ என்று
சீடர்களிடம் கேட்டார்? H தொங்கிக்கொண்டிருப்பவரை ஏற்கெனவே கீழே இறங்கியவை என்று மிக்க பணிவுடன் கேட்
சென் ஞானிகளும் 8 பெரும்பாலும் கேள்விகளாக முடியாத கேள்விகளைக் கேட்டு இனிமேல் சிந்திப்பதற்கு எது சிந்திக்கச்செய்வதே சென் ஞான
ஒரு நிகழ்வு:
ஒரு துறவி தெருவில் ந இறைச்சி வியாபாரி தனது இறைச்சி (meat) நல்ல தரமா துறவியின் காதில் விழுந்தது. விழிப்புணர்வையடைந்துவிட்டா அங்கு என்ன நடந்தது என்பே
Kung-an 3,015).sogi "alsT60. நேரம், பயிற்சி என்று எதுவுே ஞானமும் திடீரென ஏற்படக்சு
ஒரு நிகழ்வு: *
13-ஆம் நூற்றாண்டில் வாழ் chou) விடம் ஒரு துறவி "நா sin, quLuGOTGJIT (Nature of awakenin ஞானி "ஆம்" என்றார். பிற விழிப்புணர்வடையுமா? என்று அந்த ஞானி "இல்லை” என்றார் “உங்கள் பதில்கள் முரண்பாட

UIgbib 12O5
ாங்கிக் கொண்டிருப்பவனைப் பாதிதர்மர் இந்தியாவிலிருந்து ந்து பதில் கூறினால் நிலத்தில் ாளாக வேண்டும். எனவே பான யுக்தியில் பதிலளிக்கலாம் ஞானி கேள்வியாக மற்ற Tou என்ற சீடன் “மரத்தில்
விட்டு, மரத்திலிருந்து ரப் பற்றி முதலில் கூறுங்கள்”
LIT60T.
டர்களினதும் உரையாடல் வே இருக்கும். பதில் காண சிந்தனையைத் தூண்டிவிட்டு /வும் இல்லை என்றளவுக்கு ரிகளின் யுக்தியாகும்.
டந்து செல்லும்போது ஒரு வாடிக்கையாளருக்கு “இந்த னது” என்று கூறுவது அந்தத்
அந்தக் கணத்திலே அவர் ர். ஆனால் அந்த வியாபாரிக்கு த தெரியாது.
மடைவதற்கு இடம், காலம், 'ம இல்லை. விழிப்புணர்வும் டியதே!”
35 GOFGöTG5ITGof? FIT-GSFGMT(Chao ப்களும் விழிப்புணர்வடையக் )?” என்று கேட்டார். அதற்கு தொரு துறவி “நாய்களும் ஆச்சரியத்துடன் கேட்டார்.
இந்தத் துறவி தொடர்ந்தார். க இருக்கின்றனவே!” ஞானி

Page 223
2O6a போதிதர்மர் பற்றிய
"கேள்வி கேட்டவர்களின் 1 என் பதில்கள் அமைந்தன.
being) oslgluorioloollusi சார்ந்ததாகவே “ஆம்” என்று பெற்றவர் அந்தப் பாதை தெளிவாகிறது. "இல்லை” எ என்ற பதிலைப் பெறுவதற் தடையாக உள்ளது” என்றா
ஒரு நிகழ்வு:
ஒரு "சென் பெண் துறவி இருந்தார். பிரார்த்தனை, ஈடுபட்டும், சென் "கோன்கை ஞானம் கிட்டவில்லை.
ஒரு நாள் பானையி வரும்போது பானை கைதவ பானை உடைந்த அந்த சத் மனதை ஊடுருவிக் கடந்தது. விழிப்புணர்வைக் கொடுத்து விட்டது.
சில துறவிகள் "கொ புணர்வடைந்து ஞானமை வாய்விட்டுச் "சிரிக்கும்போது முதலாவது சீடனான ம "சிரிக்கும்போது ஞானமடை போதும், சில துறவிகள் 4 சிலர் உணவிருந்தும்போதும் நிலத்தில் வீழ்ந்த 'சத்தத்ை திருக்கிறார்கள்.
ஒருவர் படிப்படியாக என்று போதிதர்மரே முதலி பெளத்தம் அதையே தனது

அற்புதமான விஷயங்கள்
னநிலையைப் பொறுத்துத்தான் ஒவ்வொரு உயிரினமும் (every
கூடியனவே என்பதால் அது பதிலளித்தேன். அப்பதிலைப் பிலே பயணிக்கிறார் என்பது *ற பதிலைப் பெற்றவர் "ஆம்" த அவரது மனமே அவருக்குத்
பி நீண்ட காலமாகத் துறவறமாக தியானம் போன்றவற்றில் |ள மனனம் செய்தும் இவருக்கு
ல் நீர் மொண்டு கொண்டு றி நிலத்தில் வீழ்ந்து உடைந்தது. தம் நிசப்தமாக இருந்த இவரது
அந்தத் தீடீர் சத்தம் இவருக்கு ஞானமடைய ஏதுவாக அமைந்து
ட்டாவி விட்டபோது விழிப் டந்துள்ளனர். சில துறவிகள்
ஞானமடைந்துள்ளனர். புத்தரது கா காசியப்பா வாய்விட்டுச் ந்தார். சில துறவிகள் அழும் றுக்கி நிலத்தில் "விழும்போதும்,
அவர்களது சாப்பாட்டுத் தட்டு தக் கேட்டதும் ஞானமடைந்
gradual) ஞானம் அடைவதில்லை கூறினார். சென்’ மதம், சென்' அஸ்திவாரமாகக் கொண்டுள்ளது.

Page 224
அத்தியா
ஞானிகளைப் ை என்கிறார்கே
ஞானியும், பைத்தியக்கா செல்கிறார்கள். மனதிற்கு பார்க்கும்போது மனதுடன் வாழ் தெரியும். அவர்களது செய்கையி மனதுக்கு உட்பட்ட செயல்களாக
ஞானியின் “மணம் உயர்ந்து செல்கிறது. பைத்தியக்காரணி மனதுக்கு அப்பால் செல்கிறது. *வெறுமை? 66000. gQg உயர்வடைகிறது. ஒரு பைத் நிலையடைகிறது, அவர்களது காரத்தனமாகத் தெரியும். “உய நடவடிக்கைகளில் வித்தியாச வெறுப்பு அற்ற நிலை அா இருந்தாலும் அவையெல்லா அவர்களைக் கட்டுப்படுத்த அவ இல்லை. அதனால் ஞானியும்,
கிழக்கத்தேய நாடுகள் தொழில்நுட்ப, விஞ்ஞான வ கின்றன. அதனால் மேற்கத் நாடுகளுக்குச் சென்றால் முக் தொழில்நுட்பம், விஞ்ஞானம் ஆ பற்றவராக இருந்தாலும் மேற்

பம் 26
பத்தியக்காரர் ள!. ஏன்?
ரனும் மனதிற்கு அப்பால் அப்பால் சென்றவர்களை பவர்களுக்கு வித்தியாசமாகத் ல் சாதாரணநிலை இருக்காது. 5 இருக்காது.
சென்று மனதுக்கு அப்பால் வின் "மனம்" கீழே சென்று மனதுக்கு அப்பாலுள்ள நிலை ஞானியின் * 66000 • தியக்காரனின் நிலை கீழ் செய்கைகள் பைத்தியக் ார்நிலையும்”, “கீழ்நிலையும்? ம் இருந்தாலும் விருப்பு, வ்கேயிருக்கும். எதுவாக ம் துச்சமாகத் தெரியும். ர்கள் மனம்? அவர்கள் வசம்
விசரனும் ஒன்றே.
மேற்கத்தேய நாடுகளை ார்ச்சி நாடுகளாகப் பார்க் தேயவர்கள் கிழக்கத்தேய யத்துவம் அடைகிறார்கள். கிய துறைகளுடன் தொடர் கத்தேயவர்கள் எவராகிலும்

Page 225
208 a போதிதர்மர் பற்றிய
கிழக்கு சென்றால் சகலகல படுகிறார்கள். இந்தக் க விஞ்ஞான வளர்ச்சி நாடு ஏற்படுகிறது.
கிழக்கத்தேய நாடுகள் விஞ்ஞான செல்வத்திற்கு கையேந்துகின்றன. மேற்க நாடுகளிடம் “யோக" (Yoga), (Tai-chi), o ostlцJпL"Laho (Shiate செல்வத்துக்காகக் கையேந்து போட்டிபோட்டுக்கொண்டு 6 வாழ்க்கை முறைகளாலும் ! மனச்சிதைவு, விரக்தி இவை ஆறுதல் வழிகளை நாடுகிறா ரிஷிகேசையும், திபெத்தில் இமயமலைச்சாரலையும், சீ6 மடாலயங்களையும் நாடி கேட்கிறார்கள். ஆன்மிகப் ப அதனால் கிழக்கை ஆன்மிக நாடுகள் பார்க்கின்றன. அத் போன்ற நாடுகளில் பிரபல்யா LDCU.5gol (Herbal and O அக்கியூபஞ்சர் சிகிச்சைை (Alternative treatment) (Suppgo உடலுக்கும் ஆரோக்கிய சிகி நிற்கிறது. யோகாவும், தியா மேற்குலகில் பிரபல்யமாகிc தியான முறைகள் மேற் கொண்டேயிருக்கின்றன.
கிழக்கை ஆன்மிக நாட வரும் கிழக்கத்தேயர்களு போன்றவைகளில் பயிற்சியும் நிலை, கர்மா?வைப் பற்றிய மேற்கத்தேயக் கணிப்பும் த யோகா, தியானம் போன்ற கிழக்கத்தேய ‘சுவாமிமார்

அற்புதமான விஷயங்கள்
T வல்லவனாகத்தான் பார்க்கப் ணிப்பு தவறானது. காரணம் கெளிலிருந்து வருவதால் இது
மேற்கத்தேய நாடுகளிடம் தம், பொருட்செல்வத்திற்கும் த்தேய நாடுகள் கிழக்கத்தேய *தியானம் (Meditation), 'ராய்-சி? su) போன்ற 'உள? ஆரோக்கிய கின்றன. மேற்கே நேரத்துடன் வாழ்வதாலும், இயந்திர மயமான மனஇறுக்கம், மன உளைச்சல், வகளிலிருந்து மீள்வதற்காகப் பல ர்கள். உதாரணமாக இந்தியாவில் தர்மசாலாவையும், நேபாளத்தில் எாவிலும், ஜப்பானிலும் "சென்? ஆன்மிகப் போதனைகளைக் யிற்சிகளை மேற்கொள்கிறார்கள். செல்வந்த நாடுகளாக மேற்குலக ந்துடன் கிழக்கே இந்தியா, சீனா மாக உள்ள மூலிகை எண்ணெய் il treatment) & 5&oofoou Jub யயும் மாற்று வைத்தியமாக கம் பார்க்கிறது. உள்ளத்துக்கும், ச்சை இடமாகக் கிழக்கு உயர்ந்து னமும் இடம்பெறும் மையங்கள் ன்றன. கிழக்கத்தேய யோகா, »Ga5 S_u JV S_u JV . GleFoörg)
ாகப் பார்ப்பதால் மேற்குலகத்துக்கு ருக்கு யோகா, தியானம் *ஆன்மா, மரணத்துக்கு அப்பால் விளக்கமும் இருக்கிறது என்ற வறானது. மேற்குலகில் நிலவும் வற்றுக்கான வறுமை நிலையைக் கள் தங்களுக்குச் சாதகமாக

Page 226
எஸ். கு(
பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
ஆன்மிகமாகவே மேற்குலகத் சுவாமிகள் ‘டாலர் மீது?
சொகுசு ஹோட்டலில் தங் சொகுசு வாகனத்தில் உல்லா பழரசம், சமவிகித உணவு, வாசம் செய்தல் போன்றவற்றி இந்த Corporate சுவாமிகள் கிளைகள் திறக்கும் தொ இவர்களின் முக்கிய போத6 என்பதாகும். இவர்கள்
நியாயமானதாகத் தெரிகிறதா?
"எளிமையாக வாழுங்கள் 'உணவை ஒறுத்துங்கள்’ எ வழங்குகிறார்கள். அடியார்கள், தங்களை வருத்தி உணவு கடைப்பிடித்து, விருப்பத்திற்கு அணிந்து, சில தினங்கள் . இருப்பதை ஆன்மிகமாக நி உடையிலும், எளிமையிலும் தெய்விகத்திற்கான பாதை இது வழிமுறைகள் இவைதான் ஏழ்மையில் வாழும் மக்கள் அந்த வரைவிலக்கணத்திற்குள் உண்ண உணவில்லாமல் விர தினமும் கந்தையான எளிமை பொழுதுகள் கொண்ட இந்த இன்னும் ஏன் கிடைக்கவில்ை பிறக்கும்போதே ஆன்மிகவா போலித்தனமில்லை, அவர்க உண்மையாகவே இயல்பாகவல் ஏழை மக்களிடம் சென்று பெறுவதில்லையே! ஆனால் தங்கள் ஆசிரம வலையை ஏ விரித்து அந்த மக்களைத் தங்களு
தங்கள் வங்கிக்கணக்கை உயர்த்

பாதம் 1209
கிழக்கிலிருந்து வரும் சுவாமியை தில் பார்க்கிறார்கள். இந்தச் தியானமாக இருக்கிறார்கள். குவது, சொகுசு பிரயாணம், Fம் செய்வது, நேரம் தவறாத குளிரூட்டப்பட்ட அறையில் ல் கவனம் செலுத்துகிறார்கள். உலகம் பூராவும் வருமானக் ாழில் அதிபர்களாகின்றனர். னை ஆசையைத் துறவுங்கள்’ சொல்வது இவர்களுக்கே
, “எளிய ஆடையணியுங்கள், ான ஆன்மிக ஆலோசனை பக்தர்கள், பின்பற்றுபவர்கள் வை நிராகரித்து, விரதம் மாறாக எளிய ஆடைகளை தூங்காமல் கண் விழித்தும் னைக்கின்றனர். உணவிலும், ஆன்மிகம் தங்கியிருக்கிறதா? தான், ஆன்மிகப் பண்புக்கான என்றால் இந்த உலகத்தில் இயல்பாக, இயற்கையாகவே வந்துவிடுகிறார்கள். தினமும் தம் அனுஷ்டிக்கும் வாழ்வு, ஆடைகள், தூங்காமல் கழிக்கும் மக்களுக்குத் தெய்வதரிசனம் 0? அப்படியானால் இவர்கள் கள் ஆயிற்றே! இவர்களில் ர் வேடம் போடவில்லை, லவா வாழ்கிறார்கள். இந்த ாரும் ஆன்மிக ஆசீர்வாதம் இந்த Corporate சுவாமிகள் ழை மக்கள் வாழும் பக்கம் கு மூலதனமாகப் பயன்படுத்தி, திக்கொள்கிறார்கள்.

Page 227
21 oa போதிதர்மர் பற்றிய
இந்த ஆன்மிகக் கொம் தேடும் மேற்கத்தேயர்களது அவர்கள் கிழக்கத்தேய ந நாடுகளாகப் பார்ப்பதால் பிரகடனப்படுத்தியவர்களது . தனம் மேற்கில் அரங்கேறுகிற நாடுகள் நூற்றாண்டுகளா மேற்குலகத்தினரால் அடிமைட் அந்த வெள்ளைக்காரரைப் சந்ததியாக ஒருவரிலிருந்து கொண்டே வருகிறது.
வருகிறார்கள் என்பது முக்கி
இனம், மொழி, நி வித்தியாசங்களைக் கடந்து அறியாமை ஒன்றுதான். அறியாமையும் எப்பொழுது ஆரம்பம் இல்லை ஆனால் கெளதமபுத்தர். உலகம் பூரா எல்லாம் திசை மாறிக்கொண்
சோக்கிரடீஸ், கெளதமட லா-கு, இயேசுநாதர், திலோ சிரிப்புப்புத்தர், சைதன்ஜர் ே அண்மைக்கால இராமகிரு வீர்டிபாபா, இரமணமகரிஷி வாழ்ந்த காலத்தில் பைத்தி தூற்றப்பட்டவர்கள். மிக கொண்டனர். இவர்கள் எல் என்றும், யோகிகள் என்றும், யான இருப்பியல்வாதிகள் மெய்ஞானிகள் என்றும் ே படுகின்றனர்.
மானிடப்பிரக்ஞை வள சுய அனுபவத்திலிருந்து மக் இவர்கள் இறந்தகால, எதி மனப்பிரபஞ்சங்களையும்

அற்புதமான விஷயங்கள்
பனி சுவாமிகள் மன ஆறுதல் மனதில் இடம்பெறுகிறார்கள். ாடுகளை ஆன்மிக செல்வந்த தங்களைச் சுவாமிகளாகப் டங்களை வணங்கும் முட்டாள் து. இலங்கை, இந்தியா போன்ற 5 வெள்ளைநிறம் கொண்ட படுத்தப்பட்டிருந்த காரணத்தால் போற்றும் அடிமைமனம் சந்ததி மற்றவருக்கு கடத்தப்பட்டுக் இதனால் “வெள்ளைக்காரரும்’ ப கவர்ச்சியாக மாறுகிறது.
றம், மதம், நாடு என்ற எல்லோருக்கும் பொதுவானது இருட்டு இருப்பது போலவே Iம் இருக்கும். அறியாமைக்கு முடிவு இருக்கிறது என்கிறார் வும் ஆன்மிக நோக்கம், பார்வை, டே செல்கிறது.
த்தர், மஹாவீரர், பட்டினத்தார், பா, தியோஜினிஸ், போதிதர்மர், பான்ற மகான்கள் காலத்திலிருந்து ஷ்ணர், சூஃபி (suf) ஞானி இவர்கள் அனைவரும் அவர்கள் யக்காரர்கள் என்று மக்களால் சிலரே அவர்களைப் புரிந்து ாம் இறந்தபின் தத்துவஞானிகள்
மகான்கள் என்றும், உண்மை என்றும், தெய்விகமானவர்கள், பாற்றப்படுகின்றனர், வணங்கப்
ச்சியின் சகல அம்சங்களையும் ளுக்குக் கூறியவர்கள் ஞானிகள். ாகால உலகங்களைக கடநது ாண்டி எல்லையற்ற நிரந்தர

Page 228
ooto. (g
Zo 6O 6OD 5 ஒவ்வொருவரு கண்டுணர்ந்தவர்கள். இ6 கதவைத் திறப்பதற்கான அளித்துச் சென்றுள்ளாார்க சாராமல் தங்கள் சுய த உண்மையையும் தங்கள் சுய பகிர்ந்துகொண்டவர்கள்.
பட்டினத்தார் வசதிகள் உள்ள ஆடைகளிலும் பெரும் ஒட்டையும் துறந்தார், ஆட பைத்தியக்காரன் என்ற பெ ஆடினார், பாடினார், சிரித்தா என்றனர். வீரடிபாபாவைட திலோபாவைப் பைத்தியக்கார கைதட்டினார், சிரித்தார் பைத்தியக்காரன் என்றனர். சிரித்தார்-பைத்தியக்காரன் என் தர்க்கவியல் சார்ந்தவராக வித் பைத்தியக்காரன் என்றனர். ே என்றனர். சீனஞானி லா-சூ அவரால் அரசுடன் ஒத்துப் மாட்டில் ஏறிச் சீனாவைவி சென்றார். சோக்கிரடீஸுக்கு உண்ணக் கொடுத்து கொ சிலுவையில் அறையப்பட்ட கொலை முயற்சி நடந்தது பெரும்பகுதி காலம் அபிமானிகளே புத்தரைத் தவ
இஞ்ஞானிகள் எல்லாம் த தண்டனை பெற்றார்கள், ஏற்றுக்கொண்டார்கள், நிந்தி புன்முறுவலுடன் அமைதியாக இவர்களைத் தொடர்ந்து நிந்தி
சோக்கிரடீஸ், புத்தர், மதி புத்தர், போதிதர்மர், நபிகள்

ருபாதம் l1211
b தாமே அனுபவத்தில் ார்கள் அந்த நிரந்தர உலகக் அனுபவசாவியை மக்களுக்கு ஸ். இவர்கள் எந்த மரபையும் ரிசனத்தில் தாங்கள் கண்ட அனுபவங்களையும் மக்களுடன்
எல்லாம் துறந்தார், உடலில் பகுதியைத் துறந்தார், சாப்பாட்டு டினார், பாடினார், சிரித்தார். பரையும் பெற்றார். சைதன்யர் ார். அவரையும் பைத்தியக்காரன் பைத்தியக்காரன் என்றனர். ான் என்றனர். இராமகிருஷ்ணர் ஆடினார், பாடினார் - சிரிப்புப் புத்தர் ஹொடாய் ாறனர். சோக்கிரடீஸ் அறிவியல், தியாசமான ஆளாக இருந்தார் - போதிதர்மரைப் பைத்தியக்காரன் வை பைத்தியக்காரன் என்றனர். போக முடியவில்லை. எருமை ட்டு இந்தியாவுக்குத் தப்பிச் 5 மரண தண்டனையாக விசம் "ல்லப்பட்டார், இயேசுநாதர் ார், புத்தருக்குப் பல தடவை அவர் இருந்த காலத்திலே ந்ெதிக்கப்பட்டார், புத்தரது றாகப் புரிந்துகொண்டனர்.
ாங்கள் செய்யாத குற்றங்களுக்குத் அவற்றைப் புன்முறுவலுடன் க்கப்பட்டார்கள். அவற்றையும் ஏற்றுக்கொண்டார்கள், அதனால் க்க முடியாமல் போய்விட்டது.
றாவீரர், இயேசுநாதர், சிரிப்புப் நாயகம் போன்றோர்களைப்

Page 229
212a போதிதர்மர் பற்றிய
பெற்றெடுத்த சமுதாயம் ஆ ஒப்புக்கொள்ளவில்லை, கண் படுத்தப்பட்டார்கள். ஆன இருந்தார்கள், தங்கள் பாை அவர்கள் நடந்த பாதை
மாறியது. அஞ்ஞானிகளை 6 வாழ்க்கை பற்றிய (ԼՔ சென்றுள்ளார்கள். ஒவ்வொரு அறியத் தங்களுக்குள் உள் என்பதை அறிந்துகொள்ள முயற்சியற்ற முயற்சியைக் க என்பதை அறிய உங்களுக்குள் உள்ளே செல்லச்செல்ல நீங்க விடுவீர்கள் என்றனர்.
தங்கள் சொந்தச் சுயதரி உண்மையாகச் சொன்ன ( உண்மையாக இருந்தவர்கள். ஆதாரமாகக் காட்டவில்லை, தாங்கள் கூறும் கருத்துக் காட்டுகிறது. ஆட்டம் கொ களுக்கு நிலைநிறுத்த அ அத்தகையவர்கள் சொந்தக் குரலில் பேசுகிறார்கள். ஆன குரலில் பேசினார்கள்.
சோக்கிரடீஸ் கொல்லி இயலாது. இயேசுவைச் சிலு மாற்ற இயலுறது. மகாவீர ஆனால் மாற்ற இயலாது. பு: 6.ELDITs, (Food Poison) LDITD நபிகள் நாயகத்துக்கு எதிராக மாற்ற இயலாது. லா-கு அ சிறையில் அடைக்கலாம், பட்டினத்தாருக்குக் கழுவே ஆனால் மாற்ற இயலாது. இரமணமகரிஷி தாக்கப்பட6 மன்சூரைக் கொடுமைப்

அற்புதமான விஷயங்கள்
அவர்களைத் தீர்க்கதரிசிகளாக டிக்கப்பட்டார்கள், அவமானப் ால் அவர்கள் தாங்களாகவே தயில் நடந்தார்கள். எனவே மற்றவர்களுக்குப் பாதையாக பழிபடத் தொடங்கிவிட்டார்கள். க்கிய வினாவை விட்டுச் வரும் தான் யார்? என்பதை பிரயாணம் செய்து தான் யார் வேண்டும், அதை அடைய ாட்டியுள்ளார்கள். நீங்கள் யார்? T உள் பிரயாணம் செய்யுங்கள். ள் வெறுமையாகி பிரபஞ்சமாகி
சனத்தில் கண்ட உண்மைகளை ஞானிகள் இவர்கள், என்றும் மேற்கோள்களைத் தங்களுக்கு காரணம் ஆதாரங்களை தேடுவது களில் நம்பிக்கையின்மையைக் டுக்கும், நிலையற்ற போதனை ஆதாரம் தேவை, காரணம் குரலில் பேசவில்லை, இரவல் ால் இந்த ஞானிகள் சொந்தக்
]ப்படலாம், ஆனால் மாற்ற வையில் அறையலாம், ஆனால் ரை சித்திரவதை செய்யலாம், ந்தருக்கு போதிதர்மருக்கு உணவு லாம், ஆனால் மாற்ற இயலாது. ப் போர் தொடுக்கலாம், ஆனால் வர்களை ஏளனம் செய்யலாம்,
ஆனால் மாற்ற இயலாது. 1ற்ற தண்டனை வழங்கலாம், இராமகிருஷ்ணர், சீரடிபாபா, ாம், ஆனால் மாற்ற இயலாது. படுத்தினார்கள், சித்திரவதை

Page 230
σΙοίο. Θ5
செய்தார்கள், அவர் சிரித்துக் மாற்ற முடியாது. இயேசுவை மன்னிக்கும்படி இறைஞ்! செய்கிறார்கள் என்பதை s இச்சிறுபிள்ளைகளை இரட்சி இவரை மாற்ற முடியாது. { பட்டினத்தார், புத்தர், நபிக சீரடிபாபா, இராமகிருஷ்ணர், உறுதி அவர்கள் கண்ட உண்டு சுயதரிசனத்திலிருந்தும் ஏற்பட்ட சில மகான்கள் சில யோகிகள் வாழ்ந்தவர்கள். ஆனால்
மகான்களைப் பற்றி எதுவு குறிப்பிடவில்லை. இவர்க தங்கள் போதனைகளில் குறி பின்பற்றுபவர்களும் வெவ்6ே ஒருவரை ஒருவர் புரிந்துே மதப்பூசல்கள், மதச்சண்டைகள் இருந்திருக்கும். ஞானிகள், ! பிற ஞானிகளைப் பற்றியும் புரிந்துணர்வை வளர்க்கும். நூல்களில் பிற மதபோதனை sobrublast UotioIUITG5th (Religiou
சமணமதத்தின் முதல் தி இந்துக்கள் போற்றும் ரிக்ே வேண்டும். ஏனெனில் இந்து ரிஷிபதேவரைப் பற்றி புகழா ஓஷோ குறிப்பிட்டதை (இந்நூலாசிரியருக்கு) உண்டு இன்னொரு ஞானியை ஏ பண்பாட்டை அதற்கு பி முடியவில்லை.
ஞானிகளை, மகான்க6ை புறக்கணித்து, நூற்றாண்டுகளு அறிந்து போற்றுவதை விட, அ

ருபாதம் 1213
கொண்டே இருந்தார். ஆனால் * சிலுவையில் அறைந்தவர்களை சினார். “தாங்கள் என்ன அவர்கள் அறிந்திருக்கவில்லை, த்து அருளும்படி” கேட்டார். இயேசு, மன்சூர், போதிதர்மா, ர் நாயகம், மகாவீரர், லா-சூ, இரமணர் போன்ற ஞானிகளின் மையின் சுயசாட்சியத்திலிருந்தும், தாகும். இங்கே குறிப்பிட்டுள்ள சில ஞானிகள் ஒரே காலத்தில் அவர்கள் தங்கள் சமகால ம் தங்கள் வாழ்நாட்களில் ள் ஒருவரை ஒருவர் ஏற்றுத் ப்பிட்டிருந்தால், இவர்களைப் வறு பிரிவினராக இருந்தாலும் கொள்ள முயன்றிருப்பார்கள். , மதப்போர்கள் அற்ற உலகமாக மகான்களைப்பற்றிய நூல்களில் சேர்த்து எழுதுவது பிறமதப் மதபோதனைகளை எழுதும் Iகளையும் சேர்த்து எழுதுவது S ethical values).
ர்த்தங்காரரான ரிஷிபதேவர், வத காலத்தில் வாழ்ந்திருக்க மத ரிக்வேதத்தில் சமணமத ர்ந்த குறிப்புக்கள் இருப்பதாக வாசித்த ஞாபகம் எனக்கு
அதே காலத்தில் வாழ்ந்த ]று அவரைப்பற்றிக் கூறும் ன்பு எக்காலத்திலும் காண
" அவர்கள் வாழுங்காலத்தில் நக்குப் பின்பு "உண்மையை” வர்கள் வாழுங் காலத்திலேயே

Page 231
214a போதிதர்மர் பற்றி
அவர்கள் அறியப்பட வே உணர்ந்துகொள்ளும் தெளில் வளர்த்துக்கொள்ள வேண்டு
உலகில் இருக்கும் நோக்கினால் அவைகள் போன்றவர்களால் வழிநட Einstein, Edison, Darwin, போன்றவர்களைச் சமூகம் ஏதாவதொரு வித்தியாசம் 6 சமூகத்திலோ, புதுக் கண்டு எப்போதும் எங்கேயும் : சமூகம் கூறும் பைத்தி நிகழ்ந்திருக்கும் எனலாம். வர்களில்லை.

அற்புதமான விஷயங்கள்
ண்டும். அதற்கான உண்மையை வயும், விழிப்புணர்வையும் நாம்
).
சகல மதங்களையும் உற்று எல்லாம் பைத்தியக்காரர்கள் த்தப்பட்டுள்ளன. விஞ்ஞானிகள் 3alileo, Copernicus, Archimedes பைத்தியக்காரராகப் பார்த்தது. விஞ்ஞானத்திலோ, ஆன்மிகத்திலோ, பிடிப்புகளிலோ, புதுமைகளிலோ உணரப்பட்டிருந்தால் அவைகள் யக்காரர் போன்றவர்களாலே ஏனெனில் அவர்கள் போலியான

Page 232
அத்திய
golf all"L
(Aura
ஞானிகளின் தலையைச் ஒளிவட்டம் (Aureole) இருப் அவர்களின் உருவப்படங் வரைந்திருப்பார்கள். இந்த வட்டத்திற்கு இப்போது விஞ் ரீதியான விளக்கம் கூறப்படு சோவியத்யூனியனில் வசித்த த மேதையும் விஞ்ஞானியு கிர்லியான் (Kirian) ஒரு க( வைக் கண்டுபிடித்தார். அத
撥
விலங்கினங்களை, மரம், ெ தனது பொழுதுபோக்காக பட மனிதர்கள், விலங்கினங் எல்லாவற்றிலும் மிகச் சிறிய
 

ITulib 27
ம் (தேஜஸ்) of Light)
ற்குப் - பாவிக்கும் படச்சுருளையும் (Fim) கண்டுபிடித்தார். அது எங்களது கண்களுக்குப் புலப் படாத, கண்களுக்குத் தெரி யாதவைகளையும் வெளிக் காட்டக்கூடிய சக்திமிக்க தாக இருந்தது. அவர் அந்த கமெராவால் ஆட்களை, இயற்கைக் காட்சிகளை, Fடி, கொடிகளை, மலர்களைத் ம் பிடித்தார். என்ன ஆச்சரியம்! 5ள், மரங்கள், மலர்கள் ஒளிவட்டம் கண்டார்.

Page 233
216a போதிதர்மர் பற்றிய
ஆனந்தமாக உள்ளவர்களு யும், சோகமாக மன உை சிறிதான ஒளிவட்டத்தையும் (halo) அளவில் வித்தியாசம்
இவைகளுக்கு அருகாமையில் படுக்கையில் இருப்பவர் மறைந்துவிடுகிறது என்ப பரிசோதனை செய்து கண் இயேசு, நபிகள்நாயகம், டே பல ஞானிகளின் ஒளிவட் தெரிந்தது. அவர்களின் கண்க போன்றிருந்தது. இவர்க ஏனையோரால் பார்க்க முடி
புத்தர், மகாவீரர், போ இந்துமத ரிஷிகள் போன்றே சாதாரணமானவர்களின் கன எல்லாம் தங்கள் முழுை
இருப்பில் (Being) முழுமைய
தன்னை அறிந்தவர்களு களும், முழுமையாக கடந்தவர்களுக்கும் பெரிய கண்களும் உடையவர்களாக ஒளிவட்டத்திற்குள் பிரவேசி கொடிய விலங்கினங்களும் ஆ அவர்களது ஞான ஒளிக்குள்

அற்புதமான விஷயங்கள்
}க்குப் பெரிதான ஒளிவட்டத்தை ளச்சல் உள்ளவர்களுக்கு மிகச் அவதானித்தார். ஒளிவட்டத்தின் தெரிந்தது. மரங்கள், மலர்கள், ) SAG) BNGSMVy\ \\ \ S). \DVoW\ \ களுக்கு அந்த ஒளிவட்டம் தையும் தனது கமெராவால் ாடறிந்தார். புத்தர், மகாவீரர், ாதிதர்மர் இவர்களைப் போன்ற டம் அவர்களின் சீடர்களுக்குத் 5ள் அந்த சக்திமிக்க கமெராவைப் ளின் சீடர்கள் பார்ப்பதை யாமல் இருக்கலாம்.
திதர்மர், இயேசு, நபிகள்நாயகம், ார்களின் கண்களுக்குத் தெரிவது ண்களுக்குத் தெரியாது. இவர்கள் மயில் இருப்பவர்கள். தங்கள் பாக, ஆழமாக இருப்பவர்கள்.
iம், சுயவிழிப்புணர்வு உள்ளவர் இருப்பவர்களும், தங்களைக் ஒளிவட்டங்களும், சக்திமிக்க க் காணப்பட்டனர். அத்தகைய ப்பவர்களும் மாற்றமடைந்தனர். அவர்களுக்கு முன் அமைதியாகின.
எல்லாம் கட்டுப்பட்டன.

Page 234
விதிமுறைகள் இல் இந்த ஞானிகளின்
(Living without any precepts of the fo

ib 2
Glorg வாழ்வதே * விதிமுறைகள்
precepts are the lowing Saints)

Page 235
அத்திய
6Na.mpTLITLIů (Hotei) மனதை ஒருமைப்ப விழிப்புணர்வை
இவர் ஜப்பானைச் சேர்ந்த ஒரு சென் பெளத்த ஞானி (G). L9). 16ஆம் நூற்றாண்டு). விதிமுறைகள் இல்லாதிருப்பதே . இவரது விதிமுறையாகும். சென் மத ஞானிகள் பெரும் பாலும் சொற்கள் எதுவும் பயன்படுத் தாது முயற்சியற்ற முயற்சி யால் விழிப்புணர்வை ஏற் படுத்தியவர்கள். சென் மதத் துறவிகள் தங்களுக்குள் விடை எளிதில் காணமுடியாத வினாக் களைத் தொடர்ந்து விவாதி இயக்கிக்கொண்டேயிருப்பார்க உற்சாகமாகவும் வைத்திருட் மாத்திரம்தான் தங்கள் உண பணம் கையாளாதவர்கள், யாசித்து உண்பவர்கள், விழ இடத்தில் நிலைகொள்ளாது இன்று இந்நிலை சற்று மாறி
சென் (Zen) பெளத்த ம எப்படி மனமற்ற நிலையைப்

Tuulib 28
- சிரிப்பால் மக்கள் டுத்தியவர் சிரிப்பால் த் தூண்டியவர்
த்து மூளையைச் சுறுசுறுப்பாக ள். அதே நேரத்தில் உடலையும் பார்கள். இரண்டு அங்கிகள் டமைகளாக கொண்டவர்கள். யாசகர்களாக வாழ்பவர்கள், ப்ெபுணர்வு மிக்கவர்கள். ஒரே ஊர்ஊராகச் சஞ்சரிப்பவர்கள். விட்டது.
தத்தின் முழுச்செயல் முறையுமே பெறுவது என்பதுதான். சிரிப்பு

Page 236
எஸ். கு(
அதை அடைவதற்கான மிக ஞானி ஹொடாய் இந்தப் பா அந்தப் பாதையை மக்களுக்கு
சென்மத ஞானிகள் ெ கண்கொட்டாது பார்த்தல், (vibration) கொட்டாவி விடுதை வரைதல், நிலைமையைக் குழ மூலம் மக்களுக்குத் திடீர் விழி ஜப்பானில் வாழ்ந்த செ6 நிலைமையைக் குழப்பி திடீர்
ஹொடாய் (Hotei) அவர் விழிப்புணர்வை ஏற்படுத்திய நேருக்குநேர் பெற்றவர்கள் உணர்ந்தனர். சிரிப்பு மூலம் மாற்றியவர். சிரிப்பால் மக் அவர்களைச் சக்திமிக்கவர்கள் அத்தகைய உள் மாற்றத்தை ஏ மகான் என்பதை அறியாத ம
இந்தோனேசியாவில் வாழ் ஞானி பபக் சுடித் தன் உடல் மற்றவர்களுக்கு மாற்றுவதுணி முகம்மதியர் அவரது மார்க்கம்
ஹொடாய் ஜப்பா வாழ்ந்த மிகப்பெரும் சென் ( பெளத்த ஞானி. இவர் 8 கொரியா போன்ற அயல் களுக்கும் பயணித்தவர். இ மக்களால் சிரிக்கும் LH (Laughing Buddah) (6 T60] மகிழ்ச்சிப் புத்தர் (Happy Bud எனவும் அன்பாக அழைக்கப்ப அடைந்தவர் என்பதே அதன் அடைந்த பின்பே கெளதம சித்தார்த்தருக்கு முன்பும்

நபாதம் 1219
அழகிய பாதைகளில் ஒன்று. தையிலே பிரயாணம் செய்தவர். க் காட்டியவர்.
சாற்கள் அல்லாத சிரித்தல், (Staring) உடல் அதிர்தல், ஸ், (yawning) செருமல், ஒவியம் ப்பிவிடுதல் போன்ற செயல்கள் ப்புணர்வை ஏற்படுத்தியவர்கள். sTG 5 IT Gof? (mó)6ồTSFTui (Rinzai) விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். கள் மக்கள் முன் சிரித்து திடீர் மகான். இவரது சிரிப்பை தங்களுக்குள் உள்மாற்றத்தை தன் சக்தியை மற்றவர்களுக்கு கள் மனதை ஒருமைப்படுத்தி ளாக்கினார். இவரின் சிரிப்பு 1ற்படுத்தியது. இவர் தான் ஒரு
கான்.
ழ்ந்த இலத்திக்கான் (Lathihan) அதிர்வால் (Vibration) சக்தியை
ண்டு. பிறப்பால் அவர் ஒரு
3FL Jj (Subud).
னில் Zen) ισοτΠτ ாடு
வர்
ட்டார். புத்தர் என்றால் ஞானம் பொருள். சித்தார்த்தர் ஞானம் த்தர் என அழைக்கப்பட்டார்.
பின்பும் ULIJ ONO புத்தர்கள்

Page 237
22Oa போதிதர்மர் பற்றிய
இருந்திருக்கிறார்கள். அத் ஹொடாய். இவர் சொற்க தொந்தி வயிறு குலுங்கக் ( மக்கள் மனங்களைச் சி
மிகப்பெரும் ஆன்மிகஞானி.
ஊர் ஊராக, கிராமம் தெருத்தெருவாக, மூலை மு( உடல் குலுங்கக் குலுங்க வெளிப்படுத்தினார். இவரைச் இவர் சிரிக்கும் அழகைப் சிரித்தார்கள். இவர் இருக்கு மக்கள் எல்லோரும் தொற்று நாடே சிரித்தது. சொற்கள் எதுவுமில்லாமல் தன் அங்க சிரிப்பூட்டிய சிரிப்புப் புை இவருடன் சேர்ந்து சிரித்தனர் மக்கள் தங்களில் மாற்றத்தை
இறந்தவர்களைப் பார்த்து ஆட்டத்திலும் “இறந்தவர் இ விட்டார், அது இறப்பல்ல மரணத்தால் யாரையும் அழி அழித்துவிடலாம், மரணத்ை அந்தச் செய்தி இவரது அந் ஒவ்வொருவரும் கவலை வாழுங்கள் என்பதே அவரது
எப்போதெல்லாம் ‘உன் தெல்லாம் "ஆமாம் போடு வாதிகள், தர்க்கவியலாளர்கள் "உண்மை மீது தாவி ஏற அத்தகையவர்களின் முன்னிை பார்வையில் முட்டாள்தன இருக்கக்கூடும் என்று கணக்கு சிரிப்பு புத்தர். எதிர்பா
எண்ணங்கள், கருத்தியல்கள்

அற்புதமான விஷயங்கள்
தகையவர்களில் ஒருவர்தான் ள் எதுவும் பயன்படுத்தாமல் குலுங்கச் சிரித்துப் பிளவுபட்ட ரிப்பால் 'ஒருமைப்படுத்திய
கிராமமாக, நகரம் நகரமாக, டுக்கு எல்லாம் திரிந்து தொந்தி அடிவயிற்றிலிருந்து சிரிப்பை * கண்டதும் மக்கள் சிரித்தனர். பார்த்து மக்களும் மெய்மறந்து தம் அந்தச் சூழலே மாறிவிடும், றுவியாதி போலச் சிரிப்பார்கள், எதுவுமில்லாமல், போதனை i egy 605FG).IITGi) (Body language) னிதர் (Saint) இவர். மக்கள் , நடனமாடினர், குதூகலித்தனர்.
உணர்ந்தனர்.
|ச் சிரித்தார். இவரது சிரிப்பிலும் இறக்கவில்லை, அவர் ஜெயித்து அது ஒரு புதிய வாழ்க்கை. க்க முடியாது, மரணத்தையே தப்பார்த்துச் சிரியுங்கள்?? என்ற தச் சிரிப்பில் மறைந்திருந்தது. மறந்து சிரித்தனர். சிரித்து பொதுவான செய்தி.
ண்மை’ பிறக்கிறதோ அப்போ ம்ெ புத்திமான்கள், கொள்கை T எல்லாம் ஒன்றுசேர்ந்து அந்த அதை நசுக்கிவிடுகின்றனர். லயில், சிரிக்கும்போது அவர்கள் மாகவும், மடைத்தனமாகவும் ப் பார்க்கத் தெரியாதவர் இந்தச் ர்ப்புக்கள், அபிப்பிராயங்கள், ர், கோட்பாடுகள், தத்துவம்,

Page 238
எஸ். குரு
வழிமுறைகள் என இன பார்ப்பவர்களுக்குக் ஹொடாய்
வாழ்வென்றால் என்ன என்றால் என்ன? அப்பால் என்ன? என்ற கேள்வியைத் தானே கேட்டார், பதில் கிடை சிந்தித்தார், பதில் கிடைக்கவில் கேள்வியுடனே வாழ்ந்தார். தனது கேள்வியுடன் ஒரு மரத் சிந்தித்துக்கொண்டிருந்தார். கண்ணெதிரே ஒரு பழுத் மரத்திலிருந்து கழன்று காற்றில் அங்கும் இங்கும் அசைந்து அடைந்தது. கண்ணிமைக்கா இருந்தவர், பதில் கிடைத்துவிட் நடனமாடியபடி தொந்தி வயிறு அப்பொழுது சிரிக்கத் தொடங்கி மக்களும் இவருடன் சேர்ந்து சி ஒருமைப்படுத்தினார்.
ஹொடாய் போன்ற மனிதர் பிறக்கிறார்கள். அதிகளவு மக்க இருக்கவேண்டும். கோயில்க நிரப்பப்படவேண்டும். ÁRńf எல்லாவற்றையும் இழந்துவிடு பேசுவதில்லை, ஆன்மிகச் செ போதனைகள் போதிப்பதில்லை,
இவரது சிசிப்பை முக பெற்றவர்கள் ஞானநிலைக்கு உணர்ந்தனர். தன் சிரிப்பு மூல மாற்றினார். ஹொடாய் தனித்து மக்கள் கரைந்தனர். இவரது அவர்களது இருப்பை” (Bein ஞானமடைந்தவுடன் சிரிக்க ஆ சிரிக்கிறீர்கள் என்று கேட்டால் ஆரம்பித்துவிடுவார். சிரிக்க

Jngjib 1221
வகளைச் சுமந்துகொண்டு
ஒரு புரியாத புதிர்.
மரணம் நிகழ்வது தனக்குத் கவில்லை. லை அந்தக் ஒரு நாள் துக்குக் கீழ் இவர் 5 இலை அடிபட்டு நிலத்தை மல் அதைப் UITi55Ulq. -டது என்று துள்ளிக் குதித்து குலுங்கக் குலுங்கச் சிரித்தார். பவர் இறக்கும்வரை சிரித்தார். ரித்தனர். சிரிப்பால் மக்களை
இந்த உலகில் அரிதாகவே ள் அவரைப்போல் சிரிப்புடன் ள் அதிகளவில் சிரிப்பினால் Ů6oU இழந்துவிட்டால் வோம். இவர் மக்கள் முன் ாற்பொழிவு செய்வதில்லை, அவரது ஒரே மொழி “சிரிப்பு.?
ந்துக்கு முகம் நேராகப் சென்றனர். உள்மாற்றம் ம் சக்தியை’ மற்றவர்களுக்கு வமானவர். இவரது சிரிப்பில் சிரிப்பு மக்களுக்குள் தங்கி ) தூண்டிவிட்டது. இவர் ரம்பித்தார். யாராவது ஏன் மேலும் அதிகமாகச் சிரிக்க காரணமே கிடையாது.

Page 239
222a போதிதர்மர் பற்றிய
அவருடன் ցArflլյլ գl60TIT படுத்தப்பட LD[TJ5 9 - 6ð மாற்றம் நி
ஹொ நாற்பத்தை ஒன்றுதான் அவரது ( உண்மை, சிரிப்புத்தா6
இவரது உருவச்சிலை உலகம் பூராவும் வீடுகளி சீனர்கள், கொரியர், விய மத்தியில் மாத்திரமல்ல, இ இவரது உருவச்சிலை நிலை
சிரிப்பை இழந்துவிட்ட விடுவோம். நீங்கள் பொது காரணங்களுக்காகச் சிரிக்கி ரீதியாகிவிட்டது, சிரிப்புகூ சேர்ந்ததாக மாறிவிட்ட தூய்மையை இழந்துவிட்ட போலத் தூய்மையாக, எல் முடியவில்லை என்றால், பிழையிருக்கிறது என்றே : முதல் சமுதாயச்செயல் புல் தான் அழவீம் முடியும். தேவைப்படுகிறார்கள், அ முடிகிறது. ஹொடாய் ( வாய், வண்டி, தொந்தி, அ சிரிக்கும். 'குழந்தைகள்’ எ அவர் தன் வாழ்நாளில் கூ
ஒருவர் உண்மைய சிரிக்கும்போது "மனம்?
 

அற்புதமான விஷயங்கள்
சேர்ந்து சிரித்தவர்கள் அந்தச் ல் வளம்பெற்றனர், தூய்மைப் டனர். தங்களுக்குள் வித்தியாச rர்ந்தனர். அவர்களுக்குள் உள் கழ்ந்தது. டாய் அவர்கள் ஞானமடைந்தபின் ந்து வருடம் செய்தது ஒன்றே
அதாவது “சிரிப்பு.? சிரிப்புத்தான் செய்தி, சிரிப்புத்தான் அவரது சிரிப்புத்தான் அவரது ஆன்மிகம், ன் அவரது மறைநூல்.
ஜப்பானில் மட்டுமல்ல இன்று ல் உள்ளது. ஜப்பானியர்கள், ட்னாமியர், தாய்லாந்து மககள் லங்கையர், இந்தியர் மத்தியிலும் த்துவிட்டது.
டால் எல்லாவற்றையும் இழந்து வாகச் சிரிப்போடு சம்பந்தப்படாத ஹீர்கள். சிரிப்புக்கூட தொழில் ட பொருளாதாரம், அரசியலைச் து. அதாவது சிரிப்பு அதன் து. நீங்கள் ஒரு குழந்தையைப் fமையாக, வெகுளியாகச் சிரிக்க
உங்களது வாழும்முறையில் கூறவேண்டும். ஒரு குழந்தையின் னகைதான். சிரிக்கும் மனிதனால் உங்களுக்குச் சிரிப்பூட்ட யாரும் தன் பின்பே உங்களால் சிரிக்க முழுமையாகச் சிரிப்பார். அவரது ந்தப் பருமனான உடல் பூராவும் ன்பதைத் தவிர வேறு எதையும் றியதில்லை.
க, இயல்பாக, வெகுளியாக மறைந்துவிடுகிறது. சென்மதம்

Page 240
எஸ். குருட
கூறுவதே உன் மனமமற்ற நிை அதை அடைவதற்கு அழகா நடனமும், சிரிப்பும் மிகச்சிற சிரிக்கும்போதும் ஒருகணம் சிந் (No-mind) மாறிவிடுகிறோம். சிந் எங்களை அழைத்துச் செல்கிறது அடையத்தான் தியானம் ெ அடையக்கூடிய நிலையைச்
தருகிறது. ஏனோதானோ என்றி அனுமதித்தால் அதாவது இயல்ப மனமற்ற நிலையை அடைய தோற்றம் எங்களுக்கு அந்த உ6
ஹொடாய் தான் ஒரு ( வேண்டும் என்பதற்காகவோ சுற்றியிருக்க வேண்டும் என்ப செய்வதில்லை. இவர் ஒரு டை இனிப்புகளுடனும், மிட்டாய்களு சுமந்துகொண்டு திரிவார். அவ கொடுப்பார். இந்த உலகம் வெறு விளங்கிக்கொள்வதற்காகப் பொ
ஹொடாயின் சிரிப்பினால் பார்ப்பவர்களின் எண்ணங்கள் அந்தக் கணத்தில் காணாமல் போய்விடுகின்றன. அந்தக் கணத்தில் மக்கள் மனங்கள் *ஒருமை நிலை அடைந்தன. அவர் முன்னிலையில் மக்கள் தாங்கள் இருக்கிறோம் என் தங்களைத் தாங்களே தொை வித்தியாசங்கள் தனித்தனியே நீடிக்கும். 'ஒருமை" (Oneness) சென்றவர்களுக்கு வித்தியாசா தெரியாது. ஹொடாய் அவர் வாழும் காலத்தில் விளங்கிக்கெ இருந்தார்.

ாதம் <223
லக்குள் நீ பிரவேசி என்பதே. ன நுழைவாயில் “சிரிப்பு.* ந்த வழிகள். வாய்விட்டுச் திப்பது நின்று மனமற்றவராக தனையற்ற நிலைக்குச் சிரிப்பு து. சிந்தனையற்ற நிலையை சய்கிறார்கள். தியானத்தால் சிரிப்பும், நடனமும் எமக்கு ல்ெலாமல் நடனம் நடைபெற ாக அந்த நடனம் நிகழ்ந்தால் லாம். நடனமாடும் நடராஜ் ன்மையை விளக்குகிறது.
சென்குரு என்றழைக்கப்பட அல்லது சீடர்கள் தன்னைச் தற்காகவோ இவர் எதுவும் பயை (Sack) தனது முதுகில் நடனும், பொம்மைகளுடனும் ற்றைச் சிறுபிள்ளைகளுக்குக் றும் பொம்மைதான் என்பதை
ம்மை கொடுத்தார்.
பதையே உணரமுடியாமல் லத்தனர். உலகில் உள்ள தெரியும்வரை இருமைநிலை நிலையைக் கடந்து அப்பால் வகள் வேறுபாடுகள் எதுவும் 5ள் அத்தகையவரே. அவர் ாள்ளப்பட முடியாதவராகவே

Page 241
போதிதர்மர் பற்றி
சமுதாயம் உங்களைச்
மகிழ்ச்சியாகப் பார்க்க விரு முகமூடிகளை மாற்றி மாற்ற உங்களிடமிருந்து எதிர்பார்க் சமுதாயத்தில் அங்கீகாரம் சொந்த முகத்தை மறந்ே முகத்தை ஞாபகப்படுத்திப் உங்கள் போலி முகமே உங் நீங்கள் வாழும் சமுதாய சோகமாக சுலபமாகப் போ ஆடிப்பாடிக்கொண்டு போ கண்டு அஞ்சுவார்கள், ே எந்த நேரமும், நீங்கள் வி சோகமாக இருக்கலாம் சோகத்தையே, மகிழ்ச்சியை கிடைக்கும், நீங்கள் சிரித்த அந்தச் சிரிப்பு இனிமேல் அடையாளம் என்று கூ சோகத்திற்கு முடிசூட்ப விருப்பமான சோகம் ச சிரிப்பால் தகர்த்தப்படவேலி பக்கம் நிற்கிறது, மகிழ்ச்சி காட்டுகிறது.
நீங்கள் யாரும் மாதி நீங்களாகவே இருங்கள், சுயமாக இருங்கள், சுயம இருந்தாலும், அந்நிலை சிரித்து, மகிழ்ச்சியாக, நிம் இருக்கும் சக்கரவர்த்தி தன சிரித்துக்கொண்டிருக்கும் உணர்கிறார். பயத்தைய வாழ்பவர்கள் தங்களைச் கொள்கிறார்கள். விழிப்புண வாழ்வார்கள். ஒருவர் வ கணத்தில் மெய்யான நி6ை

ய அற்புதமான விஷயங்கள்
சோகத்தில் பார்க்க விரும்புகிறது, நம்புவதில்லை. சமுதாயத்திற்கேற்ப அணிந்து வாழ்வதைச் சமுதாயம் கிறது. உங்கள் சொந்த முகத்திற்கு இல்லாததால் நீங்கள் உங்கள் தேவிட்டீர்கள், உங்கள் சொந்த பார்க்க முயற்சி செய்யும்போது களுக்கு நிஜ முகமாகத் தெரிகிறது. பத்தில் நீங்கள் அழுதுகொண்டு கலாம். ஆனால் சிரித்துக்கொண்டு, கமுடியாது. உங்கள் மகிழ்ச்சியைக் கலிபண்ணி அடக்கிவிடுவார்கள். ரும்பியபொழுதெல்லாம் அழலாம், சமுதாயம் எதிர்பார்ப்பது அல்ல. சோகத்துக்கு அங்கீகாரம் ால் சோகம் வரப்போகிறதென்றும் வரப்போகும் சோகத்துக்கு முன் றிச் சிரிப்பை விரட்டியடித்து, டிவிடுவார்கள். சமுதாயத்திற்கு மூகத்திற்கு ஏற்புடைய சோகம் ண்டும். சமூகம் என்றும் சோகத்தின் க்கும், சிரிப்புக்கும் சிவப்புக்கொடி
திரி ஆக வேண்டாம், நீங்கள் தனிமனிதனாகவே இருங்கள், ாக வாழ்வதில் பிச்சைக்காரனாக சக்கரவர்த்தியைவிட மேலானது. மதியாக இருப்பீர்கள். இறுக்கமாக க்குள் ஒரு ஏக்கத்தை உணர்கிறார். ஏழை தனக்குள் ஒரு நிறைவை |ம், பீதியையும் முன்வைத்து சுற்றிப் பயத்தை வளர்த்துக் ர்வில் வாழமுடியாமல் மந்தமாகவே ாய்விட்டுச் சிரிக்கும்போது அந்தக் 0யை அடைகிறார்கள்.

Page 242
எஸ். குருட
சமுதாயம் சிரிப்பவர்களைய பார்க்க விரும்புவதில்லை. பெற்றோர்களால் சிரிப்புக்கு 6 பட்டதால் தங்களை அறி குழந்தைகளையும் ஆனந்தத்துக்கு எதிராக வளர்க்கிறார்கள். இது கைமாற்றப்படுகிறது. gliflւյլ குற்றமாக்கிவிட்டார்கள். ஏளனத் விரும்புகிறார்கள். மகிழ்ச்சியின் சிரிப்பை சிரமப்பட்டு தங்கள் அடக்குகிறார்கள்.
பிறக்கும்போதே குழந்தை தவழும்போது சிரிக்கிறது. குழந்தை இப்பூவுலகில் பிரவே8 சிரிப்பொலியுடன் இருந்தால் சிரிப்பைக் குறையுங்கள் என் அழுதுகுழறி, சோகப்புயலாக கதவைத் தட்டமாட்டார்கள், 8 வில்லை, சோகம் ஏற்றுக்கொள்ள துன்பத்தையும், விதியையும், கெ அச்சம், பீதி, மரணபயம் என்பன வளர்ச்சியில்லாது வாழ்பவர்களு சிரிப்பு, கும்மாளம் தொல்லையா
பிறர் மகிழ்ச்சியை, ஆனந்: கொள்ளமாட்டார்கள். சோகத் சிரிப்பை ஏற்காது. சமுதாயம் 6 கூட்டம்தான் சமுதுாயம். பிறப் ஆயுட்கால அங்கத்தினர்தான் கொண்டாடுகிறார்கள். வெறும் காதலர்களைக் கொண்டாடுங் அன்னையர் தினம், தந்தையர் தினங்களைக் கொண்டாடும் கொ வெறும் தினங்களைக் கொ குழந்தையை, அன்னையை, தந் அவர்களைக் கொண்டாடும் வரை

தம்
ம், ஆனந்தமானவர்களையும் பெற்றோர்கள், தங்கள் திரானவர்களாக வளர்க்கப் பாமல் வளரும் தங்கள் ), மகிழ்ச்சிக்கும், சிரிப்புக்கும் பரம்பரை பரம்பரையாக தைத் தண்டனைக்குரிய ன்ெ அடையாளமாகச் சிரிக்க அடையாளமாக ஏற்படும் மூச்சுத் திணறும் அளவுக்கு
சிரிப்புடன் பிறக்கிறது. சிரிப்பை வரமாகப்பெற்று சிக்கிறது. நீங்கள் வீட்டில் உங்கள் கதவைத் தட்டி பார்கள். ஆனால் நீங்கள் இருங்கள் யாரும் உங்கள் Gரிப்பு ஏற்றுக்கொள்ளப்பட ப்படுகிறது. சோகத்தையும், ட்ட தினங்கள், கரிநாட்கள், வகளை மையமாக வைத்து, நக்கு மகிழ்ச்சி, ஆனந்தம், கத்தான் இருக்கும். நத்தை, சிரிப்பைச் சகித்து தை ஏற்கும் சமுதாயம், ான்பது என்ன? மனிதர்கள் பவர்கள் எல்லோரும் அதில் காதலர் தினத்தைக் தினத்தை கொண்டாடாது 1ள். குழந்தைகள் தினம், தினம் எல்லாம் வெறும் ண்டாட்டங்களாக உள்ளன. ண்டாடுவதைத் தவிர்த்து தையை கொண்டாடுங்கள். தினங்கள் எல்லாம் வெறும்

Page 243
226a போதிதர்மர் பற்றிய
OA, தினங்கள் தான். அனைத்தும் களாகட்டும்.
சிரிப்பு ஒரு வழிபாடு, ! உங்களைத் தூக்கி விழுங்கில் Stress) தளர்த்திவிடும். சிரிக்கமுடியாது. இறுக்கம் ( இறுக்கத்தில் சமயத்தன்மை சிரிக்க முடிந்தால் ஒருவர் வா முடிந்தவராவார். அத்தகைய
வாழ்வே ஆன்மிகம். எர் புனித நூலையும் விட, 6 வழிபாட்டையும் விட உயர்ந்தது வாழ்வு. வாழ்க் யைத் தியாகம் செய்யாதீர் வாழ்வதற்காகத் தியாகம் ே யுங்கள்! சிரிப்புத்தான் வாழ் சாரம், அதுதான் மதத்தின் ச கடினம்’, ‘கண்டிப்பு', 'இறுக் “டென்சன்’ (Tension), 'ஸ்ெ (Stress) 96.06), 6(15 GLun வாழ்வாகாது. வாழ்வே மத வேண்டும். , ցArflլ յ (8լյ 6 தடையாக மதம் இருக்கக் போதிக்க வேண்டும். சிரிப்பு. சிரியுங்கள்! உடல் தளரச் சிரியுங்கள்! எங்கும் சிரிப்பு சிரிப்பு! வீட்டில் சிரிப்பு! ஆலயத்தில் சிரிப்பு! நாலா இடமெல்லாம் சிரிப்பு! பா சிரிப்பே வாழ்க்கையாகட்டுட வழிபாடு சிரிப்பாகட்டும்! சிரிப்பு மரணத்தில் சிரிப்பு!
வாழ்வுக்குத் தொட
எக்காலத்திலும், எந்தச் ** நேரமில்லை, நேரமில்ை

அற்புதமான விஷயங்கள்
சிரிப்பொலிக் கொண்டாட்டங்
ரிக்க முடிந்தால் பிரச்சினைகள் டாது. இறுக்கத்தை (Tension/
இறுக்கமாக இருப்பவர்கள் நோய்க்குப் பாதை அமைக்கிறது. இல்லை. ஒருவர் முழுமையாகச் ழ்வை முழுமையாக அனுபவிக்க வாழவில் சமயத்தன்மை உண்டு.
1ழிபாடாகட்டும். சிரிப்புக்குத் கூடாது. ஆன்மிகம் சிரிப்பைப் சிரிப்பு!! சிரிப்பு!!! வாய்விட்டுச் சிரியுங்கள்! குலுங்கிக் குலுங்கிச் கனவில் சிரிப்பு! வேலையில் கொண்டாட்டத்தில் சிரிப்பு! திசையிலும் சிரிப்பு! திரும்பும் ர்க்கும் இடமெல்லாம் சிரிப்பு! ! வாழ்க்கையே சிரிப்பாகட்டும்! திருமணத்தில் சிரிப்பு! வாழ்வில் பிறப்பில் சிரிப்பு!
இசைவாக்கம் உண்டு,
சூழலிலும் எங்கும் நிற்காது. o என்று வாழ்ந்தால் வாழ்வில்

Page 244
எஸ். (
ஏதோ ஒரு இடத்தில் பிழை வாழ்ந்தால் வாழும் முறைய மகா அலெக்சாண்டர்.
ஒவ்வொரு முறையும் நீங்கள் நிகழ்காலத்தில் இ துன்பம் வரலாம் என்ற எதிர் வருங்காலத்திலும் இருக்கிறீ நீங்கள் ‘இரண்டு பட்டுவிட பற்றிய பயமும் அடிக்கடி பட்டுக்கொண்டு இருக்கிறீர் தொலைத்துவிட்டீர்கள். ஒ ஹொடாயை வெளியில் *ஒருமைப்படுங்கள்."
சிரிப்பில் எல்லைகள் மன சமுதாய முகங்கள் மறைகின்ற எடுப்பது, அவனது வாழ்க் குழந்தைத் தனமானதா? குழந்தையாக மாற்றக்கூடியது. ஆனால் வாய்விட்டுச் சிரிப்ப
மனிதன் சிரிப்பிலிருந்து உலகத்தில் மனிதனுக்கு பாவங்களிலேயே மிகப் குழந்தைகளுக்கும், அநாகர் பைத்தியமானவர்களுக்கும் கோயில்கள், ஆலயங்கள், ! சிரிப்புக்கூடங்களாக வே6 இறுக்கமாக்கிவிட்டது. அச் கடவுள் கைகளில் ஆயுத இறுக்கமாக்கிறது. வணக்க ஸ்: இறுக்கத்திற்கு அங்கீகாரம் நரகத்தைப் பெரிதுபடுத்தி சொர்க்கத்தைப் பெரிதுபடுத் கட்டப்பட்டுவிட்டது.

நருபாதம் 227ے
இருக்கிறது. சிரிப்பே இல்லாமல் வில் பிழையிருக்கிறது?’ என்றார்
சிரிக்கும்போதும், மகிழும்போதும் ருக்கிறீர்கள். அதே நேரத்தில் பார்ப்பும் அடிமனதில் இருப்பதால் ர்கள். அதனால் ஒரே நேரத்தில் டடீர்கள். அதேபோல் இறப்பைப் குறுக்கிடுவதால் “இரண்டு? 5ள். அதனால் சிரிப்பை நீங்கள் வ்வொருவருக்குள்ளும் வாழும் கொண்டுவந்து சிரித்து
றகின்றன. சிரிப்பில் துண்டுபட்ட ]ன. மனிதனிடமிருந்து சிரிப்பை கையை எடுப்பதாகும். சிரிப்பு இல்லை! சிரிப்பு ஒருவரை புன்னகை ஒரு தனிப் பழக்கம். தற்கு தனிப்பழக்கம் தெரியாது.
து தடுக்கப்பட்டது தான் இந்த
எதிராகச் செய்யப்பட்ட பெரிய பாவமாகும். சிரிப்பு கமானவர்களுக்கும், காதலால் உரியதாகக் கருதப்படுகிறது. Fர்ச்சுக்கள், மசூதிகள் எல்லாம் ண்டும். மதங்கள் மனிதனை ாறுத்தும் சிலைகள், ஒவியங்கள், ங்கள் மேலும் பீதியையூட்டி தலங்களில் சிரிப்பைக் குற்றமாக்கி வழங்கப்பட்டுள்ளது. Luu Ild ப் பார்க்கிறது. பேராசை, திப் பார்க்கிறது. சிரிப்பு ஒரம்

Page 245
22৪৯২ போதிதர்மர் பற்றிய அ
மகிழ்ந்திருந்தால், வாய்வி இருந்தால் ஏதாவது துன்பம் மனதிற்குக் கற்பிக்கப்பட்டுவிட் நீடித்து இருக்க முடிவதில்ை சிரிக்காமல் இறுக்கமாக இருக்க நல்ல பழக்கமில்லை, மரியான என்று பெற்றோரால் சமுதாய பேசாமல் இருந்தால் நல்ல பிள்ை சிரிக்கக் கூடாது என்று எச்சரி சிரிக்கிறது என்ற வினா தொடு கேட்டால் தண்டனைக்குரிய கு தினால் வாழ்வின் சுவை பறி சிரிப்பு மீண்டும் மனிதருக்குள் இடமெல்லாம் சிரிப்பொலி கே களில் சிரிப்பு பாடமாக்கப்பட இடங்களில், காரியாலயங்க நகைச்சுவை ஒரு பகுதியாக சொல்லை வலது பக்கத்திலிருந்து கிடைப்பது "Desserts" என்ற அந்தப் "பஞ்சாமிர்தம் (Des desserts-go 56) sp6L 'G Stresse அது எங்கள் வாழ்வில் மறை விட்டால் வாழ்வின் இரச விடுவோம். நகைச்சுவையை உ உணரவே மாட்டான், இறுக்கப விடயத்தைக் கூடச் செய்யமுடி சிரிப்பை பிரார்த்தனையாக்குவே
சிரிப்பில் மதவேற்றுமை ம சிரிப்பில் இனவேற்றுமை ப சிரிப்பில் மொழி வேற்றுை சிரிப்பில் பிரதேச வேற்றுை சிரிப்பில் நிற வேற்றுமை சிரிப்பில் பகைமை மறைகி சிரிப்பில் ஏற்றத்தாழ்வு மன சிரிப்பில் பிரிவினைகள் ம6 சிரிப்பில் அனைத்து வித்திய வாய் விட்டுச்சிரித்தால் நே

புதமான விஷயங்கள்
ட்டுச் சிரித்து கலகலப்பாக நேரிடலாம் என உங்கள் டது. அதனால் கலகலப்பாக 0. குழந்தை வளர வளர பழக்கப்படுகிறது. "சிரித்தல்" தயில்லை, கெளரவமில்லை பத்தில் போதிக்கப்படுகிறது. ளை என்று கற்பிக்கப்படுகிறது. க்கப்படுகிறது. யார் அங்கே கப்படுகிறது. சிரிப்புச் சத்தம் ற்றமாகிவிட்டது. சமுதாயத் க்கப்பட்டுவிட்டது. இழந்த மலரவேண்டும். திரும்பும் ட்க வேண்டும். பாடசாலை வேண்டும், வேலைசெய்யும் ளில், தொழிற்சாலைகளில் 36)168oTG)Lb. "Stressed' 6T6öp இடப்பக்கமாக வாசித்தால் சொல்லாகும். சிரிப்புத்தான் serts) சிரிக்க மறந்ததால் d-ஐ பிடித்துக்கொண்டோம். ந்திருக்கிறது. சிரிக்க முடியா சியங்களைத் தொலைத்து ணர்ந்தால் மனிதன் நோயை ான முகத்துடன் ஒரு சின்ன யாது. சிரிப்பு புனிதமானது,
| TLD.
றைகிறது. 1றைகிறது. ம மறைகிறது. ம மறைகிறது. மறைகிறது. Dġbl.
றகிறது. றகிறது. ों ாசங்களும் மறைகிறது.
ாய் கூட விட்டுப்போகும்.

Page 246
எஸ்.
சென்மதத்தின் முழுச் ே நிலையைப் பெறுவது என் சென்ஞானிகள் சிரிப்பை நடனத்தையும், சைதன்யா கையாண்டனர். சூஃபிகள் : போலச் சுழன்று சுழன்று அதாவது மனதுக்கு அப்ப அடைவார்கள். ஆம்! சிரி எல்லைகளும், எல்லா வேறு சிரப்பு ஆக்கிரமித்துவிட் விடுகிறோம். சிந்தனை உ மறைந்துவிடுகிறது. நடனமு மனமற்ற நிலைக்குள் பிர6ே ஐக்கியமாகிவிடும் என்பதை சிலையும் உணர்த்துகிறது.
குழந்தை புன்னகை0 வருகிறது. அந்தப் புன்ன துடன் ஒரு பாகமாகிறது. மீ புன்னகை தோன்றுகிறது. 6 முடிந்தால் எதையும் எதிர் விடலாம் அடிவயிற்றிலிருந் சிரிப்பில் ஞானி ஹொட அத்தகைய சிரிப்பு அவரது சி
அவரிடம் இருந்த ஒரே இருந்த ஒரே ஒரு புதையல் ஒரு பொக்கிஷம் “சிரிப்பு?, அனுபவித்தவிகள் தங்களுக் சிரிப்பால் ஆன்மிகம் பரப் அவர்கள் ஆகும்.
ஆசையின் மூலம் மணி போன்றோர்கள் ஆசையி சமுதாயம் தேடும் வரலாற் வரமாட்டார்கள். ஏனெனில் வாழ்வதால் இந்த நிலை ஏற்

தருபாதம் 1229
சயல்முறையுமே எப்படி மனமற்ற ாபதுதான். அதை அடைவதற்கு பும், சூஃபி (Sufi) ஞானிகள் "கள் ஆடலையும் பாடலையும் 5ITá) 15/60failu disaffai) Ballet Dance நடனமாடி மனமற்ற நிலையை ால் உள்ள அந்த வெறுமையை ப்பிலும், நடனத்திலும் எல்லா பாடுகளும் மறைந்துவிடுகின்றன. டால் எங்களையே மறந்து டனே நின்றுவிடுகிறது. மனம் ம் அத்தகையதே. நடனம் ஊடாக பசிக்க பிரபஞ்சம் அவர்களுக்குள் தத்தான் நடனமாடும் நடராஜர்
யைத் தன்னுடன் கொண்டு கை மூலம் குழந்தை சமுதாயத் கெவும் இயற்கையானதாக அந்தப் Iல்லாச் சூழ்நிலைகளிலும் சிரிக்க கொள்ளும் சக்தியைப் பெற்று து கிளம்பும் தன் முழுமையான ாய் தானும் கரைந்துவிடுவார். |flÙւյ.
ஒரு செல்வம் “சிரிப்பு", அவரிடம்
*சிரிப்பு?, அவரிடமிருந்த ஒரே அவரது அந்த ஞானச் சிரிப்பை குள் “உள்? மாற்றம் அடைந்தனர். ய அற்புத ஞானி ஹொடாய்
தகுலம் இயங்கும்போது இவர் ன்மைக்குள் நுழைகிறார்கள். றுக்குள் இவர் போன்றோர்கள் 5ாலத்தைக் கடந்து நித்தியத்தில் படுகிறது.

Page 247
23Oa போதிதர்மர் பற்றிய
அவர் வாழும் காலத் திலும் அவரை மக்கள் விளங்கிக் கொள்ளவில்லை. இக்காலத்தில் வாழ்பவர்களும் அவரை விளங்கிக்கொள்ள வில்லை. எக்காலத்திலும் ஞானி ஹொடாய் அவர்கள் புரிந்துகொள்ளப் படாதவ ராகவே இருக்கப்போகிறார். இவர் மெளனித்து இருந்த ஞானி. சொற்பொழிவுகளும் போதனைகளும் ஒருவரை அ6 இருந்தவரை அடையாளப்படுத் ஒவ்வொருவரும் தங்கள் ஆ பெயர் சூட்டி இவரை அ ஆசைகள் நிறைவேற்றப்பட்ட சிலைகள் ஒவ்வொருவருக்குள் ஞானிகளுக்கு முன் ஒவ்வெ அவரின் சிரிப்பைக் கற்பனை அமர்த்தி மகுடம் சூட்டி அ6 பார்க்க விழைகிறது பேரான ஹொடாய் பணம் கையாள ஹொடாய் இனிப்புப் பண்ட ஒரு பையில் போட்டுத் அவைகளை சிறு பிள்ளை சொற்கள் எதுவும் பேசா 'குழந்தைகள்’ என்ற சொ பேசாதவர். க்சிரிப்பு ஒன் இணைத்த ஊடகமாகும்.
மனிதர்கள் இயல்பாகக் கதைகள், துணுக்குள், ஜோ அதற்கும் அக்கம் பக்கம் தி சிரிக்கிறீர்கள். சிரிப்பதற்கு உள்ளத்தில் கிளர்ச்சியை ஏ வாக்கும், நோயைப் குணப் நகைச்சுவையூட்டுபவர்களை

அற்புதமான விஷயங்கள்
டையாளப்படுத்தும். மெளனித்து த முடியாது. அதனால் இவரை சைகளுக்கு ஏற்ப இவருக்குப் ழைத்து அதன்மூலம் தங்கள் தாக மகிழ்ச்சி அடைகின்றனர். "ளும் கட்டுப்படலாம். ஆனால் ாருவரும் கட்டுப்படுவார்கள். ஆக்கி அவரைச் சிம்மாசனத்தில் வரைக் கற்பகத் தருவாக அழகு சை கொண்ட மனம், ஆனால் ாது யாசித்து வாழ்ந்த துறவி. ங்களையும், பொம்மைகளையும் தோளில் சுமந்து திரிந்தவர். களுக்கு வழங்கியவர். இவர் த மெளனித்திருந்த துறவி. Dலைத் தவிர வேறு எதுவும் றே அவரையும் மக்களையும்
சிரிக்காததால் சிரிப்பூட்டும் க்குகள், தேவையாக உள்ளன. ரும்பிப் பார்த்து விட்டுத்தான் ால்லை பார்க்கிறீர்கள். சிரிப்பு ற்படுத்தும். உடம்பை இலகு டுத்தும். வைத்தியசாலைகளில் பும் பயன்படுத்த வேண்டும்.

Page 248
எஸ். கு
கல்வி போதனைகள் நசை வேண்டும். இன்று உலகத்திற் காமெடியன்களே, அந்த விட்டார்கள். நகைச்சுை அளித்திருக்கும் மருந்து.
grill gigs/Tait. Side Effects L மருந்து சிரிப்புத்தான். யா மருந்து சிரிப்புத்தான். இது
வாழ்வைச் சோகமாக கூடாது. தளர்த்துங்கள்! சிரி சிரிக்கின்றீர்கள் இல்லை, திணிக்கின்றீர்கள். அது சம சிரிப்பு வயிற்றிலிருந்து வரவி
சிரிக்காமல் வாழ்வத கொண்டிருக்கிறீர்கள். சிரி குழந்தைத்தனம், கெளரவக் நினைப்பார்கள் என்றாகி ( தயாராகிவிட்டீர்கள். நன்றாக அழவும் முடியும். எதற்கும் சிரிக்கவும் முடியாது, அழவு இயல்பான வாழ்வின் சுவையு வாழ்வு பூரண வாழ்வில்லை மதிப்பைப் பெறுகிறது, நகை இயற்கையாக இருக்கிறது. எதிராகக் கட்டுப்பாட்டைப் ே முன்னிலையில் சிரிக்கக்கூட மசூதிகள், சர்ச்சுகள் உ எதிர்ப்பார்க்கப்படுகிறது. எவ் இறுக்மாக இருக்கிறீர்களோ சமுதாயம் தயாராக இருக்கிற தெரியாது, நகைச்சுவை உt விழிப்புணர்வில்லை, 56 கொண்டாட்டம் என்றால் எ கம்ப்யூட்டராக மாறிவிட்டான்

5ருபாதம் 231ےر
ச்சுவை ஊடாக கற்பிக்கப்பட கு அதிகம் தேவைப்படுவோர்கள் ாவுக்கு மக்கள் இறுக்கமாகி 6)] மனிதனுக்கு இயற்கை மிக ஆழமாகச் செல்லக்கூடியது க்க விளைவுகள் allergic அல்லாத ரும் தயங்காமல் பருகக்கூடிய
ஒரு சர்வரோக நிவாரணி.
மாற்றக்கூடாது, இறுக்கமாக்கக் புங்கள்! நீங்கள் சிரிக்கும்போதும் சிரிப்பை உங்கள் மீது ாளிக்கப்பட்டதாக இருக்கிறது. ல்லை, இயல்பாக வரவில்லை.
ற்குப் LJ 6QD காரணங்களைக் ப்பது அநாகரிகமல்ல, சிரிப்பது க்குறைவு, மற்றவர்கள் என்ன வாழ்வின் சுவையை இழக்கத் sச் சிரிக்கிற மனிதனால் நன்றாக முறைகள் பார்க்கிற மனிதனால் b முடியாது, வாழவும் முடியாது. ம் தெரியாது. சிரிக்கத் தெரியாத ). சிரிக்காத வாழ்வு சமுதாய ச்சுவை உணர்வு எல்லோரிடமும்
அந்தச் சமுதாயம் சிரிப்புக்கு பாதித்திருக்கிறதே! பெரியோர் ாது, ஆலயங்கள், கோயில்கள், ள்ளே சிரிக்கக்கூடாது என வளவுக்கு எவ்வளவு சிரிக்காமல் அதற்கேற்ற கெளரவம் வழங்கச் து. கம்ப்யூட்டருக்குச் சிரிக்கத் ணர்வில்லை, பகுத்தறிவில்லை, எனுணர்வில்லை. அதற்குக் என என்று தெரியாது. மனிதன்

Page 249
232 a போதிதர்மர் பற்றிய அ
வாழ்வைக் கொண்டாடு விதமான உயர்வான கோ சிரிப்பில்லாத மனிதன் வெறும் L நகைச்சுவை ஆன்மிகமாக மாற இலேசாக்கிவிடுவது நகைச்சுவை யென்றால் யமன் தனக்கு இ உங்களிடம் வந்துவிடுவார் என் பற்றி கூறப்படுவதுண்டு. உங்க களில் சற்று நகைச்சுவையைச் உங்கள் கற்பனையையும் சேர்த்து
சிரிப்பு மனிதனுக்கு இ மனிதனால் மட்டுமே சிரிக்கழு மலர்கள் இல்லாத மரத்தைப் மனிதர் மரியாதைக்குரியவர்கள் இருப்பவர்கள், உயர் அந்தள் மந்திரி, ஜனாதிபதி, உயர் நீ! மந்திரிகள், மதபீடத் தலைவ தியாகிகள், பொலிஸ், இராணு துணைவேந்தர், ஆசிரியர்கள் இருப்பவர்கள் எல்லாம் தாங் இருக்கவேண்டும் என்று ஒ செயற்கையாக ஏற்படுத் வித்தியாசமாக இருப்பதென்றா? என நினைக்கிறார்கள். அவர்கள் தகுதியற்றவர்களாகப் பார்க் சிரிப்பில்லாத சமுதாயத்தில் சி போக முடியும். தங்களை வி இருந்தால் சிரிக்காமல் ஒே தொடர்ந்து இருக்கவேண்டும்
கொண்டாட்டங்கள், தி பெறும்போது சிரிக்கக்கூடாது போடப்பட்டு வருகிறது. இ வரவேற்பைப் பெறுகிறது. கடினத்திலிருந்தும் தளர்த்தக்கூ முழுமையானதாக இருக்க அணு இருக்காதீர்கள். குழந்தைபோல்

ற்புதமான விஷயங்கள்
வதைத் தவிர வேறு எந்த ட்பாடும் இருக்கமுடியாது. ாலைவனத்தைப் போலாகிறான். வேண்டும். மனிதன்-பாரத்தை . நீங்கள் சிரிக்க நேரமில்லை னிமேல் நேரமில்லை என்று று நகைச்சுவையாக சிரிப்பை 1ள் வீட்டுக் கொண்டாட்டங் சேர்த்து வித்தியாசமாக்குங்கள். நுவிடுங்கள், புதுமையாக்குங்கள்.
இயற்கை அளித்த மருந்து. )டியும். சிரிப்பில்லாத மனிதர் போன்றவர்கள். சிரிப்பில்லாத ாாகின்றனர். உயர் பதவியில் ஸ்தில் இருப்பவர்கள், பிரதம திபதி, அரசியல் தலைவர்கள், ர்கள், துறவிகள், சுவாமிகள், வம், கலெக்டர், அரச அதிபர், இன்னோரன்ன பதவிகளில் கள் இறுக்கமாக, கடினமாக" ஒரு போலித் தோற்றத்தை திக் கொண்டுள்ளார்கள். ல் சிரிக்காமல் இருக்கவேணடும் சிரித்தால் சமூகம் அவர்களை கும் என்ற அச்சம் உண்டு. ப்பில்லாதிருந்தால்தான் ஒத்துப் த்தியாசமாக வைத்திருப்பதாக ரமாதிரியான பார்வையுடன் அல்லவா!
னங்கள், சடங்குகள் இடம் என காலம் காலமாகத் தடை யந்திரத் தனமாக இருத்தல்
மன இறுக்கத்திலிருந்தும், டயது "சிரிப்பு. உங்கள் சிரிப்பு மதியுங்கள். சிரிப்புக்கு எதிராக
இருங்கள். குழந்தைத்தனமாக

Page 250
எஸ். கு
இருக்காதீர்கள், அது பக்கு கல்விக்கு, வீரத்துக்கு எல்ல நகைச்சுவைக்கு கடவுள் வேண் வேண்டும், நகைச்சுவையான மயமாக வேண்டும். நகைச்சு மனிதர்களுக்குத் தேவை தள
கடவுள், மதம், கோ கடினமாக்குகிறது, இறுக்கமாக் “தளர்ச்சி”, “மென்மை? இதை உண்டு அதுதான “சிரிப்பு.? சேர்ந்து மனிதனை இறுக்கமா LonoooIoJiö56ooII இறுக்கம கல்விமுறையில் சேர்க்கப்பட வேலை இடங்களில், கல்விக் பரப்புங்கள். அதுதான் சிறந்தது காசு, பணம் கிடைக்க வழிபா விட்டது. இரத்தம் சிந்தும் கண்டுடித்துவிட்டான் மனி இலகுவாக்கும் சிரிப்புக்குக் அறியவில்லை. நகைச்சுவை மீது மதவாதிக்கு நாட்டமில் ஆதிக்கம் செலுத்தக் கண்டுபி நிறைவேற்ற முடியாத விஷ அதைக் குற்றமாக்கி மக்க மக்களிடம் குற்ற உணர்வை வாழ்நாள் முழுக்க குற்ற உண அவர்கள் பொறியில் சிக் வியாபாரமாகிறது.
நகைச்சுவைக்கு, சிரிப்புக் கோயில் அமைப்பு இல்லாத இது எந்த இடத்திலும் உருவாகிக்கொண்டேயிருக்க ே செடி, கொடி எல்லாவற்றி நகைச்சுவையூடாக உலகம் சி சிரிக்கட்டும், வானமே சிரி அண்ட சராசரங்களும் சிரிப்

ருபாதம் 233ے
வமற்ற நிலை. செல்வத்துக்கு, ாம் கடவுள் உண்டு. ஆனால் ண்டும். நகைச்சுவைக்குக் கோயில் வழிபாடு வேண்டும், நகைச்சுவை வை வழங்க அமைப்புத் தேவை. ர்ச்சி, கடினம் அல்ல.
யில் எல்லாம் மனிதனைக் 5குகிறது. மனிதருக்குத் தேவை 5யடைய ஒரே ஒரு முறைதான் அரச சட்டங்களும் மதத்துடன் க்குகின்றன. கல்வி முறையும் ாக்குகிறது. சிரிப்புக்கலை வேண்டும். ஆஸ்பத்திரிகளில், கூடங்களில் சிரிப்புக் கலையைப் . “சிரிப்புக்கு ஆலயம் தேவை. ாட்டுக்குக் கடவுளை அறிந்தாகி வன்முறைக்குக் கடவுளைக் தன். ஆனால் மனிதனை கடவுளை இன்னும் கண்டு ாக் கடவுள்', 'சிரிப்புக் கடவுள்? லை. மதவாதிகள் மக்கள் மீது டித்த தந்திரமே குற்ற உணர்வு. பங்களை மக்கள் மீது திணித்து ள் மீது சுமத்திவிடுகிறார்கள். ஏற்படுத்துகிறார்கள். அதன்பின் ர்வுடன் அடிமையாகின்றார்கள். கியவுடன் மதம் மக்கள்மீது
கு, கடவுள், கோயில் தேவை. கோயில்தான் சிரிப்புக்கோயில். எந்த நேரத்திலும் தினமும் வண்டும். வானம், பூமி, மரம், லும் “சிரிப்பு பொழியட்டும். ரிக்கட்டும். சகல ஜீவராசிகளும் க்கட்டும். இந்தப் பிரபஞ்சம் புக் கோயில்களாக வேண்டும்.

Page 251
234a போதிதர்மர் பற்றிய அ
சிரிப்பின் வடிவமே தெய்வமாக மனிதனை உயர்விக்கும் வழி
நீங்கும், பிணி நீங்கும், சிரிப்ட வேற்றுமை நீக்கும், ஒற்றுமை நேசம் இவற்றைக் கொள்கைய தேவை.
அன்பு அரசியலாகட்டும், அன்பும் உட்புறத்தில் மாற்றத்ை கொண்டாட்டமாகட்டும். கொடுப்பது சிரிப்பு. உள்ள வெளிக்காட்டும் வாழ்வு இன்ே ஒன்று - கிடைத்த வாழ்6 விரும்புகிறது ஒன்று இன்னொன்று. மனிதன் பல சிரிப்பும், நேசமும் மணி பிளவுபட்ட மனிதனை ஒருபை இதுதான் இன்றைய தேவை. வேலைப்பழு, குடும்பப்பொறு எல்லாம் மனிதனைக் கூறுடே பிரித்துவிட்டது, பிளவுபடுத்தில் நிலையை, பிரிந்த நிலையை, நேசமும்தான். எனவே ம6 வேண்டும். ஒருமைப்படவேண் தனித்தனியாகக் காணப்பட்டா
LGV முகங்களுடன் தங் வெளிப்பார்வைக்கு மட்டும் ஒ( காணப்படுகிறார்கள்.
ஒவ்வொரு தனிமனிதனு (Oneness) “6 (U5 GOLD LÜLuG Iš 5 ( (Oneness) ஒருமையாயிரு ஒருமைப்பட்டால் Br6)LI
ஒற்றுமைக்கு முதற்படி ஒருபை
பலவாறாகப் பிளவுபட்டு Pers Personality என வாழ்கிறார்கள் இணக்கம் காணவேண்டும். த
வேண்டும். தன்னை நேசிக்க

ற்புதமான விஷயங்கள்
வேண்டும். அதுவே வழிபாடு. அது ஒன்றுதான். துன்பம் பகைவனை நண்பனாக்கும், மேலோங்கச் செய்யும். சிரிப்பு, கப் பிரகடனம் செய்யும் ஆட்சி
அன்பு மதமாகட்டும், சிரிப்பும் தை ஏற்படுத்துகின்றன, சிரிப்பு சோகத்திலிருந்து விடுதலை ாார்ந்த வாழ்வு ஒன்று - னொன்று. எதிர்பார்த்த வாழ்வு பு இன்னொன்று. அடைய கிடைத்துக்கொண்டிருப்பது வாக பிளவுபட்டுவிட்டான். தனை 'ஒருமைப்படுத்தும். D"யாக்கும். ஒருமைப்படுங்கள் மனிதன் பிளவுபட்டுவிட்டான். ப்பு, சமூகம், மதம், அரசியல் பாட்டு இரண்டாக்கிவிட்டது, பிட்டது, இந்த இரண்டுபட்ட ஒன்றாக்கக்கூடியது சிரிப்பும், ரிதன் முதலில் 'ஒருமையாக" ண்டும். மனிதர்கள் பார்வைக்கு லும் பிளவுபட்ட மனநிலையில் களுக்குள் இருக்கிறார்கள்.
நமுகம் கொண்ட மனிதர்களாக
றும் ஒருமைப்படவேண்டும் ர், நீங்கள் ஒருவராகுங்கள்’ ங்கள், ஒருமைப்படுங்கள். DIT55 ஒற்றுமைப்படலாம். ப்படல்தான். மனித மனங்கள் onality, Split Personality, ultiple
மனிதன் முதலில் தன்னுடன் ன்னுடன் தானே ஒத்துப்போக வேண்டும்.

Page 252
`yܢ
எஸ். குழு
ஒருமைப்பட்டால் உங் படைப்பீர்கள். மகிழ்ச்சியின் இது சுவாசம் போன்றது. சு6 எங்களை அறியாமலேயே நட சுவாசமாகிவிடும். ஒருமைப்பட விதி. 'ஒருமை வாழ்வின் ஒருமைப்பட்டவர்கள், செய மகாசக்தி அவர்களிடம் பி செயல்திறன், ஆற்றல், நேசம் மற்றவர்களை நேசித்தல், தன் எல்லாம் வெளிப்படும். “ஒரு அறிவர். தன்னை அறிதல் வா
நீங்கள்தான் உங்கள் பார்ன இயக்குநர். பிற மனிதா சாதித்துக்கொள்ள இருப்ப உங்களைச் சார்ந்திருப்பவர்கள அவர்களுக்காகவே வாழ்கிறா அல்ல. வாழ்வு ஒவ்வொருவரும் தன்னகத்தே கொண்டது. ஒரு முயற்சியே வாழ்வு. ஆண் - ெ உறவில் ஒரு கணம் உலகடே இல்லாத, வெறும் உலகமாகச் நிலை அது. அந்த அன்பு உலகமே சாதாரணமாகத் தோ அத்தகைய நிலையைத் தரக்க முழுமையான சிரிப்பு. சாதாரணமாகவே எங்களுக்கு உறவில்லாமல் தோன்றிவிடக்கூ முறைகள் மனிதர்களை இறுக்க குற்றவாளியாக்கக் கூடாது. தோற்றுவிக்கக் கூடாது. மத அனைத்தும் மனிதர்களை இல
வீட்டில் சிரிப்பு தினசரி வாழ்வில் ծAflÙԿ கொ கொண்டாட்டம் சிரிப்பாக 1 இலகுவாக்கக்கூடியது இதுத்

நபாதம் 1235
கள் சொர்க்கத்தை நீங்கள் சொந்தக்காரர் ஆகிவிடுவீர்கள். வாசிப்பது எப்படி எங்களுக்குள் க்கிறதோ அதுபோல் மகிழ்ச்சி டல்தான் வாழ்வின் அடிப்படை பலம். ஒருமையானவர்கள், ற்கரிய சாதனை படைப்பர். றக்கும். வலிமை, திடம், கருணை, தன்னை நேசித்தல் ானை ஏற்றல், பிறரை ஏற்றல் மைப்பட்டவர் தன்னைத்தான் þoÍSloöI QUpg5ốo Ulq-.
வையாளன். நீங்கள்தான் உங்கள் ர்களை உங்கள் காரியம் வர்களாக மாற்றக்கூடாது. ாக உருவாக்காதீர்கள். அவர்கள் ர்கள், அவர்கள் உங்களுக்காக வளர்வதற்கான ஆசீர்வாதத்தைத் வர் தன்னை அறிந்துகொள்ளும் பண் ஒன்றுசேர்ந்த தாம்பத்திய D நின்றுவிடுகிறது. யாருமே சாதாரண உலகமாக தோன்றும் நிலை இல்லாமலேயே முழு ன்றும் நிலை இருக்கவேண்டும். கூடியது வாய்விட்டுச் சிரிக்கும் எங்கள் சுவாசம்போல் ஸ் அந்த நிலை ஆண் - பெண் டியது. மதங்கள், வழிபாட்டு மாக்கக் கூடாது. மனிதர்களைக் மதம், பயம், பீதியைத் ங்கள் வழிபாட்டு முறைகள் குவாக்க வேண்டும்.
வாழ்வாகவேண்டும். மனித ண்டாட்டமாக வேண்டும். ாறவேணடும். மனிதர்களை ான். சிரிப்பில் உலகத்தை

Page 253
236a போதிதர்மர் பற்றிய
மறக்கிறோம். சிரிப்புக்கு நாகரிகமானது. மிருகங்களு மனிதனையும் விலங்கையும் மிருகம் தளர்வு நிலையில் அதனால் விலங்கினத்திற்கு சிரிப்பின் அவசியம் ஏற்படவி மிருகங்கள் சிரிக்கும் காலம் இல்லை. ‘இன்பமே எந்ந திருநாவுக்கரசுநாயனார் கூ மகிழ்ச்சியினதும், பேரானந்தத் வாழ்வின் நோக்கமும் இது ஆலோசகர்கள் இதையேதான் கூறுகிறார்கள். திருநாவுக்கரசு இதனை வலியுறுத்தியுள்ளார். மக்கள் தினமும் அனுபவி ஆனந்தம்! பேரானந்தமே!
ஹொடாய் அவர்களை ந எல்லோர் மனங்களிலு அனுமதித்து நாம் எல்லோரு சிரிப்போம். நாம் எல்லோரு மகிழ்வோம். நாம் எல்லோரு ஆனந்தமடைவோம். இந் முழு உலகத்திலும் வேறு எந் மனிதனும் எக்காரணமுமின் இந்தளவு அதிகமான மக்க இருப்பினும் அந்தச் சிரிப்பினு அந்தச் சிரிப்தினால் ஒவ்ெ பட்டனர். முன்னெப்போது நன்றாகத் தங்களை உணர்ந்த ஏதோ ஒன்று அவர்களுக்குே அதிக ஹொடாய்களைப் (Ho

அற்புதமான விஷயங்கள்
எதிரானவராகாதீர்கள். சிரிப்பு நக்குச் சிரிக்கத் தெரியாது. சிரிப்பு வித்தியாசப்படுத்துகிறது. இறுக்கமில்லாமல் இருக்கிறது. 5 நகைச்சுவை உணர்வான ல்லை. மனிதர்களைப் பார்த்து வந்தாலும் ஆச்சரிய்பபடுவதற்கு ாளுந் துன்பமில்லை என்று றுகிறார். வாழ்க்கை என்றும் நினதும் அடையாளம் என்கிறார். தான். இன்று மனோதத்துவ மீண்டும், மீண்டும் வலியுறுத்திக் சுவாமிகள் ஆறாம் நூற்றாண்டில்
எந்தக் காலமாக இருந்தாலும் க்க வேண்டியது ஆனந்தம்!
ளைச் சிரிக்க வைத்ததில்லை. ள் ஒவ்வொருவரும் கரைந்தனர். வாருவரும் தூய்மைப்படுத்தப் ம் உணர்ந்திராத அளவுக்கு னர். அறிந்திராத ஆழத்திலிருந்து ா ஊடுருவியது. இந்த உலகம் el) பெறவேண்டும்.

Page 254
அத்தியா
ਸui ( ‘ஒரு கை ஓசையை
ஜப்பானி மிகப்பெரிய இவர் போதி மறைஞானி. ஞானத்தைப் ஞானிகள் ஓவியங்கள், ! அசைவு, செ உடல் அதிர்வ குழப்புதல் ே Rinzai புணர்வைத்
பிறருக்கு மாற நிலைமைகளைத் திடீரெனக் கு விழிப்புணர்வைத் தூண்டியவர்.
ஜப்பானில் ரின்சாய் செ (Rinzai, Zen Philosol பிரபல்யமானது. ரில் திடீர் ஞானப்பாடசா Rinzai Zen School enlightenment) giTul ஞானி ஸ்தாபித்தார். மதக் கருத்துக்கள் றாண்டைச் சேர்ந்த "ஹைகூ"வினால் (Hal
 
 

பம் 29
Rinzai): பக் கேளுங்கள்”
ல் வாழ்ந்த ரின்சாய் அவர்கள் சென் (Zen) ஞானியாவார். தெர்மர் பாதையில் நடந்த இவர் சொற்கள் இல்லாமல் UJů úluU6)Jň. சென்மறை
சொற்கள் UIT65ung சித்திரம் வரைதல், கண்புருவ ருமல், கொட்டாவி விடுதல், பு, சிரித்தல், நிலைமைகளைக் பான்றவைகள் மூலம் விழிப் தூண்டித் தங்கள் சக்தியைப் ற்றியவர்கள். ஞானி ரின்சாய் 5ழப்புவதன் மூலம் மக்களின்
ன் தத்துவம் phy) மிகவும் STIFTu'u GoF6öT லையை (The Of Sudden (Eisai) 6TGöụp Rinzai (o)gFGöIT 18-ஆம் நூற்
ஜப்பானிய சிந்தனையாளர் uin) வலுவடைந்தது. அவர்
Eisai

Page 255
238a போதிதர்மர் பற்றி
ரின்சாய் சென்கோன்கை வெளியிட்டார். அவற்றில் என்பது மிகவும் பிரபல்யமr
தன்னை நாடி வரும் கூறுவது இரண்டு கை கிளம்புகிறது. ஒரு கை கேளுங்கள்’ என்பார். ஒருந கூறினார் தான் ஒரு கை Rinzai; “அதுபற்றிக் கூறுங்க சீடன்: அது இலைகளின் மாதிரி இருந்தது.
rífleiraFinTulů (Rinzai): பொருட்கள், அவை ஒன்ற6 பல மாதங்களுக்குப்பின் சந்தித்தார்.
சீடன் கூரையின்மீது என்றார்.
மறைஞானி: அதையும்
பல வருடங்கள் ஆ சீடரைக் காணவில்லை. கண்டுபிடித்து கூட்டிவர தை அனுப்பினார். தேடிச் .ெ சீடனை அழைத்து வந்தன ரின்சாய் (Rinzai): இப்ே விட்டீர்.
சீடன்: நான் “ஒரு சை
ரின்சாய் (Rinzai): தை
சீடன்: அது பிரபஞ்ச் இன்றி எழுகின்ற ஒலி. அது
LU L-sT35gl. மனதைக்

அற்புதமான விஷயங்கள்
ள (Zen Koan) தொகுத்து ஒரு கை ஓசையைக் கேளுங்கள்’ னது.
சீடர்களுக்கு Rinzai முதலில் களைத் தட்டும்போது ஒசை பின் ஒசையை செவிமடுத்துக் ாள் ஒரு சீடர் வந்து அவரிடம் ஒசையைக் கேட்டதாக, அதற்கு ள்’ என்றார்.
ஊடே காற்றுக் கடந்து செல்கிற
காற்றும் இலையும் இரண்டு ல்ல.
சீடன் மீண்டும் மறைஞானியைச்
மழைத்துளி விழும் ஓசை அது
மறுத்தார். கிவிட்டன. இந்த குறிப்பிட்ட
இந்த குறிப்பிட்ட சீடரைக் ாது மற்றய சீடர்களை மறைஞானி
ஈன்றவர்கள் அந்தக் குறிப்பிட்ட
பாது நீர் அந்த ஒசையைக் கேட்டு
ஒசையைக் கேட்டுவிட்டேன்’
யசைத்தார்
ஒலி. அது எவ்வித உராய்வும் பிறப்பிடமற்றது, தோற்றுவிக்கப் கடந்து மனமற்ற (No-mind)

Page 256
எஸ். கு(
வெறுமைக்குள், மனமற்ற ந அசைவிலிருந்து வரும் ஒசைை கேட்டால் அதுபோலவே பிர
இந்த ஒலியை இந்துக்கள் *ஆமென்? எனவும் இஸ்ல அழைக்கின்றனரா? இது6ே ஆங்கிலத்தில் எங்கும் நிறை
அறிந்தவர் (Omni Sci. (Omnipotent) GIGöIg) arGagpjúb *ஆமென்”, “ஆமீன்? உ தெரிகிறது.
ரின்சாயின் சுதந்திரம்:
ரின்சாய்: ஞானமடைவ தனக்கு விடுதலை தரும்படி (
குரு உன்னைக் கொண்டு விடுதலை தருகிறேன். ஆ இல்லாதபோது உனக்கு எப்படி ஏற்கெனவே சுதந்திரமான சுதந்திரம் கேட்கிறாய். ஆகே என்று கண்டுபிடி. 'நீ எங் என்னிடம் வா.
ரின்சாய்: சில மாதங்கள் வந்தார். நான் இந்த உடம்ப முடிந்தது.
குரு; அந்திப் பகுதி அள திரும்பிப்போய் மிகுதியைக் க
ரின்சாய்: மேலும் சில நான்’ என் மனமல்ல. ஏனென் பார்க்கமுடிந்தது.
குரு; இப்போது சரி பா: விட்டாய். போய் நீ யார்

நபாதம் б2з9
திலையில், தனி ஒரு கையின் யக் கேட்டேன். கூர்மையாகக் பஞ்ச ஒசையும்” என்றார்.
“ஓம்" எனவும் கிறிஸ்தவர்கள் ாமியர்கள் “ஆமீன்? எனவும் வ உலகத்தின் பொது "ஒலி". 55orf (Omni present), Ordooomb ent), oIdooomth வல்லவர் பாது அதனுள் "ஓம்" (Omn), ள்ளடங்கியிருக்கிறது போல்
தற்கு முன் தன் குரு'விடம் கேட்டார்.
நி வா. "நீ இருந்தால் உனக்கு பூனால் நீயே இல்லை. நீயே நான் விடுதலை தரமுடியும். நீ வன். உன்னிடமிருந்துதான் வ போய் இந்த ‘நான்? எங்கே கே என்று கண்டுபிடி. பின்பு
ர் தியானித்துவிட்டு திரும்பி ல்ல. இதைத்தான் கண்டுபிடிக்க
வுதான் சுதந்திரமாகிவிட்டாய். ண்டுபிடிக்க முயற்சிசெய். மாதங்களில் மீண்டும் வந்தார்
ரில் என்னால் எண்ணங்களைப்
நிக்கு மேல் விடுதலை பெற்று என்பதைக் கண்டுபிடி

Page 257
24Oa போதிதர்மர் பற்றிய
ரின்சாய்: ஒருநாள் த இப்போது நான் இல்லா என்னைக் கண்டுபிடிக்க மு விட்டேன், நான் ஒரு 'g?6örp|LÓlóvGO6V' (Nothingness),
(ரின்சாய் ஞானமடைந்த ‘என் உடம்பு எங்கே? எ
தேடியவர் ஆவார்.)
ரின்சாய் (Rinzai) அவர்களின் நிகழ்ந்த சம்பவம் ஒன்று :
ரின்சாய் அவர்கள் தூங்கிக்கொண்டிருந்தார். குடிசையினுள் நுழைந்தான். துறவி எழுந்தார். திருடனைக் நேரத்தில் நான் கண் விழி நான் இங்கிருந்து வெளி படாமல், அவசரப்படாம நிறைவேற்றுங்கள் எனக் திடீரென வெளியே ஒடினா பின்தொடர்ந்து ஓடினான். பிடித்துக் கேட்டான். விளங்கவில்லை”. அதற்கு : கொண்டிருக்கிறேன். உங் தன்னம்பிக்கை பிறந்துவிட் செய்து பார்க்கிறேன்” என்ற
திருடன் "வீட்டின் த6ை ஒடுகின்றீர்கள். என்னைத் தி பழகிய முதல் மனிதர் நீ நடந்துகொண்டிருந்தால் கைவிட்டிருப்பேன். நீங்கள் விளங்கவில்லை” என்றார். சிரித்தவுடன் தெளிவானேன் என்னுள் எதுவும் நிகழவி சிலவற்றைத் தகர்த்தேன்,

அற்புதமான விஷயங்கள்
1ன் குருவிடம் ஓடி வந்தார். மல் போய்விட்டேன். எங்கும் முடியவில்லை. சுதந்திரமடைந்து “G) Gulion'). Lb' (Void/Space), வெறுமை’ (Emptiness) என்றார்.
பின் அவர் கேட்ட முதற்கேள்வி னக் கேட்டுத் தன் உடம்பைத்
ா வாழ்வில்
தனது குடிசையில் இரவு திருடன் ஒருவன் அந்தக் இவனது நடமாடும் சத்தத்தில் க் கண்டதும் துறவி “நீங்கள் வந்த த்ததற்கு என்னை மன்னியுங்கள். யேறுகிறேன். நீங்கள் பதற்றப் ல் நீங்கள் வந்த நோக்கத்தை கூறி” கடகடவெனச் சிரித்தார். ர் துறவி. திகைப்படைந்த கள்வன் கள்வன் ரின்சாயின் கரத்தைப் “நீங்கள் செய்வது எனக்கு துறவி “என்னை நான் குழப்பிக் களைக் கண்டதும் எனக்குத் டது, நான் எனக்குச் சோதனை
TIT.
ஸ்வரான நீங்கள் திருடனைப்போல் ருடனாகக் கருதாமல் என்னுடன் ங்கள்தான். மற்றவர்கள் இப்படி
நான் இத்தொழிலை செய்வது என்ன? எனக்கு ஒன்றும் ரின்சாய் “நான் கடகடவென்று எ. பல ஆண்டுகள் தவமிருந்தும் ல்லை, சிரித்த அந்த வினாடி சிலவற்றை வெளிப்படுத்தினேன்,

Page 258
எஸ்.
நான் என்னிடமிருந்து துன் ஆசான்” என்று கள்வனிடட இவரின் காலடியில் விழுந்து மன்றாடினார். துறவி “நீங்கள் ஒருவரை ஒருவர் ஏற்று இ
மறைஞானி பின்வடிாய் திருடனுக்கு விழிப்புணர்வை

குருபாதம் 241ےر
ாடிக்கப்பட்டேன், நீதான் எனது பணிவாகக் கூறினார். கள்வன் தன்னைச் சீடனாக ஏற்கும்படி எனக்குக் குருவானவர். நாங்கள் நப்போம்” என்றார்.
அவர்கள் நிலைமையைக் குழப்பி,
ஏற்படுத்திவிட்டார்.

Page 259
அத்தி
தியோஜினி *மனிதனை
இவர் ஒரு கிரேக்க மேதையும், ஞானியுமாவ அலெக்சாண்டர், தத்துவ மே தத்துவ மேதை அரிஸ்ரோ காலத்தில் வாழ்ந்தவர். அ1 கருத்துக்களுடனும், கருத்துக்களுடனும் முரண்பட அலெக்சாண்டரைப் பொ பொது மக்கள் மத்தியிலும் தியவர். அதன் ஊடாக அ அவருக்கு உணர்த்தியவர். காலத்தில்தான் உணர்ந்தார்.
இன்று வீட்டு வளர் பூனைகளுக்கு ஆடைகள் பசாரங்கள் இடம்பெறும் கால்களை நிர்வாணமா
 

LITuib 30
iud (Diogenes) : த் தேடுகிறேன்"
நாட்டு தத்துவ ார். மாவீரன் தை பிளேட்டோ, ட்டில், வாழ்ந்த சிஸ்ரோட்டிலின் பிளேட்டோவின் ட்டவர். மாவீரன் து இடத்திலும் அவமானப்படுத் (லெக்சாண்டரின் அகம்பாவத்தை அவர் அதைத் தனது இறுதிக்
தியோஜினிஸ் தன் வாழ்நாளில் ரும்பகுதி நிர்வாணமாகத்தான் ந்தார். மனிதன் நிர்வாணமாகத் பிறந்தான் என்பார். மனிதன் னை ஆடைகளால் மறைத்துக் rள்வதால் மனம் பலவீனமான ாகிவிட்டான் என்று அவர் வது வழக்கம்.
ப்புப் பிராணிகளான நாய்கள்,
அணிவிக்கப்படுகிறது. விருந்து மண்டபங்களில் நாற்காலிகளின் ப் பார்ப்பது நாகரிகமாகாது

Page 260
எஸ். கு
என்பதனால் அவைகள் து போலும். நிர்வாண நடன மேசைகளைக்கூட ஆடைக மாக்கப்படுகிறது. ஆனால் வாழ்ந்தார். கிரேக்க நாட்டில் சினோப் (Sinope) நகரில் 412 Gosnyójöj (Corinth) p535íf6) கட்டுப்பாட்டில் வைத்திருந்து பொழுது தனது உடலை இ
தியோஜினிஸ் தனது மிருகங்கள் வாழும் இடத்தில் மிருகங்கள் தன் உடலை உல அங்குக் கூடியிருந்தவர்கள் மிரு எனக் கிண்டலாகக் கேட்டணி தந்தால் மிருகங்களை விரட் நகைச்சுவையாக கூறினார். என்றனர் மேலும் கிண்ட விட்டதென்றால் நீங்கள் எப் என நகைச்சுவையாக தன்னும் உலகிலே நகைச்சுவையாகப் ே இவராகத்தான் இருக்கமு அறிவியலை நகைச்சுவையுடன் கொடுத்தவர். இவர் இறந்த ஞாபகார்த்த தூண் எழுப்ப மேல் நாயின் உருவச்சிை மனிதர்களை விட நாய்கள் பூராவும் கூறி நாய்களு அடையாளமாக நாயின் இருக்கலாம்
இவரது தத்துவ இயை கிண்டல் செய்யும் தத்துவம், ( சமூகம் இவரை அவமதித்தது எனவும் அழைத்தது. சம்பிரத நடைமுறைகள், பழக்கங்கள், எதையும் ஏற்காது அவைகை அவைகளை மீறியே வாழ்நாள்

ருபாதம் 243ےر
Eகளால் மறைக்கப்படுகின்றன ாம் இடம்பெறும் அரங்குகளில் ள் அணிந்து மேசை கெளரவ தியோஜினிஸ் நிர்வாணமாகவே கருங்கடல் பிரதேசத்தில் உள்ள BCEuộ6iv . Djigi 323 BCE u Glav இறந்தார். மரணத்தைத் தன் 90 வயதில் தான் விரும்பிய றக்கச் செய்தார்.
உடலை நகருக்கு வெளியில் வீசும்படி கேட்டுக்கொண்டார். ணவாக உட்கொள்ளும் என்றார். நகங்களுக்குப் பயப்படவில்லையா னர். தியோஜினிஸ் “நீங்கள் தடி டிக் கொண்டிருக்கலாம்” என “நீ தானே இறந்துவிட்டாய்” -லாக, என் உடல் இறந்து படி எனக்குத் தடி தர முடியும் ணர்வுடன் பேசியபடி இறந்தார். பேசியபடி இறந்த முதல் மனிதர் டியும். வாழ்நாள் பூராவும் ா கலந்து ஆழமான கருத்துடன் 5 கொறிந்த் நகரில் இவருக்கு ப்பட்டுள்ளது. அந்தத் தூணின் ல ஒன்று வைத்துள்ளார்கள். மேலானவை என்று காலம் டன் உலாவியதால் இதன் உருவச்சிலை வைக்கப்பட்டு
ல குற்றம் காணும் தத்துவம், Cynic philosophy) oIoOIởis JogóloOIñi. , கேலி செய்தது, நாய் விசரன் ாயம், பாரம்பரியம், கலாச்சாரம், விதிமுறைகள், சட்டதிட்டங்கள் ளக் கடுமையாக விமர்சித்தார். முழுக்க வாழ்ந்தார். மனிதர்கள்

Page 261
244a போதிதர்மர் பற்றி
இயல்பாகவும், இலகுவாக விதிகள், சம்பிரதாயங்கள் பிறர் தனக்கு அங்கீகாரம் ( தனக்குத்தான் அங்கீகாரம் ஏற்றுக்கொள்வதாகவும், பிற என்றே இறுதிவரை வாழ்ந்த
சோக்கிரட்டிசின் மான
வர்களில் ஒருவரா? அந்ரிஸ்தீன்ஸ் இட (Antisthenes) gauri 356öTGO)6 LD [TG6Ö0TG I GoÖTTT55 ஏற்று
கொள்ளும்படி கேட்டா அவர் மறுத்து தடியா அடித்துத் துரத்தினா “அடிப்பதற்கு இனிமே தடியே இல்லை என்னு மளவிற்கு என்னை அடி உங்களிடம் ஞானம் இரு ஏற்றுக்கொள்ளுங்கள்’ ( ஏற்றுக்கொள்ளப்பட்டார். தொடர்ந்தும் மாணவனாக குருவை விட அறிவியல் யாகவும் விளங்கினார். அந் உண்மையான மாணவன் பிளேட்டோவிடம் கேட்ட
91
தியோஜினிஸ் இறகில்லாத பறவையுடன்
 

அற்புதமான விஷயங்கள்
வும் வாழ்வதற்குச் சட்டங்கள், தடைகளாக உள்ளன என்றார். பழங்கத் தேவையில்லை எனவும் கொடுப்பதாகவும், தன்னைத்தான் தன்னை ஏற்கத் தேவையில்லை
II.
i Biocents
$8:x *
யுங்கள். எனக்கு கற்பிப்பதற்கு 5க்கிறது. என்னை மாணவனாக ான்றார். அவர் மாணவனாக இவர் அடி உதை பெற்றும் இருந்தார். காலப்போக்கில் தனது மேதையாகவும், பெரும் ஞானி ரிஸ்தீன்ஸ் தான் சோக்கிரட்டிஸின் ா என்பது இவரது கருத்து. னர் தியோஜினிசைப்பற்றி என்ன றுகிறீர்கள்? அதற்கு அவர் சோக்கிரட்டிஸ் இருந்திருந்தால் வரை விசர் ஆக்கியிருப்பார்’
ன்றார்.
பிளேட்டோவிடம் விவாதித்தார். ளேட்டோவின் தத்துவங்கள் கோட் ாடுகளை தியோஜினிஸ் நிராகரித் ΤΓή". ஒருமுறை பிளேட்டோ னது மாணவர்களுக்கு மனிதனைப் ற்றிக் கூறும்போது மனிதன் ஒரு றகில்லாத பறவை என்றார்.

Page 262
எஸ். கு
தியோஜினிஸ் ஒரு இறகில்லா காண்பித்து இங்கே பார், இ பிளேட்டோ தனது அக்க( செய்தார். அறிவியலுடன் ந6 செய்வது தியோஜினிசின் பா
இவரது தந்தை ஒரு வங்கி அதிகாரி. இளமைப் பருவத்தில் தியோஜினிஸ் வங்கியில் பணியாற்றினார். தந்தை நாணயம் வெளியிடு வதற்குப் பொறுப்காக இருந் தார். நாணயத்தில் தந்தை யின் பெயரான ஹைசிசியா (Hicesia) பொறிக்கப்பட் டிருக்கும். இவரும் தந்தைக்கு உதவியாக இ நாணயங்களை உருமாற்ற செல்லுபடியாகாது செய்துவி சொத்துரிமை, உரிமம் என்று விவாதித்தார். இவர் வா நகரிலிருந்து தண்டனையம கடத்தப்பட்டார். அங்கு கட
கீழும், தெரு ஓரத்திலும் வாழ்
ஒரு நாள் எலியொன்று அஞ்சாமல் வாழ்வதைப் பார்த் சுதந்திரம் என்றார். தெருவோ கிடக்கும் குழாய்கள், தொ உறங்குவார்.
ஒரு நாள் ஏழைச் சிறு உள்ள தண்ணிர்க் குழாயி குவித்துத் தண்ணிர் பருகுவை கோப்பையை உடைத்து எறிந் கைகளையும் கோப்பையாகப் சொத்துடைமைகளுக்கு எ ஆட்சியாளர்களுடன் வாதி

ருபாதம் 245ےر
ந பறவையை பிளேட்டோவிடம் தான் உனது மனிதன் என்றார். 3த்தில் பின்பு சிறிது மாற்றம் கைச்சுவையைக் கலந்து கிண்டல் னியாகும்.
ருந்தார். ஒரு நாள் அந்த ம் செய்து நாணயங்களை ட்டார். காசு, பணம், சொத்து, | எதுவும் இருக்கக்கூடாது என ழ்ந்துகொண்டிருந்த சினோப் 5க் கொறிந்த் நகருக்கு நாடு டற்கரையிலும், மரங்களுக்குக் ந்தார்.
ந்து பொந்தெல்லாம் இலகுவாக தார். எலி தனக்குக் கற்பித்தது த்திலோ, கோயில் முன்றிலிலோ ட்டிகளுக்குள் குளிர்காலத்தில்
வன் ஒருவன் தெரு ஓரத்தில் ) தனது இரு கைகளையும் தப் பார்த்ததும் தனது உணவுக் தார். அன்றிலிருந்து தனது இரு பாவித்தார். பொருள் உடைமை, ராகக் குரல் கொடுத்தார். ட்டார். இவர் அரசுக்கும்,

Page 263
246. போதிதர்மர் பற்றிய
ஆட்சிக்கும், அதிகாரிகளுக்கு மிக்கவர், பயம் அறியாதவர். இவருக்கு அரசனும், ஆண்டி
கொறிந்த் நகரில் ஒரு நாள் காலை மனித எலும்புச் குவியலைப் பார்த்தபடி சூரியஒளியில் உட்கார்ந்து இருந்தார். அந்த வழியாக வந்த அரசன் மாவீரன் அலெக்சாண்டர் “உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் என்று சொல் லுங்கள். அதை உடனே அதற்கு தியோஜினிஸ் “நீ எ என்றார். அலெக்சாண்டர் எதைத் தேடுகிறீர்கள்” என்ற தேடுகிறேன். அடிமையின் எலும்பு எது என்று வித்திய என்றார் தியோஜினிஸ். அலெக்சாண்டரை ஏளனம் போர்வீரர்கள் ஆத்திரம் கொ செய்ய எத்தனித்தனர். தியோஜினிஸ் எதையும் எதைப்பற்றியும் அக் அலெக்சாண்டர் இரதத்தில்
இவரது வாழ்க்கையில் நிக
கொறிந்த் நகரில் ஒ நடமாட்டம் குறைந்த வ பார்ப்போரைக் கவரும் வசீ கண்கள், மிடுக்கான பார்ை மிக்க உடல் அனைத்தும் பேச்சு சிங்கம் கர்ச்சிப்ட சுதந்திரமாக இயற்கைை கொண்டிருந்தார்.

அற்புதமான விஷயங்கள்
அஞசாதவர். இவர் துணிச்சல் யாருக்கும் தலை வணங்காதவர். யும ஒன்றேதான்.
__7:4 நிறைவேற்றுகிறேன்’ என்றார். ன் சூரிய ஒளியைவிட்டுப் போ” கேட்டார் "எலும்புக்குவியலில் ார். 'உன் தந்தையின் எலும்பைத் எலும்பு எது உன் தந்தையின் பாசம் கண்டுபிடிக்கமுடியவில்லை” பொது மக்கள் மத்தியில் செய்தார். மெய்க்காப்பாளர்கள், ண்டனர். தியோஜினிசைக் கைது அலெக்சாண்டர் தடுத்தார். கவனத்தில் கொள்ளவில்லை. 5றையும் கொள்ளவில்லை. புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
)
pந்த சம்பவம் ஒன்று:
ரு நாள் தியோஜினிஸ் சன Iயில் போய்க்கொண்டிருந்தார். ரத் தோற்றம், ஊடுருவும் காந்தக் ப. கம்பீரமான வீரநடை, வலிமை கொண்டவர் இவர். இவரது து போல் இருக்கும். இவர் ப இரசித்து நடந்து சென்று

Page 264
οποίο Θ
மனிதர்களைப் பிடித் வியாபாரிகள் நான்கு பேர் இவரது ஆஜானுபாகுவான ே தயங்கினாலும் சுற்றி வளைத்து பிடிப்பதற்கு நாலா பக்கத் தியோஜினிஸ் நடந்துகொ வினோதமாக இருந்தது. கலக்கமோ, அச்சமோ இல்ை கம்பீரமாக நின்றார். இவா பதுங்குவதை அவதானித்துவ கொண்டுபோய் விற்கப்போகி சிங்கம் கர்ச்சிப்பது போலச் 8 போக்க என்னால் முடியுெ உள்ளது. நீங்கள் என்னை அமைத்தது வீண். என்னிட தந்திருப்பேன். கொண்டுவந் என்றார். மறைத்து வைத் எடுத்தனர். இவரது பேச்சு அவர்கள் அடிமை போல நில் பைத்தியம் போல் இரு வந்துவிடுமோ என்று பயந்தா சங்கிலியால் பிணைத்து நடைமுறைகள் எங்களை திை தயக்கத்துடன் கூறினர். திே இரகசியத்தைக் கற்றுக்கொ மட்டும் அடிமை, எனவே அடிமையாக்க முடியாது, என் முடியாது? என்றார்.
இவர் கம்பீரமாக முன் அடிமை வியாபாரிகள் சா பின்னால் நடந்து சென்றனர். பார்த்துக் கேட்டார்: “ஏன் அடிமைபோலச் சங்கிலியைத் நான் உங்களை அடிமைப்ட போன்று சுதந்திர மனிதர்க சங்கிலியை வீசிவிட்டு எ

ருபாதம் 247ے
து அடிமையாக விற்கும் இவரைப் பார்த்துவிட்டனர். தோற்றத்தைப் பார்த்ததும் சற்றுத் வப் பிடித்துவிட்டனர். இவரைப் திலும் சுற்றி வளைத்தபோது ாண்ட விதம் அவர்களுக்கு முகத்தில் கொஞ்சம் கூடக் υπLDου அமைதியாக, ஆனால் ர்கள் மரங்களுக்குப் பின்னால் விட்டார். என்னைப் பிடித்துக் கிறீர்களா? என்று கேட்டுவிட்டு கிரித்தார். உங்களது வறுமையைப் மன்றால் அது மிகவும் பயன் மறித்துப் பிடிக்க வியூகம் ம் சொல்லியிருந்தால் சம்மதம் த கைவிலங்குகளை எடுங்கள் திருந்த இரும்புச் சங்கிலியை எஜமானின் பேச்சாக இருந்தது. எறுகொண்டிருந்தனர். இந்த ஆள் க்கிறார். இவரால் ஆபத்து "ர்கள். தயக்கத்துடன் இவரைச் கூட்டிச் சென்றனர். “உன் கப்படையச் செய்கின்றன எனத் யாஜினிஸ் “நான் சுதந்திரத்தின் ண்டுவிட்டேன், நான் எனக்கு என்னை வேறு யாராலும் சுதந்திரத்தை யாராலும் பறிக்க
ானால் நடந்து செல்ல அந்த வ்கிலிகளைத் தூக்கிக்கொண்டு இந்த வியாபாரிகளை திரும்பிப் எனக்குப் பின்னால் நீங்கள் தூக்கிக்கொண்டு வருகிறீர்கள். டுத்தவில்லையே!. என்னைப் ளாக முன்னுக்கு வாருங்கள். ன்னுடன் சேர்ந்து சுதந்திர

Page 265
248a போதிதர்மர் பற்றிய
மனிதர்களாக நடந்து வ மாட்டேன். நீங்கள் தப்பி
விற்கப்படப் போகின்றேன் சந்தோஷமாக இருக்கிறது. போகின்றேன். இது எனக்கு ஒரு உயர் பீடத்தில் எஜமான் விலைபேசி வாங்குபவர்கள் கீழ் நிற்கப்போகிறார்கள்’
அடிமை வியாபாரிகள் இ கொண்டு செல்வதில் அர்த்த பேசி, சங்கிலியைக் கழற்றி கூட சுதந்திரமான மனித பொறுப்பைத் தானே மு வியாபாரப்பொருள் போன்று மனிதனுக்கு நிகழ்கின்ற அந் அடிமையாக விற்கப்படப் ே கூட அவர் சுதந்திர மனிதரா
இவர் மிடுக்காக நட தெருக்களில் போய் வருவே தியோஜினிசின் ஆளுமைக் ச வேடிக்கை பார்க்கும் ம “என்னுடன் நடந்து வ இவர்களைச் சங்கிலியால் இவர்கள் என்னை விட்டு கட்டுப்பட்டவர்கள்’ என விற்கப்போகும் வியாபாரிகள் கேட்டவர்கள் இடிந்துபோல் அடிமையாக விற்கும் கிே அடைந்தனர். அங்கே அப இருந்தார். இந்த அடிமை சீக்கிரமே விற்றுவிடலாம் எ ஏலம்போடும் மேடை மீ கம்பீரமாக நின்றார்.
வியாபாரிகளின் தலை6 ஒரு பெரிய அடிமை விற்க
உள்ளவர்கள் உடனே ஏலம்

அற்புதமான விஷயங்கள்
ாருங்கள். நான் ஓடிப்போக ஓடாமல் இருந்தால் சரி. நான் என்பதை நினைக்க எனக்குச் நான் ஏலத்தில் விடப்படப் மகிழ்ச்சியைத் தருகிறது. நான் ா போல உயர்ந்து நிற்க என்னை அடிமைபோல் உயர் பீடத்திற்குக் என்றார். இதைக் கேட்டதும் வரைச் சங்கிலியால் பிணைத்து ம் இல்லை எனத் தங்களுக்குள் விட்டார்கள், இந்தச் சூழலிலும் ராகத்தான் இருந்தார். தனது ழுமையாக ஏற்றுக்கொண்டார். ஏலத்தில் விற்கப்படுகின்ற ஒரு த அசிங்கமான நேரத்திலும் கூட, பாகின்ற அந்தச் சூழ்நிலையிலும் க இருந்தார்.
டந்து சென்றுகொண்டிருந்தார். வார் இவர்களைப் பார்த்தனர். வர்ச்சியும் அப்படிப்பட்டதுதான். க்களைப் பார்த்துக் கூறினார் ரும் இவர்கள் அடிமைகள்.
பிணைக்கத் தேவையில்லை. ஓடிவிட மாட்டார்கள். எனக்குக் க் கூறி இவரை அடிமையாக )ளச் சுட்டிக்காட்டினார். இதைக் ாார்கள். இறுதியில் மனிதர்களை றட் (Crate) நகரச் சந்தையை மை வியாபாரிகளின் தலைவர் யை நல்ல விலைக்குக் கூடிய ன்று வியாபாரிகள் கூறினார்கள். து ஏறி ஒரு அரசனைப்போல்
Iர் உரக்கக் கூறினான். “இங்கே படுவதற்கு வந்திருக்கிறார். பணம் கூறலாம். இது பொது அறிவிப்பு”

Page 266
ܠ ܔ
οποίο Θ
என்றான். உடனே தியோ பார்த்துக் கத்தினார். “ஒரு என்பது உனக்குத் தெரியவில் பார்த்து “இங்கே ஒரு எஜம என்னை வாங்கும் சக்தியுள்ள அடிமைக்கு விற்பதற்காக இர ஏனெனில் என்னுடன் 6 தேவைப்படுகிறது. எனவே ஏ வாங்கப்போவது ஒரு எஜமா என்பதை நினைவில் கொள்ளு
ஏலம் ஏறிக்கொண்டே விலைக்கு விற்கப்பட்டார். ெ அதிக விலை கொடுத்து இல் செல்வந்தர். இவரைப் பிடி விற்பனை செய்ததன் மூல கிடைத்தது. தியோஜினிஸ் அ கூறினார். "உங்கள் வறுமை செய்துவிட்டேன். எவ்வித நீங்கள் போகலாம். என்னை நான் செல்கிறேன்.”
இவரை வாங்கிய ெ “உனக்குப் பைத்தியமா? உ நினைக்கிறாய். நான் ஒரு தியோஜினிஸ் "அடிமை வியாப அடிமைதான். நீ அடிமை வருகிறாய்?” என்றார். செல்ல என்று கேட்டார். “நான் (Govern Men GTaipitri அதிர்ச்சியடைந்தார். இவரு ஒன்றுமில்லை. இவர் எந்தச் இவரது ஆளுமை இவரது பயப்படாத இவரது துணிச்ச எல்லாவற்றிற்குமான பொறு எண்ணமில்லாத மனம், நி விடுதலை உணர்வுள்ள முழு ஆடையில்லாத நிர்வாண ம

நபாதம் 1249
ஜினிஸ் அந்தத் தலைவரைப் எஜமானை எப்படி விற்பது லை.” பின்பு கூட்டத்தினரைப் னர் விலைக்கு வந்திருக்கிறேன். வர்கள் ஏலம் கோரலாம். ஒரு கே ஒரு எஜமான் நிற்கிறேன். பந்த நால்வருக்கும் பணம் லத்தை ஆரம்பியுங்கள். நீங்கள் னை, ஒரு அடிமையை அல்ல ங்கள்” என்றார்.
போனது. இறுதியில் அதிக Fணியாட்ஸ் (zeniades) என்பவர் பரை வாங்கினார். இவர் ஒரு த்த அடிமைகளுக்கு இவரை ம் பெரும் தொகைப்பணம் ந்த வியாபாரிகளைப் பார்த்து நீங்க நான் உங்களுக்கு உதவி குற்ற உணர்வும் இல்லாமல் வாங்கிய இந்த அடிமையோடு
சல்வந்தர் தியோஜினிஸிடம் ன்னை நீ ஒரு எஜமானாக த செல்வந்தன்” என்றார். ார சந்தைக்கு வரும் நீயும் ஒரு இல்லாவிட்டால் இங்கு ஏன் பந்தர் “உன் வேலை என்ன? மனிதர்களை நிர்வகிப்பவன்
தியோஜினிஸ். செல்வந்தர் டன் ஒப்பிடும்போது தான் சூழலிலும் மகிழ்ச்சியானவர். வசீகரம், எந்தச் சூழலிலும் ல், கலங்காத மனோதிடம், பெடுத்தல், அடிமை என்ற டெத்துக்கு நிமிடம் வாழும் மையான மனிதர் இவர். இவர் னிதராக இருந்தாலும் இவர்

Page 267
25oa போதிதர்மர் பற்றி
முன்னிலையில் தான் வெறு வேண்டும். இவரை உடனே
தியோஜினிஸ் "நான் அந்த அடிமை வியாபாரிகள் நானாகத்தான் வந்தேன்” எ போய்க்கொண்டிருந்தார். புதல்வர்கள் காலப்போக்கின் மாறிவிட்டார்கள்.
ஒரு சுதந்திர மனித தன்னைக் கைதியாகப் பார் தன்னை அடிமையாகப் ப என்றும் சுதந்திர மனிதன் ஆள்கின்ற ஆள் உண்மை இருக்கமுடியும். பயந்தவ அடக்கி ஆள நினைப்பா சரிக்கட்டுவதற்காகத்தான் அடிமைப்படுத்தமாட்டான் மகிழ்ச்சி அடையமாட்டான் மற்றவர் சுதந்திரத்தையு உயிரைப்போலவே S பயந்தவன்தான் மற்றவரை அடக்கிவிடுவாரோ என்று இருப்பான். அதனால்தான் Prince) oIGibigD pIIGSlóo “g5 குறிப்பிடுகிறார். நிக்ே Markavali) இத்தாலி ந 03.05.1469, இறந்தது: ! நூலில் அரசியல், நிர்வ விடயங்கள் பற்றி எழுதியு
இந்தச் சுதந்திர ம6 எதென்ஸ் நகரை அன விதிமுறைகள், மரபுகள், அனைத்தையும் எதிர்த்த மக்களின் இயல்பு வாழ் அவை தடைகளாக உ

ப அற்புதமான விஷயங்கள்
மையானவர் என நினைத்திருக்க
விடுதலை செய்தார்.
அடிமையாகக்கூடிய ஆள் இல்லை. r என்னைக் கொண்டு வரவில்லை. ன்றார். இவர் சுதந்திர மனிதராகப்
இந்தச் செல்வந்தரது இரு தியோஜினிசினது மாணவர்களாக
னைச் சிறையில் அடைத்தாலும் க்கமாட்டான். அடிமைச் சூழலிலும் ார்க்கமாட்டான். சுதந்திர மனிதன் தான். மற்றவர்களை அடக்கி யில் பலவீனமான ஆளாகத்தான் ன்தான் மற்றவனைப் பயமுறுத்தி ன். அது தன் சொந்தப் பயத்தை அஞ்சாத மனிதன் எவரையும் 1. மற்றவர்களின் மரணத்திலும் எ. தன்னுடைய சுதந்திரம்போலவே ம் மதிப்பவன் அவன். தனது றர் உயிரையும் மதிப்பான். அடக்கி ஆளாவிட்டால் தன்னை எப்பொழுதும் பயந்துகொண்டே மார்க்கியவல்லி "இளவரசன் (The ாக்குவதே சிறந்த தற்காப்பு? எனக் காலோ மார்க்கியவல்லி (Nicolo ாட்டைச் சேர்ந்தவர். பிறந்தது: 1.06.1527. The Prince ordiop கம், இராணுவம், சமூகம் ஆகிய
Gi தர் தியோஜினிஸ் நாளடைவில் டந்தார். கலாச்சாரம், சட்டம், சம்பிரதாயங்கள், கோட்பாடுகள் ர். இவர் அவைகளை மீறினார். ற்கும் இயற்கையான வாழ்வுக்கும் ாளன என்றார். மக்கள் தங்கள்

Page 268
στου. ΘδC
போக்கில் இயல்பாகவும் இய அத்தகைய வாழ்வு அறிவையு இல்லையேல் மக்கள் நடை என்பதை தனது இறுதி மூச்சு
தனது கையில் லாம்பு (Lamp) கொண்டு திரிந்தார். அது 24 மணிநேரமும் எரிந்துகொண்டே இருக் கும். தெருவில் போய் வருவோர் முகங்களில் அந்த லாம்பைப் பிடித்துப் பார்ப்பார். என்ன செய் கிறீர்கள் என்று கேட்டார் “மனிதனைத் தேடுகிறேன்’ என்பார். இவர் இறக்கும் போது இவரது லாம்பு இவரு இருந்தது. தியோஜினிஸ் ", பிடித்து விட்டீர்களா?’ என் “இறைவனுக்கு நன்றி, என விட்டேன்” என்றாராம். இவ.ை பிறர் முகத்திற்கு நேராகப் ஆனால், அவர் லாம்பைத் தன் தன் கண்களைத்தான் பிறருக்கு ஊடாகத் தனது சக்தியைப் கண்களை உற்று நோக்கிய நிகழ்ந்ததை உணர்ந்தனர். அ வாழ்ந்தனர்.
இவர் ப்ோகுமிடமெல் சேர்ந்துகொள்ளும். மனிதர்கள் நடிப்பு, கள்ளம், கபடம், நயவ பேராசை, செயற்கைத்தன்மை நிரம்பியவர்கள் என்பார். நிபந்தனைகளும், மரபுகளும் களும் இல்லாதவை. நாய் கணத்துக்குக்கணம் அந்தக் கொள்கிறது. ஆனால் மனிதன்
 

நபாதம் 1251
ற்கையாகவும் வாழவேண்டும். ம் ஞானத்தையும் கொடுக்கும். டபிணமாக மாறிவிடுவார்கள் வரை கூறியவர்.
}க்கு அருகாமையில் எரிந்தபடி நீங்கள் மனிதர்களைக் கண்டு ாறு கேட்டவர்களுக்கு அவர் ாது விளக்கைப் பாதுகாத்து ரப் பார்ப்பவர்களுக்கு லாம்பை
பிடிப்பது போல் தெரியும். முகத்துக்கு அருகில் பிடித்துத் குக் காட்டினார். தன் கண்கள் பிறருக்கு மாற்றினார். இவரது வர்களுக்குள் "உள் மாற்றம்’ அவர்கள் மாறிய மனிதர்களாக
லாம் நாய்கள் இவருடன் பொய், போலி, பாசாங்கு, ஞ்சகம், நம்பிக்கைத் துரோகம், சூது, வாது, ஏமாற்று, சதி நாய்கள் உண்மையானவை. விதிமுறைகளும், சம்பிரதாயங் நிகழ்காலத்தில் வாழ்கிறது. கணப்பொழுதில் வாழ்ந்து ா இறந்தகால எண்ணங்களும்

Page 269
252a போதிதர்மர் பற்றி
எதிர்காலப் பேராசைகளுட கணம் அந்தக் கணப்பொ நண்பன் யார் பகைவை மனிதனைப்போல் நாய்
"உண்மையின் மீது கு உண்மையானது. கள்ளம் க
மனிதர்கள் தங்களு களையும் பிரச்சினை ஆக்கு கொள்ளும் அத்தனை மொழித்தளை, இனத்தன நாட்டுத்தளை.) மனிதனி ஞானத்தை அபகரிக்கின்றன என்று சட்டமும் அரசும் ெ பூராவும் ஊர் ஊராகச் தனிப்புரட்சியாளர். "யாதும் வாழ்ந்தவர் இவர். உங்கள ஒரு உலகப்பிரஜை (Citize பதிலாக இருந்தது. மக்கள் எளிதில் புரிந்துகொள்ளமு *பயித்தியக்காரன், நாய் விச யாரைக் குறிக்கும் என்பன அளவுக்கு இவரது பெயர் வைத்திருக்கவில்லை.
தான் எதைச் சொல்கிற தான் எதை ஏற்க கொள்ளாமலே வாழ்ந்த தனக்குச் சரி எனத் தே சொல்லுக்கும், செயலு இல்லாது வாழ்ந்தவர். சமுதாயம் கூறும் கல மனிதர்களுக்கு எதிராக மனிதர்கள் இல்லை என்று இடமான சந்தை மைதா
கூறினார். இந்த இடத்

ய அற்புதமான விஷயங்கள்
-னும் இருப்பதால் கணத்துக்குக் "ழுதில் வாழ்வதில்லை. நாய்க்கு ண் யார் என்பதும் தெரியும். யாரையும் ஏமாற்றாது. நாய் 5ரைக்கும். அந்தக் குரைப்பு படம் அற்றது என்று கூறுவாராம். நக்குள்ள அத்தனை வாய்ப்புக் குகிறார்கள். மனிதன் ஏற்படுத்திக் *தளைகளும் (குடும்பத்தளை, )ள, சமூகத்தளை, மதத்தளை, ன் சுதந்திரத்தை, ஆனந்தத்தை, 1. மனிதன் எப்படி வாழவேண்டும் சொல்லக்கூடாது என்று வாழ்நாள் சென்று பிரச்சாரம் செய்த ஊரே யாவரும் கேளிர்" என்று து ஊர் எது எனக் கேட்டால் தான் n of the World) Orois U(35 Sol Ug இவரைப் புரிந்துகொள்ளவில்லை. டியாத மனிதராகவே வாழ்ந்தார். ரன், லாம்பு விசரன்" என்றால் அது pத மக்கள் அறிந்து வைத்திருந்த தியோஜினிஸ்? என்பதை அறிந்து
)ாரோ அதன்படி வாழ்ந்தவர். வில்லையோ அதை ஏற்றுக்
OJT. ான்றியதைத் துணிந்து கூறியவர். ரக்கும், வாழ்தலுக்கும் வித்தியாசம்
ாச்சாரம், ஒழுக்கம், சம்பிரதாயம், இருக்கின்றன. அவைகளுக்காக எதென்ஸ் நகரில் உள்ள பொது Bor (Market Place) Cyp GörgóloSlóio தில்தான் பொது விவாதங்கள்

Page 270
எஸ். கு(
இடம்பெறும். யாரும் தங்கள் கருத்துக்களைக் கூறலாம். தாங்கள் அறிந்த செய்திகளைத் தெரிவிப்பதற்கும் அறிவியலைப் பரப்புவதற்கும் இந்தச் சந்தை மைதானமே விவாத அரங்காக இருந்தது. அங்குப் பிற நாடுகளிலிருந்து செல்வோரும் அந்த மைதானத்தில்தான் தாங்கள் அறிந்த உண்மைகளை உரைப் பிளேட்டோ, அரிஸ்ரோட்ட வர்கள். இந்த மைதானத் அரிஸ்ரோட்டல் உடனும்
எதிர்வாதம்புரிந்தார். அவர்க கோட்பாடுகளுடனும் முரண்ப குதர்க்க தத்துவம் (Cynic அழைத்தனர். மனிதனைக் போதுமானது. ஒரு நடுவிர சமுதாயமே விசராகிறது. ஒரு நடுவிரலே பேதுமானதாக இ குழப்பத்துக்குக் காரணம் ஆ தேவையற்றவைகளை "ஒழுக்க கூறிக் கிண்டல் செய்வார்.
இவர் இறுதிவரை யாரு இவர் தனக்கென்று சீடர்க6ை விவாதங்கள் இவரது கருத்துச் கொண்டு செல்லப்படவில்லை விரும்பவில்லை.
சரித்திர முக்கியத்துவம் வ சந்திப்பொன்று அலெக்சாண்ட - தியோஜினிசுக்கும் இை நிகழ்ந்தது. இந்தச் சந்திப்பு பேரரசன் "வூ” வுக்கும் போ, ருக்கும் இடையில் நடந்த சந்தி நினைவூட்டுகிறது. பிற்காலத்தி

பார்கள். அங்கு சோக்கிறட்டிஸ், ல் போன்றோர் பிரபல்யமான திலே பிளேட்டோவுடனும், தியோஜினிஸ் பல தடவை ளது பல கருத்துக்களுடனும் ட்டார். இவரது கருத்துக்களைக் Philosophy) என்றே பலரும் குழப்புவதற்கு ஒரு நடுவிரல் rலைத் தூக்கிக் காட்டினால் சமுதாயத்தை விசராக்க ஒரு இருக்கிறதே! அந்த விரல்தான் கிறதே! சமுதாயம் இப்படித் 5ம்’ என்று கூறுகிறதே என்று
டனும் ஒத்துப்போகவில்லை. உருவாக்கவில்லை. இவரது கள் அடுத்த தலைமுறைக்குக் ). இவருடன் யாரும் பழகவே
ாய்ந்த நக்கும் டயில் சீனப் நிதர்ம ப்பை

Page 271
254 a போதிதர்மர் பற்றி
அரசனுக்கு நடக்கப்போ காப்பாற்ற முனைந்தார் ே வுக்கு போதிதர்மரை விளங் நிலைதான் மாவீரன் மக இருந்தது. அந்த நிகழ்வை
அலெக்சாண்டர் இந்தி போது தியோஜினிசைக் மகாஞானி என்பதை அெ எதென்ஸ் ஆற்றங்கரையில் அவரது நாய் அவருடன் இவரது தோற்றத்தைக் கை ஆடை எதுவுமின்றி அழகா டரோ எல்லா அலங்கா அணிந்துகொண்டு அவர் மு
*உங்களோடு ஒப்பி உள்ளேன். உங்களிடமே உயர்ந்தவராக இருக்கிறீர் கிறது??? என்று கேட்ட தியோஜினிஸ் “எனக்கு எ எதுவுமில்லை, என்னுடை இருப்பதே என் பலம், ! உலகை வென்றுவிட்டேன் வரப்போகிறது. உன்னு உன்னிடமிருந்து பிடுங்கிக்
தியோஜினிஸ் : எதற்காக அலெக்சாண்டர் : இந்தியா தியோஜினிஸ் : எதற்காக
அலெக்சாண்டர் : இந்திய
கொண்ட
தியோஜினிஸ் : வென்ற
அலெக்சாண்டர் : உலகத்ை

ப அற்புதமான விஷயங்கள்
வதை முற்கூட்டியே உணர்த்தி பாதிதர்மர். ஆனால் அரசன் 'வூ' கிக்கொள்ள முடியவில்லை. அதே அலெக்சாண்டரது நிலையுமாக இங்கே கவனியுங்கள்.
யாவைக் கைப்பற்ற புறப்பட்ட காணச் சென்றார். இவர் ஒரு லக்சாண்டர் உணர்ந்தேயிருந்தார். நிர்வாணமாகப் படுத்திருந்தார். ா விளையாடிக்கொண்டிருந்தது. ண்ட அலெக்சாண்டர் திகைத்தார். னவராக இருந்தார். அலெக்சாண் ரங்களையும் ஆபரணங்களையும் முன்னிலையில் நின்றார்.
டும்போது நான் வெறுமையாக ா ஏதுவுமே இல்லை. ஆனால் கள். எது உங்களை உயர்வாக்கு டார் அலெக்சாண்டர். அதற்குத் ந்த ஆசையும் இல்லை, என்னிடம் டயது என்று எதுவுமே இல்லாமல் நான் என்னை வென்றுவிட்டதால் . என்னுடைய வெற்றி என்னோடு டைய வெற்றி நீ இறக்கும்போது
கொள்ளப்படும்?? என்றார்.
என்னைப் பார்க்க வந்தாய்?
செல்கிறேன்.
p
வை வெல்லுவதற்காகப் போய்க் ருக்கிறேன்.
ன் என்ன செய்வாய்?
த வெல்லுவேன்.

Page 272
எஸ். கு
தியோஜினிஸ்
அலெக்சாண்டர் :
தியோஜினிஸ்
அலெக்சாண்டர் :
தியோஜினிஸ்
அலெக்சாண்டர் :
உலகத்தை (
அதற்குப் பி
கடகடவெல
தன்அருகே
இவர் சொ வென்றபின் போகிறாரா இடத்தைக்கூ கொண்டிரு கூறிவிட்டு “ஓய்வுதான் இலட்சியம் ஆற்றங்கரை நாயுடனும் ! கொள்ளலா இடம் இ ஒய்வெடுத்து இறுதியில் ஒ முழுவதும் து வேண்டும்?. ஒய்வெடுத்துச்
வெட்கப்பட்ட பூர்வமாகத்தா இப்போது உலகத்தை மு
* உலகத்தை
பதற்கும் ெ
உலகத்தை ( இங்கே நாள் வில்லையா?
நீங்கள் சொ
நான் இந்தி
விட்டேன். ப

நபாதம் 255
வென்றபின் என்ன செய்வாய்? ன் நிம்மதியாக ஓய்வெடுப்பேன்.
ாச் சிரித்தார். தன் நாயைத் அழைத்தார். நாயைப் பார்த்து ல்வதைக் கேட்டியா! உலகை இந்த மனிதர் ஒய்வெடுக்கப் ம்! நீயும் நானும் ஒரு சிறு ட வெல்லாமல் ஒய்வெடுத்துக் க்கிறோம்’ என்று நாயிடம் அலெக்சாண்டரிடம் கூறினார். உன்னுடைய கடைசி என்றால் இந்த அழகான யில் என்னுடனும் என் இங்கே நீ இப்போதே சேர்ந்து மே. இங்கே தேவையான ருக்கிறது. நான் இங்கே க்கொண்டுதான் இருக்கிறேன். ய்வெடுப்பதற்காக ஏன் உலகம் ன்பம் துயரங்களை உண்டாக்க இங்கேயே இப்போதே நீ
கொள்” என்றார்
டார். நீங்கள் கூறுவது அறிவுப்
ன் இருக்கிறது. ஆனால் நான் ஒய்வெடுக்க (plglu Islgil.
முதலில் வெல்லவேண்டும்.
வெல்லுவதற்கும் ஒய்வெடுப் தாடர்பு எதுவும் இல்லை. வெல்லுவதற்குச் செல்லாமல் ண் நிம்மதியாக ஓய்வெடுக்க
ல்வது நியாயம்தான். ஆனால் யா நோக்கிப் புறப்பட்டு ாதியில் நிற்கமாட்டேன்.

Page 273
256a போதிதர்மர் பற்றி
தியோஜினஸ் ; நீ பாதி :
இந்தியாவைக் கைப்பற் போர் வியூகத்தால் அலெ சாணக்கியரின் மதிநுட்பம் தவிடுபொடியாக்கியது. ய வியூகம் அமைத்தவர் சா 'சாணக்கியம்’ என்ற சொல்
யார் இந்த சாணக்கியர்?
இவர் பூர்வீகத்தில் ே மெலிந்த நலிந்த தோற்ற பீகாரை அண்மித்த பகுதிய அரசவையில் இடம்பெற்றா
இவரைப்பற்றிய பிறிதொரு
வட இந்தியாவில் தட்சி கழகத்தில் பயின்றவர். தன. நாட்டு அரசனையும் வ அரசியைத் தன் மனைவி குட்டிக்கொண்டாராம். சாணக்கியர் இடம்பெற்றா வேணுமென்றே தனந்தர் (ந சாணக்கியர் அரசவையிலிரு திடசங்கற்பம் பூண்டார் என
சாணக்கியர் ஒருநா கொண்டிருந்தபோது அரச இவரைக் கவர்ந்தார். அர் ஆயனால் வளர்க்கப்பட்ட இளைஞருக்குச் சாணக்கிய போர் தொடுத்தார். ஆனால் திருத்திப் போர் முறையை தனந்தரை வென்று சந்திரகுப்தனை அரசன் ஆ

ப அற்புதமான விஷயங்கள்
நாண்டமாட்டாய்!!
ற நடந்த போரில் சாணக்கியரின் க்சாண்டர் தோல்வியடைந்தார். அலெக்சாண்டரின் பேராசையை ானைகளை மையமாக வைத்தே ணக்கியர். அரசியலில் இன்று
பிரபல்யமாகிவிட்டது.
கரளாவைச் சேர்ந்த அந்தணர். முடையவர். வட இந்தியாவில் ான பாடலிபுரம் போய்ச் சேர்ந்து ர் என்ற வரலாறும் உண்டு.
வரலாறு:
ஈசீலத்தைச் சேர்ந்தவர். பல்கலைக் ந்தர் என்பவருடைய தந்தை அந்த ம்சத்தையும் கொலை செய்து யாக்கி தானே தனக்கு மகுடம் தனந்தருைைடய அரசவையில் ர். அரச விருந்துபசாரமொன்றில் ந்தர்) சாணக்கியரை அவமதித்தார். ந்து வெளியேறி தனந்தரை அழிக்க னப் பிறிதொரு வரலாறு கூறுகிறது.
ள் நாடகமொன்று பார்த்துக் வேடம் பூண்ட ஒரு இளைஞர் த இளைஞன் மாடு மேய்க்கும் - சந்திரகுப்தன் ஆவார். அந்த பயிற்சி கொடுத்து தனந்தருடன் தோற்றுப்போயினர். தவறுகளைத் மாற்றி மீண்டும் போர் தொடுத்து பாடலிபுரத்தைக் கைப்பற்றி 536OTITsi.

Page 274
எஸ். கு
சாணக்கியர் அரசு ெ விடுவித்து தன் அனுபவங்கை என்ற நூலை எழுதினார். தந்திர உத்திகள், சமூக நீதி, இவர் அரச நிர்வாகத்தை உரு
இவருடைய வாழ்க்கை
உள்ளன. சனகா என்பவரின் என்று அழைக்கப்பட்டார் எ6 இயற்பெயர் விஷ்ணுகுப்தா
சேர்ந்தவர் எனவும் குடில வ கெளடில்யர் என அழைக்கப்ட இத்தகவல் தவறானது. இவர் சேர்ந்தவர் எனவும் கூறப்ப வரலாறு எப்படியாயிருந்தாலு இந்திய மனங்களில் ஒரு புதி
சாணக்கியரே.
இந்தியாவிற்கு அலெச் தத்துவமேதை அரிஸ்ரோட்டி இந்தியாவிலிருந்து ஒரு து அத்துறவியிடம் சந்நியாசம் மரணம்', "மரணத்தின் பின்' இந்திய கோட்பாட்டையும் அலெக்சாண்டர் இந்தியாவி துறவியைச் சந்தித்தார். (Dantemus). g)fö6ulü G). பிழையாகவும் உச்சரிக்கலாம். தவறா என்பதும் தெரியவில்ை
அலெக்சாண்டர் இந்திய
சென்றார். தியோஜினிசின் நிை
அதே கண்கள், அதே தோ எதுவுமின்றியிருந்தார்.
அலெக்சாண்டர் : நான் அரசல்
கிரேக்க நா
ளுக்கு வே

ருபாதம் 1257
பாறுப்புக்களிலிருந்து தன்னை ளத் திரட்டி அர்த்த சாஸ்திரம் இந்நூலில் போர்முறை, இராஜ
இராாஜநீதி கூறப்பட்டுள்ளன.
நவாக்கிக் காட்டியவர்.
பற்றிய தகவல்கள் குழப்பமாக மகன் என்பதால் சாணக்கியர் ன்றும் கூறப்படுகிறது. இவரது
எனவும் வட இந்தியாவைச் ம்சத்தைச் சேர்ந்தவரென்பதால் பட்டார் எனவும் கூறப்படுகிறது. தென் இந்தியாவில் கேரளாவைச் டுகிறது. அவரது வாழ்க்கை ம் அலெக்சாண்டரை எதிர்க்க ய எழுச்சியை உருவாக்கியவர்
சாண்டர் புறப்படும்போது ல் அவருக்குக் கூறியிருந்தார். றவியைக் கூட்டிவாருங்கள். என்றால் என்ன? ‘ஆன்மா', கர்மா இவைகளைப் பற்றிய அறிய வேண்டும் என்றார். ல் விசாரித்து அறிந்து ஒரு அவரது பெயர் தந்த மெஸ் பயரை கிரேக்க நாட்டினர் அதனால் இந்தப் பெயர் சரியா, 6l).
த் துறவியினது அருகாமையில்
னைவு வந்தது. அதே பார்வை, ற்றம், அதே பேச்சு, ஆடை
r அலெக்சாண்டர் என்னுடன் ட்டுக்கு வந்துவிடுங்கள். உங்க ண்டிய அனைத்தும் செய்து

Page 275
258a போதிதர்மர் பற்றி
தந்தமெஸ்
தருகிறே அரண்மை டன் வா
வருவது,
விட்டவ6 இல்லை இல்லை.
விட்டவல் கல்லறை
அலெக்சாண்டர் :
தந்தமெஸ்
அலெக்சாண்டர் :
தந்தமெஸ்
அலெக்சாண்டர் :
தந்தமெஸ் 7
பொருள்
இது மன்
கடகடெ
ஆணைய எனக்கு
வாளை
கொடுக்க
: நீ என்ன
கிறாயோ செய்துவி விழும்டே வேடிக்ை
எப்படிட்
இறந்துவி
: நான்
என்னுை பார்ப்ப பார்ப்ே பார்ப்ே
நிறைவே
அலெக்சாண்டர் :
விடும். ந
திகைப்ட
போட்ட

மிய அற்புதமான விஷயங்கள்
ன். எனது விருந்தினராக எனது னையில் தங்கியிருக்கலாம். என்னு ருங்கள்.
போவது- எல்லாமும் கழித்து ன் நான். இனி உலகுக்கு வருவதும்
உலகத்திலிருந்து போவதும் வருவதையும் போவதையும் கடந்து ன் நான். அதாவது கருவறையையும் யையும் கடந்துவிட்டேன் என்ற படக் கூறினார்.
ானனின் ஆணை, வந்துவிடுங்கள்.
வனச் சிரித்தார். யாரும் எனக்கு பிட முடியாது. மரணம் கூட ஆணையிட முடியாது.
எடுத்தான். வாளுக்கு வேலை ாமல் வந்துவிடுங்கள்.
னதான் செய்வேன் என்று கூறு அதை நான் எனக்கு ஏற்கெனவே பிட்டேன். என் தலை உருண்டு பாது உன்னோடு சேர்ந்து நானும் க பார்ப்பேன்.
Lu rTrifağä«95 முடியும். நீங்கள்
டுவீர்களே!
இனிமேல் இறக்கமுடியாது. டய மரணத்தை நீ வேடிக்கை து போல, நானும் வேடிக்கை பன். நீயும் பார்ப்பாய், நானும் பன். இந்த உடலின் பயனும் றிவிடும். உன் ஆசைகளும் முடிந்து நான் ஏற்கெனவே இறந்துவிட்டேன். |ற்றார்! வாளை உறையினுள்
Tri.

Page 276
எஸ். கு
தந்தமெஸ் அலெக்சா நோக்கினா நோக்கிய அகன்று அவரது க தயங்கினா
அலெக்சாண்டர் : அவரை வ பின் நகர்ந் தனது கண் ருக்குள் உ
ஒரு சிறு பிரதேசத்தை ( இந்தியாவையும் தன் ஆகை தோல்வியுற்ற நிலையில் தியோஜினிஸையும், தந்தெ பாதி வழியில் கடும் நே மாட்டாய்” என்று தியோஜி வந்தது.
தந்தமெஸ்ஸிடமும், ! தாண்டிய ஒன்று இருந்தது. இருப்பதைக் கண்டுகொ6 என்னிடம் இல்லை. என்னிட தனது சேவகர்களை அழை டைய உடலைக் கல்லறைச் தன் கைகளை வெளியே ெ ஆணையிட்டார். சேவகர் *அலெக்சாண்டர் வெறு வெறுங்கைய்ோடு போகின்ற கொள்ள வேண்டும். என் வா என் கைகள் எல்லோரும் தொங்கட்டும். மாவீரன் அ செல்லவில்லை. வெறுங்கை உலகு அறியட்டும்? என்றார். பட்டது.

குருபாதம் 259ے
ண்டரது கண்களை உற்று ர், கண்களை இமைக்காமல் உற்று படியே இருந்தார். கண்கள் விரிந்துகொண்டே போனது. ண்களை நேருக்கு நேர் சந்திக்கத் ர் அலெக்சாண்டர்.
ணங்கி மரியாதை செலுத்திவிட்டு து சென்றார். (ஞானி தந்தமெஸ் ஒளியின் ஊடாக அலெக்சாண்ட
ள் மாற்றம் ஏற்படுத்திவிட்டார்.)
கைப்பற்றிய அலெக்சான்டர் முழு Fயின்படி கைப்பற்ற முடியாமல்
கிரேக்கம் திரும்பும்பொழுது மஸ்ஸையும் நினைவுகூர்ந்தார். ாயுற்றார். ‘பாதிவழி தாண்ட னிஸ் சொன்னது ஞாபகத்துக்கு
தியோஜினிசிடம் மரணத்தைத் அவர்கள் மரணத்துக்கு அப்பால் ண்டனர். அவர்களிடமிருப்பது ம் ஒன்றுமே இல்லை. அழுதார். த்து, தான் இறந்தபின்பு என்னு குக் கொண்டு செல்லும் போது நாங்கப்போட்டு விடுங்கள் என்று 5ள் ஏன் என்று கேட்டனர். ங் கையோடு வந்தான், )ான் என்பதை மக்கள் தெரிந்து ழ்க்கை முழுக்க வீணாகிவிட்டது. பார்க்கக்கூடியதாக வெளியே லெக்சாண்டர் எதையும் எடுத்துச் யோடுதான் போகிறான் என்பதை அவரது உத்தரவு நிறைவேற்றப்

Page 277
26Oa போதிதர்மர் பற்றி
அலெக்சாண்டருக்கு ஏற்படுத்தியவர் தந்தமெள் தன்னை மீளாய்வு செய்துெ
தியோஜினிஸ் கூறியது கிரேக்க நாட்டை அடைய இறந்துவிட்டார். இவர் இறந் இறந்ததாக வரலாறுகள் ச அலெக்சாண்டர்களும் இறந்ே புத்தர் கூறுகிறார் ‘உன்ை வெற்றியும் உன்னுடையது எடுத்துக்கொள்ளமுடியாது எடுத்துக்கொள்ள முடியா உன்னிடமிருந்து எடுத் உன்னுடையதாகாது.”
தன்னையே வென்றெ தாழ்த்தும்போது எங்களுக் விடுகிறது. இது கோயில் வாசல்களில், குருத்து சினோகோஜ்ஜில், எங்கு அடைவதற்கு எந்தக் குறுக்
தியோஜினிஸ் தனக் வில்லை. தனது அடையா விட்டுச் செல்லவில்லை. அரிஸ்ரோட்டில் போன்றே சீடர்களின் வாய்வழி மூ வந்துள்ளன. தியோஜினிஸ் இறந்தார். தியோஜினிஸ் அவைகளைக் குதர்க்க வ ஏளனத்துக்கு உள்ளாச் தியோஜினிஸ், தந்தமெஸ், உண்மையானவர்கள். அவ *விசரர்கள்?. இவர்கள் தம் பேசியவர்கள்?. உண் தெரியாதவர்கள். தங்க கூறியவர்கள். சொல்லுக்

அற்புதமான விஷயங்கள்
மரணத்தை நோக்கிய விழிப்பை ). இவரின் கூற்று ஊடாகவே 5ாண்டார் அலெக்சாண்டர்.
போல் பாதி தாண்டவே இல்லை. முன் அலெக்சாண்டர் பாதியில்; த அதே தினத்தில் தியோஜினிசும் கூறுகின்றன. உலகில் எல்லா தே போகிறார்கள். இதையேதான் னையே நீ வெல், வேறு எந்த ஆகாது. இதை உன்னிட மிருந்து எது உன்னிடமிருந்து தோ அதுதான் உன்னுடையது. துக்கொள்ளக்கூடியது எதுவும்
)டுத்தவருக்கு எங்கள் தலையை $குள் ஏதோ ஒன்று ஊடுருவி ல்களில், ஆலயங்களில், பள்ளி வாராவில், பன்சாலைகளில், கும் சாத்தியமில்லை. இதை கு வழியும் இல்லை.
கென்று சீடர்களை உருவாக்க ாமாக எந்த அடையாளங்களையும் சோக்கிரட்டீஸ், பிளேட்டோ, ார்களினது கருத்துக்கள் அவர்களது )லம் பரவி நூல்களாக வெளி வழிப்போக்கன் போல வாழ்ந்து ன்ெ கருத்துக்களை ஏற்காமல் வாத தத்துவங்கள் என்று கூறி கிவிட்டனர். சோக்கிரட்டிஸ், திலோபா, போதிதர்மர் போன்றோர் ர்களுக்கு உலகம் கொடுத்த பெயர் கள் வாழ்நாள் முழுக்க "உண்மை மையைத் தவிர வேறெதுவும் சொந்த அனுபவங்களைக் கும் செயலுக்கும் வித்தியாசம்

Page 278
எஸ். கு
அறியாதவர்கள். தங்கள் கூறியவர்கள். அரசன், ஆன் பார்த்தவர்கள்.
பல நூலாசிரியர்கள் திே நாய்களைப்பற்றியும் நகைச்சு களைப் பற்றியும் தத்தமது ளார்கள். அவற்றில் சிலவற்ை
வில்லியம் பிளேக்கின் (W நரகத்தினதும் திருமணம்’ (Th சாள்ஸ் டிக்கின்ஸ்ன் (Charles (Dombey and Son) 6 TGöImp g நாய்களுடன் நட்பாக இரு ஒப்பிட்டுள்ளார்.
வலரியா மான்பிரடி (Ve அலெக்சாண்டர் உலகத்தின் the earth) என்ற நூலில் அ நேரடியாகச் சந்தித்ததைப் ட ஆதர் கொனன்டொயில் (S gd Luis 15u IIT, Fri' The Greek தியோஜினிஸின் கருத்துக்களை
சேக்ஸ்பியர் ஏதென்ஸ் ந என்ற கதையில் திமோ ஒப்பிடுகிறார். திமோனின் ந விவாத தத்துவத்துடன் (Cynic
தியோஜினிசின் 2 வற்றிக்கன் அருங்காட்சி (Museum of Vatican) LITGhai மொனலிசா ஒவியம் உள்ள லுாவர் (Louvre) அருங்காட் உள்ளது. கிரேக்க நாட்டிலு உருவச்சிலை கையில் லா நாயுடனும் இவர் தனது ச கோப்பையை உடைப்பது சிலைகளும் உள்ளன.

ருபாதம் 1 26ے
கருத்துக்களைத் துணிந்து எடி எல்லோரையும் சமமாகவே
யாஜினிஸைப் பற்றியும் அவரது ர்வை கலந்த அவரது கருத்துக் படைப்புக்களில் குறிப்பிட்டுள் ற இங்குப் பார்ப்போம்.
Villiam Blake) “GOSFITrijgbjö36601gJLib 2 marriage of Heaven and Hell), Dickens) டோம்பியும் மகனும், னது நாவலில் டோம்பி தனது ப்பதை தியோஜினிஸ் உடன்
leria Manfredi) g56og5 5TGofTGOT (uplq6 (Alexander: The ends of |லெக்சாண்டர் தியோஜினிஸை பற்றிக் குறிப்பிட்டுள்ளார். சேர் ir Arther Conondoyle) “65) G3DTjiegi;
Interpreter) GT6öp 5TGö6v
ாப் பற்றி குறிப்பிட்டுள்ளார். கர திமோன்’ (Timon Of Athen) னை தியோஜினிஸ் உடன் ாயை தியோஜினிசின் குதர்க்க
Philosophy) g)GOGOOTj;60mp/Tri.
ருவச்சிலை : யகத்திலும் & சி வரைந்த பாரிஸ் நகர சியகத்திலும் ம் இவரது ம்புடனும், Tப்பாட்டுக்
போன்ற

Page 279
262a போதிதர்மர் பற்றி
தியோஜினிசும் அலெ பளிங்குக் கல்லில் செதுக் வற்றிக்கானுக்கு அண்மையி Albani) D Gir@mig. Frfjög சிற்பம் கருதப்படுகிறது.
மருத்துவத்துறையில் (Diogenes syndrome) 6 பாவிக்கப்படுகிறது. Gର । விரோதமாக நடப்பவர் உளவியலிலும் மருத்துவ பாவிக்கப்படுகிறது.
தியோஜினிசினைப் பற் இன்றும் இப்படித்தான் இரு
தியோஜினிஸ் என்ற தன்னை வெல்லல், து மரணத்தைத் தன் கட்டுப் கருத்துக்களும் தியோஜிை கொடுக்கப்பட வேண்டும்.
போதிதர்மரும் திே சந்தித்திருந்தால் உலகில் சந்திப்பாக அமைந்திருக்கு
நான் ஏன் பிறந்தேன் எம். ஜி. இராமச்சந்திரன் இந்தப் பாடலை கவிஞர் சங்கர் கணேஷ் அவர்க செளந்தரராஜன் அவர்கள் பற்றிய குறிப்பு காணப்ப( இதோ அந்தப் பாட தம்பிக்கு ஒரு பாட்டு வாழ்வில் நம்பிக்ை சொல்லும் கதைப்பாட் பிறப்பால் வளர்ப்பால்

ய அற்புதமான விஷயங்கள்
சாண்டரும் உரையாடும் காட்சி 5, Illul G. GDITL6ai) (Rome, Italy) ல் உள்ள விலா அல்பணியில் (Villa ர முக்கியத்துவமானதாக அந்தச்
தியோஜினிஸ் நோய் அறிகுறி ான்ற மருத்துவக் கலைச்சொல் பாதுவான நடைமுறைகளுக்கு h (605 dig, (Behavioural Disorder) த்திலும் தியோஜினிசின் பெயர்
றிய உலகத்தின் கணிப்பு அன்றும் நக்கிறது.
ால் ஞானம், தீர்க்க தரிசனம், னிச்சல், உண்மை உரைத்தல், பாட்டில் வைத்திருத்தல் போன்ற விஸ் என்ற பெயருக்கு அர்த்தமாக
பாஜினிசும் ஒருவரை ஒருவர் அது ஒரு வரலாற்று மிக்க அற்புத
D.
படத்தில் மக்கள் தலைவர் திரு அவர்கள் பாடுவதாக அமைந்த திரு. வாலி அவர்கள் இயற்றி திரு. ள் இசையமைத்து திரு. டி.எம். பாடிய ஒரு பாடலில் தியோஜினிஸ் கிறது.
):
அன்புத் தங்கைக்கு ஒரு பாட்டு 5 வளர்வதற்கு உதவும் நான்
6
இருப்பவர் எல்லாம் மனிதர்கள்

Page 280
அல்ல என்றாராம் இனத்தால் அல்ல மனத் என்றாராம் ஒரு மேதை பகல்ே சென்றாராம் - மனிதன் எங்கே? மனித தேடுகிறேன் நான் என்ற

குருபாதம் l1263
தால் மட்டும் வாழ்பவன் மனிதன்
வளை கையில் விளக்குடன்
ன் எங்கே? காணவில்லை

Page 281
அத்
இந்தியாவின் ந (Goodwi
போதிதர்மர் தான் வ நாடுகளில் இந்தியப் மாத்திரமல்ல இந்தியக் தற்காப்புக் கலையையும் அந்நாடுகளில் இந்தியாவி கலை, நல்லெண்ணத் மருத்துவ விஞ்ஞானியா பட்டுக்கொண்டார்.
போதிதர்மர் சித்தரா' மகானா? ஞானியா? சிந் அறிவியல் மேதையா? விஞ்ஞானியா? மானிடவி புத்தரா? அதற்கும் அப்பா புரியமுடியாத புதிராகவே இ
போதிதர்மர் ஒரு மிகட் ஒரு மாபீெரும் சித்தரும் திலிருந்து சீனதேசம் சென் விளங்கியது போல் ெ அங்கிருந்தும் சீனச் சித்தர் சிறந்து விளங்கியிருக்கிறார்
அட்டாங்க யோகப்
அனைத்தையும் பெற்று g) 600Trisbg,6)Irig,6ir (self-Realiz

தியாயம் 31
ல்லெண்ணத் தூதுவர் Il Ambassador)
விஜயம் செய்த பெளத்தத்தை d35 (oО) О) LITOOT பரப்பினார். பின் ஆன்மிக, தூதுவராகவும் கவும் செயல்
? (Sumásluum? 56Odoor unro III? மருத்துவ யல் விஞ்ஞானியா? புரட்சியளரா? லா..? போதிதர்மர் யார் என்பது இன்றும் உள்ளது.
பெரும் ஞானி மாத்திரமல்ல அவர் ஆவார். போதிதர்மர் தமிழகத் று அங்கு மருத்துவத்திலும் சிறந்து வவ்வேறு கால கட்டங்களில் கள் தமிழகம் வந்து மருத்துவத்தில் கள்.
, அட்டமா சித்தி இவைகள் சித்தர்கள் தங்களை நன்கு ed) ஆனார்கள். அதன் வழிகளில்

Page 282
எஸ். கு
ஞானம் அடைந்தனர். இ வாழ்க்கை முறைகள் பற்றியும், முறைகள் பற்றியும், உபதேசம் செய்திருக்கிற சித்தர் போகர் சிங்கம், புல பூனை போன்ற விலங்கினங்க உபதேசம் செய்தார் என பற்றிய தகவல்கள் கூறுகி மருத்துவத்தின் தந்தை சித்த ஆவார்கள். போகரை வேதிய தந்தை என்றும் கூறலாம். சித்த தலைமையானவர் திருமூ தாவரங்களின் இலை, பூ, விதைகள், தண்டு, வேர் ே வற்றின் தனித்தன்மைகளையு துள்ளனர். குழந்தைகள் பிறட் வைத்திய நூல்களில் விள சித்தர்களின் ஆய்வுக்கு உட அவர்கள் மிக்க அறிவியல் சா
சித்தர்கள் அட்டாங்க சித்திகளையும் பெற்று எல்லாப் வல்லவர்களாகவும், எந்தக் கண சக்தியுடையவர்களாகவும், உ அதனை அறியக்கூடிய இருந்தார்கள். கூடுவிட்டு பிரவேசம்) கலையைத் தெரிற் உடலிலிருந்து நீங்கி வேறு உ உயிர் வேறு (பிரக்ஞை - என்பதற்கு இது ஒரு சான்றா
அட்டாங்க யோகங்களாவன:
இயமம் கொல்லாமை,
நியமம் : தவம், மனத்து
ஆதனம் சுகம், திடம்,

ருபாதம்
வர்கள் யோக நிறைய ார்கள். , பசு, ளுக்கும் அவர் ன்றன. ர்களே பியலின் தர்களில் முலரே. காய், பான்ற ம் சித்தர்கள் நன்கு ஆராய்ந் பதைப் பற்றியும் சித்தர்களின் க்கமாகக் கூறப்பட்டுள்ளது. ட்படாதது எதுவும் இல்லை. ர்ந்தவர்கள் ஆவார்கள்.
யோகங்களையும் அட்டமா ) அறிந்தவர்களாகவும், எல்லாம் ாத்திலும் எங்கும் செல்லக்கூடிய லகில் எங்கு எது நடந்தாலும் ஆற்றல் பெற்றவர்களாகவும் க் கூடு பாய்தல் (பரகாயப் தவர்கள் சித்தர்கள். அதாவது -டலுக்குள் பிரவேசித்தலாகும். onsciousness), a Lai) Gaup. கும்.
வாய்மை, கள்ளாமை.
ாய்மை, தத்துவ நூலோர்தல்.
வீரம், மயூரம்.

Page 283
266a போதிதர்மர் பற்றி
பிராணயாமம் : பிரான
உட்செலு
பிராப்தியாகாரம் : மனமான உழலாவ
தாரணை உந்தி,
உள்ளத்ை
தியானம் மனம் க
&LDng தன் உன் இருத்தல்
அட்டமா சித்திகளாவன:
அணிமா அணுப்போ
சுருக்குதல்.
இலகிமா : பஞ்சைப் ( பறத்தல், வே
LDSLDIT மலைபோன் பெருப்பித்த
sil.pt கனமாதல்,
பிராப்தி எல்லாப்
வரவழைத்த அடைதல்,
பிராகாமியம் : உருவம் ம
உடலினுள்
வசித்துவம் : பொதுஜனங் ஈசத்துவம் : தெய்விக நி

ய அற்புதமான விஷயங்கள்
பாயுவைத் தடுத்தல், வாயுவை த்துதல், வெளிச்செலுத்துதல். து புலன்கள் வாயிலாகச் சென்று ண்ணம் தடுத்தல்.
இதயம், உச்சி ஆகியவற்றில் த நிலைநிறுத்தல். டந்து அப்பால் செல்லல்,
ணர்வைக் கடந்து வெறும் உடலாக
ன்று குக்குமமாதல், உடலைச்
போல இலேசாதல், ஆகாயத்தில் பகமாகச் செல்லுதல், நீரில் நடத்தல்.
ாறு பெரிதாகுதல், உடலைப் ல்.
கல்லாக மாறுதல்,
பொருட்களையும் தன்பால் ல், அதாவது மனதில் நினைத்ததை
ாறுதல், வாயு மூலமாகப் பிறரது உயிரைச் செலுத்துவதாகும்.
களை தன்பால் ஈர்த்தல்.
லையை அடைதல்.

Page 284
எஸ். கு(
d சீனா விஞ் காஞ
(6 T60)T(6) சீனா திருமூ βοΟΤΠ"
தகவ சீடர எனவு புலிப்
(60 T(60)T(6) பழனியில் சமாதியானார்கள்
பிறிதொரு சீன தேசத்துச் திருக்குறுங்குடியில் சமாதியான
சீன ஞானி லா-க தான் போக
சீனப் பெருஞானியான ல (Lao-Tzu) egy Gi)Gugl GvITS (Lac இவரே என்று பேராசி இராமையா யோகி அவர் போகர் 7000 நூல்" மதிப்புரை கூறியுள்ளார் என அறியவருகி அகத்திய முனிவர் போகரைச் தேசத்தவரே எனக் குறிப்பிடுகி
 
 

ருபாதம் 267 سے
5ாளங்கிநாதர் காசியில் பிறந்து
வில் சித்த மருத்துவ ஞானத்தைப் பரப்பி பின்பு சிபுரத்தில் சமாதியானார்
பும், இதை மறுத்து அவர் வில் பிறந்து இந்தியாவில் லரின் சீடனாக இருந்து பின்பு சென்று சமாதியானார் எனவும் ல்கள் கூறுகின்றன. இவரது ான போகர் சீன தேசத்தவர் |ம், போகரின் சீடரான பாண்டியும் சீன தேசத்தவரே |ம் இவர்கள் இருவரும் எனவும் ஏடுகள் கூறுகின்றன.
சித்தரான அழுக்கண்ணர் ார் என ஏடுகள் கூறுகின்றன.
i: Humuח חמ
Bhogar traversing the sky

Page 285
268a போதிதர்மர் பற்
இவைகள் பல்லாண்டுச என்றபடியால் ஏடுகளி கூறப்படவில்லை. இதனா முரண்படுகின்றன. பெரு அறிந்த உண்மைகளை மற் - பாரத தேசங்களுக்கு ஆன்மீகப் பாலமாகவும் இ
இவர் சீனாவிலிருந்து நிலையிலிருந்தும் கூடுவி கட்டங்களில் வாழ்ந்து 1 அழைக்கப்பட்டவரும் 6 லாகுவின் தாவோ மத போக்கில் போதிதர்மரின் கலந்துவிட்டது. இவரைப் Jing பற்றிய விளக்கமும் ஆ
இயற்டெ 4 போ-யா Bad De Jing: (Bhogar)
8xx ஆலோச கூறப்படுகிறது. இவர் காலகட்டங்களில் வாழ்ந்து
 
 

றிய அற்புதமான விஷயங்கள்
5ளுக்கு முன் நடந்த சம்பவம் ல் தெளிவாக வரையறுத்துக் லேயே தகவல்கள் ஒன்றுக்கொன்று ம் சித்தர்கள், மகரிசிகள் தாங்கள் றும் மருத்துவ விஞ்ஞானத்தைச் சீன இடையில் பரப்பி நல்லுறவு நிலவ இருந்துள்ளார்கள்.
லாசி, லா-சூ, லாவோற்கு (Laozi/Lao Tzu) GTGöTLU Go356iv6avsTub இந்த ஞானியைக் குறிக்கும் பெயர்கள். இவரைப்பற்றிக் கூறும் ஏடுகளிலொன்று இவரது காலத்தை கி.மு. 551-479 எனக் கணிக்கிறது. இவரது வரலாற்றைக் கூறும் ஏடுகளில் தகவல்கள் வித்தியாசப்படுகின்றன.
இந்தியாவிற்குள் பிரவேசித்து சமாதி ட்டுக் கூடு பாய்ந்தும் பல கால பிற்காலத்தில் சித்தர் போகர் என லா-சூ வே என அறியவருகிறது. க்கோட்பாடுகள் (Taoism) காலப் சென்மதக் கோட்பாடுகளுடன் பற்றியும் இவரது மத நூல் Dao De அத்தியாயம் 11-இல் காணப்படுகிறது.
ளத்த துறவியான போகரின் Juuri (3Lust-uu TšI. இப்பெயரே r என மருவி பின்பு போகர் என நிலைத்துவிட்டதாக அவரைப் பிறிதொரு தகவல் கூறுகின்றது. தஞ்சைப் பெருங்கோயிலின் தின் உச்சிக்குக் கலசம் கொண்டு வைக்க பொறியியல் தொழில்நுட்ப 6067 வழங்கியவர் என்றும் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து பல |ள்ளார் என நம்பப்ட் டுகிறது.

Page 286
στου. ΘδO
சித்தர்கள் நாடு, இன கட்டுப்பாட்டில் வாழ்ந்தவா சித்தர்கள் அப்படித்தான் வாழ்
கதிர்காமத்தில் போகர்:
போகர் பழனியில் சமாதி முன் அவர் இலங்கையிலுள்ள கதிர்காமத்திற்குச் சென்று 1 இதழ் வடிவம் கொண்ட ய (Yantra Shrine) gy60)LDö5Ti படுகின்றது. அங்கு சித்தர் கிரி நாகராஜ் இவரிடம் கிரியா ே போகரின் சீடர் ஆனார். கிரி கதிர்காமத்தில் சமாதி எய்தின நினைவாலயமான கிரிஜா பா (kriya Babaji shrine) gyrig, யாழ்ப்பாணத்து சுவாமியும் யடைந்தார்.
சித்தர் போகர்ைசீனா வரும்ப மனவழிமூலம் (Telepathy) வே6
சித்தர் போகர், சித்தர் ச இந்தியாவிலிருந்து சென்ற கா மருத்துவத்தையும் சித்த ம பரப்பியவர். தமிழ்நாட்டில் போகரை சீனாவிற்கு உடே செய்தி அனுப்பினார்.
 
 
 

பாதம் 1269
ம், மொழி, மதம் என்ற கள் அல்ல. பல நாடுகளில் ந்துள்ளார்கள்.
எய்து வதற்கு (Sri Lanka) 008 தாமரை ந்திர ஸ்தலம் எனக் கூறப் ஜா பாபாஜி யோகம் கற்று யா பாபாஜி Tார். அவரது பாஜி ஸ்தலம் அமைந்துள்ளது. சித்தர் கதிர்காமத்திலேயே சமாதி
2 ண்டுகோள்:
ாளங்கிநாதரின் சீடர் ஆவார். ாங்கிநாதர் சீனாவில் மூலிகை ருத்துவ விஞ்ஞானத்தையும் பழநியில் இருந்த தனது சீடன் ன வரும்படி மனவழிமுலம்

Page 287
போதிதர்மர் பற் בס27
சித்தர் காளங்கிநாதரும்
அதை மனவழிமூ6 விமானம் நிர்மாணித்தும், சித்திக் கலையைப் பிர பறந்து சீனா சென்ற அங்குத் தன் குருவைச் போகருக்கு நீடித்த காலி காயகல்ப கலையையும், மூலிகைத் தயாரிப்பையு விட்டு தன் பணியைத் ெ கேட்டுக்கொண்டுவிட்டு சென்றுவிட்டார் என ஆ அகராதி இான்ற நூல்களி காணப்படுகிறது.
இந்தியா - சீனா பெளத்தம் ஆன்மிகப் பா நல்லுறவுக்குச் சித்த 6ை இருந்துள்ளது.
போதிதர்மர் கண்ட மலர வேண்டும்.
 

றிய அற்புதமான விஷயங்கள்
லம் பெற்றுக் கொண்ட போகர்
அட்டமா யோகித்தும் டைந்தார். சந்தித்தார். )ம வாழும அதற்கான ம் விளக்கி தாடரும்படி
காளங்கிநாதர் சமாதிநிலைக்குச் அபிதான சிந்தாமணி, தமிழ்மொழி ல் சித்தர்களைப்பற்றிய பகுதியில்
ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள லமாக இருந்துள்ளது. இந்திய - சீன பத்தியமும் ஆரோக்கியப் பாலமாக
சீன - இந்திய நல்லுறவு மீண்டும்

Page 288
στου. ΘδC
xxxx
 

நபாதம
逐

Page 289


Page 290
T
எல்லாமான எல்லாமற்றவ
Be empower
unemp«

LD 3
ாவராகவும் ராகவும் இரு ed as well 2S
DWered

Page 291
*சும்மா &
"உண்மையை? Doop அதிகம் பயன்படுத்தப்ப உண்மை என்று உண்ை எதுவோ அது “உண்மை? அதற்கு ஆதாரங்களைத் மில்லை. அந்த ஆதாரங் விடப்போவதில்லை. உ உண்மைக்கு பெருமையு
போதிதர்மர் அவர்க சொற்களைப் பயன்படுத்தி வேறு எதுவும் தெரியா அவரைப் புரிந்துகொ புரிந்துகொள்ளக்கொள்ள தொடங்குகிறோம்.
இன்று புதிதாக இரு இன்று பிழையது என்று புதிதாக இருந்தது, அது அற்றது, இரண்டும் அ எதுவோ அதுதான் அழிவற்றது, இயற்கையா உண்மையாகவே உண்டை அவர்கள் அறிந்திருப்பதுட வருங்காலத்தில் உண் உண்மையைத்தான் உண

த்தியாயம் 32
Bd3 - "Be Non-self
றப்பதற்கே இன்று உலகில் சொற்கள் டுகிறது. பழைய உண்மை, புதிய மயில் வேறுபாடில்லை. இருப்பது . உண்மையைப் பற்றிப் பேசும்போது தேடிப்பிடிக்க வேண்டிய அவசிய கள் உண்மைக்கு எதையும் சேர்த்து உண்மை என்பது உண்மைதானே! ம் புகழும் சேர்க்கவும் முடியாது.
ள் உண்மையைப் பேசுவதற்காகவே தியவர். காரணம் உண்மையைத் தவிர தவர். உண்மையின் ஊடாகத்தான் droII (Մ»ւգ-պմ». போதிதர்மரைப் I உண்மையை அனுபவிக்கத்
ப்பது காலம் கடக்கப் பழசாகிவிடும். சொல்லப்படுவது ஒரு காலத்தில்
இயற்கை புதிதும் அற்றது. பழசும் ற்றது, ஆதியும் அந்தமும் அற்றது உண்மை’. அது நிரந்தரமானது, ானது. உண்மையை உணர்ந்தவர்கள் மயை உணர்ந்தவர்களாக இருப்பதால் ) அதே நிரந்தர உண்மையைத்தான். மையை உணர்பவர்களும் இதே ரப்போகிறார்கள்.

Page 292
στου. (
போதிதர்மர் அவர்கள் உண்மை என்று கருதுவை சொல்லிவிடும் நேர்மையா நேர்மையாகும். போதிதர்ம அதைத் தம் சொந்தப் பொ சொந்தக்குரலில் பேசினார். *உண்மையை வெளிப்படு சொன்னதிலோ ஆதாரங் யின்மையின் அடையாளம். சொல்வதில் அழுத்தமான ந
“உங்கள் அனுபவத்த பாருங்கள்” என்கிறார் புத்தர் கூறுகின்றன.
இந்த உலகில் பல ெ மக்கள் இருக்கிறார்கள், அ தங்களை வெளிப்படுத்திக்ெ அத்தனை மொழிகளும் விடுகின்றன. பூங்காவில் பூங்காவிற்கு அழகு சேர்ப் உலகிற்கு அழகு சேர்க்கி எங்களுக்கும், இயற்கைக் உரையாடலுக்கு ஒரு தெ போன்றதே. மதங்களை, ம மொழி என்று எடுத்துக்கெ இல்லை. எந்த மொழியும் ப வெவ்வேறு உணர்வுகளில் வெவ்வேறு த மொழிகளில் மதங்களும் மார்க்கங்களும் ஆ எல்லாமே சரியாகிவிடும். முடியாததைச் சொல்ல முய
பலவகை மனிதர்கள் மார்க்கங்கள், சமயங்கள். ஒவ்வொரு வகை பிரியங் ஒன்றுக்குப் பெயர் வைத்து

குருபாதம் 275ےر
உண்மை என்று நினைப்பதை, த உண்மை என்று உணர்வதைச் ளர். அதுதான் ஒரு மனிதனின் ர் ஏதாவது சொல்கிறார் என்றால் றுப்பாகவே சொன்னார். தனது இரவல் குரலில் பேசவில்லை. த்த நூல்களிலோ அல்லது பிறர் களைத் தேடுவது நம்பிக்கை போதிதர்மா அவர்களுக்கு தான் ம்பிக்கை இருந்தது.
ால் உண்மையை உணர்ந்து உபநிடதங்களும் இதையேதான்
மாழிகள், அத்தனை வகையான தனால் அத்தனை வகைககளில் காள்கிறார்கள். உலகில் உள்ள உலகத்திற்கு வளம் சேர்த்து 9 - GIT6IT LIG)6).16ð)G5 LD (6)[Td}56IT பது போலப் பல மொழிகள் ன்றன. 'ஆன்மிகம் என்பது க்கும் இடையே நடக்கும் ாடர்பை ஏற்படுத்தும் மொழி ார்க்கங்களை எல்லாம் ஒவ்வொரு ாண்டால் எந்தப் பிரச்சினையும் பனுள்ளவைதான். ஒரே நிகழ்வை , வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுத்த முயல்வதே கும். இதைப் புரிந்துகொண்டால் ஆன்மிகம் என்பதே சொல்ல ஸ்வதுதானே!
அதனால் பலவகை மதங்கள், ஒவ்வொரு வகை மனிதருக்கும் கள்தானே! பெயர் இல்லாத விட்டார்கள் "கடவுள்' என்று.

Page 293
276a போதிதர்மர் பற்
அந்தப் பெயர் இல்லாத பெயர்களைக் கண்டுபிடித்
வடிவங்கள் என்பது ( தான் முக்கியமானது. ஒவ் எத்தனை வகை மனிதர்க முகம், அதனால் வித் ஒவ்வொரு மனிதனதும் முழுக்க வேறுபட்டுத்தா பிரச்சினையும் எழவில்ை உலகளாவிய சகோதரத்து நிற, இன, உடை, உை சம்பிரதாயம், LDDJU வித்தியாசங்களும் உலகிற்
இந்த வித்தியாசங்க நாங்கள் எல்லோரும் மணி
உபநிடதத்திற்கென் அங்கே வாழும் முன
குரானுக்கென்று (இ அங்கே சமத்துவம் (
பைபிளுக்கென்று (சி அங்கே காருண்யம்
தம்மலுதம், திரிபீடம் ஓர் அழகுண்டு அங்கே நேயம் இரு
கல்பசூத்திராவுக்குெ அங்கே அகிம்சை
ஹிராந்த்சாகிப்பிற்ெ அங்கே சேவை இ

யெ அற்புதமான விஷயங்கள்
"உண்மைக்குப் பல வகையான துவிட்டார்கள்.
pக்கியமல்ல, ஆன்மிகப் பிரக்ஞை? வொரு வடிவமும் அழகானதுதான். ர், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தியாசமான அழகு அல்லவா!. கைரேகை பிறருடையதிலிருந்து ன் இருக்கிறது. அதனால் எந்தப் லயே! இதைப் புரிந்து கொண்டால் வம் சாத்தியமாகும். மத, மொழி, னவு உணர்வு, நாடு, கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் அனைத்து )கு அழகைப் படைக்கின்றன.
ளை நாம் இரசித்துக்கொண்டால் தர்களாகிவிடுவோம்.
று (இந்து மதம்) ஓர் அழகுண்டு Dற இருக்கிறது,
ஸ்லாம்) ஓர் அழகுண்டு இருக்கிறது,
றிெஸ்துவம்) ஓர் அழகுண்டு இருக்கிறது,
(பெளத்தம்) இவைகளுக்கென்று
க்கிறது,
கன்று (சமணம்) ஓர் அழகுண்டு இருக்கிறது,
ன்று (சீக்கியம்) ஓர் அழகுண்டு நக்கிறது,

Page 294
எஸ். (
Glaf6öI –GosmoöI – Zenஓர் அழகுண்டு அங்கே கடின உழைப்
அவஸ்ரா (Avesta)விற்ெ ஓர் அழகுண்டு அங்கே சகிப்புத்தன்மை
ஸ்பண்டஹாறிகாவிற்ெ
அழகுண்டு அங்கே இயல்பாக வாழ்
yITôoGluDúo (6) — Talmudášo
அழகுண்டு அங்கே மரபுகள் இருக்கி
ராவோஜிங்க்கு (Dao de உண்டு அங்கே இயற்ை
எண்ணுலுக்கென்று (சா அங்கே அளவு பரிமாண இருக்கிறது,
நூல்கள் அடங்கிய நூலு அழகுண்டு அங்கே கலைப்படைப்பு
இவைகளைக் கூறும் டெ அரமிக் (ஹீபுற் பாலி, பிரசி (Pahlavi), @IriðLgp. g3) GO GAu350 மொழிகளே. இந்த அனைத் அழகு சேர்க்கின்றன.
மனிதர்கள் பல மெ மார்க்கங்களைத் தெரிந்துே மனிதகுலம் வளம்பெற உதவி
சார்பற்றவர்களாகவும், L

ருபாதம் 277ے
oans (சென்) இற்கென்று
பும் முயற்சியும் இருக்கிறது,
கன்று (சொறாஸ்ரிறிய மதம்)
இருக்கிறது,
56öIgDJ Spandakarika (g5bśly II) gęň
தல்; இருக்கிறது,
கென்று (ஜடைஸ்ம்) ஓர்
றெது
jing) OIoồIg)I (Taoism) gọử eIgọ(35 கையுடன் நகர்தல் இருக்கிறது,
ங்கியம்) ஓர் அழகுண்டு ாம், இயற்கைத் தன்மையும்
ரக்கு (சூஃபி மதம்) ஓர்
இருக்கிறது,
ாழிகளான சமஸ்கிருதம், அரபு, றிட், பஞ்சாபி, சீனம், பஹ்லவி ா ஒவ்வொன்றும் வெவ்வேறு து வித்தியாசங்களும் உலகுக்கு
ாழிகளை, பல மதங்களை, காள்வது நல்லது. அவைகள் பாக இருக்கும். மனிதர்கள் பக்க தமற்றவர்களாகவும், பரந்த

Page 295
278a போதிதர்மர் பற்றி
மனத்தவர்களாகவும் மாறி மனிதநேயம் கொண்டவர் மேலாக 'மனிதனாகிவிடுே
சிந்தனையைப் பற்ற இவ்வாறு வரையப்பட்டு 560)6) u96) (Relaxed) g) இவ்வாறு எழுதப்பட்டுள்ள
‘இவர் ஒரு சிந்தனை சிந்தித்துக்கொண்டிருக
சிந்தனையாளன் அங்கிருப்பது. ஆனால் சிந்தனையில்லை. இந்த சிந்தனைகள் இரு சிந்தித்தல் இருக்கிறது, சிந்தனையாளன் இல்ை ஒவியத்தில் காணப்படும் யாளன் தணிவு நிலையில் தில் எதுவித எண்ணங்களு மல் இருக்கிறான். தன்உணர்வு எங்கும் ெ வில்லை. அது ஒய்வாக ஒவியத்திலுள்ள மனிதன் இருக்கிறான்.
மனிதன் மிக முக்கிய தான் நிகழ்வுகள் நகர் வைப்பவரும், ஆட்டத் மனிதர்களே.
மாசுபட்ட வெளி பேசுகிறோம் ஆனால் ம mind) 96.056 gaOLD 6 பற்றிய விஷயங்கள் தொலைக்காட்சிகளில் கொண்டிருக்கிறது. ஆனா

ய அற்புதமான விஷயங்கள்
விடுவார்கள். நாம் அனைவரும் ளாகிவிடுவோம். எல்லாவற்றிற்கும்
JITLD.
ய சீன சென் ஓவியம் ஒன்று ள்ளது, அதில் ஒருவர் தணிவு க்கிறார். அந்த ஒவியத்தின்மேல் து.
பாளர், எவ்வகையிலும் கவில்லை?
மட்டுமே அங்கு ஒவியத்தில் க்கின்றன, ஆனால் ல. அந்த சிந்தனை ஸ் உள்ளத் ரும் எழா அவனது சன்றுவிட இருக்கிறது.
*சும்மா”
மானவன். மனிதனைப் பொறுத்துத் கின்றன. ஆடுபவரும், ஆட்டி தை நிறுத்துபவரும் எல்லாம்
யுலகச் சூழலைப் பற்றி அதிகம் "g, Gitant LD60TIisait (Pollution of the 6061T6755d3, LquGO)6). Energy Crisis' த்திரிகைகளில், வானொலிகளில் தினமும் முக்கிய செய்தியாகிக் ல் மனிதருக்குள் இருக்கும் Internal

Page 296
எஸ். கு
Crisis அதைவிட முக்கியமா Energy" முடங்கிக்கிடக்கிறது. கிடக்கும் 'சக்தியை’ மனித மனிதருக்குள் மறைந்திருக்கு சக்தியை வெளிக்கொண உடலுக்கும், உள்ளத்துக்கும்,
இயற்கையைத் தவிர்த்தா மனிதனால்தான் ஒவ்வெ மனிதனால்தான் மாற்றங்
மனிதன் தன்னை நம்ப ! ஆகின்றான்."
மனிதனைவிட உயர்ந்த
கிழக்கு, மேற்கு, 3-ஆம் 2 வளர்ந்த நாடுகள், இடது நாடுகள், ஏழ்மை நாடுகள், ெ நாடுகள், அணி சேராத நாடுக சார்பு நாடுகள் என அை குலத்தைக் கொன்றுவிடுகின்ற
கிழக்கின், மேற்கின், வட வாழ்க்கை முறைகளை ஒரு அங்கே மனித வித்தியாசங்க தேசங்களுக்கிடையிலான நாகரிக வித்தியாசங்களை ஒன்றோடொன்று கலந்து அதன்வழிகளில் புரிந்து ஏ பிரபஞ்சத்தின் மத்தியாகிவிடுப்
கிழக்கிற்கும், மேற்கி வித்தியாசங்களை இங்குக் கவி
Way of writing and Reading:
ஆசியாவில் உள்ள எழுத்துக்களை வலப்பக்கத்தி

ருபாதம் 79ےسےر
னது. மனித வர்க்கத்துக்குள்ளே
மனிதர்களுக்குள்ளே புதைந்து ன் தோண்டிப் பார்க்கவில்லை. iம் அற்புத சக்தியை அபார ர்ந்து பிரயோகித்தால் அது உலகத்துக்கும் உபயோகமானது.
ல்,
ான்றும் ஏதோ ஒன்றாகிறது. கள் நிகழ்கின்றன.
நம்ப 'அபார சக்தி கொண்டவன்
சக்தியும் மனிதனே!
உலக நாடுகள், வளரும் நாடுகள், சார்பு நாடுகள், வலது சார்பு சல்வந்த நாடுகள், அணி சேர்ந்த 5ள், மத சார்பு நாடுகள், மொழி னைத்துப் பிளவுகளும் மனித
T.
க்கின், தெற்கின் நாகரிகங்களை, வருக்கொருவர் புரிந்து வாழ ள் முக்கியமற்று மறைந்துவிடும், புரிந்துணர்வும் மலர்ந்துவிடும். ", வாழ்க்கை முறைகளை குழப்பாமல் அவையவைகளை ாற்றுக்கொள்ள மனித உறவு ).
ற்கும் இடையிலான சில பனிப்போம்.
மத்திய கிழக்கு நாடுகளில் லிருந்து இடப்பக்கம் நோக்கி

Page 297
28oa போதிதர்மர் பற்றி
எழுதுதலும், வாசித்தலும் உட்பட ஏனைய பல வலப்பக்கமாக எழுதுதலும்,
Structure of Letters:
சில கிழக்கத்தேய (Vertically structured), Gou கிடையானவை (horizontaly
Greetings:
கிழக்கில் வரவேற்பு அருகாமையில் செங்குத்தா clasped hands), 560)a) augis வழங்கப்படுகிறது.
மேற்கில் கைகுலுக்! வழங்குகிறார்கள். அதாவது நகர்கின்றன.
6yp566) Vertical Gree 6T60TGITLD (Western civilizati Oriental civilization is more
Family System:
கிழக்கில் மூதாதை
அமைப்பு பிலமாக உள்ளது
that the ancestors are the
கிழக்கில் கூட்டுக்குடு!
பொதுவாக மேற்
அஸ்திவாரமாக இல் மதிக்கப்படுகிறது. தனி ம6

ய அற்புதமான விஷயங்கள்
வழக்கமாக உள்ளது. மேற்கு நாடுகளில் இடப்பக்கத்திலிருந்து
வாசித்தலும் வழக்கமாக உள்ளன.
எழுத்துக்கள் செங்குத்தானவை ாதுவாக மேற்கத்தய எழுத்துக்கள்
structured) a TaoTan Lib.
565 (greetings) gogiugigsbg 5 (Verticlal) g)(sulb ü9 (with ணங்கி நிமிர்ந்து (verticla) மரியாதை
5 (Hand shaking) LDifluntaos | sTilsGir 66OoLunts (Horizontally)
tings, Gudi)Sai Horizontal Greetings on is more horizontally based while vertical)
பரை மையப்படுத்திய குடும்ப (in the Orient, there is a tradition core of the family system).
ப அமைப்பு நிலவுகிறது.
நலகில் அத்தகைய அமைப்பு OG). ஆனால் தனித்துவம் ரித சுதந்திரம் சுதந்திரமாக உள்ளது.

Page 298
எஸ். கு
Food Habits:
Spaisai) Rice and spicy potatoவையும் மையப்படுத் சிலேடையாக மேற்கை M சொல்வது போலக் கிழக்கை போலத்தோன்றுகிறது.
Education:
கிழக்கில் ஆசிரியரை ை கல்விமுறையாகவும் மேற்கில் (Student Centred) 56.6(p60sp,
Political Approach:
கிழக்கில் தன்னை ை அரசியலும், பொதுவாக ே மையப்படுத்திய (People அரசியலுமாக நகர்கிறது.
மேற்கில் தீர்வை நோக்கி பிரச்சினையாக்கி அரசியலா வுள்ளன. ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
மேற்கில் எதிர்கட்சியும் e எதிர்க்கட்சி எதிரிக்கட்சி ( மேற்கில் சிரித்துக்கொண்டு ை கிழக்கில் பகையுணர்வுடன் அம்சங்களாகின்றன.
Time Value: 4
கிழக்கில் நேர விரயம் அ அதிகம் எனலாம்.
உணவிலும், வாழ்க்கை aggggylb, Body Languae Su வித்தியாசப்படுகிறது.

ருபாதம் 281ے سے |
food guyub Gui)6á) Meat and திய உணவு பிரதானமாகிறது. at and potato Culture 6T6örgy spicy Culture என்று சொல்லலாம்
DuluG59u (Teacher Centred) ) மாணவரை மையப்படுத்திய பாகவும் உள்ளது
LDul'luG35u (Self centred மற்கில் மக்களை / தேசத்தை Centred / Country Centred)
ய அரசியலும் கிழக்கில் தீர்வை
க்குவதும் பொது அம்சமகாக
ஆளும் கட்சிபோலவும் கிழக்கில் போலவும் செயற்படுகின்றன. குலுக்கி சிநேகயூர்வ அரசியலும்
விரோத அரசியலும் பொது
திகம். மேற்கில் நேரச் சிக்கனம்
முறைகளிலும், சிந்திக்கும் யோகத்திலும் கிழக்கும் மேற்கும்

Page 299
282a போதிதர்மர் பற்
நாட்டுக்கு நாடும், இல்லாமல் பகையுணர்வு பெரிதாகிக்கொண்டே அனைத்து மக்களையு தோற்றுவிக்கப்போகிறது. இதைச் சுலபமாகச் செய் இரகசியத்தைத் திருடு தகவல்களைப் புகுத்தி த அதியுயர் தொழில்நுட் போகிறது. இராணுவப்பே இப்போரில் முக்கிய பங்கு பரவச்செய்து மனித குல: இல்லாத போரும் இடம்
அப்படி ஏதும் ந. பார்வையைப் பரவ விட பிரசவிக்க வேண்டும். மேற்கத்தியவனாகவோ, வடக்கோ என்று வித்தியா எல்லாமானவராக உலகட் பிரஜைகள் அன்புக்கே வரைபடத்தை வரைந்துவி
இன்று வாழ்வு ஏே காரணங்களுக்குப் பின்ன இயல்பாக இயற்கை 'காரணங்களால் வாழ்? மனிதர்கள் காரணங்கலை
தொழில் நுட்ப நா அதிகரிக்கச் செய்வதுட சேர்த்தே உருவாக்குகி தேடிப் பதுங்கிக்கொன மனிதத்தை மனிதன் ெ
அதற்கு ஒவ்வொருெ வேண்டியது ஒவ்வொரு

|ய அற்புதமான விஷயங்கள்
நாடுகளுக்குள்ளும் புரிந்துணர்வு னால் பிளவுகள் நாளுக்கு நாள் சல்லுகிறது. இந்தப் பிளவுகள் b அளிக்கக்கூடிய போரைத் வேகமாக வளரும் விஞ்ஞானம் துவிடும். ஒரு நாட்டின் அதி உயர் தல், தகவல்களுக்குள் வேறு கவல்களைக் குழப்பிவிடுதல் போன்ற பப் போரும் இடம்பெறத்தான் ார் இல்லாமல் கணனியே (Computer) வகிக்கப்போகிறது. நோய்களைப் துக்கு அழிவை ஏற்படுத்தும் போர் பெறத்தான் போகிறது.
டப்பதற்கு முன்பு புதிய ஒரே -வேண்டும். புதிய மானிடத்தைப்
அப்படிப்பட்ட புதிய மனிதன்
கிழக்கத்தியவனாகவோ தெற்கோ, சம் எதுவுமில்லாமல் ஒரே சமயத்தில் பிரஜையாக இருப்பார். அத்தகைய ாட்டால் எல்லைகளற்ற உலக டுவார்கள்.
தா காரணங்களுக்காக நிகழ்கிறது. ால் வாழ்வு ஒடுகிறது. மனிதவாழ்வு L IΠέ5 நதிபோல் ஓடவில்லை. தீர்மானிக்கப்படுகிறது. அதனால் விரும்புகிறார்கள்.
ரிகம் தொடர்ச்சியான தேவைகளை ன் துன்பத்தையும், அச்சத்தையும் து. மனிதம் மனிதனுள் புகலிடம் rடது. மனிதனில் மறைந்திருக்கும் ளியில் கொண்டு வரவேண்டும்.
நம் தங்களுக்கு உண்மையாக இருக்க ரினதும் தலையாய பொறுப்பாகும்.

Page 300
எஸ். கு
நாம் பாவிக்கும் சொற்கள் வேண்டும். நாம் பாவிக் சிறைப்படுத்தக்கூடாது. நாம் விடுதலை தரவேண்டும்.
பாவிக்கும் சொற்கள் ‘விடுதலை பெறுவோம்! போலியிலிருந்து விடுதலை’ (
பாவிக்கும் சொற்கள் மூ பெறுவோம்!
நமக்கு நாமே விடுதலை நாம் அனுபவிப்போமாக.
போதிதர்மர் அவர்கள் ராகவும் எல்லாமானவராகவு. ஆவார். போதிதர்மரின் மறுபக் உணர்வு, பரிவு, நிசப்தம், கரு உண்மையை உணர்ந்த உண் போதிதர்மர்களை FF6it போன்றோர்களிலிருந்து சும் அடைந்தால்,
அந்த சும்மா இருத்தலில் மனிதன் தன்னை அ அந்த சும்மா இருத்தலில் மனிதன் உண்மைை அந்த சும்மா இருத்தலில் மனிதன் எல்லாம் ஆ ஆகவும் விடுவான் அந்த சும்மா இருத்தலில் உலகில் போர்கள் மே அந்த சும்மா இருத்தலில் உலகில் வேறுபாடுக அந்த சும்மா இருத்தலில் உலகில் மனித உண அந்த சும்மா இருத்தலில் உலகில் மனிதம் மல

ருபாதம் 283ے
ா நமது தளைகளைத் தகர்த்திட கும் சொற்கள் எங்களைச் பாவிக்கும் சொற்கள் எங்களுக்கு
மூலம் அறியாமையிலிருந்து பாவிக்கும் சொற்கள் மூலம் பெறுவோம்!!
லம் பொய்யிலிருந்து விடுதலை’
கொடுத்து அந்த “விடுதலையை’
ஒரே சமயத்தில் எல்லாமற்றவ ம் இருந்த ஒரு உலகப்பிரஜை கேம் அன்பு, மனிதநேயம், மனித ணை, காருண்யம் ஆகும். அவர் GOLDLIToOTo)IT. golol)5LD LIGlDLJol) றெடுக்க வேண்டும்.அவர் மா இருத்தல் மனித குலத்தை
இருந்து
றிந்துவிடுவான்.
இருந்து
ப உணர்ந்துவிடுவான்
இருந்து னவனாகவும் எல்லாம் அற்றவன்
இருந்து
றைந்துவிடும்
இருந்து
ய் மறைந்துவிடும்
இருந்து ர்வுகள் மதிக்கப்படும் இருந்து ர்ந்து மனிதனாகிவிடுவான்

Page 301
| 284 போதிதர்மர் பற்
போதிதர்மர் போன் peace. great tranquility), fear), திடமான மனஉறுதி மனித உணர்வையும் நாட
மேற்கத்திய மனநிை சூழல் நன்கு தெரிந்த கி மனநிலை, பழக்கங்கள் தெரிந்த மேற்கும் உரு எதையும் அரசியல் மயப்ப மனித உணர்வாகப் பார்க்
உலக அனைத்து ம நகரவேண்டும்!
உலக நாடுகளின் அ நகரவேண்டும்!
உலக அனைத்து ம நகரவேண்டும்!!!
*BitbuDI
**யாதும் உ6 மனித நே

லிய அற்புதமான விஷயங்கள்
று ஆழமான அமைதியையும் (Deep புச்சமற்ற மனதினையும் (absence of GOuLuuqub (îndomitable will) gypLDTGOT
எல்லோரும் பெற்றிடுவோம்.
ல, பழக்கங்கள், கலாச்சாரங்கள், ழக்கும் அதே நேரத்தில் கிழக்கின் கலாச்சாரங்கள், சூழல் நன்கு வாக வேண்டும். அப்போதுதான் டுத்தாமல், அரசியலாகப் பார்க்காமல்,
5 முடியும். தங்களும் இதை நோக்கி
அரசியல் இதை நோக்கி
னித மனங்களும் இதை நோக்கி
இருப்போமா?!!!
ாரே யாவரும் கேளிர்?? யத்துடன் வணக்கம்!

Page 302
சில ஆய்வு நூல்கள்
Glimpses of World History By Jawaharlal Nehru Penguin Publications - 19
The Discovery of India. By Jawaharlal Nehru Penguin Publications - 19
Bodhi Dharma: The Great Discourse by Osho -1987
Eastern Religion By Michael. D.Coogan Duncan Baird Publishers London
The Essence of Buddha The Path to Enlightenment By Ryuho Okawa Time Warner Paper Back London
Zen Keys By Thich Nhat Hanh Double Day Publishers -20 New York
மறுபிறப்பு பற்றிய ஆச் ஆசிரியர்: எஸ். குருபா மணிமேகலைப் பிரசுரப் சென்னை, இந்தியா
Pictorial images Source -Google

l1285
r (Selected Bibiliography)
34
941
est Zen Master
- 2005
t
Publishers - 2003
)05
சரியமான தகவல்கள் தம்
- 2013

Page 303

286
eneues rouenuo
'toommemmauauom, saeaea, pt)Aquae unaesaeuos sa
paadinos sena aaaaa
saeuaedruno os e apuan,
!!!!maeneo wae mae· eureupunoa參餐戀} | 繆繆

Page 304
287
குறிப்புகளு

நக்காக:

Page 305

288
ரிப்புகளுக்காக:

Page 306


Page 307
போதிதர்மரைபேற்றி இவர்களி:
O இந்தியாவில் பெளத்தம் படி படியாக குன்றி வந்ததனால் போதிதர்ம இந்தியாவைவிட்டு சீனா பயணமானதற் அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்
பாரத முதல் பிரதப திரு ஜவகர்லால் நேரு Book: Glimpses of World Histc
O ‘தென் இந்தியாவில் தமிழ்மொ பேசும் இடத்தில் மாபெரும் பெளத் ஞானி இருந்தார்.
Xuan Zang (596-664. C.E FGOTITĚ 56ð6ĩ DIT DILð EJD6Ĩuquð. Book : Eastern Religion
போதிதர்மர் புத்திக்கர்மையும், உள்ளவர்' 囊 | Hieun Tsang (629 AC) forá, E6ö65). DT
Highlights of Bodhidharmar:
கௌதம புத்தருக்குப் īsirų கண்ட புத்தர் இவர்.
* தமிழகத்தில் பிறந்து, தமிழைத் மொழியாகக்கொண்டவர், தமிழ்நாட்டி ஞானமடைந்தவர்.
*ஆன்மீகபோதனைக்காக வெளி சென்ற முதல் இந்திய மகான்.
"சென்" மதக்கோட்பாட்டை ஆதி முதன்முதல் நிறுவிய முதல்குரு.
* நெற்றிக்கணி கொண்டவர் (gro நோக்கு வர்மக்கலையின் முன்னோடி.
* கவரை உற்றுநோக்கும் தியானது தற்காப்புக்கலையின் தந்தை, புர * மருத்துவ விஞ்ஞானி, அக்கியூபஞ் * உடல் உறுப்புகள்தானம் பற்றி விஞ்ஞான அறிவிப்பு.
*மனிதருக்கு 6யுலன்கள் எனவும் Sense of balance Groragi upsigia as *மூலிகை மருத்துவ சிகிச்சையில் மூலிகைத் தேயிலை அறிமுகம்
* கிழக்கே தோன்றிய அறிவியல் மே
 
 
 

S இந்நூலாசிரியர் எஸ்.குருபாதம்
மதியூகமும், அறிவும், ஞானமும்
னும் துறவியும். Book: Glimpses of world History
உலகு
g5muů (36.03u
ாடுகள்
யாவில்
eye),
$தை அறிமுகப்படுத்தியவர். ட்சிகர ஞானி. சர் மருத்துவச் சிகிச்சையின் தந்தை?
உலகில் முதன்முதல் மருத்துவ
6வது புலன் காதுக்குள் உள்ள ண்டுபிடிப்பு.
கைதேர்ந்த மாபெரும் சித்தர்,
தை ஞான ஒளி போதிதர்மர்.