கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முருகன் மணவாளன்

Page 1


Page 2

இந்நூலின் வருவாய் முழுவதும் உரும்பராய் சிதம்பர சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குரியது. -
பிரசுரிப்போர்: உரும்பராய் சிதம்பரசுப்பிரமணிய சுவாமி கோயில் கொழும்புக் கிளையினர்.
ருபா 200,

Page 3
முதற்பதிப்பு: குரோதி வருடம் வைகாசித் திங்கள் (1964)
உரிமை ஆசிரியர்க்கு ܝܗܝ.
s
റ്റ്
காணிக்கை
1945 ஆம் ஆண்டு மலாய் நாட்டில் விழுந்த குண்டு சிந்தனைச் செல்வம் - செழுந்தமிழ்ப் புலவன் சேவை யில் தன் வாழ்வைத் தேய்த்துச் செப்பரிய இன்பம் கண்ட செம்மல் - சிற்ருடை கட்டத் தெரியாத சிறு பருவத்திலிருந்தே என் வாழ்வுக்கு வழிகாட்டிய மேதை - என் உடன் பிறந்தோன் - அமரர் திரு. செ. நவரத்தினம் அவர்களின் ஒ யிரைப் பறித்தது. அவருக்கு இந்நூலேக் காணிக்கையாக்குகின்றேன்.
செ. தனபாலசிங்கன் ,
அச்சுப்பதிவு பூரீ சண்முகநாத அச்சகம், யாழ்ப்பாணம்.
 
 
 

"நூல் எழுதி விடலாம். ஆணுல் அந்நூலுக்கு முகவுரை தான் எப்படி எழுதுவதென்பது தெரியவில்லை' என்று நூலாசிரியர் ஒருவர் சொன்னுர் என் நிலைமையும் இதே போலத் தர்மசங்கடமாக இருந்தது. இன்றைய உலகைத் திரும்பிப் பார்த்தேன். சிந்தனை சுழன்றது. எண்ண அலை கள் எழுந்தன இதயத்தில். முகவுரை எழுதலாம் போல் தோற்றியது.
வாழ்வில் நாம் நினைப்பதெல்லாம் நடந்து விடுவ தில்லை. சகல செல்வங்களுடன் வாழ்கின்றவர்களும் திட்ட மிட்டதைச் சாதிக்க முடிகின்றதா என்ருல் இல்லை என்று தான் கூறவேண்டும். நாம் நினையாத எத்தனை எத்தனை காரியங்கள் எதிர்பாராமலே எம்மை வந்து அடைந்து விடுகின்றன. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் ஆண்ட
வன் என்ற பேச்சுக்கே இடம் இல்லாது போய்விடும்.
நாம் ஒன்றை நினைக்கிருேம். சிலபோது அது கைகூடு கிறது. சிலபோது நாம் நினைத்ததற்கு மாருகவே நிகழ்ந்து விடுகிறது. ஆணுல் எவ்வித நினைப்பும் இன்றி எது எது நிகழவேண்டும் என்ற விருப்பும் இன்றிக் கண்மூடி மெளனி யாக இருந்தாலும் நாம் நினையாதது வேண்டாம் வேண் டாம் என்று சொன்னுலும் கூட நம்முன் வந்து விடுகிறது. இவற்றை எல்லாம் சிந்தித்துப் பார்த்தால் ஏதோ ஒரு சக்தி நம்மிலும் பார்க்க வலிமையுடையதாகத் தொழிற் பட்டுக் கொண்டிருப்பது தெரிகிறது கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் அதனை இயற்கை என்று அழைக் கிருர்கள். அவ்வளவுதான் ! கடவுள் உண்டு என்று சொல்பவர்கள் அந்தச் சக்தியை ஈசன் என்று ஏத்துகிறர் கள்; போற்றுகிறர்கள்; பாடுகிறர்கள். ஒளவையார் இந் தக் கருத்தைத் தெள்ளித் தெளிந்த தமிழில்,

Page 4
ii
'ஒன்றை நினைக்கி னதுவொழிந்திட் டொன்ரு கும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும்-ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும் எனயாளு மீசன் செயல்'
என்று அன்றைக்கே பாடிவிட்டார்.
அந்த மகாசக்தியே உலகத்தை இயக்குகிறது. அந்த மகாசக்தி எத்தனை எத்தனை வடிவங்களுடன் நமக்குத் தரிச னம் தருகிறது. அதற்காக எத்தனை எத்தனை அற்புதமான ஆலயங்கள்; அழகே சொரியும் திருவுருவங்கள்; ஆயிரம் ஆயிரம் கவிதைகள், கதைகள், கற்பனைகள். -
கடவுள் இருக்கிருர் என்று சொல்பவர்களிடத்திலேயும் ஒரு அவநம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது. ஒரு காரி யத்தில் நமக்கு வெற்றி கிட்டிவிட்டால் அந்த வெற்றியை ஆண்டவனிடத்திலே கொடுத்துவிடாது ஏதோ நாம் பாடு பட்டு வெற்றியீட்டியதாகப் பெருமைப்பட்டுக் கொள்கிருேம். ஆனல் ஒரு கருமத்திலே வெற்றிகிட்டாதபோது கண் கெட்ட கடவுளே என்று ஆண்டவனை வையவும் பார்க்கி
ருேம். என்றைக்கும் அறத்தின் வழிப்பட்ட கருமம் வெற்றி
யடையாமற் போவதில்லை. மறம் தலைப்பட்டுச் சிலபோது
வெற்றி கிட்டலாம். ஆணுல் அது வெற்றியாக இருக்க
மாட்டாது. தோட்டக் கொல்லையில் இருக்கின்ற பொம்மை
காகங்களையும், குருவிகளையும், விலங்குகளையும் விரட்டுகின் றது. ஆணுல் ஒவ்வொரு மழைக்கும் காற்றுக்கும் கீழே
சரிந்து விழுந்தேவிடுகிறது. மறத்தினுல் வந்த வெற்றி
தோட்டக் கொல்லையில் இருக்கும் பொம்மையைப் போன் றது. அந்த வெற்றி வெற்றியாகத் தோற்றினுலும் வாழ்க்கை யில் அடிக்கின்ற புயற்காற்றுக்கும் பெருமழைக்கும் அது சாய்ந்து விழுந்துவிடும். "
தன்னருள் வெளிக்குள்ளே அகிலாண்ட கோடி எல் லாம் தங்கும்படிக்கு இச்சைவைத்து உயிர்க்குயிராய் இருக் கின்ற அந்த மகாசக்தியை-ஆண்டவனை நாம் தேடிச் செல்லவேண்டியதில்லை. வான் பழித்து மண்புகுந்து மணி தரை ஆட்கொள்ளும் வள்ளல் தேடிவந்து நம்மை ஆட்

iii
கொள்வான். நாமும் கடவுளைத் தேடுகிறோம்; கடவுளும் நம்மைத் தேடுகிறார் என்று சொல்வதிலும் பார்க்கக் கட வுள் நம்மைத் தேடுகிறார் என்று சொல்வதிற்தான் சிறப்பு இருக்கிறது. ஏன் நம்மிற் பலரே கடவுளைப் பற்றிச் சிந்தி யாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பேதித்து நம்மை வளர்த்தெடுக்க வேண்டிய பெரும் பொறுப்பு அவனுடை யதுதானே! பெற்ற மனம் பித்து அல்லவா!
பிரான்சிஸ் தோம்சன் (Francis Thompson) என்னும் ஆங்கிலக் கவிஞன் தன்னுடைய அருள் வேட்டை (Hound of Heaven) என்ற பாட்டிலே இறைவன் அருளைச் சொல்ல வருகிறார். ஆண்டவனிடமிருந்து ஓடிப்போகும் மனிதனைத் துரத்திக்கொண்டு ஓடிப்போகிறது ஒரு வேட்டை நாய். கல்லிலும் முள்ளிலும் நடந்தாலும் நாய் தொடர்ந்தே வரு கிறது. வானுலகத்துக்கு ஓடி நட்சத்திரங்களுக்கிடையில் ஒளிந்து கொண்டாலும் இயற்கையோடு இயற்கையாய் பூவுலகில் மறைந்து கொண்டாலும் குழந்தை குட்டி களுடன் அளக்க முடியாத செல்வத்துடன் வாழ்ந்து கொண் டாலும் வேட்டை நாய் விடுவதாக இல்லை. சென்ற சென்ற இடமெல்லாம் தேடித் தேடிப்பிடிக்க ஓடி ஓடிவருகிறது அந்த நாய். கவ்விப் பிடித்துத் தன்பக்கமே இழுக்கப் பார்க்கிறது. இப்படித்தான் இறைவனை விட்டோடும் மனி தனை ஆண்டவன் கருணை வேட்டை நாயுருவில் தொடர்ந்து வந்து அருள்புரிகின்றது. இது, கவிஞனின் கற்பனை. 'பிரான்சிஸ் தோம்சன்' இறைவன் கருணையைத் தொடரும் வேட்டை நாயாகக் கற்பனை பண்ணுகிறான். இதனை மணி வாசகப் பெருமான் திருவாசகச் செந்தமிழ் மாமறையிலே,
கேட்டாயோ தோழி கிறிசெய்த வாறொருவன் தீட்டார் மதில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான் காட்டாதன வெல்லாம் காட்டிச் சிவங்காட்டித் தாள் தா மரைகாட்டித் தன் கருணைத் தேன் காட்டி நாட்டார் நகை செய்ய நாமேலை வீ டெய்த ஆள் தான்கொண் டாண்டவா பாடுதுங்காண் அம்மானாய்
(திருவம்மானை 6) என்று பாடினால்,
தாழி இத செந்தமித் இதனை -

Page 5
i v
நில்லாத நீர்சடைமேல் நிற்பித்தானை
நினையா வென் நெஞ்சை நினைவித்தானைக் கல்லா தன வெல்லாங் கற்பித் தானைக்
காணு த ைவெல்லாங் காட்டி னனைச் சொல்லா தனவெல்லாஞ் சொல்லி யென்னைத்
தொடர் திங்(கு) அடியேனை யாளாக் கொண்டு பொல்லா வென் நோய்தீர்த்த புனிதன் தன்னைப்
புண் ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே .."
என்று நற்றமிழ்வல்ல நாவுக்கரசு நாயனுர் பாடுவார்.
இறைவன் கருணை எம்மட்டில் இருக்கின்றது என்று பார்த்தால் அது தோன்றத்துணையாக இருக்கின்றது.
ஈன்ரு ஞ மாயெனக் கெந்தையு மாயுடன்
- தோன்றினராய் மூன்ரு யுலகம் படைத்துகந் தான் மனத்
துள்ளிருக்க ஏன் ருன் இ ைரியவர்க் கன்பன் திருப்பா
திரிப்புலியூர்த் தோன் ருத் துணையா யிருந்தனன் தன்னடி
யோங்களுக்கே,
தோன்றத்துணையாய் நிற்கும்நிலை அனைத்தையும் முறைப் பெயரில் வைத்துப் பாடுகிருர், -
அப்பன் நீ அம்மை நீ ஐய லும் நீ
அன்புடைய மாமனும் மாமி யும் நீ ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ஞம் நீ
ஒருகுலமும் சுற்றமும் ஒரூ ரும் நீ துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்று வாய்நீ
துணையாயென் நெஞ்சம் துறப்பிப் பாய்நீ இப்பொன் நீ இம்மணி நீ இம்முத் தும் நீ
இறைவன் நீ ஏறுார்ந்த செல்வன் நீயே. அவனுடைய கருணை மனிதர்க்கு மட்டுமன்றிப் பன்றிக்குட்டி கள், கரிக்குருவி முதலிய எல்லாப் பிராணிகளிடத்திலேயும்

"V
சென்று சேர்கின்றது என்பதைக் காட்டுவதற்காகவே கதை கள் எழுந்தன. இவை எல்லாம் புராணக் கதைகள் என்று புறத்தே தள்ளிவிடலாகாது. சிந்தித்துப் பார்க்க வேண்டும். இக்கதைகள் காட்டித் தருவன யாவை ? ஆண்டவன் எளி வந்தபிரான் என்பதைச் சொல்லித் தரு கின்றன. பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை என்று தொடங்கிப் பாடிய சுந்தரர் எளி வந்தபிரான் என்று தானே பாடுகிருர்,
உயிரைப் பிரிந்து உடம்பு இருக்கமாட்டாதது போல் உயிர்க்குயிராகிய கடவுளைப் பிரிந்து உயிர் உயிராக இருக்க
மாட்டாது. "என்னுளே உயிர்ப்பாய்ப் புறம்போந்து புக்கு என்னுளே நிற்கும் இன்னம்பரீசன்" என்று தேவாரம்
பாடினுல்,
உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை உள்ளம்விட் டோரடி நீங்கா ஒருவனை உள்ளமும் தானும் உடனே இருக்கினும் உள்ளம் அவனை உருவறி யாதே.
என்று திருமூலர் பாடுவார். ஆண்டவன் நம்மைவிட்டகலாமல் இருக்கவும் நாம் அவனை அறிவதில்லை. காரணம் என்ன ? அறியாமை இருள் எம்மைப்பற்றி இருக்கிறது. நம்மைப்பற்றி இருக் *கும் அறியாமை இருளிலிருந்து எம்மைக் கைதூக்கி விடு வது சிவத்தின் சக்தி. அத்திருவருட் சக்தி எல்லாம் தர வல்லது. 'தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது’ என்று தெய்வப்
புலவர் திருவள்ளுவர் பேசுவார். பண்சுமந்த பாடல் கேட் l gJbl (Ob ளூ
கப் பெண்சுமந்த பாகத்தன் மண்சுமந்து புண்சுமந்தான்.
பெண் சுமந்த பாகப் பெருமான் ஒருமாமேல் எண் சுமந்த சேவகன் போல் எய்தியதும் வைகைநதி மண் சுமந்து நின்றதும் ஓர்மாறன் பிரம்படியால் புண் சுமந்து கொண்டதும்நின் பொருட்டன்ருே
P . புண்ணியனே.

Page 6
ν
என்று தித்திக்கும் திருவாசகம் தந்த மணிவாசகரைப் பார்த்துத் திருவருட்பாபாடும். இதைவிட ஆண்டவனுடைய அளவிலா அன்புக்குச் சான்று வேண்டுமா ?
நீண்ட நாட்களாகப் பூட்டி வைக்கப்பட்டிருக்கும் ஓர் அறைக்குள் விளக்கை எடுத்துக்கொண்டு போகிருேம். பல நாள் பூட்டிவைக்கப்பட்டிருந்த அறையில் பல நாள் இருள் சேர்ந்திருக்கும். பல நாட்கள் விளக்கின் ஒளிபட் டால் தான் மண்டி இருக்கும் இருள் ஒடிப்போகும் என்று நாம் சொல்லலாமா? விளக்கு வந்தவுடன் எத்தனை காலமாக இருள் மண்டிக்கிடந்தாலும் இருளுக்கு அங்கே வேலை இல்லை. அதேபோல் எவ்வளவு காலமாக அறியாமை இருள் மண்டிக்கிடந்தாலும் திருவருட்சோதி பிரகாசிக்கத் தொடங்குமேயானுல் அறியாமை இருள் அகன்று ஓடிவிடும். நோய் வாய்ப்பட்டவனுக்கு ஊசி மருந்து ஏற்றுகிருேம். அது ஒரு துளிதானே 1 நோய் மாறவில்லையா ? வாழ்க்கை ஒரு மருத்துவமனை, மக்களெல்லாம் நோயாளிகள்; நோய் தீர்க்கும் மருத்துவன் இறைவன். தீராத நோயெல்லாம் தீர்த்தருள வல்லவன் வைத்தியர்களுக்கெல்லாம் வைத்திய ணுக விளங்கும் வைத்தியநாதன்-அவன் ஒருவனே !
எமக்கு வேண்டியதொன்று; அதுதான் பிரார்த்தனை. கோயிலுக்குச் சென்று தீபாராதனையைக் கண்டு கன்னத்தில் போட்டுக் கொண்டு விபூதி வாங்கி வீட்டுக்கு வரும் அள வில் நமது பிரார்த்தனை முடிந்து விடுகிறது. வாழ்க்கை சில நேரத்தில் ஆட்டம் கொடுக்கிறது. இந்த அச்சத் திலே இறை உணர்ச்சி பிறக்கிறது. ஆட்டம் நிற்கின்ற போது இறை உணர்ச்சியும் நின்று விடுகின்றது. இது வேண்டத்தக்கதொன்றன்று. எமது காலத்திலேயே வாழ்ந்து வீரம் நிறைந்த பிரித்தானிய சாம்ராச்சியத்தை வெறுங்கையோடு எதிர்த்த காந்தி அடிகள் பிரார்த்தனையே மனிதனை வாழவைக்கும் நன்மருந்து என்று பல முறையும் கூறுவார். 'கடவுள் உண்டு என்பதை நீங்கள் நம்புகி றிர்களா ?’ என்று காந்தி அடிகளைக் கேட்டபோது "நீங் களும் நானும் இருப்பது உண்மையானுல் நமது பெற்
 

vii
ருேர்கள் வாழ்ந்தது உண்மையானுல் நமது பிள்ளைகள் இருக்கப்போவது உண்மையானுல் கடவுளும் உண்டு' என்று அவர் கூறினர். அவர் குண்டடிபட்டு வீழ்ந்தபோதும் *ராம் ராம்" என்று பகவன் நாமத்தைச் சொல்லிக்கொண்டே சாய்ந்தார் தரையில் 1 மெய்யன்பர்கள் எது எவ்வாறு நிகழினும் தம்முள்ளம் இறைவன் திருவடியினின்று ஒரு காலும் நிலைபெயர ஒட்டார்.
வானின் றிடிக்கிலென் மாகடல் பொங்கிலென் கானின்ற செந்தீக் கலந்துடன் வேகிலென் தானுென்றி மாருதம் சண்டம் அடிக்கிலென் நானுென்றி நாதனை நாடுவன் நானே. என்ற திருமந்திரத்துக்கு விரிவுரையாக எமது வாழ்க்கை
அமையவேண்டும்.
பிரார்த்தனை ஆலயத்தில் மட்டும் சிலபோது நிகழ் கின்றது. ஆண்டவனை ஆலயத்துள் வைத்துப் பூட்டி
அர்ச்சகர் உடைமையாக்கிவிட்டு வந்துவிடுகிருேம். வாழ விரும்புகின்ற-வாழ்கின்ற சமுதாயத்தில் சமயவாழ்வு இருக்க
வேண்டும். வீட்டில் சமயவாழ்வு இருந்தால் நாட்டில் சம யப்பண்புமிகும். சமயம் கற்றுக் கொடுக்கக்கூடியதன்று. வீடுகளில் கோயிலின் சூழல் அமையுமேயானுல் திருக்
கோயில்கள் திருவருளின் பெட்டகமாய்த் திகழும்.
எமக்கு வேண்டியது நல்லறிவு. அது தான் ஞான
அறிவு. "அறிவால் அறிந்து இருதாள் இறைஞ்சும் அடி
யார் இடைஞ்சல் களைவோனே' என்று முருகப்பெருமானை ஏத்திப்போற்றுகிருர் அருணகிரிநாதர். இன்றைய பாட சாலைகள் அறிவை வளர்க்கும் அறநிலையங்களாக இல்லை. ஒலிப்பதிவுக் கருவி (Tape Recorder) போன்று புத்தகத்தில் உள்ளதையே திரும்பத்திரும்ப ஒப்படைக்கும் நிலையில் அவை இருக்கின்றன. பாடசாலைகளில், ஏன் ? எதற்கு? என்று கேட்கப்படும் கேள்விகளுக்கு விடை இல்லை. விடை காண முயலுவதும் இல்லை. அறிவை வளர்க்கின்ற முயற்சி

Page 7
Viii
அவ்வளவு எளிமையானதன்று. தெளிந்த ஆழமான நுட்ப மான அறிவு சிந்தனையைக் கிளறிச் செழுமைப்படுத்த முயற்சிக்கும்போதுதான் தோன்றும். நல்லறிவு கிட்டாத போது வாழ்க்கை திசைமாறும்.
சமயம் காட்டித் தருவது என்ன ? கோயில்களின் இன்றைய நிலை என்ன ? இவற்றைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நமது சமயம் வாழ்க்கைக்கு எளியது. அநுப
வத்துக்கு உரியது. சீரிய சித்தாந்தங்களைக் கொண்டது.
இந்த உண்மைகளை நெஞ்சில் தேக்கி நீண்டகாலக் கண்
ணுேட்டத்துடன் நாம் செயற்படவேண்டும். "மேன்மை
கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்' என்று பாடிப் பரவுகிருேம். சைவநிதியும் சைவநெறியும் எங்கும் பரவி
யிருக்கிறதா ? பரவுவதற்கான வழிமுறைகளைச் செய்திருக்கி ருேமா ? சுருங்கச் சொன்னுல், நமது மதத்தில் வளர்ச்சியே
இல்லை. காரணம் என்ன ? சைவப்பெருங்குடி மக்களுக்
கிடையே சமயவழியான உறவு இல்லை, போட்டியும் பொருமையுமே தாண்டவம் ஆடுகின்றன. இதனுல் நமது சமயமும் நமது சமயத்தினரும் வளரமுடியாத நிலை ஏற்.
பட்டிருக்கிறது. நமது சமயத்தில் உள்ள மக்களின் சமய அறிவு வளரவேண்டும். குருக்கள் தொடங்கிக் கும்பிடப் போவோர் ஈருக உள்ள மக்களின் கல்வி மட்டமாகவே
க்கி . இனிவரும் தலைமுறையினரையாவது வளர்த் ருககறது ரும தலைமுறை அது {bاژق
விட உருப்படியான திட்டங்கள் நம்மிடத்தில் இல்லை. வகுத்
தாகவேண்டும். ஒவ்வோர் ஊரிலும் கோயிலை நடுநாயகமாக வைத்துச் சமூகத் தொண்டுகளும் கலைவளர்ச்சியும் அறச் செயல்களும் வளர்ந்தன அந்தக் காலத்தில் சமயம் வாணிப மாகி வரும் நிலை தெரிகிறது இந்தக் காலத்தில்! இந்நிலை
யில் சமயம் தொலைகிறது. கோயில்கள் வாணிபச் சந்தை
யாகி விட்டன. இதனைச் சிந்தனையைச் சிதறவிட்டுப் பார்க்க
வேண்டும். மனிதனை மனிதனுக வாழச் செய்வது சமயம்,
அழியும் உலகில் அழியாத் தன்மை அடைவது எங்ங்ணம்
என வழிகாட்டுகிறது சமயம். சிறப்பாகச் சொன்னுல், துன் பம் கலந்த உலகவாழ்வைத் துன்பம் கலவாத இன்ப வாழ் வாக மாற்றுவது சமயம். நாம் மனிதனுக வாழ்கின்ருேமா?

1 Χ
அல்லது சிங்கம், புலி, கரடியாக வாழ்கின்ருேமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கிரேக்க நாட்டில் இரண்டாயிரம் வருடங்களுக்குமுன் ஒருநாள் டயோஜனிஸ்’ என்ற பெரியவர் அதென்ஸ் நக ரத்தில் ஒரு நாற்சந்தியில் நிற்கிருர், பட்டப்பகல் பன்னி ரண்டு மணி; கையில் ஒரு விளக்கை ஏந்திக் கொண்டு எதையோ தேடுகிறர். பல்லாயிரக் கணக்கான மக்கள் வரு வதும் போவதுமாக இருக்கிறர்கள். ஒருவருக்கும் எதைத் தேடுகிறர் என்று விளங்கவில்லை. "என்ன தேடுகிறீர்கள்?" என்று கேட்கிறர் ஒருவர். டயோஜனிஸ் சாவதானமாக, 'மனிதனைத் தேடுகிறேன்’ என்று பதில் சொல்கிறர். இந்தப் பதில் நமக்குச் சற்றுவியப்பாக இருக்கலாம். ஏதோ உரு வில் மனிதர்களாகத் தோற்றினுலும் உள்ளத்தால் மனிதர்க ளாக இல்லையே! மருந்துக்குக்கூட ஒரு மனிதன் அகப் படமாட்டேன் என்கிருனே என்பது தான் டயோஜனிஸ் அவர்களின் கவலை.
மனிதனை நிறை மனிதனுக்குவது சமயம். மனிதனின் ஒழுக்கநெறி வளரவேண்டும் என்று சொன்னுல் சமயப் பற்றே இன்றியமையாதது என்ருன் மாவீரன் மாஜினி. ஆத்மிகம் ஆன்மாவைப் பற்றி அறிதல். இன்னும் விளக்க மாகச் சொன்னுல் நான் யார் என்று அறிதல். சமயம் ஒன்றுதான் மனிதனைத் திருத்தவல்லது. மனிதனை மனித னுக, மாணிக்கமாக, ஆக்கும் சக்தி மதத்துக்கும், கடவுள் நம்பிக்கைக்குமே உண்டு. சமயம் காட்டித் தருவது வாழ் வித்து வாழ்தலும் மகிழ்வித்து மகிழ்தலுமாகிய சிறந்த வாழ்க்கை, சமயநெறி சிவநெறி; சிவநெறி சிந்தை தழு விய நெறி; அன்பில் தோன்றி அன்பில் தோய்ந்த நெறி; κ. சிவநெறி வாழ்க்கை நெறி; அது நாடு தழுவும் நன்னெறி: வீடு தழுவும் விழுமிய நெறி; அதுவே எல்லா உயிர்களுக் கும் இன்புற்றமர்ந்து வாழவகை செய்யும் பெருநெறி.
ஆலயத்தில் வழிபாடு நடக்கிறது. ஆணுல் தூய்மை இல்லை. வழிபாடு பொழுது போக்காகி விட்டது. குருக்கள் தொடங்கிக் கும்பிடச் செல்வோர் ஈருக அனைவரிடத்திலும்

Page 8
Χ
வாணிகக் கண்ணுேட்டமே தலை எடுக்கிறது. அர்ச்சனைக்குக் காசு இவ்வளவு என்று சொல்வாரே தவிர ஆண்டவன் தத்துவத்தைச் சொல்லமாட்டார் அர்ச்சகர் ஆர்ப்பாட்டத் துக்கும் ஆரவாரத்துக்கும் குறை இல்லை. ஆணுல் அன்பு இல்லை; பக்தி இல்லை; வெறும் வேடிக்கையாகி விட்டது. சமூக நன்மைக்காகச் சமயமானது எந்த முறையில் பயன் படுத்தப்பட வேண்டுமோ அந்த முறையில் பயன்படுத்தப் படாமையே இழிவுக்குக் காரணம் என்று சொல்வார் வீர சந்நியாசி விவேகானந்தர். மனிதர்கள் இயற்கையில் மிக நல்லவர்கள், சமுதாயத்தால் கெடுகிறர்கள் என்று காந்தி அடிகள் சொல்வார். மனிதன் ஒளியுடையவன், ஒளிபடைத்த வன், ஒளி உடையவனுக வாழமுடியும்; ஆனுல் அவன் அறிவை வளர்த்துக் கொள்வதில்லை என்று சோக்ரட்டீஸ்
சொல்வார். மனித சமுதாயம் பகுத்தறிவைப் பயன்படுத்
தத் தவறிவிட்டது. அதனுல் இந்த நாட்டில் எத்தனை எத்
தனை அலங்கோலங்கள். தந்தையின் அறிவைவிட மகன் அறிவு தூயதாக இருப்பது நியாயமே இருக்கிறதா என் பது தான் கேள்வி!
தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது. -
என வள்ளுவர் பேசியதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
வளர்ந்து வருகின்ற மனித சமுதாயத்துக்கேற்பக் கருத்துக்கள் மாறும்; மாறவேண்டும். ஆணுல் அடிப்படை மாறமாட்டாது; மாற்றவும் முடியாது. காலநிலைக்கேற்பச் சீர் திருத்தலாம். காலமொடு தேசவர்த்தமானமாதிக் கலந்து நின்ற கருணை வாழி' என்றுதானே தாயுமானவர் " பாடுகிறர்.
பண்பியல் வழியாகத் தன்னை வழிப்படுத்திக் கொள்வது வழிபாடு. சிறப்பாகச் சொன்னுல், உயர்ந்த பாதையில் வழிப்படுத்திக் கொள்வது வழிபாடு. மனித சமுதாயம் பரி
 

Xi
பூரணத்தை நோக்கிப் போவதுதான் வாழ்க்கை. 'யோசிக் கும் வேளையில் பசிதீர உண்பதும் உறங்குவதுமாக முடி யும்' என்ற தாயுமான சுவாமிகளின் சொற்கள் நம்முள் பெரும் பாலார் வாழ்க்கையில் நடைபெறுவதொன்றாகும். கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழ்பவர் களுக்கும் வாழ்க்கை நடைபெறாமல் இல்லை. ஆனால் இவர் கள் வாழ்கின்றார்கள் என்று கூறுவதைப் பார்க்கிலும் வாழ்க்கை இவர்களை ஆட்கொண்டுவிட்டது என்று கூறு வதுதான் சாலப்பொருத்தமுடையது. உலகம் நிலையில்லா தது. ஆனால் இது நிலையில்லாதது என்பதற்காக ஒருவன் இதனோடு சேர்ந்து அழிவது அறிவுடைமையாகாது. நிலை யில்லாத உலகிடை வாழ்ந்து நிலைபெறும் வழியைத் தேட வேண்டும்.
''மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே' என்று புறநானூறு பேசுகிறது.
விலங்குகளுக்கும் மனிதனுக்கும் வேறுபாடு இருக்க வேண்டாமா ? பார்க்கும் சக்தியில் மனிதனைக் கழுகு வென்று விட்டது. மோப்பம் பிடிக்கும் சக்தியில் நாய் வென்று விட்டது. ஊர் சுற்றுவதில் காக்கை மனிதனை வென்றுவிட்டது. இனத்தைப் பெருக்குவதில் பன்றி வென்று விட்டது. உண்பதில் யானை வென்று விட் டது. ஆனால் மனிதன் எவ்வகையில் உயர்ந்தவன் ? மனிதன் சிந்தனையில் சிறந்தவனாக, உயர்ந்தவனாக, குறிக் கோளுடன் வாழ்கின்றான். இதை யாரும் மறுக்கமுடியாது. வாழ்க்கையில் உயர்ந்த குறிக்கோளுடன் வாழவேண்டும்.
அந்தக் குறிக்கோளை ,
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்றது
தள்ளினும் தள் ளாமை நீர்த்து. என்று திருக்குறள் காட்டுகிறது. இத்தகைய பெரும் பண் புடையவர்கள் இருத்தலினாலேயே உலகமே நிலைபெற்றிருக் கிறது.

Page 9
Χi i
பண்புடையார்ப் பட்டுஉண்டு உலகம் அது இன்றேல் மண்புக்கு மாய்வது மன்.
என்று வள்ளுவர் முழக்குகிருர்,
உள்ளத்தால் கூணிக்குறுகிய வாழ்வு வாழக்கூடாது. உடலால் கூனிக்குறுகி இருப்பது எப்படிப் பார்ப்பதற்கு வருத்தத்தைத் தருகின்றதோ அது போலவே உள்ளத் தால் கூனிக் குறுகியிருப்பதும் வருந்தவேண்டியதே. மனித ணுடைய உயர்வு அவன் உள்ளத்தில் கொண்ட குறிக் கோள் அளவாகும்.
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர் தம் உள்ளத் தனையது உயர்வு.
என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவர் பாடினுர் என்பதை நினைத்து வியப்படையாமல் நாம் இருக்க (1ՔւգաTՖl.
இந்த உலகில் பிறந்தேன். பிறந்து என்ன செய் தேன்? வாழ்க்கையில் ஒரு நாள் மறக்க முடியாத நாள் என்று குறிப்பிடமுடியுமா என்று சிந்தனையைச் சீர்ப்படுத்தித் தன்னைத்தானே ஒவ்வொருவரும் கேட்டுப் பார்க்க வேண் டும். சரித்திரம் சான்று சொல்லமுடியாத எத்தனை மேதை
கள் இந்த நாட்டிலே வாழ்ந்து சேவையில் தம்மைத் தேய்த்
தார்கள். நானும் இந்த நாட்டிலே தானே வாழ்கின்றேன் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்காவண்ணம் இறைவன் எப் போதும் பேதகஞ் செய்து கொண்டே இருக்கின்றன் பேத கம் செய்தலாவது புன்னெறி அதனிற் செல்லும் போக் கினை விலக்கி மேலாம் நன்னெறி ஒழுகச் செய்வதாகும்.
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன் பாதத்திறம்பாடி ஆடேலோ ரெம் பாவாய்.
என்று திருவெம்பாவையும் பாடுகிறது.

xiii
இந்தச் சரீரம் நமக்குக் கிடைத்தது நாம் கடவுளை வணங்கி முத்தியின்பம் பெறுதற் பொருட்டேயாம்' என்று நாவலர் சொல்வார்.
"இந்தப் பூமி சிவனுய்யக் கொள்கின்றவாறு'
என்பது திருவாசகம். இந்தச் சரீரமும் ஒரு பூமி. பரந்த உலகமும் ஒரு பூமி. விளக்கமாகச் சொன்னுல், இந்தப்பூமி, பூமியில் உள்ள போகங்கள், அவைகளை அநுபவித்தற்கு எமக்கு வாய்த்த உடம்பு முதலிய அனைத்தும் ஆண்டவன் அருளிய உபகாரங்கள். திருவருள் நலம்பெற "அவளால் வந்த ஆக்கம் இவ்வாழ்க்கை எல்லாம்'.
உலகில் ஒருவன் நினைப்புக்குத் தக்கதாகவே அவன்
வாழ்வு அமைகிறது. 'யத்பாவம் தத்பவதி' என்று வட
மொழியில் சொல்வார்கள். உலகியலில் இன்பதுன்பங்க ளுக்குக் காரணம் என்ன என்பதை அறிஞர்கள், ஆராய்ச் சிக்காரர்கள், ஆராய்ந்தார்கள், ஆராய்ந்து கொண்டே
இருக்கிருர்கள். அவரவர் செய்த செயல்களால் தீமையும்
நன்மையும் அவரவரை வந்து அடையும். 'தீதும் நன்றும் பிறர்தரவாரா". அவரவர் வினைவழியே எல்லாம் ஆகும். இதனைக் கச்சியப்பர் அன்றைக்கே ஆராய்ந்து இருக்கிருர்,
தீங்குவந் தடையுமாறும் நன்மைதான் சேருமாறும் தாங்கள் செய்வினையினுலே தத்தமக் காயவல்லால் ஆங்கவை பிறரால்வாரா அமுதம் நஞ்சிரண்டினுக்கும் ஓங்கிய சுவையின்பேதம் உதவினுர் சிலருமுண்டோ.
இது ஒழுக்க நியதி. இதை உணர்த்தாத நிலையில் மனிதன் எண்ணற்ற கேடுகளைச் செய்துகொண்டே இருப்
பான். ஆகவே நமக்கு வேண்டியது தூய உள்ளம்.
மனத்துக்கண் மாசில ஞதல் அனைத்து அறன் ஆகுல நீர பிற. என்பது தமிழ் வேதவாக்கு.

Page 10
xiv.
"துணிவெளுக்க மண்ணுண்டு, தோல் வெளுக்கச் சாம்ப ருண்டு, மணி வெளுக்கச் சாணையுண்டு, மனம் வெளுக்க வழியில்லை’ என்று பாடுவார் பாரதியார், செவிப்புலன் இல்லாதவனுக்கு ஒலிபெருக்கி கேட்காது; குருடனுக்கு ஒளி தெரியாது; நெஞ்சத் தூய்மை இல்லாதவன் ஆண்டவ னைக் காண முடியாது. ஒலி அலை எங்கும் பரந்து செல் கிறது. ஆனல் வானுெலிப் பெட்டி இருக்கும் இடத்தில் அது கேட்கிறது. அது போல ஆண்டவன் திருவருள் அங்கு இங்கு எனுதபடி எங்கும் பிரகாசமாய் பொங்கித் ததும்பிப் பூரணமாய்க் கிடக்கிறது. பண்பட்ட உள்ளம் பற்றிப்பிடிக்கிறது. ‘சிந்தையும் தெளிவுமாகி தெளிவினுட்
சிவமுமாகி’ என்று அப்பர் பாடுவார். "நன்னர் நெஞ்சத்து
இன்னசை வாய்ப்ப' என நக்கீரரும் பாடுவார். கடவுள் எங்கோ இருப்பதாகக் கற்பனை பண்ணுகிருேம். 'கயிலா
யத்துச்சியுள்ளான் காளத்தியான் அவன் என்கண்ணு ளானே’. கடவுளைக் கோயிற் பொருளாக்கி விட்டு வருகி
ருேம். அது வாழ்க்கைப் பொருள்; காட்சிப் பொருள்
அன்று, கருத்துப் பொருள். காதலாகிக் கசிந்து கண்ணிர்
மல்க இருதயம் நல்லதாகும். அப்போது தெய்வம் என்ப தோர் சித்தம் உண்டாகிச் சிந்தையிற் சிவம் தெரியும்.
இவை ஒருபுறம் இருக்க, உலகத்தாருக்குப் போதித்து அவர்களைத் திருத்துவது என் கருத்தன்று. ஆண்டவன் ஒவ்வொருவரையும் திருத்திக் கொண்டே வருகின்றன். எனவே, நான் அந்த முயற்சியில் இறங்கினுல் ஆண்ட வன்மேல் அறியாமை ஏற்றுவதாக முடியும். எனது வேலை,
'ஆடும்பரிவேல் அணி சேவலெனப்
பாடும்பணியே பணியாய் அருள்வாய்', என்று கேட்கும் வேலை. இன்னும்,
யாமோதிய கல்வியும் எம்மறிவும் தாமே பெற வேலவர் தந்ததனுல், வந்த வேலை.
6,

XV
என்னுடைய இந்த முயற்சி 'தொண்டலாது உயிர்க்கு ஊதியம் இல்லை' என்ற முடிந்த முடிபில் எழுந்தவேலை.
விச்ச தின்றியே விளைவு செய்குவாய்
விண்ணும் மண்ணகம் முழுதும் யாவையும் வைச்சு வாங்குவாய் வஞ்ச கப் பெரும்
புலைய னேனை யுன் கோயில் வாயிலிற் பிச்சனாக்கினாய் பெரிய அன்பருக்(கு)
உரிய னாக்கினாய் தாம்வ ளர்த்ததோர் நச்சு மாமர மாயி னுங்கொலார்
நானும் அங்ஙனே உடைய நாதனே. இந்தத் திருவாசகத்தைப் படிக்கின்றபோதெல்லாம் என்னை அறியாமல் என் உள்ளத்தில் எக்களிப்புத் தோன்று வது வழக்கம். என்னைச் சிதம்பரசுப்பிரமணியன் திருக் கோயிலில் பித்தனாக்கினான் முருகன். கிடைத்தபேறு பேரன் பர்களுக்கு உரியனானேன். அதுவே திருப்தி. வேண்டுவ தும் அதுவே !
ஆராய்ச்சி, விளக்கம், வருணனை, அநுபவம் முதலியன விளங்கவைத்துக் கட்டுரைகள் எழுதச் சிறியேனின் அறிவு போதாது. சுருதி, யுக்தி, அநுபவம் என்ற மூன்றையும் பயன்படுத்தி விளக்கும் ஆற்றல் என்னிடத்தில் இல்லை. இருந்து எண்ணிச் சிந்தையிற் தேக்கி எழுத வேண்டிய கட்டுரைகளைப்பற்றி ஒரு சிலவே எழுதிய என் அறியாமை யும் அறிவு வளர்ச்சிக்கு வழியாகலாம் என்ற துணிவுடை யேன். இக்கட்டுரைகள் முருகனைப் பற்றிய நினைவோடு எழுந்தவை. படிப்பவர்களுக்கும் அந்த நிலையை உண் டாக்கினால் அதுவே போதுமானது. அறிவு அறிந்த செந் தமிழ்ச் சைவப் பெரியார்கள் அல்லன் நீக்கி ஆசி கூற வேண்டுகிறேன்.
இலங்கை வானொலியில் அவ்வப்போது பேசிய பேச் சுக்கள் இவை. இக்கட்டுரைகள் புத்தக வடிவு எடுக்கும் போது விஷய அமைப்பும் பாஷை நடையும் மாற்றம் அடைய வேண்டும் என்பது நிலையாய கருத்து. வானொலி

Page 11
XVI
யில் காலத்துக்குட்பட்ட கட்டுரைகள் கால இடக்கட்டுப் பாடுகளுக்கு உட்படாது விரிந்து வெளிவருகின்றன.
கல்தோன்றி மண் தோன்ருக் காலத்துக்கும் முன் தோன்றி மூத்தவன் தமிழன். பிறநாட்டார் சாதாரண நாகரிகம் அடையுமுன்னரே மிக உயர்ந்த நாகரிகத்தைப் பெற்று இறை உணர்ச்சியில் நீண்டு வளர்ந்தவனும் தமி ழன். அவன் மொழியும் வாழ்வும் பண்பாடும் எண்ண மும் மிகமிகப் பழமையானவை. இரண்டாயிரம் ஆண்டுக
ளுக்கு முன் சிறந்த குறிக்கோளுடன் வாழ்ந்த பெருங்குடி
மக்களுக்கு இந்நூலை ஆதரிக்கவேண்டும் என்று சொல்ல வேண்டிய தேவையே இல்லை ! -
நான் விரும்பிச் செய்யும் சைவ நற்பணிகளைச் சிறப் பிப்பதற்கு ஆரும் அறியாவகையில் எனக்கொரு புரவல ணுய் அமைந்து ஊக்கம் தந்து இந்நூலின் கையெழுத்துப்
பிரதிகளைச் சீராக்கி எழுதி உதவியவர் திரு. மு. வைத்திய
லிங்கம். நல்லதை நல்லதென்று சொல்லத் தயங்கும் உலோ பத்தன்மை இவரிடம் அணுவளவும் கிடையாது. "இந்த விளக்கம் அருமையாக இருக்கிறது; இதனை மிகமிகத் தெளி வாக விளக்கியிருக்கிறீர்கள்’ என்று பாராட்டிப் பேசுவார் கள். கடிதத்தில் எழுதுவார்கள். அநுபவத்தில் கனிந்த அவர்கள் எப்போதும் ஆசிகூறி என் உள்ளத்தை நிறை வாக்கினுர்கள். தெய்வபக்தியும், தமிழார்வமும், தொண்டு மனப்பான்மையும், நல்ல பண்பும் நிறைந்த இவர் என் எழுத்துக்குச் சிறப்புச் செய்தார். அது சிதம்பரசுப்பிர மணியன் திருவருள் !
என் மதிப்புக்குரிய ஆசிரியர்-பல்லாயிரக் கணக்கான உபாத்தியாயர்களுக்கெல்லாம் உபாத்தியாயர், உலகமே வணங்கும் சீலமுடையவர், சைவத்தமிழ்ப் பேரறிஞர் பண்டிதர் திரு. பொ. கிருஷ்ணபிள்ளை இந்நூலின் கைப் படிகளை வாசித்துக் காட்டியபோது அகமகிழ்ந்து முக மலர்ந்து ஆசி கூறி வாழ்த்தினுர்கள்.

xvii
நான் சிறுவனாக இருந்த காலத்திலேயே திருப்பணி யாம் பெரும்பணிக்கு வழிகாட்டி என்னுடைய சமய வாழ் வுப்பயிருக்கு வித்திட்டு நீரூற்றிக் களை பிடுங்கிக் காத்தவர் திரு. மு. பசுபதி. என் பால் அளவற்ற அன்பும் இறைவனி டம் ஆழ்ந்த பக்தியும் நிறைந்து படரும் கொடிக்குக் கொழுகொம்பு போல அமைந்து என் கருத்துக்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் தருபவர்கள் பலர். அவர்களில் இரு வரை இங்கே குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஒருவர் திரு. மு. சிவராசா, மற்றொருவர் திரு. கா. இரத்தினசிங்கம். திருப்பணிக்கென நூல் எழுதுகிறேன் என அறிந்தார் சிறாப்பர் திரு.சி. சிவசுப்பிரமணியம். கொழும்புக் கிளையின் வெளியீடாகவே இருக்க வேண்டும் எனப்பணித்தார். அவர் அன்பை நான் என்றும் மறக்க முடியாது. கொழும் புக் கிளையின் செயலாளன் திரு. செ. பஞ்சலிங்கம், பொரு ளாளன் திரு. க. இராசரத்தினம். இவர்கள் இருவரும் தலை வர் சிறாப்பர் திரு.சி. சிவசுப்பிரமணியம் அவர்களும் இந்நூலை விற்றுப் பெரும் பொருள் திரட்டித் திருப் பணியை நிறைவேற்றி விட வேண்டும் என்னும் பேரவா பிடித்து ந்த நூல் வெளிவரும் நாளை எதிர்பார்த்த வண் ண மே இருக்கிறார்கள். நூல் வெளிவருவதுதான் தாமதம். திருவருள் வழி நடாத்தத் திருப்பணி விரைவில் நிறை வேறும் !
கலைமகள் ஆசிரியர் வித்துவான் திரு. கி.வா.ஜகந் நாதன் M. A., M. 0. L. எழுதிக்குவித்த நூல்கள் அளப்பல. முருகன் மேல் எளியேன் எழுதும் நூல்களுக்கு வித்திட் டன அவைகளே என்று சொல்ல ஆசைப்படுகிறேன்.
திரு. கி. வா, ஜகந்நாதன், சித்தாந்த சாகரம், பண்டித மணி திரு.சி. கணபதிப்பிள்ளை, கோயம்புத்தூர் நீதிபதி திரு. நா. கிரிதாரிபிரசாத் B. A., B.L.. P. P. A.(Dip), ஆகிய மூவரும் முருகன் மணவாளனுக்கு அணிந்துரை வழங்கு கிறார்கள். என் பணியில் ஆக்கம் தேட என்னை மேலேயே புகழ்ந்து தட்டிக் கொடுக்கிறார்கள். இப்பெருமக்களின்

Page 12
Xνiii
அணிந்துரைகள் நூலுக்குப் பெருமை தேடித்தருகின்றன. அது நான் செய்த பாக்கியமே !
எல்லோர்க்கும் என் நன்றியைத் தெரிவிக்கச் சொற்கள் போதா. உள்ளத்துணர்ச்சியை எப்படிச் சரியாகச் சொல் லிலே வடிக்க முடியும்? இன்னமும் சின்னவனும் முருகன் அருளால் எல்லோரும் பன்னரு நலங்கள் குன்ருப்பாக்கி யம் பெற்று நீடுவாழ வேண்டும் என்று முருகனைத் துதிக் கின்றேன்.
முன் வாயிலில் உங்கள் எல்லோரையும் நெடுநேரம் தடுத்து நிறுத்திவிட்டேன். இனி விருப்பு வெறுப்பின்றி உள்ளே நுழைய வேண்டுகிறேன்.
நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப் பேயேன துள்ளப் பிழை பொறுக்கும் பெருமையனைச் சீயேதும் இல்லாதென் செய்பணிகள் கொண்டருளும் தாயான ஈ சற்கே சென்று தாய் கோத்தும்பீ.
வணக்கம், வணக்கம், வணக்கம்,
ତJf. தனபாலசிங்கன்
−ബ

கோயம்புத்தூர் நீதிபதி திரு. நா. கிரிதாரி பிரசாத்
B. A., B. L., P. P. A. (Dip) egy 5) idjai அளிக்கும் அணிந்துரை
அன்பு தனபாலசிங்கன் அவர்கள் 'முருகன் மணவா ளன்' என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரைப் பகுதிகளைக் கண்ணுற்றேன். கருத்து ஊன்றிப் படித்தேன் முன்பு அவர்கள் எழுதிய ஆறுமுகமான பொருள் என்னும் அரிய நூலையும் படித்துள்ளேன். உயர்திரு தனபாலசிங்கன் அவர்கள் முருகனில் பெரிதும் ஈடுபாடுடையவர்கள். இறை பணியே தன் வாழ்நாளின் பணியாக எண்ணி அழகிய நூல்களை எழுதி அவற்றின் வழியே அருளைப் பரப்பிவரும்
அவர்களுடைய முயற்சியைப் பெரிதும் பாராட்டுகிறேன்.
முதல் நூலை விற்றுப் பதினுயிரம் ரூபாய்களுக்கு மேல் திரட்டி ஒரு திருப்பணியையே முடித்து விட்டார் அன்பர் தனபால சிங்கன். அதை அடுத்துவரும் இந்த நூல் அதனிலும் சிறந்ததாக அமைந்துள்ளது.
பல பொருள்களைத் தாங்கிவரும் பன்னிரண்டு கட்டுரை கள் இந்நூலை அலங்கரிக்கின்றன. முருகன் மணவாளன் என்னும் தலைப்பில் அமைந்த கட்டுரை தமிழ் மரபிற்கே உரிய அகத்துறையின் சிறப்பை விளக்கும் ஓர் அரிய பகுதி. அதனை மேற்கோள்களுடன் நமக்குப் படம் பிடித் துக் காட்டும் பெற்றியே பெற்றி. வள்ளி தெய்வானை திரு மணங்களுக்கு அவர் கற்பிக்கும் தத்துவவிளக்கம் மிகவும் அழகாக அமைந்துள்ளது. வரவழைத்தால் வாராதிருக்க வழக்குண்டோ என்னும் தலைப்பில் பல சுவையான நிகழ்ச்சி களைக் கூறுகிறர் ஆசிரியர். புக்கொளி ஊர் என்னும் அவி நாசியில் முதலையைப் பிள்ளைதரச் சொன்ன சுந்தரர் வர லாறும், ஞானசம்பந்தப் பெருமான் திருமருகல் என்

Page 13
XX
னும் தலத்தில் பாம்பு தீண்டி இறந்த செட்டிப்பிள்ளை ஒரு வனுக்கு உயிர் கொடுத்ததிருவருள் நலனும், அபிராமிபட்டர் அம்பாளிடம் கொண்டிருந்த அன்பினுல் பழுதாகச் சொல் லிய சொல்லை மெய்ப்பித்த வரலாறும், பகழிக்கூத்தர் கடும் பிணியாம் சூலைநோய் நீங்கப்பெற்ற நிலையும், திருப்பனந் தாளில் மேவும் ஈசனை வழிபட்டுக் குங்குலியர் ஈசனைக் கட்டி இழுத்த வரலாறும் மிகமிகச் சுவையாக அமைந்துள்ளன. அவற்றுள் அபிராமிபட்டர் பாடிய இந்த அழகிய பாட்டை ஆயிரம் ஆயிரம் முறை நாமும் பாடி மகிழவேண்டும்.
தனம்தரும் கல்விதரும் ஒரு நாளும் தளர்வு அறியா மனம்தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா இனம்தரும் நல்லன எல்லாம்தரும் அன்பர் என்பவர்க்கே கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே.
இலக்கிய அறிவும் சமய ஞானமும் நிறைந்த ஆசிரியர் இறைவனைப் பல கோணங்களிலிருந்து நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறர். ஒவ்வொரு கட்டுரையும் ஒரு இலக் கிய விருந்தாக இருப்பதுடன் சமயச்சார்புடையதாகவும் அமைந்துள்ளது. இலட்சியத்தைப் பிரதிபலிப்பதே இலக் கியம். இலக்கியங்களிளெல்லாம் சிறந்த இலக்கியம் இறை வனே அந்த இறைவனுடைய பெருமையைச் சொல்லு தற்கு என்றே தமிழகத்திலுள்ள எல்லா நூல்களும் எழுந் தன. அவற்றுள் சிறப்பாக முருகனைப் பற்றிய காவியங்கள் எண்ணிறந்தவை. முருகன் தமிழ்க்கடவுள், கலியுகவர்தன். வேண்டுவார் வேண்டுவதை வழங்கும் வள்ளல். தமிழகம் செய்த தவப்பயனே ஆறுபடை வீடுகளாகத் திகழ்கின்றன. திருச்செந்தூர், திருவாவிநன்குடி, திருத்தணிகை போன்ற எல்லாப் படைவீடுகளும் நம் உடம்பிலேயே இருக்கின்றன. இவற்றை உணர்ந்து இவற்றின் தலைவனுகிய முருகனையும் உணர்ந்து அவனை வழிபட்டு உய்வு பெறவேண்டும். இதனை அழகுபட ஆசிரியர் தம் கட்டுரைகளில் சிறந்த மேற் கோள்களுடன் கூறுகிறர். யமனுக்குச் சவால் என் னும் பகுதியில் அஞ்சாது அயில் வேல்முருகனை வழிபட்ட வர்கள் வீடுபேற்றை எய்துவார்கள் எனத் துணிந்துரைக்
6.

ΧΧί
கும் அருணகிரியாரின் பாட்டு நமக்கு ஊக்கத்தையும், உணர்ச்சியையும், உறுதியையும் தருகிறது.
' படிக்கும் திருப்புகழ் போற்றுவன் கூற்றுவன் பாசத்தினுல் பிடிக்கும்பொழுது வந்து அஞ்சல் என்பாய் பெரும்பாம்பி
னின்று நடிக்கும் பிரான்மருகா கொடும் சூரன் நடுங்க வெற்பை இடிக்கும் கலாபத் தனிமயில் ஏறும் இராவுத்தனே '
இக்கட்டுரைகளுக்கெல்லாம் முத்தாய்ப்பு வைப்பது போல அமைந்திருக்கிறது இறுதியாக வரும் "சும்மா இரு” என்னும் கட்டுரை. ஆடவர்களின் வேலை ஆடுதல். ஒடி ஆடி ஊர் திரிந்து பாழுக்கே உழைத்துப் பிழை பல பெருக்கும் இயல்புடைய மக்களைச் சும்மா இருங்கள் என் முல் இருப்பார்களா ? அரிது அரிது. சும்மா இருக்கும் திறம் அரிது. என்றலும் சும்மா இருப்பதில் ஒரு சுகம்
இருக்கிறது அதிலும் சிந்தையை அடக்கியே சும்மா
இருப்பதில் பெரும் ஆனந்தம் இருக்கிறது. அருணகிரி யாரின் அமுதவாக்கை ஆசிரியர் நமக்கு ஞாபகமூட்டுகிறர்.
செம்மா ன் மகளைத் திருடும் திருடன் பெம்மான் முருகன் பிற வான் இற வான் சும்மா இரு சொல்லற என்ற லுமே அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே.
இதனை வள்ளல் இராமலிங்கப் பெருமான் அழகுபடத் தீந்
தமிழில் கூறும் ஒருபாட்டையும் இங்கு குறிப்போம்.
வாக்கொழிந்து மனமொழிந்து மதிஒழிந்து மதியின்
வாதனையு மொழிந்தறிவாய் வயங்கி நின்ற விடத்தும் போக்கொழிந்தும் வரவொழிந்தும் பூரணமாயதுவும்
போன பொழுதுள்ள படி புகலுவ தெப்படியோ நீக்கொழிந்த நிறைவே மெய்ந்நிலையே யென்னுடைய
நேயமே யானந்த நிருத்தமிடும் பதியே ஏக்கொழிந்தா ருளத்திருக்கு மிறையே யென் குருவே
எல்லா மாயல்லதுமா யிலங்கிய மெய்ப்பொருளே,

Page 14
XX}
நாம் எல்லோரும் ஆசாபாசங்கள் அற்றுச் சும்மா இருந்து இறைவனை நினைக்க வேண்டும் என்பது ஆசிரியன் ஆசை. இதுவே நமது பிறப்பின் குறிக்கோள்.
நூலின் நடை மிகவும் நன்றக இருக்கிறது. கவிதை கள் அழகுபெற எடுத்து ஆளப்பெற்றுள்ளன. எடுத்த புத்தகத்தைக் கீழேவைக்கக் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை.
*
படித்துக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது. அடி
யேன் பலமுறை படிக்க விரும்புகிறேன்.
திரு. தனபாலசிங்கன் அவர்களை அறியும்பேறு அண்மை யில் தான் அடியேனுக்குக் கிடைத்தது. அவர்கள் ஆற் றும் அருந்தொண்டை அவர்களுடைய பிறந்த பொன்னு டாகிய உரும்பராய்க்கே சென்று நேரில் அறியும் பேறு பெற்றேன். மிகச் சிறந்த ஆலயத்திருப்பணியை அழகுற முடித்துள்ளார்கள். தமிழுக்கும், சைவத்திற்கும் அவர் கள் ஆற்றிவரும் தொண்டை வெறும் சொற்களால் புகழமுடி யாது. தனக்கென வாழாத தன்னலமற்ற ஒழுக்க சீலர் முருகன் பால் பேரன்பு கொண்டவர்; எடுத்தகாரியத்தை இடைவிடாது முயன்று செவ்வனே முடிக்கும் திறனுடைய வர். அவர்கள் எழுதியுள்ள இவ்வரிய நூலைப் பொன்னே போல் போற்றி ஆண் பெண் அனைவரும் இதனைப் படித்து இன்புற வேண்டுகிறேன். அரும்பணிக்கென்றே எழுதப்பெற்ற இந்நூலுக்கு விலை ஏது? கொடையுள்ளம் படைத்த ஈழநாட்டு மக்கள் வள்ளன்மையுடன் வாரி வழங்கி அவர்கள் ஏற்றுள்ள அருட்பணியை முடிக்க ஆவன செய்ய வேண்டுகிறேன்.
வாழ்க தனபாலசிங்கன் 1 வளர்க அவர் பணி !!
கோயம்புத்தூர், நா. கிரிதாரி பிரசாத்
6-4-64.

6) சித்தாந்த சாகரம், பண்டிதமணி
சி. கணபதிப்பிள்ளை அவர்கள் அளிக்கும் அணிந்துரை
கடவுளை வழிபடுவதற்கும் சந்தியாவந்தனம் செய்வ தற்கும் தனக்கு நேரங்கிடைப்பதில்லை என்று ஒருமுறை ஒருவர் விவேகானந்த சுவாமிக்குச் சொன்னுர். அப் பொழுது, ' ஏ மனிதா, வேறு என்ன என்ன அலுவல் களுக்கு உனக்கு நேரங்கிடைக்கிறது, சொல்லு ' என்று கோபாவேசத்துடன் பேசினுர்கள் சுவாமிகள். இச்சம்பவம் சுவாமிகளின் சரித்திரத்தில் வருகின்றது.
பெரியோர்கள் கடவுள் வணக்கத்தையே முக்கிய குறிக் கோளாக வைத்துக் கொண்டு, வாழ்க்கைத் துறைகள் அனைத்தையும் அதற்கு அங்கமாக்கி வாழ்ந்தார்கள், கவலைச் சமுத்திரமாகிய பிரபஞ்சத்தைத் தாண்டுதற்கு அவர்களே
வழிகண்டவர்கள்; வழிகாட்டிகள்.
'மானுடப் பிற விதானும் வகுத்தது மனம் வாக்காயத்
தானிடத்தைந்து மாடு மரன் பணிக் காகவன்ருே வானிடத் தவருமண் மேல் வந்தரன் றனையர்ச்சிப்பர் ஊனெடுத் துழலு மூம ரொன்றையு முனராரந்தோ",
என்றிரங்குகின்றது சிவஞானசித்தியார்.
கலியுகத்திற்கண்ட தெய்வம் திருமுருகன். அவன் கலியுகவரதன், அவனுடைய பிரதாபங்களை எடுத்து எடுத் துப் புகழ்தலும், அவன் பணிபுரிதலுமே நாம் உய்தற்கு வழி; நல்வழி. இந்த நல்ல வழியைக் கடைப்பிடித்தொழு கித் தமக்கும் பிறர்க்கும் பயன்படுபவர் ஒருவர் இந்தக் காலத்திலும் உளர் என்ருல் அந்த ஒருவர் திரு செ' தனபாலசிங்கன் B. A. (Lond.) அவர்களேயாவர். இவர் உரும்பராயிற் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் சிதம்

Page 15
XX1ν
பர சுப்பிரமணிய சுவாமியை உபாசனை செய்பவர். சமீ பத்தில் இவர் வெளியிட்ட “ஆறுமுகமான பொருள்' என்கின்ற அருமந்த நூல் இவருடைய சுப்பிரமணிய உபாசனையின் பெறுபேறேயாம். இந்த நூலால் பதினு யிரத்துக்கு மேற்பட்ட தொகை சேர்ந்ததென்றும், அத் தொகை முழுவதும் சிதம்பர சுப்பிரமணிய சுவாமி கோயிற் றிருப்பணிக்கென்றே சங்கற்பிக்கப்பட்டதென்றும் அறியும்
6.
போது, நூலாசிரியர்பால் மிக்க அச்சத்தோடுகூடிய மதிப்பு
உண்டாகின்றது
அற்கா வியல்பிற்றுச் செல்வம் அது பெற்ருல் 1 ܠܵܐ ܢ .
அற்குப ஆங்கே செயல்
என்கின்ற திருவள்ளுவதேவரின் திருவாக்கின் பொருளை
முருகபக்தர்களின் மனத்தில் ஆறுமுகமான பொருள் பதித்துவிட்டது என்பது எனது எண்ணம்.
செல்வம் நிலையாத இயல்பினையுடையது. நிலையாத
செல்வம் வந்து தங்குகிற காலத்தில், அது விரைந்து புறப்பட்டுச் செல்லுவதற்கு முன்னமே, அச்செல்வத்தைக்
கொண்டு நிலையாய காரியங்களை உடனே செய்க என்பது
தேவர்வாக்கின் கருத்து
திருக்கோயிற் றிருப்பணி என்றும் நிலையாயதொரு பெரிய காரியம்.
பெரும் பொருள் செய்து பெரிய காரியம் விளைத்த
ஆறுமுகமான பொருளைத் தொடர்ந்து, முருகன் மணவா ளன் எனப் பெயரிய மற்ருெரு நூலை நூலாசிரியர் இப் பொழுது உதவியிருக்கின்றர். இதுவும் முருகப் பிரபாவம்
பேசுவது; பல்வகைச் சிறப்புக்களோடு கூடியது முருகன் மணவாளன் என்று தொடங்கி சும்மா இரு என்று முற்று
கின்ற பன்னிரு அத்தியாயங்களைக் கொண்டது இந்நூல்.
பன்னிரு அத்திய பங்களும் ஆறுமுகம  ை பொரு
புன்னிரண்டு திருக் கைகள் போலும்.
 

* XXV"
(1) முருகன் ஆன்ம நாயகன்; (i) அழுதால் அவனைப் பெறலாம்; (i) அவன் சின்னஞ் சிறியன் - விளையாட்டுப் பிள்ளை - ஆயினும் அவன் விளையாட்டு உய்வார்கள் உய் யும் விளையாட்டு, (ty) அவன் உளன்; அவனை நம்பி னுேர் கைவிடப்பட மாட்டார்; (v) உன் சிந்தையைக் கோயிலாக்கு, அதிற் குடியிருப்பான்; (v) அவன் மாண் பும் அருளும்வண்ணமும் அளவைக் கெட்டாதவை. அவன் வேதக் காட்சிக்கும் உபநிடதத்துச்சியில் விரிந்த போதக் காட்சிக்குங் காணலன். அவனைக் கண்டாரைக் கேட்டறி யேம்; கண்டவர் விண்டிலர். (Vi) அழிய வேண்டியவை களின் அழிவே ஆக்கம். (vi) அவன்பக்தர்க்கு மரணப் பிரமாதம் இல்லை. (ix) வாசியருளியவை வாழ்விக்கும் வாசிதான் காரியம், வாசிக்காரன் முருகன். (x) அருட் கண்களே கண்கள்; அவை காணுங் காட்சிகள் நவையறு காட்சிகள். (x) தொண்டர்தம் பெருமையைக் கூறுதல் அரிது. (xi) நீ ஆட்டுவான் வழிநில்; அவன் எடுத்துச் சுமப்பான் என்ற கருத்துக்களும் அவை போல்வனவும் இந் நூலின் பன்னிரு அத்தியாயங்களிலும் முறையே படித் துணரத்தக்கவை. இக்கருத்துக்கள் சிந்தனைக்கு வித்துக் கள். இவை முருக பக்தியை மேன்மேல் முதிரச் செய்து, அவன் வயப்பட்டு அவன் பணி நிற்றற்கு உபகாரமானவை.
*ஏகனுகி இறைபணி நிற்க' என்பது சிவஞானபோதம்.
இந்நூலாசிரியர் அருண்முறைகளாகிய திருமுறை "கிளில் திளைத்தவர்; சமய தத்துவ சாத்திரப் பயிற்சி மிக்க வர். நக்கீரர், அருணகிரியார், கச்சியப்பர், குமரகுருபரர் முதலிய முருகபக்தர்களின் உயிர்ப்பு இவர் எழுத்துக்களில் துள்ளிக்குதிக்கின்றது. இவர் மேலும் உயிர்க்குறுதி பயக் 勒 கும் நூல்கள் பல செய்யவும். அதனுல் சிதம்பர சுப்பிர " மணிய சுவாமி கோயில் திருப்பணி மேன்மேற் சிறக்கவும்,
திருமுருகன் திருவருள் முன்னிற்பதாக! திருநெல்வேலி, சி. கணபதிப்பிள்ளை
94.64,
f
iii

Page 16
6.
கலைமகள் ஆசிரியர்
வித்துவான் கி. வா. ஜகந்நாதன் M. A., M.C. L. அவர்கள் அளிக்கும் அணிந்துரை
முருகனுடைய பன்னிரண்டு கைகளைப் போன்ற கட்டுரைகள் பன்னிரண்டு அடங்கிய இந்த நூல் தெய்வ மணம் கமழ்கின்றது. "முருகன் மணவாளன்' என்பதைத் தலைவாயிற் பூஞ்சோலையாகப் பெற்றுச் "சும்மா இரு" என்ற அநுபூதி வாக்கோடு நிறைவடைகிறது. முருகனைப் பற் றிய சிந்தனையில் ஆழவும், சிவபெருமானுடைய பெருமை யில் துளையவும், நித்தியமான உண்மைகளில் நீந்தவும் செய்வதற்குரிய பல கருத்துக்கள் இந்த நூலில் ஒளிர் கின்றன.
முரு கனே ஆருயிர்களுக்கெல்லாம் தனிநாயகன், உயிர்க்கூட்டம் முழுவதும் பெண்கள் என்ற கருத்தை இனி தாகப் புலப்படுத்துகிறது முதல் கட்டுரை. "நாம் ஒவ் வொருவரும் வள்ளிநாயகியாக வேண்டும். முருகன் மண வாளன் என்று உள்ளத்தால் பெண்மையை மேற்கொள்ள வேண்டும்’ என்பதை வற்புறுத்துகின்றர் ஆசிரியர்.
'வரவழைத்தால் வாராதிருக்க வழக்குண்டோ ?' என்ற கட்டுரையில், முறுகிய அன்புடையவர்களுக்கு ஆண்ட (' வன் தடையின்றி வந்து அருள்செய்வான் என்ற கருத்' தைப் பல வரலாறுகளைக் கூறி நிறுவுகிருர். சுந்தரர்" கதையும், திருமருகல் செட்டிப்பெண் சரித்தரமும், அபி ராமிபட்டர் அற்புத வரலாறும், பகழிக்கூத்தர் வாழ்வும்: கலயர் பக்தியும், அமெரிக்காவிலுள்ள நியாயவாதியின் உண்மை வரலாறும் எடுத்துக் காட்டுக்களாக வருகின்றன.
 

Χχνii
'இன்னமும் சின்னவன் தானுே ?" என்பது முருகன் இளங்குமரனுக வந்து அருள்செய்த அற்புத நிகழ்ச்சிகளை நினைப்பூட்டுகிறது. இப்படியே ஒவ்வொரு கட்டுரையும் பக்திமணமும் உயர்ந்த உண்மையாகிய தேனும் கொண்டு விளங்குகிறது. "தலை எழுத்து அழிந்தது', 'யமனுக்குச் சவால்", குதிரைக்கார முருகன்' என்பவை கந்தர் அலங் காரப் பாடல்களை அடிப்படையாக வைத்துப் படர்ந்த கட்டுரைகள்.
இந்தக் கட்டுரைகளினிடையே அருணகிரியார் வாக் கும், சைவசமயாசாரியர்களின் அருளுரையும் வருகின்றன. தாயுமானவரும் திருமூலரும் காட்சிதருகிறர்கள். ஆழ்வார் களும் தோன்றுகின்றனர். உபநிடதக் கருத்துக்களும் சைவ சித்தாந்த உண்மைகளும் இழையோடுகின்றன. பல பல பண்டை வரலாறுகள் சுவைபட நடைபோடுகின்றன.
சொல்வதைத் தெளிவாகச் சொல்லத் தெரிந்தவர்
ஆசிரியர். அழகாகவும் சொல்கிருர் பக்தி உணர்ச்சி
ஊற்றெடுக்கும் உள்ளத்தினர் என்பதைப் பல இடங்களில் உருகி உருகிச் சொல்லும்போது உணர்கிருேம்.
அழகிய மலர்கள் கோத்த மாலையைப் போன்ற இந்தப் புத்தகம் பக்தர்களுக்கும் தமிழன்பு உள்ளவர்களுக்கும் இன் பத்தையும் எழுச்சியையும் உண்டாக்கும் என்று உறுதி யாக எண்ணுகிறேன்.
பூரீ சிதம்பர சுப்பிரமணியனிடத்தில் ஆராத காதல் மீதுTர்ந்த அன்பர் திரு. தனபாலசிங்கன் இன்னும் இத்த கைய மாலைகள் பலவற்றைக் கோத்துத் தர வேண்டுமென்று
வாழ்த்துகிறேன்.
'காந்தமலை" கி. வா. ஜகந்நாதன் கல்யாண நகர்,
8.4.64.

Page 17

பொருளடக்கம்
We முன்னுரை - i
காப்பு - xxxi முருகன் மணவாளன் ... 1.
வரவழைத்தால் வாரா திருக்க வழக்குண்டோ? 物2
இன்னமும் சின்னவன் தானுே ? . | 24 தெய்வம் உண்டென்றிரு 。 32 சிக்தையிற் சிவன் poo 41 கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் 50 தலையெழுத்து அழிந்தது w 63 யமனுக்குச் சவால்! - - - 73 'குதிரைக்கார (இராவுத்த) முருகன் 82
இரு கண்கள் o so 89 ாகடமாடுங் கோயில்கள் 108 சும்மா இரு 119

Page 18
y
-
-
- -
-
.
 
 
 
 
 
 
 
 

A திருச்சிற்றம்பலம்
காப்பு
கணபதி
முந்திவரு சூரரின மாளச் சிவந்தவனை
முன்புகடல் நீர்சுவற வேல்தொட்ட செங்கையனை முண்டகனை நூல்வினவி வாதித்த புங்கவனை
மொய்ம்புபெற வேதொழுத கீரற்கி ரங்கினனை எந்தையை என் ஆவியை என்னுவிக் கருந்துணையை
என்சிரசில் ஒலமிடு பாதச்ச தங்கையனை
இன்பமுரு கேசனைமெய்ஞ் ஞானக் கொழுங்கனியை
எங்கள்கர னுரரின்மயி லோனைப் புரந்தருள்க அந்தரம் எலாம் அதிர வாய்விட்டு மண்டிவரு
மஞ்சலரெ லாமுறிய வால்சுற்றி மஞ்சுதளை
அங்கைகொடு தாவிஅத னிரைப்பி பூழிந்துகடல்
அம்புவியெ லாம்நெளிய வோடித்தி ரும்பிவிட மந்தரமெ லாம்.அசைய வேமுட்டி அங்குலவு
வன்பரிதி தேர்முறிய வேகுத்தி வெண்டரளம் வந்துலவும் ஏழ்சலதி நீர்வற்ற உண்டுமிழும்
வண்டுகள்ம தாசலம தாயுற்றி ருந்தவனே.
திருவருள்
திருக்கஞ்ச இருகரத்தின் அபயவர தமும் சேர்
திகழுமர கதம் அளித்த தெய்வசிகா மணியை அருக்கன்சந் திரன் தவழும் புரிசைவிரிஞ் சையில்வாழ் ஆறுமுகத் தரசைஎ மை ஆண்டவனைப் புரக்க பெருக்கம்சந் ததமேவுஞ் சிவநாத னிடத்திற்
பிறந்தவொரு சிறுபாலன் பெருங்காணி பெறவே இருக்கஞ்சன் முதலமர ரரகரஎன் றேத்த
இளைத்தபிறை சூடுமிடி வளைத்ததிரு வருளே

Page 19
xxxii
முடிஆ றுடையாய் குமராசிவ மோட்சத் தேற்றும்
முருகா அசுரே சர்களாகிய காட்டைப் பாற்றும்
முனைவா கருணு கரனேமறை வாக்கிற் சாற்றும்
முடியா முதலே த&ளஓதிம ஆர்க்குப் பூட்டும் ச் 霹 அடியார் துணையே அவர்பால்விளையாட்டைக் காட்டும்
அமுதே கனியே நறவேமுரு காற்றைக் கேட்கும் அரசே எமதா ருயிரேயெமை ஊத்தைக் கூட்டில்
அடையா நெறிநீஅருள்வாயென் வாழ்த்திப் போற்றி விடியா மலமாயைகளாம் இருள் தீர்த்துத் தீர்த்து
விழிநீர் தருயோ கிகள் சேர்தரு வீட்டுக்கேற்ற
வெளிரு அமுதாய் உலகோரிடர் நீக்கப் பாட்டு
மிகவோ தமுனு ளொருநேயனுள் நாக்கீற் றீட்டும் வடிவே லுடனே வயல்சூழ்கர னுார்க்குள் தோற்றும் y
மயிலேறியசேய் சிறுவாணுதல் மேற்பொற் பூத்த .دي மலைமான் முலையூறியபாலொடு கூட்டிச் சாத்தும்
வளைபோல் மதிபோல் ஒளிசேர்திருநீற்றுக் காப்பே
திருவேல்
முடியொர் ஆறுடை யானைஎம் ஐயனை
முதல்வனைச் செவ்வேளைப் ܨ ܣ -- படியெ லாம்புகழ் தேவனை விரிஞ்சை அம் , - **
பதிமுரு கனைக்காக்க கொடிய தானவர் குருதியில் ஆடிவெங் " : بلدة حر
குடலெனுந் தொடைசூடி நெடிய யாக்கையின் நிணமெலாம் அருந்திய,
அவன் கையின் நெடுவேலே,
 
 
 

ή
xxxiii
திருமயில்
தொண்ட ஞக மைக்கொ ரூஞ்சிறு தோன்ற லைச்சதுர் வேதநூல் சொல்லு மாமணி வாய 2னச்சுக
மாயி ருந்தும ணங்கொளும் / வண்டு சேர்தரு நீப மாலைய
னைத்தி ருக்கர னுாரில்வாழ் மரக தக்கொடி பெற்ற செஞ்சுடர்
மணியை யன் பொடு காக்கவே அண்ட கூட நடுங்க மால்வரை
தூளி யாக அத் தூளியால் ஆழி ஏழு நி ரம்பி மேடுப
டக்க லாபம டித்தெழுந் தெண் தி சாமுக முங்க ட்ைக்கண் மைக்கு முன்னம்உ லாவியே என்று மாட லியற்றி வாழவன்
ஏறு கின்றம யூரமே.
திருமுருகாற்றுப்படையும் திருப்புகழும் அம்மைமுலை யுண்டுவிளையாடும் இளை GLIT206 T 60 ED
யாட்கொண்ட குமரேசனைச் செம்மையுள ஆறுமுக னைத்திரு விரிஞ்சைவரு
சேயைப் புரந்தருள்கவே மும்மைமல மகலநக் கீரமுனி சொன்னதிரு
முருகா றெனுந்தேறலும் எம் அருண கிரிநாதர் ஒதுபதி ருை
யிரந்திருப் புகழமுதுமே.

Page 20

1999 பேரம்
10:59:
பயா
தில்லைச் சிதம்பர நாதனை " வினையோட உனை நாட எனை நாடி இதுவேளை விருதோடு அடிவருவாய் என்றேத்த வந்தமர்ந்தான் சிதம்பர சுப்பிரமணியனாய் உரும்பராயில் இத்திருக்கோயிலில் !
ஏன் ? முருகனாகத்தானே அவன் கலியுகத்தில் கடாட்சிக்கிறான் !

Page 21
Y
rt;
 
 

*
6al ஓம் முருகா
முருகன் மணவாளன்
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறைந்து எல்லே இலா
தானுய் நின்றிலங்கும் எல்லாம் வல்ல இறைவனை
பூரீ ருத்திரம் "தஸ்க ராணும்பதயே நமோ நம' என்
ஏத்துகிறது, போற்றுகிறது.
இறைவனைக் கள்வன் என்று கூட்ச் சொல்லா
மல் கள்வர் தலைவன் என்றல்லவா சொல்கிறது பூரீ
ருத்திரம். கள்வன் என்பதில் ஓர் இரகசியம் இல்லா
மல் இல்லை. நற்றமிழ் வல்ல ஞான சம்பந்தர் தன்னை ஞானசம்பந்த நாயகியாக்கி,
'நீர்பரந்த நிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதிசூடி ஏர்பரந்த இன வெள்வளை சோரஎன் உள்ளம் கவர் கள்வன் '
என்றும்
'மறைகலந்த ஒலி பாடலொடா டலர் ஆகிமழுஏந்தி இறைகலந்த இன வெள்வளைசோரஎன் உள்ளம் கவர்கள்வன்'
என்றும் ஆண்டவனை உள்ளம் கவர் கள்வன் என்று பாடித் தம்காதலை வெளிப்படுத்துகிருரர்.
தித்திக்கும் திருவாசகம் தந்த மணிவாசகரும் ஒரு கள்வனைக் காண்கின்றரர். இறைவன் பால் தம்மை ஒப்படைத்து இறைஞ்சு பவர்களுக்கு அவர் கள் இரந்த பொருள்கள் எல்லாவற்றையும் கொடுத்து விடுவான் அந்தக கள்வன. தொண்டர்கள் தம்

Page 22
2 முருகன்
ஆசையை அவனுக்குச் சொல்ல வேண்டும் என்ப
தும் இல்லை. ஏன்? அவன்தான் உள்ளத்திலே
இருக்கிற பெரிய கள்வன் ஆயிற்றே.
பாடுகிறர் மணிவாசகப் பெருமான், பரந்துபல் லாய்மல ரிட்டுமுட் பாதடி யேஇறைஞ்சி இரந்தஎல் லாம் எமக் கேபெற லாம் என்னும் அன்பர் உள்ளம் கரந்துதில் லாக்கள்வ னேநின்றன் வார்கழற்கு அன்பெனக்கு நிரந்தர மாய் அரு ளாய்நின்னை ஏத்த முழுவதுமே.
அப்பர் சுவாமிகள் அழுது அழுது ஆண்ட
ఎడింT, அம்பலத்தாடும் ஐயன அடைந்தவர். அவர் ஒருநாள் பெண்ணுகிவிடுகிருரர் அதுவும் நல்ல இள
மங்கையாக, வ8ளயல் அணிந்த வேல்விழியாளாக
மாறி விடுகிருரர். ஒளிவ8ள ஒண்தொடியாளிடத்திலே
வருகிருன் மணவாளன்.
நல்ல கம்பீரமான கோற்றம்; திருமேனியில் திருநீறு; மார்பிலே முப்புரிநூல்; தலையிலே மூன் மும் பிறைச் சந்திரன்; உளவு காரனைப் போல வேடம் வந்தவர் சும்மா இருக்கிரு ரா ? அதுவும்
மணமகள் நல்ல நித்திரை. மெதுவாக அவள் கையைப் பிடித்து வளையல்களை ஒவ்வொன்முக எண்ணுகிருரர். தலைவியின் தூக்கம் கலேகிறது.
எழுந்தாள். பித்துப் பிடித்தவள் போல் ஒரு மயக்
கம். கைகளைப் பிடித்தவனைக் கைவிட்டு விடுவதா? உம்மைவிட எனக்கு வேறு யார் துணை " என்கிருள் தலைவி.
புற்றிலே இருக்கின்ற பாம்புகளை அரையிலே கட்டிய அந்த ஆசாமி 5ாமிருக்கும் ஊர் திருப்
 

முருகன் மணவாளன் 3.
புறம்பயம்" என்று மட்டும் சொல்லி விட்டுப் போய் விட்டார் பூதகணங்களுடன் இதனை அப்பர் அழுது அழுது சொல்கிருர், 。
முற்ருெருவர் போல முழுநீருடி முளேத்திங்கள் சூடி
முந்நூலும் பூண்டு ஒற்ருெருவர் போல உறங்கு வேன்கை ஒளிவளையை
ஒன் ருென்ரு எண்ணு சின் ருர் ,、 மற்ருெருவ பில்லைத் துணையெனக்கு மால்கொண்டாற்
போல மயங்கு வேற்குப் புற்றரவக் கச்சார்த்துப் பூதஞ்சூழப் புறம்பயம் நம்
மூரென்று போயி னுரே.
இந்தப் பாடலில் உறங்குவது என்பது திரோத மலம் காரணமாக உலக வாழ்வில் மயங்கிப் பேரின்ப நெறியை அறியாதிருத்தல், வளையல் என்பது உயிரை வளைந்திருக்கிற உலக வாழ்வுப் பற்றுக் கள், வளையல்களை எண்ணுவதாவது பற்றுக்களை ஒவ்வொன்முகச் சோத செய்து ஒவ்வொன்றும்
(ର (3 இன ெ 3. எவ்வளவு கடித்திருக்கின்றது என்று கணக்கிடுதல்
பேரின் பச் சுவை அறியும் தகுதி அடைதற்கு உலகப் பற்றுக்கள் முழுவதும் அற்றுப்போக வேண்டும். அதனல் ஆண்டவன் ஒவ்வொன்முக எண்ணிப் பார்க்கிருரர். அருட்பார்வை செய்கிருரர் அருட்சோதி வள்ளல். ஆனல் மலம் நீங்குவதற் குத் தகுதி உண்டாகவில்லை. இன்னும் தன்னை * அறிய இடம் உண்டு என்று அறிவித்துவிட்டுப்
போகிருரன் இறைவன்.
பேரின்பக் கருத்தைச் சிற்றின்ப நெறியில் வைத்துப் பேசிப் பார்க்கிருரர் அப்பரடிகள். ஒவ் வோர் உயிர்க்கும் அதனதன் பக்குவம் அறிந்து

Page 23
4. முருகன் மணவாளன்
அருள் செய்கிருரன் என்பதற்கு இதைவிடச் சான்று வேண்டுமா ?
*ஆமையரவோ டேனவெண்கொம் பக்குமா?ல பூண் டாமோர்கள்வர் வெள்ளர் போல உள்வெந்நோய் செய்தார் ஓமவேத நான்முகனுங் கோனுகனை யானுஞ் சேமமாய செல்வர்கானூர் மேய சேடரே."
என்பது சம்பந்தர் தேவாரம்.
காதல் முற்றிய காதலி கண்ட கண்ட பொருள் களைப் பார்த்துப் பேசுவது வழக்கம் ' காமமிக்க கழிபடர் கிளவி' என இதனை அழைப்பார்கள். ஞானசம்பந்த நாயகிக்கு விரகதாபம் மேலிட்டு விடு கிறது ஆட்கொள்ளவேண்டிய காதலன் பிரிந்து நிற்கிருரன், அவனுடைய பிரிவால் மனம் காற்றரய்ச் சுழன்று பேயாய் அலைகிறது. பிரிவு தாங்க முடிய வில்லை, வண்டு ஒன்று வருகிறது. பேசத்தொடங்கு கிருரர்.
வளம்பொருந்திய அலைகள் நிறைந்த பொய்கை யில் பூத்த தாமரை மலரிலே இருக்கின்ற கேனே உண்டு பெண்வண்டோடு அலைபோல வருகின்ற இசையினைப் பாடுகின்ற அரசவண்டே, -  ിങ്ങ് നഞu அணிந்த சடாமுடியையும் எலும்பை அ னிங் த மார்பையும் உடையவரும், திருத்தோணிபுரம் என் னும் சீகாழியில் கோயில் கொண்ட பண்டரங்கரு
மாகிய என் காதலனுக்குப் பிரிவினல் மிக வருக் "
தும் என் நிலையை இரக்கத்தோடு ஒரு தரம் சொல்ல வேண்டும் என்கிருரர் சம்பந்கர். எப்படி இருக்கி றது ஒரு நெறிய மனம் வைத்து உணர் சம்பந்த ரின் காதல் விளையாட்டு 1
 

முருகன் மணவாளன்
வண்டைத் தூதுவிடும் பாடல் இதுதான், *வண்தரங்கப் புனற்கமல மதுமாந்திப் பெடையினெடும் ஒண்தரங்க இசைபாடு மளியரசே ஒளிமதியத் துண்டர் அங்கப் பூண்மார்பர் திருத்தோணி புரத்துறையும் பண்டரங்கர்க் கென்நிலைமை பரிந்தொருகாற் பகராயே."
米 米 米 ஆண்டாள் கண்ணனைக் காதலனுகவே எண்ணி வாழ்ந்த குடிக் கொடுத்த சுடர்க் கொடியாள். *மானிடவர்க் கென்று பேச்சுப் படில் வாழகில்லேன்
கண்டாய் மன்மதனே." என்று வாய்விட்டு உரைத்து ஓங்கி உலகளந்த உத்தமனையே காதலனுக்கிக் கொண்டவள்.
வண்டைப் பார்த்து ஞானசம்பந்த நாயகி பாடக் குயிலைப் பார்த்துக் குரல் எழுப்புகிருரள் ஆண்டாள். M. என்புருகி இனவேல் நெடுங்கண்கள் இமை பொருந்தா பலநாளும்
துன்பக் கடல்புக்கு வைகுந்தன் தோணி பெரு துழல் கின்றேன் அன்புடை யாரைப் பிரிவுறு நோயது நீயும் அறிதிகுயிலே பொன்புரைமேவி கருளக் கொடியுடைப் புண்ணியனை வரக்கூவாய்.
எப்படி இருக்கிறது ஆண்டாளின் தெய்வீகக் காதல் 1 -
பரிபாடலிலே ஒரு பாட்டு, "நான்மறை விரித்து நல்லிசை விளக்கும்
வாய்மொழிப் புலவீர் கேண்மீன்; சிறந்தது - காதற் காமம், காமத்துச் சிறந்தது * விருப்போர் ஒத்து மெய்யுறு புணர்ச்சி.” -
தமிழ் இலக்கியத்தில் களவு கற்பு என இரு வகை மணம் உண்டு. இவற்றைக் கைகோள் என அழைப்பர். கைகோள் என்ருரல் ஒழுக்கம் என் பது பொருள். களவொழுக்கம் தமிழ் நூல்களில்

Page 24
6 முருகன் மணவாளன்
சிறப்பாகப் பேசப்படுகிறது. ஆலவாயில் அவிர் சடைக் கடவுள் களவியல் என ஒர் இலக்கண நூலை நமக்கு அளித்தமையே களவொழுக்கம் காட்டும் காதலின் அருமையையும் நமக்குச் சொல்லி நிற் கின்றது.
சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன் அறும் ஏரகமும் நீங்கா இறைவனும் முருகன் தமிழ் நாட்டின் தனிப்பெரும் தெய்வம். அவன் தமிழ் நாட்டுக் குறமகளை மணந்தது களவுத் திருமணம்
திருச்செந்தூரில் சூரசம்மாரம் நிகழ்த்தி அதற் குப் பரிசாகத் தேவேந்திரனிடம் திருப்பரங்குன் றத்தில் தெய்வயானை அம்மையைப் பெற்றது கள வின்வழி வராத கற்புத் திருமணம். βγ
வள்ளி எம்பெரும்ாட்டியைக் களவில் மனங் தான் முருகன், அவளைக் களவிலேயே மணக்க வேண்டும் என்ற கவலை முருகப்பெருமானுக்கு. இங்கிலவுலகில் உயிர்கள் அத்தனையும் உய்யவேண் டும் என்ற தீராக் கவலை அப்பெருமானிடம் இருக் கிறது என்பதை வள்ளி திருமணம் நமக்குக் காட்
டித் தருகிறது.
அருணகிரிநாதர் செம்மான் மகளைக் களவு கொண்டு வரும் ஆகுலவன் என்று பாடுவதில் என்ன ஆனந்தம் 1 ஆகுலவன் என்றால் கவலை கொண்ட வன் என்பது பொருள். வள்ளியைத் திருடிச் செல்ல வேண்டும் என்று அவனுக்குத் தீராத கவலை. முரு கன் பரம கருணநிதி அல்லவா ? அவனைச் சென்ற 601-u-1 வேண்டும என்ற காதல் ஒவ்வொருவருக்கும்

முருகன் மணவாளன் 7
உள்ளத்தில் உரம்பெற வேண்டும். பக்குவம் அடைந்த ஆன்மாவை வலியவந்து ஆட்கொள்வான் முருகன் !
兴 : 来 கந்தரநுபூதியில் ஒர் அற்புதமான பாடல். நாதா குமரா நம என்று அரனர்
ஒதாய் என ஒதியது எப்பொருள்தான் வேதா முதல் விண்ணவர் சூடுமலர்ப் பாத குறயின் பதசே கரனே. பிரணவத்தின் பொருள் தெரியாது விழிக்கி முன் பிரமன், அவனுக்கு நல்ல குட்டு விழுகிறது. முருகன் அவ்வளவுடன் விட்டுவிடவில்லை. படைத் தற் கடவுளுக்கே பிரணவத்தின் பொருள் தெரிய வில்லை என்ற குற்றச் சாட்டுடன் சிறைக்கே தள்ளி விடுகிருரன். தந்தையார் வருகிருரர். நாதா குமரா என்று வணங்கிக் கை க்ட்டி வாய்பொத்திக் கேட்கிருரர் பிரணவத்தின் பொருளை, ஒதியது எப் பொருள்தான் என்ற ஒரு வினுவை இங்கே எழுப்பு கிருரர் அருணகிரிநாதர்.
IELD
பிரமன் முதலிய தேவர்கள் எல்லோரும் தத் தம் த லை க ளில் சூடிக்கொள்ளும் தாமரைமலர் போன்ற திருவடியை உடையவன் முருகன். அப் பெருமான் வள்ளிநாயகியின் திருவடியைத் தலை "யணையாக வைத்திருக்கிறனே! என்ன புதுமை ! ஒதியது எப்பொருள்தான் என்ற வினவுக்கு விடை இங்கே வருகிறது ஆன்மாக்களை வலியவந்து தடுத் தாட்கொள்வான் அந்தப் பெருமான். இது வே அதற்கு விடையாகும். பிரணவத்தின் பொருள்
-

Page 25
8 முருகன் மணவாளன்
இதுதான் என்று கூடச் சொல்லலாம் போலிருக் கிறது.
நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்துருகும் அநுபூதி யில் வள்ளி சன்மார்க்கத்தை அடுக்கிக்கொண்டே செல்கின்றர் அருணகிரிநாதர். 'பணியா என வள்ளி பதம் பணியும் தணியா அதிமோக தயாபரனே.”
'செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிற வான் இறவான்'
'பாளைக் குழல் வள்ளி பதம் பணியும்
வேளைச் சுரபூ பதி மேருவையே” *வடிவிக் ரமவேல் மகிபா குறமின்
கொடியைப் புணருங் குணபூ தரனே ' 'கோவே குறமின் கொடிதோள் புணரும் 份
தேவே சிவசங்கர தேசிகனே' என வருவனவெல்லாம் முருகன் திருவிளையாட லைச் சொல்லி நிற்பனவாகும்.
முருகனிலே முறுகிய பக்தியே வேண்டுவது; பிரபஞ்சச் சேற்றிலிருந்து கரையேற்றி விடுவான் அப்பெருமான். ஆகவே நமக்கு வேண்டியது நல்ல உள்ளம், அதுவும் பெண் உள்ளம். திருஞான சம்பந்த சுவாமிகளுக்குப் பாலருரவாயில் பாட்டு எழும்போதே ' என்னுள்ளம் கவர்கள் வின் ' என்று உள்ளத்தைப் பறிகொடுக்கும் இரகசியம் இதுதான்"
கள்ளன் எப்போது வருவான், எப்படி வரு வான் என்றெல்லாம் சொல்லமுடியாது களவு எடுக்க நல்ல சமயம் பார்த்துப் பொருளுக்குரியவர் அறியாமலே வந்து எடுத்துச் சென்றுவிடுவான்.

முருகன் மண்வாளன் 9.
ஆண்டவன் அடியார்களை ஆட்கொள்வதும் அப் படித்தான் !
வள்ளியைத் திருமணம் புரிய வந்தபோது முருக னின் திருக்கூத்துக்கள் எத்தனை எத்தனை 11 வேடனகி, விருத்தணுகி, வேங்கை மரமாகி மம்பி ரசன் மகளை நாடுகிருரன்,
"வேடுவர் புனத்திலுருமாறி முனிசொற்படி
வியாகுல மனத்தீணுெடு போம் விற்காரன்' எனத் திருவகுப்பில் அவன் திருவிளையாடல் அருமையாகப் பேசப்படுகிறது.
ஆண்டவனிடத்தில் கொள்கின்ற காமம் சிவ காமம். ஆன்மாக்கள் சிவகாமிகளாக வேண்டும். இறைவனுடைய 5ாயகியாக நாம் நம்மை எண்ணிக் கொண்டு தெய்வீகக் காதலை எம்மிடம் வளர்க்க வேண்டும்.
கந்தரலங்காரத்திலே, ... 'தெள்ளிய ஏனலிற் சிள்ளையைக் கள்ளச் சிறுமி எனும்
வள்ளியை வேட்டவன் தாள் வேட்டிலே . 9
என்று படுகிருரர். அதாவது, ‘ நெஞ்சமே, தெள்ளியுண்ணும் தினை வளர்கின்ற கொல்லையில் கிளியைப் போல இருந்து காவல் செய்தவளும் கள்ளமுடைய குறக்குலச் "சிறுமி என்று சுட்டும் வண்ணம் இருந்தவளுமாகிய வள்ளியை வலியவந்து திருமணம் செய்துகொண்ட முருகன் திருவடியை விரும்பாமல் இருக கிருரயே? என்று தன் செஞ்சைக் கடிந்துரைக்கிறர் அருண் கிரிநாதர், -
2

Page 26
10 முருகன் மணவாளன்
முருகனின் அழகிலும் இளமையிலும் சொக்கிய ஒரு பேதைப் பெண் காதலினுல் வாடிவதங்க அவள் தோழி முருகனைப் பார்த்துப் பாடுவதாகத் திருப் புகழிலே சோடனை செய்து பார்க்கிருரர் அருணகிரி
5ாதர்.
S طر அவர் பாடுகிறார், *நீலங்கொள் மேகத்தின் மயில் மீதே நீவந்த வாழ்வைக்கண் டதனுலே மால்கொண்ட பேதைக்குன் மணநாறும்
மார்தங்கு தாரைத்தந் தருள்வாயே’
சுருக்கமாகச் சொன்னல், இறைவனகிய காதல னிடம் ஆன்மாவாகிய காதலி என்றென்றும் இறு
கிய அன்புடன் வாழவேண்டும்.
முருக பக்தர்கள் வள்ளி நாச்சியாரை مايو"* கொண்ட வள்ளி திருமணத்தை அலுப்புத்தட்டாது இன்று வரையும் பாடியும் ஆடியும் பாராட்டுகின் முரா கள எனருரல, அதறகுக காரணம ஒனறு இருக்கவேண்டும்; அது கான் என்ன ? நாம் ஒவ் வொருவரும் வள்ளி5ாயகியாக வேண்டும், முருகன் மணவாளன் என்று உள்ளத்தால் பெண்மையை மேற்கொள்ள வேண்டும்.
அந்த ஒரு வீடு பெறுவதற்காக இந்த ஒரு வேட்டுவர் குறிச்சியில் சிறு இல்லில் கால்வைத்து" வள்ளியை அவன் கைப்பிடிக்க வந்த விக்கையைச் சிங்தை கவரும் வகையில் விந்தை விந்தையாகத் திருப்புகழால் நமக்கு விளக்குகின்றர் அருணகிரி Birg; fr.
 

முருகன் மணவாளன்
அஞ்சு வித பூத முங்கரண நாலு
மந்திபகல் யாதும் அறியாத அந்தநடு வாதி யொன்றுமில தான
அந்தவொரு வீடு பெறுமாறு மஞ்சு தவழ் சாரி லஞ்சயில வேடர்
மங்கைதன நாடி வனமீது வந்த சரி ஞர விந்தமது பாட
வண்டமிழ் வி னே தம் அருள்வாயே குஞ்சரக லாப வஞ்சியபி ராமி
குங்குமப டீர வதிரேசக் கும்பதன மீது சென்றணையு மார்ப
குன்றுதடு மாற இகல்கோப வெஞ்சமர சூர னெஞ்சுபக வீர
வென்றிவடி வேலை விடுவோனே விம்பமதில் சூழு நிம்பபுர வாண
விண்டலம கீபர் பெருமாளே.
2'S S حالت YW as was
ஈசுவரன் உனக்கு மெய்யுணர்வைக் தருவது நீ அவற்ருற் கடைத்தேறும் பொருட்டன் ருே, அங்ங்ன மாக நீ அவற்றைப் பக்குவமில்லாத பிறர் க்கு ப் போதித்து அது காரணமாக உனக்குக் கீர்த்தி சம் பாதிக்க முயன்று கொள்வாயானல் உனது நிலை யாதாகின்றது ? நீ இங்ங்னம் ஒழுகுவது உனக்குக் கீர்த்தியாகிய மேம்பாடு கருதியல்ல என்பாயாயின் உன்னிலும் உனக்கினியார் பிறர் எனக்கருதியோ நீ பெறக்கடவதாகிய நன்மைகளையும் இழந்து அவர்க் குப் போதிக்கின் ருய் ? முளைக்கத்தகாத இடத்தில் வித்தை விதைப்பவர் யாவர் ? பசித்து வருந்திவந்து வேண்டுவாருக்கன் ருே உணவு கொடுப்பது. பசியா தவனுக்குக் கொடுக்கும் உணவு தோஷங்களையன் ருே விளைக்கும்.
ஆன்மவிசாரம்
1.

Page 27
வரவழைத்தால் வாராதிருக்க வழக்குண்டோ?
சொக்கதாகப் புலவர் கிங் காஸ் துதியாக ஒரு பாட்டுப்பாடுகிருரர்,
அடிபட்டீர் கல்லாலும் எறிபட்டீர்
அத்தனைக்கும் ஆளாய் அந்தப் படிபட்டும் போதாமல் உதைபட்டீர் இப்படியும் படுவார் உண்டோ முடிபட்ட சடையுடையீர் கழுக்குன்றீர் முதற்கோணல் முட்டக்கோணல் இடிபட்டும் பொறுத்திருந்தீர் சிவசிவா
உமைத் தெய்வம் என்னலாமோ.
எல்லாம் வல்ல இறைவனை ஒருவர் வில்லால் அடிக்
கிருரர்; ஒருவர் செருப்பால் உதைக் கிருரர்; இன்னும்
ஒருவர் பிரம்பால் அடிக்கிருரர். இப்படி எல்லாம் தன் மதிப்பைக் கொடுத்தவர் இரண்டு பெண்டாட் டிக்கா ரன் சுங்கரருக்குக் கலியாணத்தூதுவர் ஆவ தில் வியப்பு ஒன்றும் இல்லையே! இழுத்த இழுப் புக்கெல்லாம் இழுபடுவார் என்பது சுந்தரருக்கு நன்ற கத் தெரியும். -
ஒருநாள் சுந்தரர் புக்கொளியூர் என்ற ஊருக்கு வருகிருரர் வீதி வழியே நடந்து செல்கிருரர். அங்க ணர்கள் வாழ்கின்ற கெரு ஒரு வீட்டில் மங்கல வாத்தியம் ஒலிக்கின்றது. எதிர்வீட்டிலே அழுகை ஒலி கேட்கிறது. அங்கிருந்த அன்பர்களிடம் கார ணம் வினவுகிருரர். " இங்கே ஐந்து ஆண்டுகளுக்கு

வரவழைத்தால் வாராதிருக்க வழக்குண்டோ 13
முன்பே ஒரு சம்பவம் நடந்தது. குளத்திலே குளிக்க ஐந்து வயது நிரம்பிய அந்தணச் சிறுவர் இருவர் சென்றார்கள். அவர்களில் ஒருவனைக் குளத் தில் கிடக்க முதலை இழுத்துச் சென்று விழுங்கி ' விட்டது. மற்றப்பையன் தப்பித்தடவி வீடுவந்து சேர்ந்தான். அவனுக்கு இன்றைக்குப் பூனூல் அணியும் பொ ன் னு ஸ். மங்கல வாத்தியங்கள் முழங்குவதும் அத்திருநாளை முன்னிட்டேயாகும். எதிர் வீட்டுப்பிள்ளை இன்று இருந்தால் அவனுக் கும் பூனூல், சாத்திப் பொலிவு பார்க்கலாமே என்று வாய்விட்டழுகிருரர்கள்.'
சுங்காருக்கு விஷயம் புரிந்துவிட்டது. குளக் கரைக்குச் செல்கின்ருரர். புக்கொளியூர் அவிநாசி அப்பன் பேரில் பாட்டுக்கள் வருகின்றன. மூன்று பாடல்கள் முடிக்கதும் ஆண்டவன் கிடுகிடுத்துப் போனுன், நான்காவது பாட்டை இன்னும் கொஞ் சம் மிடுக்கா கப்போடுகிருரர்.
உரைப்பார் உரைஉகந்து உள்கவல்லார் தங்கள் உச்சியாய் அரைக்காடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினுய்
புரைக்காடு சோலைப் புக்கொளி ஊர் அவி நாசியே
கரைக்கால் முதலயைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே.
கரைக்சால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே என்று கட்டளை பிறக்கிறது சுந்தரரிட மிருந்து முதலே நீந்தி வருகிறது. பத்து வருடப் பாலகனுக முகலைவாயிலிருந்து வெளிவருகிறன் சிறுவன். SiS S S

Page 28
14 (upbassör மணவாளன்
சேக்கிழார் இதனைப் பாடுகிருரர், 'உரைப்பார் உரை" என்று எடுத்ததிருப் பாட்டுமுடியாமுன் உயர்ந்த வரைப்பான் மையில் நீள் தடம்புயத்து மறலி,மைந்தன் உயிர்கொணர்ந்து திரைப்பாய் புனலின் முதலை வயிற்று உடலில் சென்ற ஆண்டுகளும் தரைப்பால் வளர்ந்தது என நிரம்ப முதலே வாயில் தருவித்தான்.
சுந்தரர் போ ட்ட கட்டளையைச் சிரமேற்
கொண்டு வந்தவன் ஆண்டவன்.
போற்றிப் பணிந்து மகிழ்ந்து வரவழைத்தால் வாராதிருக்க வழக்குண்டோ :
O () O
செட்டிப்பிள்ளை ஒருவனுக்கு மாமன் மகள் மேல் தீராக்காதல். ஆனல் மாமன் மகளை இன்னெரு வனுக்குக் கட்டிக் கொடுப்பதற்கு ஆயத்கங்கள்
செய்கிருரர்கள் அவளது பெற்றேர், இளங் காதலர்
கள் இதனை அறிகின்றரர்கள். ஊரைவிட்டே ஓடிப் போக முடிபுகட்டுகிருரர்கள். காதலியைக் கூட்டிக் கொண்டு புறப்படுகிருரன் அந்த இளங்காளை. திரு மருகல் என்ற ஊருக்கு வருகிருரர்கள் இருவரும். அங்கே திருமடத்தில் தங்குகிருரர்கள். அன்றிரவு இளைஞனைப் பாம்பு தீண்டி விடுகிறது. இளைஞன் உயிர் துறக்கிருரன், செட்டிப்பெண் பதைபதைத்
துக் கதறுகிருள். புழுப்போல் துடிக்கிருரள். அந்த
ஊருக்கு வந்து சேர்கிருரர் நற்றமிழ்வல்ல ஞான
சம்பந்தர் பெண்ணின் பெருந்துயரை அறிகிருரர்,
பாடுகிறார்,
சடையாய் எனுமால் சரண் நீ எனுமால் விடையாய் எனுமால் வெருவா விழுமால் மடையார் குவளை மலரும் மருகல் உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே.

*
வரவழைத்தால் வாராதிருக்க வழக்குண்டோ 15
பாட்டில் பெண்ணின் துயர் தெரிகிறது. ஆண்ட வனுக்கு, ஒரு கேள்வியும் பிறக்கிறது. இந்தப் பெண் இப்படி எல்லாம் கதறி அழுகிருளே, இது உனக்கு அடுக்குமா என்பதுதான் அந்தக் கேள்வி.
திருமருகல் உறையும் பெருமான் திடுக்கிட்டுப் போனன். செட்டி மகன் உயிர்பெற்றே எழுந்து விடுகிருரன்; காதலர்களின் கனிந்த வாழ்வு ஆரம்ப மாகிறது.
இப்படி எல்லாம் எத்தனை, எத்தனை சம்பவங் கள்; எத்தனை திருவிளையாடல்கள் ! -
வரவழைத்தால் வாாதிருக்க வழக்குண்டோ ?
Ο O Ο
இற்றைக்கு சுமார் இருநூற்றைம்பது ஆண்டு களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம்.
அபிராமி அம்பாளிடத்தில் அளவுகடந்த பக்தி கொண்டிருக்கிருரர் ஒரு பட்டர் பக்தி ஏற ஏற உன்மத்தர்போல் ஆகிவிடுகிருரர். அவருடைய அநு பவ நிலையை உணராத சிலர் பித்துப் பிடித்து அலைகிருரர் என்று கூடப் பேசத் தலைப்படுகிருரர்கள்.
தை மாத அமாவாசைத் தினத்தன்று கஞ்சை மன்னன் திருக்கடவூருக்கு வருகிருரன். அபிராமி யின் சந்நிதியில் அபிராமிப்பட்டரைக் காண்கின் ருரன். பட்டருடன் பேச எண்ணி, ‘இன்று அமா வாசை உண்டா ? எவ்வளவு நாழிகை இருக்கிறது’ என்று கேட்கின்றர்.

Page 29
16 முருகன் மணவாளன்
அமுதமயமாய் வீற்றிருக்கும் அம்பிகையைத் தன்னுள் கரிசித்து அங்கே குழுஞ் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்விடுகின்ற திருக்கோலத்தில் ஈடுபட்டி ருந்த பட்டர் "இன்று பெளர்ணமி என் கிருரர்.
மக்களும் ம ன் ன லும் திகைக்கின் ருரர்கள். அர்ச்சகர்கள் உட்பட எல்லோரும் பைத்தியம் 廖
என்றே முடிவு கட்டுகிருரர்கள்.
தம் தவற்றை உணர்கிருரர் பட்டர் நன்றே வரினும் தீதே விஜள கினும் நானறிவதொன்றேயும் இல்லை' என்ற பக்குவமுடைய பட்டர் ‘உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம்” என்று அம்பிகைமேல் பாடத்தொடங்குகிருரர். எழுபத்தெட்டுப் பாட்டுக்கள் பாடி விடுகிறார். எழுபத்தொன்பதாவது பாட்டு வரு கிறது, " . 修 விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதஞ்சொன்ன - வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு அவ் வழிகிடக்கப் பழிக்கே சுழன்றுவெம் பாவங்க ளே செய்து பாழ்நரகக் குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடுஎன்ன கூட்டுஇனியே.
என்றுபாடி முடித்தாரோ இல்லையோ அபிராமி அம்மை தன் திருத்தோட்டைக் கழற்றி வீசி எறிகி ருள். அது வான வீதியிலே பூரண சந்திரனுகக்
அமாவாசை அன்றே பெளர்ணிமை நிலவு " கண்டு எல்லோரும் திகைக்கிருரர்கள்; வியக கிருரர்கள். செயற்கரிய செய்யும் பெரிய ராம்பட்டரை வழிபட் டுப் புறக்கணித்த பிழையைப் பொறுக்க வேண் டும் என்று வேண்டுகிறார்கள், ! ' ".
 

வரவழைத்தால் வாராதிருக்க வழக்குண்டோ r
எல்லாம் அபிராமி திருவருள் என்று பாடல் கள் நூருகப் பெருகுகின்றன; அபிராமி அந்தாதி எனப் பெயர்பெறுகின்றது.
இன்னலுற்று இடர்ப்படுவார் இப்பாடல்களைப் பாடி அபிராமியை வழிபட்டால் எல்லா நலமும் பெறுவார் என்பது நம்பிக்கை, அபிராமியின் கடைக்கண் நோக்குத் தரும்பேறுதான் எத்தனே! எத்தனை 11
தனந்தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா மனந்தரும் தெய்வ வடிவும் தரும்நெஞ்சில் வஞ்சமில்லா இனந்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே கனந்தரும் பூங்குழ லாள் அபி ராமி கடைக்கண்களே.
இதை அறியாமலோ ' கயவர் தம்மோடு என்ன கூட்டு இனியே' என்று பட்டர் பாடியதும் அம் பிகை திடுக் கிட்டுத் திருத்தோட்டை வீசி எறிந்து வெண்ணிலவு காயச் செய்து பட்டருக்கும் பெருமை தேடிக் கருகிருரள், 5ாமும் பாடி மகிழ்ந்து வர வழைத்தால் வாரா திருக்க வழக்குண்டோ ?
Ο @ Ο திருச்செந்தூர் முருக ன் வேண்டிய வாங் கொடுக்கும் கண்கண்ட கெய்வம். 'நல்செந்தின்
மேய வள்ளி மணுளர்க்குத் தாகை கண்டாய் ’ என்று அப்பர் பாடுகிருரர் அத்திருப்பதியை !
திருச்செந்தூரில் குமரகுருபரசுவாமிகள் அருள்
பெற்றதைப் போல இன்னேர் கவிஞரும் திருவருள்
நலம்பெற்ற வரலாறு ஒன்றுண்டு.
3

Page 30
18 முருகன் மணவாளன்
பகழிக்கூத்தர் என்பவர் முறையாகக் கலை பயின்று இனிய தமிழ்க் கவிபாடும் திறமை கைவரப் பெற்றவர். ஒருகால் கடும்பிணியாம் சூலைநோய் அவரைத்தாக்கியது, கூத்தர் சுழன்று புழுப்போல் துடித்தார். மருந்துகள் அருந்தினர். நோயின் வேகம் குறைந்தபாடில்லை. சூரனைக் கொன்று அடியார் துயர்போக்கிய பெருமான், வங்காரை வாழ வைக்கும் வள்ளல் என்பது அவர் மனக் கண்ணில் மிளிர்ந்தது
ஒரு கோடி முத்தம் தெள்ளித் தெளிக்கும் கடற்
செந்தில் நகரை அடைந்தார். அலைகடல் ஒரத்தில் ஆறுமுகப் பெருமானைக் கண்டு ஆனந்த பரவச முற்ருரர். செவ்வேளின் அருட்கோ லத்தைக் கண் டார். உள்ளம் உருகியது. பாடத்தொடங்கினர். அப்போது பாடியது திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ். அப்பிள்ளைத் தமிழிலே வருகைப் பருவத் திலே பேராதரிக்கும் அடியவர் தம் பிறப்பை ஒழித்துப் பெருவாழ்வும் பேறும் கொடுக்க வரும் பிள்ளைப் பெருமான் என்னும் பேராளா' என்று தொடங்கி “வரவழைத்தால் வாரா திருக்க வழக் குண்டோ’ என்று அடித்துக் கேட்கிருரர் பகழிக் கூத்தர்.
பிள்ளைத் தமிழைப்பாடி முடித்தார். பொல்லாத சூலைநோயும் நில்லாது சென்றது. இன்பக்கடலில் முழ்கி எழுந்தார். ஆடிப்பாடி அகங்குழைந்தார்.
முருகனைக் கலியுக வரதன், கண் கண்ட தெய் வம் என்று பாடி ப் பரவுவதில் தப்பொன்றும்
இல்லையே?
枋

蕾 Ν வரவழைத்தால் வாராதிருக்க வழக்குண்டோ 19
குறிஞ்சிக் குமரன் கலியுகவரதன். மகாவரப் பிரசாதி,
குஞ்சரமுதற்கிளேய கோவே
கொஞ்சிஉமை முத்தமிடுவே!
தஞ்சென நினைக்குமவர் தேவே -
தண்சமர நற்பதியில் வாழ்வே.
இது திருப்போரூர்ச் சங்கிதிமுறை. O Θ Ο
திருப்பனந்தாளில் மேவும் ஈசனைத் தாடகை என்னும் பெண் ஒருத்தி பூமாலை புனைந்தேத்தி வழி பட்டுவருகிருரள். ஒரு நாள் மாலையுடன் இறைவன் திருமுன்பு வரும்போது அவளது ஆடை சற்றே நழுவுகிறது. ஆ  ைட  ைய த் திருத்திக்கொண்டு மாலையை அணிவிப்பதா, மாலையைச் சாத்திவிட்டு ஆடையைத் திருத்திக் கொள்வதா என்ற தர்மசங் கடமான நிலை தாடகைக்கு வந்தடைகிறது. ஆடை யைச் சரிசெய்ய மாலையைக் கீழே கரையில் வைக்க வேண்டும். மாலையைத் தரையில் வைக்காவிட்டால் பலர் முன்னிலையில் மானம் இழக்க நேரிடும். இந்த இக்கட்டான நிலையில் ஆண்டவன் அவள் மானம் காக்க விர்ைகின் ருரன். தன் தலையைக் குனிந்து மாலையை ஏற்கிருரன், அன்று சாய்ந்த சிவலிங்கம் சாய்ந்தபடியே நிற்கின்றது. இங்ஙனம் தாடகை யின் பக்தியை உலகறியச் செ ய் த பெருமான் அன்றுமுதல் தான் கோயில் கொண்டு எழுந்தருளி யிருக்கும் தலத்துக்கே அத்தாடகையின் பெயரைக் கொடுத்துத் தாடகை ஈச்சரம் என்றே அழைக்கி

Page 31
20
முருகன் மணவாளன் றான். இந்தத் தாடகை ஈச்சரம் கோயில் இருக் கும் தலம் திருப்பனந்தாள்.
சாய்வினைச் சரி செய்து வழிபட விரும்புகிறான் மன்னன். தன் சேனை யானை எல்லாம் பூட்டிச் சிவ லிங்கத் திருமேனியை நிமிர்த்திச் செம்மைப்படுத் தப் பாடுபடுகிறான். மன்னவனின் முயற்சி வெற்றி பெறுவதாக இல்லை.
கலயர் திருக்கடவூரில் அந்தணர் குலத்தில் பிறந்தவர் ஆண்டவன் சந்நிதியில் இடையறாது. குங்கிலிய தூபம் போடும் பணியை மேற்கொண்ட மையால் குங்குலியக்கலயர் எனப் பெயர் பெறுகி றார். மாங்கல்யத்தைக் கொடுத்து உணவுப்பொருள் வாங்கிவரச் சென்றவர் குங்குலியம் வாங்கித் தம் திருப்பணியை நடத்துகிறார். ஆண்டவன் அருளால் செல்வம் பெருகுகின்றது அவருக்கு !!
திருப்பனந்தாளில் தாடகைக்குத் தலைதாழ்த்திய செய்தியையும் மன்னவன் முயன்றும் தலைநிமிர வில்லை என்பதையும் அறிகிறார் குங்கிலியக்கலைய நாயனார். நாதனை நேரே காணும் முயற்சியில் ஈடு படத் திருப்பனந்தாளினைச் சென்றடைகிறார். அர சன் உற்ற வருத்தத்தையும் சேனையும் யானையும் இளைத்த நிலையையும் காண்கிறார் நேரில். இறை வன் திருமேனிக்கும் தன் கழுத்துக்கும் கயிறுமாட்டி இழுக்கிறார். அன்பெனும் பிடியில் அகப்படுகிறான் ஆண்டவன். அண்ணலார் நேரே நிற்கின்றார். அமர ரும் விசும்பில் ஆர்ப்பரிக்கின்றனர்,

வரவழைத்தால் வாராதிருக்க வழக்குண்டோ 21
ஆண்டவன்பால் நம்பிக்கை கொண் டால் சாதிக்க முடியாத எத்தனையோ காரியங்களைச் சாதித்து விடலாம். அமெரிக்காவில் அண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சி.
ஒரு நியாயவாதி தெய்வ நம்பிக்கையுள்ளவர். அவருக்கு வேண்டிய நீரோக்கள் இருவர்மீது. கொலைக்குற்றம் சாட்டப்பட்டது. அந்த இரு நீகி றோச் சிறுவர்களும் மிகவும் நல்லவர்கள். எந்தத் தவறான வழிக்கும் போகமாட்டார்கள். அநியாய மாக இவர்கள் மேல் கொலைக்குற்றம் சாட்டப்பட் டிருக்கிறது என்பதை அந்த நியாயவாதி உணர்ந் தார் ஆனாலும் நிரபராதிகள் என்று நிரூபிக்கத் தகுந்த சாட்சியில்லை. ஆனாலும் வழக்கை நடாத்தி இவர்களை விடுதலை யாக்கவேண்டியது தன் கடன் என முடிபு செய்தார். நியாயவாதி கடவுள் தான் இவர்களைக் காப்பாற்றவேண்டும் என்று மட்டும்
அடிக்கடி ஆண்டவனைக் கேட்டுக் கொள்வார்.
வழக்குத் தொடங்கியது. எதிர்க்கட்சி இவர் களே கொலை செய்தார்கள் என்பதை உறுதிப் படுத்தப் பல தரப்பட்ட சாட்சிகளைக் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.
சா
'திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை' என்று இருந்த நியாயவாதிக்குப் போதிய சாட்சிகள் கிடைக்கவில்லை.

Page 32
முருகன் மணவாளன்
வழக்கு முடிகிற தருணத்தில் இருந்தது. தீர்ப் புக்கூற ஒரு நாள் மட்டும் இருந்தது. கலக்கமடைக் தார் நியாயவாதி. ஆண்டவனே தோன் வழிகாட்ட வேண்டும் என்று பிரார்த்தித்தார்.
- طر தீர்ப்புக் கூறுவதற்கு முதல் நாள் நீதிமன்றம் கலைந்ததும் வெளியே வந்தார். அப்போது யாரோ ஒருவர் ஒரு துண்டுக் கடதாசியை அவரிடம் நீட்டி இதைக்கொஞ்சம் படியுங்கள் என்று சொல்லிவிட் டுப் போய்விட்டார். அது தினசரிப் பத்திரிகை ஒன் றில் வெளிவந்த ஒரு துண்டு விளம்பரம். "துப்பறி பவருக்குச் சான்றிதழைக் கொடுப்போம். அதற்கு விலே இரண்டு டொலர் என்று அதில் எழுதியிருந் தது. அதைப் பெற்றுக்கொண்டு வீட்டுக்கு வந்தார்;
சிந்தனை சுழன்றது. சிலர் அதிகாரம் இல்லா மல் இப்படித்தான் நற் சாட்சிப் பத்திரம் பெற்றுத் துப்பு அறிபவர்களாக வருகிருரர்கள் போலும். இந்த வழக்கில் அப்படி யாராவது உண்டா என்று சற்றே சிந்தித்தார். ஆம்; அவர் மேற் கொண்டிருந்த வழக்கில் குற்றவாளிகள் என்று நிரூபிப்பதற்குத் துப்பறிபவர் ஒருவர் மிக முக்கியமான சாட்சியாக இருந்தார். ஒகோ, அவர் முறையான நற்சாட்சிப் பத்திரம் இல்லாதவராக இருக்கவேண்டும் என்ற சந்தேகம் நியாயவாதிக்கு எழுந்தது. அப்படியா னுல் அவர் கூறும் சாட்சி பொய்யாகலாம் என்ற எண்ணமும் வந்தது. இது இறைவன் திருவருள் தானே என்றும் எண்ணினர்.
 

வரவழைத்தால் வாராதிருக்க வழக்குண்டோ 23
அடுத்த நாள் வழக்குத் தொடங்கியது. அந்தத் துப்பறிபவர் மீண்டும் கூட்டில் நிறுத்தப்பட்டார். கெய்வ நம்பிக்கையுள்ள நியாயவாதி குறுக்கு விசா ரணையை நடத்தினர். 'நீர் எங்கே படித்தீர்? உம் முடைய நற்சாட்சிப் பத்திரம் எ ங் கே யென்று கேட்டார்.
உண்மையில் அவர் போலித்துப்பறிபவர்; அத னல் முகம் வெழுத்து நடுங்கினர். சாட்சி கூறுவது பொய் என்று நிரூபிக்கப்பட்டது. குற்றவாளிகள் விடுதலை பெற்றனர்.
முன்பின் தெரியாத ஒருவர் நியாயவாதிக்கு விளம்பரத் துண்டைக் கொடுத்ததுதானே நிரபராதி கள் விடுதலைக்கு காரணமாயது. இதற்கெல்லாம் ஆண்டவனே வழிநடாத்தினன். முன்பின் தெரி யாத ஒருவர் யாராக இருக்கலாம் ? (New guide posts - Edited by Norman Vincent Peale at airs) நூலில் காணப்பட்ட சம்பவம். இறைவனை நம்பிய தால் நலம் கிடைத்த நிகழ்ச்சிகள் பல இந்நூலில் உண்டு.
வரவழைத்தால் வாராதிருக்க வழக்குண்டோ?

Page 33
இன்னமும் சின்னவன்தானே?
திருமுருகாற்றுப்படையிலே கூறப்பட்ட ஆறு படை வீடுகளில் இரண்டாவது படை வீடு திருச் செந்தூர். சூரசம்ஹாரம் நடந்த தலம். 'சீர்கெழு طر செந்திலும் செங்கோடும் வெண்குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன் ' என்று சிலப்பதிகாரம் பேசு கிறது. வெண்டலைப் புணரி அலைக்குஞ் செந்தில் நெடுவேள் நிலைஇய காமர்வியன் துறை என்று சங்க இலக்கியமாகிய புறநானூறு ஏத்துகிறது. கத்தும் தரங்கம் எடுத்தெறியுங் கருங்கடலின் அருகேயிருக்கும் செந்தில் நகரை உலகம் புகழ்ந்க ஓங்குயர் விழுச்சீர் அலைவாய்' என்று நக்கீரர் பாடுவார். இதற்கெல்லாம் காரணம் இல்லாமல் இல்லை. செந்திலம்பதி அருளாலும் பொருளாலும் அறத்தாலும் ஏனைய திறத்தாலும் மங்காப் புகழு டன் நின்று நிலவுவது முருகன் திருவருட்பொலிவை யல்லவா சுட்டிக்காட்டுகிறது !
ஓராறு முகங்களோடும் ஈராறு கரங்களோடும் திருச்செந்தூர் முருகன் விளங்கும் பான்மையைக் காணக் கண்ணுயிரம் வேண்டும் !
முருகனை வழிபடு முறைதான் எத்தனே! எத்” தனை !! குறிஞ்சிநிலக் குறவர்கள் குன்றின்மேல் கோயில் அமைத்துக் கோடு முழக்கிக் குறிஞ்சிப் பாட்டிசைத்து 5றும்புகை எடுத்து வழிபடுவார்கள். உச்சிமேல் கரங்குவித்து, ஆறெழுத்து அமைந்த
 

**
இன்னமும் சின்னவன்தானே 25
அருமறைபாடி, நறுமலர் எடுத்து, அந்தணர் ஏத்தி யும் போற்றியும் தொழுவார்கள்.
கற்ருரர்க்கும் கல்லார்க்கும் களிப்பருளும் களிப் பாம் முருகனை 'யாவதுங் கற்ருேரர், அறியா அறி வினர் கற்றேர்க்குத் தாம் வரம்பாகிய தலைமை சான்ற நற்றவச் செல்வர்கள்-முனிவர்கள்-ஞானத்தி னல் நயந்தேத்துவார்கள்.
“நின்னளந்தறிதல் மன்னுயிர்க் கருமையின் நின்னடி உள்ளிவந்தனென்’ என யாருமே வழி படலாம். 'அறிவல் நின்வரவு, அஞ்சேல்' என்று யாவர்க்கும் அருள் தருவான் அப்பெருமான் !
முருகன் திருவருள் நலனையும், அடியார்களின் தேனூறு சொல்லுக்கு வாயூறி நின்ற நிலையையும், மெய்கண்ட தெய்வம் இத்தெய்வம் அல்லால் புவி யில் வேறில்லை யென் பகையும் நன்குணர்ந்தவர் ஒரு புலவர். அவர் தான் படிக்கா சுத் தம்பிரான். புலவர் என்ருல் வறுமையைப் பற்றிச் சொல்ல
வேண்டியதில்லையே!
“முன்னவனே அருள்புரிந்தால் முடியாதது ஒன்றுண்டோ’ என்ற அசையா நம்பிக்கை உள்ள வர். அதனுல் ஆண்டவனையே வேண்டி வறுமை யைப் போக்கப் பார்ககிருரர் புலவர். அம்பிகை யைப் பார்த்துப் பாடுகிறர்:
4

Page 34
26 முருகன் மணவாளன்
வேல் கொடுத்தாய் திருச்செந்துரர்க் கம்மியின் மீது வைக்கக்
கால் கொடுத்தாய் நின்மண வாளனுக்குக் கவுணியர்க்குப்
பால் கொடுத்தாய் மதவேளுக்கு மூவர் பயப்படச்செங் கோல் கொடுத்தா யன்னயே யெனக்கேதுங் கொடுத்திலேயே.
"அன்னையே, எனக்கே துங் கொடுத்திலேயே’ என்று குறை இரக்கிருரர் பாவம் !!
ஒரு நாள் திருச்செந்தூருக்கு வருகிறார். மாமயில் ஏறும் முருகனை மனைவியர் இருவருடனும் காண்கி ருரர் படிக்காசுப்புலவர்; சிந்திக்கிருரர். 'என் துய ரைத் துடைக்க வேலேந்தி வீறுடன் நிற்கும் இவன் என்ன சின்னப்பிள்ளையா ? ஒன்றும் கெரியாத பாலனு இவன் ? அம்பிகை தன் மடிமேல் இருத்தி அமுதூட்டிக் கண்களுக்குமையிட்டு நெற்றிக்குப்
பொட்டிட்டு அழகு பார்த்துக் கன்னத்திலே மூத்த
மிட்டாள். அதெல்லாம் அந்தக்காலம் குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டும் கவ்வி யுந் துழந்தும் வாழ்ந்த காலம், தாயோடு பிள்ளை யாய் விளையாடும் இந்தக் குழந்தைக்கு என்துய ரைப் போக்க முடியுமா ? நாம் சென்று சொன்னு
லும் இச் சிறுபிள்ளைக்கு எப்படி விளங்கும் என்று
அன்றெல்லாம் சொல்லாமல் இருந்துவிட்டேன். இப்போது ஒன்றுக்கு இரண்டாக மனேவியர்கள்; அன்னம் போலவும் மயில்போலவும் சாயல்; இரண்டு பெண்டாட்டிக்கா ரன்; இவனுக்கு எம்முடைய துன் ப்ம் தெரியாமல் இருக்குமா ; ' இரண்டு பெண் கொண்ட ஆண்பிள்ளை இன்னமும் சின்னவன் தானு? சிந்தித்தார்; சிந்தனை பாட்டாக வெளிவரு கிறது; பாடுகிருரர்:
چې په

இன்னமும் சின்னவன்தானோ
முன்னம் நின் அன்னை அமு தூட்டி மையிட்டு முத்தமிட்டுக் கன்னமுங் கிள்ளிய கா ளல்லவே என்னைக் காப்பதற்கே அன்னமும் மஞ்ஞையும் போல் இரு பெண் கொண்ட ஆண் பிள்ளை நீ இன்னமும் சின்னவன் தானோ செந் தூரில் இருப்பவனே.
இப்படித் தன் வரம் கேட்டவர் படிக்காசுப் புலவர். நாமும் எப்படியும் எங்குறையைக் கொட்டி அழலாம்! அவன் இக்கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் ஆயிற்றே!
தாயாகித் தந்தையாகி எம்மை எல்லாம் தாங்கு கின்ற தயாபரனாம் முருகன் இன்ன முஞ் சின்னவனா?
அவன் எத்தனை எத்தனை திருவிளையாடல்கள் இயற்றியருளு வான்!
நாககிரியாகிய திருச்செங்கோட்டில் குணசீலர் என்ற ஒரு புலவர்; முருகபக்தன்; அமைதிக்கு இருப்பிடமானவர். அவர் காலத்திலே தென்பாண்டி நாட்டிலே வாழ்ந்தவன் பிரதிவாதி பயங்க ரன் என்ற ஒரு புலவன்; கல்விச் செருக்குடையவன்; புலமை குறைந்த புலவர்களுடன் சொற்போர் செய்து ''நான் உனக்கு அடிமை'' என்று முறி எழுதி வாங்கிக் கொள்வான். அவன் அட்டகாசம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே சென்றது எந்த ஊருக்குப் போவதற்கு முன்பும் அந்த ஊரிலுள்ள புலவர் களுக்கு ஓலை அனுப்புவான். ஓலை கிடைத்த தும் " பிரதிவாதிபயங்கர னுக்கு நான் அடிமை '' என்று எழுதிக் கொடுத்து விடுவார்கள் புலவர்கள்.

Page 35
28
முருகன் மணவாளன்
ஒருநாள் அவன் திருச்செங்கோட்டுக்கு அரு கில் வந்தான். குணசீலர் என்ற புலவன் அந்த ஊரிலே இருப்பதை அறிந்தான். வழமை போல் ஒலை அவருக்கு வந்தது குணசீலர் பாவம் ! என்ன Qgu5) f திருச்செங்கோட்டு முருகனைவிட அவ ருக்கு வேறு துணையில்லாதவராயிற்றே. குணசீலர் குறை இரந்தார் முருகனிடம் ‘நான் கற்ற கல்வி உன்னைப் பாடத்தானே பயன்படுகிறது. எனக்கு இருக்கும் புலமை நீ அறியாததா ? இப்படி இருக்க வீண் வம்புச் சண்டைக்கு என்னை இழுககிருரனே பிரதிவாதி பயங்கரன் என்னும் புலவன். நான் யாதும் அறியேன்! முருகா, என்னைக் காப்பாற்ற வேண்டும்' என மனமுருகி வேண்டினர். தனக்கு வந்த ஒலையை முருகப்பெருமானின் திருவடியிலே வைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார். 例
குணசீலரிடமிருந்து விடை எதுவும் வராததால், கோபம் கொண்ட பிரதிவாதி பயங்கரன் குண சீலரை வாதிட்டு வெல்லவேண்டும் என்று நினைத் துக் கொண்டு திருச்செங்கோட்டை நோக்கி வந் தான். மலையின் பக்கத்திலே ஒரு சிறுவன் மாடு மேய்த்துக் கொண்டிருந்தான்.
புலவன் பிரதிவாதி பயங்கரன், தன் கூட்டத் தோடு சிறுவன் மாடு மேய்த்துக் கொண்டிருந்த இடத்துக்கு வந்தான். மலைய்ைப் பார்த்ததும் பிரதி வாதி பயங்கரன் 'இது என்ன மலை’ என்று அரு கில் வந்தவர்களைக் கேட்டான். 'திருச்செங்கோடு, சர்ப்பகிரி என்று இதனை அழைப்பார்கள்" என
 
 
 

பாடிவிட்டுச் சற்றே விழித் கான், பாட்டு நிறை
என்னே என்ஜன என்ற கேள்விக்கு விடை தேடி
விடை கிடைத்தது. மலை பாம்பு போலே இருக் தது. புலவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.
டாகப் பாடினன்.
இன்னமும் சின்னவன்தாணுே 29
இது சர்ப்பமானுல் இந்தப் பாம்பு ஆடாமல் ஏன் படுத்துக் கிடக்கிறது என்ற கேள்வியைப் பாட்
'சமர முகத்திருச் செங்கோடு சர்ப்ப சயிலமெனின் அமரில் படம் விரித் தாடாதது என்ன ?"
என எடுத்த எடுப்பில் இரண்டு அடிகளை மட்டும்
வேறுவதாக இல்லை. பாட்டை முடிப்பதற்காக
ன்ை; பாட்டு அப்பால் ஒடவில்லை; திணறிக்கொண் டிருந்தான். அந்தச் சமயம் 'அஃது ஆய்ந்திலேயோ' என்ற ஒரு குரல் கேட்டது. குரல் இன்னமுஞ் சின்ன வனக இருக்கிற ஒரு இளைஞனின் குரலாக
இருந்தது. மாடு மேய்த்துக் கொண்டிருந்தானே
சிறுவன், அவன் தான் பாடுகிருரன்.
"- அஃது ஆய்ந்திலேயோ நமரன் குறவள்ளி பங்கன் எழுகரை நாட்டுயர்ந்த குமரன் திருமரு கன்மயில் வாகனம்கொத்து மென்றே."
என்று புலவன் தொடங்கிய பாட்டை இன்னமுஞ் சின்னவன் முடித்துக் கொடுத்தான்.
எழுகரை நாடு என்பது திருச்செங்கோடு உள்ள சிறிய நாட்டுக்குப் பெயர், ' எழு கரை நாட்டிலுள்ள குமரப்பெருமானுடைய வாகனமாகிய மயில், படம் எடுத்து ஆடினல் கொத்திவிடும் என்று பயந்து

Page 36
& முருகன் மணவாளன்
பாம்பு ஆடாமல் கிடக்கிறது இது உனக்குத் தெரியவில்லையா' என்ற விடை பாட்டாக வந்தது.
விடை மிகமிக அழகாக அமைந்திருந்தது புலவன் திகைத்து விட்டான். “ யார் இந்தச் சிறு வன் என்று கேளுங்கள் ' என்று கன் அரு طر கிருந்த மாணவர்களே ஏவினன்.
அதற்கு அந்த இளைஞன் “ இந்த ஊரில் குண சீலர் என்ற ஒரு புலவர் இருக்கிருரர்; 5ல்ல அடக்க மானவர்; அமைதிக்கு இருப்பிடம் என்று சொல்லி விடலாம், முருகன் மேல் அவருக்கு முறுகிய பக்தி; அவன் புகழைக் கடல் மடை திறந்தாற் போல் பாடுவார். அந்தப் பெரும் புலவரிடம் பாடம் கேட் கச் சென்றேன். விரைவில் கவிபாடும் திறமை யைச் சொல்லித் தந்தார். அவரிடம் படிக்கும் மாண வர் பலர். எல்லோர்க்கும் விரைவில் கவிபாட முடிந்தது. ஆனல் எனக்கோ முடியவில்லை அத னுல் நீ என்னிடம் படித்தது போதும். என்னு டைய மாணுக்ககை இருப்பதற்கு உனக்குத் தகுதி யில்லே என்று சொல்லி என்னைத் துரத்திவிட் டார். வேறு வழியில்லாததால் மாடு மேய்க் கிறேன்" என்று சாதுரியமாக விடையிறுத்தான்.
பயங்கரனின் கலை சுழன்றது. துரத்திவிடப்" பட்ட மாண்வன் நான் முடிக்க முடியாத பாட்டைப் பாடி முடித்தான் என்ருரல் குணசீலரின் பெருமை எத்தகையது என எண்ணிப் பார்த்கான், அந்தப் பக்கம் கலைவைத்துப் படுக்கத்தானும் கூடாது. இந்த அவமானமே போதும், போதும் என்று

ஆகைக் குணசிலருக்குத் தெரிவி’ என்று மாத்திரம்
இன்னமும் சின்னவன்தாணுே 31
எண்ணியவனுய், 'தம்பி, என்னுடைய வணக்கத்
"சொல்லிவிட்டு வ ங் த வழியே திரும்பிப் போய்
விட்டான்.
-J இதனைக் கொங்குமண்டல சதகம் ஒரு பாட்
டிலேசொல்கின்றது.
பெருமை மிகும் அர வச்சிலம் பாமெனின் பெட்புறும் அவ் வரவு படம் விரித் தாடாதது என்னென் றகத்துனுமோர் கருவி வெருக்கொள ஆமேய்ப் பவனுக் கனிந்துதிரு மருகன் மயில்கொத் தும் என்றெனச் சொல்கொங்கு மண்டலமே.
மாடு மேய்த்க சிறுவன் முருகன் என்பது சொல்ல. வேண்டியதில்லையே! t
முருகன் இன்னமும் சின்னவன்தானுே ?
米 < na | ||
W
ჟ7)
குழந்தையானது தனக்குச் சம்பவிக்கும் யாதொரு %7#۔ விஷயத்திலும் விசாரமில்லாது இருப்பதுபோல நீயும் அங்ங்ணம் ஒழுகுவாயானல் அதுவே ஈசுவரனுக்கு நீ குழந்தையாயிருக்கும் விதம். } = '' .. ''
bm ஆன்மவிசாரழ்.

Page 37
தெய்வம் உண்டென்றிரு
- * இன்பம் என்பது உள்ளத்தின் நிலை. இறைவனோடு கலந்துபோய் உள்ளத்தில் உண்டா கும் ஆனந்தத்துக்கு ஈடில் லை. சித்தத்தைச் ரிடி. சிவன்பாலே வைக்கின்றபோது அடைகின்ற இன் பத்துக்கு உலகில் எந்த இன்பமும் இணையாகாது.
" ஆராத இன்பம் அருளுமலை '' என்று ஈசனை மணிவாசகர் காரண மின்றியா பாடினார் ! ஈசன் ஒருவனே; அவனுக்கு எத்தனை பெயரிட்டு அழைத் தாலும் கெடுதல் ஒன்றுமில்லை.
சிவன் என்பதும் திருமால் என்பதும் பெயர். அளவில் வேறுபாடுடையன போலத் தோன்றினும், சர்வேஸ்வரன் ஒருவனையே அப்பெயர்களெல்லாம் குறிப்பனவாகும். " பேராயிரம் பரவி வானோரேத் தும் பெம்மான் ' என்பர் அப்பர் சுவாமிகள்.
" ஏகம் சத்விப்ரா பகுதாவதந்தி '' என்கிறது வேதம். அப்பரும், சுந்தரரும், ஆளுடைப்பிள்ளை யும், அருள் மணி வாசகரும் பாடியதும், நம்மாழ் வார் பாடியதும், சங்கரர் பாடியதும் எல்லாங் கடந்த ஒரு பரமேஸ்வரனை நினைத்தே. .
கடவுள் என் ப து பரம்பொருளின் தமிழ்ப் பெயர். ஒன்றுக்கே பல வடிவங்கள். பேத எண் ணம் அறியாமையாகும். " ஒருவன் என்னும் ஒரு வன் காண்க " என்பது தித்திக்கும் திருவாசகம்.

33
தெய்வம் உண்டென்றிரு
குடத்தைக் காணும்போது குடத்தை வனைந்த வன் ஒருவன் இருப்பான் என்பது சொல்லாமலே விளங்கும். அதுபோல உலகத்தைக் காணும்போது அதைப் படைத்தவனும் ஒருவன் இருக்கத்தான் வேண்டும் என்பது சைவசித்தாந்திகளின் முடிபு.
தெய்வம் உண்டென்பதோர் சித்தம் உண்டா கின் றபோது வாழ்வு ஒளிதரும், அருணகிரிநாதர்
முருகப்பெருமானை, "தொ ழுது வழிபடுமடியர் காவற். காரப் பெருமாளே'' எனப்பாடுகின்றபோது தெய்வ முண்டென்று வாழ்வோர்க்கு அவன் காவற்கார னாகி விடுகின்றான் என்றல்லவா சொல்லுகின்றார்.
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தவர்களுக்கு, செல்வம் ஒருவருக்குக் கிடைத்ததன் இரகசியம் 24 தெரியும். அதுதான் என்ன ? '' இரப்பவர்க்கீய வைத்தார்,'' என அப்பரடிகள் சொல்வதே அந்த இரகசியம்.
பொருளைக் கொடுத்து அருளைப்பெற வேண் டும். பொருள் நிலையில்லாதது; அருள் நிலையுள்ள து. பொருளைக் கொடுத்தவர் க ளுக்கு அருள் கிடைக்கும் என்பதனை அழுத்தந்திருத்தமாக அருணகிரியார், ''பொங்கார வேலையில் வேலை விட் டோனருள் போல் உதவ
எங்காயினும் வரும்.'' என அருள் கிடைக்கு மாற்றைச் சொல்கின்றார்.
பாரதத்திலே ஒரு சுவையான கட்டம். போர்க் களத்திலே கன்னனின் நெஞ்சில் அம்பு பாய்ந்து

Page 38
4 முருகன் மணவாளன்"
விடுகிறது ஆவி அகத்ததோ, புறத்ததோ தெரிய வில்லை. அந்தணன் ஒருவன் வருகின் முன் அதே நேரத்தில்.
"கன்ன, நீ தளர்ந்தவர்களுக்கெல்லாம் வேண் டிய பொருள்கொடுப்பதாகக் கேள்விப்பட்டேன். வறுமையால் வாடுகின்ற எனக்கு உன்னுல் முடிங் ததை இப்போது கொடு.”
சிரிக்கிருரன் கன்னன். 'என்னுல் கரக்கூடி யதை நீயே கேளப்பா."
* அப்படியா, இதுவரை நீ செய்த புண்ணிய மனைத்தையும் என க் குக் கொடுத்துவிட்டால் அதுவே போதும்." *
உள்ளம் பூரித்தது கன்னனுக்கு.
'ஆவியோ நிலையிற் கலங்கிய தியாக்கை
யகத்ததோ புறத்ததோ வறியேன் பாவியேன் வேண்டும் பொருளெலா நயக்கும்
பக்கு வந் தன்னில் வந்திலேயா லோவிலா தீயான் செய் புண்ணிய மனைத்து முதவினேன் கொள்க நீ யுனக்குப் பூவில்வா முயனு நிகர ல னென் ருற்
புண்ணிய மிதனினும் பெரிதோ."
چ*
'கண்ணிரில் தாரைவார்த்துக் கொடு” என்று கேட்கிருரன் அந்தணன்.
நெஞ்சிற் பாய்ந்த அம்பையிழுத்து வடிந்த இரத்தத்தைக் கையில் ஏக்தித் தாரை வார்த்துக் கொடுக்கின்றன் கொடைக்குக் கன்னன்.
 
 
 
 

தெய்வம் உண்டென்றிரு 35
ஏற்கிருரன் அந்தணன் 'நீ கொடுத்த கொடைக்கு மகிழ்கின்றேன். உனக்கு என்ன வரம் வேண்டும், கேள்; தருகிறேன்'
藏
அப்படியா,
1. அல்லல் வெவ் வினையா லின்னமுற் பவமுண்
டாயினு மேழெழு பிறப்பு
மில்லையென் றிரப்போர்க் கில்லையென் றுரையா
விதயநீ யளித்தரு ளென்ருன்.” நான் செய்த வினை காரணமாக இனிமேல் பிறக்க நேர்க் கால் ஏழேழு பிறப்பிலும் எவரெ வர் இல்லையென்று என்னிடம் வருகின்றர்களோ அவர்களுக்கு இல்லே என்று சொல்லாத இதயம் ©r:ಅ# கொடுக்க வேண்டும். அதுவே நான்
கேட்கின்ற வரம்' என்ருரன் கன்னன்.
எப்படி இருக்கிறது ஈத்து உவக்கும் இன்பம்
Ο () Ο
நாளெல்லாம் நாய்போலத் திரிந்து எச்சிற் சோற்றுக்கு நாய்களுடன் நின்று, பட்டினிப் புழுக்க ளாய்த் துவண்டு நெழிந்து வாடுகின்ற சீவனைச் சிவனுகக் காண்கின்ற உள்ளத்தெளிவு நமக்குவேண் டும் நம்மிடம் பணத்தைக் கொடுத்த இறைவன் அந்த ஏழையிடம் பசியைக் கொடுத்தான் என்று உணரவேண்டும். அவன் பசியைப் போக்குவது நிலையான மாதவம், அது கொலேயா வழிக்குப் பொதிசோறும் உற்ற துணையுமாகும்.

Page 39
36 முருகன் மணவாளன்"
“ur Qije, Lorit 3G)p Qj QJ,TG II i f2;) III QLij, g, In I thu4, Q!}, 0,10, QIIIIị6)] யாவர்க்கு மாம் உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே.”
இங்ங்னம் நல்வினைகளைச் செ ய் து வ ர அன்பு முதிர்ந்து பரிபக்குவம் உயர்ந்து ' எல்லாம் அற طر என்னை இழந்த நலம் ' தோற்றும். பதி புண்ணி யங்களே இந்நன் னிலைக்கு நம்மை இட்டுச் செல் வன. அப்போது தீதும் நன்றும் பிறர்கர வாரா என்ற தெள்ளிய அறிவு நமக்கு உண்டாகும். நடப்பன எல்லாம் நடன ராஜன் விளையாட்டு என்ற
முடிபுங் கோன்றும்.
* நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானே இதற்கு நாயகமே " என்ற விழுமிய வாசகம் அடைக்கலம் புகுந்தாரின் அருமைத் திருவா சகம். நமக்கு இட்டபடி அதுவேயாகும். சிறப்பாக ச் சொன்னுல், ஊழ்வினை முறைமையுமாகும்.
ஆகவே அம்பலத்தாடும் ஐயனிடம் அடைக் கலம் புகுந்தால் ஊழ்வினையில் விருப்போ அன்றி வெறுப்போ நமக்குத் தோற்றது.
அருணகிரி சுவாமிகள், . پیوند
"சேந்தனக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோன விளங்குவள்ளி காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகன?னச் சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே."

தெய்வம் உண்டென்றிரு 37
என்று பாடி மகிழ்வதும் நமக்கு இதனைக் காட்டித் தருவதற்கேயாகும்.
* என் செயலாவது யாதொன்றும் இ ல் லை?
என்ற பட்டினத்தடிகள் மேலே பேசிய கருத்துக்
கள் அனைத்தையும் ஒரு பாட்டிலேயே பொறித்து விட்டார்.
பாடல் பின்வருமாறு,
"ஒன்றென் றிருதெய்வ முண்டென் றிருவுயர் செல்வமெல்லாம்
அன்றென் றிருபசித் தோர்முகம் பார்நல் லறமுநட்பும் நன்றென் றிருநடு நீங்காம லேநமக் கிட்டபடி என்றென் றிருமண மேயுனக் கேயுப தேசமிதே'
உபதே சம் பெற்ற மனத்தைப்போல் ஒருவனுக்கு நண்பன் கிடையாது. ஏன் ?
'நகுதற் பொருட்டன்று நட்டன் மிகுதிக்கண்
மேற்சென் றிடித்தற் பொருட்டு.”
*
என்று வள்ளுவர் பேசுவார். இதனைப் பட்டினத் தடியார் நன்கு அறிந்தவர் போலும் !
காரணமாகிய வினை அற்றபோது காரியமாகிய உடம்பும் அற்றுவிடும். வினையின் தேட்டம் இத் தேகம், நல்வினை தீவினையாகிய இருவினைகளும் பிறவிக்குக் காரணமானவை. உடம்பு ' வினையின் வந்தது; வினைக்கு விளைவாயது ”
தீவினை இரும்பு விலங்கு, நல்வினை பொன் விலங்கு இருவினை ஒப்பு உண்டாகுமபோது மல பரிபாகம் ஏற்படும். வினை ஒழிகின்றபோது தேகம்

Page 40
58 முருகன் மணவாளன்
மில்லாது. வினையை ஒழிக்கப் பலவழிகள் உண்டு சிங்கையில் சிவனை இருத்தல் வேண்டும். இதுவே தலையாயவழி சிந்கையைச் சிதறவிடாது சிவனைக் காண்பதற்குச் சிவ னை நினைப்பவர்களே நாம் சென்று அடைதல் வேண்டும். அங்ானம் நினை யாதவர்களை ச் சென்று சேராது தூர விலகிக் கொள்ள வேண்டும். இப்படியே மனத்தைப் பண் படுத்தி வந்தால் அந்த மனத்தைப் போல் நமக்கு உற்றதுணை வேறென்றுமில்லை. இதனை வடிக் தெடுக்கிறர் ஒரு பாட்டிலே பட்டினத்தடிகள்.
"வினைப்போக மேயொரு தேகங்கண் டாய்வினை தானுெழிந்தால்
தினப்போ தளவுநில் லாதுகண் டாய் சிவன் பாதநினை நினைப்போ ரைமேவு நினையாரை நீங்கிந் நெறியினின் ருல் உனப்போ லொருவருண் டோமன மேயெனக் குற்றவரே."
இங்ஙனம் பண்படாத உள்ளத்தினுல் பண்பில் லாரைச் சென்றடைந்தவர்களையுங் காப்பதற்கு முருகன் இருக்கின்றன் குற்றம் மாய்ந்து குணம் பெருக வேண்டுமானுல் நாம் தீயவர்களுடன் இணங் கக்கூடாது இறைவனை வணங்காமல் இருக்கிற வர்கள் எத்தனை பெரிய மனிதர்களாகத் தோற்றி னலும் அவர்களுடன் இணங்கிப் பழகக் கூடாது.
Ο @ Ο ஒருவருக்கு நல்ல செல்வம் இருக்கிறது. படிக்
துப் பட்டம் பெற்று வாழ்க்கையில் நல்ல செல் வாக்குடன் வாழ்கின்றார். உலக சம்பிரதாயத்துக் காக, 57 கரிகத்துக்க கக் கடவுளைப் பற்றியும் பேசு வார். அவரை 5ல்லவர் என்று சொல்லிவிட முடி
ܬܐ
 

R
தெய்வம் உண்டென்றிரு 39.
யாது. இறைவனுடைய அன்புப் பிணைப்பு இல்லாத காரணத்தினுல் அங்ஙனங் தெரிந்தோ தெரியாமலோ அவர்களுடன் பழகிக் கெட்டவர்கள் ஆகிவிட்டாலும் முருகனைச் சரணடைந்தால் அவன் ஈடேற்றுவான்.
காக்கையும் கழுகும் ஒன்று டன் ஒன்று போட்டி போடவும், பேய்கள் துணங்கைக் கூத்து ஆடவும், ஊனுணவையுடைய அசுரர்களுடைய வாய், கிணத்தைக் கக்கவும், வெற்றி வேற்படையை வீசி, அசுரர்களை மாய்த்தவன் முருகன். அசுரத்து வத்தை அழிப்பதே அவன் வேலை. பாடுகிறர் அருணகிரிநாகர்,
*வணங்கித் துதிக்க அறியா மனித ருடனிணங்கிக்
குணங்கெட்ட துட்டன யீடேற்று வாய்கொடி யுங்கழுகும் பிணங்கத் துணங்கை யலகைகொண் டாடப் பிசிதர்தம்வாய் நிணங்கக்க விக்ரம வேலா யுதந்தொட்ட நிர்மலனே.”
தெய்வம் உண்டென்று இருந்தால் நாம் ஈடேற லாம். நம பிக்கை வாழ்க கையின் அடிப்படை, மனை வியை நம்பினுல் மட்டுமே வீட்டில் வாழமுடியும். அதேபோலக் கடவுளை நம்பினுல்தான் உலகில் வாழ்வாங்கு வாழ முடியும். கடவுளை 5ம்பி வாழ்கின்ற வாழ்வில் ஒழுக்க நியதி இருக்கும் அது வாழ்வைச் செம்மைய ககும். கல்லில் தெரிந்த கடவுள் கருத் தில் தெரியும். வாழ்த்துப் பொருளாக இருந்த கடவுள் வாழ்வுப் பொருளாகும். ஆலயப் பொருளாக இருந்த இறைவன் ஆன்மாவின் பொருளாவான். வறுமை யிற் செம்மையும், கருத்தில் பெருக்கமும் வாழ்வை வளம் படுத்தும். தெய்வ நம்பிக்கை ஆழமானது

Page 41
40 முருகன் மணவாளன்
சிந்தனையைத் திருத்திப் பெருக்குவது; அகவாழ் வைத் துலக்குவது; கிறைவாழ்வைத் தருவது.
சமயத்துடன் தொடர்பு கொண்டவன்-தெய் வம் உண்டென்று நம்புபவன் - தவறுசெய்யப் பயப்படுகின் முன் மறுமையின் அச்சம், மறுபிறப் பின் துன்பம், நல்வாழ்வுக்குப் பாலம் போடுகிறது. அழுக்காறு, அவா, வெகுளி முதலிய குற்றங்களை விலக்கி நல்வழிக்கு ஆற்றுப்படுத்துகிறது தெய்வ நம்பிக்கை. சுருக்கமாகச் சொன்னல், மனிதனைத் திருவருளின் கருத்தறிந்து கன் கருமஞ் செய்து வையத்துள் வாழ்வாங்கு வாழ வைக்கின்றது. தெய் வம் கவிர்த்து ஒழுக்கநெறி தனியே இல்லை ஒழுக்க நெறியில் மனிதனை நிறுத்துவது தெய்வத் திரு வருளேயாம்.
se SAMDs عوه ତନ୍ତ୍ରିଂ S ళ
அறிவாளிகள் எனப்படும் ஒவ்வொருவர்க்கும் உத் தம இலக்கணமாவது அறிவினலே தம்மிற்குழ்ந்த வர்க்கு அவரவர் அளவு தெரிந்து அவரவர் அறிவுக்கு ஏற்பக் கோபம் பொருமைகள் அவர்க்கு உண்டாகா வண்ணம் தாம் சாதுரியமாய் கடந்து கொள்வதே. அவரவர் அளவு தெரிந்து அவரவர்க்கு இயைய கடப்பது தான் அறிவின் மேம்பட்டானுக்கு அழகு.
தன்னிடமுள்ள குணகுற்றங்கள் யாவற்றையும் ஒருங்குணர்ந்தவனே அறிவாளி.
- ஆன்மவிசாரம்,
ز
 

சிந்தையிற் சிவன்
பரம்பொருளே மறந்து வேறெந்தப் பொரு 2ளத் தேடி வாழ்ந்தாலும் அது இறுதியில் ஏமாற் றத்தையே தரும். மனைவி, மக்கள், மாடு, கன்று இவைகளினுள் பரந்து பொலியும் பரம்பொருளைக் கண்டு அதனுடன் கலந்து ஒன்ருவதற்கு என்றென் றும் உள்ளம் பொங்க வேண்டும்.
பரம்பொருளைத் தனியாகக் காண மனித வாழ் வில் முடியாது. ஏனைய பொருள்களில் பரம்பொருள் செறிந்திருப்பதை அறிந்து அப்பொருள்களின் வாயிலாகவே பரம்பொருளை அடையமுடியும்.
* வீணை வாசிக்கப்படும்போது வெளிவரும் ஸ்வ ரங்களை எங்ங்ணம் தனியாக எடுத்துக் கொள்ள இயலாதோ, ஆனல் வீணையின் பொது நாதத்தி லும் வீணை வாசிப்பின் போது உண்டாகும் ஒலி அலைத்தொடர்பிலும் உள்ளடங்கிப் பற்றப்படுமோ, அவ்வாறு உலகம் பரம்பொருளுக்குப் புறம்பாகப் பிடி படமாட்டாது.' இது பிருகதாரணியக உப நிடதம். இதை இன்னும் விளக்கமாகச் சொன் ணுல், பேரிகையிலும் சங்கிலும் ஒலி உண்டாகின் றது. ஒலியை மட்டும் எடுத்துப் பிடித்துக் கொள்ள முடியாது. சங்கையும் பேரிகை யையும் அவற்றைச் சப்திக்கச் செய்பவனையும் அடைந்து ஒலியைப் பெறலாம் வினேயின் மாதத்தை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளமுடியாது வீணையைப்
6

Page 42
முருகன் மணவாளன்
பெற்று மாதத்தை இசிக்கலாம், பரம்பொருளைக் காண்பதும் இவ்வாறேயாகும்.
பரம்பொருளுக்கு இலக்கணங் கூறமுடியுமா என்பது ஒரு வின. இது அன்று; அது அன்று என்று பரம்பொருளுக்கு மறுப்பு இலக்கணங்கூற ل R O (R முடியுமே தவிர வேறு எந்த இலக்கணமும் கூறி விட (ply-ll hit gil.
SLTTL LLLLLLz LLLLSSYTYLzJS S LLLLL LLLLLST
மலேயல்ல கடலல்லை வாயு வல்லை
எண்ணல்லை யெழுத்தல்லே யெரியு மல்லே யிர வல்ல பகலல்லை யாவு மல்லை
பெண்ணல்லை யாணல்லை பேடு மல்லை
பிறிதல்ல யானுயும் பெரியாய் நீயே
உண்ணல்ல நல்லார்க்குத் தீயை யல்ல
உணர்வரிய ஒற்றியூ ருடைய கோவே.”
என்று அப்பர் எக்களிப்போடு பாடுகிறார்.
“ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்
காணலுமாகான் உளனல்லன் இல்லை யல்லன் பேணுங்கால் பேணுமுருவாகும் அல்ல னுமாம் கோனே பெரிதுடைத்து எம்மானக் கூறுதலே." என எமபெருமானே எப்படிக் கூறலாம் என நம்
- மாழ்வாரும் தயங்குகிருரர்!
6ேதி நேதி என வடமொழியாளர் கூறும் மார்க் டி கத்தை அப்பர் போன்ற பெரியோர்கள் அன்மை அன்மை எனக் கூறுவது சிந்திக்க வேண்டியது. . . . .
நிலையான பேரின்பம் அடைய விரும்புவார்க்கு நல்லதொரு வழியுண்டு. ஐம்புலன்களால் நுகரும்
 
 
 

சிந்தையிற் சிவன் 43
உலக இன்பம் நிலையற்றது என எண்ணிச் சிவத் தன்மை என்னும் உணர்வைச் சிந்தையில் நிகழச் செய்தல் வேண்டும். அதாவது சிவத்தன்மையடைய வேண்டிப் பயன் கருகாது மனம் மொழி மெய்க ளால் செய்யப்படும் செயல்க ஆளப் பயின்று பயின்று உள்ளத்தைப் பண்படுத்தல் வேண்டும். அவ்வாறு பண்படுத்தப்பட்ட உள்ள மாகிய நிலத்தில் சிவனை அடைய வேண்டும் என்ற பெருவிருப்பாகிய விதையை விகை க்க வேண்டும் அங்ஙனம் விதைத்த உள்ளமாகிய நிலத்தில் முளைத்து வளர்ந்த சிவத் தன்மையாகிய பயிருடன் வளர்ந்திருக்கும் பழைய மலவாசனையாகிய க2ளயைப் பிடுங்கி எறிய வேண் டும். பயிர் வளர்ந்து வருவதற்கு நீர் வேண்டு மல்லவா ? சிவத்தன்மையாகிய பயிர் காய்க் து போகாதபடி எடுத்த உடலில் பிராரத்துவ வினையி னலே உண்டாகும் துன்பங்களைப் பொறுத்தல் ஆகிய நன்னிரைப் பாய்ச்சவேண்டும். பிராரத்துவ வினையினுல் வரும் இன் பங்களையும் விரும்பி மகிழ்ச்சி யடையாது பொறுமையாகவே இருக்க வேண்டும். விருப்பு வெறுப்புக்கள் வழியாகப் பழைய மல
வாசனை சிவத்தன்மையைக் கெடுத்துவிடும்.
உழவன் தனது நிலத்தில் வளரும் பயிரிலிருந்து தானியக்கதிர்கள் வெளிப்படக் காணுதல் போல உள்ளத்தில் வளருஞ் சிவத்தன்மையிலிருந்து சிவ மும் அச்சிவத்தினுள்ளே உயிரும் வெளிப்பட்டு விளங்கக் காணலாம். அங்ஙன ஞ் சிவத்தினுள் விளங்கி நிற்கும் நிலையில் கற்போதம் வந்து பொருந்தி அவ்விளக்கக் காட்சியைக் கெடுக்காத

Page 43
44.
முருகன் மணவாளன்
படி ஐந்தெழுத்தோ தல், சிவோ கம் பாவனை செய் தல் முதலிய வழிகளால் தடுத்துக் கா க் கி ன் ற வேலியை இட்டுக்கொள்ளல் வேண்டும். இங்ஙனஞ் சிவத்துடன் ஒற்றுமைப்பட்டு நிற்கும் அத்து வித நிலையில் நிற்கின்ற பேறு வாய்க்குமாயின் பேரின் ப விருப்புடைய உள்ளத்தில் அத்துவித அநுபவ நிலையாகிய கா னியம் வி ளை யும். சுருக்கமாகச் சொன்னால் சிந்தையில் வைத்து உயிர் சிவனைக் கண்டானந்திக்கும். இ து வே அப்பரடிகளின் கருத்து. பாடல் பின் வருமாறு, "மெய்ம்மையாம் உழவைச் செய் து விருப்பெனும் வித்தை வித் திப்
பொய்ம்மையாங் களையை வாங்கிப் பொறையெனும் நீரைப்பாய்ச் சித் தம்மையும் நோக்கிக் கண்டு தகவெனும் வேலியிட்டுச் ' செம்மையுள் நிற்ப ரா கிற் சி வக தி விளையுமன் றே.'
இக்கருத்துக்கள் எல்லாவற்றையும் அமைத்துக் கொண்டு பட்டினத்தார் ஓர் அருமையான பாடலைப் பாடுகிறார்.
*"' அஞ் சக் கரமெனுங் கோடாலி கொண்டிந்த ஐம்புலனாம் வஞ்சப் புலக்கட்டை வேரற வெட்டி வளங்கள் செய்து விஞ் சத் திருத்திச் ச தா சிவம் என் கின்ற வித்தையிட்டுப் புஞ்சக் களை பரித் தேன் வ ளர்த் தேன் சி வ போகத் தையே.”
சிந்தையில் வைத்து உயிர் சிவனைக் கண்டானந் திக்க வேண்டுவதாக இருந்தால் நாம் ஒன்று செய் --- தல் வேண்டும். சரியை வழி நிற்றல் வேண்டற் பாலது. அ காவது சீலநெறி நிற்போர் திருநாடு, திருநகரம், திருக்கோயில்களைத் தேடிச் செல்லல் வேண்டும். அங்கெல்லாம் ஆண்டவன் வெளிப்பட்
* அஞ்சக்கரம் - பஞ்சாட்சரம்

சிந்தையிற் சிவன்
45 டருள்வான். "' ஆலயந்கானும் அரன் எனத் தொழுமே'' என்று அன்றெல்லாம் பாடி வைத் தார்களே ! திருக்கோயில்களுக்குச் சென்று, சிறப் பாகச் சொன்னால், எப்பாரும் எப்பதமும் எங்ங் ணுஞ் சென்று எந்தை அருட் புகழை இயம்பியிடல் வேண்டும். அங்ஙனஞ் செய்பவர்களுடைய நல்லுள் ளங்களைச் சிவபிரான் திருக்கோயிலாகக் கொண்ட ருள்வான்.
எத்தனை எத்தனை பெருமக்கள் பொருளையும் பொன்னையும் அள்ளி அள்ளிக் கொடுத்துக் கோயில் களை எழுப்பினார்கள். ஆனால் பொன்னும் பொரு ளும் இல்லாமல் ஒரு பக்தன் கோ யில் எழுப்பி 1 யிருக்கிறார்.
திருநின்ற ஊரிலே பூசலார் நாயனார் வாழ்கின் றார். காஞ்சியில் இராஜசிம்ஹன் என் னும் பல்லவ மன்னன் செங்கோல் செலுத்தி வருகிறான். அ வ னுக்கு ஓர் ஆசை, தன் வாழ்வில் கைலாசநா க பெருமானுக்கு ஒரு கோயில் கட்டி முடிக்க வேண் டும் என்பதே கோயில் உருவாவதற்குக் கேட்பா னேன் ? இராஜசிம்ஹன் கோயில் கட்டமுனைந் திருப்பதைப் பூசலார் அறிகிறார். பரம ஏழை; அன்றாட வாழ்க்கைக்கே தட்டுக்கேடு; இருந்தும் இவருக்கும் ஆசை பிறக்கிறது தாமும் ஒரு கோயில் கட்ட வேண்டுமென்று.
கோயில் கட்டுவது என்றால் சாதாரண காரியமா என்றெல்லாம் மூளையைப் போட்டு அடிக்கிறார்.

Page 44
4 முருகன் மணவாளன்
தன்னுடைய உள்ளத்துக்குள்ளேயே ஒரு கோயிலை ஏன் கட்டக்கூடாதென்று முடிபு கட்டுகிருரர்.
இராஜசிம்ஹன் கோயில் வேலை தொடங்கி விட்டது. அர்த்தமண்டபம் ஆரம்பமாகிறது. கர்ப் பக்கிருஹம் நிர்மாணமாகிறது மதில் எழுகிறது. udgirldgodt l flid உருவாகிறது. பூசலாருஞ் சளைக்க வில்லை. உள்ளத்துள்ளேயே கர்ப்பக கிருஹம், அர்த்தமண்டபம், மகா மண்டபம், மதில் எல்லாம்
எழுகின்றன, ஒரு செலவுமில்ல மலே,
அரசன் மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்ய ஒரு நாளைக் குறிக்கிருரன். பூசலாருந் தாம் கட்டிய கோயி லிலே அதே நாள், அதே முகூர்க்கத்தை இறை
வன் பிரதிஷ்டைக்காகக் குறித்து விடுகிறர் தற்
(G) FLUGDAT 35.
அன்றிரவு அரசனது கனவில் கைலாசநாகர் தோன்றிச் சொல்கிறார்,
"நின்றஊர்ப் பூசல் அன்பன் நெடிதுநாள் தினந்து செய்த
நன்று நீ டால யத்து நாளை நாம் புகுவோம் நீஇங் கொன்றிய செயலே நாளை ஒழிந்து பின் கொள்வாய் என்று கொன்றை வார் சடையார் தொண்டர் கோயில் கொண் டருளப்
போந்தார்."
“அரசனே இன்னுெரு கோயில், நீ ġib l lg LI J கோயிலிலும் பார்க்கப் பெரிய கோயில்; நீ குறித்த அதே நேரத்தில் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு. ஆகவே உன்கோயில் பிரதிஷ்டையை இன்னுெரு நாளைக்கு மாற்றி வைத்துக கொள்.'
 
 

சிந்தையிற் சிவன் *
இராஜசிம்ஹன் கேட்கிருரர் “சுவாமி கான் கட் டிய கோயிலைவிடப் பெரிய கோயிலை இங்கே யார் கட்டியிருக்கிருரர்கள்?
"அதுவா? திருகின்ற ஊரில் பூசலார் என்ற ஓர் அன்பன் கட்டியிருககிருரன்." 。
இறைவன் மறைகிருரர். மன்னனுக்குப் பெரிய ஏமாற்றம் ! எதிர்ப்பட்ட எல்லாரையும் பூசலார் கட்டிய கோயிலைப் பற்றிக் கேட்கிருரன். ஒருவரா லும் பதில் கூற முடியவில்லை புறப்படுகின்றன் திருகின்ற ஊரை கோக்கி. மக்கள் மன்னனைத் தொடர்ந்து செல்கின்ருரர்கள், திருநின்ற ஊரைச் சேர்கின் ருரர்கள் அடுத்த5ாள் உதயத்தின் போது,
и பிரதிஷ்டைக்கான ஆர்ப்பாட்டம் ஒன்றையும் அங்குக் காணுேம். ஊரில் விசாரிக்கின்ருரர்கள்.
‘பூசலாரா? அவராவது, கோயில் கட்டுவதா வது," என்று ஏளனமாகப் பதில் சொல்கிருரர்கள்.
“ஊருக்கு மேற்கே உள்ள குளக்கரையில் உட் காந்திருப்பர் பூசலார் அங்கே சென்று கேட்டு விடுங்கள்” என்று பதில் வருகிறது. விரைந்து செல்கிரர்கள். “பெரியவரே நீர் கட்டிய கோயில் எங்கே" என்று கேட்கிறன் அரசன்.
என்னைக் கொந்த ரவு செய்யாதீர்கள். என்னு டைய கோயிலில் இப்போது பிரதிஷ்டை கடந்து கொண்டிருக்கிறது” என் கிருரர் விபரங் கேட்ட போது விளக்கமாகச் சொல்கிருரர் பூசலார் பிர

Page 45
48
முருகன் மணவாளன்
திஷ்டை நடந்த விதத்தையும் விரிவாகக் கூறுகி
ஹார். அரசன் திடுக்கிடுகிறான். அரசன் தான் கண்ட க னா வை க் கூ றித்தங்களுடைய மனக்கோயிலே பெரிது! பெரிது!! என்று உவந்து ஆண்டவன் பிரதிஷ்டைக்கே வந்திருக்கிறான் என்று பணிவோடு பகர்கிறான்.
- இறைவன் பேரன்பை நினைந்து நினைந்து உருகுகிறார் பூசலார். மா சிலாப் பூசலார் மனத்தி னால் முயன்ற கோயிலின் பெருமை பெரிது! பெரிது !!
நாமும் பூசலார் போல் உள்ளத்தைப் பண் படுத்திக் கொண்டால் எம்முடைய உள்ளத்திலும் ஆண்டவன் ஏன் கோயில் அமைக்கமாட்டான் ? இதற்கு ஒரு வழியுண்டு.
திருமூலர் சொல்கிறார். ''நாடு நகரமும் நற்றிருக் கோயிலுந்
தேடித் திரிந்து சிவபெரு மான் என்று பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சத் துக் கோயிலாய்க் கொள்வனே.''
நல்லவழிதானே! இலங்கும் உயிரனைத் தும் ஈசன் கோயில் என்று பாடி நமக்கு நம்முன்னோர்கள் பக்தியைப் புகட்டினார்கள் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. "உள்ளமே கோயிலா உள் குமென் உள்ளமே'' என்பது தேவாரம்.
- பூசலார் நாயனார் கதை காட்டித் கருவது யாது? பொன்னைப் பொதிந்து எவ்வளவு பெரிய கோயி

49
சிந்தையிற் சிவன் லைக் கட்டினாலும் அதனை ஆண்டவனுக்கு அர்ப் பணஞ் செய்தாலும் "நான் செய்தேன்” என்ற அகங் காரம் அரசன் மனத்தில் ஒட்டிக் கொண்டிருந்தது. அதனால் அவன் கட்டிய கோயில் ஆண்டவனுக் குப் பெரிதாகத் தெரியவில்லை.
நின் ற ஊர்ப் பூசல் அன்பன் நெடிது நாள் நினைந்து செய்த கோயில் ஆண்டவனுக்குப் பெரி தாகியது அவரின் தூய்மையான உள்ளத்தினால் !
தூய்மை குடி கொண்ட மனத்துடன் செய்யப் படுவனவே அறம்.
''மனத் துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற'' எனக் குறளும் பேசுகிறது.
''எல்லாவற்றையும் விட்டுவிட்டேன் என்ற எண் ணத்தையும் விடு'' என்று வைணவ சித்தாந்தம் கூறும்.
சிந்தையிற் சிவனைக் காண்கின்ற நிலையை ஆழ் வார்களும் அன்பு ததும்பச் சொல்லியுள்ளார்கள்.
ஆழ்வார் பாசுரங்களிலே ஓர் அற்புதமான பாடல்,
''உளன் கண்டாய் நன் நெஞ் சே உத் தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளு வார் உள்ளத்து - உளன் கண்டாய் *வெள்ளத்தின் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத் தின் உள்ளான் என்று ஓர்.''
* வெள்ளம் - திருப்பாற்கடல்

Page 46
கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்
ஆண்டவனை அறிய ஆராய்ச்சி வேண்டுமா ? ڑ கடவுள் என்னுஞ் சொல்லுக்குப் பொருள் எப் பொருளையும் கடந்து நிற்பது என்பதாகும். நம் மறிவால் முதலில் அறியப்படுவது இவ்வுலகமே யன்றிப் பிறிதில்லை.
"நிலந்தீ நீர்வளி விசும்போடு ஐந்துங் கலந்த மயக்கம் உலகமாதலின்,'
என்று கூறுவர் தொல்காப்பியனுர்,
ஆகவே நம்மால் அறியப்படும் பொருள்கள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐந் தும், பொறிகளின் வாயிலாக நம் உள்ளத்தில் வந்து பதியும் இவ் ஐம்பொருள்களைப் பற்றிய நினைவு களும் ஆகும். ஆகவே கடவுள், இவை எல்லா வற்றையும் கடந்தவர் என்பது சொல்லாமலே அறி யக் கிடக்கின்றது.
கடத்தல் என்பது இடத்தைக் கடப்பது, கீாலத் தைக் கடப்பது, பொருள் தன்மைகளைக் கடப்பது எனப் பொருள் கொள்ளலாம். இடத்தைக் கடப்ப" தாவது நம்மால் அறியப்பட்ட எந்தப் பொருள்க ளின் எல்லையிலும் அல்லது எந்த இடத்தின் எல்லையி லும் கடவுளை அடக்கிவிட முடியாது. காலத்தைக் கடந்தவர் என்பதை மணிவாசகர்,
 

கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் 51
'முன்னைப் பழம்பொருட்கு முன்னப்பழம் பொருளே பின்னப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே."
6T6oT LI IT li.
பொருள்களின் தன்மையைக் கடந்தவர் என்
* பது எவ்வெப் பொருள்களின் இயல்புகளிலும் தம்
மியல்பு அடங்காமல் எல்லாவற்றின் இயல்புகளையும் முற்றுங் கடந்து நிற்பவர் என்பதாகும்.
சம்பந்தப் பெருமான் தேவாரம்,
"வெந்த சாம்பல் விரையெனப் பூசியே தந்தை யாரொடு தாயிலர் தம்மையே சிந்தி யாஎழு வார்வினை தீர்ப்பரால் எந்தை யாரவ ரெவ்வகை யார்கொலோ.'
என வியக்கின்றது 1 ஆகவே ஆண் ட வன ச் சோதித்து அறிந்து விட முடியாது. அவன் உண் மையை அறிந்துவிட்டால் அதுவே போதுமானது.
'உயிர்களிடத்து அன்புவேனும் - தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்.”
என்று பாப்பாக்களைப் பார்த்துப் பாடினன் பாரதி.
ஆராய்ச்சி செய்பவர்களாகிய உலகாயதர்களை அணுகி வீண் ஆராய்ச்சி செய்து காலத்தைப் போக்க வேண்டாம்; இறைவனையே சாருங்கள் என்று சம்பந்தப் பெருமான் நமக்கு வழி காட்டு கிருரர். சாட்சிக்காரன் காலில் விழுவதைவிடச் சண்டைக்காரன் காலில் விழுவதே அறிவுடைமை !

Page 47
முருகன் மணவாளன்
இராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு கதை சொல் வார் இரண்டுபேர் ஒரு நாள் ஒரு மாமாத் தோட் டத்துக்குப் போனுர்கள். LIDIT LID IT Ibi an, 69f7@Goổi) GDH ub நல்ல பழங்கள் பழுத்துக் குலைகுலையாகத் தொங் கின. சென்ற இருவரில் ஒருவன் காவா நூல் அறிவு சிறிதுடையவன். மற்றவனுக்கும் ஏதோ சற்றுத் தெரியும். தாவர நூல் அறிந்தவன் மாம்பழங்களைப் பார்த்ததும் இது என்ன சாதி மாம்பழம், எங்த நாட்டில் அதிகமாக இருக்கிறது, என்ன வகைப் புழு இகனைத் தாக்கும் என்ற விபரங்களை ஆரா யத் தொடங்கினன். ஆனல் மற்றவனே தோட் டத்துக்கு யார் காவலாளி என்பதை அறிந்து அவன் வீட்டுக்கு நேரே சென்றான். அவனுடன் இங்கித மாகப் பேசி அவனிடமிருந்து இரண்டு மாம்பழங்
களைப் பெற்று அருந்தினன். முன்னவன் DTube
பழங்களின் ஆராய்ச்சியிலேயே நேரத்தைப் போக் கிக் கொண்டிருந்தான் அ வ னு  ைடய மாம்பழ
ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டே சென்றது.
மற்றவன் மாம்பழங்களின் இனிமையைச் சுவைத் துக் கொண்டே இருந்தான். இவர்களில் யார் கெட் டிக்காரன் ? மாம்பழத்தைச் சுவைத்தவன் தானே! ஏன்? ஆராய்ச்சிக்கு முடிவேயில்லையே! r
நற்றமிழ் வல்ல சம்பந்தன் இன்னும் பாடுகி முர்,
"ஆட்பா லவர்க்கருளும் வண்ணமும் ஆதி மாண்பும்
கேட்பான் புகில் அளவில்லை கிளக்க வேண்டா கோட்பா லனவும் வினையுங் குறுகாமை எந்தை தாட்பால் வணங்கித் தலைநின் றிவைகேட்க தக்கார்"
 
 
 

கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் 5
ஆண்டவன் அ டி யார் களை ஆட்கொள்ளும் வண்ணமும் அவன் அளவில் பெருமையும் ஆராய்ச் சிக்கு ஆன பொருளாக எடுத்துக் கொண்டால் முடிவே இல்லாத ஆராய்ச்சியாக முடியும். ஆனல் செய்யத்தக்கது அப்பெருமானை ஏத்திப் போற்றி வினைவிளையாது வாழவழி கேட்க வேண்டும் என் கின் முர் சம்பந்தப் பெருந்தகையார்.
'ஏதுக்க ளாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா சுடர்விட்டுள னெங்கள் சோதி மாதுக்க நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின் சாதுக்கள் மிக்கீ ரிறையே வந்து சார்மின்களே.' இதன் பொருள் - நாங்கள் வழிபடும் ஒளிப் பொருளாம் இறைவன் நம்மைத் தன்வழிப்படுத்த எப்பொழுதும் கனது ஒளியைப் பரப்பிக்கொண்டே இருக்கின் ருரன் ஆதலால் காரணங்களாலும் நூல்
உரைகளாலும் அளவுக்கு மிஞ்சி ஆராய்ச்சி செய்ய
வேண்டாம். நற்பண்புகள் மிக்க பெரியோர்களே, பிறவித் துன்பத்தை நீக்கக் தொடங்கியிருக்கும் நீங்கள் உங்கள் உள்ளத்தில் அ ங் த ப் பே ரொ ளிப் பெரும் பொருளை நினைந்து வாழ்வீர்களாக !
திருஞானசம்பந்தர் இறைவனை அளவுக் கு மிஞ்சி ஆராயவேண்டாம் என்கின்ருரர் ஆராய்வ தற்கு "என்ன இருக்கிறது ? காலத்துக்குக் காலம் அவன் வெளிப்பட்டுத் திருவருட் சிறப்பைக் காட்டி விடுகிருரனே!
O O O அன்று நடந்த ஒரு நிகழ்ச்சி. இற்றைக்கு இரு நூற்றெண்பது ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த

Page 48
54 முருகன் மணவாளன்
வர் சிதம்பரசுவாமிகள் அவருக்கு அறிவுத்தீக்கை
கொடுத்து ஆசிரியனுக அமர்ந்தார் குமாரதேவர்.
ஒருநாள் மயில் ஒன்று வந்து கன் வடிவத்தைச் சிறகால் மறைத்துச் சிதம்பரசுவாமிகள் முன் னின்று ஆடியது. சிதம்பரசுவாமிகளுக்கு ஒன் றுமே புரியவில்லை. தம் ஆசிரியராம் குமாரதே. *月 வரை அடைந்து வினவினர் அவர் 'நீ மதுரைக் குச் சென்று அங்கயற் கண்ணம்மையை வழிப்ட் டால் அவள் சொல்வாள்? என்று வழிகாட்டினர்." மதுரைக்குச் சென்று நாற்பத்தைந்து தினங்கள். அம்மையை இடைவிடாது தொழுதார். அக்காலத் *、 தில் அவர் பாடியது மீனுட்சி கலிவெண்பா. அம்ம்ை.
யார் ஒருநாள் வெளிவந்து “இவ்வூருக்கு வடபால் போரூர் என்னும் ஆறுமுகன் திருப்பதி ஒன்று: உண்டு. 9 g, முன்பு ஆறு தரம் விளங்கியிருந்து இப்போது மறைந்திருக்கிறது. அஃது ஏழாவது: தடவையாக உன்னல் திருத்தி அமைக்கப்படுதல்' வேண்டும். அதற்காகவே முருகன் மயில்வடிவாய் * ,
வந்து வடிவத்தை மறைத்து ஆடினன். அவன்
கினக்கு ஆசிரியனவான்’ என்று கூறி மறைந்தார்.
சிதம்பர அடிகள் திருப்போரூர்க்குச் சென்ருரர். ) திருப்போரூர் ஆறுமுகன் கோயில் பழுதடைந்து ... ',
பல்வகைச் செடிகளாலும் பனைமரங்களாலும் மூடப் பெற்றுக் காடாய்க் கிடந்தது. சிதம்பர அடிகள் “ பனைமரத்தடியில் எழுந்தருளியிருக்கும் முருக க் கடவுளின் திருஉருவத்தைக் கண்டு மனம் உடைந்து நெஞ்சம் 5ெக்குருகினர். ஒருநாள் அங்கே குமார தேவரைப் போல் ஒருவர் எழுந்தருளினர். சிதம்
 
 
 
 
 
 
 
 
 
 

கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் 5
LI IT அடிகள் அவரை வணங்கி இவ்விடத்தில் திருக்
வினர். அவ்வளவில் 'திருக்கோயிலைப் பார்ப்பா யாக' என்ருரர் வந்தவர். திருமதில், கோபுரம், கொடித்தூண், மாடவீதி, மடாலயம், நன்னீர்ப் பொய்கை முதலியன சிற்பநூல் முறைப்படி விளங் கத் திருக்கோயில் காட்சியளித்தது. குமாரதேவ ராக வந்தவர் கோயிலுட் புகுந்து மறைந்தார். எல் லாம் 'பழையபடி பனங்காடாக விளங்குவதைக் கண்டு இது தன்னைப் பணிக்கொள்ள வந்த முரு
s
பரவசராயினர். அவர் அங்கே தங்கி இறைபணி ரியும் நாட்களில் கூன், குருடு, செவிடு, கொண்டி, குட்டம், சுரம், பெருவயிறு முதலிய பல வகை
5ா யா ளர்கள் வந்து நோய் தீர வேண்டினர் கள், அவர்கள் நோய்கள் எல்லாம் மறைந்தன. - எல்லோருங் காணிக்கை செலுத்தத் தொடங்கினர் கள். காணிக்கைப் பொருள்களையும் பிறபொருள் களையுங் கொண்டு சிதம்பரசுவாமிகள், திருப்பணி யைச் சிறப்பாக நிறைவேற்றினர். உற்சவங்கள்
நடக்க வேண்டிய ஏற்பாடுகளையுஞ் செய்தார். செங் "தமிழ்ச் சைவத்திருநாட்டில் செல்வங் கொழிக்கும்
-- அரசர்கள் பிரபுக்கள் செய்து முடிக்க வேண்டிய சீரிய பணியை ஓர் ஏழைத்துறவி இனிது கிறை வேற்றினர் என்ருரல் அது முருகன் திருவருளே என்று சொல்வதைவிட வேறு நாம் என்ன
சொல்ல முடியும்! முருகன் திருவருளைச் சுட்டிக் காட்ட ஆராய்ச்சியும் வேண்டுமா?
கோயில் முதலில் எவ்வாறு இருந்தது என வின
கப் பெரும்ான் திருவுருவே என்று வியந்து ஆனந்த

Page 49
சூரபத்மன் முதலாய அசுரர்களைப் போரில் கொன்றெழிக்கச் சமர்புரிந்த இடம் திருப்போரூர் என்பது வரலாறு. அதனுல் திருப்போரூரைச் சமரபுரி என்று அழைக்கின்றர்கள் !
திருப்போரூர் முருகன்மேல் அவர் பாடியது * திருப்போரூர்ச் சந்நிதிமுறை; எழுநூற்று இருபத் தாறு பாடல்களைக் கொண்டது. பிள்ளைத் தமிழ், அலங்காரம், தாலாட்டு, திருப்பள்ளியெழுச்சி ஆதிய பாடல்களால் முருகனைப் பாடிப் பரவியிருக்கின்றர்.
'கொங்கணர் ஆரியர் ஒட்டியர் கோசலர் குச்சரராஞ்
சிங்களர் சோனகர் வங்காளர் ஈழர் தெலுங்கர் கொங்கர் அங்கர் கலிங்கர் கன்னுடர் துருக்க ரனவருமே தங்கள்தங் கட்சிறை நீ என்பர் போரிச் சரவணனே.” *கன்றழைக்கும் முன்னே கருதிவரு மாப்போல
நின்றழைக்கும் நாயேற்கு நேர்தோன்றி-ஒன்றினுக்கும் அஞ்சாதே வாவென் றழைப்பாய்தென் போரூரா எஞ்சாத பேரருளா லின்று."
என்பன போன்ற அருமையான பாடல்கள் திருப்போரூர்ச் சங்கிதிமுறையில் காணப்படுகின் றன. அவர் பாடிய திருப்பள்ளியெழுச்சி முதலிய பாடல்களை முருகன் கோயில்களில் நாம் பாடலாம்; பாராயணமே செய்யலாம்.
தமிழ்த் தெய்வம் முருகன்; அவனை ஏத்துகின்ற பாடல்கள் எத்தனை எத்தனை எங்கு கிடைத்தாலும் அவற்றையெல்லாம் போற்றிப் பாடிப்பாடி அடையும் ஆனந்தத்துக்கு உவமை உரை தேவையில்லையே! O Θ O பொருள்களின் உண்மையை அறிந்து கொள்ள மூன்றுவித பிரமாணங்கள் இருக்கின்றன.
*
 
 
 
 
 
 
 
 
 

கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் 57
'ப்ாத்யட்சானுமானுகமா: ப்ரமாணுனி'
இது பதஞ்சலி யோக சூத்திரம். அதாவது பிரத்தியட்சம், அனுமானம், ஆகமங்கள் என்பன பிரமாணங்கள் ஆகின்றன. பொறிகள் வாயிலாகப் பெறப்படுவது பிரத்தியட்சம், இன்னும் விளக்க மாகச் சொன்னுல் நாம் நேரில் காண்பதும் உணர்வ தும் பிரத்தியட்சப் பிரமாணமாகின்றது. பிரத்தி யட்சப் பிரமாணத்தினுல் பொரு ஆள அறிந்து கொள்ள வேண்டுமாயின் இந்திரியக் கோளாறு, குறைபாடு எதுவும் இல்லாதிருக்க வேண்டும். கண் ணுல் காண்பது, காதால் கேட்பது, கையால் தொடு வது போன்றவை யாவும் பிரத்தியட்சப் பிரமாண LDsi Gg5ÜD.
அநுமானம் என்பது இரண்டாவது பிரமாணம். அறிகுறி தெரியும்போது அது எதனைக் குறிக்கி றது என்று முடிபு கட்டுவது அநுமானம். நெடுங் தூரத்தில் புகை கிளம்பி மேலே வருவது தென் படுகிறது. கண்ணுல் பார்க்காமலே அங்கே நெருப்பு இருக்கிறது என்று அநுமானித்து முடிபுகட்டுகி ருேரம்,
ஆப்த வாக்கியம் என்பது மூன்றுவது பிரமா ணம். தீர்க்க தரிசிகள் ஞானிகள் நேரேகண்டு அறிந்தவைகளைப் பற்றிப் பேசுவதை ஆப்த வாக்கி யம் என் கிருேரம். இதனைச் சுருதிப்பிரமாணம் என் அறும் குறிப்பிடலாம். திருவருள் நலம் கைவரப் பெற்ற அநுபூதிமான்களுடைய வாக்குகள் சுருதி, வேதம், ஆகமம் என்றெல்லாம் கூறப்படுகின்றன,
8

Page 50
58 முருகன் மணவாளன் யோகி எனப்படும் பரிசுத்தான்மாவாகிய ஒரு வருக்கு இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவை ஒன்று சேர்ந்து மனக்கண்முன் காட்சி கொடுக்கின்றன. அவை எல்லாவற்றையும் ஞானத் திருஷ்டிய்ால் அறியும் அறிவுத்திறன் யோகிக்குண்டு. உண்மை ஞானம் உள்ளத்தில் ஒளிர்கின்றது. * ஒளிர்வதைத் திருவாய் மலர்ந்தருளுகின்றர். இத னேயே ஆப்தவாக்கியம் என்கின் ருேம். ஆகமப் பிரமாணம் என்பதும் இதுவேயாகும்
* 。 ஆகவே ஒரு பொருள் உண்டு என்று நிறுவு வதற்கு எமக்கு மூன்றுவழிகள் அல்லது பிரம்ா ணங்கள் உண்டு என்பதைக் கண்டோம். இம் மூன்றினும் ஆப் தவாக்கியமே முடிவான பிரமாணம் என்பதைப் பலரும் ஒப்புக்கொள்கின்ருரர்கள். *
| -
இறைவன் நிலையைப் பிரத்தியட்சமாகக் காட்ட முடியாது. அநுமானத்தைக் கொண்டு ஓரளவுக்கு நிரூபிக்க முடியும். உலகம் உண்டு; அகனல் அத னைப் படைத்தவனும் ஒருவன் இரு க் க த் தா ன் வேண்டும் என்று அநுமானிப்பர் சைவசித்தாந்தி கள், -
*ஒருவனுே டொருத்தி யொன்றென் றுரைத்திடு முலகமெல்லாம்
வருமுறை வந்து நின்று போவது மாதலாலே தருபவ னுெருவன் வேண்டுந் தான்முத லீறுமாகி *siچي மருவிடு மநாதி முத்த சித்துரு மன்னிநின்றே.” என்பது சித்தியார்.
சுவா நுபூதிச் செல்வர்கள் எடுத்துரைக்கும் ஆக மப் பிரமாணம் எவராலும் மறுக்க முடியாதது.
 
 
 

கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் 59
நம்பிக்கையின் சக்தி அகக்கண்களேத் திறந்துவைக் கும். ஊனக்கண் காணமுடியாதன ஞானக் கண் ணுக்குத் தோற்றும் உலகம் முழுவதும் அங்கிங்
கெனதபடி எங்கும் வியாபித்திருக்கும் பரம்பொருள், கரைந்துபோன உப்பைக் கண்காணுவிட்டாலும் நா உணர்வது போல, புஞ்சேந்திரியங்களுக்குத் தோற்றுவிட்டாலும் ஞானக்கண்ணில் பிரகாசிக்கும்.
, . ,,. இறைவனிடம் அசைக்கமுடியாக நம்பிக்கை
வைத்தால் சுபாநுபவம் சித்திக்கும். இந்திரியங்க
ளுக்கும் அறிவுக்கும் எட்டாத பெருநிலை சுவாது பூதிக்கு எட்டுகிறது. அங்நிலையில்,
'மைப்படிந்த கண்ணுளுந் தானுங் கச்சி " . மயானத்தான் வார்சடையான் என்வினல்லான்
ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன் ஒருர னல்லன் ஒருவம ணில்லி அப்படியும் அந்நிறமும் அவ்வண் ணமும்
அவனருளே கண்ணுக்க் காணின் அல்லால் இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ னுதே."
எனப் பாடுகின்ருரர் சுவாறுபூதிச் செல்வர். அப்பர் சுவாமிகள்.
曇。 கேன உபநிடகம் மிக அருமையாகப் பிறருக்கு வெளிப்படுத்த முடி யாத நிலையைப் பேசுகிறது. ‘அங்கே கண் செல்லாது, வாக்குச் செல்லாது, மனமுஞ் செல்லாது. அதை நாம் உண்மையில் அறிய மாட்டோம் ஆகையால் அதைப்பற்றி விளக்
கும் வகையுந் தெரியவில்லை. அது அறிந்த பொருள்

Page 51
60
கஜா விட வேறு; அறியாக பொருள்களுக்கு அப்
முருகன் மணவாளன்
பாற்பட்டது என்றிவ்வாறே விஷயத்தைக் கூறிய
பூர்வாசிரியர்களிடம் அறிந்துள்ளோம்.'
முருக பக்தியில் மூழ்கித் திஜிளக்கவர் அருண கிரிநாத சுவாமிகள். அவர் எமக்குச் சொல்கின்ருர், 'முருகன் திருக்கையில் பொலிகின்றது. வெற்றி
வேல்; அதைக் கண்குளிரப் பார்த்து ஆனங்கம் அடைவோம். அந்த வீரவேலைத் திருக்கரத்தில் தாங்கிச் சூர் மார்பும் குன்றும் துளைத்து விண்ணுேர்
சிறை மீட்டானே குழந்தை வடிவேலன் அவன் திருக்கரத்தை மனங்குளிரப் பார்ப்போம். அவன் திருப்பாதங்கள் அடியவர்களைத் தேடி ஒடி நடமாடுவ தால் செக்கச் செவேலெனச் சிவந்து விட்டன. அடியவர்களுக்காக ஓடி ஆடிய அத்திருப்பாகங்க ளில் சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்க வேண்டா
முருகன்மேல் பித்தேறினல் வருவது மயக்கம். அப் பெருமானின் வீரவேல், தீரக கை, செய்யதாள்
*。
வணங்கியதன் பயன் முறுகிய அன்பு (D),
கண்டதன்மேல் பிரமித்துப்போய் விடுவோம். இவ் வாறு முருகனைக் காண்பதல்லால் அவன் நிலையைச் சொல்ல முடியாது. அவன் மனம் வாக்குச் செய லாலே அடைதற்கு அரியவன். இம்மூன்றுக்கும் உட்பட்டவனக இருந்தால் அறிந்து அறிவிக்க முடி யும். பரம்பொருள் உருவம் இல்லாதது; அருவம் உருவாகி இருப்பது. அநுபவ நிலையில் அருவே .
உருவாகி விடுகிறது,
காலத்துக்குக் காலம் மாறுதல் இன்றி ஒன்று போல் இருக்கும் பொருள் பரம்பொருள். இதற்கு மேல் என்ன சொல்ல முடியும். அநுபவித்து அறிந்து கொள்ள வேண்டியதுதான். அநுபவித்
 
 
 
 

கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் 6 தறிந்தவர் அருணகிரியார் அநுபவித்து ஆனக் திக்க அழைக்கின்றர்.
பாடல் பின்வருமாறு:
"வேலே விளங்கு கையான் செய்ய தாளினில் வீழ்ந்திறைஞ்சி மாலே கொளவிங்கன் காண்பதல் லான்மன வாக்குச்செய லாலே படைதற் கரிதா பருவுருவாகியொன்று போலே யிருக்கும் பொருளையெவ் வாறு புகல்வதுவே.
இதே கருத்தைக் கந்தரநுபூதிச் செய்யுள் ஒன்
அறும் பேசுகிறது; பாடல் இதோ, ** Galgân Gair னுருவிற் றிகழ்வே லவனன்
ருெவ்வாததென வுணர்வித் ததுதான் அவ்வாறறிவா ரறிகின்றதலால் 龔
எவ்வாருெருவர்க் கிசைவிப் பதுவே.”
கேன உபநிடதம் இன்னும் பேசுகிறது எது விக்கில் விளக்கப் பெரு கதோ
O <9}} * Quit:୫୯୬ எஇல் விளக்கப் பெறுமோ அதுவே பிரமம். எதனை ஒருவர் மனத்தால் உணர்வதில்லையோ ஆனல்
மனம் எகல்ை உணரப் பெறுகின்றதோ அதுவே பிரமம். எதை ஒருவன் கண்ணுல் பா ர்ப்பதில்லையோ ஆயின் கண்கள் எகனல் பார்க்கின்றனவோ அதுவே
பிரமம். எதனை ஒருவன் காகால் கேட்பதில்லையோ காது எகனல் கேட்பதா கின்றதோ அதுவே பிர மம். எகனே ஒருவன் சுவாசிப்பதில்லையோ ஆனல் சுவாசம் எதல்ை சுவாசிக்கிறதோ அதுவே பிரமம்?
இன்னும் விளக்கமாகச் சொல்லப்போனல்
முடியினுல் முடிந்தது, முடியின்றி நின்றது. தெரிய வில்லை என்பவனுக்குத் தெரிகிறது; தெரிந்து கொண்டேன் என்பவனுக்குத் தெரிவதில்லை.
எத்தனை விளக்குகளை ஏற்றி வைத்தாலும் இரவில் நாம் சூரியனைக் காணமுடியாது. விளசுகு

Page 52
امیر |
براہ
முருகன் மணவாளன் கள் இருளைப் போக்கும்; சூரியனைக் காட்டா. இறைவன் காட்சியும் இத்தகைத்தே.
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோன், கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையில் தேனூறி நிற்பான். வேறறக் கலந்து காண்கின்ற விழுத்துணையாம் سلسل முதல்வனை வேறு நின்று காண்கின்ற அழிபொருட் காட்சியில் காணமுடியாது “காண்பார் யார் கண் ணுதலார் காட்டாக்காலே " -
காத்தும் படைத்தும் கரந்தும் வி%ளயாடும் ஆண்டவனுடைய நிலைமையைச் சொல்ல நாம் யார்? தொன்றுதொட்டுப் பேரிருளாகிய அறியாமையிற் டெந்து அறிவொளி மழுங்கி வாழுகின்ற நமக்கு அவன் நிலை விளம்பமுடியாதது, விளம்பி முடியா தது. எல்லாம் கடந்த இறைவனை எம்முடன் நெருங்கத் தொடர்புபடுத்தி அவனை அறியச் செய் 7 வன பொன்னும் பொருளும் போகமும் அல்ல, அருளும் அன்பும் அறனும் ஆகும். இதனை நன்கு அறிக்கவர் கடுவன் இளவெயினனர். அவர் முருக னிடத்தில் இரக்கின் ருரர்,
யாம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமும் அல்லதின் பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும் உருளினர்க் கடம்பின் ஒலிதாரோயே." இவற்றை நாமும் முருகனிடத்தில் இரப்போம் !
சர்க்கரையை அணுகிய எறும்பு அகனை உண்டு . அப்புறஞ் செல்ல இயலாது அதிலேயே மடிந்து ஒன்ருய் விடுகின்றது போலத் தாங்கள் அனுப வித்த திருவருள் ஆனங்கத்தை விளக்குஞ் சொல் லின்மையால் எடுத்து விள்ளாது அகனேடு அத்து விகமாகின்றனர் அநுபூகிமான்கள். ஆகவே கண்ட வர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்.
 

தல எழுத்து அழிந்தது
திலே எழுத்து அழியுமா? அழியும் கைபுனைங் தியற்றக் கவின்பெறு வனப்பில் உள்ளத்தைப் பறிகொடுத்தவர் அருணகிரியார். அழகுணர்ச்சி அவருக்குக் கருவிலே வாய்த்த திரு. முருகப்பெரு மானின் அழகில் உள்ளத்தைப் பறிகொடுத்தவர் அழகனுக்கு அலங்காரஞ் செய்கிருரர் கந்தர் அலங் காரத்திலே! *
தமிழ்த் திருநாட்டின் தெற்குக் கோடியில் திருச்செந்தூர் இருக்கிறது. முருகன் திரு வ ரு ட் செயல்கள் அத்தனையிலும் பெரும்புகழ் உடையது சூரன் உடலற வாரிசுவறிட வேல்விட்ட திருவிளை 'யாடல். சூரசம்ஹாரம் நடந்தது திருச்செந்தூரிலே, அதுதான் திருச்சீரலைவாய். கடற்கரைப் பட்டினம்
என்ருரலும், நீர்வளம் நிலவளம் மிக்க வயல்களுக்கு அங்கே குறைவில்லை. வயல், பொழில் ஒரே பச் சைப் பசேல் என்றிருக்கும். அங்கே வயல்களில் தண்ணீருடன் சேர்ந்து பாய்ந்து துள்ளிவிஆளயாடு கின்றன சேல்மீன்கள். கொழுத்த மீன்கள் வயலி லுள்ள நீரில் துள்ளிக் குதிப்பதால் வயல்களுக்கு அருகிலுள்ள சோலைகள் அழிந்து விடுகின்றன. நெற்பயிர்களுக்கு நிழல் உண்டாக்கி அவற்றின் வளர்ச்சியைத் தடுக்கின்ற சோலை மரங்களைச் சேல் மீன்கள் அழித்து வயலே வாழவைக்கின்றன. அது வும் முருகன் திருவிளையாடல் போலும்

Page 53
முருகன் மணவாளன்
64
முருகன் மயிலையும், அவன் திருக்கை அயிலையும், கோலக்குறத்தியுடன் வரும் இயலையும் பார்த்தால் யார் தான் தம் மனத்தைப் பறிகொடுக்க மாட் Litigai
திருச்செந்தூரிலே கடம்ப ம ரங்க ளு க் கு க் குறைவே இல்லை. அவை எல்லாம் பூத்துக் குலுங்கு கின்றன. முருகனுக்குக் கடம்பமலர் மாலை சாத்தி அவனை ஏத்தி வழிபடுகின்ருரர்கள் அவனடியார்கள். இதனைக் காண்கின்றர்கள் பூங்கொடியைப் போன்ற மெல்லியல்புடைய பெண்கள். அப்படியே முருகப் பெருமானின் அழகிலும் இளமையிலும் சொக்கிய தால் அத் தனை காலமும் கட்டிக்காத்த அவர் நிறைவு அழிகிறது.
பூங்கொடியார் எ ன் ருர ல் பெண்களே மட்டுமா
குறிப்பிடுகிருரர்? இல்லை, இல்லை. அவ னியில்
தான்றிய ஆன்மாக்கள் அத்தனையும் பெண்களே தான்; ஆண்டவன் ஒருவனே 5ாயகன்.
திருச்செந்தூர்ப் பெருமான ஒரு தரம் கண்டு விட்டால் நிறை அழிகிறது. அதாவது மனம் அழிந்து விடுகிறது. மனகற்ற பரிசுத்த நிலைதானே முக்தி, மனமகிழ்ந்து வாழ்வுதரும் நிலையை அருண கிரியார் அழகொழுக அலங்காரஞ் செய்கிருரர். *
சூரசம்ஹாரம் நமக்கெல்லாம் பெருமை தருங் திருவிழா நம்முள்ளத்தில் வெறி தந்து நெறி கெடுக் கும் அகங்காரம் மம காரம் அற்றுப் போகவேண் டும் என்றல் அது அலங்காரக் கந்தனுல்தான்
 
 
 
 

தலை எழுத்து அழிந்தது 65
முடியும். இதைத்தான் சூரசம்ஹாரம் காட்டித் தருகிறது.
சூரனை அழித்த வேல் சாதாரண வேலா? அது ஒரு தடவை கடலையும் ஒரு தடவை மலையையுமே அழித்துவிட்டது. குரத்துவம் அழிந்தது. சூரன் ܠ ܕ . மாமயிலானன். அவன் பெற்றபேறு யார் பெற்றர் கள்! அசுரத்துவம் அழிந்ததால் கந்தப்பெருமானின் கருணைக்கு இலக்கானுன் குரன். அவன் அழிந்தான அவன் வாழ்ந்தான்! வாழ்ந்து கொண்டிருக்கின்றன்!
சூரன் பெற்றது ஆண்டவனது கொடியாகவும் வாகனமாகவும் நிற்கும் பேறு. சூரபன்மன் கூற்ற கக் கந்தபுராணம் சொல்கிறது,
மெண்ணிலா வூழி கால மெத்திற நோக்கி னுலுங் கண்ணினு லடங்கா துன்னிற் கருத்தினு லடங்கா தென்பா னண்ணினு னமருக் கென்கை யருளென நாட்ட லாமே."
'அண்ணலார் குமரன் மேனி யடிமுதன் முடியின் காறு
சூரனே துணிவாகச் சொல்கிருரன் தான் பெற்றது அருள் என்று. பின் நாம் சொல்ல வேண்டுமா :
இவ்வளவுந்தானு அழிக் கப்பட வேண்டிய பொருள்கள் இன அணும் ஒரு பொருள் அழிக்கப் * படவேண்டியிருக்கிறது. எமது வாழ்வின் நிகழ்ச்சி நிரலைத் தலையிலே எழுதி விட்டான் அந்தப் பிர மன். அந்த எழுத்து அழியா எழுத்தாக நின்று எத்தனை எத்தனை அலங்கோலங்களை ஆக்குகின் றது 5ம் வ, ழ்வில் ? அந்த எழுத்தையும் அழிக் கத்தானே வேண்டும் அந்த எழுத்தை அழிகளும்
,

Page 54
முருகன் மணவாளன்
ஆற்றல் பெற்றவன் முருகன்; செந்தில் முதல்வன் என்று காண்கிறர் அருணகிரிநாதர்
பிரமன் தன் கையால் எழுதினுன், செந்தில் வேலன் அதைத் தன் காலால் அழிக்கிருரன். பிர மன் விதித்த விதியே அழிக்கப்படுகிறது. அருண கிரிநாதர் இங்கே குறிப்பிட்ட அழிவுகள் ஆக்கத்தைத் தரும் அழிவுகள். திருச்செந்தூர்க் செல்வனின் திருவடியிலே தலை தாழ்த்தி வணங்கும் போது பிறவித்துன்பம் ஒழியாமற் போகுமா ?
அயன் எழுதிய எழுத்து அழிந்தது என்ருல் [କ୍ୱାl। ஒழிந்தது என்பதல்லவா பொருள். அப் போது மரணமில்லாப் பெருவாழ்வு கிட்டுகிறது. 枋。。 இப்ப்டித்தான் இவன் வாழ்வு முடிய این دو டும் என்று பிரமன் எழுதிய எழுத்துத் தவிடு பொடியாகி விடுகிறது திருச்செந்தூர் முருகனின் திருவருளால் அருணகிரியார் பாடிய அலங்காரப் பாட்டை காம் இப்போது பார்ப்போம் :
சேல்பட்டழிந்தது. செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின் மால்பட்டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன் வேல்பட்டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன் கால்பட்டழிந்ததிங் கென்றல் மேல்யன் கையெழுத்தே' "
முருகன் அழகேயுருவானவன்; இளமையே கோல
மானவன் 'என்றும் இளையாய் அழகியாய் ஏறுTர்ந் தான் ஏறே உளையாய் என் உள்ளத்துறை' என் பது பழைய பாடல்,
 
 
 
 
 
 
 

தலை எழுத்து அழிந்தது * , செங்கோடஜனச சென்று கண்டுகொழ நாலா யிரம் கண்படைத்திலனே' என்று பிற மனத் திட்டி அழுவார் அருணகிரியார், அவன் அழகு இரண்டு கண்ணுலும் பருகி முடியாத காரணத்தால்
க ங் த புராணத்தில் முருகப்பெருமானுடைய பேரழகை அவருடைய பெரும் புகைவகைத் தோற் maya y குரபன் மனே பாராட்டுகின்ற வரலாறு வரு கின்றது. முருகன் சூரபன்மன் முன்னிலையில் கின்றபோது குழந்தை ஒன்று இங்கே வந்திருக் கிறது என்று துச் சமாக எண்ணினுன் இதனை உணர்ந்தார் முருகப்பெருமான் மிகப் பெரிய திரு வுருவத்தை எடுத்துத் தன்னுடைய அழகு புலனுக முன்னின் முர், சூரபன்மன் நிமிர்ந்து பார்த்தான். மிக உயரமாக இருக்கும் திருவுருவத்தை அண் ணுந்து பார்த்தான். யாரோ ஒரு சிறிய குழந்தை மயிற் குஞ் சி ல் மேல் ஏறிவருகிறதென்றல்லவா எண்ணினேன்; இவ்வளவு அழகு பொலியுக் திரு. வுருவத்தை உடையவன் முருகன் என்பதை இற்றை நாள்வரை அறிந்திலேன் எனப் பச்சாத் தாபமுற்று, . 霹
"கோலமா மஞ்ஞை தன்னிற் குலவிய குமரன் றன்னைப்
பாலனென் றிருந்தே னந்நாட் பரிசிவை யுணர்ந்தி லேன்யான் மாலயன் றனக்கு மேனை வானவர் தமக்கும் Liigi
மூலகாரணமாய் நின்ற மூர்த்தியிம் மூர்த்தி uLI s5i (3o;. ʻʼ
என்று பாடிப் பரவுகிருரன்,

Page 55
68 முருகன் மணவாளன்
முருகன் அழகைப் பார்க்கத் தொடங்குகிருரன்; சிந்தனை சிதறுகிறது, உலகத்திலே மன்மதன்
பேரழகன் என்று பேசுகிருரர்களே, என்ன பைத்தி யக்காரத்தனம் மன்மகன் முருகன் முன் ஒரு தூசு அல்லவா? பெருமானின் உறுப்புக்களைப் பற்றிப் பேசவேண்டாம்; அவன் திருவடியில் உள்ள
ஒரு பகுதிக்கு ஆயிரகோடி மன்மகர்களுடைய
அழகு எல்லாம் ஒன்றுகச் சேர்ந்து உருவம் எடுத் தாலும் ஒப்பாகுமா? பாட்டு வருகிறது; பாட்டிலே யும் அழகு சொட்டுகிறது:
"ஆயிர கோடி காம ரழகெலாந் திரண்டொன் ருகி
மேயின வெனினுஞ் செவ்வேள் விமலமாஞ் சரணந் தன்னிற் றுயநல் லெழிலுக் காற்ரு தென்றி.டி னினைய தொல்லோன் மாயிரு வடிவிற் கெல்லா முவமையார் வகுக்க வல்லார்."
நல்ல பொருளைக் கண்டால் நல்ல எண்ணம் உண்டா வது மரபு. அஃதின்றித் தீய எண்ணம் உண்டா
வது விதிக்கு விலக்கு சூரன் தூய நல்லெழில் கண்டான்; அதனுல் அவனுள்ளத்தில் புதிய அறிவு புகுகின்றது. அறியாமை இருள் அகல்கின்றது. நான் என்னும் அகந்தை விலகுகின்றது. போதம் உள்ளத்தில் இடம் பெறுகின்றது. பேரானந்தப் பெருங்கடலில் மூழ்கிய சூரன் எக்களிப்போடு பாடு கிருரன்,
*போயின வகந்தை போதம் புகுந்தன வலத்த தான
தூயதோர் தோளுங் கண்ணுந் துடித்தன புவன மெங்கு மேயின பொருள்கண் முற்றும் வெளிப்படு கின்ற விண்ணுேர் நாயகன் வடிவங் கண்டே னற்றவப் பயனி தன்ருே."
*
ܼ ܼ ܸ ܼ
 
 
 
 

தலை எழுத்து அழிந்தது 69 போதம் புகுந்ததால் நல்லறிவு தோன்ற உலகமே ... வேறுபட்டுத் தோன்றுகின்றது. காலங்கடந்து, இடங்கடந்து, எல்லை கடந்து நின்ற இறைவனைக் கண்ட இன்பம் பேசும் தரத்ததன்று
முருகப்பெருமானைச் சென்றடைந்து அவன் في
காலில் விழ வேண்டும் என்று குரனுக்குத் தோன்று கிறது; ஆனல் மானம் தடுக்கிறது என்கிருரன்:
"சூழுதல் வேண்டுந் தாள்க டொழுதிடல் வேண்டு மங்கை தாழுதல் வேண்டுஞ் சென்னி துதித்திடல் வேண்டுந் தாலு
வாழுதல் வேண்டுந் தீமை யகன்றுதா னிவற்கா ளாகி வாழுதல் வேண்டு நெஞ்சந் தடுத்தது மான மொன்றே,'
எப்படி இருக்கிறது அசுரத்துவம் !
போரில் அறுபத்தாறு கோடி அசுரர்கள் மாண்டார்கள் என்ருரல் போரைப் பற்றிப் பேச வேண்டுமா? எல்லாரும் மாண்டார்கள்; ஆனல் சூரனின் சூரத்துவத்தைப் போக்கி அவனை மயி லாகவும் சேவலாகவும் ஆக்கிக் கொள்கிருரன் முரு கன் சூரன் தலை எழுத்து அழிக்கது. அவன் பெற்ற பேறு யார் பெற்றரர்கள் அவனே சேவ லும் மயிலும் போற்றி என்று எம்மால் வணங்கப் படுகிருரன். میر
நாம் எழுதிய எழுத்துக்களை அழிக்க ஒரு (ரப்பர்) கருவியுள்ளது. அது போல எகனலும் அழிக்க முடியாத தலையிலுள்ள பிரமன் எழுத்தை அழிக்கும் கருவி கங் கப் பெருமானுடைய திருவடி களேயாகும்.

Page 56
70 முருகன் மணவாளன்
'வல்லத் துரந்த முலைநுளே மாதர் வளயெறியப் பல்லேத் திறந்துறு மக்கவி தாலப் பழமுகுக்குந் தொல்லேத் திருத்திகழ் போரூர்க் குகன்பதஞ் சூடும்சென்னிக் சில்லேப் பிரமன் துயருறக் கீறு மெழுத்துக்களே,
-
O ს C) O பழங்கணக்குகளை அலசிப்பார்த்து மக்களுக் குப் பிறப்புக் கொடுப்பது பிரமன் வேலை. அவன் மக்களைப் படைப்பதில் கைகேர்ந்தவன். அவன் செய்துவரும் சிருஷ்டிகள் ஒன்றுபோல் ஒன்று இல்லை, வேறு வேறு வகை வெவ்வேறு உருவம். படைப்புத் தொழிலில் பேதம் இல்லாத சிருஷ்டியே இல்லை. எல்லாப் பொருளையும் தத்துவத்தையும் உணர்ந்து படைப்பவன் அவன். வேத அறிவு
நிரம்பியவன். அதனுல் வேதியன் ஆன்ை.
எல்லா வித்தைகளுக்கும் உரிய சக்தி கலேமகள். அந்தக் கலைமகளே அவன் மனைவி. அவள் அவன் நாவில் இருக்கிறாள். பின் அவன் அறிவுச் செல்
வத்தைப் பேச வேண்டுமா ?
பிறப்பவர்களுடைய பட்டோலே தயாரிப்பதில் எந்தப் பக்கத்திலும் கோடாமல் வேலை செய்ய வேண்டும். ' கோடாகவேகன் ' என்று அருணகிரி யார் அழகாகச் சொல்வார். தவறு செய்பவர்க
ளுக்குத் தீங்கும் நலம் செய்பவர்களுக்கு நன்மை
யும் தருகிறவன் பிரமன். அவன் தவறு செய் வதே கிடையாது. அவனுக்கு நான்கு முகங்கள். எட்டுக் கண்கள். எல்லாவற்றையும் ஒரே சமயத் தில் பார்ப்பான். அதனுல் அவன் நடுநிலைமையைப்
பற்றிப்பேச வேண்டியதில்லையே!
ー*

தலை எழுத்து அழிந்தது
இந்த நான்முகன் ஒருநாள் அவசரத்தில் அருணகிரியாருடைய பெயரை மறுபிறப்பு எழுதும் பட்டோலேயில் சேர்த்துவிட்டான். பட்டோலையில் முருகன் அடியார்களின் பெயர்களே காணப் படாது. ஏதோ பொல்லாத வேளை; தவறு நேர்ந்து விட்டது.
அருணகிரியாருக்கு இது தெரிந்துவிடுகிறது. அன்றெல்லாம் தலைதருக்கி நடந்து குட்டு வாங்கிக் காலில் தளை பூட்டிச் சிறையில் தள்ளியதை இந்தப் பிரமன் மறந்து விட்டானே! அடியார்களைக் காக் கின்ற வேஜலயைத் தொண்டாகக் கொண்டவன் முருகன் அவன் கைவேல்,
விட்டு அலறச் செய்த வேல். கிரெளஞ்சமலையைத்
தவிடுபொடியாக்கிய வேல், இந்தத் தனிச் சிறப்
புள்ள வேலைக் கையில் பிடித்த முருகப் பெருமா னுக்கு அடியவனகிய என்னுடைய பெயர் பட்டோலே யில் எழுதப்பட்டு விட்டது. -
தனக்குத் தவறு செய்தால் ஒரு பங்கு தண் டனை; தன் அடியார்களுக்குச் செய்க பிழைக்கு இரண்டு பங்கு தண்டனை முன்பு பிரமன் தனக் குச் செய்த அப காரத்துக்கு ஒரு விலங்கு போட்ட
வன் முருகன். இப்போது தன் அடியவனன
எனக்குச் செய்த தீங்கிக்கு இரட்டை விலங்கு போடுவான். காலில் ஒன்று, கையில் ஒன்று-ஆக இரட்டை விலங்கு. என்னை இனிமேல் பிறக்கும்
!எழுதிய பிழைக்கு இருவிலங்கு سالا "

Page 57
72 முருகன் மணவாளன் அருணகிரிநாதர் பாடுகிருர்:
பங்கே ருகன் எனப் பட்டோ லயில் இடப் பண்டுதளே தன்காலில் இட்டது அறிந்தி லனே தனி வேல்எடுத்துப் பொங்கோதம் வாய்விடப் பொன்னஞ் சிலம்பு புலம்பவரும் எங்கோன் அறியின் இனிநான் முருகனுக்கு இருவிலங்கே'
முருகன் அடியார்களுக்கு அப்பெருமானுடைய திருவருளால் தலை எழுத்து அழிந்து பிறப்பு அற்றுப் போகும் என்பது இந்தப் பாட்டிலிருந்தும் கெரி கிறதல்லவா ?
*பங்கேருகன்-பிரமன், பட்டோலே-கணக்கு எழுதும் ஒலை. தளே-விலங்கு ஒதம்-கடல், பொன்னஞ்சிலம்பு-கிரவுஞ்சமலை
உனக்கு நேரிடும் எவ்வித சங்கடங்களையும் ஈசனே ஊட்டுவதாக ஒப்புக்கொள் உனது திருச் தத்துக்காக; ஈசன் நமக்கு எதை ஊட்டுகினும் சீவர்கள் மூலமாகவே அதைச் செய்யவேண்டியிருப்பதால் நாம் சீவர்களை நோக நியாயமில்லை.
ஒருவன் தனக்குத் தீங்கு செய்த பிறன் மேல் அதற்காகப் பழி சாதிக்கும் எண்ணம் உள்ள மட்டும் தான் ஈசுவரனுக்கு அன்பன் ஆகமாட்டான்.
- ஆன்மவிசாரம்.
 

யமனுக்குச் சவால்
(Pருகபக்தியில் மூழ்கித் திளைத்தவர் அருண
கிரிநாத சுவாமிகள் அவர் வினையாலும் அந்த வினையின் விளைவைத் தருவனவாக நினைக்கின்ற
நாளினுலும் கோளிலுைம் வருகிற துன்பங்களுக்கு
மருந்து சொல்கின்றர்:
நாளென் செயும் வினை தானென் செயுமென நாடிவந்த கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந் தோளுங் கடம்பு மெனக்குமுன்னேவந்து தோன்றிடினே'
இறைவனுடைய திருவருளால் நம்முடைய வாழ்
வில் நலம் உண்டாகும் என்ற அசையா நம்பிக்கை நமக்கு வேண்டும். அங்கம்பிக்கையுடன் நாம் வாழ்ந்
தால் நாளுங்கோளும் நமக்கு ஒன்றுமே செய்ய
மாட்டா. எல்லாம் 5 மக்கு அநுகூலமாகவே இருக் கும்.
முருகன் வெற்றிவேற் பெருமான் - அடியார்க்கு நல்லபெருமான் - அவுனர்குல மடங்கப் பொடியாக் கிய பெருமான்; அவன் கோன் ரத் துணை; ೨) ನಿವಾರಿ க?ளயும் அருமருந்து; பார்க்குமிடமெங்கணும் நீக்க மற நிறைகின்றவன்; எங்கே நினைப்பினும் அங்கே முன்வந்து எம் துயர் களைபவன்; அவன் அருள் இருக்கும்போது 5மக்கு அச்சமே இல்லை என்ப
கைச் சொல்லாமல் சொல்லி விடுகின்றர் அருண
கிரிநாத சுவாமிகள் :
*செங்கே ழடுத்த சினவடி வேலுந் திருமுகமும்
பங்கே திரைத தநற் பன்னிரு தோளும் பதும10லர்க் 0S YttttS S S 0ii iiS SSii i y iKS L S S SYS EE S0 0 S uu TS tAAAy TAALAaA MTT KttAttATATTT TAAA AAAA AAAA AAAttAtTTS
10

Page 58
முருகன் துயர் வரும்போது வேல் தாங்கி, மயில்ஏறி வந்துவிடுவன் மரணம் என்றல் அஞ் சாதவர்கள் இந்த உல கத்தில் இல்லை. அது எல் லாத் துன்பங்களுக்கும் தலையாய துன்பம் மரணம் நிச்சயம் என்பது எல்லோர்க்குக் தெரியும். ஆனல் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ எல்லோருக்குக் தெரியாது. இறைவன் திருவருள் நலம் கைவரப் பெற்ற செந்நெறிச் சிலர்கள். ஞானிகள் அடியார்க
ளாகிய இவர்களுக்கு மரணம் என்பது மரணம்
இல்லாப் ருெவாழ்வின் பிறப்பு: அமரவாழ்வின் ஆரம்பம் மேக்கு மாணம் ஏற்படும்போது மறு பிறப்புஞ் சாவும் மீண்டுங் காத்துக் கிடக்கின்றன.
வங்காரமும் எங்கள் மடந்தை யரும் சங்காதம்' என்று வாழ்ந்திருந்தோம்; நாம் : காலனேக் கண்டு பயப்படத்தானே வேண்டும் !
*' +
செந்தில் வேலனுக்கு என்றே தம்மை அர்ப் பணித்தவர் ஈரந்ெஞ்சினர் அருணகிரியார் அவர் Gಠಾಣಾಕ್ಷ್ಣೆ' ஒன்று உண்டு அது அவிரோத ஞான்தடம் வடிவாள். அந்த ஞானம் அபேத ஞானம் அச் வாள் அவரிடத்தில் ஒளிவீசிக் கொண்டிருகின்றது. அந்த மிடுகினல் மரணத் திற்கு ஆவி பயிப்படுவாரா? அந்தகனே அறை
கூவி அழைக்கிருர்
میشد.
தண்ட யுகமுந் திரிசூலமும் விழத் தர்க்கியுன்னத் திண்டாட விெட்டி விழவிடு வேன்செந்தில் வேலனுக்குத் தொண்டாகிய வென் அவிரோத ஞானச் சுடர் வடிவாள்
கண்ட யட அந்த கவந்து பார்சற்றென் கைக்கெட்டவே"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

75
யமனுக்குச் சவால்
''ஓ, யமனே, முருகனுக்கு நான் அடியவன்; என்கையில் அபேக ஞான வாள் இருக்கின் 10 து; வேண்டுமாகில் வந்துப்ார்; சற்று என் கைக்கு எட் டும் டியாக வந்து பார்; உன் கையில் இருக்கின் ற தண்டாயுதமும் திரிசூல மும் திண்டாட வெட்டி விடு வேன்'' என்று யமனுக்குச் சவால் விடுக்கிறார் அருணகிரி காகர். அ வரு க்கு இருந்த மிடுக்கு முருக பக்தி. உள் ளம் உரமேறி நரம்புகள் முறுக்கே றி விட்டன திருவருட்பெருக்கால்! அவர் பாடுவதில் புதுமை என்ன !
உருக்குலைந்து உடல் மெலிந்தவர்கள் அடியார் கள். இவர்களிடம் வீரம் இருக்குமா என்று நாம் சந்தேகிக்கலாம்.. வீ ரம் உண்டு; அ சைக்க முடி யாத வீரம்; நாம் கற்பனை யில் காண முடியாத வீரம்; கல் இன்றைய நவநாகரிகத்தைச் சுக்குநூறாக உடைத்
தெறியும் வீரம்.
*''ஆ ரங் கண்டிகை ஆடையுங் க ந் ைதயே
பாரம்" ஈசன் பணி அல தொன் றிலார் ஈர அன்பினர் யாதுங் கு றை வி லார்
வீரம் என்னால் விளம்புந் தகையதோ'' “எங்கெழில் என் ஞாயிறு எமக்கு"? " என் றிருக்கும்
அடியவர்களின் வீரத்தைச் சொல்ல முடியாது., ''வீரம் என்னால் விளம்புந் - த கைய கோ ''* என்று. தத்தளிக்கிறார் மந்திரியாகக் கடமையாற்றிப் போர் பல கண்ட சேக்கிழார் ! -
அடியவர்கள் ஈர அன்பினர், யாதும் குறைவி லாதவர்கள். ''ஞானவாள் ஏந் துமின்'' எ ன் று
அடியவர்க்கு வழி காட்டுகிறார் மணிவாசகர்.
*ஆரம்-மாலை, கண்டிகை --- உருத்திராக்கம்

Page 59
6 முருகன் மணவாளன்
யமன் வருவான்; அப்போது நீ மயிலின் மேல் வேந்து என்னைக் காக்க வேண்டும் என்ற கருத்தை
வைத்து,
"மாகந்தை முட்டிவரும் நெடுங் கூற்றன் வந்தால் என்முன்னே
தோகைப் புரவியில் தோன்றி நிற்பாய்,
. ܬܐ என்று பாடுகிரர் அருணகிரியார் பாடியவருக்குப் பயம் போய் விடுகி nது. தைரியம் வந்து விடுகிறது. நிச்சயமாக முருகன் திருவருள் கிடைக்கும் என்ற உறுதி. யமபயத்தைப் போக்குவதற்குரிய படைக் கலங்களெல்லாம் உள்ளத்திற் சேர்த்துவிட்டார்.
காலனுக்குக் காலணுகித் திருவடி யி ன லே காலனே உகைத்துக் கொன்ற கதை பிரசித்தி *? பெற்றதே. திருக்கடவூரிலே G J G) TT &org gr ggor
டைந்த மார்க்கண்டேயருக்கு வாழ்வு கொடுக்கவன் மைந்தன் அல்லவா முருகன் பெரிய பெரிய அசுரர்களையெல்லாம் அழித்துக் காத்த வீரவேல் அவன் கையில் இருக்கிறது 'சீராவுஞ் சிறுவாளும் வேலும் எனக்குத் துணையாக இருக்கின்றன; நீ எக்கப் படையோடு இங்கு வந்தாலும் எனக்குப் பயமில்லை; என் சிந்தையில் முருகன் இருக்கின் முன்; நீ உய்ய வேண்டும் என்று கருதினுல் ஒரு
அகன்றுபோ; அப்படி 51 ன் சொல்வதைக் கேளா
வாங்கி விடுவேன்? என்று எம்மையெல்லாம் பாட
வைத்து யமனுக்கு அஞ்சாத நிலையைத் தேடித் தருகிறர் அருணகிரியார். -
மல் அருகிலே வருவாயேயானுல் உன் உயிரையே
வழி சொல்கிறேன்; என்பக்கத்தில் வ ரா மல்
 
 
 
 
 
 
 
 
 
 
 

யமனுக்குச் சவால்
பாட்டு இது கான் :
"தாரா கணமெனுத் தாய்மா ரறுவர் தருமுலேப்பால்
ஆரா துமைமு?லப் பாலுண்ட பால னரையிற் கட்டுஞ் ராவுங் கையிற் சிறுவாளும் வேலுமென் சிந்தையவே வாரா தகலந்த காவந்த போதுயிர் வாங்குவனே'
எனக்குக் கிட்ட வராதே வந்தால் உயிர் வாங்கு வே ன் என்றவர் அத்துடன் விட்டுவிடவில்லை. யமனேயும் யமன் ஏறிவரும் எருமைக் கடாவையும் யாரும் நிறுத்த முடியாது. " மாற்றிரும் கூற்றம்' என்று கொல்காப்பியம் பேசும். யமன் எருமைக் கடாவில் வரும்போது முருகன் அடியான் என்ற மிடுக்கு இருந்தாற்போதும் யமபயம் போக்க
அருணகிரி 5ாதருக்கு இருந்தது அந்த மிடுக்கு, அகனல் 'இந்த உலகம் அறிய உன்னை வெட்டி விட்டுத் தான் மறுகாரியம் பார்ப்பேன்? என்று கொந்தளிக்கிருரர். 'எல்லோரிடமும் அடிக்கிற தம் பட்டம் என்னிடம் அடிக்க முடியாது; ஏன் ? நான் யார் தெரியுமா? தேவர்களுக்கு யமனுகவிருந்தவன் குரன், தேவலோகம் அவன் பெயரைக் கேட்டால் திடுக கிடும்; கோலமா மஞ்ஞை தன் னில் குலவிய குமரனை அன்று அவன் பாலன் என்று இருங் தான்; அவனை முட்டிப் பொருத வந்தவன் செவ் வேள்; அந்தப் பெருமானுடைய சந்நிதானத்தில் நான் நிற்கிறேன்” என்று கர்ச்சிக்கிருரர். யமனுக் குச் சூரன் ஞாபகம் இருக்குக்கானே! அதைச் சொல்லிக்காட்டி விட்டு, 'நான் ஆயத்தம்; நீயும் உன்னுடைய போர்க கோலத்கைத் தாங்கிக்கொள்?
*தா ரா-நட்சத்திரம், அறுவர்-கார்த்திகைப் பெண்கள்.
சீரா-உடைவாள்

Page 60
78 முருகன் மணவாளன்
என்று யமனுக்கு உத்தரவு பிறக்கிறது அருண கிரியாரிடமிருந்து,
இவ்வளவையும் அடுக்கிக்கொண்டு செல்லும் போது நமக்கு எல்லாம் ஒரு சங்தேகம் யமனுக் குக்கூடச் சந்தேகம் எழுந்திருக்கும் மார்புதட்டிப் பேசுகிருரே அருணகிரிநாதர்; இவரிடம் அப்படி யென்ன பெரிய ஆயுதம் இருக்கிறது, என்ற சக் தேகம் எழுவது இயற்கைதானே.
யமனுக்கு ஆயுதங்கள் பல. அவ னுடன் போருக்குப் புறப்படும் அருணகிரிநாதரிடம் ஒரே யொரு ஆயுதங்கானிருக்கிறது. அதனையும் நன்ற கத் தீட்டி வைத்திருக்கிருரர். நாளுக்கு நாள் கூர்மை கூடிக்கொண்டே செல்கின்றது.
சக்தியாகியவாள் என்கையில் இருக்கிறது. அதையமன் பார்க்கமாட்டான் ஏன் ? அவன் அந்தகன் (குருடன்) அல்லவா ? முருகப்பெருமான் எனக்குப் பாலித்த அருளாகிய சக்திவாள் ஒளி விட்டுக் கொண்டிருக்கிறது. "வேண்டு மா னு ல் அந்தகா வந்து பார் ! உன்னை உலகத்தவர் சிரிக்க வெட்டித் தோல்வியுறச் செய்து விடு கிறேன்.? அருணகிரியாருக்கு இருந்த மிடுக்குப் பாட்டிலே தொனிக்கிறது. பாட்டு வருகிறது :
*"பட்டிக் கடாவில் வருமந்த காவுனைப் பாரறிய
வெட்டிப் புறங்கண் டலாதுவிடேன் வெய்ய சூரனைப்போய்
முட்டிப் பொருதசெவ் வேற்பெரு மாள்திரு முன்புதின்றேன் கட்டிப் புறப்பட டாசத்தி வாளென்றன் கையதுவே"
*பட்டி-அடக்கமுடியாதது. கட்டி-ஆயுதங்களை அணிந்து
 
 

"! !"
யமனுக்குக் வால் g
இவ்வாறு யமனுக்குச் சவால் விடுத்தவர் அருண்
கிரிநாதர் யமன் வருவான் என்பது அவருக்கு நிச்சயமாகத் தெரியும் எவ்வளவு கைரியம் இருக் தாலும் திருவருள் முன் நின்று காப்பாற்றினலன்றி யமன அசைக்க முடியாதென்பதும் அவருக்கு கன் முக விளங்கும. யமன் வரும்பொழுது வாழ்நாளில் ஈட்டிய அறிவெல்லாம் மறைந்துவிடும். எல்லா வற்றையும் மறைத்துக் கொண்டு வருவான் அவன். அஞ்சினலும் போகமாட்டான், கெஞ்சினுலும் விட LDITI "LIT Gör.
ம ரணம் வரும்போது ஏற்படும் அச்சத்தை அப்பர் சுவாமிகள், "ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய் ஒக்க அடைக்கும் போது உணரமாட்
மணிவாசகர்,
"யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக் கென் கடவேன்?
என்றும்,
அச்சம் தொனிக்கப் பாடியுள்ளார்கள்.
Ο ) Ο அருணகிரிநாதரும் யமபயத்தைப் பற்றி கன்
முக அறிந்திருந்தார். முருகன் திருவருள் நலன் இருந்தால் அந்தகனுக்குப் பயப்படும் நிலை வந்தடை யாது இதை அவர் எமக்கும் சொல்லித் தருகி முர்: "யமன் எருமைக் கடாவில் வருகின்ற நேரத் தில் பச்சை மயிலின்மேல் அச்சம் அகற்றும் அயில்

Page 61
30. முருகன் மணவாளன்
வேலைத் தாங்கி வரவேண்டும், முருகா நீ என்முன்
காட்சி தந்தால் பின் யமபயம் ஏது. யமன் வரு
வான் என்பது உறுதி; அப்படி வரும்போது, முருகா நீ அவனை முக்திக் கொண்டு வெகுவேக
மாக மயில் மீதே எழுந்தருளி வந்து காட்சி தர வேண்டும்' என்று முருகனை முன்னிலைப் படுத்திப் பாடுகிறர் அலங்காரத்தில், ଶ୍ରେ: மாகத்தை முட்டி வருநெடுங் கூற்றன்வந் தாலென்முன்னே தோகைப் புரவியில் தோன்றிதிற் பாய்சுத்த நித்தமுத்தித் த்யாகப் பொருப்பைத் த்ரிபுராந் தகனத் த்ரியம்பகனைப் பாகத்தில் வைக்கும் பரமகல் யாணிதன் பாலகனே' யமதூதர் தன்னை வருத்தக்கூடாது என முரு கனே வேண்டி,
இசைந்த ஏறுங் கரியுரி போர்வையும் எழில்நீறும் இலங்கு நூலும் புலியத ளாடையும் மழுமானும் அசைந்த தோடுஞ் சிரமணி மாலையும் முடி மீதே அணிந்த ஈசன் பரிவுடன் மேவிய குருநாதர் உசந்த சூரன் கிளையுடன் வேரற முனிவோனே உகந்த பாசங் கயிருெடு தூதுவர் நலியாதே
அசந்த போதென் துயர்கெட மாமயில் வரவேணும் அமைந்த வேலும் புயமிசை மேவிய பெருமாளே'
எனத் திருப்புகழிலும் இறைஞ்சுகின் ரர்.
மற்றவர்கள் இறப்பதுபோல் இறக்கக்கூடாது; முருகன் திருவருள் தான் இறப்பதன்முன் தன்
னைக் காக்கவேண்டும் என்பது அருணகிரியாரின்
ஆசிை அவர் பிரார்த்தனை பலித்தது.
பிறர் உடம்பை ப்ேபது போன்று அவர் வாழ்வு முடியவில்லை. பூத உடம்பு அழிய
. . . த்சியம்பகன் = முக்கண்ணன்
உயிர் போகும்
 
 

யமனுக்குச் சவால்
நிலை அவருக்கு ஏற்படவில்லை. உடலைப் பிறர் போக்குமாறு போக்காமல் கிளி உருவம் பெற்று இறைவன் திருக்கரத்தில் அமர்ந்து அநுபூதிப் பாக்களைப் பாடிய தாகக் கூறப்படுகின்றது.
''பரவ சந் தணிந் துனையு ணர்ந் தொரு மவுன பஞ் சரம் பயில் த ருஞ் சுக
பதமடைந் திருந் தருள் பொ ருந்தும் தொரு நாளே" என அவர் வேண்டியபடி சுகபதம் (சுகம் - கிளி; பதம் - நிலை) பெற்றார்.
முருகன் அருள் செய்தான். அவர் பெற்ற அருள் அதிசயமான து. இந்த அதிசயத்தை அ நு பூதியில் சொல்கின்றார்:
'' நாகாசல வேலவனே, ஆசு, மதுரம், சித்தி ரம், வித் தாரம் என்னும் நால்வகைக் கவிகளையும் பாடும் திறமையை அருளிய பெருமானே, தேவ லோக வாசிகளின் முடியிலே மணிபோலத் திகழ் பவனே, நீ எனக்குச் செய்த உபகாரத்தை என் னென்பேன்; உலகத்திலுள்ள மக்கள் உடம்பை விட்டு உயிர் நீ ங்கும்போது சுற்றத்தவர்கள் அனை வருங்கூ-டிக் கூகா என அ ழுது புலம்புவார்கள் ; அப்படி என் சுற்றம் அழுது புலம்ப நான் மரண மடையாமல் உண்மையான உபதேசத்தை எனக்கு அருளியவாறு என்ன ஆச்சரியம்'' என்று பாடிப் பரவுகிறார். பாடல் இதோ :
• 'கூகா என என் கிளைகூ டி அழப்
போகா வகை மெய்ப் பொருள்பே சியவா *நாக சலவே லவ நா லு கவித்
தியாகா கரலோ கசிகா மணியே"
*நாகாசலம் - திருச்செங்கோடு

Page 62
தனக்கு அமைச்சராக்கி விடுகிருன் வாதவூரரை.
குதிரைக்கர இராவுத்த முருகன்
முருகன் குதிரைக்காரன் அருணகிரிநாதர் சொல்லுகிறர் கந்தரலங்காரத்தில் ஓரிடத்திலா? இல்லை, இரண்டு இடத்திலே! முருகன் குதிரைக் காரணு அருணகிரிநாதர் காரணமின்றிச் சொல் ? זaxifrrf
வாதவூரிலே மாணிக்கவாசகர் பிறக்கிருரர் நல் லறிவு கைவரப்பெற்று விளங்குகிருரர். அறிவுடை மையை அரிமர்த்தன பாண்டியன் அறிகிருரன்;
காற்பத்தொன்பது கோடி பொன் கொடுத் துத் குதிரை வாங்கிவர அனுப்புகிறன் அரசன். அமைச்சர் வாதவூரர் திருப்பெருந்துறைக்கு வரு கிருரர். ஒரு குருந்த மரத்தடியிலே சிடர்கள் சில ருக்கு ஞானுேபதேசஞ் செய்யும் முனிவரொருவ ரைக் காண்கிருரர். பக்தி மேலிடுகிறது தம்மை மறந்து, காம் வந்த பணியை மறந்து தம்மைத் தடுத்தாட்கொள்ள இறைவனே எழுந்தருளி வங் திருக்கிருரன் என்று உணர்கிருரர். கொண்டு வந்த பணத்தை எல்லாம் இறைவனுக்குக் கோயில் கட்டு வதற்காகச் செலவு செய்கிருரர். பாண்டியனுக்கு இச்செய்தி எட்டுகிறது. மதுரைக்கு உடனடியாக வரும்படி கட்டளை பிறக்கிறது. மதுரைக்கு வருகி ருரர் குதிரைகள் என்ன ஆயின வென்று வினவுகிருரன் அரசன். இறைவன் இயம்பி யதை மனத்துட்கொண்டு 'ஆவணி மூலத்தன்று
 
 
 

குதிரைக்கார முருகன் 83
குதிரைகள் வரும்' என்று விடை வருகிறது வாத வூரரிடமிருந்து இறைவனும் திருப்பெருந்துறைக் காட்டிலுள்ள நரிகளையெல்லாம் குதிரைகளாக்கி
ஒட்டிக்கொண்டு வருகிருன் இராவுத்தனுக ನೌaT# # மாகச் சொன்னல் குதிரைக்காரனுக
குதிரைகள் எல்லாம் இலாயத்தில் 3.lül 13 இரவாகப் பரிகள் எல்லாம் நரிகளாகி மற்றக் குதிரைகளைக் கடித்துவிட்டு ஒடு
ਫ੭
சிறை விதிக்கிறன் பாண்டியன் Daorofalasjir gets ருக்கு திரும்பவும் இறைவன் மண் சுமக்கும் கூலி யாளாக வந்து, பெருகும் வைகையை அடைக்கி முன் மன்னனிடம் அடிபடுகிறன். ஆண்டவன் திருவருள் நலனையும் அடியார் பெருமையையும் உலகம் அறிகிறது. மணிவாசகர் யாத் தி  ைர தொடங்குகிறர் திருவாசகம் எழுகிறது. இது மணி
வாசகரின் சரித்திரச் சுருக்கம்
யானையை ஒட்டுபவன் மாவுத்தன் குதிரையை ஒட்டுபவன் இராவுத்தன். திருப்பெருந்துறையி லிருந்து மதுரைக்குக் குதிரை ஒட்டிவந்த இராவுத் தன் இறைவன். அந்த இராவுத்தன் மகன்தானே முருகன். அருணகிரிநாதர் இராவுத்தனே என்று பாடுவதில் வியப்பில்லைத்தானே!
“முருகா, நான் உன்னுடைய புகழை உள்ளத் தில் நினைந்து போற்றுவேன்; யமன் வரும்போது நீ வந்து என்னைப் பார்த் து அஞ்சல் என்று

Page 63
முருகன் மணவாளன்
சொல்ல வேண்டும் என்று கேட்கிருர் அருணகிரி ாேதர் முருகனைக் கொஞ்சம் தட்டிக் கொடுக்கி ருர் 'நீ என்ன சாதாரண பேர் வழியா? கண்ண பிரான் மாமனுக்கு மருகன் அல்லவா ? கண் ணன் காளிங்க நர்த்தன்ஞ் செய்பவன். ஐந்து ఓు நாகத்தின்மீது ஒரு காலில் நின்று கொண்டு பாம்பின் வாலை ஒரு கையில் பிடித்துக்கொண்டு ஆனந்த நீர்த்தன்ஞ் செய்கிறன் முருகனுடைய மாமன் விளக்கமாக சொன்னல் நம்முடைய மனமே காளிங்கன் மின்ம் என்னும் காளிங்கன் நஞ்சு கொப்புளிக்காமல் இருக்கவேண்டுமாயின் இறைவன் அதன்மேல்நின்று ஆடவேண்டும். அப் போது மனம் ஒருமுகப்படும். | ზ | ხ |
*
அது மட்டுமா? No log வரும் முருகனைக்
காணும்போதெல்லாம் சூர்ணுக்கு நடுக்கம். மயில் பறந்து போகும்போது அருகில் இருக்க ஒரு மலையே இடிந்து விட்ட்து அப்போது சூரன் மன்மும் இடிந்துவிட்ட்து. ஆண்டவனுடைய அடியார்களுக்கு மயில் ஒரு தீங்குஞ் செய்யாது திருவருளே மறந்து
வாழ்பவர்களுக்கு மயில் நடுக்கத்தையே கொடுக் கும் நடுக்கம் போக வேண்டுமானல் இறைவன் திருப்புகழை இடைவிடாது ஒதவேண்டும்.
மார்க்கண்டேயர் உயிரைப் போக்க வந்தவ னுடைய உயிரே போன கதை நமக்குத் தெரியுமே. அப்பெருமான் மகன்தானே முருகன். பின் கால னல் வரும் அச்சமேது ? இந்த அருமையான கருத் துக்கள் எல்லாம் பொதிந்த அற்புதமான பாடல்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குதிரைக்கார முருகன் 姆。
'படிக்குத் திருப்புகழ் போற்றுவின் கூற்றுவன் பாசத்தினுற்
பிடிக்கும் பொழுதுவந் தஞ்சலென் பாய்பெரும் பாம்பினின்று நடிக்கும் பிரான்மரு காகொடுஞ்சூர னடுங்கவெற்பை இடிக்குங் கலாபத் தனிமயிலேறு மிராவுத்தனே'
இராவுத்தனே என்று முடியும் இன்னெரு
* AN (2) --S ٹہرنے" : "",*,,,,,,,,,,,,, T6) கட்டுண்ட சொல்லியர் 9"50"ДО ФРНН* தேழாவது கந்தரலங்காரப் பாடல்)
முருகனக் குதிரைக்கரன் என்றது எவ்வளவு இன்பமாக இருக்கிறது. $ರ್ç
பாடல் :
| || s!\{e No
„ ბუნეშ7**", "სტაუნში’’. சாதிப்பிரிவை ஒழிக்கவேண்டும் என்ற காலம் இது சாதி இரண்ட்ொழிய శిక్ష్మడి என்பதும் இட்டார் ப்ெரியோர் இட்ாதார் இழிகுலத்தோர் என் பதும் நாமறிந்ததே அந்தக் காலத்திலே சமுதா யம் நன்ருரக ஒழுகுவதற்காகச் சாதி வகுத்தார் கள். அதனுல் நல்ல காரியங்க்ள் பலவற்றைச் செய்தார்கள் இப்போது கீழ்சாதி மேல்சாதி என்று சாதிவேறுபாடு வந்து சமுதாயத்தில் எத்தன் பிளவு கள், எத்தனை சண்டைகள் இப்போது சாதி வியாதியாயிற்று. அதனுல் சாதியே வேண்டாம் என்று சொல்ல வேண்டியிருக்கிறது. '
பன்னீர்ாயிரம் பாடல்களைக் கொண்ட கந்த புராணத்தின் ஆசிரியர் கச்சியப்ப சிவாசாரியார். வாழ்வியலின் பல நுட்பங்களைக் கொண்டது கந்த புராணம், வள்ளுவர், திருமுறை பாடிய நாயன்
、
ணுமொரு சுவையான

Page 64
முருகன் மணவாளன்
86
மார்கள் எமக்கு எடுத்துரைத்த கருத்துக்கள் பல
வற்றைக் கச்சியப்பரும் எடுத்தாண்டுள்ளார்.
தேங்கிக் கிடக்கின்ற திருவருளே வாங்கித்தா வழி வகுத்தவர்கள் சிவாசாரியர்கள். அவர்களுள் கச்சியப்ப் சிவா சாரியரும் ஒருவர். பிறப்பினல் 4 பேசப்படும் சாதியுணர்வுகள் சமய நெறிக்கும் சமு தாய நெறிக்கும் மிகமிக முரண்பட்டன. *),
சமுதாயம் ஒரு சங்கிலித்தொடர் போன்றது" சமுதாயத்தில் சாதி பேசாது ஒருவரோடொருவர் கைகோத்து வாழவேண்டும். அதுவே சமுதாய ஒழுங்கு; பண்பட்ட சமயநெறி, "ஒன்றேகுலம் ஒரு வனே தேவன்'; இது திருமந்திரம் காட்டும் பரி பூரண சைவசமய வாழ்வு. இதனைக் கச் சி யப்ப சுவாமிகள்,
*சிறிய ரென்றுஞ் சிலரைச் சிலர்மேல்
நெறிய ரென்றுந் நினைவது நீர்மையோ இறுதியில் உயிர் யாவும் ஒன்றேயெணு அறிதல் வேண்டும் அஃது உண்மையதாகுமே”
எனப் பேசுவது வள்ளுவரின்
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்குஞ் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்' ܢܝܼܨ݂ܵܬܐ
என்ற குறளுக்கு விளக்கமாக அமைகின்றது.
'சாத்தி ரம்ல பேசுஞ் சழக்கர்காள்
கோத்தி ரமுங்கு ல்முங்கொண் டென் செய்வீர் ' ?
என்று அப்பர் கேட்டால்,
 
 
 
 
 

குதிரைக்கார முருகன் g
'சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிபட்டுத் தடுமாறும் ஆதமிலி நாயேன அல்லலறுத்து ஆட்கொண்டு'
என்று அழுதழுது பாடுவார் திருவாசகத்தில் tpგუუქმ | 6.JITge 35 l.
காட்டிலுள்ள அத்தனை சாதிகளும் இறைவ னேடு தொடர்புடையன. இதைக் காட்டித் தருவ தற்கோ என்னவோ ஒரு பாட்டுப் பாடுகிறர் அருண் கிரிநாதர். இரும்படிக்குங் கொல்லன், கோல் தைக் குஞ் செம்மான், மலைப்புகளில் மறைந்து கின்று இரைபிடிக்கும் வேடன், நெசவுத் தொழில் செய் யும் கைக்கோளன்; இவ்வளவு சாதிப்பெயர்களை யும் முருகனையும் இணைத்துப் பாடுகிருரர். பாட்டு இதோ:
"கருமான் மருகனைச் செம்மான் மகளைக் களவுகொண்டு வருமா குலவனச் சேவற்கைக் கோளனை வானமுய்யப் பொருமா வினைச்செற்ற போர்வேல னைக்கன்னிப் பூகமுடன் தரும மருவுசெங் கோடன வாழ்த்துகை சாலநன்றே.”
இரும்படிக்குங் கொல்லன் கருமான். அவ. னுடைய மருகன் முருகன், கோல்வேலை செய்கிற வன் செம்மான். அவனுடைய மகளைக் களவாடிய கள்வன் முருகன், மலையில் வேட்டையாடும் வேடன் ஆகுலவன். மலைப்புதரில் மறைந்து நின்று பறவை பிடிக்கும் ஆகுலவனைப் போல வேங்கை மரத்தில் மறைந்து நின்று வள்ளியின் கரம்பிடித்தவன் முருகன். கைக்கோளன் என்பது செங்குந்தர் குலப்பெயர். சேவற் கைக்கோளன் முருகன்; அதாவது சேவற் கொடியைக் கையிலே யுடையவன் முருகன

Page 65
முருகன்
மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் கொல்லன. யுஞ் செம்மானையும் வேடனையும் கைக்கோளனையும் கினைப்பூட்டி எல்லோர்க்கும் முருகன் சொந்தம் என்று சொல்லித் தருகிருர் அருணகிரிநாதர்
சிறிது ஆழ்ந்து பார்த்தால் கருமால் மருகன் என்பது கரியநிறம் பொருந்திய திருமாலின் மருகன் முருகன், செம்மான் மகளைக் களவுகொண்டவன் என்பது செந்நிறம் பெற்ற மானுருவில் வந்த திரு மகளுடைய மகளாகிய வள்ளிநாயகியைக் களவில் மணந்தவன் முருகன் ஆகுலவன் கவலேயுள்ளவன். அதாவது வள்ளியைக் களவில் எடுத்துப் பேரருள் புரியவேண்டுமென்ற கவலைகொண்டவன் முருகன். சேவல் கைக்கோளன் என்பது சேவலாகிய கொடி யைக் கையிலே கொண்டவன் முருகன்,
பிறப்பும் இறப்பும் அற்ற பெருமானைக் கருமா னுேடுஞ் செம்மானுேடும் வேடனுேடும் செங்குந்த ரோடும் இணைத்துப் பாடிய அருணகிரியாருடைய சதுரப்பாட்டுக்கு நாம் தலைவணங்கியேயாக வேண் டும் முருகன் மேலிருந்த முறுகிய பக்தி அவரைக் குதிரைக்காரமுருகன் என அழைக்கிறது. சாதிப் பெயர் சொல்லிச் சமற்காரமாகப் பேசுகிறது.
இத்தகைய அலங்காரம் தமிழ்க் கவிதையின் சிறப்பு. சுவையறிவார்கள் கந்தப்பெருமானின் திரு வருட் செல்வர்கள் !
 
 
 
 
 
 
 
 

இருகண்கள்
மார்கழித் திங்கள் திருவருள் நினைவுக்குரிய - திங்கள், உயிர்களின் இன்பநலன் கருதி எம்பெரு
மான் திருநடனம் செய்யும் திருவாதிரை வந்துலா வும் திங்கள், மானிடர்க்கும் இருள் நீக்கும் காலம். தேவர்களுக்கும் அது விடியும் காலம்.
மார்கழி மாதம் விடியற் காலம், கூவின பூங் குயில்; கூவின கோழி; குருகுகள் இயம்பின. நீராடப் புறப்படுகிறார்கள் இளங் கன்னியர்கள். எழுந்திராத தோழியர்கள் வீடுதோறும் சென்று -- துயிலெழுப்புகிறார்கள். ஒருத்தி நல்ல நித்திரை. கதவைத் திறவாமல் கடுந்துயிலில் ஆழ்ந்திருக்கிறாள். ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் சோதியை நாம் பாடக் கேட்டேயும் இன்னுமா வல்லுறக்கம் ; வன் செவியோ நின் செவி தான் என்று பாடுகிறார் கள். அவள் பள்ளியை விட்டு எழுந்து நீராடும் துறையை நோக்கி நடக்கிறாள். இன்னொருத்தி அடுத்த வீட்டுக்காரி; அவளும் எழுந்து இன் னும் வரவில்லை. அம்மா தோழி, இந்த மலர் நிறைந்த படுக்கையின் கண்ணே இவ்வளவு விருப்பமா ? நாம் தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்து ஈசனார்க்கு அன்பர்களல்லவோ? என்று பாடுகி றாள். இனிமேல் அவளுக்குத்தான் என்ன தூக் கம்? அவளும் எழுந்து கூட்டத்துடன் சேர்ந்து விட்டாள்.
12

Page 66
90 முருகன் மணவாளன்
ஒருத்தி கதவைத் திறக்காமலே கடுந்துயிலில் ஆழ்ந்திருக்கிருள். அவளுடைய வீட்டு வாசலுக்கு வந்த தோழிகள் பாடுகிருரர்கள் தோழி, நீ முன்னே நம் சிவனை ஆனந்தன் அமுதன் என்றளளுறித் தித்திக்கப் பேசுவாய்; இப்போது யோ துயிலில் ஆழ்ந்திருக்கிருய்? வந்துன்கடை திறவாய்' என்று கதவைத் தட்டினர்கள். நாணித் தலைகுனிந்தவ ளாய் அவளும் நீராடப் புறப்பட்டு விட்டாள்.
இன்னுெருத்தி எழுந்து விட்டாள். ஆனல் எல்லோரும் வந்து விட்டார்களோ என்று ஒரு சங் தேகம் வினவுகிருள் தோழிகள் விடை கூறு கிருரர்கள். விண்ணுக் கொரு மருந்தை வேத
கசிந்துள்ளம் உள்ருெக்கு நின்றுருக யாம் மாட் டோம்; நீயே வந்து எண்ணிக் குறையில் துயில்; எண்ணிப்பார் அம்மா, தொகை குறைந்தால் மீண்
டும் போய்ப் படுத்துக் கொள்' என்று கேலி
பண்ணுகிருரர்கள். அவளும் இனிமேல் தூங்குவாளா?
வீதியில் சென்று கொண்டிருக்கிருரர்கள் எல்
லோரும் ஒரு த் தி யின் வீடு அடைக்கப்பட்டுக்
கிடக்கிறது. 'சிவனே சிவனே என்று ஒலமிடி னும் உணராய் உணராப்காண் 1 கடைதிறவாய்? முன்னெல்லாம் நீ மாலறியா நான்முகனும் காணு மலையினை நாம் போலறிவோம் என்று பிதற்றி னயே’ என்று இடித்துரைக்கிருரர்கள். நாணிக் கோணிக் கண்ணைத் துடைத்துக் கொண்டு அவ ஞம் வந்து
விழுப்பொருளேக் கண்ணுக்கினியானப் பாடிக்
 
 

இருகண்கள் 9.
வல்லுறக்கம் (მექი, მექტr | 5 வாயாடி ஒருத்தியின் வீடு இன்னும் திறந்தபாடில்லை. ஏனைய தோழிகள் பாடுகிருரர்கள்; "நீ மேற்று, நாளே வந்துங்களே நானே எழுப்புவன் என்றயே; நீ சொன்ன சொல் எந்தத் திசைக்குப் போய்விட்ட்து அம்மா ? இன்ன மும் விடியவில்லையா' வாயாடியாம் அவள் நீரா டப் புறப்படுவதை விடச் சொல்வதற்கு என்ன
இருக்கிறது ? "
மூலை வீட்டுக்காரி நல்ல நித்திரை. “என்னுனை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும் சொன்னுேங்கேள், வெவ்வேரு ய் இன்னந்துயிலு தியோ ? வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தி, நின்னுடைய துயிலின் சிறப்பை என் னென்பது? என்று குரல் எழுப்பினுர்கள் இனி மேலும் அவள் துயில் வாளா?
வீதி ஒரத்திலிருக்கும் இன்னுெருத்தி நல்ல செவிடுபோலும் கோழி கூவியது; குருகுகள் இயம்பின; வெண்சங்கம் முழங்கியது; ஒன்றுமே அவளுக்குத் தெரியாது. தோழியர்கள், கேழில் பரஞ்சோதி, கேழில் பாங்கருணை, கேழில் விழுப் பொருள்கள் பாடினுேம் கேட்டிலேயோ? இதென்ன உறக்கம் அம்மா ?? என்கிருரர்கள். அவளும் கண் ணைத் துடைத்துக்கொண்டு கூட்டத்துடன் சேர்ந்து விட்டாள்,
சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகும் கன்னி யர்களுக் கெல்லாம் ஒரே களிப்பு முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம் @LTញ36T

Page 67
முருகன் மணவாளன்
னே, கின் மெய்யடியார்க9ளயே பன்னிந்து மனத்து வாழ்ே
ரர்கள்
பார்க்கவேண்டும் உயிர் கதிரவன், திங்க ள், வான், வளி, நெருப்பு நீர், நிலம் என எண்வகையாயும்
 ില്ക്ക് இறைவன். எனவே அவ்வடிவங்களில்
క్ష్* ه;" ' 崧 சக்திகள் Tbit விளங்குதல் வேண்டும். இச்
# ನ್ತಿ। இயக்குதற்கு நீக்கமற நின்ற பராசக்தி και τιμή மற்றெடுத்தி உண்மை பெறப்படும். எண்
வ ைவடிவாகிய் ஆல்க் காரியும் தொடங்குவதற்கு
பாடிய்து திருவெம் பாவையாகும்
鷺 *. நவசக்திகள் மனுேன்
பிரமதன், பலவிகானி இரெளத்திரி சேட்டை வால் இவற்றுள் சர்வபூதமினி உயிர்கள் பாலுள்ள புண்ணிப்பாவங்களே, அடக்குவது பலப்பிரமதனி
biji, சர்வபூ
ಸ್ಧಿ: காளி,
•oኳ
சூரியன் பாலுள்ள சித்தியாய்ப் பலத்தைக் கொடுக்
கும் தொழில் உடையது பலவிகரணி சந்திரன்' பாலுள்ள சத்தியாய்ப் பயனே மிகுதியாகத் 25 (15td. இயல்புடையது.கலவிதரணி ஆகாசத்திலுள்ள சத்தி
ய்ப் எவற்றிற்கும் இடம் தருவது வாயுவினுள் காளி விளங்கி பிராணமயமாய் இருக்கும், நெருப்பி னுள் இரெளத்திரி விளங்கிச் சூட்டினைத் தரும்:
ஒன்பது சத்திகள் 'துயிலுணர்ந்து நீராடிப் புகழ் *
ன்ேனேப் புதுமைக்கும் போது அப்பெற்றி
T) பாடிக்கொண்டே செல்கின்
இங்கே G|'' திருவெம்பாவைப் பாடல்
களின் உட்கருத்தை காம் கொஞ்சம் அலசிப்
மனி, பலப்
வாமை என்பவராவர்.'
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருகண்கள் 。 93
விளங்கிக் குளிர்ச்சியைத் தரும்:
வாமை மண்ணில் விளங்கி ஐந்து குணங்களும் உடையதாயிருக்கும். ஆகவே சக்தியை வியந்த இத்திருப்பாடல்கள் எல்லாம் நமக்கு ஆக்கமும் ஊக்க மும் தருவன இவற்றுக்கு வேரோ உட்கருத்தும்
சொல்வார்கள்.
ܨ ܐ
அருள் வீழ்ச்சி (சத்திரிபாதம்) பெற்ற பக்குவ முள்ள உயிர்கள் அனைத்தும் கன்னிப்பெண்கள் ஆண்டவன் பிராணநாயகன் உயிர்கள் ஆணவ இருளில் பிணிப்புண்டிருக்கும் நி ைஇம்ெ 'தின் ஆற்றல் அற்றுப்பேஜ் நில துயி 20ர்கல் முன்னரே துயிலுன்ந்தவர்களாகப் பேசப்படும் கன்னிப்பெண்கள் மல்பரி ரகம் அன்டந்த உயிர்கள் மலரிப்ரகீம் அை ಸ್ತನ್ತಿ।
விப்பதாகப் பேசப்படுவதே ஏனைய களைத் துயிலுணர்த்துவதாகும்.
蠶
திளைக்கச்செய்து இறைவன் திருவருளில் தோய்
ரேடல், நோன்பு நோற்றல் எல்லாம் இறை அருளில் தோய்விக்கும் முயற்சிகள் திருவாகிரை ஒளில் விழாக் கண்டு களித்தல், திருவருள் நலத் கால் பிராணநாயக கிைய இறைவனுடன் கலத்தல் 諡 கன்னிப்பெண்கள் மட்டுமன்றி ஏனைய பெண்களும் டவரும் திருவெம்பாவை பாடி மகிழ வேண்டும் என்பதற்கும் இக்கருத்தே சான்று கருகிற தல்லவா? *s 。
வாழ்க்கை நெறியைக் lfill-A2,02 g5 a 360T ... 擂。 ہe" : "", 鷲 திருவெம்பாவையும் திருப்பாவையும், வைணவப் LJETLD |

Page 68
94 corrori
வாழ்க்கை ബ് பாடியவள் ஆண் டாள். சைவப்பரம்பரைடில் இறை அன்பில் ஊறித்திளைத்து வெளிவந்தது திருவெம்பாவை
மனிதன் கண்ணுக்கும் பாவை இன்றியமையா *அ பாவை இருந்தால்தானே காட்சி. திருவெம் ாவையும் திருப்பாவையும் இருபாவைகள் ஞானக் காட்சியைத் தெரிவிப்பன இப்பாவைகள், ஞானக் காட்சி இறை அநுபவம். இந்த இன்ப அநுப வத்துக்கு இழுத்துச் செல்வன இப்பாவைகள்
திருப்பாவையும் திருவெம்மாவையும் மனிதனை மனிதருள் மானிக்கமாக வாழச் செய்வன, செய்யா தன செய்யோம் என்று குடிக்கொடுத்த சுடர்க் கொடியும் பாடிக்கொடுக்கிருள் -
திருவாசகம், சிவானந்த அனுபவம் பொங்கி எழுந்தபோது வந்த பாடல்கள் தண்ணுர் தமிழ
ளிக்கும் தண்பாண்டி நாட்டானின் கண்ணருள்
திருவாசகத்தில் அநுபவிக்க முடிகிறது. திருவாசகத் தேனருவியில் மூழ்கித் திளைத்தால் உயிரின் மல வெப்பம் கழியும்; துன்பம் நீங்கும்; இன்ப அன்பு பெருகும்; வாழ்க்கை ஞானச் செல்வத்தில் வளம் பெறும்.
செந்தமிழ்ச் சைவத் திருநாட்டின் கண்ணுள்ள எல்லாச் சந்நிதிகளிலும் மார்கழித் திருவாதிரையை இறுதியாகக் கொண்ட பத்து நாட்களிலும் திரு வெம்பாவை ஓதுதல் நிகழ்ந்து வருகின்றது. மார் கழி மாதத்தில் நடைபெறும் விழாக்களுள் தலை சிறந்தது திருவாதிரையாகும்.
*』

இருகண்கள் 95
மயிலாப்பூரில் சிவகேசர் என்று ஒரு வைசியர் ஆளுடைய பிள்ளையார் தலம் தலமாகச் சென்று ஆண்டவனப் பாடுகிருர், சமணர்களே வாதிட்டு வெல்கிருர் என்று அவர் அறிகிருர் ஆளுடைய பிள்ளையார்மேல் அவருக்கு அளப்பரும் அன்பு, தன் ஒரே மகளாகிய பூம்பாவையை அவருக்கு மணம் செய்ய வேண்டும் என்று முடிவு கட்டி விடு கிருர் பூந்தோட்டத்துக்குப் போன இடத்தில் பூம் பாவையைப் பாம்பு தீண்டி விடுகிறது. மரணம் அடைந்த அவளுடைய உடலைத் தகனம் செய்து, எலும்பையும் சாம்பரையும் ஒரு குடத்துள் இட்டுப் பத்திரமாகப் பாதுகாக்கிருர் சிவநேசர் சம்பந்தர் ஒற்றியூர் வருகிருரர். சிவநேசர் அவரை அணுகி நடந்ததைச் சொல்லி மயிலாப்பூருக்கு அழைக்கி ருரர். அவரும் மயிலாப்பூர் கபாலி நாதனிடம் வருகி முர், பூம்பாவையின் எலும்புகள் இருந்த பாத்தி ரம் அங்கே கொண்டுவரப்படுகிறது. சம்பந்தர்
பாடுகிருரர் ஒரு பதிகம். அதிலே ஒரு பாடல் :
"ஊர்திரை *வேலை உலாவும் உயர்மயிலைக்
கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில் கார்தரு சோலைக் கபாலீச் சரம் அமர்ந்தான்
ஆதிரை நாள் காணுதே போதியோ பூம்பாவாய்' - பூம்பாவை கன்னிப்பெண்ணுக உயிர்பெற்றெழுந்து a வணங்கிருள் உடலும் கொடுத்து உயிரும் கொடுத்த சம்பந்தர் அவளை மகள் முறை கொண்டாடுகிருரர். பின் திருமணமேது சம்பந்தர் ஆதிரை நாள் காணுதே போதியோ பூம்பாவாய் என்று பாடுவ
கபாலீச்சரம் மயிலாப்பூர் கோயில்,

Page 69
| 96 | ap Cassi மணவாளன்
தில் திருவாதிரையின் பெருமை நமக்கெல்லாம் தெரிந்து விடுகிறது அல்லவா?
\%م : ଫାଲ୍ଗି ,"ä" ଅଷ୍ଟ୍")
VIVIANA SOUNOU சிவலோகநாதனேக் கண்டுகளிக்க முடியாமல் மலைபோலே ஒரு மாடு படுத்து வழிமறித்திருக் கிறதே என்று ஏங்குகிருன் 5ங்தன். "சற்றே
விலகியிரும் பிள்ளாய் சந்நிதானம் மறைக்குதரம்
என்று 15ந்திக்கு உத்தரவு வருகிறது சிவலோக
நாதனிடமிருந்து நந்தி விலகுகிறது; திருப்புன்கூர்
சிவலோகநாதனின் தரிசனம் கிடைக்கிறது. நந்த னுக்கு
இந்தப் பக்திமானும் நந்தனை நாற்பது வேலி
நிலத்துக்கு நடவு நீட்டுவிட்டுப் போகவேண்டும்
என்று உத்தரவு போடுகிருரர் ஆண்டானுகிய அந்த னன். நந்தன் தயங்குகிருரன். எப்படி இதனை முடிப்பேன். “மார்கழி மாதம் திருவாதிரை நாள் வரப்போகுது ஐயே, மனத்தைப் புண்ணுக்காமல் ஒரு தரம் போய்வா என்று சொல் ஐயே' என்று
அழுகிறன் 15ந்தன். எப்படி இந்த வேலேயை
முடிப்பது என்று தயங்கிய நந்தனுக்கு இறைவனே இந்த வேலையையும் முடித்துக் கொடுக கிருரன்.
அந்தணர் அன்றுதான் நந்தனின் பக்தியைக் காண்கிருரர் நந்தனின் காலிலேயே விழுந்து விடு கிருரர். விடை கொடுக்கிருரர். ஆறு தகாதல் அளப் பரிதாய் வளர்ந்தோங்கத் தில்லைக்குப் போகிருரர் ந்ேதன்.
 
 
 

இருகன்கள் :
"சாட்டி நிற்கும் அண்டமெல்லாம் சாட்டையி
லாப் பம்பரமாய் ஆட்டிவைக்கும் அண்ணல் கட்
ராசப்பெருமானைத் தில்லையிலே காண்கிருர் நந்த இம் அவன் திருவடியையே சேர்ந்து விடுகிமு திருவாதிரை நாளில்
மார்கழி நீராடும் மங்கையரும் திருவாதிரை யோடு முடிவுறும் பத்து நாட்களிலும் பாதத்திறம் பாடி ரோடுவர். | .
'காகார் குழையாடப் பைம்பூண் கலனுடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச் சீதப்
புனல் ஆடிச் சிற்றம்பலம் பாடி இன்புற்ற இளங்
கன்னியரின் கோலத்தைத் திருவெம்பாவையும் பாடு கிறது.
"மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னுளால்
நீராடப் போதுவீர் போதுமினே நேரிழையீர்!
என்று ஆண்டாளும் பாடி நம்மைப் பா டவைக்கிருள் திருவாதவூரடிகள் புராணத்திலும்,
மாதர்கொள் மாதரெல்லாம் மார்கழித் திங்கள் தன்னில் ஆதிரை முன் ரைந்தே ஆகிய தினங்கள் தம்பில் மேதகு மனைகள் தோறும் அழைத்திருள் விடிவான போதிவர் தம்மில் கூடிப் புனற்றடம் ஆடல் செய்வர்."
ତTତOT& குறிப்பிட்டுத் திருவெம்பாவை எழுந்த 3) ET லாறு பேசுகிறர் கடவுள் மாமுனிவர்.
இப்புனித மார்கழி நாட்களில் இளம் பெண் கள் இறைவனைப்பணிந்து கேட்கிருரர்கள், “+ °F@লা
13

Page 70
98
முருகன் மணவாளன்
ஆதி நாயகன் ஆதிரை நாயகனாம் உன்னிடம் அடி யேம் செய்யும் விண்ணப்பம் ஒன்றுண்டு; நாம் நின் கையிற் பிள்ளைகள்; உனக்கே அடைக்கலம்; எம் கண் அல்லும் பகலும் உன்னையன்றி வேறு எப் பொருளையும் காணலாகாது; எம்கை உனக்கே அன்றி வேறு எவர்க்கும் எத்தகைய பணியும் செய்யலாகாது; நின் அடியார்களே எமக்கு நாயகர்க ளாக வேண்டும்; பழமைக்கெல்லாம் பழமையாகிய பரம்பொருள் நீயே; புதுமைக்கு எல்லாம் புதுமை யாகிய புனிதனும் நீயே; செம்பொருளாகிய நின் னையே எம்பிரானாகப் பெற்றோம்; உலகில் யாது நிகழி னும் எம்மனம் இனிமேல் மாறுபடுவதில்லை; நீ எமக்கு இந்த வரங்களை எல்லாம் தந்தருளுவாயாயின், கதிர வன் கீழ்த்திசையினன்றி வேறு எத்திசையில் உதித்தாலும் எமக்குக் கவலையில்லை.''
எப்படி இருக்கிறது, மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளின் அவர்களின் வேண்டுகோள்!
- பக்தியிற் பலவகை : இறைவனைப் புத்திரனா கப் பாவனை பண்ணிப் பத்தி செலுத்துவது ஒரு முறை; இது வாத்சல்ய பக்தி எனப்படும். இறை வனை ஆண்டானாகப் பாவனை பண்ணித் தம்மை அவனின் அடிமையாக (தா சனாக) பாவனை பண் ணிப் பக்தி பண்ணல் தாஸ்யபக்தி எனப்படும். இறைவனை அருமைத் தோழனாகப் பாவனை பண் ணிப் பக்தி செய்வது இன்னொரு முறை. இதனைச் ஸக்ய பக்தி என்பர். இறைவனைக் காதலனாக எண்ணிப் பாவனை செய்து அவனிடம் காதலைச்

இருகண்கள்
99
செலுத்தி வழிபடுவது மதுரபக்தி. இந்த மதுர பக்தியில் தமிழ் நாடு பலரைக் கண்டது, அவர்க ளுடைய பாடல்களில் பக்தி அநுபவம் சொட்டக் காணலாம். பாவனை யோடு பரந்தாமனையே காதல னாகக் கொண்டு அவனையே மணவாளனாகப் பெற்ற பெருமை ஆண்டாளுக்கே உரியது.
- ஸ்ரீ வில்லிபுத்தூரில் விஷ்ணுசித்தர் என் னும் பெரியாழ்வார் நந்தவனத்தில் திருத்துழாய் மரத். தடியில் ஒரு பெண் குழந்தை கிடப்பதைப் காண் கி றார். எடுத்து வந்து தன் மனைவி விரஜையிடம் கொடுக்கிறார். குழந்தைக்குக் கோதை என்று பெயரிடுகிறார்கள். கோதையும் வளர்கிறாள். ஒரு நாள் விஷ்ணுசித்தர் பெரு ம ா ளு க்கு எ ன் றே தொடுத்து வைத்திருந்த மாலையைத் தன் கூந்த லிலே சூடி அழகு பார்க்கிறாள் கோதை. அ வள் சூடிக் களை ந்த மாலையே பின் பெருமாளுக்கு அணி யப்படுகிறது. இது ஒருநாள் நிகழ்ச்சியல்ல; பல நாள் நிகழ்ச்சி. அவள் சூடிக்களைந்த மாலையிலே மயிர் ஒட்டி இருப்பதைக் கோயில் குருக்கள் பல நாட்களாக அவதானித்து வருகிறார். ஆனால் பெரி யாழ்வாருக்குச் சொல்லப் பயந்திருக்கிறார்.
ஒரு நாள் விஷ்ணு சித்தர் கோதை மாலை சூடி அழகு பார்க்கும்போது பார்த்துவிடுகிறார். மகளைக் கோபித்து மாலை சாத்தாமலே இருந்து விடுகிறார். கோயில் குருக்களும் மயிர் ஒட்டி இருந்த கதையைச் சொல்லுகிறார். அன்று இரவு பெருமாள் பெரி யாழ்வாருக்குக் கனவிலே தோன்றுகிறார். ''கோதை

Page 71
100 முருகன் மணவாளன்
குடிக் கொடுத்த மாலைகளே எனக்கு வேண்டுவன:
என்று சொல்கிறர் பெரியாழ்வாருக்கு ஒரே
மகிழ்ச்சி அன்று முதல் கோதை குடிக்கொடுத்த மரலேகளே பெருமாளுக்கு அணியப்படுகின்றன.
。 ஆண்டாள் தெய்வப்பெண் அழகின் கொழுந்து. அவள் உண்ணும் சோறும் பருகும் நீரும் எல்லாம் கண்ணனே எனக் கருதிக் களிகூர்கின்றுள் ஓங்கி
உலகளந்த உத்தமனைப் பாடிப் பாடிப் பரவசம் அடைகிரள் கார்முகில் வண்ணன் கமலக் கண்ண இன்த் தன் திரு உள்ளத்தில் அழகொழுக எழுதிப் பார்க்கின்றுள் பரந்தாமனின் திருவடியில் பதிந்த உள்ளத் தாளாகிய அவள் கருத்திற்குகந்த கணவன் கண்ணன் என்பதை அறியார் அவள் தங்கை கோதைக்குக் கொழுநனக் கேடத் தலைப்படுகிறர் * தக்கையின் கருத்தறிகிருரள் கோகை, 'என் கண் நிறைந்த காதலன் கண்ணன், கருத்திற்கு உகந்த கணவன் அவனே. மானிடன் எவனையும் நான் மனப்பதில்லை. எவர்க்காவது என்னை மணம் பேசி ல்ை நான் மாண்டு போவேன்'.
"மானிடவர்க்கென்று பேச்சுப்படில்
வாழ்கில்லேன் கண்டாய் மன்மதனே'
என்கின்றுள் கோதை, سی
- கோதையின் கருத்தறிகிரர் தங்தை. கேனர் பூஞ்சோலைத் தென் அரங்கமா நகரில் கண்ணுறங்
(56 பெருமானை கினைக்க நெஞ்சுண்டு, வாழ்த்த வாயுண்டு, பாடப்பாட்டுண்டு என்று வாழும் தன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருகண்கள் 101
அருமைப் புதல்வியின் காதலைக் கண்ணன் ஏற் றுக் கொள்வானு எனத் தயங்குகிறர் ஆண்டா ளின் உள்ளம் உரமேறி கண்ணனின் மணக் கோலத்தைக் கனவிலும் நனவிலும் காண்கின்ருள் கண்ணுடி பார்த்துக் கைவளை திருத்துவாள்; கூறை உடுத்துக் குயிலை நோக்கி கருங்குயிலே என் கண் னன் வரக்கூவாய்' என்று பாடுவாள் திருமாலை கினைந்து மணமாலே குட்டிப் பார்ப்பாள் பரந்தாமா என்று பரிந்தழைப்பாள். மனவாக்குக் கெட்டாத மணிவண்ணன் கோதையின் காதலை அறிய நாட் கள் வேண்டுமா ? குடிக் கொடுத்த மனமாலை அப் பெருமானுக்கு உகந்ததாயிற்று. கண்ணனே காதல னகிக் கணவனனன். இது ஆண்டாளின் சரித்தி
ரச் சுருக்கம்.
கற்பு நிலை அன்பு நிலையின் சிகரம். ஆண்டா ளுக்குக் கண்ணனின் எதிரில் யாவும் சூனியம் ஆயிற்று. அந்த நிலை தானற்ற நிலை.
'. நான் என ஒன்று
இல்லென்று தானே எனும் அவரைத் தன்னடிவைத்து இல்லென்று தானும் இறை" எனச் சிவஞானபோதம் பேசுகின்ற நிலை. அதா வது நான் என்று ஒரு முகல் காணப்படுமாறு இல்லை என்றுணர்ந்து, அவ்விறைவன் தானே முழுதும் எனக் காணும் ஆன்மாவை, தனது வியாபகத்துள் அடங்கி நிற்கச் செய்து, தன்னை யன்றி வேறு காணப்படுமாறு இல்லை என்று, தானே முழுவதுமாய்க் காணப்பட்டு நிற்பன் இறை வன் என்பது சிவஞான போதக் கருத்து. -蠶

Page 72
102. முருகன் மணவாளன்
ஆண்டாள் பரியக்குவமெய்திய ஆன்மா அர்
| iଶଞ୍ଚ) ଦ୍ରୋତ ஆன்மாவாகிய நாயகி சர்வான்மநாயகனும்
இறைவனைத் தன் நாயகன் எனக் காண்கின்றது. இசியில் தன்னை மறந்து கன்கு ெ
*வன் காளில் தலைப்படுகின்றது.
கோகை என்றும் ஆண்டாள் என்றும் தமிழ் காடு போற்றும் திருமகள் சூடிக் கொடுத்த கிடக் கொடியாள். அவள் பாடிக் கொடுத்தாள் திருப்
பாவை இத்திருப்பாவையில் இருப்பன முப்பது பாடல்கள். திருவெம்பாவை போல் இப்பாடல்களும் எம்பாவாய் என்றே முடிகின்றன. ஆண்டவனைப் பாடும் பெரும்பேற்றுக்கு இங்கிலவுலகில் ஈடும் இணை யும் இல்லை. இதனைத் தொண்டரடிப் பொடி யாழ் 7 வார் ஒரு பாட்டிலேயே சொல்லி விட்டார்.
பச்சைமர மலபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுத அமரர்ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர்பான்போய் இந்திர லோகம் ஆளும் *”′, அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.
。 இந்திரலோகம் ஆளும் பெரும்பேறு கிடைத் தாலும் அதை ஆழ்வார் புறத்தே தள்ளிவிட்டு அச்சுதா அமரர் ஏறே ஆயர்கம் கொழுந்தே"
என்று கண்ணனைப் பாடுகின்ற ஒரு வாய்ப்புக்
கிடைக்க வேண்டும் என்கிறர் ஆண்டாள் திருப் பாவையின் அளப்பரும் பெருமையை எடுத்துக்
still- 鷺* *
 
 
 
 
 
 
 
 

இருகண்கள்
பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும் வேதம் அனத்துக்கும் வித்தாகும்-கோதைமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு'
என்ற பாடலைவிட நாம் வேறென்ன சொல் லிக்காட்ட முடியும்?
மாதம் மும்மாரி பெய்தது அந்தக் 5Taoib. இந்தக் காலம் வருடம் மும்மாரி பெய்வதே அருமை யாக இருக்கிறது. மழையை வேண்டிப் பெற்றவர் η ση அந்தக் காலத்திலும் சரி இந்தக் காலத்திலும் சரி பெண்களே தான். பர்மா தேசத்திலே மழை பொழியாது விட்டால் பெண்களை விரதம் அநுட் டிக்கச் செய்து குறிப்பிட்ட மலைகளுக்குச் சென்று குடத்தில் நீர் நிரப்பி வரும்படி செய்வார்களாம்.
லிருந்து இறங்கும்போதே LDGಲಾ!) சோனுவாரியாகப் பெய்யத் தொட்ங்கி விடுமாம். *” 。
திருப்பாவையும் திருவெம்பாவையும் எழுத்த
வரிய பாடல்களை முறையாக ஓதி வந்தால் மழை நிறைவாகப் பொழியும்,
திருப்பாவை திருவெம்பாவையின் மங்காப்புகழ் இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள Gjit
(தாய்லந்து) தேசத்திலும் சென்று சேர்ந்துவிட்டது. அங்கே பல நூற்றண்டுகளாக அரசாங்கம் ஒரு விழாவைக் கொண்டாடி வருகின்றது. அவ்விழா வுக்குத் திரியெம்பாவை, திரிபாவை என்று பெயர்,
பெண்கள் நீர் நிறைந்த குடங்களுடன் மலையி
காலத்திலே மழை வளத்துக்கே குறைவில்லை. இவ்

Page 73
0. முருகன் மணவாளன் இப்பெயர்க்குப் பொருளும் தெரியாது; தமிழ்மொழி என்று கூடத் தெரியாது விழாக் கொண்டாடி வரு கின்றர்கள் சியம் காட்டினர் இன்னும் முடிசூட்டு விழாப் போன்ற முக்கிய விழாக்களில் பாவைப் பாடல்கள் ஒதப்படுவதாகவும் அறியக்கிடக்கின்றது. ܪܬ
பழைய காலத்தில் கடல்கடந்து வெளிகாட்டா ரின் 5ல்வாழ்வுக்கு உறுதுணையாக இருந்த பாவைப் பாடல்கள் தமிழரின் கருவூலங்கள் என்று கொள் வதில் பெருமைப்படாமல் இருக்க முடியாது!
அந்தக்காணங்கள் தூயனவாதற் பொருட்டுப் பலவித நோன்புகளைப் பண்டையோர் செய்து வந் தார்கள். இவற்றுள் ஒன்று மார்கழி நோன்பு. ஆண்டாள் அருளிய திருப்பாவையும் திருவாசகம் தந்த மணிவாசகர் அருளிய திருவெம்பாவையும், மார்கழி நோன்பு பண்டைக் காலத்தில் பிரசித்தி பெற்று விளங்கியதென்பதை நமக்குச் சொல்லி நிற்கின்றன. ".
|5|Tତ ରjଗtub குன்றியக்கால் மழை பொழிந்து வளம் பெருகவும் உத்தம நாயகர்களை அடைந்து நலன் எய்தவும் கார்த்தியாயணி தேவியைக் குறித்து மார்கழி முழுவதும் 5ோற்பது அக்கால வழக்கம். அதற்காக வைகறையில் துயிலெழுந்து ஒருவரை ஒருவர் துயிலெழுப்பி நதிதிரமடைந்து நீராடி மனே ரதம் நிறைவேறப் பூசிப்பார்கள் கன்னிப்பெண்கள்.
கோகுலத்துக் கோபிகைகளுள் ஒருத்தி கண்ண பிரானைப் பாடிக் கொண்டே நீராடச் செல்கின்
 
 
 
 
 
 
 
 

இருகன்கள் 105
முள் வழியில் கன் கோழியர்களே அழைக்கிருள்; பாடும்படி தூண்டுகிருள்; பாடுகிருரர்கள் அவற்றுள் ஒருபாட்டு : .11.37
"ஓங்கிஉல களந்த உத்தமன் Gifu Tt
நாங்கள் சாற்றி நீராடினுல்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மரிபெய்து ஓங்கு பெருஞ்செந்நெ லூடுகிய லுகள் ܬܐ .
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத் தேங்காதே புக்கிருந்து சீர்த்த முல்பற்றி வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்." என்பது ஆண்டாள்திருப்பாவை தேவி வணக்கம் தருவன எல்லாம் பேசுகிறது இப்பாடல்.
நீராடிய இயல்பைக் கண்டு அவர் மேலேற்றிப் பாடினர் என்பது ஒரு கருத்து. எப்படி இருந்த போதிலும் திருவெம்பாவையிலும் சக்தி விரதமே பேசப்படுகிறது. காதரர் குழையாட எனத் தொடங் கிய மணிவாசகர் பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வ8ளதன் பாகத்திறம்பாடி ஆடேலோர் எம் பாவாய்' எனப் பாடுகிறர்
இன்னும் திருவாசகத்திற்குப் பொருள் விளங்கு மாறு எழுதிய தலைக் குறிப்பிலும் திருவெம்பாவை சக்தியை வியந்தது என எழுதப்படுகிறது. எம் பாவாய் என்று முடியும் திருப்பாட்டுக்களாலாய பகுதியாயின்மையின் இவை திருவெம் பா ைவ
13
திருவெம்பாவையை மணிவாசகர் திருவண்ணு மலையில் மார்கழித் திங்களில் மகளிர் வைகறையில்

Page 74
முருகன் மணவாளன் மார்கழித் திங்களில் வைகையாற்றில் இளங்
கன்னியர் წეroft: გუთნიც ექნეცკი முழுவதும் மழைவளம் இறக்க வேண்டி ஆடலும் பாடலும் நிகழ்த்துதல் வழக்கம் என்று பரிபாடல் என்னும் பழந்தமிழ்
。° இடுக்ார்முஜைக் கைகூப்பித் தொழுது "வன்முலேடுசெழிக்கக் கருங்கடலின் நீரைக்
கவர்ந்து திருமலைப்பிேல் மெய்கறுத்து அப்பெரு மானின் கையில் இருக்கும் சங்குபோல் முழங்கி காம் போல் மின்னிச்சரம் உமிழும் சர்கம் போல் மழை பொழிவாயாக' என நயந்தனர் கங்கைகள் ந்ேதகோன ur பின்வருமாறு:
 ைசாற்றுகிறது
ஆழி மழைக்கண்ணு ஒன்று கைவுேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழியத் தோளுடைய ஆழி போல் மின்னி வலம்புபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைப்ோல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் ''
மார்கழி நீராட் மகிழ்ந்தேலே ரெம்பாவாய்." s
சிவனடியே சிந்திக்கும் சிறுமியரும் வானே அண்ணுந்து பார்த்து 'நீள்கடலின் நீரை முகிந்து உண்டு எம்மை உடையாளாகிய உமை அம்ம்ை திருமேனிபோல் கறுத்து அவள் சிற்றிடைபோல் மின்னி திருப்பாகப் பொற்சிலம்புபோல் முழங்கி திருப்புருவம் போல் வான வில்லிட்டு buలితg
 
 
 
 
 
 
 
 
 
 
 

முன்னப் பொழிகின்ற இனிய அருபோலழை
பொழியப் என்னக் கூப்பித் தொழுகிரர்கள் இதோ அந்தப் பாடல்
"Up Giron as Leavă asia grug aan
Gör GOÄ) abijgt Grib Gmungen
மின்னிப் பொலிந்து 。、
பொன்னஞ் சிலம்பிற சிலம்பித் தீப்புருவம் என்னச் சில குலவி நம்தம்மை ஆளுடையாள்
| မျိုး gigii, îfie) எம்மோன் அன்ர்க்கு
முன்னி அவள்நழக்கு முன்கர்கும் இன் அருளே
என்னப் பொழியாய் மழையேலேம்ெ பாவாய்
ஆதிபரம் பொருளின் ஜக்கம் அதை தன்னை எனப் பணிதல் ஆக்கம் என்று பாரதியர் பாடி னர். இதனை உட்பொருளாகக் கொண்டு அன் றைக்கே பராசக்தியை வியந்து திருவெம்பாவை பாடி நம்மை எல்லாம் பாட வைக்கிறர்
ஆண்டாள் அருளிய திருப்பாவையும் மாணிக்க வாசகர் தந்த் திருவெம்பாவையும் தமிழர்க்கு அருள் நெறி காட்டும் இருகண்கள் என்றே கூறவேண்டும்.
பிறரால் உனக்கு இம்சை உண்டாகும்போது இதற்குக் காரண்ம் ஈசுராநுக்கிரகம் உனக்குப்போதா மையே என்பதைத் தெளிவாக அறிந்துகொள். ஆகவே மேலும் மேலும் அங்ங்ணம் ஆகாமைப் பொருட்டு நீ செய்யத்தக்கது ஈசுவர அநுக்கிரகத்தைப் பெற இடை
யருமல் முயற்சிப்பதே.
ஆன்மவிசாரம்,

Page 75
நடமாடுங்கோயில்கள்
பெரியபுராணத்தில் গুঞ্জ","ঞ্জ 'கைத்தலத் திருந்த வைத்துப்
புத்தகம் அவிழ்ப்பான் போன்று புரிந்தவர் வணங்கும் போதில் பத்திரம் வாங்கித் தான் முன் தினந்த அப் பரிசே செய்ய மெய்த்தவ வேட் மேமெய்ப் பொருள்எனத் தொழுது வென்டூர்'
மெய்ப்பொருள் நாயனுர் மெய்த்தவ வேடமே மெய்ப் பொருள் எனக் கொண்டு வாழ்ந்தவர். அவர்பால் பகை கொண்டவன் முத்திநாதன் பலமுறை போர் தொடுத்தும் மெய்ப்பொருள் நாயனுரை (a) asj6ტ6). முடியவில்லை. மெய்ப்பொருளார் சிவவேடம் பூண் டாரைத் தொழுது வழிபடும் இயல்புடையவர் என்ப" தைத் தெரிந்து கொண்டு, 。
'மெய்யெலாம் நீறுபூசி வேணிகள் முடித்துக் கட்டிக்
கையினிற் படைக ரந்த புத்தகக் கவளி ஏந்தி மைபொதி விளக்கே என்ன மனத்தினுள் கறுப்பு வைத்துப் பொய்தவ வேடங் கொண்டு புகுந்தனன் முத்தநாதன்'
மனத்தினிற் கறுப்பு வைத்த முத்திநாதன் கையினில் வைத்திருந்த பையில் மறைவாக வாளேச் செருகிக் கொண்டு போனுன் மெய்ப்பொருள் 5ாய னரை அணுகி 'எங்கும் காணமுடியாத ஆகம நூல் ஒன்று எனக்குக் கிடைத்திருககிறது; அதனை உனக்கு உபதேசிக்கலாம் என வந்தேன்' என்ருரன்,
நாயனர் அ ந் த உபதேசத்தைக் கேட்கப் பணிந்து கின்றார். அந்த வஞ்சகன் வாளை உருவி
 
 
 
 
 
 
 
 

நடமாடுங்கோயில்கள் 109.
அவரைக் குத்திவிட்டான் இதை வெளியிலிருந்து பார்க்க தத்தன் உடனே உள்ளே புகுந்து முத்தி நாதனே வெட்ட முயன்ருன் தடுத்து கின்றர் மெய்ப்பொருள் நாயனர் பின்பு தத்தனைக் கொண்டே முத்திநாதனே ஊரின் எல்லே கடந்து ی பாதுகாப்பாக விட்டுவரச் சொல்லி, அவ்வாறே செய்துவிட்டு வருகிறவரைக்கும் உயிரைத் தாங்கி கின்று அப்பால் சிவனடிக்கண் சேர்ந்தார். இது மெய்ப்பொருள் நாயனுர் வரலாற்றுச் சுருக்கம்
சேக்கிழார் கூறிய மெய்த்தவ வேடமே மெய்ப் பொருள் எனத்தொழுது வென் ருரர்' என்பது கிங் தனக்கோர் சீரிய விருந்து தோற்றவர் மெய்ப் பொருளார் என்றே சொல்ல வேண்டும். ஆனல் } மெய்ப்பொருளாரையே வென்றவராகச் சொல்கின்
முர் சேக்கிழார்
சுந்தரமூர்க்தி சுவாமிகளும் தமது திருத்தொண் டத் தொகையிலே வெல்லுமா மிகவல்ல மெய்ப் பொருளுக் கடியேன்” என மெய்ப்பொருள் 5ாய னருக்கே கொடுத்து விடு கி ரு ர் வெற்றியை தேவர்கோ அறியாத தேவதேவனின் அன்பர் வேடமே சிந்தை செய்பவர் மெய்ப்பொருள் நாய னர். அடியார்கள் திருவேடத்தை அரன் எனத் தொழுதல் எல்லோர்க்கும் சாத்தியமாகாது. சிவ பெருமான் திருவேடத்தைத் தாங்கியிருக்கின்ற அடியாரைக் கண்டவுடன் அவரைச் சிவபிரான் தமர் என நினைந்து மகிழல் வேண்டும்
திருவேடத்தைக் கண்டு மகிழ்ந்தவர்கள் சீவன் முக்தர்கள். அவர்கள் சிவபிரானுக்கு ஆட்பட்டு

Page 76
முருகன் மணவாளன்
கிற்கும் அத்துவித கிலேயில் ஆண்டான் அடிமைக் கருத்தை கினைந்து மகிழ்ச்சி எய்து வார்கள் அடி யார்களைச் சிவனே என்று யாதொரு வேற்றுமை பும் மனத்தில் கொள்ளாது சிவனுக்கு ஆட்படிருக் கும் அடியார்களுக்குத் தாங்களும் அடிமைகள் என்ற ஒருமைக் கருத்துடன் சிந்தையில் சிவனக்
Bir gözəllifi, mrflgəlir.
கடலில் கல்லைப் படகாய்ச் செய்து உலகுக்கு வழிகாட்டியவர் அப்பர் நாமார்ககும் குடியல்லோம் எனக் குரல் எடுத்து அஞ்சுவதும் இல்லை, அஞ்ச வருவதுமில்லை என எமக்குச் செல்வழி காட்டு கின்ற அப்பர் பெருமான் தேவலோக வாழ்க்கை யைத் துச்சமாக எண்ணுகிருரர். அடியவர்கரு அடி யவனுகி விட்டால் அதுவே போதும்; வேறென்றும் வேண்டாம் என்று இந்திரலோக வாழ்ககையை உதறித்கள்ளுகிருரர். இந்த நல்ல கருத்தை நான்கு வரிகளிலேயே பொறித்துக் காட்டுகிருரர் :
'அண்டர் வாழ்வும் அமரர் இருக்கையும்
கண்டு வீற்றிருக் குங்கருத் தொன்றிலோம் வண்டு சேர்மயி லாடு துறையரன் தொண்டர் பாதங்கள் சூடித் துதையிலே." சிங்தையிற் சிவனைக் கண்டவர்களுக்கு எங்கும் சிவனே காட்சி அளிப்பான் தாயுமானவர் எம் பிரான அர்ச்சிக்கப் பூப்பறிக்கச் சென்ருரர். பூவி னைப் பறிக்க அவரால் முடியவில்லை. سي
பண்ணே னுனக்கான பூசையொரு வடிவிலே
பாவித்திறைஞ்ச ஆங்கே பார்க்கின்ற மலருடு நீயே யிருத்தி அப்
பனி மலரெடுக்க மனமும் ......................... إنه سي3) وفقه في
என மலரில் மறை முதல்வனைக் காண்கின்றர்.
 
 
 

நடமாடுங்கோயில்கள்
மனித குலத்துக்கு வழிகாட்ட வந்த அப்பாடி கள் தித்திக்குஞ் செந்தமிழில், *
"Gaggi stors ago L. L.
திருநீறுஞ் சாதனமுங் கண்டி லுள் உவராதே யவரவரைக் கண்ட போது
உகந்தடிமைத் திறநினைந்தங் குவந்து நோக்கி T STT S LLLSS L L T T SSLL TSSMY Mk
இரண்டாட்டா தொழிந்தீசன் திறமே பேணிக் கவராதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்ருப்பூர் நடுதயைக் காண லாமே."
எனப்பாடிப் பரவுகின்றர் (காமாக என்பது தாம் சிவமாக)
அறிவினிலே தெளிவும் நெஞ்சினிலே உறுதி யும் ஆண்டவனிடத்தில் கேட்ட அமரகவி பாரதியார்,
'காக்கைச் சிறகினிலே நந்தலாலா-நின்றன்
கரியநிறந் தோன்று தையே நந்தலாலா
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா-நின்றன் பச்சைநிறந் தோன்று தையே நந்தலாலா;
கேட்கு மொலியிலெல்லாம் நந்தலாலா-நின்றன் கீதமிசைக்குதடா நந்தலாலா:
arco எங்கும் எப்பொருளிலும் ஆண்டவன் ہے۔
தெரிவதாகச் சொல்கின்ருரர்.
முத்திகாதனைச் சிவனெனக் கண்டவர் மெய்ப் பொருள் நாயனுர், வெற்றி அவருக்குத்தானே!
இந்த வெற்றியை நாமும் அடைய வேண்டுமரீனல்

Page 77
முருகன் மணவாளன்
'பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் 败 guinea Guy LI Ir Gavri siguri ġieħ gets Giċi
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் முப்போதும் திருமேனி தீண்டுவார்க்(கு) அடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன் அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன் 鷲。 ஆகுரின் ஆரூரில் அம்மனுக்கு) ஆளே
என்று பாடவேண்டும்
அப்பாலும் அடிசார்ந்த அடியார்க்கும் ೨]ದ್ಧಿ: யேன் என்று தம்பிரான் தோழர் சுந்தரமூர்த்தி சுவாமிகள் எத்தனை தூரம் இறங்கி அடியவர் பெரு மையை அடித்துக் கூறுகிருர் நாம் பாடிப் பரவு வதுடன் எம் உள்ளத்தையும் பண்படுத்துவோம்.
சென்ற காலத்தும், நிகழ்காலத்தும், எதிர்
காலத்தும் அன்புநெறி நின்றர் எந்த நாட்டில் எந்த உலகில் தோன்றினுலும் அவர்களுக்கெல் லாம் நான் அடிமை என்று வாயார மனமார வணங் கிய சுந்தர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பல்லவா
இந்தப் பாட்டைப் பாடியிருக்கிறர்
அவர் பொதுமை மனப்பான்மைக்கு நாம் தலை வணங்காமல் இருக்க முடியாது!
s A22 * ଅଙ୍ଘ୍ରିବି , ); ଅଙ୍ଘ୍ରି 豔
} ( السله
எறிபத்கர் சிவபக்தர்; சிவனடியார்க்ளுக்குத் துன்பம் வராமல் காப்பது அவர்பணி. சிவகாமி ஆண்டார் என்பவர் இன்னெரு சிவனடியார்; பெரு மானுக்கு மாலைசாத்திப் பணிவது அவர் பணி ஈந்தவனத்தில் அவர் ஒரு நாள் மலர் பறித்துவரும்
 
 
 
 
 
 
 

நடமாடுங்கோயில்கள்
113 போது மன்னன் புகழ்ச் சோழன து பட்டத்து யானை சிவகாமியாண்டார் கையிலிருந்த மலர்க் கூடையைப் பறித்து மலர்களைச் சிதறி விடுகிற து. எ றிப்த் கர் இதனைக் காண்கிறார். யானையின் துதிக் கை யை மழுவால் வெட்டிப் பராமுகமாக இருந்த பாகனையும் தாக்குகிறார். யானையும் பாக னும் மாண்டு போன செய்தியை அரசன் அறிகிறான்" செயல் நடந்த இடத்துக்கு விரைகிறான். அபசாரம், அப் சாரம் என்று எறிபத்தர் திருவடியில் வீழ்ந்து யானையையும் பாகனையுங் கொன்றது போதாது, தம் மையுமே கொல்லும்படி உடை வாளை உருவிக் கொடுக்கிறார் எறிபத்தரிடம் !
மன்னனின் சிவபக்தியைக் கண்டு கம்முடைய "> கழுத்தையே அரிவதற்குத் துணிகிறார் எறிபத்தர் கெட்டேன் கெட்டேன் எனத் தடுக்கிறான் அரசன்
இறைவன் இருவரது பக்தியையும் அவர்கள்
• தம் திருத்தொண்டின் சிறப்பையும் மெச்சிப் பேசு கிறன் அசரீரியில்.
மாண்ட யானை மீண்டும் உயிர் பெறுகிறது. பாகனும் உயிர்பெற்று எழுகின்றான். எ றிபத் கர் மன்னு புகழ் ர் சே ழனை வண ங்க, வா ளி னை வீசி க யெறிந்து எறிபத்தரின் தாளினைப் பணிகிறான்
சோழன்.
'' ஆ ளு டை த் தொண்டர் செய்த ஆண்மையும் தம்மைக் கொல்ல
வாளினைக் கொடுத்து நின்ற வ ள வ னார் பெருமை தானும் நா ளுர் மற் ற வர்க்கு நல் கும் நம்பர் தாம் அளக்கில், அன் றி நீளும் இக் தொண்டின் நீர்மை நினைக்கில்ஆர் அளக்க வல்லார்”
15

Page 78
114 முருகன் மணவாளன்
என்று சேக்கிழார் பெருமானின் கெய்வத் தமிழ் கேட்கிறதென்றல் திருத்தொண்டின் சீரை யும் திருத்தொண்டர் தம் பெருமையையும் அளக்க நமக்கேது வலிமை ?
மன்னன் புகழ்ச் சோழனும் எறிபத்தரும் திருத்தொண்டர் புராணத்திலே இடம்பெற்று விடு கிருரர்கள்.
“எத்தவத்தைச் செய்தாலும் ஏதவத்தைப்
பட்டாலும் முத்தர் மனமிருக்கும் மோனத்தே' என்பதற்கு இதைவிடச் சான்று வேறு வேண்டுமா? இப்படியெல்லாம் நடமாடும் கோவில்கள் நமக்கு எத்தனை எத்தனை வழிகளில் ஆக்கமும் ஊக்கமும் தந்தார்கள் சிவனடியார்களே சிவன் எனக் காண் பதுவே செம்பொருட் துணிவு.
'செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா அம்மலங் கழிஇ அன்பரொடு மரீஇ மாலற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே” இது சிவஞானபோதத்தின் முடிவு.
SA &WAص ଅଁଟି - ଫାଟି ନର୍ଦ
பாம்பு கடித்து இறந்த மகனைப் பார்க்காது அடியவர்க்கு அமுதூட்ட விரை கிருரர் அப்பூதியடி கள், பிள்ளைக்கறி கொடுக்க வருகிருரர் சிறுத் தொண்டர் தீஞ்சுவை மாம்பழத்தைத் தெவிட்டாத அன்புடன் கொடுக்கிறர் காரைக்காலம்மையார். மனைவியைக் கொடுத்து மாண் புகழ் கேடுகிருரர் இயற் பகையார் கோவணம் கொடுத்துக் கோதிலா அமு
سمنه
لار

4
1y
a
நடமாடுங்கோயில்கள் 115
தைக் காண விழைகிருரர் அமர்நீதி நாயனர் 92) னடியார்களுக்குத் திருவோடு கொடுத்துத் திருவருள்
தேடுகிருரர் திருநீலகண்டர் ஆண்டவன் அடியார்
களுக்கு ஆடை துவைத்துக் கொடுத்து அருள் பெறு கிருரர் திருக்குறிப்புத் தொண்டர் எம்பிரான் அடி யார்களுக்கு இன்னமுதூட்டி இறையருள் காண்கி முர் இளையான் குடிமாற நாயனுர், சிவாலயங்கள்
கோறும் பேரிகைக்கும் மத்தளத்துக்கும் தோலும்
வாரும், வீணைக்கும் யாழுக்கும் நரம்புங் கொடுத்து
வந்தார் புலேயர்குல அருளாளர் திரு5ா8ளப் போவார். சிவனை மறவாத சிந்தையுடன் வாழ்ந்து நமக்கு
வழி காட்டினர்கள், சீர்பரவுங் திருத்தொண்டர்கள் எல்லோரும் !
ஒவ்வொரு தொழிலுக்கும் மேன்மை பேசப் படுகிறது பெரியபுராணத்திலே,
இறைவனுடைய அடியார்களின் துணி வெளுக் கும் தொழில் மேற்கொண்டவர் திருக்குறிப்புத் கொண்டர் அடியார்கள் வாய்விட்டுக் கேளாமல் இருக்கவும் அவரே அடியார்களுடைய விருப்பத்தை அறிந்து வெளுத்துக் கொடுத்கமையால் திருக்குறிப் புத் தொண்டர் என்னும் பெயர் பெற்ருரர்.
ஒருநாள் வயது முதிர்க்க அடியார் ஒருவர் வந்தார். அவருடைய உடம்பில் உள்ள ஒரே துணி யைத் தவிர வேறு உடை அவரிடம் இல்லை திருக் குறிப்புத் தொண்டர் அவரிடம் ஒடோடிச் சென் ருரர். "பெரியீர், உங்கள் உடையைக் கொடுத்தால் அதனை வெளுத்துத்தருகிறேன்.'

Page 79
116 முருகன் bizontair arriär
என்னிடத்தில் இந்த ஒரே துணிதான் இருக் கிறது இதனை நீர் வெளுத்துத் தருவதில் எனக்கு
ஆட்சேபனையில்லை ஆனல் இரவு வர்முன் முடித்
துத் தரவில்லை என்ருல் இந்தத் தள்ளாத வயதில் நான் துயர்பட வேண்டிவரும்; இதற்குச் சம்மத மானுல் எடுத்துச் செல்லும்,'
திருக்குறிப்புத் தொண்டர் உடன்பட்டு மகிழ்ந்து கங்தையை வாங்கித் துவைக்கச் சென் ருரர். நன்கு
துவைத்தார் கந்தையைக் காயவைக்க முற்பட்டார்.
நிர்மலமாய் இருந்த ஆகாயம் திடீரென்று மூடியது.
திசை மயங்க வெளி அடைத்துச் செறி முகிலின்
குழாம் மிடைத் துவிட்டது. LD 5ԾՄ) தொடங்கியது.
ஒய து பொழிகின்றது. மழை விட்டுவிடும் எனக் காத்து நின்ருர் மழை விட்டபாடில்லே மலே வந்தது. உடல்நடுக்கம் அதிகப்படத் துடிதுடிக்கும் அடியாருக்குப் பெரு ந் தீ  ைம செய்துவிட்டேன் என்று துடியாய்த் துடித்தார் திருக்குறிப்புத் தொண்டர்.
ʻʻqpaI I (3ğ5 பொழியுமழை ஒருகால்விட் டொழியும் எனக்
காவாலி திருத்தொண்டர் தனிதின் ருர் விடக்காணும் மே வர்போற் கங்குல்வர மெய் குளிரும் விழுத்தவர்ால் ஆ ஆ என் குற்றேவல் அழிந்தவர் என விழுந்தார்'
அவர் செய்வதற்கு ஒன்றுமே இல்லை. భీషు
அவரைப் பிடித்தது. மண்ணவர் கண் மழை
பொழிந்தார். வானவர் பூ மழை பொழிந்தார். அசரீரி எழுந்தது. "உனது பக்தி வலியை மூவுல
யைக் கல்லிலே மோதினர் ஆண்டவன் திருக்கரம்
گر \
 
 
 
 
 

நடமாடுங்கோயில்கள் 117.
கத்துக்கும் காட்டினுேம் இனி நம்மை அடைந்து பேரின் பம் பெற்று வாழ்ந்திரு' தொண்டர் தம் பெருமை செல்லவும் பெரிதே !
சுருங்கச் சொன்னல் தொண்டல்லாது உயிர்க்கு ஊதியமில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகிறது
பெரிய புராணம்.
Ay
AA 3.
S.
N
Aa ଅଙ୍ଘ୍ରିବି
இக்கருத்துக்கள் எல்லாவற்றையும் இரத்தினச்
சுருக்கமாகப் பொறிக்கிருரர் திருமூலர், திருக் கோயில் நின்று பயன் அளிக்கும் அருள் நிலையம்.
இது படமாடுங் கோயில், சிவனைச் சிந்தையில் கொண்டொழுகுவார் திருமேனி நடமாடுங் கோயில், இத்திருக் கோயிலுக்குச் செய்யுஞ் சீருஞ் சிறப்பும் படமாடுங் கோயில் பரமனுர் திருவடியில் சென்று சேரும். இது மறுக்க முடியாத உண்மை. பாட்டு இதோ:
“LILLDN, Li (35ruîlâ us aj G3 T göz öuî â LLN ir Lj, G, g u â pi di Lu i jis, iš , IST
நடமாடக் கோயில் நம்பர்க்கொன் lயில் படமாடக் கோயில் பகவற்க தாமே"
சிங்தையைச் சிவமாக்கிய அடியார்கள் நட
மாடுங் கோயில்கள் !
ஈசனிடத்தில் உண்மை அன்புடையார் எவ்வுயி ரும் ஈசன் சங்கிதி என்றும், இலக்கும் உயிர் உட
லனைத்தும் ஈசன் கோயில் எனறும் கருதுவார்கள்,

Page 80
118 முருகன் மணவாளன்
அப்போது உயிர் தாங்கி நிலவும் உடலனைத்தும் நடமாடுங் கோயில்களாகிவிடும் ஈசன் பால் உண்மை அன்புடையவர்கள் அடியார்களே அடைந்து பணி கின்ற நிலை அப்பூதியடிகள் வரலாற்றில் மிகத் தெளிவாகின்றது.
'அரசறிய உரைசெய்ய அப்பூதி அடிகள்தாம்
கரகமல மிசை குவியக் கண்ணருவி பொழிந்திழிய உரைகுழறி உடம்பெல்லாம் உரோமபுள கம்பொலியத் தரையின்மிசை வீழ்ந்தவர்தஞ் சரணகம லம்பூண்டார்."
'மற்றவரை எதிர்வணங்கி வாகீசர் எடுத்தருள
அற்றவர்கள் அருநிதியம் பெற்ருற்போல் அருமறையோர் முற்றஉளங் களிகூர முன்நின்று கூத்தாடி உற்றவிருப் புடன் சூழ ஒடிஞர் பாடினுர்."
நடமாடுங் கோயில்களே நாம் வழிபடுமாறு இப் போது தெரிந்து விடுகிறதல்லவா!
ஈசுவரன் ஆன்மாக்களுக்கு இன்பதுன்பங்களே ஊட்டுவதெல்லாம் சட்சித்துக்களைப் பிரே ரித் து கின்றேயல்லாமல் தாமாய் வெளிப்பட்டல்ல. பிற ரால் நமக்கு இம்சை உண்டாகும்போது அதற்காக ஈசுவர இன வேண்டுவதும் முறைப்பாடு செய்வதும் தக்கது. அது பற்றியே நன்மை உண்டாகற்பாலது. இங்ங்னமன்றி இம்சை உண்டாகும் விஷயங்களில் فہر சீவர்களிற் சீறி அழுக்கறுத்துக் கடுமொழி புறங் கூற்றுக்களை வழங்கி அவர்களைக் குற்றம் தூற்று வது நமது காலத்தையும் பாழாக்கி நமக்கு அஞ் ஞானத்தையும் நிலைப்படுத்தி ஈசுவரனுக்கு நம்மேல் வெறுப்பையும் நாம் பெற்றுக் கொள்வதாகும்.
- ஆன்மவிசாரம்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

hitur 3.
Tெங்கும் எப்பொருளிலும் பரம்பொருளைக் காணும் அனுபவம் சிறந்ததோர் அனுபவம். யோக கிஷ்டையாகிய நிர்விக ல் ப சமாதியில் இந்நிலை தோன்றும் எங்கும் தானேயாகி, சிவம்வேறு, நான் வேறு என்ற வேற்றுணர்ச்சி அந்நிலையில் இல்லாதொழியும். நானே சிவன், சிவனே நான் என்ற இரண்டற்றநிலை சுவானுபூதி இன்னும் சிறப்பாகச் சொன்னல், சிவோகம் பாவனையாகும். அதாவது உயிரின் கசிந்த கொண்டினுலும் சிவன் உயிரோடு கலந்து நிற்றலாலும் 'நான் சிவன்? எனப் பாவித்தல், இந்நிலை எல்லோர்க்கும் வாய்ப் புடைத்தாகாது மனம் வாக்குக் காயங்கட்கு எட்டா தது இந்நிலை. நான் எனப்பட்ட நிலை தோன்று திருக்கும்போது வேறு ஒன்றும் இல்லாது எப் பொருளும் தாணுகித் தோன்றும்.
சிவோகம் பாவனை சித்தாந்தத்துக்கு உபகார மானநிலை, சிவத்துவம் மேலிட்ட ஆன்மா'சிவமாய் இருக்கிறேன்' எனப் பாவனை பண்ணுதல் சிவோ கம் பாவனையாகும். 'நான் சிவமாய் இருக்கிறேன்" என்று சொல்வது இந்நிலை. இதனை வேதாந்தம் தத்துவமசி; அகம்பி மாஸ்மி’ எனப் CBL37úb. இங்கிலை அபே த நிலை, இதுவே அத்வைதம். இரண்டற்றநிலை; ஒன்றனநிலை. 。
ஆண்டவன் அத்வைதமாக இருக்கிருரன் என்ற கருத்தை வைத்துக் கொண்டே 'எல்லா உலகமு மானப்" என்று அப்பர் சுவாமிகள் பாடி இருக்கிறர்.

Page 81
20 முருகன் மணவாளன்
ஆத்மா சிவமயமாகின்ற போது சிவத்தை மட்டுமே பார்க்கும். வேறென்றையும பார்க்க மட்டாது; பார்க்கவும் முடியாது }
பாத்துள், பார்முதல் பூகம் அனைத்தும் மறைக் தால், பார்ப்பது சிவமன்றி வேறெது: ஆகவே வேதாந்தமானுலுஞ் சரி சித்தாந்தமானுலுஞ் சரி ஒன்ருந் தன்மையெய்து தற்குரிய பாவனையம் சாதனையையே பேசுகின்றது. 。
சிவோகம் சித்தாந்தத்துக்குரிய பாவனை அகம் பிரமம் வேதாந்தத்துக்குரிய பாவனை இப்பாவனை கள் சிவமயமாவதற்குரிய சாதனைகளாகும இவ் விரண்டு சாதனைகளும் உண்மைப் பொருளைக் காண் பன வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை கண்ட * வித்தகச் சித்தர்கணம் கண்டது அதுவே!
தற்போதஞ் சிற்றுணர்வு; சிற்றுணர்வுமுனைக் குந்தோறும் உலகியலிற் சிகதிப் பன்னுள் கனி வருந்தி உழல ேேண்டி நேரிடும். 。
பழியஞ்சும் ” பண்புடையார், சிற்று ணர்வு முனையாவண்ணம், திருவருளால் முற்றுணர்வுள்
சிவன் நிறைவில் அழுந்துவதால் முற்றுணர்வு விளங்கித் தோற்றும். சொல்ல ஒண்ணுத இறை கிறைவில் அடங்குவதாகிய மெய்ம்மை கை கூடினல் தம்வழி ஈர்க்கும் புலன் ஐந்தும் திருவருள rai ஆருயி ரின் வழிச் சென்று அடங்கிவிடும். 。
அடங்கிச் சிவநுகர்வைத் தமதாக்கிக் கொள்வர்
 
 
 
 
 
 
 
 
 
 

சும்மா இரு' (1)
121
செருக்கு என்பது நான் என் னும் முனைப்பு. அகந்தை யென்பதும் அதுவே. அ து உயிர்களைப் 1பிறப்பு இறப்பு என் னும் பேதைமையில் உட்படுத் தும். பொருளல்லவற்றைப் பொருளென் றுணரும் மயக்கம் பிறந்திறந்து வருகின்ற நிலையாமைக்கு வழிகாட்டும்,
யான் என து என் னும் தலையெடுப்புடையவர் களுக்கு ஆண்டவன் காட்சி கிட்டவே கிட்டாது, தாயுமானப் பெருந் தகை,
''அரு ளா லெவையும் பார் என் றான்-அத்தை
அறியாதே சுட்டி யென் ன றி வரலே பார்த்தேன் இரு ளான பொருள்கண்ட தல்லாற் -கண்ட
என்னையுங் கண்டி லன் என்னேடி தோழி.'' என்று பாடுகிறார்.'
'யான் எனது என்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.'' என்பது வான் புகழ் வள்ளுவன் வாய் மொழி.
செருக்கு அற்றுப்போகும் போது இறைவன் அனை த்துயிரினும் உயிர்க்குயிராய் நிற்கும் உண்மை யினைக் காணலாம். எல்லா உயிரையும் தன்னுயிர் போற் கருதி நிற்றல் ஞான பூசை. உயிரின் கண் ஒளியைக் கண்டு நிற்றல் யோகபூசை. தன் னுயி ரின்கண் உள்ள சிவத்தை வெளியிலுள்ள பொருள் களில் தாபித்துப் பூசித்தல் கிரியாபூசை, : :-

Page 82
122 முருகன் மணவாளன்
ஞான பூசை, யோகபூசை, கிரியா பூசை என்பன நிகழ்ந்துவரத் தற்போதங் கழன்று சிவபோதக் தோன்றும்.
*அவனே தானே ஆகிய அந்நெறி
ஏகன் ஆகி இறைபணி நிற்க மலம்மாயை தன்னெடு வல்வினை இன்றே."
என்பது சிவஞானபோதம்.
அவனே கானே ஆகிய அங்கெறி" என்று சிவஞானபோதங் கூறுவது அத்துவித நெறியாகும்.
முனைப்பற்றுத் திருவருள் வழி நிற்றலையே மெய்
கண்டார் இறைபணி நிற்றல் என்கின்றர்.
"நானென்றுந் தானென்றும் நாடிநான் சாரவே தானென்று நானேன் றிரண்டிலாத் தற்பதத்
தானென்று நானென்ற தத்துவ நல்கலால்
தானென்று நானென்றுஞ் சாற்றகில் லேனே.” என்பது திருமந்திரம்.
தன்னை மறந்து, கன்நாமங் கெட்டுத், தலைப் படும்போது வேறு ஒன்றுமில்லாது எப்பொருளுக் தானுகி நிலைத்து கிற்கின்ற உயர்ச்சி எவராலுஞ் சொல்ல முடியாதது; சொல்லி முடியாதது.
முருகன் ஞான வடிவினன். அவன் கைத் தனிவேல் ஞானவேல், அவ்வீரவேல் அசுர வாழ்
வைக் கெடுப்பது; அமரவாழ்வைத் தருவது. முரு
கனேயணுகி அவனுேடு ஒன்றுபடும் முடிவான இன்ப ழாகிய அத்துவித கிலையை வேண்டி,
 
 

iki. இரு 123
'நீயான ஞான விே சதந்தனை என்று கீ அருள் வாய்' என்று கந்தரலங்காரத்தில் முருகனைக் கேட் பார் அருணகிரிகாத சுவாமிகள்.
*பிரம்மமாயும் அகன் பிறப்பிடமாயும் சிருஷ்டி கர்த்தாவாயும் ஈசனயுமுள்ள பொன் போல் விளங் கும் பரம் பொருளை எப்போது, பார்க்கின்ற திறமை யுடையவன் பார்க்கின்றனுே, அப்போது அவன் புண்ணியம், பாவம் இரண்டினையும் உதறித்தள்ளி விட்டு மாசற்றவனுய்ப் பரமபுருஷனை அடைகிறன்." இது முண்டக உபநிடதம்.
சுருங்கச் சொன்னல் ஜீவபோகங் கழன்று எல்லையற்ற பேரானந்தப் பெருங்கடலில் இன்பங் துய்ப்பான்.
ஏகனுகி இறைபணி நின்று நாதன் தாள் வாழ் கின்றநிலை வந்த டைகின்றது. இவ்வுயர்வு அனுப விக்கத் தக்கதேயன்றிப் பிறர்க்குச் சொல்ல முடியா தது. இந்த நல்ல கருத்துக்கள் எல்லாம் கந்தரனு பூதிச் செய்யுள் ஒன்றில் தெரிகின்றன. பாடல் பின்வருமாறு:
"ஆணு "அழுதே அயில்வேல் அரசே
ஞானுகரனே நவிலத் தகுமோ பாணுகிய என்ன விழுங்கி வெறுந் தானுய் நிலைநின்றது தற்பரமே."
இப்படி அருணகிரிநாதர் பாடினுல்,

Page 83
鬣24 முருகன் மணவாளன்
'நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும் நெருப்பினுெடு காற்ருசி நெடுவணுகி அற்பமொடு பெருமையுமாய் அருமையாகி
அன்புடையார்க் கெளிமையதாய் அளக்கலாகாத் தற்பரமாய்ச் சதாசிவமாய்த் தானும்யானும் -
ஆகின்ற தன்மையனே நன்மையோடும் பொற்புடைய பேசக் கடவோம் பேயர்
பேசுவன பேசுதுமோ பிழையற் ருேமே.'
என்று அப்பர் பெருமான் பாடுவார்.
இறைவன் குறைவிலா நிறைவு, கோதிலா அ முது, ஈறிலாக் கொழுஞ்சுடர்க்குன்று. அவன் உட?ல இடமாகக் கொண்டால் அவனிடம் இரப் பகற்கு என்ன இருக்கிறது என்று பாடுவார் மணிவாசகர்.
விளக்கமாகச் சொன்னுல் சிவன் என் உடலை
இடமாகக் கொண்டால் 'நானே சிவன்'.
*நான் வேறெதிைருக்க நீ வேறெதிைருக்க' என்று திருப்பு கிழிலே அருணகிரி நாதர் பாடுவார் இறைவனை விட்டுத் தனியாக இருக்கும்போது அவ னும் நாமும் வேறு என்று தோன்றும். அவனேடு கலக்கின்ற நிலையில் எல்லாமற என்னே இழந்த நலம் தோன்றும். அது அனுபூதி நிலை
இந்த அனுபூகி நிலை யான் தான் என்ற சொற் கள் கோன் ருரதநிலை, யான் என்ற சொல் கெட்
டஸ் எல்லாங் கெட்டுவிடும். இரண்டற்ற அத்து
விக நிலையில் யானும் இல்லை; கடினும் இல்லை. சொல்லைச் சொல்லும் கிலே பேதகிலை சொற்கெட்டு

சும்மா இரு 125 இரண்டும் ஒன்றுவதே இலட்சியம் (ଗଣFItତ 2lଗtଗୀt அளவும் இன்ப அனுபூதி இல்லை.
ஆண்டவன் ஞான வெளியாகிய சிகாகாசத்தில் வீற்றிருக்கிறன். நாம் உலகினின்று நழுவி, மன மற்று, உரையற்று எங்கே இருக்கிருேமோ அங்கே அந்த வெளி நமக்குக் கிடைக்கும். அது தனி வெளி-சிகாகாசம்-சூனியம். மனமற்ற நிலை சும்மா இருக்கும் நிலை யான் கெட்டுத் தானுடன் இசையும் போதுசும்மா இருக்கும் நிலை தோன்றும். இதனை அழகாகக் கந்தரலங்காரத்தில், -
'யான் தான் எனுஞ் சொல் இரண்டுங்
கெட்டாலன்றி யாவருக்குந் தோன்ருது சத்தீயம்'
என அருணகிரிநாதர் பாடுவது அகந்தை உள்ள அளவும் அனுபவம் கிடையாது என்பதைச் சுட்டிக் காட்டுவதற்கேயாம். கங் கானுபூதியிலே ஓர் அற்புத மான பாடல் இங்கே நினைவுக்கு வருகிறது.
"செம்மான் மகளைத் திருடுத் திருடன்
பெம்மான் முருகன் பிறவா னிற வான் கம்மா இருசொல் லறவென் றலுமே அம்மா பொரு ளொன்று மறிந்தீலனே.”
| , titler. இரு சொல்லற என்றலுமே அம்மா பொருளொன்றுமறிந்திலனே, எனச் சும்மா இருக் கும் நிலையைப் பேசுகிருரர் அருணகிரிநாதர்.
பிரமம் வாயினுல் பேசக் கூடியதன்று. வாயி னுல் பேசினுல் எச்சில் பட்டுவிடும். ஆகவே சும்மா இருப்பதே சிறந்தது,

Page 84
。 426 முருகன் மணவாளன் 。、
அருணகிரிநாதர் சுற்றும் அருள் அனுபவிச் செய்திகள் மிகமிகச் சிறப்புடையன் நான், தான் என்ற வேறுபாடு உரைக்கும் கிலே ஒழிந்து, மோன நில பெற்றல், சான்று ஆரும் அந் தனி வெளி பில் முருகனேடு ஒன்றி இன்புறலாம் என்று அவர் பாடுவார். அருணகிரியரின் கிஜல் கற்பனையிற் காண முடியாத நிலை,
இருப்போரூர்ச்சந்நிதி முறையிலே
"சும்மா இருவெனநீ சொல்லப் பொருளொன்றும் அம்மா அறிந்திலமென் நன்றுரைத்த-எம்மான்
அருணகி நாதன் அனுபவம் நாயேற்குக் கருெைபாழி போரூரர் காட்டு"
என்று அக்க அனுபவத்தைக் காட்டச் சொ
ဓါးစံ၏႔း கேட்கிருர் சிதம்பரசுவாமிகள்.
鷺
கேந்துகமதக் கரியை"வசமாய் இடத்தலாம், என்ற காயுமானவர், எல்லாஞ் செய்யலாம், ஆனல் "சிக்கையை அடிக்கியே இருக்கின்ற திறம் அரிது’ என்று சொல்கிரர் அப்பெருக்ககையார் சும்மா இருக்கின்ற நிஐலயைப் பற்றிப் பல இடங் களில் பேசுவார். அவற்றுள் சிலவற்றைக் குறிப் பிடாமல் இருக்க முடியாது.
gäu. லறிவதற் ஏம்பெருமான் பாதுமின்றி கம்மா இருக்கஒரு சூத்திரத்தான் இல்லயே ெேசால்லும் பொருளுமற்றுச் கம்மா இருப்பதற்ே அல்லும் பகலுமெனக் காசை பரபரழே:
 
 
 
 
 
 
 
 
 
 
 

சும்மா இரு g
"sh விருக்கச் மென்று சுருதியெல்லாம் அம்மா நிரந்தரஞ் சொல்லவுங் கேட்டும்."
SLtLLLLLL LTTTT TLTTLLL LTTTTSSSLL LSLSLSALLLSAAASS என்றெல்லாம் (FL) galtrf.
ஆகவே மெளனமென்பதும் "சும்மா இரு” என்பதுஞ் சுட்டிறந்த முதல்வனையுணரும் ஞான கிட்டை என்பது 5 மக் கெல் லாங் தெளிவாகிற தல்லவா ?
'நேச நிருவிகற்ப $ểaLuảg ? உன்னடிமைக் காசை யுண்டோ நீயறிய தன்றே பராபர்மே."
சும்மா இரு; ஒரு பொல்லாப்பும் இல்லை. அதுவே ஓம் சாதனை !
முற்றும்.
| %ა, ఒఉ***************************************************A*+ఉ ఉత
.. ரீசண்முகநாத அச்சகம், யாழ்ப்பாணம் ,

Page 85
பக்கம் வரி
1, 2 17, 20 18 25 20 10 20 8
23 8
35 18
40 - 6
50 l7
62. 9
71. 4.
85 22
24
17
3
| c . . у А и Ам.
எண்ணிறைந்து நல்செந்தின் முழ்கி
குங்கிலிய குங்கிலியக் கலையர் வெழுத்து நெழிந்து போடுகிறது பொருள் கண்ணுகலார் காணப்படாது
பன் னிராயிரம் சுழிபட்டு வணங்கிருரள் நன்னளின் உரமேறி
ஆேதி
மூழ்கி
வெளுத்து
நெளிந்து போடுகின்றன. பொருட் 缕。下 கண்ணுகலாய்க் காணப்படுவதில்லை 10346
சுழிப்பட்டு வணங்குகிறாள் நன்ளிைல்
திருத்தம் எண்ணிறந்து நம்செந்தின்
குங்குலிய குங்குலியக்கலயர்
மேறிக் *
همه ا۶۰۷r ب. ب. م. نامه
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 86