கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய சுகாதாரக்கல்வி

Page 1

, , |× sae
.

Page 2

புதிய
சுகாதாரக் கல்வி
10
புதிய பாடத்திட்டத்திற்கு அமைவானது
ஆக்கியோர்:
S. Glassi)6), brusúb B. Sc. Dip-in-Ed. Gaysian Dr. S. angry 6örgasi) M. B. B. S.
பதிப்புரிமையுடிையது
மாசில் பதிப்பகம் ஈச்சமோட்டிை வீதி யாழ்ப்பானம்

Page 3
திருத்திய முதற்பதிப்பு பங்குனி - 1983
அச்சுப்பதிப்பு தசமகள் அச்சகம், யாழ்ப்பாணம்,
 
 
 
 
 
 

முன்னுரை
புதிய பாடத்திட்டத்திற்கமைய இந்நூல் எழுதப்பட்டுள் ளது. விஞ்ஞான ஆசிரியரான திரு. செல்வநாயகம் சுகாதா ரவியல் பரீட்சகராகக் கடமையாற்றி அனுபவம் வாய்ந்த வர். செல்வி Dr. பிரான்சிஸ் வைத்தியத்துறையில் நவீன நடைமுறைகளைக் கற்றுத் தேர்ந்தவர். சில காலம் யாழ். மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளராகக் கடமையாற்றி யவர், இருவரினதும் முயற்சியால் இந்நூல் மாணவருக்குப் பயன்படும் முறையில் வெளியாகின்றது. இதில் விஞ்ஞான மருத்துவத்துறையில் வழங்கும் கலைச்சொற்களே பயன்படுத் தப்பட்டுள்ளன. புள்ளி விபரங்கள் இலங்கை M. R. 1. ஸ்தா பனத்தாரின் ஆராய்வுகளை அடிப்படையாகக் கொண்டவை. இலங்கையர்க்கு பொருத்தமானவை. இப்பொழுது கையா ளப்படும் S. 1. அலகு முறையே நிறை , நீளம், சக்தி முதலிய வற்றிற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர்களும், மாணவர்களும் இந்நூல்களை வரவேற் பர் என எண்ணுகின்ருேம். ஐயப்பாடுகளிருப்பின் எமக் கெழுதவும் சுகாதாரக் கல்வியின் ஒரு பகுதியான உடற்கல்வி தனிநூலாக அச்சிடப்பட்டுள்ளது. இதை 6 ம் வகுப்புத் தொடங்கி 10-ம் வகுப்பு வரை உபயோகிக்கலாம்.
பதிப்பாளர்

Page 4
L. :
குருதிச்சுற்றேட்டத்தின் அமைப்பும் தொழிலும்: குருதிச்சுற்ருேட்ட நோய்கள் - சோகை - உயர் தாழ் குருதி அமுக்கம்-வாதக்காய்ச்சல்-இந்நோய்களுக்கான காரணங்கள் -இதயநோய் காரணிகள்-இவற்றைத் தடுக்கும் முறைகள். இயைபாக்கமும் சீராக்கலும் நரம்புத் தொகுதியின் அமைப்பும் தொழிலும் நரம்புவாதை - மெனிஞ்சயிற்றிஸ், இளம்பிள்ளைவாதம், விசர்நாய் கடிநோய் - இந்நோய்கள் வராது தடுத்தல். கழித்தலும் இனப்பெருக்கமும் சிறுநீரகத் தொகுதியும் தொழிலும் - சிறுநீரக நோய்கள் - சிறுநீரக அழற்சி, சிறுநீரகக்கல், தடுப்பும் சிகிச்சையும் ஆண் இனப்பெருக்கத் தொகுதி - விந்தாக்கம் பெண் இனப்பெருக் கத்தொகுதி - மாதவிடாய் வட்டம் - முட்டையாக்கம் - கருக்கட்டல் - முளையம் விருத்தியடைதல் - இனப்பெருக்க உறுப்பு நோய்கள் -சிபிலிஸ் - கொனேரியா - நோய்களின் நிகழ்வும் தடுப்பும் சிகிச்சையும்.
அவசரநிலைமைகள் இலங்கையிலும் பிறதேசங்களிலும் விபத்துக்களும் உயிர்ச்சே தமும் சாலையில் வீட்டில் தொழிற்சுடங்களில் கல்லூரிகளில் நிகழும் விபத்துக்கள் - இவ்விபத்துக்களைத் தவிர்க்கும் வழி முறைகள் - சாலையொழுங்கு, தொழிற்கூடப் பாதுகாப்பு, நஞ்சுப் பொருள் விற்பனைக்கான சட்டங்கள்.
முதலுதவி முதலுதவியாளன் அறிந்திருக்க வேண்டிய நிலைபரங்கள் - முதலுதவி முறைகள் - பொதுவான இடையூறுகளுக்கான முதலுதவி.
நாட்பட்ட உடல்நோய்கள் புற்றுநோய், நீரிழிவு, ஒவ்வாமை அல்லது அலர்ச்சி நோய்கள், --சிகிச்சையும் வராது தடுக்கும் முறைகளும், உடல்நலக் குறைவும் அதன் பாதிப்பும் இலங்கையில் இறப்புக்கான நோய்நொடிகள், இறப்புவீதம் வாழ்வுக்காலம் ஆகியவற்றில் மாற்றங்கள் - தனிநபர்களுக் கும், அரசாங்கத்துக்கும் உடநலக்குறைவால் ஏற்படும் செல வுகள் - நாட்டின் சுகாதாரச்சேவை - தடுப்புமுறைகளும் கட் டுப்பாடும், அரசாங்க பொதுநலச் சங்கங்களின் சேவைகள், பயிற்சி
34
66
74
128
 
 
 

Luit I th 1 கொண்டு செல்லலும் பாதுகாப்பும். 1. கொண்டு செல்லும் தொகுதியின் அவசியம்.
ஒரு பெரிய நகரத்தில் மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றேரிடத்துக் குச் செல்ல வாகனங்கள் தேவைப்படுகின்றன. பொருட்களைக் காவிச் செல்ல லொறிகள், மாட்டுவண்டிகள் தேவைப்படுகின்றன. அதே போல உடலிலும் காவப்பட வேண்டிய தேவைகள் உண்டு. உதார ணமாகக் குடலில் உணவு உறிஞ்சப்படும். அதன் பின் அவ்வுணவு ஈரலுக்கும் உடலில் வேறு பகுதிகளுக்கும் கடத்தப்படல் வேண்டும். நுரையீரலில் உறிஞ்சப்படும் ஒட்சிசன் (0) மற்றைய பகுதிகளுக்குக் கடத்தப்படல் வேண்டும். உடற்கலங்களில் உண்டாகும் காபனீரொட் சைட்டு (CO) நுரையீரலுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். கழிக் கப்பட வேண்டிய பொருட்கள் சிறுநீரகத்துக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும், ܗ
தொற்றல் ஏற்படும் இடங்களை வெண்கலங்கள் சென்றடைய வேண்டும். வியர்வைப் பொருட்கள் தோலை வந்தடைய வேண்டும்: வெப்பம் உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப் பட் டாலே ஒரே சீரான வெப்ப நிலையைப் பேண முடியும். இவ்வாறு எமது உடலில் ஒரு பகுதியிலிருந்து இன்னெரு பகுதிக்குப் பல பொருட் களையும் கொண்டு செல்லும் ஒரு தொகுதி அத்தியாவசியமானதாகும். இத் தேவைகளைக் குருதிச் சுற்ருேட்டம் நிறைவேற்றுகின்றது.
2. குருதிச் சுற்றேட்டத்தின் பகுதிகள்.
போசணைப் பொருட்கள் கழிவுப்பொருட்கள் நீர் ஆகியன உடலின் பகுதிகள் யாவற்றினூடாகவும் கொண்டு செல்லப்படும். உடலினுள் டாக அவை கொண்டுசெல்லப்படுவதால் சுற்றேட்டம் எனப்படும். சுற் ருேட்டத்தோடு தொடர்பான பகுதிகள் யாவும் சுற்றேட்டத் தொகுதி அல்லது கொண்டு செல்லல் தொகுதி என அழைக்கப்படும்.
மனிதனின் சுற்ருேட்டத் தொகுதி ஏனைய விலங்குகளிலும் சிக்க லானது. உடலில் ஒரு பகுதியிலிருந்து இன்னெரு பகுதிக்குப் பதார்த் தங்களைக் கடத்துவதற்கு பயன்படும் பாய் பொருள் குருதி ஆகும். குருதி தொடர்ச்சியாகச் சுற்றியோடுவதற்கு குருதிக்கலன்கள் எனும் குழாய்கள் உண்டு. இது இதயம், நாடி, நாளம், மயிர்த்துளைக்குழாய் கள் ஆகிய பகுதிகளையுடையது. குருதிக்கலன்களினூடாக குருதி செலுத்தப்பட வேண்டிய விசையை இதயம் அளிக்கின்றது.
குருதியிலிருந்து வெளியேறிய கல இடைவெளிகளில் காணப்படும் "பாப்பொருள் நிணநீர் எனப்படும். இதைக் கொண்டு செல்ல நிண
நீர்க்கலன்கள் உண்டு.

Page 5
- 2 பல்
இதயம், நாடி, நாளம், மயிர்க்குழஜய்.
(1) இதயம் ! ஒரு தசைப்பற்றான பம்பி, இது குருதியைச் சேகரித்து பின் அமுக்கத்துடன் வெளியேற்றும்.
(2) நாடி: இதயத்திலிருந்து குருதியை எடுத்துச் செல்லும் குருதிக் குழாய்கள் ; தடிப்பான சுவருடையவை, மீளும் தன்மையும் இதன் சுவருக்குண்டு. இளஞ்சிவப்பு நிறமுடையது.
மயிர்க்குழாம்
நாளம்
நாடி
Int- வால்வு)
இதயம்
வாங்கும்
பம்பும் அறை
அறை
(3) நாளம்: குருதியை இதயம் நோக்கிக் கொண்டு வரும் குழாய் கள்: மெல்லிய சுவருடையவை. உள்ளே இடையிடையே வால்வுகள் உடையன இவ்வால்வுகள் குருதி பின்னோக்கிப் பாய்வதைத் தடுக் கும் நாளம் மெல்லிய சுவருடையதால் இருளான நீல நிற முடையது .
நாடி (வெட்டுமுகம்)
மடு
மயிர்க்குமாம்
நாளம்
8
10 3ெ
2ஜர் - வால்வு
உமா
தாடி
( ைன
செங்கலங்கள்
நாளம் (வெட்டுமுகம்)

- 3 -
(4) மயிர்க்குழாய்: ஓர் உறுப்பில் குருதியை விநியோகிப்பதற் காக அமைந்த நுண்ணிய பின்னற் குழாய்கள். தட்டையான கலங் களையுடைய சுவருடையன, பொருள்கள் இலகுவாக வெளியேறவும் உட்செல்லவும் உதவும்.
3. இதயத்தின் அமைப்பு
இதயம் ஒரு உட்குழிவான தசைசெறிந்த அங்கமாகும். அது தொடர்ச்சியாக சந்தமான முறையில் சுருங்கித் தளர்ந்து உடவின் எல்லாப் பகுதிகளுக்கும் குருதியை விநியோகிப்பதற்கு உதவும் . இத யம் நெஞ்சறையின் வயிற்றுப்புறமாக இரு சுவாசப்பைகளுக்கும் இடையில் நடுக்கோட்டில் சற்று " இடப்புறமாக அமைந்திருக்கும். கூம்பு வடிவான இதயத்தின் அகன்ற பாகம் மேல் நோக்கி வலது பக்கமாகவும் நுனி கீழ்நோக்கி இடது பக்கமாகவும் அமைந்துள்ளது. இதயம் இதயச் சுற்றுச் சவ்வினால் போர்க்கப்பட்டிருக்கும். இதயத் தின் வயிற்றுப்புற மேற்பரப்பில் பெருமளவு கொழுப்புப் படிவுகள் உண்டு.
வலது
இடது சுவாச சுவாச நாடி
நாடி வலது சுவாச
பெருநாடி நாளங்கள் -
வில் மேற்குழிய
இடது சுவாச நாளம்
நாளங்கள்
இடது சுவாச நாடி வில்
சோணையறை
இரு கூர் வலது சோணை .
வால்வு யறை
அரைமதி
வால்வு முக்கூர் வால்வு
இடது
இதயவறை அரைமதிவால்வு
இதயச்சுற்று
வலது
மென்சவ்வு இதயவறை
இதயத்தின் பகுதிகள் இதயத்தின் பகுதிகள்: இதயம் ஒரு பிரிசுவரினால் வலது இடது பாதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். வலது பாதியும் இடது பாதியும் ஒன்றுடனொன்று தொடர்பு கொள்வதில்லை. ஒவ்வொரு பாதியும் மெல் லிய சுவருடைய கூடம் அல்லது சோணையறையையும் தடித்த தசை செறிந்த இதயவறையையும் கொண்டிருக்கும். சோணையறைகள், மேற் பக்கமாகவும் இ த ய வ றை க ள் கீழ்ப்பக்கமாகவும் காணப்படும்.

Page 6
جیجے 4 حیاستے
ஒவ்வொரு சோணைய்றையும் அதே பக்கத்திலுள்ள இதயவறையு டன் ஒரு சிறிய துவாரத்தால் தொடர்புற்றிருக்கும். இத்துவாரங் களை இதய வால்வுகள் பாதுகாக்கின்றன. இவ்வால்வுகள் சோணே யறை இதயவறை வால்வுகள் எனப்படும். வலது சோணையறைக் கும் வலது இதயவறைக்கும் இடையிலுள்ள வால்வு முக்கூர் வால்வு எனப்படும். இடது சோனை யறைக்கும் இதயவறைக்கும் இடையி லுள்ள வால்வு இருகூர் வால்வு எனப்படும். இவ் வா ல் வு க ள் இதய நாண்கள் எனப்படும் நார் க ளி னு ல் இதயவறையின்
( కాanguau ། འཚོ་མྱི་
தலை, புயத்துக் துக்குரிய நாடி டி. சுவாச நாளம்
வலது சுவாச
15ITlg. Bayn வலது சோணை இடது சோ
யறை ” யறை
இரு கூர் வால்வு
முக்கூர் வால்வு ۔۔۔شہنچہ...خب
வலது
இதயவறை - и 160 ДО
முதுகுப்புற நாடி
ஈரல் நாளம் ,
கீழ்க்குழிய
நாளம் ஈரல்
வாயினுளம்
சிறுநீரக நாடி
இடது சோணை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

مساس 5 || -سسه
சுவருடன் தொடுக்கப்பட்டிருக்கும். இவ் வால்வுகள் சோணையறை களிலிருந்து குருதியை இதயவறைகளினுள்ளே செல்ல விடுகின்றன. ஆனல் இதயவறைகள் சுருங்கும்போது சோணையறைகளினுள்ளே குருதி மீண்டும் செல்ல விடாது தடுக்கும்.
வலச்சோணையறை கீழ்க்குழி நாளம் மேற்குழி நாளம் எனும் பெரு நாளங்கள் மூலம் குருதியைப் பெறும், இடச்சோணை நாளம் சுவாச நாளங்கள் மூலம் குருதியைப் பெறும் இதயவறைகளிலிருந்து நாடிகள் எழும். இடது இதய அறையிலிருந்து பெருநாடிவில்லும் வலது இதய அறையிலிருந்து சுவாசநாடியும் எழும்.
இதயத்திலிருந்து உற்பத்தியாகும் பெருநாடிகளின் அடிப்பகுதி களிலும் வால்வுகள் உண்டு. வலது இதயவறையிலிருந்து உற்பத்தி யாகும் சுவாசப்பைப் பெருநாடியின் அடியில் சுவாச நாடிக்குரிய வால்வுகளும் இடது இதயவறையிலிருந்து தோன்றும் தொகுதிப் பெருநாடியின் அடிப்பகுதியில் தொகுதிப் பெருநாடிக்குரிய வால்வுகளும் உண்டு இவை அரைமதி வால்வுகள் எனவும் அழைக்கப்படும். இவ் வால்வுகள் பெருநாடிகளினுள்ளே சென்ற குருதியை மீண்டும் இதய வறைக்குள் வரவிடாது தடுக்கும், -
இதயத் துடிப்பு: இதயம் சுருங்குவது இதயச் சுருக்கம் என வும் இதயம் விரிவது இதயவிரிவு எனவும் அழைக்கப்படும். இதய வறைகளும சோணையறைகளும் சுருங்குவதும் தளர்வதுமான முழுச் சுற்றென்றைக் கொண்டதாக ஒவ்வொரு இதயத்துடிப்பும் இருக்கும் இதயச்சோணைகளின் சுருக்கத்தைத் தொடர்ந்து இதயவறைகள் சுருங்குகின்றன. இதே ஒழுங்கில் விரிவும் நடைபெறுகின்றது. ஒரு சாதாரண மனிதனில் ஒரு நிமிடத்துக்கு இதயம் 72 தடவைகள் துடிக்கின்றது. சாதாரண இதயத் துடிப்பின்போது 'லப்" "டப்" என் னும் ஒலிகள் சத்தமான முறையில் ஒலிக்கும். இதயவறைகள் சுருங்கும்போது இரு கூர்வால்வும் முக்கர்வால்வும் மூடுவதால் 'லப்" ஒலி கேட்கிறது; இதயவறைத்தளர்வின்போது அரைமதி வால்வுகள் மூடுவதால் டப் ஒலி கேட்கின்றது.
வலது சோணையறையின் சுவரிலுள்ள பேஸ்மேக்கர் அல்லது இதயவியக்கி என்னும் இழையம் இதயத்துடிப்பை ஆரம்பிக்கின்றது. ஒவ்வொரு இதயத்துடிப்பும் நாடிகளில் நாடித்துடிப்பையும் உண்டாக் கும். பரிவு நரம்புத்தொகுதி நரம்புகள் இதயத் துடிப்பு வீதத்தைக் கட்டுப்படுத்துகின்றன. இதயத்துடிப்பு வீதம் அதிரினலின் ஓமோனி ல்ை அதிகரிக்கப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதயத் துடிப்பின்போது பின்வரும் செயல்முறைகள் நடைபெறு கின்றன.

Page 7
- 6 -
1. மேற்குழிய நாளத்தாலும் கீழ்க்குழிய நாளத்தாலும் உடலிழை யங்களிலிருந்து சேகரிக்கப்படும் குருதி வலது சோணையறையில் சேர்க் கப்படும் சுவாசப்பைகளிலிருந்து சேகரிக்கப்படும் குருதி இடது சோணை யறையில் சேருகின்றது.
சிரசு
f5fTւգ, f
தொகு திப்பெரு
15ft lg. Lyulbst L9.
இதயம்
முதுகுப் -%שחL}{DB
காலுக்கு ரிய நாடி
\翡
VAV محر
ܛܠ
நாடித் தொகுதி 2. சோணையறைகளில் குருதி நிரம்பியதும் சோணையறைகள் சுருங்கும்போது குருதி இதையவறைகளினுள்ளே செல்லும், இதய வறை சுருங்கும்போது இருகூர், முக்கூர் வால்வுகள் மூடிக் கொள் ளும். இதனுல் இதயவறைகளிலிருந்து குருதி சோணையறைகளினுள்
 
 
 
 
 
 
 

&ழுத்து
fbfᎢ ᎧrᎢ ᏌᏝo மேற் குழிய
நாளம
கீழ்க் குழிய நாளம்
நாளத் தொகுதி மீண்டும் செல்வது தடை செய்யப்படும். இதயவறைகள் சுருங்கி அமுக் கம் அதிகரிப்பதால் அவ்வறைகளுடன் தொடர்பான பெருநாடிகளின் வாய்களிலிருக்கும் அரைமதி வால்வுகள் திறக்கின்றன. வலது இதய வறையிலிருந்து குருதி சுவாசப் பெருநாடிக்குள் செல்லும். இடது இதயவறையிலிருந்து குருதி தொகுதிப் பெருநாடிக்குள் செல்லும்.
குருதிச் சுற்றேட்டம்
மனிதனில் இரண்டு வகையான சுற்ருேட்டமுண்டு. (1) சுவாசச் சுற்ருேட்டம் (2) தொகுதிச் சுற்றேட்டம்

Page 8
8 -
(1) சுவாசச் சுற்றேட்டம்: சுவாசப் பெருநாடி வலது இதய வறையில் ஆரம்பித்து சுவாசப்பைகளுக்குச் செல்லும். இது வலது இடது சுவாச நாடிகளாகப் பிரிகிறது, சுவாசப்பையை அடைந்ததும் சிறு குழாய்களாகப் பிரிந்து மயிர்த்துளைக் குழாய்களில் முடிவடை கின்றன, மயிர்த்துளைக் குழாய்கள் சுவாசப்பையின் சிற்றறைச் சுவரில் அமைந்து வாயுப்பரிமாற்றம் நிகழ உதவும்.
மயிர்த்துளைக் குழாய்கள் இணைந்து புன்னுளங்களை உண்டாக்கும். புன்னளங்கள் சேர்ந்து பெருநாளங்களை உண்டாக்குகின்றன மனி தனில் ஒவ்வொரு சுவாசப்பையிலிருந்தும் சுவாச நாளங்கள் இதயத் திற்குக் குருதியைக் கொண்டு வரும். இச் சுவா சி நா ள ங் க ள் ஒட்சிசனேற்றப்பட்ட குருதியை இடது இதயச் சோணைக்குள் கொண்டு செல்லும். சுவாசப்பைச் சுற்ருேட்டத்தைப் பின்வருமாறு 35 fTL-LG)fTLb. -
சுவாசப்பைநாடி -> சுவாசப்பை -> சுவாசப்பைநாளம்
வலது இதய அறை இடது சோணையறை
(2) தொகுதிச் சுற்றேட்டம்:- இது இடது இதய அறையில் தொகுதிப் பெருநாடியாக ஆரம்பித்து சுவாசப்பை தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்கு ஒட்சிசன் ஏற்றப்பட்ட குருதியை வழங்கும். தொகுதி நாடி வில்லிலிருந்து சிரசு நாடிகள் தலைப்பகுதிக்கும் காறைக்குக் கீழான நாடிகள் புயங்களுக்கும் குருதியைக் கொண்டு செல்லும், பெருநாடி வளைந்து முதுகுப்புற நாடியாகும். இதிலிருந்து சிறுநீரகங்கள், உணவுக் கால்வாய், சனன உறுப்புக்கள் குருதியைப் பெறும். கடைசியில் இரு கால்களுக்கும் குருதி கொடுக்கப்படும்.
நாளங்களின் உதவியால் குருதி சேகரிக்கட்பட்டு வலது சோணை யறையுள் சேர்க்கின்றது உடலின் மேற்பக்கத்தில் இருந்து ஒரு மேற்குழி நாளமும் பிற்பக்கத்திலிருந்து ஒரு கீழ்க்குழிநாளமும் குரு தியைச் சேகரித்து வலது சோணையுள் சேர்க்கும். மேற்குழிநாளங்கள் தலைப்பகுதியிலிருந்தும் புயத்திலிருந்தும் குருதியைச் சேர்க்கும். கீழ்க் குழிநாளம் கால், உடலக உறுப்புகள் ஆகியவற்றிலிருந்து குருதி யைக் கொண்டு வரும். இதைப் பின்வருமாறு சுருக்கிக் கூறலாம்.
தொகுதிப்பெருநாடி -ஆ உடல் இழையங்கள் -> பெருநாளங்கள்
இடது இதயவறை வலது சோணையறை
 
 
 

--بق۔۔) 9 ہے
மனித உடலில் வாயிற் சுற்றேட்டம்
உடலில் காணப்படும் நாளங்கள் மயிர்த்துளைக் குழாய்களில் ஆரம்பித்து நாளங்களாகி இதயத்துக்குக் குருதியைக் கொண்டு செல்லும்? ஆனல் ஒரு சில நாளங்கள் ஒரு அங்கத்தில் மயிர்த்துளைக் குழாய்களாக ஆரம்பித்து இதயற்திற்குச் செல்லாது இன்னெரு அங் கத்தில் மயிர்த்துளைக் குழாய்களில் முடிவடையும். இவை வாயினுளம் (வாயில் +நாளம்) எனப்படும்.
மனிதரில் ஒரு வாயினுளத் தொகுதி மாத்திரமுண்டு. இது ஈரல்வாயினுளம் எனப்படும். இது உணவுக்கால்வாயில் மயிர்த்துளைக் குழாய்களாக ஆரம்பித்து ஈரலில் மயிர்த்துளைக் குழாய்களில் முடிவ டையும். இது உணவுக் கால்வாயில் உறிஞ்சப்பட்ட குளுக்கோசு, அமினேவடமிலங்கள் முதலியவற்றை ஈரலுக்கு எடுத்துச் செல்லும்.
குருதி அமுக்கம்
குருதி நாடிகளின் சுவர்களில் ஏற்படுத்தும் அமுக்கம் குருதி அமுக்கம் எனப்படும். ஒரு நாடியை வெட்டும்பொழுது குருதி மிக விசையாக வெளியேறுவதை அவதானிக்கலாம். ஒவ்வொரு இதயத் துடிப்பிற்கும் பொருத்தமாகக் குருதி விட்டு விட்டுப் பாய்வதையும் அவதானிக்கலாம். குருதி அமுக்கம் தொடர்ந்து நிலைத்திருக்க நாடிகளின் மீள்சக்தித் தன்மையே பொறுப்பாகும். ஒவ்வொரு இத யத் துடிப்புடனும் ஏற்படுகின்ற அதிகரித்த அமுக்கம், சுருங்கற் குருதி அமுக்கம் ஆகும். இதய விரிவின் போது நாடிகளில் செயல்படுவது விரிவுக் குருதி அமுக்கம் ஆகும். குருதியமுக்கம் ஒருவரின் வயதுக் கேற்ப வேறுபடும். சாதாரண சுருக்கவமுக்கம் 120-130 mm Hg வரை வேறுபடும். விரிவுக் குருதியமுக்கம் 80-90m m Hg ஆகும்.
உயர் குருதி அமுக்கம் 145 முதல் - 240mm Hg வரை உயரக் கூடும். நிறைவுடலிப் பெண்ணில் அதே வயது ஆணிலும் பார்க்கக் குருதியமுக்கம் 10 முதல் 20 mm குறைவாக இருக்கும்.
சாதாரண சுருக்கவமுக்கம்
10 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் = 100mm Hg இளம் நிறைவுடலிகளில் (20 முதல் 30 வயதுவரை)
= 120 mm Hg நடு வயது (30-50 வயது வரை) = 120 - 140 mm Hg முதிர் வயது (65 வயதுக்குமேல்) = 140 - 150 mm Hg வழமையாக சுருக்கவமுக்கத்தையும் விரிவமுக்கத்தையும்
20
பின்வருமாறு குறித்துக் காட்டுவர் உ + ம் B, P ஐ 10-2

Page 9
நாடித்துடிப்பு:
ஒவ்வொரு தடவையும் இடது இதயவறை சுருங்கும்போது குருதி
விசையாகப் பெருநாடியினூடு செலுத்தப்படும். பெருநாடி மீள் சக்தி
யுடையதால் மேலதிக குருதியை ஏற்பதற்கு விரிவடைகிறது. அதே வேளையில் நாடியில் ஏற்கனவே இருந்த குருதி அடுத்த பகுதிக் குச் செலுத்தப்படும். இதனுல் அடுத்த பகுதி வீக்கமடைகிறது. இவ் வாறு பெருநாடியின் அடிப்பகுதியில் தொடங்கிய விரிவு முழுநாடித் தொகுதி ஊடாகப் பரவும். இவ்வாறு நாடிகளில் தோன்றும் வீக்க
அலை தோலுக்கு அண்மையிலுள்ள நாடிகளில் உணரப்படுதல் நாடித்
துடிப்பு எனப்படும். உடலின் மேற்பரப்பிலுள்ள சில நாடிகளில் நாடித்துடிப்பை அறியலாம். மணிக்கட்டிலுள்ள நாடியிலேயே நாடித் துடிப்பை இலகுவாக உணர முடியும்,
பிறந்த பிள்ளையில் 140
வயது , , 20 5 வயதில் , 960 100 سنٹی نے 10 வயதில் , 80 90 سس
வயது வந்தவர்களில் 60 - 80 சராசரி 72 துடிப்பு வீதம் உடல் பயிற்சியின்போது தற்காலிகமாக அதி கரிக்கும்.
4. குருதியின் அமைப்பும் தொழில்களும்.
குருதி ஒரு திரவ இழையமாகும்; உயிர் வாழ்வதற்கு குருதி பிரதான பங்கை வகிக்கின்றது. ஒரு சராசரி மனிதனில் ஏறக்குறைய 5 - 6 இலீற்றர் (8 - 10 பைந்து) குருதி உண்டு. உடலின் ஏறக் குறைய 40% நிறை குருதியினதாகும்,
அமைப்பு: குருதி மூன்று வேறுபட்ட கூறினல் ஆனது.
அவையாவன;
(i) உயிரற்ற பாய்பொருட் பகுதியாகிய குருதி முதலுரு அல்
லது திரவவிழையம்.
(i) உயிருள்ள திண்மப்பகுதியாகிய குருதிக் கலங்கள்
(i) உயிரற்ற உருவமுள்ள குருதிச் சிறுதட்டுக்கள் இவை குருதி
முதலுருவில் பரம்பிக் காணப்படும்.
குருதி முதலுரு; இது ஒட்டுந்தன்மையுள்ள வைக்கோல் நிறத் திரவமாகும். சிறிது காரத்தன்மை வாய்ந்த இத் திரவத்தில் ஏறக் குறைய 92% நீராகும், குருதி முதலுருவில் பின்வரும் பதார்த்தங்கள் காணப்படுகின்றன.
 

سس، 1 {-س-
1. அமைப்புப் புரதங்கள்; இதில் மூன்று வகைப்புரதங்கள் காணப்படும். குருதியின் பிரசாரண அமுக்கத்துக்கு இவை உதவும். i) பைபிரினுேச்சன் குருதியுறைதலுக்கு அவசியமான நாரைத்
தரும். 1) ஒரம் அல்புமின் அல்லது நீர்ப்பாய வெண்கரு உறிஞ்சலுக்கு
உதவும்: ii) சீரம் குளோபியூலின் - இதில் ஒரு வகையான காமாகுளோ
பியுலின்கள் பிறபொருளெதிரிகளாகத் தொழிற்படும்.
குருதியிலுள்ள புரதங்களே குருதியின் பாகுநிலைக்குக் காரணமா கின்றன:
2. உப்புக்கள். சோடியம், பொற்ருசியம், கல்சியம், மகனீசி யம் ஆகியவற்றின் காபனேற்றுக்கள், குளோரைட்டுக்கள், சல்பேற் றுக்கள், பொசுபேற்றுக்கள், இவை ஏறக்குறைய குருதி முதலுருவில் 1% உப்பு அடக்கத்திற்குப் பொறுப்பானவை. பைகாபனேற்றுகள் காபனீரொட்சைட்டைக் காவ உதவும்.
3. சமிக்கப்பட்ட உணவுகள், குளுக்கோஸ், அமினுேவமிலங்கள், கொழுப்பமிலங்கள், கிளிசரோல், விற்றமின்கள்.
4. நைதரசன் கழிவுப் பொருட்கள்:- புரதங்களின் அனுசேபத் தின் போது தோன்றும் அமோனியா, யூரியா, யூரிக்கமிலம் சிறியற்றி
5. நீர் இது கரைக்கும் ஊடகமாகும். 6, சுரப்புக்கள்: புரோத்துரம்பின், நொதியங்கள், பிறபொருள் எதிரிகள், ஓமோன்கள் முதலியன.
7 வாயுக்கள்: ஒட்சிசன், காபனீரொட்சைட்டு, நைதரசன்.
மனிதக் குருதி முதலுருவின் கூறுகளின் பெறுமானங்கள் 100 மி இலீற்றரில் பின்வருமாறு:
புரதங்கள் - 7g (அல்புமின் - 45g. குளோபியுலின் - 25g. பைபிரினேச்சன் - 03g)
குளுக்கோசு - 70 - 100 mg (மில்லிகிராம்) இலிப்பிட்டு (கொழுப்பு வகை) - 500 - 600 mg. கொலஸ்ரரோல் கொழுப்பு — 150 - 280 mg .
யூரியா — 20 - 40 mg . .
யூரிக்கமிலம் — 3 - 6 mg.

Page 10
N ہنسیے \ 22 ستمے
கிறியற்றினின் .2 - 0.8 است ting கல்சியம் . - . 9 a l l mg. இரும்பு — 0 • 75 - 1 ʻ 75 mg. மகனீசியம் -- 1 - 2 mg. பொற்ருசியம் — 14 - 20 mg. சோடியம் assis- 310 - 340 mg. புரதம் அல்லாத நைதரசன் பதார்த்தங்கள் -au- 15 - 35 mg.
குருதி முதலுருவிலிருந்து பைபிரினேச்சனை நீக்கும்போது பெறப் படும் பாய்பொருள் நீர்ப்பாயம் (சீரம்) எனப்படும்.
நீர்ப்பாயம் = குருதிமுதலுரு - பைபிரினேச்சன். திண்மக் கூறுகள் (அல்லது கலக்கூறுகள்)
குருதியில் மூன்றுவகையான திண்மக்கூறுகள் உண்டு. 1. செங்குருதிச் சிறுதுணிக்கை அல்லது செங்குழியம். 2. வெண் குருதிச் சிறுதுணிக்கை அல்லது வெண்குழியம். 3. குருதிச் சிறுதட்டுக்கள். 1 கன மி. லீ குருதியில் உள்ள கலங்களின் எண்ணிக்கை.
குருதிச் சிறுதட்டுகள் செங்குழியங்கள் வெண்குழியங்கள்
250,000 5,000,000 8,000 - 10,000
(1) செங்குழியங்கள்
இவை தட்டையான, வட்டத்தட்டுருவான கலங்கள் குருதியில் பெரும் எண்ணிக்கையில் காணப்படுகின்றன. 1 கன மிமீ. இல் 4 . 5.
வெண்குருதிச்சிறுதுணிக்கை ,
செங்குருதிச்
சிறுதுணிக்கை
 
 
 
 

மில்லியன். இக் கலங்களில் ஈமோகுளோபின் அல்லது குருதி திறக் சத்து எனப்படும் இரும்பைக் கொண்டுள்ள சிவப்புநிறப் பொருட்கள் இருப்பதனல் செந்நிறமாகத் தோன்றும். செங்குழியங்களில் கரு இல்லை. வட்டத்தட்டு வடிவான இக் கலங்களின் இரு மேற்பரப்புகளின்தும் நடுவில் குழிவு இருக்கும் விட்டம் ஏறக்குறைய 7 மைக்குரோன்கள் (7A) ஆகும். இவை செவ்வென்பு மச்சையில் உண்டாக்கப்படுகின்றன. செங்குழியங்களிலுள்ள ஈமோகுளோபின் ஒட்சிசனுடன் இலகுவாகச் சேரக் கூடியது. இதன் உதவியினல் 100 m குருதியில் 19 - 20 m ஒட் சிசன் காவப்படும். இழையங்களில் ஒட்சிசனை விடுவித்த பின்னர் காபனீரொட்சைட்டின் ஒரு பகுதியையும் சுவாசப்பைகளுக்குக் கடத்த உதவும். செங்குழியங்கள் 120 நாள் வாழும், பின் மண்ணீரலில் அழிக் கப்படும்.
(2) வெண்குழியங்கள்
இவை கருவைக் கொண்டுள்ள நிறமற்ற கலங்களாகும். செங்குழி யங்களிலும் பெரியன. விட்டம் ஏறக்குறைய 8-15 மைக்குரோன் ஆகும் 3-4 நாள் வாழ்வுடையன. வெண்குழியங்களில் இருவகை உண்டு.
1) தின்குழியங்கள் பல்சோணையுள்ள கருவுடையன 70% அமீபா
தன்மை உடையன. பொருள்களை விழுங்கி அழிக்கும்.
i) நிணநீர்க்குழியங்கள்- 30% கோளவடிவானவை. கோள வடி வுள்ள கருவுடையன, பிறபொருள் எதிரிகளைச் சுரந்து கிருமி களை அழிக்கும்.
வெண்குழியங்கள் ஏறக்குறைய 600 செங்குழியங்களுக்கு ஒரு வெண் குழியம் என்ற வீதத்தில் காணப்படும். கண் n. இல் 8000-10000 வரை உண்டு. வெண்குழியங்கள் செவ்வென்பு மச்சையிலும் நிணநீர்ச் சுரப்பிகளிலும் உண்டாக்கப்படுகின்றன. வெண்குழியங்களின் முதலுரு வில் சிறுமணிகளின் தொகையும் அவற்றின் தன்மையும் வேறுபடும். இவ்வாருண் வேற்றுமைகளின் அடிப்படையிலும் வெண்குழியங்களைப் பின்வருமாறு பாகுபடுத்தலாம். இது மருத்துவ மூக்கியத்துவமு 600 L - tiġi .
1. சிறுமணிகளைக் கொண்ட வெண்குழியங்கள். முழுத்தொகையில் 70%.
1. நடுநிலை நாடிகள்: பல்சோணைக் கருவுடையன. அமீபத்தன்மை
tly60 L (L1607.
புண், நெருப்புக் காய்ச்சல் முதலிய நோய்களின் போது கூடு தலாகக் காணப்படும்.

Page 11
سے 14 سس۔
2, இயோசினுடிகள்: அவரை வித்து வடிவுடைய கரு உடையன.
புழு நோய்களில் அதிகரிக்கும்.
3. மூலநாடிகள்.
2. சிறுமணிகளற்ற வெண்குழியங்கள்.
வெண்குழியங்களின் முழு எண்ணிக்கையில் இவை ஏறக்குறைய
25% ஆகும். .
(1) நிணநீர்க்குழியம்; வட்டமான பெரிய கருவைக் கொண்டிருக்
கும். குழியவுரு குறைவாய் இருக்கும். இவற்றின் விட்டம் 5-10 மைக் கிரோன் வரை வேறுபடும்.
(2) ஒற்றைக்குழியம்: இவை பருமனில் பெரியவை. இவற்றின் விட்டம் 6-22 மைக்கிரோன் வரை வேறுபடும். பெரிய சிறுநீரக வடிவான கரு உண்டு.
பொதுவாக வெண்குழியங்களின் எண்ணிக்கை பின்வருமாறு கானப்படும். -
நடுநிலைதாடிகள் 50 - 70%
மூலநாடிகள் 0-1 س% இயோசிநாடிகள் 1 4" سس% , நிணநீர்க்குழியங்கள் 20 - 40%
ஒற்றைக் குழியங்கள் 2 - 3%
குழந்தைகளில் நடுநிலைநாடிகள் ஏறக்குறைய 20% குறைவாகவும் நிணநீர்க்குழியங்கள் ஏறக்குறைய 20% கூடுதலாகவும் காணப்படும்.
வெண்குழியங்களின் தொழில்:
1. நோய்க் கிருமிகளை எதிர்த்து உடலை நோய்களினின்றும் பாது காக்கும். இது இரண்டு முறைகளால் நடைபெறும்.
(அ) தின்குழியங்கள் போலிப்பாதங்களை உண்டாக்கி தின் குழிய மாக மாறி அந்நிய கிருமிகளை விழுங்கி அழிக்கும் இறந்த காயமடைந்த இழையங்களை அகற்றுவதற்கும் உதவுகின் றன. நடுநிலை நாடிகளும், மூலநாடிகளும் இவ்வகையின.

(ஆ) நிணநீர்க்குழியங்கள் பிறபொருள் எதிரிகளை உண்டாக்கி
நோய்க் கிருமிகளின் நச்சுப் பொருளை நடுநிலையாக்கும்.
பற்றீரியங்கள் போன்ற கிருமிகள் உடலையடைந்து வலிமையான நஞ்சுகளைச் சுரந்தால் தாக்கத்தில் பல வெண்குழியங்கள் இறந்து விடு கின்றன. இவ்வாறு இறந்த கிருமிகளும் இழையங்களும் சேர்ந்து
சீழ் உண்டாக்கும்,
(3) குருதிச் சிறுதட்டுகள்:
கலங்கள் உடைந்து தோன்றுவன. செங்குழியங்களிலும் மிகச் சிறி யவை. ஒழுங்கற்ற வடிவமுடையன, நிறமற்றன. தாமாகவே ←፵6õpóዎ፱ ! மாட்டா. என்புமச்சையில் உண்டாக்கப்படுகின்றன என நம்பப்படு கின்றது. இவை ஒரு சில நாட்களுக்கே வாழ்கின்றன. மண்ணிரலில் அழிக்கப்படுகின்றன. குருதியுறைதலில் முக்கிய பங்கை வகிக்கின்றன.
இது வரை நாம் குருதியைப் பற்றிக் கற்றவற்றைப் பின்வருமாறு அட்டவணைப்படுத்தலாம். .
':'ൂ',
குருதி
ܐܸܠܵܐ ܓܝܼܐ
- - - - -
கலங்கள் குருதிமுதலுரு
செங்குழியங்கள் வெண்குழியங்கள் குருதிச்
சிறுதட்டுகள்
நடுநிலை இயோ மூலநாடி நிணநீர்க் ஒற்றைக் நாடிகள் சிணுடிகள் குழியங்கள் குழியங்கள்
நீர் புரதங்கள் உப்புக்கள் சமிக்கப் கழிவுகள் ஏனைய tut L. பதார்த் உணவுகள் தங்கள்

Page 12
ம 16 .
(1) கொண்டு செல்லல் தொழில்:
1.
குருதி சமிக்கப்பட்ட உணவுகளை (குளுக்கோசையும், அமினே அமிலங்களையும்) சிறுகுடலிலிருந்து உடலின் ஏனைய பகுதி களுக்கு கொண்டு செல்லும்.
சுவாசப்பையிலிருந்து ஒட்சிசனை உடலிழையங்களுக்குக்கொண்டு செல்லுகிறது.
உடலிழையங்களிலிருந்து காபனீரொட்சைட்டை சுவாசப்பை களுக்குக் கொண்டு செல்லல்,
நைதரசன் கழிவுகளை உடலிழையங்களிலிருந்து கழித்தலங் கங்களாகிய சிறுநீரகங்களுக்கு கொண்டு செல்கிறது.
ஒமோன்களைக் கானில் சுரப்பியிலிருந்து உடலின் பல்வேறு
பகுதிகளுக்குக் கொண்டு செல்லல்
சமிபாட்டு அங்கங்களிலிருந்து சிறுநீரகங்கள் தோல், சுவாசப் பைகள் போன்ற அங்கங்களுக்கு நீரை எடுத்துச் செல்கின்றது.
உயிர்ப்பான இழையங்களில் வெப்பத்தை உறிஞ்சி ஏனைய பகுதிகளில் (விசேடமாகத் தோலில்) விடுவித்து உடலின் வெப்பநிலை யைச் சீராக்குவதற்கு உதவுதல்.
 

|
qiegungosirisiree,q2115m (109ff qg U@g)£ € @胡将44圈曲4姆唱q21157.109@- 77%) urīgsmunąs-i-agbsggsトミg :· @ Noof)g@@ gssミトg49orțirmāsioo(5) sologossosooqf-ı-ā893 그 어757년7079 ||:@@@ đò@@@ |-qīIÊU usorgirn sfiorso(o) so uos sĩ ư3 十 sposofioqosori (gorio:Ur(o se | * * · · · ·@@@@@@@ : gミsQ qøș șofio || ... ···ųoosio 11ĝīstīto@@@ (fi)(5%)© @497) sa oqoỹdogj qø-i-a« $@@@ đĩ,5%)(?) ~~~.ரகுமாடு ஈவிருெை 濑)£ €qī ŌgĪ 1999 ĝi @ș sowego urīgo|* ·£ € @ # loog o urīg)§ 4@@@ (fi) (5%)(?) q1@g@oņi mõisno(,) ரெஞ்சிசியாeஒரு1/604919sporgirmsfisƆŋ solo) @@@@riņ19 -----
@@@@ /1594119
są9@@ 19
sporțirmāsiqo@
qırısısee (9
googlossillo
@T LITŲī£4ygs (ç 49€Œısı 11, q2ųo uso哈哈947Dé(寸
sporgirmāsiqoĠ德)에T ooooooo | #0.9771/110) gora uo (q 49 (1:1)Ausmųfī (e 49877%) url(Osıfosfī£ (g.
49% ofīņłmųoo 氢题+ Isoo qoffa af Qïsso (p. 1ųoolelnostā sni√∞ so
qis@udg) og søg
qi@# aes &org/seyırısıớī) uoso) (o |go Tosto | posgiãogije (oggio (q {q2.11b/g2-1@IŪegaụ911ogÐ?@@ (e
1țeoho 1999-æ |丁soosī£ (z Isoorloo ŋo ɖito so|googoo (I
-s@@@89(5,19
|-qi&ĒĢĒĻ LĒTI--------- qui@ą980) ĝis golo@
Igoqo filosu) 1çoŲng@@
****
(so)uoqo £®)3) logo Tjolo) - Į
logo? TƯ TỊio 卿
lO)2-3

Page 13
(soosissio) legeneo
@ș ș@IĜqeñ)49@ @ ₪io qp um |(notī urī0ų sąoko)
• s@@@@@@@49**11, aggio),afsoofiřnsię geg || 49949-īrā ģglo (€) -(f)|qe uorte u-i logo:(\olgoố30) qiaof? (1,9 uș (151)49€y(@ 19{{Ligos@). Isossoso seorgirmāsīce(s)@soof) goo | l,soğutmosięg uglešği|1,9%) uracjaīsi | sourių (5090-7-a (?) -阿图塔恩de的姆阿图向|督增脾09哈 @g@喻了@gif@ų, ricos Noā Øgeqøljone@șu-ı§§7-109 GĦđī)rı ~Iroqs19 qirmuo@@@(f) {@ @@gooĠ6Đg)ụsıračne|logo-a afgestiĝ@@tsooisumus (sœ} @@@@-ıĮįsiso isIỆrts@rıņGĒĢ-1,IỆqig) grą, 19qo@gẾ19'HIJIJ?IỆısı -|-| 1991. (1519 @@@is Hıņussuri (z
 

- 19 -
2. பாதுகாப்புத் தொழில்:
(i) (அ) தின் குழியங்கள் நுண்கிருமிகளையும் உடைந்து போன
இழையங்களையும் விழுங்கி அழிக்கும். புண் அல்லது வேறு அழற்சி
உண்டாகும் காலங்களில் இவை அதிகரிக்கும், அழற்சி யுள்ள இடங்களில் இவை கூடுதலாகக் குழுமிக் காணப்படும்.
மேலுள்ள படம்: தின் குழியம் விழுங்கி அழிதல்.
கீழுள்ள படம். நிணநீர்க் குழியங்கள் எதிருடல் சுரந்து அழித்தல்,
(ஆ) நிணநீர்க் குழியங்கள் கிருமிகள் உற்பத்தியாக்கும் நச்சுப் பெருட்களே நடுநிலையாக்குகின்ற எதிருடல்களை உ ற் பத் தி யாக்கும் இதனுல் சில நோய்களை எதிர்க்கக் கூடிய நிர்ப்பீடனமும் கிடைக்கும்.
(i) வெப்பச் சீராக்கல்: வெப்பம் கூடுதலாகத் தோன்றும் இடங் களிலிருந்து குறைவான இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படும்
(ii) குருதி உறைதல்: குருதி கலன்களிலிருந்து வெளிப்படும் போது தோன்றும் துரொம்பின் என்னும் நொதியத்தால் பைபிரின் புரதவலை தோன்றும் இந்த வலை குருதிக்கலங்களுடன் சேர்ந்து குருதியுறையை உண்டாக்கும். இது காயங்களை அடைந்து குருதி வெளியேறுவதை நிறுத்தும்"
(ty) நிணநீரை உற்பத்தியாக்கல்: குருதி மயிர்க்குழாய்களிலிருந்து திரவவிழையத்தின் ஒரு பகுதி வெளியேறி இழையங்களில் நிணநீராகும். குருதிக்கும் கலங்களுக்குமிடையில் பொருட்கள் பரவும் ஊடகமாக நிணநீர் தொழிற்படும்.

Page 14
۱۰ شمس (0 2 - است.
குருதியுறைதல்:
குருதி உடலினுள்ளே ஒரு திரவமாகச் சுற்றியோடுகின்றது. ஆனல் உடலில் ஏதாவது ஒரு சிறு காயமேற்பட்டு வெளி யி ல் வந்ததும் திண்மமாகின்றது. இவ்வாறு கு ரு தி தி ன் ம மா க மாறும் செயல்முறை குருதியுறைதல் எனப்படும். குருதியுறைதல் பொறிமுறை மிகவும் சிக்கலானது. ஆனல் அதன் பொதுத் தத்துவங்கள் எளிதானவை
- குருதியு ைதலில் முக்கிய மாற்றம் யாதெனில் குருதியிலுள்ள
பைபிரினுேச்சின் புரதம் பைபிரின் நார்களாக மாற்றப்படுதலேயா கும். பைபிரின் நார்களுக்கிடையில் குருதிக்கலங்கள் பிடிபடும் பின்பு நார்கள் சுருங்கி குருதியுறை தோன்றும் .
1. காயமேற்பட்ட இடங்களில் உடைந்த அல்லது கரடு முரடான மேற்பரப்புகளுடன் குருதிச் சிறுதட்டுக்கள் மு ட் டு ம் போ து அவை உடைகின்றன . அப்பொழுது குருதிச் சிறுதட்டுக்கள் துரொம்போபிளாஸ்திரின் எனும் பதார்த்தத்தை விடுவிக்கும்
2. துரொம்போபிளாஸ்திரின் கல்சியம் அயன்கள் இருக்கும் போது
புரொத்து ரொம்பினை துரொம்பினுக மாற்றுகிறது.
3. துரொம்பின் பைபிரினேசனை தாக்கி பைபிரினுக மாற்றுகிறது.
4. பைபிரின் நுண்ணிய இழையங்களால் ஆனது; பைபிரின் இழைக ளின் வலைவேலைக்குள்ளே குருதிக்கலங்கள் அகப்படும்பொழுது உறை ஏற்படுகிறது. உறை சுருங்கியபின் இறுதியில் திரவப் பகுதி வெளியேறும். இது மஞ்சள் நிறமான நீர்ப்பாயம் ஆகும்"
அல்லது
1. குருதியில் காற்றுப்படும் போது அல்லது உடைந்த இழை யங்களில் படும்போது-அகுருதியில் துரொம் போபிளாஸ் திரின் வெளியாகும்.
2. துரொம்போ + கல்சியம் + புரொத் உடலு துரொம்பின்
பிளாஸ்திரின். துரொம்பின்
3. துரொம்பின் + பைபிரினுேசன்-அபைபிரின் 4. பைபிரின் + குருதிக்கலங்கள் ->குருதியுறை + நீர்ப்பாயம்
சில வேளைகளில் தோலுக்குக் கீழே குருதிக்கலங்கள் உடைந்து 4 உறை ஏற்படலாம். அப்பொழுது அவ்விடங்கள் கருமை நிறமான
 
 

مضس - 1 2 محضے
கண்டல் புள்ளிகளாகத் தோற்றமளிக்கும். இவை காயம் ஆறிய பின் படிப்படியாக உறிஞ்சப்பட்டுவிடும்.
குருதியுறைதலைப் பின்வரும் காரணிகள் விரைவுபடுத்தும்:
1. கல்சிய உப்புக்கள் , - 2. இழையங்களில் அல்லது குருதிக்கலன் சுவரில் ஏற்படும்
5 frtup
3. கரடுமுரடான பொருட்களுடன் தொடர்பு - (உ + ம்) மருந்து கட்டும்போது பயன்படுத்தப்படும் நொய் அல்லது வேறு அணியம், 4. உடல் வெப்பநிலையிலும் சிறிது உயர்ந்த வெப்பநிலை, 5. கொலஸ்ரோல் படிந்த நாடிச்சுவர்.
குருதியுறைவைத் தடுக்கும் காரணிகள்:
1. சோடியம் அல்லது பொற்ருசியம் சித்திரேற்று இது குருதி
தியிலுள்ள கல்சியம் அயன்களை நீக்கும். 2. ஈரலால் சுரக்கப்படும் எப்பாரின் அல்லது துரம்பினெதிரி 3. மலைநாட்டு அட்டையின் ( லீச் ) சாறு ( கிருடின் )
குருதிக்கூட்டமும் குருதி மாற்றீடு செய்தலும்:-
குருதியிலுள்ள சில புரதக்கூறுகளின் அடிப்படையில் குருதியை
நான்கு கூட்டங்களாக வகுப்பர்.
செங்குழியங்களில் அக்குளுட்டினெசென் Aயும் Bயும் உண்டு; திரவவிழையத்தில் அக்குளுட்டினின் aவும், 8வும் உண்டு.
செங்குழியங்களில் காணப்படும் அகுளூத்திஞேசெனின் அடிப்படை யிலேயே குருதியை நான்கு வகையாகப் பிரிப்பர்.
குருதிக்கூட்டம் A - அகுளூத்தினேசென் Aயைக் கொண்டவர்கள் B . 1) ο B யைக் கொண்டவர்கள் AB -- 莎? A யும் B யும் உடையவர்கள்
O - அகுளூத்தினேசின் அற்றவர்கள்.
ஒருவரின் குருதியில் A யும் a வும் ஒன்ருகவரா, B யும் 8 வும் ஒன் ருகவரா,

Page 15
- 22 -
குருதியில் அவை பின்வருமாறு காணப்படும்;
செங்குழியம் திரவவிழையம் கூட்டம்
A 8 (அல்லது B எதிரி) A 2. B a (A 67.5ii) : B 3. AB (இல்லை) AB 4. (இல்லை) O
குருதி மாற்றீடு செய்யும்போது முற்கூறியதுபோல் A வB 8 ஒன்று சேராதவாறு கொடுத்தல் வேண்டும். மாறிக் கொடுப்பின் ஒருங் கொட்டல் ஏற்பட்டுக் குருதி அழியும். இந் நிபந்தனைக்கமையக் குருதிபாய்ச்சின் ஒரு கூட்டமுடையவர் தன் கூட்டத்துக்கே வழங்
553) FBF3
குருதி செலுத்தும்போது (மாற்றீடு) கொடுக்கப்படுகின்ற குருதி யிலுள்ள கலங்கள், வாங்குபவரின் குருதியின் நீர்ப்பாயத்திற்கு பொருத்தமானதாக இருக்க வேண்டும். அதாவது ஒருங் கொட்டல் நிகழாமல் இருத்தல் வேண்டும். வழங்குபவரின் குருதியிலுள்ள நீர்ப் பாயத்தின் பிறபொருள் எதிரிகள் வாங்குபவரின் குருதியில் ஐதாக் கப்படுவதனுல் எதுவித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. இதற்கமைய குருதியைப் பின்வருமாறு பாய்ச்சலாம்.
வழங்கி வாங்கி
O سے عصبسیسی< O, A, B, AB A III -> A, AB B a He B, AB AB تاسیسح AB
பின்வரும் வரைபடம் குருதி செலுத்தல் தொடர்பான ஒழுங் கைக் காட்டும். ஒவ்வொரு கூட்டத்தினரும் தத்தம் கூட்டத்துக்குக் கொடுக்கலாம். வேறு சில கூட்டங்களுக்கும் கொடுக்கலாம். அம்புக் குறிகள் இவ்வொழுங்கைக் காட்டும்.
 
 
 
 
 

AB வகைக் குருதியுடையவர்கள் எந்த வகைக் குருதியுடையவர் களிடமிருந்தும் பெறலாம். ஏனெனில் இவர்களின் குருதியில் பிற பொருள் எதிரிகள் a வும் 8 வும் இல்லை என்க. AB வகைக் குருதி யுடையவர்கள் பொது வாங்கிகள் என அழைக்கப்படுவர்.
O வகைக் குருதியுடையவர்கள் ஏனைய வகைக் குருதியுடையவர் களுக்குக் குருதியை வழங்க முடியும். ஏனெனில் இவ் வகைக் குருதியில் செங்கலங்களில் அகுளூத்தினேசன்கள் காணப்படுவதில்லை. O வகைக் குருதியுடையவர்கள் பொது வழங்கிகள் எனப்படுவர்.
சில வேளைகளில் நோயாளிகளுக்குக் குருதியில் திரவத்தின் அளவை மாத்திரம் அதிகரிக்க வேண்டியிருக்கும். செங்குழியங்கள் தேவைப்பட மாட்டா. குருதியின் கனவளவு அதிகரிக்கும்போது கூடுதலான செங் குழியங்கள் உற்பத்தியாக்கப் படுகின்றன, இந் நிலையில் முழுக்குருதிக் குப் பதிலாகக் குருதி முதலுருவைச் செலுத்தலாம். தனித்து குருதி முதலுரு பயன்படுத்தும் போது அதில் கலங்கள் இல்லாததால் குருதி யைச் சோதிக்காமலேயே வழங்க முடியும்.
குருதி வகைகளும் அவை மனிதரில் காணப்படும் சதவீதமும்,
A - 40% 10% -سن- B AB - 5%
O - 45% Rh assmTIJ aosñ
மனிதரின் குருதியை அதில் காணப்படும் இன்னெரு வகைப்புரதம் காரணமாகவும் வகுப்பர். இது றீசஸ் (Rhesus) என்னும் குரங்கில் காணப்பட்டதால் Rh காரணி எனப்பட்டது.
85% மனிதரின் குருதியில் Rh காரணி உண்டு, இவர்கள் Rh* 5.L . டமாவர். 15% மனிதரில் இது இல்லை. இவர்கள் Rh" கூட்டமாவர்.
குருதிப்பாய்ச்சுதலில், Rh" கூட்டம் யாருக்கும் வழங்கலாம். Rh+ கூட்டம் Rh+ கூட்டத்திற்கே வழங்கலாம்:
ஆனல் Rh+ குருதி Rh" கூட்டத்துக்குக் குருதி வழங்க முடி üЈПТg/» -
Rh+ குருதி Rh" குருதிக்கு வழங்கின் Rh- குருதியில் Rh+ இற்கு எதிருடல்களை உண்டாக்கும். இதனல் Rh+ குருதிக் கலங்கள் ஒருங் கொட்டும். எனினும் முதலாம் தடவை ஆபத்து நேராது போகலாம் ஆணுல் இரண்டாம் தடவை கொடுக்கக்கூடாது.

Page 16
--24 : ص۔
Rh+ கூட்டம் தாய்க்கும் குழந்தைகளுக்குமிடையிலும் தாக்கமேற் படுத்தும்.
தாய் Rh- ஆகவும் குழந்தை Rh+ ஆகவுமிருப்பின் குழந்தையின் குருதி தாயின் குருதிக்குள் கசிந்து செல்லக்கூடும். இதனல் தாயின் RhT (g5(1595) Rh+ இதற்கு எதிருடலை உற்பத்தியாக்கும். இவ் வெதிரு டல் திரும்பவும் குழந்தையின் குருதிக்குள் செல்லின் ஒருங்கொட்டல் ஏற்படும். 7-ம், 8-ம் மாதத்தில் சிசு இறக்க நேரிடும். இங்கும் முத லாம் பிள்ளைக்கு அதிக ஆபத்தில்லை. 2-ம் 3-ம் பிள்ளைகள் Rh+ ஆயின் இறப்பு தவிர்க்க முடியாதது. சிசு இறப்பதால் தாய்க்கும் ஆபத்து ஏற்படலாம். 7-ம் 8-ம் மாதத்தில் Rh+ எதிருடலை நடுநிலையாக்கும் மாற்றுப் பொருளை ஏற்றுவதால் இறப்பைத் தவிர்க்கலாம்.
நிர்ப்பீடணம்:
குருதியிலுள்ள நோய் எதிர்க்கும் பிறபொருள் எதிரிகளினல் தொற்று நோய்கள் வராது எதிர்க்கும் ஆற்றல் நிர்ப்பீடனம் எனப் படும். ஒவ்வொரு தொற்று நேரய்க்கும் தனித்தனி பிறபொருள் எதிரிகள் தொழிற்படும். நிர்ப்பீடனம் இருவகைப்படும்.
நிர்ப்பீடனம்
இயற்கை நிர்ப்பீடனம் பெற்ற நிர்ப்பீடனம்
| 。1 உயிர்ப்பானது உயிர்ப்பற்றது உயிர்ப்பானது உயிர்ப்பற்றது
இயற்கை நிர்ப்பீடணம்: ஒருவர் பிறக்கும்போதே பரம்பரை காரணமாகவோ அல்லது தாயின் குருதி மூலமோ கிடைக்கும் நிர்ப்பீடனம் இதுவாகும்.
(1) உயிர்ப்பான இயற்கை நிர்ப்பீடணம்; பரம்பரை காரணமாக குருதியிலுள்ள பிறபொருள் எதிரிகள் நோயை எதிர்க்கும் இயல்பு இது வாகும். உதாரணமாக சிலருக்கு பொக்குளிப்பான், சின்னமுத்து போன்ற நோய்கள் வருவதில்லை. விலங்குகளுக்கு வரும் பல நோய் களுக்கு மனிதரில் நிர்ப்பீடனம் உண்டு. Y
(i) உயிர்ப்பற்ற இயற்கை நிர்ப்பீடணம்; தாயின் குருதியிலுள்ள பிறபொருள் எதிரிகள் குழந்தையின் குருதிக்குக் கிடைப்பதால் ஏற் படுகிறது. இவ்வெதிர்ப்புத்தன்மை குழந்தை பிறந்தபின் இரண்டொரு மாதங்களுக்கு குழந்தைக்கு தொற்று நோய்களை எதிர்க்க உதவும்
 
 
 

- 25 -
பெற்ற நிர்ப்பீடணம்:
ஒருவர் பிறந்தபின் நோய் தொற்றல் ஏற்படுவதால் இது ஏற் படும். அல்லது மருத்துவ முறையில்
கொல்லப்பட்ட நோய்க்காரணி (வாந்திபேதி) வலுக்குறைக்கப்பட்ட நோய்க்காரணி (வாந்திபேதி) வீரியம் குறைந்த கிட்டிய இன நோய்க்காரணி (அம்மை) நோய்க்காரணியின் தொட்சின்கள் (நெருப்புக் காய்ச்சல்) நோய்க்காரணியின் தொட்சின் போலி (ஏற்புவலி) என்பவற்றை உடலில் ஏற்றுவதால் பெறப்படும்.
(i) உயிர்ப்பான பெற்ற நிர்ப்பீடனம்: நோயால் பீடிக்கப்பட்டுப் பெறும் நிர்ப்பீடனம் அல்லது நோய்க்காரணிகளை அல்லது தொட்சின் களைப் புகுத்திப் பெறும் நிர்ப்பீடனம் இதுவாகும்.
(i) உயிர்ப்பற்ற பெற்ற நீர்ப்பீடனம்; வேறு மனிதரில் அல்லது விலங்குகளில் உற்பத்தியாக்கப்பட்ட பிறபொருள் எதிரிகளைக்கொண்ட குருதி நீர்ப்பாயத்தை (சீரம்) ஏற்றுவதன் மூலம் பெறப்படும். பெரும் பாலும் குதிரை அல்லது மாட்டுக் கன்றுகளிலிருந்தே சீரம் தயாரிக் கப்படும். நோயை ஒருவர் பெற்றபின் அந்நோயை எதிர்ப்பதற்கே எதிருடல் உள்ள சீரம் வைத்திய முறையில் உபயோகிக்கப்படும்.
இலங்கையில் குழந்தைகளுக்கு உண்டாகும் கசரோகம், இளம் பிள்ளைவாதம், கக்குவான், ஈர்ப்புவலி, தொண்டைக்கரப்பான் போன்ற நோய்களைத் தடுப்பதற்கு நிர்ப்பீடன மாக்கல் பயன்படுகிறது.
விசர்நாய்கடி, ஏற்புவலி ஆகியவற்றிற்கு நாம் எதிர்ச்சீரம் உப யோகிக்கிருேம். மேல் நாடுகளில் சின்னமுத்து நோயுடையவரின் சீரம் எடுக்கப்பட்டு அந்நோய்த் தடுப்பில் உபயோகிக்கப்படுகின்றது. சீரம் ஏற்றுவதில் முன்னவதானம் எடுத்தல் வேண்டும். சீரம் பெறுபவர் சீரத்துக்கு ஒவ்வாமை காட்டலாம். எனவே சிறிதளவை தோலின் கீழ் ஏற்றுவர் ஒவ்வாமையிருப்பின் ஏற்றப்படும் இடம் வீங்கித் தடிக்கும். இதை அவதானித்த பின்னரே சீரம் ஏற்றுவர்,
நிணநீர்த் தொகுதி
குருதிமயிர்க் குழாய்களிலுள்ள குருதியின் திரவ இழையப்பகுதி
வடிந்து வெளியேறி இழைய வெளிகளை நிரப்பும். இது இழையப் பாயி எனப்படும். வெளியேறும் பாயியின் ஒரு பகுதி நாளப்பக்கத்
நீதிலுள்ள மயிர்க்குழாய்களுக்குள் செல்லும். மேலதிக இழையப் பாயி
யைச் சேகரிக்க நிணநீர்த் தொகுதி உண்டு.

Page 17
இழைய வெளிகளில் மூடிய குழாய்களாக நிணநீர்க் கான் கீல் ஆரம்பிக்கும். இவை நாளங்கள் போன்றன.
உடலின் வலது புயம், வலது தலை ஆகிய பகுதிகளிலிருந்து வரும் நிணநீர்க்கான் வலது காறையென்புக்குக்கீழான நாளத்துடன் இணையும்
உடலிள் கால், உடலக உறுப்புக்கள், இடது தலை, இடது கை ஆகிய பகுதிகளிலிருந்து சேரும் நிணநீர் நெஞ்சறைக்கான் ஒன்றினுள் திறக்கும். இது இடது காறைக்குக் கீழான நாளத்துள் திறக்கும்.
நிணநீர் முடிச்சு:
நிணநீர்க்கான்கள் செல்லும் பாதைகளில் முழங்கால், கவடு, சிசி குள், கழுத்து, நெஞ்சறைக்கான் ஆகிய இடங்களில் சிறிய திரணே கள் காணப்படும். இவை நிணநீர் முடிச்சு எனப்படும். இவை நிை நீர் இழையங்களை உடையவை. நிணநீர் இதனூடாக மெதுவாகப் பாயும். இம் முடிச்சுக்களில் நிணநீர்க் குழியங்கள் உற்பத்தியாக்க பேடும்
நெஞ்சறைக்
கான்
முடிச்சுக்கள்
நிணநீர்த் , தொகுதி
நிணநீரின் தொழில்:
1. நிணநீர் இழையவெளிகளில் குருதிக்கும் கீலங்களுக்கும் இடை
யில் ஊடகமாயமையும்,
2. நிணநீர் முடிச்சுக்களில் நிணநீர் குழியங்களை உற்பத்தியாக்கும்.
 
 
 

-- 27 -
3. இழைய வெளிகளில் சேரும் கிருமிகள் நிண நீரால் கடத்தப்
பட்டு நிண நீர் முடிச்சுக்களில் அழிக்கப்படும் சில வேளைகளில் இம் முடிச்சுக்கள் வீங்கி வலி உண்டாகும் இது நெறி கட்டல்
என வழங்கும். 4. உணவுக் கால்வாயிலுள்ள பாற்கலன்கள் கொழுப்பைக் கடத்த
உதவும். 5: நிணநீர்க் கணுக்களிலிருந்து நிணநீர்க் குழியங்களை குருதிச்
சுற்றோட்டத்திற்குக் கடத்த உதவும். 6. நிணநீர்க் கணுக்களில் உள்ள நிணநீர் நச்சுப் பதார்த்தங்களை
யும் பற்றீரியங்களையும் வடிகட்டி குருதியில் பரவ விடாது தடுக்கும்.
குருதி நோய்கள்:
குருதி சம்பந்தமான இரு தொற்று நோய்கள் பற்றி 6-ம் வகுப்பில் படித்தீர்கள். தொற்று நோய்களல்லாத குறைபாட்டு அல்லது சிதைவு நோய்களும் உண்டு.
(1) குருதியுறையா நோய்: சாதாரண மனிதருக்கு ஒரு காயத் திலிருந்து வரும் குருதி 3-5 நிமிடங்களில் உறையும். சிலருக்கு எளிதில் உறைவதில்லை. இது பரம்பரை நோயாகும். இத்தகையவர்கள் அறு வைச்சிகிச்சைக் குட்படும் போதும், வெட்டுக்காயங்கள், விபத்துகள் ஏற்படும்போதும் கவனமாயிருக்க வேண்டும்,
(ii) குருதிச் சோகை: குருதியில் ஈமோகுளோபின் என்னும் நிறச் சத்துக் குறைவாகக் காணப்படுதல் இந்நோய்க்கான காரணங்கள்.
(அ) செங்கலங்கள் குறைவாக உற்பத்தியாதல், இது புரதம் குறைந்த உணவினால் ஏற்படும். இது பெரும்பாலும் குழந்தைகள் முதியவர்கள், கர்ப்பிணிகளில் காணப்படும்.
(ஆ) இரும்புச்சத்துக் குறைபாடு: உணவில் இரும்புள்ள பச்சை மரக்கறி வகைகளைக் குறைவாக எடுத்தலால் ஏற்படும். இது பெரும் பாலும் பெண்களில் காணப்படும்.
(இ) தொற்று நோய்களாகிய குடற்புழு நோய், மலேரியா ஆகிய வற்றின் விளைவாக ஏற்படலாம்,
(ஈ) விற்றமின் B12 குறைபாடு: பெரும்பாலும் பரம்பரையாக இருப்பது. விற்றமின் B 12 ஐ உறிஞ்சுவதற்குத் தேவையான காரணி குடற்சுவரில் இல்லாமையால் உண்டாவது . இது கடூரமான சோகை எனப்படும்.

Page 18
* کسی سے 28 -صے
(உ) தற்காலிகமாக குருதிப்பெருக்கால் குருதியை இழப்பவர்களில்
ஏற்படலாம்.
(ஊ) ஈயம், ஆர்செனிக் நஞ்சுகள் பென்சீன் சேர்வைகள் உணவு
டன் உட்செல்வதாலும் ஏற்படலாம்.
(அ) (ஆ) இல் குறிப்பிட்டவை போசணையில் குறைபாடு ஏற்
படுவதனல் தோன்றும் ,
குருதிச்சோகை நோயின் அறிகுறி:
உயிர்ப்பாக வேலை செய்ய முடியாது சோம்பலுடையவர்களாயிருப் பர். முறையான உடற்பயிற்சிசளிற் பங்கு கொள்ள முடியாது; கை மஞ்சள் நிறமாகவும் கண்மடல்களில் உட்பகுதி செந்நிறம் குறைந்தும் காணப்படும்.
நோயைத் தவிர்த்தல்
(i) நல்ல போசாக்குள்ள உணவை எடுத்தல் (ii) கர்ப்பிணிகள், பெண்கள், குழந்தைகள் இரும்புச்சத்துள்ள
உணவுகளை உண்ண வேண்டும், (ii) தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் நோய் மாறிய
பின் போசாக்குள்ள உணவை உண்ணுதல்.
ftw) பரம்பரை காரணமாக விற்றமின் B குறைபாட்டால் சோகை
யுடையோர் B ஐ ஊசி மூலம் பெறுதல் வேண்டும்.
{y) குருதி இழக்கப்படுமாயின் வைத்திய சேவையைப் பெறுதல்
வேண்டும்.
குருதி அமுக்கம்
குருதி மூடிய அறைகளுள்ளும் குழாய்களுள்ளும் இருக்கும்போது அறைச்சுவர்களும், குழாய்ச்சுவர்களும் குருதியை அமுக்குவதால் குருதி யும் சுவர்களை அமுக்கும், இதனுல் குருதி அமுக்கம் ஏற்படும். இதயஅறை சுருங்கும்போது அமுக்கம் உயர்வாயிருக்கும். இது சுருக்க அமுக்கம் எனப்படும். இதயவறை விரியும்போது அமுக்கம் குறைவாயிருக்கும். இது விரிவமுக்கம் எனப்படும் .
சாதாரண மனிதனுக்கு சுருக்க அருக்கம் 120 மம்: இரச உயரம் ஆகும். விரிவமுக்கம் 80 mm, இரச உயரமாகும்.
லும் பார்க்க 5–10 mm குறைவாகவிருக்கும்
 
 
 

ھے- 29 -ئے
ಮಿ೬g செல்லச்செல்ல இரு அமுக்கங்களும் கூடும். விரிவமுக்கம் 80-90 mm. ஆகவும் சுருக்க அமுக்கம் 130 - 150 mm. ஆகவும் கூட லாம். இது நாடிச்சுவரின் மீள்தன்மை குறைவதால் ஏற்படுவதாகும்.
() தாழ்குருதி அமுக்கம் சாதாரண விரிவு அமுக்கத்திலும் குறை வான அமுக்கம் ஏற்பட்டால் தாழ் அமுக்கம் எனப்படும். தோற்று விக்கும் காரணிகள்.
(அ) வயிற்ருேட்டம், சத்தி (வாந்தி): நீரை உட்கொள்ள முடி யாமையினுல் குருதியில் நீர் குறைய, அதன் அளவும் குறைதல்; அறு வைச் சிகிச்சையில் அல்லது விபத்தில் குருதி இழப்பு, இதன் அறிகுறி மயக்கம் (Fainting) மூளைக்குக் குருதி செல்லாமையால் இது ஏற்படும்.
சீராக்கல்; குருதி மாற்றிடுசெய்தல், சேலைன் (Saine) ஏற்றல்
(ஆ) குருதியின் புரதக்குறைவு இந்தக் குறைபாட்டைச் சீராக்க 100 கிராமிற்கு குறையாத புரத உணவை எடுத்தல் வேண்டும்.
(i) உயர் குருதி அமுக்கம்: வயது சென்றவர்களில் பலருக்கு இந்நிலைமை ஏற்படலாம். அமுக்கம் 150 mm க்கு மேலிருக்கும் காரணி கள் ;
(அ) இதயத்துடிப்பு அதிகரித்துக் குருதியின் அளவு குழாய்களில்
கூடுதல்,
(ஆ) கோபம், பயம்
(இ) மனநிம்மதி இல்லாம்ை
(ஈ) நாடிக்குள் கொலசுதிரோல் படிவதும், கல்சிய உப்புக்கள்
சுவரினுள் படிவதும்,
குருதி அமுக்க உயிர்வ்ைக் கட்டுப்ப்டுத்தல்:
(அ) மண்தைச் சீராக்கல், (ஆ) 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிக திண்ம கொழுப்புள்ள்
உணவைத் தவிர்த்தல், (இ) அளவுக்கு மிஞ்சிய புர்த, கொழுப்பு உணவைத் தவிர்த்தல் இதனுல் உடல் நிறை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தலாம். (ஈ) கறியுப்பினை சோடியம் குளோரைட்டை தவிர்த்தல் நன்று (உ) வைத்திய ஆலோசனையுடன் குருதியமுக்கத்தைக் கட்டுப்
படுத்தம் மருந்துகளை உபயோகித்தல். (ஊ) கல்சிய உப்புப்படிதல் வயது கூடுதலின் விளைவு.

Page 19
سيس (30 سسس
வரிக்கோசு நாளம் (விரிந்த நாளம்)
இது நாளங்கள் குருதியைத் தேக்கி, விரிவதால் ஏற்படுவது மூல நோய்க்கு நேர்குடலில் ஏற்படும் வரிக்கோசு நாளங்கள் காரணமாகும். காலிலுள்ள நாளங்களே பெரும்பாலும் தாக்கப்படுவனவாகும். கர்ப் பிணிகளில் இது தற்காலிகமாக ஏற்படுவதுண்டு. மீள இழு கட்டுந் துணியினல் வரிந்து கட்டிக் கொண்டால் நோ குறைவாயிருக்கும். நாளங்களை அகற்றும் சிகிச்சை முறையும் உண்டு. உடற்பயிற்சி செய் யாதவர்களிடத்தும் ஒரேயிடத்திலிருந்து வேலை செய்பவர்களிடத்தும் இது காணப்படும். தாக்கப்பட்ட இடங்களில் தோலையும் தள்ளிக் கொண்டு நாளங்கள் காணப்படுவதோடு வலியும் அதிகமாக இருக் கும். இவ்விடங்களில் புண்கள் ஏற்பட்டால் இலேசில் மாரு.
வாத, இதயக் காய்ச்சல்: -
சாதாரண தொண்டையழற்சி ஸ்ரபிலோகொக்கஸ் பற்றீரியாவினல் உண்டாகும். இந்நோய் அடிக்கடி வரும்போது கட்டுப் படுத்தாவிடில் இதன் தொட்சின்கள் இதய வெளியுறை அல்லது உள்ளனியில் அழற் சியை உண்டாக்கும். இதயச் சுற்றுச் சவ்வு அழற்சியும், இதய அகவணி அழற்சியும் ஏற்படும். அகவணி அழற்சியால் வால்வுகள் தாக்கப் பட்டுத் தடிக்கலாம் இதனுல் இவற்றின் மூடித்திறக்கும் திறன் குறையும் மூடியிருக்கையிலும் குருதி பின்னுேக்கி ஒழுகும்.
சிகிச்சையும் பாதுகாப்பும்:
(அ) தொண்டை மூளையழற்சி, டிஃப்தீரியா போன்ற நோய்களுக்கு உடன் வைத்தியம் செய்தல் வேண்டும்.
(ஆ) இதய வாதக் காய்ச்சல் ஏற்படின் தொடர்ந்து சில வரு டங்களுக்கு வைத்திய ஆலோசனையின்படி மருந்தெடுக்க வேண்டும்.
(இ) சிறுவயதில் அடிக்கடி தொண்டை நோ, தொண்டையடைப்பு ஏற்படின் தக்க வைத்தியரிடம் ஆலோசனை பெறவேண்டும்.
இதய வால்வுக் குறைபாடு:
வால்வு பிறக்கும்போது தடித்தோ, சிறிதாகவோ அல்லது பிளவு பட்டோ இருக்கலாம். வால்வுக் குறைபாடு அறுவைச் சிகிச்சை மூலம் திருந்தக் கூடியது. செயற்கை வாவ்வுகளைப் பயன்படுத்தியும் இதனைச் சீராக்குவர்.
இதயத்தில் துவாரம்:
இது சோணையறைகளுக்கிடையில் அல்லது இதய அறைகளுக்கி
டையில் துவாரமிருப்பதால் ஏற்படும் நோய். பிறக்கும்போது இடைச்
சுவர்கள் பூரண வளர்ச்சி பெருமையால் ஏற்படுவது, அறைகள் சுருங்
 

سب 31 || سحے
கும்போது ஆரம்பத்தில் இடது அறையிலிருந்து குருதி வலது அறைக் குச் செல்லும். இதனுல் வலது அறை பெரிதாகும். வலது அறை ஒரளவு பெரிதானதும் குருதி வலது அறையிலிருந்து இடது அறைக் குச் செல்லும். இதனல் ஒட்சிசன் குறைந்த குருதி சுற்றேட்டத்துள் செல்லும். இதனுல் பீடிக்கப்பட்டவர்கள் களைப்பான வேலைகளைச் செய்ய முடியாது. இது பிறப்பின் போதே ஏற்படும் கோளாருயினும் அறுவைச் சிகிச்சை மூலம் நிவாரணம் காணக்கூடியது.
இதய நோய்:
இது ஒரு தனிநோயல்ல, இதில் பலவகைகளும் பல தரங்களும் உண்டு. இதயம் வேலை செய்து கொண்டே தன்னைச் சீராக்கிக் கொள் ளும் ஆற்றலுடையது. எனினும் சில மாற்றங்களை மேற் கொள்ள முடிவதில்லை.
(i) பெரிதாகும் இருதயம்: (Enlarged Heart) இதயம் தொடர்ச் சியாக உயர் அமுக்கத்திற்கு உட்படின் கூடிய அளவு குருதியை வாங் குவதற்காகப் பெரிதாகும். இது தொடர்ந்து நிகழுமாயின் ஒரு நிலை யில் அது சுருங்கும் திறனை இழக்கும். இது வலது அல்லது இடது அறைகளில் நேரக் கூடியதாகும். சிகிச்சையளிக்கப் படாத உயர் அமுக் கத்தினுல் இடது அறை பாதிக்கப்படும். சீதப்பொருள் சேருவதால் நுரையீரல் சுற்ருேட்டத்தில் உயர் அமுக்கம் அதிகரித்தலும் இதற் குப் பிரதான காரணமாகும்.
() கொலஸ்திரோல் படிவதால் ஏற்படும் நோய்கள்:
பெருநாடியிலிருந்து விசேட வலது, இடது முடியுரு தாடிகளால்
குருதி இதயத்துக்கு வழங்கப்படும். இது 2 mm விட்டமுள்ள நா4
ஆாக அமைந்து தசை முழுவதற்கும் கிளைகளைச் செலுத்தும். நாடி
蔷 七′敬鲨 6) as reunus 491.
دالہ قطعی طوJے களுக்குள் கொலஸ்திரோல் படிவதால் அவற்றின் உள்விட்டம் குறை யும். இதனுல் இதயத்துக்குச் செல்லும் குருதியின் அளவும் குறையும். இதன் விளைவாக இதயத்தசைகளுக்கு ஒட்சிசன் பற்ருக்குறை ஏற்படும் இதனுலும் இதயம் பலவீனம் அடையலாம்,

Page 20
-- 2 3 ܗ
)ே அஞ்செணு பெக்ரோறிஸ்;.
முடியுரு நாடிகளில் கொலஸ்திரோல் படிவதால் வயது சென்றவர் களில் ஏற்படும் நோய்களில் ஒன்று. இதன் ஆரம்ப அறிகுறி இளைக்க வேலை செய்ததும் நெஞ்சில் நோ ஏற்படும். ஆறியதும் நோ மாறும். இதை அபாய அறிகுறியாக எடுத்துக் கொண்டு சிறந்த இதயநோய் வைத்தியரிடம் சிகிச்சை பெறுவதுடன் அவருடைய ஆலோசனைகளின் படி ஒழுகுதல் வேண்டும். - (ii) மாரடைப்பு: (Heart attack)
இதயத்துக்குக் குருதி எடுத்துச் செல்லும் நாடிகளில் அல்லது அவற்றின் கிளைகளில் கொலஸ்திரோல் படிந்து ஒடுங்கினுல் இச்சுவர் களில் குருதிச்சிறு தட்டுகள் பிடிபட்டுச் சேரும். இக் குருதிச்சிறு தட்டுகள் குருதியை உறையச் செய்து குழாயை ஒரிடத்தில் அடைத்து விடும். இதனுல் அடைபட்ட இடத்துக்கு அப்பாலுள்ள பகுதிக்குக் குருதி கிடைக்காது. அவை சுருங்க முடியாத நிலையும் அதனல் அவ் விடத்தில் வலியும் ஏற்படும். அப்பகுதித் தசைகள் இறந்துபோக அப் பகுதி நாரிழையத்தால் மூடப்படும் தசை தாக்கப்பட்ட இடம் சிறி தாயின் இதயம் தொடர்ந்து இயங்கும். பெரிதாயின், ஒரு தாக்கத் தில்ை ஒருவர் இறக்கவும் கூடும். 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் இப்படிப் பாதிக்கப்படுவதுண்டு. ஒருசிலர் 20-30 தயதிலும் 30-40 வயதிலும் கூட பாதிக்கப்படலாம் இந் நோய்க்கு பராமரிப்பு முறையே சிறந்த மருந்து வைத்தியரின் ஆலோசனைப்படி தாக்கப்பட்ட இதயச் சுவர் மீள நார்களால் அமைக்
இதயச் தசைக்கும் குருதி கொடுக்கும் குருதிக் கலன்கள்
கப்படும் வரை ԱՄ6007 ஒய்வு எடுத்தல் வேண்டும், இதற்குக் குறைந்தது ஆறு வாரங்களாகும். குருதி உறைதலைத் தடுக்கும் மருந்துகளும் மன தை நிம்மதிப்படுத்தி ஒய்வெடுக்க உதவும் மருந்துகளும் தேவைப்படும்
*
 
 
 
 

سے 33 ) .....................
இதய நோயால் தாக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பு;-
இதய நோய் காரணமாக இளமையிலேயே மரணம் சம்பவிக்க லாம். முற்கூட்டியே பாதுகாப்பெடுப்பின் இதயநோய் வராது தடுக்க முடியும். அல்லது ஒருமுறை வந்தாலும் பின்னர் பல வருடங்களுக்கு வாழமுடியும்,
சில தற்பாதுகாப்பு முறைகள் :-
(i) இதயத்தில் வலிப்பு, இடக்கை கழுத்து உளைவு, சிறிது தூரம் நடந்தபின் அல்லது மாடிப்படிகளில் ஏறிஞல் இளைப்பு முதலிய அறி குறிகள் காணப்பட்டால் உடனே தகுந்த வைத்திய ஆலோசனை பெறப் படல் வேண்டும். இவ்வறிகுறிகளுட் சில இதயத்தோடு சம்பந்தப்படாத வேறு நோய்களுக் குரியனவாகவும் இருக்கலாம்.
(i) 35 வயதுக்கு மேல் புரத கொழுப்பு உணவை அளவுக்கு மிஞ்சி எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். விலங்குக் கொழுப்புகளை நன்முக குறைக்க வேண்டும் விலங் குணவுகளில் மீனுணவு எடுக்கலாம்: தாவர உணவில் தேங்கா யெண்ணெய் கொலஸ்திரோல் உற்பத்தியில் உதவுவதால் தவிர்க்கப்பட வேண்டும்.
(i) உடல் நிறை ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் அதிகரிக்காது பாதுகாக்க வேண்டும்.
(iv) நாளாந்தம் ஒரளவு உடற்பயிற்சி செய்தல் வேண்டும் நடத்தல், வீட்டுத்தோட்டம் செய்தல் போதுமானதாகும்.
(v) மனக்குழப்பங்கள் கவலைகள் உடலைப் பாதிக்காதவாறு நிதா னமாக நடந்து கொள்ளல் வேண்டும். திருப்தி, முயற்சித்த ஏதாவது கிடைக்காவிடின் விரக்தியடையாமை, போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்த என்ற மனப்பான்மை, துன்பமும் இன்பமும் மாறி மாறி வரும் என்ற உண்மை உணர்வு, தெய்வ சித்தம் எதுவோ அதுவே நடக்கும் என்ற அறிவு, துன்பத்திலும் இன்பத்திலும் கடவுள் தம்முடனிருக்கிருர் என்ற நம்பிக்கை ஆகியவற்றை உணர்ந்து வாழ்க் கையில் கடைப் பிடித்தல் வேண்டும்.
(wi) மது அருந்துதல், புகைப்பிடித்தல் போன்ற தீய பழக்கங் களை முற்ருக மறத்தல் அல்லது முடிந்த அளவு குறைத்தல் வேண்டும், (Vi) பெற்ருேருக்கு இதய பலவீனம் என்ருல் பிள்ளைகள் அவர் கள் மீது கூடிய கவன மெடுக்க வேண்டும்.
(wi) கூடுமாயின், வருடத்துக்கு ஒரு முறை வைத்திய பரிசோதனை செய்து கொள்ளல் நன்று 。 பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடித்தவர்கள் ஒரு முறை இதய நோயால் தாக்கப்பட்ட பின்னரும் பல்லாண்டு வாழ்ந்துள்ளனர்.
10.4

Page 21
b 2
இயைபாக்கமும் சீராக்கலும்
நரம்புத் தொகுதியும் இயைபாக்கமும்
எமது உடலில் பலவிதமான தொழில்கள் நடந்து கொண்டிருக் கின்றன, குருதி சுற்றியோடுகின்றது. நுரையீரல்கள் வளியை உள் ளெடுத்து வெளிவிடுகின்றன உணவுக்கால்வாய் உணவைச் செலுத்து கின்றது. தசைகள் அசைவதால் கை கால்கள் அசைகின்றன.
இத் தொழில்களெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளதாக நிகழ்வதாலேயே அங்கி வாழுகின்றது. நுரையீரல்கள் வளியை உள் ளெடுப்பினும் குருதிச் சுற்ருேட்டம் அதற்கேற்பச் சுற்றியோடா விடின் யாது பிரயோசனமுமிராது. நடக்கும்போது ஒரு கால் உயர்த் தப்பட்டுத் தரையில் வைத்த மறுகணத்திலே மறுகால் உயர்த்தப்படு கின்றது. உடற்பயிற்சி செய்யும்போது தேவைக்கேற்ப சுவாச வேக மும் அதிகரிக்கப்படுகின்றது. ஒரு பொரு ளேத் தூக்கும் போது கண் பொருளிருக்கு மிடத்தைக் காட்டுகின்றது.
வெவ்வேறு உடற் ருெழில்களின் தேவைக்கேற்ப உடற் பகுதிகள் ஒத்தி யங்குதல் இயைபாக்கமாகும். இதை நரம் புத் தொகுதி இயற்றுகின்றது. நரம்புத் தொகுதியின் கீழ் இயங்கும் அகஞ் சுரப் பிகளும் நரம்புத் தொகுதியுடன் சேர்ந்து உறுப்புக்கள் ஒத்திசைவதற்கு உதவும்.
நரம்புத் தொகுதி:
தலையோட்டினுள் மூளை என்னும் பகுதி உண்டு. இதுவே நரம்புத் தொகு தியின் ஆளும் பகுதியாகும். மூளையிலிரு ந்து முள்ளெலும்புக் கோவையினுரடாக முண்ணுண் செல்லும்.
மூளையிலிருந்தும் முண்ணுணிலிருந்தும் நரம்புகள் வெளி ச் செ ல் லு ம். இந் நரம்புகளிற் சில உடலின் புலனங்கஜ்
 
 
 

- }് -
களோடு தொடர்புடையன. ஏனைய நரம்புகள் உடலின் தசைகள் சுரப்பிகள் ஆகியவற்றுடன் தொடர்பு பெறும், மூளை, முண்ணுண், நரம்புகள் சேர்ந்த தொகுதி நரம்புத்தொகுதி ஆகும்.
நரம்புத்தொகுதியின் அலகு 。
நரம்புத் தொகுதியை அமைச்கும் அலகுகள் நரம்புக்கலங்கள் ஆகும். ஒரு நரம்புக் கலத்துக்க ஒரு கல உடலும் அதிலிருந்து செல் லும் பல முளைகளும் உண்டு. நீளமான முளையை நரம்பு நார் என் பர். பல நரம்பு நார்கள் சேர்ந்த கற்றையை நரம்பு என்பர்.
நரம்புக்கலம்
நார் கலஉடல்
சில கலங்கள் 2 முளைகளை உடையவை. பெரும்பாலான கலங்கள் பல முளைகளை உடையவை. கல உடல்கள் மூளை, முண்ணுண் அல் லது முண்ணுணின் அருகிலுள்ள திரட்டுக்களில் காணப்படும். நரம்பு கள் பல நரம்பு முளைகளால் அமைக்கப்படும்.
கணத்தாக்கமும் நரம்புக் கலவகைகளும்
நரம்புக் கலங்களினூடாக புலனுறுப்புக்களிலிருந்து மையநரம்புத் தொகுதிக்கும், மைய நரம்புத்தொகுதியிலிருந்து தசை சுரப்பி முதலிய
வற்றிற்கும் செல்லும் செய்தி கணத்தாக்கம் எனப்படும்.
Y
புலனுறுப்புக்களிலிருந்து மையநரம்புத்தொகுதிக்கு கொண்டு செல்லப்படும் கணத்தாக்கம் உணர் கணத்தாக்கம் எனப்படும். மைய நரம்புத் தொகுதியிலிருந்து தசை, சுரப்பி என்பவற்றிற்குச் செல்வது இயக்கு கணத்தாக்கம் எனப்படும்.
உணர் கணத்தாக்கத்தைக் கொண்டு செல்லும் நரம்புக்கலங்கள்
உட்காவு அல்லது உணர்நரம்புக் கலங்கள் ஆகும். இயக்கக் கணத்
தாக்கத்தைக் கொண்டு செல்பவை இயக்க நரம்புக்கலங்கள் எனப்

Page 22
. 55 י? וקוץ הוא)A- st- 63rf
படும். மைய நரம்புத் தொகுதியுள் உணர் நரம்புக் கலங்களுக்கும் வெளிக்காவு நரம்புக் கலங்களுக்கும் இடையில் கணத்தாக்கத்தை ஊடு கடத்தும் கலங்கள் உண்டு. இவை இடைநரம்புக் கலங்கள் என
அழைக்கப்படும்.
தூண்டலும் தூண்டற்பேறும்
புலனங்கங்களைத் தாக்கும் காரணிகள் தூண்டல் எனப்படும். சூழலிலுள்ள சக்திகள், மாற்றங்கள் முதலியவற்றை உணரும் உடற் பகுதிகள் வாங்கிகள் எனப்படும். புலன் அங்கங்கள் வாங்கிகளாகும் தூண்டல்களால் எமது உடலில் ஏற்படும் விளைவுகள் தூண்டற்பேறுகள் எனப்படும். தூண்டற்பேறுகளை விளைவிக்கும் உடற்பகுதிகள் விளேவு காட்டிகள் எனப்படும்.
தசைகளும் சுரப்பிகளுமே உடலிலுள்ள விளைவு காட்டிகளாகும். விளைவுகளை உண்டாக்குவதற்கு செய்திகள் அல்லது கணத்தாக்கங்கள் வாங்கிகளிலிருந்து விளைவு காட்டிகளுககுக் கடத்தப்படல் வேண்டும்.
மனிதனின் நரம்புத் தொகுதியின் பகுதிகள்
மனிதனின் நரம்புத் தொகுதி பின்வரும் 3 பெரும் பகுதிகளை a 60-tugal.
மையநரம்புத் தொகுதி - மூளையும் முண்ணுணும்:
மூளை மண்டையோட்டுக் குழியினுள் அமைந்திருக்கும். நிறைவு டலி ஆணில் அதன்நிறை 1,380 கிராமும் பெண்ணில் 1250 கிராமும் ஆகும். இது மூளையவரைக்கோளங்கள், மூளி, நீள்வளைய மையவிழை வம் ஆகிய மூன்று பிரதம பகுதிகளை உடையது. மூளையவரைக்கோ ளங்களுக்கும் மூளிக்குமிடையில் சிறிய ஏந்திமூளை, நடுமூளை ஆகிய பகுதிகளுமிருக்கும். வெளிப்புறமாக மென்ருயி, வன்முயி என்னும் சவ்வுகளால் மூடப்பட்டுளது,
மூளையவரைக் கோளங்கள்: (மூளையம்) இது மனிதனில் மற்றைய முள்ளெலும்பு விலங்குகளிலும் பார்க்கப் பெரியது. முழு மூளையின
 
 
 
 
 

7ലാമി
y يا «760ته tغه ول தும் நிறையில் * பங்குமாகும். பிளவுகளையும் பல சால்களையும் உடைய தாகக் காணப்படும். இப்பகுதியில் ஏராளமான நரம்புக்கலங்கள் அமைப்புப் பெற்றுள்ளன,
മ്?ഖ
இதன் தொழில்களாவன: ,
(1) உடற்பகுதிகளின் உணர்ச்சிகளை ஐம்புலன்கள் வழியாக அறி
வது (2) உடற்பகுதிகளின் இயக்கங்களை ஆள்வது (3) பார்வை, கேட்டல், மணத்தல் ஆகிய உணர்வுகளைப் பெறு
வதும் விளங்கிக் கொள்வதும்,
இயக்க
ஆடம்) மூளையின் தொழிலாற்றும் மிரதேசங்கள் (வலது பக்கப்ார்வை)

Page 23
........................') 338 ) ۔
(4) அனுபவங்களை ஞாபகப்படுத்தல், சிந்தித்தல் பேசுதல், தொடர்புபடுத்தல், புதிய கருத்துக்களை உண்டாக்கல், நுண் ணறிவு விவேகம் இதில் தங்கியுள்ளது.
மேற்கூறிய தொழில்களுக்காக மூளையின் வெவ்வேறு பகுதி கள் சிறப்புப் பெற்றுள்ளன -
ஏந்தி மூளை அல்லது துவி மூளை இப்பகுதி ஒமோன்களைச் சுரக் கின்ற கபச்சுரப்பியை அடியிற் கொண்டிருக்கும். சில ஒமோன்களையும் சுரக்கின்றது.
நடுமூளை; இது சிறிய நான்கு சோணைகளை உடையது. இவை
ஈரிணைச்சடலங்கள் என அழைக்கப்படும்.
மூளி: இது பல சோணைகளையும் மடிப்புகளையும் உடையது. இது கால், கை, உடல் தசைகளை மூளையத்தின் உதவியுடன் கட்டுப்படுத்தும் நடத்தல், ஒடுதல், பாய்தல், எழுதுதல் ஆகிய இச்சையில் தொழில்களை கட்டுப்பாடு செய்யும. மேலும் இத் தசைகளை இயக்கி சமநிலையில் நிற்க, இருக்க, ஒட உதவும். சுருங்கக்கூறின் மூளி தசை நார்களைக் கட்டுப்படுத்துகிறது. ஒருங்கிணைதல், உடலைச் சமநிலையில் வைத்திருத் தல் போன்றவற்றிற்கு உதவும் எனலாம்.
நீள்வளைய மையவிழையம்: இது மூளையின் கடைசிப் பகுதியாகும் இப்பகுதி இதயத் துடிப்பு, சுவாசித்தல், வியர்வை வெளியேறல், குரு திச்சுற்ருேட்டம் போன்ற முக்கிய இச்சையில் உடற்ருெழில்களை ஆளு கின்றது அல்லது கட்டுப்படுத்துகின்றது.
மூளையின் வெட்டுமுகத்தை ஆராயின் அது வெளிப்புறமாக நரை சட்டப்பொருளையும் உட்புறமாக வெண்சடப்பொருளையும் உடையதா யிருக்கும். முன்னையதில் கலங்களும் பின்னையதில் நரம்பு நார்களும் உள. மூளை வெளியாக மென்முயி வன்முயி என்னும் உறைகளை உடை யது. மூளையினுள் அறைகளும் உண்டு. மூளை அறைகளுள்ளும், வெளிப் போர்வைகளின் இடைவெளியிலும் மூளைய முண்ணுன் பாய்பொருள் உண்டு. மூளைக்குப் போசணையளிப்பதும் சுவாச கழிவு சம்பந்தமான பொருள்களை விநியோகித்தல், சேகரித்தல் என்பனவும் இப்பாய் பொருளின் தொழில்களாகும், நீரணை போன்று பாதுகாப்பும் அளிக்கின் தது. சில நரம்புத்தொகுதி நோய்களுக்கு இப்பாய்பொருள் தொற்றல டைதலே காரணமாகும்

سے | 9ھ | سستے
முண்ணுண் -
முண்ணுண் முள்ளந்தண்டுக் கோவையின் கால்வாயினுள் அமைந் திருக்கின்றது இது நீள்வளைய மையவிழையத்தின் தொடர்ச்சியாகக் காணப்படுகிறது. நிறைவுடலியில் ஏறக்குறைய 45 cm நீளமு 60 - Ugl ,
முண்ணுண் மேல்பகுதியிலிருந்து கீழ் நோக்கிச் செல்லும்பொழுது பருமனில் சிறிது குறைகின்றது. கீழ்முனை மிக மெல்லியதாகவும் கூராகவும் உள்ளது. முண்ணுண் இரண்டு இடங்களில் (கழுத்துப்பகு தியிலும் நாரிப்பகுதியிலும்) சிறிது பெருத்துக் காணப்படும்.
முண்ணுணும் வன்முயி, மென்ருயி ஆகிய மென்சவ்வுப்படைக ளால் சூழப்பட்டிருக்கும். முண்ணுணின் குறுக்கு வெட்டுமுகத்தில் நரைநிறச் சடப்பொருளும், வெண் சடப்பொருளும் காணப்படும் ஆனல் மூளையிலிருப்பதைப் போலன்றி ஒழுங்குமுறை மாறியிருக் கும். முண்ணுணின் வெண் சடப்பொருள் வெளிப்புறமாகவும் நரைநிறப் பொருள் உள்ளாக H வடிவத்திலும் அமைந்திருக்கும் முண். ணுணிலிருந்து சோடியான முதுகு வயிற்றுப்புற அடிகள் உண்டாகும் இவை இணைந்து முண்ணுண் நரம்புகள் உற்பத்தியாகிப் பல்வேறு உறுப்புக்களுக்கும் செல்லும.
1.
7/
7
2
L
奥
4 N --------------- "י :- "" - "ידי ר முண்ணுணும் நரம்புகளும் 1. முதுகுப்புற அடி 2, முண்ணுண் நரம்பு 3. பரிவுத்திரட்டு 4. பரிவு நரப் பு 5 வாங்கி 6. விளைவு காட்டி 7. பரிவுச் சங்கிலி: A B C தெறிவில்

Page 24
ســا 40 حسن۔
முண்ணுணிண் தொழில்கள்:
1. மூளையுடன் தொடர்பை ஏற்படுத்துகின்றது: 2. புலன் நரம்புகளையும் இயக்க நரம்புகளையும் கொண்டிருத்தல் 3. செய்திகளைப் பல்வேறு பகுதிகளுக்கும் கடத்தல். 4. உடலின் நிலைபற்றிய உணர்வை தசைகளில் இருந்து மூளைக்கு
அறிவித்தல்.
II. சுற்றயல் நரம்புத் தொகுதி
இவை மண்டையோட்டு நரம்புகள் முண்ணுண் நரம்புகள் என இருவகையின.
(1) மண்டையோட்டு நரம்புகள்: இவை மூளையிலிருந்து வெளிப் படுகின்றன. மனிதனில் 12 சோடி மண்டையோட்டு நரம்புகள் உண்டு. i, i, Wi-ம் நரம்புகள் மணநுகர்ச்சி, பார்வை, கேட்டல் நரம் புகளாகும். i, tv, vi-ம் நரம்புகள் கண் தசைகளை இயக் கும். w-ம் Wi-ம் நரம்புகள் முகம், மேற்ருடை கீழ்த்தா
டைக்குரியன. ix-ம் X1, Xi-ம் நரம்புகள் தொண்டை நாக்கு ஆகிய பகுதிகளுக்கு உரியன், xம் நரம்பு உடலக உறுப்புகளுக்குரியது.
(2) முண்ணுண் நரம்புகள்: முண்ணுணிலிருந்து 31 சோடி முண் ணுண் நரம்புகள் உற்பத்தியாகும். ஒவ்வொரு நரம்பும் முது குப்புற அடி, வயிற்றுப்புற அடி எனும் இருவேர்கள் இணைவதால் உண்டாகின்றது. உ ட லி ன் தசைகளுக்குச் செல்லும்,
11. தன்னுட்சி நரம்புத் தொகுதி:
முண்ணுண் நரம்புகள் எழுமிடத்திலிருந்து பரிவுக்கிளை என்னும் நரம்புகள் உண்டாகும். இவை பரிவுத்திரட்டில் முடிவடையும். இப்பரிவுத் திரட்டுகள் சங்கிலியாக இணைக்கப்பட்டிருக்கும். இத் திரட்டு களிலிருந்து எழும் நரம்பு நார்கள் உடலக உறுப்புக்களான இதயம் உணவுக்கால்வாய், நுரையீரல் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும். இந் நரம்புகள் தன்னுட்சி நரம்புத்தொகுதியாகும். இவை மூளையின் சிந் திக்கும் கட்டுப்பாடின்றி உடலகத் தொழிற்பாடுகளை ஆளும்.
இதயத்துடிப்பு கூடுதல், குறைதல், சுவாசவேகம் கூடுதல் குறைதல் சமிபாட்டுக்கான சுரப்பிகள் சுரத்தல், வெப்பநிலை சீராக்கல் முதலிய செயற்பாடுகள் தன்னுட்சி நரம்புத் தொகுதிக்குட்பட்ட செயல்களாகும்.
 

అpడిగా
முண்ணுன் இதயப் பின்னல்
பரிவு நரம்பு
பரிவுச் சங்கிலி
சூரியப் பின்னல்
கீழுதரப் t ଜିହ୍ବା ଛୋtଇଁ)
தன்னுட்சி நரம்புத்தொகுதி
நடத்தை
சூழல் மாற்றங்களிற்கேற்ப நாம் நடந்துகொள்ளும் முறை நடத்தை எனப்படும். உடலின் புலனுறுப்புக்களிலிருந்து கணத் தாக்கங்கள் மூளைக்குச் செல்லுகின்றன. இவற்றை மூளை பிரித்தறிந்து ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் ஏற்றவாறு இயக்க நரம்புகள் மூலம் கட்டளைகளைச் செலுத்தும்.
தெறிவினை: எமது நடத்தையில் பல மூளேயின் சிந்திக்கும் தன்
மையில் தங்கியிருப்பதில்லை. மூளையின் சிந்தனைக்கு உட்படாது ஒரு
0-6

Page 25
حسس 42 عاصم.
தூண்டலுக்கு நிகழும் தூண்டற்பேறு தெறிவினை எனப்படும், இவை
வாழ்க்கையில் பழகாதவை, மறக்க முடியாதவை.
உதாரணமாக: கண்மடல் மூடித்திறக்கின்றது,
கண்மணியின் அளவு ஒளிச்செறிவுக்கு ஏற்றதாக சிறி தாகும். அல்லது பெரிதாகும். கண் தூரக் கிட்டப்பார்வைக்கு வில்லையைச் சீராக்கும்; குளிரான வேளையில் உரோமம் சிலிர்க்கும். நாசியுள் ஏதாவது பிறபொருள் சென்றல் தும்மல் ஏற்படும், வாதஞளியில் பிறபொருள் படின், இருமல் ஏற்படும்; சூடான பொருளில் பட்ட கை உடன் அகற்றப்படும் இவ்வாறு பல இச்சையில் செயல்கள் தெறிவினை மூலம் நடைபெறுகிறது.
இச்சையில் செயல் ஒன்று நடைபெறுவதற்கு இன்றியமையாத ஐந்து
காரணிகள்:
1. தூண்டலை ஏற்கும் வாங்கி உறுப்பு
2. வாங்கியிலிருந்து முண்ணுணுக்குக் கடத்தும் முதுகுப்புற
வேரில் உள்ள திரட்டிலிருக்கும் புலன் நரம்புக்கலம்.
3. புலன் அல்லது உணர்ச்சி நரம்புக் கலத்திலிருந்து நரம்பிணைப்பு வழியாகக் கணத்தாக்கத்தைக் கடத்தும் முண்ணுணில் உள்ள
இடைத்துது நரம்புக்கலம்,
4. அக் கணத்தாக்கங்களை செலுத்தும் முண்ணுணின் வயிற்றுப்புறத்
திலுள் இயக்க நரம்புக்கலம்.
5. இச்சையில் செயல் நடைபெறும் ஒரு விளைவுகாட்டி (பொது
வாக தசைகள் அல்லது சுரப்பிகள்)
தெறிவில்: ஒரு தெறிவினையில் வாங்கியிலிருந்து விளைவுகாட்டிக் குக் கணத்தாக்கம் செல்லும்பாதை தெறிவில் எனப்படும்.
நிபந்தனைக்குட்பட்ட தெறிவினை:
நாம் பிறக்கும்போது இயல்பான தெறிவினைகளை மட்டும் உடை
யோம் நாம் வளர புதிய தூண்டல்களுக்கு ஆளாகின்ருேம் அதற்
கேற்ப புதிய பழக்கங்கள் ஏற்படும்.
உதாரணமாக ஒரு குழந்தை பாலைச் சுவைத்துக் குடிக்கும் சில நாட்களின் பின் பாற்போத்தலைக் கண்டதும் மகிழ்ச்சியடையும். உணவு
и

..................... 4 3--
கொடுப்பவரை விரும்புகின்றது. இவ்வாறு கற்றுக்கொள்ளும் புதிய தெறிப்புவினைகள் நிபந்தனைக்குட்பட்ட தெறி வினைகளாகும். இயல் பான தூண்டலுடன் புதிய தாண்டல் திருப்தி அளிக்கக்கூடியதாகப் பலமுறை சம்பந்தப் படுவதாலேயே கற்றல் ஏற்படும். நாம் எம் வாழ்க்கையில் செய்யும் பல செயல்கள் இவ்வகைப்பட்டன. எழுதுதல் படித்தல், சைக்கிள் ஓடுதல், பல் துலக்குதல், குளித்தல் போன்ற செயல்களெல்லாம் இவ்வகையாகும்.
பழக்கம்:
பலமுறை ஒரே செயலைச் செய்வதனல் சில செயல்கள் எம்மில் பதிக்கப்படுகின்றன. இதைப் பெரும்பாலும் சொந்த விருப்பத்தி னலோ அல்லது பெற்ருர், ஆசிரியர், சமுதாயத்தின் தூண்டுதலி ஞலோ பெற்றுக்கொள்கிருேம், இவ்வாருன செயல்கள் பழக்கம் எனப்படும்.
உதாரணம் எழுதப்பழகல், பல்துலக்கல், கைக்கிள் செலுத்தல் நன்றி எனக் கூறல், மோட்டார் ஒட்டுதல், நிமிர்ந்து நடத்தல் கிரிக்கட்-உதைபந்து விளையாடுதல்.
நல்ல பழக்கங்களைக் கற்றல் போன்று தீயபழக்கங்களையும் ஒருவர் பெற்றுக் கொள்ளலாம்.
உதாரணம்:- புகைத்தல், மது அருந்துதல்.
பழக்கங்கள் ஒருவரால் கற்றுக் கொண்ட செயல் என்பதால் இவற்றை விரும்பின் மறக்க முடியும். பழக்கத்துக்கு ஏதுவான இடம் பொருள், நபர் முதலிய காரணிகளைத் தவிர்த்தலால் மறக்க முடியும். தண்டனையை ஒருவர் விரும்புவதில்லை எனவே ஒரு பழக்கத்தை வெறுக் கச் செய்ய தண்டனை ஒரு கருவியாகும். தண்டனையைப் பழக்கம் நிகழும்போது அளித்தல் வேண்டும். மேலும் தண்டனையைப் பெறுப வருக்கு எதற்காகத் தண்டனை எனவும் கூறப்பட வேண்டும்.
தண்டனைக்குப் பதிலாக ஒரு பழக்கத்தைச் செய்யும்போது மெச்சுதல், பரிசளித்தல் போன்ற செயல்கள் மூலம் திருத்துதல் நன்று என உளவியலாளர் கூறுவர், உதாரணமாக கையெழுத்து அழகில்லாவிடில் தண்டிப்பதிலும் பார்க்க கையெழுத்துக்குச் சோத னையில் புள்ளிகள் தரப்படும் எனக் கூறுவதன் மூலம் திருத்த முடியும். நல்ல பழக்கமொன்றைப் பிள்ளை செய்யும்போது "கெட்டிக்காரன்' *நல்லபிள்ளை' என்று சொல்லுவதால் பிள்ளை அப்பழக்கத்தை விரும்
பிப் பழகும்.

Page 26
قیا۔ 444 مستقسے
இச்சைச்செயல்கள்
இது மனிதனிலும் மனிதக்குரங்குகளிலும் மாத்திரம் காணப் படும். மூளை அனுபவங்களைப் பிரயோகித்துக் குறிப்பிட்ட தேவைகளுக் கேற்ப செயல்களைச் செய்யத் துணிதல் இச்சைச் செயலாகும் இவற்றிற். கான இயக்கக் கணத்தாக்கங்கள் மூளையிலிருந்து தொடக்கப்படும்.
மனிதர் ஏனைய விலங்குகளைவிட மூளைத்திறனில் சிறந்தவர்கள் அணு பவங்களையும், கேட்டவற்றையும், படிப்பவற்றையும் சீர்தூக்கி சரி பிழையென்று தீர்மானிப்பர் நீதியானவற்றைச் செய்வர். எத்தனையோ கருத்துக்களைச் சிந்தனை மூலம் வெளிப்படுத்துகின்றனர் புதிய சாதனங் களைக் கண்டு பிடித்தனர். நீண்ட காலமாக மனிதன் நம்பிவந்த மூட நம்பிக்கைகள் தகர்த்தெறியப்பட்டுள்ளன. பல நோய்களுக்கு பிசாசு கள், அசுத்த ஆவிகள், பெல்லி சூனியம் காரணம் என்ற மூட நம் பிக்கைகள் தவிர்க்கப்பட்டுள்ளன.பெரும்பாலான இதுவரை மாற்ற முடி யாதெனக் கருதிய நோய்கள் நித்திரையின்மை, தாழ்வு மனப்பான்மை ஹிஸ்டீரியா முதலிய நோய்களை அசுத்த ஆவியின் நோய்களாகக் கருதி வந்தனர். மருத்துவத்துறையில் இவை மன நோய்கள் என்றும் இதற்கான மூலகாரணங்களை அறிந்து குணமாக்கலாம் என்றும் இப் பொழுது அறியப்பட்டுள்ளது. மனிதருக்குள்ள்ே சாதி, மொழி, பிர தேச வேறுபாடுகளால் வேற்றுமை பாராட்டுதல்கூட விஞ்ஞான ரீதி யில் வேறுபாடல்ல. வாழும் சூழலைப்பொறுத்து ஏற்படலாம் என இப் பொழுது எடுத்துக் காட்டப்பட்டுள்ளது
அகஞ்சுரப்பிகள் - ஓமோன் சுரப்பிகள்
எமது உடலில் நரம்புத் தொகுதிக்கு உட்பட்டு இயங்கும் கானில் லாத அகஞ் சுரப்பிகள் கரப்பிகள் உண்டு. இவை கானிற் சுரப்பிகள் எனவும் வழங்கப்படும், நரம்புத் தொகுதியுடன் சேர்ந்து இயை பாக் கத்தில் உதவுகின்றன. இவை சிறிய அளவில் ஓமோன்கள் என்னும் இரசாயனப் பொருள்களைச் சுரக்கின்றன. ஓமோன்களினல் ஏற்படுத் தப்படும் இயைபாக்கம் இரசாயன இயைபாக்கம் எனவும் அழைக்கப் படும். பின்வருவன முக்கியமானவை:
 

45 لیے
சுரக்கும் சுரப்பி ஒமோன்கள் தாக்கம்
1. கேடயப் போலிச் தைரொக்சின்வளர்ச்சி, உடல் வெப்பநிலை
சுரப்பி (குரல்வளை சீராக்கம் யின் முன்கை அம்ை ந்துள்ளது)
2. இலங்ககான்சுவின் இன்சுலின் குருதியிலுள்ள வெல்லச் செறி
சிறு தீவுகள்; குளுக்காகன் வைக் கட்டுப்படுத்தும் (முன் சிறு குடலின் வளைவினுள் அமைந் துள்ள சதையியில் காணப்படும்)
(அ) a (அல்பா) குளுக்காகன் குருதியில் குளுக்கோஸ் குறையும் கலங்கள் போது கிளைக்கோசன் குளுக்கோ
சாக மாற உதவும்.
(ஆ) 8 (பீற்ரு) இன்சுலின் மிதமிஞ்சிய குளுக்கோசைக்கிளைக் கலங்கள் கோசணுக மாற்றும். 3. அதிரினல் சுரப்பி (அ) அதிரினகுருதி வெல்லத்தைக் கட்டுப்படுத் (சிறுநீரகத்துக்கு மே ଜୟ୍ଯ தும்; தசைக உசாராகத் தொ லுள்ளது) ழிற்படச் செய்யும் இதயத்துடிப்பு
வேகத்தைக் கூட்டும்.
(ஆ) கோட்டி|உடலில் உப்புக்களின் அளவைக்
சோன்கள்|கட்டுப் படுத்தும்.
4. சூலகம் இசுத்திரசன் இனப்பெருக்கத் தொழிலைக் கட் புரொகெசுத் டுப் படுத்தும்; பெண்துணை இயல் தரன் புகளை விருத்தியாக்கும்.
5. விதை ரெஸ்ரோஸ் ஆண்துணைப் பாலியல்புகள்
ரரோன் விருத்தியாவதை ஆளும்.
6 கபச்சுரப்பி fel Gol) மற்றைய சுரப்பிகளை ஆளும்,
(துவி மூளையின் கீழுஒமோன்கள் வளர்ச்சியைக் கட்டுப் படுத்தும் ள்ளது) உண்டு
நரம்புத் தொகுதியும் மனநோய்களும்
எளிமையான சமூகங்களில் மனநோய்கள் இல்லை. அவர்கள் தங் களை சமுதாய தேவைகளுக்கேற்ப சீர்படுத்திக் கொள்கின்றனர். முன்
னேறிய சமுதாயங்களில் ஒருவரின் தேவைகள் அதிகரிக்கின்றமையால் மனக்கோளாறுகள் ஏற்படுதலும் அதிகரிக்கின்றது.

Page 27
--سے 6 4 -
மன நோய்களுக்கான காரணம்
(1) பெற்ருேர்மூலம் வம்சாவழியாகப் பெற்றதாயிருக்கலாம். (2) குழந்தை வளரும் காலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறை
பாடுகள்.
(3) மூளையிலேற்பட்ட சிதைவு. ཉིན་
(4) குழந்தையாக வாழ்ந்த காலத்தில் பயமூட்டல், தண்டித்தல் அல்லது முறையான பாதுகாப்போ ஆதரவோ இன்றி வளரு தல்.
(5) சில தொற்று நோய்கள் அல்லது ஓமோன்கள் சுரக்கும் சுரப்
பிக் குறைபாடு. -
(6) தாங்க முடியாத அதிர்ச்சி தரும் நிகழ்ச்சிகள்.
உயிரியல் முறையில், இவற்றை நாம் அறிந்து மேற்கொள் வதணுல் மனநோய்கள் வருவதைத தவிர்க்கலாம் .
நரம்புத் தொகுதியில் ஏற்படும் நோய்கள் மெனிஞ்சைற்றிஸ் அல்லது மூளைமென்சவ்வழற்சி
இது மூளை முண்ணுண் ஆகியவற்றைச் சூழ்ந்துள்ள மென்சவ்வு களில் அழற்சி ஏற்படுவதால் உண்டாகின்றது. இது பெரும்பாலும் மொனுேகொக்கஸ் பற்றீரியாவினல் உண்டாகும். சீழ் உண்டாக்கும் ஸ்ரெப்ரோகொக்கஸ், ஸ்ரபிலோகொக்கஸ் கசநோய்க்கிருமி என்பவற் முலும் உண்டாகலாம். கிருமிகள் மண்டையோட்டிலுள்ள புண்கள் வேறு இடங்களிலுள்ள புண்கள் தொண்டை சுவாசப்பையிலுள்ள அழற்சி கள் முதலியவற்றினூடாகக் குருதிக்குட்சென்று, மூளை மென்சவ்வுகளை அடையும். மூக்கழற்சி, நடுக்காதழற்சி என்பவற்றிலிருந்து நேரடியாகவும GoF6āv GvGorTub.
நோய் அறிகுறிகள்:- கடுந்தலையிடி, தொடர்ச்சியான காய்ச்சல், வாந்தி, தசைப்பிடிப்பு பொதுவாகக் காணப்படும். தலையைத் தாழ்த்தி நாடியினல் நெஞ்சைத் தொடும்போது அல்லது மடித்த காலை நீட்டும் போது தாங்க முடியாத நோவும் வலியும் உண்டாகும்.
வைத்தியர் நாரிப்பகுதியில் குற்றி மூளை முண்ணுண் பாயியை எடுத்து அதிலுள்ள கிருமிகள், வெண்குழியங்களைக் கொண்டு எத்த கைய கிருமியின் அழற்சி எனக் கண்டுபிடிப்பர்.
சிகிச்சை: வைத்திய கண்காணிப்பின் கீழ் உயிர் கொல்லி மருந்து கள் கொடுக்கப்பட வேண்டும். ஐஸ் பை தலைக்கு வைத்து காய்ச்சலைத் தணிக்கலாம். உடலுக்குக் குளிர் ஒத்தடமும் கொடுக்கலாம்.
t
 

حس سے 7 4ے سے
தடுப்புமுறை: மூக்குக் குடா அழற்சி, நடுக்காதழற்சி, சீழ் புண்கள் முதலியவற்றை ஆரம்பத்திலேயே குணப்படுத்தல் வேண்டும். இந் நோய்களுக்கு உயிர் கொல்லி மருந்துகள் இருப்பதனல் மூளை மென்சவ் வழற்சி பெரும்பாலும் கட்டுப்படுத்தக்கூடிய நோயாகும்,
விசர் நாய்க்கடி நோய் அல்லது நீர் வெறுப்புநோய்
இது நரம்புத்தொகுதியைத் தாக்கும் ஒரு வைரசு நோய், நாய், பூனை ஆகியவற்றில் காணப்படுவது. விசர் நாய் மனிதனைக் கடிக்கும் போது இந்நோய்க் கிருமிகள் மனிதனுக்குத் தொற்றும்.
நோயரும்பு காலம் இரண்டு வாரங்கள் தொடங்கி சில மாதங் கள் வரை நீடிக்கும். நாய் கடித்த இடம் மூளையிலிருந்து தூரமாயின் அறிகுறிகள் தாமதித்தே தோன்றும்,
அறிகுறிகள்: எவ்வறிகுறிகள் தோன்ருவிடினும் நாய் தொற்றுள் ளதாயின் அல்லது கடித்தநாய் 10 நாட்களில் இறந்துபோகின் நோய் தொற்றியிருக்கும் எனக் கொள்ளவும், வளர்த்த நாய் தூண்டுதலில் லாமல் கடித்தல் சந்தேகப்படக்கூடியது. நோயின் அறிகுறிகள் : காய்ச்சல் அமைதியின்மை, மனக்கட்டுப்பாடில்லாத செயல்கள், ஒலி ஒளி தூண்டல்களால் பாதிப்பு, நீரைக்கண்டு பயப்படுதல், தொண் டையில் வலிப்பும் பிடிப்பும் எனபனவாம்,
தடுப்புமுறை இந்நோய்க்குக் குணமாக்கும் மருந்து இல்லை. தடுப்பு முறையே முக்கியமானது.
(1) நாய், பூனைகள் வளர்ப்போர் விசர்நாய்க்கடி நோய்க்குரியநோய் எதிர்ப்பு வக்சினை (A. R V) விலங்குகளுக்குக் கொடுத்தல் வேண்டும். தாமும் எடுத்தல் வேண்டும்,
(2) கடிக்கப்பட்ட ஒருவருக்கு வைத்தியரின் ஆலோசனைப்படி 14 நாள் அல்லது 21 நாட்களுக்கு அன்ரிறேபிஸ் சீரம் (A. R. S.) ஊசி மூல்ம் கொடுத்தல் வேண்டும்.
(3) நோயுற்ற நாய்களையும் அலைந்து திரியும் நாய்களையும் கொல் லுதல் வேண்டும். நோயுற்ற நாய் பதுங்கித் திரியும் வாயி லிருந்து எச்சில் வடியும்; வால் தொங்கும், கால்கள் வாதப் பிடிப்படையும், நோய் தொற்றிப் 10 நாட்களில் நாய் இறக்
கும், சிறுபிள்ளை வாதம் அல்லது போலியோ
இது ஒரு வைரஸ் நோயாகும். பெரும்பாலும் சிறுபிள்ளைகளுக்குத்
தொற்றும். ஆணுல் வயது வந்தவர்களுக்கும் தொற்றலாம். தொற்

Page 28
4 8 -
றுள்ளவரின் தொண்டைச்சளி, மலம் முதலியவற்றிலிருந்து கிருமி பரவும் நோயுள்ளவரோடு நெருங்கிச் சீவிப்பதாலும் காற்றின் ஊடா கவும் சிலவேளைகளில் பாலூடாகவும் பரவலாம்.
நோயரும்பு காலம்: 7 - 21 நாட்கள் வரையிலாகும்.
அறிகுறிகள்:- இருமல், காய்ச்சல் தலையிடி என்பவற்றுடன் கழுத்து முள்ளெலும்பு மூட்டுகளில் நோவும் பிடிப்பும் இருக்கும். தசைகள் வலுவிழந்து சிதைவடையும். மலச்சிக்கல், வாந்தி என்பனவும் காணப் படலாம். நோயுற்றவர்களில் 90 - 95 சதவீதமானவர்களுக்கு வாதத் தன்மை ஏற்படுவதில்லை. 5% மானவர்களில் பெரும்பாலும் ஒருகால் தாக்கப்படலாம். இதஞல் அக்காலுக்குரிய தசைகள் சூம்பிப்போகும்.
தடுப்பு முறை
(1) நோய் கண்டவர்கள் வைத்திய உதவியை உடன்பெற வேண்
டும், தனிப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். (2) சளி, மலம் தொற்று நீக்கப்பட வேண்டும். (3) ஈக்கள் மொய்க்காதவாறு பாதுகாக்க வேண்டும் (4) நோயாளிகளுடன் மற்றவர்கள் சேராது பாதுகாப்பாக இருக்க
வேண்டும். (5) நோய் பரவும் காலங்களில் பொது இடங்களில் நடமாடுதலைத்
தவிர்க்க வேண்டும். (6) சுகாதார முறைப்படி மலசலகூடங்களை உபயோகிக்க வேண்
டும். (7) சபின் (Sabin) வக்கீன் சிறுபிள்ளையாக இருக்கும்போதே கொடுத்து நீர்ப்பீடனம் பெறுதல் வேண்டும். அல்லது சோக் (Salk) வக்கீனை ஊசி மூலம் ஏற்றல். சபின் வக்சின் பொது வாக விரும்பத்தக்கது.
காக்கைவலி
இது ஒரு காரணம் அறியப்படாத நோயாகும். சில நிலைபரங் களில் நோயாளி கடுமையான தசைவலிப்பிற்கு உட்படுவார். வாயி லிருந்து நுரை வெளியேறும். நரம்பு நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று சில வருடங்களுக்குத் தொடர்ச்சியாக மருந்து எடுத்துவரின் கட்டுப்படுத்தி நோய்வராது தடுக்கலாம்.
நரம்பு வாதை (Stroke) அல்லது பாரிசவாதம்
குருதி உயரமுக்கம் உடையவர்களில் மூளைக் குருதிக் கலன்கள் வெடிப்பதால் மூளையில் குருதிப் பெருக்கு ஏற்பட்டு குருதி உறைதல்
к
Mሃ

----49 است.
ஏற்படலாம், இதனல் அப்பகுதியிலுள்ள மூளைக்கலங்கள் இறக்க நேரி டும். வயது முதிர்ந்தவர்களில் மூளைக்குச் செல்லும் குருதிக்குழாய்கள் தடிப்படைந்து கொலஸ்திரோலும் படிவதால் குருதி உறைகட்டி ஏற் பட்டு மூளையின் சில பகுதிகளிலுள்ள கலங்கள் அழிக்கப்படலாம். உடலில் வேறு பகுதிகளிலுண்டான உறைகட்டி தலைக்குக் காவப்பட்டு மூளைக் குருதிக்கானென்றை அடைப்பதனலும் ஏற்படலாம்.
அறிகுறிகள்:- உடலின் வல இடப் பாகங்களில் ஒரு பகுதி செயற் பட முடியாது போகலாம். முகத்தசைகள் ஒரு பக்கம் இழுபடலாம்" நாக்குத் தசைகள் தாக்கப்படுவதால் பேச முடியாது இருக்கும் அல்லது பேச்சுத் தளம்பும்,
சிகிச்சை:- மூளையின் எப்பகுதி தாக்கப்பட்டது என்பதைப் பொறுத்து நோயின் தரம் இருக்கும். உடனடியாக தக்க வைத்திய சிசிச்சை அளிக்கப்பட வேண்டும். பலர் சில வார ஒய்வின் பின் அதிக தாக்க மின்றி குணமாகுவர். ஒரு சிலருக்கு ஏதாவதொரு அவயவம் அல்லது முகத்தின் ஒரு பகுதியின அசைவுகள் தாக்கப்படலாம்.
நோய் தோன்றுவதற்கான காரணங்கள்:
பெரும்பாலும் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே இது ஏற்படலாம். குருதி உயரமுக்கம் உடையவர்களுக்கும் குருதியில் கொலஸ்திரோல் அதிகமுடையவர்களுக்கும் இது ஏற்படக்கூடிய வாய்ப் புண்டு. எனவே இதய நோய்களுக்கு எடுக்கும் தடுப்பு முறைகள் இங்கும் பயனுடையதாகும். வயது முதிர்ந்தவர்களுக்குக் குருதிக்கலங் கள் படிப்படியாகத் தடிப்படைவதால் இந் நோய் அறிகுறிகள் படிப் படியாகத் தோன்றும். வைத்திய ஆலோசனைப்படி மருந்தெடுப்பின் இந் நோயின் தாக்கங்களை மேற்கொள்ளலாம்,
சமூக நோய்கள்: இவையும் நரம்புத் தொகுதியைத் தாக்கும்:
(விபரம் இனப்பெருக்கத் தொகுதியில் காண்க)

Page 29
I u (ar l lib 3
கழித்தலும் இனப்பெருக்கலும்
கழித்தல்
மனிதனின் கலங்களுக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கும் பல்வேறு தொழிற்பாடுகள் அனுசேபங்கள் எனப்படும். அனுசேபங்களின்போது உடற்கலங்களிற் பல பொருள்கள் தோன்றுகின்றன. இப் பொருட் களில் பெரும்பாலானவை உடற்கலங்களினல் பயன்படுத்தப்படுகின் றன. ஏனைய பதார்த்தங்கள் உடலிற்குத் தேவையற்றவை. அவை உடற்கலங்களில் தொடர்ந்து சேருமாயின் உடலுக்குத் தீங்கை லிளே விக்கின்றன. எனவே இப்பதார்த்தங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு சேரு வதற்கு முன்பு உடலிலிருந்து வெளியேற்றப்படல் வேண்டும்.
அனுசேபத் தொழிற்பாடுகளின் போது தோன்றும் தேவையற்ற பொருட்களை உடலிலிருந்து வெளியேற்றும் செயல் கழித்தல் ஆகும்.
மனிதனில் பலவகைப்பட்ட கழிவுப்பொருட்கள் வெளியேற்றப்படு
கின்றன. அவற்றுள் சில பின்வருமாறு:
(i) யூரியா (ii) யூரிக்கமிலம் (ii) கிறியற்றினன் (tw) காபனீரொட்சைட்டு (W) பித்த நிறப்பொருட்கள்
இவற்றுள் i, i, i நைதரசன் கழிவுகள் எனப்படும் .
மனிதனில் பிரதான கழித்தலங்கங்களும், அவை அகற்றும் கழிவுப் பொருட்களும் பின்வருமாறு:
அங்கம் கழிவுப் பொருட்கள் சிறுநீரகங்கள் பன் யூரியா, யூரிக்கமிலம், கிறியற்றினன்,
காபனீரொட்சைட்டு, மிதமிஞ்சிய நீர். தோல் ബ வியர்வையுடன் சிறிதளவு யூரியா, NaC)
முதலிய உப்புக்கள். சுவாசப்பை - காபனீரொட்சைட்டு, ஈரல் - பித்த நிறப்பொருள்.
மனிதனில் சிறுநீரகங்களே பிரதான கழித்தலங்கங்கள். அவை குருதியிலுள்ள நைதரசன் கழிவுகளை அகற்றி மிதமிஞ்சிய நீருடன் சில உப்புக்களையும் வெளியேற்றுகின்றன.
 

سمت || || 5، حس
சிறுநீரகத் தொகுதியின் அமைப்பு: (முதுகுப்பார்வை)
1 - முதுகுப்புறப்பெருநாடி 5 - சிறுநீர்க்கான் (வலது) 2 - பிற்பெருநாளம் 6 - சிறுநீர்ப்பை 3 - அதிரினல் சுரப்பி 7 - சிறுநீர்வழி 4 - இடது சிறுநீரகம்
2
ܢܠ
தி

Page 30
- 52 --
அமைவிடம்; வயிற்றுப்பகுதியில் முதுகுப்புறமாக் முள்ளந்தண்டின் இரு புறங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரு சிறு நீரகங்களுண்டு.
இவை அவரைவித்து வடிவமும் செங்கபில நிறமும் உடையவை. ஒரு சிறுநீரகத்தின் பருமன் ஏறத்தாள ஒருவரது கை முட்டியின் அளவா னது சாதாரண மனிதனின் சிறுநீரகம் ஏறக்குறைய 12 cm நீளமும் 6 cm குறுக்களவும் உடையது. சிறுநீரகங்கள் ஒளிபுகவிடக் கூடிய மென்சவ் வினாலேயே போர்க்கப்பட்டிருக்கும்.
சிறு நீரகங்கள் சிறு நீரக நாடியிலிருந்து ஒட்சிசன் ஏற்றப்பட்ட குரு தியைப் பெறும் சிறுநீரகங்களிலிருந்து ஒட்சிசன கற்றப்பட்ட குருதியை சிறு நீரக நாளங்கள் பிற்பக்க பெருநாளத்திற்கு எடுத்துச் செல்லும்.
ஒவ்வொரு சிறு நீரகத்திலிருந்தும் சிறு நீரகக்கான் எனப்படும் குழாய் உற்பத்தியாகி வயிற்றின் அடிப்பகுதியில் அமைந்துள்ள சிறுநீர்ப்பையி னுள் திறக்கும். சிறுநீர்ப்பை ஒரு தசை செறிந்த மீள் சக்தியுடைய பையாகும். சிறுநீர்ப்பையிலிருந்து சிறு நீர்வழியினால் சிறுநீர் வெளியேற் றப்படும்.
சிறுநீரகத்தின் உட்புறக் கட்டமைப்பு
சிறுநீரகத்தின் உட்புறக் கட்டமைப்பை அறிவதற்கு அதன் நீளப் பக்க வெட்டுமுகத் தோற்றத்தை ஆராய்தல் வேண்டும். அதன் குழி வான பகுதி சிறு நீரக இடுப்பு எனப்படும். இது சிறுநீரகக்கானுடன் தொடர்புடையது. சிறுநீரக இடுப்புக்கு அருகில் உட்புறமாகப் பல முக்கோண வடிவான கூம்பகங்கள் காணப்படுகின்றன .
சிறுநீரக வெட்டுமுகத்தில் இரண்டு பகுதிகளை வேறு பிரித்து அறிய லாம் அவையாவன :
மேற்பட்டை
மையவிழையம்
சிறு நீரக நாளம் சிறுநீரக நாடி
சிறு நீரக இடுப்பு
கூம்பகம்
சிறுநீர்க்கான்
சிறுநீரகத்தின் வெட்டுமுகம்

حسینے 63 ستم
() மேற்பட்டை; இது சிறுநீரகத்தின் வெளிப்புறத்திலுள்ள சிறிது கருமை நிறம் வாய்ந்த பகுதியாகும்.
(i) மையவிழையம்; இது உட்புறமாக அமைந்த கருமைநிறம் குறைந்த பகுதியாகும் மையவிழையம் அரியம் போன்ற கம்பங்கஃா உட்பக்கமாகவுடையது
கலன் கோளம்
உ. சேய்மைச் சுருள் அண்மைச் சுருள் " 阮一 சேகரிக்கும்
குழாய்
என்லியின் தடம் அண்ஆை
சிறுநீரகத்தின் நுண் அமைப்பு (விபரமான)
சிறுநீரகம் சிறுநீரகச் சிறுகுழாய்களால் (சிறுநீரகத்திகளினல்) ஆனது ஒவ்வொரு சிறுநீரகச் சிறுகுழாயும் சுருண்ட குழாய் வடிவானது. இக் குழாயின் ஒரு முனை விரிந்து கிண்ணம் போன்று காணப்படும். இது போமனின் உறை எனப்படும். போமனினுறையிலுள்ள கிண்ணத்தி னுள் குருதிமயிர்க்குழாய் கற்றையாக இருக்கும். இது கலன்கோளம் எனப்படும். போமனின் உறையும் கலன்கோளமும் ஒருமித்து மல்பீசி யன் உடல் எனப்படும்.
போமனின் உறையைத் தொடர்ந்து சிறுநீரகச் சிறுகுழாயின் முற் பகுதி அண்மைச் சுருள் ஆகவும் பின்னர் நீண்டு U வடிவான என். லேயின் தடமாகவும் அமையும். இதைத் தொடர்ந்து சேய்மைச்சுருள் காணப்படும். இது சேர்க்கும் கானினுள்ளே திறக்கும். ஒரு சேர்க்கும் கலனில் பல சிறுநீரகச் சிறுகுழாய்கள் தொடுக்கப்பட்டிருக்கும். சேர்த்
கும் கான் இறுதியில் கூம்பகத்தில் முடிவடையும்,

Page 31
-- 4 5 ܚ
சிறுநீரக நாடியின் ஒரு சிறு கிளையான உட்காவு புன்னடியொன்று கலன்கோளத்திற்குக் குருதியைக் கொண்டு வரும் இவற்றிலும் பார்க் கச் சிறிதான வெளிக்காவு புன்னடி கலன்கோளத்திலிருந்து குருதியை எடுத்துச் செல்லும் வெளிக்காவு புன்னடி பின்னர் சிறிய குருதிமயிர்க் குழாய்களாகப் பிரிந்து கிறுநீரகச் சிறுகுழாயின்மேல் வலைபோன்று படர்ந்திருக்கும். இவை மீண்டும் ஒன்று சேர்ந்து சிறுநீரகத்திலிருந்து குருதியைச் சேகரிக்கும் சிறுநீரக நாளத்தில் சேரும்.
கழித்தற் பொறிமுறை
(1) வடிகட்டல்:- கலன் கோளத்தில் குருதி உயர் அமுக்கத்தில் காணப்படும். இதனுல் குருதிமயிர்த்துளைக் குழாய்களின் சுவரினுாடாக வடிகட்டல் நிகழ்கின்றது. வடிகட்டப்பட்ட பாய்பொருள் கலன்கோள வடிதிரவம் எனப்படும்.
(i) மீள உறிஞ்சல்:- கலன்கோள வடிதிரவம் குருதியின் திரவ விழையத்தை ஒத்தது. சிறுகுழாயினுாடாக கலன்கோளவடிதிரவம் செல்லும்போது அதிலுள்ள குளுக்கோசும் சில உப்புக்களும் பெருமளவு நீரும் மீள அகத்துறிஞ்சப்படும். இவ்வாறு உறிஞ்சப்படுவதனல் கலன் கோளவடிதிரவத்தின் அமைப்பு மாறுபடுகின்றது. இறுதியில் குழாய்களில் எஞ்சியிருக்கும் பொருள் சிறுநீர் எனப்படும். சேர்க்கும் கானில் நீர் மீண் டும் உறிஞ்சப்படுவதினுல் சிறுநீர் மேலும் செறிவாக்கப்படுகின்றது. சேர்க் கும் குழாய்களிலிருந்து சிறுநீர் சிறுநீரக இடுப்பை அடையும். அது பின்பு சிறுநீர்க்குழாயின் சுற்றுச்சுருக்கு அசைவினல் சிறுநீர்ப்பையைத் துளிதுளியாக அடையும். குழந்தைகளில் சிறுநீர்ப்பை நிரம்பியதும் சிறு நீர் வெளியேற்றப்படும். வளர வளர குறிப்பிட்ட நேரங்களில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் உண்டாகும். ஒரு மனிதன் ஒரு நாளில் 1500 cc சிறு நீரைக் கழிக்கின்ருன்.
சிறுநீரின் கூறுகள்:
(i) யூரியா - 2% (i) யூரிக்கமிலம் -005% (i) அமோனியா சேர்வைகள் -- 005% (iv) fỂrf - 96%
(v) உப்புக்கள், விற்றமின்கள், ஓமோன்கள், மதுசாரம் முதலி
யனவும் மிகச் சிறிய அளவில் காணப்படும்.
சிறுநீரகத்தின் தொழில்கள்:
(1) நைதரசன் கழிவுப் பொருட்களை அகற்றல். (i) நீரை மீள அகத்துறிஞ்சி நீர்ச் சமநிலையைப் பேணல், (iii) உடற்பாய் பொருட்களின் அமிலகார (pH) சமநிலையைப்
பேனல்,
ب)

حی- 5 5-سے
(iv) கனியுப்புக்களை குருதியில் சீராக வைத்திருத்தல். (w) மேலதிக விற்றமின் B, C கழித்தல். நாம் உள்ளெடுக்கும் பென்சிலின் போன்ற சில மருந்துப் பொருட்களை வெளியேற் றல்.
ஏனைய கழிவகற்றும் அங்கங்கள்:
தோல், தோலிலுள்ள வியர்வைச் சுரப்பிகள் வியர்வையைச் சுரக் கும். வியர்வை வியர்வைக் கானினுரடாக உடலின் மேற்பரப்பை அடை யும். வியர்வையில் ஏறககுறைய 98% - 99% வரை நீர் உண்டு. மிகுதி சோடியம் குளோரட்டையும் சிறிதளவு யூரியாவையும் வேறு உப்புக்களை யும் கொண்டிருககும். வியர்வையின் அமைப்பு வேறுபடக் கூடியது. சிறு நீரகங்சள் பாதிக்கப்பட்டிருந்தால் வியர்வையில் யூரியாவின் செறிவு அதிகரிக்கப்படும். சிறுநீருடன் ஒப்பிடும்பொழுது வியர்வையினல் கழிக் கப்படும் யூரியா மிக மிகக் குறைவாகும். வியரில்லி அல்லது வியர் வைத் துவாரங்கள் அழுக்கினுல் அடைபடாது இருப்பதற்குத் தோலைச் சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும் அழுக்கு வியர்வைக் சுரப்பிகளைத் தொழிற்படாது தடைப்படுத்தும்.
சுவாசப்பை சுவாசப்பைகள் வெளிச் சுவாசத்துடன் காபனீரொட் சைட்டையும் நீராவியையும் கொண்ட வளியை வெளியேற்றுவதற்கு உதவி புரியும். உட்சுவாசிக்கப்பட்ட வளியிலுள்ள காபனீரொட்சைட் டினது செறிவு - 0.3% ஆகும். வெளிச் சுவாசிக்கப்பட்ட வளியில்-4% உண்டு. காபனீரொட்சைட்டு கலங்களில் சுவாசத்தின் போது தோன்றிய சுழிவாகும். -
ஈரல் ஈரலில் மிகையான அமினுேவமிலங்கள் அமீன் அகற்றல் முறையால் யூரியாவாக மாற்றப்படும். மேலும் ஈரலில் செங்குழியங் களிலுள்ள ஈமோகுளோபின் பிரிகையடையும் பொழுது பிலிரூபின் பிலிவேடின் என்னும் பித்த நிறப்பொருட்கள் தோன்றுகின்றன. அவை பித்நக்கானினுரடாகச் சென்று முன் சிறுகுடலை அடைந்து பின்னர் மலத்துடன் வெளியேற்றப்படும். மலம் நிறமாக இருப்பதற்கு இந் நிறப்பொருட்களே காரணமாகும்.
சிறுநீரகத்தில் ஏற்படும் நோய்கள்:-
(அ) சிறுநீரக அழற்சி; (Nephritis) அல்லது பிறைற்றின் தோய் (Brights disease) கிருமிகளின் தொற்றுதலின லே சிறுநீரக அழற்சி ஏற் படுகின்றது. சிறுநீரக அழற்சி பின்வரும் காரணிகளினல் ஏற்படும். (i) பற்றிரியங்களினல் விடுவிக்கப்படும் நச்சுப் பொருட்களின் ஒவ் வாமைத் தாக்கம். சிறுநீரகங்களின் கலன்கோளமே அழற்சிக்கு உட் படுகிறது. இவ்வழற்சியினல் செங்குழியங்களும் புரதங்களும் கலன்கோள வடிதிரவத்தை அடையும். இதனல் சிறுநீரில் செங்குழியங்களும் புர

Page 32
س 6 5 ديسس
தங்களும் காணப்படும். உடலில் வேறுபகுதிகளில் தொற்றல் ஏற்பட்டு (விசேடமாகத் தொண்டையில்) விடுவிக்கப்படும் நச்சுப்பதார்த்தமே இவ்விளைவை உண்டாக்கும்.
(ii) சிறுநீர்க் கான்கழில் கீழ்ப்பகுதியிலிருந்து பற்றீரியங்கள் குடி பெயர்ந்து தாக்குதல், அல்லது குருதியிலிருந்து பரவுதல், இதல்ை சிறு நீரக இடுப்பும், கூம்பகங்களுமே கூடுதலாக பாதிப்படையும்.
(i) பற்றீரியங்களின் தொற்றல். இது பொதுவாக சிறுநீர்ப்பை யில் ஏற்படும்
அறிகுறிகள்:-
(1) சிறுநீர் தேனீர்சாய நிறமாகக் காணப்படும் உடல் வீங்கு
தல் குறிப்பாக கன்னங்கள்.
(2) முகம், கணுக்கால் ஆகியன பொருமிக் காணப்படல்,
(3) ஆரம்பத்தில் வாந்தியும் சமிபாட்டுக் கோளாறுகளும் பசியின்
மையும் ஏற்படல்.
(4) காய்ச்சல் 100 - 101°F வரை செல்லும், உடல் குளிர்வது போலிருக்கும். வயது வந்தவர்களில் காய்ச்சல் இராது. முதுகு வலி, இடுப்புவலி சிலவேளைகளில் வயிற்ருேட்டமும் ஏற்படும் ,
(5) கடுமையாகத் தாக்கப்படின் சிறுநீர் மிகக் குறைவாகவே வெளி
யேறும்.
(6) குருதியில் யூறியாவின் அளவும் அதிகரிக்கும்.
நோய்க்குரிய அறிகுறிகள் தோன்றியதும் மருத்துவரிடம் ஆலோ சனைபெற்று சிகிச்சையளித்தல் வேண்டும், கவனயீனமாக விடப்படின் ஆபத்து விளைவிக்கும். யூரியா குருதியில் சேர்வதால் யூரிமியா என்னும் நஞ்சூட்டப்பட்ட நிலை ஏற்படும்.
(ஆ) சிறுநீரகக் கற்கள்: (Kidney Stones) சிறுநீரில் கல்சியம் ஒட்சலேற்று, கல்சியம் பொசுபேற்று, யூறிக்கமிலம் ஆகிய உப்புக்கள் உண்டு. சிறுநீரில் கரைந்திருக்கும் இவ்வுப்புக்கள் சிறுநீரில் அதிக செறி விலிருப்பின் பளிங்க்ாகிச் சிறுநீரகத்தில் கற்களை உண்டாகச் செய்யும் கற்கள் வழமையாகச் சிறுநீரக இடுப்பிலேயே உண்டாகின்றன.
அறிகுறிகள் கற்கள் உண்டாவதால் அப்பகுதியில் வலி ஏற்படும். சிறுநீரகத்தில் தோன்றிய சிறுகற்கள் சிலவேளைகளில் சிறுநீர்க்கான்களி னுாடாக சிறுநீர்ப்பையை அடையக்கூடும். அப்பொழுது சிறுநீர்க்கானின் சுவர் விரிவடைவதனல் உக்கிரமான நோவு ஏற்படுகிறது. சிறுநீர் வழி யிலுள்ள கற்கள் பெரும்பாலும் ஊசி போன்றிருப்பதால் அவை சிறுநீர் செல்லும் வழியைத் தடை செய்வதில்லை. சிறிய கற்கள் சிறுநீருடன்

ட 57 -
வெளியேறுவதுமுண்டு. சிறுநீரக இடுப்புக்களில் தோன்றும் பெரிய கற் களை அறுவைச் சிகிச்சை மூலம் நீக்கவேண்டியிருக்கும் சிறுநீர்க்கற்கள் தோன்றுவதைத் தடுக்கச் சுத்தமான நீரை ஒழுங்காகக் குடிக்க வேண் டும். -
இ. யூறேமியா (utemia) குருதியில் யூறியா சேருதல். அறிகுறிகள்:- காய்ச்சல், வீக்கம், அதிக களைப்பு, மூளைத் தொழிற்பாடு
படிப்படியாகக் குறைதல், சிறுநீரக நோயைத் தடுக்கும் முறைகள்
1. சுத்தமான நீரை 150 மி. லீற்றர் தினம் பருகுதல், o 2. உப்புச் செறிவதிகமான நீரைக் கொதிக்க வைத்தபின் பருகுதல 3. உடற்பயிற்சி சிறுநீரகங்களைச் சுக நிலையில் வைத்திருக்க உதவும்" 4 நற்போசணை இனப்பெருக்கத் தொகுதி
மனிதனில் இலிங்கமுறை இனப்பெருக்கமே நடைபெறுகின்றது இவ் இனப்பெருக்க முறையில் ஆண்புணரி அல்லது விந்தும், பெண் புணரி அல்லது சூலும் இணைந்து நுகத்தைத் தோற்றுவிக்கும். நுகம் பல பிளவுகளுக்குப் பின் முளையமாக விருத்தியடைகின்றது. ஆண் களில் விந்துக்கள் விதையிலும், பெண்களில் சூல் சூலகத்தினலும் உற் பத்தியாக்கப்படும் ஆணின் இனப்பெருக்கத் தொகுதி
சிறுநீர்க் கான்
சுச்கிலப்புடகம்
முன்னிற்கும்
சுரப்பி ஆண்குறி
அப்பாற் செலுத்தி
விதையிேற் முன் ருேல்
றிணிவு விதைப்பை விதை
0.8 ஆண் சனணித் தொகுதி (பக்கத்தோற்றம்)

Page 33
كسد 8 5 سم.
இதில் பின்வரும் அங்கங்கள் காணப்படும்
(1) விதை: இரண்டு விதைகள் வயிற்றறைக்கு வெளியே விதைப் பையினுள் அமைந்துள்ளன. விதைகள் நீள்வட்ட வடிவானவை. விதை யினுள்ளே விந்துக்களை உண்டாக்கும் சிறிய குழாய்கள் காணப்படுகின் 1960T. இவை சுக்சிலச் சிறுகுழாய்கள் எனப்படும். இதன் சுவர்களிலி ருந்து விந்துக்கள் உருவாகும்.
(2) விதைமேற்றிணிவு:- விதையிலுள்ள சுச் கிலச் சிறுகுழாய்கள் யாவும் இணைந்து விதையின் வெளியே நீண்ட குழாயாகும். இக் குழாய் சுருண்டு மடிந்து விதையின் முற்பக்கத்திலும் பிற்பக்கத்திலும் விதை மேல் திணிவாகக் காணப்படும் இவை விந்துக்களைச் சேமிக்கும்
(3) அப்பாற் செலுத்தி:- இது தசை செறிந்த கான். வலது இடது விதைமேற்றிணிவிலிருந்து ஆரம்பிக்கம். அப்பாற் செலுத்திக்கான்கள் சிறுநீரக வழியின் ஆரம்பத்தில் திறக்கும்:
(4) சுக்கிலப்புடகம்:- இது ஒவ்வொரு பக்கத்திலும் அப்பாற் செலுத் தியின் அடியில் திறக்கின்ற சுரப்பியாகும். சுக்கிலப்புடகம் சுக்கிலப் பாய் பொருளைச் சுரக்கும். விந்துக்களுக்கான போசனை ஊடகமாகச் சுக்கிலப் பாய்பொருள் உதவும்.
(5) முன்னிற்கும் சுரப்பி: விந்துக்கானின் அடி, சிறுநீர் வழி ஆகி யவற்றைச் சூழ்ந்து காணப்படும் சுரப்பி இதுவாகும் இச் சுரப்பியின் சுரப்பு சிறுநீர் வழியில் தங்கியிருக்கும் சிறுநீரின் அமிலத் தன்மையை நடுநிலையாக்கும்.
(6) சிறுநீர்வழிச் சுரப்பி அல்லது கூப்பரின் சுரப்பி; இது சிறுநீர் வழியின் நடுப்பகுதியில் திறக்கும் ஒரு சோடிச் சுரப்பியாகும்.
(7) ஆண்குறி:- சிறுநீர் வழி ஆண்களில் ஆண்குறியினூடாகச் சென்று வெளியே திறபடுகின்றது ஆண்குறியில் தொடுப்பிழையங்களும் அவற்றினிடையே பல குருதி வெளிகளும் காணப்படுகின்றன. ஆண் குறியின் முற்பகுதி முன்ருேலினல் போர்க்கப்பட்டிருக்கும். புணர்ச்சி யின்போது குருதி சேருவதால் வீக்கமுறும்.
சுக்கிலப் புடகங்கள் , முன்னிற்கும் சுரப்பி, சிறுநீர்வழிச்சுரப்பி ஆகியன சுரக்கும் விளைபொருட்கள் யாவும் சேர்ந்த ஒரு வெண்மை யான பாகுத்தன்மையுள்ள பாய்பொருளை ஆக்குகின்றன. இப் பாய் பொருள் சுக்கிலப் பாய்பொருள் என அழைக்கப்படும்.
*
M
 

----۔ 9 5 --۔
பெண்ணின் இனப் பெருக்கத் தொகுதி
இது பின்வரும் பாகங்களைக் கொண்டிருக்கும்.
(1) சூலகம்; இவை மங்சல் வெண்ணிறமான சிறிய நீள்வளேய உடல்களாகும். சூலகங்கள் உடலின் வயிற்றறையின் முதுகுப் புறத்தில் சிறுநீரகங்களுக்குக் கீழே காணப்படுகின்றன. சூலகங்கள் சூல்கள் அல லது முட்டைகளை உண்டாக்குகின்றன
சிறிய படம் - பெண்சனிைத் தொகுதி பெரிய படம் - சூல் செல்லும் பாதை
1 - சூல் 5 - கருப்பை 2 - சூலகம் 6 - நுகம் பதிந்து வளரல் 3 - சூலகப் புனல் 7 - கருப்பை வாய் 4 - பலோப்பியன் குழாய்
(2) பலோப்பியன்குழாய்: இது ஒரு ஒடுங்கிய குழாயாகும். இவை ஒவ்வொரு சூலகத்திற்கும் அண்மையில் காணப்படும். சூலகத்துடன் நேரான தொடர்பைக் கொண்டிருப்பதில்லை. பலோப்பியன் குழாயின் "திறந்த முனை கொய்யக விளிம்புள்ள சூலகப் புனலை உடையது.

Page 34
جہا۔ 60 ۔
(3) கருப்பை- பலோப்பியன் குழாய்கள் நடுக்கோட்டில் அமைந்த ஒரு கருப்பையில் திறபடும். இது வயிற்றின் கீழ்ப்பகுதியில் காணப்படு கின்றது. ஏறக்குறைய 80 மில்லிமீற்றர் நீளமுடையது. குருதிச்செறி வுடையது. இச்சையின்றி அசையும் தசைகளையுடையது.
மனிதனின் கருப்பையின் கீழ்ப்பகுதி கூம்பிக் கானப்படுகின்றது இது கருப்பைக் கழுத்து எனப்படும். கருப்பைக் கழுத்து யோனி மடலுக் குள் கவிந்திருக்கும். இதில் கருப்பையின் வாயுண்டு.
(4) யோனி மடல்:- இது கருப்பையை வெளிப்புறத்துடன் தொடர்பு படுத்தும் தசை செறிந்த குழாயாகும், இது 8 முதல் 10 செ. மீ நீள முடையது. சீதச் சுரப்பிகளினல் யோனிமடல் ஈரலிப்பாக வைத்திருக் கப்படுகின்றது. இது சிறிது அமிலததன்மை வாய்ந்தது. கிருமிகளே க் கொல்லுவதற்கு அமிலத்தன்மை உதவும்.
(5) தலைவாயில்: யோனிமடலும் சிறுநீர் வழியும் தலைவாயில் என்னும் பொது வழியுள் திறக்கும். பக்க உதடுகளுள்ள துவாரத்தால் தலைவாயில் வெளித்திறக்கும். N
சூல் கொள்ளல்:- -
முதிர்ச்சியடைந்த பெண்ணில் சூலகம் 13 வயது முதல் 45 வயது வரை முட்டைகளைத் தோற்றுவிக்கின்றது சூலகத்திலிருந்து முட்டை வெளியேற்றப்படல் சூல் கொள்ளல் எனப்படும். முட்டை ஏறக்குறைய கோளவடிவமான 0, 13 மி. மீ விட்டமுடைய நுண்ணிய அமைப்பா கும். சூலகங்கள் 4 கிழமைக்கு (28 நாட்களுக்கு) ஒரு தடவை ஒரு முட்டையை மாறி மாறி உண்டாக்கும். ஒரு சூலகம் 56 நாட்களுக்கு ஒரு தடவை முட்டையை உண்டாக்கும்.
விந்து உண்டாக்கல்:-
விதையின் சுக்கிலச் சிறு குழாய்கள் எண்ணுக் கணக்கற்ற விந் துக்களை உண்டாக்குகின்றன. விந்து ஒரு சிறிய கருவைக் கொண்ட தலையையும், நீண்ட வாலையும் கொண்டிருக்கும். விந்துக்கள் முதல் உண்டாக்கப்பட்டதும் அசையமாட்டா. இவை விதைமேற்றிணிவில் சேமித்து வைக்கப்படும்.
கருக்கட்டல்:
புணர்ச்சியின் போது விதைமேற்றிணிவு, விந்துக்கான் தொடர் பான தசைகள் சுருங்குவதனல் சேமித்து வைக்கப்பட்ட விந்துக்கள் சுக்கிலப்பாய் பொருளுடன் வெளியேற்றப்படும். யோனி மடியுள் விடப் படும் விந்துக்கள் கருப்பையை தாண்டி பலோப்பியன் குழாய்களை அடையும். அங்கு சூல் இருந்தால் ஒரு விந்து ஒரு சூலுடன் இணையும் விந்தும் சூலும் இணைந்து நுகமாதல் கருக்கட்டல் எனப்படும்.
 
 

as 6 ܒܵܣܡܗ
பேண்களில் மாதவிடாய்ச் சக்கரம்
եւՁո5, ചി-r)
s
μβη ή - 7. நாள் 28
- நாள் - 12 - 13 வயதில் கபச்சுரப்பியின் புடைப்பு தூண்டும் சுரப்புக்குட் பட்டு முட்டையாக்கம் சூலகத்தில் ஆரம்பிக்கும் இத்துடன், கருப்பை யிலும் மாற்றங்கள் ஏற்படும். இது 28 நாட்களுக்கொருமுறை நிகழும். இது மாதவிடாய் வட்டம் எனப்படும. இவ்வட்டத்தில்
ta) 1 - 4 ம் நாள் வரை வளர்ந்த கருப்பைச் சுவரின் உள்ளனி
உடைந்து குருதியும் இழையங்களும் வெளியேறும்
(b) 5 - 14 ம் நாள் வரை கருப்பை உட்சுவர் வளரும், சூலகத்
தில் புடைப்பு என்னும் உறையுள் சூல் வளரும். (c) 14 - ம் நாள் வரையில் புடைப்பு உடைய சூல் சூலகத்தி
லிருந்து வெளியேறும்.
(d) 15 - 28 ம் நாள் வரை கருப்பை உட்சுவர் வளரும் சூலகத்
தில் சூல் வெளியேறிய பின் புடைப்பு உறையுள் மஞ்சட்சட லம் என்னும் அமைப்பு உருவாகும். (e) 29 ம் நாள் வரையில் அடுத்த வட்டம் ஆரம்பிக்கும்.
சூல் கருக்கட்டல் அடையின் வட்டம் தடைப்படும். கருப்பையில்
நுகம் தங்கி வளரும். பிள்ளை பிறந்து ஒருசில மாதத்தின் பின் வட் டம் திரும்ப ஆரம்பிக்கும்.

Page 35
............... \\ 62)۔
இருப்பையில் வளர்த்தி
s இருக்கட்டிய முட்டை பிரிவடைந்து பல கலங்களாகும். கலக் கட் டத்திலிருந்து முளையம் வளரும் முளையத்துக்கும் தாயின் கருப்பைக் கும் இடையே கொப்பூழ் நாண் இணைப்பு ஏற்படும். சொப்பூழ் நாண் கருபபைச் சுவருடன் சூல்வித்தகம் என்னும் அமைப்பை உண்டாக்கும். இதன் மூலமாக தாய்க்கும் சேய்க்குமிடையே உணவும் சழிவுப் பொருள் களும் ஒட்சிசனும் பரிமாற்றப்படும்.
சூல்வித் தகம்
கொப்பூழ் நாண்
கருப்பை
முளையம்
அமினியன்பை
கருப்பையில் 4 மாத மனித முளையம்
மனிதக்குழந்தை கருப்பையில் 270 நாட்கள் வரை வளரும். குழந் தையைச் சூழ அமினியன் பை பாதுகாப்பிற்காக வளர்ந்திருக்கும். குழந்தை வளர கருப்பையும் வளர்ச்சியடையும். 270 நாட்களின் பிை கருப்பைச்சுவர்த்தசைகளில் சுருக்கமேற்படும். இச் சுருக்கம் குறிப்பிட்ட *ால இடைவெளிக்கு ஒரு முறை நிகழும். இவ்விடைவெளி படிப்படி பாகக் குறைந்து சுருக்கம் அடிக்கடி ஏற்படும். இவ்வலுவான சுருக்கத் தால் அமினியன பை உடைந்துபோக குழந்தை யோனிமடல் வழியாக வெளியேற்றப்படும்
சனனித் தொகுதியில் தோன்றும் சில பிரதான நோய்கள்;
சிபிலிஸ்: இது திரெப்போனிமா பலிடம் (Treponema pallidum) எ ன் னு ம் ஸ் பி ரோ க் கீ ற் று த் (Spirochate) தொற்றலினல் ஏற்படுகின்றது இந்நோய்க் கிருமிகள் உடலையடைந்ததும் குருதிச் சுற் ருேட்டத்துடன் பல உட்புற அங்கங்களைத் தாக்கும் இந்நோய்க் கிரு மிகள் உடலுறவு கொள்ளும்பொழுது ஒருவரிலிருந்து மற்றவருக்கு இனப்பெருக்க உறுப்புகள் மூலம் தொற்றுகின்றது,
சிபிலிசு நோயில் 3 பருவங்கள் அறியப்பட்டுள்ளது.
 
 
 
 

---- 3 6 --س-
அறிகுறிகள் : -
முதலாம் பருவம்: நோயரும்பு காலம் 3 - 4 வாரங்கள் ஆகும். சில வேளைகளில் 10 வாரங்களும் ஆகலாம். நோய்க்கிருமிகள் உடலினூடு சென்று ஏறக்குறைய ஒரு மாதத்தின் பின் சிறிய தடித்த செந்நிற சிறுமுகிழ் ஒன்று தோன்றும் இது வழமையாக வாயில் அல்லது இலிங்க உறுப்பில் தோன்றும் இச் சிறுமுகிழ் ஏறக்குறைய 4 - 8 கிழமைகளுள் மறைந்துவிடக் கூடும். இதன் பின் மறைகாலம் ஏற்படுகின்றது.
இரண்டாம் பருவம்; ஏறக்குறைய 8 கிழமைகளிலிருந்து 5 வருடங் கள் வரை நீடிக்கும் அறிகுறிகள வழமையாக இரண்டு மாத முடிவி லேயே தோன்றுகின்றன இரண்டாம் பருவத்துக்குரிய அறிகுறிகளm ܗܐ 7[6760
1. கடுமையான தலைவலி (கூடுதலாக இரவில்) ஏற்படுதல். 2. சிறிதளவான காய்ச்சல் உண்டாதல், 3. மூட்டுகளிலும் என்புகளிலும் வலி ஏற்படுதல் 4. உடல் முழுவதும் பருக்கள் (Rash) உண்டாதல், 5. தொண்டை நோ இருத்தல்.
மூன்ரும் பருவம்;- இப்பருவத்தில் உடலிலும் உட்புறத்திலும் அங் கங்களிலும் குறிப்பாக சிறிய நாடிகளிலும் மூளையிலும் மென்மையான கட்டிகள் வளர்ச்சியடையும். இவற்றின் பருமன் குண்டூசியின் தலைப் பகுதியினளவு முதல் தோடம்பழத்தின் பருமன வரை வேறுபடும். இவை பின்பு புண்களாக மாறி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். இப் புண்கள் தோல், என்பு மூட்டு, ஈரல், அண்ணம், நாக்கு ஆகிய இடம் களில் தோன்றும். நோயாளி புத்தி சுவாதீனமற்றவராகக் காணப்படு வார் நோயாளி தகுந்த சிகிச்சையைப் பெருவிடின் இறக்கவேண்டி நேரிடும்
பிறப்பிற்குரிய சிபிலிஸ்:- சிபிலிசு நோயுடையவர்களின் குழந்தை கள் பாதிக்கப்படலாம். இக் குழந்தைகளில் நோயின் பிந்திய பருவங் களின் அறிகுறிகளே தோன்றும்,
காதும் கண்களும் பாதிக்கப்படலாம். நோயுற்ற தாய் ஆரம்பத் திலேயே சிகிச்சையைப் பெற்ருல் குழந்தை பெரும்பாலும் இந் நோயி ணுல் பாதிக்கப்படுவதில்லை.
கொனுேரியா. இதுவும் ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புக்கள் மூலம் பரவும் நோயாகும். நெயிசேரியா கொனேரியா என்னும் இரட் டைக் கோளவுரு பற்றீரியத்தினுல் உண்டாகும்.

Page 36
ܚܝ ܠܐ 4 6 --
அறிகுறிகள்:- ஆண்களில் சிறுநீர் வழிப்பாதையில் அழற்சியை உண்டாககும், முன்னிற்கும் சுரப்பி சிறுநீர்ப்பை ஆகிய பகுதிகளுக்கும் பரவலாம். சிறுநீர் வழியிலிருந்து பசியமஞ்சள் நிறத் திர வம் அல்லது வடிப்பு (Discharge) வெளியேறும். வடிப்பில் நோய்க்கிருமியை அடை யாளம் காணலாம். ஆரம்பத்தில் அதிகமாயிருக்கும். பின்பு இடையி டையேயிருக்கும். சிறுநீர் கழிக்கும்போது நோவிருக்கும் சிறுநீரில் சீழ்க்கலங்களுமிருக்கும். ஆண்குறி வீங்கிக் காணப்படலாம்.
பெண்களில் சிறுநீர்வழி, கருப்பைவாய். கருப்பை ஆகிய பகுதி களேத் தாக்கும் யோனிமடலிலிருந்து வடிப்பு இருக்கும். யோனி வாய்ப் பகுதிகள் வீக்கமடையும். நோயுள்ள காலத்தில் பிறககும் பிள்ளையின் கண் தொற்றலடைந்து குருட்டுத்தன்மை ஏற்படலாம்.
சிகிச்சை: இந் நோயைப் பெனிசிலினை ஊசி மூலம் எடுப்பதால் ஆரம்பத்தில் எளிதாகக் குணப்படுத்தலாம்.
தடுப்புமுறை:
சிபிலிசும், கொனுேரியாவும் மதன நோய்கள் அல்லது சமூக நோய் கள் எனப்படும். இந் நோய்கள் பெரும்பாலும் சமூகப் பொருளாதார பின்னிலையில் உள்ளவர்களிடமும் மதுபோதையில் நாட்டங் கொள்ப வர்களிடமும் காணப்படுகின்றது. துறைமுகப் பட்டினங்களிலும் சன நெருக்கமான பட்டினங்களிலும் கணிசமான அளவு பரவியுள்ளது. இந் நோயுடையவர்கள் பயத்தினுலும் வெட்கத்தினுலும் குணப்படுத்தாது வாழ்கின்றனர். இதனலேயே இந்நோயைக் கட்டுப்படுத்த முடியாத நிலை நிலவுகிறது
குடும்பங்களின் பொருளாதாரக் குறைபாட்டால் பணம் ஈட்டு வதற்காக பொருளாதார நிலை குறைந்த பெண்கள் பல ஆண்களுடன் உடலுறவு கொள்வதே இந் நோய் பரவலுக்கு முக்கிய காரணமாகும். மனக் கட்டுப்பாடில்லாத ஆண்களினல் ஒரு டெண்ணிலிருந்து இன்னுெரு பெண்ணிற்குக் கடத்தப்படுகின்றது.
இனப்பெருக்கம் பரிசுத்தமான ஒரு செயலாகும் கடவுளின் படைக் கும் தொழிலில் மனிதன் ஒரு கருவியாகப் பயன்படுத்தப் படுகின்ருன் , இதனுலேயே ஒரு ஆண் பெண்ணை ஏற்றுக்கொள்ளும் சடங்கை நாம் திருமணம் என அழைக்கின்ருேம். ஒருவனுக்கு ஒருத்தி என்பதே நியதி அதை மீறுவோருக்கே இந்நோய் ஏற்படுகின்றதெனலாம்.
இக் காலச் சினிமாப் படங்களிலும் விற்பனை விளம்பரங்களிலும், சிறுகதைகளிலும், புதினத்தாள் சளிலும் ஆண் பெண் உறவுத் தொடர்
பைப் பணம் சேர்க்கும் நோக்குக்காகப் பயன்படுத்துகின்றனர். பால்
 
 

--سید 5 6 -
சம்பந்தமான மன எழுச்சியை இவர்கள் சமூகத்துக்கு ஒவ்வாத வழி யில் பயன் படுத்துவதால் இளம் வயதினரும் கடுக்கிவிழுந்து தவருன வழியில் இட்டுச் செல்லப்பட்டு இந்நோய்க்குள்ளாகின்றனர் வைத்திய அறிக்கைகளின்படி பெரிய நகரங்களிலுள்ள கல்லூரி மாணவர்களி டையே மிக அரிதாக இது பரவியிருப்பதாகக் கூறப்படுகின்றது.
திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவுகள் அருவருக்கத்தக்கது. எம் சமூகம் விரும்பாதது, ஏற்றுக்கொள்ளாதது. விசேடமாகப் பெண்கள் இதனுல் தம் வாழ் நாள் முழுவதும் கெட்ட பெயருடன் வாழ நேரி டும். இதஞல் சில சமயம் மனமுடைந்து அகால மரணத்தையும் தழுவு கின்றனர். இத்தகைய பெற்ருேரின் பிள்ளைகளுக்கும் அவப்பெயர் ஏற் படுகின்றது. பெண்கள் தமது கற்பைக் காத்துக்கொள்வதே சிறந்தது.
படித்து முன்னேறிய பெண்களுக்கு பெரும் பங்குண்டு. வசதி குறைந்த பெண்களை முன்னேற்றக்கூடிய பயிற்சி நிலையங்களையும் தொழிற்கூடங்களையும் அமைத்து வருவாய்குறைந்த கல்வி அறிவு குறைந்த பெண்களின் முன்னேற்றத்தில் சிரத்தை கொள்ளல் வேண் டும்.
திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவை விரும்பும் ஆண் மனக்கட்டுப் பாடில்லாதவன் ஒரு நிலையான குடும்ப வாழ்வுக்கு உரியவனுமன்று மேலும் ஒரு பெண்ணுக்கு வரக்கூடிய இழுக்கில் கவலைப்படாதவன். மாணவர்கள் நல்ல உடற்பயிற்சிகளில் பங்குகொள்வதால், மதச்சார் பான நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதால் சமூக சேவைகளில் ஈடுபடுவ தால் தமது வயதுக்குரிய மன எழுச்சிகளைக் கட்டுப்படுத்தி சமூகத்துக் குப் பயனுடையதாக வாழலாம். இளம் சந்ததியினரே நமது வருங் கால சமூகத்தின் ஆணிவேர் போன்றவர்கள். அவர்கள் சமூகத் திலுள்ள துர்நடத்தைகளை களைந்து எமது கலை கலாச்சார பாரம்பரி யங்களைப் பேணிப் ப்ாதுகாக்க வேண்டும். உடல் நலமும் மன நலமும் 260D - li சந்ததியைத் தோற்றுவிப்பதில் அவர்கள் நல்ல பங்கை ஆற்ற வேண்டும், ஆற்ற முடியும் என்பதை எவரும் ஏற்றுக்கொள்வர்.
10.9

Page 37
Lu T t i 4
விபத்துக்களும் அவசர நிலைமைகளும்
மனிதரின் வாழ்க்கையில் பலவிதமான விபத்துக்கள் ஏற்படுகின் றன. தினசரித்தாள்கள் ஒவ்வொரு நாளும் வீடுகளிலும், சாலைகளிலும் தொழிற்சாலைகளிலும், கடலிலும் பலவிதமான விபத்துக்கள் நிகழ்து கொண்டிருப்பதை எடுத்துக் கூறுகின்றன
புதினத் தாள்களில் வெளிவந்த விபத்துக்கள் பற்றிய தலைப்புக்களில் சில: புத்தளத்தில் பஸ் தடம் புரண்டது. நாலுபேரின் நிலைமை கவலைக் கிடம். தோலைகட்டி இளைஞன் கடலில் மூழ்கி மரணம். அரியாலையில் நாலு குழந்தைகள் நஞ்சுக்குப் பலி. பண்டத்தரிப்பில் சமையல் செய்யும்போது சேலை தீப்பிடித்து 25 இளம் வயது பெண் மரணம். சாவகச்சேரியில் 6 வயதுப் பாலகன் வாகனத்துக்குப் பலி
யாழ்ப்பாணத்தில் மின்சாரத்துக்கு இளைஞன் பலி. இந்தியாவில் கோர ரயில் விபத்தில் 100 பேர் பலி. நத்தார் வாணவெடியால் நீர்கொழும்பில் வீடுகள் தீக்கிரை. துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் படுகாயம்.
இன்று மனிதன் முன்னேற்றமடைந்துள்ள காரணத்தால் போக்கு வரத்து சாதனங்கள் அதிகரித்துள்ளன. மின்சார உபகரணங்கள், வாயு அடுப்பு, மண்ணெய் அடுப்பு முதலிய வசதிகள் பலராலும் பயன்படுத் தப்படுகின்றன.தொழிற்சாலைகளில் பாரமான, விரைவாக அசையும் இயந் திரங்கள் வேலை செய்கின்றன. ஒய்வு நேரங்களில் பலவகையான கேளிக்
கைகளிலும் விளேயாட்டுக்களிலும் மனிதன் ஈடுபடுகின்றன் இதனுல்
தற்செயலாகவோ. கவனக்குறைவாகவோ பலவிதமான விபத்துக்கள் ஏற்படுகின்றன.
வீட்டில்நிகழக்கூடிய விபத்துக்கள்
வீடுகளில் பொதுவாகக் கிணறு, குளியலறை, சமயலறை ஆகிய இடங்களிலேயே பெரும்பாலான விபத்துக்கள் ஏற்படுகின்றன, பெரிய வர்களிலும் பார்க்கச் சிறியவர்களே கூடுதலாக விபத்துக்குள்ளாகின் றனா.
(1) சமயலறையில் அடுப்பிலிருந்து அல்லது இரவில் உபயோகிக்கும்
விளக்குகளிலிருந்து தீ விபத்துக்கள் நேரிடல்,
 
 

fi) ஆழமான கிணற்றில் பிள்ளைகள் விழுதல். (i) மின் ஒழுக்குகளினல் அதிர்ச்சி. (W) நஞ்சுப் பொருட்களை அல்லது மயக்க மருந்துகளை அறியாது பருகு
தல்,
(* சுடுநீர், சுடுகஞ்சி என்பவற்ருல் பிள்ளைகள் காயமடைதல். (Vi) பிள்ளைகள் கத்திக் காயங்களுக்கு உட்படல். (Wi) பண்டிகைக் காலங்களில் வெடி விபத்து. (wi) குளியலறையில், வழுக்கும் தரைகளில், படிகளில் விழுதல்,
விழுந்து முறிவுகள் ஏற்படல்.
(ix) சன்னமிடப்பட்ட சுடுகருவிகளினுல் விபத்து,
பாடசாலையில் ஏற்படும் விபத்துக்கள்:
(1) விளையாடும்போது காயங்கள், எலும்பு முறிவுகள் ஏற்படல். (ii) தற்செயலாக எறியப்படும் பொருட்களில்ை காயம். (ii) வலிப்பு, மயக்கம், நோய் காரணமாக, (iv) சுற்றுலாக்களில் கவனக்குறைவால் வாகன நீர் விபத்துக்குட்
til Gi), (v) விளையாட்டுத் திடலில் ஏற்படக்கூடிய விபத்துக்கள்.
(அ) காயங்கள், எலும்பு முறிவு (ஆ) சுளுக்கு (இ) தசை நெரிவு (ஈ) அதிர்ச்சி (உ) வலிப்பு (ஊ) நீந்துமிடங்களில் அமிழல்
சாலையில் ஏற்படக்கூடிய விபத்துக்கள்
(1) வாகனங்களினல் ஏற்படும் விபத்து (i) மின்கம்பிகளிலிருந்து ஒழுக்கினல் ஏற்படும் விபத்துக்கள் (ii) சறுக்கி விழுதல்: (iv) கான்களில் விழுதல்.
(W) கட்டாக்காலி ஆடு மாடுகளினல் ஏற்படும் விபத்துக்கள். (vi) இரெயில் கடவைகளில் வாகனங்கள் இரெயிலுடன் மோதுதல்
தொழில் ஸ்தாபனங்களில் ஏற்படும் விபத்துக்கள்
(i) சுரங்கங்களில் நச்சு வாயுக்களினுல் தாக்கப்படலாம்.
(i) அசையும் இயந்திரப் பகுதிகள், பட்டிகள் முதலியவற்றில் கை 蠶 * தலைமயிர் முதலியன சிக்குப்படலாம்.

Page 38

- 69 -
பட்டுள்ளன. இத்தகைய சட்டங்களுக்கு மதிப்போ, பயமோ இல்லா தில் நடப்பதில் சிலர் பெருமைப்படுகின்றனர், இப்படிப்பட்டவர்களே பெரும்பாலும் விபத்துக்குள்ளாகின்றனர். தனக்கும் பிறருக்கும் விபத்
மாகும். பழக்கங்களினுல் இதனை வலுப்படுத்தலாம்.
விபத்துக்களைத் தடுக்கும் விதிகள் (அ) சாலை விபத்துக்களைத் தடுக்கும் விதிகள்
கச் செலுத்துவதே சாலை விபததுக்களுக்கு முதற் காரணமாகும். ஆகவே வாகனங்களின் சதியை கட்டுப்படுத்தல் வேண்டும்.
(i) மது அருந்திய நிலையில் வாகனங்களை ஒட்டுவதால் பல விபத் துக்கள் ஏற்படுகின்றன, மதுவின் காரணமாகப் புலனங் களும் அவை ஏற்கும் தூண்டலால் நிகழும். தெறிப்பு வினை களும் இயல்பாகத் தொழிற்படுவதில்லை,
(iii) தூக்கக்கலக்கத்தில் வாகனங்களைச் செலுத்தல் தவருகும்
(ty) சீரில்லாத வாகனங்கள்: வாகனத்தின் தடைகள் செம்மை யாக இல்லாதவிடத்து எந்தச் சிறந்த வாகன ஒட்டியாலும் விபத்து நேர்வதைத் தடுக்க முடியாது.
(v) ஒரு வாகனத்தின் பின்னல் இன்னெரு வாகனம் செல்லும் பொழுது இரண்டுக்குமிடையில் ஒரு குறைந்த பட்ச இடை வெளி வேண்டும்.
உதாரணம்: 30km/h வேகத்தில் செல்லும் இரு வாகனங்களுக் கிடையே இருக்க வேண்டிய தூரம் 10 m ஆகும். வேகம் கூடக்கூட இதுவும் அதிகரித்தல் வேண்டும். 45km/h வேகத்துக்கு இத் தூரம் ஏறக்குறைய 20 m ஆகும்,
(wi) வீதி ஓரங்களிலுள்ள போக்குவரத்துப் பிரிவினரின் அறிவு றுத்தல்களை பாதசாரிகளும் வாகன ஒட்டிகளும் கடைப்பிடித்தல் வேண் டும் எனினும் வாகன ஒட்டிகள் பாதசாரிகளோ அல்லது மற்றவர் களோ சரியான வழியில் வருவாரென நினைத்துத் தவறிழைக்கக் கூடாது பாதசாரிகள் வலது பக்கத்தால் நடத்தல், வீதியைக் கடக்கும்போது இட-வலப் பக்கங்களைப் பார்த்துக் கடத்தல், பாதசாரிகள் கடவைகள் உள்ள இடங்களில் மட்டும் கடத்தல், வாகனங்களின் பின்னல் நின்று வீதியைக் கடக்க முயற்சியா திருத்தல் முதலிய எளிய ஒழுங்குகளைக் கடைப்பிடித்தல் வேண்டும்.

Page 39
سلسله: " 70 سم
(Vi) சிறு பிள்ளைகள் வீதிகளில் விளையாடுதல் கூடாது. வயது குறைந்த சிறுபிள்ளைகள் துணையின்றித் தனியே வீதிகளுக்குச் செல் லுதல் கூடாது. வயது சென்றவர்களும் துணையின்றி வாகனங்கள் அதிகம் செல்லும் வீதிகளில் செல்லக்கூடாது,
(vii) பஸ் வண்டிகளில் மிதி பலகையிற் பிரயாணம் செய்தலும் பாய்ந்த ஏறுதலும் குதித்து இறங்குதலும் ஆபத்தானது.
(ix) பாதசாரிகளும் சைக்கிள்களில் செல்வோரும் பக்கம் பக்க மாகச் செல்லுதல் கூடாது,
(x) திருவிழாக்கள் un ற்றும் மக்கள் கூடும் நிகழ்ச்சிகளின்போது பொலிசாரின் உதவியைப் பெற்றுக் குறிப்பிட்ட வீதிகளின் போக்கு வரத்துக்களைக் கட்டுப்படுத்தல் வேண்டும்.
(ஆ) மின்னுெழுக்கினுல் ஏற்படும் விபத்துக்களைத் தடுத்தல்,
மின்சாரம் நல்ல சேவகன். ஆனல் அதனைக் கவனக்குறைவாகப் பயன்படுத்தினுல் பலவகையான விபத்துக்கள் ஏற்படுவதோடு விலை மதிப்புள்ள உபகரணங்களும் பழுதடையும். மின் விபத்துக்களைத் தடுப் பதற்குரிய சில வழிவகைகள் கீழே தரப்பட்டுள்ளன.
(i) மின்னிணைப்புகளை அதை முறையாக அறிந்தவர்களே அமைத் தல் வேண்டும்.
(i) மின் உபகரணங்களில் மின்னேட்டம் நிகழ்ந்து கொண்டிருக் கும்போது அவற்றைச் சீர்செய்ய முனைதல் கூடாது.
(i) முதன்மை ஆளியை (Main Switch) நிறுத்திய பின்னரே மின்னுேட்ட்த்தைச் சீர்செய்தல் வேண்டும்.
(iv) மின் உபகரணங்களைச் சீர்செய்யும்போது காலில் இறப்பர்ச் செருப்பு அணிந்திருத்தல் நன்று.
(w) அணுவசியமாகப் புது இணைப்புகளை அமைத்தல் கூடாது. (wi) மின் கம்பிகள் காவலிடப்பட்டனவாயிருத்தல் வேண்டும். (vi) தற்காலிகமாக இணைத்த கம்பிகளைத் தரைகளில் விசேடமாக ஈரமான தரைகளில் இடுதல் கூடாது. போக்குவரவு உள்ள இடங் களிலும் மின்கம்பிகளை இடுதல் கூடாது.
(vi) வீட்டு மின்னிணைப்புக் கம்பிகளை 10, 15 வருடங்களுக்கொரு முறை திரும்ப இடுதல் நன்று. மிகக்கூடிய மின்வலு பயன் படுத்தப் படுகின்ற (500 வாற்றுக்குமேல்) மின்னழுத்தி, மின்கேத்தல், மின்னடுப்பு முதலியவற்றிற்குக் குறுக்களவு கூடிய (gauge) கம்பிகளால் இணைப் புக் கொடுத்தல் வேண்டும்,
 
 

سے 71 سیم
LLLSSS TTTO OtLLTLLL TT TTS S TT TTS S TTTT SSLLLLL LLLLLLLLSS TTHLH rrTT தலும் எல்லா உபகரணங்களுக்கும் புவித்தொடுப்புக் கொடுத்தலும் நன்று.
(x) செரிகித் தானங்கள், மின்குமிழ்ப்பிடி முதலியனவற்றைத் திறந்த நிலையில் விடக்கூடாது. செருகிகளுககுச் செருகி மூடிகள் இடப் பட வேண்டும். புதிய மின் குமிழ் பொருத்தும் வரை பழைய மின் குமிழை அகற்றுதல் கூடாது
(xi) சிறு பிள்ளைகளுக்கு எட்டக்கூடிய இடங்களில் மின்னுப கரணங்களை வைத்தல் கூடாது.
(இ) வீடுகளில் நிகழக்கூடிய விபத்துக்களைத் தடுத்தல்,
(1) கிணறுகளுக்குப் பாதுகாப்பான சுவர்களை அமைத்தல் வேண் டும். கூடுமாயின் வலைக்கம்பி 6untuEus565). L6 lorrub.
(ii) சிறு பிள்ளைகள் சுடுநீர், கஞ்சி முதலியவற்ருல் தாக்கப்ப டாது பாதுகாக்க அவற்றை உடனே கொட்டி விடுதல் நன்று.
(i) மண்ணெண்ணெய் விளக்குகளைப் படுக்கைக்கருகில் வைத் திருத்தலும் அவற்றுக்கருகில் படுத்திருந்து வாசித்தலும் தவிர்க்கப்பட வேண்டும்.
(iv) எளிதில் தீப்பற்றக்கூடிய சேலையைத் தாறுமாருக உடுத்திக் கொண்டு சமையல் வேலை செய்தலாகாது.
(v) சுடுகருவிகளில் (fire - Arms) சன்னங்களை இட்டு வைத்தல் கூடாது அவற்றைப் பூட்டி வைத்தல் நன்று.
(Vi) பண்டிகைக் காலங்களில் வெடிகளினுல் ஆபத்துக்கள் ஏற் படுவதுண்டு சிறந்த உற்பத்தியாளர்களின் தயாரிப்பை வாங்குவதஞ லும் முதியவர்களின் மேற்பார்வையின் கீழ் வெடிகளைச் சுடுவதனலும் இத்தகைய ஆபத்துக்களைத் தடுக்கலாம். சிறுவர்கள் தனியாக வெடி சுடுவதில் ஈடுபட்டால் தவருண முறைகளைக் கையாளவும் கூடும்.
(wi) வீடுகளில் வைத்திருக்கும் நச்சுப்பொருட்கள், மயக்க மருந்து கள் என்பவற்றைப் பூட்டி வைத்தல் நன்று. அவற்றை வைத்திருக் கும் பெட்டியில் நஞ்சு எனப் பெயர்ச் சுட்டிகள் அழியாத சிவப்பு
மையால் எழுதி ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.
(vii) சிறு பிள்ளைகளுக்கு மின்சாரம், கத்தி, மருந்துகள் சுடுநீர் பற்றிய அபாயங்களை எடுத்துக்கூறி, அவை பற்றிக் கவனமாக இருக் கும்படி வற்புறுத்த வேண்டும்.

Page 40
س 2 7 سـ
(ஈ) கல்லூரிகளில் ஏற்படும் விபத்துக்களைத் தடுத்தல்
(i) மாணவர்கள் ஒழுங்கான பழக்க வழக்கங்களுக்கு உட்படின் பெரும்பாலான விபத்துக்கள் ஏற்படாது.
(i) வீடுகளில் ஏற்படுவன போன்ற சில விபத்துக்கள் இங்கும் ஏற்படலாம். கிணறுகள் மின்னுபகரணங்கள் தொடர்பானவை இவ்வகையின. அவற்றிற்குரிய எச்சரிக்கையை இங்கும் எடுத்தல் வேண்டும்.
(i) பாடசாலைகளில் ஆசிரியர்கள், சாரணர்கள், உயர் வகுப்பு மாணவர்கள், முதலியோர் முதலுதவிப் பயிற்சி பெற்றிருத்தல் வேண்டும்,
(iv) மாணவர்கள் தங்கள் வயதுக்கேற்ற விளையாட்டுக்களில் மட்டுமே ஈடுபடவேண்டும்.
(w) பல மாணவர்கள் பங்குகொள்ளும் விளையாட்டுப் போட்டி போன்ற நிகழ்சிக்கு ஒரு வைத்தியரை உதவியாளராக வைத்திருத் தல் நன்று.
(wi) சுற்றுலாக்களின் போது வாகனங்கள் மோதிக்கொள்ளல் நீரில் மூழ்குதல் போன்ற விபத்துக்களுக்கு இடமுண்டு. இவைபற்றி யும் வாகனங்களின் பின்னுல் நெரிபடல் பற்றியும் மாணவர்களுக்கு முன்னெச்சரிக்கை செய்யப்பட வேண்டும்.
(உ) தொழிற்சாலை விபத்துக்களைத் தடுத்தல்;-
(i) சுழலும், ஏறி இறங்கும், துளை க் கு ம் இயந்திரங்களால் ஆபத்து ஏற்படலாம். இவற்றைச் சுற்றிவரக் கம்பிவலைத் தடைகள் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும்,
(i) உயர்மின்வலு உபயோகிக்கப்படும் இடங்களில் அது செல் லும் அல்லது தாங்கும் கம்பங்களில் அபாய அறிவிப்புகள் இடப்பட வேண்டும், -
(ii) உபகரணங்களைப் பழுது பார்ப்பவர்கள் அவற்றில் பழக்கப் பட்டவராயிருத்தல் வேண்டும்,
(iv) தீயணை கருவிகள் தேவையான இடங்களில் மாட்டப்பட்டி ருத்தல் வேண்டும்,
(y) முதலுதவிப் பொருட்சளடங்கிய பெட்டிகள் இருத்தல் வேண்
டும். பலருக்கும் முதலுதவியளிக்கப் பயிற்ற வேண்டும்.
f

ܚܙܝܼ: 1 3 7 ܚ ܀
நீரில் மூழ்குவதைத் தவிர்த்தல்:
1. ஆழமறியாது காலை இடாதே என்பது வாழ்க்கைக்கு உதவும் பழமொழி. இது நீராடலுக்கும் பொருந்தும்; பழக்கமில்லாத இடங் களுக்கு நீராடச் செல்லக்கூடாது.
2. தனியாக நீராடச் செல்வதும் தவறு.
3. மதுபோதையில் நீராடச் செல்லக்கூடாது.
4. சுற்றுலாக்களில் பலர் கூடி நீரில் விளையாடுவதுண்டு. சில வேளை போட்டி மனப்பான்மை ஏற்பட்டுச் சுழியோடுதல், தூரமாக நீந்துதல் போன்ற செய்கைகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படுவ
துண்டு.
5. நீராடும் சுனைகள் கடற்கரை போன்ற இடங்களில் அபாய கரமான இடங்களை நகர, பட்டின சங்கங்கள் அறிவுறுத்தற் பலகை களில் எச்சரிக்கை செய்தல் வேண்டும் ,
விபத்துக்களைக் கட்டுப்படுத்த உதவும் சட்டங்கள்:
சில விபத்துக்களைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களும் உண்டு.
(i) வாகனப் போக்குவரத்துச் குக் குறிப்பிட்ட நகரம், தெரு ஆகிய பகுதிகளில் குறிப்பிட்ட வேகம் வரையறை செய்யப்பட்டுள் ளெது.
(i) லொறி, பஸ் போன்ற வாகனங்களின் தகுதி நிலையை வரு டாவருடம் சோதித்த பின்னரே அலுமதிப்பத்திரம் வழங்கும் முறை யுண்டு
(iii) தொழிற்சாலைகளில் பாதுகாப்பு முறைகளைப் பேணும்படி தொழிலதிபர்களைக் கட்டுப்படுத்தும் தொழிற்சாலைச் சட்டங்கள் உண்டு. விபத்தில் அகப்படும் தொழிலாளிக்கு நஸ்ட ஈடு வழங்க வேண்டும் என்பதற்கும் சட்டமுண்டு.
N ” (iv) வெடிகள் செய்பவர்கள், அவற்றை விற்பனை செய்பவர்கள் அனுமதிப்பத்திரம் பெறல் வேண்டும், ".
(v) நஞ்சுப் பொருட்களை விற்பனை செய்பவர்கல் அனுமதிப்பத் திரம் பெறுதல் வேண்டும் வைத்தியர்கள் அல்லது உரிய அதிகாரி களின் உத்தரவுடனேயே நஞ்சுப்பொருள்கள் விற்கப்பட வேண்டும்"
0.10

Page 41
u IT u Lib 5
முதலுதவி
முதலுதவி என்பது
இன்றைய உலகில் விபத்துக்கள் முற்ருகத் தடுக்க முடியாதவை எச்சரிக்கையுடனிருந்தால் விபத்துக்களை ஒரவுக்குத் தவிர்க்கலாம் அல்லது ஆபத்தின் தீவிரத்தைக் குறைக்கலாம். விபத்து நிகழும் இடங்களில் வைத்தியர்களின் சேவை உடனடியாகக் கிடைக்க முடியாது. விபத்துக் குள்ளானவர்களுக்கு வைத்தியர் வரும் வரை அல்லது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வரை அளிக்கப்படும் உடனுதவியும் பராமரிப்புமே முத லுதவி எனப்படும்.
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நாம் ஒருவருக்கு முதலுதவி செய்ய வேண்டி ஏற்படலாம். எனவே முதலுதவி முறைகளை அறிந்திருத்தல் நன்று, இது ஒவ்வொருவருடைய கடமையுமாகும் முதலுதவி செய்ய முடியாவிடினும், முதலுதவி செய்பவருக்கு உதவ முடியும். முதலுதவி யாளனுக்குத் தேவையான பொருட்களைத் தேடிக் கொடுக்கலாம், வைத் தியரிடம் செல்லலாம். சாலையாயின் போக்குவரத்தைக் கட்டுப்படுத் தலாம். வேடிககை பார்க்க நிற்பவர்களை விலகச் செய்து விபத்துக்குள் ளானவருக்குக் காற்றுக் கிடைக்கச் செய்யலாம். காயமடைந்தவரைத் தூக்குவதற்கு உதவி செய்யலாம,
முதலுதவியின் நோக்கம்
(i) துன்பப்படுபவருக்கு நல்ல சமாரியன் (good Samaritan) போல உதவுவது மனிதப் பண்பும் காருண்ணியமும் மிக்க செய லாகும்.
(i) விபத்துக்குள்ளான் வரின் நிலை மேலும் மோசமடையாது
தவிர்த்தல்.
(i) விபத்துக்குள்ளானவரின் அவஸ்தையைக் குறைத்தல்,
முதலுதவி செய்பவரின் தகைமைகள்
(1) நிலைபரங்களைத் துரிதமாக அவதானித்தல், (i) நிலைபரங்களுக்கேற்ப நடந்து கொள்ளல் (ii) கிடைக்கும் உபகரணங்களை பயன்படுத்தக் கூடியதாயிருத்
தல். (iv) கைத் திறமை இது பழக்கத்தினல் மட்டுமே கைகூடுவது (w) கட்டளையிடும்போது தெளிவாகக் கூறக்கூடியதாயிருத்தல்,
ές
 

75
(Wi) எதை முதலில் செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கக்
கூடிய ஆற்றல். (wi) காருண்ய, சேவை மனப்பான்மை.
(vi) தன்னை நெருப்பு மின், நஞ்சுப் பொருளிலிருந்து தாக்காது
கவனிக்கக் கூடியவராயிருத்தல் வேண்டும்.
முதலுதவி செய்வோன் செய்யக் கூடாதவை
1. தன்னை வைத்தியணுகக் கருதக் கூடாது.
2. மயங்கியவர்கள் அல்லது உடன் அறுவைச்சிகிச்சைக்கு உட் படக் கூடிய ஒருவருக்குக் குடிக்க அல்லது உண்ண ஒன்றும் கொடுக்கக் கூடாது -
3. நோயாளியை யார் பொறுப்பிலும் விட்டுச் செல்லக் கூடாது.
முதலுதவியாளன் முதலில் கவனிக்க வேண்டியவை;
(i) விபத்துக்குள்ளாகியவரின் அறிகுறிகளை அவரிடத்தும் அவரில்
நிலையை அவதானித்தும் அறியலாம்.
(ii) மூச்சு (சுவாசம்) இல்லாதிருந்தால் உடனே உயிர் நீங்கி
விட்டதெனக் கருதக் கூடாது. (iii) விபத்துக்சான காரணியை அகற்றுதல் வேண்டும் அல்லது
தாக்கப்பட்டவரைக் காரணியிலிருந்து அகற்றுதல் வேண்டும் (iv) காயங்கள் முதலியன எதுவாயினும் குருதிப்பெருக்கை உடன்
நிறுத்த வேண்டும்,
முதலுதவியாளன் அறிந்திருக்க வேண்டியவை
1. குருதிப் பெருக்கு
காயங்கள் ஏற்படும் போது நாடி, நாளம், மயிர்க்குழாய் ஆகியன வெட்டப்பட்டு அல்லது உரோஞ்சப்பட்டு அவற்றிலிருந்து குருதி வெளி யேறல் குருதிப் பெருக்காகும்,
நாடியிலிருந்து குருதி “குபுகுபு' எனச் சீறிப்பாயும். N நாளங்களிலிருந்து குருதி ஒரு சீராகப் பாயும். மயிர்க்குழாய்களிலிருந்து குருதி கசிந்து வெளியேறும்,
உணவுக் கால்வாயிலிருந்தும் நுரையீரலிலிருந்தும் குருதி வெளி யேறலாம். இது இருமலுடன் வெளிவரும் சளியுடன் அல்லது வாந்தி யுடன் வெளிவரலாம். மலத்துடனும் வெளியேறும்

Page 42
காயங்கள்
(அ) எரிகாயங்கள் சூடான உலோகப் பொருட்கள், கொதிக்கும் திரவங்கள், செறி அமிலங்கள் (உ-ம்: சல்பூரிக்கமிலம் (H, SO) தீ, மின்சாரம் என் பவை எரிகாயங்களை உண்டாக்குவன. இது மூன்று வகைப்படும்.
1. முதன்நிலை: சுட்ட இடம் சிவப்பாக இருக்கும் சருமம் உடைந்
திருக்காது. - 2. இரண்டாம் நிலை: மேற்ருேல் சிதைந்துபோயிருக்கும். 3. மூன்ரும் நிலை: மேற்ருேல், உட்டோல் கருகுவதுடன் கீழுள்ள
இழையங்களும் அவிந்துபோகும்.
வெட்டுக் காயங்கள்
வெட்டுக்காயம் கூரான கத்தி, கோடரி, கண்ணுடி, உல்ோகத் துண்டுகள் மூலம் ஏற்படும். அடிபிடி சண்டைகளின் போது ஏற்பட லாம், வெட்டுப்பட்ட இடத்தின் ஆழத்தைப் பொறுத்தே குருதிப் பெருக்கு இருக்கும்.
*V. குத்துக்காயம்;
கூரான உளி, ஆணி, துளைக்கும் துப்பாக்கிக் குண்டு, ஈர்க்கு போன் றவற்றல் ஏற்படும் காயங்களின் வாய் மூடியிருக்கும். கறள் பிடித்த ஆணி, ஈர்க்கு ஆகியவற்ருல் ஏற்பட்ட காயங்களானல் அவற்றின் வாய் சிலிம்பியிருக்கும். மண், தூசி படிந்த குததும பொருட்களி னல் ஆபத்து அதிகம். ஆழமான காயங்கள் மூலம் ஈர்ப்பு வலிக் கிரு மிகள் உட்செல்லலாம்.
W. கிளிப்புகள்:
சுழலும் இயந்திரங்கள் கொழுகொம்பு, பட்டாசு வெடி என்டர் வற்றல் ஏற்படலாம், இழையங்கள் ஒழுங்கீனமாகக் கிழிபட்டிருக்கும்,
ஓர், சிராய்ப்பு:
ஓடி விழுதல், அசையும் இயந்திரங்களோடு உராய்வு ஆகியவற்ருல் தோலின் மேற்பரப்பு உரோஞ்சப்பட்டு சிராய்ப்புக் காயங்கள் ஏற்
2 LuGB u b.
wi. கண்டற்காயம்
அடிபடல், பாரமான பொருள் விழுதல் காரணமாக உடற்பகுதி நெரிபடத் தோலின்கீழ் குருதி வெளிப்பட்டுக் கண்டிப் போகும். wi. நசிவுகள் நெரிவுகள்:
அடித்தல், விழுதல், நெரித்தல் ஆகியவற்றின் போது தசைகள் " இழையங்கள் நெரிக்கப்படுவதால் ஏற்படுபவை.

- 77 -
காயங்கள் மூலம் இரத்தம்பெருக்கு ஏற்படும். G6 (Bauðar: || || 2 || லின் உள்ளாக இது நிகழலாம். இரத்தம் இழக்கப்படுவதாலும் காயங் களில் ஏற்படும் நோ, வலிப்பு என்பவற்றலும் அதிர்ச்சி (துளக்கு) ஏற் படும், தொற்றுக் கிருமிகளும் காயங்களில் தொற்றை ஏற்படுத்தும்,
ix. அதிர்ச்சி அல்லது துளக்கு
உடல் சக்தி குன்றி ஒன்றும் செய்ய முடியாத சுயநினைவற்ற நிலை அதிர்ச்சி ஆகும். அதிர்ச்சியின் முதல் நிலை ஆபத்தற்றது. இதன் போது குமட்டல், கால்கள் நடுங்குதல், வியர்வை அரும்புதல், இத யம் படபடவென அடித்தல் போன்ற அறிகுறிகளிருக்கும். ஒரு காயம் ஏற்படும்போது அல்லது ஒரு துக்க அல்லது பயம் தரும் செய்தியைக் கேட்கும்போது இது ஏற்படும்.
இரண்டாவது வகையின் அறிகுறிகள்: வியர்வை அதிகரிக்கும். நாடித்துடிப்புக் குறையும், மூச்சுத் திணறும் கைகால் சில்லெனக் குளிரும். நடுக்கமும் ஏற்படலாம். சோர்வுண்டாகி மயங்கி விழலாம் ஒன்றும் செய்ய முடியாத பரிதாபகரமான நிலையை அவதானிக்க voll) TITO .
அதிர்ச்சிக்கான காரணிகள்:-
(அ) இரத்தப் பெருக்கு (ஆ) மூளைக்குத் தேவையான குருதி செல்லாமை ”蔷 (இ) நாளங்கள் விரிந்து உடற்பகுதியில் குருதியைச் சேமித்து வைத்தலால் நாடித் தொகுதிக்குச் செல்லும் குருதி
குறை ல். (ஈ) குருதியில் சேரும் நஞ்சு மூலம் நரம்புகள் தாக்கப்படல்.
x எலும்பு முறிவுகள்:
விழுதல், அடிபடுதல், வாகன விபத்து, சண்டையிடுதல், விளை
யாட்டுகள், வயதுக் கொவ்வாத விள்யாட்டுக்களில் பங்கு கொள்ளல்
முதலியன என்பு முறிவுகளுக்கான காரணமாகலாம்.
(அ) பசுந்தாள் முறிவு:-
இது சிறுபிள்ளைகளில் ஏற்படும் எலும்பு முற்ருக முறியாது சிறு வெடிப்பு மட்டும் ஏற்படும், படம் (1) பெரியவர்களில் இது முற்றற்ற முறிவு எனப்படும்.
(ஆ) எளிய முறிவு அல்லது தனிமுறிவு:
எலும். முறிந்திருக்கும். அருகிலுள்ள இழையங்கள் பாதிக்கப்பட் டிருக்க மாட்டா. படம் (2)

Page 43
2 4. 5
(இ) நொருங்கிய முறிவு
எலும்பு முறிந்த இடத்தில் பல துண்டுகளாகவும் முறிந்திருக்கும். விசையான விழுகை அல்லது பாரமான பொருள் விழுதலினல் ஏற் படும் படம் (3) (ஈ) கலப்பு முறிவு:-
எலும்பு முறிந்திருக்கும். மேலும் அருகிலுள்ள இழையங்களேக் குற்றி வெளியே பீறிட்டிருக்கும். அல்லது காயங் காரணமாக முறிந்த பகுதி வெளியுடன் தொடர்பு பெற்ற தாயிருக்கும், படம் (4) (உ) சிக்கல் முறிவு
ஒரு எலுப பு பல இடங்களில் முறிதலும், உடலின் முக்கிய உறுப் புக்களான ஈரல், மூளை போன்றவற்றைக் குற்றிக்காயப் படுத்துதலும், εμι i (5)
(ஊ) மோதுகை முறிவு:
உடைந்த எலும் பின் முனைகள் ஒன்று மற்றையதில் புகுந்து கொள்ளல்.
(எ) இறக்க முறிவு:
தட்டையான மண்டையோட்டில் அடிபட்ட இடத்தில் எலும்பு உள்ளிறங்குதல்.
பெரும்பாலும் முற்புய எலும்புகள், கீழ்க்கால் என்பு, காறை என்பு, விலா என்பு, மண்டையோடு என்பனவே முறிவுக்குள்ளாகும்"
என்பு முறிவின் அறிகுறிகள்:-
(அ) முறிந்த இடத்தில் வீக்கமிருக்கும். (ஆ) முறிந்த இடத்தில் அழுத்தினுல் நோகும்.
 
 
 

حس 79 - سه
(இ) அங்கம் வளைந்திகுக்கும். நீளம் குறைந்திருக்கும்.
(ஈ) முறிந்த முனைகள் அசையும்போது கிறு கிறு வென்று சத்தம்
கேட்கும்
(உ) விழுந்தவருக்கு முறிவின் ஒலி கேட்டிருக்கலாம்,
ஊ) கலப்பு முறிவில் என்பு வெளியே தெரியும்,
(v) எலும்பிடப் பெயர்வு:
எலும்புகள் மூட்டுப் பெறுமிடங்களில் தம் நிலையிலிருந்து விலகு தல் எலும்பிடப் பெயர்வு ஆகும். தோள் முழங்கை, இடுப்பு மூட்டு மணிக்கட்டு, கணுக்கால் ஆகிய இடங்களிலேயே பெரும்பாலும் இடப் பெயர்வு ஏற்படும். மூட்டுக்களைச் சுற்றியிருக்கும் இழையங்களின் பெலவீனமே இதற்குக் காரணமாகும் ,
அறிகுறிகள்; (அ) நோ, வீக்கம்
(ஆ) மூட்டில் அசைக்க முடியாமை,
தோள் மூட்டு-இடப் பெயர்வு
ki ) 555š 5 (sprain)
ஒரு மூட்டைச் சுற்றியிருக்கும் இழையங்கள் வெடித்தல், நசிந்து போதல் அல்லது கிழிதலால் சுளுக்கு ஏற்படும். ஒரு மூட்டில் நிகழும் இயல்பான அசைவுகளை மீறி முறுகுதல் திருகதல் \ வளைதல் போன்ற அடுதியான செயல்களினல் சுளுக்கு ஏற்படுகின்றது. விளையாட்டுத் திடல்களில் காற்பந்தாட்டத்தின்போது கணுக்கால் சுளுக்கு ஏற்படு வது பற்றி நாம் அறிந்திருக்கிருேம். அப்பொழுது நோயாளியை மைத7 ன்த்திலிருந்து அப்புறப்படுத்தி குளிர்ந்த நீரில் நனைத்த பஞ்சை அல் லது சீலைத்துண்டை பாதிக்கப்பட்ட பகுதியில் வைத்துக் கட்டுத்துணி யினல் கட்டுதல் வேண்டும். கட்டிய பகுதியை திரும்பத் SG ÚU குளிர்நீரினுல் நண்ைத்துப் பின்னர் வைத்திய உதவியை நாட வேண் டும்,

Page 44
- 80 -
மணிக்கட்டு என்புகளும் இணையங்களும் அறிகுறிகள்
(அ) சடுதியான அடிப்பு அல்லது பிழையான ஒரு அசைவை
அடுத்தே தோன்றும். (ஆ) வீக்கம், நோ இருக்கும். (இ) அசைக்கும்போது நோ இருக்கும். (vii) நஞ்சு
(அ) தவறுதலாக நஞ்சு மருந்துகள் உட்கொள்ளப்படலாம். (ஆ) கொலை நோக்கிற்காக ஊட்டப்படலாம். (இ) தற்கொலை முயற்சிக்காக உள்ளெடுக்கப்படலாம்:
பொதுவான நஞ்சு மருந்துகள்:
(அ) விவசாயப் பூச்சி கொல்லிகள் உ - ம் பொலிடோல் (ஆ) மயக்க மருந்துகள் - பினுேபாபிற்றன் . (இ) ஆய்வுகூட அமிலங்கள். பொற்ருசியம்சயனைட் (KCN) உப்பு ஆர்சனிக், அயடீன், ஐதரோசயனிக் அமிலம் (HCN) முத லியன.
சில விஷங்கள் இழையங்களை அரிக்கும். மற்றயவை நரம்புகளை உறுத்தி அழிக்கும். மயக்கிகள் நரம்புகளின் உணர்வை நீக்கும்.
அறிகுறிகள்:
(அ) அரிக்கும் நஞ்சு வாயின் மேலணியை வெந்து போகச் செய்
யும்.
(ஆ) மயக்கமருந்து வகைகளாயின் உணர்வற்றிருப்பர் விஷத் துக்கு அவற்றின் நச்சுத்தன்மையை அகற்றுவதற்கு மாற்று மருந்துகளை அல்லது விடமுறிகளைக் கொடுப்பர்.
(இ) அறியப்படாத நஞ்சாயுமிருக்கலாம்.
 

- 81 -
விடமூறிகள்
1. அவித்த முட்டையை அல்லது பாலை நீரிற் கலந்து கொடுக்கலாம். 2. அமிலங்களுக்கு மகனீசியப்பால் அல்லது சோடியம் பைகாப
னேற்று கொடுக்கலாம். 3. காரங்களுக்கு - வினகிரியைத் தண்ணீரில் கலந்து கொடுக்க
6) IT b . நித்திரைக் குளிசைகளுக்கு - பேதியுப்பு. 5. அயடீனுக்கு - மாப்பசை நீர். 6. பொலிடோல் போன்ற பூச்சி கொல்லிகளுக்கு - முட்டை
வெள்ளைக்கரு - அல்லது தேங்காய்ப்பால். Vi) பாம்பு, தேள்கடி:
சில பாம்புகள் கடித்தாலும் மட்டைத்தேள், கொடுக்கன் முதலி யவை கொட்டினுலும் உடலுக்கு நஞ்சு ஏறலாம்.
இலங்கைப் பாம்புகளில் நாகபாம்பும், விரியன் பாம்பும், புடை யன் பாம்பும், கடற்பாம்புமே மனிதனைக் கொல்லக் கூடிய விடச் செறிவு உடையன. சிலர் பாம்பு கடித்து விட்டதென்ற அதிர்ச்சியின லேயே இறந்து போகின்றனர். தாக்கம் ஏற்றப்பட்ட விஷத்தின் அளவி லும் தங்கியிருக்கும் நாகத்தின் நஞ்சு நரம்புத்தொகுதியின் கலங்களைத் தாக்கும், விரியன், புடையன் பாம்புகளின் நஞ்சு குருதியைத் தாக்கி குருதிக்கலங்களை அழியச் செய்யும்,
நஞ்சுப் பாம்புகளை அடையாளம் காணல்;
10-11

Page 45
ديس- 2 & -ضس
1. வால் தட்டையானது - கடற்பாம்பு நஞ்சுள்ளது. 2. வால் உருண்டை நிலப்பரம்புகள்,
(i) தலையில் சிறு செதில் உள்ளன. (படம் A விரியன் பாம்பு (Echis
Carinata)
(i) தலையில் பெரிய செதிலுள்ளது (B) முதுகில் அறுகோண பட்டை கள் உண்டு (C) கீழ்த்தாடையில் 4 செதில்கள் உண்டு . 4 வது
G@Luthulu SITUSCUBős (suh (D) LjGDLulu Gör (Bunga i us)
(i) தலையில் பெரிய செதில், தலையின் கீழ் விரியக்கூடிய கவிப்பு
15m75b (Naia)
ஏனைய பாம்புகள் நஞ்சற்றவை,
பூச்சிகளின் கடி;
கடிக்கப்பட்ட இடத்தில் வீக்கமும் வலிப்பும் உண்டாகும். சிலருக்கு
ஒவ்வாமை காரணமாக ஒவ்வாமைக்கான அறிகுறிகள் தோன்றும். ஒவ்
வாமை காரணமாக அபூர்வமாக மரண்ம் சம்பவிக்கலாம்.
(ix) மூச்சுத் திணறல்;
பிள்ளைகள் பொலித்தீன் பையினுல் தலையை மூடுதல், கழுத்தைச் சுற்றிக் கயிறு க்ற்றுதல், மண்ணுல் மூடப்படுதல், உணவு தொண் டைக்குள் சிக்குதல், நீரில் மூழ்குதல், நஞ்சுண்ணல், மயக்கம், பாம் புக்கடி முதலிய சந்தர்ப்பங்களில் மூச்சுத் திணறல் ஏற்படலாம்.
{%) கட்டுத் துணிகள்: காயங்களைக் கட்டுவதற்குப் பின்வருவன உபயோகிக்கப்படும்: (i) சுருள் கட்டுத்துணிகள் வெவ்வேறு அளவுகளில் உண்டு. (i) முக்கோனக் கட்டுத்துணி;- 1 ம சதுரத் துணியை மூலை
விட்டம் வழியே வெட்டிப் பெறப்படும்.
(i) ஒட்டும் பிளாஸ்டர் - இது வெவ்வேறு அகலங்களிலும் நீளங்
களிலும் உள்ளது.
(ty) அணியங்கள் - இவை மென்மையான G) 1577uir (gauze); ; )
லின்ற் (int) அல்லது பஞ்சாகும்.

முதலுதவி செய்பவன் சமயோசித புத்தியுடையவனுயிருத்தல் வேண் டும். இவை கைலேஞ்சி, வேட்டி, சேலை என்பவற்றிலிருந்து துண்டு களைக் கிழித்துப் பெறமுடியும். கிடையாத வேளையில் வேறு ஏதா வதையும் பயன் படுத்தலாம்.
அந்தம் இப்படங்கள் முக்கோணக் கட்டும் துணி ? حیشیس" کے 14
மடிக்கும் முறையைக் காட்டுகின்றன
வகை 1 வகை 2 இருவகையான பெரியதவளமிடல்

Page 46
மூக்குக்கட்டு
سے 4 8 ميسيسيني
《ä o மேல்தலைக்கட்டு
● ப்புக்கட்டு
 

முதலுதவிப் பெட்டி:
முதலுதவிக்குச் சில சாதனங்கள் இருப்பது அவசியம் விபத்துக் கள் நிகழக் கூடிய இடங்களில் இச்சாதனங்களைக் கொண்ட பெட்டி இருத்தல் வேண்டும். வீடுகளில், பிள்ளைகள் கூடி விளையாடுமிடங் களில், படிக்குமிடங்களில், நீந்துமிடங்களில் தொழிற்சாலைகளில் பஸ்களில், லொறிகளில், கட்டாயமாக இருத்தல் வேண்டும்.
முதலுதவிப் பெட்டியில் இருக்க வேண்டியன;-
அ, உபகரணங்கள்:
1. கத்தரிக்கோல் &FMT 6J 6007 Lb உடைவுக்குக் கட்டும் மட்டைகள் - பல்வேறு நீளங்களில் நாக்கமுக்கி ( சிறு உறுளை அல்லது தட்டையான தடி) கட்டும் துணிகள், நொய் அணியங்கள் பஞ்சு முதலியன ஒட்டும் பிளாஸ்டர்
ஆ. மருந்துகள்
1. டெற்ருேல், ஐதரசன் பரவொட்சைட்டு முதலிய தொற்று
நீக்கிகள் *,
மணக்கும் உப்பு அயடீன் கரைசல் போரிக் பவுடர்
கொண்டிஸ் பளிங்கு
6
லினமென்ட்
இ. வீடுகளிலுள்ள முதலுதவிப் பெட்டிகளில் மேலதிகமாயிருக்கவேண்டி
6)6.
1 , உடல் வெப்பமானி
2. வெந்நீர்ப்பை
3. யுக்கலிப்டஸ் தைலம்
4. மென்தோல் சேர்ந்த குரு அல்லது விக்ஸ் தைலம்
51 கராம்புத் தைலம்
6. மில்க் ஒஃப் மக்னீசியா
7. டிஸ்பிரின். பனடோல் போன்ற காய்ச்சல் தணிக்கும்
குளிசை
8. வேமொக்ஸ் போன்ற புழு எதிர் மருந்து

Page 47
- 86 -
9, அன்ரிகிஸ்ரமைன் பூச்சுமருந்து 10. சிக்கறின் பவுடர் 11. சோடியம் இருகாபனேற்று தொற்றுநீக்கி மருத்துகள்:- புண்களில் கிருமிகள் தொற்று வதை
இவை தடுக்கும் 1. சவர்க்கார நீர்
2. டெற்ருேல், சஃபலோன் - 4. கொண்டிஸ் கரைசல் 3. og SFTiTuh (rectified spirit) 5. அயடீன் கரைசல்
முதலுதவி முறைகள் 1. நோயாளியைப் படுக்க வைக்கும்முறைகள்:-
| l) மயக்க நிலையில் படத்தில் காட்டியவாறு படுக்கச் செய்தல் வேண்டும். வாந்தி எடுப்பினும் சுவாசப்பாதை அடைபடாது தசை களும் ஒப்வெடுக்கும். இது "கோமா - படுக்கை நிலை" எனப்படும்
இதயநோயாளி இருக்கவேண்டிய நிலை
(i) இதயத் தாக்கத்தில் உடலைத் தலையணை களால் படத்தில் காட்டியவாறு உயர்த்தி வைக்கவும்,
 

(ii) கால் பகுதியில் காயமெனின் காலை உயர்த் தி வைக்க வேண்டும். தலையிற் காயமெனின் தலையை உயர்த்தி வைத்தல் வேண்டும். அதிர்ச்சியின் போது தலையைத் தாழ்த்தியும் காலை உயர் வாகவும் வைத்தல் நன்று. வயிற்றினில் குருதிப் பெருக்கெனின் தலை யைவும் காலையும் உயர்த்தி வைத்தல் விரும்பத்தக்கது.
வயிற்றில் உட்காயம் உடையவரைப் படுக்கவைக்கும் முறை
(iv) Sef6ħvšudrir நோயாளி:- அவஸ்த்தை நிலையில் படத்தில் காட்டியவாறு முன் சரிந்து கைகளைத் தொடையின் மேல் தாங்கி அல்லது ஒரு ஆதாரத்தின் மேல் தாங்கி வைத்திருத்தல் வேண்டும்.
அஸ்த்மா நோயாளி இருக்கவேண்டிய நிலை
1, நோயாளிகளைக் காவுதல்
i) தனி ஒருவர் காவுதல் iே) இருவர் காவுதல் i) தூக்குக் கட்டிலிற் காவுதல்

Page 48
ஒருவர் நோயாளியைத் தூக்கும் மூன்று முறைகள்
u0 ഉദ്ദേ خه 7کیe تییو
sagങ്ങഒaിg G
இருவர் நோயாளியைத் தூக்கும் இரு முறைகள்
 
 
 

--سید / 89 || | سس
தூக்கும் கட்டிலில் தூக்கும் முறை: மூவர் ஒற்றை முழங்காலில்
அமர்ந்து நாலாவது ஆளுடன் சேர்ந்து நோயாளியைத் தூக்கித் தம்
தொடைகளின்மேல் தாங்குவர். நாலாவது ஆள் தூக்குக் கட்டில்ை வைத்தபின் நோயாளியைக் கட்டிலின் மேல் வைப்பர்.
0-2

Page 49
جیسے 90 س۔
மூச்சுத்திணறலுக்கு முதலுதவி
வளி உட்செல்லும் பாதையைத் தடுக்கும் தடை, மண் முதி வியவற்றை அகற்றுக.
2. தொண்டை, வாய் என்பவற்றுள் அடைப்பிருப்பின் தாக்கப் பட்டவரைப் பக்கமாகப் படுத்தி முதுகுப்புறத்தில் கோட்பட்டைகளுக் கிடையே பலமுறை இறக்கி அடிக்கவும். சிறு பிள்ளையாயின் படத்திற் காட்டியவாறு தூக்கிப்பிடித்து இதைச் செய்யலாம். e
3. செயற்கை முறையாக மூச்சைக் கொடுக்கவும்
11. எரிகாயங்களுக்கு முதலுதவி -
1. தீ எரிகாயங்களுக்கு எரிபட்ட பகுதியின் மேலுள்ள உடைகளை நீக்கவும் ஒட்டியிருக்கும் துணியை அகற்றக் கூடாது. 2. எரிபட்ட இடங்களைத் தீண்டக் கூடாது. 3. கறியுப்பை வெந்நீரிலிட்டு அதில் தோய்த்த கத்தமான துணி யால் காயங்களை மூடவும்.
4. மிகக்கூடிய கெதியில் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லவும் அமிலகார பொசுபரசு எரிகாயத்துக்கு முதலுதவி அமில எரிகாயத்துக்கு (உ-ம்: H2SO4 சல்பூரிக்கமிலம்)
1. ஒடும் நீரில் 10 நிமிடம் கழுவுக.
2 சோடியமிருகாபனேற்றுக் கரைசலை உபயோகித்தல் நன்று. 3. கார எரிகாயத்துக்கு உ-ம்: (எரிபொற்ருசு) ஐதான எலுமிச்சஞ் சாறு, விஞகிரி ஆகியவற்றை நீரால் கழுவியபின் உபயோகிக்கலாம். நீரில் அமிழ்ந்தியவருக்கு முதலுதவி
நீரிலிருந்து வெளியேற்றல் 2. வாய், மூக்குப்பாதை ஆகியவற்றைத் தடை செய்யும் பொருட் "
கள் ஏதும் காணப்படின் அவற்றை அகற்றல்,
 
 

سسسس l 9 حسس--
உடனடியாக செயற்கைச் சுவாசமளித்தல். நெஞ்சப் பகுதியைப் பிடித்துவிடல் வைத்தியரின் உதவியை நாடல்
V செயற்கைச் சுவாசமளித்தல். (பிரித்தானிய செஞ்சிலுவைச் சங்கி
ஒழுங்கின் படி) வாய்-வாயூடான முறை அல்லது வாய் மூக்கூடான முறை,
பொதுவான முறை இதுவாகும். 1. வாய், மூக குத்துவாரங்களை துப்பரவாக்கவும், 2. சுவாசப்பாதையில் அடைப்பிருப்பின் சரிவாகப்படுத்திய பின் முதுகில் தோட்பட்டைகளுக்கிடையில் அறைந்து வெளியே றச் செய்க,
E,
3. தாக்கப்பட்டவரை மல்லாக்காகப் படுத்தவும். * நெற்றியை ஒரு கையால் கீழாக அழுத்தியவண்ணம் நாடியில் மறுகையைக் கொடுத்து மேல்னுேக்கி உயர்த்தவும். இதனுல் நாக்கு உள்ளிழுக்கப்பட்டுச் சுவாசப்பாதை திறபடும்.
5. நெற்றி மேலுள்ள கையின் இரு விரல்களால் மூக்குத்துவா ரங்களை அழுத்தி பிடித்தவாறு வாயைத் தாக்கப்பட்ட வரின் வாய்மீது வைத்து வளியை ஊதுக, வாயை எடுத்து வெளிச்சுவாசம் வெளியேறு வதை அவதானிக்குக. -
6. நெஞ்சு படிந்ததும் திரும்பவும் ஊதவும். வாயைப் பெருவி ரலால் அழுத்தி மூடியவாறு மூக்கினூடாகவும் ஊதலாம்.

Page 50
சேவேர் முறை
1. சுவாசப் பாதையில் அடைப்பு இருப்பின் வெளியேற்றுக 2. கோமா நிலையில் படுக்க வைக்கவும்
3. படத்திற் காட்டியவாறு ஒரு பக்கமாக இருந்து இரு கைகளின் உள்ளங்கைகளை முதுகில் தோற்பட்டைகளுக்குப் பின்ணுக வைக்கவும்"
(Łu Lub 1) e
4. கையை மடக்காது முன்னுேக்கிச் சாய்ந்து நெஞ்சறையை சிழுத்தவும்.
5. பின்னுகச் சாய்ந்து முதல் நிலைக்கு வரவும். (படம் 2) இவ் வாறு ஒரு நிமிடத்துக்கு 10-12 முறை செய்யவும்.
W. குருதிப் பெருக்கத்தைத் தடுத்தல்
ஒரு விபத்தில் குருதிப் பெருக்கத்தைத் தவிர்த்தலே முதற் காரிய மாகும் பெருக்கைத் தவிர்க்கும் முறைகள்.
1. சிராய்ப்புக் காயம் அல்லது சிறிய காயங்களின் மேல் சுத்த மான துணியை அல்லது பொலித்தீன் தாளை வைத்து அழுத்துவதன் மூலம் குருதிப் பெருக்கை நிறுத்தலாம். ". '...'
 
 

= وg |
குருதி அமுக்கி தானங்கள்
1-13 விரல்களால் அழுத்துமிடங்கள். A, B, C - கம்மாடு (மடித்த துணி) வைத்து அவயவத்தை மடக்கி அழுத்துமிடங்கள் 7 , 11 குருதியடக்கு வளையம் இடப்படும் முக்கிய தானங்கன்.

Page 51
سبب 94 -...............
நாடிக்காயத்துக்கு நாளக்காயத்துக்கு அழுத்துமிடம் அழுத்துமிடம்
2 நாடி, நாளக்கா பங்களுக்கு பிரதம நாடி, நாளம் செல்லும் பாதைகளிற் கையினுல் அழுத்திக குருதிப் பெருக்கைத் தடுக்க
)fA) .
3. கால், கைகளில் ஏற்படும் காயங்களுக்கு குருதியடக்கு மிடவும் ஒரு துணியால் வளையமிட்டு. அதற்குள் ஒடு துணிச் சும்மாடு வைத்துப் பின் மெதுவாக முறுக்கவும். நாடிப்பெருக்குக் காயத்திற்கு உடற்பக்கமாகவும் நாளப்பெருக்கத்துச்குக் காயத்திலிருந்து தூரத்திலும் இதனை இடவும். -
4. உள்ளான குருதிப்பெருக்கு: சந்தேகிக்கப்படும் இடத்துக்குக் குளிர் ஒத்தணம் கொடுக்கவும்.
V, துளக்கு அல்லது அதிர்ச்சிக்கு முதலுதவி
ஆரம்பநிலை அதிர்ச்சியுடையவர்களுக்கு - இது அதிக நேரம் நீடிக் காது. சிறிது நேரம் அமைதியாகஇருப்பின் போதுமானது V
இரண்டாவது வகை அதிர்ச்சிக்கு - உஷ்ணத்தை அதிகரிக் கவும், குருதிச் சுற்ருேட்டத்தை அதிகரிக்கவும் உதவுதல் வேண்டும்.
1. கம்பளியால் மூடிப்படுக்க வைக்கவும். 2. கைகால்க%ள விரைவாகத் தேய்த்து விடவும்: 3. இரத்தப் பெருக்கு இருப்பின் உடன் நிறுத்தவும்: 4. கூடுமாயின், தலையில் காயமில்லாவிடின் காற்பக்கத்தை 30 cm
உயர்த்தி வைக்கவும். 5. குருதிப் பெருக்கில்லாவிடின் அல்லது நின்றபின், நினைவு இருக்குமானுல் சீனி அல்லது குளுக்கோசு நிறையப்போட்ட சூடான கோப்பி அல்லது தேநீர் கொடுக்கவும்,
6. நினைவில்லாவிடின் மணக்கும் உப்பை மணக்கக் கொடுத்து : நினைவு வரச் செய்யவும்.
 
 

جیسے 95 ) سسم
V1 சூரியவாதையில் மயங்கி விழுவோனுக்கு முதலுதவி:
1. குளிரான காற்ருேட்டமான இடத்தில் படுக்க வைக்கவும், 2. உடைகளை தளர்த்தி விடவும். 3. ஐஸ்கட்டி அல்லது குளிர் நீர் தோய்த்த துணியால் நோயாளி யின் நெற்றி, கண்ணிமை ஆகிய பகுதிகளில் வருடவும். 4. சுயநினைவிருப்பின் குளிரான பானங்கள் கொடுக்கலாம்.
V1. வெட்டு, குத்துக் காயங்களுக்கு முதலுதவி;
1. குருதிப் பெருக்கை நிறுத்தவும் 2. அதிர்ச்சி ஏற்படாமல் தடுக்கவும் 3. காயத்தில் தொற்று ஏற்படாதிருக்கச் செய்யவும். கிருமி கழுவியபின் துப்புரவான அணியத்தை வைத்து மூடிக் கட்டவும் அல்லது அணியத்தை வைத்துப் பிளாஸ்ரரால் ஒட்டி விட வும். கிருமி கொல்லி கிடைக்காது விட்டால் உப்பை வெந்நீரில் கரைத்து அதில் தோய்த்த துணியால் மூடி விடலாம்.
4. வெட்டிப் பிரிவடைந்த காயங்கள் வைத்தியரால் இழை போடப்பட வேண்டும். காயத்தின் வாயை மூடத்தக்கதாக அகன்ற பிளாஸ்ரரால் தோலை இழுத்து ஒட்டிவிடவும்.
5. காயமடைந்தவர் ஏற்புவலி எதிர் ATTS எப்போது கடைசி யாகப் பெற்ருர் எனக்கேட்டறிந்து வைத்தியருக்குக் கூற வேண்டும்.
6 வயிற்றில் குத்துக் காயங்கள் ஆபத்தானவை. விரைவில் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்தல் வேண்டும்.
X. வலிப்புகளுக்கு முதலுதவி:
1. நோயாளியின் கை, கால் அசைவுகளைக் கட்டுப்படுத்தக் கூடாது, அருகிலுள்ள பொருள்களை விலக்கி வைக்கவும்.
2. கூடுமாயின் வாயுள் பென்சில், தடி போன்றவற்றைக் குறுக் காக வைத்துப் பற்களால் நாக்குக் கடிபடுவதைத் தடுக்கவும் 3. வாயில் நுரையிருப்பின் அதைத் துடைக்கவும். 4. ஆடைகளைத் தளர்த்தவும். 5. நித்திரை கொள்ளவிடல் விரும்பத்தக்கது. 6. அதிர்ச்சிக்குரிய பொது விதிகளைப் பிரயோகிக்கவும்,

Page 52
سے 96) -
X, ஹிஸ்ரீரியா மயக்கத்துக்கு முதலுதவி:
இது பெரும்பாலும் பெண்களிலேயே ஏற்படும். அபூர்வமாக ஆண்
களிலும் தோன்றுவதுண்டு.
N இவர்கள் தம்மைச் சில நேரங்களில் கட்டுப்படுத்த முடியா தவராயிருப்பர். மற்றவர்களின் கரிசனையைப் பெறத்தக்கதாக நடிப்பர். சிலர் கட்டுப்படுத்த முடியாத உடலசைவுகளையும் காட்டுவர். கடைசியில் மயக்கமுறுவர்-ஆஞ ல் ஒருபோதும் தமக்குக்காயம் ஏற்படும் படியாக விழமாட்டார்கள். ஆரம்ப அதிர்ச்சிக்குரிய முதலுதவி போதுமானது.
X1, நஞ்சுண்டவருக்கு முதலுதவி
மயக்கமுற்றிருப்பின்
l,
2
வயிற்றினுள் சென்ற விஷத்தை வாந்தி எடுக்கச் செய்ய வேண் டும். அல்லது ஐதாக்கக்கூடியதாக மாற்று மருந்துகள் வழங்க வேண்டும். உள் அங்கங்களில் ஏற்படும் எரிவைப்போக்கக்கூடியதாக மாற்று மருந்துகள் கொடுக்க வேண்டும்,
3. உடலில் ஏறிவிட்ட நஞ்சை வெளிப்படுத்த வேண்டிய நட
வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 4. அரிக்காத நஞ்சாயின் இருவிரல்களால் தொண்டையினடியில் தொட்டு வாந்தியெடுக்கச் செய்யலாம். அல்லது ஒரு கிண்ண நீரில் 2 தேக்கரண்டி உப்பிட்டுக் குடிக்கக் கொடுப்பதால் வாந்தியெடுக்கச் செய்யலாம். 5. நோயாளியின் பல மும் சக்தியும் குன்றிவிடாமற் பார்த்துக்
கொள்ளல் வேணடும்.  ெநஞ்சூட்டப்பட்ட பொருள் எதுவெனத் தெரியாவிடில் பசுப் பால், தேங்காய்ப்பால், பச்சை முட்டை (பாலில் அல்லது நீரில் கரைத்தகரைசல்) கடுமையான தேநீர் முதலியவற்றைக் குடிக்கக் கொடுக்க வேண்டும், 7. வாந்தி எடுக்கும் பொருட்களின் மாதிரியை வைத்தியருக்குக்
காட்டும் பொருட்டு எடுத்து வைத்தல். 8. உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லல், மயக்கமுற்றிருப்பின்
கோமா நிலையில் படுக்கவைக்கவும். சுவாசிக்காவிடின் செயற்கைச் சுவாசம் அளிக்கவும். தொண்டையுள் அடைப்பிருப்பின் முதுகில் இறுக் கமாக அடித்து அடைப்பை வெளியேற்றவும். உடன் வைத்தியசாக்கு எடுத்துச் செல்க.
 
 
 
 
 

- 9 7 ܚ
XII. என்பு முறிவுகளுக்கு முதலுதவி
1. குருதிப் பெருக்கிருப்பின் நிறுத்துக. 2. காயமிருப்பின் மூடிக்கட்டுக. 3. சிக்கலான முறிவாயின் சீர்படுத்த முயலவேண்டாம். 4. முறிந்த பகுதிக்கு மட்ட்ை வைத்துக் கட்டவும்: 5, கை, காறை என்பு முறிவுகளுக்குத் தவளமிட்டுச் சொகுசாக வைக்கவும். கால் முறிவுகளாயின் படுக்கையில் வைக்கவும்.
தொடை எலும்பு முறிவு
காறை எலும்பு முறிவு
சில என்பு முறிவுகளுக்கான முதலுதவி; 1. கீழ்க்கால் என்பு முறிவு:
கால்களுக்கிடையில் துணி மடிப்புகளை வைத்தபின் இரு கால் களையும் ஒன்று மற்றையதுக்குத் துணையாக அமையக் கட்டி விடுக, அல்லது மட்டை வைத்துக் கட்டுக. தொடை எலும்பு முறிவு: அக்குளிலிருந்து பாதம்வரை மட்டை வைத்துக் கட்டவும். 3. முழங்காற் சில் உடைவு:
காலை உயர்த்தி வைத்தவாறு கால்களுக்கிடையில் சீலை அணை வைத்து இரு கால்களையும் சேர்த்துக் கட்டுக. 4. மூற்புய எலும்பு முறிவு:
மட்டை வைத்துக் கட்டியபின் பெருந்தவளமிடுக. 5. மேற்புய என்பு முறிவு:
மட்டை வைத்துக் கட்டிய பின் பெருந்த வளமிடுக. 6. விலா என்பு முறிவு:
மூன்று கட்டுகள் குறுக்காக மார்பைச் சுற்றிக் கட்டுக. காறை என்பு முறிவு: அக்குளில் சும்மாடு வைத்தபின் படத்திற் காட்டியவாறு கட்டுக
10-13
2
7

Page 53
இடையூறு
அறிகுறி
அட்டைக்கடி
2. அதிர்ச்சி அல்லது து ெ
க்கு
அமில எரிகாயம்
பொசுபரசு காயம்
4. என்பு இடப்பெயர்வு
,ே என்பு முறிவு (எளிதா
னது)
என்பு முறிவு (சிக்கலா ଜିଘାଂ &))
6. காயங்கள்
7 கிஸ்ரீரியர
燃, குருதிப்பெருக்கு
(வெளிப்புற)
9. குருதிப் பெருக்கு
(உட்புற
10. சுளுக்கு
11. தலையோட்டு முறிவு
---
தோலில் பற்றியவாறு அட்டையிருக்கும்
முகம் வெளிறல் குளிர்ந்த வியர்வைப் பகுதி அல்லது முழு மயக்கம்; இதயத துடிப்பு வீதம் அதிகரிக்கும்.
முதல் நிலையில் தோல் சிவந்திருக்கும். இரண்டாம் நிலையில் தோலின் மேற்பகுதி சுட்டிருக்கும். 3 ம் நிலையில் உட்தோலும்
அவிந்திருக்கும்.
மூட்டில் நோவு அவயத்தின் பொருந்து முனை விலகியிருக்கும்: அவயவத்தை அசைக்க முடியாது.
நோவு, வீக்கம், முறிவுக்கு அப்பாற்பட்ட பகுதி அசைக்க முடியாமை
என்பு குற்றி வெளிப்பட்டிருக்கலாம். காயத்தில் குருதிப் பெருக்கு.
குத்து, வெட்டு, கிழிவு, சிராய்ப்பு காயம் முலம குருதிபபெருக்கு
சத்தமிடல், கை கால்களை அசைத்தல் தலையாட்டம், மயங்கி விழுதல் ஆனல் தன்னைப் பாதிக்காமல் தரையில் விழுவர்.
மயிர்க்குழாய் வெளிவரும்.
( ) மூலமாயின் கசிந்து
(b) நாளமாயின் மெதுவான வடிதலாயி
ருக்கும்
(c) நாடி பாயின் குபு குபு என வெளி
வரும்.
அறிவு கெடல், தாகம், பெருமூச்சுவிடல் முகம் வெளுத்தல், நாடித்துடிப்புக் குறை தல்.
வீக்கம், நோ
உடலில் வெளிப்பகுதி வீங்கியிருக்கலாம்
உள் பதிந்திருக்கலாம். கண் காது மூக் கினுல் குருதி வடியலாம்.
 

(),
*11,
முதலுதவி
சிகரட்டின் எரியும் தலையினுல் சுடுக.
தலேயைத் தாழ்த்திக் காலை உயர்த்தி வைக்கவும். உடலைக் கம்பளி யால் மூடவும்.
காயங்களை உரோஞ்சக் கூடாது. ஒட்டிய துணிகளை நீக்கக் கூடாது. துணியில் எரிகாய மருந்துகளைத் தோய்த்துப்போடவும் அமில பொசுபரசு எரிகாயத்துககு அதிகளவு நீரால 10 நிமிடம் கழுவவும் சோடியம் இருகாபனேற்று நீரையும் உபயோகிக்கவும்.
பாதிக்கப்பட்ட பகுதியை அசைக்கக் கூடாது அசையாதவாறு ஏற்ற கட்டுப் போடவும்,
மட்டை வைத்துக் கட்டவும்; முறிந்த பகுதி அசையாதவாறு வைத்திருக்கவும். குருதிப்பெருக்கை நிறுத்துக. தொற்றுநீக்கி காயத்துக்கு உபயோ கிக்க காயத்தைத் தூயதுணியால் மூடிக்கட்டுக. நேராக்க முயற் சிக்கக் கூடாது. மட்டை வைத்துக் கட்டவும்.
காயத்தின் மேல் அழுத்தி அல்லது குருதி அமுக்க தானங்களில் அழுத்தி அல்லது குருதியடக்கு, வடம் மூலம் குருதிப்பெருக்கை நிறுத்துக, தொற்று நீக்கி தூயதுணியால் கட்டுக. அருகில் நிற்பவர்களை அகற்றவும் மற்றவர்களின் பார்வை தாக் கத்தைக் கூட்டும். பேய் பிசாசின் செயல் எனக்கூற வேண் டாம் பரிதாபப்பட வேண்டாம உறுதியோடு பேசவும்.
(a) அழுத்தித் துடைத்தாற் போதும்.
(b) காயத்திலிருந்து உடலுக்குத் தூரமான அமுக்க தானத்தில்
அழுத்துக அல்லது குருதியடக்குவடம் இடவும்.
(c) காயத்திலிருந்து உடற்பக்கமான அமுக்கத் தானத்தில் அழுத் துக அல்லது, குருதியடக்குவடம் இடவும் காயத்தைத் தொற்று நீக்கி அணியமிடடு மூடிக் கட்டவும்.
குருதி பெருகுமிடத்தைக் குளிரூட்டி வைக்கவும். வைத்திய
சாலைக்கு கூடிய விரைவில் எடுத்துச் செல்லவும்.
சொகுசான நிலையில் அசையாது வைத்திருக்கவும் குளிர், சூடு ஒத்தணம் மாறி மாறிக் கொடுக்கவும், மீள விழு கட்டுந்துணி யால் வரிந்து கட்டவும். தலையை உயர்த்தி வைக்கவும் காயத்தை மூடிக்கட்டவும்,

Page 54
அறிகுறி
இடையூறு
12. மின்னதிர்ச்சி மின்கம்பியுடன் தொடர்பு இருக்கலாம். மின்கம்பி சுட்ட அடையாளமிருக்கும்" சுவாசம் தடைப்படும். 13. மூக்கில் இரத்தம் வடி ! பலமான அடி அல்லது விழுகையின் பின்
தல். குருதி வடியும்.
14. நஞ்சூட்டல் (வாயு) தலைச்சுற்று, மயக்கம்
15. நஞ்சூட்டல் திரவம் எரிக்கும் நஞ்சாயின் வாயோரம், வாய்
திண்மம். அவிந்திருக்கும,
16. நீரில் மூழ்கல் மூச்சின்றிச் காணப்படலாம், வாய் தொ
ண்டை அடைக்கப்பட்டிருக்கலாம்
7. நாய்க்கடி பற்காயங்களிருக்கும்
18. பாம்புக்கடி ஊசித்துளை 1 அல்லது 2 இருக்கும்
கடித்த இடத்தில் நோ, வீககம், வலி
19, பூச்சிக்கடி(கொடுக்கன் வலிப்பு இருக்கும்.
மட்டத்தேள், சிலந்தி)
20. (a) மயக்கம் (அறிவு முகம் வெளிறல் நாடித்துடிப்பு விரை
கெடல்) வாகும் குளிர்ந்த வியர்வை. (b) மயக்கம் (மதுவெ நிலை தளம்பல், மதுபானமணம்
றி) 21. மூச்சுத்திணறல் வளி கிடைக்காத நிலைபரம், மயக்கம் உதடு காதுச்சோணை நீலமாகும். சுவாசம் தடைப்படும்.
$t୫ ଜିଜ୍ଞ& ଲା। ଜହ୍ନି கால், கை துடிப்பசைவு, வாயினுல் நுரை
22.
தள்ளுதல்
 
 
 

முதலுதவி
2.
6.
7,
8
9.
[20.
21.
22.
கவனத்துடன் மின்தொடர்பை அகற்றுக அல்லது அதிர்ச்சியுற்ற வரை கம்பிலிருந்து பிரிக்க. செயற்கைச் சுவாசம் அளிக்கவும்.
குளிரூட்டவும்: தலையைக் கீழ்சாய்த்தபடி இருந்தவாறு தன் கை விரல்களால் மூக்கின் மென்மையான பகுதியை அழுத்திப் பிடிக் கவும்.
தூய வளியைச் சுவாசிக்கச் செய்யவும் செயற்கைச் சுவாசம் அளிக்கவும்
மயங்கியிருப்பின் சுவாசியாவிடின் செயற்கைச் சுவாசம் அளிக் கவும். வாய்க்குள் அடைப்பிருப்பின் வெளியேற்றவும். கோமா நிலைக்குரியவாறு படுகக விடவும்; உடன் வைத்திய உதவியைப் பெறவும். மயங்காதிருப்பின் விடமுறி கொடுக்கவும். கொடுக்கவும். வாந்தி யெடுக்கச் செய்யவும்.
அல்லது ஐதாக்கி
சுவாசப்பாதை (வாய், தொண்டை, மூக்கு) அடைப்பிருப்பின் வெளியேற்றவும் செயற்கைச் சுவாசம் அளிக்கவும்.
காயத்தை சவகார நீரால் கழுவி துப்பரவாக்கவும், தொற்று நீக்கியபின் மூடிக் கட்டவும்; நாய் விசர் உடையதா என அறியவும்,
காயத்தைக் கூரான அலகினுல் கீறித் திறக்க அதிகளவு நீர் விட்டு குருதி வெயேறச் செய்க. வாயில் புண்ணில்லாதிருப்பின் குருதியை உறிஞ்சித் துப்புக சவர்க்கார நீரில் கழுவிய பின் மூடிக்கட்டுக விரைவாக வைத்தியசாலைக் கனுப்புக.
கொடுக்கிருப்பின் நீக்கவும், அன்ரிகிஸ்ரமீன் களிம்பு பூசுக.
கம்பளியால் மூடவும் தலையைத் தாழ்த்தி வைக்கவும்: மூக்கில் மணக்கும் உப்புப் பிடிக்கவும், வாந்தி எடுக்கச் செய்தல்.
செயற்கை சுவாசம் அளிக்கவும்.
அசைவுகளைக் கட்டுப் படுத்தக்கூடாது; அருகிலுள்ள பொருட் களை அகற்றவும் நுரையைத் துடைக்கவும். நாக்கமுத்திவைக்கவும்:

Page 55
y 17 o Lun, 6
நாட்பட்ட உடல் நோய்கள்
புற்று நோய்
ஒருவரின் இழையங்களின் நடையற்ற தொடர்ச்சியான வளர்ச் சியே புற்றுநோய் எனப்படும் சாதாரண வளர்ச்சியின் போது ஏற் படும் தடை, கட்டுப்பாடு என்னும் எல்லைப்படுத்தும் காரணிகள் புற்றுநோய் வளர்ச்சியைப் பாதிப்பதில்லை. புற்றுநோயில் கலங்கள் பல தடவை பிரிவடைந்து சாதாரண கலங்களைச் சூழ்ந்து அவற்றிலி ருந்து போசணையைப் பெறும். அத்தோடு புற்றுநோய்க் கலங்கள் பெரு குவதால் அவ்விடங்களில் கழலைகள் எனப்படும் அசாதாரண இழை யத் திணிவுகள் உருவாகும். இவை சாதாரண இழையங்களை அமுக்கி அவற்றை அளிக்கின்றன. இவை உடலின் மற்றைய பகுதிகளுக்குப் பரவி மேலும் புதிய கட்டிகளின் வளர்ச்சியை உருவாக்கலாம்.
புற்றுநோய்க் கலங்கள் உற்பத்தியாகும் இடங்களில் தொடுப்பிழை யச் சவ்வு சூழ வளர்ந்து அரணுக அமையலாம். இவ் வகைக் கட்டிகள் துன்புறுத்தாத அல்லது சாந்தமான கழலை எனப்படும். இவற்றை விரலினுல் தள்ளினல் அங்குமிங்கும் அசையக் கூடியனவாய் இருக்கும். வளரும் கலங்கள் சவ்வினுல் குழப்படாவிடின் கலங்கள் விரைவாகப் பெருகும். கட்டி நாளுக்குநாள் பெரிதாகும். இது துன்புறுத்தும் கழலை எனப்படும். இது ஆபத்தானது இதிலிருந்து புற்றுநோய்க் கலங்கள் நண்டுக் கால்கள் போலப் பல திசைகளிலும் வளர ஆரம்பிக்கும். சில கலங்கள் குருதி அல்லது நிணநீருக்கூடாகப் பரவி வேறு இடங்களை அடைந்து புதிய கட்டிகளை உருவாக்கும். இந் நிலை கிடக்கும் அல் லது இடப்பெயர்ச்சி நிலையாகும். இது கார்சினேமா எனப்படும்.
இது இரசாயனப் பொருட்கள், ஓமோன்கள், கதிர்வீசல், பல் உராய்வு, மலச்சிக்கல் போன்ற பல காரணிகளால் ஏற்படலாம். சில வைரசுக்களும் காரணமாகலாம். ஆனல் பெரும்பாலும் மனிதரில் ஏற்படும் புற்றுநோய்க்கான காரணம், திட்டவட்டமாக நிர்ணயிக்கப்
La Lacầ)3av.
சுவாசப்பை புற்றுநோய்க்கும் புகைத்தலுக்குமிடையே நேரடித் தொடர் இருப்பதாகக் காணப்பட்டுள்ளது. ஒவ்வொரு 100, 000 மக் களுக்கும் சுவாசப்பை புற்றுநோயால் ஏற்படும் இறப்புக்கள்
 
 
 

سید ( h0 حبیبیسی.
பின்வருமாறு:
ஒரு போதும் புகைக்காதோர் 10 இறப்புகள் சுங்கான் புகைப்போர் 39 இறப்புகள் சிகரட் புகைப்போர் 135 இறப்புகள்
இலங்கையில் சுவாசப்டை புற்றுநோயால் இறந்தவர்களின்
6 வருட எண்ணிக்கை
1967 - 101 |1970 ،141 سیس
163 س- {197 95 حصہ 1968
1969 - 104 1972 188 سسسس
புற்றுநோயால் கணிசமான எண்ணிக்கையில் இறப்புக்கள் ஏற் படுகிறது என்பதையும் வருடாவருடம் அதிகரித்து வருகிறது என்ப தையும் இப்புள்ளி விபரம் காட்டுகிறது. இந்நோய் மக்களின் சமூக பொருளாதாரப் பின்னணியுடனும் தொடர்புடையது.
காஷ்மீர் போன்ற இடங்களில் குளிர் காலங்களில் வறுமையான மக்கள் வயிற்றுக்கு அண்மையில் மட்பாண்டங்களில் நிலக்கரியை எரிப் டதால் தோல்புற்று நோய் ஏற்படுகிறது.
பிரான்ஸ் போன்ற நாடுகளில் மிதமிஞ்சிய அற்ககோல் போன்ற குடி வகைகளைப் பயன் படுத்துவதால் குடல்புற்றுநோய் ஏற்படுகிறது
யப்பானியர்கள் கூடுதலாக ஊறுகாய்களைப் பயன்படுத்துவதால் அவர்களில் இரைப்பைப் புற்றுநோய் காணப்படுகிறது
இலங்கையில் பெரும்பாலான விவசாயிகள் வெற்றிலை பாக்குப் போடுவதால் ஏறக்குறைய 45 - 50 வயதளவில் வாய்ப் புற்றுநோயைப் பெறுகின்றனர். இலங்கையில் காணப்படும் புற்றுநோய்களில் 55% வாய்ப் புற்றுநோய் ஆகும். இதில் ஏறக்குறைய 50% நோயாளிகள் வெற்றிலை, சுண்ணும்பு, புகையிலை பயன்படுத்துபவர்களாகக் காணப் படுகின்றனர்.
அஸ்பெஸ்டஸ், பென்சோல், பினைல் குளோரையிட்டு, நப்தலின் அனலீன் சாயங்கள், விவசாய இரசாயனப்பொருட்கள் போன்றன புற்று நோயை ஏற்படுத்தும் ஏறக்குறைய நூறுக்கும் அதிகமான இத்தகைய இரசாயனப் பதார்த்தங்கள் வகைப்படுத்தப் பட்டுள்ளன:
கதிர்வீசல் X கதிர்கள், அழுத்தமற்ற மேற்பரப்புகளுடன் தொடர்ச் சியான தொடுகை போன்றவையும் புற்றுநோய்க்குக் காரணமாகும்,

Page 56
س 4 0 1 -
குளிர் நாடுகளில் பணிப்புகாரில் சல்பூரிக்கமிலம் போன்ற இரசா யனப்பொருட்கள் காணப்படுகின்றன. இவை புற்றுநோயைத் தூண்டு கின்றன.
புற்றுநோயின் வகைகள் பொதுவாகக் காணப்படும் சில புற்றுநோய்கள் பின்வருமாறு:
(1 வெண்குருதியம் (லியூக்கெமியா)
இது குருதிப் புற்றுநோயாகும். இது வெண்குருதிச் சிறு துணிக் கைகளின் கட்டுப்பாடற்ற உற்பத்தியால் உண்டாகும். கதிர்வீச்சு பென்சோல் போன்ற இரசாயனங்கள், குறிப்பிட்ட சில வைரசுக் களின் தாக்கம் என்பன வெண்குருதியம் உண்டாவதற்கு முக்கிய காரணிகள் ஆகும்.
(ii) கருப்பைப் புற்றுநோய்:
இது கருப்பையின் கழுத்துப்பகுதியில் ஆரம்பமாகி ஏனைய பகுதி களுக்குப் பரவும். இதற்குரிய காரணம் முற்ருக அறியப்படவில்லை அடிவயிற்றுப் பகுதியில் நோ, திரட்சி மாதவிடாய்ச் சிக்கல் போன்றை இதன் அறிகுறிகளாகும்.
(i) இரைப்பை, சிறுகுடல், புற்றுநோய்:
அளவுக்கதிகமான அற்ககோல் குடிபானங்களின் பாவனை, மிகக் குளிர்ந்த அல்லது மிகச் சூடான பானங்களைக் குடிக்கும் பழக்கம், புகையிலையின் பாவனை ஆகியவற்ருல் இது தோன்றலாம். இதன் அறி குறிகள்: (அ) வயிற்றில் நோ (ஆ) மலத்தில் குருதி காணப்படுதல் (இ) வாந்தி (ஈ) உடல் நிறையில் விரைவான இழப்பு
(tw) வாய்ப் புற்றுநோய்;
இது பெரும்பாலும் 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களிலேயே காணப்படுகின்றது. உதடுகள், நா. கன்னம் ஆகியவை நோய் ஏற் படும் பொதுவான இடங்களாகும். வாயின் கீழ் தளம் முரசுகள், அண் ணம், கீழ்த்தாடை, உமிழ் நீர் சுரப்பிகள் போன்றவை மற்றைய இடங்களாகும்.
(W) முன்னிற்கும் சுரப்பிப் புற்றுநோய்;
இது ஆண்களின் சிறுநீர்ப்பையின் அடியில் காணப்படும்கின்ற முன் னிற்கும் சுரப்பியில் ஏற்படுகின்றது அறிகுறிகள். (அ) சிறுநீர் கழிப் பதில் கஷ்டம், (ஆ) சிறுநீர் கழிப்பதில் நோ. (இ) சிறுநீருடன் குருதி ! வெளியேற்றம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

بـ 5 0 1 سمسم
(vi) மூலைப் புற்றுநோய்:
பெண்களில் இது மிகப் பொதுவான புற்றுநோயாகும். முலேச் சுரப்பியில் ஒரு கட்டியாகத் தொடங்கி உடலில் ஏனைய பகுதிகளுக்
குப் பரவும். (V) கொஜ்கின்ஸ் நோய்
இது நிணநீர்த் தொகுதியைத் தாக்குகின்றது. நிணநீர்க் குழி
பங்கள் அசாதாரண முறையில் தோற்றுவிக்கப்படும். தொடர்ச்சி யான காய்ச்சல், இருமல் இதன் அறிகுறிகளாகும், (71) சுவாசப்பைப் புற்றுநோய்'
இது சுவாசப்பையில் அசாதாரண வளர்ச்சியை உண்டு பண்ணி மற்றைய பாகங்களுக்குப் பரவச் செய்யும்.
(wi) தோல் புற்றுநோய்:
தோலில் கட்டிகள், மச்சங்கள் விரைவாக வளர்தலும் ஆழுத புண்களும் தோற் புற்றுநோயாகும். புற்றுநோய் அபாய அறிகுறிகள்:
ஆரம்பத்தில் அறிகுறிகள் தெரியாது போகலாம். புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பின் முற்முக மாற்றலாம். அல்லது ஒரு வர் அதிக தாக்கமடையாது வாழ உதவலாம். சில அறிகுறிகள் வேறு நோய்களுக்குரியனவாகவும் இருக்கலாம். எனினும் வைத்திய ஆலோ சனை அவசியம்
1. இரண்டு வாரங்களுக்கு மேல் ஆருது நீடிக்கும் வாய் தோல்
புண்கள், 2. மலங்கழித்தல் சிறுநீர் கழித்தலில் நோ.
3. மலத்துடன் , சிறுநீருடன், வாந்தியுடன் குருதி அல்லது சீழ்
வெளியேறல்.
4. சடுதியாக வளரும் கட்டிகள்.
5. உடல் நிறை குறைந்து போதல்.
6. தொடர்ச்சியான சமிபாட்டுக் குறைபாடு,
7. மாருத இருமல், தொண்டைநோ, உணவை விழுங்குவதில்
கஷ்டம். 8. மலங்கழிக்கும் ஒழுங்கில் குறிப்பிடத்தக்க மாற்றம். புற்றுநோயை முற்ருக மாற்ற இயலாத போதும் நொயைக் கட் டுப்படுத்துவதுடன் நோயாளியின் வாழ்க்கையை ஒரு சில மாதங் களுக்கு அல்லது வருடங்களுக்கு நீடிப்பதே சிகிச்சையின் முக்கிய நோக்கமாகும். மத சார்பான நேர்த்திகள், சாந்தி செய்தல் போன்ற வற்றில் சிலர் காலங்கழித்த பின்னரே முறைமையான வைத்தியம் பெற
10.4

Page 57
ج............... 106 سب سے
வருவதானுல் குணமாதல் தாமதமாகின்றது. சிலர் ஆரம்ப அறி குறிகளை அசட்டை பண்ணுகின்றனர்.
புற்று நோயால் பாதிக்கப்பட்டவருடன் நேரடியாக அல்லது மறை முகமாக ஏற்படும் தொடுகை மூலம் இந்நோய் தொற்றுதலுக்கான சான்றுகள் இல்லை. எனவே புற்று நோயாளிகளைப் பராமரிப்பதில் எவ் வித ஆபத்துமில்லை.
சிகிச்சை:
1. அறுவைச் சிகிச்சை மூலம் கட்டிகள் அகற்றப்படலாம்.
உணவுக் கால்வாயின் ஒரு பகுதி நீக்கப்படலாம் 2. X = கதிர்கள் மூலம் புற்றுநோய்க் கவசங்கள் அழிக்கப்படலாம். 3. இரேடியக் கதிர்வீச்சால் கட்டியும் கட்டியைச் சூழவுள்ள இழை
யங்களும் எரிக்கப்படலாம்.
தடுப்பு முறைகள்: N.
புற்றுநோய் தொடர்பான அறிவையும் அனுபவத்தையும் பயன்
படுத்தினல் நோயைப் பெருமளவில் தடுக்கலாம். புகைத்தல் வெற்
றிலை மெல்லல், தொழிற்சாலை இரசாயனப் பொருட்களின் அபாயங்
கிள் போன்றவற்றைத் தவிர்ப்பது நோயைத் தடுப்பதற்குரிய வழி
பாகும். சிகிச்சையளிக்கப்பட்ட புற்றுநோயாளிகளுக்கு அவர்களின்
வாழ்க்கை வளம்பெறும் வகையில் அவர்களுக்கு ஏற்படும் துன்பங்
கிளை நிவிர்த்தி செய்து அவர்களுடைய எதிர்காலத்தைப் பயனுள்ள தாகக் கழிப்பதற்கு ஊக்கமும், உற்சாகமும் ஊட்டப்படுவது அவசிய
font 5 dit -
நீரிழிவு நோய் (சலரோகம்) நீரிழிவு இரண்டு வகைப்படும் அவையாவன: 3. மதுநீரிழிவு (Diabetis mellitus) இது சாதாரணமான நீரிழிவு
அல்லது வெல்ல நீரிழிவு எனப்படும். 2. மதுவற்ற நீரிழிவு: இதில் வெல்லம் இழக்கப்படுவதில்லை.
ஆணுல் பெருமளவு சிறுநீர் Qaefaupಟಿ.
மது நீரிழிவு:
இது பொதுவாக நடுத்தர வயதுக்குப் பின் தோன்றுவதாகும் அபூர்வமாகச் சிறு பராயத்தினரிடமும் இது காணப்படுவதுண்டு. நீரி ழிவு நோயை மாற்ற முடியா தெனினும் கட்டுப்படுத்திச் சாதாரண ! இாழ்க்கை நடாத்த முடியும் நோயைக் கட்டுப்படுத்தி வாழ முடி
f

| بیبیسه با 7 (h0 ( سیاسی
யாவிடின் இறக்க வேண்டிய நிலைமை ஏற்படும். சாதாரண நிலைமை களில் நாம் எடுக்கும் காபோவைதரேற்று உணவுகள் எளிதான வெல்லங்களாக மாற்றப்பட்டுக் குருதியினுல் ஈரலுக்கு எடுத்துச் செல் லப்படும். ஈரலில் மிதமிஞ்சிய வெல்லங்கள் கிளைக்கோசனுக மாற்றப் பட்டுச் சேமிக்கப்படும். நீரிழிவில் இத் தொழிற்பாடு தடைப்படுவத னுல் குருதியில் கூடுதலான அளவு வெல்லம் சேருகின்றது, இது பின் னர் சிறுநீருடன் வெளியேற்றப்படுகிறது.
அறிகுறிகள்:
அதிக அளவு சிறுநீர் அடிக்கடி வெளியேறல், மிகையான தாகமும் பசியும் நோயாளியின் வயதைப் பொறுத்து நிறை குறைதல் அல்லது கொழுப்புச் சேரல் பார்வைக் குறைபாடு முதலியன வாகும் சுற் ருேட்டத் தொகுதியிலும் நரம்புத் தொகுதியிலும் ஒழுங்கீனங்கள் ஏற்படலாம்.
நீரிழிவு நோயின்போது வெல்ல அனுசேபத்தில் குழப்பம் ஏற்படு வதால் கொழுப்பு அனுசேபத்திலும் தடையும் குழப்பமும் ஏற்படுகி றது. கொழுப்பு அனுசேபத்தின்போது கொழுப்புகள் முழுமையாக ஒட்சிஏற்றப்படாமையால் பல நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்கள் குருதியில் சேருகின்ற்ன. இவற்றுள் அசற்ருேனும் டைஅசற்றிக் அமில மும் குறிப்பிடத்தக்கவையாகும். இவை அமிலத்தன்மையான நஞ் சூட்டலை நிகழ்த்துவதால் நோயாளியின் உயிருக்கு ஆபத்து ஏற்.
6)
வெல்லச் சோதனை: \
2cc பெனடிற் கரைசலில் 4 துளி சிறுநீரை விட்டு வெப்பமேற் றவும். நீல நிறமாயிருப்பின் வெல்லம் இல்லை. இளம் பச்சை நிறமா யிருப்பின் வெல்லம் மிகக் குறைவு பச்சை நிறமாயிருப்பின் ஓரளவு வெல்லம் உண்டு. செம்மஞ்சள் நிறமாயின் கணிசமான அளவு உண்டு: செங்கட்டி நிறமாயின் மிகையான அளவு உண்டு.
மிகவும் தீவிர நிலையை அடைந்த நீரிழிவு நோயாளிகள் மயக்கம் அல்லது (coma) கோமா மூடுசன்னி நிலையை அடைவர் இது குருதி தஞ்சூட்டப்படுவதால் ஏற்படுவது,
Girton நிலையில் பின்வரும் அறிகுறிகள் காணப்படும் : (1) சுவாசித்தல் கஷ்டம் (ii) நாடித்துடிப்பு வீதம் குறைதல்
fi) அறிவு மயக்கம், கடுமையான சன்னியைத் தொடர்ந்து இறப்பு
ܓܠ .
A

Page 58
ܡܸܝ̈ܚܗ 8 (0 [ ܚ
நேருகின்றது. நீரிழிவு நோயாளிகளுக்குப் பெரும்பாலும் கட்டுகளும் சொறி நோய்களும் ஏற்படுகின்றன. காயங்கள் இலகுவில் ஆறுவ தில்லை.
பொதுவாக சதையில் போதுமான அளவு இன்சுலின் ஒமோ னைச் சுரக்காததினுல் ஏற்படும் இந் நோயை முற்ருக மாற்ற இய லாது. எனினும் க்ட்டுப்பாடான உணவு மூலமும் செயற்கைமுறை யில் வைத்தியர்களின் ஆலோசனைப்படி இன்சுலின் மருந்தை உட் செலுத்துவதன் மூலமும் கட்டுப்படுத்த முடியும். இதற்கான குளிசை மருந்துகளும் உண்டு. நோயின் ஆரம்ப நிலையில் உணவுகள் மூலமே கட்டுப்படுத்தி விடலாம். இன்சுலின மருந்தை மிகையாக உள்ளெடுப் பின் குருதியில் வெல்லம் மிகக் குறைந்து உயிருக்கு ஆபத்து ஏற் படும் இன்சுலினக் கூடுதலாக உள்ளெடுத்தால் தலைச்சுற்று, வியர்த் தல், கால் கை குளிர்ச்சியடைதல் போன்ற அறிகுறிகள் தோன்றும் அவ்வாறயின் உடனே வெல்லம் அல்லது குளுக்கோசு உட்கொள்
ால் சிறந்ததாகும்,
ஆரம்பத்திலேயே நீரிழிவு நோயை உணவு மூலம் கட்டுப்படுத்தி ஞல் அதை முற்ருகக் குணமடையவும் செய்யலாம், 。
நீரிழிவு நோயாளிகளுக்கு உணவு அட்டவணை
2 துண்டு பாண் அல்லது 2 இடியப்பம் r முட்டை
15g பட்டர்
மத்தியான வேளை 100 g மீன் அல்லது இறைச்சி அல்லது பருப்பு
2 பிடி சோறு 100 g காய்கறி
வாழைப்பழம்
2 சுவையற்ற பிஸ்கட் 1 கோப்பை தேனீர் பாலுடன் (வெல்லமின்றி)
இரவு வேளை 1 கோப்பை தெளிந்த சூப்
100 g மீன் அல்லது இறைச்சி அல்லது பருப்பு 2 துண்டு பாண் அல்லது 2 இடியப்பம் 100 g மரக்கறி
கோப்பை கோப்பி (வெல்லுமின்றி)
 
 
 

أديس 9 0 2 حمضضه
மேலே தரப்பட்ட உணவுத் திட்டத்தை நுணுக்கமாகத் தரப் பட்டவாறே கைக்கொள்ள வேண்டியதில்லை. அவற்றை உடல்நிலை பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளலாம். ஆணுல் உணவில் உடல் வளர்ச்சிக்குத் தேவையானதும் உடலிழையங்களை மீளக் கட்டியமைப்பதற்கு வேண்டியதுமான புரதமும் பாதுகாப்பு மூலகங்களும் இருத்தல் வேண்டும். இயன்றவரை மாப்பொருளையும் வெல்லத்தையும் தவிர்த்தல் வேண்டும்
இந்நோய்க்கான காரணிகள்:
1. இது பெரும்பாலும் வம்சாவழியாக வருவது 2. இளம் வயதில் அல்லது நடுவயதில் மிகையான வெல்ல உணவு
எடுத்தல் இந்நோய் ஏற்படுவதைத் துரிதப் படுத்தும்.
வெல்லமில்லாத நீரிழிவு (Diabetis insipidus)
இவ்வகை நீரிழிவில் சிறுநீரில் வெல்லம் காணப்படமாட்டாது.
ஆணுல் சிறுநீர் பெருமளவில் வெளியேறும். இந்நோய் அபூர்வமாகவே
ஏற்படுகிறது. இது கபச்சுரப்பிக் கோளாறின் விளைவாகும்.
அறிகுறிகள்;
கூடுதலான தாகம், அடிக்கடி சிறுநீர் பெருமளவில் வெளியேறுதல், (ஏறக்குறைய 20 பைந்து நீர் நாளாந்தம் வெளியேறும்) வாய், நாக்கு, தொண்டை என்பன உலர்ந்திருத்தல், பசி மிகக் கூடுதலாக இருத்தல், தோல் உலர்ந்திருத்தல், உடல் வெப்பநிலை சாதாரண நிலையிலும் குறைவாயிருத்தல் முதுகுதோ, கை கால் நோ இருத்தல் இதன் அறி குறியாகும். -
siggsos.
திரவ உணவுகளை அதிகமாக உள்ளெடுத்தல் வேண்டும். உணவில் உப்புகளைத் தவிர்த்தல் நன்று. கபச் சுரப்பிச் சாற்றை சிறுநீர் பெருக்க எதிர்ப்பு ஒமோன ஊசிமூலம் உட்செலுத்தினுல் குறிப்பிடத் தக்க அளவு முன்னேற்றம் காணப்படும்
ஒவ்வாமை அல்லது அலர்ச்சி நோய் (Alergy)
சிலவகை உணவுகள். மகரந்தம், மருந்துகள், இரசாயனப் பொருட் கள், தூசி, சூரிய வெப்பம் போன்றவை சிலரின் உடலில் மிகக் கூடு தலான உணர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இது ஒவ்வாவை எனப் படும். இம் மிகையான உணர்ச்சி காரணமாக உடலில் வீக்கம், சொறி தலையிடி, வயிற்றேட்டம், மூக்கரிப்பு, மூக்கு நீர் சிந்துதல் போன்ற

Page 59
سیسی : 0 Il| {{ | مهمی
அசெளகரியங்கள் ஏற்படும் அலர்ச்சி அறிகுறிகள் உணவுக் கால்வாய்த் தொகுதி, சுவாசத்தொகுதி, நரம்புத்தொகுதி ஆகியவற்றிலே காணப் படும்.
ஒரு நோயாளி ஒரு குறிப்பிட்ட உணவுக்கோ அல்லது வேறு பொருளுக் கோ சில நாட்களில் உணர்ச்சி உடையவராகவும் மற்றைய நாட்களில் எதுவித தாக்கமற்றும் காணப்படலாம். சில வேளை சளில் ஒரு உணவுப் பொருளை இன்னெரு பொருளுடன சேர்த்து எடுக்கும்போது ஒவ்வாமை ஏற்படுகிறது. தனித்தனி உணவுப் பொருளை எடுக்கும்போது ஒவ்வாமை ஏற்படுவதில்லை.
(உ + ம்; திராட்சைப் பழம் + சீனி)
மீண்டும் மீண்டும் தோன்றுகின்ற தடிமன், குடா அழற்சி, (Sinusitis) மூக்கழற்சி (Cataran) சுவாசப்பைக் குழாய்த் தாக்கமான அஸ்துமிா (asthma) போன்றவற்றிற்கும் ஒவ்வாமையே காரணம் எனக் கூறப்படுகிறது. எக்சிமா, கொள்ளிக்கரப்பன் போன்ற தோல் வியாதிகளுக்கும், சிலவகை சமிபாட்டு ஒழுங்கீனங்களுக்கும் உடல் நோ தலையிடி போன்ற தாக்கங்களுக்கும் ஒவ்வாமையே காரணமென ச் சொல்லப்படுகிறது. டிஸ்பிரின், பென்சிலின், சல்பா குளிகை ஊசி மூலம் ஏற்றும் சீரம், வக்சின் முதலிய மருந்துகளுக்கும் ஒளி, வெப் பம், குளிர், தூசு, பூக்களின் மகரந்தம் முதலியவற்றுக்கும் சிலர்
6ivalrta) to a 60 Luart.
சிகிச்சை:
ஒவ்வாமையை ஏற்படுத்துமெனச் சந்தேகிக்கும் உணவுகளிலிருந் தும், வேறு பொருட்களிலிருந்தும் நோயாளி ஒதுங்கிக் கொள்ளுதல் வேண்டும் இப்படிப்பட்ட பொருட்களுக்குக் கூடுதலான உணர்திற னைக் காட்டித் தாக்கங்களை விளைவிக்கும் இழையங்களை வலிமைப்படுத் தக்கூடிய மருந்துகள் இல்லை. அலர்ச்சியை எதிர்க்கும் அன்ரிஹிஸ்ர மீன் (anti - histamine) பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. இச் சையின்றி இயங்கும் தசைகளைத் தளரச் செய்யும், சில மருந்துகள் உண்டு. அவற்றை வைத்திய ஆலோசனைப்படி பயன்படுத்தலாம்.
ஊசி மூலம் ஏற்றும் மருந்துகளை ஒவ்வாமை சோதனையின் பின் னரே ஏற்றுதல் வேண்டும்.
மருந்துகளுக்கு ஒவ்வாமை ஏற்படின் உடனே அவற்றை நிறுத்தி அலர்ச்சியைத் தணிக்கும் மருந்துகளே வைத்திய ஆலோசனைப்படி எடுத்
。
f
 
 
 
 

ܡܝܕܘܡ 7 7 7 ܡܫ
பொதுவான அலர்ச்சி நோய்கள்
(i) எக்வலீமா
இது தோல் பரப்பில் - தலையுட்பட காணப்படலாம். இதில் தோல் தடித்துச் செதில்களாக உரியும். உலர் எக்ஸிமாவில் நீர் வடி வதில்லை. ஈர வகையில் நீர் வடியும், பற்றீரியத் தாக்கங்களும் இருக்கும்.
உள்ளெடுக்கும் உணவுகளில் ஒவ்வாதனவற்றைத் தவிர்க்க வேண் டும். எரிவைக் குறைக்கும் மருந்துகளையும் உபயோகிக்கலாம்.
நரம்புகளில் ஏற்படும் உறுத்தல்களே இன்நோய்க்குக் காரணம0 கும். ஆகவே நற்சிந்தையிஞல் சமய நம்பிக்கையில் மனக்கவலைகளை மறந்து மனதைச் சாந்தி செய்வதனுல் இது போன்ற உள-உடல் நோய்களே மாறற முடியும்.
(ii) - sňJEuroT :
இதில் மூச்சுக் குழற் சுவர்களிலுள்ள தசைகள் ஒவ்வாமை கார ணமாகச் சுருங்குவதால் சுவாசப்பாதை இறுகிச் சுவாசித்தலில் கஷ் டம் உண்டாகும். இந் நோயால் அவஸ்தைப்படுபவர்கள் மாத்திர மன்றி அவர்களேப் பராமரிப்பவர்களும் கஷ்டப்படுவர்.
சிகிச்சை
(அ) இளம் வயதிலிருந்தே சுவாசப்பயிற்சி செய்தல், (ஆ) சில ருக்கு விடியற்காலையில் குளிர் நீராடல் நரம்புகளை ஊக்குவித்து அலர்ச்சி ஒவ்வாமையைக் குறைக்கும் (இ) அலர்ச்சி எதிர் மருந்துகளை வைத்திய ஆலோசனைப்படி எடுத்தல். நோயின் அறிகுறி தோன்ற முன்னரே எடுத்தல் கூடிய நன்மையைப் பயக்கும்,
(ஈ) இரவுணவை எளிதில் சமிக்கக்கூடியதாகவும் இரவு 7 மணிக்கு
முன்னரும் எடுத்தல் வேண்டும். (உ) மனச்சஞ்சலங்கள் குழப்பங்கள் முதலியவற்றிலிருந்து மனதை விடுவித்துக்கொள்ளச் சிந்தனையைப் பழக்கி மனமகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்.

Page 60
Lu (r l lub 7
உடனலக் குறைவும் அதன் பாதிப்பும்
100 வருடங்களுக்கு முன் பிறந்த ஒவ்வொரு குழந்தையும் 25
வயது வரையே வாழலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அநேக குழந் ( தைகள் இளம் வயதில் இறப்பதாலேயே சராசரி வாழ்வுக் காலம் மிகத்தாழ்வாகக் காணப்பட்டது. இன்று சராசரி வாழ்வுக்காலம்
65 வயதாகும்.
100 வருடங்களுக்கு முன் மக்கள் தொகையில் 50-75 வயதுள் ளோர் குறைவாகவே காணப்பட்டனர். இன்று 25 வயதுக்குட்பட் டோர் தொகை கணிசமானது. 50 வயதுக்கு மேற்பட்டோரும் கணி சமான அளவில் உள்ளனர்.
இறப்பு பெரும்பாலும் 10 வயதுக்குட்பட்ட பிள்ளைகளிலும் 50 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களிலும் கணிசமான வீதத்தில் நிகழ் கின்றது. 10 - 50 வயதுக்குட்பட்டவர்களின் இறப்பு வீதம் குறை வாகும்,
பிள்ளைகளின் இறப்புக்கான காரணங்கள்:
1. தொற்றுநோய் காரணமாக ஏற்படும் வயிற்ருேட்டம் 2. சுவாசத் தொகுதி சம்பந்தமான நோய்கள்-சுவாசப்பை அழற்சி
சுவாசக்குழல் அழற்சி பொதுவானவை.
3. ஏற்புவலி, சிறுபிள்ளைவாதம், டிப்திரியா ஆகிய தொற்று
நோய்கள்.
போசாக்குக் குறைபாடு-இதனல் உடல் தொற்று நோய்களே
எதிர்க்கும் ஆற்றலை இழக்கின்றது.
வயதுடையவர்களில் இறப்புக்குக் காரணம்:
இதய நோய்கள்
புற்றுநோய்
கயரோகம்
விபத்துக்கள்
பெண்களில் பிள்ளைப்பேற்றையடுத்து நிகழக்கூடிய தொற்று
நோய்கள்
(S
50 வயதுக்கு மேற்பட்டவர்களின் இறப்புக்குக் காரணம்:
1. இதய நோய்கள் 2. புற்றுநோய் 3. சுவாசத் தொகுதி தொற்று நோய்கள்-விசேடமாக கயரோகம்
சுவாசப்பையழற்சி.
 
 
 
 
 
 

(1984 ம் ஆண்டு புள்ளி விபரத் திரட்டுக் கைநூலிலிருந்து)
بسسب 3. 1 1 سسسس
* நீரிழிவு. அஸ்துமா தைரொயிட்சுரப்பி நோய்களால் ஏற்படும்
சிக்கல்கள். 5. விபத்துக்கள் 6. முதிர்ச்சியினல் ஏற்படும் சிதைவு,
மேலும் எமது ஊரில் உடல் நலப்பிரச்சனை ஏதுமிருப்பின் அதைத்
தீர்ப்பதற்கான அறிவுரையை பொது உடல் நலப் பரிசோதகர் மூலம்
பெறலாம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேற்கூறியவற்றிலிருந்து தொற்றுநோய்களே பெரும்பாலான இறப் புக்குக் காரணம் என்பதை அறியலாம். இதை மேற் கொள்ள முடியுமாயின் 50 வயதுக்குட்பட்டோரின் இறப்பு வீதத்தைக் குறைகசி முடியும். இதே வேளை முதியோர் பிரச்சனைகளும் சனத்தொகை அதி கரிப்பும் புதிய பிரச்சனைகளாக எழும்.
இலங்கையில் இறப்பு வீத மாற்றங்களும்
சராசரி வாழ்வுக் காலமும் மனிதனது சனத்தொகை வளர்ச்சி 2 பிரதான காரணிகளில் தங்கியுள்ளது (1) பிறப்பு வீதம் (i) இறப்பு வீதம். இதைத் தவி ரக் குடிவரவும் குடியகல்வும் சனத்தொகையைப் பாதிக்கும் ஏனைய காரணிகளாகும். எமது நாட்டைப் பொறுத்தளவில் இறப்பு வீதத் தைப் பார்க்கிலும் பிறப்பு வீதமே கூடுதலாகக் காணப்படுகிறது. பின் வரும் அட்டவணை சில வருடங்களுக்குரிய பிறப்பு வீதத்தையும் இறப் புவீதத்தையும் காட்டுகின்றது. (பிறப்பு வீதம் ஆயிரம்பேருக்கு எத் தனை என்பதால் குறிக்கப்படும்)
அட்டவணை 1 வருடம் குடித்தொகை பிறப்புவீதம் இறப்புவீதம்
(ஆயிரங்கள்) (1000 க்கு) (1000 க்கு)
1945 66.50 36.6 21.9 1955 8723 37.3 10.8 1965 11164. 33 82 1975 13496 27.7 8 - 5 1980 14747 28 - 4 6 2 1981 5988 280 6:0 1982 151.89 26.8 1983 15416 --- manu
10.15 -

Page 61
- 4 1 7 ܚ
இலங்கையின் இறப்பு வீதம் 1920இல் 1000-க்கு 26 ஆக இருதி தது. 1945-ல் 215 ஆகக் குறைந்தது. 1947-ம் ஆண்டு இறப்பு வீதம் குறிப்பிடத்தக்களவு குறைந்தது. அவ்வருடம் இறப்பு 1000 க்கு 14 ஆகக் குறைந்தது. அவ்வருடம் மலேரியா தடுப்பதற்காகக் கடுமை யாக D D. T. விசிறல் நடந்தமையே இதற்குக் காரணமாகும். இதன் பின்னர் இறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து கொண்டே சென் றது. 1921 முதல் 1930 வரையுமுள்ள காலத்தில் இறப்பு வீதம் 265 ஆகக் காணப்பட்டது.
ஆனல் 1931-ம் ஆண்டு முதல் 1945-ம் ஆண்டுவரையுள்ள காலத் தில் அங்கு 220 இற்கு வீழ்ச்சியடைந்தது. அட்டவணை 1-இன் புள்ளி விபரங்கள் இறப்பு வீதம் குறைந்து செல்வதைக் காட்டுகின் றது. இப்பொழுது 1000-க்கு 60 ஆகும்.
இதற்கான காரணங்கள்:
1. முன்னேற்றமடைந்த மருத்துவ வசதிகள் கிடைத்தமையும்
அவை எல்லாப் பகுதிகளிலும் கிடைக்கப் பெறுதலும். 2. பால் கட்டல், பிற பொருள் எதிரிகளைச் செலுத்துதல் முத
விய நிர்ப்பீடன முறைகளைப் பயன் படுத்துதல். 3. சுற்ருடல் சுகாதார நிலைமைகள் முன்னேற்றம்.
4. பாடசாலைப் பிள்ளைகளுக்கு இலவச பால் விநியோகம்,
மதியபோசனம் வழங்கல் 5. வாழ்க்கை நிலைமைகள் பொதுவாக முன்னேற்றமடைந்தமை 6. உடல் நலம் பற்றிய கல்வி அறிவு அதிகரித்தமை, 7. தாய்சேய் பிணியாய் நிலையங்கள்.
அட்டவணை 11 வருடம் தாய்மாரின் இறப்பு வீதம் குழந்தைகள் இறம்பு வீதம் (ஒவ்வொரு உயிருடன் (ஒவ்வொரு உயிருடன் வாழும் 1000 க்கு) வாழும் 1000 க்கு) 945 16-5 40.0 1955 4. 70) 1965 2.4 53s2 1975 () 45 - 1 98). (): 9 34 4
தற்பொழுது சிறுகுழந்தைகளின் இறப்பு வீதம் வருடாந்தம் குறைந்து கொண்டே செல்கிறது. இதற்குக் காரனம் முன்னேற்றி
 
 
 
 

................... 1.5 11 --سے
மடைந்த மருத்துவ வசதிகள் பெரும்பாலும் எல்லா இடங்களிலும் காணப்படுவதால் எனலாம். வயிற்றேட்டம், ஈர்ப்புவலி, தொண்டைக் கரப்பன், குக்கல் முதலிய நோய்களைக்கட்டுப்படுத்த முடிந்ததும் தடுப் பூசிகள் போட்டு நிர்ப்பீடனத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் கிடைத் ததுமே குழைந்தைகளின் இறப்புவீதம் குறைந்ததற்குக் காரணங் களாகும்
தாய்மாரின் இறப்பு வீதம் 1945-ல் 1000ற்கு 1625 ஆகவும் அதற்கு முன்னைய வருடம் 554 ஆகவும் காணப்பட்டது. 1970 இலும் 1971 இலும் இறப்பு வீதம் நிலையாகவே காணப்பட்டது. அதாவது 1000ற்கு 12 ஆகக் காணப்பட்டத. இதே நிலைமை 1975-ம் ஆண்டுவரை தொடர்ந்தது ஆனல் 1975-ம் ஆண்டில் அது 10 ஆக வீழ்ச்சியடைந் தீதும்
இலங்கையில் இறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து கொண்டே செல்கிறது. இதன்படி 2001-ம் ஆண்டில் ஆண்களின் சராசரி வாழ்வுக் காலம் 722 வருடங்களாகவும் பெண்களின் சராசரி வாழ்வுக்காலம் 68 5 வருடங்களாகவும் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
அடுத்துவரும் அட்டவணை இலங்கையிலுள்ளவர்களின் சராசரி வாழும் காலத்தை வருடாந்த ரீதியாக எடுத்துக்காட்டுகின்றது.
வருடம் 1920-22 1946 1955 962 1974
967 1971
ஆண் 32.7 499 588 6.9 648 642 59.2
பெண் 30.7 41 6 57.5 6 4 669 67 62.9
மேலே தரப்பட்ட அட்டவணையின்படி இலங்கையிலுள்ளவர்களின் வாழ்க்கைக்காலம் படிப்படியாக அதிகரித்துச் செல்வதை அவதாளிக் கலாம். இதற்குப் பிரதான காரணம் முன்னேற்றமான மருத்துவ வசதிகளேயாகும்.
உடல் நலமின்மையால் ஏற்படும் செலவினங்கள்:
ஒரு நாட்டின் பிரசை தனக்கும் தனது சமூகத்திற்கும் நாட்டிற் கும் தன்னலான சேவைகளைச் செய்வதற்கு உடல் நலம் வாய்ந்தவ ராக இருக்க வேண்டும் ஆனல் எமது நாட்டில் மக்கள் வாழும் சூழ லில் பலவகைப்பட்ட தொற்றுநோய்கள், மன நோய்கள், குறை பாட்டு நோய்கள் போன்ற இன்னுேரன்ன குறைபாடுகளுக்குட்பட

Page 62
حیھقصے 16 1 - اسلیے
வேண்டியுள்ளது. சில நோய்கள் பிறவி நோய்களாகக் காண்ப்படு கின்றன. உடலுக்குப் போதிய ஊட்டத்தை வழங்கக்கூடிய உணவு கள் உட்கொள்ளப்படாவிடின் பல குறைபாட்டு நோய்கள் ஏற்படு கின்றன.
ஒழுங்கான உணவு பெருதோர் வேலை செய்யும் சக்தி குறைந்த வர்களாக இருப்பர். அவர்கள் பல நோய்களால் பீடிக்கப்படுவா . ஊட்டக்குறைவு உடல் மாற்றங்களை ஏற்படுத்தும் சமூக நடத்தை யையும் மாற்றுகிறது. அத்தோடு மன விருத்தியையும் பாதிக்கிறது இவ்வகையில் போசனக் குறைவு நாட்டின் உற்பத்தித் திறனைத் தாழ்த்தி அதன் முன்னேற்றத்தைத் தடுக்கக் கூடும்.
உடல் நலமின்மை ஒரு தனி நபரை மாத்திரம் அன்றி நாட்டை யும் பாதிக்கின்றது.
ஒரு தனி நபரை உடல் நலமின்மை பாதிக்கும் மூறைகள்:
1. கஷ்டங்கள் அதிகரிக்கும்.
2. வருமானம் குறைகின்றது.
3. செலவு அதிகரிக்கும்.
4. நாளாந்த வேலைகளைக் கவனிக்க முடியாத நிலை ஏற்படும்.
5, மன, உடல் நலம் குன்றும்.
உடல்நலமின்மை நாட்டைப் பாதிக்கும் முறை:
1. உழைக்கும் திறன் குறைவதனல் நாட்டின் பொருளாதார
உற்பத்தித் திறன் தாழ்த்தப்படுகிறது.
2. நாட்டின் நலன்புரி சேவைகளுக்குச் செலவிடப்படும் பணம் உடல் நலக்குறைவுகளைத் தீர்ப்பதற்கு செலவு செய்வதால் குறைகின்றது.
இலங்கையில் மக்களின் உடல் நலனைப் பேணுவதற்காக அரசாங் கமும் சமூக சேவைப் பொது ஸ்தாபனங்களும் பலவகைப்பட்ட முயற் சிகளை மேற்கொள்ளுகின்றன. இச் செயல் திட்டங்களை அமுல்படுத்து வதற்குப் பெருமளவு நிதியை அரசாங்கம் வருடா வருடம் ஒதுக்கு கின்றது. மக்களின் சுகாதாரத்தைப் பேணுவதற்காக நாட்டின் பல் வேறு பகுதிகளிலும் வைத்தியசாலைகளும் மத்திய மருத்துவ நிலையங் களும் ஸ்தாபித்து மக்களுக்கு இலவச வைத்திய சிகிச்சை அளிக்கின் றது. வைத்தியசாலைகளில் வைத்தியர்கள், உதவி வைத்தியப் பயிற்சி யாளர்கள் தாதிமார் போன்ருேரை நியமித்து மக்களுக்கு ஏற்ற சிகிச் சை வழங்கப் படுகின்றது. இவை யாவற்றுக்கும் ஏற்படும் செலவினங் களைப் பின்வரும் அட்டவணை விளக்கிக் காட்டுகின்றதுg
 

ميس 7 11 17 سم.
அட்டவனை
1972 1978 1983
1. வைத்தியசாலைகள் 335 359 483 2. மத்திய மருந்து நிலையங்கள் 343 351 334 3. வைத்தியர்கள் 2038 2229 198 4, உதவி மருத்துவப் பயிற்சியாளர் 161 051 988 5. தாதிமார் 4955 5938 7112 6. சிகிச்சையளிக்கப்பட்ட உள்நோயாளர் 205 21.7 25.2
(இலட்சத்தில்) 7. வெளிநோயாளர் (இலட்சத்தில்) 2205 284 1 3.07.2 8. சுகாதாரசேவைச் செலவு (10 இலட் 310°5 。一 2024
சம் ரூபாவில்)
1000,000 (ஒரு இலட்சம்) சனத்தொகைக்கு வைத்திய சாலைகளும் படுக்கைகளும் வைத்தியர்களும் செலவும்:
வருடம் :Ë படுக்கைகள் வைத்தியர்கள் @*မုဖူ+7
1945 2.30 109.4 5.7 324.8 1955 3. 14 278.7 109 1058. 1970 266 3059 157 1864-7 1976 2.52 290 ... 1 164 3304-2 1983 3.22 293e3 13 2024
முன்னர் தரப்பட்ட அட்டவணைகளை ஆராயும்பொழுது நமது நாட் டில் சுகாதார சேவைகளுக்கு அரசாங்கம் எவ்வளவு பணத்தைச் செல விடுகின்றதென்பதையும் வருடாவருடம் செலவுகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றதென்பதையும் அது காட்டுகின்றது. மக்களின் சுகநலம் கருதி அரசாங்கம் பெருமளவு பணத்தைச் சுகாதார சேவை களுக்குச் செலவிடுகின்றது குறிப்பிடத்தக்கதாகும். இதே வேளை மேல் நாடுகளுடன் ஒப்பிடும்போது எமக்கு வைத்தியசாலைகளும் வைத்தியர் களும் பற்ருக்குறை என்பதும் குறிப்பிடத்தக்கது. நோயைக் குணமாக் கும் செலவு அதிகரிப்பது நாட்டுக்கும் மக்களுக்கும் பயனற்றதே நோய் வராது தடுப்பதற்குப் பிரயத்தனம் எடுத்தல் நன்று.
இலங்கையில் மக்களின் சுகநிலைக்கு அரசாங்கமும் சமூகமும் ஆற்றும் சேவைகள் நோய், துன்பம் எதுவுமின்றிச் சந்தோஷமும் மனநிறைவும் உடைய ஏற்றத்தாழ்வு மனப்பான்மையற்ற மக்களைச் சுகநிலையிலுள்ளவர்கள் GT 60T6)ITib,

Page 63
مسـم 8 71 صمس
ஒருவர் சுகநிலையில் இருந்தால்தான் தனக்கும் சமூகத்திற்கும் நாட்டிற்கும் இயன்றவரை சேவையாற்ற முடியும். நாட்டின் பொருளர்
தார உற்பத்தித் திறனை உயர்த்துவதற்கு அந் நாட்டில் வாழும் மக் களின் ஆரோக்கியம் நன்னிலையில் இருப்பது அவசியமாகும். உடல் நலம் இல்லாவிடின் நாட்டின் உற்பத்தித்திறன் தாழ்த்தப்பட்டு அதன்
முன்னேற்றமும் தடைப்படும். *
ஒருவரின் சுகநிலைக்குப் பின்வருவன பிரதான அடிப்படைக் கார
கிணிகளாக அமையும்;
(l) (2) (3) (4) (5) (6)
(7)
எனவே நாட்டின் உற்பத்தி பாதிக்கப்படாது தடுப்பதற்காக மக் களின் சுகநிலைக்கு அரசாங்கமும் சமூக (பொது) ஸ்தாபனங்களும் பல l உதவிகளை யும் சேவைகளையும் புரிகின்றன.
எமது நாட்டில் பல வகைப்பட்ட சுகாதார சேவைகளை அரசாங் கமும் பொது ஸ்தாபனங்களும் நடைமுறைப் படுத்துகின்றன:
இச் சுகாதார சேவைகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
2. 3. 4。 岱。 6. 7. 8.
போஷாக்குள்ள உணவு உடற் தூய்மை தொற்று நோய்களைப் பரவவிடாது தடுத்தல் சுற்ருடலைச் சுத்தமாக வைத்திருத்தல் உடல் நலத்திற்கு ஏற்ற ஓய்வு நேர முயற்சிகள் சூழலில் ஏற்படும் ஆபத்துக்களையும் விபத்துக்காேயும் தடுத் 256). மனநிறைவு
உடல் நலத் திட்டமிடலும் நிகழ்ச்சித் தயாரிப்பும் அரசாங்க மருத்துவக் களஞ்சியத்தின் சேவை தேசிய சுகாதாரச் சேவை வைத்தியசாலைகள் பாடசாலைச் சுகாதார சேவை
சூழல் சுகாதாரம்
நிர்ப்பீடன முயற்சிகள் விசேட பிரசாரங்கள் அல்லது பிரசார இயக்கங்கள் பயிற்சியளிக்கும் திட்டங்கள், குடும்பத் திட்டச் சங்கம் துறைமுகச் சுகாதாரமும் தனிப்படுத்துகையும் வயோதிபர் இல்லங்கள்
சுகாதாரக் கல்வி
பொதுசனத் தொடர்பு (A) பத்திரிகைகள் (Bர் வாஞெலி (C) afts (P) ரெலிவிஷன் (தொலைக்காட்சி)
(
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

سے 119 --سے
1. உடல் நலத் திட்டமிடலும் நிகழ்ச்சித் தயாரிப்பும்:
இது சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு குழுவினுல் தயாரில் கப்படுகிறது. இதன் தொழில்கள் பின்வருமாறு:
1. வருடாந்த சுகாதாரத் திட்டமிடலும் அதை நடைமுறைப் படுத்தும் நிகழ்ச்சிகளைத் தயாரித்தலும்,
2. செயற் திட்டங்களுக்கு வேண்டிய அமுல்படுத்தும் நிகழ்ச்சி களைத் தயாரித்தலும், அதற்கு வேண்டிய நிதி வழங்களை ஒதுக்கீடு செய்தலும் . - 3. நிதித்திட்டமிடலும் வேலைத்திட்டம் தயாரித்தலும் மேற்கூறிய தொழிற்பாடுகள் பின்வரும் சேவைகளை இலக்காகக் கொண்டு செயற்படும்.
அ. இலங்கையின் சுகாதார முயற்சிகளை வெளிநாடுகளிலுள்ள தூதரகங்களுக்கு அறிக்கைகள் மூலம் விளம்பரப்படுத்தல்.
ஆ. இலங்கையின் வைத்தியப் பொதுச் சுகாதார நிறுவனங்களோடு தொடர்பான உணவு உற்பத்திகள் பற்றி அறிக்கைகள் தயாரித்தல், இ. சுகாதார சமூக சேவைகள் தொடர்பான/உபகுழுக்களுக்கும் அமைச்சுக்கும் வரவு செலவுத் திட்டங்கள் பற்றி அறிக்கை சமர்ப் பித்தல்.
2. அரசாங்க மருத்துவ களஞ்சியத்தின் சேவை:
அரசாங்க மருத்துவக் களஞ்சியம் பிராந்திய மருந்துக் களஞ்சியங் களுக்குத் தேவையான மருந்துகளையும் மருத்துவ உபகரணங்களையும் வழங்குகின்றது. வெளிநாட்டு நன்கொடைகள் கெயர் பால்மா, திரி போஷ பால்பா முதலியவற்றையும் பெற்று நாட்டின் பல்வேறு வைத் திய நிலையங்களுக்கும் அனுப்புகின்றது.
3. வைத்தியசாலைகளின் சேவைகள்:
வைத்தியசாலைகள் உள்ளூராட்சி மன்றங்களினலும் அரசாங்கத்தி னலும் சில பொது ஸ்தாபனங்களினலும் தனிப்பட்டோரினலும் நடாத் தப்படுகின்றன. இச் சேவைகள் யாவும் சுகாதாரத் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் நடைபெறுகின்றன.
மாவட்டங்கள் தோறும் நவின வசதிகளையும் விசேட வைத்தியர் களையும் கொண்ட மாவட்ட வைத்தியசாலைகளே அரசாங்கம் நடத்து கின்றது. இவற்றில் சத்திர சிகிச்சைப் பகுதிகளும் உண்டு. கடுமை யான நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கு வசதிகள் அளிக்கட் பட்டுள்ளன. சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் பின்வரும் வைத்தியசாலைகளும் இயங்குகின்றன.

Page 64
- 20 -
1. சில முக்கிய நகரங்களில் பிரதம வைத்தியசாலைகள் 2. விசேட நோய்களுக்கான வைத்தியசாலைகள்.
உதாரணம்:-
காங்கேசன்துறை கசநோய் வைத்தியசாலை மகரகம புற்றுநோய் வைத்தியசாலை அங்கொடை மனநோய்ச் சிகிச்சை வைத்தியசாலை மாந்தீவு தொழுநோய் வைத்தியசாலை
3. அரசாங்க மத்திய மருந்துச்சாலைகள் (டிஸ்பென்சரிகள்) இவை பெரும்பாலும் ஒவ்வொரு கிராமத்திலும் அமைந்திருக்கும். இவற்றில் பதிவு செய்யப்பட்ட வைத்திய அதிகாரிகள் சேவையாற்றுகிருர்கள்.
ஆயுள்வேத வைத்தியசாலைகள்:- இவை சில கிராமப்புறங்களி லும், சில நகரப்புறங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ஆயுர் வேத வைத்தியர்கள் கடமையரற்றுகிருர்கள். கொழும்பு பொரளை யில் அமைந்துள்ள ஆயுர்வேத பெரிய வைத்தியசாலை வாயிலாக வெளி நோயாளிகட்கும் தங்கும் நோயரளிகட்கும் வசதிகளுடன் சேவை செய் யப்பட்டுவருகிறது. பல்வேறு பிரிவுகளுக்கும் பொறுப்புள்ள விசேட வைத்தியர்கள் இங்கு சேவையாற்றுகின்றனர். ஆயுர்வேத வைத்திய சேவையை அபிவிருத்தி செய்வதற்காக சுகாதார அமைச்சு ஆய்வுகூட மொன்றும், மருந்து தயாரிக்கும் நிலையமொன்றும் மகரகமவி லுள்ள நாவின்ன என்ற இடத்தில் நிறுவப்பட்டுள்ளன. மேலும் இத் துறையை வளர்க்க கொழும்பில் பல்கலைக்கழகம் அமைந்துள்ள ஆயுர் வேத வைத்திய கல்லூரியும் ஒன்று உள்ளது. உள்ளூராட்சி மன்றங் களும் சில வைத்தியசாலைகளை நடாத்துகின்றன. இவற்றைத் தவிர தனிப்பட்ட வைத்தியசாலைகளும் டிஸ்பென்சரிகளும் கூட்டுறவு இயக்கங் களும் தனிப்பட்டோராலும் நடாத்தப்படுகின்றன. இவற்றின் சேவை களுக்குக் கட்டணங்கள் அறவிடப்படுகின்றன.
4. பாடசாலைச் சுகாதார சேவை:-
மாணவர்கள் சனத்தொகையில் பங்காகும். வளரும் பருவத்த வர்கள். இலிங்க முதிர்வு அடையும் காலத்துக்குரியவர்கள்.
பாடசாலைச் சுகாதார சேவைகள் மாணவர்கள் பாடசாலையில் இருக்கும்பொழுது பெறக்கூடிய உடல், உள நலங்களைப் பெற உதவு வதால் அவர்கள் தங்கள் கல்வியில் முழுப்பயனையும் பெறமுடியும்,
இச் சேவையின் செயற்பாடு பின்வருவனவற்றை உள்ளடக்கும். (அ) வைத்தியப் பரிசோதனைகள் 2ம், 5ம், 8ம் ஆண்டுகளில்
(1ம், 4ம், 7ம் வகுப்புகளில்) நடாத்தப்படும். பின்வருவனற்றைக் கண்டு பிடித்தலும், பொருத்தமான நடவடிக்கைகளைச் சிபார்சு செய்தலும்.
l

== 2 { ...............ے
1. போசாக்கின்மையும் குறையூட்டமும்
2. சுத்தமின்மை
3. ஒழுங்கின்றிய பாடசாலை வரவு
4. உள வளர்ச்சிக் குறைவு
5. கல்வியில் பின்னிற்றல் 6. ஒழுக்கப் பிரச்சனைகளும் உள்ளுணர்வுக் குழப்பங்களும் 7. நரம்புத் தளர்ச்சி 8 தலை, தோல், கண், காது, மூக்கு, வாய், கழுத்து என்பவற்
றின் நிலை 9. குருதிச் சோகை நிலை 10 பலமற்ற தன்மை
1 உடற் குறைபாடுகள்
(ஆ) தொற்றுநோய் தடைகாப்பு வழங்கல்
(1) தொண்டைக்கரப்பன், குக்கல், ஏற்புவலி என்பவற்றிற்கு
முக்கூட்டு வக்கீன் ஏற்றல், (ii) சுயரோகத் தடுப்பு பி. சி. ஜி (B. C. G. பால் குத்தல் (ii) நெருப்புக்காய்ச்சல் தடுக்கும் T. A. B. கிருமி புகுத்தல் (iv) போலியோமைலற்றிஸ் தடுப்பு மருந்து வழங்கல்
(இ) உடல்நலக்கல்வி உத்தியோகஸ்தரால் மாணவர்களுக்கு உடல்
நலக்கல்வி வழங்கல்
(ஈ) பல் வைத்திய சேவையை ஒழுங்கு செய்து பற்குறைபாடுகளை யும் பல் நோய்களையும் சுகப்படுத்தல், பாடசாலை பற் கிளி னிக்குகளில் வழமையாக 13 வயதுக்குட்பட்டோருக்கே சிகிச்சை வசதிகள் அளிக்கப்படுகின்றது.
(உ) முதலுதவிச் சேவைகளைப் பெற்றுக் கொடுத்தல், அல்லது பாட
சாலை முதலுதவிச் சேவையை நிறுவுதல்.
(ஊ) மருத்துவசேவை தேவைப்படும் மாணவர்களே அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு மருத்துவ பராமரிப்புக்குச் சிபார்சு செய்தல்.
5. சூழல் சுகாதாரம்:
மனிதன் தனது உடலைச் சுத்தமாக வைத்திருப்பதற்கு சூழல் சுத் தமும் அவசியமாகும். சூழல் சுத்தத்தின் அடிப்படைத் தேவைகளாவன:
10-16

Page 65
سيسي 2 2 1 سيسي
1. சுத்தமான நீர் வழங்கல்:
வீட்டுத் தேவை பொதுசன தொழிற்சாலை, விவசாய பொழுது
போக்குச் சார்ந்த தேவைகள் போன்ற சமுதாயத்தின் எல்லாத்தேவை
களுக்கும் பாதுகாப்பான நீர் போதியளவு விநியோகிக்கப்பட வேண்டும்.
2. கழிவுகளை அகற்றல்
கழிவுகள் சூழலில் சேருவதால்
(2) துர்நாற்றம் (b) பொது சனங்களுக்கு அசெளகரிகம் (c) ஈக் கள் பெருகுதல் ஈக்களால் நோய்ககிருமிகள் காவப்படல். (d) கழிவு உலர்ந்து தூசாகப்பரவல், இதில் நோய்க்கிருமிகள் காவப்படலாம். (e) நஞ்சுப் பொருள்கள் சூழலில் சேரலாம் (f) மேல் தரையும் தரைமேல் நீரும் தரைக் கீழுள்ள ஆழமற்ற கிணற்றுநீரும் தொற்று s96ð) LG) nr Ltd.
கழிவுகளை கிராமப்பகுதிகளில் அகற்றல்
உலர்ந்த கழிவுகளை எரித்த கற்றலாம் ஈரக்கழிவுகளை புதைக்க லாம். தாழ்ந்த பகுதிகளை நிரப்பப் பயன் படுத்தலாம் அல்லது கிடங் குகளில் கழிவு, சாணம், மண் 6:2:1 என்னும் விகிதங்களில் சேர்த்து கல வைப் பசளை தயாரிக்கலாம். கலவையை 14, 28, 56 நாட்களில் புரட்டி விடுதல் வேண்டும். ஈற்றில் ஒரு மாதம் கழிந்த பின் பசளையாக உப யோகிக்கலாம்,
நகரப் பகுதிகளில் அபிவிருத்திச்சபை அல்லது உள்ளூராட்சி மூலம் அகற்றப்படல் வேண்டும், அகற்றப்பட்ட கழிவுகள் எரிக்கப்படலாம் அல்லது தாழ்ந்த பகுதிகளை நிரப்பப் பயன் படுத்தலாம்.
எரிபொருளாகவோ பசளையாகவோ அதனுடைய பெறுமதியைப் பாதுகாக்கும் முறையில் கழிவு வெளியகற்றல் அமைதல் நன்று. இவ் விரு வழிகளும் பொதுசனத்துக்கு தொல்லையை உண்டாக்காமலும் ஈ போன்ற பீடைப் பூச்சிகளின் இனப்பெருக்கத்தைத் தவிர்ப்பதற்கும் எலி போன்ற கொறி உயிர்களின் பெருக்கத்தைத் தூண்டாமலும் நீர், பால், மற்றைய உணவுகள் அழுக்காவதைத் தடுப்பதாயும் செயன் முறைகள் அமைய வேண்டும்.
3. காவிக் கட்டுப்பாடு: நோய் பரப்பும் ஈ, நுளம்பு பெருக்கத்தை கட்டுப் படுத்தல்
4. வீடமைப்பு: பிரதேசத்துக்குரிய காலநிலைத் தேவைகளைப் பூர்த் தியாக்கக் கூடிய வீடமைப்பு.
{
 
 
 
 

سیس: || || 2 || || || سیاسی
5. உணவுத் துப்புரவு; பாலினதும் மற்றைய உணவுகளினதும்
துப்பரவு. - பாலினதும் ஏனய உணவுகளின் உற்பத்தி, சேமிப்பு பாவிப்பு என்பவற்றினதும் முழுச் செயன்முறைகளினதும் உணவுத் துப்புரவு கவனித்தல் வேண்டும்.
6. சுகாதாரக் கல்வி: பொதுசனத்திற்கு சுகாதாரக்கல்வியும் சுகா தாரசேவையாளர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்படல் வேண்டும்.
7. மனித மலக்கழிவு அகற்றல்; இலங்கையில் 39% வீதமானேர் முறை போன மலசல கூடங்களை அமைக்காதிருக்கின்றனர்.
மேற்கூறிய சூழல் சுத்தம் ஒவ்வொரு M. O. H. அதாவது சுகா தார வைத்திய அதிகாரியின் பகுதியிலும் சுகாதார சேவை மேற்பார் வையாளர்களால் கவனிக்கப்படும் ,
உணவுச் சுத்தத்தைப் பொதுசன சுகாதார உத்தியோகத்தர் மேற் பார்வை செய்வர்.
6. நிர்ப்பீடன முயற்சிகள்
தொற்று நோய்களை வருமுன் காப்பது மிகச் சிறந்தது. ஓரிடத் தில் ஏதாவது குறிப்பிட்ட தொற்று நோய் தோன்றியதும் நோயின் தொடக்கம், காரணம் முதலியவற்றையறிந்து தடுப்பு நடவடிக்கை களை மேற் கொள்ள வேண்டும். இதற்குப் பொதுசன சுகாதார அதி காரிகள் உதவுகின்றனர். பொதுசன சுகாதார அதிகாரிகள் மாவட்ட சுகாதார அதிகாரிகள் (D. M. 0) மேற்பார்வையின் கீழ் கடமை புரி கின்றனர். பொதுவாக நம் நாட்டில் பின்வரும் நோய்களுக்கெதிராகப் பால் கட்டல், ஊசி ஏற்றல், தொட்சோயிட்டுகள் வழங்கப்படு
கின்றன
1. அம்மை; இரு தடவைகள் பால் குத்துதல் வழங்கப்படும். முதல் பால் கட்டலும் துணைப்பால் கட்டலும் செய்யப்படு கின்றன. இப்பொழுது இந்நோய் உலகில் எவ்விடத்தும் இல்லை எனவே பால் கட்டல் அவசியமன்று.
2. நெருப்புக் காய்ச்சல்: 3 தடவைகள் T. A, B, ஊசி மருந்து ஏற்
றப்படும்.
3. கசநோய்: B. C. G. ஊசி மருந்து,
இளம்பிள்ளை வாதம் - சபின் வக்கீன். ஈர்ப்புவலி, குக்கல், தொண்டைக்கரப்பன் . முக்கூட்டு வக்கீன் கூட்டாகக் கொடுக்கப்படும்.

Page 66
سیسی-4 129 س
இளமையில் பெறக்கூடிய நோய்த்தடுப்பு:
வயது
Dngstid எத்தடை மருந்து எதற்காக
O B. C. G. கயரோகம் 3 D. P. T. முக்கூட்டு வக்சின் டிப்தீரியா, குக்கல், ஈர்ப்புவலி ,
போலியோ வக்இன் 1 போலியோ
5 முக்கூட்டு வக்சின் 11 2
போலியோ வக்சின் 11
7 முக்கூட்டு வக்சின் II s
போலியோ வக்சின் II
9 சின்னமுத்து வக்சின் சின்னமுத்து
8 முக்கூட்டு வக்சின் IV டிப்திரியா, குக்கல், ஈர்ப்புவலி
G3LufT G6?GuLurr aduši; Grača IV (3urtai?G3urt
o | 357/918 இத்தொடரை ஞாபகத்தில் வைத்துக் கொள்க)
7. விசேட பிரசாரங்கள்: ( பொதுசன உடல்நலத் திட்டத்திலும் அதனுடைய செயற்பாட் ܵ
டிலும் விசேட பிரசாரங்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. இலங்கை
யில் பின்வரும் விசேட நோய்த்தடுப்பு இயக்கங்கள் செயற்படுகின்றன.
குஷ்டரோகத் தடுப்புச் சங்கம்.
மலேரியாத் தடுப்பு இயக்கம்.
மேகநோய்த் தடுப்பு இயக்கம்.
காசநோய்த் தடுப்பு இயக்கம்.
யானைக்கால் நோய் தடுப்பு இயக்கம் ஆகியன.
சில இயக்கங்கள் நோய்த் தடுப்பில் கவனம் செலுத்துகின்றன. இப் பிரசார இயக்கங்கள் நோய்களைப்பற்றியும் அதன் ஆபத் துக்களையிட்டும் விளக்கமளித்தல். பேச்சு, திரைப்படம், சுவ ரொட்டிகள், நாடகங்கள் முதலியன பயன் தரும் வழிகளாகும் பாடசாலைகள் மூலம் இதைச் செயற்படுத்தல் கூடிய பயன் தரும். ஆரம்ப சுகாதார நிலையங்களும் இதில் உதவும்
8. பயிற்சியளிக்கும் திட்டங்கள்:
உடல் நலம் சம்பந்தமான பல்வேறு திட்டங்களை அமுல் செய்வ
தற்கு வெவ்வேறு துறைகளில் பயிற்சியளிக்க வேண்டியது அவசியமா N
கிறது. இலங்கை மருத்துவக்கல்லூரி ஆயுள்வேதக்கல்லூரி ஆகிய

- 125 -
வைத்தியர்களுக்கும், பதிவு செய்யப்பட்ட மருத்துவப் பயிற்சியாளர் களுக்கும் உரிய பயிற்சியை அளிக்கிறது. தாதிமார் பயிற்சிப் பாட சாலைகள், தாதிமார்களுக்குப் பயிற்சியளிக்கிறது. விசேட, மருத்துல கற்கை நெறிகளுக்கும் பல்வேறு துறைகளில் பயிற்சி பெறுவதற்கும் வெளிநாடுகளுக்கு வைத்தியர்கள் அனுப்பப்படுகின்றனர்.
9. குடும்பத்திட்டச் சங்கம்:
ஒரு குடும்பத்தின் சுகாதார ம் அக்குடும்பத்திலுள்ள அங்கத்தவர் களின் எண்ணிக்கையுடன் தொடர்புடையதாகும். குடும்பத்தின் பொரு ளாதார வலு தாங்க முடியாதவாறு குழந்தைகளின் எண் ணிக்கை இருக்குமாயின் அவர்களுக்கு வேண்டிய வாழ்க்கை வசதிகளை ஆக்கிக் கொடுப்பது கடினமாகும். போதிய குடியிருப்பு வசதிகள், போசாக்குள்ள உணவு போன்றவற்றை வழங்கமுடியாத நிலை ஏற்படும். இதனால் உடல் நலமும் உள நலமும் பாதிக்கப்படும். ஆகவே திட்டமிட்ட அள வான குடும்பத்தை அமைப்பதே சிறந்ததாகும்.
இலங்கைக் குடும்பத்திட்டச் சங்கம் பல்வேறு முறைகளில் குடும் பத்திட்டம் பற்றிய பிரசாரங்களைச் செய்கிறது. அத்துடன் குழந்தை கள் இல்லாதவர்களுக்கு உரிய மருத்துவ வசதிகளைப் பெற்றுக் கொடுக் கிறது. குடும்பத் திட்டச்சங்கம் கருத்தரங்குகளையும் கலந்துரையாடல் களையும் சினிமாப் படங்களையும் ஒழுங்கு செய்து, நகர்ப்புறங்களிலும் கிராமிய மட்டத்திலும் பிரச்சாரத்திலீடுபடுகின்றது.
10. துறைமுகச் சுகாதாரமும் தனிப்படுத்துகையும்:
துறைமுக உடனலம்: கப்பல் சரக்கு அல்லது பிரயாணிகளின் போக்குவரத்தில் மிகக்குறைந்த தலையீட்டுடன் தொற்றுநோய்களின் இறக்குமதியை அல்லது ஏற்றுமதியைத் தடுப்பதே துறைமுகச் சுகா தார சேவையாகும்.
உலகின் எல்லாப் பகுதிகளுக்கும் நோய் பரவலைத் தடுப்பதற்கும் சுகாதார எல்லைத் தடைகள் அவசியமாகும். எனவே தனிப்படுத்துகை முறை தொடக்கப்பட்டது. அத்துடன் தேசிய தனிப் தடுத்துகைக் கட்டளைச் சட்டமும் அமைக்கப்பட்டது. தொற்று நோய்களின் சர்வ தேச கட்டுப்பாட்டில் 3 கூறுகள் உள் ளன.
1. வாந்திபேதி, கொள்ளைநோய், மஞ்சட் காய்ச்சல், பெரியம்மை முதலிய குறிப்பிட்ட நோய்கள் நாட்டில் திடீரெனத் தோன்றினால் அந்நாடுகள் எல்லாம் அவற்றை உலக சுகாதார ஸ்தாபனத்தின் மத் திய அலுவலகத்திற்கு அறிவித்தல் வேண்டும். இது உலகெங்கும்

Page 67
سے 226 1-۔
உள்ள துறைமுகங்களிலும் விமான நிலையங்களிலும் குடியேறுபவரி களையும் உடல்நல உத்தியோகத்தர்களையும் விழிப்பாக இருக்கச் செய் கிறது.
2. மேற்கூறிய தொற்றல்கள் நிகழுங் காலத்தில் அப்பிரதேசங் களுக்கு அல்லது அதிலிருந்து பிரயாணம் செய்யும் தனிநபர்களுக்கு அந்நோய்களுக்கான எதிர்ப்பு மருந்து வழங்கப்பட வேண்டும்.
3, இத்தகைய நோயினல் பாதிக்க்ப்பட்ட பிரதேசங்களிலிருந்து நோய் எதிர்ப்பு மருந்து பெருது மக்கள் வரும்பொழுது அல்லது 4 பெரும் நோய்களில் ஒன்றுடன் வந்தால் நோய் எதிர்ப்புத் தன்மையால் பாதுகாக்கப்படுமட்டும் அவர்களைப் பரிசோதித்துப் பிரித்துத் தனிப் படுத்தி வைக்க வேண்டும்.
ஒவ்வொரு தனியாளும் வளரும்பொழுது அம்மைப்பால் குத்தப் பட்டிருத்தலைச் செயல்முறையில் பல நாடுகள் கோருகின்றன. ஆபிரிக் காவின் சில பகுதிகளிலும், மத்திய தென் அமெரிக்காவிலும் மஞ்சள் காய்ச்சல் காணப்படுகின்றது அந்நாடுகளுக்குப் பிரயாணம் செய்பவர் களும் அங்கிருந்து வெளியேறுபவர்களும் அந்நோய்க்கெதிராகத் தடுப்பு மருந்து பெற வேண்டும். மஞ்சட் காய்ச்சல் பிரதேசங்களி னுாடாகச் செல்லும் பிரயாணிகள் நோய் எதிர்ப்பு மருந்து எடுத்தல் வேண்டும் என மஞ்சட்காய்ச்சல் இல்லாத இந்தியா போன்ற ஆசிய நாடுகள் வற்புறுத்துகின்றன.
தறைமுக சுகாதார அதிகாரியின் தொழில்கள் பின்வருவனவற்றை அடக்கும்.
1. கப்பல்களுக்கு "சுயாதீன அனுமதி" வழங்கப்படுதல், அதாவது கப்பலில் வந்த பிரயாணிகள் எல்லோரும் இறங்குவதற்கு அனுமதி அளித்தல்,
2. கட்டுப்படுத்தப்பட்ட அனுமதி வழங்கல் - சுயாதீன அணு மதி கொடுக்க முடியாவிடின் கப்பலில் உள்ள நோயாளிகளும் அவர் களுடன் தொகையிலுள்ளவர்களும் தனிப்படுத்தப்படுவார்கள். 3. எலி அகற்றப்பட்டதென சான்றிதழ் வழங்கப்படல். 4. உணவுப் பொருட்களின் தூபமூட்டல்; உதாரணமாக பர்மா தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் அரிசி ஐதர சன் சயனேயிட்டு வாயுவால் தூபமூட்டப்படும்.
5. தொற்றுயிர் கட்டுப்பாடு. 6. உணவுப் பொருட்களைத் தரப்படுத்தல்- அதாவது நாட்டுக்குள் வரும் உணவுகள் உண்பதற்குத் தரமானவையா எனக் கவனித்தல்,
 

- 127 -
7. சரக்குக் கப்பல் ஊழியர்கள் ' யாரேனும் சுகவீனமுற்றால் வானொலி மூலம் துறைமுகம் தொடர்பு கொள்ளப்பட்டு வானொலிச் செய்தியாக மருத்துவ அறிவுரைகள் வழங்கப்படும்.
8. கப்பல் ஊழியர்களுக்குத் தடுப்பு மருந்துச்சேவை வழங்கல். 11. வயோதிபர், அங்கவீனர் இல்லங்கள்:
வயது வந்த அல்லது ஆதரவற்றோரைப் பாதுகாக்கும் பொருட்டு அரசாங்கம் வயோதிபருக்குரிய மூன்று இல்லங்களை நிர்வகித்து வரு கின் றது. இது போன்ற 46 பிரத்தியேக வயோதிபர் இல்லங்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன இவை சமூகசே வைப் பகுதியின்கீழ் இயங் கும். அங்கவீனர் இல்லங்கள் உடல் அங்க வீனம் அல்லது நிரந்த மூளைக்குறைபாடு உள்ளவர்களுக்கு அமைக்கப் பட்டுள்ளன. இதுவும் சமூக சேவைப்பகுதியின் கீழ் இயங்கும். 12.
பொதுசனத் தொடர்புகள்: மக்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துவதற்கான பொதுசனத் தொடர்புகளாகிய பத்திரிகைகளும் வானொலியும் சினிமாவும் ரெலிவி சனும் உதவுகின்றது. மக்களிடையே உடல் நலம் சூழற் சுத்தம் தொடர் பான விடயங்களை அறிவிக்கவும் பிரசாரம் செய்யவும் உதவுகின்றன நோய்களைத் தடுப்பதற்குக் கையாளப்படும் பின்வரும் முறைகளில் பிர சாரம் செய்வது குறிப்பிடத்தக்க அளவு தாக்கத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தும்.
பாதுகாப்பான நீர் விநியோக வசதிகள் 2. மலத்தைச் சுகா தார முறைப்படி நீக்கும் வசதிகள்
பாலில் கிருமியளித்தலும் பாச்சர் முறைப் பிரயோகமும். விற்பனைக்கு வைக்கும் உணவின் தயாரிப்பு போசணைக் குறைபாடுகளைத் தவிர்த்தல்
நோய்க் காவிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள் 7. சில தொழில்களோடு தொடர்பான நோய்கள்
உணவுகள் அழுக்கடைதல் உணவுகளின் துப்புரவு 9. கிராமப்புற வீடமைப்புகள் 10. நோய்கள் பற்றிய விபரங்கள் போன்ற பல விடயங்களை வானொலியில் கலந்துரையாடல்களாக அல்லது புதினப் பத்திரிகைகளில் கட்டுரையாக அல்லது விளம்பரங்களாகப் பிரசாரம் செய்கின்றனர்.
இதனால் மக்கள் தமது சொந்த உடல் நலத்தைப் பற்றியும் வீட் டிற்கும் சமூகத்திற்கும் அத்தி யாவசியமான உடல் நலத்தேவைகள் பற்றியும் அறிந்து ஏற்றவாறு தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடிகிறது. இவ்வாறு தமது உடல் நலத்தைப் பேணினால் சமூகத்திற் கும் நாட்டிற்கும் தம்மாலியன் ற சேவைகளை ஆற்ற முடியும்,
08 - த க க ம

Page 68
10. 1. 2. 13.
4. 5.
6. 7. 8. 9. 26).
குருதியுறைதல் ஏற்பட
1. பைபிரினக்கி பைபிரின் ஆக மாறுதல் வேண்டும்: 2. குருதிச்சிறு தட்டுக்கள் துரொம்போபிளாஸ்ரினை வெளிவிடல்
பயிற்சி
அலகு 1
சுருக்கமான விடை தருக.
குருதியின் இருபெரும் பகுதிகள் எவை? திரவவிழையத்தில் காணப்படும் கூறுகள் என்ன? ஒரு கன மிலிமீற்றரில் செங்குழியங்களின் எண்ணிக்கை யாது? ஒரு கன மிலிமீற்றரில் வெண்குழியங்களின் எண்ணிக்கை யாது தொழிற்படி வெண்குழியங்களின் இருவகை யாது? இருவகை வெண்குழியங்களின் தொழில் யாது? குருதியில் ஒட்சிசன், காபனீரொட்சைட்டு ஆகியன எவ்வாறு காணப்படுகின்றன. நிணநீர் என்பது யாது?
நிணநீரின் தொழில்கள் என்ன? நிணநீர் முடிச்சுகளின் பயன் யாது? நாடிக்கும் நாளத்துக்குமிடையே உள்ள இருவித்தியாசங்கள் மோது? குருதி எப்பொழுது உறையும்? வைத்தியமுறையில் குருதியைச் சேமிக்கும்போது குருதியுறையா திருக்க பாது செய்வர்? குருதிக் கூட்டங்களின் வகைகள் எதஞல் நிர்ணயிக்கப்படும். பின்வரும் குருதிக் கூட்டமுடையவர்களுக்கு யாது கூட்டக் குருதி வழங்கலாம்?
(a) AB (b) AB, Rh* (c) O), Rh, குருதி உறைதலின் நன்மை யாது? குருதி உறைதலின் தீமை யாது: நிர்ப்பீடனம் என்ருல் என்ன? எந்நோய்களுக்கு நிர்ப்பீடனம் பெறமுடியும்? இயற்கை, செயற்கை நிர்ப்பீடனம் என்பதால் நீர் விளங்குவது
யாது?
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க,
வேண்டும்.
3. Cஐ அயன்கள் அவசியம், *, மேற்கூறியனவெல்லாம்.
t
 
 
 
 

و سپس 29 II مست.
இதய நோய்களுக்கு முக்கியகாரணம்: 1. நிறையதிகரிப்பு. 2. ஈமோகுளோபின் இல்லாமை. 3. கொலஸ்திரோல் படிவு
4. வெண்கலம் அதிகரிப்பு.
3,
.
இதயத் துவார நோயில்:
சுவாசப்பைக்கு ஒட்சிசன் கூடிய குருதி கிடைக்கும்.
உடற்கலங்களுக்கு ஒட்சிசன் கூடிய குருதி கிடைக்கும். இதயவறையிலிருந்து சோணையறைக்குக் குருதி செல்லும், இடதுசோணை அறையிலிருந்து வலது சோணை அறைக்குச் சென்று மீளவும் வ. சோ, இலிருந்து இடது அறைக்குக் குருதி பாயும்,
இதய, குருதி நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு: 1. புரத உணவை அளவாக உட்கொள்ள வேண்டும். 2. தாவரவிலங்குக் கொழுப்பு உணவைக் குறைத்தல் வேண்டும். 3. மனதைச் சாந்தமாக வைத்திருக்கப் பழகுதல் வேண்டும். 4. மேற்கூறியனவெல்லாம்.
நீலக் குழந்தைநோய் உண்டாவது: 1. சுவாசநாடிக்கும் பெருநாடிக்குமிடையில் பிறப்பில் மூடா
திருக்கும் குறுக்குச் சுற்ருேட்டக்கலனினுல், 2. இதயத்துக்குக் குருதி செல்லாததால். 3. ஈமோகுளோபின் குறைவென்பதால்.
(a) இதயத்தில் ஒட்சிசன் இறக்கப்பட்ட குருதி எப்பாகத்தில்
உண்டு, (b) வலது இதயவறைக்குள் திறக்கும் குருதிக்கலன்கள் எவை? (c) லப் டப்' ஒலி எவ்வாறு உண்டாகும். (d) இதயப் பகுதிகளைப் பருமட்டான கோட்டுப் படம் வரைந்து
பெயரிடுக.
(a) இதய நோய்கள் மூன்று தருக. (b) இதயநோய்கள் வராது தடுக்க யாது செய்தல் வேண்டும், (c) குருதி யுறையா நோய் என்பது யாது?
(a) குருதிச்சோகை ஏற்படக்கூடிய காரணிகள் யாவை? (b) குருதிச்சோகை எத்தகையவர்களில் கூடுதலாகக் கானப்
படும்? 107

Page 69
ܚ- 490 7 ܐ ܚ
(c) குருதிச்சோகையை எவ்வாறு குணப்படுத்தலாம்? (d) வாதக்காய்ச்சல் (வாதச்சுரம்) வருவதை எவ்வாறு தவிர்த்
துக் கொள்ளலாம்? 4. (3) குருதி அமுக்கம் என்ருல் என்ன?
(b) சாதாரண சுருங்கல் விரிவ முக்க அளவு யாது? (c) குருதி அமுக்கம் அதிகரிப்பதற்கான காரணங்கள் எவை? 枋 (d) குருதி அமுக்கத்தைக் குறைக்கக் கடைப் பிடிக்க வேண்டிய R
பழக்கங்கள் எவை? 5. (a) வாயில் நாளம் என்பது எது?
(b) ஈரல் வாயினளம் எங்குள்ளது? (c) மயிர்க்குழாய்களின் தொழில் யாது? (d) முடியுருநாடியில் கொலஸ்திரோல் படிவதால் யாது நிகழக்
கூடும்? 6. (a) தலையிலிருந்து சுவாசப்பைக்குக் குருதி செல்லும் பாதை
யாது? (b) உணவுக் கால்வாயிலுள்ள குருதி பெருநாடியை அடையும்
வழி யாது? (c) நாடித்துடிப்பு என்பது யாது? (d) ஒருவரின் சாதாரண நாடித்துடிப்பு எவ்வளவு?
அலகு 2 1. சுருக்கமான விடை தருக.
நரம்புத் தொகுதியின் மூன்று பெரும் பிரிவுகள் எவை? மனிதனின் மூளையில் எப்பகுதி மிகவும் சிறப்படைந்துள்ளது? , மூளையின் பின்வரும் பகுதிகளின் முக்கிய தொழில்கள் என்ன?
(a) e pori? (b) நீள் வளைய மையவிழையம்
மூளையையும் முண்ணுணையும் பாதுகாக்கும் மென்சவ்வுகள் எவை? மூளையறைகளுள்ளிருக்கும் பாய்பொருளின் தொழில் யாது? மூளையத்தின் புறவுருவப்படம் வரைந்து பார்வை, கேட்டல், உடல் உணர்ச்சி, உடல் இயக்கம், பேச்சு ஆகிய வற்றிற்குரிய பகுதிகளைக் குறிக்கவும். 7. ஒரு நரம்புக்கலத்தின் படம் வரைந்து பெயரிடுக. 8. கனத்தாக்கம் என்ருல் என்ன? இருவகையான கணத்தாக்கங்கள்
எவை? 9. தூண்டல் தூண்டற்பேறு என்பதால் நீர் விளங்குவது யாது? 0 உடலிலுள்ள புலனங்கங்கள் எவை? இவை எவ்வெத் துரண்ட
லுக்கு உரியன? 11. எமது நரம்புத்தொகுதியில் மூளை நரம்புகள் எத்தனை சோடி உண்டு? 12. முண்ண்ை எத்தனைசோடி முண்ணுண் நரம்புகளை உடையது?
 
 

و ح 11 و 2 سليم
13. முண்ணுணின் குறுக்கு வெட்டுப் படம் வரைக. - 14. முண்ணுண் நரம்புகள் எப்பகுதிகளுக்கு நரம்புகளைக் கொடுக்கும்? 19. தன்னட்சி நரம்புத்தொகுதி எப்பகுதிகளைச் சேவிக்கும்? 10. இச்சைச் செயலுக்கு மூன்று உதாரணம் தருக, 17. இச்சையின்றிய செயலுக்கு மூன்று உதாரணம் தருக. 18, தெறிவினை என்பது யாது? * 19. தெறிவினை நிகழும் பாதை எவ்வாறு அழைக்கப்படும்?
20. தெறிவினைப்பாதையில் அமையும் மூன்றுவகை தரம்புக்கலங்கள்
எவை? 21. உடலின் விளைவுகாட்டிகள் எவை? 22. நரம்புத் தொகுதியைத் தாக்கும் மூன்று நோய்கள் திருச் 23. ஒரு விசர்நாய் எத்தனை நாளில் இறக்கும்?
11. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க,
1. முண்ணுனைப் பாதுகாப்பது
1) தசைகள் 13) வன்முயி மென்ருயி உறை 2) முள்ளெலும்புக்கோவை 4) 2ம் 3ம்
(1) மூளையம் (2) மூளி (3) முண்ணுண் (4) துவிமூளே மேல்வருவனவற்றில்: | மூனேயில்
" 2. சுவாசத்தையும் இதயத்துடிப்பையும் ஆள்வது
ஞாபகத்துக்குரிய பகுதி வன்கூட்டுத் தசைகளைக் கட்டுப்படுத்துவது கபச்சுரப்பி காணப்படுவது இச்சைச் செயல் அல்லாதது (1) புத்தகம் எடுத்தல் (2) கடையில் பொருள் வாங்குதல்
6
(3) பாட்டுப்பாடுதல் (4) சூடான பொருளில் பட்டதும் கையை எடுத்தல்
7. தெறிப்பு வினை
(1) உடலின் ஊட்டலுடனும் பாதுகாப்புடனும் உள்ளியக்கங்
களுடனும் தொடர்புடையடது.
(2) ஊட்டலுடன் தொடர்புடையது (3) பாதுகாப்புடன் தொடர்புடையது
(4) உள்ளியக்கங்களுடன் தொடர்புடையது
8-13 () சூடான பொருளிலிருந்து கை எடுத்தல்
(2) காலில் குற்றிய முள்ளை எடுத்தல்
(3) குளிரான வேளையில் உரோமம் நிமிர்தல்

Page 70
نیست 23 نویسی
(4) உணவைக் கண்டதும் வாயூறல் (5) பிள்ளை பால் குடித்தல் மேலுள்ளவற்றில்
8. முண்ணுன் தெறிப்புவினை 9. இச்சைச் செயல் 10, மூளைத் தெறிவினை ტყიბება ექის, კ. 11. இயல்பூக்கம் - By 12. தன்னட் சித் தெறிவினை 以"
13 இளம் பிள்ளை வாதத்துக்கான வச்சீன்
(l) B. C. G. 613, Saif (2) சபின் வக்கீன்
(3) சீரம் (4) பைபிரின்
14 விசர் நாய்க்கடி வக்கீன் கொடுக்கப்பட வேண்டிய முறை (1) ஒருமுறை (2) 2 முறை (3) 14-21 (up 60fp (4) 7 முறை
15. நரம்புத் தொகுதியைத் தாக்கும் தொற்று நோயல்லாதது
(1) மெயின் சயிற்றிஸ் (2) விசர்நாய்க்கடி (3) காக்கை வலி (4) இளம்பிள்ளைவாதம்
-
அலகு 3
1. சுருக்கமான விடை தருக,
1. கழிவென்பது யாது? 2. உடல் வெளியேற்றும் கழிவுப்பொருள் மூன்று தருக: 3. மலம் ஏன் கழிவு அன்று? 4. உடலின் கழிவுறுப்புக்கள் நான்கு தருக. 5. சிறுநீரகத்தின் உள்ளமைப்பின் அலகு யாது? 6. கலன்கோள வடிதிரவம் எதை ஒத்திருக்கும்? 7. சிறுநீரகக் குழாயில் கலன்கோள வடிதிரவத்துக்கு யாது நிகழும்? 8. சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய இரு நோய்கள் எவை? இதற்கான
காரணம் trாது? 9. சூலகம் முட்டையாவதற்கு எவ்வோமோன் சுரப்பி உதவுகின்றது? 10. மாதவிடாய் வட்டத்தில் எத்தனையாம் நாள் சூல் கொள்ளல்
நிகழும்? 11. விந்தாக்கம் நிகழுமிடம் எது? 12. விந்துக்கள் கடத்தப்படும் பாதை எது? 13. கருக்கட்டல் எங்கு நிகழும்?
4. கருக்கட்டல் அடைந்த முட்டை எங்கு விருத்தியாகும்?
 
 

S
.
- 3 3 1 -܀
சூல்வித்தகத்தின் தொழில் யாது? இனப்பெருக்க உறுப்புக்கள் மூலம் கடத்தப்படும் இரு நோய்கள் எவை?
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்: சிறுநீர் வெளியேறும் பாதையின் ஒழுங்கு 1) சிறுநீர்க்கான், சிறுநீர்ப்பை, சிறுநீர்வழி 2) சிறுநீரகம், சிறுநீர்க்கான், யோனிமடி 3) சிறுநீர்க்கான், சிறுநீர்ப்பை, அப்பாற்செலுத்தி 4) சிறுநீர்க்கான், அப்பாற்செலுத்தி, சிறுநீர்ப்பை, சிறுநீர்வழி பின்வருவனவற்றுள் கழிவு அல்லாதது
1) யூரியா 2) CO, 3) பிலிரூபின் 4) வெல்லம்
4 துளி சிறுநீருக்கு 2cc பெனடிற் கரைசல் விட்டு வெப்பமேற்றிய
போது மெல்லிய பச்சை நிறம் தோன்றியது சிறுநீரில்
1) அதிகளவு வெல்லம் உண்டு
2) வெல்லம் இல்லை 3) குறைந்தளவு வெல்லம் உண்டு. 4) ஒரளவு வெல்லம் உண்டு யூரியா கூடுதலாகவுள்ள குருதிக்கலன்
1) சிறுநீரக நாளம் 2) சிறுநீரக நாடி 3) பிற்பெருநாளம் 4) முற்பெருநாளம்
சிறுநீரக அழற்சி - (நெப்ரயிற்றிஸ்) நோயின் அறிகுறிகள் 1) உடல் வீக்கம் 2) குருதியில் யூரியா அதிகரித்தல் 3) சிறுநீரின் அளவு குறைதல் 4) மேற்கூறியனவெல்லாம் 1. a) சிறுநீரகங்களின் தொழில்கள் எவை?
b) சிறுநீரகத்தின் வெட்டுமுகத்தைக் கீறிப் பெயரிடுக. c) யூரியா நோய் என்பது யாது? - d) சிறுநீரக நோய்கள் வராதிருப்பதற்கு யாது செய்தல்
வேண்டும்? 2, 3) மாதவிடாய் வட்டத்தில் கருப்பையில் நிகழும் மாற்றங்
களை ஒழுங்காகத் தருக, b) கருக்கட்டல் என்பது யாது? e) கருக்கட்டிய முட்டை கருப்பைச்சுவரில் தங்கிய பின் அதற்கு யாது மாற்றம் நிகழும்? - d) சிபிலிஸ் நோயுள்ள தாய்க்குப் பிறக்கும் துழந்தைக்கு
யாது நிகழக்கூடும்?

Page 71
- 134 -
அலகு 4 சுருக்கமான விடை தருக.
பொதுவான விபத்துக்கள் ஐந்து கூறுக. சாலை விபத்துக்கு முக்கிய காரணங்கள் மூன்று தருக. மின்னதிர்ச்சி ஏற்படாதிருக்க என்ன பாதுகாப்பு முறைகள் எடுக்கப்பட வேண்டும்?
4. வீடுகளில் நிகழக்கூடிய பின்வரும் விபத்துக்களுக்கு முற்பாது
காப்பு யாது? a) பிள்ளைகள் நஞ்சு மருந்துகளை உட்கொள்ளல் b) பிள்ளைகள் சுடுகருவிகளால் தற்செயலாகச் சுடுபடல் c) சுடுநீர் விபத்து -
5. வீடுகளில் தீ விபத்தை எவ்வாறு தடுக்கலாம்?
பாதசாரிகள் சாலை விபத்தில் அகப்படாது தப்பித்துக்கொள்ள என்ன முன்னவதானங்களை எடுத்தல் வேண்டும்.
நீரில் மூழ்குவதைத் தடுக்க எடுக்கவேண்டிய முன்னவதானங் கள் எவை?
f
8. விளையாட்டுத் திடலில் ஏற்படக்கூடிய விபத்துகள் எவை?
அலகு ச் 1. சுருக்கமான விடை தருக. முதலுதவி என்பது யாது? முதலுதவியாளரின் தகமைகள் யாவை? முதலுதவியாளன் செய்யக்கூடாதவை எவை? குருதிப்பெருககின் வகைகளை எவ்வாறு அறிவீர்? எரிகாயங்களின் மூன்று நிலைகள் எவை? துளக்கு என்பது யாது? அதிர்ச்சி அல்லது துளக்கின் அறிகுறிகள் எவை? என்பு முறிவுகளின் வகைகள் எவை? என்பு முறிவின் அறிகுறி என்ன? பின் வருவனவற்றின் அறிகுறிகள் எவை? (a) மூட்டு இடப்பெயர்வு (b) பாம்புக்கடி (c) நீரில் மூழ்கியவர் (d) காக்கைவவி பின்வரும் நிலைபரங்களில் நீர் செய்யும் முதலுதவி யாது?
(a) மயங்கியநிலை (b) துளக்கு (c) வலி 蟾。 (d) முன்னங்கை முறிவு (e) கீழ்க்கால் முறிவு (f) சுளுக்கு . (g). Larri Lész. (h) தீயினுல் எரியுண்டவருக்கு (1) மயக்க e
மருந்து அதிகளவு உண்டவருக்கு
O
 
 
 

--5 3 1 ہے۔
சரியர்ன விடையைத் தேர்ந்தெடுக்க: 1. தீயினல் தாக்கப்பட்டவர் செய்யவேண்டியது
1. அருகில் நீரிருப்பின் நீரால் தீயை அணைக்கலாம் - 2. நிலத்தில் விழுந்து புரளவேண்டும் அல்லது சாக்கினல் மூடிக்
கொண்டு விழுந்து புரளவேண்டும். 3. ஒடுதல் வேண்டும்.
4. l-ib 2-h
அலகு 6 சுருக்கமான விடை தருக
1. புற்று நோய்க்கான முதல் அறிகுறிகள் என்ன? 2. புற்றுநோய் எப்படி உண்டாகும்? 3. துன்புறுத்தா புற்றுநோய்க் கட்டிகள் துன்புறுத்தும் புற்று
நோய்க் கட்டிகள் எப்படிப்பட்டன? 4. சுவாசப்பைப் புற்றுநோய்க்கும் வாய்ப் புற்றுநோய்க்கும் முதல்
காரணங்கள் எவை? 5. குருதியிலுள்ள குளுக்கோஸ் எதனுல் கட்டுப்படுத்தப்படும்? 6. நீரிழிவு (வெல்ல) நோயின் அறிகுறிகள் என்ன? 7. சிறுநீரில் வெல்லமிருப்பதை எவ்வாறு சோதித்தறியலாம்? 8. நீரிழிவை ஆரம்பநிலையில், பிந்தியநிலையில் எவ்வாறு கட்டுப்
படுத்தலாம்? அலர்ச்சி (ஒவ்வாமை என்ருல் என்ன? 10. அலர்ச்சி தரும் நோய்கள் சில கூறுக,
1. பின்வருவனவற்றிற்கு உதாரணம் தருக.
11. தோலிற்படுவதால் அலர்ச்சி அறிகுறி தரும் பொருள்சில கூறுக, 12. உள்ளெடுக்கப்படின் அலர்ச்சி தரும் மருந்துகள் சில கூறுக. 13. நீரிழிவு நோயாளி எடுக்கக்கூடாத உணவுகள் எவை? 14. புற்றுநோய் மருத்துவத்திற்கு விசேடமான வைத்தியிசாலே
எங்குள்ளது? 15. புற்றுநோய் பொதுவாக உண்டாகும் இடங்கள் ஆறு கூறுக
11. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க,
1 முதலுதவியாளன் செய்யவேண்டியது:
1. மயக்கமுற்றவருக்கு சுடுநீர் அருந்தக் கொடுத்தல். 2. கலப்பு முறிவாயின் அதை இழுத்து நேராகக் கட்ட வெண்
டும்.

Page 72
3.
مسیس 36 11 سمیسیے!’’
எலும்பு முறிவடைந்தவனை ஒரு நாட்டு எலும்பு முறிவு வைத்தியரிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.
4. குருதிப்பெருக்கை உடன் நிறுத்த வேண்டும். 2. களைகொல்லி மருந்து விசுறுகிறவர்கள்
. 2. 3,
4.
.
காற்றுகெதிராக நின்று விசிறுதல் கூடாது.
தோலிற் காயமிருப்பின் விசிறக்கூடாது. محم۔ உடைகளைக் களைந்த பின் சவர்க்கார நீரில் *一例邻 85(ggan தல் வேண்டும்.
மேற்கூறிய மூன்றும் செய்தல் வேண்டும்.
அலகு 7
5 சுருக்கமான விடை தருக.
இலங்கையில் பிள்ளைகள் இறப்பதற்குக் காரணமா? நோய் கள் எவை?
2. இலங்கையில் உள்ள வைத்தியசாலைகளின் வகைகள் எனன
3.
(),
12。
3.
4.
சென்ற ஆண்டில் சுகாதார சேவைக்கு வரவு செலவுத் திட் டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? குடும்பநலத் திட்டத்தின் நோக்கங்கள் யாது? பாடசாலைச் சுகாதார சேவை அளிக்கும் வசதிகள் எவை? நோய் தடுப்பில் பொதுமக்கள் உதவும் சங்கங்கள் எவை? உள்ளூராட்சி மன்றங்கள் அளிக்கும் சுகாதார சேவை கள் எவை? சில குறிப்பிட்ட நோய்களுக்கென இயங்கும் வைத்தியசாலை கள் எவை? அவை எங்குள்ளன? நோயைத் தடுப்பதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகள் எவை? . −
பிள்ளைகளின் போசணையைத் திருத்த அரசாங்கம் எவ்வகை
யில் உதவுகின்றது? இலங்கையில் பிறப்பு வீதமும் இறப்பு வீதமும் இந் நூற் முண்டின் முதல் 30 வருடங்களோடு ஒப்பிடும்போது இன்று என்ன மாற்றத்தைக் காணலாம்? இன்று இலங்கையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் எத்தனை வருடங்கள் வரை வாழலாம் என எதிர்பார்க்கலாம்"
(30, 50,62, 90)
இலங்கையின் சுகாதாரசேவைச் செலவைக் குறைப்பதற்கு நாம் செய்யக்கூடியதென்ன? இலங்கையில் இறப்புவீதம் குறைந்திருப்பதற்கான முக்கிய
காரணங்கள் எவை? S KOM N
 
 
 


Page 73