கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழ் அமுதம்

Page 1
. ܕ ܢ
அ.சே. சுந்த
eAL S S S S SA A A SA SA S ASA A A A SAAS S Seee AeAAA AAAA AAS AASAe
 
 
 
 
 

அமுதம்
புத்தகம்

Page 2

தமிழ் அமுதம்
மூன்ரும் புத்தகம்
இலங்கை முன்னுள் அமைச்சர் கனம் சு. நடேச பிள்ளை அவர்களது
முன்னுரையுடன்
பதிப்பாசிரியன்
அ. சே.சுந்தரராஜன், B, A,
இராமநாதன் கல்லூரி
சுன்னுகம், இலங்கை.
உரிமை பதிவு
1956. (ரூ. 14:25,
O

Page 3

முன்னுரை
பள்ளிக்கூட மாணவர்களுக்குத் தமிழ்ச் சுவையை உண்டாக்கத்
தக்க செய்யுட் பகுதிகளை அவர்கள் தரத்துக்கியைய வரிசைப் படுத்தித் தெளிவான உரையுடன் வெளியிடவேண்டும் என்ற எனது விருப்பத்தைச் சில ஆண்டுகளுக்கு முன் திரு. சுந்தரராஜ ஐயங்காரவர்களுக்குத் தெரிவித்தேன். அவர்கள் இப்பணியை மேற்கொண்டு தமது இதர நூல் வெளியீட்டுக்
கிடையில் "தமிழ் அமுதம்" என்ற வரிசையில் ஐந்து புத்தகங் களை அமைத்துள்ளார்கள். ஆரும் வகுப்புத் தொடங்கிப் படிப்படியாக மேல் வகுப்புகளில் உபயோகப்படுத்தக் கூடிய முறையில் இப்புத்தகங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன. இவ் வரிசையில் மூன்ரும் புத்தகம் இப்பொழுது வெளியிடப்படு கிறது. மற்றைய புத்தகங்கள் இனி வெளிவரும். இப்பொழுது வெளியிடப்படும் புத்தகத்தினின்று " தமிழமுதம் ' என்ற பெயரின் பொருத்தம் நன்கு விளங்கும். தமிழ் கற்கும் மாணவர்கள் படித்தின்புறவேண்டிய முக்கியமான செய்யுட் பகுதிகளைத் தமிழமுதம் கொண்டுள்ளது. தெரிந்தெடுக்கப் பட்ட செய்யுள்கள் சிறந்த முறையில் விளக்கப்பட்டிருக்
கின்றன.
இத்தகைய நூல்கள் மூலமாகத் திரு. சுந்தரராஜ ஐயங்காரவர்கள்
செய்துவரும் தமிழ்த்தொண்டு மிகவும் பயனளிப்பதாகும்.
இராமநாதன் கல்லூரி,
.1956--12 س-182
சுன்னுகம், Jr. நடேச gi?aII.
μ

Page 4
போருளடக்கம்
شد. بر باشد .
முன்னுரை கடவுள் வாழ்த்து
* 1 காவியப்பகுதி பழியஞ்சிய பாண்டியனுக்கு அருள் செய்தமை கடோற்கசன் தூது மெய்ப்பொருள் நாயனர் வரலாறு வாமனுவதாரக் கதை
11 வருணனைப் பகுதி சூரியாத்தமனம் முதுவேனில்
III நீதிப்பகுதி
(5ாலடியார்
திருக்குறள் குசேலோபாக்கியானம்"
IV. LUGüvg|Gdgpů58 தனிப்பாடல்கள் " தேசீயகீதம் பக்திப் பாடல்கள்
பக்கம்
20
44. 60
75
79
82 86 89
92 - 98 102
மொத்தம் செய்யுள்
26 21. 23
22
5
s
185 3
5
·
 
 

தமிழ் அமுதம்
மூன்ரும் புத்தகம்
கடவுள் வாழ்த்து
1. ஆய கலைகள் அறுபத்து கான்கினையும் ஏய உணர்விக்கும் என்னம்மை-துரய உருப்பளிங்கு போல்வாளேன் உள்ளத்தி னுள்ளே இருப்பளிங்கு வாரா திடர்.
1. இச் செய்யுள் கம்பர் பாடிய சரசுவதியந்தாதியின் காப்புச் செய்யுள்.
ஆய - ஆகிய; பொருந்திய கலைகள் - கல்வி வகைகள். அவை இதிகாசம், புராணம், தருக்கம் முதலியன. ஏய - ஏற்ற விதமாக, உணர்விக்கும் - உணரும்படி செய்யும். என் அம்மை - என் தாய்போன்றவள். தூய உரு பளிங்கு போல்வாள் - பரிசுத்தமான திருமேனி பளிங்குபோன்று வெண்ணிற மானவள். என் அம்மையாகிய பளிங்குபோல்வாள் - கலேமகள். இங்கு . என்னிடத்து.
அறுபத்து நான்கு கலைகளையும் நன்கு உணரும்படி அருள் செய்யும் தாயாகிய பளிங்குகிறத் திருமேனியை உடைய கலை வாணி எனது நெஞ்சிலே எழுந்தருளி இருக்கின்ருள்; ஆகை யால் எனக்கு எவ்விதமான இடையூறும் வாாாது,

Page 5
1. காவியப்பகுதி
Animu
ギ宰 ". . اسمه 1. பழியஞ்சிய பாண்டியனுக்கு அருள் செய்தமை.
இப்பகுதியிற் காணப்படும் செய்யுள்கள் பரஞ்சோதி முனிவர் அருளிச்செய்த திருவிளையாடற் புராணத்தினின்றும் எடுக்கப்பட்டவை. (பழியஞ்சிய படலம் 19-44). குலோத்துங்க பாண்டியன் காலத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் இங்கே கூறப் படுகின்றது.
கதைத் தொடர்பு.
திருப்புத்தூரிலிருந்து காட்டுவழியே தன் மனைவி, கைக் குழந்தையுடன் தன் மாமன் வீடு சென்ற ஒர் அந்தணன் வழியில் ஒர் ஆலமர நிழலில் தன் மனைவியை இருக்கச் செய்து,
தண்ணீர் கொண்டுவரச் சென்முன்.
அந்த- ஆலமரத்தில் முன்னுளில் எய்த அம்பொன்று சிக் குண்டு கிடந்தது. அஃது காற்றினல் அலைப்புண்டு கீழே விழுந்து அப்பார்ப்பனியின் வயிறு உருவும்படி தைக்க அவள் உயிர் நீங்கினுள். திரும்பி வந்த கணவன் அவள் இறந்தது கண்டு மனமழிந்து பெரிதும் வருந்தினன். அம்மா நிழலில் வில்லுங் கையுமாக கின்ற வேடன் ஒருவனைக் கண்டு, அவனே தன் மனைவியைக் கொலை செய்தான் என்று குற்றஞ் சாட்டி, அரசன்மீது ஆணையிட்டு, இறந்தவளைத் தோளின்மேலிட்டு, அவ்வேடனையும் உடன்கொண்டு அரசனிடஞ் சென்றன். சென்றவன் அரண்மனை வாயிலை அடைந்து, வேடனை முன்னே விட்டு, யாவருங் கேட்க முறையிட்டான். பின்பு நிகழ்ந்தன.
எலலாம இப்பாடத்திற் கூறப்பட்டுள்ள ØJ,
கதைச் சுருக்கம் " ":" ",': ' ';
வாயில் காப்போர் அரசனிடஞ் சென்று, * மன்னவனே, صر^ நம் அரண்மனை வாயிலில் வேதியன் ஒருவன் தன் மனைவியைக் கொலை செய்தான் என்று ஒரு வேடனை முன்னே விட்டு

பழியஞ்சிய பாண்டியனுக்கு அருள் செய்தமை 3
அவளைத் தூக்கிவந்து அங்கே இட்டு வருந்துகின் முன்” என்ற னர். அது கேட்ட அரசன் அஞ்சி வருந்தி வெளியே வந்து அந்தணன் நிலைமையைக் கண்டு மனம் வாடி, அவனை விசாரித் தான். அவன், “ இன்று இவளை ஒர் ஆலமா கிழலில் விட்டுத் தண்ணீர் கொண்டுவரச் சென்றேன். யான் திரும்பி வருமுன் இந்த வில் வேடன் அவளைக் கொன்று விட்டு அயலிலே நின் முன்” என் முன். அரசன் அளவற்ற துன்பமடைந்தான். பின்பு வேடனை நோக்க, அவன் அடி வணங்கி, "எங்தையே, யான் கொல்லவில்லை. கொன்றவரைக் காணவும் இல்லை” என்றன். எதிர்நின்றவர்கள், 'இவள் உடலில் அம்பு ஏறுண் டது எவ்வாறு? என்று கேட்டனர். அவன் 8 உண்மையில்
அதனை யான் அறியேன் ”ட் என்முன்.
கேட்ட மந்திரத்திலுள்ளார் யாவரும், ? இக் கொடிய குணமுள்ள் வேடனைத் தக்கபடி தண்டித்தால் அல்லாமல் உண்மை வெளிவராது ' என்றனர். அரசன் கட்டளைப்படி ஏவலாளர் அவ்வேடனைத் தண்டஞ் செய்து கேட்கவும் குற்ற மற்ற அவன் முன் சொல்லியபடியே கூறினன்.
பாண்டிய மன்னவன் பலவாறு தன்னுள்ளே சிந்தித்து, மந்திரிமாரை நோக்கி, ' இதனைப் பழைய அறநூல்களின் உதவியினல் ஆராய்ந்து அறியுங்கள் ” என்று கூற, அவர்கள், *இதனை அறநூலால் தெளிய இயலாது; தெய்வத்தின் அரு ளாலே தெளிவதே ஏற்ற வழி” என்றனர்.
மன்னவன் வேகியனை நோக்கி, 'நீ ஒன்றுக்கும் அஞ்ச வேண்டாம்; இப்பொழுது கின் மனைவிக்குரிய ஈமக்கடனை முடித்து வருவாயாக’ என்று கூறி, வேடனைச் சிறைவைத்தான். கடன் கழித்து மீண்ட அந்தணனைத் தன் கோயில் வாயிலில் இருக்கும்படி செய்து தன் குலதெய்வமாகிய சோமசுந்தரக் கடவுளை அடி பணிந்து குறையிாந்தான். அப்பொழுது, * இந்நகரிலுள்ள வாணிகக் தெருவில் ஒரு வீட்டில் திருமணம் நிகழப் போகின்றது; அவ்விட்டிற்கு கீ பிராமணனுடன் வா; எல்லாவற்றையும் தெளிவிப்போம்' என்று ஆகாயத்தில் ஓர் அசரீரி எழுந்தது. . . . , ,

Page 6
கேட்ட அரசன் தன் அரண்மன்ை வாயிலில் இருந்த மறைய வன உடனழைத்து, மாலையில் இருளும் சமயம் மாறு வேடம் பூண்டு மண மனையின் ஒரு பக்கத்தே இருந்தான். அன்றைய தினம் மணமகனது ஆயுள் முடிந்தமையால் பாசக் கயிற்றை யுடைய யமதூதர் இருவரில் ஒருவன், இறைவனருளால் அரச னும் அந்தணனும் கேட்கும்படி பின்வருமாறு கூறுவான்:- 8 இன்றைய தினமே இங்கு இவனுயிரைக் கொண்டுவரும்படி கூறினன் யமதருமாாசன். அவன் கட்டளைப்படி உடம்பில் எவ்வித நோயுமில்லாத இவனுயிரைக் கவர்வது எப்படி ?? அது கேட்ட மற்றவன், “வழியிலுள்ள ஆலமரத்திற் சிக்குண்ட அம்பினைக் காற்றினலே விழச்செய்து அம்மா நிழலில் ஒதுங் கிய பார்ப்பனியின் உயிரை எவ்வாறு கவர்ந்தோமோ அவ் வாறே இந்த மணவிழாவின் ஆரவாரத்தினலே கட்டிய தாம்பினை அறுத்துக்கொண்டு ஒடும்படி இந்தக் கன்றினை ஈன்ற பசுவினை வெருளப் பண்ணி இவனுயிர் கவர்க” என்முன்,
அச்சொல்லைக் கேட்ட அரசனும் அந்தணனும் அவ்விடம் இருந்தனர். சுற்றத்தார் யாவரும் கூடியபின் மணவினைக்குரிய மங்கலவினை தொடங்கிற்று. பலதிறப்பட்ட கொட்டுவாக்கியங் களின் ஒன்று கூடிய பேரோ சையினுல் கன்றினை ஈன்ற ஒரு பசு அஞ்சி, கட்டிய தாம்பினை அறுத்துக்கொண்டு அலறியடி ஒடி மணமகனை முட்டிற்று. அவனும் ஆவி நீங்கினன்.
அதனைக் கண்ட அந்தணன் தன் மனைவியை இழந்ததினும் அதிகமான துன்பமுற்றன். அரசனும் அவனேடு அரண் மனையை அடைந்து நிகழ்ந்ததை யெல்லாம் அமைச்சர் முதலி னுேர்க்கு உாைத்தான்.
மறையவனை இன்னுமொரு மணஞ்செய்து கொள்ளும்படி பெரும் பொருள் கொடுத்தனுப்பினன். வேடனைச் சிறை விடுத்து, சமாதான ஞ் செய்து அவன் விரும்பிய பொருள் பல அளித்து அவனிருக்குமிடம் போகவிட்டான், பின்பு கோயில் சென்று தன்னைப் பழியினின்றும் பாதுகாத்தருளிய சோம சுந்தரக் கடவுளைப் பன்முறை புகழ்ந்து வணங்கி, திருவிழா முதலியன செய்து துன்பங்களை அகற்றி உலகினுக்குயிராய் இருந்தனன்.
 
 

பழியஞ்சிய பாண்டியனுக்கு அருள் செய்தமை 5
சிறப்பியல்புகள்
இப்பகுதியில் அவதானிக்கத் தகும் சிறப்பியல்புகள் சில உள. அவற்றுள் முதலாவது பாண்டிய மன்னவனது உயர் குணத்தை ஆசிரியர் காட்டுங் திறன் ஆகும். அம் மன்னவன் சேவகர் சொற் கேட்டலும் அஞ்சினன்; தனது ஆட்சியில் ஒரு தீமை நிகழ்ந்தமைக்குப் பெரிதும் வருந்தினன். வெளியே வந்து அந்தணனது பரிதாப நிலையை நேரிலே கண்டு மனம் மெலி வுற்முன். அவன் கூறிய சொற்களைக் கேட்டபொழுது பொறுக்க முடியாத வேதனையுற்றன். பின்பு வழக்கு விசாரிக்கும் பொழுது, நடுவு நிலைமை தவமுது மிகுந்த பொறுமையுடனும் கிதானத்துடனும் உண்மையை அறிய அரும்பாடுபட்டான். முடிவில் இறைவன் அருளால் உண்மையை அறிந்தபொழுது வேதியனுக்குப் பொருள் முதலியன கொடுத்து அனுப்பிய தோடு, வேடனைத் தான் தெரியாமல் தண்டஞ் செய்தமைக்கு வருந்தி, அவனைப் பொறுக்கும்படி சொல்லி அரும் பொருள் கொடுத்தனுப்பினன்.
இங்ங்ணம் கதைப் போக்கில் அமைத்துக் காட்டிய அம் மன்னவனது அருங்குணங்களை ஆசிரியர் சில அடை மொழிகள் முதலியவற்றலே தெளிவு படுத்துகின்றர். “வன் திறல் மாறன்’, *அற நோக்கும் சந்தன வெற்பன்’, ‘வேந்தர்கள் சிங்கம்’, ‘உயிர்க் குயிராய் இருந்தனன் இறை குலோத்துங்கன்’, ‘அளி யான மனத்தாசன்”, என்பன போன்ற தொடர் மொழிகளால் அம்
மன்னவன் அருங் குணம் உய்த்துணர வைக்கப்படுகின்றது.
இரண்டாவதாக இவ் வரலாற்றினல் அறியத்தகும் ஒருண் மையினை ஆசிரியர், 'மணமகனே பிணமகனுய்" என்று தொடங்கும் செய்யுளிற் காட்டுகின்றர். இந்நூலில் இக்கதைக் குறிப்பினை உட்கொண்ட 'மன்றங் கறங்க” (100) என்று
தொடங்கும் நாலடிச் செய்யுளும் அவ்வுண்மையினை எடுத்துக்
கூறும்.
மூன்முவதாக அவதானிக்கத் தக்கது ஆசிரியர் கதை சொல்லும் பண்பே யாகும். சற்று விரிவான நிகழ்ச்சிகள் இடம் பெற்ற இக்கதையை ஆசிரியர் மிகச் சுருங்கிய சொற்களால், கதையின் வேகம் தடைபடாத முறையில், பொருள் நன்கு

Page 7
தன்னை வெறுத்து. புறம்போந்தான் = வெளியே வந்தான்.
புலப்படும்படி, புதிய புதிய நயங் தோன்ற, இனிய ஓசை நிரம்பிய அழகிய செய்யுள்களிற் கூறுகின்றர். இச் செய்யுள் களே எல்லாம் பன்முறை படித்துப் பார்த்து அவற்றின் ஒசையில் அமைந்த பண்பினை மாணவர் அனுபவித் துணர வேண்டும். அப்பொழுது கதை கூறுங் திறமையில் அமைந்த நயம் நன்கு புலப்படும்.
வாயில் காப்போர் பாண்டியனிடங் கூறியது
2. வாயிலு ளார்தாம் மன்னவன் முன்போய் மன்னாகம்
கோயிலின் மாடோர் வேதியன் மாதைக் கோலைசெய்தான் ஆயினன் என்ருேர் வேடனை முன்விட் டவிந்தாளைத் தாயினன் வந்திங் கிட்டயர் கின்றன் தமிஎன்றர். 1.
அரசன் வெளியே வருதல்
3. இறைமகன் அஞ்சா என்குடை நன்றல் என்காவல் அறமலி சேங்கோல் அஞ்சுப யந்தீர்த் தரசாளும்
2. கோவிலின்மாடு - "அரண்மனை வாயிற் பக்கத்தில். செய்தான் என்பது செய்தானுயினன் என்று விரிந்து நின்றது. முன்விட்டு - முன்னே விட்டு. அவிந்தாளே - இறந்தவளை. தாயினன் - தாயினனகி; அணைத்தவனகி. இங்கு இட்டு - இங்கே போட்டு. தமி-தமியணுய்; ஒன்றியாய். அயர்கின்றன் - வருந்துகின்றன்.
வாயில் காப்போர் அரசனிடஞ் சென்று, “மன்னவனே, நமது அரண்மனை வாயிற் பக்கத்திலே ஒரு பிராமணன், தன் மனைவியைக் கொலை செய்தான் என்று ஒரு வேடனை முன்னே விட்டு, அவளைத் தூக்கிவந்து அங்கே இட்டுத் தனியாய் வருந்து கின் முன்’ என்றனர். ' , , ,
8. இன்றமகன் - அரசன். அஞ்சா - அஞ்சி, அஞ்சா நின்று. மண் - உலகம். கலி - தீமை; துன்பம். கலி மூழ்கா - கலியில் மூழ்காமல். புலந்து
και η ν ,
பாண்டிய ராசன் அது கேட்டு அஞ்சி, *உயிர்களுக்குத்
தண்ணிய கிழலைத்தரும் என் வெண் கொற்றக் குடை நன்மு யிருந்தது; எனது காவலாகிய அறம் மிக்க செங்கோல் ஐந்து

பழியஞ்சிய பாண்டியனுக்கு அருள் செய்தமை 7.
முறைமையும் நன்றல் மண்கலி மூழ்கா முயன்றேத்தும் பொறைமையும் கன்றல் என்று புலந்து புறம்போங்தான். 2
வேதியனை வினவுதல்
. வேதியன் நிற்குந் தன்மை தெரிந்தான் மேலிவுற்றன்
சாதியின் மிக்காய் வந்த துனக்கேன் தளர்கின்ருய் ஒதுதி என்னக் காவல னைப்பார்த் துரைசான்ற நீதியு ளாய்கேள் என்றுரை செய்வான் நிகழ்சேய்தி. 3
அவன் கூறிய விடை
. இன்றிவளைக்கொண் டோர்வட நீழ லிடையிட்டுச்
சென்றுத னிர்கொண் டியான்வரு முன்இச் சிலைவேடன்
நீதியை யுடையவனே, கேட்பாயாக'
கூறுவானுயினன். ' ' '
பயங்களையுந் தீர்த்து அரசாளும் முறையும் நன்முயிருந்தது. உலகம் கலியில் மூழ்காதபடி முயற்சியிற் குன்றமல் தாங்கும் பொறுமையும் நன்முயிருந்தது" என்று தன்னை வெறுத்து வெளியே வந்தான்,
O O - O O عالنبیصلى الله عليه وسلم ' طرح بچہ ہم۔” அஞ்சு - ஐந்து. ஐந்து பயமாவன அரசன், பரிசனம், பகைவர், கள்வர், "
வனவிலங்கு முதலிய உயிர்களால் வரும் பயம். கன்று - இகழ்ச்சிக் குறிப்பு. ஆல் - அசை.
4. நிற்கும் தன்மை- துன்ப மிகுதியோடு நிற்கும் நிலைமை. தெரிந்தான்.
தெரிந்து; கண்டு. மெலிவுற்றன் - மெலிவுற்று; மனம்வாடி, உனக்கு என் வந்தது. உரை - புகழ்.
அந்த அந்தணன் கின்ற கிலைமையை அறிந்து, "மனம்
வருந்தி, ‘சாதியிலே மேம்பட்டவனே, உனக்கு என்ன நிகழ்ந் தது? பெரிதும் வருந்துகின்முய்; "சொல்லுவாய்' என்று வின விஞன். அப்படி வினுவிய அரசனை நோக்கி, 'புகழமைந்த
’ என்று நடந்த செய்தியைக்
5. வடழேல் , ஆலமர நிழல். நீழலிடை இட்டு நிழலிலே இருத்தி. தணீர் - தண்ணீர், நுழைவித்தான் - செலுத்தினன். வன் திறல் ஒரு பொருள் குறித்த இருசொற்கள். மறையோன் - எழுவ்ாய், ஆல் - அசை,

Page 8
8 தமிழ் அமுதம்
கொன்யல் நின்றன் என்றுலை யூட்டுங் கோலைவேல்போல் வன்றிறல் மாறன் சேவிநுழை வித்தான் மறையோனல், 4
வேடன் கூற்று (6-7)
.ே அந்தணன் மாற்றக் தன்னையும் உட்கொண் டறநோக்கும்
சந்தன வேற்பன் மறவனை கோக்கத் தாழ்ந்தன்னுன் * எந்தை பிரானே நாயடி யேன்இன்று எய்ப்பாற
வந்து புகுந்தேன் அந்த மரத்தின் மருங்கோர்சார். 5
"இன்றையதினம் இவளை உடன்கொண்டு ஒர் عهدمية நிழலில் இருக்கச்செய்து, இவளது நீர் வேட்கையைத் தீர்க்கும் பொருட்டுத் தண்ணீர் கொண்டுவரச் சென்றேன்; யான் நீர் கொண்டு திரும்பிவருமுன் இந்த வில்லேந்திய வேடன் இவளைக்
கொன்று விட்டு அம்மாத்தின் பக்கத்திலே நின் முன்’ என்று
கொல்லன் உலைக்களத்திற் காய்ச்சிய கொலைத் தொழிலையுடைய
வேற்படையைச் செவியிலே நுழைத்தாற் போன்று வன்மை யுடைய பாண்டியன் காதிலே செலுத்தினன், அந்த மறையவன்.
மறையவன் கூறியதையெல்லாங் கேட்கும் பொழுது அரசன் சொல்ல வொண்ணுத மன வேதனையடைந்தான் என்பது கருத்து.
6. மாற்றம் - சொல். தன் - சாரியை. அறம் நோக்கும் சந்தன.
வெற்பன் - தரும வழியை ஆராயும் பாண்டியன். சங்தன வெற்பு = சந்தன் மரங்கள் அடர்ந்த ம்லை; அதாவது பொதிய மலை; அம்மலைய்ையுடைய பாண்டியன். மறவன் - வேடன். தாழ்ந்து - வணங்கி, எய்ப்பாற - இளைப் பாற. அந்த மரத்தின் மருங்கு ஓர் சார் - அந்த மரத்தினடியிலே ஒரு பக்கத்திலே.
பிராமணன் சொல்லைக் கேட்டறிந்து, அறத்தின் கூறுகளை ஆராயும் இயல்பினனுகிய பாண்டியன் வேடனைக் குறிப்பாக நோக்கினன்; அவ்வேடன் வணங்கி கின்று, “எம் தந்தையாகிய அரசனே, காயினுங் கடைப்பட்ட அடியேன் இன்று இளைப்
பாறும்பொருட்டு அம்மாத்தினடியிலே ஒரு பக்கத்திலே
வந்து புகுந்தேன்."
 
 
 

பழியஞ்சிய பாண்டியனுக்கு அருள் செய்தமை 9
7.(ஐயே கானுங் கோன்றவ னல்லேன் கோன்றரைக் கையேன் வேறுங் கண்டிலன்)என்ருன் இவளாகம் எய்யே றுண்ட வாறென் என்ருர் எதிர்நின்றர் மெய்யே ஐயா யானறி யேன்இவ் விளைவேன்றன். G
அமைச்சர் கூற்று
8. இக்கோலை செய்தான் யானலன் என்ன துளனேன்னத் தக்கவ னேயோ தறுகண் மறவன் உரைமேய்யோ சிக்க ஒறுத்தா லல்லதை உண்மை செப்பானென்று ஒக்க உரைத்தார் மந்திர ருள்ளார் பிறரெல்லாம். 7
வேடன் முன்பு சொல்லியதையே சொல்லுதல்
9. மன்னன் தானும் மற்றது சேய்ம்மின் எனமள்ளர்
பின்னங் தண்டஞ் செய்தனர் கேட்கப் பிழையில்லான்
7. கையேன் வேறு ஒன்றையுங் கண்டிலன் என்று கூட்டுக. கையேன் - கீழ் மகனுகிய யான். ஆகம் . சரீரம். எய் - எய்யப்படுவது; அம்பு ஆகுபெயர். விளைவு - நிகழ்ச்சி செய்தி
‘ஐயனே, யான் கொன்றவனுமல்லேன்; bsعه ب கொன்ற வரைக் கீழ்மகனுகிய யான் கண்டவனுமல்லேன்" என்றன். 'இவள் உடலில் அம்பு ஏறுண்டது எவ்வாறு?’ என்று கேட்ட னர் எதிரிலே நின்றவர்கள். அவன், 'உண்மையாக ஐயா, யான் அது எப்படி நேரிட்டது என்பதை அறியேன்” என்முன்.
8. தறுகண் மறவன் - கொடுமையாகிய இயல்பினேயுடைய வேடன். சிக்க ஒறுத்தல் - நன்ருகத் தண்டித்தல். ஒக்க - ஒருசேர, மந்திரர் மந்திரிகள். ஐ - சாரியை.
66 இக் கொலை செய்தவன் யானல்லேன்' என்று கூருமல், *யான் செய்துளேன்' என்று கூறுங் தகுதியுடையவனே? இவன் எதற்கும் அஞ்சாக கொடிய வேடனல்லனே? இவன் கூறும் சொல் உண்மையாகுமோ? இவனைக் கடுமையாகத் தண்டித் தாலல்லாமல் உள்ளதைச் சொல்லுவானே? ஒரு பொழுதுஞ் சொல்லமாட்டான்’ என்று அரசனுடைய மந்திரிமாராக உள்ளவர் யாவரும் ஒரே அபிப்பிராயமாகக் கூறினர்கள்.
9. தான் • அசை, மற்று - அசை. மள்ளர் = ஏவலாளர். பின்னம் - பின்; அம் சாரியை, செய்தனர் - செய்து பிழையில்லான் - வேடன்,
2

Page 9
ஒன்றில்லையே; ஆதலால் இவன் கொன்றிருப்பான்
10 தமிழ் அமுதம்
முன்னஞ் சொன்ன சொற்பெய ராணுய் மோழியாகின்று இன்னங் தீரத் தேருமின் என்றன் என்செய்வான். 8
மன்னவன் சிந்தித்தல் (10-11)
10. ஆற்ற ஒறுக்குங் தண்டமும் அஞ்சர்ன் அறைகின்ற
கூற்றமும் ஒன்றே கோன்ற குறிப்பு முகங்தோற்றன் மாற்றவ ரேயோ மாவோ புள்ளோ வழிவந்த கோற்றெடி யைக்கோன் றென்பேற வல்லான்
கோலைசெய்வான். 9
முன்னம் - முன்; அம் சாரியை, மொழியா நின்று - மொழிந்து; சொல்லி. இன்னம் தீரத் தேருமின் - இன்னும் ஐயம் நீங்கும்படி நன்கு ஆராயுங்கள். தீர - முடிவுற.
மன்னவனும் “அதனைச் செய்யுங்கள்” என்று கட்டளையிட, ஏவலாளர் தண்டஞ் செய்து கேட்டனர்; அப்படிக் கேட்கவும் குற்றமற்றவணுகிய வேடன் முன் சொல்லிய சொல்லினின்றும் மாறுபடாணுய்ச் சொல்லிகின்று, இதனை ஐயங் தீரும்படி முற்ற ஆராய்ந்து யான் கிாபாாதி என்பதைத் தெளிவீர்களாக 29 என்றன். மிகுதியும் ஒறுக்கப்பட்ட அக்குற்றமற்ற வேடன் வேறு என்செய்ய வல்லான் ?
10. ஆற்ற ஒருக்கும் தண்டம் - மிகவும் கடுமையான தண்டம். கூற்றம் - மறுமொழி. மாற்றவர் - பகைவர். மா = விலங்கு, புள் - பட்சி. கோற்றெடி-கோல்தொடி, கோல் போலத் திரண்ட வளையல்களையுடையவள்: அன்மொழித் தொகை.
6 மிகவும் கடுமையான தண்டத்திற்கும் பயப்படான்; சொல்லுகின்ற விடையும் ஒன்றே யாகும். கொலை செய்தமை யைக் காட்டும் எவ்விதமான குறிப்பும் முகத்திலே தோன்றப் பெற்றிலன். மேலும் பகையோ அன்றி விலங்கோ, பறவையோ தன் வழியிலே செல்லும் பார்ப்பனியைக் கொன்று இக் கொலை வேடன் பெறும் பயன் யாது ? ஒன்று மில்லையே."
கொலைத் தொழிலுக்குரிய குலத்திற்பிறந்த இவ்வேடன் இந்த அந்தணன் பகைவனுயின் பகை முடிப்பதற்கு அவன் மனேவியைக் கொன்முன் ஆகலாம். விலங்கு, புள் ஆயின் உணவின் பொருட்டுக் கொன்ருன் ஆகலாம். இவற்றுள் ஒன்றிலும் அமையாத இப்பெண் கொலையால் இவன் பெறும் பயன் என்று துணிய இடமில்லை என்று அரசன் கருதினன். * " | וא c - ;
5, מקו

பழியஞ்சிய Lונ ண்டியனுக்கு அருள் செய்தமை 1.
11. கைதவ னுமிக் காணவ னேயோ பிறரேயோ
செய்தவர் யாரே இக்கொலே வேட்டஞ் செய்தோர்மா எய்த இலக்கில் தப்பிய கோல்தான் ஏறுண்டிம் மைதவழ் கண்ணுள் மாய்ந்தன ளேயோ அறியேனல். 10
صر
அரசன் கூற்றும் அமைச்சர் விடையும்
12. என்னு முன்னித் தென்னவன் இன்னம் இதுமுன்னூல்
தன்னுல் ஆயத் தக்கதை என்ருன் தகவில்தன் அன்னர் அந்நூல் ஆய்ந்திது நூலால் அமையாதால் மன்ன தேய்வத் தாலே தேறும் வழிஎன்றர். 11
11. கைதவம் - வஞ்சனை. கைதவன் - வஞ்சகன். கானவன் - காட்டில் வாழும் வேடன். அமைச்சர் கருத்தை ஒட்டி, ‘கைதவனும் இக்கானவன்’ என்ருன். மா - விலங்கு. கோல் . அம்பு, மா எய்த இலக்கில் தப்பிய கோல் - விலங்கினைக் குறிவைத்துப் பிழைத்த அம்பு. தப்பிய - இலக்குத் தவறிய, ஏறுண்டு இ மைதவழ் கண்ணுள். ஏகாரங்கள் இசைநிறை. தான், ஆல் - அசை.
‘வஞ்சகன் என்று கூறப்பட்ட இந்த வனவாசி வேடனே, வேறு யாரோ இக் கொலை செய்தவர் யார் ? அன்றி வேட்டையாடியவர், விலங்கினத்திற்குக் குறி வைத்த அம்பு இலக்குத் தவறி ஏறுண்டபடியால் இம் மைதீட்டிய கண்ணுள் இறந்து பட்டனளோ ? இன்னதென்று அறியகில்லேன்.”
12. முன்னி - நினைத்து. முன்னூல் . பழமையாகிய அறநூல். தக்கதை என்பதிலுள்ள ஐ சாரியை, தகவில் தன் அன்னர் - நடுவு நிலைமையில் தன்னைப் போன்றவர். தகவு - நடுவு நிலைமை.
என்று எண்ணி பாண்டிய ராசன், 'இன்னம் இது பழைய அற நூல்களின் உதவியினலே ஆராயத் தக்கது’ என்முன். நடுவு நிலையில் அவ்வரசனை ஒத்த அமைச்சர்கள் அப்படியே நூல்களையெல்லா ம் ஆராய்ந்து, ' இது நூலாலே தெளியத் தக்கதன்று; தெய்வத்தின் அருளினலே தெளியற்பா லது ” என்று கூறினர்.

Page 10
2 தமிழ் அமுதம்
வேதியனை ஈமக்கடன் செய்யும்படி கூறி வேடனைச் சிறைப்படுத்தல் 13. வேந்தர்கள் சிங்கம் வேதிய னைப்பார்த் திதுதீர
ஆய்ந்துன துள்ளக் கவலை ஒழிப்பேன் அஞ்சேல்நின் > ஏந்திழை ஈமக் கடனிறு இப்போ தேன்றேவித்
தேந்துணர் வேங்கைத் தார்மற வோனைச் சிறைசெய்தான். 12 அரசன் கோயில் சென்று முறையிடுதல் (14-15) 14. மின்னனை யாள்தன் செய்கடன் முற்ரு மீண்டோனைத் தன்னமர் கோயிற் கடைவயின் வைத்துத் தானேகிக் கொன்னவில் வேலான் தங்கள் குடிக்கோர் குலதெய்வம் என்ன இருந்தார் அடிகள் பணிந்தான் இதுகூறும். 18
13. ஏந்திழை - ஏங்திய ஆபரணங்களை அணிந்தவள்; வேதியன் மனைவி. ஈமக்கடன் - இறந்தவர்க்குச் செய்யப்படும் தகனக்கிரியை. ஈமம் - சுடுகாடு. தேம் துணர் வேங்கைத்தார் மறவோன் - தேன் துளிக்கும் பூங்கொத்துக்களை யுடைய வேங்கைப் பூ மாலையை அணிந்த வேடன்.
மன்னவர்களுள் ஆண்சிங்கம் போன்றவணுகிய பாண்டியன் வேதம் வல்ல அந்தணனைப் பார்த்து, "இதனை நன்கு ஆராய்ந்து உனது மனக்கவலையை நீக்குவேன்; அதைக் குறித்து அஞ்சாதே. இப்பொழுது உன் மனைவியின் ஈமக்கடன்களை முடிப்பாய்” என்று சொல்லியனுப்பி, வேடனைச் சிறையிலே வைத்தான்.
14. மின்அனையாள்-மின்னல் போன்றவள்; அந்தணன் மனைவி. முற்ரு. முற்றி; நிறைவேற்றி, தன் அமர் கோயில் . தன்னுல் விரும்பப்பட்ட அரண் மனை. அமர்தல் . மனம் பொருந்துதல். கடைவயின் = வாயிலிலே. கொல் நவில் வேலான் - கொலைத் தொழிலைப் பயின்ற வேற்படையையுடைய பாண்டியன். பணிக்தான் - பணிந்து. இது . பின்வருவதனை.
தன் மனைவிக்குரிய ஈமக் கடன்களைச் செய்து முடித்துத் திரும்பி வந்தவனகிய வேதியனத் தன் அரண்மனை வாயிலில் இருக்கும்படி வைத்து விட்டுத் தான் மாத்திரம் போய்த் தங்கள் குடிக்கு ஒரு குல தெய்வம் போன்றிருந்த சோம சுந்தரக் கடவுளின் பாதங்களில் வணங்கி கின்று இதனைக் கூறு வானுயினன் :-

பழியஞ்சிய பாண்டியனுக்கு அருள் செய்தமை 13
வேறு 15. மன்றடு மணியேஇம் மறவன்தான் பார்ப்பணியைக்
கொன்ருணுே பிறர்பிறிதாக் கோன்றதோ இதுஅறநூல் ஒன்ருலும் அளப்பரிதாக் கிடந்ததால் உன்னருளால் என்றழ்வு கேடத்தேற்ருய் என்றிரந்தான் அவ்வேலை. 14
அசரீரி வாக்கு
16. திருககரின் புறம்போருசார் குலவணிகத் தேருவின்கண்
ஒருமனையின் மணமுளதங் கந்தணணுே டோருங்குநீ வருதியுன துளக்தேரு மாற்றமேலாக் தேற்றுதுமென்று
இருவிசும்பின் அகடுகிழித் தேழுந்ததால் ஒருவாக்கு. 15/
15. மன்று-மன்றம்; வெள்ளியம்பலம்: இது மதுரையின்கண் உள்ளது. ஏனையது தில்லையின் கண் உள்ளது; அது பொன்னம்பலம். மணி - மாணிக்கம். பிறிதா - வேறு காரணத்தினல். அளப்பு - அளந்தறிதல். அரிதா-அரிதாக.
ஆல் - அசை, தாழ்வு - குறை. தேற்ருய் - தெளிவிப்பாய். அவ்வேலை .
அப்பொழுது; அடுத்த செய்யுளில் வரும் * எழுந்தது' என்பதனேடு முடியும். * வெள்ளியம்பலத்தின் கண்ணே திருநடனஞ் செய்கின்ற
மாணிக்கமே, இந்த வேடன் தான் பிராமணன் மனைவியைக்
கொன்ருனே? அன்றிப் பிறர் வேறு காரணத்தாற் கொன்றதோ
இக் கொலை, இதன் உண்மை அற நூல் ஒன்ருலும் ஆராய்ர் தறிய முடியாமல் இருக்கின்றது. இதனை உனதருளால் அறிந் தால் அறியலா மன்றி வேறு உபாயங்களால் அறிதல் அரிதா கும். ஆதலால் எனது தாழ்வினுக்கு ஏதுவாகிய இக்குறை தீரும்படி தெளிவிப்பாயாக ’ என்று குறையிாந்தான்; அப் பொழுது;
16. குலவணிகத் தெரு - வணிககுலத் தெரு, தேரு மாற்றம் - தெளி யாத செய்தி. தேற்றுதும் - தெளியவைப்போம். இருவிசும்பு - பெரிய ஆகாயம் அகடு - வயிறு. ஆல் - அசை, ‘அவ்வேலை" (15) ஒரு வாக்கு எழுந்தது? என்று முடிக்க,
* அழகிய நகரத்தின் புறம்பே ஒரு பக்கத்திலுள்ள வணிக குலத்தெருவிலுள்ள ஒரு வீட்டிலே கிருமணம் நடைபெற இருக்
கின்றது; அவ்விடத்திற்கு நீ பிராமணனேடு வந்து சேருவாய்; உனது மனம் தெளியாக செய்திகளை எல்லாம் தெளிய
வைப்போம்” என்று பெரிய வானத்தின் வயிற்றைக் கீண்டது போன்று ஒர் அசரீரி வாக்கு எழுந்தது.

Page 11
14 தமிழ் அமுதம்
அரசனும் அந்தணனும் மணவீடு சென்றிருத்தல் 17. திருவாக்குச் செவிமடுத்துச் செழியன்தன் புறங்கடையிற்
பேருவாக்கு மறையவனே டோருங்கெய்திப்
பெரும்பகல்போய்க் கருவாக்கு மருண்மாலேக் கங்குல்வாய்த் தன்னைவேற்று உருவாக்கிக் கடிமனைபோய் ஒருசிறைபுக் கினிதிருந்தான். 16 யமதூதர் கூற்று (18-20) 18. அன்றிறைவ னருளாலங் கவர்கேட்க அம்மனையின்
மன்றல்மகன் தனக்களர்ந்த நாளுலப்ப மறலிஇருட் குன்றமிரண் டெனவிடுத்த கோடும்பாசக் கையினர்வாய் மென்றுவருஞ் சினத்தவரில் ஒருவனிது விளம்புமால். 17
17. செவிமடுத்து - செவி நிரம்பக் கேட்டு, செழியன் - பாண்டியன். பெருவாக்கு மறை . பெருமை பொருந்திய வாக்காகிய வேதங்கள். கரு ஆக்கும் மருள் மாலைக் கங்குல்வாய் - கருமையைப் பெருக்கும் மங்கிய மாலைக் காலத்துடன் வந்த இராப்பொழுதில், கடிமனை - மணம் நிகழும் வீடு. சிறை:
5565 LO o
அழகிய அசரீரி வாக்கினைக் காது கிரம்பக் கேட்டுப் பாண்டிய சாசன் தன் அரண்மனைக் கடைவாயிலில் இருந்த வேதம்வல்ல அங்கணனேடு ஒன்று கூடி, பெரிய பகற்காலம் போய் மாலைக் காலமும்வந்து அதனையடுத்த இராப்பொழுதிலே தன்னை வேற்றுருவமாக்கிக்கொண்டு மணம் நிகழும் வீட்டினை அடைந்து ஒரு பக்கத்திலே இனிது அமர்ந்திருந்தான்.
18. அவர் - அரசனும் அந்தணனும். மன்றல் மகன் - மணமகன். நாள் உலப்ப - ஆயுள் முடிதலால். மறலி - யமன். ‘இறைவனருளால் அவர் கேட்க. விளம்பும்" என்று முடிக்க. ஆல்- அசை.
அன்றைய தினம் இறைவனருளால் அரசனும் அந்தணனும் காதினுற் கேட்க, அந்த வீட்டில் மணமகனக இருந்தவனது ஆயுள் முடிந்தபடியால், யமன் அனுப்பிய, இருளால் ஆகிய மலை போன்ற தோற்றத்தினராகிய பாசக் கயிற்றினையுடைய தூதர், வாயை மென்று தின்னுதற்குக் காரணமான கோபத்தையுடைய
வர் இருவரில் ஒருவன் இதனைக் கூறுவானுயினன்:-

பழியஞ்சிய பாண்டியனுக்கு அருள் செய்தமை 15
19. இன்றேயிங் கிவனுயிரைத் தருதிரேனும் இரும்பகட்டுக்
குன்றேறுங் கோனுரையாற் கோள்வதேவன் பிணிஉடம்பின் ஒன்றேனும் இலன்ஒருகா ரணமின்றி உயிர்கொள்வ தன்றேளன் செய்துமென மற்றவன்ஈ தறைகின்றன். 18
20. ஆற்ருலே றுண்டகணை அருகோதுங்கும் பார்ப்பணியைக் காற்றல்வீழ்த் தெவ்வாறு கவர்ந்தோமப் படிஇந்தச் சாற்றர வாரத்தில் தாம்பறுத்துப் புறம்ாகின்ற ஈற்ருவை வேருளவிடுத் திவனுவி கவர்கேன்றன். 19
19. இன்று - இப்பொழுது. இங்கு - இவ்விடத்தில். இரும் பகட்டுக் குன்று = பெரிய எருமைக் கடாவாகிய மலை. குன்றும் ஏறும் கோன் - யமன். உரையால் - கட்டளையால். எவன் . எவ்விதம். உயிர்கொள்வது அன்று - உயிர் கொள்வது செயற்பாலதன்று.
‘இன்றைய தினமே அதுவும் இப்பொழுதே இவனுயிசைக் கொண்டுவந்து தாக்கடவீர்” என்னும், எருமை வாகனத்தில் ஏறிச்செல்லும் நம் தலைவன் கட்டளைப்படி இவன் உயிரைக் கவர்வது எவ்விதம்? நோய் என்பது உடம்பில் ஒரு சிறிதும் இல்லாதவனுய் இருக்கின் முன்; ஒரு காரணமும் இல்லாமல் உயிர் கொள்வது என்பது சாத்தியமன்று. இதற்கு நாம் என்ன செய்யலாம்’ என்று கூற, மற்றவன் இதனைக் கூறு வானுயினன்.
20. ஆற்று ஆல் - வழியிலுள்ள ஆலமரம்; ஆறு - வழி. சாறு - விழா. சாற்று ஆரவாரம் - மணவிழாவின் ஆரவாரத்தினல். ஈற்று ஆ - கன்றினை ஈன்ற பசு, வெருளவிடுத்து - வெருண்டோடும்படி செய்து. கவர்கென்ருன் - கவர்க என்றன்; அகரம் தொக்கது. புறம் கின்ற ஈற்ருவைத் தாம்பறுத்து வெருளவிடுத்து எனக் கூட்டுக. -
'வழியிலுள்ள ஆலமாக்கிலே தைத்துச் சிக்கிக் கிடந்த அம்பினைக் காற்றினுல் விழும்படி செய்து அம்மாக்கருகிலே ஒதுங்கிய பார்ப்பனியின் உயிரை எவ்வாறு கவர்ந்தோமோ அதுபோன்ற ஒரு முறையில் இந்த மண விழாவின் பெரிய ஆரவாரத்தினல் வெளியே கின்ற கன்றினை ஈன்றுள்ள பசுவைக் கட்டிய தாம்பினை அறுத்துக்கொண்டு வெருண்டோடும்படி செய்து இந்த மணமகன் உயிரைக் கவர்க' என்றுரைத்தான்.

Page 12
16 தமிழ் அமுதம்
அரசன் கூற்றும் வேதியன் மாற்றமும்
21. அந்தமொழி கேட்டரசன் அருமறையோய் கேட்டனையோ இந்தமோழி எனப்பின்வன் இவ்வாறு இறந்தாலென் பைங்தோடியாள் இறந்ததுமப் படியேளன் மனக்கவலை சிந்தஇது காண்பேனேன்றேருங்கிருந்தான் М ) தென்னணுேடும். 20
மணமகன் இறத்தல்
22. ஒட்டியபல் கிளைதுவன்றி ஒல்லோலிமங் கலந்தோடங்கக்
கோட்டியபல் லியமுழங்கக் குழுமியஒ சையின்வேருண்டு
கட்டியதாம் பிறப்புனிற்றுக் கற்றஒன்று அதிர்ந்தோடி முட்டியதால் மணமகனை முடிந்ததால் அவனுவி. 21
21. பவனன் - பார்ப்பனன். பைங்தொடியாள் - பசிய வளையல்களை
அணிந்தவள்; பார்ப்பணி. சிந்த - நீங்கும்படி, தென்னன் - பாண்டியன்.
அந்த வார்த்தையைக் கேட்ட அரசன், " அரிய வேதங் களில் வல்லவனே, கேட்டாயோ இந்த வார்த்தையை ?’ என்று கூறினன். பிராமணன் 'இவ்வாறு இவன் இறப்பானுயின் என் மனைவி இறந்ததும் அப்படியேயாம்; எனது மனக்கவலை நீங்கும் படி இதனை இருந்து காண்பேன்’ என்றுரைத்துப் பாண்டிய னேடும் ஒருங்கிருந்தான்.
22. ஒட்டிய பல்கிளை - நெருங்கிய பல சுற்றத்தார்கள். துவன்றி. ஒன்று சேர்ந்து, மங்கலம் - மணவினை. பல் இயம் - பல வாத்தியங்கள். குழுமிய ஓசை - ஒன்று சேர்ந்த பேரொலி. புனிற்றுக் கற்ரு .இளங் கன்றினை யுடைய பசு, புனிறு கன்று ஆ கன்று+ஆ= கற்ரு. வலித்தல் விகாரம் அதிர்ந்து - அலறி. ஆல் இரண்டும் அசை,
நெருங்கிய உறவினர் பலர் ஒன்று சேர்ந்து ஒல்லென்னும் ஒலியுண்டாக மணவினையைத் தொடங்கினர்கள்; அப்பொழுது கொட்டிய பலவகை வாத்தியங்கள் முழங்கின அவற்றின் ஒன்று சேர்ந்த பெரிய சத்தத்தினுல் அஞ்சி, இளங் கன்றினையுடைய பசு, அலறியபடியே ஒடி மணமகனை முட்டிற்று; அக்கணமே அவன் உயிர் நீங்கினன்.

பழியஞ்சிய பாண்டியனுக்கு அருள் செய்தமை 17
s கவிக்கூற்று - 23. மணமகனே பிணமகனுய் மனப்பறையே பிணப்பறையாய்
அணியிழையார் வாழ்த்தோலிபோய் அழுகையோலி
யாய்க்கழியக் கணமதனிற் பிறந்திறுமிக் காயத்தின் வரும்பயனை உணர்வுடையார் பெறுவர்உணர் வோன்றுமிலார்க்
கோன்றுமிலை, 22 அந்தணன் துயரமும் அரசன் செயலும் 24. கண்டானங் தணனென்ன காரியஞ்சேய் தேனேனத்தன்
வண்டார்பூங் குழன்மனைவி மாட்சியினுங் கழிதுன்பங்
23. பிணமகன் உயிர் நீங்கிய மகன். மணப்பறை - மங்கல வாத்தியம். பிணப்பறை - சாப்பறை, அணி இழையார் - அணியப்பட்ட ஆபரணங்களை யுடைய மங்கல மகளிர். கழிய - முடிய. கணம் - மிகச் சிறிய கால அளவு. இறும் - கழியும். காயம் - சரீரம். காயத்தின் வரும் பயன் . உடலெடுத்த லாற் பெறக்கூடிய பயன்; அப்பயனவது அறஞ்செய்து வீடு பேறடைதல். உணர்வுடையார் . அறிவுடையார். ஒன்றும் இ(ல்)லை - அப்பயனை அடைதல் சிறிதும் இல்லை. -
மணமகனே இறந்து கிடக்கும் பிணமாய், மங்கல வாத்தி பமே சாப்பறையாய் மாறி மங்கல மகளிர் வாழ்த்தொலிபோய் அழுகை ஒலியாய் முடியும்படி ஒரு கணப்பொ ழுதிலேயே பிறந்து அழியும் இயல்பினையுடையது இவ்வுடல்; அத்தகைய உடலினைப் பெற்ற பயனை அறிவுடையார் பெறுவர்; அறிவில் லார் அப்பயனை ஒரு பொழுதும் சிறிதும் அடையமாட்டார்.
இச்செய்யுளை * மன்றங் கறங்க ? என்று தொடங்கும் செய்யுளோடு ஒப்பிடுக. (100)
24. வண்டார் பூங்குழல் மனேவி - வண்டுகள் வந்து தங்கும் பூக்களை யணிந்த கூந்தலையுடைய மனைவி. மாட்சி - இறப்பு. மாள் - பகுதி. கழி துன்பம் - மிக்க துன்பம். மற்று - அசை, அலர் வேப்பந்தாரான் - மலர்ந்த வேம்பினுலாகிய குளிர்ச்சி பொருந்திய மாலையினையுடைய பாண்டியன். வேம்பு அம் சாரியை பெற்று வலித்தல் விகாரமாயிற்று.
அங்கு நிகழ்ந்ததை அந்தணன் கண்டான்; கண்டு (வேடனை வீண் பழி சுமத்தியமைக்கு மனம் கொந்து) என்ன பிழையான காரியஞ் செய்தேன் என்று, தன் மனைவி மாணத்தினற் பட்டதைவிட மிக அதிகமான துன்பங் கொண்டான். அப்படிப்
3

Page 13
18 தமிழ் அமுதம்
கொண்டான்மற் றவனெடுந்தன் கோயில்புகுந் தலர்வேப்பந் தண்டாரான் அமைச்சர்க்கும் பிறர்க்குமிது சாற்றினன்.23 அரசன் ஆவன செய்து இருவரையும் அனுப்புதல் (25-26) 25. மறையவன்ை இன்னுமொரு மணமுடித்துக் கோடியென நிறையஅரும் போருளிந்து நீபோதி எனவிடுத்துச் சிறையழுவத் திடைக்கிடந்த சேடித்தலேய இடிக்குரல கறையுடல்வே டனைத்தோடுத்த கால்யாப்புக் கழல்வித்து.24 26. தெளியாதே யாமிழைத்த தீத்தண்டம் பொறுத்தியென
விளியாஇன் னருள்சுரந்து வேண்டுவன கனிகல்கி
பட்ட மறையவனுேடும் பாண்டிய மன்னன் தன் அரண்மனைக் குப் போனன்; போய் அமைச்சர்க்கும் ஏனையோர்க்கும் கடிமனை யில் நிகழ்ந்ததை எல்லாம் கூறினன்.
25. கோடி - கொள்ளுதி. சிறை அழுவம் - சிறைச்சாலை; அழுவம் - அரண்; காவலையுடையது. செடித்தலை - முடை காற்றம் பொருந்திய தலை, இடிக்குரல் - இடி போன்ற குரல். தலைய, குரல என்பனவற்றிலுள்ள அகரம் அசை, கறை உடல் - கரிய உடல். தொடுத்த - கட்டிய, கால்யாப்பு கால்விலங்கு கழல்வித்து - கழற்றச் செய்து,
பிராமணனை, "நீ இன்னும் ஒரு மணமுடிக் துக்கொள்ளு வாய்” என்று நிறைய அரும்பொருள் கொடுக் து, ‘ரீ செல்லுதி” என்று விடை கொடுத்தனுப்பினன். பின்பு காவலில் வைக்கப் பட்ட முடை நாற்றம் பொருங்கிய கலையையும் இடி போன்ற குரலினையும் கரிய உடலினையுமுட்ைய வேடனை விலங்கறுத்து விடுதலை செய்தான். செய்து;
26. தெளியாது - உண்மையை அறியாமல், தீத்தண்டம் - கொடுக் தண்டம். விளியா - அருகழைத்து. அளி ஆன மனத்தரசன் - தண்ணளி நீங்கப்பெருத மனத்தினையுடைய அரசன். இடை" இடம். கெளரியன் பாண்டியன். சிவபெருமான் சுங்தர பாண்டியனுக இருந்து அரசு புரிந்தன ராதலின் கெளரியன் எனப்பட்டார். கெளரி - உமாதேவி.
'உண்மையை அறியாமல் யாம் செய்த கடுமையாகிய தண்டத்தைப் பொறுப்பாய்’ என்று வேடனை அருகிலே அழைத்து, தண்ணளி நீங்காத மனத்தினையுடைய அரசன் அவனை அவனிருக்குமிடத்திற்கு அனுப்பினன். அனுப்பி, சமணர்கள் ஏவிய களிப்பினையுடைய யானை விழும்படி அம் பெய்த சோமசுந்தரக் கடவுளைச் சென்று வணங்கினன்.
 
 

發* 淺。 - பழியஞ்சிய பாண்டியனுக்கு அருள் செய்தமை 19
அளியான மனத்தரசன் அவனே அவ னிடைச்செலுத்திக் களியான விழஎய்த கேளரியனைப் போய்ப்பணிந்தான்.25
வேறு இறைவனைத் துதித்தல் 27 ஆதரம் பேருகப் பாவியேன் பொருட்டேம்
அடிகள்நீர் அரும்பழி அஞ்சும் நாதராய் இருந்தீர் எந்தையார்க் குண்டோ
கான்செயத் தக்கதொன் றென்னக் காதலிற் புகழ்ந்து பன்முறை பழிச்சிக்
கரையின்மா பூசனை சிறப்பித்து ஒதம தகற்றி உலகினுக் குயிராய்
இருந்தனன் இறைகுலோத் துங்கன். 2G
களியான விழ எய்த கெளரியன் - விக்கிரம பாண்டியன் அரசாண்ட காலத்தில், காஞ்சியை இராசதானியாகக்கொண்ட சோழ ரா சன் பாண்டியனேடு போர்புரிய முடியாமல் சமண முனிவரை அபிசார வேள்வி செய்து அவனைக் கொல்லும்படி வேண்டிக்கொண்டான். அவர்கள் செய்த வேள்வித் தீயினின்றும் எழுந்த பயங்கரமான தோற்றமுள்ள யானையை, பாண்டியனையும் அவன் நகரையும் அழிக்கும்படி ஏவினர். பாண்டியன் குறையிரப்ப, சிவபெருமான் ஒரு போர் வீரனுகி வந்து நரசிங்கப் படையை விட்டு யானையின் மத்தகத்தைப் பிளந்தனர்.
27. ஆதரம் - அன்பு. பெருக - வெள்ளம் போற் பெருக; "காதரா யிருந்தீர்' என்பதனேடு முடியும். பழிச்சி - துதித்து. கரை இல் மாப் பூசனை சிறப்பித்து-அளவில்லாத பூசனைகள் எல்லாம் சிறப்பாகச் செய்து. மாபூசனை. திருவிழா முதலியன. ஏதம் - துன்பம். அது பகுதிப் பொருள் விகுதி.
'அன்பானது உள்ளத்தில் வெள்ளம்போற் பெருகும்படி
பாவியேனுகிய என்பொருட்டு, அடிகளே, தேவரீர் அரிய பழிக்கு அஞ்சும் நாதராய் இருந்தீர்; எங்தையாராகிய தமக்கு நான் செய்யத்தக்க கைம்மாறு ஒன்றுண்டோ? இல்லையே” என்று அன்பினுற் புகழ்ந்து எல்லையில்லாத பெரிய பூசனைகளெல் லாம் சிறப்பாகச் செய்தான். செய்து எல்லாத் துன்பங்களையும் நீக்கி உலகம் உடலாகத் தான் உயிராகப் பரிபாலித்திருந்தான் அரசனுகிய குலோத்துங்க பாண்டியன்.

Page 14
2. கடோற்கசன் தூது.
இப்பகுதியிற் காணப்படும் செய்யுள்கள் வில்லி பாரதத் தினின்றும் எடுக்கப்பட்டன. (துரோண பருவம்: பதின்
மூன்றும் போர்ச் சுருக்கம் 225 - 245.)
கதைத் தொடர்பு
சந்தனு என்னும் அரசன் குலத்திலே தோன்றிய நூற்று வரும் ஐவரும் பாண்டு இறந்தபின் அத்தினபுரியில் ஒன்று சேர்ந்து வாழ்வாராயினர். இளமைப் பருவ விளையாட்டுக்களில் வீமன் துரியோதனுகியரினும் மேம்பட்டு விளங்கினன். அகனல் இருதிறத்தா ருக்குமிடையில் பகைமை வளரலாயிற்று. பொருமைமிக்க துரியோதனன் வீமனைக் கொல்வதற்குப் பல சூழ்ச்சிகள் செய்தான். ஒருநாள் இருதிறத்தாரும் கங்கையில் நீர் விளையாடிக் கரையேறினர்; பின்பு ஒரு பெரிய மாளிகையில் இனிய உணவுண்டு துயின்றனர். அப்படித் துயிலும்பொழுது துரியோதனன் கன்னன் சகுனி முதலியவர்களோடு ஆலோ சித்து வீமனை வலிய கொடிகளாற் கட்டி அப்பெரிய நதியில் எறிந்தனன். அதில் விழுந்து துயிலுணர்ந்த வாயுகுமாரன் அக்கட்டுக்களைத் தன் உடல் வலிமையினலே துணித்துக் கொண்டு கரையேறினன்.
மற்ருெரு முறை கங்கைத் துறையில் எழுக்களினலும் இரும்பினலும் செம்மாங்களினலும் கூரிய கழுக்களை நீரின்மேல் கோன்ருமல் நாட்டச்செய்து, துரியோதனன் வீமனை நீரில் விளையாட அழைத்து, வஞ்சனையாக உடன்கொண்டு சென்று 6 இங்கிருந்து நீரில் இறங்குகின்றனயா, பார்ப்போம்” என்ன, அப்பொழுது கண்ணபிரான் கருவண்டின் உருவங்கொண்டு முனை தோறும் உட்கார்ந்திருக்க, வீமன் அதனை நோக்கி, ஆபத்தான நிலைமையை உணர்ந்து கழுமுனை கட்டிராத இடம் பார்த்துக் குதித்துக் கரையேறி மீண்டான்.
மற்ருெருமுறை துரியோதனன் வீமனுக்கு விருந்தளிப்ப வன் போன்று விடங்கலந்த உணவினை உண்பித்து, விடத்தினுல் அறிவு மயங்கி இருந்த அவனைக் கயிற்றினுற் கட்டிக் கங்கையிற்

- கடோற்கசன் gilgil 2.
போக விட்டான். அப்படி வீழ்ந்து பாதாளஞ் சென்ற வீமனை நாகங்கள் கடித்தன. நாக விடத்தினுல் உணவிற் கலந்திருந்த விடம் முறிந்தது; கட்டிய கயிற்றையும் அறுத்துக்கொண்டு நின்ற வீமனுக்கு வாசுகி, வாயுகுமாரன் என்ற முறைமையினல் அமுதங் கொடுத்து உண்பிக்க அவன் முன்னையிலும் பன் மடங்கு வலிமை பெற்று மீண்டு நகரடைந்தான்.
துரோணனிடம் வில்வித்தை முதலியவற்றைப் பயின்ற காலத்திலும், ஆயுதப் பயிற்சி அரங்கேற்றம் நடைபெற்ற பொழுதும், அருச்சுனன் யாகசேனனைப் போரில் வென்ற பொழுதும் இப்பகைமை மேன்மேலும் வளரலாயிற்று. பின்பு தருமபுத்திரனுக்கு இளவரசுப் பட்டம் கட்டியபொழுது அது உச்சநிலை அடைந்தது. அப்பொழுது துரியோதனன் வற்புறுக்
தலுக்கிணங்கிய திருத ராட்டிரன் பாண்டவரை புரோசனன்
。 என்னும் தீமதி அமைச்சனேடும் வாாணுவதத்திற்கு அனுப்பி
னன். பாண்டவர் வசிக்கும் பொருட்டு மெழுகு முதலியவற் முல் அந்நகரிற் கட்டிய மாளிகைக்குக் தீ வைத்து அவர்களை அழிப்பதாகத் துரியோதனதியர் திட்டமிட்டிருந்தார்கள். அத் திட்டத்தின்படி புரோசனன் தீ வைக்கு முன் பாண்டவரே அம் மாளிகைக்குத் தீ மூட்டி, சுரங்க வழியாக வெளியேறி உயிர் தப்பி ஒரு காட்டை அடைந்தனர்.
அக் காட்டின் தலைவனன இடிம்பன் என்னும் அாக்கனை வீமன் கொன்று, தன் மீது காதல் கொண்ட அவன் உடன் பிறந் தாளாகிய இடிம்பியை மணந்து கடோற்கசன் என்னும் மகனைப் பெற்றன். பின்பு பாண்டவர் வேக் கிரயேம் என்னும் ஊரிலே சில காலங் தங்கி, கிரெளபதியின் சுயம்வரத்திற்கு அந்தணர் கோலத்திற் சென்றனர். அரசர் யாவரும் வீழ்த்த இயலாத இலக்கினை வீழ்த்திய விசயனுக்குப் பாஞ்சாலி மணமாலை சூட்டினுள். மறு நாள் பாண்டவர் ஐவரும் அவளை விதிப்படி மணம் புரிந்தனர். அதன் பின்பு திருதசாட்டிானல் அழைக்கப் பட்டு அத்தினபுரி சென்றனர். அம்மன்னவன் மந்திரியரோடு ஆலோசித்து உதிட்டிரனுக்குரிய நாட்டின் பகுதியைக் கொடுத்து அவனுக்கு முடி குட்டினன்.

Page 15
22 தமிழ் அமுதம்
அதன் பின்பு துரியோதனதியரும் பாண்டவரும் ஒரே இடத்திலிருந்தால் பகைமை முற்றும் என்று எண்ணிய திருத ராட்டிரன் கட்டளைப்படி பாண்டவர் காண்டவப் பிரத்தம் என்னும் நகரிலிருந்து அரசாண்டு வந்தனர். அப்படி அரசாள் கையில் உதிட்டிரன் இராச சூயம் என்னும் வேள்வி செய்து முடித்து ‘சம்ராட்” என்னும் பட்டம் பெற்று விளங்கினன். அவன் பெற்ற பெருஞ் செல்வத்தையும் சிறப்பையுங் கண்டு பொருமைத் தீ மேலுங் கிளாப் பெற்ற துரியோதனன், சகுனி யின் ஆலோசனைப்படி தந்திரமாகப் பாண்ட வரை அத்தின புரிக்கு வரவழைத்துப் பொய்ச்சூதாடும்படி செய்தான். சகுனி யுடன் தருமன் ஆடிய சூதிலே முதலில் நாடு, நகரம், செல்வம் முதலியவற்றைத் தோற்றுப் பின்பு தம்பியரையும் தன்னையுங் தோற்று, முடிவில் பாஞ்சா லியையும் பணயமாக வைத்துக் தோற்றன். வெற்றிக் களிப்பு மேலிட்ட துரியோதனன் சபையிலே பாஞ்சாலியைக் கொண்டுவரும்படி ஏவி அவளைத் துகிலுரியும்படி செய்தனன்.
கடைசியில் திரெளபதியின் கற்பின் பெருமைக்கு அஞ்சிய திருதாாட்டிரன் ஐவரையும் அடிமைக் களையினின்றும் நீக்கி, இழந்த செல்வத்தையுங் கொடுத்தனுப்ப, துரியன் அதனை மறுத்து, செல்வத்தையெல்லாங் கவர்ந்துகொண்டு, மறுகு தாடி அடிமை நீங்கிய அவர்களைப் பன்னிரண்டாண்டு வனவாசமும் ஓராண்டு அஞ்ஞாதவாசமும் செய்து திரும்பிவந்தால் அரசினைப் பெறலாம் என்று நிபந்தனையிட்டு அனுப்பினன்.
பாண்டவர் காட்டில் வசித்து வந்த காலத்திலும் துரியோ தனன் பலவிதமான சூழ்ச்சிகள் செய்யலானன். ஒரு சமயம் தன் பெருமையைக் காட்டிப் பாண்டவர்க்குப் பொருமையை உண்டாக்கி அவரை அழுங்கச் செய்யவேண்டுமென்று கருதி, ஆடம்பரத்துடன் அவர் இருக்குமிடத்தருகே சென்றபொழுது சித்திரசேனன் என்னும் கந்தருவன் துரியோதனனைக் கயிற்றி னற்கட்டி வானத்தே தூக்கிச் சென் முன். அவனது பரிதாப நிலையைக் கேள்வியுற்ற உதிட்டிான் ஆணைப்படி வீமனும் அருச்சுனனும் சென்று கட்டுண்டவனைச் சிறைமீட்டனர். மறுபடியும் அக்கந்தருவனல் தீங்கு நேராதபடி அவனை அவன்
 

கடோற்கசன் ஆதி ஆதி 23
psi வரையிலும் வழிவிடக் துணையாக வச, தன் ஊர்ப்புறம் வந்தவுடன் வீமனை நோக்கி, ‘என் எல்லையிற் கால்வையாதே? என்று சிறிதும் செய்ங் நன்றியின்றித் துர்த்தியனுப்பினன்.
பாண்டவர் வனவாசம் முடியுங் கறுவாயில் துரியோதனன் காளமா முனிவனைக்கொண்டு பாண்டவரைக் கொல்லும் பொருட்டு அபிசாச வேள்வி செய்வித்தான்; யமதருமன் அருளால் வேள்விப் பூதத்திற்குத் தப்பிப் பிழைத்தனர்.
பாண்டவர் ஒராண்டு அஞ்ஞாத வாசத்தை விராடன் நகரிலே கழித்தனர். அவ் வாண்டெல்லை முடியும்பொழுது துரியோதனன் முதலிய கெளரவ வீசர் யாவரும் அந்நகரை முற்றுகை செய்து போர் தொடங்கினர். அருச்சுனன் செய்த வீரப்போரில் துரியோதனன் முதுகுகாட்டி ஒடினன்.
ஈற்றிலே பாரதப் போர் தொடங்கிற்று. முதற் பத்து நாளும் விட்டுமனே கெளரவ சேனைத் தலைவனுக இருந்து போரை நடத்தினன். அடுத்த ஐந்து நாளும் துர்ோணன் தலைமை தாங்கினன்.
பதின் மூன் மும் நாள் துரோணன் தன் சேனையைச் சக்கா வியூகமாக வகுத்து நிறுத்தினன். பாண்டவ சேனை மகாவியூக மாக வகுக்கப்பட்டது. இரு திறத்தினருக்குமிடையே விளைந்த கடும் போரில் சேனதிபதி திட்டத்துய்மன் துரோணனுக்குத் தோற்று, தருமனை அடைந்தான். அவன் சக்கர வியூகத்தைப் பிளக்க வல்லவன் அபிமன் ஒருவனே என்று கருதி அவனைப் போருக் கனுப்பினுன். அவன் முதல் வரிசையில் நின்ற துரோணனேடு வெற்றிப் போர் புரிந்து அவனைப் புறங் கண்டனன். அடுத்த வரிசையில் நின்ற அசுவத் தாமனுடன்
போர் புரிந்து வெற்றிகொண்டான். பின்பு கன்னனுடன் கடும்
போர் புரிந்து அவனைத் துரத்தினன். பின்பு சகுனி மகனை ஒரம்பினுல் உயிர் கவர்ந்தான்.
தனியே ஏக காலத்திற் பலரோடு போர்புரிந்த அபிமனுக் குத் துணையாக வீமன் கிந்தனன். ஆனல் சிவபெருமானுக்
குரிய கொன்றை மாலை அவன் வரும் வழியிலே துரியோதனனற்
போடப்பட்டது. சிவ பக்தனுகிய வீமன் அம்மாலையினைத்

Page 16
24 தமிழ் அமுதம்
தாண்ட மனமின்றி, g isir வியூகத்தின் வெளியே நின்று போர்புரியல்ாயினன். இருவரும் ஒன்று சேர முடியா மற் கொன்றை மாலை குறுக்கிட்டது.
சக்கர வியூகத்தினுள்ளே தனித்து கின்ற அபிமனுடன் கன்னன் முதலியோர் கடும் போர் புரிந்தனர். அவன் கன்னனது வில்லை முறித்து அன்னவன் ஒடும்படி செய்தனன். துரியோதனன் தம்பியரும் அவனுேடு போர் செய்யலாற்ருது கோற்றேடினர். பின்பு துரியன் தன் மகன் இலக்கண குமாரனைப் பதினுயிரம் அரச குமாாரோடு பொடி விட்டான். அபிமன் அவர்கள் யாவரையுங் தோற்கடித்து, துரியோதனன் மகனையும் யமனுலகிற் கனுப்பினன்.
பின்பு துரோணன் முதலிய பலர் தனியே நின்ற அபிம னைச் சூழ்ந்து கொண்டு கடும்போர் புரிந்தனர். அவன் செய்த விரப் போரில் யாவரும் நிலைகெட்டு ஓடினர். பின்பு கன்னன் கடும்போர் புரிந்து மூன்று முறை தோற்றன். அவன் அபிம னுடைய தேர், குதிசை முதலியவற்றை அழித்து வில்லையும் ஒடித்துவிட்டான். அந்நிலையில் அபிமன் வாளேந்திய கையுடன் தரையில் இறங்கிப் போர் புரிந்தான். முன்பு தோற்முேடிய யாவரும் அவனைச் சூழ்ந்து கொண்டனர். வந்தவர் தலைகளை யெல்லாம் தன் கை வாளினுல் அறுத்துத் தள்ளினன். அவ் விான் தன் தேர் உருளை ஒன்றினை எறி சக்கரமாக்கி, அதைக் கொண்டு எதிர்த்தவர் தலைகளையெல்லாம் அறுத்துத் தள்ளினன்.
பின்பு துரியோதனன் மைத்துனன் சிந்து நாட்டரசன் சயத்திர தன் அபிமனேடு கடும் போர் புரிந்து சிவபெருமானிட மிருந்து பெற்ற கதையினுல் அவ்வீரன் கலையைக் துணித்தான்.
அபிமன் இறந்தது கேட்ட தருமன் ஆகியோர் பெரிதும் வருந்திப் புலம்பினர். அளவில்லாத சோகமுற்ற அருச்சுனன் மறுநாள் சூரியன் அத்தமிக்குமுன் தன் மகனைக் கொன்ற சயத் திரனைக் கொல்வேன், இன்றேல் எரியில் வீழ்வேன் என்று சபதஞ் செய்தனன். பின்பு அதற்கு வேண்டும் தெய்வப் படைகளைச் சிவபெருமானிடம் பெறும்பொருட்டுக் கண்ண
பிரானுடன் கயிலை மலைக்குச் சென்முன்,
' ) :
 
 
 

கடோற்க்சன் துTதி 25
இந்தச் செய்தியினைத் துரியோதன னுக்கு அறிவிக்கும்படி உதிட்டிரன் வீமன், மகன் கடோற்க சனை அன்றிரவே தூதாக அனுப்பினன். அவன் சென்று தூதுரைத்த வரலாறு இப் பகுதியிற் கூறப்படுகின்றது.
பொருட் சுருக்கம்
கயிலைக்குச் சென்ற கண்ணபிரான், கருடன், அருச்சுனன் ஆகிய மூவரும் திரும்பி வருமுன் உதிட்டிரன், அருச்சுனன் செய்துள்ள சபதத்தையும், சிவபெருமானிடம் படைக்கலம் பெறும்பொருட்டுச் சென்றதையும் அன்றிரவே துரியோ தன னிடம் சொல்லிவரும்படி கடோற்கசனை ஏ வினன். அவன் பெரிய தங்தையை வணங்கி, 'முன்பு வஞ்சனையினுல் அபிமனைக் கொன்ற பாதகருக்கு உற்றது கூறுதல் ஏன் முர சக்கொடியோன், *கொடிய வழியை மேற்கொண்டு பகை
.என்றன் «و
வரைக் கொல்வது வஞ்சகம் பொருங்கிய செயலாகுமேயன்றி ஏற்ற உபாயமாகாது; பொய் கலவா அறநெறிபற்றி வெல்லுவதே உண்மையான வெற்றி; அதுவே ஆண்மையுமாகும்” என்று கூறினன்.
கேட்ட கடோற்கசன் நகைத்து வணங்கிப் பகைவர் பாசறையை ஒரு கணப்பொழுதில் அடைந்தான். அடைந்து தன் மகன் இலக்கண குமாரன் அன்று போர்க்களத்தில் இறந்ததை நினைந்து வருந்தி மனமழிந்து நின்ற துரியோதனன் வாயிலில் கின்று ஒன்று கூறி விளித்தனன். வாயில் காப்போர், யோர்?’ என்று வினவுதலும், அவன், 'முரசக் கொடியோன் அரவக் கொடியோனுக்குச் சொல்லியனுப்பிய வார்த்தையைச் சொல்லிப்போகவந்தேன் சிங்கக் கொடியோன் மகனுகிய யான்? என்றனன்.
துரியோதனன் அனுமதிபெற்று உள்ளே சென்று அங்குள்ள ஒருவரையும் சிறிதும் மதியானகி, 'உங்களுடைய வீண் பேச்சைவிட்டு யான் சொல்லும் இவ்வுண்மை மொழியைக் கேளுங்கள்’ என்று கூற, மனம் நொந்த நிலையிலிருந்த துரியோதனன், ! உங்தை சொல்லிவிட்ட மொழி யாது? ? என்முன். அது கேட்ட கடோற்கசன் கூறுவான் :- தன்திரு மைந்தனை முடிதுணித்த சயத்திாதனை வெற்றியாசர் காவல்
4.

Page 17
26 தமிழ் அமுதம்
காப்பினும் நாளை சூரியன் அத்தமிக்குமுன் கொன்றிடுவேன்;
அது தவறினல் நெருப்பிலே விழ்ந்திடுவேன்’ என்று
சபதஞ்செய்து சிவபெருமான் வாழும் கயிலைக்குச் சென்
முள்ளான் விசயன். வஞ்சனையாகப் போரில் பகைவர்களைப்
பொருகழிப்பது பாதகம் என்று அஞ்சினன்; ஆனபடியால் நீ( كثير
મ sk,િ அறியும்படி என்னை அனுப்பினன். காளை உன் மைத்துனன்
இறந்தான் என்று மனத்திற்கொள்.”
இவ்வாறு மனத்தில் எவ்விதமான கவலையுமற்ற இடிம்பன் மருமகன் கூற, துரியோதனன் உரைப்பானுயினுன் :- " அரச குமார் பலரோடும் போய் மீளாமல் என்னுடைய மகனும் இறந்தான். அப்படி இறக்கவும் யான் அதைப்பற்றி ஒன்றுங் கூருதவனுய்த் அக்கத்தைப் பொறுத்துக் கொண்டிருக் கின்றேன். தன்னுடைய மகன் இறந்துவிட்டானும்; அதற்காகக் தானும் தீயில் வீழ்வானும்: சபதங் கூறி, வில்வன்மைக் காட்டிப் போரிட்டு மரணமடைந்தவர் பொருட்டு அழுது புலம்பல் விரமாகுமோ ? அருச்சுனன் அஞ்சி நடுங்கி, கயிலை சென்று சிவன் கொடுத்த படையும் பெற்று, கண்ணன் கேர் செலுத்த நாளையதினம் கண்முன் தோன்று வானுயின் சூரியன் மேல் கடலில் வீழ்வதன்முன் செயலற்ற தன் மகனைப் போலவே தானும் சயத்திாதன் அம்பினல் உயிர்மாய்வது நிச்சயம் என்று
கூறுவாய்.”
* இந்த சயத்திாதன் என்னைக்காட்டிலும் அரசாள உரிமை யுடையவன்; வில்லாசிரியன் துரோணனைவிட வலியவன்; கதை கொண்டு செய்யும் போரில் உன் தந்தையினும் மேம்பட்டவன்; தோள்ாண்மையில் உன்னினும் மிக்கவன். இப்படிப்பட்ட சயத்திாதன் தன்னை விடப் போரில் எளியவன் அல்லன் என்பதைத் தெளிவாகக் கூறுவாய். ஆளை ஆள்வடிவில் அறியலாமேயன்றி உண்மையான ஆற்றலை யார் அறியமுடியும் ? அணிவகுத்த போர்க்களத்தில் நாளையதினம் வெற்றி பெறுபவர் யார் என்று தெரியுமோ? என்று சொல்லி ஈகைத்தான்.
பின்பு கன்னன், ' கம்மாசன் மகன், அவன் தம்பி, தச்சா
தனன் மகன், சல்லியன் மகன், சகுனி மகன் முதலியவர் எத்தனை பேர் இறந்தாலும் பெரியதன்று; உலகையெல்லாம் ஆளப்பிறந்த
 
 

கடோற்கசன் தூது 27
விசயன் மகன் ஒருவன் பட்டால், "ஐயோ 1 பாவம் ! இனி அரசாள உரியவர் யார் உளர் ?” என்று ஏளனமாகச் சொல்லி, மேலுங் கூறுவான்:- 1 அங்கிருந்தபடியே சயத்திர தன் உயிர் கவர்வேன் என்று வீரம் பேசி, அருச்சுனன் உமாபதியிடம் வரம்பெறச் சென்றுணுகில், உனது குடை கிழலின்கீழ் இக்காலம்வரை கூட்டங்கூடி இங்கிருந்த எளியேம் என்ன
செய்ய இருக்கின்ருேம் ?
கன்னன் கூறிய இகழுரையைக் கேட்டுக் கோபங்கொண்ட கடோற்கசன் கூறுவானுயினுன்:- 8 என்னதான் நீங்கள் வாய் மதங்கொண்டு பேசினலும் பூமி முழுவதையும் ஆளலாம் என்று மனப்பால் குடிக்கின்ற அறிவிலிகளே, சிவபெருமான் முப்புரங் களைச் சுட்டுச் சாம்பராக்கியது போன்று பாடிவீட்டைத் தீய்க்கு இரையாக்கி வாயுதேவன் மகனுக்கு மகன் என்பதை உலகறியச் செய்து உங்களைப் பரிசுகெடுப்பேன். எதிர்த்த உங்களைத் தலையறுப்பதற்கு விசயன் வரவேண்டுமோ? அன்றி மற்றுள்ளார் திரண்டுவர வேண்டுமோ? இரவு விடியுமுன்னே போர் செய்து சாம்பலாக்கிவிடுவேன். ஆணுல் எங்கள் தலைவன் சொன்ன அசைவில்லாத மொழிக்கு மாமுகப் போர் செய்ய லாகா தென்றிருக்கின்றேன். இது உங்களுக்குத் தெரிய வில்லையா? மேலும் இருவர் தம்முள் எதிர் நின்று போர் செய்தல் உலகியற்கை. நீங்கள் எல்லோரும் ஒன்று கூடி வந்தும் ஒரு பச்சைப் பாலகனுக்கு ஆற்றுமற் பறந்து ஒடி னிர்கள். பின்பு ஒருவன் தோழிக்க, ஒருவன் கை துணிக்க, ஒருவன் அறைகூவிப் பொருது கொன் முன். இந்த ஆண்மையைக் கொண்டோ வாய்மதம் பேசுகின்றீர்கள்?
மலை போன்ற தோள்களையுடைய வீமன் மகன் இப்படியே மதியாமற் பேசிய மொழிகளைக் கேட்ட பாம்புக் கொடியோன் கோபத்துடன் பார்த்து, 'இருக்கின்ற பெரிய சபைக்கு ஏற்றபடி
மரியாதையாகப் பேசாமல் வாய் மதங்கொண்டு பேசுகின்ற
அாக்கி மகனேடும் ஒன்றும் உரையாடாதீர்கள்' என்று அங்கி
ருந்த அரசர் யார்க்குஞ் சொன்னன். அந்த உரையைக் கேட்டுக் கடோற்கசன் எள்ளி நகைத்துரைப்பானுயினன் :- ? ஐயா, அரக்கரே யாயினும் அவர்கள் வஞ்சனை கினையார்; போர்

Page 18
28 தமிழ் அமுதம்
முகத்தில் வஞ்சனை புரியார்; வலிமை மேம்பட்ட சகோதரருக்கு விடம் உண்பியார்; கழுமரத்தில் வீழச் செய்யார்; வெள்ளக்கில் அழுத்தார்; இருப்பிடம் விட்டகற்ருர்; வாழும் மனையில் நெருப்பு வையார்; செய்த நன்றியைச் சிதையார்; இழிந்த மனத்திலே அழுக்காறு கொள்ளார்; பழி பாவத்திற்கு அஞ்சாமல் பொய்ச் சூதாடார்; கொழுந்தியரைத் துகிலுரிந்து மான பங்கஞ் செய்யார்; கொடிய காட்டிற் கனுப்பிப் பின்பு கொல்ல கினையார்; போருக்கு முற்பட்டுப் பின்னர் புறங்காட்டி ஒடமாட்டார்; இச் செயல்களெல்லாம் பெரியோராகிய தங்க
ளுக்கே ஏற்றன.”
இப்படி ஏசிவிட்டு, 'வெற்றி விசயன் போர்க்க நாம் புக்க อัง அவனுேடு எதிர் கிற்க வல்லவர் சிலர் மானுடரில் இல்லை; தேவர் களில் உண்டோ என்பது ஐயம். உன் மைக் துனன் சிந்து ராசன் வலிமைமிக்க வேந்தர் பக்கத்திலிருந்து போற்றினலும் நாளைய தினம் மடிவது தப்பாது” என்பதையுஞ் சொல்லி
மீண்டான்.
சிறப்பியல்புகள் :
இப்பகுதியில் அவதானிக்கக் ககும் சிறப்பியல்புகள் சில உள. அவற்றுள் முதலில் ஆராயத் தக்கது உதிட்டிரன் உயர் குணத்தை ஆசிரியர் காட்டுங் திறனேயாகும். தொடக்கத்தி லேயே முரசக் கொடியோன் உமையாடியதைக் கூறிஞல் பூவுலகில் யார் வியவாதவர் என்று பீடிகையிட்டு, கடோற்கச னுக்கும் அவனுக்குமிடையே நிகழ்ந்த பேச்சை மேலே கூறு கின்றர். உலகம் தோன்றிய காலம் முதல் அற நெறி பற்றிய இரு வேறு கொள்கையினர் இருந்து வருகின்றனர். ஒரு பகுதி யினர் தமக்கு வாய்ப்பான சந்தர்ப்பங் கிடைத்தால் நீதி என்றும் அநீதி என்றும் பாசாமல் தமக்குரிய வஞ்சனை, பொய் முதலியவற்றேடு தொடர்புற்ற எவ்வித அடாத வழியை மேற் கொண்டேனும் தாம் ஆரம்பித்த கருமத்தை நிறைவேற்றுவர். மற்ருெரு சாரார் எத்தகைய அரிய சந்தர்ப்பங் கிடைத்தாலும் அற நெறியினின்றும் இம்மியும் வழுவாது தம் கருமத்தைச் செய்து முடிக்கும் பண்பினர். இவ்விருவேறு வழிகளுள் முந்திய வழியைத் துரியோ தனதியர் மேற்கொண்டனர்.

கடோற்கசன் துஆறு 29 உகிட்டிரன் பிந்திய தாகிய நன்னெறியையே மேற்கொண்டான். அவன் மேற்கொண்ட வழியினை அவன் வாய் மொழியாக, *அற நெறியே ചെ ருகல்லது வெல்லுதல் ஆண்மை கொலோ ? அழகோ? விறல் நெறியாவது பொய்யிலத” என்று ஆசிரியர் உணர்த்துகின்றர்.
அடுத்தபடி துரியோதனன் மனநிலையையும் குணத்தையும் ஆசிரியர் காட்டும் பண்பினை ஆராய்வோம். கடோற்கசன் சென்ற சமயம், ஒரு தன் இலக்கண மைந்தன் இறந்தனன் என்று அழுது உள்ள பூழியும் விருதுடை வித்தகன்’ என்று அவன் மனநிலையைக் காட்டி, அவன் தன்னைப் போலவே அருச்சுனனும் அழுது வருந்தியதாகப் பாவனை செய்து பேசிய தன்மையும், கடோற்கசன் கூறியதைத் தெளிவாக அறியாதவன் போன்று வஞ்சனையும் தற்பெருமையும் வாய் மதமுங் தோன்றப் பேசிய பண்பும் சிறந்த முறையிற் காட்டப்பட்டுள்ளன.
இப்பகுதியில் அடுத்தபடி முக்கியமாக ஆராயத்தக்கது கடோற்கசன் தூதுரைத்த பெற்றியாகும். உதிட்டிரனிடம் விடைபெற்றுச் சென்றவன் ஒருவரையும் மதியாமற் பேசித் தான் சொல்ல வேண்டுவதைத் சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறினன். அப்படிக் கூறும் பொழுது உதிட்டிானது பெருங் தன்மையையும் எடுத்துரைத்தான். அதற்கு விடையாகக் திரியன் உரைத்த வாய் வீரமும் கன்னன் இகழுரையுங் கேட்ட வன் கோபங்கொண்டு, அவர்கள் செய்த அடாத செயல்களை யெல்லாம் சொல்லி இகழ்ந்து பின்பு வீராவேசங்கொண்டு தன் ஆற்றலை எடுத்திரைத்து ஏசினன். துரியன் (அவனை அரக்கி மகன் என்று இகழ்ந்துரைப்ப, கடோற்கசன் கடுங்கோபம் பெரும் ஏளனமாக உருக்கொள்ளக் தன் வாய்வல்லமை முழுதுங்கொண்டு துரியோதனன் ஆகி முதல் அன்று வரை செய்த வஞ்சகச் செயல்களை யெல்லாம் எடுத்துரைத்து ஏசி மீண்டான். அவன் ஏசியுரைத்த பகுதி சொற் சாதுரியம் கிாம்பிய இகழுரைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவது.

Page 19
30 தமிழ் அமுதம்
தருமன் கடோற்சகனைத் துரியோதனனிடம் தூதனுப்புதல் 28. இங்கிவர் மூவரும் ஏகினர் மீளுமுன் எறிமுர சக்கொடியோன்
அங்குரையாடிய துரைசேயின் மண்மிசை யார்விய
வாதோழியார் பங்குனன் ஒதிய வஞ்சின மும்பசு பதியிடை ஏகியதும் கங்குலின் ஏவினன் உரைசேய்க என்றுக டோற்சக
மீளியையே, 1 கடோற்கசன் வின 29. மற்றவன் முந்துறு தந்தையை வந்துவ ணங்கிமுன்
" : , வஞ்சனையிற் சேற்றவர் தம்முடன் உற்றது சோல்வது சேவக மோஅறிவோ
28. இங்கு . இவ்விடத்து; "மீளுமுன்? என்பதனேடு முடியும். ஏகினர்ஏகி; சென்று. எறி முரசக் கொடியோன் - அடிக்கின்ற முரசத்தின் உருவம் பொறித்த கொடியினையுடைய உதிட்டிரன். அங்கு - அப்பாசறையில், உரையாடியது - சொல்லியது. பங்குனன் - பங்குனி மாதம் பிறந்தவன்; அருச்சுனன். வஞ்சினம் - சபதம் (34). பசுபதி - சிவபெருமான். கங்குலின் - அப்பதின்மூன்ரும் நாள் இரவிலேயே. மீளி ஆண் சிங்கம்.
கண்ணபிரான், அருச்சுனன், கருடன் ஆகிய மூவரும் கயிலைக்குச் சென்று இவ்விடம் திரும்பி வருமுன், உதிட்டிான் பாசறையிற் சொல்லியதைக் கேட்டுப் பூமியிலே ஆச்சரியப் படாமல் நிற்பவர் யாவர்? (அவன் உரைத்தது யாதெனில் :-) அருச்சுனன் அடுக்க நாள் சூரியன் விழுமுன் சயத்திர தனக் கொல்லாவிடின் தான் தீயின் மூழ்கி இறப்பதாகக் கூறிய சபதத்தையும், அதனை நிறைவேற்றும் பொருட்டுச் சிவபெருமா னிடம் சென்றதுமாகியவற்றைப் பதின் மூன்ரும் நாள் இரவி லேயே துரியோ தனதியரிடம் கூறுவாயாக என்று ஏவினுன் : (யாரை எனின்:-) கடோற்கசன் என்னும் ஆண் சிங்கத்தை.
பங்குணன் ஓதிய வஞ்சினமும், ஏகியதும் . கங்குலில் உரை செய்க என்று கடோற்கச மீளியை ஏவினன் என்று கூட்டுக.
29. மற்று - உடனே. முந்துறு - தனக்கு முன்னே பொருந்திய. செற்றவர் - பகைவர். உற்றது . நிகழ்ந்தது. சேவகம் - வீரம். கழல் - பாதம். உள் அழன்று - மனங்கொதித்து. புகன்றனன் - சொன்னன்.
உடனே அந்த வீரன் தனக்கு முன்னே இருந்த பெரிய தந்தையாகிய உதிட்டிரனை வணங்கி, 'முன்பு போர்க்களத்தில்

கடோற்கசன்தூது 31
கொற்றவர் மாமுடி கமழ்கழ லாய்வலி கூர்திறலுஞ்செயலும் அற்றவர் போலஉரைப்பதேன் என்றுள் அழன்றுபு
: - கன்றனனே. 2
தருமன் விடை
30. திறனறி யாம லுரைத்தனை மாருதி சிறுவனே னும்படிநீ
(மறநெறி ஏன்று வயிர்த்தவர் கோல்வது வஞ்சனை யோவிரகோ
அறகேறி யேபோரு தல்லது வேல்லுதல் ஆண்மைகோ ്യ
லோஅழகோ) /ހ ދި விறனேறி யாவது போய்யில தென்றனன் மெய்ம்மை
உணர்ந்திடுவான்.8
- ހހހހހހ வஞ்சனையினல் அபிமனக் கொன்ற பகைவரிடம் நிகழ்ந்ததைக் . கூறுவது விமமோ? அன்றி அறிவுடைமையோ? வெற்றி மிக்க ', '
அரசர்களது பெரிய முடியின் கண்ணே மணங்கமழும் பாதங்
AvY
களாகிய தாமரை மலரையுடையவனே, வலிமை மிக்க வீரமும செயலும் ஒழிந்தவர் போன்று இப்படி நீ உரைப்பது எக்காா ணத்தினுல்? என்று மனங் கொதித்துக் கூறினன்.
செற்றவர். உரைப்பதென் - பகைவரை வெல்லும் வல்லமை வாய்ந்த நீ இவ்வாறு சொல்லியனுப்பினுல் துரியோதனன் பலவீனத்தினுற்
**
சொல்லிவிட்டதாக எண்ணி மேலும் கர்வங்கொள்ளுவான் ஆதலால் இது Y எதற்கு என்று கருதினன். ஏ - ஈற்றசை. 9ܛ؟
*
30. திறன் - செய்யுங்திறன்; தகுதி. மாருதி . வீமன் மருத்தன் மகன் மாருதி, மருத்தன் = வாயுதேவன். சிறுவன் - மகன். மறநெறி ஏன்று - கொடுமையான வழியை மேற்கொண்டு. வயிர்த்தவர் - பகைவர். விரகு - உபாயம், விறல்நெறி - வெற்றிக்குரிய வழி. மெய்ம்மை உணர்ந்திடுவான் - மெய்யான தத்துவத்தை உணர்ந்த உதிட்டிரன்.
"செய்யுங் தகுதி அறியாமற் கூறினுய்; வீமன் மகன் என்ப தற்கு ஏற்றபடி கோபத்தினற் கூறினய் நீ; கொடுமை மிக்க வழியை மேற்கொண்டு வயிாங் கொண்ட பகைவரைக் கொல் வது வஞ்சகமோ அன்றி ஓர் உபாயமாகுமோ? தரும வழியிலே போர் செய்தல்லது வெற்றிகொள்வது வீரமோ? அன்றி அழ கா குமோ? இரண்டும் அன்று. வெற்றிக் குரிய வழியாவது பொய்ம்மை கலவாத நெறியே யாகும்’ என்றுரைத்தான் உதிட்டிான்.

Page 20
32 தமிழ் அமுதம்
கடோற்கசன் துரியோதனன் வாயிலடைந்து விளித்தல் 31. நிருதன கைத்துவ ணங்கி மணங்கமழ் நீளிலே வேலினெடும்
கருதலர்துற்றிய பாசறை அன்றேர்க ணப்போழு திற்புகுதா ஒருதனி லக்கண மைந்தனி றந்தனன் என்றழு துள்ளழியும் விருதுடை வித்தகன் வாயிலி னின்றுவி ஸ்ரித்தனன்
ஒருரையே. 4
அவன் வாயில் காப்போரிடம் கூறியன
32. எதிரெதிர் கோற்றவன் வாயிலின் நின்றவர் யாரேன
எய்துதலும் அதிர்முர சக்கோடி யோனர வக்கோடி அரசினி
டைப்பகர்வான்
31. நிருதனகைத்து - நிருதன் நகைத்து. நிருதன் - அரக்கன், கடோற் கசன். நிணம் . கொழுப்பு. கருதலர் துற்றிய பாசறை - பகைவர்கள் நிறைந்த படைவீடு. புகுதா - புகுந்து; அடைந்து. இலக்கண மைந்தன் . இலக்கண குமாரன். உள்அழியும் - மனம் வருந்தும். விருதுடை வித்தகன் - அபிமனைக் கொன்றதனுல் வெற்றியையுடைய சதுரனகிய துரியோதனன். ஓர் உரை விளித்தனன் . ஒரு வார்த்தை சொல்லிக் கூப்பிட்டான்.
அதைக் கேட்ட கடோற்கசன் நகைக் து, உதிட்டிானை அடி பணிந்து, பகைவரது உடற் கொழுப்பு நாறுகின்ற மீண்ட அரசிலை வடிவமான தன் வேலினேடும் பகைவர்கள் தங்கியுள்ள பாடி வீட்டை ஒரு கணப்பொழுதில் அடைந்தான். அடைந்து ஒப்பற்ற தன் மகனுகிய இலக்கண குமாரன் அன்று இறந்தனன் என்று புலம்பி மனம் வருந்துகின்ற துரியோதனன் வா யிலிலே கின்று ஒரு வார்த்தை சொல்லிக் கூப்பிட்டான்.
32. எதிரெதிர் வாயிலில் நின்றவர் - ஒருவரெதிர் மற்றவராக வாயிலின் இருமருங்கினும் நின்ற வாயில் காப்பாளர். அதிர் முரசக் கொடியோன் - முழங்குகின்ற முரசக் கொடியையுடைய உதிட்டிரன். அரவக் கொடியோன் . பாம்புக் கொடியையுடைய துரியோதனன். பகர்வான் - கூறும்படி. முதிர உரைத்தது - நன்முகக் கூறியது. எதிர் அறு வெற்றி அரிக்கொடியோன் - ஒப்பில்லாத வெற்றியையுடைய சிங்கக் கொடியையுடைய வீமன்,
எதிரெதிராக இருமருங்கினும் கின்ற வாயில் காப்போர் அப்படி விளித்தவர் யார் என்று வினவியபடி வந்த அளவிலே,
 
 

கடோற்கசன் து து 33
முதிரவு ரைத்ததோர் மோழியுள தம்மொழி மொழிதர
, , ... . . வந்தனன்யான் எதிரறு வேற்றிஅ ரிக்கோடி யோன்மகன் என்றனன்
விக்ரமனே. 5
கடோற்கசன் உள்ளே சென்று பேசத் தொடங்கல்
33. அம்மோழி தீயுரு மேறென நீடவை அரசர்சே விப்படஒர் சேம்மொழி யற்றவன் மொழிவழி சேன்றேரு சிறிதும
தித்தருளான்
*உதிட்டிரன் பாம்புக் கொடியையுடைய மன்னவனிடம் சொல் லும்படி கன்முகக் கூறினதாகிய ஒரு வார்த்தையுளது; அதனைச் சொல்ல வந்தேன். யான் வீமன் மகன்” என் முன் வெற்றியை யுடையவனகிய கடோற்கசன்.
33. தீ உரும் ஏறு - கொடிய பேரிடி, நீடு அவை - பெரிய அவை. ஓர் செம்மொழி அற்றவன் - ஒரு நல்ல வார்த்தை சொல்லும் இயல்பில்லாத வனகிய துரியோதனன். மொழிவழி சென்று-கட்டளைப்படி உள்ளே சென்று. நோதகு நெஞ்சினன் - தன்மகன் இறந்தமைக்கு வருந்துகின்ற துரியோதனன். வித்தகன் - தூதன்.
வாயில் காப்போரிடம் கூறிய அந்த வார்க்தை கொடிய இடியேறு போன்று பெரிய அவையிலுள்ள அரசர் செவியிற் பட, உடனே துரியோதனன் கட்டளையிட்ட வண்ணம் உள்ளே சென்று, அங்குள்ளவர் யாரையும் ஒரு சிறிதும் மதியாதவனகி, “உங்கள் பேச்சை கிறுக்கிவிட்டு யான் கூறும் ஓர் உண்மை மொழியைக் கேட்பாய்' என்று கடோற்கசன் கூறினன்; அப்படிக் கூற, மகன் இறந்தமைக்கு வருந்துகின்ற நெஞ்சின னகிய துரியோதனனும், கொடிய சொற்களைப் பேசுகின்ற தூதனே, உன் பெரிய தங்தை சொல்லிவிட்ட மெய்மையான வார்த்தைகள் எவ்வார்த்தைகள்?’ என்று கேட்டான்.
செம்மொழி - நீதியும் இனிமையும் உடைய வார்த்தை. ‘நும் மொழி விட்டு ஒரு மெய்ம்மொழி கேள் என்றமையால் நீங்கள் பேசுவனவெல்லாம் பொய்ம்மொழி என்னும் குறிப்புப்படப் பேசினன். நும் என்று பன்மை
5

Page 21
34 தமிழ் அமுதம்
நும்மொழி விட்டோரு மேய்ம்மொழி கேளென நோதகு
ாேகஞ்சின்னும் வேம்மோழி வித்தக எம்மோழி நுங்தைதன் மேய்ம்மோழி
என்றனனே. 6 கடோற்கசன் கூற்று (34-35) »i 34. தன்திரு மைந்தனை மேளலிது னித்தச யத்திர
தன்தனைவாள் வென்றிகோள் காவலர் காவன்மி குப்பினும் வேயிலவன்
வீழ்வதன்முன் கோன்றிடு வேனது தப்பின ருங்கன லூடுகு தித்திடுவேன் என்றுமோ ழிந்தரன் வாழ்கயி லாயமும் எய்தினன்
வில்விசயன். 7 35(வஞ்சனே யாலம ரிற்பகை தன்னைமலைப்பது பாதகமேன்று அஞ்சின தைலின் நீயறியும்படி ஐயன்விடுத்தன்னல்
யிலே தொடங்கி கேள்' என்று ஒருமையிலே முடிவது பால் வழுவமைதி: இகழ்ச்சி பற்றியது.
84. திருமைந்தன் - சிறந்த மைந்தன். மெளலி துணிந்த - தலையைத் துண்டித்த. காவல் - பாதுகாப்பு. வெயிலவன் - சூரியன். வீழ்வதன்முன் -
அத்தமிக்கு முன்பு, அது தப்பின் - அப்படிச் செய்வது தவறினல், அரன்சிவபெருமான். விசயன் - அருச்சுனன்.
* தனது சிறந்த மகனைத் தலைதுணித்த சயத்திாதனை வாள் வலிமையினலே வெற்றிகொள்ளும் அரசர் செய்யும் பாது காப்பு மிக அதிகமாகச் செய்யப்படினும் (நாளை) சூரியன் அத்தமிக்கு முன் கொன்று விடுவேன். அப்படிக் கொல்வது தவறுமாயின் அரிய நெருப்பில் வீழ்ந்து விடுவேன்' என்று சபதங்கூறி, சிவபெருமான் வாழும் கயிலை மலையை அடைந்தான் வில்லில் மேம்பட்ட அருச்சுனன்.”
35. அமரில் - போரில். மலைப்பது - அழிப்பது. பாதகம் -gasar. ஐயன் . உதிட்டிரன். எஞ்சினன் - நிச்சயம் இறந்துபடுவான்; காலவழு வமைதி. உன் மைத்துனன் - உன் சகோதரி துச்சளையின் கணவன். வன்திறல் கூர் நிசாசரன் மருமான் நெஞ்சினில் வேருெரு சஞ்சலமற்ற நிசாசரன் மருமான். நிசாசரன் - இரவிலே சஞ்சரிப்பவன் அரக்கன் ஈண்டு . இடிம்பன்.
 

கடோற்கசன் தூது 35
எஞ்சினன் நாளையுன் மைத்துனன் என்றுகோள் என்றனன் '. வன்திறல்கூர் கேஞ்சினில் வேறெரு சஞ்சல மற்றங் சாசரன் மாமருகன். 8
வேறு
துரியோதனன் கூறுவன (36-39)
36. மன்மைந்தர் பலரோடும்போய் மறித்தோருவர்
மீளாமன் மலைந்து வீழ
என்மைந்தன் இறந்திடவும் யாதோன்றும்
புகலாமல் இருக்கின் றேன்யான்
தன்மைந்தன் இறந்தனனும் தான்தழலின் மூழ்குவனும் சபதங் கூறி
வின்மைந்தின் மிகுந்தவருக் கழுதிரங்கி
அரற்றுவது வீரங் தானே. 9
'வஞ்சனை வழியை மேற்கொண்டு போரிலே பகைவனைக் கொல்வது தீவினை என்று ஐயன் கருதினன்; ஆதலினலே நீ அறியும்படி ஐயன் என்னை விடுத்தனன். நாளை நடைபெறும் போரில் உன் மைத்துனன் இறந்தான் என்றே மனதிற் கொள்ளுவாய்" என்று கூறினுன் மிகுந்த ஆற்றலையுடையவனும் மனதில் எவ்விதமான கவலையற்றவனுமாகிய இடிம்பன் மருமக ணுகிய கடோற்கசன்.
36. மன்மைந்தர் - அரச குமாரர்கள். மறித்து . மறுபடி, மலைந்துவீழபோர் செய்து இறக்க, வில் மைந்தின் மிகுந்தவர்க்கு வில் வன்மையில் மேம்பட்டவருக்கு, அழுது - புலம்பி. இரங்கி - விசனமுற்று. அரற்றுவது -
கதறுவது.
'அரசகுமாரர் பலரோடும் போய் மறுபடி ஒருவரும் மீண்டு வாரா தடடி போர் செய்து இறந்து பட என் மைந்தன் இறந்தான்; அப்படி இறந்திடவும் யான் யாதொன்றும் பேசாமல் இருக்கின்றேன். இவன் தன் மகன் இறந்தனனும்; அதன் பொருட்டுத் தான் நெருப்பிலே மூழ்குவானம்; இப்படி யெல்லாம் சபதங்கூறி வில் வலிமை மேம்பட்டவர் இறந்தமைக் குப் புலம்பி, வருந்திக் கதறுவது உண்மை வீரமாகுமோ?

Page 22
37. பயத்திரவில் நடுங்கிஅரன் பருப்பதம்புக்கு
அவன்கோடுத்த படையும் வாங்கி
வயத்திரத மால்கடவ வந்தேதிர்தோன்
றுவனுகின் மகர மோதும்
கயத்திரவி விழுவதன்முன் கையறுதன்
புதல்வனைப்போற் களத்தின் மாளச்
சயத்திரதன் கோடுங்கணையால் தான்படுதல்
உறுதியெனச் சாற்று வரியே. 1O
38. என்னினும்பார் தனக்குரியன் சிலைத்தொழிலிற்
சிலைக்குருவாய் எவரும் போற்றும் மன்னினுந்தான் மிகவலியன் தண்டெடுத்தால்
உங்தையினும் வலியன் சால
37. பயத்து இரவில் - அச்சக்தருவதாகிய இரவில். கடுங்கி - அஞ்சி. பருப்பதம் - மலை; பர்வதம் என்பதன் திரிபு. படை - ஆயுதம். வயத்து இரதம் மால் கடவ - வலிமையுள்ள தேரைக் கண்ணபிரான் செலுத்த. மகரம் மோதும் கயம் = மகர மீன்கள் மோதுகின்ற நீர் நிலையாகிய கடல். இரவி - சூரியன். கையறுதல் - செயலற்றுப்போதல், படுதல் - இறத்தல்.
*அச்சங் தருகின்ற இராக்காலத்தில், தன் சபதம் நிறை வேறுமோ என்று அஞ்சி, சிவபெருமான் வாழ்கின்ற கயிலை மலைக்குச் சென்று அப்பிரான் கொடுத்த படைக்கலமும் பெற்று, கண்ணபிரான் தேர் செலுத்தப் போர்க்களம் வந்து எதிரே தோன்று வானுகில் மகாமீன்கள் மோதுகின்ற கடலில் சூரியன் விழுமுன்பு, செயலற்றுத் தத்தளித்த தன் புதல்வனைப் போலப் போர்களத்தில் மாளும்படி சயத்திர தன் விடுகின்ற கொடிய அம்பினுலே தானும் பட்டு விழுதல் நிச்சயம் என்று எடுத்துரைப்பாய்”.
38. பார்தனக்கு என்னினும் உரியன் என்று கூட்டுக. சிலைக்குருவாய் எவரும் போற்றும் மன் - வில்லாசிரியனுய் எல்லாராலும் போற்றப்படுகின்ற தலைவனுகிய துரோணன். உங்தை - உன் தங்தையாகிய வீமன், உரன் - தோள்வலி. தன்னினும் - அருச்சுனனைக் காட்டிலும், எளியன் - குறைந்தவன். -
*உலகினை ஆளும் உரிமையில் என்னைக் காட்டிலும் கூடிய உரிமை பெற்றவன்; வில்லினுற் செய்யும் போர்த்தொழிலை
 
 
 

கடோற்கசன்தூது 37
உன்னினுந்தோள் உரனுடையன் மதியாமல்
இப்படிநீ உரைக்க லாமோ
தன்னினும்போர்க் கேளியணுே சயத்திரதன்
தானேன்று சாற்று வாயே. 11
89. ஆளேயாள் நிலையறிவ தல்லதுமற்
றறிபவர்யார் அணிந்த போரில் காளையார் வேல்வரெனத் தெரியுமோ
எனாகவின்று கக்கான் மன்னுே பாளைவாய் கேடுங்கமுகின் மிடருேடியக்
குலைத்தெங்கின் பழங்கள் வீழ வாளேபாய் குருநாடும் எங்காடும்
முழுதாளும் மன்னர் கோமான். 12
நோ க்குமிடத்து சிலைக்குருவாகி யாவராலும் போற்றப்பட்ட தலைவனன துரோணுசாரியனிலும் மிகுந்த வலிமையுடையவன்; தண்டாயுதத்தைக் கையிலே கொண்டால் உன் தந்தை வீமனைக் காட்டிலும் மிக வலிமையுடையவன்; உன்னைவிடத் தோள் வலிமை யுடையவன். இத்தகையவனை மதியாமல் இப்படி மீ பேசலாமோ? அருச்சுனன் தன்னைக் காட்டிலும் போரிலே வல்லமை குறைந்தவனே சயத்திாதன் என்று கூறுவாய்.”
39. நிலையறிவது - வடிவத்தை அறிவது. மற்று - ஏனையவற்றை; குணம் முதலியவற்றை. அணிந்த - அணிவகுத்து நின்ற. மன் ஓ - அசை, மிடறு = கழுத்து; இங்கு மேற்பக்கம். வாளை - வாளைமீன். மன்னர்கோமான்அரசர்களுக்குத் தலைவனுன துரியோதனன்.
*ஒரு மனிதன் மற்முெரு மனிதன் எதிரே தோன்றும் வடிவத்தின் தன்மையை அறிவதல்லாமல் குணம், ஆற்றல்
முதலியவற்றை உண்மையில் அறியவல்லவர் யார்? ஒருவரும்
இல்லை. அணிவகுத்து கின்று செய்யும் யுத்தத்தில் நாளை யார் வெற்றியடைவார் என்று தெரியுமோ?" என்று சொல்லிச்
சிரித்தான். (யாவன் எனின்:-) பாளைகள் அமைந்த மீண்ட கமுகமாத்தின் கழுத்து ஒடியும்படி குலையாக உள்ள தென்னை
மாத்தின் நெற்றுகள் விழ, அந்த அதிர்ச்சியினல் வாளைமீன்கள் துள்ளிப் பாய்கின்ற நீர்வளம் மிக்க குரு நாட்டையும் மற்றைய

Page 23
38. தமிழ் அமுதம்
கன்னன் இகழுரை (40-41)
40. தாரரசன் மகன்துச்சா தனன்மகன்சல்
லியன்மகன்வேற் சகுனி என்னும் பேரரசன் மகன்முதலா எத்தனைபேர்
பட்டாலும் பேரிய தன்றே (பாரரசா ளுதற்கிருந்த பார்த்தன்மா
மகனுேருவன் பட்டா கில் ஆரரசுக் கினிஉரியார் அந்தோளன்
றுரைத்தான் அங்கர் கோமான். 13
41. அங்கிருந்து சயத்திரதன் ஆவிகவர்ந்
திடுவலென ஆண்மை கூறிப் பங்கிருந்த உமாபதிபாற் பணிந்துவரம்
பெறச்சென்றன் பார்த்த ஞகிற்
எல்லா நாட்டையும் தான் ஒருவனே முற்றும் ஆளவேண்டு மென்னும் ஆசையையுடைய துரியோதனன்.
40. தார் அரசன் - மாலையினை அணிந்த துரியோதனன். பட்டாலும்இறந்துபட்டாலும். அங்தோ - ஐயோ பாவம்; பரிகாசக் குறிப்பு. அங்கர் கோமான் - அங்கநாட்டு மக்களின் தலைவன் கன்னன்.
*வெற்றி மாலையை அணிந்த நம்மாசன் மகன், அவன் தம்பி தச்சாதனன் மகன், சல்லியன் மகன், வேற்படையை யுடைய சகுனி என்று சொல்லப்பட்ட அரசன் மகன் முதலாக எத்தனைபேர் நேற்றுப் போர்க்களத்தில் இறந்துபட்டாலும் அந்த இழவு பெரிதன்று; ஆனல் உலகை யெல்லாம் ஆள்வதற் கென்று காத்திருந்த அருச்சுனனது சிறந்த மகன் ஒருவன் இறந்தானனல் யார் இனி அரசாள உரிமை பூண்டவர் ? ஐயோ
பாவம்' என்று ஏளனமாகச் சொன்னன் கன்னன்.
41. அங்கிருந்து - எதிர்ப்பக்கத்திலிருந்து. ஆண்மை - வீரமொழி. பங்கு - பக்கம்; இடது பக்கம். பணிந்து - வணங்கி. பார்த்தன் சென்ருனுகில் என்று கூட்டுக. கொங்கு - வாசனை. ஏழையரேம் - எளியவராகிய நாங்கள். மற்று என்செய்ய இருக்கின்றேம் - அருச்சுனனை ஒழிப்பதையன்றி வேறு என்ன செய்ய இருக்கின்ருேம்.

கடோற்கசன் தூது 39
(கொங்கிருந்த தாராய்கின் குடைநிழற்கீழ்
இதுகாலங் கூட்டங் கூடி இங்கிருந்த ஏழையரேம் என்சேயமற்
றிருக்கின்றேம்) என்றுஞ் சோன்னன். 14
கடோற்கசன் வெகுண்டு கூறுவன (42-44)
42. இவன்மொழிந்த இகழுரைகேட் டிடிம்பன்மரு
கன்வெகுளுற் றேன்சோன் னுலும்
அவனிதல முழுதுமினி அரசாள
நினைந்திருந்தீர் அறிவி லீர்காள்
'அவ்விடத்திலிருந்தபடியே சயத்திரத ன் உயிரைக் கவர்ந்து விடுவேன் என்று வீர வாதங் கூறி, இடப்பக்கத்தில் உமாதேவியைக் கொண்ட சிவபெருமானிடம் வணங்கி வரம் பெறும் பொருட்டு அருச்சுனன் சென் முன் என் முல், வாசனை வீசுகின்ற மாலையினை அணிந்தவனே, உனது குடை நிழலின் கீழே இவ்வளவு காலமாகக் கூட்டங்கூடி இங்கே இருந்த எளியவராகிய நாங்கள் எல்லோரும் அருச்சுனனை ஒழிப்பதை யன்றி வேறு என்ன செய்ய இருக்கின்முேம்? என்றும் சொன்னன்.
42. இவன் - கன்னன். இடிம்பன் மருகன் . கடோற்கசன். வெகு
ளுற்று - கோபமுற்று, "என்சொன்னலும்" என்பது ‘தீப்படுத்துவேன்' என்பதனேடு முடியும், அவனிதலம் - பூவுலகம். சிவன் எரி செய்யும் புரம் -
முப்புரம். பாடிவீடு - பாசறை. பவனன்மகன் மகன் - வாயுவின் குமாரனன
வீமன் மகன். பரிசு - தன்மை, ஈடுபடுத்துவேன் - (உங்கள்) பெருமையை அழிப்பேன்.
இப்படிக் கூறிய கன்னன் மொழிகேட்டு இடிம்பன் மருமக ணுகிய கடோற்கசன் கோபங்கொண்டு, “நாங்கள் என்ன சொன்னலும் அதனைக் கேளாமல் உங்கள் மனேசதப்படி அரசாளலாம் என்று எண்ணியிருந்தீர்; இதிலிருந்தே நீங்கள் அறிவில்லாதவர்கள் என்பது விளங்குகின்றதல்லவா? சிவபெரு மான் எரித்திட்ட முப்புரம் போன்ற உமது பாசறைக்கு நெருப்பு வைத்துச் சேனை முழுவதையும், வாயுதேவன் மகனுகிய
வீமன்மகன் யான் என்னும் தன்மையை யாவரும் அறியும்படி
Kø

Page 24
40 தமிழ் அமுதம்
சிவனேரிசேய் புரம்போலும் பாடிவீடு
அழலூட்டிச் சேனை யாவும். பவனன்மகன் மகனேன்னும் பரிசறியத்
தொலைத்தீடு படுத்து வேனே. 15
43. தசைகுருதி மிசையோழுகத் தனித்தனியே
எதிர்த்தவரைத் தலைகள் சிந்த
விசயன்வர வேண்டுமோ மற்றுள்ளார்
திரண்டுவர வேண்டு மோதான்
நிசைபுலரு முனமுனைந்து நீருக்கி
விடுகுவனெம் நிருபன் சோன்ன
அசைவின்மோழி மறுத்துடற்ற லாகாதேன்
றிருக்கின்றேன் அறிகி லீரே. 16
44. இருவரெதிர் ஸ்திர்தம்மில் இகல்போருதல்
உலகியற்கை யாருங் கூடிப் பருவமுருத் தனிக்குதலைப் பாலகனுக்
காற்ருமற் பறந்து போனீர்
அழித்து உமது பெருமையை (அகம்பாவத்தை) இப்பொழுதே தொலைப்பேன்".
43. தசைகுருதி மிசை ஒழுக = தசையும் இரத்தமும் மேலே வழியும் படி, சிந்த - சிதற அடித்து. நிசை . இரவு. புலருமுன் - விடியுமுன் முனைந்து - போர் செய்து, நீருக்கிவிடுவன் - சாம்பலாக்கி விடுவேன். நிருபன் . அரசனுகிய உதிட்டிரன், அசைவில் மொழி - தளர்ச்சி யில்லாத மொழி. உடற்றல் - போர் செய்தல். தான் - அசை, −
*சதையும் இரத்தமும் மேலே வழியும்படி எதிர்த்தவர் யாவரையும் தனித்தனியே தலைகள் பட்டுருளச் செய்வதற்கு விசயன் வரவேண்டுமோ? அன்றி வீமன் முதலிய வீரர் திரண்டு வரவேண்டுமோ? இரவு கழிந்து விடியுமுன் போர் செய்து சாம்ப லாக்கி விடுவேன்; ஆனல் எம்மாசன் கூறிய கலங்காத கட்டளையை மறுத்துப் போர் செய்யலாகாதென்று வாளா இருக்கின்றேன். இதை அறிய மாட்டீர்களா?"
44. எதிர் எதிர் - எதிரெதிராக. இகல் பொருதல் - போர் செய்தல், பருவம் உரு - தக்க வயது நிரம்பாத குதலை - மதலை மொழி. தேரழித்தவன்
ଽ

கடோற்கசன் தூது 4.
ஒருவன்கேடுந் தேரழிக்க ஒருவன்மலர்க்
கைதுணிக்க ஒருவன் பின்னைப்
பொருவனேன அறைகூவிப் போன்றுவித்தான்
இதுகொண்டோ புகல்கின் றீரே. 17
துரியோதனன் கூறுதல்
45. வரைக்குவமை பெறுந்தடந்தோள் வீமன்மகன்
இப்படியே மதியா னுகி உரைக்குமோழி கேட்டிருந்த உரகமணிக்
கோடிவேந்தன் உருத்து கோக்கி
கன்னன். கைதுணித்தவன் துரோணன். அறைகூவியவன் சயத்திரதன். அறைகூவி - போருக்கழைத்து.
6இருவர் எதிரெதிராக ஒருவரோடொருவர் போர் செய் தல் உலகியலிற் காணப்பட்ட இயற்கை; அப்படியிருக்க நீங்கள் யாவரும் ஒன்று கூடித் தக்க வயது கிாம்பாக மழலை மொழி பேசும் இளங்குமான் ஒருவனுக்குப் போரில் முன் கிற்க மாட்டாமல் முதுகு காட்டி விரைந்து ஒடினிர்கள். அப்படி ஒடியவர்கள் மீண்டும் வளைந்து ஒருவன் (கன்னன்) அவனது தேரை அழித்தான்; ஒருவன் (துரோணன்) மலர் போலுங் கையை வெட்டினன்; பின்பு ஒருவன் (சயத்திரதன்) அத்தகைய வனேடு போர் செய்வேனென்று அறைகூவி யழைத்து அழியும் படி செய்தான். இந்தப் பராக்கிரமத்தைக் கொண்டோ பேசுகின்றீர்கள்?
45. மதியானகி , லட்சியஞ் செய்யாமல், எழில் அவை-அழகிய சபை. உரகமணிக்கொடி வேங்தன் - பாம்பின் உருவம் பொறித்த கொடியையுடைய துரியோதனன். உருத்து - கோபித்து. தன் மதம் - தன்வாய்க்கொழுப்பு. அரக்கி - இடிம்பி.
மலைக்கு ஒப்பாகக் கூறப்பெறும் விசாலமான தேர்ள்களை யுடைய வீமன்மகன் கடோற்கசன் இவ்வண்ணமே மதியாமல் உாைத்த வார்த்தைகளைக் கேட்டிருந்த பாம்புக்கொடியோனுகிய துரியோதனன் கோபித்து நோக்கி, கோம் விற்றிருக்கும் அழகிய சபைக்குப் பொருத்தமானபடி பேசாமல் தனது வாய்க்
6

Page 25
42 தமிழ் அமுதம்
இருக்குமேழில் அவைக்கேற்ப இயம்பாமல் தன்மதத்தால் இயம்பு கின்ற
அரக்கிமக னுடனுேன்றுங் கழருதீர்
என்றுரைத்தான் அரசர் யார்க்கும். 18
கடோற்கசன் ஏளனஞ்செய்து மீளுதல்
46. அக்தவுரை மீண்டிவன்கேட் டாங்கவனை
நகைத்துரைப்பான் (அரக்க ரேனும் சிந்தைனையில் விரகேண்ணர் சேருமுகத்தில்
வஞ்சகமும் செய்யாரையா வேந்திறல்கூர் துணைவருக்கு விடமருத்தார்
நிரைக்கழுவில் வீழச் செய்யார் உந்துபுன லிடைப்புதையார் ஒருரில்
இருப்பகற்றர் உரையுந் தப்பார். 19
கொழுப்பினுல் மனம்போனபடி பேசுகின்ற அரக்கியின் மகனேடு நீங்கள் யாதொரு வார்த்தையும் பேசாதீர்கள்” என்று கூறினன் அங்கிருந்த அரசர் யார்க்கும்.
46. அந்த உரை இவன் கேட்டு ஆங்கு மீண்டு அவனை " நகைத்துரைப் பான் என்று கூட்டுக. விரகு - வஞ்சனே. செருமுகம் . போர் முகம், விடம்
அருத்தார் - விடத்தை உண்பிக்கமாட்டார். நிரைக்கழு - வரிசையாக நிறுத்தப்பட்ட கழுமரம். உங்துபுனல் - பாய்கின்ற நீர்ப்பெருக்கு.
அந்த வார்த்தைகளை இந்தக் கடோற்கசன் கேட்டு அப் பொழுது மறுபடியும் அத்துரியோதனனை ஏளனஞ் செய்து கூறுவான் :- " அரக்கரேயாயினும் மனத்திலே வஞ்சனையான் உபாயங்களைச் சிந்தியார்; போர்க்களத்தில் வஞ்சனையான செயல் புரியார்; ஐயனே, வலிமைமிக்க சகோதரருக்கு விடத்தைக் கொடுத்து அருந்தும்படி செய்யமாட்டார்; அவரை, வரிசையாக நிறுத்தப்பட்ட கழுமரத்திலே குதிக்கும்படி செய்யமாட்டார்; பாய்கின்ற சீர் பெருக்கிலே அழுத்தமாட்டார்கள்; ஒரூரிலே அவர்கள் இருந்தால் அதைவிட்டு அகலும்படி செய்யார்; சொன்ன சொல்லும் தவறமாட்டார்”. ெ

கடோற்க்சன் துது 43
47. சேழுந்தழல்வாழ் மனேகோளுவார் செய்ந்நன்றி
கொன்றறியார் தீங்கு பூணுர் - அழுந்துமனத் தழுக்குருர்அச் சமுமற்று
அருளின்றிப் போய்ச்சூ தாடார் கொழுந்தியரைத் துகிலுரியார் கொடுங்கானம்
அடைவித்துக் கோல்ல எண்ணுர் எழுந்தமரின் முதுகிடார் இவையெல்லாம்
அடிகளுக்கே ஏற்ப என்றன். 20
48. தேனிடறிப் பாண்முரலுஞ் செழுந்தாம
விசயனுடன் சேருவில் வந்தால்
மானிடரிற் போரவல்லார் சிலருண்டோ
தேரியாது வானு 'ளோரில்
47. செழுந்தழல் - வலிய நெருப்பு. வாழ்மனை - வாழ்கின்ற வீடு. கொளுவார் - பற்றவைக்கமாட்டார்கள். அழுந்து மனம் - கீழப்பட்ட மனம், அழுக்குருர் - அழுக்காறு (பொருமை) கொள்ளார். பொய்ச்சூது - வஞ்சனை மயமான குது. கொழுந்தியர் . உடன் பிறந்தவர் மனைவி. அடைவித்து - அடையும்படி செய்து; பிறவினை. எழுந்து - போருக்குப் புறப்பட்டு. முதுகிடார் - முதுகுகொடுத்து ஓடார். அடிகள் - தேவரீர், !
* வலிய நெருப்பைப் பிறர் வாழ்கின்ற வீட்டிலே “ዖዖD வைக்கமாட்டார்; செய்ங்கன்றி மறந்தறியார் ஒருபொழுதும்; தீமை செய்தலையே உற்றதொழிலாக மேற்கொள்ளமாட்டார்; கீழான தன்மை வாய்ந்த மனத்தில் அழுக்காறுகொள்ளார்; அருளில்லாவிடினும் பழிபாவத்திற்கும் அச்சமென்பதில்லாமல் வஞ்சனமிக்க சூதாடமாட்டார்; உடன்பிறந்தவர் மனைவியைத் திகிலுரிந்து மான பங்கஞ் செய்யமாட்டார்; கொடிய காட்டிற்கு ஒட்டிப் பின்பு கொல்ல கினையார்; முதலில் உற்சாகத்தோடு போருக்கு முற்பட்டுப் பின்பு முதுகு காட்டி ஒடமாட்டார்; இத்தகைய மிக இழிவான செயல்களெல்லாம் தங்களுக்கே பொருத்தமாகும்.” -
48. தேன் வண்டுகள். இடறி - நெருங்கி, பாண் - இசை, கோன் இடை - சிந்துராசன் சயத்திரதனிடம். குறித்த வீரன் - சயத்திரதன். இடருற்று அழிகை - துன்பமுற்று இறத்தல், தனயன் - வீமன் மகனுகிய கடோற்கசன்.

Page 26
44 தமிழ் அமுதம் : .
கோனிடையுற் றருகிருந்த திறல்வேந்தர்
காத்திடினும் குறித்த வீரன் தானிடருற் றுயிரழிகை தப்பாதென்
பதுமுரைத்துத் தனயன் மீண்டான். 21
6 வண்டுகள் நெருங்கி மொய்த்து இசைபாட ஒலிக்கின்ற செழுமையான மாலைகளையணிந்த அருச்சுனனேடு போர்க்களத் தில் எதிரில் வந்தால் மானிடர்களுள் ஒரு சிலரேனும் தளராது நின்று போர் செய்ய வல்லவர் உண்டோ? இல்லையே. ஒரு தேவலோகத்தில் உளரோ இலரோ தெரியாது. சிந்து ராசனை விட்டு நீங்காது உன் பக்கத்திலுள்ள வல்லமை வாய்ந்த வேந்தர் பாதுகாத்தாலும், குறிப்பிட்ட வீாணுகிய சயத்திாதன் மாண்டுபோவது நிச்சயம்; ஒருபொழுதும் அது தப்பாது” என்பதையும் உரைத்து வீமன் மகன் திரும்பிச் சென் முன்.
3. மெய்ப்பொருள் நாயனர் வரலாறு இப்பகுதியிலுள்ள செய்யுள்கள் சேக்கிழார் அருளிய பெரிய புராணத்தினின்றும் எடுக்கப்பட்டன. (மெய்ப்பொரு ணுயனர் புராணம் 1-23.) கதைச் சுருக்கம் ,
சேதி நாட்டிலே திருக்கோவலூரின்கண்ணே யிருந்து சீரிய முறையில் அரசு செலுத்திய, சிவ பக்தியில் மேம்பட்ட மலாடர்" குலத் தோன்றலாகிய மெய்ப்பொருள் நாயனர் என்னும் அரசர் ஒருவர் இருந்தார். அவர் அடியார் தொண்டினையும் இறைவன் தொண்டினையும் எல்லா வகையிலும் குறைவின்றிச் செய்துவந்தார்.
。 絮
இப்படி ஒழுகிவரும் நாளில் முத்தநாதன் என்னும் வேருேர் அரசன் காரணமின்றியும் பகைமேற்கொண்டு அன்ன வரை வெல்ல முயன்று போர்செய்து பன் முறை தோற்று அவமானப்பட்டுப் போனன். போரில் அவரை வெல்ல முடியா, தென்றுணர்ந்த அக்கொடியோன் அங்காயனாது அடியார்
 
 
 
 

மெய்ப்பொருள் காயனர் வரலாறு 45 பக்தியின் பண்பினையறிந்து வஞ்சனையால் வெல்ல எண்ணி, விபூதி, சடை முடிதரித்து அடியார் வேடங்கொண்டு, புத்தகக் கவளி போலத் தோன்றும்படி ஆயுதத்தை மறைத்துக்கொண்டு, திருக்கோவலூர் சென்று அரண்மனை வாயிலை அடைந்தான். வாயில் காப்போர் அவன் கொண்ட தவவேடங் கண்டு உள்ளே விட்டனர். இறுதி வாயிலையடைந்த பொழுது அங்கு கின்ற தத்தன் தடுத்தனன். தான் அரசருக்கு உறுதி கூறவேண்டும் என்று சைத்து அத்தடையையுங் கடந்து அரண்மனையினுள்ளே சென்றன்.
அவனது வருகை கண்ட இராசமாதேவி துயில்கொள்ளும் நாயனரை எழுப்ப, அவர் கைகூப்பியபடி எழுந்து வேடதாரியை வணங்கி நின்று முகமன் கூறி, வந்த காரியம் வினவினர். அவன், “உங்கள் இறையவன் அருளிச் செய்த, மண்மேல் எங்கு மில்லாத அரியதொரு ஆகமத்தை உனக்குக் கூறவந்தேன்’ என்முன். அவர் “அதனை உபதேசித்தருள வேண்டும்” என்ன, மற்றவன், 'இராசமா தேவியில்லாமல் நாம் இருவருமே இருக்கவேண்டும்? என் முன், தேவியை அந்தப்புரம் அனுப்பி, வேடம் புனைந்த வனைப் பீடத்தில் அமரச் செய்து, தான் கீழே இருந்து, ‘இனி உபதேசஞ் செய்தருள்க’ என்னலும், அவன் புத்தகம் அவிழ்ப் பான் போன்று கவளியை மடிமேல் வைத்து, ஆயுதத்தை வெளியே எடுத்து, தான் முன்பு திட்டமிட்டபடியே அவரைக் குத்த, அவர் அவ்வஞ்சகன் புனைந்த வேடத்தையே இறைவ கைத் தொழுது அவன் வஞ்சனையை வென்முர்.
அவன் உட்புகுந்த பொழுதே ஐயுற்ற தத்தன் அவ்
வஞ்சகனை வாளினல் வீசப்புக, உதிரம் பெருகக் கீழே விழும்
நிலையிலுள்ள நாயனர், தம் மீண்ட கையினல் அவனைத் தடுத்து கின்று, 'தத்தா, நம்மவர்" என்று சொல்லி கிலத்திலே விழுக் தார். வணங்கியபடி கையினலே அவரைத் தாங்கிய தத்தன்,
'கான் செய்யவேண்டுவது என்ன?" என்று கேட்ப, நாயனுர்,
*atuil9a T sä அடியா சாகிய இவர் போக, ஒருவரும் விலக்காதபடி
கொண்டுபோய் விட்டு வருக” என் முர்.
இவ்வாறு நிகழ்ந்ததை யெல்லாம் அறிந்தவர் யாவரும்
முத்தநாதனைக் கொல்ல முற்பட, தத்தன் அரசர் கட்டளை

Page 27
46 தமிழ் அமுதம் இன்னதெனக் கூறலும் அவர்கள் யாவரும் விலகி நின்றனர். அக்கொடியவனை மனித நடமாட்டம் இல்லாத காடு வரையிற் கொண்டுபோய் விட்டுத் திரும்பினன். அவ்வேடதாரியைக் கொண்டுபோய் விட்ட செய்தியைக் கேட்கவேண்டிச் சோர் கின்ற உயிரைத் தாங்கி கின்ற நாயனரைக் கண்டு, இடையூ றின்றி விட்ட பண்பினைக் கூறினன். அது கேட்டவர் அளவிலா மகிழ்ச்சி கூர்ந்து தத்தனிடம் பெருங் கருணை செய்தார். பின்பு இளவரசர், மந்திரியர், உறவினர் முதலியோரை அன்பர்க்குரிய திரு மீற்றுடன் கூடிய வேடத்திலே வைத்த அன்பினைப் பாது காக்கும்படி கூறியருளி, தில்லையின் கண்ணே ஆடுகின்ற பாதங் களைத் தியானித்து, உமாதேவியாருடன் காட்சியளித்த இறை வனைக் கண்களாாக்கண்டு அப்பெருமானது திருவடி நீழலை அடைந்தார். சிறப்பியல்புகள்
இப்பகுதியில் முக்கியமாக ஆராயத்தக்கது ஆசிரியர் இல் வரலாற்றைக் கூறும் திறனேயாகும். விரிவான கிகழ்ச்சிகள் சிலபல இடம்பெற்ற இவ்வரலாற்றை, சுருங்கிய சொற்களால் பொருள் தெளிவாக விளங்கும்படி தூய இனிய நடையில் ஆசிரியர் கூறுகின் முர். இப்பகுதி ஒரு தனிப்பட்ட காவியம் போன்று எல்லா நலங்களோடும் விளங்குகின்றது என்னலாம். நாடு சேதி நன்னடு. நகரம் எல்லாச் செல்வங்களும் நிரம்பிய திருக்கோவலூர். அவ்வூரில் மாடந்தோறும் சோதிவெண் கொடிகளாடும் ஒளிமிக்க தெருக்கள் உள்ளன. அரச பரம் பறை மோதொருபாகன் அன்பின் வழிவரும் மலாடர்' பாம்பரை. அரண்மனையோ சுடர்மணி வாயில் பலவற்றைக் கொண்டது. அரசரோ வரை நெடுங் தோளால் பகைவரைப் போர்முனையில் வென்றவர்'; 'அரசியல் நெறியின் வந்த அறநெறி வழா மற் காப்பவர்'; 'உரைதிறம்பாத ரீதியின் மேம்பட்டவர்". தெய்வ பக்தியிலும் அடியார் பக்தியிலும் ஒப்பற்று விளங்குபவர். அவருடைய ஆயத்தார் முதலிய யாவரும் இராஜ விசுவாசம் கிரம்பியவர். அவருடைய தாதனும் தத்தன் மன்னவர் நலனையே இரவும் பகலும் கருதி அவர் குறிப்பின் வழி கிற்பவன்; எங்கிலை யிலும் அவரது ஆண்ை கடவாதவன். இங்ஙனம் இப்பகுதி ஒரு சிறு காப்பியம் போன்று பொருள் கிறைவு பெற்று விளங்குவது.

மெய்ப்பொருள் நாயனர் வரலாறு 47
மேலும் இவ்வரலாற்றிற்குத் தலைவரான மலாடர் கோமா னது அடியார் பக்தியின் பண்பு மிகச் சீரிய முறையிற் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. இறைவனுக்குரிய தொண்டினைக் (góD வின்றிப் புரிந்தொழுகிய நாயனர் அடியார் தொண்டினையும் பல்லாற்ருனும் புரிந்துவந்தார்; ஈசன் அன்பர் கருத்தறிந்து ஏவல் செய்வார்; அந்த அன்பர் வேடமே சிங்தை செய்வார்; அவர் பாதமே யல்லாது வேறு சார்பு இல்லாதவர்; தம்முடைய பெருகிதி அனைத்தையும் அவ்வடியார்க்குக் குறைவின்றிக் கொடுப்பவர். பொய்யாக அடியார் போன்று நடிப்பவர்க்கும் இறைவன் எல்லாப் பேறுகளையும் அளிப்பது போன்று, நெஞ்சிலே வஞ்சகமும் வெளியிலே சிவ வேடமுங்கொண்டு நள்ளிரவிலே அரண்மனை புக்கு, ஏமாற்றி இன்னுயிர் செகுத்த கொடியோனுக்கும் கருணை காட்டி அவனுயிரைப் பாடுபட்டுக் காத்ததுமன்றி, அவன் கொண்ட பொய் வேடத்தையே மெய்ப் பொருளாகிய இறைவனுக வழிபட்டு, உயிர் பிரியுங்காலையில் பொன்னம்பலத்தில் திருக்கூத்தாடும் பெருமான் கழலிணையைச் சிந்தித்து, அவன் உமா தேவியோடு காட்சியளிப்பக் கண்டு களித்து, அந்தமில் இன் பத்து அழிவில் வீட்டினை எய்திய 610 GD st ov மிகவும் உருக்கமான முறையிற் கூறப்பட்டுள்ளது.
மலாடர் கோமான் செய்துவந்த அடியார் தொண்டு (49-52)
49. சேதிகன் னுட்டு நீடு திருக்கோவ லூரின் மன்னி
மாதோரு பாகர் அன்பின் வழிவரு மலாடர் கோமான்
49. சேதி நன்னூடு - நாட்டின் பெயர்; நன்மை பொருந்திய சேதி நாடு, நீடு திருக்கோவலூர் - நகரின் பெயர்; திருடுேகோவலூர் . யாவரும் விரும்பும் பண்புகள் நிலைபெற்ற கோவலூரி. மாதொருபாகர் அன்பின் வழிவரும் . சிவனடியார் பரம்பரையிலே தோன்றிய, மலாடர் கோமான் - மலையமான் நாட்டின் தலைவர்.
நன்மை பொருந்திய சேதி நாட்டிலே சீரிய பண்புகள் நிலைபெற்ற திருக்கோவலூரிலே நிலைபெற்ற அரசு செலுத்தி வந்து, உமா தேவியை ஒரு பாகத்திலேயுடைய சிவபெருமானி டத்தில் அன்புவைத்த அடியார் பரம்பரையிலே தோன்றிய மலாடர் தலைவராகிய மெய்ப்பொருள் நாயனுர் வேதங்கூறும்

Page 28
48 தமிழ் அமுதம்
வேதநன் னேறியின் வாய்மை விளங்கிட் மேன்மை பூண்டு காதலால் ஈசர்க் கன்பர் கருத்தறிந் தேவல் சேய்வார். 1 . . . كي /50. அரசியல் நேறியில் வந்த அறநெறி வழாமற் காத்து வரைகேடுக் தோளால் வென்று மாற்றலர் முனைகள் மாற்றி محرم
உரைதிறம் பாத நீதி ஓங்குநீர் மையின் மிக்கார் திரைசேய்நீர்ச் சடையான் அன்பர் வேடமே சிந்தை
செய்வார். 2 51. மங்கையைப் பாக மாக உடையவர் மன்னுங் கோயில்
எங்கணும் பூசை நீடி ஏழிசைப் பாடல் ஆடல்
நன்மையான நெறியினது உண்மைத்திறம் உலகிலே விளக்க மடையும்படி மேன்மைபூண்டு, மேலான அன்பினுலே அடியார் களது மனக்குறிப்பை அறிந்து அவர்களுக்குத் தொண்டு செய்வார்.
50. அரசியல் நெறியில் வந்த அறநெறி - அரசியல் நெறியினைப்பற்றி அறநூல்கள் விதித்த நெறி. வரைநெடும் தோளால் - மலைபோன்ற பெரிய தோளாற்றலால். மாற்றலர் முனைகள் மாற்றி - பகைவர்களைப் போரில் வென்று மாற்றி, உரை - அரசியலைப்பற்றி முன்னேர் உரைத்த உரை. திறம்பாத நீதி - ம்ாறுபடாது செலுத்திய நீதி, நீர்மை - பண்பு; நீதிநிலை. திரைசெய்நீர்-அலைகளையுடைய கங்கை, சிங்தை செய்வார். கருதி வழிபடுவார்.
அரசியல் நெறியிலே வந்த அறவழியிலே பிழைபடா மற் பாதுகாத்து, மலைபோல் உயர்ந்த தம் தோள் வலியாலே பகை வரைப் போரில் வென்று மாற்றி, முன்னேர் மொழிந்தவற்றி னின்றும் சிறிதும் மாறுபடாது ஒங்குகின்ற நீதிநிலையிலே சிறந்தவர்; அப்படிப்பட்டவர் சிவபெருமா னது அடியார் வேடத்தினையே மனத்திற்கொண்டு வழிபடுபவர்.
51. மங்கையைப் பாகமாக உடையவர் உமா தேவியை ஒரு பக்கத்திலே கொண்ட சிவபெருமான். எங்கனும் - எங்கெங்கும். பூசைடிே - நித்திய வழிபாடு தவருமலும் காலக் தவருமலும் நிகழ்ந்துவரும்படி செய்து. சிறப்பு. திருவிழா. மல்க - நடைபெற. போற்றுதல் புரிந்து - பாதுகாத்தலைச் செய்து, தங்கள் நாயகன் - வழிவழித் தங்கள் தலைவராகிய சிவபெருமான். ஒன்று - ஒரு தஞ்சம்.
 
 

மெய்ப்பொருள் நாயனர் a) Ta) In 2 A. 49 போங்கிய சிறப்பின் மல்கப் போற்றுதல் புரிந்து வாழ்வார் தங்கள்நாயகனுக் கன்பர் தாளலாற் சார்போன் றில்லார். 3 52. தேடிய மாடு நீடு செல்வமுந் தில்லை மன்றுள்
பெரும்ான் அன்பர்க் காவன ஆகு மென்று للاطوارننگے காடிய மனத்தி னேடு நாயன்மார் அணைந்த போது கூடிய மகிழ்ச்சி பொங்கக் குறைவறக் கொடுத்து
w வந்தார். 4 முத்தநாதன் அவரிடந் தோற்றமை 53. இன்னவா ருேழுகு நாளில் இகல்திறம் புரிந்தோர் மன்னன் அன்னவர் தம்மை வெல்லும் ஆசையால் அமர்மேற்
கொண்டு
உமாதேவியாமை ஒரு பக்கத்திலே கொண்ட சிவ பெருமான் வெளிப்பட்டு வீற்றிருக்கும் கோயில்களில் எல்லாம் பூசைகள் தவமுது டிேத்து நடைபெறவும் ஏழு இசைகளை யுடைய பாடலும் ஆடலும் மேம்பட்ட திருவிழாக்கள் நிகழும் படியாகவுஞ் செய்து வாழ்பவர்; தங்கள் நாயகருக்கு அன்ப ராகிய அடியார்களது பாதங்களையல்லாது வேருெரு தஞ்சம் இல்லாதவர்.
52. மாடு-நிதி. மீடு செல்வம்-முந்தையோர் வைத்துச் சென்ற அழியாப் பெருஞ் செல்வம். தில்லை மன்றுள் ஆடிய பெருமான் - நடேசப் பெருமான். நாயன்மார் - தம்மை ஆட்கொண்ட தலைவர்களாகிய அடியார்கள்; நாயனர் என்பது இறைவனைக் குறிக்கும்; இங்கு அவனைப் போன்ற அடியார்களைக் குறித்தது. அணைந்த போது - தம்மிடம் வந்தபோது.
தாம் தரும வழியிலே தேடிய கிதியும் முன்னேர் வைத்துச் சென்ற அழியாத பெருஞ் செல்வமும் ஆனவையெல்லாம் தில்லை யம்பலத்தின் கண்ணே திரு கடனஞ் செய்கின்ற பெருமான் மாட்டு அன்பு பூண்ட அடியார்களுக்கு ஆவனவே யாகும் என்று நாட்டங்கொண்ட மனத்தோடு தம் தலைவர்களாகிய அவ்வடியார்கள் தம்மிடம் வந்த பொழுது அவரைக் கூடப் பெற்றதால் ஆகிய மகிழ்ச்சி மேன்மேலும் பெருகுதலால் மனக்குறை சிறிதுமின்மிக் கொடுத் தொழுகிவந்தார்.
53. இகல் திறம் புரிந்து = பகைமையை உட்கொண்டு. அமர் . போர். பொன் அணி ஓடை யானை - பொன்னலாகிய முகபடாம் அணிந்த யானைப் படை, பொருபரி - போர்க்குதிரை. பரிபவம் - அவமானம்.
7

Page 29
50 தமிழ் அமுதம்
போன்னணி ஓடை யானை போருபரி காலாள் மற்றும் பன்முறை இழந்து தோற்றுப் பரிபவப் பட்டுப்
போனன். 5 அப்பகைவன் அடியார் வேடம் பூண்டு திருக்கோவலூர் புக்கமை (54-55) 54. இப்படி இழந்த மாற்றன் இகலினல் வெல்ல மாட்டான்
மேய்ப்போருள் வேந்தன் சீலம் அறிந்துவிேண் ணிறு
சாத்தும் அப்பேரு வேடங் கொண்டே அற்றத்தில் வெல்வா னுகச் செப்பரு நிலைமை எண்ணித் திருக்கோவ லூரிற்
சேர்வான். 6 55. மெய்யேலாம் நீறு பூசி வேணிகள் முடித்துக் கட்டிக்
கையினிற் படைக ரந்த புத்தகக் கவளி ஏந்தி
இவ்விதமாக அவர் ஒழுகி வரும் நாளில் ஒர் அரசன் காரணமில்லா திருக்கவும் தானே பகைமை உட்கொண்டு அத்தகையவரை வெல்லலாம் என்னும் ஆசையினல் பகைத்துப் போர்செய்து யானை, குதிரை, காலாள், தேர்ப்படை முதலிய படைகளை யெல்லாம் பல முறை இழந்து தோற்றமையால் அவமானப்பட்டுப் போனன்.
54. இகலினல் வெல்லமாட்டான் - போரினல் வெல்லமாட்டாதவனகி. சிலம் - நல்லொழுக்கம்; " அன்பர் வேடமே சிங்தை செய்தொழுகும் சீலம் (50). அற்றத்தில் . வஞ்சனேயினல். செப்பரும் - சொல்லத்தகாத, சேர்வான் - சேரும் பொருட்டு,
இப்படி நால் வகைப்படை முதலியவற்றைப் போர் செய்து தோற்ற பகையரசன் போரிலே வெல்ல மாட்டாதவணுகி, மலாடர் கோமானகிய மெய்ப்பொருள் நாயனாது அடியார் வேடமே சிங்தைசெய்து ஒழுகும் சீலத்தை அறிந்து, அப் பெருமை பொ ருந்திய வெண்ணிறு சாத்தும் அடியார் வேடத் தைத் தான் மேற்கொண்டு வஞ்சனையினல் அவரை வெல்லலாம் என்று, சொல்லுதற்கும் தகாததை மனதில் எண்ணித் திருக் கோவலூரிற் சேரும்பொருட்டு;
55. வேணிகள் - சடைமுடி, கவளி - நூற்கட்டு. கரந்த - மறைத்து
வைத்த, மை பொதி விளக்கு - மையாகிய நீலத்தைத் தனக்குள் வைத்தும்
冰

மெய்ப்பொருள் நாயனர் 6. A 6) ty 5
மைபோதி விளக்கே என்ன மனத்தினுட் கறுப்பு வைத்துப் போய்தவ வேடங் கொண்டு புகுந்தனன் முத்த நாதன். 7 அவன் வீதியூடே நடந்து அரண்மனை வாயிலை அடைதல் 56. மாதவ வேடங் கொண்ட வன்கனன் மாடங் தோறும்
கோதைதழ் அளக பாரக் குழைக்கோடி யாட மீது சோதிவேண் கோடிக ளாடுஞ் சுடர்கேடு மறுகிற் போகிச் சேதியர் பேருமான் கோயில் திருமணி வாயில்
சேர்ந்தான். 8
அதனைச்சுற்றி ஒளியைச் செய்யும் விளக்கு. கறுப்பு - வஞ்சனையாகிய எண்ணம். பொய் தவ வேடம் - பொய்யாகிய (விபூதி முதலிய தரித்த) அடியார் வேடம், முத்தநாதன் - பகைவன் பெயர்.
அந்தப் பகையரசனுகிய முத்த5ாதன் என்பவன் முழுநீறு பூசிய முனிவர்போல உடம்பெல்லாம் விபூதி தரித்து, தனது குடுமிகளைச் சடை போலத் திரித்துச் சடைமுடி போலக்கட்டி, படைக்கலத்தை மறைத் துவைத்துப் புத்தகம் போற்கட்டிய புத்தகப்பையை ஏந்தியபடி, மையாகிய நீல நிறத்தைத் தன்னுள்ளே வைத்தும் அதனைச்சுற்றி ஒளியைச் செய்யும் விளக்கினைப்போன்று மனத்திலே வஞ்சக எண்ணம் பொதிந்து வைத்து வெளியே திருநீறு முதலிய தரித்த வேடங் கொண்டு புகுந்தனன்.
56. வன்கணுன் - கல்நெஞ்சன். கோதைசூழ் அளகபாரக் குழைக் கொடி - மாலைகள் சுற்றிய கூந்தலையும் காதணிகளையும் உடைய பெண்கள். கோதை - மாலை. அளகபாரம் - கூந்தல். குழை = காதணி. கொடி - கொடி போன்ற பெண்கள். சோதிவெண் கொடிகள் - ஒளி பொருந்திய வெண் கொடிகள். ஆடும் - காற்றினல் அலைப்புண்டு அசையும். மறுகு வீதி. சேதியர் பெருமான் - மெய்ப்பொருள் காயனர். கோயில் - அரண்மனை. திருமணி வாயில் - அழகிய திருவாயில்.
பெரிய தவவேடம் புனைந்த கல்நெஞ்சனகிய முத்தநாதன்
மாடங்கள் தோறும் மாலையினையணிந்த கூந்தலையும் காதணியையு முடைய மாதர் நடனமாட, ஒளிமிக்க வெண்கொடிகள் காற்றினுல் அலைப்புண்டு ஆடும் ஒளிமிக்க நீண்ட அரசவிகியூடு சென்று சேதியர் பெருமானது அரண்மனையின் அழகிய வாயிலை அடைந்தான்.

Page 30
52 - தமிழ் அமுதம் :
காவல் முதலிய தடைகளைக் கடந்து உட்சென்று அரசரைக் காணுதல் (57-58) 57. கடையுடைக் காவ லாளர் கைதொழு தேற நின்றே
உடையவர் தாமே வந்தார் உள்ளெழுந் தருளும் என்னத் தடைபல புக்க பின்பு தனித்தடை நின்ற தத்தன் இடைதேரிந் தருள வேண்டும் துயில்கோளும் இறைவன்
என்ருன். 9 58. என்றவன் கூறக் கேட்டேயானவற் குறுதி கூற
நின்றிடு நீயும்) என்றே அவனையும் நீக்கிப் புக்கு
57. கடை - வாயில். ஏறநின்று - எட்டி நின்று. உட்ையவர் - தம்மரசனை ஆளாக உடைய சிவனடியார். தடை - வாயில். தனித்தடை= கடைசி வாயில், தத்தன்-அரசரின் முக்கியமான காவலாளன். இடை-சமயம். இடைதெரிந்தருளவேண்டும் - இது தக்க சமயமன்று; மற்ருெரு சமயம் அருள்புரிக. துயில் கொள்ளும் இறைவன்-அது சமயமின்மைக்குக் காரணங் காட்டினன்
வாயில்களிலே காவல்புரிபவர் கைகூப்பி வணங்கி விலகி கின்று தம் இறைவனை அடிமைகொண்ட அடியார் தாமே வந்தார் என்று மனத் தட்கொண்டு, “உள்ளே எழுந்தருளும்" என்று கூறி வழிவிட்டனர். இங்ஙனம் பல வாயில்களையும் தாண்டியபின்பு கடைசி வாயிலை அடைந்தான். அங்குகின்ற தத்தன், 'இது சமயமன்று; மற்றெரு சமயம் அருள்க; இறைவன் துயில் கொள்ளுகின்முன்’ என்று கூறி நின்றன்.
58. நின்றிடு - தடை செய்யாமல் நின்றுவிடுவாய், பொன் திகழ் பள்ளிக் கட்டில் - பொன்னலாக்கப்பட்டு விளங்கும் பள்ளிகொள்ளும் மஞ்சத்தில். புரவலன் - அரசன். மாடே - பக்கத்தில். மன்றல் அம் குழல் மென்சாயல் மாதேவி - வாசனையுடைய அழகிய கூந்தலையும் சாயலையுமுடைய இராசமாதேவி.
என்று அக் தத்தன் தடுத்துக் கூறக்கேட்டு, யோன் அவ்வரசனுக்கு உறுதி கூறப்புக்கேன்; ஆதலின் அவ்வாறு இப்பொழுதே கூறும் பொருட்டு நீயும் தடைசெய்யாமல் இங்கே நிற்பாய்” என்று சொல்லி, அத்தடையையுங் தவிர்த்து,
 

மெய்ப்பொருள் நாயனர் வரலாறு 53
போன்றிகழ் பள்ளிக் கட்டிற் புரவலன் துயில மாடே மன்றலங் குழல்மேன் சாயல் மாதேவி இருப்பக்
கண்டான். 10 தேவி துயில்ெமுப்ப உணர்ந்த மன்னன் வணங்கி வினவ முத்தநாதன் கூறியது (59-60) 59. கண்டுசேன் றனையும் போது கதுமென இழிந்து தேவி
வண்டலர் மாலை யானை எழுப்பிட உணர்ந்து மன்னன் அண்டர்கா யகனுர் தோண்ட ராமேனக் குவித்த செங்கை கொண்டேழுந் தேதிரே சென்று கொள்கையின் வணங்கி
கின்று. 11
60. மங்கலம் பேருக மற்றேன் வாழ்வுவக் தணைந்த தென்ன
இங்கெழுந் தருளப் பெற்ற தென்கோலோ)என்று கூற
உள்ளே சென்று பொன்னற் செய்த மஞ்சத்திலே அரசன் நித்திசை செய்ய, வாசனை மிக்க கூந்தலையும், மென்மையான சாயலையுமுடைய இராசமாதேவி அமர்ந்திருப்பதைக் கண்டான்.
59. கதுமென - விரைவாக. வண்டலர் மாலையான் - மெய்ப்பொருள் காயனூர். அண்டர் நாயகனர் - சிவபெருமான். தொண்டர் - அடியார், கொள்கையின்-விதிப்படி,
அவ்வாறு கண்டபின்னும் உள்ளே சென்று அணுகினன். அப்படி அணுகியபொழுது தேவி விரைவாகக் கட்டிலினின்றும் இறங்கி, வண்டுகள் அலர்தற்கிடமாகிய மாலையினையணிந்த மெய்ப்பொருள் நாயனரை எழுப்பினள். அவர் துயிலுணர்ந்து தேவர்கள் தலைவராகிய சிவபெருமான் அடியார் என்றறிந்த வுடனே கூப்பிய கையாாய்ப் படுக்கையை விட்டெழுந்து அன்பர் சார்பல்லாமல் வேறு சார்பற்ற தம் கொள்கையின் விதிப்படி வணங்கி கின் முர்; அப்படி வணங்கி கின்று,
60. மங்கலம் பெருக - மங்கலம் பெருகும்படி; இதில் பின்வரும் நிகழ்ச்சிகளைக் குறிக்கும் அமங்கலப் பொருளும் தொனிக்கும். வாழ்வு வந்தணைந்தது - எனக்குப் பெருவாழ்வுவங்து கூடிற்று; என் வாழ்வே ஓர் உருப்பெற்று முயற்சியின்றித் தானே வந்தது. எனது வாழ்க்கைக்கு இறுதி வந்துற்றது என்பதும் குறிப்பாகத் தோன்றும். முன்னம் - சிருட்டி ஆரம்பத்தில். கொடுவந்தேன் இயம்ப - இயம்பக் கொண்டுவந்தேன்.

Page 31
54 தமிழ் அமுதம்
உங்கள்ாகா யகனுர் முன்னம் உரைத்த ஆ கமதுரல்
மண்மேல் எங்குமில் லாத தோன்று கொடுவந்தேன் இயம்ப
என்றன். 12
அரசர் உபதேசிக்கும்படி கேட்க மற்றவன் விரும்பியபடி தேவியை அந்தப்புரம் அனுப்பி, முறைப்படி கேட்டல் (61-62) 61(பேறெனக் கிதன்மே லுண்டோ பிரானருள் செய்த இந்த
மாறிலா கமத்தை வாசித் தருள்செய வேண்டும்) என்ன காறுபூங் கோதை மாது தவிரவே கானும் நீயும் வேறிடத் திருக்க வேண்டும் என்றவன் விளம்ப
வேந்தன். 13 62. திருமகள் என்ன நின்ற தேவியார் தம்மை நோக்கிப்
புரிவுடன் விரைய அந்தப் புரத்திடைப் போக ஏவித்
'மங்கலம் பெருகும்படி எனக்குப் பெருவாழ்வு வந்து கூடிற்று என்னும்படி (தேவரீர்) இங்கு எழுந்தருளும் பேறு பெற்றேன்; எழுந்தருளிய காரணம் யாதோ?’ என்று கூறினர். அதற்கு மற்றவன், “உங்கள் நாயகராகிய இறையவர் முன்பு சொல்லிய ஆகம நூல் உலகில் எங்கும் இல்லாததொன்று உளது; அதனை உனக்குச் சொல்லும் பொருட்டுக் கொண்டு
வந்தேன்' என் முன்.
61. மாறுஇல் - ஒப்பில்லாத காறு பூங்கோதை மாது - வாசனை யுடைய பூமாலையை அணிந்த தேவி. தவிர - நீங்க, "வேந்தன்' அடுத்த செய்யுளில் ' என்ருர்’ என்பதனேடு முடியும்,
'எனக்கு இதைவிட மேலான பேறு ஒன்மண்டோ? இறைவன் அருளிச் செய்த ஒப்பில்லாத ஆகம நூலை வாசித்துப் பொருள் கூறவேண்டும்” என்று அரசர் கூறினர். மற்றவன், 4 'வாசனையுடைய பூமாலையை அணிந்த தேவி நீங்க, நானும் நீயும் தனியே இருக்தல் வேண்டும்” என்று சொல்ல, அரசர்;
62. புரிவுடன் - ஆகம நூல் உபதேசம் பெறும் பயனைச் சிந்தித்து.
அந்தப்புரத்திடைப் போகப் புரிவுடன் விரைய ஏவி என்று கூட்டுக. அந்தப் புரம் - பெண்கள் வசிக்குமிடம். தவிசு - ஆசனம். போற்றி - துதித்து.
 

اثر : . . . : . . .
மெய்ப்பொருள் நாயனர் 6. JAV 6) (TY 55
தருதவ வேடத் தானேத் தவிசின்மேல் இருத்தித் தாமும் இருநிலத் திருந்து போற்றி இனிஅருள் செய்யும் என்றர்.
** 14 முத்தநாதன் நாயனரை உயிர் செகுத்தல்
63. கைத்தலத் திருந்த வஞ்சக் கவளிகை மடிமேல் வைத்துப்
புத்தகம் அவிழ்ப்பான் போன்று புரிந்தவர் வணங்கும்
, போழ்திற்
பத்திரம் வாங்கித் தான்முன் நினைந்தஅப் பரிசே செய்ய
மெய்த்தவ வேட மேமெய்ப் போருளேனத் தொழுது
வேன்ருர், 15
திருமகளே இவள் என்று கூறும்படி நின்ற பட்டத்தாசி யாரை அந்தப்புரம் செல்லும்படி உபதேசம் பெறுதலின் பயனைச் சிந்தித்து விரைவாக ஏவி, தானுக வஞ்சனையால் மேற் கொண்ட தவ வேடத்தானை ஆசனத்தில் உட்கார வைத்து, ஆசாரியனிடம் ஞானுேபதேசம் கேட்கும் முறைப்படி தாம் கிலத்திலே இருந்து துதித்து, ‘இனி உபதேசித்தருளும்” என் முர்.
63. வஞ்சகக் கவளிகை - வஞ்சனையாற் புத்தகப்பை போன்றிருந்த கவளிகை. முந்திய செய்யுளில் ஈறு கெட்டு, “கவளி என வந்தது. போன்றுபோன்றிருந்து. புரிந்தவர்-புரிந்த அவர் புரிதல்-இடைவிடாது நினைத்தல். பத்திரம் - படை, வாங்கி - விரைவாக ஓங்கி; எடுத்து. தான் முன் நினைந்த அப்பரிசே செய்ய - வஞ்சனையினல் வெல்ல நினைந்தபடியே படையை எடுத்து ஓங்கி உயிர் செகுக்கலானன்; அவன் செய்த அடாத செயலைத் தம் வாயினுற் கூற விரும்பாத ஆசிரியர் இங்ங்ணம் கூறினர். மெய்ப்பொருள் - அழியாப் பேற்றினை அடைவிக்கும் பொருள்.
கையிலே இருந்த, வஞ்சனையாற் புக்தகப் பைபோன்று கின்ற கவளிகையை மடிமேல் வைத்துப் புத்தகம் அவிழ்ப்பவன் போன்றிருந்து, ராயனர் வணங்கும் பொழுதில் படையை எடுத்து ஓங்கி, தான் முன்பு வஞ்சனையாற் கொல்ல எண்ணிய படியே அவர் உயிரைச் செகுக்கலானன்; அவர் தவ வேடம் எனப்பட்ட திரு நீறு, சடை முடி முதலியவற்றை யுடைய சிவ வேடமே அழியாப் பேற்றினை அடைவிக்கும் பொருள் என்று அவ்வேடத்தையே இறைவனுகத் தொழுது, அவன் வஞ்சனையை வென்முர்.

Page 32
56 "தமிழ் அமுதம்
வீழ்ந்தமை
64. மறைத்தவன் புகுந்த போழ்தே மனமங்கு வைத்த தத்தன்
இறைப்பொழு தின்கட் கூடி வாளினூல் எறிய லுற்றன் நிறைத்தசேங் குருதி சோர வீழ்கின்றர் நீண்ட கையால்
தறைப்படுமளவில் தத்தா நமரேனத் தடுத்து வீழ்ந்தார். 16
வஞ்சகனை கொல்லலுற்ற தத்தனைத் தடுத்து நிலத்தில்
அவனை இடையூறின்றிக் கொண்டுபோய் விடும்படி கூறல்
65. வேதனை எய்தி வீழ்ந்த வேந்தரால் விலக்கப் பட்ட
தாதனும் தத்தன் தானும் தலையினுல் வணங்கித் தாங்கி
64. இறைப்பொழுது - கணப்பொழுது, குருதி - உதிரம். தரைப் படும் அளவில் - தரையில் வீழும் அளவில். நீண்ட கையால் தடுத்து நின்றபடி *தத்தா கமர் என வீழ்ந்தார். கமர் - நம்மவர்.
(படையைக் கவளிகையில்) மறைத்து வைத்துக்கொண்டு தான் கூறியதையும் தடுத்து உட்சென்றபொழுதே, ஐயுற்று, வாயிலில் நின்றனயினும், மனம் அவ்வஞ்சகன் செயலில் வைத்த தத்தன் கணப்பொழுதில் அவ்விடத்தை அடைந்து முத்தநாதனை வாளினல் எறியலுற்முன்; அதற்கிடையே பெருகிய சிவந்த உதிரம் ஒட, விழுகின்ற நிலைமையை எய்திய நாயனர் தரையில் வீழும் அளவில், “தத்தா நம்மவர் இவர்' என்று கூறித் தமது மீண்ட கையினலே தடுத்தார்; அவ்வள விலே கீழே விழுந்தார்.
மறைத்தவன் - மறைகளிற் கூறிய தவ வேடங் கொண்டவன் என்றும் தவவேடத்திலே தன்னை மறைத்துக்கொண்டவன் என்றும் பொருள் தொனிப்பது காண்க. வீழ்கின்ருராகிய நாயனர் தடுத்து வீழ்ந்தார் என முடியும்,
65. தாதன் . அடிமை. தாங்கி வீழ்ந்த அரசரைத் தாங்கி. மீது = இவர் மீது. இடைவிலக்காவண்ணம் - வழிமறித்து துன்பஞ் செய்யாதபடி, நீ - நீயே,
படையினலாகிய புண்ணின் வேதனைப் பட்டு வீழ்ந்த அரசரால் தடுக்கப்பட்ட அடிமையாகிய தத்தன், அரசர் கட்டளையைத் தலையாா வணங்கி ஏற்றுக்கொண்டு, அவரைக் தாங்கி நின்று, ‘இனி யான் செய்யத்தக்கது யாது” என்று
 
 
 

மெய்ப்பொருள் காபஞர் 61A 6) (T. gal *57 யாதுநான் செய்கேன் என்ன எம்பிரான் அடியார் போக மீதிடை விலக்கா வண்ணம் கொண்டுபோய் விடுநீ)
: " ; என்றர். 17
வஞ் - il- னைக்கொல்ல வந்தவரை விலக்கல்
66. அத்திறம் அறிந்தா ரெல்லாம் அரசனைத் தீங்கு செய்த
பொய்த்தவன் தன்னைக் கோல்வோம் எனப்புடை சூழ்ந்த
போது
தத்தனும் அவரை யேல்லாம் தடுத்துடன் கோண்டு
போவான் (இத்தவன் போகப் பெற்றது இறைவன தாணை என்ருன்\
18
தத்தன் அவனைக் காடுவரை கொண்டுவிட்டு மீளுதல்
67. அவ்வழி அவர்க ளேல்லாம் அஞ்சியே அகன்று நீங்க
செவ்விய கெறியில் தத்தன் திருங்கர் கடந்து போந்து
வினவினன். ‘இறைவன் அடியவராகிய இவர் விரும்பியபடி செல்லும் வழியில் எவரும் மேற்சென்று தடுக்காத வகை நீயே கொண்டுபோய் விடுக” என்றர்.
66. அத்திறம்=வேடத்தால் வஞ்சித்த செய்கை, புடைசூழ்ந்தபோதுசுற்றிலும் நெருங்கியபொழுது. உடன்கொண்டு போவா(ஞகிய) தத்தனும் அவரையெல்லாங் தடுத்து என்று கூட்டுக. இத்தவன் எ இத்தவசி; அரசர் * நமர்" என்று கூறியதை உட்கொண்டு கூறினன். 'ஆணை - ஆணையால் நிகழ்ந்தது.
வஞ்சித்து அரசரைக் கொன்ற அச்செய்தியைக் கேட் டறிந்த ஊரவரும், அரசியல் ஆயத்தாரும் அரசருக்கு ஊறு செய்த பொய் வேடங்கொண்டவனைக் கொன்று களை வோம் என்று சுற்றிலும் நெருங்கினர். அப்பொழுது அவனை உடன் கொண்டு செல்லும் கருமத்தை மேற்கொண்ட தத்தன் அவரை யெல்லாங் தடுத்து, “இந்தத் தவசியை யான் உடன்கொண்டு போகப்பெற்றது அரசர் கட்டளையால் நிகழ்ந்ததாகும்” என்றன்.
67. அவ்வழி அவ்வாணை வழி. கைவழி - கையினலே, ஆளுருக் கானம் க மனித சஞ்சாரமற்ற காடு.

Page 33
' ' ' 5. m
58 - தமிழ் அமுதம்
கைவழி கேடுவா ளேந்தி ஆளுருக் கானஞ் சேர வெவ்வினைக் கொடியோன் தன்னை விட்டபின் மீண்டு
போந்தான். 19 அரசர் முன்பு செல்லல் :
68. மற்றவன் கோண்டு போன வஞ்சனை வேடத் தான்மேற் சேற்றவர் தம்மை நீக்கித் தீதிலா கேநியில் விட்ட சோற்றிறம் கேட்க வேண்டிச் சோர்கின்ற ஆவி தாங்கும் கோற்றவன் முன்பு சென்றன் கோமகன் குறிப்பின்
நின்றன். 20 தத்தன் கூறிய செய்தி கேட்டுக் கருணை கூர்தல் 69. சென்றடி வணங்கி நின்று செய்தவ வேடங் கோண்டு
வென்றவற் கிடையூ றின்றி விட்டனன் என்று கூற
அவ்வாணைப்படி அவர்கள் யாவரும் அச்சங்கொண்டு விலகி அவ்விடம் விட்டு நீங்கினர். செம்மையாகிய நெறியில் நிற்பவனுகிய கத்தன் அழகிய நகர எல்லையைக் கடந்து வெளிச் சென்று கையிலே உறைநீக்கிய மீண்ட வாளை ஏந்தியபடி மனித நடமாட்டமில்லாத காட்டினை அடைந்தான். கொடிய வினைபுரிந்த கொடியோனுகிய முத்தநாதனை அக்காட்டில் விட்ட பின் திரும்பிச் சென்றன்.
68. அவன் கொண்டுபோன மற்ற வஞ்சனே வேடத்தான் என்று கூட்டுக, செற்றவர் - எதிர்த்துக் கொல்ல வருபவர். சொல்திறம் - நல்ல வார்த்தை. கோமகன் குறிப்பின் நின்றன் . அரசரது மனக்குறிப்பறிந்து ஒழுகும் தத்தன்.
அத்தத்தன் காவல் புரிந்து கொண்டுபோன வஞ்சனை வேடமுடையவன்மேல் எதிர்த்து அடா வருகின்றவர்களையெல் லாம் தடுத்து விலக்கி, ஒருவரும் தீமை செய்ய இடமில்லாத வழியில் விட்டுவந்ததாகிய நல்ல வார்த்தை கேட்பதை விரும்பி, சோரும் உயிரை மன உறுதியினலே தடுத்து நிறுத்திவைக்கும் அரசர் முன்பு சென்முன் அவர் மனக் குறிப்பறிந்தொழுகும் தத்தன்.
69. ஐயன் - முன்னிலை குறித்த படர்க்கைச் சொல். நிறை பெருங் கருணை கூர்ந்தார். கருணை கூர்ந்தார்; பெருங்கருணை கூர்ந்தார்; நிறை பெருங் கருணை கூர்ந்தார்.
܀ 11:18 ܗܝܕܝܢ ܐܬܐ
。
 

மெய்ப்பெர்ருள் காய்ஞர் வரலாறு 59
இன்றெனக் கையன் செய்தது யார்செய வல்லார் என்று நின்றவன் தன்னை நோக்கி நிறைபேருங் கருணை
கூர்ந்தார். 21 அரசியல் ஆயத்தார்க்கு உறுவன கூறி இறைவன் طر
பாதங்களை நினைதல் 70. அரசியல் ஆயத் தார்க்கும் அழிவுறுங் காத லார்க்கும்
விரவிய செய்கை தன்னை விளம்புவார் விதியி னுலே பரவிய திருநீற் றன்பு பாதுகாத் துய்ப்பீர் என்று புரவலர் மன்று ளாடும் பூங்கழல் சிந்தை செய்தார். 22
- போய் அவசடி வணங்கி நின்று, ‘வஞ்சனையாற் புனைந்த தவ வேடங் கொண்டமையினலே வென்றவனைக் காவல் செய்து எவ்வித இடையூறும் இல்லாமல் விட்டுவிட்டேன்” என்று கூறினன். அவர், 'இன்றையதினம் ஐயணுகிய நீ செய்தது போல யாவர் செய்யவல்லார்? என்று தமது அழகிய உள்ளத்
திலே நிறைந்த பெரியதாகிய அருளை அவனிடத்துச் செய்தார்.
70. அரசியல் ஆயத்தார் - தமக்குப்பின் அரசியல் கடத்தும் உரிமை பெற்ற இளவரசர், அமைச்சர் முதலாயினேர். அறிவுறு காதலார் - தம்மிடம் வைத்த பேரன்பினல் மனம் வருந்தும் தேவியார், சுற்றத்தார். விரவிய செய்கை-நடந்ததும், நடைபெறவேண்டியதுமாகிய கருமம். விதி - 1. ஆகம நூல் விதித்த விதி; தவ வேடத்தை அரனெனப் போற்றும் விதி. 2. அரசர் போற்றிவந்த முறைமை. பரவிய - பரவப்பட்ட போற்றப்பட்ட, புரவலர்அரசர். மன்றுள் ஆடும் பூங்கழல் - சிற்றம்பலத்திலே அருட் கூத்தாடும் அம்பலவாணரது அழகிய கழலணிந்த திருவடி,
தமக்குப் பின் அரசியல் ஈடத்தும் இளவரசர் மந்திரி முதலானவர்களுக்கும் மனமழிந்து வருந்தும் தேவிமார் முதலானவர்களுக்கும் முன்பு நிகழ்ந்ததும் இனி நடைபெற வேண்டுவதுமாகிய செய்தியைக் கூறுவாராகி, “Lurør போற்றிவந்த முறைப்படியே திருமே, ஏனைத் திருவேடம் என்பனவற்றில் வைத்த அன்பின் ஒழுக்கத்தைச் சோர்வு படாமற் பாதுகாப்பீராக” என்று உறுதி மொழியுரைத்து, அரசர் தில்லையம்பலத்திலே அருட்கூத்தாடுகின்ற பூங்கழ லணிந்த திருவடிகளைச் சிங்தை செய்தார்.

Page 34
60.
இறைவன் காட்சியளிப்ப் அவன் திருவடிநீழலடைதல்
71. தோண்டனுர்க் கிமையப் பாவை துணைவனர் அவர்முன்
தம்மைக் கண்டவா றெதிரே நின்று காட்சிதந் தருளி மிக்க அண்டவா னவர்கட் கேட்டா அருட்கழல் நீழல் சேரக் கொண்டவா றிடைய ருமற் கும்பிடுங் கோள்கை ஈந்தார். 23
71. தொண்டனர் - காயனர். இமையப் பாவை - பார்வதி தேவி. இமையப் பாவை துணைவனுர் - பார்வதி தேவியோடு காட்சியளித்தமை கருதி இங்ங்ணம் குறித்தார். அண்ட வானவர் - அண்டங்களை ஆளும் தேவர்கள். அருட் கழல் - அருள் நிறைந்த பாத நீழலில், சேரக்கொண்டு -கலந்து நிற்கும்படி ஏற்றுக்கொண்டு.
உண்மைத் தொண்டராகிய மெய்ப்பொருள் நாயனருக்கு பார்வதி தேவியின் துணைவராகிய சிவபெருமான், முன்பு பன்ன ளும் அகக்கண் முன்னே தாம் தம்மைக் காட்ட, அவ்வடியார் தம்மைக்கண்டு பழகிய அவ்வண்ணமே ஊனக் கண்ணுற் காணும்படி வெளிப்பட்டு நின்று, மேலான அண்டங்களை ஆளும் தேவர்களுக்கும் காணக்கிடைக்காத அருள் நிறைந்த பாத நிழலிலே கலந்து கிற்கும்படி ஏற்றுக்கொண்டு, இடை யறவுபடாமல் வணங்கித் தொண்டு செய்யும் பேற்றின ஈந்தருளினர்.
4. வாமனுவதாரக் கதை
விசுவாமித்திர முனிவன் இராமபிரானுக்குக் கூறுவதாக உள்ள இப்பகுதி கம்பராமாயணத்தினின்றும் எடுக்கப்பட்டது.
(பாலகாண்டம்: வேள்விப் படலம் 18-28)
கதைத் தொடர்பு முதலியன:
விசுவாமித்திர முனிவன் தான் செய்ய விரும்பிய ஒரு வேள்வியை, அரக்கர் செய்யும் இடையூற்றினின்றும் காக்கும் பொருட்டு, தயாத மன்னனிடம் இராம லேக்குமணர்களைக்
 
 
 
 
 
 

வா மஞ்வதாாக்கதை கையடையா கப் பெற்றுச் சென்றன். இடைவழியில் எதிர்ப் பட்ட தாடகை என்னும் அாக்கியை இராமபிரான் வதஞ்செய்த பின், மூவரும் ஒரு சோலையை அடைந்தனர். அச் சோலை முன்பு திருமால்: நீண்டகாலம் தவஞ்செய்த சோலை, என்று கூறி, அவ்வ்ாறு அப் பெருமான் தவஞ்செய்த காலத்திலே கிகழ்ந்த வாமனுவதாா வரலாற்றினைக் கூறலுற்முன். அம் முனிவன் கூறிய அவ் வரலாறு இங்கே காணப்படும். கதைச் சுருக்கம்
விசுவாமித்திர முனிவன் கூற்று. *அத்திருமால் இச் சோலையிலே தவஞ்செய்து வந்த காலத்திலே பெருவலி படைத்த மாவலி என்னும் அசுரன் பூவுலகினையும் மண்ணுலகினையும் கைப்பற்றித் தான் செய்யப் போகும் வேள்வியிலே முனிவர்களுக்கு அவ்வுலகங்களைத் தானமாக வழங்கத் தீர்மானித்தான். அச் செய்தியறிந்த தேவர் கள் திருமாலை வந்து வணங்கி, அம்மாவலியின் கொடுமையைத் தீர்த்தருளும்படி வேண்ட, அவனும் அங்ஙனடிே செய்ய விரும்பி, காசிபனுக்கும் அதிதிக்கும் குறுகிய வடிவமுள்ள மகனுகத் தோன்றி யாவரும் வியக்கும் தெய்வ ஒளியோடுகூடிய முனிவர் வேடத்துடன் மாவலிபாற் சென் முன். மாவலி மனமுவந்து அவனை எதிர்கொண்டு, முகமன் கூறுவானகி, *உனக்கு ஒப்பான முனிவர் இல்லை; நீ வரப்பெற்ற என்னின் உய்ந்தவரும் இலர்’ என் முன். வாமனன்:- வேண்டியவர் வேண்டிய அளவிற்கு அதிகமாக அள்ளிக் கொடுத்து மீண்ட கையையுடையவனே, உன்னிடம் வந்தவரே மாட்சிமைப்பட்டவர்; ஏனையோர் மாண்பிலர்.
மாவலி:- (மனம் உவந்து) யான் செய்யவேண்டுவது யாது ? "கட்டளையிடுக.
வாமனன்:- மூன்றடி மண்-தருவதாகுல்-இதுவே வேண்டும். மாவலி:- தந்தனன்; கொள்க. வெள்ளி:- கில், கில்: கண்ட இந்த வடிவம் வஞ்சனை; இவன் மூவுலகினையும் முன்பு உண்ட மாயவன். இதனை உணர்ந்து செய்.
鷲

Page 35
,
62 தமிழ் அமுதம் மாவலி-கொடுக்கும் என்கை மேலே நிற்க, ஏற்கும் ப்ொருட்டுத் தாழ்வது, மேக மேனியன் கை என்றல் எனக்கு இதனைவிட வேறு என்ன நன்மை வேண்டும்? இதனை ரீ கினைக்கவில்லையே. : மேலும் வேண்டியவர் வேண்டாதவர் என்னும் பாகுபாடு பாரார் கற்றறிந்தவர். " உயர்ந்தவர் வந்து தானங் கொள்க’ என்றுேம்; அதன்படியே வந்துற்ற இவனைவிட உயர்ந்தவர் யாவர்? உனது பெயர் வெள்ளி; அதற்கேற்ப அறிவில்லாதன கூறினய், வள்ளன்மை பூண்டு வரையாது வழங்குவதன் றிச் சிலவற்றைக் கொடுத்தல் கூடாது என்று ஏன் ஒதுக்கவேண்டும்? இன்னுயிரேயாயினும் கொள்ளுவது தீது, கொடுப்பது நன்று.
இறந்து போனவர் எல்லாரும் உண்மையில் இறந்தொழிங் தவரல்லர். ஏற்ற கையோடு இாந்தவரே உண்மையில் இறந்து பட்டவர். உடல் அழிந்து மாண்டவரேயாயினும் ஈதலைச் செய்தவரையன்றி கிலையாக இருந்தவர் யாவர்?
உண்மையான பகைவர் பழிவிளைப்பவால்லர்; கொடுக்கும் நிலையில் முன்பு குறுக்கிட்டுகின்று கொடேல் என்று தடுப்ப வரே அப்பகைவர். இத்தகையவர் தம்மையும் கெடுத்துக் கொள்பவர். இப்படித் தடுப்பதைப் போன்று வேறு தீமை இல்லை. பெரிய உறுதி கூறவந்த கற்குணமில்லாதவனே, கையிற் பொருளுள்ள பொழுதே ஈதலைச் செய்து புகழுடம்பைப் பெற்று அறப் பயனையும பெற முயல்பவர்க்கு உட்பகை உலோபம். ஆதலால் இப்பேச்சை விட்டுவிடு. ஒருவருக்கு ஒருவர் ஒரு பொருளை ஈயுந் தருணம் தடுப்பது அழகன்று; அப்படித் தடுப்பவரின் சுற்றம் உண்ண உணவும் உடுக்க உடையு மின்றி அழியும்.
பின்பு வாமனனை நோக்கி, ? நீ மூன்றடி அளந்துகொள் ” என்று குண்டிகை நீரை நீட்டினன். சுக்கிான் சிற்றுருவங் கொண்டு குண்டிகையை அடைக்க, வாமனன் தருப்பையினும் கிளறி அடைப்பை நீக்கினன். தான நீர் கையிலே தீண்டுதலும் குறளுருவாய் கின்றவன் கண்டவர் யாவரும் வியக்கும்படி பேருருவங் கொண்டு வளர்ந்தனன். கின்ற பாதம் பூமியை அடக்கிற்று. மேலே உயர்ந்த பாதம் வானுலகினை அடைந்து

வாமனுவதாாக் கதை 63
இடமின்மையால் மீண்டது. மாவலியின் தலையே மூன் மும்
அடிக்கு இடமாயிற்று. மாவலியினின்றும் மீட்ட உலகமெல் லாம் இந்திரனுக்குரியதென்று அவன் பால் நல்கி மீண்டும் திருமால் பாற்கடல் பள்ளிமேவினன்.”
冪
சிறப்பியல்புகள்
இப்பகுதியில் அமைந்த சிறப்பியல்புகளை மூன்று கூமுக வைத்து ஆராயலாம் He
1. முதலில் ஆராயத்தக்கது இதில் அமைந்த நாடகப் பண்பேயாகும். வாமனனுகி வந்த திருமாலும், உலகை யெல்லாம் கவர்ந்த வள்ளன்மை மிக்க மாவழியும் பேசும் பேச்சு தமிழ்ப் பண்பாட்டிற்கு ஒரு சீரிய எடுத்துக் காட்டாக கின்று, பேசுபவர் மன நிலையையும் உணர்ச்சி வயப்பட்ட பண்பையும் புலப்படுத்தி, அருகில் கின்று அனுபவிப்பது போன்ற பண் பைப் பெற்று விளங்குகின்றது.
2. இரண்டாவது, இப்பகுதியில் ஆசிரியர் திருவள்ளுவ நாயனுர், புகழ், ஈகை முதலிய அதிகாரங்களிற் கூறியுள்ள கருத் துக்கள் சில வந்துள்ளன. அவ்வுண்மைகளை யெல்லாம் கதைப் போக்கில் பொருத்தமான இடங்களில் அமைத்துத் தம்முடைய அனுபவத்தோடு இசைவித்து மாவலிகூற்முக விமரிசன முறை யிற் கூறுகின்ருர் கவியரசர் கம்பர். காவியங்களில் இடை யிடையே வரும் இத்தகைய உலகியல் நெறி பற்றிய விமரிசனக் குறிப்புக்கள் எல்லாம் நுணுகி ஆராய்ந்து போற்றத் தக்கன. (83, 84, 87, 90)
3. மூன்முவதாக இப்பகுதியில் இடம்பெற்ற உவமை களைப் பற்றி ஆராயலாம். (72,75, 76,90). இவற்றுள் இரண்டு நீதி நூற் கருத்துப்பொருள் பற்றிய உவமைகள். (75, 90) ஏனைய இரண்டும் திருமாலின் அவதாரம், பண்பு இவற்றேடு தொடர்புடையன. எல்லா உவமைகளும் எடுத்துக்கொண்ட பொருளுக்கு மிகவும் பொருத்தமானவை. அவற்றுள் ஒன்று (75) அடுத்துவரும் நிகழ்ச்சியையும் குறிப்பாக உணர்த்தும் பண்பில் அமைந்துள்ளது. எல்லா உவமைகளும் நுதலிய பொருளுக் கேற்றவாறு, உயர் படியில் அமைந்துள்ளன.

Page 36
っ
64 ή ή
7 மாவலி எல்லா உலகங்களையும் கைப்பற்றியை Α κ - - - -
(e. ஆனவன் இங்குறை கின்றஅ
ஏனமே னுந்திறல் மாவலி என்ட் ன். வானமும் வையமும் வவ்வுதல் செய்த அவன் வேள்வியில் எல்லாவற்றையுந் தானங் கொடுக்கத்
தீர்மானித்தல் * 73. செய்தவன் வானவ ருஞ்சேய லாற்ரு
கேய்தவழ் வேள்வியை முற்றிட நின்றன்
72. ஆனவன் - அத்தகைய திருமால். இங்கு - இந்தச் சோலையிலே, ஊனம் - குறைவு. ஞாலம் -உலகம். ஒடுங்கும் - அடங்கும். எயிற்றின் ஏனம் - தந்தத்தையுடைய வராகம். எயிறு - பல்: இங்கு ஒற்றைக் கொம்பு. வானம் - விண்ணுலகம், வவ்வுதல் செய்தான் - பறித்தான். “
அத்திருமால் இச்சோலையிலே தவஞ்செய்து தங்கியிருந்த காலத்தில் அகண்டமான பூமி முழுவதும் அடங்கி கிற்கும்படி யான ஒற்றைக் கொம்பினையுடைய வாாக மூர்த்தியை ஒத்த பெருவலி படைத்த மாவலி என்பவன் வானுலகினையும் மண் "ணுலகினையும் எளிதிலே கைப்பற்றிக் கொண்டான்.
இரணியன் தம்பி இரணியாக்கன் என்பவன் பூமி முழுவதையும் பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலிலே முழுகினன். திருமால் வராக ரூபங்கொண்டு, அவ்வசுரனைக் கொன்று, பூமியைத் தன் பல்லாகிய ஒற்றைக் கொம்பினுற் குத்தி வெளியே கொணர்ந்தார். அவ்வராக மூர்த்தி மண்ணுலகினை அனயாசமாகக் குத்தி எடுத்ததுபோன்று பெருவிறல் படைத்த மர்வலியும் இரண்டுலகங்களையும் எளிதிலே வென்று கைப்பற்றினன் என்பது கருத்து.
78. நெய்தவழ் வேள்வி- நெய் சொரிந்து செய்யப்படும் யாகம். ஐயம் இல் சிந்தையன் . பெருவிறல் படைத்தவனதலில் பிறர் வல்லமையைப்பற்றி
மதியாது, அவரால் தனக்கு இடையூறு வரும் என்னும் ஐயம் இல்லாத மணத்தினன். வலித்தான் - உறுதி செய்தான்.
அப்படி உலகங்களை யெல்லாம் எளிதிலே கவர்ந்தவனுகிய மாவலி தேவர்களாலும் செய்து கிறைவேற்றுதற்கரிய பெரிய வேள்வியைச் செய்து முடிப்பதாயினன். அவ்வேள்வி இடையூ றின்றி முற்றுப்பெறும் என்பதில் எள்ளளவும் ஐயப்பாடில்லா
 
 
 

65
வர்மனுவதாரக் கதை
ஐயமில் சிந்தையன் அந்தணர் தம்பால் வையமும் வானமும் வழங்க வலித்தான். ,2
வானவர் வேண்டுகோளுக்குத் திருமால் உடன்படல் 74. ஆய தறிந்தனர் வானவர் அங்ாகாள்
மாயன வந்து வணங்கி இரந்தார் தீயவன் வெங்தோழில் தீரென நின்றர் காயக லும்மது செய்ய நயந்தான். 3
திருமால் வாமனனதல்
75. கால நுனித்துணர் காசிய னேன்னும்
வாலறி வற்கதி திக்கொரு மகவாய்
தவனுகிய அரசன் விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையும் முனிவர்களுக்குத் தானமாகக் கொடுப்பதெனத் தீர்மானித் தான்.
74. ஆயது - வேள்வியில் தானஞ்செய்தலை அங்காள் - அக்காலத்தில், மாயன - அச்சோலையிலே தவஞ் செய்துகொண்டிருந்த திருமாலை, தீயவன் - மாவலி. வெங்தொழில் - கொடிய தொழில்; பசுவைக் கொன்று செருப்புத் தானம் செய்வது போன்ற தொழில். இரந்தார் . இரந்தாராகி; குறையிரந்து, தீர் - தீர்த்தருள்வாய். நாயகன் - திருமால். நயந்தான் - விரும்பினன். அது - அவன் கொடுமை ஒழித்தல்.
அப்படி வேள்விசெய்து அதில் இரண்டு உலகங்களையும் முனிவர்களுக்கு வழங்கப் போவதையறிந்து, இச் சோலையி லுள்ள திருமாலை அடிபணிந்து (அம்மா வலியாற்பட்ட துன்ப மெல்லாஞ் சொல்லிக்) குறையிாந்து, "தீயோனது பொறுத்தற் கரிய கொடுமையை இப்போது நீக்கியருள்வாய்” என்று வேண்டி கின்றர்கள். தலைவனுகிய திருமாலும் அது செய்தற்கு விரும்பினுன். . . 75. காலம் - முக்கால நிகழ்ச்சிகள், நுணித்துணர்-நுணுகி அறிகின்ற, வாலறிவன் - மெய்யுணர்வினையுடையவன். நீல நிறத்து நெடுந்தகை - கரிய நிறமுள்ள திருமால். ஆல் அமர்வித்து - ஆலமரம் முழுவதும் உள்ளே அமர்ந்த விதை. ஆல் - ஆலமரம். குறள் , குறுகிய வடிவம்.
முக்கால கிகழ்ச்சிகளையும் நுணுகி அறிய வல்ல காசிபன் என்னும் முனிவனுக்கும் அவன் பத்தினி அதிதிக்கும் ஒரு
9

Page 37
66
* தமிழ் அமுதம் நீல நிறத்து கேடுந்தகை வந்தோர். ' : ' ' ஆலமர் வித்தின் அருங்குற ளானன். 4
மாவலிபாற் செல்லுதல் - .
/'6. முப்புரி நூலினன் முஞ்சியன் விஞ்சை கற்பதோர் நாவன் அனற்படு கையான்
அற்புதன் அற்புத ரேயறி யுக்தன் சிற்பத மோப்பதோர் மேய்க்கோடு சேன்றன். 5
மகனுய், கரிய நிறமுள்ள திருமால் ஆலமரம் முழுவதும் அடங் கிய அதன் விதையை ஒத்த அரிய குறுகிய வடிவத்தையுடையவ னனன்.
ஆதியில் மிகச் சிறியதாய்ப் பின்பு படிப்படியே வளர்ந்து வானமும் சிறிதாம்படி தழைக்கும் பண்புள்ள ஆலம் விதை முன்பு மிகச் சிறிய வடிவினணுய்ப் பின்பு அண்டமும் அகண்டமும் அடங்கும் பேருருவங் கொள்ளும் வாமனனுக்கு உவமானம். உவமை அடுத்துவரும் நிகழ்ச்சிக்குப் படிப்போர் மீனத்தைப் பண்படுத்தும் முறையில் அமைந்துள்ளது. ‘உறக்குங் துணையதோர் ஆலம் வித்தீண்டி, இறப்ப நிழற்பயந்தாங்கு என்பதனை கோக்குக. (101)
76. முப்புரி நூலினன் - மூன்று வடத்தாலாகிய பூனூலினன். முஞ்சியன் = தருப்பைப் புல்லால் ஆகிய அரைஞாணையுடையவன். அனல் = நெருப்பு. அனல்படுகையான் - ஒமாக்கினி வளர்த்த கையினையுடையவன். அற்புதன் - ஆச்சரியகரமான குணஞ் செயல்களையுடையவன்; முக வசீகரத் தினுலும் இனிய பேச்சினலும் யாவர் அறிவையும் மயக்குபவன். அற்புதர் - வியக்கத்தக்க ஞானவான்கள்; மெய்யுணர்வு பெற்றவர்கள். சிற்பதம் - சித் பதம்; ஞானஸ்வரூபமான மேலான பதம், உவமை அழகுமிக்க தெய்வ ஒளியை உணர்த்திற்று.
மூன்று வடமாகிய பூணுரலை அணிந்தவன்; கருப்பைப் புல்லாற்செய்த அரைஞாணை இடுப்பிலே கட்டியவன்; வேத மந்திரத்தை உச்சரிக்கும் நாவினன்; வேள்வித் தீயோடு பயின்ற கையினன்; ஆச்சரியகரமான குணஞ்செயல்களை யுடையவன்; பாம ஞானிகள் மட்டுமே உணரும்படியான தன் ஞானஸ்வ ரூபத்தை ஒத்த தெய்வ ஒளியோடு விளங்கும் தூய திருமேனி யுடன் சென்முன்.
V~ '. ' ' ' ". . . ، پر "" التي '*':W"s"...»
 

67
வாமனுவதார்க் கதை
மாவலி எதிர்கொண்டு முகமன் கூறல்
77. அன்றவன் வந்த தறிந்துல கேல்லாம்
வென்றவன் முந்தி வியந்தேதிர் கொண்டான் நின்றுணே அந்தணர் இல்லை நிறைந்தோய் என்றனில் உய்ந்தவர் யாருளர் என்ருன்! G
வாமனன் மாவலியைப் புகழ்தல்
78. ஆண்டகை அவ்வுரை கூற அறிந்தோன்
வேண்டினர் வேட்கையின் மேற்பட வீசி ண்டகை யாயினி நின்னுழை வந்தோர் மாண்டவர் அல்லவர் மாண்பிலர் )என்றன். z
77. உலகெல்லாம் வென்றவன் - மாவலி. முந்தி - முற்படச் சென்று. அன்றையதினம் அவ்வாமனன் வந்ததை அறிந்து உலகை யெல்லாம் வென்றவணுகிய மாவலி முற்பட்டுச் சென்றன்; அவனது தெய்வ ஒளியோடும் விளங்கும் அற்புதமான கோற் றத்தை வியந்தபடி எதிர்கொண்டான்; (தன் நெஞ்சைப் பறி கொடுத்தவன்), 'உன்னை ஒப்பவரான அந்தணர் ஒருவருமில்லை. அழகினலும் குணத்தினலும் நிறைவுற்றவனே, இத்தகைய உன்னைக் காணப்பெற்ற என்னைப்போல ஈடேறினவர் யாருளர்? ஒருவரும் இலர்” என்று கூறினன்.
“நின்துணை அந்தணர் இல்லை - முகமனுகக் கூறிய மொழியில் அவன் உணராமலே உண்மை நிலைமைக்குரிய பொருளும் தொனிக்கும்; நாடக விகற்பம். ‘என்தனில் உய்ந்தவர் யாருளர் - இதுவும் அப்படியே.
78. ஆண்டகை . மாவலி; ஆடவர்களுள் தகுதிவாய்ந்த குண முடையவன். வீசி - வரையாது விரைந்து கொடுத்து. மாண்பிலர் - சிறப்பில்லாதவர்.
அரசன் அவ்வாறு கூற எல்லாம் அறிந்தவணுகிய வாமனன் *ஒன்றைக் கேட்டவர் விரும்பிய அளவிற்குப் பெரிதும் அதிக மான பொருளை அள்ளிக் கொடுத்து, அதனல் மீண்ட கையை யுடையவனே, இத்தகைய உன்னிடம் வந்தவர் எவர் அவரே 'மாட்சிமைப்பட்டவர்; அல்லாதவர் யாவர்ாயினும் ஒரு மாண்
பும் இல்லாதவரே யாவர்” என் முன்,

Page 38
79. சிந்தை உவந்தேதிர் என்செய எ6 அந்தணன் மூவடி மண்ணரு
வேந்திற லாயிது வேண்டுமே முைன்
தந்தனன் என்றனன் வெள்ளி தடுத்தான். 8 80(கண்ட திறத்திது கைதவம் ஐய
கொண்டல் நிறக்குறள் என்பது கொள்ளேல் அண்டமு முற்றும் அகண்டமு மேனுள் உண்டவ னுமி துணர்ந்துகோள் என்ருன்) 9
79. எதிர் - விடையாக. அருளுண்டேல் - கொடுப்பதுண்டானல்; இடைப்பிறவரல். “மூவடி மண் - அருளுண்டேல்-இதுவேண்டும்உ என்ருன். தந்தனன் - காலவழுவமைதி, வெள்ளி - சுக்கிரன்; அசுர குரு; மாவலியின் மந்திரி. (88)
மனம் பெரிதும் மகிழ்ந்து, உத்தரமாக, 'யான் செய்ய வேண்டுவது யாது என்று கட்டளையிடுக” என்று கேட்டான். முனிவன் ‘மூன்றடி மண் தருவதுண்டானல், பெரிய வீரத்திறலை யுடையவனே, இதுவே வேண்டும்” என்று சொல்லி முடிக்கு முன், ‘தங்தேன்’ என் முன். அப்படிக் கூறியதும் அவன் மந்திரியாகிய அசுர குரு குறுக்கிட்டுத் தடுத்தான்.
paug- uDav......... இதுவேண்டும் - மூவடி மண்; இதுவே வேண்டும்; வேறென்றும் வேண்டாம்; தருவதானுல் இதைக் கொடு என்பது கருத்து.
80. கைதவம் - வஞ்சனை, கொண்டல் - மேகம், கொள்ளேல் = கொள்ளாதே. அண்டம் - அண்ட வடிவான உலகம். அகண்டம் - வரம்பில் அடங்காத உலகங்கள்.
*கண்ணுலே கண்ட இந்த அற்புதமான உருவம் உண்மை யன்று; வஞ்சனையினல் ஆயது; ஐயனே, இவன் மேகம் போன்ற நிறமுள்ள குறுகிய வடிவமுள்ளவன் என்று கொள் ளாதே; அண்ட வடிவமான இந்த உலகம் முழுவதையும், வரம் பின்றிப் பாந்துள்ள பிரபஞ்சத்தையும் முற்காலத்தில் உண்ட வன் இவன்; இதனை நீ உணர்ந்து ஏற்றவாறு நடந்துகொள்”
என்முன்.
 
 
 
 
 
 
 

வாமனுவதாரக் கதை" 69
. . . மாவலியின் கூற்று (81-87) 81. நினைக்கிலே என்கை நிமிர்ந்திட வந்து (தனக்கிய லாவகை தாழ்வது தாழ்வில் கனக்கரி யானது கைத்தல மேன்னின் எனக்கிதன் மேனலம் யாதுகோல் என்றன், 1 O 82. துன்னினர் துன்னலர் என்பது சோல்லார்
முன்னிய நன்னேறி நூலவர் முன்வந்து
உன்னிய தானம் உயர்ந்தவர் கோள்க
என்னின் இவன்துணை யாவர் உயர்ந்தார். 11 83. வெள்ளியை யாதல் விளம்பினை மேலோர்
வள்ளிய ராக வழங்குவ தல்லால்
81. கனக்கரியான் - மேகம்போற் கரிய நிறமுள்ள திருமால். மேனலம்மேல் நலம். -
“இதனை நினைக்கவில்லை ;ே கொடுப்பவனுகிய எனது கை மேலே கிமிர்ந்து நிற்க, வந்து தன் பெருமைக்குப் பொருத்த மில்லாத வகையில் ஏற்கும் நிலையில் கீழே இருப்பது மேக மேனியணுகிய திருமாலின் கை என்ருல் எனக்கு இதற்கு மேலாக வரும் சிறப்பு யாதுளது?’ என்ருன்.
82. துன்னினர் = வேண்டியவர்கள் நண்பர், உறவினர் முதலியோர். துன்னலர் - வேண்டாத பகைவர் முதலியோர். முன்னிய - மதிக்கப்படுகிற, உன்னிய - கருதிய.
*பொருங்கிய நண்பர் என்றும், வேண்டாத பகைவர்
என்றும் வேறுபாடு கருதிப் பேசமாட்டார்கள் நன்கு மதிக்கப்
| படும் நன்னெறியைக் கூறும் நூல்வல்ல அறிஞர்கள். மேலும்
விரும்பிய தானத்தை அதனைப்பெறும் தகுதி வாய்ந்த பெரி
யோர் கொள்வாராக என்று நாம் கூறினுேம்; அதற்கேற்ப
இங்கே வந்துற்ற இவனுக்கு ஒப்பாக உயர்ந்தவர் யாவருளர்?.
88. வெள்ளியை யாதல் விளம்பிக்ன - 1. அறிவின்மையுடையாய், ஆதலினல் இப்படிக் கூறினய் 2. வெள்ளி என்னும் பெயரினையுடையை அப் பெயருக்கு ஏற்பவே கூறினுய். வெண்மை. அறிவின்மை, வள்ளியர் - வரையாது கொடுப்பவர். இகழ்தல் - ஒதுக்குதல்,

Page 39
70 தமிழ் அமுதம்
எள்ளுவ தேன்சில இன்னுயி ரேனும் கோள்ளுதல் தீது கொடுப்பது நன்றல். 12
84. மாய்ந்தவர் மாய்ந்தவ ரல்லர்கள் ԼՈnաn&l t
ஏந்திய கைகோ டிரந்தவர் எந்தாய் வீய்ந்தவ ரேன்பவர் வீய்ந்தவ ரேனும் స్ట్కో" ஈய்ந்தவ ரன்றி இருந்தவர் யாரே. 13
85. அடுப்ப வரும்பழி செய்ஞ்ஞரு மல்லர்
கோடுப்பவர் முன்பு கோடேலேன நின்று
*நீ வெள்ளி என்னும் பெயரினையுடையை; அதற்கேற்ற படியே அறிவின்மையானவற்றைக் கூறினய், அறிவினுலே மேம்பட்டவர் வள்ளன்மையினல் வரையாது கொடுப்பதை யல்லது, கொடுத்தற்குரியன அல்ல என்று சிலவற்றை ஒதுக்கு வது ஏன்? தமது இனிய உயிரேயாயினும் அதனை ஒருவர் பாற் கொள்வது துன்பகரமானது; அதனைக் கொடுப்பது இன்பங் தருவது’. --
“நல்லர் றெனினும் கொளல் தீது மேலுலகம், இல்லெனினும் ஈதலே நன்று' என்னும் திருக்குறட்கருத்தை விரித்துக் கூறுவது இது. (110)
84. மாய்ந்தவர் = இறந்தவர். மாயாது - இரந்து உயிர் வாழும் நிலைமை ஏற்பட்ட பொழுதும் உயிரை விடாமல். வீய்ந்தவர் - இறந்தவர் என்று சொல்லப்படுபவர்.
இறந்துபோனவர் யாவரும் உண்மையில் இறந்தவர் என்று கருதப்படுவாரல்லர்; இாந்தும் உயிர்வாழவேண்டும் என்ற நிலையை அடைந்தவிடத்து உயிரை விடாமல், ஒருவர் கை மேலாகத் தம் கை கீழாக இசந்தவர் எவரோ அவரே எந்தையே, உண்மையில் இறந்தவராக மதிக்கப்படுவார். இறந் தொழிந்தவரே யாயினும் ஈதலைச் செய்தவரையன்றி கிலையான புகழுடம்போடு கின்றவர் யாவர்?’.
*இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டிற் பரந்து, கெடுக உலகியற்றி யான்,'. “ஒன்ரு உலகத் துயர்ந்த புகழல்லாற், பொன்ருது நிற்பதொன் றில்," - வசை யொழிய வாழ்வாரே வாழ்வார்மற் றிசையொழிய, வாழ்வாரே வாழா தவர்", என்னும் குறட்பாக்களோடு ஒப்பிடுக. (109, 118, 114).
85. அடுப்ப - தம்மைச்சேர. கொடேல் - கொடுக்காதே. தம்மையும் தம்மைத்தாமே. கேடு - தீச்ச்ெயல்,
 

வாமனுவதாாக் கதை 71.
தடுப்பவ ரேபகை தம்மையும் அன்னர் கேடுப்பவர் இன்னதோர் கேடிலை என்றன். 14 86. கட்டுரை உத்தம கைத்துள போழ்தே
இட்டிசை கொண்டறன் எய்த முயன்றேர்க்கு உட்டெறு வேம்பகை யாவது லோபம் விட்டிட லேன்று விலக்கினன் மாதோ. 15
வேறு 87. எடுத்தோருவ ருக்கோருவர் ஈவதனின் முன்னம் தடுப்பது நினக்கழகி தோதகவில் வெள்ளி
*தம்மைச் சேரும்படி வரும் பழியைச் செய்பவரல்லர் பகைவர் ஆகுபவர்; கொடுப்பவர் முன் சென்று குறுக்கிட்டு விலக்குபவரே பகைவராவார்; அப்படித் தடுப்பவர் தம்மைக் தாமே கெடுத்துக்கொள்பவர். ஆதலால் இது போன்றதொரு பெரிய தீமை இல்லை”.
86. கட்டுரை உத்தம. எனக்கு உறுதி பயப்பதாக எண்ணித் தகாத கூறும் உத்தமனே. உத்தம - இகழ்ச்சிக் குறிப்பு. கைத்து - கையிலே, இட்டு - ஈதலைச்செய்து. இசைகொண்டு - அழியாப் புகழை உறுதியாகப் பெற்று, அறன் - அறப்பயன்; இம்மைக்குரிய புகழோடு மறுமைக்குரிய கல்வினைப்பயன். உள்தெறு வெம்பகை . உள்ளே இருந்துகொண்டு அழியாப் புகழுடம்பைப்பெற ஒட்டாமல் அழிக்கின்ற கொடிய பகை. லோபம் . பொருளை வைத்துக்கொண்டு இரப்போர்க்கு இல்லை ஸ்ன்னுதல். விட்டிடல் - வியங்கோள்வினை. மாதோ - அசை.
“எனக்கு உறுதி கூறுவதாக எண்ணித் தகாத கூறிய நற்குணமில்லாதவனே, கையில் பொருள் உள்ள பொழுதே தக்கார்க்கு ஈதலைச் செய்து அழியாப் புகழை உடனே கைக் கொண்டு, மேலும் அறப்பயனைக் கொள்ள முயன்முேருக்கு உள்ளே இருந்து அழிக்கின்ற கொடிய பகை உலோப குணமே யாகும். ஆதலால் இந்த உலோப குணத்தை யான் மேற் கொள்ளும்படி கூறும் இப்பேச்சினை விட்டுவிடுக” என்று கூறி விலக்கினன்.
87. எடுத்து - கொடுக்க முற்பட்டுத் தருவதைக் கையிலே எடுத்து. தகவில் வெள்ளி - நற்குணமில்லாத வெள்ளியே. கொடுப்பது விலக்கு கொடியோர் . ஈவதனைத் தடுக்கும் கொடிய இயல்பினர், ஒழியும் - அழிக் தொழியும்,

Page 40
72 * தமிழ் அமுதம் * 'w
கோடுப்ப Sl விலக்குகொடி யோர்தமது சுற்றம்
உடுப்பதுவும் உண்பதுவு மின்றியோழி யுங்காண்) 16.
ഖേമ്പ്ര , ; , ; ; . மாவலி மூவடிமண் நீரோடு வழங்க முற்படல் 88. முடியஇம் மொழியேலா மொழிந்து மந்திரி ":
கொடியனேன் றுரைத்தசோல் ஒன்றுங் கோண்டிலன் அடியோரு மூன்றுநீ அளந்து கொள்கென கேடியவன் குறியகை நீரின் நீட்டினன். 17 சுக்கிரன் நீர்விழாமல் தடுத்தலும் கண்ணிழந்து போதலும் 89. குறியவன் கையினீர் விழாமற் குண்டிகை
மறிபட வாமனன் மலர்க்கைத் தருப்பையாற்
*ஒருவருக்கு ஒருவர் ஒரு பொருளைக் கொடுக்க முற்பட்டு '
அதனைக் கையிலே எடுத்து நின்ற நிலையில் அதனைக் கொடுப் பதன் முன்னம் தடுப்பது உனக்கு அழகாகுமோ? நற்குண மில்லாத வெள்ளியே, கொடுப்பதனை விலக்கும் கொடியோர் கள் குலம் உறவினர் உட்பட உடுக்க உடையும் உண்ண உணவும் பெருது எச்சமின்றி அறவே அழிக்தொழியும்; இதனை நீயே காண்பாய்”.
*கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம், உண்பதூஉம் இன்றிக் கெடும்" என்பதனை நோக்குக. (110)
88. முடிய - முற்றிலும், மந்திரி - இரகசிய ஆலோசனை செய்பவன்; சுக்கிரன். கொடியன் என்று - கொடியவன் என்று எண்ணி. ஒன்றும் -
சிறிதும். கொண்டிலன் - கொண்டிலனகி; வினையெச்சம். கொள்கென .
கொள்க என, நீரின் - நீரை.
முற்றிலும் இத்தன்மையான வார்த்தைகளையெல்லாம் கூறி, தன் மந்திரி கொடிய குணமுள்ளவன் என்று கருதி, அவன் கூறிய தொன்றையும் ஏற்றுக்கொள்ளாமல், “ஒரு மூன்று அடி களையும் நீயே அளந்து கொள்க’ என்றுரைத்து, திருமாலின் அவதாரமாகிய வாமனனது சிறிய கையிலே தாரை வார்த்தற் குரிய குண்டிகை நீரை சீட்டினன்.
89. குறியவன் - குறளுருவாயவன். கையின் நீர் விழாமல், குண்டிகை மறிபட கெண்டி அடைபடவே. அஃது அடைபடக் காரணம் சுக்கிரன்
 

வாமனுவதாரக் கதை 73 செறிவது நீக்கி ཆེ་ சிதைந்து கண்ணுடைந்து } உறுதுயர் வேள்ளியும் உடைந்து நீங்கினன். 18
விசுவரூபங் கொள்ளுதல் 9 O. கயந்தரு நறும்புனல்" கையில் தீண்டலும் பயந்தவர் களுமிகழ் குறளன் பார்த்தேதிர் வியந்தவர் வேருக்கோள விசும்பின் ஓங்கினன் உயர்ந்தவர்க் குதவிய உதவி ஒப்பவே. 19
சிறிய உருவங்கொண்டு குண்டிகை நீர் வெளிப்படும் துவாரத்தை அடைத்துக் கொண்டமை, செறிவது - அடைத்துக் கொண்டிருந்தமை. சிதைந்து = மனமுடைந்து, ஒதுங்கி நீங்கினன் . விலகிப் போயினன்.
குறுகிய வடிவினன் கையிலே நீர் விழாதபடி குண்டிகை யின் துவாரம் அடைபட, அது கண்ட வாமனன் தனது மலர் போலும் மென்மையான கையிலே உள்ள தருப்பையினுற் குத்திக்கிளறி, அடைப்பை நீக்கினன்; அதனுல் மனம் ஒடிந்து கண் சிதைந்து, மிக்க துயரத்தை அடைந்த வெள்ளியும் விலகிப்
போய்விட்டான்.
90. கயம் - குளம். பயந்தவர் - பெற்ற தாய் தந்தையர். குறளன் - குறள் வடிவமான வாமனன். வெருக்கொள - அச்சங்கொள்ள.
குளத்திலிருந்து கொண்டுவரப்பட்ட ஈறிய தண்ணீர் கையிலே பட்ட மாத்திரத்திலே, பெற்ற தாய் தந்தையரும் இகழும்படி அவ்வளவு குறுகிய வடிவினன் எதிரே நின்று வியப்புற்றவர்களும் அஞ்சும்படி, உயர்ந்தவர்களுக்கு அளித்த தானத்தின் பயன் போல ஆகாயக்கின் எல்லையளவும் உயர்ந்து
வளர்ந்தான்.
பெரியோர்க்குச் செய்த உதவி சிறிதாயினும் அது அவர் பெருமைக் கேற்பப் பெரும்பயனை அளிக்கும்; அதுபோன்று சிறிய வடிவினனுகிய வாமனன் திரிவிக்கிரமனக ஆகாயத்தெல்லேயளவும் வளர்ந்தான் என்க. உதவி வரைத்தன் றுதவி உதவி, செயப்பட்டார் சால்பின் வரைத்து' என்னும் குறட்பாவினையும் (106), 'உறக்குங் துணேயதோர் ஆலம் வித்து என்று தொடங்கும் நாலடிச் செய்யுளையும் (101) நோக்குக.
10

Page 41
74. தமிழ் அமுதம்
திருமால் ஈரடியால் உலகையெல்லாம் அளந்தமை
91. நின்றதாள் மண்ணெலாம்" நிரப்பி அப்புறம்
சென்றுபா விற்றிலை சிறிது ப்ாரேன ஒன்றவா னகமெலாம் ஒடுக்கி உம்பரை வென்றதாள் மீண்டது வெளிபே ருமையே. 2O
மூன்ருமடியை மாவலியின் முடிமேல் வைத்தல்
92. உலகெலாம் உள்ளடி அடக்கி ஓரடிக்கு
அலகிலா தவ்வடிக் கன்பன் மேய்யதாம்
91. பார்சிறிதெனச் சென்று பாவிற்றிலை என்று கூட்டுக. பார் - பூவுலகம். பாவிற்றிலை = பரவியதில்லை. வானகம் எ(ல்)லாம் ஒன்ற ஒடுக்கி என்று கூட்டுக. ஒன்ற - பாதத்தில் ஒருப்பட்டு நிற்க. ஒடுக்கி - அடங்கும் படிசெய்து, உம்பர் மேலுலகம். வென்ற - கடந்த, வெளிபெருமை - வேறு இடைவெளி பெருமையால்.
அப்படிப் பேருருக்கொண்டபொழுது அடிபெயராது நின்ற பாதம் பூவுலகம் முழுவதையும் கிாப்பிற்று; பூமி மிகவும் *சிறியதென்று அதற்கு மேலும் பசவவில்லை. வானுலகம் முழுவதும் ஒன்று படும்படி அடக்கி மேலுலகினைக் கடந்த மற்றப்பாதம் அதற்கு மேலும் வளர இடம் பெருமையால் மீண்டது.
92. அலகு - அளவு; இங்கு அளத்தற்குரிய இடம். அன்பன் - மாவலி. மெய் - சரீரம்; இங்கு சிரம். இலகுலாம் . இலை (துளசி மாலை) விளங்கு கின்ற. ஏகநாயகன் - திருமால். சிலைகுலாம் தோளினய் . வில் விளங்கு கின்ற தோளையுடைய இராமனே !
பூவுலகம் விண்ணுலகம் ஆகிய உலகம் முழுவதையும் ஒவ் வொரு பாதத்தினுள்ளே அடக்கியபடியால் தரவேண்டிய மற்றோடிக்கு இடமில்லாமற் போயிற்று; போகவே அன்பு நிறைந்த நெஞ்சினனுகிய மா வலியின் தலையே அதற்குரிய இடமாயிற்று. இப்படி மூன்றடிகளையும் அளந்துகொண்ட, துளசிமாலையை அணிந்த ஒப்பற்ற உலக நாயகன், வில்லைத் தரித்த தோளை யுடையவனே, பேருருவங்கொண்டனணுயினும், (அவனுக்குரிய விசுவரூபத்தின் பேரெல்லையை நோக்குமிடத்து) மிகவும் சிறியன் என்றே கூறவேண்டும்.

சூரியாத்தமனம் 75
இலைகுலாங் துழாய்முடி ஏக நாயகன் சிலைகுலாந் தோளினய், சிறியன் சாலவே. 21 திருமால் மூவுலகினையும் இந்திரற்களித்துப் பாற்கடலடைதல் 98. உரியதிந் திரற்கிதேன் றுலகம் ஈந்துபோய்
விரிதிரைப் பாற்கடற் பள்ளி மேவினன் கரியவன் உலகெலாங் கடந்த தாளிணை திருமகள் கரந்தோடச் சிவந்து காட்டவே. 22
v
சிறியன் சால - சாலச்சிறியன் என்க. எந்த அளவிற்கும் மிகவும் பெரியதாக வளரும் பண்பினன் உருவம் பூவுலகம், வானுலகம், மாவலிதலை இவற்றை அடக்கும்படியாக அளவுபட்ட பாதத்திற்கு ஏற்ற அளவில் வரம்பு பட்டுத் தோன்றினமையின் சாலச்சிறியன் என்ருன்.
93. இது - அளந்துகொண்ட உலகம். கரம் - கைகள்.
இந்த உலக மெல்லாம் இந்திரனுக்கு உரியது என்று
அவனுக்குக் கொடுத்துப்போய், விரிகின்ற திரைகளையுடைய பாற்கடலில் தன் பாம்பணைப் பள்ளியில், உலக்ையெல்லாம் அளந்துகொண்ட பாதங்கள் திருமகள் வருடுதலாற் சிவப்பேறிக் காட்டும்படி கித்திரை கொண்டருளினன்.
2. வருணனைப் பகுதி
5. சூரியாத்தமனம்
இப்பாடத்திலுள்ள செய்யுள்கள் புகழேந்திப் புலவர் இயற்றிய நளவெண்பா வினின்றும் எடுக்கப்பட்டன. (சுயம்வர காண்டம் 97-99) சந்தர்ப்பம்
தன்னுற் காதலிக்கப்பட்ட ஈளன், இந்திரன் பொருட்டுத் தன்னிடம் தூதுவந்து மீண்டபின்பு தமயந்தி பிரிவாற்ருமை யினுற் பலவாறு துன்புற்ருள். அப்படி அவள் வருந்தியதை ஆசிரியர் விரித்துாைகின்றர். (சுயம்வர காண்டம் 94-124).

Page 42
76
அங்ஙனம் அவள் வருந்தும் கிலேயில் நிகழ்ந்த சூரியாத்தமனமே
சிறப்பியல்புகள் - - ..
காவியங்களின் இடையிலே இடம்பெறும் இயற்கைக் காட்சி வருணனைகள் பெரும்பாலும் முன்பின் கதை நிகழ்ச்சி, கதாபாத்திசங்களின் மனநிலை முதலியவற்றேடு" ஏதோ இரு வகையில் தொடர்புற்றுக் காணப்படும். இந்த வருணனை அடுத்து வரும் தமயந்தியின் விர கதாபத்தை உள்ளே கொண்டு அதற்கு வழியமைக்கும் பண்பில் அமைந்துள்ளது.
சூரியன் அத்தமிக்கும் சமயம் வானம் ஒளிமழுங்கும்; பட்சிகளெல்லாம் நீர் நிலைகளை விட்டு நீங்கும்; இருள் பரவத் தொடங்கும்; அந்தணர் வேதம் ஒதுவர்; அந்தி மாலையில் மல்லிகையும் முல்லையும் மலரும்; வண்டுகள் மல்லிகையைச்
சுற்றி முரலும்; முல்லைக்கொடி மலர்ந்த பூவுடன் மெல்லிய
\ದಿ? அசையும், இப்படி இயல்பாக நிகழ்வனவற்றை
யெல்லாம் உதமயந்தியின் துயரத்தை மிகுவிக்கும் வாயில் களாகக் கொண்டு வருணிக்கின் முர். முதலாம் செய்யுளில் இழப்ப" என்னுஞ் சொல் இழவுணர்ச்சி தொனிக்கும்படி பன்முறை வந்துள்ளது. இரண்டாஞ் செய்யுளில் சூரியன் மறைந்ததைக் கூறும் பண்பு, நளன் தமயந்தியின் முன்பு தோன்றித் தூதுரைத்து, மனம் இருளடையும்படி கண்வட்டத் தினின்றும மறைந்ததை நினைவூட்டுவது போன்று, சூரியன் இருளாகிய திரைச்சிலையை இழுத்துவிட்டு, மலையி னுள்ளே மறைந்தான் என்று கூறுகின்றது. மூன்ருஞ்செய்யுள் பிரிந்தவரைத் துன்புறுத்தும் அந்திமாலை ஓர் அரசனைப் போன்று, மன்மதன், முல்லை மலர் முதலிய பக்கபலத்துடன் பவனி சென்முன் என்று கூறுகின்றது. இங்ஙனம் இயற்கைக் காட்சி கதையின் சந்தர்ப்பத்திற்கு இசைந்த முறையில் வருணிக்கப்படுகின்றது.
இனி மற்முென்று : இயற்கைத் தோற்றம் ஒரு கணம் இருந்தது போன்று மறு கணம் இருப்பதில்லை; மாறியபடியே செல்வது. ஆதலால் கவிஞர்களும் அதனை வளர்ச்சிக் கிரமம் பற்றி வருணிப்பது மரபு. இந்த வருணனையும் அம்முறைபற்றி
 
 
 

சூரியா த்தமனம் 77
அமைந்துள்ளதென்பது எளிதிலே புலப்படும். முதலாம் செய்யுள் சூரியன் மேற்கு மலையை அடைந்தான் என்று கூறு கின்றது. அடுத்த செய்யுள் அவன் முற்முக மறைந்தமையைக் கூறும். ஈற்றுச் செய்யுள் அதன் பின்வந்த அந்திமாலை தோன்றிய பண்பினை விரித்துரைக்கும்.
சூரியன் அத்த கிரியை அடைதல்
94. வையம் பகலிழப்ப வானம் ஒளிஇழப்பப்
போய்கையும் நீள்கழியும் புள்ளிழப்பப்-பையவே செவ்வாய அன்றில் துணைஇழப்பச் சென்றடைந்தான் வெவ்வாய் விரிகதிரோன் வேற்பு. 1.
சூரியன் மறைந்தமை
95. மாயிரு ஞாலத் துயிர்காண வானரங்கிற்
பாயிரு ளேன்னும் படாம்வாங்கிச்-சேய்கின்று
94. வையம் - உலகம். பொய்கை - தடாகம், மீள்கழி - மீண்ட உப்பங்கழி. கழி = கடலையடுத்த உப்பு நீர்ப்பரப்பு. புள் - பட்சி. பையவே. மெல்லமெல்ல, செவ்வாய - சிவந்த நிறமுள்ள வாயையுடைய. துணை = சேவலாகிய துணை. வெற்பு - மலை; அத்த கிரி.
உலகம் பகற்பொழுகை இழக்கவும், ஆகாயம் ஒளியை இழக்கவும், தடாகங்களும் நீண்ட கடற்கரைக் கால்வா ய்களும் பட்சிக் கூட்டங்களை இழக்கவும், சிவந்த வாயினையுடைய அன்றிற் பறவை தேவலா கிய துணையை இழக்கவும், வெம்மை வாய்ந்த விரிகின்ற கிரணங்களையுடைய சூரியன் (மேற்குத் திசையிலுள்ள) அத்த கிரியைப் போய்க் குறுகினன்.
பகற்பொழுது நீங்க, வானம் ஒளி மழுங்க, பட்சிகள் தடாகம் முதலிய வற்றை விட்டு அகல, அன்றில் துணையிழந்து வருந்த, சூரியன் அத்த கிரியின் எல்லையை அடைந்தான் என்று கொள்க. விரி கதிரோன் வெற்புச் சென்றடைந்தான் என்க.
95. மா = பெரிய. இரு = பெரிய. மா இரு ஞாலம் - மிகப்பெரிய பூமண்டலம். உயிர்காண - உயிர்கள் பார்க்கும்படியாக; "ஆடி என்பதனேடு முடியும். வான் அரங்கு - ஆகாயமாகிய அரங்கம் (நாடக மேடை). பாய் இருள் - விரைந்து பரவும் இருள். படிாம் - போர்வை; இங்கு திரைச்சிலை. வாங்கி - இழுத்து. சேய்நின்று = தூரத்திலே நின்று. ஆரணம் அறைந்து

Page 43
78 தமிழ் அமுதம்
அறைந்தா ரணம்பாட ஆடிப்போய் வேய்யோன் மறைந்தான் குடபால் வரை. 2
அந்திமாலை வருணனை - 96. மல்லிகையே வேண்சங்கா வண்டுத வான்கருப்பு வில்லி கணைதேரிந்து மேய்காப்ப-முல்லையேனும்
பாட - வேதத்தை எடுத்தல் படுத்தல் முதலிய பண்புகளோடு உரத்துப்பாட. பாட என்னும் சொல் மறைந்தான் என்பதனேடு முடியும். ஆடி-நடிகர் அரங் கிலே ஆடுவதுபோன்று பகல் முழுவதும் தன் பாகத்தை விளையாடி (கடித்து). குடபால் வரை-மேற்குத் திசையிலுள்ள மலை; அத்த கிரி. உயிர்காணஆடி. படாம்வாங்கி. Ulti- - - - - - - போய் மறைந்தான் என்று கூட்டுக்.
மிகப்பெரிய உலகிலுள்ள உயிர்களெல்லாம் காணும்படி ஆகாயம் என்னும் நாடக மேடையிலே, விரைந்து பரவும் இரு ளாகிய திரைச்சீலையை இழுத்துவிட்டு, மறையவர் வேத மந்தி ாங்களை ஒடுத்த குரலில் ஒத, நடித்துவிட்டுப்போய், சூரியன் மேலைத் திசையிலுள்ள மலையின் கண்ணே மறைந்தான்.
ஒரு நாடக மேடையிலே யாவருங்கான ஆடுவதுபோன்று சூரியன் பகல் முழுவதும் தனக்குரிய பாகத்தை நடித்தான். பகல் முடிவில் மறையவர் (பாராட்டுவது போன்று) வேத வாக்கியங்களே எடுத்த குரலில் இசைப்ப, இருளாகிய திரைச்சிலையை அவ்வரங்கத்தில் இழுத்துவிட்டு அவன் மேலைக் கிரியினுள்ளே மறைந்தான் என்று உருவகப் பொருளை விரித்துக்கொள்க.
96. வான் கருப்பு வில்லி = உயர்ந்த கரும்பாகிய வில்லையுடைய மன்மதன். கரும்பு வில்லி - கருப்பு வில்லி, கணை தெரிந்து - அம்புகளைத் தெரிந்தபடி, மெய்காப்ப - மெய்க்காப்பாளர் செய்யுங் தொழில் புரிய, தோள் அசைய - தோளின் கண்ணே மெல்ல அசைய. மெல்ல - ஆறுதலாக, புன்மாலை - சிறிய மாலைக்காலம். அந்திப்பொழுது - அந்திமாலை.
மல்லிகை மலரே வெண்மையான சங்காக வண்டுகள் ஊதவும், பெரிய கரும்பு வில்லை ஏந்திய மன்மதன் அம்புகளை ஆராய்ந்தெடுத்தபடி மெய் காவல் புரியவும், முல்லை என்னும் மெல்லிய மாலையானது தோளின் கண்ணே அசையவும், சிறிய கால எல்லையையுடைய அந்திமாலை மந்த கதியிலே சென்றது.

முதுவேனில் 79
மேன்மாலை தோளசைய மேல்ல கடந்ததே புன்மாலை அந்திப் பொழுது. . 3
சூரியன் மறைவுக்கும் இருளின் செறிவுக்கும் இடைப்பட்ட குறுகிய காலம் அந்திமாலை எனப்படும். அச்சிறு காலப்பொழுது ஒரு சிற்றரசனுக உருவகஞ் செய்யப்பட்டது. அப்பொழுது வண்டுகள் மல்லிகையாகிய சங்கினை ஊதின; மன்மதன் வில்லேங்தியபடி மெய்காவல் புரிந்தான். முல்லை மாலை தோளிலே அசைய அந்திமாலை என்னும் அரசன் அடிமேல் அடியிட்டுப் பவனி வந்தான் என்று கொள்க. மாலைக் காலத்தில் வண்டுகள் பூக்களில் வாய்வைத்து ஊதுவது, முல்லைமலர் காற்றில் அசைவது ஆகிய இயற்கைப் பண்புகள் கதை நிகழ்ச்சியின் தொடர்பு நோக்கி இங்ங்ணம் வருணிக்கப்பட்டன.
6. முதுவேனில்
இப்பாடத்திலுள்ள மூன்று செய்யுளும் மகா வித்துவான் மீனுட்சிசுந்தாம் பிள்ளை பாடியளித்த குசேலோபாக்கியானம் என்னும் நூலினின்றும் எடுக்கப்பட்டன. (குசேலர் மேல் கடல் அடைந்த அத்தியாயம் : 179, 182, 184) சந்தர்ப்பம்
நற்குணம் மிக்க தவ முனிவனகிய குசேலன், மக்களின் வறுமைப் பிணியை நினைந்து வாடிய தன் மனைவி சுசீலையின் வேண்டுகோளின்படி துவாரகையிலுள்ள தன் ஒரு சாலை நண்பன் கண்ணபிரானைக் காணச் சென்றன். அவன் நெடுங் அாரம் வழிநடந்து மலை, ஆறு முதலியவற்றைக் கடந்து, மெலிவுற்று, மேல்கடற் கரையை அணுகும் நிலையில் வந்த முதுவேனிற் பருவம் இங்கு வருணிக்கப்படுகின்றது. சிறப்பியல்புகள்
எங்கும் வெம்மை மயமாகக் கொதித்தபடி வந்த முது வேனிற் பருவத்தில் கானல் மீரையன்றி வாவி, குளம் முதலிய வற்றில் சீர்ப்பசை மருந்துக்கும் இல்லை. இத்தகைய வேனிற் பருவத்தை ஆசிரியர் பொருள் எளிதிலே விளங்கும் இனிய நடையிலே வருணிக்கின் முர். , ' '
மேலும் இப்பகுதியில் இரண்டு உவமைகள் வந்துள்ளன. முதலாவது உவமை இரண்டாஞ் செய்யுளில் காணப்படுகின்றது.

Page 44
80
வெளிக்காட்டி வறிய லை போன்று வெளிக் தோற்ற மளித்து மான் கூட்டங்களை அலைக்கும் கானல்ரீருக்கு
அதில் வள்ளன்மை மிக்க செல்வர்போ
வர்களை ஏமாற்றும் உலோபிக்ளை, நீர்
ஒப்பாகக் கூறுகின் முர். இரண்டாவது உவமை மூன் முஞ் செய்யுளில் வருவது. அதில் நீர் அறவே வற்றிய நீர் நிலைகளை விட்டுப் பட்சிக்கூட்டங்கள் நீங்கியமைக்கு, செல்வமுள்ளவன, அவன் வறு  ைம ப் பட்ட வுட ன் "சுற்றத்தார் விட்டு நீங்குவதை உவமானமாகக் கூறுகின்ருர். இத்தகைய கருத்துக் கள் வறுமையினல் துன்புற்றபோதிலும் பொருளிலே ஊன்றிய பற்றில்லாத ஒருவர் மனப்பாங்கிற்கு ஏற்றனவாயுள்ளன. ஆகவே இந்த உவமைகள் வழிநடந்து இளைத்த குசேல முனிவன் சிந்தனையை ஒட்டி வந்தன என்று கொள்வதில் இழுக்கில்லை.
முதுவேனிலின் மிதமிஞ்சிய வெம்மை 97. மண்கொதிப்ப அறல்கொதிப்ப வளிகோதிப்ப எண்ணுவார் எண்கோதிப்ப நறுநீழல் இயைமனைவிட் டகலார்க்குங் கண்கொதிப்பக் கரங்கொதிப்பக் கால்கொதிப்பக் கற்பகஞ்சார் விண்கொதிப்ப அவ்வேனில் வேம்பருவம் மேவியதால். 1 மான்கள் கானல்நீரின் பின்தொடர்ந்து வருந்துதல் 98. தேள்ளுபுனல் கசைமிக்குத் திரிமருப்பின் இரலையேலாம்
கள்ளரிய பேய்த்தேரின் பின்தொடர்ந்து கலிந்திடுமால்
97. அறல் - தண்ணீர். வளி - காற்று. எண் - மனம். நறுநீழல் இயைமனை - நறிய நிழல் பொருந்திய வீடு. மேவியது - வந்தது.
கிலம் அடி சுடும்படி கொதிக்கவும், அங்கிலத்திலுள்ள தண்ணீரும் கொதிக்கவும், அங்கிலத்தினூடே சஞ்சரிக்கும் காற் அறும் கொதிக்கவும், அதன் வெம்மையை நினைப்பவர் மனமும் கொதிக்கவும், ஈறிய கிழலோடு கூடிய வீட்டி விருந்து வெளியே செல்லாதவர்களுக்கும் கண், கை, கால் முதலியவெல்லாம் கொதிக்கவும், கற்பகவிருட்சம் பொருந்திய வானுலகமும் கொதிக்கவும் அந்த வெம்மையாகிய வேனிற்பருவம் வந்தது.
98. தெள்ளு புனல் - தெளிந்த தண்ணீர். கசை. விருப்பம். புனல் நசை = நீர்வேட்கை, மிக்கு - மிகுதலால், அளவின்றி விஞ்சுதலால், இரலை.
 
 

81 வள்ளலென வெளிக்காட்டி வஞ்சிக்கும் உலோபர்கள்பின்
எள்ளுவறுமைப்பிணியோர் தொடர்ந்துதொடர்ந்
..., - திளைப்பதுபோல், 2
பறவைகளெல்லாம் விட்டு " நீங்கினமை
99. காலோட்ை வாவிகுளம் முதலாய கணக்கிலவன். 岔*
மேலோடும் புனல்வறப்ப அவற்றுறைமேன் பறவைகள்கற்.
மான். திரிமருப்பின் இரலை - திருகிவிட்டதுபோன்று வளைந்த கொம்புகளை யுடைய மான்கள். நள்ளரிய - நணுகுதற்கரிய, பேய்த்தேர் - கானல் நீர். நலிந்திடும் - வருந்தும், மெலியும், வள்ளல் - வரையாது கொடுப்பவர். எள்ளு வறுமை-இகழ்தற்குறிய தரித்திரம். தொடர்ந்து-பின் சென்று. தொடர்ந்து தொடர்ந்து-விடாது பின்தொடர்ந்து; மீண்டகாலக் தொடர்ந்து, இளைத்தல்மேலும் பின்தொடரும் வலிமையின்றிக் களைத்தல். ਜੋ
தெளிந்த நீரைப்பருகும் வேட்கை பெரிதும் விஞ்சுதலாலே, திருகிவிட்டாற்போன்று. வளைந்து செல்லும் ଜଣs in ம்புக்ளையுடைய மான்கூட்டங்களெல்லாம் நெருங்குதற்கரிய கானல் நீரின் பின்னே நெடுந்து ரம் தொடர்ந்து ஒடிப்போய்க் களைப்பு மிகுதியினல் வருந்தும்; எதுபோலவெனின் வெளிப்பார்வைக்கு வசையாது கொடுக்கும் வள்ளல்களைப் போலச் தோன்றிப் பிறரை ஏமாற்றும் உலோபியர் பின்னே, இகழ்தற்குரிய வறுமை என்னும் பிணியால் நலிவுற்றவர். பல காலங் தொடர்ந்து, கடைசியில் உடலும் மனமும் ஒய்ந்து இளைப்பது போல் வருந்தி மெலியும்.
உலோபியர் பேய்த்தேருக்கும், வறியவர் மான் கூட்டத்திற்கும் உவமை. வறியவர் உலோபியரிடம் ஏதேனும் பெறலாமென்றுப்பின்சென்று வருந்துவதுபோன்று, மான்கள் தண்ணீர் பெருது கானல்நீர் தோன்றும் இடத்தை நோக்கி நெடுந்தூரம் ஓடிச் சென்று பெரிதும் துன்புறும் என்க.
99 க்ால் - வாய்க்கர்ல், வாவி-tரிலே, குளம் - தடர்கம். கணக்கில் அவல்,அவல் பிள்ள்ம். அவல்மேல் ஓடும்புனல் பள்ளத்திலே ஒடுகின்ற தண்ணீர், 'வறப்ப அற்றுப்போக, கற்பால்ஆனில் கல்வினையையுட்ைய, கிளை - சுற்றம். ஏலாத்துன்பு - பொறுத்தற்கரிய துன்பம். இரிவதென. விட்டு நீங்குவதுபோல. இரிங்தன . ஓடின." * ...,
11

Page 45
82 - தமிழ் அமுதம் 叠
பாலான ஒருவனிடம் பற்றிஇனி துண்டகிளே a ஏலாத்துன் பவனுறுங்கால் இரிவதென இரிந்தனவால். 3
வாய்க்கால், நீர் நிலை, குளம் முதலிய கணக்கில்லாதன பள்ளத்திலே பாயும் தண்ணீர் முற்றுக வறண்டு போனமையால் அவற்றிலே தங்கிய பறவைக் கூட்டங்களெல்லாம் விட்டு நீங்கின; எங்ங்னமெனில், புண்ணிய பலனையுடைய செல்வன் ஒருவனைப்பற்றி கின்று, இனிதுண்டு அனுபவித்த சுற்றத்தார் பொருந்தாத வறுமைத் துன்பத்தை அவன் அடையுங்கால் அவனைவிட்டுச் செல்வது போல நீங்கின.
நற்பாலான ஒருவ்ன் முதலியவற்றிற்கும், இனிதுண்ட சுற்றம் பட்சிக் கூட்டத்திற்கும் உவமானம். சுற்றத்தார் அச்செல்வனை வறுமை யுற்றபோது விட்டு நீங்குவது போன்று, நீர்வற்றியவுடன் பட்சிகள் அகன்று போகும் என்க. -
3. நீதிப்பகுதி
7. நாலடியார்
சைன முனிவர்கள் இயற்றிய நாலடியார் என்னும் நூலிலி ருந்து எடுக்கப்பட்டன இந்த ஐந்து செய்யுள்கள். (23,38, 80, 213,305) பல திறப்பட்ட திேகளையும் உலகியல் உண்மை களையும் கற்போர் மனதிற் பதியும் வண்ணம் ஏற்ற திருட்டா ந் தங்களோடு கவர்ச்சிகரமான எல்டையில் கூறும் இந்நூல்.
5pഖ|
100. மன்றங் கறங்க மனப்பறை யாயின
அன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப்-பின்றை
100. மன்றம் - சபை இங்கே சபாமண்டபம், கறங்க - ஒலிக்க, மணப்பறை - மங்கல வாத்தியம். ஆங்கே அவ்விடத்திலேய்ே. பின்றை பிற்பொழுதில், உய்ந்துபோம் ஆறு. தப்பிச்செல்லும் வழி; அதாவது துறவு மார்க்கம், வலிக்கும் . துணியும், வையமும் வானமும் வழங்க வலித்தான்." (73) என்பதை நோக்குக. a

காலடியார் 83.
ஒலித்தலு முண்டாமென்று உய்ந்துபோ மாறே வலிக்குமாம் மாண்டார் மனம். 1.
தக்கார்க்குதவிய தானம்
101. உறக்குக் துணையதோர் ஆலம்வித் தீண்டி
இறப்ப நிழற்பயந் தாஅங்கு-அறப்பயனும் தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால் வான்சிறிதாப் போர்த்து விடும். 2
மண மண்டபம் முழுதும் ஒலி கொள்ளும்படி மங்கல வாத்தியங்களாக அமைந்தவைகளே அம் மணமக்களுக்கு அவ் விடத்திலேயே பிற்பகலில் சாப்பறையாக மாறி ஒலித்தல் உண்டாகக்கூடும் என்று நிலையாமையை எண்ணித் துன்பங்களி னின்றும் தப்பிப் போதற்குறிய வழியாகிய துறவொழுக்கத்தை மேற்கொள்ளத் துணிந்து கிற்கும், மாட்சிமைப் பட்ட அறிவு டையவர் நெஞ்சம்.
மாண்டார் மனம் - எழுவாய். வலிக்கும் - பயனிலை. ஆம் - அசை, இந்நூல் 23-ஆஞ் செய்யுளை கோக்குக.
101. உறக்குங் துணையது - மிகச் சுருங்கிய அளவினது; நகத்தினற் கிள்ளி எடுக்கக்கூடிய அவ்வளவு நுண்ணிய அளவுள்ளது. ஆலம் வித்து என்பதில் அம் சாரியை. ஈண்டி - வளர்ந்து, இறப்ப - மிகுதியாக, பயங் தாங்கு = தருதல் போல. - பயந்தாஅங்கு - உயிரளபெடை, அறப்பயனும் என்பதிலுள்ள உம்மை அசை. பட்டக்கால் - சேர்ந்தால், போர்த்துவிடும்.
விடும். முடிவிடு
மிகச் சிறியதாகிய ஆலம் விதை முளைத்து வளர்ந்து எல்லை யின்றிப் பாவிய கிழலைத் தருதல் போல, தானஞ்செய்தலாகிய அறத்தின் பயனும், செய்யப்படும் தானம் தன்னளவில் சிறியதே யாயினும் ஞான ஒழுக்கங்களால் மேம்பட்ட பெரியோர் கையிற் சேருமாயின் ஆகாயமும் சிறிதென்னும்படி பெரியதாகி மறைத்து விடும்.
இந்நூல் 90-ஆஞ் செய்யுளை நோக்குக. "தெள்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதை தெண்ணிர்க் கயத்துட் சிறுமீன் சினையினும், நுண்ணிதே யாயினும் அண்ணல் யானை, அணிதேர் புரவி ஆட்பெரும் படையொடு, மன்னர்க்கிருக்க நிழலாகும்மே” என்னும் நறுந்தொகைச் செய்யுளையும் கோக்குக. ...)
...

Page 46
84基
செய்யத்தகாதன மூன்று V
fo - . } . ۰٬ ۱٬ ۶ با با . 102/தான்கேடினும் தக்கார்கேடேண்ணற்க தன்னுடம்பின்
ஊன்கேடினும் உண்ணுர்கை
வையக மெல்லாம் பேறினு
போய்யோ டிடைமிடைந்த ச்ே
" . . நட்புக்குரியவர்
/ 108. யானை அனையவர் கண்போரீஇ நாயனயார்
கேண்மை கேழிஇக் கோளல்வேண்டும்-யானை
鷺墓
102. கெடினும் - அழியினும், எண்ணற்க " மனத்தால் நினையா தொழிக. ஊன் சு தசை. உண்ணுர்கைத்து-உண்ணத் தகாதவர் கையினுல், உண்ணத்தகாதவராவார் அன்பு, ஆசாரம் இல்லாதவர் முதலியோர். உண்ணற்க. உண்ணுதலைச் செய்யாதொழிக, வான் கவிந்த - ஆகாயத்தினற் க்வியப்பட்ட, வையகம் - பொருள் வைக்கப்படும் இடம். உரையற்க . வாயினற் சொல்லுதலையுந் தவிர்க, இடைமிடைந்த - இடையிலே கலந்த,
६; ',''-१ தான் அழியும்படி நேரிட்டாலும் மேலோர்க்குத் தீமை வருதலை கினையாதொழிக; பசியினல் உடல் மெலிந்து தசை கரைந்து வருந்த நேரிடினும் உண்ணத்தகாதவர்" கையினல் உண்ணுதலைத்தவிர்க; ஆகாயத்தினல் மூடப்பட்ட அகில உல கினையும் பரிசாகப் பெமவதாயிருப்பினும், எச்சிறிய அளவிலா யினும் பொய்யோடு கலந்த சொற்களைப் பேசுதலைத் தவிர்க.
"அறிவுடையவர் மனமொழி மெய்களாற் . புரியத்தகாதனவற்றை இச்செய்யுள் மிகச்சீரிய முறையில் வகுத்துக் கூறுகின்றது.
103. நண்பு ஒரீஇ. ஒருவி என்பது ஒரீஇ என விகாரப்பட்டது; ஒரீஇ - நீக்கி, கேண்மை. கேளாம் தன்மை; நட்பு, கேள். சுற்றம். கெழீஇ - கெழுமி என்பதன் விகாரம். கெழீஇக்கொளல் - தழுவிக்கொளல். வேண்டும் - நிச்சயம் செய்யத்தக்கது என்னும் பொருள் குறித்த வினைச் சொல்; இது தேற்றவினை எனப்படும். அறிந்தறிந்தும் - பலகாலம் நன்ருக அறிந்துவைத்தும். மெய்யதா' - மெய்யதாக, மெய் - உடல். :
யானே போன்றவாகிய பிழை பொறுக்க மாட்டாத இயல் பினர் நட்பைவிட்டு, செய்த நன்றியை மறவாத இயல்புள்ள நாய்
போன்றவர்களது கட்பினைத் தழுவிக் கொள்ளுதலே தகுதி;
 
 
 
 
 
 

அறிந்தறிந்தும் பாகனே
மெய்யதா வால்குழைக்கு 4.
, , **
104/கரவாத திண்ணன்பிற் கண்ணன்னர் கண்
இரவாது வாழ்வதாம் வாழ்க்கை-இரவினை د : أ. كلا ان உள்ளுங்கால் உள்ளம் உருகுமால் என்கோலோ
கொள்ளுங்காற் கொள்வார் குறிப்பு. ਹੈ
ஏனெனில் யானை மீண்டகாலம் பழகி மிக தன்முக அறிந்து வைத்தும் தன்னைப் பேணி வளர்த்த பாகனையே ஒரு பிழை காரணமாகக் கொன்று விடும்; ஆனல் காயானது தன்னை வளர்த் தவன் வேற்படையைத் தன்னுடம்பிலே பாய்ச்சி, அந்த வேதனையோடு வருந்தும் நிலையிலும் அவன் முன்பு செய்த நன்றியை நினைந்து அன்புடன் வ்ாலை ஆட்டும். ཀ་)
நட்பிற் பிழை பொறுப்பவரையே நண்பராகத் தழுவிக்கொள்ளல் வேண்டும் என்பது கருத்து, யானை சிறியோர்க்கும் நாய் பெரியோர்க்கும்
உவமானம். - -
a yes . . . . . .'' *下。
104. கரவாத - ஒளிக்காத, திண் அன்பு திண்மையாகிய அன்பு: உறுதியான அன்பு. கண் அன்னூர் - கண்போன்று இனிய நண்பர். குறிப்பு - மனக்கருத்து. * '?', '
མན་༽
o :
கையிலுள்ள பொ ருள் எவ்வளவு அரியதாயினும் அதனை மறைக்காமல் முழுமனத்துடன் ஈயும் உறுதியான அன்பினை யுடைய, கண்போன்று இனிய ஆருயிர் நண்பரிடத்தும் இரவாமல் வாழ்வதே நல்வாழ்க்கையாம்; ஒருவர் யாசித்தலை நினைக்கும் பொழுதே உள்ளம் கீழ்மேலாக உருகுகின்றது; அப்படியானுல் இாந்து ஒன்றைக் கொள்பவர் மனம் அளவில் லாத வேதனைப்படுமன்ருே? 鬣 嵩蠍。 . 't
V, 'கரவாத திண்ணன்பிற் கண்ணன்னர் கண்ணும் இரவாது வாழ்வதாம்
ாழ்க்கை'; 'இரவுள்ள உள்ள முருகும் கரவுள்ள,உள்ளதூஉ மின்றிக்கெடும்என்னும் குறட்பாக்களையும் கோக்குக. - . '፡ 'ጁ..

Page 47
8. திருக்குறள் இங்கே காணப்படும். பத்துப் பாக்களும் ஆசிரியர் திருவள்ளுவ நாயனர் அருளிய திருக்குறளினின்றும் எடுக்கப்
பட்டவை.(55, 105, 110, 129, 1062,166, 222, 231, 233, 240) "
بر/ ' கற்புடைய பெண்ணின் பெருமை
105. தேய்வங் தொழாஅள் கொழுநற் றெழுதெழுவாள்
பெய்யெனப் பேய்யும் மழை. 1. K உதவியின் உயர்ச்சி 106. உதவி வரைத்தன் றுதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து. 2 ' } ) நன்றி மறத்தலின் கேடு 107. எங்கன்றி கோன்ருர்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செழ்க்கன்றி கொன்ற மகற்கு. : 8
105. தொழாள் - தொழாளாகி. தொழாஅள் - உயிரளபெடை, கொழுநன் தொழுது எழுவாள். கொழுகன் . கணவனை.
பிறதெய்வங் தொழாது தன் தெய்வமாகிய கணவனையே நாள்தோறும் வணங்கி எழுபவள் (இவ்வுலகில் மழை வறங்கூர்ந்த காலத்துப்) பெய்வாயாக" என்று சொன்ன
அளவிலேயே பெய்யும் மழை.
106. உதவி உதவி வரைத்தன்று என்று கூட்டுக. உதவி - 1. கைம்மாருன உதவி; பிரதியுபகாரம், 2. உதவி பின் பயக்கும் பெரும்பயன். *அறப்பயன்'. (101) உதவிசெயப்பட்டார் - உதவியைச் செய்வித்துக் கொண்டவர். சால்பு - நிறைவு; தகுதி குணம் முதலியவற்றின் அமைதி:
உதவியின் பயன் அன்றி அதன் பெருமை உதவிய பொருளின் வரம்பினையுடையதன்று; அதனைப் பெற்றவருடைய தகுதியின் அளவினையுடையது.
சால்பு எவ்வளவு பெரியது உதவியின் உயர்ச்சியும் அவ்வளவு பெரியது. (90)
 
 

திருக்குறள் 87. மொழியடக்கம்
108. தீயினுற் சுட்டபுண் உள்ளாறும் ஆறதே
நாவினற் சுட்ட வடு. 4.
இரத்தலின் இன்னமை 109. இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து
கேடுக உலகியற்றி யான். 5
107. நன்று . அறம். கொல்லுதல்- சிதைத்தல், உய்வு .பாவத்தின் நீங்கும் வாயில்; நரகத்திற்குத் தப்பிப் பிழைத்தல்.
எத்தகைய பெரிய அறங்களைச் சிதைத்தவருக்கும் அப்பாவங்களினின்றும் நீங்கும் வாயில் உண்டாம். ஆனல் ஒருவர் செய்த உதவியை மறந்த மகனுக்குக் கொடிய காகத்தினின்றும் தப்புதல் இல்லை.
108. புண் - இரணம். வடு - தழும்பு.
ஒருவனைத் தீயினுற் சுட்டபுண் உடம்பிலே காணப்படினும் மனத்தின் கண் அப்பொழுதே ஆறும்; அவ்வாறின்றிக் கொடுஞ்சொல்லையுடைய காவினலே சுட்ட தழும்பு அம்மனத் தின் கண்ணே ஒருபொழுதும் மாறது.
ஆறிப்போதலால் தீயினற் சுட்டதனைப் புண் என்றும் ஆருது கிடத்தலால் நாவினற் சுட்டதனை வடுவென்றுங் கூறினர். தீயும் கடுஞ் சொல்லும் சுடுதலாகிய தொழிலால் ஒக்குமாயினும் ஆருமையால் தீயினும் கடுஞ்சொல் கொடிது என்க.
109. வேண்டின் க வேண்டி விதித்தானுயின், பரந்து - அலமந்து: சுழன்று. உலகியற்றியான் - உலகினைப் படைத்தவன்; பிரமன்.
இவ்வுலகினைப் படைத்தவன் இதன் கண் வாழ்வார் முயன்று உயிர் வாழ்தலையன்றி இரந்தாவது உயிர் வாழ்தலை விரும்பி ஏற்படுத்தினன் என்ருல் அக்கொடியோன் தானும் அவரைப் போன்று எங்குந்திரிந்து கெடுவானுக.
'Y', இரத்தலேக் காட்டிலும் இறத்தலே. அமையும்'. ‘மாயாது ஏறிய.ை கொடு இரந்தவர்,.வீய்ர்தவரென்பவர் (84) என்பதை நோக்குக.

Page 48
88
11 O.
111. நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம் ,
இல்லேனினும் ஈதலே கன்று: ': 'z
புகழ் (112-14) 112. ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது * ஊதிய மில்லை உயிர்க்கு
110. அழுக்கறுப்பான் -அழுக்காற்றைச் செய்பவன். சுற்றம் பந்து வர்க்கம்; சுப அசுப காரியங்களில் ஒருவனைச் சுற்றி நிற்பது.
ஒருவன் பிறர்க்குக் கொடுப்பதைப் பொறுமையினலே விலக்குபவனது சுற்றம் உடுக்கப்படுவதும் உண்ணப்படுவதும் இல்லாமல் அழிந்துவிடும்.
சுற்றம்கெடும் எனவே அவன்கேடு சொல்லாமலே பெறப்பட்டது. பிறர் பொருமை த.ண்பேற்றையே யன்றிச் சுற்றத்தின் பேற்றையும் இழப் பிக்கும். (87) , "'"
11. நல்லாறு'எனினும் - வீட்டுலகினை அட்ைவிக்கும் நல்லநெறி என்று கூறுவார் உளராயினும், ". . . C.
யாசித்தல் வீட்டுலகிற்கு நல்ல நெறி என்று சிலர் கூறினலும் அது தீது; மேலுலகம் இல்லை யென்முலும் ஈதலே
い、 ικό s: , வேறு உரை :- இவர் கையால் ஏற்றல் புண்ணியம் உண்டு என்று சொன்னலும் ஏற்பது பொல்லாது; இவர் கையிலே கொடுத்தால் பாதகம்
என்று சொன்னலும் கொடுத்தலே நல்லது (பரிதி). '
?/ இன்னுயிரேனும் கொள்ளுதல் தீது கொடுப்பது கன்ருல்" (88).
بہمنی
A.
112, ஈதல். ஈதலைச்செய்க; வியங்கோள். வாழ்தல் a வாழ்க:
t
வறியவர்களுக்கு ஈக அதஞல் புகழுண்டாக வாழ்க,
அப்புகழல்லது மக்களுக்கு வேறு பயன் இல்லை.
புகழோடு வாழ்வதற்குக் கல்வி, ஆண்மை முதலிய பிற காரணங்கள்
உளவேனும் ஈதலே சிறந்தது என்று கொள்க.
வேறு உரை :- "புகழ்பட வாழ்தலாவது கொடுத்தல்; அக்கொடையான் அல்லது உயிர்க்கு வேறு இலாபம் இல்லை. (மணக்குடவர்.)''
 
 
 
 
 
 
 
 
 

- குசிேலோபாக்கியானம் 89. 113. ஒன்ரு உல்கத் துயர்ந்த புகழல்லாற்
போன்றது நிற்பதோன்றில், 9 114. வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையோழிய
வாழ்வாரே வாழாதவர். 1 Ο
; ' "...Y.,' ' '
113. ஒன்றுஆ. ஒப்பற்றதாக, பொன்ருது = அழியாது.
' O - ص : " هم "كين" . كم مرات. தனக்கு வேறு துணையில்லையாம்படி ஒங்கிய புகழையல்லது உலகத்து இறவாது நிற்பதொன்றில்லை.
ஒன்ருக நிற்றலாவது தன்னேடு ஒப்பதின்றித் தானே உயர்தல், அத்தகைய புகழே தேடற்பாலது என்பது கருத்து.
114, வசை-அபகீர்த்தி; ஏற்றவர்க்கு ஈயாத பெரும் பாவியர் என்னும் வசை ஈதலைச் செய்து புகழ் பெருமை. இசை - புகழ்.
தம்மாட்டு இகழ்ச்சிச் சொல் இல்லாமல் வாழ்பவரே உண்மையில் உயிர் வாழ்பவர்; புகழுண்டாகாமல் வாழ்பவரே இறந்தவராவார்.
புகழ் இல்லாதவர் பிணத்தோடொப்பார் என்பது கருத்து ஈய்ந்தவ ரன்றி இருந்தவர் யாரே. ’ (84) /エ
9. குசேலோபாக்கியானம்
நல்லார் நட்பு
s
*、 | KK. - இதிற்காணப்படும் மூன்று செய்யுள்களும் குசேலோ பாக்கியானத்தினின்மம் எடுக்கப்பட்டன. (குசேலர் நகர்ப்புற மடைந்த அத்தியாயம் 222, 223, 225.) சந்தர்ப்பம்
குசேல முனிவன் துவாாகையை அடைந்து கண்ண பிரானைக் கண்டபொழுது அப்பிரான் அவனை வரவேற்று, முகமன் கூறித் தான் அவனைக்காணுதலால் அடைந்த உவகையை வெளியிட்டான். அந்நிலையில் தான் அவனது நட்பினை மறக்கவில்லை என்பதைக் கூறிய அளவோடு கில்லாது, அம்முனி வனைப் போன்ற கற்றுணர்ந்த தவத்திலே மேற்பட்ட நல்லார் கட்பின் அருமை பெருமையை யெல்லாம் பலபடி பாராட்டிப்
12

Page 49
பேசலுற்றன். அப்படி, அப்பிரான் கூறியவற்றினின்றும் எடுக்கப்பட்டவை இச்செய்யுள்கள். \ ,
சிறப்பியல்பு ܕ:ܼܢܠ ܐܬܐ, ܪ ؟
மீதி நூல்கள் அறம் பொருள் இன்பம் வீடு பற்றிய உண் மைகளை இலக்கண முறையில் வடித்துக் கூறும். காவியங்களில் அத்தகைய உண்மைகள் கதைப் போக்கில் அமைத்துக் கூறப் பெறும். இவை கதாபாத்திரங்களின் கூற்முகவேனும் ஆசிரியர் கூற்றகவேனும் இருக்கலாம். எங்ஙனமாயினும் இவ்வாறு சந்தர்ப் பத்தோடு ஒட்டி வரும், நீதிநெறி உலகியல் வாழ்க்கை பற்றிய உண்மைகள் கவிஞரின் அனுபவத்துடன் கலந்து "நிற்றலாற் பெரிதும் பயன்படும். பெருமை வா ய்ந்த நண்பர் இருவர் நீண்ட் காலம் பிரிந்து கூடும் பொ முது, அரசனுகவுள்ள ஒருவன் ஞான முனிவனுகவுள்ள ஒருவனுக்குக் கூறுவதாக உள்ள இச்சொற்கள் ஒரு தனிப்பட்ட சிறப்பு வாய்ந்த ஆற்றலும் வேகமுங் கொண்டு விளங்குவன. ' ' ' . :) | | | " )
நல்லார் நட்புறல் நன்று  ே
115. நல்ல்ார்சொல் விரும்புவதும் நல்லாரைக் காண்பதுவும்,
கல்லார்க்கோன் றுதவுவதும் கல்லாரைப் புகழ்வதும் கல்லார்கன் றென்றுரைப்ப நவிற்றியவிவ் வேலாமடங்க கல்லார்கட் பென்றுமுறல்" ந்ன்றன்ருே நான்மறையோய்.
115. உரைப்ப - நட்புறல் என்பதனேடு முடியும். நவிற்றிய - சொல்லிய, இவ்வெலாம் . இவையெல்லாம். '
நல்லோர் கூறும் சொல்லை விரும்புவதும், அவரைக் காண்ட அவும், அவர்க்கு ஒன்றினை உதவுவதும், அவர் குணங்களைப் புகழ்வதும் ஆகிய இவையெல்லாம் அடங்க, அவர் பாராட்டுக் குரிய முறையில் அங்கல்லார் நட்பினை என்றும் பெற்றுகிற்றல் நல்லதல்லவா, நான்கு வேதங்களில் வல்லவனே! ༽ ༽ நான் மறையோய் - குசேலமுனிவனைக் கண்ணபிரான் விளித்தமை. “கல்லாரைக்காண்பதுவும் நன்றே நலமிக்க், நல்லார்சொற் கேட்பதுவும் கன்றே நல்லார், குணங்க ளுரைப்பதுவும் நன்றே அவரோடு, இணங்கி இருப் பதுவும் நன்று' என்னும் ஒளவையார், வாக்கினை ஆதாரமாகக் கொண்டது TTiSTTTTTtS S SAAAAAA A S SA SSASASA S S SAASASS SS SkS S AS
. "فضيحة "
... ." *

"...': 'بور .........'
குசேலோபாக்கியானம் 91 தவசிகள் நட்பே பெரிய செல்வம் 116. போன்னுள்ளான் பூமியுள்ளான் புந்தியுள்ளானுயிடினும்
என்னுள்ளா னவனவன் இருந்தவர்தம் நட்பிலனேல் போன்னில்லான் பூமியில்லான் புந்தியில்லா னுயிடினும் ( ) என்னில்லா னவனவன் இருந்தவர்தம் நட்புளன்ேல் 2
கற்றுணர்ந்தவர் நட்பு நல்வழிப்படுத்தும், . 117. சம்யம்வரின் இடித்துரைப்பர் தக்கவழி சேலச்செய்வார்.
இமயவர்தம் உலகுறவும் இருளுலகம் பகையுமாய் அமையஅறிவுறுத்துவர் அந்தோநூல் கற்றுணர்ந்த கமையுடையார் நட்பேவர்க்குக் காண்கிடைக்கும்
' ' ' ' ' ' அரிதரிது. 3
穆
116. புந்தி - அறிவு. இரும் தவர் - பெரிய தவசிகள். என்னுள்ளான் ஆவன் அவன் - அவன் என்னுள்ளானவன். அவன் என் இல்லானவன்.
ஒருவன் பெர்ன், பூமி, அறிவு முதலியவற்றையுடையவன யினும் பெரிய தவமுனிவர் நட்பு இல்லாதவனுயின் அவற்றைப் பெற்றிருந்தும் ஒன்றையும் பெருதவனேயாவான். அம் மூன்றும் இல்லாதவனேயாயினும் அத்தவ முனிவர் நட்பு ஒன்றைமட்டும் பெற்றுள்ளாணுயின் அவன் ஒரு குறையுமில்லாதவனுவான்.
117. இமையவர் - தேவர்கள். உலகுறவும் அறிவுறுத்துவர். அறிவுறுத்துவர் - உபதேசிப்பர். இம்மை இன்பமேயன்றி மறுமை இன்பமும் அடையும்படி உபதேசிப்பர். இருளுலகம் - நரகம். நரகஞ் சேராதவாறு உபதேசிப்பர். அமைய - கன்முக, கமை - பொறுமை காண் - அசை, நட்பு எவர்க்குக் கிடைக்கும்; அரிது அரிது.
சமயம் வரும் பொழுது நல்வழிப்படுத்தும் பொருட்டு இடித்துரைப்பர், உரைத்துச் சரியான நெறியிலே செல்லும்படி செய்வர். நாகம் பகையாம்படி சுவர்க்கத்தினை அடைதற்கேற்ற உபாயத்தை ன்ே முறையிலே உபதேசிப்பர். என்ன ஆச்சரியம்! இப்படியெல்லாம் செய்யவல்ல கற்றுணர்ந்த பொறுமை மிக்க பெரியோர் நட்பு எவர்க்குக் கிடைக்கும்? கிடைப்பது மிகவும் அரிது. 。 。絮
سمہ ہۂ

Page 50
92
தொடர் நிலையாக உள்ள நூல்க சந்தர்ப்பங்களிற் பாடிய செய்யுள்க்2 காலத்துக்குக் காலம் வெளியிட்டனர்.
ல்லாம் தொகுத்து அவற்றை யெல்லாம் தனிப்பாடற் றிாட்டு', 'தனிச் செய்யுட் சிந்தாமணி” முதலிய நூல்களிற் காணலாம். அவற்றுள் ஒளவையார், பட்டினத்தடி கள், சத்திமுத்தப் புலவர்.இவர்களது பாடல்களிற் சில இங்கு தரப்பெற்றுள்ளன.
இத்தனிப்பாடல்கள் பல் வேறு சந்தர்ப்பங்களிற் பாடப் பட்டன; பல திறப்பட்ட சுவை கிரம்பியவை; பாடிய புலவர் களது அனுபவமே சொல்லர்க உருக்கொண்டு வெளிவந்தன. கூறும் பொருள் படித்த மாத்திரத்திலேயே பசுமாத்தாணி போல் மனதில் நன்கு பதியும்படி அமைந்த இப்பாடல்கள் தோன்று தற்கு ஆதாரமாயிருந்த சந்தர்ப்பம் முதலிய நிலைமை களையும் உய்த்துணரும்படி உள்ளன; ஆதலால் யாவர் மனத்தை யும் கவர்ந்து இன்பம் பயப்பன.
ஒளவையார் சோமன் என்னும் பிரபுவின்மேற் பாடியது . 118. நிழலருமை வெய்யிலிலே நின்றறிமின் ஈசன்
கழலருமை வெவ்வினையிற் காண்மின் - பழகுதமிழ்ச்
118. கழல் - பாதங்கள். வெவ்வினை = வெம்மையாகிய வினை; தீவினை. பழகு தமிழ் . பண்பட்ட தமிழ். காலிரண்டு - நான்கு, இரண்டு; நாலடியார், திருக்குறள் என்னும் நூல்கள். சோமன் - ஒரு பிரபு, புல்லர் - கீழ் மக்கள்.
நிழலின் அருமையை வெய்யிலிலே சிறிது கின்று அறியுங் கள்; இறைவனது பாதங்களின் அருமையை தீவினை வந்த காலத் தில் அவற்றைத் தஞ்சமாகப் பற்றிகின்று காணுங்கள். பண் பட்ட தமிழ் மொழியின் ஆற்றலின் அருமைப் பாட்டினை 两Tao俘 யார், திருக்குறள் என்னும் இரு நூல்களைக் சுற்றுணருங்
 
 
 

தனிப்பாடல்கள் ,。 93
சொல்லருமை 'காலிரண்டிற் சோமன் கோடையருமை புல்லரிடத்தே அறிமின் போய்,
நான்கு புருஷார்த்தங்கள்
119. ஈதலறம் தீவினேவிட்டீட்டல்பொருள் எஞ்ஞான்றும்
காத லிருவர் கருத்தொருமித் - தாதரவு பட்டதே இன்பம், ப்ரனேநினைந் திம்மூன்றும் விட்டதே:பேரின்ப வீடு. 2
பெரியோர், சிறியோர், கயவர் சிறப்பியல்புகள் 120. சொல்லாம லேபெரியர் சொல்லிச்சேய் வர்சிறியர்
சொல்லியுஞ் செய்யார் கயவரே - கல்ல
கள். அங்ஙனமே சோமன் என்னும் வள்ளலின் கொடைய ருமையைக் கீழ் மக்களிடத்தே சென்று அலைந்து தெரிந்து கொள்ளுங்கள்.
சோமன் கொடையின் மேம்பாட்டில் ஈடுபட்ட நிலையில் ஒளவையார்
சிந்தனையில் ஊற்றெடுத்துப் பெருகிய உணர்ச்சி இச் செய்யுளில்வெளிப்பட்டு
விள்ங்கும்.
119. ஈட்டல் - தேடுதல்; சம்பாதித்தல். ஆதரவு - அன்பு, பரன் = மேலோன் இறையவன். -
வறியவர்க்கு இல்லை யென்னது கொடுத்தல் ஒன்றே அறஞ் செய்வதாகும். தீவினையை வீலக்கி கேரிய வழியிலே பொருளைச் சம்பாதித்தலே பொருள் தேடும் நெறியாகும். காதலுடைய கணவனும் மனைவியும் அன்பினுல் மனம் ஒன்றுபட்டு வாழ்வதே இன்பம் எனப்படும். பரம் பொருளாகிய இறைவனை நினைந்து இம்மூன்றினையும் துறப்பதே அழிவில்லாததும் முடிவில்லாதது மான இன்பந்தரும் வீட்டுலகினை அடையும் உபாயமாகும்.
நீதி நூல்களில் விரித்துக் கூறப்பட்ட நான்கு புருஷார்த்தங்களையும் ஒரு சொல்லாலே தெளிவாகக் கூறுவது இச் செய்யுள்.
120: குலா மாலை = அசைகின்ற மாலை,
முன்னதாக வாயினுற் சொல்லாமலே உதவியைச் செய்து நிறைவேற்றுவர் பெரியவர். சிறியவர் சொல்லிவிட்டுப் பின்பு தாம் சொல்லியபடிசெய்து நிறைவேற்றுவர். செய்வதாகச் சொல்லுவர், ஆனல் சொல்லியபடி செய்யார் கயவர்கள்.

Page 51
94
குலாமாலை வேற்கண்ணு
பலாமாவைப் பாதிரியைப் L്. :
121:அரியது கேட்கின் வரிவடிட் வேலோய்
அரிதரிது மானிட ராதல் அரிது மானிட் ராயினும் கூன்குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்த லரிது பேடு நீங்கிப் பிறந்த காலையும் ஞானமுங் கல்வியும் நயத்த லரிது ஞானமுங் கல்வியும் நயந்த காலையும் தானமுந் தவமுந் தான்சேய லரிது தானமுந் தவமுக் தான்செய்வ ராயின் வானவர் நாடு வழிதிறக் திடுமே. 4
靴
அசைகின்ற மாலையை அணிந்த வேல்போன்ற கண்ணை டையவளே, அம்மூன்று த்தின க்கும் ஏற் உவமானங் 3:7 : E.E. முறையே ஒப்பா கக்காண்.
பெரியோர் ஆதியோர் குணங்களை மிகச் சுருக்கமாகவும் அழகாகவும் ஏற்ற அரிய உவமைகளோடு விளக்குவது இச்செய்யுள். பூவாது காய்க்கும் பலா சொல்லாமலே செய்யும் பெரியோருக்கு உவமை, பூத்துப் பழந்தரும் மா முன்னறிவித்தலோடு உதவும் சிறியோருக்கு உவமானம், பூத்தும் பழந்தராத் பாதிரி சொல்லியுஞ் செய்யாத கயவருக்கு உவமானம். '121. வரி வடிவேல். நீண்ட கூர்மையான வேல். பேடு - அலி. கயத்தல் விரும்புதல். வானவர் நாடு - தேவர் உலகம்.
அரியது இன்னதென்று வினவின், மீண்ட கூரிய வேலினையுடையவனே, மிகவும் அரியது மானிடராகப் பிறத்தல். அம்மானிடப்பிறவி கிடைத்தாலும் கூன், குருடு, செவிடு, பேடு முதலிய குறையின் றிப்பிறத்தல் அதனினும் அரிது. அப்படிப் பேடு முதலிய குறையின்றிப் பிறந்த ப்ொழுதும் 'நல்ல அறிவையும் கல்வியையும் விரும்புதல் அரிது. அப்படி அவற்றை விரும்பிய விடத்தும் தானமுந் தவமுஞ் செய்தல் அரிது. அப்படித் தானமுக் தவமுஞ் செய்வதாயின் அவர்க்கு வானுலகம்
வழிதிறந்திருக்கும். ?
 
 
 
 
 
 

r. தனிப்பாடல்கள் 95
".
- பட்டினத்துப் பிள்ளையார். " உணவின் பொருட்டு இடம்விட்டுப் பெயரேன் எனல்
122. இருக்குமிடங் தேடி என்பசிக்கே அன்னம்
உருக்கமுடன் கொண்டுவந்தால் உண்பேன் பேருக்க அழைத்தாலும் போகேன் அரனேனன் தேகம் இளைத்தாலும் போகேன் இனி, . 5
பசிக்கொடுமை 123. அத்தி முதலேறும்பீ றனஉயிர் அத்தனைக்கும். " ***"
சித்த மகிழ்ந்தளிக்குங் தேசிகா - மேத்தப் பசிக்குதையா பாவியேன் பாழ்வயிற்றைப் பற்றி இசிக்குதையா காரோண ரே. 6 உயிர் நீங்குமுன் இறைவன் பெயர் கூறுக எனல் - க் 124. காலன் வருமுன்னே கண்பஞ் சடைமுன்னே ምን பாலுண் கடைவாய் படுமுன்னே - மேல்விழுந்தே
V, Mars y / 妖 - - بر − " ̧ ኔ 122. அன்னம்-சோறு. பெருக்க - மிக வருந்தி. இளைத்தல். மெலிதல்,
SSSS -
யான் இருக்குமிடந்தேடிக் கண்டுபிடித்து என் பசியைப் போக்குதற்குச் சோற்றை மனஉருக்கத்துடன் கொண்டு வந்தால் உண்ணுவேன். அப்படிச் செய்யாது மிக வருந்திக் கூப்பிட்டாலும் இடம்விட்டுப் பெயரேன். சிவபெருமானே, என் தேகம் எலும்புங் தோலுமாய் மெலிந்தாலும், போக, மாட்டேன். இனி ஒருபொழுதும் போகேன்; இது நிச்சயம்.
, | - -
123, அத்தி . Lurðar. தேசிகன் - ஆசாரியன்; பெரியவன். இசித்தல் சி இழுத்தல். பாழ்வயிறு - பாழான வயிறு காலியான வயிறு.
1. யுானைமுதல் எறும்பு ஈமுகவுள்ள எல்லா உயிர்களுக்கும் மனமுவந்து உணவளிக்கும் பெரியோனே, மிகவும் ப்சிக்கின்றது ஐயனே, பாழான என் வயிற்றைப்பற்றி இழுக்கின்றது, ஐயா, திருக்காாேரணத்திலுள்ள பெருமானே! ့် သဲ 124 காலன் . யமன். கண்பஞ்சடைதல் கண் பார்வை கெட்ல் உண்பால் (கட்ைவாய்படுதல் உண்ட பால் கடிைவாயினூடே வழிந்து
போதில். : " ." ', 'కి
بهبها

Page 52
96
தமிழ் அமுதம்
உற்ற ரழுமுன்னே ஊரார் சுடுமுன்னே குற்ருலத் தானேயே கூறு.
ஒருவருக்குந் தீங்கு நினையாமை
125. இருப்பதுபோய் போவதுமேய் என்றேண்ணி நேஞ்சே
ஒருத்தருக்குத் தீங்கினையுன் னதே - பருத்ததோந்தி நம்மதென்று நாமிருக்க காய்நரிகள் பேய்கழுகு தம்மதென்று தாமிருக்குக் தான்.
சத்திமுத்தப் புலவர் பாண்டியன் ஒருங்ாள் இரவு நகர் சோதனை செய்யும் பொருட்டு மதுரை நகரைச் சுற்றிவரும்பொழுது ஒரு பாழடைந்த 'சத்திரத்திற் படுத்திருந்த புலவர் தமது கஷ்டத்தைக்குறித்துப் பாடியது நாரைவிடு தூது 126. நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
யமன் வருவதற்கு முன்னதாக, மரண் சமயத்தில் கண் பார்வை ேெட்டுப்போவதற்கு முன்னதாக, உறவினர் ஊட்டும் பால் உள்ளே செல்லாது வழிந்தோடும் கிலை வருவதற்கு முன்னதாக, உற்ருர் மேலே விழுந்து அழுவதற்கு முன்னதாக, ஊரார் தகனஞ் செய்யுமுன்னதாகத் திருக்குற்றுலத்திலுள்ள இறைவன் பெயரை ஒருகால் வாயினுற் கூறுவாய்.
மரணசமய நிகழ்ச்சிகள் நிகழும் வரிசையிற் கூறப்பட்ட அழகு ஆராயத் தக்கது. உடலைவிட்டு உயிர் பிரியுமுன் இறைவன் பெயரைக் கூறல் வேண்டும் என்பது கருத்து. ",
125. போவது - இறப்பது. தொந்தி = வயிறு: இங்கு ஆகு பெயராக உடலினக்குறித்தது.
*உலகிலே கிலையாக வாழ்தல் என்பது நடைபெறுவதன்று; இறந்து போவது என்பது கிச்சயம்” என்றெண்ணி, மனமே, ஒருவருக்கும் தீமையை மனத்தாலும் கினையாதே. பருமையான உடல் நம்முடையதென்று நாம் எண்ணிக் களிப்போடு இருக் கின்முேம்; அப்படி இருக்க நாய், நரிகள், பேய், கழுகு ஆதியன தம்முடையது என்று நிச்சய புத்தியுடனிருக்கும்.
126. பழம்படு பனையின் கிழங்கு. பனையின் பழம் படு கிழங்கு. படுதல் - உண்டாதல், பவளவாய்; கூர்வாய். பனங்கிழங்கினைப் பிளந்தாற்
A.
 
 
 
 
 
 
 
 

தனிப்பாடல்கள் ". : 9.
பவளக் கூர்வாய்ச் சேங்கால் நாராய்: நீயும்நின் மனைவியுந் தென்றிசைக் குமரியாடி வடதிசைக் கேகுவீ ராயின் எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி நனேசுவர்க் கூரை கனகுரற் பல்லி பாடுபார்த் திருக்குமேம் மனைவியைக் கண்டே எங்கோன் மாறன் வழுதி கூடலில்
ஆட்ை யின்றி வாடையின் மேலிந்து கையது கொண்டு மேய்யது போத்திக் காலது கொண்டு மேலது தழீஇப் பேழையு ளிருக்கும் பாம்பேன உயிர்க்கும் ஏழை யாளனைக் கண்டனம் எனுமே. 9
鯊 鬣
5.
போன்ற கூரியவாய் பவளம்போற் சிவந்த வாய். வாய் - அலகு, குமரிஆடி - கன்னியா குமரியில் நீராடிவிட்டு, சத்தி முத்த வாவி . சத்தி முத்தம் என்னும் ஊர்நடுவிலுள்ள பொய்கை, சுவர் கன கூரை - மழையினல் சுவர் நனையும் ஐடியான வேயாத கூரை, கனை குரல் பல்லி - உரத்த குரலினேயுடைய பல்லி,
பாடு. ஓசை சொல். மாறன் வழுதி - மாறனுகிய வழுதி. கூட்ல் - மதுரை.
வாடை . வடக்கிலிருந்து வரும் நச்சுக்காற்று. மெலிந்து - தளர்ந்து, மெய் - சரீரம். பொத்தி - மூடி, தழிஇ - தழுவி. பேழை - பெட்டி; வட்டமாகப் பின்னிய மூடியுடன் கூடிய மூங்கிற் பெட்டி, உயிர்க்கும் - பெருமூச்சுவிடும். ஏழையாளன் = வறுமைத்துன்பமுடையவன்.
நாமையே, காரையே, சிவந்த அழகிய கால்களையுடைய
நாரையே, பனையின் பழத்தினின்றும் முளைத்தெழும் நீண்ட
கிழங்கினை இரண்டாகப் பிளங்காற் போன்று கூர்ந்து செல்லும், பவளம் போற் சிவந்த அலகினையுடைய நாரையே, மீயும் கின் மனைவியும் தெற்குத் திசையின் கண்ணே யுள்ள கன்னியா குமரியில் நீராடிவிட்டு, வட கிசை நோக்கிச் செல்லுவீர் களாயின், எங்கள் ஊராகிய சக்திமுத்தக்கிலேயுள்ள தடாகத் திலே தங்கி (இளைப்பாறி), மழையினுல் ஈணைந்த சுவரின் மீதுள்ள வேயாத கூரையிலேயுள்ள, எடுத்த குரலினையுடைய பல்லியின் சொல்லை ஆராய்ந்தபடி (எம் வரவு நோக்கி) இருக் கும் எம் மனைவியைக் கண்டு, எம் அரசன் பாண்டியனது மதுரையின் கண்ணே, ஆடையில்லாமல் வாடைக்காற்றினுல் மெலிவுற்று, கையினல் உடலினைப் பொத்தியபடி கால்களை
13

Page 53
霸 ,心
98. தமிழ் அமுதம்
மடக்கி மேலே தழுவிப் பெட்டியினுள்ளே இருக்கும்
பாம்பினைப் - போன்று சுருட்டி மடக்கிய நிலையிலுள்ள ஏழை யாளனுகிய என்னைக் கண்டோம் என்று சொல்லுங்கள்.
இச்செய்யுளிலுள்ள அரிய உவமானங்களின் பொருட் பொருத்தம் ஆராயத்தக்கது. பனங்கிழங்கு வரவரக் குறுகிச் செல்லும் நர்ரையின் அலகிற்கும், பவளம் அதன் செங்நிறத்திற்கும் உவமானம், ப்ெட்டியுள் சுருட்டிக்கொண்டு இருக்கும் பாம்பு கையது கொண்டு மெய்யது பொத்தி காலது கொண்டு மேலது தழுவிய நிலையிலுள்ள புலவருக்கு உவமானம். அப்பாம்பு இடையிடையே நீண்ட மூச்சுவிடுவதுபோன்று குளிரினல் வருந்திய புலவிரும் அடிக்கடி பெருமூச்சுவிட்டார் என்க."
*கனசுவர்க்கூரை என்றமையால் புலவரது வறுமை மிகுதி விளங்கும். *பல்லி பாடுபார்த்திருக்கும் மனைவி' என்றமையால் வறுமைப்பிணி நீங்கும் பொருட்டு வெளியூர் சென்ற புலவரைக் குறித்து அவர் மனைவி கவலையுற்றமை விளங்கும். எங்கோன் மாறன் வழுதி கூடல்' என்றமையால் பாண்டியனிடம் பரிசில் பெறச்சென்ருர் என்று ஊகிக்கலாம், ஆக இச்செய்யுள் பாடிய புலவரது நிலைமைகளை எல்லாம் அரியதொருமுறையிலே தெரியவைக்கின்றது.
- gy
' 11. தேசீயகீதம்
தமிழ் S S S S S
இப்பாடத்திலுள்ள நான்கு செய்யுள்களும் பாரதியார் பாடல்கள். (தேசீய கீதங்கள் 54.) : ' சிறப்பியல்புகள் முதலியன
தமிழ் மொழியின் அழியாப் பெருமையை நன்குணர்ந்த ஆசிரியர் அம்மொழியினை இழந்து, பாமரராய்ப் பண்பிழந்து வாழும் தமிழ் மக்களை நோக்கி, அம்மொழியைப் பல்லாற்ருனும் பேணி வளர்க்கும்படி அறை கூவியழைக்கின்றர். இப்பாடல் களில் தமிழ் மொழியின் பண்டைப் பெருமை, தேனினும், மேலான இனிமை முதலியன மட்டுமன்றி பிறநாட்டு விஞ்ஞா னம் முதலிய கருத்துக்களையும், பல்வேறு புதிய கருத்துக் களையும் தன்னுள்ளே பேணிவளர்த்து, சாவா மருந்து போன்று) அழியா இன்பப் பெருமை தந்து உலகெங்கும் பரவவல்ல பண்
பினையும் எடுத்து மொழிகின்ருர், ;'; // ;) ')کوڈ( //'
 
 
 
 
 

தேசியகீதம் 99
தமிழ் மொழியின் இனிம்ை 127. யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தேங்குங் காணுேம் பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும்
இகழ்ச்சிசோலப் பான்மை கெட்டு நாமமது தமிழரேனக் கோண்டிங்கு
வாழ்ந்திடுதல் கன்றே சொல்லீர் தேமதுரத் தமிழோசை உலகமேலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும். 1.
蠶
தமிழின் பெருமை
128. யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் ,
வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல் பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை உண்மை வேறும்புகழ்ச்சி இல்லை
。孪
127. பான்மை - குணம். நாமம் - பெயர்.தேமதுரம் . தேன் போலும்
"யாம் அறிந்த மொழிகள் எல்லாவற்றுள்ளும் தமிழ் மொழி போன்று இனிய மொழியை எந்நாட்டிலும் காணமாட்டோம். அத்தகைய தமிழ் வழங்கும் நாட்டிலிருந்தும் அதன் இனிமையை இழந்து எழுத்து வாசனையற்ற பாமரராய், மனித உருவில் நடமாடும் விலங்குகளுக்கு ஒப்பாக, உலகம் முழுவதும் இகழ்ச்சி கூற, தமக்குரிய சீரிய பண்பு அறவே கெட்டுப் பெயரளவில் தமிழர் என்று சொல்லிக் கொண்டு உடல் ஈலம் ஒன்றையே பேணி உயிர் வாழ்ந்திடுதல் நல்லதோ? நீங்களே சொல்லுங்கள். தேன் போலும் இனிமை மிக்க தமிழோசை நம் காட்டில் மட்டு மன்றி உலகம் முழுவதிலும் பரவும்வகை அம் மொழியை வளர்க்க வேண்டும். '
128. இளங்கோ- சேரன் செங்குட்டுவன் தம்பியாகிய இளங்கோவடி கள். இவர் இயற்றிய நூல் சிலப்பதிகாரம். பாமரராய் இருப்பதனல் ஊமையர் 'விலங்குகளாய் இருப்பதனல் அகக்கண் இல்லாக் குருடர்; உலகனைத்தும் இகழ்ச்சி சொல்லவும் அதனைப் பொருட்படுத்தாமையாற் செவிடர், சேமம் = நலம், AuSASkSSTTSKSMSMS SeS SS

Page 54
100
ஊமையரா செவிட களாய்க் குருடர்களாய்
வாழ்கின்ருேம் ஒருசோற் கேளிர்
சேமமுற வேண்டுமெனில் தெருவேல்லாம்
தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்
- தமிழை வளம்படுத்தல் (12 129. பிறகாட்டு நல்லறிஞர் சாத்திரங்
தமிழ்மொழியிற் பேயர்த்தல் இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் மறைவாக நமக்குள்ளே பழங்க ܕܸ
சொல்வதிலோர் மகிமை இல்லை திறமான புலமையேனில் வேளிநாட்டார்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும் 3
நாமறிந்த புலவர் யாவருள்ளும் கம்பரைப் போலவோ திருவள்ளுதரைப் போலவோ இளங்கோவடிகளைப் போலவோ இப்பூவுலகில் எங்கும் பிறந்ததில்லை. இது உண்மை; சொல்லள வில் நிரம்பிப் பொருள் சேமாக வெறும் புகழ்ச்சியன்று. ஊமையசைப் போலவும், செவிடர்களைப் போலவும், குருடர்களைப் போலவும் பயனின்றி அவமே பூமிக்குப் பாரமாக வாழ்கின்ருேம். அப்படி வாழ்கின்றவர்களே, யான் கூறும் இந்த ஒரு சொல்லை மட்டுமாவது காதுகொடுத்துக் கேளுங்கள். நாம் நன்மையடைய வேண்டுமானல் தெருக்களிலெல்லாம் தமிழோசை முழங்கும்படி அம் மொழியைப் பல்லாற்றுனும் வளம் படுத்த வேண்டும்.
129. பழங்கதைகள் - பண்டைப் பெருமை பற்றிய கதைகள். மகிமை = பெருமை. திறமான - மேலான சிறப்பு மிக்க,
பிற நாட்டு விஞ்ஞானம் முதலிய சாத்திரங்களைத் தமிழிலே மொழிபெயர்த்தல் வேண்டும்; அழியாப் புகழைத்தரும் புது நூல்களை இயற்றல் வேண்டும். இப்படியெல்லாஞ் செய்வதை விட்டு இரகசியமாக நமக்குள்ளே கம் பண்டைப் பெருமைகளைப் பேசித் திருப்திப் படுவதில் ஒரு பெருமை இல்லை. ஆற்றல் வாய்ந்த புலமையெனில் வெளி நாட்டார் அதனை மதித்து வணக்கஞ் செய்தல் வேண்டும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

101
வாக்கினிலே ஒளியுண் டாகும் வெள்ளத்தின் பேருக்கைப்போற் கலைப்பேருக்கும் ' கவிப்பேருக்கும் மேவு ԼՈmuԳ6ծr பள்ளத்தில் வீழ்ந்திருக்குங் குருடரெல்லாம்.
விழிப்ெற்றுப் பதவி கோள்வர் தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார். 4.
180, உண்மை ஒளி . உண்மையாகிய ஒளி ஞான ஒளி. வாக்கில் ஒளிவாக்கில் அழகு; சிறப்பு. பள்ளம். கீழ்நிலை. தெள்ளுற்ற - தெளிந்த கசடு என்பதில்லாத. தமிழ் அமுது: தமிழாகிய அமுது. அமரர் சிறப்புக் கண்டார் - அமரர் பெறும் மேலான இன்பச் சிறப்பினைப் பெற்றவராவர்.
獸 அகத்தின் கண்ணே உண்மையான அறிவொளி உண்டா யின் அது வாக்கினிலும் வெளிப்பட்டு அழகுடன் விளங்கு மன்ருே? வெள்ளப் பெருக்கைப் போலக் கலைப்பெருக்கும் கவிப் பெருக்கும் வந்து பொருந்துமாயின் பள்ளத்திலே வீழ்ந்தி ருக்கும் குருடரெல்லாம் கண்பார்வை பெற்றுத் தமக்குரிய பதவிகளைக் கைக்கொள்வர். தெளிந்த அமுதம் போன்ற தமிழின் சுவையை அனுபவித்தவர் இவ்வுலகின் கண் உள்ள வரா யினும் தேவர்கள் பெறும் மேலான இன்பச் சிறப்பினைப் பெற்ற
வரே யாவர்.
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடர் - மானிடராய்ப் பிறந்தும் பாமரராய்
விலங்கு நிலைக்கு வீழ்ச்சியுற்ற அறிவில்லாதவர். பதவி கொள்வர் - உலகனைத் தும் இகழ்ச்சி சொலக் கேட்டு வாளா இருந்தவர் தமக்குரிய பான்மை பெற்று வெளிநாட்டார் வணக்கஞ்செய்யும் பதவி கொள்வர். அமரர் சிறப்புக் கண்டார் - கடலமுதுண்ட தேவர்களைப் போன்று தெவிட்டாத தமிழமுதுண்டு மேலான இன்பச் சிறப்பினைப் பெற்றவராவர். கண்டார் - கான்வழுவமைதி; தேற்றப் பொருள்; நிச்சயம் காண்பார். இங்கு - இவ்வுலகிலேயே,

Page 55
102 தமிழ் அமுதம்
്. 12. பக்திப் பாடல்கள்
திருவாசகம் இறையவன்மாட்டு இடையரு அன்பு வேண்டுதல் 131. நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து நான்கடுவே
வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன் ஆடகச்சீர் மணிக்குன்றே இடையற அன்புனக்கேன் ஊடகத்தே நின்றுருகத் தந்தருள் என்உடையானே. 1
அன்பொழிய வேறு ஒன்றும் வேண்டாமை 182 உற்றரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன்
பேர்வேண்டேன் கற்றரை யான்வேண்டேன் கற்பனவும் இனிஅமையும்
181. நாடகத்தால் - கூத்தாடும் பண்பில், நடித்து - பொய்யாக நடித்து; பாசாங்கு கெது. ஆடகம் - உயர்ந்த பொன். மணி - இரத்தினம். என் ஊடகத்தே - என் நெஞ்சினுள்ளே. என் உடையானே - என் தலைவனே என்னை அடிமை கொண்டவனே.
நாடகமாடும் பண்பில் உனது மெய்யடியார் வேடம் பூண்டு அவர் செய்வன வெல்லாம் செய்வதுபோன்று வெளிக்கு நடித்து, அன்பில்லாத நான் அடியார் கூட்டத்தின் நடுவே இருந்து வீட்டுலகினுள்ளே புகுந்திடும் பொருட்டு மிகவும் விரைவாகச் செல்லுகின்றேன்; உயர்ந்த பொன்னிலே மணிகளை அழுத்திச் செய்த அழகிய மலைபோன்றவனே, 6767 త్ర கெஞ்சின் கண்ணே உன் மாட்டு அன்பு இடையருது கின்று யான் உன்னை நினைங் துருகும்படி அருள் செய்வாயாக, என்னை அடிமைகொண்ட இறையவனே!
அடியார் போன்று பொய்யாக நடிப்பவரும் வீடு பேற்றை அடைதல் கூடும்; எனினும் முன்னமே என்ன அடிமை கொண்டருளிய நீ உன் மாட்டு மெய்யான அன்பினை நிலையாக அளித்து, அப்பேற்றினையருள்வாய் என்று கூறுகின்ருர், -
182 பேர் - புகழ். கூத்தா - உலகினையெல்லாம் ஆட்டிவைப்பவனே. குரைகழல் - ஒலிக்கின்ற வீரக் கழலையுடைய பாதங்கள். கற்ரு 4 கன்று -- ஆ : கன்றையுடைய பசு வலித்தல் விகாரம்.
 
 
 

பக்திப் பாட்ல்கள் 03
குற்றலத் தமர்ந்துறையும் கூத்தாஉன் குரைகழற்கே கற்ருவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே. 2
நாலாயிர திவ்ய பிரபந்தம் பெருமாள் திருமொழி
தாய்போன்ற இறைவனை ஒழிய வேறு புகல் இல்லை
133. தருதுயரந் தடாயேலுன் சரணல்லாற் சரணில்லை
விரைகுழுவும் மலர்ப்பொழில்தழ் வித்துவக்கோட்
th டம்மானே
உற்றர் உறவினருடைய தொடர்பினையும் யான் வேண் டேன்; ஊராட்சி முதலியவற்றையும் வேண்டேன். பல நூல்களைக் கற்றவர்களையும் வேண்டேன்; அவரிடம் கற்பனவும் இனிப்போதும்; திருக்குற்றுலத்திலே வீற்றிருந்து உலகங்களை யெல்லாம் ஆட்டுவிப்பவனே, உனது சப்திக்கின்ற வீரக்கழலை யணிந்த பாதங்களையே அடைய விரும்பி, கன்றினை ஆன்ற தாய்ப் பசுவின் மனம்போல் அன்பினுற் கசிந்துருகுவதையே வேண்டு
வேன்.
இறைவன் மாட்டு அவனடியார் வேண்டுவன எல்லாம் இரு வகையினுள் அடங்கும். ஒன்று இறைவனேயே வேண்டுதல், மற்றது அவனை ஒழிய மண், பொன், கல்வி முதலியவற்றை வேண்டுதல். உண்மையான அடியார்கள் இறைவனேயே, அதாவது அவன்மாட்டு அன்புசெய்தல், நீங்காது நின்று அவனுக்கு எல்லா அடிமைகளுஞ் செய்தல் முதலியனவற்றை விரும்புவர். ஆதலால் உற்ருர், கல்வி, புகழ் முதலியனவற்றை வேண்டாது கற்ருவின் மனம் போலக் கசிந்துருகும் பக்தியை மட்டும் வேண்டுகின்ருர், கன்றினை ஈன்ற பசு அதன்மாட்டுள்ள பேரன்பினல் மனம் உருகுவது போன்று இறைவனை நினைக் துருகும் பேரன்பினை விரும்புகின்ருர்,
133 தருதுயரம் - தங்த துயரம், தடாயேல் - களையாவிடின். சரண்= பாதம். சரணில்லை - புகலிடமில்லை. விரை - வாசனை. குழுவும் . மிக்க, அரிசினம் - அரிந்து போகடும் சினம்; மிக்க கோபம். அரிதல் = அறுத்தல். குழவி - குழங்தை. குழ - இளமை அதனையுடையது குழவி. மற்று = அசை அன்றி வினைமாற்முகவும் கொள்ளலாம். w

Page 56
104.
அரிசினத்தால் ஈன்றதழ் அகற்றிடினும் மற்றவள்தன்
அருள்நினைந்தே அழுங்குழவி யதுவேபோன்
றிருந்தேனே. 3 திருமாலை
இறையன்பு இன்பரூப்மானது : - 蔷。 ་་་་་་་་་་་ * 134. பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமர ரேறே ஆயர்தங் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான்ப்ோய் இந்திர லோக மாளும் அச்சுவை பேறினும் வேண்டேன் அரங்கமா நகரு
ளானே. 4
நீ தந்த துயரங்களைய்ெல்லாம் நீயே களையவல்லாய்; அங்ங்னம் களையாவிடினும் எனக்கு உனது பாதங்களையன்றி
வேறு புகலிடம் இல்லை; பரிமளம் பொருந்திய மலர்களையுடைய
சோலைகளாலே சூழப்பட்ட வித்துவக்கோ டு என்னும் ஊரிலே கோயில் கொண்டருளிய இறைவனே, பெற்றதாய் அரிவது போன்ற கடுங்கோபத்தினல் வெறுத்துத் தள்ளினுலும் அவளைத் தவிர வேறு போக்கிடம் இல்லாத இளங்குழந்தை அவளது அருள் ஒன்றையே எண்ணி up (paign போன்று கின் அருளையே எண்ணியபடி இருந்தேன்.
184. மேனி - சரீரம், கமலம் - தாமரை, அச்சுதன் - திருமால்; தன்னை அடைந்தவரை நழுவ விடாதவன். அமரர் ஏறு - தேவர்கள் தலைவன். ஆயர் - இடையர். கொழுந்து - இளங்குமரன். இந்திர லோகம் . சுவர்க்க லோகம்,
'பச்சை நிறமுள்ள பெரிய மலைபோன்ற திருமேனியையும் பவளம் போற் சிவந்த வாயினையும் தாமரை மலர்போற் சிவந்த கண்ணினையுமுடைய அச்சுதனே!தேவர்கள் தலைவனே! இடையர் குலத்தில் அவதரித்த இளங் கும்ானே' என்று உனது பெயரை நாவினுற் கூறுதலாகிய இந்தச் சுவையைத் தவிர யான் போய்ச் சுவர்க்கலோகத்தை ஆளும்படியான அனுபவமாகிய அந்தச் சுவையைப் பெறுவதாயினும் அதனை விரும்பமாட்டேன், அரங்கமா நகரின் கண்ணே கோயில் கொண்டருளியவனே!
A.
محم
 
 

பக்திப் பாடல்கள் ', '*'*':105 , *ز
தாயுமானர் ப டல் வீண் ஆசையை ஒழித்தல் 185. ஆசைக்கோர் அளவில்லை அகிலமேல் லாங்கட்டி
ஆளினுங் கடன்மீதிலே ஆணைசேல வேநினைவர் அளகேசன் நிகராக
அம்போன்மிக வைத்தபேரும் நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்
நேடுநாள் இருந்தபேரும் நிலையாக வேயினுங் காயகற் பந்தேடி
நேஞ்சுபுண் ணவரேல்லாம் யோசிக்கும் வேளையிற் பசிதீர உண்பதும்
உறங்குவது மாகமுடியும் உள்ளதே போதுகான் நானேக் குளறியே
ஒன்றைவிட் டோன்றுபற்றிப் பாசக் கடற்குளே வீழாமன் மனதற்ற
பரிசுத்த நிலையையருள்வாய் h பார்க்குமிட மேங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூர ஞனங்தமே. 5
135. கட்டி - அடக்கி. ஆணே - ஆஞ்ஞா சக்கரம். அளகேசன் - குபேரன். ரசவாத வித்தை இரும்பு முதலிய தாழ்ந்த லோகங்களைப் பொன்னக மாற்றும் வித்தை. காயகற்பம் . சரீரம் அழியாமல் உயிர் வாழ்தற் குரிய மருந்து, குளறி - உளறி. பாசக்கடல் - ஆசையாகிய கடல். மனதற்ற - மனம் இறந்த மனத்தின் சேட்டைகள் ஒடுங்கிய, மனதற்ற பரிசுத்த நிலை . மெளன நிலை. ஒரு நீக்கம் அற - கொஞ்சமும் நீங்குதல் இல்லாமல்.
மனிதருடைய ஆசைக்கு ஒர் எல்லை இல்லை. மண்ணுலகம் முழுவதையும் அடக்கி ஆண்டபொழுதும் கடவின் பரப்பிலும் தம்முடைய ஆஞ்ஞா சக்கரத்தைச் செலுத்த விரும்புவர். குபேரனைப் போன்று மிகப்பெரும் அளவில் அழகிய பொன்னைத் தேடிவைத்தவர்களும் திருப்திப்படாமல், மேலும் பொருள் ஈட்ட விரும்பி ரசவாத வித்தையைக் கற்கும் பொருட்டுப் பலவிடங்களிலும் அலைந்து திரிவர். நீண்டகாலம் வாழ்ந்தவர்களும் காயகற்பந்தேடி, அது கிடையாமையால்
14

Page 57
மனம் புண்படுவர். இப் (3La சிக்குமிடத்து, } பசிதீர உண்பதும் ຂຶm. ஆதலினல் கிடைத்ததைக்கெ திருப்தி அடையவேண்டும், ஒ
மனம் அமையாமல் வேறு ஒன்ற்ைப்பற்றி, நான் நான் என்று
அகம்பாவங்கொண்டு பலவும்பி ற்றி சையாகிய கடலினுள்ளே
வீழ்ந்தொழியாமல், மனம் செய்ல ற்கும் தூய்மையான எங்கும் நீங்குதல்
யமானவனே!
தமிழ் அமுதம் மூன்றம் புத்தகம் முற்றும்.
mmmmmmmmmmmmmmmmma
rik. ଝୁ
சாரதா விலாஸ் பிரஸ், கரிக்காரத்தெரு, கும்பகோணம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 58
இந்நூலாசிரியர் தொ
கம்பர் கவிதைக் கோை முதல் மூன்று காண் டிெ இரண்டாம் பாகம்
, டிெ மூன்றம் பாகம் யுத்த காண்டம் இராம காதை (கம்பராமா
சுருக்கம்) நளன் சரிதம் வில்லி பாரதச் சுருக்கம்
முதல்ஜந்து பருவங்களி கப்பட்ட செய்யுள்கள் முதலியவற்றுடன் gեւհւորուք/ruճoorւb
கும்பகருணன் வதைப்ப
TAMIL A
BOO (IN
A. S. Sun
RAMATANATI CHUINNA,
Copyright
 
 

Î, Li | ti
தத்து Qajaiflu Girl நூல்கள்
ரு சதம்
வ முதலாம் பாகம்
4 OO
ক্টোr_md56া -- - 2 SO
- 2 50
பணக் கதைத்
OO
O Z5
முதலாம் பாகம்
னின்றும் எடுக் 5 gó új u Go I
2
-Goi 1-1?O。ー
M UT HAM K THREE
ΤΑΜΙΙ)
by lararajan, B.A.,
EILAN COLLEGE KAM, CEYLON.
1956 Price Rs, -25.