கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலசம் 1994.04-06

Page 1
S 低) 俞 前 剑 (6|- 团 历 西 射 额
 

முதல் ஆத்மீகக் காலன்றது

Page 2
எத்தனையோ
லிங்களது ஆத்மீ
ஆசிரியர் கு
ஆசிரியர் முநற்குணதயாளன் துணை ஆசிரியர் க. ஜெகதீஸ்வரன் நிர்வாகத் தொடர்பு வ.இ. இராமநாதன் பொருளாதாரத் தொடர்பு சிவ. அசோகன் பொதுமக்கள் தொடர்பு மாணிக்கம் சுரேஷ் விற்பனை விநியோகத் தொடர்பு
இ.முருகதாசன் மகளிர் பகுதித் தொடர்பு திருமதி உமா ஜெயக்குமார்
வெளியீடு சைவ முன்னேற்றச் சங்கம் அச்சமைப்பும் வடிவமைப்பும் சைவ முன்னேற்றச் சங்கப் பதிப்பகம் அச்சுப்பதிவு செல்வம் அச்சகம் தொடர்பு முகவரி
KALASAM 3, GAY FERE ROAD, CLAYHALL ILFORD, ESSEX IG50.JG
ENGLAND TEL: 08.1551 4292 எமது வெளிநாட்டுத் தொடர்பாளர்கள்
திரு ரஞ்சன் செல்லையா
4/214 Beach Road Mordialloc-3195 Victoria Australia Tel: (03)5875047 திரு.சு.விபுலானந்தன்
Meinertz Str–44 4400 Muenster Germany Tel:(49) 251 215356 திரு.க. பாலசுப்பிரமணியம் 131, Sangamitha Mawatha Kotahema Colombo 13 Sri Lanka Tel:(941) 333411
 
 

ør ó-Yafør
ண் சிசால்லும் எழுத்துக்கள்
அத்தனைக்கும் 5, 6 AS5a5(556
up6Ln 6 JIT55. Iets DLO
92 م.م. ٢٢مه نه نامه
ஆசிரியர் பேனாவிலிருந்து. l அருட்சுடருக்கோர் . 9. லண்டனில் ஒரு சிவாலயம். 3. இலங்கை இந்து கலாசார. 4 ஆடல் காணிரோ. 5 இறைவனும் இசையும். フ முருகன் தமிழ்க் கடவுள். 8 இலங்கையில். ll ஆடலான் . 19 குருவருள் இல்லையேல். 14 ராசி பலன்கள். 16 இந்து சமயம். 18 பூமிக்கு வந்த. 31 வாழைக்கனியும் . 23 வைகாசி விசாகம். 24 சைவ நெறி விளக்கம். எழுத்துலகில். මූ7 THE LADY SAINT ............................ 28 சித்திரக் கதை. 29
(" ──།༽
அன்பு நிறைந்த எம் இனிய வாசகள்களுக்கு
இதயம் நிறைந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
லூசியாம் பகுதியில் எழுந்தருளி அருள் பாலித்துக் கொண்டிருக்கும் சிவன் வண்ணமாக அட்டையில்
காட்சி தருகிறான்.
//محے -ܓܠ

Page 3
காஞ்சிப் பெரியவர் மு அமைதி தவழும் சாந்தமான மு. அவரை நினைக்கும் போ தெய்வீகச் சிலிர்ப் பதின்மூன்றாவது வயதில் தொட முத்தியடைந்துவிட்ட அவரை ஒரு தடவை பார்க்கவில் அவரின் ஸ்பரிஸம் கிடைக்கவில்ை அவருக்காக நீங்களும் சில நிமி
இப்போ நிஜ உல கலசத்தின் ஆறாவது இதழ் கலசத்தில் பரவலாக எழுத்துப் பி கடித மூலமாகவும் தொலைபேசி மூ எங்களுடைய சக்திக்கு மீறி ஏற் கலசம் ஆசிரியர் குழு சிரந்தா இம்முறை இவற்றில் கூடி இலங்கையின் இந்துசமயக் கலாசார ரா கலசம் சார்பாக அ இந்து உலகத்துக்குப் பயன் தரச் விபரங்களை உ இதனை எழுதிக் கொண்டிருக்கும்போ தொலைபேசி மூ "சாமி” என்று செல்லமாக அழைக்கப்படும்
திரு வே. பெரியசாமி அவர்கள் ஆன்மா மறுபடி மறு இன்பமாக வாழ்வதற்கல்ல. துன்ப இருந்து விடுதலை பெறுவதற்கா
அதற்குத்தக எம்மால் முடிந்தளவுக் வைத்திருச் மனதால் நினைத்து உடலா 28 வருடங்கள் இப்படிப் பணி புரி
அவரின் ஆத்மா சாந்தியடைய ம
நாம் பிறந்த மண்ணில் நாம் வணங்கும் ஆலயங்கள் கு மக்கள் மந்தைகளாக மனித உயிர்கள் தராசுகளில் ை இதற்கு நாம் என இவர்களுடைய நல்வாழ்வுக்காக நாளிலும் பொழுதிலும் இ6 அவர்களின் நல்வாழ்க்கைக்கும் வழ நல்லது ஓம்
{{ -س
 
 

த்தியடைந்து விட்டார். கம். தெய்வீக ஒளி வீசும் கண்கள். தே உள்ளத்துள் ஒருவகைத் பு உண்டாகின்றது. டங்கிய இறை பணியை முடித்து து பெரியவரின் ஆத்மா. ல்லையே என்று மனம் துடிக்கிறது. லயே என்று உடல் அவாவுகிறது. , டெங்கள் பிரார்த்தனை செய்யுங்கள்.
5!
பகுக்கு வாருங்கள்!
உங்கள் கைகளில் தவழ்கின்றது. ழைகள் வருவதாக, பல வாசகர்கள் முலமாகவும் கூறியுள்ளனர். உண்மை! பட்ட இத்தவறுக்கு வாசகர்களிடம், ழ்த்தி மன்னிப்புக் கேட்கின்றது. ய கவனம் செலுத்தியுள்ளோம். ஜாங்க அமைச்சர் லண்டன் வந்திருந்தார். அவரைச் சந்தித்தேன். க்கூடிய பல செய்திகள் கிடைத்தன.
of 36T sisooTouri. து மனதைத் துளைக்கும் துயர செய்தி \லமாக வருகிறது.
தாய்ச் சங்கத்தின் கெளரவ சமயச் செயலாளர் ர் இறைபதம் அடைந்த செய்தி! படி பிறப்பு எடுக்கின்றது. ம் மிகுந்த இவ் உலக வாழ்க்கையில்
கவே இதை நாம் புரிந்து கொண்டு
வாழவேண்டும். கு மனதை மாசில்லாமல் க்க வேண்டும். ல் தொண்டு புரிய வேண்டும் . ந்தவர் திரு பெரியசாமி ஐயா அவர்கள். னதால் இறைவனை வேண்டுவோம். துன்பங்கள் தொடருகின்றன. தறி வைத்துத் தகர்க்கப்படுகின்றன. க் கருதப்படுகின்றார்கள். . ܕ ܢܝ வைத்து விலை பேசப்படுகின்றன! ர்ன செய்ய முடியும்!
நாம் இறைவனை வேண்டுவோம். றைவனை வணங்கும் போது மிபாட்டில் சிறிது நேரம் ஒதுக்குவோம்.
நடக்கும்.
IELD-6.ju „álflus

Page 4
கலசம்
/
அன்பே உருவாய் அறமே வாழ்வாய்
ஆத்ம பேதம் அருளி அகமகிழ்வித்து இருண்ட மனதில் இன்பமொழி அளித்து
fசன் புகழ் இயம்பி வழிகாட்டி
உலககுரு சங்கரர் சண்மார்க்க வழிநின்று
26ர் ஊராய் உபதேசம் அருளிச்செய்து
61ழுதாக்கிழவி வகை நான்கும் கற்றுணர்ந்து
ரெகாந்த இனிமை என்றும் நமக்குணர்த்தி
ஐயம் பல நீங்கி அறிவுறுத்தி
ஒருமை கண்டாய் பன்மை உலகத்தே
ஓங்கார தத்துவமானாய் ஞானச் செம்மலே
ஒள டதம் தன்வாழ்வு பிறவிப் பிணிக்கே
சித்திரை-வை
அருட் சுடருக்கோர் அஞ்சலி ...
Z
 

காசி-ஆனி 1994 2
pr கயர்கள் நிறைந்த N
ügi கொண்டோம்
காற்றே உனக்குக் கடுமனமோ! நீ நேற்றே னிறந்தசேதி தந்தாய்
மானிட வுலகின் மணிமகனை எங்கள் மனங்களில் நிறைந்து வாழ்ந்தவனை ாசன் புகழை இசைத்தவனை என்றும் ாதல் செய்து வாழ்ந்தவனை காற்றே உனக்குக் கடுமனமோ! நீ நேற்றே னிறந்தசேதி தந்தாய்
கண்கள் நிறைந்தகண்ணிர் கொண்டோம்!எங்கள் எண்ண முலர்ந்து ஏங்கிப்போனோம் மண்ணில் புரண்டு அழுகின்றோம்! உங்கள் மாண்பை நினைந்து மறுகுகிறோம் காற்றே உனக்குக் கடுமனமோ! நீ நேற்றேன் இறந்த சேதிதந்தாய்
சைவர் உலகம் இழந்ததுவோ'உம்மை தேவர் உலகம் ஏற்றதுவோ! சாமி நீங்கள் இன்று மறைந்தீரோ சிவனார் உங்களை ஏற்றாரோ! காற்றே உனக்குக் கடுமனமோ ! நீ நேற்றேன் இறந்தசேதி தந்தாய்
சைவ முன்னேற்றச் சங்கம்(UK) இன் தாய்ச் சங்கமான கொழும்பு சைவ முன்னேற்றச் சங்கத்தில் 28 வருடங்கள் தொடர்ந்து கெளரவ சமயச் செயலாளராகப் பணியாற்றிய 56 வயதுடைய திரு வே பெரியசாமி அவர்களின் இறைபதமடைந்த செய்தி கிடைத்தவுடன் அவர்களின் ஆத்ம சாந்திக்காகப் பாடப்பட்ட பாடலை மேலே: காண்கிறீர்கள்.
ン ح

Page 5
கலசம் சித்திரை-வை
இண்டன் சைவ முன்னேற்றச் சங்கத்தினரால் வெளியிடப்படும் காலாண்டிதழான இக் கலசம் சஞ்சிகையின் மூலம் எம் சைவப்பெருமக்களுக்கு இலண்டனிலுள்ள இந்து ஆலயங்களின் செய்திகளை தந்துகொண்டிருக்கும் இத்தொடரில் இம்முறை "புலித்தோலை அரைக்கசைத்து" "காடுடைய கடலைப்பொடி பூசிய "அந்த சிவனின் ஆலயம் இடம்பெறுகின்றது.
அண்மையில் அந்த சிவன் ஆலயத்திற்கு நான் சென்றிருந்த போது எம் சிந்தையில் நிற்கும் அந்த சிவனுக்கு மங்கல ஆராத்தியுடன் பஜனையும், பூசையும் நடந்துகொண்டிருந்தது. எனக்கும் அந்தவழிபாட்டில் கலந்துகொள்ளும் சந்தர்ப்பம் கிட்டிய சந்தோஷத்துடன் ஆலய நிருவாகத்தினர் நால்வரைச் சந்தித்து " கலசம்" சஞ்சிகைக்காக ஆலயத்தின் தோற்றம் , நடைமுறை நிகழ்ச்சி, எதிர்கால வளர்ச்சித்திட்டங்கள் பற்றி சிறு விபரங்கள்
தருமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர்கள் கீழே வரும் சுவையான செய்திகளைத் தருகின்றார்கள். நாம் தமிழர்கள். எம் தாய் நாட்டை விட்டு வந்து இங்கு வாழ்கின்றோம். தாய்நாட்டில் திருக்கோணேஸ்வரம்
திருக்கேதீஸ்வரம் முனீஸ்வரம் போன்ற இடங்களில் எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் சிவனாகிய சைவசமயத்தின் முழுமுதற்கடவுளுக்கு, இலண்டனில் ஒரு ஆலயம் இல்லாதிருப்பது
 
 
 
 

காசி-ஆனி 1994 3
... ; ::::::.
பெரும் குறையாக இருந்தது. சுமார் இருபது வருடங்களாக லூஷியாம் நகரிலும் அதனைச் சார்ந்த இடங்களிலும் தமிழர்கள் வாழ்கின்றார்கள். பிரித்தானிய சைவ
அறக்கட்டளையின் செயற்பாட்டால் முதலில் உயர்வாசற் குன்று முருகன் ஆலயமும் தொடர்ந்து ஏனைய ஆலயங்களும் உருவாகின. 1983 ஆம் ஆண்டுக்கு பின் இங்கு வந்துள்ள தமிழர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்தது. முதியவர்கள் மிகத்தொலைவிலிருக்கும் ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதில் உள்ள பயணச்சிக்கல்களால் வரும் கஷ்டங்களை நிவர்த்தி செய்யும்பொருட்டும் இலண்டன் வாழ் தமிழர்கள் நித்தலும் அந்தச் சிவனைக் கைதொழ, லூஷியாம் நகரப்பகுதியில் இந்த சிவன்கோவிலை ஸ்தாபித்தோம்.
1988ஆம் ஆண்டு எம்மவர்கள் மனதில் எழுந்த இந்த எண்ணக்கரு 1989 ஆம் ஆண்டு பலரின் ஆலோசனையுடன் கருக்கொண்ட இத் திட்டம் 1993ஆம் ஆண்டு ஆவணி மாத விநாயகர் சதுர்த்தியில் ஆரம்ப பூசையுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவ்வாலயத்தின் சிறப்பு அம்சமாக இங்கு பூசைகள் யாவும் தமிழில் செய்யப்படுவதையும் ஏராளமான பொதுமக்கள் உதவிகள் புரிவதையும் காணக்கூடியதாக இருந்தது. அடுத்து ஆலயத்தின் நடைமுறை நிகழ்ச்சிகள் பற்றி அவர்கள் கூறுகையில் சுமார் நான்கு மாத காலமாக தினசரி நான்கு காலப்பூசை நடைபெறுவதாயும்
சிவராத்திரி , திருவெம்பாவை போன்ற சிறப்புத்தினங்கள் மிகச்
சிறப்பாகக் கொண்டாடப்படுவதாகவும் தெரிவித்தனர். ஏனைய மூர்த்தங்களின் விழாக்களும் சிறப்பாக நடைபெறுவதாகவும் அறிவித்தனர்.
தொடர்ந்து எதிர்காலத்திட்டங்கள் பற்றி தெரிவிக்கையில் ஆலயத்தின் வருடாபிஷேகம் ஒவ்வொரு வருடமும் 10 நாட்கள் நடாத்தத் தீர்மானித்துள்ளதாகவும் , அத்தோடு நவக்கிரகங்கள் அறுபத்துமூவர் ஆறுமுகநாவலர் ஆகியோருடைய திருவுரு வங்களை தமிழ் நாட்டிலிருந்து விரைவில் தருவிக்க ப்படவுள்ளதாகவும் தெரிவித்தனர். இவ்வாலயம் மக்களுடைய எண்ணக்கருக்களுக்கு மதிப்புக்கொடுத்து அவர்களுடைய அபிலாஷைகளைக் கருத்தில் கொண்டு சேவை அடிப்படையில் இயங்கும்.ஆலயத்தின் கட்டிடம் எதிர்காலத்தில் எவ்வாறு அமைய வேண்டுமென்று இதுவரை தீர்மானிக்கப்படவில்லை ஆயினும் அதற்கான முயற்சிகளில் மிக ஆர்வத்துடன் ஈடுபட்டுவருகின்றோம் என்று கூறிய அவர்கள் இறுதியாக ஞாயிறு தோறும் ஆலயத்தில் நடைபெறும் பஜனைகளில் சைவமுன்னேற்றச் சங்கத்தைக் கலந்துகொள்ளும்படியும் தமது ஆலயத்திற்கு வருகின்ற சிறார்களுக்கும் பெரியவர்களுக்கும் சமய அறிவை வளர்ப்பதற்கான கருத்தரங்குகளை ஏற்பாடு செய்யும் முயற்சியில் உதவி புரிய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டு இச்சிறு உரையாடலை முடித்துக்கொண்டார்கள்.

Page 6
கலசம் சித்திரை-ை
ஓர் இனிமையான மாலை நேரம், குளிர்ந்தும் குளிராத சூழ்நிலை, பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் எமது பிறந்த மணிணின் இந்துக் கலாசார அமைச்சரைச் சந்திக்கின்றேன். சிரித்த முகம். நான் முன்பின் அவரைப் பாத்த்ததில்லை. முதல் முதலாக அன்று தான் பார்த்தேன். என்னை வரவேற்கிறார். நானும் கைகூப்பி வணக்கம் செலுத்துகின்றேன்.
என்னை அறிமுகப்படுத்திக்கொள்கின்றேன். முதலில் அவருடைய வருகையின் நோக்கத்தைப் பற்றிக் கேட்கின்றேன். புண்புறுவல் பூத்த முகத்துடன் "லண்டன் வாழ் தமிழ் மக்களுக்கும் இலங்கைத் தமிழ் மக்களுக்குமிடையில் கலை கலாச்சாரத் தொடர்புகளை ஏற்படுத்துவது என் நோக்கம்" என்கிறார். அழகான பதில், "லண்டனில் உள்ள தமிழ் மக்கள் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?" என்று கேட்கின்றேன். சிக்கலான ஒரு கேள்வியைக் கேட்டதாக நினைத்துக் கொண்டு அவரை ஏறெடுத்துப் பார்க்கின்றேன். "எங்கெங்கு தமிழர்கள் சென்றாலும் கலை கலாசாரத்தைப் பேணி வாழ்வதை அவதானிக்கின்றேன். இங்கு மேற்கு லண்டன் தமிழ்ப்பாடசாலைக்கும், கிழக்கு லண்டன் நால்வர் தமிழ்க் கலை நிலைய பாடசாலைக்கும் சென்றிருந்தேன். பிள்ளைகள் அழகாக தமிழ் கதைப்பதைப் பார்க்க ஆசையாக உள்ளது. சைவமுன்னேற்றச் சங்கத்தினரின் சேவைகளும் என் மனதுக்குப் பிடித்தன." என்று நாகுக்காக பதில் கூறினார். "இலங்கையில் தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்யும் பணி என்ன?" என்று கேட்கின்றேன். "என்னால் முடிந்தளவுக்குச் சமயப்பணி புரிகின்றேன். ஆலயங்கள்
 
 

வகாசி-ஆனி 1994 4.
தோறும் அறநெறிப்ாடசாலைகளை ஆரம்பித்தள்ளேன். கண்டியில் அறநெறி மகாநாடும் வைத்தேன். என்னுடைய அதிகார வரம்புக்குட்பட்ட சகல உதவிகளையம் செய்கின்றேன்." என்றார். "யாழ்ப்பாணத்தில் அறநெறிப்பாடசாலைகள் நடத்துகிறீர்களா?"
என்கின்றேன்.
யாழ்ப்பாணத்தில் அறநெறிப் பாடசாலைகள் உண்டு. ஆனால் நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் அவற்றை எம்மால் அணுக முடியவில்லை. ஆனால் நல்லை ஆதீனத்துடாக புத்தகங்கள் வழங்கி முடிந்தளவுக்கு உதவுகின்றோம்." என்கிறார். "உங்களது அரசாங்கத்தால் ஆலயங்கள் குண்டு போட்டுத் தகர்க்கப்டுகின்றன. இதனை, தடுத்து நிறுத்த உங்களால் முடியாதா? ஏதோ பெரிய குண்டுக்கேள்வி கேட்டுவிட்ட நினைப்பில் அவரைப் பெருமிதத்துடன் பார்க்கின்றேன்.
அவர் என்னைப் பார்த்து மெதுவாகச் சினிக்கின்றார். இதென்ன கண்டைக்காய்க் கேள்வியைக் கேட்டுவிட்டுப் பையன் இப்படிப் பார்க்கின்றானே என்று நினைத்தாரோ என்னவோ! செருமிக்கொண்டு பதில் சொல்ல ஆரம்பித்தார். "ஆலயங்கள் தகர்க்கப்படுவது உண்மை. இதை நிறுத்த என்னால் முடியாது. அப்படியானால் நான் இருக்கத்தேவையில்லை என்று நீங்கள் நினைக்கலாம். நான் இல்லாவிட்டாலும் இது நடக்கும். ஆகவே இருந்துகொண்டு சிறிதளவாவது தமிழ்ச் சமூகத்திற்கு உதவி செய்வது நன்று என நான் நினைக்கின்றேன். இடிக்கப்பட்ட ஆலயங்கள் சம்பந்தமாக அறிக்கை தயாரித்துள்ளேன். ஒவ்வொரு ஆலயத்தையும் புனருத்தாரணம் செய்ய எவ்வளவு செலவாகும் என்பதையும் கணக்கிட்டுள்ளோம். இதனை புனருத்தாரண அமைச்சருக்கு கையளிக்க முடியுமேயொழிய வேறு எதையும் என்னுடைய அமைச்சால் செய்யமுடியாது. அதே நேரம் இந்து ஆலயங்களின் வளர்ச்சிக்கு நன்கு உதவிபுரிகிறோம். எத்தனையோ இந்து சமயக் கருத்துக்கொண்ட புத்தகங்களை பிரசுரம் செய்துள்ளோம் என்று அடித்துக்கூறுகின்றார்.
கொழும்பிலுள்ள சைவ முன்னேற்ச சங்கத்திற்குத் தாரளமாக உதவி புரிவதாகவும் அதேபோல பிரித்தானியாவில் இயங்கி சமயப் பணிபுரியும் சைவ முன்னேற்றச் சங்கத்திற்கு தன்னால் என்ன, உதவி செய்ய முடியும் என்று கேட்டார் அருமையான சந்தர்ப்பம். கேள் கேள் என்று மனம் அவசரப்பட்டது. கேட்டுவிட்டேன். எங்களுக்கு சமய சம்பந்தமான புத்தகங்கள் வேண்டுமென்று கேட்டேன். சம்மதம் மறுக்காமல் வந்தது. இங்கிருந்து உடுப்புகளை அனுப்பினால் யாழ்ப்பாணப்பிராந்தியத்தில் துன்பப்படும் மக்களுக்கும் அநாதையாகிப்போன பிள்ளைகளுக்கும் கொடுக்கும் ஒழுங்குகளைச் செய்வதாக வாக்குறுதி அளித்தார்.கேள்வி கேட்டது போதும் என்று மனம் சொல்கிறது. நன்றி அமைச்சரே என்று கூறிவிட்டு நான் கைகூப்ப அவரும் கைகூப்புகிறார்.
接 !ف. ن

Page 7
Ꮷ56ᎠᏧti5 சித்திரை-வை
இந்திரன் பழிதீர்த்த
திருவிளையாடல்
வித்துவான் திருமதி வசந்தா வைத்தியநாதன் விண்ணுலகத்தை ஆண்ட தேவர்
கோமானாகிய இந்திரன் அரமகளின் ஆடல் பாடல்களில் மெய்ம்மறந்திருந்த பொழுது தேவ குருவாகிய வியாழபகவான் அங்குவர, அவரை மதித்து வரவேற்காது இந்திரன் அலட்சியப்படுத்த அவனை விட்டு அகணிறார் ஆசிரியர் . உடனே அமரர்கோனது செல்வம் குறைந்தது. தேவலோகம் பொலிவிழந்தது. தனது தவற்றை உணர்ந்த அயிராவதப் பாகன் அயனை அணுகித் தனது குறையை உரைத்தான்.
நான்முகனும் இந்திரனை நோக்கி உனது பழைய குருவாகிய வியாழபகவான் வரும் வரையில் துவட்டாவின் புதல்வனும் மூன்று தலைகளை உடையவனும் அசுர குலத்தில் பிறந்தும் அறிவு ஒழுக்கங்களில் சிறந்தவனுமாகிய விச்சுவ உருவன் என்பவனைக் குருவாய் கொள்வாயாக என சூழ்ச்சியாகக் கூறினார். விச்சுவ உருவனின் வஞ்சகக் கருத்தை உணராமல் தேவேந்திரன் வேள்வி ஒன்று செய்ய, அதில் தலைமைக் குருவான விச்சுவ உருவன் தனது மனதிற்குள் அரக்கர்களுக்கு நன்மையை நாடியும்
புறத்திலே தேவர்களுக்கு நன்மை உண்டாக நடித்தும் யாகம் செய்தான். தனது ஞான நோக்கால் நிகழ்வதை அறிந்த இந்திரன் விச்சுவ உருவனின் மூன்று தலைகளையும் தனது வச்சிரப்படையால் மோதி அழிக்க அம் மூன்று தலைகளும் காடை, ஊர்க்குருவி, சிச்சிலிப் பறவைகளாய்ப் பறந்தன. இந்திரனை பிரம்மகத்தி பற்றியது. பிரம்மகத்திக் குற்றத்தினால் அல்லலுற்ற அமரர் காவலன் அப்பாவத்தை
 
 
 
 

காசி-ஆனி 1994 5
நீரினில் நுரையாகவும் மண்ணினில் உவராகவும் மரத்தினில் பிசினாகவும், பெண்களிடத்து பூப்பாகவும் ஆக்கி பகிர்ந்தளித்தான். பாவத்தைச் சுமப்பதனால் எங்களுக்கு என்ன பயன் என அந்நால்வர்களும் கேட்க நீர் இறைக்க இறைக்க ஊறவும் மண் தோண்டப்பட்டாலும் அம்மண்ணாலேயே நிறைவு அடையவும் மரங்கள் வெட்டுண்டாலும் மீண்டும் தழைக்கவும், கருவுற்ற பெண்கள் கருவுயிர்க்கும் வரை கணவரைக் கலந்து வாழவும் அருள் தந்தான். இந்திரனைப் பற்றிய பாவம் ஒழிந்தது.
தனது மைந்தன விச்சுவ உருவன மாண்டதை அறிந்த துவட்டா மாபெரும் யாகம் ஒன்று செய்து விருத்திராசுரன் என்ற அரக்கனை வருவி த்து தேவேந்திரன் மீது போர் செய்ய அனுப் பினான். இருவரும் பலகாலம் போர் செய் தனர். விருத்திரனின் அளவற்ற ஆற்றலுக்கு ஈடு கொடுக்க முடி யாமல் தெய்வங்களை நாடினான் இந்திராணி கேள்வன்.
தேவேந்திரனது அவல நிலையைப் பார்த்த திருமால், அவனை நோக்கி இந்திரா! உனது வச்சிரப்படை, முதுமையடைந்து விட்டது. அப் படையினால் விருத்திர னைக் கொல்ல முடி
யாது. தேவர்களும்
அசுரர்களும் திருப்பா ற்கடலை அமுதம் பெறுவதற்காகக் கடைந்த சமயத்தில் தங்களது ஆயுதங்கள் அனைத்தையும் ததீசி முனிவரிடம் ஒப்படைத்தனர். மீண்டும் வந்து அமரர்கள் ஆயுதங்களைக் கேட்காமையால் முனிவர் அவ்வாயுதங்கள் அனைத்தையும் விழுங்கி விட்டார். அங்ஙனம் விழுங்கப்பெற்ற ஆயுதங்கள் அனைத்தும் திரண்டு
嗣

Page 8
கலசம் சித்திரை-வை
அவரது முதுகெலும்பிலே பொருந்தியிருக்கின்றன. விருத்திரனைக் கொல்லும் வச்சிரப்படை அதுவேயாகும். அவரைக் கேட்டுப் பெறுவாயாக என அருள் செய்தார். அவ்வாறே தேவேந்திரனும் ததீசி முனிவரிடம் சென்று கேட்க அவரும்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு" என்ற வள்ளுவத்திற்கு வரைவிலக்கணமானார். முனிவரிடமிருந்து பெற்ற புதிய குலிசத்தின் முன் போரிடமுடியாத அரக்கன் அலைகடலில் ஒளித்தான். அகத்திய முனிவர் தன் அளப்பரிய ஆற்றலால் கடல்நீரை ஓர் உழுந்தளவாக செய்து பருக விருத்திரன் வெளிப்பட்டான். வெளிப்பட்ட விருத்திரனது தலையை அறுத்து வீழ்த்தி அவனது குருதியினால் வற்றிய கடலை நிறைத்தான். கற்பக நாட்டுக் காவலனை மீண்டும் பிரம்மகத்தி தோஷம் பற்றிக் கொண்டது. அதனால் வருந்திய இந்திரன் ஓர் தாமரைத் தண்டினுள் ஒளிந்து கொண்டான். இந்திரனில்லாத தேவலோகம் பொலிவு குன்றியது.
அத்தருணம் "ஆயிரம் அசுவமேத யாகங்களை நிறைவேற்றிய சந்திரகுல மன்னனாகிய நகுடனை தேவர்கள் தேவேந்திரனாக நியமித்தனர். ஆனால் நகுடனோ இந்திராணியைத் தனது பட்டமகிசவியாக்க விரும்பி அவளை அழைத்து வருமாறு பணித்தான். கற்பினிற் சிறந்த அயிராணியோ தமது குல குருவான வியாழபகவானிடம் சென்று முறையிட, அவர் சப்தரிஷிகள் தாங்க நகுடன் சிவிகையேறி வந்தால் ஏற்றுக் கொள்வேன் என்று கூறுமாறு சொன்னார். அவ்வாறே அயிராணி கூற நகுடனும், அகத்தியன், ஆங்கீரசன், கௌதமன், காசிபன், புலத்தியன், மார்க்கண்டன், வசிட்டன் என்னும் ஏழு முனிவர் தாங்க சிவிகையில் ஏறி வந்தான். இந்திராணியை அனுபவிக்க வேண்டும் என்னும் காம இச்சை மேலெழ சிவிகையின் கொம்பைத் தாங்கும் தமிழ் முனியாம் அகத்தியரை நோக்கி "விரைவாகச் செல்லுக" என்னும் பொருள்பட "சர்ப்ப சர்ப்ப" என்றான். சினம் கொண்ட குறுமுனிவர் நீ சர்ப்பமாகக்கடவாய் எனச் சாபமிட நகுடன் மலைப்பாம்பானான். அற்ப அறிவுள்ளவர்களுக்கு அவர்களது செல்வமே பகையாகும்.
மீண்டும் தேவர்கள் வியாழபகவானை அடைந்து வேண்ட தாமரைத் தண்டில் ஒளிந்திருந்த இந்திரனை அழைத்து நிலவுலகத்திற்குச் சென்றால் உன்னைப் பற்றியிருக்கின்ற பிரம்மகத்திப் பாவம் தீரும் என்று குருபகவான் கூற, அவ்வாறே இந்திரனும் நிலவுலகத்திற்கு வந்து கயிலை முதலாகப் பல தலங்களையும் வழிபட்டவாறு கடம்பவனமாகிய மதுரையின் எல்லையை எய்தினான். எல்லையை மிதித்தவுடன் பிரம்மகத்திப் பழி நீங்கியது. மாகமறுவற்ற மாணிக்கமாக ஒளிவீசினான்.பழிவேறாகிய இந்த இடம் வேறாநிலை" என அழைக்கப்படுகின்றது.
தனது பாவத்தைத் தீர்த்த பரஞ்சுடரைக் காண விரும்பினான். கடப்ப மர நீழலிலே அருவாகி, உருவாகி, அருவுருவங் கடந்து ஆனந்த உருவாகி நிற்கும் சிவக்கொழுந்தை தனது ஆயிரங் கண்களும் களிப்பக் கண்டான். நாத்தழும்பேறத் துதித்தான். பொற்றாமரைத் தடாகப் பொன்மலர்களை பறித்து அர்ச்சனை செய்தான்.

காசி-ஆனி 1994 6
"அங்கணா போற்றி! வாய்மை ஆரணா போற்றி நாக கங்கணா போற்றி மூல
காரணா போற்றி நெற்றிச் செங்கணா போற்றி ஆதி
சிவபரஞ் சுடரே போற்றி! எங்கணா யகனே போற்றி!
ஈறிலா முதலே போற்றி
என்று அடியற்ற மரம்போலப் பெருமானின் திருவடி வீழ்ந்து பணிய, பெருமானும் இந்திரன் முன்தோன்றி "அன்பனே! சித்திரை மாதமும் சித்திரை நட்சத்திரமும் கூடிய சித்திரைப் பெளர்ணமியிலே வந்து நீ பூசை செய் அப்படிச் செய்தால் ஓர் ஆண்டு முழுதும் பூசை செய்த பலன் உனக்குக் கிடைக்கும்" என்று அருளி இலிங்கத்தில் மறைய புரந்தரர் கோனும் தன் மனைவியாகிய புலோமசையுடன் சோமசுந்தரப்பெருமானின் திருவடி மறவாச் சிந்தையனாகி அமரர்
உலகத்தை ஆண்டு வந்தான். (வளரும்)

Page 9
கலசம் சித்திரை-வைச
சிவசுப்பிரமணிய சுவாமிகோவில் GPITOUgufall -- Saviñaodëb
20கள் உய்யும் பொருட்டு உலகத்தில் சிருஷ்டி, திதி, சம்கார, துரோபவ, அணுக்கிரக என்கின்ற பஞ்ச கிருத்தியங்களைச் செய்வதற்காக ஆனந்தத் தாண்டவமாடும் இறைவனின் அங்க பாவங்களின் தோற்றத்தை உற்றுநோக்கினால் அது ஓம் என்ற பிரணவ வடிவத்தை பிரதிபலிக்கின்றது. எனவே இறைவன் இறை வடிவானவன். இசையே இறைவன். உலக சிருஷ்டியே ஒலியில் தான் உண்டானது. அதாவது நாதத்தில் உலகினிலே ஓசை மட்டும் இல்லாவிட்டால் எல்லாமே நிசப்தமாகிவிடும். எனவே உலகம் இயங்குவதற்கும் ஒசை அவசியம் என்பதும் புலனாகின்ற அதே வேளையில் இறைவன் இசைவடிவாக இருந்து உலகத்தை இயக்குகின்றான் என்பதும் தெளிவாகின்றதல்லவா! ஓம் என்ற ஓசையை மென்மையாக இனிய குரலில் ஒதும் போது மனம் பொறி வழிப்போகாது. பொறிமனம் வழிவந்து மனப்பக்குவம் வளர, மன ஒரு நிலைப்பாடு ஏற்பட, ஆசை அற்ற நிலை தூண்டப்பட, உலக மாயையில் இருந்து தாண்டப்பெற இறைவன் திருவடியை நாடிச்செல்கிறோம். ஓம் என்ற நாத ஒலி எவ்வளவு சக்திமிக்கது என்பதை அறிகின்றோமல்லவா? எனவே தான் இறைவனை அடைந்திட முன்னோர்கள் இசையே சிந்தததெனச் சொன்னார்கள். எமது இந்து மதத்தின் இருக்கு யசுர் grinth அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களில் சாமம் என்கின்ற வேதம் இசைவடிவாகவே அமைந்துள்ளது. சாமவேதத்தை நாதன் என்று இறைவனுக்கு ஒரு பெயரும் இதனால் தான் ஏற்பட்டது. பல மொழிகளினாலே இறைவனுடைய புகழை ஸ்தோத்திரமாக வகுத்து இசைவடிவமாக சாமவேதம் அமைக்கப்பட்டுள்ளது. தெய்வீகத் தன்மை கொண்ட இசையின் வடிவத்திலேயே இறைவன் துதிப்பாடல்கள் எல்லாம் அமைந்திருக்கின்றன. எமது தமிழ் வேதமாகிய இறைவன் புகழ் கூறும் திருமுறைகள் எமது நாயன்மார்களினால் இசைவடிவமாக இறைவன் முன் பாடப்பட்டவை. ஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட கணமே தோடுடைய செவியன் விடையேறியோன் என்றும் தேவார இசைபாடி இறைவன் உருவத்தையேகொண்டு வந்தார். எமது சமயகுரவர்கள் இசையோடு இறைவன் புகழ்பாடி இறைவனை இசையவைத்து
 
 
 
 
 
 
 
 

காசி-ஆனி 1994 7
அவன் மனம் நெகிழ வைத்து, அவன் அருள் பெற்று இறைபாதம் அடைந்தவர்கள் என்பதை நாம் அறியமாட்டோமா? எந்த மொழிக்கும் இசை பொதுவானது. வெறும் வார்த்தைகளை வசனமாக எழுதி வாசிப்பதிலும், அதற்கு இசைவடிவம் கொடுத்து இனிமையாகப் பாடுவது அதற்கு உயிர்கொடுத்து உலவ விடுவதுபோல் இல்லையா?
எனவே இறைவனுடைய அருட் பாடல்களை இசையோடு பொருள் உணர்ந்து பாடும்போது தெய்வீக உணர்வு எம்மில் பளிச்சிடுகின்றது. தெய்வீக உணர்வு எம்மைப் பக்தி வலையில் சிக்கவைக்கின்றது. பக்திவழி எம்மை முக்தி நெறிக்கு எடுத்துச்செல்கிறது. எனவே இறைவனை அடைவதற்கு இசை சிறந்ததொரு வழியாகிறது.
திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரை முருகப்பெருமான் நாவில் வேலூன்றி நீ பாடு என்று சொல்லி "முத்தை தருபத்தி என அடியெடுத்துக்கொடுத்து தமிழ் வளர்க்க இறைபுகழ் பரப்ப இசைவரம் கொடுத்தார். அது மட்டுமல்லாது சகல பலமும் பொருந்திய இராவணன் கைலை மலையின் கீழ் சிக்குண்ட போது மீள வழியில்லாது ஈசனை இசையால் மட்டும் தான் நெகழ வைக்கலாம் என்று உணர்ந்து யாழ் மீட்டி இசைபாடி இறைவனை உருக வைத்து அருள் பெற்றான். தியாகராஜ சுவாமிகள் அவதரித்து கர்நாடக சங்கீதத்திற்கு உயிர்கொடுத்து இறைவன் புகழ் பாடும் கீர்த்தனைகளைப் பாடியருளினார். - - அவர் அன்று காட்டிய சாஸ்திரீக சங்கீதமும் அன்று LJATIqLLU கீர்த்தனைகளும் இன்று எமக்கு இசைவழி சென்று இறைவழி காண நல்வழி காட்டுகிறது.

Page 10
கலசம் சித்திரை-ன
(முருக வழிபாட்டின்
முருகனைத் தமிழ்க்கடவுள் என்பது மரபு. முருகனுக்கும் தமிழுக்கும் தமிழர்க்கும் இடையே உள்ள பிரிக்கப்பட முடியாத உறவு நிலையை எடுத்தாய்வதே இக்கட்டுரையின் இலக்கு. நமது வாழ்வின், மொழியின் வளத்தை, செழுமையைக் கூறும் தொல்காப்பியம் எமது மதத்தின் கலாசாரத்தின், மொழியமைப்பின், வரலாற்றின் பெட்டகமாக விளங்கும் பெருநூல். இந்நூல் தமிழர் விழுமியங்களை அவை மற்றைய விழுமியங்களுடன் கலப்புறுவதற்கு முன்பிருந்த வடிவிலேயே விளக்குகின்ற பெருமையைத் தன்னகத்தே கொண்டுள்ளது. தமிழர்கள் ஒன்றே இறைவன் ஒருவரே மக்கள் என்ற பெருங்கோட்பாட்டை சமூகநெறியாகக் கொண்டவர்கள் . இதனால் உலகப் பொருள்களை பாகுபாடு செய்ய முனைந்த தொல்காப்பியனார். "உயர்திணை எம்மனார் மக்கட்சுட்டே அஃறிணை எண்மனார் அவரலபிறவே" என பகுத்தறிவுநிலை நின்று மக்கள் அனைவரும் உயர்திணை. அவரல்லாத பிறவெல்லாம் அஃறிழை என்கிறார். இங்கு மானிடத்தின் பெருமை பேசப்பட்டு மானிடம் போற்றப்படுகின்றது. இவ்வாறு மானிடத்தை உயர்வாகக் கூறிய தொல்காப்பியம் மனித நேயத்தை அடிப்படையாகக் கொண்டு மக்களை அடையாளப்படுத்தி வேறுபடுத்துவதில் புதிய முறையொன்றை கையாள்கின்றது. மக்களை செய்தொழிலால் வேறுபடுத்தாது, உருவால் நிறத்தால் வேறுபடுத்தாது. பிறந்த குலத்தாற் பிரிக்காது, அவர் வாழும் நிலத்தில் உள்ள இயற்கைச் சூழலின் வேறுபாட்டை கூறுவதன் மூலம் அடையாளப்படுத்தும் தன்மை சமூகவியல் உணர்வில் தமிழர் கொண்டிருந்த மிக நுட்பமான அறிவினை வெளிப்படுத்துகின்றது. நால்வகை நிலப்பிரிப்பு புவியியல் ரீதியான அறிவுசார் பகுப்பு மட்டுமல்ல, விஞ்ஞான பூர்வமான உணர்வுசார் வெளிப்பாடு என்கிறார் செக்கோ நாட்டு தமிழாய்வாளரான கமில்கவிலபில் அவர்கள். " மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும்படுமே
 
 

வகாசி-ஆனி 1994 8
என்பது தொல்காப்பியனாரின் நால்வகை நிலப்பகுப்பு. இங்திருமாலின் காத்தலைக் கொண்ட காடாகிய இடமும் முருகவேளின் காத்தலைக் கொண்ட உயர்ந்த மலையாகிய இடமும் நன்னீர்
பொருந்திய வயலாகிய இடமும் வருணனின் காத்தலைக்கொண்ட மிகுந்த மணல் பொருந்திய இடமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலென்று முன்னோர்களால் மொழியப்பெற்ற பெயர் முறையாற் கூறப்பெறுவனவாம் என்று பொருள் விக்கப்படுகிறது. தமிழரின் ஆன்மீக வலிமையை வெளிப்படுத்தக்கூடிய வகையில் நானிலத்திற்கும் நான்கு தெய்வங்களின் பெயர்கள் கூறப்பட்டு அத்தெய்வங்களின் காத்தலில் அந்நிலங்கள் உள்ளன எனவும் விளக்கப்படுகின்றது.

Page 11
கலசம் சித்திரை-6ை
முருகன் முத்தமிழ் முதல்வன்
தமிழர்களினுடைய தோற்றம் கற்காலத்திலிருந்தே இனங்கா ணப்படுகின்றது என்பது ஆய்வாளர்களின் முடிபு. இதனால் தமிழர்களின் முதல்நிலமாக மலையும் மலைசார் நிலமுமாகிய குறிஞ்சி இருந்தது எனும் கமில்சுவலபில் போன்ற ஆய்வாளர்களின் கருத்து ஏற்புடைத்தாகின்றது. அது மட்டுமல்ல திராவிடமும் , கிரேக்கரும் பற்றிய ஆய்வுகளைச் செய்தவர்கள் இவ் இனங்களிடை பெண்கள் சிறுநில விவசாயத்தில் முதலில் ஈடுபட்டதை உறுதி செய்கின்றனர். இங்கு தான் முருகன் வள்ளி காதல்லீலை தமிழர்களின் வரலாற்று வித்தாகின்றது. வள்ளி திணைப்புலம் காக்கின்றாள். அதாவது ஆய்வாளர்கள் கருதுவது போல் தமிழ்ப் பெண் சிறு நில விவசாயத்தில் ஈடுபடுகின்றாள். இங்கே வேடுவனாக குமரன. அதுவும் யதார்த்த பூர்வமாக அமைகின்றது. அச்சுறுத்தி வள்ளியை தண்பால் ஈர்க்கும் கருவியாக யானைவடிவு. இதுவும் இயல்பாக பொருந்துகின்றது. எனவே வரலாற்றுக்கு முற்பட்ட ஒரு காலகட்டத்தின் யதார்த்த பூர்வமான சித்திரமாக இலங்குகிறது. முருகன் வரலாறு ஆதலால் தமிழர்களின் முதற்கடவுளாக முருகன் கருதப்படுவதில் வரலாற்றுப் பூர்வமான தன்மையுண்டு. எனவே குறிஞ்சித் தலைவனாக சேயோன் எனப்படும் முருகன் விளங்குகின்றான். முல்லைநிலம் என்பது, காடும், காடு சார்ந்த இடமும், கற்கால நிலைமாறி ஆடுமாடுகள் வளர்ப்பு பொருளாதார இயக்ககாரணியாக மாறிய ஒரு சூழலில் தமிழர்களின் வாழ்வியலில் ஏற்பட்ட மாற்றம் முல்லை நில வாழ்வை தோற்றுவிக்கிறது. எனவே முல்லையின் தெய்வமாக ஆயப்பாடியில் குழலூதும் கண்ணன் பசுவோடு விளையாடி நிற்கின்றான். ஆயினும் முல்லைவாழ்வு குறிஞ்சிக்கு அடுத்த கட்டம் என்பதினால் குறிஞ்சியில் குறிஞ்சி சின்னமான மயிலேறு முருகன் தமிழரின் ஆதிக்கடவுளாக பரிணமிக்கின்றான். முல்லையை அடுத்து சிறுநில விவசாயம் தோற்றம் பெற்ற மருத நிலத்தில் கலாசார சங்கமங்கள், குடி ப்பரம்பல்கள் என்பன அதிகரிக்கையில் வேதகாலத்து இடியின் மின்னலின் கடவுளாகிய இந்திரன் மருத நிலக்கடவுளாக கருதப்படுகின்றான். அவ்வாறே மீன்பிடி பொருளாதாரம் தோற்றம் பெற்ற ஆரம்பகால கட்டத்தில், கடற்கரை பெருமணற் பரப்பில் மழைக்கடவுளான வருணன் முக்கியத்துவம் பெற்று நெய்தலின் கடவுளாக வருணன்ை குறிப்பிடப்படுகின்றான். எனவே தமிழரின் நிலப்பரப்பு தன்மை கூறிய தொல்காப்பியத்தின்படி ஆய்வு செய்கையில் சேயோன் என்னும் முருகனே தமிழர்களின் முதற்கடவுளாக காட்சியளிக்கின்றான். முருகவழிபாடு என்பது எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து வரும் ஒன்று. கால ஓட்டத்திற்கு ஏற்ப இயற்கைநிலை நின்று தோன்றிய முருகவழிபாடு கருத்துக்களையும், கதைகளையும் உள்வாங்கி தமிழ் மக்கள் மதமாக பெருவளர்ச்சி பெற்று வருகிறது. பன்னிரண்டாம் நூற்றாண்டளவில் கலாச்சார சங்கமங்களின் காரணமாக முருகனின் அண்ணனான பிள்ளையார் ஏற்றுக்கொள்ளப்பட்டு சிவ குடும்பத்து அங்கமாக முருகன் மாற்றப்பட்டு சுப்பிரமணியன் ஆறுமுகக்கடவுள் போன்ற பெயர்களையும் தாங்குகின்றான் என்பது பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை போன்றோரின் கருத்து. அத்துடன் பாரதி போன்றோர் வேதகாலத்து அக்கினியின் பெயராகிய வேலன் எனும் சொல் காலகெதியில் முருகனின் செவ்வேள் என்ற பெயர் காரணமாக

வகாசி-ஆனி 1994 9
முருகனுக்குரிய மற்றோர் பெயராயிற்று என்று கூறுவதும் உண்டு.
எது எப்படியிருப்பினும், இயற்கையோடு தோன்றி ფ2(ყb மதத்தலைவனால் உருவாக்கப்படாது வளரும் வழிபாடுகளில், மக்களுடைய நம்பிக்கைகள் எதிர்பார்ப்புக்கள் ஆழமாக ஊடுருவி அவற்றை வளர்த்துச்செல்லும் என்பது பொதுவான உண்மை. இவ்வகையில் தமிழர்களுடைய தெய்வமாகிய முருகன், இன்று இந்து சமயத்தின் முக்கிய கடவுள்களில் ஒருவராகிய, முழுமுதற் பொருளாகிய சிவனின் மைந்தனாக, வேத நாயகனான பிள்ளையாரின் தம்பியாக, அண்டமெல்லாம் இயக்குகின்ற சக்தியின் வேல்தாங்கிய சக்திக்குமரனாக, திருமாலின் மருகனாக, இச்சாசக்தி, கிரியாசக்திகளாகிய வள்ளி, தெய்வானையுடன் மயிலேறும் கந்தக் கடவுளாகக் காட்சியளிக்கின்றான்.
கந்தபுராணமும் ஆறுமுகநாவலரும்
ஆயினும் 18ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முருகவழிபாட்டிற்கு புத்துயிர் அளிக்கப்பட வேண்டிய தேவை ஒன்று ஏற்பட்டது. அந்நியராட்சியானது தமிழ்த்தேசியத்தின் தோற்றுவாய்க்கு வித்திட்டது. நாம் தமிழர் என்ற உணர்வு தோன்றியதும் நம் மதத்தின் முதல்வன் யார் என்ற கேள்வியும் தோன்றியது. சமஸ்கிருத ஆதிக்கம் வளர்ச்சி பெற்ற நிலை இந்து சமயத்தில் காணப்பட்ட நேரத்தில் முருகனுடைய முக்கியத்துவம் உணரப்படவில்லை. சிவன் முழுமுதற்கடவுளாக கொள்ளப்பட்ட நிலை என்று இருந்தாலும் தமிழர்களின் வரலாற்றுடன் வளர்ந்த முருகவழிபாட்டிற்கும் புத்துயிர் அளிக்கப்படல் வேண்டும். என்ற அவா பிறந்தது. இந்த அடிப்படையில் தமிழ் தேசியத்தின் தந்தை என வர்ணிக்கப்படும் ஆறுமுக நாவலர் அவர்கள் 1889ஆம் ஆண்டில் கந்தபுரால்ணத்தை அச்சேற்றினார். இன்றைக்கு 125 ஆண்டுகளுக்கு முன்பாக அச்சேற்றப்பட்ட கந்தபுராணம் சைவசித்தாந்தச் செந்நெறியில் இயங்கத் தொடங்கிய யாழ்ப்பாண
சைவத்தின் இதயமாக மாறியது.
கந்தபுராணத்தின் முக்கியத்துவம் கந்தபுராணம் "நாண்" என்ற முனைப்பாட்டின் வழி செயற்பட்ட சூரபத்மனின் அழிவைக் காட்டும் பேரிலக்கியம். இது "நான்"என்ற முனைப்பட்டுடன் இயங்கும் எந்த சக்தியும் இறைசக்தியினால் அழிக்கப்படும் எண்பதற்கான உத்தரவாதமாகவும் திகழ்கின்றது. அத்துடன் மாயையை வழிபட்ட ஒருவன் முன்னால் இறைவன் தான் திருவருளாக நின்றாலுங்கூட அதனை உணரமாட்டான். என்பதற்கு உதாரணமாக சூரன் திகழ்கின்றான். இத்தகைய ஒரு சூழ்நிலை அண்றைய சமுதாயத்திலும் காணப்பட்டது. ஐரோப்பியமாயை வழிப்பட்ட மக்கள் முன் ஐங்குரவராக
பூத்தவளே புவனம் பதினான்கையும், பூத்தவண்ைணம்
காத்தவளே பின்கரந்தவளே கறைக்கண்டனுக்கு
முத்தவளே என்றும் முவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே!
- அபிராமி அந்தாதி

Page 12
ᏭᏂᏛuᏧᎥᎥ5 சித்திரை
ஆறுமுகநாவலர் நினிறு பணியாற்றியும் கூட அது உணரப்படவில்லை.எனவே சைவச் செந்நெறிவாழும் மக்களின் மனதில் அந்த மாயையும் ஒரு நாள் முருகனால் அழிக்கப்படும் என்ப்தற்கு உத்தரவாதமாக கந்தபுராணயுகம் ஒன்று யாழ்ப்பாணத்தில் தோற்றம் பெற்றது. முன்னர் தமிழகத்தில் தமிழ் உணர்வு கரைபுரளத்தொடங்கி அது நாத்திக வடிவு எடுக்கத் தொடங்கிய ஒரு காலகட்டத்தில் தமிழகம் ஆன்மீக இருளில் மூழ்கிடாமல் "காக்க அங்கும் ஆன்மீக நெறியாளர்களுக்கு தமிழ்க்கடவுளாம் கந்தனே கைகொடுத்தான்
இன்றைய தேவை
இன்று தமிழர் ஒரு நாட்டினமாக 13ஆம் நூற்றாண்டுக்கு பின்பே யாழ்ப்பாணத்தில் அடையாளம் காண்கின்றோம் என்ற கருத்தின் அடிப்படையில் சிங்கள புத்திஜீவிகள் எழுதவும் பேசவும் தொடங்கிய ஒரு காலகட்டத்தில் தமிழர்களுடைய கலாச்சாரம் ஆன்மீகம் பற்றி சிந்திக்க வேண்டிய காரிய தேவை சமுதாயக்கடமையாகத் தோன்றியுள்ளது. எனவே வெளிநாட்டவரான கமில்சுவலபில் எழுதிய "முருகனின் சிரிப்பு" (Smiles of Murugan) எமக்கு இன்று தமிழர் வாழ வழிகாட்டுகின்றது. ஆனால் எம்மில் எத்தனைபேர் எமது மதத்தின் வரலாற்றை , கலாசாரத்தின் வரலாற்றை பற்றி சிந்திக்கின்றோம். முருகன் தமிழ்க்கடவுள் என்பது நிரூபிக்கப்படும் பொழுதுதான் தமிழர் ஒரு நாட்டினம் என்பது நிரூபணமாகும். எல்லா மதங்களிலும் அவற்றின் செயற்பாட்டு நிலையில் குறைகள் நிறைகள் இரண்டும் உண்டு. அண்மையில் நிர்குணப்பிரம்மம் சற்குணப்பிரம்மமாக மாறுகிற நிலையையே குறைபாடுள்ள நிலையாக தத்துவார்த்த ஆய்வாளர்கள் கருதுவர். ஆகவே மதவழிப்பட்ட நிலையில் இறைவன் பல பெயர்பெறுவதும் பற்பல வழிபாடுகள் அவனுக்குச் செலுத்தப்படுவதும் சகஜம். ஆயினும் ஒர் உண்மையான இந்து வுக்கு எல்லா உருவிலும் முழுமுதற்கடவுளைக் காணும் பக்குவம் உண்டு. ஆனால் அதேவேளை ஒர் இந்துவாக வாழும் தமிழனுக்கு தன் கலாச்சாரவரலாற்றை, மொழியியல் வரலாற்றை, இலக்கிய வரல வெளிப்படுத்த வேண்டிய கடமையும் உண்டு. ஆகவே முருகன் தமிழ்க்கடவுள் என அடித்துக்கூறுவது மதவெறியல்ல- வரலாற்று உண்மை. நான் கிறிஸ்தவனாக வாழ்வது எண் செல்நெறி. ஆனால் என் இனத்தின் ஆன்மீகத்தலைவனாக முருகன் நிற்பது வரலாற்று நெறி. அதனை ஏற்று எந்தத் தமிழனும் தன் கலாசாரத் தன்மையை வெளிப்படுத்த முயல்கையில் முருகன் தமிழர் அனைவருக்கும் தமிழ்க்கடவுளாக திகழ்கிறான் என்பது இலக்கியல் யதார்த்தமாகின்றது.
அருளுரை
நாம் என்ன என்னவோ பண்ணுகிறோம்.நல்ல காரியம் பண்ணுகிறோம், தப்புக் காரியம் பண்ணுகிறோம். இவை எல்லா வற்றுக்கும் தகுந்தபடி நமக்குப் பலனைக் கொடுப் பதும் ஈகரன் தான். கடமையைச் செய்யவேண்டியது தான். அதற்குமேல் தானம், தர்மம் இவை போன்றவைகளைச் செய்ய முடியாவிட்டால் பெரிய தோஷம் என்று சொல்ல முடியாதுதான்
- காஞ்சிப் பெரியவர்

வைகாசி-ஆனி 1994 0.
திருமுறைகளை ஒதும் முறை
திருமுறைகள் பன்னிரண்டு ஆகும். அவைகளை ஒதுவோர் ஸ்நானம் செய்து, தோய்த்து உலர்ந்த வஸ்திரங்களைத் தரித்து, பசுவின் சாணத்தினால் மெழுகப்பட்டு காய்ந்ததும்நல்ல வெளிச்சமுள்ளதுமான ஓர் இடத்தில், வடக்கு அல்லது கிழக்கு பார்த்து சம்மணங்கட்டி நிமிர்ந்து உட்கார்ந்து திருநீற்றையும்- உருத்திராக்கங்களையும் விதித்த முறையில் தரித்து திருமுறை நூல்களையும் - திருநீற்றுப் பெட்டியையும் எதியில் ஒரு பீடத்தில் வைத்து இரு கரங்களையும் கூப்பி முதலில் விநாயகரையும் இரண்டாவதாக சபாநாயகரையும் மூன்றாவதாக சிவகாம சுந்தரியையும் நான்காவதாக சுப்பிரமணியரையும் அதன்பின் சமயகுரவரையும் திருத்தொண்டரையும் சிந்தித்து துதித்து பிறகு அகத்திய முனிவரால் . ஆய்ந்தெடுக்கப்பட்ட திருப்பதிகங்கள் இருபத்தைந்தையும் ஒதிக் கால அவகாசத்திற்குத் தக்கபடி மற்ற திருப்பதிகங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவைகளை வரிசையாக ஒதி முடிக்கவேண்டும்.
இந்த 25 பதிகங்களையும் ஓத இயலாதவர்கள் நேரமில்லாதவர்கள் அவற்றில் ஒவ்வொன்றின் முதற்
பாசுரத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற பாசுரத்தையேனும், ஒதலாம். ஒவ்வொரு பதிகத்தையும் துவக்கும்போதும்முடிக்கும்போதும் திருச்சிற்றம்பலம் என்று மறவாமல் கூறவேண்டும். ஒவ்வொரு திருமுறையின் இறுதியிலும் நெற்றியில் விபூதி தரிக்கவேண்டும்.
ஆதாரம்-ஆசார ஒழுக்கமுறை-நூல்

Page 13
56}öFID சித்திரை-ை
செஞ்சொற்கவிதா சிரோமனி" பிரம்மழறி. துன்னைபூர் ராம்.தேவலோகேஸ்வர முர்தேவிகருமாரி அம்பாள் பூஜயப்ப சுவாமி திருக்கோவி
இயற்கை எழில் தன்னகத்தே கொண்டு விளங்கும் லங்காபுரித்தீவினிலே தென் திசையால் வணிகர்களும், செல்வந்தர்களும் நிறைந்து வாழும் இலங்கையின் தலைநகராம் கொழும்பு மாநகரினிலே "கொள்ளுப்பிட்டி" எனும் பதியினிலே ஆர் ஏடிமெல் மாவத்தை எனும் பெருவீதியினிலே "அஸ்ரல் எனும் பெயருடன் விளங்கும் தொடர்மாடி கட்டிடத்தினில் 9 ஆவது தளத்திலே சர்வலோக நாயகி அன்னை பூரீதேவி கருமாளி அம்பாள், பூரீவிநாயகர், பூgஐயப்பசுவாமி, பாலசுப்பிரமணியர், பைரவர், நாகர், சண்டேஸ்வரி, முதலான மூர்த்திகள் அழகாக பிரதிஷ்டை செய்யப்பட்டு எழிலாக இன்று ஆலயம் மிளிர்கின்றது.
நீதியாவிலே சென்னை л ಙ್ கோவில் ன்ேகுட்டியில் CiTGTEGLOTE டெல்லியில் 4ஆவது மாடியிலே முருகன் கோவில் என்ற வரிசையில் இலங்கையில் முதன்முதலாக 9 ஆவது மாடியிலே காண்போரைக் கவர்ந்திழுக்கும் வண்ணம் அழகான சிற்ப வேலைப்பாடுகளுடன் அடக்கமாக ஓர் திருக்கோயில் என்ற பெருமை இவ்வாலயத்திற்கு உண்டு. இந்த ஆலயத்திற்கு ஏறிச்செல்லும் போது உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு செல்லும் பிரமை எல்லோர் மனதிலும் ஏற்படும். படிவழியாக உள்ளே சென்றதும் திருப்பாற்கடலிலே தோன்றிய "திவ்ய தேவியான பூரீமஹாலசஷ்மி செந்தாமரை மீது அமர்ந்திருக்க, கீழே தண்ணீர் தடாகம் தடாகத்திலுள்ளே தேவியை சுற்றி நாற்புறமும் "நாணயங்கள் போடப்பட்டு இருக்கின்றது. மஹாலகூழ்மியை வணங்கி கோவிலுக்குள்ளே சென்றதும் வலது புறத்திலே விக்கினம் தீர்க்கும் விநாயகர் கருவறையிலே சிரித்தமுகமுடைய சிவகாம சுந்தரியாம் பூரீதேவி கருமாரி அம்பாள் இடது புறத்திலே பூரீபாலசுப்பிரமணியர் அம்பாள் தேர் எதிரே சிம்மம், பலிபீடம் ஈசான மூலையில் பைரவர் நாகதம்பிரான் பிரகாரத்தை சுற்றிவந்தால் கோமுகை பக்கத்திலே தியானத்தில் இருக்கும் சண்டேஸ்வரி . இதற்கு அப்பால் வலது புறத்திலே 18 படிகளுடன் சபரிமலை சாஸ்த்தா கோவில் போல் அமைப்பு கொண்ட பூரீதர்மசாஸ்த்தா திருக்கோவில். ஆலயத்திலே மேற்கு வீதிப்பக்கமாக "சமுத்திரா தேவியின் ஆனந்த திருக்கூத்து என்றும் ஓயாத அலையுடன் வானோடு நிற்கும் நீலக்கடல் மற்றும் நாற்புறமும் வானொலி, தொலைக்காட்சி கோபுரங்களும், ஆலய கோபுரங்களும், தொடர்மாடி கட்டிடங்களும் "பச்சைபசேல்" மரங்களும் இனிமையான காட்சியாகும். ஆலயத்தின் உள்ளே சென்றதும் ஓயாத தென்றலாய் வாயுபகவான் சாமரை வீசிக்கொண்டிருக்கின்றார். அங்கு ஒரு நிமிடம் நின்றால்போதும் மனதிற்கு அமைதி கிடைத்துவிடுகின்றது. 03.12.1993 அன்று மஹாகும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
 

வைகாசி-ஆனி 1994 II
19.01.1994அன்று மண்டல்ாபிஷேக பூர்த்தியும், ரத பவனியும் மிக சிறப்பாக நடைபெற்றது. இப்போது நித்திய நைமித்தியங்கள் சீர்பட நடக்கின்றன. கும்பாபிஷேகவிழாவினை நயினை சிவாசார்ய சுவாமிநாத பரமேஸ்வரக்குருக்கள், சென்னை தாம்பரம் முத்துகுமாரசுவாமி குருக்கள், சிவபூரீ யூரீவத்ஸ் கே. பீ ராமநாதக்குருக்கள், பிரம்மg விஸ்வநாராயணசர்மா இன்னும் பல சிவாசாரிய பெருமக்கள் சிறப்பாக நடாத்தி வைத்தார்கள். இந்த ஆலயத்தை ஆகம முறைப்படி கட்டி சிறப்பாக கும்பாபிஷேகம் நடாத்தி நித்திய நைமித்தியங்களையும் சீர்பட நடக்க ஆவன செய்த ஆலய நிர்வாகத்தர் தேவிதாசன் திரு செ. செல்வக்குமார் (J.P) அவர்களுக்கும் அம்பாள் கருணை நிச்சயம் கிடைக்கும்
என்பது திண்ணம். இப்படியோர் ஆலயம்
研 Ö (W) கிடைத்தது சைவபெருமக்களுக்கு ஒரு
வரப்பிரசாதமே. "அளப்ரல் மாடியில் மேஷம் கருமாரித்தாயை. தருமநெறி தழைத்தோங்க தரணிக்கு அருள்சுரக்க பருவ முகிழ் தவறாது பொழிய கருணையுடன் வரம்கொடுக்க அருவ உருவமாய் அஸ்ரல் மாடிதனில் மேவியருளும் கருமாரி தாயே நின் திருப்பாத கமலம் சரணம்மா. என மனமுருகி வணங்கி கருமாரியின் கருணை கடாஷம் பெறுவோமாக!
"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்
R

Page 14
கலசம் ༣ சித்திரை-6ை
ஆடலான் திருவடியை அமைத்தது யார்? எங்கே? எப்போது? ஏன் அவ்வுரு ஆடுகின்றது? இப்படியான கேள்விகளுக்கு விடைகாண முயன்றதாற் பிறந்ததே இந்த ஆடலான் வரலாறு. நாம் தமிழர்கள் ஆனால் எங்கள் சரித்திரம் என்ன என்பது எங்களுக்கு தெரியாது தெரியவும் கூடாது என்று கங்கணம் கட்டி வாழும் கூட்டத்தார் ஒரு புறம் இருக்கப் பழங்கதை பேசிப்பேசியே தமிழன் அழிந்தான் என்று புலம்புவோர் ஒரு புறமிருக்க பழமை பேசி செழுமை தேடு" என்னும் முதுமொழிக்கிணங்க இந்த ஆடலான் வரலாற்றின் வாயிலாக தமிழர் வாழ்வின் பொற்காலத்தை, தொண்மையை சிறிது எடுத்துக் காட்டப்போகின்றேன்.
இதிலே முழுமையாகத் துலங்கப் போகின்றவர்கள் ஈழத்தமிழர்களே. இன்று உற்றர் பெற்றர் இன்றி வீடற்று, நாடற்று, மாற்றான் நாட்டு மண்ணிலே சிலப்பதிகாரம் கூறும் "புலம்பெயர் மாக்கள் போல் வாழும் நிலை வந்து விட்ட போதும் ஈழத்தமிழர்களின் அறிவியல் (விஞ்ஞான) அருளியல் (சமய) தத்துவ விளக்கங்களை உலகுக்கு எடுத்தியம்ப இருப்பது இந்த ஆடலான வடிவான நடராஜத்திருவுருவமே.
நடராஜ வடிவத்தை உலகுக்கு முதன் முதல் அறிமுகம் செய்தவன் மயன் என்னும் பழந்தமிழ் சிற்பி. இவன் ஓர் அரசன். ஈழத்தின் வடமேற்கே உள்ள மாந்தையை தலைநகரமாகக் கொண்டு உலகின் வடமேற்குப் பாகத்தை ஆண்ட தமிழ் அரசன். ( An Historical
 
 

வகாசி-ஆனி 1994 12
Political and statistical Account of Ceylon - by Charles Pridham, p. 6)., filifuti by H.G.Wells) 6 si6), Ivisool is , மாந்தைப்பள்ளு என்பனவும், மயன் மாந்தையை ஆண்டதை
எடுத்துக் கூறுகின்றன. இவன் வழித்தோன்றலான நல்லியக்கோடன் இலங்கையை ஆண்டதை
"நன்மா இலங்கை
மன்னநள்ளு
. மறுவின்றி விளங்கிய స్త్రీక్షణ్ }ဝှိုဋ်၊ வடுவில்வாய்வா
葱 హ్లాస్గఢ x ளுறுபுலித்துப் பிணி
**میں چیخ {?
ஒவியர் பெருமகன் என சிறுபாணாற்றுப்படை புகழ்கின்றது. 'தமிழ்மொழிக்கு அகத்தி
யனைப்போல சிற்பக்க
லைக்கு மயனே முதலாசிரியான் ஆவான். இவன் இயற்றிய "மயமதம் எனப்படும் சிற்பநூல் அறிஞர்களாலும், சிற்பிக ளாலும் இயன்றளவும் போ
" జీ ፰ዏ ற்றிப் பின்பற்றப்படுகின்றது.
(சிற்பச் செந்நூல். )
{{ (/()\ மயன் படைப்பாற்றல் இயற்
ቡ
ఔ
கையாகக் கைவரப் பெற்ற
ஓர் உன்னத சிற்பி. அவன் அன்று ஈழத்தின் மாந்தையிலே (திருக்கேதீஸ்வரம்) உருவாக்கிய ஆடலான் (நடராஜ) திருவுருவம் இன்று உலகம் போற்றும் ஓர் அற்புதச் சிற்பவடிவமாக மிளிர்கின்றது. ஆடலான் வடிவத்தை மயன் அமைத்தான் என்பதற்கு அவனின் சிற்ப இலக்கண நூல்களே சாட்சி. இத்தகு எழில்மிகு வடிவத்தை ஒரு தமிழனாக மயன் உருவாக்கினான் என்றால் அவன் : , - +

Page 15
Ꮽ56ᎠᏧ1Ꭵ5 சித்திரை-வைச
காலத்திற்கு முன் தமிழர் கலாச்சாரம் எவ்வளவு உன்னத நிலையில் இருந்திருக்க வேண்டும். அதுவும் ஈழத்தில், இது ஆராயப்பட வேண்டிய விடயம்.
அவன் எவ்வாறு இந்த நடராஜ வடிவத்தை ஆக்கினான் என்பதை இன்றைய பல விஞ்ஞானக் கருத்துக்களுடன் எமக்குக் கூறுகின்றான். எல்லாப் பொருள்களிலும் உள்ள அணுவானது ஒரு கன சதுர வடிவாக இருக்கின்றது. அணுவுக்குள் மிளிர்வது (பிரகாசிப்பது) ஒளியே. இவ்வொளிக்கட்டியைச் சிற்சபை அல்லது சிற்றம்பலம் என்றும் இதன் உள்ளே இருக்கும் ஒளியை, மூலம் (மூலப்பொருள்) என்றும் மயன் சொல்கின்றான். இவ்வொளி ஒடுங்கி விரியும் தன்மையானது. இந்த மூலப்பொருள் இடம் இருந்து வலமாகச் சுழல்கின்றது. இச்சுழற்சியை அவன் காலம் என்ற சொல்லால் அழைக்கின்றான். இக்கால ஓட்டமானது ஒரே சீராக நடைபெறுகின்றது என்றும், அந்த சீரான ஓட்டத்தை சீலம் என்றும் இயம்புகின்றான். இந்த சீரான அணுக்களின் சேர்க்கையால் பல வடிவங்கள் உருவங்கள் பொருட்கள் தோன்றுகின்றன எனவும் அவற்றைக் கோலம் எனவும் குறிக்கின்றான். இந்தக் கோலங்களே ஞாலத்தைத் தோற்றுவிக்கின்றன என்றும் முடிவாகக் கூறுகின்றான். அதாவது அணுவில் உள்ள மூலம் கால ஓட்டத்தாற் சீலமாகி அச்சீலம் கோலங்களை உருவாக்கி ஞாலத்தை ஏற்படுத்துகின்றது என்பதை மிக விரிவாக விளக்குகின்றான். இத்தகைய விஞ்ஞானக் கருத்துக்களைக் கூறிய மயன் அடுத்து மூலம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள ஒரு விசையை ஏற்படுத்தி காலத்தை (காலமாக்கடவுளை) உண்டாக்கி அதனைக் கட்டுப்படுத்தி சீலமாக்கி அதிலிருந்து கோலங்களை உருவாக்கி ஞாலங்களை படைத்துக் கொள்கின்றது என்றும் கூறி மூலப்பொருளே ஞாலமாக வியாபிக்கின்றது என்னும் சமய தத்துவத்தையும் எமக்குத் தருகின்றான். அணுவினுள் இருக்கும் ஒடுங்கி விரியும் ஒளியின் சீரான நடுக்கத்தை ஆடல் என்று கூறி அந்த ஆடலுக்கு மயன் கொடுத்த வடிவமே உலகப் புகழ் பெற்ற ஆடலான் திருவுருவம். செயற்திறன் மிக்க இந்த அற்புதக்கலைஞன் விஞ்ஞான சமயக் கொள்கைகளை ஒன்று சேர்த்தே ஆடலான் ஆகிய நடராஜத்திருவுருவத்தை உலகுக்கு ார்ந்திருக்கின்றான்.
சிற்றம்பலத்தின் உள் நின்று நடம்புரியும் ஒளி நடராஜனாக விளங்கும் பரம்பொருளை மயனால் உலகம் அறிகின்றது. ஐந்தொழிலையே தனித்தொழிலாகச் செய்யும் மூலத்தின் வடிவமே தான் அமைத்த ஆடலான் திருவுருவம் என மயன் சொல்லி மகிழும் திறம் போற்றத்ததக்கதொன்றாகும். இவ்வுண்மைகளை மயன் எமக்காக ஆக்கித்தந்த ஐந்திரமதம், மயமதம், போன்ற நூல்களை ஆராய்ந்து அறியுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவன் சிற்ப நூல்கள் மட்டும் எழுதவில்லை. தமிழ் இயல்செந்நூல், ஏழிசைச்செந்நூல், ஓவியச்செந்நூல், வானியற்செந்நூல் மரக்கலச் செந்நூல், பிரணவவேதம் போன்ற பல நூல்களை எமக்காகச் செய்து தந்திருக்கின்றான். அவன் எக்கலையிலும் வல்லவன் என்பதை அவன் எழுதிய நூல்களினால் அறியலாம். ஈழத்தமிழ் மன்னனான மயன் இசையும் உயிர்ப்பும் நடமும் உணர்வும் காலமும் விளக்கும் நடராஜத்திருவடியை மாசிமகம் என்றும் முழுமதித் திருநாள் அன்று இவ்வையத்திற்கு உவந்தளித்தான். தமிழர்கள் மாசிமகத்தை ஒரு பெருநாளாக, திருநாளாக கொண்டாடக் கடமைப்பட்டிருக்கின்றார்கள் என்பதை இங்கு நான் நினைவூட்ட விரும்புகின்றேன்.

காசி-ஆனி 1994 13
தமிழர்களின் கலாசாரத்தின் பிறப்பிடமாக ஈழமும் ஈழத்தமிழரும் விளங்கினார்கள் என்பதற்கு ஈழத்தமிழ் அரசனான மயன் அமைத்த ஆடலான் சிலையும் நூல்களும் சான்று பகர்கின்றன. ஆடலானைப் பணிந்து மயன் நாமம் பாடுவோமாக
சிவபெருமானுக்குச் செய்யும் சிறந்த சேவை!
மனத்துய்மையின்றி ஒருவன் கோவிலுக்குள் சென்றால் அவன் ஏற்கனவே செய்துள்ள பாவங்களோடு மற்றொரு பாவத்தையும் செய்தவனாகின்றான். ஆகவே அவன் தன் வீட்டை விட்டுக் கோவிலுக்குப் புறப்படும்பொழுது இருந்ததைவிட இன்னும் இழிந்த நிலையில் தான் ஆலயத்தினின்றும் வீட்டிற்குத் திரும்புகின்றான். தீர்த்தமாடும் ஷேத்திரத்தில் அநேக புனித வஸ்துக்களும் பரிசுத்தமான மக்களும் உறைகின்றனர். சாதாரணமான ஓர் இடத்தில் புரிகிற பாவத்தை எளிதில் போக்கிக் கொள்ளமுடியும். பாவத்தைப் போக்க வழியேதுமில்லை. எல்லாவித வழிபாட்டின் சாரமாவது துய உள்ளத்துடன் பிறருக்கு நன்மை புரிவது தான். ஏழை எளிய மக்கள், நோயுற்ற மக்கள் இவர்களிலே சிவத்தைக் காண்பது தான் உண்மையான சிவ வழி. விக்கிரகங்களில் மட்டும் சிவனைக் காண முயல்வது வழிபாட்டின் பூர்வாங்கமேயாகும். கோவிலில் மட்டும் சிவத்தைக் காண விழைகிறவனைக் காட்டிலும் ஜாதி மதம் மற்ற யாதொரு பேதமுமின்றி ஓர் ஏழை மனிதனிடம் கடவுளைக் கண்டு அவனுக்குச் சேவை செய்ய விரும்புகிற அவனுடைய படைப்புக்களாகிய உலகத்தில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் சேவை செய்ய முற்படவேண்டும். சிவனடியார்களுக்குச் செய்யும் சேவை சிவபெருமானுக்குச் செய்யும் சிறந்த சேவையென சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆதலால் இந்த உண்மையை நீங்கள் உணரவேண்டும்.
-பூரீ விவேகானந்த சுவாமிகள்

Page 16
கலசம் சித்திரை-ை
"என் அடுத்த பிறவியிலாவது நான் ஒரு செல்வந்தனாகப் பிறக்க
விரும்புகிறேன்.
"என் அடுத்த பிறவியில் இங்கிலாந்து நாட்டில் செல்வந்தர் குடும்பத்தில் ஒரு நாய்க்குட்டியாகப் பிறக்க விரும்புகிறேன்."
"என் அடுத்த பிறவியில் இனசமத்துவம் நிலவும் இலங்கை நாட்டின் ஜனாதிபதியாகப் பிறக்க விரும்புகிறேன்.
இப்படியெல்லாம் விரும்புபவர்கள் மிகச்சிலரே. இந்த மானிடப்பிறவியில் அல்லற்பட்டு அவதிப்பட்டு மூப்பு, பிணி, சாக்காடு ஆகியவற்றை கண்டு சலிப்படைந்ததும் ஆன்மீக உணர்வு பலருக்குத் தலைதூக்குகிறது. ஆண்டவனின் நினைப்பு வந்துவிடுகின்றது. 'சம்சாரம் என்ற சாகரத்தில் நான் உழன்றது போதும். போதுமடா சாமி. உன் பாதகமலங்களின் அருகே வீற்றிருந்த நான், மீண்டும் உன் பாதகமலங்களையே வந்தடைய விரும்புகிறேன். என்று தான் அந்தப் பரமனை நாடுகிறது எங்கள் மனம்.
சம்சார சாகரத்திலிருந்து விடுபட்டு பரமன் பாதத்தை, மோட்சத்தை நாமாக அடைந்துவிட முடியுமா? முடியாது முற்பிறவியில் செய்த
 

வகாசி-ஆனி 1994 14
ஊழ்வினைகளின் காரணமாக இப்பிறவியில் வந்து வினைகளை அனுபவிக்கின்றோம். இப்பிறவியில் அறிந்தோ அறியாமலோ நாம் செய்த தவறுகளுக்காக அடுத்த பிறவியில் பலனை அனுபவிக்கப்போகின்றோம் . இந்து மதத்தின் மாபெரும் தத்துவம் இது. அப்படியானால் பிறப்பு அறுக்கும் அந்த பிஞ்ஞகனின் கழல்களை நாம் எப்போது போய் அடைவது? அதற்குத் துரித வழி ஏதும் இருக்கிறதா? இருக்கவே இருக்கிறது. பதிலை வேத வியாச மாமுனிவரின் திருக்குமாரர் பூரீசுகள் வழங்குகின்றார். "கலியுகத்தில் களங்கமான மனதுடன் வாழ்க்கை நடத்துவோரும் பாவத்திரவியங்களைச் சேர்த்து அவற்றுடன் வாழ்வோரும் முற்பிறவியின் கர்மாவினால், இப்பிறவியில் கஷ்டங்களை அனுபவிப்போரும் தமது துன்பங்கள் நீங்க வேண்டுமாயின் இறைவனின் திருநாமத்தை ஒரு குருவின் திருவருளோடு பல தடவை உச்சரித்து நாம சங்கீர்த்தனம் செய்ய வேண்டும்.ஆனால் நாம் வளர்ந்து பெரியவர்களானதும் அந்த வரிசையை, அந்த
/് N
காலையிலும் மாலையிலும் கைத்தாளம் கொட்டி
இறைவனின் நாமத்தை உரத்துப் பல தடவை உச்சரி. நாம சங்கீர்த்தனம் செய். ஒரு பெரிய மரத்தின் கீழ் நின்று கைகொட்டினால் மரத்தில் நிற்கும் பறவைகள் பறந்துவிடும். அதேபோல கையை கொட்டி நாம சங்கீர்த்தனம் செய்தால் உடல் என்ற மரத்தில் குடிகொண்டுள்ள தீய எண்ணங்கள் பறந்து போய்விடும் பகவான் பூரீராமகிருஷ்ணர்- リ- ܓܠ ஒழுங்கை மறந்து எமது மனம் போன போக்கில் நடக்கின்றோம்.
எம்மை ஈன்ற அன்னை கருத்தரிப்பதற்குக் காரணமாக இருந்தது யார் என்பது எமக்குத் தெரியாது. அதனைப் பிறர் சொல்லி நாம் அறிய முடியாது. எமது அன்னை ஒருத்திதான் அவரைக் காட்ட முடியும். "கண்ணே இதுதான் உன் அப்பா" என்று அவள் காட்டிய பின் தான் நாம் நமது பிதா யார் என்று அறிகின்றோம். அதே போல எமது மானுடப்பிறவிக்குக் காரணமான அந்தப் பரம் பொருளை,

Page 17
கலசம் சித்திரை-ை
இறைவனை நாம் நேரடியாக அறியமுடியாது. ஒரு குருவின் துணையுடன் அவரது வழிகாட்டலுடன் மட்டுமேதான் நாம் இறைவனை அடைய முடியும் என்பது எமது சமயத்தின் மூலக்கொள்கை.
நான் வெள்ளிக்கிழமை தோறும் முருகன் கோவிலில் பால் அபிஷேகம் செய்கின்றேன். எனக்கு முருகன் அருள் கிடைக்க மூன்றாம் மனிதர்- இடையில் ஒரு குரு- என்ற புறோக்கர்-தரகள் தேவையில்லை என்று கூறுவோரைப் பார்த்திருக்கின்றேன். குரு என்ற பெயரில் மனிதரை மனிதர் நிலத்தில் வீழ்ந்து வணங்குவதை நான் எதிர்க்கின்றேன். அதுவும் குரு என்ற மனிதருக்கு கால் கழுவி, தீபமேற்றி, பாதபூஜை என்ற பெயரில் வழிபடுவதை நான் வெறுக்கின்றேன், என்று சொல்லும் பலரையும் நாம் சந்தித்திருக்கிறோம். உலகை இரட்சிக்க வந்த மகான் இயேசு கிறிஸ்து முழந்தாளிட்டு நின்று, தன்னிடம் வந்தோரின் பாதங்களை நீரால் அலம்பித் 'துடைத்து வரவேற்றதை இவர்கள் அறியார்கள் போலும்
"இனிப்பான பண்டங்களை நான் கேட்டுக் கொண்டிருக்கின்றேன். என் அம்மா கசப்பான மக்னீசியா மருந்தைத் தருகிறாளே?" என்று குழந்தை கோபப்படுகிறது. குருவருள் என்ற அந்த மருந்து உள்ளே போனதும் ஆணவம் என்ற மலம் நீங்கிவிடும். குழந்தையின் உடல் நலமாகிவிடும், என்பதை குழந்தைகள் அறிவதில்லை. மாறாக அஞ்ஞான இருளினின்று கூக்குரலிட்டு தமது குரலைக் கேட்டுத் தாமே பயங்கொண்டு வாழ்கின்றனர். "குரு" எனற மாபெரும் தத்துவத்தை உணரத்தான் பகவானே. பூரீகிருஷ்ண பரமாத்மாவாக- தேரோட்டியாக, வந்து அர்ச்சுனனுக்கு ஒரு ஆசிரியனாக- குருவாக மாறிக் கீதையை உபதேசித்தான். குருவின் பாததரிசனம் பாவவிமோசனம் என்பார்கள். இராமபிரானின் பாதங்களில் இருந்த பாதுகைகளை தலையில் சுமந்து சென்ற பரதன் அவற்றை அரியணையில் வைத்து ஆட்சி நடத்தினான். ஒரு குருவுக்கு நாம் அர்ப்பணிக்கும் பொருட்கள் இறைவனையே நேராகச் சென்றடைகின்றன. காரணம் இறைவன் குருவாக வந்து எமக்கு ஞானஒளியேற்றி உள்ளொளி பரப்பி உலப்பிலா ஆனந்தம் தருகின்றார்.
பன்னரும் வேதங்கள் படித்து உணர்ந்தாலும் குருவருள் இல்லையேல் திருவருள் இல்லை. ஆயகலைகள் அறுபத்துநான்கினையும் ஒருவன் கற்றுணர்ந்து மேதாவி ஆகினாலும் குருவருள் இல்லையேல் அவன் உய்வடைய
(pL4ELITS). இலங்கைத் தமிழர்களை விடத் தென்இந்தியத் தமிழ் மக்கள் மத்தியில் குருபக்தி வேரூன்றி இருப்பதை நாம் கவனிக்கலாம். ஆன்மீகத்துறையில் மட்டுமல்ல கலைத்துறையில், கர்நாடக சங்கீதத்துறையில், பரதநாட்டியத்துறையில் தமது குருவை உயிரினும் மேலாக மதிக்கும் கலைஞர்கள் தமது துறையின் உச்சிக்கே செல்வதை நாம் காண்கின்றோம். தென்னிந்திய கர்நாடக இசைக்கலைஞர்கள் தாம் யாருடைய சிஷ்யர், தமது குரு யார், என்று பகிரங்கமாக மேடையில் அறிவித்து மரியாதை செலுத்திப் பெருமை அடைகின்றார்கள். அமரர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் தமது கச்சேரிகள் அனைத்திலுமி, தமது குருநாதர் திருப்பாம்பரம் சுவாமிநாதனுக்கு அஞ்சலி செலுத்தும் ஒரு பாடலைச் சேர்க்காமல் கச்சேரி நடத்தமாட்டார். இன்றைய தலைமுறையினரில் பாடகி பூரீமதி சுதா ரகுநாதன் அவர்கள் புகழேணியில் துரிதமாக ஏறியமைக்கு காரணம் அவரது குருபக்தியும், அவரது குரு- அமரத்துவம் அடைந்த டாக்டர் எம்

வகாசி-ஆனி 1994 15
எல் வசந்தகுமாரி அவர்களின் ஆசீர்வாதமும் தான். பரத நாட்டிய நிகழ்ச்சி ஒன்றில் தனது குரு தரையில் அமர்ந்து மற்றொரு மாணவிக்கு நட்டுவாங்கம் செய்யும் நிழ்ச்சியைப் பார்க்க வந்தார், ஒரு பிரபல நாட்டிய நர்த்தகி. "என் குருநாதர் தரையில் கம்பளத்தில் இருக்க நான் ஏன் சபையில் நாற்காலியில் இருக்க வேண்டும்? என்று கேட்டுத் தானும் தரையில் உட்கார்ந்து நடனநிகழ்ச்சியை ரசித்ததை, நான் நேரிற் கண்டேன். அவரது குருபக்தியைக் கண்டு மகிழ்ந்தேன். தமது நாட்டிய அரங்கேற்றத்தில் தில்லானா மங்களத்தின் போது அவையோர் முன் குருவின் பாதங்களை நமஸ்கரித்து “டா டா காட்டிவிட்டு ஓடி மறையும் இன்றைய நர்த்தகிகள் பலர் அன்றிரவு தொடக்கமே குரு நிந்தனையில் ஈடுபட்டு குருவின் மனதைப் புண்படுத்துகின்றார்கள். இன்னும் சிலர் குருவுக்கு எதிராகப் புதிய கடை தொடக்குகின்றார்கள். குருவின் மனதை நோகச்செய்வது அடுக்குமா? குரு நிந்தனை மகாபாவங்களில் ஒன்றல்லவா. , மகாபாரதத்தில் துரோணர் மீது அர்ச்சுனன் கொண்டிருந்த குருபக்தி, துரோணர் மீது ஏகலைவன் கொண்டிருந்த மானசீக பக்தி இவற்றை எல்லாம் அறியாமல் நடக்கின்றார்கள், இன்றைய தலைமுறை சிஷ்யகோடிகள்.
- ...
ஒரு குருவை அடையாமல் திருவருள் கிட்டாது என்று எமது வேதநூல்கள் சொல்கின்றன். அப்படியானால் ஒரு குருவை நாம் பெறுவது எப்படி? தகுந்த குருநாதர் கிடைப்பது இறைவனின் செயல்தான். தெய்வத்தின் அருளை. ஞானத்தை அடைய வேண்டும் என்ற ஆவல், வேட்கை ஒருவனுக்கு இருந்தால் தெய்வமே சத்குரு ஒருவரை அவனிடம் அனுப்பிவைக்கும். ஒரு குருவின் பாதங்களில் பணிந்து பாதசேவை செய்வதன் மூலமே ஒரு சிஷ்யன் உண்மையான ஞானத்தைப் பெறமுடியும் என்று வலியுறுத்துகிறது பகவத்கீதை, "குருநாதரின் பாதார விந்தங்களில் ஒருவனுக்கு பக்தி ஏற்பட்டுவிடுமானால் அதற்குமேல் அவனுக்குக் கிடைப்பதற்கு என்ன இருக்கிறது?.
என்ன இருக்கிறது?
என்ன இருக்கிறது?" என்று மூன்று தடவை அடித்து கேட்கிறார் ஆதிசங்கரபகவத் பாதர் "ஆண்டவனை வணங்குவதைவிட அவனது அடியாராகிய குருவை வணங்குவது சிறந்தது. ஆண்டவனை வணங்கினால் அவன் காணி, நிலம், காசு, பொருள் தரக்கூடும். ஆனால் குருவை வணங்கினால் அவர் அந்த ஆண்டவனையே எமக்குத் தந்து விடுகிறார்" என்று வலியுறுத்துகின்றார் கபீர்தாசர். குருநாதரின் அருள் எமக்கு இருந்தால் நாம் சாதிக்க முடியாதது ஒன்றுமேயில்லை. நாம் அழும்போது அன்னைபோல அணைப்பவர் நாம் விழும்போது தந்தைபோலத் தூக்குபவர் தோழனைப்போல் விளையாடுபவர் தொழும்போது தெய்வத்தைப்போல காப்பவர் சொந்தம் கொண்டாடி எடுப்பவர்க்கு எல்லாம் சிறுகுழந்தை போல தெரிபவர் இப்படி உலாவும் குருநாதனைப் போற்றி இறையருள் பெற்று இன்புறுவோமாக.

Page 18
கலசம் சித்திரை-ை
ராசி பலன்கள்
L சித்திரைவைகாசி,ஆனி
73.குருக்கள்
மேடம் - அசுவினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதம்
சித்திரை-நிதி விஷயம் ஓரளவுக்கு திருப்தி அளிப்பதாயும் மனநிறைவையும் அளிக்கும். பட்டபாடுகளுக்கு பலனை எதிர்பார்க்கலாம். சவால்களை சந்திக்க உடலும் மனமும் போட்டிபோட்டு ஈடு கொடுக்க வாழ்க்கை ஓரளவுக்கு சந்தோஷமாயும் நிம்மதியாகவும் இருக்கும். வைகாசி- நிதி நிலை மேலும் கீழும் இறங்கி உறுதி பெறும் ஆயினும் கவலையுறத்தேவையில்லை. ஆயினும் உங்கள் வழக்கமான குணமாகிய பிடிவாதம், கோபம், இவைகளைக் காட்டுவது தற்போது மட்டுமல்ல பின்னுக்கும் நட்டம் காட்டக்கூடும். பொறுமை இனிமை இரண்டும் உங்களைக் காக்கும்.
ஆனி-படிக்கவும் (அனுபவம் மூலம்) பணம் பண்ணவும் தகுந்த மாதம். நினைத்ததை நடத்தும் திறன் மனோபலம் ஏற்படும். அனுபவத்தைக்கொண்டு வருங்காலத்தைத் திட்டமிடுதல் நல்லது. மற்றவர்கள் சொல்வதை அப்படியே கேட்டு நடக்க வேண்டாம். வீட்டையும் வேலையையும் கவனிக்க சிலருக்கு சந்தர்ப்பம் உண்டாகும். தொலைபேசியை கவனமாக கையாளுங்கள். பண வரவு கூடும் கற்றத்தர் நண்பர்கள் மூலம் திருமணமாகாதவர்களுக்கு திருமணப்பேச்சுக்கள், புதிய நட்புகள் இவைகளுக்கும் இடமுண்டு.
இடபம் -கார்த்திகை 2,3,4 பாதங்கள், ரோகினி மீருகசிரிடம் 12 பாதங்கள்)
சித்திரை-நீங்கள் சண்டைக்குப்போகும் தொழில் செய்தால் தவிர, சமாதனம் உங்களைத் தழுவி சந்தோஷமடையச் செய்யும். உங்களைத் தேடி ஆட்கள் வருவார்கள். உங்களுக்குத் தவிர்க்க முடியாத செலவும் வைக்கக்கூடும். திருமணம் ஆகாதவர்களுக்கு முக்கியமான சந்திப்புக்கள் வாழ்க்கை தொடர்புகள் ஏற்படலாம். உங்கள் திறமையையும் முயற்சியையும் குறைவாகக் எடைபோட்டு சில சந்தர்ப்ப்பங்களை இழக்க நேரிடலாம். வைகாசி-மனம் சுறுசுறுப்பாகப் பறக்கும். ஆயினும் செய்ய வேண்டியதை சரியாக நினைத்து செயல்ப்பட்டால் கடைசி நேரம் தடுக்க நேரிடலாம். செம்மையான திட்டம் செயலாக்கம் தேவை. தொழில் வியாபாரம் சந்தர்ப்பங்கள் தேடிவரலாம். தவறு செய்தாலும் திருத்த தயங்க வேண்டாம். ஆனி-கஷ்டப்பட்டு சோம்பலுக்கு இடம்கொடாமல் வேலை செய்தால் பலன் கிடைக்கும். வருவாய்க்கு இடமுண்டு. தன்னடக்கம் ஆனால் சுயமரியாதையைக் காத்தல் உங்கள் வாழ்கையை வளம்பெற வைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண வாய்ப்புக்கள் உண்டு. வீடுகளில் சில மனோகர மாற்றங்கள் ஏற்படலாம்.
மிதுனம்-மிருகசிரிடம்3,4ம் பாதங்கள் , திருவாதிரை , புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்.
சித்திரை- கூட்டுறவுடன் கூடிய வேலைகள் உங்கள் முன் தோன்றலாம். இந்தப் பணிகள் சமூக அல்லது கலாச்சாரசேவையாகவும் இருக்கலாம். முயற்சி தகுந்த பயன் அளிக்குமி. ஆனால் இதற்கான ஊக்கத்தையும் ஆக்கத்தையும் நீங்கள்தான் தொடங்கி நடத்த வேண்டும். மற்றவர்கள் சொல்வதற்கு அனுசரித்துக் கீழ்ப்படிவது (அவர்கள் உங்கள் மேலதிகாரியாக இருந்தால்) நன்மை லாபம்
 
 
 

வகாசி-ஆனி 1994 16
தரும். படிப்பு, தொழில், கல்வி சம்பந்தமான துறையில் புதிதாகத் தொடங்க
நல்லமாதம்.
வைகாசி-எல்லோருடனும் ஒத்துழைத்தல், கூடி நடத்தல் இவைகளை உங்கள் மனதில் கொண்டால் நிச்சயம் நன்மையுண்டு. மனவேறுபாடுகள் சண்டைகள் இவைகளைத் தவிர்க்கவும். சாமர்த்தியமான பேச்சும் அன்பான நடவடிக்கையும் லாபம் தரும். ஆனி-மேற்கூறிய புத்திமதிப்படி நீங்கள் நடந்திருந்தால் இப்போது நீங்கள் ஒரளவிற்கு சந்தோஷமாக இருக்க வேண்டும். உடல்நலம், தோற்றம், இவைகளை விருத்தி செய்துகொள்ள இது நல்ல சந்தர்ப்பம். பணவிடயம் இம்மாதம் உங்களை ஏமாற்றலாம். கவனம் தேவை.
கடகம்.புனர்பூசம் 4ம் பாதம், பூசம் , ஆயிலியம்
சித்திரை- உடல் உழைப்பு, உற்சாகமான பொழுதுபோக்கு இவையிரண்டும் கலந்து பிணைந்து வரும் மாதம். உங்களை பலரும் ஒரே சமயத்தில் நெருங்கி வேலை வாங்கலாம். புதிய தொழில்கள், உத்தியோகங்கள் தேடி வரலாம். உங்கள் புகழ் பெருகும். ஆனால் வேலை கூடும்.
வைகாசி- வேலைப்பழு கூடலாம். பொதுச்சேவைகளில் ஈடுபடுபவர்ளுக்கு ஓயாத அழைப்புகள் வரலாம். இந்த அழைப்புகளில் ஒன்று உங்களை தனி மனிதன் என்ற பதவியில் இருந்து குடும்பஸ்தன் என்ற பதவிக்கு தள்ளலாம். வாழ்கையை மாற்றவும். கூடும்கூட்டம் குறையலாம். சிந்தனைக்கு நேரமும் இடமும் அளிக்கலாம்.
ஆனி- இந்த வருடத்தில் மிக நல்ல மாதங்களுள் இது ஒன்று. உங்களை விரும்பி வரவேற்பவர்களையும் ஆதரவு அளிப்பவர்களையும் சந்திக்க நேரலாம். கும்பலுடன் சேர்ந்து கோவிந்தா போட வேண்டி வந்தாலும் சிலருக்கு நீங்கள் தனி ஆளாகத் தெரியாலாம். உங்களைப் பற்றி தப்பபிப்பிராயம் பரவலாம்.
சொல்வதை மற்றவர்களுக்கு விளங்குமாறு தெளிவாகச் சொல்லவும்.
சிம்மம்-மகம், பூரம் உத்தரம் 1 பாதம்.
சித்திரை-உங்கள் எண்ணங்கள் செயல்ப்பாடுகள் தெளிவ டைய உங்கள் நண்பர் ஒருவர் உறுதுணையாக அமை யலாம். குடும்பம் மனமகிழ்ச்சிக்கு இடமுள்ளதாக அமை யாது போகலாம். பெரிய இடம் தேடலாம். எதையும் சாதிக்கும் மனோசக்தியும் செயலாற்றமும் உண்டாகும். வைகாசி- சமூக சேவை, பொதுசமூக வாழ்வு மிகவும் திருப்திகரமாக அமைய இடமுண்டு. கொண்டாட்டங்கள் விழாக்களில் பங்கு பெற வாய்ப்பு உண்டு. பலரது வேண்டுகோள் உங்களை பேச்சாளர் செயலாளர் ஆக்கலாம்.இந்த நேரம் துணை அற்றவர்களுக்கு வாழ்க்கைதுணை வழங்கும் சந்தர்ப்பம் தே வரலாம். ஆனி-அமைதியாக மெதுவாகத் தொடங்கும்
உங்களில் பலருக்கு படிப்படியாக சுறுசுறுப்புப்பெறும். நட்புகள் மலரவும் அதிகமான தொழில் பொழுது போக்கு இவைகளுக்குரிய சந்தர்ப்பங்களும் வரலாம். தலைமை தாங்க வழி நடத்த புகழ்பெற சந்தர்ப்பம் ஏற்படும்போது உபயோகிப்பது உங்கள்பொறுப்பு .
கன்னி-உத்தரம்2,3,4,ம் பாதங்கள் அத்தம், சித்திரை 12ம் பாதங்கள்
சித்திரை -தொழில்முதலீடு இவைகளுக்கு நல்ல மாதம். இருப்பவை எல்லாவற்றையும் ஒன்றாக முதலீடு செய்யாமல் ஒருபகுதியை முதலீடு செய்வது நல்லது . நீண்ட கால லாபம் வருவாய் இவைகளைக் கவனியுங்கள்.
குறுக்குவழி அதிக லாபம் என்பவற்றில் கவனம்தேவை.

Page 19
கலசம் சித்திரை-வை
வைகாசி-தொழில் வியாபாரம் இவைகள் ஓரளவிற்குத் திருப்தி தரும். அதே வேளை குடும்பம் வாழ்வு,என்று உங்கள் ஈடுபாடு கூட இடமுண்டு. உணர்வுகள் ஒழுக்கத்தையும் தொழிற்கோட்பாடுகளையும் மீறலாம். இது வீடு தொழில் இரண்டிலும் சிறிய பிரச்சனைகளை உண்டாக்கலாம். வாய் கை கவனம். ஆனி- புதிய தொழில்கள் வியாபாரத்துறைகளில் நம்பிக்கையோடு ஈடுபட இது தகுந்த மாதம் . தைரியமாக செயற்படுவதும் நல்லது. ஆனால் குடும்பவாழ்வை ஒதுக்க வேண்டும். எல்லோரும் உங்கள் பங்காளிகள் உட்பட நீங்கள் சொல்வதற்கும் செய்வதற்கும் ஆமாம் போடுவார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம். நல்ல மாதம்,
துலாம்சித்திரை 3,4ம் பாதங்கள். சுவாதி, விசாகம்1,2ம் பாதங்கள்.
சித்திரை-வாழ்க்கையில் உறவுகள் இவை தொழிலாக இருந்தாலும் சரி குடும்பமாக இருந்தாலும் சரி மாற்றத்திற்குரியவையாக அமைய நேரிடலாம். உங்கள் எண்ணங்களும் செயல்களும் மற்றவர்களுடன் இணைந்து செயற்பட அத்திவாரம் இடப்படலாம். இதனால் குழப்பங்களும் சறுக்கல்களும் ஏற்பட இடமுண்டு.
வைகாசி-கடந்த மாதம் ஏற்பட்ட குழப்பங்கள் படிப்படியாக தெளிய இடமுண்டு. நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும் வண்ணம் சந்தர்ப்பங்கள் சவால்விடும். உங்கள் கல்வி உயர்கல்வி உங்கள் வாழ்வில் அநேகருக்கு இடம்பெற வாய்ப்புண்டு. பயனுமுண்டு.
ஆனி-உங்களுக்கு மிக நெருங்கிய ஒருவருடன் மனவேற்றுமை சச்சரவு ஏற்படுவதை தவிர்த்துக்கொள்ளவும். உங்களுக்கு வெற்றி எற்படுவது போல் தோன்றினாலும் முடிவு இரண்டும் கெட்டானாக இருக்கலாம். உங்களையே நீங்கள் ஏமாற்றிக்கொள்ள முயல வேண்டாம்.
விருச்சிகம்-விசாகம்4ம் பாதம், அனுஷம்,கேட்டை
சித்திரை-சுறுகறுப்பு ஒட்டம் இவைகள் உங்கள் உத்தியோகம், வியாபாரம் தொழில் துறைகளில் இடம்பெறும். உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நீங்கள் உபயோகப்படும் காலம். குடும்பம் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்படலாம். பங்காளி ஒருவரின் ஆதரவு உங்களுக்கு கிட்டஇடமுண்டு. மற்றவர்கள் முக்கியமாக பெண்கள் கடாட்சம் உங்களுக்கு ஏற்படலாம். வைகாசி-வேலை, தொழில், உங்கள் நேரத்தை நிறைத் தாலும்கூட வீடு குடும்பம், என்பவையும் உங்களை விடாது பிடித்துக்கொள்ளும், பணம் தாராளமாக செலவுபண்ண இடமுண்டு. கடன்கள் செலுத்தவும் புதிய வாகனங்கள் சேர்க்கவும் இடமேற்படும். குடும்பம் பற்றிய பிரச்சனைகள் இடம்பெறும். ஆனி-மனவேற்றுமை சச்சரவுகளுக்கு இடமுண்டு. ஆயினும் சவாலாக வாழ்க்கை அமையலாம். வேற்றுமைகளை எப்படித் தீர்ப்பது, எந்த அளவிற்கு விட்டுக்கொடுப்பது என்பவை பெரிய பிரச்சனையாக சிலருக்கு அமையலாம். இழப்பு மீட்பு இவைகளைப் பற்றி நண்கு சிந்தித்து செயலில் இறங்குவது நல்லது
தனுசு - மூலம், பூராடம்,உத்தராடம் 1ம் பாதம் சித்திரை-குழந்தைகள் குடும்பம் என்று சந்தோஷமாகப் பொழுது கழிய திருமணமானவர்களுக்கு வாய்ப்பு உண்டு. மணம் ஆகாதவர்களுக்கு மனம் புதிய வாய்ப்புகள் ஏற்படலாம். உங்களில் பலருக்கு உத்தியோகம் சம்பந்தமான வேலைகள் நேரத்தை நிரப்பும்,
வைகாசி-பங்கு சேரல், கூட்டு வியாபாரம் தொடங்க இது நல்ல மாதம். இதுவரையில் பலன் தராமல் இருந்த பங்கு கூட்டு வியாபாரங்களும் உங்களுக்கு பயன் தரும். கூட்டு முயற்சிகள் நல்லபலண் அளிக்கும்.
ஆனி-தொழிலும் குடும்பவாழ்வும் ஒன்றோடு ஒன்று புனைந்து செயற்படும். காதல் விவகாரங்கள் பொழுதுபோக்குகள் என்று உங்கள்நேரம் கழியும்.

காசி-ஆனி 1994 17
சிலருக்கு பகற்கணவுகளிலே பொழுது செல்லும் திடீர் வருமானங்களுக்கு இடமுண்டு.
LnöILm – 2-355IIILL02,3,4L0 UIIöIBlö6II திருவோணம், அவிட்டம்,உம் பாதங்கள்
சித்திரை-சமூகம் குடும்பம் உங்கள'நேரத்தை எடுக்கும். அக்கம் பக்கத்தில் புதிய பழக்கங்கள் காதல்கள் மோதல்கள் இவைகளுக்கு இடமேற்படலாம். குடும்பத்தில் கடமைச் சுமை அதிகரித்தல், ஏற்படும் . தேவைகளை நிறைவேற்ற நேரம் மனம், இவைஇல்லாமல் போகலாம். விட்டுக்கொடுத்தல் நல்லதுயுரிந்து நடத்தல் அதைவிடநல்லது. வைகாசி-குடும்பம் தொழில் இவைகளில் பிரச்சனைகளுக்கு இடமுண்டு. இவைகளின் தேவைகளுக்கு உங்களால் ஈடுகொடுக்க முடியாமற் போக்லாம் சிலருக்கு சில சமயம் தொழில் வேலை இவைகள் குடும்பத்தைவிட மனநிறைவு தரலாம். நண்பர்கள் கற்றத்தார். கைகொடுக்கக்கூடும். தொழில் வேலை இடங்களில் உங்களுக்கு நட்பு புதிய கோணத்தில் நேரலாம். ஆனி-நட்புகளை புதுப்பிக்க , புதிய நட்புகளை வளர்க்க ஏற்ற மாதம். விளையாட்டுத்துறைகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நல்ல மாதம் போட்டிகளில் வெற்றி பரிசு என்று ஏற்படலாம். உடலும் உள்ளமும் நன்கு ஒத்துழைக்கும். கிடைக்கும் சந்தர்ப்பத்தைச் சந்தோஷமாக பயன்படுத்திக்கொள்ளவும்.
கும்பம் - அவிட்டம் 3,4ம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3,ம் பாதங்கள்
சித்திரை-சந்திப்புகள் செய்திகள் தொடர்புகள் இவைகள் உங்கள் நேரத்தை நிறைக்கும். மணமும் உடலும் உற்சாக ப்படுத்தப்படும். உங்கள் ஆக்கபூர்வமான சிந்தனைகளைப் பயன்படுத்த உங்களுடன் ஒத்துழைக்க நண்பர்கள் தோன்றுவர்கள் மாணவர்களுக்கு ஆக்கபூர்வமாக நல்லமுடிவுகளைத் தரும் முன்னோடியாக இம்மாதம் அமையலாம்.
வைகாசி- வேலைப்பழு ஓரளவிற்குக் குறையலாம். நிதி பிரச்சினையாக இருக்காது. நீங்கள் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இயங்க இடமுண்டு. புதிய உறவுகள் நட்புகள் முளைத்து படர இடமுண்டு. வாகன லாபம் அல்லது வாகன சம்பந்தமான பிரச்சனை தீர இடமுண்டு.
ஆனி-உங்கள் தொழில் வேலை இவைகள் உங்களுக்கு உற்சாகம் அளிக்கலாம். நண்பர் சக தொழிலாளர் கூட்டம் உங்களுக்கு மகிழ்ச்சியையும் விறுவிறுப்பையும் அளிக்கலாம். இதற்கு குடும்பத்தில் ஏற்படும் அமைதியின்மை காரணமாகாலாம். பெண்கள் உறவு வருங்கால வாழ்வு இவைகளுக்கும் வித்திடப்படலாம்
மீனம் - பூரட்டாதி 4ம் பாதம். உத்தரட்டாதி, ரேவதி சித்திரை-விவாதங்கள் பிரச்சனைகள் சச்சரவுகள் இவைகள் தொழில் உத்தியோகம் ஆகிய எத்துறை யிலும் தோன்றலாமீ. பொறுமை, நிதானம், தேவை, கடினம், போக்குவரத்துக்கள். இவைகள் உங்களை இயங்கவும் கோபப்படவும் தூணிடலாம். நற்பலன்களுக்கு இடமுணிடாயினும் மனச்சங்கடங்களுக்கு இடம் ஏற்படலாம். நிதி பிரச்சனையாக இருக்காது. தேவைகள் நிரப்பப்படும். வைகாசி-குடும்பத்துடன் பெரும்பாலும் பொழுது கழியலாம். வீடு திருத்தல், புதிய சேர்க்கைகள் இடம் பெறலாம். நீண்டகாலமாக சந்திக்காத நண்பர்களை உறவினர்களை சந்திக்கலாம் அதிகம் பழகும் நண்பர்களிடமும் உண்மையான நட்பு பயன் தெரியவர சந்தர்ப்பம் எற்படலாம். ஆணி-புதிய வாழ்க்கை அல்லது பழைய வாழ்க்கையில் புதிய இனிமையான திருப்பங்கள் ஏற்படஇடமுண்டு. பயணங்கள் ஏற்படலாம். ஆனால் பலன் அவ்வளவு பெரிதாக இருக்குமென்று எதிர்பார்க்க முடியாது. நட்புகள் உறவுகள் சிலருக்கு வாழ்க்கையில "புதிய பிரச்சினையை உருவாக்கலாம்.

Page 20
இந்து சமயத் தோற்றத்தையும் அதன் வளர்ச்சியையும் நாம் புரிந்து கொள்வதற்கு சரித்திரரீதியாக நமது கண்ணோட்டத்தைச் செலுத்துவது ஒரு முறையாகும். கடந்த 5000 ஆண்டு காலத்தை, பின்வருமாறு வகுக்கலாம். '
1. கி.மு. 3000-கி.மு. 2000 வரை மொகஞ்சதாரோ, கரப்பா, சிந்துவெளி நாகரிககாலம்.
2. கி.மு. 2000 இடைக்காலம்-கி.மு. 500 வரை வேதகாலம் 3. கி.மு. 500-கி.பி. 500 வரை உபநிடதங்கள், முக்கியத்துவம் பெற்ற காலம் 4. கி.பி. 500-கி.பி. 1900 வரை மத்தியகாலம். இந்து சமயத்தின் செழிப்பு. வேதாந்தம், தத்துவ ரீதியாக அதில் ஏற்பட்ட விருத்திகள். 5. கி.பி. 1800 தொடக்கம் தற்காலம் அன்னியரின் ஆட்சிக்காலம். இந்து சமய இயக்கங்களும் சமயப் பெரியார்களும்.
கி.மு. 3000-கி.மு. 2000 வரை
உலகில் தோன்றிய நாகரிகங்களினுள், மொகஞ்சதாரோ கரப்பா சிந்து வெளிநாகரிகம் உன்னதமானது. 1922ஆம் ஆண்டு ஆரம்பித்து நடாத்தப்பட்ட அகழ்வாராச்சியின் பயனாக கண்டு பிடிக்கப்பட்டது. சிந்து நதிப்பள்ளத்தாக்கை அடுத்துள்ள இப்பிரதேசம் பஞ்சாப், சிந்து பகுதிகளை உள்ளடக்கியதாகும். பஞ்சாபின் தலைப்ப ட்டினமாயிருந்த கரப்பாவிலிருந்து 400மைல் தொலைவில், சிந்துவின் தலைப்பட்டினம் மொகஞ்சதாரோ இருந்தது. இவற்றிற்கிடையே பல குடியிருப்புக்கள் இருந்துள்ளன. கரப்பா, மொகஞ்சதாரோ இரண்டும் பெருநகரங்கள். ஒரே மாதிரியான அமைப்பை உடையன. நன்றாகத் திட்டமிடப்பட்டு அமைக் கப்பட்டவை. செங்கற்களினால் கட்டப்பட்ட விசாலமான கட்டிடங்கள். அவற்றில் கிணறுகள். குளியலறைகள். சுகாதார வசதிகள் படிக்கட்டுக்களையுடைய மேல் மாடிகள், சாளரங்கள், உள்ள வீடுகள் தனித்தனியாக அமைக்கப்பட்டன. இதன்மூலம் வெளிச்சம், காற்றோட்டம் தாராளமாகக் கிடைக்கும். ஒடுகள் பதிக்கப் பெற்ற முற்றங்கள் உள்ளன. வரிசையாகவும் 90 பாகையில் குறுக்கேயும் அமைந்த அகலமான வீதிகள், விரிவான வடிகாலி, சாக்கடைதொகுதிகள், வீதியிலும் சந்திலும் மூடப்பட்ட வாய்க்கால்கள், மேல்மாடிகளிலிருந்து கழிவுகளை அகற்ற சுவரினூடே அமைந்த குழாய்கள், சாக்கடைநீர், மழைநீர், என்பனவற்றை அகற்ற வடிகா ல்கள் ஆங்காங்கே மனிதன் இறங்கி வேலைசெய்யும் வழிகள், தெருக்களில் கழிவுகளை சேகரிக்கும் தொட்டிகள் என்பனவும் காணப்பட்டன. இவையெல்லாம் சிறந்த நகர் நிர்மாணம் சிற்ப
 

காசி-ஆனி. 1994 8
சாத்திரம் தெரிந்த வல்லுனர் இருந்தனர் என்பதனைக் காட்டுகின்றன. மேலும் நிர்வாக மேன்மையுள்ள ஒரு மாநகராட்சி இருந்தமைக்கும் சான்றாகும்.
விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது, அவர்கள் பொருளாதாரம். பயிர்ச்செய்கையினுள் கோதுமை, அரிசி, பார்லி, பருத்தி அடங்கும். விலங்கு வேளாண்மையில் எருமை, மாடு, ஆடு, பன்றி வளர்ப்பு இருந்துள்ளன. பொதி சுமப்பதற்கும் வேலை செய்விப்பதற்குமாக குதிரை, யானை, ஒட்டகம் போன்ற மிருகங்களை பழக்கி
மிருக்கின்றார்கள். பொன், வெள்ளி, செம்பு தொழிலில் திறமைமிக்க தொழில் நிபுணர்கள் இருந்துள்ளனர். ஈயம், தகரம், வெண்கலம் உபயோகத்தி லிருந்துள்ளது.
போருக்கும், வேட்டையாடுவதற்குமுரிய கருவிகள் வில்லும், அம்பும், ஈட்டி, கோடரி, குத்துவாள், கதை என்பன. அவர்கள் உபயோகிப்பிலிருந்த மறுகருவிகள், சிறுகோடரி, அரிவாள், உளி, சவரக்கத்தி என்பன. இவை செம்பு, வெண்கலம் ஆகியவற்றினால் செய்யப்பட்டன. இரு சில்லுமாட்டு வண்டிகள் போக்குவரத்துக்குப் பயன்பட்டன. நூல் நூற்றல், நெசவு, சாயத்தொழில் ஆகியன இருந்துள்ளன. மட்கலத்தொழிலில் வர்ணம் பூசுதல் பளபளப்பாக்கும் நுட்பங்கள் தெரிந்திருந்தனர். வலிமையுள்ள வியாபார வகுப்பினர் இருந்துள்ளனர். 600 மைல்களுக்கு அப்பால் உள்ள பகுதிகளுடன் வியாபாரம் நடைபெற் றுள்ளது. உதாரணம்- தென் மெசப்பெற்றேமியா

Page 21
கலசம் சித்திரை-ை
கல்வெட்டுக்களிலிருந்து அவர்களுக்கு எழுத்து மொழி இருந்தது தெரிகிறது. மொழி வல்லுனரான வணபிதா கேரஸ், வன பிதா ஞானப்பிரகாசர் தொல்பொருளியல் வல்லுனர் சேர் ஜோன்மார்ஷல் ஆகியோர் கருத்துப்படி இம்மொழி திராவிடமொழியாகும். 1989ஆம் ஆண்டு பின்லண்ட் நாட்டு விஞ்ஞானிகள் நால்வர், கல்வெட்டுகளிலுள்ள எழுத்துக்களை வாசித்து தமது முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அதன்படி சிந்து வெளி மக்கள் 1. திராவிடர் 2 மற்றைய இனங்களைவிட பலகாலம் முன்னரே வானியல் தெரிந்தவர்கள். 3 அவர்களின் முக்கிய கடவுள்கள் சிவன், விஷ்ணு 4 கிரக வழிபாடு செய்தவர்கள் - 5 வானியல், சோதிடம் ஆரம்பித்தவர்கள். 6 சுமேரியர், பபிலோனியர் என்பவருக்கு முன்னரே வானியல் கணிப்பு செய்தவர்கள். சிந்துவெளி மக்களின் சமய வாழ்க்கை பற்றிக் கிடைத்த தகவல்கள் பின்வருமாறு. அரண்களையுடைய கோவில்கள் அவற்றில் பாதுகாப்பாக அமை க்கப்பட்ட தீர்த்தங்கள், தாயார் தெய்வத்தைக் குறிக்கும் உருவங்கள்.(சக்தி வழிபாட்டிற்குரியது என்று இவற்றைக் கருதுகிறார்கள்) கொம்புகளையும் மூன்று முகங்களையுமுடைய ஆண் தெய்வத்தின் உருவம் (மும்மூர்த்தியின் அம்சம் என்று இதனை கருதுகின்றார்கள்) இந்த உருவம் யோக நிஷ்டையில் காணப்படுகின்றது. அவரைச் சுற்றி மிருகங்கள் உள்ளன. (சிவனைப் பசுபதி என்று கூறுவதற்கு இதுவே காரணம் என்கின்றனர்.) லிங்கங்கள் பல காணப்படுகின்றன. அரசமரம், நாகபாம்பு, எருது போன்றவற்றின் அடையாளங்களும் உள்ளன. அரசனாயும் அதேவேளை மதகுருவாகவும் தொழிற்பட்டவரின் உருவங்களும் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. சிந்துவெளி நாகரிகம் கி.மு.3000-2000 கால அளவில் சிறப்புற்றிருந்த போதிலும் இவ்வித உன்னத நிலையை அடைய எத்தனை ஆயிரம் ஆண்டுகள் எடுத்திருக்க வேண்டும்?. எனவே சமய வழிபாடுகள் மேலும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று கூறலாம். அறிஞர்கள் பலரின் கருத்துப்படி சிந்துவெளி நாகரீக சமய வாழ்வில் காணப்பட்ட பல அம்சங்கள் இன்றும் இந்து சமயத்தில் உள்ளன.
966.JT660
1. சிவன் சக்தி வழிபாடு
2. யோக முறைகள், தியானம், துறவு 3 தூய்மைப்படத்தும் கிரியைகள், தீர்த்தமாடும்முறை 4. கோவில் வழிபாடு, உருவ வழிபாடு 5. கடவுளிடம் நைவேத்தியம் வைத்து வழிபடுதல் 6. குங்குமம் உபயோகித்தல் 7. சங்குகளைச் சமயச் சடங்குகளில் உபயோகித்தல் அமைதியான சமாதானமான வாழ்வு மேற்கொண்ட அம்மக்களின் வாழ்க்கைத் தத்துவம் ஆழ்ந்த சமூக சமய அடிப்படையானதாக இருந்துள்ளது. இந்நாகரிகம் கி.மு. 1750 வரையில் கைவிடப்பட்டது. சிந்து நதியில் ஏற்பட்ட பெருவெள்ளப் பெருக்குகள், தொடர்ச்சியாக ஏற்பட்ட ஆரியரின் படையெடுப்பு இதன் காரணங்களாயிருக்கலாம். இந்நிகழ்ச்சிகளுக்கு முன்னரே கிராவிடர், இந்தியா (p(96.5JLh பரந்திருந்தனர். டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் அவர்கள்

வகாசி-ஆனி 1994 9
கூற்றுப்படி கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முன்னரே திராவிடர்கள் இந்தியக் கண்டத்தில் பரந்திருந்தனர். உன்னத நாகரிகம் ஒன்றினை விருத்தியாக்கியிருந்தனர். கி.மு. 2000 இடைக்காலம் - கி.மு. 500வரை கி.மு. 2000 இடைக்காலத்தில், ஆரியர்கள் எனப்படுவர் வந்தார்கள். இவர்கள் மந்தை மேய்ப்பவர்களாகவும், ஆரம்பத்தில் நாடோடி களாகவும் இருந்தனர். போர்க்கலையிலும் தாதுக்களிலிருந்து உலோகங்களைத் தயாரித்து வேலை செய்யும் கலையிலும் முன்னணியிலிருந்தனர். பல குழுக்களாக, தொடர்ச்சியாக வந்தனர். சிந்துவெளிப்பள்ளத்தாக்கு மக்களை போரில் வென்று குடியேறினர். அவர்களுடைய கடவுள்கள் அக்னி, இந்திரன், வருணன், ஆகியோர். அக்னி இயற்கையின் சீவசக்தியாகவும் தீ, பலி, என்பவற்றின் கடவுளாகவம் கருதப்பட்டார். இந்திரன், வான மண்டலக்கடவுளாகவும், போர்க் கடவுளாகவும் கருதப்பட்டார். வருணன் பிரபஞ்சத்தின் ஒழுங்கைக் காப்பாற்றுபவராகவும் தண்டனை, வெகுமதி என்பன வழங்கக்கூடிய அதிகாரமுடைய கடவுளாகவும் கருதப்பட்டார். அவர்களுடைய வழிபாடு பலிபீடத்தை மையமாகக் கொண்டது. வீட்டிலுள்ள அடுப்பு, வீட்டிற்கு வெளியே செங்கற்களால் அமைக்கப்பட்ட பலிபீடம் என்பவற்றை உபயோகித்தனர். தாம் விரும்புவதைப் பெறுவதற்காக தம்முடைய கடவுள்களையும் முற்சந்ததியினரையும் திருப்திப்படுத்தவும் வற்புறுத்தவும் பலிபீடத்தீயில் பல பொருட்களை இட்டனர். இது வேள்வி எனப்படும். வேள்விச் சடங்கில் உருக்கப்பட்ட வெண்ணெய், தானியங்கள், பாலில் தயாரித்த உணவுப்பொருட்கள், சோமபாணம், (ஒருவகைத் தாவரத்திலிருந்து பெறப்பட்ட மது) மிருகங்கள், என்பன உபயோகிக்கப்பட்டன. இவ்வகையில் தான் அக்னிக்கு (தீக்கடவுளுக்கு) முக்கியத்துவம் கிட்டியது. அவன் தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் நடுவனாய் விளங்கினான். ஒரு வேதப்பாடல் இதை நன்றாக விளக்குகின்றது. 'அக்கினியே வருணனை எங்கள் வேள்விக்கு அழைத்து வா இந்திரனையும் வானமணிடலங்களிலிருந்து கூட்டிக்கொணடு வா ஆகாயத்தினின்று மருந்துகளையும் கொணர்ந்து சேர்" ஆரம்பத்தில் சாதாரணமாக எவராலும் செய்யக்கூடியதாக இருந்த வேள்விமுறை பின்னர் சிக்கல் நிறைந்ததாக மாறியது. குருக்களுடைய உதவி தேவைப்பட்டது. குருக்களுடைய பணிகள் வேள்விகள் செய்யும் இடம், காலம் என்பன வரையறை செய்யப்பட்டன. ஆரியரைப் பொறுத்தவரை உருவ வழிபாடு இருக்கவில்லை. . அவர்களுக்கு தனிப்பட்ட முழுமுதற்கடவுள் இருக்கவில்லை. அவர்களுடைய கடவுள்கள் எல்லாம் ஆண் கடவுள்களாகவே இருந்தன. லிங்க வழிபாடு செய்தவர்களை நிந்தித்தனர். அவர்கள் குடியேறிய பின் வேதநூல்கள் தோன்றின. வேதங்கள் நான்கு. அவை இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் ஆகும். இருக்கு வழிபாட்டிற்குரிய தோத்திரங்களைக் கொண்டது. யசுர் யாகங்கள் அல்லது வேள்விகளைப் பற்றிய சுலோகங்களைக் கொண்டது. சாமம் பண்ணுடன் அமைந்த சுலோகங்களைக் கொண்டது. அதர்வணம் மாந்திரிகத்தோடு சம்பந்தப்பட்ட சுலோகங்களைக் கொண்டது. வேதங்களை எழுதியவர் எவர் என்று கூறமுடியாது. இவை கிறிஸ்துவுக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பே ஆக்கப்பட்டன என்று கருதுகின்றார்கள்.

Page 22
கலசம் சித்திரை-3ை
ஒன்றுக்கு மேற்பட்டவரால் ஆக்கப்பட்டன. குரு சீட முறையில் கேள்வியினால் பல நூற்றாண்டுகள் பாதுகாக்கப்பட்டன. பின்னர் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டன. ஆரியர், திராவிடரை போரில் வென்று ஆதிக்கம் செலுத்தியபோதும் திராவிடர் ஆரியரை கலாசாரரீதியாக வென்றனர். திராவிடரின் உன்னத சமூக வாழ்க்கையிலிருந்து பல அம்சங்களை ஆரியர் தமதாக்கிக்கொண்டர். அத்துடன் திராவிடரின் சமய வழிபாட்டின் அம்சங்கள் பல ஆதிக்குழுக்களின் சமய்க்கிரியைகள் நம்பிக்கைகள் என்பவனவற்றை ஏற்றுக்கொண்டனர். இப்படியே காலப்போக்கில் இருபக்க ஊடுருவல் தொடர்ந்தது. ஒரு தனித்துவமான இந்து நாகரிகம் உருவாகியது. வேதகாலத்தின் அடுத்த கட்டமாக "பிராமணங்கள்" தோன்றின. இவை மந்திரங்களை வாய் உச்சரிக்கும் போது அனுட்டிக்க வேண்டிய செயல்களை விவரிப்பன. தேவர்களுக்கும், அவர்களுடைய அதிகாரங்களுக்கும் அடிப்படையான பிரபஞ்சத்தின் சக்தி பற்றி தேடுதல் ஆரம்பித்தது. இப்பெரும் பிரபஞ்ச சக்தி "பிரஜாபதி என்று அழைக்கப்பட்டது. பிரஜாபதியே எல்லாவற்றுக்கும் தலைமையானது. பிரஜாபதிக்கே பலியை இடக்கடவோம் என்று வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் இந்த ஒரு தெய்வக்கொள்கையிலும் மாற்றம் ஏற்படுகிறது. தெய்வம் என்ற சொல் கைவிடப்பட்டு மூலமாகவுள்ளது ஒரேயொரு பொருள் என்ற கொள்கை வலியுறுத்தப்படுகிறது. அத்தகைய மூலப்பொருள் "பிரம்மம் என்று ஏற்கப்படுகிறது. பிரம்மம் பற்றிய அறிவு பிரபஞ்சத்தின் கட்டுப்பாடு பற்றி தெரிய உதவும் எனக் கருதப்பட்டது. துறவு, தியானம் என்பனவற்றின் மூலம் "பலி செலுத்தலாம் என்ற கருத்து அடுத்துத் தோன்றியது. அதாவது வேள்வி என்று புறத்தே செய்யாமல் மனிதன் தன் அகத்தே "பிரம்மம் என்னும் சக்திக்கு வேள்வி செய்ய முடியும் என்று ஏற்படுகின்றது. வேதகாலத்தின் இறுதிக்கட்டமாக உபநிடதங்களைக் கொள்ளலாம். இதன்காலம் கி.மு. 800. இவை பல முனிவர்களால் ஆக்கப்பட்டன. வேதத்தின் இறுதிப்பகுதிகளான உபநிடதங்கள் தத்துவ ஆராய்ச்சிகள் ஆகும். மிக ஆழமான ஆன்மீக உண்மைகளை விளக்கும் ஒருமையாளர் கூற்றுக்களாய் அமைந்தவை இவை. இவைகளே இந்து மதத்திற்கு அடிப்படை எனக் கருதப்படுவன. இக்காலத்தில் கிரியைகளுக்கு முக்கியத்துவம் குறைந்தது. ஒருமையாளர் அனுபவங்கள் மூலம் பிரம்மத்தை உணர்தல் என்னும் கருத்து முக்கியமடைந்தது. உலகப் பற்றுக்களிலிருந்து மனிதன் விலக வேண்டும். அப்போ ஆத்மா பிரம்மத்தை உணர அல்லது பிரம்மத்துடன் ஒன்றாக முடிகிறது. இதனை உபநிடதத்தின் கரு என்று கூறலாம். முதன்முதலாக மறுபிறவி பற்றிய கோட்பாடு குறிப்பிடப்படுகிறது. இதன்படி வீடுபேறு (முக்தி, மோட்சம்) அடையும்வரை, ஆத்மா பிறப்பு, இறப்பு விதிக்கு உட்பட்டது. அதாவது ஆத்மா இறைவனை அடையும்வரை பிறவி மீண்டும் மீண்டும் நடந்து கொண்டேயிருக்கும். ஒவ்வொரு பிறப்பும் கருமம் என்னும் கொள்கையினால் தீர்மானிக்கப்படுகிறது. கர்மம் ஒருவர் முற்பிறவியில் செய்த வினைகளைப் பொறுத்ததே. பிறப்புச் சக்கரத்திலிருந்து விடுபடுவது எவ்வாறு? இதற்கு விடை காண்பதே முக்கியமாக பலர் கவனத்தையும் ஈர்த்தது.
(தொடரும்)

காசி-ஆனி 1994 20
இரவும் பகலும் அந்தப் பற்ணசாலையை எப்படி இலக்குவன் பாதுகாக்கிறான் என்ற வியப்பு அன்னை சீதாதேவிக்கு. இராமனிடம் தன் அபிலாசையைத் தெரிவித்தாள்.இன்று இரவு மைத்துனர் நம் பர்ண சாலையை எப்படி பாது காக்கிறார் என்பதை பார்க்க விரும்புகிறேன் என்றாள். ஜானகியின் விருப்பப்படியே அன்றிரவு சக்கரவர்த்தித் திருமகன் பர்ணசாலைக்கு வெளியே சீதாதேவியை அழைத்து வந்தார். கும்மிருட்டு பயங்கரமான வனாந்தரம். பர்ணசாலைக்கு அருகில் ஒரு எணர்ணெய் விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது.
"இதென்ன இலக்குவனைக் காணோமே " என்றெண்ணிய அன்னை ராமனை வினவினாள். "எங்கே உங்கள் அருமைத்தம்பி
"இதோ கீழே பார்
கீழே பார்த்தவுடன் தேவி நடுங்கிக் கொண்டு இராமனின் தோளில் மீது சாய்ந்தாள். ஒரு பெரிய பாம்பு படமெடுத்துக் கொண்டு புஸ் என்ற சப்தத்துடன் அந்தப் பர்ணசாலையைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. "பயப்படாதே! சேஷன் என்னும் ஆதிசேஷனான இலக்குவன் தான் இந்தப் பாம்பு. எனக்கு பூரீ வைகுண்டத்தில் பணிவிடை புரியும் ஆதிசேஷன் இலக்குவனாக அவதாரம் எடுத்து இங்கு பணிபுரிகிறான்."
என்றான்.

Page 23
கலசம் சித்திரை-வை
நான்காவது கலசத்தில் பூமிக்கு வந்த புண்ணிய சீலர்கள் வரிசையில் பகவான் ராமகிருஷ்ணர் அவர்களைப் பற்றி எழுதியிருந்தேன். காலத்துக்குக் காலம் அறநெறி தழைக்க பல ஆன்மாக்கள் ஆண்டவனின் அநுபூதி பெற்றுப் பூதவுடல் தாங்கி பூமியில் வாழ்வது யாவரும் அறிந்ததே. இந்நிலையில் தமிழ் நாட்டில் கோடக நல்லூர் பகுதியில் தோன்றிய கோடக நல்லூர் சுந்தர சுவாமிகள் பற்றிக் எழுதலாம் என்று நினைக்கின்றேன். சித்திரா நதியின் வலது கரையில் அமைந்துள்ள கங்கை கொண்டான்' என்னும் ஊரில் அப்பய்ய தீட்சிதர் என்னும் வடமொழிப் புலவர் இருந்து வந்தார். இவரின் பெண்வழிச் சந்ததியில் "யக்ஞேஸ்வர சிவன்" என்றொரு பழுத்த பரம சைவர் இருந்தார். இந்த யக்ஞேஸ்வர சிவனுக்கு இரண்டு பிள்ளைகள். மூத்த புதல்வர் குப்பாணி சிவன் என்று பெயர்
பெற்றவர். இரண்டாவதாகப் பிறந்தவரே நம் சுந்தர முனிவர். இவருக்கு ஒன்றரை வயதாக இருக்கும்போது தாய் தந்தையர் காலமாகிவிட்டனர். அதனால் இவருடைய தாய்மாமனாகிய வெங்கட சுப்பய்யர், இவரையும் இவர் அண்ணனையும் தன் ஊரான பத்தமடைக்குக் கொண்டு சென்று மிகவும் அன்போடு பேணி வளர்த்தார். இயல்பாகவே ஞானச் சுடரான சுந்தரம் கல்வியில் சிறந்து விளங்கினார். சிவபக்தி இவரிடம் மேலோங்கியது. இவரின் சிறப்பு பத்தமடையிலும் பக்கத்து ஊர்களிலும் பரவலாயிற்று. மாமனார் தன் கடமையைச் செய்வதில் தீவிர கவனம் செலுத்தினார். இதன் பயனாக அடைச்சாணியைச் சேர்ந்த ஜானகி என்னும் பெண் சுந்தரத்துக்கு மனவியானார். சுந்தரமும் எவ்வித சலனமுமில்லாமல் இல்வாழ்க்கையை நடாத்தி வந்தார். சுந்தரத்திற்கு ஞானவேகம், வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது. தனக்குக் குருவாக அடைக்கலமிருந்த விசுவேஸ்வர சாஸ்திரிகளை ஏற்றுக்கொண்டார். அவர் முறைப்படி உபதேசிக்கச் சுந்தரம் உடனடியாகவே ஞானசமாதி அடைந்து பேரானந்தத்தில் திளைக்கத் தொடங்கினார். தொடர்ந்து யோக சமாதிநிலைகளை அடைந்து வந்த சுந்தரம் தம் மனைவிக்கு ஞான உபதேசம் செய்து தன் னுடைய
 
 

காசி-ஆனி 1994 2
முதல் சிஷ்யையாக்கினார். இவருக்கு சிஷ்யர்கள் பெருகினர். காலப்போக்கில் சுந்தரம் சுந்தர சுவாமிகள் ஆனார். தன்னுடைய சிஷ்யர்களோடு தீர்த்த யாத்திரிகைக்குப் புறப்பட்டார். தமிழ் நாட்டின் புண்ணிய ஸ்தலங்களைத் தரிசித்தபின் வடநாட்டுக்குச் சென்று பல தலங்களையும் தரிசித்து மகிழ்ந்து முடிவிற் காசியை அடைந்தார். காசியில் மணிகர்ணிகள் என்னும் ஸ்நான கட்டத்திலே, ஒரு சமயம் நீரடியில் ஆறுமாதகாலமாக அமர்ந்து ஜல சமாதிநிலையில் யோகம் புரிந்து கொண்டிருந்த மகாகணபதி என்ற மகானையும் சுந்தர முனிவர் தரிசித்தார். இவர்கள் இருவரும் ஒரு வரை ஒருவர் கட்டித் தழுவியபோது நீவின் மேல் ஜோதி "ஒன்று பெரிதாகத் தோன்றியதாம். சுந்தர சுவாமிகள் நிகழ்த்திக்காட்டிய
அற்புதங்கள் ஏராளம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வேற்று சட்டங்கள் தமிழகத்தில் ஊடுருவல் செய்த போது எமது சிவநெறியை நிலைபெறச் செய்த மகான்களான யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர், வடநல்லூர் இராமலிங்க வள்ளளார் வரிசையில் கோடக நல்லூர் கந்தர சுவாமிகளுக்கும் இடமுண்டு. பத்தமடை வாய்க்கால் நீரில் ஒரு சிறுவன் விழுந்து இறந்துவிட்டான். அவன் உறவினர்கள் வாயிலும், வயித்திலும் அடித்து புலம்பிக் கொண்டிருந்தார்கள். சுவாமிகள் அங்கு வந்து குழுந்தைமேல் மந்திரஜலம் தெளித்து காலனை நோக்கித் தியானத்தில் அமர்ந்தார். சிறுவன் உயிர்பெற்று எழுந்துவிட்டான். இன்னொரு சமயம் சுவாமிகள் திருநெல்வேலி நகரிலுள்ள சம்பாநதி மண்டபத்தில் தங்கி இருந்தார். அன்று தீபாவளித்திருநாள். பல பக்தர்களுடன் ராமச்சந்திர மேத்தா என்ற குஜராத்தி பிராமணரும் சுவாமிகளின் பொன்மொழிகளைக் கேட்டுக் கொண்டிருந்தனர். வலது கையின் உள்ளங்கையில் அக்கினி இருக்கிறது. உண்ணும்போது உள்ளங்கையில் உணவு படாதபடி உண்பது நல்லது என்று சுவாமிகள் சொன்னார்கள். அப்போது சம்பாநிதி மண்டபத்தில் கோயில் கொண்டிருக்கும் கமாட்சி அம்மன் பூசைக்காக வந்த அர்ச்சகரான சுப்பிரமணியப்பட்டர் கொண்டு வந்த நெருப்பு வழியில் பெய்த மழையில் அவிந்துவிட்டது, என்ன செய்வது என அவர் யோசித்துக் கொண்டிருக்கும் போது, மேத்தா, "சுவாமிகள் தம் உள்ளங்கையிலுள்ள நெருப்பை வெளிப்படுத்தலாம்" என்றார்.

Page 24
கலசம் சித்திரை-6ை
சுவாமிகள் புன்முறுவலுடன் "உம் மேலாடையை என்னிடம் கொடும்" என்றார்கள். மேத்தா மேலாடையைக் கொடுக்க சுவாமிகள் அதனை எடுத்து தம் உள்ளங்கையில் தேய்த்தார். நெருப்பு பற்றிக்கொண்டது. மேத்தாவோ கலங்கிப்போய் பதறிப் பணிந்து மன்னிப்புக்கேட்டார். இத்தகு இறைசக்தி கொண்டு விளங்கிய சுவாமிகளின் சிஷ்யர்களில் சிறந்தவராக விளங்கியவர் பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளையவர்கள். சுவாமிகளின் நிஜானந்த விலாசம் பேராசிரியரால் பதிப்பிக்கப்பட்டது. பேராசிரியர் சுவாமிகளைப் பற்றி அறிமுகம் செய்த விதம் மிக அழகானதும் கவித்துவம் நிறைந்ததும் ஆகும். - சுந்தர முனிவன் சிந்துர அடியும் வாரிசம் போன்று மலர்ந்த வதனமும் கருணை அலையெறிந்த தொழுகும் கண்ணும் பரிவுடன் முகிழ்விக்கும் மறுவலும் ப்ால்போல் நரைதரு தலையும் புரையறும் உரையும் சாந்தமும் தயையும் தங்கிய உடலும் என்று கூறுகின்றார் பேராசிரியர். சிவநெறியைத் தமிழ் நாட்டில் பரவும்வகை செய்த கந்தர சுவாமிகள் 1878ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ஆம் திகதி அரிமழத்தில் முத்தியடைந்தார்கள். சிவராமன் செட்டியாரும் பிற அன்பர்களும் சுவாமிகளின் சமாதி மீது ஒரு கோயிலை எழுப்பி அதில் சுவாமிகள் தந்த பாணலிங்கத்தையும் பிரதிஷ்டை செய்து வைத்தார்கள். அந்த சிவன் கோயில் இன்றும் அரிமழத்தில் இருக்கின்றது. குறிப்பு-இக்கட்டுரை ஞானபூமியில் வெளிவந்த புலியூர்க் கேசிகனால் எழுதப்பட்ட "சிவநெறி தழைக்கச் செய்த சித்தர்மகான் " என்ற
கட்டுரையை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது.
தெய்வ தரிசன அனுபவம் 1
காமகோடிப் பெரியவர்களைச் சந்திக்க வருகிறீர்களா?.என்று ஒரு நாள் எனக்கு அழைப்பு வந்தது. இந்த அழைப்பு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சுவாமிகளைப் பற்றி நான் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். நான் சென்று அவரை வணங்கியதும் சுவாமிகள் "நீ உன் தாயாரைப்பற்றி எழுதியிருந்த கட்டுரையைப் படித்தேன். உன்னைப் பார்க்க வேண்டும் போலத் தோன்றியது" என்றார். எனக்குத் திடீரென்று திரை விலகியது போல் இருந்தது. பல ஆண்டுகள் பல பெரிய பதவிகளை நான் வகித்திருக்கிறேன். எனக்குப் புகழ் தந்த சில தொழில் நுட்பக் கட்டுரைகளையும் எழுதி இருக்கிறேன். இவையெல்லாம் சுவாமிகளுக்கு முக்கியமாகப்படவில்லை. நான் என் தாயாரின் நற் பணிபுகளை விவரித்து புகழ் பெற்ற பத்திரிகையொன்றின் தீபாவளிமலருக்கு எழுதிய கட்டுரை அவர்களின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது.
அந்தக் கட்டுரையில் எண் தாயார் இளம் வயதில் சுகமாக வாழ்ந்ததையும், விவாகமான பிறகு வறிய நிலையில் மிகவும் கஷ்டப்பட்டதையும், அந்த நிலையிலும் கலங்காமல் நேர்மையுடனும் பெருந்தன்மையுடனும் பகவான் இருக்கிறான், எல்லாம் அவன் கவனித்துக் கொள்வான் என்ற உறுதியான நம்பிக்கையுடன் வாழ்ந்ததையும் பற்றியே எழுதி இருந்தேன். - "அப்படி ஆசார சீலங்களில் எனக்கு ஈடுபாடு இல்லையே? கோயிலுக்குப் போவது அபூர்வம். கர்மாக்களையும் கடைப்பிடிப்பதில்லையே ஆங்கில ரீதியில் அல்லவா
வாழ்ந்து வருகிறேன்.

காசி-ஆனி 1994 22
என்று எனது நிலையை சுவாமிகளிடம் தெளிவு படுத்தினேன் இவற்றையெல்லாம் பற்றி சுவாமிகள் அக்கறைப் படவேயில்லை. நான் என் தாயாரைப்பற்றி எழுதிய கட்டுரையிலிருந்து, நான் இந்து மதத்தில் அக்கறை உள்ளவன் என்றே சுவாமிகள் கருதினார். என்னைப் போல் உயர்ந்த பதவியில் உள்ளவர்கள் ஒன்று கூடி இளைஞர்களுக்கு இந்து மத தத்துவங்களில் நம்பிக்கை உண்டாகும்படி போதிக்கவேண்டுமென்று தான் சொன்னார். இப்படி உருவாகும் திட்டங்களில் சகிப்புத் தன்மையும் விடா முயற்சியும் தேவை என்றும் வலியுறுத்தினார். இளைத்து மெலிந்த அவருடைய தேகத்தைப் பார்த்ததும், நான் ஏன் இந்த சுவாமிகளிடம் மனமுருகிப் போனேன் என்று என்னையே கேட்டுக் கொண்டேன். அவருடைய பேச்சுத்தான் காரணம் என்றில்லை. ஏனென்றால் அவரைப் போலவே இவ்வளவு ஐஎளிமையாகவும் ஆழ்ந்த கருத்துக்களுடனும் சகிப்புத்
இன்னும் பலர் பேசக் கேட்டிருக்கிறேன். அவர்கள் என்னைக் கவரவில்லை. சுவாமிகளின் பக்கத்தில் மெளனமாக இருந்ததே பெரிய அனுபவமாகத் தோன்றியது.
-எச்.வி.ஆர். ஜயங்கார்
(நன்றி. ஞானபூமி)
தெய்வதரிசன அனுபவம் 2
1982ம் ஆண்டு இளையாத்தங்குடி என்ற இடத்தில் ஒரு பெரும் சபை கூடியது. அச்சபையில் நாட்டுப்புறக் கலைகளான உடுக்கை, பொய்க்கால் குதிரை, கரகம், காவடி ஆகியவற்றுக்குப் பெரு மதிப்பு அளித்து மேடையில் ஏற்றி அக் கலையைப் போற்றவும் வகை செய்தார் ஒரு பெரியவர். அது மட்டுமல்ல, கிராமங்களில் கோயில்களில் வழிபாடு செய்யும் பூசாரிகள், தேர் செய்பவர், கல் சிற்பிகள் இவர்களுக்கெல்லாம் பெருமை அளித்து நாம் 905 பெரும் பாரம்பரியத்தில் வருபவர்கள், கலையை வளர்த்தவர்கள் என்று புத்துணர்ச்சியை ஊட்டினார் அப் பெரியவர்.
அவர் கூட்டிய அச் சபைக்கு நான் செல்லும் வாய்ப்பைப்
பெற்றேன். அங்கு தான் கோயில்களைப் பற்றியும், கலைகளைப் பற்றியும் கல்வெட்டுகளின் பெருமையைப்பற்றியும் முழுமையாக நான் அறிந்து கொள்ள முடிந்தது. அச் சபையை அமைத்து அந்த மாபெரும் இயக்கத்தைத் தோற்றுவித்த பெரியவர், உலகம் உய்யத் தவமிருக்கும் பெரியவர் -சங்கராச்சாரிய கவாமிகள். அப்பெரியவர் இளையாத்தம் குடியில் சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேல், கல்வெட்டுக்களைப் பற்றியும், கலைகளைப்பற்றியும் எனக்குப் புகட்டியதை எண்ணும்தோறும் எண்மனம் உவகையால் பூரிக்கின்றது. அப்பெரும்தகை, கல்வெட்டுக்கூறும் வழிபாட்டு முறை என்னும் கட்டுரையை முற்றிலும் படித்து இதை அச்சிடு என்றும் அருள்பாலித்தார்கள். அவர்களது அருள் ஆசியே எண்னை இத்துறையில் ஈடுபாடுடையவனாக்கியது.
-டாக்டர் இரா.நாகசாமி.

Page 25
கலசம் சித்திரை-ை
இறைவனுக்கு எத்தனையோ திருநாமங்கள். ஒரு நாமம் ஒரு ருவம் ஒன்றுமில்லாதவனாகிய அவனுக்கு ஆயிரம் திருநாமம் சொல்லி ஏத்துவதென்பதுதான் அடியார்களுடைய வழக்கமாயிற்றே! இத்தனை திருநாமங்களிலும் ஏழைப்பங்காளன் என்ற திருநாமம் அவனது எளி வந்த தன்மையை செளலப்பியம் என்ற அவனது ஒப்புயர்வற்ற குணத்தைப் புலப்படுத்துவதாக அமைந்துள்ளது. பேழை போன்ற தனது சடாமகுடத்திலே இறைவன் பிறையை வைத்திருக்கின்றான். அழகுபடுத்திக் கொள்வதற்காகவா அவன் பிறையை அணிந்திருக்கின்றான்? இல்லையே இல்லை. தக்கனது சாபத்தால் தேய்ந்து மாயவிருந்த சந்திரனுக்கு வாழ்வுதரவே ஆண்டவன் அதனைத் தனது சடையிலே தவித்திருக்கின்றான். இறைவன் ஏழைப்பங்காளன் என்பதற்கு எடுத்துக்காட்டாக அவன் சடைப்பிறை இலங்குகிறது. எளி வந்த பிராணாகிய இறைவனை அடைய வேணடும் என்ற ஏக்கர் மனிதருக்கு ஏனர் ஏற்படவில்லை? அந்த ஏக்கர் மட்டும் ஏற்பட்டுவிட்டால் அவர்கள் தக்க குருவை நாடி உபதேசர் பெற்று இறையருளிலேயே திணைக்கும் வாய்ப்பைப் பெற்று உய்ந்துவிடுவார்களே! என்று ஏங்குகின்றார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். திருமறைக்காட்டிலே உள்ள இயற்கைக் காட்சி ஒன்றைக் காட்டித் தமது கருத்தை உய்த்துணர வைக்கவும் சுவாமிகள் தவறவில்லை. குரங்கு ஒன்று தென்னந்தோப்பிலே வசிக்கிறது. தேங்காயை உண்டுதான் அது வாழ்கின்றது. தேங்காயை உண்பதென்றால் அது இலகுவான காரியமா, என்ன? தேங்காய், மட்டையும் தும்பும் கொண்டது. தேங்காயின் மட்டையையும் தும்பையும் அகற்றிய
 

வகாசி-ஆனி 1994 23
பின் அதன் கெட்டியான ஓட்டையும் பிளந்தால் சிறியதொரு பருப்பு மீதமாயிருக்கும். இந்தப் பருப்பை அருந்துவதற்குள் குரங்கின் கை கால்கள் எல்லாம் தேங்காயைப் பிளக்கும் முயற்சியில் இரத்தமயமாகிச் சதை பிய்ந்து தொங்க ஆரம்பித்து விடும். கிடைப்பதோ சிறிய பருப்பு. பாவம் குரங்கு ஏதோ தான் அநுபவிப்பது பேரின்பம் என்று எண்ணிக்கொண்டு ஏமாந்து வாழ்கின்றது அது. தென்னந்தோப்பை ஒட்டி ஒரு வாழைத்தோப்பு. அப்படி ஒன்றிருப்பதே குரங்குக்குத் தெரியாது. ஒரு நாள் எதேச்சையாக வேலி ஒன்றில் இருந்த பூழையை-துவாரத்தை-குரங்கு கண்டுவிட்டது. அதனூடாக நுழைந்தது. அவ்வளவு தான் ஆகா இத்தனை நாள் இப்படி 8(ሠ9 / வாழைத்தோட்டம் இருப்பது எனக்குத் தெரியாமற் போய்விட்டதே. தென்னையெல்லாம் தாவித் தேங்காய்ப் பருப்புக்காகத் தவித்தேன், கையுங் காலும் புண்ணாகி நொந்தேனே! என்றெல்லாம் ஏங்கியது. அன்றிலிருந்து வாழைக்கனி உண்டு வாழத்தொடங்கிவிட்டது. யாழைப்பழித் தன்னமொழி மங்கைழரு பங்கன் பேழைச்சடை முடிமேற்பிறை வைத்தானிடம் பேணில் தாழைப்பொழில் ஊடே சென்று பூழைத்தலை நுழைந்து வாழைக்கனி கூழைக்குரங் குணனும்மறைக் காடே. (தாழை-தென்னை பூழை-துவாரம்)
வாழைக்கனியைக் குறியீட்டு முறையில் உபயோகிப்பது ஆன்றோர் மரபு-முழுதும் பழுத்தது வாழைக்கனியே என்பது திருமந்திரம். ஆன்மாவெனுங் குரங்கு சிற்றின்பம் எனும் தேங்காய்ப் பருப்புக்காக உடல் உள்ளம் இரண்டும் சோர்ந்து போகும்படி சம்சாரம் என்ற தெங்கம் பொழிலிலே கிடந்து உழலுகின்றது. சம்சாரம் என்ற பொழிலுக்கு அருகிலே இறையின்பம் என்ற வாழைத்தோப்பு இருப்பதே அதற்குத் தெரியாது. சம்சாரம் என்ற தென்னந்தோப்பின் ஒரத்திலே குருவருள் என்ற சிறிய பூன்ழ -துவாரம் இருக்கின்றது. அதன் வழியாக மட்டும் இந்த ஆன்மா எனும் குரங்கு நுழைந்துவிட்டதென்றால் முழுதும் பழுத்த வாழைக்கனியாக இறையருளில் திளைத்து மகிழும் பாக்கியத்தைப் படைத்துவிடும் என்ற அற்புத உள்ளுறையை இந்த இயற்கை வருணனையிலே பொதிந்து தரும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் நாம் மட்டும் குருவருள் வழிப்பட்டால் திருவருள் நெறிநிற்றல் எளிது என உய்த்துணர வைக்கின்றார்கள். எளி வந்த பிரானாக இறைவன் இருக்கின்றான். தேய்ந்துபோம் பிறைக்கும் வாழ்வு தந்தவன் அவன். அவனை அடைவதற்கு நமக்கு வேண்டுவதெல்லாம் குருவருளே என்கிறார் சுந்தரமூர்த்தி சவாமிகள். மூர்த்திதலந் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க் கோர் வார்த்தைசொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே. என்கின்றார் தாயுமான சுவாமிகள்.
4...........................
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையுள் எல்லாம் தலை
-குறள்

Page 26
கலசம்
வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரத்தில் வைகாசி விசாக விழா கொண்டாடப்படுகின்றது. ஆங்கில மே ஜூன் மாதங்களில் இது வருவதும் வைசாக் என்று அழைக்க ப்படுவதும் பலர் அறிவார்கள். இறப்புக்கு கடவுளான தர்மபுத்திரருக்கு பெளர்ணமியில் பிரார்த்தனையும் , பூஜையுமாக இது அனுஷ்டிக்க ப்படுகின்றது. இத்தோடு விசாக நட்சத்திர லக்கினத்தில் அமையப்பெற முருகப்பெருமான் அவதரித்தார் என்பதிலும் இது இரட்டிப்புப் பெருமை அடைகின்றது.
அட்டதிக்கில் தெற்கிற்கு ராஜா தர்மபுத்திரரை பிரார்த்திப்பதற்கு வளர்பிறையிலோ தேய்பிறையிலோ பதிநான்காம் திதியாக வரும் சதுர்தசி திதியில் அதுவும் செவ்வாய்க்கிழமையாக வந்தால் மிகவும் உகந்தது என எடுத்துரைத்துள்ளனர். உடல் துன்பங்களில் இருந்து விடுதலை பெற இப்பிரார்த்தனை உதவுமாம். தென்திசைக்கு அதிபதியாக உள்ள தருமராஜா அட்டதிக்குப்பாலகர்களில் ஒருவராவர். யமன் அல்லது தர்மராஜா என்றழைக்கப்படும் இவரே சாவுக்கு கடவுளாவர். எருமை வாகனம் இவருடையது. பூமியில் உள்ள ஜீவன் களது நியாயஅநியாயங்களைப் பொறுத்து தண்டனையாக மறு பிறப்பையோ அல்லது பாராட்டாக பிறப்பின்மையும் சொர்க்கமுமாக வளர்க்கும் அதிகாரம் இவருக்குள்ளது. இவரது கணக்கராக சித்திரகுப்தனார் சகல ஜீவன்களையும் கம்பியூட்டர் உதவியோடு சதா கணித்தும் அவதானித்தும் உதவி வருகின்றார். ஒருவர் இறந்த பின் அவரது பூதவுடலை தென்புலமாக தலையிருக்குமாறும் வடக்கு நோக்கி அவரது முகம் பார்க்க உதவும் வகையில் வைப்பதும் இதற்காகவே. வடக்கில் இருந்து ஆன்மாக்களை இரட்சிக்க தெற்கை
நோக்கியிருப்பதால் தெட்சணாமூர்த்தியும் இதற்கு
 

24
உதவுகின்றார். ஆன்மாக்களின் பயணம் தெற்கிலிருந்து வடக்காக நடைபெறுவதாக இந்துக்களின் நம்பிக்கை . வைகாசியின் தான தர்மங்கள்.
வைகாசி, குளங்கள் வற்ற தாவரங்கள் வாடிவிடும் அளவு வரட்சியும் வெப்பமும் கொண்டது. பல முனிவர்கள் ஆசான்கள் போதித்தவாறு தயிர்சாதம் மோர், எலும்பிச்சைப்பழச்சாறு, கருப்பநீர், கருப்பஞ்சாறு, பழஞ் சோறும் நீரும், பானகம், என்று பல விதமாக விருந்தினரையும் வழிப்போக்கர்களையும் உபசரிக்கும் தர்மம் பரவியது. மற்றவர்களது உடலையும் மனதையும் குளிர்வித்தால் அவர்கள் தன்னை மறந்து வாழ்த்தும் போது கடவுள்களும் இரங்கி இவ்வித தானங்களை அளிப்பவரை பலவித சுகங்களுக்கு ஆளாக்குவர். நல்லவை செய்தால் நன்மை விளையும். விசிறி குடை காலணி தானங்களும் இளநீர் முதல் பல உபயோகமான தாவரங்கள் வளர்க்கப் பாடுபடுவதும் இதில் அடங்கும். துளசி, அசுவத, வில்வம் போன்ற அர்ச்சனைக்குரிய தாவரங்களைப் பேணிக்காப்பதும் மத காரியங்களுள் சிறந்த தொண்டு வழிபாடாகும். மதம் எங்களுக்கு வெப்பகாலங்களில் குளிர்ச்சிக்காக பல சடங்குகளை சிருஷ்டித்து நன்மை புரிந்து வருகின்றது. அம்பாளுக்கு குளிர்த்தி, முருகனுக்கு அபிஷேகம் என்ற போர்வையில் அந்த ஊர் மக்கள் இருப்பவன் இல்லாதவனுக்கு கோவில்மூலம் கொடுத்து உதவவே இந்தச் சடங்குகள். பணத்தைவிட கோடையில் மேற்கூறியவை மிகவும் தேவையானவை. இப்போ சூப்பர் மார்க்கட் , பிரிஜ் , ஏசி, பான் என்று வந்ததால் பாலையும் சந்தனத்தையும் நீரையும் ஏன் அண்டாக்கணக்கில் கோவிலில் விரையமா க்குகின்றீர்கள் என்று பழைய தலைமுறை கேட்பதில் தவறில்லை. கானல் நீரைக் கண்டு தாகத்தில் ஒடும்போதும் ஏமாறும்போதும்
தானே நீரின் அருமை விளங்கும். முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல. அவர்கள் முன் யாக்கிரதை முத்தணர்ணாக்கள்

Page 27
கலசம் சித்திரை-வை
வினா : கோவில்களில் காலம் தப்பி பூசைகள் குருக்களின்
வசதிக்கிம் உபயகாரர்களின் நலனுக்கும் நடைபெறலாமா? -இசிதில்லைநாதமூர்த்தி
விடை:
கோவில்களில் பூஜைகாலம் கோவில்களில் காலம் தவறி பூசை நடைபெறுவது நலனல்ல. எந்த கோவில்களிலும் கும்பாபிஷேகம் ஆனவுடன் எத்தனை காலம் !ങ്ങജ என்பதை குருக்களின் ஆலோசனைப்படியும் கோவிலின் நிதிநிலையினைப் பொறுத்தும் தீர்மானித்து விடவேண்டும். அது ஒன்பது காலம், எட்டுகாலம், ஆறுகாலம் அல்லது ஒருகாலம் இப்படி எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் எவ்வளவு காலம் தீர்மானம் செய்யப்பட்டதோ அதன்படி பூசை செய்வதே சிறந்ததாகும். உற்சவகாலங்களில் உற்சவர் வீதி உலா முடிந்து கோவிலுக்குள் வந்தவுடன் தான் பூசை என்ற சமயத்தில் காலங்களில் மாற்றம் ஏற்பட்டால் தவறில்லை. ஆனால் தனி மனிதனுக்கு உட்பட்டு காலம் தவறி பூசை நடைபெறுவது சரியல்ல.
வினா: அருட் சனை என ன அடிப்படையில் நடத்தப்படுகின்றது?பணம் வசூலிப்பதற்காகவா?அல்லது இருட்டு மூலஸ்தானத்தில் இருக்கும் ஆண்டவனின் முகத்தைப் பார்ப்பதற்காகவா?
இ.சி. தில்லைநாதமூர்த்தி
6560L:
அருட்சணை
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பெழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழியாண்ட குருமனிதன் தாள் வாழ்க ஆகமமாகி நின்றணிணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க. எல்லாம் வல்ல சிவபெருமானே ஏகனாகவும் ஒன்றாகவும் அநேகனாகவும் காட்சி அளிக்கிறார். அப்படிப்பட்ட பல உருவங்களை சொல்லுவதே அர்ச்சனை என்ப்படும். அர்ச் -வணங்குதல் பூசித்தல் 6Top 5sgisis5ubig) (Root Word) is 6060, 6Taip சொல்லானது நமக்குக் கிடைக்கின்றது.
பூசித்தல் நம்முள் அந்தர்மியாக ஏகனாக இருக்கும் இறைவனையே நாம் புராணங்களை ப்ரமனாக வைத்துக்கொண்டு போற்றுகின்றோம். நமக்கு இந்த லோகத்திலும் பரலோகத்திலும் மேன்மையை அடைவதற்கு பரமாத்வாவின் அருள் இன்றியமையாததாகும். பரமாத்மா பக்தர்களை அணுக்கிரஹிப்பதற்காக தன் சக்தியினால் அநேக தேவதாரூபங்களை எடுத்துக்கொண்டு விளங்குகின்றார்.
 

காசி-ஆனி 1994 25
பக்தர்கள் தம் தம் ருசிக்கேற்றபடி தேவதாமூர்த்திகளை மனது, வாக்கு, சரீரம் இவைகளின் மூலம் ஆராதித்து இவர்களின் அருளால் தமக்கு வேண்டிய பலன்களை அடையக்கூடும். இது மட்டுமல்லாமல் அனைவரும் உயயோகிக்கக்கூடிய விதத்தில் அர்ச்சனை இருக்கிறது. சில மந்திரங்கள் தீட்சையின் பின்பு தான் அனுஷ்டிக்கக் கூடியதாக இருக்கும். சில அனுஷ்டானங்களும் நமக்கு கடினமாக இருக்கும். ஆனால் அசர்ச்சனையானது அனைவராலும் ஆலயத்தில் இறைவனை பூஜிக்க உகந்ததாக உள்ளது. பணம் வசூலிப்பதற்காகவா என்ற தங்களின் கேள்வி தங்களின்(Materialistic mind) ஐ வெளிப்படுத்துகின்றது. எப்படி பசுமாட்டிடம் பால் இருந்தாலும் பால்க்காரன் ஆனவன் மடியிலிருந்து பாலைக்கறந்து நமக்கு அளிக்கின்றானோ அதுபோல குருக்கள் என்பவர் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளின் அருளை விக்ரகத்திலிருந்து தனது மந்திரசக்தியின் மூலம் மற்றவர்களுக்காக அருளை வழங்குகின்றார். பூஜைகள் இரண்டு விதமாக வகுக்கப்பட்டிருக்கின்றது. ஆத்மார்த்தம் என்பது நமது ஆத்மா திருப்தி அடைவதற்காக செய்வது. ஸந்தியாவந்தனம், சிவபூஜை ஆகியவை இவற்றில் அடங்கும். பரார்த்தம் என்பதோ எல்லாம் வல்ல இறைவனுக்காக அதன் மூலம் அவன் உறைந்திருக்கும் உயிர்களுக்கு திருப்தி ஏற்படுவதற்காக செய்யப்படுவது. இந்த காரணத்தை பார்க்கும்போது குருக்கள் கோவிலில் செய்யும் பூசைகள் அவனுக்கு மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மை பயப்பதாக விளங்குகின்றது. ஆனால் அர்ச்சனை என்பது தனிமனிதனின் விருப்பத்திற்காக செய்யப்படுவது. நமக்கு ஏதாவது குறை என்றால் யாரிடம் சென்று முறையிடுவது? நம்மை போன்றோரிடம் சொன்னால் ஏளனம் அல்லவா செய்வார்கள். ஆதலால் எல்லாம் வல்ல கடவுளிடம் நம் சொந்த குறைகளோ நிறைகளோ சொல்வதற்காக அர்ச்சனை முறை பின்பற்றி வரப்பட்டு வருகின்றது YLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLS குறித்து வைக்க வேண்டிய விரத தினங்கள் 14-04-94 சித்திரை வருடப்பிறப்பு.கார்த்திகை விரதம் 15-04-94 சக்தி கணபதி சதுர்த்தி விரதம் 17-04-94 சஷ்டி விரதம் யூரீ ராம நவமி 94 سس۔ 04-سے 230 22ー04ー94 ஏகாதசி விரதம் 23-04-94 சனிப் பிரதோஷ விரதம் 25-04-94 சித்திரா பூரணை விரதம் 06-05-94 ஏகாதசி விரதம் 08-05-94 பிரதோஷ விரதம் 10-05-94 அமாவாசை விரதம் 11-05-94 கார்த்திகை விரதம் 14-05-94 சதுர்த்தி விரதம் 16-05-94 ஷஷ்டி விரதம் 21-05-94 ஏகாதசி விரதம் 22-05-94 பிரதோஷ விரதம் - 24-05-94 பூரணை விரதம், வைகாசி விசாகம் 05-06-94 ஏகாதசி விரதம் 06-06-94 பிரதோஷ விரதம்

Page 28
கலசம் சித்திரை-ை
07-06-94 கார்த்திகை விரதம் 09-06-94 அமாவாசை விரதம் 13-06-94 சதுர்த்தி விரதம் 15-06-94 சஷ்டி விரதம் 19-06-94 ஏகாதசி விரதம் 21-06-94 பிரதோஷ விரதம் 23-06-94 பூரணை விரதம் 04-07-94 ஏகாதசி விரதம்,கார்த்திகை விரதம் 06-07-94 பிரதோஷ விரதம் 08-07-94 அமாவாசை விரதம் 12-07-94 சதுர்த்தி விரதம் 13-07-94 நடேசரபிஷேகம் 14-07-94 குமாரசஷ்டி விரதம் us 19-07-94 சயன ஏகாதசி 20-07-94 பிரதோஷ விரதம் 56. 22-07-94 பூரணை விரதம் பெ 28-07-94 சங்கடஹார சதுர்த்தி விரதம் நம 01-08-94 கார்த்திகை விரதம் °二 03-08-94 ஏகாதசி விரதம் Liit 04-08-94 பிரதோஷ விரதம் Ólt 06-08-94 போதாயன அமாவாசை விரதம் 07-08-94 ஆடி அமாவாசை விரதம் அ 09-08-94 ஆடிப் பூரம் வே 10-08-94 நாக சதுர்த்தி விரதம் s
75, FOREST ROAD, WALTHAMST
(CLOSE TO BLACKHORSE OPEN 7 DAYS A WEEK. INCI
N ORWICH------ FAX: 081 503 2085
TEL: O81 527 1104
CALLUS ( THE ABON NUMBEI
VALUATION SURVEY'S, STRUCTRAL REPORT
FOR COUNCIL & BUIL)
 
 
 
 
 
 
 
 
 

வகாசி-ஆனி 1994 26
12-08-94 ஷஷ்டி விரதம்
17-08-94 ஏகாதசி விரதம் 18-08-94 பிரதோஷ விரதம் 19-08-94 வரலஷ்மி விரதம் 20-08-94 பூரணை விரதம் 28-08-94 கார்த்திகை விரதம் 29-08-94 ஜன்மாஷ்டமி, பூg கிருஸ்ண ஜயந்தி 01-09-94 ஏகாதசி விரதம் 03-09-94 சனிப் பிரதோஷ விரதம்
LJöi தியாகத்தின் சின்னம். அது தான் சுரக்கும் பாலைத் து கண்றுக்கு மட்டுமே என்று வைத்துக் கொள்ளாமல் ரும் பகுதியை நமக்குக் கொடுத்து விடுகிறது. க்குப் பயன்படாத புல்லையும், வைக்கோலையும், மியையும் சாப்பிட்டுவிட்டு, நமக்குப் பயன் தரும் லைக் கொடுக்கிறது. குழந்தை முதல் பெரியவர்கள் ரை எல்லோரும் அருந்தக்கூடிய எளிய உணவாக து அமைகிறது. இந்த உணர்வை நாமும் பெற பண்டும் என்றுதான் பசுவைப் பூஜிக்கிறோம்.
OW, LONDON E176HF UNDERGROUND)
LATE, EVENINGS
黑黑凰墨凰圈
MORTGAGES, BNFE ENSURANCE
NWESMENTS & ENS (DNS
WE ARE AN APPONED
REPRESENTATIVE OF
NORWICH UNION
FE INSURANCE. S.
UN TRUST MARKETING
GROUP-MEMBER OF AUTRO
'S, HOUSE PLANS AND REFURBISHMENT WORKS NG SOCIETY REQUIRMENTS

Page 29
கலசம் சித்தின்
நாளைய சந்ததியினரின் நலன் கருதி இப்பகுதி உ இப்பகுதியில் பங்குபற்ற வேண்டுமென விரும்புகின்றோம்
இளையவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களின் அளித்து வருகின்றோம்.
f. GlU II. Linufi
ஆசிரியர்
UIfσίύ
நான் சென்
நானும் என்னுடைய வகுப்புப் பிள்ளைகளும் விடுமுறை எல்லோரும் கோச் வண்டியில் அங்கு சென்றோம். அங் நேரத்துடன் எழும்பி கடற்கரைக்குப் போனோம். நன்றாக போனோம். அங்கு கடைகள் இருந்தன. ஒரு கடையில் வைற்றுக்கு வரும்போது இரண்டு கப்பல்களைக் கண் கப்பலில் உள்ளே ஏறிப் பார்த்தோம். ஐசில் ஒ வைற்ற திரும்பினோம்.
சேயோன் குருமூர்த்தி நால்வர் தமிழ்க் கலை நிலையம்
கந்திரன் -நியூமோல்டன்
வயது-12
 
 
 
 

ரை-வைகாசி-ஆனி 1994 . 27
ருவாக்கப்பட்டுள்ளது. இளைய சமுதாயம் ஆர்வமுடன் . இதற்குப் பெற்றோரும் உதவவேண்டும்.
சிறு கற்பனைப் படைப்புக்களுக்கு வெகுமதியும்
បាrrr
நீட்டம்
ர்ற சுற்றுலா
யைக் கழிப்பதற்காக "ஐசில் ஒ வைற்று க்குப் போனோம். கு ஒரு வீடு எடுத்துத் தங்கினோம். மறுநாள் காலையில் விளையாடினோம். பின் கோச் வண்டியில் ஏறி யாமெளத்துக்கு ம் நிற மண் இருப்பதைக் கண்டோம். நாங்கள் ஐசில் ஒ டோம். ஒரு கப்பலின் பெயர் எச்.எம்.எஸ் விக்டோரி. அந்தக் மில் ஆறு நாட்களைக் கழித்துவிட்டுச் சந்தோஷமாக வீடு
கீர்த்திகா " *. நற்குணதயாளன் வயது-9 நால்வர் தமிழக் கலை நிலையம்

Page 30
கலசம் - சித்திரை-ை
THE LADY SAINT
OF THILAKAVAT
Thilakavathi was bornas the first child in a farmer's family inaremote village in the modern South Arcot district. A brother by name Marul necki was born in the family when she was two years old . The parents wercadevout and religious minded couple who worshipped Shiva. Years passed and Thilakavathi grew into maidenhood. Thc parcnts chose a bridegroom for her, by name Kalippahai, a young man of equal status in the next village. He was a valiant man, high in the king's estecm, and also religious.
Just as the marriage negotiations werc over and arrangements were complete for conducting it, news came that thc Chalukya King was invading the Pallava territory. Naturally therc was a general mobilisation and Kalippahai, who was a bravc soldier capable of leading an army himself, was summoncd by thc Pallava King. Though the bctrothal between Thilakavathi and Kalippahai had becn made, the - marriagchad not been solemniscd. But innarriage could not be an excuse for absence from the battle front. Kalippahai went to the King. A division was placed under his command and he was sent to the front. He took a valiant part in several engagements and hard fighting was going on for some time.
Meanwhile, the father of Thilakavathihad some ailment and in a short time he died. His wife did not like to livc after her husband died and so she gave up her life immediately. Their young daughter and little son were now left aloncinthic world. While this was happening here, the fight in which Kalippahal was engaged grew fierce and finally the invader was put to rout and thcPallava forces were victorious. Buthowcver Kalippahai was killed in the battle.
Coming close on the death of both of their parents,this news was a terrible shock to Thilakavathiand her little brother. She said, "My parents proposed to marry me to Kalippahai. So I belong to him. After his death, I have no morc existence. I shall now give up my life". But her brother immediately intervened: "Sister, little boy that I am, I have no parents. I consider you as my parcnt and so am able to put up with my gricf. But if you plan to put an end to your life now, you will find that Ishall have died beforcyou...so please decidc what you will do now". When Thilakavathi heard this, she was helpless. Naturally she did not want to allow her brother to die. So, out of love and compassion for him, she continued to live. She
;X سمي 须
عات گسއިދޫ *ގ
برگمی ގަހަކާ
 

வகாசி-ஆனி 28
lived thereafter the life of self-emposed widowhood. Jewels and trinkets were for her no more. She remained in the house and her only ornament was love for all life, says the poet.She led a life of austerity and penance.
Her young brother grew up, well versed in all the books and scriptures of his religion. But as fate would have it, in the cause of his comparative study of religions, he was attracted by the Jain way of live. So he left her sister, went to a Jain monastery and learnt their religious lore so well that he was ordained a priest there. In due cause, by his learning and way of living, hic rose to the position of the head of the monastery, with the title, Dharmasana.
This was of course anathemato his sister. She could not for a moment reconcile her self to the thought of this dear little brother of hers, for his sake she had been leading a life of penance and devotion, having embraced and alien religion and become a leader thereof. She was daily doing little acts service in the local tcmple Thiru-Adigai and thither she used to go daily, bow before the Lord and pray that her erring brother be brought back to the Saiva fold soon. In due time her prayers wercanswered. Shchaddreamin which the Lord of Adigai told her that a colic would afflict her brother and that he would be redeemed through it.
Accordingly, her brother Dharmasena began to suffer from a stomach pain. This gradually developed into a very acute stage. The medicines and mantras of the monastery were powerless to cure it. He became desperate now and sent his cook as messenger to his sister for help. She was surprised to his messenger. So her question was, "any thing wrong?" He explained Dharmasana plight and invitcdhcron his behalf to go to him. "Go and tell him that we shall not enter the alien quarters", she firmly replied.
He returned to the suffering brother with her message at midnight, Dharmasana covered himself fully and came forth from the monastery and fell at her feet saying: "My beloved sister, lam dying of pain. Save me". She immediately thought of her dream and knew that this was Goods way of answering her prayers. Shclifled him up, and with thc Lord's name on her lips, applied thc sacred ash to his forehead and then took him to the Lord's presence in the templc.
She performed her usual services in the temple and in the presence of the Lord prayed for help to her brother. Through His Grace his ailment miraculously grew less and the darkness envcloping his mind was also cleared. He was given the gift of singing the Lord's praise in beautiful songs. He prayed for God's Gracc and relicffrom pain, which was at once granted. Thereafter he went on singing Lord's prise and performing manual service in the temples throughout Tamilnadu.
In Shaivitchageology as well in thchistory of Tamilnadu and its literaturc, this brother is known as Saint Appar. The story of Thilakavathi cinds here. Shc was pleased with God's kindness to her brother and led her life of penance and devotion as before. Her life is unique in the history of women who had devoted their lives for service to others. Women had been devoted mothers, devoted wives and dcvoted daughters. Butas devoted sister, the life of Saint Thilakavathi is in a class by itself. , a

Page 31
கலசம் சித்திரை
திருநாவுக்கரசு சுவாமிகள் திருஞான சம்பந்த சுவாமிகளைக் காண விரும்புகிறார். இதனை அறிந்த சம்பந்தர் தானே அவரை அடைந்து அவரோடு பல ஆலயங்களுக்குச் சென்று இருவரும் பதிகங்கள் பாடுகின்றனர். திருவோலக்கா வரை கூடச்சென்ற சம்பந்தர் பெருமான் திருவோலக்காவில் அப்பரை வழிய ணுப்பி வைக்கிறார்.
xதெய்வத்தமிழே ஆளுடைய 1. பிள்ளையே உம்மைக் காணும்பேறு
a 4: fus/.
சில நாட்களுக்குப் பின் பிள்ளையார் திருவோலக்கா வரை வந்து அவரை வழியனுப்பிவைத்தார்.
அங்கிருந்த தண்ணிர்ப் பந்தல், அப்பருக்கு வியப்பினை விளைவித்தது. 見芝リ AR-S
s 翠 ఏప్తి w \ \ \\\ \ V 1 / / /
'', 7 / / /
 
 
 
 

o སྣོད༽
-வைகாசி-ஆனி 29
மனம் வாக்கு காயம் அனனத்தும் அரனிடம் ஒன்றிட
கடு வழி கடந்து திங்களுரை S60) 1– U
|్యల్లో ప్తిస్తా
Naas.
c IEW
O இங்குள்ள பொய்கைக்குக் கூட என் பெயர் இடப்பட்டுள்ளதே
酮g
து யாருடைய வேலை.

Page 32
ഗ്ഗ= lures கலசம் சித்திரை-வை
- தனது திருப்பணிகளையெல்லாம் நா அடிகள என்பவர் அவரை அன்புடன்
திருநாவுக்கரசு நீ யார் பெயரைத் தாங்கியுள்ளயோ ssyu பெரியாருக்கு
குலை ஈனா தகுமரி வாழையின்
7་ཨཞུཆེ༠༧ ༈ கொண்டு வா. సాగి அப்படியே. அப்பா.
f
 
 
 

வுக்கரசின் பேரில் நிகழ்த்திய அப்பூதி
உபசரித்தார் .
|*W%目
*,
A. ک
tea
ஆ. ஐயோ என்னை பாம்பு கடித்து விட்டதே இந்த இலையை நான் கொண்டு கேர்
لبکے جھNN\لیبریا| سسک سسک سسک کسی துணியால் என் மகனை. இல்லை. இச்சடலத்தை முடிவைத்து விட்டு அடியாருக்கு அமுது பரிமாறுக!

Page 33
ம் சித்திரை-வை
ல்
ஆ. இதென்ன என்றுமில்லா என் உடல் ஈடுங்குகிறதே இந்த
வீட்டில் ஏதோ உற்பாதம் ஏற்பட்டிருக்கிறது!
V -حیجیے۔ سستے سمیعی سمتیہ
இறைவா திங்களுர் செஞ்சடையனே!
6) அறுபட்ட வாழைத தண்டு போ விளங்கும் இவனது ஆருயிரைத்
'ஒன்று கொலாம்: -Lழு
Y /፩፰V !
を3.
 
 
 
 
 
 
 

எங்கேயம்மா காவுச்கரசு?
அவனைக் கூப்பிடு.
ل
பதிகம் முடிந்தது நஞ்சு நீங்கிப்
பாலகன் பிழைத்தான்
(un 影杏類
గ్ర్వెల్ల
ട്ടീ

Page 34
249 Fore Street Edmonton London N182TY TEL 081884 4979,
FAX ()81345 6317
 

உங்களுக்குத் தேவையான தமிழ்,ஆங்கில சஞ்சிகைகள் தமிழ்,ஹிந்தி,ஆங்கில வீடியோ,ஓடியோக்கள்
மற்றும் இலங்கையிலிருந்து தருவிக்கப்பட்ட உணவுப் பண்டங்கள் உடன் மரக்கறி வகைகள் ஆகியவற்றை மலிவு விலையில் மொத்தமாகவும் சில்லறையாகவும் கொள்வனவு செய்வதற்கு நம்பிக்கையோடு அணுகவேண்டிய ஒரே ஸ்தாபனம்
محrTr
25. ЦеђI č560)L-
OTOCOPY`
4p only பலாலி வீதி
வகள் திருநெல்வேலி
யாழ்ப்பாணம் இலங்கை

Page 35
SS =س SHIPPNG - AR FI
UNACCOMPANIED BAGGAGE - P
GOODS, VEHICLES,
TO COLOMBO AND OTHER
స్ట్రా MAINAGENT F
PASSENGER TICKETS AND
All Your Goods Go To Our E WE WILL ALSO FLY YOU ON SCHEDULED FLIG உங்கள் விமானப் பயண ஒழுங்குக பூரீ லங்காவிற்கு அனுப்புவதற்கும் குறைந்த கட்ட நீங்கள் நாடவேண்டிய நம்
14, Allied Way, off Warple W
Telephone : 081-740 Fax : 08|-740 4229 Te BONDED W LAKSIRISEVA, 253/3 Avissawe
SS
KSAV BO910
y DDY? Repairs
APPROVED BODY REPAIR CENTRE
a Mజmber
* PANEL BEATING * SPRAYING
* WELDING * COLOUR MATCHING * INSURANCE WORK * RECOVERY
1009 HIGH ROAD
CHADWELL HEATH TEL: 081-597 07 12
الد=
 
 
 
 
 
 
 
 

REGIT - TRAVEL
RSONAL EFFECTS, HOUSEHOLD MACHINERY ETC.
JAWORLD JA/VIDE DESTINATIONS
OR AIRLANKA స్ట్రా
UNACCOMPANIED BAGGAGE Onded Warehouse in Colombo ANYWHERE, ANYTIME HTS AT LOW PRICES
ருக்கும் உங்களின் பொருட்களை ணத்தில் நிறைந்த சேவையினைப் பெறுவதற்கும் பிக்கையான ஸ்தாபனம்
ITED
ay, Acton, London W3 ORQ
83.79 / O 81-749 0.595 Lex : 929657 Gilcnca G AREHIOUSE la Rd, Colombo 14, Tel: 575576
s அன்டர்கள், ஆதரவாளர்கள், வாடிக்கையாளர்கள்
அனைவருக்கும் எமது இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்
VARS'S
LOWEST PRICE SRI LANKAN FOOD STORE
OPEN 9AM TO OPM
7 DAYS A WEEK
இலங்கையிலிருந்தும் இந்தியாவிலிருந்தும்
இருக்குமதி சிசய்யப்பட்ட ைேனத்து உணவுப்பண்டங்கள், உடன் மரக்கறிவகைகள் பத்திரிகைகள், சஞ்சிகைகள், ஓடியோ, வீடியோ, சீடி ஆகியவற்றை தரத்தோடு நியாய விலையில் பெற நாடவேண்டிய தரமான நம்பிக்கையான ஒரே ஸ்தாபனம்
VASI'S RODODD STOD 2 103 BURLINGTON ROAD NEW MALDON, SURREY KT3 4LR
TEL: o81-336 0061 (NEAR BURENGTON, UNIOR SCHOOL)

Page 36
திருமண வைபவங்களிலும் ஏ6 உங்கள் உணவுத் தேவை நீங்கள் நாடவேண்டிய
RESTA
SRI LANKAN AND SOU E NJOY THE REAL TA SRI LANKAN AND S(
TAKE AWAY SER PARTES AND WEDD
211, THE BROADWAY WEST HENDON
LONDON
NW9 7 DE O81-202 3486/87
OPEN:MON DAY TO SATU 12.OO NOON TO 3.OOp.m.
SUNDAY(BUF
12.OO NOON TO 3.OOp.n
சைவ முன்னேற்றச் சங்க பதிப்பகத்தில் அச்சமைப்பும் செல்வம் அச்சகத்தினரால் அச்சிடப்பட்டு சைவ முன்ே
 
 
 
 
 
 
 
 
 
 

னைய கொண்டாட்டங்களிலும் களைப் பூர்த்தி செய்ய
தரமான உணவகம்
}
见 。 த
இதி: 版妖
Ա* GAE
C 三エ
URANT
FULLY LCENCED
UTH INDIAN CUISINE ASTE OF DELCOUS OUTH IN DAN FOOD
WICE AWALABLE
INGS CATERED FOR
18,THE AVENUE WEST EALNG
LONDON W13 BPH O81-81O 6606/07 (BUSINEss LUNCH-12.oo NooN To 3.oop.m.) RDAY (EXCEPT TUESDAY) & 6.00pm. TO 11.30p.m. 'FET LUNCH) h. & 6p.m. To 10.30p.m.
வடிவமைப்பும் செய்யப்பட்டு, ஐரோப்பாவில் தரமான
னேற்ற சங்கத்தால் 144.1994 அன்று வெளியிடப்பட்டது.