கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைக்கேசரி 2013.02

Page 1
հինյիլյել
HRIAS TRADITION FAS-O MVOUME ; 04 ISSU 4 Registered in the Department of Posts of S
Gwe
C GN
வட்டுக்கோட்ை யாழ்ப்பாணக் கல்லூரி
NDA. INR 100.00 CANADA.C.
SRI LANKASLR 25.00 AUSTRAL.A.A.
SINGAPORE.SGS 14.00 WSS.
 

ஜ்
徽
ANS 10.00 USA...US$ 10.00 US$ 10.00 UK.G.B. 6.00
HF 0,00 EUROPE.EUG 7.00

Page 2
பாரம்பரிய பெருமைமிக்க எங்கள் ப உணர்வுகள் இணையத்தில்.
 
 

2. Daš
Corret vitř jiksiffra
www.yarlmann.lk

Page 3


Page 4

அட்டைப்படம்:
சிரியாவில் உள்ள உம்மயா மசந்தியில் காணப்படும் கிரீடம்
உள்ளடக்கம்:
3 O பனை தரும்
போசாக்குணவுகள்
40 காக்கும் தெய்வம் திருமாலின்
கருட வாகனம்
4. 8 தடைகள் பல தாண்டி மிளிர்ந்த தாகூரின் கீதாஞ்சலி
5 4. திரைப்பட இசைத்துறையில் ஒரு நட்சத்திரம் கண்டசாலா
6 4. காலனித்துவ இலங்கையில் ஜோர்ஜ் கீற்றின் ஓவியங்கள்

Page 5
PUBLISHER Express Newspapers (Cey) (Pvt) Ltd. 185, Grandpass Road, Colombo 14, Sri Lanka.
Τ. Ρ. +94 11 7209830 WWW. kalaikesari.com
EDITOR Annalaksmy Rajadurai luximi. rajadurai@yahoo.com
SUB EDITOR Bastiampillai Johnsan johnsan50G)gmail.com
MEDIA CO-ORDNATOR Pragash Umachandraa
CONTRIBUTORS Prof. S. Sivalingaraja Prof. Saba Jeyarasa Mrs. Vasantha Vaithyanathan Mrs. Shanthini Arulanantham Mrs. Sharmila Ranjithkumar Ms. Subashini Pathmanathan Dr. Viviyan Sathyaseelan Rasi Jayapathi
PHOTOS
J. Sujeewakumar J. Mirunalan
Umapathy M. S. Sathiskumar
LAYOUT K, Kullendran
IOT S. T. Thayalan
ADVERTISING A. Praveen marketingG)Virakesari. Ik
CIRCULATION K. Dilip Kumar
SUBSCRIPTIONS J. K. Nair subscription(G)kalaikesari. Ik
PRODUCTION L. A. D. Joseph
ISSN 2012 - 6824
56
வணக்கம் கலைக்
ஓரினத்தின் பண்ட் காலத்தின் நிர்ப்பந்: வரலாறுகளே அதை வழக்கங்களும், நம் தனித்துவத்தைப் புல
உலகப் பொதுமை சொத்து. திருக்குறளி 'ஒழுக்கம் விழுப்பந் அப்பெருந்தகையின்
வையத்து வாழ்வி என்று அவர் காட்டிய காட்டுவதாகும்.
இத்தகையதொரு சமுதாயத்தினரிடைே என்ற செய்தி மிகவும் பொருள் முதற்பட பண்பாடு மற்றும் ஒழு இந்நிலையால் காலப் இழந்து விடக்கூடிய அறிஞர் சமுதாயம், அ இது காலத்தின் கட்ட மீண்டும் சந்திப்பே
வணக்கம்
Ko
بلکھeھ کسیssrبھی قم
 

ஆசிரியர் பக்கம்
ர் இருந்தால் தானே சித்திரம் வரையலாம்?
கேசரி வாசகர்களே/
ாடு, பாரம்பரியம், கலாசாரம் மற்றும் பழக்க வழக்கங்களில் தத்தினால் மாற்றங்கள் நிகழ்வது இயல்பு. நாடுகளின் நமக்கு நிரூபிக்கின்றன. எனினும் சில பண்பாடுகளும், பழக்க பிக்கைகளும் காலத்தை வென்று நிலைத்து, அவ்வினத்தின் ப்படுத்துகின்றன. றயென விதந்தேற்றப்படும் திருக்குறள் தமிழர் தம் அரும்பெரும் ன் அறநெறிப்போதனைகளை என்றும் போற்றிவரும் தமிழினம் தருதலான், ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும்' என்னும் கூற்றுக்கு எக்காலத்தும் தனியிடம் தருகிறது. வாங்கு வாழ்பவன், வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்
வாழ்க்கை நெறியும், என்றென்றும் மக்களுக்கு உன்னத வழி
பாரம்பரியத்தின் வழிவந்தவர்களின் குறிப்பிட்ட ஓர் இளம் ய பண்பாட்டுச் சீரழிவுகள் மோசமாக ஏற்பட்டு வருகின்றன
கவலைக்குரியதாகும். ட்ட இன்றைய சமுதாயத்தில் பல்வேறு நோக்கங்களுக்காக, க்கத்தை அலட்சியம் செய்யும் போக்கு அதிகரித்து வருகின்றது. ப்போக்கில் சமுதாயம் தனது தனித்துவத்தையும் ஆத்மாவையும் ஒரு நிலை தோன்றலாம். அறிவும் ஆற்றலும், பண்பாடும் உள்ள த்தகையவர்களுக்கு விழிப்புணர்வூட்டி நல்வழிகாட்டவேண்டும். ாயமாகும். சுவர் இருந்தால் தானே சித்திரம் வரையலாம்?
(Τζό /
St.
గిలి ఇంగిత్రా ک\
February, 2013

Page 6
கலைக்கேசரி கீ 06 சிறப்புக்கட்டுரை
தவத்துப்பிள்ளை மகத்தில் பிற மாசி மகத்
முன்னொரு காலத்தில் உலகம் தண்ணீரால் அழிய இருந்த போது, பிரம்மா புண்ணிய தலங்களிலும் உள்ள மணலை எடுத்து தனது படைப்பு ஆற்றல் முழுவதையும் அமுதத்தில் கலந்து, பிசைந்து, ஒரு கும்பத்தில் இட்டு, அந்தக் கும்பத்தை இமயமலை உச்சியில் பாதுகாப்பாக வைத்தார். பிரளய காலத்தில் கடல் பொங்கி இமயமலை உச்சி வரை சென்ற போது பாதுகாப்பாக வைக்கப்பட்ட கும்பம் நீரில் மிதந்து, தெற்கு நோக்கிப் பயணித்தது. பிரளய நீர் வடிந்ததும் கும்பம் தரைதட்டிய இடத்தில் பூமி குழிந்து தாங்குக' என சிவபெருமான் நினைத்து, வேடுவ வேடத்தில் வந்த சிவன் கும்பம் மீது ஒரு பாணத்தை எய்தார். இதனால் கும்பம் சிதைந்து மணலில் அமுதம் சிந்தியது. அமுதத்தில் நனைந்த மணலால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி அதனுள் அவர் ஐக்கியமானார். கீழே சிந்திய அமுதம், மணல் இவற்றால் உருவானதால் ஆதிகும்பேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். பேரூழிக் காலத்தில் பிரமனின் வேண்டுகோளுக்கிணங்கி, இறைவன் தந்த அமுத கலசம் தங்கிய இடமாதலின் இத்தலம் கும்பகோணம் என்று பெயர் பெற்றது. கும்பம் தரைதட்டிய குளம் மகாமகக்குளம் எனப்படுகின்றது.
 
 

றக்கும்" ந்தின் மகிமைகள்
தவத்துப்பிள்ளை மகத்தில் பிறக்கும் என்பார்கள். மக
நட்சத்திரம் சிறந்த நட்சத்திரம். சிம்ம ராசிக்கு உரியது. அதுவும் மாசி மாதம் மக நட்சத்திரம் மிகவும் சிறப்பானது. மகம் நட்சத்திரத்திற்குரிய தெய்வம் விநாயகர்; கிரகம் கேது. மக நட்சத்திரக்காரர்கள் சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். ஆலமரம் மகம் நட்சத்திரத்தின் நண்பனாகத் திகழ்கிறது. அதன் நல்ல கதிர் வீச்சுகளையெல்லாம் சேகரித்து வைத்து மனிதர்களுக்கு திரும்பக் கொடுக்கிறது. கெட்ட கதிர் வீச்சுகளால் உண்டாகும் நோய்களையும், தோஷத்தையும் ஆலமரம் குணப்படுத்துகிறது. அம்பிகை மாசி மக நட்சத்திரத்தில் அவதரித்ததால் மாசிமகம் பெருமை பெறுகின்றது.
மாசி மகம் என்பது மாசி மாத பெளர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளாகும். ராசிக்கு ஏழாம் இடத்தில் சூரியன் தன் சொந்த ராசியைப் பார்த்தவாறு இருப்பார். அன்றைய தினம் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய

Page 7
இ
தினத்தை கடலாடும் விழா என்றும் கொண்டாடப் படுகிறது. இந்த மாசி மகத்தில் கடல் நீராடுதல் அவசியம் என்பதையும் அதன் முக்கியத்துவத்தையும் 63 நாயன்மார்களில் ஒருவராகிய திருஞானசம்பந்தர் தமது திருமயிலாப்பூர் தேவாரத்தில் கூறியுள்ளார்.
"மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக் கடலாட்டுக் கண்டான் கபாலிச்சரம் அமர்ந்தான் அடல் ஆன் ஏறு ஊறும் அடிகள் அடி பரவி நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்'
என்று பாடியருளி எலும்பாய் இருந்த பூம்பாவாவை என்ற பெண்ணை உயிரோடு எழுப்பினார் என்பது வரலாறு.
காசியில் பிறந்தோர் பாவம் கும்பகோணத்தில் போகும், கும்பகோணத்தில் பிறந்தோர் பாவம் மகாமகக் குளத்தில் நீராடினால் போகும் என்று புராணங்கள் கூறுகின்றன. மகாமக குளம் பதினைந்து ஏக்கர் பரப்பளவில், நான்கு கரைகளிலும் பிரமதீர்த்தேசம், முகுந்தேசம், தனேசம், ரிசபேசம், பாணேசம், கோனேசம், பக்தேசம், பைரவேசம், அகத்தீசம், வியாகேசம், கங்காதரேசம், பிரமேசம், முத்ததீர்த்தேசம் முதலிய ஆலயங்கள் விமானங்களுடன் கூடியதாய், நடுவில் ஒன்பது கிணறுகளைக் கொண்டு விளங்குகிறது. குளத்தில் நீராடிய பிறகு ஆதிகும்பேஸ்வரர் கோயிலின் முன்பிருக்கும் பொற்றாமரைக் குளத்திலும் நீராடுவர்.
மாசி மகத்தன்று மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். மாசி மாதம் அசுவதி நட்சத்திரத்தில் கொடி ஏறி, எட்டாம் நாளில் வெண்ணெய்த்தாழி நிகழ்ச்சியும், ஒன்பதாம் நாளில் தேரோட்டமும், பத்தாம் நாளில்
 

កែងព្រួញម៉ាស៊ែប៊េរី O7
மூஷிகம், மயில், ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடக்கும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமக திருவிழா நடைபெறும். தமிழகத்தின் மிகப்பெரிய திருவிழா இது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு சிம்மராசியில் இருக்க, சூரியன் கும்பராசியில் இருக்க மாசி மாதத்தில் பெளர்ணமி தினம் அன்று மக நட்சத்திரம் கூடி இருக்கும் சேர்க்கை நடைபெறும். அன்றைய பெளர்ணமி நன்னாளில் மகாமகத் திருவிழா கொண்டாடப் படுகிறது. மகாமக தினத்தன்று இத்தீர்த்தத்தில் நீராடுபவருக்கும் அவரைச்சார்ந்த ஏழு குலத்தாருக்கும் புண்ணியம் உண்டு என புராணங்கள் கூறுகின்றன.
மாசிமகம் தினம் கடலாடும் விழா என்று கொண்டாடப் படுகிறது. கடலில் தீர்த்தமாட இயலாதவர்கள் விரதமிருந்து கோவிலுக்கு சென்று இந் நாளைக் கொண்டாடுவர். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மாசிமகத் திருவிழா கும்பகோணத்தில் கும்பேசுவரர் கோயிலில் திருநாவுக்கரசர் அருளிச் செய்த தேவாரம் பின்வருமாறு கடலாடுவதன் முக்கியத்துவம் குறித்து விளக்குகின்றது. ஏவி இடர்க்கடல் இடைப்பட்டு இளைக்கின்றேனை இப்பிறவி அறுத்து ஏற வாங்கி ஆங்கே கூவிஅமருலகு அனைத்தும் உருவிப் போகக் குறியில் அறுகுணதது ஆண்டு கொண்டார் போலும் தாவி முதல் காவிரி, நல் யமுனை, கங்கை, சரசுவதி,
பொற்றாமரை, புட்கரணி, தெணநீர்க் கோவியொடு, குமரி வரு தீர்த்தம் சூழ்ந்த குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே

Page 8
என்னும் தேவாரமாகும். இத்தேவாரத்தை பாடிவிட்டு குளிக்க வேண்டும். ஏற்கனவே குளித்திருந்தாலும் இரண்டாவது முறையாக இந்த தேவாரத்தை பாடிவிட்டு குளிக்கும் அளவிற்கு முக்கியத்துவம் பெறுகின்றது. யாராக இருந்தாலும் வீட்டில் குளியலறையில் இறைவனை நினைநது இந்த தேவாரத்தை பாடிவிட்டு குளித்தால் அவர்கள் கடலாடியதற்கு 5FLDL DTTOòT பலன்களை
பெறுவார்கள் என்பது திருநாவுக்கரசரின் ஆணை.
ஆதிகும்பேஸ்வரர் கோவில் கிழக்கு நோக்கிய சந்நிதியாகும். மூன்று கோபுரங்களையும், மூன்று பிரகாரங்களையும் உடையது. இராஜகோபுரம் சுமார் 128 அடி உயரமும், ஒன்பது நிலைகளையுடையதுமாகும். இறைவன் கும்பேஸ்வரர் மணலால் ஆன லிங்கவடிவம் உடையவர் என்பதால் தங்கக் கவசம் சார்த்தியே அபிஷேகம் நடைபெறுகிறது. பெளர்ணமி தினங்களில் மட்டும் புனுகு சாத்தி வழிபாடு செய்யப்படும். இக்கோவிலில் ஆறுமுகப்பெருமானுக்கு ஆறு முகங்கள் இருந்தாலும் கைகள் 12 இல்லாமல் 6 மட்டுமே உள்ளன. இது போன்ற அமைப்பு வேறு எங்கும் இல்லை என கூறப்படுகிறது. இவரை அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார். நாள்தோறும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன.
 

12 நதிகள் மக்கள் கழுவிய பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற அங்கு வருவதாகவும். குரு சிம்ம ராசிக்கு வரும் இந்நாளில் எல்லோரும் கடலில் நீராடி நற்பேறு பெறுவர் என்பதும் ஐதீகம். முன்பு ஒருகாலத்தில் வருணபகவானைப் பீடித்த பிரம்மகத்தி தோசம் அவரை கடலுக்குள் ஒழித்து வைத்திருந்தது. வருணபகவான் சிவபெருமானை வேண்ட, அவரும் அவனைக் காப்பாற்றினார். அவனை விடுவித்த தினம் மாசிமகம் ஆகும். அப்போது வருணன் சிவபெருமனை அன்றைய தினத்தில் புண்ணிய தீர்த்தமாடுவோரின் பாவங்களை நீக்கி அவர்களுக்கு வீடுபேற்றை அருளும்படி வேண்டினான். அவரும் அவ்வாறே வரமளித்தார்.
தலவரலாற்றின்படி - 1. அமுதகும்பம் வைத்திருந்த இடம் - கும்பேசம், 2. அமுதகும்பம் வைத்திருந்த உறி சிவலிங்கமான இடம் - சோமேசம், 3. அமுதகும்பத்தில் சார்த்தியிருந்த வில்வம் இடம் - நாகேசம், 4. அமுதகும்பத்தில் வைத்திருந்த தேங்காய் இடம் - அபிமுகேசம்; 5 பெருமான் அமுதகுடத்தை வில்லால் சிதைத்த இடம் - பாணபுரேசம் (பாணாதுறை); 6. கும்பம் சிதறியபோது அதன்மீதிருந்த பூனூல் சிதறிய இடம் - கெளதமீசம் என வழங்கப்படுகின்றன.
வெளிப்பிரகாரத்தில் கும்பமுனிசித்தர் அருள் பாலிக்கிறார். இவரை வணங்கினால் கிரக தோஷங்கள் நீங்கும். இத்தல அம்மனுக்கு மங்களநாயகி, மந்திரபீட நலத்தாள் ஆகிய திருநாமங்கள் உண்டு. சம்பந்தர் இவளை 'வளர்மங்கை’ என அழைக்கிறார். சிவபெருமான் தனது திருமேனியில் பாதியை அம்மனுக்கு வழங்கியதைப் போல், தனது மந்திர சக்திகளில் 36 ஆயிரம் கோடியை இத்தல நாயகிக்கு வழங்கியுள்ளார். அம்பாளுக்கு ஏற்கனவே 36ஆயிரம் கோடி மந்திர சக்திகள் உள்ளதால், 72 ஆயிரம் கோடி மந்திர சக்திகளுக்கு அதிபதியாக மந்திரபிடேஸ்வரி என்ற திருநாமமும் பெறுகிறாள். அம்மனுக்குரிய 51 சக்தி பீடங்களில் இத்தலம்
முதன்மையானதாக கருதப்படுகிறது. அம்பாள் மஞ்சள் பட்டு உடுத்தி முகத்தில் மஞ்சள் பூசி, குங்கும திலகம் இட்டு அருள்பாலிக்கின்றார்.

Page 9
. -- 15 ܐܢ ¬ܐ
சிவபெருமான் வேடர் (கிராதர்) வடிவில் வந்து அமிர்தம் நிறைந்த குடத்தை உடைத்தார். அதன் அடிப்படையில் இங்கு கிராதமூர்த்திக்கு சன்னதி உள்ளது. மகம் நட்சத்திர நாளில், இவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்தால் விரும்பியது கிடைக்கும் என்பது ஐதீகம்.
கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள், தொழில் துவங்குபவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், குபேர வாழ்வு விரும்புபவர்கள் மங்கள நாயகிக்கு ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் செம்பருத்தி பூவால் அலங்காரம் செய்து அர்ச்சனை செய்தால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
மகாமக உற்சவநாளில் கங்கை முதலிய ஒன்பது புண்ணிய நதிகளும் (கங்கை, சரயு, யமுனை, சரஸ்வதி, சிந்து, நர்மதா, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி) நவகன்னியர்களாக வந்து நீராடியதால் கன்னியர் தீர்த்தம் என்றும் பெயர் பெற்றது.
சிவனும் அம்மனும் ஆதியில் இத்தலம் வருவதற்கு முன்பே விநாயகர் இங்கு வந்திருந்ததால் இத்தல விநாயகர்
 
 

蚤 យ៉ាងក្រុញយ៉ាង៉ាអ្វី 09
ஆதி விநாயகர் எனப்படுகிறார். முருகப்பெருமான் சூரசம்ஹாரத்திற்கு செல்லும் முன் இங்கு வந்து மந்திர பீடேஸ்வரியிடம் மந்திர உபதேசம் பெற்றுள்ளார். கன்னியாக்குமரி, இராமேஸ்வரம் போன்ற கடற்கரைத் தலங்களில் உள்ள சுவாமிகளும் மாசி மாதப் பெளர்ணமி அன்று தீர்த்தவாரி காண்பார்கள்.
மாசிமகத் திருநாள் அன்றுதான் அன்னை பார்வதியம்மாள் தாட்சாயிணி என்ற பெயரில் வலம்புரிச் சங்கில் குழந்தையாக அவதரித்தாள்.
இத்தலத்தில் எப்போதும் யோகிகளும், தபசிகளும் சிவனை அரூபமாக பூஜை செய்து வருகின்றனர். பெண்களால் இவர்களுக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்பதால் தான் அம்மன் சன்னதியில் அம்மன் வெளியே தெரியாமல் சுவரை ஒட்டி அருள்பாலிப்பதாக தல வரலாறு கூறுகிறது.
அரவிரி கோடனிடலணி காவிரி யாற்றயலே மரவிரி போதுமெளவல் மணமல்லிகை கள்ளவிழும் குரவிரி சோலைசூழ்ந்த குழகன்குட மூக்கிடமா இரவிரி திங்கள்குடி யிருந்தானவ னெம்மிறையே.
(சம்பந்தர்) பூவ ணத்தவன் புண்ணயினன்ணியங் காவணத்துடை யானடியார்களைத் தீவணத்திரு நீறு மெய் பூசியோர் கோவணத்துடை யான்குட மூக்கிலே,
(அப்பர்) த்
- மாலதி அமலகுமார்

Page 10
យ៉ាងញញយ៉ាម៉ារី 10 வாழ்வியல்
யாழ்ப்பாணப் பண்பாடு : மறந்தவையும் மறைந்தவையும்
- பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா
அன்றைய யாழ்ப்பாணச் சமூகத்தில் நடைபெற்ற பேச்சுத் திருமணங்களிலே சாதகப் பொருத்தம் பார்க்கும் மரபு மிகக் குறைவாகவே காணப்பட்டது. இன்றைய யாழ்ப்பாணச் சமூகத்திலே சாதகப் பிரச்சினையைப் பெரிது படுத்துபவர்கள் திருமணத் தரகர்களே எனலாம். தரகர்களாலும் ஜோதிடர்களாலும் நிறைவேறிய திருமணங்களைக் காட்டிலும் நிறைவேறாமல் போன (குழம்பிப்போன) திருமணங்களே அதிகம் எனலாம். இன்றைய யாழ்ப்பாணச் சமூகத்திலே 'சாதகப் பொருத்தம் மிக மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.
இன்றைய ஜோதிடம் குறிப்பிடும் 'கிரகபாவம்' என்ற கணிப்பு இற்றைக்கு ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன் பெரிதும் முதன்மைப்படுத்தப்படவில்லை. சோதிடம் பார்த்த (பொருத்தம் பார்த்த) சிலரும் சில தோஷங்கள், அல்லது குற்றங்கள் (செவ்வாய்க் குற்றம் என்பது போல) இருந்தால் அதற்குப் பரிகாரமாகக் கோயில் வழிபாடு, அல்லது நேர்த்தி, விரதம் முதலானவற்றைச் செய்து கொண்டு திருமணத்தை நிறைவேற்றி (ஒப்பேற்றி) விடுவார்கள். இன்றைய சாதகச் சூழல் பெரும்பாலும் பெண்களையே பாதிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. சாதகமே பாதகமாக அமைந்துள்ளதை இன்று யாழ்ப்பாணச் சமூகத்திலே பார்க்கக் காணலாம்.
பேச்சுத் திருமணங்களிலும் அடக்கமான திருமணச் சடங்கு, ஆடம்பரமான திருமணச் சடங்கு என இரண்டு
ᏊᎧ ]ᏊᏡᏅᏯᏧ5 காணப்பட்டது. தத்தமது வசதிக்கேற்ப மணமக்களின் பெற்றோர் திருமணச் சடங்கு ஒழுங்குகளைத் தீர்மானிப்பார்.
பெரும்பாலும் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் நடுப் பகுதி வரை, யாழ்ப்பாணச் சமூகத்தின் மேல் மட்ட சாதியினர், அதிகார வர்க்கத்தினர், அரச உத்தியோகத்தர்கள் (மலேசியா, சிங்கப்பூர் முதலிய இடங்களிலே பணியாற்றியவர்கள்) பிரபல வர்த்தகர்கள், குடாநாட்டிற்கு வெளியே வணிக முயற்சியிலீடுபட்ட முதலாளிகள் முதலானோரின் திருமணச் சடங்குகள் பெருமளவிற்கு ஆடம்பரமாக நடைபெற்றமைக்கான சான்றுகள் உள. சமூக மாற்றம், யாழ்ப்பாண மக்கள் இலங்கையில் பல பாகங்களிலும் பரந்து வாழத் தொடங்கியமை, புதிதாக மேற்கிளம்பிய மத்தியதர வர்க்கத்தினரின் வாழ்க்கை முறைகள் முதலியன திருமணச் சடங்கு முறைமைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தன.
பழந்தமிழ் இலக்கியங்களிலே எமக்குப் பரீட்சியமான திருமணத் திருமுகம் 19 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதிக்குப் பின்னர் (அச்சியந்திரத்தின் பயன்பாட்டுடன்)

ܕ ܢ .
திருமண அழைப்பிதழாகப் (Invitation) பின்னர் பயன்பாட்டிற்கு வருகின்றது. இன்று திருமண அழைப்பிதழ்கள் பல்வேறு வடிவில் பல்வேறு வகையில் பல்வேறு தரத்தில் பெருஞ் செலவில் பயன்படுத்த முடிவதை அவதானிக்க முடிகின்றது. இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியிலே அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ்களிலும் ஒரு வித அழகியல் வெளிப்பாடு காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தமிழ் அச்சுக் கலை வளர்ச்சியிலே ஈழ நாட்டுப் பங்களிப்புப் பற்றி ஆய்வு செய்பவர்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டு அச்சியந்திரசாலைகளின் செயற்பாடுகள் பற்றியும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
ஆடம்பரத் திருமணங்களிலும் சிற்சில நடைமுறை களிலே வேறுபாடுகளும் இருந்தன. புதிதாக உருவாகிய மத்தியதர வர்க்கத்தினரின் திருமணச் சடங்குகள் அதி விமரிசையாக நடைபெறுவதைப் பாரம்பரிய விழுமியங் களைப் பேணும் யாழ்ப்பாணச் சமூகத்தினர் பெருமள விற்கு வரவேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருமணம் பேசி முடிவு செய்ததும் இரண்டு குடும்பங்களுக்குமான இறுக்கத்தைப் பேணும் வகையிலே

Page 11
'சம்பந்தம் கலப்பு’ என்னும் நிகழ்வு இடம்பெறும். பெண் வீட்டார்தான் முதலிலே மணமகன் வீட்டிற்குச் செல்ல வேண்டும். செல்வதே வழக்கம். மங்கலகரமான பொருட்களுடன் (வாழைப்பழம், வெற்றிலை - பாக்கு, எலுமிச்சைப்பழம் முதலானவை) சென்று விருந்தயர்ந்து திரும்புவர். சில இடங்களிற் கொழுக்கட்டை அவித்துக் கொண்டு செல்வதும் உண்டு. இன்றும் இந்த வழக்கம் உண்டு. இரண்டு குடும்பங்களும் பரஸ்பர புரிந்துணர்வுடன், விட்டுக் கொடுப்புடன் பழகுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும் நிகழ்வாகச் 'சம்பந்தக் கலப்பு அமையும் எனலாம்.
திருமண நாள் குறிக்கப்பட்டதும் (முகூர்த்தம்) பொன் உருக்கல் என்ற நிகழ்வு முக்கியம் பெறும். பொன் உருக்கும் நிகழ்வு நல்லதொரு நாளில் (பஞ்சாங்கத்திலே உள்ளபடி) மணமகன் வீட்டிலேதான் இடம் பெறும். பொன் உருக்குவதற்குப் பொற்கொல்லர் ஒருவர் அதற்குரிய உபகரணங்களுடன் மணமகன் வீட்டிற்கு வருகை தந்து பொன் உருக்கலுக்கான சடங்காசாரங்களின் L l L Q- பொன்னை உருக்குவார். மணமகளின் பெற்றோர்களும் நெருங்கிய உறவினர்களும் பொன் உருக்கற் சடங்கிலே கலந்து கொண்டு விருந்தயர்ந்து
செல்வர். பொன் உருக்கல் நிகழ்வு நடைபெற்ற பின்
 

& តែចាញ អ៊ែអ្វី 11
மணமக்கள் திருமணம் வரை ஒருவரை ஒருவர் பார்க்கக் கூடாது என்பதும் வழக்கமாகும். இன்று இந்த நடைமுறை பெரிதும் பின்பற்றப்படுவதில்லை.
அக்காலத்திலே திருமணச் சடங்குகள் இரவிலேயே நடைபெற்றன. முகூர்த்த நேரமும் பெரும்பாலும் இரவாகவே இருக்கும் பஞ்சாங்கங்களும் இரவு நேரத்திலே தான் முகூர்த்தத்தைக் குறிப்பிட்டிருக்கும். திருமணங்களை ஆடம்பரமாக நடத்துவதற்கு இரவு நேரம் பொருத்தமானதெனக் கருதப்பட்டது. ஆனால் கடந்த முப்பது ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தில் இரவிலே திருமணச் சடங்குகள் நடைபெறவில்லை. திருமணங்கள் பகலிலேயே நடைபெற்றன, நடைபெறுகின்றன. இந்த விடயத்தைக் குறிப்பிடும் பொழுது போர்க் கால யாழ்ப்பாணச் சூழ்நிலை பற்றிய பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.
'கோயில் விழா கொண்டாட்டம் எனும் பொழுது சாய்வதற்கு முன்னே நினைவுபெறும் - தூயநிலா கண்டு மகிழ்ந்து கலந்து உறவாடி உண்ட நிகழ் வெங்கே உரை' பெரும்பாலான திருமணங்கள் வீடுகளிலேயே நடை
பெற்றன. சிற்சில திருமணங்கள் கோயில்களில் நடை பெற்றதும் உண்டு. தற்காலத்திலே திருமண

Page 12
ឆ្នាធ្វើវិ 虚 12
மண்டபங்களிலே தான் திருமணங்கள் நடைபெறுகின்றன. யாழ்ப்பாணத்திலே இன்று திருமண மண்டபங்கள் பல உள்ளன. ஆனால் நாற்பது ஐம்பது வருடங்களுக்கு முன் திருமண மண்டபங்களே யாழ்ப்பாணத்தில் இருந்த தில்லை. எத்தகைய ஆடம்பரத் திருமணமாக இருந்தாலும் அது வீட்டிலேயே நடைபெற்றது. பெரியபந்தல்கள் போட்டு வெள்ளை கட்டி அலங்காரங்கள் செய்து மணவறை அமைத்துத் திருமணச் சடங்குகளை நடத்துவர். திருமணச் சடங்கின் பிரதான விடயங்கள் பெண் வீட்டிலேயே நிகழும். தாலி கட்டி அம்மி மிதித்து அருந்ததி காட்டிக் கால் மாறுதல் என்னும் நிகழ்வு இடம்பெறும்.
திருமணச் சடங்கு முறைமைகள் இடத்திற்கு இடம் கிராமத்துக்குக் கிராமம் சமூகத்திற்கு சமூகம் வேறுபட்டு நிகழும். அதனாலே அந்த முறைகள் பற்றி விரிவாகக் குறிப்பிடாது விடுத்தோம். ஆனால் பொதுவாக ஆடம்பரத் திருமணங்களிலே மங்கல வாத்தியம், (சிற்சில இடங்களில் நிகழ்ச்சிகள்) ஊர்வலம் என்பன நிகழும். இரவு நேரமாகையால் ஊர்வலம் அழகாகவும் இருக்கும். குடும்பத்தவரின் வசதிக்கேற்ப ஊர்வலம் அமையும். திருமணமாகாத பெண்ணொருவர் தமது தந்தையார் இறந்தபோது புலம்புவதாக அமைந்த கவிஞர் எம்.வீ. கிருஷ்ணாழ்வாரின் பாடலொன்றை இவ்விடத்திலே சுட்டுவது பொருத்தமானதாக இருக்கும். “சோதிபெற நன்றாகச் சோடித்த காரேறி விதிவரும் பவனி மேதினியிற் காணாமல் காதிற் பறைகேட்கக் கட்டியபூம் பாடையிலே நீதியின்றிப் போய் மறைந்தாய் முறையோ என் ஐயாவே' யாழ்ப்பாணக் குடாநாட்டிலே ஆடம்பரத் திருமணங்களிலே பல வகையான ஊர்வலங்கள் இருந்தன என்பதற்கு மேலே காட்டிய கவிதை சான்றாகும்.
திருமணச் சடங்குகள் முறையாக நடைபெற்ற பின் வாழ்த்துதல் என்ற அம்சம் பிரதானமானது. இன்றும் இந்த வழக்கம் உண்டு. அறுகரிசி போடுதல் என்று இதனைக் கூறுவர். இதனை விட வாழ்த்துப் பாக்கள் பாடும் வழக்கமும் இருந்தது. வாழ்த்துப் பாடலை எழுதி அச்சிட்டுக் கண்ணாடிச் சட்டத்தினுள் போட்டு மண மக்களுக்கு வழங்குவர். இன்றும் இந்த வழக்கம் உண்டு. இந்த வழக்கம் 19 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதிக்குப் பின்னரே பரவலாகியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அக்காலப் புலமையாளர்கள் பலர் சிறப்பான வாழ்த்துப் பாக்களைப் பாடியுள்ளனர். வாழ்த்துப் பாவுக்கான முறையியல் ஒன்றும் யாழ்ப்பாணத்திலே நிலவியது என்பதற்கு அக்கால வாழ்த்து மடல்கள் சான்றாகும். ஈழகேசரி பொன்னையாவின் மகளின் திருமணத்திற்குப் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை வாழ்த்துப்பா பாடினார். அந்த வாழ்த்துப்பா பின்னர் ஈழகேசரிப் பத்திரிகையிலும் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. பிராமணிய நடைமுறைகளின்படி (ஆகம முறைப்படி) நடைபெறும் திருமணங்களிலேயும் அதை

நெறிப்படுத்துபவர்களாகப் புகைப்படக் கலைஞர்களே (வீடியோ உட்பட) செயற்படுவதை இன்று அவதானிக்கலாம். ஆனால் இற்றைக்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர் (50 கள் 69 களிற் கூட) சலவை, சவரத் தொழிலாளர்களே திருமண நடைமுறைகளை ஒழுங்குபடுத்துபவர்களாக விளங்கினர். இன்று அந்த முறை முற்றாக மறைந்து விட்டது. நாமும் மறந்து விட்டோம்.
திருமணம் நிறைவு பெற்று (தாலிகட்டல், விருந்து முதலியன) மணமகள் - மணமகன் வீட்டிலேதான் தங்குவார். மூன்று நாட்கள் மணமகன் வீட்டிலே தங்கி நான்காம் நாள் பெண் வீட்டிற்கு (தமது) வீட்டிற்கு வந்து சேருவர். பெண் வீட்டிற்கு வரும் நான்காவது நாளில் நாலாஞ் சடங்கு என்னும் சடங்கு வெகு விமரிசையாக நடைபெறும். பெரும்பாலும் 'மாமிச போசனம்', 'மது வகைகள் முக்கிய இடம்பெறும். நாலாஞ் சடங்கு என்ற கொண்டாட்டம் மணமகள் வீட்டிலேயும் மணமகன் வீட்டிலேயும் நடைபெறும். பெரும்பாலும் மணமகன் வீட்டிலேயே சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இன்றும் இந்த வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.
நாலாம் சடங்கின் பின்னர் மணமக்கள் கோயில்களுக்குச் சென்று வழிபாடியற்றுவர். பின்னர் நல்லதொரு நாளிலே நாள்க்கடை என்ற நடைமுறையின்படி மணமக்கள் கடைக்குச் சென்று புதுப்பானை, சட்டி, உப்பு, மஞ்சள் முதலான பொருட்களை வாங்கி வருவர். அதன் பின்னர் புதுக்குடித்தனம் தொடங்கும்.
திருமணநடைமுறைகள் இன்று வாய்ப்பு வசதிக்கேற்ப மாற்றம் பெற்றுள்ளமையையும் குறிப்பிடவேண்டும.
யாழ்ப்பாணத்துத் திருமண முறைமைகளிலே காதல் திருமணம் ஒரளவுக்கு இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. பழந்தமிழ் மக்களின் அகத்திணை மரபிலே இடம்பெற்ற "உடன் போக்கு இங்கும் நடை பெற்றுள்ளது. காதல் திருமணங்களை இற்றைக்கு அரை நூற்றாண்டிற்கு முன்னர் யாழ்ப்பாணச் சமூகம் பெரிதும் வரவேற்கவில்லை. காதல் திருமணங்களை (உடன் போக்கை) கூடிக் கொண்டோடுதல் அல்லது கூட்டிக் கொண்டோடுதல் என்ற தொடர்களாலேயே அழைத்தன. உடன் போக்கு நிகழ்ந்தால் பெண்ணையும் பெண் வீட்டாரையுமே பெருமளவுக்கு விமர்சிப்பார்கள். யாழ்ப்பாணத்தில் வழங்கும் பல நாட்டுப் பாடல்கள் இக் கருத்தினையே காட்டி நிற்கின்றன. உதாரணமாக :
“தையரியாரிடை மையலிலே - எங்கள் தாண்டவி அண்ணனும் பூண்டுவிட்டார்’ என்றும் "சீதனம் வேண்டாம் ஆதனமும் வேண்டாம் சிங்கார நாச்சியைக் கண்டாலே போதும்' என்றும் வழங்குவதைச் சுட்டிக் காட்டலாம். காதல் திருமணங்களை வரவேற்காமைக்குப் யாழ்ப்பாணச் சமூகத்தின் கட்டிறுக்கமே பிரதான காரணம் எனலாம்.து

Page 13
EXPRESS NEWSPAPERS (CEY) (PVT) L
உடனுக்குடன் உங்கள் கையடக்கத்தெ
LuGaloid : reg(space) V
77OO7
இலக்கத்துக்கு ST
 
 
 

IMITED
ாலைபேசியில் தெரிந்துகொள்ளுங்கள்
irakesari என type செய்து
என்ற S அனுப்புங்கள்.

Page 14
கலைக்கேசரி கி 14 தொல்லியல்
இலங்கையில் ஆரம்பகால வர்த்தகம்
சாந்தினி அருளானந்தம்
விரிவுரையாளர், யாழ். பல்கலைக்கழகம்
இந்து சமுத்திரத்தின் மத்தியில் நித்திலமாக விளங்குவது இலங்கைத் தீவு. அமைவிடத்தின் சிறப்பாலும், அங்கு பொதிந்து கிடந்த முத்து, பாக்கு, இரத்தினம், யானை, வாசனைத் திரவியங்கள் முதலிய பொருட்களினாலும் பண்டைக் காலத்திலிருந்தே இலங்கை பல்வேறு நாடுகளினாலும் அறியப்பட்ட நாடாக விளங்கியது. ஆதலால் வெளிநாட்டவரின் மூலாதாரங்களில் இந்நாடு பல பெயர்களால் சுட்டப் படுவதைக் காண்கிறோம். இப்பெயர்களிற் பல இலங்கை நாட்டின் வளத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதை அவதானிக்கலாம். முத்து, இரத்தினம் முதலியனவற்றுக்கு இந்நாடு சிறப்புப் பெற்று இருந்தமையால் முறையே இந்து சமுத்திரத்தின் முத்து' என்றும், இரத்தின துவீபம்’
என்றும் சிறப்பிக்கப்பட்டமையை உதாரணமாகக்
கூறலாம். மேலும் இலங்கையின் நீண்ட (பெளத்த) இலக்கிய வரலாற்று மரபும், 19ஆம் நூற்றாண்டில்
 
 

வளர்ச்சியடையத் தொடங்கிய தொல்லியல் ஆய்வுகளும் இந்நாட்டின் வளத்தை, அவ்வளம் மூலம் இலங்கையர் பெற்ற வாழ்வியல் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றன.
வளம் என்பது செழிப்பினைச் சுட்டி நின்றாலும் அச்சொல் பல நிலைகளில் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். வளம் என்பது இயற்கை வளம், தொழில் வளம், மனித வளம், செல்வ வளம், கைத்தொழில் வளம் எனப் பல வகைகளில் பாகுபடுத்தி நோக்கப்படினும் பொருளாதார அடிப்படையிலேயே இச்சொற் பதம் இக்கட்டுரையில் கையாளப்படுகின்றது. பண்டைக் கால இலங்கையைப் பொறுத்தவரை நீர்ப்பாசன விவசாயமும் வர்த்தகமும் பொருளாதாரத்தில் அதி முக்கியத்துவம் பெற்றிருந்தன. ஆயினும் வர்த்தக பொருளாதாரம் இலங்கையின் வரலாற்றில் முக்கியமான மாற்றங்களுக்கும், வெளிநாடுகளுடன் தொடர்பு கொண்டு அவற்றின் வாயிலாக பல்வேறு செல்வாக்குகளையும், விருத்திகளையும் பெறுவதற்கும் 5 ITUGOOTLDIT35 விளங்கியமை குறிப்பிடத்தக்கது.
வர்த்தக வளர்ச்சி
வரலாற்று ரீதியில் நோக்கும்போது விவசாயம், நீர்ப்பாசன விவசாயம் என்பன வணிகத்தின் வளர்ச்சிக்குத் துணை நின்றதைக் கண்டு கொள்ளலாம். பண்டைய உலக
நாகரிகங்களின் தோற்றம், எழுச்சி என்பவற்றிலும்

Page 15
இப்பண்பு காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதாவது
வண்டல் மண்ணின் செழிப்பு விவசாயம் ஊடான மிகையுற்பத்திக்கும், மிகையுற்பத்தி பண்டங்களின் பரிமாற்றத்திற்கும், பரிமாற்றம் பொருளாதார ஊடாட்டத்திற்கும் வழி வகுத்ததைக் காண்கிறோம். இவ்வகையில் இலங்கையின் நீர்ப்பாசன வளர்ச்சி, அதன் மூலம் பெற்ற வளம் பண்டப்பரிமாற்றத்திற்கு வழி வகுத்ததெனக் கூறலாம். மேலும் ஒரு நாட்டின் எல்லாப் பிராந்தியங்களும் வளமானதாகவோ, பொருளாதார வளமுள்ளதாகவோ காணப் படுவதில்லை. அதைப்போல எல்லா நாடுகளும் சகல பொருளாதார வளங்களும் கொண்டதாகக் காணப்படுவதில்லை. இந்நிலையில் பிரதேசங்களுக்கு இடையிலும், நாடுகளுக்கிடையிலும் வளங்கள் அல்லது பொருட்கள் பரிமாறப்படுவது அவசியமாகின்றது.
ஆரம்பத்தில் இப்பரிமாற்றமானது உள் நாட்டுக்குள்ளும் பின்னர் நாடு கடந்தும் வளர்ச்சியடைந்த நிலையில் அது உள்நாட்டு வர்த்தகமாகவும், வெளிநாட்டு வர்த்தகமாகவும் விரிவடைந்தது. வணிக பொருளாதாரத்தின் பின்னணியில் இலங்கை பிரதேசத் தொடர்புகளையும், வெளிநாட்டுத் தொடர்புகளையும் பெற்றமையால் அதன் பண்பாடும் பல மாற்றங்களை உள்வாங்கி வளரக் கூடிய சூழ்நிலையைப் பெற்றுக் கொண்டதெனலாம். பண்பாட்டுப் பரவலுக்கான காரணங்களை ஆராய்ந்த டி.ஜி.ஹோல் வணிகத்தையே முதன்மைப்படுத்துகின்றார். இலங்கையின் பண்பாட்டு வளர்ச்சியிலும், எழுச்சியிலும் கூட வணிகம் பிரதான பங்களிப்புச் செய்ததை அவதானிக்கலாம்.
பண்டமாற்று வர்த்தகம். ஆரம்ப காலத்தில் நாணயப் புழக்கமற்ற நிலையில் பண்டமாற்று வர்த்தகமே நடைபெற்றது. அதாவது ஒரு மனிதன், தன் தேவைக்குரியதை எடுத்துக் கொண்டு மீதமுள்ள தன் பொருட்களை மற்றவனுக்குக் கொடுத்து, தனக்குத் தேவையானதைப் பெற்றுக் கொள்வதே இதன் அடிப்படையாகும். இம்முறையே உலகின் அனைத்துப் பகுதிகளிலும் ஆரம்பத்தில் பின்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சங்க இலக்கியங்களை அவதானிக்கும் போது பண்டைய தமிழகத்தில் பண்டமாற்று முறையே பெருவழக்காகக் காணப்பட்டதை அவதானிக்கலாம். உரோமானியர் தங்கத்தைக் கொடுத்து மிளகைப் பண்டமாற்றாகப் பெற்றனர். நாணயப் புழக்கம்
 

ថាប្រញញឹមឺរ៉ាំរ៉ៃរឺ
15
அறிமுகமாகிய பின்னரும் பண்டமாற்று வர்த்தகம் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வந்தமையை சான்றுகள் புலப்படுத்துகின்றன.
மகாவம்சத்தில் விஜயன் வருவதற்கு முன் 'அமானிடரான இயக்கர், நாகர் தமது பொருட்களை ஓரிடத்தில் வைத்து விட்டு மறைவிடத்தில் இருப்பார்கள். சிலர் அவ்விடத்திற்கு வந்து அப் பொருட்களை எடுத்துக் கொண்டு தாம் கொண்டு வந்த பொருட்களை அவ்விடத்தில் வைத்துச் செல்வர்” என்ற குறிப்பு இடம் பெற்றுள்ளமை பண்டமாற்று வர்த்தகம் ஆரம்ப கால இலங்கை மக்களிடையே வழக்கில் இருந்ததைப் புலப்படுத்துகின்றது. முதலில் அயலவர்களோடு நடைபெற்ற வர்த்தகம் பின்னர் போக்குவரத்தின் அறிமுகத்தோடும், விருத்தியோடும் அயற் பிரதேசத்திற்கும், அயல் நாடுகளுக்கும் விரிவடைந்தது.
உள்நாட்டு வர்த்தகம்
நாட்டின் உள்ளார்ந்த பகுதிகளில் பொருட்களை அல்லது
வளங்களைப் பரிமாறிக் கொள்வது உள்நாட்டு வர்த்தகத்தின் பாற்படும். கால்நடையாகவோ அன்றிப் போக்குவரத்து சாதனங்களைப் பயன்படுத்தியோ இவ்வாறான வர்த்தகம் மேற்கொள்ளப்படுவது
வழக்கமாகும். வரலாற்று ரீதியாக நோக்கும்போது சக்கரங்களின் கண்டுபிடிப்பும், அதன் பயன்பாடும் வர்த்தகத்தின் துரித வளர்ச்சிக்கு ஏதுவாக இருந்ததை அவதானிக்கலாம். இலங்கைக்கும் இது பொருத்தமாக அமையும்.
இலங்கையின் உள்நாட்டு வர்த்தகம் தொடர்பாகப் பல தொல்லியற் சான்றுகள் கிடைக்கப் பெறுகின்றன. ஈரத்தாழ் வலய மற்றும் இடைத்தர வலயத்திலிருந்து இரத்தினக் கற்கள் நாட்டின் பிற வலயங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன. சிப்பியோடுகளைப் போல முத்து, உப்பு போன்ற கடல்படு திரவியங்கள் நாட்டின் உட்பாகத்திற்குப்
பரந்துள்ளமைக்கான சான்றுகளும் கிடைக்கப்

Page 16
கலைக்கேசரி கி 16
பெறுகின்றன. யாழ்ப்பாணக் குடாநாட்டின் பண்டைய தலைநகரமாக விளங்கியதாகக் கருப்படும் கந்தரோடைக்கும் உரோகணை இராச்சியத்திலுள்ள மகாகமைக்கு இடையே நெடுங்காலமாக உள்நாட்டு வணிகத் தொடர்புகள் இருந்து வந்துள்ளமையைத் தொல்லியல் சான்றுகள் புலப்படுத்துகின்றன. மகாகமையிலிருந்தும் அயலிலுள்ள திசமாறகமவில் இருந்தும் மிக அண்மைக் காலத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட நீள் சதுரமான இலச்சுமி நாணயங்கள் கந்தரோடையிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட இலச்சுமி நாணயங்களைப் பெருமளவுக்கு ஒத்துக் காணப்படுகின்றன. இதன் அடிப்படையில் மேற்கூறப்பட்ட இடங்களுக்கிடையிலான வர்த்தகத் தொடர்பினை விளங்கிக் கொள்ள முடிகின்றது.
வெளிநாட்டு வர்த்தகம்
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே வெளிநாட்டு மக்களுடன் வணிகத் தொடர்புகளை இலங்கை மக்கள் கொண்டிருந்தனர். சிறப்பாக இரும்புக் காலமென அழைக்கப்படும் பெருங்கற் காலத்திலேயே பண்டமாற்றத்திற்குரிய வர்த்தக மையங்களின் தோற்றம் ஏற்பட்டதாகவும், அவை ஒன்றோடொன்று வலைப் பின்னலாக வர்த்தக மார்க்கங்களால் இணைக்கப்பட்டிருந்ததாகவும் விளங்கியிருந்தமையை சுதர்சன் செனிவரத்தின சுட்டிக் காட்டுகின்றார். (இந்திர இல.தமிழர்,பக்.89). பெருங்கற்கால மையங்களில் வெளிநாட்டு வர்த்தகத்திற்குரிய பொருட்கள் கிடைக்கப் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய 3000 ஆண்டுகளுக்கு முன்னர் பண்டைக் கால இலங்கையின் பண்பாட்டு விருத்தி, நகர நாகரிகத் தோற்றம் என்பன வெளிநாட்டு வணிகத் தொடர்புகளால் ஒரு தனித்துவமான
 

நிலையை பெற்றுக் கொண்டது. தூர வணிகர்களினால் சேது சமுத்திரத்தின் இரு கரைகளிலும் நகர மையங்கள் தோன்றிப் பின்னர் மதிரை (பிற்காலத்தில் மதுரை), தம்பபன்னி என்பவற்றைச் சூழ குறுநில அரசுகள் உருவானதாக இந்திரபாலா குறிப்பிடுகின்றார். (இந்திர இல. தமிழர் 67). இவ்வகையில் அரசின் தோற்றத்திற்கும் வெளிநாட்டு வணிகம் பிரதான காரணமாக அமைந்த தன்மையினை அவதானிக்கலாம். சேனன், குத்திகன் என்ற தென்னகக் குதிரை வணிகர்கள் இலங்கையில் அரசாட்சி செய்த வரலாற்றினையும் மகாவம்சம் தருகின்றது.
இந்தியாவுடனான வர்த்தகம் நிலவியல் அடிப்படையில் பண்டைய இலங்கையுடன் தொடர்புபடுத்தப்படும் இந்தியாவுடன் பண்பாட்டு ரீதியிலும் நெருக்கமாக தொடர்புகள் காணப்படுகின்றமையைப் பல்வேறு அறிஞர்களும் சான்றுகளின் பின்னணியில் எடுத்துக் காட்டியுள்ளனர். இலங்கைக்கு மிக அருகிலுள்ள நாடு என்ற வகையில் இந்தியாவை விலக்கி பிற நாடுகளுடன் தொடர்பு கொள்வதென்பது பண்டைக் காலத்தில் சாத்தியமானதல்ல. தமிழ் நாடு, கங்கைச் சமவெளி, குஜராத், கேரளம், மற்றும் கிழக்கிந்தியா போன்ற இடங்களிலிருந்து இந்திய வணிகர்களின் வருகை இலங்கையை நோக்கி இடம் பெற்றுள்ளன. இப்பண்கட்டுவவில் கிடைத்த பெருங்கற் காலத்திக்குரிய மாலையின் மணிகள் இலங்கையில் கிடைக்கப் பெறாதவை என்றும், அவை இந்திய நாட்டுக்குரியதாக இருக்கலாமென்றும் கூறப்படுவது கவனத்திற் கொள்ளத் தக்கதாகும். உலகின் முதன்மை நாகரிகங்களுள் உள்ளடங்குகின்ற சுமேரிய, எகிப்திய நாகரிகங்களுடன் சிந்துவெளி நாகரிகம் தொடர்பு கொண்டிருந்தமைக்குச் சான்றுகள் எடுத்துக் காட்டப்படுகின்றன. மன்னார்க் குடாவில் விளைந்த முத்துக்களை சிந்துவெளி மக்கள் பெற்றுச் சென்றனர் என்பது அண்மைக் கால ஆய்வுகளின் முடிபாகும். அசிரியர், பபிலோனியர், அராபியர், பினிசியர் போன்றோரும் இந்தியாவுடன் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். (கந்தையா. ந. சி., 2002 மறுபதிப்பு). தமிழர் சரித்திரம், அமிழ்தம் பதிப்பகம், சென்னை. 89). இவர்களிற் பலர் இந்தியாவுடன் அதிக நெருக்கமுடைய, பாரம்பரியத் தொடர்புடைய இலங்கையைப் பற்றி அறிந்தோ அன்றிச் சென்றோ இருப்பர் என்பதை மறுக்க (LPL)-LIslg5).
பொதுவாக வரலாற்று ஆய்வாளர்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தின் முடிவாகச் சங்க காலத்தைக் கொள்வர். அக்கால இலக்கியங்களில் வணிகத்தின் சிறப்பினை எடுத்துக் காட்டும் பாடல்கள் பலவற்றை அவதானிக்கலாம். அவற்றில் இலங்கையுடனான வணிகம் பற்றிய சில குறிப்புக்களுமுண்டு. இந்திய வணிகச் சிறப்பை உணர்த்தும் வகையில் பின்வரும் பாடல் காணப்படுகின்றது.

Page 17
'நீரினின்று நிலத்தேற்றவும்
நிலத்தினின்று நீர்ப்பரப்பவும் அளந்தறியாப் பல பண்டம் வரம்பறியாமை வந்தீண்டி. அதுமட்டுமின்றி இலங்கையின் வணிகர்கள் தென்னிந்தியாவில் சிறப்புப் பெற்றிருந்ததையும் அறியலாகின்றது. அரிட்டாபட்டி என்னும் ஊரில் கிடைத்த
66
தமிழ்க் கல்வெட்டில் 'ஊர் ஊராகச் சுற்றி வணிகம் செய்யும் ஈழத்து வணிகர்.” என்ற குறிப்புக் கிடைக்கப் பெறுகின்றது. சித்தன்னவாசல், புகளுர், மாங்குளம் ஆகிய இடங்களிலிருந்து கிடைக்கப் பெற்ற கல்வெட்டுக்கள் இலங்கைத் தமிழ் வணிகர் பற்றிய செய்திகளைக் கொண்டிருக்கின்றன.
பிறநாடுகளுடனான வர்த்தகம் பண்டைக் காலத்தில் இலங்கையுடன் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்த நாடுகளைப் மேற்காசிய நாடுகள், தெற்காசிய நாடுகள், மத்திய தரை நாடுகள் என வகைப்படுத்தலாம்.
கிறிஸ்தவ சகாப்தத்தின் ஆரம்ப காலங்களில் இந்நாடுகளின் வர்த்தகத்தில் இலங்கை பிரதானமான (60), LD ULILDITd5 விளங்கியிருந்தமையை உள்நாட்டு, வெளிநாட்டுச் சான்றுகள் புலப்படுத்துகின்றன. ஆரம்பத்தில் தென்னிந்தியாவிலிருந்து இலங்கைப் பொருட்களைப் பெற்றுக் கொண்ட கிரேக்க, உரோமர் இக்காலந்தொடங்கி இலங்கையிலிருந்தே தமக்குத் தேவையான பொருட்களை நேரடியாகப் பெற்றுக் கொண்டனர்.
இலங்கையுடனான வணிக உறவுகளை புலப்படுத்தும் வகையில் இலங்கையின் பல பாகங்களிலும் உரோம நாணங்கள், மட்பாண்டங்கள், மதுச்சாடிகள் போன்றன கிடைக்கப் பெறுகின்றன. கிரேக்க, உரோம இலக்கியச் சான்றுகளிலும் இந்நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் பற்றிய சில செய்திகளுண்டு.
இலங்கையின் பல பாகங்களிலும் சீன, அராபிய வர்த்தக நடவடிக்கைகளைப் புலப்படுத்தும் சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பண்டைய வர்த்தக கடல், தரை மார்க்கம், நாணயங்கள் பழங்காலம் தொட்டுப் பண்டங்களைப் பெற்றுக் கொள்வதற்காக, பொருட்களை மட்டுமல்லாது நாணயங்களையும் மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். அவை புழக்கத்திற்கு வருவதற்கு முன்னரே கனிகள்,
கிளிஞ்சல்கள் முதலியவற்றைப் பொருட்கள் வாங்குவதற்காக இடைப் பொருட்களாகப் பயன்படுத்தியுள்ளனர்.
மேலும் களிமண் உருண்டைகள், உடைந்த மட்பாண்டத் துண்களால் ஆக்கப்பட்ட தட்டு வடிவத்தை ஒத்த தட்டுக்கள் போன்றனவும், பெறுமதியுடைய கற்கள், முத்துக்கள், யானைத் தந்தத் துண்டுகள் முதலியவும்

&យញញតែអែអ្វី
17
இடைப் பொருட்களாகப் பயன்படுத்தப்பட்டதை சந்திரிகா ஜயசிங்க எடுத்துக் காட்டுகின்றார். இவற்றின் தொடர்ச்சியாக படிப்படியாக நாணயப் புழக்கம் ஏற்ப்பட்டதை நாணயவியலாளர் எடுத்துக் காட்டுவர்.
இலங்கையில் பல்வேறு காலப் பகுதிக்குரிய பல்வேறுபட்ட நாணயங்கள், உலோகக் கட்டிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. சிறப்பாகக் கஹபண’ (பாளி) அல்லது கார்கூழ், புராண (சமஸ்கிருதம்) எனப்பட்ட நாணயமே இலங்கையின் மிகப் புராதனமாகக் கருதப் படுகின்றது.
இவை கி.மு. 3ஆம், 2ஆம் நுாற்றாண்டுகளில் இந்தியாவில் புழக்கத்தில் வழங்கின. இவ்வகை நாணயங்கள் இந்தியாவில் இருந்து வர்த்தகர்களினால் கொண்டு வரப்பட்டவை என்பது ஆய்வாளரின் முடிபு. வெள்ளி, செப்பு, தங்கம், கலப்புலோகம் என்பவற்றினால் செய்யப் பட்ட நாணயங்கள் பொறிப்புக்களைக் கொண்டும், வேறுபட்ட வடிவங்களிலும் கிடைத்துள்ளன. தவிரவும் நாணய வார்ப்புக்கான அச்சுக்கள் கெடிகே, அக்குறுகொட ஆகிய இடங்களில் கிடைக்கப் பெற்றுள்ளமை இலங்கையில் நாணய உருவாக்கம் மேற்கொள்ளப்பட்டமைக்கான சான்றாக அமைகின்றன.
தென்னிந்திய, வட இந்திய, கிரேக்க, உரோம, பாரசீக, சீன, அராபிய நாணயங்களும் இலங்கையில் காலத்துக்குக் காலம் பெறப்பட்டு வருகின்றன. அவற்றுள் பல வணிக நோக்குக் கருதி இந்நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டாலும், சில அரசியல் ஆதிக்கத்தின் பின்னணியையும்
கொண்டுள்ளன. உதாரணமாக இலங்கையில் சோழர் ஆட்சியின் போது ஈழக்காசு புழக்கத்திற்கு
விடப்பட்டமையைக் காணலாம்.

Page 18
អ៊ែងហ្គ្រាម៉ារ៉ៃរឺ 18
துறைமுகங்கள்
ஆரம்பத்தில் தரை வழியான வர்த்தக தொடர்புகளும், தொடர்ந்து கடல் வழியான வர்த்தகத் தொடர்புகளும் விருத்தியடைந்தாலும், LaToT இவ்விரு வழிகளிலும் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. உள்நாட்டு வர்த்தக நடவடிக்கைளிலும் கடல் வழி வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத் தக்கது. உதாரணமாக காலி, மாத்தளை போன்ற தென்பகுதியிலிருந்து யானைகள் கொண்டு வருவதற்கு ஊர்காவற்றுறை துறைமுகம் பயன் படுத்தப்பட்டது. மட்டக்களப்பு, கண்டி முதலிய இடங்களிலிருந்து கடல் மார்க்கமாக உள்ளூருக்குள் வர்த்தகப் பரிமாற்றம் நடை பெற்றுள்ளது.
வட மேற்கிலங்கையில் மாந்தைத் துறைமுகமும், வட கிழக்கில் கோகர்னத் துறைமுகமும் வட இலங்கையில் ஜம்புக்கோளப்பட்டினமும் பண்டைக் காலம் முதலே முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்களாகவும், உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகத்தில் மட்டுமின்றிப் பண்பாட்டுப் பரவலிலும் பங்கெடுத்துக் கொண்டன. ஹிப்பலஸ் காற்றின் கண்டுபிடிப்பும், ஆழ்கடலில் கப்பலைச் செலுத்தும் முறைகளின் விருத்திகளும் கடல் சார் வணிகத்தில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தின. மாந்தையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகத்தில் பண்டைக்காலம் முதலே அப்பிராந்தியம் ஈடுபட்டிருந்ததை நிரூபணம் செய்கின்றன. கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் கொலம்பஸின் குறிப்புக்களில் மாந்தைத் துறைமுகத்தில் எகிப்திய, பாரசீக, அராபிய, கிரேக்க, உரோம, இந்திய மரக் கலங்கள்
நிற்பதைக் கண்ணுற்றதாகக் குறிப்பிடப் படுகின்றமை கவனத்திற் கொள்ளத்தக்கதாகும். ஜம்புக்கோளத் துறைமுகத்தினூடான
சங்கமித்தையின் வருகையையடுத்து அத்துறை முகத்துக்கும் தமிரலிப்தித் துறைமுகத்திற்கு இடையே வணிகத் தொடர்புகள் ஏற்பட்டிருந்ததாக மகாவம்சம் குறிப்பிடுகின்றது. இவை மட்டுமன்றி இலங்கையில் காணப்பட்ட பல்வேறு துறைமுகங்களும் காலத்துக்குக் காலம் வர்த்தக நடவடிக்கைகளில் முக்கியத்துவம் பெற்றிருந்தது.
வணிகரும் வணிகக் கூட்டுக்களும் இலங்கையிலிருந்த வணிகக் குழுக்கள் பற்றியும், அவை இயங்கிய முறைகள் பற்றியும் அறிவதற்குச் சில சான்றுகள் காணப்படுகின்றன. இலங்கைக்குள் காலத்துக்குக் காலம் வருகை தந்த வணிகர் 'வணிஜ என்ற பெயரால் சுட்டப்பட்டனர். கி.மு.4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தோணி காலக் கல்வெட்டில் வணிகக் குழுவின் இயங்குமுறை பற்றி
 

பல்கலைக்கழக மாணவர்கள் மாந்தையில் கண்டெடுத்த தொல்பொருள் சின்னங்கள்
தொல்லியல், அகழ்வாய்வு, சாசனவியல் என்பவற்றில் மிகுந்த பயிற்சியும் அனுபவமும் பெற்ற தென்னிந்தியாவில் உள்ள பேராசிரியரான எ.சுப்பராயுலு முதலானோர்களை அழைத்து வருடந்தோறும் பயிற்சி நெறிகளை நடத்தி வரும் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் 2012ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் சாசனவியலின் உயர்நிலைப் பயிலரங்கு ஒன்றினை நடத்தியதோடு, களப்பயிற்சியையும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தது.
இம்முறை திணைக்களம் மன்னாரிலுள்ள திருக்கேதிச்சரத்திற்கு மாணவர்களை பேராசிரியர்களுடன் அழைத்துச் சென்றது. மாந்தையில் முன்பு அகழ்வாய்வுகள் நடைபெற்ற இடத்திற்குச் சென்ற மாணவர்கள் தரையிலே கணிசமான அளவு தொல்பொருள் சின்னங்களை கண்டெடுத்தனர். அணி மணிகள், கூரை ஒடுகள், மூக்குக் கெண்டி முனைகள், முத்துச் சிப்பி, சீன, அராபிய, உரோம, தென்னிந்திய பிராந்தியங்களில் இருந்து உற்பத்தியான மட் கலங்களின் ஒடுகள் போன்றன கிடைத்தன. அவை கி.பி 1 - 13ஆம் நூற்றாண்டு காலத்துக்குரியவை.
கடுகு, மிளகு, பருப்பு, கடலை அளவிலான நூற்றுக்கும் மேற்பட்ட பல வண்ண மணிகள் கண்டுபிடிக்கப்பட்டமை சிறப்பம்சமாகும். இங்கு கிடைத்த மணிகள் மூன்று வகைப் பட்டுள்ளன. அவையாவன: கண்ணாடி மணிகள் (Glass Beads), பளிங்குக் கல்மணிகள் (Quartz Beads), பசை மணிகள் (paste Beads) ஆகியனவாகும். கண்ணாடி மணிகள் பச்சை, மஞ்சள், கருநீலம் மற்றும் நீலம் போன்ற நிறங்களில் காணப்படுகின்றன. இம்மணிகள் பொதுவாக உருண்டை, நீளம் ஆகிய வடிவங்களில் உள்ளன. அத்தோடு, வளையல் செய்வதற்கு அறுத்த சங்குகளின் கழிவுகளும் ஏராளமாகக் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன் மூலம், மாந்தையில் முக்கிய தொழிலாக சங்கறுத்து வளையல்கள் செய்து, மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல் இடம்பெற்றது என அறிய முடிகின்றது. கண்ணாடி வளையல்கள் இப்பகுதியில் உருவாக்கம் செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்க வேண்டும். மேற்சொன்ன மணிகள்
தமிழகத்திலுள்ள அரிக்கமேடு, மணிக்கொல்லை மற்றும்
பொருந்தல் ஆகிய இடங்களிலும் உற்பத்தி செய்யப்பட்டன. கி.மு முதலாம் நூற்றாண்டு முதல் உரோமர்கள் தமிழகக் கடற்கரைப் பகுதிகளிலும் உள்நாட்டிலும் இம்மணிகள் ற்றும் LS) ஏலம் முதலான வாசனைத்

Page 19
செய்துள்ளன கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டங்கள் மூலம் அறிய
முடிகிறது. உரோமானிய பானை ஒடுகளுடன் அரேபிய நாட்டு இஸ்லாமிய மட்பாண்டங்கள், சீன பீங்கான் வகை மட்பாண்டங்கள் மாணவர்களின் ஆய்வின் போது கிடைக்கப் பெற்றுள்ளன. கிடைக்கப்பட்ட சீன பீங்கான் பாண்டங்களில் பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் கறுப்பு-சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட மட்பாண்டங்கள், பளபளப்பாக்கப்பட்ட கறுப்பு மட்பாண்டங்கள் என்பனவும் கிடைக்கப்பட்டுள்ளன.
உரோமானியர், அரேபியர் மற்றும் சீன வணிகர்கள் மாந்தைக்கு வந்து, சங்கு வளையல்கள், கண்ணாடி வளையல்களைத் தங்களது நாட்டிற்குக் கொண்டு சென்றுள்ளனர். இதனை இங்கு கிடைக்கும் சான்றுகளும் மெய்ப்பிக்கின்றன. மாந்தை மக்கள் நகர வாழ்க்கை வாழ்ந்துள்ளனர் என்பதை இங்குள்ள கூரை ஒடுகள், விளயாட்டுப் பொருள்கள், அணி மணிகள், எடுத்துரைக்கின்றன.
மாந்தை வாழ்விடப் பகுதி மற்றும் பட்டினப் பகுதி சுமார் பத்து ஏக்கர் பரப்பளவில் விரவியுள்ளன. தற்போதைய கள ஆய்வு சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவிலேயே மேற்பரப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுபோன்று இலங்கையின் பிற பகுதிகளிலும் தொல்லியல் ஆய்வு மேற்கொள்ளப்
படுமேயானால், அக்கால வாணிபம், சமூகம் மற்றும்
பொருளதார நிலையை ஓரளவு மீளுருவாக்கம் செய்ய முடியும் என்பதை இக்கள ஆய்வு முன்னிறுத்துவதாக உள்ளது
 
 

& கலைக்கேசரி 19
குறிப்பிடப்பட்டுள்ளது. இவை நியம என்ற பெயரால் குறிக்கப்பட்டிருந்தன. பெரிய புளியங்குளக் குகைக் கல்வெட்டில் தமிழ் வர்த்தகர்கள் சிறுசிறு குழுக்களாக பிரிந்து செயற்பட்டமையை உணர்த்துகின்றன. புக, புகிய என்ற பெயரிலும் சில வணிகக் குழுக்கள் செயற்பட்டிருந்தன
பெரிய புளியங்குளத்தில் கிடைத்த கல்வெட்டுக்களில் தமிழ் வணிகர்கள் தமிட வணிக" எனச் சுட்டப்படுகின்றனர். மேலும் காம்போஜாஸ் எனப்பட்ட வணிக குழாத்தினரும் இலங்கையின் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டதையும், அவர்களது குடியேற்றங்கள் இலங்கையில் இருந்தன என்பதையும் பரணவிதான எடுத்துக் காட்டியுள்ளார்.
அநுராதபுரத்துக் கற்பீடக் கல்வெட்டானது பண்டைய தலைநகரில் வணிக நடவடிக்கைக்கு இடமளிக்கப்பட்டிருந்ததைப் புலப்படுத்தும் முக்கிய சான்றாக அமைகின்றது.
தென்னிந்தியாவில் பல்லவப் பேரரசின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து வணிகக் கூட்டுக்கள் பலம் வாய்ந்தனவாகவும், இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளுக்கிடையே பண்பாட்டு பரவலினை எற்படுத்தியனவாகவும் வளர்ச்சி பெற்றதைக் காணலாம்.
செட்டிகள், மணிக் கிராமத்தார், நான்கு நாட்டார், குமாரகணம் போன்றன குறிப்பிடத்தக்க வணிகக் குழுவினராக விளங்கினர். கி.பி. 9ஆம் நூற்றாண்டளவில் தென்னிந்தியாவில் சோழர் பெரும் பேரரசை அமைத்தபோது வணிக கணங்களின் செல்வாக்கும் அதிகாரமும் மேனிலை பெற்றிருந்ததை தென்னிந்திய, இலங்கைச் சான்றுகள் உணர்த்துகின்றன.
சோழருக்கு முன்னதாக இந்து சமுத்திரத்தில் அராபிய முஸ்லிம் வணிகர்கள் இலங்கை, இந்தியா, சீன மத்திய தரை, தென்கிழக்காசிய நாடுகளிடையே வர்த்தக மேலாண்மை பெற்றிருந்ததோடு, அந்நாடுகளின் வரலாற்றிலும் செல்வாக்குச் செலுத்தியிருந்தனர்.
இலங்கையின் ஆரம்ப BPITG) வர்த்தக வரலாற்றினை நோக்கும்போது, அது தனித்து பொருளாதார விருத்தியாக மட்டும் அமையாது அரசியல், பண்பாட்டு அம்சங்களின் வளர்ச்சிக்குரிய தூண்டுகோலாகவும் அமைந்திருந்தமையைக் காணலாம்.
சிறப்பாக வெளிநாட்டு வணிகம்சார் உறவுகள் இலங்கையின் தனித்துவத்துக்கும், செழிப்புக்கும், வரலாற்றுச் சிறப்புக்கும் பங்களிப்புச் செய்தமையை அவதானிக்கலாம்.இ

Page 20

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி
பெட்டுக்கோட்டை யாழ்பாணக் கல்லூரி குடாநாட்டிற்கு மட்டுமல்ல இலங்கை முழுமையாகவும் மிகச்சிறப்பான முறையில் கல்விப் பணியாற்றி உயர்ந்த கல்வியறிவு மிக்க சமுதாயத்தை உருவாக்குவதில் சிறந்த பங்களிப்புச் செய்து, மங்காப் புகழுடன் விளங்குகின்றது. அமெரிக்கன் மிசனரியினால் பல்வேறு இன்னல்களுக்கும் இடையூறு களுக்கும் மத்தியில் ஆரம்பிக்கப்பட்டதாக கல்லூரியின் ஆரம்பகால வரலாறு அமைகின்றது.
டானியல் பூவர் அமைத்த பல்கலைக்கழகக் கல்லூரி
மிஷனரிமார் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான தோமஸ் ஜெபர்ஸன் கல்வி தொடர்பாகக் கூறிய கருத்துக்களை முழுமையாக நம்பினார்கள். 'கல்வியே சகல விதமான முன்னேற்றத்திற்கும் ஒரே வழி’ என்ற தோமஸ் ஜெபர்ஸன் கருத்தை மதித்தார்கள். டானியல் பூவர் மிகவும் ஒளி பொருந்திய சமுதாயமான மசாசூசெட்ஸ் மாநிலத்தில் இருந்து வந்தவர். ஆகவே அவர் கல்வியை வழங்குவதில் மிகவும் உற்சாகத்துடன்

Page 21
உழைத்தார். கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்கு வாசிக்கும் பரம்பரை ஒன்றை உருவாக்குவது அவசியம்என்று உணர்ந்த அவர், அந்த நோக்கத்துடனேயே தமிழ்ப் பள்ளிக் கூடங்களை அமைக்கத் தொடங்கினார்.
1816 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தெல்லிப்பழையில் தமிழ்ப் பள்ளி ஒன்றை அவர் நிறுவினார். அப்பள்ளியின் பொறுப்பாசிரியராக டானியர் பூவரே செயற்பட்டார். அப்பள்ளியில் 30 பிள்ளைகள் கல்வி கற்க வந்தார்கள். சிறிது காலத்துக்குப் பின்னர் அவர் மல்லாகத்தில் ஒரு தமிழ்ப் பள்ளியை நிறுவினார். தெல்லிப்பளை, மல்லாகம் ஆகிய பாடசாலைகள் அக்காலத்தில் Native Free Schools என்று அழைக்கப்பட்டபோதும், அங்கு ஆங்கிலமும் கற்பிக்கப்பட்டது. தெல்லிப்பளை, மல்லாகம் பள்ளிகளுக்குப் பின்னர் டானியல் பூவர் மயிலிட்டி, மாவிட்டபுரம் ஆகிய இடங்களில் பாடசாலைகளை அமைத்தார். டானியல் பூவரின் கல்வி முன்னேற்றத்தைப் பற்றி 1818 ஆம் ஆண்டு மிஷன் பத்திரிகை இவ்வாறு குறிப்பிடுகிறது.
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி தொடர்பாக பேராயர் கலாநிதி எஸ். ஜெபநேசன் அடிகளாரை அவரது இல்லத்தில் கலைக்கேசரிக்காகச் சந்தித்தோம். அந்த உரையாடலின் தொகுப்பாக இக்கட்டுரை அமைகிறது.
'றிச்சேட்ஸ் அவர்களாலும், மெக்ஸ் அவர்களாலும் வட்டுக்கோட்டையில் ஒரு முறையான பள்ளிக்கூடத்தை அமைக்க முடியவில்லை. ஆனால் எட்டுப் பிள்ளைகள் ஆங்கிலம் பயில்வதற்காக மிஷன் வீட்டிற்கு வருகிறார்கள். தெல்லிப்பளையிலுள்ள டானியல் பூவர் தமது முதலாவது குடியமர்விலேயே ஒரு பள்ளிக் கூடத்தை ஆரம்பித்து விட்டார். ஒரு சில வாரங்களுக்குள்ளேயே முப்பது சிறுவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.”
அமெரிக்கன் மிஷன் விடுதிப் பாடசாலைகளில் கல்வி கற்ற மாணவர்களின் பேரூக்கம், திறமை ஆகியவற்றைக் கண்ட டானியல் பூவருக்கு உற்சாகம் கரைபுரண்டது. அதனால் அம்மாணவர்களுக்கு ஒர் உயர் கலாபீடத்தை நிறுவ விரும்பினார். இதன் பொருட்டு 1823 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பணிபுரிந்த மிஷனரிமார் ஒரு மனுவைத் தயாரித்ததுடன் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இடங்களில் உள்ள தமது நண்பர்கள், நலன் விரும்பிகள் ஆகியோருக்கு அனுப்பி வைத்தார். அவ்வாறு அனுப்பப்பட்ட கொள்கைப் பிரகடனத்தில் அக்கல்விக் கழகத்தின் நோக்கங்களைத் தெளிவாக விளக்கிக் குறிப்பிட்டார். அதன் பிரகாரம் "ஆற்றல் உள்ள சுதேச வாலிபர்களுக்கு ஆங்கிலத்தில் பூரண அறிவை வழங்குவது' முதலாவது நோக்கமாகவும், 'தமிழ் இலக்கியத்தை விருத்தி செய்வது' இரண்டாவது நோக்கமாகவும் அக்கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப் பட்டிருந்தது.

& கலைக்கேசரி
21
இதேவேளை 1823 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் திகதி முன்னோடிக் கல்லூரியாக மத்திய பாடசாலை ஒன்று வட்டுக்கோட்டையில் நிறுவப்பட்டது. இவ் விடயம் தொடர்பாக 1823 ஆம் ஆண்டு மிஷனரிமார் எழுதிய கடிதம் ஒன்றில் பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது. 'வட்டுக்கோட்டையே இதன் அமைவிடத்திற்கான தகுதியான இடம் என்று பரவலாகச் சிந்திக்கப்பட்டு வருகிறது. இந்தக் கலாபீடத்தின் தலைமையை ஏற்பதற்குச் சகோதரர்கள் டானியல் பூவரையே ஏகமனதாகத் தெரிவு செய்துள்ளார்கள். அவர் வெகுவிரைவில் வட்டுக் கோட்டைக்குச் சென்று விடுவார். தெல்லிப்பளையிலே அவர் செய்த பணியைத் தொடர்வதற்கு வண. வூட்வேட் வந்து சேருவார்.'
உயர்கலா பீடத்தை அமைக்கும் ஆவலினால் உந்தப்பட்ட டானியல் பூவர், தமது தாய்ச் சங்கத்தின் அனுமதி, அரசின் உத்தரவு, நன்கொடைகள், உதவிகள் முதலியவற்றுக்காகக் காத்திருக்கவில்லை. அவர் முதல் கட்டமாக உடுவில், மானிப்பாய், பண்டத்தரிப்பு, தெல்லிப்பளை, வட்டுக்கோட்டை ஆகிய ஐந்து விடுதிப் பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட நாற்பது ஆற்றல் நிறைந்த மாணவர்களைப் பாடசாலையில் இணைத்துக் கொண்டார். அக்காலத்தில் மத குருமார்களை
உருவாக்கும் இறையியற் பள்ளிகளையே செமினரி' என்று

Page 22
கலைக்கேசரி கி 22
அழைப்பார்கள். ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையிலும், அங்கிலிக்கன் திருச்சபையிலும் பெரு வழக்காகக் காணப்படுகின்றது.
இலங்கையில் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்திலும் செமினரிகள் குருத்துவப் பள்ளிகளாகவே இயங்கின.
ஆனால் டானியல் பூவர் தமது உயர் கல்வி நிறுவனத்தைப் பட்டங்கள் வழங்கும் கல்லூரியாகவே நிறுவமுயன்றார். அமெரிக்காவில் அக்கால கட்டத்தில் கள் வழங்கும் கல்வி நிலையங்கள் 'கல்லூரி c: 3 காலிஜ்' என அழைக்கப்பட்டன. 1826 ஆம் தாடக்கம் அமெரிக்கன் மிஷனரிமார் 3. நிதி நிர்வாகக்குழு பொஸ்டனில் T_6T குடியேற்ற நாட்டுக்
ணப்பித்த வேளையில், இலங்கையில் உள்ள அமெரிக்கன் மிஷனரிமாரின் தொகை இனி அதிகரித்தலாகாது எனவும், கல்லூரி ஒன்று உருவாக்கப்பட ஜ் வேண்டுமாயின் பிரிட்டிஷ்
பேராசிரியர்களைக் கொண்டே அது உருவாக்கப்பட
நிறுவனத்தின் அமை 33.33: மிஷனரிமாருடன் கலந்தாலோசித்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யாழ்ப்பாணத்திலேயே இக் கல்வி நிறுவனத்தை அமைக்க விரும்பிய அவர், மாவட்ட நீதிபதியான மூயார்ட் என்பவரின் வீட்டை வாங்க முடிவு செய்தார். 1827 இல் வட்டுக்கோட்டையில் இந்த உயர் கல்வி நிறுவனம் அமைய வேண்டும் என பூவரும், ஏனைய மிஷனரிமாரும் முடிவு செய்தனர். அதே வருடம் இக் கல்வி நிறுவனத்துக்கு அமெரிக்கன் மிஷன் செமினரி எனச் சம்பிரதாய பூர்வமாகப் பெயரிடப்பட்டது. இப்பெயர் 1846 ஆம் ஆண்டு ஹென்றி ஹெய்சிங்டன் அதிபராக இருந்த காலத்தில் 'வட்டுக்கோட்டை செமினரி' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பட்டங்கள் வழங்கும் கல்லூரி ஒன்றை அமைக்கும் ஆர்வத்துடன் திட்டங்களை மேற்கொண்ட மிஷனரிமார், செமினரி என்ற பெயருடன் திருப்திப்பட வேண்டியதாயிற்று.
இடையூறுகள், சோதனைகள் பல ஏற்பட்டபோதும்,
மனம் தளராது தனியொரு ஆசிரியராக டானியல் பூவர் கத் தொடங்கினார். ஆனால் ஆசிரியர் கல்வி நிறுவனத்தின் ஆணி வேரையே ஆபத்தில் இருந்தாலும், அதைப்
|-LI bl2.579)
செமினரியின் ஆரம்ப JSFTG) வளர்ச்சிக்கு பேருதவியும், உறுதுணையும் புரிந்த காபிரியேல் திசேரா, டானியல் பூவரின் அற்புதமான கண்டுபிடிப்பாவார் என்பதில் ஐயமில்லை.
மனம் தளராத டானியல் பூவர் ஒர் உயர்ந்த
கல்வியறிவு மிக்க சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியுடன் இருந்த காரணத்தாலேயே அவரால் ஒரு பள்ளிக்கூ த்தைக் கட்டி, அங்கு பாடங்களை நடத்த முடிந்தது செமினரியின் முதல் அதிபராகவும், பேராசிரியராகவும் இருந்து கணிதம், இயற்கைத்தத்துவம், கிறிஸ்தவம் ஆகிய பாடங்களைத் தனியொருவராக
அவருடை இந்நடவடிக்கை சி
கேலிக்கூத்தாக இருந்தாலும், பே

Page 23
மிக்க தமிழ்க் கல்வி தழைக்கலாயிற்று. மிகச் சிறந்த, உயர்ந்த தமிழ் அறிஞர்கள் உள்ளூரிலேயே உருவானார்கள். டானியல் பூவரின் வட்டுக்கோட்டை செமினரியானது கலைத்துடிப்பும், கல்விச் செழிப்பும் நிறைந்த உள்ளூர் மாணவர் பரம்பரை ஒன்றை உருவாக்கியது.
மதப் பணியாற்ற வந்த டானியல் பூவர் போன்ற மிஷனரிமார் குழு வழங்கிய தமிழ்ப் பணி மற்றும் கல்விப் பணி மூலம் ஆற்றலும் ஆர்வமும் மிக்க ஆறு 'பிள்ளைத் தமிழர்கள் உருவானார்கள். சி.வை. தாமோதரம்பிள்ளை, நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை, ஆர்னல்ட் சதாசிவம்பிள்ளை, வைமன் கதிரவேற்பிள்ளை, எட்வேட்ஸ் கணபதிப்பிள்ளை, கரோல் விசுவநாதபிள்ளை ஆகியோரே அந்த ஆறு தமிழர்களுமாவார்கள்.
வட்டுக்கோட்டை செமினரி முப்பத்திரண்டு வருட காலம் அரிய பணி புரிந்ததுடன், அக்காலத்தில் கிட்டத் தட்ட எழுநூறு கல்விமான்களையும் உருவாக்கியது. அக்கல்விமான்கள் கிறிஸ்தவத்துக்கும், தமிழுக்கும் அரிய தொண்டாற்றினார்கள். அங்கு கற்றவர்கள் பல அரிய நூல்களை எழுதினார்கள். ஆர்னல்ட் சாதாசிவம்பிள்ளை எழுதிய நூல்களுள் 'பாவலர்
சரித்திர தீபகம், நெவின்ஸ் சிதம்பரப்பிள்ளை எழுதிய
நூல்களுள் நியாய இலக்கணம் முத சிறந்த படைப்புக்களாகும். கரோல் விசுவநாதபிள்ளை எழுதிய நூலான சுப்பிரதீபம்’ என்ற ஆக்கத்திலே
டானியல் பூவரைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்.
"வாய்மையும், தூய்மையும், நீதியும், நிறைவும், அன்பும், பொறையும் சிறந்து விளங்கிய புவர் ஐயர் (டானியல் பூவர்) முதலிய மகான்கள் இங்குதித்து அலகைவாயிலும் அகந்தை வாயிலும், உலக வாயிலிலும், உடல வாயிலிலும், அகப்பட்ட ஆன்மாக்கள் வீடு பெற்றுய்யும்படி, இரட்சா பெருமானின் திருநாமத்தை உபதேசித்துக் கைமாறு கருதாது உதவுகின்ற மேகம் போல, வைதீக - லெளகீகக் கல்விப் பொருளை வழங்கினார்கள்."
டானியல் பூவர் செமினரியை அளவற்று நேசித்தார். ஆனாலும் 1855 ஆம் ஆண்டு பொஸ்டனில் இருந்த அமெரிக்கன் மிஷன் தாய்ச் சங்கம் செமினரியை மூடிவிடத் தீர்மானம் எடுத்தது. வட்டுக்கோட்டை
செமினரி நற்செய்திப் பரம்பலுக்குத் துணை
புரியவில்லை என்பதே அதற்கான காரணமாகும். செமினரியை மூடுவதை எண்ணமாகக் கொண்ட அண்டர்சன் விசாரணைக் குழுவினர் பம்பாய் வந்தடைந்து விட்டனர் எனவும், வெகு விரைவில் வட்டுக்கோட்டைக்கு வந்து விடுவார்கள் எனவும் டானியல் பூவர் அறிந்து கொண்டார். மரணப் படுக்கையில் இருந்த பூவர் பின்வருமாறு கடிதம்
எழுதுமாறு தமது சகாக்களுக்குப் பணித்தார்.
 

ஆகலைக்கேசரி 23
'தூதுக் குழு கடவுளினால் அனுப்பப்பட்டதென்று எண்ணியிருந்தேன் என்றும், அவர்களைச் சந்திக்க ஆவலோடு காத்திருந்தேன் என்றும் டொக்டர். அண்டர்சனுக்குக் கூறுங்கள். ஆனால் நான் அவருக்குத் தாராளமாக எழுதியுள்ளேன். உங்கள் எல்லோருக்கும் எனது எண்ணம் என்னவென்று தெரியும். அவர்கள் வரும்போது நான் மறைந்து விடுவதே மேல் என்று எனக்குப்படுகிறது. உண்மை என்றோ ஒரு நாள் வெளியாகும். இதனையே நான் டொக்டர். அண்டர்சனுக்குக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.'
டானியல் பூவர் இவ்வாறு கூறும்போது, அவர் தனது செமினரி சேவையையும் மதுரை சேவையையும் முடித்துவிட்டு, மானிப்பாயில் கிறிஸ்தவ ஊழியம் செய்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1855 ஆம் ஆண்டு செமினரி மூடப்பட்ட பின்னர், (o)gFLÉS) GOTrî) ஆசிரியர்களும் மாணவர்களும் இலங்கையின் பல பாகங்களுக்கும், இந்தியாவின் தமிழ் நாட்டுக்கும் சென்று அரும்பணி ஆற்றினார்கள். மேலும் 1857 ஆம் ஆண்டு சென்னையில் பிரிட்டன்
9 JTght ஒரு Frï6) JJ5G) ITTFs T6ðD GU6ÕDULI நிறுவியது.
வட்டுக்கோட்டை செமினரியில் இருந்து இரண்டு பட்டதாரிகள் அங்கு சென்று பரீட்சைக்குத் தோற்றினர். அச்சர்வகலாசாலை தனது முதலாவது கலைமாணித் தேர்வை நடத்தியவேளை, அத்தேர்வில் இரண்டு பேர் மாத்திரம் சித்தியடைந்தார்கள். அவர்கள் இருவரும் வட்டுக்கோட்டையில் கல்வி கற்ற சி.வை. தாமோதரம் பிள்ளை மற்றும் கரோல் விஸ்வநாத பிள்ளை ஆகியோ
ராவார்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற குறிப்பிட்ட இருவருமே B.A பரீட்சைக்குத் தோற்றத் தகுதியானார்கள். இவர்கள் இருவருமே மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் முதலில் பட்டம் பெற்ற இருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் வட்டுக்கோட்டை செமினரி தரமான கல்வியை வழங்கியமை புலனாகிறது.
யாழ்ப்பாணக் கல்லூரியின் அடித்தளமான வட்டுக்கோட்டை செமினரி 1823 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் திகதி முன்னோடி மத்திய பாடசாலை என்ற பெயரில் ஸ்தாபிக்கப்பட்டது. பூவரின் 56. TGITGT வட்டுக்கோட்டை செமினரி மூடப்பட்டாலும் அக் கல்விப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகவே கல்லூரி இன்றும் விளங்குகிறது. யாழ்ப்பாணக் கல்லூரியின் தற்போதைய பெயர் 1872
யாழ்ப்பாணக்
ஆம் ஆண்டு தொடக்கம் வழங்கப்படுகிறது. ஆகவே 1922 ஆம் ஆண்டளவில் வட்டுக்கோட்டை ஆரம்ப கல்வி நிறுவகத்தின் நூற்றாண்டையும், யாழ்ப்பாணக் கல்லூரியின் பொன் விழாவையும் கொண்டாடும் மனநிலையில் அனைவருக்கும் இருந்தனர். 露
韃 (அடுத்த இதழில் நிறைவுபெறும்) தொகுப்பு: - உமா பிரகாஷ்

Page 24


Page 25
கொச்சினில் நடைபெற்ற பிபிழ மற்றும் கோபியோ மாநாடு
வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியினரின் பதினேழாவது பரவசி LITUS) SIG UITGřův (Paravasi Baharathiy Divas) (PBD) தினம் அனுஷ்டிப்பு மற் றும் கோபியோ அமைப்பின் (Global Organisation of Indian origin) மாநாடு என்பன கடந்த
07.01.2013 தொடக்கம் 10.01.2013 (6) GODIT GJEUTGITTIGNGG முக்கிய நகரங்களில் ஒன்றான கொச்சினில் சிறப்பாக நடை பெற்றது . மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, மொரீஷியஸ், தென்னா பிரிக்கா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா பிரிட்டன், ஐரோப்பா, ஆபிரிக்கா, வளை குடாநாடுகள் அடங்கலாக மொத்தம் 45 நாடுகளில் இருந்து சுமார் 4000 பேர் இதில் கலந்து கொண்டனர். முதல்நாள் நிகழ்ச்சி இந்தியப் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மொரீஷியஸ் நாட்டின் ஜனாதிபதி சிறப்பு விருந்தின ராகக் கலந்து கொண்டார். மாநாட்டு நிகழ்வுகளுடன் கலை நிகழ்ச்சிகளும் கோலாகலமாக நடைபெற்றன.
விழாவில் பங்கு கொண்ட பிரதிநிதிகளில் சிலரையும்,
கலை நிகழ்ச்சிகள் சிலவற்றையும் படங்களில் காணலாம்.
தகவலும் படங்களும் எம்.எஸ்.சதீஷ்குமார் எம்.ஏ)
 


Page 26
កែងព្រួញត្អែ 鑫 26 ஆளுமை
பெருந்தோட்டத்துை கவனக்குவிப்பை ஏற்ப
இலங்கையின் பெருந்தோட்டத்துறைக் கல்வியில் ஆர்வமும் அக்கறையும் செலுத்திய ஆய்வாளர்களுள் ஒருவராகிய ஜி.எஞானமுத்து அவர்களின் பணிகள் பெருமளவிலே கவன ஈர்ப்பைப் பெறவில்லை. பெருந்தோட்டத்துறையில் பிரதிகூலமடைந்திருந்த கல்வி நிலையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த முன்னோடிகளுள் ஒருவராக அவர் சிறப்புற்று கல்வி நிலையிலே ஒரு வினைப்பாட்டாளராகவும் விளங்கினார். அத்துறையில் ஆய்வுகளை முன்னெடுப்பதற்குரிய அடிப்படையான அனுபவப் பதிவுகளை அவர்
வழங்கியுள்ளமை கூர்ந்து நோக்குதற்குரியது.
யாழ்ப்பாணத்தைச் பூர்வீகமாகக் கொண்ட ஜோர்ச் ஞானமுத்து அவர்கள் லண்டன் பல்கலைக்கழகத்துக் கலைப் பட்டதாரி. மலையகத்திலே நீண்ட காலம் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். பெருந்தோட்டக் கல்வி பற்றிய நேருக்கு நேர் அனுபவங்களைக் கொண்டிருந்தார். தொடர்ந்து அவர் தொழில் திணைக்களத்தின் உதவி ஆணையாளராகப் பெருந்தோட்டத்துறையிலே பணி புரிந்தார். அந்நிலையில் இரு தளங்களிலே அவர் பெருந்
தோட்டத்துறை வாழ்க்கையைத்
 
 
 
 
 
 
 
 
 
 

றயில் கல்வி மீதான டுத்தியவர் ஞானமுத்து
-பேராசிரியர் சபா. ஜெயராசா
தரிசிக்க முடிந்தது. அதாவது ஆசிரியராகப் பணியாற்றிய வேளை கல்வி நிலையிலே புலக்காட்சி கொண்டார். தொழில் நிலையிலே மக்களின் நெருடல்களைச் சந்தித்தார்.
அரச பதவியிலிருந்து ஒய்வு பெற்ற பின்னரும் பெருந்தோட்டத்துறையுடன் அவரது அக்கறை தொடர்ந்து நீடித்தது. 'கல்வியும் இலங்கையின் பெருந்தோட்டத் துறைத் தொழிலாளியும் என்ற நூலையும் 'பெருந் தோட்டத்துறைகளில் பிள்ளைகள்’ என்ற நூலையும் தமது அனுபவத் தேட்டங்களாக எழுதினார். அவற்றோடு மேலும் பல கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார்.
ஞானமுத்து அவர்களைப் போன்று வேறு பல அறிஞர்களும் இத்துறையில் அறிகை முன்னீடுகளைத் தந்துள்ளனர். பேராசிரியர் ப.சந்திரசேகரம், பேராசிரியர் சோ.சந்திரசேகரம், திருமதி சொர்ணவல்லி பத்மநாப ஐயர், வி.சங்கரலிங்கம், பேராசிரியர் ஜே.ஈ.ஜெயசூரியா,
குமாரி ஜெயவர்த்தனா,

Page 27
சி.வி.வேலுப்பிள்ளை, எஸ்.செல்லையா, கோவிந்தராஜ் மனோகரன், ஆர்.சிவலிங்கம் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள். அண்மைக் காலமாகப் பல இளம் ஆய்வாளர்கள் இத்துறையில் அக்கறை காட்டி வருகின்றனர். பேராசிரியர் ஜே.ஈ.ஜெயசூரியா பேரினவாத நோக்கில் கல்வியை அணுகினார்.
ஞானமுத்து அவர்கள் புலமை நிலையில் மட்டும் நின்று பெருந்தோட்டத்துறையின் கல்வியை நோக்கவில்லை. நடைமுறை அனுபவத்தளங்களில் நின்றும் அதனை அணுகினார். அதனால் அவரது ஆய்வுகள் நம்பகமுடையனவாய் (AUTHENTICITY) அமைந்தன என்று குறிப்பிடப்படுகின்றது. ஆயினும் அவரது வரலாற்று விபரணத்திலும் புலக்காட்சியிலும் சில இடைவெளிகள் காணப்படுதலும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
பெருந்தோட்டங்கள் திறக்கப்படுதலோடு இணைந்ததாக அழைத்து வரப்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் தமக்கே உரிய வழிபாட்டு முறைமை, நாட்டார் மரபுகள், மரபு வழி மருத்துவம், சடங்குகள் முதலியவற்றை புதிய சூழலிலே கட்டமைத்துக் கொண்டார்கள். நாட்டார் மரபுகளினூடான முறை சாராக் கல்விச் செயற்பாடுகளே அவர்களது சிறார்களின் கல்வியில் இடம்பெற்றிருந்தன.
வரன்முறையான ஆரம்பக்கல்வி அங்கிருந்த சிறார்களுக்குக் கிடைக்கப் பெறவில்லை. கொழுந்து பறிப்பதற்கும் அங்குள்ள சிறுவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்குரிய கல்வி பற்றிய சட்டவாக்கங்களோ நடவடிக்கைகளோ பத்தொன்பதாம் நூற்றாண்டில் இடம்பெறவில்லை.
பெருந்தோட்டச் சிறுவரின் கல்வியின் தொடக்கம் பற்றி ஆராய்ந்த ஞானமுத்து அவர்கள் முதற்கண் கங்காணிமாரின் செயற்பாடுகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அவ்வகையில் "லைன்’ பள்ளிக்கூடங்களே ஆரம்ப நிலை அமைப்புக்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
லைன் பள்ளிக் கூடங்கள் இரண்டு வகைப்பட்டிருந்தன. ஒன்று தொழிலாளரின் பிள்ளைகளுக்குரிய எண் எழுத்து முதலியவற்றை வாய் மொழிவாயிலாகக் கற்பிக்கும் பள்ளிக் கூடங்கள். மற்றையது கங்காணிகளின் பிள்ளைகள் கற்பதற்குரிய பள்ளிக் கூடங்கள் - பல்வேறு பாடத்துறைகளையும் ஒரளவு ஆங்கில மொழியையும் உள்ளடக்கிய கலைத்திட்டத்தை அந்தப் பள்ளிக் கூடங்கள் கொண்டிருந்தன. கல்விக் கட்டமைப்பில் இடம் பெற்றிருந்த வர்க்க சார்புடைமையை ஞானமுத்து அவர்கள் வெளிப்படுத்தியிருத்தல் குறித்துரைக்கப்பட வேண்டிய அவதானிப்பாகவுள்ளது.
தொடக்க காலங்களிலே பெருந்தோட்டச் சிறுவர்களின் கல்விக்குத் துரைமாரே பொறுப்பு என்று விதந்துரைக்கப்பட்டது. பெருந்தோட்டங்கள் அவர்களுடையதென்பதாலும் அவர்களே தொழிலாளரை அழைத்து வந்தனர் என்பதாலும் அங்குள்ள சிறாரின் கல்விக்குத் துரைமாரே பொறுப்பு என்ற ஒருவித

យួញត្អែ
27
தலையிடாமைக் கொள்கையினை பிரித்தானிய காலனித்துவ ஆட்சி கொண்டிருந்தது.
அக்காலத்தைய தொழிலாளரின் நிலையை
ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தலிலும் ஞானமுத்து அவர்கள் அயராது உழைத்தார். அவர் தந்த முக்கியமான தகவல்கள் வருமாறு:
1. 10 X 12 சதுர பரப்பளவுள்ள இடமே அவர்களின்
வாழ்க்கை இல்லமாயிற்று. 2. மிகக் குறைந்த வேதனமும், அதுவும் ஒழுங்காக
வழங்கப்படாத நிலையும். 3. மனித வாழ்க்கைக்கு ஈடு கொடுக்க முடியாத சுகாதார
நிலை. 4. அவர்களுக்கு ஏற்படும் நோய் எவ்வித கவனத்துக்கும்
எடுத்துக் கொள்ளப்படவில்லை. 5. அவர்களின் அகால மரணங்களுக்கு விசாரணை
எதுவும் நடத்தப்படவில்லை. 6. 1841ஆம் ஆண்டுக்கும் 1849 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மட்டும் 70,000 தொழிலாளர் இறந்துள்ளனர். 7. தொழிலாளர் தொடர்பான ஆரம்ப காலத்தைய
சட்டவாக்கங்களும் துரைமாருக்குச் சாதகமாகவே இருந்தன. (ஞானமுத்து, 1977:4) பெருந்தோட்டத்துறையின் ஆரம்ப காலத்துக் கல்வியில் பின்வரும் நான்கு அமைப்புக்கள் இடம் பெற்றிருந்தன.

Page 28
28
1. "லைன்’ பள்ளிக் கூடங்கள் அவை கங்காணிமாரால்
அமைக்கப்பட்டன. 2. கிறிஸ்தவ சமயப் பிரிவினரால் அமைக்கப்பட்ட
பள்ளிக் கூடங்கள். 3. தனியார் முயற்சிகளினால் ஆரம்பிக்கப்பட்டவை. 4. இந்து - பெளத்த சமயச் சார்போடு உருவாக்கப்
பட்டவை. பப்டிச திருச்சபை, அங்கிலிக்கன் திருச்சபை, மெதடிஸ்த திருச்சபை ஆகியவற்றுடன் வேறு பல சபைகளும் பெரும் தோட்டச் சிறுவர்களின் கல்வியிலே அக்கறை காட்டின. அவற்றுள் குவேக்கேர்ஸ் அல்லது நண்பர்களின் சபை, ஏழாம் நாள் அற்புதச் சபை, லூதரன் சபை முதலியனவும் கல்வியில் அக்கறை செலுத்தின. தொடர்ந்து ரோமன் கத்தோலிக்க திருச்சபையும் தமது தேவாலயங்களுடன் கல்விக் கூடங்களை அமைத்தன.
பெருந் தோட்டத் துறையின் கல்வி வளர்சியில் இந்து மற்றும் பெளத்த நிறுவனங்கள் ஆற்றிய பங்களிப்பினையும் ஞானமுத்து அவர்கள் விதந்து குறிப்பிட்டுள்ளார். நாவலப்பிட்டியிலுள்ள கதிரேசன் கல்லூரி, புசல்லாவையில் உள்ள சரஸ்வதி வித்தியாலயம், மாத்தளையில் உள்ள பாக்கிய வித்தியாலயம், பதுளையில் உள்ள சரஸ்வதி வித்தியாலயம், கண்டியில் உள்ள இந்து மேனிலைப் பாடசாலை முதலியவை இந்துக்களால் ஆரம்பிக்கப்பட்டவை.ஹட்டன் பூரீ பாதகல்லூரி,
 

கம்பளை ஜினராஜா வித்தியாலயம், நாவலப்பிட்டி அனுருத்தக் கல்லூரி, பதுளை தர்மதூத கல்லூரி, கண்டி தர்மராஜக் கல்லூரி முதலியவை பெளத்தர்களினால் ஆரம்பிக்கப்பட்டவை.
தோட்டச் சிறார்களின் கல்வியிலே சிறப்பார்ந்த கவன ஈர்ப்பை மேற்கொண்ட சேர் பொன்.அருணாசலம் அவர்களின் பணிகளையும் ஞானமுத்து அவர்கள் சிறப்பாகச் சுட்டிக் காட்டியுள்ளார். கல்வி தொடர்பாக தகவல்களை ஞானமுத்து அவர்களுக்கு கிடைக்கச் செய்வதிலே அக்காலத்தைய பேராதனைப் பல்கலைக்கழகக் கல்வியியல் விரிவுரையாளர்களாகிய பேராசிரியர் ப.சந்திரசேகரம் அவர்களும் கு.நேசையா அவர்களும் உதவி செய்திருத்தலும் குறிப்பிடத்தக்கது. அதேவேளை பிளாண்டேர்ஸ் நிறுவன சுவடிக் கூட்டத்திலிருந்தும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஆவணத் தொகுப்பிலிருந்தும் பல விதமான தகவல்களை அவர் பெற்றுக் கொண்டார்.
பெருந் தோட்டத் துரைமார் தமது பிரிவுக்குட்பட்ட தோட்டங்களுக்குப் பொறுப்பாக விடப்பட்ட நிலை கல்வியிலும் பள்ளிக் கூட ஒழுங்கமைப்பிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினர். செலவுச் சிக்கனத்துடன் அவர்கள் கல்வியை வழங்க முற்பட்டனர். சிக்கன நடவடிக்கையாக அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து குறைந்த தராதரமுடையவர்களை அழைத்து வந்து ஆசிரிய

Page 29
நியமனம் வழங்கினர். யாழ்ப்பாணத்திலே கூடிய
கல்வித்தராதரங்களைக் கொண்டோர் கிடைக்கக் கூடியதாக இருந்தனராயினும் செலவுச் சிக்கனம் கருதி அவர்கள் அழைத்து வரப்படாமை ஒரு முக்கியமான எதிர் நிகழ்ச்சியாயிற்று.
காலனித்துவ ஆட்சிக் காலத்தில் ஆரம்ப பாடசாலைக் கல்வி தொடர்பான பல கட்டளைச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலும் அங்குள்ள சிறார்களுக்கு இவற்றில் போதிய அனுகூலங்கள் கிடைக்கப் பெறவில்லை என்பதே ஞானமுத்து அவர்களின் அவதானிப்பாக இருந்தது.
கன்னங்கரா அவர்களின் முற்போக்கான கல்விச் சிந்தனைகளை உள்வாங்கி 1947ஆம் ஆண்டின் கல்விக் குரிய கட்டளைச் சட்டம் விவாதம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆரம்ப நிலையில் தோட்டப் பாடசாலைகளை அது உள்ளடக்கவில்லை. பின்னர் திருத்தத்தின் வாயிலாக உள்ளடக்கப்பட்டது. ஆயினும், பெருந்தோட்டத்துறைப் பாடசாலைகள் தொடர்பான அபிவிருத்தி நடவடிக்கைகள் மந்த கதியிலே தான் இருந்தன.
1960 ஆம் மற்றும் 1961 ஆம் ஆண்டுகளில் உதவிகள் நன்கொடை பெறும் பாடசாலைகளையும் ஆசிரிய கலாசாலைகளையும் அரசு பொறுப்பேற்பதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. படிப்படியாகத் தோட்டப் பாடசாலைகளை அரசகட்டுப்பாட்டின் கீழே கொண்டு வரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
அத்தகைய பல நடவடிக்கைகளினாலும் எதிர் பார்த்த அளவு அனுகூலங்கள் கிடைக்கப்பெறவில்லை என்பதை தக்க ஆதாரங்களுடன் ஞானமுத்து அவர்கள் குறிப்பிட்டுள்ளார். பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ள பரிதாபகரமான நிலையும் சுட்டிக்காட்டியுள்ளார். கட்டுமான நிலை, ஆசிரிய வளம், கலைத்திட்ட விருத்தி முதலாம் துறைகளிலும் பின்னடைவுகள்
 

காணப்படுதலையும் வெளிப்படுத்தியுள்ளார். முன் பள்ளிக் கல்வி தொடர்பான மட்டுப்பாடுகளும் அவரது கவனத்தை ஈர்த்துள்ளன.
கல்வி வளர்ச்சிக்கும் சிறாரின் வளர்ச்சிக்கும் அடித்தளம் இடும் முன்பள்ளிக் கல்வியில் காணப்படும் பின்னடைவு முழுக் கல்வி வளர்ச்சியையும் மனித ஆளுமை வளர்ச்சியையும் பின்னடைய செய்யவல்லவை.
இலவசக் கல்வி தாய் மொழிக்கல்வி முதலியவை பெருந் தோட்ட சிறாரின் கல்வியில் முன்னேற்றங்களை ஏற்படுத்தினாலும் அவற்றின் நடைமுறைகளிலே வினைத் திறன்கள் போதுமானவையாக இல்லாதிருத்தலைச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.அவற்றுக்குரிய காரணிகளையும் அவர் விரிவாக வெளிப்படுத்தியுள்ளார். பொதுக்கல்வி மட்டுமன்றி பெருந் தோட்டத்துறையினரது வாழ்வாதார மேம்பாட்டுக்குரிய தொழில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஞானமுத்து அவர்கள் பெருந்தோட்டக் கல்வியுடன் மட்டும் தனித்து நின்றுவிடவில்லை அவர்களுக்குரிய உடல் நல மேம்பாடு, உள நலமேம்பாடு, வதிவிட மேம்பாடு, சம்பள உயர்வு, பாதுகாப்பு, ஆளுமை மேம்பாடு, தொடர்ச்சியான முன்னேற்றம் போன்ற அனைத்துத் துறைகளையும் இணைந்து நோக்கும் முழு நிலை அணுகுமுறையைக் கொண்டுள்ளார்.
பெருந் தோட்டத்துறையினரது கல்வி வாழ்க்கையையும் சமூக வாழ்க்கையையும் தரிசிப்பதற்குரிய ஆவணங்களாக அவரது எழுத்தாக்கங்கள் அமைந்துள்ளன. அங்குள்ள தொழிலாளரின் மொழி, பண்பாடு, வாழ்வின் இருப்பு முதலியவற்றின் மீதான கவனக்குவிப்பை ஏற்படுத்துவதற்கும், கூர்ந்த அக்கறையை முன்னெடுப்பதற் குமுரிய புலமை நடவடிக்கையை அவர் மேற் கொண்டுள்ளார். தமிழ் மொழி மீதான அக்கறையும் அவரது எழுத்தாக்கங்களிலும் செயற்பாடுகளிலும்
8:്.
இணைந்து நிற்றலைக் குறிப்பிட வேண்டியுள்ளது.

Page 30
போசாக்குணவுகள்
-டாக்டர் திருமதி. விவியன் சத்தியசீலன் சிரேஷ்ட விரிவுரையாளர்.
சேர மன்னர்களின் குடியிருப்பு பனை என்பர். பனையைப் போந்தை, பெண்ணை எனச் சங்க நூல்கள் கூறும். பனை மரம்
மரமன்று. அது புல் எனப்படும்.
தொல்காப்பியர் இது புறக்காழ் கொண்டது என்பர். பனையில் ஆண் மரமும் பெண் மரமும் தனித்தனியாக வளரும். இருவகை மரமும் பல வகைகளில் பயன்படுமாயினும் ஆண் பனை, பெண் பனையைப் போன்று அத்துணை பயன்தரவல்லதன்று.
பெண் பனை மரத்தில் இறக்கும் கள்ளிற்கும் பதநீர் என்று பெயர். இதனைக் காய்ச்சிப் பனை வெல்லம், பனங்கற்கண்டு முதலியவற்றைப் பெறலாம்.
பனையை நாம் மரம் என்று வழங்குகின்றோம். ஆனால் இது மர இனத்தைச் சேர்ந்ததன்று. இது புறத்தில் காழ்கொண்டு இருக்கும். இங்கணம் புறவயிர்ப்பு கொண்டவற்றைப் புல்லெனப் பேசுகின்றது தொல்காப்பியம்.
'புறக்காழனலே புல்லென மொழிப்
- தொல், பொருள் 9 : 86 பனையில் ஆண் மரமும், பெண் மரமும் காணப்படும். ஆண் பனையின் பாளையில் இருந்து இளைக்க கதிர்கள் நீண்டு திரண்டிருக்கும். அவற்றிநின்றும் சிறு ஆண் பூக்கள் விரியும். பூவில் தடித்த புறவிதழ்களும் 03 அகவிதழ்களும் 06 மகரந்த கால்களும் தோன்றும். பெண் பனையின் பாளையில் இருந்து பட்டையாக 03 புறவிதழ்களும் 03 அகவிதழ்களும் கோள வடிவான பெண்ணகத்தைக் கொண்டிருக்கும். இதுபோல மகரந்தச் சேர்க்கையின் பின்னர் பிஞ்சாகி பனங் காயாகும். இளங்காயிலுள்ள மூன்று நுங்குகளும் முற்றி விதைகளாகிவிடும். காய்முற்றிப்
பழமான பின்னர்
 
 
 
 
 
 

பனம்பழம் தானே விழும். அதற்குள் மூன்று விதைகள் இருக்கும்.
பனையின் பஞ்சு போன்ற நுங்கைப் பாடுகின்றார் திரையன்.
'பாளை தந்த பஞ்சிஅம் குறுங்காய் ஓங்கிரும் பெண்ணை நுங்கு
- குறுந். 293 : 2-3 பனையின் இவ்விருவகைப் பூக்களும் மஞ்சள் கவினிய வெண்ணிறங் கொண்டவை. இவை இரண்டுமே சூடிக் கொள்ளும் வாய்ப்பற்றவை. ஆதலின் பனையின் வெளிர் இளங்குருத்து ஒலையைப் பிளந்து அதன் கூரிய வலப்பக்கத்துப் பாதியை குடிப்பூச் சின்னமாகக் சூடிக் கொண்டனர்.
இரும்பனை வெண்டோடு மலைந்தோன்'
- புற.நா - 45 : 1. (தோடு - தடித்த பனையோலை) '.வளர் இனம் போந்தை உச்சிக் கொண்ட ஊசி வெண் தோட்டு’
- L/D.BIT.IOO : 3 - 4 (வளர் - இனம் போந்தை - குருத்தோலை) 'மிசையலங் குளைய பனைப் போழ் செரிஇ'
- புற.நா.22:21 மேலும் இரும்பனம் போந்தைத் தோடும்'
- பொருந. 143
என்ற நச்சினார்க்கினியர் கரிய பனங் குருத்தில் அவர்ந்த வலப் பக்கத்து ஒலையும் என்று உரை கண்டுள்ளார். இப் பனை ஒலையை மாலையாகவும் மார்பில் அணிவர். இதனைக் குறிக்கும் இடங்களில் 'புடையல் என்ற சொல் ஆளப்பட்டுள்ளது. இப் புடையல் குறிக்கப்படும் இடங்களில் பெரிதும் கழல் அணிந்த g5/TG) கூறப்பட்டுள்ளது. இரும்பனம் புடையல் ஈகைவான் கழல்'
- பதிற் 42 : 1

Page 31
'புடையல் அம்கழற்கால்'
- அக.நா. 295 : 14 போர்க்களத்தில் போரிட்டுக் குருதி தோய்ந்துள்ளதைப் பாடும் இடத்திலும்,
இரும்பனம் புடையவொரு வான்கழல் சிவப்ப குருதி பனிற்றும் புலவுக் களத்தோனே'
- பதிற்.57 : 2 -3 சேரர்குரிய வீரச் சின்னங்களில் புடையலும் கழலும் இணைத்துப் பேசப்படுதலின் சேரர்க்குத் தாயகமாக உரிமைப் பொருளாக தொன்மை மரபாக முன்னோர் பழக்கமாகப் பாடுகிறார் ஒளவையார்.
‘தென்னிலை மாபின் நின்முன்னோர்போல ஈகையங் கழற்கால் இரும்பனம் புடையல்’
- புற.நா. 99 :4 - 5
இவ்வளவு பழைமை வாய்ந்த பனை மரம் இன்னும்
பயன்கொடுத்துக் கொண்டே உள்ளது. அதிலும் உணவு வகைகளில் மட்டுமன்றி இயற்கை மருந்துணவாகவும் அமைவதை இன்றைய விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் பனையின் பயன்பாடுகள் மக்களால் மறக்கப்பட்டும் மறைந்தும் வருவது செயற்கை வாழ்க்கை முறையில் இன்றைய மக்கள் ஊறிக் கிடப்பதேயாகும். எனவே பனை மரத்தின் பயன்களை மருத்துவ நோக்கில் ஆராய்வோமாயின்,
ஒடியற்கூழ்
யாழ்ப்பாண மக்களிடையே பிரபல்யமானது ஒடியற் கூழாகும். இதில் ஒடியல் மா, பலாக்காய், பயற்றங்காய், செத்தல் மிளகாய், மஞ்சள், பழப்புளி, உப்பு என்பன சேர்கின்றன. பயற்றங்காயை சிறுசிறு துண்டுகளாக ஒடித்து அதனுடன் பலாக்காயின் சுளையைப் போட்டு நீர்விட்டு நன்கு அவிய விட்டு வெந்ததும் அதனுடன் சிறிது நீரில் புளியைக் கரைத்து அதில் ஒடியல் மாவையும் மஞ்சள் துண்டையும் மிளகாயையும் அரைத்துக் கரைத்தும் சேர்த்து ஊற்றி ஐந்து நிமிடங்கள் வரை துளாவிக் கொண்டிருந்து கொதிக்க விட்டு இறக்கவும்.
 
 
 
 

ಟ್ವ:
墨、 ឆ្នា
LT
கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை
என்பவற்றை தாளித்துப் போட வேண்டும்.
பலாக்காய் கிடைக்காவிட்டால் மரவள்ளிக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளலாம். பழைய ஒடியல் மாவாக இருந்தால் அதை 4 - 5 முறை நீரில் ஊற வைத்துப் பிழிந்து தும்பு போக்கி எடுத்துக் கொள்வர். இக் கூழ் பசியைத் தணிப்பதுடன் போசாக்கு மிக்கதாகவும் விளங்குகிறது. மலத்தை இளக்கி நன்கு வெளியேற்றும். எனவே இக் கூழை இடையிடையே தயாரித்து பருகி வருவதால் மலம் நன்கு வெளியேறி வாதம் முதலிய தோஷங்கள் நீங்கி சமனிலை பேணப்படுவதால் மூன்று தோஷங்களில் சமனிலை பேணப்பட்டு சரீர ஆரோக்கியமும் பேணப்படும். இன்றைய விஞ்ஞான ஆய்வுகள் கூட நார்த்தன்மையான உணவுகள் உணவுக் கால்வாயில் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கின்றது என்பதை வலியுறுத்துகின்றது. ஒடியல் மாவில் தேவையான அளவு நார்ச்சத்து உள்ளது
என்பது குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும்.
100 கிராம் ஒடியலில் உள்ள சத்துக்கள் ஈரலிப்பு - 10.8 கிராம் சக்தி - 320 கி.கலோரி புரதம் - 3.1 கிராம் கொழுப்பு - 2.2 கிராம் காபோவைதரேற்று - 77 மி.கி. கல்சியம் - 44 மி.கி. இரும்பு - 0.8 மி.கி. நார்ச்சத்து - 5.6 கிராம் குடலைச் சுத்தம் செய்வதில் ஒடியற் கூழுற்கு முக்கிய பங்குண்டு.

Page 32
ក្តញអ្វី 鑫 32
பதனீர்
'செப்பிதன் பதனீர் வெம்பை தீர்த்திடு நுங்கருந்தில் வெப்பு நா வரட்சி பித்தம் விலகிடுங் குளிர்ச்சியுண்டாம் உப்பிசமுறும் பழத்தை யுண்டிட லுடல் கனக்கும்’
பதார்த்த சூடாமணி கோடை காலத்திற்கு ஏற்றது பதனீர். இக்காலங்களில் ஏற்படும் சின்னமுத்து, பொக்குளிப்பான் போன்ற நிலைமைகளில் உணவுக் கால்வாய் அனிச்சவ்வுகளிலும் வாயிலும் ஏற்படும் புண்பாட்டிற்கு அருமருந்தாக அமையும். பதனீரில் உயிர்ச் சத்து B, இரும்புச்சத்து என்பன அதிகமுண்டு. குளிர்ச்சியான பானம் மட்டுமல்ல போசாக்குமிக்கதுமாகும்.
100 கிராம் பதனீரிலுள்ள சத்துக்கள் ஈரலிப்பு - 86.0 கிராம்
புரதம் - 0.4 கிராம்
காபோவைதரேற்று - 13.5 கிராம்
கல்சியம் - 7 மி.கிராம்
பொசுபரசு - 14 மி.கிராம்
இரும்புச்சத்து - 3.67 மி.கி
உயிர்ச்சத்து C - 13 மி.கி
நுங்கு
வெப்ப காலமாகிய சித்திரை, வைகாசி மாதங்களில் நுங்கு கிடைக்கின்றது. இது உடல் உஷ்ணத்தைத் தணித்து உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது. பித்தத்தை சமப்படுத்தும்.
100 கிராம் நுங்கிலுள்ள சத்துக்கள்
ஈரலிப்பு - 82.3 கிராம்
சக்தி - 29 கி.கலோரி
புரதம் - 10.8 கிராம்
கொழுப்பு - 0.3 கிராம்
காபோவைதரேற்று - 6.5 கிராம்
கல்சியம் - 69 மி.கி
பொசுபரசு - 110 மி.கி
இரும்பு - 0.9 கிராம்
உயிர்ச்சத்து B, - 10 மைக்ரோனியம்
ரைபோபினேலின் - 10 மைக்ரோனியம்
உயிர்ச்சத்து C - 8.5 மி.கி
நார்ச்சத்து - 0.3 கிராம்
எம் மக்களிடையே பனம்பழத்தை சுட்டு அதன் மஞ்சள் நிறக்களியை உண்பர். இதில் உயிர்ச்சத்து A இன் முன்னோடியான பீற்றாகரோட்டின் 3200 மைக்ரோ கிராம் 100 பழத்திலிருந்து கிடைக்கின்றது. இதனால் கண்பார்வை தெளிவாவதுடன் தோலினையும் மென்மையாகவும் தொற்றுக்கள் ஏற்படாமலும் பாதுகாக்கின்றது. அத்துடன் மலத்தை இலகுவாக வெளியேற்றலும் உதவும்.
பனம் களியிலிருந்து தயாரிக்கப்படும் பனங்காய் பலகாரத்தில் கல்சியம், பொஸ்பரஸ், இரும்பு, உயிர்ச்சத்து C ஆகிய சத்துக்கள் அடங்கியிருப்பதால்
 
 
 
 
 
 

BBS
உடலின் உள்உறுப்புக்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது. பனங்காய் பணியாரம் தயாரிக்கும்போது அரிசிமா, கோதுமை மாவிற்குப் பதில் சாமையரிசி மாவைப் பயன்படுத்தினால் இலகுவாக சமிபாடடையக் கூடியதாகவும் இருக்கும்.
பனங்கட்டி பனங்கட்டி சத்துமிக்க ஒரு உப உணவாகும். பனங்கட்டியில் கல்சியம், பொஸ்பரஸ், இரும்புச் சத்து, உயிர்ச்சத்து B, பொட்டாசியம் ஆகியன அதிகளவில் Z காணப்படுகின்றது. எனவேதான் பனங்கட்டியை பயன்படுத்தி ஆடிக்கூழ், சிறுவர்களுக்கான கஞ்சி வகை, எள்ளுப்பாகு போன்றன தயாரிக்கப்படுகின்றன. ... பனங்கட்டி பாலூட்டும் தாய்மார், கர்ப்பிணிப் பெண்களுக்கு சிறந்ததும் அவசியமானதுமாகும். எனவே எம்மக்கள் சீனிக்குப் பதில் பனங்கட்டியை பயன்படுத்தப் பழகிக் கொள்ளல் மருத்துவ நோக்கில் ஆரோக்கியமாகும். எனவேதான் சித்த மருந்துகளுக்கு அநேகமாக பனங்கட்டி அனுபானமாக * கொடுக்கப்படுகின்றது.
பனங்கட்டியில் தாழ்த்தப்படாத வெல்லம் (Non - reducing Sugar) கூடுதலாக இருப்பதால் நோயிலிருந்து

Page 33
விடுபட்டு உடல்தேறி வருபவர்களுக்கு பருக்கும் கொத்தமல்லித் தண்ணிர், கற்பூரவள்ளிச்சாறு போன்றவற்றில் பனங்கற்கண்டு அனுபானத்தில் வழங்கப்படுகிறது. இது குழந்தைகளுக்கு மலச்சிக்கல், சளி என்பன ஏற்படாமல் பாதுகாக்கின்றது.
பனங்கிழங்கும் புழுக்கொடியலும் அவித்த பனங்கிழங்கை இரண்டாகப் பிளந்து புழுக்கொடியலாகச் செய்து வருடம் முழுவதும் பயன் படுத்துவர். புழுக்கொடியல் மாவை சத்துமா போன்றும் பயன்படுத்தலாம். புழுக்கொடியல் மா, தேங்காய்ப்பூ சீனி சேர்த்து குழைத்து பிடித்துப் பயன்படுத்தலாம்.
இது விசேடமாக முதியோருக்குகந்த சத்துணவாகும். புழுக்கொடியலில் கல்சியம், பொசுபரசு, இரும்புச்சத்து கணிசமான அளவு உண்டு.
பனங்குருத்தில் கல்சியம், பொசுபரசு, இரும்புச்சத்து, பீற்றாகரோட்டின் போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன. பனங்குருத்து சாப்பிடும் பழக்கம் இப்போது அருகி மறந்து வந்துள்ளது.
இன்றைய இளைய சந்ததிக்கு ஏற்ற வகையில் பனங்களியில் கேக் கூடத் தயாரிக்கலாம். % கிலோ கோதுமை மாவிற்கு % கிலோ சீனி, 150 கிராம் மாஜரீன், 100 கிராம் பனங்களி சேர்த்து கேக் அடிப்பது போல் அடித்து தீ ஆவியில் அவித்து எடுத்துப் பயன்படுத்தவும். பனம் விதையிலுள்ள பூரானை பயன்படுத்தி பூரான்
புட்டும் அவித்துச் சாப்பிடலாம். தேங்காய்ப் பூவிற்கு
 
 
 

BIGDIGDé, អ៊ែអ្វី
33
பதில் பூரானை சிறு சிறு குறுணலாக அரிந்து புட்டு மாவுடன் சேர்த்து அவித்துச் சாப்பிடலாம்.
100 கிராம் பூரானிலுள்ள சத்துக்கள் ஈரலிப்பு - 61.4 கிராம்
புரதம் - 11.8 கிராம்
கொழுப்பு - 0.2 கிராம்
காபோவைதரேற்று - 6.5 கிராம்
கல்சியம் - 198 மி.கி
பொசுபரசு - 180 மி.கி
இரும்பு - 4.0 கிராம்
தமிழ் மக்களின் போசாக்குணவுகளிலும் பொருளாதாரத்திலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை பனையிலிருந்து கிடைக்கும் உணவாகும். இவையாவும் மருத்துவ நோக்கில் do L. ஏற்புடையவையாக காணப்படுகின்றன.
குறிப்பு : பனங்கிழங்கு, ஒடியல்மா என்பன பூஞ்சணம் பிடிக்கும்போது அப்பூஞ்சணம் Afatoxin என்னும் ஒரு நஞ்சைச் சுரக்கின்றது. அது ஈரலில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியது. பூஞ்சணம் பிடிப்பதற்கு முக்கிய காரணம் பதப்படுத்தி களஞ்சியப்படுத்தத் தெரியாமை ஆகும். அன்றைய காலத்தில் ஈர்க்கில் ஒடியலை அல்லது புழுக்கொடியலை கோர்த்து காய விடுவார்கள். எனவே பூஞ்சணம் பிடிப்பதற்கு சாத்தியம் குறைவாகும். களஞ்சியப்படுத்துவதற்கும் இயற்கை முறைகளை பயன்படுத்தியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.து

Page 34
புனிதத்தலமா
GF)âului நாட்டின் தலைந டமாஸ்கஸ் நகரின் மத்தியில் உ மசூதி அல்லது டமாஸ்கஸ் ( மசூதி என்றழைக்கப்படும் அமைந்துள்ளது. (இந்த
(LO(ԼՔ6ծ)ԼDեւIITՓ இஸ்லாமியர்களி நிர்வகிக்கப்படுகின்றது) இது உலகின்
பழைமை யானதும் மற்றும் மிகப்(
மசூதிகளில் ஒன்றாகவும் கண
படுகின்றது. டமாஸ்கஸ் நகரம்
3000 ஆண்டு காலமாக மக்கு தொடர்ந்து பயன்படுத்தப் வரும் நகரமாகும். இதே அ கால வரலாறு இந்த மசூதி உண்டு.
பண்டைய ஆர்மீனியர் மற்றும் இ தம்மைக் காக்கும் கடவுளான என்ற கடவுளுக்கு கி.மு. ஆண்டு கால கட்டத்தில் கே கட்டினார்கள். பத்து நூற்றாண்டு (3LDGQ)fTg5 இந்த S2, GNOUL வழிபாடுகள் நடைபெற்று வரும்
us அருளப்பரின் ஆலயமாக இருந்த க இஸ்லாமியர் தமது தொழுகைக்
 

கிறிஸ்தவ சமயத்தவரின் 5 திகழும் உமய்யா மசூதி
கரான கி.பி. முதலாம் நூற்றாண்டில் உரோமரினால் DůLET பழைய கோவில் இடிக்கப்பட்டு வியாழ )լ յրիլլ பகவானுக்கு பெரிய கோயில் கட்டப்பட்டது. மசூதி இதன் பின்னர் நான்காம் நூற்றாண்டில் மசூதி பைசாந்தியர்களினால் வியாழன் கோவில் }GÖTETG) இடிக்கப்பட்டு, பரிசுத்த ஸ்நாபக அருளப்பருக்கு L 50g5L தேவாலயம் கட்டப்பட்டது. இதன் பிறகு 636ஆம் 5)լյրիլլ ஆண்டு டமாஸ்கஸ் நகரம் முஸ்லிம்களால் ரித்துப் கைப்பற்றப்பட்டது. முஸ்லிம்கள் இந்த = pfl தேவாலாயத்தில் கிறிஸ்தவர்களுடன் சேர்ந்து 5 GITATG) பரிந்துணர்வு அடிப்படையில் அவர்களுடைய மதி பட்டு உரிமைகளுக்கு பாதகமில்லாத வகையிலும் தமது ஆண்டு மத உரிமைகளுக்கு பாதகமில்லாத வகையிலும் க்கும் தத்தமது வழிபாடுகளை மேற்கொண்டு வந்திருந்தார்கள். ஆரம்பத்தில், முஸ்லிம்கள்
புயல் தேவாலயத்திற்கு எந்தப் பாதிப்பையும் ருந்து ஏற்படுத்திக் கொள்ளவில்லை. பின்னர் அவர்கள் ஆத் தெற்குப்பக்கத்து சுவருடன் அதற்கு வெளியே LOGO ஒடு இணைப்பை ஏற்படுத்தி, சிறிய
Tគ្រា៨) களிமண்ணாலான மசூதி ஒன்றை அமைத்து தமது க்கும் மதக்கடமைகளை நிறைவேற்றிக் கொண்டார்கள். பத்தில் இதன் பிறகு கலிபாவான முதலாம் அல் வாலித் இபின் அப்துல் காலத்தில்
ாலகட்டத்தில் இந்த திறந்தவெளி மண்டபத்தில்தான்
கடமைகளை நிறைவேற்றினர்.

Page 35
கிறிஸ்தவர்களின் மொத்த பகுதியும் அவர்களிடம் இருந்து விலைக்கு வாங்கப்பட்டு இன்றுள்ள பிரமாண்டமான அழகி மசூதி நிர்மாணிக்கப்பட்டது. அவர் இதைக் கட்டும் போது இதற்கு முன்னரும் இதைப்போல் கட்டப்பட்டதில்லை; இதற்குப் பின்னரும் இனிமேலும் இதுபோல் கட்டப்படப்போவதில்லை என்று கூறியிருந்தார். இந்தப் பணி கி.பி. 706ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு கி.பி. 715ஆம் ஆண்டு காலப்பகுதியில் மன்னர் சுலைமானால் நிறை வேற்றப்பட்டது. கிறிஸ்தவர்கள் இதேகாலப் பகுதியில் மசூதிக்கு அருகில் மேற்குப் பக்கத்தில் தேவாலயம் ஒன்றை நிர்மாணித்து அதற்கு புனித ஸ்நாபக ܐ அருளப்பர் கதீட்ரல் எனப் பெயர் சூட்டி இன்றுவரை வழிபட்டு வருகின்றார்கள். 1759ஆம் ஆண்டில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் பின் பழைய ஆலயத்தின் தோற்றத்தில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படாமல் ஒட்டோமான்களால் மசூதி மீள் நிர்மாணம் செய்யப்பட்டது.
கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம் ஆகிய இரு 圣( சமயத்தவர்களும் தீர்க்கதரிசி என்று பெருமை கொள்ளும் பரிசுத்த ஸ்நாபக அருளப்பரின் சமாதி (இஸ்லாமிய இறை தூதர்களில் இ ஒருவரான யகியா) இந்த மசூதியில் உள்ளது. தேவாலயம் இடிக்கப்பட்டபோது, அருளப்பரின் தலைமுடி மற்றும் முகம் எந்தவிதமான அழிவுகளுக்கும் உட்படாமல் இருந்தது.
 
 
 
 
 

எட்டு மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட அல் அரூஸ்சா மினார் இது. சதுர வடிவிலமைந்த இந்த மினார் இஸ்லாமிய ஆரம்பகால கட்டிடக்கலைகைய பிரதிபலிக்கின்றது.
அட்டைப்பட விளக்கம்: திறந்த முற்றத்தில் கருவூலத்தின் இருபக்கங்களிலும் காணப்படும் தங்கத்தாலான கிரீடம். ஒட்டோமன் பேரரசுகளின் கிரீடத்தின் வடிவத்தை பிரதிபலிப்பதாக இந்த வடிவம் காணப்படுகின்றது.

Page 36
ក្តដ៏អ្វី 差 36
இப்பொழுதும் மசூதியினுள் இருக்கும் இந்த சமாதியிலிருந்து அமானுஷ்ய சக்தி வெளிப்படுவதாகவும் பக்தர்கள் நம்புகின்றார்கள். இந்தச் சமாதியில் யாத்திரிகர்கள் தமது தலையை வைத்து அழுத்தும் போது, மெய்சிலிர்க்க வைக்கும். ஒருவித புத்துணர்வைப் பெறுவதாக யாத்திரிகர்கள் தமது அனுபவங்களை இணையத்தளங்களில் பகிர்ந்து கொள்கின்றார்கள்.
மேலும் இஸ்லாமிய பேரரசரான சலாத்தீனின் சமாதியும் இந்த மசூதியிலேயே உள்ளது. இது சன்னி முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமாக உள்ள பொழுதும் சியா முஸ்லிம்களுக்கும் முக்கிய வரலாற்று தலமாக உள்ளது. கர்பலா போரில் உமய்யா கலிபாவான முதலாம் யாசித் என்பவரால் முறியடிக்கப்பட்ட சியா முஸ்லிம்களின் மூன்றாவது இமாமான உசைனின் (முகம்மது நபியின்
பேரன்) தலையையும் இந்த மசூதியில் வைத்துள்ளார்கள். 2001ஆம் ஆண்டு இந்த மசூதிக்கு வருகை தந்த திருத்தந்தை இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் இந்த நினைவு தூபிகளைப் தரிசித்திருந்தார்.
 

இஸ்லாமிய வரலாற்றில் முதன் முதலில் கட்டப்பட்ட நினைவுத் தூபிகள் கொண்ட மசூதியாக டமாஸ்கஸ் பெரிய மசூதி திகழ்கின்றது. இதனுடைய வசீகரத் தோற்றம், பழைமை, கட்டிட நிர்மாணம் ᏧᏠ5ᎱᎢᏞᎫᎶᏡᏡᎢᏞᏝ0ᎱᎢᏯᏏ g2 ·Ꮆu)ᏯᏠ5 அதிசயங்களின் ஒன்றாகத் திகழக்கூடிய தகுதிகள் இதற்குண்டு. ஆயினும் இது ஒரு வணக்கஸ்தலம் என்பதனால் உலக அதிசயங்களுக்குள் பட்டியலிடப்பட வில்லை. ஆனாலும் மக்காவுக்கு அடுத்த படியாக ஒரு செழிப்பான இஸ்லாமிய கலாசார மையப் புள்ளியாக திகழ்கின்றது.
உமய்யா மசூதியை மூன்று வகையாக பிரித்து நோக்க வேண்டும். முதலாவது மசூதியின் கட்டட அமைப்பு மற்றும் பழைமை, அமைவிடம்; இரண்டாவது அலங்கார வகைகள், வடிவங்கள், வர்ணங்கள்; மூன்றாவது சமயரீதியான புனிதத்துவம். இவை மூன்றும் இந்த மசூதியில் காணப்படும் முக்கிய அம்சங்களாகும். இஸ்லாமிய கட்டிடக்கலை மரபுகளின் உருவாக்கத்திற்கும் இந்த மசூதி முன்மாதிரியாகத் திகழ்கின்றது.

Page 37
உமய்யா மசூதி அதன் கட்டிட நிர்மாணத்தின் அடிப்படையில் மிகவும் அற்புதமானதும் பிரமிப்பூட்டும் வகையிலும் அமைந்துள்ளது. கோத்திக், பாரசீக, இந்திய மற்றும் பைசான்டிக் கட்டடக் கலைகளின் மரபுகள் இங்கு பின்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் இந்திய மற்றும் பாரசீக, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான
கலைஞர்களினால் மசூதி கட்டியெழுப்பப்பட்டது. இந்த வளாகத்தினுள் பிரார்த்தனை கூடம், பாடசாலை, தியான - மாநாட்டு மண்டபங்கள், கடைத்தொகுதிகள், பரந்த திறந்த முற்றம், நினைவு தூபிகள் உள்ளன. கிழக்கு, மேற்கு, வடக்கு ஆகிய நுழைவாயில்களினூடாக உள்னுழையும் போது, ஒரு பெரிய திறந்தவெளி செவ்வக வடிவம் கொண்ட திறந்த வெளி எதிர்ப்படும். இது 305 மீட்டர் அகலமும் 385 மீட்டர் நீளமும் கொண்ட ஒரு செவ்வக தளமாகும். செவ்வகத்தின் தெற்கு வாசல் பாவனைக்குட்படுத்தப்படுவதில்லை. தென்திசை புனிதமற்றதாகக் கருதப்படுவதனால் வாயிற் கதவு மூடப்பட்டுள்ளது. நன்கு அலங்கரிக்கப்பட்ட நான்கு தூண்களில் மேல் 36 அடி உயரத்தில், எண்கோண வடிவத்தில், ஜன்னல், கதவுகள் எதுவுமில்லாமல் கருவூலம் காணப்படுகின்றது. இதைவிட அளவிற் சிறியதாக மணிக்கூட்டு கோபுரமும் தூண்களின் மேல் தங்கத் தகடுகளால் செய்யப்பட்ட ஒட்டோமான்களின் சின்னங்கள் இரண்டும் காணப்படுகின்றன. திறந்த வெளியின் நான்கு பக்கங்களிலும் தாழ்வாரங்கள் காணப்படுகின்றன. இங்கு யாத்திரிகர்கள் இளைப்பாறி மகிழ்கின்றனர்.
 

பிரதான வழிபாட்டு மண்டபமும் திரிகூடமும்
உமய்யா மசூதியானது மதீனாவில் இருந்த முகம்மது நபி (சல்) அவர்களின் வீட்டை அடிப்படையாக கொண்டு கட்டப்பட்டது. இதன் வெளிப்புறச்சுவர்கள் ஆரம்பத்திலிருந்த வியாழன் கோவிலின் பாணியில் அழகூட்டப்பட்டுள்ளன. இந்த வியாழன் கோவிலின் சில சுவர்கள், தூண்களை இன்றும் காணமுடியும். குறிப்பாக தூண்களுடன்கூடிய குதிரைலாட வடிவ வளைவுகள் கட்டிடக்கலையின் தொழில்நுட்ப திறத்தை அதிசயிக்க வைக்கின்றன. மசூதியின் தொழுகைக் கூடமானது ஜெருசலம் நகரில் உள்ள அல் - அக்சா மசூதியின் பாணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மசூதி 330 அடி அகலமும் 515 நீளமும் கொண்டது. மசூதியின் உட்பக்கம் பொதுவாக வெள்ளையாகவே காட்சியளிக்கும். காரணம் பெரும்பாலும் வெள்ளை நிற சலவைக் கற்களே தொழுகைக் கூடத்தை அலங்கரிக்கின்றன. இதைவிட 4000 சதுர மீட்டருக்கும் அதிகமான அளவில் தங்க சலவைக் கற்களும் இங்கு பதிக்கப்பட்டுள்ளன. 1893 ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒரு தீவிபத்தில் இந்த தங்கக்கற்கள் சிறிது சேதமடைந்தன.
இஸ்லாமிய பாணியிலான ஆடை அலங்கார சித்திர வேலைப்பாடுகளை ஒத்த படைப்புகள் இந்த மசூதியின் சுவர்களிலும் தூண்களிலும் காணப்படுகின்றன. பொதுவாக மசூதியின் சுவர் மற்றும் தூண், வளைகள் என 9F95 (GoNU) பகுதிகளிலும் பல்வேறு வடிவங்கள் காணப்படுகின்றன. அரண்மனைகள் மற்றும் நதியும் அதை அடுத்த வீடுகள் (டமாஸ்கஸ் நகரில் ஒடும் பராடா ஆறு) ஆகிய காட்சிகளும் சித்திரிக்கப்பட்டுள்ளன. கண்ணாடி

Page 38
38
மொசைக்ஸிலும் இக்காட்சிகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள நீண்ட அறைகள் மார்பிள்ஸ் கிறில்கள் மற்றும் வட்டங்கள் சதுரங்களின் அடிப்படையிலான கேந்திர கணித வடிவங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன. வர்ண அலங்கரிப்புக்காக மொசைக் மற்றும் பளிங்கு ஆகியவற்றுடன் வண்ணக் கண்ணாடித் துண்டுகளும் தங்கம் மற்றும் வெள்ளிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. தாவர வடிவமைப்புகள், பிணைந்த திராட்சை கொடிகள் (ஒற்றுமையை வெளிப்படுத்தும் சின்னம்) இலைகள், காய்கறிகள், மலர்கள், மனிதர்கள், விலங்குகள் ஆகிய வடிவங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. சமய
இறுதித் தீர்ப்பு இந்த மினாரில்தான் நடைபெறுமென்று
கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் நம்புகின்றார்கள். 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த மினாரின் அரைப்பகுதி சதுரவடிவிலும் மேல்பகுதி உறுளை வடிவிலும் ஒட்டோமன் பேரரசின் e; L55606 or நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது.
 

வசனங்கள், திகதிகள் மற்றும் வார்த்தைகளை நீல நிறப் பின்னணியில் இரண்டு மாறுபட்ட நிறங்களுடன் பொதுவாக தங்கத்தினாலான எழுத்துக்களினால் நேர்த்தியாக எழுதியிருந்தனர். இதனடிப்படையில் இந்த அலங்கார முறைமையானது ஏனைய மசூதிகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றது.
கடந்த பல மாதங்களாக சிரியாவில் இடம்பெற்றுவரும் ஆயுத மோதல்கள் காரணமாக உமய்யா மசூதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமையை ஊடகங்கள் மூலம் அறியமுடிகின்றது. உமய்யா மசூதி யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்பட வேண்டிய உலக பாரம்பரிய கலாசார மரபுரிமை மிக்க இடமாக அறிவிக்கப்பட்டபோதிலும்
Tடடைந்த யில் காணப்படும் ழனுக்கான ஆலயம்

Page 39
ஆயுததாரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி அங்கோலமாக்கப் பட்டுள்ளமை கவலைதரும் விடயமாகும்.
மசூதியின் வளாகத்தின் வெளிப்புற சுவர்களில் மூன்று மூலைகளிலும் பெரிய கோபுரங்கள் மினராக்கள் உள்ளன. நான்கு பாதுகாப்பு கோபுரங்கள் ஒவ்வொரு மூலையிலும் கட்டப்படவேண்டும் என்றே ஆரம்பத்தில் திட்டமிடப் பட்டிருந்த போதிலும் கலிபா அல் வாலிட் தனது திட்டத்தில் தெற்குப் பக்கத்தில் மட்டும் இரண்டு கோபுரங்கள் அமைப்பதற்கு திட்டமிட்டிருந்தார். இந்த இரண்டு கோபுரங்கள் மசூதியின் கிழக்கு மற்றும் மேற்கு வாயிற்களை நிறுவுவதற்கான அடித்தளங்களாக காணப்படுகின்றன. அல் - அறுஸ்சா மினார் என அழைக்கப்படும் மூன்றாவது சதுர கோபுரம் மசூதியின் வடக்கு வாயில் அருகே பின்னர் கட்டப்பட்டது. கிழக்கு மூலையில் இருக்கும் கோபுரம் நபி ஈசா என்ற மினார் என பல முஸ்லிம்கள் நம்புகின்றார்கள். உலக இறுதியில் அவர் இங்குதான் தோன்றுவார் என்ற நம்பிக்கையும் முஸ்லிம் மக்களிடம் காணப்படுகின்றது. மேற்கு மூலையில் அமைந்திருப்பது குன்பே மினார் கோபுரமாகும்.
சமய வழிபாட்டின் காரணங்களுக்காகவோ அல்லது சுற்றுலா பயணியாகவோ இந்த மசூதிக்கு செல்லும் போது பல்வேறு கலாசாரங்கள் மற்றும் சமய குழுக்களின்
ஏராளமான அனுபவங்களைப் பெறமுடியும்.
 

ថាខ្លាញ់
39
உடற்பகுதிகள் தெரியும் வகையில் உடையணிந்து செல்வதற்கு அனுமதி கிடையாது. ஆண்கள் அரைக்காற்சட்டை, பெண்கள் ஸ்கேட்ஸ் அணிவதற்கும் அனுமதி கிடையாது. அருகிலுள்ள ஆடைகள் விற்பனை நிலையத்தில் இதற்கென பிரத்தியேகமாக உள்ள அடையை கொள்வனவு செய்தோ அல்லது வாடகைக்கு எடுத்தோ தான் உட்செல்ல வேண்டும். காலணிகளை முற்றத்தில் நுழைந்தவுடன் கழற்றிவிட்டே உட்செல்ல வேண்டும். அதிகாலையிலிருந்து மாலை வரை மசூதி திறந்திருக்கும். இங்கு தரிசனம் செய்வதற்கு சிறந்த நேரம் அதிகாலை அல்லது மாலைவேளையாகும். அழகான புகைப்படங்கள் எடுப்பதற்கு இவை சிறந்த வேளையாகும்.*
- பஸ்ரியாம்பிள்ளை ஜோண்சன்
டில் கட்டப்பட்ட கரு

Page 40
40 தெய்வ வாகனங்கள் ܡ ܐ
தெய்வ ஊர்திகள் ബ0 திருே
51க்கும் தெய்வமாம் திருமாலின் வாகனம் கருடன். வைணவ சம்பிரதாயத்தில் கருடனைப் பெரிய திருவடி என்றும் அனுமனைச் சிறிய திருவடி என்றும் கூறுவது வழக்கம். மேலும் கருடன் பறவைகளுக்கு அரசன். 'பகூவி ராஜா எனப் போற்றப்படுபவன்.
கருடனின் வரலாறு
பிரம்ம தேவனின் மானஸ் புத்திரர்களில் ஒருவரான மரீசிக்கும் களைக்கும் பிறந்தவர் காச்யப மகரிஷி. தட்சனின் புதல்விகள் பதின்மூவரை மணந்தவர். மரீசி தன்னுடைய மகனாகிய 45Тај и ЈLJ65T பிரஜாபதி ஆகிவிடுவானென்று கண்டுணர்ந்து சகல வித்தைகளையும் சாஸ்திரங்களையும் கற்பித்து வல்லவனாக்கினார். பரசுராமார் செய்த அச்வமேத யாகத்தில் பூமியை தானமாகப் பெற்றார் காச்யபர். அதனால் பூமிக்கு காசினி
என்ற பெயர் உண்டாயிற்று.
 

வடி என்னும் கருட வாகனம் கலாபூஷணம், வித்துவான் வசந்தா வைத்தியநாதன்
தட்சனின் பெண்களாகிய அதிதி, திதி, தநு, அநாயு, பிரதை, முனி, சுரசை, இளை, குரோதவசை, தாமிரை, சுரபி, விநதை, கத்ரு ஆகிய பதின்மூவரை மணந்து, அதிதியிடம் ஆதித்யரையும், திதியிடம் தைத்யரையும், தநுவிடம் தானவரையும், அநாயுவிடம் சித்தரையும்,
பிரதையிடம் கந்தர்வரையும், முனியிடம் அப்சரசுக்களையும், சுரசையிடம் யாசாரரையும், இளையிடத்து மரம், செடி, கொடி, பூண்டு வகைகளையும், குரோதவசையிடம் சிங்கம், புலி முதலிய மிருகங்களையும், தாமிரையிடம், குதிரை, கழுதை, பறவை வகைகளையும், சுரபியிடம் Ligj, கூட்டங்களையும், விநதையிடம் அருணனையும்
கருடனையும், கத்ரு நாகர்களையும் பெற்றனர்.
காச்யபரின் மனைவியருள் திதி, அதிதி, விநதை, கத்ரு ஆகியோர் LfS) g, முக்கியமானவர்கள். விநதை பலசாலிகளான இரண்டு மகன்கள் வேண்டுமென வேண்டிக் கொள்ள, கத்ரு தனக்கு ஆயிரம் பிள்ளைகள் வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள். அதன் படியே கத்ருவிற்கு சேஷன், வாசுகி, தக்ஷகன், கார்க் கோடகன் தனஞ்ஜெயன், காளியன் உள்ளிட்ட
ஆயிரம் சர்ப்பங்கள் பிறந்தன.

Page 41
தனக்கு முன் கத்ருவிற்குக் குழந்தைகள் பிறந்து விட்டதை அறிந்து விநதை பொறாமையால் விளைந்த ஆத்திரத்தில் தன்னுடைய இரண்டு முட்டைகளில் ஒரு முட்டையை அவரச புத்தியியால் உடைத்தாள். அதன் விளைவாக கைகள், கால்கள் முழுமையாக வளராத ஒரு LD56öT தோன்றினான். அவன்தான் அருணன், சூரியனின் தேர்ச் சாரதி. கதிரவன் உதயத்திற்கு முன்னால் அருணன் தேரில் தோன்றுவான். அதுவே அருணோதயம் உரிய
காலத்தில் இரண்டாவது முட்டையிலிருந்து வலிமை மிக்க கருடன் பிறந்தான். கருடனின் பெருமையை /
ஒரு புராணக்கதை மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வாலகில்யர்கள் அறுபதினாயிரவர். இவர்கள் கிருது என்பவருக்கும் கிரியை என்பவளுக்கும் பிறந்தவர்கள். கட்டை விரல் உயரம் கொண்
பசுவின் குளம் பினால் ஏற்பட்ட தண்ணிரில் ー、l三 மூழ்கி விடுபவர்கள். தலைகீழாக நின்று அற்புதமான வல்லமை வேண்டித் தவம் செய்யும் இயல்பினர். ஒரு சமயம் இவர்கள் இருந்த மரக் கிளையோடு தூக்கப் பெற்று கருடனால்
விடப் பெற்றவர்கள். நாள்தோறும் சூரிய ரதத்தை 6) Golf வரும் நியமம்
6ឆ្នាំg@fig.
35 T j (Li Li Ť
பு த் தி ர காமேஷ் டி யாகம் செய்யும் பொழுது வாலகில்யர்களின் உதவியை 57_TT. யாகத்திற்கான பூக்களைப் பறித்துக் கொண்டு வந்து கொண்டு இருந்தவர்கள்
 
 
 
 

遠 អ៊ែងហ្វិញតែម្តី 41
அப்பூக்களின் பாரம் தாங்காது துன்பப்பட்டார்கள். இக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த இந்திரன் கேலியாகச் சிரித்தான். இந்திரனது இந்தச் செய்கையினால் கோபமுற்ற வாலகில்யர்கள் காச்யப முனிவருக்குப் பிறக்கப் போகும் புத்திரன் இந்திர பதவியடைந்து இந்திரனாகி விடுவான் என்று தேவேந்திரனுக்கு சாபமளித்தனர். இந்திரன் தன் தவறுக்கு வருந்தி மாமுனிவர்களாகிய வாலகில்யர்களை சரணடைந்தான். அவர்களும் மனமிரங்கி பிறக்க இருக்கும் காச்யபரின் குமாரன் கஜேந்திரன் (பறவைகளுக்கு அரசன்) ஆகிவிடுவானென்று அருள் செய்தனர். அந்த கஜேந்திரனே பறவைகளின் அரசனான கருடன் ஒருமுறை அதிகம் கர்வம் கொண்ட தக்ஷனின் மகளும், காச்யபரின் மனைவியுமான கத்ரு, தன் சகோதரி விநதையின் மேல் கோபமும் பொறாமையும் கொண்டு உச்சைச் சிரவம் எனும் உயர்ந்த ஜாதிக் குதிரைக்கு மரு உண்டா என வினவ
இல்லையென்று விநதை கூற, சூழ்ச்சியால் நாகருள்
ஒருவனை தன் எண் ணப்படி @jTគ្រប់គ្នា) மருவாகத் தோன்றச் செய்து விநதையை அடிமை கொண்டு சிறையி GSL L TGT கத்ரு. கருடன் நிகழ்த்திய அற்புதங்கள் 1.தன்னுடைய தாயின் அடிமைத் தளையை நீக்குவதற்காக விண்ணுலகம் சென்று அமுதக் கலசத்தைக் கொண்டு வருகையில் தேவேந்திரன் வழி மறித்துத் தன் வச்சிரப் படையால் தாக்கினான். அந்த வச்சிரப் படைக்கு மரியாதையாகத் தனது இறகில் ஒன்றைக் கொடுத்தான். இந்திரன் மகிழ்ந்து கருடனுடன் நட்புக் கொண்டான். இந்திரனை நோக்கி, தேவேந்திரா இவ்வமுத கலசத்தை என்னுடைய சிறிய தாயின் சொற்படி கொண்டு (3լ IITմյ நாகருக்குக் கொடுக்கின்றேன். நீ சென்று அதனைக் கவர்ந்து வருவாய் என்றான். இந்திரன் உவகையுற்று கருடனுக்கு பாம்புகளைத்
தின்னும் வரம் அளித்தான்.
2. கருடன் அமுத கலசத்துடன் தர்ப்பையையும் கொண்டு வந்து பூமியில் பதித்தான். அதனால்
தர்ப்பை தூய்மைபெற்றது.
3. கருடன் வலாசுரனின் உடலைத் தின்று உமிழ கருடோற்கார மென்னும் மரகத ரத்தினம் உண்டாயிற்று.
4. கருடனுடைய தாய்ப் பாசத்தைக் கண்டு மகிழ்ந்த திருமால் தனது வாகனமும் கொடியுமாகுமாறு கேட்டுக் கொள்ள கருடனும் இசைந்தான்.

Page 42
5. காளியன் என்னும் நாகம் ரமணகத் தீவிலுள்ளவர்களை வருத்த அவர்களுக்கு அபயமளிக்கு முகமாக காளியனை யமுனை மடுவில் ஒடுங்கும்படி செய்தான்.
6. கண்ணன் புத்திரப்பேற்றின் பொருட்டு உபமன்யு முனிவரிடம் சிவதீட்சை பெற்றுத் தவம் செய்கையில்
துவாரகையை அவுணர்கள் வளைத்துக் கொண்டனர். அவர்களைக் கொன்று துவாரகையைக் காத்தான் கருடன்
7。 இராவணனுடன் நடந்த போரில் இந்திரசித்தின் நாகாஸ்திரத்தினால் இலக்குவன் கட்டுண்டு மயங்கிய பொழுது நாக பாசத்தை நீக்கி இராமபிரானைத் துதித்து மகிழ்ந்தான் கருடன்
8. பாற்கடல் கடைந்த காலத்து திருமாலின் ஏவலாள் மந்திரமலையை ஏந்தியவன். ಟ್ಲಿ
9. பூரீ வைகுண்டத்திலிருந்து கிரீடாசலங் கொண்டு வந்து பதித்துத் திருமாலை எழுந்தருளச் செய்தவன். அந்தப் புனித இடமே திருவேங்கடமலை, 签接
10. பாதாளத்தில் முனிவர்களின் சாபத்தால் தள்ளப்பட்ட உபசிரவசுவை விஷ்ணு மூர்த்தியின் ஏவலால் மறுபடியும் பூமியில் அரசிருக்கையில் அமர்த்தியவன் கருடன்,
11. கருடனின் பெருமையை உலகினர்க்குணர்த்த, அவருக்கு கருடாழ்வார் என்ற திருநாமமும் பெரிய திருவடி என்ற சிறப்பும் அருளினார் திருமால்
12. கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளுகின்ற அழகே அழகு. காஞ்சிபுரத்தில் நடக்கும் பதினெட்டு கருட சேவையை தரிசிக்க பல்லாயிரக் கணக்கான மக்கள் கூடுவது ஓர் அரிய காட்சி. ر 13. நந்தனார் தரிசிக்கத் திருப்புன்கூர் நந்தியை சற்று விலகியிருக்குமாறு அருள் புரிந்தார் சிவலோகத் தியாகேசர்.
 

முத்துப் பந்தலும் முத்துக் குடையும் பெற்ற
திருஞானசம்பந்தரைத் தான் கண்டு மகிழ நந்தி தேவரை யிருக்குமாறு அருளினார் திருப்பட்டீச்சரத்து இறைவன். அதேபோல நம்மாழ்வாரைக் காண கருடனை விலகுமாறு அருளினார் திருச்சேறை சாரநாதப் பெருமாள். கருடன் விலகிய இடம் திருச்சேறை.
14. பறவை வேந்தனான கருடன் பூரீ வைகுந்த வாசனை நோக்கி, பெருமானே உலகத்தில் ஜீவர்கள் பிறப்பது ஏன்? மரணத்துக்குப் பிறகு என்ன காரணத்தால் சுவர்க்க நரகங்களை அடைகிறார்கள்? ଗର୍ନt பிரேத ஜன்மத்தை அடைகிறார்கள்? எந்தப் புண்ணியத்தைச் செய்தால் அந்த ஜன்மம் நீங்கும்? எந்தக் கர்மத்தால் நிரதிசய இன்ப வீடான வைகுந்த உலகை அடைவார்கள்? பாவங்கள் நீங்குவது எப்படி? நற்கதிப்பேறு அடைவது எப்படி? என்ற வினாக்களுக்கு கருடனின் மனங்கொள்ளுமாறு அந்த இரகசியங்களை மகாவிஷ்ணு தெளிவாகச் சொல்லி அருளியதே கருட புராணம். இதனை கருடன் காச்யபமுனி வருக்கும் கூறினார். கருட புராணம் பதினெட்டு புராணங்களுள் ஒன்று. மற்றைய புராணங்களைப் படிப்பது போல இதனை நாள்தோறும் படிக்கக் கூடாது. இறந்த வீடு களிலே தான் படிக்க வேண்டும். அறிவும், வலிமையும் நிரம்பிய கருடனைத் திருமால் வேத அறிவினன், கலுழன், வைனதேயன், புள்ளரசு என்று பற்பல திருநாமங்களால் அழைத்தும் பெருமைப்படுத்துகின்றனர்.
15. திருமாலுக்குரிய சிறப்பு வாகனங்களில்
முதன்மையானது கருட வாகனம். மற்றும் சேஷ வாகனம்,
அநும வாகனங்களிற்கும் சிறப்பிடம் உண்டு. தொடர்ந்து தரிசிப்போம்.ஆ.

Page 43
絮
. . . . .
Lரோக்கள் பண்டைய எகிப்தை ஆண்டு வந்த ஆட்சியாளர்கள். இவர்கள் சிவப்பும் வெள்ளையும் கொண்ட மகுடத்தை அணிந்திருந்தனர். இதன் பொருள் இவர்களுக்கு மேல் அதிகாரம் படைத்தவர்கள் எகிப்தில் யாரும் இல்லை என்பதாகும். பண்டைய எகிப்தியர்கள் பரோக்களை கடவுள்களின் வழித்தோன்றல்களாகக் கருதி வந்தனர்.
எகிப்தியவியலாளர்கள் பிரமிட்டுகள், மம்மிகள் மற்றும் அழிந்த கோவில்களின் எச்சங்களைப் பற்றி தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர். ஏனெனில் இவை பண்டைய எகிப்திய சமூகத்தைப் பற்றிய தகவல்களைப் பெறுவதற்கான மிக இன்றியமையாத ஆதாரங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளன. பரோக்கள் கடவுள் தன்மையைக் கொண்டிருப்பதாக கருதப்பட்டதால் ஒரு புனிதமான அரசராக, எகிப்தின் கடவுளுக்கான பிரதிநிதியாகவும் கருதப்பட்டனர்.
இருந்தபோதிலும் 3000 வருடங்களுக்கு முன் அரசாட்சி செலுத்திய பத்தொன்பதாவது பரோ மன்னர் கொலை செய்யப் பட்டிருக்கலாமென S46 (C560DL ULI மம்மியை ஸ்கானிங் முறையில் பரிசோதனை செய்த மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக் கின்றார்கள். மிகவும்
U6)Ls)T60T சாம்ராஜ்யமொன்றை
கி.மு. 1188 முதல் 1 புரிந்த இந்த மன்ன6 மருத்துவ பரிசோதை அவருடைய கழுத்தி நீளத்திற்கு வெட்டு காணப்பட்டுள்ளது. கூர்மையான பிளேட் உடனடியாக மரணம் சம்பவிக்கும் வகைய ஏற்படுத்தப்பட்டுள்: மன்னனால் அவருை மனைவிக்கும் மகனு விதிக்கப்பட்ட தண் எதிராக அவரது நீதி ஒருவரே இவ்வாறு 1 கொலை செய்திருக் வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றார் மம்மியின் கழு பகுதியை சு துணிக6ை முடியாதி தெரிவிக் படுகின்ற கழுத்துக் வெளியே தெரியா பதற்கா இவ்வா விசேட தங்கள் பகுதிக் ருக்காலப் மம்மிகள் ெ நிபுணர்கள் க கின்றார்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3OOO
ஆண்டுகளுக்கு
முந்திய ಹಾಗಾ
துப்புத்துலக்க ք ցելլի Ուիլհl
155 வரை அமைத்து அரசாட்சி ரின் மம்மி அண்மையில் னைக்கு உட்படுத்தப்பட்டபோது ன்ெ பின்பகுதியில் 2.7 அங்குலம் க்காயம் ஒன்று இந்த வெட்டுக்காயம் மிகவும் - போன்ற ஆயுதத்தினால்
Soo
ளது.
f) L-U l
|க்கும் டனைக்கு மன்ற நீதிபதி
s)60T60T60)6OT35
கலாம் என ர் சந்தேகம் கள். இந்த த்துப் ற்றியிருந்த ா அகற்ற ருப்பதாகவும் கப்
g. 5TuLb
திருப்
芬
Ol
பதார்த் கழுத்துப் த பூசப்பட்டி
எனவும் தாடர்பான
ருது

Page 44

திருமதி ஷர்மிளா ரஞ்சித்குமார் விரிவுரையாளர், சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம்
LDனிதனுக்கு இயல்பாக தோன்றுவது கலை உணர்வு. இயல்பாகத் தோன்றி இயற்கையோடு இணைந்து உணர்ச்சிகளின் உறைவிடமாய் மக்களை களிப்படையச் செய்யும் கலைகள் நாட்டுப்புறக் கலைகள், கலைகள் உணர்வுகளுக்கு வடிகால்களாக
இருக்கின்றன. உணர்ச்சியின் வெளிப்பாடாகக் கலைஞர்
இருந்ததினால் கால வெள்ளத்தைக் கடந்து நின்று வாழ்கின்றனர். நாடடுப்புறக் கலைகள் நாட்டுப்புறக்களின் உயிரூற்றாகும். கூத்து என்பதுவே நாட்டுப்புறத்திற்கு
உரியதுதான்.
கூத்தின் வளர்ச்சிதான் நாடகம். அரங்கம், அவை, எதுவுமில்லாமல் கிராமங்களின் திறந்த வெளிகளில் இது நடத்தப்படுவதுண்டு. இக் கூத்துக்கள் நாட்டுப்புற மக்களால் மக்களுக்காக நிகழ்த்தப் படுவது. நாட்டுப்புறக் கலைஞர்களே இக் கூத்துக்களை நிகழ்த்துகிறார்கள். இதைக் கிராமிய நாடகங்கள் என்றும் அழைக்கலாம். "கிராமிய நாடகத்திற்குத் தேசிய முக்கியத்துவம் உண்டு. அது நாட்டின் கலாசார பாரம்பரியத்தின் முக்கிய அம்சம்; நாட்டு மக்களின் உள்ளக் கருத்து, b குணச்சிறப்பு, கலை, பண்பாடு, வாழ்க்கை முறை முதலியவற்றை எடுத்து விளக்குவது அக்கலை என்று ாட்டுப்புற நாடகத் தன்மைகளைப் பற்றி விரித்துரைக்கின்றார் சு.வித்தியானந்தன். பாவைக்கூத்து என்பது பொம்மைகளைக் குறிக்கும். தோலினாலோ மரத்தினாலோ பொம்மைகளை செய்து நூல்களால் இணைத்து, திரைக்குப் பின்னே இருந்து ஆட்டி இயக்கச் செய்வது பொம்மலாட்டமாகும்.
பொம்மைகளை ஆட்டி நிகழ்ச்சி நடத்துவதால் பொம்மலாட்டம் எனப்படும். இக்கூத்துகளில் பல வகைகள் உண்டு. தோல்களில் படம் வரைந்து ஆடும் கூத்து தோற்பாவைக்கூத்து எனவும் மரப்பொம்மைகளை வைத்து ஆடுவது பொம்மலாட்டம் எனவும் சிறு தோற் பதுமைகளை ஒரு விளக்கிற்கும் ஒரு வெள்ளைச் சீலைத் திரைக்கும் நடுவே வைத்து ஆட்டி அவற்றின் நிழல் திரையில் விழுமாறு செய்தல் நிழலாட்டம் என்றும் அழைக்கப்படும். மேலும் இவற்றை இயக்கும் முறைகளின் அடிப்படையில் நூல்பாவை, கையுறைப் பாவை, கப்பிப்பாவை, கைப்பாவை எனவும் வகைப்படும். நாட்டுப்புறக் கலைகளை ஆராய்ந்தவரான அ.கா.பெருமாள் ம்மலாட்டம் பற்றிக் குறிப்பிடுகையில், இது உலகளாவிய

Page 45
கலை. இத்தாலியில் கி.பி. முதலாம் நூற்றாண்டில் பொம்மலாட்டக்கலை இருந்ததற்குச் சான்றுகள் உள்ளன. இது குறித்த செய்திகள் இந்திய இலக்கியங்களில் பரவலாகக் கிடைக்கின்றன என்கிறார்.
திருமகள் பொம்மலாட்டம் நிகழ்த்திய அசுரர்களையும் பேய்க் கூட்டங்களையும் விரட்டினார் என்பது வாய் மொழியாக வழங்கும் புராணக்கதை. விக்கிரமாதித்தன் கதைகளில் மரப் பொம்மைகள் ஆடிய நிகழ்ச்சி வருகிறது. இலங்கை போன்ற தீவுகளுக்கு இந்தியாவிலிருந்து இக் கலை வந்தது என்பர். தமிழ் இலக்கியங்களிலும் பொம்மலாட்டக் கலை பற்றிய செய்திகள் காணப் படுகின்றன. திருவள்ளுவர் மரப்பாவையின் அசைவை எடுத்துக்காட்டாகக் காட்டுகிறார். சிவஞான சித்தியாரில் தோற்பாவைக் கூத்தும் மரப்பாவை இயக்கமும் மேற்கோளாகக் காட்டப்படுகிறது
பொம்மலாட்டம் நிகழ்த்தும் முறை ஏறத்தாழ ஒன்பது பேர் பங்கு கொள்கின்றனர். இவர்களில் நான்கு பேர் பொம்மைகளை இயக்குவர். ஒருவர் பொம்மையை எடுத்துக் கொடுப்பவர்; ஏனைய நால்வரும் இசைக் கருவிகளை இசைப்பவர்கள்.
கிராமிய கலைகளில் ஒன்றாகிய பொம்மலாட்டம் நாட்டின் கலாசார பாரம்பரியத்தின் முக்கிய அம்சம், நாட்டு மக்களின் உள்ளக் கருத்து, குணச்சிறப்பு, கலை, பண்பாடு, வாழ்க்கை முறை ஆகியவற்றை பிரதிபலிக்கின்றது.
பொம்மைகளை இயக்குபவர்கள் ஆண்களே; சில குழுக்களில் பெண் இசைக் கலைஞர்கள் உள்ளனர். பொம்மலாட்டத்திற்கு ஆர்மோனியம் தபேலா,மிருதங்கம், ஜால்ரா, முகவீணை ஆகிய பின்னணி இசைக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இன்றைய நிலையில் சிலர் நவீன இசைக் கருவிகளையும் பயன்படுத்துகின்றனர்.
பொம்மலாட்ட அரங்கு
பொம்மலாட்ட அரங்கு பெரும்பாலும் 4 மீட்டர் அகலம், 6 மீட்டர் நீளம், 3 மீட்டர் உயரம் கொண்டதாக இருக்கும். மேற்பகுதி ஒலையால் மேயப்பட்டிருக்கும். அரங்கின் மூன்று புறங்களும் அடைக்கப்பட்டிருக்கும். அரங்கின் வலதுபுறம் இசைக்கலைஞர்கள் அமர்ந்திருப்பர். அரங்கின் முன்புறம் ஒரு மீட்டர் இடைவெளி விட்டுக் கறுப்புத்திரை கட்டப்பட்டிருக்கும். இந்தத் திரை, அரங்கு மட்டத்தில் இருந்து பொம்மலாட்டக்காரரின் உருவம் தெரியாத அளவுக்கு உயரமுடையதாக இருக்கும். பொம்மைகள் தொங்குவதற்குரிய கயிறுகள் கறுப்புத் துணியின்மேல் கட்டப்பட்டிருக்கும். கறுப்புத் துணியின் பக்கவாட்டுப் பகுதிகளும் நீலத் துணியால் மறைக்கப்பட்டிருக்கும். மொத்த அரங்கின் முன்பகுதியை மறைக்கும் திரைச்சீலையும் இருக்கும்.
 

遠。 ឆ្នាវ៉ាឌ័
45
சிறுவர்களுக்கான நிழலாட்டம்
தவிர்ந்த வேளை
பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள

Page 46
ாபாத்திரங்களின் பண்பை விளக்கும்
ட அலங்காரம் மற்றும் அணிகலன்கள்
நூலுடன் இணைக்கப்பட்டுள்ள பொம்மையின் உறுப்புகள்
 

தோற்பாவைக்கூத்து
பொம்மை செய்யும் முறை
ஆய்வாளர் அ.க.பெருமாள் பொம்மை செய்யும் முறைகள் பற்றி கூறுகையில், பொம்மலாட்டத்துக்குரிய பொம்மைகளைச் செய்வதற்கு எடை குறைந்த மரங்களைப் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் இதற்குக் கல்யாண முருங்கை மரத்தைப் பயன் படுத்துகின்றனர். இந்த மரக் கட்டைகளை நீரில் ஊற வைத்துப் பொம்மைக்குரிய கை, கால், தலை, பாகங்களைத் தனியே வெட்டி எடுத்துக் கொண்டு பொம்மை உருவத்தை உருவாக்குகின்றனர். பொம்மலாட்டப் பொம்மை 45 செ.மீ முதல் 90 செ.மீ வரை உயரமுடையதாய் இருக்கும். இதற்கு ஏற்ப மரத்தைப் பக்குவம் செய்கின்றனர். பொம்மையின் உறுப்பு பாகங்களைச் செய்து முடித்ததும் அவற்றை மீண்டும் உலர வைக்கின்றனர். பின் உறுப்புகளை இணைக்கின்றனர். இந்த உறுப்புகள் தனித் தனியே அசையும் தன்மை கொண்டவை.
பொம்மையின் உறுப்புகளுக்குப் பாத்திரங்களின் தன்மைக்கேற்ப வண்ணம் தீட்டுவர். முந்திய காலங்களில் எல்லாப் பொம்மைகளுக்கும் மஞ்சள் வண்ணம் கொடுத்தனர். பாத்திரங்களின் தன்மைக்கு ஏற்ப, ஆடைகளும் அணிகலன்களும் அணிவிக்கப்படுகின்றன. சமூகக் கதைப் பாத்திரங்கள் நவீன உடையை அணிகின்றனர். தூரத்திலிருந்து பொம்மையைப் பார்ப்பவர்கள் இனம் காணும்படி அவை அமைக்கப் பட்டிருக்கும். முந்திய காலங்களில் பொம்மைகளின் கால் பகுதிகளும் முழுமையாக இருந்தன என்றும், இப்போது பொம்மைகளைக் கொண்டு செல்வதற்கு அது இடையூறாக இருப்பதால் கால் பகுதிகளைத் துணியால் மறைத்து விடுகின்றனர் என்றும் கலைஞர்கள் கூறுகின்றனர்.

Page 47
பொம்மைகளை இயக்கும் முறை பொம்மலாட்ட நிகழ்ச்சியில் ஒரு பொம்மையை ஒருவரே இயக்குகிறார். பொதுவாக ஒரு நிகழ்ச்சியை நடத்த நான்கு பேர் தேவைப்படுகின்றனர். கதை நிகழ்ச்சிகளுக்கு ஏற்ப பொம்மைகளை இயக்கும் முறையை பொம்மைகளுடன் கட்டப்பட்ட கயிற்றை அசைப்பவரே தீர்மானிக்கின்றார். பொம்மையை இணைக்கும் கயிறுகளின் அமைப்பை, அதை இயக்கும் முறையின் அடிப்படையில் இரண்டு வகைகளாகக் கூறுகின்றனர்.
முதல் வகை - பொம்மையின் உறுப்புகளில் பிணைக்கப்பட்ட கயிறுகளை ஒரு குச்சியில் கட்டி அதை இயக்குவது. இரண்டாவது வகை - பொம்மையின் உறுப்புகளுடன் கயிற்றுக்குப் பதில் மெல்லிய கம்பிகளை பிணைத்து, அவற்றை ஒரு வளையத்துடன் மொத்தமாகக் கட்டித் தலையில் மாட்டிக்கொண்டு இயக்குவது. இவ்வகை நிகழ்ச்சியில் கைகளால் கம்பிகளை ஆட்டியும் தலையை ஆட்டியும் பொம்மைகளை அசைக்கின்றனர்.
பொம்மலாட்டம் கதை தழுவிய கூத்து ஆகும். பிற் காலத்தில் தோன்றிய நாடகங்கள் இக் கூத்தை மாதிரியாகக் கொண்டே உருவாகியிருக்கின்றன என ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். இந்தியாவில் பொம்மலாட்டக் குழுவில் இரண்டு பாணிகள் உள்ளன. ஒன்று கும்பகோணம் மயிலாடுதுறைப் பாணி; மற்றையது சேலம் பாணி. சேலம் குழுப் பாணியினர் முக வீணையைப் பயன் படுத்துகின்றனர். இசைக் கூத்து மெட்டில் இருக்கும்.
உலக அரங்கில் நாட்டுப்புறக் கலைகள் மதிக்கப்படக் காரணம் அவற்றின் இசையும் ஆட்டமுமேயாகும். பாமரர்களால் தோற்றுவிக்கப்பட்ட இக் கலையை இன்றைய மக்கள் வியந்து ரசிக்கின்றனர். இக்கலைகள் இசையுடன் மட்டும் தொடர்பு கொள்ளாமல் ஒவ்வொரு மனிதனின் அன்றாட வாழ்விலும் அகலாத இடத்தை பிடித்திருக்கிறது. ஆடுவோம் பாடுவோம் நாட்டுப்புறக் கலைகளால் ஆனந்த பயன் அடைவோம்.தி
 

ககுவது.
பிகளை பிணைத்
இய
§% 密 繆壽 *義정 ¿ 響* 密
த்தமாகக் கட்டி
GuroIII
வளையத்துடன்
ன் உறுப்புகளுடன் கம்
பொம்மையி
困 而 困 迁 圈 @
மரக்கட்டை

Page 48

தடைகள் பல தாண்பு மிளிர்ந்த தாகூரின் கீதாஞ்சலி
இராசி ஜெயபதி (சிட்னி)
திகவல் பரிமாற்றம் அபிவிருத்தி அடையாத பழைய காலங்களில் தலை சிறந்த ஆக்கங்கள் அறிஞர் பெரு மக்களது கண்களுக்கு எட்டாத தொலைவில் இருந்தமை மிகவும் துரதிஷ்டமானது. GTL “ IL TITLÊ நூற்றாண்டிலே மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச் செய்த எலும்பையும் உருக்கவல்ல திருவாசகத்தின் சிறப்பை மேற்கத் தியவர்களுக்கு கிறிஸ்தவ மதப் பாதிரியான ஜி.யூ.போப் எடுத்தியம்ப பத்து நூற்றாண்டு களுக்கு மேல் ஆகிவிட்டது. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீகக் கவிஞரும் வானசாத்திரியுமான உமர் கயாம் (Omar Kahayyam) g) ugbibul றுபெயத் என்ற சிறப்பான கவிதைகளை ஆங்கில மொழி யில் ஆக்கியவர் பித்ஸ்ஜெறள் (Edward Fitzgerald) GTGöID JÉSSIG கவிஞராவார். இவர் 1859இல் எதிர்பாராமல் இக் கவிதைகளை கண்டு எடுத்தார்.
உமர்கயாமீன் ஆங்கில மொழி பெயர்ப்புகளைத் தழுவி தவமணி நேசிகலிநாயகம் பிள்ளை (1876 1954) தமக்கேயுரிய பாணியில் தாம் வாழ்ந்த சூழலுக்கு உகந்த | ПL будбубT சிறப்பான முறையில் இயற்றியதை பின் வரும் பாடல்களில் காணலாம். வெய்யிற்கேற்ற நிழல் உண்டு விசும் தென்றல் காற்று உண்டு கையில் கம்பன் கவி உண்டு கலசம் நிறைய மது உண்டு தெய்வ கீதம் பல உண்டு தெரிந்து பாட நீயும் உண்டு வையம் தரும் இவ் வளம் அன்றி வாழும் சொர்க்கம் வேறு go of G is 2

Page 49
இரவீந்திரநாத் தாகூரின் வங்க மொழியில் இயற்றப்பட்ட கீதாஞ்சலிக் கவிதைத் தொகுப்பும் மேற்கத்திய கவிஞர்களின் கவனத்தை ஈர்க்க சில வருடகாலம் எடுத்துள்ளது.
தாகூரின் 150ஆம் வருடப்பிறந்த ព្រះសាម៉ា கொண்டாட்டங்கள் (2010 - 2011 காலப்பகுதியில்) உலகளாவிய ரீதியில் பல இடங்களில் கொண்டாடப் பட்டன. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் இலக்கியத் திற்கான நோபல் பரிசை (1913) ஆசியாவில் முதன் முதல் பெற்ற இவரது வங்க மொழிப் பாடல்கள் இன்று இந்தியாவினதும் வங்காள தேசத்தினதும் தேசிய 55LDT.g. இவ்விரு நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இது இவரது கவித்திறனுக்கு நல்ல எடுத்துக்காட்டு தாகூர் ஒரு சிறந்த கவிஞன் என்பதனை எவரும் மறுக்க மாட்டார்கள் அத்துடன் அவர் உன்னத மனித நேய வாதி. மேலும் ஒர் ஆன்மீக சமூக, அரசியல் சீர்திருத்த வாதியாக ஒவியராக, நாவல் சிறுகதை ஆசிரியராக, இசை வல்லுநராக இந்திய கலாசாரத்தை சர்வதேச மட்டத்தில் பிரகாசிக்க வைத்த பெருமைக்குரியவர். தான் மேற்கொண்ட ஒவ்வொரு துறையிலும் அதி உயர் நிலையை அடைய SHILITIgil உழைத்தவர். மகாத்மா காந்தியின் சம காலத்தலைவரான இவரது சில கொள்கைகள் காந்தியின் கொள்கைகளை போன்று இந்திய பாமர மக்களை அதிகம் ஈர்க்கவில்லை எனினும் பூகோள மட்டத்தில் பல கல்விமான்களையும் புத்தி ஜிவிகளையும் இவரது ஆக்கங்களும் தத்துவங்களும் கவர்ந்தன.
கலைப்பயணம்
தாகூர் வங்க இலக்கியத்தில் பல புதிய மாற்றங்களைக் கொண்டு வந்ததன் மூலம் அம்மொழிக்கு மறு மலர்ச்சியை ஊட்டினார். ஆறுமுகநாவலர் பண்டிதர்களுக்கு மட்டும் விளங்கக்கூடிய செய்யுள் வடிவத்தினை மாற்றி சாதாரண மக்களுக்கும் விளங்கும் விதமாக எளிய தமிழ் வசன தடையைக் கையாண்டது போல் தாகூரும் Լ60ԱՔԱԼ சமஸ்கிருத இலக்கிய வடிவமைப்புகளைப் பின்பற்றுவதை மாற்றி வங்க பேச்சு மொழியை வசனங்களைக் கவிகளிற்கூடப் புகுத்தினார்.
மேலும் அவர் இந்தியக் கலாசாரத்தை மேற்கு உலகத்திற்கும் மேற்கத்தைய கலாசாரத்தை இந்தியர்களுக்கும் அறிமுகப்படுத்துவதில் பெரும் பங்காற்றினார். இதன் பலனாக வங்க மொழி 30 - 40 வருடங்களில் பாரிய மறுமலர்ச்சி கண்டது.
இவர் இங்கிலாந்திலிருந்து 1970இல் நாடு திரும்பிய 10 வருட காலத்தில் பல கவிதை நூல்களைப் பிரசுரம் செய்தார். இருப்பினும் 1890 இல் வெளியான திTசவரது sailiGasniggrgu libratg) (Manasi - The idea One) இவரின் முதிர்ச்சியடைந்த கவித்திறமையை வெளிச் கட்டுவதாக அமைந்தது. இவரது இத் தொகுப்பில் சில கவிகள் வசன நடையிலும் வேறு சில அரசியற்
கருத்துக்களடங்கியனவாகவும் மற்றும் சில நகைச்சுவை
 

ಜ್ಞ *町
49
மிக்கனவாகவும் அமைந்தன. அவற்றில் சில வங்க மக்களின் குறை குற்றங்களைச் சுட்டிக்காட்டத் தவற 65ჩ6პაგუიფი).
1891இல் தாகூருக்கு 30 வயதிருக்கும் போது குடும்ப நில புலன்களை நிர்வகிப்பதற்காக கிழக்கு வங்கத்திற்குச் சென்றார். (அப்பகுதி பங்களாதேசமாக 1971இல் பிரிந்து விட்டது) அப்பகுதியிலிருந்த பத்து வருட காலத்தில் மேலும் ஆக்கமுயற்சிகளில் ஈடுபட்டார் இமயத்தில்
உற்பத்தியாகும் கங்கை நதி வங்காள விரிகுடாவை
அண்மிக்கும் பகுதியாகிய பத்மா ஆற்றுப் பகுதியிலுள்ள ஒடத்திலமைந்த குடிலிலிருந்து (Boat House) பல விதமான கலைப் படைப்புக்களைச் செய்தார். இதில் சோனா தறி (The Golden Boat) கவிதைத் தொகுப்பு மற்றும் சித்திரங் கதா (Chitrangada) நாடகம் போன்றவை அடங்கும்.
மகாகவி பாரதியார் யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்றார். வங்க மொழியும் பாரதியார் கூறிய தமிழ் மொழி போல் இனியதொரு மொழியாகும் தாகூர் அடிப்படையில் தன்னை ஒரு கவிஞராகக் கருதினார்.
9/6), Uri GFL DITri 25OO LITTL GÖTEGOD GOT I Gong மொழியில் இயற்றியுள்ளார். இப் பாடல்களிற் சிலவற்றுக்கு அவரே இசையமைத்துத் தானே பாடியுள்ளார். இப்பாடல்கள் வங்க கிராமப் பாடகர்களின் (Bauls) சாயலை ஒத்திருக்கிறது. வங்காளிகள் இவரின் பாடல்களுக்கு இரவீந்திர சங்கீதம் என்ற தனிப்பெயர் சூட்டியுள்ளனர்.
தாகூரின் வங்கப் பாடல்களை வங்காளிகள் மிகவும் விரும்புகின்றனர். தாகூரின் பாடலில் ஒரு வரியை எடுத்து பீட்டில் போல் மக்காட்னி (Beate Paul Mccartney) 56075) ஒரு பாடலில் இணைந்துள்ளார். தாகூரின் இசை ஞானத்தை சித்தார் மேதை ரவி சங்கரும், மேற்கத்தைய கிழக்கத்தைய இசை நன்கறிந்த சினிமா மேதை சத்தியஜித் ரேயும் வெகுவாகப் புகழ்ந்துள்ளனர்.
1891 இல் வங்க மொழியில் முதல் சிறுகதையாக பிச்சைக்காரியைத் தொடர்ந்து அவர் எழுதிய பல தரமான சிறு கதைகளை சத்தியஜித்ரே கலை அம்சத்துடன் தனக்கேயுரிய பாணியில் படங்களாக்கினார். அவரது சிறு கதைகளும் பாடல்களும் கிழக்கு வங்க நாட்டுப்புற 9/60ԱՔ | Daj polici.T. வாழ்க்கைப் பிரச்சினைகளையும் இன்னல்களையும் சுட்டிக் காட்டியது. அவை வங்க கிராமங்கள் மீதும் மக்கள் மீதும் இவருக்கிருந்த தீவிர பற்றையும் அன்பையும் வெளிக்காட்டுபவையாக அமைந்தன. உணர்வுகளைத் தனது மருமகள் இந்திரா தாகூருக்குப் பல தடவை கடிதம் மூலம் அறியத் தந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கிழக்கு வங்கத்திலிருந்து புறப்பட்டு சுமார் 40 ஆண்டுகள் மேற்கு வங்கத்தில் வாழ்ந்த காலத்தில் பல கஷ்டங்ளுக்குத் தாகூர் முகம் கொடுக்க நேரிட்டது. இருப்பினும் அக்காலப் பகுதியிலும் தனது காத்திரமான படைப்புக்களுடன் கல்விப் பணிகள், பொது நலப்

Page 50
អ៊ែងហ្វិញម៉ាស៊ែប៊ី 50
பணிகள், அவற்றின் பொருட்டு நிதி திரட்டல், வெளி நாட்டுப் பயணிகள் மற்றும் அரசியல் விமர்சனங்கள் போன்றவற்றில் பெரிதும் ஈடுபட்டார்.
கீதாஞ்சலி தனது ஆன்மீக ஈடேற்றத்துக்குப் ஜீவாத்மா பரம்பொருளை வேண்டி அஞ்சலி செலுத்துவதாக கீதாஞ்சலிப் பாடல்கள் அமைகின்றன. வங்க மொழி கீதாஞ்சலியில் 183 பாடல்கள் இருக்கின்றன. இப் பாடல்கள் அல்லது கீதங்கள் தாகூர் பத்மா நதிக் கரையிலிருந்து பல கால கட்டங்களில் தனது வெவ்வேறு மொழிக் கவித் தொகுப்பிலிருந்து தெரிவு செய்த ஒரு தொகுப்பாகும். இவற்றிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சில கீதங்களைக் கண்ணுற்ற ஆங்கில அறிஞர்கள் அவைமேல் அதிக ஆர்வம் காட்டினர். அதனால் அவற்றைத் தாகூர் இங்கிலாந்திற்கு எடுத்துச் சென்றார். மொழிபெயர்ப்பு பூரணமாகாத நிலையில் இருந்தவற்றை நீண்ட நாள் கப்பற் பிரயாணத்தின் போதும் மொழி பெயர்த்து
அவ்வேலையைப் பூர்த்தி செய்து கொண்டார்.
கீதாஞ்சலி பாடல்களை இங்கிலாந்திலுள்ள தனது ஆங்கில நண்பர்களுக்கு காண்பிக்க விரும்பினார். புகை வண்டியில் மகன் ரதீந்திரநாத் (RATHINDRANTAH) அவர்களைச் சந்திக்கச் சென்றார்.
அவ்விதம் செல்லும் போது, கீதாஞ்சலி இருந்த பையைத் தவறுதலாக மகன் வண்டியில் விட்டு விட்டு இறங்கி விட்டார். அதிஷ்டவசமாக அடுத்த நாள் தொலைந்த பொதிகளை கையளிக்கும் அறையில்இருந்து கீதாஞ்சலி இருந்த பையை மீண்டும் பெற்றுக் கொண்டார்.
தாகூர் வங்க மொழிக் கீதாஞ்சலியில்இருந்த 183 பாடல்களில் 103 பாடல்களை மட்டும் தெரிவு செய்து,
 
 

ஆங்கிலத்தில் இங்கிலாந்திலுள்ள தனது நண்பர்களான கவிஞர்களுக்குக் காண்பித்தார்.
கீதாஞ்சலியைப் பார்த்தவுடனேயே அதன் தரமும் புதிய அணுகுமுறையும் அங்கு பல கவிஞர்களைக் கவர்ந்து விட்டது. இவர்களுள் வை.பி.யேற்ஸ் 9/6) Jffa5(GIBL b (W.B. YEATS) 9JL LJ5.Jg5G) Jii. இவர் தாகூரின் ஆங்கில மொழி பெயர்ப்பைச் சில இடங்களில் மாற்றிச் சீராக்கிச் சிறப்பித்தார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு தாகூருக்குக் கிடைத்து 10 ஆண்டு களின் பின் அதே பரிசு யேற்ஸ்சுக்கும் கிட்டியது. மற்றும் நோபல் பரிசு (6) usỦAD SEJDITLħ gĚm56õT (Grahm Green) என்பவர் யேற்ஸ் அவர்கள் தாகூரை அளவுக்கதிகமாகக் புகழ்ந்து தூக்கி விட்டதாகக் குறை கூறினார்.
இங்கிலாந்திலுள்ள இந்தியச் சங்கம் செப்டெம்பர் 1912இல் 750 ஆங்கில கீதாஞ்சலிப் பிரதிகளைப் பதிப்பித்தது. இவற்றைத் தLDது அங்கத்தவர்களுக்கும் ஏனையோருக்கும் விநியோகிப்
பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்தனர். அன்றைய முன்னணிப் பத்திரிகையான 'டைம்ஸ் (Times) திருதாகூரின் கவிதைகள்’ என்று போற்றி சிறப்பான ஒரு விமர்சனத்தை எழுதியது.
தாகூரின் உற்ற நண்பரான உவில்லியம் றொதன்ஸ்தீனின் (William Rothenstein) முயற்சியால் LD5LÍ)GvGðT பிரசுரகர்த்தாக்கள் முன்னைய இந்திய சங்கம் வெளியிட்டிருந்த நூலின் விலையை விட மிக மலிவான பதிப்பாக வை.பி.யேற்வின் நூல் அறிமுகத்துடன் கீதாஞ்சலியை மார்ச் 1912இல் வெளியிட்டார்கள். இதனால் முன்னர் உலகம் அறிந்திராத தாகூரின் பெயர் ஐரோப்பாவில் பரவலாகப் பிரசித்தி பெற்றது.

Page 51
கீதாஞ்சலியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இரு பாடல்களின் தமிழ் ஆக்கங்களைக் கீழே காண்க.
எனது பாடல் தனது அணிகலன்களைக் களைந்து விட்டாள். ஆடை அலங்காரத்தினால் இறுமாப்பில்லை அவளிடம். அணிகலன்கள் உனக்குமெனக்குமிடையில் புகுந்து எமது ஒருங்கிணைப்பைக் கெடுத்துவிடும். அவற்றின் கினிர்கிணிரென்ற ஒலி மென்மையான உனது குரலை மறைத்து விடும். நான் கவி என்ற எனது அகங்காரம் உன் கண்முன்னால்
வெட்கத்தால் மறைகிறது. உலக மகா கவிஞர் பெருமானாகிய உனது காலடியில் அமருகிறேன். புல்லாங்குழலின் தவழ்ந்துவரும் இனிய இசைபோல், எனது வாழ்வை எளிமையாகவும் நேராகவும் ஆக்கிக் கொள்ள மாத்திரம் எனக்கு அருள் புரிவாயாக.
(கீதாஞ்சலி 7ஆவது பாடல்) எங்கே மனம் பயமற்றிருக்கிறதோ தலை நிமிர்த்தப்பட்டிருக்கிறதோ, எங்கே அறிவு கட்டுபாடற்றுள்ளதோ, எங்கே உலகம் குறுகிய சுவர்களைக் கொண்டு துண்டாடப்படவில்லையோ, எங்கே வார்த்தைகள் உண்மையின் ஆழங்களிலிருந்து வருகின்றனவோ, எங்கே அயராத வேட்கை தன் கரங்களை முழுமை நோக்கி நீட்டுகிறதோ, எங்கே பகுத்தறிவு என்னும் வெள்ளோடை செத்த பழக்கங்களெனும் பாலைக்கு வழி தவறவில்லையோ, எங்கே மனம் உம்மால் என்றும் பரந்துபடும் எண்ணங்களுக்கும் ஆக்கத்திற்கும் அழைத்துச் செல்லப்படுகிறதோ அந்த சுதந்திர சொர்க்கத்தில், இறைவா என் நாட்டை எழச் செய்.
(கீதாஞ்சலி 35 ஆவது பாடல்) கீதாஞ்சலி உட்பட தாகூரின் ஆக்கங்கள் சில தமிழ் மொழியில் வெளிவந்துள்ளன. அவரது கவிதைகளை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

遠。 ថាញ៉ាម៉ាអៃ 51
இளங்கம்பன் என்பவர் "கீதாஞ்சலி கீர்த்தனைகள்’ என்ற
பெயருடன் வெளியிட்டுள்ளார். குமாரசாமி சேனாதிபதி தாகூரது சில கவிதைகள், கதைகள், கட்டுரைகள் ஆகியவற்றைத் தமிழாக்கம் செய்துள்ளார். அவரது பதினொரு கதைகளைத் தெரிந்து வ.வே.சு.ஐயர் தமிழில் தந்துள்ளார்.
நோபல் பரிசு தெரிவில் இழுபறி
தாகூர் தனது கீதாஞ்சலி ஆக்கம் நண்பர்களினால் நோபல் பரிசுக்குச் சிபாரிசு செய்யப்படுமென்று கனவிலும் எண்ண வில்லை. கீதாஞ்சலியை இவர்களிடம் காண்பித்த பின் வேறு விடயமாக அவர் அமெரிக்காவுக்குச் சென்று 67)L'L Ti.
இலக்கியச் செல்வாக்குள்ள ஐரோப்பியர் சிலருக்குத் தங்களது மரபிலிருந்து வேறுபட்டிருந்த புதுமையான கவிதைகளைப் பிடிக்கவில்லை. மறுபுறம் வேறு சிலருக்கு இக்கவிதைகள் மெத்த பெறுமதியானவையாகத் தோன்றின. இங்கிலாந்திலுள்ள இலக்கியத்திற்கான றோயல் காடி (Thomas Hardy) என்பவரது பெயரை 1913ஆம் ஆண்டிற்கான இலக்கிய நோபல் பரிசுக்கு சுவீடனிலுள்ள நோபல் தெரிவு கழகத்திற்குச் சிபாரிசு செய்தனர். ஆனால் அதே இங்கிலாந்து றோயல் கழக அங்கத்தவராக இருந்த தோமஸ் இஸ்தேஜ்மூர் (Thomas Surge Moore) என்பவர் மட்டும் கீதாஞ்சலியினால்
RABINDRANATH
TAGORE
প্ৰহ
పళ్ల
揆
جسے O

Page 52
ឆ្នាអ្វី 52
பெரிதும் கவரப்பட்டவராக தாகூரை நோபல் பரிசுக்கு தனது தனிப்பட்ட முறையில் பிரேரித்தார். சுவீடனிலுள்ள நோபல் பரிசு தெரிவுக் குழு இச்சிக்கலைத் தீர்ப்பதற்காக விசேடமாக ஒருவரை நியமித்து அவரின் நிபுணத்துவ அபிப்பிராயத்தைக் கோரியது.
அவரின் தீர்ப்பு தாகூருக்குச் சாதகமாக அமைந்தது. அவரது தீர்ப்புடன் தெரிவுக்கான சிக்கல் முடிந்திருக்க வேண்டும்; ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற முடிவு எடுக்கப்படாமல் இருந்தது.
இத்தகையதொரு நிலையில் அக்காலப் பகுதியில் வாழ்ந்த மிகப் புகழ்பெற்ற சுவீடிஷ் புலவராகிய கெய்டிஸ் தாம் (C.GVVHeidestam) தாகூரின் ஆக்கமே நோபல் பரிசுக்குரிய முழுத் தகுதியுடையது என்ற தனது கருத்தைக் கூறினார். இவரது கருத்து மீண்டும் தாகூருக்குச் சாதகமான நிலையை உருவாக்கியது.
பதின்மூன்று பேர் அடங்கிய நோபல் பரிசு வழங்கும் கழத்தில் 12 பெயர் தாகூருக்குச் சாதகமாக வாக்களித்தனர். ஆதலால் நவம்பர் 13 ஆம் நாள் (1913 ஆம் ஆண்டு) இரவீந்திரநாத் தாகூர் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார்.
பரிசு பெற்ற நற்செய்தியை தெரிவித்த சுவீடன் நோபல் கழகத்தினருக்குத் தாகூரின் விலாசம் தெரியாத காரணத்தினால் மக்மிலன் பிரசுரத்தினரின் உதவியை நாடி, இந்தியா திரும்பியிருந்த தாகூரைத் தொடர்பு கொண்டனர். ஆனால் இச்செய்தியை அறிந்த தாகூர் குறுகியகால இடைவெளியில் சுவீடன் சென்று நேரடியாக நோபல் பரிசைப் பெறமுடியவில்லை. அதனால் தன்னைத் தெரிவு செய்ததற்கு நன்றியைத் தந்தி மூலமாகத் தெரிவித்தார்.
தாகூரின் சார்பில் இந்தியாவில் கடமை செய்த தூதரக அதிகாரி பரிசைப் பெற்று அதனை வங்கத்து தேசாதிபதியிடம் சேர்ப்பித்தார். வங்க தேசாதிபதி காமிச்சல் பிரபு (Lord Carmichael) அவரது மாளிகையில் வைத்து தாகூருக்கு நோபல் பரிசினை வழங்கினார்.
பொதுவாக நோபல் பரிசை ஏற்பவரின் பேச்சு (Acceptance Speech) பரிசு கிடைத்தவுடன் நிகழ்த்தப் படும். ஆனால் தாகூர் இப்பேச்சை ஏழரை வருடங்கள் கழிந்த பின் சுவீடன் சென்றிருந்த வேளை நிகழ்த்தினார். இதேபோல் பல ஆண்டுகள் கழித்து அண்மையில் மியன்மாரின் (பர்மா) ஆங் சான் சூகி (Aung San Su Ky) தனது சமாதானத்திற்கான நோபல் பரிசினை ஏற்கும் பேச்சை பல ஆண்டுகள் கழித்து சுவீடன் சென்றபோது நிகழ்த்தினார்.
தாகூரின் ஆக்கங்கள் நூற்றாண்டு காலம் கடந்தும் அவற்றின் உயரிய தராதரத்தால் காலத்தை வென்று அவரது பிறந்த நாட்டில் மட்டுமல்லாது பல நாடுகளிலும் நிலைத்து நிற்கின்றன.
என்டி பறோ நேப்பியர் பல்கலைக்கழகம் தாகூரின் 150 ஆவது பிறந்த ஆண்டை ஒட்டி அவரைக் கெளரவிக்கும்

(Lp5LDIT5 The Scottish Centre For Tagore Studies (Scots) என்ற அமைப்பை ஆரம்பித்துள்ளது.
கலாசாரம் புரிந்துணர்வை ஏற்படுத்தவும் பிறநாட்டு கலைஞர்களுடன் தொடர்பை ஊக்குவிக்கும் முகமாகவும் இந்தியாவின் கமலாநேரு கல்லூரியானது பின்லாந்து, ருமேனியா, ருசியா, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, சேவியா, போர்த்துகல் போன்ற நாட்டுக் கலைஞர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது தாகூரது பரந்த கலை உணர்வை எமக்கு எடுத்துக் காட்டுகிறது.
எவ்விதமான தடைகள் ஏற்பட்டாலும் தரமான சிறந்த படைப்புக்கள் காலத்தை வென்று நிற்கும் என்பதனை தாகூரின் கீதாஞ்சலி எமக்குக் காட்டுகிறது.இ
உசாத்துணைகள்
1. Krishana Dutta and Andrew Robinson. 1997
Rabindranath Tagore : An Anthology bypicador Publication
2. Krishana Dutta. 2003
A Cultural and Literary History Interlink Books Publishing Group Inc.
3. Rabindranath Tagore Gitangali (Song Offering) Ratna Saha Parul Prakashani. India. 2007
4. India Perspectives. Vol - 24 No -2 / 2010 Rabindranath Tagore Issus . India

Page 53
議
தஞ்சையில் பல போர்த்து விரவாள்க
பாண்டிய மன்னர்களிடம் தஞ்சாவூர் கி.பி. 13ஆம் நூற்றாண்டளவில் வீழ்ந்த பின்னர் 15ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்கள் தஞ்சையை கைப்பற்றினர். 16ஆம் நூற்றாண்டில் மராட்டிய அரசு தஞ்சையை கைப்பற்றியது. வெங்காஜி மன்னர் முதலில் தஞ்சையை ஆளத் தொடங்கினார். பின்னர் சரபோஜி அரசரானார். சரபோஜி மன்னர், தஞ்சைக் கோட்டையை மட்டும் தன் வசம் வைத்துக் கொண்டு ஏனைய பகுதிகளை பிரித்தானியரிடம் வழங்குவதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டார். இறுதி மன்னராகத் திகழ்ந்த இரண்டாம் சரபோஜி மன்னர் (1798
32) இலக்கியத்தில் ஈடுபாடுள்ளவர். இதனால் காலத்தால் அழியாத அரிய பல நூல்களைச் சேகரித்து, சரஸ்வதி மகால் என்னும் நூலகத்தை ஏற்படுத்தினார். சரபோஜி மன்னரின் வாரிசுகள் இன்றும் சரஸ்வதி மஹாலுக்கு அருகிலுள்ள சரபோஜி அரண்மனையில் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களது அரண்மனையின் வரவேற்பறையில் இருக்கும் வாள்கள் இவை. சரபோஜி மன்னர் பரம்பரையினர் பயன்படுத்திய இந்த வாள்கள் இன்றும் கூர் மழுங்காமல் அதே மிடுக் குடனும் கனத்துடனும் காணப்படுகின்றன. இந்த வாள்கள் ஒவ்வொன்றும் சராசரியாக ஊந்து முதல் ஏழு கிலோவரையும் மூன்று அடி முதல் நான்கு அடி வரையிலான நீளமும் கொண்டிருக்கின்றன.
 
 
 
 
 
 
 
 


Page 54
ក្តាញអ៊ែ 54 நினைவுத்திரை
திரைப்பட இசைத்துறையில் ஒரு நட்சத்திரம்
பத்மமுறிநீ கண்டசாலா தெலுங்கு திரைப்பட இசைத்துறையில் முடிசூடா
மன்னனாக விளங்கியவர் கண்டசாலா. எனினும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் மறக்கமுடியாத ஒருவர்.
தமிழ்த் திரை இசை வானில் கண்டசாலா என்ற நட்சத்திரத்திற்கு இருந்த இடம் தனித்துவமானது என்றால் அது மிகையான கூற்றல்ல. 1950ஆம் ஆண்டுத் தசாப்தத்தில் தனது திரைப்படப் பாடல்கள் மூலம் தமிழ் ரசிகர்களைக் கிறங்கடித்தவர். அதியற்புதமான அந்த மாயக் குரலின் ரீங்காரம் அன்று ரசிக நெஞ்சங்களை நிறைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அந்த இசை மன்னர் மறைந்து இற்றைக்கு 38 ஆண்டுகள் ஆகின்றன வெனினும், அவரது ரசிகர்கள் இன்றும் அவரது பாடல்களைக் கேட்டு அனுபவிக்க அவாவுறுகின்றனர் என்பது உண்மை! தமிழ் திரைப்பட ரசிகர்களைப் பொறுத்தவரை அமர திரைக் காவியங்களான 'தேவதாஸ் மற்றும் அனார்க்கலி போன்றவை அவர்களது உள்ளங்களில் உறைந்திருக்கும் 6Ꭷ JᎶᏡᎠ ᎠᎢ, அப்படங்களின் பாடல்களுக்கு தனது மனோரம்மியக் குரலினால் உயிரும் உணர்வும் ஊட்டிய கண்டசாலாவும் வாழ்ந்திருப்பார். பிறப்பால் ஒரு தெலுங்கர்; ஆனாலும் (1922 - 1974) தெலுங்கிலும், நமது தாய் மொழியான தமிழிலும் மட்டும் கீதமிசைத்தவரல்ல; கன்னடம், மலையாளம், துளு, ஹிந்தி ஆகிய மொழித் திரைப்படங்களிலும் பாடி, அந்தந்த மொழி இரசிகர்களின் இதயங்களையும் கவர்ந்தவர்.
சிறந்த இந்திய திரைப்பட பின்னணிப் பாடகராகவும், திரைப்பட இசையமைப்பாளராகவும் விளங்கிய கண்டசாலா, இன, மொழி, வேறுபாடுகளைக் கடந்து, இலட்சக் கணக்கான ரசிகர்களைக் கொள்ளை கொண்ட ஒரு முன்னணிக் கலைஞராகத் திகழ்ந்து 'பத்மபூரீ என்னும் அதி உயர் விருதினையும் பெற்றவர்.
பாடல் பதிவில் கண்டசால
*
 

ஒரு சாதாரண தெலுங்குப் பிராமண குடும்பத்தில் சூரையா என்னும் ஓர் உள்ளூர்ப் பாடகருக்கு 1922ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தவர் கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ். தனது தகப்பனார் தரங்கம் பாடும்போது, அதனைக் கேட்டு நடனம் ஆடுவாராம். அவர் சிறு பிள்ளையாக இருக்கும்போதே தந்தையார் இறந்து விட்டார். அவரது தாய்வழி மாமனாரான றையலி பிச்சை இராமையா என்பவர் இவரை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
கண்டசாலா தமது ஆரம்ப இசைப் பயிற்சியை பத்ரயனி சீதாராம சாஸ்திரி என்பவரிடமிருந்து பெற்றுக் கொண்டார். பின்னர் இவர் வீட்டில் யாருக்கும் தெரியாமல், விஜய நகரத்திலுள்ள மகாராஜாஅரசு சங்கீத நடனக் கல்லூரியில்
பின்னணிப் பாடகிகள் பி.சுசிலா, பி.லீலா, ஜிக்
a . . .
ஜ் క్టీమ్లీ
கி ஆகியோருடன்
ఖ

Page 55
சேர்ந்து கொண்டார். இசையைக் கற்றுக் கொள்ளும் முயற்சியில் பல்வேறு கஷ்டங்களுக்கும் முகம் கொடுத்து, 'சங்கீத வித்துவான்’ பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபாடு காட்டிய கண்டசாலா 'வெள்ளையனே வெளியேறு? போராட்டத்திலும் கலந்து கொண்டார். இதன் பயனாக 18 மாத காலம், பெல்லாரியில் உள்ள அல்லிபுரம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் இருந்து வெளிவந்து, வேலை ஏதுமில்லாமல் இருந்தபோது, "உனக்குத் தானே நல்ல இனிமையான குரல் வளம் இருக்கிறது. சினிமாவில் பாட முயற்சி செய்து பார்க்கலாமல்லவா?’ என்று கண்டசாலாவுக்கு ஆலோசனை கூறினார் ஒரு பெரியவர்.
சிறைவாசத்திற்கு பின் கண்டசாலா பெதபுலிவாறு என்னும் கிராமத்தைச் சேர்ந்த சாவித்திரி என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இக் கிராமத்தில் புகழ்பெற்று விளங்கிய சினிமாப் பாடலாசிரியரான ராகவாச்சாரியாரை கண்டசாலா ஒரு நாள் சென்று சந்தித்தார். அவரிடம் குடி கொண்டிருந்த இனிய சாரீர வளத்தை ராகவாச்சாரியார் புரிந்து கொண்டார். அதுவே அக்கலைஞரின் வாழ்வில் ஒரு மகத்தான திருப்பத்திற்கும் காரணமாக அமைந்தது.
ராகவாச்சாரியார் அவரை சென்னை திரைப்படத் துறையில் அறிமுகப்படுத்தி வைத்தார். அதன் மூலம் ஏற்பட்ட திருப்பம், கண்டசாலா தென்னக திரைப்படத் துறையில், அடுத்த மூன்று தசாப்த காலம் முன்னணி திரைப்படப் பாடகராக கோலோச்ச வழிவகுத்தது.
இருப்பினும் அவர் எடுத்த எடுப்பில் பெயரைப் பெற்று விடவில்லை. பல கஷ்ட நஷ்டங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஒரு பாடகர் என்ற முறையில் முதலில் அவருக்கு கிடைத்த வெற்றி அகில இந்திய வானொலியில் பாடத் தொடங்கிய போது தான் கிட்டியது. பின்னர் எச். எம். வி. ஸ்ரூடியோவைச் சேர்ந்த பெக்கட்டி சிவராமன், அவரது தனிப்பட்ட பாடல்களை இசைத்தட்டில் பதிவு செய்தார். "சீதாராம ஜனனம் என்னும் படத்தில் கோரஸ் பாடிய கண்டசாலா குணசித்திர பாத்திரம் ஒன்றுக்கும்
 
 

塞 យ៉ាញម៉ាវែ
55
பாடினார். அதன்பின் புகழ்பெற்ற இசையமைப்
பாளர்களான காலி பெஞ்சாலா, சி.ஆர்.சுப்பராமன் போன்றோருடைய இசையமைப்பில் எல்லாம் பாடினார்.
தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளரான கிருஷ்ண வேணி, தமது மனதேசம்’ என்னும் திரைப்படத்தில் பூரண இசையமைப்பாளராகச் செயற்பட, LIITL 5 JIT6ÕT கண்டசாலாவுக்குச் சந்தர்ப்பம் வழங்கினார். அது தெலுங்குத் திரைவானில் அழியாத நட்சத்திரமாக மிளிர்ந்த என்.டி. ராமராவின் முதல் படமாக அமைந்ததும் குறிப்பிடத்தக்கது. அதன் மூலம் கண்டசாலா ஒரு தலை சிறந்த இசையமைப்பாளராகவும் பின்னணிப்
பாடகராகவும் புகழின் உச்சிக்குச் சென்று, 1970களின் நடுப்பகுதி வரை அதே சிறப்பிடத்தைப் பிடித்திருக்கும் வகையில் திரைப்படங்களும் அமைந்தன. பாதாள

Page 56
អ៊ែងហ្គ្រាម៉ារ៉ៃរឺ 鑫 56
பைரவி, மாயாபஜார்', 'லவகுச', 'பாண்டவ வனவாசம்’ உட்படப் பல படங்கள் அவரது இசையமைப்புக்கும் பாடல்களுக்குமாகவே ஓடின.
அதேபோன்று 1950, 60களில் தமிழ், கன்னடத் திரைப் படங்களிலும் அவர் பாடிய பாடல்கள் பெரும் வெற்றியைப் பெற்றன. அவர் திரைப்படத்துறையில் இருந்த 30 வருட காலத்தில் 13 ஆயிரத்துக்கும் மேலான தமிழ், தெலுங்கு, கன்னடப் பாடல்களைப் பாடிச் சாதனை புரிந்தார்.
எனினும் தமிழ் திரைப்பட ரசிகர்கள் அவர் பாடிய தமிழ்த் திரைப்படப் பாடல்கள் மூலமாகத்தான் அவரது குரல் இனிமையை ரசித்தார்கள். பாதாள பைரவி (1951), 'காதல்’ (1952), குணசுந்தரி (1955), சண்டிராணி (1957), ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ (1957), "கள்வனின் காதலி (1955), பிரேம பாசம்’ (1959) உட்பட 30க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் 50க்கும் மேற்பட்ட பாடல்கள் இவரது தேன் மதுரக்குரலில் வெளியாகின. பாதாள பைரவியில் இவர்பாடிய அமைதியில்லா தென்மனமே, 'என்னதான் உன் பிரேமையோ?? பாடல்களும், தேவதாஸில் பாடிய 'உலகே மாயம் வாழ்வே மாயம்', கனவிதுதான் நிஜமிதுதான் பாடல்களும், அனார்க்கலியில் ராஜசேகரா என் மேல் மோடி செய்யலாகுமா? போன்ற பாடல்களும் தமிழ் ரசிகர்களால் இன்றும் மறக்க முடியாதவை. தமிழ்த் திரை உலகின் தலைசிறந்த பின்னணிப் பாடகிகளாக மிளிர்ந்த பானுமதி, பி.லீலா, பி.சுசிலா, ஜிக்கி ஆகியோருடன் இணைந்தும் தனித்தும் இவர் பாடல்களைத் தந்திருக்கிறார்.
தமிழ்த் திரைப்படப் பாடல்துறை இத்துணை சிறப்புப் பெற்றதெனின் அவரது முக்கிய துறையாக விளங்கிய தெலுங்கு திரைப்பட இசையின் பங்களிப்பு எத்தகையதாக இருந்திருக்கும் என்பதை இலகுவில் புரிந்து கொள்ள முடியும். சகல தரப்பட்ட மக்களும் கேட்டு இன்புறும் படியாக பின்னணிப் பாடல்களை, அந்தந்தப் பாத்திரங்களுக்கேற்ப அதாவது கதாநாயகன், வில்லன், நகைச்சுவை நடிகன், குணச்சித்திர பாத்திரம் எனப் பல
வகைப்பட்டவர்களுக்குமான பாடல்களை உணர்ச்சி
 


Page 57
ததும்பப் பாடியதுடன், எந்தவொரு சூழ்நிலைக்கும் பொருந்தும் படியாக தமது தங்கக்குரலில் ஏற்ற இறக்கம் கருணை, காதல், ஏக்கம், பாசம், கோபம் போன்ற பல் வேறு உணர்வுகளையும் புலப்படுத்தி, தெலுங்கு ரசிகர்கள் நெஞ்சங்களை முற்றுமுழுதாகக் கவர்ந்தார். முப்பது வருடங்கள் திரைப்பட இசைத் துறையில் ஈடுபட்டிருந்த வேளை, வருடாந்தம் "சிறந்த பாடகர் விருதினைப் பெற்று வந்தார். இந்தச் சாதனை இன்றும் எந்தவொரு பின்னணிப் பாடகராலும் முறியடிக்கப்படவில்லை.
தெலுங்கு திரைப்படத்துறையில் முன்னணிக் கதாநாயக நடிகர்களாக 1950, 1960 களில் பிரசித்திபெற்று விளங்கிய என்.டி.ராமராவ், ஏ.நாகேஸ்வரராவ் ஆகியோர் கண்டசாலாவின் மோகனக் குரலில் இழைந்த பாடல்களினால் பெரும் புகழ் பெற்றனர்.
திருமலை, திருப்பதி தேவஸ்தானங்களில் ஆஸ்தான பாடகராகவும் இவர் விளங்கினார். கண்டசாலா பகவத் கீதை, தேசபக்தி பாடல்கள், பக்திப் பாடல்கள், நாட்டுப் புறப் பாடல்கள் எனத் தனிப்பட்ட ரீதியிலும் தெலுங்கில் அல்பங்களை வெளியிட்டிருக்கிறார். இவரது இசையிலும் குரலிலும் வெளியான பகவத்கீதை பாடல்களை இன்றும் இசைத்தட்டுகள் மூலமாக திருமலை ஆலயத்தில் கேட்கலாம்.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கும் சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்திய இவ்விசைக் கலைஞர் ஐக்கிய நாடுகள் சபையிலும் பாடிய பெருமைக்குரியவர். திரைப்பட இசைத்துறையில் இவரது இருபத்தைந்து வருட பூர்த்தியின்போது ஆந்திரப் பிரதேச அரசு, ஹைதராபாத்தில் 1970ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் முதலாம் திகதி பெரு விழா நடத்திக் கொண்டாடி மகிழ்ந்தது. இந்நிகழ்ச்சியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
 

& கலைக்கேசரி 57
ܡܢ
蒙 5600TLET6)
மக்கள் கலந்து கொண்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. கண்டசாலா என்ற மெல்லிசை மன்னனின், புகழ்பூத்த இசை வாழ்வு 1974ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி முடிவுக்கு வந்து, திரைப்பட இசை உலகை, குறிப்பாக தெலுங்கு இசை ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது. இந்து', 'இந்தியன் எக்ஸ்பிறெஸ் ஆகிய பத்திரிகைகள், கண்டசாலாவை அதி மேன்மை பெற்ற மெல்லிசை மன்னர் எனப் பாராட்டின.
2003ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி அவரது பெயரால் முத்திரையும் முதல் நாள் கடித உறையும் வெளியிடப்பட்டதும் பெருமைக்குரியதே.
இந்திய அரசாங்கம் இந்த இசைச் செல்வருக்கு 'பத்மபூரீ பட்டம் வழங்கிக் கெளரவித்தது. கண்டசாலா என்ற மெல்லிசை மன்னர் மறைந்து கிட்டத்தட்ட 38 ஆண்டுகள் ஆகின்றபோதும் இன்றும் அவரது பாடல்கள் அனைத்து மொழி ரசிகர்களாலும் போற்றப்பட்டவையாகவே விளங்குகின்றன.
- லசஷ்மி
3.
கண்டசாலா குடும்பம்

Page 58
தனித்துவம் பெற்ற ஹானா நெடும்வீதி
உலகில் கோடிக்கணக்கான வீதிகள் போக்கு
வரத்துக்காக உபயோகிக்கப்படுகின்றன. எனினும் ஹானா நகருக்குச் செல்லும் வீதியின் (Road to Hana) சிறப்பு தனித்துவமானது.
இவ்விதி சுமார் 68 மைல் (109 கி.மீட்டர்) தூரமுள்ளது. ஹானாவுக்குச் செல்லும் நெடும் வீதி என்பது கஹலுய் (Kahului) என்னும் இடத்தை கிழக்கு மோயியில் (Mau) அமைந்துள்ள ஹானா நகருடன் இணைக்கும் ஹவாய் அரசு வீதிகளான இலக்கம் 36 மற்றும் இலக்கம் 360 இன் நீண்ட வழியாகும்.
கிழக்குத் திசையாக கலேபா (Kalepa) பாலத்துக்குபின் ஹானா நெடும் விதி 31 ஆம் இலக்க வழியாக (Pilany Highway) கீபாஹலு (Kipahulu) என்னுமிடத்துக்குத் தொடர்கிறது. இதன் முதற் பகுதி ஹானா நெடும் வீதியின் ஒரு பகுதி என உத்தியோக பூர்வமற்றுக் கூறப்படுகின்றது. ஆரம்பத்தில் இவ்வீதி கரும்புத் தோட்டத் தொழிலாளர்களை ஹானா நகரத்துக்குச் செல்ல உருவாக்கப்பட்டது.
கஹசயியில் இருந்து ஹானா நகரம் 52 மைல்கள் தான் என்றாலும், நகரைப் போய்ச் சேர சுமார் இரண்டரை மணித்தியாலம் பிடிக்கும். ஏனெனில் இந்நெடும் வீதியில் சுற்றுப் பாதைகள் அதிகமாக இருப்பதுடன் வழியும் மிகவும் குறுகலானது.
இப்பாதையில் செல்லும் போது, 56க்கும் மேற்பட்ட பாலங்களைக் கடக்க வேண்டும் இந்தப் பாலங்களில் 46, ஆக ஓர் ஒழுங்கையின் அகலந்தான் கஹலுவின் கிழக்குப் பக்கத்தில் இருந்து ஹானாவுக்குச் செல்லும் பாதை 360 நெடுகிலும் கிட்டத்தட்ட 620 திருப்பங்கள் உள்ளன. கிட்டத்தட்ட அப்பாதை நெடுகிலும் அதன் மருங்கில் அடர்ந்த உஷ்ண வலயக் காடுகள் காணப்
படுகின்றன.
1910 ஆம் ஆண்டளவில் உருக்கு, கொங்கிரீட் ஆகியவற்றினால் பாலங்கள் கட்டப்பட்டன. இருப்பினும் ஒன்றைத் தவிர ஏனைய பாலங்கள் அனைத்தும் இன்றும் பாவனையில் உள்ளன. கடல் அரிப்பினால் மிகவும் சேதமடைந்து விட்ட அந்தப் பாலத்துக்குப் பதிலாக
 
 
 

தூக்கி எடுக்கக் கூடியதான உருக்கிலான பெய்லி பாலம் சமாந்தரமாக உருவாக்கப்பட்டது. இதனை அமெரிக்க இராணுவ பொறியியலாளர் படை மேற்கொண்டது.
இந்த நெடும்பாதை 2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜனாதிபதி பில்கிளின்டனால் ஹானா மிலேனியம் பரம்பரைச் சொத்தின் அடிச்சுவடு என அறிவிக்கப் பட்டது. ஹானா நெடும்பாதை 2001ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் திகதி வரலாற்று இடங்களின் தேசியப் பதிவில் பட்டியலிடப்பட்டது.
மோயியின் (Maui) மிகப் பிரபலமான சுற்றுலாக் கவர்ச் சிஅம்சமாக விளங்குவது ஹானாநெடும் வீதியாகும். மோயியின் கிழக்குப் பகுதிக்குச் செல்லும் நெடும் பாதைப் பயணத்தைப் பற்றித் தான் வழிகாட்டிப் புத்தகங்கள் பெரும்பாலும் குறிப்பிடுகின்றன. அத்துடன் வழி நெடுகிலும் காணப்படும் எழில் மிகு நீர் வீழ்ச்சிகள் மற்றும் கவர்ச்சியான இடங்களை எடுத்துக் காட்டு கின்றன. நீலத் தடாகங்கள், சிவப்பு மற்றும் கறுப்பு மணல் கடற்கரைகள், ஆலமரம், மூங்கில் மரம், ஈரப்பலா ஆகிய மரங்களின் அழகிய காட்சிகள், அழகான மலர்க் கூட்டங்களின் கண்கவர் காட்சிகள் என வழிநெடுகிலும் இயற்கை அற்புதங்களைக் காணலாம். இதுவே இந்நெடுஞ்சாலையை சுற்றுலாப் பயணிகள் நாடக் காரணமாக இருக்கின்றது.
ஹானா நகர கரையோரப்பகுதியில் ஹவாய் வரலாறு நிறைந்திருக்கிறது. பண்டைய பாடல்கள் 15ஆம் நூற்றாண்டின் ஆட்சியாளர்களைப் பற்றி எடுத்துக்காட்டு கின்றன. அந்த ஆட்சியாளர்களின் ஒருவன் பைலனி (Pilani) என்பவனாகும். இந்த அரசன் மோயியி நாட்டை ஒற்றுமைப் படுத்தி, மீன்தடாகங்கள், நீர்பாசன வயல்கள், வீதிகள் ஆகியவற்றை நிர்மாணித்தான்.

Page 59
அத்துடன் மிகப் பிரமாண்டமான பைலனிஹேல்
ஹையோ என்ற மாளிகையைக் கட்டினான். இதனைக் கட்டி முடித்தவர்கள் பைலனியின் பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளுமாகும். அத்துடன் மேற்கு மோயியிலிருந்து ஹானாவுக்கு முதல் வீதியை அமைத்தார்கள்.
ஏழு புனித தடாகங்கள் ஹானா நெடும் வீதி முடிவில் (கிழக்கு மோயி திசையில்) ஒஹியோ கல்ச் (Oheo Gulch) உள்ளது. இது 'ஏழு புனித தடாகங்கள்’ எனவும் அழைக்கப் படுகின்றது. ஹலேகலா தேசிய பூங்காவின் உள்ளே நீர்வீழ்ச்சித் தொடர்களும் தடாகங்களும் காணப்படுகின்றன.
31ஆம் வீதியைக் கடந்தால் வரும் வீதி அழுக்கு நிறைந்து மண்சரிவு ஏற்படுவதால் இடைக்கிடை போக்குவரத்துக்கு மூடப்படுவதுண்டு. பெரும்பாலும் பிரதான வாடகை கார் போக்குவரத்து ஒப்பந்தங்கள் இப்பகுதியில் பயணம் செய்ய தடுக்கப்படுவதுண்டு. இவ்விதி சில இடங்களில் கரடுமுரடாக இருப்பினும் மிக மெதுவாக வாகனம் ஓடினால் அபாயமில்லை. இப்பகுதி மிகவும் ஏகாந்தமாக இருப்பதன் காரணமாக வாடகைக் கார்களுக்கு மேலே பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டால் பிரச்சினை தோன்றலாம். காரணம் அவ்வீதியில் போக்குவரத்துச் செய்யும் வாகனங்கள் குறைவாக உள்ளதனால் ஆகும்.
பண்டைக் காலத்தில் மோயியில் விதிகள் அத்தியாவசியமானதாகக் கருதப்படவில்லை. செல்வாக்கு மிகுந்த உள்ளூர் தலைவர்கள் இத்தீவினை ஆண்ட போது, மலைகளில் இருந்து கடற்கரைக்குச் செல்ல சிறு பாதைகள் இருந்தன. கிராமங்களுக்குச் செல்ல தீவு வாசிகள் ஒரு கடற்கரையோரத்தில் இருந்து
 
 

இன்னொரு கடற்கரையோரத்திற்கு வள்ளங்களில் சென்று பின் அங்கிருந்து மேலே சென்றனர்.
ஒரு கிராமத்தில் இருந்து மற்றொரு கிராமத்திற்கான முதலாவது உள்ளூர் பாதை கிங்ஸ் ட்றெயில் (Kings Trail) என அழைக்கப்பட்டது. முதலாவது கிங்ஸ் ட்றெயில் 14ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. இது ஒற்றையடிப் பாதையாக நடந்து செல்லும் வழியாக இருந்த போதும் பின்னர் மோயி தீவில் வீதிகள் உருவாக்கப்பட இதுவே ஆரம் பமாக இருந்தது. முதலாவதாக நவீன விதிகள் 1800ஆம் ஆண்டுகளில் அமைக்கப்படத் தொடங்கின.
ஹானா நெடுஞ்சாலை அவசரமாக உருவாக்கப்பட்ட தொன்றல்ல. படிப்படி யாகவே உருவாக்கப்பட்டது. முதலில் பல்வேறு தோட்டப் பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்யும் பொருட்டு மோயியில் இருந்து ஹானாவுக்கு நீரைக்கொண்டு செல்லும் பொருட்டு வாய்க்கால் பலவும் உருவாக்கப்பட்டன. இதன் போதே ஏராளமான சீன குடியேற்ற தொழிலாளர்களை அழைத்து வரும் நிலை தோன்றியது. அத்துடன் கனேயில் (Keanae) சீனர்களால் நடத்தப்படும் ஒரு பொதுவான விற்பனை நிலையமும் தோன்ற வழி ஏற்பட்டது. தற்போது பயாவில் (paia) இருந்து ஹானாவுக்கு போக்குவரத்து தொடர்ந்து நடை பெறுகிறது. அத்துடன் அங்கு மக்கள் தொகையும் இருந்தது. அவர்கள் தம்மைத் தாமே கட்டுப் பாட்டுடன் நடத்தக் கூடியவர்களாக இருந்தார்கள். 1900ஆம் ஆண்டுகளில் முற்பகுதியில் கானேயில் ஒரு
சிறைச்சாலை கட்டப்பட்டது. அவ்வேளை சிறைக்
கைதிகள் ஹானா நெடும் வீதியைக் கட்டத்
தொடங்கியதுடன் அதன் பாலங்களையும் உருவாக்கத் தொடங்கினார்கள். அத்துடன் கனே மற்றும் ஹானா உள்ளூர் வாசிகள் வீதியைக் கட்டுவதற்கும் பராமரிப்பதற்கும் வாடகைக்கு அமர்த்தப்பட்டார்கள்.
1962ஆம் ஆண்டு ஹானா நெடுஞ்சாலையில் தளவரிசை இடப்பட்டது. அத்துடன் அது இன்று சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ஒரு வீதியாகவும் உள்ளூர் வாசிகள், ஒரு தீவில் இருந்து மற்றொரு தீவுக்குச்செல்ல ஒரு வழியாகவும் இருக்கிறது. ஹானா நெடுஞ்சாலைக்கு நிரம்பிய சுவையான வரலாறுகள் உள்ளன. ஹானாவுக்கு 8 மைல் தெற்கே ஹெலியோஸ் புதைகுழி என்று அழைக்கப்பட்ட 19ஆம் நூற்றாண்டின் மோயி தலைவனின்
புதை குழிப்பகுதி உள்ளது.
அதற்கருகாமையில் உள்ள ஒரு குகை ஹாவாயின் மிகப்
பிரபலமான (6) ισούΤσ00TΠοΟΤ
ஹாஹ) "LDனு என்னும் மகாராணியின் பிறந்த

Page 60

இடத்தைக் குறிக்கிறது. இந்த மகாராணி முதலாவது εg|Π9-60TΠ60T முதலாவது கமேகமேஹாவின் மனைவியாவாள். மற்றுமொரு சரித்திரப் பிரசித்தமான இடம் அமெரிக்கா விமான போக்குவரத்து அதிகாரியான சார்ல்ஸ் லின்ட் பேர்க்கின் இல்லமும் புதைகுழிப் பகுதியும் ஆகும். உலகின் முதலாவது டிரான்ஸ் - அத்திலாத்திக் விமானத்தில் விமானியாக விளங்கியதன் மூலம் அமெரிக்காவின் நாயகன் எனக் கருதப்படுபவர் சார்ல்ஸ் லின்ட் பேர்க் ஆவார்.
அவரது மகளான சிறுமி கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டமை குறித்த செய்தி அமெரிக்க முழுவதும் ஊடகங்களில் வெளியானது. இதைத் தொடர்ந்து அவர் தமது குடும்பத்துடன் மோயியில் வந்து குடியேறினர். ஹானாவில் தான் அவரது இறுதிக்காலம் கழிந்தது.
1849ஆம் ஆண்டு கடல் கப்டனான ஜோர்ஜ் வில் பெங் என்பவர் தனித்துவிடப்பட்டிருந்த இந்தக் கிரா மத்துக்கு வணிகத்தைக் கொண்டு வந்தார். அவர் அங்கு சுமார் 60 ஏக்கர் நிலத்தில் கரும்புப் பயிர்ச் செய்கையை ஆரம்பித்தார். ஆனால் அவரது கடுமையான போக்கு ஹவாயர்களுக்குப் பிடிக்க வில்லை. எனவே வில்பெங் சீனாவில் இருந்து தமது கரும்பு தோட்டத்தில் வேலை செய்வதற்கென ஜப்பானில் இருந்து ஆட்களைக் கொண்டுவந்தார்.
20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஹானாவில் கரும்புப் பயிர் மட்டும் இருக்கவில்லை. இறப்பர், கோதுமை, அன்னாசி, புகையிலை ஆகியவை நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டன.
1920 மற்றும் 1930 களில் கரையோரப் பகுதியில் சில தன்னிறைவான நகரங்கள் தோன்றின. இவை ஒவ்வொன்றும் தமது சொந்த பண்டகசாலை, L IITL gFIT60)(6), தேவாலயங்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்தன. சில நகரங்களில் திரையரங்குகளும் இருந்தன.
ஹானா நகரம் இவற்றோடு சுமார் 15 பண்டக சாலைகள், தடாக மண்டபம் மற்றும் உணவுச் சாலைகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தது.
1946 ஆம் ஆண்டு மிகப் பெரும் கடல் அலை இந் நாட்டைத் தாக்கியது. அதன் காரணமாக ஹானா கடற் கரையோரம் பெரும் அனர்த்தத்தைச் சந்தித்து அழிவைக் கண்டது.
இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் ஹவாயில் தொழில் சங்கம் மிகவும் பலமாக விளங்கியது. ஹவாயில் மிகப்பெரும் கரும்புப் பயிர்ச் செய்கை கம்பனியை வைத்திருந்த சி. புரூவர் என்பவர் அதனை மூடத் தீர்மானித்தார். இதனால் மக்களுக்கும் கரும்பு பயிர்ச் செய்கைக்கும் பெரும் பாதிப்பு ஏற்படவிருந்தது. நல்ல வேளையாக, சன்பிரான்சிஸ்

Page 61
ဒို့ဗ်ာပိန္နီ စီးကွ္ဆန္ဓီ હૂંફં
滚稳
 

塞 55ញញ585ffff 61
GET១៨) ஹானா சீனிக் கம்பனியை 1930களில் உன்னா
இருந்து வந்த போல் ஐ பாகன் என்பவர்
சகோதரர்களிடமிருந்து வாங்கியதன் மூலம் நகரத்தின் பாதுகாவலர் ஆனார்.
இந்நாட்டில் பாகன் ஒய்வுபெற விரும்பினார். சீனிக் கைத்தொழில் ஹானாவில் மேலும் செழிக்க வாய்ப்பில்லை என அறிந்த அவர், அந்த மக்களின் நன்மை கருதி வேறு வாய்ப்புக்களைத் தேடலானார்.
ஹானாவில் 14,000 ஏக்கர் நிலத்தை வாங்கி கரும்புச் செய்கைக்குப் பதில் புல்லை வளர்த்து கால் நடைகளுக்கு உணவாக வெளிநாட்டுக்கு கப்பலில் ஏற்றுமதி செய்தார்.
எதிர்காலத்தில் அதாவது ஹானாவில் சுற்றுலாத் துறை அபிவிருத்தி காணலாம் என எண்ணிய அவர், 1946 ஆம் ஆண்டு ஒர் உணவுச்சாலையை நிறுவினார். அதுவே பின்னர் ஹானா - மெளயி ஹோட்டலாக மாறியது. அத்துடன் அவர் சன்பிராஸ்சிஸ்கோவின் முழு சீல்ஸ் பேஸ்போல் குழுவையும் பயிற்சிக்காக ஹானாவுக்குக் கொண்டு வந்தார். அத்துடன் அவர் விளையாட்டுக்களைப் பற்றி விமர்சனம் எழுதும் எழுத்தாளர்களையும் கொண்டு வந்தார்.
இந்த எழுத்தாளர்கள் ஹானாவை நேசித்தார்கள். எனவே ஹானா நகரைப் பாராட்டி எழுதினார்கள்.
அதில் ஒருவர் ஹானாவை 'சொர்க்கபுரி ஹானா என
எழுதினார்.
1962ஆம் ஆண்டு அரசு ஹானா நெடும் வீதியை அமைத்தது. எனவே 1970களில் சுற்றுலாப்
பயணிகள் மெளயி தீவைக் கண்டுபிடித்ததுடன் ஹானாவுக்குச் செல்ல அந்த நீண்ட பாதையைப்
பாவிக்கவும் விருப்பம் கொண்டார்கள்.
1977ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹானாவுக்கு தொலைக்காட்சி வந்ததுடன் உள்ளூர் வாழ்க்கை
முறையில் மிகப்பெரும் மாற்றம் ஏற்பட்டது. ஹாவாயின் மெளயி தீவுக்குச் செல்லுவதானால் ஹானா நெடும் வீதியில் பயணம் செய்து அதன் மூலம் வரும் மகிழ்ச்சி அனுபவங்களைப் பெற வில்லையானால் அது பூரணத்துவமான பயணமாக அமையாது என அனுபவப்பட்ட பயணிகள் கூறுகின்றனர்.
ஆனால் சுற்றிச்சுற்றிச் செல்லும் குறுகலான பாதையில் அனுபவமில்லாதவர்கள் காரில் பயணம் செய்வதென்பது மிகக் கஷ்டமானது என்பதனால்
வழிகாட்டிகளின் காரில் பயணம் செய்வது உசிதமானது எனவும் இயற்கைக் காட்சிகளை இனிதே கண்டு களிக்கலாம் எனவும் இது வாழ்க்கையில் மறக்க முடியாத அற்புதமான பயணமாக அமையும் எனவும் ஆலோசனை கூறப்படுகின்றது.
- has

Page 62
ជាញិញម៉ារ៉ៃរឺ 62 {}TហTយោh
இரத்தோட்டை பூநீ இராமச்சந்திரன் கோவில்
இலங்கையில் இராமாயணம் என்ற இத்தொடரில் இராமாயணக் காப்பிய சம்பவங்கள் (சுந்தர காண்டம், யுத்தகாண்டம்) இலங்கையில் நிகழ்ந்ததாக நம்பப்படுகின்றது. இச்சம்பவங்களுடன் தொடர்புபட்ட இலங்கையிலுள்ள இடங்கள் குறித்து விரிவாக, ஆய்வு ரீதியில் அலசப்பட்டு வருகின்றது. இந்த வகையில் இலங்கையில் இராமாயண காப்பிய சம்பவங்களுடன் தொடர்புபட்ட இடங்கள் பட்டியலில் உள்ள இராமர் வணக்கத்துடன் தொடர்புபட்டதாக அமைந்துள்ள இராமர் கோவிலையும் அதன் சிறப்புகளையும் குறித்து கவனம் செலுத்தலாம்.
இந்துக்கள் வணங்கும் ஒவ்வொரு கடவுளும் ஒவ்வொரு தத்துவத்தை உணர்த்தும் வகையில் தோன்றுவர்.
இராமாயணத்தில் இலங்ை
 
 

திருமாலின் அவதாரமென போற்றப்படும் இராமரின் தத்துவமானது மற்றவரின் மகிழ்ச்சிக்காக தான் துன்பங்களை ஏற்றுக் கொள்ளும் தியாகத்தின் சிறப்பை கூறுவதாகும். பதவி என்பது நிரந்தரமற்றது; தோளில் போடக் கூடிய துண்டு போல் எந்நேரமும் எம்மை விட்டு விலகிவிடும். அதேபோல் கொள்கை என்பதும் உயிரிலும் மேலானது; இப்படித்தான் வாழ வேண்டும் என்ற கொள்கையுடன் வாழ்ந்து காட்டியவராக, தனது மனைவியைத்தவிர பிற பெண்களை எண்ணாத வாழ்க்கை நெறியை வாழ்ந்து காட்டியவராக இராம பிரான் உள்ளார். அவதாரமூர்த்தியான இராமபிரானுக்கு கோவில் ஒன்று இரத்தோட்டை நகரின் பிரதான வீதியில் அமைந்துள்ளது.
பூரீ இராமச்சந்திரன் என்ற பெயருடன் கூடிய இலங்கையிலுள்ள ஒரேயொரு இராமர் கோயிலாக இந்த கோவில் அமைந்துள்ளது. மிகவும் நெருக்கமாக வர்த்தக நிலையங்களுக்கு மத்தியில் தனித்துவமாக இரத்தோட்டை பூரீ இராமச்சந்திரன் கோவில் அருட் கடாட்சம் செய்கின்றது.
இரத்தோட்டை நகரில் பிரபல வர்த்தகரான அரியமுத்துச் செட்டியார் இராமருக்கு கோவில் அமைக்க வேண்டும் என்ற அவரது வாழ் நாள் கனவை நனவாக்கும் பொருட்டு இராமர் கோவில் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். குடிகள் உள்ள இடத்தில் கோவில் அமைய வேண்டும் என்பதினால் இரத்தோட்டை நகரின் மத்தியில் அலுவிகாரை குடும்பத்திற்குச் சொந்தமான நிலம் பரஸ்பர புரிந்துணர்வுகளின் அடிப்படையில் கோவிலுக்காகப் பெற்றுக்கொள்ளப்பட்டது.
இந்தியாவிலிருந்து சிற்பிகள் வரவழைக்கப்பட்டு கேரள கோவில் அமைப்பு முறையில் கோவில் கட்டப்பட்டு, 1938ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கேரள பாணியிலான முன் கோபுரமும் இதே காலப்பகுதியில் கட்டப்பட்டது. கோபுரத்தில் இராமர் பட்டாபிஷேகம்,
பிள்ளையார், அனுமார் ஆகிய சிலைகள் தத்ரூபமாக

Page 63
காணப்படுகின்றன. இராமர் கோவிலில் நவக்கிரகங்கள்,
அனுமன்சிலை, விமானம் ஆகியன 1978ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டன. இந்த இராமர் கோவிலில் கொடிமரம் கிடையாது. நந்திக்குப் பதிலாக கருடன் மூலஸ்தானத்தை நோக்கிய வண்ணம் காணப்படுகின்றது. மூலவராக இராமர், சீதா, இலட்சுமண சமேதரராக காணப்படுகின்றனர். கோவிலின் பூஜை மற்றும்
கிரிகைகளை பண்டாரம் செய்கின்றார். காலை, மாலை என இருவேளை பூஜைகளும் நடைபெறுகின்றன. வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. கோவிலின் ஸ்தாபகரான அரியமுத்துச் செட்டியாரின் மகன் இலட்சுமணன் (நாராயணன்) தற்போது இந்த ஆலயத்தை நிர்வகித்து வருகின்றார். 1972ஆம் ஆண்டு மற்றும் அடுத்தடுத்து நிகழ்ந்த இனக் கலவரங்களில் இந்த ஆலயம் சேதமாக்கப்பட்டாலும் பூரீ இராமரின் அருட்கடாட்சத்தினால் மீண்டெழுந்து மக்களுக்கு ஆன்மிகப் பணியாற்றி வருகின்றது.
மலையக மக்களின் பண்பாட்டுடனும் அவர்களின் வாழ்வியலுடனும் சமய நம்பிக்கைகளுடனும் இரண்டறக் கலந்த ஒரு கலை வடிவமாக காமன் கூத்து திகழ்கின்றது. இரத்தோட்டை நகரில் காமன் கூத்து இந்த இராமர் கோவிலில் ஆரம்பமாவது மரபு. முதலில் சப்பரம் இழுத்து, இராமர் பஜனை படித்து இராமர் கோவிலிலிருந்து காமன் கூத்து ஆரம்பமாவது வழமை. இந்த ஆலயத்தில் 1972ஆம் ஆண்டு கும்பாபிஷேகமும் தேர்த்திருவிழாவும் சிறப்பாக நடைபெற்றது.
வேலை வாய்ப்புகள், பாதுகாப்பு, திருமணம், வீடு கட்டுதல், வாகனம் வாங்குதல் போன்ற உலக இன்பங்கள் கருதிய வேண்டுதல்களுக்காக சிலர் பூரீ இராம ஜெயத்தை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

遠 កែងព្រួញបីត្លែរឺ 63
லட்சம் முறை, கோடி முறை என எழுதுகின்றனர். உலக இன்பங்கள் மட்டுமின்றி, இந்த மந்திரம் அகப்பகை எனப்படும் நமக்குள்ளேயே இருக்கும் கெட்ட குணங்களையும், புறப்பகை எனப்படும் வெளியில் இருந்து நம்மைத் தாக்கும் குணங்களையும் வெல்லும் சக்தியைத் தரும்.
ராம என்ற மந்திரத்துக்கு பல பொருள்கள் உண்டு. இதை வால்மீகி மரா என்றே முதலில் உச்சரித்தார். மரா என்றாலும், ராம என்றாலும் பாவங்களைப் போக்கடிப்பது என்று பொருள். ராமனுக்குள் சீதை அடக்கம். அதனால் அவரது பெயரையே தனதாக்கிக் கொண்டாள். ரமா என்று அவளுக்கு பெயருண்டு. ரமா என்றால் லட்சுமி. லட்சுமி கடாட்சத்தை வழங்குவது ராம மந்திரம். ராம மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும் ஜெயம் (வெற்றி) உண்டாகும். ராமன் என்ற சொல்லின் பொருளாக ரா என்றால் இல்லை; மன் என்றால் தலைவன். இதுபோன்ற தலைவன் இதுவரை இல்லை என்பது இதன் பொருள். து - மிருணாளினி
徽
毅

Page 64
64 சித்திரக்கலை
காலனித்துவ இலங்கையில் ஜோர்ஜ் கீற்றின் ஓவியங்கள்
-சுபாஷினி பத்மநாதன்
லங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட உலகப் புகழ்பெற்ற ஒவியராகத் திகழந்த ஜோர்ஜ் கீற் அவர்களின் ஓவியம் பற்றிய ஆய்வு இலங்கை கலைத்துறை வரலாற்றுக்கு இன்றியமையாதது ஆகும். 1901ஆம் ஆண்டு கண்டியில் பிறந்த இவர், காலக்கிரமத்தில் சர்வதேச அரங்கில் தனது தனித்துவ ஒவியத்திறமையினால் இலங்கைக்கு புகழ் ஏற்படுத்தித் தந்தவர்.
ஏறத்தாழ 93 ஆண்டுகள் வாழ்த இவர் தனது 26ஆம் வயதில் ஒவியக் கலைத்துறையில் ஈடுபடத் தொடங்கி அதில் கணிசமான அளவு பங்களிப்பை உலகளாவிய ரீதியில் நல்கினார். தன்னை இத்துறையில் முழுமையாக ஈடுபடுத்தி இலங்கையின் ஓவியக்கலை வளத்துக்கும், வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும், தன்னை முழுமையாக அர்ப்பணித்து உலக அரங்கில் சாதனையாளராகத் திகழ்ந்தார்.
இளம் வயதில் இரவீந்திரநாத் தாகூரின் கலைத்துவ நிலைப்பாட்டினால் பெரிதும் கவரப்பட்ட இவர் சிறந்த கவிஞராகவும், கலைத்துவம் மிக்க ஒவியராகவும், உயர்ந்த சிந்தனையாளராகவும் ஒருங்கே விளங்கியதன் காரணத்தால் அவரது ஒவ்வொரு ஓவியப் படைப்பும்
鬱 Α
 

கற்பனை வளம், கலை வளம் பொருந்தியதாகவும்
அர்த்தபூர்வமான உணர்வுகளை வெளிப்படுத்துவதாகவும் விளங்கியது.
தனது சொந்த பெளத்த மதச் சிந்தனையில் உணர்வுகளை, சிங்களப் பாரம்பரிய விழுமியங்களை இந்திய கலை நிலைத் தொடர் அம்சங்களை தன் ஒவியங்களில் பெரிதும் வெளிப்படுத்தினார்.
இந்தியாவை முன்னோடியாகக் கொண்டு முதலில் தன் கலைத்துறை சித்திரிப்புகளை முன்னெடுத்தார். ஆயினும் காலக்கிரமத்தில் இலங்கையின் சமூக, சமய, சம்பிரதாய அம்சங்களை பெரிதும் ஒவியப் படைப்புகளில் தனித்துவ நிலைப்பாடுகளுடன் பிரதிபலித்தார். இலக்கிய நூல்களில் இடம்பெறும் சித்திரிப்புக் காட்சிகள் மலையக வாழ்க்கை முறைமை, பெளத்த தர்மம் என்பன இயல்பாக அவரது கற்பனை வளத்தில் ஊறி இருந்தன என்பதை அவரது பெரும்பாலான ஓவியப் படைப்புகளில் USITGOOT முடிகின்றது.
பெளத்த தர்மத்துக்கு அப்பால் இந்து தர்மம், தமிழ்க் காவியங்களின் சித்திரிப்புக் காட்சிகள் என்பனவும் அவரது படைப்புக்களில் ஆங்காங்கே காணப்படுகின்றன.
இந்த வகையில் இலங்கை கலைத்துவ வரலாற்றில் இவரது ஓவியங்கள் பல்லின சமூக மட்டத்தில் உன்னத இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இவர்

Page 65
வாழ்ந்த காலத்தில் குறிப்பாகச் சுதந்திர இலங்கைக்கு முன்னுள்ள காலகட்டத்தில் இவரது ஓவியங்களாவன பெரிதும் உலகளாவியதாக அமைந்து காணப்படுகின்றன. ஆரம்ப கால ஒவியங்கள் விவரணம் செறிந்த சித்திரிப்பு ஒவியங்களாகவே காணப்பட்டன. இவரது ஒவியங்கள் பற்றியதான இக்கட்டுரை சுதந்திர இலங்கைக்கு முன் இடம்பெற்ற இவரது ஒவியங்கள் பற்றியதாகவே அமைந்திருக்கின்றன.
இந்த வகையில் அக்காலத்தில் இடம்பெற்ற ஒவியங்கள் அக்காலக் கலை கலாசார, சமூக, சமய, சம்பிரதாய, பண்பாட்டு விழுமியங்களை பெரிதும் பறை சாற்றுபவையாக விளங்கின. குறிப்பாக கண்டிப் பிரதேசக் காட்சி, விக்டோரியா பாதை, தமிழரின் மேடை ஒத்திகை, சிலப்பதிகாரத்தில் கோவலன் பற்றியதான காட்சி, தென் இந்திய நாட்டியத் தாரகை, தேவதாசி நாட்டியத் தாரகைகள் ஆகிய தலைப்பின் கீழ் முக்கிய இடம்பிடித்தன எனலாம். எதுஎவ்வாறாயினும் இவை யாவும் தமிழரின் வாழ்க்கை முறைமைகளை அவர்களது சமூக, கலை, கலாசார நிலைப்பாடுகளை வெளிப்படுத்துபவையாக விளங்கின.
ஆயினும் காலக்கிரமத்தில் அவரது ஒவியங்கள் வரை கோட்டு ஒவியங்களாகப் பரிணமித்தன.
கோட்டு வரைபட ஒவியங்கள் கூட அடிப்படையில் இரண்டு வகைப்படுகின்றன. முதலாவதாக விளங்குவது வெறும் கோட்டு ஒவியங்களாகும். மற்றையது வர்ணம் தீட்டப்பட்ட கோட்டு வரைபட ஒவியங்களாகும். இப் புதிய நுண்ணிய கோட்டு வரைபட முறை ஒவியங்களில் தான் எடுத்துக் கொண்ட கருவை பலவகை வண்ணப்
பூச்சுக்களினால் வெளிப்படுத்த முனைந்தார் ஓவியர் கீற்.
 

& கலைக்கேசரி 65
இத்தகைய ஓவிய முறையானது அக்காலத்தில் பெரிதும் வேறுபட்ட கண்ணோட்டம் நிறைந்த ஒவியமாக மக்கள் மத்தியில் மிளிர்ந்தது. இவை இரண்டுமே அடிப்படையில் தனித்துவம்மிக்கவையாகத் திகழ்ந்தன. இதுவே இன்று இலங்கையில் கோட்டு வரைபட ஒவிய வெளிப்பாட்டுக் கலைக்கு வித்திட்டு வழிவகுத்தது எனலாம். இவரது தனித்துவ ஓவியக் கண்காட்சியானது முதல் தடவையாக 1927ஆம் ஆண்டு கொழும்பில் லயனல்வென்ட் என்பவரின் உன்னத உதவியுடன் இடம்பெற்றது. லயனல்வென்ட் கீற்றின் நெருங்கிய நண்பனாக, ரசிகனாக இருந்து அவரது கலைப்படைப்புகளுக்கு ஊக்கமளித்தார் என்றால் அது மிகையாகாது. காலக்கிரமத்தில் இவரது கலைப்படைப்புகளின் பிரதிபலிப்பே இன்றைய நடைமுறையில் உள்ள நவீன ஒவியத்துறையின் கோட்டு வரைபட ஒவியத்திற்கு வழிவகுக்க ஏதுவாயிற்று எனலாம். ஆரம்ப காலத்தில் விவரணம் செறிந்தனவாகவும், விவரிப்புச் செறிந்தவையாகவும், விளங்கின. காலக்கிரமத்தில் அவரது எண்ணங்களில் ஏற்பட்ட உணர்வு மாற்றங்களை அவரது கலைப்படைப்புகளில் காண முடிகின்றது.
வர்ண ஒவியங்களுக்கு எந்த ஒவியனும் முன்னுரிமை அளிப்பது வழக்கம். கறுப்பு, வெள்ளை, பேனா மற்றும் மையால் மட்டுமே வரையப்பட்ட ஒவியங்களுக்கும் இவர் கணிசமான இடம் அளிப்பதை இவரது படைப்புக்களில்
காணக் கூடியதாகவுள்ளது. வெறும் கறுப்பு, வெள்ளை அம்சம் நிறைந்ததாக இதன் நிலைப்பாடு காணப்படுகின்ற போதிலும், கலைத்துவம் செறிந்த யதார்த்தம் மிகுந்தவையாக இவை காணப்பட்டன. இத்தகையதான கலைத்துவத்திற்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும்

Page 66
66
கண்காட்சியானது 1920ஆம் ஆண்டில்
கொழும்பு இலங்கை கலைஞர் பெளத்த சங்கத்தில் இடம்பெற்றது என அறிய . کر முடிகின்றது. ஆயினும் அவரின் அப்பால் இ முழுமையான கண்காட்சியானது தமிழ்க் 35/) ( 1928ஆம் ஆண்டளவில் ஜெ.ஜெ. சித்தி பெலிங் என்னும் ஓர் ஓவியரின் O ஞாபகார்த்தமாக இடம்பெற்றது. காட்சிகளு அரம்பத்தில் அவரால் வரையப்பட்ட கீற்றின் ஓவி சித்திரிக்க
விமர்சனத்திற்குள்ளாகின. ஆயினும் காலக்கிரமத்தில் இவரது படைப்புகள் சித்திரிப்பு நிறைந்தவையாகவும், இயற்கைக் காட்சி செறிந்தவையாகவும், நிலத் தோற்ற வர்ணணை செறிந்தவையாகவும் காணப்பட்டன. அவரது அரிய ஒவியங்கள் பல, அவற்றின் சித்திரிப்பு நிலைப்பாட்டிற்கு அமைய தலைப்புப் பெயரிடப்பட்டு அவற்றின் படைப்புக்களின் கீழ் இடம்பெற்றுள்ளமையைக் காண முடிகின்றது.
1930ஆம் ஆண்டு இடம்பெற்ற ஓர் ஓவியக் கண்காட்சியானது, இலங்கையின் பலதரப்பட்ட அக்காலப் பரிமாண அம்சங்களை பெரிதும் வெளிப்படுத்தின. அவரது ஒவியத்திற்கு பொருத்தமான பெயரிடப்பட்டு வரையப்பட்டு அது வரையப்பட்ட ஆண்டும் செவ்வனே குறிப்பிடப்பட்டு வெளியிடப்பட்டமை அவரது கலைத்துறை வழி நடத்தலானது ஆழமாக அர்த்த பூர்வமாக, இடம்பெற்றமையை எடுத்தியம்புகின்றது. படிபடியாக அவரது மனோதர்மத்தில் ஏற்பட்ட மாற்றங்களை அவரின் கற்பனை வளமாற்றங்களை
ஆங்காங்கே அவரின் படைப்புகளில் காண முடிகின்றது.
உலகளாவிய ரீதியிலும் ஒவ்வோரு ஆண்டும் ஏராளம்
 

ஒவியக் கண்காட்சிகளை தன் கற்பனை
தர்மத்துக்கு வளத்துடன், Llg5/60) LD நவீன O 69 மயத்துடன், வரையப்பட்ட நது தாமம, ஒவியங்கள் ஒவியக் கண்காட்சிக்கு வியங்களின் வைக்கப்பட்டமையைக் ტ5|T6ზóT ரிப்புக் முடிகின்றது. அவரின் ஒவியங்களின் o சிறப்பு யாதெனில் அவை பெரிதும் நம ஜேი/79ფ கன்வஸ் என்னும் தடித்த சீலையே Pau UGoa da9a) அவரது பெரும் பாலான ஒவியக் கலை கப்பட்டன. வடிவங்களில் பயன்படுத்தப்பட்டு
வநதன.
ஆயினும் கடுதாசியால்
வரையப்பட்ட, ஒவியங்களும் தீட்டப்பட்ட ஒவியங்களும் கணிசமாக உள்ளடக்கப்பட்டுள்ளன. மற்றும் குறிப்பிடத்தக்க அளவு இலங்கை இந்தியக் கலாசாரத்தின் தத்துவார்த்த வெளிப்பாடாக சில கலைவடிவங்கள் விளங்கின எனலாம். சிறந்த கவிஞராகவும், அதே சமயம் புகழ்பெற்ற ஒவியராகவும், விளங்கியதன் காரணத்தால் அவரது ஒவியங்களில் அவரது கற்பனை வளத்தைக் காணக் கூடியதாக உள்ளது.
இந்து சம்பிரதாய அம்சங்கள் பெரிதும் ஆங்காங்கே பிரதிபலித்த போதும், அவை நவீனத்துவம் மிக்கவையாகக் காணப்படுகின்றன. இவை யாவற்றையும் ஆங்காங்கே அவரது படைப்புக்களில் அவதானிக்க முடிகின்றது. அவரது அளப்பரிய சேவையை நினைவுகூரும் வகையில் கொழும்பில் அவரது பெயரில் தர்மஸ்தாபனம் ஒன்று
உருவாக்கப்பட்டு இளம் ஓவியக் கலைஞர்களை ஊக்குவித்து அது வழி நடத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அத்துடன் ஜோர்ஜ் கீற்றின் அரிய படைப்புகளை இன்றுவரை மெருகூட்டிப் பாதுகாத்தும் வருகின்றது.இ

Page 67
A.
W
Rer Ne భణి *
posts of St. ॐ
partmo
დაჯstered tre De
As RALA
ANADAs
AUs
SUrCinie: O759 685 Shord: O728 4977
சகல பத்திரிகை விற் வீரகேசரி
 
 

வெளிநாட்டு
III© ܬܐ ܀ நிலைவரங்களை
முழுமையாக எடுத்துரைக்கும்
ய்திச்சஞ்சிகை
భణళ
O ss to |Ո(COO) Ա | ||6)
TU) 獣e=Euー " W
35Օ15:5d5
658 / O 117 32274.1 2O / O 117 322731
னையாளர்களிடமும் களிலும் பெற்றுக்கொள்ளலாம்.
g "Liൺ ബണu്

Page 68
Printed and published by Express Newspapers (
 
 
 

இலங்கையின் அரவணைப்புடன் கூடிய புன்முறுவலை கண்டறியுங்கள்!
அது பல்லாண்டு ΦΠουLΟΠό, எண்ணற்ற இதயங்களை அரவணைத்த பெருமைமிக்க ஒரு பாரம்பரியத்தின் பகுதியாகும்.
லங்கையிலுள்ள நாம் ஒவ்வொரு பயணத்தையும்
றக்க முடியாத அனுபவமாக மாற்ற நேசத்துடன்
கூடிய தனித்துவமான பண்பினை அதி நவீன தொழிநுட்பத்துடன் இணைத்துள்ளோம்.
அழையுங்கள் 1979
WWW.sriankan.com ۲ را به )"" ://
n)(Pvt) Ltd, at No.185, Grandpass road, Colombo -14, siri Lanka.