கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலசம் 1993.01-03

Page 1

இன்தமிழ் வளர்ப்போம்”
醫 தை-மாசி-பங்குனி-1993
dadi LJ6 fill: 50p

Page 2
உலகத்தின் நாயகனாம் ! நலம்காக்கும் நற்சைவ டு புலவர்பலர் பங்கேற்று பெ கலசம்எனும் பத்திரிகை 3
-நாகநாதசிவம் குடுக்கள் -
இணை ஆசிரியர்கள்: டு. நற்கு? நிர்வாகத் தொடர்பு: 6M. 8. Ꮛ பொடுளாதாரத் தொடர்பு: சிவ. அசோ பொது மக்கள் தொடர்பு: மாணிக்கம். மகளிர் பகுதித் தொடர்பு: செல்வி தீ
666ff(6 : சைவ முன்னேற்ற Saiva Munnetta
Registered Charity
தொடர் L முகவரி : 3 Gayfere Road, C
 
 
 
 

வனின் ؤلی
D GOLDLIITbi IbhLIJûsî ன்னேற்றச் சங்கமதின் ாறுப்புடனே வெளிக்கொணடும் நற்றுணர்ந்தோர் வாழ்த்தவாழி
Iதயாளன் , ச. ஆனந்ததியாகர். ராமநாதன் கன்
déjQ }(556Jó6No IDT (bsijd)
ச் சங்கம் (UK) Sangam (U.K)
w No: 292085
layhall, Ilford, Essex, IG50JG.

Page 3
El400
தலைவனின் அன் உணர்த்தும் அவன் த கோபுரக் க இறைவனின் பெருமையை ஆன்மாவை அருகில் அை கோபுரக் கலசத்தின் வாயிலாக, திருநீறாக, அன்பு நெறி கமழும் சந் ங்குமத் திலகமாக எழுத்தில் தர இறை6 கலசத்தின் முதலாவது அறிவொளி பொற்குடமாய்த் தாங்கி நிற்கின்றீர்கள், ! திளைக்கும் முன் உங்கள் நெஞ்சுடன்
நாள்தொரும் வளர்ந்து வேரூன்றி பதினாறு வ சைவ உள்ளங்களைத் தன்னிடம் அழைக்
உயர்ந்த நோக்கங்களின்
சிறு மணி கட்டித் திருவீதி வலம் வரும் சி சைவ நடை காட்டி சிவ உள்ளங்களைச் சுண் "சைவ சமயம் மெய்ச்சமயம்" என்பது கலசத்தின் என்பது இவ்வுயிரின் அறைகூவல் எங்கள் வாழ்வி கலசத்தின் பணி சைவத்தின் கருத்துக்களைத் தி இத்தகு உயர்ந்த எண்ணங்களின் மிளிர்வாக கலசத்தின் வளர்ச்சியில் நீங்கள் எ பரவுகின்ற காலைக் கதிரொளி ே
இன்னுமா நுழை வாய் உள்ளே வ எழுத்துக்களின் கற்பூர தரிசனம் கண்
సైప్రస్ట్రీ
இறைவன் திருவடியில்
98080 MId
༈ ལུས་། ༡༢
 
 
 
 
 
 
 
 
 
 

க்கம்
பைத் தரணிக்கு ந்துவத் திருவிட்டின் லசம் இது. த் தலை நிமிர்த்திப் பார்க்க ழக்கும் தெய்வீகச் சின்னம்.
உங்களுக்குச் சிவ நெறியைத் தனமாய், சைவ உலகத்திற்கொரு வன் காலத்தைக் கனியச் செய்துள்ளான். விக் கதிர் இது. இதனைப் பூரணப் இதன் திருமஞ்சனத்திலே நீங்கள் நீராடித்
எமது எண்ணங்கள்
யதுத் தலவிருட்சமாகக் கிளைகள் பரப்பி கும் சைவ முன்னேற்றச் சங்கத்தின்
எழுத்துருவம் கலசம்,
ங்காரச் சித்திரத் தேர் போல் எழுத்துலகில் டி இழுக்கக் கங்கணம் கட்டி நிற்கிறது கலசம், உயிர். "ஈசன் நெறி பரப்ப இன் தமிழ் வளர்ப்போம்" யலைச் சமயக் கண்கொண்டு பார்க்க எழுத்தமைப்பது க்கெல்லாம் ஒலிக்கச் செய்வது கலசத்தின் செயற்றிறன் க் கலசம் உங்கள் கைகளில் தவழ்கின்றது. டுக்கும் பங்கு கலசத்தின் மீது பட்டுப் பால் அறிவொளி வீசும் சக்திமிக்கது.
பிலில் நிற்கின்றீர்கள் ? ாருங்கள்! ஒளியிலே தெய்வீகத் டு மகிழ்வோம்.
ఫ్రాస్త్ర
தலைசாய்த்து எழுதும்,
ரியர்கள் அ (ஜத்தியாக

Page 4
" மேன்மை கெ
ESSEFER DE SAVA M
Registered charity No: 292O85
தலைவரிடமிருந்து .
சைவ முன்னேற்றச் சங்கம் இந்நாட்டில் முக்கியமாகத் தமிழ் மக்களி யாவரும் அறிந்ததே.
"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்” என்பதற்கமைய
"என் கடன் பணி செய்து கிடப்பதே ” என்னும் அப்பர் சுவாமிகள் 16 ஆண்டுகளாகச் சிறந்த பணி செய்து வருகின்றது. எமது பணிக நிலையம் அமைத்து "தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் நிறைவு செய்து வருகின்றோம்.
"சைவ சமயக் கருத்துணர்வினூடாக சமூக சேவை" என்ற நோக்க 1989ம் ஆண்டில் கட்டடத்திட்டத்தை ஆரம்பித்து தொடர்ந்து செய சாதனமாக, கலசம் எனும் இக்காலாண்டிதழ்ச் சஞ்சிகை வெளிவருகி உலகம் வரவேற்கும் என்பது திண்ணம்.
மனதில் உறுதி வேண்டும், வாக்கினிலே இனிமை வேண்டும்நினை பாரதியாரின் வாக்கு இம் முயற்சிக்கு மிகப் பொருத்தமானதாகும். இந்த இச்சஞ்சிகை வெளிவருகின்றது. இதன் இணை ஆசிரியர்கள் பலf சைவ முன்னேற்றச் சங்கத்தின் கெளரவ பொதுச் செயலாளரும், ! சைவமுன்னேற்றச் சங்கத்தின் 15வது ஆண்டுவிழாவில் "ஆறே நான தமிழில் பேசி நடிக்க வைத்து பலரின் பாராட்டைப் பெற்றமை இங்கு சங்கத்தின் கெளரவ சமயச் செயலாளரும், நால்வர் தமிழ்க் கலை நடித்த "பூலோகம் வந்த பாரதியார்” என்ற தாள லய நாடகம் எல்லோரு ஆசிரியர் குழுவின் மற்றைய அங்கத்தவர்களும் சங்கப் பணிகளில் நீை
இவர்களின் கை வண்ணத்தில் உருவாகும் "கலசம்" எழுத் ஏற்படுத்துமென்பது எனது திடமான நம்பிக்கை. பல்வேறு ரசனை ஐரோப்பிய நாடுகளிலும்'மக்களின் உள்ளத்தைக் கவரக்கூடிய வகை சைவ முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் என்ற முறையில் இவர்களின்
வாழ்க இவர்கள் சேை சைவ முன்னேற்றச் சங்கம் உங்கள் உடமை
سے انتہائی تا چلی جامعہء لاتے .

Page 5
ஆண்டவன் அடுகிலிடுந்து
பூரீ காளி கா
சிவாசார்யகுலபூஷணம் சக்திகருணாகரசக்ரவர்த்தி சிவழி தி.ஷ.சாம்பமூர்த்தி சிவாசாரியார். பூர் காளிகாம்பாள் திருக்கோயில் 212, தமிபுசெட்டி தெரு, செண்னை -1.
உங்கள் வாழ்க்கைக்கு இன்றியமையாத அரும்பெரும் தத்துவக் கோட்ப இந்துமதம். அதனுள்ளே மனிதனும் தெய்வமாகலாம் என்ற கருத்தை வ மனிதனை இரண்டறக் கலக்கச் செய்வது தான் சைவ சமயமாகும். இத் வருகின்ற சைவ முன்னேற்றச் சங்கமானது கலசம் எண்றொரு சமயப் பத் அடைகிறேன்.
கலசம் பிரகாசிக்கவும் சைவ முன்னேற்றச் சங்கத்தின் நற்பணிகள் சிறக்க எல்லாம் வல்ல எண் அண்னை காளியம்பாளைப் பிரார்த்தித்து வாழ்த்துகி
அம்பாள் ஆசீர்வாதம் சிவாசார்ய குலபூஷணம்.-T.S. சாம்பமூர்த்தி சிவாசாரியார்
இலண்டன் நீ
78, Church Road, Ma
இவ்வுலகைப் படைத்து, காத்து அழித்து மறைத்து அருளி ஆனந்
விளங்கி ஆண்மாக்களை உய்விக்கின்ற தனிப்பெரும் சக்தியே சைவசமய சான்றோர் பலரால் புகழப்பட்ட அனுசரிக்கப்பட்ட, இச் சமயத்தின் முன்னேற்றச் சங்கத்தினரின் சாதனை என்னும் கற்பக விருட்ஷத்தில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.
கற்றோர் பலர் கவனமுடன் தயாரித்தளிக்கும் கலசம் எண்ணும் இப் பத்தி சிவத்தொண்டின் சிறப்புக்களை ஆழமாகப் பதிப்பதிலும் சாதனை படி வேண்டுமென்று எல்லாம் வல்ல பூர் முருகப்பெருமானை வணங்கி வாழ்த்து
இங்ஙனம் இரா. நாகநாதசிவம் குருக்கள். கி. சங்கர குருக்கள். சோ. சிவராம குருக்கள்.

வடும் ஆசிகள். . . . .
மீபாள் துணை
g காளிகா 96. ராமசாமி தெரு,
சென்னை - 1.
1 Ο - Ο1 - 1993
ாடுகளைத் தன்னுள்ளே அடக்கி மனிதனை மனிதனாக வாழச்செய்வது லியுறுத்தி மாயையைக் களைந்து ஞானச்சுடர்வரான இறைவனுடன் நகைய சைவ சமயத்தின் நற்கருத்துக்களை உலகெங்கும் பரவச்செய்து திரிகையை வெளியிட முன்வந்திருப்பது அறிந்து மிகவும் மகிழ்ச்சி
வும் மிக விரைவில் சங்கத்திற்குச் சொந்த மண்டபம் அமையவும் வேண்டி ண்றேன்.
முடுகன் கோயில்
nor Park, London E12.
த மயமாக்குகின்ற உலக நாயகனும், கயிலை நாதனின் பெயர் கொண்டு
ICIGls.
வழியே ஆண்டாண்டு காலமாக சைவ நற்பணியாற்றி வரும் சைவ “கலசம்"என்றொரு புஷ்பம் புதிதாக பூத்துக் குலுங்க இருப்பது அறிந்து
கை சைவ சமயக் கருத்துக்களைப் பரப்புவதிலும், இளைஞர்கள் மனதில் ல புரிந்து சைவ முன்னேற்றச் சங்கமாகிய கோபுரத்தில் கலசமாகத் திகழ கின்றோம்.
LO - O - 1993

Page 6
●●
-(ബി)' )[
Iதுரை நகரில் இனிய சங்கம்
வளருந் தமிழின் அமுதமோ ! வணங்கும் தாயின் வடிவமோ ! கதிரை மலையும் இமய மலையும் காக்கும் மண்டலப் புனிதமோ ! கருணை இறைவனி கோலமோ !
தில்லை அரங்கில் மகிழ்ந்து நடனம் செய்யும் சிவனின் சலங்கையோ ! திகழும் நுதலின் திலகமோ ! வில்லை வளைந்து வினைகள் அறுக்கும் வீர சக்தியின் தோற்றமோ ! வேதம் பயிற்றும் நாட்டமோ !
ஒதும் சைவ நீதி புகழும் தோத்திரங்கள் அவையமோ ! சேத்திரங்கள் உதயமோ ! காதும் மனமும் கனியும் இனிமை கானுங் குறளின் பொருளதோ ! கருதும் ஒருமைப் புலமையோ !
ஆறுபத்து மூவர் அரிய
பெரிய சரிதை அம்சமோ !
அருளை ஊட்டும் தஞ்சமோ ! வேறுமாறு வேடம் தாங்கும் ஈசனின் விளை யாடளே ! இற்ைவி மதுரைப் பாடலோ !
காவியங்கள் யாப்பிலங்கும் காப்பியங்கள் எண்ணமோ !
கண்ணித் தமிழின் வண்ணமோ ! ஓவியங்கள் தோணு மின்பம்
ஒன்று சேரும் மன்றமோ ! உள்ளங் கவரும் வதனமோ !
விளையும் மதுரச் சுவையின் மதுவைப் பொழியும் தமிழின் இரசமோ ! மோனக் கலையின் நளினமோ ! அளையுங் குழந்தை அணையும் தருணம்
செந்தமிழும் ஆதிசிவன் திருமறையும் வந்தனைசெய் வாழும் இனமாம் - சைவ (நெறி) முன்னேற்றச் சங்கமது உய்யுநிலை ஓங்கும் இனிதாம் !

Fi **
DILD62)Mulub
அளிக்கும் மழலை அமிர்தமோ ! அரும்பும் இளமைக் கதம்பமோ !
சிலம்பு சிதறிக் களங்கம் அகற்றும் சிலம்பின் காதை நீதியோ ! தேவி கண்ணகி சேதியோ ! நலங்கு நாடி வணங்கும் மாதர் நாணம் வளரும் மானமோ ! நாட்டுப் பொறையின் தானமோ !
இராம சீதைக் காதை விளம்பும் இணையி ஸ்லாத பாடமோ ! ஏற்றி மருவுஞ் சீலமோ ! நிராயு தனனங் கமல சுதனை நினைக்கும் பாரத ஞானமோ ! நெஞ்சம் உணரும் கீதையோ !
தவழும் பஞ்சு முகிலின் அழகைத் தாவி மகிழும் நிலவதோ ! தங்க இரதப் பவனியோ ! கமழும் காவில் மலரும் பூக்கள் கலந்து குலவுங் கவிதையோ ! கண்ணல் இனிக்கும் பனுவலோ !
தாயின் நாடும் சேயின் நாடும் தமிழும் சைவ மறையுமாய்ச் சார்ந்து புரியும் தருமமோ ! பாயும் தீர்த்தம் யாவும் மோட்சம் பாரில் ஈட்டும் பாக்கியமோ ! பாவம் தீர்க்கும் மார்க்கமோ !
அண்டம் முழுதுங் கண்டு மகிழும் அனந்த வேதக் கிரணமே ! அரங்கி லேறும் கலசமே ! லண்டன் நகரில் நமக்கு மலர்ந்து நாடி உலவும் கலசமே ! நமசிவாயக் கலசமே !
ஓதிநிதம் ந்தமுடன்
சீமைதனில்

Page 7
விக்கினங்கள் விலக்குபவன்
சரித்திரப் பாரம்பரிய மிக்க ஐக்கிய ராஜியத்தின் தலை நகராம் இலண்டண் மாநகரில் தென் மேற்கு பகுதியில் அமைதியாக அமர்ந்து தன்னை நாடி வரும் அண்பர்களின் துண்பம் நீக்கி வாழ்வில் அமைதி வழங்கும் விம்பிள்டன் விநாயகர் ஆலயத்தை உருவாக்கியவரும்.அக்கோவிலின் தர்மகர்த்தாவும் ஆகிய சிவநெறிச்செல்வர் இரத்தினசிங்கம் அவர்களை கலசம் ஆசிரியர் குழுவின் சார்பாக திரு மாணிக்கம் சுரேஷ் அவர்கள் எடுத்த செவ்வியின் இரத்தினச் சுருக்கம் .
ஆலயத்தின் தோற்றம், அமைக்கப்பட்ட நோக்கம் குறிப்பாக விநாயகர் ஆலயம் அமைந்த நோக்கம் என்ன என்று நாண் கேட்டபோது திரு. இரத்தினசிங்கம் அவர்கள் மடைதிறந்த வெள்ளம்போல் பதிலளித்தார்.
1966ஆம் ஆண்டு முதன் முதலில் இலண்டனில் ஒரு இந்து ஆலயம் அமைக்கப்பட வேண்டும் என்ற நோக்கம் இலண்டனில் அக்காலத்தில் வாழ்ந்த தமிழ் மக்களின் மனதில் உதித்தது. இவ் எண்ணமேயிண்ணர் இலண்டண் பிரித்தானிய இந்து தர்மஸ்தாப னமாகவும்ஈஸப்டாமில் இலண்டண் பூர் முருகண் ஆலய தர்மஸ்தாபனமாகவும் உருவெடுத்தது. இந்த இரு தர்மஸ்தாபனங்களும் பல பிரச்சனைகள் காரணமாக 1978 ஆம் ஆண்டு வரை ஒரு ஆலயத்தை அமைக்க முடியாமல் தத்தளித்தன. இந்த வேளையில் தாண் இலண்டண் பிரித்தானிய இந்து ஸ்தாபனத்தின் ஒரு நிரந்தர தர்மகர்த்தாவாகிய திரு.இரத்தினசிங்கம் அவர் களது மனதில் அக்காலத்தில் தமிழ் குடி மனைகள் அதிகமாக இருந்த விம்பிள்டன் பகுதியில் ஒரு கணபதி ஆலயம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது.
1979ஆம் ஆண்டு விநாயக சதுர்த்தியன்று இவர் இறைவனிடம் விடுத்த வேண்டுகோள் "விநாயகப் பெருமானே 1980 ஆம் ஆண்டு விநாயக சதுர்த்தி அண்று நீ எனக்கு இடத்தை தருவாயானால் 1981ஆம் ஆண்டு விநாயக சதுர்த்தி அன்று உண்னுடைய கோவில் கும்பாபிஷேகத்தை உண்னுடைய அருளுடனும் பகவான் சாயி பாபாவின் ஆசியுடனும் நான் நடத்துவேன்” எண்ப தாகும். 1980ஆம் ஆண்டு இவர் பகவாண் பூரீ சத்தியசாயிபாபா அவர்களைப் பார்க்கச் சென்றபோது, அவர் ஆசிவழங்கி ஒரு சிறிய விநாயகர் சிலையை வழங்கினார். இதன் பின் ஒரு நாள் இவர் மோட்டார் வாகனத்தில் பேர்மிங்காம் நகரில் அமைந்துள்ள பூர் கிருஷ்ணர் கோவிலில் செய்து வந்த வேலை நோக்கமாக சென்று கொண்டிருந்த போது, இவருடைய மணக்கண்ணில் விம்பிள்டன் ஆலயத்தின் திட்டம் பலப்பட்டு கொண்டிருந்தது. அப்போது கோவிலின் கட்டடம் இவர் மனக்கண் முன் தோன்றி மறைந்தது. இடது பக்கத்தில் ஒரு தேவாலயமும் , வலது பக்கத்தில் ஒரு மண்டபமும், இவை இரண்டையும் இணைக்கும் ஒரு ஓடையுமாக அமைந்திருந்தது. இக்காலத்தில் இவருடைய மனைவியும் மற்றும் சிலரும் சேர்ந்து விம்பிள்டனில் உள்ள சிறிய மண்டபம் (Little Ha11) என்னும் இடத்தில் மாதந்தோறும் முதல் சனிக்கிழமைகளில் ஒரு பஜனை நிகழ்ச்சியை நடத்தி வந்தார்கள். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒரு சனிக்கிழமை செய்து கொண்டிருந்தபோது திருயிளக் எண்பவர் சிறிய மண்டபத்தின் சாவியை திருமதி இரத்தினசிங்கத்திடம் கொடுக்க வந்தார். தெய்வாதீனமாக அண்று திரு இரத்தினசிங்கம் விட்டில் இருந்தார். இவர் திரு பிளக்கிடம் விம்பிள்டனில் ஏதாவது பெரிய மண்டபங்கள் இருக்கின்றனவா என்று கேட்டார். இதற்கு திரு பிளக்
அவர்கள் சேர்ச்சில் மண்டபத்தைப் . பற்றிக் குறிப்பிட்டு பிறநாடு சென்றுள்ள கண்டு கேட்டவர் : ப தன் பெற்றார் வந்ததும் அவர்களுடன் கதைத்து ஒரு முடிவு தருவதாகக்
கூறினார். அந்த இடத்தில் திரு இரத்தின சிங்கம்
அவர்கள் 956)) அறியாமலேயே உணர்ச்சிவசப்பட்டுக்
குறிப்பிட்டமை யாதெனில் தற்செயலாக நடப்பது எண்பது ஒரு

விம்பிள்டன் விநாயகன்
விடயத்தில் ஒரு முறை நடக்கலாம் ஆனால் பலமுறை நடப்பது எண்பது நிச்சயமாக ஆண்டவனுடைய அருளே ஏனென்றால் மனக்கண்ணிலே அவருக்குத்தோன்றிய கட்டிட அமைப்பைக் கொண்டதே இந்த சேர்ச்சில் மண்டபம்.
இந்த கட்டிடத்தை தண் சொந்த மூலதனத்தைப் போட்டு வாங்கினார்.இறைவனின் அருளின்படி இக்கட்டிடம் இவருடைய கையில் 1980 ஆம் ஆண்டு விநாயக சதுர்த்தி அன்றே கிடைத்தது. இதன் பின் இவருடைய விடா முயற்சியும் முன் வைத்த காலை பின் வைக்காத மனோநிலையும் இண்றைய விம்பிள்டன் விநாயகர் ஆலயமாக தலை நிமிர்ந்து நிற்கின்றது.
1981ம் ஆண்டு விநாயக சதுர்த்தி அன்று ஆலயத்தின் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது )ாணிக்கம் சுரேஷ் Birmingham, bfj jjjid 33 tij, Ej – வெங்கடேஸ்வரர் ஆலய அன்பர்களும் சைவ முன்னேற்றச் சங்க அண்பர்களும் முண்ணின்று நடாத்தி வைத்தனர்.
விநாயகர் ஆலயத்தின் வடிவம் மிக எளிமையாக அமைந்திருப்பதன் காரணம். சில அரசியல் காரணங்கள் காரணமாக இந்தியாவில் இருந்து வரவேண்டிய ஸ்தபதியின் Alth 6J)b î63 CELI TIL ULLSJOIN. எளிமையையே விரும்பும் திரு. இரத்தினசிங்கம் அவர்களின் மனப்பாங்கு
5

Page 8
போன்றனவாகும். இவ்வாலயம் ஒரு தனிமனிதனின் முயற்சி, இதன் வளர்ச்சியை தடுக்க எமது பெருங்குடி மக்கள் பல தகாத முயற்சிகளை மேற்கொண்டனர். இவற்றையெல்லாம் விக்கினங்கள் தீர்க்கும் விநாயகனின் அருளாலும் தன்னுடைய அயராத உழைப்பாலும் ஆலயமாக்கியவர் திரு.இரத்தினசிங்கம். இவருடைய கருத்தின்படி, இப்பெருங்குடி மக்கள் இப்படியான தகாத செயல்களில் ஈடுபட்டமையே இந்த ஆலயத்தை அமைக்க தனக்கு ஒரு உத்வேகத்தையும் ஆவேசத்தையும் வழங்கியது. எண்று கூறினார்.
இந்த ஆலயத்தில் விநாயகப் பெருமான் மூலஸ்தானத்தில் அமர்ந்து அருள் புரிகின்றான்.இந்த ஆலயத்தில் எல்லா இறைமூர்த்தங்களின் வடிவங்களும் அமைந்திருக்கின்றன. இலண்டனில் முதல் முதல் உருவாகிய இவ்வாலயத்தில் இலண்டனில் உள்ள மற்ற எந்தவொரு ஆலயத்திற்கும் இல்லாத இன்னுமொரு சிறப்பு உண்டு. இவ்வாலயம் ஒவ்வொரு நாளும் காலை 9 மணியிலிருந்து இரவு 10 மணிவரை திறந்தே இருப்பதாகும். இவருடைய கருத்துப்படி மிகத் தொலைவில் இருந்து வரும் ஒரு அடியார் தவிர்க்க முடியாத காரணத்தால் நேரம் சென்று வந்தாலும் கோவில் எந்த நேரமும் திறந்திருப்பதால் ஆண்டவனை வழிபடக்கூடியதாகவும் நான்கு வேளைப் பூசை நடைபெறுவதாகவும் கூறினார். இவ்வாலயத்தில் முக்கியமான நிகழ்ச்சி விநாயக சதுர்த்தியாகும். அன்று சிறப்பான அபிஷேகங்களுடன், அழகு மிகு ஆபரணங்கள் அணிந்த விநாயகப் பெருமாண் உள், வெளி வீதிகள் வலம்வந்து அடியார்களுக்குத் திருவருள் புரிகின்றார்.
இத் திருவிழாவைவிட இந்த உலகை ஈன்ற அண்னையாம் ஆதி பராசக்தியின் ஒன்பது நாட்களாம் நவராத்திரி தினங்களும் சிறப்பாக நடாத்தப்பட்டு வருகின்றன.இந் நாட்களில் இங்கு நடைபெறும் கலை வகுப்புக்களில் பயிலும் மாணவர்கள் விநாயகருக்கும் அண்ணைக்கும் தமது கலைகளை சமர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இதைவிட மாசி மாதத்தில் வரும் சிவனுக்குகந்த சிவராத்திரிப் பெருவிழாவும், ஆங்கிலப் புத்தாண்டு, தமிழ்ப் புத்தாண்டு போன்ற சிறப்புத் தினங்களும் கொண்டாடப்பட்டு வருகின்றன. இவ்வாலயத்திற்கு வரும் மாணவ மாணவிகள் வகுப்புகளுக்குச் செல்ல முண் வழிபாடு செய்த பின்பே செல்ல முடியும். இந்த நடைமுறை எனக்கு புளகாங்கிதத்தை அளித்தது. இவ்வாலயத்தில் கலை வகுப்புக்கள் நடாத்த இசைக் கலைஞர்களுக்கு gôGa26al&# IDITY, இடம் வழங்கப்பட்டுள்ளது. இப்படி செய்வதனால் எமது இளைய தலைமுறையினரிடையே கலைகளை வளர்க்கவும் அதே நேரத்தில் இறையுணர்வை வளர்க்கக்கூடியதாகவும் உள்ளது.
இவ்வாலயத்தின் மற்றுமொரு குறிப்பிடத்தக்க சேவையைப்பற்றி அவர் குறிப்பிட்டதாவது, 1985 ல் இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் இடம் பெயர்ந்து இங்கு வந்தபோது அவர்களுக்கு புகலிடம் அளித்தது மட்டுமல்லாமல், முடிந்தவரை அவர்களை சரியான பாதையில் திசை திருப்பிவிட்ட பெருமையும் இவ்வாலயத்திற்கு உண்டு. இவ்வாலயம் ஈழத்திலுள்ள பல தர்ம ஸ்தாபனங்களுக்கு உதவி வருதோடு பல்வேறு தரங்களில் உள்ள தமிழ்மக்களை ஒரு கூரைக்குக் கீழ் கொண்டு வருவதிலும் தன் பணியை நன்கு ஆற்றி வருகின்றது.
இறுதியில் கலசம் சஞ்சிகையின் வளர்ச்சிக்கு விம்பிள்டன் விநாயகம் பெருமாண் என்றும் அருளுவாண் எண்று மனதார கூறிக் கொண்டு விடை தந்தார்.
பிற்குறிப்பு :- திடு இரத்தினசிங்கம் அவர்கள் வழங்கிய (ழ்ன்றரை மணிநேரப் பேட்டியின் சுடுக்கமே இங்கு தரப்பட்டுள்ளது. இத்தொடரில் தொடர்ந்து இலண்டனிலுள்ள ஏனைய ஆலையங்களைப் பற்றிய பேட்டிகள் பிரசுரிக்கப்படும் என்று குறிப்பிட்டுக் கொள்ளுகிறோம்.

நமஸ்காரங்கள் ஏகாங்கம், துவியாங்கம்.திரவியாங்கம்
பஞ்சாங்கம், அவர்டாங்கம் என ஐந்து வகைப்படும். ஏகாங்க நமஸ்காரம் எண்பது தலையை மட்டும் தாழ்த்தி வணங்குதலாகும். துவியாங்க நமஸ்காரம் எண்பது வலக் கையை மட்டும் சிரசில் குவித்து வணங்குதல் ஆகும். திரவியாங்க ே என்பது சிரசின்மீது இரண்டுகைகளையும் குவித்து வணங்குதலாகும். பஞ்சாங்க நமஸ்காரம் எண்பது தலை கையிரண்டு , முழங்காலிரண்டு என்னும் ஐந்து உறுப்புக்களும் நிலத்திலே பொருந்தும்படி வணங்குதல் ஆகம். அஷ்டாங்க நமஷ்காரம் எண்பது தலை கையிரண்டு செவியிரண்டு , மோவாய் புஜங்களிரண்டு என்னும் எட்டு உறுப்புகளும் நிலத்தில் படியும்படி வணங்குதல் ஆகும். பஞ்சாங்க நமஸ்காரம் , அஷ்டாங்க நமஸ்காரம் செய்யும்போது மூன்று , ஐந்து , ஏழு , ஒன்பது . |அல்லது பன்னிரண்டு தரம் செய்தல் வேண்டும் .
ஒருதரம் இருதரம் செய்தல் குற்றமாகும் . ஆடவர் அஷ்டாங்க நமஸ்காரத்தையும் , பெண்டிர் பஞ்சாங்க நமஸ்காரத்தையும் செய்தல் வேண்டும் . ஏகாங்க , துவியாங்க திரவியாங்க நமஸ்காரங்கள் ஆடவர் பெண்டிர் ஆகிய இருபாலார்க்கும் பொதுவாகும். நமஸ்காரம் செய்யும்போது கிழக்கேனும் வடக்கேனும் கால் நீட்டலாகாது. மேற்கேனும் தெற்கேனும் கால் நீட்டவேண்டும் . அஷ்டாங்க நமஸ்காரம் செய்யும்போது முன்னர் சிரசை வைத்து மார்பு பூமியிலே படும்படி வலதுகையை முன்னும் இடதுகையை பின்னும் நேரே நீட்டிப் பின்னர் அம்முறையே மடக்கி வலத்தோளும் இடத்தோளும் தரையில் பொருந்தும் படி கைகளை இடுப்பைநோக்கி நீட்டி வலது காதை முன்னும் இடது காதைப் பின்னும் பூமியில் தோயும்படி நமஸ்காரம் செய்தல் வேண்டும் . விநாயகரை ஒரு முறையும் முருகனை மூன்று முறையும் சிவபெருமானை மூன்று முறை அல்லது |ஐந்து, ஏழு , ஒன்பது, பதினைந்து, இருபத்தொண்று முறைகளும் உமாதேவியாரையும் திருமாலையும் நன்நான்கு முறையும் சூரியனை இரண்டு முறையும் மற்யை கடவுளரை மூன்று முறையும் சக்திகளை நான்கு முறையும் வலம் வருதல் வேண்டும். வலம் வருதல் போகத்தையும் இடம் வருதல் மோட்சத்தையும் வலமாகவும் இடமாகவும் வந்துவணங்குதல் போக மோட்சத்தையும் அளிக்கும் என ஆண்றோர் கூறுவர்.

Page 9
"கோவில்” என்று சொல்லுமிடத்துச் சிதம்பரத்தையும் "நாவலர்” என்று சொல்லுமிடத்து யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலரையும் எண்ணுவது போன்று "சமயம்” என்று பேசுமிடத்து அது "சைவசமயம்” எண்பதனையே குறிக்கும். முழுமுதற்கடவுளை -சிவபோகம் எனும் பேரின்ப வெள்ளத்தைபொங்கித் ததும்பிப் பூரணமாய் ஏக உருவாய் இருக்கும் தண்ணளியானைதலைவனாகவும், ஒருவனாகவும் தன்னகத்தே தாங்கும் சமயம் சைவசமயம் ஆலமரம் தழைத்துப் பரவி, உயர்ந்து ஓங்கி வளர்ந்து , வருவோர் பாவரேயாயினும் வரவேற்று இனிய குளிர் நிழலை உவந்தளிக்குமாப்போன்று சைவமெனும் மெய்ச்சமயம் எல்லாச் சமயத்தையும் புறக்கணிக்காது காப்பாற்றும் சிறப்புப் பெற்றது."சைவமி”என்று சொல்லும் போது சமய சந்தான குரவர்களையும் மெய்ஞ்ஞானிகளையும் மனத்தின்கணி இருத்துகிறோம். எவ்வாறு பக்தி விசுவாசத்துடனும் அன்பு சிரத்தையுடனும் கண்ணிர் மல்க இறைவனைக் கண்குளிரக் கண்டது போன்ற அனுபவம் வரப்பெற்றவர்களாய் நிற்கின்றோம். எங்கு திரும்பினாலும் சமய குரவர்கள் வழிகாட்டி எம்மனைவரையும் இறைவனுடைய குஞ்சிதயாத மலரடிக்கு இட்டுப்போக ஆயத்தமாக நிற்கின்றார்கள். இப் பெருமக்களை நன்றியறிதல் செறிந்த பரவசத்துடன் கண்குளிரக்கண்டு பரவச மடைகின்றோம். நாயன்மார்கள் திருவாய் மலர்ந்தருளிய திருவருட் செல்வத்தை - பேரின் பொக்கிஷத்தை-தேவாரம் எனும் பெரிய வெள்ளப் பெருக்கை-மனம்
 

வாக்குக் காயம் ஒருமித்துத் தியானிக்கின்றோம்.கிடைத்தற்கரிய இப் பொக்கிலும் எமக்கில்லையேல் எங்கள் நிலை எவ்வாறாகும் என்பதனை யோசிக்கவேண்டாவோ?அரிய பெரிய சித்தாந்தக் கருத்துக்களைத் தன்னகத்தே கொண்டதும் இலக்கிய நயம் சொல்நயம் முதலியன நிரம்பியதுமான தேவாரத்தின் அதியுயர்ந்த இடத்துக்கு ஈடு தேவாரமேதான்! சைவ மக்கள் தம் இல்லங்கள் தோறும் தேவார திருவாசக நூல்களை வைத்துப் போற்றிப் பூசித்தல் அத்தியாவசியம்.இறைவனைப் பூசித்து முத்தியின்பம் அடைவதற்குப் பலதுறைகள் இருப்பினும் உறுதியான மார்க்கம் எதுவெனில் தேவாரம் எனும் நற்றோணி பற்றிப் பிறவிப்பிணி எனும் கடலை நீந்துவதேயாகும்.அப்பர் சுவாமிகளை அமிழ்த்திய கல் தெப்பமான தெய்வீகத்தன்மையைச் சிந்திப்போமாக. இறைவனைக் கணினி விட்டு அழைக்கவேண்டும் . பால்மணம் மாறாத குழந்தை "அம்மையே அப்பா" என அலறியதும் பொற்கிண்ணத்தில் உலகமாதாவே திருமுலைப்பால் கொணர்ந்து தமது திருக்கரத்தால் ஊட்டியதைச் சிந்திப்போமாக காதலாகிக் கசிந்து கண்ணி மல்கினாற்றாண் இறைவனது திருவுள்ளம் எங்கள் பக்கம் திரும்பும் என ஞானசம்பந்தப்பெருமான் கூறுவதைச் சிந்திப்போமாக!
"பாட வேண்டும்நாண் போற்றி நிண்ணையே
பாடி நைந்துநைந்துருகி நெக்குநெக்(கு) ஆட வேண்டும்நாண் போற்றி அம்பலத்
தாடு நின்கழற் போது நாயினேன் கூட வேண்டும்நான் போற்றி யிப்புழுக்
கூடுநீக்கெனைப் போற்றிப் பொய்யெலாம் விட வேண்டும்நாண் போற்றி விடுதந்
தருளு போற்றிநின் மெய்யர் மெய்யனே”
-திருவாசகம் :நீத்தல்விண்ணப்பம்
"மெய்யண்போடு வழிபடும் அடியவர்களுக்குத் தவறாது அருள் புரிகின்ற இறைவனே 1 தினமும் உமது இன்னருளையே நாண் போற்றிப் பாடவேண்டும். அவ்வண்ணம் நாண் உமது புகழ் பாடும்போது உளம் நெகிழ்ந்து நெகிழ்ந்து அனலிடைப்பட்ட மெழுகு போல் உருகி ஆனந்தக் கூத்தாடல் வேண்டும். நாண் நாடோறும் போற்றிப் பாதுகாக்கும் இந்தப் பொல்லாம் புழுமலி நோய் நிறைந்த உடம்பை நீக்கித் தில்லையிலே திருநடனம் செய்கின்ற ஈசன் பாதார விந்தங்களை நாயினேன் அடைதல் வேண்டும். அதித்தியமான பொய்
வாழ்வை எல்லாம் நீக்கி முத்தியிண்பத்த்ைத தந்து எண்னை ஈடேற்ற வேண்டும்.
என வேண்டுதல் செய்தாலொழிய மானிடப்பிறவி எடுத்த நாம் பிறவிப் பணியில் இருந்து மீழ இயலாது.
சைவசமயம் ஒரு கருங்கற்கோட்டை இயற்கையோடு இயைந்து சைவ சமயத்தை வளர்த்த காவலர்கள் அனந்தம். அஞ்ஞான இருளையொட்டி மெய்ஞானமாகிய சைவசமயத்தை பரப்பியவர்கள் அனந்தம்.
- 7 -

Page 10
சைவசமயத்தை நிலைநாட்ட எழுந்த கலைக் கோவில்களும் மடாலயங்களும் மட்டிலடங்கா. சேரசோழ, பாண்டியயல்லவ மன்னர்களால் வானுயர் கோவில்கள் வளர்ந்த வரலாற்றை வாயுள்ளவரையும் வாழ்த்தலாமன்றோ. இறைவன் இல்லாத இடம் இல்லை. அது போன்று சைவசமயம் இல்லாத இடம் இல்லை. சைவசமய சாஸ்திரத்தில் உள்ள உண்மைகளை ஒவ்வொரு சமயமும் சமயிகளும் தங்கள் கருத்துக்கள் அமையத் திரித்து மயக்கித் தங்கள் சமயத்தை வளர்த்து வருகின்றார்கள். இறைவனின் திருவருளை வளர்த்த பேரருளாளர்கள் இந்தப் பேருண்மையினை, எல்லாச் சமய நூல்களிலும் நுணுக்கமாகக் கண்டுள்ளார்கள் எள அறிகின்றோம். சைவசமயிகளாகிய நாம் சைவக் குரவர்களுடைய குரு பூசை தினத்தைக் கொண்டாடுவதோடு அமையாது. தேவாரம் எனும் பிறவிப் பணி தீர்க்கும் பெரு மருந்தை எவருக்கும் இலவசமாய் கிடைக்கக் கூடியதாக வழிவகைகள் உண்டுபண்ண வேண்டும். நாவலர் தந்து சென்ற சைவவினாவிடைகள், பாலபாடம் பெரியபுராண வசனம் முதலிய நூல்களை மிகவும் மலிந்த விலையில் எளிதில் எவரும் எப் புத்தகசாலையிலும் வாங்கக் கூடியவகையில் செய்வது சைவசமயத்துக்கு நாம் செய்ய வேண்டிய முக்கிய கடமையாகும்.
'60JGNJ is IIIñ CIDIsidid IDIIIñ”
உங்களிடமிடுந்து . . . . . . . . . . .
எடுத்தார்வமுள்ளவர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள். உங்கள் எடுத்துக்களுக்கோர் புதிய களம். சைவத்தை அடிப்படையாகக் கொண்டு கவிதை, சிறுகதை, கட்டுரை, தத்துவ ஆய்வுகள்ஆகியவற்றை
எதிர்பார்க்கின்றோம். தரமானவை வெளியிடப்படும். உங்கள் படைப்புக்களை, ஒரு பிரதியை வைத்துக் கொண்டே அனுப்புங்கள்.
-இணை ஆசிரியர்கள்
எங்களிடமிடுந்து. . . . . . . . . .
கலசத்தின் அடுத்த இதழ் சித்திரைத் திங்கள் அன்று (14-04-1993) வெளிவரும். இவ்விதழ் கொடும்பு
சைவ முன்னேற்றச் சங்கத்தின் (தாய்ச்சங்கம்) நாற்பதாவது ஆண்டுநிறைவையும்,
கொடும்பு கொம்பனித்தெடு dடுள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோவின் கும்பாபிஷேகத்தையும் முன்னிட்டு சிறப்பிதழாக வெளிவர இடுக்கின்றது! மற்றும் பல சிறப்பு அம்சங்களையும் தாங்கி வரவுள்ளது.
-இணை ஆசிரியர்கள்

உலகத்தில் எவ்வளவோ துண்பங்களுக்கு மத்தியிலும் மனிதன் நீண்டகாலம் வாழ வேண்டும் என்று ஆசைப்ப டுகிறான். ஒருவண் காட்டு வழியே போகும்போது அவ னுக்கும் பின்னால் ஒரு யானை துரத்தத் தொடங் குகின்றது . யானைக்கு அஞ்சி மிக வேகமாக ஓடும்போது அவன் ஒரு பாழும் கிணற்றில் விழுந்து விடுகிறான். அவனுக்கோ நீந்தவும் தெரியாது. அவன் அக்கிணற்றை விட்டு வெளி யில் வருவதற்கு முயற்சிக்கிறான். எதுவும் பலனளிக்கவில்லை . கடைசியாக அருகில் வளர்ந்திருக்கும் புல்லைப்பிடித்துக் கொண்டு தலையை தண்ணீருக்கு மேல் வைத்துக்கொள்கிறான்.
தலையை மேலே நிமிர்த்திப் பார்த்தால் யானை அவனை கிணற்றிற்கு வெளியில் நின்று எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. அவனுக்கோ அச்சம் தாங்க முடியவில்லை. அந்த நேரம் பார்த்து அவன் பிடித்திருக்கும் புல்லை ஒரு எலி கடித்துக் கொண்டிருக்கிறது. என்ன செய்வது எண்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருப்பவன் காதின் பக்கத்தில் ஒரு பாம்பு எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருக்கிறது. மேலே யானை பிடித்திருக்கும் புல்லை எலி கடித்துக் கொண்டிருக்கிறது- அவன் காதின்பக்கத்தில் பாம்பு : அந்த கிணற்றின் வாயருகே உள்ள மரத்தில் ஒரு தேன் கூடு . அந்த தேன் கூட்டிலிருந்து இரண்டு துளி தேன் கிணற்றின் உள்ளே சிந்துகிறது. இவண் பிடித்திருக்கும் புல்லையும் விடாமல் காதின் பக்கத்திலே இருக்கும் பாம்பையும் பார்த்தவண்ணம் , அந்த எலியையும் கவனித்த
வண்ணம் , மேலே நிற்கும் யானையின் நினைப்பும் உள்ளத்தில் இருக்கும் வண்ணம் , கிணற்றினுள்ளே விழுகின்ற இரண்டு துளி தேனையும் விட்டு விடக்கூடாதே என்று எண்ணி அவன் தனது நாக்கை நீக்கி அதனைச் சுவைக்கிறான். மனித வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது. ஆயுட்காலம் என்ற யானை துரத்திக் கொண்டிருக்கிறது. வாழ்க்கை என்ற கிணற்றுக்குள்ளே விழுந்து விட்ட நாம் வாழ்நாள் என்ற புல்லை இறுகப்பற்றிக் கொண்டிருந்தாலும் இரவு பகல் என்ற எலி அதனை அறுத்துக் கொண்டிருக்கிறது. மற்றும் வாழ்க்கைத் துண்பங்கள் காதின் பக்கத்தில் உள்ள பாம்பைப்போல் இருக்கிறது. இருந்தாலும் நாம் உலக வாழ்க்கையின் மேல் கொண்டுள்ள பற்று என்ற தேன் துளிகள் இரண்டாயினும் அதை சுவைக்கவேண்டும் எண்கின்ற ஆசை நமக்கு இருந்து கொண்டே இருக்கிறது. இதனால் மரண பயம் எண்பது மனிதனுக்கு இருந்து கொண்டேயிருக்கும். இதை யாராலும் நீக்க முடியாது. அப்பேற்பட்ட நிலை வரும்போது தெய்வம் வந்து தன்னைக்காக்க வேண்டும் எண்று எல்லோரும் எண்ணுவார்கள்.அபிராமியை துதிப்போர்க்கு மரணபயம் நீங்கும்.
(அபிராமி அந்தாதி- புலவர் கீரன் உரையிலிருந்து தொகுக்கப்பட்டது)

Page 11
திருமுறைத் தேன் பருகிப்பார் -ஆதிரை
திருநாவுக்கரசு நாயனார் தேவாரம்
அப்பர் சுவாமிகள் மீண்டும் சிவநெறிக்குத் திரும்பியமையை ஏற்றுக்கொள்ள முடியாத சமணர்கள் அப்பர் சுவாமிகளை சுண்ணாம்புக் காளவாயிலிட்டு அடைக்கின்றனர். ஏழு நாட்களின் பின் நீற்றறையைத் திறந்து பார்த்த போது அப்பர் பெருமானார் "ஆனந்த வெள்ளத்தினிடை மூழ்கி யம்பலவர் தேனுந்து மலர்ப்பாதத் தமுதுண்டு தெளிவெய்தி, யூனந்தானிலராகி யுவந்திருந்தார்."
சிவபெருமானின் திருவடியாற் பெறப்படும் பேரிண்ப நீழல் ஒப்புயர்வற்றது. அதனை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. இருப்பினும் அப்பர் சுவாமிகள் தாண் பெற்ற இன்பத்தினை தூயதமிழில் தேவாரப் பதிகமாய்ப் பாடியருளினார். அத்திருப்பதிகத்தின் முதாலாம் பாடல்.
திருச்சிற்றர்பர்ை மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே.
குற்றமற்ற வீணையில் பிறக்கின்ற இசையிண்பமும்; மாலைப் பொழுதிலே விண்ணில் தோன்றி கண்களுக்கு இனிமையைத் தருகின்ற குளிர்ந்த முழுநிலவொளியும்; மெல்ல மெல்ல வந்து உடலை மிருதுவாகத் தொட்டு விசிறிவிடும் தென்றற் காற்றின் இன்பமும்; இத் தென்றற் காற்றுடன் பெருமைமிக்க குளிர்ச்சியும் மணமும் குறைவற்ற பயனும் தந்து எவரையும் இன்பமடையச் செய்யும் இளவேனிற் பருவத்தில் உண்டாகும் உளமகிழ்ச்சியும்; பொய்கை நீர் நிரம்பி, நீர்ப்பூக்கள் நிறைந்து, அப் பூக்களில் இருக்கும் தேனினைச் சுவைத்துக் களித்து வண்டுகள் மொய்த்து ரீங்கார இசையையும் தருகின்ற . இத்தகைய எல்லா இன்பங்களையும் விட மேலான இண்பத்தைத் தரத்தக்கது எண் சிவபெருமானின் திருவடியிலே பெறுகின்ற பேரின்ப சிவானந்தமாகும். இப்பாடலில் ஐந்து புலண்களாலும் உணரக்கூடிய உடல் உணர்வுகளை அப்பர் சுவாமிகள் குறிப்பிடுகின்றார்.
வீணைசெவி கண்மதியம் விசுதென்றல் ஊற்றிண்மெய்
மாலையிள வேனில் மணமூக்காம் - ஆணைநீர்ப் பொய்கைநாக் காகும் புலன்கொள் பொறிஐந்தின்
செய்கைக் கிடனாம் தெளி.
 
 
 

வினை இன்பம் செவியால் நுகர்வதால் செவியும், மாலை மதியம் கண்ணுக்கு இன்பம் பயத்தலால் பண்ணும், தென்றற் காற்று உடலுக்கு இன்பம் பயத்தலால் மெய்யும், இளவேனிற் பருவம் பூவுமீ காயும், பழமும் தந்து நறுமணம் பயத்தலால் மூக்கும், பொய்கை நீர் குளிர்ச்சிமிக்க இன்சுவை பயத்தலால் நாக்கும் சொல்லப்படுவதைக் காணலாம்.
மாசில் வீணை எண்று குறிப்பிடப்பட்ட விணையில் இருக்கக் கூடிய குற்றங்களாவன - மெல்லிய மரம், புண்ணுற்ற மரம், வெந்த மரம், முறிந்த மரம், இடியால் பழுதான மரம், அழுகின மரம் எண்பன.
திருமுறைகளின் பண்ணும் அதற்கமையும் சுருதியுமே பாடுவோருக்கும், அதனைக் கேட்போருக்கும் உரிய பயனைத்தந்து இறைவனின் எண்ணம் அகலாமல் சிவ சிந்தனை வளரக் கருவியாய்த் திகழ்கின்றன.
இதையே திருஞானசம்பந்தரது தேவாரங்களுக்கு அவருடனேயே இருந்து யாழ் இசை வழங்கிப் பெருமை சேர்த்த திருநீலகண்ட பெரும்பாணரது உறவும், தொண்டும் எமக்குத் தெளிவுபடுத்துகிறது. சம்பந்தர் தம்முடைய தோவாரத்தில் பின்வருமாறு கூறுகின்றார்:
மற்றதற்குப் பிள்ளையார் மனமகிழ்வுற்றிசைந்தருளப் பெற்றவர்தாந் தம்பிரா னருளிதுவே யெனப்பேணிச் சொற்றமிழ்மா லையினிசைகள் சுருதியாழ் -
முறைதொடுத்தே அற்றைநாட் போலென்று மகலாநண் புடனமர்ந்தார்.
மிகநல்ல வீணை தடவி என்றும் திருஞானசம்பந்தர், சிவபெருமானது திருவருட்செயல்களைத் தோவாரத்தில் குறிப்பிடுகின்றார். இங்கும் குற்றமற்ற விணையெனப் பாடப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கது. பண்ணொடு பாடி மீட்பதை அப்பர் சுவாமிகள், பணிமேலே பாவித் திருந்தாய் போற்றி எண்றும், பண்ணொடி யாழ் வினை பயின்றாய் போற்றி எண்றும் திருத்தாண்டகத்திலே மேலும் வலியுறுத்துகின்றார்.
థ్రో,

Page 12
T(D) þTUIdh (f.
- பாரதிப்பி
பாரதி ஒரு காலத்தைக் கடந்த கவிஞன் . எக்காலத்துக்கும் ஏற்றவாறு கவிதை படைத்த ஒரு மாபெரும் கவிஞன்.தேசிய விடுதலை பற்றி பொருளாதாரக் கண்ணோட்டத்தில் கவிதை பாடிய ஒரு பொதுவுடமைக் கவிஞனும் இந்தப் பாரதிதான்.இம் மாபெரும் கவிஞனின் ஆத்மீகப் பக்கத்தின் ஆழம் அலாதியானது. இந்த ஆழத்தை அலசி ஆராய்ந்து உங்களுக்கும் சுவையூட்டும் வண்ணம் தருவதே எனது நோக்கம். d எந்த ஒரு செயலையும் கடவுளிலிருந்து பிரித்து இந்தக் கவிதை மலை பார்த்ததில்லை. மதம் மனிதனுக்கு அபின் c என்ற புரட்சி வாதிகளின் அணிவகுப்பால் எழுந்த ரஸ்சியம் புரட்சியைக்கூட காளிமகாதேவியின் அருளால் விளைந்தது
- 10.
 

தெய்வீக விஞனா
த்தன்
என்று அடித்துக் கூறுமளவுக்கு உரமான நம்பிக்கை கொண்டிருந்தானி எமது கவி. இவனுடைய ஆத்மீகக்கவிதைகளை இரு பெரும் பிரிவுகளுள் அடக்கலாம்.
1) தோத்திரப் பாடல்கள்
2) ஞானப் பாடல்கள் முதற்கண் தோத்திரப் பாடல்களை நோக்குவோம். தோத்திரப் பாடல்கள் முழுவதும் பாரதி ஆண்டவனிடம் , உலகத்துக்கு காண் எண்ன செய்யப்போகிறேன் எண்பதைக் கூறி அதற்கு மனத்திடத்தையும் உடல் வலிமையையும் தா எண்று கூறுவது போல் அமைந்துள்ளன. இந்த வேண்டுதலிலும் கூட தண்ணம் பிக்கைதான் கூடச் சுடர் விடுகிறது. கடவுளிடம் எதையும் தா என்று பாரதி கேட்பதில்லை. கடவுள் செய்வார் மனமே நீ பிறழாது உண் வழியில் செல் என்று தனக்குத்தானே ஆணையிடுகின்ற பாணியில் பாரதி கூறுவது வியப்பைத் தருகிறது.
பாரதி கூறுகிறான். தமக்குத் தொழில் கவிதை,நாட்டிற் குழைத்தல் இமை பொழுதுஞ் சோராதிருத்தல்-உமைக்கினி/ மைந்தனி கனநாதனிநககுடி/ை வழிவிi/னி! சிந்தையே, இம் முன்றும் செய்.
இந்தக் கவிதையில் மைந்தண் கணநாதனிடம் வாழ்வி என்று கேளாமல் வாழ்விப்பாண் என்று அறுதியிடுகின்ற தண்மை இருக்கிறதே-அதை எப்படிச்சொல்வது? ஆத்மீகத்தின் அத்திவாரமே நம்பிக்கைதான். இந்த நம்பிக்கை பாரதி மனதில் எவ்வளவு தூரம் ஊடுருவியிருக்கின்றது. இன்னுமொரு கவிதையைப் பார்ப்போம்.
மேனிமைப் படுவIர் மனமே! கேள்
விண்ணின் இடிமுனி விழுந்தாலும் Iண்மை தவறிநடுங்காதே
பயத்தால் ஏதும் பயனில்லை /7ண்முனி உரைதிதேனி கோடிமுறை இன்றுக கோடிமுறை சொல்வேன் ஆண்மாவான கணபதியின்
அருளுண்டு அசீசர் இல்லை/ே
இங்கு இன்னுமொரு படி மேலே போகிறான் பாரதி. கணபதி யாரென்றே கூறி விடுகிறான். ஆண்மாதாண் கணபதி எண்கிறான். கணபதியின் அருளுண்டு அச்சம் தேவையில்லை எண்று அடித்துக் கூறுகிறான். இப்படி யார் இதுவரையில் கூறியிருக்கிறார்கள்.? அடுத்த கவிதையைப் பாருங்கள்.

Page 13
La7 a MITid:sft
பதற7ர்! மிகுந்த பொறுமையுடன் வித்துமுனைக்கும் தண்மைபோல் மெல்லச் செய்து பயனடைவார் சக்தி தொழிலே அனைத்துமெனிச் சார்ந்த தமக்குச் சஞ்சேைமனி வித்தைக் கிறைவா! கதைத7!
மேன்மைத் தொழிலிர் பணியெனையே! பக்தியுடையவர்கள் காரியம் செய்வதில் பதற்றமடை மாட்டார்கள் என்று கூறும் பாரதி சக்தி தொழி! அனைத்துமென்றால் சார்ந்த நமக்குச் சஞ்சலமேண் என் கேட்கிறான்.ஆண்டவன் செயல் தான் எல்லாம் எண்று நம்பினால் ஏன் கவலைப்படுகிறாய்?. எல்லாவற்றையும் அவே பார்ப்பானி என்று கூறாமல் கூறும் பாரதியின் நம்பிக்கைதா எண்னே!படிக்கப் படிக்க ஒவ்வொரு கவிதையும் ஓராயி உணர்வுகளைத் தருகின்றன. தெய்வப் பாடல்களில் கூ பாரதி கற்பனைத் திறன் படைத்தவனாக தோற்றுகின்றா "வேலண் பாட்டு” என்ற கவிதையில் என்றும் பாடியவைகை நாம் நோக்கலாம்
வள்ளியை வர்ணிக்கின்ற விதத்தைப் பாருங்கள்.
...சொல்வினைத் தேனிர் குழைத்துரைப் பாண்சிறு
வள்ளியைக் கண்டு.
என்றும்
gy a p p Iபல்லினைக் காட்டிவெண் முத்தைப் பழித்திடு
a'alfalfhoIII............
என்றும்
··ga·· ·· கிள்ளை மொழிச்சிறு வள்ளியெனும் பெயர்ச்
செல்வத்தை.
எண்றும் பாடியவைகளை நாம் நோக்கலாம். இலகு தமிழில் அழகு வர்ணனையைத் தர பாரதியைத் தவ வேறு யாரால் முடியும்? அடுத்து காணிநிலம் வேண்டும் என்ற கவிதைக்கு வருவோம்.
காணிநிர்ை வேண்டுர் -பராசக்தி காணிநிர்ை வேண்டுர்-அககு துணில் அழகியதாய் -நன்மடங்கள்
துய்ய நிறத்தினதாய்-அந்தக் காணிதிந்ைதிடையே - ஓர் மாளிகை
கட்டித்தர வேண்டும்:அககு கேணியருகினிலே - தென்னைமரர்
என்ன மாதிரிக் கேட்கிறான்?எண்ணவெல்லாம் பராசக்தியிட கேட்கிறாண்? பணம் தா என்று அவன் கேட்கவில்லை ? மாடமாளிகைக தா என்று கேட்கவில்லை. ? தான் வாழக்கேட்டானா?
வயிற்றுப்பசிக்கும்.காமத்துக்கும் இடம் ெ Gup 1664) DC55 OS) said:56.f4)(5,55
அடைந்தவனாகிறான். அதனால்தான் நம |பட்டினியையும் காமத்திலிருந்து விடுதலை இப்படிக் கீழிருந்து மேலே உயரும் நிை மேலே உள்ள பகுதியைப் பிரிக்கும் பூணு

இல்லையே! இந்த வையம் வாழக் காணிநிலம் கேட்டான். அதில் ஒரு அழகான மனை கேட்டான்.-இயற்கை அமைப்பாக தென்னைமரம் கேட்டான்- ஒரு பத்தினிம் பெண் வேண்டும் எண்றாண்-இப்படியெல்லாம் கேட்ட பாரதி கடைசியாகக் கூறுகிறான். பாட்டுத்திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திடவேனும் என்று. எண்னே பொதுநோக்கு ! தன்னைப் பற்றிய கவலை சிறிதுமின்றி தன்னுடைய பாட்டுத்திறமை முழுவதும் இந்த வையம் வாழப் பயன் படவேண்டுமென்று கேட்கின்ற அந்தத் தண்மை யாருக்குவரும் லே அடுத்து பராசக்தி என்ற பாடலில் தெய்வம் தண்ணிடம் யாசிப்பதாகவும் தெய்வம் எதை எதையெல்லாம் யாசிக்கின்றது எண்பதையும் கூறுகின்றாண்.
நாட்டுமக்கள் மிணியுர் வறுமையும்
நையப் பாடென்றொரு தெய்வக கூறுமே கூட்டி மானிடச் சாதியை ஒன்றெனக் கொண்டு வையம் முழுதும் பயனுற Iட்டிலே மறகர் காட்டெனு மோர் தெய்வம்
பண்ணில் இன்பமுக கற்பனை விந்தையும் ஊட்டி எககுர் உவகை பெருகிட
ஓங்குர் இண்கவிஓதெனூர் வேறொன்றே நாட்டுமக்கள்நலமுற்று வாழவும்
நானிலத்தவர் மேனிலை எய்தமவும் Iட்டிலே தனியின்பத்தை நாட்டவுர்
løføassa) Haflin 1 i Alf éalæstø A/ka முட்டுர் அண்புக்கனைெரடு வானி/ை முன்றுகின்ற /ெழுதி ைொைங்குரண் காட்டி அண்னை பராசக்தி ஏழையேன்
கவிதை /வும் தனக்கெனக் கேட்கின்ற/வி தன்னுடைய கவிதை எல்லாவற்றையும் பராசக்தி கேட்கி ly றாளே எண்கின்ற ஆதங்கத்தோடு புனையப்பட்ட இக்கவிதை
எவ்வளவு சிறப்பாக இருக்கிறது. இங்கு தான் பாரதியை நாம் கூர்ந்து கவனிக்கவேண்டும். பாரதி எந்த சமயத்திலும் வெறுமனே தெய்வத்தைப் புகழ்ந்து பாடவில்லை. சமுதாயத்தின் தேவைகளை தெய்வத்தோடு இணைத்து தீர்வுகளை தெய்வ ஆணைகளாகவும் தெய்வவிருப்புகளாகவும் வெளிக்கொணர்ந்த பாங்கில் பாரதி மற்ற கவிஞர்கள் எல்லாரையும்விட மேலே போய்விட்டான்.யாரதியை எக்கோண
த்திலிருந்து பார்த்தாலும் ஒரு தெய்வீக சமுதாயக் கவிஞனாகவே என்னால் பார்க்க முடிகிறது.
இப்படி பாரதி பற்றி நிரம்ப எழுதிக்கொண்டு போகலாம். தொடர்ந்து வரும் கலசங்களில் தெய்வ அனுக்கிரகம் இருந்தால் மீண்டும் சந்திக்கிறேன்.
காடாமல் தனது சிந்தனையினால் உயர்வு விடுபட்டு மனிதப் பிறவியின் மேன்மையை து மதம் உயர்ந்த உள்ளம் கிடைக்கப் பெறுவதையும் முக்கியமாக உணர்த்துகிறது. லயையே நமது உடம்பின் கீழ்ப்பகுதியிலிருந்து ால் எடுத்துக் காட்டுகிறது.
- 11 -

Page 14
சித்தரந்தச் சி
சிவபெருமானது பெருமைகளை எடுத்தியம்பும் பன்னிரண்டு திருமுறைகளுக்கும் ஒத்த சிறப்பான மற்றொரு நூற்தொகை சித்தாந்த சாத்திரங்களாகும். எமது சமயத்தின் ‘அடிப்படைக் கேட்பாடுகளை எடுத்துக்காட்டும் சித்தாந்த நூல்கள் திருமுறைகளின் காலத்திற்கும் பிற்பட்டவை. பதின்னான்கு சைவ சித்தாந்த நூல்களும் அவற்றை இயற்றியவர்களின் பெயர்களும் பின்வருமாறு:
1 திருவுந்தியார் திருவியலூர் உய்யவந்ததேவர். 2 திருக்களிற்றுப்படியார் திருக்கடவூர் உய்யவந்ததேவர். 3 சிவஞானபோதம் மெய்கண்டதேவர்.
4 சிவஞான சித்தியார் அருணந்தி சிவாச்சாரியார். 5 இருபா இருபது அருணந்தி சிவாச்சாரியார்.
6 உண்மைவிளக்கம் மனவாசங்கடந்ததேவர்.
7 சிவப்பிரகாசம் D_IDILlf, dfaldðsIsulsis. 8 திருவருட்பயன் உமாபதி சிவாச்சாரியார். 9 வினாவெண்பா உமாபதி சிவாச்சாரியார். 10 GLJITÖÖÜLIQUOTGOL D LLDITLI đfalTiff (TfLIITMI. 11 கொடிக்கவி p IDTLuf dald di IfuTM.
12 நெஞ்சுவிடுதூது உமாபதி சிவாச்சாரியார். 13 உண்மை நெறிவிளக்கம் உமாபதி சிவாச்சாரியார். 14 சங்கற்பநிராகரணம் p LDITLi dard III.
கலசம் பத்திரிகை வெளியாகும் இவ்வரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி ஒவ்வொரு இதழிழும் சில சித்தாந்தக் கருத்துக்களை இலகுவான நடையில் எழுத வாய்ப்புக் கிடைத்துள்ளது. இம்முயற்சியின் முதல் கட்டுரையாக மேலே குறிப்பிட்ட 8ம் நூலாகிய திருவருட்பயனிலிருந்து ஒரு குறள் இங்கு கருத்தில் எடுக்கப்படுகிறது.
திருவருட்பயன் நூல் 100 குறட்பாக்களைக் கொண்டு 10 அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கடவுளின் இயல்பினைச் சொல்லும் முதலாம் அதிகாரம் பதிமுதுநிலை. உயிர்களது இயல்புகளை உயிரவைநிலை என்னும் இரண்டாம் அதிகாரமும், ஆணவத்தின் தன்மையை இடுண்மலநிலை என்கின்ற அடுத்த அதிகாரத்திலும். நான்காம் அதிகாரத்தில் ஞானத்தின் இயல்பினை அடுளதுநிலை பகுதியிலும், அருளால் கிடைக்கப்பெறும் ஞானகுருவின் தன்மையை டுேளுறுநிலை என்னும் ஐந்தாம் அதிகாரத்திலும், றிேயுநெறி என்னும் ஆறாம் அதிகாரத்தில் திருவருட் சக்தியாகிய உண்மைப் பொருளின் தன்மையும்,

ஏழாம் அதிகாரத்தில் அறிவு நெறியில் நிற்பதால் ஆணவம் நீங்கிய உயிரின் இயல்பினை உயிர்விளக்கம்என்றும், பக்குவ நிலையை அடைந்த உயிர் என்ன பயனைப்பெறும் என்பதை இன்புறுநிலை என்னும் எட்டாம் அதிகாரத்திலும், முத்திநிலையை அடைந்தவருக்கு துணையாய் இருக்கும் பஞ்சாட்சர மந்திர இயல்பினை ஐந்தெடுத்தடுனிலை என்னும் ஒன்பதாம் அதிகாரத்திலும், பத்தாம் அதிகாரத்தில் திருவருளுடன் கலந்து சமாதி நிலை அடைந்தோரது பண்பினை அணைந்தோர்தன்மை என்னும் பத்துக் குறள்களிலும் நாம் காணலாம்.
திருவருட்பயன் நூலானது எவ்வாறு ஓர் அதிகாரத்தின் பின் மற்றைய அதிகாரத்துடன் ஒரு தொடர்பினைக் கொண்டு அமைந்துள்ளதோ அவ்வாறே இந்நூலின் ஒவ்வொரு குறளும் அடுத்துவரும் குறளுடன் ஒரு தொடர்பினைக் கொண்டுள்ளது. அப்படியாயின் இக்கட்டுரை முதலாம் அதிகாரத்தில் முதலாவது குறளைக் கருத்தில் எடுத்து அதன் பின் இனி வர இருக்கும் காலத்தில் அடுத்தடுத்த குறட்பாக்களை எடுத்து விளக்கம் தருவதே முறையெனத் தென்படலாம். இக்கட்டுரையின் உயர்ந்த நோக்கம் வாசகர்களுக்கு சைவ சித்தாந்த கோட்பாட்டில் ஓர் ஆவலைத் தூண்டுவதே. திருவருட்பயன் போன்ற சித்தாந்த நூல்களைப் பெற்று, கற்று விரிவான விளக்கத்தை நீங்கள் தேட இக்கட்டுரை ஒரு கருவியாக மட்டுமே அமைகிறது. ஆதலால் முதலாவது குறளில் தொடங்கி நூறாவது குறளை நோக்கி இக்கட்டுரையின் அமைப்பு வளராது என்பதைப் பணிவுடன் குறிப்பிட விரும்புகின்றேன்.
இவ்விதழில் இடம்பெறும் குறள் உயிர்களின் தன்மையைக் கூறும்
இரண்டாம் அதிகாரமாகிய உயிரவை நிலையின் ஏழாம்
6T||)|j.
ஆண்மா சதசத்து
சத்தசத்தைச் சாரா தசத்தறியா தங்கணிவை உற்றசத சத்தாம் உயிர்.
இதை பின்வருமாறு பொருள் விளங்க பிரித்து எழுதலாம்:
சத்து அசத்தைச் சாராது அசத்து அறியாது அங்கண் இவை உற்ற சதசத்தாம் உயிர் இக்குறளிள் இறைவனாகிய பதியை சத்துப் பொருள் என்றும், ஆண்மாவாகிய (உயிர்) பசுவை சதசத்து எனவும், பாசம் என்கின்ற ஆணவம், கண்மம், மாயை இவைகளை அசத்து என்றும் ஆசிரியர்
குறிப்பிடுகின்றார்.
2 -

Page 15
அறிவிக்காமலேயே அறியும் பொருள் இறைவன் எண்பத இறைவனை சத்துப் பொருள் என்றும், அறிவித்தாலும் அறிய காரணத்தால் பாசத்தை அசத்துப் பொருள் என்றும் காட்டப்படுகிற உயிரானது இறைவனைச் சாரும்போது சத்தின் குணத்தைய பாசங்களைச் சார்ந்திருக்கும்போது அசத்தின் தன்மையை அடைவதால் சதசத்து எனப்படுகிறது.
இறைவன் பாசத்தால் பீடிக்கப்படாதவன். பாசத்திற்கு இறைவனி தன்மையைத் தெரிந்து கொள்ளும் வல்லமை ஒரு போது உண்டாவதில்லை. ஒளியின் முன் இருள் நிற்பதில்லை. ஒளி இருளும் எப்படி ஒன்றிற்கு ஒன்று எதிரோ அவ்வாறே இறைவனு மலங்கள் எனப்படும் பாசங்களுக்கு அப்பாற்பட்டவன். இத காரணமாய் இறைவனது எட்டுக் குணங்களில் இயல்பாகே பாசங்களில் நீங்குதல் ஒரு குணமாகச் சிறப்பிக்கப்பட்டுள்ள இதையே சத்து அசத்தைச் சாராது என்று உமாபதி சிவாச்சாரி குறிப்பிடுகின்றார்.
அசத்தாகிய சடப்பொருள் அறிவற்ற பொருள். ஆதலால் அ ஒன்றையும் ஒருபோதும் அறியாது. இதன் காரணமாய் அச அறியாது என்று பாசத்தின் தன்மையை விளக்குகின்றார் ஆசிரியர்.
அங்ஙன் இவை உற்ற சதசத்தாம் உயிர் - என்கின்ற வரி நோக்கினால், இதில் அங்ஙன்-என்று சொன்னமை அப் இருப்பதால் என்று பொருள். சத்தாக இறைவனும் அசத்த பாசங்களும் இங்ஙனம் இருக்கின்றன. இவை உற்ற- என்றமை, மேலே சொன்ன இறைவனையும் பாசத்தையும் சார்ந்து எனப் பொருட்படும்.
உயிரின் சிறப்பிலக்கணம் சார்ந்ததின் வண்ணமாய் நிற்ற என்று சைவ சித்தாந்தம் குறிப்பிடுகின்றது. இதற்கமைய உயிரானது இறைவனைச் சாரும்போது உயர் தன்மையையும், பாசத்தை சார்ந்திருக்கும்போது அசத்தாக இயங்குகிறது. இதனால் உயிர் சதசத்து எனப்படும் என்று ஆசிரி கூறுகின்றார்.
ஆலயங்களில் இறைவன், நந்தி, பலிபீடம் ஆகியவற்றின் அமை இக்குறளின் உண்மையைக் காட்டுகிறது. நந்தியாகிய இடபம், மயி எலி (மூஷிகம்), சிங்கம் என்பன எப்போதும் இறைவனை நோக்க வண்ணம் இருக்கிறன. இவ் வாகனங்கள் உயிராகிய பசு6ை குறிப்பன. உயிர் பதியாகிய ஆண்டவனை நாடி நின்றால் சாருகி ஆண்டவனின் தன்மையைப் பெறலாம் என்பதை நாம் காணல உயிருடன் சேர்ந்தே இருக்கும் பாசம் வாகனமாகிய நந்திய புறத்தே பலிபீடமாகக் காட்சி தருகின்றது.
உயிர் இறைவனைச் சார்ந்து அவனது வண்ணமாய் நின்றால் அருச் தொடர்ந்தே நிற்கும் பாசத்தின் பிணைப்பு வலுவிழந்திருக்கு சதசத்தாய் இருக்கும் உயிர் திருவருட்சக்தியை உணர்

ால் சிவானந்தத்தில் மூழ்கியிருக்கும் என்பதை ஆலயத்தில் இறைவன் ாத முன்னிலையில் நாம் நிற்கும் போது நினைவில் கொள்வோமாக,
து.
பும்,
பும்
ரின்
தும்
பும்
றும்
ଘର୍ଘ
ଲା ।
3.
III
அது
ந்து
ILց
Ch
நல்ல ஞானியர் தன்மை. . .
|ல் ஞானிகள் சில சமயம் குழந்தைகள் போலவும், சில
சமயம் பைத்தியங்கள் போலவும் இருப்பார்கள்
ந்த என்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. குழந்தைகள்
தங்களை எந்நேரமும் சூழ்ந்திருக்கும்படி செய்து
பும் கொள்வதன் மூலம் தாங்களும்,
bul குழந்தைத்தனத்தையும், பற்றற்ற தன்மையையும்
பெறுவதற்கு முயல்வார்கள். ஒரு புதிய துணியை தாய் குழந்தைக்குக் கொடுத்ததும் அது எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறது எண்று உங்களுக்குத்
|ÜLI தெரியும். நீங்கள் அதைக்கேட்டால் கூட , குழந்தை
ல், அந்தத் துணியை மறைத்துக் கொண்டு , "நான்
கொடுக்கமாட்டேண் , அம்மா எனக்குக்
கிய கொடுத்தது” என்று சொல்லும். நீங்கள் பிடுங்கிக்
வக் கொள்வீர்களோ என்று கெட்டியாகப் பிடித்துக்
ன்ற கொள்ளும். தண் உயிரையே அதன்மேல்
வைத்திருக்கும். ஆனால் கொஞ்சநேரம் பொறுத்து
D. உங்கள் கையில் ஒரு பொம்மை இருப்பதை
ஓர் பார்த்துவிட்டால் , அது பத்துக் காசுக்கு
மதிப்பில்லாததாக இருந்தாலும் , " இந்தத் துணியைக் கொடுக்கிறேன் பொம்மையைக் கொடு” என்று கேட்கும். கொஞ்சம் பொறுத்துப்
நில் பொம்மையைப் போட்டுவிட்டு பூவின் பின்னால்
கும் ஓடும். அது எதனோடும் தண்ணைப் பந்தப்படுத்திக்
கொள்வதில்லை. நல்ல ஞானியரின் தண்மையும் میسو
bg குழந்தையைப் போன்றதே.
- 13 -

Page 16
1993 GÓ 2.56 JT
I¿ി
ராசிகளில் முதலாவதான மேஷ ராசியில் பிறந்த நீங்கள் 93ஆம் ஆண்டை மந்தமாகவே தொடங்குகின்றீர்கள். 6ல் உள்ள குருவினாலும் 10ல் உள்ள சனியினாலும் பலவிதமான எதிர்ப்புக்களை சந்திக்க நேரிடும். எதிர்பாராத தடைகள் ஏற்படும். பித்ருகாரகன் சூரியன் நல்ல இடங்களில் சஞ்சரிப்பதால் தகப்பனார் வழி லாபங்களும். ஆதரவும் கிடைக்கும். ஆண்டின் பிற்பகுதியில் திடீர் அதிர்ஷ்ட பணவரவும். இரும்பு, எண்ணெய் தொழில் மூலம் வருமானமும் கிட்டும்.திருமணவிஷ யங்கள் gᎠᏧᏂᏧm lg வரும். குருவின் பார்வையினால் கஷ்டங்கள் நீங்கி சுகம் கிடைக்க வாய்ப்புண்டு 8ல் உள்ள ராகுவினால் பிரயாணத்தில் கஷ்ட கண்டங்களும் 2ல் உள்ள கேதுவினால் குடும்பத்தில் சிறு குழப்பங்களும் ஏற்படும்.
கல்வியில் மேண்மையும் விவகாரங்களில் வம்பி நேரிடலாம். கவனம் தினால் சங்கடங்கள் தீரு பிறகு நிம்மதியும் மன உத்தியோக உயர்வும் கடைசியில் விண் அ மனைவி உறவில் வாய்ப்புண்டு. பொறுமை நல்லது.
கடகம்
எப்போதும் காரியங்க திகழ்கின்ற நீங்கள்.
ded Goia), p GDLul தொடங்குகின்றீர்கள். எ நடந்தாலும் மனதின் மூல
ിമ്നlി
சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசியில் பிறந்த உல்லாசப்பிரியரான நீங்கள்
93ம் ஆண்டை சுறுசுறுப்பாக தொடங் கினாலும் உடல்நலபாதிப்பால் கஷ்டப் படுவீர்கள். அதே போல ஆண்டின்
முற்பகுதியில் கணவன் மனைவி உறவு கசப்படையும். இருப்பினும் குழந்தைகளால் ஆறுதல் உண்டு வம்ச விருத்தியும் ஏற்படலாம். தொழிற் துறையில் நல்ல முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். ஆண்டின் பிற்பகுதியில் வீடு, வாகன யோகமுண்டு செலவு அதிகமானாலுமீ"மனதில் சந்தோஷம் ஏற்படும். ஒப்பந்த (contract) விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. தடைப்பட்ட திருமணங்கள் மே, ஜூன் மாதங் களில் நடைபெறும்.
மிதுனம்
கலைகளில் ஆர்வம் கொண்ட மிதுன ராசிக்காரர்களாகிய நீங்கள் வருட ஆரம்பத்தில் நெருக்கடியை சந்திப்பீர்கள். வேலைகள் மலை போல் தோற்றமளிக்கும். புதிய வேலைகளால் சோர்வு உண்டாகும். நண்பர்களால் நல்ல சமயத்தில் உதவி கிடைக்கும். மனைவியின் ஒத்துழைப்பு உண்டு, வியாபாரங்களில் லாபம் உண்டு. ஆண்டின் பிற்பகுதியில் குருவின் பார்வையால் நல்ல மாற்றம் ஏற்படும். காரிய வெற்றியும்,
உண்டு கவலை வேண் செல்ல மாற்றம் உண்டு மனதிற்கு நிம்மதிய கிடைக்கும். திருமண 6 கைகூடும். சனிபகவான் தொல்லை தரத்தொ ஆண்டை பொறுத்தவ6 இராது. கல்வி விஷய உண்டு. தாய்தந்தையர்க உண்டு சகோதரர்களிட ஏற்படலாம். ஆணி உத்தியோக உயர்வும் உண்டு.
đìÎIDI)
எதற்கும் முன் நிற்கும் ராசி அதிபதி சூரிய மாதங்கள் பகையாக ராசிகளில் சஞ்சரிப்பத தடங்கல் உண்டு. இருக்கும். இருப்பினும் 6ல் உள்ள சனியாலு fJLTLDCu சந்தோஷம் மிகும். ச உண்டு. வீடு, ம நடைபெறும். ஆண்டி குடும்பத்தில் வீணான ச உண்டாகும். விருந்த தொல்லை உண்டு ஏப்
 

1 LIGADerð
உண்டாகும். விடு ல் மாட்டிக்கொள்ள தேவை. சனிமாற்றத் ம். நெடு நாட்களுக்கு அமைதியும் ஏற்படும். உண்டு வருடக் பவாதமும் கணவன், விரிசலும் ஏற்பட யைக் கடைப்பிடிப்பது
வில் கண் ணாக எப்போதும் மனதில் வராகவே 93ண்றைத் Iல்லாம் நல்லபடியாக லையில் கலக்கம்
டாம் மாதம் செல்லச் குரு மாற்றத்தினால் ம் சந்தோஷமும் விஷயங்கள் விரைவாக 8ம் இடத்திற்கு வந்து டங்கினாலும் இந்த ர அதிக சிரமங்கள் Iங்களில் மேன்மை ள் உடல்நல பாதிப்பு ம் கருத்து வேற்றுமை g6 கடைசியில்
புதுவிடு யோகமும்
நீங்கள் பிறந்த சிம்ம ண் முதல் இரண்டு இருந்து மகர, கும்ப ால் எந்தகாரியத்திலும் மறைமுக எதிர்ப்பும் 2ல் உள்ள குருவாலும் ம், எதிலும் வெற்றி மடக்கும். குடும்பத்தில் கோதரர்களால் உதவி னை, வாங்குதலும் ன் நடுப்பகுதியில் ச்சரவும் குழப்பங்களும் னெர்களால் வீணான பிரல் மாதத்தில்
14
எதிர்பாராது நடக்கும் பிரயாணத்தினால் லாபம் உண்டு. பிறர்வார்த்தை கேட்க வேண்டாம். எதையும் கலந்துபேசி முடிவெடுப்பது நல்லது.
கன்னி
இரட்டை GAILLb போடுவதில் கெட்டிக்காரரான நீங்கள் இப்பொழுது சிந்தனை செய்தே காலத்தைக் கழிக்கிறீர்கள். வருடம் பிறந்ததும் மெதுவாக தலை
துக்குவீர்கள். கல்வியில் மேண்மை உண்டு. குடும்பத்தில் குழப்பமிருந்தாலும் உங்களிடம் பணிந்தே போவார்கள். பேச்சிலேயே எல்லோ ரையும் அடக்கி வைக்கலாம். வயது வந்த குழந்தைகள் எதிர்த்துப் பேசுவார்கள். ஏப்பிரல், மே மாதங்களில் தம்பதிகளுக்குள் மிக ஒற்றுமை காணப்படும். பொழுது இனிமையாக போகும் ஆண்டின் பிற்பகுதியில் பெருமுயற்சிகள் வெற்றி தரும். குடும்பத்தில் அமைதி நிலவும். வம்ச விருத்தி ஏற்படும். திருமண விஷயங்கள் நம்பிக்கை தரும்.
பெண் பார்க்க நல்ல காலம். உங்கள் எதிரிகள் தோற்பார்கள். கல்வியில் சித்தி உண்டு வீடு
வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை.
துலாம்
எந்த இடத்திலும் நடுநிலையை
நிலைநிறுத்துகின்ற துலா ராசிக்காரரான உங்களுக்கு 93ம் ஆண்டு அலைச்சலோடு தான் பிறக்கின்றது. துரதேச வாசமும் அமையலாம். குடும்பத்தை விட்டு பிரிவும். தணவிரயமும் ஏற்படக்கூடும். கவனமாக இருப்பது நல்லது வருடப் பிற்பகுதியில் குடும்பத்தில் குழப்பம் உண்டாகலாம். படிப்பில் மேன்மை உண்டு. ஆயினும் எதிலும் வெறுப்பு ஏற்படும். பொதுநல சேவை ஈடுபாடு அதிகமாகும். சிலருக்கு விடு, வாகன யோகம் உண்டு. இல்வாழ்க்கையும் அமையும். ராசிநாதனான சுக்கிரண் ஜூன், ஜூலை மாதத்தில் நல்ல இடங்களில் சஞ்சரிப்பதால் புதிய வியாபாரங்கள் தொடங்க நல்ல காலமாகும்.
விடுச்சிகம்
கோபமும், குணமும் ஒருங்கே அமையப்பெற்ற விருச்சிக ராசிக்காரரான நீங்கள் 93ம் ஆண்டை சிறப்பாகவே தொடங்குவீர்கள். எங் கும் வெற்றி எதிலும் லாபம், குருவுமீ. சனியும் அள்ளியே கொடுப்பார்கள். ஜாதக நற்பலனும் கூடினால் நல்ல மேன்மை உண்டாகும்.

Page 17
ஜூனிற்கு பிறகுதான் வருகின்றது சோதனை பிரயாணத்தின் மூலம் பண விரயமும் உடல் நலக்குறைவும், மனக் கஷ்டமும் உண்டாகும். உத்தியோகத்தில் பிரச்சினை வரும். இந்த சமயத்தில் குடும்பத்தினர் ஆதரவும் நண்பர்கள் உதவியும் கிடைக்கும். புதிய தொழில் அனுபவமும் பயிற்சியும் பெறுவீர்கள். விளையாட்டுத்துறையில் ஈடுபாடு உண்டாகும். ஆண்டின் கடைசியில் நிரந்தர தொழில் உத்தியோகம் அமையும்.
தலு
பொறுமைக்குப் பேர்போன தனு ராசிக்காரரான உங்களுக்கு 93ம் ஆண்டு தொழில்துறை ஆண்டாகவே அமையும். நல்ல உத்தி யோகத்தையும். புதிய தொழில் தொடங்க நல்ல நேரத்தையும் எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.ஆண்டின் முற்பகுதியில் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கப் போகும் நீங்கள் பிற்பகுதியில் பரபரப்பாகி விடுவீர்கள். ஒரே ஓட்டம்தான் பொது நலச்சேவையிலும் முன் நிற்பீர்கள். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்கள் மிகச் சிறப்பாக அமையும். வீடு, வாகன யோகமும் உண்டு. முதலில் மந்தமாக இருக்கும். கல்விநிலை பிறகு சரியாகிவிடும். ராசிநாதன் வியாழன் துலாராசிக்கு வந்ததும் பொருளாதார நிலைமை சிறப்படையும். பழைய பாக்கிகள் தானாக வருமீ. அரசமரியாதையும் கெளரவமும் கிடைக்கும்.
I05)ID
எல்லோரையும் தன்வசப்படுத்தி காரியத்தை சாதிப்பதில் வல்லவரான மகர ராசிக்காரரான நீங்கள் ஆண்டுத் தொடக்கத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க இருக்கின்றீர்கள். தொழிலும் உத்தியோகத்திலும் போட்டியும் கூடவே பொறாமையும் இருக்கும். பிரயாணத்
தினால் மனக்கஷ்டமும், பணச்செலவும் ஏற்படும். வீடு, வாகன விவகாரங்களில் îJddfaD. உண்டாகும். ஆண்டின்
பிற்பகுதியில் குடும்பத்தில் சந்தோஷமும் அமைதியும் நிலவும். ராசி அதிபதியான சனிபகவான் 2ம் இடத்தில் சஞ்சரிப்பதால் வீட்டில் சுபகாரியங்கள் நடக்க வாய்ப்பு உண்டு திருமண காரியங்கள் முதலில்
தடைப்பட்டு பின்பு கைகூடும். ஆண்டுக்
கடைசியில் வீடு வாகன விஷயங்கள் நல்முடிவு ஏற்படும். கல்வியில் மேண்மை சிறப்பாக கூறும்படி இல்லை. கவனம் தேவை.
கும்பம்
மனதில் இருப்பதை வெளிக்காட்டிக் கொள்ளாத அழுத்தக்கார கும்பராசிக்காரரான
உங்களுக்கு 93ம் ஆண்டின் தொடக்க நிலை மோசமாகவே இருக்கும். அனாவசியப்
பிரச்சினைகளில் ப ஓய்வில்லாமல் அ கணவண் மனைவியி பிள்ளைகளிடத்தில் பிடிவாதத்தால் காரிய நடுப்பகுதியில் பர நடக்கும். திடீர் பொ கிடைக்கும். வெளி செய்தி வரும். வீடு கூடும். வீட்டில் சுப வாய்ப்பு உண்டு. பிரயாணம் ஏற்படும். ே வாய்ப்பு உண்டு நீண் நிறைவேறுb.
iBob
எந்த வம்பிலும் நடுநிலைவாதியான மீ 93 ஆர மீபத்தில் பீர்கள் பரபரப்பாக சோர்வு தெரியாது. வீடு காரியங்கள் துரிதமாக தீதிலும் மேன்மை உ பகுதியிலிருந்து 8ே அட்டமத்து வியாழ சனியாலும் தொல் பெரும் திட்டங்கை நல்லது, உத்திே குடும்பத்திலும் சிறு தலைதுக்கும். ஆ நிலையாக இருந்து
உதவுவார்கள். கன
நடந்து கொள்வது விவகாரங்களில் தலை
- 15 -
 

ாட்டிக் லையவேண்டி வரும். டையே மனத்தாங்கலும்
விரோதமும் வளரும். மீ கெடும். ஆண்டின் ரப்பான நிகழ்ச்சிகள் ருள் வரவும், கெளரவமும் நாட்டிலிருந்து சந்தோஷ
வாகன செளகர்யங்கள்
நிகழ்ச்சிகள் நடக்க ஆண்டின் கடைசியில் வறு தேசத்தில் குடியேற ட நாள் எதிர் பார்ப்புகள்
மாட்டிக் கொள்ளாத ன ராசிக்காரரான நீங்கள் சந்தோஷமாகவே இருப் வேலை இருந்தாலும் }, வாகன சம்பந்தப்பட்ட நடைபெறும். வியாபார உண்டு ஆண்டின் நடுப் சாதனை தொடங்கும். னாலும் 12க்கு வரும் லைகள் ஆரம்பமாகும். ளத் தள்ளிப்போடுவது IIII hals) கவனம். பிரச்சனைகள் பினும், பொருளாதாரம் வரும். நண்பர்கள் வண் மனைவி புரிந்து நல்லது பிறர் யிட வேண்டாம்.
கொள்வீர்கள், !
கலசத்தின் சைவநெறி விளக்கம்
பகுதியில் சைவ சமயம்பற்றிய
உங்களின் ஐயங்களுக்கு
சிவபூரீ நாகநாத சிவம் குடுக்கள்
அவர்கள் பதில் அளிக்க அன்புடன்
முன்வந்துள்ளார்கள். சித்திரை
இதடுக்குரிய கேள்விகளை
திகதிக்கு முன்னர்
08-03-l998
எமக்குக் கிடைக்கக் கூடியதாக
The Editor 3 Gaufere Road, Clayhall, llford, Essex, IG5 OG.
്മൃt) {)ർഖിത്ര റീതൃuില്ക്ക്
இராசிச் சக் கரம்

Page 18
ஒளவைக் கிழவி நம் கிழவி
அமுதின் இனிய சொற்கிழவி
செவ்வை நெறிகள் பற்பலவும்
தெரியக் காட்டும் பழங்கிழவி
கூழுக்காகக் கவிபாடும்
கூணக் கிழவி அவளுரையை
வாழும் வாழ்வில் ஒருநாளும்
மறவோம் மறவோம் மறவோம்.
இவ்வாறு கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை ஒளவையாரைப் பாடியுள்ளார். ஆத்திசூடி, கொண்றை வேந்தன், மூதுரை, நல்வழி போன்ற நூல்களையும் பல தனிப்பாடல்க ளையும் இலகுவான, அழகான தமிழில் ஒளவையார் தந்துள்ளார்.
குழந்தைகள் மனதில் நற் பண்புகளை வளர்க்க குழந்தை இலக்கியம் தந்த முதல் கவிஞர் ஒளவையாரே. இப்படிப் பட்ட உயர்ந்த படைப்புக்களில் சில சமீப காலத்தில் பிள்ளைகளுக்கேற்ப ஆங்கில மொழியில், இந்த நாட்டிலே வெளியிடப்பட்டுள்ளது. நீதி நூல்களில் அமைந்திருக்கும் கருத்துக்களை மாணவ சமுதாயத்திற்கு ஏற்ப இப்படி எழுதுவது நன்மையைத் தருகிறது. இதனிலும் பலன்தரத் தக்க வழி தமிழ்ப் பிள்ளைகள் தமிழிலேயே இவற்றை கற்றுத் தெரிந்துகெள்ள பெற்றோர்கள் முழுக் கவனம் எடுத்தலாகும். பிற நாட்டு நல்லறிஞர் நூல்களை தமிழில் எழுத வேண்டுமென பாரதி சொன்னான். அது எமது அறிவை நாம் இன்னும் வளர்க்க ஏதுவாகும் எனற உயர்ந்த நோக்கில். தமிழ் நூல்களை எமது பிள்ளைகள் தமிழ்மொழியில் படிக்கின்ற வாய்ப்பை நாம் வழங்கக் கடமைப்பட்டுள்ளோம். இப்படியான சந்தர்ப்பம் இருக்குமானால் தமிழ்க் குழந்தைகள் வருங்காலத்தில் தமிழ் நூல்களைப் பிற நாட்டுக் குழந்தைகள் பயன்பெறத்தக்கவாறு பிற மொழிகளில் எழுத இந் நாட்டிலே வாய்ப்புகள் இருக்கின்றன.
ஒளவைத் தமிழில் இருக்கின்ற நல்ல கருத்துக்களை நாம் மீண்டும் நினைவில் கொண்டால் எமது பிள்ளைகள் தமிழ்க் குழந்தை இலக்கியத்தை எவ்வளவு தூரம் இழந்து நிற்கின்றார்கள் என்பதை நாம்
 
 

உணரலாம். இவ்வுணர்வு எதிர்கால சந்ததியையிட்டு ஆக்கபூர்வமான எண்ணங்களை எமது மனத்தில் தோற்றுவிக்கும் எண்பது திண்ணம். வாக்குண்டாம் எண்கிண்ற மூதுரையிலிருந்து இரண்டு வெண்பாக்கள் இங்கு சிந்தனைக்குத் தரப்படுகின்றன.
பண்டு முளைப் தரிசியே யானாலும் விண்டுமி போனான் முளையாதாங் கொண்டபேர் ஆற்ற லுடையார்க்கும் ஆகா தளவின்றி ஏற்ற கடுமஞ் செயல்.
பண்டு முனைiபது அரிசியே ஆனாலுர் - உமியாகிய தோல் நீங்குவதற்கு முன் முளைப்பது அரிசியாக இருப்பினும்;
உமி விண்டு போனான் முனைWாது - உமியாகிய தோல் நீங்கிப்போனால் அவ்வரிசி முளைக்க வழியே இல்லை;
கொண்ட பேர் ஆற்றல் உடையார்க்குமி - தம்மில் நீங்காத பெரிய வல்லமை உடையவர்களுக்கும்;
அளவு இன்றி ஏற்ற கருமஞ் செயன் ஆகாது - மற்றொருவர் துணையின்றி எடுத்துக் கொண்ட தொழிலைச் செய்தல் முடியாது.
சில முயற்சிகள் வெற்றியடைய ஒருவர் அல்லது பலரது உதவிகள் தேவைப்பட்டிருக்கும். இவ்வுதவிகள் தோற்றத்திற்கு அரிசியின் உமியைப் போல முக்கியமில்லாதது போன்று தோன்றலாம். ஆனால் வளர்ந்து கதிராகப் பலன் தரப் போகும் ஒரு நெல்லானது அதனது உமி சற்றே பழுதானாலும் எப்படி விதைப்பதற்கு உதவாமல் போகின்றதோ அவ்வாறே அச் சிறு உதவிகளின்றி எடுத்த செயல் வெற்றியைத் தந்திருக்காது, தராது என நாம் உணரவேண்டும் என்பதை இப் பாடல் தெரிவிக்கின்றது.
மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல்சிறியர் என்றிடுக்க வேண்டா கடல்பெரிது மண்ணிடு மாகா ததனடுகே சிற்றுாறல்
உண்ணீரும் ஆகி விடும்
தாழை மடலி பெரிது - தாழம்பூ இதழ்களின் அளவினால் பெரிதாக இருக்கின்றது;
மகிழி நந்தர் இனிது - மகிழம் பூ இதழ்களின் அளவில் சிறிதாக இருந்தாலும் வாசனையால் இனிதாக இருக்கிறது;
கடலி பெரிது - கடல் பெரிதாக இருக்கிறது;

Page 19
மணிநீரும் ஆகாது - ஆயினும் உடல் அழுக்கைக் கழுவுதற்கும் உதவமா
அதனி அருகே சிற்றுாறன் உண்ணிருமி ஆகி விடுமீ- அக்கடலின் பக் நீராக இருக்கிறது;
உடலி சிறியர் என்றிருக்க வேண்டா - உருவத்தில் சிறியவர் என்று மதிய
ஆண் பெண் என்னும் பாகுபாட்டினாலோ, வயது வேறுபாட்டினாலோ, பொரு அல்லது வேறு எந்தப் புறக் காரணங்களையேனும் கொண்டு ஒரு மனிதனை சி சிறியதாக இருக்கும் மகிழம் பூவும், எல்லை இல்லாத கடலின் அருகே இ பயனுள்ளதாய் அமைகின்றது என்பதை நாம் எண்ணிச் செயற்படுவோமாக.
ஒளவை மீண்டும் வருவாள் - தமிழமுதம் தரு
உலகப்பொது மன இறைவன். அவன ஆதிபகவானாகிய இ இதர சடப்பொரு து வைக்க வள்ளுவர் "அகரம்”என்பது
இறைவனிடமிருந்து அனைத்தும் தோன்றின. எல்லாவற்றுக்கும் முதன்மைய
வள்ளுவப் பெருந்தகை கூறும் இறைவனின் உண்மைத் தண்மையை நா G5TsiaTQI).
முன்னொரு காலத்தில் உத்தாளகர் என்ற ஒரு முனிவருக்கு சுவேதகேது 6 முனிவனாக வேண்டும் என விரும்பினார். அதன் பொருட்டு சுவேதகே சுவேதகேதுவும் குருகுலக் கல்வியை முடித்துக் கொண்டு விடேகினாண் எண்பதைப் பரீட்சிக்கும் பொருட்டு ஒரு வினாவை வினவினார். அக்கேள் வளர்ந்து ஒரு விருட்சமாக இருப்பதற்கு அவ்வினாவுக்கு விடையளிக்க முடியாமல்
தானே மகனுக்கு குருவாக இருந்து |
ஆலம் விதையை எடுத்துப் பிரித்துக் காட்டி அதனுள் என்ன இருக்கின்ற காணாத சுவேதகேது எதுவுமே இல்லை என பதிலளித்தாண். அப்போது உ ஆலவிருட்சம் உருப்பெற்றது. இதுபோலவே கண்ணுக்குப் புலப்படாத அனைத்திற்கும் மூலகாரணம் என்றும் விளக்கமளித்தார்.
வள்ளுவர் கூறும் பொருள் யாதெனின் எமக்கு மேல் ஒருவன். அவன் தாண் அணுவும் அசையாது. அவ்வாறே “அ” என்ற ஒலியில்லாத எந்தப் பதழு இக்குறள் இறைவனின் பரிபூரணத்துவத்தைக் காட்டுகின்றது.
 
 

ாட்டாது;
கத்தில் இருக்கும் சிறிய மணற் குழியில் சுரக்கும் ஊற்று நீர் குடிக்கத்தக்க
ாமல் இருக்க வேண்டாம்.
}ள் மற்றும் வசதி வாயப்புகளால் அமையக் கூடிய வித்தியாசங்களினாலோ சிறியவரென்று எண்ண வேண்டாம்.
இருக்கும் சிறிய ஊற்றும் எவ்வாறு பெரிய தாழம்பூ, கடல் இவற்றை விட
JITGli . . . . . . அடுத்த இதழில்
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
மறயின் முதற் குறள் இது 1 உலக இயக்கத்திற்கு முதன்மைக் காரணமானவன் ரிண்றி நாமில்லை. நாம் நடமாடும் உலகமில்லை. எண்பது தெளிவாகின்றது. ஆண்டவனிடமிருந்து இவ்வுலகும் அதில் உலாவும் பலவேறு உயிர்களும் ட்களும் உருப்பெற்றன என்ற உண்மைத் தன்மையை எம்மவர்க்கு உணர காட்டும் உவமை தான் 'அகர முதல எழுத்தெல்லாம் " என்பது.
“அ” என்னும் முதல் தமிழ் உயிர் எழுத்து அந்த "அ" என்ற ஒலியிலிருந்து மற்றைய எழுத்துக்கள் தோன்றின. அதுபோலவே ாணவண் இறைவன்.
ாம் ஒரு ஆலமரத்தின் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு விளங்கிக்
என்ற ஒரு மகன் இருந்தான். முனிவர் தன் மகனும் தன்னைப் போலவே ஒரு துவை குருகுலக் கல்வி கற்றுவர அனுப்பி வைத்தார். சில காலத்தின் பின் . அப்போது தந்தை உத்தாளகர் மகனின் அறிவு எத்துணைத்தன்மையது வி யாதெனின், அதோ பார் அந்த ஆலமரத்தை , அது இவ்வளவு பெரிதாக காரணம் யாது? அப்போது சுவேதகேது தயங்கினான். அதனைக் கண்ட உத்தாளகர் உபதேசிக்கத் தொடங்கினார்.
து என்ற வினாவை மீண்டும் சுவேதகேதுவிடம் விடுத்தார். அதனுள் எதையும் த்தாளகர் எதுவுமே இல்லாத இந்த சிறிய ஆலம் வித்திலிருந்து இந்த பெரிய இறைவனிடமிருந்து அனைத்தும் தோன்றுகின்றன என்றும், இறைவனே
ஆண்டவன். அவனிடமிருந்தே அனைத்தும் தோண்றுகின்றன. அவனின்றி ஓர் ம் இல்லை எண்பதன் மூலம் இறைவன் மேண்மையை தெளிவாக்குகின்றார்.
- 17

Page 20
ஏற்கெனவே செய்துள்ள பாவங்களோடு மற்றெரு பாவத்தையும் செய்தவனாகிறான். ஆகவே, அவன் தன் வீட்டை விட்டுக் கோவிலுக்குப் புறப்படும் பொழுது இருந்ததைவிட இன்னும் இழிந்த நிலையில்தான் ஆலயத்தினின்றும் வீட்டிற்குத் திரும்புகின்றான். தீர்த்தமாடும் கங்கைபோன்ற புண்ணிய இடங்களில் அநேக தேவர்களும், மகிமையுள்ள மக்களும் உறைகின்றனர். சாதாரணமான ஓர் இடத்தில் புரிகின்ற பாவத்தை எளிதில் போக்கிக் கொள்ள முடியும். ஆனால் புண்ணியமான இடங்களில் புரியும் பாவத்தைப் போக்க வழியேதுமில்லை.
எல்லாவித வழிபாட்டிலும் அடிப்படையாய் இருப்பது, தூய உள்ளத்துடன் பிறருக்கு நன்மை செய்வதுதான். ஏழை எளிய மக்கள் நோயுற்ற மக்கள் இவர்களிலே சிவத்தைக் காண்பதுதான் உண்மையான சிவ வழிபாடு, விக்கிரங்களில் மட்டும் சிவனைக் காணமுயல்வது வழிபாட்டின் ஒரு பகுதியேயாகும். கோவிலில் மட்டும் சிவத்தைக் காண விழைகிறவனைக்காட்டிலும் சாதி, மதம், மற்ற யாதொரு பேதமுமின்றி ஓர் ஏழை மனிதனிடம் கடவுளைக் கண்டு உதவி புரிகின்றவன்தான் சிவபெருமானின் இன்னருளுக்குப் பாத்திரமாகின்றான்.
சிவபெருமானுக்குச் சேவை செய்ய விரும்புகின்றவன் அவனுடைய படைப்புக்களாகிய உலகத்தில் உள்ள எல்லா உயிர்களுக்கும் சேவை செய்ய முற்பட வேண்டும். சிவனடியார்களுக்குச் செய்யும் சேவைதான் சிறந்த சேவையென ஞான நூல்கள் கூறுகின்றன. ஆதாலால் இந்த உண்மையை நீங்கள் தெளிவாய் உணர வேண்டும்.
- 1:
 

தற்குத்தக !!!
27-01-1897 அன்று பூநீ சுவாமி விவேகானந்தர் இராமேசுவரம் கோவிலில் செய்த சொற்பொழிவின் தமிழாக்கம் அவரது ஞாபகார்த்தமாக இராமேசுவரம் குடகோபுர வாசலில் அவர் செற்பொழிவு செய்த இடத்திற் கல்லில் பதிக்கப்பட்டுள்ளது.
- d.
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய
திருவீரட்டானங்கள் i
சிவபெருமான் செய்தருளிய எட்டு வீரச் செயல்களும் அவற்றைக் குறிக்கும் திருத்தலங்களும்:
1. பிரமன் சிரம் கொய்தது திருக்கண் டியூர்.
2. அந்தகாசுரனைச் சங்கரித்தது திருக்கோவலுார்.
3. முப்புரம் எரித்தது திரு அதிகை.
4. தக்கன் வேள்வி தகர்த்தது திருப்பறியலுார்.
5. சலந்தராசுரனைச் சங்கரித்தது திருவிற்குடி.
6. LIITG)66)II 53) திருவழுவூர்.
7. மண்மதனை எரித்தது திருக்குறுக்கை
8. காலனை உதைத்தது திருக்கடவூர்.

Page 21
Prges---- =
r.'ರಾಣಾ
பிரம்மத்தை நம்முடைய புலன்களாலும் அறிவினாலும் தெரிந்து கொள்ள முயன்றோமானால், பிரம்மத்துக்குக் குணங்களைக் கற்பித்துக் கொள்ள ஆரம்பித்து விடுவோம். இதுவே சகுணபிரம்மம். அதாவது தன்னைப் போலவே ஆனால் தனக்கு மேலான ஒன்றாக பிரம்மத்தை உருவகித்துக் கொள்கின்றாண் மனிதன். எல்லாம் கடந்ததை உணரும் நிலை என்று இதை நாம் சொல்லு கின்றோம். இந்த உணர்வில் வாசனைகளின் தொடர்பு இருக்கிறது. தான் என்ற முனைப்பு இருக்கின்றது.
சகுணபிரம்மத்துக்கும் ஆத்மாவுக்கும் வேறுபாடுகள் இல்லை. இனி மாயை என்பது என்னவென்று பார்ப்போம். உண்மையில்லாததை உண்மையானது போல் தோண்றச் செய்வதே மாயை ஆகும். மாயையை கண்கட்டு வித்தையோடு ஒப்பிடலாம். ஆதி சங்கரர். இல்லாதது எதுவோ
 

அது மாயை எண்கின்றார். உலகம் ஒரு கனவு எண்கின்றது சங்கரர் சித்தாந்தம். கனவு என்ற தெளிவு யாருக்கு ஏற்படும்? கணவு காண்பவனுக்கா இல்லை, கனவிலிருந்து விழித்துக் கொண்டவனுக்கா? விழித்துக் கொண்டவனுக்குத் தான் நாம் கண்டது கனவு என்று தெரியும். நாமெல்லாம் விழித்துக் கொள்ளாதவர்கள். ஏனென்றால் நம்மைச்சுற்றியிருக்கும் உலகம் நமக்குப் பொய்யாக தெரியவில்லை. இன்னும் ஜீவாத்மா பரமாத்மாவுடன் கலக்கும் போது வரையறுக்கப்பட்ட மனம் வரையறையற்ற ஒன்றோடு ஒன்றி விடும் போது சுற்றி இருப்பது மாயை எண்று புரியும். அப்போதுதான் பிரம்மம் தான் உண்மை உலகம் வெறும் பொய் என்னும் பொருள் விளங்கும் .
மாயைக்கு இரண்டு விதமான சக்திகள் உண்டு உள்ளதை மறைப்பது, வேறொன்றை நமக்குக் காட்டுவது முதலாவதற்கு ஆவரண சக்தி என்றும் இரண்டாவதற்கு விஷேபசக்தி என்றும் பெயர். கயிறை பாம்பாக நினைக்கும்போது கயிறு எண்கிறதை மறைப்பது ஆவரண சக்தி. அது பாம்பு என்று இல்லாத ஒன்றாகக் காட்டுவது விஷேப சக்தி, மாயையின் வலிமையினால்தான் நம்மைச் சுற்றி நீக்கமற நிறைந்திருக்கிற பரம்பொருளை (பிரம்மத்தை) காணாமல் உலகத்தைப் பார்க்கிறோம்.
பிரம்ம ஞானிகளுக்கு உலகம் தெரியாது. பிரம்மம் தான் தெரியும். இதனைத்தாண் பாரதியார் தீக்குள் விரலை வைத்தால் நந்தாைாைஉண்ணைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா என்றார். ஸர்வம் பிரம்ம மயம் ஜகத் என்று தோண்றும்பகவத்கீதையில் விசுவ ரூப தரிசனத்தின் விளக்கமும் அதுவே. மாயை விலகினால் பரம் பொருளை நேருக்கு நேர் பார்க்க முடியும். மாயை எப்படி நம் கண்களை மறைக்கிறது ? மாயையிலிருந்து விடுபடு வது எப்படி ? காலம், இடம் எல்லாம் நாமாகக் கற்பித்துக்கொண்டவை. இவை மாயையின் அடிப்படை பரம்பொருள் இதையெல்லாம் கடந்தது ஆத்மா, மாயை இரண்டுமே அநாதியானவை. மாயை உண்மையுமல்ல. பொய்யுமல்ல.ஏனென்றால் ஞானம் வரும் போது மாயை இல்லாமலாகிவிடுகின்றது. மாயை உண்மையில் இருந்தும்
பொய்யில் இருந்தும் வேறுபட்டது . இதைத்தான் சமஸ்கிருதத்தில் லத் அஸத் விஷைன எண்பார்கள்.
ஆகவே தான் நம்மைச் சுற்றியிருக்கின்ற இந்த உலகம் இல்லாத ஒன்று. விலக்கவும் முடியவில்லை. மாயையின் விசேஷமே அதுதான் புலன் களைப் பொறுத்த மட்டில் இந்த உலகம் இருப்பது உண்மை. ஆனால் ஆத்மாவை பொறுத்த மட்டில் அது பொய். பிரமத்துக்கே இரண்டு சக்திகள் இருப்பதாக சொல்லுவார்கள் வேதாந்திகள். பராசக்தி, அபராசக்தி .
பராசக்தி எண்பது பிரம்மத்தின் தன் உணர்வு நிலை . இதை ஞானம் என்றும் சித்சக்தி எண்றும் சொல்லலாம். பிரம்மத்திண் -பராசக்தியின் ஒரு துளி தான் ஜீவண் அல்லது ஆத்மா. ஜீவண் எண்பது உடலில் இருந்து
வேறுபட்ட ஒன்று. பஞ்சபூத சேர்க்கையான இந்த உடல் எங்கே இருந்து வந்தது? பஞ்சபூத சேர்க்கையான இந்த உலகம் எப்படிப் படைக்க
ப்பட்டது? பிரம்மத்தின் இண்னொரு சக்தியான அபராசக்தியின் படைப்புத்தான் இந்த உலகம்.
பொருளையும் இயற்கையையும் படைத்தது அபராசக்தி இதை பிரகிருதி என்றும் பிரதான எண்றும் சொல்வார்கள். பிரகிருதி என்றால் இயற்கை. பிரதான எண்றால் அடிப்படை. இதை ஷேத்திர - அதாவது களம், இருப்பிடம் என்றும் சொல்வார்கள். இது உணர்வற்றது. அதாவது ஐடம்
- 19 -

Page 22
ஏனென்றால் பிரமத்தின் சித்சக்தி இதில் படவில்லை. ஆகவே இதற்கு ஞானம் இல்லை. அவித்தை (அஞ்ஞானம்) தான் இருக்கின்றது.
கண்ணுக்குத் தெரியாமல் இது உலகத்தை இயக்குகின்ற படியால் இதற்கு அவியக்த எண்றும் பெயர். இது அழியக்கூடியதும் மறுபடியும் தோன்றக் கூடியதும் ஆதலால் ஷர எண்றும் அழைக்கப்படும். இதற்கு உள்ளதை இல்லாததாகவும் இல்லாததை இருப்பதாகவும் காட்டக் கூடிய சக்தி இருப்பதால் இதை மாயை எண்பார்கள் . ஆனால் ஜீவன் பிரம்மத்தின் சித்சக்தியின் ஒரு துளி. சித்சக்தி பொருளினூடே நுழைந்து உயிரை உண்டாக்குகின்றது எண்கின்றது வேதம்.
பொருளில் நுழைந்த அது முனைப்புள்ள மனிதன் ஆகின்றது. பொருளில் இருந்து விடுபட்ட மனிதன் தாண் அந்தமில்லாத அது என்பதை உணர்கின்றான். ஆத்மாவைச் சுற்றி பஞ்சபூத சேர்க்கை படரும் போது ஜீவன் எண்கிறோம். அவன் தண்ணைச் சுற்றி இருக்கும் களத்தை அறிகிறான். எனவே அவனுக்கு ஷேத்திரக்ஞன் என்று பெயர். அவன் புருசண். புருசன் - பிரகிருதி, ஆத்மா-பொருள். இவற்றின் செயலில் தான் அனுபவம் பிறக்கிறது. பிரகிருதியின் படைப்பான உடலோடும், இந்திரியங்களோடும் தண்ணைத் தொடர்புபடுத்திக் கொண்டு அதுவே தாண் என்று ஆத்மா நினைக்கும் போது அனுபவம் உண்டாகின்றது. பிரகிருதிதாண் காரியங்களைச் செய்கின்றது. ஆத்மா எதிலும் ஈடுபடவில்லை என்பதை உணர்வது ஞானம் எண்கின்றது பகவத்கீதை.
பொருளோடு ஆத்மா சேரும் போது ஜீவன் தோன்றுகின்றது. ஆத்மாவை யும் பொருளையும் சேர்த்துக் காணும் போது சகுணபிரம்மம் என்ற கருத்து தெரிகின்றது. அதாவது அறிவின் மூலமாக பரப்பிரம்மத்தை காண
முயலும் நிலை .
பரப்பிரம்மத்துக்கு எந்த விதமான குணமும் இயல்பும் கிடையாது. ஆனால் சகுணபிரம்மத்தை நாம் வழிபடலாம், சேவை செய்யலாம், வணங்கலாம்.
இயல்பு, குணம். எதுவுமில்லாத பரப்பிரம்மத்தை சாதாரண மனிதனும் புரிந்து கொள்ளும்படியாக - சகுணபிரம்மமாக ஒளிவுபடுத்திய பெருமை அத்வைத சித்தாந்தத்திற்கு உண்டு.
தத்துவமஸி- அது நீயே எண்கின்ற உபநிடதக் கருத்து ஜீவனுக்கும் ஈஸ்வரனுக்கும் (சகுணபிரம்மத்துக்கும்) உள்ள தொடர்பை விளக்குகின்றது.
பிரம்ம உணர்வு அறியாமையினால் ஜீவனிடம் மறைக்கப்பட்டுள்ளது. அதே பிரம்ம உணர்வு ஈஸ்வரனில் மாயையினால் மறைக்கப்பட்டுள்ளது. இந்த அறியாமையும் மாயையும் மறைந்தால் ஜீவனும் ஈஸ்வரனும் பிரம்மமே எண்பது தெரியும். தானே பிரம்மம், எண்கிண்ற உணர்வு ஜீவனுக்கு வந்து விட்டால் பிரம்ம நிலைக்கு உயர்ந்துவிடும். இதை மெய்கண்டதேவர் சிவஞான போதத்தில் அழகாகச் சொல்லுகிறார்.
உணரும் அசத்தெனின் உணராது இண்மையின் இருதிறன் அல்லது சிவசத்தாம் எனஇரண்டு வகையின் இசைக்குமண் உலகே
(உயிரறிவினால் அறியப்படும் அசத்துப் பொருளெல்லாம் அழியும் தண்மைய .உயிரினாலே அறியப் படாத அரண் அழியாத சத்துப் பொருள் எண்பதாகும்)
வேதாந்த அறிவு ஒருவனுக்கு நானே ஆத்மா. நானே பிரம்மம், நான் உடலோ இந்திரியங்கனோ அல்ல என்ற உணர்வைக் கொடுக்கும். மூன்று அவஸ்த்தைகளும் கூட மனிதனுக்கு இதை உணர்த்துபவையே ஸ்துல, ஸPஷ்ம, காரண நிலைகள் ஜீவன், ஈஸ்வரன் இவற்றை இந்த நிலைகளில் இருந்து விடுவிக்க முடியும்.
அஞ்ஞானத்தில் இருந்து விடுபட்டு நானே பிரம்மம் எண்கின்ற உணர்வு ஜீவனுக்கு எப்போது ஏற்படுகிறதோ அப்போது ஒவ்வொரு உடம்பாம்
ஜீவன் புகுந்து வெளியேறும் நிலை மாறும். அதுவே மோட்ஷம், விடுதலை, மோட்ஷம் எங்கிருந்தோ வராது யாரோ கொடுக்கமாட்டார்கள். அஞ்ஞானத்தை உதறினால் மோட்ஷம் கிடைக்கும்.

பத்துப்பேர் ஆற்றைக் கடந்தார்கள்.அக்கரைக்குப் போய் எல்லோரும் வந்து விட்டோமோ என்று அறிந்து கொள்ள ஒருவன் எண்ணிப்பார்த்தான்.
ஒன்று.இரண்டு.ஒன்பது ஒருவனைக் காணோம். இன்னொருவண் எண்ணிப் பார்த்தான். ஒண்பது தான் ஒருவனைக் காணோம். அவ்வழியே வந்த ஒருவன் இவர்களுடைய பிரச்சனையைப் புரிந்து கொண்டான். இப்போது எண்ணு என்று சொன்னான். ஒன்று. இரண்டு. ஒன்பது. பத்தாவது நீதான். பத்துப் பேரும் இருக்கின்றீர்கள்! எண்றான். அந்த பத்தாவது ஆசாமி நான்தான் எண்று எண்ணிப் பார்த்த ஒருவனுக்கும் தோன்றவில்லை. இது தான் ஜீவனின் நிலை. பிரம்மம் நான்தான்"என்று தெரியவில்லை. அந்த புத்திசாலிகளுக்கு இதைத் தெரிவிக்க வேறு ஒரு ஆசாமி வந்தான். வேறு ஒருவர் - நமக்கு ஞானம் புகட்ட ஒருவர் - அதாவது குரு தேவை. நாம் யாரென்பதை நமக்கு தெரிவிக்க ஒரு குரு தேவை. நம்மை மூடியிருக்கிற மாயை இருளை அகற்ற அவரால் முடியும். இருள் அகன்றதும் நாமே பிரம்மம் என்ற ஞானம் நமக்கு உண்டாகிவிடும். பிரம்மத்தில் இருந்து தோன்றிய மாயை பிரம்மத்தையே மூடுகிறது. குருவின் ஒளியால்தான் அந்த பிரம்மத்தை உணர முடியும். தானே அந் பிரம்மம் எண்றும் உணர முடியும்.
முருகனின் கரங்கள் பன்னிரண்டு. தமிழில் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டு. ஆறுமுகப் பெருமானின் ஆறு திருமுகங்கள் ஒவ்வொன்றிலும் மூன்று கண்கள்.
மொத்தம் பதினெட்டு.
மெய் எழுத்து பதினெட்டு பதினெட்டுக் கண்களில் சூரியன் ஆறு சந்திரன் ஆறு, அக்கினி ஆறு. மெய் எழுத்திலும் வல்லினம் ஆறு, இடையினம் ஆறு கடையினம் ஆறு. முருகா என்பதில், மு-மெல்லினம் , ரு-இடையினம், காவல்லினம் . அதேபோல் த-மி-ழ் என்ற எழுத்துக்களில் ஒவ்வொன்றும் ஒவ்வோர் இனம். மேலும் எந்தக் கடவுளுக்கும் இல்லாத ஆயுதம் வேல் முருகனிடம் மட்டும் உண்டு. அதேபோல் எந்த ஒரு மொழியிலும் இல்லாத சிறப்பெழுத்து ஃ என்னும் ஆயுத எழுத்து தமிழில் தான் உண்டு. எனவே தான் தமிழ்க் கடவுள் முருகன் எண்கிறோம்.
தொகுத்தவர் : கேசி
2) -

Page 23
கடவுளைத் தேடி நாம் ஏன் போகவேண்டும்? கட6 பொருளுக்காக நாம் ஏன் தேடி அலையவேண்டும்?அப் விவரிக்க முடிவதில்லை.அப்படி ஒரு அனுபவம் தேவை கடவுளை நாம் தெரிந்து கொள்ளலாம்: தெரிந்து கொள்ளாமலும் இருக்கலாம். கடவுளைத் தெரிந்து கொண்டவண் அதற்கென்று தனியாகத் தேடி அலைவது இல்லை. அவர் தன்னிடமே இருப்பதை உணர்ந்து கொள்கிறான். கடவுளைத் தெரிந்து கொள்ளாதவன் அவர் இல்லை என்பதை ஆதாரங்களைத் தேடி அலைகிறான்.அதனால் மறைமுகமாக அவனுக்கும் அந்த உணர்வு வந்துவிடுகிறது. விளம்பரங்களில் ஒரு பொருளைப்பற்றி படிக்கிறோம். பிறகு அது தேவைப்படுவதாலோ, அல்லது அது சரியான முறையில் தயாரிக்கப்படவில்லை என்பதற்காகவோ வாங்கி அனுபவிக்கிறோம். ஆக இரு வழிகளில் அனுபவம் பூர்த்தி யாகிவிடுகிறது. கடவுள் உணர்வும் அப்படித்தான். உங்களுடைய மனஅமைதிக்காக இறைவனைத் தேடிக்கொண்டே இருப்பீர்கள். நாம் எதற்காக வலியின் வேதனை குறையவேண்டும் என்று மருந்துகளை நாடுகிறோம்? எதற்காகத் தூக்க மாத்திரைகளைப் போடுகிறோம்? வலி இல்லாத நிலையில் நமக்கு விவரிக்கும்படியான அனுபவம் எதுவும் கிட்டுவதில்லை. தூக்கநிலையில் நாம் எதையும் உணர்வதில்லை. இப்படி விவரிக்க முடியாத,உணர்வு மறைந்த நிலைதான் கடவுளைப் புரிந்து கொள்ளும் அனுபவம் அதைச்சொல்லி விவரிக்க முடியாது! அனுபவித்துத்தான் தெரிந்து கொள்ளவேண்டும். நன்றாகத் தூங்கி எழும்பியவனுக்கே அதன் அருமை தெரியும் . நல்ல உணவைச் சாப்பிட்டவனுக்கே ருசி புரியும். மனத்தெளிவையும் , அதனால் கிடைக்கும் அமைதியையும் புரிந்து கொண்டவனுக்கே அதன் பெருமை தெரியும். இவற்றை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு வாழ்பவர்களுக்கு, இதைச் சொல்லிப் புரிய வைக்க முடியாது.ஆண்டவனிடம் நம்மை விட்டுவிட்டு மனம் உருகி வேண்டினால் அவர் இனிய அனுபவங்களை நமக்குக் கொடுப்பார். அவை ஒவ்வொன்றிலும் இறைவனைக் காணும் மனப்பக்குவத்தை நமக்கு அளிப்பார். இதுவே இந்து மதம் காட்டும் மிகச் சிறந்த தத்துவமாகும். கடவுளை நேரில் பார்க்க முடியாததால் நம்பிக்கை இல்லை என்று சொல்லுபவர்களுக்கு நாம் என்ன பதில் சொல்ல முடியும்?
 

யம் தீர்க்கும் அருளுரைகள்
புளை யாரும் பார்த்ததில்லை.அப்படிப் பார்த்திராத ஒரு
படியே கடவுளை உணர்ந்தாலும் நாம் அதை அனுபவித்து
bIIGOIII?
கடவுள் நம்பிக்கை நம்முடைய வாழ்க்கைக்கு ஏன் அவசியம் என்று சொல்லுகிறோம்? குழந்தை தாயின் மடியில் அமைதியாகத் தூங்குகிறது. ஆனால் வயது வந்ததும் அதற்குத் தந்தையின் ஆதரவும் தேவைப்படுகிறது. அப்போது அது அப்பா எங்கே என்று கேட்கிறது ? தாய் இவர்தான் உன் அப்பா என்று அடையாளம் காட்டுகிறாள் . குழந்தை அதை நம்புகிறது. பிறகு அதன் வாழ்க்கைக்கே அந்த நம்பிக்கை ஆதாரமாக அமைந்து விடுகிறது. கத்தியைக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் நாவிதனைக்கண்டு நாம் பயப்படுவதில்லை அவன் நம்மை அழகுபடுத்துவதற்கே கத்தியை வைத்திருக்கிறான் என்று நம்புகிறோம். விலையுயர்ந்த துணிகளை வண்ணானிடம் கொடுக்கிறோம் . அவன் பத்திரமாக வெளுத்துத் திருப்பிக் கொண்டுவந்து கொடுப்பான் என்று நாம் நம்புகிறோம். காரில் அமர்ந்து டிரைவரிடம் போகவேண்டிய இடத்துக்குப் பத்திரமாகக் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுவாண் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. இந்த நம்பிக்கையை நாம் முதலில் நாமே உணர்ந்து அனுபவித்த பிறகுதான் ஏற்றுக்கொண்டோம் என்று
அவற்றை ஏற்றுக்கொள்கிறோம். நம்புகிறோம். அதைப்போல நமது மூதாதையரான பெரியோர்கள் தமது அனுபவத்தை , கடவுளை நேரே தரிசித்துப் பெற்ற சாஸ்திர நூல்களாக எழுதி வைத்து இருக்கிறார்கள். அந்த அனுபவத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டு நாமும் நம்பிக்கையுடன் அதைப்பின்பற்ற வேண்டும். உலகமும் உலக வாழ்க்கையும் நம்பிக்கையில்தான் ஓடுகிறது. எங்கேயோ நடப்பதை செய்தித்தாளில் படித்துத்தான் நம்புகிறோம். நேரில் சென்று பார்ப்பதில்லை. ஆண்டவனின் அருளை உணர்ந்தவர்கள் ஆண்டவன் இருப்பதை நம்புகிறார்கள். நேரில் பார்க்கவேண்டும் என்று சொல்லுவதில்லை. அந்த நம்பிக்கை இருப்பது நமது வாழ்க்கைக்கு உறுதிதரும். நம்முடைய காரியங்களை மேலும் சிறப்பாகச் செய்ய உதவும்.
- 21 -

Page 24
சிவபெருமானின் தோற்றமும்,அலங்காரமும், வழி பாடும் கடுமையானதாக இருக்கின்றன. நாராயணனின் தோற்றமும்,அலங்காரமும்,வழிபாடு முறைகளும் இனி GOLDLIII இருக்கின்றன.சிவபெருமானுக்கு ஏன் வசீகரமான உருவமோ,அமைப்போ இல்லை ? இறைவன் வடிவத்தில் சிவபெருமானுடைய வடிவம்தான் நம்முடைய குடும்ப சூழ்நிலையை ஒத்ததாக இருக்கிறது. சிவபெருமான் மனைவியுடன் அமர்ந்திருக்கின்றார். மடி மீது குழந்தை முருகனையும் பக்கத்தில் விநாயகரையும் வைத்துக் கொண்டிருக்கின்றார். மற்ற உருவங்களைப் போல் அல்லாமல் தேவியான உமையவளுக்குப் பாதி உடம்பையே கொடுத்து அர்த்த நாரீஸ்வரராகத் தோற்றம் அளிக்கின்றார். ஒரு பெண்ணின் உடலுடன் ஒட்டிய நிலையிலும் மனம் எப்படித் துறவற நிலையை மேற்கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த தத்துவத்தைக் காட்டும் விதமாகத் துறவியின் கோல தீதிலும் காட்சி அளிக்கிறார். வாழ்க்கையில் முக்கியமாகத் தேவைப்படுவது ஞானம். இதற்குரிய கோலத்தில் தட்சிணா மூர்த்தியாகக் காட்சி தருகிறார். எளிமையின் உருவமாக நமக்குத் தெரிவதற் காகப் பிட்சாடனராகத் தரிசனம் கொடுக்கிறார். அரசருக்கெல்லாம் 9360IIISO மகேசுவரர், ஆண்டியாகத் தோன்றி உலக இன்பங்கள் அநித்தியமானவை என்பதை உணர்த்துகிறார். சிவபெருமான் நமது வாழ்க்கையின் இனிமையான பகுதிகளை ஏற்றுக்கொள்பவர். கல்யாண சுந்தரராகத் திருமணக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். கண்ணுக்கினிய நடனத்தையும், காதுக்கினிய இசையையும் ஏற்பவராக அம்பலத்தில் ஆடுகிறார். மனைவியிடம் அன்பு கொண்டவராகவும், மனைவிக்கு உரிமைகளைத் தருபவராகவும். லெளகீக அடிப்படையிலும் தோன்றுகிறார். ஈசுவரன் நமக்கு எல்லா வரங்களையும் எளிதில் தருபவர்.பக்தர்களுக்கு உடனே உதவுபவர். புராணங்களில் வரும் வரம் தரும் வரலாறுகளும், திருவிளையாடலில் காணும் பல்வேறு நிகழ்ச்சிகளும் இதை வலியுறுத்துகின்றன. கர்மவினை என்று சொல்வதும் தலைவிதி என்று கூறிக்கொள்வதும் ஒன்றுதானா? விதிப்பயண் என்று எல்லாவற்றையும் விட்டு விடுவது வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு உதவுமா? நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் நமது பூர்வஜன்ம கர்மவினை அடிப்படையை அமைக்கிறது என்பது இந்துமதம் சுடறும் தத்துவம். இது சித்தாந்தபூர்வமான உண்மையும் ஆகும். இதன் படியே நமது முயற்சிகளும் முன்னேற்றமும் அமைகின்றன. கடந்த பிறவியில் செய்தது இந்தப் பிறவியின் செயல் களையும்.இந்தப் பிறவியில் செய்வது அடுத்த பிறவியில் நடப்பதையும் தீர்மானிக்கின்றன. இறப்போ,பிறப்போ இந்தச் சுழற்சியை மாற்றுவதில்லை. இதைப் புரிந்து கொண்டுவிட்டால் நம்முடைய இன்றைய வாழ்க்கைக்கு நாமே பொறுப்பாளி என்பதை உணர்ந்து கொள்வோம்.கடவுளையோ நமது பெற்றாரையோ நாம் வாழும் சமூகத்தையோ நிந்திக்கமாட்டோம். நாம் இன்று எப்படி இருக்கின்றோம் என்பதையும் நாம் அடுத்தபிறவியில் எப்படி இருக்கப் போகிறோம் என்பதையும் நாமே தீர்மானிக்கிறோம் என்று தெரிந்து கொள்ளவேண்டும். நமக்கு நல்ல எண்ணங்களும் - அதற்குரிய நல்ல

முயற்சிகளும் இருந்தால் நாம் நமது எதிர்காலத்தை நல்லவிதமாக உருவாக்கிக் கொள்ளலாம் என்ற சித்தாந்தம் ஆரோக் கியமானது.அனுபவ பூர்வமானது. அது தலைவிதிப்பயண் என்று சலிப்படைவதில்லை. நம்முடைய நோக்கமும், முயற்சியும் நல்லதாக இருந்தால் வெற்றி கிடைக்காவிட்டாலும் நாம் கலங்க வேண்டியதில்லை. கிடைக்காததைக் கர்மவினை அடிப்படையிலும் கிடைத்ததை மேலும் முன்னேறுவதற்குரிய அடிப்படையாகவும்
கொள்ளுவதற்கு அது உதவும். வெளியே கிடைப்பது எதுவானாலும்,உள்ளூர முன்னேற்றம் கிடைப்பதற்கு இது பெரிதும் உதவுகிறது.
இன்றைய யுகம் விஞ்ஞானபுகம்.அதில் உண்மை களின் வடிவத்தை ஆராய்ச்சி மூலம் கண்டு பிடிக்கிறார்கள். இது பகுத்தறிவுக்கு உட்பட்டது. மதமும் - அதைச் சார்ந்த நம்பிக்கைகளும் இப்படி அமைந்த வையல்ல.இன்றைய இளைஞர்கள் எதற்காக மதத்தில் பற்று வைக்க வேண்டும்.? மனிதனின் சரித்திரம் நான்கு தெளிவான கட்டங்களைத் தாண்டி வருகின்றது. இதில் நாலாவது முடிவான கட்டமே மதமும் வேதாந்தமும் நமக்குக் காட்டும் வழி. அறிவில் எல்லையான பூரண ஞானத்தை அடைந்தவர்கள் நமது மகரிஷிகள். அவர்கள் அனுபவபூர்வமாக உணர்ந்து அருளியவை. மனித குலத்துக்குத் தெளிவாகத் தெரிந்த விஞ்ஞான அறிவைவிடப் பலமடங்கு உயர் நீததாகும். இன்று உலகமெங்கும் தோன்றியுள்ள சங்கடங்களுக்கு, விஞ்ஞான அறிவு தீர்வுகாண முடியவில்லை. நாம் நமது சாஸ்திரங்களில் கூறியுள்ள உண்மைகளை உணர்ந்து , அவற்றை ஒட்டி வாழ்ந்திருந்தால் நமக்கு இந்தச் சங்கடம் ஏற்பட்டிராது. மனிதன் தோன்றிய ஆரம்பகாலம் முதற்கட்டமாகும். அப்போது அவனுக்கு விலங்கினங்களைப்போல அடிப்படை உணர்ச்சிகள் மட்டுமே இருந்தன. பசி-தூக்கம் இச்சை, இவை மட்டுமே இருந்தன.சூரியனின் ஒளி , மழை , இடி போன்றவை அவனுக்குப் புலப்பட்டனவே அன்றி அவற்றின் பின்னணியை அவன் ஆராயவில்லை. சுகங்களை அனுபவித்தான். துக்கங்களை சகித்துத் தவித்து வாழ்ந்தான். இதைக்காட்சி அனுபவக்கட்டம் (Age of Perception) என்று சொல்லுவார்கள். அடுத்தபடியாக மனிதன் தன்னைச் சுற்றிலும் இருந்த உலகத்தைக் கவனிக்க ஆரம்பித்தான்.எதையும் கவனித்து ஏன்? எதற்கு ? என்று யோசிக்கத் தொடங்கினான். உதாரணமாக -மழை பெய்வதின் காரணத்தையும் , சூரிய ஒளியின் சூட்டையும் ஆராய்ந்து பார்க்கத் தொடங்கினான். இயற்கையின் சக்தியை ஆராய்ந்து பார்க்கவும் ஆரம்பித்தான். இதை கவனித்து உணரும் கட்டம் (Age of Observation) 616ði Jim All Til 56. அடுத்தபடியாக வந்தது அவற்றை விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்து IIIiddlf (Age of Scientific Enquiry) bl Lth.96s) அவன் தன்னைச் சுற்றிலும் உள்ள உலகத்தின் சக்திகளை ஆராய்ந்து அவற்றின் அடிப்படையைக் கண்டுபிடிக்க ஆரம்பித்தான். ஒவ்வொன்றுக்கும் அவன் விஞ்ஞான பூர்வமான ஆதாரத்தையும் தேடத்தொடங்கினான். இதற்காக இயற்கையின் விதிகளையும் நிர்ணயிக்க ஆரம்பித்தான். ஆனால் இந்த விதிகளை வெளியுலக நடவடிக்கைகளுக்கு மட்டுமே அவனால் திட்டமிட்டுச் செய்ய
22 -

Page 25
முடிந்தது. இந்த அறிவும் முழுமையானதாக இல்லை. விஞ்ஞான உலகம் இன்றும் தொடர்ந்து ஆராய்ந்து கொண்டேயிருக்கிறது . இயற்கையின் பல அம்சங்கள் அவர்களுக்கு எட்டாதவையாகவே இருக்கின்றன. இதுவே நாம் இன்று சாதாரணமாக வாழ்ந்து வரும் மூன்றாவது கட்டம். பெளதீகம், இரசாயனம், கணிதம், தாவரநால் இப்படிப் பலவற்றையும் நுட்பமாக ஆராய்ந்த பின்னும் விஞ்ஞானிகளின் அறிவுக்கு எட்டாத எல்லை கடந்த இயற்கையின் நியதிகளைப் பார்க்கும்போது இவற்றுக்குப் பின்னணியாக இருக்கும் மூலவர் (Eterna1- LawGiver) யார் என்று ஆராயத் தோன்றுகின்றது. இப்படி ஒரு சுய சோதனையிலும் இயற்கையின் வெளிப்படையான விளைவுகளுக்கு அப்பாற்பட்ட ஆராய்ச்சியிலும் இறங்குவது நாலாவது கட்டம்.அதை மனிதனின் சுயசோதனைக்கட்டம் என்று சொல்ல வேண்டும். விஞ்ஞான ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக வரும் இதையே மதங்களை உருவாக்கி யவர்களும் தத்துவ நூல்களை எழுதியவர்களும் உணர்ந்தார்கள். ஆகவே மனித வளர்ச்சியில் இந்த உணர்வைப் புரிந்து கொள்ளும் கட்டமே மிகச் சிறந்தது.- உயர்ந்தது-முடிவானதாக அமைந்திருப்பது. இதுவே நம்மை எதிர்கால வளர்ச்சிக்கு அழைத்துச் செல்லக் கூடியது.
தியானம் என்பதை ஏன் தனிமையில் செய்ய வேண்டும்?தியானம் செய்யும் போது கண்களை மூடிக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன ? தனிமையும் கண்களை மூடிக்கொள்வதும் மட்டுமே அமைதியைத் தந்துவிட முடியுமா? எதையும் நாம் செய்வதற்கு அதற்குரிய ஒரு சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வதுதான் சரியானது. அலுவலகத்தில் நிறைய வேலை செய்துவிட்டு வீடு திரும்புகின்றோம். நிம்மதியாகப் படுத்து உறங்க நினைக்கின்றோம். அப்போது என்ன செய்கின்றோம்? வாசல் கதவை மூடுகின்றோம். அடுத்தபடி தாழ்ப்பாள் போடுகின்றோம். உள்ளே வந்த பின் படுக்ககை அறைக் கதவை மூடுகின்றோம். பின்பு விளக்கையும் அணைத்து இருட்டா க்குகின்றோம். பின் கடைசியாக கண்களை மூடித் தூங்குகின்றோம். இவ்வாறெல்லாம் செய்துவிட்டால் மட்டும் தூக்கம் வந்து விடாது. ஆனால் தூங்குவதற்குரிய சூழ்நிலை அமைவதற்கு இவ்வளவையும் நாம் செய்தாக வேண்டி இருக்கின்றது. தியானத்தைப் பொறுத்தவரையிலும் கூட நாம் இப்படித் தான் செய்தாக வேண்டி இருக்கின்றது. கொஞ்சம் கொஞ்சமாக வெளியே உள்ள சூழ்நிலைகளில் இருந்து நம்மை உள்ளே இழுத்துக் கொள்ள வேண்டும் . சூழ் நிலையின் உணர்வு நமது உடம்பின் உணர்வு இந்திரியங்களின் உணர்வு உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளும் நிலை- இப்படி படிப்படியாக ஒவ்வொன்றையும் மூடிக்கொண்டு போகவேண்டும். கடைசியாக நம்மிலேயே நாம் ஒன்றிப் போய்விடுகின்றோம். இவை எல்லாம் தியானத்திற்கு அனுசரனையாக இருப்பவை. இவை மட்டும் தியானத்தின் குறிக்கோளான அமைதியை அளித்துவிட முடியாது. ஆனால் இந்த முயற்சியில் நாம் அடைவதற்கு இவ்வளவையும் செய்தே ஆக வேண்டும்.

பிரணவமானது சிவபெருமான் எழுந்தருளியிடுக்கும் பீடமாயும் மற்றைத் தேவர்களுக்கெல்லாம் பிறப்பிடமாகவும் எல்லா மந்திரங்களுக்கும் வேதங்களுக்கும் முலமாகவும் உள்ளது. பிரணவம் முலமொழி எனவும் ஓங்காரம் எனவும், குடிலை எனவும்படும் . இதன் வடிவமே விநாயகக் கடவுள். விநாயகர் பிரணவ வடிவினராதலை பீவரது திருடுகம் உணர்த்தும். தேனையே யானை முகம் என்று பெரியோர் கூறுவர். லுற பிரணவத்தின் வரிவடிவை முதற்கண் ஃறிவது மரபாம். முதலாம் இரண்டாம் உறுப்புக்கள் நட்சத்திர வடிவு , தண்டவடிவுகளாக ைேமயப்பெற்றது பிரணவம் என்று காமிகாகமம் கூறுகிறது. ஆகையால் ஃவ்விரண்டு உறுப்பும் கலந்த வடிவம் ஊமை எடுத்தென்றும் முலமது என்றும், பிள்ளையார் சுழி என்றும் மெளநாஷரம் என்றும் சொல்லப்படும். 'உ' என்னும் எடுத்துநாத விந்துக்கிளன் வரி வடிவாம். இது ஓங்கார வாச்சியாராகிய விநாயகரது துதிக்கை போலாம். இது பற்றியே கணபதியை முதலில் வழிபடும் மரபை உலகம் கைக்கொண்டு சினுஷ்டித்து வடுகின்றது. இதனையே சிவபெருமான் அவருக்குச் அடுளிச் செய்தாரென்று உண்மை நூல்கள் கூறும். விநாயகரும் சிவடும் சக்தியும் முருகனும் பிரணவ சொடுபியாவார். சிவபெருமானை ஓங்காரப் பொருளென்று வேதம் கூறும் திருநாவுக்கரசு நாயனாரும், "ஓங்காரத்து உட்பொருணானை” என்று திருவாய் மலர்ந்துள்ளார். சிவத்தோடு ேேபதமாய் விளங்கும் விநாயகரது தாயை "உம” என்று வேதம் கூறி "உமா” சகாயம் என்று சிவத்தை துதிக்கும். . பீ-உ-ம என்னும் பிரணவும் உ-ம-3 எனத் திரிந்து விளங்கும் ஷண்டுகக் கடவுள் பிரணவ வடிவினராதலை அவரது ஆறு திருமுகங்களுள் ஒன்று உணர்த்தும்.
- 23

Page 26
எழுத்துலகில் இல்
வளர்ந்து வரும் எமது நாளைய சமுதாயத்திற்கு கலசம் இப் பகுதியை பெருமை வாசிக்கவும் கருவியாக இருத்தலே. கலசத்தின் வாயிலாக பெற்றோர் தமது பிள் தமது குழந்தைகளுக்கு எடுத்து விளக்கவும் தயங்கமாட்டார்களென நாம் எதிர்பா
இந் நாட்டில் நற் தெண்டாற்றி வரும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் தமது மாணவர்க பயனடைய வழிவகுக்குமாறு பணிவுடன் வேண்டுகின்றோம்.
கலசத்தில் வெளியிடப்படும் மாணவர்களின் படைப்புகளுக்குப் பரிசு வழங்கப்படு இல்லாதிருப்பிண் இவை ஆசிரியர்களின் குறிப்புடன் மாணவர்களுக்குத் திருப்பி அனுப்பிவைக்கப்படும் கட்டுரைகள் வெளியிடத் தகுந்ததாகக் கருதப்படும்.
எழுத்துலகில் இளைய நெஞ்சங்கள் பகுதியில் வெளியாகும் கட்டுரைக கருத்துப் பிழைகள் உண்டாவதை நாம் தவிர்க்க முயன்றாலும், மாணவர்களது : செயற்றிறன் இருக்கும்.
இவ்விதழில் சைவ முன்னேற்றச் சங்கம் ஞாயிறு தோறும் நடத்தும் நால்வர் எழுத்துலகில் இளைய நெஞ்சங்கள் பகுதியைப் பற்றிய உங்களது கருத்துக்களை
இப்படிக்கு
ஆசிரியர்கள்.
முருகேசு யோகலி
பரிசுத்
காலம் சென்ற, யாழ்ப்பாணம் கரணவாய் வடக்கைச் சேர்ந்த
அவர்களது அன்புத் துணைவியார் திருமதி. புவனநாயகி யோ
பகுதியில் இடம் பெறுகின்ற கட்டுரைகளுக்கு பரிசளித்து, தமது
முன்வந்துள்ளார்கள்.
இவ்விதழில் முடிவுத் திகதிவரை எமக்கு அனுப்பி வைக்கப்பட்
 

0ளய நெஞ்சங்கள்
புடன் வழங்குகின்றது. எமது நோக்கம் மாணவர்களைத் தமிழில் எழுதவும். ளைகள் தமிழில் தேர்ச்சி பெறவும், இதில் வெளியாகும் கதை, கட்டுரைகளை Iர்க்கின்றோம்.
ளை எழுத்துலகில் இளைய நெஞ்சங்கள் பகுதியில் பங்கேற்று
ம். மாணவர்கள் எழுதி அனுப்பும் கட்டுரைகள் வெளியிடத்தக்கதாக
அனுப்பி வைக்கப்படும். திருத்தங்கள் செய்யப்பட்டு மீண்டும் எமக்கு
ளின் எழுத்துப் பிழைகளுக்கு ஆசிரியர்கள் பொறுப்புடையவர்கள். ஆனால், தமிழ் பயிலும் எண்ணத்தை முதன்மையாகக் கருத்தில் கொண்டே எமது
தமிழ்க் கலை நிலைய மாணவர்களது சீரிய முயற்சிகள் வெளியாகின்றன.
எங்களுக்குத் தெரியப்படுத்தவும்.
ங்கம் ஞாபகார்த்த திட்டம்
முருகேசு யோகலிங்கம், சமாதான நீதவான் (கிளிநொச்சி)
கலிங்கம் அவர்கள், எழுத்துலகில் இளைய நெஞ்சங்கள்
அன்புக் கணவரின் சமயத் தொண்டினைத் தொடர்ந்து வளர்க்க
ஐந்து கட்டுரைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
24

Page 27
கம்சன் ஓர் அரசன். அவர் தங்கையின் பெயர் தேவகி தேவகியின் கணவரின் பிறக்கக் கூடாது என்று கருதினான். தேவகியையும் வாசுதேவரையும் சிறையி
தேவகிக்கு சிறையில் கிருஷ்ணன் பிறந்தான். கம்சன் கொண்று விடுவாண் வாசுதேவரிடம் கொடுத்தார். வாசுதேவர் கூடையில் குழந்தையை வைத்து த பெய்து கொண்டிருந்தது. குழந்தை நனையாமல் இருக்க ஒர் ஐந்து தலைப் பா
வாசுதேவர் கோகுலத்திற்கு வந்தார். அங்கு ஆயர் தலைவன் மனைவி கிருஷ்ணனை கோகுலத்தில் விட்டு யசோதையின் பெண் குழந்தையை எடுத் முயன்றான். அக் குழந்தை மறைந்தது.
கிருஷ்ணன் வாழ்ந்து கடவுளாக மாறினார்.
செல்வன். பவன் இராமநாதன். வயது; 13 நால்வர் தமிழ்க் கலை நிலைய மாணவர்
- 25,
 
 

பெயர் வாசுதேவர். கம்சன் தனது தங்கை தேவகிக்கு ஆண் குழந்தை ல் அடைத்தான்.
என்று பயந்து கோகுலத்திற்குப் போக விரும்பினர். தேவகி குழந்தையை லையில் சுமந்தார். சிறைக் கதவு தானாகத் திறந்தது. வெளியே மழை ம்பு குடையாக வந்தது.
யசோதைக்குப் பெண் குழந்தை ஒன்று பிறந்திருந்தது. வாசுதேவர் துக் கொண்டு திரும்பினார். கம்சன் பெண் குழந்தையைக் கொல்ல
சித்திரம் மயூரன் ஆனந்ததியாகர் வயது:8 நால்வர் தமிழ்க் கலை நிலைய மாணவர்

Page 28
6165 [16)) QII
எனக்கு அப்பொழுது இரண்டு அல்லது மூன்று வயது இருக்கும். நாங்க வெய்யில் எறித்தது. நாங்கள் வீட்டுக்குப் போனோம். ஒரு நாள் எண் தங்கையும் நானும் படுக் எனது தங்கை சுகண்யா தொட்டிலுக்குள் படுத்திருந்தாள். அவள் கையில் கையில் இருந்த போத்தலைப் பிடுங்கி அவளுக்கு தலையைக் கழுவ வே அவள் தலையில் ஊற்றித் தேய்த்தேன். அவள் ஓ என்று அழுதாள். அம் சம்பவத்தை இப்பொழுது நினைத்தாலும் சிரிப்புத்தான் வருகின்றது.
சோபனா நல்லையா. வயது : 14 நால்வர் தமிழ்க் கலை நிலைய மாணவி
്ത
என்னுடைய வீணையின் பெயர் ஸரஸ்வதி வீணை. வினைகள் தஞ்சா உண்டு. இக் குடத்தில் 23 சுருதிகள் உண்டு. வீணை இந்தியாவின் தே
வீணைகளில் பலவிதமான வீணைகள் இருக்கின்றன. உருத்ர வினை வ வீணைக்கு மூன்று குடங்கள் உண்டு. அதன் பெயர் கிண்ணரி வீணை. கி
1. லக்வி- சிறியது. 2. மத்யம்- நடு அளவு. 3. ப்ருஹதி-பெரியது.
சரஸ்வதியின் கையில் இருப்பதும் வீணை, வீணையினால் உண்ட இசையைக் கேட்க மிகவும் விருப்பம். எனக்கு வீணை வாசிக்க விருப்பு
3id56i III bö6)4)IIT ରାlly)' : 13 நால்வர் தமிழ்க் கலை நிலைய மாணவி

நினைவுகள்
ள் இலண்டனிலிருந்து கொழும்புக்குப் பிளேனில் போனோம். அங்கு நல்ல
கை அறையில் இருந்தோம். நாங்கள் நித்திரை கொள்ளும் நேரம் அது.
பால்ப் போத்தல் வைத்திருந்தாள். அதற்குள் தோடம்பழச் சாறு இருந்தது. ண்டும் போல் இருந்தது. போத்தலைப் பிடுங்கி தோடம்பழச்சாற்றை மா ஓடி வந்து போத்தலைப் பிடுங்கி எடுத்தா. ஓர் அடியும் தந்தா. இந்த
) 6T
வூரில் இருந்து வரும். அதற்கு நாலு கம்பிகளும், ஒரு பெரிய குடமும் சிய வாத்தியம். அது ஒரு நரம்பு வாத்தியம்
ட இந்தியாவிலிருந்து வரும். அதற்கு இரண்டு குடங்கள் உண்டு மற்றொரு ண்ணரி வாத்தியம் மூண்று வகைப்படும்
ாகும் நாதம் மிகவும் இனிமையானது. எனக்கு சிட்டிபாபுவின் விணை ம். நான் இப்பொழுது ஜம்பை தாள வர்ணம் வாசிக்கப் பழகுகிறேன்.
- 26 -

Page 29
அன்புள்ள கடவுளுக்கு,
எனது வணக்கங்கள். உங்கள் அருளால் நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்கி
உலகத்தில் பல துன்பங்கள் நடக்கின்றன. நாடுகளில் நடக்கும் சண்ை நடைபெறுவதை நீங்கள் தெரிந்திருந்தும் ஏன் நிறுத்தவில்லை என்று என அறியாத அப்பாவி மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.
பல குழந்தைகள் சாப்பிட உணவு இல்லாமல் பசியால் சாகிறார்கள். போல இன்னும் பல துன்பங்கள் உலகத்தில் நடக்கின்றன.
உலகத்தின் பல பகுதிகளில் நீண்ட காலமாய் மழை பெய்யவில்லை எல்லாம் பல நாடுகளில் நடக்கின்றது என்று எனக்குத் தெரியவில்லை எங்களைப் போல் உலகத்தில் உள்ள எல்லாப் பிள்ளைகளும் சந்ே கேட்டுக்கொள்கிறேன்.
செல்வன். சரவணன் ஆனந்ததியாகர் வயது:11 நால்வர் தமிழ்க் கலை நிலைய மாணவர்
பெற்றோர்களுக்
கலசம் மாணவர்களுக்குத் தமிழ் அறிவை வளர்க்கும் ச
தமிழ்ப்பள்ளிகளின் தமிழ் வளர்ச்சிக்கு ஒரு தூண்டுகோ
இம் முக்கிய காரணங்களின் நிமித்தம் மாணவர்களுக்கு
உங்களது ஒத்துழைப்புடனும், தமிழ்ப்பள்ளிகளின் ஊக்க சிந்தனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கின்றோ
கலசத்தின் வெளியீடுகளில் மாணவர்கள் பங்கெடுக்க 6 ஊக்கம் கொடுத்து உதவி செய்வீர்களென நாம் எதிர்பார்
இவ்வழியால் எதிர்காலச் சமுதாயம் முன்னேறி, பெரு உருவாக்கிக் கொடுத்தவர்களாவோம்.
நன்றி இணை ஆசிரியர்கள்
 

க்கு ஒரு கடிதம்)
ன்றோம். .
டைகளினால் மக்கள் வீணாக இறக்கிறார்கள். இப்படிப்பட்ட கொடுமைகள் Iக்குப் புரியவில்லை. சில பொல்லாதவர்களின் செயல்களினால் ஒரு பாவமும்
இவர்களது நிலமையைப் பார்க்க மிகவும் கவலையாய் இருக்கிறது. இது
. இதனால் பல மக்கள் உணவின்றிக் கஷ்டப்படுகிறார்கள். ஏன் இப்படி 0. இவற்றை எல்லாம் நீங்கள் பார்த்தும் ஒன்றும் செய்யாது இருக்கிறீர்கள். தாஷமாக வாழ நீங்கள் வழி செய்யவேண்டும் என்று இக்கடித மூலம்
உங்களை வழிபடும்
சரவணன்
கு ஒரு வேண்டுகோள்.
க்தி மிக்க ஒரு கருவி!
i
ஆங்கிலத்தில் எதையும் எழுத கலசம் முன்வரவில்லை.
6த்துடனும் கலசத்தில் வெளியாகும் கட்டுரைகள் மாணவர்களின் th.
பெற்றோர்களாகிய நீங்களும், தமிழ்ப் பள்ளிக்கூட ஆசிரியர்களும் க்கின்றோம்.
மைமிக்க தமிழ் நூல்களைக் கற்றுணரும் வாய்பினை நாம்
- 27

Page 30
பரத நாட்
பரதநாட்டியம் ஆதிகாலத்தில் தமிழ் நாட்டில் ஆரம்பித்த நடனக் கை நடனத்தை பரதம் என்றும் சொல்லுவதால் பரதநாட்டியம் என்று பெயர் ( எழுதப்பட்டது. இதனால் இந்த நடனத்திற்கு பரதநாட்டியம் என்ற பெய மூன்றையும், சுருதியையும் ப-ர-த-ம் என்ற எழுத்துக்கள் குறிக்கும்.
இந்த நடனத்தின் முக்கிய அம்சம் அரைமண்டி என்று கூறப்படும். இர் அங்கங்களாலும் கைகளாலும் உணர்ச்சிகளையும், செயல்களையும், ! பிடித்துக் காட்டுவதை முத்திரை என்று செல்லுவர்.
பரத நாட்டியத்திற்கு வாய்ப்பாட்டு மிகவும் முக்கியமானது நட்டுவாங் ஆடைகள் பல வர்ணங்களில் இருக்கும். பண்டைக் காலத்தில் அரச ஜதீஸ்வரம், சப்தம், வர்ணம், பதம், ஜவாளி தில்லானா, விருத்தம், மங்கள
இந்த நடன அமைப்புகளைத் தஞ்சாவூர் சிவன் கோயிலில் காணலாம். இ
செல்வி, அனுஷியா நிர்மலானந்தன். வயது:10 நால்வர் தமிழ்க் கலை நிலைய மாணவி
"الكويتي
தீட்டிப்
67
 

Ip UILD
லயாகும். முற்காலத்தில் இதைக் கூத்து என்றும் அழைத்தனர். இந்த பற்றது. இதைப் பற்றி எழுதப்பட்ட முதல் நூல் பரதர் என்னும் ரிஷியால் ஏற்பட்டிருக்கலாம் என்று சிலர் கூறுவர். பாவம், ராகம், தாளம் என்ற
த நடனத்தின் அசைவுகள் அடவுகள் என்று சொல்லப்படும். உடலின் பொருள்களையும் காட்டலாம். கைவிரல்களைப் பல வித நிலைகளில்
கமும் மிருதங்கமும் முக்கியமானவை. இந்த நடனத்திற்கு அணியும் ர்கள் முன்னால் இது ஆடப்பட்டது. இப்போது இதை அலரிப்பு, ம் என்ற பல வகைகளில் ஆடுவார்கள்.
இந்தக் கோயில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.

Page 31
சைவ முன்னேற
SMS(UK) 46 Hanover Ga
தை மாதம் 1ம் நாள் (14-01- 1993)
மாசி மாதம் BibbIsst (19 – o2–1993)
பங்குனி மாதம் 7ம் நாள் (20-03-1993)
சித்திரை மாதம் lib TG (14-o4–1993)
சித்திரை மாதம் 25ம் நாள் (o8-05-1993)
வைகாசி மாதம் 30ம் நாள் (12-06-1993)
ஆனி மாதம் 12b (bsTai (26 — o6 - 1993)
ஆனி மாதம் 26th [bITGi (lo — o7 — 1993)
ஆடி மாதம் 23ம் நாள் (07-08-1993)
ஆவணி மாதம் 26ம் நாள் (11-09-1993)
ஐப்பசி மாதம் 7ம் நாள் (23-10-1993)
ஐப்பசி மாதம் 29ம் நாள் (14-11-1993)
கார்த்திகை மாதம் 26ம் நாள் (11-12-1993)
16ம் ஆண்டு ஆட்சி
தலைவர் திடு. கு. சிதம்பரப்பிள்ளை கெளரவ பொதுச் செயலாளர் திடு. ச. ஆனந்ததியாகர் கெளரவ பொடுளாளர் திரு. வ. இ. இராமநாதன் துணைத் தலைவர் திடு. இ. பத்மநாதன் பாடசாலைச் செயலாளர் திடு. து. கனகசபை சமயச் செயலாளர் திரு. டு. நற்குணதபாளன் கட்டடத்திட்டச் செயலாளர் திடு. வி. நாகரத்தினம் அங்கத்துவ சமுக சேவைச் செயலாளர் திரு. இ. முடுகதாசன் துணைப் பொருளாளர் திரு. சிவ. அசோகன் காப்பாளர் திடு. வி. செல்லத்துரை obVůLIT6Tři Dr. O6. LITQ6odbylb
 

bpd JlblölÓ (U.K.)
rdens, Hainault, Ilford, Essex , IG6 2RA
ர்டு நிகழ்ச்சிகள்
வியாழக்கிழமை, தைப் பொங்கல் வழிபாடு.
வெள்ளிக்கிழமை, மகா சிவராத்திரி விரத வழிபாடு.
சனிக்கிழமை, காரைக்கால் அம்மையார்
குருபூசையை முன்னிட்டு வழிபாடு.
புதன்கிழமை, பூறிமுக ஆண்டுப் பிறப்பு வழிபாடு.
சனிக்கிழமை, திருநாவுக்கரசு நாயனார்
குருபூசையை முண்ணிட்டு வழிபாடு
சனிக்கிழமை, திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
குருபூசையை முன்னிட்டு வழிபாடு.
சனிக்கிழமை, நால்வர் தமிழ்க் கலை நிலையம்
வழங்கும் கலை விழா.
சனிக்கிழமை, மாணிக்கவாசக சுவாமிகள்
குருபூசையை முன்னிட்டு வழிபாடு.
சனிக்கிழமை, சுந்தரமூர்த்தி சுவாமிகள்
குருபூசையை முன்னிட்டு வழிபாடு.
சனிக்கிழமை, சங்கத்தின் 16ம் ஆண்டு நிறைவு விழா.
சனிக்கிழமை, கலைமகள் பூசை
ஞாயிற்றுக்கிழமை, கந்த சஷ்டி விரத 1ம் நாள் பூசை.
சனிக்கிழமை, பிள்ளையார் விரத 13ம் நாள் வழிபாடு.
ந்துடு
செயற்குழு அங்கத்தவர்கள்: திரு. க. ஜெகதீஸ்வரர் திருமதி. பிரபாலினி இலிங்கானந்தன் திடு. இ. லோகநாதர் திருமதி. மசோதா நல்லையா திடு. க. சிவகுருநாதபிள்ளை Dr. சி. சோமசேகரம் திடு. மா. சுரேஷ் திருமதி. சந்திரவதனா தர்மராஜா திருமதி. பிரேமரானி உத்தமகுணன் திருமதி. செந்தில்செல்வி வாமனானந்தன் திடுமதி. ஞானமணி போகராஜா

Page 32
கலசத்தின் சைவப் பணி
பண்ணிடைத் தமிழ்ஒப்பாய் கண்ணிடை மணியொப்பா மண்ணிடை அடியார்கள் விண்ணிடைக் குருகாவூர்
சுந்தரர் சீர்காழியிலிருந்து வரும் வழியில் அவரின் களைப் கொடுத்து மறைந்தடுளினார். உண்மை உணர்ந்த சுந்தரம்
We have divided a day as morning, nic Arrhrmaifar (ala Jä8|á 3. Ďa 194||O Saus beautif
"Like morning sky his Like roor, white ash Like evening sky his Like dark night his in
காலையே போன்றிலங்கு மே வேலையே போன்றியங்கும் ெ
தாங்குடுவே போலுஞ் சடைக் வீங்கிருளே போது மிடறு
FINANCIAL MANAGENENT SYSTEMS CONS
3 The Orchard, Te Wickford, Te Essex SS12 OHB, U.K. Fa
சைவமுன்னேற்றச் சங்கத்தினரால் வடிவமைக் கப்பட்டு (Designing
அச் சுப்பதிப்பு ஐரோப்பா வில் தரமான ெ
 
 
 
 

க்கு எமது வாழ்த்துக்கள்
பழத்தினிற் சுவையொப்பாய் ம் கடுஇருட் சுடரொப்பாய்
மனத்திடர் வாராமே
வெள்ளடை நீயண்றே
பகற்ற சிவபெருமான் பந்தலமைத்து தண்ணீரும் பொதிாறும் த்தி சுவாமிகள் பாடியருளிய திருப்பதிகத்தின் ஒரு பாடல்.
dóLIGIL DIDilibió 6J6).
pon, evening and night. But Karaikikal uttu that God is seen at at times of a day.
podi is red; On his bodկ Spread; lead hair is red; 2ck appeared"
(6 bilagiai AGOŠKrig — DIT GCOGADÓki கற்றை மற்றவற்கு
ULTANTS LTD.
:081-591-3.583
x:O268-561805
%"ടങ്ങട്ട
அச் மைக் கப்பட்டு (Typesetting) 17013 அனறு வெளியிடப்பட்டது
லவம் அ கம் இலண் டன் 01 *** ■