கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகவிழி 2013.05

Page 1
●園。
ஆசிரியத்
தொடருறு கல்விச் சேவை தோற்றுப்போகாமலிருக்க.
கல்விச் சந்தை மட்டும் ே
உரையாடும் முறையைக் கற்பித்தல்
பேராசிரியர் நத்தசேன ரத்னபால செ S.N.A. Aroos O le. Lofuran O Prof. பேராசிரியர் சோ. சந்திரசேகரன் க. அ கல்விமானி எஸ்.எல். மன்சூர் சொ.
www.viluthu.org
 
 

2013 - nلاق
பிள்ளை நேய அணுகுமுறை ஓர் ஆலோசனைக் குறிப்பு
மாணவரின் கணிப்பீட்டு முறைக்கு செயலடைவுக் கோவையின் முக்கியத்துவம்
சண்முகம் M.M. ஹிர்பஹான் Daya Rohana Athukorala
செ. ரூபசிங்கம்
signal: 100/

Page 2
●ጳቆ**oጆዳም
ته
a" ल्लिg*
2012 (607T
ஆம்
LO ஆண்டிற்
Lig,6i '! சிரி (60)TT
TIL LULUI
 

ஐக்க
ஆர் ஈர்
ய்தல்'
லுடயதாக ஐே
تهتهtarه)rtرواترو مېخي .
რმდრo:2}***
# ဗျွိါ/ பெற விரும்பும் தாடர்பு கொள்ளவும்.

Page 3
ஒ
لیکن جسمبرج
t పడుతో
تختمییز 6یج
*ā°
Q. S:G303 ܝ
O
O 荔兹
2リ三ya భ
AHAVIILI 3, Torrington Avenue
Colöa Tel: 011,2506272 E-mail: ahaviliviltithuagmail.com
அகவிழியில் இடம்பெறும் கட்டுரைகளுக்கு அதன் ஆசிரியர்களே பொறுப்பு, கட்டுரைகளில் இடம்பெறும் கருத்துக்கள் "அகவிழி” யின் கருத்துக்கள் அல்ல.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ISSN 1800-1246
2ܙ 72ܐܰܓܝܘ .ଔ }} } (م؟
1. பிரயோக மானிடவியல் 4
2. நெருக்கீடுகள் பிள்ளையின் கல்வியில் 8
ஏற்படுத்தும் பாதிப்பு
3. தொடருறு கல்விச் சேவை 12
தோற்றுப்போகாமலிருக்க.
4. பாடசாலைகளில் பயிற்று மொழியாக 17
ஆங்கிலத்தின் மீள் அறிமுகம்
ஒரு விமர்சனப் பார்வை
5. பிள்ளை நேய அணுகுமுறை - 21
ஓர் ஆலோசனைக் குறிப்பு
6 கல்விச் சந்தை - மதிப்பெண் மட்டும் pg
போதுமா?
7. நடைமுறையிலுள்ள பல்கலைக்கழக 26 அனுமதி கொள்கையும் 2011/2012 அனுமதிகளும் - சில குறிப்புகள்
8. மாணவரின் கணிப்பீட்டு முறைக்கு செய சூ0
லடைவுக் கோவையின் முக்கியத்துவம்
9. ஆளும்ையில் ஊக்குவித்தல் 33
10. உரையாடும் முறையைக் கற்பித்தல் 37
11. பண்பாட்டுக் கல்வி 4O

Page 4
ஆசிரியர்: நிர்வா VS. இந்திரகுமார் சாந்தி ச
நிறைவேற்றுப்
ஆலே திரு. து. ராஜேந்திரம் முன்னாள் முதுநிலை விரிவுரையாளர், இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
பேராசிரியர் சோ. சந்திரசேகரம் முன்னாள் கல்விப் பீடாதிபதி, கொழும்புப் பல்கலைக்கழகம்
கலாநிதி உ. நவரட்ணம் முன்னாள் ஒய்வு நிலைப்பணிப்பாளர், தேசிய கல்வி நிறுவகம்
திரு.தை. தனராஜ் முதுநிலை விரிவுரையாளர், இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
லெனின் மதிவானம் பிரதி கல்வி வெளியீட்டு ஆணையாளர், கல்வி அமைச்சு
கலாநிதி சசிகலா குகமூர்த்தி சிரேஷ்ட விரிவுரையாளர், இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்
ܢܠ
ஆசிரியரிடமிருந்து.
சகல அரச பாடசாலைகளிலும் பணியாற்றும் நிரந்த ஆசிரியர்கள் அனைவரும் இலங்கை அரசாங்க சேவைக்குள்ளும் தேசிய கல்வியியல் கல்லூரிகளின் நிரந்தர கல்வியியலாளர்கள் இலங்கை அரசாங்க கல்வி சேவைக்குள்ளும் ஈர்க்கப்பட்டுள்ளனர். கல்விசார் நிர்வாகிகள் அனைவரும் இலங்கை கல்வி நிர்வாக சேவையில் உள்ளனர். அடிப்படையில் ஒவ்வொரு வகுதியினரும் தமக்குரிய தெளிவாக வரையறை செய்யப்பட்ட கடமைகளையும் பொறுப்புக்களையும் கொண்டுள்ளனர். எனினும் நடைமுறையில் இவ்வாறு இல்லை. ஆசிரியர்களும் கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளும் பாடசாலை அதிபரின் கடமைகளைச்
அகவிழி|மே 2013
 

ாக ஆசிரியர்: ஆசிரியர் குழு:
ஈச்சிதானந்தம் க. சண்முகலிங்கம் பணிப்பாளர்(விழுது) பத்மா சோமகாந்தன்
)ாசகர் குழு
பேராசிரியர் வ. மகேஸ்வரன் தலைவர் தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம் திரு.க. இரகுபரன்
முதுநிலை விரிவுரையாளர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
பேராசிரியர் துரை மனோகரன் தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம் பேராசிரியர் இரா.வை. கனகரட்னம் தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம் திரு.வீ. தியாகராஜா சிரேஷ்ட ஆலோசகர், சமூக விஞ்ஞானக் கற்கைகள் துறை, இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம் திரு.கே. சாம்பசிவம் தேசிய ஆலோசகர்: கல்வி முகாமைத்துவம் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம் திருமதி. அருந்ததி ராஜவிஜயன் ஆசிரிய ஆலோசகர், கொழும்பு கல்வி வலயம் ஜி. போல் அன்ரனி
முன்னாள் பிரதி பரீட்சை ஆணையாளர்
لر
செய்கின்ற அதே வேளை தரம்பெற்ற அதிபர்கள் பலர் வேறுபணிகளைச் செய்கின்றனர். சில பாடசாலைகளில் அதிபரின் பணியினை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள், பிரிவுத்தலைவர், ஆசிரியர் மற்றும் துணை அதிபர் ஆற்ற வேண்டியுள்ளது. உண்மையில் நாட்டிலுள்ள பிரசித்தி பெற்ற பாடசாலைகளின் அதிபர்களாக கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளே பணியாற்றுகின்றனர். இந்நிலமைகளின் காரணமாக பல்வேறு தொழில் வகுதிகளுக்கிடையிலான எல்லைகள் தெளிவற்றுக் காணப்படுகின்றன.
1995ஆம் ஆண்டுக்கு முன்னர் கல்விசார் தொழில் தகைமைகளின் அடிப்படையிலேயே ஆசிரியர்கள் வகைப்படுத்தப்பட்டிருந்தனர். 1995இல் புதிதாக ஆசிரியர் சேவைக்கான சேவைக்குறிப்பு தயாரிக்கப்பட்டது. இதனுள் ஆசிரியர் தரங்கள் ஐந்து ப்குதிகளாக வகுக்கப்பட்டது.
V 2

Page 5
அரசாங்கப் பாடசாலைகளின் சகல நிரந்தர ஆசிரியர்களும் ஒரே சேவைக்குள் உள்ளீர்க்கப்பட்டதோடு அவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புக்களும் வழங்கப்பட்டன. இவ்வாறு ஆசிரியர் சேவைக்கான பல்வேறு பிரமாணக் குறிப்புக்களின் படி ஆசிரியர் சேவை மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறான பிரமாணக் குறிப்புகளும் மதிப்பீடுகளும், தொழில்சார் தேர்ச்சியும் அர்ப்பணிப்பும் கொண்ட ஒர் ஆசிரியர் தொகுதியை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. ஆனால் ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்புக்கள் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை என்றும் ஆசிரியர் நியமனங்கள் குழப்பகரமானதாக இருப்பதாகவும் தொழில்சார் தகைமை பெறும் வாய்ப்புக்கள் ஆசிரியர்களுக்கு மறுக் கப்பட்டுள்ளதாகவும் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது. பாடசாலை ரீதியாகவும் மாகாண ரீதியாகவும் ஆசிரியர்களை பாடசாலைக்கு அனுப்பவதில் சமநிலை காணப்படவில்லை. கிராமப் புற மற்றும் வசதிகுறைந்த பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படும் போது வசதி உள்ள நகர்ப்புறங்களில் ஆசிரியர் மிகை காணப்படுகிறது. இவ்விடயங்கள் தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் அவை போதுமானவை அல்ல என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
இந்நிலைமைகள் இவ்வாறு இருக்க சேவைக்கால ஆசிரியர்களின் வகிபங்கு பற்றி அகவிழி தனது அனுபவம் ஒன்றை முன்வைக்கிறது. கஷ்ரப் பிரதேசங்களில் பணியாற்றுகின்ற ஆசிரியர்கள் போதுமான வசதிகள் இல்லாத காரணத்தால் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்குவர் என்பதனை யாவரும் அறிவர். இவ்விடயம் இன்று நேற்று அல்ல ஆசிரியர் சேவையில் தொடர்ந்து இருக்கும் ஓர் நிலமைதான். ஆனால் தற்போதைய சேவைக்கால ஆசிரியர்கள் அவர்களது மனங்களில் கொண்டிருக்கும் தொழில்சார்ந்த வெறுப்பும் அவர்கள் கற்பிக்கும் பாடசாலை மீதும் அச்சமூகத்தின் மீதும் கொண்டிருக்கும் மாற்றாந் தாய் மனப் பாங்கும் வார்த்தைகளில் சொல்ல இயலாதவை. இவர்களின் மனப்பாங்குகளின் வெளிப்பாடுகள் சில.
“இதுகளுக்கேன் படிப்பிப்பான். இதுகள் எப்படிப் போனா எங்களுக்கென்ன? வன்னிக்கும் போவானா மனுசன் , அதிகாரிகள் எங்களைப் போட்டுக் கொல்லுறான்கள், அரசியல் செல்வாக்கு உள்ளவன் மாறிப் போறான் அவையிட கதையும் ஆட்களும் வாறியளா? போறியளா? என்று பிரதேச வழக்கு மொழிகளை நீக்கலும் நையாண்டியுமாக கதைப்பர். மேலும் சும்மா போய் வந்தாலே போதும்’ என்பதான அங்கலாயப்ப்புக்கள் ஏராளம். பல நாட்கள் பல

ாடவேளைகள் கழிந்தும் பாடசாலைக்குச் செல்வதும் ாடிக்கையாகிப் போன நிகழ்வுகள். யாழ்ப்பாணத்தில் ருந்து தீவுகளுக்கும் வன்னிப் பகுதிகளுக்கும் செல்லும் ல ஆசிரியர்களது மனப்போக்கு இவைதான். அதிலும் ன்தங்கிய பாடசாலைகளைக் கொண்ட சமூகங்களை ள்ளி நகையாடுவதும் வேண்டா வெறுப்பாக நோக்குவதும் சவிகள் புலப்படக் கேட்டவை.
இப்படிப்பட்ட சில ஆசிரியர்கள் தாங்கள் ஏற்றிருக்கும் ணி பற்றிய அடிப்படைச் சிந்தனை கூட இல்லாதவர்கள். ாழ்வதற்கு பல்வேறு தொழில்கள் இருக்கின்றன. ஆசிரியர் ணி அவ்வாறன்று. ஓர் எதிர்காலத்தின் இருப்பு என்பதையும் ர் சமூகத்தின் சந்ததியின் வாழ்வியல் என்பதையும் கூட புறியாதவர்கள். இவர்கள் பிறதொழில் செய்வோரையும் புவர்களது வாழ்வையும் எண்ணி அதிகம் கவலைப் டுபவர்கள். விரைவான முன்னேற்றத்தையும் சொகுசான ாழ்வையும் எண்ணிக் கனவு காண்பவர்கள். வேறு தாழில் செய்பவனைக் குறித்து அவன் கார், காணி, lடு வாங்கிவிட்டான் என அங்கலாய்ப்பதும் தம் பணிமீதான 1றைவான மனோநிலையைக் கொண்டிராமையின் வளிப்பாடுகள்.
எதற்கெடுத்தாலும் பிறர்மீதான குற்றச்சாட்டுகளும் புதிகாரிகள் மீதான அவதூறுகளையும் தங்களது பணி |யலாமையின் பொருட்டு சங்கற்பித்துக் கொண்டே }ருப்பார்கள். சம்பளம் போதாது என்ற நிலமையைக் ாட்டி தொழில் மீதான முழு வெறுப்பையும் வளிப்படுத்துவது இவர்களுக்கு பழகிப்போன ஒன்று. Tதாரணமாக மாதம் ஒன்றிற்கு 20000 ரூபா சம்பளத்தைப் பறும் ஆசிரியர் ஒருவர் வருடமொன்றிற்கு 2 1/2 இலட்சம் பா வரை பெறுவார். குடும்ப வாழ்விற்கு இக்கொடுப்பனவு பாதாது என்றாலும் கூட தனது கல்வி மேம்பாட்டிற்காக புகவிழி போன்ற ஒரு சஞ்சிகையை வருடமொன்றிற்கு வறும் 1000 ரூபாவைச் செலவு செய்வதற்கு தயங்குவர்.
இவற்றை ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டுக்களாக கவிழி முன்வைக்கவில்லை. இவ்வகையான போக்குகள் மது சமூகத்தில் இருப்பதை இட்டு ஆச்சரியப்படவேண்டி உள்ளது. மாறாக எதிர்வினை செய்யும் வியத்தகு பூசிரியர்களையும் அக விழி நன்றியுணர்வோடு ாராட்டுகிறது.
ஆயினும் கஷ்ரப் பிரதேச மாணவர்களின் எதிர்காலம் ருதி கல்வி அதிகாரிகள் மேற்குறித்த ஆசிரியர்கள் தாடர்பாக விழிப்பாக இருக்குமாறு அகவிழி தாழ்மையாகக் கட்டுக்கொள்கின்றது.
V.S. இந்திரகுமார்
அகவிழி (மே 2013

Page 6
பிரயோக மானி
(Applied Anthro
பேராசிரியர் நத்தசேன சமூகவியற் துறை, ஜயவர்தனபுர தொடர்ச்சி.
k 6TuSist) (Fig5(5p) - AIDS
மிகக்குறுகிய காலத்தினுள் பெருந்திரளான மக்களைக் கொன்று குவிக்க AIDS இனால் முடிந்தது. கறுப்பிறப் (BlackDeath) ஐரோப்பாவின் சனத்தொகையில் 25% மான மக்களை அழித்தொழித்தது. (75 மில்லியன்பேர்) 6ஆL நூற்றாண்டில் மத்திய கிழக்கிலேற்பட்ட கொள்ளை (SpruisOTIT6) (Epidemiological diseases) seg5IT6 g5 (og5ITs) நோயினால் 100மில்லியன் பேர் மாண்டனர் (ஆசியாவிலுL ஐரோப்பவிலும் இணைந்து).
இன்று கொள்ளைநோய் ஏற்படாதென நாப நினைக்கிறோம். எனினும் எயிட்ஸ் ஒரு கொள்ளை நோயாகும்.
உலகம் பூராகவும் பல மில்லியன் மக்களுக்கு எய்ட்ஸ் உண்டு. 2000ம் ஆண்டாகும் போது 4 மில்லியன்பேருக்கு இவ் வைரசுத் தொற்று ஏற்பட்டுள்ளது எயிட்ஸ் பாலியல் தொடர்புகள் மூலம் பரவுகின்றது குருதி மூலமான தொற்று தற்போது கட்டுப்படுத்த பட்டுள்ளது. ஹெரொயின் (Heroin) எடுப்பவர்கள் ஊசிமூலL ஏற்றிக் கொள்ளல் எயிட்சை வரவழைக்கும் ஒரு வழிமுறையாகும்.
எய்ட்ஸ் என்பது மருத்துவப்பிரச்சினை மட்டுமன்று அதற்கான தடுப்பு மருந்தைக் கண்டறிதல் மருத்துவ ஆய்வாளர்ளின் பொறுப்பாகும். எனினும் அம்மருந்தை யாராலும் எடுக்கமுடியுமா? சாதாரணவிலையிலி கிடைக்காவிடின் பெரும்பாலான நோயாளருக்கு அதனால் என்ன பயன்? முக்கியத்துவம் பெறுவது மருத்துவ தீர்வன்று. நடத்தை மாற்றம் (சீராக்கம்) செய்து பாலுறவுகளை மாற்றியமைப்பதன் மூலம் இத6ை நிறுத்துவதாகும்.
பல பாலியல் துணைகளை நாடுதல் எய்ட்ள ஏற்படுவதற்கான மூலாரம்பமாகும். ஆகவே ஒருவருடன் மாத்திரம் நேர்மையான தொடர்பு மிகப் பொருத்தமானது சந்தேகமுள்ள எவ்விடத்திலும் கவனமாக ஆணுை (Condom) பாவித்தல் மிக முக்கியமானது. ஆபத்தா6 பாலியல் நடத்தையை ஏற்படுத்தாமலிருக்க சிரமமெடுத்த வேண்டும்.
அகவிழி மே 2013

டவியல்
pology)
ரத்னபால
பல்கலைக்கழகம்
பாலுணர்வு (Sexual Reeling) மிகவும் வலிமையானது. எனினும் அதனை கவனமாக விழிப்புணர்வுடன் பயன் படுத்தாவிடின் குறித்த நபர் தனது அழிவிற்காய் உபயோகித்ததாக அமையும். ஆபத்தான பாலுறவுகளிலிருந்து அவர் விலகுதல் வேண்டும். பாலுறவின் போது விசுவாசமான ஒருவருடன் மாத்திரம் ஈடுபடுவதும், மற்றைய சந்தர் ப் பங்களில் விழிப் பணர்வுடன் ஆணுறைகளைப் பாவிப்பதும் அவசியம். நடத்தைச் சீராக்கமே சீரிய முடிவைத்தரும்.
Ts
* அனர்த்தம்
நதிகள் பெருக்கெடுத்தல், வறட்சி, மண்சரிவுகள், பூகம்பங்கள் என்பவற்றை வேரோடழிக்க முடியாது. எனினும் அவற்றுள் சில எமது நடத்தைகளுடன் தொடர்பானவை. பூகம்பங்களாலேற்படும் பிரதேச வதிவிடங்கள் அதற்கு ஈடுகொடுப்பதாய் அமைக்கப்படுமாயின் ஏற்படும் இழப்பு குறைவாகவிருக்கும்.
மரங்களை வீழ்த்தி, வெளியாக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மண்சரிவுகள் ஏற்படலாம். 1970இல் சீனாவிலேற்பட்ட பூகம் பத்தினால் 250,000 பேர் இறையடியெய்தினர். அதற்கான காரணம் அவர்களின் வதிவிடங்களின் அமைவாகும். 1989இல் கலிபோனியாவில் (Clifornia) ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை 65 ஒரேமாதிரியான இரு பூகம்பங்கள் ஏற்படுத்திய அழிவின் வேறுபாட்டைப் பார்க்க. பூகம்பத்திற்கு ஈடுகொடுக்கும் வகையிலேயே கலிபோனியாவில வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன.
1931இல் சீனாவின் மஞ்சள் நதி பெருக்கெடுத்தபோது நான்கு மில்லியன்பேர் மாண்டனர். மஞ்சள் நதியோர மரங்களை வெட்டிச்சாய்த்ததே இதற்கான காரண மாயமைந்தது. இதனால் பாரிய மண்திணிவுகள் நதியினுள் கழுவப்பட்டுச்சென்றன. அம்மண் நதியின் மண்னை அதிரவைத்தது. மக்கள் காட்டு மரங்களை விறகிற்காய் வெட்டாமலிருப்பின், நதிக்கரையை அண்மித்து விவசாயப் பண்ணைகளை அமைக்காவிடின் இந்நிலை மாற்றம்பெறும்.

Page 7
பஞ்சத்தினால் (Famine) ஏற்படும் அழிவைச் சிந்திக்க, பஞ்சத்தினால் ஏற்படும் அழிவை சமூகத்தினால் நிறுத்த முடியும். செமோவா நாட்டில் பாரிய சுழல்காற்று ஏற்பட்டதும் நடப்பது என்ன? அழிவேற்பட்ட கிராமத்திலிருப்பவர்களை அழிவடையாத அயலூர்களை நாடுவர். அங்கு அவர்களின் உறவினர்களும், நட்புறவு கொண்டோரும் அவர் களுக்குதவுவர். அவர்களின் காணிகளில் பயிர்செய்து விளைச்சல் கிடைக்கும் போது மீண்டும் பிறப்பிடத்தை நாடுவர். இரு ஊர்களிடையேயான அன்னியோன்னிய தொடர்பு ஏற்பட்ட அழிவின் பயங்கர விளைவைக் குறைக்கிறது. இவை வெற்றியளிப்பது சமூக நிரலாக்கம் (Social Stratification) g) gJouÕp GeF(3LDT6 J(3gg திலேயேயாகும்.
அரசினால் வழங்கப்படுபவைகளும் இத்தருணத்தில் முக்கியம் பெறும். இந்தியாவிலும் அதேபோல் நம் நாட்டிலும் அரசின் கையளிப்புகளை ஒருசில வேளை மக்கள் கணிப்பிலெடுப்பதில்லை. அவை வழங்கப்படும் முறை தவறானது. பிரதேசத்தின் செல்வாக்குடையோர் அவற்றைப் பொறுப்பெடுத்து தனக்கு சாதகமாய் பகிர்கின்றனர். வறுமையின் கொடுமையில் வாடுவோர் பெரும்பாலும் இடையூறுகளை அனுபவிப்பர். குடும்பங் களிடையே மகளிருக்கு வெவ்வேறு தடங்கல்களுண்டு. உணவுப்பற்றாக்குறை நிலவும்போது, பட்டினி ஏற்படும் போது துரிதமாக அழிவை ஏற்பது வறியோரும் சமூக நிலையமைப்பில் பின்தங்கியவர்களுமாகும்.
சமூகத்திற்கேற்படும் அனர்த்தங்களில் அனைவருக்கும் ஒரே பாதிப்பேற்படுவதில்லை. நாம் முன்னர் கூறியதுபோன்று பாரிய தாக்குதல் நிகழ்வது வறியோரிடையாகும். உண்மையாகவே சமூகத்தின் உதவிக்கரங்கள் அதிகமாக நீட்டப்படவேண்டியதும் அவர்களுக்கே.
பெரும்பாலும் இவ் அனர்த்தங்கள் கடவுளினால் மேற்கொள்ளப்படுவதாகக் கொள்ளப்படும். மழை ஏற் பட்டால் கூறப்படும் நோவாவின் (Noah) வெள்ளப்பெருக்கு கடவுளினால் அனுப்பட்டது போல. எனினும் இன்று அறிவியற் (Scientific) காரணிகளையும் சமூகக் (social) காரணிகளையும் எம்மால் விளங்க முடியும். சமூகக் காரணிகளுக்கு மூலகாரணம் மனிதன் எனின், அவர்களால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியும். தாவரங்களை (காடுகளை) வெட்டியழிக்காமல் மண்ணை வெட்டியகற்றாமல் அவர்களால் வேலைசெய்ய முடியும். சமூகத்திற்காக இவையனைத்தையும் செய்தல் அவர்களின் பொறுப்பாகும்.
* வீடில்லாப் பிரச்சினை / வதிவிடப்பிரச்சினை
இன்று வறுமையினால் வாடுவோர் வாழ்வது சேரிப்புறங் களிலாகும். இலகுவாக விறைப்பான அட்டைகள் (Hardboad)
 

லவற்றை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட வதிவிடங்கள் லவுண்டு. ஒருசிலருக்கு வீடென்பதே கிடையாது. அவ்வாறானவர்கள் நைரோபியில் 40% எல்செடோரில் 67% ஆனோர் வாழ்வது சேரி போன்ற சட்டத்திற்குப் புறம்பாக அமைத்துக்கொண்ட வதிவிடங்களிலாகும்.
சேரிப்புறவாசிகள் அனைவரும் வறியோரல்ல. வசதி பாய்ப்புடையோரும் இவர்களுள் அடங்குவர். சேரிப்புறம் நற்றங்களினால் நிரம்பி வழிவதாக நினைக்க வேண்டிய ல்லை. இங்கு குடியிருப்போர் உழைக்கின்றனர். தனியாக பதிவிடங்களில் நன்கு வாழ்கின்றனர். அவர்களிடையே ற்றும் ஏனையோருடன் புரிந்துணர்வுடன் பணிபுரிகின்றனர். }|வர்களால் இவற்றைவிட சிறந்த வதிவிடங்களை தடிக்கொள்ள முடியாமையினால் இவற்றில் வசிக்கின்றனர் இவர்களின் வீடுகளைத் திருத்தியமைக்க பொருளுதவி கிடைக்குமாயின் சிறந்த வதிவிடங்களை அமைக்க முடியுமென அம்மக்கள் பெருமூச்சு விடுவர்.
வீடின்றிய மக்களும் உலகிலுள்ளனர். 1987இல் ஐக்கிய அமெரிக்காவில் வீடற்றோர் தொகை ஒரு ல்ெலியன் எனக் கூறப்படுகின்றது. இந்நிலைமையை மாளிக்காவிடின் இத்தொகை 19 மில்லியன் வரை டயரலாம்.
ஐக்கிய அமெரிக்காவில் வீடற்றவர்களில் பெரும் ாலானோர் தொழிலற்றவர்கள். அவர்களால் இலகுவாக பறமுடியுமான இலாப முறை வதிவிடங்களில்லை. உளப் ணிகாரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப் ட்டிருப்போர் வெளியேற்றப்படுவதும் இதற்கான காரணங் 3ளிலொன்றாகும். 1980-1990 காலப்பகுதியில் நியுயோர்க் Newyork) நகரப்புறத்தில் ஆயிரக்கணக்கான உளப் னியாளர் வெளியேற்றப்பட்டனர். இவர்கள் இலாபமாக கிடைக்கக்கூடிய வீடுகளில் அல்லது அவ்வாறான வறிடங்களில் வசித்தனர். வறுமையும் எதையும் lசய்துகொள்ள முடியாமையும் (உள அல்லது பலம்) வ்வொன்றாக ஒன்றிணைந்து ஒருவரை வதிவிடமற்றவராய் ஆக்கிவிடும்.
இவர்கள் நகர்ப்புற தங்குமிடங்களுக்கு செல்லாதது ன் என கேள்வி எழுப்புகின்றனர். எனினும் இவற்றில் பன்முறையுமுண்டு. அவற்றிற்கு செல்வதைவிட பாதையில் டுத்திடுப்பது பாதுகாப்பானது. தனியார்துறையும் சில வளைகளில் தங்குமிடவசதிகளை வழங்குகின்றது. |வை நிரம்பிவழிகின்றன. அவற்றில் தங்கமுடியுமான ண்ணிக்கை குறைவு. இலாபகரமான ஹோட்டல்களும் அவ்வாறானதே. அவற்றின் குளிப்பறைகளும் கழிப் றைகளும் தூய்மைகெட்டவை. அதேபோல் அவற்றில் ாழ்வதும் பயங்கரமானது.
அகவிழி மே 2018

Page 8
வறியவர்களில் ஒருசிலர் சமூகரீதியாக வேறுபடுத்த பட்டவர்களும் உளர். அவர்களுக்கு நட்புகள் கிடையாது உறவினர்களும் கிடையாது. சமூகத்துடன் எந்தவித தொடர்புகளுமில்லை. எனினும் இவ்வாறானவர்கள் இருப்பதால் வதிவிடமற்றோர் தொகை அதிகரிப்பதில்லை மெல்போன் (அவுஸ்திரேலியா) ஐ சற்று நோக்குக. அங்கு சமூக அடிப்படையிலிருந்து வேறாகி தனிமையிலுள்ள உளப்பிணியாளர்களுக்கும் வீடுகளுள்ளன. நலவியல (Health) துறைக்கான கொடுப்பனவுகளும் காப்புறுத மூலம் இடம்பெறுகின்றது. வைத்தியர்கள் அவர்களை பரிசோதிக்க வருகின்றனர். அங்கவீனமானோருக்கு ஊனமுற்றோருக்கு (Disabled) ஒய்வுபூதியம் அல்லது நோயினால் ஏற்பட்டிருப்பின் உதவித்தொகை கிடைக்கின்றது மெல்போனில் இலாபகரமான வீடுகள் ஏராளமுண்டு.
மெல்போனில் இடம்பெற்ற ஆய்வுகளுக்கமைய உளரீதியாக வன்முறைகொண்டோர் அதிலிருந்து சுக மானபின் தஞ்சம் புகுவது எல்லைப்புற தங்குமிட மொன்றிலாகும். அது நகரத்திலின்றிய, கட்டணப செலுத்தும் அல்லது இலாபகரமான அறையாக இருக்கலாம் அவ்வாறான இடங்களில் வசிப்போரில் 50% ஆனோ இதற்கு முன்னர் உளப்பிரச்சினகளினால் துன்புற்றவர்களென கூறப்படுகின்றது. இவர்களின் எண்ணிக்கை அமெரிக்க தங்குமிடங்களிலிருப்பவர்களுக்குச் சமனாகும்.
அவுஸ்திரேலியாவையும், ஐக்கிய அமெரிக்காவையுட ஒப்பிடும்போது வதிவிடப்பிரச்சினை சமூக மற்றும் அரசியல் கொள்கைகளினால் ஏற்பட்டிருப்பது தெளிவாகின்றது அவ்வாறானவர்கள் அவுஸ்திரேவியாவிலும், ஐக்கிய அமெரிக்காவிலும் வாழ்ந்தாலும் ஐக்கிய அமெரிக்காவிலி பெரும்பாலானோர் வதிவிடமற்றவர்களாவர்.
1970 இலிருந்து இன்றுவரை நோக்கும்போது ஐக்கிய அமெரிக்காவில் வசதி படைத்தோரின் வசதி பெருகுட அதேவேளை வறியவர்களின் வறுமையும் பெருகிக்கொண்டு செல்கின்றது. ஐக்கிய அமெரிக்காவில் சமூக சமநிலையற்ற நிலை கைத்தொழிலாக்கம் பெற்ற நாடுகளில் அதிகம் ஜப்பானிற்கும், நெதர்லாந்திற்கும் அதிகம். ஐக்கிய அமெரிக்காவிலுள்ள சமமின்றிய நிலை மிகவுப அண்மையை / ஒற்றுமையைக் காட்டுவது இந்தியா மெக்சிகோ போன்ற மூன்றாம் உலக நாடுகளுடனாகும்
ஐக்கிய அமெரிக்காவிலும் ஏனைய நாடுகளைப்போன்று வதிவிடமற்றவர்கள் வளர்ந்தோராவர். இவ் வளர்ற தோரைப்பற்றி எந்தப் பேச்சும் இன்றிருப்பினும் வீதி சிறார்களைப் பற்றியெனில் தாராளமாகக் கதைக்கின்றனர் உலகில் வீதிச்சிறார்கள் 80மில்லியன் பேர் இருப்பதா கணக்கெடுப்புகள் கூறுகின்றன. இவர்களில் 40மில்லியன
அகவிழி மே 2018

சிறார்கள் லத்தீன் அமெரிக்காவிலும், 20மில்லியன் ஆசியாவிலும், 10மில்லியன் ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்குநாடுகளிலும் 10மில்லியன்பேர் எஞ்சிய நாடுகளிலும் வாழ்கின்றனர்.
இச்சிறார்களைப்பற்றி ஆய்வுசெய்த அப்டெகார் (Aptekar-1988) இவ்வாறு கூறுகிறார். அவர் இவ்ஆய்வினை கொலம்பியாவின் கெலி நகரிலேயே மேற்கொண்டிருந்தார். “ஐக்கிய அமெரிக்காவிலும் அவுஸ்திரேவியாவிலுமுள்ள வீதிச்சிறார்கள் உளநிலை பாதிப்படைந்தவர்கள். கெலியில் அவ்வாறல்ல அவர்கள் புத்திக்கூர்மையான அன்னியர் களுடன் வாழ்கின்றனர். அவர்கள் வன்நடத்தையுடைய குடும்பங்களிலிருந்து வந்திருப்பினும், ஒருசிலருக்கு குடும்பமென ஒன்று இன்றிருப்பினும் அவர்கள் யாரினதும் உதவியைப் பெற்றுவாழ்கின்றனர். அவர்கள் ஏனையோருக்கு வினோதம் வழங்கி திறமையாக பணம் தேடுகின்றனர்.”
இவ்வீதிச்சிறார்கள் குடும்பத்தினால் கைவிடப்பட்டதாக நினைப்பின் அது தவறு. அவர்களைக் கவனிக்க ஒருதாய் அல்லது தந்தை உள்ளனர். அவர்களுடன் சிறாருக்கு தொடர்புகளுமுண்டு. வீதிவாழ்க்கையை மெதுவாகவே தொடங்குகின்றனர். ஒரே முறையிலல்ல 13வயதாகும் வரை அவர்கள் முழுநேரத்தையும் வீதியில் கழிப்பதில்லை.
இச்சிறார்களின் ஆரோக்கியம் வீட்டிலுள்ள உடன் பிறப்புகளைவிட சிறந்தது. அவர்களின் உடல், உள நிலைமைகள் உடன் பிறப்புகளைவிட சிறந்தது. அவர்கள் வறிய குடும்பங்களிலிருந்து வருகின்றனர். வசதி படைத்த குடும்பத்தவர்கள் தமது பிள்ளைகளும் இவர்களை மாதிரிகை (Mode) கொண்டு சுதந்திரம் பெற முயற்சி யெடுப்பதாக குற்றம்சாட்டுகின்றனர்.
* குடும்பவிரிசல்களும் துர்ப்பாவனையும்
சமூகத்திலுள்ள பிள்ளைகளுக்கும் மனைவிமாருக்கும் வன்முறைகள் நிகழல் எம்மால் அடிக்கடி கேட்க முடியும். பிள்ளைகளுக்கு தண்டனை வழங்கல் துஷ்பிரயோகமாகுமா?
இன்று சிறுவர் துஷபிரயோகம் பற்றிய அறிக்கைகள் அதிகமென்பதால் அதுவொரு சமூகப்பிரச்சினையாக தென்படுகின்றது. அதிகரித்தது சிறார் துஷ்பிரயோகமா? அதுபற்றிய அறிக்கைகளா? முதல் கணக்கெடுப்பைவிட சிறார் துஷபிரயோகம் பாரியளவில் அதிகரித்திருப்பதில் சந்தேகமில்லை.
1975-78 காலப்பகுதியினுள் சிறுவர் துஷபிரயோகம் குறைந்திருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறிருப்பினும் ஐக்கிய அமெரிக்கா விரிசல் நிறைந்த குடும்பங்களையுடைய நாடாக பிரதான இடம் பிடிக்கின்றது. அன்னியோரின்

Page 9
தாக்குதலுக்குள்ளாவதை விட குடும்ப உறுப்பினரொருவரின் தாக்குதலுக்குள்ளாகும் சந்தர்ப்பம் அதிகமாகும். பெண்ணாயின் 200 தடைவைகள் அதிகமாகும். 25 நாடுகளை ஒப்பிடும்போது சிறுவர் படுகொலை அடிப் படையில் ஐக்கிய அமெரிக்கா மூன்றாமிடத்தைப் பெறுகிறது.
எமது நாட்டிலும் குடும்பத்தில் விரிசல்களுண்டு. பிள்ளைகளைத் தாக்கும் தகப்பன்மார் எத்தனையோபேர் உள்ளனர். ஒருசில வேளை கொடுரமாகவே தாக்குகின்றனர். வளர்ப்புத் தகப்பனாயின் நிலைமை மேலும் மோசமடையும். மகளிருக்கு அடித்து உதைக்கும், கடுஞ்சொற்களால் வதைப்பவர்களும் உளர். நாம் செய்த ஆய்வில் வெளிப் புறக்கிராமங்களில் குடும்பங்களில் 47% வன்முறையிலீடுபடும் பெண்களைத் துன்புறுத்தும் ஆண்களிருப்பது தெரியவந்தது. 53% பிள்ளைகளைத் துன்புறுத்துகின்றனர். இப்பெறு மானங்கள் நகர்புறங்களிலும் பாரிய வேறுபாடுகளைக் காட்டவில்லை.
பெரும்பாலான நாடுகளில் சிறுவர்களைக் கொல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எமது நாட்டிலும் கண்டி யுகத்தில் கண்டிக்கு அண்மையிலுள்ள மலையொன்றில் (பகிரவமலை) பெண் குழந்தைகளைப் போட்டுவரும் நிகழ்வுபற்றி புராதன காவியங்களில் காணக்கிடைக்கின்றது. ஒருசிலவேளை தனக்கு அதிகம் என நினைக்கும் குழந்தையை இவ்வாறு வைத்திருக்கலாம். குழந்தைகளை கைவிட்டுக் செல்லும் தாய்மாரும் விவாகமற்ற முறையில் பிறக்கும் குழந்தைகளும் கணவன் கைவிட்டு சென்ற தாய்மாரும் பிள்ளைகளைக் கைவிடுகின்றனர்.
உலகநாடுகளில் 70% ஆன நாடுகளில் குழந்தை களுக்கு உடலியல் தண்டனைகள் வழங்கப்படுவதைக் காணமுடிகிறது.
ஒருசிலர் நினைப்பது போன்று குழந்தைகள் வளர்ப்பதற்கு இருப்பது அம்மா மாத்திரமெனின் உடலியல் தண்டனைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். குழந்தையை வளர்க்க, கவனிக்க வேறுயாரும் இருக்கும் போது உடலியல் தண்டனைகள் குறைவு. பொருண்மிய ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சிக்கலான சமூகங்களில் படிமுறையொழுங்கு அல்லது அடுக்கமைவு இருப்பதால் கட்டளையிடுதலை அவர்களை உயர்வாக பார்ப்பர். பிள்ளையைக் கட்டுப்படுத்த, தன்பால் ஈர்க்க உடலியல் தண்டனையை நிறைவேற்றுவர்.
மகளிருக்கெதிரான வன் நடத்தைகள் உலக சமூகங்களில் 58% காணமுடிகின்றது. ஆடவர்க்கு நிர்வாகத் தலைமைத்துவம் கிடைப்பதனால் மாத்திரம் மகளிருக்கு தாக்குதல் இடம்பெறுவதில்லை.
ܢC
 

குடும்ப உழைப்பு ஆணின் கையிலுள்ளபோது
குடும்பத்தின் இறுதித்தீர்மானம் ஆணினால் எடுக்கப் படும்போது
விவாகரத்து கடினமாகும் போது
விதவைகளுக்கு மறுமணம் முடிப்பதை கணவனின் உறவினர் கட்டுப்படுத்தும்போது.
பெண்களுக்கு வேலைசெய்ய பெண்குழுக்கள் இல்லாதபோது வன்நடத்தை நிகழலாம்.
ஐக்கிய அமெரிக்காவில் ஆண் அல்லது பெண் தனித்தீர்மானம் எடுப்பின் அவ்வாறு செய்ய அவருக்கு அல்லது அவளுக்கு அதிகாரமிருப்பின் வன்முறை தோன்றும்.
இலங்கையில் ஆண்கள் குடும்பத்தின் பிரதான அங்கம் வகிக்கின்றனர். அவர் தனது அதிகாரத்தால் பெண்ணானவள் சவால் விடுவதைக் காணவிரும்புவதில்லை. அவரே தீர்மானமெடுக்க வேண்டும். எவ்விடத்திலும் தலைவர் அவரே. பெண்ணானவள் படிப்பறிவில் தன்னுடன் Fமமாயிருப்பின் மாத்திரமே பெண் அதிகாரமுடைய தடும்பத்தில் பிறந்த செல்வந்தமுடையவளாகவிருத்தல் வேண்டும்.
இவற்றை இல்லாதொழிப்பது எவ்வாறு? சமூகத்தி லுள்ளவர்கள் இவ்வாறானதொரு பிரச்சினை இருப்பதை ரற்றுக்கொள்ளும் வரை எம்மால் தீர்வொன்றை எட்ட முடியாது. சிறுவர் துஷ்பிரயோகம் செய்யும் மனைவிமாருக்கு ஓங்கியடிக்கும் மனிதர்கள் எம்மிடையே இருப்பதாய் ரற்றுக்கொள்ளும்போதுதான், அதனை ஒரு சமூகப் பிரச்சினையாக காணமுடியும். வன்முறை நடத்தபின்னே உரியவர்களை அடையாளம் காணமுடிகிறது. துன்புறுத்தல் நிகழுமுன் யாதேனுமொரு வழியில் முன்கூட்டியே எம்மால் அடையாளம் காண முடியுமாயின் உடனே செயற்பட்டு துன்பத்தை நீக்கலாம். இயன்றளவு குடும்பத்தகராறுகளில் பாரேனும் தலையிட முடியும் (நடுவராக). போதகர்கள் ஒவ்வொரு இடத்திலும் அக்குடும்பங்களின் அருகிலிருத்தல் வேண்டும். நாம் அனைவரும் எமது பொறுப்பாக நினைத்து அவ்வாறான குடும்பங்களை இனங்கண்டு எமது உதவியை வழங்குதல் வேண்டும். துஷபிரயோகத்திற்குட்படும் பிள்ளைகளிருப்பின் முன்னரே அவற்றிற்கு தீர்வு காண்பதன் முலம் துஷபிர யோகப்பிரச்சினை மேலெழுவதில்லை. கணவன் - மனைவி இருவருக்கும் குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு சுமத்தப்படல் வேண்டும்.
அகவிழி மே 2013

Page 10
நெருக்கீடுகள் பிள்ளை ஏற்படுத்தும் (
M.M. gubljug) ID T65 M.Ed., B.A., P.G.D.E. (Merit), .
கல்வி என்பது பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில கொண்டு வாழ்க்கைக்கு தயாராக்கும் நோக்கில வழங்கப்படவேண்டிய செயற்பாட்டுத் தொகுப்பாகும் கல்வியின் மூலம் அடையப்பட வேண்டிய பல்வேறு குறிக்கோள்கள் தேசியரீதியில் முன்வைக்கப்பட்டுள்ளன தேசிய ஐக்கியத்தைக் கட்டிஎழுப்புதல், சுய நிறைவு பெறும்வகையிலான வேலைவாய்ப்புக்கள் பலவற்றை ஏற்படுத்தல், பொதுவான சமூக நீதி பேணப்படுதல் நிலைபேண்தகு வாழ்கைக் கோலத்தைக் கட்டியெழுப்புதல் மனிதவள அபிவிருத்தியில் அனைவரும் பங்கேற்குப் வாய்ப்பை உருவாக்குதல், நாட்டைக் கட்டியெழுப்புதல் பணியில் துடிப்புடன் பங்கேற்றல், சவால்களுக்கும் மாற்றங்களுக்கும் முகங்கொடுத்தல், சிக்கலான சந்தர்ப்பங்களுக்கு முகங்கொடுத்தல், சமூகத்தில் கெளரவமான ஒரு இடத்தினைப் பெறுதல் போன்றவற்றைச் குறிப்பிடலாம். கல்வியினால் பொதுவானதோர் ஒழுக்கம் தீர்மானங்களை மேற்கொள்ளும் வாண்மை, சமூகட் பொறுப்புக்கள் தொடர்பான விளக்கம் என்பன உருவாக்கப் படவேண்டுமென்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
21ம் நூற்றாண்டுக்கான கல்வி பற்றிய அனைத்துலக ஆணைக்குழு குறிப்பிடும்போது “இந்நூற்றாண்டிற்கான சமூகத்தை உருவாக்கும் பணியில் கல்வியானது, அறிந்து கொள்வதற்காகக் கற்றல், இணைந்துவாழக்கற்றல் குறிப்பிட்ட ஒன்றை ஆற்றுவதற்காகக் கற்றல், ஆவதற் காகக் கற்றல் ஆகிய விடயங்களில் ஆக்க பூர்வமானதாக காணப்படவேண்டும்” என்கிறது.
கல்வியின் குறிக்கோள்களை அடைவதற்காக வாழ்கையின் பல்வேறு சந்தர்ப்பங்களில் பொதுவான தேர்ச்சிகள் அவசியமாகின்றன. பாடசாலைகளின் முக்கிய பணியாகத் தேர்ச்சிகளை அடைவதற்கான அனுபவங்களைப் பிள்ளைகளுக்கு வழங்குவது அவசியமானதாகின்றது தேர்ச்சிகள் அறிவு, திறன், மனப்பாங்கு என்பவற்றின் இணைந்த வெளிப்பாடாகும். கல்வியின் மூலம் அடையப்பட வேண்டிய தேர்ச்சிகள் தொடர்பாடல் சார்ந்த தேர்ச்சிகள் சமூக உயிரியல், பெளதீக, சுற்றாடல் தொடர்பான தேர்ச்சிகள், நல்லெழுக்கத்திற்கும், சமயத்திற்கும் ஏற்புடைய தேரச்சிகள், விளையாட்டுக்கள் மற்றும் ஆய்வு தொடர்பான தேர்ச்சிகள், கற்றலுக்காக கற்றல் தொடர்பான
அகவிழி மே 2018

ாயின் கல்வியில்
பாதிப்பு
)
)
SLPS
D.C.Sc. (Merit)
தேர்ச்சிகள் என்பன முன்வைக்கப்படுகின்றன.
கல்வியின் விளைவாக பிள்ளைகளிடம் உளம் பயிற்றுவிக்கப்படுதல், விவேகத்திறன் விருத்தி, சமூக சேவை செய்யும் வகையிலான தன்னம்பிக்கை உருவாக்கம், ஒத்துழைப்புடன் ஏனையோருடன் பணிபுரியும் திறன் விருத்தி, சிறந்ததொரு நடத்தைக்கோலத்தைப் பேணுதல், பயனுள்ள பணிகளில் ஈடுபடுதல் ஏற்படுத்த வேண்டுமென சமூகம் எதிர்பார்க்கின்றது. பிள்ளைகளிடம் முழுமையான தோர் ஆளுமைவிருத்திக்குரிய அனுபவங்களே இங்கு வேண்டப்படுகின்றன.
கல்வி பல்வகைப்பட்ட அனுவங்களை பாடசாலை எனும் சமூக அமைப்பு மூலம் வழங்குகிறது. “அனுபவங்களை அனுபவங்களால் அனுபவங்களி னுாடாக அளிப்பதாக கல்வி அன்மய வேண்டும்” என ஜோன் டுயி கூறியுள்ளார்.
கல்விச் செயற்பாடுகளில் கற்றல் என்பது மனித நடத்தைக் கோலங்களில் நிகழும் ஒரளவு நிரந்தரமான மாற்றம் எனக் கூறப்படுகின்றபோதிலும் நன்மை பயக்கும் நடத்தையினை ஏற்படுத்தலே சிறந்த கற்றலாக அமைகின்றது. கற்றலின்போது எதிர்பார்க்கப்படும் அறிவுக் கோலங்கள், திறன்சார்ந்த கோலங்கள், மனப்பாங்குசார் கோலங்கள் என்பவற்றுக்கு பொருத்தமான தொடர்புகளான வலைப்பின்னல்கள் மூளையில் உருவாக்கப்படுகின்றன.
உகந்த அனுபவங்களைத் தெரிவு செய்தல், அவற்றை ஒழுங்கு படுத்துதல், பிள்ளைகளிடம் சமர்பித்தல், அவர்களின் கவனத்தை அங்கு ஈடுபாடுகொள்ளச் செய்தல் பிள்ளைகளின் பங்கு பற்றுதல்களை உறுதிப்படுத்தல் போன்ற பணிகள் செவ்வனே நிறைவு செய்யப்படும்போது அங்கு சிறந்த கற்றல் இடம்பெற முடியும். ஆசிரியர் மாணவரிடையே நேயமான புரிந்துணர்வு இருக்குமாயின் அங்கு கற்பித்தல் மட்டுமன்றி கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகள் ஒருமித்து நிகழமுடியும். அதிபர் ஆசிரியர், மாணவர்கள் ஏனைய சேவையாளர்கள் ஆகியோரிடத்தே இடம்பெறும் சிறந்த அன்புமிக்க தொடர் பாடல் பாடசாலையை உன்னத சூழலாக மிளிரச் செய்யும்.
கற்றற் செயற்பாடுகளில் இடர்பாடுகள் ஏற்படும் நிலைமைகள் கருத்துான்றிக் கவனிக்கப்படவேண்டியவை

Page 11
யாகும். பிள்ளைகளின் உடல் உளப்பிரச்சினைகள்
பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளில் தடைகளையும்
பின்னடைவுகளையும் ஏற்படுத்தும் அதேவேளை கல்விச் செயற்பாடுகளில் விரும் பத்தகாத தலையீடுகள் பிள்ளைகளில் உடல் உளப் பிரச்சினைகள் உருவாகவும் காரணமாக அமைகின்றன.
கல்வி வழங்கும் சமூக நிறுவனமான பாடசாலைகளில் பணிபுரியும் அனைத்து சேவையாளர்களும் கல்வியின் விளைவாக மாணவர்கள் உச்சப்பயனை மகிழ்ச்சியான சூழலில் பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதையே நோக்காகக் கொள்ளவேண்டியது அவசியமாகின்றது. இதனைத்தான் ஹெலன் கல் டி கெட் என்பவர் குறிப்பிடும்போது “ஆசிரியர்கள்தான் சமூகத்தின் மிகவும் பொறுப்புவாய்ந்த பிரதான அங்கத்தவர்கள். ஏனெனில் அவர்களது தொழில் சார்ந்த முயற்சிகள் பூமியின் விதியைத் தீர்மானிக்கும் சக்தி வாய்ந்தவை.’ இவரது கருத்து சமூகமாற்றத்தில் வளர்ச்சியில் ஆசிரியரின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நிற்பதைக் காணலாம்.
கல்விச் செயற்பாடு எனும்போது கவனம் புலக்காட்சி பெறுதல், ஞாபகம், எண்ணக்கரு விருத்தி கற்றல், கற்றலின் இடமாற்றம், படைப்பாற்றல், பிரச்சினை தீர்த்தல் தொடர்பாடல் திறன், தலைமைத்துவம், இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் ஈடுபாடு போன்ற ஆளுமை வளர்ச்சிக்கான கூறுகள் யாவும் கவனத்தில் எடுக்கப்படவேண்டியவையாகும்.
கவனம் எனும்போது சூழலில் இருந்து பெறும் தூண்டிகள் சிலவற்றை எமது புலன்கள் தேர்ந்தெடுத்து ஏற்றுக்கொள்ளுதல் எனக் கூறப்படுகின்றது. கவனத்தில் செல்வாக்குச் செலுத்தும் பல காரணிகள் உள்ளன. கவர்ச்சியான நிறங்கள், ஒளி, ஒலி, என்பவற்றின் கூடிய செறிவு உயரமான பெரிதான பொருள்களும், இடங்களும், இயங்கிக்கொண்டு அல்லது மாறிக்கொண்டிருக்கும் அசைவு நிலையைக் காட்டும் பொருள்கள் அல்லது சம்பவங்கள், விருப்புக்குரிய விடயங்கள் பரிச்சயமான பொருள்களும் சம்பவங்களும் தேவைகளும், நனவிலி ஊக்கல் நிலை என்பன கவனத்தை அதிகரிக்கச் செய்கின்றன. மாற்றமின்றித் தொடரும் பொருள்களும், சம்பவங்களும் களைப்பு, மறை உணர்வு நிலைகள் என்பனவும் கவனத்தைக் குறைப்பனவாகும்.
புலனுணர்ச்சிகளுக்கு மூளையில் அளிக்கப்படும் விளக்கமே புலக்காட்சியாகும். புலக்காட்சியில் பொருளின் அளவு, வடிவம், மாறாத்தன்மை அமைவுக்கோலங்கள், பொருள்களின் பின்னணியின் தன்மை புறத் தூண்டிகளின் காட்சி என்பனவும், எதிர்பார்ப்பு விழுமியம், அனுபவம், மனப்பாங்கு தேவை பெறப்பட்ட கருத்தேற்றங்கள் என்பனவும் செல்வாக்குச் செலுத்துகின்றன. சில அகவயக்

காரணிகள் சரியான புலக்காட்சிக்கு தடையாக அமைவதால் கற்றலில் இடர்பாடு ஏற்படுகின்றது.
ஞாபகம் கற்றல் செயற்பாட்டில் முக்கிய இடம் பெறுகின்றது. ஞாபகச் செயற்பாட்டில் தகவல்களைப் பெறுதல், பதிவு செய்தல், மீளப்பெறுதல் என்ற செயற்பாட்டுக் கூறுகள் இடம்பெறுகின்றன. உடனடி ஞாபகம், குறுங்கால ஞாபகம், நீண்டகால ஞாபகம் என இது வகைப்படுத்தப்படும். தோமஸ், HA. றோபின்சன், போக் போன்றோரின் PQRST அணுகுமுறை மூலம் நூலுருவில் உள்ள தகவல்களை புரிந்துகொண்டு ஞாபகப் படுத்தற் செயற்பாட்டை அதிகரிக்கலாம். கற்றலை இலகு படுத்த இது உதவும்.
P - Preview (முற்காணுகை) மேலெழுந்தவாரியாக வாசித்தல், அட்டவணைகள், தரவுகளைப்பார்த்தல் முடிவின் சர்ராம்சத்தை வாசித்தல் மூலம் விடய ஒழுங்கமைவை பெறுதல்.
Q- Question (வினாவாக்கல்) விடயத்திலுள்ள பிரதான பகுதிகளையும் விடயத்தலைப்புக்களையும் வினாக்களாக மாற்றி அமைத்து விடைகாணும் விதத்தில் படித்தல்.
R Read (வாசித்தல்) - வாசிக்கும் போது பிரதான கருத்துக்களை அறிந்துகொள்ளும் வகையில் குறிப்பெடுத்தல்.
S-Selfreditation (ஒப்புவித்தல்) விடயத்தை வாசித்தபின் முக்கிய தகவல்களை தனக்குத்தானே உரத்தோ அல்லது அமைதியாகவோ சொல்லிக்கொள்ளுதல்.
T-Test படித்து முடித்தபின் சாரம்சத்தை மீண்டும் படித்தல் மூலம் பதிவு செய்தல்.
எண்ணக் கருவாக்கம் என்பது பொருள்களிலும் விடயங்களிலும் காணப்படும் பண்புக்கூறுகளை பண்பு பிரித்தல், பொதுமைப்படுத்தல் ஆகிய செயற்பாடு களுக்குள்ளாக்கி கருத்து நிலைப்பொருளை பெறுதல் எனலாம். எண்ணக்கருக்களைப் பெற்று அவற்றைத் திரளமைப்புக்களாக வளர்க்கும் திறனையே சிந்தனை வளர்ச்சி என பியாஜே குறிப்பிட்டுள்ளார்.
கற்றல் இடமாற்றம் என்பது ஒரு சந்தர்ப்பத்தில் பெறப்பட்ட அறிவு, திறன், மனப்பாங்கு என்பன இன்னொரு சந்தர்ப்பத்தில் பெறப்படும் அறிவு, திறன், மனப்பாங்கு என்பவற்றின் அளவில் செல்வாக்கு செலுத்துதலாகும். பிள்ளைகளின் தனியாள் வேறுபாடு கற்கும் விடய இயல்புகள், கற்கும் விதம், கற்ற அளவு, பெற்ற பயிற்சி என்பன கற்றல் இடமாற்றத்தில் செல்வாக்குச் செலுத்துகின்றன. படைப்பாற்றல் என்பது ஒருவர் தனது சிந்தனையி னுடாக சிறப்பான வழிவகைகளைக் கையாண்டு குறிப்பான பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆற்றல் எனலாம். படைப்பாற்றல் விரி சிந்தனையின் இயல்புகளைக் கொண்டது. ஒருவர் பிரச்சினையை எதிர்கொள்ளும்போது அப்பிரச்சினையின்
அகவிழி|மே 2013

Page 12
தீர்வு தொடர்பான செயற்பாடுகளில் படைப்பாற்றலைக் காணமுடியும். கற்றலும் படைப்பாற்றல் திறனும் தொடர்பு மிக்கதாகவே அமைந்துள்ளன.
பிரச்சினையை இனங்கண்டு தீர்க்கக்கூடிய பல்வேறு வழிகளைத் தேடி அவற்றினால் கிடைக்கூடிய பயன்களை மதிப்பிட்டு பொருத்தமான தீர்விற்கு வருதலே பிரச்சினை தீர்க்கும் வழியாகும்.
சிறந்த தொடர்பாடலின் கூறுகளாக உடனிருத்தல் உற்று நோக்கல், ஒத்துணர்வுப் பதில் கூறல், வன்முறையற்ற சொல் செயல் பிரயோகம், உறுதியான கருத்து வெளிப்பாடு என்பன அமைகின்றன. கற்றல் கற்பித்தல் செயன் முறையில் மட்டுமன்றி பாடசாலையின் அனைத்துச் செயற்பாடுகளிலும் தொடர்பாடற் தேர்ச்சி அனைவருக்கும் முக்கியமான தொன்றாகும்.
சூழலுடன் பொருத்தப்பாடு பெறுவதைத் தீர்மானிக்கும் ஒருவருடைய முழுமையான அம்சம் ஆளுமை எனலாம். ஆளுமையில் தோற்றம், நுண்மதி, உளச்சார்பு, மனப்பாங்கு, கவர்ச்சி, சமூக இயைபு உணர்வு வெளிப்பாட்டு முதிர்ச்சி போன்ற பல்வேறு கூறுகளைக் காணலாம். பிள்ளைகளின் கற்றற் செயற்பாடுகளில் பிள்ளைகளின் ஆளுமையும், ஆசிரியரின் ஆளுமையும் அதிகம் செல்வாக்குச் செலுத்துகின்றன.
இணைப்பாடவிதானச் செயற்பாடுகளாகிய விளை யாட்டு, ஆடுதல், பாடுதல், நடித்தல், வரைதல், புத்தாக்கம் போன்ற செயற்பாடுகள் பாடவிதானச் செயற்பாடுகளுடன் இணைந்த வகையில் இடம்பெறுகின்றன. நூற்கல்வியுடன் செயற்பாட்டுக் கல்வியும் முக்கியம் பெறுகின்றன.
இத்தகைய கல்விச் செயற்பாட்டு அம்சங்கள் யாவும் நிறைவான கல்விச் செயற்பாடுகளில் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய அம்சங்களுடன் குடும்பம், அயல், பாடசாலை நண்பர் குழு சமூகம் நோய் நிலைமைகள் பண்பாட்டம்சங்கள், வெகுசனத் தொடர்புசாதனங்கள், பொருளாதார நிலைமைகள், அங்கவீனம் போன்ற குறைபாடுகள் என்பனவும் பிள்ளையின் கல்விச் செயற்பாடுகளில் அதிக செல்வாக்குச் செலுத்துகின்றன. இவை பிள்ளைகளின் ஆளுமையில் செல்வாக்குச் செலுத்துவதனால் கற்றலிலும் செல்வாக்குச் செலுத்துகின்றன.
கற்றலில் இடர் படுதல், கற்றலில் அடைவு மட்டம் குறைதல் என்பன பொதுவாக உதவி தேவைப்படும் பிள்ளைகளிடம் காணுகின்ற பிரச்சினைகளாகும் சாதாரணமாக உளத் தாக்கங்கள் ஆரோக்கியமான எவருக்கும் ஏற்படலாம். உளத்தாங்கு திறனுக்கு ஒர் எல்லையுண்டு பிள்ளைகளில் ஏற்படும் உளத்தாக்கங்கள் அவர்களின் வயது, உடல்வளர்ச்சி, உளவிருத்தி, சமூக விருத்தி, அறிவாற்றல் முதிர்ச்சி என்பவற்றிலும் தங்கி
அகவிழி மே 2013

யுள்ளன. உளத் தாக்கங்கள் பிள்ளைகளின் வயது விருத்தி என்பவற்றிற்கேற்ப பருவங்களை அடிப்படையாக் கொண்டு அறிகுறிகள் தோன்றுகின்றன. பெரும்பாலான உளத்தாக்கங்கள் விரைவில் விலகக்கூடியனவும் இலகுவில் கையாளக்கூடியனவுமாகும். உதவி வழங்குதல் மூலம் மீண்டும் ஆரோக்கிய நிலை பேணக்கூடியனவாகும்.
பிள்ளைகள் தம்மை அழுத்தும் சம்பவங்களினால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கமுடியாத நிலையிலுள்ளபோது நெருக்கீடு உருவாகின்றது. இப்பிரச்சினைகளை தடுப்பதன் மூலம் அல்லது குறைப்பதன் மூலம் நெருக்கீடுகளினால் ஏற்படும் விளைவுகளை குறைத்துக்கொள்ள முடியும். இத்தகைய சம்பவங்களினால் ஏற்படும் குழப்பமான, கவலையான, கோபமான, மறை உணர்வு நிலைகளும் உயர்வான உணர்வு வெளிப்பாட்டு நிலைகளும் கவனம் வீழ்ச்சியுறுவதற்கும் கற்றல் இடர்படுவதற்கும் காரணமாக அமைகின்றன.
மறை உணர்வுகளை ஏற்படுத்திய அனுபவங்கள் காரணமாக ஏற்பட்ட பக்கச் சார்பான நிலை, மறையான எண்ணங்கொண்ட உளப் பாங்கு என்பன தவறான புலக்காட்சிக்கும் தவறான எண்ணக் கருவுருவாக்கத்திற்கும் இடமளித்து கற்றல் இடர்பாட்டினை ஏற்படுத்துகின்றன.
பிள்ளைகளில் ஏற்படும் உளத்தாக்கங்கள் பொதுவாக உணர்வு சார்பாகவும், நடத்தை சார்பாகவும் அறிகை சார்பாகவும், உறவாடல் சார்பாகவும், ஆன்மீகம் சார்பாகவும், வெளிப்படுகின்றன. நெருக்கீடுகள் உடல் நிலையில் மாற்றங்களை ஏறபடுத்துவது போல் உணர்வுச் சமனிலையிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. காரணமின்றி கோபம், தேவையற்ற குற்ற உணர்வு, அதீத பயம், தொடர்ச்சியான கவலை ஆக்ரோஷம், தொடரும் தழிவிரக்கம், போன்ற உணர்வுசார் வெளிப்பாடுகளாக இவை இருக்கலாம். இதனால் கருத்துான்றலில் குறைபாடு, தன்னம்பிக்கை குறைதல் உதவியின்றிய நிலையில் கவனக் குறைவு என்பன காரணமாக கற்றலில் அடைவு மட்டம் குறைகின்றது.
உணவுப் பழக்கவழக்கம், நித்திரை கொள்ளும் இயல்பு என்பவற்றில் மாற்றம் ஏற்படுதல், இலகுவில் அழுதல், அதீத செயற்பாடுகள், வலிந்து சண்டையிடுதல் வன்முறைகளில் ஈடுபடுதல் பாடசாலைக்கு வருவதாகக் கூறி வேறு இடம் செல்லுதல், கூறப்படுவதற்கு எதிர் மாறாகவே நடந்துகொள்ளுதல், தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமை யாகுதல் ஆகிய நடத்தைசார் வெளிப்பாடுகளாகவும் 360)6) g|60LDu I6)ITlb.
மனதை ஒருமுகப் படுத்த முடியாமை, ஞாபக மறதி, கிரகித்தல் ஆற்றல் குறைவு, கற்றலில் இடர்படுதல், கல்வியில் பின்னடைதல் தொடர் சிந்தனை மயப்படுதல்

Page 13
போன்ற அறிகைசார் வெளிப்பாடுகளையும் பிள்ளை களிடையே காணலாம்.
சில பிள்ளைகள் ஏனையோருடன் உறவாடுதலில் சிரமப்படலாம் அதாவது உடன்பாடின்மை புரிந்துணர்வின்மை, எதற்கும் தர்க்கப்படுதல் சிறிய தீர்மானங்களை எடுக்கவும்
மற்றவர்களில் தங்கியிருத்தல், ஆதரவைப் பெறுவதற்காக
மற்றவர்களில் தங்கியிருத்தல் போன்ற இயல்புகளையும் வெளிப்படுத்தலாம்.
கடவுளை மறுதலித்தல் சமூகத்துடன் அன்னியோன்னிய உறவைப் பேண முடியாமை அத்தகைய உறவுகளைத் தவிர்க்க முயலுதல், தனிமைப்படுதல், சமூகத்தில் வெறுப்புணர்வை பிரதிபலித்தல் போன்ற வெளிப்பாடுகளை இழப்புக்களை சந்தித்த பிள்ளைகளிடம் காணலாம்.
பாடசாலைப் பிள்ளைகளில் நெருக்கீட்டு சம்பவங் களினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குணங்குறிகளாகவோ நிதானம் செய் நோய் நிலைமையாகவோ வெளிப்படலாம். நிதானம் செய் நோய் நிலைமைகள் மிதமான நோய்களாகவோ அல்லது பாரிய உள நோய்களாகவோ இருக்கலாம்.
நெருக்கீடுகளினால் பாதிப்புற்ற பிள்ளைகளுக்கு பாடசாலையின் சாதாரண நடைமுறைகளினூடாகவும் உதவி வழங்கப்பட முடியும். காலைக் கூட்டங்களில் நற்சிந்தனைகளையும் மனதை சாந்திப்படுத்தும் வழி முறைகளையும் பயிற்சிகளையும் வழங்கலாம். வகுப்பு ரீரிதியாகவும் கூட இப்பயிற்சிகளை பாட ஆரம்பத்தில் பாட ஆசிரியர்கள் வழங்குவதனால் பிள்ளைகள் இறுக்கமான நிலையிலிருந்து விடுபட்டு தளர்வு நிலையை அடையவும் மனதை ஒருமுகப்படுத்தவும் கிரகித்தல் மற்றும் ஞாபக சக்தியை அதிகரிக்கவும் செய்து கற்றலை மேம்படுத்த முடியும்.
பாடசாலைக்கு பிந்திவரும் பிள்ளைகளும் வருகை தர மறுக்கும் பிள்ளைகளும் விசாரிக்கப்பட்டு கரிசனையுடன் பிரச்சினைகளை கேட்டறிதல் மூலம் அப்பிரச்சினைகளில் இருந்து விடுபடவும், பிரச்சினைகளை இலகுபடுத்தி வழிமுறைகளை மாற்றிக்கொள்ளவும் முயலும் தன்மையைப் பெற முடியும். இதற்கு அதிபர் மற்றும் அனைத்து ஆசிரியர்களின் ஒத்துழைப்பு அவசியமாகின்றது.
நல்ல ஆளுமைப் பண்புகளை வெளிப்படுத்தும் வெற்றி விளையாட்டுக்கள் திட்டமிட்டு நெறிப்படுத்திய விளையாட்டுக்கள் பாடுதல், ஆடுதல் நடித்தல் வரைதல் இயற்கையை இரசித்தல், கவிதை எழுதுதல், கதை எழுதுதல் போன்ற படைப்பாக்கச் செயற்பாடுகள் ஆகிய இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் மூலம் பிள்ளை தன்னை அறிந்துகொள்ளவும், தனது எண்ணங்களையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தவும் சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன. இத்தகைய வாய்ப்புக்களை வழங்கி
s
प
 

ஆதிபரும் ஆசிரியர்களும் பயனை உணர்ந்து செயற்படுவது பிள்ளையின் முழமையான விருத்திக்கு உதவும் செயற்பாடாக அமைகின்றது. இதனை வலியுறுத்துவதாக தன்னைத் தானே அறிய உதவுவது கல்வியாகும்” என்றார் பிளேட்டோ மனித உடல் உள்ளம் ஆன்மா இதயம் என்பவற்றை ஒருமித்து விருத்தி செய்வதே கல்வியின் பயனாகும் என்று கூறினார் மகாத்மா காந்தி. நெருக்கீட்டு சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள் கற்றலில் அடைவு மட்டம் குறைந்து காணப்படும் நிலையிலும் அசாதாரண வெளிப்பாடுகளை காட்டும் நிலையிலும் பாடசாலை அதனை நிவர்த்தி செய்ய தண்டனை வழங்கப்படுமாயின் அதன் விளைவாகவும் மேலும் அடைவு மட்டம் குறைகின்றது. இதனால் மேலும் தண்டனை அதிகரிக்கப்பட அடைவு மட்டம் மிகவும் குறைந்த நிலைக் குச் செல்கின்றது. இத்தகைய நச்சுவட்டத்தை உடைக்கக்கூடிய ஆசிரியர்களின் தேவை அவசியமாகின்றது. நச்சுவட்டத்தை உடைத்து பிள்ளைகளை மீட்டு எடுக்க சீர்மிய ஆசிரியரினால்தான் முடியும்.
கற்றல் அடைவு மட்டத்தை உயர்த்த கற்பித்தல் செயற்பாடுகளை மாற்றியமைத்தல், இடர்பாடான சூழலை அறிந்து கொள்ளுதல் சூழலை மாற்றி அமைத்தல் வெகுமதி பாராட்டுக்களை வழங்குதல் மறையான சந்தரப்பங்களை கண்டுகொள்ளாமை, பிள்ளைகளுக்கு பிடித்தமான விடயங்களுடன் நிபந்தனைப்படுத்தல் போன்ற பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அவற்றைப் பயன்படுத்த யாவரும் முன்வரவேண்டும். மேலும் உதவி தேவைப்படின் வழிகாட்டல் ஆலோசனை வழங்கும் ஆசிரியரிடம் வழிப்படுத்தல், அவசியமாயின் மருத்துவ உதவிபெற வழிப்படுத்தல் என்பவற்றை அனைத்து ஆசிரியர்களும் மேற்கொள்ளலாம்.
எனவே, நெருக்கிடுகளுக்குள்ளான பிள்ளைகளை வழிகாட்டல் ஆலோசனை சேவை மூலம் தங்களின் பிரச்சினைகளை வெளிபடுத்தி ஆறுதல் பெறவும், உணர்வுகளை வெளிப்படுத்தவும் இலக்கு நோக்கி உரையாடல்களை மேற்கொள்ளவும் வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் பிரச்சினைகளில் இருந்து தன்னை விடுவித்து நம்பிக்கையுடன் நாளாந்தச் செயற்பாடுகளை தொடரக்கூடியவர்களாக்க முடியும். பாடசாலையில் உளவளத் துணைச் சேவையை பிள்ளை பெற்றுக் கொள்ளும்வகையில் சந்தர்ப்பங்களை பாடசாலை கல்விச் செயற்பாடுகளினூடாகவும், கல்விச் செயற்பாடுகளுக்கு புறம்பாகவும் வழங்கி உதவுவதும் பிள்ளைகளின் கல்வி அடைவு மட்டத்தை அதன் மூலம் உயர்த்துவதும், முழுமையான விருத்தியை ஏற்படுத்துவதும் அதிபர் ஆசிரியர்களினது முக்கிய பணியாகின்றது.
அகவிழி (மே 2013

Page 14
தொடருறு கல்வி தோற்றுப்போகாம
S.N.Al. Aroos (M.Sc. in Scienca முதுநிலை விரிவுரையாளர், தேசிய ச இணைப்பாளர், தேசிய கல்வி நிறுவகம், கல்முை
இன்றைய கல்வி உலகில் பெற்றோரும் கல்விச் சமூகமும் பாடசாலைக் கல்வியில் நம்பிக்கை இழந்து தனியார் போதனா நிலையங்களையும் தனியார் கல்வி நிலைய ஆசிரியர்களையும் நம்பி, அவர்களிடமே பிள்ளைகளின் கல்வி தங்கியுள்ளது என எண்ணி தனியார் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அவ்வாறாயின், பாடசாலைக் கல்வி முறை இன்றைய தொழில்நுட்ப, தகவல் தொழில்நுட்ப உலகின் சவால்களுக்கு முகங் கொடுக்கச் சிறந்ததா? எனும் கேள்விக்கான விடை பற்றி எம்மைச் சிந்திக்கத் தூண்டியுள்ளது. அவ்வாறாயின், நாம் பாடசாலையின் கடமை பொறுப்பு, வகிபங்கு, தனியார் போதனா நிலையங்களின் கடமை, பொறுப்பு வகிபங்கு பற்றி அறிதல் வேண்டும். இவை பற்றி இன்று கல்வியியலாளர்களும் , கல விச் சமூகவியல ஆய்வாளர்களும் அதீதமாகச் சிந்தித்து வருகின்றனர்.
பாடசாலைக் கல்வி
பாடசாலைக் கல்வி முறையில் சுமார் 40 இலட்சம் மாணவர்கள் பங்குபற்றுகின்றனர். பாடசாலைகளின் நோக்கம் சிறந்த பிரஜைகளை வளர்த்தெடுக்கவும் நவீன பொருளாதார முறைகளுக்கேற்ற தொழிற்திறன்களைப் பெற்றுக்கொடுப்பதும் ஆகும். இவ்வாற்றல்களைச் செய்யும் பாடசாலை சமுதாயத்தின் ஓர் உப தொகுதி என கல்விச் சமூகவியலாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். இந்நிறுவனம் சமூகத்தின் எதிர்பார்ப்புக்களையும் தேவைகளையும் நிறைவு செய்வதற்காகக் கருமமாற்றும் சமூகத்தின் இன்றியமையாத ஒரு நிறுவனமாகும். இன்னொருவகையில் சமுதாயத்தினை சமூகமயமாக்கும் ஒரு தொழில் நிறுவனமாகும். இதனாலேயே இதில் தொழில் செய்யும் ஆசிரியர்களை அறிவுத் தொழிலாளி என உயர்த்திப் பேசப்படுகிறது. அவ்வாறாயின், பாடசாலை சமுதாய அங்கத்தவர்களைச் சமூக அங்கத்தவர்களாக மாற்றும் செயல்முறையில் ஈடுபடும் உயிருள்ள உயிரியல் நிறுவனமாகும்.
சு. ஐ. கொலின்வூட் சமுதாயத்தைப் பின்வருமாறு வரையறுக்கின்றார். “ஒரு குறித்த பிரதேசத்தில் வாழ்கின்ற குறித்த பொதுச் சமூக முறையைச் சேர்ந்த சிறுவர்களையும் வளர்ந்தோரையும் சமூகமயமாக் கடைந்த, சமூக மயமாக்கமடையாத அனைவரையும் குறிப்பதாகும்.
அகவிழி மே 2013

ச் சேவை
லிருக்க.
: Education) ல்வியல் கல்லூரி ன பிராந்திய கற்கை நிலையம்
அவ்வாறாயின், சமூகம்’ என்பது முற்குறிப்பிட்ட பரந்த சமுதாயத்தில் சமூக விழுமியங்கள், பொறுப்புக்கள், கடமைகள் ஆகியன தொடர்பாகப் பூரண விளக்கத்தைக் கொண்ட சமூக உணர்வினைக் கொண்ட பிரிவினராகும். அவ்வாறாயின், இத்தகைய பூரண விளக்கமுடைய சமூக உணர்வு கல்வியூடாகவே தோற்றுவிக்க முடியும். இதனைத் தற்காலத்தில் செயன்முறைப்படுத்தி வருவது பாடசாலையா? தனியார் கல்வி நிறுவனமா?
கல்விச் சமூகவியல் ஆய்வின்படி கல்வி என்பது Education - பிள்ளையை அப்பால் கொண்டு செல்லுதல் அல்லது வெளிக்கொணருதல் எனப் பொருள்படும். அவ்வாறாயின், மாணவனின் அறிவு (Knowledge), திறன் (Ski), மனப்பாங்கு (Attitude), தனியாள் திறன் (Individual Skill), Fepasg5 5.06ir (Social Skills) 6T6irl 6 si60p G6).j6ffids கொணர்ந்து வளர்க்கும் செயல்முறையாகும். கல்வியின் தனியாள் சமூக நோக்கம், நல்ல ஆளுமை, விவேகம், சுயமான, சுதந்திரம் மிக்க தனிமனிதனை உருவாக்குவதே ஆகும். இதன் குறிகாட்டி கல்வி பெற்றவன் சிறந்த உள நல வளர்ச்சி பெற்றவனாக இருப்பான். இதனை ஒரு மனிதனிடம் இரண்டு முறையில் காணலாம்.
1. gp1Drt GOT 91s56) (Deep Knowledge)
2. 656 Tasii,Lib (Understanding)
3. இவ்விரண்டினையும் கல்வியின்மூலம் பெற்றவனைத்
தான் கல்விமான் Education Man' எனக் கூறுவர்.
இன்று எம்மில் யாரையாவது கல்விமான் எனக் குறிப்பிடுவதாயின் அவர் வைத்துள்ள பட்டங்களை மட்டும் வைத்து மதிப்பிடுவதில்லை. மாறாக அவர் வைத்துள்ள பட்டம் மூலம் பெற்றுள்ள அறிவில் தெளிவுடையவரும் அதனைச் சமூக நலன் கருதி பிரயோகிக்கவும் கூடியதாகவும் இருப்பவரே அறிவுடையவர் என்று அல்லது கல்விமான் என்று கூறப்படும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாட்டைப் பிரத்தியேகக் கல்வியா? பாடசாலைக் கல்வியா? வழங்கும் என்பதில் பலமான கேள்வி அண்மைக்காலமாக எழுப்பப்பட்டு வருகிறது.
பாடசாலைக் கல்வியின் அடிப்படைப் பண்புகளாகப் பின்வருவன வலியுறுத்தப்படுகிறது.

Page 15
1. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தல் (Managing Emotions)
2. சகித்துக் கொள்ளல் (Tolerance) 3. நன்றி கூறல் (Acknowledgement)
LITUIT' (B956) (Appreciation)
ஏற்றுக் கொள்ளல் (Acceptance)
பிறர் உணர்வைத் தான் பெறுதல் (Empating)
gŜAOJË5g5 856d|bg5J60DJU JITL6ð (Open Stimulant discussion)
இவற்றை வழங்குவதில் பிரத்தியேகக் கல்வி வழங்கும் நிறுவனங்களின் பங்களிப்பு என்ன என்பது பற்றி பெற்றோர் சிந்திக்க வேண்டும். இத்தகைய இயல்புடைய கல்வி முறை, முறைசாரா வழிகளில் இன்று பெற முடிகிறது. அதனால் இன்று கல்வி வாழ்க்கை நீடித்த கல்வி (Life LongEducation) என மாற்றப்பட்டுச் செயற்பட்டு வருகின்றது. அதனுள் முறைசாரா முறையில் உள்ளடங்கும் கல்வி போதனா முறைதான் பிரத்தியேக வகுப்புக்கள் ஆகும்.
பிரத்தியேகக் கல்வி போதனை
உலகமயமாதல் நிகழ் வினால் பெரும் சவாலுக் குள்ளாகியுள்ள பாடசாலைக் கல்வி, பிரத்தியேகக் கல்வி போதனைகளினால் பெரும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டும் வருகின்றது. இதனை (Shadow Education) நிழல்க் கல்வி எனவும் குறிப்பிடப்படும். Tuition என்பது தனிநபர்களால் அல்லது குழுக்களால் பாடசாலை நேரத்துக்குப் பின்னர் அல்லது முன்னர் மாணவர்களிடம் கட்டணம் பெற்றுக் கொண்டு வழங்கப்படும் பிரத்தியேகக் கல்வியூட்டலைக் குறிப்பிடும். இன்று இது இந்தியா,
 

ஐரோப்பா, வடஅமெரிக்கா, கொரியா போன்ற நாடுகளிலும் பெருமளவு வியாபித்துள்ளது. இன்று அதிகளவான )ாணவர்கள் முன்பள்ளி முதல் தரம் 13 வரையிலான ாடசாலை மாணவர்கள் ரியூஷன் என்றும் கருத்தரங்குகள், மீட்டல் வகுப்புகள், பேப்பர் கிளாஸ் என அனேக மாணவர்களைக் காணமுடியும். இதனால் மாணவர்கள் சுயமாகச் சிந்தித்துப் படிப்பதற்குக் கூட நேரம் இல்லை. இதற்குச் செலவு செய்ய முடியுமான பெற்றோர்களாக அனைத்தையும் இழந்து மாறிவருவதையும் அவதானிக்க முடிகிறது. இன்று எம் மத்தியில் நடைபெறும் இப்பிரத்தியேக வகுப்பு பின்வருமாறும் வகைப்படுத்தப்படுகிறது.
தனிப்பட்ட வகுப்புக்கள்
குழு வகுப்புக்கள்
நவீன வசதியுடன் நடைபெறும் தனிப்பட்ட, குழு
வகுப்புக்கள்
இத்தகைய பிரத்தியேகக் கல்வியைப் பின்வருவோர் நாடுகின்றனர்.
குறைந்த அடைவை உடையவர்கள்
. தமது சமவயதினர் பெற்றுள்ள கல்வியை விட உயர்ந்த கல்வி பெறவேண்டும் எனும் எண்ணம் உள்ளோர்.
இப்போதனைகளை வழங்குபவர்களை (Tutors) என அழைப்பர். இதன் வரலாறு பழமையானது. அறிவுலகில் முதன் முதலில் அறிவைப் பணத்துக்கு விற்க முனைந்தவர்கள் கிரேக்க மெய்யியலாளர்களான சோபிஸ்ட் Sophist) எனும் குழுவாகும். இவர்கள் அக்காலத்தில், இப்போது குறிப்பிடப்படும் “பேராசிரியர்” என்போருக்கு
அகவிழி (மே 2013

Page 16
ஒப்பானவர்கள் என மதிக்கப்பட்டனர். இவர்களது போதனைகளை அக்காலத்தைய இளைஞர்கள் கற்க முனைந்தமையால் கல்வியானது தனிப்பட்டவர்கள் தரும் கட்டணத்துக்கேற்ற போதனை முறையாக மாறியது. இதன்படி ‘சோபிஸ்ட்டுகள் பிரத்தியேகச் செயற்திறனையும் உயர்ந்த மன வளத்தையும் யார் பெற்றுக் கொள்ள விரும்புகிறார்களே அவர்களுக்குக் கற்பித்து அவர்களிடம் இருந்து பணம் பெற்றனர். இத்திறமை சோபிஸ்ட்டுகளின் தனித்திறமை என கி.மு. 5ஆம் நூற்றாண்டில் மதிக்கப்பட்டது. கிரேக்க வரலாற்றில் இம்முறையினை இல்லாமல் செய்ய அக்காலத்தில் உலக தத்துவஞானி சோக்கிரடீஸ் இளைஞர்களையும் பொதுமக்களையும் தேடிச் சென்று இலவச அறிவுரை வழங்கினார்.
கல்வி வரலாற்றில் பிரத்தியேக தனியார் கல்வி தோன்றியதற்கான காரணங்களைக் கல்வி சமூகவி யலாளர்கள் பின்வருமாறு பட்டியல் படுத்துகின்றனர்.
1. பரீட்சை மையக்கல்வி
2. ஆசிரியர்கள் வருமானத்தை அதிகரித்தல்
3. காலத்துக்குத் தேவையான கல்வியைப் பெறல்
உலக சந்தையில் புதிய கற்கைகளின் வருகை
பாடசாலை -கற்றல் - கற்பித்தலில் நம்பிக்கையின்மை
6. பாடசாலை கற்பித்தலைச் சரியாகப் பெற்றோர்.
ஆசிரியர் புரியாமை
7. பாடசாலையில் பாடத்திட்டம் பூர்த்தி செய்யப்படாமை
இக்காரணங்கள் ஒவ்வொன்றையும் அரசு, அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலைகள், கல்வி அதிகாரிகள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விடயமாகும். இச்சிந்தனையின் விளைவு எம்மில் நோயாகத் தோன்றியுள்ள பரீட்சை மையக் கல்வியாகும். இதனால் இன்று இலங்கையின் கல்வித்துறையில் இரண்டு உந்து சக்திகள் செல்வாக்குச் செலுத்துகின்றது என அடையாளப் படுத்துகின்றனர் கல்விச் சமூகவியலாளர்கள்.
1. பொதுப் பரீட்சைகள் மீது மக்கள் கொண்டுள்ள அபரீதமான கரிசனையும் பரீட்சைமையப் போதனையும்
2. இதன் காரணமாகச் செல்வாக்கடைந்துள்ள பிரத்தி
யேக வகுப்புக்கள்
தேசிய கல்வி ஆணைக் குழு (2010) தனியார் வகுப்புகளுக்குச் செல்வதற்கான காரணம் பற்றி தரம் 10 மாணவர்களில் 2378 பேர் ஆய்வு செய்யப்பட்டனர். அதற்கான காரணங்கள் பின்வரும் வீத அடிப்படையில் கண்டறியப்பட்டது. 68% வீதத்தினர் பொதுப்பரீட்சையின் வினாவிடைகளைக் கலந்துரையாடச் செல்வதாகவும் 53% வீதத்தினர் போதுமான பாடப் பயிற்சிகள் பாடசாலைகளில்
அகவிழி மே 2018

வழங்கப்படுவதில்லை எனவும் மேலும் 53% முழுப்பாடத்தில் எல்லா அலகுகளும் பாடசாலையில் முடிக்கப்படுவதில்லை எனவும் 29% எவ்வாறு வினாக்களுக்கு விடை அளிப்பதெனத் தனியார் கல்வி போதனை விளக்குவதாகவும் 23% பாடசாலையில் புறக் கீர்த்திய செயற்பாடுகளால் விட்டுப் போன பாடங்களை முடிப்பதற்கெனவும் மேலும் 10% பெற்றோரின் உந்துதலால் வருவதாகவும் குறிப்பிடுகின்றனர். 7% சந்தோசமான பொழுதுபோக்கு பிரத்தியேக வகுப்பு எனவும் 6% வகுப்பாசிரியர்களால் வகுப்புக்கள் சமூகமளிக்க வேண்டாம் என்ற காரணத்தினாலும் 3% சக மாணவர்கள் தனியார் வகுப்புகளுக்குச் செல்வதால் நாங்களும் செல்கிறோம் என ஆய்வு கண்டறிந்துள்ளது. இத்தகைய விருப்பங்களுக்குக் காரணம், இன்று கல்வி உலகிலும் வேலை உலகிலும் பரீட்சை முடிவுகளைத் தான் பார்க் கின்றார்களே தவிர வாழ்க்கைத் தேர்ச்சிக்கும் தொழில் திறமைக்கும் ஏற்றவகையில் மாணவர்கள் உள்ளார்களா என்பது நோக்கப்படுவது இல்லை. உதாரணமாக 5ஆம் தரப் புலமைப் பரீட்சை சித்தி, O/L, A/L, பல்கலைக்கழகத் தேர்வு என்பவற்றில் அதி உயர் சித்தியடைவோரை மட்டும் பெரும் புலமையாளர்களாகப் பார்ப்பது பழக்க மாகியும் சமூக அந்தஸ்து எனவும் கருதுவதால் பிரத்தியேக போதனை தொடர்ந்து பிரசித்தம் பெற்று நடைபெற்று வருகின்றது.
மேற்கூறிய காரணங்களால் பிரத்தியேக வகுப்பு நடைபெறுவதாகக் கண்டறிந்த போதிலும் இவை அனைத்தும் பாடசாலைக் கல்வியில் விடப்படும் தவறு களாலேயே நடந்தேறுகின்றது என்பது கருதுகோள். இன்று மருத்துவத் துறையில் எவ்வாறு அரச வைத்தியசாலைகளை விடவும், நோயாளர்கள் தனியார் வைத்தியசாலை களுக்குச் செல்கின்றனர் என்பதும் இத்தகைய பிரச்சினை போன்றது எனச் சுட்டிக்காட்டலாம்.
இருப்பினும் இத்தகைய பிரத்தியேகக் கற்றலின் மூலம் நன்மையும் இருக்கவே செய்கின்றன. தெளிவான விளக்கம் பெறல், விரும்பிய பாடத்தை விரும்பிய ஆசிரியர்களிடம் கற்கலாம், அதன் மூலம் அடைவு மட்டத்தை அதிகரிக்கலாம். ஒய்வு நேரத்தைப் பயனுள்ளதாக்கலாம். நிபுணத்துவம் வாய்ந்தவர்களின் எதிர்பார்க்கை வினாக்கள் குறிப்புக்கள் பெறலாம், மாணவர்கள் தனிப்பட்ட முறையில் கவனிக்கப் படல், பாடசாலைக்குச் சென்று கல்வியைப் பெற முடியாத மாணவர்களாலும் கல்வியைத் தொடரமுடியும் எனும் வாய்ப்புக்கள் பிரத்தியேகக் கல்வி போதனைகளில் உண்டு. இத்தகைய முயற்சிகள் எல்லாவற்றையும் கவனிக்கும்போது பாடப்புள்ளிகளை அதிகரித்து பரீட்சை மையமானதும் சான்றிதழ் கல்வி மைய சமூகத்தை உருவாக்கும் தொடர்ச்சியான செயற்பாடு எனவும் இதைக் கூறலாம்.
இதனாலேயே இன்றைய காலகட்டத்தில் உருவாகும் பட்டதாரிகள் “பட்டம் பெற்ற பட்டதாரிகளாக உருவா

Page 17
கின்றார்களே தவிர பட்டம் பெற்ற தொழிற்திறன் பெற்ற புத்தி ஜீவிகளாக உருவாவதில்லை” என்ற மனம்நொந்த செய்தியும் உண்டு. இதனாலேயே "தற்காலக் கல்விச் செய்தியின்படி இலங்கை, கென்யா, கியூபா போன்ற நாடுகளில் இன்று டிப்ளோமா நோய் அல்லது சான்றிதழ் பெறும் நோய் பரவியுள்ளது. இந்நாடுகளில் வேலை வாய்ப்புக்களை நாடுவோர் சிறந்த கல்வியையன்றி சிறந்த சான்றிதழ்களையே நாடுகின்றனர். இதனால் இந்நாடுகளில் உள்ள கல்வி நிலையங்கள் பரீட்சைக்கு ஆயத்தம் செய்யும் கலாசாரம் ஒன்றை உருவாக்கியுள்ளது. அதனாலேயே தற்கால பாடசாலைகளும் பரீட்சைக்கு ஆயத்தம் செய்வதையே தமது கடமை எனவும் கொள்ள நேரிடுகின்றது." இன்று பாடசாலைகளின் கல்வி அடைவுகளை அளக் கும் கருவியாக O/L, A/L, பல்கலைக்கழக மாணவர் தேர்வு எண்ணிக்கை, 5ஆம் தரப் புலமைப் பரீட்சைத் தேர்வு மாணவர்களின் எண்ணிக்கையையே கல்வி வலயங்களும் கல்வி அதிகாரிகளும் மதிப்பீடு செய்து வருகின்றனர். இதுவும் இன்றைய கல்வி உலகில் கவலை தரும் செய்தியாகும்.
இவற்றுக்கும் அப்பால் பிரத்தியேக வகுப்புக்களினால் மாணவர்கட்கும் பாடசாலைகளுக்கும் தீமையும் அதிகம் ஏற்படுகின்றது. இது பற்றி பெற்றோர், ஆசிரியர் சிந்திக்க முன்வருதல் வேண்டும். பாடசாலையில் மாணவர் வரவு குறைவடைதல், செய்முறையினூடாகப் பாடங்களில் அனுபவம் பெற முடியாத நிலை, பெற்றோரின் கற்பித்தல் சுமை அதிகரிப்பு. மாணவர்கட்கு ஒய்வு குறைவு, விடுமுறை தினங்களை மாணவர்கள், பெற்றோர்கள் மகிழ்ச்சியாகக் கழிக்க முடியாமை, பாடசாலைக் கல்வி மீதான நம்பிக்கை குறைவடைதல், பிரத்தியேக வகுப்புக்களில் கற்கும் மாணவர்களால் பாடசாலையில் ஏனைய மாணவர்கட்குக் கற்றல் இடையூறு ஏற்படல், பெற்றோரும் பிள்ளைகளும் பிரத்தியேக வகுப்பு ஆசிரியரில் நாட்டம் கொள்ளல், பாடசாலை ஆசிரியர்கள் தரம் குறைவு என மாணவர்கள் நினைப்பதால் ஆசிரியர்கள் கற்பிப்பதில் சோர்வு அடைதல், வசதி படைத்த பிள்ளைகள் அதிகம் நன்மை பெறல், வறிய பிள்ளைகள் பாதிக்கப்படல், ஒத்த வயதுக்குழு, ஏனைய வயதுக் குழுக்களிடையே ஒழுக்கம் சீர்கேடு, காதல், அன்பு, ஏற்பட்டு கலாசார சீர்கேடு ஏற்பட வழிவகுத்தல். இன்னும் ஆசிரியர், பெற்றோர், மாணவர் கட்குக் கற்றல், கற்பித்தல் சுமை அதிகரித்து மன அழுத்தம் ஏற்படும். மனப்பாங்கு பண்பு விருத்தி தடைப்படும். மேலும், பிரத்தியேக வகுப்பில் அறிவு விருத்தி மட்டுமே நோக்காகக் கொள்வதால் திறன், மனப்பாங்கு விழுமிய விருத்திக்கு வாய்ப்பில்லாத நிலை, சுயமாகச் சிந்திக்க மாணவர்கட்குச் சந்தர்ப்பம் கிட்டுவதில்லை எனப் பல. இத்தீமையின் உச்சகட்டம் கற்றலுக்குப் பாடசாலை ஆசிரியர் அவசியமில்லை என்பது மேலோங்கி ஆசிரியர்
ܐ
 

கட்கு, பாடசாலைகளுக்கு மாணவர்களும் பெற்றோரும் மதிப்பளிக்காத நிலையும் தோன்றியுள்ளது. இது தவிர மாணவர்கள் எந்த நேரமும் பிரத்தியேகக் கல்வி என்று 4 மணி நேரமும் செலவு செய்வதால் சிறந்த கல்விக்கு அவசியமான சீரான ஆன்மா, உள்ளம், உடல் என்பன இல்லாமல் செய்யப்பட்டும் தேகாரோக்கியம், உடற் பயிற்சியும் இன்றி மன அழுத்தத்துக்கும், மன நோய்க்கும் உட்பட்டு, சீரழிந்த மாணவ சமூகமும் சீரழிந்த பெற்றோர் சமூகமும் உருவாகியுள்ளது. இதன் இன்னொரு படி மாணவர்களிடம் அழகுணர்வு இல்லாமல் செய்யப்பட்டு பெற்றோர் - பிள்ளை பிளவு, ஆசிரியர் - மாணவர் பிளவு என்பனவும் சமூகம் சந்தித்து வருகின்றது. இதனால் கல்வியின் உண்மையான நோக்கம் நிறைந்த பிள்ளை களாகவன்றி, மனநோயினாலும் கவலையினாலும் பாதிக்கப் பட்ட மாணவர்களையே சமூகம் சுமந்து வருகின்றது என்ற கவலையான செய்தியும் இதில் உண்டு.
என்ற போதிலும் பாடசாலைக் கல்வி பற்றிய விமர்சனங்களும் இன்று எழுத்துருவில் இடம்பெற் றுள்ளதையும் சுட்டிக் காட்டியேயாக வேண்டும். (பாடசாலை LusĎ O FUpĎ (De-schooling Society) 6TOJ Lò (5T6ól6ð பாடசாலைகள் - மாணவர்களின் சுயசிந்தனை வளர்ச்சியைத் தடைசெய்கின்றன என்றும் அவர்களுடைய படைப்பாற்றல்களை வளர்ப்பதற்கான ஏற்பாடுகள் எவையும் பாடசாலையில் இல்லை எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.) அதே வரிசையில்,
1976களில் பாடசாலைக் கல்வியை ஒட்டு மொத்தமாக எதிர்க்கும் இயக்கங்களும் சிந்தனைகளும் நூல்களும் எழுந்தன. அச்சிந்தனையில் சில கல்வியியலாளர்கள் நாட்டுப்பற்றுடைய, கீழ்ப்படிவுள்ள பிரஜைகளை உரு வாக்குவது பாடசாலைக் கல்வியின் பிரதான நோக்கம் என்பதை எதிர்க்கின்றனர். இது பெரியவர்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிபலிக்கும் நோக்கமேயன்றி கல்வி சார்ந்த நோக்கமல்ல என்கின்றனர். மேலும், கண் முடித்தனமான கேள்விக்கிடமற்ற தேசாபிமானத்தை வளர்க்க முனைவது ஆட்சியாளர்களுக்கே பயன்படக்கூடிய பண்புகள் எனவும் இதனால் ஜனநாயகப் பாங்கான சுய சிந்தனையும் எதையும் நுணுகி நோக்கும் போக்குடைய ஜனநாயகப் பிரஜைகளை வளர்த்தெடுக்க முடியாது என்பதும் மற்றொரு சாரார் விமர்சனமாகும். இதனை இன்னும் ஒரு படி மேல் சென்று ஒழுக்கவியலின்படி பார்த்தால் ஒழுக்கம் என்பது ஏலவே தீர்மானிக்கப்பட்ட தேர்வுகளில் அல்ல. எமது தேர்வுகளிலேயே ஒழுக்கவியல் தங்கியுள்ளது என்கிறது ஒழுக்க மெய்யியல் கல்வித் தத்துவம். அவ்வாறாயின் கல்வியின் முடிவும் மனிதனை அவனது சுய விருப்பப்படி விட்டுவிட்டு, அவன் செயற் பாடுகளையும் சிந்தனையையும் எதிர்பார்ப்பதே சிறந்தது. இதற்கு அரச பாடசாலைகளும் ஆசிரியர்களும் சீர்
அகவிழி (மே 2013

Page 18
திருத்தத்துக்குட்பட வேண்டிய தேவை, அவசியம் உணரப்படுகிறது.
மார்க்ஸிய விமர்சனத்தின்படி பாடசாலை முறையானது சமூக வகுப்பு வேறுபாடுகளை மறு உற்பத்தி செய்ய உதவுகிறது எனவும் எனவே இதில் யாருக்கும் சமமான கல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில், சமூக அமைப்பில் செல்வாக்குச் செலுத்தும் உயர் வகுப்பினர் எப்படியேனும் தமக்கென வசதியான பாடசாலையை அமைத்துக் கொள்வதனால் இது ஏற்படுகின்றது என்கின்றனர்.
பரிந்துரைகள்
எனவே, பிரத்தியேகக் கல்வி, பாடசாலைக் கல்வி தொடர்பாக அரசும் கல்விக் கொள்கைகளும் கவனமெடுத்தல் வேண்டும் என்று அவசியமாகியுள்ளது. குறிப்பாகப் பாடசாலைக் கல்வியை மேம்படுத்தும் வகையில் தொடர்ச்சியாகக் கல்விக் கொள்கைகளே அடிக்கடி சீர்படுத்தப்படுகிறதே தவிர, கல்வியை மாணவர்களிடத்தில் உற்பத்தி செய்கின்ற ஆசிரியர்களின் நலன் விடயங்களில் எந்தச் சீர்திருத்தமும் செய்வதாக இல்லை. குறிப்பாக ஆசிரியர்களின் சம்பளத்தை உயர்த்துதல், அவர்களுக்கான வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முனைதல் முக்கியமாகும். இன்று கல்வியை உற்பத்தி செய்கின்ற ஏனைய பிரிவினரோடு ஒப்பிடுகின்றபோது ஆசிரியர்களின் சம்பளம் மிகக் குறைவாகும். இதனாலேயே ஆசிரியர்கள் பிரத்தியேக வகுப்புக்கள் பற்றியும் ஏனைய தொழில் நடவடிக்கை பற்றியும் சிந்தித்து, செயற்பட்டும் வருகின்றனர். இதற்கு மாற்றீடு செய்யும்போது அவர்களது முழுக்கவனமும் பாடசாலை கற்றல், கற்பித்தல் பற்றித் திரும்ப வாய்ப்புண்டு.
மேலும், ஆசிரியர்கட்கு, பல்கலைக்கழக, கல்விக் கல்லூரி விரிவுரையாளர்கட்கு இருப்பது போன்று தமது தொழில்வாண்மையை விருத்தி செய்ய B.Ed, PGDE, SPNPGDE, M.Ed. Epi) is 36)6. IFL L6)6OLD Urf d6) திட்டங்களை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும். இன்று எம் நாட்டில் உள்ள பாடசாலை ஆசிரியர்களில் முன்பள்ளி, ஆரம்பக் கல்வி கற்பித்துக்கொடுக்க முன்பள்ளி, ஆரம்பக்கல்வி தொடர்பான ஆரம்பக்கல்வி பட்டப்படிப்பு பட்டம் பெற்றோர் எத்தனை பேர் உள்ளனர் என்பது கேள்விக்குறி, மேலைத்தேய நாடுகளில் முன்பள்ளி பற்றிய பட்டம் இல்லாமல் சிறு பிள்ளைகளுக்குக் கற்பிப்பது என்பது இயலாத காரியமாகும்.
இன்னும் கல்வி அதிகாரிகள் பாடசாலை மேற் பார்வையின்போது அதிகாரம் படைத்த அதிகாரி போல் நடந்து கொள்வதை விடுத்து கற்றல் - கற்பித்தல் நண்பனாக மேற்பார்வை செய்ய முன்வர வேண்டும். மேற்பார்வை செய்ய முன்வருபவர்கள் நவீன கற்பித்தல்
அகவிழி மே 2018

உபகரணம், நவீன கற்பித்தல் சிந்தனை கொண்டு ஆசிரியர்களை வழிப்படுத்த முனைய வேண்டும்.
இது தவிர பாடசாலை பற்றிய நல்ல விழிப்புணர்வுகளைப் பெற்றோர் மத்தியில் செயற்படுத்தி தொடர்ச்சியான பங்களிப்பை சிந்தனை ரீதியாகப் பெற முயலுதல் வேண்டும். ஆசிரியர்களாக ஆட்சேர்ப்புச் செய்யும்போது ஆசிரியத் தொழிலுக்கு உண்மையான விருப்பம் உள்ள கல்விப் புலத்தோடு பட்டம் பெற்றவர்களை இணைக்க முன்வருதல் சிறப்பு. இது தவிர மதிப்பீட்டு முறைகளில் எழுத்துப் பரீட்சைகளை மாத்திரம் கொண்டு மாணவர்களின் திறமையை அளவிடாது ஏனைய செயல்முறைப் பரீட்சை களை ஆசிரியர்கள் மாணவர்களை எதிர்காலத்தில் ஆற்றல் மிக்கவனாக மிளிர்வதற்குச் செயற்படுத்த முன்வர வேண்டும் எனும் நோக்கில் மதிப்பிட்டு புள்ளிகள் இட முன்வர வேண்டும். இவற்றைச் செயற்படுத்தும் முகமாகவே SBA மதிப்பீட்டு முறை, 5E கற்பித்தல் முறை அறிமுகப் படுத்திய போதிலும் இன்னும் இதன் முக்கியத்துவத்தை விளங்காத ஆசிரியர்களும் உள்ளனர் என்பது மனவேதனையாகும். இதற்கு ஆசிரியர்கள் மட்டும் காரணமல்ல. இது பற்றிச் பயிற்சிக் கருத்தரங்கு செய்கின்ற வளவாளர்கள் போதிய அதுபற்றிய கல்வியறிவு, தன்னில் அதை மீட்டிப் பார்க்காமை என்பன தெரியாமல் செயற் படுத்துகின்றனர். இன்னும் சொன்னால் கொடுப்பனவு களுக்காக ஆசிரியர்கள் முன் நின்று அவர்களுக்குத் தெரிந்த விடயங்களை மட்டும் கூறி நேரம் கடத்துகின்ற செயற்பாடுகள் இல்லாமல் செய்யப்பட்டு, கல்விப் புலத்தில் உள்ள கல்வி பற்றி உயர்பட்டம் பெற்றவர்களை இதற்காக இணைத்துச் செயற்படுத்த முன்வர வேண்டும்.
இதற்கும், அப்பால் ஒவ்வொரு பாடசாலை ஆசிரியரும் தனது கற்பித்தலைத் தனது பூரண விருப்பத்துடன், ஏலவே தயார் செய்தலுடன், தானும் ஆய்வு செய்து, தமக்கும் இது விளங்குமா? என்ற தன்னை அறிந்து, கற்பித்தல் உபகரணம் கொண்டு சென்று மகிழ்ச்சிகரமாகக் கற்பிக்க முன்வர வேண்டும். இதனைத் திறன்படச் செயற்படுத்த கணனி, தகவல் தொழில்நுட்பம் தெரிந்து மகிழ்ச்சிகரமாகக் கற்பிக்க ஆசிரியர்கள் முன்வர வேண்டும். இதைவிடுத்து இதற்குத் தயார் இல்லாதவர்கள் கல்விப் புலத்தில் இருந்து விலகி வேறு துறைகட்குத் தமது பங்களிப்பைச் செலுத்துவது சிறந்தது.
எனவே, பாடசாலைக் கல்வியைச் சீர்திருத்துவதன் மூலம் தனியார் கல்வியின் செல்வாக்கை மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் இழக்கச் செய்யலாம். அதன் மூலம் எதிர்கால்ச் சந்ததியையாவது தொழிற்திறன்கள் நிறைந்த, சவாலுள்ள தொழிற்சந்தையில் முகங்கொடுக்கும் ஆற்றல் உள்ளவர்களாகவும் மனநிறைவும் அழகுணர்வும் விரக்தி யுமற்ற மனித சமூகத்தையும் உருவாக்கலாம்.

Page 19
பாடசாலைகளில் பயிற்று
ஆங்கிலத்தின் மீள் அ
ஒரு விமர்சனப் பார்
ம.மரியராசா
முதல்வர், கிளி/வலைப்பாடு றோ.க.த.
இன்று உலகளாவிய ரீதியில் ஆங்கில மொழியானது வளச்சியுற்று மருத்துவம், வியாபாரம் தொடர்பாடல், அரசியல், கல்வி போன்ற சகல துறைகளிலும் தனது ஆதிக்கத்தினை நேரடியாகவும் மறைமுகமாகவும் செலுத்தி வருகின்றது. இவ்வாறு செல்வாக்குப் பெற்று விளங்குகின்ற ஆங்கில மொழியானது எமது பாடசாலைகளில் மீண்டும் பயிற்று மொழியாக அறிமுகம் செய்யப்படுகின்றதெனின் அது பற்றிய ஒரு விமர்சனப்பார்வை மிக அவசியமானதாக இருக்கின்றது. அந்த வகையில் எமது நாட்டில் பயிற்று மொழியாக ஆங்கில மொழியின் வருகையினை நோக்க வேண்டியது அவசியமாகின்றது. பின்னர் அது ஏன் கைவிடப்பட்டது என்பதற்கான காரணங்களை ஆராய்வதும் மிக முக்கியமாகும். பயிற்று மொழி என்ற நிலையில் இருந்து அகற்றப்பட்ட ஆங்கில மொழி ஏன் இன்று மீண்டும் பயிற்று மொழியாக்கப்படுகின்றது? இதன் விளைவுதான் என்ன? எதிர்பார்கின்ற நோக்கங்களினை அடையக்கூடியதாக இருக்குமா? என்பதெல்லாம் இங்கு நோக்கப்படுவது சாலப்பொருத்தமாகும்.
பயிற்றுமொழியாக ஆங்கிலம்
இலங்கையில் பயிற்று மொழியாக ஆங்கில மொழி அறிமுகப்படுத்தப்பட்ட காலப்பகுதியினை நோக்குகின்ற போது ஆங்கிலேயரின் ஆட்சிக் காலமாக அது காணப் படுகின்றது. இலங்கையினை தமது ஆட்சிக்குட்படுத்திய போர்த்துக்கீசர் தமது காலத்தின் கல்விப் போதனா மொழியாக சுதேச மொழிகளினையே பின்பற்றினார்கள். உயர் கல்வி நிறுவனங்களில் இவர்கள் போதனா மொழியாக போர்த்துக்கீச மொழியினையும் வேறு மொழிகளினையும் உபயோகித்தார்கள்.
இவ்வாறே ஒல்லாந்தரும் ஆரம்ப பாடசாலைகளில் தமிழ் சிங்கள மொழிகளினையே போதனா மொழியாக கையாண்டதோடு பரிஸ் பாடசாலைகளின் கீழ் பிரிவுகளில் ஒல்லாந்த மொழி காணப்பட்டதோடு மேற்ப்பிரிவுகளில் லத்தீன் மொழியினையும் உபயோகித்தார்கள்.
இது போன்றே ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்திலும் ஆரம்பக்கல்வி தாய் மொழியிலும் இடைநிலைக் கல்வி ஆங்கிலத்திலும் வழங்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. எனவே ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்திலையே ஆங்கில
மொழி போதனா மொழியாக அறிமுகம் செய்யப்பட்டது.
 

மொழியாக அறிமுகம்
6O6)
5.JTFT656)
ஆங்கில மொழிக் கல்வியினை முழு வீச்சுடன் முன்னெடுக்க வேண்டும் என்ற நோக்கு கோல்புறுாக் ஆணைக்குழுவின் கல்வி ஆலோசனைகளில் பெரிதும் 5ானப்படுகின்றது. இது தொடர்பான ஆலோசனைகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிட முடியும்.
> கற்பித்தல் மொழி ஆங்கிலமாக இருக்க வேண்டும். சுய மொழி ஆரம்பப் பாடசாலைகளை மூடிவிட்டு அதற்குப் பதிலாக ஆரம்பம் தொடக்கம் ஆங்கிலம் கற்பிக்கும் பாடசாலைகளை ஆரம்பிக்க வேண்டும்.
> ஆங்கிலக் கல்வியின் முன்னேற்றத்திற்கு ஓர் ஆங்கில
கல்லூரி நிறுவப்பட வேண்டும்.
> ஆங்கிலம் படித்த இலங்கையர்களை அரச
தொழில்களில் சேர்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
கோல்புறுாக் எதிர் பார்த்தபடி கி.பி.1834 இல் பாடசாலைகளின் சகல பரிபாலன வேலைகளையும் நிறைவேற்றுவதற்காக நியமிக்கப்பட்ட பாடசாலை ஆணைக்குழு ஆங்கிலக் கல்வியினை நிறை வேற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டது. சுதேச மொழிகளைப் புறக்கணித்து ஆங்கிலத்தினை கற்பித்தல் மொழியாக உபயோகித்தது. 1836 இல் கொழும்பு அக்கடமி புனர மைக்கப்பட்டு ஆங்கிலம் கற்பிப்பதற்கு ஆசிரியர்களைப் பயிற்றும் ஒரு நிறுவனமாக மாற்றப்பட்டதுடன் அதற்கு அவசியமான ஆசிரியர்கள் இங்கிலாந்தில் இருந்து தருவிக்கப்பட்டார்கள்.
மேலும் ஆங்கில ஆட்சியாளர்கள் தமது குடியேற்ற ஆட்சி முறையின் தேவைகளையும் நன்மைகளையும் கருத்தில் கொண்டு ஆங்கில வழிக் கல்வியினை அறிமுகம் செய்தார்கள். இவ்வாறு அறிமுகம் செய்த ஆங்கிலக் கல்வியின் நோக்கங்களாக
> ஆங்கிலக்கல்வினை பாடசாலை நிலையில் கற்றுத் தேர்ந்தவர்களை வைத்துக் கொண்டு அரசாங்க நிர்வாகத்தை குறைந்த செலவில் நடாத்திச் செல்லுதல்.
> ஆங்கிலக் கல்வியினுTடாக குடியேற்ற ஆட்சி முறையின் கீழ் மட்டங்களில் பணிபுரியக்கூடிய, விசுவாசமிக்க, மேலத்தேயப் பாணியிலான சுதேச கற்றோர் குழாம் ஒன்றினை உருவாக்குதல்.
அகவிழி மே 2013

Page 20
இதே வேளையில் சம காலத்தில் இந்தியாவில் முதன்முதலாக ஆங்கிலக்கல்வியினை அறிமுகம் செய்ய முற்பட்ட மக்களம் யாப்பு அதன் நோக்கத்தைப் பற்றி கூறியமை இங்கு நோக்கப்படத்தக்கது. ஆங்கிலக்கல்வி யினுடாக இரத்தத்திலும் நிறத்தத்திலும் இந்தியராகவும், சுவையிலும் சிந்தனையிலும் ஒழுக்கத்திலும் அறிவாற்ற லிலும் ஆங்கிலேயராகவும் உள்ள ஒரு புதிய வகுப்பினை உருவாக்க வேண்டும். அவ்வகுப்பினர் சுதேச மொழிகளைச் செம்மைப் படுத்தி மேலைநாட்டறிவினை மக்கள் மத்தியில் பரப்புபவர்களாக விளங்குதல் வேண்டும். என்ற கருத்து ஆங்கில ஆட்சியாளர்கள் அறிமுகம் செய்த ஆங்கிலக் கல்வியின் நோக்கத்தினை சுட்டிக்காட்டுகின்றது.
இந்த அடிப்படையில் ஆங்கிலக் கல்வி வளர்த்தெடுக்கப் பட்ட போதும் சாதாரண மக்களுக்கு ஆரம்பக்கல்வியினை வழங்குவதற்கென சுய மொழிப் பாடசாலைகளைப் படிப்படியாக ஏற்படுத்தினர். தனியார் துறையினரும் கிறிஸ்தவ மிசனரிமாரும் ஆங்கிலக் கல்வியின் வளர்ச்சியில் மிகுந்த ஊக்கத்துடன் ஈடுபட்டனர். இதே நேரத்தில் தவிற்க முடியாத காரணங்களினால் அதாவது பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட பெளத்த, இந்து சமயங்களின் மறுமலர்ச்சியின் காரணமாக உருவாக்கப்பட்ட பாடசாலை முறைமையில் கிறிஸ்தவ மிசனரிமார் உருவாக்கியது போன்ற ஆங்கிலப் பாடசாலைகளும் அடங்கும்.
ஆங்கிலக் கல்வியானது உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு போன்ற வற்றில் பல சந்தர்ப்பங்களை வழங்கியதன் காரணமாக பெளத்தர்களும் இந்துக்களும் இப்போக்கி லிருந்து விலகிச் செல்ல முடியவில்லை. அத்துடன் பாடசாலைக் கல்வியில் மிசனரிமாரிடம் இருந்ததாக கூறப்பட்ட ஏகபோக உரிமையை எதிர் கொள்ள உள்ளுர் சமயத்தவரும் ஆங்கிலப் பாடசாலைகளை நிறுவ வேண்டியதாயிற்று.
இவ்வாறு இக்காலப்பகுதியில் சுதேச மொழிகளுக்குரிய முக்கியத்துவம் அலட்சியப்படுத்தப்பட வேண்டியதாயிற்று.
போதனா மொழி என்ற நிலையில் இருந்து ஆங்கில மொழி படிப்படியாக நீக்கப்படுதல்
தேசிய மொழிகளுக்கு முறையான இடம் வழங்கப் படாததையிட்டு பல்வேறு குழுவினரும் அதிருப்தியினை வெளிக்காட்டத் தொடங்கினர். இதற்கு ஆதரவாக எழுந்த பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்படத்தக்கன.
அனாகரிக தர்ம பாலன் சிங்கள மொழி வளர்ச்சி பற்றி விரிவாக எடுத்துரைத்தார்
கலாயோகி ஆனந்தகுமார சுவாமி நிறுவிய இலங்கை சமூக சீர்திருத்தச் சங்கம் ஆங்கிலப் பாடசாலைகளில் தேசிய மொழிகளை அறிமுகம் செய்யுமாறு ஆங்கில ஆளுனரை வேண்டியது.
அகவிழி மே 2018

ஆங்கிலத்தில் கல்வி பயின்ற உயர் வர்க்க இளைஞர்கள் சாதாரண மக்களுடன் தேசியமொழிகளில் உரையாட முடியாமல் போனதும் சிந்தனைகளை சுய மொழியில் வெளியிட முடியாமல் போனதும் அவர்களிடம் சுய மொழி அறிவு காணப்படவில்லையென்பதனை வெளிக்காட்டியது.
புகழ் பெற்ற சஞ்சிகையாளர்களும் நாவலாசிரியர்களும் இவ்விடயத்தில் தமது அதிருப்தியை எடுத்துக்காட்டினர்.
இந்தியாவிலும் இந்திய தேசிய வாதிகள் மற்றும் முஸ்லிம்கள் ஆங்கில மொழி வழிக்கல்வியினை எதிர்த்து குரல் எழுப்பினர்.
ஆங்கில ஆட்சியாளர்களின் கல்விக்கொள்கையின் விளைவாக நாட்டில் ஆங்கில மொழிப் பாடசாலை சுய மொழிப்பாடசாலை என இரண்டு வகையான பாடசாலை முறை உருவாகியிருந்தமை. இது கல்வி முறையின் பிரதான குறை பாடாக கன்னங்கரா குழுவினர் சுட்டிக்காட்டினர்.
இவ்வாறான விமர்சனங்களோடு இக்கல்வி முறைக்கு எதிராக பின்வரும் வாதங்களும் முன்வைக்கப்பட்டன.
1. ஆங்கில மொழியானது சமூக மேன்மைக்குரிய மொழியாக அடையாளம் காணப்பட்டது. இதனால் மக்கள் மத்தியில் ஒரு புதிய பிரிவு தோற்றம் பெற்றது. அதாவது ஆங்கிலம் பேசும் சமூகம், சுய மொழியினைப் பேசும் சமூகம் என்கின்ற பிரிவுகள் தோற்றம் பெற்றன.
2. சிங்களம் தமிழ் மொழிகள் விருத்தி செய்யப்படாமை காரணமாக இலக்கியத்துறையிலும் கலைத்துறையிலும் தமது பங்களிப்பினை முழுமையாக செய்ய முடியாமல் போனதாகும்.
3. கட்டணம் செலுத்தக் கூடியவர்கள் ஆங்கிலப் பாடசாலைகளிலும் செலுத்த முடியாதவர்கள் சுய மொழிப் பாடசாலைகளிலும் கற்றமையினால் கல்வித்துறையில் சம வாய்ப்பு தவற விடப்பட்டது.
மேலும் கிறிஸ்தவ சமயக்குழுவினர் சுய மொழிக் கல்வியினை வழங்குவதில் விருப்பம் கொண்டிருந்தார்கள். இதற்கு பின்வரும் ஆதாரங்களைக் கூற முடியும்.
> இலங்கையில் கல்விப்பணியினை ஆரம்பித்த காலம் தொடக்கம் சுய மொழிக் கல்வி வளர்ச்சியில் கூடிய அக்கறை செலுத்தினர்.
> நாட்டில் சுய மொழிக் கல்வியினைப் பரப்புவதற்காக சுய மொழிப் பாடசாலை முறையொன்றை ஆரம்பித்தமை.
> கோல்புறுக் ஆணைக்குழுவினர் தமது அறிக்கையில் ஆங்கிலேய சமயக்குழுவினர் தமது பாடசாலைகள் மூலமாக ஆங்கில மொழியினைப் பரப்புவதில் உள்ள முக்கியத்துவத்தினை பொதுவாக வரவேற்கவில்லை

Page 21
என்று கூறியதில் இருந்து சமயக் குழுவினர் சுய மொழியிலான கல்வி பரப்புவதிலேயே முக்கியத்துவம் காட்டினர் என்பது தெளிவாகும்.
1841இல் அரசாங்கப் பாடசாலைகளை எதிர்காலத்தில் சுய மொழிக் கல்வியை விருத்தி செய்யும் பாடசாலை களாக மாற்ற வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இதனால் ஆங்கிலத்தில் மட்டுமே கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்ற ஆரம்ப கால பிரித்தானியர் கொள்கை கைவிடப்பட்டு சுய மொழிக் கல்விக்கு சார்பான ஒரு கொள்கை உருவாக்கப்பட்டது.இவ்வாறு படிப்படியாக ஆரம்பிக்கப்பட்ட சுதேச மொழிக்கல்வி யானது 1950 கள் தொடக்கம் முழு வீச்சுடன் வலிமை பெற்று ஆங்கில மொழி போதனா மொழி என்கின்ற நிலை முற்றாக நீக்கப்பட்டது.
மீண்டும் பயிற்று மொழியாக ஆங்கிலம்
ஏறக்குறைய 50 வருடங்களின் பின்னர் மீண்டும் ஆங்கில மொழியானது பயிற்று மொழியாக அறிமுகம் செய்யப்பட்டது. இவ்வாறு மீண்டும் பயிற்று மொழியாக அறிமுகம் செய்வதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றது.
X
உலக மயமாக்கலின் சர்வதேச உறவுகள், வர்த்தகம், கைத்தொழில் தகவல் தொழில் நுட்பத்தின் விரிவான பயன்பாடும் முக்கியத்துவமும்
உலகளாவிய ரீதியில் பன்மடங்காகப் பெருகி வரும் அறிவுத் தொகுதியனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கின்றமை.
சர்வதேச தொழிற்சந்தையில் இலங்கை இளைஞர்கள் பிறநாட்டு இளைஞர்களுடன் சமமாக போட்டியிடுவதற்கு ஆங்கில மொழித்திறன்கள் அவசியம்.
உயர் கல்வி நிலையில் மருத்துவம், பொறியியல், சமூக அறிவியல் போன்ற துறைகளில் ஆங்கில மொழி பயன்படுத்தப்படுகின்ற நிலைமை.
வெளிநாட்டு மூலதனத்துடன் பல்தேசிய கம்பனிகளின்
வருகை.
அரச துறையில் வேலை வாய்ப்புகளின் வீழ்ச்சியும் தனியார் துறையில் வேலைவாய்புக்களுக்கும் ஆங்கில மொழித்தேவைகளை நிறைவு செய்ய வேண்டிய அவசியம்.
அரச பாடசாலைகளில் சுய மொழிகளில் கல்வி பெறுவோர் ஆங்கில மொழியில் கல்வி பயிலுகின்ற மாணவர்களுடன் போட்டியிட முடியாத ஒரு பாதகமான நிலை தோன்றியிருப்பதனால் அதிலிருந்து சுய மொழியில் கல்வி பெறும் மாணவர்களினை பாதுகாப்பதற்கு.
 

> கடந்த காலங்களில் ஒரு பாடமாக கற்பிக்கும் முயற்சிகளில் காட்டப் பட்ட அலட்சியமும் அக்கறையின்மையும் ஆங்கில மொழி அறிவில் ஏற்ப்பட்ட பாரதூரமான வீழ்ச்சியினை நீக்குவதற்கும் துரித கதியில் அபிவிருத்தி செய்வதற்கும்.
> ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கையில் சகல பிள்ளைகளும் ஆங்கிலத்தேர்ச்சி பெற்றவர்களாக ஆக்கப்பட எதிர் வரும் பத்து ஆண்டுகளுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளமை.
> உலக மயமாக் கல் சர்வதேச மொழியாக ஆங்கிலத்தின் அதிகளவு பயன்பாடு, தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பத்தில் விரிந்து செல்லும் வகிபங்கு என்பதன் காரணமாக ஆங்கில மொழித் தேர்ச்சியின் தேவையும் கேள்வியும் உயர்வடைந்து விட்டமை.
> ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக ஒரு நாளைக்கு ஒரு பாட வீதம் கற்பிப்பதன் மூலம் இத்தேவையையும் இக்கேள்வியையும் நிறைவு செய்யப்படமாட்டாது என்பதைக் கடந்தகால அனுபவம் சுட்டிக்காட்டுகின்றது.
இத்தகைய நோக்கங்களை நிறைவேற்றும் பொருட்டு
பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
1. போதுமான ஆசிரியர்கள் இருக்கும் பட்சத்தில் 6ம் வகுப்பிலிருந்து வருடா வருடம் இடைநிலை வகுப்பு களில் தெரிவு செய்யப்பட்ட பாடங்களை அதாவது கணிதம் விஞஞானம் கணினிப்படிப்பறிவு உட்பட தொழில் நுட்பம் சமூக விஞஞானம் முதலான பாடங்களை ஆங்கில மொழியில் கற்பிப்பதற்கு அனுமதி வழங்கியமை.
2. போதியளவு ஆசிரியர்கள் இருப்பதைப் பொறுத்து க.பொ.த சாதாரண தரம் மற்றும் க.பொ.த. உயர் தரம் வகுப்புக்களில் எந்தவொரு பாடத்தையும் ஆங்கில மொழி மூலம் கற்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். மற்றும் தாம் விரும்பும் மொழியில் பரீட்சைக்கு தோற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.
3. பல்கலைக் கழகங்களும் தமது போதனா மொழியாக ஆங்கிலத்தினை உபயோகிக்க வேண்டும் என்கின்ற போக்கும் காணப்படுகின்றது. இதற்கு அமைவாக கலைப்பீடத்தில் கற்கும் மாணவர்களும் குறைந்தது ஒரு பாடத்தையேனும் ஆங்கில மொழியில் கற்க வேண்டும் என எதிர்வு கூறப்பட்டது.
அகவிழி (மே 2018

Page 22
இதன் தாக்கம்
ஏற்கனவே குறிப்பிடப்பட்டது போல் ஆங்கில மொழி யினை போதனா மொழியிலருந்து அகற்றுவதற்காக கூறப்பட்ட அத்தனை குறைபாடுகளுடனும் பின்வரும் விளைவுகளினையும் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.
D
இத்தகைய கொள்கையானது நகர்புறத்திலும் பெரிய பாடசாலைகளிலும் ஆங்கிலத்தைக் கற்பிக்க தகுதி பெற்ற ஆசிரியர்கள் போதியளவு இருப்பதனால் மீளவும் சமூக பொருளாதார வேறுபாட்டையும் குடியேற்ற சகாப்தத்தின் சலுகை பெற்றோர் நிரலுக்குமே இட்டுச்செல்கின்றது. பெற்றோர்கள் பிள்ளைகளின் உண்மை நிலையினைப் புரிந்து கொள்ளாது தமது கெளரவ அந்தஸ்த்தினை உயர்த்திக் காட்டுவதற்காக கட்டாயப்படுத்தி தமது பிள்ளைகளை ஆங்கில மொழியிலான கல்வி கற்பதற்கு தூண்டுகின்றனர் தன்னுடைய சுய உணர்வுகளினை தாய் மொழி யில்லாத வேறு மொழிகளில் தெளிவாக வெளியிட முடியாத சூழ்நிலைகளில் ஆங்கிலக் கல்வி அவசியம் தான் என்கின்ற கேள்வியும் எழுகின்றது. பாடசாலைகளும் தங்களை உயர் நிலையில் காட்டுவதற்காக இக் கொள்கையைக் கடைபிடித்தாலும் தரமற்ற ஆசிரியர்களினால் பிள்ளைகளின் எதிர்காலம் பாழாய் போகின்ற தன்மை காணப்படுகின்றது. பல்கலைக்கழகங்களில் கூட பொதுவாக யாழ் பல்கலைக்கழகத்தில் நான்கு வருட கற்கை நெறியினை ஆங்கில மொழியூடாக மேற்க்கொண்டு பட்டதாரியாக வெளியேறும் எத்தனை பேர் சரளமாக ஆங்கிலத்தில் எழுதவும் வாசிக்கவும் பேசவும் தெரிந்தவர்களாக இருக்கின்றார்கள்.அவர்களின் அறிவு வெறும் காகிதத்திலையே காணப்படுகின்றது. பிள்ளைகள் மத்தியில் ஓர் உள நெருக்கீடு தோன்று வதற்கும் அதேவேளை ஆங்கில மொழியில் கற்கும் மாணவர்கள் தாம் உயர் அந்தஸ்து உடையவர்கள் என்கின்ற தவறான சிந்தனைக்கு ஆட்படுபவர்களாகவும் காணப்படுகின்றார்கள். என்னதான் கூறினாலும் இக்கொள்கை கிராமப் புறங்களுக்கு எட்டாக் கனியாகவே காணப்படும். பாடசாலையில் பயிலுகின்ற மொழி ஒன்றாகவும் பாடசாலைக்கு வெளியே சமூகத் தொடர்பு மொழியாக தமிழோ அல்லது சிங்களமோ காணப்படுவதனால் பெரியதொரு இடைவெளிப்போக்கே காணப்படுகின்றது. வேறு மொழியில் பாண்டித்தியம் பெற வேண்டுமாயின் முதலில் தாய்மொழியில் பாண்டித்தியம் தேவையாகும். எனவே தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.
அகவிழி 1 மே 2013

இவ்வாறான சாதக பாதக தன்மை காணப்பட்ட போதும் ஆங்கிலக் கல்வியினை யாரும் இன்று வெறுக்க முடியாது. வெறுக்கவும் கூடாது. ஏனெனில் உலகத்தை தரிசிக்கும் சரளமாக ஆங்கில மொழி காணப்படுகின்றது என ஜவஹர்லால் நேரு கூறியதனை கருத்தில் கொள்ள வேண்டும்.
மாறி வருகின்ற உலக ஒழுங்குக்கு ஏற்ப மாணவர்கள் அனைத்துத் திறன்களையும் பெற்றுக்கொள்ளும் முகமாக புதிய மாற்றங்கள் அவசியமானதே. இதே நேரத்தில் எங்கோ தெரிகின்ற இலக்கு ஒன்றிற்காக ஏன் குழந்தைகள் உள நெருக்கடிக்கு ஆளாக வேண்டும் என்கின்ற கேள்வியும் எழாமல் இல்லை. இதே வேளையில் பொருத்தமான சூழ்நிலையில் பொருத்தமான ஆசிரியர் களைக் கொண்டு இம்முறையினை அமுல்ப்படுத்துவதில் தவறேதும் இல்லை.
ஆரம்ப நிலைக்கல்வியில் தாய் மொழிதான் இருக்க வேண்டும் என்கின்ற எந்த நியதியும் இல்லை. தேசிய ஆணைக்குழவின் 2003மார்கழி மாத அறிக்கையானது இலங்கையில் ஆங்கிலக்கல்வி பற்றிய சில பரிந்துரைகளைச் செய்த போது ஆரம்ப நிலைக்கல்வியில் ஆங்கில மொழியை பயிற்று மொழியாக்குவது தொடர்பாக பரிந்துரைகள் எதனையும் செய்யவும் இல்லை.
மேலும் இன்று பாடசாலைகளில் ஆங்கில மொழியினை போதிப்பதற்கும் பாடங்களினை ஆங்கில மொழியூடாக போதிப்பதற்கும் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுடன் உரையாடுகின்ற போது அவர்களில் பலர் அதற்கு தாங்கள் பொருத்தமற்றவர்கள் என்றும் தங்களிற்கு வழங்கப்பட்டுள்ள நியமனங்கள் ஆங்கில மொழியூடானது அல்ல என்றும் தங்களிலையே நம் பரிக் கை அற்றவர்களாக காணப்படுகின்றார்கள். இவ்வாறு ஆசிரியர்கள் போதிய தயார்படுத்தல்கள் இன்றி பயிற்சிகள் இன்றி ஆங்கில மொழி போதனா மொழியாக்கப்பட்ட்து ஒரு கவலை தரும் விடையமாகும். எப்படியாகிலும் எமது மாணவர்களும் ஆங்கில மொழித் தேர்ச்சியினைப் பெற்று அதனூடாக கிடைக்கின்ற நன்மைகளை அனுபவிக்கச் செய்வதோடு உள நெருக்கடியற்ற முறையில் இயல்பான நாட்டம் கொண்டமாணவர்கள் ஆங்கில மொழியினையும் ஏனைய மாணவர்கள் தமது தாய் மொழியில் கல்வி பெறுவதற்கு ஆவணை செய்ய வேண்டும்.
உசாத்துணை நூல்கள்
1) கல்வி வரலாற்றடிப்படை, பகுதி-1 இதேசிய கல்வி நிறுவகம்
2) பேராசிரியர் சந்நிரசேகரம், சோ, கலாநிதி கருணாநிதி, மா,
மீண்டும் பயிற்று மொழியாக ஆங்கிலம், அகவிழி வெளியீடு
3) மனித விருத்திக்கான கல்வி பற்றிய தொலை நோக்கு, மார்ச்
2003, தேசிய கல்வி ஆணைக்குழு

Page 23
பிள்ளை நேய அணு
ஓர் ஆலோசனைக் (
பேராசிரியர் சோ. சந்திரே
இலங்கையிலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் isiT606TCBBut UIL FIT606)56TTE (Child Frienly Schools) மாற்றியமைக்கும் செயற்றிட்டமொன்று தற்போது யுனிசெப் நிறுவனத்தின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் கொழும்புப் பல்கலைக் கழகக் கல் வித் துறை விரிவுரையாளர்களும் தேசியக் கல்வி நிறுவன கல்வி அதிகாரிகளும் இணைந்து செயற்பட்டு வருகின்றனர். தென்னிலங்கையில் உள்ள கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் மட்டுமன்றி மாணவர்களுடனும் இவ்விடயம் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது. இலங்கையின் விசேட நிலைமைகளைக் கருத்திற் கொண்ட முறையில் பிள்ளைநேயப் பாடசாலைகளை அமைப்பதற்கான செயற்றிட்டத்தை உருவாக்குவதே இச்செயற்றிட்டத்தின் நோக்கமாகும். இதனை முழுமைப்படுத்தும் நோக்குடன் வடகிழக்கைச்சேர்ந்த கல்வித்துறை அதிகாரிகளுடனான கலந்துரையாடல் ஒன்றும் விரைவில் நடைபெற்றது.
யுனிசெப் நிறுவனமானது பிள்ளைகளின் உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட பிள்ளைநேயக் கல்வி முறைமையும் பாடசாலைகளையும் உருவாக்குவதற்கான சட்டகமொன்றை (Framework) தயாரித்துள்ளது. இப்பாடசாலைகள் குடும்பங்களையும் சமூகங்களையும் ஈடுபடுத்தி, அவற்றின் ஒத்துழைப்புடன் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பான, ஆரோக்கியமான சூழலை வழங்கும்.
இச்சட்டகத்தின் அம்சங்களாவன
> மாணவர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரையில் பாடசாலைகள் அவர்களுக்கு முக்கியமான தனிப்பட்ட, சமூகச் சூழலை வழங்குபவை. ஒவ்வொரு பிள்ளைக்கும் உடல் உணர்வு ரீதியாக பாதுகாப்பான, உளரீதியாக மகிழ்ச்சியாகச் செயற்படக் கூடிய சூழலைப் பிள்ளை நேயப் பாடசாலை வழங்கும். > வினைத்திறன் உள்ள, யாவரையும் உள்ளடக்கிக் கொள்ளும் வகுப்பறையை உருவாக்குவதில் மிகப் பிரதானமான, தனியொரு காரணியாக விளங்குபவர் ஆசிரியராவர். > பிள்ளைகள் இயல்பாகவே கற்பதில் விருப்புடைய வர்கள். ஆனால் கற்பதற்கான பிள்ளைகளின் ஆற்றல் பல சந்தர்ப்பங்களில் அழித்தொழிக்கப்படுகின்றது
 

JG5CUp6O) (D
குறிப்பு
ாகரன்
அல்லது சிதைக்கப்படுகின்றது. பிள்ளைகளுக்கு கற்கும் ஆற்றல் உண்டு என்பதையும் பிள்ளைநேயப் பாடசாலை அங்கீகரிக்கின்றது. கற்போன், அவனது கற்றல் செயற்பாடு என்பவற்றுக்கு முக்கியத்துவ மளிக்கும் வகையிலான ஒரு பாடசாலைக் கலாசாரத் தையும் ஆசிரியர்களின் நடத்தைப் பாங்குகளையும் பாட ஏற்பாட்டையும் அப்பாடசாலை வழங்கும். > பாடசாலையானது பிள்ளைநேயப் பாடசாலை என்ற அந்தஸ்தைப் பெற வேண்டுமாயின் குடும்பங்களின் ஒத்துழைப்பு, ஆதரவு, பங்கேற்பு என்பன அப்பாடசாலைக்கான ஒரு அத்தியாவசியத் தேவை. > பிள்ளைகள் கற்பதற்கான ஊக்கத்தைப் பெறுவதற்கான ஒரு கற்றல் சூழலைப் பிள்ளைநேயப் பாடசாலை ஏற்படுத்தும், ஆசிரியர்கள் பிள்ளைகளை மனமுவந்து வரவேற்பவர்களாயப், சிநேக மனப்பாங்குடன் நோக்குபவர்களாயப் , அவர்களுடைய சகல ஆரோக்கிய மற்றும் பாதுகாப்புத் தேவைகளை நிறைவு செய்பவர்களாய் இருப்பர்.
பிள்ளைகளின் உரிமைகள் பற்றி சர்வதேச உடன்படிக்கையின்படி பிள்ளைகளோடு தொடர்புடைய சகல சமூக முறைமைகளும் நிறுவனங்களும் இவ்வுடன்படிக்கையின் தத்துவங்களின் படியே செயற்பட வேண்டும். குறிப்பாக, ஆரம்பக் கல்வி வயதெல்லையில் உள்ள பெரும்பாலான பிள்ளைகளை உள்வாங்கி அவர்களுக்குக் கல்விச் சேவையை வழங்கும் பாடசாலைகள் இத்தத்துவங்களைப் பின்பற்ற வேண்டும்.
பிள்ளை தரமான ஆரம்பக் கல்வியைப் பெற உரித்துடையவர்கள், உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட பிள்ளைநேயப் பாடசாலைகள் இவ்வுண்மையைப் பெற்றுக் கொள்ள உதவ வேண்டும். அத்துடன் பிள்ளை நேயப் பாடசாலைகள்,
> பிள்ளைகளின் கற்றல் தேவைகளுக்கு ஏற்ப அவர்கள்
கற்பதற்கு உதவுதல். > புதிய நூற்றாண்டின் சவால்களை மேம்படுத்தும்
நோக்குடன் செயற்படல். > அவர்களுடைய உடல்நலனை மேம்படுத்தும்
நோக்குடன் செயற்படல்.
அகவிழி மே 2018

Page 24
கற்பதற்கான பாதுகாப்பான இடவசதிகளை வழங்குதல். பிள்ளைகள் வன்செயலுக்கும் துஷ்பிரயோகத்திற்கும் உள்ளாகாதவாறு பாதுகாத்தல். ஆசிரியர்கள் ஊக்கத்துடனும் மனோபலத்துடனும் (Morale) செயற்படும் சூழலை வழங்குதல். பாடசாலைக் கல்வி மேம்பாட்டுக்குச் சமூகத்தின் ஒத்துழைப்பை நாடுதல்.
என்னும் அம்சங்களைக் கொண்டு இயங்கும் பிள்ளை நேயப் பாடசாலை இரு அடிப்படையான இயல்புகளைக்
கொண்டது.
1.
அது பிள்ளைகளை நாடும் பாடசாலை, ஒதுக்கி வைக்கப்பட்ட பிள்ளைகளைப் பாடசாலையில் சேருமாறு முயற்சி செய்யும் பாடசாலை, பிள்ளைகள் உரிமை உடைய பிரஜைகள் எனச் சிந்திக்கும் பாடசாலை, சமூகத்தில் உள்ள பிள்ளைகளின் உரிமைகள் நலன்கள் என்பவற்றைக் கண்காணிக்கும்
UTLEFT66).
பிள்ளைகளின் நலன்களைக் கருத்திற்கொண்டு இயங்கும் பாடசாலை, பிள்ளைகளின் முழு ஆற்றலையும் வெளிக்கொண்டுவர முயற்சிக்கும் பாடசாலை, பிள்ளைகளை "முழுமையாக’ (அதன் உடல்நலன், மற்றும் நலன்கள்) நோக்கும் பாடசாலைகள், பிள்ளைகள் பாடசாலைக்கு வரு முன்னரும் பாடசாலையை விட்டு விலகிய பின்னரும் அவர்களுக்கு குடும்பத்திலும் சமூகத்திலும் என்ன நடக்கின்றது என்பதை அக்கறையோடு கவனிக்கும் LITLFT6Õ)6).
இவற்றுக்கும் மேலாக பிள்ளைநேயப் பாடசாலையானது
பின்வரும் அம்சங்களில் உயர்ந்த தராதரங்களைப் பேணுதல் வேண்டும்.
01)
D
X
சகல பிள்ளைகளையும் உள்ளடக்கும் தன்மை (Inclusive) இலவசமான கட்டாயக் கல்வியை வழங்குதல், பின்தங்கிய பிரிவினரினால் சமாளிக்கக் கூடிய முறையில் அவர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கும் முறையில் பாடசாலை அமைதல். பிள்ளைகளின் பல்வகைத்தன்மையை கெளரவித்து, தரமான கல்வியை வழங்குதல், உதாரணம்: பெண் பிள்ளைகள், சிறுபான்மையினர் பிள்ளைகள், வன் செயலால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள், உடற்குறை பாடுடைய பிள்ளைகள்.
அகவிழி மே 2013

02)
O3)
04)
பால்நிலை, சமூகவகுப்பு, இனம், ஆற்றல் மட்டம் என்பவற்றில் வேறுபடும் பிள்ளைகளின் தேவைகளைக் கருத்திற்கொண்டு செயற்படல். -
கற்றல் வினைத்திறனுடன் அமைவதை உறுதி செய்தல் தனியாள் முறைக் கற்பித்தல், சனநாயகப் பாங்கான கற்பித்தல் முறைகள் என்பவற்றைப் பயன்படுத்தல், ஒவ்வொரு பிள்ளையினுடைய விருத்திக் கட்டத்திற்கும் ஆற்றலுக்கும் பொருத்தமான கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்தல். பாட உள்ளடக்கத்தை அமைப்பாக்கம் (Structure) செய்து வழங்கல், தரமான கற்றல் சாதனங்களை வழங்குதல். ஆசிரியர்களின் அந்தஸ்து, வருமானம், ஆற்றல் ஈடுபாடு, மனோபலம் என்பவற்றை ஊக்குவித்தல், அவர் கள் பிள்  ைளகளினி உரிமைகளை அங்கீகரிக்குமாறு செய்தல். தேவையானவற்றைக் கற்பித்தலும் தரமாக, சுயமாகக் கற்பதற்கான திறன்களைப் பிள்ளைகளுக்கு வழங்குதல்.
பிள்ளைநேயப் பாடசாலை சமூகங்கள், குடும்பங்கள் என்பவற்றின் ஒத்துழைப்பை நாடுவன. பிள்ளைகள், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கிடையே சுமூகமான உறவை ஏற்படுத்தல், பிள்ளைகளைப் பராமரிக்கும் பிரதான பொறுப்பு குடும்பங்களுடையது. எனவே குடும்பங்களுக்கு வலுவூட்டுவது பற்றிச் சிந்தித்தலும் செயற்படலும் கல்விச் செயற்பாட்டில் சமூகத்தைப் பங்காளிகளாக ஏற்றுக் கொள்ளுதல், பிள்ளைகளின் உரிமைகளைப் பேண சமூகத்தின் உதவியை நாடுதல்.
பால்வகை வேறுபாடு எதுவும் காட்டாது, மாணவரின் பாடசாலை சேர்விலும் கல்விச் சித்தியிலும் பாலின சமத்துவத்தைப் பேணுதல். பெண்பிள்ளைகளுக்கு உகந்த கற்பித்தல் செயற்பாடு, பாடநூல், வசதிகள் என்பவற்றை வழங்குதல். சுகாதாரமான, பாதுகாப்பான சூழலை வழங்குதல், போதிய குடிநீர் வசதி, சுகாதார வசதிகளை ஏற்படுத்தல், உடல் ரீதியான தண்டனைகள், தொந்தரவுகள் என்பவற்றை அகற்றுதல், உடல்-உள சமூக நலனுக்காக சூழலை ஏற்படுத்தல்.

Page 25
கல்விச் சந்தை - மதிப்ெ
க. அருள்ே
சமச்சீர் கல்விக்காக சமர் பல நடத்தி உச்ச நீதிமன்றம் ( சமச்சீர் கல்விதான் வழங்க வேண்டுமென்று தீர்ப்புச் சொல்லி விட்ட பிறகும் அரசுப் பள்ளிகள், தனியார் 2 பள்ளிகள் இடையே ஒரு பனிப் போர் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
தனியார் பள்ளிகள் எனப்படும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நாங்கள்தான் தரமான கல்வியைத் தருகிறோம் ( என்று விளம்பரம் செய்து தம்பட்டம் அடித்துக் கொள்கின்றன. 6 அரசுப் பள்ளிகளில்தான் தகுதியுடைய ஆசிரியர்கள் இருக்கிறார்கள், அது மட்டுமல்லாமல் அரசின் பல்வேறு ( நலத் திட்டங்களும் அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கும் என்று அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்வதை ஊக்கப் படுத்துகிறார்கள்.
தனியார் பள்ளிகளில் தரமான கல்வி வேண்டுமென்றால் காசு கொடுக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் இலவச அனுமதியோடு சத்துணவு, சீருடை, இலவசப் பாடப் புத்தகங்கள், உதவித் தொகையாகப் பணம், உயர் கல்வி பெறும்போது பல்வேறு சலுகைகள். இப்போது இலவச சைக்கிள், லெப்டாப் என்று பல சலுகைகள் கூடி விட்டன. ஆனால், கல்வி தரமானதாக இருக்குமா என்று சந்தேகம். இப்போது பெற்றோருக்கு எந்தப் பக்கம் போவது என்று குழப்பம்.
உள்ளூர்ப் பள்ளிகளெல்லாம் சரியில் லை, திருச்செங்கோடு, நாமக்கல், ஊட்டி, கொடைக்கானல், ஆ பள்ளிகளில் சேர்த்து விடுங்கள், உங்கள் பிள்ளைகள் 5 டாக்டர் ஆவது உறுதி என்று ஒரு குரல் கேட்கிறது. ே இதற்கு எதிர்காலப் பலன் ஒன்று உண்டு. அதாவது, அதிக மதிப்பெண் பெற்று பெரிய வேலையில் சேர்ந்தபிறகு பெற்றோரைக் கவனிக்க முடியாமல் போவதால் முன்பு நான் விடுதியில் தங்கியிருந்ததுபோல் நீங்கள் விடுதிக்குப் போங்கள் என்று பெற்றோரை அனுப்பிவிடுவதுதான்.
ஒரு காலத்தில் எட்டாக்கனியாய் இருந்த கல்வி இப்போது கரை புரண்டு ஓடுகிறது. மகிழ்ச்சி. எல்லோருக்கும் கட்டாயக் கல்வி. அடடா! இந்தக் கட்டுரையின் நோக்கம், மக்கள் தரமான கல்வி, தரமான கல்வி என்று சொல்கிறார்களே அது என்ன? தரமில்லாத கல்வி என்பது என்ன என்பதைப் பற்றி விவாதிப்பதுதான்.
பணம் கொடுத்து வாங்கும் கல்வி தரமான கல்வி! இலவசமாகக் கிடைக்கும் கல்வி தரமற்றது. இதுதான்
 

பண் மட்டும் போதுமா?
மாழி
Dக்களின் மன நிலை. ஏனென்றால், தனியார் பள்ளிகளில் டிக்கும் மாணவர்கள், 1. அதிக மதிப்பெண் பெறுகிறார்கள்.
நன்றாக ஆங்கிலம் பேசுகிறார்கள்.3. ஒழுக்கமாக நடந்து கொள்கிறார்கள்.4. அறிவாளிகளாக இருக்கிறார்கள்.
அதிக மதிப்பெண் பெறுபவர்கள் அனைவரும் தனியார் பள்ளிகளில் படித்தவர்கள்தானா என்பது ஒவ்வொரு முறையும் பத்தாம் வகுப்பு மற்றும் +2 தேர்வு முடிவுகள் வரும்போது தெரிகிறது. தனியார் பள்ளிகளில் படிப்பவர்கள் அனைவரும் ஒழுக்கமானவர்கள், மற்றவர்கள் ஒழுக்கக் கேடானவர்கள் என்பதை நிரூபிக்க முடியுமா?
சரி மேற்கண்ட தரமான கல்வி என்பதற்கான விளக்கம் ஒரு பக்கம் இருக்க, மாணவர்களின் உடல் நலன் பற்றிய கேள்விக் குறி பெரிதாக எதிரே நிற்கிறது. தரமான கல்வியைக் கொடுக்கும் பள்ளிகளால் தரமான உடல் நலனைக் கொடுக்க முடியுமா?
மதிப்பெண், மதிப்பெண் என்று மாணவர்களை மதிப்பெண் இயந்திரங்களாக்கிய பெருமை மெட்ரிகுலேஷன் பள்ளிகளையே சாரும். போட்டி உலகத்தில் மதிப்பெண் பெறாவிட்டால் மதிப்பிழந்து போவீர்கள் என்று சொல்லிப் பயமுறுத்தி, கட்டாயப்படுத்தி இன்னும் சொல்லப் போனால் பலாத்காரம் செய்து மதிப்பெண் பெற வைத்து மாணவப் பருவத்தைச் சீரழித்தது மெட்ரிகுலேஷன் பள்ளிகள்தான். அவர்களைப் பார்த்து அரசுப் பள்ளி மாணவர்களையும் அதே போல் மதிப்பெண் பெற வைக்க வேண்டிய 5ட்டாயத்தை ஆசிரியர்கள் மீது அதிகாரிகளும் பெற்றோர்களும் உண்டாக்குகிறார்கள்.
அதிக மதிப்பெண் பெற வைப்பது, அதற்காக உழைப்பது என்பதெல்லாம் முற்றிலும் தவறு என்று நாம் சொல்லவில்லை. அந்த முறைதான் தவறு என்கிறோம். பத்தாம் வகுப்புப் பாடத்தை ஒன்பதாம் வகுப்பிலேயே நடத்தத் தொடங்கி விடுவதும், பதினொன்றாம் வகுப்புப் பாடத்தை நடத்தாமலே பன்னிரண்டாம் வகுப்புப் பாடத்தை இரண்டாண்டு நடத்துவதும் தனியார் பள்ளிகள் செய்கின்ற அநியாயம். அடித்தளம் இல்லாமல் அடுக்கு மாடி கட்டுகிறார்கள். திரும்பத்திரும்பச் சொல்லிப் பழகி நினைவில் வைத்துக் கொள்வதுதான் அறிவுடைமை! புரிந்து படித்து விரும்பிப் பதியச் செய்து கொள்வதல்ல.)
அகவிழி மே 2013

Page 26
துல்லியமாக மனப்பாடம் செய்து திரும்ப ஒப்புவித்தால் பாராட்டு உண்டு! இணக்கமாக இல்லை என்றால் தண்டனை உண்டு.
ஒடியாட வேண்டிய பருவத்தில் படி, படி என்று முடக்கிப்போட்டு விடுகிறார்கள்.
காலை எழுந்தவுடன் படிப்பு. மாலை முழுதும் விளையாட்டு என்பதைக்கூட பாடப் புத்தகத்தில் மட்டும்தான் தெரிந்து கொள்கிறார்கள். அதனைச் செயல் வடிவம் கொடுக்க அவர்களுக்கு அனுமதியில்லை.
பள்ளியில் விளையாட்டு வகுப்பு கால அட்டவணையில் மட்டுமே. விளையாட அனுமதியில்லை. பள்ளிவிட்டு வந்த பின்னர் பெற்றோர்கள் விடுவார்களா? காசு கொடுத்துப் படிக்க வைக்கும் கஷ்டம் அவர்களுக்குத்தானே தெரியும்? கொடுத்த காசுக்கு மதிப்பெண்ணைப் பெற வைக்க அவர்கள் பங்குக்கு படி, படி, என்று உயிரை எடுப்பார்கள்.
விளையாடாமல் இருப்பதானாலும், பாடச் சுமை தரும் மன அழுத்தத்தினாலும் மாணவர்கள் உடல் பருமன் ஏற்பட்டு அவதிப்படுகிறார்கள். விளையாட்டில் பெறும் வெற்றி தோல்விகளைச் சமமாகக் கருதுவது போல் எதிர்கால வாழ்க்கையிலும் வெற்றி தோல்விகளைச் சமமாகப் பார்க்கும் மனப் பக்குவம் ஏற்படுகிறது. சிறிய தோல்விகளுக்கும் துவண்டு போவதற்கும் வாழ்க்கையையே முடித்துக் கொள்வதற்கும் மதிப்பெண் எந்திரமாய் மாணவர்களை உருவாக்கும் கல்வி முறைதான் காரணம். பல தனியார் பள்ளிகளில் இடம் கிடைக்க வேண்டுமானால் பெற்றோர் இருவரும் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய மாத வருமானம் பள்ளி சொல்லும் கட்டணத்தையும் இதர செலவுகளையும் தயக்கமின்றி செய்யத் தயங்காத அளவிற்கு இருக்கிறதா என்று பார்க்கின்றனர்.
பத்தாம் வகுப்பில் வேறு பள்ளியில் படித்து நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குக் கட்டண விலக்குக் கொடுத்தும், ஒரு லட்சம் பணம் கொடுத்தும் தங்கள் பள்ளியில் சேர்த்துக் கொண்டு 2 தேர்வில் எங்கள் பள்ளியின் தரத்தைப் பாருங்கள் என்று விளம்பரம் செய்து, இந்த மாணவருக்குக் கொடுத்த பணத்தை மற்றவர்களிடம் பிடுங்கும் தந்திரம் தனியார் பள்ளிகளுடையது.
சந்திராயன் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சொல்வதென்னவென்றால், தன்னுடன் பணிபுரியும் சக விஞ்ஞானிகள் பலரும் அவரவர் தாய் மொழியில் படித்தவர்கள்தான் என்பதுதான்.
அரசுப் பள்ளி மாணவர்கள் எங்கிருந்து வருகிறார்கள். அவர்களுடைய பின்புலம், வாழ்க்கை முறை, ஆகியவற்றை எண்ணிப் பார்க்க வேண்டும். பள்ளி விட்டுச் சென்று தன் தந்தையுடன் கடையிலோ தாயாருடன் வீட்டில் செய்யும் கூலி வேலையிலோ உதவி செய்ய வேண்டும்.
அகவிழி மே 2018

அரசுப் பள்ளி, கல்வியை மட்டுமல்லாமல் உணவு உடை, பேருந்து, புத்தகம் எல்லாம் இலவசமாகக் கொடுக்கிறது. எதுவுமே இலவசமாக வந்தால் இளக்காரம் தானே? ஏதோ பள்ளிக்குப் போய் வந்தான் என்றால் சரி என்பதோடு அவர்களின் கவனம் முடிந்து விடுகிறது.
நம் மக்களின் கலாச்சாரச் சிந்தனையை இங்கே கவனிக்க வேண்டும். உழைத்துப் பெற வேண்டிய அரிசி, மிக்சி, கிரைண்டர் போன்றவற்றை இலவசமாகத் தருவார்களா என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இலவசமாகப் பெற வேண்டிய கல்வியைக் காசு கொடுத்து வாங்குவதுதான் பெருமை என்று நினைக்கிறார்கள்.
தனியார் பள்ளிகளில் காசு கொடுத்துப் படிக்க வைப்பதால் அடிக்கடி பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களுடன் பேசி தன்னுடைய குழந்தையைப் பற்றி விசாரிக்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் இலவசம் என்பதால் அந்தப் பக்கமே தலை காட்டுவதில்லை. உண்மையில் இலவசம் என்றாலும் அது ஒவ்வொரு பெற்றோரும் மற்றோரும் கொடுக்கக் கூடிய வரிப் பணம் தானே? கல் விக் கென்றே பல பொருட்களின் மீது வரி விதிக்கப்பட்டுள்ளதே? அதுமட்டுமல்லாமல் குறைந்த அளவாவது கல்விக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் அரசுப் பள்ளிகளிலும் வசூலிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்குக் கொடுக்கும் கட்டணம் என்பது அதிகப்படியான இரண்டாவது கட்டணம் என்ற உண்மை இவர்களுக்கு எப்போது புரியும்?
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் அங்குள்ள கல்வித்தரம் பற்றியும் கழிப்பிடம், நூலகம், ஆய்வுக்கூடம் போன்ற வசதிகள் பற்றியும் தெரிந்து கொள்ளவும், தரமும் வசதியும் சரியில்லை என்றால் கேட்டுப் பெறவும், புகார் செய்யவும், வசதிகளை ஏற்படுத்தச் செய்யவும் உரிமை உண்டு. இன்னும் சொல்லப் போனால், காசு கேட்கும் தனியார் பள்ளிகள் பலவற்றில் பல அடிப்படைக் குறைபாடுகள் இருந்தாலும் கல்வி தரமாக இருக்கிறது என்பதால் (இருப்பதாக நினைத்துக் கொண்டு) வாயை மூடிக் கொண்டு இருந்துவிடுகிறார்கள். வேலூர் அருகே ஒரு தனியார் பள்ளியில் சிமெண்ட் தொட்டியில் குடி நீர் என்று எழுதி வைத்திருந்தது. அதனைக் குடிக்கலாம் என்று வாயில் ஊற்றினால் கடல் நீரைப் போல உப்புக் கரித்தது. அதே பள்ளியின் கட்டடங்களுக்குக் குறுக்கே தாழ்வான உயரத்தில் உயர் அழுத்த மின் கம்பி செல்கிறது. தனியார் பள்ளி வாகனத்தில் ஒட்டை இருந்துதானே மாணவி பலியானாள்?
இது போல பல பள்ளிகளைப் பற்றி பல செய்திகள் உண்டு. குறை சொன்னால் தன் பிள்ளைகளுக்குச் சரியாகக் கற்றுக் கொடுக்க மாட்டார்கள் என்ற பயத்தில் பேசாமல் வந்து விடுகிறார்கள்.

Page 27
அரசுப் பள்ளிகளைப் பற்றி பத்திரிகைகளில் எழுதுபவர்கள் இதுபற்றி ஏன் கண்டு கொள்வதில்லை. அடிப்படை வசதிகள் என்றால் வகுப்பிற்கு மாதம் 1000 ரூபாய் கட்டணம் வாங்கும் பள்ளியின் வசதியும் 100 ரூபாய் வாங்கும் பள்ளியின் வசதியும் வேறுபடுவது போல் அரசுப் பள்ளிகளின் வசதிகளும் மாறுபடும்தான். வசதி இல்லை என்றாலும் சும்மா இருக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்.
கிராமம் முதல் சென்னை போன்ற பெரு நகரங்களில்
உள்ள எல்லா ஆங்கில வழிப் பள்ளிகளிலும் படித்த மாணவர்கள் அனைவருக்கும் ஆங்கிலம் நன்றாகத் தெரியுமா? முக்கியமாக ஆங்கிலத்தில் நன்றாகப் பேச முடியுமா? ஏனென்றால் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள்கூட ஆங்கிலம் எழுதவும் படிக்கவும் செய்கிறார்கள். பேசுவதுதான் முக்கியப் பிரச்சினை.
ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளுக்குச் செல்லும் பெரும்பாலானவர்கள் ஆங்கில வழியில் படித்தவர்கள் என்ற விவரம் எல்லோருக்கும் தெரியும்தானே?
ஆங்கிலம் பேசக் கற்றுக் கொள்வதற்கு ஆங்கில வழியில் படிப்பதைவிட ஆங்கில இந்தியர்கள் அருகில் இருந்தால் அவர்களுடன் பழகிக் கற்றுக் கொள்ளலாம். ஆங்கில இந்தியர்கள் வீட்டில் பத்துப் பாத்திரம் தேய்க்கும் பெண்கள் எவ்வளவு ஸ்டைலாக இங்கிலீஷ் பேசுகிறார்கள்
தெரியுமா? அவர்கள் அறிவாளிகள் வரிசையில்
வருவார்களா?
ஒழுக்கம் என்பதைப் பற்றிப் பேசும்போது அவர்கள் அணியும் உடையைப் பற்றி நிறைய பேர் பேசுவார்கள். வெப்பப் பிரதேசத்தில் ஷ?, டை அணிந்து கொள்வது ஒழுக்கமா? அவஸ்தையா? இன்னொன்று ஆங்கிலத்தில் பேசினால் கெட்ட வார்த்தையாகத் தெரியவில்லையோ என்னவோ?, என்பதும் இன்னும் பலவும் அடிக்கடி ஆங்கில வழி மாணவர்கள் பேசும் வார்த்தைகள்.
இன்றைக்கு டேட்டிங் என்று சொல்லி ஊர் சுற்றுவதும் யார்? இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?
சில பள்ளி முதலாளிகள், தன்னுடைய பள்ளி மாணவர்களுக்குச் சொல்லும் அறிவுரை என்ன தெரியுமா? அரசுப் பள்ளி மாணவர்களுடன் சேராதீர்கள். அவர்கள் ஒழுக்க மில்லாதவர்கள், அரசுப் பள்ளி மாணவிகள் முறையற்ற உறவால் கர்ப்பமாகி விடுகிறார்கள் என்று நவீன தீண்டாமையைச் சொல்லித் தருகிறார்கள். கல விக் கட்டணம் செலுத்த முடியாதவர்களை மனிதர்களாகவே மதிக் காமல் அபாணி டமான குற்றச்சாட்டைச் சொல்லி மாணவர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் இந்தப் புதிய மனுவாதிகள், கல்வியில் வர்ணபேதம் இருக்க வேண்டும் என்கிறார்கள்.
6LEܐܸܢ
gܛܢ
 

அரசுப் பள்ளிகள் பற்றிய குற்றச்சாட்டிற்கு அரசுப் |ள்ளி ஆசிரியர்கள் என்ன பதில் சொல்கிறார்கள் என்று ார்த்தால், மெளனம்தான். தனியார் பள்ளி ஆசிரியர்கள் பொறாமைப்படும் அளவிற்கு இவர்களுக்குச் சம்பளம் ரப்படுகிறது. (இது அதிக சம்பளம் என்று சொல்லவில்லை.) 2ஆனால் அவர்கள் தன்னுடைய சம்பளத்தில் ஒரு பகுதியை தன்னுடைய அறிவையும் தகுதியையும் அதிகப் டுத்திக்கொள்ள நூல்களை வாங்கிப் படிக்கிறார்களா? ான்றால், இல்லை! இதனால் இவர்களுக்கே இவர்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் தன்னுடைய பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். இதைவிட அசிங்கம் இவர்களுக்கு இல்லை.
இப்போது ஆசிரியர்களாக இருக்கும் பலரும் ஆங்கில வழியில் தனியார் பள்ளியில் படித்தவர்கள்தான். இவர்கள் ரன் உயர்ந்த பதவிக்குப் போக முடியவில்லை? அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 5லந்துகொணி டு தேர்வாக முடியாமல் போன 1ல்லாயிரக்கணக்கான பேரும் தனியார் பள்ளியில் ஆங்கில வழியில் படித்தவர்கள்தான். அவர்களுக்கு ஆங்கிலமும் ரியாகத் தெரியவில்லை. தமிழும் சரியாகத் தெரியவில்லை. பொது அறிவில் பொதுவாக அக்கறையில்லை.
இப்போது அரசு ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறது. அதாவது, அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வியை ஒன்றாம் வகுப்பிலிருந்து ஆரம்பிக்கப் போகிறார்களாம். தமிழ்நாட்டின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை ான்று புரட்சிக் கவிஞர் சொன்னது போல் தமிழ்நாட்டின் தமிழ்ப் பள்ளிகளிலும் தமிழ் இல்லாமல் போகப் போகிறது. கல்விச் சந்தையில் அரசுக்கும் தனியாருக்கும் நடக்கும் போட்டியில் விலைபோகாச் சரக்காகிப் போகுமா தமிழ்?
ஆங்கிலத்தை அறிந்து கொள்வதற்குப் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டுமே தவிர பாட வழியையே மாற்றுவது பலன் தராது. தாய் மொழியை இலக்கண வகுப்பை நடத்திவிட்டுப் பிறகு பேசக் கற்றுக் கொடுப்பதில்லை. வீட்டருகில் தெலுங்கோ இந்தியோ பேசுகிறவர்கள் இருந்தால் அவர்கள் பேசுவதைக் கவனித்து நாமும் அந்த மொழியை இயல்பாகக் கற்றுக் கொள்கிறோம். அதுபோலவே ஆங்கிலத்தைப் பேசுவதிலிருந்து இயல்பாகக் கற்றுக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.
அதை விட்டு, முதலில் எடுத்தவுடனே டென்ஸ், வாய்ஸ், என்று ஆரம்பித்தால் நம் மாணவர்களுக்கு டென்ஷனில் வாய்ஸ் வரமாட்டேன்கிறது. அயல் மொழியான ஆங்கில மொழியைக் கற்றுக் கொள்ளும் வேகத்தில் தாய் மொழியைத் தவற விட்டுவிடக் கூடாது. தாய் மொழியைக் காப்பாற்றாத தறுதலை இனமாகத் தமிழினம் தாழ்ந்துவிடக் கூடாது.
அகவிழி மே 2013

Page 28
நடைமுறையிலுள்ள பல்கை கொள்கையும் 2011/2012 சில குறிப்புகள்
செ. ரூபசிங்கம் BSc Dipin சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி,
2011 / 2012 கல்வியாண்டின் பொருட்டான பல்கலைக்கழக அனுமதிகளிற்கான வெட்டுப்புள்ளிகள் கடந்த 09. 02. 2013 அன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவினால் வெளியிடப்பட்டன. மேற்படி வெட்டுப்புள்ளிகளது வெளியீட்டின் பொருட்டு 2011 ஆகஸ்டில் க. பொ. த. உயர்தரப் பரீட்சையினை எழுதிய மாணவர்கள் ஏறத்தாழ 18 மாதகாலங்களுக்கு காத்திருக்க வேண்டியிருந்தமை கல்வித்துறை சார்ந்த அனைவரும் அறிந்த துரதிஷ்ட வசமான விடயமாகும்.
புதிய பழைய பாடத்திட்டங்களில் காணப்பட்ட உள்ளடக்க வேறுபாடுகளைப் பயன்படுத்தி உயர்கல்வி அமைச்சர், கல்வி அமைச்சர், அப்போதைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுத் தலைவர் மற்றும் இவர்களுக்கு வேண்டிய சிலரது சுயநலன்களின் பொருட்டு புள்ளிவிபரவியல் அடிப்படைகளையே மாற்றியமைக்கச் செய்திருந்தமை அனைவரும் அறிந்த விடயமாகும். மேற்படி நபர்களுள் ஊவாவெல்லஸ்ஸ் பல்கலைக்கழக உபவேந்தரும் அடங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நிபுணர்குழு அங்கத்தவர்களுள் ஒருவராவார்
iy
பின்னர் மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தினை நாடியதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறைசார்ந்தவர்களால் திட்டமிட்டு இழைக்கப்பட்ட தவறுகளைத் திருத்துமுகமாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் மேற்படி வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டன. 25% அசாதாரண அதிகரிப்பு, முதலாவது மற்றும் இரண்டாவது மூன்றாவது
அகவிழி மே 2013

லைக்கழக அனுமதி
அனுமதிகளும்
T
Ed., MEd
மன்னார் lo
தடவைகளில் மாவட்ட ரீதியாக கடந்த ஐந்தாண்டு காலப்பகுதியில் பரீட்சைக்கமர்ந்து பல்கலைக்கழக அனுமதி பெற்ற பரீட்சார்த்திகளின் ஒப்பீட்டு விகிதத்தின் அடிப்படையில் மேற்படி அனுமதித் தொகைகள் பகிரப்பட வேண்டும் எனவும் கடந்த ஐந்தாண்டு காலப்பகுதியுள் ஆரம்பிக்கப்பட்ட பாடநெறிகள் மற்றும் தொடர்பாடல் கற்கைநெறி போன்றவற்றின் பொருட்டு விவசாய கற்கை நெறியுடன் தொடர்பான அனுமதி விகிதாசாரத்தினை பின்பற்றுமாறும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. அதேவேளை மேற்படி ஒதுக்கீடுகள் வழமையான 40% தீவளாவிய திறமையடிப்படை, 60% மாவட்ட சனத்தொகை அடிப்படை என்ற வகையில் பகிரப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டது. வழமையான பின்தங்கிய மாவட்டங்களின் பொருட்டான அனுமதி பற்றி இத்தீர்ப்பில் பிரஸ்தாபியக்கப் படவில்லை என்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். இது மேற்படி பின்தங்கிய மாவட்டங்களின் பொருட்டான அனுமதி போலியான தோற்றப்பாட்டினை ஏற்படுத்திக் கொள்வதற்கான ஏற்பாடு என்பதை உறுதிப் படுத்துவதாக உள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களது எட்டு மாவட்டங்களும் மேற்படி 16 மாவட்டங்களுள் அடங்குபவை என்பது குறிப்பிடத்தக்கது. கொடிய 3 தசாப்தகால யுத்ததின் பின்னரான மிகக்குறைந்தளவிலான நியாயப்படுத்தப்பட்ட பாரபட்சத்தினைக்கூட இம்மாவட்டங் களது மாணவர்கள் அனுபவிப்பதை இது முழுவதுமாக தடை செய்தது. இன்னொரு வகையில் ஏனைய சமூக, கலாச்சார, பொருளாதார துறைகளிலான கபளிகரங்கள் ஆக்கிரமிப்புகள் சிறுபான்மைச் சமூகங்களின் இருப்பினைக் கேள்விக் குறியாக்கும் யுத்தத்துக்கு பின்னரான நடவடிக்கை களை ஒத்ததாக உயர்கல்வித்துறையில இந்த நடவடிக்கை அமைகின்றது.
மேற்படி தீர்ப்பின் மூலம் இதே உச்சநீதிமன்றம் வழங்கிய பழைய புதிய பாடத்திட்டங்களின் பொருட்டான தனித்தனி Z புள்ளிக் கணிப்புக்கள் அடிப்படை மனித உரிமைகள் மீறாதவாறு பொதுப்பட்டியலின்படி பல்கலைக் கழக அனுமதி வழங்கப்பட வேண்டும் என்ற உத்தரவு வலுவிழக்கச் செய்யப்பட்டது. பொதுப்பட்டியலின் படியான அனுமதியில் திறமையடிப்படையிலான மாணவர் தொகையில் தமிழ்மொழி மூலத்தினரது எண்ணிக்கை கூடிய பெறுமானமாக அமைந்திருந்தது. இது தொடர்பாக

Page 29
கல்வி அமைச்சரும் உயர்கல்வி அமைச்சரும் பாராளு மன்றத்தில் பிரஸ்தாபிக்கச் செய்திருந்தனர்.
மேற்படி தீர்ப்பினால் ஆரம்பம் முதலே பாடத்திட்டங்களது வேறுபாடுகளைப் பயன்படுத்தி 2011 / 2012 பல்கலைக்கழக அனுமதியில் குறித்த சிலர் நன்மைபெற மேற்கொண்ட முயற்சி சட்டத்தின் துணையுடன நிறைவேற்றப்பட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படலாயிற்று. இது ஒருவகையில் 17 வது அரசியலமைப்பு திருத்தத்தினை உச்சநீதிமன்றம் அங்கீகரித்ததை ஒத்த விடயமாகும். எவ்வாறாயினும் மேற்படி இறுதித் தீர்ப்பின் மூலம் 2011 / 2012 பல்கலைக்கழக அனுமதியில் பாரிய அசமத்துவங்கள் எழுவதற்கான சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டது. இயல்பாகவே பல்கலைக் கழக அனுமதி முறைமையிலுள்ள சிக்கல் தன்மைகளையும் இரகசிய நடைமுறைகளையும் பயன்படுத்தி சிறுபான்மைச் சமூகங்களின் பொருட்டு மறுக்கப்படும் அனுமதித் தொகைகள் மேலும் அதிகரிப் பதற்கும் அவை பெரும் பான்மைச் சமூகத்தை நோக்கித் திருப்பப்படவும் சட்ட அங்கீகாரம் கிடைக்கச் செய்தது. அதேவேளை உச்சநீதி மன்றத்தினால் குறிப்பிடப்பட்ட 25% அதிகரிப்பு அர்த்த மில்லாத தாக்கப்பட்டுமுள்ளது.
இத்தகைய பல்கலைக் கழக பாடநெறிகளின் பொருட்டான கேள்வி நிரம்பல் அசமத்துவப் பாங்கு இதற்கு முன்னர் ஒருபோதும் பிரதிபலிக்கப்படாததாகும். இம்முறை பல்கலைக்கழக அனுமதிக் கைநுாலில் குறிப்பிடப்பட்டிருக்காத மொத்தமான பாடநெறிகளுள் 30% தினை கொண்ட 28 பட்டப்பயில் நெறிகளின் பொருட்டான விண்ணப்பதாரிகளால் பூர்த்தி செய்யப்பட வேண்டிய உளச்சார்புப் பரீட்சைகளது தேவையும் மேற்படி தீர்ப்பினைத் தொடர்ந்து அத்தியாவசியமான தாக்கப்பட்டுள்ளது. இதுவும் சிறுபான்மைச் சமூகங்களது அனுமதித்தொகை வீழ்ச்சி அடைவதற்கு காரணமாகும் விடயங்களில் ஒன்றாகும்.
முதலாவது மற்றும் இரண்டாவது மூன்றாவது தடவைகள் பரீட்சைக்கமரும் மாணவர் தொகைகள் எப்பொழுதும் மாறாத இயல்பான போக் கினைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்பு அரிதானதாகும். இவை ஆசிரிய மற்றும் பெளதிக வளங்கள், ஆசிரியர்களது அர்ப்பணிப்புடனான மற்றும் அக்கறையற்ற செயற்படு தன்மைகள், வாண்மைகள், முகாமைத்துவப் பொறி முறைகள், அவற்றின் அமுலாக்கம் மற்றும் மாணவரது சமூக பொருளாதார வளங்கள் முறைசார் கல்வி முறைமைகளது பலங்கள் பலவீனங்கள் முறைசாரா கல்விமுறைமைகளது ஆக்கிரமிப்புக்கள் சமூகரீதியிலான நகர்ப்புற கிராமிய வேறுபாடுகள் போன்ற பல்வேறு காரணிகளால் தீர்மானிக்கப்படு பவையாகும்.
முதலாவது மற்றும் இரண்டாவது மூன்றாவது தடவை களில் பரீட்சைக்கமரும் மாணவர்களின் தொகை

மாவட்டங்கள் தோறும் பாரிய வேறுபாடுகளைக் கொண்டது. பொதுவாக கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் முதலாவது தடவையிலேயே வாய்ப்புக்களைப் பயன்படுத்தும் தன்மை அதிகமாக இருக்கும் உதாரணமாக மன்னார் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டு காலப்பகுதியில் முதலாவது தடவை பரீட்சைக் கமர்ந்து அனுமதி பெறும் மாணவர் தொகை அதிகரித்துச் சென்ற அதேவேளை வவுனியா மாவட்டத்தில் தீவளாவிய திறமையடிப்படையில் அனுமதி பெறும் மாணவர் தொகை பாரிய வீழ்ச்சியினைக் கண்டு வந்தது. சில பாடநெறிகளின் பொருட்டு மன்னார் மாவட்டம் தீவளாவிய திறமையடிப்படையில் ஆகக் கூடுதலான இடங்களை பெற்றுக் கொள்ளச் செய்தது. சமாதானமும் முரண்பாடு தீர்த்தலும் கற்கை நெறியில் 2010 / 2011 கல்வியாண்டின் பொருட்டு 30 இடங்களுள் 4 அனுமதிகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைப் பொறுத்தவரை முதலாவது மற்றும் இரணி டாவது மூன்றாவது தடவைகள் பரீட்சைக்கமரும் மாணவர் தொகைகள் ஒரு நியம மட்டத்தைச் சூழ சிறிய தளம் பல்களை மட்டுமே கொண்டிருப்பவையாகும். அதேவேளை குறிப்பாக உயிரியல் துறையில் புதிதாக ஆரம்பிக்கப்படும் கற்கை நெறிகளைப் பொறுத்தவரை வவுனியா மாவட்டம் தேசிய ரீதியில் உச்ச விருப்பத் தெரிவுகளை ஆரம்ப காலங்களில் காட்டி வந்தது. பின்னர் கடந்த 6 வருட காலப்பகுதியில் மன்னார் மாவட்டத்தில் இத்தகைய விருப்பத் தெரிவு ஒழுங்குகள் பிரதிபலிக்கச் செய்தன.
பாடநெறித் தேர்வுகளும்கூட மாவட்டங்களிடையே பாரிய தளம்பல்களைக் கொண்டவையாகும். தமிழ் மொழிமூல மாணவரது விருப்பத் தெரிவுகள் பாரம் பரியத்தன்மை கொண்டவையாக உள்ள அதேவேளை சிங்கள மொழிமூல மாணவரது விருப்பத் தெரிவுகள் வேலை கொள்வோரால் பெரிதும் விரும்பப்படும் திறன்களை வளர்க்கும் துறைகளாக உள்ளமை அண்மைக்கால கல்வியியல் ஆய்வுகள் மூலம் வெளிப்பட்ட விடயமாகும்.
மேற்படி வெட்டுப்புள்ளிகளது வெளியீட்டின் பொருட்டு இறுதித் தருணத்தில் கூட உச்சநீதிமன்றத்தின் நெறிப் படுத்தலை புதிய பிரதம நீதியரசரிடம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பெறவேண்டி யிருந்தது. குறிப்பாக குறித்த பல பாடநெறிகளின் பொருட்டு மாவட்டரீதியில் தகுதிவாய்ந்த அபேட்சகர்கள் இல்லாத பட்சத்தில் வெற்றிடங்களின் பொருட்டான வாய்ப்புக்களை ஏனைய மாவட்டங்களின் பொருட்டு ஒதுக்கிக் கொள்வதற்கான அனுமதி பெறப்பட்டது. இத்தகைய நடைமுறையும் 2011 / 2012 இன்பொருட்டான திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட பிறழ்வுகளும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினது வழமையான அனுமதிக் கொள்கையில்
அகவிழி மே 2013

Page 30
ஏற்படுத்திய தாக்கங்களை வெளிப்படுத் தவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.
வெட்டுப்புள்ளிகள் பழைய மற்றும் புதிய பாடத் திட்டங்களின் பொருட்டு தலா 94 பாடநெறிகளிற்காக 25 மாவட்டங்களுக்குமாக 2350 x 2 ஆக 4700 இடங்களின் பொருட்டானவை. இவற்றுள் பழைய பாடத்திட்டத்தில் 371, புதிய பாடத்திட்டத்தில் 525 ஆக ஒட்டுமொத்ததில் 896 இடங்கள் தகுதியான விண்ணப்பதாரிகளைக் கொண்டி ருக்கவில்லை. இது மொத்த அனுமதித் தொகையில் 19% மாகும். ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் கிடைக்கப் பெறும் 11 பாடநெறிகளின் பொருட்டும் பழைய பாடத்திட்டத்தில் 93 இடங்களும் புதிய பாடத்திட்டத்தில் 197 இடங்களும் பாடநெறி ரீதியாகவும் மாவட்ட ரீதியாகவும் தகுதியான பரீட்சார்த்திகளைக் கொண்டிருக்கவில்லை. அதாவது மொத்தத் தொகையில் 33% இடங்கள் ஒருபல்கலைக்கழகத்தில் மட்டும் தகுதியான விண்ணப்ப தாரிகளைக் கொண்டிருக்கவில்லை. உதாரணமாக ஏற்றுமதி விவசாய கற்கைநெறியின் பொருட்டு புதிய பாடத்திட்டத்தின்கீழ் கொழும்பு, கண்டி, மாத்தறை ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்து மாத்திரமே மாணவர்கள் தெரிவாகியுள்ளனர். இத்தகைய நிலைமை ஏனைய பெரும்பாலான கற்கை நெறிகளின் பொருட்டும் நிலவச் செய்கின்றது. இவ்வாறே வேறு சில உளச்சார்புப் பரீட்சைத் தேவையுடைய பாடநெறிகளின் பொருட்டும் இடம் பெற்றுள்ளது. சப்ரகமுவ பல்கலைக்கழக உடலியல் கல்விப் பாடநெறியின் பொருட்டு பழைய பாடத்திட்டத்தின்கீழ் கொழும்பு, காலி, குருநாகல, பதுளை, கேகாலை, இரத்தினபுரி ஆகிய ஆறு மாவட்டங்களிலிருந்து மட்டும் மாணவர் அனுமதிக்கப் பட்டுள்ளனர். வெற்றிடங்களுள் பெரும்பாலானவை பழைய பாடத்திட்டத்தில் 165 புதிய பாடத்திட்டத்தில் 203 ஆக ஒட்டு மொத்தில் 368 இடங்கள் வடக்கு கிழக்கு மாவட்டங்களுள் அடங்கும் 8 மாவட்டங்களில் ஏற்பட்ட தாகும். அதாவது வடக்குகிழக்கில் தகுதியான அபேட்சகர்கள் இல்லாத படியால் அவை வேறுமாவட்டங் களின் பொருட்டு சனத்தொகை விகிதாசார அடிப்படையில் பிரித்து ஒதுக்கப்பட்டுள்ளன. இன்னொரு வகையில் குறிப்பிடுவதாயின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினது அனுமதிக் கொள்கையில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது அல்லது ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 60 மூ மாவட்ட சனத்தொகை அடிப்படையிலான ஒதுக்கீடுகள் இம்முறை வடக்குக் கிழக்கிற்கு கிடைத்த அளவு புறக்கணிக்கத்தக்க அளவிலானதாகும். வடக்கு கிழக்கைப் பொறுத்தவரை புதிய பாடத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்திலிருந்து 11 பாடநெறிகளுக்கும் கிளிநொச்சி யிலிருந்து 48 பாடநெறிகளுக்கும் மன்னாரிலிருந்து 36 பாடநெறிகளுக்கும் முல்லைத்தீவிலிருந்து 38 பாடநெறி களுக்கும் வவுனியாவிலிருந்து 16 பாடநெறிகளுக்கும்
அகவிழி மே 2013

திருகோணமலையிலிருந்து 17 பாடநெறிகளுக்கும் மட்டக்களப்பிலிருந்து 16 பாடநெறிகளுக்கும் அம்பாறை யிலிருந்து 16 பாடநெறிகளுக்கும் தகுதியான அபேட்சகர் களது விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றிருக்கவில்லை. இவ்வாறே பழைய பாடத்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத் திலிருந்து 14 பாடநெறிகளுக்கும் கிளிநொச்சியிலிருந்து 27 பாடநெறிகளுக்கும் மன்னாரிலிருந்து 27 பாடநெறி களுக்கும் முல்லைத்தீவிலிருந்து 30 பாடநெறிகளுக்கும் வவுனியாவிலிருந்து 23 பாடநெறிகளுக்கும் திருகோண மலையிலிருந்து 18 பாடநெறிகளுக்கும் மட்டக்களப்பிலிருந்து 13 பாடநெறிகளுக்கும் அம்பாறையிலிருந்து 13 பாடநெறிகளுக்கும் தகுதியான
அபேட்சகர்களது விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றிருக்கவில்லை.
மேற்படி தகுதிவாய்ந்த அபேட்சகர்களைக் கொண்டிராத பாடநெறிகளுள் பெரும்பாலானவை அனுமதித் தகமை களுடன் மேலதிகமாக உளச்சார்புப் பரீட்சைகள் மற்றும் செய்முறைப் பரீட்சைகள் வேண்டப்பட்டவையாகும். 1999 கல்வி மறுசீரமைப்பு பரிந்துரைகளுடன் பெரும்பாலான பாடநெறிகளின் பொருட்டு உளச்சார்புப் பரீட்சைகள் நடாத்தப்பட்டன. இவற்றுள் குறிப்பாக ஊவா வெல்லஸ்ஸ பலகலைக்கழகத்தில் நடைமுறையில் உள்ள 11 பாட நெறிகளின் பொருட்டும் இத்தேவையை மாணவர்கள் பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது. இப்பரீட்சைகள் ஆங்கில மொழிமூலத்தில் அமைந்திருந்தன. ஆங்கிலமொழியினது கற்றல் கற்பித்தல் தொடர்பான வளங்களது வாய்ப்புக்கள் தேசியரீதியில் சமச்சீரற்றதாக உள்ளமை மேற்படி பரீட்சைகளில் வெவ்வேறு மாவட்டங்களிடையில் பெறு பேறுகள் வேறுபடக் காரணமாகும். மேலும் இப்பரீட்சைகளது நம்பகம் மற்றும் தகுதி தொடர்பாக கேள்வி எழுப்பப் பட்டதுடன் மேலதிக பரீட்சைத் தேவைகளை கொண்டிருந்த சில பாடநெறிகளின் பொருட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து மட்டுமன்றி தமிழ்பேசும் மாணவர்கள் தீவளாவிய ரீதியில் தொடர்ச்சியாக தெரிவு செய்யப்படாமல் இருந்து வந்தது நடைமுறையாகும்.
இக்கட்டுரையாளனால் இவ்விடயமும் மற்றும் பல்கலைக்கழக அனுமதி தொடர்பாக சிறுபான்மையினர் எதிர் கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளும் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணையின்போது சுட்டிக்காட்டப் பட்டிருந்தன. இதனாலோ அல்லது வேறேதும் காரணத்தினாலோ 2011 / 2012 கல்வியாண்டின் பொருட் டான அனுமதிக் கைநூலில் தகவல் தொழில்நுட்பமும் முகாமைத்துவமும் பாடநெறியினைத் தவிர ஏனைய 27 பாடநெறிகளின் பொருட்டு உளச்சார்புப் பரீட்சைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டிருந்தன. ஆயினும் பின்னர் உச்சநீதிமன்றம் 5 வருடகால நியமங்களைப்

Page 31
பயன்படுத்துவதற்காக இப்பரீட்சைகளையும் நடாத்துமாறு தீர்ப்பளித்திருந்தது. அதனடிப்படையில் பரீட்சைகளை நடாத்தி வெட்டுப்புள்ளிகளை வெளியிட்டபோது மேற்படி விளைவு ஏற்பட்டுள்ளது.
மேற்படி விபரங்களிலிருந்து தமிழ் மொழிமூல மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிகளிலிருந்து ஓரங்கட்டப்படுகின்றமை தெளிவாகின்றது. இதற்கு 3 தசாப்த காலங்களாக தொடர்ந்த யுத்தம் மட்டுமன்றி வேறுதிட்டமிட்ட அடிப்படையிலான காரணங்களும் கூட ஏதுவாக அமைகின்றன. இதன் ஒருபிரதிபலிப்பாகவே Z புள்ளி தொடர்பான பிரச்சினைகளின்போது பாராளுமன்றத்தில் உயர்கல்வி அமைச்சராலும் கல்வி அமைச்சராலும் தமிழ்மொழிமூல மாணவர்களது அதிரித்த வாய்ப்புப் பற்றி பிரஸ் தாபிக் கப்படமையாகும். அமைச்சர் தனது ஆதங்கத்தை உளச்சார்புப் பரீட்சைகளை அடிப்படையாகக் கொண்டு நிறைவேற்றி யிருப்பதற்கான வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது. நியாயமான வெளிப்படுத்தக் கூடிய காரணங்களாயின் அவை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்ட போது வெளிப்படுத்தப் பட்டிருக்கவேண்டும். அது வழமையான நடைமுறையும் கூட. ஆனால் இந்த முறை அத்தகைய வெளிப்படுத்துகைகள் எதுவும் இடம்பெற்றிருக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய செல் நெறி காலப் போக் கில் பெரும்பான்மைச் சமூகத்துக்கு மட்டும் பெரும்பாலான பல்கலைக் கழக வாய்ப்புக்கள் என்ற நிலைமையை சட்டபூர்வமாக்கிக் கொள்ளப் பயன்படுத்தப்படலாம். இது 1974 களில் கொண்டு வரப்பட்ட தரப்படுத்தலை விட பாதகமான விளைவுகளை உண்டு பண்ணக்கூடியது. இத்தகைய நிலைமை எதிர்காலத்தில் பல்கலைக்கழக அனுமதிக் கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான அடிப்படையாக அமைவதற்கான வாய்ப்பு உண்டு. அத்தகைய கோரிக்கைகள் பல பரிமாணங்களிலும் மேலெழுந்து வருகின்றமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
குறித்த உளச்சார்புப் பரீட்சைகள் தொடர்பான தகவல்கள் மாணவர்களை சென்றடையா திருந்திருக்கலாம் அல்லது குறித்த மாவட்டங்களில் பரீட்சைக்கமர்ந்த அனைவருமே சித்தியெய்தத் தவறியிருந்திருக்கலாம். அதிலும் குறிப்பாக வடக்கு கிழக்கு மாணவர்கள் மட்டும் உளச்சார்புப் பரீட்சைகளில் பெருமளவில் சித்தியெய்தத் தவறியிருப்பதற்கு கல்வித்துறை சார்ந்த அனைவருவே வகைகூற வேண்டியவர்களாவர். அதிலும் குறிப்பாக வடக்கு கிழக்கு சார்ந்த கல்விச் சமூகத்தினர்கள் அதிலும் அரசாங்கத்தினது கொள்கைகளை அமுலாக்கும் அதிகாரிகள் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் முதலான அனைவரதும் வகைகூறலுக்குட்பட்டதாகும்.
 

எது எவ்வாறிருப்பினும் Z புள்ளி விவகாரத்தில் திட்டமிட்ட முறையில் தவறிழைத்த எவருமே தண்டிக்கப் படவில்லை என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். அமைச்சரவை மாற்றத்தின்போதுகூட கல்வி, உயர்கல்வி அமைச்சுப் பொறுப்புகளில் மாற்றங்கள் எவையும் மேற் கொள்ளப்பட்டிருக்கவில்லை. இதன்மூலம் நிறைவேற்று அதிகாரம் கல்வியை தனியார் மயப்படுத்தி தரமிறக்குவதில் குறியாக உள்ளமை தெளிவாகின்றது. இது அவரது அமைச்சர்களால் பகிரங்கமாகவே வெளிப்படுத்தப்பட்டு வரும் விடயமுமாகும். எனவே வடக்குகிழக்கிலும் கல்வித்துறைசார்ந்த அதிகாரிகளது நடவடிக்கைகளில் மாற்றங்கள் எவையும் ஏற்படப் போவதில்லை.
மக்கள் நன்மை கருதி திட்டங்களை அமுல்படுத்து வதற்கான உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்கான அதிகாரம் உச்சநீதிமன்றத்துக்கு உண்டு என்பதனால் உச்சநீதிமன்றம் மேற்படி வழக்கில் Z புள்ளி கணிப்பு முறை, மற்றும் பல்கலைக்கழக அனுமதிக் கொள்கை நடைமுறைப் படுத்தப்படும் விதம் போன்ற விடயங்களைப் பகிரங்கப் படுத்துமாறும் அசாதாரண அனுமதியினால் ஏற்படக்கூடிய பல்கலைக்கழக கல்வியினது தரத்தாழ்வினை மேம்படுத்து வதற்கான வழிமுறைகளையும் சிபார்சு செய்து அவற்றை அமுலாக்குமாறும் தீர்ப்பளித்திருப்பின் அது தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்கும். அதன் மூலம் பல்கலைக்கழக அனுமதியின் போது ஏற்படக்கூடிய தவறுகளைத் தவிர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புக்களை உண்டு பண்ணியிருக்கலாம். பல்கலைக்கழக அனுமதியின் போது வெவ்வேறு கட்டங்களில் உண்டாகும் வெற்றிடங் களை நிரப்புவதற்கான நடைமுறையினை உறுதிப்படுத்தி யிருக்கலாம். மேற்படி இரண்டு பாடத்திட்டங்களிற்கும் ஆன பல்கலைக்கழக அனுமதி வெட்டுப்புள்ளிகளிற் கிடையில் ஒரு இழிவு விலகல் எல்லையினை வகுப்பதன் மூலம் ஒரு பகுதியினருக்கு பாரிய பாதிப்புக்களை தவிர்ப்பதற்கு ஏற்பாடு செய்திருப்பின் குறித்த தீரப்பு பெறுமதி வாய்ந்ததாக இருந்திருக்கும். சகலருக்கும் நன்மை பயக்கத்தக்க வகையில் நீதிநிலைநாட்டப் பட்டிருந்திருக்குமேயானால் பின்னர் சொந்த விடயத்தில் இயற்கை நீதியை நாடவேண்டிய தேவை நீதித்துறையின் காவலருக்கு வேண்டப்படாது இருந்திருக்கலாம். எவ்வாறாயினும் முன்னர் சிறுபான்மையினர் என்றிருந்த நிலைமை மாறி தற்பொழுது இலங்கைத்தீவில் அதிகார பீடத்திலுள்ளவர்களையும் அவர்களது விசுவாசிகளையும் தவிர மற்றும் அனைவருமே இயற்கை நீதியினை நாடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பது மிகைப் படுத்தப்பட்ட விடயமன்று.
அகவிழி மே 2018

Page 32
மாணவரின் கணிப்பீட்
செயலடைவுக் கோவையி
கல்விமாணி எஸ்.எல். ம ஆசிரிய ஆலோசகர், அட்டா6ை
அண்மையில் ஒருபாடசாலைக்கு சென்றிருந்தபோது ஆரம்பக் கல்வி பயிற்றப்பட்ட ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் கற்பித்துக் கொண்டிருந்தார். அவரிடம் மாணவர்களின் கணிப்பீடுகள் சம்பந்தமாக கலந்துரையாடி மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், மாணவர் களின் செயற்பாடுகள் அனைத்தையும் கோவைப்படுத்தப் படுவதன் அவசியம் பற்றி உரையாடியதன் பின்னர் செயல் அடைவுக்கோவையை சரியான முறையில் அறிந்து அதன் பிரகாரம் மாணவர்களின் கணிப்பீட்டை மேற்கொள்ளுமாறு அறிவுரை கூறினேன். அப்போது அந்த ஆசிரியர் உடனடியாக செயலடைவுக்கோவை என்றால் என்ன என்பது தனக்குத் தெரியாது என்றும், தனக்கு அதுபற்றிய அறிவு இல்லையென்றும் கூறினார். அப்போது அவருடைய வகுப்பு மேசையில் இருந்த ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி நுாலின் இறுதியில் மாணவர்களது அடைவினை மேற்கொள்ளும் முறைசார் ரீதியாகக் கணிப்பிடப்படுகின்ற ஒரு பகுதியில் காணப்படுகின்ற செயல் அடைவுக்கோவையை காட்டி இதுதான் செயலடைவுக்கோவை என்பதை அந்த ஆசிரியரிடம் காண்பித்து இதனை நன்கு வாசித்து அறிந்து செயற்படுங்கள் என்றும், ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி நூலை நன்கு வாசித்தறிந்து மாணவர்களுக்கு சரியான முறையில் பயன்படுத்துமாறும் வேண்டிக் கொண்டேன்.
இன்றைய அவசர உலகில் இவ்வாறுதான் பல ஆசிரியப் பெருந்தகைகள் காணப்படுகின்றனர். உண்மையில் மாணவர்களின் அடைவு மட்டத்தினை மேற்கொள்கின்றபோது பலர் உண்மையாக செய்வதில்லை. வகுப்பறையில் ஏதோ தொழிலுக்கு வந்தோம், ஏதோ படிப்பித்தோம் மாதம் முடிவில் சம்பளம் கிடைத்துவிட்டால் சரி என்கிற மனோநிலையில்தான் இன்றைய ஆசிரியர் உலகத்தில் பலர் காணப்படுகின்றனர். இதுகுறிப்பாக பின்தங்கிய பிரதேசங்களிலும், கிராமப்புறங்களில் காணப்படுகின்ற ஆசிரியர்களில் சிலரும் இந்த மாதிரியான மனோ நிலையில் காணப்படுகின்றனர். இதற்கு ஆசிரியர் களது வேதனம் குறைவு என்கிற ஒரு பிரச்சினையும் உள்ளது. எது எவ்வாறாயினும் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மாணவர்கள் சரியான முறையில் கையாளப்பட்டு நாளை உலகின் நற்பிரஜையாக மாத்திரமன்றி அந்தப் பிள்ளையின் குடும்பத்துக்குரிய ஒரு முத்தாகவும் அடையாளப்படுத்தப்பட்டு
அகவிழி மே 2013

டு முறைக்கு ன் முக்கியத்துவம்
ன்சூர்
ாச்சேனை
தன்னுடையதும், தனது குடும்பத்தினரினதும் வாழ்வுக்குரிய சம்பாத்தியத்தினை பெற்றுக் கொள்ளவும் இந்த பிள்ளையை நல்லமுறையில் படிப்பிக்க வேண்டும் என்கிற அவாவை பெற்றோரின் மனதிலிருந்து அகற்றுகின்ற ஒரு நம்பிக்கைத் துரோகத்தனமான செயலாகவே பார்க்கப்படுகின்றது. மாணவர்களின் சிறப்பான கற்றலை மேற்கொள்வதற்குரிய ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி நூலை வாசிக்காத பல ஆசிரியர்கள் வகுப்பறைகளில் காணப்படுகின்றனர் என்கிற ஒருநிலையில் பெற்றோரின் இந்த எதிர்ப்பார்ப்பினை நிறைவேற்றுவதில் ஆசிரியர்களே தடைகளாக அமை கின்றனர் என்பதுதான் இன்று தனியார் கல்வியின் மேம்பாட்டுக்கு வித்திடுகின்றது என்பதே யதார்த்தமான உண்மையாகும்.
செயல் அடைவுக்கோவை என்பது பற்றி பலதரப்பட்ட அறிஞர்கள் கருத்துக்களை வழங்கினாலும் பொதுவாக மாணவர்களின் முன்னேற்றத்தைக் கணிப்பீடு செய்வதற்கான முறைகளில் முறைமையில் கணிப்பீட்டு முறையைப் போன்றே முறைசார்ந்த கணிப்பீட்டு முறைகளும் காணப் படுகின்றன. அந்தவகையில் மாணவர்களின் கற்றல் அமைப்புக்குப் பரிச்சயமான முறையில் கற்கும் விடயங்களின் தன்மைக்கு அமைய இவ்வகைக் கணிப்பீட்டு முறை வழிகாட்டுகின்றது. மேலைநாடுகளில் பண்புரீதியான முறையில் அமைந்த மதிப்பீட்டு முறைக்கே அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. அந்தவகையில் இந்த செயலடைவுக்கோவை முறை பண்புரீதியான மதிப்பீட்டு முறைக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளது எனலாம்.
அறிஞர் ஆர்ட்டர் மற்றும் ஸ்பென்டல் ஆகியோர் “குறித்ததோர் விடயத்தில், அல்லது பாடத்தினுள் ஒரே நோக்கை அடிப்படையாகக் கொண்ட மாணவர்களின் செயற்பாடுகளினது சேகரித்தல் தொடர்பாக அவர்களது முயற்சி, செயற்பாடுகளே இதற்கான அடைவாகும். இந்த சேகரிப்பில் மாணவர்களின் பங்குபற்றல், தெரிவுக்கான வழிகாட்டல்கள், திறமையை மதிப்பீடுவதற்கான நியதிகள், மாணவர்களின் சுய பிரதிபலிப்புக்கான சான்றுகள் உள்ளடக்கப் பட்டிருக்கும் நிலைமையே செயலடைவுக் கோவை’ என இவர்கள் கூறுகின்றனர். இவ்வாறு மாணவர்கள் வகுப் பறையில் குறிப்பிடப்படுகின்ற பாடங்களில் ஆசிரியர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற

Page 33
வேலைத் திட்டங்கள், செயற்பாடுகள், ஆக்கத்திறன்கள், கையெழுத்து வடிவங்கள், ஒட்டுச் சித்திரங்கள், பயிற்சிகள், மாதிரி வேலைகள் என அனைத்துப் பாடப்பரப்புக்களிலும் மேற்கொள்ளப்படுகின்ற விடயங்களை கோவைப்படுத்துகின்ற ஒரு செயற்பாடே இந்த செயலடைவுக் கோவையில் உட்படுத்தப்படுகின்றன.
பொதுவாகக் கூறினால் வகுப்பறையில் ஆசிரியரால் கற்பிக்கப்படுகின்ற கற்றல் சார்ந்த அடைவுகளை மதிப்பீடு
செய்வதற்கான நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு முறைசார்ந்தரீதியில் தகவல்களைத் ஒன்றுசேர்த்து கணிப்பிடப்படுகின்ற ஒரு முறையாகக் கொள்ளலாம். மாணவர்களைக் கணிப்பிட உபயோகிக்கக் கூடிய மிகவும் பயனுறுதியுள்ள ஒருமுறையாக இது கருதப்படுகின்றது. மாணவரின் கற்றல் தொடர்பான இடர்களையும், அவர்களது திறன்களையும் தொடர்ச்சியாகக் கணிப்பிடும் ஒருமுறை என்கிற வகையில் அதிக முக்கியத்துவமுடையதாக இது காணப்படுகின்றது. பொதுவாக ஆரம்பத்தரங்களில் கற்பிக்கும் ஆசிரியர்கள் யாவரும் மாணவர் ஒவ்வொரு வரினதும் வேலைகளை அவர்கள் செய்கின்ற செயற்பாடு களை தனித்தனியான முறையில் கோவைப்படுத்தி அதனைச் சேகரிக்கும் வழக்கத்தினைக் கொண்டிருப்பர். எனினும் செயல் அடைவுக்கோவை முறையை இதனிலும் முன்னேற்றகரமான முறையாகக் கொள்ளப்படுகின்றது. இதன்படி பார்க்கின்றபோது செயல் அடைவுக் கோவை என்பது “மாணவனது திறமைகளையும், அவன் கற்றலின் போது எதிர்கொள்ளும் இடர்களையும் காண்பிக்கும்
 
 

வகையில் கருத்தாழத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள மாணவர் களின் வேலைத் தொகுப்பே இந்த செயலடைவுக் கோவை எனக் கருதலாம். இந்தக் கோவையானது மாணவர்கள் பற்றிய தெளிவான கருத்தை வெளிக்காட்டும் ஒரு கோவையாக அமைதல் வேண்டும் எனவும் கூறப்படுகின்றது.
இவ்வாறான கோவையினைத் தயாரிக்கையில் ஆசிரியருக்கு ஆசிரியர் வேறுபாடாகவும் அமையலாம். இது பற்றிய ஒரு நியமமான முறை ஒன்று இல்லை என்பதனால் ஆக்கத்திறனுடைய ஒரு ஆசிரியரினால் தனது ஆக்கத் திறனுக்கு ஏற்ப மிக உயர்ந்த மட்டத்திலான செயலடைவுக் கோவை ஒன்றை வடிவமைத்துக் கொள்ள முடியும். செயல் அடைவுக் கோவை ஒன்றில் உள்ளடக்க வேண்டியவைகள் யாவை போன்றன வற்றை ஆசிரியரே தீர்மானித்து மாணவர்களின் செயற்பாடுகள் அனைத்தையும் ஒவ்வொரு வகை யாகப் பிரித்து கோவைப்படுத்தப்படுதல் வேண்டும். இதன் மூலம் மாணவர் களின் அடைவு மட்டங்களை பெற்றுக் கொள்ளவும், வகுப்பறையில் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்களைப் பார்வையிடவும், பெற்றோர்கள், வகுப்பறைக் கற்றல் கற்பித்தல் நடவடிக் கைகளை பார்வையிட வருகின்ற மேற்பார்வை யாளர்களுக்கும் மாணவர்களின் கற்றல் நிலைமைகளை விளக்குவதுதற்கும் இந்த செயல் அடைவுக் கோவை ஒரு அடிப்படையான அம்சமாக காணப்படுகின்றது.
ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள் தரமான உள்ளிடு களிலிருந்து கற்பித்தலுக்கான உபகரணங்களைப் பெற்றுக் கொள்கின்றனர். சிலர் பெற்றுக் கொள்வதே இல்லை. ஏனெனில் சில பாடசாலைகளில் வருடம் முடிவடைகின்ற போதுதான் கற்றல் கற்பிதலுக்கான தரமான உள்ளீடுகளைப் பெற்றுக் கொள்ளும் நடைமுறைகளும் உண்டு. இவ்வாறு பெற்றுக் கொள்கின்ற பொருள்களைக் கொண்டு பாடவாரியாக கலைத்திட்டத்தில் குறிப்பிடப்படுகின்ற விடயங்களை மேற்கொள்வதற்கு இவ்வுபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக ஆக்கத்திறனை மேற்கொள்வதற்குரிய வேலைத் திட்டத்தை வகுப்பறையில் மேற்கொள்கின்றபோது மாணவர்களின் ஆக்கங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உரியமுறையில் அமைகின்ற ஆக்கத்திறன்களை காட்சிப்படுத்தியதன் பின்னர் அவற்றினைக் கோவைப்படுத்தி வைக்கவும்,
அகவிழி (மே 2013

Page 34
மாணவர்களின் பெற்றோர்கள், ஏனைய ஆசிரியர்கள், அதிபர், மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கு இதனை காண்பிக்கவும் முடியும். இதன் மூலம் மாணவர்களின் கற்றல் நிலைமைகளை அறிந்து கொள்ள ஏதுவாக அமைகின்றது.
செயலடைவுக் கோவையை வகுப்பறைகளில் ஆசிரியர்கள் பயன்படுத்துவதன் மூலம் கிடைக்கின்ற சில நன்மைகள்
> மாணவர்கள் விரும்பி செய்கின்ற, செயற்படுகின்ற
ஒருநிலைமை காணப்படும்.
சேகரிக்கும் தன்மை அதிகரிக்கும்.
மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிக்கும்.
மாணவர்களின் பொருட்கள் காட்சிப்படுத்தப்படும்
அறிவு, திறன் தொடர்பான மதிப்பீட்டுக்கு உட்படுத்தட் படுகின்ற ஒருநிலை ஏற்படும்.
> மாணவர்களின் ஆக்கச் சிந்தனையை உயர்வடையச்
செய்யும்.
> மாணவர்களின் கணிப்பீடுகளை இலகுவாக
மேற்கொள்ள உதவும்.
> மாணவர்களது ஆக்க முயற்சிக்கு ஊக்கம்
வழங்கப்படுகின்றது.
> கற்றல் செயற்பாடுகளை கணிப்பீடு செய்வதற்கான தளமாக இக்கோவைகள் காணப்படுகின்றன.
> பின்னுாட்டலுக்கு வழிவகுக்கின்றது.
> மாணவர்கள் தாம் கற்கும் இலக்குகளை அடைவதற்கு
இவை உதவுகின்றமை.
> மாணவர்கள் சுயமான மதிப்பீட்டில் ஈடுபடுவதற்கு
உதவுகின்றது.
> மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்துரையாடி பயிற்சிகளில் ஈடுபடும் தன்மையை உருவாக்குகின்றது
> மாணவர்களின் செயற்பாடுகள் அனைத்தும் ஆவண மாக்கப்படுகின்ற ஒரு நிலைமை காணப்படுகின்றது
இதுபோன்ற எண்ணற்ற செற்பாடுகளை இந்த செயல் அடைவுக்கோவை மூலமாக மாணவர்களின் கற்றல் பேறுகளை அதிகரித்துக் கொள்ள உதவுகின்றது. இது பற்றி பிளக் & வில்லியம் என்போர் இந்த ஆராய்ச்சி மதிப்பீடு மூலம் கற்றல் திறனை ஐந்து வகையான எளிய காரணிகளை சார்ந்திருக்கின்றது எனக் கூறுகின்றனர்.
அகவிழி மே 2018

மாணவர்களுக்கு பயனுள்ள பின்னூட்டல்களை வழங்குவதுடன் தமது சொந்தக் கற்றலை மாணவர்கள் பெற்றுக் கொள்ளவும், சரியான முறையில் கற்றலுக்கான, மதிப்பீட்டிற்கான முடிவுகளை மேற்கொள்ளவும், மதிப்பிடல் பற்றிய ஒரு அங்கீகாரத்தையும், அது மாணவர்களை ஊக்கப்படுத்தவும், சுயமாக தங்களைத் தாங்களே மதிப்பிடவும், மேம்படுத்தவும் வகுப்பறையின் செயற்பாடுகள் உதவுகின்றன எனவும் கூறுகின்றனர். மேலும், இது மாணவர்களின் கற்றலை ஊக்குவிக்கின்ற பன்புகளையும் கொண்டுள்ளன எனவும் இவர்கள் கூறுவதுடன், கற்றல் கற்பித்தலில் அவசியமான ஒரு பார்வையையும், கற்றல் இலக்குகளை பகிர்ந்து கொள்ளவும், அவர்களின் தரத்தை மேம்படுத்தவும், சுயமதிப்பீட்டில் ஈடுபடவும், அடுத்த செயற்பாடுகளுக்கு மாணவர்களை ஊக்கப்படுத்தவும், ஆசிரியர்கள் தங்களுடைய மாணவர்கள் பற்றிய மதிப் பீட்டினை மேற்கொள்ளவும் இவை உதவி செய்கின்றன என்றும் கூறுகின்றனர்.
எனவே, ஆரம்பக்கல்வி வகுப்புக்களில் கற்கும் மாணவர்களுக்கான கற்றல் அனுபவங்களை ஒழுங்க மைக்கும் போது ஆசிரியர், மாணவர்களின் திறமை, முடியாமை போன்றவற்றைப் போன்று அவர்களின் கற்றல் தொடர்பாக காட்டும் நலிவுகளும், வலிவுகளும் தொடர்பான தகவல்களும் அவசியமாகும் என்பதைக் கவனத்திற் கொள்ளல் வேண்டும். மாணவர்களின் முன்னேற்றம் தொடர்பாக எப்போதும் தகவல் சேகரிக்கும் செயற்பாடாகவே கணிப்பீட்டுப் பொறிமுறை கருதப்படுகின்றது. இவ்வாறான கணிப்பீடுகளை மேற்கொள்கின்றபோது அது மாணவர்களின் அடைவினை கண்டு கொள்ளவும், அதிலிருந்து மேலும் மேலும் தங்களை வளர்த்துக் கொள்வதற்கான செயற் பாடுகளை ஒழுங்கமைத்துக் கொள்ளவும், மாணவர்களின் செற்பாடுகளை உள்ளடக்கி, கோவைப்படுத்துகின்ற ஒரு முறையாகவே இந்த செயல் அடைவுக் கோவை காணப்படுகின்றது.
எது எப்படியாக இருப்பினும் இன்று வகுப்பறைகளில் மாணவர்களினதும், ஆசிரியர்களினதும் ஆக்கங்கள் நிறைந்திருக்கின்ற ஒருநிலைமை காணப்படுகின்றது. இவ்வாறு காட்சிப்படுத்துவதிலிருந்து தவிர்த்து மாணவர் களுக்கு பிரயோசனமான முறையில் உரியவாறு நாளாந்தம், வாரத்திற்கு ஒருமுறையாவது புதுப்பிக்கப்பட்டு காட்சிப்படுத்துவதுடன் காட்சிப்படுத்தியவைகளை கோவைப் படுத்துவதன் மூலம் ஆவணமாக பயன்படுத்தலாம் என்பதையும் நினைவிற்கொண்டு மாணவர்களின் ஆக்க வுக்கச் செயற்பாடுகளுக்கும், சிறப்பான கணிப்பீட்டு முறைகளுக்கும், மாணவர்கள் பற்றிய சிறந்த எண்ணப்
பாடுகளை அறிந்து கொள்ளவும் செயல் அடைவுக்கோவை
உதவுகின்றது என்பதை ஆரம்ப வகுப்புக்களில் கற்றலில் ஈடுபடுகின்ற ஆசிரியர்கள் உணர்ந்து செயற்படவேண்டும்.

Page 35
ஆளுமையில் ஊக்கு
(Motivation)
சொ. அமிர்தலிங்கம்
ஆளுநரின் செயலாளர், கிழக்கு மாகா
செய்யும் தொழிலைச் செவ்வனே சிறப்புறச் செய்யவேண்டும் என்ற ஊக்கத்தின் அடிப்படையில் மனிதனின் செயல்கள் யாவும் நிகழ்கின்றன. இந்த ஊக்குவித்தலானது போட்டி மனப்பான்மையையும், முயன்று வெற்றி காணும் இயல்பையும் மனிதனில் தோற்றுவிக்கின்றது. ஊக்குவித்தல் இன்றி எதுவும் செய்யவியலாது. மனிதனின் செயலுக்கு அடிப்படையானது ஊக்குவித்தல் என்ற உணர்வாகும். ஹென்றி முரே என்ற அறிஞர் கூறும் பொழுது “உளம்சார் தேவைகள் இருபதில் ஒன்று ஊக்குவித்தல்” என்றார். மெக்கிலாண்டு என்ற அறிஞர் “ஊக்குவித்தலானது குறிப்பிட்ட நடத்தையின் உணர்ச்சிசார்ந்த கற்றல்” என்றார். எனவே போட்டியையும் முதன்மை நிலையையும் வலியுறுத்துவதாக ஊக்குவித்தல் அமைகின்றது. சிறுவர்களிடம் ஊக் குவித்தலை உணர் டாக் கப் போட்டிமனப்பான்மையையும், எல்லாச்செயல்களையும் சிறப்பாகவும், விரைவாகவும் செய்யவேண்டும் என்ற எண்ணத்தையும் வளர்க்கவேண்டும். இதற்காகச் சிறந்த சாதனைகளைப் பாராட்டியும், திறனற்ற செயல்களைக் கண்டித்தும், செயற்றிறனைச் செயல்வழிப்படுத்துவதன் மூலம் ஊக்குவித்தலை வளர்க்கலாம். “ஊக்குவித்தலுடன் திறம்படச் செயற்படுவோர் தங்கள் சிக்கல்களைச் சவாலாக ஏற்று வெற்றி பெற்று விரைவில் தீர்வைக் காண்பார்கள்” என மெக்கிலாண்டு கூறுகின்றார். இதனைச் சாதனைத்தேவை (Need for achievement – NAch) 6T60Ié G5ÖlLLil(Beßl6ösDITj. மெக்கிலாண்டு ஒரு நாட்டின் ஊக்குவித்தலை அறிய, அந்த நாட்டின் சிறுகுழந்தைகளுக்காக எழுதப்பட்ட கதைகளை ஆராய்ந்தார். அந்தக் கதைகள் பெரியவர்களால் சிறுவர்களுக்காக எழுதப்பட்டவையாதலால் அவற்றில் ஊக்குவித்தல் அதிகமாக இருந்திருப்பின் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் அதிகரித்து இருக்கும் எனக் கருதி அதை உண்மை என்று நிரூபித்தார்.
அற்கின்சன் என்பவர் ஊக்குவித்தலில் வெற்றி - நம்பிக்கை, தோல்வியச்சம் என்ற இரு காரணிகள் உள்ளன என்றும், இவ்விரண்டிற்குமிடையில் ஏற்படும் முரண்பாட்டின் முடிவில்தான் ஊக்குவித்தல் நடத்தை ஏற்படுகின்றது என்றார். (வெற்றி நம்பிக்கை X வெற்றிக்கான வாய்ப்பு x வெற்றியின் பயன்) + (தோல்வியச்சம் x தேல்விக்கான வாய்ப்பு x தோல்வியின் பயன) ஆகியவற்றின் பயனாக ஊக்குவித்தல் நடத்தை ஏற்படுகின்றது என்ற

காட்பாட்டை முன்வைத்தார். கடினமான செயல் ஒன்றினை வற்றிகரமாகச் செய்து முடித்த பின், பெருமையும், னநிறைவும், நிம்மதியும், மகிழ்ச்சியும் தோன்றும். ளிமையாகச் செய்யக்கூடிய செயல் ஒன்றில் தோல்வி ண்டால் அவமானப்படுவதையும் அவர் குறிப்பிடுகின்றார். வற்றியின் பயன் செயலின் கடினத்தன்மையைப் பாறுத்தது என எடுத்தியம்புகின்றார். அற்கின்சன் கூறிய ஊக்குவித்தல் மாற்றமடைந்து இன்று காரணம் கற்பித்துக் உறல் வருங்கால உள்நோக்கம் என்பனவற்றையும் ருத்திற்கொண்டுள்ளன.
வெற்றி நம்பிக்கையை அளக்க ஹென்றி முரேயின் பாருள் இணைத்தறி சோதனை முறையையும் , தால்வியச்சத்தை அளக்க மாண்டலர் சாரசனின் தர்வுநேரத்தவிப்பு நிலை வினாத்தாளையும், ரெய்லரின் விப்புநிலை வினாத்தாளையும் பலரும் பயன்படுத்துவர். ஹார்னர் என்னும் அறிஞர் பெண்களுக்கு வெற்றியில் அச்சமுண்டு என்றார். எனவே அச்சத்தைப் போக்கி வற்றியடைய ஊக் குவித் தல பெணிகளுக்கு வசியமாகிறது.
மனிதனானவன் எச்செயலைச் செய்யினும் அதற்கு டிப்படையாக ஊக்குவித்தல் உண்டு. இந்த ஊக்குவித்தல் |ல கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. }வற்றை ஊக்குவித்தல் கோட்பாடுகள் எனலாம். இவற்றில் |ல பின்வருமாறு.
அடிப்படைத்தேவைகளைப் பூர்த்திசெய்தல்
னிதனுக்கு அடிப்படையான தேவைகள் பல உள்ளன. }த்தேவைகள் நிறைவுபெறாதுபோயின் இவை வலுவான ஊக்குவித்தலுக்கு வழிவகுக்கின்றன. மனிதன் தான் உயிர் வாழ்வதற்கு அடிப்படைத் தேவைகளாக உணவு, உடை, உறையுள் என்பவற்றிற்காக உழைக்கின்றான். }வற்றைப்பெற்றுவிட்டால் மாத்திரம் அவன் திருப்தி அடைவதில்லை. அவனுக்கு ஒரு மனம் உண்டு. அந்த னம் சுற்றுச்சூழல், அனுபவம், வாழ்க்கைமுறை, பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் சில மதிப்புகளை ருணயித்து அவை நிறைவுறும் வகையில் செயல்புரிகின்றது. னிதன் வெற்றியுடன் செயலாற்ற அவனுக்கு மனநிறைவு அவசியம். எனவே ஊக்கமான நிலையில் செயல்புரிய
அகவிழி மே 2013

Page 36
முற்பட்டால் மனநிறைவுபெற்றுச் செயலும் செயல்திறன் மிக்கதாக அமையும்.
நிறைவேற்றப்படாத தேவைகளை நிறைவேற்றல்
எமது உள்ளத்தில் அல்லது மனதில் நிறைவேற்றப்படாத தேவைகள் பல உள்ளன. அவற்றில் பிரதானமானது தனிமனிதனுக்குரிய சமூக ஒப்புதலும் அங்கீகாரமுமாகும் மனிதன்தான் மனிதக்கூட்டத்தில் ஒருவகை வாளா வெட்டியாக இருக்க விரும்புவதில்லை. எனவே தன்னை வேறுபடுத்தி ஒரு ஆளுமையைப் பெறத்துடிக்கின்றான் எனவே தனிமனித அங்கீகாரம் கிடைக்கும் செயல்களில் அவன் முழுமூச்சுடன் ஈடுபடுகின்றான். இன்று இதை நான் எழுதுவதற்கு வாசகர்களாகிய உங்களிடமிருந்து கிடைத்த சமூக ஒப்புதலும் அங்கீகாரமுமே காரணமாகும். இப்படி ஏற்படும்போது அவன் ஊக்குவித்தலுக்கு உட்பட்டு உற்சாகப்படுகின்றான். செய்யும் செயலில் வெற்றி பெற முனைகின்றான். நிறைவேற்றப்படாத தேவைகளை நிறைவேற்ற ஊக்குவிக்கப்படுகின்றான்.
வாழ்க்கை நெறிகளைக்கையாளுதல்
மேலும் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கை முறைகளினாலும் அனுபவங்களினாலும் சில நெறிகளைத் தன் உள்ளத்தில் பதிய வைத்துள்ளான். இந்த நெறிகளுக்கு ஏற்ப முழுமூச்சுடன் உழைக்கின்றான். நெறி தவறிய செயல்களில் ஊக்கமின்றி, ஈடுபாடின்றி செயற்படுவான்.
அகவிழி மே 2013
 

நெறிகளுக்கு ஏற்ற செயல்களில் மாத்திரம் ஊக்கமுடன் செயற்படுகின்றான். இதற்காக உடலை வருத்தி ஊண் உறக்கமின்றிச் செயற்பட்டு வெற்றிகாண முற்படுகின்றான்.
தேவைகளை உணர்ந்து செயற்படல்
நாட்டின் உற்பத்தித்திறனும் உற்பத்திப் பெருக்கமும் அதிகரிக்க வேண்டுமாயின் ஒவ்வொரு மனிதனும் தான் செய்யும் செயல்களில் ஈடுபாட்டுடன், ஊக்கத்துடன் செயற்படவேண்டும். எமக்கு நிறைவு பெறாத தேவைகளே ஊக்குவித்தலுக்கு அடிப்படையாக அமைகின்றன. ஒரு தேவை நிறைவு பெற இன்னொரு தேவை ஏற்படும். எனவே தேவைகளை உணர்ந்து அவற்றின் நிறைவுக்கு வழிகோல முற்படும்போது ஊக்குவித்தல் அதற்கு வழியமைக்கின்றது.
தமது பங்குணர்ந்து செயலாற்றல்
மேலும் ஊதியமானது ஊக்குவித்தல் சாதனங்களில் வலுவான ஒரு சாதனமாகும். எனினும் ஒரு அளவுக்கு மேலே இதனைப் பயன்படுத்த முடியாது. ஊதியமும் உழைப்பும் நேர் விகிதத்தில் அமைவதுமில்லை. ஊதிய உயர்வின்மூலம் மட்டுமே அதிக உழைப்பைப் பெற முடியாது. உற்பத்தி பெருக வேண்டுமாயின் உற்பத்தித்திறன் பெருகவேண்டும். உற்பத்தித்திறன் பெருக ஒவ்வொரு தொழிலாளியும் தன் உடல், உளம் என்பவற்றை ஒருங்கமைத்துச் செயலாற்ற வேண்டும். ஒரு தொழிலாளி

Page 37
முழுமனதுடன் செயலாற்ற தான் செய்யும் பணிக்கும் நிறுவனத்தின் குறிக்கோளிற்கும் உள்ள உறவையும், நிறுவன உற்பத்திப் பெருக்கத்திற்கும் நாட்டின் நலனிற்கும் உள்ள தொடர்பையும் நன்கு அறிதல் வேண்டும். எனவே தொழிலாளி தனது பங்கை உணர்ந்து செயலாற்ற முற்படுகையில் ஊக்குவித்தல் அடிப்படையாக அமைகின்றது.
தேவை அறிந்து செயல் மூலம் குறிக்கோள்களை அடைதல்
அறிவியல்சார் முகாமைத்துவத்தில் உற்பத்தியையும், உற்பத்தித் திறனையும் அதிகரிக்கும் வகையில் ஊழியர்களைச் செயலாற்ற ஊக்குவிக்கும் வழிகள்பற்றி ஆராயப்பட்டுள்ளன. எனவே தேவைகள் தான் செயலாற்றத் தூண்டுகின்றன. செயலாற்றல் குறிக்கோளை அடைய வழிவகுக்கிறது. எனவே தேவை -> செயல் -> குறிக்கோள் என இது அமைகின்றது. ஆகவே ஊக்குவிக்கும் செயற்பாடுகளில் முதல்நிலையில் நிற்பது தேவைகள்தான்.
அறிஞர் ஆப்ரகாம் மாசுலோ என்ற அறிஞர் கூறும்போது மனிதனிற்கு உடல் சார்ந்த தேவைகள், பாதுகாப்புத் தேவைகள், அன்புத் தேவைகள், மதிப்புத் தேவைகள், தன்னிறைவுத் தேவைகள் என ஐந்து வித தேவைகள் உள்ளன என்றார். மாசுலோவின் கூற்றின்படி நிறைவு செய்யப்பட்ட தேவைகள் ஊக்குவித்தலுக்கு அடிப்படையாக அமைவதில்லை. நிறைவு செய்யப்படாத தேவைகளே ஊக்குவித்தலுக்கு அடிப்படையாகும். உடல்சார் தேவைகளான உணவு, உடை, உறையுள் என்பனவற்றிற்காக உழைப்பவன் அதற்கு மட்டும் உழைக்கின்றான். இத்தேவைகள் நிறைவு பெற்றதும் மேலும் பாதுகாப்புத் தேவைகள் ஏற்படுகின்றது. அதுவும் நிறைவுற்றதும் அன்புக்காக, சமூக ஒப்புதலுக்காக உழைக்கின்றான். மதிப்புத் தேவைகளுக்காக தன் உழைப்பை நல்குகின்றான். எனினும் இவற்றிலும் பார்க்க தன்னிறைவு மேலோங்குகின்றது. இந்த தன்னிறைவுத் தேவைகள் புரிய முற்படுவோர் ஊக்குவித்தலினால் மேலும் முன்னேற முற்படுகின்றனர். எனவே மனிதன் செயல்புரிய தேவைகளின் அடிப்படையில் தோன்றும் ஊக்குவித்தலே காரணம். நிறுவனத்தில் ஊழியர்களின் உழைப்பானது நிறுவனத்தின் குறிக்கோளை அடைய முற்படவேண்டும். ஊழியர்களின் சுயதேவையும் நிறுவனத்தின் குறிக்கோளும் இணைந்தால் உற்பத்தி பெருகும். ஒருவனுக்குப் பசி போன்ற தேவை நிறைவு பெற்றதும் பாதுகாப்புத் தேவைப்படுகின்றது. பாதுகாப்பு நிறைவு பெற்றதும் பாசம், காதல், அன்பு, தோழமை போன்ற தேவைகளை நாடு கின்றான். அவை கிடைக்கப்பெற்றதும் அங்கீகரம், ஏற்பு, தன்மதிப்பு போன்றவற்றை நாடுகின்றான். ஒரு அடிப்படைத் தேவை நிறைவுபெற இன்னொரு தேவை ஏற்பட்டு அதை நிறைவு செய்ய மனிதன் ஊக்குவிக்கப்படுகின்றான். தேவைகள் அவனது வளர்ச்சிநிலையைப் பொறுத்தது.
9.
g
 

ால்லாச் செயல்களும் தேவைகள், விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைகின்றன.
உடல், உளம் சார்ந்த தேவைகளும், செயல்நோக்கங்களும்
]னித இயக்கமானது ஊக்குவித்தலினால் நடைபெறுகின்றது. }ருவரை செயலிற்கு ஊக்குவிக்கும் ஆற்றலைச் செயல்நோக்கம் (Motive) என உளவியலாளர் கூறுவர். இச்செயல் நோக்கமே ஒரு செயலுக்குக் காரணமாக, செயலைத் தொடர, இலக்கை நோக்கி நகர வழி பகுக்கின்றது. எந்த உயிரினமும் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத தேவைகள் குறையும் பொழுது ஒரு சயலுக்கு ஊக்குவிக்கப்படுகின்றது. மனிதனிடத்தில் டடல், உளம்சார்ந்த தேவைகள், செயல்நோக்கங்கள் இருக்கின்றன. இவையிரண்டும் செயலுக்கு ஊக்கு விக்கின்றன. உடல்சார்ந்த முதன்மை நோக்கங்களாக நாகம், பசி, வலி, பாலுணர்வு என்பன உள்ளன. உளம் ார்ந்தவையாக ஆசைகள், தன்மானம், அறியும் ஆர்வம் ான்பன இரண்டாந்தர செயல் நோக்கங்களாக உள்ளன. ஊக்குவித்தல் உள்ளார்ந்த ஊக்குவித்தல் புறத்தேயான ஊக்குவித்தல் என இருவகைப்படும். ஒரு செயலைச் செய்யத் துTண்டும் புறக் காரணிகள் புறத்தேயான ஊக்குவித்தலாகும். ஆசிரியரின் புகழ் மொழி, பரிசளிப்பு ான்பன மாணவனுக்குப் புறஊக்குவித்தலாக அமையும். உள்ளார்ந்த ஊக்குவித்தல் செய்யும் செயலிலேயே அமைந்து உள்ளது. ஆராய்ச்சியில் மெய்மறந்து ஈடுபடுதல் இதற்குச் சிறந்த உதாரணமாகும்.
ாடசாலை மாணவர்களுக்கான ஊக்குவித்தல் முறை
ாடசாலை மாணவர்களுக்கு வகுப்பறைகளில் பின்வரும் விதத்தில் ஊக்குவித்தல் நடைபெறுகின்றது. புகழ்தலும் இகழ்தலும், பரிசும் தண்டனையும், போட்டியும், பரீட்சையும், செயல்விளைவு பற்றிய அறிவு என்பன மாணவர்களை ஊக்குவிக்கும் செயல்முறைகளாகும். புகழ்ச்சியின் முலம் ஒருவனை ஊக்குவிக்கலாம். எனினும் இகழ்ச்சி ாற்படாமல் தவிர்க்க ஊக்குவித்தல் கைகொடுக்கின்றது. ரிசளிப்பது பாராட்டுதலுடன், ஏனையோரையும் பரிசுபெற ஊக்குவிக்கிறது. தண்டனையானது அச்சத்தை ஏற்படுத்தி உளநிலையைப் பாதிக்க வழிவகுத்தபோதும் இனி அவ்வாறு நிகழவிடாமல் ஓரளவு ஊக்குவிக்கின்றது. போட்டியானது தூண்டுதல் சக்தியாக இருந்தபோதும் )ாணவரிடையே பொறாமை, வெறுப்பு போன்ற உணர்வு $ளைத் தூண்டி சமூக ஒத்துழைப்பைப் பாதிக்கும். ானினும் போட்டி வெல்லும் ஊக்கத்தையும், பரீட்சை சித்திபெறும் ஊக்கத்தையும் தரும். மேலும் செயல் விளைவு பற்றிய அறிவு கற்பவன் இலக்கிலிருந்து எவ்வளவு தூரத்திலிருக்கின்றான் என்பதை உணர்தற்குரிய ஒரு ஊக்குவிப்பாகும். இது செயற்றிறனை மேலோங்கச் செய்ய வழிவகுக்கிறது.
அகவிழி (மே 2018

Page 38
முதல்நிலை மேற்பார்வையாளரின் பங்கு
எந்த நிறுவனமும் தான் விரும்பும் வகையில் செயற்பட ஊழியர்கள் நிறுவனத்தில் கொண்டுள்ள ஈர்ப்பையும் ஈடுபாட்டையும் ஊக்குவிக்கவேண்டும். எனவே முதல் நிலையிலுள்ள மேற்பார்வையாளர்களின், அறிவு, அனுபவம் ஆற்றல், அணுகுமுறை, வேலைத்திறன், மனப்போக்கு ஆகியனவே அவரின்கீழ் பணிபுரியும் தொழிலாளரின் ஊக்கத்திற்கும், உற்சாகத்திற்கும் வழிவகுக்கின்றன. மேலும் முதல்நிலை மேற்பார்வையாளர்கள் ஊழியர்களிடையே கண்டிப்பையும், அரவணைத்தலையும் மனிதாபிமானமாகச் செயற்படுத்த வேண்டும்.
பயிற்சி வகிக்கும் பங்கு
ஊக்குவித்தலுக்கு மேலும் தூண்டுவது பயிற்சியாகும். பயிற்சி தொழிலாளர்களின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றுகின்றது இப்பயிற்சி தனது சுயவளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் உதவுகின்றது என்ற உணர்வு தொழிலாளியின் மனதில் எழவேண்டும். இதன்மூலம் அவன்தன் ஒத்துழைப்பையும் உற்சாகத்தையும் நிறுவனத்திற்கு அளிக்கின்றான். பயிற்சி இல்லாதவிடத்து அவன் தவறுகள் மூலம் அனுபவ அறிவை வளர்க்க முடியும். இத்தவறுகள் வராமல் தடுப்பதும் பயிற்சியாகும். எனவே தோல்வியானது மனத்தளர்ச்சிக்கும் ஊக்கமின்மைக்கும் காரணமாகும். இதனால் பயிற்சி மூலம் தன்னம்பிக்கையை வளர்த்து, வெற்றிக்கு வழிவகுத்து மனநிறைவையும் உற்சாகத்தையும் ஊட்ட வழிவகுக்க வேண்டும். எந்த மனிதனின் வெற்றிக்கும் வளமான வாழ்க்கையும், திறம்பட செயலாற்ற ஊக்குவித்தல் இன்றியமையாதது. ஊக்குவித்தலால் எந்தச்செயலையும் செய்ய முற்பட்டு வாழ்வில் வெற்றியடைய வேண்டும்.
ஹொண்டா கம்பனியின் நிறுவுனரின் ஊக்கமுடைமை
ஹொண்டா கம்பனியின் நிறுவுனரான சாயப் சீரா ஹொண்டாவின் ஊக்கமும் விடாமுயற்சியும் இன்று அவருக்கு உலகப் புகழைக் கொடுத்துள்ளது ஆரம்பத்தில் ரொயற்றா கார் கம்பனிக்கு பிஸ்டனை வடிவமைத்துக் கொண்டு சென்றபோது அவர்கள் அதனை நிராகரித்தனர். பின்பு ஊக்கத்துடன் முயன்று நன்கு வடிவமைத்த புதிய பிஸ்டன்களை ரொயற்றா கம்பெனிக்கு உற்பத்திசெய்து விற்றார். ஜப்பானில் பிஸ்டன்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்க முற்பட்டார். சீமெந்து உற்பத்திசெய்யும் வழிகளைககனிடு தொழிற்சாலையைக் கட்டியபோதும் இரண்டாம் நாளே கட்டிடத்தின் ஒரு பகுதி அமெரிக்க விமானத் தாக்குதலுக்குள்ளாகி இடிந்து விழுந்தது. பின்ட
அகவிழி 1 மே 2013

ஏற்பட்ட பூகம்பம் தொழிற்சாலையைத் தரைமட்டமாக்கியது. இதனால் பிஸ்டன் தயாரிப்பு தொழிலை ரொயற்றோ கம்பனிக்கு விற்றுவிட்டார். ஒருநாள் ஒரு புல்வெட்டும் இயந்திரத்தைப் பார்த்ததார். அதிலிருந்த மோட்டாரைக் கவனித்தார். புதிய மோட்டார் சைக்கிள்களைத் தயாரிக்க ஹோண்டா சைக்கிள் கம்பெனியை உருவாக்கி மோட்டார் சைக்கிள் தொழிற்சாலையை நிறுவினார். எனினும் தயாரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பெரிதாகவும் விற்பனை குறைவாகவும் இருந்ததமையினால் பின்னர் சிறிய உருவம், அடக்கமான தோற்றம், குறைவான நிறை என்பவற்றுடன் வடிவமைத்து மோட்டார் சைக்கிள்களைத் தயாரித்தார். இது உலகின் முதல் இடத்தினைப் பெற்றது. இன்று ஹொண்டா கம்பனி கார், மோட்டார் சைக்கிள், புல்வெட்டும் இயந்திரம், கடல் இயந்திரம் என்று பல்வேறு உற்பத்திகளை உலகிற்கு அளிக்கின்றது. இதற்கு ஊக்குவித்தலே முக்கிய காரணியாகும். பலவித தோல்விகள் வந்துள்ள போதும் தயங்காது, தளராது பின்வாங்காது தொடர்ந்து ஊக்கத்துடன் விடாமுயற்சியுடனும் ஹொண்டா செயற்பட்டமையே வெற்றியின் பின்னணியாகும்.
இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றிய திருவள்ளுவர் என்னும் பெருந்தகை படைத்த திருக்குறளில் பின்வருமாறு கூறியுள்ளார்.
“உடையர் எனப்படுவது ஊக்கம் அஃது இல்லார் உடையது உடையரோ மற்று" (591)
ஒருவரைச் செல்வம் உடையவர் என்று சொல்லச் சிறந்த காரணமாயிருப்பது ஊக்கம். அது இல்லாதவர் வேறு ஏதேனும் உடையவராயினும் உடையவர் ஆகமாட்டார். என்பது இதன் கருத்தாகும்.
"ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவு இலா ஊக்கம் உடையான் உழை” (394)
செல்வம், தளர்விலாத ஊக்கம் உள்ள இடத்திற்குத் தானாகவே வழிகேட்டுக் கொண்டு செல்லும். எனவே வினை செய்வதில் தளர்ச்சியின்றி மேன்மேலும் கிளர்ச்சி பெறுவதற்கு ஊக்கமுடைமை கைகொடுக்கின்றது என்பதை அன்றைய காலத்தில் உணர்ந்திருந்தார் திருவள்ளுவர்.
“ஊக்கமது கைவிடேல்” என தமிழ் மூதாட்டி ஒளவையார் அன்று ஆத்திசூடியில் கூறியுள்ளார். இந்த ஊக்கம் முயற்சியின் அடிப்படையாக அமைகின்றது. இதனாலன்றோ ‘முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்” “முயற்சி திருவினையாக்கும்” என்று பெரியார்கள் கூறியுள்ளனர். மக்கள் செய்யும் செயல்களில் முயற்சியுடன் இன்றியமையாத உந்துதலே ஊக்குவித்தலாக மாறுகின்றது.

Page 39
2d LOODIJULUIT(6lb Cyp6ODIC
செ. சண்(
சென்ற இதழின் தொடர்ச்சி.
செய்தி பரிமாறுதல் 임
இந்த நிலையில் மையப்படுத்துதல், விடைபெறுதல், 2 G
முடித்தல் என்ற 3 நிலைகள் காணப்படும். கருத்தை மையப்படுத்துதல் என்ற நிலையில், செய்திகளை வழங்கும் வண்ணம் பல செயல்கள் நிகழ்கின்றன. விடைபெறுதல் நிலையில் உரையாடலை முடிப்பதற்கான ஆயத்தம் செய்யப்படும். முடித்தல் என்ற நிலையில் உண்மையான விடைபெறுதல் செயல் நிகழும். ஆக, உரையாடல் என்ற செயற்பாடு பல நிலைகளையும் அந்த நிலைகளுக்குரிய செயற்பாடுகளையும் கொண்ட அமைப்பைக் காட்டுகிறது என பகுப்பாய்வு நெறிமுறையின் அடிப்படையில் விளக்கப்படும்.
தொகுப்பாய்வு நெறிமுறை
இந்த நெறிமுறையின் படி, உரைத்தொடர்கள் முதற் பொருளாகக் கருதப்பட்டு, அவை தொகுக்கப்பட்டு
(
匹
@
s
6
L
6
 
 

யைக் கற்பித்தல்
முகம்
உரையாடல் அமைப்பு உருவாகிறது என விளக்கப்படுகிறது. உரையாடலின் அடிமட்ட, மூலச்செயல் உரைத்தல் சயல் (act) எனவும், மேல்மட்டச் செயல் உரையாடுதல் onversation) எனவும், இவ்விரண்டு செயல்களிடையே கர்தல், பரிமாறுதல், தொடர்பரிமாறுதல் (move, exchange, nteract) போன்ற செயல்கள் காணப்படுகின்றன எனவும் இச்செயல்கள் அனைத்தும் ஒரு படிநிலையமைப்பை உருவாக்குகின்றன எனவும் விளக்கப்படுகிறது. (சின்கிளேர்)
உரைத்தல் என்ற அடிமட்டச் செயலின் தலைமை ற்றும் சார்ந்துவரும் செயல்கள் காணப்படும். இதில், பிரித்துக் கூறுதல், திருத்தியமைத்துக் கூறுதல், தெளிவு டுத்திக் கூறுதல், கவனம் ஈர்க்கக் கூறுதல் என்ற கைகளைக் காணலாம். இரண்டு உரைத்தல் செயல்கள் இணைந்து நகர்தல் செயல் உருவாகும். இரண்டு நகர்தல் செயல் கள் இணைந்து பரிமாறல் செயல் உருவாகும். இரண்டு பரிமாறல் செயல்கள் இணைந்து தொடர்பரிமாறல் செயல் உருவாகும். இரண்டு தொடர் பரிமாறல் செயல்கள் இணைந்து உரையாடல் > உருவாகும்.
உரையாடலின் கருத்து
உரையாடும் போது பல
கருத்துக்கள் பரிமாறப்படு ܢܐܐܬܵܐ V கின்றன. இவை களில் சில
J மையக் கருத்துக்கள் எனப் படும். இவை உரையாடும் ܐ̈ܐ
போது வளர்க்கப்படும். சில 2. நேரங்களில் சில தடைகள் காரணமாக மையக் கருத்துக் 5ள் தற்காலிகமாகப் புறக்கணிக்கப்பட்டு திரும்பவும் உரையாடலில் தரப்படும். இவை உரையாடலில் வெளிப்படும் பொதுக் கருத்தாகவும், உணர்வின் மூலம் உணரப்படும் கருத்துக்களாகவும் இருக்கும். சில
அகவிழி (மே 2013

Page 40
நேரங்களில் உரையாடல் மையக் கருத்துக்கள் மறைதல், LDIE G556Ö (shading, fading) 6f 6ösD LDTsbsDIE &(6Ibé (g உள்ளாகலாம். கருத்து மறைதல் என்பதில் மையக் கருத்தின் பரப்பு விரிவாக்கப்பட்டு சார்ந்து வரும் கருத்துக்கள் அதிகமாக வெளியிடப்படும். கருத்து மங்குதல் என்பதில் மையக்கருத்து புறக்கணிக்ப்பட்டு, வேறு புதுக் கருத்துப் பரப்புக்கள் விளக்கப்படும்.
ஆக உரையாடல் குறித்த அறிவை வளர்க்க உரைக்கோவை, உரைதொடர், உரைசெயல், உரை கருத்து, உரைநியதி, உரையாடல் உத்தி, உரையாடல் போக்கு, அமைப்பு, உரையாடலில் தோன்றும் தொடர்வகைகள் ஆகிய பல உரையாடல் தொடர்பான செய்திகளை விளக்கி மாணவர்களின் உரையாடல் அறிவை வளர்க்க வேண்டும்.
உரையாடும்போது மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் காணுதல்
இரண்டாம் மொழியைக் கற்கும் மாணவர்கள், இரண்டாம் மொழியைப் பயன்படுத்தி உரையாட முனையும் போது தகுந்த உரைத் தொடர்களைப் படைத்து, கூற்றுத்திருப்பங்களைத் தகுந்தவாறு உருவாக்கி, உரையாடுவதிலும், கருத்தைப் பரிமாறுவதிலும் சில இடர்பாடுகளுக்கு உள்ளாகின்றனர். இந்த இடர்பாடுகள் அவர்களது உரையாடல் குறித்த அறிவிலும் உரையாடும் திறனிலும் ஏற்படும் குறைபாடுகளால் ஏற்படுகின்றன. இத்தகைய இடர்பாடுகளைக் காண்பதற்கு மாணவர்களின் உரைகளை ஆராய்ச்சி செய்ய வேண்டும்.
மாணவர்களின் குறைபாடு
கூற்றுக்களைச் சூழலுக்கும் உரைசெயல்களுக்கும் ஏற்றவகையில் உருவாக்கும் திறனற்றவர்களாக இருப்பதால், மாணவர்களின் உரையாடலில் குறை பாடு காணப்படுகிறது. இந்தக் குறைபாட்டிற்கு தாய்மொழியில் இருக்கும் உரையாடும் முறைகளை இரண்டாம் மொழியைப் பயன்படுத்தி உரையாடவேண்டிய சூழல்களிலும் பயன்படுத்துதல், இரண்டாம் மொழிக்கென அமைந்த உரையாடல் முறைகளைச் சரியாகக் கடைப்பிடிக்காமலி த்தல் ஆகிய இரண்டு காரணங்கள் உள்ளன. தாய்ம்ொழித்தாக்கம், பிறமொழி நியதி பின்பற்றாமை என்ற இந்த இரண்டு காரணங்களால் W ழிக்ற்கும் மாணவர்களின் உரையாடலும், 器 இத்ற்றிரடுள்ள அயலார் பேச்சு (foreigne Speed) தேர்ன்றும் நிலை ஏற்படுவதுண்டு. இந்த நிலைய்ர்னது, உரையாடும் போது p அலகுகளைப் பயன் துவதைத் தவிர்த்தல் கையாள வேண்டிய
 
 
 
 
 

சில செயற்பாடுகளை சரிவரக் கையாளாதிருத்தல் போன்ற மொழிபயில்வோர் கையாளுகின்ற உத்திகளின் தாக்கத்தால் ஏற்படுகிறது.
உரையாடலில் சிக்கல் ஏற்படக் காரணம்
இரண்டாம் மொழியைப் பயிலும் மாணவர்களின் பேச்சும் உரையாடலும் குறைபாடுடையதாகத் தோன்றுவதற்கு, அலகுகளைப் பயன்படுத்துவதில் சில மாற்றங்களைத் தருதல். சில செயற்பாடுகளைக் கைக்கொள்ளாதிருத்தல் ஆகியன காரணமாக அமைகின்றன. செயற்பாட்டு வாக்கியங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல் சில இலக்கணக்கூறுகளை பயன்படுத்தத்த தவறுதல் (look on the other side = look other side) 6TÉirLD60), D3, G5ITs)36061Tub பெயர்ப்பதிலிகளையும் எளிமையாக்கிப் பயன்படுத்துதல் (I not, don’t, won’t = not, II, me = me) Jf6d (g5 Jaśluu அலகுகளை விரிவுபடுத்தி பயன்படுத்துதல் (1 cant = 1 cannot) உரைதொடர்களைத் தவறாகத் தொடங்குதல், தொடர்களைத் தகுந்தவாறு முடிக்காது விட்டுவிடுதல், மொழிக்கூறுகளை உச்சரிக்கும் போது இயற்கையாக ஏற்படுகின்ற தடங்கல்களை வலிந்து, செயற்கையாகத் தவிர்க்க முயற்சிசெய்தல், சிறிய தொடர்களையும் வாக்கியங்களையும் அதிகமாகப் பயன்படுத்துதல் போன்ற பல செயற்பாடுகள் இரண்டாம் மொழி பயிலும் மாணவர்களின் உரையாடலிலும் உரைகளிலும் குறைபாடு ஏற்படக் காரணமாக அமைகின்றன. (தியோவான)
கொச்சைவழக்கு, வட்டாரவழக்கு, கூட்டுச்சொல், மரபுத்தொடர் போன்றவற்றைத் தவிர்த்தல், சொற்களைத் திரும்பச் சொல்லுதல், ஒருபொருட் பன்மொழியை அதிகமாகப் பயன்படுத்துதல், ஒரு மொழிக் கூறின் பொருளை விளக்க சுற்றிவளைத்த விளக்கம் தருதல் (plane-airCraft, tomorrow=day after today) Lipst 560Tg5) பேச்சில் கவனத்தை வைக்குமாறு செய்ய சில தொடர்களை அடிக்கடி பயன்படுத்துதல் (okay do you know) தாய்மொழிச் சொற்களை இரண்டாம் மொழியைப் பயன்படுத்தி நிகழ்த்தும் உரையாடல்களில் அதிகமாகத் தருதல் போன்ற செயல்களாலும் மாணவர்களின் உரையாடல் குறைபாடு உடையதாகிறது.
மெதுவாகப் பேசுதல், முக்கிய சொற்களை ஒசையோடு ஒலித்தல், மொழிக்கூறுகளில் காணப்படும் எல்லா ஒலிகளையும் ஒலிக்கவேண்டும் என்ற உணர்வோடு Gly-LLJ6)L(656) (rsoundin words like iron, horn etc) 3.J60ötLTD மொழியின் இன்னோசையைத் தாய்மொழி இன்னோசை போன்று மாற்றியமைத்தல் போன்ற ஒலி சார்ந்த செயற்பாடுகளும் மாணவர்களின் உரையாடலில் குறைபாடு ஏற்படக் காரணமாகின்றன.

Page 41
ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் கற்கும் சில மாணவர்கின் உரை தொடர்களில் காணப்படும் மொழி அலகு வெளிப்பாடு தொடர்பான குறைபாடுகள் பல ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு பட்டியலிடப் பட்டுள்ளன. அவைகளில் சில இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. ஆகு என்ற வினை (it) என்ற பெயர்ப்பதிலி, கால - இணக்க உருபன்கள், தொடர்நிகழ்காலம் காட்டும் உருபுகள் (do) என்ற துணைவினை, உடைமை வேற்றுமை உருபு போன்ற இலக்கணக் கூறுகளைத் தக்கவாறு பயன்படுத்தாதிருத்தல். (not) என்ற எதிர்மறை கூறுக்குப் பதிலாக (no) என்ற கூறைப் பயன்படுத்துதல் போன்ற இலக்கண அலகுப் பயன்படுத்தும் முறைகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக மாணவர் உரைகள் குறைபாடுள்ளவை யாகின்றன. சில எடுத்துக் காட்டுக்கள் பின்வருமாறு
தவறான தொடர்கள் சரியான தொடர்கள்
you jealous you are jealous
is good for him it is good for him
every time she come there every time she comes there
so alice work now so alice works now
she not know about this she does not know about this
she is no old she is not old
he car his car
பிற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டு தமிழை இரண்டாம் மொழியாகக் கற்கும் மாணவர்கள் இலக்கண அலகுகளைச் சரிவரப் பயன்படுத்தத் தவறுவதனால் அவர்களது உரைகளிலும் குறைபாடு இருப்பதை பல ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன.
உரைதிருப்பம் தருவதில் வேறுபாடுகள்
உரைதொடர்களைப் படைத்து உரையாடலில் ஈடுபடும் போது உரையில் திருப்பங்கள் முறை சமுதாயத்துக்கு சமுதாயம் வேறுபடும். தாய்மொழியில் கையாளப்படும் உரைதிருப்பம் தரும் முறைகளை இரண்டாம் மொழி பயன்படுத்தும் சூழலிலும் மாணவர்கள் தரும் போது தாய்மொழித்தாக்கத்தால் உரைதிரும்பல் முறைகளில் மாற்றங்களைத் தருவார்கள். இதுவும் அவர்களது உரையாடல் குறைபாட்டுக்கு ஒரு காரணமாக அமைகிறது. உரையாடலில் திருப்பத்தை ஏற்படுத்த வினா வாக்கியம் பயன்படுத்துதல், கவனம் ஈர்க்கும் கூறுகளைப் பயன்படுத்துதல் திருப்பலுக்கான அலகுகளையும் அழைப்பு அலகுகளையும் பயன்படுத்துதல் போன்றவை இரண்டாம் மொழியைப் பயிலும் மாணவர்களின் உரையாடல்களில் அதிகம் காணப்படுகின்றன.
s
5LG
ب
 

உரைத்தொடர்களைத் திருத்தும் முறைகளில் வேறுபாடு
உரையாடும்போது தவறான உரைதொடர்களைப் படைக்க நரிடும் தருணத்தில் தாமாக அவைகளைத் திருத்தி, தொடர்களை வெளியிடுவதில் மாணவர்கள் ஈடுபடுவார்கள். இத்தகைய செயல்களில் தானாகத் திருத்துதல், பிறர் திருத்துதல் என்ற இரண்டு வகைகள் காணப்படுகின்றன. இவை மாணவர் உரையாடலின்போது வெளிப்படுகின்றன.
மாணவர்கள் தானாகவே தாம் வெளியிட்ட தவறான தொடர்புகளைத் திருத்தி வெளியிடும் முயற்சி தானாகத் திருத்துதல் எனப்படும். இவ்வாறு திருத்தும் முயற்சியில் )ாணவர்கள் ஈடுபடுவதை உரையாடும்போது அவர்கள் Iu6öru(6595ub (uh, I mean, You know) (BUT6örp 96)(35 5ளிலிருந்தும் அவரது கண்பார்வை, கையசைவு போன்ற உடலங்கச் செயல்களிலிருந்தும் கண்டுபிடிக்கலாம். நானாகத் திருத்துதல் என்பதில் சொற்களை மாற்றி J60LD556) (this school, Imean this University) GaffTsbQprLir களையும் சொற்களின் வரிசைப்பாட்டையும் மாற்றியமைத்தல் What kind of English they... What do they say) (SUT66 psO)6). அடங்குகின்றன.
மாணவர் வெளியிட்ட தவறான உரைதொடர்களை பிறர் திருத்தியமைத்து வெளியிடும் முயற்சி பிறர் திருத்ததல் எனப்படும். இந்தத் திருத்தம் உரையாடல் இடைவெளிகளில் தோன்றுகிறது. பிறரால் திருத்தி பமைக்ப்பட்ட தொடர்கள் பிறரது உரையாடல் குறித்த யோசனையை வெளிப்படுத்துவது போன்றும் தோன்றும். றரால் திருத்தியமைக்கப்பட்ட தொடர்கள் ஒருவரால் திரும்பவும் பயன்படுத்தப்படலாம். (where did1buyedit. Where did I buy ti). (what, when, where) (BUIT6ðrgo 660TIT 246)(5560) 6T 360)600Tg556) (too many...what) fol) blood6) பான அலகுகளோடு திருத்தியமைக்கப்பட்ட தொடரை 26)16flüLIC6H5g5Jg56ü (You mean.... after school) (3UIT6örp செயற்பாடுகளின் மூலம் பிறர் திருத்தல் நிகழ்வதைக் கண்டுகொள்ள முடியும்.
ஆக, இரண்டாம் மொழியமைப்பிலும் மாணவர்களின் உரையாடலை ஆய்வு செய்வதன் மூலம் அவர்களது உரையாடும் முறை, உரைதொடர்களை உருவாக்கி வெளியிடும் முறை ஆகியவற்றில் ஏற்படும் குறைபாடு 5ளையும் வெளியிடப்பட்ட குறைபாடுள்ள தொடர்கள் ாவ்வாறு குறைபாடுள்ளவையாகின்றன என்பதையும் அவர்களின் உரையாடலில் தாய்மொழி உரையாடல் முறைகளின் தாக்கம், இரண்டாம் மொழி உரையாடல் நெறிமுறைகளைப் பின்பற்றாமை போன்றவற்றை இனம் 5ண்டு அவைகளை நிவிர்த்தி செய்வதற்கான பயிற்சி 560)6Tեւյլք (Մ)Iգեւյմ).
அகவிழி மே 2013

Page 42
U6öOTUTL' (6)ğ5 & (Cultural Educa
Prof Daya Rohana Athuk
5Lölgp ITöö5Lib: A.A. AZee சென்ற இதழின் தொடர்ச்சி.
பாடசாலை வாழ்க்கையுடன் இணைந்ததொரு பகுதியாக பண்பாட்டை உட்படுத்தல்
மேற்கூறியவாறு பாடசாலைக்கு வெளியில் கலைக்கேந்திர நிலையங்களை காணக்கூடியதாக இருப்பினும் 1% ஆனோருக்கேனும் அதிலிருந்து பயன்பெறுவது கடினமாக வுள்ளதென Birminham Midland கலை நிலையத்தின் அதிபர் தெரிவித்துள்ளார். இதனால் பிள்ளைகள் அதிகளவில் தொடர்புறும் பாடசாலை பண்பாட்டுக் கல்வியின் ஆரம்ப நிலையமாக விளங்குதல் வேண்டும். எந்தவொரு நாட்டிலும் பாடசலையைப் போன்று சத்திமிக்கதொரு கல்விநிறுவனமொன்று நிறுவும் சக்தி யற்றிருப்பதால் பாடசாலையினால் நிறைவேற்றக்கூடிய நிறைவேற்ற வேண்டியதொன்றாக ஆக்கிக் கொள்ளல் வேண்டும். பாடசாலை வாழ்க்கையுடன் தொடர் ட படுத்துவதன் மூலம் பணி பாட்டை பெருமளவில் மக்களிடையே கொண்டு செல்ல முடியும். திறந்த UITLFIT606)856ir (Open School) 6Tg) Lib B(55.56 ep6)lf பல நன்மைகள் கிடைக்கப்பெறும். அதாவது அனைத்து இளைஞர்களுக்கும் பண்பாட்டுக்கல்வி கிடைக்கப்பெறுவதை உறுதி செய்ய முடியும். அறிவு, பண்பாடு, ஓய்வு எனும் மூன்று வேறுபட்ட உலகங்களை ஒன்றிணைப்பது அதன் மூலம் நிறைவேற்றப்படும். இதன் மூலம் வெளியிலிருக்கும் வளர்ந்தோர், பாடசாலை எம்முடையது எனும் மனப்பாங்குடன் வாழ்நாள் நீட்சிக் கல்வி (Life long education) அந்நிறுவனத்தை தொடர்புபடுத்திக் கொள்வர். அதே போன்று தனது நடவடிக்கைகளை நவீன மட்டம் வரை கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு பாடசாலைக் கேற்படும்.
மேலும் மற்றுமொரு நன்மையாக அது உபகரணங்களில் சேமிப்பை ஏற்படுத்தும். பின்னேரம் வார இறுதியில் மற்றும் விடுமுறைக் காலத்தில் பயன்படுத்தாது வெறிச்சோடிட் போயிருக்கும் வளங்களைப் பயன்படுத்தும் ஆற்றலும் கைகூடும்.ப்ாடசாலையை முழுச் சமூகத்தையும் ஒன்று சேர்க் 盟 வூாழ்நாள் நீட்சிக் கல்வியை வழங்கும் ’ : ४ : * ந்ைத் ஐரீற்றியமைக்க முடியும். சுவீடன் (Sweden) ༤.J5f(ཏེ་ # *நிகழ்ச்சிகள், திரைப்படம், காட்சிகளை நடாத்துவதற்கு பாடசாலைக் கட்டிடங்களை உபயோகிக் கின்றது. எந்தவொரு வயதுப் பிள்ளைக்கும் பயன்
 
 
 
 
 
 

நல்வி tion)
Orala
|
படுத்தக்கூடியவாறு வழங்கப்பட்ட கல்விப் பூங்காக்கள் லண்டன் நகரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தான் விரும்பும் துறைகளில் திருப்தியும், படைப்புக்களையும் பெற இப்பூங்காக்கள் பயன்படும். முழுக்குடும்பமும் சென்று கற்கக் கூடிய பாடசாலைகள் தற்போது திறக்கப்பட்ட வண்ணமுள்ளன.
பண்பாடு, விளையாட்டு, ஆய்வு ஆகிய மூன்று இரத்தினங் களும் ஒரே நிலையத்தில்
பிரான்ஸ் நாட்டில் இவ்வாறான நிலையங்களை காண முடியும். பாடசாலையில் பாரிய விளையாட்டரங்கு அமைக்கப்பட்டிருப்பதுடன் அதில் ஏறத்தாழ ஆயிரம் ஆசன வசதிகளுமுண்டு. கற்றல், விளையாட்டு மற்றும் கலாச்சார காண்பியங்கள் என்பன இந்நிறுவனத்தினால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. கலாசார அம்சங்களிலும் விளையாட்டிலும் பிள்ளைகளின் கவன ஈர்ப்பை குவிப்பது இதன் குறிக்கோளாகும். இவ்வாறு ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனத்துடன் பிள்ளைகள் தொடர்புபடும் போது செயற்பாடுகளுடன் இயல்பாகவே நாட்டங்கொள்வர். பாடசாலையும், நாடக அரங்கும், விளையாட்டரங்கும் என ஒன்றாயமையும் போது பிள்ளைகளுக்கு அவை வேறுபட்ட பழக்கமற்ற இடமாக அமையாது இவ்விடம் நன்கு பழக்கப்படுவதால் ஐயம், வெட்கமின்றி சிறுபராயத்தி லிருந்தே அவற்றுடன் இடைத்தொடர்பு ஏற்படுவதற்கு அவகாசம் கிடைக்கும்.
சமூகவாழ்க்கைக்கு கலாசாரத்தினதும் கல்வியினதும்
தொடர்பை ஏற்படுத்தல்.
நகர வாசிகளுக்கு அதிக கல்வியை வழங்குவதற்கும் அவர்களுக்கு தனது விருப்பிற்கேற்ப பண்பாட்டு வசதிகளை வழங்குவதற்கும் சில நகரங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. New Town of Grenoble gelg5|GBLIT6örgDGog5IT6örgDIT(g5Lib. சர்வசமக் கல்வியை வழங்கல் இதன்மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது மதிநுட்பம், திறமைகள், கலை இரசனை அறிவு, விளையாட்டு ஆகிய அனைத்து துறைகளிலும் விருத்தி ஏற்படுவது எதிர்பார்க்கப்படுகிறது. விளையாட்டு மைதானத்தை சுதந்திரமாகப் பயன்படுத்துவதற்கு அனுமதி
வழங்கப்பட்டுள்ளது. இயன்றளவு மத்திய தொடர்பாடல்

Page 43
ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. வாழ்க்கை நீட்சிக் கல்வியை மேம்படுத்தும் பொருட்டு ஆசிரியர்களுக்கு பெற்றுக்கொள்ளக் கூடிய கற்றல் உபகரணங்கள் ஒவ்வொரு குடிமகனுக்கும் பெறக்கூடியவாறு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பிள்ளைகளுக்கு வேலைத்தளம், விளையாட்டு உபகரணங்கள் என்பவற்றை பாடசாலை நேரம் கழிந்தும் பயன்படுத்த வசதிகள் செய்து கொடுக்கப் பட்டுள்ளன. வகுப்பறைகளும் பண்பாட்டு நிறுவனங்களில் கற்றல் நிலையங்களில் மக்கள் நடமாடும் இடமாக ஆக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பண்பாட்டுக் கல்வியை பிள்ளைகளுக்கும் இளைஞர்களுக்கும் வளர்ந்தோருக்கும் கணிப்பதற்கு வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.
சுற்றுச் சூழலைக் கட்டுப்படுத்தல்
பண்பாடு சமகாலச் சமூகத்தின் உயர்வாழ்வில் தர ரீதியாக சிறந்த மேம்பாட்டை ஏற்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுவதாயின் பண்பாட்டு யோசனைகளும் செயற்திட்டங்களும் சமூகத்திட்டமிடலின் ஓர் அங்கமாக மாற்றமடைதல் வேண்டும். முன்னது போன்று திட்டமிடலின் போது வெறுமனே பொருளாதார பகுதியை மாத்திரம் கருத்திற்கொண்டு செய்யப்படவேண்டியதல்ல. இது யுனெஸ்கோவினால் ஏற்பாடு செய்யப்பட்ட வெனிஸ் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட ஒரு கூற்றாகும்.
சில நகரங்களில் காணப்படும் வதிவிடங்களின் எண்ணிக்கை 2000ம் ஆண்டாகும் போது 1970களில் காணப்பட்டதன் இரு மடங்காக அதிகரித்துள்ளது. இந்த நகரமயமாக்கம் மற்றும் கைத்தொழில் மயமாக்கம் பெரும்பாலும் தனியாள் வாழ்வில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். இவ்வாறு சனத்தொகை பெருகுதல், நகரங்கள் சன நெரிசலுடையதாதல் காரணமாக நகரங்களின் செழிப்பின்றிய நிலை அதிகரிக்கும். நகர அபிவிருத்தியில் இயற்கையான சொத்துக்களைப் போன்று பண்பாட்டு அம்சங்களும் கவனத்திலெடுக்காது கைவிடப்படும். இவ்விழப்பு நாடகம், சித்திரம், கலை, சங்கீதம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் வெளிப்படும், தென்படும்.
இதனால் நகரத்திட்டமிடல், அலங்காரப்படுத்தல், நெடுங்காலத் திட்டமுடைய கட்டிடங்களையமைத்தல் ஆகிய துறைகள் கவனத்தில் எடுக்கப்படல் வேண்டும். இவ்வாறான நகரங்களின் சூழலை தூய்மையாகப் பேணல், அலங்காரப்படுத்தல், என்பன மனித வாழ்க்கைக்கு மிக முக்கியம். புதிய கட்டிட கலைஞர்களும் கலை இரசனை மிகு இதயங்கொண்ட, மக்கள் வாழ்க்கையை நன்கறிந்த பண்பாட்டு அம்சங்களைக் கற்றுத்தேர்ந்த திறமையான குழுவினராயிருப்பது அத்தியாவசியமானது.
E
 

திய நகரங்களைத் தோற்றுவித்தல்
திய நகரங்களைத் தோற்றுவிக்கும் போது பண்பாட்டுடன் நேரடியாக தொடர்புறுதல் வேண்டும். அதே போன்று கல்வி, ஒய்வு, வதிவிடம், தொடர்பாடல் ஊடகங்கள், *ய கருத்து வெளியிடக் கூடிய தன்னால் பக்கத்து பீட்டாருக்கு இடைஞ்சலின்றிய வகையில் சுற்றுச் சூழலை படிவமைப்பதன் வசதிகள் வழங்குவதும் மிக முக்கியம். இசைக்கருவிகளை மீட்டும் போதும் ஏனையோருக்கு இடைஞ்சல் இன்றிச் செய்வதற்கு கற்றுக்கொள்ளல் வேண்டும். அதே போன்று நகரில் பொருத்தப்பட்டுள்ள 1ல்வேறு உபகரணங்களினால் பண்பாட்டு வாழ்க்கைக்கு உதவியளிக்கக் கூடிய வகையில் சில வசதிகளை ாற்படுத்த முடியும். வாகனங்கள், வாகனப்பாதைக் குறியீடுகள், கழிவுத்தொட்டி, பொதுவான வங்கி, 5ம்பங்கள் என்பன மக்களுக்கு பிரயோசனம் கருதி திட்டமிட்டுச் செயற்படுத்தல் வேண்டும். அதே போன்று 5கரப்புறச் சூழலை அழகுபடுத்தவும், அதன் மூலம் உயரளவில் அழகிய தோற்றத்தை ஏற்படுத்தவும் அவ்வாறு பொருத்தப்பட்டுள்ளவற்றையும் உபயோகிக் முடியும். வெறுமனே பஸ் நிறுத்துமிடம் அல்லது பாதை )ாறுமிடமொன்றை அமைப்பது போதியதன்று. அவற்றைப் ார்க்கும் போது மிகவும் எழில்மிகு தோற்றத்துடன் Dனங்களைக் கவர்ந்திழுக்கும் இடங்களாகக் காட்சியளித்தல் வேண்டும்.
இவ்வாறான தொழிற்பாடுகளைப் பாடசாலையில் ஆரம்பித்து வாழ்க்கையின் அனைத்துச் செயற்பாடுகளுடனும் தொடர்புபடுத்தல் வேண்டும். இவ்வாறு கலையுணர்வு பற்றிய மக்கள் விழிப்புணர்வை மேம்படுத்துவதன் மூலம் கலைஞர்களுக்கு உரிய இடத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக் கையெடுத்தல் வேண்டும். வாழ்க்கையின் பூரணத்துவத்திற்கு அழகியற்கலையின் முக்கியத்துவம் பற்றி போதிய விளக்கமளித்தல் வேண்டும்.
கலைஞர்களுக்கு சமூகத்தில் உயர்வான நிலை கிடைக்கவேண்டுமென்பதுடன் கலைஞர்களும் சமகால மக்களுக்கு பயனுடையவர்களாய் வாழ்வதும் முக்கிய மானது. முற்காலத்தில் பெரும்பாலான நாடுகளில் படைப்பாற்றல் மிகு கலைஞர்கள் மிகவும் தாழ்நிலைப் பொருளாதாரத்தை உடையவர்களாகக் காணப்படுகின்றனர். இந்நிலை முற்றாக ஒழிக்கப்படல் வேண்டும்.
பொதுவான சமூக அலங்கரிப்புக்களை மேற்கொள்ள கலைஞர்களின் சேவையைப் பெற்றக்கொள்ள முடியும். உரிமை வழங்கும் நிலையங்கள், கலை கேந்திர நிலையங்கள், பொது வங்கி, விளக்குக் கம்பம், சிற்றுண்டி விற்பனை நிலையம், பஸ் தரிப்பிடம் என்பவற்றைத் திட்டமிடும் போது அவர்களின் சேவையைப் பெற்றுக்கொள்ள Մ)Iգեւյլb.
அகவிழி மே 2018

Page 44
நகருக்கு இயற்கையான தன்மையை வழங்குவதிலும் இவர்களால் சேவையாற்ற முடியும். சுவிடன் நாட்டில் மருத்துவமனைகளின் வெண்சுவர், பாடசாலைகளில் பச்சை நிறச் சுவர், சிறைக் கூடங்களில் மங்கல்நிறச் சுவர் என்பனவற்றில் உருவப்படங்கள் வரையப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் கல்விக் கொள்கை வகுப்போரும் நகர, கிராம அபிவிருத்தியைத் திட்டமிடுவோரும், அனைத்துப் பொது மக்களும், பண்பாட்டு மற்றும் அழகியற் கல்வியின் முக்கியத்துவம் பற்றி தெளிவு பெற்றிருத்தல்
மனிதவள அபிவிருத்தியின் முன்னணிச் செயற்ப
தேசிய மொழிக் கல்வி
கலாசார மற்றும் மொழி அடிப்படையில் இலங்ை கெளரவிக்கும் எதிர்காலச் சந்ததியினரை உருவாக்குத6 தாபிக்கும் நோக்கினை அடிப்படையாகக் கொண்டு த இரண்டாம் மொழியாக சிங்களம் அல்லது தமிழ் மொ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
2011 ஆம் ஆண்டில் 6ம் தரம் தொடக்கம் 13 வை ஏனைய மொழி அறிவினை மேம்படுத்தும் நோக்கு தமிழ் மொழி மற்றும் இலக்கியப் போட்டித் தொட செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சிறுவர் எழுத்தாளர்களின் ஆக்கங்களை உருவாக் மற்றும் கூர்மதி" கலை இலக்கியச் சஞ்சிகைகளை
ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிக் கல்வி
உலகளாவிய பயன்மிக்க பிரஜைகளை உருவா மொழித் திறமையை சகல மாணவர்களுக்கிடையேயும் பயன்பாட்டை விருத்தி செய்தல் உட்பட பல்வேறு எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் பல்வேறுபட்ட மொழியை விருத்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பிரயோக மொழிப் பயன்பாட்டினை விருத்தி செ பங்கேற்புடன் போட்டிகள், கண்காட்சிகள், முகாம்க ஒரு இலட்சம் மாணவர்களுக்காக சகலருக்கும் அ
ஆங்கில வளவாளர் மத்திய நிலையங்களைத் த மூன்று மத்திய நிலையங்களைத் தாபிக்க நடவடி
தகவல் தொழிநுட்ப வசதிகள் மற்றும் ஊழியர்க: ஆங்கிலம் கற்கும் சந்தர்ப்பத்தினை விருத்தி செய்
அகவிழி மே 2018

வேண்டும். சிறார்களைப் போன்று இளைஞர், வளர்ந் தோருக்கும் கலை இரசனை பெறுவதற்கும் கலையுடன் இணைந்து கொள்வதற்கும் தேவையான வசதிகள் வழங்கப்படல் வேண்டும். மனிதக் கருணை, மனித நற்பண்புகள் விருத்தியடைவது ஆக்கத்திறனுடைய கலைஇரசனையுடைய இதயங்களிலாகும். எதிர்காலத்தில் போரின்றி சமாதானத்தை அங்கீகரிக்கும் உலகு உருவாகு வதற்கு மக்களைப்போன்று ஆட்சி அதிகாரத்திலிருப்பவர் களுக்கும் மிருதுவான (மென்மையான) இதயம் படைக்கப் படுவதற்கு பண்பாட்டுக் கல்வி அத்தியாவசியமாகும்.
ாடாக மொழிக் கல்வி
கெயின் அடையாளத்தைக் காத்து தேசிய பெறுமதிகளை ல் மற்றும் மொழி அறிவின் ஊடாக தேசிய நல்லிணக்கத்தை ாய் மொழியாக சிங்களம் அல்லது தமிழ் மொழியையும், ழியிலும் தேர்ச்சியினை மேம்படுத்துவதற்குத் தேவையான
ரையான தரங்களின் மாணவர்களுக்கு தாய்மொழி மற்றும் டன் சிங்கள மொழி மற்றும் இலக்கியப் போட்டித் தொடர், ரை நடாத்தி தேசிய விருது வழங்கும் விழாவை ஒழுங்கு
குவதற்கான சந்தர்ப்பத்தினை வழங்கும் வகையில் "நுவன ா அச்சிட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
க்கும் நோக்குடன் வாழ்வதற்குத் தேவையான ஆங்கில
விருத்தி செய்வதற்கான ஆசிரியர்களின் பிரயோக மொழிப் பட்ட செயற்பாடுகளை அமுல்படுத்த நடவடிக்கைகள் க் கற்பிக்கும் வசதிகளையும் தொடர்ந்தும் பாடசாலைகளில்
ய்வதற்காக 2011 ஆம் ஆண்டில் 1152 மாணவர்களின் 5ள் மற்றும் விழாக்கள் நடாத்தப்பட்டன.
ஆங்கில வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது.
Tபித்தல் மற்றும் ஆங்கில மொழி கற்பிக்க அதி உயரிய க்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ளைப் பயன்படுத்தி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின்
யவும் எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Page 45
இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் /Depar
இலங்கைக் கல்வி நிருவாக சேவை II வகுப்பிற்கு (பொ ஆட்சேர்த்துக்கொள்வதற்கான மட்டுப்படுத்தப்ப Limited Competitive Examination for Recruitment to
of the Srilanka Educational Administra
கல்வி நிருவாகம் பற்றியவிடய ஆய்வு (Case Study Rel
பின் வரும் உரைப் பகுதியை வாசித்து, எல்லா வினாக்களுக்கும் விடை எழுதுக.
அகஸ்வத்தை மகா வித்தியாலயம் துரிதகதியில் நகரமயமாகிக்கொண்டு வரும் பிரதேச எல்லையில் உள்ளது. இவ்வித்தியாலயம் 1600 பிள்ளைகளையும் 80 ஆசிரியர்களையும் கொண்டுள்ளது. இதில் தரம் 1 தொடக்கம் க.பொ.த (உ/த) வரைக்கும் வகுப்புகள் நடைபெறுகின்றன. க.பொ.த (உ/த) வகுப்பில் கலை, வர்த்தகம் ஆகிய பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
திரு. அமன்கல்ல இலங்கைக் கல்வி நிருவாக சேவைக்கு ஆட்சேர்ப்பதற்கான வரையறுத்த போட்டிப் பரீட்சையில் தேறி, பயிற்சியின் பின்னர் சிறிது காலத்திற்கு ஒரு பாடசாலையில் பிரதி அதிபராகப் பணியாற்றினார். அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அகஸ்வத்தை மகா வித்தியாலயத்தில் சேர்ந்து அதன் அதிபராகப் பணியாற்றி வருகின்றார்.
திரு. அமன்கல்ல இவ்வித்தியாலயத்தின் அதிபராகப் பணியாற்றும் காலத்தில் வித்தியாலயத்தில் முனைப்பான அபிவிருத்தி எதுவும் ஏற்படவில்லை. ஆனால் அவர், இவ்வித்தியாலயத்தின் பணிகள் சாதாரண நிலையில் நடைபெறுவதில் வெற்றியீட்டினார். ஆசிரியர்கள் தமது கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த அதே வேளை அவர்களுக் கிடையே அல்லது அவர்களுக்கும் அதிபருக்குமிடையே தீவிர முரண்பாடு எதுவும் ஏற்படவில்லை.
இவ்வித்தியாலயத்தில் பயிலும் பெரும்பாலான மாணவர்கள் மத்தியதர வகுப்பையும் தொழிலாளர் வகுப்பையும் சேர்ந்தவர்கள். மாணவர் குழுக்களுக்கிடையே அவ்வப்போது முரண்பாடுகள் ஏற்பட்ட போதிலும் அவை வித்தியாலயத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் கடும் சம்பவங்களாக உருவாகவில்லை. பின்னேரங்களில்
பிள்ளைகளின் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளை
மேற்பார்வை செய்வதற்கு ஆசிரியர்கள் இல்லாமையால்
இத்தகைய முரண்பாடுகள் பெரும்பாலும் ஏற்பட்டன.
ஒரு நாள் அதிபர் காலைக் கூட்டத்தின் பின்னர் தமது
அலுவலகத்தில் தினசரி நிருவாகப் பணிகளில் ஈடுபட்டிருந்த
 

tment of Examinations, Sri Lanka.
துச் சேவையணிக்கு / விசேட சேவையணிக்கு) ட்ட போட்டிப் பரீட்சை - 2005(2006) Class III (General Cadre / Special Cadre) ive Service-2005 (2006)
ating to Educational Administration) - Two hours
பாது க.பொ.த (உத) வகுப்பில் அரசியல் மூலத்துவங்கள் ான்னும் பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியரான திரு. ணபாலா அங்கு வந்தார். அவர் தாம் அதிபர் சேவைக்கு ஆட்சேர்ப்பதற்கான பரீட்சைக்குரிய விண்ணப்பத்தைத் தயார் செய்து கொண்டு வந்திருப்பதாகவும் அதில் அதிபர் "மிகத் திருப்தியானது” என்று புறக்குறிப்பு (endorsement) இட வேண்டும் எனவும் கூறினார். அதிபர் அவ்விண்ணப்பத்தை 3ன்றாகப் பரிசீலித்துவிட்டு, “விண்ணப்பகாரரின் பணியும் டத்தையும் திருப்திகரமானவை” எனப் புறக்குறிப்பிட்டுத் மது கையொப்பத்துடன் அதனை அவரிடம் கையளித்தார்.
இப் புறக் குறிப்பை வாசித்த திரு. ரணபாலா வெறுப்புற்றார். ஒரளவுக்கு நிதானம் இழந்த அவர்
"நான் இவ்வித்தியாலயத்தில் 8 ஆண்டுகளாகக் கற்பித்து வருகிறேன். பொதுப் பரீட்சைகளுக்கு தோற்றும் )ாணவர்களுக்காக மேலதிக (பின்னேர) வகுப்புகளை 5டத்தியுள்ளேன். எனது மனைவியார் நோயுற்றமையால் கடந்த ஆண்டிலிருந்து அவ்வகுப்புகளை நடத்த இயலாமற் போய்விட்டது. வித்தியாலயத்திற்கு நற்பெயர் வாங்குவதற்கு 2யராமல் உழைத்துள்ளேன். கிராமத்தில் வதியும் மக்கள் வித்தியாலயத்தைப் பற்றிப் பல்வேறு விதமாகப் பேசும்போது அவர்களுக்கு எதிராகக் கதைக்கின்றேன். ஆகவே, எனது 1ணியும் நடத்தையும் மிகவும் திருப்திகரமானவை என ரன் புறக்குறிப்பிட முடியாது? என விசாரித்தார்.
“நான் எனது கடமைகளைப் பிறரைத் திருப்திப் Iடுத்துவதற்காகச் செய்வதில்லை. ஒருவர் செய்யும் 1ணிக்கேற்பவே செயற்படுகிறேன். நீர் கடந்த ஆண்டு லிகையாக விடுப்பை (லீவை) எடுத்துள்ளிர், நீர் பிள்ளை 5ளின் இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் தொடர்பாகப் பின்னேரங்களில் வித்தியாலயத்திற்கு வருவதை நான் ஒருபோதும் பார்த்தில்லை’ என அதிபர் பதிலளித்தார்.
“கடந்த ஆண்டில் மனைவியாரின் நோய் காரணமாக மேலதிகப் பணியில் ஈடுபடவில்லையென நான் ஏற்கனவே கூறியுள்ளேன். முன்னைய அதிபர் திரு. கருணாரத்னாவிடம் விசாரித்தால் நான் ஆற்றிய பணி பற்றி அறிந்து
asTeirerson Lib'.
அகவிழி மே 2013

Page 46
"நான் ஒவ்வொருவருக்கும் பின்னால் சென்று எனது ஆசிரியர்கள் பற்றி அறிய வேண்டியதில்லை. எந்த ஆசிரியர் நன்றாகப் பணியாற்றுகிறார் என்பதை நான் அறிவேன்’.
"ஆம், உங்களை வெகுமதிகளுடன் வீட்டில் சந்தித்த ஏனையோர் பற்றிக் கோள் சொல்பவர்களுக்கு மிகத் திருப்திகரமான புறக்குறிப்புகள் கிடைப்பதை நான் அறிவேன். கடந்த மாதத்தில் செல்வி சிறியாவதிக்கு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு செல்வதற்கு எப்படி மிகச் சிறந்த புறக்குறிப்பு கிடைத்தது?”
என ரணபாலா கடுந்தொனியில் கூறினார்.
“என்ன சொன்னாய்?. எனது அலுவலகத்திலிருந்து வெளியே செல்”
என அதிபர் சத்தமிட்டார்.
"நான் போகிறேன், ஆனால் நீர் இவ்வித்தியாலயத்தில் அதிபராகத் தொடர்ந்து பணியாற்றுவதற்கு உம்மை விடமாட்டேன்’
என்று ரணபாலா பயமுறுத்தினார்.
இச்சத்தத்தைக் கேட்ட அயல் வகுப்பு ஆசிரியர்கள் சிலர் அங்கு வந்து ரணபாலாவை வெளியே அழைத்துச் சென்று அமைதிப்படுத்தினர்.
அதிபர் இச்சம்பவத்தை விவரித்து வலயக் கல்விட் பணிப்பாளருக்கு ஒரு நீண்ட கடிதத்தை எழுதி, திரு ரணபாலா தம்மை இகழ்ந்தும் பயமுறுத்தியும் உள்ளார் என முறையிட்டு, அவரை இவ்வித்தியாலயத்திலிருந்து உடனடியாக இடமாற்றஞ் செய்யுமாறு கோரினார்.
அடுத்த வாரத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் விசாரணைக்காக வித்தியாலயத்திற்கு வந்தார். அவர் மேற்குறித்த சம்பவம் தொடர்பாக அதிபர் திரு.ரணபாலா சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வந்த ஆசிரியர்கள் ஆகியோரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவுசெய்தார். அதன் பின்னர் பணிப்பாளர் ஆசிரியர் கூட்டத்தை நடத்தி உரை நிகழ்த்தினார்.
“இவ்வித்தியாலயத்தில் கடந்த வாரம் விரும்பத்தகாத ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆசிரியர்கள் பணிகளைத் தகுந்தவாறு,மதிப்பிடுவதற்கான ஒரு திட்டம் இருத்தல் வேண்டும்.இதற்காகத்தான் ஆசிரியர் வினையாற்றுகை ப்பீட்டுத் திட்டம் பேற்றிய அறிவுறுத்தல் கைந்நூல் ாரித் ஜீடு:ஆதனை நடைமுறைப்படுத்த வேண்டிய விதம் பற்றிப் பாடசாலைக்குச் சுற்றுநிருபத்தின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனைப் பற்றிப் பல ஆண்டுகளாகட் ܕ. பாடசாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்த போதும் அதனை
 
 

நடைமுறைப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் போதுமானவையல்ல. இவ்வாண்டு தொடக்கம் அதனைக் கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும். அடுத்த ஆண்டு தொடக்கம் ஆசிரியர்களின் சம்பள ஏற்றத்தை விதந்துரைக்கும் போது அது கருத்தில் கொள்ளப்படும். இத்தகைய திட்டத்தை இவ்வித்தியாலயத்தில் நடைமுறைப்படுத்தியிருந்தால், மேற்குறித்த சம்பவம் நடைபெற்றிருக்க மாட்டாது. ஆகவே இன்று தொடக்கம் ஆசிரியர் வினையாற்றுகை மதிப்பீட்டுத் திட்டத்தை நன்றாகப் பரிசீலித்து, அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். அதிபரும் ஆசிரியர்களின் கருத்துக்களை விசாரித்து அறிந்து, கூட்டு முயற்சிக்காக அதனை நடைமுறைப்படுத்துவதில் அக்கறைகொள்ள வேண்டும். அத்தகவல்களைப் பயன்படுத்தி எவ்வேளையிலும் ஆசிரியர் பற்றிய பணியைச் சரியாக மதிப்பிடலாம்”.
பின்னர் அதிபர் உட்பட எல்லா ஆசிரியர்களும் பாடசாலையில் கூட்டுறவுடன் பணியாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்திவிட்டு, வலயக் கல்விப் பணிப்பாளர் விடைபெற்றுச் சென்றார்.
அடுத்த வாரம் திரு. ரணபாலாவுக்கு அருடைய இல்லத்திற்கு அண்மையில் உள்ள ஒரு பாடசாலைக்கு இடமாற்றஞ்செய்யப்பட்டமைக்கான ஒரு கடிதம் வலயக் கல்விப் பணிப்பாளரிடமிருந்து கிடைத்தது.
(1) இவ்வித்தியாலயத்தின் அதிபர் வெற்றிகரமான
முகாமையாளராவென நுணுக்கமாக விளக்குக.
(i) ஆசிரியர் வினையாற்றுகை மதிப்பீட்டுத் திட்டத்தின் நோக்கங்களை விளக்குக. இலங்கைப் பாடசாலை முகாமையில் இத்திட்டத்தின் பொருத்தப்பாட்டினை நுணுக்கமாகப் பரிசீலிக்க.
(i) இச்சம்பவம் தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளரின் அணுகுமுறை பொருத்தமானதா, பொருத்தமற்றதா என பரிசீலிக்க.
(iv) அகஸ்வத்தை மகா வித்தியாலயத்தின் அதிபராக நீங்கள் நியமிக்கப்பட்டால், அவ்வித்தியாலயத்தில் ஆசிரியர் வினையாற்றுகை மதிப்பீட்டுத் திட்டத்தை அறிமுகஞ் செய்வதற்கு மேற் கொள்ளும் நடைமுறைகளை விளக்குக.
(மேற்குறித்த பகுதியிலுள்ள வினாக்களுக்கான விடைகள் june மாத இதழில் எதிர்பாருங்கள்.)
எதிர் வரும் மாதங்களில் மேற்படி பரீட்சை நடைபெறவுள்ளதால் இப்பரீட்சை தொடர்பான வினாக்களும் விடைகளும் அகவிழியில் தொடர்ந்து வெளிவரும்.

Page 47
சந்தா விண்ணப்பப் படிவம்
பெயர் (முழுப் பெயர்)
கற்பிக்கும் பாடசாலை ് --~
பாடசாலை முகவரி
தொலைபேசி/தொலைநகல் இல. :-
மின்அஞ்சல் முகவரி
கற்பிக்கும் பிரிவு
அகவிழி அனுப்ப வேண்டிய முகவரி;-
இத்துடன் ரூபா க்கான காசோலை/காசுக்
இல ( ) இணைத்துள்ளேன்.
சந்தா செலுத்த சில எளிய வழிமுறைகள்
அகவிழி சந்தா செலுத்த விரும்புவோர் மற்றும் அகவிழி வெளியீடுகளை நேரடியாகப் பெறப் பணம் செலுத்த விரும்பு வோருக்கான சில எளிய வழிமுறைகள், அகவிழி, கொமஷல் வங்கி, வெள்ளவத்தை நடைமுறைக்கணக்கு எண் 100022581 Commercial வங்கியின் எந்த கிளைகளி லிருந்தும் அகவிழி கணக்கு எண்ணுக்கு சந்தா அல்லது புத்தக விலையை பணமாக வைப்பு செய்து அதன் பற்றுச்சிட்டை எங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வங்கி கமிஷன் இல்லை பிற வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் VILUTHU - AHAVIL பெயருக்கு காசோலை எழுதி அகவிழி கணக்கு எண்னைக் குறிப்பிட்டு உள்ளூர் Commercial வங்கியில் வைப்பு செய்யலாம். மேற்படி வழிமுறைகளில் பணம் அனுப்புவர்கள் செலுத்தப் பட்ட தொகை, தேதி, இடம், நாள் மற்றும் தேவைகளைக் குறிப்பிட்டு அகவிழி தலைமை அலுவலக முகவரிக்கு கடிதம் எழுதவேண்டுகிறோம். அல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சந்தா விபரம் தனி இதழ் : 100/- ஆண்டு சந்தா (தபால் செலவுடன்) : 1200/s
N أبر \\
 
 

உதவிதி 3, Torrington avenue, Colombo - 07
Tel : 01 l-2506272, Fax: 01 l-2585190 Email: ahavili,vilithu(agmail.com
. ஆரம்பம்/இடைநிலை/உயர்தரம்
கட்டளையை
திகதி
ப்படிவத்தை போட்டோ பிரதிசெய்து உபயோகிக்கவும்.
- - - - - - - - - - - - - - -->
பின் அட்டை : 7000/-
உள் அட்டை (முன்) : 6000/- உள் அட்டை (பின்) : 5000/-
உள் பக்கம் : 4000/-
நடு இருபக்கங்கள் : 6500/-
Colombo
3, Torrington Avenue, Colombo - 07. Tel: O 1 -2506272 Jafna 167, Hospital Road, Jaffna. Tel: O21-2229866 Trincomalee 81 A. Rajavarodayam Street, Trincomalee
Tel: O26-222494
Batticaloa 37, Old Rest House Road, Te: O65-2222097
أبر

Page 48
கிடைக்கு பூபாலசிங்கம் புத்தகக்கடை
202, செட்டியார் தெரு, கொழும்பு - 11 தொ.பே.இல. 011-2422321
பூபாலசிங்கம் புத்தகக்கடை 4A, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம் தொ.பே.இல. 021-2226693
நியூ கேசவன் புக்ஸ்டோல் 52 டன்பார் வீதி, ஹட்டன் தொ.பே.இல.: 051-2222504, O51-2222977
அறிவாலயம் புத்தகக்கடை 190 B புகையிரத வீதி, வைரவப்புளியங்குளம், வவுனியா தொ.பே.இல.: 024-4920733
நூர் மொஹமட் நியூஸ் ஏஜண்ட் 132, பிரதான வீதி, கிண்ணியா-03 தொ.பே.இல. 026-2236266
புக் லாப் 20, 22 சேர் பொன் ராமநாதன் வீதி, பரமேஸ்வரா சந்தி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம் தொ.பே.இல: 021-2227290, கை.தொ.இல. 077-1285749
இஸ்லாமிக் புத்தக இல்லம் 77, தெமட்டக்கொட வீதி, கொழும்பு - 09 தொ.பே.இல. 011-2688102
Noori Book Shop.
No. 143, Main Street, Kathankudi Tel: O65-2246883
Easwaran Book Depot No. 126/1, Colombo Street, Kandy I Tel.: 081-2220820
Pr Kumara 39, 36th La kUm
Registered in the Department of P୯s
 
 
 
 

தமிடங்கள்
பூபாலசிங்கம் புத்தகக்கடை 309-A 2/3 காலி வீதி, வெள்ளவத்தை, கொழும்பு தொ.பே.இல.: 4515775, 2504266
அபிஷா புத்தகக்கடை 137, பிரதான வீதி, தலவாக்களை தொ.பே.இல. 052-2258437
குமரன் புக் சென்டர் 18, டெய்லிபயர் கொம்பிலக்ஸ் நுவரெலியா தொ.பே.இல. 052-2223416
அல்குரசி புத்தக நிலையம் 28, 1/2, புகையிரத வீதி, மாத்தளை தொ.பே.இல. 066-3662228
Rajah’s Book Centre No. 111, Main Street, Batticaloa Tel.: 065-2222371
S. சச்சிதானந்தகுமார் 19/26, மாரியம்மன் கோவில் வீதி, கல்லடி, மட்டக்களப்பு தொ.பே.இல. 077-1270458
எஸ்.எல். மண்சூர் அனாசமி டொட் கொம். அட்டாளைச்சேனை - 10
தொ.பே.இல. 0779059684, 0752929 150
Zeen Baby Care 121B, Arm Mill Road, Addalaichenai — 01. Tel: O77 3651138
அன்பு ஸ்டோர்ஸ் 14 பிரதான வீதி, கல்முனை தொ.பே.இல. 067.2229540
ISSN 1800-1246
|
Oil OO 5
inted by D D
Press (Pvt) Ltd. ne, Colombo 06 D kGogmail.com
S of Sri Lanka Under QD, IO, Ney S. 20 3