கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வணிக நாதம் 1997-1998

Page 1
LIDGE ATLİ
i.
5 55gTo GigETSIDL, diffi GUITé
விம்கந்த வரோது
|- Ħ |= E 历 西 守司 |- 미 T고 Ē
 

*

Page 2


Page 3
கலை வர்த்தக ம
யா | ஸ்கந்தவரோ கந்தரோடை -
 
 

ானவர் மன்றம் தயக் கல்லூரி
சுன்னாகம்

Page 4
கல்லூரி
போற்றிசெய் வோமெங்கள் கல்லூர் பொலிவுடன் மாணவர் கூடி
ஸ்கந்தவ ரோதய எங்கள் கல்லூரி சந்ததமும் புகழ் கொண்டே இந்த வுலகினில் நன்கு வளர்ந்திட ஸ்கந்த அருள்புரி நன்றே
ஆங்கில ஞானமும் அருந்தமிழ் ஆரி அவைதரு ஞானமும் நன்றே ஓங்குவிஞ் ஞானமும் உயர்தரு கை உண்மையில் வளர்தரு மிங்கே
பிறவிகள் தோறுமே தொடருநற் க பேற்றினை ஈந்தனை அன்னாய் உறவென்றும் நீயே உண்மையொ ( உழைத்திடு வோமென்றும் நாமே
எந்தை யெனத்தகு கந்தைய வள்ள சிந்தையி லெழுந்த கல்லூரி செந்தண்மை மருத்துவன் சுப்பிர ம சேவையில் உயர்ந்த கல்லூரி
சேவையில் உயர்ந்த கல்லு சேவையில் உயர்ந்த கல்லு சேவையில் உயர்ந்த கல்லு
வாழிய வாழிய எங்கள் கல்லூரி வளமலிந் தோங்கியே என்றும் வாழ்க வாழ்க வாழ்க! வளரிள மதியெனவே வாழிய எங்கள் கல்லூரி,


Page 5
Վ
திருமிகு சு. இரத்தினராக
(கல்விப்
}}ته
அன்பும் அறிவும் ஆராய்ந் அகம் திறந்த வாழ்வும் மி மன்றத்தின் நிகழ்வுகளில் எண்ணிக் கலங்குகிறோம்
அமரத்துவ நிலையில்
 

அமரர் rff, B. A. Dip-in-Eid. SLEAS - II பணிப்பாளர்)
வர்கள்
த சொல்வன்மையும் க்க கல்விப் பணிப்பாளரே !
மங்கலமாய்க் கலந்த நாளை
)
எம்மை ஆசீர்வதிப்பீராக

Page 6


Page 7
Our
K. Si B. A. (Hons)
Spl. Trd. (
 

Principal
vaji Dip - in - Edu English)

Page 8


Page 9
.÷
Princi | Message of
I have great pleasure in giv cation of our college magazine and commerce union The emer annual event at Skandavarodaya ( should be commended for their to publish this magazine for th both in its educational activitie well as its extracurricular activitie will definitely help the students Any venture that promotes inc students must be appreciated.
The enthusiasm and fervour commerce union and their endeav are praiseworthy
I wish them all success.
Skandavarodaya College Kandarodai, Chun nakam.
འཛ(
محصیلیے کے

pal's Felicitation
ing my message for the publiVanikanatham' by the arts gence of vanikanatham is an College. The teachers in charge untiring efforts they have taken he advancement of the college is within the class room as is outside. Efforts of this nature
to furthur their knowledge. reasing the knowledge of the
of the members of Arts and our in publishing this magazine
K. Sivaji B. A. (Hons) Dip - in - Edu,
Spl. Trd, (English)

Page 10
பூரீ துர்க்கா.ே பூரீ துர்க்காதேவி தே6 அவர்
வழங்
யா சுன்னாகம் ஸ்கந்த6 வர்த்தக மாணவர்மன்றம் வெளி மலருக்கு ஆசிஉரை எழுதி வாழ் அடைகின்றேன்.
இம்மலரின் முதலாவதும6 பற்றி உரையாற்றிய பெருமை மாணவர்மன்றம் காலந்தோறும் எ மிகவும் பாராட்டுக்குரியது. ஸ் பழமையையும் வரலாற்றுச்சிறப்6 நான் நன்கு அறிவேன். ஆண்டு எம்மைத் தொடருகின்ற போது யும் நல்லாசிரியர்கள் பல  ைர கொண்டிருப்பது மிகவும் பாராட் பெருந்தகை ஆறு. திருமுருகன் .ே இங்கு கடமை ஆற்றுவதால் கல் றும் கட்டிக் காப்பாற்றப்படுவதை மேலும் கல்லூரியின் பழம்டெ ஓங்கவேண்டுமென்று திருவருளை
கலாநிதி, செல்வி த
பூரீ துர்க்காதேவி தேவஸ்தானம்,
தெல்லிப்பழை,
15-06-1999.

நவி துணை வஸ்தானத் தலைவர் கள்
செய்தி
வரோதயக் கல்லூரியின் கலை பிடும் வணிகநாதம் ஐந்தாவது த்துவதில் நான் பெருமகிழ்ச்சி
ஸ்ர் வெளியீட்டு விழாவில் பங்கு எனக்கு உண்டு. கலைவர்த்தக டுக்கும் பயனுள்ள இம்முயற்சி கந்தவரோதயக் கல்லூரியின் பையும் கல்விமேம்பாட்டையும் கள் பலகழிந்து அவலநிலை ம் எதற்கும் சலிக்காது பணிபுரி இந்தக்கல்லூரி  ைவத்து க் டுக்குரிய தாகும். ஆசிரியப் பான்ற நல்லாசிரியர்கள் குழாம் லூரியின் பழம்பெருமை இன் நாம் உணரமுடிகிறது. மேலும் ருமையும் கல்விமேம்பாடும் பிரார்த்தித்து அமைகின்றேன்.
1ங்கம்மா அப்பாக்குட்டி, J. P.
தலைவர்

Page 11
வழிதிதி
யா/ஸ்கந்தவரோதயாக் கல்: மாணவர் மன்றம் “ வணிகநாத யீட்டுச் சஞ்சிகை மூலம் அறி உள்ள செய்தியைக் கேட்டு ம துடன் இச்சஞ்சிகை வருடா வருட படுத்தும், வழிப்படுத்தும் அ வேண்டும் எனவும் எதிர்பார்க்கி
இக்கல்லூரி வரலாற்றுப் தன்னகத்தே கொண்டு, வலிகா விற்பன்னர்களை உருவாக்கிய ெ வழிநின்று இச்சஞ்சிகையை கல்லூரி சார்ந்த சமூகம் மேலும் அசையாத நம்பிக்கை எனக்கு
மாணவர்களது ஆற்றல் வி துணைபோகும் இவ்வரலாற்றுச் துணையாக நின்று உழைத்த அனைவரையும் வாழ்த்துவதிலும்
மருதனார்மடம், $ୋt ୋt it sub.

ji 67 óf důsó
லூரியைச் சேர்ந்த கலை வர்த்தக ம் ' எனும் வருடாந்த வெளி வொளி பரப்பி நறுமணம் வீச கிழ்ச்சி அடைகின்றேன். அத் -ம் மலர்ந்து சமூகத்தை நெறிப் yறிப் பொக்கிசமாகவும் திகழ ன்றேன்.
பாரம்பரியங்கள் பலவற்றைத் மம் பிரதேசத்தில் பல கல்வி பருமைக்குரியது. அப்பெருமை வெளியீடு செய்வதன் மூலம் மேம்பாடடையும் என்பதில்
ண்டு.
ருத்திக்கும், மொழிவிருத்திக்கும் சஞ்சிகை வெளியீட்டுக்கு உறு
இக்கல்லூரியின் பெருமக்கள் பெருமிதம் அடைகின்றேன்.
வீ. இராசையா, வலயக் கல்விப் பணிப்பாளர், வலயம் வலிகாமம்.

Page 12
வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மானது காலந்தோறும் எடுக்கும் பாராட்டப்பட வேண்டியதொன்ற பாட்டினால் சிறந்த எழுத்தாளர்க யியற் சிந்தனையாளர்கள், தன் வாக்கப்பட்டுள்ளனர். இதற்குக நானிலம் போற்றும் நல்லாசிரிய மன்றத்தின் வளர்ச்சியில் கண் அத்துடன் ஆசானுக்கு அடிபணி ஒழுக்கத்துடன் செயற்படுவதுமா சூழ்நிலையிலும் இப்படியான மல பாராட்டுகிறேன். இம்முயற்சிக் மன்றப் பொறுப்பாசிரியர்கள், புடன் மலர ஸ்கந்தனை வேண்டி
கந்தரோடை,
சுன்னாகம், 1999 - 06 - 0.3
 
 

கலிகாமம் கல்வி வலயத்தின் 'வு இரண்டில் உள்ள முதன்மை ய்ந்த கல்லூரிகளில், கந்தரோடை /ம் வரலாற்றுப் புகழ்மிக்க தொல் யில் அமைந்திருக்கும் ஸ்கந்தவ தயாக் கல்லுரரியும் ஒன்றாகும். கல்லுரரியின் கலை, வர்த்தக னவர் மன்றம் தனது ' வணிக தம் ' சஞ்சிகையின் ஐந்தாவது ரை இவ்வாண்டு வெளியிடுவ னயிட்டு எனது மனப்பூர்வமான மகிழ்ச்சியடைகிறேன். இம் மன்ற
பயனுள்ள இம் முயற்சியானது ாகும். இம்மன்றத்தின் செயற் ள், அரசியல்வாதிகள், கல்வி லைவர்கள். பேச்சாளர்கள் உரு காரணம் இங்கு கற்பிக்கும் ர்கள் பொறுப்புடன் செயற்பட்டு ணுங் கருத்துமாக இருப்பதாகும். யும் அருமை மாணவர் குழாம் கும். இன்றைய நெருக்கடியான ர் ஒன்று வெளிவருவதைப்பிட்டுப் கு உறுதுணையாக இருக்கும் மாணவர்களை வாழ்த்திச் சிறப்
அமைகின்றேன்.
அ. தற்பரானந்தன், உதவிக் கல்விப் பணிப்பாளர்,
வலிகாமம் பிரிவு 11

Page 13
حة
பேறு டூம் ஒரு மறுமலர்ச்சிக் காலச் சூ வர்த்தகத் துறையில் ஒரே கால காலத்தில் பல்கலைக்கழகம் செ வர்கள் கல்வியியற் கல்லூரிக்க பெற்றுள்ளனர்.
கடந்த 1998 ஆம் ஆண்டு க. களும் எமக்குப் பெரு வெற்றியை
தகத்துறை மாணவர்கள் கல்வியிர
முத்தமிட்துறையிலும் விளையாட் களை ஆற்றி வருகின்றனர்.
எம் கல்லூரி கடந்த 105 வரு யற்துறைக்கு ஆற்றிய பங்களிப்பு யால் நலிந்து மெலிந்து பயந்து கொண்டிருக்கின்ற போதிலும் கடி காப்பாற்றுவதை ஆசிரியர்களாகி 21 ஆவது நூற்றாண்டை உலகம் யில் எமது தமிழ் மாணவர்கள் பேணிக் காப்பது கல்வித் துறை கும். உலகின் அறிவியல் வேகத்து வசதிகள் எமது பிள்ளைகளுக்கு யார்க்கெடுத்துரைப்பது? பல்கலை பல மாணவர்கள் கடல் கடப்பதர் மனிதவலுவை இந்நாடு இழந்து ே
 

ன்றப் பொறுப்பாசிரியரின்
ஆசிச் செய்தி
புகழ்பூத்த எம் கல்லூரியின் கலை தக மாணவ ம ன்ற த் தின ரின் சிகநாத மலருக்கு ஆசி கூறுவதில் ரு மகிழ்ச்சியடைகிறேன் கலை தகத்துறையில் எம் கல்லூரியாழ் ட்டத்தில் முதன்மை வகிப்பதை வரும் ஒப்புக்கொள்வர். 1997 பா. த. (உ/த) பரீட்சைப் பெறு /கள் கல்லுரரி வரலாற்றில் மீண் ழலை ஏற்படுத்தி உள்ளது. கலை ப்பகுதியில் 27 மாணவர்கள் ஒரே ல்கின்றனர். மேலும் பலமான ான அனுமதி பெறும் தகுதியைப்
பொ. த. உயர்தரப் பெறுபேறு
ஈட்டித்தந்துள்ளன. கலைவர்த் * சாதனை நிலைநாட்டியது போல ட்டுத்துறையிலும் அரிய சாதனை
தடங்களாக இந்நாட்டின் அறிவி மகத்தானது நாட்டுச் சூழ் நிலை இளைய தலைமுறை வாழ்ந்து ன முயற்சியால் தம் கல்வியைக் ய நாம் உணர்ந்து கொள்ளலாம் சந்திக்க இருக்கின்ற இவ்வேளை ரின் அறிவியல் வளர்ச்சியைப் சார்ந்த அனைவரதும் கடமையா க்கு ஈடுகொடுக்கக் கூடிய கல்வி கிடைப்பதாக இல்லை. இதை க்கழக அனுமதி பெறத்தவறிய >கு ஆயத்த மாகின்றனர் இனிய கொண்டே இருக்கிறது. இதனால்

Page 14
எதிர்கால நிலைபற்றிய ஏக்கம் 6 யில் வாழும் இன்றைய சமுதாய காத்து அருள வேண்டும் என இ கல்லூரி முதல்வரின் புனிதமான மாணவச் செல்வங்களின் முயர் ஒளிவிசிப் பிரகாசிக்க,
* சொல் விற் பணமும்
சொல்ல வல்ல ந
கலைவாணியைப் பிரார்த்தித்து
is Ol

ரம்மை வாட்டுகிறது. இச் சூழ்நிலை த்தின் எதிர் காலத்தை இறைவனே இறைவனைப் பிரார்த்தித்து எம்
வழிகாட்டலில் எம் அன்புக்குரிய θάθιου σου 6ου αγίαύδι ύ υθώ έςώωρουή
அவதானமும் கவி ல்வித்தை யாவும் தருகின்ற "
வாழ்த்தி அமைகிறேன்.
", ŝi?(5 Gap (5 assiv, B. A. Dip. in - Ed.
மன்றப் பொறுப்பாசிரியர்

Page 15
ܓ .
சிரிய சிந்தையாளர்களை உரு வர்த்தக மாணவர் மன்றத்தின் மன உங்கள் கரங்களில் வழங்குவதைய
பல பேராசான்களும் கல்விபய ரைகளைக் கொண்டு மணங்கமழ் தரும் என்பதில் ஐயமில்லை. பத்தா: புதுயுகம் வேண்டும் புதுமைகளைப் ெ
கைக்கொள்ளும். உயர் வகுப்பு மா
கேற்ப இது மலர்கிறது; மனம் பரப் பல கட்டுரைகள் படர்கின்றன.
நாதத்தின் இனிமையில் நாம் மிகு முதல்வர் நற்றுணை புரிந்த ெ ஆசிரியர்கள், ஆசியுரைதந்த பெரி யாளர்கள், விளம்பரம் தந்துதவிய நன்னெஞ்சினர், உறுதுணையாய் யம் யாவிலும் கைகொடுத்த நண்பு பித்தவர்கள் அனைவருக்கும் உளமார் என்றும் இறவாத இனிய நாதம் ஒ அரவணைப்பையும் வேண்டுகிறோம்
* உறவென்றும் நீயே உ
உழைத்திடு வேச மென்

யங்கள் இயம்புகின்றன
வாக்கும் எமது கல்லூரியின் கலை ரமிக்க மலரான வணிகநாதத்தை பிட்டுப் பூரிப்படைகிறோம்.
சில் மாணவர்களும் எழுதிய கட்டு மலரிது மாணவர்களுக்கு மகிழ்ச்சி பிரமாண்டை நோக்கும் இப்புத்தகம் பருமையுடன் வழங்கும் இலக்கைக் ாணவர்களின் உன்னத தேவை கட் புகிறது; மலரின் மகரந்தங்களாகப்
திளைக்க நல்வழிகாட்டிய பெருமை பாறுப்பாசிரியர்கள், ஆதரவளித்த பவர்கள், கட்டுரைகள் தந்த கல்வி பெருந்தகைகள், நிதியுதவி செய்த நின்ற மன்ற உறுப்பினர்கள், காரி ரர்கள், பொலிவு பொங்கப் பதிப் ர்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம். ங்கி ஒலிக்க உங்கள் ஆதரவையும்
உண்மையென் டுரைக் காய்
1றும் நாமே '
இதழாசிரியர்கள்

Page 16
1997ஆம் ஆண்டு (க, பொ.
சிறந்த பெறுபேற்றி
வர்த்தகம் :
I
அ. ராஜினி இ. கமலலோஜினிதேவி க. நேதானந்தன் கு. பிரதிபன்
1. சா. செந்தில்குமார் 2. பா. சுவர்ணதாசன் 3. இ. குயிலினி
4. தே. சேத்திர பாலன்
85
ଗ0)
ଋ)
σολύ υ/του σ'
பாலேந்திரா
தியானி
சிவருபி ா நிஷாந்தன்
சிவமைந்தன்
தனேஸ்வரன் , 6) 36η σού αυσ.
ஜமுனா
சஜிதா சிவகாந்தினி கிருஸ்ணமேனன்
9

த.) உயர்தரப் பரீட்சையில் னைப் பெற்றோர்
- 2A, 2B
A C 3 مست.
- 3A C
- A 3B
- A2 BC
- 2B 2C
- 4B --
- 3B C
- 3B C
- 2A BC
- B2C S
- B 3C
... 3C S
- 2A, 2B
- 2A BC
- 2A BC
- 2A BC
- A 3B
- A 2B C
- A2B C
- A 2BC
- A 2BC
- A 2BC
- A 2BC
-- AB 2C

Page 17
13.
14.
15. 16. 17.
18.
19. 20.
21.
22.
23. 24.
25.
26.
27.
28.
29.
30.
3 II .
32.
33.
34.
க. உதயகுமார் வே கருணாவதி பு. சசிரஜனி சி. சிவாஜினி அ, ரேவதி
少 今g/7多の செ. சத்தியகுமார் 6) σ. 3/ή αναρουή அ. சகிலா சி. லிங்கனதாஸ்
திருமகள் பவள ராஜ் சுஜனி கஜந்தி ரேணுகா வெ. ஜெகதீஸ்வரன் வி. செந்தில்குமாரன்
த. அதினா
சி. ஜெயசந்திரிகா கா. கவிதா வி. புஷ்பலதா α . 3 ή αδ’ ουρτ
1998& ஆண்டு (க. பொ. சிறந்த பெறுபேற்றி
இ. ஜனகா க. கார்த்திகா வெ. ஜெகதீஸ்வரன் க. உதயகுமார் இ. டெய்சி ஜெயமலர் இ. ரமணன்

-- AB 2C
— AB 2C
— AB 2C
- AB 2C
- AB 2C
- ABCS
. - ABCS
- A 3C
- A 2CS
- A 2CS
- AB 2C - A 2C 3 BC
- 3B C
- 3B C
- 2B 2C
- 2B 2C
- 2B 2C
- 2B 2C
- 2B 2C
- 2B 2C
- 2B 2C
த.) உயர்தரப் பரீட்சையில் னைப் பெற்றோர்
- 3A B
- 2A, 2B,
- 2A 2B
- 2A, 2B
- 2A BC
- 2A BC

Page 18
10.
II.
12.
13. 14.
15.
I6.
17.
18.
I9. 20.
21.
7
ථුට
9.
0
I
க. தனஞ்செயன் பூ. மிதுனா இ. நளிந்தினி க. கணிதா பொ. சந்திரசேகரம் ம - பகீரதன் வி. கோடீஸ்வரி
சத்திய காமன் திலக்சி சுகந்தி
• 326γυα ου ஜெயச்சந்திரிகா பிரசன்னா வித்தியாசங்கர் தி, வரோதயன்
பல்கலைக்கழக அடிப்படைத் தகுதிே

- 2ABC
- 2A BC
- A 2BC
A 2BC تتسم
- A B 2C
- A B C S
- A 3C
- A 3C - A3C
- A 3C
- A3C
4B =س-
4B - جیس۔
4B س= 2B C S --س-
பெற்ற மாணவர் தொகை - 74

Page 19
கலை வர்த்தக
செயற்குழு
ασύρσοπή , பொறுப்பாசிரியகள் :
தலைவர் : உப தலைவர் : செயலாளர் உப செயலாளர் : பொருளார் : பத்திராதிபர் துணைப்பத்திராதிபர் :
கலை வர்த்தக
செயற்குழு
பொறுப்பாசிரியர்கள் :
தலைவர் :
உப தலைவர் :
66 to 676tti :
உப செயலாளர் : பொருளாளர் : பத்திரா பதிபர் : துணைப் பத்திரா திபர் : இனக்காய்வாளர் : விளம்பரப் பொறுப்பாளர்கள் :

மாணவர் மன்றச் D - 1997
திரு. ஆ. கமலநாதன் (அதிபர்) திரு. ஆறு. திருமுருகன் திரு. வ, நந்தீஸ்வரன் திருமதி த. திருலிங்கம் லோ, றமணன் கு. சிபானி பு, பாலேந்திரா ஜெனிதா க. உதயகுமார் இ. கிருஷ்ணமேனன் ப. ரேணுகா
மாணவர் மன்றச்
- 1998
திரு. க. சிவாஜி ( அதிபர் ) திரு. ஆறு. திருமுருகன் திரு. வ, நந்தீஸ்வரன் திருமதி த. திருலிங்கம் இ. ரமணன் செ. காயத்திரி வி. கருணதாசன் இ. டெய்சி ஜெயமலர் க, ஹரன்
ச சுகீரதன் வ, கலைவாணி சு. சத்தியசீலன் ச. கமல் விமலச்சந்திரா தா. அன்ரன் செல்வக்குமார் ச. சபேசன்

Page 20


Page 21
1997 கலை வர்த்தக
பு. பாலேந்திரா
செயலாளர்
 

நிர்வாக சபை
மாணவா மனற
●
லா, றமணன
é6Ꮼ)ᏛuᏛᏁ/Ꮫ
85. O-5u(5LDTIT பொருளாளர்

Page 22


Page 23
வி. கருணாதாசன் ( 60éᎭuᏗ6ᏍᏛ677 /i - 1998 )
 

ரமணன் avi - 1998 )
&, ബ്രങ് ( பொருளாளர் - 1998)

Page 24


Page 25
சாதனை படைத்த ஸ்கந்தாவின் புதல்வி
செல்வி செ. சுபாஜினி
1997 - அகில இலங்கைத் தமிழ்த்தி போட்டியில்,
சிறுகதைப் பிரிவு - 1இ வடக்கு கிழக்கு மகாணத்
முதலாம் இடம் அகில இலங்கை ரீதியி இரண்டாம் இடம் லண்டன் 1 B, C, நிகழ்ச்சியிலும் வானொலி நிகழ்சியிலும் கலந்து சேர்த்தமை, 1998 - வடக்கு கிழக்கு மாகாண GU0 (' (20ിബ),
முதலாமிடம்
 

க்கு கிழக்கு மாகாண மெய்வல்லுநர் 7 g.ccs”Gü 400m, 800m, 1500m, sav G} ழ்வில் முறையே 1ஆம், 2ஆம், 3ஆம் இடங் ளப் பெற்று அகில இலங்கை தேசிய டப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்
பெற்ற யாழ்ப்பாணச் சாதனையாளர்.
சாதனை படைத்த ஸ்கந்தாவின் புதல்வி
இலங்கை பெருமை,
சிறுகதைப்
செல்வி ஆரபி சிவஞானராசா

Page 26


Page 27
விவாதப் போட்டியில் சாதனை ப
நா. நிஷாந்தன் பு: பா
1997 தமிழ்த்தின விழா நிகழ்ச் போட்டியில் முதலிடமும், அகில இடமும் பெற்று, லண்டன் 1. B. நிகழ்ச்சிகளில் கலந்து கொண் மாணவர்கள்.
 

டைத்த ஸ்கந்தாவின் புதல்வர்கள்
லேந்திரா க. உதயகுமார்
சியில் வடக்கு கிழக்கு மகாணப் இலங்கைப் போட்டியில் மூன்றாம் C நிகழ்ச்சி, இலங்கை வானொலி டு கல்லூரிக்கு பெருமை சேர்த்த

Page 28


Page 29
ஸ்கந்தாவில்
12 - 04 - 19993ναό βίν αν η φύ υη மாணவர் மன்றம் நடாத்திய போட்டியில் யாழ் மாவட்டத்த அதிபர், ஆசிரியரும்.
 

ா சாதனையாளர்கள்
ணப் பல்கலைக் கழக முகாமைத்துவ வணிக அறிவு' வினாவிடைப் தில் முதலாமிடம் பெற்ற அணியினரும்,

Page 30


Page 31
ܓܒܐ
கலை வர்த்தக மாணவர் மன்ற இருப்பவர்கள் (இடமிருந்துவலம், பொறுப்பாசிரியர்), திருமதிவி , கருணதாசன் (செயலாளர்), தி ரமணன் (தலைவர்) திரு. ஆறு நிற்பவர்கள் : (இடமிருந்துவல செ காயத்திரி (உபதலைவர்), (பத்திரா திபர்), க ஹரன் (பெ.
 

செயற்சுழு 1998ஆம் ஆண்டு ) திரு. வி. நந்தீஸ்வரன் (இணைப் இலட்சுமணன் (உப-அதிபர்), வி. திரு K சிவாஜி (அதிபர்), K, L. திருமுருகன் (பொறுப்பாசிரியர்) ம்) ஞானகரன், பற்குணராஜா, வ கலைவாணி, ச. சுகீதரன் ாருளாளர்)

Page 32


Page 33
ண்டு : 1997ஆம் ஆண்
 

கலைப்பிரிவு மாணவிகள்

Page 34


Page 35
அமரர் செல்வி இன்பவதனி முத்தையா சிரேஷ்ட மாணவ தலைவி - 1994
இனிய எம்மாணவரைக் கா அஞ்சலித்து வ
 

அமரர் செல்வன் பொ. கமலநாதன்
கலைத்துறை - 1995 யாழ். பல்கலைக் கழக மாணவன்
ாலன் தன்வசம் கவர்ந்தான் |ணங்குகிறோம்.
கலைவர்த்தக மாணவர் மன்றம்

Page 36


Page 37
"ஒருபாவையின் வி
ஹென்றிக் இப்சன் நோர்வே நாட்டு நாடகாசிரியர். யதார்த்த நாடகத்தின் தலை மகன் எனக் கருதப்படுபவர் ' ஒரு பாவையின் வீடு' இவரது மிகச் சிறந்த நாடகம் எ ன ப் படும். இந்த நா ட கம் " யதார்த்த வாதத்தின் ' பண்புகளையும் 'நன்கமைந்த நாடகம்' என்ற வகையின் இயல்புகளையும் சிறப்புற வெளிப்படுத்தி நிற்கிறது. நல்லதொரு, நவீன சிந்தனை யின் பாற்பட்ட கரு, நினைவில் நிலைத் திடும் பாத்திரங்கள், உள்ளுறை பொருள் கொண்ட உரையாடல்கள். கவித்துவ அழகு மிக்க மொழிநடை, யதார்த்த வாதத்தின் அரங்கமொழிச் சிறப்பு என்பன இந்த நாடகத்தின் சிறப்புக்கள். நவீனத்துவத் தின் ஆரம்பகால புரட்சிகர சிந்தனையின் கலைத்துவ வெளிப்பாட்டின் உயர் உதார ணமாக இந்த நாடகம் உள்ளது. அதனால் சிந்தனைச் செழுமை உலகில் உள்ளளவும் இந்த நாடகம் வாழும் எனலாம்.
பத் தொன் பதாம் நூற்றாண்டின் ஐரோப்பிய மத்தியதரக் குடும்பமொன் றின் கதையினைக் கூறும் இந்த நாடகம் பதினொரு பாத்திரங்களைக் கொண்டது. அவற்றுள் ஐந்து பாத்திரங்கள் முக்கிய மானவை. அவையாவன -
1. திரு. ட்டோர்வால்ட் ஹெல்மர் - குடும்பத்தலைவர், நியாயவாதி
2. நோறா - ஹெல்மரது மனைவி
3. வைத்தியர் ராங்க் - ஹெல் மரின்
குடும்ப நண்பர்
4. நில்ஸ்குறொக்ஸ்டட் -சட்டத்தரணி
5. திருமதி கிறிஸ் டி னா வின்டே -
நோறாவின் சினேகிதி
 

டு' ஒரு பார்வை
குழந்தை ம. சண்முகலிங்கம்
நோறாவின் கதைதான் " ஒரு பாவை யின் வீடு ' அத்தோடு அதையோடு கதை யாக கிறிஸ்டினாவின் கதையும் கூறப்படு கிறது. "பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால் பெரும்பிழை இருக்கிற, தென் பதை இருகதைகளும் கூறுகின்றன. ஆயி னும் ஆசிரியர் பெண்ணின் பரிவுக் குரிய நிலையைக் காட்டுவதோடு அமைதியுறாது மனிதம்' எனும் 'அர்த்தநாரீஸ்வரத்துன்" பெண் இரண்டறக் கலந்து நிற்பதற்கான வழியினையும் குறிப்பீடாகக் காட்டுகிறார் புதுமைப்பெண்ணை உலகம் காணவைக்கி றார்.
மூன்று அங்கங்களைக் கொ எண் டது * ஒரு பாவையின் வீடு' மூன்று அங்கங் களும் ஹெல்மரின் வீட்டில் ஒரு அறையி லேயே தமது களத்தைக் கொண்டுள்ளன. அங்கங்கள் காட்சிகளாகப் பிரிக் கப் ப - வில்லை. ஒவ்வொரு அங்கத்திலும் குறித்த அந்த அறையில் சில மாற்றங்கள் செய்யப் படுகின்றன.
முதலாவது அங்கத்தில் அ  ைனத் து நாடக மாந்தரையும் தரிசிக்கிறோம். அத் தோடு பிரதான பாத்திரங்களின் பண்பு நலன்களையும், அவர்தம் பிரச்சினைகளை யும், கதை ஆரம்பமாவதற்கு மு ன்ன ர் இவர்களது வாழ்வில் நிகழ்ந்தவற்றில் முக் கியமானவற்றையும், இனி நடக்க க் கூடி யவை பற்றிய சில முன்னறிகுறி காட்டல் களையும் இங்கு நாம் கண்டுகொள்கிறோம். இவை அனைத்தும் சிறந்த நாடகவாக்க முறைமையின் நற்பண்புகள் எனக் கொள் ளப்படும்.
இப்சனின் நாடகங்களில் காட்சியமைப் புக்களும், மேடைப் பொருட்களும், கைப் பொருட்களும், அலங்காரங்களும் மிக முக்

Page 38
கியத்துவம் பெறும். அவை பலவற்றைக் குறிப்பீடாகக் காட்டிநிற்கும் அன்டன்செக் கோவின் நாடகங்களை அவர் குறிப்பிடும் காட்சிப்பொருட்கள் இல்லாதும் தயாரிக்க முடியும்; இப்சனை அவ்வாறு தயாரித்தால் அவர் கூறவரும் "கதை"யை முழுமையாகக் கூறிவிடமுடியாது என்பர் நாடகவியலா ளர்கள்.
மத்தியதரக் குடும் பமொன்றுக்குரிய தளபாடங்களையும் பொருட் களை யும் கொண்டதாக அறை இருக்கிறது. அழகு ணர்ச்சியோடு அவை ஒழுங்குபடுத்தப்பட் டுள்ளன. அவை அவ்வில் லத்தின் தலை மகளின் அழகுணர்வை வெளிப்படுத்துகின் றன. அவ்வறையிலிருந்து ஏனைய அறை களுக்கும், வாயிலுக்கும் செல்ல உதவும் நான்கு கதவுகள் உள்ளன. அவை கதையை நகர்த்தப் பெரிதும் உதவுகின்றன.
நாடகம் ஆரம்பமாகும்போது காட்சி யில் எவரும் இல்லை. ஒருகணத்தில் நோறா பிரவேசிக்கிறாள் மிகப் பிரதானமான பாத்திரம் முதலில் அறிமுகப்படுத்தப்படு கிறது. மிகவும் உற்சாகமான மனநிலையில் அவள் இருக்கிறாள். நாளை நத்தார்தினம் அதற்கு வேண்டிய பொருட்களை அவள் வாங்கி வந்திருக்கிறாள். நத்தார் ஒளிநாள்; மகிழ்ச்சியின் திருநாள்; உலகுக்கு ஒளிதர வந்த தெய்வபாலனின் பிறப்பைக்குறிக்கும் நாள். யேசுக்கிறிஸ்து என்றதுமே உலகின் பாவங்களைத்தான் சுமந்து சிலுவையில் அறையுண்டு மரித்துப்பின் உயிர்த்தெழுந்த வரலாறு நினைவை நிரப்பும், "நத்தார்" என்பது இங்கு ஆசிரியரால் குறியீடாகக் கொள்ளப்பட்டுக் குறிப்பீடாகப் பெண்ணி னத்தின் "சிலுவை சுமத்தலை உணர்த்தப் பயன்படுத்தப்படுகிறது. நோறா பெண்ணி னத்தின்பிரதிநிதியாக அமைகிறாள், உயிர்த் தெழ வேண்டிய பெண்மையின் பிரதிநிதி யாகிறாள்.
கடுங்குளிர்ப் பருவத்தின் ஒரு நாளில் இந்த நாடகம் ஆரம்பமாகிறது நத்தா ருக்கு முந்திய நாள் அது. கணப்படுப்பு எரிந்து கொண்டுள்ளது. கடுங் குளிரும் இதமான வெப்பமும் நோறாவின் வாழ்வின்

2 -
எதிரிடைகளின் குறியீடாக உள்ளன எனக் கொள்ளமுடியும் கதையின் போக் கில் கணப்படுப்பும் கதை" சொல்வதைக் காண முடிகிறது.
" நத்தார் மரத் தை முறை யாக மறைத்து வை' என்று நோறா பணிப் பெண்ணிடம் கூறும் வார்த்தைகளோடு நாடகம் ஆரம்பமாகிறது. தனது கணவனின் நலனுக்காக நோறா தனக்குள் "முறையாக மறைத்து வைத்திருக்கும் உண்மை யின் குறிப்பீடுடன் நாடகம் ஆரம்பமாகிறது. நத்தார் மரத்தின் அழகுக்குள் இனி வர விருக்கும் சிலுவை சுமப்பின் தியாகமும் அவலமும் உள்ளுறையாக இருப்பதுபோல நோறாவின் கலகலப்புக்குள் ஆழமான தொரு அவலம் உறைந்திருக்கிறது.
சுமைதூக்கி கேட்ட கூலியை இருமடங் காகக் கொடுக்கிறாள் இந்த 'ஊதாரி'ப் பெண். இவள் ஒரு ஊதாரி என்றே கண வன் கருதுகிறான். உலகம் அறியாத அப் பாவிப் பெண் என்பதும் அவனது கருத்து. தனது துணையில்லாது இவள் எதையுமே செய்யமாட்டாதவள் என்பது அவனது எண்ணம். எனவே இந்தச் சின்னப்பெண்ணி டம், தனது பாவையிடம் அவன் நிறைந்த அன்பும் பரிவும் கொண்டவனாக உள்ளான் ஆனால் பேதையென அவன் கருதும் பெண் அவனுக்காகப் பெரிய காரியமொன்றை அவனறியாதவாறு செய்திருக்கிறாள். அவ ளுக்குக் கடமைப்படுவதைக் கூட அவன் விரும்பான் என்பதால் தான் அவள் அந்தக் காரியத்தை அவனிடமிருந்து மறை க் கி றாள். சிறுசிறு விஷயங்களைக்கூட மறைக்க அவள் பழகிவிட்டாள். சூழல் அவளை அவ்வாறு ஆக்கிவிடுகிறது. இது யதார்த்த வாதத்தின் அடிப்படை எண்ணக்கருவும்கூட மிட்டாய் சாப்பிட்டால் பல் பழுதடைந்து விடும் என்று அவள் அதை உண்பதை அவன் தடைசெய்துள்ளான். அவன் அறியாது அவள் அதை உண் பா ள் கேட்டால் 'இல்லை' என்பாள். பொய்யும் மறைப்பு மின்றி அவள் வாழமுடியாத அவலம். பிடிவாதம் கொண்டதொரு குழந்தையின் அன்புப் பிடியில் சிக்குண்டு திணறும் ஒரு
* பாவை" அவள்

Page 39
நோறா மகிழ்வோடு ஒரு மெட்டை இசைத்தபடி இருக்க அடுத்த அறையிலி ருந்து கணவனது குரல் கேட்கிறது - "அங்கு இசைப்பது எனது சின்னஞ்சிறிய வானம் பாடி தானோ?" என்று ' சின்னஞ்சிறிய
வானம்பாடி' " அணில் குஞ்சு, ' + ' சின் னஞ்சிறிய சலனபுத்திக்காறி” " ஊதாரிக் குட்டி' " நோறாக்குட்டி" என்று தான்
தனது செல்லப்பெண்டாட்டிப் பாவையை அவர் அழைப்பார். அவரைப் பொறுத்த வரையில் அவள் குழந்தை, பாவைப் பிள்ளை" தனது அன்பில் ஊறிக்கிடக்கும் பாவைக்கு எந்தக்குறையும் இல்லையென அவர் எண் ணிக் கொள்கிறார். ஆனால் குடும்ப வாழ்வின் பொறுப்புக்களையும், துன்பதுயரங்களையும் சுமக்கக்கூடியதொரு * மனுஷி என்பதை நிறுவுவதற்காக அவள் தன்னுள் சிலுவை சுமக்கிறாள் என்பதை அவர் அறியமாட்டார்.
மூதலாவது அங்கம் பின்வரும் தகவல் களை வெளிப்படுத்துகிறது. புது வருடத் தோடு ஹெல்மர் வங்கியில் முகாமையாளர் பதவியை ஏற்பதோடு இவர்களது பணக் கஷ்டம் நீங்கும்; ஹெல்மர், நோறா இரு வரும் ஒருவர் மீது மற்றவர் அன்பு கொண்ட வர்களாக உள்ளனர்; பெண்கள் சுயமாகச் சிந்தித்துச் செயலாற்ற முடியாதவர்கள் என்பது ஹெல்மரின் எண்ணம் கடன் பட்டு வாழும் குடும்பத்தில் குரூரம் நிலவும் என் பது ஹெல்மரின் கருத்து, (அவர்பொருட்டு நோறா கடன்பட்டுள்ளாள் என்பது அவ ருக்குத் தெரியாது) அவளுக்கு நத்தார் பரி சாக எது வேண்டும் என அவன் கேட்க, அவள் பணம் தான் வேண்டுமெனக் கேட் டுப் பெறுகிறாள் (கடனைத் தவணை முறை யில் திரும்பச் செலுத்தி வரும் நோ றா இவ்வாறு தான் தன்னை "ஒறுப்பனவு செய்து வாழ்கிறாள் என்பது பின்னரே எமக்கும் தெரியவருகிறது) "இந்த வானம் பாடிகளுக்கும் அணில்களுக்கும் எத்தகைய செலவுகள் உள்ளன என்பதை மட்டும் நீங்கள் அறிந்தால் ' என அவள் கூறுவ தன் பொருள் பின்னர் தான் புரிகிறது; தந்தைபோல இவளும் ஊதாரி எனக்கூறும் ஹல்மர் ' அது உன் இரத்தத்தில் இருக்

கிறது. இவை பரம்பரையாக வருபவை' என்கிறார். ( யதார்த்தவாதியான இப்சன் * சந்ததிக்கூர்ப்பு கொள்கையை இங் வலியுறுத்துகிறார் போலும் ) நோறா மிட் டாய் சாப்பிட்டதை அவளது பல்லைப் பார்த்து அறிந்து கொண்ட ஹெல்மர். அதுபற்றிக் கேட்க 'சத்தியமாக இல்லை" என்று அவள் மறுக்கிறாள் - எமது கண்முன் மறுக்கிறாள் ( அதிக கண்டிப்பு எவரையும் பொய்சொல்லத் தூண்டும் என்பதை உணர் கிறோம்; மேலும் தனது அழகுப்பாவை" எப்படியேனும் அழகாக இருக்க வேண்டும் என்பதே ஹெல்மரின் ஆசை என்பதையும் அவளது ஆசைகள் பற்றி அவருக்கு அக் கறையில்லை என்பதையும் நாம் புரிந்து கொள்கிறோம் ) அவள் இல்லை" என்று மறுத்ததும் அவரும் "சும்மா கேலி செய் தேன்" என்று கூறிவிடுகிறார் (இருவருக் குமிடையில் நெருக்கமான, ஆழமான, ஊடாட்டம் இல்லை என்பதைக் கண்டு கொள்கிறோம். இவற்றின் மூலம் வரவிருக் கும் நெருக்கடிகளுக்கு எம்மை ஆசிரியர் தயார் படுத்துகிறார்) கடந்த வருட நத் தாரின் போது நடந்த அனர்த் த த் தை ஹெல்மர் நோறாவுக்கு நினைவுபடுத்துகி றார்; அவள் பொறுமையோடு செய்த அலங்காரங்கள், ஆயத்தங்கள் அனைத்தை யும் பூன்னயொன்று புகுந்து சிதைத்து விட்டது (குடும்பத்தின் மகிழ் வுக் கா க அவள் செய்த காரியம் பாதகமாகி விடு வதைக் காணும் போது இந்த நிகழ்வின் நினைப்பு எம்மை உறுத்துகிறது. மேலும் "பூனைக்கு ஒன்பது உயிர் என்பார்கள். இவளது முயற்சி மீண்டும் மீண்டும் சிதை யுமோ என்ற எண்ணம் எழுகிறது)
அடுத்து இந்தக்கதையின் மூன்றாவது முக்கிய நபரான திருமதி கிறிஸ்டினா வின் டேயைச்சந்திக்கிறோம். அவள் நோறா வின் சிறுவயதுச் சினேகிதி, பத்து வருடங்களின் பின்னர் சந்திக்கின்றனர். தோழியைக் கைக் கதிரையில் அமர்த்தித்தான் ஆடுகதிரையில் அமர்கிறாள் நோறா ( கிறிஸ் டினா உறுதி யா ன வ ள்; நோறா ஈ டா டு பவ ள் என வே, அவர்களை அமர வைக்கும் ஆசனங் கள் மூலமும் ஆசிரியர் கதைசொல்கிறார்

Page 40
ஆடுகதிரை ஆடி அடங்கத்தானே வேண்டும் இப்போ கிறிஸ்டினா விதவை; பிள்ளைச ளும் இல்லை; தனி மரம், அவளுக்குத் தனது கணவனது வங்கியில் வேலை பெற் றுத்தர நோறா இசைகிறாள் (இச்செயல் நோறாவின் வாழ்வில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்பதை தோழி யர் இருவரும் அறிந்திருக்கவில்லை) முன் னர் ஓய்வற்ற கடும் உழைப்புக் காரணமாக ஹெல்மர் நோய்வாய்ப்பட்டதையும்; அை ரது உயிரைக்காக்க அவரை இத்தாலிக்கு அழைத்துச் செல்லவேண்டி வந்ததையும். அவர் பொருட்டே செல்கிறோம் என்பதை அவர் அறிந்தால் சம் ம தி க்க மாட்டT என்பதால் தனது மகிழ்வுக்காக வருமாறு வற்புறுத்தி இசைய வைத்ததையும் பணம் நிறையத் தேவைப்பட்டதையும்; தந்தை யிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்ட தாக நோறா கூறுவதையும் அது பொய் அவள் வேறு ஒருவரிடமிருந்தே பணத்தைப் பெற்றாள்) கணவனது கடும் நோய் காரண மாசு நோறா தந்தையின் மரணப்படுக்கை யருகே நிற்க முடியாது போனதையும், இத்தாலியில் தங்கி ஒய்வெடுக்க ஹெல்ப ரின் நோய் குணமடைந்ததையும்; கிறிஸ் டினா நோய் வாய்ப் பட்டிருந்த தனது தாயைப் பராமரிக்கவும் தம்பியர் இருவரை யும் வளர்த்தெடுப்பதற்காகவும், தனது காதலைக் கைவிட்டு பணம் சிறிது வைத் திருந்த ஒருவனை மணந்துகொண்ட நிர்ட் பந்தத்தையும், தாயும் இறந்தாள் தம்பி யரும் வளர்ந்து தனித்துப் போயினர். கவைக்குதவாத கணவனும் இறந்தான் இவள் அனாதை ஏழையானாள் என்பதை யும்; ' இனி நான் வாழ்வதற்கென்று எவ ருமே இல்லை' என்ற நிர்க்கதி நிலையில் வாழும் கிறிஸ்டினாவையும் நாம் கண்டுப் கேட்டும் அறிந்து கொள்கிறோம்.
தந்தையின் பணத்தை வைத்துத்தான் நோறா சீரும் சிறப்புமாக வாழ்கிறாள் என்று நம்பும் கிறிஸ்டினா அவ்வாறு அவ ளிடம் கூறியதையும் தாய்க்கும் தம்பியருக குமாகச் செய்த தியாகங்களைப் பெருபை யோடு எண்ணுவதையும் கண்ட நோறா 'எனக்கும் பெருமைப்படுவதற்கு ஒன்று

4 =
இருக்கிறது' என்று ஆரம்பித்து தந்தை மரணப்படுக்கையில் இருந்த வேளையில் தனது கணவனது நோய்பற்றிக் கூறி அவ ரது இறுதிநேர அமைதியைக் கெடுத்துவிட விரும்பாததால் அப்பணத்தைத் தான்வேறு வழியில் பெற்றுக்கொண்டதாகவும் எங்கி ருந்து பெற்றேன் என்பது தனது கணவ னுக்கும் தெரியாது என்றும், எல்லா ஆண் களையும் போலத் தற்பெருமை கொண்ட ஹெல்மர் அதை அறிந்தால் "எனக்குத் தான் கடமைப்பட்டுள்ளேன் என்ற நினைப் பால்' அவர் பயங்கரமாகப் புண்பட்டும் அவமானப்பட்டும் விடுவார். அது எங்க ளுக்கிடையிலுள்ள அனைத்தையும்கெடுத்து விடும் என்கிறாள். நோறாவின் தியாகத் தையும் இருதலைக்கொள்ளி எறும்பு நிலை யையும் இங்குதான் நாம் முதலில் காண்கி றோம். யாரிடமோ அவள்பெற்ற கடனைத் தவணை முறையில் திருப்பிச் செலுத்து வதற்காக அவள் பட்டுக்கொண்டிருக்கும் துயரம் எமக்கு அவள் பால் மிகுந்த அனு தாபத்தையும் மதிப்பையும் ஏற்படுத்துகி நிது.
இந்நிலையில் ஹெல்மரின் புதியதொழில் கைநிறையப் பணத்தைத் தரப்போகிற தென்று கிறிஸ்டினாவிடம் கூறும் நோறா '.இனி விரைவில் வசந்தம் வரும், வானம் நீலமாக இருக்கும். ஒ , உயிரோடும் மகிழ் வோடும் இருப்பது அற்புதமாக இல்லையா என்று கூறி ஆனந்தப் படுகிறாள். அவள் பால் எமக்குப் பரிவும் பாசமும் ஏற்படுகி நி0து. அவள் எம்மவளாகிவிடுகிறாள் ( யதார்த்த வாத நுட்பம் பார்வையாள ரைப் பாத்திரங்களோடு பினைத்து விடு வதை இங்கு நாம் அவதானிக்கலாம். இனி வரவிருப்பதில் பார்வையாளர் மிகுந்த ஆர் வங்கொண்டு நிற்பர்)
அடுத்து நாடகத்தின் நான்காவது முக் கியமான நபரான குறொக்ஸ்டட்டை நாம் காண்கிறோம். அவரைக்கண்ட கிறிஸ்டினா திடுக் குற்றுத் திரும்பிச் சென்று எதிர்ப்புறச் சுவரருகே நிற்கிறாள். அவரைக் கண்டு நோறாவும் பதட்டமடைகிறாள். இரண்டு பெண்களும் ஏன் இப்படி நடந்து கொள்கி

Page 41
5
றார்கள்? இந்த மனிதருக்கும் இந்தப்பெண் களுக்குமிடையில் எதோவொரு தொடர்பு இருக்கிறதா? (எமது ஆர்வத்தைத் தூண்டும் முன்னறிகுறிகாட்டல் உத்திகளில் ஒன்று தான் இது
குறொக்ஸ்டட், வங்கி அலுவ லா க ஹெல்மரைக் காண வந்திருக்கிறார் என் பதை அறிந்தபின் தான் நோறா சற்றுப் பதட்டம் தணிவது தெரிகிறது. அவரை ஹெல்மரின் அறைக்கு அனுப்பிவிட்டு இரு பெண்களும் உரையாடுவதிலிருந்து குறொக் ஸ்டட் பற்றிச் சில தகவல்கள் தெரியவரு கின்றன குறொக்ஸ்டட்தாரமிழந்தவர், பல பிள்ளைகளோடு தனித்திருந்து தவிக்கிறார் கிறிஸ்டினாவுக்கு அவர் அறிமுகமானவர் என்பதனைத்தும் தெரிய வருகிறது. இவ் வேளையில் கணப்படுப்பின் நெருப்பை நோறாதுரண்டி விட்டவாறு ' அது இனி எரி யவேண்டும் ' என்கிறாள். அவள் ஆடு கதி ரையைத்தள்ளிவிடுகிறாள் (இங்கு மேடைப் பொருட்கள் மீண்டும் பேசுவதை நாம் பார்க் கலாம்) கிறிஸ்டினாவின் மனதில் ஏதோ வொன்று பற்றி எரிகிறதோ? தள்ளி விடப் பட்ட ஆடுகதிரை ஆடிக்கொண்டிருப்பது போல அவளது உள்ளம் ஊசலாடுகிறதா? அவள் மட்டும் தான் தவிக்கிறாளா? நோறா வின் நிலை என்ன? இவற்றுக்கான விடை பின்னர் எமக்குக் கிடைக்கிறது.
அடுத்து நாம் ஐந்தாவது முக்கிய நப ரான வைத்தியர் ராங்க் என்பவரைச் சந் திக்கிறோம். அவர் இந்தக்குடும் பத்தின் நண்பர்; பிரம்மச்சாரி இங்கு தினமும் வந்து போகின்றவர். இப்பொழுது ஹெல்மரின் அறையிலிருந்து வருகிறார். அங்கு குறொக் ஸ்டட் சென்றதும் இங்குவருகிறார் ' மூலா தாரம் வரை அழுகிப் போனவர் ' என்பது குறொக்ஸ்டட் பற்றிய அபிப்பிராயம் அவர் செய்யத்தகாதவை பலவற்றைச் செய்கி றார் என்பதை நாம் பின்னர் அறிகிறோம். ஆயினும் இறுதியில், அவர் ' மூலாதாரம் வரை அழுகிப் போனவர்" அல்ல என்பதை உணர்கிறோம். சந்தர்ப்ப சூழ்நிலைகளும் சூழவுள்ள மனிதரது நடவடிக்கைகளுமே அவரது தகாத நடவடிக்கைகளுக்குக் காரண ாமக அமைந்தது என்பதையும், சூழல்
2

நல்லபடி அமைய அவர் நல்லதைச் செய் வதையும் நாம் பின்னர் காண்கிறோம். சூழல் மனித நடவடிக்கைகளுக்குக் காரண மாகிறது என்ற யதார்த்தவாத சிந்தனை இவரிலும் காட்டப்படுகிறது)
அடுத்து ஹெல்மர் அங்கு வருகிறார். கிறிஸ்டினாவுக்கு வங்கியில் இடம் கொடுக்க அவர் சம்திக்கிறார் 'இல்லாத பொல்லாத" பலதையும் " புழுகி நோறா தனது தோழி யைச் சிபாரிசு செய்வதைக் காணும் நாம் பொய் சொல்வது அவளுக்கு ஒரு வினோத விளையாட்டாகப் போயிருப்பதைக் கண்டு அஞ்சுகிறோம், பொய்யில் அமைந்த இல்ல றம் சிதைந்து விடுமோ என ஏங்குகிறோம்.
ஹெல்மர், ராங்க், கிறிஸ்டினா மூவரும் வெளியேறுகின்றனர். அதனை அடுத்து நோறாவின் பிள்ளைகளும் தாதியும் வரு கின்றனர். நோறா அவர்களோடு ஆனந்த மாக விளையாடுகிறாள். அவர்களோடு சேர்ந்து அவளும் ஆனந்தமான தொரு குழந்தையாகி விடுகிறாள். குறொக்ஸ்டட் டின் வருகையோடு அந்த ஆனந்தமும் குற் றுயிர் படைத்ததாக அமைந்து விடுகிறது. பின்னர் விளையாடுவோம் எனக் கூறிப் பிள்ளைகளைத் தாதியோடு அனுப்பிவிடு கிறாள். ஆனால் தாயும் பிள்ளைகளும் சேர்ந்திருப்பதை நாம் இனிக் காணமாட் டோம். பிள்ளைகளை நாம் இனிக்காணவே மாட்டோம் என்று கூறிவிடலாம்; ஆயினும் அவர்கள் தாயிடம் வந்து விளையாடக் கேட்பர், அவள் விளையாடும் மனநிலை பில் இல்லை. தா தியோ டு அவர் க  ைள அனுப்பி விடுவாள்.
குறொக்ஸ்டட்டின் இந்த வருகையோடு எமக்குப் பல சிக்கல்கள் தெரியவருகின்றன நோறா இவரிடமிருந்துதான் பணத்தைப் பெற்றிருக்கிறாள் வங்கியில் இவரைப்பதவி நீக்கம் செய்து விட ஹெல்மர் உத்தேசிக்கி றார்; அந்த இடத்தைத்தான் கிறிஸ்டினா வுக்கு க் கொடுக்கச் சம்மதித்துள்ளார்; குறொக்ஸ்டட்டுக்கும் கிறிஸ்டினாவுக்குக் மிடையே நீண்டதொரு பகைமை உறவு இருப்பது போலத் தெரிகிறது; தான் பத வியிழந்தால் பணம் சம்பந்தப்பட்ட இர

Page 42
- 6
கசியத்தை ஹெல்மரிடம் தெரிவித்துப் பழிக்குப்பழி வாங்குவேனெனக் குறொக் ஸ்டட் பயமுறுத்துகிறார்; மேலும், கடன் பத்திரத்தில் தந்தையின் ஒப்பத்தை இவளே எழுதியிருக்கிறாள். இவை எல்லாவற்றை யும் அம்பலப்படுத்தப் போவதாக குறொக் ஸ்டட் பயமுறுத்த, எஞ்சியுள்ள பணம் முழுவதையும் கணவர் தருவார் எனப் பெருமையோடு கூறுகிறாள். பாவம் பேதை நடக்க இருப்பதைப் பின்னர்தான் காண 6) Tib.
குறொக்ஸ்டட் சென்றபின்னர் நத்தார் மரத்தை அவள் அலங்கரிக்கிறாள் " நாங் கள் ஒரு அழகிய மரத்தை உருவாக்கு வோம் - நீங்கள் விரும்பிய எல்லா வற்றை யும் நான் செய்வேன் ட்டோர்வால்ட், நான் பாடி ஆடுவேன்' என்று தனக்குத் தானே கூறிக்கொள்கிறாள். நத்தார்மரம் இங்கு குறியீடாகிறது. தனது வாழ்வை அழகுபடுத்திக் கொள்ள அவள் எத்தகை யதொரு தியாகத்தை, எவரும் அறியாத வாறு செய்து கொண்டிருக்கிறாள். கணவன் விரும்பிய எல்லாவற்றையும் செய்கிறாள் தனக்கு இடர்வரும் போது அவர் துணை நிற்பார் என உறுதியாக நம்புகிறாள். ஆனால். பாவம் நோறா,
வெளியே சென்ற ஹெல்மர் திரும்பி வந்ததும் குறொக்ஸ்டட் வந்து போனது பற்றி விசாரித்து விட்டு, அந்த நபர்மீது தனக்கிருக்கும் வெறுப்பைக் கொட்டுகிறார் குறொக்ஸ்டட்டை வேலையிலிருந்து நீக்க வேண்டாம் என நோறா கேட்க முனைகி றாள். ஆனால் ஹெல்மர் அதற்கு இடம் கொடுக்காது ' அவன் கள்ளக் கையொப்ப மிட்டவன், அதன் அர்த்தம் பற்றி உனக்கு ஏதும் புரியுமா? " எனக் கோபிக்கிறார் அவர் தொடர்ந்து குறெர்க்ஸ்டட் மீது சுமத்தும் குற்றங்களும், அவற்றை அவர் வெறுக்கும் முறைமையும் நோறா வை அச் சுறுத்துகின்றன அத்தனை. தவறுகளை யும் அவளும் புரிந்திருக்கிறாளே "பொய் யின் சூழலில் வாழும் பிள்ளைகள் நஞ் சூட்டப்படுகின்றனர்" என்றும் பொய்யர் அருகில் இருக்கும் போது தனக்கு நோய் எற்படுவதா கத் தா ன் உண ர் வதாக

ஹெல்மர் கூறும் வார்த்தைகள் நோறா வின் உள்ளத்தைச் சுடுகின்றன. அவலம் நிறைந்த நாடக நிலைமைகளை மிகவும் யதார்த்தமான முறையில் இப்சன் கையாள் வதை நாம் இங்கு காண்கிறோம்.
இவ்வாறக முதலாவது அங்கம் நாடக மாந்தர் அனைவரையும் அறிமுகப்படுத்து வதோடு பிரதான பாத்திரம் இரண்டின தும் குணநலன்களை நன்கு தெளிவுபடுத்தி கதையின் பிரதான மோதலை அதன் உச் சத்தில் கொணர்ந்து நிறுத்துகிறது. இனி என்ன நடக்கும் என்பது மிக மங்கலாக எமக்கு தெரிவது போல இருப்பினும், நல்ல தும் நடக்கும் என ஏங்குகிறோம்.
இரண்டாவது அங்கத்தில் நத்தார் மரம் ஒரு மூலையில் இருக்கிறதுg அதில் இருந்த வையாவும் களையப் பட்டுப் பரட்டையாக இருக்கிறது. எரிந்த மெழுகுவர்திகளின் அடிக்கட்டைகள் அதில் உள்ளன. இவை யாவும் நேரறாவின் நிலைமையின் குறியீடு களா? அவள் வெளியே செல்லும் போது அணியும் ஆடைகள் சோபாவில் உள்ளன அவை எதையாவது முன்னறிகுறி காட்டி நிற்கின்றனவா? இப்சனின் நாடகத்தில் எந்த மேடைப்பொருளும் சும்மா இருப் பதில்லை. இன்று நத்தாருக்கடுத்த நாள் இனி என்ன பாடுகளும் சிலுவை சுமப்புக்க ளும் வரவிருக்கின்றனவோ! அதை அடுத்து உயிர்ப்பும் இடம் பெறுமோ?
வினோத உடை விருந்தொன்று மேல் மாடியில் உள்ளவர் தம் இல்லத்தில் நடை பெறவிருக்கிறது. நோறா அதற்காக தனது ஆடை ஒன்றைச் சரிசெய்து கொள்ள வேண் டியுள்ளது. அதற்கு அவள் கிறிஸ்டினாவின் உதவியை நாடுகிறாள், கிழிந்த உடையும் அதைச் சரிசெய்ய கிறிஸ்டினா உதவுவதும் கூடக் குறியீடாக நின்று சிலதை உணர்த்து கிறது.
இந்த அங்கத்தில் நாம் வைத்தியர் ராங்க் பற்றி மேலும் அறிகின்றோம். அவர் நோய் நிறைந்தவராக இருக்கி றார். தந்தையின் ஒழுக்கங் கெட்ட வாழ்வு ம கன ர ன ராங்கின் உடல் நிலையைப்

Page 43
- 7
பாதித்துவிட்டது. கூர்ப்புக் கொள்கை இப் சனால் இங்கும் வலியுறுத்தப்படுகிறது. ராங்க் விசேடமானதொரு விருப்பத்தை நோறாவிடத்து வளர்த்து வந்திருக்கிறார் என்பதை அவள் அறிந்தும் அந்த எண்ணம் விசித்திரமானது என்று அவரிடம் கூறி விடுகிறாள். அவர் ஏமாற்றம் அடைந்தா லும் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு ஹெல்மரின் அறைக்குச் சென்றுவிடுகிறார்.
குறொக்ஸ்டட் மீண்டும் வந்து பறி போய்விட்ட தனது பதவியை மீண்டும் பெற்றுத்தராவிட்டால், பணம் சம்பந்த மான அனைத்தையும் ஹெல்மருக்குத் தெரி விக்கப் போவதாகப் பயமுறுத்துகிறார்: பயமுறுத்தியதோடு நில்லாது அச் செய்தி அடங்கிய கடிதத்தை ஹெல்மரின் கடிதப் பெட்டிக்குள் போட்டுவிட்டுப் போகிறார். * எங்களுக்கு விமோசனமில்லை " எ ன ஏங்குகிறாள் நோறா கடிதத்தைத் திரும் பப் பெற்றுக் கொள்ளும் படி குறொக்ஸ் டட்டிடம் கேட்கப் போகிறாள் கிறிஸ்டினா முன்னொரு காலத்தில் இவளுக்காக எதை யும் செய்யச் சித்தமாக இருந்தவர்தான் அவர் என்பதை இங்கு நாம் அறிகிறோம்.
ஹெல்மர் கடிதப் பெட்டியைத் திற வாது பார்த்துக் கொள்வது நோறா வின் பொறுப்பு. நாளைய விருந்து முடியும் வரை ஹெல்மர் தனக்கு உதவ வேண்டும் என் றும் அதன் பின்னரே கடிதங்களைக் கூடப் படிக்க வேண்டும் என்றும் அவள் கேட்க, அவர் சம்மதிக்கிறார். ஆனால், குறொக்ஸ் டட் ஊரில் இல்லை என்ற தகவலை கிறிஸ் டினா வந்து சொல்கிறாள், இனிநடப்பது நடக்கட்டும் " ஒரு அற்புதம் நடக்கும் என்ற எதிர்பார்ப்போடு நோறா இருக்கி
றாள் பாவம் அவள்.
மூன்றாவது அங்கத்தில் மேசையும் அதைச் சூழவுள்ள கதிரைகளும் மேடை யின் மையப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளன மேசையில் ஒரு விளக்கு எரிகிறது, இந்த ஒழுங்கு சிலவற்றைக் கூறிநிற்கிறது. இங்கு ஒரு கனதியான பேச்சு வார்த்தை நடக் கப் போகிறதா ? அதில் ஒரு பிரகாசமான முடிவு வரக்கூடும் என்பதைத் தான் விளக்கு

குறிக்கிறதா ? இரண்டு பேச்சு வார்த்தை" கள் இங்கு நடக்கப் போகின்றன - ஒன்று கிறிஸ்டினாவுக்கும் கு றொக் ஸ்டட் டு க்கு மிடையில்; மற்றையது ஹெல்மருக்கும் நோறாவுக்கு மிடையில் பெறுபேறுகளைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
காட்சி ஆரம்பத்தில் கிறிஸ்டினா மட் டும் இருக்கிறாள். மேல் வீட்டில் நடன இசை கேட்கிறது. குறொக்ஸ்டட் வருகிறார் இவர்களது உரையாடல் மூலம் முன்னர் இவர்கள் ஒருவரை ஒருவர் நேசித்த நெருக் கமும், தாய்க்கும் தம்பியருக்குமாக அவள் காதலைக் கைவிடவேண்டி வந்ததையும், இடையில் இருவரது வாழ்வும் அவலம் நிறைந்ததாக அமைந்துவிட்டதையும், இப் பொழுது இருவருமே சிதைந்த தத்தமது கப்பல்களின் " பாய்மரத்தைப் பற்றிக் கொண்டிருப் ' பவர்கள் என்பதையும் அறி கிறோம். இப்போது இருவரும் சேர்ந்து ஒரு பாய்மரத்தைப் பற்றிக்கொள்ள இசை கின்றனர். பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ பாதகமான சூழல் குறொக்ஸ் டட்டைத் தீயவற்றைச் செய்யத் துரண் டியது. இனி வரப்போகும் நல்ல சூழல் நிச் சயம் அவரை நல்ல மனிதராக்கும். கடி தத்தை அவர் திருப்பிப் பெற்றுக் கொள் ளப் போவதாகக் கூறுகிறார். கிறிஸ்டினா இப்போ வேண்டாம் என்றாள். ஏன்? "இந்த வீட்டில் என்னால் நம்ப முடியாதவை சில நடந்துள்ளதை நான் பார்த்தேன். முழுக் கதையையும் ஹெல்மர் அறிய வேண்டும். அவர்களிடையில் பூரணமான புரிந்துணர்வு வருவதற்காக இந்தத் துர்ப்பாக்கியமான இரகசியம் வெளியே கொண்டுவரப்பட வேண்டும். இந்த அளவு மறைப்பும் தவிப் பும் இருக்கும் போது அதுசாத்தியமா காது ' என்கிறாள். எ ம து விருப்பமும் பதட்டமும் அதிகரிக்கின்றது. கிறிஸ்டினா நல்லெண்ணத்தோடு விஷப்பரீட்சை செய் கிறாளா ? பாவம் நோறா.
மாடிவீட்டில் நடனம் முடிவுக்கு வரு வதைக் கேட்க முடிகிறது. குறொக்ஸ்டட் வெளியேறுகிறார். ஹெல்மரும் நோறாவும் வருகின்றனர். நோறா தனது கணவரிடம்

Page 44
அனைத்து உண்மைகளையும் சொல்லிவிடு வது நல்லதென, அவளிடம் தனித்துக் கூறி வி ட் டு கிறிஸ்டினா வெளியேறுகிறாள். விருந்திலிருந்து வீ டு செல்லும் வழியில் ராங்க் இங்கு வந்து போகிறார். அடுத்த விருந்து வரை தான் உயிருடன் இருக்கப் போவதில்லை என்பதைக் கூறிப் போகி றார்.
ஹெல்மர் சென்று கடிதப் பெட்டியி லிருந்து கடிதங்களை எடுக்கிறார். 'முன் கதவு வெளிச்சத்தை அணைத்துவிடு " எனப் பணிப்பெண்ணிடம் உரத்துக் கூறி விட்டு மேலால் உள்ள கடிதத்தைப் பார்க் கின்றார். அது ராங்க்கின் கடிதம், அதன் உறையில் கறுப்புச் சிலுவை வரையப்பட் பட்டுள்ளது. மரணப்படுக்கைக்கு அவர் போகும் போது இத்தகையதொரு சின்னம் பொறிக்கப்பட்ட கடிதம் அவருக்கு அவரி டமிருந்து வரும் என அவர் முன்னர் நோறா விடம் கூறியிருந்தார். " வெளிச்சத்தை அணைத்துவிடு' என்ற ஹெல்மரின் வார்த் தைகள் குறியீடாவதை இப்போது உணர் கிறோம் நோறாவின் இல்லை, ஹெல்ம ரின் வாழ்வில் வரப்போவதன் குறியீடாக அது அமைவதையும் நாம் காண்போம்.
நண்பனை இழக்கும் நிலையில் ஹெல் மர் நோறாவிடம் அதிக நெருக்கம் கொள் கிறார், மனவெழுச்சி வேகத்தில் அவர் " நோறா வரவிருக்கும் ஒரு ஆபத்து உன் னைப் பயமுறுத்த, நான் எல்லாவற்றை யும் பணயம் வைத்து - எனது உயிரை யும் - உன்னைக் காப்பாற்றக் கூடியதான தொரு நிலைமை வரவேண்டுமென நான் அடிக்கடி விரும்பியிருக்கிறேன் ' என்கி றார். இது வாய்ப்பான தருணம் எ ன எண்ணிப் போலும் உடனே நோ றா * இப்போ நீங்கள் உங்கள் கடிதங்களைப் படிக்க வேண்டுமென்கிறாள். கடிதங்களைப் படிக்க அவர் தனது அறைக்குப் போகி றார்.
என்ன நடக்கு மோ என நோறா வீட்டைவிட்டு வெளியேற முற்படும் போது ஹெல்மர் ஆவேசமாக வருகிறார்; வெளி ாேற முற்படும் மனைவியைத் தடுக்கிறார்.

يسبس 8
* இந்த உலகில் நான் எதையும்விட உங் களை நேசித்தேன் " அ த னால் தான் அதைச் செய்யத் துணிந்தேன் என்கிறாள். இந்த மிகை நடிப்பு", "பாசாங்கு எதுவும் தேவையில்லை என்கிறார் கணவர். "கேடு கெட்ட பெண்ணே எனச் சபிக்கிறார். அப்பன் குணம் அப்படியே அவளிடம் இருக் கிறதென்கிறார். அவள் ஒரு பொய்யள்
பாசாங்குக்காரி' 'குற்றவாளி' என்கிறார். 'எனது சந்தோசத்தை அழித்துவிட்டாய், என் எதிர்காலம் முழுவதையும் நீ கெடுத்து விட்டாய்" எனக்கூச்சலிடுகிறார். அவருக்கு அவர்தான் முக்கியம்; அவளல்ல.
அவரை நன்கறிந்திருந்த அவளது இத யத்தின் மூலையில் " அற்புதமொன்று " நிகழக் கூடும் என்ற நப்பாசையொன்றிருந் தது. பழியைத் தான் ஏற்று, அவளைக் காப்பார் என்று அவள் அணு அளவு நம் பினாள். அவரது விஸ்வரூபம் அவளை அதிர்ச்சியுறச் செய்யவில்லை. அவளது உள்ளத்துள் கனிந்தெழுந்த முடிவு கல்லெ னத் திண்மை பெறு கிற து. அவளைப் பொறுத்தவரையில் இந்தக் கதை முடிந்து விடுகிறது; ஆயினும் எமக்காக அதுதொடர் கிறது.
அவளது முடிவை அறியாத அந்த முட் டாள் " நீ இங்கு எனது வீட்டில் தங்கியி ருப்பாய் - ஆனால், பிள்ளைகளை வளர்க்க உன்னை நான் விடமாட்டேன், ' என்கி றார். இவ்வேளை குறொக்ஸ்டட்டிடமி ருந்து நோறாவுக்கு ஒரு கடிதம் வருகிறது. பணிப்பெண்ணிடமிருந்து அதைப் பறித் துப் படிக்கிறார் ஹெல்மர் அதை அவசர மாகப் பறித்துப் படித்த அவர் " நான் காப்பாற்றப்பட்டுவிட்டேன் ' என ஆனந்
தமாகக் கூறுகிறார். எப்பவும் " நான் ' என்பதுதான் அவருக்கு முக்கியம். அவள் * பெண்" தானே.
கடிதத்தில், இதுவரை நடந்தவற்றுக் காக குறொக்ஸ்டட் மன்னிப்புக் கேட்கி றார்; கடன் பத்திரத்தைத் திருப்பி அனுப் புகிறார். எமது உள்ளங்களில் அவர் உயர் கிறார்; அவரது காலடியில் ஹெல்மர் புழு வெனக் கிடப்பது போல நாம் உணர்கி

Page 45
ܔ
றோம். எத்தகைய சந்ததிக் கூர்ப்பும், சமூக சூழலும் ஹெல்மரை மனிதனாக்கின என் பது பற்றி இப்சன் எதுவுமே கூறவில்லை இவை இரண்டுக்கும் அப்பால், மனிதன் தானாகவே உருவாக்கிக் கொள்ளும் பண்புகளும், அவனது நலந்தீங்குக்கும் கார ணமாக அமையக் கூடும் என இப்சன் சிந் திக்க முற்படுகிறாரா? நீள நினைந்திட வேண்டியதொரு விஷயமாகும்.
நோறாவை மன்னித்து விட்டதாகக் கூறி ஹெல்மர் ஆனந்தப்பட்டுக் கொள்கி றார். அவள் எழுந்து உள்ளே செல்கிறாள். வினோதஉடை விருந்துக்குத் தான் அணிந் திருந்த வேட உடுப்புக்களைக் களைகிறாள் * உடைகளை மாற்றிவிட்டேன் ' என்கி கிறாள். பொருள் பொதிந்த வார்த்தைகள் ஹெல்மரோடு " கதைப்பதற்கு அதிகம் இருக்கிறது ' என்று கூறி மேசையின் ஒரு கரையில் உள்ள நாற்காலியில் அமர்கிறாள்; அவர் மறுகரையில் அமர்கிறார். இடை வெளியாக மேசை அவர்களுக்கு மத்தியில் நீண்டுகிடக்கிறது.
அவர்களது எட்டு வருட மணவாழ்க் கையில், கணவனும் மனைவியும் சேர்ந்து கதைப்பது இதுதான் முதல் தடவை ' இதுதான் அந்தக் குடும்பத்தின் சோகம் - அவலம், இநத அவலம் வினளந்தது ஹெல் மரால் .
இப்போது நோறா வுக்கு வேறு வழி எதுவுமில்லை. அவள் தன்னைத் தான் கண் டறிந்து கொள்ள வேண்டியுள்ளது. இங்கு அதுஒருபோதும் சாத்தியமாகாது, தனித்து நின்றே அவள் தன்னைக் கண்டுகொள்ள வேண்டும். தான் ஒரு மனிதப் பிறவி என்பதை அவள் உணர்ந்து விட்டாள். அவள் நம்பிக்கையினத்தின் மத்தியிலும் நம்பியிருந்த அந்த " அற்புதம் நிகழ வில்லை. விட்டுக்கொடுப்புக்கள், அர்ப்ப
 

) -
னிப்புக்கள், தியாகங்களின் சங்கமத்தால் மலராத இல்லற வாழ்வென்ன வாழ்வு!
நோறா தொடர்ந்து இந்த வீட்டில் இருக்க முடியாது. சற்றும் எதிர்பாராத அதிர்ச்சியால் ஹெல்மர் அரற்றுகிறார். அவள் உறுதியும் நிதானமும் தவறாது செயற்படுகிறாள். அவர் அ ண வித் த திருமண மோதிரத்தை அவரிடம் திருப்பிக் கொடுக்கிறாள். தனது மோதிரத்தை அவ ரிடமிருந்து பெற்றுக் கொள்கிறாள். வீட்டை விட்டு வெளியேறுகிறாள். தாங் கள் இனி இணையமுடியாதா என ஹெல் மர் கேட்க, மிகப்பெரியதொரு அற்புதம் நிகழ்ந்தால் நடக்கலாம் என்றுவிட்டு, * இனிமேல் நான் அற்புதங்ளில் நம்பிக்கை வைக்கப் போவதில்லை", என்கிறாள் ஹெல்மர் இடிந்துபோய் கதிரையொன்றில் கிடக்கிறார் " " கதவொன்று அடித்துச் சாத்தப்படும் ஒசைகீழிருந்து வருகிறது ' என்று மேடைக் குறிப்புக் கூறுகிறது. நாடகம் முடிவடைகிறது.
நோறா கதவை அடித்துச் சாத்திய போது எழுந்த ஒசை பத்தொன்பதாம் நூற் றாண்டு ஐரோப்பா எங்கணும் எதிரொ லித்தது என ஒரு விமர்சகர் கூறினார். பெண்ணொருத்தி தனது கணவனையும் பிள் ளைகளையும் துறந்து, வீட்டைவிட்டு வெளி யேறுவதென்பது அன்றைய ஐரோப்பாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
ஸ் டா னி ஸ் ல | வ ஸ் கி யின் நடிப்பு * முறைமையும், நெறியாளுகை முறைமை யையும், மேடையேற்ற முறைமைகளையும் கைக்கொண்டு இப்சனது ' ஒரு பாவை யின் வீடு ' நாடகத்தை மேடையேற்று வோமானால், அது இன்றும் ஒரு அவலச் சுவை நாடகத்தின் உணர்வை எமது உள் ளங்களில் தொற்ற வைத்துவிடும் என்பதில் ஐயமில்லை.

Page 46
குழந்தை ம. சண் நாடக ஆக்க
ஈழத்து தமிழ் நவீன நாடக வர லாற்றின் புதிய அத் தி யா யம் ஒன்று கலையரசு சொர்ணலிங்கத்துடன் ஆரம்ப மாகின்றது. பேராசிரியர் க. கணபதிப் பிள்ளை உருவாக்கிய சமகாலப் பிரச்சினை களை உள்ளடக்கிய நாடக மரபு 1970களில் பல்கிப் பெருகியது. இலங்கையில் அரசியல் தாக்கம் காரணமாகத் தோன்றிய சமுதா யப் புரள்வுகளை, அரசியல் ஜனரஞ்சக வலுவுடமைகள்ை கரு ப் பொருளாகக் கொண்டு இந் நாடக மரபு உதயம்பெறு கின்றது. படித்த இளைஞர்கள் நாடகத் தில் தீவிர அக்கறை கொள்ளுகின்றனர். நாடகத்தை பயில முறையாக வரன் முறை யாகக் கற்க முயல்கின்றனர். பல பட்டறை கள் உருவாக்கப்பட்டு அவற்றுக் கூடாக கற்கைநெறியாக அரங்கியல் அறிவுவிருத்தி செய்யப்படுகின்றது. இதனுரடாக நாடக அறிஞர்களைப் பெற்று ஈழமண் பொலிவு பெறுகின்றது
இவ்வகையில் ஈழத்தின் நவீன நாடக வரலாற்று நாயகனாக குழந்தை ம. சண் முகலிங்கம் விளங்குகின்றார். சிறந்த நாடக எழுத்தாளராக, நெறியாளராக, தயாரிப் பாளராக புகழ்பெற்று விளங்கும் இவர் * ஈழத்து நவீன நாடக விஞ்ஞானி' எனச் சிறப்பிக்கப்படுகின்றார். இவர் சிறுவயதில் இருந்தே நாடகத்தில் ஈடுபாடு கொண்ட வர். கலையரசு சொர்ணலிங்கத்தின் நாடக வண்டியில் பயணம் செய்தவர். பல இக்கட் டான சூழ்நிலைகளிலும் தாங்க முடியாத பிரச்சினைகள் மத்தியிலும் நாடகம் பற்றிய நினைவுடனே வாழ வேண்டும் என்ற சிந் தனை கொண்டவர். நவீன நாடக (எழுத்

ாமுகலிங்கத்தின் ப் பணிகள்
பொன்னுத்துரை சந்திரசேகரம்
1998, கலை,
துத்) துறையில் புதிய மரபுகளையும் புதிய ஆக்கங்களையும் இணைத்துக் கொண்ட கலைஞராவார்.
குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்கள் பட்டப்படிப்பின் பின் நாடக புத்திஜீவி களான A, குணவர்த்தனா, ஹென்றி ஜெயசேனா, அமரதேவா, சொலைமான் கலாநிதி சு வித்தியானந்தன், கலாநிதி கா. சிவத்தம்பி (பிற் பட்ட காலத் தில் பேராசிரியராக விளங்கியவர்கள், விளங்கு கின்றவர்கள் போன்றோரின் விரிவுரைக ளூடாக நாடக அரங்கியலை வரன்முறை யாக கற்றது மட்டுமன்றி ஆசிரியராக அதிபராக கடமை ஆற்றி தற்போது யாழ் பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கிய லும் என்ற பாடத்துக்கு இடைவரவு விரி வுரையாளராக பணிபுரிந்து வருகின்றார்.
டிப்ளோமா கற்கை நெறிக்கூடாகப்பல் வகை அரங்கின் ஆணி வேர்களை நன் கறிந்து பல அற்புதப்படைப்புக்களை தந் துள்ளார். அசாதாரண இலக்கியப்புலமை கொண்ட இவர் மே  ைலத் தேய நாடக இலக்கணவரன் முறைகளையும் நன்கு தெளிவாகக் கற்றதனால் எமது கீழைத்தேச அரங்க மரபினையும் நன்கு ணர்ந்து இரு படிமங்களாக தர்க்கரீதியிலும் இணைத்து புதிய ஒரு நாடக ஆக்கமுறை யினை அரங்கிற்கு அறிமுகம் செய்தார் என்ற பெருமைக்குரியவர் ஆவார். இது ஈழத்துத்தமிழ் நவீன நாடக வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்து கொண்டது இதன்சிறந்த கலைப்பிரசவமாக"மண் சுமந்த மேனியர்' என்ற இவரின் நாடகம் அமைந்து

Page 47
1 جنسیس۔
உள்ளது. இது மேலைத்தேய நாடகக்கோட் பாடுகள், கிரேக்க அவலச்சுவையின்கோரஸ் முறமை, மகிழ்நெறியின் அங்கவீச்சுக்கள், இப்சனின் சமுதாய சித்திரிப்புமுறை, மேற் றோல் பிறேச்சின் தொலைப்படுத்தல்முறை கீழைத்தேய கூத்துக்களின் ஆட்டம் என்ப வற்றை இணைத்து உருவான ஒரு பரிசோ தனை முயற்சி நாடகமே இந்நாடகமாகும்,
இவ்வாறானதொரு அரு மருந் தன்ன கலைப்படைப்பைத் தந்த இவரின் நாடகப் பணியை நோக்குகையில் இந்து வாலிபர் சங்கம் 1950ல் அளிக்கை செய்த நாடகத்தில் கிழவன் பாத்திரம் ஏற்று நாடகக் கலை யில் காலடி எடுத்து வைத்தார் 1957ஆம் ஆண்டு இவர் தனது முதலாவதுநாடகமான அருமை நண்பன் என்கின்ற நாடகத்தை எழுதினார். 1950இல் கலையரசு சொர்ண லிங்கத்துடனான நாடக ஈடு பா ட் டி ன் காரணமாய் "தேரோ ட் டி' மகன் என்ற நாடகத்தில் அர்ச்சுனன் பாத்திரம் ஏற்று நடித்துள்ளார், அன் றி லிருந்து இன்று வரை பல்வேறுபட்ட கதைக் கருக்களைக் கொண்டு எழுபதிற்கு மேற்பட்ட நாடகங் களை எழுதி உள்ளார். மாதொருபாவம் திரிசங்கு சொர்க்கம், எந்தையும் தாயும், அன்னையிட்டதீ, உறவுகள், உருவங்கள், உள்ளக்கமலமடி என இவர் எழுதிய நாட கங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். நாடகம் எழுதும்போது பின்வரும் முறை களைக் கைபTண்டTர்.
1. தனியாகத்தானே சிந்தித்து நாடகத்தை
எழுதுதல் - 2. இன்னொருவரோடு கலந்து ரையாடி
நாடகத்தை எழுதுதல் 3. பலரோடு அல்லது குழுக்களோடு கலந்
துரையாடி நாடகத்தை எழுதுதல் இவ்வாறான வழிகளிலே இவரது நாட கங்கள் எழுத்துருப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
குழந்தை ம. சண்முகலிங்கத்தின் நாட கப்பணியின் வளர்ச்சிக் கட்டங்களை பின் வருமாறு நோக்கமுடிகின்றது. 1. 1957 தொடக்கம் 1970 வரையான
ஆரம்பகாலம்

1 -
2. 1977 தொடக்கம் 1990 வரையான
இடைக்காலம்
3. 1990 தொடக்கம் இன்று வரையான
தற்காலம்
இயல்பு நெறியில் இருந்து பெரும் பாலும் விடுபட்டு மோடிமைப்பட்ட அரங்க அசைவுகளில் மட்டும் பழக்கப்பட்ட யாழ்ப் பாண அரங்கிற்கு மேடை அசைவுகளையும், ஊமத்தையும், குறியீட்டு கண்பியத்தையும் எழுத்துருவில் குழந்தை ம சண்முகலிங்கம் அவர்கள் வலியுறுத்தி உள்ளார். பேராசிரி யர் க. கணபதிப்பிள்ளை போன்று யாழ்ப் பாணத்துப் பேச்சு மொழியை உயிர்த்துடிப் புடன் கையாண்டு சமகால சமுதாய அரசி யல் பிரச்சினைகளை வெற்றிகரமாக அரங் கியல் ஊடாக வெளிக்கொணர்ந்தார். குறிப்பாக யாழ்ப்பாண மக்களிடம் காணப் படும் சீதனப்பிரச்சினை சாதிப்பிரச்சினை பெண் அடிமை எனப்பல பிரச்சினைகள் சுட்டிக்காட்டத்தக்கது இதற்கு இவர் எழுதிய ' எங்கள் தவப்பயன்' ' தாயு மானார் நாயுமானார் " போன்ற நாடகங் கள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
குழந்தை ம. சண்முகலிங்கம் ஒர் இடது சாரிச் சிந்தனையாளராவார். தேசிய இன எழுச்சியாளர் சிங்கள தமிழ் மறுமலர்ச்சி சமயஞானம், நாடகக்கோட்பாட்டு விளக் கங்கள், சினிமா அறிவு போன்ற அனுபவங் கள் இவரது நாடக எழுத்துருக்களில் விரவி வந்துள்ளமையைக் காணமுடிகின்றது. குறி யீட்டு நாடகங்கள், சொல்லாடல் நாடகங் கள், சமூக நாடகங்கள், மொழிபெயர்ப்பு நாடகங்கள், சிறுவர் நாடகங்கள், உரை நாடகங்கள் எனப்பல வடிவில் நாடகங்க ளைப் படைத்துள்ளார். இவரது நாடகங் களில் அவலமும் அங்கதமும் மாறிமாறி வந்து செல்வதைக் காணமுடிகின்றது.
இவரது நாடக ஆக்கப்பணிகளில் சிறு வர் நாடகங்கள் மற்றும் பாடசாலை நாட கங்கள் முக்கியம் பெறுகின்றன. ஈழத்துச் சிறுவர் அரங்க வரலாற்றில் இவர் எழுதிய * கூடிவிளையாடு பாப்பா' என்ற நாடகம் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இத் துடன் "ஆச்சி சுட்ட வடை' முயலா;

Page 48
12 ܚ
முனைகிறார்' " இடுக்கண்வருங்கால் ? எனப்பல சிறுவர் நாடகங்களையும் எழுதி உள்ளார். பாடசாலை அரங்கின் வளர்ச் சியிலும் இவரின் இடம் முக்கியமானது. ஆசிரியர்களின் விருப்பு முயற்சிநடவடிக்கை வட்டத்திலிருந்து நடிப்பு, ஆட்டம், ஒளிய மைப்பு, கதை ய  ைம ப்பு ஆகிய ன காத்திரம் மிக்கதான ஒரு கலைப்பயிற்சி யாக மாற்றப்பட்டுள்ளன. இப்பாடசாலை நாடகத்தின் இலக்கிய அறுவடையாகவே சுண்டுக்குழி மகளிர் கல்லூரி வெளியிட்ட 7 நாடகம் என்ற நூல் அமைந்துள்ளது.
மேலும் இவரதுநாடகங்கள் பலபொது வான பண்புகளைக் கொண்டதாக விளங்கு கின்றது. முற்கூற்றுடனும் கடவுள் வாழ்த் துடனும் ஆரம்பித்து வீரஉணர்ச்சி எழுச் சியுடன் முடிவைக் கூறும் தன்  ைம யும் எடுத்துரைஞர் போன்ற செய்து காட்டல் தன்மை அதிகமுள்ள பாத்திரங்களும் அறி முகமாவதைக் காணலாம். அத்துடன் மேடை வெளிக்குறிப்புக்கள் ஒளியமைப்புக் குறிப்புக்கள் போன்றவற்றையும் சம்பவங் கள் பல வற்றி ன் செயற்பாட்  ைட முறையாக அரங்கிலே காட்டுவதும் இவரது நாடகத்தின் பிரதான பங்காக இருந்துள் ளது. இவரது நாடக மொழிநடை தமிழ் மொழியும் ஆங்கில மொழியும் கலந்து காணப்பட்டது.
குழந்தை ம. சண்முகலிங்கத்தின் நாடக ஆக்கப்பணிகளில் முக்கிய இடம் பெறுவது

அவர் ஆரம்பித்து வைத்த நாடக அரங்கக் கல்லூரியாகும். ஈழத்தவரின் தமிழ்நாடக வரலாற்றில் நாடக அரங்கக்கல்லூரியா னது பொன் எழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டிய ஒன்றாகக் காணப்படுகின் றது கற்கை நெறியாக நாடகஅரங்கியலை கற்றுக் கொண்ட இவர் யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட பழைய தலைமுறை நடிகர் களான செல்வரட்ணம், அரசு, யோகநா தன், பிரான்சிஸ் ஜெனம், A T. பொன் னுத்துரை, V. M. குகராஜா, தேவராஜா போன்றவர்களை இணைத்து நாடக அரங் கக் கல்லூரியை 23-01-1978இல் ஆரம்பித்து வைத்தார். எமக்காக ஒரு நாடகம் செய் விப்போம் என்னும் புதிய உத்வேகத்தின் அடிப்படையில் நாடக அரங்கியலை ஒரு வரன் முறையில் தளமாக மாற்றஇந்நாடக நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப காலப்பயிற்சியாளனாக தாசீசியஸ் விளங் கினார். இக்கல்லூரிக்கு குழந்தை ம. சண் முகலிங்கம் ஆற்றிய பணிகள் மகத்தானவை
ஈழத்து நாடக வரலாற்றில் ஓர் அற் புதச்சிற்பியாக விளங்கும் குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்களின் பணிகளால் ஈழத்துத்தமிழ் நாடக வரலாறு இன்றுவரை பல வியப்புக்குரிய சாதனைகள் செய்து பொலிவுகண்டு விளங்குகின்றது. இவரை "ஈழத்தின் சமகால புரட்சித்தாய்' என பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர் க ள் சிறப்பிப்பது பொருத்தமானதே.

Page 49
ஈழத்து நாவ
ஐரோப்பிய நாகரிக வருகையால் தமி ழுக்கு வந்த இலக்கிய வகைகளுள் நாவலும் ஒன்றாகும். புனைகதை இலக்கியத்தின் ஒரு பிரிவாக அமைவது நாவல் எனலாம். நாவல் என்பது சமூக உறவுகள் சம்பந்த மாக உள்ள நியமங்கள் அல்லது பெறு மானங்கள் ஆகியன மாறும்போது அந்த மாறுகின்ற நிலைமையில் ஏற்படுகின்ற மனித இன்னல்களைப் பற்றிய இலக்கிய வடிவமாக அமைவது. ஈழத்தில் ஆரம்ப கால நாவலிலக்கியங்கள் நாவலுக்கான முழுமையான பண்புகளைக் கொண்டு அமையவில்லை.
ஈழத்தில் ஆரம்பத்தில் மொழிபெயர்ப்பு நாவல்களே தோன்றின. அவை ஆங்கிலத் திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டனவாக அமைந்தன. இவற்றுக்குச் சில உதாரணங் களாக " " காவலப்பன் கதை " யையும், இன்னாசித்தம்பியின் "ஊசோன் பாலந்தை கதை'யையும் கூறிக்கொள்ளலாம். ஈழத்து அறிஞரால் சுயமாகனழுதப்பட்ட நாவலாக ** அசன் பேயின் கதை" அமைகிறது. இது அறிஞர் சித்திலெப்பையினால் 'அசன் பே' எனும் அரசகுமாரனின் வாழ்க்கை யைக் கருவாகக் கொண்டு இஸ்லாமியப் பண்புகளுடன் எழுதப்பட்ட நாவலாகும். 1895இல் சரவணமுத்துப்பிள்ளை என்பவர் 'மோகனாங்கி' என்ற நாவலை வழங்கி னார். இவர் நாயக்கர் காலத்து சிறிய கதைச்சம்பவம் ஒன்றைக் கற்பனையூட்டிக் கதையாக்கினார்.
பின்னர் சி. வை. சின்னப்பப்பிள்ளை என்பவர் நாவல்கள் எழுதினார். இவர் எழுதிய நாவல்களாக 'வீரசிங்கன் கதை' "உதிரபாசம்' போன்றன அமைகின்றன.
4.

|Gi) GDIGIT Îjf
இ. ரமணன் ஆண்டு 13, கலை. (1998)
இவை யாவும் 1915ஆம் ஆண்டிற்கு முற் பட்டவையாக அமைகின்றன. 1915ஆம் ஆண்டு வரையான ஈழத்து நாவல்கள் இதி காச, கற்பனைக் கதைகளைக் கொண்டு நீண்டவசனங்கள் உடையனவாகக் காணப் பட்டனவே அன்றி சமகாலப் பிரச்சினை களையும், சமூக நிலைமைகளையும் கருத் திற் கொண்டவையாகக் காணப்படவில்லை
1915ஆம் ஆண்டின் பின்னர் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களால் நாவல் இலக்கி யங்கள் சமுதாய நிலைமைகளைக் கருத்திற் கொண்டவையாக எழுச்சிபெறத் தொடங் கின. இவ்வாறான நாவலிலக்கியங்களும் இலக்கிய கர்த்தாக்களும் தோன்றவே கருப் பொருளாக சாதிஏற்றத்தாழ்வு, மதுப்பழக் கத்தினாலான சீரழிவு, சீதனக்கொடுமை, கிறிஸ்தவ மதமாற்றம் போன்றவை எடுத் துக்கொள்ளப்பட்டன. இந்த வகையில் தம்பிமுத்துப்பிள்ளையின் "சுந்தரன் செய்த தந்திரம் மங்களநாயகம் தம்பையாவின் 'நொறுங்குண்ட இருதயம்' இடைக்காட் ரின் 'நீலகண்டன் ஒரு சாதி வேளாளன்" திருஞானசம்பந்த பிள்ளையின் "காசிநா தன் நேசமலர்' ' துரைரத்தினம் நேசமணி" 'கோபால நேசரத்தினம்' போன்ற நாவல் கள் அமைகின்றன. இவை 1930ஆம் ஆண் டுக்கு முற்பட்டவை என்றுகருதப்படுகிறது.
1930-50க்கு இடைப்பட்ட காலப்பகு தியில் ஈழத்தில் பெருமளவு நாவலிலக்கியங் கள் தோற்றம் பெற்றன. இந்த வகையில் நெல்லையாவின் 'சந்திரவதனா', 'தீண் டாமைக்குச் சாவுமனி", "இலங்கை இந் திய நட்பு', 'சோமாவதி' முதலியவை யும் கே. வி. எஸ். வாஸ் எழுதிய 'குந்த ளப்பிரேமா', 'அருணோதயம்', 'உதய

Page 50
கன்னி", "மலைக்கன்னி ' , ' நந்தினி", "பத்மினி' போன்ற  ைவ யும் ஜே. எம். தாஸின் "ஐயோ நானா', 'காமசுந்தரி' * பெண்ணோ பேயோ ' போன்றவையும் இராசம்மாளின் "சரஸ்வதி', தாமோதரம் பிள்ளையின் "கற்பின் மாட்சி' போன்ற இலக்கியங்கள் அமைகின்றன. இந்நூல்கள் மர்ம, வீர உணர்வுகளையும், குடும்ப உறவுகள் பற்றியும், தீண்டாமை ஒழிப்புப் பற்றியும் கூறுகின்றன. இக்காலகட்டத்தின் பிற்பகுதியில் யதார்த்தத்தைக் கருவாக்கிய நூல்கள் எழவாரம்பித்தன. இதற்குச்சில உதாரணங்களாக சம்பந்தனின் "பாசம்' சச்சிதானந்தனின்' அன்னபூரணி" போன்ற வற்றைக் கூறலாம்.
இலங்கை சுதந்திரம் அடையவும் அர சியல், பொருளாதார, சமூக மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன. 1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச் சட்டத் தினால் ஈழத்தமிழருக்குத் தனித்துவமான தேசியவுணர்வு ஏற்பட்டது. இத்தகைய மாற்றங்கள் இலக்கியப்போக்குகளில் மாற் றத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை
இடதுசாரி அரசியற்சிந்தனையும், முற் போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தோற்ற மும், பல்வேறு சிந்தனைகளும் ஆக்கங்களும் வெளிவரக் காரணமாகின எனலாம்.இச்சங் கத்தில் முக்கிய இடம் வகித்தோராக பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் சிவத்தம்பி, கணேசலிங்கம், டானியல், டொமினிக்ஜீவா, இளங்கீரன், காவலூர் இராசதுரை, நீர்வை பொன்னையன், நந்தி போன்றோரைக் கூறலாம். இவர்களிற்பலர் எழுபதுகள் வரை நாவல்கள் எழுதி வந்த
6ԾTIT -
இவர்களிற் சிலரை சிறிது நோக்கு வோம். இளங்கீரன் தனது நாவல்களை சமூகப்பிரச்சினைகளைக் கருதி எழுதினார் இவரது தொடர்கதைகள் தினகரனில் வெளிவந்துள்ளன. இவரது நாவல்களாக * நீதியே நீ கேள்' ' தென்றலும் Lytt லும் ', 'சொர்க்கம் எங்கே ', "மண்ணில் விளைந்தவர்கள்' அவளுக்கு ஒருவேலை வேண்டும் ' போன்றவை அமைகின்றன.

4 -
கணேசலிங்கம் சமுதாய நோக்கில் பல நாவல்களை எழுதினார். இவரது நாவல்
களாக 18 சடங்கு ', ' செவ்வானம் ', " போர்க்கோலம் ', "மண்ணும் மக்க ளும் ' ' தரையும் தாரகையும் ' போன்
றவை அமைகின்றன. இவரது " நீண்ட பயணம் ' என்ற நாவல் யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட சாதி அடக்கு முறையைக் கருத்திற்கொண்டமைந்தது. டானியலின் நாவல்களாக பஞ்சமர் ', ' தண்ணிர்' போராளிகள் காத்திருக்கின்றனர் போன் றவை அமைகின்றன. இவர் இவற்றில் தீண்டாமை, சாதியடக்குமுறை என்ப வற்றை யதார்த்த பூர்வமாக எழுதியுள் * "חrח ח6
சுதந்திரம் அடைந்ததைத் தொடர் கின்ற சில காலங்களில் குடும்ப உணர்ச்சிப் போராட்டங்களை கூறும் சில நாவல்கள் எழுந்தன. உதாரணமாக கணக. செந்தி நாதன் எழுதிய ' விதியி ன் கை', வெறும் பனை ' போன்றவையும் இராச ரத்தினத்தின் 'கொழு கொம் பு' கசின் ( க, சிவகுருநாதன்) எழுதிய ' சகடயோ கம் " " இதய ஊற்று' போன்றவை அமைகின்றன.
நாவலின் வளர்ச்சிநிலைக் காலங்களில் 1960-70 இற்கு இடையில் எஸ். பொன் னுத்துரை பொருள் மரபில் மாறுபட்டு
பாலியலை வெளிப்படையாக தீ', * சடங்கு ' போன்ற நாவல்கள் மூலம் வெளிப்படுத்தினார்.
1970க்கு முன்னர் பெனடிக்ற் பாலன் பல நாவல்களை மலையக மக்களின் அவல வாழ்வை கருவாக்கி அமைத்தார். இதற்கு இவரது சொந்தக்காரன் ' எனும் நாவலை எடுத்துக் காட்டலாம். இது போன்றே நந்தி ' தூரத்துப் பச்சை ' யை யும், சீ. வி. வேலுப்பிள்ளை வீடற்ற வன்' எனும் நாவலையும் தெளிவத்தை யோசப் காலங்கள் சாவதில்லை ? ? என் பதையும் அமைத்தனர்.
எழுபதுகளில் புதிய பல நாவலாசிரியர் கள் தோற்றம் பெற்றனர். இக்கால நாவ லாசிரியர்களாக யோகநாதன், அகஸ்தியர்,

Page 51
15 --س--
அருள்சுப்பிரமணியம், செங்கை ஆழியான், பாலமனோகரன், தி. ஞானசேகரன். வை. அகமத், ஜோன்ராஜன், சாந்தன், கே. ஆர். டேவிட், நித்தியகீர்த்தி போன்றோர் அமை கின்றனர். செங்கை ஆழியான் ஒரு சிறந்த நாவலாசிரியர் ஆவார். இவரது மிகக்சிறந்த நாவல் "காட்டாறு' என்பதாகும், இவ ரது ஏனைய நாவல்களாக 'முற்றத்து
ஒற்றைப்பனை", "ஆச்சி பயணம் போகி றாள்', ' வாடைக்காற்று ', 'நந்திக் கடல்', 'பிரளயம்', 'இரவின் முடிவு'
போன்றவை அமைகின்றன. பாலமனோ கரனின் 'நிலக்கிளி' சாந்தனின் 'ஒட்டு மா' அகமதின் "புதிய தலைமுறைகள்' போன்றவை குறிப்பிடத்தக்க நாவல்களா கும்,
எழுபதுகளில் யாழ் ப் பாணம், திரு கோணமலை, மட்டக்களப்பு, மலையகம் என்பவற்றைக் கதைப்புலமாகக் கொண்ட பிரதேச நாவல்கள் தோன்றின. இக்கால கட்டத்தில் இன உணர்வு நாவலாக அருள ரின் "லங்கா ராணி" என்பது அமைகிறது.

எண்பதுகளிலும், பல எழுத்தாளர்கள் எழுதி வந்துள்ளனர். உதாரணமாக செங் கையாழியன், செம்பியன்செல்வன், ஜோன் ராஜன், வை. அகமத் சாந்தன், கோகிலா மகேந்திரன், ரஞ்சிதகுமார், சுதா ராஜ் போன்றோரைக் குறிப்பிடலாம். இக்கால நாவல்கள் பெண் சமத் துவம், சமுதாய முரண்பாடுகள், சாதி ஏற்றத்தாழ்வுகள் கிழக்கிலங்கை, மலையக மக்களின் அவலம், அரசியல், அதிலுள்ள லஞ்ச ஊழல்கள் போன்றவற்றையும் மனித உறவில் காணப் படும் அன்பு, கருணை, பாசம் முதலியவற் றையும் கருவாகக் கொண்டமைந்தன.
இவ்வாறாக ஈழத்தின் நாவல் வளர்ச் சியானது எண்பதுகள் வரை கூறப்பட்டுள் ளது. நா வலி லக் கியம் இன்று வரையும் வளர்ந்தவண்ணமேயுள்ளது. அழிவற்ற நீண்ட வளர்ச்சிப்படிகளையுடைய இவ் விலக்கியம் தமிழுக்குச் செழுமை சேர்க்கி றது என்பதில் ஐயம் இல்லை.

Page 52
சந்தைப்படுத் Marketing
நவீன சந்தைப்படுத்தல் எண்ணக்கரு வின்படி ஒரு நிறுவனம் நுகர்வோனின் தேவைகளைக் கண்டறிந்து போட்டி ஸ்தா பணத்தைவிடநூகர்வோரைத் திருப்திப்படுத் தக் கூடிய வகையில் பொருட்களை உற் பத்தி செய்து வழங்க வேண்டியது அவசியம் ஆகும். நவீன சந்தைப்படுத்தல் எண்ணக் கருவிற்கு அமைய நுகர்வோன் முக்கியத்து வம் பெறுகின்றான். இவற்றினால் நிறுவ னம் நுகர்வோர் பற்றிய தகவல்களை அறிந்து பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்படு கின்றது. இதற்கு சந்தைப் படுத்தல் ஆராய்ச்சி உதவுகின்றது.
நிறுவனம் தனது சந்தைப்படுத்தல் கருமங்களை திட்டமிடும் பொருட்டு தக வல்களை சேகரித்து அவற்றை பகுப்பாய்வு செய்து அவை தொடர்பாக பெற்றுக்கொள் ளப்படும் முடிவுகளை அமுல் படுத்தும் செயற்பாடு சந்தைப்படுத்தல் ஆராய்ச்சி ஆன சந்தை ஆராய்ச்சி இதிலிருந்து வேறு பட்டது ஆகும். ஏனெனில் சந்தைப்படுத் தல் ஆராய்ச்சி சந்தைப்படுத்தல் முகாமை தொடர்பான சகல செயற்பாடுகளையும் ஆய்வு செய்கின்றது. ஆனால் சந்தை ஆராய்ச்சி சந்தைதொடர்பான குறிப்பிட்ட நடவடிக்கையினை ஆய்வு செய்கிறது சந் தைப்படுத்தல் ஆராய்ச்சியில் விளம்பரப் படுத்தலின் திறனை ஆய்வு செய்தல் விநி யோக முறைகளை ஆய்வு செய்தல் போட்டி உற்பத்திகளை ஆய்வு செய்தல் சந்தைப் படுத்தல் கொள்கையை ஆய்வு செய்தல் சந்தை ஆராய்ச்சி என்பனவும் அடங்கும். இவ்வகையில் சந்தைப்படுத்தல் ஆராய்ச்சி யில் சந்தை ஆராய்ச்சியும் உள்ளடங்கும்.

ல் ஆராய்ச்சி Research
இ. தவஜனனி ஆண்டு 13 98 வர்த்தகம்
சந்தைப்படுத்தல் ஆராய்ச்சி குறிப் பிட்ட பொருளை வாங்கும் நுகர்வோனின் விபரம் அவர்களின் விருப்பம் என்ன? அக் குறிப்பிட்ட பொருளை நுகராத கொள் வனவாளரின் விபரம், அதற்கான காரணங் கள் பொருளிற்கான கேள்வி என்ன? குறிப் பிட்ட பொருளை நுகர்வோர் என்ன தரத் தில் என்ன அளவில் எதிர்பார்க்கின்றனர்? என்பவற்றை அறிந்து தீர்மானங்களைமேற் கொள்ள உதவுகின்றது.
சந்தை ஆராய்ச்சிச் செய்முறை :
சந்தை ஆராய்ச்சி தொடர்பான செய் முறை பின்வரும் படிமுறைகளை கொண் டுள்ளது.
* சந்தை ஆராய்ச்சி நோக்கத்தை வரைய
றுத்தல்.
* தகவல்களை பெறும் வழிகளை விருத்தி
செய்தல்
* தரவுகளைச் சேகரித்தல்
தரவுகளைப் பகுப்பாய்வு செய்தல்
* முடிவுகளை மேற்கொள்ளல்
தரவுகளை சேகரித்தல் எனும் போது அவை இருவகையான தரவுகளை அடக்கப் படலாம் , ( I ) மு த லா ம் தர த ர வு (Primary Data) (2) இரண்டாம் தர தரவு (Secondary Data ). (p.56th - g5ut 5pray என்பது குறிப்பிட்ட நோ க் கத்திற்காக உடன் பெறப்படும் தரவுகள் ஆகும். இவை தொடர்பான செலவு அதிகம் ஏற்படும், இவை ஆய்விற்கு மிகவும் ஏற்புடைய தரவு களாக அமையும். இவை பின்வரும் வ களில் பெறப்படலாம்:

Page 53
- 1
* நேருக்கு நேர் சந்தித்துத் தகவல்களைப்
பெறல்
* தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு
தகவல்களைப் பெறல்
* வினாக்கொத்து முறை
இரண்டாந்தரத் தரவு எனப்படுவது ஏற்கனவே பெற்றுக்கொள்ளப்பட்டதகவல் களில் இருந்து தரவுகளை திரட்டலாம். இது பிறஅறிக்கைகள் சஞ்சிகைகள் ஊடாக கத்திரட்டப்படும்,நேரடியாக தகவல்களைக் கேட்டறிதல் எனும்போது தெரிவு செய்யப் பட்ட சிலரிடம் இருந்து தகவல்களைக் கேட்டறிதல் ஆகும். இதன்போது உண்மை யான தகவல்களை அதிகம் பெற்றுக்கொள் ளலாம். சில சந்தர் ப் பங்களில் அதிகம் தூர இடங்களில் உள்ளவர்களிடம் இருந்தும் தகவல்களை பெற தொலைபேசி முறை வசதி அளிக்கிறது.
வினாக்கொத்து முறை என்பது நிறுவ
னம் சந்தை ஆராய்ச்சிக்கு வேண்டிய தக வல்களை விடையாக பெறக்கூடிய வகை யில் வினாக்கள் தொகுக்கப்பட்டு தரவு திரட்டப்படும் முறையாகும். இவ்வினாக் கொத்து முறையில் பின்வரும் அனுகூலம் உண்டு.
* தரவுகளின் பக்கச்சார்புத் தன்மையை
குறைக்கலாம். * தகவல் அளிப்பவர் ஆறுதலாக கிந்தித்து
தகவல்களை வழங்க இடமளிக்கும் * செலவு குறைந்த ஒரு முறை * தூர இடங்க ளிலுள்ள வர்களிடமும்
இருந்து தரவுகளை பெறமுடியும்.
இதே வேளை இதில் பின்வரும் பிரதி கூலங்களும் உண்டு. * வினாக்கொத்துக்கள் வழங்கப்படும் சக லரிடம் இருந்தும் தகவல்களை மீளப் பெறமுடியாது. * எல்லாத் தகவல்களையும் பெறமுடியாது * தகவல்களை பெற காலதாமதம் ஏற்
படும்.
5

7 -
சந்தைப்படுத்தல் ஆராய்ச்சி முறையை தெரிவு செய்தல்
ஒரு நிறுவனம் சந்தை ஆராய்ச்சிக்காக தரவுகளை எவ்வழிகளினூடாக திரட்டுதல் எனும் போது பின்வரும் காரணிகளை கவனத்தில் கொள்ள வேண்டும். * சந்தை ஆராய்ச்சியினை மேற்கொள்ள
கிடைக்கும் நிதியின் அளவு. * ஆராய்ச்சி மூலம் எ தி ர் பார்க் ப் படும்
செம்மை
* ஆராய்ச்சி மேற்கொள்ளத் தேவைப்படும்
நேரம் * ஆராய்ச்சிக்குச் சேர்த்துக் கொள்ளப்படும்
புவியியல் ரீதியான பரப்பு
சந்தைப்படுத்தல் ஆராய்ச்சியின் வகைகள் : * சந்தை ஆராய்ச்சி * பொருள் ஆராய்ச்சி விலை ஆராய்ச்சி விற்பனை மேம்படுத்தல் ஆராய்ச்சி விநியோக ஆராய்ச்சி
சந் தைப் படுத் த லில் அடிப்படை தொழிற்பாடாக அ  ைம வதே சந்தை ஆராய்ச்சி ஆகும். இது நுகர்வோரது கவை நாகரிகம் வருமான மாற்றங்களை மைய மாகக் கொண்டு அவர்களது எதிர்கால விருப்பங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளவும். பொருட்களுக்கான சந்தை கேள்வி, பொருட்களுக்கான சந் ைத ப் பாங்கு என்பவற்றை அறிந்து கொள்ளவும் சந்தை ஆராய்ச்சி உதவுகின்றது.
பொருள் ஆராய்ச்சி மூலம் என்ன பொருளை உற்பத்தி செய்யலயம், பொதி கட்டல், வடிவமைத்தல் முறைகமை, புதிய பொருட்களிற்கான நுகர்வோரின் விருப்பு பற்றிய ஆய்வு போட்டி பொருள் பற்றிய ஒப்பீடு உற்பத்தி வரிசையை எவ்வாறு விருத்தி செய்ய லாம் எ ன் பன கண்டு கொள்ளப்படும்.
விலை ஆராய் ச் சி மூலம் கேள்வி நெகிழ்ச்சி பற்றிய ஆய்வு, செலவு, இலாப

Page 54
எல்லை, நுகர்வோன், விலை, தரம் பற்றிய அபிப்பிராயம் என்பன கண்டு கொள்ளப் LIG th
விற்பனை மேம்படுத்தல் ஆராய்ச்சி மூலம் விற்பனையாளரின் திறனை மதிப் பிடல் ஏனைய மேம்படுத்தல் முறைகளின் திறனை மதிப்பிடல் விளம்பரத்தின் பயன் போன்றவற்றை கண்டு கொள்ளலாம்.
விநியோக ஆராய்ச்சிமூலம் வேறுபட்ட போக்குவரத்து முறைக்கான செலவு, விநி யோக முறை பற்றிய திறமை என்பவற் றைக் கண்டு கொள்ள முடியும்.
சந்தைப்படுத்தல் ஆராய்ச்சியின் முக்கியத்துவம் :
சந்தைப்படுத்தல் ஆராய்ச்சி பல வழி களில் முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம். * (ஓர்) நிறுவனம் தொடர்ந்து வீழ்ச்சி அடைவதற்கு நுகர்வோர் பற்றிய தகவல் கள் அவசியம். இதனை சந்தைப்படுத்தல் ஆராய்ச்சி மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
*
உசாத்துணை நூல்கள் :
1. பொருளியல் நோக்கு 2. Principles of marketing philip

8 -
来源
நிறுவனம் பாரிய சந்தையினுள் நுழை வதற்கு சந்தைப்படுத்தல் ஆராய்ச்சி பற்றிய தகவல்கள் இன்றியமையாதது. நுகர்வோரைப் பொருட்களை வாங்கும் படி துரண்டுவதற்கும் சரியான சந்தைப் படுத்தல் தந்திரோபாயத்தை பயன்படுத் தவும் சந்தைப்படுத்தல் ஆராய்ச்சி முக்கியமானது.
நிறுவனம் எத்தகைய சந்தைப்படுத்தல் எண்ணக்கருவை பின்பற்ற வேண்டும் என் பதை தீர்மானிக்கவும் சந்தைப்படுத்தல் ஆராய்ச்சி அவசியமாகும். அதாவது
உற்பத்தி எண்ணக்கரு உற்பத்திப் பொருள் எண்ணக்கரு விற்பனை எண்ணக்கரு
சந்தைப்படுத்தல் எண்ணக்கரு
சமுதாயதேவை கருதிய எண்ணக்கரு
இவற்றில் எதனை பின்பற்ற வேண்டும்
என தீர்மானிக்கவும் உதவும்
Koter Gray Amstrong

Page 55
பொருளாதார உட்க
(பொருளாதார அடிப்ட
பொருளாதார கீழ்க்
சந் ைத ப் பொருளாதாரமொன்றில் அரசாங்கம் நேராகப் பொருட்கள் சேவை களை வழங்குவதற்குப் பதிலாக பொருட் கள் சேவைகள் வழங்கப்படுவதற்கு தேவை யான வசதிகள் அமைத்துக் கொடுக்கும் பங்களிப்பினையே செய்தல் வேண்டுமெனக் கூறப்படுகிறது. அதாவது 'சந்தை நட்புக் கொள்கைக்கமைய அரசாங்கங்கள் வரவு செலவுத் திட்டத் தினூடாக நேராகப் பொருட்கள் சேவைகளை வழங்குவதற்குப் பதிலாக அவற்றை வழங்குவதற்கான உட் கட்டமைப்பு வசதிகளை வழங்கி வருகின் றன. பொதுவாக உட்கட்டமைப்பு வசதி களை இரண்டு வகைப்படுத்த முடியும்.
1. பொருளாதார உட்கட்டமைப்பு வசதி
கள்
2. சமூக உட்கட்டமைப்பு வசதிகள்
உற்பத்தி நடவடிக்கைகளை ஊக்குவிப் பதற்கு தூண்டுகோலாக காணப்படுகின்ற வீதிகள், துறைமுகங்கள், விமானச்சேவை, பாலம் அமைத்தல், நீர்விநியோகம், மின் விநியோகம், செய்தித்தொடர்பு, வடிகா லமைப்பு போன்றவற்றை ஒருங்கிணைத்து பொருளாதார உட்கட்டமைப்பு வசதிகள் எனக்கொள்வர், இவை பொருளாதாரப் பொதுப்பணி மூலதனம் எனவும் கொள் ளப்படும்.
மனிதனின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் வதிவிடக்கட்டடங் கள், பாடசாலைகள், மருத்துவமனைகள், குடிநீர்விநியோகம், பொதுமலசலசுட வச திகள் போன்றவற்றை ஒருங்கிணைத்து

ட்டமைப்பு வசதிகள் டை வசதிகள்/ கட்டுமான வசதிகள்)
தா, அன்ரன் செல்வக்குமார் 1998 (வர்த்தகப் பிரிவு)
சமூக உட்கட்டமைப்பு வசதிகள் எனக் கொள்வர். இவை சமூகப் பொதுப்பணி மூலதனம் எனவும் கொள்ளப்படும்.
இக்கட்டுரையானது பொருளாதார உட்கட்டமைப்பு வசதிகள் பற்றி ஆராய்வ தாகவே அமைகின்றது. சந்தைப் பொரு ளாதாரமொன்றில் அரசாங்கம் ஆற்றும் பங்கு என்ற வகையில் பொருளாதார உட் கட்டமைப்பு வசதிகளின் வழங்கல் முக்கியம் பெறுகின்றது.
பொருளாதார உட்கட்டமைப்பு வசதிகளின் முக்கியத்துவம் : * உற்பத்தி நடவடிக்கைகள் நானா வித வசதிகளினால் முன்னேற்றப்படுகின்றன. உற்பத்திச் செலவைக் குறைப்பதுடன், உற்பத்திகளை அதிகரிக்க உதவுகின்றது * வெளிநாட்டு முதலீடுகளை வரவழைத்
தல்
* உற்பத்தித்திறனை மேம்படுத்தல் * தொழில் வாய்ப்புக்களை அதிகரித்தல் * தனியார்துறை முயற்சியினைத் தூண்டு
தல் * பொருளாதார வளர்ச்சிக்கான துரண்டு
கோலாக அமைதல்
என்ற வகையில் பொருளாதார உட் கட்டமைப்பு வசதிகள் முக்கியம் பெறுகின் றன. இப்பொருளாதார உட்கட்டமைப்பு வசதிகளினை அரசாங்கத்துறையும், தனி யார் துறையும் வழங்கிவருகின்றன.

Page 56
பொருளாதார உட்கட்டமைப்பு வசதிகளின் வழங்கலில் அரசாங்கத்துறையின் பங்களிப்பு :
சந்தைப் பொருளாதாரமொன்றில் அரசாங்கம் ஆற்றும் பங்கு என்ற வகையில் பொருளாதார உட்கட்டமைப்பு வசதிகள் அரசாங்க துறையினால் வழங்கப்பட்டு வருகின்றன. இலங்கையில் மிக அண்மைக் காலம்வரை மிகமுக்கியமான பொருளா தார உட்கட்டமைப்பு வசதிகள் அரசாங்க சார்புத்துறை நிறுவனங்களான 'இலங்கை முதலீட்டுச்சபை' (சுதந்திர வர்த்தக வல யம்) 'கைத்தொழில் அபிவிருத்திச்சபை' (கைத்தொழில் பேட்டை I கைத்தொழில் பூங்கா) ஆகியவற்றால் வழங்கப்பட்டு வரு கின்றன, பொருளாதார உட்கட்டமைப்பு வசதிகளின் முதலீடுகள் அதிக செலவைக் கொண்டிருப்பதால் அரசாங்கத்துறை இவ் வசதிகளினை அதிகளவில் வழங்க வேண்டி யுள்ளது. எனினும் அரசாங்கத்துறை நிறு வனங்கள் இத்துறைசார் செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்கான போதிய முதலீடு களைக் கொண்டிருக்கவில்லை. அதாவது அரசாங்கத்துறை நிறுவனங்கள் மிகக்கடு மையான நிதிநெருக்கடிகளை எதிர்நோக்கு வதுடன் தமது தொழிற்பாட்டுச் செலவு களுக்காக வரவு செலவுத்திட்ட உதவியில் பெருமளவுக்கு தங்கியிருக்கின்றன. எனவே தான் பொருளாதார உட்கட்டமைப்பு வசதி களின் பங்களிப்பில் அரசாங்கத்துறை திற மையான பங்களிப்புச் செய்யமுடியாதுள் ளெது.
இலங்கையில் பொருளாதார உட்கட் டமைப்பு வசதிகள் மிக அண்மைக்காலம் வரை அரசாங்கத்தாலேயே வழங்கப்பட்டு வருகின்றபோதும் இவை பொதுப்பண்டங் 56i ( PUBLIC GOODS) 6T69 th aggus னுள் அடங்கமாட்டாது. ஏனெனில் இட் பண்டங்கள் தனியார் பண்டங்களுக்குரிய சில பண்புகளையும் கொண்டிருக்கின்றன. பெரும்பாலான பொருளாதார உட்கட்ட மைப்பு வசதிகளை சமூகத்திலுள்ள அனை வரும் சமகாலத்தில் நுகரலாம். இப்பண்டை பொதுப்பண்டங்களும் கொண்டுள் ளன. எனினும் பொருளாதார உட்கட்டமைப்ட வசதிகளை நுகர்வதற்கு பெரும்பாலும்

20 =
விலை/ கட்டணம் செலுத்தவேண்டியுள் ளது. எனவே இவற்றை பொதுப்பண்டங் கள் எனும் வகுதியினுள் அடக்கமுடியாது. ஆனாலும் இவ்வசதிகள் பொதுப்பண்டங் களுக்கும், தனியார் பண்டங்களுக்கும் உரித் தான பண்புகளை கொண்டிருப்பதனால் போலில் பொதுப்பண்டங்கள் எனும் வகுதி யினுள் உள்ளடக்கமுடியும்,
பொருளாதார உட்கட்டமைப்பு வசதிகளின் வழங்கலில் தனியார் துறையின் பங்களிப்பு பொருளாதார உட்கட்டமைப்பு வசதி களை வழங்குவதில் தனியார்துறையினர் மிகவும் திறமையானவர்கள் என்பது தற் போது உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள் ளப்பட்டு வருகின்ற விடயமாகும். இதற் கான காரணங்கள் வருமாறு.
* அரசாங்கத்தின் நிதிப்பற்றாக்குறை
* உட்கட்டமைப்பு வ ச தி களை வழங்கி
வந்த அரசாங்க நிறுவனங்களின் நிதிப்
பற்றாக்குறை
* இதுவரை இவ்வசதிகளை வழங்கி வந்த அரசாங்க நிறுவனங்களின் நிர்வாககுறை பாடு காரணமாக எதிர்பார்த்த வருமா னம் பெறமுடியாத நிலை காணப்பட்ட தால் நவீன வசதிகளை ஏற்படுத்த முடி யாத நிலை.
எனினும் இலங்கையைப் போறுத்த வரையில் மூலவளக்கட்டுப்பாடுகள் காரண மாக தனியார் துறையினரின் இத்துறை சார் முதலீடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள் ளது. எனவே பொருளாதார உட்கட்ட மைப்பு துறைகளில் உள்நாட்டு, வெளி நாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பு ஊக்குவிக்கப்படவேண்டும். மேலும் வெளி நாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப் பானது புதிய தொழில்நுட்ப அறிவையும், நவீன முகாமை அறிவுகளையும் பெற்றுக் கொள்ள உதவும். பொருளாதார உட்கட் டமைப்பு வசதிகளை வழங்குவதில் தனி யார் துறையினரை ஊக்குவிப்பதற்காக சட்டம் மற்றும் ஒழுங்கமைப்புச் சட்டவரை வானது பாரபட்சமற்றதாக அமையவேண் டும். அத்துடன் அச்சட்டமானது வாடிக்

Page 57
- 2
கையாளர்களினதும், இவ் வ ச தி க  ைள வழங்குவோரினதும் நலன்களைப் பாது காப்பதாக அமையவேண்டும்.
இலங்கை அரசாங்கம் தனது 'கொள்கை விளக்கக்கூற்றில்' இத்துறையில் தனியார் துறையின் பங்களிப்புத் தே  ைவயினை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளவாறு தனியார்துறை யின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கு அவசியமான தேவையாக இவ்வசதிகளை உருவாக்குவதற்கு அரசதுறை முதலீடுகளின் குறைநிரப்பல் அவசியமாகும். எனினும் போதிய பொருளாதார உட்கட்டமைப்பு வசதிகளின் வழங்கலுக்கான மூல வளத் தேவைப்பாடுகள் வியத்தகு அளவில் அதிக மாக இருப்பதனால் இவற்றின் முதலீட்டில் குறிப்பிடத்தக்க அளவு தனியார்துறையின ரால் ஏற்கப்படவேண்டும். இந்தவகையில் பொருளாதார உட்கட்டமைப்பு வசதிக ளின் பங்களிப்பில் தனியார்துறையின் பங் களிப்பு பின்வரும் இரண்டு முறைகளில் இடம்பெறும்.
கட்டித்தொழிற்படுத்தி உடமையாக்கு
5 6i) ( BOO ) (Build Operate and Own) 2. கட்டித்தொழிற்படுத்தி உரிமை மாற்று - g56i (BOT)
- (Build Operate and Transfer)
இவ்வாறு தனியார் முதலீட்டு தந்தி G L T L T L 5, S60 30T (Private Investment Strategy) தற்போதைய அரசு பின்பற்றி வருகின்றது.
கட்டித்தொழிற்படுத்தி உடமையாக்குதல்/ நிர் மாணித்து தொழிற்படுத்தி உடமையாக்குதல்
கட்டித்தொழிற்படுத்தி உடமையாக்கு தல் என்பதுகுறித்த செயற்திட்டமொன்றை தனியார் முதலீட்டாளரொருவர் நிதியிடல் கட்டடவாக்கம், தொழிற்பாடு என்பதுடன் அவ்வசதிகளைப் பேணுதலும் தமது உட மையாக்குதலுமாகும், உட்கட்டமைப்பு
உசாத்துணை நூல்கள் :
தேசிய கல்வி நிறுவகம் - பொருளியல் தேசிய கல்ல் நிறுவகம் - வணிகக் கல்வி தேசிய கல்வி நிறுவகம் - வகுப்பறை ச சுதந்திர இலங்கையின் பொருளாதார இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறி
6
 
 

வசதிகளை வழங்குவதில் தனியார் துறை யின் பங்களிப்புச் செயல்முறையானது தற் போது மெதுவான ஆனால் உறுதியான முன்னேற்றத்தை காட்டிவருகின்றது. இச் செயல்முறைக்கான தீர்க்கமான அரசியல் கடப்பாடு ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட மையினால் முதலீட்டுப்போக்கில் குறிப்பாக பாதுகாப்பு நிலைமையில் பொதுவான முன் னேற்றமொன்று ஏற்படுமாயின் விரைவான முன்னேற்றம் ஏற்படும்.
கட்டித்தொழிற்படுத்தி உரிமைமாற்றுதல் 1 நிர்மாணித்து தொழிற்படுத்தி உரிமைமாற்றுதல் :
கட்டித்தொழிற்படுத்தி உரிமைமாற்று தல் என்பது குறித்தசெயற்திட்டமொன்றை தனியார் முதலீட்டாளரொருவர் நிதியிடல், கட்டடவாக்கம், தொழிற்பாடு என்பதுடன் அவ்வசதிகளைக் குறித்தவொரு காலப்பகு திக்கு பேணுதலும் பின்பு அரசுக்கு உரிமை மாற்றம் செய்ய இணங்கு வத  ைன யும் குறிக்கும்.
இலங்கையில் வலு த் துறை  ைய ப் பொறுத்த வரையில் கட்டித்தொழிற்படுத்தி உடமை யாக்குதல் / உரிமை மாற்றம் செய் தல் ஆகியவற்றின் கீழ் பல செயற்திட்டங் கள் பரிசீலனையின் கீழ் இருப்பதுடன் இம் முறைகளின் கீழ் சபுகஸ்கந்தையிலுள்ள மெகாவாட்டீசல் பொறி செயற்திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் 1995ன் இறுதியில் நிறைவுசெய்யப்பட்டுத் தற் போது நடைமுறைப்படுத் துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
முடிவுரை :
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் காரணிகளில் ஒன்றாக பொரு ளாதார உட்கட்டமைப்பு வசதிகள் மிக முக்கியம் பெறுகின்றன. கடந்த காலங் களில் க பொ, த, (உத) பொருளியல், வணிகக் கல்வி பரீட்சை வினோக்களை அடிப் படையாக கொண்டு சுருக்கமாக இக்கட் டுரை வரையப்பட்டுள்ளது.
கற்றல் - கற்பித்தல் வழிகாட்டி பி கற்றல் - கற்பித்லல் வழிகாட்டி ற்றல் - கற்பித்தல் மதிப்பீடு பொருளியல்
முன்னேற்றம் த்தைகள் - 1995, 1996, 1997,

Page 58
சூழல் மாசடைவதால் 2 பேராபத்துக்களும் இ மீளுவதற்கான
பூமியைச் சூழ்ந்து படையாக அல்லது போர்வையாக காணப்படும் மண், பாறை, நீர், வளி என்பன உள்ளடங்கலாக, உயிர் களைக் கொண்டிருந்து அவற்றைத்தாங்கும் அனைத்தும் ஒன்றிணைந்து உயிரின மண்ட லம் எனப்படும். இவ்வுயிரின மண்டலத்தின் உபபிரிவுகளாக சூழற் தொகுதிகள் அமை கின்றன. உயிருள்ள உயிரற்ற காரணிக ளைக் கொண்டிருந்து அக்காரணிகளுக்கி டையேயான இடைத்தாக்கத்தின் மூலம் தொடர்ந்து பேணப் படுகின்ற அல்லது இயக்கிக் கொண்டிருக்கின்ற தொகுதி சூழற்தொகுதி எனப்படும்.
ஏனைய உயிரங்கிகளைப் போன்று மனிதனும் சுற்றாடலை அல்லது சூழல்தொ குதியை ஆக்கும் கூறாக அமைகின்றான். மனிதன் தனியனாக அல்லது அங்கியாக சுற்றாடலில் வாழமுடியாது. ஒரு உயிரி அதே இன அங்கியில் அல்லது பிறிதொரு அங்கியில் பின்வரும் ஏதோ ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட காரணத்திற்காக தங் கியிருக்கும். அவை i உணவு i வாழிடம் ii, பாதுகாப்பு iv இடப்பெயர்ச்சி w. இனப்பெருக்கம் என்பவையாகும். சாதா ரண நிபந்தனைகளில் ஒரு சூழல்தொகுதி யின் ஆக்கக்கூறுகள் ஒன்றுடன் ஒன்று ஒரு சமநிலையில் காணப்படும். இச் சமநிலை இயற்கைச் சமநிலை எனப்படும்.
இயற்கைச் சூழற்தொகுதி, (உதாரண மாக காட்டுச் சூழற்தொகுதியை எடுத்துக் கொண்டால்) தன்னைத் தானே தொடர்ந் தும் பேணக்கூடிய தன்மை கொண்டதால் அங்கு இயற்கைச் சமநிலை தொடர்ந்தும்

உலகை உலுக்கி வரும் பேராபத்தில் இருந்து
உத்திகளும்
(தொகுப்பு) ச. சுகீரதன் 98 கலை ( புவியியல்)
பேணப்படுகின்றது. ஆனால் செயற்கைச் சூழற் தொகுதி மனிதனால் உருவாக்கப் பட்டு காலத்துக்கு காலம் மாற்றியமைக் கப்படுவதின் விளைவாக சூழலியற் காரணி கள் குழப்பப்படுவதால் தன்னைத் தானே தொடர்ந்தும் பேண முடியாத தன்மை யைக் கொண்டதாக அமையும். இயற்கைச் சமநிலை ஏதாவது ஒரு காரணத்தினால் குழப்பப்படும் போது, அது சூழற்தொகுதி யில் அல்லது சுற்றாடலில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும், இயற்கைச் சமநிலையைப் பேணி, சுற்றாடலைப் பாது காக்கும் முக்கிய கடமை மனிதனுக்கு உண்டு. ஏனெனில் இயற்கைச் சமநிலை யைக் குழப்பும் பிரதான காரணி மனித னTவரன் ,
சூழற்தொகுதியில் மனிதன் நேரடியாக அல்லது மறைமுகமாக ஏற்படுத்தும் விரும் பத்தகாத அல்லது பாதகமான, பெரும் பாலும் மீளமுடியாத விளைவுகள் சூழல் மாசடைதல் எனப்படும். சூழல் மாசடைத லுக்கு முக்கிய காரணம், அதிகரித்துவரும் உலகசனத்தொகைப் பெருக்கமாகும். இதன் காரணமாக, அதன் தேவையை ஈடுசெய்ய பின்வரும் செயற்பாடுகளில் மனிதன் ஈடு படுவதால் சூழலில் பல நேரடியான அல்லது மறைமுகமான, பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன.
1. உணவுத் தேவையை பூர்த்தி செய்ய விளைநிலங்களை அதிகப்படுத்தல்
2. வீடமைப்புத் திட்டங்கள் குடியேற்றத்
திட்டங்கள் அமுலாக்கப்படுதல்

Page 59
- 23
3. நீர்ப்பாசனத் திட்டங்கள், போ க்கு வரத்து நெடுஞ்சாலைகள் அமைக்கப் படுதல்
4. தொழிற்சாலைகள், கைத் தொழிற் பேட்டைகளை அதிகப்படுத்தல் என் பண்குழல் மாசடைதலை ஏற்படுத்து கின்றன. இவற்றோடு பின்வரும் செயற் பாடுகள் மாசாக்கிகள், சூழல் மாசடை தலில் பிரதான பங்கு வகிக்கின்றன.
(i) இரசாயன வளமாக்கிகளும் விவசாய
இரசாயனப் பொருட்களும் (i) உயிர்ச்சுவட்டு எரிபொருட்க ளின்
LItalog
(i) வாகனங்களில் இருந்து வெளியேறும்
மாசாக்கிகள்
(iv) தொழிற்சாலைகளில் இருந்து வெளி
யேறும் மாசாக்கிகள் (V) கணியங்கள் அகழ்ந்தெடுக்கப்படுதல் (vi எண்ணெய் சிந்துதல் (wi) கதிர்வீச்சுப் பொருட்களின் பாவனை (wi) விமானப் பயன்பாடு அதிகரிப்பு (ix) கப்பல் பயன்பாடு அதிகரிப்பு (x) வாசனைத்திரவியம், குளிரூட்டிகள் என்பவற்றில் பயன்படுத்தப்படும் CFC வாயு (xi) காடழிப்பு நடவடிக்கை என்பன சூழல் மாசடைதலைத் துரிதப்படுத்துகின் றன. சுருங்கக்கூறின் கைத்தொழிற் துறையில் ஏற்பட்ட மறுமலர்ச்சியே
இன்று சூழல் மாசடைதலுக்கு முக்கிய காரணமாகின்றது.
பேராபத்துக்கள் :
இந்த வகையில் விஞ்ஞான தொழில் நுட்ப அறிவின் காரணமாக சூழல் மாச டைகின்றது. இவ்வாறு சூழல் மாசடைவ தால் இன்று உலகைப் பல பேராபத்துக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் உலுக்கி வருகின்றன. இதன் காரணமாக பல நாடு கள் அதாவது அபிவிருத்தி அடைந்த நாடு களும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடு களும் பல இன்னல்களை எதிர் நோக்கி

வருகின்றன. இந்தவகையில், அமிலமழை, ஓசோன் படைத்துவாரம் என்பன உலகை உலுக்கிவரும் பேராபத்துக்கள் ஆகும் இவற்றோடு அண்மையில் ஏற்பட்ட எல்நைனோ என்ற வரட்சியான காற்றும் உலகை உலுக்கிய பேராபத்து என (வர லாற்று) ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.
பேராபத்துக்களில் ஒன்றான அமில மழையை நோக்குமிடத்து தொழிற்சாலை மயமாக்கலும், சுவட்டு எரிபொருட்களின் பாவனையின் அதிகரிப்பின் காரணமாகவும் எழுத்துள்ளதும், பொருளாதார அரசியல் அரங்கில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதுமான சூழல் மாசாக்கலின் விளைவுகளில் ஒன்றே அமில மழையாகும். இயற்கையில் மாசாக்க லுக்கு உட்படாத வளிமண்டத்தில் கந்த கத்தை கொண்ட சேர்வைகள் ஒரு குறித்த அளவில் காணப்படும், சேதனப் பதார்த்தங் கள், பக்ரீரியாக்களின் செயற்பாட்டின் மூலம் சிதைவடையும் போதும், எரிமலை கள் வெடிக்கும் போதும் கந்தகச் சேர்வை கள் இயற்கையில் வெளிவிடப்படுகின்றன. மனிதனின் செயற்பாட்டின் மூலம் தொழிற் சாலைச் சுற்றாடல் அதிகரிப்பால் வளிமண் டலத்தை அடையும் கந்தகத் துணிக்கை களின் அளவு அதிகரிக்கின்றது. கந்தகச் சேர்வைகளில் பிரதானமாக கந்தகவிரொக் சைட்டு (So, விரும்பத்தகாத தீமையான விளைவுகளை ஏற்படுத்தும் வளி மாசாக்கி யாகக் கருதப்படுகின்றது. வளிமண்டலத்தில் So, இன் அளவு அதிகரிப்பதால் உடல்நலம் மாத்திரமன்றி பெறுமதிமிக்க உடமைகள் கூடப் பாதிப்படைகின்றன. எல்லாத்தீமை யான விளைவுகளும் So, வினால் ஏற்படுத் துவன அல்ல. குறிப்பாக So, ஒட்சியேற் றத்துக்குட்படுவதால் தோன்றும் So, கூட பிரதான தீமை விளைவிக்கும் மாசாக்கியாக அமைகின்றது. தோற்றுவிக்கப்பட்ட So, நீர்த்துளிகளில் கரைவதால் சல்பூரிக்கமிலம் உருவாக்கப்படுகிறது.
மழைநீரில் சல்பூரிக்கமிலம் காணப்படு கின்றபோது அது அமில மழை என்னும் தோற்றப்பாட்டுக்கு காரணமாக அமை கின்றது. நைதரசன் ஒட்சைட்டு ஒட்சியே றத்திற்கு உட்பட்டு தோற்றுவிக்கப்படும்

Page 60
A a
No, பின்னர் O, நீராவி என்பவற்றுடன் சேர்ந்து நைத்திரிக்கமிலத்தைத் தோற்று விக்கும். அத்துடன் பல்வேறு செயற்பாடு களின் போது வெளிவிடப்படும் காபன் துணி கைகள் ஒட்சியேற்றப்பட்டு நீராவி யுடன் சேர்ந்து காபோ னிக் கமிலத்தை தோற்றுவிப்பதன் மூலம் அமிலமழையின் உருவாக்கத்தில் பங்குகொள்கின்றன. அமில வாயுக்களை தோற்றுவிக்கும் தொழிற் சாலை மையங்கள் அல்லது சக்தி பிறப் பாக்கும் நிலையங்களுக்கு அருகில் திண்ம அமிலப்படிவும் இடம்பெறலாம். அமில மழையின் பாதிப்பு அதனை தோற்றுவிக் கும் தோற்றுவாய்கள் அமைந்துள்ள இடத் திலிருந்து பலநூறு மைல்களுக்கு அப்பாலும் ஏற்படலாம். இந்த வகையில் அமிலமழை யில் ஏற்படும் ஆபத்தான விளைவுகள் (i) மனிதனில் சரும எரிவு ஏற்படுவதுடன் சுவாசத்தொகுதியின் மென்சவ்வுகள், மேலணிக்கலங்கள் பாதிக்கப்படுதல் போன்ற உடல் நலத்துக்கு தீமையான விளைவுகள் ஏற்படும்
(i) தாவரங்களின் பகுதிகள் குறிப்பாக இலைகள் பாதிக்கப்படுவதால் தாவர வளர்ச்சி குன்றும். இதனால் விவசாய உற்பத்தி வீழ்ச் யடையும் காட்டுச் சூழல் தொகுதி பாதிக்கப்படுவதால் இயற்கை வட்டங்கள் குழம்புவதுடன் வனவிலங்குகளும் பாதிப்படையும்.
(i) மண்வாழ் அங்கிகள் பாதிப்படையும் குறிப்பாக பக்ரீரியா, பங்கசு போன்ற நுண்ணங்கிகள் பாதிப்படையும்போது அல்லது அவற்றின் எண்ணிக்கை குறை யும்போது சேதனப்பதார்த்தங்களின் பிரிந்தழியும் வேகம் குறையும். இத னால் சேதனப்பதார்த்தங்களின் தேக் கம் அதிகரிக்கும்.
(ty) அமிலப்படிவுகள் அமிலமழை என்பன மண்ணில் அமில காரத்தன்மையை மாற்றுவதுடன் மழை நீரோட்டத் தின் மூலம் போசணைப் பதார்த்தங் கள் மண்ணிலிருந்து அகற்றப்படுவ தால் மண்ணின் வளம் குன்றும் மண்ணின் அலுமினியம் அயன், சல்பர்
அயன் போன்றவற்றின் அளவு அதி

கரிக்கும் கல்சியம் போன்ற அயன்கள் நீரோ ட்டத்தின் மூலம் மண்ணில் இருந்து அகற்றப்படும். பூமியின் மேற் பரப்பில் காணப்படும் சிலிக்கேற்றுக் கள் மற்றும் கனியங்கள் அமிலத் தன்மை காரணமாக அவற்றின் தனித் துவத்தை இழக்கின்றன. (w) நீர் நிலைகளில் காணப்படும் நீரின் PH வீச்சு 6.5 - 8 5 ஆகும். நீர்நிலை களின் அமிலத்தன்மை அதிகரிப்ப தால் நீர்வாழ் அங்கிகள் இறக்கின் றன. நீரின் PH 4 இலும் குறையும் போது எல்லா முள்ளந்த ண் டு ஸ்ள பிராணிகளும் பெரும்பாலான முள் ளந்தண்டற்ற விலங்குகள் என்பனவும் அழிக்கப்படும். நீர்நிலைகளில் அமிலத் தன்மை அதிகரிக்கும்போது, மீன்க ளின் பூக்கள் பாதிப்படையும். அமில மழையில் காணப்படும் சல்பேற்று அயன்கள், அலுமினியம் அயனுடன் சேர்ந்து அலுமினியம் சல்பேற்றைத் தோற்றுவிக்கும் இச்சேர்வை பூக்களில் காணப்படும் சீதத்துடன் சேர்வதால் மீன்களின் வாயுப்பரிமாற்றம் தடைப்
படும். (wi) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டடப்பொருட்கள், உலோகம்
என்பன அரிப்புக்குள்ளாகின்றன.
இதனால் கட்டடங்கள், பாலங்கள் என்பன பாதிப்படையும் குறிப்பாக சுண் ணாம்புக்கல்லால் ஆன கட்டடங்கள், நினைவுச்சின்னங்கள் ஸ்தூபிகள் என்பன சேதமடைகின்றன.
தடுப்பு நடவடிக்கைகள் :
1. அமிலவாயுக்களை வெளியேற்றும் தோற்றுவாய்களின் செயற்பாட்டைக் குறைத்தல் அல்லது கட்டுப்படுத்தல் குறிப் பாக, குறைந்த அளவில் கந்தகத்தைக் கொண்டிருக்கும் எண்ணையைச் சந்தைப் படுத்துதல், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிலக்கரியை வாயு நிலைக் குரிய எரிபொருளாக மாற்றுகின்றபோது கணிசமான அளவு கந்தகம் அகற்றப்படும் சுண்ணாம்புக்கல் படுக்கையில் நிலக்கரியை

Page 61
- 25
எரிக்கும்போது கந்தகம் அகற்றப்படுவதால் கந்தகவிரொட்சைட்டு உருவாக்கல் குறைக் கப்படும்.
2. சக்திபிறப்பாக்கும் நிலையங்களில் இருந்து வெளியேறும் So, பல்வேறு வழி களில் அகற்றப்படுகின்றது. இச் செயல் முறை "எரிபொருள் வா யுவில் இருந்து கந்தகத்தை நீக்கல்' எனப்படும். பொது வாக காரக்கரைசல்கள் பயன்படுத்தப்பட்டு சூழலில் பாதிப்பை ஏற்படுத்தாத கந்த கத்தை கொண்ட வேறு சேர்வைகளை மாற்றுவதன் மூலம் மேற்கொள்ளப்படுகி றது. தோற்றுவிக்கப்படும் கந்தகச்சேர்வை வேறு பொருட்களின் உற்பத்தியில் பயன் படுத்தலாம்.
3. சுவட்டு எரிபொருட்கள் மூலம் சக்தி பிறப்பிக்கும் நிலையங்களுக்கு பதி லாக மீளப்பெறக்கூடியசக்தி மூலகங்களைப் பயன்படுத்துதல் () சூரியசக்தி (i) அலைச்சக்தி (ii) காற்றுசக்தி (iv) புவி வெப்பசக்தி குறிப் பாக இலங்கையில் அனல் மின்சக்தி நிலை யங்களை நிறுவும்போது அவற்றின் சூழல் பாதிப்புக்களை மதிப்பிடுதல் அவசியமா (5 0.
4. சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயற்படும் தொழிற் சா  ைல நிர்வாகத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளல்
5. தீமையான விளைவுகள் மற்றும் பாதகமான நடவடிக்கைகள் பற்றி மக்க ளுக்கு அறிவுறுத்துதல்
இவ்வாறான நடவடிக்கை மூலம் அமில மழைப்பொழிவை ஒரளவு கட்டுப்படுத்த 6) b.
இந்த வகையில் அடுத்த பேராபத்தா கக் கருதப்படுவது ஒசோன் படைத்துவா ரமாகும். வளிமண்டலம் மூன்று பிரிவுகளா கக் காணப்படுகின்றது, (i) மாறன் மண்ட லம் (ii) படைமண்டலம் (ii) அயன்மண் டலம் என்பவையாகும் மாறன்மண்டலத் திற்கும் படைமண்டலத்திற்கும் இடையே
7
 

மாற்றரிப்பு எல்லை காணப்படுகிறது. இவ் வெல்லையில் ஒசோன் என்ற வாயு அதா வது (0) காணப்படுகிறது. இப் படை சூரியனில் இருந்து வெளிவிடப்படும் தீங்கு விளைவிக்கும்.குறித்த அலைநீளம் கொண்ட UV (Ultra Violet / 22 GMIST SLjög5 ) 536)ř களை அகத் துறுஞ்சும் தன்மை கொண்டது இவ் ஓசோன் படை காரணமாக தீங்கு வி  ைள விக்கும் (UV) கதிர்கள் பூமியை அடைவது தடைசெய்யப்படுகிறது.
இவ்வாறு பூமியை பாதுகாத்து வரும் ஓசோன்படை தற்போது சிதைவடைந்து வருகிறது இதற்குக்காரணம் மனித செயற் பாடே ஆகும். மனிதன் தனது தேவைக்கு அதிகமாக பயன்படுத்தும் பா வ ைன ப் பொருட்களில் இருந்து வெளியேறும் வாயுக் களே இவ் ஓசோன் படையைச் சிதைவடை யச் செய்கின்றன, அதாவது வளிமண்ட லத்தில் சேரும் CFC, NO, போன்ற வாயுக் கள் வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் வாயுவுடன் அதாவது (O) உடன் தாக்கம் புரிந்து ஒசோன்படையைச் சிதைவடையச் செய்கின்றன. இதனால் சூரியனில் இருந்து வெளிவரும் புற ஊதாக்கதிர்கள் புவியை வந்தடைகின்றன. இதனால் இப்பேரா பத்து பல உலக நாடுகளை உலுக்கி வரு கின்றன. இவ்வாயுக்கள் வளிமண்டலத்தை அடையும் வழியை நோக்குவோம்.
2. CFC வளிமண்டலத்தை அடையும் வழிகள் :
(i) குளிரூட்டிகளுக்கு பயன்படுத்தப்படுதல்
(i) நுரைகள் தயாரிப்பில் பயன்படுத்தப்
படுதல்
(i) தெளிகருவிகளில் உந்துசக்தியாக பயன்
படுத்தப்படுதல்
(ty) பிளாஸ்டிக் பொருட்களின் தயாரிப்பில்
பயன்படுத்தப்படுதல்
(w) வாசனைப் பொருட்களுக்கு பயன் படுத்தப்படுதல் போன்ற செயற்பாடு களின் மூலம் CFC வளிமண்டலத்தை அடைகின்றது

Page 62
4. NO, வளிவண்டலத்தை அடையும் வழிகள் :
(i) மண்ணிலுள்ள நுண்ணங்கிகளின் செயற்
பாடு
(i) N வளமாக்கிகள் இரசாயனத் தாக்கத்
திற்கு உட்படும் போது
(ii) சுவட்டு எரிபொருட்கள் தகனமடை
யும் போது
மேற்குறிப்பிட்ட செயற்பாடுகள் கார ணமாக வெளியேறும் வாயுக்கள் ஓசோன் படையைச் சிதைவடையச் செய்துவிடுகின் றள. இதன் காரணமாக சூரியனில் இருந்து வெளிவரும் (தாக்கம்) தீமையானஒளிக்கதிர் கள் புவியை வந்தடைகின்றன. இதனால் பல தாக்கங்கள் ஏற்படுகின்றன. புற ஊதாக்க திர்கள் புவியை வந்தடைவதால் ஏற்படும் ஆபத்துக்கள் பின்வருமாறு
கண்களைப் பறித்தல்
(ii) தோல் எரிவு மற்றும் தோலின் மேற் றோல் கலங்களில் காணப்படும் DNA இன் கட்டமைப்பை மாற்றுவதன் மூலம் தோற்புற்று நோயை ஏற் படுத்துதல்
(i) தாவரங்களின் வளர்ச்சியை குறைப் பதனால் விவசாய உற்பத்தி வீழ்ச் சியடையும்
(iv) புற ஊதாக்கதிர்கள் அதிவெப்பம் கொண்டவை. இதன் காரணமாக முனைவுப் பகுதியில் உள்ள பனிக் கட்டி உருகும் தன்மை ஏற்படுகிறது. இதன் காரணமாக கடல் மட்டம் உயர்ந்து சிறுதீவுகள் கடலில் மூழ் கும் அபாயம் ஏற்படுகிறது.
(v) நீர்வாழ் குடம்பிகள் பாதிப்படை யும் குறிப்பாக அம்பீபியாக்களின் முட்டைகள் நீர் மேற்பர ப் பில் காணப்படும் போது UV கதிர்களின் தாக்கத்திற்கு உட்படுவதனால் அதன் கட்டமைப்பு மாற்றம் பெற்றுவிடும் இதனால் அம்பீபியாக்கள் அருகிச் செல்லும் தன்மை அதிகரிக்கும்.

26 -
(vi)
(vii)
நீர்ப்பீடனத் தொகுதியில் கானப் படும் நிணநீர்க் குழியங்களின் தொழிற்பாட்டை பாதிப்பதால் நோயினால் பீடிக்கும் தன்மை அதி கரிக்கும்
பிளாஸ்டிக் பொருட்கள் பிரிந்தழி தலைத் துரிதப்படுத்தும்
(wii) சூழற் சமநிலை பாதிப்படைதல்
(ix)
(x)
கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப் படுவதால் கடலின் உணவுஉற்பத்தி பாதிப்படையும்
ஒளி இரசாயன புகாரின் உருவாக் கத்தில் பங்கு கொள்ளுவதன் மூலம் வளிமாசடைதலை ஏற்படுத்தும்
மேற்கூறிய UV கதிர்கள் புவியில் தீய
விளைவுகளை ஏற்படுத்துகின்றன; மேற் போன்ற தாக்கத்தில் இருந்துவிடுபடுவதற்கு ஓசோன் படைச்சிதைவு ஏற்படாதவாறு பேணவேண்டிய கட்டாய தேவை ஏற்படு கிறது.
ஓசோன் படையை பாதுகாக்கும் முறைகள் :
1.
சூழற்பாதுகாப்பு சம்பந்தமான சட்டங் கள் இயற்றப்பட்டு நாட்டினுள்ளும் நாடுகளுக்கு வெளியேயும் அமுல்படுத் தப்படுதல் வேண்டும்
CFC பாவனையைத் தடை செய்ய வேண்டும்
புதிய தொழில்நுட்ப முறை களைக் கண்டுபிடித்தல் உதாரணமாக CFCக்கு H சேர்ப்பதன் மூலம் CFCன் உறுதித் தன்மையைக் குறைக்கலாம்
CFCக்கு மாற்றிடான இரசாயனப் பொருட்களை உருவாக்குதல்
N வளமாக்கிப் பிரயோகத்தைக்கட்டுப் படுத்தல்
தூவிகளாக ப யன் படுத் த ப் படும் ஓசோன் படையைச் சிதைக்கும் பீடை கொல்லிகளின் பாவனையைத் தடை செய்தல்

Page 63
- 2
மேற்போன்ற செயற்பா டு களினால் ஓசோன் படைச்சிதைவைக் கட்டுப்படுத்த லாம். இவ்வாறாக சூழல் மாசடைவதால் ஏற்படும் ஆபத்துக்கள் புவியை விரட்டிய படி உள்ளன. இதன் காரணமாக இம்மா ܗ சடைதலைக் கட்டுப்படுத்த வேண்டிய கட் டாய தேவை சர்வதேச அரங்கிற்கு ஏற் பட்டிருக்கின்றது. இந்த வகையில் எதிர் காலத்தில் பூமியில் மனிதனின் சஞ்சாரத் துக்கு சவாலாக அமைந்துள்ள சூழல்மாச டைதல் இன்று பொருளாதார, அரசியல் களங்களில் முக்கிய இடம் பிடித்துள்ளன. பூமியில் தொடர்ந்தும் உயிரினங்கள் வாழ வேண்டுமாயின் சுற்றாடலைப் பாதுகாக்க தகுந்த பாதுகாப்புத்திட்டங்கள் அமுல் படுத்த வேண்டிய அவசியத்தை இன்று அனைத்து நாடுகளும் அதாவது அபிவிருத்தி அடைந்த, அடைந்துவரும் நாடுகள் என்பன வும் உணரத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக சர்வதேச ரீதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சம்பந்தமான கருத்தரங்குக ளும், ஆய்வுகளும் மேற்கொள்ளப்படுகின் றன.
கைத்தொழில் நாடுகளின் செயற்பா டும், குறித்த வகைப்பொருட்களின் உற்பத் தியும், அவற்றின் நுகர்வும் சர்வதேச ரீதி யில்குந்தகம் விளைவிப்பவையாக அமைகின் றன. இதனால் இன்று வளர்ச்சியடைந்த நாடுகள் மாத்திரமன்றி வளர்முக நாடுகள் கூட பல்வேறு சூழல் பாதுகாப்புத்திட்டங் சளை அமுல்படுத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் உள்ளன. மீளப்பெறக்கூடிய மீளப்பெறமுடியாத இயற்கை வளங்களின் பாவனையைக் கட்டுப்படுத்தி அவ்வியற்கை வளங்களைப் பேணுவது மாத்திரமன்றி, இயற்கை வளங்களின் அதிநுகர்வு காரண மாக ஏற்படும் சூழல் பிரச்சினைகள் இனங் காணப்பட்டு, அதற்கான தீர்வுகள் முன் வைக்கப்படுதல் வேண்டும்.
சூழற் பாதிப்பு காரணமாக அழிந்து செல்லும் உயிரினங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் , இயற்கைச் சரணாலயங்களை அமைப்பதுடன் வனப்பாதுகாப்புச் சட்டங் களை உருவாக்கி தகுந்த முறையில்
 
 

س-7
அமுல்படுத்த வேண்டும். நாடுகள் ஒவ் வொன்றும் தமக்குரிய இனங்களைப்பேணிப் பாதுகாப்புடன் உயிரினங்களின் பல்லினத் தன்மையை பேணுவதற்கு நடவடிக்கை எடுத்தல் அவசியமாகும். தொழிற் சாலை மயமாக்கலும், விவசாய அபிவிருத் தியும் சூழல் மாசாக்கலில் பிரதான பங்கு வகிப்பதால், எந்த ஒரு திட்டமோ அல்லது செயற்பாடோ நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் அச்செயற்பாட்டால் அல்லது திட்டத்தால் ஏற்படும் தாக்கம் அறியப் படல் வேண்டும். குறிப்பாக தொழிற்சாலை களின் செயற்பாட்டால் சூழலில் ஏற்படும் குறுகியகால, நீண்டகால விளைவுகள் அறி யப்படவேண்டும். இலங்கையில் அமுல்படுத் தப்படும் திட்டங்கள் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அனு ம தி யுடனேயே செயற்படுத்தப்படுகின்றது,
விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் நோக்குடன் வளமாக்கிகள் பீடைகொல்லி கள் என்பவற்றின் பாவனை அதிகரிப்பால் தோன்றும் சூழல் மாசாக்கலின் அளவைக் குறைப்பதற்கு இயற்கை வளமாக்கிகளின் பாவனையை ஊக்குவிப்பதுடன் சில வள மாக்கிகளின் பாவனையை முற்றாக தடை செய்தல் அவசியமாகும் பீ டை க  ைளக் கட்டுப்படுத்துவதற்கு உயிரியற் கட்டுப் பாட்டுடன் இணைந்ததாக ஒன்றிணைந்த பீடை முகாமைத்துவத்தை அறிமுகப் படுத்தி, நிலையான விவசாயத்தை மேற் கொள்ள திட்டங்களை அமு ல் படுத்தல் வேண்டும். இன்றைய அணுயுகத்தில், அணுச் சக்தி பல ஆக்கபூர்வமான செயற்பாடுக ளுக்குப் பயன்பட்டாலும் அவற்றால் ஏற் படும் அழிவுகளும் கவனத்தில் எடுக்கப்பட்டு அணுச்சக்தியின் பாவனை, பரிசோதனை என்பவற்றில் மிகக் கவனம் எடுப்பதுடன், அழிவுக்கு பயன்படுத்தப்படும் அணு ஆயு தங்களின் ஒழிப்பு சர்வதேசரீதியில் மேற் கொள்ளப்படுதல் அவசியமாகின்றது.
புதிய தொழில்நுட்ப அறிவுகளைப் பயன்படுத்திச் சூழலில் வெளிவிடப்படும் கழிவுகளிலிருந்து அல்லது பயன்படுத்தப் படும் பொருட்களில் இருந்துவேறு பொருட்

Page 64
களை அல்லது அதே பொருளை மீண்டு. பெறும் திட்டங்களை அறிமுகப்படுத்துத6 இவ்வாறு பயன்படுத்தப்பட்ட பொருட் ளில் இருந்து மீண்டும் அதே பொருட்கள்
உருவாக்கப்படுதல் 'மீள் ஒட்டல்' என படும். உதாரணமாக பயன்படுத்தப்பட்ட கடதாசிகள், கண்ணா டி கள், ரயர்கள் போன்றவற்றில் இருந்து மீண்டும் அே பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. இ புதிய தொழில்நுட்ப முறை காரணமா சூழலுக்குள் விடப்படும் கழிவுகள் வெகு வாகக் குறைக்கப்படலாம்.
எல்லாவற்றிற்கும் மேலாக மனிதன் சூழலின் ஆக்கக்கூறாக அமைவதால், சு
உசாத்துணை நூல்கள் :
1. சூழல் மாசடைதல் 2. சூழலியல் 3. பூமித்தாய்

28 -
றுச்சூழற் பாதுகாப்பில் தனிமனிதன் பங்கு தவிர்க்க முடியாத ஒன்றாகும். இதனால் சமுதாயத்தின் சகலமட்டத்திலும் சுற்றுச் சூழற்பாதுகாப்பு மற்றும் சூழல் மோசடை வதால் ஏற்படும் பாதிப்புக்கள் உணர்த்தப் பட்டு, அதற்கான தீர்வுகளும் முன்வைக் கப்படுதல் அவசியமாகும். குறிப்பாக நிலை யான அபிவிருத்தியை அடைய அரசுகள்
பொருளாதார சிந்தனையுடன், சூழலியற்
கொள்கைகளையும் ஒன்றிணைக்க வேண்டி யது தவிர்க்கமுடியாத ஒன்றாகக் காணப் படுகின்றது, இந்நடவடிக்கையை மேற் கொள்வதன் மூலம் சூழல் மாசடைதலைத் தவிர்ப்பதுடன் சூழற் சமநிலையைப்பேன வும் முடியும்,
హ

Page 65
இருபத்தோராம் ரு தமிழ் இலக்ச
இருபத்தோராம் நூற்றாண்டுக்கான தமிழ்க் கல்வியில் கணிப்பொறி முதலாய தகவலறிவியற் கருவிகள் சிறப்பான இடத் தைப் பெறவுள்ளன. உலகிலுள்ள ஏனைய குழந்தைகளைப் போல, தமிழ்க் குழந்தை களும் தகவலறிவியற் கருவிகளைப் பயன் படுத்தும் வாய்ப்புகளைப் பெற்றுவருகின் றனர். நெடுங்காலமாக இத்தகைய கருவி களைக் கையாளுகின்றவர்களுக்கு ஆங்கி லமே கருவிக் கையாட்சி மொழியாக அமைந்தது ஆனால் இந்நிலை மாறி, தமிழ் கருவிக் கையாட்சி மொழியாக ஆகும் நிலை இருபத்தோராம் நூற்றாண்டிற் சிறப் புடன் நிகழ்ந்துவிடும் என எதிர்பார்க்கப் படுகின்றது. இதற்கான தொடக்கச் செயற் பாடுகள் இப்பொழுது நிகழ்ந்து கொண்டி ருக்கின்றன. கணிப்பொறிச் செயற்பாட்டிற் குத் தமிழைப் பயன்படுத்தும் முயற்சிக ளிலே சிறந்த முன்னேற்றங்கள் ஏற்பட் டுள்ளன. இவற்றிலே இன்னும் சிறப்பான முன்னேற்றத்தை அடைவதற்குத் தமிழ் மொழி கணிப்பொறித் தமிழாகப் பயன்பட வேண்டியுள்ளது. இருபத்தோராம் நூற் றாண்டுச் சவால்களை எதிர் கொள்வதற்கு இது மிகவும் வேண்டியதொன்றாகும். தமிழ் கணிப்பொறி மொழியாக மாறுவதற்கு அது தொடர்பான பல மாற்றங்கள் வேண்டப்படுகின்றன. தமிழ் மொழிக்குப் புதிய இலக்கணம் அமைப்பது அவற்றுள் ஒன்றாகும். இப்புதிய இலக்கணக் கல்வி இருபத்தோராம் நூற்றாண்டுக்கு வேண்டப் படுவதொன்றாகும்.
தமிழ் இலக்கணம் தமிழ்ச் செய்யுட்க
ளூடாகக் கற்பிக்கப்படும் ஒரு பயில் நெறி
யாகவே கருதப்பட்டுவந்துள்ளது. இலக்கி
8

ாற்றாண்டுக்கான னக் கல்வி
பேராசிரியர் அ. சண்முகதாஸ்
கலைப்பீடாதிபதி, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்
யங்கண்டு அதற்கு இலக்கணம் இயம்பும் மரபு இத்தகைய கற்பித்தல் முறைக்கு அடிப்படையாக அமைந்தது. எமது இலக் கியமும், இலக்கிய -மொழிக் கல்வியும் வாய்மொழியாக நீண்ட காலமாக இருந்து வந்ததும் இதற்குக் காரணமாகும். ஆனால் நவீன மொழியியற் பயிற்சி பெற்ற தமிழ் அறிஞர்கள் தமிழ் மொழியின் வழக்குநிலை நோக்கி அதனுடைய இயல்புகளை மாண வர்களுக்குக் கற்பிக்க வேண்டும் என்பதை உணர்த்தத் தொடங்கினர். பல நவீன மொழிகளுடன் ஒப்பிட்டு நோக்குகையில் தமிழ் மொழி தொடர்பான ஒரு சிக்கலை இவ்விடத்திலே விரிவாக நோக்க வேண்டும் பெரும்பாலான நவீன மொழிகளுக்கு ஒரு நீண்ட இலக்கியப் பராம்பரியம் இல்லை. அதனுடன் அவ்வம் மொழிகளின் பழைய வடிவங்களிலிருந்து அவை அளப்பரிய மாற் றங்களைப் பெற்றனவாகவும் அமைந்து விட்டன. இத்தகைய மொழிகளை அடிப் படையாகக் கொண்டு முன்வைக்கப்பட்ட மொழியியற் கோட்பாடுகள் யாவுமே எம் முடைய மொழிக்கும் பொருத்தமானவை யாக அமையுமென நாம் எதிர்பார்க்க வேண்டியதில்லை. தமிழ் மொழியின் நீண்ட கால இலக்கியங்களின் மொழி இயல்புகளை நாம் விளங்கிக்கொள்வதற்கு முன்னோரு டைய இலக்கண நூல்களை அடிப்படையா கக்கொண்ட ஒரு மொழியியல் விவரணம் இன்றியமையாததாகும். ஆனால், இன்று வழக்கிலுள்ள தமிழ் மொழியின் இயல்புகள் இவ்விவரண அளவு கோல்களுக்கு அப்பாற் பட்டனவாயுள்ளன. எனவே, இன்றைய வழங்கு தமிழை அடிப்படையாக கொண்ட ஒரு புதிய தமிழ் இலக்கணம் அமைக்கப்பட வேண்டும்.

Page 66
3 صے
இத்தகைய புதிய தமிழ் இலக்கணத் திலே நாம் நாள்தோறும் பயன்படுத்தும் எழுத்துக்களையும், அவற்றின் ஒலிப்பண்பு களையும் இனங்கண்டு, அவற்றின் பயன் பாட்டுத்தன்மைகளைத் தெளிவாக மான வர்களுக்குக் கற்பிக்க வேண்டும் சொல் என்றால் என்ன? சொற்களை எவ்வாறு பாகுபடுத்தவேண்டும்? இவ்வாறான வினாக் களுக்கு விளக்கமான விடை மாணவர்க ளுக்கு வழங்கப்பட வேண்டும். ஒட்டமைப் புப் பண்பு எம்முடைய மொழியிலே சற்று இறுக்கமாகவே அமைந்துவிட்டது. தனித் தனியாக அமைய வேண்டிய வடிவங்களெல் லாம் செய்யுளின் யாப்பிலக் கணச் செல் வாக்கினாலே நன்றாகவே ஒட்டப்பட்டு விட்டன. கல்லின் என்னும் வடிவத்தினை நாம் ஒரு சொல்லாகவே இனங்கண்டு கொள்கிறோம். ஆனால், மாணவர்களுக் குக் கல்+ இன் என இரு வடிவங்கள் இருப் பதாகக் கற்பிக்கிறோம். இத்தகைய நிலைப் பாடு மாணவர்களுக்கு மொழி பற்றிய தெளிவான விளக்கத்தினைக் கொடுக்க மாட்டாது. கல்லின் என்பது ஒட்டுமொழி களுள் ஒன்றாகிய யப்பானிய மொழியிலே இஸி+னொ ( கல் + இன் ) என இரு சொற் களாகப் பிரித்து வழங்கப்படுகின்றது. தமிழில் நாம் ஒரு சொல் என இனங்கா ணும் வடிவத்தினுள் பல சொல் வடிவங் கள் அமைந்து விடுகின்றன. பேசுகின்ற பொழுது சேர்த்துப் பேசலாம். ஆனால் எழுதுகின்றபொழுது அ வ் வடிவங்க  ைள இனங்காணும் வகையிலே அவை அமைதல் வேண்டும், இதை நடை முறையிலே செயற் படுத்த முடியுமா என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.
தமிழ்ச் சொற்களைப் பாகுபாடு செய் வதிலும் சில சிக்கல்கள் தென்படுகின்றன. 1993 இல் இலங்கை இந்து கலாசார தமிழ் அலுவல்கள் திணைக்களம் கொழும்பில் நடத்திய மொழியியற் கருத்தரங்கில் எஸ். வி. சண்முகம், அ. சண்முகதாஸ், திலகவதி ஆகியோர் புதிய தமிழ் இலக்கணம் தொடர்பான கருத்துக்களை முன்வைத்த னர். இக்கருத்தரங்கக் கட்டுரைகள் தொடர் பாடல் மொழி நவீனத்துவம் (பதி. எம். ஏ. நுஃமான் ) என்னும் நூல் வடிவில் வெளிவந்

0 -
துள்ளன. தமிழ்ச் சொற்களஞ்சியம் தொடர் பாகவும், சொற்பொருளியல் தொடர்பாக வும் தெளிவான விளக்கங்கள் தேவைப் படுகின்றன. இவ் விளக்கங்கள் மாணவர் களுக்கும் கணிப்பொறிக்கும் தேவையாயுள் ளன. ஒரு பொருளுணர்த்தும் சொற்களெ னக் கொடுக்கப்படுபவை தனித்தனியாக நோக்குமிடத்து அவற்றினிடையே பொரு ளமைதியில் நுணுக்கமான வேறுபாடுகள் இருக்கின்றன. இந்நுணுக்கமான பொருள் வேறுபாட்டினைக் கணிப்பொறித் தமிழ் கட்டாயம் இனங்காண வேண்டியுள்ளது. அது மாணவர் களு க் கும் பயன்பட வேண்டியது.
தமிழ் நிகண்டுகளும் அகரமுதலிகளும் கணிப்பொறித் தமிழுக்கும் மாணவர் பயில் வுக்குமாகச் சில மாற்றங்கள் பெறவேண்டி யுள்ளன. பழைய தமிழ் நிகண்டுகளைப் பயன் படுத்தும் நாம் அந்நிகண்டுகளில் குறிக்கப்பட்டுள்ள எவ்வகைச் சொற்கள் இன்றைய பயன்பாட்டிலே இருக்கின்றன என்னும் தகவல் கணிப்பொறிக்கு மிக மிக இன்றியமையாததாகும். கணிப்பொறிக்கு ஏற்ற ஒரு தமிழ் நிகண்டு தயாரிக்கப்பட வேண்டும். தமிழ் அகரமுதலிகளில் பெரும் பாலானவை சொற்களையும் அவற்றுக்குரிய பொருளையும் தருகின்றனவே தவிர அச் சொற்களின் இலக்கணப் பயன்பாடுபற்றிய விரிவான தகவல்களைத் தருவதில்லை ஒரு வினையடி எவ்வகையான கால இடை நிலைகளைப் பெறும், அது செயப்படுபொ ருள் குன்றிய வினையா குன்றா வினையா என்பன போன்ற தகவல்கள் அகரமுதலி களிலே இடம் பெறவேண்டும், மாணவர்க ளுக்கும் தமிழைப் பிறமொழியாகப் பயில் பவர்களுக்கும் இத்தகைய அகரமுதலிகள் பயனளிக்கும். க்ரியாவின் அகரமுதலி முயற்சி இன்னும் கூர்மைபெற வேண்டும்.
இருபத்தோராம் நூற்றாண்டு மான வர்கள் இரண்டு வகையான தமிழ் இலக் கணங்களை அறிய வேண்டிய தேவை யுண்டு. ஒன்று பண்டைக் காலந் தொடக்கம் வழங்கிவந்த தமிழ்மொழியின் இயல்புகளை விவரிக்கும் இலக்கணம் மற்றையது கணிப் பொறித் தமிழுக்கான புதிய தமிழ் இலக் 5,600TLn.

Page 67
தோற்றுப் போன
புள்ளியியலானது தூய விஞ்ஞானத் துறையிலும், சமூக விஞ்ஞான, மருத்துவ, விவசாயத்துறைகளிலும் பரவலாகப் பயன் படுத்தப்பட்டு வருகின்றது. நாட்டின் சமூக பொருளாதார, அபிவிருத்தித் தேவைகளை உணர்ந்து, அவற்றின் வளர்ச்சிக்கு புள்ளி யியலின் பங்களிப்பு அதிகம் உணரப்பட்ட தனால் பல்கலைக் கழகங்கள் உயர் தொழில் நுட்பக் கல்லூரிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் என்பனவற்றில் புள்ளிவிபர வியல் அறிமுகமாகி ஆராய்ச்சி மாணர்க ளின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய் வதற்குப் பேருதவி புரிந்து வருகின்றது.
இவ்வுயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் புள்ளியியல் எனும் அறிவியல் சார் பாடப்பரப்பினைக் கற்பதற்குச் சிர மப்படுவதனைக் கருத்திற் கொண்டு கல்வி மான்களின் ஆலோசனைக்கு இணங்க பாட சாலைமட்டத்தில் ஆரம்பப் பிரிவிலிருந்து தெரிதலும், அடங்கலும் எனும் பாடப்பரப் பில் அறிமுகமாக ஆரம்பமாகிப் பின்னர் கிளைவிட்டுப் பரவி, வளர்ச்சியடைந்து க. பொ. த. சாதாணதர வகுப்பு வரை கணித பாடத்தின் பாட அலகாக புள்ளி விபரவியிலும், நிகழ்தகவும் அறிமுகமாகி
Ug9, -
மேலும் இப்பாடப்பரப்பு க. பொ. த. உயர்தர கணிதப் பிரிவில் கணித பாடத் தில் ஒரு பாட அலகாக மேலும் விரிவாக் கப்பட்டுச் சேர்த்துக் கொள்ளப்பட்டது கணிதம் கற்கும் மாணவர்ளே பொதுவாக புள்ளியியல் துறையில் ஆர்வம் காட்டு வதைக் கண்ணுற்ற கல்விமான்கள் ஏனை யதுறைக்கும் புள்ளியியல் எனும் பாடப் பரப்பு விரிவு படுத்தப்பட வேண்டும் எனும் கருத்தினை முன்வைத்து கணிதம் சாரா
 

ாதா அறிமுகம்!
சி. மகேந்திரன்
ஆசிரியர், ஸ்கந்தவரோதயக் கல்லூரி.
மாணவர்களும் புள்ளியியல் பாடத்தினைக் கற்றுப் பூரண அறிவினைப் பெற்றுக் கொள்ள வழிவகுத்தனர்.
CIMA, AAT, U Luž 56ööTéž str6Tř போன்ற தொழிற் கல்வித் துறையிலுள்ள பாடப்பரப்புக்களை இலகுவில் புரிந்து கொள்ளும் நோக்கத்துடனும், பல்கலைக் கழகம் புகத் தவறிய மாணவர்கள் உயர் கல்வியைப் பெற வாய்ப்புக்களை வழங்க வும் க. பொ. த. உயர்தர வணிகப்பிரிவு களில் புள்ளியியல் வணிகப்புள்ளிவிபர வியல் ' எனும் பாடமாக 1995 ஆம் ஆண்டு அரசினால் அறிமுகப் படுத்தப்பட்டது
பாடசாலைகளில் அறிமுகமாகிய இப் புதிய பாடத்தைக் கற்க விரும்பி அநேக மான கணித அறிவுசார் மாணவர்கள் முன்வந்தனர் அவர்களின் தேவைகளை உணர்ந்து தமிழ் மொழியில் பல நூல்களை அறிஞர்கள், ஆசிரியர்கள், விரிவுரையா ளர்கள், கல்விமான்கள் வேறு மொழிகளி லிருந்து மொழி பெயர்த்துத் தமிழ் மொழி மூலம் புள்ளிவிபரவியலைக் கற்கும் சகல துறை மாணவர்களினதும் ஆவலைப் பூர்த்தி செய்தனர். சகல துறைகளிலும், பிரிவுகளிலும் இம்மாணவருக்குக் கல்வி புகட்டும் ஆசிரியர்களின் தேடல் எனும் பரந்த விடயத்தினை ஒருமுகப்படுத்தி, சந்தேகங்களை நீக்கி ஒட்டுமொத்தமாக வழங்கினர். அவர்கள் ஆற்றிய ம7 பெரும் சேவை இன்று தமிழ் மொழிமூலம் புள்ளி விபரவியல் கற்கும், கற்பிக்கும் அனைவர தும் கல்விப் பொக்கிஷமாகும். அத்துறை சார் மாணவர்கள் கடந்த பொதுப்பரீட்சை களிலும் நல்ல பெறுபேற்றினையும் பெற் றுக் கொண்டனர். -

Page 68
அரசின் பாடத்திட்ட மாற்றத்தினால் க, பொ. த. உயர்தரப்பிரிவுகளில் மூன்று பாடங்களை மட்டும் கற்று, இம் மூன்று பாடங்களிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுப் பல்கலைக்கழகம் புகும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வணிகப்பிரிவில் முகாமைத்துவத்துறைக்கு வணிகக் கல்வி, கணக்கீடு என்பன முக்கிய இரு பாடங்களா கவும் பொருளாதாரம் அல்லது வணிகப் புள்ளி விபரவியல் அல்லது அளவையிய யலும் விஞ்ஞான முறையும் போன்ற பாடங் கள் மூன்றாவது பாடமாகவும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன.
வணிக முகாமைத்துவத் துறையினை இலக்காகக் கருதி மட்டும் பாடசாலைகளில் மாணவர்கள் கற்கும் பாடங்கள் மாணவர் கள் அல்லாதோர்களால் தெரிவு செய்யப் பட்டு ( வணிகக் கல்வி, கணக்கீடு, பொரு ளாதாரம் அனேகமான பாடசாலைகளில் கற்பிக்கப்பட்டு வருகின்றது, அநேகமான பாடசாலைகளில் வணிகப்புள்ளிவிபரவியல் பூரணமாக விலகப்பட்டுள்ளது. க. பொ. த உயர்தரவகுப்பில் தேறிப் போதிய வெட் டுப்புள்ளியைப் பெற்று வணிகத்துறைக்குப் பல்கலைக்கழகம் புகும் மாணவர்கள் மீண் டும் அங்கு புள்ளியல் பாடப்பரப்பினைக் கற்கும் போது, இப்பாடம் எந்நோக்கத் திற்கு அறிமுகமாக்கப்பட்டதோ அந்நோக் கத்தை, அவர்களது தேவையை நிறைவேற் றுமா? அல்லது அவர்களைக் கஷ்டமான நிலைக்குத் தள்ளுமா? அல்லது ஆராய்ச்சி மாணவன் பிரத்தியேகமாக இப்பாடப் பரப்பினை கற்றுக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவானா? எனும் வினாக்கள் இன்று பலரிடம் தொக்கி நிற்கின்றன. ஆனால் புள்ளி விபரவியல் எனும் பாடப்பரப்பு பாடசாலை மட்டத்தில் ஒரளவு பூரணப் படுத்தப் படாவிடின் அவன் மீண்டும் இக் கட்டான நிலைக்குத் தள்ளப்படுவான் என் பதில் இரு வேறு கருத்துக்களுக்கு இடமே யில்லை.

32 -
புதிதாக க. பொ. த உயர்தர வகுப்பில் அறிமுகமான மூன்று பாடங்கள் மட்டும் எனும் கருத்தால் இன்று மாணவர்களால் முற்று முழுதாக வணிகப் புள்ளி விபர வியல் ' எனும் பாடம் விலக்கி வைக்கப் பட்டுள்ளது. இவ்வாறு விலக்கிவைத்தலா னது பல்கலைக்கழகம் புகத் தவறும் அல் லது போதுமான வெட்டுப்புள்ளியைப் பெறத்தவறும் மாணவர்கள் வணிகம் சார் ஏனைய உயர் தொழிற் கல்வியைப் பெறும் போது அவர்களுக்கு ஏற்படும் தாக்கம் உணரப்பட்டு வருகின்றது இதனால் மேலும் தொடர்ந்து கல்விகற்கும் வாய்ப்பினை இழந்து விடுகின்றனர்.
ஆசிரியர்கள் என்போர் மாணவர்களின் வழிகாட்டிகளாவர் மாணவர்கள் பாட சாலையில் கற்கும் காலத்தில் அவர்களின் திறன்களை அறிந்து, எப்பாடத்தினை அவர்கள் தெரிவு செய்து தங்கள் அறிவினை விருத்தி செய்யலாம் அல்லது தொழில் வாய்ப்பினைப் பெறலாம் என்பதுபற்றி ஒவ் வொரு ஆசிரியனும் மாணவருக்கு அறிவு றுத்தல் அவனது புனிதப் பணியாகும். அறிவியல் சார் பாடங்களைக் கற்கவாய்ப் புக்கள் அருகி வரும் எமது மாவட்டத்தில், தவறான வழிகாட்டலினால் வேறு துறை களை நாடி மாணவர்கள் செல்ல வழிய மைத்துக்கொடுத்தல் அவர்களை ஒரு வழி யில் ஊக்கப்படுத்தல் எனும் கருத்தாகப் பரவலாகக் காணப்படுவது கவலை தரும் விடயமாகும்.
ஒரு காலத்தில் அறிவியல்சார் பாடங் களைப் பூரணமாக க் கற்றுப் பெருமை தேடிய எமது மாவட்டம் தற்போது பூரண மாக அதிலிருந்து விலகிச் செல்வது, வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவருக்கு நாம் வாய்ப்புக்களைத் தாரை வார்த்துக் கொடுப்பதாக அமைந்து விடும் என்பது எனது கருத்தாகும். எனவே அறிவுசார் துறை ஆசிரியர்கள் எம் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருந்து விழிப்புணர்ச்சியை ஏற்படுத்து தலே சாலச்சிறந்தது.

Page 69
செயற்றிட்ட அறிக்ை
1, 0, அறிமுகம்
தற்காலத்தில் எந்தவொரு திட்டத் தையும் மேற்கொள் வதற்கு முன்னர் வேண்டப்படுவதே செயற்றிட்ட அறிக்கை யாகும். அரசு நிறுவனங்களோ அன்றித் தனியார் நிறுவனங்களோ ஒரு திட்டத்தை ஆரம்பித்துச் செயற்படுத்துவதற்கு முன் பாக அது சம்பந்தப்பட்ட செயற்திட்ட அறிக்கையைத் தயாரித்துக் கொள்ளல் வேண்டும். இலங்கையைப் பொறுத்தவரை யில் அதன் அபிவிருத்திக்கு உதவ முன் வரும் வெளிநாட்டு நிறுவனங்களெல்லாம் அவை சம்பந்தப்பட்ட செயற்றிட்ட அறிக்  ைக யைத் தயாரித்த பின்பே அவற்றில் ஈடுபடு வதா இல்லையா? என்ற முடிவை எடுக் கின்றன. இதன்மூலம் ஒரு நடவடிக்கையை மேற்கொள்வதற்கான எல்லாச் சாத்திய மான நடவடிக்கையும் செயற்றிட்ட அறிக் கையில் ஆராயப்படும் இந்த அறிக்கை யைத் தயாரிக்கும் போது குறித்தவொரு திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்குச் சாத்தியமில்லையெனில் அது கைவிடப்படு வதும் இயல்பாகும்.
புதிய திட்டமொன்றை ஆரம்பிக்கும் போதும் அல்லது புதிய பழைய திட்ட மொன்றை விஸ்தரிக்கும் போதும் செயற் றிட்ட அறிக்கை அவசியமாகிறது. திட் டத்தின் எதிர்கால வெற்றியையும் தோல்வி யையும் செயற்றிட்ட அறிக்கையினூடாக அறிந்து கொள்ளமுடியும் திட்டத்தின் சந்தைப்படுத்தல் முகாமைத்துவத்தையும், நிதி முகாமைத்துவத்தையும் பகுப்பாய்வு செய்வது செயற்றிட்ட அறிக்கையால் நிறைவேற்றப்படும்.
9

g, - Project Report
க. தேவராஜா,
தலைவர், வணிகத்துறை, யாழ். பல்கலைக் கழகம்.
செயற்றிட்ட அறிக்கை ஒரு திட்டத் தை மேற்கொள்வதற்கான எல்லாச் சாத் தியமான வழிகளையும் ஆராயும் என்ப தால் திட்டம் வெற்றி பெறுவதை உறுதிப் படுத்த இந்த அறிக்கையின் பயன்பாடு முக்கியமாகின்றது. நா டொ ன்றுக் கா ன திட்டமோ அல்லது நிறுவனமொன்றுக்கான திட்டமோ தற்காலத்தில் செயற்றிட்ட அறிக்கை தயாரிக்கப் படாமல் ஆரம்பிக் கப்படல் கூடாது. அவ்வயறு ஆரம்பித்தால் குறித்த திட்டம் வெற்றி பெறாமல் தோல் வியில் முடியக் கூடும் என்பதனாலேயே செயற்றிட்ட அறிக்கை வேண்டப்படுகிறது பெரும்பாலான திட்டங்களுக்குத் தற்காலத் தில் நுண் செயற்றிட்டம் (MICRO PRO UECT) தயாரிக்கப்படும் வழக்கத்தைக் கானலாம்.
2. 0, செயற்றிட்ட அறிக்கையின் குறிக்கோள்
செயற்றிட்ட அறிக்கையொன்று தயா ரிக்கப்படும் போது பல நோக்கங்கள் முன் வைக்கப்படுவதுண்டு, பல்வேறு பட்ட மாற் றுச் செயற்றிட்டங்களில் மிகப்பொருத்த மானது எது என்பதைக் கண்டுகொள்ளு தல் அவசியம். இவ்வாறு கண்டுபிடிக்கப் பட்ட செயற்றிட்டங்களே வெற்றியை உறுதிசெய்வனவாகவும் இருக்கமுடியும் இவ் வாறு பெறப்பட்ட தகவல்கள் குறித்த முயற்சியை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே அதன் வெற்றி தோல்வியை உறுதி செய்யும் இதனால் வெற்றி தரக்கூடுமென்றால் மட் டுமே ஒரு திட்டத்தை மேற்கொள்ள நட வடிக்கை எடுக்கப்படும் அத்துடன் செயற் றிட்டத்தை மேற்கொள்வதற்கான நிதி வளத்தின் கிடைப்பனவை உறுதிப்படுத்து

Page 70
- 34
வதும் செயற்றிட்ட அறிக்கையின் குறிக் கோளாகும். வங்கிகள் போன்ற நிதிநிறு வனங்களிட மிருந்து கடன்களைப் பெற்றுக் கொள்வதற்கும் பின்னர் அவற்றைத் திருப் பிச் செலுத்தும் ஆற்றலை உறுதிப்படுத்து வதற்கும் செயற்றிட்ட அறிக்கை உதவும்.
3. 0, செயற்றிட்ட அறிக்கையின் உள்ளடக்கம்
செயற்றிட்ட அறிக்கை புதிய நிறுவனத் துக்கும் பழைய நிறுவனத்துக்கும் வேண்டப் படுவதாகும். செயற்றிட்டம் ஒன்றை அறி முகப்படுத்தும் போது உற்பத்தியின் தன்மை பற்றியும் அவை எந்நோக்கத்துக்காகப் பயன்படும் என்பதையும் செயற்றிட்டத் திலிருந்து அறியக்கூடியதாக இருக்க வேண் டும். அத்துடன் ஆரம்பிக்கப்படும் உற்பத் திகளுக்குக் தேவைப்படும் மூலப்பொருட் ளின் கிடைப்பனவையும் உறுதிப்படுத் திக்கொள்ள செயற்றிட்ட அறிக்கை முன் வரும், அத்துடன் உத்தேச உற்பத்திகளுக் கான சந்தை வாய்ப்புக்கள் பற்றிய தகவல் களை அறியவும் செயற்றிட்ட அறிக்கை உதவும். அதே நேரம் விஸ்தரிக்கப்படும் நிறு வனமாயின் இதுவரை காலம் அந்நிறுவ னத்தின் வளர்ச்சிப் போக்குகள் அவதானிக் கப்பட்டு எதிர்கால விஸ்தரிப்புக்கான செயற்றிட்டம் ஆக்கப்பட வேண்டும். பொதுவாக க்ெயற்றிட்டத்திலே
சந்தை பற்றிய தகவல்
தொழில் நுட்பத் தகவல்
நிதிசார் தகவல் என்பவற்றை அறிந்து தீர்மானம் எடுப்பது செயற்றிட்ட த் தி ன் உள் ள டக் கமா க உள்ளது.
3. 1. சந்தை பற்றிய தகவல்
செயற்றிட்டமொன்றைத் திட்டமிடும் பொழுது பொருளுக்கு அல்லது சேவைக்கு இருக்கக்கூடிய சந்தை த் த க வ ல் க  ைள அறிந்து கொள்வது அவசியமாகிறது. சந் தையை மையமாகக் கொண்டே பொருட் களும் சேவைகளும் உற்பத்தி செய்யப்பட வேண்டுமென்பதால் சந்தைத் தகவல்கள் செயற்றிட்ட அறிக்கையைத் தயாரிப்ப தற்கு அவசியமாகின்றன.

இவற்றுள் பின்வருவன முக்கியம் பெறும்
(1) உத்தேச உற்பத்திக்கான தற்போ தைய மொத்தக் கேள்வியின் அளவு
(i) உத்தேச உற்பத்திக்குச் சந்தையில் காணப்படும் பிரதியீட்டுப் பொருட் கள்
(i) உத்தேச உற்பத்திக்குச் சந்தையில்
காணப்படும் விலை
(iv) சந்தையிலிருக்கும் போட்டியாளர்க
ளும் அவர்களது வலிமைகளும்
(w) புதிய உற்பத்தியைச் சந்தைப்படுத் துவதற்காக அறவிடப்பட வேண்டு மென்ற விலை
(wi) உத்தேச உற்பத்தியை விநியோகம் செய்வதற்கான விநியோக வழிகள். (wi) குறிப்பிட்ட கால எல்லைக்குள் விற் பனை செய்ய உத்தேசிக்கப்பட்டிருக் கும் அளவு (wi) கொள்வனவாளருக்கு வழங்க உத்தே
சிக்கப்பட்டிருக்கும் கழிவுகள் (ix) உற்பத்தியைச் சந்தைக்கு அறிமுகம்
செய்து வைக்கக்கூடிய முறைகள் (x) விற்பனை மேம்படுத்தல்களுக்கான தேவையும் அவற்றுக்கு ஏற்படும் செல வினங்களும் என்பவை செயற்றிட்ட அறிக்கையைத் தயாரிக்கும் வேளையில் அறிந்து கொள் ளப்பட வேண்டிய சந்தைத் தகவல்கள் ஆகும். 3. 2. தொழில்நுட்பத் தகவல்கள்
செயற்றிட்ட அறிக்கையைத் தயாரிக் கும்போது தொழில் சார் புடைய தும் தொழில்நுட்பம் சார்புடையதுமான தக வல்கள் அறியப்படல் வேண்டும். நிறுவனம் எத்தொழிலை மேற்கொள்ள இருக்கிறதோ அதனுடன் தொடர்புடைய தகவல் க ள் செயற்றிட்ட அறிக்கையில் அடக்கப்படல் வேண்டும். அவற்றுள் பின்வருவன முக்கியம் பெறும். (i) உற்பத்தித் தொழிற்பாட்டுத்திட்டம் அறிந்து கொள்ளப்படல் வேண்டும்.

Page 71
يج
(ii)
(iii)
(iv)
(v)
- 35
தொழில்நுட்பம் சார்ந்த அறிவுரை கள் பெற்றுக்கொள்வதற்கு வழிவகுக் கப்பட வேண்டியிருக்கும்.
உற்பத்திக்குத் தேவைப்படும் இயந் திர உபகரணங்கள் பற்றிய விபரம் திட்டமிடப்படல் வேண்டும் இயந்தி ரங்களின் இயலளவு, விலை, உதிரிப் பாகங்களின் கி  ைடப் பன வு, பரா மரிப்பு என்பன செயற்றிட்ட அறிக் கையில் காட்டப்பட வேண்டும்,
உற்பத்திக்குத் தேவைப்படும் மூலப் பொருட்கள் தொடர்பான தகவல் கள் செயற்றிட்ட அறிக்கைக்கு அவ சியமாகும். மூலம்பொருட்கள் உள் நாட்டிலா, வெளிநாட்டிலா பெறப் பட வேண்டும் எ ன் பதும், அவை தேவைப்படும் அளவு, விலை என்பன வும் நகர்த்தப்பட வேண்டிய தூரம் , பராமரிப்பு என்பனவும் செயற்றிட்ட அறிக்கையில் காட்டப்பட வேண்டும்.
நிறுவன அமைப்புக்குப் பொருத்த மான இடம் செயற்றிட்ட அறிக்கை யால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். எப்பொழுதுமே உட் கட்டமைப் பு வசதிகள் உள்ள இடத்திலும் மூலப் பொருளை வரவழைத்துக்கொள்வதி லும் முடிவுப் பொரு  ைள விற்றுக் கொள்வதிலும் இலகுத்தன்மை வாய்ந் திருக்கும் இடம் நிறுவனம் அமைப் பதற்குப் பொருத்தமான இடமாகும்,
கொள்வனவு செய்வதற்கு உத்தேசிக் கப்பட்டிருக்கும் காணியும் நிர்மாணிப் பதற்கு உத்தே சிக் கப்பட்டிருக்கும் கட்டிடமும் செயற்றிட்ட அறிக்கை யில் காட்டப்படல் வேண்டும். எதிர் காலத்தில் கட்டடங்களை விஸ்தரிப்ப தற்குத் தேவை யான காணி யும் கிடைப்பதனைச் செயற்றிட்ட அறிக் கையில் காட்டுதல் வேண்டும். கட்ட டம் நிலமாடிக்கட்டடமாக அமைய வேண்டுமா? அல்லது பல்மாடிக்கட்ட டமாக அமைய வேண்டுமா? என்பதை யும் திட்டமிடல் வேண்டும்.

vi)
vii)
உட்கட்டமைப்பு வசதிகளை உறுதிப் படுத்துவது செயற்றிட்ட அறிக்கை யில் முக்கியம் பெறும். நீர், மின்சா ரம், தொடர்பாடல் போன்றேசேவை களைப் பெற்றுக்கொள்ளும் சாத்தியம் செயற்றிட்ட அறிக்கையில் காட்டப் படல் வேண்டும்.
நிறுவனத்துக்குத் தேவைப்படும் ஆள னியினர் பற்றிய விபரத்தை செயற் றிட்ட அறிக் கையில் காட்டு த ல் வேண்டும், நிறுவனத்துக்கு அண்மை யில் ஆளணி பெறப்பட முடியுமா? என்பதை அறிதல் அவசியம். அத்து டன் பயிற்றப் பட்ட ஆளணியின் கிடைப்பனவும் அறியப்பட வேண்டும் பயிற்றப்படாத ஆளணி மட்டுமே கிடைக்குமெனில் அவர்களைப் பயிற் றும் வசதி கிடைக்குமா என்பதையும் அறிந்துகொள்ளல் வேண்டும்.
wii) சூழல் மாசடையும் நிலையை முன்
ix)
X)
கூட்டியே தடுப்பதற்கான நடவடிக் கைகளைச் செயற்றிட்ட அறிக்கை யிலே காட்டுதல் வேண்டும். தொழிற் சாலையில் இருந்து வெளியேற்றப் படும் புகை, தூசி என்பன காற்றை மாசுபடுத்துவதும், கழிவுப் பொருட் கள் நீரை அசுத்தமாக்குவதும் வழக் கம். எனவே அவை மக்களுக்கு ப் பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம் நடவடிக்கை எடுப்பதற்குச் செயற் றிட்டம் உதவும்.
தொழில் முயற்சிக்கான அனுமதிபெ றும் நடவடிக்கைகளையும் செயற்றிட் டத்தில் காட்டுதல் வேண்டும். அர சாங்க நிறுவனங்களிடமிருந்து வேறு பட்ட தொழில் முயற்சிகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் பெறப்பட வேண்டும் என்பதனால் அது பெறப் படுவதனை செயற்றிட்டம் உறுதிப் படுத்தல் வேண்டும்.
செயற்றிட்டம் தொடர்பான கிரயத் தைக் கணிப்பிடுவதும் செயற்றிட்ட அறிக்கையில் முக்கியம் பெறுகிறது. இதில் நிலையான சொத்துக்களுக்

Page 72
3ح۔
கான கிரயங்களும் தேறிய தொழிற் படு மூலதனத் தேவைகளும் திட்ட மிடப்படல் வேண்டும் இதனூடாக செயற்றிட்டம் ஏற்படுத்தக் கூடிய மொத்தச் செலவினைக் கணிப்பிட முடியும்,
3, 3. நிதிசார் தகவல் திரட்டுதல்
செயற்றிட்டத்தில் நிறுவனமானது உற்பத்தி செய்யும் பொருட்கள் சேவைகள் ஆகியவற்றால் பெறப்பட இருக்கும் வருமா னம், இலாபம் என்பன பற்றிய விடயங் கள் உள்ளடக்கப்படுதல் வேண்டும், நிதிசார் தகவல்களில் இலாபத்தன்மையைக் கணிப் பது முக்கியம் பெறும் உற்பத்தி தொடர் பான மாறும் கிரயம், நிலையான கிரயம் ஆகியவற்றைக் கணிப்பிடுவதன் மூலம் உற் பத்திக்கான மொத்தக் கிரயம் கண்டுபிடிக் கப்படும். இதிலிருந்தும் இலாபம் கண்டுபிடிக் கப்பட இயலும் இலாப நட்ட மதிப்பீட் டில் பின்வருவன முக்கியம் பெறும்.
3, 3 1, மாறும் உற்பத்திக் கிரயம்
உத்தேச உற்பத்தி அளவுக்கமைவாக மாற்றமடையக் கூடிய செலவுகள் மாறும் உற்பத்திக் கிரயம் எனப்படும் மாறும் உற் பத்திக் கிரயம் என்பதற்குள் மூலப்பொருட் கிரயம், நேர்க் கூலிக் கிரயம், நேர்ச்செல வுக் கிரயம் என்பன மாறும் உற்பத்திக் கிரயமாகும், இச்செலவு உற்பத்தியின் அளவாகக் கூடிக் குறையும் பண்பைக் கொண்டிருக்கும்.
8. 3. 2. நிலையான செலவுக்கிரயம்
தொழிற்சாலைகளை இயக்கும் செலவு பேணுதல் செலவு, அலுவலக வேதனம், மேற்பார்வையாளர் வேதனம், வாடகை, காப்புறுதி, நிலையான சொத்தில் தேய் மானம், வங்கிவட்டி போன்றவை நிலை யான செலவுக் கிரயத்தில் அடக் கப்படும்.
3. 3, 3. தேறிய இலாபம்
குறித்தவொரு ஆண்டுக்கான விற்பனை வருமானத்திலிருந்து மொத்தச் செலவுக ளைக் கழிப்பதன் மூலம் பெறப்படுவதே

6 -
தேறிய இலாபமாகும். இதனைக் கணக்கி யல் வீதங்களால் காட்டிவிட முடியும் வழ மையில்
தேறிய இலாபம் X 100 விற்பனை வருமானம் என்ற வீதம் பயன்படுத்தப்படும் இதே போல் இலாப இயலுமை கணிக்கப்படுவ தில் மூலதனத் துக்கான இலாப வீதமும் முக்கியம் பெறும் இதற்கென
தேறிய இலாபம் X 100 ஈடுபடுத்திய மூலதனம்
என்ற கணக்கியல் வீதம் பயன்படுத்தப்படுத் தப்படும் இங்கு ஈடுபடுத்திய மூலதனம் என்பது செயற்றிட்டக் கிரயத்தையே குறித்து நிற்கும்.
3, 3, 4 செயற்றிட்டத்தின் இலாபம்
உத்தேசிக்கப்பட்டிருக்கும் செயற்றிட் டத்தின் மூலம் ஒரு தொழில் முயற்சி இலாபத்தையா அல்லது நட்டத்தையா அடையும் என்பதைக் கணித்தல் வேண்டும். இதனைக் கணிப்பிட
மொத்த நிலையான செலவு
பொருளின் விற்பனைவிலை - பொருளின்
மாறும் விலை என்ற வாய்ப்பாடு பயன்படுத்தப்படும். இதில் உத்தேச செயற்றிட்டத்தின் மூலம் இலாபம் உழைக்க எந்த அளவில் உற் பத்தி மட்டம் வைத்திருக்கப்பட வேண்டும் என்பது கண்டறியப்படும். இதனையே ' இ லா பநட்ட மற்ற புள்ளி' எனக் கொள்வர்.
3. 3, 5, ஏற்றுமதி நெகிழ்வுத் தன்மை
உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் எந்தளவு பொருட்கள் வெளிநாட்டில் சந்தைப்படுத்தப்படலாம் என்பதும் முக்கி கியமாகும். மொத்த விற்பனை வருமா னத்தில் என்ன நூற்று வீதம் மொத்த ஏற்றுமதி வருமானம் பெற்றுக் கொள் கிறது எனக் கூறுவதே ஏற்றுமதி நெகிழ் வுத்தன்மையாகும். இதனைக் கணிப்பிட

Page 73
- 37
மொத்த ஏற்றுமதி வருமானம் X 100 மொத்த விற்பனை வருமானம்
என்ற வாய்ப்பாடு பயன்படுத்தம்படும். உள்நாட்டு விற்பனை வருமானத்துடன் வெளிநாட்டு விற்பனை வருமானமும் இலா பம் உழைக்கும் ஆற்றலை அதிகரிக்ரும் ல்ன்பதால் நிதி நிலைமையைத் திட்ட மிடும் போது ஏற்றுமதி நெகிழ்ச்சித் தன் ܢܓܝ̈ܐ
மையை அதிகரிக்கும்.
4. 0, முடிவுரை
தற்காலத்தில் எந்தவொரு நடவடிக் கையை ஆரம்பிக்கும்போதும் செயற்றிட்ட அறிக்கை வேண்டப்படுகிறது. எதிர்காலம்
1.
 

நிச்சயமற்றதாகவும் மாற்றங்கள் நிறைந்த நாகவும் இருப்பதால் எதிர்கால நடவடிக் கைகளைச் சரிவர முன்னுணர செயற்றிட்ட அறிக்கை அவசியமாகிறது. இதன் அடிப்ப டையிலேயே இலங்கையில் இயங்கி வரும் வெளிநாட்டு நிறுவனங்களெல்லாம் நுண் }árufb gól L– (MICRO - PROJECT) egy gólás கைகளைத் தயாரித்துக் கொள்கின்றன. இதன் மூலமே எந்தவொரு தொழில்முயற் Fயையும் தோல்வியின்றி இயக்கமுடிகிறது. அபிவிருத்தி அடைந்தநாடுகளில் ஏற்கனவே வளர்ச்சி பெற்ற செயற்றிட்ட நடவடிக்கை கள் இலங்கையிலும் அண்மை ஆண்டுகளில் பிரபலம் பெற்றுவருதைக் காணலாம்.

Page 74
இந்தியச் சிந் ஐவகைத்
உலகில் முதல் மனிதன் எப்படிச் சிந் தித்தான் என்பதை அறியவேண்டுமாயின் வேதங்களைத்தான் நாடவேண்டும் உல கின் முதல் இலக்கியம் என்ற நிலையும் இவ்வேதங்களுக்கே உரித்தானவை. வேதம் முதல் சித்தாந்தம் வரை இந்தியச்சிந்தனை மரபு பல பரிணாமங்கள் பெற்ற வரலாற்றை காணமுடிகின்றது. உபநிடதம், பிரம்மசூத் திரம், பகவத்கீதை, அவைதீகநெறிச் சிந் தனைகள், தர்சனங்கள், வேதாந்தம், சைவ சித்தாந்தம் என்றவகையில் சிந்தனை மரபு விளங்குகின்றது. ம னித ன் சிந் தி க்கு ம் விலங்கு என்பதால் ஒருவர் கூறியதை ஆரா யும் தன்மை பெற்றவன். இங்கு ஆராயப் பட்டவை உண்மைப் பொருட்கள் எவை என்பனபற்றியே. அனுமானம், பிரத்தியட் சம், ஆப்தவாக்கியம் என்ற அளவைகளின்
வாயிலாக இவை நிரூபிக்கப்படுகின்றன.
தர்சனம் என்ற பதத்திற்கு "த்ருஷ்டி" என்ற வடமொழிச் சொல்லில் காட்சி என்று பொருள் படுகின்றது. அதாவது வெறும் அறிவுமுறையில் உறுதிபெறுவதோடு அமை யாது அவ்வுறுதியை நேரடியானநுகர்வாக்கி கொள்ளவேண்டும் என்பதை வற்புறுத்துவ தாகும். தர்சனங்கள் ஒரு புறம் சமயத்தை யும் மறுபுறம் இந்தக்காலத்தில் விஞ்ஞானம் என்று கருதக்கூடியதையும் தம்முள் கொண் டிருப்பதால் த த் துவ ம் எ ன் னும் பொரு ளிலும் அவை மேற் பட்ட  ைவ. தர் சனங்கள் உரைநடை அல்லது செய்யுள் நடை அல்லது இரண்டும் சேர்ந்த நிலையில் உள்ள நூல்கள். இத் த ர் சனங்க ளாவன சாங்கியம், யோகம், வைசேடி கம், நியாயம்,

தனை மரபில் தரிசனங்கள்
மு. தவேந்திரன், யாழ். பல்கலைக் கழகம்
மீமாம்சை என்பனவே. இனி இவை ஒவ் வொன்றைப் பற்றியும் அதன் உட்கிடை பற்றியும் பார்ப்போம்.
গ্রুয়ািটguib ;
தர்சனங்களில் மி கப் பழைய தா ன இதனை முதலில் முறைப்படுத்தி வெளியிட் டவர் கபிலர். கி. பி. 5ஆம் நூற்றாண்டள வில் வாழ்ந்த ஈஸ்வரகிருஸ்ணரால் இயற்றப் பட்ட சாங்கியகாரிகை மிகப்பழைய நூலா கும். மூலப்பொருள்பற்றிய பூரண அறிவை தருவது சாங்கியம். இதன் அடிப்படை நியதி மாற்றம் நிலைபேறு மாற்றம் அடையும் பொருள் அறிவுள்ளதல்ல. அறிவேமுழுமை யானது. மாற்றமடையாதது. இது சாங்கிய கொள்கை. இதன் மூலப்பொருள் இரண்டு ஒன்று புருடன் (அறிவுமயமானது). பிரகிருதி (அறிவற்ற அசேதனம்) இரண்டாவது உல கம் முக்குணங்களின் சேர்க்கையால் ஆனது ஆன்மா அல்லது புருடன் பல உலகை உற் பத்தி செய்ய கடவுள் தேவையில்லை என் பனவே சாங்கியரது முக்கியமான கொள்கை களாகும், ஞானேந்திரியங்கள், கன்மேந்தி ரியங்கள், தன்மாத்திரைகள், பஞ்சபூதங் கள் என 25 தத்துவங்களுள் இவ் உலகை அடக்குவர்.
யோகம் :
பிரகிருதித் தொடர்பில்இருந்துபுருடன் பிரிதல் எ ன் பதே யோ கம் எ ன் பதன் பொருள். யோகமதத்தை பதஞ்சலி வரை யறுத்து விளக்கி யோகசூத்திரம் செய்ய கி. பி. 4ஆம் நூற்றாண்டில் வியாசர் என்

Page 75
- 3
பார் தலைசிறந்த வியாக்கியானம் செய் தார். யோகம் என்றபதம் ' யுஜ் ' என்ற சொல்லில்இருந்து எடுக்கப்பட்டது. யோகம் கடவுளை ஒப்புக்தொள்வதால் சேஸ்வரசாங் கியம் எனப்படுகிறது. சாங்கியம் ஞானத்தை வற்புறுத்த யோகம் தியானத்தை வற்புறுத் துகின்றது. யோகத்துக்கு இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகா ரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய எட்டும் அங்கங்களாகும், ஒம் என்ற ஒலியை இறைவன் பெயராகப் பெற்றவன் என்கி றது யோகம். வைசேடிகம்:
உள்ளமும் புறஉலகும் உண்மை என் பதே வைசேடிகர் கொள்கை. இதை விளக் கும் மிகப்பழைய நூல் கணாத முனிவரால் இயற்றப்பட்ட வைசேடிக சூத் திர ம். அணுக்களே உலக உற்பத்திக்கு முலகார னம். அணுச்சேர்க்கையே பஞ்சபூதங்கள். இவற்றுடன் காலம், இடம், மனம், ஆத்மா ஆகிய ஒன்பதையும் வைசேடிகர் திரவியம் என அழைப்பர். நிலம், நீர் ,தீ, காற்று அணுக்கள் என நான்கு குண அணுக்கள் உண்டு என்பர் வைசேடிகர். காரணத்தில் இல்லாது புதிதாக ஒரு காரியம் தோன்றும் அதாவது பகுதிகளால் ஆன காரணத்தினால் இல்லாதது அப்பகுதிகளின் சேர்க்கையா கிய காரியத்தில் தோன்றும் இது 'அசத்கா யவாதம் அல்லது ஆரம்பவாதம்' எனப் படும். பகுதிக்கும் அப் பகுதி யால் ஆன பொருளுக்கும் உள்ள தொடர்பை கூறுவது சமவாய சம்பந்தம். இவ்வாறு அணுவிசேட கொள்கை, அசத்காரிய வாதம், சமவாயம் என்ற மூன்று முக்கியதத்துவங்களும் இங்கு காணப்படுகின்றன. நியாயம் :
நியாய மதத்தை நையாயிகம் எனவும் அதனை பின்பற்றுவோரை நையாயிகர் எனவும் அழைப்பர் நியாயிப்பது எப்படி என வரையறை செய்து அதற்கு எல்லை பேச முற்பட்ட முயற்சியால் நையாயிகர் என அழைக் கப்படுகின்றனர். பிரமா னத்தை நையாயிகர் முக்கியம் கொடுத்து ஏற்றனர். பிரமாதா, பிரமேயம், பிர மாணம், பிரமதி அதாவது முறையே அறிய

ہے - 9
வன், அறிபொருள், அறிவு வரும் வழி, அறிவு எனும் நான்கிலும் வரும் பிரமாணத் திற்கேயாகும். பிரத்தியட்சத்தை லெளகி கப் பிரத்தியட்சம் அலெளகிகப் பிரத்தி யட்சம் என இரண்டாக்கி லெளகிகத்தை பாகியம் அல்லது புறம் மானசம் அல்லது உள் என மேலும் இரண்டாக்குவர். சுவை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம் ஆகிய அனைத் தும் லெளகி கப் பிரத்தியட்சம் ஆகும். ஒரு பொருளை பார்த்த தும் அது ஒரு பொருள் எனவும் என்னபொருள் எனவும் அறிகின்றோம். இதில் முதற்காட்சியை நிர்விகல்பக் காட்சி என்றும் இரண்டாம் காட்சியை சவிகல்பக் காட்சி எனவும் வழங் குவர். ஏனைய வழிகளால் நமக்கு கிடைக் காத புது அறிவை தரவல்ல அருத்தாபத்தி அனுலப்தி எனும் பிரமாணங்களை இது ஏற்பதில்லை. திரவியம், குணம், தொழில் சாதி, விசேடம், சமவாயம் இன்மை ஆகிய வைசேடிகரது பதார்த்தத்தைபிரமேயத்தில் நையாயிகர் அடக்குவர். ஆன்மாநித்தியம். அறிவுடையது. மனமும் உடலும் தொடர்பு பட்டாலே அத்தன்மை ஏற்படும். ஆன்மா உணர்வு கெட்டு நிற்கும் நிலையே முத்தி என்பதும், கடவுள் உண்டென்பதும் உலகை படைக்க நிமித்த காரணம் மட்டுமே இறை வன் என்பதும் நையாயிகர் கருத்து.
மீமாம்சை :
ஒன்றின் உண்மை மெய்மையை முறை யாக நம் அறிவு கொண்டு விசாரித்தல் அல்லது ஆராய்தல் என்பதே மீமாம்சை என்பது. கல்பசூத்திரம், சைமினி இயற்றிய மீமாம்ச சூத்திரம் முக்கியநூல்கள். இதற்கு சபர முனிவர் பாடியம் செய்ய இதற்கு வழிநூல் செய்தவர்கள் இருவர் குமாரில பட்டர், பிரபாகர் ஆகியோர். குமாரில பட்டரை பின்பற்றி பட்டமீமாம்சம் என வும் பிரபாகரரை பின்பற்றிப் பிரபாகர மீமாம்சை என எனவும் இருவகைப்பட்டன. இதற்குமுன் முற்பட்ட வேதத்தை அண்டி தோன்றியது பூர்வ மீமாம்சை எனவும் பிற் பட்ட வேதத்தை சார்ந்தது உத்தர மீமாம் சை என்றும் இருவகையாக அழைக்கப்பட லாயிற்று பொருட்கள் அணு க் களால் ஆனவை. அணுக்கள் கண்ணுக்குத் தெரியா தவையல்ல என்றும், ஆன்மா உள்ள

Page 76
- 4
பொருள், ஆன்மா மனதால் நேரடியாக அறியக் கூடிய பொருள் என்றும் கருதுவர். வேதத்தை ஏற்று கடவுளை ஏற்காத இவர்கள் யாகத்திற்கு உன்னத மதிப்பு கொடுத்தனர். ஆனால் பிற்கால மீமாம் சகர் கடவுட் கொள்கையை இணைந்த தன்மை காணப்படுகின்றது. உலகோடு ஆன்மாவுக்கு உள்ளபந்தர் அவசியமற்றது என்பதை உணர்வதே முத்தி. இந்நிலை ஆனந்த ம ய மானது. இம்முத்தி பெற ஞானம்மட்டுமன்றி கன்மமும் தேவை. இக் கன்மம் காமியகன்மம், பிரதிசித்த கன்மம், நித்தியகன்மம் என மூவகைப்படுகின்றது என்பதே மீமாம்சகரது முக்கிய அடிப் படைக் கொள்கைகளாக உள்ளன.

) --
இவ்வாறாக உண்மைத் தேடலி ன் ஆராய்ச்சி சிந்தனை வளர்ச்சியின் ஒருகட்ட மாக உள்ள தரிசனக் கொள்கைகள் சம யம் வேறு தத்துவம் வேறு என்றில்லாமல் இரண்டும் உடலும் உயிரும் போல பிணைந் துள்ள நிலையில் சரியாகச் சிந்திக்க மட்டு மல்லாதுவாழ்க்கை நெறிபிறழாது வாழ்வில் ஒன்றாக கலந்து நிற்பதே இவற்றின் முக் கியமான சிறப்பியல்பு. இவ்வாறான அறி வுக் கொள்கைகள் வாழும் மனிதனை மட் டுமல்லாது இனி வாழப் போகும் மனித னுக்கும் சிந்தனை ஆற்றலைத் தந்தும்தூண் டியும் பெருந்துணை புரியும் என்பதில் ஐய மில்லை,

Page 77
வியாபார அபிவிருத்தியில் Role of Credit Card in
10 அறிமுகம் :
பணப்புழக்கமற்ற ஒரு சமுதாயத் தினை தோற்றுவிக்கும் வகையில் ப்ணத் திற்குப் பதிலாகப் பயன்படுத்தக்கூடிய பல் வேறுபட்ட வகையான பணப்பெறுமதி கொண்ட " பிளாஸ்ரிக் பண அட்டைகள்" அறிமுகம் செய்யப்படுகின்றன. அவற்றுள் கடன் அட்டைகள், தொலைபேசிக் கொடுப் Eu6076y 9.60L–56ir (Pay Phone Cards) என்பன மிகவும் பிரபல்யம் அடைந்திருக் கின்றன.
* வங்கிகளும் வங்கியல்லா நிறுவனங் களும் தமது வாடிக்கையாளர்களுக்கு அங் கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பொருட்கள் சேவைகளைக்கொள்வனவு செய்வதற்காகச் சமர்பிக்கக் கூடிய வகையில் வழங்கியுள்ள உத்தரவாத அட்டைகள் கடனட்டைகள் எனப்படும் " ஒருவர் தனது வருமானத் தினை உறுதிப்படுத்தி குறிப்பிட்டதொகைப் பணத்தினைச் செலுத்தி சிறப்புச் சேமிப்புக் கணக்கினை ஆரம்பித்து கடன் அட்டை யைப் பெறலாம்.
2. 0 கடனட்டையின் நோக்கம் :
கொடுக்கல் வாங்கல்களின் போது நேர டியாக பணத்தைப் பயன்படுத்தாது இக் கடன் அட்டையினைப் பயன்படுத்தி வரை யறுத்த தொகைக்கு அங்கீகரிக்கப்பட்ட வியாபாரிகளிடம் இருந்து தேவையான பொருட்களை கொள்வனவு செய்யலாம். இல வேளைகளில் வங்கி or வங்கிக்கிளை யில் கொடுத்து ஓரளவு பணமும் பெறமுடி
1.
 

கடனட்டையின் பங்கு the Trade Development
வ, கலைவாணி,
ஆண்டு 13, வர்த்தகம்,
யும். காசு பயன்படாத வங்கித் தொழிலை ஊக்கப்படுத்துவதற்காகவே இம் முறை அறிமுகப்படுத்தப்பட்டதாகும்.
3. 0 கடனட்டையின் வகைகள் : 9e um nċa l-oqfsanL ( Cey bank card )
காசு பயன்படாத வங்கித்தொழிலை ஊக்கப்படுத்துவதற்காக இலங்கை வங்கி யும், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த சர்வதேச விசா நிறுவனமும் இணைந்து அறிமுகப் படுத்திய ஒரு வகைக் கடனட்டையே இது வாகும். இவ்வட்டையில் அட்டை இலக்கம் செல்லுபடியாகும் காலம் என்பனவும், பின் புறத்தில் காந்தமை எண்கள், கையொப் பம் போன்ற விபரங்களும் குறிக்கப்பட்டு இருக்கும். இலங்கை வங்கியில் இருந்து இவ் வட்டையினை பயன்படுத்துவதற்கு வங்கி யில் வாடிக்கையாளராக இருக்க வேண்டி யது இல்லை. அட்டையினைப் பெறுபவ ரின் தொழில், வருமானம், நம்பிக்கை போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டு தீர்மானிக்கப்படும்.
இத்தகைய அட்டையினைப் பயன்ப டுத்தி உணவு விடுதிகளிலும், பிரபல ஹோட்டல்கள், வைத்திய நிலையங்கள், பயணமுகவர், அங்கீகரிக்கப்பட்ட வியாபா ரிகள் போன்றவர்களிடம் இருந்தும் பொருட் கள், சேவைகளைக் கொள்வனவு செய்
இலங்கை வங்கி பின்வரும் 5 வகைக் கடன் அட்டைகளைக் கொண்டு காணப் படுகின்றது;

Page 78
உள்நாட்டு தங்க அட்டை உள்நாட்டு முதல்தர அட்டை வியாபார அட்டை
சர்வதேச முதல்தர அட்டை 5. சர்வதேச தங்க அட்டை
மேற்கூறப்பட்டவற்றில் முதல் மூன் றும் உள்நாட்டில் பயன்படுத்தப்படும். ஏனைய இரண்டும் சர்வதேசரீதியாக கட னட்டையை அங்கீகரிக்கப்பட்ட பிறநாடுக ளில் பயன்படுத்தப்படும்.
Dáassir el Gol ( People Card )
இது மக்கள் வங்கியும், விசா சர்வதேச நிறுவனமும் இணைந்து கடனடிப்படையில் பொருட்கள் சேவைகளைக் கொள்வனவு செய்வதற்கு உதவியாக அறிமுகம் செய் யப்பட்டுள்ள கடனட்டை மக்கள் அட்டை ஆகும். இவ்வட்டைகள் காசோலை உத்தர வாத அட்டையாகவும் பயன்படுத்தலாம். இதுவும் 4 வகைகளில் காணப்படுகின்றது
udnævLs økson (Master Card)
ஐக்கிய அமெரிக்கா நாடுகளில் உலகப் பிரசித்தி பெற்ற சிறப்பு அட்டை நிறுவ னத்துடன் கூட்டுச் சேர்ந்து இலங்கையி லுள்ள சம்பத்வங்கியினால் அறிமுகப்படுத் தப்பட்ட சர்வதேச கடன் அட்டையே இது வாகும். இவ்வட்டையை பயன்படுத்தி அங்கீகரிக்கப்பட்ட வி ய ர பா ரி க ளிடம் இருந்து தேவையான பொருட்கள் சேவை களைக் கொள்வனவு செய்யலாம். அத் துடன் சம்பத்வங்கியின் ரெலர் பொறி வசதி களும் வழங்கப்படுகின்றது,
afraidst Slait on L (Inter national Cred
it Card )
வங்கிகள் தமது வாடிக்கையாளர்க ளுக்குப் பொருட்கள் சேவைகளை வெளி நாடுகளில் கடனுக்கு கொள்வனவு செய்வ தற்கு வசதி அளிக்கும் நோக்குடன் அறி முகப்படுத்திய கடன் அட்டையே இதுவா G55 LD .
சர்வதேச கடன் அட்டைகளை வைத் திருப்பவர்களுக்கு நாணயமாற்றுக்கட்டுப்

2 -
பாட்டுத் திணைக்களத்தினால் அண்மையில் பின்வரும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
1. குறிப்பிட்ட எல்லைவரை கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட அந்நிய நாணய கட்டுப்பாட்டாளரின் அனுமதி வேண்டி யது இல்லை,
2. சிலசமயங்களில் குறிப்பிட்ட எல்லைக்கு மேல் கொடுக்கல் வாங்கல்களில் ஈடு பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
4.0 கடன் அட்டையின் பயன்பாடுகள்
1. கடனட்டை உரிமையாளர் ( Credit Card
holder)
பொருட்கள் சேவைகளை கடனடிப் படையில் பெறுவதற்காக கடன் அட்டை யினை பெற்றுக் கொள்பவர் ஆவார். இவர் இவ் அட்டை மூலம் பின்வரும் நன்மையைப் பெறுவார்.
1. பணத்தினை எடுத்துச் செல்வது சம்மந்
தமான ஆபத்துக்களைக் குறைத்துக் கொள்ளலாம்.
2 சர்வதேச கடனட்டை மூலம் சர்வதேச
கொடுப்பனவையும் செய்ய முடிதல்
3. கடனுக்கு குறிப்பிட்ட காலம் வரை
வட்டியில்லை
4. காசோலை உத்தரவாத அட்டையாக
வும் பயன்படும் Eg மக்கள் அட்டை
5. கணக்கு விபரங்களை வங்கி பேணும்
2. affluum Lurrís ( Merchant )
கடனட்டைக்குப் பொருட்கள் சேவை களை கடனடிப்படையில் விநியோகிக்கின்ற நிறுவனமாகும். வியாபரி ஒருவர் பின்வரும் நன்மைகளை இவ்வட்டை மூலம் பெறலாம்
1. விற்பனைப் புரள்வு அதிகரித்தல்
2. நிரந்தர வாடிக்கையாளரைப் பெறமுடி
தல்
3. கடன் அட்டைக்குப் பொருட்களைக் கொள்வனவு செய்யக்கூடிய நிறுவனங்

Page 79
- 4
களை வங்கிகள் பிரகடனப்படுத்துவ தால் அது அந்த நிறுவனத்துக்கு விளம்பரமாதல் கடன் விற்பனைக்கான பணம் பெறு தல் உறுதிப்படுத்தப்படும். அதாவது அ. மு. க நட்டம் தவிர்க்கப்படுதல்
as LGBT taun gấasvuib ( Credit Card Ce ntre )
Ex : வர்த்தக வங்கி
கடனட்டையினை பொதுமக்களுக்கு
வழங்குவதற்கென வர்த்தக வங்கிகளின் ஒரு பிரிவாக இந் நிலையம் தொழிற்படுகின்
நிறது பின்
器。
இவ்வட்டை மூலம் இந்நிலையம்
வரும் நன்மைகளைப் பெறுகிறது.
வைப்புக்களை அதிகளவு திரட்ட முடியும்
வியாபாரிகளிடம் இருந்து விற்ப னைக்கேற்ற தரகினைப் பெறலாம். வங்கியின் நன்மதிப்பு அதிகரிக்கப்ப டும்

3 -
கடனட்டைப்பயன்பாடு குறைந்த
அபிமானத்தைப் பெறக்காரணங்கள்
* கடனட்டையை எல்லா மக்களாலும்
பெற்றுக்கொள்ள முடியாமை
* கடனட்டையினைக் கொண்டு எல்லா நிறுவனங்களிலும் பொருட்களை வாங்க முடியாமை
* வைப்புப்பணத்தைச்செலுத்தியே இத
னைப் பெறமுடிதல்
(opt೩೧೧೮]
நாம் வியாபார அபிவிருத்தியில் கடன் அட்டையின் பங்கு பற்றி அறிவோம். பொதுவாக வியாபார அபிவிருத்தியில் கடனட்டையானது காசு பயன்படாத வங் கித்தொழிலை ஊக் கப்படுத்துவதாகும். அடுத்து இக்கடனட்டைகளின் வகைகள், சமூகத்தின் ஒவ்வொரு தரப்பினருக்கும் அதன் பயன்பாடுகள் பற்றிக் கூறினோம். இதன் காரணமாக உலகின் எல்லா நாடு களுமே கடன்அட்டைப் பயன்பாட்டில் அக் கறை காட்டுகிறது.

Page 80
தலைமைவகித்
E.
மனித வளங்களை வழிநடத்திச் செல் லும் முக்கியமான ஆளணிக் கரும மே தலைமைவகித்தலாகும். ஒரு நிறுவனத்தில் மட்டுமன்றி ஒரு நாட்டிற்கும், இராணுவ அணியொன்றிற்கும், விளையாட்டு அணி யொன்றிற்கும் தேவைப்படுகின்ற கரும மாகவே தலைமைத்துவம் கொள்ளப்படும்.
இங்கிலாந்தின் ஆளணி முகாமைத்துவ நிறுவனம் ' ஒரு முகாமையாளர் ஒரு கரு மத்தை எவ்வாறு ஆற்ற விரும்புகின்றாரோ அதே போல் ஏனையோரையும் செயற்பட வைக்கும் ஒரு முகாமைக்கருமம் தலைமைத் துவம் ' என வரையறை கூறியுள்ளது.
தலைமைத்துவம் தொடர்பாக காலத் திற்குக் காலம் பல வரைவிலக்கணங்கள் கூறப்பட்டுள்ளது. நிறுவனத்தின் குறிக் கோளை அடைந்து கொள்வதற்கு விருப்ப மும் நம்பிக்கையும் பொறுப்புணர்ச்சியும் கொண்டிருப்பதுடன் தனது உதவியாளர் களுக்கு சிறந்த வழிகாட்டலை வகுப்பது மான கருத்திறமைகளே தலைமைத்துவம் எனப்படும்.
ஒரு தலைவர் தூயவராகவும் சாதுரி யம் மிக்கவராகவும் சிக்கனமான வராகவும் இருத்தல் வேண்டும். இத்தகைய தலைவரே மற்றவர்கள் மீது நேர்க்கணியக் செல்வாக்கு செலுத்த முடியும், நேர்க்கணிச்ய செல் வாக்குஎன்பதுதான் நினைத்தவிடயத்தைத் தனது விருப்பத்தின்படியே நிறைவேற்றிக் கொள்ளும் சாதுரியம் ஆகும். பதி லா க எதிர்க்கணியச் செல்வாக்கோ உதவியாளர் விரும்பியபடி தலைவன் ஒரு கருமத்தை ஆற்றுவதைக் குறிக்கும். இது சரியான தலைமை வகித்தலுக்கு உதவாது.

56) Leadership
வ, நந்தீஸ்வரன், B. B. A. (Hons) ஆசிரியர், ஸ்கந்தவரோதயக் கல்லூரி,
நேர்க்கணியச் செல்வாக்கு உள்ள ஒரு தலைவரிடமே
- Empathy -
- Self Awareness -
- Objectivity -
எனும் மூன்று பண்புகளையும் காணமுடி யும். Empathy என்பது மற்றவர் நிலைக் குள்ளாகும் பண்பினைக் குறிக்கும். Self Awarenass என்பது தன்னைத்தானே உண ரும் பண்பினைக் குறிக்கும். அதாவது தன் னைப் பற்றி மற்றையோர் என்ன நினைக் கின்றார்கள் என்பதை தலைவர் உணர வேண்டும்.
அதே போல Objectivity என்பது தலைவருடைய ஒவ்வொரு இயக் கமும் செயற்பாடும் நோக்கத்தை மையமாகக் கொண்டு செயற்படவேண்டும் என்பதாகும்.
தலைமை வகித்தலிலே ஒரு தலைவன் கூடிய வலுவை (Power ) கொண்டிருக்க வேண்டும். இதனாலேயே கீழ்ப்படியில் உள் ளோரால் தலைவன் மதிக்கப்படும் நிலை உருவாகும்.
POWyer
l
Influence
Change in Behaviour
தலைமை வகித்தல் தலைமைத்துவம் என் பதில் இருந்து வேறுபட்டது. தலைமை வகித்தல் கீழ் ம ட் ட த்தவர்களிடமிருந்து தலைவர் அதிகாரம் பெற்றுக்கொள்வ

Page 81
- 4
தைக் குறிக்கும். ஆனால் தலைமைத்துவம் மேல் மட்டத்தவர்களிடமிருந்து தலைவர் அதிகாரம் பெற்றுக் கொள்வதைக் குறிக் கும்.
தலைமை வகித்தலிலே தலைவர்கள் பிறக்கின்றார்களா அல்லது உருவாக்கப்படு கின்றார்களா என்ற முரண்பட்ட கருத்து நிலவி வந்தது. அதனால் 50களிலே உள வியலாளர்கள் தலைவர்கள் பிறப்பதாகவே கருதினர். அப்போதைய ஆய்வின்படி 60% மான தலைவர்கள் பிறப்பதாகவே கருதப் பட்டது. ஆனால் தற்போதைய ஆய்வின் படி தலைவர்கள் பிறப்பதில்லை என்றும் பதிலாக தலைவர்கள் உருவாக்கப்படுவதா கவும் கொள்ளப்படுகிறது. இதனாலேயே மனித வள முகாமைத்துவம் என்னும் முகா மைப்பிரிவு வளர்ந்து வருகின்றது.
தலைமைத்துவப் பண்புகள்
(i) திறமை
(i) முன் மாதிரி (i) பக்கம் சாராமை (wi) பொறுப்பேற்றல்
(W) உறுதித்தன்மை (wi) கலந்துரையாடித் தீர்மானித்தல் (vi) தீர்மானங்களை இனம் காணும்
திறன் (wit) சாதனைத்திறன் מiX) =g@560)L!
(x) ஆக்க இயல்பு (xt) பக்கம் சாராமை (xi) தற்துணிபு
தலைமைத்துவ இயல்புகளும் வகைகளும்
தலைமைத்துவ இயல்பு என்பது நிறு வனமொன்றில் ஊழியருக்கும் முகாமையா ளருக்கும் இடையில் எத் த கைய உறவு காணப்படுகிறது என்பதைக் குறிக்கின்றது" ஆய்வுகளின் பிரகாரம் பல்வேறு தலைமைத் துவ இயல்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
Lewin என்பவரே முதன் முதலாக தலைமைத்துவ இயல்பு பற்றிக் கூறியவ
2
 

5 -
ராவர். இவரது கருத்துப்படி நிறுவனங்க ளில் இருக்கும் தலைமை வகித்தல் இயல்பு $ଗTIT ତ୪୮,
1. அதிகார மயப்பட்ட தலைமைத்
துவம்
2. ஜனநாயகத்தலை வகித்தல்
கட்டுப்பாடற்ற தலைமைவகித்தல்
என 3ஆக வகைப்படுத்தப்படுகிறது. அதிகாரமயப்பட்ட தலைமைவகித்தல் என் பதோ கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய தலைமைவகித்தலாகும். இங்குஉதவி யாளர் மிகக் குறைந்த சுதந்திரத்தையே கொண்டிருப்பர். இந்த அதிகாரமயப்படுத் தப்பட்ட தலைமைத்துவத்தை Heckman என்பவர் மேலும் இருவகையாக வகுத் துள்ளார்.
1. சர்வதிகாரத் தலைமைத்துவம்
Dictatorial Leadership
2. எதேச்சதிகாரத் தலைமைத்துவம்
Autocratic Leadership
சர்வதிகாரத் தலைமைத்துவம் என் பது கடுமையான கட்டுப்பாட்டைக் கொண் டிருக்கும். தலைவரே முழு அதிகாரங்களை யும் தன் பொறுப்பில் வைத்திருப்பார்.
எதேச்சதிகாரத் தலைமைத்துவம் என் பதோ உதவியாளருக்கு மிகக்குறைந்த சுதந் திரம் வழங்க முன்வருவதாகும். ஆனால் உதவியாளரிடமிருந்து ஆலோசனை கள பெறப்படலாகாது.
ஜனநாயகத்தலைமை வகித்தல் என் பது கட்டுப்பாடுகள் குறைந்த ஒருதலைமை வகித்தலாகும். இங்கு தலைவன் தனது அதிகாரத்தை குறைந்து உதவியாளர்களது சுதந்திரத்தை உயர்த்தியிருப்பார். இங்கு ஊழியர்களது ஆலோசனைகளைப் பெற்றே பணிப்புரைகள் வழங்கப்படுவதால் அவரது கட்டளைகளை ஏற்பதில் ஊழியர் அக்க றையாக இருப்பர்.
தலையிடாத அல்லது கட்டுப்பாடற்ற தலைமைத்துவம் என்பது தலைவனின் அதி காரத்தை முழுமையாகக் குறைத்து ஊழி

Page 82
யருக்கு சுதந்திரத்தை பெருமளவிற்கு வழங்க முன்வரும் தலைமைவகித்தலாகும். இங்கு தலைவன் ஒரு பார்வையாளராக மட்டும் இருப்பார். இங்கு குழுக்கள் உரு வாக்கப்பட்டு தீர்மானம் எடுப்பதும் நடை முறைப்படுத்துவதுமான வேலைகளில் ஈடு படுவதனால் இத்தலைமை வகித் த லை * குழுத்தனியக்கம் ' என்பர். யப்பானில் 56o LQup60) (DLL /G555 UGBib . Ringi System என்பதும் ஒரு வகையான கட்டுப்பாடற்ற தலைமை வகித்தலே ஆகும். இதன்படி ஊழியர் சுதந்திரம் உயர்வாக இருக்கும்.
தலைமை வகித்தல் இயல்பு பற்றி கருத்து வெளியிட்ட மற்று மொ ரு வர் Rensis likert GT GõT LIGJITIT GJř. g) a Jiř gd av 55 நாடுகளிலே காணப்படும் தலைமை வகித் தல் எல்லாவற்றையும் 04 பிரிவுகளுக்குள் அடக்குகின்றார்.
01. சுரண்டற் தலையமைத்துவம் Exploitive Leadership 02. இரக்கங் தலைமைத்துவம்
Benevolent Leadership 03. கலந்துரையாடும் தலைமைத்துவம்
Consultative Leadership 04. பங்குபற்றும் தலைமைத்துவம்
Participative Leadership
சுரண்டற் தலைமைத்துவம் என்பது கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்ட தலைமைத்துவம் எனப்படும் ஊழியர்களுக்கு எவ்வித சுதந்திரமும் காணப்படாது. இத் தகைய கடும் போக்கு கொண்ட தலை மைத்துவத்தை (TELLS STYLE) அறி விக்கும் பாங்கு என அழைப்பர்.
இரங்கற் தலைமைத்துவம் என்பது ஊழியர்களுக்குச் சிறிதளவு சுதந்திரத்தைக் கொடுத்துத்தலைவர் அதிகாரத்தைச் சற் றுக் குறைக்கின்ற தலைமை வகித்தலாகும். இங்கு தலைவர் தான் எடுத்த தீர்மானம் சரியென நிரூபித்து நடைமுறைப்படுத்து வார். இதனை விற்கும் பாங்கு (SELLS STYLE) GT 675 3. pian ri.
கலந்துரையாடல் தலைமை வகித்த லென்சது ஊழியர்களுக்கு பெருமளவு சுதந்

46 -
திரம் காணப்படும். ஜனநாயக தலைமை வகித்தலாகும். இங்கு தலைவர் ஊழியர் களுக்கு அதிக சுதந்திரத்தை வழங்கி இருப் பார். ஊழியரிடம் ஆலோசனை கோரிய பின்பே தலைவர் தீர்மானம் எடுப்பார். இதனால் இதனை கலந்துரையாடும் பாங்கு (CON, SSULIATIVE STYLE) Groorgyengpü
LTT
பங்குபற்றல், தலைமை வகித்தல் என் பது ஊழியர்களுக்கு மிகக் கூடிய அதிகா ரத்தை வழங்கித் தலைவர் பார்வையாள ராக மட்டும் இருக்கின்ற இயல்பினைக் குறிக்கும். தலைவருடன் சேர்ந்து ஊழியர் கள் தீர்மானங்களை எடுத்து நடைமுறைப் படுத்துவார். இதனால் இதனை இணை uyuh UIT Išig (JOINS STYLE) GT GOT 9 Gongpu'à
לת [ ]
1960 அளவில் தலைமை வகித்தல் தொடர்பான புதிய கோட்பாட்டை அறி (up 5th Glafligiouri Douglas Megregor ஆவார். இவர் தலைவரின் பண்பானது ஊழியர் பணியிலேயே தங்கியிருக்கும் எனக் கூறினார். இவர் தலைமை வகித்தல் இயல் புகளை இரண்டாகக் கூறுகின்றார்.
01, X. Theory 02. Y. Theory
X கோட்பாட்டில் தலைவர் கடும் போக்குடையவராகவும் Y கோட்பாட்டில் தலைவர் ஜனநாயக விரும்பியாகவும் இருப் பார் எனக் கூறுகின்றார்.
கோட்பாடு X ஆனது ஊழியர் சார் பாக 05 அபிப்பிராயங்களைக் கொண்டுள் எாது, அவை:
01. வழமையாகவே ஊழியர் வேலை
செய்ய விரும்புவதில்லை. 02. பொறுப்புக்களை இயலுமான வரை
தட்டிக் கழித்தல் 03. நிறுவன நோக்கை அடைவதில்
அவர்களுக்கு அக்கறை இன்மை: 04. ஊழியர்களிடமிருந்து வேலைக ளைப் பெறக் கடுமையான மேற் பார்வைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

Page 83
جميين
- 47
03. ஊழியர்களிடமிருந்து விளைவைப் பெற ஊழியர்களிடமிருந்து அப ராதங்களும் தண்டனைகளும் விதிக் கப்பட வேண்டும்:
இக்கோட்பாட்டின்படி தலைவரே தீர் மானங்களை எடுத்து ஊழியர்களை நடை முறைப்படுத்துமாறு பணிப்பார் .
கோட்பாடுY யின்படிஊழியர்கள் பின் வரும் 05 இயல்புகளைக் கொண்டிருப்பார், 01. ஊழியர்கள் வேலை செய்ய எப் பொழுதும் அக்கறையாக இருப்
un riř. 02. வேலை செய்வதனூடாகத் திருப்தி
பெறுவார், 03. நிறுவன இலக்கை அடைவதில் ஊழி யருக்கு அக்கறை இருக்கும். 04. ஊழியருக்கு கடுமையான மேற்
பார்வை அவசியமில்லை. 05. ஊழியரிடமிருந்து கூடிய விளை வைப் பெற அவர்களை தட்டிக் கொடுக்க வேண்டும்.
இதன்படி தலைவர் அதிக அதிகாரங் களை வைத்திருக்காது ஊழியர்களைத் தட்டிக் கொடுக்கும் ஜனநாயக தலைமை வகித்தலைக் கடைப்பிடிக்க வேண்டும்.
Tamen Baum என்பவரும் தலைமை வகித்தல் தொடர்பாக கருத்துக்களை வெளி யிட்டுள்ளார். தலைவரின் அதிகாரம், ஊழி யர் சுதந்திரம் என்பவற்றை அடிப்படை யாகக் கொண்டு தலைமைத்துவ இயல்பு களைப் பின்வரும் 07 வகையாகக் கூறியுள் GITT fif.
01. தலைவரே தீர்மானம் எடுத் து உதவியாளருக்கு அறிவித்து விடு
தல், 02. தலைவர் தீர்மானங்களை விற்றல் 03. தலைவர் தீர்மானங்களை முன் வைத்து வினாக்களை எதிர்பார்த்
தல .

04.
05.
06.
07.
தலைவரின் தற்காலிக தீர்மானம் தலைவர் பிரச்சினைகளை முன் வைத்து ஆலோசனைகளைப் பெற் றுத் தீர்மானங்களை ஏற்றல். தலைவன் எல்லைகளை வரைய றுத்து அதற்குள் குழுக்களைத் தீர் மானம் எடுக்க விடுதல். தலைவர் குழுவினது விருப்பப்படி தீர்மானம் எடுத்து அக்குழுவை நடைமுறைப் படுத்தச் செய்தல்.
தலைமை வகித்தலில் பொதுவாகப் பின் வரும் வகைகளையும் அவதானிக்க முடிதல்.
0.
மரபு ரீதியான தலைமைத்துவம் குடும்ப மரபினை அடிப்படையாகக் கொண்டு தலைமைப் பதவி கிடைத் தல்.
உதாரணம் : அரசனின் மகன் அரசனாக
02.
03.
●会。
வரல்,
தெரிவு செய்யப்பட்ட தலைமைத் துவம் தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யப்படுகின்ற தலைமைப் பதவி களைக் குறிக்கும். உதாரணம் : ஜனாதிபதி நியமிக்கப்பட்ட தலைமைத்துவம் மேலதிகாரியினால் நியமிக்கப்பட்ட வகையில் கிடைக்கும் தலைமைத் துவம். பிறப் பாலான தலைமைத்துவம் ஏனையவர்கள் செய்ய முடியாத பணியொன்றை ஆற்றியதன் கார ணமாக கிடைக்கும் தலைமைத்து வம்,
உதாரணம் : மகாத்மா காந்தி
தலைமைத்துவம் தொடர்பா கக் காலத்துக்குக் காலம் பல கருத்துக்கள் வெளி யிட்டாலும் அவற்றிற்கிடையிலான உட் கருத்துக்கள் ஒன்றாக இருப்பதை அவ தானிக்கலாம்.
முற்றும்

Page 84
கண்ணகி
இந்து சமய வழிபாட்டு மரபில் மிகப் பழங்காலத்திலிருந்தே பத்தினித் தெய்வ வழிபாடு நிலவி வந்துள்ளது. குறிப்பாக தென்நாட்டிலும், ஈழத்திருநாட்டிலும், பத்தினித் தெய்வம் எனக்கருதப்படுவது சிலப்பதிகார இலக்கியத்தில் வரும் கற்பரசி ஆகிய கண்ணகியே. கண்ணகியை தம்துன் பம் தீர்க்கும் அருட்தெய்வமாக தென் நாட்டவரும், ஈழநாட்டவரும் கருதி வழி பட்டமைக்கு பல இலக்கியங்களும் வழி பாட்டு ஆலயங்களும் சான்றாக விளங்கு கின்றன. சிலப்பதிகாரம், பிறந்த பாரத நாட்டில் இன்று கண்ணகியை நினைவுபடுத் தக்கூடிய சிற்பக்கலைக் கூடங்கள் மட்டுமே விளங்குகின்றபோதிலும் ஈழமண்டலமாகிய இலங்கையில் பல பாகங்களில் கண்ணகிக் கோயில்கள் எழுச்சிபெற்று அழியாச்சான் றாதாரமாக சிறப்புற்று விளங்குகின்றது. சங்க இலக்கியம்ாக திகழும் சிலப்பதிகா ரம் இந்துமத வழிபாட்டு மரபுகளை பல் வேறு சந்தர்ப்பங்களில் நன்கு தெளிவு படுத்தியுள்ளது. சிலப்பதிகாரம் எழுந்த காலத்தில் பல வகைக் கோயில்களை அக் காலத்தவர்கள் வழிபட்டார்கள் என்ப தனை இளங்கோவடிகள் பின்வரும் வரிகளி லூடாக குறிப்பிடுகின்றார் :
* பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும் அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும் வால்வளை மேனி வாலியோன் கோயிலும் நீலமேனி நெடியோன் கோயிலும் மாலை வெண்குடை மன்னவன் கோயிலும் மாழுது முதல்வன் வாய்மையின் வழாக நான்மறை மரபின் தீமுறை ஒருபால் '
என இந்திரவிழா எடுத்த காதையில் குறிப் பிட்ட இளங்கோ வடிகள் சிலப்பதிகார வஞ்சிக்காண்டத்திலே பத்தினித் தெய்வ

வழிபாடு
ஆறு திருமுருகன்
மாகிய கண்ணகிக்கு சேரன் செங்குட்டுவன் கோயில் எடுத்த வரலாற்றைக் குறிப்பிட் டுள்ளார். அத்தோடு இலங்கை அரசனாகிய கஜபாகு வேந்தனும் கண்ணகிக்கு இலங் கையில் கோயில் எழுப்பினான் எனச் சுட் டிக்காட்டுகின்றார்,
வலமும் மும்முறை வந்தனன் வணங்கி உலக மன்னவன் நின்றோன் முன்னர் அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும் பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும் குடகக் கொங்கரும் மாளுவ வேந்தனும் எந்நாட்டாங்கண் இமய வரம்பன் இந்நன்னாட் செய்த நாளணி வேள்வியில் வந்தீகென்றே வணங்கினர் வேண்டித் தந்தேன் வரமென் றெழுந்ததொரு குரல் '
ஈழத்திருநாட்டில் கண்ணகி வழிபாட் டில் சிங்களமக்களும், ஈடுபாடு கொண்டு விளங்கினர் என்பதற்கு பல சான்றாதாரங் கள் காணப்படுகின்றன, இவர்கள் ' பத் திணித் தெய்யோ ' என கண்ணகியை வழி பாடு செய்தமையை இராசவழி என்னும் நூல் தெளிவாக விளக்குகின்றது. கி. பி 2 ஆம் நூற்றாண்டிலே இலங்கையில் கண் ணகி வழிபாடு தென்னாட்டிலிருந்து பரவி யதாக சில ஆராய்ச்சிக் கட்டுரைகள் தெரி விக்கின்றன. இலங்கையின் பல பாகங்களி லும் கண்ணகி வழிபாடு நிலவிய போதிலும் குறிப்பாககிழக்கிலங்கையாகிய மட்டக்களப் புப் பகுதியில் கண்ணகி வழிபாடு செல்வாக் குப் பெற்றுவிளங்கியுள்ளது. இலங்கையில் வடபகுதியாகிய யாழ்ப்பாணத்தில் அங் கணாமைக்கடவை' என்னுமிடத்திலேயே முதன் முதலாக கண்ணகை அம்மன் கோயில் எழுந்ததாக இலங்கைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியராக விளங்கிய கலாநிதி க. கணபதிப்பிள்ளை தமது ஆய்வில் குறிப்

Page 85
- 49
பிட்டுள்ளார். கிழக்கிலங்கையில் கண்ணகி வழிபாடு பற்றி எடுத்து விளக்கும் உடுகுச் சிந்து என்னும் நூற்குறிப்புகள் அங்க ணா மைக்கடவைபற்றிய தகவல்களையும் தரு வதாகக் கூறப்படுகிறது. உடுகுச்சிந்து எனும் நூலை ஊர்சுற்றுக் காவியம் என வும் அழைப்பர். இந்நூல் அங்கணா மைக் கடவை கண்ணகையம்மனைப் பற்றி நான்கு பாடல்களிலே வழுத்தி உள்ளது மேலும் காரைதீவு, வந்தாறுமூலை, செட்டிபாளை யம், களுவாஞ்சி, வீரமுனை, நீலாவணை போன்ற இடங்களில் விளங்கிய கண்ண கைத் திருத்தலங்கள் வாழ்த்தப்படுவதை அறியலாம். மேலும் கண்டி, அநுராதபுரம் போன்ற இடங்களில் சிங்கள மன்னர்கள் கண்ணகை வழிபாட்டைப்பேணி வந்த மையை இந்நூலமுலம் அறியமுடிகிறது.
இலங்கையின் வடபாகத்தில் முல்லைத் தீவுப்பகுதியில் அமைந்த வற்றாப்பளை கண்ணகையம்மன் பல ஜதீக வரலாற்றைக் கொண்ட கண்ணகையம்மன் தலமாக இன் றும் விளங்குகின்றது. யாழ்ப்பாணத்தில் பல கண்ணகை வழிபாட்டுத்தலங்கள் பல நூறு வருடங்களாக சிறப்புப் பெற்று விளங்கிய போதிலும் காலப்போக்கில் பல கண்ணகை யம்மன் கோயில்கள் ராஜராஜேஸ்வரியம் மன் கோயில்களாக மாற்றப்பட்டு விட்ட தாக தமிழ் அறிஞரும் சிறந்த கல்வி மானு மாகிய திரு. சு. நடேசபிள்ளை தமது ஆராய்ச்சியில் குறிப்பிட்டுள்ளார். எனினும் யாழ்ப்பாணத்தில் மிகப் பழமைவாய்ந்த கண்ணகையம்மன் கோயில்கள் இன்றும் அழியாத நிலையில் சிறப்பாக விளங்குவ தைக் காணலாம் வட்டுக்கோட்டைகண்ண கையம்மன், மாகியப்பிட்டி கண்ணகை அம்மன், உடு வில் கண் ண  ைக யம் ம ன், கோப்பாய் பாலாணை கண்ணகையம்மன், சுட்டிபுரம் கண்ணகையம்மன் போன்ற தலங்கள் பிரசித்தி பெற்ற கண்ணகை கோயில்களாக விளங்குகின்றன. முல்லைத் தீவு வற்றாப்பளைக் கண்ணகையம்மன் கோயில் திருகோணமலை மட்டக்களப்புப் பகுதிகளில் வாழும் மக்களையும் யாழ்ப் பாண மக்களையும் இணைக்கும் தலமாக சிறப்புப் பெற்று விளங்கியுள்ளது.
13

ஈழநாட்டில் கண்ணகை வழிபாடு ஒர ளவு இன்னும் நிலைபெற்று விளங்குகின்ற போதிலும் கண்ணகி பிறந்த பாரதநாட்டில் கண்ணகை வழிபாடு அமைதி பெற்று விட் -து. என நினைக் கத்தோன்றும் அளவிற்கு கண்ணகை பெயர் குறிப்பிடும் கோயில்கள் இல்லாமல் போய்விட்டன. மலையாள நாட்டில் சிறாங்கலூர் என்ற நகரத்தில் ஒற்றை முலைச்சி என்னும் அம்மன் கோயில் ஒன்று சிறப்பாக விளங்குகின்றது. இத் திருத்தலம் ஒரு முலை இழந்த திருமாபத் திணி என்ற கண்ணகியின் வழிபாட்டைக் குறிப்பதாக சில அறிஞர்கள் கருதுகின் றார்கள், தென்நாட்டில் சில இடங்களில் பகவதி என பெயர் குறித்து வணங்கப்படும் தலங்கள் கண்ணகி வழிபாட்டுத் தலங்க ளாக முன்பு விளங்கியிருக்க வேண்டுமென சிலர் கருதுகின்றனர். ஈழநாட்டில் கண்ண கையம்மன் வழிபாட்டினை பல கிராமத்துப் பாடல்கள், கூத்துக்கள் ஊ டா கவும் உணர்ந்து கொள்ள முடிகின்றது. கிழக் கிலங்கையில் அம்பன் பள்ளு, வசந்தன்கூத்து கோலாட்டம் என்பவற்றிலும் போர்த்தேங் காய் அடித்தல், கொம்புவிளையாட்டு என் பவற்றின் ஊடாகவும் கண்ணகை வழி பாட்டு மரபுகளை இன்றும் உணரலாம்.
கண்ணகி வழிபாட்டில் குறிப்பாக மக் கள் குறிப்பிட்ட சில நோய்கள் கண்ணகை யம்மனால் ஆட்கொள்ளப் படுவதற்காக தரப்படுவதாக கருதி வழிபட்டுள்ளனர். சில வெம்மை நோய்கள் பத்தினித் தெய் வத்தின் கோபம் காரணமாக வருவதாக மக்கள் நம்பி வழிபாடு செய்கின்றனர், கண்ணகை அம்மன் வழிபாட்டில் படையல் குளிர்த்தி முறை, ஆடிப்பாடி வணங்குதல். தீக்குளித்தல், காவடி எடுத்தல் முதன்மை பெற்றுள்ளமையை அறியமுடிகிறது. கிழக் இலங்கையில் கண் ணகையம்மன் கோயிலில் நடக்கும் பூசையை சடங்கு என்று கூறுவர் வயலை நம்பி வாழும் மக்கள் மழை பெய் வதும் மண் செழிப்பதும் பயிர் விளைவதும் பத்தினித் தெய்வமாகிய கண்ணகியால் நடைபெறுவதாக நீண்டகாலமாக நம்பிக் கைகொண்டு வழிபட்டு வருகின்றனர். பொங்கல் படையல் செய்து வழிபடும் மக்

Page 86
- 50
கள் குளிர்த்திப்பாடல் பாடுவதும் வழக்கு ரை காதை படிப்பதுவும் கூத்தாடிக்கலை மூலம் வழிபாடு செய்வதுவும் இன்று வரை காணப்படும் வழிபாட்டு அம்சமாகும். கிழக்கிலங்கையில் நிலவும் குளிர்த்திப்பாடல் கள் சிலவற்றில்
" தாட்டான் பெரிடியாகத்தார் வேந்தன் நீறாகச் சுட்டெரித்துப் போட்டதொரு தேங் காய் குளிர்ந்தருள்வாய் எல்லைபடும் பழிக்கு எண்ணவொண்ணப் பழிவாங்கிச் சொல்லரிய மாமதுரை கட்டாய் குளிர்ந்தருள் வாய் மதுராபுரித் தெய்வம் வாய் மாற்றந்தான் கேட்டுச் சதுராக வேகம் தணிந் ரய் குளிர்ந் தருள்வாய்'
தர்ம சாஸ்தி
சாதாரண தர்மம் சாமானிய தர்மம் விசேட தர்மம் ஸ்வ தர்மம் ஸ்திரீ தர்மம் புருஷ தர்மம் மாணவ தர்மம்

போன்ற அடிகள் அம்மனைக் குளிருமாறு வேண்டுவதனை அறிய முடிகிறது.
யாழ்ப்பாணத்திலும் முல்லைத்தீவிலும் வழக்குரை காதை படிப்பதுவும். வசந்தன் கூத்து முறையீடு எனப்பல ஆடல்பாட லோடு கூடிய கண்ணகைவழிபாடு கிராமங் களில் நிலவியுள்ளதனை கலைபண்பாட்டு மரபுகள் இன்றும் விளக்குகின்றன. இன்று ஈழத்தில் கண்ணகை அம்மன் வழிபாட்டுத் தலங்கள் ஆகம முறை சார்ந்த ஆகமமுறை சாராத இரு நிலையில் விளங்குவதனைக்
5 IT GROOT GR)fTb),
ரங்கள் 14
8. குல தர்மம் 9. யுக தர்மம்
10. ஆச்சிரம தர்மம் 11. இராஜ தர்மம் 12. பிரஜா தர்மம் 13. பிரவிருத்தி தர்மம் 14. நிவ்விருத்தி தர்மம்

Page 87
* జ్" κτ *_ 言亨 エ羅 羅・警 エ.cmで 器滨 #g_క్ష్మీ_్యక్టీక్లీ క్షీ!
- ܚܝ g_&_6 ធឹង ប្រើប់) அதிதுே அகூட்டங்கஃன்க்கொண்ட :விஷ்!! :
تنتقي
326
Lii
ஜ்
နုံ၌ နှီ
ଖୁଁ
裘
#-
。翌
ଅଙ୍କ୍
t
نیچ؟
i-i
န္နိဌိ
Z
4、
5;
意。
கோன்ஜிஒழ்கள், விற்பஐஜிகள், :ே
f - (!, இறக்குமதிகள்
SSS SSqSS *{{{&#*}}}°{{*'; t'; జYYYYY g அ8:இதற்கும் அதன் மூலம் 5 சுட்டெண் உதழ்ேகின்றது.
உ + b pோத்த வீலேசசுட்டெண்
விண்க
___{Rj;
******
ஒரு விண்க
;s- پیپسلی حسییو : ** نویسہ۔-- கண்ட்: தற்கு i. 34.333 3: விருமானத்தை மேய்த்தேசிய விருமா
வணிகத்துறையினர் பண்வீக்க நி3
eOqu SSsue AqS SAAS S LAAS Aeqe S S qqSS S S S AAAAA AAAq S SLSS స్ట్రీట్టఈజిప్ నాజీ {{__టైటిళ్లి
; ହିଷ୍ଟ[[ * منہاج ? ہم سب بہبی برچسبیب
జ్ఞాశ్రి కైశి_{ద్ధిప ! పూజెప&&__#1&&&
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வீ. கருணதாசன் 38 வர்த்தக பிரிவு
ܨܘܼܪ یاسمی"F {ŏi is gette‘83: 383; six
s ஆந்தி:த:த v33* R * } #å}}} '*کدام | isis; ; ; அல்லது தொடர்புடைய மாறிக்குரிய ஒரு தற்காக பயன்படுத்தப்படும் புன்னிவிபர ஆணஷ்
காலத்துடன் மாறும் மாறியை அல்லது ஆன பதற்கு பயன்படுத்தப்படும் புன்னிவிபர 籍爵莓岱
5 நகரத்தில் காண்ப்படும் ஒரு குறிப்பிட்ட
: : :
- - - ۔ ۔ -- * It !!! : ' 'fr': ஆத்: {ழிந்தி: ஓஜ் &}} ♔ട്ടു{_് 登氹一鲨
- 'V r్న . -:து.
ܝ̈ܐ- ܘܘܗ *
- t-- تم۔۔۔سیہ -- چم i לה تيسي. - وسمہ ,# - போத்தவிலே, சில்லறை விலை, உற்பத்திக்
နှီ ဦ:- ప్రత్త
s ۔۔۔سوط شدہ۔۔--سئد ܕܚ" • ሃ"ሚግሬ , " ... --g
_######్య 3}}}_{t}| } மாற்றங்கனை
திர்கால நடவடிக்கைகளை திட்டமிடுவதற்கும்
ஜ், சில்லஐநஜீலைச் சுட்டென்
ட்டத்தை நிர்ண்யிக்கும்போது பெயரளவிலான து :ெகூலிஃ:ே கண்டபதற்கு சுட்டென்
ப்ரின் வருமானத்திலிருந்து மெய்வருமானத்தை
, : ج{rچم سہ نہ ہبہ :?t -mr- r-r-A : ܚܨܐ ܕܡܪܢ 1 ܓ݁ܶܝܨܐ ܕ கீழ்ந்து. ஒரு : பண்ததேச: ščii:5 தற்கு சுட்டென் பயன்படுகிறது.
ஒலமைகள் வாழ்க்கைச் செலவில் ஏற்படும்
リぶ。
;ہستی ! بہم وسمہ سہم ہی အံ့ -ဦ႕6?ဗွီဒံနိဒ္ဓိဌိဋ္ဌိဉ့်နီ,
தி**:ப்ேபதற்கு சுட்டென் உதவிழ்கிறது
"T" in
';#_{ r- )
:3த்துக்க:தற்க BA{_{ck_i; 343& 33.3gs.

Page 88
4. 3ஜி: ஜிஜ்6: ஆட்டேஜ் - ?? - “: x
fauimbers à
དུ་ محبت":"gم .................... چن2. எளிய அளவுச் சுட்டென் - QR = }
Simple quantity relative index at abers)
3. எளிய பெறுமானச் சுட்டெண் - WR =Wற, !
ዃ፻፷› (Simple value relative index aurabers)
Pr . நடப்பாஜ்டு வில்ை Po :- அடிடாண்டு விலை
W3CRE ஐ - நடப்iலக்டு :ெத்தப் gெ:தி *30R2 ஐ - அடி :ண்டு :ெத்தப் பெறுமதி
உ+ம்: பொருளொன்றின் இரு பருவங்களுக்க: தரப்பட்டுள்ளன. 1990 - 13 " T*
ଶୟଃ୫୫{'_ଛି_ଞ, ଶ୍ୟାମ୍ପି! ; கணிக்க,
"* بےطیسے میے۔ ,"سمي * :ரு53 pag Éi:<i> ©រី
连 ལྔ་
". ek" -g **
எளிய விலைச்சுட்டெண் = Pr , ,
"مية "ليلة 2 3 كم.
望角 二 芮 亨喜叠叠 2. ****
F#Fffiti 4 G: g3 DFFFICE ŠFSF'_G_FIVÉ – Ping
 
 
 
 
 
 

r-r- : ; ; ; sr-e-Arts
浔 *。 ታሟ`3 H,ረኻ፧ፕሩ ̈፡፤ t - நட tண்டு ஆன்:
g0 - அடிபாண்டு அளவு
1992ஆம் ஆண்டுக்கான் கிளிய Yಣೆ:} {}_g}}## #_§§_äæ禧È
pm வீலை ចុច <វវិទ្យុ
3 5
ய அளவுச் சுட்டெண்_

Page 89
ܣܛܠܐ
ܝ .
彰 差 $ 4- 37, එෆ්.ඡි, ළූ "# ::iقهٔ منتقةهٔ ثهٔ بیسابقهٔ سسهٔ اتمی بش& سسهٔ
தரப்பட்ட ஆண்டிற்குரிய 1க்கு * ** : حمير - * கூட்டுத்தொகையை அதே பொருட்க
- ܪ - ட்டுத்தொகைய is: விகிதத்தின்
݂ ݂ ݂ 露。" rg ܘ 舒露L醬{p,豎兗 至登上L竇岳珂 在
எளிய திரள் விலைச்சுட்டெலின்
登
蓝
2pt-நடைமுஜிஐtஜி:
p3 - ஆடிபாண்டு விலைகளின் கூட்டு:
Σ
Σ
s * مسیر * }ਬ ਸੁ ਤੇ ਓ -
தரப்பட்ட ஆண்டுக்குரியூ ஒ? அளவுகளின் கூட்தொகை1ை அ அளவுக்ளின் கூட்டுத்தொகையின் 6
அ3வுசசுட்டெண் 53: டும். இதன்
எனி: திரள் அளவு சுட்டெண் ():
سریہ இனிய திரள் பெறுமE சுட்டெE
3.
}
பெறுமானங்களின் கூட்டுத்தொகை ஆ:ண்:து :ெத்தப் பெறு: சதவீதமாகக் கூறுதல் எளிய திர
ா"ே  ே r rrrrrr tal- - #ಣ್ಣೀ}}}ಷ್ರಕ್ಲಿà# ## ## ಇಚ್ಛಕ್ತಿ
حیح است=
எளிய திரள் பெறுமஐ சுட்
 
 

(Sinn pie aggrega fe price index numbers)
ăಣ್ಣೆ}___ & Hತ್ರಕ್ರರ್ಣೆ ವà&#ë à:éàಿ! ன் வகைகளினது ஆபாண்டு விலைகளின்
தமாக கூறுதல் எளிய திரன் விலைச் சுட்டேஜ் - : ہے ، چیہ ہو۔ تمہم -- អ៊_វិជ្ជា យឹរី
- ལྟ་ -
ii = E F ; : {}{
3à
;"""آہ مہب %"i"=*, கூட்டுத்தேஜிக
க்தொகை
iragle aggegate Quantity index autabers)
- ட்ட பொருள்கள் ஒஒகளினது தே பொருள் ஷ்கைகளினது அgiண்டிற்குரி: விகிதத்தின் சதவீதமாகக் கூறுதல் எளி திரள் 8 கணிப்பிடுவதற்கான சமன்பாடு ஒரு:து.
= -82 100
t s
r - ܪ 3 (Simple. Àggrafe Yahue index humber}
க்கு மேற்பட்ட பெருன் வகைகளினது :ெத்த
- - .ܢܢ - "א - - :ே அதே பொருள், பொருள் ஒகேகளின்து
-err f:
தொகையின் விகிதத்தின் ஓர் பெறுTச் சுட்டெனின் இனப்படும். இதனை
33ässåsiä ärsi 35 - リ 83 : تقی زیاس
3.

Page 90
ܗܝ *
鲨一
登 “
*
..
釜
:
/*
3.
量竞
*ب۔۔۔۔۔۔
{}
盔
を二や
-
凸性
i
A {}{}
塞盖鲁穆
备
g
ಟ್ವಿಟಿ
-
Af
ஜிஜ்
•••* 『“|| MTMA营*T 玲穿* 主||
产
};
P
; :
କ୍ଷୁଃ
६
محھے۔
5
$ழ்த்
孪
拿
言 ? 登u"鹰
쿤F
ଝୁ
irYii i -مجمع ag
ஆ
R
L;
ஜி
நீக்க,
乳
|-
శ్లో
钴
سمسة
କାଁଧ୍
莎
登兵二A容泛
『き まを 、
g
L纪一
விண்கி:Tiபுகளின்
-هٔ
}}
{}
현
.
- جي"", லசசுடkடஐ,
53.3 332;
登
ஸ் அணிவுச சுட்
藏密*
;授----
환系 활}爵咒saei
琵年%為第靈-斑
游憩絮}磷斑翻 趙爾碼藏盈廓盛*) km鹰照斑
அரிசி
}
ទន្សំ
|-
苔猩
a#. Hitiե8
ܗܐ t
66វិ{ }
தாகையை
3 & 485. Rig
ਸੰ
好、露L鲇
சிண்ட்
f(: {ነ
8{D
暹
இதனை கஜி
 
 
 
 

SEG TEKI EāSJI jį jį į 3 ELiKTIES AFTERF அளவுகளும் கீழே தரப்பட்டுள்ளன.
ட்டேன், எளிய திரள் பெறுமானச்
VF3 W;
: ೬¥ | ಬ್ಲೌಳಿ : #ಣ್ಣೀ:
St. i iђž4f)={i}{} i i3x5)=fŠf}
5 7 = ; 5 = 25
盏袁露=重釜露撰驾拿雯星芝=竺4鲁
24--
호
彗
g
3.
를
笼
率
{}
= 68.62%
i
i.
露
舍
verage index numbers
yarage price index number)
கலில் இகை 8ெருள்களுக்குரிய
இகைகளின் எண்ணிக்கை: #ல் * పుస్తోత్తBE_3_పణి పళx{{{8}

Page 91
: }?: =
至*美翠莹
ప్రజభటె_ck_ప్రస్లో
:: مس 弩圣
箕
囊
2.
莲
爱
Á Í -
恶
அTரgர்
5 (or
#ଶ୍ରେ:
శ్లే
இ}
i
தில் ட்டுத்தொகை
憩蚤
鲇
蔷
{
; ... 有點殘聖靈 盛避哥避|邱, 曙斑皿桑 舜徽辩斑為鐘额@融涯 融홍젊每班
惩
F
பTEச்சுட்டென்சி
*。 F.
I
#FFFF"xị
டேஜ்
fiýs::
حة
- స్ట్రీ { }
ਖੁ ---
پایتخت
器套 ば、
·
﷽¶ ̈ ዲ Úři
ឆ្នាំឆ្នាំ
鲁
குறிபீட் T. E. பறப்படும் ஆஜ்ட் $3ჭ{g
链接
sft:f
玮
3. ਗੁ. .
第
3
பெறுமா ந்ேததது t ற்
琶
ଶ୍ରେଣୀ:8. ଶ୍ରୀfiଣ୍ଣ &#ଞଣ୍ଟିଅଁ, ଶୋଥs
ெ
6_អភ្ជា
Arat (Bjë
th
s
 
 
 
 

蜜
குேத்து
ہے۔
سٹی む。
2. 복, .
குரிய அளவு ஜ்ேஜ்கபூபிEல்
翼 会 *应
پي چHe 呈翠圣号
&Sigi
管
ம
ம் இதனை
每一瞬藏
**• "
盘桑辍斑|--~~~~, 瑟km·登 拜汪矿t萨: 衰{额-ml 容湘盛咒 卷愈难활
段亨亡學堂** 斑鼠剔飞 :::*接守) 知義一 - * 잃 확(~~~~' ~*~
{}୫
ܒܚܧ
捻
-i -
ன் எண்ணிக்கையினால்
சுட்டெஜ்
± ರ್â
பொருட்களுக்குரிய ဂျိ 23;{{EČěF Egi
鬣
铨、魏
g
: {if }
彗
Average Value index Niizaber
{
ஜீ 65អ៊ួ រួ
s
登。
第 芭
莊上醬
F__భక్తి

Page 92
ဒီ့နွံနွံ5? កែ អ៊ុស្ឆាង Pg Fé ‰ጆ፤
量亨爱擎 翼翼 重擎霹 露 重拿 爱鲁 يؤخر 至 호 5 {}
중 홍 i é i
言 v ni F . Σ PnPox100 *{gigo Kitು A 0/8 kl. 0}{0} = 25 3020x00 = 玲,筠盘笼意箕 =鹫、 iť), i{} x} {}{} = C. 8š6xi{}{} = 33,33 : 2{}í: 6 : {}{} - i. 聆。链烹蓝莓,=鹫兽 懿薰鲁莓 =鲨
533.33 5
ஒளிய சரசரி விலைச் சுட்டெண் ஒஜி
r */ -in - * go 莓 t = |--- V Ν ئي
= 533.33
李 =重芷
-- Vï፩ Ã - - as ် စုပ္၉ ‘ီ ஒஸ்ரிய பெறுமானச் சுட்டெண் = 爱、
= 655.65
4 -Fáfá ófá நிறையிடப்பட்ட திரள் சு
ਸੁੰ 555
1. நிஐைபிடப்பட்ட திரள் சுட்டெண்
2. நிறையிடப்பட்ட திரள் அளவுச் சுட்டெண்
6
 

ፕ............ : * マ - - ¥é! f : 智蛋
Po go Fiä ga
출
3. 5: 300 星羲 23 53 2 ஜ்ே
露堂 }
2Evnivo x100
3箕星经Q喜夏拿拿 =星器7.5
:5í),š} Ž{} x} {}í) = 25 25 68; 96 x}{} = 66.66 25 60;3200 = 87.5
566.66
ப சாரசரி ஆலிவுச்சுட்டெண்
= 3 " x4}
N
颜 حسیر * E_{e}} - 3x3x3536
டெண்கள் நிறைபிடப்பட்ட
rs
:Pಾಳ್ಯ
”
ä ŠilkÄ. {{} 之 ಙ್

Page 93
叠子穿景 碧穿鎮** 瑟叠y* * *: ............ ||*}} **) *** *雲*** 登y ዛ፡ካ።'፧ 登y*毒シ * 院統一日字一之宮 大元 登き 密斑 锌t翻 盘
వ్లో
孔商 斑斑 寧*
:ே * :
బ్రిణి హౌ8L
$Â.
t
بنتیکہ
穿配 斑홍
Σε
--
–ܓܠ
的.“
ஆஜ்ஜி}}
இக் இட்டென்
_វិជ្ជៈ ឆ្នា
 
 
 
 
 
 
 
 

****|- 황|*|&#|流随 登* “*) 银×* * 辽-- 封爵:후历 t’i*** ......... 靛“...!盘----盘 由一腳顫韃一*M*議 登*班藏究登A* w*凝 斑糖登**接一艘瑟 *s.:......”兵 *き *登----* も获” 為银登☆套----* *:r“, „...·シ、尹彭 至斑圈野ዞ፡ካሣ瑟王慈en 發|| 홍·황絮苏恶器 -至1-登 "正 *연혁斑斑斑覆蓋我盘器H 莘磁*院***衰感 總社 : 5 * 5활 红斑 密斑||||橙 :讓 德奥墨厂器 封孚幫登登"鹫之 更...o.s.海翼瑟” , ,ミ“----叠y“ ....篇冠藏きま盘“ 融花言妊甄濾登 斑袋“·接辩ww三 函o圈圈。割要尧。. *登.r“,舞a.fi፫'°ኔ ! ሐሤ .! 彰

Page 94
పg ܗ
# fiឆ្នា
#ಖಿ # ចុះ o# 994, 1995 1994. 995 அர்சி 2ಿ 28 { ?}} {{}} *
f கோதுன்: 5 重笼捕。氢酶 雳期 ਸੁੰ 夏器 20 5
-------"{"٦------ .........ሜ.. 5 سیاسی ----- سیاسی T" ーモー一丁 ܐܚ
1994ஆம் ஆண்டை அடியாண்டாகக் கொண்டு 13 அவுைச் சுட்டெலன்கனைக் கணிக்க,
星群
$36
பாசே விலைச்சுட்டெண் ॣ"
– * * *iłcił
-----x i{}{}
Хgзga
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் உள்ளார்ந்த தேசிய உற்பத்திச் சுருக்கி மொத்த விற்பனை விலைச் சுட்டெண் கொழும்பு பெரும்பாக நுகர்வோர் வீன்ஸ்ச் சுட் கூலிக்கட்டெண்
3. 2. 3, 酶、 5.
கொழும்பு நுகர்வோர் வின் (CaloMbO CON SUM er Price
கொழும்பு நகரில் வாழும் நடுத்தர துெ மாதிரியாகக் கொண்டு இலங்கைவாழ் மக்கனி மாற்றங்களையும் அவற்றை ஒபிடுவதற்கும் ಸ್ತ್ರೀಪತಿಃ-Fé கொண்டு இலங்கை புள்ளிவிபர த விலைக்சசுட்டெண் கொழும்பு நுகர்வோர் விலைத்
இச்சுட்டெண்ணைக் கணிப்பதற்கு உண ஏனைய பொருட்கள் என்னும் 3 வகைப் ப8 கொள்ளப்பட்டு கணிப்பீடப்படுகிறது. இச்சுட்டே 6ួ}}}
 

32 卓湾鲨拿
3} 笠酶
180 3{{
320 4弹弹拿 626)
95 ஆம ஆண்டுக்குரிய பாசே விலை,
ச அளவுச்சுட்டெண்
- --x 1
素
{}
ତିଜ୍ଞ_ଞ
§È #_§§_#
in deX RUMIber)
ாழிலாளர் குடும்பங்களின் நுகர்வை ன் வாழ்க்கைச் செலவில் ஏற்படும் 1932ஆம் ஆண்டை அடிப்படை ணைக்கனத்தினால் கணிப்பிடப்படும் FŁck LEITFÄH; SEFÉ HA BÉi.
ஷ், உஒட, எரிபொருள், வாடகை *டத்தொகுதிகள் மட்டும் கருத்திற் அன்னை கண்டபதற்கான சமன்பாடு

Page 95
- - - محبو-- :
奇。 -- E}_{ gā#డిప!? పోస్టభక్తి81_
를 * ܗܘ
" 2 st is உள்:tர்ந்த tெத்த தேசிய உர்
உண்3ைர்ந்த :ெத்தத் தேசி: ஆஓட்டஜ்ட
سہمتھی۔ oci 33%; &8;
தயாரிக்கப்படும் சுட்டெண் ஆதும்,
உள்ளார்ந்த பொத்தத்தேசிய நடை
உற்பத்திச் சுருக்கி f:ffff;
*
ܵ ፖ! 孝 மொத்த விற்பனை இபீலைச் சுட்
பொத்த விற்பனை விலைகளி: ஒப்பிடுவதற்காகவும் 1974ஆம் ஆண்டு மத்திய வங்கியினால் கணிப்பிடப்படும் சுட்டெண் எனப்படும் இங்கு போரு EEËET விற்பனை ప్రణి! ప్తపల్లె கொள்ளப்படுகிறது. அதாவது உற்பத் மொத்தவிலையின் அடிப்படையில் கை
இங்கு விற்பனையாகின்ற 13 கணிப்பீடட்டபூன்படுகிறது.
爱 爱 ۔همي கொழும்பு பெரும்பாக Greater Colombo c
టి?]{{ iii. 318. ibisiti.
சேவைகனின் சி இiல்திப்பி x ன்படுத்தப்படுகின்ற விலைச்சுட்டெல்
அடிப்படை ஆண்டாகக் கொண்டு கணி
இச்சுட்டெண்ணை கண்டபதற்கு
* سي
|-
கூலிசசுட்டெண் என்பது ஓர் தொழிலாளரின் பஐக்சலியில்
 
 

شبیبیسی : "" £2%_ჭჯ??!*
三 穹
a. if
立、警萤
-as ! تمہ شعیب ;ی 爱一到 3 نیعه
பத்திச் சுருக்கி:னது 1982ஆம் ஆண்டை மொத்தத் தேசிய உற்பத்திக்குள் அடங்கும் ல் ஏற்படும் :ற்றங்க:ை அறிந்துகொன்ன் னை கணிப்பதற்கான சமன்பாடு வருமாறு:
ஓஒற மொத்தத்தேசிய உற்பத்தி
சீஃல் :ேத்தத்தேசிi உற்பத்தி
6L6.3 (Whole sale price index number
ட ஆட்பட்ட ஆண்டாகக்கொண்டு இலங்கை ஜிஐஐஜ் ஆட்டேஜ் :ேஈத்த விற்பனை விலைக்
- س- س-- 1ண்து சந்தைப்படுத்தலின் ஆரம்ப நிலிைப்பீல் யே மொத்த விற்பனையாக கருத்திற் த: tாதத வி: Tபார்களுக்கு இழங்கும் கிக்க படுகிறது.
பிரதான பொருட்களின் விலைகள் இச்சுட்டெண்
ܗܝ
நுகர்வோர் விலைச் சுட்டெண் nsum er price index number
سب سے
LSLLASAAAAAAS AAAASLSASAASASAS AAAAS LSSAS LAAS LLS AAAAA محمYa. . ٹی-سی-پوچ * 4 -پی-پیر භිද්%හී හි%භිභීෂි;_{e:_% හී{{ග්‍රි: ©% %;_&භි:
ல் ஏற்படுகின்ற மாற்றங்களை அளவிடப
kr ܐ ܢ '-. M ...7 ++ * تلبیہ : - : ۴ - چ - پ م به: * AF% * ஆகும். இதE குடித்தேஜ்க தி டேே
ம் ஆண்டு ஜனவரி - பூண் மாதத்தினை ட்பீடு செtட்படுகிறது.
8 பண்டவகைன் கருத்திற் கொள்ளப்படுகிறது.
* ܚܚܚܚܚܐ - ܪ`” سقے، سے۔ ܕ ܘܐ ܨܚ - - - ۔ ۔ ۔ * ، -- . . ಆಟ್ಸ೬ರೌ೬ ಟ್ರá5೬- 56àಹ್ಲಿ ಥ್ರಿà76ಣೆ:8 ர் டுகின்ற மாற்றங்களை அறிந்துகொள்ள
g

Page 96
தயாரிக்கும் ஓர் குறிகாட்டியாகும். இலங்கையில் கொண்டு கூஜின் அட்டென் கண்ணிப்பிடப்படு கணிப்பிடப்படுகிறது.
3) அரச ஊழியருக்கான கூலிச்சுட்டெண் 2) தனியார் துறை ஊழியருக்கான கூலிச்சுட்டெண்
K PÅ 646ð
ఓడిపణి జెట్టే {{__పట్టే ఓ పోటీపడ్లే ఔటైళ్ சுட்டெண்கள் நடைமுறையில் பயன்படுத்தப்படுவன் இவற்றை கணித ரீதியாக அறிந்து கொண்ஷ்த் பாதையில் இட்டுச் செல்ல சுட்டெண்கள் இன்றியை
E
}
ဇာ(J******ဒဂဂဂဂဂဂဂဂဂဂဂဂဂဂဂ
r సీ. چی۔ خلیج چھ வெற்றியின் இரக: ത്ത അ میجی
உழைத்துப் போராடாமல் வெற்றி கிடைக்காது.
2
உழைப்பும் முயற்சியும் வெற்றியின் ஆடிப்படை
t
3.
)
கடின் உழைப்பைத் தவிர வெற்றிக்கு ஆேறு ஐழி:
வேற்றியின் துணைவன் தன்னம்பிக்கை
(
5
எடுத்த செயலில் நிஐலத்து நிற்பதே வேற்றின்ே
{
6.
)
உற்சாகம88 உஐழப்பு இல்:ைஜ் உ:த்த ஜெ
פר" "
LittхяйијgGизиgѣёй
t
)
கடல்நீரைப் போன்றது பணம் குடிக்கக்குடிக்க தர
{
2.
}
பஐத்திற்காக திருமஐம் செய்யாதே பஐழ் இல்ல
(3) கேவலம் பணம் சம்பாதிப்பதற்காக ஒழுக்கத்தை :
彗童 ܟܬܝܼ
هجمي
*** xxxxxxxxxxxxxxxxxxxxx
i.
t
i

978ஆம் ஆண்டை அடிபாண்டாகக் கின்றது. இது இருஷ்கையில்
uY 0ykyT Tee STyyyyTkZS eeMeYz LTTOe த அறியக்கூடியதாக இருக்கிறது. 3ல் சமூகத்தில்ன் முன்னேற்றப் :பாததாகும்
*ళళ్ల***********
தrஜல் ஒகேற்பூண் 4
|- శశిక్ష
= _2á# =
- : - இரகசியம்
* ெ 莒* *
g
霹
ਉ
- சுவீடன்
ஈலும் ஐம் புரியாதே
---- 器
- ఊబీLRడాజీవెత్తి --
سمعہ
xxxxxxxxxxxxx^^
ரேலி
;ழந்துவிடாதே

Page 97
ܐܠܓܐ
பாதீடு
குறித்த கால வரையறை ஒன்றுக்காக
செயற்பாட்டுப் பணிகள் பற்றிய விளக்க மான திட்டமே பாதீடு ஆகும். அதாவது எதிர்பார்க்கும் நோக்கங்களை அடைந்து கொள்வதற்கான குறிக்கோளுடன் ஏதா வது குறித்த எதிர்காலம் ஒன்றுக்காகத் தயாரிக்கப்படும் திட்டமொன்றை அளவு ரீதியாகவும் பணரீதியாகவும் வெளிப்படுத் தல் பாதீடு ஆகும்.
பாதீடு தயாரிக்கப்படுவதன் நோக்கம் :
நிறுவனம் ஒன்றின் நீண்டகால நோக் கத்தை அடிப்படையாகக் கொண்டு குறித்த கால வரையறை ஒன்றின் நோக்கத்தையடைவதற்கு கடைப் பிடிக்கப்படும் செயற்பாடுகளை மேற் கொள்ள வேண்டிய தீர்மானம்.
ஏதாவது குறித்த கால வரையறை ஒன்றில் அடைவதற்கு எதிர்பார்க் கப்படும் நோக்கத்தை அடைந்து கொள்வதற்காகக் கடைப் பிடிக்க வேண்டிய செயற்பாடுகளுக்கு எடுக்க வேண்டிய முறைகள் பற்றியும் அத னால் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறு பற்றியும் இறுதி முடிவு ஒன்று எடுக்க உதவும்.
இந்த வகையில் நீண்ட காலத் திட்
டத்தை வினைத்திறனாக மேற்கொள்ளப் பாதீடு சிறந்தது.
பாதீடு தயாரிப்பதன் அனுகூலம்:
1.
முகாமைத்துவ, நிர்வாக நுட்பங் களை முகாமை முறையாகப் பயன் படுத்த முடிதல் நிறுவனத்தின் பல்வேறு திணைக் களங்களிடையே / பகுதி களிடையே சிறந்த தொடர்பாடல் ஒன்றை ஏற் படுத்த முடிதல் ஒவ்வொரு பகுதி / தி  ைண க் கள ங் களின் நோக்கங்களினை பிரதான
4.

UDGET
நே. நிலக்ஸள் வர்த்தகம் 1999
நோக்கமாகக் கொள்ளாது நிறுவன த்தின் நோக்கத்தினையடைந்து கொள்ள உதவுதல் திட்டங்களை வரை வதன் மூலம் முகாமைத்துவத்திற்கு ஊக்குவிப்புக் கள் ஏற்படும் நிறுவனத்தின் நோக்கங்களை அடை வதன் மீது ஊக்குவிப்பு ஏற்படல் எதிர்கால நிச்சயமற்ற நிலமை களினை வெற்றிகொள்ள உதவுதல்
பாதீட்டின் வகைகள் :
காசுப் பாதீடு விற்பனைப் பாதீடு கொள்வனவுப் பாதீடு மேந்தலைப் பாதீடு நேர்கூலிக்கிரயப் பாதீடு மூலச்செலவுப் பாதீடு உற்பத்திப் பாதீடு
காசுப் பாதீடு :
குறிக்கப்பட்ட எதிர்காலம் ஒன்றில் ஒரு
நிறுவனம் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் பணத்தொகையையும் நிறுவனம் செலுத்த எதிர்பார்க்கும் பணத் தொகையையும் தொகுத்து கோவைப்படுத்தி வைக் கும் அறிக்கை காசுப்பாதீடாகும்.
காகப் பாதீட்டைத் தயாரிப்பதன்
அனுகூலங்கள் : பாதீடு செய்யப்பட்ட கால வரை யறை ஒன்றின் ஏதாவது சந்தர்ப் பம் ஒன்றில் பணப்பற்றாக் குறை ஏற்படுமாயின் அதனை திரட்டிக் கொள்வதற்கான பல்வேறு வழி களையும் முன்கூட்டியே தெரிந்து கொள்ள இது உதவும். இது இல்லா விடில் திடீரெனக் காசுப் பற்றாக் குறை ஏற்படுமாயின் அதனைத் திரட்ட அதிக செலவு ஏற்படும்.

Page 98
2. பாதீட்டுக் கால வரையறை ஒன்றில் ஏதாவது பணமிகை நிறுவனத்தில் காணப்படுமாயின் அது பாதீடு மூலம் வெளிப்படுத்தப்படும். இதன் மூல மாகப் பணமிகையைப் பயன்படுத் தக் கூடிய வழிவகைகளை அறிய GOTTLAD 3. சிறிய நிறுவனங்களும் பாதீட்டைத் தயாரிக்கின்றன, ஏனெனில் தம்மி டம் எதிர்காலத்துக்குப் போதிய பணமுண்டா என அறிவதற்கு காசுப் பாதீட்டில் பொதுவாக உள்ளடக்கப் படும் படிமுறை :
காசுப்பாதீடு ஒன்றி ********* திகதியில் முடிவுற்ற ஆண்டுக்கான
விபரம்
பெறுவனவுகள் விற்பனை கடன்படுனர் சொத்து விற்பனை குறுங்காலக் கடன் நீண்டகாலக் கடன் பங்கு வழங்கல் ஏனைய பெறுவனவுகள் மொத்தப் பெறுவனவுகள்
(-) கொடுப்பினவுக
கொள்வனவு கடன் கொடுனர் சொத்துக் கொள்வனவு செலவுகள் வட்டி, பங்கிலாபம் வழங்கல் கடன் மீட்டல்
மூலதனம் மீட்டல் ஏனைய கொடுப்பனவுகள் தேறிய காசு மீதி ஆரம்பகாசு மீதி
இறுதிக் காசுமீதி

2 -
1. எதிர்பார்க்கப்படும் பன ப் பெறு
வனவு
(Eg) காசு விற்பனை
கடன் படு னரிடமிருந்து பெற்ற I 16001 Lib ஏனைய வருமானம்
1. எதிர்பார்க்கப்படும் பணக்கொடுப்ப
ଜ୩ ରy
(Eg) காசுக் கொள்வனவு
கடன் கொடுனருக்கு கொடுத்த பனம், கூலிக்கொடுப்பனவு நிலையான சொத்துக்கொள்வனவு
ன் மாதிரி அமைப்பு
. மாதங்களுக்கான காசுப் பாதீடு மாதம் 1 மாதம் 2 மாதம் 3 மொத்.
崇 率 来 率 案。率 来 案
宗 来源 率。米 来。率
来 豪 ක්‍රීදී 5% 来 来 ※ 来
来 来 亲 来 鰲 崇 ※ 豪
率 率 ※ 来 来 来 崇 案
率 来 崇 来 来 率 චූදු ශ්‍රී
※ ※ 米 率 来”豪
来 来 来 ※ 米 来 ※ 来 宰 米 来。崇
率 来 ※ 来 来 来 来 来
崇 来 来 ※ 米 崇 翠 零
චූදු පද්ද 案 米 米 来 来 来
率 来 宗 来 来 来 来 率
来 来 来 来 来 来 桑 来
来 来 来 来 米。米 率 案
来 米 ※ 来源 米 来源 率 率
※ 米 率。米 米 崇 宗。案
* * 来 来 来 来 来 率 来 亲 来
宗 来 米 来 米 来 来 来 来 米、崇 来
来 来 米 来 米 来 米 来 来 率 米 来

Page 99
- 53 -
பின்வரும் விடயங்களுக்கமைய 99ஆம் ஆண்டின் முதல் 3 மாத ங் களு க் கா ன மாதாந்த மீதிகளைக் காட்டத்தக்க வகை யில் காசுப்பாதீட்டைத் தயாரிக்க,
1. 01-01-1999இல் காசு լճ6 2500|-
மாதாந்தக் காசுவிற்பனைகள் 4500/-
கடன் விற்பனைகள் (கடன்பட்டோ
ருக்கு காசு செலுத்தும் தவணைக்
காலம் இரண்டு மாதம்)
1998-1 - 10000
1998-12 - 6500
1999-0 - 14500
16,500 - 0%ے 1999
2. மாதாந்தக் காசுக் கொள்வனவு 2500/ கடன் கொள்வனவு ( கடன்கொடுன
31-03-1999ல் முதல் மூன்று மா
விபரம்
பெறுவனவு
காசு விற்பனை
gլ-6նr լյլ ՝ Gլ-րrri
மொத்தப் பெறுவனவு
(-) கொடுப்பனவுகள்
கொள்வனவு
கடன் கொடுனர்
கூலியும் சம்பளமும்
விநியோகச் செலவு
நிலைய நிர்வாகச் செலவு
வங்கிக்கடன் மீளச் செலுத்தியது
தேறிய காசு மீதி
ஆரம்ப காசு மீதி
இறுதிக் காசு மீதி
 

ருக்கு காசு செலுத்தும் தவணைக்
காலம் ஒரு மாதமாகும் )
1998-1.
1998-2
1999-01
1999-02
1999-03
3. மாதாந்தக்
岱300
6500
5000
7500
8000
கூலியும் சம்பளமும்
6650/-
மாதாந்த விநியோகச் செலவு 750/-
மாதாந்த நிலைய நிர்வாகச் செலவு
1400/-
4. பெப்ரவரி மாதம் மீளச் செலுத்திய
வங்கிக்கடன் 500/-
தங்களுக்கான காசுப் பாதீடு
ஜனவரி பெப்ரவரி மார்ச் மொத்.
垒500 4500 4500 置3500
10000 6500 4500 3000
14500 11000 19000 44500
2500 2500 2500 7,500
6500 5000 7500 19000
1650 1650 1650 玺950
750 750 750 2250
400 400 1400 4000
500 500
1700 (800) 5200 6700
2500 4200 3400 2500
4200 3400 8600 8600
S.

Page 100


Page 101
3. யாழி எஸ்கந்தாவின் வணிக
மகிழ்ச்சியுடன்
ཀྱིji །
119 கஸ்தூரியார் வீதி
சுகாதாரமுறைப்
ஸ்பெஷல் ஐஸ்கி சொக்லெட் ஐஸ் சொக்லெட் ஐஸ்க
நட்ஸ் ஐஸ்கிறீம் ஜெரி ஐஸ்கிறீம் மட்டன் றோல் மிக்ஸர் லட்டு sisäl85 . LLif
LINGAN C)
W, 119 Kas
 

~":
N
N
நாதம் என்றென்றும் வளம் பெற
வாழ்த்துகின்றோம்.
து ஜவுள்
யாழ்ப்பாணம்.
படி தயாரிக்கப்பட்ட
றிம் 6. கிறீம்.
பட்டர் கேக் வகைகள்
LᎠ6itᎩᏋᏏᎥ" . ஸ்பெஷல் பீடா
REAM HOUSE
thuriar Road
fna. 3.
ം ബ nം ബം - -- ജ്. - LSLS SqqS SqqSqS SqqSTSTSS S SSS
N

Page 102
வணிக நாதமே வருக
டிாணர் (ككيو ལྕ་
வணிக நாதம் புதுப்பொலிவுடன் மிளிர AA எமது வாழ்த்துக்கள் இ
No: I K.K.S. Road Chunnakam -
 
 
 

வாழ்த்துகின்றோம்
மின் உபகரணங்கள் சைக்கிள் உதிரிப் பாகங்கள் விற்பனை யாளரும் ஒப்பந்தகாரரும்
;, ' ' 40kK.SD Road, Chunnakam.
லர்ந்து வரும் வணிகநாதம் நீ நீடுழி ாழிய
லவகையான பழவகைகள் ற்பககருவின் பொருட்கள் மற்றும் ல்வேறு பொருள் விற்பனை செய்யுமிடம்
ல்ரேசன் றோட் சுன்னாகம்,

Page 103
வணிக நாதத்திற்கு தல்லாசிகள் பல
Articles are all Guarentee
and Genuine for Quality Jewels.
JEWE ԿՀes خالمعنيين
Gold and Jewel merchant
91. Dr. Suramaniam Road Chunnal
வாழ்க வளமுடன்
affe0)u Ju பொருட்கள் மூலிகைப்
பொருட்கள் மற்றும் பலபொருட்களும் விற்பனை செய்யப்படுமிடம்
isi
K.K.S. 622, சுண்ணாகம்

வாழ்த்துக்கள் பல
சகல விதமான சஞ்சிகைகள், கதைப் புத்தகங்கள் மற்றும் பலவித உலகளாவிய நூல்களும் பெறக்கூடிய ஒரே இடம்
ృు "క్కొ *
சுன்னாகம்
வணிகக் கல்வியை மேம்படுத்தும் வணிகநாதமே வருக! வருக!
ஆள்பாதி ஆடைபாதி என்பார்கள் அந்த ஆடை பாதியை அழகுபடுத்த சுன்னாகத்தில்
நவீன கட்டிங் அமைப்புடன் தைத்து பெற்றுக் கொள்ள நீங்கள் நாடவேண்டிய ஒரே
TION
எப்டேசன் றோட், கண்ண#கர்,

Page 104
வாழ்த்துக்கள் பல
நவீன 22 கரட் அழகிய தங்க ஆபரணங்களுக்கு சிறந்த ஸ்தாபனம்
in
25 K.K.S. Road, Chunnakam.
வணிகநாதம் வாழ்க வாழ்கவென்று வாழ்த்துகின்றோம்
& அழகுசாதனப் பொருட்கள் அன்பளிப்பு பொருட்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் 颅
அனைத்தையும் மலிவாக பெற்றுக் கொள்ளுங்கள்
K.K.S. Road Chunnakam K
கொம்பியூட்டர் பிரிண்ட் மற்றும் ரோணியே (பி.
 

for moder And Distinetive Articles are a II (Guaranteed and Gehuilac for Quality Jewels
Oum Sakthy
Jewellery
Gold and Jewel merchant
93, Dr.Subramaniam Road Chunnakam
பணிகநாதமே நீ வாழிய
உறுதியும் உத்தரவாதமும் உள்ள நங்க வைர நகைகள ைபெற்றுக் காள்ள சிறந்த ஸ்தாபனம் 22 கரட் நங்க நகைகள் ஒடருக்கு குறித் வணையில் செய்து கொடுக்கப்படும்
..K.S. Road Chunnaka,
ரவுண் நேசட் அண்மையில் நாவலர் ரேட், யாழ்
(

Page 105
FFFFFFFFFFFFFFFFF.
உங்களது நயம் நமயிக்கை நாணயமு ஸ்தாபனம்
தங்கப்பவுண் நகை வியாபாரம் தரம் நாடுவே குறித்த காலத்தில் செய்து கொடுக்கப்படும்.
பஸ்நிலையம் முன்பாக
Y00YYYYLLSS LLLLLL 0LLLS 0L0 0LY0LY 0LY0LY Y0S 00LL 0LL 0LL 0LL 0LL SLLL L LLLLL LL LLL LLLLS 00LL 0LLS L LLLLLS LLL LL LL LL0
வணிக நாதத்திற்கு எம் வாழ்த்துக்கள்
தரமான போட்டோ பிரதிகள் எடுக்கவும் லமினேற்றில் செய்து கொள்ளவும் மற்றும் பாடசாலை காரியாலயங்களுக்குரிய உபகரணங்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற நாடவேண்டிய இடம்
A COMPLE لبه
Photo Stat Service
76, K. K. Road Chunnakam
 

ாள் தவறாமல் நாடுமிடம் ஒடர் நகைகள்
சுன்னாகம்
&
s
"م
வணிகநாதம் மலர்ச்சி எங்களுக்கு மனமகிழ்ச்சி
LT6)h வகுப்பு முதல் பட்டதாரி வகுப்புக்களுக்கான பாடசாலை புத்தகங்
556 பெற்றுக் கொள்ள சிறந்த ஸ்தாபனம்
چا څلي . f. å
26 ஸ்டேசன் றோட் சுன்னாகம்
பத்திரிகை முகவர்கள் 家、e

Page 106
வணிக நாதமே உன் உதயம்
வணிகக்கல்விக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும்
சுவையின் சிகரம்
dagni
கே.கே.எஸ் வீதி, சுன்னாகம்,
Will Wishes for Vanikanaatham
ŠtiS||0ჭწ8
Dr. Subramaniam Road, Chunnakam

வணிகக் கலைக்கு வளமுட்டும் as நாதத்திற்கு நல்லாசிகள் விள்ை
பழைய புதிய திரைப்படங்கள்
கொள்ளக்கூடிய இடம்
鹭
கே.கே.எஸ் வீதி சுன்னாகம்
யாழ் மண்ணில் புகழ்பெறும் வணிக ಛಿ। புகழ் பாரெங்கும் பரவ வாழ்த் க்கள்.
சாதனப்பொருட்கள் பரிசுப்பொருட்கள்
யும் மலிவாகப் பெற்றுக் கொள்
28,LT digit gify D60 fullb 6 g5 (366. T35 D
కొత్యా "سهيوني
c

Page 107
్యుx^టిటిసిట్విట్సిట్విట్సిటి:
ܝܡܐ
* மனமுகந்த அன்பளிப்புச்
^ *J^ ^o^
‚ማ
1. மணியம் பல் பொ
`ܵ_
ஸ்ரேசள் வீதி, சுள்ளாக
2. பூரீமுருகன் ஸ்ரோ6
31 ID நவீன சந்தை,
3. கலா தேநீர் சாலை
K.K.S. Road Chunna
எமது வணிக நாத வெள
அளித்த அனைத்து
மனமார்ர்
2. *్స్క
**SXwGS:
****ՀՀՀՀ ܗ ܢ ܡ ، • ܝܢ -- ܗ ܗ ܗ ܟܗ *******::::::::*:*:*
 
 

ருள் வாணிபம்
dira:UTafüíld, A
kam.
ரியீட்டிற்காக விளம்பர உதவி அமைப்புக்களுக்கும் எமது த நன்றிகள்
லை வர்த்தக மாணவ மன்றம்

Page 108


Page 109


Page 110
SNAŇAVS ÅRS & A 3A/ER ja Six
 

ధ8888
কুঁ8ঞ্জ
PLAZA COMPLEX COLOMBO