கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆக்கம் 1988.07

Page 1
ைதுன்பத்தை விலக்கி உள்ளறிவை
e இலங்கையில் பங்குடமைச் சட்டத்தி
o sigd:05 Tib356T (Roots)
9 பிரமசமாஜம், ஆரியசமாஜம், பூநீராமகி
o இலங்கையின் இரண்டாம் குடியரசு ஜனதிபதியின் அதிகாரங்களும் கடன் O செய்முறைப் புவியியலில் புள்ளிவிப வரைபடங்களும் வரைபுகளும் - 2
స్త్ర
148, Gorgia
 
 

மலர் 1
இதழ் 5
සීඝ්‍ර මර්කා 1988
வளர்க்கும் நூலே வேதம்
ன் ஏற்பாடுகள்
ருஷ்ண இயக்கம் - ஒர் ஒப்புகோக்கு
அரசியல் அமைப்பின்கீழ் )LD565ub
த் தரவுகளுக்கான
ப்புகள் கல்லூரி
தி யாழ்ப்பாணம்
議エ

Page 2


Page 3
ஆக்கம்
g9&aు 1988 இதழ் 5
صح>صےـح ہسپہ سجے۔ یہ
ஆசிரியர் :
திரு. வே. சிவயோகலிங்கம், B. A. (Hons.)
முகாமை இயக்குனர் :
திரு. இரா. சத்தீஸ்வரன்
பிரசாரப்பகுதி :
திரு. பொ. அமிர்தலிங்கம் செல்வி நா. குமுதினி 萝警 க. மாலினி
8 ற ந. மங்கையர்க்கரசி
இந்த இதழில் ஆக்கங்களை வழங்கியோர் :
திரு. வை. நந்தகுமார், M. A.
, ஆ. க. ஆனந்தநாதன், M. A.
, பொன், பூலோகசிங்கம்,
B. Dev. S. (Hens.)
sraio. SausốSaša 35J TraFFT, M. A. கலாநிதி நா. சுப்பிரமணியன்
, S. T. B. இராஜேஸ்வரன், M. A. செல்வி T. சோபியவதனி
எமது மூலத் நாம் எ சேவை
என்ன
அதற்க நான் 6
அதை அ ஆனல்
கொண் கல்வி வர்கள் யும் உன் நாம் ஆ
இருந்து
LOff 60IS) செய்ய
அவற்ை

எண்ணம்
豪
து எமது ஐந்தாவது வெளியீடு. இவ் விதழுடன் கல்லூரியின் 11ஆவது வெளியீடான அரசியல் தத்துவங்கள் என்ற நூலும் வெளிவருகின்றது. ாமது இளஞ் சந்ததியினருக்கு ஆற்றி வரும் களைச் சொல்லிக்கொண்டிருக்காமல் இன்னும்
சேவைகளை ஆற்றலாம் என்று ஆராய்ந்து ான வழியில் செயற்படுவதே அர்த்தமுள்ளதென எண்ணுகின்றேன். கட்டிடங்கள் அழியலாம், உருப்படுத்திய மனிதர்களும் அழிந்து போகலாம்,
கருத்துக்கள் அழிவதில்லை. அவை வளர்ந்து டே போகும். எமது மாணவ சமுதாயத்தின் வளர்ச்சியில் ஈடுபாடும் அக்கறையும் உடைய
மாணவர்களின் தேவையையும் பிரச்சினைகளை னர்ந்து அதற்குப் பரிகாரம் தேட முற்பட்டால் அதனை மனப்பூர்வமாக வரவேற்போம். அதே பல துறைகளையும் சேர்ந்த ஆசிரியர்களிடம் கிட்டுரைகளை எதிர்பார்க்கின்ருேம், தர வயாகவும் மாணவர்களின் தேவையை நிவிர்த்தி க் கூடியனவாகவும் இருந்தால் நிச்சயமாக நாம் றைப் பிரசுரிப்போம்.
- ஆசிரியர்

Page 4
அரசறிவியல் மாணவர்களுக்க
அரசியல்
ஆசிரியர் : அப்
G. C. E. All, G. A. Q., ஆகிய பாடநெறிகளுக்குரிய அடிப்
எமது ஏனைய வெளியீடு
SqSqSqqqSASqSqSqSSqqSqSqAASASqqSqSqSqSMSqSSqSqqqSqSqAAS
கேள்வியும் நிரம்பலும் கேள்வி நெகிழ்ச்சி நிரம்பல் பற்றிய த குறியீட்டு அளவையிய நடைமுறை விடயங்கள் விவரணப் புள்ளி விபரவி
கடலாடுகாதை, கானல்வரி,
(உரைக்குறிப்புடன்)

ான வெளியீடு
) மூலத் தத்துவங்கள்
விலை ரூ. 80/-
bபலவாணர் சிவராசா, M. A. (கனடா) rஷ்ட விரிவுரையாளர், சறிவியற்றுறை, ராதனைப் பல்கலைக் கழகம்.
B. A., FIRST-IN-LAWS படை விடயங்களே உள்ளடக்கியது.
痪
திகள்
விலை ரூ.18-00 நெகிழ்ச்சி த்துவங்கள் விலரு. 12-00
iù விலை ரூ. 11-50
விலை ரூ. 22-30
பல் விலே ரூ. 25-00
வாலிவதை விலே ரூ. 19-50
2 -

Page 5
சனத்தொகையும் அபிவிருத்தியும்
அபிவிருத்தி பற்றிய எண்ணக்கரு
பொருளாதார வளர்ச்சி என்பது தலா வருமானத்து டன் தொடர்பு படுத்தப்படும் அதேவேளை பொருளா தார அபிவிருத்தி எனும்போது, அது தலா வருமா னத்துடன் வேறும் பல குறிகாட்டிகளையும் அளவீடாகக் கருத்தில்கொண்டே கணிக்கப்படும். எனவே பொருளா தார அபிவிருத்தி எனும் சொல் பொருளாதார வளர்ச்சி யையும் உள்ளடக்கியதே ஆகும். மிர்டாலினது வார்த் தைகளில் கூறுவதானுல் 'சகல சமூக அமைப்புக்களி னதும் முன்னேற்றகரமான போக்கே " அபிவிருத்தி
யாகும். அதாவது உதாரணமாக வறுமை மட்டம் குறைவடையவும், வேலையில்லாப் பிரச்சினை அற்றுப் போகவும், போஷாக்கின்மை, சுகாதாரமின்மைகள்
ஒழியவும், கல்வியறிவின்மை அகலவும், சமமான வரு மான பங்கீடு உறுதிப்படுத்தப்படவும், போக்குவரத்து மற்றும் தொடர்பு சாதனங்களினது அபிவிருத்தியை ஏற்படுத்தல், நவீன தொழில் நுட்பங்களையும் கைத் தொழிலினது விருத்தியையும் வர்த்தக விருத்தியையும் ஏற்படுத்தல் போன்ற பல்வேறு அம்சங்களையும் உள் ளடக்கியதே பொருளாதார அபிவிருத்தியாகும். மேற் கூறிய குறிகாட்டிகளை ஒத்த குறிகாட்டிகள் யாவும் பொருளாதார அபிவிருத்தியை அளவிடப் பயன்படுத்தப் படும். இத்தகைய அபிவிருத்தி என்ற எண்ணக்கருவை இலகுவில் விளக்கவோ அல்லது விளங்கிக் கொள்ளு தலோ கடினமாகும்:
சனத்தொகை வளர்ச்சியும் பொருளாதார வளர்ச்சியும் :
உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வரலாற் றில் சனத்தொகை வளர்ச்சியானது பொருளாதார விருத்திக்கு உதவியுள்ளது என்பதற்கு சாதக பாதக கருத்துக்கள் உண்டு. பிரித்தானிய கைத்தொழில் புரட்சியைத் தொடர்ந்து பிரித்தானியாவில் ஏற்பட்ட துரித பொருளாதார வளர்ச்சியைப் பிரான்ஸினுல் அடைய முடியாமல் போனதிற்கு குறைவான சனத் தொகையும் ஒரு காரணியெனப் பொருளியலாளர்கள் விளக்கியுள்ளனர். சனத்தொகை எந்தளவுக்குப் பொரு ளாதார வளர்ச்சியை ஏற்படுத்த உதவும் என்பதற்குப் பொருளியலாளர்களிடையே கருத்து வேறுபாடு நிலவு வது தவிர்க்க முடியாததொரு விடயமாகும்.

வை. நந்தகுமார், M. A.
புவியியற்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்,
பேராதனை.
பொருளாதார வளர்ச்சிக்குச் சனத்தொகை வளர்ச் சியானது சாதகமானது என வாதிடுவோர் மனிதனை உற்பத்தி சாதனங்களில் ஒன்ருகக் கருதிக் கொள்கின் முர்கள். மானிட கூலி கைத்தொழிலாக்கத்துக்கு இன்றியமையாததாகக் காணப்பட்டதுடன் இது உற் பத்திச் செலவையும் குறைத்தது. அடுத்து சனத் தொகை கூடிய நாடுகளில் உள்நாட்டுச் சந்தையில் பொருள்களுக்குப் போதியளவு கேள்வியிருப்பதஞல் கைத்தொழில்துறையில் முதலீடு செய்வதற்கான ஊக்கம் அதிகமாகக் காணப்படும். மேலும், பயன்படுத்தப் படாத வளங்களைப் பயன்படுத்துவதற்கான நடவடிக் கைகளை மேற்கொள்ளச் சனத்தொகை வளர்ச்சி உதவுவ துடன் புதிய கண்டுபிடிப்புகளும் ஏற்பட வாய்ப்புக் கள் உருவாக உதவுவதனுல் பொருளாதார வளர்ச்சி சாத்தியமாகும் என இவர்கள் கூறுகின்றனர்.
சனத்தொகை வளர்ச்சியானது பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் என்பதற்கு அபிவிருத்தி யடைந்து வரும் நாடுகளின் பிரச்சினையே நல்ல உதா ரணமாகும். இந் நாடுகளில் மிகையான சனத்தொகை யால் மனிதன் என்ற உற்பத்திக் காரணி மிகையாகக் காணப்படுகின்றது. இது வேலையின்மை, குறைந்த தலா வருமானம், குறைந்த சேமிப்பு என்பவற்றுக்கு வழிவகுப்பதுடன் இவற்றின் விளைவாக தங்கிவாழ் வோர் தொகையும் கூடுதலாகத் காணப்படுகின்றது. உள்நாட்டுச் சந்தையின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இறக்குமதி செய்யும் பொருட்களி னளவு அதிகரிக்கும். இதனுல் அரசாங்க மீள் உற்பத்திக் குரிய முதலீடு கட்டுப்படுத்துவதுடன் அரசாங்கத்தின் சமூக சேவைகட்கான செலவும் பல மடங்குகளாக் அதி கரித்துச் செல்லும். இந்நிலையில் சனத்தொகை அதி கரிப்பினூடாக அத்தியாவசியப் பொருட்களான உணவு, உடை, மருந்து வகைகளை இறக்குமதி செய்வ தற்குப் பெருமளவு வெளிநாட்டுச் செலாவணியைச் செல விட வேண்டியிருப்பதனுல் பொருளாதார வளர்ச்சிக் கான மூலதனப் பொருட்களையும் முதலீட்டுப் பொருட் களையும் அதிகளவில் இறக்குமதி செய்ய முடியாமலிருக் கும். இதனுல் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மிகையான சனத்தொகையினல் தடைப்படுவதனை நோக்கலாம்.

Page 6
இலங்கையின் சனத்தொகை வளர்ச்சி :
இலங்கையின் சனத்தொகை மதிப்பீடு 1871இல் முதன் முதல் பெறப்பட்டது. இதற்கு முற்பட்ட காலங்களில் பல்வேறுபட்ட நிர்வாக காரணங்களுக் காகச் சில கணிப்பீடுகள் செய்யப்பட்டன. ஆனல் புராதன சனத்தொகைபற்றிய விபரத்தை வரலாற்றுச் சாசனங்கள், புராதன இதிகாசங்கள், பழைய கட்டடங் கள், கல்வெட்டுக்கள், குளங்களின் எண்ணிக்கை, மண்டபங்கள் என்பவற்றை ஆதாரமாக வைத்து அனுமானிக்க வேண்டியுள்ளது. 1871ஆம் ஆண்டில் இருந்து 1986ஆம் ஆண்டிற்கான சனத்தொகை வளர்ச்சியைப் பின்வருமாறு விளக்கலாம். 1871இல் 2.4 மில்லியனுகக் காணப்பட்ட சனத்தொகை 1986இல் மதிப்பிட்டபோது 16.1 மில்லியனுல் வளர்ச்சியடைந் துள்ளது. 115 வருடத்தில் 64 மடங்காக அதிகரித்துள் ளது. இவ் வளர்ச்சியின் போக்கில் பலதரப்பட்ட விட யங்கள் உள்ளடக்கப்படுவதனுல் இதனை மூன்று கால கட்டங்களாக நோக்கலாம். முதலாம் கட்டம் 1871இல் இருந்து 1946ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலப் பகுதியை உள்ளடக்கியது. அடுத்தது இப்பகுதியில் சனத்தொகை வளர்ச்சியில் குடிவரவிலான தாக்கமே இயற்கையான அதிகரிப்பிலும் கூடிக் காணப்படுகிறது. அடுத்தது 1946இலிருந்து 1971ஆம் ஆண்டுவரையான பகுதி, இக் காலப்பகுதிகளில் தென் இந்தியத் தொழி லாளரின் வருகை தடைப்பட்டதுடன், இயற்கை அதி கரிப்பினுலான துரித சனத்தொகை வளர்ச்சி காணப்படு கிறது. மூன்ருவது காலமான 1971ஆம் ஆண்டிற்குப் பிற்பட்ட பகுதி குடிப்பெயர்ச்சியில் எதிர்கணியமும் இயற்கை அதிகரிப்பு வீழ்ச்சி யடைந்ததுமான மந்தகர மான சனத்தொகை வளர்ச்சியை உள்ளடக்கியதாக வுள்ளது.
1871ஆம் ஆண்டு இலங்கையின் சனத்தொகை 2.4 மில்லியனுகக் காணப்பட்டது. 1946ஆம் ஆண்டின் சனத்தொகை 6.7 மில்லியனுக அதிகரித்துள்ளது. இந்த 55 வருடங்களில் 4.3 மில்லியன் அதிகரிப்பு ஏற் பட்டுள்ளது. ஒரு நாட்டின் சனத்தொகை அதிகரிப்பு இயற்கையான அதிகரிப்பு, குடிப்பெயர்விலான அதி கரிப்பு என இரு வழிகளில் ஏற்படலாம். இயற்கை அதிகரிப்பு என்பது ஆண்டிற்கான மொத்த பிறப்புக் களிலிருந்து மொத்த இறப்புக்களின் எண்ணிக்கையைக் கழித்துப் பெறப்படுவதாகும். இக்காலங்களில் இலங்கை யில் இவ்விரண்டு அம்சங்களும் பொதுவாக உயர் வாகவே காணப்பட்டன. குடிப்பெயர்வு ஒரு நாட்டிற்கு குறித்த ஆண்டில் இடம்பெயர்ந்து வருகை தருவோரி னதும் இடம்பெயர்ந்து செல்வோரையும் பொறுத்து நேர்கணியமாகவோ எதிர்கணியமாகவோ அமைவுறும். 1971 - 1946ஆம் ஆண்டுகளில் இலங்கையில் அதிகமான தென்னிந்தியத் தொழிலாளர்கள் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையின் பொருட்டு வருகை தந்தமையால் இக்காலப் பகுதிகளில் சனத்தொகை வளர்ச்சியில் குடி வரவிலான அதிகரிப்பு கூடிக் காணப்படுகின்றது.
- 4

1871 - 1881ஆம் ஆண்டுகளில் கோப்பித் தோட்டங் களின் செழிப்பான விருத்தியினுல் தோட்டங்களில் அநேக தொழிலாளர் வரவழைக்கப்பட்டனர். இதனுல் இக்காலப் பகுதியின் சனத்தொகை அதிகரிப்பில் 66.7 வீதம் குடிவரவிலான அதிகரிப்பாகக் காணப்படுகின் றது. மீண்டும் 1891 - 1901ஆம் ஆண்டுகளில் தேயிலைத் தோட்டங்களின் அபிவிருத்திக்காக மேலும் பலர் வர வழைக்கப்பட்டதனுல் இக்காலப் பகுதிகளிலும் குடி வரவிலான அதிகரிப்பு 59.7 வீதம் காணப்படுகின்றது. 1921ஆம் ஆண்டிற்குப் பிற்பட்ட காலத்தில் தொழி லாளர் வருகை மட்டுப்படுத்தப்பட்டு பின்னர் 1939ஆம் ஆண்டிலிருந்து இலங்கைக்குக் குடியேறும் இந்திய தொழிலாளரினளவு அரசாங்கத்தினுல் சட்டமூலம் கட்டுப்படுத்தப்பட்டது. இதனுல் 1946ஆம் ஆண்டின் பின் சனத்தொகை அதிகரிப்பில் இயற்கையான அதி கரிப்பில் இயற்கையான அதிகரிப்பின் செல்வாக்கு முக்கியம் பெறுகின்றது. 1946ஆம் ஆண்டிற்கான குடி யதிகரிப்பில் 95 வீதமும் இயற்கையான அதிகரிப்பாகவே காணப்படுகின்றது.
1946ஆம் ஆண்டிலிருந்து 1971ஆம் ஆண்டு காலப் பகுதியினது சனத்தொகை வளர்ச்சி துரிதமாகக் காணப்படுகின்றது. இக் கா லத் தி ன து சனத் தொகை வளர்ச்சிக்கு இயற்கையான அதிகரிப்பே பொறுப்பாயமைகிறது. 1946ஆம் ஆண் டு வ  ைர பிறப்பு விகிதமும் இறப்பு விகித மு ம் உயர்வாகவே காணப்பட்டது. 1946க்குப் பிற்பட்ட காலப்பகுதியில் பிறப்பு விகிதம் உயர்வாக இருந்த போதிலும் இறப்பு வீதம் வீழ்ச்சியுற்றுச் சென்றது. 1946ஆம் ஆண்டில் 1000க்கு 23ஆக இருந்த இறப்பு விகிதம் 1963இல் 1000க்கு 10.4 ஆக வீழ்ச்சியடைந்து, மேலும் 1971இல் 100க்கு 6 ஆகவும், வீழ்ச்சியடைந்தது, இத்தகைய இறப்பு வீத வீழ்ச்சிக்கு மலேரியா தடுப்பு இயக்கம், நோய்களைத் தடுக்கும் மருந்து வகைகளையும், நவீன மருந்து முறைகளையும் கண்டுபிடித்தமை, மற்றும் உணவு மானியம், இலவசக் கல்வி முறை என்பன காரணங்களாக அமைகின்றன.
1960க்கு பின்னர் குடிவரவு சனத்தொகை வளர்ச் சியில் பங்கு கொள்ளவில்லை. மாருக 1964இல் கைச் சாத்திட்ட சிறீமா - சாஸ்திரி உடன்படிக்கையின் படி வருடம் 35,000 இந்தியத தொழிலாளர்களைத் திருப்பி அனுப்புவதற்கு வழி செய்யப்பட்டது. எனினும் 1971 லிருந்தே இந்தியாவுக்கு இந்திய தொழிலாளரை அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
1971இன் பின்னர் பிறப்பு விகிதத்திலும் வீழ்ச்சி ஏற்பட்டது. 1963 - 1971ஆம் ஆண்டுகளில் ஆயிரத் துக்கு 32.7 விகிதமாகக் காணப்பட்ட பிறப்பு விகிதம் 1971 - 1981 காலப்பகுதிகளில் 1000க்கு 28 ஆகவும் 1981 - 1986 பகுதிகளில் 1000க்கு 22.3 ஆகவும் வீழ்ச்சி யடைந்து சென்றது. இத்தகைய பிறப்பு விகித வீழ்ச் சிக்கு 1953இல் ஆரம்பிக்கப்பட்ட குடும்பக் கட்டுப்

Page 7
பாட்டு முறைகள் மட்டுமன்றி பெண்கள் வயது சென்ற பின்னரே விவாகம் செய்யத் தலைப்பட்டமை, விவாகம் புரிந்தோர் குறைந்த பிள்ளைகளையே விரும்புதல், பெண் களின் சமூக அந்தஸ்து உயர்ந்தமை, பெண்களுக்கான கல்வி வாய்ப்புகள், வேலே வாய்ப்புக்கள் அதிகரித்தமை போன்றன காரணிகளாக அமைகின்றன.
1898ஆம் ஆண்டில் 21 வயதுக்கு உட்பட்ட பெண் களில் 75.9 சத வீதத்தினரும் ஆண்களில் 6.6 சத வீதத் தினரும் திருமணம் செய்தவர்களாகக் காணப்பட்ட னர். 1951இல் 21 வயதுக்குட்பட்ட பெண்களில் 32 சத வீதத்தினரும் ஆண்களில் 0.6 வீதத் தின ருமே திருமணம் செய்தவர்களாயிருந்தனர். எனவே பிந்திய திருமண வயது சனத்தொகை வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தியதை ந்ன்கு நோக்க முடிகிறது. 1901ஆண்டு களில் திருமண சராசரி வயது 24.6 ஆகவும் பெண்க ளது 18.3 ஆகவுமிருந்து 1953இல் ஆண்களின் சராசரி திருமண வயது 27 ஆகவும் 1981இல் 28 ஆகவும் உயர்ந்து சென்றது. இதே போன்று பெண்களின் சராசரி திருமண வயது 1956இல் 20.9இல் இருந்து 1981இல் 23.8 ஆக உயர்ந்து உள்ளது. இத்திருமண வயது உயர்ந்த மைக்கு ஆண்களைப் பொறுத்தவரையில் வேலையில்லாப் பிரச்சினை முக்கிய காரணியாக அமைய, பெண்களின் திருமண வயது அதிகரிப்பிற்குப் பெண்கள் உயர்கல்வி கற்க முற்பட்டமை, வேலைவாய்ப்புக்களைப் பெற்றமை என்பன காரணிகளாக உள்ளன. இதனுல் 1971ஆம் ஆண்டின் பிற்பட்ட காலத்தில் இலங்கையின் சனத் தொகை வளர்ச்சி குறைந்த வேகத்தில் செல்வதை நோக்க முடிகிறது.
1977ஆம் ஆண்டிலிருந்து வேலைவாய்ப்புக் காரண மாகப் பலர் மேற்காசிய நாடுகளுக்குச் சென்றுள்ளனர். மேலும் 1983இல் கலவரத்தின் பின்னர் தமிழர்கள் பலர் வெளிநாடுகளுக்குப் பெயர்ந்து சென்றுள்ளமை யால் சனத்தொகை வளர்ச்சி குறைவான விகிதத்தில் காணலாம். இக்காலங்களில் சனத்தொகை வளர்ச்சி யில் குடியேற்றத்திலான எதிர்க்கணிய தன்மை காணப் படுகிறது. எனினும் 1986இலிருந்து வேலைவாய்ப்பின் பொருட்டு வெளிநாடுகளுக்குச் செல்வோர் தொகை குறைந்து வருகிறது. இவர்களுக்கு வெளிநாட்டில் வழங்கப்பட்ட வசதிகள் அ தி ரு ப் தி, மேற்கு நாடு களில் வேலை வாய் ப் புக் குறைந்தமை என்பன வற்றல் பலர் இலங்கைக்கு வர ஆரம்பித்துள்ளனர். எனவே இக்காலங்களில் சனத்தொகை வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளமை ஒரு தற்காலிக நிகழ்ச்சியாகவே கொள்ள வேண்டியுள்ளது. மீண்டும் இவர்கள் நாட்டிற்கு வரும் போது சனத்தொகை வளர்ச்சியை ஏற்படுத்தும் என்பதால் சனத்தொகை வளர்ச்சி வீதம் 1.6 ஆகக் குறைந்துள்ளதென்பதை நிரந்தரமாக ஏற்க முடியாது உள்ளது.
2 - 5

சனத்தொகை வளர்ச்சி விகிதம் மாவட்டங்களுக் கிடையில் வேறுபட்டுக் காணப்படுகிறது. 197 - 1981ஆம் ஆண்டுகளுக்கிடையிலான சனத்தொகை வளர்ச்சி விகிதம் முல்லைத்தீவு, பொலன்னறுவை, வவுனியா, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் 6 லிருந்து 4.4 விகிதம் வரையினதாகக் காணப்பட மாத்தறை, கேகாலை, பதுளை, கண்டி மாவட்டங்களின் வளர்ச்சி விகிதம் ஒன்றிலும் குறைந்து காணப்படுகிறது. நுவரெலிய மாவட்டத்தின் சனத்தொகை வளர்ச்சி விகிதம் - 4 ஆகக் காணப்படுகிறது. இவ் எதிர்கணி யப் போக்கு தென் இந்தியத் தொழிலாளரின் இடம் பெயர்வினுலானதாகும்.
இலங்கையின் சனத்தொகையின் பரம்பல் :
இலங்கையின் சனத்தொகைப் பரம்பல் சமனற்றுப் பரம்பியுள்ளது. இச் சமனற்ற பரம்பலுக்கு புவியியல், பொருளாதார, வரலாற்று, சமூகவியல் காரணிகள் காரணங்களாகும். காலநிலையியலாளர்கள் இலங்கையை 1900 மில்லி மீற்றர் (75 அங்குலம்) மழை வீழ்ச்சிக் கோட்டு அடிப்படையில் ஈரவலயம், வரண்ட வலயம் என இரு பகுதிகளாகப் பாகுபடுத்தியுள்ளனர். 1871ஆம் ஆண்டின் சனத்தொகை மதிப்பீட்டின் போது மொத்த சனத்தொகையின் 58.4 சதவீதத்தினர் ஈரவல யத்தில் காணப்படுகின்றனர். 1971ஆம் ஆண்டிலும் மொத்த சனத்தொகையில் 60.5 சதவீதம் இப்பகுதி யிலேயே காணப்படுகின்றனர். வரண்ட வலயத்தில் 1871ஆம் ஆண்டு மொத்த சனத்தொகையின் 41.6 வீதம் வரண்டவலயத்தில் காணப்பட்டனர். 1971ஆம் ஆண்டு இதனளவு 39.5 சத வீதமாக அமைந்து காணப்படுகிறது. சுதந்திரத்திற்குப் பிற்பட்ட காலங் களில் வரண்டவலய அபிவிருத்தியின் பொருட்டு பாரிய பல திட்டங்களை மேற்கொண்ட போதும் இப் பரம் பல்களில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. அண்மைய ஆண்டுகளில் குடியேற்றத் திட்டங்கள், கிராமிய அபி விருத்தித் திட்டங்கள், துரித மகாவலி அபிவிருத்தித் திட்டம் போன்ற பாரிய திட்டங்கள் மூலம் இப்பகுதி யின் விருத்தியில் கவனம் எடுக்கப்படுகிறது. இதனுல் இப்பகுதிகளை நோக்கிய சனத்தொகை ୧୭ ଡଃ ଏfଇy அண்மைய ஆண்டுகளில் அதிகரித்து ଈll(s), ଭାଦ୍ଦ), & நோக்கலாம்.
இலங்கையின் சனத்தொகை 1981ஆம் ஆண்டிற் கான சனத்தொகை மதிப்பீட்டின்படி 1 கோடியே 48 இலட்சத்து 50 ஆயிரமாகக் காணப்படுகிறது. இதன் பரம்பல் மாவட்டங்களுக்கிடையில் பெரிதும் வேறு பட்டுக் காணப்படுகிறது. மொத்த நிலப்பரப்பின் 5.7 சதவீதத்தை உள்ளடக்கிய கொழும்பு, கம்பஹா, களுத் துறை ஆகிய மாவட்டங்களில் மொத்த சனததொகை யின் 26.4 வீதமானவர்கள் பரவிக் காணப்படுகின்றனர்.
அதி உயர்வான சனத்தொகைப் பரம்பலை உள்ள டக்கிய மாவட்டமாக கொழும்பு காணப்படுகிறது.

Page 8
இம்மாவட்டத்தின் சனப்பரம்பல் 15 இலட்சத்திற்கும் மேற்பட்டதாகக் காணப்படுகிறது. கண்டி, குருநாகல், கம்பஹா மாவட்டங்கள் முறையே 10 இலட்சத்தி லிருந்து 15 இலட்சம் வரையான சனத்தொகைப் பரம்பலையும் வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் முறையே ஒரு இலட்சத்திலும் குறைவான சனத் தொகையையும் கொண்டுள்ளன. சனத்தொகைப் பரம் பல் மாகாணங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள மாவட் டங்களிடையே பாரிய வேறுபாடுடையதாகக் காணப் படுகிறது, மேல்மாகாணத்திலுள்ள கொழும்பு மாவட் சனத்தொகை களுத்துறை மாவட்டத்தை معه في ட இருமடங்குடையதாயுள்ளது. வடமாகாணத்தி லுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தின் சனத்தொகை, மன்னர், வவுனியா, மு ல் லை த் தீவு மாவட்டங்கள் ஒவ்வொன்றினதும் சனத்தொகையின் எட்டு மடங்கு அதிகமானதாகக் காணப்படுகிறது.
இலங்கையின் சனத்தொகையின் அடர்த்தி:
சனத்தொகை அடர்த்தி என்பது மொத்த சனத் தொகையை மொத்த நிலப்பரப்பால் வகுக்கும்போது பெறப்படுவதாகும். நிலப்பரப்பு மாருத காரணியாக இருக்க சனத்தொகை அதிகரித்துச் செல்லுதல், சனத் தொகை அடர்த்தியில் அதிகரிப்பை ஏற்படுத்துவதாக அமைகிறது, 1871ஆம் ஆண்டு சதுர கிலோ மீற்ற ருக்கு 37 மக்களாகக் காணப்பட்ட அடர்த்தியின் அளவு 1981ஆம் ஆண்டில் 230 மக்களால் அதிகரித்துள்ளது.
இவ் 110 ஆண்டுகளில் . 1871 ஒருவருக் கெனக் காணப்பட்ட நிலப்பரப்பு 1981இல் 6.2 மக்க ளுக்கெனப் பகிரப்படுகிறது. இத்தகைய அதிகரிப்பா னது நிலத்தின் உற்பத்தித்திறனின் உற்பத்திச்செறிவை ஏற்படுத்தவேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. இது இலங்கைபோன்ற வளர்ச்சி அடைந்துவரும் நாடு களுக்கு எளிதான காரியமல்ல,
இலங்கையின் சனத்தொகை அடர்த்தி மாவட் டங்களுக்கிடையில் பரந் தள வில் வேறுபடுகிறது. கொழும்பின் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 1000-3000 மக்களைக் கொண்டிருக்கின்றது. கம்பஹா, இளுத்துறை, கண்டி, மாத்தறை மாவட்டங் கள் சதுர கிலோ மீற்றருக்கு 500-1000வரையான மக் கள் தொகையைக் கொண்டுள்ளன, மன்னுர், வவுனியா, முல்லைத்தீவு, அம்பாறை, திருகோணமலை, அநுராத புரம், பொல்லநறுவை, மொனருகலை ஆகிய மாவட் டங்களில் ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 100 மக்களுக் கும் குறைவாகவே காணப்படுகின்றனர்.
இலங்கையின் சனத்தொகை அமைப்பு
சனத்தொகை அமைப்பு, என்பது சனத்தொகை மதிப்பீட்டுப் புள்ளிவிபரங்களில் இருந்து பெறும் விபரங்களே அடிப்படையாகக்கொண்ட வயதமைப்பு, பால்விகித வேறுபாடு, பிறப்பு, இறப்பு, குடும்ப நிலைமைகள், விவாக நிலைமைகள், தேசீயம் போன்ற

வற்றை உள்ளடக்கியதாகும். சனத்தொகை அமைப் பானது நாட்டிற்கு நாடு, பிரதேசத்திற்குப் பிரதேசம், கிராமம் நகரம் என்ற அடிப்படையிலும் சமூகங்களுக் கிடையிலுமாக வேறுபட்டுக் காணப்படும். இத்தகைய அம்சங்களை உள்ளடக்கிய சனத்தொகை அமைப்பா னது நாடுகளின் சமூக பொருளாதார அரசியல் நிலைமை களிலும் அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் அதிகளவு பங்கினை வகிப்பதாகவுள்ளது.
வயது:
இலங்கையின் சனத்தொகை அமைப்பில் 15 வய திற் குட்பட்ட இளம் வயதினரின் தொகை 36 முதல் 40 சதவீதமாகக் காணப்படுகிறது. இவ்வயதுப் பிரிவி னர் சனத்தொகை அதிகரிப்பிற்கோ பொருளாதார வளர்ச்சிக்கோ பெரிதும் பயன்படாதவர்களாகவும் , பிறரில் தங்கி வாழ்பவர்களாகவும் காணப்படுகின்ற னர். இதே போன்று 60 வயதுக்கு மேற்பட்ட பிரிவி னரும் உழைப்புச் சக்திக்குட்படாதவர்களாவர். இத னளவு, இலங்கையின் மொத்த சனத்தொகையில் 1.2 சதவீதம் முதல் 6.6 சதவீதமாகக் காணப்படுகின்றது. அபிவிருத்தியடைந்த நாடுகளில் 15 வயதிற்கு மேற் பட்டவர்களின் தொகை 25 சதவீதமாகவே உள்ளது. ஒப்பீட்டளவில் இலங்கையின் சனத்தொகையில் தங்கி வாழ்பவர்களின் தொகை அதிகமாகக் காணப்படுகின் றது. இப்பிரிவினர் தேசீய உற்பத்தியில் எவ்வித பங்களிப்பையும் வழங்காது நுகர்வினை மட்டும் மேற் கொள்பவர்களாகவும், பெரும்பாலானவர் பாடசாலை செல்பவர்களாகவும் இருப்பதனுல் அரசாங்க சமூக சேவைச் செலவுகள் அதிகரிப்பதுடன் சுகாதார மற்றும் மருத்துவ சேவைகளுக்கான செலவினத்திலும் அதிக ரிப்பை ஏற்படுத்தும். இதனுல் அரசாங்கத்தின் நேரடி உற்பத்தி காரணிகளின் முதலீடுகளுக்கான செலவீட் டில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
15 வயதிலிருந்து 55 அல்லது 60 வயதிற்கு இடைப் பட்ட வேலைசெய்யும் வயதிலான சனத்தொகையில் இருந்து மாணவர்கள், குடும்பத்தலைவிகளாக விளங் கும் பெண்கள், வேலைசெய்ய விருப்பமற்று இருக்கும் ஆண்கள், உடல்ரீதியான உளரீதியான குறைபாடுக ளுடையோர் போன்ருேரை நீக்கிப் பெறப்படும் தொகை யினரே தொழிற்படையினர் எனப்படும். அதாவது வேலைசெய்வோர், வேலைசெய்ய விருப்பமிருந்தும் வேலை அற்றிருப்போரையும் உள்ளடக்கியதே தொழிற்படை யினராகும், 1978ஆம் ஆண்டு கணிப்பீட்டின்படி 15 மில்லியன் பேர் வேலையற்றவர்களாகக் காணப்பட்ட னர். இவர்கள் இலங்கையின் சனத்தொகையில் அண் ணளவாக 10 வீதமானவர், வேலையற்றவர்களில் 60 சத வீதத்தினர் 15 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாகவும் காணப்படுகின்றனர். இவ்வயதினர் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்பாடற்றவர்களாக இருப்பது நாட் டின் அபிவிருத்திக்குக் குந்தகமாக இருப்பதுடன், நாட் டின் அமைதியற்ற சூழ்நிலையை ஏற்படுத்தவும் வழிவகுக்கும்.
6 -

Page 9
6.
இலங்கையின் சனத்தொகையில் பெண்களிலும் பார்க்க ஆண்களின் எண்ணிக்கை கூடியே காணப் படுகின்றது. ஒவ்வொரு 100 பெண்களுக்கும் 104 ஆண் கள் என்ற முறையில் அமைந்து காணப்படுகின்றது. இத்தகைய வேறுபாடு மாவட்டங்களுக்கு இடையில் வேறுபட்டும் காணப்படுகின்றது. எனினும் பொல னறுவை, மன்னுர், முல்லைத்தீவு மாவட்டங்களில் 100 பெண்களுக்கான ஆண்களின் அளவு 130 முதல் 115 வரை காணப்படுகின்றது. மாருக காலி, யாழ்ப்பாணம், கண்டி மாவட்டங்களில் 100 பெண்களுக்கு 94-99வரை ஆண்கள் காணப்படுகின்றனர். இத்தகைய வேறுபா டானது ஆண்கள் வேலையின் நிமித்தம் வெளிமாவட் டங்களுக்கு இடம்பெயர்ந்தமையிஞலேயே ஏற்பட்ட தாகும். இந்நிலைமையானது சமூகத்தில் பாரிய தாக் கத்தை ஏற்படுத்தமாட்டாது.
இன மதம் :
சனத்தொகைபற்றிய அரசாங்கத்தின் கொள்கை களில் குடும்பக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில், சனத் தொகைப் பரம்பல் விகிதத்தில் இவற்றின் செல்வாக்கு அதிகளவில் காணப்படும். இலங்கையின் சனத்தொகை யில் 74 வீதம் சிங்களவர், 12.6 வீதம் இலங்கைத் தமிழர், 5.5 வீதம் இந்தியத் தமிழர், 7 வீதம் முஸ்லீம் தள், மற்றும் சிறிதளவு பறங்கியர், மலாயர் காணப் படுகின்றனர். சமய அடிப்படையில் 69.3 வீதம் பெளத் தர்கள், 15.5 வீதம் இந்துக்கள், 7.6 வீதம் இஸ்லாமி யர்கள், 7.5 வீதம் கிறிஸ்தவர்களாகக் காணப்படுகின் றனர். இலங்கையின் சனத்தொகையில் இத்தகைய பல்லின மத மக்கள் காணப் படுவதணு ல் அவர்க ளின் ஒவ்வொரு பிரிவினரும் தத்தமது கலாச்சாரம், தனித்துவங்களைப் பேண முற்படுதல் தேசீய ரீதியான அபிவிருத்தியின் போக்கிற்குத் தடையாகிறது.
இறப்பு பிறப்பு விகிதமும், சிசு மரணமும் :
இலங்கையின் சனத்தொகையில் 1945ஆம் ஆண்டு வரை பிறப்பு விகிதமும் இறப்பு விகிதமும் உயர்வா கக் காணப்பட்டது. இன்று இவ்விரண்டு நடவடிக் கைகளும் குறைந்து காணப்படுகின்றன. 1945ஆம் ஆண் டில் 1000 பேருக்கு 36.6 விகிதமாக இருந்த பிறப்பு 1986இல் 23.2 விகிதமாகவும், 1945இல் 1000 பேருக்கு 21.9 விகிதமாக இருந்த பிறப்பு விகிதம் 1986இல் இது 6 பேரால் வீழ்ச்சியடைந்துள்ளது. சிசு மரணம் 1945இல் 1000 பேருக்கு 140ஆக இருந்து 1981இல் 29.5ஆக

வீழ்ச்சி அடைந்துள்ளது. இத்தகைய புள்ளிவிபரங்கள் நாட்டின் சுகாதார மருத்துவத்துறையின் மேம்பாட்டை உணர்த்துவதாக உள்ளது.
ஆயுட்காலம்:
இலங்கையின் மக்கள் பிறப்பில் எதிர்பார்க்கும் சராசரி ஆயுட்காலம் 65.7 ஆண்டுகளாகும். 19201922ஆம் ஆண்டுகளில் இதன் அளவு 31.5 ஆண்டுகளாகக் காணப்பட்டது. இலங்கையின் சராசரி ஆயுட்கால அளவு அபிவிருத்திஅடைந்துவரும் நாடுகளுடன் ஒப்பி டும்போது மிக உயர்வாகக் காணப்படுகின்றது.
எழுத்தறிவு:
1953ஆம் ஆண்டின் இலங்கையின் மொத்த சனத் தொகையில் 65 சதவீதமானேரி எழுத்தறிவுடையோ ராகக் காணப்பட்டனர். இதன் அளவு 1971இல் 78.5 வீதமாகவும் 1981இல் 86.5 வீதமாகவும் அதிகரித் துள்ளது. இப்போக்கானது அபிவிருத்தியடைந்த நாடு களுடன் ஒத்ததாக உள்ளது. எழுத்தறிவு உடையவர் களின் தொகை நகர கிராமிய ரீதியில் சிறிதளவு வேறு பட்டுக் காணப்படுகின்றது. இலங்கையின் நகர்ப்புறங் களில் எழுத்தறிவுடையோர் தொகை 93.3 வீதமாக வும் கிராமப்புறங்களில் 8.5 வீதமாகவும் காணப்படு கின்றது. இத்தகைய வேறுபாட்டை மாவட்டங்களுக்கு இடையிலும் நோக்கலாம். கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா மாவட்டங்களில் எழுத்தறிவு கூடியோர் தொகை 93 வீதமாகக் காணப்பட மட்டக்களப்பு மாவட் டத்தில் இதன் அளவு 85 வீதமாகக் காணப்படுகின்றது. இலங்கையின் இலவசக் கல்வித்திட்டம், கட்டாயக் கல்வி என்பன இவ் உயர்நிலைக்குக் காரணமாக அமை கின்றன. புள்ளிவிபர அடிப்படையில் இலங்கையின் சனத்தொகையில் எழுத்தறிவுடையோர் தொகை உயர் வாகக் காணப்பட்டாலும் உயர்கல்வி, தொழில்நுட்பப் பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கை குறைந்தே காணப்படுகின்றது. நா ட் டி ன் அபிவிருத்தியைப் பொறுத்தமட்டில் எழுத்தறிவுடையோரின் எண்ணிக்கை கூடிக் காணப்படுவது இன்றியமையாததாகும்.
நகர கிராமிய சனத்தொகை :
இலங்கையின் மொத்த சனத்தொகையில் 77.6 சதவீதமானுேர் கிராமியப் பகுதிகளில் வாழ்கின்றனர். 1871ஆம் ஆண்டின் மொத்த சனத்தொகையில் 10.8 சதவீதம் நகர வாசிகளாகக் காணப்பட்டனர். 1971ஆம் ஆண்டில் இதன் அளவு 24.4 வீதமாக அதிகரித்துச்

Page 10
சென்ருலும் 1981ஆம் ஆண்டில் இதன் அளவு 21.5 சத வீதமான வீழ்ச்சியடைந்துள்ளது.
1971ஆம் ஆண் டி ன் பின்னர் கிராமியப்புறங் களில் விஸ்தரிக்கப்பட்ட சுய தொழில் வாய்ப்புத் திட் டங்கள், துரித மகாவலி அபிவிருத்தித்திட்டம், மற் றும் ஆற்று வடிநில அபிவிருத்தித்திட்டங்கள் போன்ற வற்ருல் கிராமங்களிலிருந்து நகரங்கள் நோக்கிக் குடிப் பெயர்வு குறைந்தது. மேலும் மேற்காசிய நாடுகளின் வேலைவாய்ப்புகளிஞலான இடப்பெயர்வு நகரக் குடித் தொகை வீழ்ச்சிக்குப் பிறிதொரு காரணமாகும். நகர மக்களின் எண்ணிக்கை மாவட்டங்களுக்கிடையிலும் வேறுபட்டுக் காணப்படுகின்றது. கொழும்பு மாவட் டத்தில் மொத்த சனத்தொகையின் 74.3 வீதத்தினர் நகரமக்களாவர். திருகோணமலை, யாழ்ப்பாணம், கம் பஹா, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் நகர மக்களின் அளவு 32 வீதத்திலிருந்து 22 வீதமாகக் காணப்படுகிறது. குருநாகல், மொனராகல மாவட் டங்களில் நகரவாசிகளின் அளவு 2.2 வீதத்திலிருந்து 3.6 வீதமாகக் குறைந்து காணப்படுகின்றது. இப் புள்ளி விபரங்களிலிருந்து இலங்கையின் நகரமக்களின் வளர்ச்சி வர்த்தக, துறைமுக மையங்களேயும், வரலாற்றடிப்படை யிலும் ஏற்பட்டுள்ளன என்பதையும் நோக்கலாம். மேலே சிறிய நகரங்களின் வளர்ச்சியானது மீன்பிடி நிலையங்களைத் தழுவிய நிலையில் வளர்ச்சியடைந்து காணப்படுகின்றது. இலங்கையின் நகர, கிராமிய மக் களின் பரம்பலின் தன்மையை நோக்குமிடத்து கிராமப் புறங்களின் விருத்தியிலேயே அபிவிருத்தி தங்கியுள்ளது என்பதை நோக்கமுடிகின்றது.
எதிர்கால நிலப்பாடு:
மேற்காட்டிய புள்ளி விபரங்களின் அடிப்படையில் நோக்குகையில் இலங்கையின் குடித்தொகை வளர்ச்சி

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்குச் சாதகமான தாக இல்லே, இவ்வருட ஐ. நா. அறிக்கையின்படி ஆசியாவின் சனத்தொகை 300 கோடியாகும். 1955ஆம் ஆண்டு ஐ. நா. அறிக்கையின்படி ஆசியாவின் குடித் தொகை 152.4 கோடியாக இருந்தது. இடைப்பட்ட இந்த 33 வருடத்தில் இத்தொகை இரட்டிப்படைந்துள் ளது. இலங்கையின் சனத்தொகை 1958இல் 8.1 மில்லிய கைக் காணப்பட்டது. இது 1986இல் 16.1 மில்லியனுக (33 வருடங்களில்) இருமடங்காக அதிகரித்துள்ளது. சனத்தொகை அதிகரிப்பு வேகம் பொருளாதார வளர்ச்சி வேகத்துடன் ஈடு கொடுப்பதாக இல்லை. இத்தகைய மிகையான குடித்தொகைப் பெருக்கம் பல பொருளா தாரச் சமூகப் பிரச்சினைகளுக்கு வழிவகுத்துவருகின்றது. குறிப்பாக வேலையில்லாப் பிரச்சினை, தகுதிக்குரிய வேலை யின்மை, தங்கி வாழ்பவரின் தொகை அதிகரிப்பு, வறுமை, சமமான வருமான பங்கீட்டின்மை, அரசாங்கத் தினது உள்நாட்டு வெளிநாட்டுக் கடன்சுமை, போஷாக் கின்மை, தரமான கல்வி வசதிகள் வழங்க முடியாமை, சுகாதார சீர்கேடு போன்ற 重_夺} பிரச்சினே களே விஸ்வரூபம் எடுக்கப் பண்ணுகிறது. இத் தகைய பிரச்சினேகள் அரசாங்கத்தினதும் தனியாரினதும் நிகழ்கால எதிர்கால முதலிடுகையைப் பாதிக்கின்றது. கைத்தொழில், வர்த்தகம், விவசாயம் போன்ற துறை களில் முதலீடு வீழ்ச்சியடைகையில் அது நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதத்தையும், பொருளாதார அபிவிருத்தி குறிகாட்டிகளையும் பாதிக்கின்றது. சனத் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தல் அல்லது முத லீடுகளை அதிகரித்து வளங்களைக் கூட்டுதல் சிறந்த அபி விருத்தி குறிகாட்டிகளைப் பெற வழிவகுக்கும்.

Page 11
துன்பத்தை விலக்கி உள்ளறி
இந்து சமயத்தை அனுஷ்டிக்கின்ற பல இனத்தினர் உலகில் இருக்கிருர்கள். எந்த இனத்தவராயினும் தத்தம் மொழியில் இந்து சமய சாத்திரங்கள் பலவற்றை வைத்திருக்கிருர்கள். இந்துசமய சாத்திரங்கள் எல்லா - வற்றிற்கும் அடிப்படையானவை வேதங்களேயாகும். இவ் வேதங்களெல்லாம் சமஸ்கிருத மொழியில் எழுதப் பட்டிருக்கின்றன. அவற்றை அடிப்படையாகக் கொண்டே சமஸ்கிருதத்திலும் மற்றும் பல மொழிக ளிலும் பல இந்துசமய சாத்திரங்கள் உண்டாயின. வேதம் என்ருல் அறிவு எனப் பொருள்படும். துன் பத்தை விலக்கி உள்ளறிவை வளர்க்கும் நூல் என்று வேதத்தைச் சொல்லலாம். வேதம்தான் உலகிலேயே பழைய நூல், இருக்கு, யசுர், சாமம், அதர்வனம் என வேதங்கள் நான்கு வகைப்படும். இந் நான்கு வகையான வேதங்களும் என்றும் அள்ள அள்ள வற்ருத அறிவுக் கடலைப்போல இருக்கின்றன. வேதங்கள் வெவ் வேறு காலத்தில் ஆக்கப்பட்டன, என்று அறிஞர்கள் கூறுகின்றர்கள்.
ஈசுவரனே வேதங்களை அருளிச் செய்தாரென்று இந்துக்கள் நம்புகிருர்கள். அது எப்படியானுலும் கடவுள் அருள்பெற்ற பெரிய முனிவர்களே வேதங்களைச் செய்திருக்கலாமென்று நாம் நம்பலாம். வேதங்களின் அடிப்படைத் தத்துவங்கள் மிக நுட்பமானவை. சாதாரண மனிதர்களால் வேதங்களை விளங்கிக் கொள் ளவோ அவற்றைக் கடைப்பிடிக்கவோ முடியாது. வெளியிலே நாம் காணும் தோற்றங்களும் கொண் டாட்டங்களும்தான் இந்துசமயம் என்று நினைப்பது தவறு, சாதாரண மனிதன் விளங்கிக் கொள்வதற்கும் அவனை வசப்படுத்துவதற்குமாகவே கொண்டாட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன.
இந்து சமயத்தின் தொடக்கம் தெரிந்துகொள்ள முடியாத ம  ைற பொருளாக உள்ளது. அதைப் பற்றி மிகுந்த கருத்து வேறுபாடு உள்ளது. இந்து
3. -9 --س

வை வளர்க்கும் நூலே வேதம்
se
ஆ. க. ஆனந்தநாதன், எம். ஏ. விரிவுரையாளர், மெய்யியற்றுறை,
பேராதனைப் பல்கலைக் கழகம்.
சமயத்தின் மிகப் பழைய உருவம் இயற்கை ஆற்றல் களின் வழிபாடாக அமைந்திருந்தது என்று வைத்துக் கொள்ளலாம். வெறும் விலங்குநிலை உணர்வினின்றும் மனிதன் முதலில் உயரும்போது தன்னைச் சூழ்ந்திருக் கும் வலிவுள்ள ஆற்றல்களின் மீது கிட்டத்தட்ட முழு வதுமே தான் சார்ந்திருப்பதை உணர்கிருன் தன்னு டைய சொந்த அநுபவத்தில் எல்லா ஆற்றல்களையும் தான் செய்யும் முயற்சியுடன் இணைக்கும் பழக்கத்தினுல் இவ்வாற்றல்கள் தமக்குப்பின் மறைவாக இருந்து இயக்கு விக்கும் புலணுணர்வுடைய உயிர் க ளி ஞ ல் ஏற்படு பவை எனக் கருதுகிருன், வேறுவகையாகச் சொன்னுல் பழங்கால மனிதன் இயற்கை ஆற்றல்களே உருவகப் படுத்துகிருன், பேராற்றல் காரணமாக அவை அவனு டைய கடவுளர்களாகி விடுகின்றன. இவ்வுண்மை இருக்கு வேதத்தில் பரக்கப் பேசப்படுவதை அவதானிக்
SSG), TLD .
வேதத்தின் புராணக்கதை பற்றிய விவரங்களைக் குறித்து இங்கே நீள எழுதாது தத்துவத் தொடர் புடைய தன்மைகளை மட்டுமே இங்கே குறிப்பிடலாம். முதலாவது எம் கவனத்தை ஈர்ப்பது, வியக்கத்தக்க வகையில் இயற்கைக்கு எவ்வளவு நெருங்கியவர்களாக வேதகாலக் கடவுளர் உளர் என்பதாகும். உதாரணமாக அக்கினி, பிரஜாபதி என்பவற்றிற்கு இயற்கையின் அடிப்படையாக இருப்பது எது என்பதைப் பற்றி ஐயம் சிறிதும் இல்லை. கடவுளராகவும் அதே சமயத்தில் இயற்கைப் பொருளாகவும் இருப்பவை தீ, முகில் ஆகியவை. அக்கினி, இந்திரன் போன்ற மற்றுக் கடவு ளரின் அடிப்படை தெளிவாக இல்லை என்பது உண்மை தான். கடவுளைப் பற்றிய வேதக் கருத்து முழு உருவக நிலையின்றி இருப்பதாக எண்ணும்படி செய்யக் கூடு மெனினும் உண்மையில் இது அதன் மேன்மையைச் சுட்டிக்காட்டுகிறது. அதாவது தத்துவக் கோட்பாட் டாய்விற்கு மிக உகந்த வேதகால ஆரியன் மனப்பான் மையைக் காட்டுகிறது, றுடோல்வ் ரோத் என்னும்
-

Page 12
மெய்யியலாளன் கூறியுள்ளதுபோல இந்தியாவில் குறிப் பிடத்தக்க முறையில் கவர்ச்சியாக உள்ள இயற்கையின் சிறப்பியல்புகள் இயற்கையிடம் இந்தியர் கொண்டுள்ள " மறவாத சார்பை ' விளக்கலாம். ஆணுல் இது குறைந்தது அதே அளவிற்கு இந்தியரின் தத்துவ மனப் பான்மை இாரணமாகவும் விளைந்திருக்கலாம்.
உண்மை யாதெனில், வேதகால இந்தியர் தங்கள் கருத்துக்களைத் தேவைக்கு மிஞ்சிய விரைவுடன் உருப் பெற விடவில்லை. கோட்பாட்டாய்வில் அவர்களது அக்கறை மிக ஆழ்ந்ததாகவும் பரம்பொருள் புதிராக இருப்பதைப் பற்றிய உணர்வு மிக நுட்பமானதாகவும் இருந்த படியால் ஏற்ற விடைகாணும் வரையில் தாம் புரிந்துகொள்ள முயன்ற இயற்கை நிகழ்ச்சிகளே மறைய விடாமல் வைத்திருந்தார்கள். இந்தச் சிறப்பியல்பு உண்மை காண்பதில் இருந்த ஆர்வத்தைக் காட்டுகிறது. இந்திய தத்துவ ஆராய்ச்சியின் ஆழத்தை மட்டுமன்றித் தத்துவச் சிக்கல்களுக்குத் தரப்பெற்ற விடைகள் பல திறப்பட்டனவாயிருப்பதையும் இது விளக்குகிறது.
இவ்வாறே தொடக்கநிலை இந்திய சமயத்தைப் பற்றிய குறிப்பிடத்தக்க சிறப்பியல்பு வேதகீதங்களில் தெளிவாக இடம் பெற்றுள்ள ' ரிதா' என்பதைப் பற்றிய கருத்தில் காணப்பெறுகிறது. பிரபஞ்ச ஒழுங்கு முறைமாருதது எனவும், மீற ஒண்ணுதது எனவும்: கருதப் பெறுகிறது. பி ர ப ஞ் ச ஒழுங்கினை 'ரித” என்று கூறுவர். இச்சொல்லின் நேரடியான பொருள் ' செல்நெறி " எ ன் ப த ரீ கு ம். ரித என்னும் இச் சொல் சமய ஒழுக்க ஒழுங்கு அமைப்பு களையும் தொடக்ககாலத்தில் உட்படுத்தியே கருதியி ருக்கவேண்டும். ஆதித்திய தெய்வங்களும் அவற்றின் தலைவனுகிய வருணனும் விரிவாகக் கருதப்பெறும் "ரித" என்னும் செல்நெறியின் ஆர்வம்மிகுந்த காப்புத் தெய் வங்களாக விளங்குகின்றனர். அத்தோடல்லாமல், இத் தெய்வங்கள் "ரித" என்பதினின்று தோன்றியவை அல் லது ‘ரிதத்தினுள் தோன்றியவை என்று கருதப்பெறு கின்றன. இவை "ரிதத்தால் நிலைபெறுவன, "ரிதத்தில்? வளர்வன, மனிதர்கள் தொல்லை அல்லது நோய் விளைக்கும் சிறு தெய்வங்களே நீக்கவும், அழிக்கவும், பகைவர்களே வென்று ஆற்றலைப் பெருக்கவும், நேரும் பிழைகளைப் பொறுக்கவும் "ரிதத்தை"க்காக்கவும் தெய் வங்களை வேண்டினர். இத் தெய்வங்களே அன்போடு தந்தை, தாய், உடன்பிறந்தவன், நணபன், உறவினர் ஆகிய சொற்களைக்கொண்டு அழைத்தனர். இச் சொற்கள் அன்பில் எழும் உறவினையும் வழிபடுவோன்

வழிபடப்பெறும் பொருள் ஆகிய இர ண் டி ற் கும் இடையே உள்ளார்ந்தநிலையில் விளங்கும் உறுதிப் பாட்டையும் குறிக்கும்.
வேதத்தில் "ரித' என்ற எண்ணக்கரு ஒழுக்க ரீதி யான ஒழுங்கினைப் பெரு மதிப்பிற்குரியதாக்குகிறது. இவ்வொழுங்கு மீறவொண்ணுதது. இவ்வொழுங்கு தவிர்க்கவொண்ணு தநிலையில் நேர்மையையும் நீதியை யும் வழங்குகிறது, ‘ரித? இருமக்கொள்கையை முன்னரே விளக்குவதாகிறது. தெய்வீக ஆணைகள் - (விரதம் ) இவ்வகையில் உறுதிகளையும் ஒழுகலாற்றையும், உட் படுத்தும் வகையில் விரிவடைந்தன. (இ. வே. 2, 27 :ே 8, 18, 15 ) எண்ணங்களையும், சொற் இ ளை யும் செயல்களையும் மதித்துத் தெய்வங்கள் மதிப்பிற்கு ஏற் பப் பரிசுகளையோ தண்டனைகளையோ முறைமை செய்கின்றன. முதலில் ‘ரித" என்பது நற் பண்பு களைக் குறித்தது. அன்ரிதம்" என்பது தீய பண்பு களைக் குறித்தது, சத்தியம் என்பது உள்ளதோடு, உள் பொருளோடு இசைவது ஆகும் ‘ரித” என்பதும் ரித மறுப்பு (அன்ரிதம்) என்பதும் பின்னர் உண்மையூை யும் பொய்மையையும் மட்டுமே குறிப்பதற்கு முறையே பயன்படுத்தப்பெற்றன, (இ. வே. 7; 49; 3, தை, பி. 3, 7, 12, 3) தீய எண்ணம், சூளுரைத்தல் சத்தி யம்செய்தல், பொய்  ைம, பழித்துரைத்தல் (பழி சொல்லுதல்) புறங்கூறுதல் ஆகியவை ரிதம் என்பதற்கு
LDITଏyଶଙ୍ଖ ଚିତ୍ଵ ଛା}.
வாய்மையற்ற நிலை, வஞ்சித்து ஒழுகுதல், சூனி யம், சூதாடுதல், தன்முனைப்போடு கூடிய மகிழ்ச்சி, அழிவழக்கு அல்லது கூடாவொழுக்கம், களவு உயிர்க்கு ஊறுவிளைத்தல் ஆகியவை தீயபண்புகள், (பாவச் செயல்கள்) ஆகும். (இ. வே. 1, 23, 22 4: 5, 5, 7104。 一25) (அ. வே. 6, 12, 34, 30, 5 ; 13) வாய்மை நேரிய நெறிநிற்றல், தோழமையுணர்வு, தரு மம், இன்ன செய்யாமை, உண்மை, நன்மை விளை விக்கும் இசைவான பேச்சு ஏற்கத்தக்க மதிப்புணர் வேடு கூடிய பேச்சு, புலனடக்கம், பிரமச்சாரியம், வழிபாட்டுக் கொள்கை, வழிபடு உணர்வைத் தரும் நோன்பு ஆகியவை நற்பண்புகள் ஆகும். (இ. வே: 10, 117, 154, அ. வே. 11, 5, கெளடபி 1, 2, 1 - 47 வ. ச. 19, 77, 26, 2) இவ்வாறு இவ் 'ரிதா'க் கோட் பாடே பண்டைய வேதகால இந்திய சமூகத்தின் ஒழுங் மைப்பை நிர்ணயிப்பதாக அமைந்து அச்சமூகத்தின் போக்கையும் வளர்ச்சியையும் நிர்ணயித்தன வென்
பதை அறியமுடிகிறது .
0 -

Page 13
மனிதனுடைய சக்தி மிகவும் பெரியது அதை அவன் நல்ல முறையில் அபிவிருத்தி செய்தால் அவன் தன் சக்தியைக்கொண்டு செயற்கரிய ஆாரியங்களைச் செய் யலாம். விஞ்ஞான முறையாகப் புதுப்புது ஆரய்ச்சிக ளைச் செய்வதுதான் செயற்கரிய காரியமன்று. நல் லொழுக்க வழியால் ஆத்மசக்தியை வளர்த்துத் தன்னுள் அடங்கிய சக்தியை விருத்தியாக்குதல்தான் செயற்கரிய செயல். ' செயற்கரிய செய்வர் பெரியர் 喜罗 (குறள் 28) என்று திருவள்ளுவரும் இதையே குறிப் பிட்டார். இந்துசமய சாத்திரங்களும் இந் நோக்கத் தையே ஆதாரமாகக் கொண்டிருக்கின்றன. ' பிர மத்தையறிதல் ' என்றெல்லாம் வேதத்தில் கூறப் படுவதும் இதையேதான். வெளிவேஷமான உலக இன் பங்களே மனிதன் தேடி அலையக்கூடாது என்று இந்து சமய சாத்திரங்கள் போதிக்கின்றன. இந்த உண்மையை நாம் விளங்கிக்கொண்டால், மேலைத்தேச நாகரிகத்துக் கும், கீழைத்தேச நாகரிகத்திற்குமுள்ள வித்தியாசத்தை யும் அறிதல் இலகுவாகும். இந்தத் தன்மையுள்ள இந்துசமய சாத் தி ரங் த ஞள் முக்கியமானவையும் முதன்மையானவையும் வேதங்களேயாகும்.
இவற்றைவிட ஆகமங்களென்றும் ஒரு பகுதி உண்டு. சிவபெருமானுல் அருளிச் செய்யப்பட்டமை யால் அவற்றைச் சிவாகமங்கள் என்று கூட அழைப்பர். அவற்றில் இருபத்தெட்டு ஆகமங்கள் இருக்கின்றன வேதங்களும், ஆகமங்களும் கொள்கையளவில் ஒன்று பட்டவைதான். ஆனல் அவற்றின் முடிவு வித்தியாச மானது, வேதங்களின்படி கடவுளும் உயிர்களும் ஒன்று தான். அஃதாவது சீவாத்மாவும் பரமாத்மாவும் பேத மற்றவை. பரமாத்மாவே எல்லா உயிர்ப்பொருள் களிலும் வியாபித்திருக்கின்றது. சிவாகமங்கள் பரமாத் மாவும் சீவாத்மாவும் புறம்பானவை என்று முடிகி செய்கின்றன. பந்தபாசங்களினுல் சீவாத்மா உலகில் கஷ்டப்படுகிறது. உண்மையை அறிந்ததும் பந்தபாச மெனும் சிக்கல்கள் நீங்குகின்றன. அப்போது பரமாத் மாவுடன் சீவாத்மா ஐக்கியப்படுகின்றது. இதுவே சிவாகமங்களின் முடிவு. வேதங்களைப் பின்பற்றுவோர் வேதாந்திகளென்றும், சிவாகமங்களைப் பின்பற்று வோர் சித்தாந்திகள் என்றும் அழைக்கப்படுவர். தென்னிந்தியாவிலும் ஈழத்திலும் இருக்கும் சைவர்களிற்
குறியீட்டு விளக்கம் :
1. இ. வே. - இருக்குவேதம் 2. அ. ( 4. கெள. பி. - கெளவrதகி பிராமணம்
- 1

பெரும்பாலோர் சித்தாந்தத்தை ஒப்புக்கொள்வோர். இராமகிருஷ்ணபரமகம்சர், விவேகானந்தர் போன்றேர் வேதாந்திகள். இன்று உலகில் நன்மதிப்பைப்பெற்று விளங்குவது வேதாந்தமேயாகும். பெளத்தமதக் கோட் பாடுகளும் வேதாந்தத்தையே பெரும்பாலும் ஒப்புக் கொள்ளுகின்றன. சைவசமயாச்சாரியர்களான நாயன் மார்களுடைய கொள்கைகள் சித்தாந்தத்தையே ஒப்புத் ஆொள்வன.
வேதங்களின் ஒரு பகுதியாகிய உபநிடதம் உலகின் அருள்வாக்குகளில் மிகச் சிறந்தது. அதுவே வேதத்தின் ஞானமகுடம் ; வேதத்தின் தாயூற்று, இந்து சமயத் தின் ரிஷிஞானமெல்லாம் உபநிடதவடிவாகவே விளங்கு கின்றன. உபநிடதம் இந்துமத்தின் வேர். அதன் அநுபவமே இந்துமதமாகிய மரத்தில் பழுத்த பழம். அமைதியாகத் தவம் செய்து முக்தியடைந்த பெரிய ரிஷிகளின் சுத்தமான உள்ளத்திலிருந்து எழுத்த ஞான இங்கையே உபநிடதமாகும். இந்த ஞானகங்கை உல குள்ள மட்டும் ஒடிக்கொண்டேயிருக்கும். அதையள்ளிப் பருகுவோர் உள்ளமெல்லாம் ஞானவூற்றுகின்றது. இந்த உபநிடதத்தைப்படித்து இந்துக்கள் மட்டுமன்றி ஏனையோரும் பயனடைந்துள்ளார்கள். உபநிடத மாகிய காமதேனுவிலிருந்து கண்ணனுல் கறக்கப்பட்ட பாலே பகவத்கீதை, அஃது விஜயனுகிய இன்றுக்குக் கண்ணனுல் ஊட்டப்பட்டது. ஆன்ம ஈடேற்றத்துக்கு அஃதொன்றுமே போதும். மாகாத்மா காந்தியை மகாத்மாவாக்கி இந்நிலைமைக்குக் கொண்டுவந்ததும் பகவத்கீதையேயாகும். ஆகவே இந்துக்கள் சாத்திரங்க ளால் வித்தியாசத்தை ஏற்படுத்தாது, அவற்றை ஒப் பிட்டுப் படித்து உண்மையைக் கண்டுபிடிக்கவேண்டும். அதுவே சமரச சன்மார்க்கத்துக்கு வழியாகும். * எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப் பொருள் மெய்ப்பொருள்காண்பதறிவு " (குறள் 423). ஆகவே, பிரஸ்தானத்திரயத்தின் அடிப்படை நூலாக வும், உள்ளறிவின் சிகரமாகவும், இந்துசமய சாத்திரங் களுக்குமட்டுமல்ல, இந்திய மெய்யியலுக்கே ஆதார மாகவும், மூலமாகவும் உள்ள வேத உபநிடதங்களை நன்கு கற்றுப் பிறவிப்பிணி நீங்கி ஆன்மநிறைவைப் பெறுவோமாக,
வ. அதர்வ வேதம் 3. தை. பி. - தைத்ரீய பிராமணம்
5. வா. ச. வாஜஸ நேயீ சம்ஹிதை.

Page 14
இலங்கையில் பங்குடமைச் சட்ட
பங்குடமை என்ருல் என்ன?
பங்குடமை என்ருல் என்ன ? என்ற கேள்விக்கு
வட்சன் (Watson) என்பாரி பின்வருமாறு கருத்துரைக்
கின்ருர்,
" பங்குடமை என்ருல் ஆங்கிலச் சட்டப்படி
இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு தொழில் முயற்சியை இலாப நோக் குடன் கொண்டு நடத்துவதாகும் ".
இதன்படி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் தம்மிடையே தன்னிச்சையாகச் செய்துகொள்ளும் ஒரு ஒப்பந்தம் என்பதுடன் இலாபத்திலும் நட்டத்திலும் பங்கேற்பதாகும்.
பங்காண்மையின் உருவாக்கம்
இருவர் அல்லது அதற்கு மேற்பட்டோரிடையே உட்கிடை அல்லது வெளிப்படை உடன்படிக்கை மூலம் உருவாகலாம். பங்குடமை வியாபாரத்தின் பெறுமதி ஆயிரம் ரூபாவுக்கு மேற்பட்டதாயின் எழுத்துருவில் இருப்பதுடன் பங்குடமையாளர்களால் ஒப்பமிடப் படவும் வேண்டும்.
பங்காண்மை ஒன்றை உருவாக்க விதிமுறை கிடை யாது. ஆணுல் ஒரு ஒப்பந்தம் ஒன்றின்மூலமே ஒரு பங்காண்மை உருவாக்கப்பட வேண்டும். இந்த ஒப்பந் தம் உறுதிமூலம் எழுத்துமூலம் அல்லது வாய்மொழி மூலம் உருவாக்கலாம். பங்காண்லமை ஒப்பந்தம் ஒன் றைச் செய்துகொள்வதற்கு ஒப்பந்தம் எழுத்தில் இருக்க வேண்டும் என ஆங்கிலச் சட்டம் கூறவில்லை. இலங்கை யிலும் இதேகருத்துத்தான் உண்டு. இவ்விதிக்கு இலங் கையில் சில விதிவிலக்கு உண்டு.
இலங்கைச் சட்டம்
இலங்கையில் 1840ஆம் ஆண்டு 7ஆம் இலக்க மோசடிகள் தடுப்புக் கட்டளைச்சட்டத்தின் 18ஆம் பிரிவு பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
* எந்தவிதமான வாக்குறுதியோ அல்லது ஒப் பந்தமோ அல்லது உடன்படிக்கையோ பகுதியின
- 1

த்தின் ஏற்பாடுகள்
பொன். பூலோகசிங்கம் B. Dev. S. (Hons) Cey; L. L. B. (Cey) இலங்கை உயர் நீதிமன்ற சட்டத்தரணி
ரின் கையெழுத்தோடு எழுத்தில் இருந்தால் சட் டத்தில் வலுவாக்க முடியும், 1000/- மேற்பட்ட மூலதனத்தையுடைய பங்குடைமையானது மேற் படி பிரிவுக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும்.
விதிவிலக்காக, இவ்வேற்பாடானது ஆட்களின் நடத்தை மூலமோ அல்லது சூழ்நிலைகளைக்கொண்டோ அல்லது சாட்சிகளைக்கொண்டோ மூன்ரும்ஆள் பங்கு டைமை ஒன்று இருப்பதை நிரூபிப்பதை இது தடுகாது.
மேற்கண்ட சட்டஏற்பாட்டின்படி 1000/- ரூபா வுக்கு மேற்பட்ட தொடக்கி மூலதனத்தைக்கொண்ட பங்காண்மைஒன்று இருந்தது என்பதை நிறுவுவதற்கு அப் பங்காண்மை தொடர்பான சான்று எழுத்துமூலம் இல்லாவிடின் சட்டவலுவோ சட்டப்பயனே இருக்க மாட்டாது. இந்தக்கருத்து
Pate Vs Pate
என்றவழக்கில் கூறப்பட்டது. இந்த வழக்கில் வழக்காளிக்கும் எதிராளிக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்கின் கணக்கு 1000/= ரூபாவிற்கு மேற்பட்டது. இது எழுத்தில் இல்லாதபடியால் நிலேநிறுத்த முடியாது என எதிராளி குறிப்பிட்டார். இவரது கருத்தை நீதி மன்றம் ஏற்றுக்கொண்டது. இக் கருத்து
Rajaratnam Vs Commissioner of stamp De Silva Vs De Silva
ஆகிய வழக்குகளிலும் கூறப்பட்டது.
இந்தவிடயம் தொடர்பாக நாம் மிக நுணுக்கமான ஒரு விடயத்தை நோக்குதல் வேண்டும். அதாவது மோசடிகள் தடுப்புக் கட்டளைச் சட்டத்தின் 18ஆம் பிரிவின்படி எழுத்தில் இல்லாத பங்காண்மை உடன் படிக்கை வெற்று வெறிது என்ருே சட்ட வலுவற்ற தென்ருே கூறவில்லை. அதாவது எழுத்தில் இல்லை என் பதால் அந்தப் பங்காண்மை சட்டவிரோதமானதல்ல , சட்டபூர்வமானதே. ஆனல் அதனை நிறுவுதல் தொடர் பில் சட்டப் பயனுே அல்லது சட்டவலுவோ அற்றது என்றே மோசடிகள் தடுப்புக் கட்டளைச்சட்டத்தின் 18ஆம் பிரிவு கூறுகின்றது. அதாவது இப் பிரிவு அங்
-سس- 2

Page 15
கொரு பங்காண்மை ஒன்று உண்டு. அல்லது இல்லை என்பதை வேறு சான்றுகள்மூலம் நிறுவுவதை இப் பிகிவு தடைசெய்வதாகப் பொருள் கொள்ளக்கூடாது.
பங்காண்மை உடன்படிக்கை எழுத்தில் இல்லை என்பதால் மூன்ரும் கட்சியினர் பங்காண்மை இருந்தது என்பதை நிறுவ மோசடிகள் தடுப்புக் கட்டளைச் சட் டத்தின் 18ஆம் பிரிவு தடையாக இல்லை என்றும் வேறு நபர்களுக்கிடையில் பங்காண்மை இருந்தது என் பதை மூன்ரும் கட்சி நிரூபிக்கலாம் எனவும்,
droos Vs Sheriff என்ற வழக்கிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதேபோல வழக்காளியின் கோரிக்கையை மறுப் பதற்கு எதிராளியானவர் வாய்மொழிச் சான்றுகள் மூலம் பங்காண்மை ஒன்று உண்டு என்பதை நிரூபித்த மோசடிகள் தடுப்புக் கட்டனைச்சட்டம் தடை செய்ய வில்லை என்ற கருத்து
Balasubramanium Vs Vallaiappar Chettiar
என்ற வழக்கில் கூறப்பட்டது.
மேற் கூறப்பட்ட சகல இலங்கை வழக்குகளிலும் மோசடிகள் தடுப்புக் கட்டளைச்சட்டத்தின் 18ஆம் பிரி வுக்குத் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி 1000/-மேற்பட்ட பங்கான்மை ஒன்று எழுத் தில் இருந்தால்தான் அது சட்டப்பயன் உடையதாகும். ஆணுல் அது எழுத்தில் இல்லை என்பதற்காகச் சட்ட விரோதமானதொன்ருகிவிடமாட்டாது.
நியதிச் சட்டம்
பாராளுமன்றத்தால் இயற்றப்படும் சகல சட்டங் களும் நியதிச் சட்டம் என்றே பொருள்படும். இந்த வகையில் 1866 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட 21ஆம் இலக்கு பங்காண்மைக் கட்டளைச் சட்டம் பங்காண்மை தொடர்பாக எடுத்துரைக்கின்றது. ஆணுல் குடியியல் நடபடிக்கைக் கோவையின் 79ஆம் அத்தியாயம் இங்கி லாந்தில் நடைமுறையில் இரு க்கு ம் பங்காண்மை தொடர்பான ச ட் டத்  ைத இலங்கையில் புகுத்தல் தொடர்பாகப் பின்வருமாறு கூறுகின்றது.
* பங்காண்மை தொடர்பில் இலங்கையில் எழுகின்ற எல்லாப் பிரச்சினைகளிலும் பிரயோகிக் கப்படவேண்டிய சட்டமானது சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் இங்கிலாந்தில் நடைமுறையில் இருக்கும் அதே சட்டமாதல் வேண்டும்."
4. 1 سے

இவ்வாருண சட்ட ஏற்பாடுகள் இலங்கையில் இருப் பதால் பங்குடமை பற்றி ஆங்கிலச் சட்டமே இலங் கையில் ஆளப்படுகின்றது என்பது புலனுகும். ஆங்கில நியதிச்சட்டம் மட்டுமல்ல ஆங்கிலப் பொதுச்சட்டமும் இலங்கையில் ஏற்புடையதாகும்.
சூசைப்பிள்ளை எதிர் வைத்திலிங்கம் என்ற வழக்கில் இக் கருத்துக் கூறப்படுகின்றது.
பதிவுக்காகச் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
ஒரு பங்குடமை வியாபாரத்தை ஆரம்பிப்பவர்கள் அது தொடர்பாகப் பதிவு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அ வ் வாரு ன பதிவின்போது பின்வரும் விபரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
(அ) வியாபாரத்தின் பெயர். (ஆ) வியாபாரத்தின் தன்மை. (இ) பிரதான வியாபாரத்தலம் இருக்குமிடம். (ஈ) பங்காளர்களின் பெயர், தேசிய இனம், மற்றும்
அவர்களது தனிப்பட்ட விலாசம். (உ) பங்காளரின் தனிப்பட்ட வேறு தொழில். (ஊ) வியாபாரம் தொடங்கும் திகதி.
(எ) வியாபாரம் தொடங்கி 14 நாட்களுள் பதிதல் வேண்டும். ஏதாவது மாற்றம் செய்வதாயின் அதுவும் 14 நாட்களுள் பதிதல் வேண்டும். (ஏ) பதிவுச் சான்றிதழ் வெளிப்படையாகத் தொங்க விடப்படுதல் வேண்டும். இல்லா விடின் எல்லாப் பங்காளரும் தண்டனைக்குள் ளாவார்கள்.
வேறு சட்ட ஏற்பாடுகள்
பங்காண்மைச் சட்டம் தொடர்பாக இலங்கையில் வேறும் பல சட்டங்கள் சில பிரிவுகளைக் கொண்டு இருக்கின்றன. வகையறைவுக் கட்டளைச்சட்டம் (இல. 7: 1853) வியாபார பெயர்ப் பதிவுக் கட்டளைச்சட்டம் (இல. 6 1918) சான்றுக்கட்டளைச் சட்டத்தின் 9ஆம் பிரிவு ; 1982ஆம் ஆண்டு 17ஆம் இலக்க கம்பணிகள் சட்டம்; 1866ஆம் ஆண்டு 22ஆம் இலக்க சிவில் கட் டளைச் சட்டம்; அத்தோடு 1978ஆம் ஆண்டு தற்போ தைய யு. என். பி. அரசாங்கத்தால் கொண்டுவரப் பட்ட அரசியல் யாப்பின் 14ஆம், 16ஆம் பிரிவுகளும் பங்காண்மை தொடர்பான சட்ட ஏற்பாடுகளைக் கொண்டுள்ளன.
3 -

Page 16
அடிச்சொற்கள் ( Roots)
தமிழையும் தமிழுக்கினமான திராவிட மொழிக ளையும் ஒட்டுநிலை மிக்க மொழிகள் என மொழியியல் அறிஞர் கூறுவர்; ஒட்டுநிலை என்பது சொற்கள் பல உறுப்புகளைப் பெற்று ஆக்கம் பெறுவதனையும் பின் அவற்றைப் பகுத்துப் பார்க்கின்றபோது ஒட்டுநிலையில் இடம்பெற்ற உறுப்புக்கள் யாவும் சிதைவுபெருது நிற் பதையுமே கருதிநிற்கிறது. தமிழிற் பெருவழக்குச் சொற்கள் பல உறுப்புக்களைப் பெற்று ஒட்டுநிலைமூலம் ஆக்கம் பெறுவதேயாகும். உதாரணமாக, அடித்தனன் என்ற சொல்லை எடுத்துக்கொண்டால் அடி + த் + த்+ அன்+அன் என ஐந்து உறுப்புக்களைப் பெற்று இச் சொல் ஆக்கம் பெற்றிருப்பதைக் காணலாம். இவ் வைந்து உறுப்புக்களையும் இ லக் க ண ஆசிரியர்கள் முறையே பகுதி, சந்தி, இடைநிலை, சாரியை, விகுதி என அழைப்பர். நன் னுர லா ர் தமிழ்ச் சொற்கள் எவ்வெவ் உறுப்புக்களைப் பெற்று ஆக்கம் பெறுகின்றன என்பது பற்றிப் பின்வருமாறு விளக்குகின்ருர்,
* பகுதி விகுதி இடைநிலை சாரியை சந்தி விகார மாறினு மேற்பவை முன்னிப் புணர்ப்ப முடியுமெப் பதங்களும் "
(நன். 133 )
பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகா ரம் முதலிய உறுப்புக்களில் சிலவற்றையோ பலவற் றையோ தேவைக்கேற்றவாறு ஒன்றுசேர வைக்கும் போது சொற்கள் ஆக்கம்பெறுகின்றன, எனும் கருத் தினையே மேற்காட்டிய நூற்பா தருகின்றது. ஆகவே தமிழில் சொற்கள் பெரும்பாலும் பல உறுப்புக்களைப் பெற்று ஒட்டுநிலைமூலமே ஆக்கம் பெறுகின்றன என்பது புலனுகின்றது.
ஒட்டுநிலையில் இடம்பெறும் உறுப்புக்களில் ஒன்றே அடிச் சொல்லாகும். சொல்லின் முதலுறுப்பாக இடம் பெற்றுப் பொருளுணர்த்தும் குறைந்த அளவுடைய வேர்ச் சொல்லே அடிச்சொல் என இதற்கு வரைவிலக் கணம் கூறிக்கொள்ளலாம். சொல்லின் முதலுறுப் பாக அடிச் சொற்கள் இடம்பெறுவது போல நன்னூ லார் கூறும் பகுதி என்பதும் சொல்லின் முதலுறுப் பாகவே இடம்பெறுகிறது. எனவே இவை இரண்டும் வெவ்வேருண பொருளுடையனவா? அல்லது ஒத்த பொருள் கொண்டனவா என்பது விளக்கப்பட வேண் டியதாகும் , அடிச் சொல்லும் நன்னூலார் கூறும்
- 14

எஸ். சிவலிங்கராஜா, எம். ஏ.
பகுதியும் பெரும்பாலும் ஒத்து நடக்கக்கூடியவை யாகும் அரிதான சந்தர்ப்பங்களில் மட்டும் சிறிது மாறுபடக்கூடியவை. இதை டாக்டர் மு. வரதராஜன் அவர்கள் தரும் விளக்கத்தினின்றும் இலகுவாக விளங் கிக்கொள்ளலாம்.
பகுதி என்பது பெரும்பாலும் அடிச் சொல் லோடு ஒத்துவரும். சிறுபான்மை வேறுபடும். பெரு கிற்று என்பதில் பெருகு பகுதி என்பர். ஆணுல் பெர் அல்லது பெரு என்பதே அடிச் சொல்லாகும். உண்டான் என்பதில் உண் என்பதே பகுதியும் அடிச் சொல்லுமாகும். (மொ. நூ. ப. 121)
மு. வ. வின் மேற்கண்ட விளக்கம் அடிச்சொல்லுக் கும் பகுதிக்குமிடையே பெரியளவான வேறுபாடுகள் எதுவும் இல்லை என்பதையும் அரிதான சந்தர்ப்பங்க ளில் மட்டும் சிறியளவான வேறுபாட்டினைப் பெறுகின் றன என்பதையும் விளக்குவதாக உள்ளது.
தற்கால மொழியியலாளர் இதனை அடிச்சொல் என்றும், அடிச்சொல் உருபன் என்றும்,பகுதி உருபன்என் றும் பலவாறு பெயரிட்டு அழைக்கின்றனர். சொல்லுக் குரிய அடிப்படையான பொருளைத் தன்னகத்தே பொ திந்துவைத்திருக்கும் காரணம் பற்றியோ அன்றி சொற் கள் இவற்றை அடியாகக் கொண்டு பிறக்கும் காரணம் பற்றியோ இதற்கு அடிச்சொல்லென்ற பெயரிடப் பட்டிருக்கலாம். பிரெஞ்சுநாட்டு வெந்தாரியே (vendreys) எனும் மொழியியலறிஞர் சொல்லுக்குரிய அடிப் படையான பொருளைத் தன்னகத்தே கொண்டிருக்கும் காரணம் பற்றியே அடிச்சொற்களைப் பொருட்கூறுகள் (Semantemes) எனப் பெயரிட்டு அழைக்கின்ருர், சொல்லின் முதலுறுப்பாக அடிச்சொற்கள் இடம் பெற்று இயங்குவதனுல் இவற்றை முதனிலை என அழைப்பது பொருந்தக் கூடுமாயினும் முதனிலை என் பது பிறிதோரிடத்தில் வேருேர் பொருளில் வழங்குவது கவனிக்கத் தக்கது. இதனுல் முதனிலை என அழைப்பது பெருமளவில் பொருந்தாது எனலாம்.
திராவிட மொழிகளைப் போல இந்தோ ஐரோப்பிய மொழிகளிலும் அடிச் சொற்களோடு பிற உறுப்புக்கள் இணைந்து சொற்கள் ஆக்கம் பெறும் வழக்காறுகள் உண்டாயினும் அம்மொழிகளில் அடிச் சொற்களையும் பிற உறுப்புக்களையும் தனித்தனியே பிரித்தறிதல் பெரு மளவில் முடியாது. இவை பிரிக்க முடியாதவாறு

Page 17
ஒன்றிக் கலந்துவிடுகின்றன. திராவிட மொழிகளில் இவற்றைப் பிரித்தறிதல் எளிது. இது பற்றியே இந்தோ ஐரோப்பிய மொழிகளை உட்பிணைப்பு நிலை மிக்கவை என்றும் திராவிட மொழிகளை ஒட்டுநில் மிக்கவை என்றும் மொழியியலாளர் கூறுகின்றனர். மேலும் திராவிட மொழிகளில் வழங்கும் அடிச் சொற்கள் பேச்சு வழக்கு இலக்கிய வழக்கு ஆகிய இரண்டிலும் வழங்குபவையாகும். இவை இலக்கண நூலார் படைப்பன்று. ஆணுல் இந்தோ ஐரோப்பிய மொழிகளை உட்பிணைப்பு நிலைமிக்கவை என்றும் திராவிட மொழிகளை ஒட்டுநிலை மிக்கவை என்றும் மொழியிய லாளர் கூறுகின்றனர். மேலும் திராவிட மொழிகளில் வழங்கும் அடிச் சொற்கள் பேச்சு வழக்கு இலக்கிய வழக்கு ஆகிய இரண்டிலும் வழங்குபவையாகும்" இவை இலக்கண நூலார் படைப்பன்று. ஆனல் இந்தோ ஐரோப்பிய மொழிகளில் வழங்கும் அடிச் சொற்கள் பேச்சு மொழியில் வழங்காதவை எனவும் இவை இலக்கணநூலார் படைப்பே அல்லாமல் வழக்கி லுள்ள சொற்கள் அல்ல எனவும் யெஸ்பர்ஸன் எனும் மொழி ஆய்வாளர் கூறுகிருர்,
அடிச் சொற்களின் பண்புகள்
அடிச்சொற்களுள் பெயர்க்கும் வினைக்கும் பொது வானவை காணப்படிலும் சிறுபான்மை வெவ்வேருன அடிச்சொற்களும் தமிழில் வழக்கிலுள்ளன. வினைச் சொற்களில் வழங்கும் பெரும்பாலான சொற்கள் யாவும் ஏவலொருமையாக நடக்கக்கூடியவை. இது வினைச்சொற் களில் வழங்கும் அடிச் சொற்களுக்குரிய ஒரு பண்பா கும். அடுத்து அடிச்சொற்களுக்குரிய இன்னெரு பண்பு இவற்றைப் பிரித்தால் இவை பொருளைத் தரா. பொரு ளுணர்த்தும் குறைந்தளவுடைய வேர்ச் சொற்களையே அடிச் சொற்கள் எனக் கொள்ளப்படுகிறது. எனவே பொருளுணர்த்தல் இதன் ஒரு பிரதான அம்சமாகும். ஆகவே இவற்றைப் பகுத்தறிய முடியாது. பகுக்கப் பட்டால் பொருள் சிதைந்துவிடும். நன்னூலார் கூறும் பகுதி என்பது இதனுடன் பெருமளவு பொருந்தக் கூடியது என்பது முன்னேரிடத்தில் சுட்டப்பட்டது. பகுதி என்ருல் என்னவென்பது நன்னூலார் விளக்கும் போது,
தத்தம்
பகாப் பதங்களே பகுதியாகும்.
(ந. சூ. 134)
என்கிருர். நன்னூலார் கூறும்பகுதி பகுக்கப்பட முடி யாதது என்பதுபோல அடிச் சொற்களும் பகுக்கப்பட முடியாதவையாகும். மேலும் சொல்லாக்க உறுப்புக்களில் சொல்லுக்குரிய அடிப்படையான பொருளை இவையே தம்மகத்தே பொதிந்து வைத்திருக்கின்றன. இவற்றை மூலமாகக்கொண்டே சொற்களுக்குரிய பொருள் பிறக் கின்றது எனலாம். எனவே சொல்லுக்குரிய அடிப் படையான பொருளைக் கொண்டிருத்தல் இவற்றுக்குரிய
- 1

இன்னுெரு பண்பாகும். வினைச் சொற்களில் வழங்கும் அடிச் சொற்கள் வேறு ஒட்டுறுப்புக்களைப் பெருது தனித்து நின்று பொருளுணர்த்தக்கூடிய ஆற்றல் வாய்ந் தவை. உ+ம்: நட, வா, போ என்பன. இவ்வாறு தனித்து நின்று பொருளுணர்த்தல் வினையடிகளுக்குரிய ஒரு பண்பாகும். மேலும் வினைச் சொற்களில் வழங் கும் அடிச் சொற்கள் காலங்காட்டும் உறுப்புக்களைப் பெருது காலத்தை உணர்த்தக்கூடிய ஆற்றல் வாய்ந் தவையாகும். உதாரணம் : ஒடு, பாடு என்பவற்றை எடுத்துக்கொண்டால் இவை எதிர்காலத்தை உணர்த்து வதையும் காலங்காட்டும் உறுப்புக்களைப் பெருதிருத் தலையும் காணலாம். மேற்கண்டவாறு பல பண்புகளைத் தம்மகத்தே கொண்டு அடிச் சொற்கள் இயங்கிவரு கின்றன.
அடிச்சொற்களும் சொல்லாக்கமும்
சொல்லாக்கத்தில் அடிச் சொற்கள் மிக இன்றி யமையாத முக்கிய இடத்தைப் பெறுகின்றன. சொல் லாக்க உறுப்புக்களில் ஏனையவை இடம்பெருது சொல் லாக்கம் நடைபெற முடியும். ஆணுல் அடிச் சொற்கள் இல்லாது எவ்வித சொற்களும் ஆக்கம்பெற முடியாது. சொல்லென்ருல் என்னவென்று விளக்கும்போது நன் னுாலார் நூற்றி இருபத்தெட்டாவது சூத்திரத்தில், * எழுத்தே தனித்துந் தொடர்ந்தும் பொருள் தரின் சொல்லாம் ' என்கிருர், நூற்றைம்பத்தேழாவது சூத்திரத்தில் தொல்காப்பியர் "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்பார். இவ்விரு இலக்கண காரரதும் விளக்கங்களிலிருந்து ஒரெழுத்தினுலோ பல எழுத்துக்களினுலோ ஆகி ஒரு பொருளை உணர்த்தும் போது அது சொல்லாகும் என்ற முடிவினை நாம் பெற லாம். தமிழிற் பெயரடிகளும் வினையடிகளும் தனித்து நின்று சொல்லாக இயங்கக்கூடியன. உதாரணம் : தலை, நட என்பன. இவை முன் குறிப்பிட்டதுபோலச் சொல் லுக்குரிய இலக்கணங்களைக் கொண்டவை. இவை ஏனைய சொல்லாக்க உறுப்புக்களையும் பெறவில்லை என்பது அவதானிக்கத்தக்கது. இதேபோல ஏனைய சொல்லாக்க உறுப்புக்கள் எவையும் தனித்துநின்று சொல்லாக இயங்கக்கூடிய ஆற் ற ல் அற்றவை. தனித்துநின்று சொல்லாக இயங்கக்கூடிய ஆற்றல் அடிச் சொற்களுக்கு மட்டுமே உண்டு. பொன்னன் என்ற பெயர்ச் சொல்லை எடுத்துக்கொண்டால் இதில் அடிச் சொல்லும் விகுதியும் மட்டுமே இடம் பெறுகிறது. ஏனைய சொல்லாக்க உறுப்புக்கள் எவையும் இடம் பெறவில்லை. மேற்கண்ட விளக்கங்களிலிருந்து சொல் லாக்கத்தில் அடிச்சொல் பெறும் இடம் எத்தகையது என்பதை நாம் விளங்கிக்கொள்ளலாம்.
தமிழில் பலவகையான சொற்கள் அடிச் சொற்க ளாக இயங்குகின்றன. நன்னூலார் தெரிநிலை வினைச் சொற்களில் வழங்கும் பகுதிகளை ஒரு சூத்திரத்தின் வாயிலாக வகுத்துக் கூறுகிருர்,

Page 18
நடவா மடிசி விடுகூ வேவை நொப்போ வெளவுரி நுண்பொருந் திருந்தின் தேய்பார் செல்வவ் வாழ்கே ளஃகென் றெம்திய விருபான் மூன்ற மீற்றவும் செய்யெ னேவல் வினைப்பகாப் பதமே. (ந. சூ. 137)
நன்னுர்லார் கூறும் இவ் விருபத்துமூன்று வாய்ப் பாடுகளும் தெரிநிலை வினைச் சொற்களில் வழங்கும் பகுதிகளாகக் கூறப்பட்டிருக்கின்றபோதும் இவ் வாய் பாடுகள் யாவும் வினையடிச் சொற்களாக வழங்குவதற் கும் பெருமளவில் தகுதியுடையனவாகும். இவற்றுள் சில தற்காலத்தில் வழக்கிழந்தவையாக இருப்பினும் பல இன்றும் பெருவழக்கில் உள்ளவையாகும். தற் காலத்தில் வழங்கும் வினைச் சொற்கள் யாவும் இவற் றையே அடிச் சொற்களாகக்கொண்டு இயங்குகின்றன: எனவே நன்னூலார் கூறிய தெரிநிலை வினைப்பகுதிகள் வினையடிச் சொற்களாய் இயங்கிச் சொல்லாக்கத்திற்கு உதவுகின்றன என்பது பெறப்படும்.
சிலபோது உரிச்சொற்களும் அடிச்சொற்களாகி சொல்லாக்கத்திற்கு உதவுகின்றன. உதாரணமாக கூர்ந் தான் என்ற சொல்லை எடுத்துக்கொண்டால் இதில் கூர் என்பது உரிச்சொல்லாகும். இங்கே அடிச் சொல் லாக நிற்பதும் கூர் என்பதேயாகும். எனவே உரிச் சொற்களும் அடிச்சொற்களாக நடக்கக்கூடியவை என் பது பெறப்படும். மேலும் உரிச்சொற்கள் அடிச் சொற் களாக நடக்கக்கூடியவை என்பதனைத் தொல்காப்பிய சொல்லதிகாரத்திற்கு உரைவகுத்தவர்களுள் ஒருவரான தெய்வச்சிலையார் தனது உரையிற் சுட்டிக்காட்டுகின் முர். அவர் கூறுவதாவது:
" எழுத்ததிகாரத்துள் இதனைக் குறைச்சொற் கிளவி என்று ஒதினமையால் வடநூலாசிரியர் தாது என்று குறிப்பிட்ட சொற்களே இவை என்று கொள்ளப்படும். அவையும் குறைச்சொல் ஆதலான்."
(தொ. சொ. தெ. உ. ப. 263)
தெய்வச்சிலையாரின் இக் கூற்றும் உரிச்சொற்கள் அடிச்செசற்களாக இயங்கக்கூடியவை என்பதனை வலி யுறுத்துவதாக உள்ளது. மேலும் உரிச்சொற்கள் அடிச் சொற்களாக இயங்கக்கூடியவை என்பதற்கான காரணங் களை மொழியியல் என்ற நூலில் பேராசிரியர் சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார். எனவே மேற்கண்ட கூற்றுகளி லிருந்து உரிச்சொற்கள் அடிச்சொற்களாக இயங்கக்கூடி யவை என்பது புலனுகின்றது.
சிலபோது இடைச் சொற்களும் அடிச்சொற்களாகிச் சொல்லாக்கத்திற்கு உதவுகின்றன. உதாரணமாக

அதனை என்ற சொல்லை எடுத்துக்கொண்டால் இதை அது + ஐ எனப் பிரிக்கலாம். இதில் அது என்பதே அடிச்சொல்லாகும். அது என்பது ஏழாம் வேற்றுமைக் குரிய ஒரு உருபுமாகும். இதுபோலவே கண்ணன் என்ற சொல்லை எடுத்துக்கொண்டாலும் கண் என்பது இதன் அடிச்சொல்லாகும். கண் என்பது ஏழாம் வேற்றுமைக் குரிய ஒரு உருபுமாகும். வேற்றுமை உருபுகள் யாவும் இடைச் சொற்களாக நடக்கக்கூடியவை என்பது இலக் கணகாரர் கருத்தாகும். நன்னூலார் இடைச் சொற் கள் பற்றிக் கூறும்போது இதைத் தெளிவாக விளக்கு கிருர்,
வேற்றுமை வினைசா ரியையொப் புருபுகள் தத்தம் பொருள விசைநிறை யசைநிலை குறிப்பெனெண் பகுதியிற் றணித்திய லின்றிப் பெயரினும் வினையினும் பின்முன் னேரிடத் தொன்றும் பலவும்வந் தொன்றுவ திடைச்சொல்.
(ந, சூ. கீ20)
எனவே, சிலபோது இடைச் சொற்களும் உரிச் சொற்கள் போல அடிச்சொற்களாகி சொல்லாக்கத்திற்கு உதவுகின்றன எனக் கருதுவது தவருகாது.
வினேச் சொற்களுக்குப் பிறம்பாக அடிச் சொற்கள் வழக்கிலிருப்பதுபோல பெயர்ச் சொற்களுக்கும் பிறம் பாக சிறியளவான அடிச்சொற்கள் வழக்கிலுள்ளன. உதாரணம் : செவி, கல், மண் முதலியன. இவற் றைப் பெயரடிகள் என அழைக்கலாம். இப்பெயரடிகள் தனித்து நின்று சொல்லாக இயங்குவதோடு சொல் லாக்கத்திற்கும் உதவிவருபவையாகும். எனவே பெயு ரடிகளும் அடிச் சொற்களாகிய சொல்லாக்கத்திற்கு உதவுகின்றன என்பன பெறப்படும்.
சில சந்தர்ப்பங்களிலே இரு அடிச் சொற்கள் ஐ. முத லான இடைச் சொற்களை ஏற்றுச் சொல்லாக்கத்திற்கு உதவுகின்றன. உதாரணம்: கல்லைப் பார்த்தான். கல், பார் என்பவை இங்கே அடிச் சொற்களாகும். இவையிரண்டும், ஐ உருபை ஏற்று கல்லைப் பார்த்தான் என ஒரு சொல் போல அமைந்துள்ளது.
இரு அடிச் சொற்களுக்கு மத்தியில் வரவேண்டிய உருபு மறைந்து வரும்போது தொகைநிலைத் தொடர் மொழிகள் ஆக்கம் பெறுகின்றன. இந்தவகையில் தொகைநிலைத் தொடர் மொழிகள் ஆக்கத்திற்கும் அடிச் சொற்கள் உதவுகின்றன எனலாம். இவ்வாறு தொடர்ந்து ஆராயும் பொழுது எல்லாவகையான ஆக்கங்களிலும் அடிச் சொற்கள் முக்கிய உறுப்பாக இடம்பெற்றுச் சொல்லாக்கத்திலே முக்கிய இடத்தை வகித்துவருவதை அவதானிக்கலாம்.

Page 19
நவீன இந்து மத இயக்கங்கள் :
பிரமசமாஜம், ஆரியசமாஜம், பூரீராமக்
இந்துமதம் முன்னைப் பழம் பொருட்கு முன்னைய தாகவும் பின்னப் புதுமைக்குப் பெயர்த்துமப் பெற் றித்தாகவும் திகழும் மாண்புடையது. வேதம் என்ற " ஆலம்விதையில் முளைவிட்டு காலந்தோறும் நிகழ்ந்த சமுதாய வரலாற்றுப்பரிணுமங்களிற் படிமுறை வளர்ச்சி எய்தி இன்றைய அணுயுகத்தின் சவால்களையும் எதிர் கொண்டு நிமிர்ந்துநிற்பது. அதன் வளர்ச்சிப்படிமுறை யின் ஒரு வரலாற்றுக்கட்டமாக அமைவதே நவீன இந்துமதம் என்ற பெயராற் சுட்டப்படும் நிலை, இது கடந்த நூற்ருண்டிலே முளைவிட்டு இந்த நூற் முண்டிலும் தொடர்ந்துவரும் சில சமய-சமூக சிந்த னைப் போக்குகளைத் தொகுத்துச் சுட்டி நிற்பது. இச் சிந்தனைப் போக்குகளைப் பிரதிபலித்துநிற்கும் நிறுவன அமைப்புக்களில் முதன்மையாகச் சுட்டத்தக்க வர லாற்றுமுக்கியத்துவமுடையன பிரமசமாஜம், ஆரிய சமாஜம், பூரீ ராமகிருஷ்ண மிஷன் என்பனவாகும். இம் மூன்று இயக்கங்களின் பொது அடிப்படைகள் சிறப்பு வேறுபாடுகள் என்பவற்றைச் சுருக்கமாக இங்கு நோக்
S6Utrið.
மேற்படி மூன்று இயக்கங்களும் இந்தியாவின் வட புலத்தில் உருவானவை. அவற்றுள் முதலாவதும் மூன் ருவதும் வங்காளத்தில் முகிழ்த்தவை. இரண்டாவது குஜராத் மாநிலத்திலே உருப்பெற்றது. மூன்றும் வேத இலக்கியம், உபநிடத சிந்தனைகள் என்பவற்றின் விழு மிய அம்சங்களை ஏற்றுக்கொண்டவை. இடைக் ஆாலத்திலே இந்துமதத்தில் நிகழ்ந்த சீர்கேடுகள், அதிற் சுமத்தப்பட்ட குறைபாடுகள் என்பவற்றைக் களைந்தெறிய வேண்டும் என்றஆர்வம் இவற்றை வழி நடத்தியது. அத்துடன் மேலைப்புலத்தினின்று அடி யெடுத்துவைத்த அந்நிய பண்பாட்டுக் கூறுகளின் தாக்கத்தினின்று இந்துமதத்தைப் பேணிக் காத்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணக்கரு இவற்றின் உந்துசக்தியாக அமைந்தது. இத்தகு பொது அடிப்
- 17

ருஷ்ணஇயக்கம்-ஒர் ஒப்புநோக்கு
கலாநிதி நா. சுப்பிரமணியன்
படைகளிற் கருக்கொண்ட இந்த இயக்கங்கள் இவற்றை உருவாக்கியவர்களின் அறிவாற்றல் சமூக நோக்கு நிலை என்பவற்றிற்கு ஏற்ப வெவ்வேறு அணுகுமுறை களிலும் நிலைகளிலும் தொழிற்பட்டன .
"பிரமசமாஜம் (1828) என்ற இயக்கத்தைத் தோற்றுவித்தவரான ராஜாராம்மோகன்ராய் (17741833) அவர்கள் செல்வமிக்க வைதிகப் பிராமணகுலத் திற் பிறந்தவர். இளம்பராயத்திலே அறிவாராய்ச்சியில் ஈடுபட்டு இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் முதலிய பல சமயங்களையும் நுணுகி நோக்கியவர். கிறிஸ்தவ சமயத் தின் கோட்பாடுகள், அமைப்பியல் என்பவற்ருல் இவர் கவரப்பட்டார் எனினும் அவர் கிறிஸ்தவராக மாற முற்படவில்லை. இந்து மதத்திற்குப் புதிய வடி வம் தருவதிற் கவனம் செலுத்தினர். இந்துமதத்திற் காணப்படும் பல தெய்வவனக்கம், உருவ வழிபாடு அர்த்தமற்ற கிரியைகள் என்பன இவரது கண்டனத் துக்குள்ளாயின. உபநிடதங்களிலே கூறப்பட்ட நிர்சி குணப் பிரமம் என்ற கருத்துநிலையே இவரது அறிவா ராய்ச்சிக்கு உகந்ததாயிற்று. அப்பிரமம் தொடர்பான சிந்தனையை வளர்க்கும் உளப்பாங்கிலேமுதலில் அவர் "பிரமசபா' என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். பின்னர் அது "பிரமசமாஜம் ஆயிற்று.
ராஜாராம் மோகனர் அவர்கள் அன்றைய இந்து மதத்திலே ( சில பிரதேசங்களில் ) நிலவிய உடன் கட்டை ஏறும் கொலை முயற்சியைக் கண்டித்தார். இவ் வழக்கம் "சதீ" எனப்பட்டது. இதனை ஒழிப்ப தற்கு அரும் பாடுபட்டார். மேலும் பெண்கள் அன்று எய்தியிருந்த அடிமைநிலை, அறியாமை என்பவற்றுக்கு எதிரான கருத்துக்களை அவர் முன்வைத்தார். குறிப் பாக பால்ய விவாகம் என்ற கொடுமையை எதிர்த் தார். கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்ளவேண்டுமென இவர் விரும்பினர். அத்துடன்

Page 20
கலப்புமணம் என்ற சமூக சமத்துவக் கருத்தும் இவ ரால் முன்வைக்கப்பட்டது. இத்தகு நிலைகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தைப் பெண்கள் எய்துவதற்கு அவர்கள் கல்வியறிவு பெறவேண்டும் எனச் சுட்டிக் காட்டினர். சமூகத்தில் நிலவிய சாதிவேறுபாடு, ஏற்றத் தாழ்வு என்பன இவராற் கண்டிக்கப்பட்டன. இந்திய நாடு உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்பதற்கு ஆங்கி லக்கல்வி அவசியம் என்று கருதியவர் இவர். எனி னும் தமது மாநிலத் தாய்மொழியான வங்காள மொழியை வளம்படுத்துவதிலும் கவனம் செலுத்தினூர், இதனுல் வங்காளமொழி புதிய கருத்துக்களுக்கு வாகன மாகும் நிலையில் வளமடையலாயிற்று.
ராம் மோகனரின் மேற்படி சிந்தனைகள், செயற் பாடுகளின் நிறுவனநிலையிலான செயற்களமாக அமைந் ததே பிரமசமாஜம் ஆகும். ராம் மோகனர் சாதி வேறுபாடுகளைக் கண்டித்தவராயினும் தாம் பிராமணர் என்ற நிeேயினின்று விலகியதாகத் தெரியவில்லை, தம் வாழ்நாள் இறுதிவரை அவர் பிராமணருக்குரிய முக்கிய குறியீடான யக்ஞோபவிதத்தை (பூணுரலை) அணிந் திருந்தார் என அறியப்படுகின்றது. மேலும் பிரம சமாஜத்திலே வேதபாராயணம் செய்வதற்கு இவர் வைதிகப் பிராமணர்கட்கு இடமளித்தார் என்பதும் ஈண்டு சுட்டத்தக்கது.
ராம் மோகனரின் பின்னர் மகரிஷி தேவேந்திர நாத தாகூர், அக்ஷயகுமார்தத்தர், கேசவசந்திரசேனர் முதலியவர்களால் வழிநடத்தப்பட்ட பிரமசமாஜம் இந்தியாவில் பலபிரதேசங்களிலும் பரவியது. தமிழ் நாட்டிலே மகாகவி சுப்பிரமணியபாரதி வாழ்ந்தகாலத் தில் (1882-1921) இந்த இயக்கம் ஒரு முக்கிய சமூக சீர்திருத்த இயக்கமாஇக்கருதப்பட்டது. அவரது சந்திரி கையின் கதையிலே "கலப்புமணம் செய்துவைக்கும் நிறுவனமாக இது கட்டப்பட்டுள்ளது.
ஆர்யசமாஜம் ' என்ற இயக்கத்தைத் தோற்று வித்தவரான சுவாமி தயாநந்த சரஸ்வதி அவர்கள் (1824-1883) சமஸ்கிருத மொழியிற் பெரும்புலமை வாய்ந்தவர். ஆங்கில அறிவு அற்றவர். வேத இலக் கியத்தை மட்டுமே முழுமையான ஆதாரமாகக் கொண் டவர். புராணங்களே மறுத்தவர். வேதத்திற்குத் திரும்புங்கள் ' என்பது இவர் முன்வைத்த முக்கிய கோஷமாகும். இவரும் ராம் மோகனரைப்போல உருவ வழிபாட்டைக் கண்டித்தவர். ஒரே தெய்வம் பற்றிய நம்பிக்கை கொண்டவர் : பால்ய விவாகத்தைக் கண்டித்தவர் விதவா விவாகத்தையும் பெண்கல்வி
18 -س--

யையும் ஆதரித்தவர். சாதிக்கட்டுப்பாட்டை எதிர்த்த இவர் வர்ணதருமத்தை ஏற்பவராகவே அமைந்தார். ஆயினும் அதற்குப் பிறப்பு அடிப்படையன்று , ஒழுக்கமே அடிப்படை' என்பது அவரது கருத்தாகும்.
தயாநந்தர் சிறப்பாக முன்வைத்த சிந்தனைகளி லொன்று பசுக்காத்தல் ஆகும். " கோமாதா எங்கள் குலமாதா” என்ற வகையில் பசுவைப் புனிதமாகப் பேணவேண்டும் என இவர் முன்வைத்த கருத்தை ஒட்டி இன்றுவரை இந்திய சங்கராச்சாரிய பீடங்கள்
பசுக்காத்தல் கோஷம் எழுப்பி வருகின்றன.
தயாநந்தரின் செயற்பாடுகள் குறிப்பாக இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய சமயங்களின் பரவுதலுக்கு எதிரான எழுச்சிகளாகவே அமைந்தன. இப்புறச்சமயங்களைச் சார்ந்த இந்தியர் மீண்டும் இந்துக்களாவதற்கு வாய்ப் பளிப்பதற்காக இவர் ' சுத்தி எனப்படும் தூய்மைப் படுத்தும் இயக்கத்தைத் தோற்றுவித்தார். புற சமயங்களைக் கண்டிப்பதோடு மட்டுமன்றி இந்து மதத் தின் பல்வேறு உட்பிரிவுகளையும் கூட இவர் மறுப்பவ ராக அமைந்தார்.
ராம் மோகனரது சிந்தனை அனைத்துலக ரீதியான புதிய போக்குகளைத் தழுவிய-புதுமைதழுவும்-நிலை யில் அமைய தயாநந்தரின் சிந்தனை அவற்றை மறுத்துப் பழமையில்-வேதத்தில்-அமைதி காண்பதாக அமைந் தமை சுட்டத்தக்கது. தயாநந்தர் அவ்வகையிலே இந்திய தேசியவாத மூலவராகவும் கருதப்படத்தக்கவர்.
"வேற்று நாட்டாராட்சியில் எத்தகு நன்மைகளேற். படினும் இந்நாட்டவராட்சியே இந்நாட்டிற்கு ஏற்றது’ என இவர் கூறிஞர். அத்துடன் மக்கள் போர்ப் பயிற்சி பெறவேண்டும் எனவும் ஆயுதங்களே உற்பத்தி செய்யவேண்டுமென்றும் ஆலோசனை கூறியுள்ளார். இவை அன்றைய பிரித்தானிய ஆட்சியாளர்க் கெதி ரான தேசிய சிந்தனைப் போக்குகளாகும்.
பூரீராமகிருஷ்ணபரமஹம்ஸர் முற்கூறிய இருவரை யும் போலக் கல்வியாற் புலமைபெற்றவரல்ல; ஒரு சாதாரன கோவிற்பூசகராக விளங்கியவர் ; ஆயின் சிறந்த மறைஞான (Mystic) அநுபவம் பெற்றவர் : பல சமயங்களையும் சார்ந்து நின்று நோக்கித் தமது நம்பிக்கைகளை வலுப்படுத்திக் கொண்டவர். இந்தியா விலே பலநூற்ருண்டுகளாக வளர்ந்துவந்த சிந்தனை களால் நிறைவுபெற்ற ஞானியாக அவர் அமைந்தார் என்பர். இவரும் இவர் மனைவி சாரதாதேவியாரும் வாழ்ந்த இல்லறம் ஒரு தெய்விக அநுபவம் எனப்படு
3 -

Page 21
கின்றது. தமது மனைவியாரை பரமஹம்சர் தாய்த் தெய்வமாகவே தரிசித்தார் என்பர்.
இவரது செயற்பாடு முக்கியமாகப் போதனை யாகவே அமைந்தது. சிறிய கதைகள், பழமொழிகள் என்பவற்றின்மூலம் அரிய கருத்துக்களை இவர் முன் வைத்தார். அடியார்கள், நண்பர்கள் என்றநிலைகளில் உள்ள பலர் இவற்ருல் கவரப்பட்டனர். இவ்வகைக் கருத்துக்களின் தொகுப்பே ராமகிருஷ்ண இயக்கத்தின் அடிப்படையாகும்.
ராமகிருஷ்ணர் குறித்த ஒரு சமயத்தையோ அன்றேல் ஒரு சமயப்பிரிவையே சார்ந்து நின்றவரல்ல. எல்லாச் சமயங்களின் நல்லம்சங்களையும் ஏற்றவர். * எல்லா நதிகளும் ஒரு கடலில் சங்கமிக்கின்றன. அதேபோல் எல்லாச் சமயங்களும் ஒரே பரம்பொருளைச் சுட்டிநிற்பன" என்ற கருத்துடையவர் இவர். இதனுல் இவர் ஒரு சமய சமரசவாதியாக அமைகிருர். இச் சமரசநோக்கு தத்துவநிலையில் சங்கரவேதாந்த சார் பானது. எல்லாவற்றிலும் ஒரே பிரமமே தரிசிக்கப் படுகின்றது.
ராமகிருஷ்ணர் மனிதனது ஆன்மிக ஆற்றலை வளர்க்க விழைந்தவர். அதனுல் இவர் உருவவழி பாட்டைக் இண்டிக்கவில்லை. அது ஆன்மிகத்துக்குப் பயன்படும் அளவில் வரவேற்கத்தக்கதென்றே கருதினுர், ஆயின் பொருளற்ற கிரியைகளைக் கண்டித்தார்.
ராமகிருஷ்ணரின் இத்தகு சிந்தனைகளுக்கு ஒரு இயக்கவடிவு தந்து அவற்றை உலகளாவிய நிலைக்கு இட்டுவந்தவர் அவரது தலைமாணுக்கரான நரேந்திர நாததத்தர் ஆவர். கல்கத்தாப் பல்கலைக்கழகப் பட்ட

தாரியான இவர் ஆங்கிலமொழி ஆற்றலும் சொற் பெருக்காற்றும் வன்மையும் வியக்கத்தக்க ஆளுமையும் உடையவர். ராமகிருஷ்ணரிடம் பிரமஞான அநுபவம் பெற்ற இவர் விவேகானந்தர் என்ற நாமம் சூட்டப் பெற்ருர். இவர் 1893இல் அமெரிக்காவில் (சிக்கா கோவில்) சர்வமத மாநாட்டில் நிகழ்த்திய உரை இந்திய மெஞ்ஞான வளத்தை உலகுக்கு எடுத்துக் காட்டிய பெருமைக்குரியது. இதனைத் தொடர்ந்து உலகெங்கணும் இராமகிருஷ்ண இயக்கம் வியாபித்தது. புனிதமான மடாலய சேவைகள் மூலம் பொதுமக்க ளுக்குத் தொண்டுபுரிதலே இவ்வியக்கத்தின் முக்கிய செயற்பாடாயிற்று. கல்விக்கூடங்கள், சேவாசிரமங்கள் என்பன அமைக்கப்பட்டன. அநாதைகள், பாதிக்கப் Lu "Grrriř, வசதிகுறைந்தோர் முதலிய பலநிலை யினர்க்கும் கல்வி, உறைவிட வாய்ப்புக்கள், பொரு ளுதவி என்பன நல்கும் ஆன்மிக நிலயங்களாக பூரீ ராமகிருஷ்ண மிஷன் நிறுவனங்கள் அமைந்தன.
மேற்படி மூன்று இயக்கங்களையும் ஒப்புநோக்கும் பொழுது முதலாவது புதுமையை வரவேற்பதாகவும் இரண்டாவது பழமையில் அமைதிகான்பதாகவும் மூன்ருவது சமரசம்பேணிச் சமூக சேவை செய்வதாக வும் திகழக் காணலாம். இவற்றுள் முதலிரண்டும் இந்திய மண்ணுக்குள் மட்டும் எல்லைப்பட்டுநிற்க மூன்ருவது அனைத்துலக நிலையில் பரந்தமைந்ததை அவதானிக்கலாம். அதன் அப்பெருநிலைக்கு முக்கிய காரணராக அமைந்தவர் விவேகானந்தர் என்பது யாவரும் அறிந்ததே. ஏனைய இரு இயக்கங்கட்கும் இத்தகு ஆளுமைமிக்க வழிநடத்துநர் அமையவில்லை என்பது ஈண்டு சுட்டத்தக்கது.

Page 22
இலங்கையின் இரண்டாம் குடியரசு ஜகுதிபதியின் அதிகாரங்களும் கட
1947இல் இருந்து 1977வரை நடைமுறையிலிருந்த இலங்கையின் அரசியலமைப்புக் கட்டமைவினை மாற்றி யமையே 2ஆவது குடியரசு அரசியலமைப்பின் மிகவும் பிரத்தியட்சமான அம்சமெனக் கொள்ளப்படுகின்றது. அதுவரை காலமும் பிரித்தானியாவில் உள்ளது போன்ற பாராளுமன்ற சனநாயக (West minister) அமைப்பு முறையே இலங்கையில் நடைமுறையில் இருந்து வந்தது. சிந்த முறையினை மாற்றி பாராளுமன்ற முறைசார்ந்த இனதிபதித்துவ முறை 1978இல் அறிமுகப்படுத்தப் 'ட்டது. இம் முறை அறிமுகப் படுத்தப்பட்டதற் இான பின்னணியைப் பார்க்க வேண்டியது அவசிய மானது. பொருளாதார குறைவிருத்தியன் அடிப் படையிற் தோன்றும் பிரச்சினைகளிலிருந்து குறுக்கு வழியில் தப்பித்துக் கொள்ள முயல்வது நாட்டின் நெடுங்கால முன்னேற்றத்திற்குக் கேடு விளைவிக்கின்றது. நெடுங்கால நோக்கிற் செயற்படுகின்ற அரசாங்கம் விரைவில் மக்களின் அதிருப்தியைத் தேடிக் கொள்கின் றது. இதுவரை நிலவி வந்த எமது பாராளுமன்ற முறையின் இக் கேட்டை நீக்குமுகமாகவே திரு.ஜே.ஆர். ஜெயவர்த்தன அவர்கள் ஜனதிபதித்துவ முறையினைப் புகுத்த முனைந்தார். 2ஆவது குடியரசு அரசியற் திட் உத்தினை அறிமுகப் படுத்திப் பேசிய அப்போதைய பிரதமரும் தற்போதைய ஜனதிபதியுமான ஜே. ஆர். ஜெயவர்த்தணு அவர்கள் " அரசியல் அல்லோலகல்லோ லத்திற் கப்பாற்பட்ட ஒரு நிர்வாகமே அபிவிருத்திக்குச் சிறந்த தென்றும் அபிவிருத்தி அடைந்துவருகின்ற எமது நாட்டில் இதை ஜனதிபதித்துவ அரசாங்கமே பெற்றுத் தரும் ' என்றும் கூறினர். அத்தோடு பல்லின மக்கள் வாழ்கின்ற எமது நாட்டிலே எழுகின்ற பிரச்சினை களுக்கு ஜனதிபதியானவர் இலங்கை முழுவதையும் ஒரே தேர்தற் தொகுதியாகக் ைொண்டு தேர்ந்தெடுக்கப் படுவதினுல் கட்சி முரண்பாடுகளுக்கு அப்பால் நின்று கடமையாற்ற முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுவ தோடு இலங்கையின் தேசிய சின்னமாக இருப்பார் எனவும் எண்ண இடமுண்டு. ஆனல் சிறிலங்கா சுதந் திரக் கட்சியின் தலைவியான திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா இம்முறையினையிட்டுக் கருத்து தெரி வித்த போது இதுவரை நிலவி வந்த பாராளுமன்ற முறையானது மக்கள் அறிந்த முறை, எல்லோரும் புரிந்த முறை, மக்களுக்குப் பரிச்சயமான இம் முறையில் இருந்து மாறி தனியொருவரை அதிகாரமிக்க ஜனதிபதியாக ஆக்குவதென்பது மக்கள் அதிகாரத்தி லிருந்து விடுபட்டு தனி ஒருவர் அதிகாரத்தினை அப
- 2

அரசியல் அமைப்பின்கீழ் மைகளும்
செல்வி T. சோபியாவதனி கலைப்பிரிவு (இறுதி ஆண்டு)
கரிக்க எடுக்கும் முயற்சி எனச் சாடியதோடு தாம் பத. விக்கு வந்தால் இம் முறையை மாற்றி அமைப்போம் எனக் கூறினுர் கூறியும் வருகின்ரு ர்.
இலங்கையிலே உருவாக்கப்பட்ட இந்த ஜனதி
பதித்துவ முறையானது பிரான்சிலே உள்ளது போன்ற
பாராளுமன்ற பண்பினைக் கொண்ட ஜனதிபதித்துவ
முறையா? அல்லது பாராளுமன்ற பண்புகளற்ற ஜனதி பதித்துவ (அமெரிக்கா) முறையா? அல்லது இரண்டும் கலந்த முறையா? என்பதில் அரசியல் விமர்சகர்க, ளிடையே கருத்து வேறுபாடுகளுண்டு. கலாநிதி நீலன் திருச்செல்வம் அவர்கள் இவ்வரசியற் திட்டம் பாராளு
மன்ற முறைசார்ந்த ஜனதிபதி ஆட்சி முறையினைப் புகுத்தியுள்ளது. "1978இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஜனதிபதித்துவ முறை ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளின் அரசாங்க முறையின் கலவையைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றது" என
கலாநிதி விஸ்வ வர்ணபாலா அவர்கள் குறிப்பிட்டுள் ளார். அமெரிக்க ஜனதிபதித்துவ முறையினை ஏற்
படுத்துவதற்காக ஆங்கிலோ சக்கன் முறை நிராகரிக்கப்
பட்டதென கலாநிதி N. M. பெரேரா அவர்கள் குறிப் பிட்டார். எவ்வாறிருந்த போதிலும் 1972 அரசியற்
திட்டத்தின் கீழ் பெயரளவு அதிகாரம் பொருந்திய ஜனதிபதிக்குப் பதிலாக 1978 ஜனுதிபதியானவர் தற்
துணிவு அதிகாரமிக்க ஜனுதிபதியாகக் கடமையாற்று வார். அதாவது மக்களால் நேரடியாகத் தெரிந்தெடுக்கப்
படும் ஜனதிபதியையும் அவரின் வழிகாட்டலின் கீழ்
இயங்கும் அமைச்சரவையையும் 1978ஆம் அர சி யற்
திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது.
குடியரசு அரசியற் திட்டத்தின் கீழ் ஜனுதிபதிப் பதவியானது பல வழிகளில் வேறுபடுகின்றது. அவர்க ளுடைய தெரிவு முறை, பதவிக்காலம், அதிகாரங் களேச் செயற்படுத்தும் விதம் போன்ற விடயங்களில் இவற்றினை நாம் தெளிவாக அறிந்துகொள்ளலாம். இலங்கையின் தற்போதைய ஜனதிபதியானவர் மக்க ளால் நேரடியாக தனிமாற்று வாக்குமுறையின் மூலம் இலங்கை முழுவதையும் ஒரே தொகுதியாகக் கொண்டு தெரிவு செய்யப்படுகின்றர். ஐக்கிய அமெரிக்காவையும் பிரான்சையும் எடுத்துக்கொண்டால் ஜ ஞ தி ப தி க ள் தேர்தற் கழகங்களினூடாகத் தெரிவு செய்யப்படுகின் முர்கள். அமெரிக்காவில் ஒவ்வொரு சம அரசும் காங் கிரசில் எத்தனை பிரதிநிதிகளையும், மேற்சபை அங்கத்
) -

Page 23
தவர்களையும் கொண்டுள்ளதோ அத்தொகை எண் ணிைக்கையுடையார்களை ஜனு தி ப தி  ைய த் தெரிவு செய்யும் குழுவிற்குத் தேர்ந்தெடுக்க உரிமையுண்டு. ஆணுல் இ ல ங்  ைக ஜனதிபதித் தேர்தலில் அவர் பொதுமக்களால் நேர டி யாக ப் பிரதிநிதித்துவப் படுத்தப்படுகின்ருர், பிரான்சிய ஜனதிபதியானவர் கிட்டத்தட்ட 8000 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு தேர் தற் கழகத்தினுல் தேர்ந்தெடுக்கப்படுகின்றர். இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கவுன்சில் உறுப்பினர்கள், பிறநாட்டு அசெம்பிளி உறுப்பினர்கள் மாநகர கவுன்சில்களில் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதி கள் என்போர் அடங்குவர். இலங்கையின் ஜனதிபதி 4 ஆண்டுகள் பதவி வகிக்கவெனத் தேர்ந்தெடுக்கப்படு கின்ருர். இவர் இரு முறைகள் மட்டுமே பதவி வகிக்க லாம். இருமுறை பதவி வகித்தபின் இவர் மீண்டும் தெரியப்பட அருகதையற்றவராவார் என அரசியல் அமைப்புக் குறிப்பிடுகின்றது. இன்று இருதடவைகள் பதவி வகித்த ஒருவர் மூன்றுவது முறையும் பதவி வகிக்கக்கூடிய வகையில் அரசியல் அமைப்பில் ஏற்பாடு கள் செய்வதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வரு கின்றன. அரசியலமைப்பிலே 15ஆவது திருத்தத்தினச் செய்வதனூடாகவும், அத் திருத்தத்திற்குப் பாராளு மன்றத்திலே 2/3 பெரும்பான்மையைக் கொள்ளுவதன் மூலமும் சாத்தியமாகலாம் எனத் தெரியவருகின்றது.
ஜனதிபதியின் அதிகாரங்கள் கடமைகள் என்ப வற்றை எடுத்து நோக்கின் ஜனதிபதி அரசின் தலைவ ராகவும், ஆட்சித்துறையினதும் ஆயுதம் தாங்கிய படை களின் தலைவராகவும் இருப்பதால் அரசியற் திட்டத் தலைவர், பிரதமர் ஆகிய இருவரும் ஆற்றிய கடமைகளை யும் ஒருங்கே பெற்றுக்கொள்கின்ருர், ஜனுதிபதி தனது அதிகாரங்கள் கடமைகள் அல்லது நடவடிக்கைகளுக்கு பாராளுமன்றத்துக்குப் பொறுப்புடையவராக இருத்தல் வேண்டுமென அரசியலமைப்பின் 91ஆம், 92ஆம் சரத் துக்கள் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. ஆகவே 2ஆவது குடியரசு அரசியல் திட்டம் ஒருபுறம் ஜஞதிபதியை நிர்வாகசுதந்திரம் மிக்க ஒருவராகவும் மறுபுறமாக தான் புரியும் நிர்வாக கடமை களு க் குத் தேசிய அரசுப் பேரவைக்குப் பொறுப்புடையவராகவும் ஆக்கிவிடுகின் றது. ஆயின் எந்தளவுக்கு ஜனதிபதி பேரவைக்குப் பொறுபுடையவர் என்பதனை நாம் விசாரணை செய்யும் போது இதுவரை காலமும் இருந்துவந்த (1977வரை) அர சிய லமைப்பில் காணப்பட்டது போன்று தற்போதைய நிர்வாகி பேரவைக்கு நேரடியாகப் பொறுப்புடையவர் அல்லர். ஏனெனில் அவர் பேரவையின் ஒர் உறுப்பினர் அல்லர், மந்திரிசபை நிர்வாகமுறையிலே பேரவை பெற் றிருந்த கட்டுப்பாட்டு அதிகாரத்தினை இப்போது இழந் திருக்கின்றது. ஜனுதிபதி விரும்பினுல் பேரவையில் பேச லாம். விரும்பாதபோது தன்னைப் பேரவையின் பிடியில் இருந்து விலக்கிக்கொள்ளலாம். ஆகவே நிர்வாகத் துறையின் ஏகபோக அதிகாரத்தினை அரசியல் அமைப்பு நேரடியாக ஜனுதிபதிக்கு வழங்குகின்றது. மந்திரி சபை என்பது இவருக்குக்கீழ் இயங்கும் ஆலோசனை
21

களை வழங்கும் நிலையிலேயே உள்ளது. எல்லா நிர்வாக முடிவுகளை எடுக்கும் சட்ட அதிகாரத்தினையும் அவற்றினை மந்திரிகள் மூலம் செயல்படுத்தும் பூரண இறைமை யினையும் அரசியலமைப்பின்மூலம் ஜனதிபதி பெற்றவ ராகின்ருர், இதனுல் இதுவரை காலமும் இருந்து வந்த கூட்டுப் பொறுப்பு என்ற அம்சம் சிதைவு படு வதுபோல் எமக்குத் தெரிகின்றது. மந்திரிகள் ஜனுதி பதியினுல் நிர்ப்பந்திக்கப்படுவதாகத் தெரிகின்றது. ஆனல் ஜனதிபதி, மந்திரிகள் அடங்கிய ஒரு குழு நிர் வாகத்திற்குப் பொறுப்புடையது என அரசியலமைப்புக் கூறுகின்றது. அதாவது ஜனதிபதியும், மந்திரி சபையும் சேர்ந்து அரசாங்கத்திற்குப் பொறுப்புடை யது என இங்கே கொள்ளப்படுகின்றது. இங்கே ஜஞதி பதி பிரிந்துநின்று செயற்படப் போகின்ருரா? அல்லது மந்திரிசபையுடன் இணைந்து முடிவெடுக்கப்போகின்ருரா என்பதனை முடிவெடுக்க இ ன் னு ம் கால அவகாசம் தேவை. எல்லாக் கொள்கையாக்கத்திலும் அவர் மந்திரி சபையோடு ஒத்து நின்ருல் மந்திரிசபையின் சம்மதத் தோடு தொழிற்படுகின்ருர் எனக் கூறலாம், மாருக மந்திரிசபையோடு சேராமல் தானுக ஏதாவது கொள்கை களே இயற்றி மந்திரிசபையை வற்புறுத்துவாராயின் அல்லது அந்த அடிப்படையில் அவர் தொழிற்படுவா ராயின் ஜனதிபதி முதன்மைபெற்றுப் பாராளுமன்ற முறை பிற்போடப்பட்டுள்ளது என்ற முடிவுக்கே நாம் வரவேண்டும்.
இவ்வரசியல் திட்டத்தின்கீழ் இலங்கை ஜனுதிபதி பின்வரும் அதிகாரங்களைக் கொண்டிருப்பார் என எடுத்துரைக்கின்றது.
(1) ஒவ்வொரு பாராளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பத்திலும் பாராளுமன்றத்தில் அரசாங்கக் கொள்கை பற்றி விளக்கம் அளிப்பதற்கு.
(i) பாராளுமன்றத்தின் சடங்கு மு  ைற யான இருக்கைகளுக்குத் தலைமை தாங்குவதற்கு,
(i) இராஜதந்திர முகவர்கள், தூதுவர்கள், உயர் அதிகாரிகள் என்போரை வரவேற்க, நியமிக்க, அங்கீரிக்க, பதவி வழங்குதற்கு,
(ty) குடியரசின் பொது இலச்சினையை வைத்திருக்க வும், பொது இலச்சினேயின் கீழ் பிரதம மந்திரி, அமைச்சரவையின் இதரமந்திரிமார்கள், உயர் நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர், இதர நீதிபதி களையும், சட்டப்படி அமைந்த நன்கொடைகளை வழங்குவதற்கும், பொது இலச்சினையைப் பயன் படுத்துவதற்கு.
(w) போர், சமாதானம் என்பவற்றைப் பிரகடனஞ்
செய்வதற்கு,
(wi) அரசியல் திட்டத்துக்கோ, எழுத்துருவில் உள்ள சட்டத்துக்கோ, சர்வதேச சட்டத்துக்கோ, மரபுகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் முரணுகாத வகையில் அவர் செய்யவேண்டுமெனக் கேட்கப் பட்டுள்ள அல்லது அதி கா ர மளிக்கப்பட்ட நடவடிக்கைகளைச் செய்வதற்கு ஆன அதிகாரங் ö拿。

Page 24
இத்தகைய ஜனதிபதி தனக் களிக் கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி ஒரு சர்வாதிகாரியாக மாறிவிட வாய் ப் புண் டு என்பதே இந்த முறைக்கு எதிராகத் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுட் பலமான தாகும். ஆணுல் இவ்வரசியல் திட்டத்துக்குச் சார்பா னவர்கள் பின்வரும் கருத்துக்களை எடுத்துக்கூறி அதனை மறுத்தனர். அரசாங்கக் கொள்கைகளை விளக்கிச் சொல்லி நடைமுறைப்படுத்துவதற்கும் வருடாந்த வரவு செலவுத் திட்டத்தை அங்கீகரிக்கச் செய்வதற் கும் ஜனதிபதி பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவில் தங்கியிருக்க வேண்டுமென்றும், ஜஞதிபதி சர்வாதிகாரியாக மாற முற்பட்டால் பாராளுமன்றம் அவரைக் கட்டுப்படுத்துமென்றும், பாராளுமன்றத்தி னதோ ஜனுதிபதியினதோ பதவிக் காலத்தை நீடிப் பதற் கெதிராக அரசியல் திட்டம் பாரதூரமான நிபந்தனையை விதித்துள்ளது. அதாவது தனியே : பங்கு பெரும்பான்மை பெற்றுவிட்டால் போதாது. ஒரு குடி யொப்பத்தின் மூலம் மக்களின் சம்மதத்தைப் பெறல் வேண்டும்.
பின்வரும் குற்றங்களுக்காகப் பாராளுமன்ற உறுப் பினர்கள் (சமூகமளித்தோர் உட்பட) முழு எண்ணிக் கையில் 3 பங்கினர்க்குக் குறையாதோர் சாதகமாக வாக்களித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானமொன்றின் மூலம் ஜனதிபதியைப் பதவியிலிருந்து நீக்கலாம்.
(i) அரசியலமைப்பை வேண்டுமென்றே மீறிய
குற்றம் (i) தேசத்துரோகம் புரிந்த குற்றம் (ii இலஞ்சம் பெற்ற குற்றம்
(iW) தமது பதவிக்குரிய அதிகாரங்களைத் துஷ்பிரயோ கஞ் செய்தமையை உள்ளடக்கி துர்நடத்தைக் கான அல்லது ஊழலுக்கான குற்றம். (V) ஒழுக்கக் கேட்டை உட்படுத்தும் ஏதேனும் தவறு போன்ற காரணங்களினுல் ஜனதிபதியைப் பதவி யில் இருந்து நீக்கலாம்.
அடுத்ததாக இலங்கையின் ஜனதிபதியின் பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பத்தை நோக்குவோம்.
(i) ஜனதிபதி ஒருவர் பதவி வகிக்கும் காலத்தில்
இறந்தால்,
(i) ஜனதிபதி ஒருவர் தனது கைப்பட எழுதி சபாநாயகருக்கு விலாசமிட்டு தனது பதவியை இராஜிமைாச் செய்தால்,
(i) ஜனுதிபதி இலங்கையின் பிரசை என்ற
அந்தஸ்தை இழக்கும்போது,
(iv) ஜனதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் அவரது பதவிக்காலம் தொடங்கி ஒரு மாத காலத்துள் தாமாகவே பதவியை ஏற்காத விடத்து.

(w) ஏதாவது குற்றச்சாட்டின் பேரில் ஜனதிபதி
பதவியிலிருந்து நீக்கப்படும்போது. (wi) ஜனதிபதிப் பதவிக்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப் பட்டது முறையானதல்ல எனவும் அப்பதவிக்கு வேறு ஒருவரும் தெரிவு செய்யப்படவில்லை எனவும் உயர் நீதிமன்றம் தீர்மானிக்கும்போது போன்ற இவ் ஆறு சந்தர்ப்பங்களில் ஜனதிபதி யின் பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பம் காணப் படுகின்றது. இறுதியாக இலங்கைக் குடியரசினுள் ஏதாவது குற்றஞ் செய்தவர் எனத் தண்டனை வழங்கப்பட்ட ஒருவருக்கு மின்னிப்பு வழங்கும் அல்லது தண்டனை வழங்கும் அல்லது தண்டனையை ஒத்திவைக்கும் அதி காரம் இலங்கையின் ஜனதிபதிக்கு உண்டு. இவ்வாறன அதிகாரங்கள் கடமைகளைக் கொண்ட ஜனதிபதித்துவ முறையாகக் காணப்பட்டாலும் இம்முறை பலருடைய கண்டனங்களுக்கும் உள்ளாகியுள்ளது. 2ஆவது குடியரசு அரசியல் திட்டத்தில் எடுத்துக்காட்டப்பட்ட பலவீனங் களில் முக்கியமானது. ஜனுதிபதிக்கு முரண்பாடான கட்சி ஒன்று பதவிக்கு வரும்போது தனக்கு ஆதர வில்லாத பாராளுமன்றத்தை எவ்வாறு நடத்த முடியும் என்பதாகும். கலாநிதி N. M. பெரேரா அவர்கள் 'முரண்பாடான கட்சி பதவிக்கு வந்தால் ஜனதிபதி யின் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற மறுக்க லாம். இதனுல் அரசாங்கம் அசைவற்றுவிடும். இதனுல் அரசியற்திட்டமும் பாராளுமன்றமும் பொதுமக்கள் பார்வையில் விளையாட்டுப் பொருளாகிவிடும்" என்றுர், எமது ஜனதிபதியும் இவ்விடயம் பற்றி அடிக்கடி மேடைகளில் பிரஸ்தாபித்து வருகின்ருர், அதாவது அடுத்த பொதுத்தேர்தல் நடக்கும் போது தானே ஜனதிபதிப் பதவியை வகிப்பதாகவும் அரசாங்கக் கட்சி யையும் எதிர்க்கட்சியையும் பிரதம அமைச்சரவையை யும் தானே தெரிவு செய்வதாகவும் தன்னைப் பதவியி லிருந்து நீக்கவோ அல்லது தனது அதிகாரத்தினைப் பறிக்கவோ நாடாளுமன்றத்துக்கு என்றும் உயர்நீதிமன்றத்தின் மூலம் இதனைச் செய்ய முடிகின்ற போது அது நிகழாதவாறு பாராளுமன்றத் தினேக் கலைக்க தனது அதிகாரம் உண்டென்றும் கூறி யுள்ளார். மேலும் 1982இன் இந்திய பத்திரிகையான இந்துவிற்கு அளித்த பேட்டி ஒன்றில் 1983இல் அமைக் கப்படும் அரசாங்கம் தனது சட்டசபையாகவே இருக்கு மென்றும் அச்சபை தனது கொள்கையையே அமுல் படுத்தவேண்டும் என்றும் அது அவ்வாறு செய்யத் தவ றின் பிரெஞ்சு ஜனதிபதி டீகோல் செய்ததைப் போல அரசாங்கத்தைப் பதவியில் இருந்து நீக்குவதைத் தவிர வேறு வழியில்லாமல் இருக்கும் என்றும் கூறியுள்ளார். அதிலிருந்து ஜனதிபதிக்கு முரணுன கொள்கையுடைய ஒருகட்சி பதவிக்கு வருமிடத்து ஜனதிபதியை அனு சரித்தே நடக்க வேண்டும். இல்லாவிட்டால் அக்கட்சி தொடர்ந்திருப்பது ஜனதிபதியின் கையிலேயே இருக் கின்றது என்பதனையே காட்டுகின்றது.
2 -

Page 25
செய்முறைப் புவியியலில் புள்ளிவிட
வரைபடங்களும் வரைபுகளும் - 2 Diagrams and graphs for the Statistical data in Practical Geog
s a
புவியியலில் பயன்படுத்தப்படுகின்ற தரவுகளுக்கு இழை Polygon), fiq posit su%mus (Frequency Curve), Sgt.G Big வற்றை அமைத்தலும் அவற்றின் பயன்பாடும்,
புவியியலில் பயன்படுத்தப்படுகின்ற பல்லினப் பண் புடைய தரவுகள் அல்லது புள்ளிவிபரங்கள். அத் தரவு களின் பண்புகளைப் பிரதிபலிக்கக்கூடியவகையிலும், எளி மையாக விளங்கக்கூடிய முறையிலும் படமாக்கப்படு கின்றன. இதனுலேயே நீண்ட சிக்கலான தரவுகளின் சுருக்க வடிவமே வரைபடங்களும் வரைபுகளும் என்று குறிப்பிடப்படுகின்றன. புள்ளிவிபரவியலில் தொடர்ச் சியான பகுப்பாய்வுகளுக்குப் பயன்படுகின்ற வரைபுகள் என்னும் வரிசையில் இடம்பெறுகின்ற இழைவரையம், மீடிறன் பல்கோணி, மீடிறன் வளையி, திரட்டு மீடிறன் வளையி, புவியியற் தேவைகளுக்கான தரவுகளைக் குறித் துக்காட்ட, விளக்கமளிக்க எவ்வாறு பயன்படுகின்றது என்பது பற்றிய ஆரம்ப விளக்கத்தைக் கொடுப்பதற் காக இக் கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது.
இழைவரையம் அல்லது ح==ے மீடிறன் வரைபடம்
நீண்ட தரவுத் தொகுதிகளை வகுப்பாக்கலுக்கும் அட்டவணைப் படுத்தலுக்குமான ஒரு படிமுறையாக
அட்டவணை 1.
1931 - 1980 ஆண்
வரண்ட பிரதேச மகாபருவத்தி
(மீ. மீற்றரில்)
வருடம் மழை 5A(TRLD மழை வருடம்
வீழ்ச்சி ரு வீழ்ச்சி ரு
1931 1011 194 109 19ច 1932 1096 1942 924 1952 1933 1216 1943 | 1041 | 1958 1934 1024 1944 989 1954 1935 664 1945 876 1955 i936 1068 1946 970 1956 1937 1010 1947 1287 1957 1938 911 1948 700 1958 1939 591 1949 1138 1959 1940 828 1950 881 1960
(episcid : Yoshino, M. M. (1983). Climate, water
- 2
 

ரத் தரவுகளுக்கான
raphy – 2
S. T. B. இராஜேஸ்வரன், M. A.
விரிவுரையாளர்,
புவியியற்றுறை,
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் , pSusanguib (Histograms), LÊqngir usioGasman (Frequency Mpsö7 6użTruflassir (Cumulative Frequency Curves) GITT Gör go
மீடிறன் பரம்பல்கள் அமைகின்றன. நீண்ட அல்லது தொகையான தரவுகளை பந்தி உருவில் அமைத்து அவற்றைத் திட்டமாக வகுப்பாக்கிப் பெறப்படுவதே மீடிறன் பரம்பலாகும். ஒரு மீடிறன் பரம்பல் அட்ட வணையில் குறித்த தரவுகள் ஒரு ஒழுங்குமுறையில் வகுப் பாக்கம் செய்யப்பட்டு அவற்றிற்குரிய மீடிறன்களும் கணிக்கப்பட்டிருக்கும். வகுப்பொழுங்கு (வகுப்பாயிடை) களுக்கும் மீடிறன்களுக்கும் உள்ள தொடர்பைப் பட ரீதியாகக் காட்டுவதே இழைவரையமாகும்.
புவியியல் ஆய்வுகளில் பயன்படும் நீண்ட தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு அவற்றினின்றும் முடிவு களைப் பெறுவதற்குத் தரவுகளை வகுப்பாக்கல், அட்ட வணை அமைத்தல் அவசியமாகின்றது. அட்டவனை இல் நீண்டகாலத்திற்குரிய மழைவீழ்ச்சித் தரவு ஒன்று உதா ரணத்திற்குக் கொடுக்கப்படுகின்றது. இத் தரவுகளுக்கு வகுப்பாக்கம், அட்டவணை அமைத்தல் ஊடாக மீடி றன் பரம்பல் எவ்வாறு அமைகின்றது என்றும் இப்பரம்ப லுக்கு இழைவரையம் எவ்வாறு அமைக்கப்படுகின்றது என்பதையும் நோக்குவோம்.
டுகளுக்கிடையிலான நிற்கான சராசரி மழைவீழ்ச்சி
மழை மழை மழை ويقرؤيته "ها- اقل500 | 5 قوقdه tP-اق) له | aقdه 852 1961 988 197 1054 944. 1962 1018 1972 782 681 1963 1166 1973 - 966 936 1964 1213 1974 888 1099 196ಿ | 24 I975 560 544 1966 1088 1976 755 822 1967 933 1977 882 1699 夏96& 1089 1978 954 729 1969 696 1979 962 1134 1970 1250 1980 920
and agriculture in Sri Lanka.)
-س- 3

Page 26
செய்கை 1:
பொருத்தமான முறையில் மீடிறன் பரம்பல்
அட்டவணை அமைத்தல்
படி 1: தரவுகளின் வீழ்ச்சியினை அறிதல், அதாவது தரவுக் கூட்டத்தின் ஆகக்கூடிய, ஆகக் குறைந்த பெறுமானங்களை அறிந்து அவற் றின் வித்தியாசங்களைக் காண்பது ஆகும்.
படி 2 : வீச்சினை அடிப்படையாகக்கொண்டு வகுப் பாயிடைகளின் எண்ணிக்கையைத் தீர்மா னித்தல்,
படி 3 வகுப்பாயிடைகளின் அகலத்தை அல்லது பருமனத் தீர்மானித்தல், இது பின்வருமாறு
கானப்படும்,
-- வீச்சு TYYTTmT S TTT S JSAu SSS SS SSAASSSSSASASASASS
வகுப்பாயிடைகளின்
எண்ணிக்இை
படி 43 வரவுக்குறி அமைத்து ஒவ்வொரு வகுப்பா யிடைகளுக்குமுரிய மீடிறன்களைக் கணித்தல்.
செய்கை 11:
பொருத்தமான அளவுத் திட்டத்தில் படத்தை அமைத்தல்
படி 1 : 'X' அச்சில் வகுப்பாயிடைகளையும் "Y' அச்சில் மீடிறன்களேயும் காட்டுவதற்குப் பொருத்தமான கோடுகளை முறையே கிடை யாகவும் குத்தாகவும் வரைந்துகொள்ளுதல் வேண்டும். (தேவையான அளவுத் திட்டத் தைத் தெரிவுசெய்யலாம்)
படி 2 : அட்டவணைப் பெறுமானங்களுக்கு ஏற்ப முறைப்படி மீடிறன் செவ்வகப் படங்களைத் திருத்தமாக வரைதல் வேண்டும்.
படி 3 வரைபடத்திற்குப் பொருத்தமான தலைப்
பிடல்,
(படங்கள் தரவுகளுக்கான சுருக்க வடிவமாக
இருப்பதனுல் திருத்தமாகவும், தெளிவாகவும் அமைக்கப் படல் அவசியம்.
அட்டவணை - 1 இன் தரவுகள் 50 ஆண்டுகளுக்குரிய மழைவீழ்ச்சித் தரவுகளாகும். இத்தரவுத் தொகுதியில் ஆகக்கூடிய மழைவீழ்ச்சியாக 1699 மி. மீ. மழையும் ஆகக் குறைந்த மழைவீழ்ச்சித் தரவாக 544 மி. மீற்ற ரும் அமைகின்றது. ஆகவே, 200 மி. மீ. இடைவெளி யில் வகுப்பாயிடைகள் அமையத்தக்கதாக வகுப்பாக்கம் செய்யப்பட வேண்டுமெனின், வகுப்புக்களும் அவ்வகுப் புக்களுக்குள் எத்தனை ஆண்டுகள் இடம்பெறுகின்றன (மீடிறன்) என்பதும் கணிப்பிடப்பட்டு அட்டவணை 11இல் காட்டப்பட்டுள்ளது.
- 2

அட்டவணை - 11
மழைவீழ்ச்சித் தரவுகளுக்கான மீடிறன் பரம்பல் அட்டிவணை
வகுப்பு அல்லது மீடிறன் வகுப்பாயிடை (Frequency) (Class interval)
50 - 700 08
701 - 900 O 24 1100 ہے۔ 901 110 - 1300 07 130 - 1500 00 150 - 1700 O
” 50 (மொத்த ബ ஆண்டுகள்
மொத்த மீடிறனுக் குச் சமன்)
அட்டவணை 11 இல் இருந்து 08 ஆண்டுகளில் 501 மி. மீற்றருக்கும் 700 மி. மீற்றருக்கும் இடையில் மழை நிகழ்ந்துள்ளது என்றும் 10 ஆண்டுகளில் 70 மி. மீற்ற ருக்கும் 900 மி. மீற்றருக்கும் இடையில் மழைவீழ்ச்சி நிகழ்ந்துள்ளது என்றும் இலகுவாகப் பகுப்பாய்வு செய்து கொள்ள முடிகின்றது. இதுபோல ஏனைய மழைவீழ்ச்சி வகுப்புக்களிலும் மீடிறனில் உள்ள ஆண்டுகளில் நிகழ் வுகள் இடம் பெற்றுள்ளன என்று அறிந்து கொள்ள முடிகின்றது. எனவே, 50 ஆண்டு நிகழ்வுகள் சுருக்க வடிவமாக மாற்றப்பட்டமை மேற்கொண்டு மழை வீழ்ச்சி தொடர்பான முடிவுகள் எடுப்பதற்கு முதற் படியாக அமைகின்றது எனலாம்.
அட்டவணை - 11 இல் காட்டப்பட்ட வகுப்பாயிடை களுக்கும், மீடிறன்களுக்கும் இடையேயான தொடர்பை பட ரீதியாக அமைத்துக் காட்டும் விளக்கமே இழை வரையமாகும். இங்கு "X" அச்சில் வகுப்பாயிடைகளும் "Y அச்சில் மீடிறன்களும் குறிக்கப்பட்டு படம் வரையப் LG56õdg. Lul Lb “ (5šgi LT i" (Vertical Bar) வரைபடம் போல அமைக்கப்படினும் " பார் களுக்கு இடையில் இடைவெளியில்லாமை கவனிக்கத்தக்கது. அட்டவணை 11 இன் தரவுகளுக்குரிய படம் பின்வரு மாறு அமையும் (படம் - 1).
(குறிப்பு : குத்து, கிடை அளவுத்திட்டங்களை நோக்குக.)
மேற்படி படத்தில் இருந்து பின்வரும் முடிவு களைப் பெறக்கூடியதாக உள்ளது. 901 - 1100 மி. மீ. மழை வீழ்ச்சி வகுப்பிலேயே அதிக நிகழ்வுகள் (மீடிறன் இடம்பெற்று இருக்கின்றபடியினுல் வரைபடத்தில் அதிகூடிய நீளமுள்ள செவ்வகத்தை இவ் வகுப்பாயிடை கொண்டுள்ளது. வரண்ட பிரதேச மொத்த மழை
4 -

Page 27
ஆண்டுகளில் ஏறத்தாழ 48% [ 100 se 48%.
இவ் வகுப்பிலேயே நிகழ்ந்துள்ளது. ஏறத்தாழ 68% ஆண்டுகளில் 701 - 1100 மி. மீற்றருக்கு இடையில் நிகழ்ந்துள்ளது. 84% ஆண்டுகள் 501 - 1100 மி. மீற்ற ருக்கு இடையில் நிகழ்ந்துள்ளது. இது போன்ற விளக்கங் களை உடனடியாக இழைவரையத்தில் இருந்து பெற்றுக் கொள்ள முடிவது இதன் விசேட பண்பாகும்.
மீடிறன் பல்கோணியும் மீடிறன் வளையியும்
வகுப்பாயிடை (வகுப்பு) களின் நடுபெறுமானத் திற்கும் மீடிறன்களுக்கும் இடையே உள்ள தொடர் பைக் காட்டும் வரைபே மீடிறன் பல்கோணி எனப் படும். மீடிறன் பல்கோணியை ஒரு வளையியாக மாற் றும் பொழுது அது மீடிறன் வளையி என்று அழைக்கப் UGLÈ).
அட்டவணை - 11 இல் உள்ள தரவுகளை 15 nt is நோக்கும் பொழுது 08 ஆண்டுகளில் 501 மி. மீற்ற ருக்கும் 700 மி. மீற்றருக்கும் இடையில் மழைவீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று விளங்கிக் கொள்ளும் அதே சமயம் எவ்வளவு மழைவீழ்ச்சி என்று வகுப்பாயிடையில் இருந்து எமக்குத் தெரியாது. அதாவது 50 மி. மீற்ற ருக்கும் 700 மி. மீற்றருக்கும் இடையில் எப்பெறுமான மாகவும் இது அமைந்திருக்கலாம். ஆகவே இவ்வகுப் பாயிடைக்குரிய நடுப்பெறுமானத்தைக் கணிப்பதன் மூலம் 08 ஆண்டுகளிலும் வகுப்புச் சராசரி (நடுப்பெறு மானம்) மழை கிடைக்கின்றது எனக் கணிப்பது பொருத்தமாகின்றது. எனவே, 501 - 700 மி. மீ. வகுப் பாயிடையில் நடுப்பெறுமானம் 600.5 மி. மீற்றர். மழை கிடைக்கின்றது என்று இலகுவாக முடிவெடுக்கக் கூடியதாகவுள்ளது. இது போல ஏனைய வகுப்பாயிடை களுக்கும் நடுப் பெறுமான த்தைக் கணித்தறியலாம். அட்டவணை - 111 இல் வகுப்பாயிடை, நடுப்பெறு மானம், மீடிறன் கணிக்கப்பட்டுக் காட்டப்பட்டுள்ளது. வகுப்பாயிடைகளின் நடுப்பெறுமானத்திற்கும் மீடிற னுக்கும் உள்ள தொடர்பைக்காட்டும் வரைவே மீடிறன் பல்கோணியாகும். இது முறிகோட்டினுல் உணர்த்தப் படும். (படம்-1, அ)
அட்டவனே-11 அட்டவணை-11இன் வகுப்பாயிடைகளின்
நடுப்பெறுமானம் வகுப்பாயிடை வகுப்பு நடுப்பெறுமானம் மீடிறன்
700 50丑一 700 501 700 జా 6005 08 70 - 900 201 900 ஐ 800.5 II () 901 - 1100 901 + 1100 = 1000, 5 24
300 1101 - 1300 ' ' ' - soo. of
1301 - 1500 1901 1000 - 1400 5 00 2501 - 1700 150 1700 一 【600,5,0巫
ஜூ - 25
 

மீடிறன் பல்கோணி முறிந்த கோடாகக் கீறப் பட்டபோதிலும் இம்முறிகோட்டினை ஒரளவு செம்மைப் படுத்தி வளையிபோல அமைத்துக்கொள்ள முடியும். அப்படி அமைத்துக்கொள்ளும் பொழுது அவ்வளையிற்கு * மீடிறன் வளையி " என்று பெயர். பொதுவாக மீடிறன் பல்கோணியை ஒட்டிச்செல்லுமாறு வளையி வரையப் படும் பொழுது மீடிறன் வளையி சுலபமாக அமைக்கக் கூடியதாக உள்ளது. சில வேளைகளில் வகுப்பாயிடை களின் எண்ணிக்கைகளே அதிகரிக்கும் பொழுது மீடிறன் பல்கோணியின் பக்கங்களின் எண்ணிக்கை கூடுவதஞல் பல்கோணி வளையி போல அமையும். இதுவும் மீடிறன் வளையி என்று அழைக்கப்படும். é6% שחש4-פATLDחsפ அட்டவணை - 1 இன் தரவுகளை 100 அல்லது 50 மி. மீ. இடைவெளியில் வகுப்பாக்கினுல் வகுப்பாயிடைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் ஒவ்வொரு வகுப்பா யிடைகளுக்குமுரிய மீடிறன்களும் வேறுபடும். இதன லேயே பல்கோணியுருவம் வளையிபோல உருப்பெறு கின்றது. அட்டவணை - IV இல் 100 மி. மீ. இடை வெளியில் வகுப்பாயிடை அமையும் பொழுது மீடிறன் பரம்பல் எவ்வாறு வேறுபடுகின்றது என்பது காட்டப் படுகின்றது.
அட்டவணை - IV.
100 மி. மீ, இடைவெளியில் மீடிறன்பரம்பல்
வகுப்பாயிடை மீடிறன் வகுப்பு நடுப்பெறுமானம்
5。550 03 600 ܚ- 501 601 - 700 05 650,5 701 - 800 03 750.5 8505 07 9009 سيس- 801 950.5 12 1000 سس- 901 1001 - 1100 12 1050, 5 1101 - 1200 03 II50。5 J250.5 04 1300 سسه 1201 1301 - 1400 00 I350.5 1450.5 00 (1500 پس I {0 H 1550.5 00 (1600 سيس- 1507 1601 - 1700 0. 1650.5
இதற்கான வளையி எவ்வாறு அமையும் என்பதை நீங்களே அமைத்துப்பாருங்கள். பல்கோணி உருவம் வளைகோடு போல மாறுவதை அவதானிக்கலாம். சில சந்தர்ப்பங்களில் மீடிறன் பல்கோணியைச் செப்பம் செய்து வளையி போலாக்குவதற்குச் சில கணிப்பு முறை கள் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக ஒரு வகுப்பாயிடைக்குரிய மீடிறனே அழுத்தம் செய்வதற்கு (Smoothing a frequency Polygone) 955 Qugûunt யிடைக்குரிய மீடிறனின் இரண்டு மடங்குடன் அதற்கு நேர் கீழேயும் மேலேயும் உள்ள மீடிறன்களைக் கூட்டி வரும் தொகையை நான்கால் (4) பிரிக்கவேண்டும். அட்டவணை - V இல் அட்டவணை - IIIஇன் தரவுகள் எவ்வாறு மீடிறன் வளையியைப் பெறுவதற்கு அழுத்த மாக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகின்றது.

Page 28
அட்டவணை-V
அழுத்தமாக்கப்பட்ட மீடிறன் அட்டவணை
வகுப்பாயிடை நடுப்பெறு மீடிறன் அழுத்தமாக்கப்பட்ட அழுத்தமாக்கப்
IBFGTih மீடிறன் கணிப்பு uť. L. Šlapci 501 - 700 600.5 08 *x* 6.5
2×10 + S_士2参
707 - 900 800.5 10 4. 13.0 901 - 1 100 1000.5 24 x 240 + I6.25 1101 - 1300 1200.5 07 *字土"- 9。5 130 - 1500 1400.5 00 **子ェュ 20 1501 - 1700 1600.5 or * * * * 0.75
இப்பொழுது அட்டவணை Vஐ நோக்கும் பொழுது முன்னைய மீடிறனில் இருந்து அழுத்தமாக்கப்பட்ட மீடிறன் எவ்வளவு தூரம் வேறுபடுகின்றது என்பதை அறிந்துகொள்ள முடியும். அழுத்தமாக்கப்பட்ட மீடிறனுக்கு வளையி அமைக்கப்பட்டால் அது பல் கோணியினின்றும் வேறுபடுவதை அவதானிக்கலாம் (படம்-1 ஆ).
இவ்வளையிகளில் இருந்து தரவுகளின் பண்புகளை அறிந்து கொள்ள முடியும், மீடிறன் வளையிகளின் அமைப்பிற்கு ஏற்ப முடிவுகளும் வேறுபடும். (வளையி கள், சமச்சீர் வளையிகள், சமச்சீரற்ற வளையிகள், U வடிவ வளையிகள், வடிவ வளையிகள் எனப் பலவகைப் படும்). தரவுகளின் பரம்பல் நிலைகளை விளக்குவதற்கு வளையிகள் பெரிதும் துணைபுரிகின்றன. எனவே, புவி யியல் தரவுகளின் பகுப்பாய்வுகளின்போதும் மீடிறன் வளையிகள் பெரிதும் விரும்பப்படுகின்றன. உதாரண மாக ஒரு பிரதேசத்தின் மழைவீழ்ச்சிப் புள்ளி விபரங் களில் இருந்து பரம்பல் நிலைகளை அறிந்து கொள்வதற்கு இவை விரும்பப்படுகின்றன. அதாவது தரவுகள் சமச் சீராக அமைந்துள்ளனவா, அல்லது சமச்சீரற்றுக் காணப்படுகின்றனவா என்பதை அறிய இவை உதவு கின்றன.
திரட்டு மீடிறன் வளையி :
வகுப்பாயிடைகளின் மீடிறன்களை ஒரு ஒழுங்கில் (ஏறுவரிசை, இறங்குவரிசை) தொடர்ச்சியாக கூட்டிப் பெறப்பட்ட பெறுமானங்கள் திரட்டு மீடிறன்கள் எனப் படும். இவை இரு வகைப்படும்.
1. குறைந்தவகைத் திரட்டு மீடிறன் (Less than type) 2. கூடியவகைத் திரட்டு மீடிறன் (greter than type)

அட்டவணை 11இன் தரவுகள் குறைந்த, கூடிய திரட்டு மீடிறன் பெறுமானங்களுக்கு மாற்றும் பொழுது அவை அட்டவணை Vஇல் காட்டப்பட்டுள்ளது போல அமையும். (அட்டவணையில் சதவீத திரட்டு மீடிறனும் கணிக்கப்பட்டுள்ளது).
a 'Laisor VI
இரட்டு மீடிறனும் சதவீத திரட்டு மீடிறனும்
குறைந்தவகை ' கூடியவகை வகுப்பாயிடை மீடிறன் இதைத்தை
GO)
சதவீத திரட்டு திரட்டு ಕಣ್ಣೀರು
le.
சீட்டு மீன் மீன் 1:
501- 700 08 08 16% 50 100%
G
701 - 900 10 8 36% 49 98% ,90】一五五00 24 4& 84% 49 98% 1101-1300 07 49 98% 42 84% 臀 00 49 98% 18 36%. 1501-1700 01 50 100% 08 16%
வகுப்பாயிடை நடுப்பெறுமானங்களுக்கும் திரட்டு மீடிறன் பெறுமா னங்களுக்கும் இடையேயுள்ள தொடர்பை விளக்கும் வளைகோடே திரட்டு மீடிறன் வளையியாகும். (படம் 2).
இவ்வளையி மூலமாகவும் தரவுகளின் முடிவுகளை அறியக் கூடியதாக உள்ளது. உதாரணமாக 08 ஆண்டு களில் 700 மி. மீற்றரும் அதற்குக் குறைந்த மழை வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது என முடிவிற்கு வரக்கூடிய தாக இருக்கின்றது. இதேபோல ஏனைய வகுப்பா யிடைக்கு உரிய திரட்டு மீடிறன் பெறுமானங்களுக்கும் விளக்கமளிக்க முடியும்.
இதேபோல கூடிய திட்டு மீடிறன் வளையியில் இருந் தும் விளக்கங்களையும், முடிவுகளையும் பெற முடியும் .
சதவீத திரட்டுமீடிறன் பெறுமானங்களும் அதற்குரிய வளையிகளும் தரவுக்கூட்டங்களின் பல்வேறுபட்ட பண் புகளை எடுத்துக்காட்ட உதவுகின்றது. அதாவது ஒவ் வொரு வகுப்பாயிடைகளின் திரட்டு மீடிறன்கள் சத வீதத்திற்கு மாற்றப்படுகின்றது. இதனுல் ஒன்றுக்கு மேற்பட்ட பிரதேசத் தரவுகள் ஒப்பிடக்கூடியதாக அமைகின்றது. சதவீத திரட்டுமீடிறன்களின் LuaLu 6ör *லோறன் வளையி (Lorenz Curve) போன்ற வளை கோடுகளை அமைப்பதற்கும் பயன்படுகின்றது.
திரட்டுமீடிறன் வளையிகளை அமைத்தபின்னர் அவற் றில் இருந்து 50%, 75%, 25% பெறுமானங்களையும் அறிந்துகொள்ளமுடியும். அதாவது நடு எண், மேற் காலணை, கீழ் காலணப் பெறுமானங்களை அறிந்து கொள்ள முடியும்.
புவியியல் தரவுகளைப் பகுப்பாய்வு செய்யும்பொ
ழுது நடுப்பெறுமானம், காலணப் பெறுமானங்கள், வீச்சுக்கள் என்பவை மிகுந்த யேனுடையவையாக
6 -

Page 29
உள்ளன . மழைவீழ்ச்சிப் பரம்பல்களைப் பொறுத்தவரை யில் பிரதேசத்தின் சாதாரண நிகழ்வுகளை அறிவதற்கு மேற்குறித்த அளவீடுகள் பயன்படுத்தப்படுகின்றது. இந்நிலையில் மேற்படி வளைகோடுகள் பயனுடையவை யாகவுள்ளன. இடையம், காலணை போன்றவற்றைக் கணிதவாய்பாடுகள் மூலமும் அறிந்துகொள்ள முடியும், (இதற் குமுதல் இதழை நோக்குக.) ஆனல் திருத்த மாகக் கீறும் வளையிகளில் இருந்தும் இவற்றை அறிந்து கொள்வது திரட்டு மீடிறன் வளையியின் சிறப்பு அம்ச ԼԸrresւb. குறிப்பு :
வளைகோடுகள் அமைக்கப்படும்பொழுது வரைவுத் தாளில் இரு அச்சுக்களிலும் (X, Y) முறையே வகுப்பாபிடைகளுக்கும் திரட்டுமீடிறன் பெறுமா
1931-1980 இடையிலான வரண் SF y sy as rif மழைவீழ்ச்சித் தரவுகளுக்கு மீடிறன் பல்கோணியும்,
Y மீடிறன்
25 -
30 -
75 །
0 at
ܘܗ 05
#గ్యిస్ట్రీ -----
控 S ജ > C)
அளவுத்திட்டம் : Χ: " JLib 1 Y , 1.0/
 

னங்களுக்குமான பொருத்தமான அளவுத் திட்டங் களைத் தெரிவுசெய்துகொண்டு பின்னர் தரவுகளை வழமைபோலக் குறித்து, அவற்றை இணைத்து வளைகோடுகளைக் கீறவேண்டும். (திரட்டுமீடிறன் வளையிக்கு) சதவீத திரட்டுமீடிறன் வளையியை அமைக்கும்பொழுது "Y அச்சில் திரட்டுமீடிறன் பெறுமானங்களுக்குக் கணிக்கப்பட்ட ச த வீத திரட்டு மீடிறன் பெறுமானங்கள் குறிக்கப்பட்டு வளைகோடுகள் கீறப்பட வேண்டும்.
வளைகோடுகள் திருத்தமாக வரைதல் விரும்பத்
தக்கது. ஒவ்வொரு வளையிகளுக்கும் பொருத்தமான
தலைப்பிடுதல் அவசியம். (விளக்கப் படங்களை
நோக்குக.) ாட பிரதேச மகா பருவத்திற்கான
வரையப்பட்ட இழைவரையமும், மீடிறன் வளையியும்
மீடிறன் பல்கோணி (அ)
மீடிறன் வளையி (ஆ)
இழைவரையம்
Χ
ह्वा V
S S 9ܣܼܿ S S భ- 《 ഞ്ചു E tes ട് བྲོ།། ూ རྗེའི་ཐོ། = ஒரு வகுப்பாயிடை
! = 05 மீடிறன்

Page 30
அட்டிவ திரட்டு மீடிறன் பெறுமா
's.
eses essesse
Y
திரட்டு மீடிறன் 50
玺0*
30
20
| 00£I | 00II o 006 | 002
• 10g
ill

2500 VI
னங்களுக்கான வளையிகள்
(1) குறைந்தவகைத் திரட்டு மீடிறன் வளையி
ாண (2) கூடியவகைத் திரட்டு மீடிறன் வளையி
སྒྲི
ཕྱི་
28 -

Page 31


Page 32
(IIIf I LILL கல்வியாண்டு 198
இலங்கைப் பல்கலை LjůLů LTL (
P 52DID r6)of B.
o 565 I GILDIG
o IGJos SID I Dos
க. பொ. த. உயர்தரம் 3 பாட அல்ல பயிற்றப்பட்ட ஆசிரியர்கள்
விபரத்தினையும், விண்ண ருபா 10/- செலுத்தி ே பெற்றுக்கொ6 விண்ணப்ப முடிவுத்
விபரங்களுக்கு உதவி
LILL 1481
திருமகள் அழுத்தக

Il LlQILI#5sir 919 O
)க் கழகங்களின் நெறிகளான
A.
Jos B. Sc.
B. Com.
ங்களில் சித்தி பெற்றவர்கள்
து
விண்ணப்பிக்கலாம்.
ாப்பப் படிவத்தினயும் நரில் / தபால் மூலம் ப்ளலாம்.
திகதி 31-7-88
iň LIIIII i, டப் படிப்புகள் கல்லூரி,
1, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.