கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகவிழி 2013.06

Page 1
கலாநிதி சசிகலா குகமூர்த்தி 0 மமரி கவர்னராஜா R ரமனேஸ் ந தெய்வசுந்தரம் திருமதி சிவலோக
SS SS SSLSLSSS L S SSLLLL L S SS SS SS SS SS
www.viluthu.org
 

ாசா பொ. பூலோகநாதன் பார்த்திபன்
சுரேந்திரன்
agarajah O Dr. Laithn Wijesinghe
sensu: too/

Page 2
'பருவம்,பிள். R மொழிவிருத்து
ம் ஆண்டிற்கான 2O2 2. LL GOTTI LIL
 

கவிழிகளை பெற விரும்பும் தொடர்பு கொள்ளவும்.

Page 3
AHIAVILI 3, Torrington Avenue Colombo 07 Tel.: O 11 250 6272 E-mail: ahavili.viluthu(agmail.com
அகவிழியில் இடம்பெறும் கட்டுரைகளுக்கு அதன் ஆசிரியர்களே
பொறுப்பு, கட்டுரைகளில் இடம்பெறும் கருத்துக்கள் "அகவிழி”
யின் கருத்துக்கள் அல்ல.
 

ISSN 1800-1246 のY Gent.
1. சுய கற்ற லின் பால் மாணவர்களை 4
சுயநெறிப்படுத்தல்
2. மாணவனை சமூக மயமாக்குவதில் வீடு, 8
பாடசாலை என்பவற்றின் முக்கியத்துவம்
3. மாணவர்களின் மனப்பாங்கை விருத்தி 12 யாக்குவதில் ஆசிரியர்களின் பங்களிப்பு
4. சமூக விஞ்ஞான ஆய்வுகளில் புறவயத் 14
தன்மை
5. ஆசிரிய தலைமைத்துவத்தின் வகிபங்குகள் 16
6 மனித மூளையும் அதன் நிலைத்திருப்பும் 20
7. ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியும் 23 பாடநூல்களும் ஆரம்பப் பிரிவு ஆசிரியர் களின் இரு கண்கள்
8. கணினி மொழியியல் 25
9. உடல் ஒலிபெருக்கியால் (Stetho- 28 scope) உணர முடியாத ஏராளமான உணர்வலைகளை இதயத்தினால் உணர முடியும் (உணர்வு-அலை)
10. கல்வி துறையில் சேவைகள் 32
11. தேசிய கல்வியியற் கல்லூரிகளில் வர்த்தக 34 பாடநெறிக்கு தெரிவாகும் மாணவ ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்
12 பாடசாலையை விட்டு விலகுவோர் 36 மற்றும் பாடசாலைக்கு வெளியே உள்ள பிள்ளைகளுக்கு மாற்றுக்கல்வி வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ள
உபாயங்கள்
13 திறவறிவர் பெயர்விழப்பு 40

Page 4
つ ISSN
2"云
LDIRI:
ஆசிரியர்: Ιβύ6) Πg V.S. இந்திரகுமார் சாந்தி சச் நிறைவேற்றுப் ப
ஆலோ
திரு. து. ராஜேந்திரம் முன்னாள் முதுநிலை விரிவுரையாளர், இலங்கை திறந்த பல்கலைக்கழகம் பேராசிரியர் சோ. சந்திரசேகரம் முன்னாள் கல்விப் பீடாதிபதி, கொழும்புப் பல்கலைக்கழகம் கலாநிதி உ. நவரட்ணம் முன்னாள் ஒய்வு நிலைப்பணிப்பாளர், தேசிய கல்வி நிறுவகம்
திரு.தை. தனராஜ்
முதுநிலை விரிவுரையாளர், இலங்கை திறந்த பல்கலைக்கழகம் லெனின் மதிவானம் பிரதி கல்வி வெளியீட்டு ஆணையாளர், கல்வி அமைச்சு கலாநிதி சசிகலா குகமூர்த்தி சிரேஷ்ட விரிவுரையாளர், இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்
ܢܠ
ஆசிரியரிடமிருந்து.
ஆசிரியர்களே உங்களிடம் கற்கும் ஒவ்வொரு பிள்ளையும் உங்களது பிள்ளைகள் என ஏற்றுக் கொள்வீர்களானால் உயிர்ப்புடன் அவர்கள் மீது கவனம் செலுத்துங்கள். ஏனெனில் உங்களது மாணவர்கள புதியதோர் மன உபாதைக்கு உட்பட்டுள்ளனர் என்பதைத் தெரியப்படுத்த வேண்டிய தேவை உங்களது கடமை என்பதை உணர்ந்து கொண்டவர்களாக இருக்க வேண்டுமென்பதற்காக பின்வரும் விடயங்களைச் கூற வேண்டியிருக்கிறது.
அகவிழி ஜூன் 2013

800-1246 N
5 இதழ்
ஆசிரியர்: ஆசிரியர் குழு: சிதானந்தம் க. சண்முகலிங்கம் ணிப்பாளர்(விழுது) பத்மா சோமகாந்தன்
சகர் குழு
பேராசிரியர் வ. மகேஸ்வரன் தலைவர் தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம் திரு.க. இரகுபரன்
முதுநிலை விரிவுரையாளர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் பேராசிரியர் துரை மனோகரன் தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம் பேராசிரியர் இரா.வை. கனகரட்னம் தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம் திரு.வீ. தியாகராஜா சிரேஷ்ட ஆலோசகர், சமூக விஞ்ஞானக் கற்கைகள் துறை, இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம் திரு.கே. சாம்பசிவம் தேசிய ஆலோசகர் கல்வி முகாமைத்துவம் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம் திருமதி. அருந்ததி ராஜவிஜயன் ஆசிரிய ஆலோசகர், கொழும்பு கல்வி வலயம் ஜி. போல் அன்ரனி
முன்னாள் பிரதி பரீட்சை ஆணையாளர்
கணினியானது தற்காலத்தில் இன்றியமையாததொரு பண்டமாக ஆகிவிட்டது. அதனுடன் கைத்தொலைபேசியும் இணைந்துள்ளது. இவை இரண்டும் பல அபூர்வ சேவைகளைச் மனித சமூகத்திற்கு வழங்குகின்றன. உலகம் பூகோள மயமாக்கப்பட்டிருப்பது கணினியும் அதனுடன் சார்பான தொடர் பாடல் ஊடகங்கள் மூலமாகும். எனவே கணினியின்றிய எமது வாழ்வு கடினமானது. குறுகிய வீச்சுடையது. எனினும் கணினியின் பாவனையால் பயன்கள் பல பெறப்படுவது போன்று சிறார்களுக்கு இழைக்கப்படும் விபரீதங்களும்

Page 5
விளைவுகளும் ஆசிரியரினதும் பெற்றாரினதும் விசேட கவனத்தைப் பெற வேண்டியவை.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி சிறார்கள் கணினிக்கு அடிமையாகும் தீவிர அபாயம் நிலவுவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கணினிக்கு அடிமையாகிய பிள்ளையின் மூளைத்தொழிற்பாடு (Brain Function) ஹெரொயின் (Heroine) எனும் போதைத்து களிற்கு அடிமையாகிய பிள்ளையின் மூளைத் தொழிற்பாட்டிற்கு சமமாகக் காணப்படுவதாக Scan பரிசோதனைகள் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. கணினி மற்றும் இணையத்தினால் (Internet) ஏற்படும் நிர்க்கதி நிலைமைகளையும் நாம் மறுக்கமுடியாது.
வரையறையின்றிய இணையத்தரவு திரட்டலும் 956örep6)b Lugbab6f U60)Lgbg), b (Suffer From Anxiety) சாதாரணமாகிவிட்டது. சில வேளைகளில் நாம் நெருக்கீட்டிலிருந்து (StreSS) அல்லது வேதனை தரும் சிந்தனைகளிலிருந்து தப்பியோடுவதற்கு கணினியானது ஒரு வகையில் புத்துணர்ச்சியைத் தரும் என்றாலும் அதன் அந்தரங்கம் மூலம் மேலும் நெருக்கீடு அதிகரித்து மனநோயாக வெளிப்படும் வரை விருத்தியடைந்து செல்லும் என்பதே யதார்த்தமாகும்.
உளச்சோர்விற்கு (Depression) உட்படுதல் மற்று மோர் அபாய நிலையாகும். அடிக்கடி கணினியை உபயோகிப்பதால் உளச்சோர்வு மற்றும் அது தொடர்பான குணங்குறிகள் பிள்ளைகளில் வெளிப்பட முடியுமென ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலைமை பிள்ளைகளில் பாடசாலை செல்லாமை, உற்சாகம் குறைவடைதல் ஞாபகசக்தி / நினைவாற்றல் குறை வடைதல் அடிக்கடி மனவெழுச்சிகள் (கோபம்) வெளிப் படல் உடல், உள, சாந்தநிலை (Relax) பறிக்கப்படல். கல்வியில் வீழ்ச்சியடையும் சந்தர்ப்பங்கள் என்பவற்றை பெருமளவில் ஏற்படுத்துகின்றன என கண்டறியப் பட்டுள்ளது.
இணையத்தினாலேற்படும் இணைப்புக்களும் (Link) அவற்றிக்கு இரையாதலும் பிள்ளைகளில் அதிகரித்த 61605600T(p6ft 6Tg5). 395 Cyber Relationship Addition எனவும் அழைக்கப்படும். இணையத்தினூடாக முழு உலகிலுமுள்ள நண்பர்களை தொடர்புகொள்ள முடிவ துடன் புதிய நண்பர்களை தேடியறியவும் வாய்ப்புக் களேற்படும். இவ்வாறு தொடர்பு கொள்ளும் நண்பர்கள் உண்மையான, நேருக்கு நேர் சந்தித்து பழகும் நண்பர்களை விட நெருக்கமாவதுடன் அவர்களை விட்டுப் பிரிவதும் இலகுவான காரியமன்று.
இவ்வாறு அதிகரித்துச் செல்லும் இணையப் பாவனையானது பிள்ளைகளில் பின்வரும் குணங்

குறிகளை தோற்றுவிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது பிள்ளைக்குப் பிள்ளை வேறுபடும். அடிமையாவது பெரும்பாலும் பிள்ளையிலேயே இடம்பெறுகின்றது. அதற்கான காரணம் மூளையும் ஆளுமையும் வளர்ச்சி படைந்து கொண்டிருப்பதாகும்.
உதாரணமாக சமைக்கத் தெரியாத மங்கையரும் உழைக்கத் தெரியாத ஆடவரும் உருவாகியிருத்தல். அன்றாட செயற்பாடுகளில் பின்னடைவான பிள்ளைகள், நண்பர்கள் குழாத்திலிருந்து விடுபட்டு தனிமைப்படுத்தப் பட்டிருத்தல், தன்னில் (சுய) வெறுப்புக் காணப்படல், இணையத்திலிருந்து விடுபடுதல் கடினமாயிருத்தல், தனக்கு இன்பம் தரும் இதமாக அமையும் ஊடகங்கள் கணினி மற்றும் கைத்தொலைபேசி மாத்திரமே எனும் உணர்வுகள் மேலோங்கியிருத்தல், மேலும் உடலியல் சார்ந்து கண்பார்வை குறைவடைதலும், கண்ணில் உலர்தல் ஏற்படுதலும், தொடர்ந்து நிலைத் திருக்கும் தலை, கழுத்து, இடுப்பு வலி, உறக்கமின்மை, உடல் எடை குறைவடைதல் அல்லது அதிகரித்தல் போன்ற இன்னோரன்ன விடயங்களைக் கூறலாம்.
பெற்றோர்களே கணினிக்கும் கைத்தொலைபேசிக்கும் உங்கள் பிள்ளையை பறிகொடுக்காமலிருக்க கணினி, TV என்பவற்றைத் தினமும் இரு மணிநேரத்திற்கு மட்டுப்படுத்துங்கள், இணையத்தில் பெற்றோர் பிள்ளை களின் செயற்பாடு தொடர்பாக கண்ணுங்கருத்து மாயிருத்தல், பிள்ளையை விளையாட்டில் ஈடுபடுத்தல், வினோத நிகழ்ச்சி, வேறு பொழுது போக்குகளில் ஈடுபடுத்தல், பிள்ளையுடன் குடும்பக் கலந்துரை பாடல்களை மேற்கொள்ளல், தொலைக்காட்சிச் சண்டைக்காட்சிகளை பார்வையிட்டு சண்டையிடுதல், தற்கொலை செய்ய எத்தனித்தல் போன்றவற்றை பிள்ளைகளிடமிருந்து விலக்கி வைப்பதற்கு ஆசிரியர்களி, பெற்றோருக்கு விழிப்புணர்வூட்ட வேண்டியது மிகப்பெரிய பொறுப்பாகும்.
வாராந்தம் 10 மணி நேரத்திற்கு மேல் இவற்றில் செலவிடும் பிள்ளைகள் கல்வியில் பின்னடைவதாக ஆய்வுகள் உறுதிசெய்கின்றன. எனவே இவ்விரு ஊடகங்களுக்கும் உங்களது பிள்ளைகளின் கல்வியைப் றிகொடுக்காமலிருக்க எந்நேரமும் ஆசிரியர்களும் பெற்றோரும் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதே அவர்களின் கல்வி அபிவிருத்தி தேர்ச்சிக்கான முதற்பணியாக இருக்கும் என்பது எமது நம்பிக்கையாகும்.
V.S. இந்திரகுமார்
அகவிழி ஜூன் 2013

Page 6
சுயகற்றலின்பால் ம சுயநெறிப்படு
கலாநிதி சசிகலா குச சிரேஷ்ட விரிவுரை கல்விப்பீடம், இலங்கை திறந்த
அறிமுகம்
மாணவர்கள் தமது அறிவு, திறன், மனப்பாங்கு என்பன வற்றை தாமே சுயமாக விருத்திசெய்ய வேண்டும். காலமாற்றத்திற்கும் தேவைக்கும் ஏற்றவகையில் சுயமாகப் புதிய விடயங்களைத் தேடிக் கற்கின்ற சுயகற்றலுக்கான ஆற்றல்மிக்கவர்களாக மாணவர்கள் உருவாக்கப்படாவிடின் நவீன உலகின் சவால்களுக்கு முகம்கொடுக்கமுடியாத ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுவர். இதனால் சுயகற்றலுக்கான ஆற்றல்களை மாணவர்கள் மத்தியில் வளர்த்தெடுப்பதற்கு சுயநெறிப் படுத்தப்பட்ட கற்றல் செயன்முறைகளும் (Self Regulated Learning Practices) diu135pb D6) G3 upbuT(635(61.5 lb (Self Learning Activities) அத்தியாவசியமானவை ஆகும். சுய நெறிப்படுத்தப்பட்ட கற்றல் செயன்முறை என்றால் என்ன, அதன் முக்கியத்துவம், சுயநெறிப்படுத்தப்பட்ட கற்றல் செயன்முறையிலே பின்பற்றக்கூடிய மாதிரி என்பவற்றுடன் சுயநெறிப்படுத்தப்பட்ட கற்பவர்களிடம் காணப்படும் பண்புக்கூறுகள், சுயகற்றலில் ஊக்கலின் செல்வாக்கு, சுயகற்றலுக்காக வளர்க்கப்பட வேண்டிய ஆற்றல்கள். சூழல்கள் எவை, இவற்றை உருவாக்க முனைகையில் எதிர்நோக்கப்படும் சவால்கள் என்பன தொடர்பான விளக்கங்களை முன்வைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது
சுயநெறிப்பட்ட கற்றல் செயன்முறையும் சுயகற்றல் செயற்பாடுகளும்
சுயநெறிப்படுத்தப்பட்ட கற்றல் என்பது ஒருவரிடப இடம்பெறுகின்ற ஒரு உள்ளார்ந்த செயன்முறையாகும் சுயநெறிப்படுத்தப்பட்ட கற்றல் செயன்முறையில மாணவர்கள் குறித்த ஒரு தகவலை அறிவதற்காக அல்லது குறித்ததொரு திறனை அடைவதற்காக தங்களது நடவடிக்கைகளை அல்லது செயன்முறைகளை தாே சுயமாக நெறிப்படுத்திச் செயற்படுவர். இச்செயலி முறையில் மாணவர்கள் தமது கற்றல்சார் அனுபவங்களில் வெற்றியடையும் வகையில் தமது சிந்தனைகள் எண்ணங்கள், நடத்தைகள், மனவெழுச்சிகள் என்பனவற்ை தாமே சுயமாக வழிப்படுத்துவர். கற்றலில் சுயநெறிப்படுத்த படுதலானது மாணவர்களில் சிறந்த கற்றல் பழக்கங்க6ை
அகவிழி 1 ஜூன் 2013

I600I6).jjö56O)6IT
த்தல்
முர்த்தி
பாளர்
பல்கலைக்கழம்
ஏற்படுத்துவதுடன் கற்றலுக்கான திறன்களையும் வலுப்படுத்த உதவும்.
மாணவர்கள் தாமே சுயமாகக் கற்பதற்கு சுயநெறிப் படுத்தப்பட்ட கற்கும் திறன்கள் அவசியமானவை. சுயமாகக் கற்பதற்கு கற்பவர்கள் கற்றலின்பால் சுய ஊக்கல் உடையவர்களாக இருத்தல் வேண்டும். இதனாலேயே உளவியலாளர்கள் வெற்றிகரமான கற்பித்தல் - கற்றல் செயன்முறைக்கு ஆசிரியர்கள் சுயவுக்கலுக்கான உத்திகளைப் பயன்படுத்த வேண்டுமெனக் குறிப்பிடுகின்றனர். சுயநெறிப்படுத்தப்பட்ட கற்றல் செயன்முறையானது மாணவரது கற்றலுக்கான ஊக்கல், கற்றல் அடைவு என்பனவற்றில் மிகமுக்கியமான செல்வாக்குச் செலுத்து கின்றது. சுயநெறிப்படுத்தப்பட்ட கற்றல் செயன்முறையிலே மாணவர்கள் தாங்களே தங்கள் கற்றலைச் சுதந்திரமான முறையில் திட்டமிடுதல், மேற்பார்வை செய்தல், சுயமாகக் கணிப்பீடு செய்தல் என்பன இடம்பெறுதல் வேண்டும். ஆசிரியர்கள் வகுப்பறை கற்பித்தல் - கற்றல் செயன்முறை களில் இதற்கான சந்தர்ப்பங்களை வழங்குதல் வேண்டும். சுயநெறிப்படுத்தப்பட்ட கற்றல் செயன்முறையினை நடைமுறைப்படுத்துவதற்கு சுயகற்றல் செயற்பாடுகள் அவசியம். கற்பித்தல் - கற்றல் செயன்முறையினைத் திட்டமிடுகையில் சுயகற்றல் செயற்பாடுகளுக்கும் நேரத்தை ஒதுக்குதல் வேண்டும். 5E கற்பித்தல் மாதிரி இதற்கான ஒரு சிறந்த உதாரணமாகும். சுயகற்றல் செயற்பாடுகளாகப் பின்வருவனவற்றைப் பயன்படுத்தலாம்.
1. கற்றல் செயலடைவுக் கோவையை (Learning
Portfolio) உருவாக்கல் 2. Jguo 5 Lai (35s). L (Reflective Journal) 6T(pg)56) 3. செயற்றிட்டம்
சுயநெறிப்படுத்தப்பட்ட கற்றல் மாதிரி - சுழலியக்க மாதிரி (Cyclical Model)
சுயநெறிப்படுத்தப்பட்ட கற்றல் மாதிரிகளில் சுழலியக்க மாதிரி மிகவும் பிரசித்தமான ஒரு மாதிரியாகும. இது மூன்று முக்கிய வேறுபட்ட கட்டங்களைத் தன்னகத்தே 2 60)Luigi).

Page 7
1. முற்சிந்தனையும் திட்டமிடுதலும்
2. செயலாற்றுகையும் மேற்பார்வையும்
3. செயலாற்றுகை பற்றிய சுயபிரதிபலிப்பு
மேற்குறித்த இவ் மூன்று முக்கிய கட்டங்களும் ஒரு சுழலியக்க முறையில் தொடச்சியாக இடம்பெறல் வேண்டும். இதனைப் பின்வரும் உரு விளக்குகின்றது.
சுழலியக்க மாதிரி
செயலாற்றுகையும் மேற்பார்வையும்
செயலாற்றுகை பற்றிய சுயபிரதிபலிப்பு
முற் சிந்தனையும் திட்டமிடலும் என்ற கட்டத்தில் மாணவர்கள் கற்கவேண்டிய விடயங்களை தாமே ஆராய்ந்து, கற்றலை முழுமைப்படுத்தும் வகையில் தம்மை நகர்த்துவதற்குத் தேவையான குறிப்பான கற்றல் இலக்குகளை அமைத்துக்கொள்வர். இச்சந்தர்ப்பத்தில் மிகவும் தெரியாத புதிய விடயங்களைக் கற்க முற்படுகின்ற பொழுது, அப்புதிய விடயங்களைக் கற்றுத் தெளிவடை வதற்கு எத்தகைய அணுகுமுறைகளைப் பின்பற்றுதல் வேண்டும், இதற்காக அமைக்கப்பட வேண்டிய பொருத்த மான இலக்குகள் எவை என்பன தொடர்பான சிறந்த விளக்கங்களை அறியாது இருக்கலாம். இத்தகைய சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட வேண்டிய தேவையான நடவடிக்கைகள் எவை என்பதை ஆசிரியர்களும் சகபாடிக் குழுக்களில் உள்ள மிகவும் அனுபவம்மிக்கவர்களும் தெளிவுபடுத்தி வழிகாட்டுதல் வேண்டும்.
செயலாற்றுகையும் மேற்பார்வையும் என்ற கட்டத்திலே சுயகற்றல் செயன்முறைக்குத் தேவையான உத்திகளை உருவாக்குவதும் இந்தக் கற்றல் உத்திகளைப் பயன் படுத்துவதன் மூலம் சிறந்த கற்றல் அடைவுகளைப் பெற முடியுமா என்பதைக் கவனித்துக்கொள்வதும் இடம்பெறும். இந்தக் கட்டத்தில் மாணவர்கள் தாங்கள் அமைத்துக் கொண்ட கற்றல் இலக்குகளை அடையும்வரை தொடர்ச்சி யானதொரு முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தங்களை ஊக்கப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். இதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய கற்றல் உத்திகள் புதிதாக இருக்கின்ற பொழுது அவற்றைக் கைவிட்டு, ஏற்கனவே பழக்கமான உத்திகளைப் பயன்படுத்திக் கற்பதற்கு முயற்சித்தல் சிறப்பானது. இச்சந்தர்ப்பங்களில்
 
 
 
 
 
 
 
 
 
 
 

பின்பற்றிய கற்றல் உத்திகள் விளைதிறன் அற்றதாகவும் அமைந்து விடலாம் இத்தகைய சந்தர்ப்பங்களில் ஆசிரியரின் மேற்பார்வையும் மிகத் தெளிவான விளக்கங்களும் மிகவும் அவசியம்.
சுயநெறிப்படுத்தப்பட்ட கற்றல் செயன்முறையை விருத்தி செய்வதற்காக ஆசிரியர்களால் அறிமுகப் படுத்தப்படும் சில சுயகற்றல் உத்திகள் சிலசமயம் மிகவும் தெளிவற்றமுறையில் அமைந்துவிடலாம். இவை சிலசமயம் மாணவர்களை விரக்தியடையவும் செய்துவிடலாம். இதனால் ஆசிரியர்கள் அறிமுகப்படுத்தும் சுயகற்றலுக்கான உத்திகள் கற்றலை எளிதுபடுத்துவதாக அமைதல் வேண்டும்.
மூன்றாவது கட்டமாகிய செயலாற்றுகை பற்றிய சுயபிரதிபலிப்புச் செயன்முறையை நோக்கின் இக்கட்டத்தில் மாணவர்கள் தாங்கள் கற்றலுக்காப் பயன்படுத்திய கற்றல் உத்திகள் வினைத்திறன் மிக்கவையா என்பது தொடர்பாகச் சுயமாகச் சிந்தித்தல் வேண்டும். இந்த நிலையில் மாணவர்கள் தாங்கள் பின்பற்றிய கற்றல் உத்திகளைத் தாமே முகாமை செய்யக்கூடிய வகையில் தங்களது மனவெழுச்சிகளை உருவாக்கிக் கொள்ளுதல் வேண்டும். சுயபிரதிபலிப்புச் செயன்முறையானது மாணவர்கள் தமது கற்றல் தொடர்பாக அமைத்துக் கெள்ளக்கூடிய எதிர்காலத் திட்டங்கள், குறிக்கோள்கள் என்பவற்றை மீள அமைத்துக் கொள்வதற்கும், தமது சுயநெறிப்பட்ட கற்றல் செயற் பாட்டுக்கான நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பித்துக் கொள்வதற்கும் உதவியாக அமையும்.
சுயநெறிப்பட்ட கற்றலில் ஊக்கிகளின் செல்வாக்கு
மாணவர்கள் கற்றலின்பால் ஊக்கப்படுவது கற்றல் பேறுகளில் மிகவும் நேர்முகமான செல்வாக்கைச் செலுத்துகின்றது என்பதை ஆய்வு முடிபுகள் எடுத்துக் கூறுகின்றன. ஊக்கலின்றி சுயநெறிப்படுத்தப்பட்ட கற்றல் செயன்முறையை வளர்த்தெடுத்தல் என்பது மிகவும் கடினமான ஒரு விடயமாகும். சுயநெறிப்படுத்தப்பட்ட கற்றலானது பல்வேறு வகைப்பட்ட கட்டமைப்புகளின் கூட்டிணைப்புகளினால் உருவாக்கப்பட்டதாகும். இது பல்வேறு காரணிகளின் செல்வாக்கினால் கட்டுப்படுத்தப் படுகின்ற ஒரு செயன்முறையாகும். இக்காரணிகளில் ஊக்கல் மிகமுக்கிய செல்வாக்குச் செலுத்துகின்றது (wank & Hokombe 2010). SD 5TJ60OTLDT35 GHuuGbólůLu(6ġ55Ů பட்டசெயன்முறையில் முற்சிந்தனை மற்றும் திட்டமிடல் என்ற கட்டத்தில் கற்றற் செயற்பாடு ஒன்றினைப் பூரணப் படுத்துவதன் முக்கியத்துவம், இதற்காக எவ்வளவு நேரத்தைச் செலவழிக்க வேண்டும், என்னவகையான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று சிந்திக்கின்ற பொழுது ஏற்படுகின்ற நாட்டமானது கற்றலின்பால் மாணவர்களை ஊக்குவிக்க உதவுகின்றது.
அகவிழி ஜூன் 2013

Page 8
கற்றல் அடைவுப் பெறுபேறுகளின் சாதகமான அல்லது பாதகமான நிலைமைகளும் மாணவர்களின் சுயநெறிப் படுத்தப்பட்ட கற்றல் செயன்முறையில் செல்வாக்குச் செலுத்துகின்றன. மாணவர்கள் கற்றலின் பால் ஊக்கப் படுகின்றபொழுது தமது நேரத்தில் அதிகமான அளவினை கற்றல் செயன்முறைகளில் செலவழிப்பதற்கு விருப்பப்படுவர். எனினும் சில கற்றற் செயற்பாடுகளைப் பூரணப்படுத்து வதினால் அதிக நன்மைகள் கிடையாதென இனங்காண்கின்ற பொழுது மாணவர்கள் அத்தகைய பாடத்துறைகளில் அதிகளவு நாட்டம் அற்றவர்களாகவும், அதற்காக அதிகளவு நேரத்தை செலவிட விரும்பாதவர்களாகவும் மாறுகின்றனர். இதனால் பலர் தாம் தெரிவுசெய்த பாடத்துறைகளில் இருந்து இடைவிலகுகின்றனர். இத்தகைய பிரச்சினைகளைத் தவிர்க்கும்வகையில் பாடத்துறைகளை பயன்தரு துறைகளாக மாற்றுதல் வேண்டும்.
சுயநெறிப்பட்ட கற்பவர்களின் இயல்புகள்
சுயநெறிப்படுத்தப்பட்ட கற்பவர்கள் கூடுதலான நேரத்தை கற்றலின்பால் செலவு செய்பவர்களாகக் காணப்படுவர். இத்தகைய மாணவர்கள் சுயமாக வகுப்பறைகளில் முன்பக்க இருக்கைகளில் இருந்து கற்க விரும்புகின்றவர் களாவும், கேட்கப்படும் வினாக்களுக்கு தாமே முன்வந்து விடை அளிப்பவர்களாகவும் காணப்படுவதோடு ஆசிரியர் களால் வழங்கப்படும் தகவல்களுக்கு மேலதிகமாக மேலும் பல புதிய விடயங்களைத்தாமே சுயமாகத் தேடிக்கற்று, பாட அறிவு தொடர்பான உயர்வான சிறந்ததொரு உள்ளடக்கத்தை தெளிவாகப் பெற்றுக் கொள்பவர்களாகவும் காணப்படுவர். மேலும் தமது கற்றலுக்கான தேவைகளை நிறைவு செய்யும் வகையில் கற்றலுக்கான சூழலை தாமே முன்வந்து அமைத்துக்
அகவிழி (ஜூன் 2013
 

கொள்பவர்களாகவும் காணப்படுவர் (Labuhn Zimmerman
& Hasselhorn, 2010), சுயநெறிப்படுத்தப்பட்ட கற்பவர்களில்
பின்வரும் பண்புக்கூறுகள் பொதுவாகக் காணப்படும்.
1. கற்றலுக்குத் தேவையான ஆலோசனைகளை புலமைச் சிறப்புமிக்க பலரிடமிருந்து பெறுவதற்கு முனைதல்.
2. பலவகையான தகவல்களை பல கோணங்களிலும்
பெறமுனைதல்.
3. கற்றலுக்கான சாதகமான சூழலை தாமே உருவாக்க
முனைதல்.
4. சுயநெறிப்பட்ட கற்றல் செயற்திறன்களைக் பெற்றிராத சகபாடிகளுடனான தொடர்புகளை இயல்பாகவே குறைத்தல்.
5. அடைவுப்பரீட்சைகளில் உயர் புள்ளிகளைப் பெறுதல்.
6. சுயகற்றலில் உயர்நம்பிக்கை கொண்டிருத்தல்.
சுயநெறிப்படுத்தப்பட்ட கற்பவர்களிடம் காணப்படும் முன் ஆயத்தமான செயல் களும் சுயஊக்கலுக்கான ஆற்றல் களும் சில சமயம் அவர்களது சகபாடி களுடன் அதிக தொடர்புகளைப் பேணிக் கொள்வதில் ஒரு இடைவெளியை ஏற்படுத்திவிடலாம். இச்சந்தர்ப்பத்தில் சுயநெறிபபடுத்தப்பட்ட கற்பவர்கள் சகபாடிகளுடனான உறவை தொடர்ந்து பேணும் வகையில் பொருத்தமான சூழலை உருவாக்கிக் கொள்ளுதல் வேண்டும்.
சுயநெறிப்படுத்தப்பட்ட கற்றலுக்கான சூழல்
மிகவும் அனுபவம் பெற்ற ஆசிரியர்களுக்குக் கூட சிலசமயங்களில் சுயநெறிப்படுத்தப்பட்ட கற்றல் சூழ்நிலை களை உருவாக்குதல் என்பது சவால் நிறைந்த ஒன்றாக அமைந்துவிடலாம். சுயநெறிப்படுத்தப்பட்ட கற்றல் சூழ்நிலைகளை உருவாக்குகின்ற பொழுது பல விடயங்களைக் கருத்திற் கொள்ளவேண்டியுள்ளது. வேறுபட்ட சூழற் பின்னணிகளில் கவனம் செலுத்தவேண்டும். உதாரணமாக மாணவர்களுக்குப் பொருத்தமான மாறுபட்ட அளவுகளில் சுயநெறிப்படுத்துவதற்கான சூழ்நிலைகளை உருவாக்குதல், வளர்க்கப்பட வேண்டிய திறமைகளையும் தலமைத்துவ குணவியல்புகளையும் தீர்மானித்தல் என்பனவற்றில் கவனம் செலுத்தவேண்டும்.

Page 9
வகுப்பறைகளில் சுயநெறிப்படுத்தப்பட்ட கற்றலை ஊக்கப்படுத்துவதற்கு வேறுபட்ட வினைத்திறன்மிக்க அறிவுறுத்தல்கள், உபாயங்கள் என்பனவற்றைப் பயன் படுத்தல் வேண்டும். இத்தகைய அறிவுறுத்தல்கள் பின்வரும் முறைகளில் அமையலாம்.
1. நேரடி அறிவுறுத்தல்கள்
2. மாதிரிகளின் பயன்பாடு
3. சுதந்திரமாக இயங்குவதற்கான வழிகாட்டப்பட்ட
செயன்முறைகள்
4. சமூக உதவிகளைப் பெறும் வழிகளை முன்வைத்தல்
5. பின்னூட்டல்கள்
6. பிரதிபலிப்புச் செயன்முறை
மேற்குறித்த பல்வேறுபட்ட அறிவுறுத்தல்கள், செயற் பாடுகளின் மூலம் ஆசிரியர்கள் மாணவர்களில் சுயநெறிப் படுத்தப்பட்ட கற்றல் திறன்களை விருத்தி செய்யலாம்.
எதிர்நோக்கப்படும் சவால்கள்
சுயநெறிப்படுத்தப்பட்ட கற்றலுக்கான சூழலை வகுப் பறைகளில் உருவாக்குவது ஒரு சவால்மிக்க கருமம் ஆகும். கற்க வேண்டிய பாடங்களில் மாணவர்கள் சுயமாக ஈடுபடும்வகையில் ஆயத்தப்படுத்துவது ஒரு சுலபமான காரியம் அல்ல. சுயமாக மாணவர்கள் கற்றலில் ஈடுபடும்வகையில் செயற்பாடுகளைத் திட்டமிடவேண்டி இருப்பதுடன், செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற பொழுது அவற்றைப் பகுதி பகுதிகளாக நடைமுறைப்படுத்துவதும், இவற்றிற்கான உதவிகளை வழங்குவதும் முக்கியமான தாகும். மாணவர்களை சுயநெறிப்படுத்தப்பட்ட கற்றலில் ஈடுபடுத்துகின்ற பொழுது எதிர்நோக்கப்படும் முக்கிய சவாலாக இருப்பது நேரப் பிரச்சினையாகும். குறிக்கப்பட்ட நேரத்தினுள் மாணவர்களைச் சுயமாகக் கற்றலில் ஈடுபடுத்தத்தக்கவகையில் அவர்களது வெவ்வேறுபட்ட இயலுமைகளை இனங்காண்பதற்கும், இதற்கு ஏற்ற வகையில் சுயகற்றலுக்கான உத்திகளை திட்டமிடு வதற்கும், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கும் அதிக நேரம் தேவைப்படுகின்றது என Boekaerts, Cascalar (2006) என்பவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பாரம்பரிய முறையிலே அமைக்கப்பட்ட வகுப்பறைகள், கற்பித்தல் முறைகள், வளங்களின் பற்றாக்குறை என்பனவும் சுயநெறிப்படுத்தப்பட்ட கற்றற் சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு தடைகளாக அமையலாம். மிக முக்கிய மான சவாலாக அமைவது சுயநெறிப்படுத்தப்பட்ட கற்றல் செயன்முறைகளுக்குப் பொருத்தமற்ற முறையில் வடிவ மைக்கப்பட்டுள்ள கலைத்திட்டம், போதனைக்கான

அறிவுறுத்தல்கள், கணிப்பீட்டு மதிப்பீட்டு முறைகள் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது (Patrick et al, 2007). எனவே ஆசிரியர்களுக்கு அப்பாற்பட்டவகையிலும் சுயநெறிப் படுத்தப்பட்ட கற்றல் திறன்களை வளர்ப்பதில் பல பிரச்சினைகள் உள்ளன என்பதை உணரமுடிகின்றது. எனினும் ஆசிரியர்கள் சுயநெறிப்படுத்தப்பட்ட கற்றல் செயன்முறைக்காக கற்றல் இலக்குகளை சுயமாக அமைத்தல், சுயமாகத் திட்டமிடல், சுயமாக ஊக்கப்படல், சுய கவனிப்பு, சுயகட்டுப்பாடு, சுயகற்றல் உத்திகளைப் பொருத்தமாகப் பயன்படுத்தல், சுய மேற்பார்வை, புலமை சார்ந்த உறவுகளைச் சுயமாகத் தேடுதல், சுய பிரதிபலிப்பு, சுயமாக மதிப்பிடுதல் போன்ற ஆற்றல்களை மாணவர்களிடம் வளர்த்தல் வேண்டும்.
முடிவுரை ஆசிரியர்கள் சுயநெறிப்படுத்தப்பட்ட கற்றல் செயன்முறை தொடர்பான அறிவுமிக்கவர்களாக இருப்பதோடு மாணவர் கள் சுயமாகக் கற்பதில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளை இனங்கண்டு சுயகற்றலை விருத்தி செய் வதற்கு பயன்படுத்தப்பட வேண்டிய உத்திகள் எவை என்பன தொடர்பான போதிய விளக்கம் உடையவர்களாக இருத்தல் வேண்டும். மாணவர்களைக் கற்றலின் பால் சுயஊக்கப்படுத்துவது அவர்களது சுய கற்றலுக்கான ஆர்வத்தையும் திறன்களையும் விருத்தி செய்ய உதவும். இது ஒருவர் தனது வாழ்நாள் முழுவதிலும் பல்வேறுபட்ட தொடர் சூழ்நிலைகளில், காலத்திற்குக்காலம் தேவைப் படுகின்ற அறிவு திறன் மனப்பாங்குகளை தாமே சுயமாகத் தேவைக்கு ஏற்ற வகையில் பொருத்தமான முறையில் வளர்த்தெடுக்க உதவும். தகவல் தொழில்நுட்ப உலகில் சுயநெறிப்படுத்தப்பட்ட கற்றல் செயன்முறைக்கான திறன்விருத்தியில் எமது பாடசாலைகள் கவனம் செலுத்த வேண்டும் என்பது காலத்தின் தேவையாகும்.
உசாத்துணைகள்
Boekaerts, M., & Cascallar, E. (2006). How far have we moved toward the
integration of theory and practice in self-regulation? Educational
Psychology Review, 18 (3), 199-210.
Labuhn, A.S., Zimmerman, B.J., & Hasselhorn, M. (2010). Enhancing students' self-regulation and mathematics performance: The influence offeedback
and self-evaluative standards Metacognition and Learning, 5 (2), 173
194.
Patrick, H., Ryan, A.M., & Kaplan, A. (2007) Early adolescents' perceptions of
the classroom social environment, motivational beliefs, and engagement.
Journal of Educational Psychology, 99(1), 83-98.
Wang, M.T., & Holcombe, R. (2010). Adolescents' perceptions of school environment, engagement, and academic achievement in middle school,
American Educational Research Journal, 47(3), 633-662.
அகவிழி ஜூன் 2013

Page 10
மாணவனை சமூக ம
வீடு, பாடசாலை என்பவற்றி
ம.மரியராசா முதல்வர், கிளி/வலைப்பாடு றோ.ச
அறிமுகம்
உலகில் பிறக்கின்ற எந்தக்குழந்தையும் தனது வாழ்க்கைக் காலத்தினை இந்த உலகிலேதான் செலவழிக்க வேண்டி யுள்ளது. இந்த உலகத்தோடு ஒத்து வாழ வேண்டுமாயின் சமூகத்திலே தனக்கென ஒரு இடத்தினை பிடிக்க வேண்டுமாயின் சமூக நியமங்களை ஏற்று அதன் படி ஒழுகி அதற்குள் காணப்படுகின்ற அம்சங்கள் எல்லா வற்றையும் நுகர்ந்து பார்த்தே ஆக வேண்டும். ஒரு குழந்தைக்கு அல்லது மாணவனுக்கு சமூகமயமாக்கலின் முதலாவது தளமாக அவனது வீடும், இரண்டாவது தளமாக பாடசாலையும் காணப்படுகின்றது. சமூக மயமாக்கலின்றி மனிதன் ஒருவன் இந்த உலகில் முழு மனிதனாக வாழ முடியாது. எனவே சமூகமயமாக்கல் பற்றி நோக்குவோம்.
சமூகமயமாக்கல்
ஒரு மாணவனிடத்தே சமூகமயமாக்கல் ஏற்பட வேண்டு மாயின் சமூக இயைபாக்கம் பெற்று, சமூகப் பிராணியாக மாணவர்களை உருவாக்குவதற்கு சமூகத்தின் இன்றியமையாத கூறுகளான தனிமனிதன், அவனை உறுப்பினனாக ஏற்றுக் கொள்ளும் சமூகம், அந்த சமூகத்தின் பாரம்பரியத்தினை உணர்த்தும் வரலாறு, அவன் வாழும் சமூகத்தின் சூழலை விளக்கும் புவியியல் ஆட்சியமைப்புக்கள், கலாச்சாரப் பாங்குகள், ஒழுக்க நெறிகள், கோட்பாடுகள், என்பனவற்றை மாணவர்களுக்கு எடுத்தியம்பக் கூடிய சூழலினை உருவாக்க வேண்டும். இவற்றின் அடிப்படையில் சமூகமயமாக்கல் என்றால் என்ன என்பதற்கு பல்வேறு அறிஞர்களால் வழங்கப்பட்ட கருத்தினை நோக்குவது சாலப்பொருத்தமாகும்.
அறியாப்பருவக் குழந்தை, சுய விழிப்புணர்வும் அறிவும் பெற்று மனிதனாக மலர்ச்சி பெறவும் தம் பிறந்த சமூகத்தின் கலாசார நடைமுறைகளை அறிந்து அவற்றை பேணுவதில் திறன் பெறவும் இட்டுச் செல்லும் செயன்முறை சமூகமயமாக்கல் ஆகும்.
(GIDDENS 1989)
சமூக மயமாக்கல் என்பது தனிநபர்கள், சமூக உறுப்பினர்கள் ஆவதற்கு அல்லது சமூகத்தின் கூறுகளின் உறுப்பினர்கள் ஆவதற்கு நிகழ்த்தப்படும் செயன்முறை
அகவிழி |ஜூன் 2013

பமாக்குவதில் ன்ெ முக்கியத்துவம்
.த.க.பாடசாலை
என்று பரந்த கருத்தில் பொருள் கொள்ளலாம். வாழும் கலாச்சாரத்தின் அல்லது உப கலாச்சாரத்தின் விழுமியங்கள், நோக்குகள் என்பவற்றைத் தனிநபர்கள் எவ்வாறு கைக் கொள்கின்றார்கள் அல்லது விலக்கி வைக்கின்றார்கள் என்பதுடன் இது தொடர்பானது.
(STURMAN 1978)
தனி நபர்கள் தாம் சார்ந்த சமூகத்தின் கலாசாரத்தைக் கற்றறிந்து கொள்கின்ற செயன்முறையே சமூகமய மாக்கலாகும். சமூகமயமாக்கலுக்கு உட்படுத்தப்படாத எவரும், அவர் வாழுகின்ற சமூகம் விதித்த நியமங்களுக்கு ஏற்ப இயல்பான மனிதராகக் கருதப்படமாட்டார்.
(HARALAMBO & HOLBORN 1990)
ஏற்கனவே இருப்பில் உள்ள உலகில் அல்லது உலகின் ஒரு பகுதியில், முன்னர் உறுபிபினர்களாக அல்லாதவர்கள் உறுப்பினர்களாக நுழைவதற்கு ஏற்ற தகுதிப்பாட்டினை வழங்குவதற்கான ஒரு செயற்பாடு சமூகமயமாக்கலாகும்.
(WENT WORTH 1980)
எனவே தான் சமூகமயமாக்கல் என்பது ஒரு செயன் முறை எனவும், அது தனிநபரை அல்லது ஆளை மாற்றுகின்றது எனவும், தனிநபரை சமூகத்தின் அல்லது கலாச்சாரத்தின் அங்கம் ஆக்குகின்றது எனவும் குறிப்பிடப் படுகின்றது.
மேலும் சமூகமயமாக்கல் எண்ணக்கரு இரண்டு தெளிவான கருத்துக்களை கொண்டுள்ளது. என Gecas1981 குறிப்பிடுகின்றார். அவை வருமாறு,
1. சமூகத்தேவைகளுடன் ஒத்துப் போதலும் இசைவு
பெறுதலும்.
2. தன்னம்பிக்கையுடனான ஆளுமை நிறைந்த
மனிதனாக தனிநபர் பரிணமித்தல்.
மேலும் இவர் சமூகமயமாக்கலின் இரண்டு அம்சங்கள் பற்றியும் குறிப்பிடுகின்றார்.
X 360T stil85s,600T656 - Identification of
X 9601st absTe00TL6GT - Identification with.
“இனம் காணலின்” எனும் தொடர் அடையாளத்தை நிறுவுதல் என்பதனைக் குறிக்கின்றது. “இனம் காணலுடன்"

Page 11
எனும் தொடர் ஒரு குழுவுடனோ சில ஆட்களுடனோ ஒருவர் கொண்டுள்ள உணர்ச்சி சார்ந்த உளவியல் சார்ந்த பிணைப்புக்கள் என்பதனைக் குறிக்கும்.
இந்த வகையில் மாணவனின் சமூகமயமாக்கலில் அவனது வீடு எவ்வளவு முக்கியமானது என்பதனை ஆராய்கின்ற போது சமூகத்தினைப் பார்க்கின்ற ஒரு சாளரமாகவே வீட்டினைக் குறிப்பிட முடியும். ஏனெனில் ஒரு சமூகம் எவ்வாறு காணப்படுகின்றது என்பதனை ஒரு குட்டிச் சமூகமான வீட்டிலிருந்தே அறிந்து கொள்ள முடியும். எனவே தான் சமூகமயமாக்குதலிலே குடும்பத்தின் பணி மிக முக்கியமானது எனக் கூறப்படுகின்றது. மாணவர்களின் குணம், நடத்தைகள், ஆளுமை வளர்ச்சி, பழக்கவழக்கங்கள், ஒழுக்கம், கீழ்ப்படிவு, துணிவு, மொழிப்பாவனை போன்றவற்றில் குடும்பத்தின் செல்வாக்கு அதிகம் உண்டு. எனவே ஒரு வீடானது எவ்வாறு சமூகமயமாக்கலில் தனது ஆதிக்கத்தினை செலுத்துகின்றது என பின்வரும் தலைப்புக்களில் நோக்குவோம்.
சமூக ஒற்றுமையை வளர்க்கும் நிறுவனமாக (குடும்பம்) வீடு
குடும்பம் என்பது பல தனிமனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு பாசப்பிணைப்பாகும். இங்கு ஒருவருக்கு ஏற்படுகின்ற துன்பத்தில் குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் கரைந்து போவதும் மகிழ்ச்சியான வேளைகளில் குதுர கலிப்பதும் குடும்பத்திலிருந்தே உருவாகுகின்றது. இதில் இருந்து தான் “சமூக ஒற்றுமையின்” அடிப்படையினை மாணவன் கற்றுக் கொள்கின்றான். இதனால் தான் குடும்பம் ஒரு கோவில் எனக் கூறப்படுகின்றது. அங்கே அன்பு, விட்டுக்கொடுப்பு, சகோரத்துவம், மன்னிப்பு, ஏற்றுக்கொள்ளுதல், ஒருவருக்காக மற்றவர் தியாகம் செய்தல் போன்ற சமூகத்தில் மிளிர வேண்டிய அத்தனை பணிகளையும் காண முடியும்.
ஒன்று பட்டு உழைக்கும்நிறுவனமாக குடும்பத்தைக் காணல்
ஒருவன் சமூகமயமாக்கலுக்கு உட்படுத்தப்படுவதன் மூலமாக சமூகத் தோடு ஒத் திசைந்து அதன் வளர்ச்சிக்கு பாடுபடுபவனாக மாற்றப்படுகின்றான். இவ்வாறு சமூகத்தோடு ஒத்திசைவதற்கு ஒன்று பட்டு உழைப்பதற்குமான அடித்தளத்தினையும் அதனால் ஏற்படும் மகிழ்ச்சியினையும் அனுபவிக்க கற்றுக்கொடுக்கின்ற இடமாக வீடு விளங்குகின்றது. குடும்பம் ஒன்றின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவோ அல்லது குடும்பப் பாதுகாப்பிற்காகவோ குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் ஒன்று பட்டு பலர் சேர்ந்து உழைக்கின்ற தன்மை ஒரு மாணவனை தனது சமூகத்திற்கு தன்னாலான உழைப்பினை வழங்குவதற்கு பக்குவப்படுத்துகின்ற தன்மையினை உருவாக்குகின்றது.
9 7

ஏனையவர்களினை மதித்து ஏற்றுக்கொள்ளும் பககுவத்தினைப் பெறுவதற்கான பயிற்சியினைப் பெறும் நிறுவனமான வீட்டினை காணல்.
ஒரு குழந்தை பிறந்து முதலில் தனது தாயையும் பின்னர் குடும்ப உறுப்பினர்களையும் அறியத் தொடங்கு கின்றது. அதன் பின்னர் உற்றார் உறவினர்கள் அயல் வீட்டுக்காரர் போன்றோரினை அறிகின்றது. இவ்வாறு குடும்பமானது சமூகத் தொடர்பினை ஏற்படுத்துகின்றதாகவும் ஏனையோரினையும் மதித்து வரவேற்று உபசரிக்கின்ற போது மாணவனும் சமூக அங்கத்தவர்களை மதித்து ஏற்கின்ற ஒரு மனப்பாண்மையினை பெற்றுக் கொள்கின்றான். சமூக வாழ்க்கை என்பது தனித்தனியாக வாழ்கின்ற வாழ்க்கையல்ல என்பதனை உணர்ந்து கொள்கின்றான். இவ்வாறு மற்றவர்களை மதித்து ஏற்றுக் கொள்வதன் ஊடாக தன்னையும் மற்றவர்கள் மதிக்கச் செய்கின்ற நுட்பத்தினை ஒரு மாணவன் குடும்பத்திலையே பெறு கின்றான்.
வாழும் சமூகத்தின் கலாசாரத்தினை அறிந்து கொள்ளும் இடமாக வீடு
ஒரு சமூகம் தனக்கே உரிய தனித்துவமான கலாசாரப் பின்னணிகளை கொண்டிருக்கின்றது. இதனை மாணவன் விளங்கிக் கொள்வதற்கு அவனது குடும்பமே காரணமாக அமைகின்றது. உதாரணமாக கோவிலுக்குச் செல்கின்ற போது வேட்டி அணிதல், திருநூறு அணிதல், கும்பிடும் பாங்கு, வழியில் காண்போருக்கு வணக்கம் சொல்லுதல், வீட்டிற்கு வருவொரை அன்பாக வரவேற்றல் போன்ற பல கலாச்சார விழுமியங்கள். குடும்பத்தின் நடத்தைகளினூ டாகவே மாணவன் கற்று அதனை சமூகத்தில் பிரயோகித்து சமூகமயப்படுகின்றான். இதனால் தான் ஆன்றோர்கள் நூ லைப் போல் சேலை, தாயைப் போல் பிள்ளை என்றார்கள். ஆகவே தான் கலாச்சாரத்தின் ஆரம்ப அறிவிடமாக வீடு விளங்குகின்றது எனக் கூறப்படுகின்றது.
நல்ல மொழிநடத்தையினை வழங்குகின்ற நிறுவனமாக வீடு
சமூகத்திலே பல்வேறுபட்ட நிலைகளிலே வாழுகின்ற மனிதர்களைச் சந்திக்க நேரிடும். அப்போதெல்லாம் எப்படிக் கதைப்பது, எவ்வாறான சொற்களைக் கையாழ்வது, எவ்வாறு செவிமடுப்பது, எவ்வாறான சொற்களுக்கு கீழ்ப்படிவது போன்றவற்றினை எல்லாம் வீட்டுச்சூழலிலே தான் மாணவன் கற்றுக் கொள்கின்றான். சமூகத்திலே நடைபெறுகின்ற பல்வேறு வகையான நிகழ்வுகளின் போதும் தான் பழகிக் கொள்கின்ற சகபாடிகளிடத்தையும் எவ்வாறு மற்றவர்களைக் கவர முடியும் என்பதெல்லாம் வீட்டிலே கற்றுக்கொள்கின்றான். ஆனால் வீட்டில் இயல்பாகவே எவ்வாறான மொழிநடைகள் பின்பற்றப்படுகின்றனவோ
அகவிழி ஜூன் 2013

Page 12
அவ்வாறே தான் மாணவனும் மொழியினைக் கைக் கொள்வான். இதனால் தான் பாடசாலைக்கு வருகின்ற பிள்ளை தன்னுடன் தனது பெற்றோரினையும் பாடசாலைக்கு கொண்டு வருகின்றது என “ஒடோவே” குறிப்பிடுகின்றார். அதாவது பிள்ளை தான் வீட்டில் பெற்றுக்கொண்ட அறிவு, மனப்பாங்குகள், நடத்தைகள் ஆகியவற்றுடனேயே பாடசாலைக்கு வருகின்றது எனக் கூறமுடியும்.
பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வழிவகுக்கும் நிறுவனமாக வீடு
குடும்பங்களில் நடைபெறுகின்ற நிகழ்வுகளுக்கு அல்லது செய்யப்பட வேண்டிய வேலைகளுக்கு பிள்ளைகளைப் பொறுப்பாக நியமித்து அதனை வெற்றி பெற வழி நடத்துகின்ற பொழுது இயல்பாகவே அவர்களிடத்து குடும்பப்பொறுப்பினையும் சமூகப்பொறுப்பினையும் ஏற்கின்ற பக்குவம் வளர்த்தெடுக்கப்படுகின்றது. இதே போன்று குடும்பத்தின் முக்கிய முடிவுகள் எடுக்கும் போது அதில் பிள்ளைகளையும் பங்கு பெறச் செய்வதும் அவர்களது கருத்துக்களைக் கேட்டறிவதும் அவர்கள் தீர்மானம் எடுக்கும் ஆற்றலினையும், சமூகத்தில் தலைமை தாங்கும் ஆற்றலினைப் பெறுவதற்கும் சமூகமயமாக்கல் பெறுவதற்கும் வழிசமைக்கின்றது. இதனால் தான் நல்ல குடும்பம் நல்ல தலைவர்களினை நாட்டிற்குக் கொடுக்கின்றது, என்று ஒரு அறிஞர் குறிப்பிடுகின்றார்.
மேலும் ஒரு மாணவன் என்னென்ன குணாம்சங்களினை சமூகமயமாக்குவதற்கு பெற்றுக்கொள்ள வேண்டுமோ அத்தனை குணாம்சங்களினையும் ஒரு மாணவனிடத்தே அவனது குடும்பம் ஏற்படுத்துகின்றது. ஒரு சமூகம் எப்போதும் தன்னகத்தே நல்ல விடயங்களைத் தான் வைத்திருப்பது என்று கருதி விட முடியாது. சமூகம் என்பது எப்பொழுதும் பிரச்சினைகள் தோன்றிக் கொண்டிருக் கின்ற ஒரு களமாகவே காணப்படும் என்பதனையும் ஒரு குடும்பம் மாணவனுக்கு தமது குடும்பப் பிரச்சினைகளினடாக கற்றுக் கொடுக்கின்றது. இதனால் தான் என்னவோ அன்னையானவள் தனது குழந்தைக்கு தாலாட்டுப் பாடுகின்ற போதே சமூகத்தின் நச்சுத்தன்மையை தெரியப்படுத்தவதற்காக “பல நபர்கள் உனக்கு அடிப்பதற்குக் காத்திருக்கின்றார்கள்” (தாலாட்டுப்பாடல்) என்பதனை உணர்த்தி விடுகின்றாள்.
இவ்வாறு பிள்ளைகளின் சமூகமயமாக்கலில் குடும்பங்களுள் காணப்படும் “பன்மைத்துவத் தன்மை” முக்கியத்துவம் பெறுவதினை அவதானிக்கலாம். அதாவது குடும்பத்தின் ஒழுங்கு அமைப்பு தாய் - தந்தைக்கு இடையில் நிலவும் முரண்பட்ட உறவு நிலை, தாய் வேலைக்குச் செல்லல், ஒற்றைப் பெற்றோர் குடும்பத்தில் தந்தை இடம் பெறாமை, பெற்றோர் விவாகரத்துக்கள்,
அகவிழி|ஜூன் 2013

போன்றன பாரிய தாக்கங்களினை சமூகமயமாக்கலில் ஏற்படுத்தி விடுகின்றது.
இவ்வாறு பெற்றோரின் நடத்தைப் பாணிகளுக்கும் பிள்ளைகளின் நடத்தைகளுக்குமிடையில் தொடர்பு காண டீயரஅசெைன - 1967 என்பவர் முயன்றுள்ளார். மூன்று வகையான பெற்றோர் நடத்தைப் பாணிகளினைக் குறிப்பிட்டுள்ளார்.
1. இடம் கொடுக்கும் - கடுமையற்ற பெற்றோர் 2. அடக்கியாளும் பெற்றோர் 3. அதிகாரவாண்மைப் பெற்றோர்
இப்பாணிகள் பிள்ளைகளில் மூன்று விதமான நடத்தைப் போக்குகளை ஏற்படுத்த உதவுகின்றன.
1. உணர்ச்சி வசப்பட்ட - பேரூக்கம் உள்ள பிள்ளைகள்
2. முரண்படும் - எளிதில் சினங்கொள்ளும்
பிள்ளைகள்
3. உயிர்ப்புள்ள - சினேகபாவமான பிள்ளைகள்
இவ்வாறான பல்வேறு கோணங்களில் உள்ளோராக பெற்றோரும் அதனால் மாணவர்களும் சமூகமயமாக்கலிற்கு தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றார்கள்.
சமூகமயமாக்கலில் பாடசாலை
இவ்வாறு குடும்பம் ஒன்றில் சமூகமயமாக்கலின் ஆரம்ப பயிற்சியினை பெற்றுக்கொள்கின்ற ஒரு பிள்ளை சமூக மயமாக்கலின் முழுத்தன்மையினையும் தன்னுடைய பாடசாலை வாழ்க்கையின் 13 வருட காலங்களில் பல்வேறு நிகழ்வுகளின் ஊடாக பெற்றுக் கொள்கின்றது.
குடும்பத்திற்கு அடுத்தபடியாக ஒரு பிள்ளை புதிய மனிதர்களையும் புதிய சூழலினையும் பாடசாலையில் பெற்றுத் தான் வாழப் போகின்ற சமூகத்தில் எவ்வாறு வாழ வேண்டும் என்பதையும் கற்றுக் கொள்கின்றது.
பாடசாலையில் இருந்து தோற்றுவிக்கப்படும் பிள்ளை களை ஏற்றுக் கொள்வதற்காகச் சமுதாயம் தயாராக உள்ளது. இப் பிள்ளைகளே சமுதாயத்தின் எதிர்காலப் பங்காளிகளாவர். அவ்வாறெனின் பாடசாலையின் ஊடாகப் பிள்ளைகள் சமூகமயமாக்கப்படல் வேண்டும்.
பாடசாலைகளில் கல்வி முறைசார்ந்த வகையில் வழங்கப்படுகின்றது. வயது, நாட்டங்கள், சில வேளைகளில் பால் என்பவற்றின் அடிப்படையில் பாடசாலையில் மாணவர்கள் குழுத்தொகுதிகளாக்கப்படுகின்றனர். மாணவர்கள் இங்கு பரீட்சைகளுக்கும் மதிப்பீடுகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். விதிகளும், விதிமுறைகளும், சடங்கு சம்பிரதாயங்களும் பாடசாலைகளில் குழு ஒருமைப் பாட்டினை அதிகரிக்கின்றன. மாணவர் மன்றங்கள் நேர

Page 13
அட்டவணை, ஒழுக்காற்று நடைமுறைகள் என்பவற்றுடன் மாணவர் வரவு, அடைவு ஒழுக்கம், பாடசாலைச் சேவை என்பனவும் இவற்றுள் அடங்குகின்றன. இவற்றுடன் பாடசாலை ஒன்றுகூடல்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், விழாக்கள் மற்றும் பாடசாலைக் கீதங்கள், பாடசாலைக் கொடிகள், சின்னங்கள் என்பனவும் பாடசாலைப் பண்பாட்டு விருத்தியை அதிகரிக்கச் செய்வதோடு பிள்ளைகளையும் சமூகமயமாக்கப்படுத்துகின்றன எனக் கூறப்படுகின்றது.
ஒருவரின் அறிவு மட்டத்தினை தீர்மானிக்கின்ற காரணிகள் எண்ணிலடங்கா. இவற்றில் இயற்கையினால் உட்படுத்தப்படுகின்ற காரணி ஒரு வகையாகும். பாடசாலைக் காலங்கள் இன்னொரு வகையாகவும் 35T600TLJU(6565 D601. (One factor is the influence exerted by the nature and duration of schooling) 35g, UITL&T606) is காலங்கள் என்பது மாணவனின் சமூகமயமயக்கலில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தி விடுவதாக Roger Girod என்பவர் குறிப்பிடுகின்றார். மேலும் தொழிற்பாட்டுப் பார்வை நோக்கில் பாடசாலை சமூகமயமாக்கலின் முகவராக கவனிக்கப்படுகின்றது. இங்கு சமூகமயப் படுத்தலுக்கு அவசியமான வேறுபட்ட உள்ளடக்கங்களான GUT plub gap60)LD35(65lb (Commitments & Capacities) உருவாக்கப்படுவதற்கு அடிப்படை முகவராக பாடசாலையே செயற்படுகின்றது. அமெரிக்க சமூகத்தில் ஒருவரின் அந்தஸ்து மட்டமும் கல்வி அடைதலின் மட்டமுமே சமூகமயமாக்கலில் அதிக பங்களிப்பு செய்து விடுவதாக குறிப்பிடப்படுகின்றது. மேலும் அடைந்து கொள்ளப்பட்ட தொழில்ரீதியான அந்தஸ்தினை இனம் காட்டுவதாக அல்லது தொடர்பு படுவதாக கல்வித்தரமும், சமூகத் தரமும் காணப்படுகின்றது. எனவே தொழிலகத்துக்கு ஏற்றவாறு மாணவர்களை சமூகமயமாக்கலுக்குத் தயார் படுத்துகின்ற பாரிய பொறுப்பினை பாடசாலைகளே 94).pdgip60T. (3LDgjib The School is the first socializing agency in the Child's experience which institutionalize a differentiation of status on nonbiological bases. 61607(36). LDT600T6 it களினை ஒத்த வயது குழுவினருடனும் ஒத்த வயது எதிர்பாலினருடனும் இந்த எல்லைகளைக் கடந்து சமூகத்திற்குரியவனாக மாற்றுகின்ற செயற்பாட்டினை பாடசாலை முன்னெடுக்கின்றது.
மனிதன் சமூகத்தில் வாழ்கின்ற ஓர் உயிரினம் தான். பள்ளிக்கூடம் சமூகத்தைப் பிரதிபலிக்கும் நிறுவனம். சமூகத்தில் வாழும் மக்களிடையே எழுகின்ற இணைவுத் தன்மை பள்ளிக் கூடத்தில் மாணவர்களிடையே வளர் கின்றது. சமூகத்தில் நிகழும் பல குழுக்களைப் போன்று பள்ளிக் கூடங்களிலும் குழுக்கள் உருவாகலாம், உருவாக்கப்படலாம். ஆனால் பலவகைப்பட்ட குழுக்கள் மூலம் ஒருமித்த சமூகம் வளர வேண்டும். சமூகத்திற் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனாற் சமூகம் ஒருமித்த சமூகமாகவே உருவாக்கப்பட வேண்டும். பள்ளிக்கூடத்தில்

மாணவர்கள் தங்கள் ஆற்றல்களுக்கு ஏற்ப பொறுப்புக் களை ஏற்க வேண்டும். பொறுப்புக்கள் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். மாணவர்கள் பாடசாலைகளில் தம் கடமைகளை நிறைவேற்றுவதன் மூலம் சமூகத்திலும் பின்னர் தம் கடமைகளைத் திறம்பட ஆற்றுவதற்கும் பாடசாலையிலையே பயிற்றுவிக்கப்படுகின்றார்கள்.
பாடசாலையானது பல்வேறு இனத்தவர்கள், பல்வேறு மொழி பேசுவோர், பல்வேறு சமயத்தைச் சார்ந்தோர், பல்வகைப் பண்பாடுகளைக் கொண்டோர் ஆகியோர்களைச் சமூகமயப்படுத்தும் நிறுவனமாகக் காணப்படுகின்றது. இன்னுமாக பாடசாலையில் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்ளுதல், குறைநிறைகளை அவ்வாறே ஏற்றுக் கொள்ளுதல், தமக்குள் ஏற்படும் அனுபவங்களை தமக்கிடையில் பகிர்ந்து கொள்ளல், ஆசிரியர் மாணவர் இடையே நம்பிக்கையான சுமுகமான உறவினை ஏற் படுத்துதல் போன்றனவும் மாணவர்கள் பின்னர் வாழப் போகும் கூட்டு வாழ்க்கைக்கு வித்தாக அமைகின்றது. சமூகத்தலைவர்களை உருவாக்குகின்ற களமாகவும் பாடசாலை மாணவர்களை குழுச்செயற்பாட்டில் ஈடுபடுத்து வதன் மூலம் அவர்களை தலைமை ஏற்கச் செய்வதன் மூலமும் சமூகமயப்படுத்துவதற்கான பயிற்சியினை வழங்குகின்றது.
மேலும் பாடசாலைக் கலாச்சாரமும் சமூகமயமாக்கலில் ஒரு முக்கிய மாறியாக இனங்கொள்ளப்படடுள்ளது. பாடசாலையில் நிகழும் நம்பிக்கைகள், விழுமியங்கள், அறிவுசார் கற்கைகள், மனித பழக்கவழக்கங்கள், என்பவற்றினை உள்ளடக்கியதான பாடசாலைக் கலாச்சாரம் (ANDERSON – 1982) uDIT 60016jft 356f 600601 gelpdbLDuitsj படுத்துவதில் பெரும் பங்காற்றுகின்றது. இந்த வகையில் நோக்குகின்ற போது மாணவர்களினை சமூகமயப் படுத்துவதில் குடும்பமும் (வீடும்) பாடசாலையும் அளப்பரிய பங்காற்றுகின்றன என்பதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.
உசாத்துணை நூல்கள்
l. Roger Girod, Problems of Sociology in Education.
2. கலாநிதி திருநாவுக்கரசு கமலநாதன், சமூக அசைவியலும் சமூகக்கல்வியும் யாழ்ப்பாணம் தேசியற் கல்லூரி, யாழ்ப்பாணம்
3. Sureshchandra shvkva Krishna Kumar, Sociological, Perspective in
education, Chanukah Publications Delhi,
4. திரு ப. சந்திரசேகரம் கல்வித்தத்துவம் - யாழ்ப்பாணம் கூட்டுறவு தமிழ் நாத வெளியடு விற்பனைக்கழகம், யாழ்ப்பாணம்
5. கல்வியின் சமூகவியல் அடிப்படை, பட்பப்பின் கல்வித்துறை
தேசிய கல்வி நிறுவகம். மகரகம.
6. ஜெயலட்சுமி இராசநாயகம், சமுதாயக் கல்வி - மகாவீர்
பதிப்பகம், தஞ்சாவூர்.
அகவிழி ஜூன் 2013

Page 14
மாணவர்களின் மனப்பாங்கை 6
ஆசிரியர்களின் பங்
Mr.P. Thilagarajah. BA. PGDE (Merit)
“மனப்பாங்கு” என்ற சொல்லுக்கு வரைவிலக்கணம் தருவது சுலபமானதல்ல. ஒரு விடயத்தை பற்றி ஒருவன் கொண்டுள்ள எண்ணங்கள், அபிப்பிராயங்கள் அது சம்மந்தமாக அவன் மனதில் எழும் உணர்ச்சிகள் இவைகளின் பயனாக அவன் செய்யும் செயல் யாவும் மனப்பாங்கில் அடங்கும். சுருங்கக் கூறின் ஒரு விடயத்தை பற்றி நாம் கொண்டுள்ள நிலையான அபிப்பிராயங்கள் ஏற்படும் உணர்ச்சிகள் செய்யும் முயற்சிகள் முதலியவற்றின் தொகுப்பே மனப்பாங்காகும.
மாணவர்களில் எவ்வாறு மனப்பாங்குகள் வளர்ந்து உறுதியாகின்றனவெனச் சற்று கவனிப்போம். அவன் வகுப்பில் கற்கும் பாடங்கள் பற்றியும் பாடசாலைகளில் செய்யும் முயற்சிகளைப் பற்றியும் மனப்பாங்குகளை ஆக்கிக் கொள்கின்றான் ஒரு மாணவன் கணிதப்பாடத்தை கற்பதற்கு வேண்டிய விவேகம் படைத்தவனாக இருக் கின்றான் கணித ஆசிரியர் கணக்குகளை சுருக்கமாகவும் சுலபமாகவும் செய்யும் முறைகளை சொல் லிக் கொடுக்கின்றார். அவர் அனுபவமும் ஆற்றலும் படைத்த ஓர் கணித ஆசிரியர் தன்னுடைய மாணவனின் முன்னேற்றத்தில் மிகவும் அக்கறையுடையவர் எனவே அந்த மாணவன் கணிதத்தை விரும்பிக் கற்கிறான்.
நல்ல புள்ளிகளை பெறுகின்றான் ஆசிரியர் அதனை பாராட்டுகின்றார். இவற்றின் பயனாக கணிதத்தை பற்றிய நல்லதொரு மனப்பாங்கு அவனில் உருவாகிறது. அதனால் அவன் தனது எதிர்கால வாழ்க்கையிலும் சிக்கனமாகவும் செய்யும் செயல்களை விரைவாகவும் செய்யப் பழகிக் கொள்வான்.
இன்னொரு மாணவன் கணிதம் கற்பதற்கு வேண்டிய விவேகமும் ஆற்றலும் இல்லாதவன் ஆசிரியர் எவ்வளவு தான் முயன்றும் அவனைத் திருத்த முடியாமல் இருக் கின்றார். அவன் இப் பாடத்தில் குறைந்த புள்ளிகளையே பெறுகின்றான். இவற்றின் பயனாக மாணவனுடைய மனப்பாங்கு கணிதத்தை பொறுத்தவரையில் பாதகமாகவே அமைந்து விடுகின்றது.
எனவே ஒரு பாடத்தையோ அல்லது முயற்சியையோ வெற்றியுடன் செய்து இன்பம் காணும் போது நல்ல மனப்பாங்கும், அவ்வாறு இன்பங் காணாத போது
அகவிழி |ஜூன் 2013

விருத்தியாக்குவதில் பகளிப்பு
MED Following
பிழையான மனப்பாங்கும் மாணவரில் ஏற்படுகின்றது. ஆசிரியர்கள் பாடங்கள் சம்மந்தமாக பிள்ளைகளில் நல்ல மனப்பாங்குகளை ஆக்க முயற்சிக்க வேண்டும் மாணவரின் இயற்கை விவேகங்கள் ஆற்றல்கள் முதலியன சில வேளைகளில் தடையாக இருப்பினும் இத் தடையை ஓரளவுக்காவது குறைக்க வேண்டும்.
சில மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதை வேம்பாகக் கொள்கிறார்கள். ஏனெனில் பாடசாலையைப் பற்றிய அவர்களுடைய மனப்பாங்கு பிழையாக அமைந்து விட்டது. பாடசாலை வீட்டினின்றும் வித்தியாசமான நிலையமாகச் சிறுவனுக்கு காட்சி அளிக்கிறன்றது. தங்கள் ஆசிரியர்கள் பிரம்பும் கையுமாக இருக்கிறார்கள். அங்கே விளையாடுவதற்கு வசதியில்லை.ஆசிரியரும் விளையாட மாட்டார். ஆசனங்களில் அமர்ந்து தரப்பட்ட வேலைகளைச் செய்ய வேண்டும். வீட்டில் குழந்தைகள் மிகவும் சுதந்திரமாக தான் விரும்பியவாறு வாழ்கின்றனர் அவன் பெற்றோர்களின் செல்லப் பிள்ளை, இக் காரணங்களுக்காக சில பிள்ளைகள் பாடசாலையை வெறுக்கின்றனர். பாடசாலையைப் பற்றிய மனப்பாங்கு சிறுவர்களுக்கு பிழையாக அமைந்து விடுகின்றது. ஆசிரியர்கள் எவ்வாறு மாணவர்களை பாடசாலைக்கு விரும்பி வரச் செய்யலாம். பாடசாலையைப் போன்ற இன்பம் கொழிக்கும் இல்லமாக எப்படி வகுக்கலாம் என்ற இன்னொரன்ன வினாக்களுக்கு விடை காண வேண்டும். அப்போதுதான் பாடசாலை சம்மந்தமான மனப்பாங்கை இன்பம் நிறைந்த மனப் பாங்காக்கலாம்.
சிறுவர்களுடைய மானப்பாங்குகளை வளர்ப்பதில் ஆசிரியர்கள் மிகக் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்ள வேண்டும். மாணவர்கள் செய்யும் வேலைகளில் போதியளவு வெற்றி அவர்கள் காணக் கூடியதாக அவற்றை அமைக்க வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுடைய விவேகத்திற்கு தக்கதாக தரப்படுத்தல் வேண்டும். விவேகத்தால் மிகக் குறைந்தவர்களையும் உச்சப்படி உள்ளவர்களையும் ஒன்று சேர்த்து கற்பிக்கக் கூடாது. கல்விச் செயற்றிட்டம் அமைக்கும் போது அது மாணவர்களுக்கு பொருத்தமானதாகவும், இசைந்து கொடுக்கக்கூடியதாகவும் அவர்களது வாழ்க்கை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டதாகவும்

Page 15
இன்றும் புதிய புதிய அனுபவங்களை அவர்கள் பெற உதவுவதாகவும் அமைய வேண்டும். தெரிந்த விடயத்தை சொல்லிக்கொடுத்து பின் தெரியாத விடயங்களை படிப்படியாக அவர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்.
சுலபமான விடயங்களுடன் ஆரம்பித்து பின் படிப் படியாக கடுமையான விடயங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். மாணவர்களுக்குக் கொடுக்கும் முயற்சி, அவர்களுக்கு கற்பிக்கும் விடயம் மிகக் கடினமாக மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய வகையில் பாடங்களை கற்பிக்கக் கூடாது. தோல்வி சிறுவர்களை மனமுடையச் செய்து அவர்களை பிழையான மனப்பாங்கில் பழக்கிவிடும். இதை ஆசிரியர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். வயது வந்த மாணவர்கள் தோல்வியை எதிர்த்து போராடக்கூடிய மன வலிமை படைத்தவர்கள் அவர்களது முயற்சியின் விளைவுகள் வெற்றியின் படிகளாகும்.
மனப்பாங்குகளை ஆக்குவதில் கல்வியின் சகல பாடங்களுக்கும் இடமுண்டு அவற்றுள் இலக்கியம் எவ்வாறு மனப்பாங்கை உருவாக்குவதில் மாணவர்களுக்கு உதவுகின்றது என்பதை ஆராய்வோம். இலக்கிய கர்த்தாக்கள் தமது படைப்புக்களில் எடுத்துக்காட்டான பாத்திரங்களை தருகின்றார்கள். இப் பாத்திரங்கள் சிறந்த பண்புகளும் மதிப்புக்களும் உடையவர்கள். நல்ல நெறிகளை கடைப்பிடிப்பவர்கள் இத்தகைய பாத்திரங்களை எல்லா நாட்டுச் சிறந்த இலக்கியங்களிலும் நாம் சந்திக்கின்றோம். இராமாயணத்தில் இராமனையும் இராவணனையும், குகனையும் சீதையையும், இலட்சுமனை யும், அனுமனையும் கும்பகர்ணனையும் விபீடனையும் நாம் சந்திக்கின்றோம்.
இவர்கள் எல்லோரும் உயர்ந்த கொள்கைகளையும் நிறைந்த இலட்சியங்களையும் கொண்டவர்களாக காணப் படுகின்றனர். மகாபாரதத்தில் அர்ச்சுனன் கர்ணண் முதலிய இலக்கிய புருசர்களைநாம் சந்தித்து அளவளாவுகின்றோம். இவ்வகையான சந்திப்புக்கள் மூலம் இலக்கியங்களை கற்பவர்களின் சிறந்த மனப்பாங்குகள் உதயமாகுவது இயல்பு. இன்றும் திருக்குறள் போன்ற இலக்கிய நூல் களை வாசிப்பதாலும் எங்களுடைய மனப்பாங்குகள் உறுதியும் அழகும் பெறுகின்றன. எனவே பெற்றோர்களும் ஆசிரியர்களும் சிறந்த இலக்கியங்களை தெரிந்து அவற்றை பிள்ளைகளை வாசிக்கத் தூண்ட வேண்டும். மாணவர்களில் மனப்பாங்கை உருவாக்குவதற்கு இலக்கியத்தை போன்ற சிறந்த காரணி இல்லையெனலாம்.
பாடசாலைகளில் மாணவர்களின் மனப்பான்மைகளை உருவாக்குவதில் உடற்பயிற்சிக்கு ஒரு முக்கிய பங்குண்டு என்பதை நாம் மறக்கலாகாது. ஆனால் ஒடற்பயிற்சியை பற்றி நம்முடைய மனப்பாங்கு எப்படி அமைகின்றதோ அதற்கேற்பவே உடற்பயிற்சியின் பயனாக கிடைக்கும்

மனப்பாங்குகளும் உருவமெடுக்கும். உடலுறுப்புக்களை வளர்த்து உறுதியாக்கி நல்லொதொரு பயில்வானாக ஒரு மாணவன் வருவதால் மாத்திரம் பயனுமில்லை. சிலவேளைகளில் உடலை விருத்தியாக்குவதில் நாம் அளவுக்கு மிஞ்சிய கவனம் செலுத்தி உள்ளதை புண்படுத்தாது ஆத்மீகத்தை வளர்க்காது நின்று விடுகின்றோம். உடலை உறுதியாக்குவதற்கு ஆத்மாவை காண்பதற்காகவே என்று கிரேக்க அறிஞர் “பிளேற்றோ” குடியரசு என்ற நூலின் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.
உடற்பயிற்சி கல்வியின் உயர்ந்த நோக்கத்தின் ஒரு பகுதி என்பதை உடற்பயிற்சி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர் களுக்கும் மறந்துவிடலாகாது. யோகாசனங்கள், ஆத்மீகங்களை வளர்ப்தற்கு வேண்டிய ஆரம்பப் படிகள் என்பதை யார் தான் அறியார். அதே போன்று எவ்வகையான உடற்பயிற்சியாயினும் அது மனதை பக்கவப்படுத்தி அறநெறியை வளர்த்து ஆன்மீகத்தை விருத்தியாக்கு வதற்காகவே இருக்க வேண்டும்.
பெரியோர்களுடைய கூட்டுறவு சகவாசம் நட்பு இவை முதலியவற்றின் மூலம் மக்களின் நல்ல மனப்பாங்குகளை உருவாக்கலாம். அதாவது இராமகிருஸ்ண பரமகம்சர் ஆறுமுகநாவலர் விபுலானந்த அடிகள் மகாத்மாகாந்தி போன்ற பெரியார்கள் மக்களில் நல்ல மனப்பாங்குகளை உருவாக்கியுள்ளனர்.
நல்லவைகளை போதித்தல் சமுகத்தில் பிழைகள் நிகழாமல் அவற்றை அறிந்து தீர்க்க மாற்று வழிகளைக் கையாளுதல். தன்நலத்தை ஒடுக்கி பொதுநலத்தை பெருக்கி மக்களின் பொறுமை வாழ்க்கையை புரிந்து அவற்றிற்கு ஏற்ப அறம் வழுவாச்செம்மை நெறி நின்று சேவை செய்தல் சிற்றறிவுடைய சிலர் நாள் வாழ் மக்களென்று மற்றவரை ஒடுக்கி வாழாது ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனும் விழுமிய வாக்கிற்கு இணங்க யாதும் ஊரே யாவரும் கேளிர் என நினைத்து அன்பு கொண்டு வாழுதல் போன்ற உயர்ந்த பண்புகளால் மக்களது உள்ளத்தில் உயர்ந்த மனப்பாங்குகளை பெரியார்கள் ஊட்டியுள்ளார்கள் என்பது கண்கூடு எனவே ஆசிரியர்களும் பெற்றோரும் மாணவர்களை பெரியோர் களுடன் பழகுவதற்கு வாய்ப்புச் செய்து கொடுக்கவேண்டும்.
வினையினிணங்கி விளங்கிய அறிவின் விளைவான மதிப்பிற்குரிய பெரியோர்கள் தந்து சென்ற பொறுமைகளை மாணவர்கள் கற்க வேண்டும். அவர்களுடைய நூல்களை மாணவர்கள் கருத்துண்றி பயில வசதி செய்து ஆக்கமும் ஊக்கமும் அளிக்க வேண்டும். அஞ்ஞான்று அவர்கள் நன் மனப்பாங்குகளை உருவாக்கிக் கொள்வார்கள் என்பதில் ஐயமில்லை.
அகவிழி ஜூன் 2013

Page 16
சமூக விஞ்ஞான ஆய்வு
பொ. பூ6ே மெய்யியற்துறை, யாழ்ப்
மனித சமுகத்தின் வேறுபட்ட அம்சங்கள் தொடர்பாக ஆய்வு செய்யும் கற்கைத்துறைகள் சமூக விஞ்ஞானங்கள் எனப்படும். பொதுவாக சமூகவியல், மானிடவியல், உளவியல், வரலாறு, அரசியல், பொருளியல், மெய்யியல் போன்ற துறைகளை குறிப்பிடலாம். பிளேட்டோவின் குடியரசு (Republic), அரிஸ்ரோட்லின் அரசியல் தொடர்பான நூல்கள் சமூகவிஞ்ஞானம் பற்றிய ஆரம்ப நுால்களாக குறிப்பிடலாம். ஆயினும் 1650ம் ஆண்டுகளிற்குப் பின்னரான மறுமலர்ச்சிக் காலத்திற்கு பின்னரே சமூக விஞ்ஞானம் வளச்சியடையத் தொடங்கியது என குறிப்பிடலாம். 6TL66ò(660da35b (Emile Dhurhim) DITË6mò Q6Luj (Max Weber), SÐ456ù Gat5TLibs (Aguste Comte) (GBLJAT6öIGBOTTÜ Feyp85 விஞ்ஞானத்தின் ஆரம்ப கர்த்தாக்களாக குறிப்பிடலாம்.
ஆய்வு முறைகள் என்பது புதிய அறிவினை தேடும் செயற்பாடாகும். எனவே சமூக விஞ்ஞான ஆய்வு முறைகள் என்பது சமூகம் சார்ந்த புதிய அறிவினை தேடுவதற்கு பயன்படும் ஆய்வு முறைகள் என பொருள் கொள்ளலாம். இவ் வகையிலே சமூக விஞ்ஞான முறைகளாக அதாவது மானிட சமூக தொடர்பாக ஆராயும் ஆய்வு முறைகளாக பேட்டி காணல், வினாக்கொத்து, தனியாள் ஆய்வு, கட்டுப்பாட்டுக்குழு பரிசோதனை முறை, கள ஆய்வு, ஏடுகளின் ஆய்வு, அவதானம், புள்ளிவிபரவியல் முறை, போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவ் ஆய்வு முறைகளினுாடாகப் பெறப்படும் முடிவுகள் அகவயமானதும், புறவயமானதுமான தன்மையினைக் கொண்டு காணப்படும்.
அகவயம் என்பது விருப்பு வெறுப்புக்களை ஏற் படுத்துவது, ஆய்வாளனின் உணர்சிகளுக்கு இடமளிக்கக் கூடியது, ஆனால் புறவய அணுகுமுறையில் இவ்வாறான தாக்கம் ஏற்படுவதில்லை. புறவயம் என்பது நம்பிக்கைகள், எதிர்பார்ப்புக்கள், பக்கச்சார்பு என்பனவற்றிலிருந்து விடுபட்டு ஒரு யதார்த்ததின் தோற்றப்பாட்டை கொண்டி ருப்பது அதாவது உள்ளுணர்வு ரிதியாகவோ சிந்தனை பூர்வமாகவோ இல்லாது உண்மையை அவதானிப்பதில் இருந்து புறவயம் பெறப்படுகின்றது.
சமூக விஞ்ஞான ஆய்வுகளின் புறவயத்தை அடைவது கடினமானதாகும். இங்குள்ள பிரதான இடையூறு என்ன
அகவிழி (ஜூன் 2013

களில் புறவயத்தன்மை ாகநாதன்
பாணப் பல்கலைக்கழகம்
வெனில் ஆய்வாளனின் நம்பிக்கைகள், செல்வாக்குகள் இங்கு இடம்பெறுவதாகும். சமூக விஞ்ஞான ஆய்வுகளில் பிரதான அடித்தளம் சமூகம் ஆகும். இங்கு விடயப் பொருளாக சமூகம் காணப்படுகின்ற காரணத்தினால் சமூகத்தின் பிரதான இயல்பு அது மாறும் என்பதாகும். ஒரு தொடர்ச்சியான மாற்றம் சமூகத்தில் நிகழ்கிறது. எனவே தான் சமூக விஞ்ஞானத்தை ஆய்வுக்கு எடுக்கும் போது அகவயத் தன்மைகள் இடம்பெற இது காரணமாக அமைகின்றன. இயற்கை விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை அங்கு பெறப்படும் முடிவுகள் புறவயமானதாகவே காணப்படுகிறது. ஏனேனில் இயற்கை விஞ்ஞான ஆய்வு விடயங்கள் அதிகமான சர்ந்தர்ப்பத்தில் நிலையான தன்மையை கொண்டது அது மாறுவதில்லை. அது ஆய்வாளனின் முற்கற்பிதங்களினால் (Pre Judice) தாக்கப் படுவதில்லை. Lomberge என்பவரது கருத்துப்படி அகவயம் எல்லா விஞ்ஞானங்களிலும் (சமூகம், இயற்கை விஞ்ஞானம்) இடம் பெறக்கூடியதொன்று இங்கு இயற்கை, சமூக விஞ்ஞானத்திற்கான வேறுபாடு என்னவெனில் இயற்கை விஞ்ஞானத்தில் அகவயத்திற்கான சாத்தியகூறு குறைவு என்பதாகும்.
சமூகவிஞ்ஞானங்கள் ஆய்வாளனின் மன உணர்வு களுக்கு விரைவில் ஆளாகக்கூடியது ஏனேனில் இவை கலாசார, மொழி,மற்றும் பல்வேறு பண்பாட்டு அம்சங்க ளோடு தொடர்பு பட்டதாக இருப்பதனால் அங்கு புறவயத் தன்ைமை (Objective) இல்லாமல் போய்விடும். மேலும் விடயப்பொருளின் சிக்கலான தன்மை காரண மாகவும் அங்கு புறவயத்தன்மை பெற முடியாமல் போகும்.
சமூக விஞ்ஞானத்தின் பிரச்சினைகள் அளவு ரீதியானது (Quandity) என்பதை விட பண்பு ரீதியானது (quality) என்பதாக காணப்படும். பண்பு ரீதியானது எனும் போது அது பார்ப்பதற்கு கடினமானவை அவற்றை உணரக்கூடியதாகவும், சிந்திக்ககூடியதாகவும் இருக்கலாம் ஆனால் அளவு ரீதியானது என்பது பார்ப்பதற்கு, தொடுவதற்கு, பரிசோதிக்க இயலுமானவை ஆகும். எனவே சமூகவிஞ்ஞானத்தில் இக் குறிப்பிட்ட அம்சம் புறவய ரீதியான ஆய்வை சிக்கலானதாக மாற்றுகிறது.

Page 17
மேலும் சமூக விஞ்ஞானத்தில் ஒவ்வொரு ஆய் வாளனும் ஏதாவது ஒரு குழு அல்லது அமைப்பின் செல்வாக்கு உட்பட்டவராக இருக்கலாம். இதனால் இங்கு உறவு முறையின் தாக்கம் ஏற்பட வாய்ப்பு ஏற்படுகிறது. உதாரணமாக ஒரு நிறுவனத்தின் ஊழலை ஆராய ஒரு குழுவாக வேலை செய்யும் போது அதன் உரிமையாளர் உறவினராக இருக்கும் போது அங்கு சரியான ஆய்வு இடம்பெறாது.
(3LD6J b 96015g,660)LDulb (Ethnic Centrism) felp35 விஞ்ஞானத்தில் புறவயத்திற்கு பெரும் தடைக்கல்லாக இருக்கிறது. இதனால் பாரபட்சம், சலுகைகள் போய் ஆய்வு விடயத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் குறிப்பாக சமூக விஞ்ஞானத்தில் ஆய்வாளனும் ஆய்வுக்கு உட்படுப வரும் மனிதனாக இருப்பதனால் பக்க சார்பு, பாரபட்சம் போன்றன இடம் பெற்று புறவயதன்மையை அடைவதில் சிக்கல் நிலையை தோற்றுவிக்கும்.
எனவே தற்காலத்தில் சமூக விஞ்ஞானத்தில் புறவய தன்மையினை அடைவதற்கு அவதானம், பரிசோதனை போன்ற முறைகள் பயன்படுத்துகிறது. ஆய்வாளன் நேரடியாக அவதானித்து அதன் ஊடாக ஒரு விடயத்தை ஆராயும் பொழுது அதன் மூலம் பெறப்படும் முடிவுகள் நம்பகமானவை எனப்படும். இதனுடன் சேர்ந்து ஒரு நம்பகமான முறையே புள்ளிவிபரவியல் முறையாகும். புள்ளிவிபரவியல் மூலமாக பெரும்பாலும் துல்லியமான புறவய விடயங்களை சேகரிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது.
மேலும் சமூக விஞ்ஞானங்களில் பயன்படுத்தப்படும் சில கோட்பாடுகள், எண்ணக்கருக்கள் போன்றவற்றிற்கு விசேடமான பொருட்கள் தரப்படுகின்றதின்றன. அதாவது ஆய்வு விடயத்தினைப் பொறுத்தவரை ஏற்றுக்கொள்ளப்பட்ட பொது அர்த்தம் மாறுபடுகிறது. எனவே தான் இயற்கை விஞ்ஞானத்தில் இன்றும் சில பதங்களை கிரேக்க, இலத்தீன் மொழிகளில் வைத்திருக்கின்றனர். எனவே சமூக விஞ்ஞானத்தில் இக்குழப்பத்தை இல்லாமல் செய்ய அங்கு பயன்படுத்தப்படும் எண்ணக்கருக்களை தரநிர்ணயம் செய்ய வேண்டும். கேள்விக் கொத்துக்களை தயாரிக்கும் போது மொழி அமைப்பு சீராக பின்பற்றப்பட வேண்டும், தெளிவாக அமைந்திருக்க வேண்டும். சரியான தகவல்களை பெறுவதற்கு ஆதாரமாகவும், தேவையற்ற தகவல்களை தவிர்ப்பதற்கும் சமூக விஞ்ஞான ஆய்வுகளின் புறவத் தன்மையை பாதுகாப்பதற்கும் மொழி கவனமாக கையாளப் பட வேண்டும் என கூறப்படுகிறது.
மேலும் சமூக விஞ்ஞானத்தில் புறவயதன்மையை பெறுவதற்கு கட்டுப்பாட்டு குழு முறை பயன்படுகிறது. இம் முறை இயற்கை, சமூக விஞ்ஞானத்தில் உயிரியல்,

மருத்துவம் போன்ற துறைகளில் பயன்படுகிறது. இம் முறை மூலம் பெறப்படும் முடிவுகள் மிக சரியானதாக அமைகிறது ஏனேனில் கட்டுப்படுத்தப்பட்ட நிபந்தனையின் கீழ் இவ்வாய்வு நடைபெறுவதாலாகும். இம் முறையினை சமூக விஞ்ஞானத்தில் பயன்படுத்துவதனால் பறவயமான முடிவினை பெறலாம்.
மேலும் சமூக விஞ்ஞானத்தில் ஆய்வாளனுடைய மனப்பாங்கு ஒரு முக்கிய தாக்கம் செலுத்தும் இப் பிரச்சினையை நீக்குவதற்கு சமூக விஞ்ஞானத்தில் கருவி 36T6i (6 (Up60D36061T (Mechanical devices) ULL16in (6.556, Tib. உதாரணமாக வீடியோகமரா, பதிவுக்கருவிகள் (Recorders) போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.
மேலும் சமூக விஞ்ஞானத்தில் புறவியதன்மையான (pig6.j6060T GUpj6) gosi)(5 Inter disciplinary Technic I Lu6ör படுத்தப்படுத்த வேண்டும். அதாவது வரலாறு, மானிடவியல் போன்ற துறைகளில் ஒரு சமூக பிரச்சினையானது அரசியல், பொருளாதார, சமூகவியல் அழுத்தம் கூடியதாக இருக்கலாம். இந்நிலையில் குறிப்பிட்ட பிரச்சினையில் எது அதிகம் தாக்கம் செலுத்துகின்றது என்பதை அறிவதற்கு குறித்த ஆய்வாளன் ஏனைய துறைகளிலும் சிறப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்கவேண்டும். அவ்வாறு காணப்படுவாராயின் இயற்கை விஞ்ஞானம் போன்று சமூக விஞ்ஞாத்திலும் புறவய நோக்கை பெறலாம்.
மேலும் சமூக விஞ்ஞான ஆய்வு முறையில் நேர்முகம் காணல் (Interview) முறையும் ஒன்றாகும். அவதான முறையோடு ஒப்பிடும் போது இது மிகச்சிறந்ததாகும். ஏனெனில் அவதானத்தின் மூலம் நிகழ்கால விடயத்தை மட்டுமே கவனத்தில் கொண்டுவர முடியும் ஆனால் நேர்காணல் முறையில் கடந்த கால, நிகழ்கால, எதிர்கால விடங்களையும் சேகரிக்க முடியும். அவதானிக்கக் கடினமான விடயங்களையும் நாம் கேட்க முடியும். நேர்காணல் முறையானது அவதான முறையை விட கூடிய புறவய உண்மைக்கு சான்றாகவுள்ளது மேலும் இம் முறையில் சில குறைபாடுகள் ஏற்படுகிறது.
சமூகவிஞ்ஞானத்தில் மேற்குறிப்பிடப்பட்ட ஆய்வு முறைகளைப் பயன்படுத்துவதன் ஊடாக இயற்கை விஞ்ஞானத்தில் பெறப்படுவது போன்று புறவயமான முடிவுகளை சமூகவிஞ்ஞானத்திலும் பெறமுடியும். எனவே இன்று சமூகவிஞ்ஞான ஆய்வுகளில் கூடுதலாக மேற்குறிப்பிட்ட ஆய்வு முறைகள் பயன்படுத்தப்படுகிறது.
அகவிழி ஜூன் 2013

Page 18
ஆசிரிய தலைமைத்துவத்தி
க.சுவர்ணராஜா வவுனியா தேசிய கல்வியியற் உபபீடாதிபதி நிதியியற் பி
மாணவர்களின் கற்றல் வெற்றிற்காக ஆசிரியர்கள் பல்வேறு வகிப்பங்குகளை ஏற்கவும், ஆற்றவும் வேண்டிய வர்களாக உள்ளனர். ஆசிரியர்கள் மாணவர்களின் கற்றல் வெற்றிக்காக பல்வேறு தலைமைத்துவ வகிப்பங்குகளை விருப்புடன் ஏற்று நடப்பதால் மாணவர்களிடையே கற்றல் வெற்றியோடு இணைந்து தலைமைத்துவப் பண்புகளும் விருத்தியடைகின்றன.
தலைமைத்துவம் என்பது வற்புறுத்ததில்லாத முறை களினுாடாக மக்களை செயற்பட ஊக்குவிப்பதன் மூலம் அவர்களை ஒரு திட்டமிட்ட திசையில் செலுத்தும் செயன்முறையாகும். நல்ல தலைமைத்துவம் மக்களை அவர்களுக்கு நீண்ட காலத்தில் சிறந்த பயனளிக்கக் கூடிய திசையிலே செலுத்தவல்லாத இருக்கும். மற்றுமொரு கோணத்தில் கூறுவதாயினும் தலைமைத்துவம் தொலை நோக்கினை உருவாக்கி செயல்நுட்பத்தை, நுணுக்கத்தை உருவாக்கி, அதனை நிலைமைக்கேற்ப விருத்தியாக்கி ஒத்துழைப்பை திரட்டி செயற்பாட்டை ஊக்குவிக்கின்ற ஒரு செயல் முறையாகும். ஆசிரிய தலைமைத்துவமானது நேரடியாக மாணவர்களின் விருத்தியில் தொடர்புபடுவதால் அவர்களின் தொலைநோக்கும், பணி இலக்கும் மாணவர் களின் கற்றல் விருத்தியுடன் தொடர்புடையதாகவே அமைகின்றது எனலாம்.
ஆசிரியர்களின் தலைமைத்துவ வகிபங்குகள் முறை சார்ந்த முறையிலோ, அல்லது முறைமையில் முறையிலோ அமையலாம், அதாவது பாடசாலை முகாமைத்துவக் கட்டமைப்பின் ஊடாக வழங்கப்பட்ட கடமைப்பட்டியலின் ஊடாகவும், ஆசிரியர் தானே உருவகித்துக் கொள்ளும் செயற்பாடுகளின் ஊடாகவும் ஆசிரியர்களின் தலைமைத்துவ வகிப்பங்குகள் தோற்றக் கூடும்.
பாடசாலைகளின் தரம், இயலளவு, பாடசாலையில் இடம் பெறும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளின் ஊடாகவும் ஆசிரியர்களின் தலைமைத்துவ வகிபங்குகள் மாற்ற மடையவும் கூடும். ஆசிரியர்கள் தமது பாடத்துறைச் சார்ந்தும், தனது விசேடமான சிறப்பாற்றல்களைச் வெளிக்காட்டுவதன் ஊடாகவும் சில தலைமைத்துவ வகிப்பங்குகளை வெளிப்படுத்தக் கூடும். உதாரணமாக பல ஆசிரியர்கள் தமது விசேட நிபுணத்துவ ஆற்றலில்
அகவிழி |ஜூன் 2018

தின் வகிபங்குகள்
கல்லூரி விரிவு
தமது சகபாடிகளின் தலைவராக செயற்படும் நிலைமை களைக் குறிப்பிடலாம்.
ஆசிரியர்கள் தமது விசேடமான குணாதிசயங்களை ஏனையவர்களைவிட அதிகமாக வெளிக்காட்டும் ஆளுமை ரீதியான நடத்தைகள், ஆற்றல்கள் என்பவற்றின் ஊடாக மற்றவர்களை ஆட்கொள்ளும் தலைமைத்துவமிக்கவர் களாகக் காணப்படுகின்றனர்.
பொதுவாக ஆசிரியர்கள் ஏற்க வேணி டிய தலைமைத்துவ வகிப்பங்குகள் பல உள்ளன. அவற்றில் பிரதான சில வகிபங்குகள் பின்வருமாறு அமைகின்றன.
g)6O)6 uT660s
1. வளப்பகிர்வாளன்
ஆசிரியர்கள் எப்போதும் மாணவர்களுக்கும் தனது சகபாடி ஆசிரியர்களுக்கும் ஒரு வளப்பகிர்வாளனாக அமைதல் வேண்டும். கற்றல்-கற்பித்தல் தொடர்பான ஆசிரியர் வழிகாட்டிகள், மாணவர் வழிகாட்டிகள் வாசிப்பிற்கான நூல்கள், இணையத்தள முகவரிகள் தன்னால் ஆக்கப்பட்ட குறிப்புக்கள், தன்னால் தயாரிக்கப்பட்ட விசேடமான கற்றல் - கற்பித்தல் சாதனங்கள், என்பவற்றை பகிர்ந்து கொள்வதன் ஊடாக ஆசிரியர் வளப்பகிர்வாளன் என்ற தலைமைத்துவ வகிப்பங்கினை வெளிப்படுத்துகின்றார்.
சில ஆசிரியர்கள் தனது வெப்தளங்கள் ஊடாகவும், மின்னஞ்சல் ஊடாகவும் ஏனையோருக்கு கற்றல் -கற்பித்தலுக்கான விடயங்களை பரிமாறிக் கொள்கின்றனர். மேலும் பல ஆசிரியர்கள் பாடசாலைக்கு புதிதாக நியமனம் பெற்றும் ஆசிரியர்களுக்கு தம்மிடமுள்ள வளங்களை பகிர்ந்தளிப்பதில் காட்டும் அக்கறையானது புதிதாக வரும் ஆசிரியர்களின் விருத்திக்காக மட்டுமன்றி மாணவர்களின் கற்றல் வெற்றிற்கும் ஒட்டு மொத்த பாடசாலை விருத்திக்கும் அடித்தளமாக அமைகின்றன.
2. கலைத்திட்ட - நிபுணன்
பாடசாலைக் கலைத்திட்டத்தில் ஆசிரியர் நிபுணத்துவ நிலையானது. கலைத்திட்டம் தொடர்பான ஒரு

Page 19
தலைமைத்துவ வகிபங்கினை ஆசிரியருக்கு பெற்றுக் கொடுக்கின்றது. பாடசாலைக் கலைத் திட்டத்தின் உள்ளடக்கம், அவற்றின் தரவேறுபாடுகள், பாடசாலைக் கலைத்திட்டத்தின் பிரிவுகள், என்பன தொடர்பாக ஆசிரியர்கள் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.
கலைத் திட்டத்தை பாடசாலைக்கு ஏற்றவாறு மாற்றி திட்டமிடும் முறை, பாடசாலை கலைத்திட்டத்தின் பல்வேறு இணைப்பு முறைகள், பாடசாலைக்கலைத்திட்டத்தின் பெறுபேறுகள் மதிப்பிடும் முறைகள் தொடர்பில் ஆசிரியர் நிபுணத்துவம் கொண்டிருந்தால் ஏனைய ஆசிரியர்கள் அவரை கலைத்திட்ட நிபுணராகவும், அத்துறைசார்ந்த தலைவராகவும் ஏற்றுக் கொள்கின்றனர்.
கலைத்திட்ட நிபுணராக ஆசிரியர் தலைமைத்துவம் ஏற்கும் போது, பாடசாலை மட்டத்தில் கலைத்திட்த்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தவும், கலைத்திட்டம் தொடர்பாக நியமங்களை பாடசாலைமட்டத்தில் வகித்துச் செயற்படவும், கலைத்திட்டம் தொடர்பான விடயங்களை அவ்வப்போது பகிர்ந்துகொள்ளவும், கலைத்திட்டத்தில் மாற்றங்கள் ஏற்படும் போது அதனை இலகுவாக உள்வாங்கிக் கொள்ளவும் முடிகிறது.
உதாரணமாக தனது பாடத்துறை தொடர்பாகவும், ஏனைய பாடங்கள் தொடர்பாகவும், அது சார்ந்த இணைப்பாடவிதான நடவடிக்கைகள், மாணவர்களை கணிப்பிடும் செய்யும் நுட்பங்கள், கணிப்பிடும் விடயங்களை அறிக்கைப்படுத்தும் முறைகள் என்பன தொடர்பாக ஒரு ஆசிரியர் கொண்டிருக்கும் நிபுணத்துவம் இயல்பாகவே இவரது தலைமைத்துவத்தை ஏற்கும் உணர்வை ஏனையோரிடத்தே ஏற்படுத்துவதைக் குறிப்பிடலாம். அதாவது ஒரு ஆசிரியர் கலைத்திட்டம் தொடர்பாக கொண்டிருக்கும் நிபுணத்துவமானனது ஏனைய ஆசிரியர்கள் அவரது வழிகாட்டலைப் பெற தூண்டுவதாக அமைகின்றது.
3. கற்பித்தலில் நிபுணத்துவம்.
ஆசிரியர்களின் தலைமைத்துவம் சிறப்பாக செயற்பட ஆசிரியர்கள் கற்பித்தலில் நிபுணத்தவம் பெற்றவர்களாகக் காணப்படல் வேண்டும். கற்பித்தலில் ஆசிரியர் தனது சகபாடிகளுக்கு வினைத்திறன்மிகு கற்பித்தல் உபாயங்களை எடுத்துரைக்கும் ஒரு தலைவராக மாற்ற மடைகின்றார். பாடசாலைகளில் சிறப்பாக கற்பிற்கும் ஆசிரியர்களை ஏனைய ஆசிரியர்களும் மாணவர்களும் வெகுவாக மதிப்பது நடைமுறையில் காணப்படும் ஒரு உண்மையாகும்.
கற்பித்தல் தொடர்பான நுட்பங்களையும் அடிப்படை எண்ணக்கருக்களையும் கற்பித்தலுக்காக வெவ்வேறு திட்டங்களையும், ஏனைய ஆசிரியர்களுடன் பகிர்ந்து

கொள்ளும்போதும், முன்மாதிரியாக சில விசேட கற்பித்தல் முறைகளை நிகழ்த்திக் காட்டுவதன் மூலமும் ஆசிரியர் களின் கற்பித்தல் நிபுணத்தவ தலைமைத்துவ வகிப்பங்கு வெளிப்படுகின்றது.
சில ஆசிரியர்கள் தமது கற்பித்தல் தொடர்பாக பல்வேறு செயல்வழி ஆய்வுகளில் ஈடுபட்டு அதன் விளைவுகளை ஏனைய ஆசிரியர்களிடத்து பகிர்ந்து கொள்கின்றனர். சில ஆசிரியர்கள் அனுபவம் குறைந்த ஆசிரியர்களின் கற்பித்தலை அவர்களின் அனுமதியுடன் அவதானித்து அது தொடர்பான கலந்துரையாடல்களில் ஈடுபடுகின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் ஆசிரிய தலைமைத்துவத்தின் சிறப்பினை வெளிக்காட்டுவதாக அமைகின்றது.
4. கற்பித்தல் சாத்தியப்படுத்தும் வகிப்பங்கு
ஆசிரியர்கள் பாடசாலையில் கற்றலை சாத்தியப்படுத்தும் தலைமைத்துவத்தை ஏனைய ஆசிரியர்களுக்கு வாண்மைத் துவ விருத்திக்கான வசதிகளை ஏற்படுத்தி தர முன்வரும் போது ஏற்கின்றார். ஆசிரியதத்துவத்தின் பிரதான இலட்சணங்களில் ஒன்று ஒருவரிலிருந்து ஒருவர் கற்றுக் கொள்வதாகும். ஆசிரிய வாண்மைத்துவ விருத்திக்கு சகபாடி கற்பித்தல் மற்றும் கணிப்பீடு அவசியமானதாகும்.
மாணவர்களின் கற்றல் தொடர்பாகவும் மாணவர்களின் சிறப்புத்தன்மைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாகவும் தெளிவானப் பார்வையை ஆசிரியர்கள் கொண்டிருக்கும் போது ஆசிரிய தலைமைத்துவம் சிறப்பாக வெளிப்படு கின்றது.
மாணவர்களின் கற்றலை சாத்தியப்படுத்துவதற்காக ஆசிரியர்கள் வெளிக்காட்டும் வகுப்பறை முகாமைத்துவ திறன்கள் ஏனைய ஆசிரியர்களுடன் இணைந்து கற்பிப்பதில் வெளிக்காட்டும் ஆர்வம், மாணவர்களின் முன்னேற்றத்திற் கான திட்டமிட்டு செயற்படுத்தும் விசேட செயற்திட்டங்கள் கற்பதற்காகப் மாணவர்களுக்கு உருவாக்கி கொடுக்கும் விசேட சந்தர்ப்பங்கள் என்பன ஆசிரியரின் கற்றலை சாத்தியமாக்கும் தலைமைத்துவத்தின் வெளிப்பாடாக அமையும்.
5. தொழிவழிப்டுத்துநர்
தொழில் வழிப்படுத்தல் (Mentoring) என்பது சிறப் பான வாண்மைசார் வழிகாட்டுதலாகும். ஏனைய ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாகவும், ஆலோசனைகள் வழிகாட்டல்கள் வழங்குபவராகவும், நம்பகமான முறையிலும், சினேகபூர்வமான நிலையிலிருந்தும் ஏனைய ஆசிரியர்களின் பிர்சசினைகளிலிருந்தும் விடுபடவும் ஓர் ஆசிரியர் உதவும் போது அவர் ஏனையோர்கள் ஏற்றுக்
அகவிழி ஜூன் 2013

Page 20
கொள்ளக் கூடிய தொழில்வழிப்படுத்துனராக வகிபாகம் ஏற்கின்றார்.
பாடசாலைக்கு நியமனம் பெற்று வரும் புதிய ஆசிரியர்களுக்கு பாடத்திட்டம், கலைத்திட்டம், கற்பிற்கும் முறைகள், கணிப்பீட்டு முறைகள் பாடசாலை கொள்கை, பாடசாலை கலாச்சாரம், தொடர்பாக நேரடியாகவும் மறைமுகமாகவும் எடுத்துரைத்தலில் ஆசிரியரின் தொழில் வழிப்படுத்துனர் பணி விரிவடைகின்றது. புதிய ஆசிரியர்கள் பாடசாலையின் புதிய சூழ்நிலைக்கு ஏற்றவாறு தம்மை தயார்படுத்துவதற்கு சிரேஷ்ட ஆசிரியர்களையே நாடு கின்றனர். இந்நிலையில் பொறுமையாகவும் நம்பகமாகவும், சினேகபூர்வமானதாகவும் சிரேஷ்ட ஆசிரியர்கள் புதிய ஆசிரியர்களை வழிநடத்தும் போது, சிரேஷ்ட ஆசிரியர் களின் பணி சிறப்புமிகு தலைமைத்துவப் பணியாக நோக்கப்படுகின்றது. புதிய ஆசிரியர்களுக்கு வழிகாட்டு வதற்கு சிரேஷ்ட ஆசிரியர்கள் எடுத்துக் கொள்ளும் சிரத்தை நிபுணத்துவம், கால அளவு, என்பனவற்றின் அளிவிலேயே புதிய ஆசிரியர்கள் பெற்றுக்கொள்ளும் வாண்மைத்துவ விருத்தியின் அளவும் தங்கியுள்ளது 6T60T6)|TLb.
6. பாடாசலை தலைவர்
ஆசிரியர்கள் பாடசாலை தலைவர் என்ற தலைமைத்துவ வகிபாகத்தையும் வெளிக்காட்டும் சந்தர்ப்பங்கள் பல உள்ளன. சில வேளைகளில் பாடசாலையின் அதிபர் விடுமுறைபெறும்போது அல்லது அவர் உத்தியோக பூர்வ கடமைகளுக்குச் செல்லும் போது தற்காலிகமாக பாடசாலை தலைவர் பொறுப்பு ஆசிரியர் ஒருவரிடம் ஒப்படைக்கும் போது அச்சந்தர்ப்பத்தில் பாடசாலை தலைவராக ஆசிரியர் தனது செயலாற்றலை வெளிப்படுத்தலாம்.
இதனை விட பாடசாலையில் காணப்படும் பாடசாலை அபிவிருத்திக்குழு, பாடசாலை ஆசிரியர் நலன்புரிச்சங்கம், பாடசாலை இணைப்பாட விதான அபிவிருத்திக்குழு, மாணவர் அபிவிருத்திக் குழு போன்ற குழுக்களின் தலைமைத்துவம் ஏற்று அல்லது அக்குழுக்களில் சிறப்பாக தனது பங்களிப்பை வெளிப்படுத்தி தனது தலைமைத்துவ ஆற்றலை வெளிக் காட்ட முடியும்.
மேற்கண்டவாறான சந்தர்ப்பத்தில் ஆசிரியர் ஒருவர் பாடசாலை முன்னேற்றம் கருதி புதிய கருத்துககளை, புதிய திட்டங்களை மற்றும் ஆக்கபூர்வமாக முன்வைக்கலாம். இவை பாடசாலை விருத்திக்கு அடிப்படையாக அமையுமாயின் அக்குறிப்பிட்ட ஆசிரியரின் தலைமைத்துவ சிறப்பு வெளிப்படும் நிலை உருவாகின்றது. பாடசாலை அபிவிருத்தி சார்பான குழுக்களில் பங்காற்றி ஆசிரியர்கள் முன்வைக்கும் விடயங்கள் ஏனைய ஆசிரியர்களாலும்,
அகவிழி 1 ஜூன் 2013

பாடசாலை அதிபராலும் வரவேற்கப் படுமாயின் புதிய விடயத்தை முன்வைக்கும் ஆசிரியர்களின் தலைமைத்துவம் மறைமுகமாக ஏனையோரால் அங்கீகரிக்கப்படுகிறது எனலாம்.
மேலும் பாடசாலை தலைவர் என்ற ஆசிரியர் தலைமைத்து வகிபங்கு பின்வரும் சந்தர்ப்பங்களிலும் வெளிப்படுத்தப்படுகின்றது எனலாம்.
அ. தமது பாடசாலை சார்பாக, அல்லது தமது பாடசாலையிற் பிரதிநிதியாக ஏனைய பாடசாலைகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்று செயற்படல்.
ஆ. கோட்டமட்ட, வலயமட்ட, மாகாணமட்ட கல்வி அபிவிருத்திபணிகளிலும் இணைப்பாடவிதான அபிருத்தி பணிகளிலும், தமது உயரிய பங்களிப்பினை தாம் சார்ந்த பாடசாலை சார்பாக வழங்குவதற்கு ஓர் அசிரியர் முன்வருதல்.
இ. பாடசாலையின் முன்னேற்றத்திற்காக பல்வேறு சமூகத் தொடர்புகளை ஏற்படுத்தும் இணைப்பாளராக ஓர் ஆசிரியர் தொழிற்படும் போது பாடசாலை தலைவர் என்ற வகிபாகத்தை ஆசிரியர் ஏற்கின்றார்.
7. தகவல் பங்களிக்கும் தலைமைத்துவ வகிபங்கு
ஆசிரியர் என்பவர் தகவல் நிரம்பிய ஒரு வளமாகும். பல்வேறு தரவுகளையும், தகவல்களையும தன்னகத்தே கொண்டுள்ளார்.இன்றைய நவீன உலகில் ஒருவர் தகவல் நிரம்பியவராகக் காணப்படுதல் சிறப்பான தொரு வளமாக கருதப்படுகின்றது. இன்றைய நிலையில் ஆசிரியர் தாம் பெற்றுள்ள எல்லா தகவல்களையும் கற்பித்தல் திறன் விருத்திக்காகவும், பாடசாலையின் விருத்திக்காகவும் பயன்படுத்த முன்வருவதில்லை.
தகவல்களை பொருத்தமாக பெற்று அவற்றை சிறப்பாக களஞ்சியப்படுத்தி, அவற்றை பகுப்பாய்வு செய்து அதன் முடிவுகளை பொருத்தமாக வெளிப்படுத்தும் கலை தலைமைத்துவம் சார்ந்ததாகும். ஓர் ஆசிரியர் இவ்வாறு தகவல்களை வகுப்றைக் கற்பித்தலுக்கும், பாடசாலை அபிவிருத்தி செயற்பாடுகளிலும் பயன்படுத்தும் போது அவரது பணி ஒரு தலைமைத்துவ பணியாக மாணவர் களாலும், ஏனைய ஆசிரியர்களாலும் நோக்கப்படுகின்றது.
அது மட்டுமன்றி ஓர் ஆசிரியர் தான் பெற்றுள்ள தகவல் வளத்தை ஏனைய ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொள்ளல். பரஸ்பர வாண்மை விருத்திக்கு உதவுகின்றது. உதாரணமாக தாம் கற்பிற்கும் வகுப்றைகளிலுள்ள மாணவர்களிற் பலம், பலவீனம் பற்றிய திரட்டிய தகவல்களை ஏனைய ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொள்ளலானது மாணவர்களின் அடைவு விருத்திக்கும்,

Page 21
ஆசிரியர்களின் கற்பித்தல் சார்பான பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் ஆதாரமாக அமைகின்றது. இது தகவல்களை மையமாகக் கொண்ட தீர்மானமெடுத்தலுக்கு உதவுவதால் இந்நிலை ஓர் ஆசிரிய தலைமைத்துவ வெளிப்பாடாக அமைகின்றது எனலாம்.
8. மாற்றங்களை துாண்டும் தலைமைத்துவம்
ஆசிரியர் தமது செயற்பாடுகள் தொடர்பாக விழிப் புணர்வுடன் இருப்பதோடு, தமது செயற்பாடுகளுக்கு பாதிப்பு விளைவிக்கும் காரணிகள் தொடர்பாகவும் கவனமாக இருத்தலும் வேண்டும். ஓர் ஆசிரியர் தான் நன்கு திட்டமிட்டு செயற்படுத்தும் மாணவர் சார்பான செயற்பாடுகளிற்கு ஏனைய ஆசிரியர்களின் நடத்தை தடையாக இருக்குமாயின் அது தொடர்பாக மாற்றங்களை மேற்கொள்ள முன்வரல் வேண்டும்.
உதாரணமாக வகுப்பறை முகாமைத்துவ செயற்பாடு களில் மேற்கண்டவாறான நிலைமைகள் தோற்றம் பெறலாம். ஓர் ஆசிரியரால் முன் வைக்கப்பட்ட மாணவர் தொடர்பான சில பொருத்தமான கட்டுப்பாடுகள் ஏனைய பாட ஆசிரியர்களால் பின்பற்றாது விடப்படுமாயின் தொடர்பான சில பொருத்தமான கூட்டுறவுகள் ஏனைய பாட ஆசிரியர்களால் பின்பற்றாது விடப்படுமாயின் அல்லது அக்கட்டுப்பாடுகள் தொடர்பாக மாணவர் முன்னிலையில் விமர்சிக்கப்படுமாயின் வகுப்பறைக்கட்டுப்பாடு குலைவதற்கு காரணமாக அமையலாம். இவ்வாறானச் சந்தர்ப்பங்களில் ஏனைய ஆசிரியர்களுக்கு விளக்கமளித்து அவர்களுடன் கலந்துரையாடி பொருத்தமான மாற்றங்களை முன்னெடுக்க வேண்டியது ஆசிரியரின் தலைமைத்தவ வகிபங்கு ஆகும்.
9. கற்போன்
தொடர்ந்து கற்றுக் கொண்டிருக்கும் ஓர் ஆசிரியர் ஏனையவர்களுக்கு ஏதோ ஒருவகையில் தலைமைத் துவத்தை வழங்கிக் கொண்டிருப்பார். அதாவது தனது கற்றலின் அளவினால் மற்றவர்களின் நடத்தையில் செல்வாக்குச் செலுத்திக் கொண்டிருப்பார். தொடர்ந்து கற்றல் என்பது ஆசிரியர்களுக்கு தேவையான ஒரு சிறப்பான தகுதியாகும்.
ஓர் ஆசிரியர் தனது தொடர்ச்சியான கற்றலின் ஊடாக தனது கற்பித்தலிலும், தனது ஏனைய செயற்பாடுகளிலும் தொடர்ச்சியாக புதுமைகளை ஏற்படுத்த முடியும். ஆக்க பூர்வ தன்மையை வெளிப்படுத்த முடியும். ஒருவரது புதுமை, ஆக்கபூர்வதன்மை என்பதை மற்றவரால் விரும்பப்படும் போது அதனை வெளிப்படுத்திய ஆசிரியரின் தலைமைத்துவம் ஏனையோரால் பின்பற்றப்படுகின்றது எனலாம்.

உதாரணமாக சில ஆசிரியர்களின் பாடசாலையில் இடம் பெறும் ஆசிரியர் கூட்டங்களிலும் ஏனைய நிகழ்ச்சி களிலும் முன்வைக்கும் புதிய கருத்துக்கள், புதியதிட்டங்கள் அவர்களின் கற்றலின் விளைவாக தோன்றியவை ஆகும். கற்றல் வழி ஓர் ஆசிரியர் வெளிப்படுத்தும் தலைமைத்துவம், பெறுமதி மிக்கதாகவும், ஏனையோரால் இலகுவாக வரவேற்கப்படுவதாகவும், அமைகின்றது.
10. வகுப்பறை உதவியாளன்
ஓர் ஆசிரியர் வகுப்பறைக் கற்பித்தல் செயற்பாடுகள் ஊடாக மாணவர்களுக்கும், ஏனைய ஆசிரியர்களுக்கும் உதவமுடியும். ஏனைய ஆசிரியர்களின் வகுப்பறைக் கற்பித்தலை அவதானித்து பின்னூட்டல் வழங்குதல், மாதிரி வகுப்புக்களை நடத்திக் காட்டுதல், ஊடாக ஒரு வகுப்பறை உதவியாளனாக செயற்பட முடியும்.
ஏனைய ஆசிரியர்களின் திறமைகளை அவர்களுக்கு எடுத்துரைத்தல் அவர்களது கற்பித்தல் சார்பான பிரச்சினை களுக்கு தீர்வுகளை சுய பிரதிபலிப்பின் அவர்கள் பெற வழிகாட்டுதல், மாணவர்களின் ஒத்துழைப்பை பெறுவதற் கான நுட்பங்களை கலந்துரையாடுவதோடு அவற்றை வகுப்பறைகளில் நடைமுறைப்படுத்த உடனிருந்து உதவு தல் என்பன வகுப்பறை உதவியாளர் என்ற தலைமைத்துவ வகிபங்கினை வெளிப்படுத்தும் செயற்பாடாகும்.
ஆசிரியர்கள் முறைசார்ந்த முறையிலும் முறைமையில் முறையிலும் தலைமைத்துவத்தினை ஏற்கவும், வெளிப் படுத்தவும் முன்வருதல், மாணவர்களின் வெற்றிற்கும் பாடசாலையின் வெற்றிற்கும் அடிப்படையாக அமையும். சில ஆசிரியர்கள் பொறுப்புக்களை தானாக முன் வந்து ஏற்று தனது பொறுப்பியத்தை வெளிக்காட்டுகின்றனர். சில ஆசிரியர்கள் தமது தலைமைத்துவ திறன்களை தமது சகபாடிகளுடன் மட்டும் பகிர்ந்து கொள்கின்றனர்.
பொதுவாக ஆசிரியர்கள் தலைவர்கள் என்ற வகையில் பன்முக நோக்கில் தலைமைத்துவ வகிபங்கு களை வெளிக்காட்டுதல் வேண்டும். தமது கடமைப்பட்டியல், பொறுப்புநிலை என்பனவற்றிற்கு அப்பாற்பட்டும் சுயேச்சையான தலைமைத்துவத்தை ஆசிரியர்கள் வெளிக்காட்டுதல் வாண்மை விருத்திக்கும் மாணவர்களின் கற்றல் வெற்றிற்கும் துணையாக அமையும், அதே நேரத்தில் தமது திறமைகள், ஆற்றல்கள் என்பவற்றை மையமாகக் கொண்டு ஏனையவர்களை நசுக்குதல், அவர்களது திறமைகளை குறைத்து மதிப்பிடல் அளவுக் கதிகமான அதிகாரத்தை வெளிப்படுத்தல்,மற்றவர்களை அச்சுறுத்தி பணிய வைத்தல் என்பன தலைமைத்துவமாக 960) DuuLDTLITg5).
அகவிழி ஜூன் 2013

Page 22
மனித மூளையும் அ
R. Lo(
தொடர்ந்து நிகழும் கணக்கிலடங்கா மாற்றங்களில், ஒரு சில அதன் சுற்றுச்சூழலுக்கு ஏற்றாற்போல் இருந்தால், அவை பிழைத்து அடுத்த தலைமுறைக்கு செல்லும் மற்றவை மடிந்து போகும். நாளடைவில் பிழைத்தவற்றை நோக்கினால், யாரோ அவற்றை அதன் சுற்றுச்சூழலுக்கு ஏற்றாற்போல் உருவாக்கி உள்ளார் என்பது போல் தோன்றும். அப்படி இயற்கை தேர்வு - முறையில் உருவான எந்திரங்கள் தான் பாக்டீரியா, தாவரங்கள், மீன்கள் முதல் விலங்குகள் வரை, மனிதன் உட்பட! இந்த எந்திரங்களின் வடிவமைப்பு அவற்றின் ஜீன்களில் (DNA) 6f 6Tg).
உயிர் எந்திரங்களின் அடிப்படை நோக்கம் பிழைத் திருந்து, இனப்பெருக்கம் செய்தல். ஏனெனில், அப்படிப் பட்டவை மட்டுமே பிழைத்திருக்கின்றன. நம் உடலின் ஒவ்வொரு அங்கங்களும், மூளையின் ஒவ்வொரு எண்ணங்களும், வாழ்க்கையின் ஒவ்வொரு குறிக்கோளும் இந்த அடிப்படை நோக்கத்திலிருந்து உருவாக்கப்பட்டதே!
நாம் பிழைத்திருக்க உணவு வேண்டும் அதைத் தேட கால்கள் வேண்டும் பறித்து, பிடித்து உண்ண கைகள் வேண்டும் உணவை கண்டுகொள்ள கண்களும், மூக்கும் வேண்டும் உண்பதற்கு வாய் வேண்டும். இந்த உடல் உறுப்புகளின் தசைகளைக் கட்டுபடுத்தி செயல் படுத்த நரம்பு மண்டலமும், மூளையும் வேண்டும்.
உடலுக்குத் தேவையான நீர் முற்றிலும் குறைவதற்கு முன்பே மூளை நமக்கு தாகத்தை ஏற்படுத்தி எச்சரிக்க வேண்டும் இரத்தத்தில் ஊட்டச்சத்து குறையும் முன்பே பசியை ஏற்படுத்தி எச்சரிக்க வேண்டும். உடல் செல்கள் அதிகமாக வெப்பத்தால் சேதமடையும் முன், வியர்வையை உருவாக்கி உடல் வெப்பத்தைக் குறைக்க வேண்டும். உடல் செல்கள் குளிரால் சேதமடையும் முன், உடல் நடுக்கத்தை ஏற்படுத்தி உடல் வெப்பத்தைக் கூட்ட வேண்டும். இனப்பெருக்கம் செய்ய பால் எண்ணங்களை உருவாக்க வேண்டும். அதற்கேற்ப உடலைத் தயார்படுத்த வேண்டும்.
மூளை நம் கால்களுக்கு சமமான அளவிற்கு (25) ஆற்றலை செலவிடுகின்றது. எனவே அது பொதுவாக சாதாரண வேகத்தில் இயங்க வேண்டும். ஆனால் ஆபத்து
அகவிழி |ஜூன் 2013

தன் நிலைத்திருப்பும்
னேஸ்
போன்ற முக்கிய சமயங்களில் மூளை இயங்கும் வேகத்தைக் கூட்ட வேண்டும். மூளை ஒவ்வொன்றின் நன்மை தீமைகளையும் லாப நட்டங்களையும் அறிந்து சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். ஆனால் எதிரியுடன் போராட முடிவெடுத்த பிறகு, மூளை சீர்தூக்கிப் பார்த்தல் பகுதியை அணைத்து விட்டு, மூளையின் ஆற்றலையும் உடலையும் போராட்டத்திற்கு ஒரு முகப்படுத்தி தயார்படுத்த வேண்டும். இப்படிபட்ட மூளையின் நிலையை (மன - நிலை கால்கள் செயல்பட்டால் நடத்தல், மூளை செயல்பட்டால் மனம்) கோபம் என்கின்கிறோம். எனவேதான் ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்கிறோம்.
ஒவ்வொன்றின் குறை நிறைகளை அறிந்து கொள்ள வேண்டும். ஆனால் பால்-துணையின் மேல், மூளை அப்பகுதியின் செயலை அனைத்து விட வேண்டும். இப்படிபட்ட மூளையின் நிலையை காதல் என்கின்கிறோம். எனவே தான்-காதலுக்கு கண் இல்லை - என்கின்கிறோம். எனவே தான் காதலின் போது குறைகள் அற்ற சொர்க்க மாக இவ்வுலகைக் காண்கின்கிறோம். பொதுவாக மூளை பல விடயங்களை அலசி ஆராய்ந்து கொண்டே இருக்க வேண்டும். ஆகவே சாதாரணமாக மனம் அலைபாய்தல் எளிது. ஆனால் நம் குழந்தைகளின் மேல், நம் கவனத்தை ஒருமுகப்படுத்தி, அதன் நல்லது கெட்டதை அறிந்து அதற்கேற்ப ஆற்றலை செலவிட வேண்டும். இப்படிபட்ட மூளையின் நிலையை பாசம் என்கின்கிறோம்.
மூளை அனுபவத்தில் ஏற்படும் புதிய நிகழ்வுகளை நினைவில் கொள்ள வேண்டும் புதிய விசயங்களை கற்று கொள்ள வேண்டும் புதிய திறமைகளை கற்றுக் கொள்ள வேண்டும். அது மட்டுமில்லாமல், ஏற்கனவே உள்ள உணர்ச்சிகளை புதிய கற்றலின் மூலம், மூளை கட்டுப் படுத்த வேண்டும். மூளை இப்படி பலவற்றை செயல் படுத்துவதோடு, அதன் நிலையையும் தெரிந்து கொள்ள வேண்டும் தனக்கு என்ன தெரியும், தெரியாது, தன் பலம் என்ன, பலவீனம் என்ன என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும் இதை நாம் சுயநினைவு என்கின்கிறோம். இவ்வாறு ஜீன்கள் நம் மூளையில் எழுதிய கட்டளையை செயல்படுத்துகின்கிறோம். இது நம் எந்திர வாழ்கை இந்த எந்திரம் செயல்படும்போது உயிர் என்கின்கிறோம், அது செயல் இழக்கும்போது மரணம் என்கின்கிறோம்.

Page 23
இப்பொழுதெல்லாம் சுவாசம் நின்ற பிறகும், இருதயம் நின்ற பிறகும் கூட உயிர் பிழைக்க வைக்க முடிகின்றதே?
பாக்டீரியா என்பது ஒரு செல் உயிரினம். அதன் செல்லின் எந்த பகுதி பழுதடைந்தாலும் அல்லது எந்த வேதிவினை தடைபட்டாலும் அது அதன் மரணம். நாம் பல-செல் உயிரினம். நாம் பல கோடி செல்களின் கூட்டு முயற்சி. அதில் ஒரு செல் பழுதடைந்தால், நம் உடல் அதை மாற்றிவிடும். ஆனால் ஒரு முக்கிய உறுப்பே பழுதடைந்தால், அது மற்ற செல்களையும் சேதப்படுத்தி மொத்த உடலும் மெதுவாக செயலிழந்து போகும். சுவாசமோ, இருதயமோ நின்ற பிறகு, நம் உடல் செல்கள் மெதுவாக பழுதடைய ஆரம்பிக்கும். அதற்கு முன், செயற்கையாக சுவாசத்தை, இருதயத்தை இயக்கப் படுத்தினால், நாம் மீண்டு வரலாம். இன்றைய மருத்துவ தொழிற்நுட்பத்தில், பெரும்பான்மையான மூளையின் செல்கள் செயல் இழந்தால் அதை மரணம் எனலாம். ஏனெனில் மற்றவற்றிக்கு சில மாற்று வழிமுறைகளை கண்டறிந்துள்ளோம். நாளை மூளைக்கு மாற்று வழி கண்டறியலாம்.
ஒரு கருதுகோள், உன் கை கால்களை இழந்து நீ செயற்கை அங்கங்களைப் பொருத்தி கொண்டால், அது நீதானா? (மூளையின் கட்டளைகளை மின்னணு செய்தி களாக மாற்றி அதைக் கொண்டு செயற்கை
 
 

அங்கங்களை இயங்க வைப்பது. இதில் பல தொழிற்நுட்ப இயற்பாடுகள் இருந்தாலும் கை, கால்கள், காது, கண்கள் போன்றவற்றை ஓரளவு செயற்கையாக மாற்றி உள்ளோம்)
அப்பொழுதும் அது நான் தான்.
மூளையின் செல்கள் தொடர்ந்து செயல்பட நல்ல இரத்தத்தை தொடர்ந்து அனுப்ப வேண்டும். இருதயம் நுரையீரல் என உன் உடலின் அனைத்து உறுப்பு களையும் நீக்கிவிட்டு செயற்கையாக மூளை நல்ல இரத்தம் கிடைக்கும்படி செய்தால், அப்பொழுதும் அது நீயா?
நான் தான்.
மூளையில் உள்ள செல்கள் (நரம்பணுக்கள்) எப்படி செயல்படுகின்றது என்பது நமக்குத் தெரியும். ஒரு செல்லை அல்லது பல செல்களை மின்னணு-சிப்பை கொண்டு மாற்றி அமைக்க முடியும். (இதை எலி மற்றும் குரங்கின் மூளை செல்களுக்கு ஏற்கனவே நாம் செய்துள்ளோம்). இப்படி உன்னுடைய ஒவ் வொரு செல்லையும் மின்னணு-சிப்பை கொண்டு மாற்றி அமைத்தால், நீ எப்படி செயல்படுகின்றாயோ அதே போலவே செயல்படுவாய். அப்பொழுதும் அது ỂuuIT ?
ம்ம்ம், நான் தான் என்று நினைக்கின்றேன்!
இப்பொழுது உனக்கு மின்சக்தி தரும் பேட்டரி மட்டும் இருந்தால் போதும். நாம் உருவாக்கும் எந்திரங்கள் உயிரினங்களைப் போல் செயல்படுவ தில்லையே?
உயிரினங்கள் மிகவும் சிக்கலான நேனோ-தொழிற் நுட்பத்தில் (அணு மற்றும் வேதி-மூலக்கூறுகள் அளவில்) உருவாக்கப்பட்டவை. இப்பொழுது தான் நாம் நேனோ-தொழிநுட்பத்தில் கால் வைத்துள்ளோம். ஆனாலும் மற்ற தொழிநுட்பத்திலும் பல நல்ல தீர்வுகள் காண முடியும். ஒவ்வொரு முறையிலும் நிறை குறைகள் உண்டு. விலங்குகள் எலும்புகளையும், ஆயிரக்கணக்கான நரம்பு மற்றும் தசைகளையும் கொண்டு உருவான கால்கள் மூலம் இடம் பெயர் கின்றன. நாம் செயற்கை எந்திரங்களுக்கு (கார் வண்டிகள்) சக்கரங்களைப் பயன்படுத்துகின்கிறோம். பறவையைப் போல் விமானத்தையும், மேலும் முற்றிலும் வேறுபட்ட முறையிலும் இயங்கும் இராக்கெட்டையும் உருவாக்கி உள்ளோம். மூளை யைப் போல் கணினியை உருவாக்கியுள்ளோம். இன்று செயற்கை-அறிவில் உருவாக்கப்பட்ட கணினிமென்நிரல்கள் செஸ் விளையாடுகின்றன, பலவகை யான கணித சிக்கலுக்கு தீர்வு கண்டுபிடிக்கின்றன,
அகவிழி ஜூன் 2013

Page 24
பல துறைகளிலில் (மண்ணியல், இருதயவியல்.) நிபுணர்களைப் போல் ஆலோசனை வழங்குகின்றன, பங்கு சந்தையில் பங்குகளை வாங்குகின்றன.
இன்று வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட செயற்கைஅறிவு-மென்நிரல்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடைய ஆயிரக்கணக்கான செய்திகளைக் கொண்டவை.
ஆனால் மனிதனைப் போன்ற பொது-அறிவுக்கு ஒன்றுக்கொன்று-தொடர்புடைய பல கோடி செய்தி களைக் கொண்ட மென்நிரல்களை உருவாக்க வேண்டும். அதை நேரடியாக உருவாக்குவதற்குப் பதில், குழந்தைகள் உலகத் தொடர்பு மற்றும் அனுபவத்தின் மூலம் கற்பது போல் கற்கும்மென்நிரல்களை உருவாக்கலாம். மனிதனைப் போன்ற தானியங்கு-எந்திரத்தை உருவாக்கினால் அதற்கும் சுயநினைவு மற்றும் ஒருவகையான உணர்ச்சிகள் இருக்கும்.
X 6Tug?
அது எப்படிப்பட்ட கட்டமைப்பு, கற்கும் உத்திகளைக் கொண்டு எந்த நோக்கத்திற்காக உருவாக்கு கின்கிறோம் என்பதைப் பொறுத்தது. குறைந்த பட்சம் அதற்கு அதனுடைய சக்தி மூலத்தை (மின்சக்தி வழங்கும் பேட்டரி) பற்றி ஒரளவாவது தெரிய வேண்டும்-அதிகபட்ச சேமிக்கும் சக்தி எவ்வளவு? ஒவ்வொரு வேலைக்கும் எவ்வளவு சக்தி தேவைப் படும்? இன்னும் எவ்வளவு நேரம் சக்தி இருக்கும்? எப்படிப்பட்ட வழிகளில் சக்தியைப் பெறமுடியும்? அதன் அங்கங்களைப் பற்றியும், அதைக் கொண்டு என்ன என்ன செய்ய முடியும் என்பதையும் அறிய
அகவிழி |ஜூன் 2013
 

வேண்டும். மேலும் உலகத்தைப் பற்றியும் அதன் காரண-காரியங்களைப் பற்றியும் கற்றுக் கொள்ள வேண்டும் அதற்கு அதன் கற்கும் திறனைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். அதற்கு தனக்கு என்ன தெரியும்தெரியாது, என்ன திறமைகள் இருக்குஇல்லை என்பது தெரிய வேண்டும். மொத்தத்தில் சுய அறிவு, சுய நினைவு வேண்டும். அதற்கு சுயஅறிவு இருந்
தால், அதன் மூளையின் ஒவ்வொரு
స్కో நிலையைப் பற்றியும் ஓரளவாவது ܢܝܬܐ * له *~ தெரிந்திருக்க வேண்டும். அதன் ஒவ்
வொரு நிலையும் அதன் உணர்ச்சிகளே!
ஒரு இலக்கை அடைய அது திட்டமிட வேண்டும். நிஜ உலக Ay இலக்குகள் செஸ் விளையாட்டை விட பலகோடி மடங்கு சிக்கலானவை. பல வழிகளிலிருந்து அதன் நன்மைதீமைகள் அறிந்து தன்னுடைய பலம்பலவீனம் அறிந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் தெரியாதவற்றை பல வழி ཉིད་ཀྱི་ களில் கற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு துணைஇலக்குகள் வெற்றி தோல்வி அடையும்போது, அதை அறிந்து கற்றுக் கொள்ளும் நிலை ஒருவகையில் சந்தோசம்விரக்தியைப் போன்றது தான். புதியவற்றவை கற்கும்போதும் ஏற்படும் நிலை, புரியாதவற்றால் குழம்பி அதைப் புரிந்து கொள்ள முற்படும் நிலை என பலவாறு அதன் நிலைகள் விரிவடையும்.
நாம் உருவாக்கும் செயற்கை எந்திரங்கள் நம்மைவிட மேம்பட்டதாக இருக்கும் அல்லவா?
செயற்கை எந்திரங்களின் மூளை அளவையும் வேகத்தையும் பலமடங்கு அதிகப்படுத்தலாம். தற்காலிக நினைவையும், சுயஅறிவையும் பல மடங்கு உயர்த்தி அதன் அறிவுத்திறனை பல மடங்கு உயர்த்தலாம். அப்படிப்பட்ட எந்திரங்கள் நாளை நம்முடன் வலம்வரலாம்! அவை புற்றுநோய், HIV போன்ற நோய்களுக்கு மருந்து கண்டறியலாம். நாட்டின் உலகத்தின் பொருளாதார பிரச்சினைகளுக்கு, உலக வெப்பமயமாக்குதலுக்கு நல்ல தீர்வு காணலாம். அப்படிப்பட்ட எந்திரம் அதைவிட மேம்பட்ட எந்திரத்தை உருவாக்கலாம்! யார் கண்டார், நாம் நம் சந்ததிகளை ஜின்கள் மூலமாக அனுப்புவதற்குப் பதிலாக நாமே நம் மூளையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லலாம்

Page 25
ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களி
ந. பார்த்தீபன் விரிவுரையாளர் வவுனியா தேசிய கல்வியியற்
ஆரம்பப் பாடசாலைப் பருவம் என்பது பிள்ளை விருத்தியின் தீர்க்கமான ஒரு பருவமாகும் என்பதை அனைவரும் அறிவு பூர்வமாகவும் உணர்வு பூர்வமாகவும் ஏற்றுக் கொள்வர். இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் என்பதை அங்கீகரிக்கும் நாங்கள், இன்றைய சிறுவர்களை நாளைய இளைஞர்களாகவும் அங்கீகரிக்க வேண்டும். எதிர்காலத்தில் வெற்றிகரமான ஒரு பிரஜையாகச் செயற்படுத்துவதற்குத் தேவையான பல ஆற்றல்களின் உருவாக்கமும் இசைவாக்கமும் இப்பருவத்திலேயே நிகழும். அதனால் தான் ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்றும் இளமையிற் கல்வி சிலையில் எழுத்து என்றும் பல்வேறு அர்த்த புஷ்டியான கருத்துக்களை வழங்கியிருக்கிறார்கள். பல ஆற்றல்களின் உருவாக்கமும் இசைவாக்கமும் உருவாதலால் தான், பிள்ளைகளின் வளர்ச்சிக்குச் சாதகமாக அதற்கு தூண்டு கோலாக அமையத்தக்க சூழலை உருவாக்குவது இன்றியமையாதது என்கின்றார்கள்.
பொதுவாகப் பிள்ளைகளுக்கு தமது அயற் சூழலுடன் தொடர்புறுவதற்கும் மகிழ்ச்சியையும் களிப்பையும் அனுபவிப்பதற்கும் பெற்றோரினதும் ஆசிரியர்களினதும்
 

டியும் பாடநூல்களும் ன் இரு கண்கள்
கல்லூரி
அன்பையும் கணிப்பையும் வழங்குதல் வேண்டும். அவ்வாறான வாய்ப்புக்களை பிள்ளையின் விருத்தி உச்ச அளவில் நிகழ்வதற்கு தூண்டுகோலாக அமையும் என்பதில் ஐயமில்லை என்று பாடத்திட்டமும் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியும் (தரம் 1) நூலில் பேராசிரியரும் தேசிய கல்வி நிறுவகப் பணிப்பாளர் நாயகமான ஜே. டபிள்யு விக்கிரமசிங்க அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி என்பது ஆசிரியர் களுக்கு வகுப்பில் தமது கற்றல்-கற்பித்தல் பணிகளை ஒழுங்கு செய்து கொள்வதற்கு வழிகாட்டும் அறிவுறுத்தற் கோவையாகும். இவ்வழிகாட்டல்களின் படி, கற்றல்கற்பித்தல் பணிகளை ஒழுங்கு செய்வது ஆசிரியர்களின் பொறுப்பாகும். பல ஆசிரியர்கள் பாடநூல்களை ஒரளவு பயன்படுத்திய போதும் ஆசிரியர் அறிவரைப்பு வழிகாட்டியை சிறிதேனும் கவனத்திற் கொள்ளாதது உணரக்கூடிய தாயுள்ளது.
ஆரம்பத் தரங்களில் பயிலும் பிள்ளைகள் அவர்களது முழுமையான விருத்தியின் முக்கிய மான ஒரு பருவத்தில் அடங்குவோராவார். மாணவர்களது ஆக்கச் சிந்தனை, சமூகத் திறன்கள், ஆளுமைப் பண்புகள் யாவும் இசைவு பெறும் பருவமும் இதுவாகும். எனவே மாணவர்களுக்கு கற்றல் அனுபவங்களை ஒழுங்கு செய்யும் போது இவ் அறிவுரைப்பு வழிகாட்டியிலுள்ள தகவல்களை மாத்திரமன்றி, மேற்குறிப்பிட்ட பிள்ளை விருத்தி தொடர்பான விடயங்களையும் கவனத்திற் கொள்ளல் அவசியமாகும். மாணவர்களது கற்றல் தொடர்பான அவர்களது அண்மைச் சூழலினை மிக வெற்றிகரமாக பயன்படுத்த வேண்டும். இவ்வயதுப் பிரிவைச் சார்ந்த மாணவரது கற்றல் முற்று முழுதாக சூழலுடனான இடைத் தொடர் பாடுகளினூடாகவே நிகழ்கின்றது. எனவே மாணவர்களுக்கான கற்றல்-கற்பித்தல் பணிகளை ஒழுங்கு செய்யும் போது அம்மாணவர் களது அயற் சூழலை பொருளுள்ள வகையில் பயன் படுத்தல் அவசியமானதாகும்.
அகவிழி ஜூன் 2013

Page 26
ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியில் தரப்பட்டுள்ள கற்றல் செயற்பாடுகளை ஒழுங்கு செய்யும் போது மகிழ்ச்சியூட்டும் விளையாட்டுகளுக்கும் வேலைகளுக்கும் முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்குத் தமது இளமைப் பருவத்தில் மகிழ்ந்திருப்பதற்கும் வெற்றிக் களிப்பை அளிப்பதற்கும் வாய்ப்புக் கிடைத்தலானது அவர்களது முழுமையான விருத்திக்கு இன்றியமை யாததாகும். மேலும் அவர்களது எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான தேர்ச்சிகளை விருத்தி செய்வதற்கான அடித்தளமும் இடப்படுதல் முக்கியமானதாகும். இந்நிலை யில் வகுப்பறையில் இவ்வாறான வாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுத்தல் ஆசிரியர்களின் அத்தியாவசியப் பணியாகும். தமது வகுப்பில் பயிலும் மாணவர்கள் கற்றல் செயல் முறையுடன் எந்த அளவுக்குத் தொடர்புறுகின்றார்கள் என்பது குறித்து இடையறாது கவனம் செலுத்தி தேவையான பரிகார வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும். கணிப்பீடு எனக் கருதப்படுகின்ற இச்செயன் முறையின் இறுதிப் பெறுபேறு ஒவ்வொரு மாணவரதும் கற்றலை மேம்படுத்து வதாகவே அமைதல் வேண்டும்.
ஆசிரியர் கைந்நூல் ஆசிரியர் அறிவுரைப்பு வழி காட்டியென இன்று அழைக்கப்படுகின்றது. இது எட்டுத் தேசிய குறிக்கோள்களையும் ஏழு அடிப்படைத் தேர்ச்சி களையும் உள்வாங்கிக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இது தேசிய கல்வி நிறுவகத்தினால் ஆரம்பக் கல்வி தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளும் கற்கைகளும், வேறு நாடுகளில் ஆரம்பக் கல்விப் பாட விதானங்களும் அவை தொடர்பான ஆய்வுகளும், இலங்கையிலுள்ள ஆசிரியர்களினால் பாடவிதானத்தில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட விதப்புரைகளும் கருத்துக்களும் சமயப் பெரியார்கள், கல்வியியலாளர்கள், ஆரம்பக் கல்வி தொடர்பான ஆர்வமுள்ள கல்விமான்கள் ஆகியோரின் கருத்துக்கள் போன்ற பல விடயங்களையும் உள்வாங்கித் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசிரியர்கள் இவ் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியையும் பாட நூல் களையும் இரு கண்களாகப் போற்றித் தமது கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
வெறும் பரீட்சை நோக்கில் பிள்ளைகளின் சந்தோஷங் களை ஆண்டு மூன்றிலிருந்து ஆண்டு ஐந்துவரை குழிதோண்டிப் புதைத்து அதில் புலமைப் பரிசில் பரீட்சை எனும் கட்டிடத்தைக் கட்டுதல் செய்வதால் எந்தவித பயனுமில்லை. மாறாக, போட்டி மனப்பாங்கும் பொறாமை உணர்வும் கொண்ட ஆசிரியர், பெற்றோர், மாணவர் ஆகியோர்களை உருவாக்கிவிடும் அபாயம் தொடர்கிறது. விளையாட்டோ, விசேட தினக் கொண்டாட்டமோ, கல்விச் சுற்றுலாக்களோ, கலை-இலக்கிய நாட்டமோ எதுவும் இல்லாமல் பிள்ளை பாதிக்கப்படும் இன்றைய நிலை
அகவிழி | ஜூன் 2013

மாற வேண்டும். மாற்றப்பட வேண்டும். முன்னர் குறிப்பிட்டது போல் மகிழ்ச்சியூட்டும் விளையாட்டுக்களும் சந்தோஷந் தரும் செயற்பாடுகளும் வழங்கப்பட்டு தமது இளமைப் பருவத்தில் மகிழ்ந்நிருப்பதற்கும் வெற்றிக் களிப்பை அடைவதற்கும் சகல மாணவர்களுக்கும் வாய்ப்புக் கிடைத்தலானதுதான் அவர்கள் அனைவரதும் முழுமையான விருத்திக்கு வழிவகுக்கும். இதுவே அவர்களது எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான தேர்ச்சிகளை விருத்தி செய்வதற்கு அடித்தளமாகும். இப்பணியைத் திறம்பட ஆசிரியர் மேற்கொள்வதற்கு ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியும் பாடநூல்களும் போதுமானவை என்பது ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பிள்ளைகளின் வயதிற்குப் பொருத்தமேயில்லாத சுமையை, ஆர்வத்திற்குப் பொருத்தமேயில்லாத வேலை களை, ஆற்றலுக்குப் பொருத்தமேயில்லாத செயல்களை, ஆளுமைக்குப் பங்கம் விளைவிக்கும் பாரத்தைப் பிள்ளைகள் மீது சுமத்தாமல் இருப்பதற்கு ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி வழிகாட்டும் என்பதை ஆசிரியர்கள் உணர்ந்து கொள்வது அவசியமாகும். ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தயார்படுத்துவது அவசிய மென உணர்ந்தாலும் (பெற்றோரின், ஆசிரியரினதும், பாடசாலையினதும் கெளரவத்தை காப்பாற்ற, அதுவே இன்று பாடசாலைகளின் தரத்தை, தகுதியை நிர்ணயிக்கும் அளவு கோல் என கல்விச் சமூகம் குறிகாட்டியாகக் கொள்ள) ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியையும் பாடநூ லையும் மட்டுமே கருவிகளாகக் கொள்ளலாம் எனத் துணிந்து கூறத்தக்க வகையில் இவை இரண்டும் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களுக்கு இரு கண்களாகத் தொழிற்படும் எனக் கூறமுடியும்.
கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக, ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியையும் பாடநூலையும் தவிர்த்து ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு வினாக்கள் போடப்படவில்லை என்பதை அனுபவம் மிக்க ஆசிரியர்கள் உணர்ந்து கொள்வார்கள். இந்நிலையில் அங்கலாய்த்த பெற்றோர்களும் அதற்கு தீனி போடும் ஆசிரியர்களும் நூற்றுக் கணக்கில் வெளிவரும் பயிற்சிப் புத்தகங்களை வாங்குவதும், அவற்றையே மந்திரங்களாக மனனஞ் செய்யத் தூண்டுவதும், பிள்ளைகளின் சிந்தனையை மழுங்கடிப்பதுடன் அவர்களுக்கு கல்வி மீதான வெறுப்பை ஏற்படுத்துவதும்தான் செய்யும் கைங்கரியம் எனலாம். இனிப்பெறுபேறுகள் வந்ததும் டிஜிற்றல் படங்கள், கட்டவுட்டுக்கள், விளம்பரங்கள் என ஆர்ப்பாட்டம் செய்வதால் சித்தியடையத் தவறிய பிள்ளைகளின் மனநிலைப் பாதிப்பை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. கல்வி ஏன் மகிழ்ச்சிக்குரியதாய் அமையாமல் சுமையாகிப் போனதென்பதை உணரவேண்டும்.

Page 27
கணினி ெ
ந. தெய்
பேராசிரியர், தலைவ
சென்னைப் ட
கணினித்தமிழ் வளர்ச்சி என்பது கணினியானது தமிழ்த்தொடர்களைப் புரிந்துகொள்ளவும் அவற்றை உருவாக்கவும் தேவையான தமிழ்மொழி அறிவை அதற்குக் கொடுப்பதற்காக நாம் மெற்கொள்ளவேண்டிய பணிகளைக் குறித்து நிற்கிறது.
கருத்துப்புலப்படுத்தலும் இயற்கைமொழிகளும்
மனித சமுதாயத்தில் பொருள் உற்பத்தி மற்றும் பிற சமூக நடவடிக்கைகளில் மனிதர்களுக்கிடையே கருத்துப்புலப்படுத்தல் என்பது மிக அடிப்படையான ஒன்றாகும். நமது கருத்துப்புலப்படுத்தச் செயற்பாட்டில் இயற்கைமொழிகள் இன்றியமையாதவையாக அமை கின்றன. மொழிசாராக் கூறுகளான முகபாவம் , உடல் அசைவு, படம், அட்டவணை போன்ற பல வற்றையும் நாம் இயற்கைமொழியோடு இணைத்து கருத்துப்புலப்படுத்துவதில் ஈடுபடுகிறோம். இயற்கைமொழி அறிவுத்திறனானது மனிதருக்கே மனித மூளைக்கே உரிய ஒன்றாகும். மனிதரையும் உயிரினங்களையும் வேறுபடுத்தக்கூடிய முக்கியமான இரண்டு பண்புகளில் ஒன்று மொழி, மற்றொன்று உழைப்பு. நமது மூளையில் இயற்கைமொழி அறிவு எப்படி உருவாகிறது? அம்மொழி அறிவின் கூறுகள் எவை? அவற்றின் அமைப்பு என்ன? அந்த அறிவு எங்கே எப்படி தேக்கிவைக்கப்படுகிறது? எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது? என்பதை ஆராயும் அடிப்படை அறிவியலே மொழியியலாகும். கடந்த ஐம்பது ஆண்டுகளில் அமெரிக்க மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கியின் வழிகாட்டுதலில் நடைபெற்றுவரும் மாற்றிலக்கண மொழியியல் ஆய்வானது மேற்கூறிய துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. மொழியியலின் இப்பிரிவானது புலன் மனித அறிவாற்றல் இயலின் ஒரு பகுதியாக அமைகிறது.
இயற்கைமொழி ஆய்வு
இயற்கைமொழி அறிவுத்திறன் பற்றிய மேற்குறிப்பிட்ட மொழியியலின் ஆய்வுகளைச் சோதித்தறிய தற்போது கணினிப்பொறி மிகவும் பயன்படுகிறது. இயற்கைமொழி அறிவுத்திறன் பற்றிய குறிப்பிட்ட கோட்பாடுகள் மற்றும் மாதிரிவடிவங்களைச் சோதித்தறிய வேண்டும் என்றால் அவற்றின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட மொழியின்

மாழியியல்
வசுந்தரம்
ர் தமிழ் மொழித்துறை, ல்கலைக்கழகம்
அறிவை ஒரு மின்னணு மாதிரிவடிவத்தில் கணினியில் அமைத்துச் சோதிக்கலாம். இதன் அடுத்த கட்டம் நமது கருத்துப்புலப்படுத்தல்த் திறனை வெளிப்படுத்தும் ஒரு மின்னணு மாதிரிவடிவத்தை கணினியில் உருவாக்கி கணினியை நம்மைப் போன்றே இயற்கைமொழி அறிவு மற்றும் பிற பின்புல உலக அறிவை தீர்த்துவிடலாம். இவ்வாறு உள்ளிடு மின்னணு, விசைப்பலகை ஆகிய இரண்டு அடிப்படைப் பணிகளிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கணினித்தமிழ் பெற்றுள்ளது. கைபேசி விசைப்பலகை உருவாக்கத்திலும் பலர் ஈடுபட்டுள்ளனர்.
இரட்டைவழக்குத் தமிழும் கணினிமொழியியலும்
மேற்கண்ட வளர்ச்சிகள் தமிழ்மொழியைக் கணினியில் உள்ளிடு செய்ய வழிவகுத்துள்ளது. அடுத்த கட்ட பணிகள் தமிழ்மொழியியலை அடிப்படையாகக் கொண்ட பணிகளாகும். தமிழ்மொழியை பேச்சு வழக்கு எழுத்து வழக்கு இரண்டையுமே கணினி புரிந்துகொள்ளவேண்டும். தமிழ்மொழி ஒரு இரட்டை வழக்கு மொழி என்பதை இங்கு நாம் மனதில் கொள்ளவேண்டும். தமிழ்ச்சமுதாயத்தில் தமிழ்வழிச் செயல்பாடுகள் அனைத்தையும் மேற்கொள்ள இரண்டு வழக்குகளுமே தேவைப்படுகிறது. பேச்சு வழக்கில் பல வட்டார வழக்குப் பிரிவுகள் உண்டு. அதுபோன்று எழுத்து வழக்கிலும் சில வகைகள் உண்டு. இருப்பினும் அனைவரும் புரிந்து கொள்ளக் கூடிய ஊடக எழுத்துத்தமிழைத் தொடக்கத்தில் கணினி எழுத்துத்தமிழாக எடுத்துக்கொள்ளலாம். பேச்சு வழக்கைப் பொறுத்தவரையில் இன்று கல்வி, போக்குவரத்து ஆகியவற்றின் வளர்ச்சிகளின் பயனாக ஒரு பொதுப்பேச்சுத் தமிழ் உருவாகியுள்ளது. இந்த வழக்கு பிராமணர் அல்லாத முறைசார் கல்வியைப் பெற்றவர்களின் பேச்சுவழக்காக அமைந்துள்ளது என்று தமிழ்மொழியியலாளர்கள் கருதுகின்றனர். இந்தப் பொதுப் பேச்சுத் தமிழைக் கணினிப்பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளலாம். மேற்கண்ட இரு தமிழ் வழக்குகளையும் உள்ளடக்கிய தமிழைக் கணினி புரிந்துகொள்ளவேண்டும். இதற்கு நாம் மேற்கொள்ளவேண்டிய பணிகளை இனி பார்க்கலாம.
அகவிழி ஜூன் 2013

Page 28
பொருள் மயக்கம்
மொழியில் நாம் உருவாக்கும் தொடர்கள், நாம் புலப்படுத்த விரும்புகிற கருத்தை அல்லது பொருளை அடையாளப்படுத்தி நிற்கின்றனவே தவிர முழுப்பொருளும் வெளிப்படையாகத் தெரிவதில்லை. பொருளை முழுமை யாகப் புரிந்துகொள்ள தொடர்களின் அமைப்பை முதலில் நமது மூளை தெரிந்துகொண்டு அந்த அமைப்பின் மீது தனக்கே உரிய மொழித்திறன் மற்றும் உலகப் பொது அறிவு போன்றவற்றைச் செயல்படுத்துகிறது. மொழித்தொடர்களில் காணப்படுகிற சொல் அமைப்பு, தொடர் அமைப்பு போன்ற மொழி அமைப்புகள் தொடர்கள் அடையாளப்படுத்துகிற பொருளுக்கேற்ப மாறுபட்டு அமைகின்றன. இந்த மொழி அமைப்புகளைப் பற்றிய மொழியறிவையும் தேவையான பிற உலகப் பின்புலப் பொதுஅறிவையும் கொண்டுதான் மனித மூளை தொடர்கள் வெளிப்படுத்துகிற பொருளைப் புரிந்துகொள்கிறது. உலகப் பின்புலப் பொது அறிவை எவ்வாறு கணினிக்கு அளிப்பது என்பது வேறு ஒரு பிரச்சினை.
தொடர்நிலையில் பொருள் மயக்கம்
நாம் உருவாக்கும் மொழித்தொடர்கள் ஒவ்வொன்றும் ஒரே ஒரு அமைப்பைப் பெற்றிருந்தால் அதை அடிப்படை யாகக்கொண்டு தொடர்ப்பொருளைப் புரிந்துகொள்வது சற்று எளிது. ஆனால் நடைமுறையில் இயற்கைமொழித் தொடர்கள் அவ்வாறு அமைவதில்லை. ஒரு தொடரில் ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புகள் காணப்படலாம். அதாவது குறிப்பிட்ட தொடரில் இடம் பெறும் சொற்கள் தங்களுக்குள் வெவ்வேறு வகையில் இணையலாம். அப்போது பொருள் மயக்கம் ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக நான் முரளியோடு கமலாவை இன்று பார்த்தேன் என்ற தொடரை இரண்டுவகையில் புரிந்துகொள்ளலாம். நான் முரளியோடு கமலாவை இன்று பார்த்தேன் என்றும் அல்லது நான் முரளியோடு கமலாவை இன்று பார்த்தேன் என்றும் இரண்டு வகையில் புரிந்துகொள்ளலாம் ஒரே தொடரில் ஐந்து சொற்கள் தங்களுக்குள் எவ்வாறு இணைகிறது என்பதைப் பொறுத்துத் தான் தொடரின் பொருள் அமைகிறது. இதைத்தான் மொழியியலின் தொடரியல் ஆய்வு செய்கிறது. மேற்கூறிய தொடருக்கு இரண்டு அமைப்புகள் இருந்தாலும் நாம் குறிப்பிட்ட சூழலை அடிப்படையாகக்கொண்டு இரண்டு தொடர் அமைப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து பொருள் கொள்கிறோம். இதற்குத் தேவை முதலில் குறிப்பிட்ட தொடரில் எத்தனை மற்றும் எந்தவகை அமைப்புகள் புதைந்துகிடைக்கின்றன என்ற தொடரியல் அறிவும் அதன்பின்னர் பின்புல அறிவை அடிப்படையாகக் கொண்டு இரண்டு அமைப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் அறிவும் ஆகும். தொடர் நிலையில் மட்டுமல்லாமல் ஒலியனியியல் உருபனியியல்
அகவிழி | ஜூன் 2013

அல்லது சொல் பொருண்மையியல் கருத்தாடல் ஆகிய நிலைகளிலும் ஒரு தொடருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அமைப்புகள் நிலவலாம். அதனால் ஒன்றுக்கு மேற்பட்ட பொருளுக்கு அக்குறிப்பிட்ட தொடர் இடம் அளிக்கலாம். பொருள் மயக்கம் ஏற்படலாம். இப்பொருள் மயக்கத்தைத் தீர்த்துவைத்தால்தான் குறிப்பிட்ட தொடரின் குறிப்பிட்ட பொருளைக் கணினி புரிந்துகொள்ளமுடியும்.
உருபன் அமைப்புநிலையில் பொருள் மயக்கம்
நான் கத்தி வரவழைத்தேன் என்ற தொடரில் கத்தி என்ற சொல்லானது கத்தி என்ற ஒரு பெயர்ச்சொல்லைக் குறிக்கிறதா? அல்லது கத்து, என்ற வினையெச்சத்தைக் குறிக்கிறதா? என்பது பற்றி முடிவு எடுத்தால்தான் நாம் குறிப்பிட்ட தொடரின் பொருளைப் புரிந்துபொள்ளமுடியும். ஒரே சொல் இரண்டு அமைப்புகளுக்கு இடம் தருகிறது. வந்தவரை என்பதின் அமைப்பு வந்த வரை என்பதா? அல்லது வந்தவர் 1 என்பதா என்ற ஐயம் ஏற்படுகிறது இது உருபனியல் நிலையிலான மயக்கம் எனப்படும்.
சொல் நிலையில் பொருள் மயக்கம்
பச்சைக் காய்கறி, பச்சைப் பொய், பச்சை உடம்பு ஆகிய தொடர்களில் பச்சை என்ற சொல் மூன்று வேறுபட்ட பொருள்களைக் குறித்து நிற்கிறது. மொழி அகராதியில் பச்சை என்ற சொல்லுக்கு இந்த மூன்று பொருள்களும் கொடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் குறிப்பிட்ட தொடரில் மூன்றில் எந்தப் பொருளை எடுத்துக்கொள்வது என்பது அச்சொல்லுக்கு அடுத்துவருகிற சொல்லைப் பொறுத்து அமைகிறது. இது சொற்பொருண்மை நிலையிலான மயக்கம் எனப்படும்.
மேற்குறிப்பிட்ட பொருள்மயக்கங்களைத் தீர்த்து வைக்கக்கூடிய அறிவை, வழிமுறைகளை எவ்வாறு கணினிக்கு அளிப்பது என்பது பற்றிய ஆய்வே கணினி மொழியியலாகும். சொல், தொடர் என்ற நிலைகளில் மட்டுமல்லாமல் ஒரு முழு உரை நிலையிலும் ஏற்படும் பொருள் மயக்கங்களை எல்லாம் தீர்க்கக்கூடிய மொழி அறிவைக் கணினிக்குக் கொடுக்கவேண்டும், அப்போதுதான் தமிழானது கணினித்தமிழாகப் பரிணமிக்கமுடியும்.
இலக்கணப் பொறியியலும் கணினி இலக்கணமும்
இதற்கு முதல் தேவை தமிழ்மொழி அமைப்பை பேச் சொலியில் இருந்து முழு உரை வரை முழுமையாக ஆய்வு செய்யவேண்டும். மனித மூளைக்கு எழுதப்படுகிற மொழி இலக்கணத்தைவிட அதிக விளக்கங்களை உடையதாக இது இருக்கும். ஏனெனில் மனித மூளைக்கு உள்ள உலகப் பின்புல அறிவு கணினிக்குத் தற்போது இல்லை. இதுபோன்ற ஒரு மொழி இலக்கணத்தை உருவாக்கும்

Page 29
பணியானது மொழி இலக்கணப்பொறியியல் என்று அழைக்கப்படுகிறது. இந்த அடிப்படையில் இன்றைய தமிழுக்கு ஒரு இலக்கணம் கணினி இலக்கணம் உரு வாக்கப்படவேண்டும். நாம் வெளிப்படுத்த விரும்பும் கருத்தை அல்லது பொருளைத் தமிழ்மொழியானது தனது ஒலியனியல், உருபனியல்,தொடரியல், பொருண்மையியல் பின்புல அறிவியல், கருத்தாடல் இயல் போன்ற பல நிலைகளில் எவ்வாறு அடையாளப்படுத்தி நிற்கிறது என்ற மொழி அறிவை இந்தக் கணினி இலக்கணம் வெளிப்படுத்தி நிற்கும். மேற்குறிப்பிட்ட இலக்கணம் கணினிக்கான இலக்கணம் என்பதால் ஒரு மின்னணுக் கருவியான கணனிக்குப் புரியக்கூடிய வகையில் அது அமையவேண்டும். கணித அடிப்படையில் அமையவேண்டும். தமிழ் மொழி அமைப்பை பேச்சொலியிலிருந்து உரை அமைப்பு வரை வெளிப்படுத்தும் முறைசார் இலக்கணமாக அமையவேண்டும். இதற்கான பல நுட்பங்களைத் தற்கால மொழியியல் துறையில் இருந்து மடடுமல்லாமல் கணிதவியல், இயற்பியல், புள்ளியில், கணனியியல், மின்னணுவியல் போன்ற துறைகள் அளிக்கிற அறிவி லிருந்தும் பெறவேண்டியுளது.
கணினிமொழியியல் நோக்கில் தமிழ் ஆராய்ச்சிப் பணி
பல துறைசார்ந்த ஒரு துறையாக இன்று கணினிமொழியியல் துறை வளர்ந்துவருகிறது. இதன் அடிப்படையில் தமிழ்மொழி அமைப்பை, அறிவை கணினிக்கு அளிப்பதன் மூலம்தான் கணினித்தமிழ் வளரமுடியும். தமிழ்மொழி அறிவைக் கணினிக்கேற்ற வகையில் தரவு அமைப்பு மூலமும் கணினி நிரல்வழிமுறை மூலமும் கொடுக்கும் பணியே கணினித்தமிழ் ஆராய்ச்சிப்பணியாகும். இதில் மிக அடிப்படையானவை இரண்டு ஒன்று தமிழ்மொழி இலக்கணம், மற்றொன்று பகுப்பி. ஒரு தமிழ் உரையைத் தமிழ் இலக்கணத்தின் அடிப்படையில் பகுப்பிகளைக் கொண்டு பகுப்பாய்வு செய்யும் போதுதான் அந்த உரையில் புதைந்திருக்கும் அமைப்பைக் கண்டறிந்து அதற்கேற்ற பொருள் விளக்கத்தைக் கணினியால் பெறமுடியும்.
இப்பணிக்குத் தேவயான துறைசார் அறிவை கணினி மொழியியல் இன்று அளித்துள்ளது. பேச்சொலிகள் முதல் ஒரு முழுமையான கருத்தாடல்வரை ஒரு மொழியை கணினி நோக்கில் எவ்வாறு ஆராய்வது என்பதற்கான பல வழிமுறைகளை அது உருவாக்கி வருகிறது. பேச்சொலி உருவாக்கி, பேச்சொலி ஆய்வாளர், சொல், பகுப்பி, தொடர் பகுப்பி, இலக்கண வகைப்பாட்டுக் குறியீட்டாளர், பொருண்மை ஆய்வாளர், பொருள் மயக்கத் தெளிவாக்கி போன்ற பல்வேறு மொழி மற்றும் பேச்சு ஆய்வுக் கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மொழித் தரவுகளை உருவாக்கத் தேவையான அடிப்படையான வழிமுறைகள் தரவு மொழியியலில் முன்வைக்கப்பட்டுள்ளன.

கணினிக்கேற்ற மொழி அகராதிகளை உருவாக்குவதற்குத் தேவையான பல வழிமுறைகள் சொல்வலை உருவாக்க அகராதி போன்றவை முன்வைக்கப்பட்டுள்ளன.
கணினி மொழியியலின் வளர்ச்சி
உலக அளவில் கணினி மொழியியல் துறையானது இன்று நன்கு வளர்ந்துள்ளது. பிறதுறை அறிவுகளையும் அடிப்படையாகக் கொண்டு பல்வேறு ஆய்வு கோட்பாடு களையும் மாதிரி வடிவங்களையும் அது முன்வைத்துள்ளது. ரெகுலர் எக்ஸ்பிரஷன் /பைனைட் ஸ்டேட் ஆட்டோமேட்டா இயந்திரக் கற்றல் ஹிட்டடன் மார்க்கோவ் மாடல் என்கிராம் வழிமுறை எனப் பல கணினிய வழிமுறைகளைக் கொண்டு இயற்கை மொழித்தொடர்களை மின்னணு உரைவடிவத்தில் வெளிப்படுத்தி ஆய்வு செய்யும் கருவிகளை அது உருவாக்கி உள்ளது. மொழியியல் துறையில் உருவாக்கப்பட்டுள்ள இரு நிலை உருபனியியல் மாற்றிலக்கணம் பொதுத் தொடர் அமைப்பு இலக்கணம், சொல் செயற்பாடு இலக்கணம், கிளை ஒட்டு இலக்கணம், தலைமை சார் தொடரமைப்பு இலக்கணம் போன்ற பல்வேறு இயற்கை மொழி இலக்கணம் மாதிரி வடிவங்களும் கணினி மொழியியலில் மிகவும் பயன்படுகின்றன. மேலும் புள்ளியில் அடிப்படையியலான கணினி மொழியில் ஆய்வும் குறிப்பாக நிகழ்ச்சித் தகவு புள்ளியியல் அடிப்படையிலான கணினி மொழியில் பெருமளவில் பயன்படுகிறது. கணினிமொழியியலின் அடிப்படையில் தமிழ் எழுத்து வழக்கு, பேச்சு வழக்கு இரண்டையும் ஆய்ந்து ஒரு சிறந்த கணினித் தமிழ் இலக்கணத்தை தமிழ் தரவுப் பேச்சொலி உருவாக்கி, பேச் சொலி ஆய்வாளர் சொல் மற்றும் தொடர் பகுப்பிகள், கணினி அகராதி உட்பட நாம் உருவாக்கினால் தான் இன்றைய மொழித்தொழில்நுட்பத்தின் பயன்களை நாம் பெற முடியும். சொல் திருத்தியில் இருந்து தானியங்கு மொழிபெயர்ப்பு வரை பல்வேறு பயன்பாட்டு மொழிக்கருவிகளை தமிழுக்கு உருவாக்க முடியும். இதற்கான சில அடிப்படைப் பணிகள் ஏற்கனவே தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உயர்நிலைக் கல்வி மற்றும் ஆய்வு நிலையில் கணினி மொழியியல் மற்றும் மொழித்தொழில் நுட்பம் தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக உயர்நிலைத் தமிழ் மொழிக் கல்வியில் கணினி மொழியியல் பாடம் வைக்கப்பட வேண்டும். கணினி மொழியியலில் மனித வளம் பெருமளவில் உருவாக்கப்பட வேண்டும். இது போன்ற திட்டமிட்ட கணினித் தமிழ் வளர்ச்சித் திட்டத்தின் மூலமே செம்மொழித் தமிழானது இன்றைய அறிவியல் உலகிற்கேற்ற கணினித் தமிழாகவும் வளர்ந்து உலக அளவில் தலைசிறந்து விளங்கும்.
அகவிழி ஜூன் 2013

Page 30
உடல் ஒலிபெருக்கி
2 600IU Cuplo-LLJITg5 6JUIT6ITLD இதயத்தினால் உணர மு
Dr. Lalith V
தமிழாக்கம்:
பிள்ளைகள் வாழ்க்கைக்குப் பதிலாக மரணத்தைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான ஓர் இதயக்குமுறல்.
கையடக்கத்தொலைபேசி நடுநிசியில் ஒலிக்கத் தொடங்கியதால் திடீரென விழித்தெழும்ப நேரிட்டது.
“மரணத்தை விட மாற்றுவழியேதும் எனக்கில்லை” அது பல்கலைக்கழகமொன்றில் முகாமைத்துவ பீட இறுதியாண்டில் கற்கும் நேரில் கண்டிராத மாணவரொருவரின் கவலைக்குரல, தற்கொலை தொடர்பாக மிகவும் தீவிரமாக செயற்பாட்டில் இறங்கியிருக்கும் அம்மாணவருடன் அப்பீட பேராசிரியரொருவரின் வேண்டுதலின் பேரில் முதலில் தொடர்பு கொண்டோம். அம்மாணவனைக் தற்கொலை யிலிருந்து காப்பாற்ற உங்களால் செய்யமுடியுமாக யாதேனுமிருப்பின் அதனைச் செய்யுமாறு அப்பேராசிரியர் கனிவான வேண்டுகோள் விடுத்தார்.
அதற்கமைய சில நாட்கள் பலமணிநேரம் அம்மாணவ னுடன் கலந்துரையாடல் நிகழ்த்தப்பட்டது. அதேபோன்று பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், நட்புறவுகள் வளர்ந்தோர் (அனுபவசாலிகள்) ஆகியோராலும் அவனது பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டன. அதிலிருந்து விடுபடுவதற்கு வழிகாட்டலும், ஆலோசனையும் வழங்கப் பட்டிருந்தது. பொருளாதார இடர்கள் ஆராயப்பட்டு அதற்கான தீர்வுகளும் எட்டப்பட்டிருந்தன. அத்துடன் நட்புறவுகள் எந்நேரமும் நேசக்கரங்களை நீட்டிய வண்ணமிருந்தனர்.
மாணவன் "ஆங்கில மொழிமூலமான பாடநெறி காரணமாக அவன் அடைந்திருக்கும் துன்பங்களை” மீட்டிக்கொண்டிருந்தான். வார்த்தைகளை கொட்டிக் கொண்டிருந்தான். அத்துடன் அவை சார்பான மேலும் பல பிரச்சினைகளும் அவனுக்கிருந்தன.
மேற்கூறிய இடர் காரணமாக அவனில் ஏற்பட்ட சமூகப்பிரச்சினைகள், அவற்றிலிருந்து விடுபட அவன் உபயோகித்த சில போதைபொருட்கள், அதன் மூலம் அவன் தனிமையடைவதும், தனிமை மேலோங்குவதும், தீவிர மனஅழுத்தம், சமூகத்தின் மீது வெறுப்பு, சினம், வாழ்க்கை இனிக்காமை என்பன அவற்றிடையே காணப்பட்டன.
அகவிழி ஜூன் 2013

sluUIT6o (Stethoscope)
ான உணர்வலைகளை
Գպմ» (உணர்வு-அலை)
Vijesinghe
A. A Azees
பல்கலைக்கழக சுகாதார மருத்துவப் பொறுப்பதிகாரி மூலம் உளமருத்துவப் பிரிவிற்கும் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டிருந்தான். எனினும் அவனுக்கு போதிய ஆறுதல் கிடைக்காமையால் குணமாகாமையால் தனது மருத்துவ அறிக்கைகளை தானே தீயிட்டுக் கொழுத்தி யிருந்தான்.
எவ்வித சோம்பலுமின்றி அவன் நள்ளிரவில் தனக்கு ஏற்படும் சிந்தனை, உணர்வுகளை நேரடியாக எவ்வித கூச்சமுமின்றி எண்முடன் பலமணிநேரம் கலந்துரை யாடினான். அவ்வாறான கலந்துரையாடல்கள் மூலம் நாம் இனங்கண்ட ஓர் பிரச்சினை காணப்பட்டது. அப்பிரச்சினை: தனது பிரச்சினைகளை யாருடன் கலந்துரை யாடிய போதும் அவன் தான் நினைப்பது மாத்திரமே சரியெனும் நிலைப்பாட்டில் காணப்பட்டன. மற்றையவர் களால் முன்வைக்கப்படும் கருத்துக்களை ஏற்பதற்கு, அல்லது ஏற்று நடப்பதற்கு எவ்வித தேவையும் காணப்பட வில்லை. ஏற்றுக்கொண்டாற்போல் நடித்தபோதும் மெளனமாய் அமர்ந்த போதும் மீண்டும் அவன் தனது போக்கிலேயே அதுவே இறுதியும் உறுதியுமான முடிவாயிருந்தது.
முகாமைத்துவப் பட்டப்படிப்பை கட்டாயமாக நிறைவு செய்துகொண்டு கலாசாலையிலிருந்து வெளியேற வேண்டுமென அதீத ஆர்வம் கொண்டிருந்த போதும் தன்னால் அது முடியாத காரியமெனவும் உரத்துக் கூறிக்கொண்டிருந்தான். பட்டம் பெறவேண்டியது தான், பெற்றொர், உறவினர், குருமார், தனது பிறந்த மண் என்பவற்றிற்காகவேயாகும். இவ்விடயத்தில் பட்டம் கிடைக்காவிடின் பயமின்றி மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்று ஆன்மா சாந்தியடைவதாகவும் மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டிருந்தான்.
முடியுமானளவு உதவி, உபகாரங்கள், வழிகாட்டல்கள் என்பவற்றை சூழ்ந்திருப்போது அளிப்பதாகவும் அவ் உதவி உபகாரங்களுடன் பட்டப் படிப்பை மேற்கொண்டு செல்லும்படியும் தவறியபோதும் வேறு மாற்றுவழிகள் பல இருப்பதாகவும் சீரிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.

Page 31
“இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் செல்லக்கூடிய மார்க்கங்கள் ஒன்றல்ல, பலவுண்டு. செல்ல முடியுமான மார்க்கங்களும் திறந்து கொள்ள முடியுமான நுழைவாயல் களும் ஏராளமுண்டு அவற்றிற்குத் தேவைப்படுவது “மதியால் விதியை வெல்வதாகும;” அவற்றை தேர்ந் தெடுத்துக்கொள்ளும்படி அவனுக்கு எம்மால் போதனை 6 ups6J35 JULUGBl.
“இந்நாட்டில் 8ம் தரம் சித்தியடைந்தோருக்கு, சாதாரணதரம் மாத்திரம் கற்றோருக்கு, உயர்தரம் வரை மாத்திரம் கற்றோருக்கு, எந்தப் பட்டங்களும் அற் றோருக்கு, பாடசாலை சென்றிருக்காதோருக்கு கூட தொழில் வாய்ப்புகள் பலவுண்டு அவற்றிற்குச் செல்வதன் மூலம், சில சந்தர்ப்பங்களில் கல்வித்தகைமையுடை யோரையும் தாண்டி துறைசார் நிபுணத்துவம் பெறமுடியுமென எம்மால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
அவற்றிற்கு செவிமடுத்த அவன் அளித்த பதில் “முகாமைத்துவப் பட்டமின்றி பிறந்த மண்ணில் முகங் கொடுக்க முடியாது” என்பாதாகும்.
அக்கூற்றில் உண்மை இருப்பது போன்று பெரும் பொய்யும் உண்டென்பதையும் உணர்த்தினோம். பட்டம் பெறும் அனைவருக்கும் தாய் மண்ணில் தடம் பதிக்க முடியாதென்பதையும் சிலர் முழுவாழ்நாளும் பிற பிரதேசங்களில் அல்லது வெளிநாடுகளில் கழிப்பதையும் உணர்த்தினோம்.
மருத்துவபீடத்தில் என்னுடன் வந்த சில மாணவர்கள் மருத்துவப் பட்டப்படிபினை நிறைவுசெய்துகொள்ள (plgust LD6) Pharmacist, MLTO, 3560.f6 6.16bgj601 stab6ft, 666 வியாபாரத்திலும் கூட ஈடுபடுகின்றனர். என்னை விட சிறந்த பொருளாதாரத்தையும் வளங்களையும் கொண்டி ருப்பதுடன் சமூகத்திற்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்று கின்றனர். அவர்கள் தாய்மண்ணிலும் உள்ளனர். கடல் கடந்து சென்றும் உள்ளனர்.
“உலகிலுள்ள பட்டங்கள், தொழில்கள், பதவிகள், வரவேற்பு, அவற்றால் கிடைத்தவை என்பவற்றைவிட தனது “மனித உயிர்” மிகவும் அருமையானது. உமது பெறுமதியான வாழ்க்கையை பட்டம் (Degree) அல்லது வேறு காரணங்களுக்காக மாய்த்துக் கொள்ள வேண்டிய தல்ல” என்பது எமது இறுதி அறிவுரையாகியது.
“நல்லது, நான் அவற்றைப் பற்றி சிந்திக்கின்றேன் எனக் கூறியவனாக அவன், மெளனமடைந்தான். மீண்டும் மனநோய் கிளினிக் (clineck) இற்கும் சமூகமளிக்கத் தொடங்கினான். மரணத்தைத் தழுவிக் கொள்ளத் துணிந்த மாணவனொருவன் வாழ்க்கையில் எதிர்பார்ப்பு வைத்து, மீண்டும் முயற்சிசெய்ய முன்வந்ததையிட்டு எம்மில் தனிப்பட்ட வகையிலான மகிழ்ச்சி மேலோங்கியது”.

நாட்கள், வாரங்களாக காலம் கடந்து கொண்டிருந்தது அம்மாணவனின் தோற்றம், தொழிற்பாடு, துலங்கல் (Response) என்பன முன்னரைவிட மாற்றமடைந்து கொண்டு செல்வதாக எமக்கு செய்தி கிடைத்தது. அவனில் மாற்றத்தை அவதானித்த சகபாடிகள் அவற்றை மேலும் உற்சாகமூட்டி நன்னிலைப்படுத்த விரும்பினர்.
ஒருநாள் அவன் எழுதிய பரீட்சையொன்றின் முடிவுகள் வெளியாகின. அவன் எழுதிய அனைத்துப் பாடங்களிலும் Fail ஆகியிருந்தான். அதனால் மீண்டும் ஆத்திரமடைந்தான். விரிவுரையாளர்கள் கூட இரண்டாவது முறை பரீட்சை யெருதும்படி கனிவாய் வேண்டி நின்றனர்.
சில நாட்கள் கழிந்தன. ஒரு நாள் இரவு அவன் தீடீரென காணாமல் போனான். மறுநாள் காலை அவனது உயிர்பிரிந்த சடலம் குளிருட்டப்பட்ட நிலையிற்போல் குளிராயிருக்க அகப்பட்டது.
எம்மால் நடாத்தப்பட்ட ஆயிரக்கணக்கான பிரேதப் பரிசோதனைகளில் (Postmortem) நூற்றுக்கணக்கான தற்கொலைப் பிரேத உடல்களும் காணப்பட்டன. ஒவ்வொரு தற்கொலைக்கும் விஷேடமான காரணமொன்று காணப் படுவதுடன் பல பொது அம்சங்களும் காணப்படும். அதனடிப்படையில் இம்மரணத்திலும் விஷேட, பொது அம்சங்களைக் காணமுடியும் இவ் ஆக்கம் எழுதப் படுவதற்கான காரணம் அக்காரணங்களை ஆழமாக ஆராய்ந்து தற்போதைய கல்வியைப் பற்றி பல முக்கிய விடயங்களை ஆராய்வதற்காகும். அதன்மூலம் மரணத்தைத் தழுவிக்கொண்ட மாணவனுக்கு கிடைப்பது எதுவுமில்லை. எனினும் அவ்வாறான மரணங்களை விபரரீதியாக நோக்குவதற்கும் நுண்மதியால் வெல்வதற்கும் யாரேனும் தெரிந்துகொள்வார்களானால் அவருக்கும் சமூகத்திற்கும் கிடைக்கும் பலன்கள் ஏராளம். அதன்மூலம் உலகின் உன்னதறிலையை கருத்திற்கொண்டு செய்ய முடியு மானவைகள், சமூகத்தில் எதிர்காலத்தில் இவ்வாறான மரணங்களைக் களைவதற்கு செய்ய முடியுமான செயற்பாடுகள் ஏராளமுண்டு. இவ்ஆக்கம் எழுதப்படுவது இவ் குறிக்கோள்களைக் கருத்திற்கொண்டாடும்.
அந்த மரணத்திற்கான காரணங்களாக அவனால் குறிப்பிடப்பட்டவை, அவனது நண்பர்கள், விரிவுரையாளர்கள் மூலம் அளித்த தகவல்கள் மூலம் திரட்டப்பட்டன. அவனால் மாத்திரமல்ல வேறொருவருக்கும் தாக்கம் விளைவிக்கக் கூடிய கராணிகள் யாவை?
1. பழக்கப்படாத இயைபாக்கமடையாத புதிய சூழல்
2 பொருளாதாரக் கஷடங்கள்
3. மன உழைவு 4. ஆங்கில மொழி
அகவிழி ஜூன் 2013

Page 32
குடும்பப் பின்னணி
எதிர்பார்ப்பு தாங்கு திறன் குறைவு உயிர்நண்பர்கள் யாருமின்மை
g5660LD
10. மனமுரண்பாடு
11. அதிக களைப்பு
12. வேலைப்பளு
13. நோய்கள் 14. செயற்கையான அடைபட்ட வாழ்க்கை 15. ஓரிலக்கை மாத்திரம் கொண்ட நிலை 16. வாழ்க்கையின் முழுமையை அறியாமை 17. ஒரேபிள்ளை
18. பிடிவாதம்
இந்நிகழ்வும், இதுபோன்ற நிகழ்வுகளும் ஒரே காரணத்தை அடிப்படையாகக் கொண்டவையெனும் தீர்விற்கு வருவதை காணமுடிகின்றது. ஒரே காரணத்தை அடிப்படையாக வைத்து விளக்கப்படுகின்றது. அவ்வாறு நடப்பதற்கான காரணம் யாதேனுமொரு விடயத்தை விளக்கும் எளிய செயன்முறைகளிற்கு பழக்கப்பட்டிருப்ப தாகும்.
பல காரணிகளை அடிப்படையாகக்கொண்டு நிகழ்ந் திருக்கும் விடயமொன்றை மிகவும் எளிய, குறுகிய முறையில் விளக்கும்போது அந்நிகழ்வு பற்றிய பூரண அறிவு, தெளிவு, காரண - காரிய தொடர்பு என்பன சமூகத்திற்குக் கிடைக்காமற்போகும். எதிர்காலத்தில் இவ்வாறான நிகழ்வுகள் நிகழாமலிருக்க சமூகத்தினைப் வழிவகை செய்வதே இதன் பெறுபேறாக அமைதல் வேண்டும். இவ்வாறு நிகழாத காரணத்தால் இது போன்ற நிகழ்வுகள் திரும்பத் திரும்ப இடம்பெறுகின்றன.
அம்மாணவனின் வாழ்க்கை எவ்வாறானது என்பதைப் பற்றி நாம் விரிவாக ஆராய்வோம்
அவன் தற்போது நடைமுறையிலிருக்கும் கல்வியில் சா தரம், உ தரம் வகுப்புகளில் திறமையாக சித்தி யடைந்தவன் பல்தேசிய பல்கலைக்கழகத்தில் அதனாலேயே அனுமதி கிடைத்து அவ்வாறெனின் அவனில் உயர் ஆற்றல், தகைமை, நுண்மதி (Intelligence) காணப்படுதல் வேண்டும். அவ்வாறான திறமையுடன் பல்கலைக்கழகம் புகுந்து இறுதியாண்டுப் பரீட்சையில் வெற்றி பெற முடியாமற் போனது ஏன்? சகபாடிகள் ஆங்கில மொழிமூலமான கற்றல் எவ்வளவு கடினமாயிருந்த போதிலும் மிகவும் சிரமப்பட்டு அதற்கு இயைபாக்கமடைந்து (Adaptation) வருவதாக குறிப்பிட்டனர்.
அகவிழி 1 ஜூன் 2013

அவனுக்கு அறிவுரை வழங்க முன்வந்த இளம் விரிவுரையாளரொருவர் கூறியது “அவனுக்கு ஆங்கிலத்தில் விடையளிப்பது பாரதூரமான பிரச்சினையாக காணப்பட வில்லை” என்பதாகும். அப்படியாயின் அவனது பிரச்சினை
1. ஆங்கிலத்தில் பாடக் குறிப்புகளை ஞாபகம்
வைத்திருப்பதா? 2. ஆங்கிலமொழிமூலம் வினாக்களுக்கு விடையளிப்பதா?
இவ்வினாக்களிற்கு விடையளிப்பது மிகவும் கடினமானது
"மேலைத்தேய மருத்துவ விஞ்ஞானத்திற்கமைய (Western Medicine) மொழியாற்றல், பேச்சுவன்மை, எழுத்தாற்றல், கணித வல்லமை, புத்தாக்கம், நுண்ணறிவு என்பன ஒருவரின் மூளையை அடிப்படையாகக் கொண்டு தொழிற்படுபவை” அதற்கமைய ஒருவருக்கு குறிப்பிட்ட துறைகளில் வாண்மை பெறுவதற்கு மூளையில் குறிப்பிட்ட பிரதேசங்களில் ஆட்சியான உயிர்ப்பான தொழிற்பாடு காணப்படுவது முக்கியம். அங்கு நேரடியாக பரம்பரையலகுகள் (Genes) முக்கியத்துவம் பெறுவதுடன் பரம்பரையலகுகள் தொழிற் படுவதற்கான சூழலும் (Environment) முக்கியமானது அதனை இவ்வாறு சமன் பாடாகக் காட்டலாம்.
விளைவு = பரம்பரை X சூழல்
அப்படியாயின் ஒருவர் திறமைகளை வெளிக்காட்டும் போது, சமூகமயமாக்கமடையும்போது உடலின்உயரம், நிறம், நுண்மதி, சில நோய்கள், சிந்தனை, செயற்பாடு ஆகியன தீர்மானிக்கப்படுவது மனிதனுக்கு பிறப்பின் மூலம் கிடைக்கும் மரபுரிமை, அவன் வாழும்குழல் என்பன ஒன்றுடனொன்று இடைத்தாக்கமுறுவதன் மூல மாகும். அதற்கமைய மரபுரிமையால் கிடைத்த இயல்புகள் வளர்வதும், குறளடைவதும் சூழலைப் பொறுத்து இடம்பெறும். சூழலின் தொடர் தாக்கத்தினால் மரபுரிமையில் பினதங்கிய இயல்புகள் வளர்ச்சியடையவும் முடியும். இங்கு சூழற்காரணிகளாக வாழிடம், காலநிலை, கல்வி, உறவு(Relationshi) பண்பாடு என்பன காணப்படுகின்றன.
மேலைத்தேய மருத்துவ விஞ்ஞானத்திற்கமைய பிறப்பிலிருந்து இறப்புவரை மனிதனில் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் காரணிகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1. தனிப்பட்ட காரணிகள் : மரபுவழிவந்த உடல், உள
நிலைமைகள் 2. சூழற் காரணிகள் : கல்வி, பண்பாடு, உறவு,
காலநிலை, அயற் சூழல் 3. ஏனையவை : பழக்கப்படுத்திக்கொண்டவை, மூடநம்பிக்கைகள், சமயக் கோட்பாடுகள்

Page 33
மேலைத்தேய மருத்துவ நோக்கிற்கமைய
"குடும்பத்தில் ஒரே பிள்ளையென்பது சற்று பிரச்சினைக்குரிய நிலையாகும்” அதற்கான காரணம், பல பிள்ளைகளுக்கு குடும்பத்தைப்போல் பகிர்ந்துகொள்ளல் (Sharing), தாங்கும் சக்தி (Tolerance), ஏனையவர்களைப் புரிந்து கொள்ளல், என்பன ஆரம்பத்திலிருந்தே காணக்கிடைக்காத ஓர் பிள்ளையாக வளருவதாகும். ஆகவே அவ்வாறான பிள்ளை
கடும் பிடிவாதமுடைய
பகிர்ந்துண்ணும் பழக்கமற்ற
சுயநலம் மிகுந்த
உணர்ச்சிபூர்வமற்ற ஒருவராக வளர பெருமளவு இடமுண்டு. (ஒரே பிள்ளையென்பது பிரச்சினையை உண்டு பண்ணும் எனும் உறுதியான முடிவிற்கு வரமுடியாதென்பதை மனதிற்கொள்க).
தான் பிறந்த குடும்பத்தின் வறுமை, கல்வியறிவின்மை, வேறு பிரச்சினைகள் என்பனவும் ஒருவரின் கனவுகளை சிதறியடிக்க, ஆளுமையை . திறமைகுன்ற காரணமா யமையலாம். எனினும் இவை சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைளென்பதை கவனத்திற் கொள்க.
தனது உடல்மைப்பு, தோலின்நீளம், உயரம், அகலம், கட்டையானதன்மை, மெலிந்த உடல், அழகான, கவர்ச்சி யானதன்மை, என்பனவும், வாழ்க்கையில் தாக்கம் விளைவிக்கும். சிலர் தனக்கு இயற்கையாகக் கிடைத்த வற்றின் மூலம் மாத்திரம் வெற்றிகொள்ள சிலர் அந்த இயற்கை மூலம் பின்வாங்கவும் செல்கின்றது.
பெற்றோர், சகோதரர், உறவினர், முதியோர் வழிகாட்டல், பாசம், கருணை, தாங்கும்சக்தி, எச்சரிக்கை, போதனைகள் ஒவ்வொருவரினதும் வாழ்வில் மிகமுக்கிய காரணியாகும். இங்கு குறிப்பிடப்பட்ட கிடைப்பவைகளின் பெறுபேறு பெரும்பாலும் திறமையான, உணர்வான, ஆளுமைமிக்க பிள்ளையாகும். எனினும் அவை கிடைக்கப் பெற்றபோதும் அவ்வாறன்றிய ஜீவன்களையும் காணமுடியும். ஆசிரிய/ஆரியைகளின் வழிகாட்டல், பிரிவு, கருணை, பொறுமை, முன்மாதிரி, எச்சரிக்கை அதேபோன்று முன்மாதிரியான ஆசிரியர் குணவியல்புகள் பிள்ளையின் வாழ்க்கை நெறியின் நேர்நிலையையேற்படுத்துவதில் மிகமுக்கியமான மற்றுமொரு காரணியாகும்.
சமூகத்தில் பண்பாடு (Culture) எதுவாக அமைந்த போதும் “நண்பன்” எனும் எண்ணக்கருவிற்கு பிரபலமான தொரு இடமுண்டு. ஒருவரின் வாழ்வின் போக்கு, காப்பு, வெற்றி அதேபோன்று சிலவேளை தோல்வியும் நட்பின் மீது தங்கியுள்ளது. அதற்கான காரணம் மனிதன் ஒரு சமூகப்பிராணி என்பதனாலாகும்.

மேற்கூறிய விடயங்களை ஒவ்வொன்றாக ஆராய்வதன் மூலம் அம்மாணவனின் வாழ்க்கை மலர்ச்சி, உதிர்ச்சி என்பவற்றில் எவ்வாறு செல்வாக்குச் செலுத்தியுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இதன்மூலம் எதிர் காலத்தில் நிகழக்கூடிய இன்னுமொரு மரணத்தைத் தவிர்ப்பதற்கு அதன்மூலம் தீர்வு வழிமுறைகளைக் 605ute T6)Tib.
இறுதியாக நாம் ஒருவரின் வாழ்க்கை மலர்ச்சியில் மிகவும் நெருக்கமாக செல்வாக்குச் செலுத்தும் மற்றுமொரு காரணியைப்பற்றி ஆராய்வோம். ஒருவர் பெற்றுக்கொண்ட, பெற்றுக்கொண்டிருக்கும் உலகும் அறிவும் தெளிவுமாகும். எமது வாழ்க்கைப் பயணம் தற்போது பெரும்பாலும் தீர்மானிக்கப்படுவது அறிவை மையமாகக் கொண்ட பார்வையின் மூலமாகும். அறிவை மூலாதாரமாகக் கொண்ட தொழில் மூலமாகும். சமூக அந்தஸ்து மூலமாகும். மாதிரிப்படம் மூலமாகும்.
அறிவைத் தேடிப் பெற்றுக்கொள்வதில் உலகில் பல்வேறு கோட்பாடுகள் நடைமுறையிலிருந்தபோதும் மேலைத்தேய சிந்தனை அவற்றுள் பெருமளவில் அங்கி காரம் பெற்றதாக விளங்குகின்றது. மேலைத்தேய அறிவு ஜம்புலன்களையும் அடிப்படையாகக் கொண்டு வடி வமைக்கப்பட்டுள்ளது. ஐம்புலன்களை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள இவ் அறிவு, இந்நாட்டுப் பாடசாலைகள் மூலம் ஆரம்பக்கல்வி, சாதாரணதர பாடங்கள், உயர்தரபாடங்கள் என கணித, உயிரியல், வணிக, கலைப்பிரிவுகள் மூலம் மற்றும் பல்கலைக்கழகங்கள், உயர் கல்லூரிகள் மூலம் சமூகத்திடம் கையளிக்கப் படுகின்றது. கலைப் பாடங்களும் மேலைத்தேய சிந்தனை களைத் தவிர வேறு பிரிவுகளிலும் மேலைத்தேய சிந்தனைகளே ஆதிக்கம் பெற்றுள்ளன. என்பது தெளிவான விடயம்.
அறிவு என்பதற்கு மேலைத்தேய வரைவிலக்கணம் என்ன? பிரித்தானிய Oxford Dictionary இற்கேற்ப "அனுபவம் அல்லது கற்றல் பலம் பெற்றுக் கொள்ளப்படும் கொள்கை | தத்துவ ரீதியாகவும், பிரயோகநிலையிலும் விளங்கிக் கொள்ளல்”
(Informations and skills acquired throush experience or education, the theoretical or practical understanding ora subject”
அதற்கேற்ப நம்மாட்டுக் கல்வியில் முன்னர் குறிப்பிட்ட அறிவின் மூலம் மாணவ மணிகளுக்கு தெரிவுசெய்துகொண்ட விடயங்கள் பற்றிய தகவல்களை வழங்கி அவ்விடயங்கள் பற்றிய தத்துவ / கொள்கை ரீதியான, பிரயோக அடிப்படை யிலான பயிற்சியை வழங்கி அவர்களின் ஆற்றல்களை வளர்த்தெடுக்கும் சமர் (operation) முன்னெடுக்கப்படுகின்றது.
அகவிழி ஜூன் 2013

Page 34
கல்வி துறையி
தற்போது கல்வித் துறையில் பினர் வரும் நான்கு கட்டமைக்கப்பட்ட சேவைகள் உள்ளன:
i. இலங்கை ஆசிரியர்கள் சேவை (SITS) i. இலங்கை அதிபர்கள் சேவை (SLPS) i. இலங்கை ஆசிரிய கல்வியாளர்கள் சேவை (SITES) iv. இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS)
சகல அரச பாடசாலைகளிலும் பணியாற்றும் நிரந்தர ஆசிரியர்கள் அனைவரும் இலங்கை அரசாங்க சேவைக் குள்ளும் தேசிய கல்வியியல் கல்லூரிகளின் நிரந்தர ஆசிரிய கல்வியாளர்கள் இலங்கை அரசாங்க கல்விச் சேவைக்குள்ளும் ஈர்க்கப்பட்டுள்ளனர். கல்விசார் நிர்வாகி கள் அனைவரும் இலங்கை கல்வி நிர்வாக சேவையில் உள்ளனர். அடிப்படையில் ஒவ்வொரு வகுதியினரும் தனக்குரிய தெளிவாக வரையறை செய்யப்பட்ட கடமை களையும் பொறுப்புகளையும் கொண்டுள்ளனர். எனினும் நடைமுறையில் இவ்வாறு இல்லை. ஆசிரியர்களும், கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளும் பாடசாலை அதிபரின் கடமைகளை செய்கின்ற அதேவேளை தரம் பெற்ற அதிபர்கள் பலர் வேறு பணிகளைச் செய்கின்றனர். சில இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள், ஆசிரியர், பிரிவுத் தலைவர், துணை அதிபர் மற்றும் அதிபர்குரிய பணிகளைச் செய்கின்றனர்.உண்மையில் நாட்டிலுள்ள பிரசித்தி பெற்ற பெரிய பாடசாலைகளின் அதிபர்களாக கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளே பணிபுரிகின்றனர். இந்நிலைமைகளின் காரணமாக பல்வேறு தொழில் வகுதிகளுக்கிடையிலான எல்லைகள் தெளிவற்று காணப்படுகின்றன. VM
இலங்கை ஆசிரியர்கள் சேவை (SLTS)
கொள்கைச் சூழமைவு
1995 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆசிரியர்கள் தமது கல்விசார் தொழில் தகைமைகளின் அடிப்படையில் பின்வருமாறு வகுதிப்படுத்தப்பட்டிருந்தனர்:
1. தராதரப் பத்திரமற்ற ஆசிரியர்கள் i. சேவை சான்றிதழ் பெற்ற ஆசிரியர்கள் i. தராதரப் பத்திரமுள்ள ஆசிரியர்கள் iv. பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் V. பட்டதாரி ஆசிரியர்கள் wi. பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் wi. தெரிவு தரமுள்ள ஆசிரியர்கள்
அகவிழி |ஜூன் 2013

ல் சேவைகள்
தராதரப் பத்திரமற்ற ஆசிரியர் ஒருவர் பத்து வருட திருப்திகரமான சேவைக்குப் பின்னர் சேவை சான்றிதழ் பெற்ற ஆசிரியராகி விடலாம். ஆனால் சேவை சான்றிதழ் பெற்ற ஓர் ஆசிரியர் பயிற்றப்பட்ட ஆசிரியர் தராதரப் பத்திரம் அல்லது பட்டம் பெறும் வரை அதே வகுதியிலேயே இருக்க வேண்டும். அதேபோல பயிற்றப்பட்ட ஆசிரியர் அடுத்த வகுதிக்கு செல்லப் பட்டம் பெறவேண்டும். இந்த சூழ்நிலை காரணமாக பல ஆசிரிகர்கள் ஒரே வகுதியில் தேங்கி இருந்ததோடு தாம் ஓய்வு பெறும்வரை அதே சம்பளத்தை பெற்றுக் கொண்டிருந்தனர்.
1995 இல் கட்டமைக்கப்பட்ட ஆசிரியர் சேவைக்கான சேவைக்குறிப்பு தயாரிக்கப்பட்டது. இதில் ஐந்து அடுக்குகள் இருந்தன. அரசாங்க பாடசாலைகளில் சகல நிரந்தர ஆசிரியர்களும் ஒரே சேவைக்குள் உள்ளீர்க்கப்பட்டதோடு அவர்களுக்குப் பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் வழங்கப்பட்டன. மேற்படி ஐந்து அடுக்குகளும் பின்வரும் மூன்று வகுப்புகளுக்குள் அடங்கின:
i. வகுப்பு 3 - தரம் (I)
i. வகுப்பு 3 - தரம் (1)
iii. 6 JG5ÜL 2 — 5Jub (III)
iv. வகுப்பு 2 - தரம் (1)
V. வகுப்பு 1
6.10.1994 முதல் பயிலுனர் ஆசிரிகர்களைத் தவிர சகல ஆசிரியர்களும் (வகுப்பு 1 தவிர) பொருத்தமான தரங்களுக்கு உள்ளிர்க்கப்பட்டனர்.
சகல தொழில் தகைமை பெற்ற ஆசிரியர்களும் உயர் வகுப்பு / தரங்களுக்கு (வகுப்பு 1 தவிர) பதவி உயர்வு பெற புதிய ஆசிரியர் சேவை வழிவகுத்தது. வகுப்பு 1க்கு பதவி உயர்வு பெற குறிப்பிட்ட வருடங்களுக்கு திருப்திகரமான சேவை உள்ளிட்ட தொழில் சார் மீளாய்வுக்கு உட்படுவதோடு ஓர் எழுத்துப் பரீட்சைக்கும் தோற்ற வேண்டியிருந்தது. பதவி உயர்வுக்கான தகுதியை பெற பல்வேறு அம்சங்கள் இருக்கத்தக்கதாக குறிப்பிட்ட மணித்தியாலங்கள் சேவைக்கால கருத்தரங்குகளில் பங்குப்ற்றியிருக்க வேண்டுமெனவும் விதிக்கப்பட்டதோடு முழுமையான தொழில்சார் மீளாய்வுக்கும உட்பட வேண்டியிருந்தது. இதன் நோக்கம் தொழில்சார் தேர்ச்சியும் அர்ப்பணிப்பும் கொண்ட ஒர் ஆசிரியர் தொகுதியை உருவாக்குவதாகும். புதிய ஆசிரியர் சேவை ஆசிரியர்களின் சேவையை எதிர்பாராத அளவுக்கு உயர்த்தியது. வகுப்பு

Page 35
1, 2 சம்பளங்கள் நாடளாவிய சேவைகளுக்குச் சமமாக்கப்பட்டன. இதனால் பொதுச் சேவை ஊழியர் மத்தியில் பிரச்சினைகள் தலைதூக்கின. அவர்கள் தமது சம்பளங்கள் உயர்த்தப்பட வேண்டுமென கோரினர். அரசாங்கம் B.C. பெரேரா ஆணைக்குழுவை அமைத்து ஆசிரியர்களைத் தவிர சகல வகுதி அரசாங்க ஊழியர் களின் சம்பளங்களையும் விகிதாசாரப்படி உயர்த்தியது.
ஆசிரியர் சேவை பிரமாணக்குறிப்பின்படி பதவி உயர்வுக்காக ஆசிரியர்கள் குறிப்பிட்ட மணித்தியாலங்கள் சேவைக்காலப் பயிற்சி அல்லது மீள்பயிற்சிகளில் ஈடுபட்டிருக்க வேண்டும். அத்துடன் தொழில்சார் மீளாய்வில் குறிப்பிட்டளவு புள்ளிகள் பெற்றிருக்கவும் வேண்டும். இதற்கான வசதி வாய்ப்புகளை வழங்கவேண்டிய பொறுப்பு மத்திய அமைச்சு மற்றும் மாகாணக் கல்வித் திணைக்களங் களுக்கு உள்ளது. ஆனால் இது நடைமுறைமையினால் பல ஆசிரியரகள் பதவி உயர்வு பெறமுடியாமல் தேங்கி நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதனால் ஆசிரியர் தொழிற் சங்கங்கள் அழுத்தம் தரத் தொடங்கின. இந்த நிலையில் அமைச்சு சேவைக்கால பயிற்சிகளை ஏற்பாடு செய்வதற்குப் பதிலாக சேவைக் குறிப்பிலுள்ள இது தொடர்பான பகுதியை நீக்கி விட்டது. ஆசிரியர்களுக்கு தன்னிச்சையான பதவி உயர்வு வழங்கப்படும் நிலையை ஏற்படுத்தியதன் மூலம் கல்வி அமைச்சானது ஆசிரியர்சேவை அமைக்கப்பட்டதன் நோக்கத்தையே சீர்குலைத்தது. இந்த நிலைமை உடனடியாகத் திருத்தப்பட வேண்டும்.
இந்நாட்டில் வருடாந்தம் பெருந்தொகையான பட்டதாரிகள் வெளிவருகின்றனர். இவர்கள் முதலில் அரசாங்கத் துறையில் தொழில் பெற விரும்பி கிளர்ச்சிகளில் ஈடுபடுகின்றனர். இதற்கு அடிபணியும் அரசு பெருந் தொகையானோரை தொழில் தகைமை இல்லாமலேயே ஆசிரியர்களாக நியமிக்கிறது. வருடாந்தம் க.பொ.த. (உ/த) தகுதி பெற்ற சுமார் 3000 நபர்களை ஆசிரிகர்களாகப் பயிற்சி பெற அனுமதிக்கிறது. இவர்கள் அனைவரும் பின்னர் ஆசிரியர்களாகப் பாடசாலையில் நியமிக்கப் படுகின்றனர். இந்த இரட்டை நியமனம் காரணமாக பாடசாலைகளில் ஆசிரியர் மிகை ஏற்படுகிறது. இந்த நிலைமையை மாற்ற வேண்டுமெனில் தேசிய கல்வியியல் கல்லூரிகளில் பட்டதாரிகளை உள்ளிர்த்து ஆசிரியர்களாகப் பயிற்ற வேண்டும். அல்லது கற்பித்தலில் டிப்ளோமா கற்கைநெறியை கல்விமாணி (B.Ed) பட்ட கற்கைநெறியாக மேம்படுத்த வேண்டும்.
பாடசாலை முறைமையில் இன்னும் தொழில் தகைமை இல்லாத ஆசிரியர்கள் இருக்கவே செய்கின்றனர். தொழில்சார் பயிற்சிக்கு வாய்ப்பும் வசதிகளும் இருப்பினும் அவைகள் முழுமையாகப் பயன்படுத்தப்படுவதில்லை. ஆசிரியர்களின் தொழில்சார் தேர்ச்சியை கண்காணித்து அனைவரும் பயிற்சி பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்தக்

கூடிய பொறிமுறை எதுவுமில்லை. பயிற்சிக்குப் பின்னர் கஷ்டப் பிரதேசங்களுக்கு நியமனம் வழங்கப்படுவதால் சில பயிற்றப்படாத ஆசிரியர்கள் ஆசிரியர் கலாசாலை களினுள் சேர்ந்து பயிற்சி பெற விரும்புவதில்லை. சகல பயிற்றப்படாத ஆசிரியர்களும் குறிப்பிட்ட காலத்துக்குள் தொழில்சார் பயிற்சியைப் பெற்றுக் கொள்ளக்கூடியதான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தற்போது குறிப்பாக சிங்கள மொழி மூலத்தில் ஆசிரியர் மிகை காணப்படுகிறது. ஆனால் சில பாடசாலைகளில் கடுமை யான பற்றாக்குறையும் நிலவுகிறது. இதற்கு காரணம் ஆசிரியர்களை பாடசாலைகளுக்கு நியமித்தல், ஆசிரியர்களின் இடமாற்றம் தொர்பான உறுதியான கொள்கைள் இல்லாமையாகும். ஆசிரியர்கள் எவ்வித திட்டமும் இல்லாத முறையில் பாடசாலைகளுக்கு அனுப்பப்படுகின்றனர். அத்துடன் இவ்விடயத்தில் வெளிவாரி தலையீடுகளும் உள்ளன. சில ஆசிரியர்கள் மிகக் கஷ்டமான பாடசாலைகளில் நீண்ட நாட்கள் சேவை புரிய வேண்டிய துர்ப்பாக்கியசாலிகளாக இருக்கும் போது சில ஆசிரியர்கள தமது சேவைக்காலம் முழுதுமே வசதியான, பிரசித்தி பெற்ற பாடசாலைகளில் பணி புரிகின்றனர். ஒரு குறிப்பிட்ட பாடசாலையில் / மாவட்டத்தில் எவ்வளவு காலம் ஓர் ஆசிரியர் பணிபுரிய வேண்டும் என்பது தொடர்பான கொள்கை எதுவுமில்லை. எனவே மற்றவர்களது தலையீடு இல்லாத, நியாயமும் திறந்த தன்மையும் கொண்ட இடமாற்ற கொள்கை அமுலாக்கப்பட வேண்டும்.
செயலாற்றுகை மதிப்பீடு என்பது ஆசிரியர்களிடம் எதிர்பார்க்கப்படும் தேர்ச்சிகளுக்கும் அவர்களது உண்மை யான தேர்ச்சிகளுக்குமிடையிலான இடைவெளியை வெளிப்படுத்துகிறது. இதன் மூலம் ஆசிரியர்களின் தொழில்சார் அபிவிருத்திக்கான நடவடிக்கைகளை அமுல்படுத்த முடியும். செயலாற்றுகை மதிப்பீடு ஒன்றினை உருவாக்கி நடைமுறைப்படுத்தியபோதும் அம்முயற்சி வெற்றியளிக்கவில்லை.
முதன்மை ஆசிரியர்கள் (சேவைக்கால ஆலோசகர்கள்) கூடிய தேர்ச்சிகள் கொண்ட ஆசிரியர்களாவர். ஆசிரியர்கள் தமது பணிகளை விளைத்திறனுடன் மேற்கொள்ள வழி காட்டுவதும் தேவையான தொழில்சார் உதவிகளை வழங்குவதுமே அவர்களது பணி. எனினும் அவர்கள் பாடசாலைக் குழுப் பரிசோதனையில் “மேற்பார்வையாளர்” களாகப் பயன்படுத்தப்படுகின்றனர். அத்துடன் ஏனைய அலுவலகப் பணிகளிலும் அவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இவ்வாறான செயற்பாடுக ளினால் தமது வகிபங்கு பற்றி முதன்மை ஆசிரியர்கள் தவறான புலக்காட்சியை விருத்தி செய்து கொண்டுள்ளனர்.
நன்றி. இலங்கையில் பொதுக் கல்விக்கான புதிய கல்விச்சட்டம்
அகவிழி ஜூன் 2013

Page 36
தேசிய கல்வியியற் கல்லூரி பாடநெறிக்கு தெரிவாகும் மான
எதிர்நோக்கும் சவா
திருமதி. சிவலோசனி சுரேந் ஆசிரிய கல்வியியலாளர், வவுனியா தேசிய
கல்வி முறைமையில் ஏற்பட்ட பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்து நாட்டினை முன்னேற்றப்பாதையில் மிகவும் திறம்படவும், வினைத்திறனுடன் வழிநடத்திச் செல்வதற்கும், கல்வியில் அபிவிருத்தியை ஏற்படுத்தி ஆசிரியர் கல்வி முறையில் மாற்றத்தைக் கொண்டுவரும் பொருட்டே கல்விக்கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன. அந்த வகையில் இலங்கைத்தீவு முழுவதும் 18 தேசிய கல்வியியற் கல்லூரிகள் உள்ளன இவற்றில் 6 தேசிய கல்வியியற் கல்லூரிகள் தமிழ் மொழிமூலமானவை. இக்கல்லூரிகளில் 25 பாட நெறிகளுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
முன்னர் ஆசிரிய தொழிலுக்கு ஆட்சேர்க்கும்
(p60) Du T85.
1. பட்டதாரி மாணவர்.
2. போட்டிப் பரீட்சைகள் மூலம்.
3. தொண்டர் ஆசிரியர்.
4. ஒய்வு பெற்றவர்களை மீள இணைத்தல்.
போன்ற முறைகளில் தெரிவு செய்யப்படுபவர்கள் மூலமே பாடசாலைகளில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெற்றன. ஆனால் முதல் 3 தொகுதியினருக்கும் ஆசிரியத் தொழில்பற்றி எதுவித பயிற்சியும் இல்லாது வகுப்பறைச் செயற்பாட்டில் ஈடுபடுவதால் இவர்களுக்கு கற்பித்தலில் விளக்கம் போதாதுள்ளதோடு, பல்வேறு உத்திகளைக் கையாண்டு கற்றல் கற்பித்தலை முன் னெடுத்து செல்ல சிரமப்பட்டனர். இதனை நிவர்த்தி செய்ய ஆசிரிய நியமனம் பெற்ற பின்னரே ஆசிரியர் பயிற்சியை மேற்கொள்கின்றனர். அதாவது ஆசிரியர் பயிற்சிகளை மேற்கொள்வதற்கு
1. ஆசிரிய கலாசாலைக்கு செல்லல்.
2. தொலைக் கல்வி மூலம் பயிற்சி பெறல் (தேசிய
கல்வி நிறுவகம்)
3. பட்டப்பின் கல்வி டிப்ளோமா கற்றல்.
அகவிழி 1 ஜூன் 2013

களில் வர்த்தக ணவ ஆசிரியர்கள்
6)56T
திரன் கல்வியியற் கல்லூரி.
ஆசிரிய கலாசாலை 2 வருடம் முழுநேரமான கற்கை நெறியாக இருந்தபோதும் ஏனைய இரண்டும் அநேகர் பகுதிநேரமாகவே கற்கின்றனர். இவ்விடர் பாடுகளைத் தவிர்த்து ஒரு மனதுடன் கற்றல் கற்பித்தலை மேம்படுத்துவதற்காகவே இரண்டு வருடம் விடுதியில் தங்கி உள்ளக பயிற்சியையும் ஒரு வருடம் பாடசாலைகளில் கற்பித்தல் பயிற்சியையும் திருப்தியாக முடித்து வெளியேறு பவர்களுக்கு ஆசிரிய நியமனத்தை வழங்கும் முறையே கல்விக் கல்லூரிகளின் செயற்பாடாகும். இவ்வாறு கடந்த 25 வருடங்களாக தமிழ் மொழி மூலம் பல்வேறு பாட நெறிகளுக்கும் தேசிய கல்விக் கல்லூரிகள் ஆசிரியர்களை உருவாக்கி சமுதாயத்திற்கு வழங்கிவருகின்றது. ஆனால் வர்த்தக பாடநெறி 2011 ஆம் ஆண்டே தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டு மாணவர்கள் தெரிவாகி உள்ளனர். 2011 ஆம் ஆண்டில் 30 மாணவர் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரிக்கும் 20 மாணவர் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரிக்கும் அனுமதிக்கப்பட்டனர். 2012 ஆம் ஆண்டில் 50 மாணவரும் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூ ரிக்கு அனுமதிக்கப்பட்டனர். 2013 ஆம் ஆண்டில் இன்னும் மாணவர் தெரிவு இடம் பெறவில்லை.
வர்த்தக பாட நெறிக்கான தகைமை
1. க.பொ.த (உ/த) பரீட்சையில் ஒரே தடவையில் கணக்கியல் மற்றும் வணிகக்கல்வி உட்பட 3 பாடங்களில் சித்தியடைந்திருத்தல்.
2. க.பொ.த (சா/த) பரீட்சையில் வணிகமும் கணக்கியலும் / முயற்சியாண்மைக்கல்வி / கணிதம் திறமைச் சித்தியுடன் ஆங்கில மொழிக்கு திறமைச் சித்தி / ஆங்கில இலக்கியத்திற்கு சாதாரண சித்தியுடன், சிங்களம் / தமிழ் மொழி உட்பட பிரதான 6 பாடங்களில் சித்தியுடன் 3C, 3S பரீட்சைப் பெறுபேறு இருக்க வேண்டும்.

Page 37
வர்த்தக பாடநெறிக்கான கலைத்திட்ட்டம்
1. சகல பாட நெறிகளுக்குமான 6 தொழில்சார் பாடம்
1. கல்வி உளவியல்
2. கல்வி அளவீடும் மதிப்பீடும்
3. கல்வி சமூகவியல் 4. கல்வி வழிகாட்டலும் ஆலோசனையும் 5. கல்வித்தத்துவமும் பாடசாலை முகாமைத்துவமும்
6. கற்பித்தல் பரீட்சயம்
2. 6îG3FL LITLD
1. வர்த்தகமும் கணக்கியலும்
2. கணிதம்
கற்பித்தல் பயிற்ச்சி
பொறுப்பு வாய்ந்த, தரமான, வலிமைமிக்க, கடமை உணர்வுடைய ஆசிரியர்களை உருவாக்குவது தேசிய கல்வியியற் கல்லூரிகளின் பொறுப்பாகும். இதற்கு கல்லூரிகளில் இடம் பெறும் கற்பித்தல் செயற்பாட்டுடன் கற்பித்தல் பயிற்சியே மிக முக்கியமானது. கல்லூரியில் இருக்கும் இரு வருட காலத்தில் ஒரு தடவைக்கு 10 நாட்கள் வீதம் 4 தடவை 40 நாட்கள் கற்பித்தல் பயிற்சியைப் பூரணப் படுத்துவதோடு மூன்றாவது வருடம் ஒரு பாடசாலையில் கட்டுறுப்பயில்வை மேற்கொள்ள வேண்டுதல் கட்டாயமாகும்.
எந்த ஒரு துறை மாணவ ஆசிரியரும் தான் கற்கும் பாடநெறியில் உள்ள விசேடபாடங்கள் இரண்டும் கற்பித்தல் பயிற்சியின் போது கற்பிக்க வேண்டும்.
உ-ம்: கணித பிரிவு மாணவன் கணித பாடமும், விஞ்ஞான பாடமும்
விவசாய பிரிவு மாணவர் விவசாயமும், விஞ்ஞானமும் ஆரம்பப்பிரிவு மாணவன் தமிழ், கணிதம், சுற்றாடல். அந்த வகையில் வர்த்தக பிரிவு மாணவர் தரம் 10,11இற்கு வர்த்தகமும் கணக்கியலும், தரம் 6,7,8,9இற்கு கணிதமும் கற்பிக்க வேண்டும்.
இவர்களுக்கான நேர சூசி வாரத்தில் 15 பாடவேளை ஆகும். வர்த்தகமும் கணக்கியலும் தரம் 10,11 இற்கு மும்மூன்று பாடவேளைகளே இடம் பெறும், கணிதம் 5/6பாடவேளைகள் இடம் பெறும்.
பாடசாலைகளில் வர்த்தகபாடம் கற்கும் மாணவர் எண்ணிக்கை குறைவு ஒவ்வொரு பாடசாலையிலும் 10-20 வரையான மாணவர்களே வர்த்தக பாடம் கற்கின்றனர்.

அத்துடன் எல்லாப் பாடசாலைகளிலும் வர்த்தக பாடம் இல்லை. இதனால் கற்பித்தல் பயிற்சி மாணவர் செல்லும்போது எல்லா மாணவருக்கும் வர்த்தகபாடம் கற்பிக்க வாய்புக்கிடைப்பதில்லை வவுனியா மாவட்டத்தில் கற்பித்தல் பயிற்சியில் ஈடுபடும் பாடசாலைகளில் 20 பாடசாலைகளிலேயே தரம் 10,11 இல் வர்த்தகபாடம் உள்ளது ஏனைய பாடசாலைகளில் இல்லை. இதனால் எல்லா மாணவருக்கும் வர்த்தகபாடம் கற்பிப்பதற்கான வாய்ப்புக் கிடைப்பதில்லை. கட்டுறுப்பயிற்சி காலத்திலேயே வர்த்தகபாடம் கற்பிக்காது தனியே கணிதபாடம் மட்டும் கற்பிக்கும் மாணவ ஆசிரியர்கள் உள்ளனர் கற்கை நெறி முடிந்து வெளியேறும் போது இவர்களுக்கு வர்த்தக டிப்ளோமா ஆசிரியர் என சான்று வழங்கப்படுவதோடு. வர்த்தகபாட ஆசிரியராக நியமனம் பெற்று வேறு இடங்களில் ஆசிரியர்களாக செல்லும் போது பல்வேறு இடர்பாடுகளை எதிர்நோக்குவர்.
மேலும் இவர்கள் கணிதபாடம் கற்பிப்பதிலும் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்குகின்றனர். ஏனெனில் இவர்கள் க.பொ.த.(சா/த) வரை கணிதம் கற்று சித்தியடைந்தால் போது மென்ற மனதுடன் ஏற்று சித்தியடைந்தோரே பெரும் பாலானோர். இவர்கள் கணிதபாடம் கற்பிப்பதற்கு சிரமப் படுகின்றதோடு பாடசாலைகளுக்கு கற்பித்தல், பயிற்சிக்கு செல்லும் போது நேரசூசி (Time Table) பெறுவதிலும் சிரமம் ஏற்படுகிறது. ஏனெனில் கணிதபிரிவு, விஞ்ஞான பிரிவு, வர்த்தக பிரிவு ஆகிய 3 பிரிவினரும் கணிதம் கற்பிப்பதால் நேரசூசி பெறுவதும் சிரமம். மேலும் தற்போது பாடசாலைகளில் வர்த்தக பட்டதாரி ஆசிரியர்களே தரம் 10,11 இற்கு வர்த்தகபாடம் கற்பிப்பதால் அவர்கள் கல்விக் கல்லூரி மாணவர்களை கற்பிக்க அனுமதிக்க சிறிது விருப்பம் குறைவாக உள்ளதோடு க.பொ.த (சா/த) பரீட்சைக்கு மாணவர்களை தொடர்ந்து வழிப்படுத்த வேண்டிய தேவையும் உள்ளதால் கற்பித்தல் பயிற்சிக்கு செல்லும் ஆசிரிய மாணவருக்கு நேர சூசி வழங்க பாடசாலை அதிபர்கள் பின்நிற்கின்றனர். இவ்வாறாக பல்வேறு சிரமங்களின் மத்தியில் வர்த்தக பாடம் கற்பிக்காமலே வர்த்தக பாட ஆசிரியர்களாக வெளியேறுவதால் இவர்கள் வினைத்திறனுடைய ஆசிரியர்களாக செயற்படுவார்கள் என எதிர்பார்க்க முடியாது. மேலும் வர்த்தக பாடத்திற்கு நிரந்தர விரிவுரையாளர்கள் இல்லாத ஒரு பிரச்சினையாலும் வருகை தரு விரிவுரையாளர்களின் உதவியுடனே. இக்கற்கைநெறி கொண்டு செல்லப்படுகிறது.
உசாத்துணை
. அரசவர்த்தகமானி - 2012 யூன் 12
2. வணிகமும் கணக்கியலும் பாடநெறிக்கான பாடம் 1 பாடம் 11
இற்கான கலைத்திட்டம்.
அகவிழி ஜூன் 2013

Page 38
UIL&FITOOoooooou 65ll' (
பாடசாலைக்கு வெளியே மாற்றுக்கல்வி வழங்குவதற்கு மு
பின்வரும் தந்திரோபாய மற்றும் கொள்கை வழிகாட்டல்கள் மற்றும் செயற்பாடுகள் பாடசாலைக்கு வெளியே உள்ள கட்டாயக் கல்வி வயதுக்குட்பட்ட பிள்ளைகள் அனைவருக்கும் கல்வி வாய்ப்புகளை வழங்கும். அத்துடன் தனியார் மற்றும் அரசதுறை அபிவிருத்தி முனைப்புகள் ஊடாக பாடசாலையை விட்டு வெளியேறியோரை தொழில் உலகுக்கு வழிகாட்டும்.
2010 ஆம் ஆண்டளவில் 9, 11, 13 ஆம் தரங்களில் கற்கும் சகல மாணவர்களுக்கும் தொழில் வழிகாட்டலை அறிமுகஞ்செய்ய கல்வி அமைச்சின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைப் பிரிவு ஒரு திட்டத்தை விருத்தி செய்யும். இதன் மூலம் தொழில்சார் வேலைத்திட்டங்கள் மற்றும் தொழில் வாய்ப்புகள் பற்றி அவர்களுக்கு அறிவுபூட்ட (Մ)Iջեւյլb.
கல்வி அமைச்சின் முறைசாராக் கல்விப்பிரிவு தனியார் மற்றும் அரசதுறை தொழில் அபிவிருத்தியுடன் சபை, நிலையங்கள் மற்றும் வேலைத் திட்டங்களுடன் ஆலோசனைத் தொடர்புகளை ஏற்படுத்தி கல்வித் துறைக்கும் தொழில்துறைக்குமிடையில் முறையான தொடர்புகளை ஏற்படுத்தும்.
கல்வி அமைச்சின் முறைசாராக் கல்விப்பிரிவு தனியார் மற்றும் அரசதுறையின் தொழில் அபிவிருத்தி முனைப்புகளுக்கும் மாகாண சபைகளுக்குமிடையில் இணைப்புகளை ஏற்படுத்தி பாடசாலையை விட்டு விலகுவோர் தொழில் பயிற்சி வேலைத்திட்டங்களின் மூலம் தொழில் பெற உதவிகள் வழங்கப்படும்.
கல்வி அமைச்சின் முறைசாரா கல்வி அலகு: மாகாண சபைகளுடன் ஆலோசனை செய்து பாடசாலைகளில் அறிவூட்டுவதன் மூலம் தனியார் மற்றும் அரச துறைகளில் பாடசாலையை விட்டு விலகும் மாணவர்களுக்கு இருக்கக் கூடிய தொழிற் பயிற்சி வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வை மேம்படுத்தமுடியும்.
கல்வி அமைச்சு தனியார் மற்றும் அரச துறை தொழிற்படை அபிவிருத்தி அதிகாரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அதன் மூலமாக தொழிற் பயிற்சி மற்றும் தொழில் பயிற்சிசார் நிகழ்ச்சித் திட்டங்கள் பற்றிய விபரங்களை தரம் 9-13 வரையுள்ள சகல பாடசாலைகளுக்கும் அனுப்பிவைத்தல்.
அகவிழி ஜூன் 2013

விலகுவோர் மற்றும் உள்ள பிள்ளைகளுக்கு
ன்மொழியப்பட்டுள்ள உபாயங்கள்
2015 ஆம் ஆண்டளவில் கல்வி அமைச்சின் முறைசாரா கல்விப்பிரிவு வலய / பிரிவு மட்டங்களில் முறைசாரா கல்வி நிகழ்ச்சித்திட்டங்களை மேம்படுத்தக்கூடியதாக மாகாண சபைகள், தேசிய, சர்வதேசிய அரசுசாரா நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து இளைஞர்கள் மற்றும் பாடசாலையை விட்டு விலகுவோருக்கான சுய தொழில்வாய்ப்பு மற்றும் தொழில் முயற்சியாண்மை திறன்களை மேம்படுத்தும் நிகழச்சித திட்டங்களை ஒழுங்குபடுத்த வேண்டும்.
தெருவோரப் பிள்ளைகளுக்கு இன்னுமொரு வாய்ப்பு வழங்குவதற்காக முறைசாரா கல்விப்பிரிவு அடிப்படை எழுத்தறிவு வகுப்புகள் மற்றும் செயற்பாடுகள் சார்ந்த அடிப்படை எழுத்தறிவு வகுப்புகளை தொடர்ந்து நடத்த வேண்டும். எனினும் மாகாண சபைகளுடன் கலந்தாலோசித்து தற்போது நடைபெறுகின்ற சமுதாய அபிவிருத்திப் பணிகள், வருமானம் தரும் பணிகள், மற்றும் நலன்சார் நிகழ்ச்சித் திட்டங்களை சமுர்த்தி அலுவலர்களுக்கோ அல்லது வேறு 53 அலுவலர்க்கோ ஏதேனும் பொருத்தமான பொறுப்பளித்துவிட்டு தேசிய கல்வி நிறுவகத்தின் திறந்த பாடசாலை நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒத்துழைக்க வேண்டும்.
கல்வி அமைச்சும் மாகாண சபைகளும் தற்போதைய 8500 குழுக்கள் ஊடாக பிரிவு மட்டத்தில் பெற்றார் கல்வி நிகழ்ச்சித்திட்டங்களை நடத்த வேண்டும். இதன் மூலம் கட்டாயக் கல்வி வட்டத்தில் 100% பங்குபற்றவும் வலதுகுறைந்த பிள்ளைகள் மற்றும் பாடசாலைக்கு செல்லாத பிள்ளைகளை இனங்காணவும் முடிவதோடு பாடசாலையை விட்டு செல்லும்போது இருக்கக்கூடிய தொழில்சார் பயிற்சிகளைப் பற்றிய அறிவையும் பெற்றுக் கொள்ள முடியும்.
முன்மொழியப்பட்டுள்ள முறைசாராகல்வி உத்திகள், மற்றும் ஏனைய பிரிவுமட்ட திட்டமிடல் செயற்பாடுகளின் அடிப்படையில் செயற்திட்ட உதவியாளர்கள் கோட்ட அலுவலகங்களில் மீளவும் பணிக்கமர்த்தப்படுவர். கோட்ட அலுவலகங்களுக்குத் தேவையான செயற் றிட்ட அலுவலர்கள் அண்மையில் நியமிக்கப்பட்ட பட்டதாரிகளிடமிருந்து பணிக்கமர்த்தப்படுவர். கல்வி அமைச்சு, வலயத் திட்டமிடல் அதிகாரி, வலயத் தொழில்நுட்பக் குழு ஆகியவற்றின் உதவியுடன்

Page 39
கோட்டக் கல்விப் பணிப்பாளர்களைப் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்யும். செயற்றிட்ட உதவியாளர்களுக்கு ஒரு தொழில் முன்னேற்றப் படிமுறைகளை உருவாக்கும் சாத்தியப்பாடுகளையும் கல்வி அமைச்சு மதிப்பீடு செய்யும்.
எழுவினா: கல்வி மானியம் கீழ்வருமான மட்டத்திலுள்ள உதவி தேவைப்படும் பிள்ளைகளுக்கு போதுமான அளவில் பகிர்ந்தளிக்கப்படு வதில்லை. மாறாக உயர் வருமான மட்டத்திலுள்ள 30% பிள்ளைகளுக்கும் மானியம் வழங்கப்படுகிறது.
குறிக்கோள்: கீழ்வருமான மட்டத்திலுள்ள பிள்ளைகளுக்கு உதவி அதிகரிக்கப்படக்கூடியதாக கல்வி மானிய ஒதுக்கீட்டை ஒழுங்குபடுத்தல்.
மானியங்களுக்கான பாதிடு
தெரிவு செய்யப்பட்ட தகுதியான பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில், சகலருக்கும் இலவச பாடநூல், இலவச சீருடை, தேவையானோருக்கு மூக்குக்கண்ணாடி, இலவச பயணச்சீட்டு மற்றும் தெரிவு செய்யப்பட்டோருக்கு போசாக்கு உணவு முதலிய கொள்கைகளை அமுல் நடத்துவதற்காக கல்வி அமைச்சு தனது பாதீட்டில் வருடாந்தம் 10% ஒதுக்குகிறது. தற்போதைய ஒதுக்கீட்டுத் தொகை ரூ. 3.435 பில். ஆகும்.
பரம்பலும் இலக்குபடுத்தலும் இந்நிகழ்ச்சித் திட்டங்களின் நோக்கம் சகலருக்கும் கல்வி மற்றும் கல்வியில் நியாயத்தன்மை ஆகியவற்றை
37 7
 

உறுதிப்படுத்துவதாகும். எனினும் வருமான அதிகரிப்பு உயர், கீழ் வருமான மட்டங்களுக்கிடையில் நிலவும் இடைவெளி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒதுக்கீடு கீழ்வருமான மட்டத்திலுள்ளவர்களைச் சென்றடையாதது குறித்து அரசாங்கம் மீளாய்வு செய்யும் நிலையில் உள்ளது. சனத்தொகையில் 30வீதத்தினர் மொத்த தேசிய உற்பத்தியின் 69 வீதத்தைப் பெறுகின்றனர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் அவர்களது மாதாந்த வருமானம் சுமார் ரூ. 100,000/= ஆகும். இவர்களும் இலவச பாடநூல், சீருடை, பருவகாலச்சீட்டு முதலிய மானியத்தைப் பெற்றுக் கொள்கின்றனர்.
போசாக்கு உணவுத்திட்டம் மற்றும் புலமைப்பரிசில் ஆகியவை குறைந்த வருமானக் குழுவினரை அடையக் கூடியதாக இருக்க வேண்டும்
புலமைப்பரிசில் பரீட்சை ஒவ்வோர் ஆண்டும் நடத்தப் படுகிறது. சுமார் 333,000 மாணவர்கள் இப்பரீட்சைக்குத் தோற்றுகிறார்கள்.
புலமைப்பரிசில் திட்டம்
திறமையான ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு சிறந்த பாடசாலைகளில் அனுமதி பெற்றுத் தரும் இந்த நியாயத்தன்மை ஏற்பாடு பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. சில நிர்ணயிக்கப்பட்ட பிரமாணங்களின் அடிப்படையிலேயே சித்தி பெறும் மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. பெறுபேறுகளின் அடிப்படையில் கூடிய புள்ளிகள் பெறும் குறைந்த வருமானம் பெறும்
அகவிழி ஜூன் 2013

Page 40
குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 10,000 புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன. இப்புலமைப்பரிசில் குறிப்பிட்ட மாணவன் தரம் 13 வரை இடைநிலைக்கல்வியைப் பூர்த்தி செய்யும் வரை வழங்கப்படும். இவ்வாறு புலமைப் பரிசில் பெறும் மொத்த மாணவர் தொகை தற்போது 77,788 ஆகும். புலமைப்பரிசில் பெறும ஒவ்வொரு மாணவனுக்கும் மாதாந்தம் ரூ. 500/= வீதம் வருடாந்தம் ரூ. 5,000/= வழங்கப்படும். புலமைப்பரிசில் திட்டம் சகல பாடசாலைகளிலும் ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கு சிறந்த பாடசாலையில் அனுமதிபெறும் வாய்ப்பினை வழங்குகிறது. நிதியுதவியானது குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு கல்வியில் நியாயத்தன்மை வழங்குவதை நோக்காகக் கொண்டது. 2006 இல் ரூ. 275 மில். நிதி உதவியாக வழங்கப்பட்டது. தற்போது 10,000 பேருக்கு நிதி உதவி வழங்கப்படுவதால் இந்த தொகை மேலும் அதிகரிக்கலாம்.
இலவச பாடநூல்கள்
தரம் 1-11 வரை பயிலும் சகல மாணவர்களுக்கும் அரசாங்கம் இலவச பாடநூல்களை வழங்குகிறது. ஆரம்ப பாடசாலை கலைத் திட்டத்துக்குரிய 70 பாடநூல்கள்
7.34 மில்லியன் பிரதிகள் அச்சிடப்பட்டு வருடாந்தம் பாடசாலைகளுக்கு வழங்கப்படுகின்றன. தரம் 6-11 வரை 253 பாடநூல்கள் 21.32 மில்லியன் பிரதிகள் அச்சிடப்படுகின்றன. அச்சிடப்படும் புத்தகங்களில் 33% திரும்பவும் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாடநூல்களுக்கான வருடாந்த மானியம் தற்போது ரூ. 1,165 மில். ஆகும். இப்பாடநூல்கள் தனியார் பாடசாலை
அகவிழி ஜூன் 2013
 

மாணவர்கள் உட்பட நாட்டிலுள்ள சகல மாணவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.
பாடசாலை போசாக்கு உணவுத்திட்டம்
இத்திட்டம் 8,023 பாடசாலைகளிலுள்ள தரம் 1, 2 மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 6454 பாடசாலை களுக்கு அரசமானியமும் 1378 பாடசாலைகளுக்கு உலக உணவு நிகழ்ச்சித்திட்ட உதவியும் 191 பாடசாலை களுக்கு மாகாணசபைகளின் உதவியும் கிடைக்கின்றன. கஷ்டப்பிரதேசம் மற்றும் வருமானம் குறைந்த குடும்பங் களைச் சேர்ந்த மாணவர்களில் 30% போசாக்கு குறைந்தவர் களாக உள்ளனர். இவர்களையே இந்த திட்டம் கருத்தில் கொள்கிறது. பிள்ளைக்கு ரூபா 15/= வீதம் ரூபா 500 மில். கல்வி அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ளது.
மூக்குக் கண்ணாடி வழங்கல்
தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் இத்தேவை உள்ள மாணவர்கள் கோரும் பட்சத்தில் இந்த உதவி
வழங்கப்படுகிறது. வருடாந்தம் இதற்காக ரூ. 330,000/= ஒதுக்கப்பட்டுள்ளது.
பாடசாலை பருவகாலசீட்டு
இது சேவை வழங்குவோருக்கு தரப்படுகின்ற விலை மானியமாகும். இதற்காக ரூபா 250 மில் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போதைய கொள்கையின்படி மாணவர்கள் அண்மை யிலுள்ள பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படுவதால் பருவகால சீட்டுகளுக்கான தேவை அரசாங்கத்தினால் மீளாய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. எனினும் தற்போது

Page 41
முன்மொழியப்பட்டுள்ளவாறு 1ஏபி பாடசாலைகளில் தரம் 6 மாணவர்கள் தேசிய மதிப்பீட்டின்படி அனுமதிக்கப்படும்போது இத்தேவை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே இது நியாயமான முறையில் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.
பாடசாலை சீருடைகள்
இதறகாக ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 1,260 மில்லியன் மிக அதிகமான மானியத் தொகையாகும். சகலருக்கும் சீருடை வழங்கப்படுவதால் இச்செயற்பாடு நியாயத் தன்மை நோக்கியதல்ல. துணியை வெட்டி, பொதி யாக்கி, பாடசாலைக்கு வழங்கும் செலவும இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. வெட்டிப்பொதி கட்டுவதற்கு ஓர் அலகுக்கு ரூ. 4 வழங்கப்படுகிறது. விநியோகிக்கும் செலவு உயர்வானது. உயர்மட்ட வருமான குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களுக்கு இந்த மானியம் அவசியமானதல்ல. எனவே இந்த மானியம் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். சனத்தொகையின் 40% கீழ்மட்ட, கூடிய தேவையுள்ள மாணவர்களுக்கு இம்மானியத்தை இருமடங்கு ஆக்கும் வாய்ப்புகள் பற்றி அரசாங்கம் மதிப்பீடு செய்யும்.
இலக்குப்படுத்தல்
கீழ்வருமானம் கொண்ட 70% மாணவர்களை இந்த நிகழ்ச்சித் திட்டங்களின் பயன் சென்றடைய வேண்டும் என்பதே மிகமுக்கியமான விடயமாகும். பாடசாலைச் சீருடை போன்ற மானியங்கள் அதிகரிக்கப்பட வேண்டும். 40% கீழ்வருமான மட்டங்களை இது சென்றடைய வேண்டும். தற்போது தனியார் பாடசாலை மாணவர்கள் கூட இலவச பாடநூல்களைப் பெறுகின்றனர். எனினும் மானியங்கள் இலக்குப்படுத்தல் என்பது மிகவும் சிரமமான காரியம். இதனால்தான் சகல மாணவர்களுக்கும் இவை விஸ்தரிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த நிலைமை ஒப்புரவு என்னும் நிலைமையை கருத்தில் கொள்ளமாட்டாது. எனவே இலக்குப்படுத்தல் அல்லது தெரிவுப் பிரமாணங்கள் மிக கவனமாக விருத்தி செய்யப்பட வேண்டும்.
இலக்குப்படுத்தலுக்கான பிரமாணங்கள்
மானியங்களுக்காக பாடசாலைகளைத் தெரிவு செய் வதற்காக குறிப்பான பிரமாணங்களை வகுக்கும்போது பொதுவான பிரமாணங்கள் கருத்தில் கொள்ளப்படும். எனினும் இதற்கான ஒரு முறைமை இல்லை. எனினும் கல்வி அமைச்சு இருக்கக்கூடிய தெரிவுகளை மதிப்பீடு செய்யும். இறுதி 30% சனத் தொகைக்கு மானியங்கள் அதிகரிக்கப்படும். மத்திய 40% க்கு தற்போதைய மானியங்கள் வழங்கப்படும். உயர் 30% க்கு வழங்கப்படும் சில மானியங்கள் நீக்கப்படும்.
மாணவர்கள் அல்லாது பாடசாலைகளே இலக்குப் படுத்தப்படும். மாணவர் களை இலக்குப்படுத்துவது

அறமாகாது. அதுமட்டுமல்லாமல இது பல்வேறு உளவியல் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். எனவே தேவையான பாடசாலைகளே இலக்குப் படுத்தப்படும்.
பாடசாலைகளை இனங்காணப் பயன்படும் பிர மாணங்கள் பாடசாலையில் நிலையத்தைக் கருத்தில் கொள்ளும் சமுர்த்தி திட்டங்கள் மற்றும் உலக உணவுத்திட்டம் ஆகியவற்றின் வறுமை அளவீடுகளைப் பயன்படுத்தி நகரங்கள் உட்பட உயர் வறுமை கொண்ட பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள் இனங்காணப்படும்.
30% உயர் வருமான குழுக்களுக்கு மானியங்களை நீக்குவது பற்றி பின்வரும் பிரமாணம் மதிப்பீடு செய்யப்படும். எனினும் பிரபலமான அல்லது 1 ஏபி பாடசாலைகளில் கற்கும் பிள்ளைகளுக்கு இன்னும் மானியம் தேவையா என்பது பற்றி அவர்களின் பெற்றாரிடமிருந்து ஒரு பிரகடனம் பெற்றுக் கொள்ளப்படும். பாடசாலையின் பருமனும் இவ்விடயத்தில் கவனத்தில் கொள்ளப்படும். ஏனெனில் பெரிய பாடசாலைகளில்தான் உயர் வருமானம் கொண்ட பெற்றாரின் பிள்ளைகள் கற்கின்றனர். இதன் மூலம் சிறுபாடசாலைகளில் மாணவர் எண்ணிக்கையை கூட்டவும், பெரிய பாடசாலைகளில் எண்ணிக்கையை குறைக்கவும் முடியும்.
சகல வகை 2, 3 பாடசாலைகளுக்கும் மானியம் அதிகரிக்கப்படும். வகை 2 பாடசாலைகளில் மொத்த மாணவர் எண்ணிக்கை 1.1 மில். ஆகவும் வகை 3 இல் 340,000 ஆகவும் உள்ளது. இப்பாடசாலைகளில் கற்கும் 1.4 மில்லியன் பிள்ளைகள் கீழ் 30% வருமான மட்டத்தைச் சேர்ந்தோராவர். எனவே அவர்களுக்கு இரண்டு சீருடைகளும் போஷாக்கு உணவும் தேவைப்படும். இதனை வழங்கும்போது சிறு பாடசாலைகளுக்கும் கூடிய மாணவர்கள் வந்து சேர்வர். பெருந்தொகை மாணவர்கள் கற்கும் பாடசாலைகளுக்கு இதே அளவு மானியம் தேவைப்படாது. நாட்டில் 2500க்கு மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட 165 பாடசாலைகளும் 10002500 மாணவர்களைக் கொண்ட 469 பாடசாலைகளும் உள்ளன. 646 1 ஏபி பாடசாலைகளில் 1.3 மில். மாணவர்கள் கற்கிறார்கள். இவர்கள் மொத்த மாணவர் தொகையில் 31.6% ஆகும். தற்போதைய முதலாந்தர சேர்வு முறையின்படி 300,000 சேர்வுகளில் 22% (60,000) 1 ஏபி பாடசாலைகளிலேயே சேர்கின்றனர். இவை பற்றி சம்பந்தப்பட்ட நிபுணர்கள், துறைகளுடன் கலந்தாலோசித்து மேலும் மதிப்பீடு செய்யப்படும்.
எனினும் தற்போது நிதிஉதவி பெறுகின்ற மாணவர்கள் எந்த பாடசாலையில் படித்தாலும் அவர்களுக்கு சகல விதமான மானியங்களும் தொடர்ந்தும் வழங்கப்படும்.
நன்றி: கல்வித்துறை அபிவிருத்திச் சட்டகமும், நிகழ்ச்சித்திட்டமும்
அகவிழி ஜூன் 2013

Page 42
திறவறிவர் பெயர்
Brain Drain
Prof. Daya Rohana Athukor
g5L6l6ão : A. A Azees
Brain Drain எனும் ஆங்கிலப்பதத்திற்கு மூளைசாலிகள் வெளியேற்றம், புத்திஜீவிகள் குடிபெயர்வு என பொதுவாக அழைக்கப்பட்ட போதும் கலைச்சொல் அகராதி கொண்டி ருக்கும் கருத்து திறவறிவர் பெயர்விழப்பு என்பதாகும்.
அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் மேலெழுந் திருக்கும் பிரதான பிரச்சினைகளிடையே வேரூன்றியிருக்கும் முக்கியமானதொரு பிரச்சினையாக திறவறிவர் பெயர்விழப்பு கருதப்படுகின்றது. கடந்த தசாப்தத்தில் மிக முனைப்பாக மேலெழும்பிய இப்பிரச்சினை கல்விமான்கள், தொழிற்பயிற்சி பெற்றோர் நாட்டை விட்டு வெளியேறுவது “மறைநிலை ஆசிர்வாதம்” என சிலர் கருதுகின்றனர். இப்பிரச்சினை பொருளாதார, அரசியல், சமூக விஞ்ஞான ரீதியில் ஆராயப்பட்டு பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
"யாதேனுமொரு நாட்டில் பிறந்து வளர்ந்த கல்விமான் கள் (அறிஞர்கள்) மற்றும் தேர்ச்சி பெற்ற தொழிலாளர் தமது தாய் மண்ணைவிட்டு வெளியேறி தற்காலிகமாக அல்லது நிரந்தர சேவையின் நிமித்தம் வேறொரு நாட்டை நோக்கிச் செல்லுதல் திறவறிவர் பெயர்விழப்பு என அழைக்கப்படும்”
Brain Drain S60 &iuesulh:
காலணித்துவ ஆட்சியிலிருந்து விடுபட்டு அரசியல் சுதந்திரம் பெற்ற மூன்றாம் உலகநாடுகள் புதிதாக எதிர்நோக்கியிருக்கும் இப்பிரச்சினை காலனித்துவ ஆட்சியின் ஒர் எச்சமாகவும் கருதப்படுகின்றது. கடந்த காலங்களில் போரியல் மற்றும் அரசியல் நுட்பங்களைப் பிரயோகித்து வளங்களையும், மூலப்பொருட்களையும் கடத்திச்செல்வதற்கு காலனித்துவ நாடுகள் பிரயத்தனம் செய்திருப்பதுடன் தற்போது அதைவிட நுட்பமான நுண்முறையில் தமது நாட்டிற்கு அவசியமான வளங்களை ஈர்த்துக் கொள்வதற்கு பல்வேறு தந்திரோபாயங்களை மேற்கொண்டு வருகின்றது.
"அடிமைப்படுத்திய நாடுகள் அடிமைப்படுத்தப்பட்ட நாடுகளில் அறிமுகப்படுத்திய அவர்களது மொழி, போக்கு, பாடசாலை, பல்கலைக்கழக ஒழுங்கமைப்பு, கலைத்திட்டம், பரீட்சை வழக்கங்கள் ஆகிய அனைத்தும் கற்றோர் செல்வந்த நாடுகளை நோக்கி ஈர்க்கும் பாணியிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன”.
அகவிழி |ஜூன் 2013

ala
மூன்றாம் உலகநாடுகளில் கல்விக்காக முதலீடு செய்யப்படும் நிதியில் கற்று, பயிற்சிபெற்று, நிபுணத்துவம் பெற்று சேவையிலிருக்கும் நியுணர்கள் (விஞ்ஞானிகள்) நாட்டைவிட்டு வெளியேறுவது அந்நாடுகளில் கல்வி மற்றும் அபிவிருத்தி சார் துறைகளில் பாரிய பின்னடைவு களை ஏற்படுத்திய வண்ணமுள்ளன.
1975 இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றிற்கமைய கற்ற, தொழிற்பயிற்சி பெற்ற பணியாளர்கள் மேலைத்தேய நாடுகளை நோக்கி குடிபெயர்வதன் விளைவாக ஏற்படும் வருடாந்த இழப்பு 128 மில்லியன் ரூபாய்களாகும். இதன்மூலம் எமது நாடு விருத்தியடைந்த நாடுகளிற்கு வழங்கும் வருடாந்த நிதியுதவி 110 மில்லியன் ரூபாய்கள். அதேவேளை அந்நாடுகளிலிருந்து எமக்குக் கிடைக்கும் தொழிநுட்ப உதவி வருடாந்தம் 88 மில்லியன் ரூபாய்கள் ஆகும். எனவே எமதுநாடு அந்நாடுகளிற்கு அதிகநிதியுதவி வழங்கியிருப்பது புலனாகின்றது. 1971-1974 காலப்பகுதியில் மாத்திரம் இலங்கையின் நிபுணர்கள் 1700பேர் வெளிநாடு சென்றுள்ளனர். அவர்களில் பொறியியலாளர்களின் எண்ணிக்கை 275 ஆகும். அதற்கமைய மாதாந்தம் 23 எந்திரிமார் (Engineer) நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர்.
இலங்கையின் திட்டமிடல் அறிக்கைக்கமைய 1979இல் தேர்ச்சிபெற்ற ஊழியர்கள் 9423 பேர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இவர்களுள் Doctor, Engineer, Accountant, Manager முதலிடம் பெறுகின்றனர். நம் நாட்டி லுள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிநுட்ப நிறுவனங்களிள் வெளியீடு மேற்குறிப்பிட்ட பெறுமதியைவிட குறைவானதாகவே காணப்படுகின்றது.
சர்வதேச அபிவிருத்தி ஆய்வு மையத்தின் புள்ளி விபரவியல் தரவுகளுக்கமைய இப்பிரச்சினையின் ஆழ, அகலத்தையும் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
1970ம் தசாப்தத்தில்.
1) பாகிஸ்தானில் மருத்துவப் பட்டதாரிகள் 50 - 70%
நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.
2) இந்தியாவில் 1966/67 காலப்பகுதியில் மருத்துவப்
பட்டதாரிகள் 30% எந்திரிமார் 35 நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.

Page 43
இத்தேர்ச்சிபெற்ற வல்லுனர்கள் ஒருதிசையை நோக்கியே நகர்கின்றனர். அதாவது அபிவிருத்தியடைந்த நாடுகளை நோக்கியதாகும். USA, UK இல் பணிபுரியும் மருத்துவர், சத்திரசிகிச்சை நிபுணர்களில் 51% ஆனோர் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிலிருந்து குடிபெயர்ந் தோராவார். ருமு இன் அறிக்கையொன்றிற்கமைய 1970ம் தசாப்த ஆரம்பத்தில் 19000 இந்திய மருத்துவர்கள் அங்கு பணிபுரிந்துள்ளனர். அவர்களுள் ஒருவரிற்கான கற்கைச் செலவினம் 9600 டொலர் எனவே மொத்த செலவினை 175 மில்லியன் டொலர்கள். பிலிப்பீன் நாட்டின் 9500 மருத்துவர்கள் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். இது நாட்டின் வருடாந்த செலவினத்தை விட இரு மடங்காகும். SubLD(bg.g56) if 3560) 6T USA, Canada, Western Germany, Australia, Newzealand Safuu [b5T(B65(36TT AÐ6uftb@BOBġ56řIGIT60T.
இதனடிப்படையில் சர்வதேச உதவிப் பரிமாற்றுத் துறையில் மிகவும் கொடுரமான பிரச்சினை திறவறிவர் பெயர்விழப்பாகும். இங்குள்ள கல்விமான்கள் மற்றும் விஞ்ஞானிமார் வெளிநாட்டில் வசிக்கச் செல்வதும், வெளிநாடுகளில் கல்விகற்கும் மாணவர்கள் தாய்நாட்டிற்குத் திரும்பாமையும் இப்பிரச்சினையில் இரு பரிமாணங்களாகும். USA இல் வாழும்பிறநாட்டு நிபுனர்களின் 35% உம், ஊயயெனயவில் 16% உம் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்தவர்களாவர். ருளுயு இற்கு வரும் பிறநாட்டு வைத்தியர்களில் பெரும்பாலானோர் மருத்துவர் பற்றாக்குறை தீவிரமாக நிலவும் நாடு களிலிருந்தே வருகை தருகின்றனர்.
“விருத்திகுன்றிய நாடுகள் மூலம் பயிற்றப்படும் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் இறுதியில், அபிவிருத்தி யடைந்த நாடுகளில் சேவையாற்றத் தேர்ந்தெடுக்கப்படுவது திறவறிவர் பெயர்விழப்பின் நச்சுரூபமாய் உருவெடுத் துள்ளது”
நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான காரணங்கள்
திறவறிவர் பெயர்விழப்பிற்கு பல காரணங்களுண்டு. இக்காரணிகளை அரசியல், பொருளாதார, சமூகக் காரணிகளென மீண்டும் வகைப்படுத்தலாம். 1974 இல் கெபினட் செயற்குழு மூலம் ஆராய்ந்து சமர்ப்பிக்கப்பட்ட இலங்கையில் பிரதானமான பல காரணங்களுண்டு. இவை நாட்டிலிருந்து தள்ளப்படுவதற்கான உந்துவிசை, பிறநாடொன்றின் பால் ஈர்க்கும் கவர்ச்சிவிசை என இருவகைப்படும். நம் நாட்டில் பொருளாதாரமே பிரதான காரணியாக விளங்குகின்றது. நம்நாட்டிலுள்ள நிபுணர்கள் (Consultants) தாய்நாட்டிலும் தலைசிறந்த கொடுப்பனவுகளைப் பெற்றபோதும் விருத்தியடைந்த நாடுகளில் இங்கு பெறுவதைவிட நான்கு, ஐந்து மடங்கு அதிகமாகக் கிடைப்பதால் நாட்டைவிட்டு வெளியேறுவதில்

ஊக்கம் காட்டுகின்றனர். இவ்வாறு வெளிநாட்டில் உழைத்த ஊதியத்தின் மூலம் அந்நாட்டிலும் இந்நாட்டிலும் தனிப்பட்ட தேவைகளை உயரளவில் பூர்த்தி செய்துகொள்ள உபயோகிக்க முடியும்.
மேலும் உயர்பரீட்சைகளில் சித்தியடைதல், உயர் தகைமை படைத்த நிபுணர் குழுவினருடன் சேவை யாற்றுவதில் உள்ள அளவற்ற ஆர்வம், ஆய்வுகளை முன்னெடுப்பதற்கும் சேவையை வழங்குவதில் அதிகளவு வளங்கள் விருத்தியடைந்த நாடுகளில் காணப்படுவதும் மற்றுமொரு காரணமாகும். அவற்றுடன் ஒப்பிடும்போது தேசிய உயர்கல்வி போதியளவு வளர்ச்சியடையாமையும் முக்கிய காரணங்களிலொன்றாகும். எதிர்காலத்தில் தமது பிள்ளைச் செல்வங்களுக்கு வெளிநாட்டுக்கல்வியை வழங்குவதற்கும், அக்கல்வியின் காரணமாக தொழில் சார்பாக நிலவும் சவால்களை வெற்றிகொள்ளும் உணர்வும் மற்றுமொரு காரணியாகும்.
கல்விமான்களும் நிபுணர்களும் இந்நாட்டிலிருந்து வெளியேறுவதில் நம்நாட்டு ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் தொலைநோக்கின்றிய, புத்திசாதுரிய மற்ற செயற்பாடுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஐந்தாண்டுகளுக்கொரு முறை மாற்றமுறும் அரசியல் அரங்கில், உயர் தொழில்களில் ஈடுபட்டிருக்கும் ஆனால் தொழிற்சங்கம் or கட்சி சார்புகளற்ற மேதைகளுக்கு இன்னோரன்ன இன்னல்/இடையூறுகளுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்றது. இந்நிலைமையின் கீழ்,
தொழிலில் திருப்தியின்மை - நியமனத்தில் (Appointment) பொறுப்புடன் செயற்பட
முடியாமை - இடமாற்றம், பதவியுயர்வு ஆகிய விடயங்களில்
மோசடி, பாரபட்சங்கள் நிகழ்தல் என்பன நாட்டில் வசிப்பது வெறுப்பான விடயமாக ஆக்குகின்றது.
grud T60TGLDGd5(guib (Decision Making) GaulsburTL96) தொழில்சார் நிபுணர்களின் வழிகாட்டல் பெறப்படாமையினால் அவர்களது நிபுணத்துவ அறிவு புறக்கணிக்கப்படுவதாகவும் ஆழ்மனதில் கவலையுடன் காணப்படுகின்றனர். இவ்வாறு நிர்வாக முறையில் மற்றும் சமூகத்தில் நிலவும் உரியவர் களுக்கு உரிய இடம் கிடைக்காமை இந்நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுவதில் ஆதாரமாய் அமைகின்றது.
கெபினட் செயற்குழு அறிக்கை கொண்டிருக்கும் ஏனைய காரணங்களாக
-- பதவியுயர்வு பெறும் ஆர்வம் பெருமளவு காணப்படாமை
கருவிகளின் பற்றாக்குறை
அகவிழி ஜூன் 2013

Page 44
பிற நிறுவனங்களின் உதவி மட்டுப்படுத்தபபட்டிருத்தல்
நிறுவனத்தின் பிற்போக்கு சர்வதேச வல்லுனர்களுடன் சேவையாற்ற, உயர் தொழிநுட்ப முறைகள், அறிவியல் உபகரணங்கள் என்பவற்றின் பயன்பாடு குன்றியிருப்பதும் ஏனைய காரணங்களாகும்.
திறவறிவர் பெயர்விழப்பைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
வளர்ச்சியடையும் நாடுகளில் வசிக்கும் புத்திஜீவிகள் அந்நாடுகளிலுள்ள அதிஉன்னத வளங்களாகும். அதேபோன்று பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களிற்கு அவசியமான பயிற்றப்பட்ட ஊழியர்படை மற்றும் நுன்மதி படைத்தோர் குறைவடையுமிடத்து அந்நாடுகளின் அபிவிருத்தி நடவடிக்கைகள் பெருமளவில் குறைவடையும். இந்நிலைமை மூன்றாம் உலக நாடுகளிற்கு பெருமளவு பாதிப்பைத்தரும். யாதேனுமொரு நாடொன்றிற்கு தனது நாட்டு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அவசியமான நிபுணர்கள் போதியளவு காணப்படாதவிடத்து அச் செயற்பாடுகளை கைவிடும் நிலைக்குத் தள்ளப்படல் பல பிரச்சினைகளுக்கு காரணமாக அமையும்.
இதனால் மூன்றாம் உலக நாடுகள் திறவறிவர் பெயர்விழப்பை இயன்றளவு கட்டுப்பாட்டில் வைத்திருத்தல் வேண்டும். இதற்காக செய்யவேண்டிய செயற்பாடுகள் பலவுண்டு. அறிவு (Knowledge) துரிதமாக வளர்ச்சியடையும் உலகில் அவ் அறிவைப் பெற்றுக்கொள்வதற்கான அடிப்படை வசதிகளை அறிவுத் தாகத்தில் தவிக்கும் மூளைசாலிகளுக்கு பெற்றுக் கொடுப்பது ஒரு மாற்று வழியாகும். சொகுசுப் பண்டங்களைவிட நூல்கள், சஞ்சிகைகள், journals அவர்களுக்கு மிகவும் பெறுமதி வாய்ந்த பொருட்களாக அமையும். (சர்வதேச இலத்தி ரனியல் நூலக சேவைகள் பெற்றுக்கொடுத்தல் இங்கு சாலப்பொருந்தும்)
அதேபோன்று, பிரதானமாக தொழில் வல்லுனர்களை அத்துறையிலுள்ள நிபுணர்களாக அங்கீகரித்தல் வேண்டும். அவர்களது துறைசார் தீர்மானங்கள், தீர்மானம் நிறை வேற்றல், மற்றும் அவற்றின் பிரதிபலன்கள் பற்றிய பொறுப்பு என்பவற்றிற்கான உரிமையை அவர்களுக்கு வழங்குதல் வேண்டும். அரசியல் கட்சியெனும் வியாதி தொற்றாது தமது சேவைகளை நிறைவேற்ற வல்லுனர் களுக்கு வசதியளித்தல் வேண்டும். இவர்களை தாய் நாட்டிற்கு கண்ணியமளிக்கும், தாய்நாட்டில் சேவையாற்ற விருப்புள்ள மனப்படைத்தவர்களாக மாற்றியமைக்க கல்வித்திட்டமும் புதிய முறையில் திட்டமிடப்படல் வேண்டும். சீனாவின் கல்வி இலக்குகளிடையே அமையும் “செந்நிற மற்றும் நிபுணர் நிலையுடைய நிபுணர் மற்றும் செந்நிறமான” எனும் கருத்தும் “கருமமாற்றுவோர் மூளைசாலிகளாகும், மூளைசாலிகள் கருமமாற்றுவோர்”
அகவிழி 1 ஜூன் 2013

எனும் கருத்தை எமது கல்வித்திட்டத்தில் எமக்கு பொருந்தும் வகையில் உள்ளடக்கப்படல் வேண்டும்.
அதேபோன்று ஒவ்வொரு ஏழுஎட்டு வருடங்களிற் கொருமுறை பிறநாடொன்றில் கல்விபயில அல்லது சேவையாற்ற விடுமுறை வழங்குவதும் மிகவும் பொருத்த மானது. இதன்மூலம் கல்விமான்களுக்கு தமக்குத் தேவைப்படும் அறிவு, அனுபவம் அல்லது ஊதியம் பெறுவதற்கு அது வழியமைக்கும். அவ்விடுமுறையின் பின்னர் மீண்டும் சேவைக்கு சமூகமளிக்கும் போது, அவர்களுக்கு மீண்டும் முன்னர் பணியாற்றிய அதே நிலையில் பணியாற்றவும், தரஉயர்வு பெறுவதற்கும் வசதிவாய்ப்புகள் வழங்குதல் வேண்டும்.
மூளைசாலிகளுக்கு மிகவும் பெறுமதிவாய்ந்த நூ ல்கள் சஞ்சிகைகளை இலகுமுறையில், குறைந்த விலையில் பெற்றுக்கொள்வதற்கு வரிச்சலுகை (Tax) வழங்குதல் மற்றும் நூல்களை பரிமாற்றம் செய்யக்கூடிய சேவை நிலையமொன்றை நிறுவுதலும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வாறு அடிப்படை வசதிகள் கிடைக்குமிடத்து நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான ஆர்வம் குறைவடையும். பட்டப்பின்படிப்புகளை தாய்நாட்டில் பெற்றுக்கொள்வதற்கும் அக்கறைகளுக்கு உரிய தரஉயர்வு வழங்குவதற்கும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படல் வேண்டும்.
இப்பிரச்சினையை நெடுங்காலமாக தீர்ப்பதற்கு எடுக்கக்கூடிய சிறந்தமுறை கல்வியை உரிய முறையில் திட்மிட்டு வழங்குவதாகும். நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு எடுத்த தீர்மானம் பெரும்பாலும் காணப்படும் நிலவரங் களைவிட பிள்ளைப்பருவத்தில் ஏற்பட்ட கற்றலொன்றின் வெளிப்பாடாகவும் அமைய முடியும். அபிவிருத்தி யடைந்து வரும் ஏனைய நாடுகளைப் போன்று இலங்கையிலும் கிராமத்திலிருந்தே குடிபெயர்வு ஆரம்பிக்கின்றது.
வாழ்க்கைக் கோலம் நகரை முன்மாதிரியாகக் கொண்டு உருவாவதுடன் கல்விக்களம் வெளிநாட்டிலிருந்து உருவான பாடசாலைகளை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆளொருவரில் தான் குறிப்பிட்ட இனத்திற்கும், சமுகத்திற்கும் உரியவரென்பதை உணர்த்தி தனது சூழலுடன் இசைவாக்கமடையச் செய்வற்கு இவ் இரு துறைகளும் தவறிவிட்டன. கிராமியச்சூழலில் கிடைப்பதற்கு அரிதான நுண்மதிசார் மாற்றம் பெளதீக எதிர்பார்ப்புகளையேற்படுத்தி, பாடசாலை மாணவர்களில் தனது சுற்றுச் சூழலைப் பற்றிய வெறுப்பேற்படும் வகையிலான கணிப்பீட்டு முறைகளை செயற்படுத்துவது அதன் மூலம் இடம்பெறுகின்றது சுயாதின மேம்பாட்டிற்கும், நாட்டின் தனித்துவத்திற்கும் தொடர்புடைய அறிவிலிருந்து மாணவர்களை அப்பாற் செலுத்தும் பாடசாலைகள், அவர்களை நகரின்பால் விரட்டியடிக்கின்றன.
“கற்றவர்கள் உயர் சமூக பண்பாட்டு அடைவு மட்டங்களைப் பெறுவதன் விளைவு அவனை அடிப்படைக்

Page 45
கோட்பாடுகளின்றிய, இறுதிப்பயன்பாடின்றிய பிரஜையாக உருவாக்குவதாகும்” கிராமத்திலிருந்து நகரிற்கும், நகரிலிருந்து - தலைநகரிற்கும், அவன் புறப்பட்டுச் சென்று இறுதியில் வெளிநாடொன்றில் வளம்பெறுவதில் முடிவடையும்.
இதனால் கல்வியின் குறிக்கோள்களையும் அதே போன்று கல்வி முறையையும் மீள்கட்டமைப்புச் செய்தல் வேண்டும். தேசியக் குறைபாடுகளை, மற்றும் தேவைகளை நிவர்த்தி செய்யும் உள்நாட்டு நிபுணர்களை உருவாக்குவது இன்றியமையாதது.
இந்ாட்டில் வழங்கப்படும் பட்டப்படிப்புகளை தேசியப் பட்டப் படிப்புகளாக தரமுயர்த்தல், தேசியத் தேவைகளை நிவர்த்தி செய்யும் பயிற்றப்பட்ட ஊழியர்களாக மேம் படுத்தல், சிறு கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய நோய்த்தடுப்பு நிபுணர்களை (Preventive Medicine) உரு வாக்குதல் மூலம் தேவையான தொழில் வல்லுனர்களை உள்நாட்டில் உருவாக்க அரசினால் முடியும். மேலும்,
"மேலைத்தேய பரீட்சை நடைமுறைகளைப் பின்பற்றல், லண்டன் பரீட்சைகளுக்கு வாய்ப்பளித்தல் என்பன நடைமுறையிலிருக்கும் வரையில் திறவறிவர் பெயர்விழப்பை கட்டுப்படுத்துவது கடினமாகவேயிருக்கும்”
இலங்கையின் கல்வி முறையில் காணப்படும் குறைபாடுகளே திறவறிவர் பெயர்விழப்பை ஊக்குவிக்கும் பிரதான காரணியாக செயற்படுகின்றது. காலணித்துவ வாதிகள் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வித் திட்டத்தில் பயிற்சி பெறும் கல்விமான்கள் நாட்டின் மீது கரிசனை கொள்வதை விட விடயத்தின்பால் ஈர்க்கப்படுவதும், நாட்டின் மீது பற்று வைப்பதைவிட தனது விடயத்தின் மீது கண்ணும் கருத்துமாகயிருப்பது கவனிக்கத்தக்க விடயங்களாகும்.
“இலங்கை உட்பட அனேகமான மூன்றாம் உலக நாடுகளில் கல்வித்திட்டங்கள் செயற்படுத்தப்படுவது, நாட்டிற்குப் பொருத்தமான, நாட்டுப்பற்றுடைய கல்விமான் களை உருவாக்குவதை விட, தான், தனதுவிடயப்பரப்பு, பட்டம் என்பவற்றில் பற்றுடைய சுயநலவாதிகளை உருவாக்குவதற்காகும்”
இவ் அறிஞர்கள் பெறும் பட்டச்சான்றிதழ் வேறு நாடுகளை நோக்கிப் புறப்படுவதற்கு வழங்கும் அனுமதிப் பத்திரமாகும். இவ்வாறு புதிய அறிவைப் பெற, துறையில் நிபுணத்துவம்பெற, இலகுமுறை நகர்வாகும். “இதனால் நிலைமை அறிந்து இலங்கையின் கல்வித்திட்டம் வகுக்கப்படல் வேண்டும்”
திறவறிவர் பெயர்விழப்பினால் விளையும் நன்மைகள்
பொதுவாக நோக்குமிடத்து பாதிப்புகள் அதிகமிருந்த போதும் சில நன்மைகளையும் பெற வழிவகைகளுண்டு.

1) மேலதிகமாக ஊழியர்களைப் பயிற்றுவித்து வெளி நாடனுப்பி மேலதிக அன்னியச் செலாவணியைப் பெறல்.
2) இவ்வாறு பெறப்படும் அன்னியச் செலாவணி மூலம் தேசியக் கல்விப் பிரச்சினையில் தீர்வு காணல் புதிய கற்றல் உபகரணங்கள், பாடசாலை, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை நிறுவுதல். 3) பெயர்ந்து செல்வோர் மூலம் நவீன ஆய்வு நுட்பங்கள், ஆய்வு அறிக்கைகள், பிறநாட்டு ஜேர்னல்கள் (Journals) என்பவற்றை வரவழைப்பதன்மூலம் அறிவுப் பரவலிற்கு வழிவகுத்தல். 4) TOKTEN எனும் அமைப்பின் தொடர்புகள் ஏற்படல் (Transfer of know how thought expariate Nationals) அதாவது புலம்பெயர்ந்து விட்ட நிபுணர்களை மீள வரவழைப்பதற்கான உத்திகள். 5) ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் பணியாற்ற வரும் பிறநாட்டுப் பிரஜைகளுக்குப் பதிலாக இந்நாட்டிலிருந்து புலம் பெயர்ந்து அறிஞர் களை வரவழைத்து மேலும் சிறந்த சேவையைப் பெறல். இது துருக்கி, எகிப்து, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் மிகவும் வெற்றிகண்டுள்ளது.
கலந்துரையாடல்
இலங்கையின் மனிதவள முகாமைத்துவம் திறமையான முறையில் நிர்வகிக்கப்படல் வேண்டும். நாட்டிற்கு அவசியமான மனித வளங்களையும், நாட்டின் அபி விருத்திக்கு அவசியமான ஊழியர்படையை கட்டாயமாக நாட்டில்வைத்துக்கொள்ளவும், மேலதிக ஊழியர்படையை வெளிநாடனுப்பி அறிவு, நிதி என்பவற்றுடன் தாய்நாட்டிற்கு வரவழைத்துக் கொள்ளவும் செயற்பாடுகள் அமுல்ப் படுத்தப்படுமாயின் அவை மிகவும் புத்திசாதுரியமான நடவடிக்கைகளாக அமையும். வெளிநாட்டிவிருந்து மீள வருகைதருபவர்களின் அறிவுஞானம், நிதி, என்பவற்றை தாய்மண்ணின் அபிவிருத்தியில் ஈடுபடுத்துவதும், அந்நியச் செலாவணியை நம்நாட்டு வங்கிகளில் வைப்புச் செய் வதற்கு வழிவகைகளை மேற்கொள்வதும், அந்நிதிமூலம் கல்விக்களத்தை புனரமைக்க முன்வருவதும் தற்போது காணப்படும் நச்சுவட்டத்தை உடைத்தெறிய சிறந்த செயற்பாடுகளாகும்.
“இவ்வழிமுறைமூலம், பெயர்விழப்பில் புதிய ஐரோப்பிய காலனித்துவத்தை ஏற்படுத்துவதில் சாத்தியமாகக்கூடிய வாய்ப்புகளை துடைத்தெறிந்து, குன்றியிருக்கும் அபிவிருத்தியை ஆர்முடுக்கி சிறந்த அபிவிருத்தியை ஏற்படுத்தக் கூடிய ஆதாரமாக இதனை உபயோகிப்போம்.
அகவிழி ஜூன் 2013

Page 46
ஒத்த வயதுடைய குழந்தைகளோடு விளையாட வாய்ப்பு மறுக்
சில குழந்தைகளுக்கு ஒத்த வயதிலுள்ள பிற குழந்தைகளுட மறக்கப்படுகின்றன. உயர்குடி மக்கள் - தாழ்குடி மக்கள் செ6 வேறுபடுவோர், உடல்நலமுற்றோர், ஒத்த வயதினருடன் பழ வயதினருடன் பழகாமையால் சமூக இயல்பு பெறாதிருப்பதுட6
இவ்விதக் குழந்தைகளைப் பள்ளியில் பிற குழந்தைக கொள்ளும் படி சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்தும் சாரணரியக்க
அவர்களை முறையான சமூகவியல்பினராக்கலாம்.
ஒத்த வயதினருடன் விளையாட மறுக்கும் குழந்தைக்
ஒத்த வயதுடைய குழந்தைகளுடன் விளையாட மறுக்கும் குழ கூடும். போதிய சமூக வளர்ச்சி எழ வாய்ப்புகள் இளம் பருவ விளையாடச் சில குழந்தைகள் விரும்ப மாட்டார்கள். வீட்டில் ஒே மறுப்பதைக் காணலாம். தாழ்வுணர்ச்சியின் விளைவாகவும், கூ பிறருடன் விளையாட மறுப்பர். இத்தகைய குழந்தைகளை நன்கு இத்தகைய நடத்தைக்கான காரணங்களை ஆசிரியர் கண்டறி வெற்றி பெறக் கூடிய எளிய விளையாட்டுகளில் இத்தகையோ போன்ற பல்வேறு வழிகளை ஆசிரியர் கையாளலாம்.
உயர்வான தன் மதிப்பீட்டை குழந்தைகளிடம்
தன் மதிப்பீடு என்பதனைத் தற்கருத்து (SelfConcepts) என இக்கருத்து ஆக்க முறையிலமைந்து (Positive) நமக்கே மகிழ் வாழ்க்கை சிறப்பாக அமையும். இத்தகைய உடன்பாட்டுத் த வாழ்க்கையில் சாதனை மேலும் உயர்வதற்கும் அடிப்படை. கு ஆகியன அதன் தற்கருத்தின் தன்மையைப் பொறுத்தது. த உள்ளடக்கியிருத்தல் வேண்டும். இவ்வாறின்றித் தற்கருத்தில் நம்பிக்கை இல்லாதிருத்தல் போன்றன காணப்பட்டால், நடத் பிரச்சினைகளும் கருத்துக்கள், உணர்ச்சிகள், மனப்பான்மைக
தற்கருத்து படிப்படியாகவும் பல்வேறு காரணிகளின் பயனாகவ
(1) தற்கருத்து உருவாதலில் குழந்தையின் குடும்பத்துக்குச்
முன்மாதிரி நடத்தை, குழந்தையிடம் அவர்கள் நடந்து ெ ஆகியன காணப்படுகின்றனவா அல்லது மகிழ்ச்சியின்மை பல குடும்பக் காரணிகள் குழந்தையின் தற்கருத்தின் த
(ii) சமூக உறுப்பினர்களது செல்வாக்கும் இவர்கள் குழந்ை
தற்கருத்து வளர்ச்சியின் முக்கிய காரணியாகும்.
(i) பள்ளியில் ஆசிரியர்களது செல்வாக்கு நண்பர்களது பா
(ty) வளரும் குழந்தையின் உடல், மனம், மற்றும் சமூகத்
அளவுக்கு அதன் தற்கருத்து நல்ல முறையில் அமையும். தற்கருத்து நல்ல முறையில் வளர உதவும். தனது 1 அவற்றைத் தன்னுள் அமைத்தும், குழந்தை நல்ல தற்க
(v) சிறப்பாக, குழந்தையின் நடத்தை நன்கு அமைந்துள்ளது 6 அதனிடம் நடந்து கொள்வதுடன், தனது பண்புகள் பிற அதனிடம் எழுவதும் விரும்பத்தக்கது.
அகவிழி ஜூன் 2013

கப்படும் குழந்தைகளுக்கு ஆசிரியரின் வழிகாட்டுதல் யாவை?
ன் பழகும் வாய்ப்புகள் சில பெற்றோர்களால், உறவினர்களால் ல்வந்தர் - ஏழைகள் - மதத்தால் வேறுபடுவோர், சூழ்நிலையால் க வாய்ப்பளிக்க மறுக்கின்றனர். இவ்விதக் குழந்தைகள் ஒத்த ள் சிலபோது தாழ்வுணர்ச்சியும் பெறுவர்.
ளுடன் பழக வைத்தும், அனைத்துக் குழந்தைகளும் கலந்து ம், செஞ்சிலுவைச் சங்கம் போன்ற இயக்கங்களில் ஈடுபடுத்தியும்
களுக்கு ஆசிரியர் எவ்வாறு வழிகாட்டுதல் வேண்டும்?
2ந்தைகளது இத்தகைய நடத்தைக்குப் பல காரணிகள் இருக்கக் பத்தில் குறைந்து காணப்படுதலின் விளைவாகப் பிறருடன் பழகி ர குழந்தையாக வளர்க்கப்படும் குழந்தையும் பிறருடன் விளையாட டிச்சம், தொடர்ந்த தோல்வி போன்றவற்றின் விளைவாகவும் சிலர் த கவனித்து, இவர்களது குடும்பச் சூழ்நிலையினையும் ஆராய்ந்து ந்து நீக்கவேண்டும். பிரிவு, அரவணைப்பு, உற்சாகப்படுத்துதல், ரை ஈடுபடுத்துதல், குழுச் செயல்களில் பங்கு பெறத் தூண்டுதல்
ஏற்படுத்துவதில் ஆசிரியரின் வகிபங்கு யாது?
லாம். நம்மைப் பற்றி நாம் கொண்டுள்ள கருத்து, தற்கருத்தாகும். ழ்ச்சியையும் தன்னம்பிக்கையினையும் அளிப்பதாக இருப்பின் நம் ற்கருத்து நம் ஆளுமை இசைவான முழுவளர்ச்சியடைவதற்கும் ழந்தையினது கல்வி முன்னேற்றம், பொருத்தபாடுடைய நடத்தை ற்கருத்து, சிறப்பான தன்மதிப்பு, தன்னம்பிக்கை போன்றவற்றை தாழ்வு மனப்பான்மை, குற்ற உணர்வு, தன் திறன்களில் தனக்கே ததையும் சாதனையும் கீழ்நிலைப்படுவதுடன், பொருத்தப்பாட்டுப் ள் போன்றவற்றின் தொகுப்பாக அதன் தற்கருத்து அமைகிறது. பும் எழுகிறது.
சிறப்பான பங்கு உண்டு, மரபு நிலை, குடும்பப் பேற்றோர்களது காள்ளும் முறை, குடும்பத்தில் அன்பு, பிரிவு, ஏற்பு (Acceptance) , வெறுப்பு, புறக்கணிப்பு போன்றன காணப்படுகின்றனவா போன்ற ன்மையை நிர்ணயிக்கின்றன.
தயிடம் எவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதும் குழந்தையின்
திப்பு போன்றனவும் தற்கருத்து வளர்ச்சியில் பங்கு பெறுகின்றன.
தேவைகள் எந்த அளவுக்கு நிறைவு பெறுகின்றனவோ அந்த வெற்றி வாய்ப்புகள் தன்னம்பிக்கையை வளர்த்துக் குழந்தையின் மதிப்பைப் பெற்ற முதியவர்களது நற்பண்புகளில் ஒன்றிப்போய் கருத்தைப் பெறும்
என்ற எண்ணம் அதன் மனத்தில் ஏற்படும் வகையில் சமுதாயத்தினர் றரால் பாராட்டப்படுகின்றன என்ற உடனடி அறிவு (Reedback)
நன்றி: கல்வி உளவியல்

Page 47
சந்தா விண்ணப்பப் படிவம்
பெயர் (முழுப் பெயர்)
கற்பிக்கும் பாடசாலை
பாடசாலை முகவரி - தொலைபேசி/தொலைநகல் இல. ! உ
மின்அஞ்சல் முகவரி
கற்பிக்கும் பிரிவு - அகவிழி அனுப்ப வேண்டிய முகவரி: ட
இத்துடன் ரூபா க்கான காசோலை/காசு
இல ( ) இணைத்துள்ளேன்.
கையொப்பம்
555.1 632.2 545 dros 660au
அகவிழி சந்தா செலுத்த விரும்புவோர் மற்றும் அகவிழி வெளியீடுகளை நேரடியாகப் பெறப் பணம் செலுத்த விரும்பு வோருக்கான சில எளிய வழிமுறைகள் அகவிழி கொமஷல் வங்கி வெள்ளவத்தை நடைமுறைக் கணக்கு எண் 100022581 Commercial வங்கியின் எந்த கிளைகளி லிருந்தும் அகவிழி கணக்கு எண்ணுக்கு சந்தா அல்லது புத்தக விலையை பணமாக வைப்பு செய்து அதன் பற்றுச்சிட்டை எங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வங்கி கமிஷன் இல்லை பிற வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் VILUTHU - AHAVIL பெயருக்கு காசோலை எழுதி அகவிழி கணக்கு எண்னைக் குறிப்பிட்டு உள்ளூர் Commercial வங்கியில் வைப்பு செய்யலாம். மேற்படி வழிமுறைகளில் பணம் அனுப்புவர்கள் செலுத்தப் பட்ட தொகை, தேதி, இடம், நாள் மற்றும் தேவைகளைக் குறிப்பிட்டு அகவிழி தலைமை அலுவலக முகவரிக்கு கடிதம் எழுதவேண்டுகிறோம். அல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சந்தா விபரம் தனி இதழ் : 100/- ஆண்டு சந்தா (தபால் செலவுடன்) : 1200/-
ار ܢܠ
 

உதவிதி
3, Torrington avenue, Colombo - 07 Tel : 011-2506272, Fax: 011-2585190 Email: ahavili.vilithu(agmail.com
ஆரம்பம்/இடைநிலை/உயர்தரம்
க் கட்டளையை
திகதி :
இப்படிவத்தை போட்டோ பிரதிசெய்து உபயோகிக்கவும்.
SSSSSSSSSSSSSSSSSSS>é
அகவிழி விளம்பரக் கட்டம்ை
பின் அட்டை 7OOO/-
உள் அட்டை (முன்) . GOOO/- உள் அட்டை (பின்) : 5000/-
உள் பக்கம் : 4000/-
நடு இருபக்கங்கள் : 6500/-
agn is g,
Colombo 3, Torrington Avenue, Colombo-07. Tel: O11-2506272 Jafna 167, Hospital Road, Jaffna. Tel: O21-2229866 Trincomalee 81 A. Rajavarodayam Street, Trincomalee Tel: O26.2224941 Batticaloa 37, Old Rest House Road, Tel: O65-2222097

Page 48
@園安
கிடைக்கு பூபாலசிங்கம் புத்தகக்கடை 202, செட்டியார் தெரு, கொழும்பு - 11 தொ.பே.இல. 011-2422321
பூபாலசிங்கம் புத்தகக்கடை 4A, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம் தொ.பே.இல. 021-2226693
நியூ கேசவன் புக்ஸ்டோல் 52 டன்பார் வீதி, ஹட்டன் தொ.பே.இல. 051-2222504, O5I-2222,977
அறிவாலயம் புத்தகக்கடை 190 B புகையிரத வீதி, வைரவப்புளியங்குளம், வவுனியா தொ.பே.இல.: 024-4920733
நூர் மொஹமட் நியூஸ் ஏஜண்ட் 132, பிரதான வீதி, கிண்ணியா-03 தொ.பே.இல. O26-2236266
புக் லாப் 20, 22 சேர் பொன் ராமநாதன் வீதி, பரமேஸ்வரா சந்தி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம் தொ.பே.இல: 021-2227290, கை.தொ.இல. 077-1285749
இஸ்லாமிக் புத்தக இல்லம் 77, தெமட்டக்கொட வீதி, கொழும்பு - 09 தொ.பே.இல. 011-2688102
Noori Book Shop No. 143, Main Street, Kathankudi Tel.: 065-2246883
Easwaran Book Depot No. 126/1, Colombo Street, Kandy Tel. 081-2220820
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மிடங்கள்
பூபாலசிங்கம் புத்தகக்கடை 309-A 2/3 காலி வீதி, வெள்ளவத்தை, கொழும்பு தொ.பே.இல.: 4515775, 2504266
அபிஷா புத்தகக்கடை 137, பிரதான வீதி, தலவாக்களை தொ.பே.இல. 052-2258437
குமரன் புக் சென்டர் 18, டெய்லிபயர் கொம்பிலக்ஸ் நுவரெலியா தொ.பே.இல. 052-2223416
அல்குரசி புத்தக நிலையம் 28, 1/2, புகையிரத வீதி, மாத்தளை தொ.பே.இல. 066-3662228
அறிவுநதி புத்தகசாலை இல 06, கனகபுரம் வீதி, கிளிநொச்சி
தொ.பே.இல. 077 6737535
S. சச்சிதானந்தகுமார் 19/26, மாரியம்மன் கோவில் வீதி, கல்லடி, மட்டக்களப்பு தொ.பே.இல. 077-1270458
எஸ்.எல். மண்சூர் அனாசமி டொட் கொம். அட்டாளைச்சேனை- 10 தொ.பே.இல. 0779059684, O752929 150
Zeen Baby Care 121 B.Arm Mill Road, Addalaichenai – 01. Tel.: 077 3651 138
அண்பு எப்டோர்ஸ் 14 பிரதான வீதி, கல்முனை தொ.பே.இல. 067-2229540
ed by 回 口 esis (Pvt)Ltd.
Colomb
Co. 體 O6 D
of Sri Lanka under OD/16/News/2013
ISSN 1800-1246
|
7? 7? Il, B O O"], 2 L-4 0 0 5 -