கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உலக ஐக்கியத்துக்கு அத்திவாரம்

Page 1


Page 2
W,
"
 


Page 3
-
 
 
 
 

உலக ஐக்கியத்துக்கு அத்திவாரம்
அப்துல் பஹாவின் பேருரை - வரைவில்லைகளிலிருந்து தொகுத்தது.
'மனித இன அறிவின் ஒருமைப்பாடும்’ சமயங்களின் ஒருமைப்பாடுமே இறைவன் இந்த யுகத்தில் நமக்களித்த பரிசாகும்.'
λ
தமிழாக்கம் : நாவலியூர் சோ. நடராசன்
" "באל-ארד ി (, , ,
/ SA*
飒。
11 ܐܬܐ
\,
● ■ re பஹாய் பப்ளிஷிங் டிர
தபால் பெட்டி எண் 19 புது டில்லி - 110 001

Page 4
Foundations of World Unity
Compiled from
Addresses and Tablets
of
‘ABDU’L BAHA”
Tamil Edition: C BAHAI PUBLISHING TRUST First Edition Mar. I978 5, Ooo Copies
Price Rs. TWO
Tamil Baha'i Publications Committee of Baha'i Publishing Trust
BAHA’I CENTRE 8, Sarangapani Street, Theagarayanagar
Madras - 6oo or 7 INDIA.
Sri B.L.S. Press Madras - 6oo o 24
 

உலக ஐக்கியத்துக்கு அத்திவாரம்
முகவுரை
பெறுமதிப்புள்ள ஆக்கபூர்வமான வகையில் உலக மக்களை ஒன்றிணைக்கும் ஐக்கியத்துக்கு அவசியமானதொரு கோட்பாட்டைத் தேடிக்காண்பதே தற்காலச் சந்ததியை எதிர்நோக்கியுள்ள முக்கியமான கருமமாகும். தற்கால மக்கள் சிந்தையில் அடங்கியிருக்கும் பிரமாண்டமான உற்பத்திச் சக்திகளை வெளிப்படுத்த உதவக்கூடிய ஒரு விஷயம் உலக ஒற்றுமையே. சாதி அடிப்படையில் எழும் இலட்சியங்களின் காலம் மலையேறிவிட்டது. அவை பிணக்கு களுக்குக் காரணமாக அமைகின்றனவேயன்றி ஒற்றுமைக்கு ஊற்ருக அமையவில்லை. இன்று எல்லா நாடுகளிலும் அராஜரீகம், தலையெடுத்துத் தாண்டவமாடுகிறது. உலக ஒற்றுமையொன்றே இதைத் தடுக்கவல்லது. மாற்றமென்ற
ஆழமான நீரோட்டத்தைத் தடுத்து நிலையானதொரு
தன்மையை உண்டாக்கி மனிதருடைய ஆத்மா, பயமின்றி நித்திரை செய்வதற்கு முடியாதிருக்கிறது. போட்டிச் சக்தி களினலும், கூட்டுறவுச் சக்திகளினலும், கூட்டுறவுச் சக்தி களினுலும் அபிவிருத்தி செய்யப்பட்ட பல்லாயிரக்கணக் கான பரஸ்பரத் தொடர்புகள் தொடர்ந்து நிலைநிற்ப தானுல் வாழ்வின் அந்தரங்க விவகாரங்களோடும், பகிரங்க விவகாரங்களோடும் தொடர்புள்ள ஒற்றுமையை அமைப்பு தணுல்தான் ஏற்படுத்தலாம்.
- இத்தகைய உலகளாவிய ஒற்றுமைக் கோட்பாட்டின் தேவை அவசரமாகவும் தவிர்க்க முடியாததாகவுமிருப்ப தால், நாகரிகம் என்ற இந்தத் தொடர் நெருக்கடியைத்
தீர்க்கும் எந்த வகையான செல்வாக்குக்கும் உணர்ச்சி
காட்டக் கூடியதாயிருக்கிறது.

Page 5
4.
அப்துல்பஹாவின் வாழ்வுத் தொண்டின் விசே ட தன்மை அவருடைய வாழ்வு உன்னதமான தன்னலமற்ற தியாக வடிவானது மாத்திரமின்றி, அது உலக ஒற்றுமையை இலட்சியமாக வலியுறுத்துவதில் அயராது உறுதிப்பாடும், அதுவே வாழ்வுமுறை என்பதைத் திட்டவட்டமாக எடுத்துக் காட்டுவதுமாயிருந்தமையுமாகும். மிகவும் அறிவு வாய்ந்த முற்போக்கு வாதிகள்கூட ஒற்றுமையென்பதை அரைகுறை யான அர்த்தத்தில் சமயம், ஒழுக்கம், விஞ்ஞானம் அல்லது அரசியல் என்ற ஒரு புலத்து அனுபவத்தையே குறிப்பிடும் வரையறைப்பட்ட ஒற்றுமையையே கருத்திற் கொண்டிருக் கையில், அப்துல்பஹா தமது சொல்லாலும் செயலாலும் , உண்மையான உலகளாவியதொரு கருதுகோளை இவ் வார்த் தைக்கு உண்டாக்கினர்.
அப்துல்பஹாவுக்கு உலக ஐக்கியமென்பது ஆன்மீக இருள் சூழ்ந்த வேற்றுமைமிக்க காலத்திலே சமூகத்திஞலே விருத்திசெய்யப்பட்ட சம்பிரதாயப்படி அமைந்த தாபனங் களை ஒன்று சேர்ப்பதன்று. ஆனல் மனித குலத்தின் தலை விதியைப் பற்றிய புதியதொரு அறிவுபெற்றவரின் ஒன்றிய உள்ளத்தையும் சிந்தையையும் குறிக்கிறது. தூய கரைமம் ஒன்றின் செய்கைபோல சூழ்நிலையினல் தன்மீது சுமத்தப் பட்ட வெளியகத்தைக் கரைப்பதற்கு அவருடைய காட்சி உதவியது. அவ்வாறு செய்து, எங்கும் பரந்த இறைவனின் சங்கற்பத்துக்குப் பணியும் அந்தரங்க அகத்துக்கு உயிர்ப் பூட்ட உதவிற்று.
அந்தச் சங்கற்பத்தின் நோக்கங்களும், சக்திகளும் பூரணமானதோர் அன்பின் வெற்றியினுல் தாங்கப்பட்டது. அதன் பயணுக அவருடைய வாழ்வின் முழுமையும் ஒரு தேசம், ஒரு சாதி, ஒரு சமயம் என்பவற்றையற்றி மனித குலத்தையே மெய்ப்பித்துக்காட்ட உதவியது.
ம ன த் தி லி ரு ந் து பிரிக்கமுடியாததோர் அன்பின் வெற்றிக்குச் சாட்சியாக அப்துல்பஹா விளங்கினர். மனித
 

5
குலத்தின் பிரச்சினைகளுக்கு அவர் வழங்கிய விளக்கங்கள் ஒரு சந்ததியாரினுல், விஞ்ஞானம், தத்துவம் என்பவற்றின் முடிவுகளாக எதிர்பார்க்கப்பட்டன. விஞ்ஞானமும் தத்து வமும் என்றும் கண்டறியாததொரு கூட்டிணைப்புத்தன்மை யுடையது. கிழக்கும் மேற்கும் அவருடைய சுபாவத்தில் இணைந்திருந்தன. இந்த இரண்டு விதமான நாகரிகங்களின் முக்கியமான உண்மைகளையும் அவற்றின் முழுமையையும் அவர் சிதைத்துவிடவில்லை. மனித விவகாரங்களில் ஒன்றுக் கொன்று சம்பந்தமில்லாத சிரத்தை, நியாயிக்கும் தன்மை, மனிதாபிமான அன்பு, நீதி, அனுபூதியார்வம், நிர்வாகச் சக்தி என்பனவற்றை அவருடைய சுபாவம் இணைத் திருந்தது. இப் பண்புகள் மனிதரிடத்துப் பிரிந்து காணப் படுவதே சகலவிதமான வேற்றுமைக்கும் காரணம், வாழ்வு ஒன்றென அவர் கண்டார். இந்தக் காட்சியினுல், எல்லா ரிடத்தும் அனுதாபமும், இசைவுமுடையவராயிருந்தார்.
இது பாலைவனத்திலே நீர் பாய்ச்சுவது போலிருந்தது. இந்த
ஒருமைப்பட்ட வாழ்வினுல், ஒன்றுபட்ட மனித சமுதா யத்தைப் பற்றிய கணநேரத் தோற்றமுண்டாகிறது. உலக ளாவிய பொதுவான பண்புகள் தெரிகின்றன. அவை புதியதும் உயர்ந்ததுமான சமுதாய அமைப்புக்களை உண்டாக்க உதவுகின்றன.
அவருடைய கடிதங்களையும் பேருரைகளையும் மேற் போக்காக, வோசிப்போர், அதாவது இவ் விஷயங்கள் பற்றி மாமூலான ஆராய்ச்சிமுறை எதிர்பார்க்கும் சமயவாதி களும் சமூக விஞ்ஞானிகளும், அப்துல்பஹா இந்த நவீன உலகுக்கு அதனுடைய ஆபத்தான வேளையில் இலவசமாக வழக்கும் ஞானத்தை நுனித்து அறிந்து கொள்ளமாட்டார். இந்த ஞானம், காட்சி நிறைந்ததும், குறித்த ஒரு கொள் கையையோ, விஷயத்தையோ விரித்துக் கூறும் நோக்க மின்றி மெய்ம்மையின் விரிந்த பரப்பை உள்ளடக்கியது மாயிருக்கிறது. தனித்துறை நிபுணருடைய முடிவுகளைப் போன்ற ஆராய்ச்சி முடிவுகளைச் செய்வது அவர் கடமை

Page 6
6
யாயமையவில்லை. வாழ் வி ல் முழுமையைப் புணர் நிர்மாணஞ் செய்வதே அவர் கடமையாயிருந்தது.
வாசகரிடத்திலும் புதியதொரு மானசிக, ஆத்மீக ஒளி
முகப்புத் தேவைப்படுகிறது. கட்சி வெற்றியையோ, தனிப்
பட்ட பிரத்தியேகமான பிரமாணத்தையோ தூல வகையில் அல்லது சூக்கும வகையில் இருப்பது விரும்பப்படத்தக்க தன்று. எந்த வகையிலும், மெய்ம்மையே தேவைப்படு கிறது. இந்தக் குவிமையம், ஒளிமுகப்பு வாய்க்கப் பெற்ருல், அப்துல் பஹாவின் ஞானம் விசேஷமானதொரு பயனைத் தருகிறது. அதாவது கடும்பற்றுள்ளமென்ற அந்தரங்கத் திரைகள் நிச்சயமாக அகற்றப்படுகின்றன. மனமானது எத்துணை ஆர்வமும், சுறுசுறுப்புமுள்ளதா யிருந்தாலும், அத் திரைகள் மனிதனுடைய விளக்கத்தை இருளடையச் செய்கின்றன. இதற்கு ஞானத்தைத் தத்துவ மயமான விவேகத்தின் அடக்கமான விக்கணை வாசகமாய்க் கொள்ளக் கூடாது; அது சத்தியத்தின் தரிசனம் தோன்றுவதும் , சத் தி யம் அனுசரிக்கப்படுவதுமான ஆழங்களிலிருந்து மிகவும், சக்திவாய்ந்த இயக்கத் தன்மையினல் செறிவு படுத் தப்பட்டிருக்கிறது.
முதலாவது மகாயுத்தத்துக்கு முன்னர் அப்துல் பஹா ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் பிரயாணஞ் செய்து மக்கள் முன் செய்த பேருரைகளிலிருந்தும், மேனுட்டிலுள்ள நண்பருக்கு எழுதிய கடிதங்களிலிருந்தும் எடுத்த சில பகுதி களே இந் நூலில் அடங்கியுள்ளவை. இவர் செ ய் த யாத்திரை முக்கியத்துவம் வாய்ந்தது. அதாவது உலக ஐக்கியத்துக்கு இது வழி வகுத்தது. நமது சிக்கலான பல திறப்பட்ட வாழ்வின் பல பிரிவான சமூகங்களிள் பிரதி நிதிகள் முன் அவர் உரை நிகழ்த்தினர். நியூயோர்க்கிலுள்ள கொலம்பியா சர்வகலாசாலைதொட்டு கலிபோர்னியாவி லுள்ள லேலண்ட் ஸ்ரான்போட் வரை உரை நிகழ்த்தினர். போவரிமிஷன் தொட்டு வாஷிங்டனிலுள்ள ராஜதந்திரியில் போசனசாலை வரையும் அவர் சென்று உரை நிகழ்த்தினர்.
↑

7
பூமிசாத்திரப் பிரதேசத்தை மாத்திரம் அப்துல்பஹா தாண்டவில்லை; அமெரிக்க மக்களின் ஆன்மீகப் பிரதேசத் தையும் தாண்டினர். வெள்ளைச் சாதியாருக்கும் மற்ற வர்ணத்தவருக்குமிடையே இணக்கமும் ஒத்துழைப்பும் உண்டாக்கும் பெரிய ஆத்மீகப் பிரச்சினையைத் தீர்த்து வைத்தால் சர்வதேச சமாதானத்தைப் பிரகடனஞ் செய்வ தில் அமெரிக்காவின் செல்வாக்கு அதிகமாயிருக்குமென அமெரிக்க மக்களுக்கு வாக்குறுதியளித்தார். அப்துல் பஹாவை ரொசெட்டா சிலையை முத்துக்கு ஒப்பிட லாம்.* அதில் மனிதனுடைய வரலாறு மூன்று பாஷையில்,
அதாவது மனுேமயமான பாஷையிலும், உள்ளஞ் சார்ந்த பாஷையிலும், ஆன்மார்த்தமான பாஷையிலும் அச்
சரித்திரம் எழுதப்பட்டுள்ளது. இந்த மூவகையான மெய்ம் மையைக் குறிப்பிடும்போது நம்மிடத்து அபிவிருத்தியடை யாதிருப்பதும், விசுவத்திலே காணப்படாததுமானதொரு
திறவுகோலையே கண்டுபிடிக்கிருேம். அதன் மூலம் புதிய யுகத்தின் அத்திவாரமான அந்தரங்கக் கடவுளுணர்ச்சியைப் பெறுகிருேம்.
ஹொரேஸ் ஹொவ்லி கிறீன்ஏகர், எலியட், மெயன், ஆகஸ்டு 8, 1927,
* ரொசெட்டா சிலை என்பது ரொசெட்டா என்ற இடத்தில் 1799இல் காணப்பட்டதொரு கிலா சாசனம். இதில் கிரேக்க எழுத்திலும், எகிப்திய சித்திரலிபியிலும் பேச்சு மொழி லிபியிலும் சாசனங்கள் எழுதப்பட்டிருந்தன. இதனுல் புராதன எகிப்திய சித்திரலிபிக்கு அர்த்தங் காணக்கூடியதாயிருந்தது.

Page 7
உண்மையான நவீனம்
சிருட்டிக்கப்பட்ட பொருள்களெல்லாம் பலபடியான பருவ நிறைவையுடையன. ஒரு மரம் பழுக்கத் தொடங்கி யதும், முதிர்ச்சியடைகிறது. ஒரு செடி பூத்து மலர் நிறை யும் சமயம் முதிர்ச்சிப் பருவமடைகிறது. மிருகம் நிறை வளர்ச்சியும் பூரணமும் அடையும் ஒரு பருவத்தை அடை கிறது. மனிதருலகத்திலே விவேகமென்ற ஒளிமிக்க பிரபை யும், அபிவிருத்தியும் அடையும்போது அவன் பருவ நிறைவை அடைகிருன்.
மனிதன் தனது வாழ்வின் தொடக்கத்திலிருந்து, முடிவுவரை சில பருவங்களை தாண்டிச் செல்லுகிருன், அவை சில விசேஷ அமிசங்களுடையனவாய்க் காணப்படுகின்றன. உதாரணமாகக்குழந்தைப் பருவத்திலே அவனுடைய நிலையும் தேவைகளும் அவனுடைய விவேகத்துக்கும் தேவைகளுக்கு மேற்றதாயிருக்கும். அதன் பின்னர் சிறிது காலத்திலே அவன் வாலிபனகிருன், இப்போது முந்திய நிலைகளும் தேவைகளும், புதிய நிலைக்கேற்றவாறு மாறுகின்றன. அவனுடைய அவதான ச க் தி க ள் விரிவடைகின்றன. ஆழமாகின்றன. அவனுடைய விவேகத் திறமைகள் பயிற்சி யளிக்கப்பட்டு விழி ப் ப  ைட ய ச் செய்யப்படுகின்றன. அவனுடைய சக்திகளையும், சாதனைகளையும், குழந்தைக் காலத்துச் சூழ்நிலையும், வரையறைகளும் கட்டுப்படுத்துவ தில்லை. கடைசியாக அவன் வாலிபதசையைக் கடந்து பருவ நிறைவுக் கூட்டத்தை அடைகிருன். இது அவனுடைய வாழ்க்கை முயற்சிகளில் மற்ருெரு மாற்றத்தையும், அதற் கேற்ற முன்னேற்றத்தையுமுண்டாக்குகிறது. புதிய சக்தி களும் காட்சிகளும் அவனைச் சூழுகின்றன. அவனுடைய முன்னேற்றத்துக்கு ஏற்ற போதனையும், பயிற்சியும் அவன் சிந்தனையை ஆட்கொள்ளுகின்றன. அவனுடைய திறமை
 
 
 

9
களின் வளர்ச்சிக்கேற்றவாறு விசேடமான கொடைகளும், வரங்களும் அவனுக்குக் கிடைக்கின்றன. அவனுடைய இளமைப் பிராயமும், அதன் நிலைமைகளும் அவனுடைய முதிர்ச்சியடைந்த காட்சியையும், நோக்கத்தையும் மேலும் திருப்தி செய்யமாட்டா.
இவ்வாறே மனித சமுதாயத்தின் வாழ்விலும் பருவங் களும் படிகளுமுண்டு. அது ஒரு காலத்திலே பால தசையி லிருந்தது. பின்னர் வாலிபதசையிலிருந்தது. இப்போது அது தனது நீண்ட முதிர்ச்சி நிலையிற் பிரவேசித்துள்ளது. இதற்குரிய சான்றுகள் எங்கும் காணப்படுகின்றன. முந்திய காலங்களுக்குத் தேவையான நிலைகளும் அவசியப் பொருள் களும் மாறிவிட்டன. மாறியதோடு இக் கால உலக நிலை களோடு இரண்டறக் கலந்துவிட்டன. நமது சாதியின் வரலாற்று ஆரம்பத்திலிருந்த தேவைகளுக்கு ஏற்றவை. இக் காலத்துக்குப் பொருத்தமற்றவையாயிருக்கின்றன. இது புதிய யுகம், நிறைவேற்றம் காணும் யுகம். ஆரம்பப் பயிற்சி நிலையிலிருந்தும், வரையறையான படிநிலைகளிலிருந்தும் மனித குலம் முன்னேறிவிட்டது. புதிய பண்புகள், சக்தி கள், ஒழுக்கங்கள், புதிய திறமைகள், கொடைகள், நிறை -வுகள் என்பன அவனை எதிர்பார்த்திருப்பதோடு அவன் மீது வந்து குவிகின்றன. மனித குலம் இளமையாயிருந்த காலத் திலே அதற்குக் கிடைத்த கொடைகளும், அருட்பொலிவு களும் அக் காலத்துக் கேற்றதாயிருந்த போதிலும், முதிர்ந்த பருவத்துக்கு அது ஏற்றதாயில்லை. குழந்தையாயிருக்கும் போது விளையாடிய விளையாட்டுச் சாமான்கள்; பருவம் முதிர்ந்த காலத்திலே மனத்தைக் கவரமாட்டா.
எந்தவகையிற் பார்த்தாலும், மனிதகுலம் புதியதொரு உருமாற்றத்தைப் பெற்று வருகிறது. முந்திய அரசுகளின் சட்டங்களும், நாகரிகங்களும் மாற்றமடைந்து வருகின்றன. விஞ்ஞானக் கருத்துக்களும், கருதுகோள்களும், அபிவிருத்தி யடைந்து வருகின்றன. புதிய ஆராய்ச்சிக்குரிய செய்திகள் பல தோன்றியுள்ளன. அவற்றை ஆராய வேண்டிய கட்டுப்

Page 8
10
பாடு உண்டு. முன்னுராய்ச்சி செய்யப்படாத பலதுறை
களில் கண்டுபிடிப்புகளும் புத்தாக்கங்களும் ஈடுபட்டுள்ளன. பிரபஞ்சத்தின் மறைவாயிருந்த பல இரகசியங்களும் அற்பு தங்களும் தெரியவந்துள்ளன. கைத்தொழில்கள் பெரிதும் விரிவடைந்து வருகின்றன, எங்கும் மனிதகுலம் புது வளர்ச்சியடைந்து வருகின்றது. பழைய சம்பிரதாயங்
களெல்லாம் மாறுகின்றன. புதியதொரு உலகம் உருவாகி
வருகிறது. பழைய மரங்கள் பழம் கொடுக்கமாட்டா. பழைய கருத்துகளும் முறைகளும் வழக்கற்றுப் போயின. அவற்ருல்,இப்போது பயனில்லை. பழைய ஒழுக்கப் பிரமா ணங்களும், தருமப் பிரமாணங்களும் வாழ்க்கை முறைகளும் இக் காலத்குக்குப் பொருத்தமற்றனவாகும். முன்னேற்ற
மும், முற்போக்குமுள்ள இக் காலத்துக்கு அவை பொருத்த
மற்றனவாகும்.
சமையத்துறையிலும் இந்த யுகம் முதிர்ச்சியும் , புனரமைப்பும் பொருந்தியதாகும், முன்னையோர் கோட் பாடுகளைப் பாவனை செய்து முரட்டுத் தனமாகப் பிடித்துக்
கொண்டிருக்கும் வழக்கம் மாறுகிறது. சமயமானது இந்த
அச்சிலேதான் சுழன்று கொண்டிருந்தது. இப் போது அவற்றுக்குப் பயனில்லாது போய்விட்டது. இன்று அவை
மனிதனுடைய அழிவுக்கும் முன்னேற்றத் தடைக்கும் ஏது
வாகிவிட்டன. குருட்டுப் பிடிவாதமும், பழையவற்றை விடாப்பிடியாகக் கைப்பற்றுவதுமே மக்களிடையே துவேஷ முண்டாவதற்குக் காரணமாய்விட்டது; இதுவே மனித முன்னேற்றத்துக்குத் தடையாயிருக்கிறது. பி ண க் கு,
யுத்தம் என்பனவுக்குக் காரணமாய்விட்டன. உலகிலே
சமாதானம், சுபீட்சம், அமைவடக்கம், என்பவற்றை அழித்துவருகின்றன. இன்றுபோல் கன்பிரதேசத்திலுள்ள நிலைமையைப் பாருங்கள்.* தாய் தந்தையர் குழந்தைகள் துயரடைந்து புலம்பிக்கொண்டிருக்கின்றனர். வாழ்வின் அத்திவாரமே தலைகீழாகிவிட்டது. மதத்தின் பயணுகப்
*卫972
 

II.
பட்டினங்கள் அழிகின்றன. வயல்கள் சேதமடைகின்றன. தேசங்களிடையேயுள்ள துவேஷத்தினுல்தான் இந் நிலை களுண்டாயின. சமயாபிமானமுளளவர்கள் சமயத்தின் வெளிக்கோலங்களை மாத் தி ர ம் பின்பற்றிக்கொண்டு, தெய்வீக போதனைகளின் உண்மைச் சாரத்தை மறந்துவிடு கிருர்கள்.
இது உண்மையேயானுலும், முதிர்ச்சியும், நிறைவேற்ற மும் நிறைந்த இந்த யுகத்திலே இறைவன் உலகுக்கு எல்லை யற்ற கொடைகளை, வழங்கியுள்ளார். தெய்வீகக் கருணைக் கடல் கொந்தளிக்கிறது. வசந்தகால மழை வருஷித்துக்
கொண்டிருக்கிறது. உண்மையென்ற சூரியன் பிரகாசமாக
ஒளிவீசுகிருன், மனித நிலையில் மாற்றமுண்டாக்கக்கூடிய
தெய்வீக போதனைகள், கருணை மிக்க இந்த யுகத்தில் வெளிப்
படுத்தப்பட்டுள்ளன. சமயத்தின் மூலாதாரமான தத்துவப் புனரமைப்பும், மறுமலர்ச்சியும், நவீன யுகத்தின் உண்மை
யான வெளிப்படையான போக்காகும். உலகுக்கு ஒளி
தரும் தவருதசோதி, இறைவனின் வார்த்தையிலிருந்து
வந்த வெளிப்படையான பிரபை, மக்கள் குலத்தை
வருத்தும் நோய்க்கெல்லாம் தெய்வீக மருந்து, மனித
குலத்துக்கு வழங்கப்பட்ட நித்தியவாழ்வென்னும் கொடை.

Page 9
மெய்ம்மையின் தோற்றுவாய்
நமது சூரிய மண்டலத்தில், ஒளிக்கு மையமாயிருப்பது சூரியனே. சகல இயற்கைப் பொருள்களின் இருப்புக்கும், வளர்ச்சிக்கும், ஒரே ஒரு தேற்றுவாயாய் ஆண்டவன் சங்கற் பகத்தின்படி சுழல்வது இந்தச் சூரியனே. ஜட உலகின் உயிரினங்களை நாம் கவனிக்கும் போது அவற்றின் வளர்ச்சி யும், பயிற்சியும் சூரியனுடைய வெப்பத்திலும் ஒளியிலுமே தங்கியிருப்பதைக் காண்கிருேம். இந்த உயிர்ப்புச் சக்தி யில்லாவிட்டால் மரமோ புல்பூண்டோ வளரமாட்டா. மிருகம், மனிதர் என்ற சீவராசிகள் வாழமாட்டா. பூமி யிலே எந்த விதமான சிருட்டியும் இயங்கமாட்டா. ஆணுல் இதை ஆழமாகச் சிந்தித்தால், உயிரை உண்டாக்கு பவர் கடவுளே என்பதை உணர்வோம். கடவுளின் திட்டத் துக்கும் சங்கற்பத்துக்கும் நடுவராயிருப்பவர் சூரியனே. சூரியனுடைய கொடையில்லாவிட்டால் உலகம் இருள் சூழ்ந்து கிடக்கும். நமது கோள்மண்டலத்தின் வெளிச்ச மெல்லாம் சூரிய மண்டலத்திலிருந்தே உண்டாகின்றது.
ཀ་དག་
அது போலவே விவேகம், இலட்சியமென்ற ஆத்மீக உலகிலேயும் ஒளிமையமொன்றிருக்க வேண்டும். அதுவே கடவுளின் வார்த்தை. அது நித்தியமானது என்றும் ஒளி விடுவது. அதனுடைய ஒளிகள் மெய்ம்மையின் ஒளிகள். மனித குலத்துக்கு ஒளி பரப்புபவை. சிந்தனை, ஒழுக்கம் என்ற இராச்சியங்களுக்கெல்லாம் ஒளி கொடுப்பவை: மனிதனுக்கு விண்ணுலகக் கொடைகளைக் கொடுப்பது உயிர்களுக்குக் கல்வி கொடுப்பது இதுவே. உள்ளங்களுக்கு ஞானஒளி கொடுப்பதும் இதுவே. கடவுள் இராச்சியத்தின் மகிழ்ச்சிக்குரிய செய்திகளைப் பிரபையுடன் அனுப்புவதும் இதுவே. சுருக்கமாகக் கூறுவதானல், தார்மிக உலகும், ஒழுக்க உலகும், ஆன்மீக மறுமலர்ச்சியுலகும், அந்த வானிலவும் ஒளிமையத்திலேதான் தமது முன்னேற்றத்
 

3
துக்குத் தங்கியிருக்கின்றன. இது சமய ஒளியைப் பரப்பி ஆன்மாவுக்கு உயிர்ப்பை வழங்குகிறது. மனித குலத்துக்கு முன்மாதிரியான ஒழுக்கங்களையும், நிரந்தரமான ஒளியை யும் கொடுக்கின்றது.
இந்த மெய்மையென்னுஞ் சூரியன் ஒளிகளுக்கெல்லாம் மையமாயுள்ளவர் தீர்க்கதரிசி எனப்படுவார். அ வ ர் கடவுளின் அவதாரமாவார். இயற்கை உலகிலுள்ள சூரியன் பிரபஞ்சத்திலே ஒளியைப் பரப்பாவிட்டால், உயிர் வாழ்வு மில்லை; வளர்ச்சியுமில்லை. அதுபோலவே ஆத்மீக அந்ய னென்னும் தீர்க்கதரிசி மனிதருடைய சிந்தனை உலகிலும் விவேகத்திலும் ஒளியைப் பிரதிபலிக்காவிட்டால், மனித வாழ்வெனும் அடிவானில் உதயமாகாவிட்டால் மனித னுடைய இராச்சியம் இருள் சூழ்ந்ததாய் மறைந்துவிடும்.
மெய்மையென்னும் சூரியன் ஒன்றே. ஆனல் அது பல இடங்களில் உதயமாகும்; சூரியனும் அப்படித்தான். அது அடிவானத்திலே பல இடங்களில் தோன்றுகின்றது. வசந்த காலத்திலே சூரியன் வடக்கே உதயமாகிறது. கோடையில் நடுவே உதயமாகின்றது. பனிக்காலத்திலே அது தென் கோடியில் தோன்றுகிறது. இந்த உதயங்கள் அல்லது விடியு திசைகள் பலவாறு வித்தியாசப்பட்டாலும், சூரியன் ஒன்றே. அது இயற்கையின் சூரியனணுலென்ன ஆத்மீக சூரியனுனலென்ன ஒன்றே. இந்த ஆத்மீக சூரியனுணுலென்ன ஒன்றே. இந்த ஆத்மீக சூரியன் எந்தத் திசையிலெழுந்தா  ெல ன் ன மெய்ம்மையென்ற சூரியனிடத்துத் தமது பார்வையைச் செலுத்துவோர் ஒளியைப் பெறுவார். உதயமாகும் திசைபற்றி பற்றுக் கொண்டவர்கள், ஆத்மீக அடிவானிலே அது வேறு திசையில் உதயமானுல் அதைப் பார்க்கமுடியாது போவார்.
சூரிய மண்டலக் கால விட்டம் நாலு பருவங்களை யுடையது. அவ்வாறே மெய்ம்மை என்ற சூரியனின் கால வட்டமும் தெளிவாள தொடர்பான பருவங்களையுடையது. இரு மண்டலங்களிலும் வசந்தகாலமுண்டு. மனிதகுலத்

Page 10
14
துக்கு உயிர்ப்புக் கொடுக்க மெய்ம்மையென்ற சூரியன் திரும்பும்போது தெய்வீகக் கொடையொன்று வள்ளன்மை யென்ற விண்ணிலிருந்து பொழிகிறது. சிந்தனை இலட்சியம் என்ற உலகம் சுழலத் தொடங்குகிறது. புதிய வாழ்வு இதனல் உண்டாகிறது. ம ன து வளர்ச்சியடைகிறது. நம்பிக்கைகள் மலர்ச்சியடைகின்றன. அபிலாஷைகள் ஆத்மார்த்தமாகின்றன. மனித உலகின் பண்புகள் புதிய சக்தி யோ டு வளர்ச்சியடைகின்றன, மனிதனிடத்துக் கடவுளின் உருவம் தென்படுகிறது. அக உலகின் வசந்த காலமிதுவே. இளவேனிற் காலத்தின் பின்னர், கோடைக் காலம் வரும். ஆன்மீகப் பழங்கள் நிறைய உண்டாகும்.
இலையுதிர் காலத்தில் வரட்டும் காற்று உயிரைக் குளிரச்
செய்யும். சூரியன் போவது போலத் தெரியும். கடைசியாக பனிக்காலம் குழுகிறது. தெய்வீகச் சூரியனின் இலேசான ஒளிதான் மிஞ்சி நிற்கிறது. சட உலகின் மேற்பரப்பு இருள் சூழ்ந்ததாகவும், பாழுந்தோற்றமுடையதாகவுந் தெரி கிறது, பூமி விளைவற்றுக் கிடக்கிறது. மரங்கள் வெளிச் சென்று வெறுமனே கிடக்கின்றன. இருளையும், அழிவையும் உற்சாகப்படுத்த அழகோ புதுமையோ காணப்படவில்லை. ஆத்மார்த்தத்தின் பனிக்காலம் தெய்வீக வளர்ச்சியின் மறைவை ஒளியின் மறைவையும் கடவுளன்பின் அழிவையும் காட்டும். ஆனல் மறுபடியும் வசந்த காலம் தோன்றும். முந்திய வசந்தம் மறுபடியுந் திரும்புகிறது. உலகம் புனருத் தாரணம் செய்யப்படுகிறது. ஒளிபெற்று ஆத்மீகத் தன்மை யடைகிறது. சமயம் புதுப்பிக்கப்பட்டு, புனர் நிர்மாணஞ் செய்யப்படுகிறது. மக்களுள்ளம் கடவுளை நோக்கிச் செல்லு கின்றது. கடவுளின் அழைப்புக் கேட்கிறது. மனிதனிடத்து மறுபடியும் உயிர் நிறைகிறது. பல காலமாகச் சமயம் பல மிழந்திருந்தது. உலோகாயதம் உலகெங்கும் பரவிற்று. வாழ் வி ன் ஆத்மீக சக்திகள் பலமிழந்தன. ஒழுக்கம் குன்றியது. சாந்தியும் சமாதானமும் உலகிருந்து அகன்றன. மக்களுள்ளத்திலே அசுர சம்பத்துக் குடிகொண்டது. எங்கும் பிணக்கும் பூசலும் தாண்டவமாடின. இரத்தஞ் சிந்தி மக்கள் பலாத்காரத்திலீடு பட்டனர். கடவுளை மறந்தனர்.
\\ھمبر

5
மெய்ம்மை என்ற சூரியன் அஸ்தமித்துவிட்டான். விண்ணு லகக் கொடைகளில்லாதொழிந்தன. இவ்வாறு பனிக்காலம் உலகை மூடிற்று. ஆனல் கடவுளின் கருணையினல் மற்ருெரு வசந்தம் தோன்றிற்று. கடவுளின் ஒளி பிரகாசித்தது. பிரகாசம் மிக்க மெய்ம்மையென்னும் சூரியன் தோன்றினன். சிந்தனையுலகும் உள்ளத்து நெகிழ்ச்சியும் தோன்றின. உலகில் புதியதொரு வாழ்வு உயிர்த்தது. தொடர்ந்து முன்னேற்றமுண்டாயிற்று.
மெய்ம்மையின் ஒளி உலகம் முழுவதையும் ஒளிபெறச் செய்யும். சண்டையும் பூசலும், யுத்தமும் இரத்தஞ் சிந்தலும் இருக்கமாட்டா. மதவெறியும், விடாப்பிடியான கோட்பாடும் அகன்று போவதாக; மக்களெல்லாம் சகோதர பாசத்தை வளர்க்க; உயிரினங்கள் மரண ஒற்றுமை பெறுக. உலகத்து மக்களினம் உண்மையின் கொடியை ஏற்றி உலகத்துச் சமயங்களெல்லாம் ஒருமை என்ற கோயிலிற்
பிரவேசிப்பாராக, தெய்வீகச் சமயங்களின் அத்திவாரம்
ஒரு மெய்ம்மையே மெய்ம்மையைப் பிரிக்க முடியாது. அது பலதரப்பட்டதென்றும் கூறமுடியாது. கடவுளின் அவதா ரங்களெல்லாம் ஒரே மெய்ம்மையையே பிரகடனஞ் செய் துள்ளன. அவர்கள் மனித குலத்தை மெய்ம்மையைக் கா ண அ  ைழ த் து ஸ் ள ன ர். மெய்ம்மையொன்றே. இமிடேஷன் என்ற மேகங்களும் புகார்களும் உண்மையென்ற சூரியனை மறைத்துவிட்டன. இந்த இமிடேஷன்களை நாம் கைவிட வேண்டும். இந்த மேகங்களையும் புகார்களையும் நீக்கி, உண்மையென்ற சூரியனைக் கண் மூடி வழக்கமென்ற இருளிலிருந்து விடுதலை செய்ய வேண்டும். அப்போதுதான் சத்திய சூரியன் அதி பிரபையோடு பிரகாசிக்கும். உலகத்து மக்களெல்லாரும் அப்போதுதான் ஒன்று கூடுவர். உலகத்துச் சமயங்களெல்லாம் ஒன்ரு கும், கிளைகளும், பிரிவுகளும் ஒன்றிணையும். எல்லாச் சாதியாரும் ஒரே கடவு னி ன் பிதுருத்துவத்தை ஏற்றுக்கொண்டு ஒரே கோவிலில் ஒரே கொடியின் கீழ் வழிபாடியற்றுவர்.

Page 11
6
தெய்வீக நாகரிகம் ஸ்தாபிக்கப்படும்வரை லெளகீக நாகரிகத்தினுல் எவ்வித நற்பயனுமுண்டாகாது. மனித குலத்துக்கு என்ன கெடுதி வரப்போகிறதென்பதைப் பாருங்கள். உ ல  ைக க் கஷ்டப்படுத்தும் யுத்தங்களைப் பாருங்கள். உலகில் நிலவும் பகைமையையும் துவேஷத்தை யும் பாருங்கள். தெய்வீக நாகரிகம் இன்னும் ஸ்தாபிக்கப் படவில்லை என்பதையே இவை காட்டுகின்றன. ஆண்டவன் ராச்சியத்தின் நாகரீகம் எல்லாத் தேசங்களிலும் பரவு மானுல், பிணக்கு என்ற தூசு கலைந்து போகும். இந்த மேகங்கள் கலைந்துவிடும்; மெய்ம்மையென்ற சூரியன் மிகுந்த பிரகாசத்தோடு மனித குலத்தின்மீது ஒளி வீசும்,
 
 

சமாதான உதயம்
கடவுள் எல்லாருக்கும் தந்தை. அவர் கருணைமிக்கவர்; வள்ளன்மை நிறைந்தவரென்பதையெல்லாருமறிவர். அவர் தமது கருணையினுல், தமது சிருட்டிகளுக்குத் தேவையான எல்லாவற்றையும் வழங்குவார். யாராவது பாவஞ்செய்தால் அவர் தமது கொடையை நிறுத்தி விடுவதில்லை. எல்லாச் சிருஷ்டிக்கும் அவரே கர்த்தா. அவரே தந்தை. எல்லாம் அவரையே வெளிப்படுத்துகின்றன. அவருடைய கருணையை யும், தெய்வீகக் கொடைகளையுமே வெளிப்படுத்துகின்றன. சூரியன் எவ்வளவு தெளிவாயிருக்கிறதோ அதைப் போலவே மக்கள் எல்லாம் சகோதரர் என்பது தெளிவாகிறது. எல்லாரும் ஒரே கடவுளின் தொண்டர்களே. ஒரே மனித குலத்தைச் சேர்ந்தவர்களே. ஒரே பூமியில் வசிப்பவரே. ஒரே கருணைக் கடலில் மூழ்கியிருப்பவரே. மனித இனத்தின் சுபீட்சம் தேவைப்பட்டால், பரஸ்பர ஒற்றுமையும், உதவியும் தேவை. இது மனித இனத்தின் சடசம்பந்தமான தொடர்பு. ஆனல் இதற்கு மேலானதும், புனிதமானதும், எல்லாவற்றிலும் பார்க்கச் சிறந்ததுமான தொடர்பு ஒன்றுண்டு. அதுவே ஆத்மீகத் தொடர்பு. இது தெய்வீக மானது. இது பரிசுத்த ஆவியின் மூச்சிலிருந்து எழுவது. கருணைக் குணங்களின் பிரகாசத்திலிருந்து தோன்றுவது. இது ஆத்மீக மனவியல் உணர்வுகளில் தாபிக்கப்பட்டது. தூய ஒன்றின் அவதாரங்களினுல் இந்தச் சகோதரத்துவம் ஸ்தாபிக்கப்பட்டது.
ஆதாம் காலத்திலிருந்தே அவதார புருஷர்கள் மனித குலத்தை, ஒன்ருக்க முயன்று வந்திருக்கிருர்கள். எல்லா ரையும் ஒரே ஆன்மாவாகக் கருதக் கூடிய வாறு ஒ ற் று  ைம செய்ய மு ய ன் று வந்திருக்கின்றனர்.
ஆட்டு இடையனின் நோக்கம் மந்தைகளை ஒன்று சேர்ப்பதே
உ.ஐ.அ - 2

Page 12
8
யன்றிப் பிரித்துவிடுவதன்று. கடவுள் தூதுவர் மனித குலத் துக்குத் தெய்வீக இடையராக அமைந்தவர். அவர்கள் மனிதரிடையே ஓர் அன்புத்தளையையும், ஒ ற் று  ைம யையும் ஏற்படுத்தியிருக்கின்றனர். பிரிந்துகிடந்த பல சாதிகளை ஒன்ருக்கியிருக்கின்றனர். நாடோடிகளாய்த் தி ரி ந் த வ  ைர ப் பலம் பொருந்திய ராய்ச்சியமாக்கினர். கடவுள் ஒருவரே என்பதற்கு அத்திவாரமிட்டனர். எல்லா ரையும் சமாதானமாக இருக்குமாறு அழைத்தனர். தூய தெய்வீகமான இந்த அவதாரங்களெல்லாம் ஒன்றே. அவர்கள் ஒரே கடவுளுக்கே தொண்டு செய்துள்ளனர். ஒரே உண்மையையே பிரகடனஞ் செய்தனர். ஒரே தாபனங் களையே கட்டி எழுப்பினர். ஒரே ஒளியையே பிரதிபலித் தனர். அவர்கள் தோற்றம் தொடர்புடையதாகவும் அடுத் தடுத்து நிகழ்வதாகவுமிருந்தது. ஒவ்வொருவரும், தமக்குப் பின்வருபவரைப் பற்றிக் குறிப்பிட்டு மெய்ம்மையின் அத்தி வாரத்தை நிலைநாட்டினர். மக்கள் அன்பு செய்ய வேண்டு மென அறைகூவி யழைத்தனர். உலகை இ  ைற வ ன் வார்த்தை பிரதிபலிக்கும் ஒரு கண்ணுடிபோலாக்கினர். எனவே அவர்கள் ஸ்தாபித்த தெய்வீகச் சமயங்களுடைய போதனைகளும், நிரூபணங்களும் சான்றுகளும் ஒன்றே. நாம ரூபத்திலே அவை வேருகத் தெரிந்தாலும் மெய்ம் மையில் அவை ஒன்றே. இவர்களுடைய தோற்றம் உலகுக்கு வசந்தகாலம் போல இருந்தது. இந்த வருடத்து வசந்த காலத்துக்கு, வருடத்தின் பெயரை அனுசரித்து வேறு பெயர் கூறப்பட்டாலும் அது பெயரளவில் மாத்திரமே வித்தியாசமானது. மற்றும்படி போன வருடத்து வசந்த காலம் போலவே உயிர்ப்பும் வாழ்வும் காணப்படுகிறது. ஒவ்வொரு வசந்தகாலத்திலும் புத்துயிர்ப்பும் மறுமலர்ச்சியு முண்டாகிறது. கொடைகளும், நி  ைற வு களு ம் உயிர் கொடுக்கும் சக்திகளும் உண்டாகின்றன. இவையெல்லாம் முந்திய வ ரு டத் து வசந்தகாலத்தவை போலவேயிருக் கின்றன. ஆணுல் புதிய வசந்தத்தின் பெயர் மாத்திரம் வேறு. இன்று 1912 ஆம் ஆண்டு சென்ற வருடம் 1911 ஆம் ஆண்டு. ஆணுல் மூலாதாரமான மாற்றங்களொன்றுமில்லை.
 

19
சூரியன் ஒன்றே. ஆனல் அது தோன்றும் திசைகள் வேரு யிருக்கலாம். சமுத்திரம் ஒரே நீர்த்தேக்கம். ஆனல் அதற்கு வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு பெயர்கள் வழங்கப்படு கின்றன. அத்லாந்திக், பசுபிக் மத்தியதரை, அண்டாட்டிக், எனப் பலவகையான பெயரைக் கொடுக்கிருேம். பெயர் களைப் பொறுத்தவரையில் வித்தியாசமுண்டு. ஆனல் நீர், அதாவது கடலின் தன்மை மாறுவதில்லை.
இவ்வாறே தூய இறை அவதாரங்களினல் வகுக்கப் பட்ட சமயங்களும் ஒன்றே. ஆனல் பெயரளவில் மாத் திரம் வித்தியாசப்படுகின்றன. மனிதன் ஒளியை விரும்ப வேண்டும். அது எந்த உதயத்திலிருந்து வந்தாலும் காரிய மில்லை. அவன் ரோசா மலரை விரும்புகிறவனுயிருக்க வேண்டும். அது எந்த நிலத்தில் முளைத்ததானுலும் பரவா யில்லை. அவன் உண்மையில் விருப்புடையவனுகயிருக்க வேண்டும். எந்த மூலத்திலிருந்துவந்ததானுலும் பரவா யில்லை. விளக்கிலிருந்து ஒளிவருகிறதென்று விளக்கிலே பற்றுவைத்தல் ஒளியிலே பற்றுவைத்தலாகாது. நிலத்திலே ரோசா மலர்கிறதென்று நிலத்தைக் கொண்டாடுவதிலும், ரோசா மலரையே கொண்டாடுவது பொருத்தமுடையது. பழந்தரும் மரத்தில் பற்றுவைப்பதிலும் அது தரும் பழத் தில் சிரத்தை கொள்ளவேண்டும். சுவையுள்ள பழங்களைச் சுவைத்துண்ணவேண்டும். அவை எ ங் கே தோன்றின வென்று ஆராய்வதிற் பயனில்லை. சத்திய வார்த்தையை யார் சொன்னுலும், அதைப் பிரமாணமாகக் கொள்ள வேண்டும். பேருண்மைகள் எந்த ஆகமத்திலே கூறப் பட்டாலும் அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் தப்பெண்ணங் கொள்வோமானுல், அது அறியாமைக்கும், இழப்புக்கும் காரணமாகும். சமயங்களுக்கும், தேசங்களுக் கும், சாதிகளுக்குமிடையே உள்ள பூசல்கள் தப்பெண்ணத் தினுலுண்டாவன. சமயங்களின் அடிப்படைத் தத்துவங் களே நாம் ஆராய்வோமானுல், அவை ஒற்றுமையுடையன என்பதை அறிவோம். ஏனெனில் அவற்றின் அடிப்படைத் தத்துவம் பலவல்ல, ஒன்றே. இதனுல் உலகத்துப் பல

Page 13
20
சமயவாதிகளும் ஒற்றுமையையும், இணக்கத்தையுமடை வார்கள். சமயத்தின் நோக்கம், உயர்ந்த பண்புகளைப் பெறுவதும், நல்லொழுக்கத்தை விருத்தி செய்வதும், மனித குலத்தின் ஆன்மஞானத்தை வளர்ப்பதுமாகுமென்ற உண்மையை உணர்வதோடு, உண்மையான வாழ்வும் தெய் வீகக் கொடையுமதனல் கிடைக்குமென்பதையும் உணர் வார். தீர்க்கதரிசிகளெல்லாருமே இ க் கொள் கை களை வளர்த்தவராவார். அவர்கள் தீமையையோ, தீயொழுக் கத்தையோ இழிதகைமையையோ போற்றி வளர்க்கவில்லை. அவர்கள் மனித குலத்தை நன்மையான வழியில் நடக்கு மாறு விேண்டினர். கடவுள் பக்தியால் மக்களை ஒன்றிணைத் தனர். மக்களினம் ஒன்றென்ற மதத்துக்கு மக்களை அழைத் தனர். இணக்கமும் ஒற்றுமையுமுடையவராயிருக்குமாறு மக்களைத் தூண்டினர். உதாரணமாக ஆபிரகாமையும் மோசேயையுங் கூறலாம். இவ்வாறு கூறுவதால் இவர் களோடு இவ்விஷயம் எல்லைப்படுத்தப்பட்டதெனக் குறிக்க வில்லை. இவர்களுடைய ப ண்  ைப யே குறிக்கிருேம். * ஆபிரகாம்' என்று கூறும்போது தெய்வீக வழிகாட்டி யான ஓர் அவதார புருஷரை, மனித நல்லொழுக்கத்துக்கு நிலைக்களமாயுள்ளவரை, மனித குலத்துக்கு வரமளித்த ஒரு தோற்றுவாயை, தெய்வீக அருட்கிளர்ச்சிக்கும் நிறைவு களுக்கும் உதயத்தானமாயுள்ள ஒன்றையே குறிப்பிடு கிருேம். இந்த நிறைவுகளும், அழகுகளும் பெயர்களுக்கும், எல்லைகளுக்கும் எல்லைப்பட்டனவன்று. எவரிடத்து இந்தப் பண்புகளும், குணங்களும் காணப்படுகின்றனவோ, அங்கே ஒரே மெய்ப்பொருள் தான் பிரகாசிக்கிறதென உணர்ந்து ஆபிரகாம் மயமாய் வெளிவந்த நிறைவுகளுக்குத் தலை சாய்த்து வணங்குகிருேம். இவ்வாறே மோசேயின் செம்மை களைப் போற்றுகிருேம். சிலர் ஆபிரகாமின் பெயர்மீது பற்றுடையவராயிருந்தனர். ஒளி கொடுக்கும் லாந்தரில் பற்று வைத்தாரேயன்றி ஒளியிலே பற்று வைக்க வில்லை. இதே ஒளி வேருெரு லாந்தரில் பிரகாசிப்பதைக் கண்டதும், அவர்கள் முன் த ரம் பற்று வைத்த

2I
ல T ந் த  ைர நினைத்தார்களேயன்றி, அதன் பிந்திய தோற்றத்தையும், ஒளியையுங் கவனிக்கவில்லை. எனவே ஆபிரகாம் என்ற பெயரில் பற்றுவைத்த அதையே விடாது பற்றி நின்றவர்கள் மோசேயில் ஆபிரகாமிய பண்புகள் தோன்றியபோது அவற்றை உணர்ந்துகொள்ள முடியாது போயினர். இவ்வாறே யூதர் மோசே புனிதர் மீது பற்றுடையவராயிருந்தனர். அவர்கள், ரட்சகர் வருவா ரெனக் காத்திருந்தனர். மோசேயின் பண்புகளும் நிறைவு களும் யேசுநாதரிடம் காணப்பட்டன. ஆனல் மோசேயின் பெயரில் மோகங்கொண்ட அவர்கள் அப் பெயரையே பற்றிக் கொண்டு யேசுநாதரிற் காணப்பட்ட மோசேய பண்புகளைக் கருத்திற் கொள்ளத் தவறினர். இந்த நற் பண்புகளையும் நிறைவுகளையும் அவர்கள் போற்றிவந்தால், அவர்கள் யேசுநாதரிடம் நம்பிக்கை வைத்திருப்பார்கள். ஒளியைப் போற்றுபவராயிருந்தால் அந்த ஒளி எந்த விளக்கி லிருந்து பிரகாசித்தாலும் அதைப் போற்றவேண்டும். ஆணு ல் விளக்கையே நா ம் விரும்புபவராயிருந்தால் அந்த ஒளி வேறு விளக்குக்கு மாற்றப்பட்டால், அந்த ஒளியை ஏற்றுக் கொள்ளவும் மாட்டோம்; பிரமாணமாகக் கொள்ளவும் மாட்டோம். எனவே கடவுள் தூதரான ஆபிரகாம், மோசே, யேசுநாதர் முதலிய தீர்க்கதரிசி களிடத்து வெளிப்பட்ட நற்பண்புகளைப் போ ற் றி ப் பின்பற்ற வேண்டுமேயன்றி, ஒளிதந்த விளக்கைமாத்திரம் போற்றிக்கொண்டிருக்கக்கூடாது. சூரியன் எந்தத் தானத் திலே உதித்தாலும் அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அது மோசே என்ற தானத்திலோ ஆபிரகாம் என்ற தானத் திலோ வேறு தீர்க்கதரிசிகள் என்ற தானத்திலோ இருந்து உதயமானுலும் நாம் ஒளியில் விருப்புடையவரானபடியால் ஒளியை வரவேற்க வேண்டும். நாம் ஒளியின் அபிமானி களேயன்றி, விளக்குகளின் அபிம்ானிகளல்லர் மெழுகுவர்த் திகளின் அபிமானிகளல்லர். எமக்குத் தேவை பழங்கள்.
அவை எந்தத் தோட்டத்திலே பழுத்தாலென்ன எமக்கு
வேண்டியது மழை. அது எந்த மேகத்திலிருந்து பெய்தா

Page 14
22
லென்ன? நாம் பந்தப்பட்டவராயிருக்கக் கூடாது. இப்பந் தங்களைக் கைவிட்டால் எம்மிடம் ஒற்றுமையுண்டாகும்.
ஏனெனில் எல்லாரும் மெய்ம்மையைத் தேடுபவர்களே.
போலிச் சமயம் மனிதருடைய நம்பிக்கையைக் கலப்படஞ்
செய்து விட்டது. அதனுல் அடிப்படையை இழந்துவிட்டோம் இந்தப் போலிகளின் மாற்றத்தினுல் பகைமையும் பிணக்கு
முண்டாகிவிட்டன. யுத்தமும் இரத்தஞ்சிந்தலும் நிகழ்ந்து விட்டன. இப்போது மகிமை மிக்க பிரகாசம் பொருந்திய இருபதாம் நூற்ருண்டு உதயமாகிவிட்டது. தெய்வீகக் கொடைகள் எங்கும் வாரி இறைக்கப்படுகின்றன. சத்திய சூரியன் அதிபிரபையோடு எறித்துக் கொண்டிருக்கிருன்.
இந்தப் போலிக்கொள்கைகளைக் கைவிட வே ண் டி ய காலமிது. க ண் மூ டி க் கொள்கைகளைத் திரஸ்கரிக்க வேண்டும். கடவுள் ஒருவரையே வணங்க வேண்டும். தீர்க்க தரிசிகளின் மெய்ம்மையையும், அவர்களுடைய போதனை யையும் பார்த்தால் நாம் ஒற்றுமையடைவோம்.
கடவுள் நாமம் வாழ்க! கடவுளின் வசந்தகாலம் வந்து விட்டது. இந்த நூற்ருண்டே வசந்த பருவம். சிந்தனையும் உயிரும் புதுமை பெற்றுவிட்டன. கொடைகள் நிறைந்து விட்டன. வாழ்வு மறுமலர்ச்சி பெற்றுவிட்டது. ஒரு புறத் திலே மெய்ம்மையின் ஒளி பிரகாசிக்கிறது. மறுபுறத்தில் இறைவனின் அருள் மழை பொழிந்து கொண்டிருக்கிறது, அற்புதமான லெளகீக முன்னேற்றம் காணப்படுகிறது: ஆத்மார்த்தத் துறையிலே பெரிய கண்டுபிடிப்புகள் காணப் படுகின்றன. இது நூற்ருண்டுகளுள் அற்புதம் வாய்ந்த தெனக் கூறலாம். ஏனெனில் இந்த நூற்ருண்டிலே அற்புதங் களின் வெளிப்பாடுகள் பல காணப்படுகின்றன. மனித குலம் ஒன்றுபடுவதற்குக் காலம் வந்துவிட்டது. எல்லா நாட்டவரும் ஒரே நாட்டவராய் அந் நாட்டுக்கு விசுவாச
முடையவராயிருக்கும் காலம் வந்துவிட்டது. சகல மதங்
களும் ஒரே மதங்களாகும். காலம் வந்துவிட்டது. சாதித் துவேஷமும் சமயத் துவேஷமும் நீங்கும், மனிதகுலம் ஒன்று

23
என்ற வெற்றிக் கொடி பறக்க விடப்படும். சர்வதேச சமா தானம் என்ற உதய ஒளி உலகெங்கும் பரவும். எனவே நாம் கடவுளைப் பிரார்த்திக்கிருேம், இந்த இருளடர்ந்த மேகங் களைச் கலையச் செய்யுமாறு. இந்தப் போலிக் கொள்கைகள் வேரோடு களையப்பட்டு கிழக்கும் மேற்கும் அன்பு, ஒற்றுமை என்பவற்ருல் பிரகாசமடையட்டும். உலகத்துத் தேசங்க ளெல்லாம் ஒருவரையொருவர் தழுவி, இலட்சிய பூர்வமான ஆத்மீகச் சகோதரத்துவம், விண்ணகத்து விளங்கும் விறல் மிகு சூரியன் போல உலகை ஒளியினுல் பிரகாசிக்கச் செய்வ தTக.

Page 15
யுத்தத்துக்குக் காரணம்
சரித்திராசிரியருடைய மதிப்பின்படி ஒளி மிகுந்த இந்த நூற்ருண்டு முன் சென்ற நூறு நூற்ருண்டுகளுக்குச் சமம். முற்காலத்துலே மக்கள் சாதித்த சாதனைகளைக் கூட்டிப் பார்த்தால், இந்த நூற்ருண்டின் கண்டுபிடிப்புகளும் , விஞ்ஞான முன்னேற்றமும், லெளகீக நாகரிகமும், முன் சென் ற நூறு நூற்ருண்டுகளில் சாதித்தவற்றைவிட அதிகரித்து விட்டதென்று கூறலாம். இலக்கியத் தொகுப் புக்களையும் புதிய நூல்களையும் கணக்கிட்டால், இந் த நூற்ருண்டிலே மனிதருடைய சிந்தனையிற் பிறந்த நூல்கள் பழைய நூற்ருண்டுகள் எல்லாவற்றிலும் ஆக்கப்பட்ட வற்றைவிட அதிகரித்துள்ளன. அன்றியும் அறிவுத்துறை யில் சிறப்பு வாய்ந்தன என்பது தெரிகிறது. எனவே இந்த நூற்றண்டு மிக முக்கியம் வாய்ந்தது. இந் நூற்ருண்டிலே ஈட்டிய சாதனைகள் எவ்வளவு அற்புதமானவை என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். மனிதனுடைய ஆராய்ச்சித் துறை கள் எல்லாவற்றிலும் நிகழ்ந்த புதிய கண்டுபிடிப்புக்கள்; புதிய விளைவுகள், விஞ்ஞான அறிவுகள், ஒழுக்கச் சீர்த்திருத் தங்கள், மனித இனத்தின் சுபிட்சத்துக்காக அமைக்கப்பட்ட பிரமாணங்கள், ஆராய்ந்தறியப்பட்ட இயற்கையின் இரக சியங்கள், முன்னே கண்டறியப்படாத புதிய சக்திகளும், அவற்றை ஆளும் முறையும், புதிய இயற்கை பற்றிய அற்புத உலகமும் முன்னே இதுவரை மனிதன் காணுத நிலை கள் இன்று அவன் பயன்படுத்தவும் ஆராயவும் உதவு கின்றன. கீழைநாட்டுடன் மேலைநாடு ஒரு கணப் பொழுதில் தொடர்பு கொள்ளலாம். மனிதன் ஆகாயத்திலே பறக்க லாம்! கடல் ஆழத்துக்குச் செல்லலாம். நீராவிச் சக்தி கண்டங்களை இணைத்துவிட்டது. பாலைவனுந்தரங்களுக் கூடாகப் புகையிரதங்கள் செல்கின்றன. மலைகளையெல்லாம்
 

25
ஊடுருவிச் செல்கின்றன. திக்குத்திசையற்று சமுத்திரங் களிலே கப்பல்கள் திசை நோக்கி ஓடுகின்றன. புதிய கண்டு பிடிப்புக்கள் தினமும் அதிகரிக்கின்றன. எவ்வளவு அற்புத மான நூற்ருண்டு இது! இது உலகெங்கும் சீர்திருத்தம் நடைபெறும் யுகம். சிவில் சமஷ்டி அரசாங்கங்களின் சட்டங் களும், நிறைவேற்றுச் சட்டங்களும் மாறிக்கொண்டு வரு கின்றன. விஞ்ஞானங்களும் கலைகளும் புதிய அமைப்புப் பெறுகின்றன. சிந்தனைகள் உருமாறுகின்றன. ம னி த ச் சமுதாயத்தின் அத்திவாரம் மாறுவதோடு பலமடைந்தும் வருகின்றது. பழங்காலத்து விஞ்ஞானங்களுக்கு இப்போது பயனில்லை வானசாத்திரத்துறையிலே தொல பியின் முறை யும் கணக்கற்ற வேறு முறைகளும், விஞ்ஞான விளக்கங் களும், தத்துவ விளக்கங்களும் தவருனவை, பயனற்றவை யெனத் தள்ளப்பட்டுவிட்டன. தற்கால உலகுக்கு முன்னே நாள் ஒழுக்கப் பிராமணங்கள் ஏற்புடையனவாகா. பழங் காலச் சிந்தனைகளும் கருதுகோள்களும் இன்று பயனற்றன வாகி விட்டன. சிங்காசனங்களும் அரசுகளும் உடைந்து விடுகின்றன. முற்காலத்து நிலைகளும், தேவைகளும் இக் காலத்துக்கு ஏற்றனவாகக் காணப்படாததால் தீவிரமான மாற்றங்களை அடைகின்றன.
போலிச் சமயப் போதனைகளும், பழைய நம்பிக்கை களும், மூதாதையோரின் போலிப் பாவனைகளும், தெய்வீக மெய்ம்மையின் அத்திவாரத்துக்கு ஏறுமாருனவை. அவற் றையும் கழித்துச் சீர்திருத்த வேண்டும். அவற்றைக் கைவிட்டுவிட்டுப் புதிய நிபந்தனைகளை மேற்கொள்ள வேண்டும். மனித சமுதாயத்தின் ஒழுக்கமுறை மாற்ற மடைய வேண்டும். மனிதப் பிரச்சினைகளுக்குப் புதிய தீர்வைக் காணவேண்டும். மனிதனுடைய விவேகமும் மாறவேண்டும். அவ்ை சர்வதேச மாற்றத்துக்கு அடங்க வேண்டும். பழங்காலத்துச் சிந்தனைகளும் கருதுகோள்களும்
இன்று பயனற்றவை போலவே சமயத்துறையிலே மணி
தனுல் சிருட்டிக்கப்பட்ட கொள்கைகளும், புதுப் புனைவு களும், பயனற்றவையாகவும், வழக்கிறந்தன வா கவு ம்

Page 16
26
கழிகின்றன. இவையே மனித சமுதாயத்தில் பிணக்கை உண்டாக்குகின்றன. யுத்தமும், இரத்தஞ் சிந்துதலும் இவற்ருலேயே உண்டாகின்றன. அவை மனிதன் ஒன்று என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொள்வதில்லை. இந்த ஒளி யுகத்திலே தெய்வீக சமயத்தின் சாரமென்னவென்பதை ஆராயவேண்டும். மனிதகுலம் ஒன்று என்பதன் அடிப் படையில் உள்ள தத்துவத்தை ஆராய்ந்து, தெய்வீக அன்பினல் ம னி த  ைர ஒற்றுமையாக்கும் தோழமை இணக்கம் என்பவற்றின் காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் ,
இந்த ஒற்றுமையே நித்தியவாழ்வின் ஒளியாகும். தெய் வீகமான ஆத்மஞானமாகும். கடவுளின் ஒளியும் தேவராச் சியத்தின் கொடையுமாகும். இந்தத் தெய்வீகக் கொடை களின் தோற்றுவாய் என்ன என்பதை அறிந்து உறுதியோடு அவற்றைப் பற்றிக் கொள்ளவேண்டும். மனிதனுடைய புனைவுகளாலும் கோட்பாடுகளாலும் கட்டுப்பட்டு வரை யறுக்கப்பட்டிருப்போமானுல், ம னித கு ல ம் இழிநிலை யடையும், யுத்தமும் பிணக்கும் வளரும், மனித இனத்தை அழிப்பதற்கு அசுரசைனியங்கள் வந்து சூழும்.
தனிப்பட்ட ஒரு குடும்பத்திலே அன்பும், இணக்கமும் வெளிப்படுமானல், அந்தக் குடும்பம் முன்னேற்றமடைந்து ஒலிபெற்று, ஆத்மீகத் தன்மை பெறும். ஆனல் பகையும் துவேஷமும் அக் குடும்பத்திலிருந்தால் அது அழிந்துவிடும். இது ஒரு நகரைப் பொறுத்த அளவிலும் உண்மை. அந்நகரில் வசிப்போர் இணக்கமான போக்கும் தோழமையுங் காண்பித்தால், அது படிப்படிவாக முன்னேறும். மனித னுடைய நிலை ஒளியுடையதாகும். ஆனல் பகையினலும் துவேஷத்தினுலும் அது இழி நிலையடையும். அந்நகர வாசிகளும் பல திசையிலும் கலேந்துவிடுவார்கள். அவ்வாறே ஒரு நாட்டு மக்களும் அன்பினுலும், நாகரிகத்திலும், அறிவிலும் முன்னேறுவார்கள். யுத்தத்தினுலும் பிணக் கிணுலுஞ் சீரழிந்துவிடுவார். ஈற்றில் மனிதகுலத்தைப்
 

27
பொறுத்தவரையிலும் இது உண்மையே. அன்புவாய்க்கப்
பெற்று மக்களுடைய உள்ளங்களை இலட்சியபூர்வமான
ஆன்மார்த்தப்பந்தங்கள் ஒன்று சேர்க்குமானல் மனித
குலம் முழுவதும் உயர்த்தப்படும். உலகம் ஆன்ம விலாச
மடையும், ஒளியுடையதாகும், மனிதகுலத்தின் சுகமும்,
அமைதியும் எல்லேயற்ற அளவில் அதிகரிக்கும். யுத்தமும்
பிணக்கும் வேரோடு களையப்படும். பூசலும் பிணக்கும் நீங்கி விடும். உலக மக்கள் உலகளாவிய சமாதானத்தினுல் ஒன்று
சேர்க்கப்படுவார். உலகம் முழுவதும் ஒரே குடும்பமாக
வாழும் ஒரே கடலின் திரைகளைப்போல இணையும். ஒரே வானிலுள்ள நட்சத்திரங்களைப் போலப் பிரகாசிக்கும்.
ஒரே மரத்துப் பழங்கள் போல விளங்கும். இதுவே மனித
குலத்தின் சுபிட்சமும் நன்மையுமாகும். இதுவே மனித னுக்கு ஞான ஒளி; நிரந்தரமான மகிமை, நித்திய வாழ்வு.
இதுவே தெய்வீகக் கொடை. இந்நிலை உங்களுக்கு உண்டாக வேண்டுமென விரும்புகிறேன். அமெரிக்க மக்கள் தமது சனநாயகத்தின் பண்பு உறுதிப்படுத்தப்படவும், பெயர் நித்தியம் புகழ் பெறவும் இந்த இலட்சியத்தை அடைவார் களாக எனக் கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.

Page 17
உலக சமாதானம்
"மிகப் பெரிய சமாதானத்துக்குத் தொண்டு செய்வ திலும் பார்க்கச் சிறந்த புகழைக் கொடுக்கும் சேவை இன்று ம ணி த னு க் கு வேறென்றுமில்லை. சமாதானம் ஒளி போன்றது. யுத்தம் இருள்; சமாதானமே வாழ்வு. போர் சாவுக்குச் சரி. சமாதானமே கடவுள் போட்ட அத்திவாரம் யுத்தம் அசுரத்தாபனம் மனித குலத்துக்குச் சமாதானம் ஒளி. மனித அத்திவாரங்களையெல்லாம் தகர்ப்பது யுத்தம். உலகவாழ்வின் விளைவுகளை ஆராய்ந்து பார்க்கும்போது சமாதானமும் தோழமையும் மனிதனே உய்விப்பதற்கும் அவன் நன்மைக்கும் ஏதுவானதொன்று. ஆனல், பூசலும், போரும் அழிவுக்கும், பிரிவினைக்கும் ஏதுவானது. சிருட்டிக் கப்பட்ட பொருள்களெல்லாம் சேர்க்கை மூலப்பதார்த்தங் களின் ஒற்றுமை என்பவற்றின் வெளிப்பாடு இல்லாமை என்பது அந்தச் சேர்க்கையின் மையும் இணக்கமின்மையு மாகும். சேர்க்கையிலே பல வகைப்பட்ட மூலக்கூறுகள் ஒன்று சேர்ந்து இணைகின்றன. ஆனல், அவை இசைவற்றன வாய் ஒன்றையொன்று ஒதுக்கிக் கொண்டிருக்குமானல், கூருகப் பிரியும்போது அழிவுண்டாகிறது. இந்த இயல்பு எல்லாவற்றுக்குமுண்டு. இக் கோட்பாட்டுக்கு அவை அடங் கியவை. பல மட்டத்திலுள்ள துறைகளிலுமுள்ள ஆக்க அடிப்படை அன்பின் வெளிப்பாடே இன்று உலகிலுள்ள
அமைதியின்மையையும், கிளர்ச் கியையும் பா ரு ங் க ள்.
இஃதெல்லாம் யுத்தத்தினலுண்டானவை. சமாதானமே ஆரோக்கியமும் ஆக்கமுமாகும். யுத்தம் நோயும் அழிவு மாகும். உண்மையென்ற கொடி உயர்த்தப்பட்டதும், சமாதானம் மனிதனுடைய சுபீட்சத்துக்கும் முன்னேற்றத் துக்கும் ஏதுவாகிறது.
 

29
எல்லா யுகங்களிலும் காலவட்டங்களிலும் ஒழுங்கீனத் துக்கும் அசெளக்கியத்துக்கும் யுத்தமே காரணமாகிறது. சமாதானமும் சகோதரத்துவமும் பாதுகாப்பையும், மனித ருடைய நன்மையுங் கொண்டு வந்துள்ளது. இந்தத் தன்மை இன்றைய உலக நிலையில் விசேடமாகக் கவனிக்கப்படத்தக்க தாயிருக்கிறது. ஏனெனில், கடந்த காலங்களிலே யுத்தம் இவ்வளவு காட்டுமிராண்டித்தனமாகவும், கொ டு  ைம யுடனும் நடத்தப்படவில்லை. பழங்காலத்திலே இருநாடு கள் தம்முட் சண்டை செய்தால், பத்து, இருபதாயிரம் Guri மடிவார். ஆனல், இக் காலத்துச் சண்டையில் ஒரு லட்சம் பேர் ஒரே நா வரி ல் மடியலாம். மனிதன் மனிதனைக் கொல்லும் கலை பூரணமாக்கப்பட்டுள்ளது. அதற்குரிய ஆயுதங்களும் மிகச் சாதுரியமாக அமைக்கப்பட்டுள்ளன. எனவே, சொற்ப நேரத்தில் ஒரு தேசத்தை இல்லாமற் செய்துவிடலாம். எனவே, பழங்காலத்து யுத்த முறை யோடு இக் காலத்து யுத்தமுறையை ஒப்பிட்டுப் பார்க்கக் Gin. L-TTgl.
இயற்கையின் நியதிப்படி, வாழ்வின் நிகழ்வுகள் உச்சத்தை அடைந்து சிறப்பான படியை எட்டியதும் புதிய தொரு ஒழுங்கும் நிலைமையும் ஸ்தாபிக்கப்படும். யுத்தக் கலையும், யுத்த ஆயுதங்களும் பூர்ணமான அபிவிருத்தியை அடைந்திருப்பதால் இவ்வுலகில் ஒரு மாற்றமுண்டாகப் போகின்றது. எதிர்வரும் நூற்ருண்டுகளிலே ம னி த னுடைய சக்திகளும் புதுப்புனைவுகளும், சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் விருத்தி செய்யவே பயன்படுத்தப் படும். எனவே, மதிப்புக்குரிய தகைமை வாய்ந்த இந்தச் சங்கம்* சர்வதேச சமாதானத்தை ஏற்படுத்தும் நேர்மை யான அதன் நோக்கத்துக்கு இறைவன் உறுதி வழங்கிச் சக்தியையுமளிப்பீராக. அப்போது உலக சமாதானமென்ற கொடியை உயர்த்தும் காலம் நெருங்கும். சர்வதேச சுபீட்சம், பிரகடனஞ் செய்யப்படும். இப்போது உலகைச் சூழ்ந்துள்ள இருள் அகன்றுவிடும்.

Page 18
30
இப் பெருமைமிக்க மகிமை வாய்ந்த நூற்ருண்டுக்குக் நடவுள் விதித்துள்ள சலுகைகளுக்கும் கொடைகளுக்கும் எதிராக உலகின் சக்திகள் எம்மாத்திரம்? அவை இக் காலத் துக்குத் தேவைப்பட்டவை. அவசியமானவை. மனிதன் மற்றெல்லாவற்றுக்கு மெதிராகச் சவால்விடலாம். ஆனல், தெய்வாதீனமாக இக் காலத்துக்கென விதிக்கப்பட்டதை எதிர்க்கமுடியாது. இன்று உலகின் பல பாகங்களிலும், சமாதானப்பிரியர் இருக்கிருர்கள். இறைவன் நா ம ம் வாழ்க. இக் கொள்கைகளெல்லாம் எல்லா நாடுகளிலும் விசேஷமாக இந் நாட்டிலும் பரப்பப்பட்டு வருகின்றன. இறைவன் நாமம் வாழ்க. இச் சிந்தனை நிலவி உலகம் ஒன்று என்ற கருத்தைப் பாதுகாக்க இடையருது முன்வரு கின்றனர். உலக சமாதானத்தை நிலைநாட்ட அவர்கள் உதவி செய்து வருகிருர்கள். இந்த அற்புதமான சனநாயகம் அதனை உணரும் என்பதிலும், சர்வதேச இணக்கம் என்ற கொடி இங்கே விரிக்கப்பட்டு அது உலக நாடுகளெங்கும் விரிந்து விரிந்து பறக்குமென்பதிலும் சந்தேகமில்லை. உங்க ளிடம் அத்தகைய உணர்ச்சியும் உயர்ந்த நோக்கங்களுமிருப் பதையிட்டு இறைவனுக்குத் துதி செலுத்துகின்றேன். இந்த ஒளியை எங்கும் பரப்புவதற்கு நீங்களே சாதனமாயிருப்பீர் களென நம்புகிறேன். இவ்வாறு சத்திய சூரியன் கிழக்கிலும் மேற்கிலும் ஒளிபரப்புவானக சூழும் மேகங்கள் கலைந்து விடும். தெய்வீகக் கிரணங்களின் வெப்பம் மூடுபனியை அகலச் செய்யும். மனிதனின் மெய்ம்மை விருத்தியடைந்து சிருஷ்டிகர்த்தாவான இறைவனின் உருவத்தில் வரும். மனிதனுடைய சிந்தனைகள் மிக உயர்ந்து பறக்கும். முன்னைய சாதனைகளெல்லாம் அவனுக்குச் சிறுபிள்ளை விளையாட்டுப்போலத் தோன்றும். பழைய சிந்தனைகளும் நம்பிக்கைகளும், சாதி, சமயம், என்பன பற்றிய தப்பெண் ணங்களும் மனித வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகவு மிருக்கும். இந்த நூற்ருண்டிலே இந்த உயர் சிந்தனைகள் மனித சுபீட்சத்துக்கு ஏற்றவை என நான் நம்புகின்றேன். முந்திய நூற்ருண்டு சூரியனுக இருக்கட்டும். இதன் பிரபை

3 II
எப்பொழுதும் நிலைத்திருப்பதாக. அதன் பயனுக வருங் காலத்திலே, இருபதாம் நூற்ருண்டை ஒளியின் நூற்ருண்டு, வாழ்வுன் நூற்ருண்டு, உலக சமாதானத்தின் நூற்ருண்டு,
தெய்வீகக் கொடைகள் நிறைந்த நூற்ருண்டு, அதன் அடிச்
சுவடுகள் என்றும் மாரு தென்றெல்லாம் புகழ்ந்து கூறுவார் கள்.

Page 19
தீர்க்கதரிசிகளும் போரும்
ஆரம்பத்திலிருந்து இன்றுவரையுள்ள வரலாற்றை
ஆராயும்போது பிணக்கும் போரும் மனித உலகெங்கும் நடைபெற்று வந்ததை அறிகிருேம். சமயப் போர்களும், சாதிப் போர்களும், அரசியற் போர்களும் அறியாமை யினுலும், விளக்கக் குறைவினுலும், கல்வியில்லாமையினு லுமே உண்டாகியிருக்கின்றன. முதலில் சமயச் சண்டை பற்றி ஆராய்வோம்.
அன்பையும், இணக்கத்தையும் உலக மக்களிடையே உண்டாக்குவதற்காகவே உலகில் தெய்வீக தீர்க்க தரிசிகள் தோன்றியிருக்கிருர்கள் என்பது தெளிவாகிறது. அவர்கள் இடையராக இருந்திருக்கிருர்களேயன்றி ஒநாய்களாக இருக்கவில்லை. மந்தைகளை ஒன்று சேர்த்து வழிநடத்துவதே. இடையனுடைய பணியன்றி பிணக்கையுண்டாக்கிச் சிதறச் செய்வது அவனுடைய நோக்கமன்று. முன்னே சிதறிப் போன மந்தையை ஒன்று திரட்டுவதே தெய்வீக இடை யனின் பணியாக இருந்து வந்திருக்கின்றது. இத்தகைய இடையர்களுள் ஒருவர் பரிசு த் த மோசே ஆவார். இஸ்ரேல் சாதியார் நாடோடியாகச் சிதறித் திரித்தபோது அவர் அவர்களே ஒன்றுசோர்த்து ஒற்றுமைப்படுத்திக் கல்வி போதித்தார். அதனல் உயர்ந்த தகைமையும் முன்னேற்றமு மடைந்தார்கள். அதன் பயணுக அவர்கள் கட்டுப்பாடென்ற காட்டுக்கு ஊடாகச் சென்று உரிமை பெற்ருர்கள். அவர் களுடைய இழிவை நீக்கி மேன்மையாக்கினர். வறுமையைச் செல்வமாக்கினர். தீயகுணங்களை நற்குணங்களாக்கினர். அவர்கள் அதனுல் உச்சநிலையடைந்துனர்; சாலமன் அரச GEOJ GÖML — ULI மகிமை அதனல் உண்டாயிற்று. அவர்கள் நாட்டின் புகழ் கீழ்த்திசையிலும் மேற்றிசையிலும் பரவின. பரிசுத்த மோசே ஒரு தெய்வீக இடையனென்பதில்
 

33
ஐயமில்லை. அவர் இஸ்ரவேல் மக்களை ஒன்றுகூட்டி ஒரு ፩r தேசிய இனத்துக்குரிய அதிகாரத்தையும் பலத்தையும்
வழங்கிருர்,
யேசுநாதரின் தீர்க்கதரிசனமென்ற நட்சத்திரம் தோன் றிற்று. தாம் மோசேயின் சிதறிய மந்தைகளை ஒன்று சேர்க்கவும், இழந்து போன சாதியாரைத் திரட்டவும் வந்திருப்பதாக அவர் பிரகடனஞ் செய்தார். அவர் இஸ்ரவேல் மந்தைகளுக்கு மாத்திரம் வழிகாட்டவில்லை. சல்டியா, எகிப்து, சிரியா, புராதன அசீரியா, போயினி வியா ஆகிய நாட்டு மக்களையும் ஒன்று கூட்டினூர். இம் மக்கள் ஒருவரோடு ஒருவர் பெரும்பகை கொண்டு, மிருகங்களைப்போல இரத்தப் பலிவாங்க ஆரவாரித்துத் திரிந்தனர். ஆனல், பரிசுத்த யேசுநாதர் அவர்களை ஒன்றிணைத்துத் தமது நோக்கத்துக்கு அவர்களை ஈடுபடுத்தி அவர்களிடையே அன்பை நிலை நாட்டியதால், போரும், பகைமையும் கைவிடப்பட்டன, தெய்வீகப் போதனைகளின் நோக்கம் மனிதரிடையே ஒற்றுமையை வளர்ப்பதும், அவர் களிடையே அன்பையும் தோழமையையும் நிலைநாட்டுவது மேயாகும். தெய்வீக சமயம் பிணக்குக்கும் பகைக்கும் ஏதுவாயிருக்குமானல், அத்தகைய சமயம் இல்லாதிருப்பது மேலானதாகும். அரசின் வாழ்வுக்கு உயிர் ஊட்டுவதே சமயம். மக்களினத்துக்கு அது சாவை உண்டாக்குமானல், அது இல்லாதிருப்பது மனிதனுக்கு ஒரு பெரிய பாக்கிய மாகும். ஏனவே, இந் நாளில் தெய்வீகப் போதனைகளை நாடவேண்டும். இன்றைய உலக நிலையில் அவைதாம் நல்ல பரிகாரமாயுள்ளன.
அராபிய இனங்களும், நாடோடிக் குழுவின்ரும், தொடர்பின்றி வேறுபட்டுப் பிரிந்து பாலைவனங்களில் சட்டத்துக்குட்படாத நிலையில் பிளக்கும் சண்டையும். இரத்த வெறியும் தாண்டவமாடின. ஓரினம் மற்றதைத் தாக்கி அழித்துவந்தது. அத்தகைய நெருக்கடியான நிலை யில் முகம்மதுநபி தோன்றினர். பாலைவனத்துக் காட்டினங்
உ.ஐ.அ.-3

Page 20
34
களாகிய இவர்களை ஒன்று சேர்த்தார். அவர்களிடையே இணக்கத்தை உண்டாக்கி, ஒற்றுமைப்படுத்தி, இசைய வைத்தார். அதனுல் பகைமையும், போரும் நின்றது. அராபிய தேசத்தவர் முன்னேற்றமடைந்தனர். அதன் ஆதிக்கம் மேற்கே ஸ்பானியாவுக்கும் அண்டலூகியாவுக்கும் பரவிற்று.
இவற்றிலிருந்து, தெய்வீக சமயங்கள் சமாதானத்துக் காகவே தாபிக்கப்பட்டனவென்றும், இரத்தஞ் சிந்துவதற் கும் , யுத்தஞ் செய்வதற்குமாக அன்றென்றும் நாம் முடிவு செய்யலாம். அன்பு, ஒற்றுமை என்ற மெய்ம்மையிலேயே Stல்லாச் சமயங்களும் ஸ்தாபிக்கப்பட்டன. ஆனல், சமய வரலாற்றிலே காணப்படும் யுத்தங்களும், பிணக்குகளும் பின்னர் தோன்றிய பாசாங்குகளாலும் கண்மூடி வழக்கங் களினலுமுண்டானவை. சமயமே மெய்ம்மை. மெய்ம்மை ஒன்றே. கடவுள் சமயத்தின் மூலாதாரங்கள் உண்மையில் ஒன்றே. மூலாதாரங்களில் வித்தியாசமோ, மாற்றமோ கிடையாது. வேற்றுமைகள், கண்மூடித்தனமான பின் பற்றல்களினலும், தப்பெண்ணங்களினுலும், பி ன் ன ர் தோன்றிய வடிவங்களில் பற்றுக்கொண்டிருப்பதாலும், அவை மாறுபட்டிருப்பதால் பிணக்கும் பூசலுமுண்டா கின்றன. பிரிவுக்குக் காரணமானவற்றை உலக சமயங்கள் கைவிட்டு மூலாதாரமானவற்றைத் தேடினல் எல்லாரும் இசைவார்கள். பிணக்கும் பூசலும் மறையும்; சமயமும் மெய்ம்மையும் பலவன்று ஒன்றே ,
வேறுவகையான யுத்தங்களுக்குக் காரணம் கற்பனையி லுள்ள சாதி வேற்றுமைகளினலேதான். மனிதகுலம் ஒரே இனந்தான். ஒரே சாதிதான்; ஒரே சந்ததியார்தான். இவ்வுலகெங்கும் பரவியிருக்கிருர் கள். கடவுள் சிருட்டித் திட்டத்திலே பி ரெ ஞ் சு க் கா ர ன், ஆங்கிலேயன், அமெரிக்கன், ஜெர்மன், இத்தாலியன், ஸ்பானியன் என்ற வேறுபாடு உத்தேசிக்கப்படவில்லை. எல்லாரும் ஒரே இல்லத்தைச் சேர்ந்தவர்களே. இந்த எல்லைகளும், வித்தியாசங்களும், மனிதனல் செயற்கை முறையில்

35
உண்டாக்கப்பட்டன. இவை இயற்கையானவை. மனித இனம் முழுவதும் ஒரு மரத்தின் பழங்களே, ஒரே பூந்தோட்டத்தில் மலர்ந்த பூக்களே. ஒரே கடலின் திரை களே. மிருக உலகத்திலே இத்தகைய வேறுபாடுகள் காணப்படுவதில்லை. கீழைத் தேசத்திலுள்ள ஆடுகளும் மேலைத் தேசத்திலுள்ள ஆடுகளும் சமாதானமாகத் தம்முட் பழகிக் கொள்ளும். கீழை நாட்டிலுள்ள மந்தைகள், மேலைநாட்டு மந்தைகளை ஆச்சரியத்தோடு பார்த்து ** இவை மேலை நாட்டு மந்தைகள்; அவை எங் களு ரை ச் சேர்ந்தவை'யெனச் சொல்லமாட்டா. எல்லா மந்தை களும் சாதி வேறு பாடோ, தேச வேறு பாடோ பாராமல், புல்லைமேயும். பல தேசத்துப் பறவைகளும் சிநேகிதமாக ஒன்று சேரும். மிருக சாதியிடையே இந்தப் பண்பைக் காணுகிருேம். மனிதன் தனக்குரிய இப் பண்புகளைக் கைவிடலாமா? மனிதனிடத்து மேலான பகுத்தறிவும் விஷயங்களை நுணிகி ஆராயும் சக்தியும் உண்டு. அவனிடம் தெய்வாதினமான கொடைகளுண்டு. மனித உலகில் உள்ள ஒற்றுமை நோக்கங் கொண்ட ஆக்கச் சக்தியைச் சாதிக் கருத்துகள் மறைக்கமுடியுமா? அவன் "நான் ஜெர்மன்காரன், நான் பிரெஞ்சுக்காரன், நான் ஆங்கிலே யன் என்று சொல்லி இந்தப் போலி வித்தியாசங்களைக் காட்டிச் சண்டை பிடிக்க முடியுமா? கடவுள் இதைத் தடுப்பாராக!
உலகம் ஒரே இல்லம். மனிதகுலம் முழுவதும் அதிலே தான் பிறந்தது. செயற்கையான வேறுபாடுகள் எல்லைகள் என்பவற்றை மனிதசாதி பொருட்படுத்தக்கூடாது. அவை பூசலுக்கும் பகைமைக்கும் காரணமானவை. நாம் கீழைத் தேசத்திலிருந்து வந்துள்ளோம். இந்தக் கண்டமானது செல்வச் சிறப்புடன் விளங்குகிறது. இதன் சீதோஷ்ணநிலை சுகத்துக்கேற்றதாகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடிய தாகவுமிருக்கிறது. இங்குள்ள மக்கள் அன்பும் பண்பு முள்ளவராயிருக்கிருர்கள். அரசு நீதியும் ஒழுங்குமுடைய தாயிருக்கிறது. உங்களிடம் அன்பு என்ற உணர்ச்சியைத்

Page 21
36
தவிர வேறு உணர்ச்சியைக் காட்டமுடியுமா? "இது எங்ககளுடைய தேசமன்று; ஆனபடியால் இ ங் கே யுள்ளதெல்லாம் எமக்கு ஆட்சேபமானவையென்று கூற முடியுமா? இது முட்டாள்தனம். மனிதர் இந்நிலையிருக்கக் கூடாது. மெய்ம்மை என்ன என்பதை ஆராய்ந்தறிய மனிதனுக்குச் சக்தியுண்டு. அந்த உண்மை என்னவென்ருல், மனிதகுலம் ஒன்று; மனிதரிடையே வித்தியாசமில்லை என்பது அதுவே சிருஷ்டியின் அமைப்பு. ஆனபடியால் சாதி, பிறப்பு என்பனவெல்லாம் போலி வித்தியாசங்கள். இவை + போருக்கு ஏதுவானவை. இவற்றைக் கைவிடவேண்டும்.
இப்பொழுது திரிப்போலியில் நடப்பதென்ன என்பதை
ஆராயுங்கள். *ஏழை மக்களைக் கொல்லுகிருர்கள். இரண்டு பக்கத்திலும் இரத்தஞ் சிந்தப்படுகிறது. குழந்தை கன் தந்தையை இழக்கிருர்கள். தந்தைமார், தம் குமாரர் இறந்து விட்டார்கள் எனப் பிரலாபிக்கிருர்கள். தாய்மார் நிலையும் அத்தகையதே. தம்மரிய புதல்வரை இழந்து விட்டார்கள். இதனல் வரும் நன்மையென்ன? ஒன்று மில்லை. இது நியாயமானதா? வீட்டு மிருகங்கள் ஒன்றுக் கொன்று விரோதங்காட்டுகின்றனவா? அது காட்டு மிருகங் களின் சுபாவமல்லவா? ஆயிரம் ஆடுகளுள்ள மந்தையில் இத்தகைய இரத்தவெறி ஏற்படுமா? எத்தனைவகையான பறவைக் கூட்டங்களுண்டு. ஒநாய், சிங்கம், புலி என்பன தம் உணவுக்காகக் கொடிய சுபாவமுடையனவாயிருக், கின்றன. மனிதனிடம் அத்தகைய கொடிய சுபாவமில்லை.
அவனுக்கு வேறு வழியாக உணவுகிடைக்கிறது. எனவே, மனிதனுடைய உலகில் பேராசை, பகைமை, தன்னலம் என்பவற்றினலேதான் போரும், கொடுமையும், இரத்தஞ். சிந்துதலும் உண்டாகின்றன, என்பது தெளிவாகிறது. மன்னரும், ஆட்சி நடத்துவோரும், தமது அரண்மனையில் சுகமாக இருந்துகொண்டு, சாதாரண மக்களை யுத்தகளத் துக்கு அனுப்புகிறர்கள். அவர்களைப் பீரங்கிகளுக்கு இரையாக்குகிறர்கள். மனித குலத்தின் அத்திவாரத்தையே
1912

37
தகர்த்தெறியக்கூடிய புதிய புதிய ஆயுதங்களை நாளுக்கு நாள் உண்டாக்குகிருர்கள். அவர்கள் தமது சகாக்களான மனிதரிடம் இரக்கமற்றவர்களாய் வன்னெஞ்சராயிருக் கிருர்கள். தமது புதல்வரைச் சீராட்டி வளர்த்த தாய் மாரின் துயரையும் இன்னலையும் என்னதான் ஈடு செய்யும். தம் மக்களை வளர்த்தெடுப்பதற்கு நித்திரையின்றி எத்தனை நாள்களைச் செலவு செய்தனர். எவ்வளவு ஆர்வத்தையும் பரிவையும் காட்டினர்கள். ஆனல், யுத்தவெறிபிடித்த ஆட்சியாளார் எத்தனை பேரை ஒரே நாளில் ,பலியாக்கு கிருர்கள். இது எவ்வளவு அறியாமை. கொடிய மிருகங் களிலும் பார்க்கப் பெரிய இழிவான செயல். ஒநாயொன்று ஒரு நாளைக்கு ஒர் ஆட்டுக்குட்டியைத்தான் பசியாலும், ஆனல் பேராசை பிடித்த கொடுங்கோலரசன் ஒரு லட்சம் பேரை யுத்தத்திலே பலி கொடுத்து விட்டு" நான் சேனதிபதி; இப் பெரிய வெற்றியை ஈட்டிவிட்டேன்' என்று தன் ராணுவத்திறமையை வியந்து கொண்டாடுவான். மனித இனத்தின் மடைமையும், முரணுன தன்மையையும், பாருங்கள். ஒருவன் எக் காரணம் கொண்டோ மற்ருெரு வனைக் கொன்ருல், அவனைக் கொலைகாரன் என்று சொல்லு வார். அவனுக்குச் சிறைத் தண்டனையோ, தூக்குத் தண்டனையோ கிடைக்கும். ஆனல், ஒரு இலட்சம் பேரைப் பலிகொடுத்தவனை வீரனென்று கொண்டாடுகிருர்கள். ராணுவ மேதாவி எனப் புகழ்கிருர்கள். கொஞ்சப் பணத் தைத் திருடிய ஒருவனைக் கள்வனென்று சிறையில் வைக்கி" ருர்கள். ஆனல், ஒரு இராச்சியத்தையே குறையாடிக் கொள்ளையடித்த ராணுவத் தலைவனை வெற்றிவீரன் என் றும், மகாமேதாவி என்றும் கொண்டாடுகிருர்கள். மனித னின் அறியாமையும் இழிதகைமையும் எத்தகையது?
பத்தொன்பதாம் நூற்ருண்டின் நடுப்பகுதிக்கு முன்னர் பாரசீகத்திலேயுள்ள பல இனத்தவரிடையிலும் சாதியாரி டையிலும் சமயப் பிரிவுகளிடையிலும் பகைமை பெரிதும் நிலவிவந்தது. பூசலும் ஏசலும் எல்லை கடந்து காணப் :பட்டன. அதே காலத்திலே கீழை நாடுகளிலுள்ள அநேக
துெ

Page 22
38
நாடுகளிலே இத்தகைய நிலைமையே நிலவி வந்தது. சமயவாதிகள் ஒருவர்க்கொருவர் படையுடையவராய், மதவெறிகொண்ட வராயிருந்தனர். சமயப் பிரிவுகள் ஒன்ருேடொன்று மோதின. சாதிகள் ஒன்றையொன்று வெறுத்தன. இனமக்கள் அடிக்கடி தம்முன் சண்டை செய்தனர். எங்கும் பகையும் பிணக்கும் நிலவின. மனிதர் ஒருவரையொருவர் வெறுத்தனர். சமுசயங் கொண்டனர். தன் தோழரில் ஒரு தொகைமக்களைக் கொல்லக்கூடியவன் மகா வீரனுகப் போற்றப்பட்டான் : சமயவாதிகள், தம் கொள்கைக்கு மாருனவனே க் கொல் வது சிறந்த செயலாகக் கருதினர். இத் தருணத்திலே பஹவுல்லா தோன்றித் தமது சமயப்பணியைப் பிரகடனஞ் செய்தார். மனிதகுலம் ஒன்றென்பதை அவர் தாபித்தார். எம்மைப் படைத்து உணவு வகுத்து எல்லார்க்கும் தேவை யான ஏற்பாடுகளைச் செய்த கருணைமிக்க இறைவனின் தொண்டர்களே சகலரும்; ஒருவர்க்கொருவர் பகைமை எதற்காகக் காட்டவேண்டும்? அது கடவுளருணெறிக்கு மாருனதெனக் கூறினர். அவர் நம் மீது அன்பு கொண்டி ருக்கும்போது நாமேன் நமது சகோதரரை வெறுக்க வேண்டுமென எடுத்துக் காட்டினர். கடவுள் எம்மை யெல்லாம் நேசிக்காவிட்டால் அவர் எதற்காக எம்மைச் சிருட்டித்துப் பரிபாலிக்க வேண்டும்? அன்பே தெய்வநெறி.
முனிதர் வகுத்த நெறி கடவுளால் அருளப்பட்டநெறியிலும்
சிறந்ததா? அவருடைய ஞானத்திலும் பார்க்க எமது புத்தி மேலானதா? இதை மனத்தால் நினைக்கவும் முடியாது. இது அசாத்தியமானது. எனவே, நாம் தெய்வீக நெறியை முன்மாதிரியாகக் கொண்டு அதைப் பின்பற்றவேண்டும். ஒருவரோடொருவர் அன்போடும் பரிவோடும் நடக்க
வேண்டும்.
பஹவுல்லச ** மிகப் பெரிய சமாதானத்தையும்' சர்வ தேச மத்தியட்சத்தையும் பிரகடனஞ் செய்தார். பல திருமுகங்கள் மூலம் இக் கொள்கைகளைக் கூறினர். இவை கீழைத் தேசமெங்கும் பரப்பப்பட்டுப் பிரசாரஞ் செய்யப்

39
பட்டன. சமாதானத்தை நிலைநாட்ட வேண்டுமெனக் கூறிச் சகல மன்னர்க்கும் ஆட்சியாளர்க்கும் திருமுகம் வரைந்தார். அவர்களுக்குப் புத்திமதி கூறி உற்சாகம் அளித்தார், சில சமயம் எச்சரிக்கை செய்தார். சமாதானத் தின் மூலமே மனித குலம் சுகமும், மேன்மையும் பெறுமென் பதையும், அது ஆயுதப் பரிகரணம், மத்தியட்சம் என்பன மூலமே உறுதியளிக்கப்படு மென்பதையும் நிரூபித்தார். இது 50 வருடங்களுக்கு முன்னே நடந்தது. உலக சமாதா னத்தையும், சர்வதேச ஒற்றுமையையும் அவர் பிரகடனஞ் செய்தபடியால், கீழைத்தேச மன்னர்கள் அவருகிகெதிராக எழுந்தனர். அவருடைய அறிவுரைகளும் எச்சரிக்கைகளும், அம் மன்னருடைய சொந்த நலன்களுக்கும் தேசிய நலன் களுக்கும் மாருக இருந்தமையே இதற்குக் காரணமாகும். அவரை அவர்கள் மிகவும் கொடுமைப்படுத்தினர்கள். எல்லாவிதமான துன்பங்களையுமிழைத்தனர். சி  ைற யி லிட்டனர். உள்ளங்காலில் தடியாலடித்து வருத்தினர். நாட்டைவிட்டுக் கலைத்தனர். ஈற்றிலே ஒரு கோட்டையில் அடைத்து வைத்தனர். பின்னர் அவருடைய சீடர்களுக் கெதிராக எழுந்தனர். உலக சமாதானத்தை நிலைநாட்டுவ தற்காக இருபதினுயிரம் பஹாய்களின் இரத்தம் சிந்தப் பட்டது. அவர்களுடைய வீடுகள் சிதைக்கப்பட்டன. அவர்களுடைய சிறுவரைக் கைதிகளாக்கினர். உடைமை கள் சூறையாடப்பட்டன. ஆனல், அவர்களுடைய ஆர்வம் சிறிதளவும் குறையவில்லை. இன்றுகூட ப ஹ (ா ய் க ள்துன்புறுத்தப்படுகின்றனர். மிக அண்மையில் சிலர் கொலை செய்யப்பட்டனர். பஹாய்கள் எங்கே காணப்பட்டாலும் உலக சமாதானத்தை நிலைநாட்ட அவர்கள் பெரிதும்
முயன்று வருகிருர்கள். அவர் க ள் கொள்கைகளைப் பிரகடனஞ் செய்வது மாத்திரமன்றி செயல்வீரராகவும் காணப்படுகிறர்கள்.
இன்று பாரசீகத்திலே, பஹவுல்லாவின் போதனைகளின் பயனகப் பல சமயங்களைச் சேர்ந்தவர்களும் மிக்க சமாதா னத்தோடும் ஐக்கியத்தோடும் வாழ்கின்ருர்கள். முந்திய

Page 23
A0
பகைமைகளும், துவேஷங்களும் மறைந்துவிட்டன. இன்று அவர்கள் சகல மனிதரிடமும் அன்புகாட்டுகின்றனர். ஏனெனில் எல்லாரும் கடவுளின் பிள்ளைகள், தொண்டர்கள் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். இம் மாற்றம் பஹவுல்லாவின் தெய்வீக போதனைகளாலுண்டானது. அதாவது சுருக்கமாகக் கூறுவதானல் அறிவில்லாதவர்க்குக் கல்வி புகட்ட வேண்டும். நோயாளருக் குச் சிகிச்சை செய்ய வேண்டும். வளர்ச்சிப்படியிலே குழந்தை நிலையிலுள்ள வர்க்கு முதிர் நிலையடைய உதவிபுரிய வேண்டும். கல்வியறி வில்லாதவ்ர் என்ற காரணத்தால் ஒருவரை வெறுக்கக் கூடாது. முதிர்ச்சியடையாதவரை இகழக்கூட 1ாது. நோயா ளியைக் கைவிடக்கூடாது. ஒவ்வொருவருக்கும் தேவை யானதை அறிந்து செய்து எல்லாரும் இறையருளில் ஒன்றுபட வேண்டும். தெய்வீக சமயங்களின் மூலாதார மான கொள்கை அன்பும் ஐக்கியமுமேயாகும். சமயம் மனிதரிடத்தில், பிணக்கை வளர்க்குமானல் அது அழிவுக் கேதுவானது; அது தெய்வீகமானதன்று. ஏனெனில், சமயம் ஐக்கியத்தையும், ஒற்றுமையுமே வளர்க்குமன்றி, வேற்று மையை வளர்க்காது. கோட்பாடுகளை அறிந்தால் மாத்திரம் போதாது. நீதி நல்லதென்பதை நாமெல்லாம் அறிவோம். ஆனல், அதை செயல்முறையிற் காட்டுவதற்குச் செயல் வேண்டும். உதாராணமாக ஒரு கோவிலைக் கட்டுவது நல்லதென நாமெல்லாம் நினைக்கலாம். ஆனல், நினைத்துக் மாகொண்டிருந்தால் மாத்திரம் போதாது. அதற்கு வழிவகை களைத் தேடவேண்டும். திடசங்கற்பஞ் செய்து கொண்டு கட்டடத்தைக் கட்ட முயல வேண்டும். உலக சமாதானம் நன்றென்பதை நாம் அறிவோம். அது மனித சுபீட்சத் துக்கும், மனிதகுலத்தின் மகிமைக்கும் ஏற்றதென்பதையு மறிவோம். ஆனல் அதற்குறிய முயற்சியை நாங்களெடுக்க வேண்டும். செயலே முக்கியமானது. இந்த நூற்ருண்டு ஒளியின் நூற்ருண்டாயிருப்பதால், மனிதனுக்குச் செயல் திடம் கிடைக்குமென உறுதிசெய்யப்பட்டுள்ளது. செயலில் ஈடுபடுவதற்கு முன்னர், தெய்வீகக் கோட்பாடுகளை மக்களி

41
டையே பரப்பப்படும். செயலில் ஈடுபடுவதற்கான காலமும் நிலைகளுமுண்டாகிவிட்டன. யுத்தம் மனிதருடைய அத்தி வாரத்தை அழிந்துவிடும். இதை எல்லா நாடுகளும் இப்போது ஏற்றுக்கொள்ளுகின்றன. ஐக்கிய அமெரிக்கா மிக முன்னேற்றமான நாடென்பதை நான் உணர்கிறேன். அரசாங்கமும் நீதியானது. மக்களும் அதற்கு ஆயத்தமாயி ருக்கிருர்கள். இங்கே சமத்துவம் உயர்ந்த அளவுக்குச் சாதிக் கப்பட்டுள்ளது. உலக சமாதானக்கொடியை இங்கேதான் உயர்த்த வேண்டும். இந் நாடுதான் மற்றைய நாடுகளைவிட அப் பணியைச் செய்வதற்குத் தகுதியும், திற  ைம யு முடையது. வேறுநாடுகள் இதைச் செய்ய எத்தனித்தால், நோக்கத்துக்குத் தப்பர்த்தங் கொடுக்கப்படும். உதாரண மாகப் பெரிய பிரித்தனியா இதைச் செய்ய முற்பட்டால், அது தன்னுடைய குடியேற்ற நாடுகளைப் பாதுகாக்கவே இவ்வாறு முயல்கிறதென்று சொல்லுவார்கள். பிரான்ஸ் உலக சமாதானக் கொடியை உயர்த்துமானல், இதில் ஏதோ ராஜதந்திரமடங்கியிருப்பதாக மற்றைத் தேசங்கள் கூறும். ருஷ்யா இதைச் செய்யுமானல், ஏதோ சூழ்ச்சி மறைந் திருப்பதாகச் சந்தேகங் கொள்ளுவார்கள். இவ்வாறு ஏனைய ஐரோப்பிய நாடுகள் விஷயத்திலும் கீழை நாடுகள் விஷயத்திலும் ச ந் தே க ந் தெரிவிக்கப்படும். ஆனல் அத்தகைய சுயநலம் அமெரிக்கா விஷயத்திலே சுமத்த முடியாது. உங்களிடம் காப்பாற்றுவதற்குக் குடியேற்ற நாடுகளில்லை. உங்கள் நாட்டெல்லையை விஸ்தரிக்கும் நோக்கமோ, வேறு நாடுகளைப் பிடிக்கும் நோக்கமோ உங்களிமில்லை. எனவே, உலக சமாதானத்துக்கு அமெரிக்கா முயலுமானல் அது சுயநலங்கருதியதொன்றன்று; பிறர் நலங் கருதியதொன்றெனவே உலகம் மதிக்கும், "பிறர் நலமும், மனிதகுலத்துக்கு நன்மை செய்வதுமே யன்றி வேறுநோக்கம் அமெரிக்காவுக்குக் கிடையாதென, உலகம் கூறும். நீங்களே உலக சமாதானத்தின் தூதுவராக முன்னின்று இந்தக் கொடியை ஏற்றுவீராக இக் கொடி எப்படியும் ஏற்றவேபடும். ஆனபடியால் உயர ஏற்றுங்கள்.
s

Page 24
42
இத் தொண்டுக்கு நீங்களே மிகவும் தகுதியும், திறமையு முடையவர்கள். மற்ற நாடுகள் இந்த அழைப்பை எதிர் பார்த்திருக்கின்றன. உலகமனைத்தும் இந்த யுத்தத்தினுல் உ ண் டா கு ம் பெரும்பளுவினுலும், ஈடுசெய்யமுடியாத சேதங்களினலும், உலகம் சஞ்சலமடைகின்றது. யுத்தச் செலவுக்காக வ ரி க ள் விதிக்கப்படுகின்றன. வருஷா வருஷம் இந்தப் பகுதி அதிகரிக்கின்றது. அதனல் மக்கள் கடைசிக் கந்தாயத்துக்கு வந்துவிட்டார்கள். இப்போது ஐரோப்பா ஒரு யுத்தகளமாக மாறியுள்ளது. புது வெடி மருந்துருவாக்கப்பட்டுள்ளது. ஒரு பொ றி ப ற ந் தால் போதும், உலகம் முழுவதும் அக்கினியினல் தகிக்கப்படும். இந்தச் சிக்கல்களும், ஊழிப் பேரழிவுக்குரிய சம்பவங்களும் நடக்கு முன்னர் அவற்றைத் தடுக்கும் முதல் நடவடிக் கையை எடுங்கள்.
சகல தெய்வீக சமயங்களினதும் அத்திவாரம் சமாதா னமும் இணக்கமுமாகும். ஆனல் தப்பெண்ணங்களும், அறியாமையும் வளர்ந்துவிட்டன. இவை மறைய வழிவகுக் கப்பட்டால், எல்லாச் சமயங்களும் சமாதானத்துக்கும், மனிதகுல ஒற்றுமைக்கும் முயலும். எல்லாம் ஒரே மெய்ம் மையிலேதான் தாபிக்கப்பட்டுள்ளன. மெய்ம்மை பல வகைப்பட்டதன்று. மோசே அதற்கு அத்திரவாரமிட்டார். யேசுநாதர் முகாம் அமைத்தார். சகல சமயங்களிலும் அதன் ஒளிபிரதிபலித்தது. பரிசுத்த பஹவுல்லா இந்த மெய்ம்மையை எடுத்துக்கூறி பெரிய சமாதானச் செய்தியை உலகெங்கும் பரப்பினர். சிறையிலேயிருந்தபொழுதுகூட அவர் ஓயவில்லை. இந்த விளக்கைக் கிழக்கே ஏற்றிக் கொண் டிருந்தார். கடவுள் நாமம் வாழ்க. அவருடைய போதனை களை ஏற்றுக்கொண்டவர்கள் சமாதானப் பிரியரானார். தமது உயிரையும் பொருளையும் சமாதானத்துக்காக அர்ப்ப ணம் செய்வோராயிருந்தனர். இப்போது உலக சமாதான க் கொடி மேல்நாடுகளில் உயர்த்தப்படட்டும். பலர் இதன் அழைப்பை ஏற்றுக்கொள்வார். அமெரிக்கா தனது புதிய
 

43
கண்டுபிடிப்புகளுக்கும், புதிய புனைவுகட்கும், கலைத் திறமைக்கும் புகழ்பெற்றநாடு; அரச நீதிக்கும் பிரமாண்ட மான தொழிற்றுறைகளுக்கும் பேர்போனது. இப்போது அது உலக சமாதானத்தின் தூதராகவும் முன்னேடியாகவும் புகழ்பெறுவதாக. இதுவே அதனுடைய பணியாகவும், முயற்சியாகவுமிருக்கட்டும். இந்த மங்களமான உற்சாகம் சகல நாடுகளுக்கும் பரவுவதாக, நீங்கள் இந்தச் சேவையை மனித சமுதாயத்துக்குச் செய்ய உங்களுக்காக நான்" பிரார்த்தனை செய்கின்றேன்.
)

Page 25
உலக ஐக்கியத்துக்கு அத்திவாரம்
இன்று உலகுக்கு அத்தியாவசியம் தேவைப்படுவது *உலக சமாதானம் என்பதை எவரும் ஆட்சேபிக்கமாட்டார். நீதியுள்ள எவரும் இதற்குச் சாட்சி பகர்வதோடு அந்த மதிப்புமிக்க சம்மேளனத்தைப் போற்றுவார்கள். ஏனெனில் அதனுடைய நோக்கம், இந்த இருள் ஒளியாக மாறவேண் டும், இந்த இரத்தவெறி அன்பாக மாற வேண்டும். இக் கஷ்டங்கள் சுகங்களாக மாறவேண்டும். இந்தப் பகைமையும் துவேஷமும் தோழமையும் அன்புமாக மாற வேண்டும். எனவே, அந்த மதிப்புமிக்க சங்கத்தவரின் முயற்சி புகழுக்கும், பாராட்டுதலுக்கும் தகுதியுடையது.
பொருள்களின் நடப்பு நிலையிலிருந்து உண்டாகும் முக்கியமான தொடர்புகளை யுணர்ந்த புத்திமான்கள், ஒரே ஒரு பொருள், தன்னளவில் மானிடத் தத்துவத்தை எப்படிப் பாதிக்கவேண்டுமோ அப்படிப் பாதிக்கமாட்டாது. ஏனெனில் மனிதருடைய மனம் ஒற்றுமைப்பட்டாலன்றி *எந்த ஒரு முக்கியமான விஷயத்தையும் சாதிக்கமுடியாது. இன்றைய நிலையில் உலக சமாதானம் மிக முக்கியமான தொரு விஷயம். ஆனல், மக்களுடைய மனம் ஐக்கியப்பட வேண்டும். அப்பொழுதுதான் இவ் விஷயத்தின் அத்தி :வாரம் பாதுகாப்புடையதாகும். அதனுடைய நிறுவனம்
உறுதியுடையதாகும், கட்டடம் பலமுடையதாகும்.
ஆனபடியால் புனிதர் பஹவுல்லா ஐம்பது வருடங் களுக்கு முன்னர் அக்காகோட்டையில் நீதிக்கு மாருகச் சிறைவைக்கப்பட்டிருந்தபோது, இந்த உலக சமாதானத் தைப் பற்றி விளக்கங்கொடுத்தார். இந்த உலக சமா தானத்தைப் பற்றி உலகத்துப் பெரிய வேந்தர்களுக் கெல்லாம் எழுதினர்; கீழைத் தேசத்திலிருந்து தமது
 

45
நண்பர்களிடையே அதைத்தான் ஸ்தாபித்தார். கீழைத்
தேசத்து அடிவானம் கொடிய இருளால் சூழ்ந்திருந்தது. தேசங்கள் ஒன்றுக்கொன்று பகைமை சாதித்து வந்தன. சமயங்கள் மற்றச் சமயங்களின் இரத்தத்தைக் குடிக்கக் காத்திருந்தன. அப்போது இருள் மேலிருள் பரவிற்று. அந்த நேரத்திலே புனிதர் பஹவுல்லா கீழ்வானத்திலே சூரியன்போலத் தோன்றிப் பாரசீகத்தைத் தமது போதனை களால் ஒளிமயமாக்கினர்.
அவருடைய போதனைகளில் உலக சமாதானப் பிரகடன.
மும் ஒன்று. பல தேசத்தையும், சமயத்தையும்; பிரிவு களையும் சேர்ந்த அவருடைய சீடர் பெருந் தொகையாகக் கூடினர். கீழைத் தேசத்தைச் சேர்ந்த பல சாதி மக்களும் பல சமய மக்களும் ஒன்றுசேர்ந்தனர். அக் கூட்டங்களிலே கலந்துகொண்ட ஒவ்வொருவரும், ஒரே தேசத்தையும், ஒரே நெறியையும், ஒரே போதனையையும், ஒரே சமயப் பணிதுறை அமைப்பையும், கண்டனர். புனிதர் பஹவுல்லா வின் போதனைகள் உலக சமாதானத்தை மாத்திரம் நிறுவு மாறு கூறவில்லை. அதை நிறைவுபடுத்தவும் "ஆதரிக்கவும் உடந்தையாயிருந்த பல போதனைகளை உள்ளடக்கின.
இப் போதனைகளில் ஒன்று உண்மையை தனிப்பட ஆராய்தல். இதனுல் போலிகளிலிருந்து மனிதகுலம் தப்பி உண்மையை அடையக்கூடியதாயிருக்கும். ஆயிரமாண்டு களுக்கு முந்தியதான நைந்துபோன இந்த உடையைக் கீழற்றி எறிந்துவிட்டு மிக்க தூய்மையும் புனிதமும் நிறைந்த தும் மெய்ம்மையில் நெசவு செய்ததுமான உடையை அணியக்கூடியதாயிருக்கும். மெய்ம்மையென்பது ஒன்று
தான். அதிலே பலவிதமில்லை. ஆனபடியால் பல வகைப்
பட்ட அபிப்பிராயங்கள் கடைசியில் ஒன்ருக இணைந்து விடும்.
y
புனிதர் பஹவுல்லாவின் போதனைகளுள் மனிதகுலம்
ஒன்று என்ற போதனையுண்டு. மனிதரெல்லாம் இறை.

Page 26
46
வனின் மந்தைகள், இறைவனே அன்பான இடையன், இந்த ஆடுகளைப் படைத்து பயிற்சியளித்து, அவற்றுக்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து அவற்றைப் பாது காத்தார். இந்த இடையன் எல்லா ஆடுகளிடமும் அன்பா யிருக்கிருர் என்பதில் ஐயமில்லை. இந்த ஆட்டுமந்தை களிடையே அறிவில்லாத ஆடுகளிருந்தால் அவற்றுக்கு அறிவூட்ட வேண்டும். சிறுவர் இருந்தால் அவை முதிர்ச்சி யடையும் வரை பயிற்சியளிக்கவேண்டும். நோயாளிகள் இருந்தால் அவற்றுக்குச் சிசிச்சையளிக்கவேண்டும். பகைமையோ துவேஷமோ இருக்கக்கூடாது. அன்புள்ள வைத்தியரைப்போல அறிவில்லாதவற்றுக்கும் நோயான வற்றுக்கும் சிகிச்சையளிக்கவேண்டும்.
புனிதர் பஹவுல்லாவின் போதனைகளும், சமயம் தோழமையும் அன்பையும் வளர்க்கவேண்டுமென்பதொன்ரு கும். அறு வேற்றுமையை உண்டாக்குமானுல் அதனுற் பயனில்லை. ஏனெனில் சமயம், சிகிச்சை போன்றது. அது நோயை வளர்க்குமானல் அதனுல் பயனில்லை.
பஹவுல்லாவின் போதனைகளுள், சமயச் சார்பான சாதிச்சார்பான அரசியல் சார்பான, பொருளாதாரச் சார்பான, அரசியல் சார்பான தப்பெண்ணங்களிலிருக்கும் வரை, மனித குலத்துக்கு ஆறுதலே சிடையாது. ஆருயிரம் வருடமாக மனிதகுலத்தின் வரலாற்றைச் சரித்திரம் குறிப்பிடுகிறது. இந்த ஆருயிரம் வருடமாக மனித குலத்திலே யுத்தமில்லாத காலமே கிடையாது. பிணக்கு, கொலை, இரத்தவெறி என்பன இல்லாத காலமே கிடை யாது. ஒவ்வொரு காலப் பிரிவிலும் ஏதோ ஒரு நாட்டில் சண்டை நடந்தே வந்திருக்கிறது. இந்த யுத்தம். சமயம் காரணமாகவோ, சாதிவெறி காரணமாகவோ, அரசியல் காரணமாகவோ, தேசபிமானத் தப்பெண்ணங் காரண மாகவோ நடந்திருக்கிறது: இந்தத் தப்பெண்ணங்களெல் லாம், மனிதகுலமென்ற கட்டிடத்தை அழித்தனவென்று நிரூபிக்கப்பட்டுள்ளன. இந்தத் தப்பெண்ணங்களிருக்கும்
 

47
வரை, வாழ்க்கைப் போராட்டம் இருந்து கொண்டேயிருக் கும். இரத்தவெறியும், கொடுங்கொள்ளையும் நடை பெறும். இந்த நிலைமையில், மனித குலத்தை இயற்கை யின் இருளிலிருந்து காப்பாற்ற முடியாது. முற்காலத்தைப் போலவே அது அறிவொளி பெறமுடியாது. தப்பெண்ணங் களைக் கைவிட்டுப் பரமண்டல ராச்சியத்துக்குரிய நற்பண்பு களைப் பெற்ருலன்றி அது நடைபெருது.
புனிதர் பஹவுல்லாவின் போதனைகளுள் உலக மக்கள் எல்லாருக்கும் பொதுவான மொழி யொன்று வேண்டு மென்பது. இது உலகப் பொதுமொழியாயிருக்கவேண்டும். உலக மக்கள் மத்தியிலே நிலவும் விளக்கக் குறைவைப் போக்குவதற்காக இந்தப் போதனை பஹவுல்லாவினல் அருளப்பட்டது.
புனிதர் பஹவுல்லாவின் போதனைகளுள் மற்ருென்று ஆண் பெண் சமத்துவம், மனிதகுலத்துக்கு இரண்டு சிறகுகளுண்டு. ஒன்று பெண் ; மற்றது ஆண். இரு சிறகுக ளும் சமமாக வளர்ச்சியடைந்தாலொழியப் பறவை பறக்க மாட்டாது. ஒரு சிறகு பலமிழந்திருந்தால் பறக்க முடியாது. பெண்களுடைய உலகம் ஆண்களுடைய உலகத் துக்குச் சமமாக நற்பண்புகளையும், நிறைவுகளையும் அடை யும் வரை சுபீட்சமும் வெற்றியும், கிடைக்கவேண்டிய அளவுக்குக் கிடைக்கமாட்டாது.
யஹவுல்லாவுடைய போதனைகளுள் ஒருவர் தம்முடையீ"
சொத்துகளைத் தன்னிச்சையாகவே மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டுமென்பது ஒன்ரு கும். தன்னிச் சையாகத் தம் சொத்துகளைப் பகிர்ந்து கொள்வது சம உடைமைக்கும் மேலானதாகும். அதாவது, தனிதர் தன்னை மற்றவர்களைவிட மேலாகக் கருதக் கூடாதென்பதே இதன் அர்த்தம். அதற்குப் பதிலாக மற்றவர்க்காகத் தனது உயிரையும் சொத்தையும் தியாகஞ் செய்யவேண்டும். ஆனல், இந்நிலையை நிர்ப்பந்தத்தினுல் உண்டாக்கிச் சட்ட

Page 27
48
மாக்கி மனிதனைக் கட்டாயப்படுத்தக்கூடாது. மனிதன் தானகவே மற்றவர்க்காகத் தனது உயிரையும் உடைமை யையும் தியாகஞ் செய்ய வேண்டும். முழு விருப்பத்தோடு தன் பொருளைப் பாரசீகத்துப் பஹாய்கள் செலவு செய்வது போலச் செலவழிக்கவேண்டும்.
புனித பஹவுல்லாவின் போதனைகளில் மனிதனுடைய சுதந்தரம் பற்றியதும் ஒன்று. அதாவது பரம்பொருளின் அருளால், உலக இயற்கையின் சிறையிலிருந்து அவன் விடுதலை பெறவேண்டுமென்பது. இயற்கைக்கு அடிமைப் பட்டிருக்கும்வரை மனிதன் கொடிய விலங்குக்குச் சமமான வனுவான். உயிர் வாழ்வதற்குப் போரிடல் இயற்கையின் அவசரத் தேவையாகும். உயிர் வாழப் போரிடுதல் கெடுதிக ளெல்லாவற்றுக்கும் காரணமாகும். இதுவே மிகப் பெரிய துன்பமாகும்.
சமயம் ஒரு பெரிய அரண் என்பது பகவுல்லாவின் மற்ருெரு போதனையாகும். சமயமென்ற அரண், ஆடி அசைந்து தத்தளிக்குமாளுல்ை குழப்பமும் அமைதியின்மையு முண்டாகி உலகிலே ஒழுங்கு பாதிக்கப்படும். உலகில் இரண்டு விஷயங்கள் மனிதன் தவறு செய்யாமல் பாதுகாக் கின்றன. ஒரு சட்டம். அது குற்றம் பரிவோருக்குத் தண்டனை வழங்குகிறது. ஆனல், சட்டமோ வெளிப் படையாகச் செய்யும் குற்றத்தையே தடுக்கிறது. மறை வாகச் செய்யும் பாவத்தைத் தடுப்பதில்லை. ஆனல், உன்னதமான பாதுகாப்பு அதாவது கடவுளுடைய அரு னெறி வெளிப்படையான பாவத்தையும், மறைவான பாவத்தையும் தடுக்கிறது : மனிதனுக்குப் பயிற்சியளிக் கிறது; ஒழுக்கத்தைப் பயிற்றுகிறது; பண்புகளை அனுசரிக்க நிர்ப்பந்திக்கிறது; மனிதகுலத்தின் சுகத்தை உறுதி செய் கிறது. நுனித்து ஆராய்ந்த முடிவே சமயமென்பது. வெறும் போலி நடிப்பிலே தாபிக்கப்பட்டதன்று. அது தெய்வீக சமயத்தில் அடிப்படையாக உள்ளதன்றி மனித ரால் ஏற்படுத்தப்பட்ட போலி நடிப்புக்களில்லை.

49
மனித குலத்தின் சுபீட்சத்துக்கு உலகியல் நாகரிகம் ஒரு சாதனமாயிருந்தாலும், அது தெய்வீக நாகரிகத்தோடு இணைந்திராவிட்டால், மனித சு பீட்சம் கிடைக்க மாட்டாது. சிந்தித்துப் பாருங்கள்; ஒரு மணி நேரத்துள் ஒரு நகரத்தை அழிக்கக்கூடிய இந்தப் போர்க் கப்பல்கள், லெளகீக நாகரிகத்தின் விளைவுகள். அவ்வாறே செருமானிய துப்பாக்கிகளும், மெளசர்துமிக்கிகளும், வெடிமருந்து, நீர்மூழ்கிப்படை, நீர்மூழ்கிநாவாய், யுத்த விமானம், குண்டு போடும் விமானம் என்பனவெல்லாம் லெளகீக நாகரிகத் தின் விளைவுகளான யுத்த ஆயுதங்களாகும். லெளகீக நாகரிகத்தோடு, தெய்வீக நாகரிகமும் சேர்ந்திருக்கு மானல், இக் கொடிய ஆயுதங்களுண்டாகியிருக்கமாட்டா, அதற்குப் பதிலாகப் பயனுள்ள புதிய புனைவுகளிலும், புகழ்தற்குரிய கண்டு பிடிப்புகளிலும் மனிதனுடைய சக்தி கள் முழுவதும் பயன்படுத்தப்பட்டிருக்கும், லெளகீக நாகரிகம் வட்டமானதொரு கண்ணுடி போன்றது. தெய் வீக நாகரிகம் ஒளி போன்றது. ஒளியில்லாத கண்ணுடி இருள் சூழ்ந்ததாயிருக்கும் லெளகீக நாகரிகம் உடல் போன்றது. அது எவ்வளவு அழகானதாகவும் செப்பமான தாகவும், இருந்தாலும், அது உயிரற்றதே. தெய்வீக நாகரிகம் உயிர்போன்றது. தேகத்துக்கு ஜீவன் ஆத்மாவிலி ருந்தே வருகிறது. இல்லாவிட்டால் அது சவமாகவே யிருக்கும். எனவே, மனிதகுலமென்ற உடலுக்குப் பரிசுத்த ஆவியின் உயிர்ப்பு வேண்டும். ஆத்மா இல்லாவிட்டால் மனிதகுலம் உயிரற்ற ஒன்ருய் விடும்; இந்த ஒளியில்லாஉ விட்டால் மனிதகுலம் உயிரற்றதாகிவிடும்; இயற்கை உலகு மிருக உலகம். இயற்கையுலகிலிருந்து மனிதன் புனர்ஜீவனம் பெருகிவிட்டால், அதாவது இயற்கையுலகோடு பற்றில் லாதவனுயிராவிட்டால், அவன் மிருகத்துக்குச் சமம். தெய்வீக போதனைகளே அவனை மனித உயிராக்கும்.
பஹவுல்லாவின் போதனைகளில் ஒன்று கல்வியை விருத்திசெய்ய வேண்டுமென்பது ஒவ்வொரு குழந்தைக்கும்
உ.ஐ.அ.-4

Page 28
டமென்ருல், எல்லாச் சமூகங்களும், சமயங்களும்,
50
தேவையான அளவு விஞ்ஞானம் பயிற்ற வேண்டும். பெற்றேர் இந்தக் கல்விக்குரிய செலவைக் கொடுக்க முடியு மானுல் சரி; இல்லாவிட்டால் சமூகம் அந்தக் குழந்தையின் கல்வியைப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பஹவுல்லாவின் போதனைகளில் ஒன்று நீதியும், சரியா னதைச் செய்தலுமாகும். இவற்றை நடைமுறையில் காணு விட்டால், எல்லாம் ஒழுங்கீனமாகவும், நிறைவற்றதாக வுமேயிருக்கும். மனிதகுலம் பாவச் செயலும், அட்டூழி யமும் நிறைந்ததாயிருக்கும்.
இவ்வாறு பஹவுல்லாவின் போதனைகள் பல. இப் பல வகைப்பட்ட கோட்பாடுகள் மனிதகுலத்தின் நன்மைக்கு அடிப்படையானவை. கருணைக்கடலாகிய இறைவனின் அருட்கொடைகள். இவற்றை உலக சமாதானத்தோடு சேர்க்க வேண்டும். அப்போதுதான் நல்லவிளைவுகளுண் டாகும். இல்லாவிட்டால் உ ல கி ல் சமாதானத்தை உண்டாக்க முடியாது. புனிதர் பஹவுல்லாவின் போதனை கள் உலக சமாதானத்தோடு சேர்ந்தால், நல்ல பாகமான சுவையுள்ள போசனம் போலிருக்கும். அந்தப் போசன சாலையில் மக்கள் தாம்தாம் விரும்பியவற்றையெல்லாம் பெறக் கூடியவராயிருப்பார். உலக சமாதான மென்ற வரத்தை மாத்திரம் பெறவிரும்பினல், அற்புதமான மற்றைப் பயன்களைப் பெறமாட்டார்கள். உலக சமாதான
5LD5 மேலான அபிலாஷைகளை அதன்மூலம் பெறக்கூடியதாயி ருக்கவேண்டும். புனிதர் பஹவுல்லாவின் போதனைகள் உலகத்துச் சமுதாயங்களெல்லாம் அவை சமய சம்பந்த மானவையென்ரு லென்ன, அர சி ய ல் சம்பந்தமானவை யென்ருலென்ன, ஒழு க் க ம் சம்பந்தமானவையென்ரு லென்ன, புராதனமானவையென்ருலென்ன பஹவுல்லாவின் போதனைகளில், அவரவருடைய உயர்ந்த அபிலாஷைகள் விளக்கப்பட்டிருப்பதைக் காண்பர்.

/
உதாரணமாகச் சமயத்தவர் புனிதர் பஹவுல்லாவின் போதனைகளிலே உலக சமயம் ஸ்தாபிக்கப்படுவதைக் காண்பார். இச் சமயம் இக் காலநிலைமைகளுக்கு ஏற்றதாயி ருக்கும். மாற்றமுடியாத உலகத்து நோயை உடனடியாக மாற்றக்கூடியதாயிருக்கும். எந்தவிதமான நோவையும், எந்தக் கொடிய விஷத்தையும் போக்கடிக்கக்கூடியதாயி ருக்கும். தற்காலச் சமயப் பாசாங்குகளுக்கேற்றவாறு மனிதகுலத்தை ஒழுங்குசெய்து மனிதகுலத்துக்கு நன்மை செய்வதானல், அது சாத்தியமானதொன்றன்று. உதாரண மாகப் பழைய ஏற்பாட்டின் சட்டங்களை நட்ைமுறைப் படுத்துவதானல், அல்லது ஏனைய சமயங்களின் தற்போ தைய போலி நடத்தைகளுக்கு ஏற்றவாறு ஒழுங்கு செய்வ தானுல் முடியாத காரியம்.
மனிதகுலத்தின் பண்புகளுக்குப் பொருத்தமானதும், மனிதனுடைய நன்மைகளுக்கு அத்திவாரமாயுள்ளதும் தெய்வீக சமயங்களின் சாரமாயுள்ளதுமான போதனைகள் புனிதர் பஹவுல்லாவின் அருள்வாக்குகளிலே மிகவும் பூரண மாகக் காணப்படுகிறது. t
அவ்வாறே சுதந்திரமென்று மக்கள் கூப்பாடு போடு வதைப் பற்றிக் கூறுவதானல் மனிதருக்கு நன்மையை உறுதிப்படுத்தும் நிதானமான சுதந்திரம் புனிதர் பஹவுல் லாவின் போதனைகளிலே காணப்படுகிறது.
அரசியல் கட்சிகளைப் பற்றியதும் அவ்வாறே மனித உலகுக்கு வழிகாட்டும் மிக உயர்ந்த கொள்கை, அதாவது தெய்வீகமான கோட்பாடு பு னி த ர் பஹவுல்லாவின் போதனைகளிலே காணப்படுகிறது.
சமதர்மம் பேசும் கட்சிகள் அதாவது பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் விஷயம் பற்றிக் கூறுவ தானுல், பிரேரிக்கப்பட்ட தீர்வுகளெல்லாம் காரியசாத்திய மற்றவையாகக் காணப்பட்டன. புனிதர் பஹவுல்லா காட்டிய பொருளாதார முறைகளே காரியசாத்தியமான

Page 29
52
வையாகவும், சமுதாயத்துக்கு இன்னல் விளைவிக்காதவை யாகவுமிருக்கின்றன.
இவ்வாறு ஏனைய கட்சி விஷயங்களும், இவ் விஷயத்தை ஆழமாக ஆராய்ந்து பார்த்தால், அந்தக் கட்சிகளின் மிக உயர்ந்த நோக்கங்களெல்லாம் பஹவுல்லாவின் போதனை களிலே காணப்படுகின்றன. இப் போதனைகள் சகல சக்தி வாய்ந்தவையாகவும் காரிய சாத்தியமானவையாகவுங் காணப்படுகின்றன. உதாரணமாக உலக சமாதானத்தை எடுத்துக்கொள்ளலாம். உலக நீதிமன்றம் ஒன்று அமைக் கப்பட வேண்டுமென்று புனிதர் பஹவுல்லா கூறுகிருர். சர்வதேச சங்கம் அமைக்கப்பட்டபோதிலும், உலக சமா தானத்தை அதனுல் ஏற்படுத்த முடியவில்லை. ஆனல் புனிதர் பஹவுல்லா கூறும் உலக நீதிமன்றம் இப் புனித மான பணியை மிகுந்த சத்தியோடும், பலத்தோடும் அமைத்துவிடும். அவருடைய திட்டம் இதுதான். ஒவ்வொரு தேசத்துப் பாராளுமன்றமும், அவ்வந்நாட்டின் சிறந்த பிரதிநிதிகளும், சர்வதேசச் சட்டங்களிலே தேர்ந்தவர் களும், அரசாங்கங்களிடையேயுள்ள தொடர்புகளை நன்கு அறிந்தவர்களும், இக்கால மனித வர்க்கத்தின் முக்கியமான தேவைகளை அறிந்தவர்களுமான இரண்டு மூன்று பேரைத் தெரிந்தெடுக்க வேண்டும். இப் பிரதிநிதிகளின் தொகை அவ்வந்நாட்டின் ச ன த் தொ  ைக விகிதாசாரத்தையனு சரித்து நிச்சயிக்கப்படும். இப் பாராளுமன்றங்களாலே தேர்ந்தெடுக்கப்படுபவர் மேற்சபையினலும் காங்கிரசின லும், மந்திரி சபையினுலும், நாட்டின் சனதிபதி அல்லது மன்னர் என்பவராலும் ஊர்சிதம் செய்யப்பட்டவரா யிருக்கவேண்டும். அப்போது இவர்கள் நாட்டினுலும் அரசினலும் தேர்ந்தெடுக்கப்பட்டவராகக் கருதப்படுவார். இவர்களிலிருந்து உலக நீதி மன்றந் தெரிந்தெடுக்கப்படும். இவ்வாறு மனிதவர்க்கம் எல்லாருக்கும் இவ் விஷயத்தில் பங்கிருக்கும். பிரதிநிதிகள் நாட்டின் பிரதிநிதிகளா யிருப்பர். உலக நீதிமன்றம் சர்வதேசப் பிரச்சினை சம்பந்த மாக ஏகமனதாகவோ, பெரும்பான்மை வாக்கினலோ

53
தீர்ப்பளிக்குமானல், வழக்காளியோ, எதிரியோ ஆட்சேபஞ் சொல்ல இடமிருக்கமாட்டாது. எந்த அரசோ, நாடோ, உலக நீதிமன்றத்தின் தீர்ப்பை அமுல் நடத்துவதில் அலட் சியமாகவோ, காலங்கடத்தியோ நடக்குமானுல் மற்றைத் தேசங்களெல்லாம் அதற்கு எ தி ரா க எழவேண்டும். ஏனெனில் எல்லா நாடுகளும் இந்த உலக நீதிமன்றத்தை ஏற்பாடு செய்தன. இது எத்துணை உறுதியான அத்திவார மென்பதைச் சிந்தித்துப் பாருங்கள். ஆனல், ஒரு சில
நாடுகள் மாத்திரம் சேர்ந்த சர்வதேச சங்கத்தினுல்
நோக்கம் சரிவர நிறைவேற்றப்படமாட்டாது. இதுவே இங்குக் கூறிய விஷயத்தைப் பற்றிய உண்மை. ,
இன்று கடவுள் வார்த்தையின் சக்தி ஒன்றுதான் அதாவது உலகளாவிய அந்தச் சக்திதான் எல்லாருடைய சிந்தனையையும், மனங்களையும், உள்ளங்களையும், ஆவியை யும் ஒரு மரத்தின் நிழலுக்குக் கீழே கொண்டுவரக்கூடியது. இறைவனே எல்லா விஷயங்களிலும் அடங்கியிருப்பவர். உள்ளங்களுக்கு உயிர்ப்பு வழங்குபவர். மனிதகுலத்தை ரட்சித்து வழிநடத்துபவர். கடவுள் நாமம் வாழ்க. இன்று இறைவனுடைய வாக்கின் ஒளி எங்கும் பிரகாசிக்கிறது. சகல பிரிவுகள், சமூகங்கள், இனங்கள், மரபுக் குழுக்கள், சனங்கள், சமயங்கள், சமயப் பிரிவுகள், எங்குமிருந்து உயிர்கள் ஒருமை என்ற சொல்லின் சாயலின்கீழ் ஒன்றுகூடி, பெருந்தோழமையோடு ஒற்றுமைப்பட்டு இணங்கியுள்ளன.

Page 30
சாதி ஒற்றுமை
இன்று இங்கே* இறைவனடியார் கூட்டத்தைக் கண்டு நான் மிக்க மகிழ்ச்சியடைந்துள்ளேன். வெள்ளையரும் வேறு நிறத்தவரும் ஒன்றுகூடியிருப்பதை நான் காணு கின்றேன். கடவுள் கண்முன் நிற வித்தியாசம் கிடையாது. எல்லா வருணத்தவரும் ஒன்றே. இறைவன் தொண்டில் எல்லாரும் சமமே. நிறம் முக்கியமன்று. உள்ளந்தான் மிக முக்கியம். உள்ளந் தூய்மையாகவும் வெண்மையாகவு மிருந்தால், வெளியே எப்படியிருந்தாலும் பறவாயில்லை. கடவுள் நிறவித்தியாசத்தைப் பார்ப்பவரல்லர். அவர் உள்ளத்தையே பார்ப்பார். கடவுள் சந்நிதானத்திலே எவருடைய ஒழுக்கமும் பண்புகளும் சிலாகிக்கத்தக்கனவோ அ வ ரே விரும்பப்படுவார். பரமண்டலராச்சியத்தின் அணுக்கமானவரே அன்புக்குரியவர். சிருஷ்டியிலும் பிறப் பிலும், வருணப் பிரச்சினை மிக அற்பமானதே.
கணிப்பொருள் உலகில் பலநிறமுள்ள பொருள்களுண்டு. பல நிறமுள்ள சேர்க்கைப் பொருள்களுண்டு. அது காரண மாக அவற்றிடை பிணக்குண்டாவதில்லை. தாவர உலகிலும் பல நிறங்களுண்டு. அது காரணமாகப் பழங்களும், பூக்களும் தம்முள் சண்டையிட்டுக் கொள்வதில்லை. வித்தியாசங் களும் வேறுபாடுகளுமிருப்பதே தோட்டத்துக்கு அழகை பூட்டுகின்றன. எல்லாப் பூக்களும் ஒரே நிறமாயிருந்தால், ஒரே தன்மை சலிப்பூட்டுவதாயும், மனமடிவுண்டாக்கு, வதாயுமிருக்கும். ரோசாப் பூஞ்சோலையில் பிரவேசிக்கும் போது பலநிலமான பூக்கள் மலர்ந்திருப்பது அழகையும் அற்புதத்தையுமுண்டாக்குகிறது. உலகம் ஒரு பூஞ்சோலை போன்றது. பலநிறப்பட்ட சாதிகள் மலர் போன்றவை. அவை அச் சோலையை அலங்கரிக்கின்றன. மிருக உலகிலும் பல வித்தியாசங்களைக் காண்கிருேம். புருக்களில் எவ்வளவு
* ஹோவர்டு பல்கலைக் கழகம் (Howard University)

55
வித்தியாசமுண்டு. அவை எவ்வளவு ஒற்றுமையாக வாழ் கின்றன. ஒன்றையொன்று நேசிக்கின்றன. நிறவித்தி யாசம் அவைகளிடையே பிணக்கை உண்டாக்கவில்லை. தாம் ஒரே சாதி. ஒரே இனம் என்பதை உணர்ந்து கொள்ளு கின்றன. தாம் ஒரே இன்மென்பதை அவை அறிகின்றன. வெள்ளைப் புரு கறுத்தப் புருவோடு மேலே கிளம்பிவிடு கிறது. மிருக உலகில் நிறத்தினுல் அவை வித்தியாசங் காட்டுவதில்லை. ஒரே இனம் ஒரே சாதி என்பதை அவை உணர்ந்துகொள்ளுகின்றன. குறைந்த அறிவும் பகுத்தறிவும் உள்ள மிருகங்களிடையே சாதி வித்தியாசங் காண்ப்படாத போது, நாமெல்லாம் ஒரே மூலத்திலிருந்து பிறந்தவர்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களென்று உணரும் திறமை யுள்ள மனித வர்க்கத்தில் ஏன் இந்தப் பாகுபாடு? தோற்றத் தில் மனிதன் ஒன்று. அவன் படைக்கப்பட்ட நோக்கமும் ஒன்று, பின்னர்தான் சாதி, வருணம் என்ற வேறுபாடு கள் தோன்றின. இன்று இங்கே வெள்ளையரும், வேறு வருண மக்களும் ஒன்று கூடியிருப்பதையிட்டு மகிழ்ச்சியடை கிறேன். மிகுந்த சமாதானத்தோடும், ஐக்கியத்தோடும், நட்போடும் ஒன்றுகூடி வாழும் காலம் வருமென்று எதிர் பார்க்கிறேன். இரு வருணத்தாருக்கும் முக்கியமானதொரு விஷயத்தை நான் கூறவிரும்புகிறேன். வெள்ளையர் அதன் பயணுகக் கறுப்பரிடம் நீதியாகவும் அன்பாகவும் நடப்பார் கள். கறுப்பர் வெள்ளையரிடம் நன்றியறிதலோடும், நயமறி பண்போடும் நடந்து கொள்வார்கள். சுதந்திரம், அடிமை” கள், வி டு த லை யெ ன் பன இந்தக் கண்டத்திலேதான் பிரகடனஞ் செய்யப்பட்டன. கறுப்பர் சார்பாக வெள்ளை யர் இந் நாட்டிலே நீண்ட கொடிய யுத்தத்தைப் புரிந்திருக் கிருர்கள். கறுப்பர் த மது அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெறுவதற்காக, ஆயிரக்கணக்கான வெள்ளையர் தமது உடல் பொருளாவி அனைத்தையும் தியாகஞ் செய் தனர். ஐக்கிய அமெரிக்காவிலுள்ள கறுப்பர் தாம்பெற்ற விடுதலை ஆசியாவிலும், ஆபிரிக்காவிலுமுள்ள வருணத் தவரின் நிலைமையை எவ்வளவு தூரம் பாதிக்குமென்பதை

Page 31
56
உணராதிருக்கிருர்கள். அத் தேசங்களில் மிகக் கொடிய அடிமை நிலை நிலவி வந்தது. ஐக்கிய அமெரிக்காவின் முன் மாதிரியைப் பின்பற்றி ஐரோப்பிய வல்லரசுகள் வருணசாதி யினருக்கு விடுதலையளிப்பதாகப் பிரகடனஞ் செய்தனர்.
இப்பொழுது அங்கே அடிமைகளில்லை. வெள்ளைச் சாதியார் செய்த இத் தொண்டு மறக்கற்பாலதொன்றன்று. இரு வருணத்தவரும் இவ் விஷயத்தில் நன்றியறிதலுடைய வராய் மகிழ்ச்சியடைய வேண்டும். ஏனெனில் இச் செயல், மற்றை நாடுகளிலுள்ள அடிமைகளுக்கு விடுதலையளித் துள்ளது. இந் நாட்டிலுள்ள வருணசாதியார் அதிஷ்டசாலி கள். கடவுள் நாமம் வாழ்க, கீழை நாட்டைவிட இங்கே நிலைமை மிக உயர்ந்துள்ளது. வெள்ளையரோடு சமமான சாதனை களைப் பெறுவதற்கு இங்கே வாய்ப்புகள் அதிகம். வித்தியாசங்கள் சார்பு வகைகளில் மற்றை நாடுகளைவிடக் குறைவாகவேயிருக்கின்றன. இரு சாதியாரும் மிக உயர்ந்த சமத்துவ நிலையையும், பிறர்க்குதவி செய்யும் பண்பையும் பெறுவாராக, நீங்கள் அனைவரும் நட்பினல் ஒன்று சேர் வீராக. அசாதாரணமான அபிவிருத்தி சகோதரத்துவத்தை நிலைநாட்டுவதாக, உங்களிடையே மனிதகுலம் எ ன் ற பெயரைவிட வேறு பெயரில்லாதிருப்பதாக என உங்களுக் காக நான் பிரார்த்தனை செய்வேன்.
இந்தத் தோழமையை அடைவதற்கும் இந்தச் சகோ த்ரத்துவப்பந்தத்தை வலுப்படுத்துவதற்கும் நேர்மையுடன் முயலுங்கள். மிகுந்த பிரயத்தனத்தை மேற் கொள்ளுங் கள். ஒவ்வொருவரும் சங்கற்பத்தோடு முயன்ருலன்றி இது கைகூடாது. ஒருவரிடமிருந்து நன்றியறிதலும் நயவுரை யும் வேண்டும். மற்றவரிடமிருந்து அன்பும், சமத்துவத்தை ஒப்புக்கொள்ளும் பண்பும் வேண்டும். ஒவ்வொருவரும் மற்றவரை முன்னேற்றமடையச் செய்து உதவி புரிய வேண்டும். இவ்வாறு பரஸ்பர முன்னேற்றமுண்டாகும். நோக்கமும் செயலும் ஒத்திருந்தாற்ருன் இது சாத்திய மாகு ம். உங்களிடையே அ ன் பும், ஒற்றுமையும்,
 
 

57
அபிவிருத்தி செய்யப்படும். இதனல் மனித குலம் ஒன்ன்ெற நிலை உருவாகும். வெள்ளையரும் மற்றச் சாதியாரும் ஒற்றுமையடைவாரானல், உலக சமாதானம் நிலைநாட்டப் படும். பின்னர் சாதித் துவேஷமும், இனத் துவேஷமும், குறுகிய தேசாபிமானமும், சமயத் துவேஷமும் நீங்கும். வெள்ளையரும் கறுத்தவரும், ஒன்றுகூடியுள்ள இந்தக் கூட்டத்தைக் காண மகிழ்ச்சியடைகின்றேன். நீங்கள் ஒருவரையொருவர் நேசிப்பதைப் பார்க்கக் கிடைத்ததை யிட்டுக் கடவுளுக்குத் தோத்திரஞ் செய்கிறேன். மனித வர்க்கத்தின் மகிமைக்கு இதுவே வழி. கடவுளுக்கு விருப்ப மானதும் இதுவே. அவருடைய இராச்சியத்திலே நித்தியா னந்தமடைவதற்கு இதுவே வழி. பூரண அன்பு பெறுவர் களென உங்கள் சார்பாகப் பிரார்த்தனை செய்கிறேன். உங்களிடையேயுள்ள வித்தியாசங்களெல்லாம் நீங்கும் நாள் உதயமாக வேண்டுமெனவும் பிரார்த்திக்கிறேன்.

Page 32
நீதிப் போக்கு
கடவுள் சந்நிதானத்திலே ஏழைகளைப் பற்றிச் சிந்திப்ப திலும் பார்க்கச் சிறந்ததென்ன? விண்ணுலக ராச்சியத்தி லுள்ள எமது பரமபிதாவுக்குப் பிரியமானவர்கள் ஏழை களே. கிறிஸ்துநாதர் உலகுக்கு வந்தபோது அவரிடத்து நம்பிக்கை வைத்து, அவரைப் பின்தொடர்ந்தவர்கள், ஏழை எளியவர்களே. க ட வு ஞ க் கு அணுக்கமானவர்களே. கடவுளுக்கு அணுக்கமானவர் இவர்களேயென்பது இதனல் விளங்குகிறது. செல்வன் கடவுளின் அவதார புருடனிடம் நம்பிக்கை வைத்து அவரைப் பின்தொடர்வானுனல், வீடு பேறுடையச் செல்வம் இடையூருயிருக்க மாட்டாதென்பது வெளிப்படையாகிறது. அவன் பரீட்சைக்கு உட்படுத்தப் பட்டுச் சோதிக்கப்பட்ட பின்னர் அவனுடைய சமய வாழ்வுக்கு அவனுடைய செல்வம் தடையாயிருக்கிறதா என்பது தெரியவரும். ஏழைகள் விசேஷமாகக் கடவுளின் நே ச த் து க் குப் பாத்திரமானவர்கள். அவர்களுடைய வாழ்க்கை கஷ்டம் நிறைந்தது. சோதனைகள் இடையரு தவை. கடவுளில்தான் அவர்கள் நம்பிக்கை வைத் துள்ளனர். எனவே, ஏழைகளுக்கு உங்களைத் தியாகஞ் செய்வதாக உதவி புரிய வேண்டும். கடவுள் சந்நிதானத் திலே ஏழைகளுக்கு உதவி செய்வதைக் காட்டிலும் மேலான சேவை கிடையாது. பொருள் பண்டம் இருப்பதோ இல்லாமலிருப்பதோ ஒரு பொருட்டன்று. ஆத்மீக வளர்ச்சி அவற்றிலே தங்கவில்லை. உடல்நலம் குன்றினுல் ஆத்மீக உணர்வு ஏற்படுவது சகசம். ஏழைமை கடவுளை நினைக்கத் தூண்டும். நீங்கள் ஒவ்வொருவரும், ஏழைகளுக்கு உதவி புரிய வேண்டும். வறுமை அதிகரிக்காத வகையில் ஒழுங்கு செய்து வறியவர்க்கு உதவ வேண்டும். சிலர் கோடீஸ்வர ராகவும் ஏனையோர் வறியவராகவுமிருக்கும் நிலைமையை மாற்றக்கூடியவாறு, சமூகத்தில் சட்டங்களை மாற்றி
 
 

59
அவற்றை அமுல் நடத்த வேண்டும். மனித சமூகத்திலே சீவனுேபாயத்துக்கான ஒழுங்குகளைச் சரிப்படுத்துவது பஹவுல்லாவின் போதனைகளில் ஒன்ருகும். இதன்படி செல்வம், சீவனுேபாயம் என்பனபற்றி அபரிமிதமான வித்தியாசங்களிருக்கக்கூடாது. ஒரு சைனியத்திலே தளபதி, உத்தியோகத்தர், காலாட்படை ஆகிய பிரிவுகளிருப்பது போலவே சமூகத்திலும், தனவைசியர் வைசியர், வணிகர், தொழிலாளி ஆகிய வர்க்கத்தினர் இருக்க வேண்டும். எல்லாரும் தளபதிகளாக இருக்க முடியாது; எல்லாரும் உத்தியோகத்தராகவும், தனிப்பட்ட ப  ைட வீரராகவு மிருக்க முடியாது. சமூக அமைப்பிலே ஒவ்வொரு வர்க்கத் திலிருப்பவரும் திறமையுடையவராயிருக்க வேண்டும்; ஒவ்வொருவருடைய திறமையைப் பொறுத்த வரையில் பதவியைப் பெறுவர்; ஆனல் எல்லாருக்கும் நீதியான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.
ஸ்பாட்டா தேசத்து அரசனுன லைசேர்கஸ் என்பவன் கிறிஸ்து பிறப்பதற்கு வெகு காலத்துக்கு முன்னர் வாழ்ந் தான். அவன் ஆட்சியில் எல்லாருக்கும் தனிச் சமவுரிமை இ ரு க் க வேண்டுமென்ற கருத்துடையவனுயிருந்தான். ஸ்பாட்டாவிலுள்ள மக்கள் அனைவரும் சில பிரிவுகளில் அடங்கவேண்டுமெனச் சட்டம் பிரகடனஞ் செய்தான். ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனிக் கடமைகளும் உரிமை களுமிருந்தன. முதலாவது நிலத்தைப் பயன்படுத்தும் உழவரும் தொழிலாளரும் வகுக்கப்பட்டனர். இரண்டா, வது வணிகரும், தொழில்நுட்பம் தெரிந்தவர்களும் ஒரு. பிரிவில் அடங்கினர். மூன்ருவது தலைவர்களும், உயர் பதவி யாளரும். லைசேர்க்கஸின் சட்டப்படி இவர்கள் தொழிலில் ஈடுபட வேண்டியதில்லை. போர், படையெடுப்பு என்பன நிகழுங்காலத்திலே இவர்கள் நாட்டைப் பாதுகாக்க வேண்டும். நாட்டை அவன் ஒன்பதினுயிரம் சம பிரிவு களாகப் பிரித்தான். ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு பெருமகனக ஒன்பதினுயிரம் தலைவர்களை நாட்டைக் காக்க நியமித்தான். இவ்வாறு ஒவ்வொரு மாகாணத்திலுள்ள

Page 33
60
விவசாயிக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. அந்தந்த மாகாணத்தின் தலைவரை ஆதரிப்பதற்காக ஒவ்வொரு விவசாயியும் கட்டாய வரியொன்றை யிறுக்க வேண்டி யிருந்தது. விவசாயியோ, வணிகரோ, இராணுவ சேவை யில் ஈடுபட வேண்டியதில்லை. தொழில் செய்வதற்குப் பதிலாகப் பெருந்தலைவர்களுக்கு வரிப்பணம் செலுத்தப் பட்டது. இந்த ஒழுங்கை நிரந்தரமாக்கும் நோக்கத்தோடு லைசேர்கஸ் பெருந்தலைவர்கள் எல்லாரையும் ஒன்று கூட்டி, தாம் நீண்ட பிரயாணம் செய்யப் போவதாகவும், தாம் திரும்பி வரும்வரை இச் சட்டங்கள் அமுலிலிருக்க வேண்டு மென்றும் கூறினர். அவன் விதித்த சட்டங்களைப் பாது காப்பதாக எல்லாரும் சத்தியப்பிரமாணஞ் செய்தனர். பின்னர். அவன் தனது ராச்சியத்தைவிட்டு நீங்கித் தன்னிச்சையாகத் தேசாந்தரம் போனன். அவன் திரும்பி வரவேயில்லை. தன் தோழரிடையே சமத்துவத்தை நிலை நாட்டுவதற்காக இவ்வாறு எவருந் தியாகஞ் செய்ததில்லை. ஒரு சில வருடங்கழிந்ததும், அவன் வகுத்த அரசு நீதியும் சாதுரியமும் நிறைந்த அடிப்படையில் அமைக்கப்பட்ட போதிலும் வீழ்ச்சியுற்றது.
மனிதரிடையே திறமை வித்தியாசப்படுவது முக்கிய மானதொரு அம்சமாகும். எல்லாரும் ஒரேமாதிரியிருக்க முடியாது. எல்லாரும் சமமானவராயுமிருக்க முடியாது. எல்லாரும் புத்திமான்களாகவுமிருக்க முடியாது. மனித ரிடையேயுள்ள பல திறப்பட்ட தகைமைகளைச் சீர்ப்படுத்தும் முறையில் பஹ வுல்லா கோட்பாடுகளையும், சட்டங்களையும் வகுத்துள்ளார். மனிதருடைய அரசிலே சாதிக்கக் கூடிய வையெல்லாம், இந்தக் கோட்பாடுகள் மூலம் சாதிக்கப்படு மெனக் கூறியிருக்கிருர், இந்தச் சட்டங்களை நடைமுறை யிற் கொண்டுவந்தால், சமூகத்திலே கோடீஸ்வரர்களிருக்க மாட்டார்கள். அவ்வாறே மிக ஏழைகளுமிருக்க மாட்டார் கள். மனிதருடைய பலவகைப்பட்ட திறமையைச் சீர்ப் படுத்துவதனல் இது நிறைவேற்றப்படும். சமூகத்தின்
 

61
வாழ்வு விவசாயத்திலேதான் தங்கியுள்ளது. எல்லாரும் உற்பத்தியாளராக இருக்க வேண்டும். தனிப்பட்ட ஆக்கத். திறனுக்கேற்றவருமானமுள்ள ஒவ்வொருவரும் வரியிலிருந்து விலக்கப்படுவார். ஆனல், அவருடைய தேவைக்கதிகமான
வருமானமுடையவராயிருந்தால் அவர் வரி கொடுக்க வேண்டியவராவார். இந்த வரியை அவர் சரி செய்யும் வரை கொடுக்க வேண்டும். அதாவது ஒருவனுடைய
ஆக்கத் திறமையும், அவனுடைய தேவையும் வரிமூலம்
சமன் படுத்திச் சரி செய்யப்படும். அவனுடைய உற்பத்தி
அதிகரிக்குமானல் அவன் வரி கொடுக்க வேண்டியதில்லை.
அவனுடைய தேவைகள் உற்பத்தியைவிட அதிகரிக்கு
மானல், சமன் செய்யவோ சரிப்படுத்தவோ போதுமான
தொரு தொகையைப் பெறுவான். எனவே வரி விதித்தல்,
திறமைக்கும் உற்பத்திக்கும் பொருத்தமான விகிதத்தை, அனுசரித்திருக்கும். நா ட் டி லே வறியவர்களிருக்க LDTL'LTri56.

Page 34
கூட்டுறவு
சகல உயிரினங்களும் தனியாகவோ, வேறு துணை யின்றியோ வாழமுடியும். உதாரணமாக ஒரு மரம் புற்றரையிலோ, பள்ளத்தாக்கிலோ, மலைச்சாரலிலோ தனி யாக வாழலாம். ஒரு மிருகம் மலையில் அவ்வாறு வாழலாம். வானத்திலே பறக்கும் பறவை தனிவாழ்வு வாழலாம். கூட்டுறவோ, ஒன்று சேர்ந்து வாழ்வதோ அவற்றுக்குத் தேவையில்லை. அத்தகைய உயிரினங்கள் தத்தம் தனி வாழ்விலே மிகப் பெரிய சுகத்தையும் மகிழ்ச்சியையும் அடைகின்றன.
ஆணுல், மனிதன் தனித்து ஒன்றியாய் வாழமுடியாது. அவனுக்குத் தொடர்ந்து கூட்டுறவும் பரஸ்பர உதவியும் தேவை. உதாரணமாக காட்டில் தனியேயிருக்கும் மனிதன் ஈற்றில்பட்டினியால் வாடுவான். தனக்குத் தேவையான பொருள்களைத் தனித்திருந்து பெறமாட்டான். அதனல் அவன் கூட்டுறவையும், பரஸ்பர உதவியையும் நாடுகிருன்.
இந்த இயற்கைக் கோலத்தின் இரகசிய மென்ன? இதற்குக் காரணமென்ன? மனித இனம் ஒரு தனிக்காரணத் திலிருந்துதான் தோன்றியது. ஒரு குடும்பத்திலிருந்து தரன் கிளைத்தது. எனவே, உண்மையில் மனிதகுலம் ஒரு குடும்பத்தையே குறிக்கின்றது. கடவுள் எவ்வித வித்தியா சத்தையும் உண்டாக்கவில்லை. இந்தக் குடும்பம் பூரண சுகத் தோடும் சுபீட்சத்தோடும் வாழ்வதற்காக எல்லாறையும் ஒன்றிலிருந்து படைத்துள்ளார். பரஸ்பர உதவியைப் பற்றியும், கூட்டுறவைப் பற்றியும் கூறுவதானல், அரசியல் சமுதாயத்திலுள்ள ஒவ்வொருவரும் மிக்க செளக்கியத் தோடும் சுபீட்சத்தோடும் வாழவேண்டும். ஏனெனில், மனித வர்க்கத்தின் ஒவ்வொரு அங்கத்தவரும், அரசியல் சமுதாயத்தின் அங்கத்தவராவார். ஓர் அங்கத்தவருக்குத்
 

63
துன்பமுண்டானல் அல்லது நோயினுற் பீடிக்கப்பட்டால், மற்றை அங்கத்தவருக்கும் நோயுண்டாகும். உதாரணமாக உடம்பின் ஒர் உறுப்புகண், கண்ணுக்கு ஊறுண்டானல் அது முழு நரம்பையும் பாதிக்கும். அவ்வாறே அரசியற் சமுதா யத்தின் ஒர் அங்கத்தவர் பாதிக்கப்பட்டால், மற்றையோ ரெல்லாரும் பாதிக்கப்படுவார். பாதிக்கப்பட்டவர் அங்கத் தவர் குழுவில் ஒருவரானபடியால் எல்லாரையும் அது பாதிக்கும். ஒர் அங்கத்தவர் அல்லது ஒரு பகுதியினர் துன்ப மடைந்தால், மற்றவர்கள் சுகமாயிருப்பார்களா? அது முடியாத காரியம். எனவே, மனிதகுலத்து அரசியற் சமுதா யத்திலே ஒவ்வொருவரும், பூரண சுகத்தையனுபவிக்க வேண்டுமென்று கடவுள் விரும்பியுள்ளார்.
அரசியல் சமுதாயம் ஒரே குடும்பமானலும், சமரச மான தொடர்பில்லாதபடியால் சிலர் செளக்கியமாக வாழ் கின்றனர். வேறு சிலர் வறுமையில் வாழ்கிருர்கள். சிலர் திருப்தியோடு வாழ்கின்றனர்; வேறு சிலர் பசியோடு வாழ் கின்றனர். சிலர் அழகான ஆடையுடுக்கின்றனர். வேறு சில குடும்பங்களுக்கு உணவும் வீடும் தேவைப்படுகின்றன. ஏன்? ஏனெனில் இந்தக் குடும்பத்துக்குத் தேவையான பரஸ்பர உதவியும், இருபுடை இயைபுங் கிடையாது. இந்தக் குடும்பம் செப்பமாக ஒழுங்குசெய்யப்படவில்லை. இது பூரணமானதொரு சட்டத்தின் கீழ் வாழவில்லை. செய்யப் பட்ட சட்டங்கள் சுகத்துக்கு உறுதியானவையல்ல. அவை சுகத்தை வழங்குவதில்லை. எனவே, குடும்பத்தின் சகவு, அங்கத்தவரும், சமமான சுகத்தையும், சந்தோஷத்தையும் அனுபவிக்கக்கூடியவாறு ஒரு சட்டம் அமைக்க வேண்டும்.
குடும்பத்திலே ஒர் உறுப்பினர் மிக மோசமான வறுமை யிலும் ஏழ்மையிலும் வாழ மற்றவர்கள் சுகமாக வாழ முடியுமா? அந்தக் குடும்பத்தவர் உணர்ச்சியற்றவராகவும், சக்தியற்றவராவும், அன்பில்லாதவராகவும், ஈகைப் பண்பில் லாதவராகவுமிருந்தாலன்றி அவ்வாறு செய்யமுடியாது. பிறகு அவர்கள் சொல்லுவார்கள் 'இந்த உறுப்பினர் எமது

Page 35
64
குடும்பத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தபோதிலும், அவர்களை
அப்படியே விட்டுவிடுங்கள். எங்களையே நாங்கள் பார்த்துக் கொள்வோம். அவர்கள் இறந்து போகட்டும். நான் சுகமா யிருக்கும் வரை மக்கள் என்னை மதிப்பார்கள். நான் சந்தோஷமாயிருப்பேன். இந்த என் சகோதரன் இறக் கட்டும். இவன் வறுமையில் அமிழ்ந்தியிருந்தால் அவன் அப்படியே இருக்கட்டும். நான் சுகமாக இருந்தால் போதும்; அவனுக்குப் பசியானல், அவன் அப்படியேயிருக்கட்டும். நான் திருப்தியாக இருந்தால் போதும். அவனுக்கு உடை யில்லாவிட்டால் பறவாயில்லை. நான் நன்ருக உடுத்திருந் த ர ல் போதும். அவனுக்கு வீடுவாசலில்லாவிட்டால், அதனலென்ன? எனக்கு வீடிருந்தால் போதும். அவன் காட்டிலிருக்கட்டும்.'
இத்தகைய அக்கறையின்மை மனிதர் குடும்பத்திலிருப் பது, அடக்கமில்லாத தன்மையாலும், செயல்முறைச் சட்ட மின்  ைம ய ர லு ம், அன்பில்லாத த ன்  ைம ய ர லு ம் உண்டானவை. இக் குடும்பத்தவர்க்கு அன்புகாட்டப் பட்டால், அவர்களெல்லாரும் சுகமும் சந்தோஷமுமடைந் திருப்பார்கள்.
ம ணி த கு ல ம் எதிர்நோக்கும் சகல பிரச்சினைகள் பற்றியும் புனிதர் பஹவுல்லா அறிவுரை வழங்கியுள்ளார். மனிதன் போராடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு பிரச்சினை பற்றியும் அவர் அறிவுரையும் போதனையும் வழங்கி யுள்ளார். இவற்றுள் பொருளாதாரம் பற்றிய போதனை களுண்டு. இவற்றைச் செயற்படுத்தினல், பொது ப் படையான ஒழுங்குக்கு எவ்வித ஊனமுண்டாகாமல் அரசியல் சமுதாயத்தின் ஒவ்வோர் அங்கத்தவரும் மிக்க சுகத்தையும் சுபீட்சத்தையும் சந்தோஷத்தையுமடைவார் கள். இதனுல் எவ்வித பிணக்கும், வித்தியாசங்களுமுண் டாகமாட்டாது. இந்தத் தீர்வு எப்படிப்பட்டதென்ருல், முதலாவதாக, மனித குலத்தின் பெரிய சாதனைகளெல்லாம் அரசியல் சமுதாயத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் வழங்கப்
 

65
படவேண்டும். ஒவ்வொருவரும் மிகச் சிறந்த சுபீட்சமும் நன்மையும் பெறவேண்டும். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்ப தற்கு நாம் முதலில் விவசாயியை முதலிற் கவனிக்க வேண்டும். கிராமவாசிகளும் விவசாயிகளும் செய்யும் சேவையே மற்றெல்லா வகுப்பாருடைய சேவைகளிலும் மேலானது. எனவே அவர்களுடைய வகுப்பில் ஒர் ஒழுங் கையும் திட்டத்தையும் வகுக்கலாம். ஒவ்வொரு கிராமத் திலும் ஒரு பண்டகசாலை அமைக்க வேண்டும். அதற்குப் பல வகையான வருமானமிருக்கும். முதலாவது வருமானம், பத்திலொரு பங்கு அல்லது பதின்மைப்பண்டவரி. இரண் டாவது வருமானம், மிருகங்கள் கணக்கிற் கிடைப்பது. மூன்ருவது நிலக் கணிப்பொருள்கள் சார்பில் கிடைப்பது. அதாவது நாட்டில் கண்டுபிடிக்கப்படும் ஒவ்வொரு சுரங் கத்தின் வருமானத்தில் மூன்றிலொரு பகுதி இந்தப் பெரிய களஞ்சிய சாலைக்குச் சேரும்.
நாலாவது, வாரிசில்லாமல் இறப்பவருடைய சொத்து முழுவதும் இப் பண்டக சாலைக்குச் சேரும். ஐந்தாவது நாட்டில் ஏதாவது அருநிதி கிடைத்தால் அதுவும் இப் பண்டகசாலையையே சேரும். இந்த வருமானமெல்லாம் இந்தத் திறைசேரியிற் சேர்க்கப்படும்.
முதலாவது பதின்மைப்பண்டவரி பற்றியது; ஒரு விவசாயியை எடுத்துக்கொள்வோம். இவன் உழவரில் ஒருவன். இவனுடைய வருமானத்தைப் பார்ப்போம். இவனுடைய வருட வருமானம் எவ்வளவு, செலவு எவ்வளவு என்பதைப் பார்ப்போம். இவனுடைய வரவு செலவும் சமமாயிருந்தால் இவனிடமிருந்து எவ்வித வரியும் அறவி டப்படமாட்டாது. ஏனெனில் இவனுடைய வருமானம் முழுவதும் இவனுக்கே தேவைப்படும். மற்ருெரு விவ சாயியை எடுப்போம். இவனுடைய வருமானம் இரண்டா யிரம் டாலர் எனக் கொள்வோம். இவனிடமிருந்து வருமா னத்தில் பத்திலொன்றை வரியாக எடுப்போம். ஏனெனில் இவனுக்குச் செலவைவிட வருமானம் பத்தாயிரம் டாலராக
உ.ஐ.அ.-5

Page 36
66
வும் செலவு ஆயிரம் டாலராகவுமிருந்தால், அல்லது வருமானம் இருபதினுயிரம் டாலராயிருந்தால், இவன் நாலிலொரு பகுதியை வருமானமாகக் கொடுக்கவேண்டும். இவனுடைய வருமானம் ஒரு லட்சம் டாலராகவும் செலவு ஐயாயிரமாகவுமிருந்தால், இவன் மூன்றிலொரு பகுதியை வரியாகச் செலுத்த வேண்டும். ஏனெனில் இவனுக்குச் செலவைவிட வருமானம் அதிகம். ஏனெனில் இவனுடைய செலவு ஐயாயிரம், வரவு ஒரு லட்சம். இவன் முப்பத்தையா ஆயிரத்தை ஐயாயிரத்தோடு கொடுப்பானனல், அவனிடம் இன்னும் அறுபதினுயிரம், மிச்சமிருக்கும். ஆனல், அவனு டைய செலவு பத்தாயிரமாகவும், வரவு இரண்டு லட்சமாக வுமிருந்தால் இவன் அரைப் பங்கை வரியாகக் கொடுக்க வேண்டும். ஏனெனில் தொண்ணுாருயிரம் அவனுக்கு மிஞ்சும். இத்தகையதொரு படிமுறையைக் கொண்டு வரியை நிச்சயிக்கலாம். இவ்வாறு கிடைக்கும் வருமானமும் திறைசேரியிற் சேர்க்கப்படும்.
ஆனல், பின்னே கூறப்படும் நெருக்கடிகளையும் கவனிக்க வேண்டும். ஒரு விவசாயியின் செலவு பத்தாயிரம் டாலராக இருந்தது. அவனுடைய வருவாய் ஐயாயிரம். அவனுக்குத் திறைசேரியிலிருந்து உதவி கிடைக்க வேண்டும். அவனுக்கு உதவியாக ஐயாயிரம் டாலர் கொடுக்கப்படும். அதனுல் அவனுக்குத் தேவையுண்டாகாது.
அநாதைகள் கவனிக்கப்படவேண்டும்; கிராமங்களிலே புள்ள முடமானவர்களைக் கவனிக்கவேண்டும். கிராமத்திலே யுள்ள வறியவரைக் கவனிக்கவேண்டும். அவர்களுக்குத் தேவையான செலவெல்லாம் கொடுக்கப்பட வேண்டும். குருடர், செவிடர், வயது சென்றவர் ஆகிய சகலருடைய செளகரியங்களையும் கவனிக்க வேண்டும். கிராமத்திலே தேவைகளோடு குறைகளோ உடையவர் இருக்கக் கூடாது. எல்லாரும் செளக்கியமாக வாழ்வார்கள். அர சி ய ல் சமுதாயத்திலே எவ்விதப் பிரிவும் உண்டாகமாட்டாது.

67
எனவே, பண்டகசாலையின் செலவினங்களும் நடவடிக் கைகளும் தெளிவாக்கப்பட்டுள்ளன. இதன் வருமானமுங் காட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரங்களைப் பார்ப்பதற் காகக் கிராமத்திலே சில தர்மகர்த்தாக்களை மக்கள் தெரிவு செய்யவேண்டும். விவசாயிகள் கவனிக்கப்படுவார்கள். இந்தச் செலவினங்கள் எல்லாம் கொடுக்கப்பட்ட பின்னர், பண்டகசாலையில் பணம் மிஞ்சினல் அது தேசியத் திறை சேரியிற் சேர்க்கப்படும்.
கிராமத்திலே மிக ஏழைகள் கூடச் செளக்கியமாயிருக்க வும், அநாதைகள் சந்தோஷமாய் வாழவும், எவரும் அநாதரவான நிலையிலிருக்காமலும், சுகசிவனம் நடத்து வதற்காகவே இந்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
பெரிய நகரங்களுக்கு பெரிய எடுப்பிலே ஒர் அமைப்பு ஏற்படுத்தவேண்டும். இதைப்பற்றி விபரங் கொடுப்ப தானுல் அது மிக விரிவானதாயிருக்கும்.
இந்த அமைப்பின் கீழே அரசியல் சமுதாயத்தின் ஒவ்வோர் அங்கத்தவரும் எவருக்கும் கடமைப்படாமல் சுகமாகவும் செளக்கியமாகவும் சந்தோஷமாகவுமிருப்பார் கள். ஆனல், பதவி உயர்வு தாழ்வு இருந்தே தீரும். அரசியல் சமுதாயம் ஒரு சைனியம் போன்றது. சைனியத் தில் ஒரு தளபதியிருப்பார். சார்ஜன் ஒருவர் இருப்பார். மார்ஷல் ஒருவர் இருப்பார். காலாட்படையிருக்கும். ஆனல் எல்லாரும் உயர்ந்த சுகத்தையும் சுபீட்சத்தையும் அனுபவிக்க வேண்டும். 婴
கடவுள் பட்சபாதமுள்ளவரல்லர். அவர் ஆள்களுடைய அந்தஸ்தைக் கவனிப்பவரல்லர். எல்லாருடைய நன்மைக் கும் ஏற்பாடு செய்துள்ளார். மழையும் வெய்யிலும் எல்லாருக்கும் பொது, நிலத்தின் பசுமை எல்லாருக்கும் சொந்தமானது. ஆதலால் மனிதகுலம் அனைத்துக்கும் சிறந்த சுகமும், மேலான செளக்கியமும், நன்மையுமிருக்க வேண்டும் .

Page 37
68
சிலர் சந்தோஷமாகவும், வேறு சிலர் துன்பத்திலு மிருக்கும் நிலைமை ஏற்படுமானல், சிலர் அளவற்ற செல்வ மும், மற்றவர் மிகுந்த வறுமையுடையவராயிருக்கும். நிலைமை உண்டாகுமானல், மனிதன் எவ்வாறு சந்தோஷமா யிருப்பது. கடவுளின் அன்பை எவ்வாறு பெறுவது? கடவுள் எல்லாரிடத்தும் அன்புடையவராயிருக்கிருர், மனிதரெல் லாம் சுகமாயிருந்தால்தான் கடவுளுக்குப் பிரிதீயாயிருக் (5 L D.
பாரசீகத்திலே ஒரு மன்னன் ஒரு நாளிரவு கவலையற்ற பேரின் பத்தில் மூழ்கியிருந்தான். அளவுகடந்த ஆனந்தத் தினல் அவன் ஒரு மனிதனைப் பார்த்து 'என் வாழ்நாளிலே இன்றுதான் எனக்கு மிக இன்பமான நாள். கடவுள் நாமம் வாழ்க, எங்கே பார்த்தாலும் சுபீட்சமும், ஐசுவரியமும் புன்னகை புரிந்து கொண்டிருக்கின்றன. கஜானுவில் நிறையப் பணமுண்டு. எனது சைனியம் நன்முகக் கவனிக் கப்படுகிறது. என்னிடம் பல அரண்மனையுண்டு. எல்லை யற்ற நிலமுண்டு; என் குடும்பத்தவர் நன்ருயிருக்கிருர்கள். எனது கெளரவமும் இறைமையும் பெரிது. இதற்கு மேல், எனக்கு என்ன வேண்டும்." என்று கூறினன்.
வாசலில் நின்ற அந்த ஏழை பின்வருமாறு கூறினன். **ஒ! அன்புள்ள ராஜனே! நீ சகல வகையிலும் சந்தோஷமா யிருக்கிருய் என்று வைத்துக் கொள்வோம். உனக்கு எந்த விதமான துக்கமோ, கவலையோ இல்லை. ஆனல் எங்களைப் பற்றி நீ கவலைப்படவில்லையா? உன்னைப் பொறுத்தவரையில் உனக்குக் கவலையில்லை என்று கூறுகின்ரு ய், ஆணுல் உன் தேசத்திலே வாழும் வறியவரைப் பற்றி நீ கவலை கொள்வ தில்லையா? நீ இவ்வளவு செளபாக்கியத்திலிருப்பதும் நாம் இவ்வளவு வறுமையிலிருப்பதும் பொருத்தமா? நாம் இவ்வாறு கவலையுற்றிருக்க நீ எப்படி நிம்மதியாக உன் அரண்மனையில் வாழுவாய். உனக்குத் து ய ர மே 1ா கவலையோ இல்லையென்று எப்படிக் கூறுவாய்? மன்னன் என்ற முறையில் நீ உன்னில் மாத்திரம் அக்கறை கொண்

69
டிருப்பது பொருத்தமா? உன்னுடைய பிரசைகளைப் பற்றி நீ சிந்திக்கவேண்டாமா? நாம் செளக்கியமாயிருந்தாற்ருன் நீயும் செளக்கியமாயிருக்க முடியும். நாம் வறுமையில் துடிக்க நம் அரசனென்ற முறையில் நீ எப்படிச் சந்தோஷ மாயிருக்க முடியும்?
இக் கதையின் அர்த்தம் இதுதான். நாமெல்லாம் ஒரு பூகோளத்திலேதான் வசிக்கிருேம். உண்மையில் நாம் ஒரு குடும்பத்தையே சேர்ந்தவர்கள். நாமொவ்வொருவரும் இக் குடும்பத்து உறுப்பினர். நாமெல்லாம் மேலான சுகத் தோடும் சந்தோஷத்தோடும் வாழவேண்டும். கடவுளுக்குப் பிரியமான நீதியான நல்ல ஆட்சியின் கீழிருக்கவேண்டும். இவ்வாறு எமக்குச் சந்ாதஷேத்தையுண்டாக்க வேண்டும். வாழ்வுநிலையற்றது.
மனிதன் தன்னலத்தை மாத்திரம் கவனிப்பவனுணுல் அவன் மிருகத்துக்குச் சமம். ஏனெனில் மிருகங்களே இவ்வாறு தன்னலம் பார்ப்பவை, ஆயிரம் ஆடுகளைக் கூபக் கரைக்குக் கொண்டுவந்து 999ஐக் கொன்ருல் எஞ்சிய ஆடு தன் பாட்டிற்குப் புல் மேய்ந்துகொண்டிருக்கும். மற்ற ஆடு களுக்கு என்ன ஆயிற்றென அது அக்கறை கொள்வதில்லை. தன்னலத்தையே கவனிப்பது மிருக சுபாவம் தன்னந்தனி யாக ஏகாந்தமாய் வாழ்வது மிருக சுபாவம். தன் சொந்த நன்மையை மாத்திரம் கவனிப்பது மிருகத்தின் சுபாவம். மனிதன் மனிதனுயிருப்பதற்காகவே படைக்கப்பட்டான். அதாவது நேர்மையாகவும், நீதியாகவும், கருணையாகவும், தன்னினத்தவர்க்கு அன்பாகவும் இருப்பதே மனித சுபாவம்.
மற்றவர் வறுமையிலும் துன்பத்திலும் வருந்தத் தான் - மாத்திரம் சுகமாயிருக்கவேண்டுமென நினைப்பது மிருக சுபாவமேயன்றி மனித சுபாவ் மன்று. மற்றவர்கள் செல் வத்தை அனுபவிக்கும் பொருட்டு ஒருவன் தான் துன்பத் துக்குள்ளாக விரும்பவேண்டும். மற்றவர்கள் சந்தோஷ மும் நன்மையும் அடையும் பொருட்டுத்தான் துன்பத்தை

Page 38
70
யும் கஷ்டத்தையும் அனுபவிக்கவேண்டும். இதுவே மனிதப் பண்பு. இதுவே மனிதனுக்குச் சால்பு; இல்லாவிட்டால் மனிதன் மனிதன் அல்லன். அவன் மிருகத்திலும் கேவல மானவன்.
தன்னலத்தையே கருதிக்கொண்டு மற்றவர்களைப் பற்றி அக்கறையில்லாதிருப்பவன் மனிதனிலும் பார்க்கக் குறைந்த வன். ஏனெனில் மிருகத்துக்குப் பகுத்தறியும் தன்மை கிடையாது. ஆனபடியால் மிருகத்தை நாம் மன்னித்து விடு கி ருே ம். மனிதனிடத்தோ பகுத்தறிவுண்டு. நீதி அநீதியை உய்த்துணரும் அறிவுண்டு. கருனைப் பண்புண்டு. இவ்வளவு பண்புகளையும் தன்னகத்துக் கொண்டு அவற்றைப் பயன்படுத்தாதுவிடக்கூடாது. தன் சுகத்தை மாத்திரம் கருத்தில் கொள்ளும் வன்னெஞ்சகரை மனிதரென்று கூறக் dial-IT gil.
மற்றவர் நன்மைக்காகத் தன் சொந்த நலனைக் கருதாது விடுபவனே மனிதன். மற்றவர் நலனுக்காக அவன் தனது சுகங்களைத் தியாகஞ் செய்கிருன். மனிதகுலத்தின் வாழ்வுக் காக அவன் தன்னுயிரைத் தியாகஞ் செய்யக்கூடியவனு பிருக்கவேண்டும். மனிதகுலத்துக்கு அவனே கெளரவமளிப் பவன். அவனே மனிதகுலத்துக்கு மகிமையளிப்பவன். அவனே நித்தியானந்தத்தை அனுபவிப்பவன். அவனே கடவுள் சந்நிதானத்துக்கு அணுக்கள். நித்தியானந்தத்தின் பிரதிநிதி அவனே. இல்லாவிட்டால் மனிதர் மிருகங்களைப் போல்வர். மிருக சுபாவங்களைக் காட்டும் மிருகங்கள், என்ன வேற்றுமை? என்ன தனிச் சிறப்புரிமை? என்ன நிறைவு? ஒன்றுமில்லை. மிருகங்கள் மனிதரை விடச் சிறந்தவை. தம்மைப்பற்றியே சிந்தித்து மற்றவர்களின் தேவையை அலட்சியஞ் செய்தல்.
உலகிலே தோன்றிய மிக உயர்ந்த மனிதர்-தீர்க்கதரிசி களினிடையே என்ருலென்ன, தத்துவஞானிகளிடையே என்ருலென்ன எல்லாரும் தமது சுகத்தைத் தியாகஞ் செய்
ܓ ܕ *

7
தார்கள். எப்படியென்று சிந்தித்துப் பாருங்கள். தமது இன்பத்தை மற்ற வர் நன்மைக்காகத் தியாகஞ்செய் தார்கள். தமது உயிரையே அரசியல் சமுதாயத்துக்காகத் தியாகஞ் செய்தனர். பொது நன்மையை உத்தேசித்துத் தமது செல்வத்தைத் துறந்தனர். மனித குலத்தின் கெளர வத்துக்காகத் தமது கெளரவத்தைத் துறந்தனர். எனவே மனிதகுலம் ஈட்டக்கூடிய பெரும்பேறு இதுவே.
நீதியை மனிதனிடம் நிலைக்கச் செய்யுமாறு கடவுளிடம் நாம் பிரார்த்திப்போமாக. சகலருடைய நன்மைக்காகவும்: அவர்கள் முயல்வாராக. அதன் பயணுக மக்கள் எல்லாரும் சுகத்தோடும் சுபீட்சத்தோடும் வாழ்வாராக. அப்போது இம் மண்ணுலகம் விண்ணுலக ராச்சியமாகிவிடும். இந்தப் பஞ்சபூதச் சேர்க்கையான உலகம் விண்ணுலகத்துக்கு நிகராகும். கடவுளடியாரெல்லாம், மிக்க மகிழ்ச்சியோடும் ஆனந்தத்தோடும் சந்தோஷத்தோடும் வாழ்வார். மனித குலத்தில் அத்தகைய மகிழ்ச்சி உண்டாகும்படி நாம் முயன்று எமது சிந்தனைகளை அதிற் செலுத்தவேண்டும்.
பொதுநலக் கூட்டுத்தத்துவம் பற்றிய பிரச்சினை மிக முக்கியமானது. சம்பள உயர்வுபெற வேலைநிறுத்தஞ் செய்வதால் இது தீர்ந்துவிடாது. உலகத்து அரசுக ளெல்லாம் ஒன்றுகூடி ஒரு சபையை உண்டாக்கவேண்டும். அதன் அங்கத்தவர் பல தேசத்துப் பாராளுமன்றங்களாலும் பிரபுக்களாலும் தெரிந்தெடுக்கப்பட வேண்டும். முதலாளி கள் பெரிய நட்டமடையாமலும், தொழிலாளிகள் வறுமை யடையாமலும் ஏற்ற முறையில் மிகுந்த புத்திசாலித்தனத் தோடும் அதிகாரத்தோடும் திட்டமிட வேண்டும். மிக்க நிதானத்தோடு சட்டமியற்றப்படவேண்டும். தொழிலாள ருடைய உரிமைகள் பதுகாக்க்ப்பட வேண்டுமெனப் பொது மக்களுக்கு அறிவித்தல் கொடுக்கவேண்டும், முதலாளி களுடைய உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். இரு பக்கத்தவரது சம்மதத்தோடும் அத்தகைய பொதுத்

Page 39
72
திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு வேலைநிறுத்த மேற் பட்டால், உலகத்து அரசுகளெல்லாம் அதனை எதிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் தொழிலாளர் பிரச்சினை பெரிய சேதத்தை விசேடமாக ஐரோப்பாவில் உண்டாக்கும். கொடிய சம்பவங்கள் நிகழும். உதாரணமாக நிலம், சுரங்கம், தொழிற்சாலை என்பவற்றின் சொந்தக்காரர் தமது வருவாயைத் தொழிலாளிகளோடு பகிர்ந்துகொள்ள வேண்டும். உற்பத்திப் பொருளில் ஒரு நியாயமான விகிதத்தைத் தொழிலாளருக்குக் கொடுக்க வேண்டும். இதன்மூலம் தொழிலாளர் தமது சம்பளத்தைவிட தொழிற் சாலையிலிருந்து வரும் பொது வருமானத்திற் கொஞ் சத்தைப் பெறுவதன்மூலம் தமது வேலையில் கண்ணுங் கருத்துமாயிருட் பார்கள்.
இனிமேல் தருமச் சொத்து என்பது இல்லாமற்போகும். தருமச்சொத்து என்ற விஷயம் முற்ருக நீக்கப்படும். மேலும், பத்தாயிரம் பங்குகொண்டு ஒவ்வொரு தொழிற் சாலையும், இரண்டாயிரம் பங்கைத் தொழிலாளருக்குக் கொடுக்கவேண்டும். கொடுத்து அவற்றை அவர்களின் பெயரில் எழுதிவிடவேண்டும். மற்றவை முதலாளிக்கு விடப் படும். பின்னர் மாத முடிவிலோ வருட முடிவிலோ வருமா னத்திலே செலவு, சம்பளவகையெல்லாம் கழித்த பின்னர் பங்குத் தொகை, விகிதப்படி வரும் வருமானத்தை இரு பகு தியாரும் பிரித்துக்கொள்ளவேண்டும். இதுவரை உண்மை யில் பொதுமக்களுக்குப் பெரும் அநீதி செய்யப்பட்டது. தற்போதைய முறை தொழிலாளருக்குத் திருப்தியைக் கொடுக்கக்கூடியதன்று. ஆனபடியால் சட்டங்கள் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் ஒவ்வொரு மாதமும் வருடமும் வேலைநிறுத்தஞ் செய்வார்கள். ஈற்றிலே முதலா ளிகள் நட்டமடைவார். முற்காலத்திலே துருக்கிச் சைனி யத்தில் வேலைநிறுத்தம் நடந்தது. ‘எங்களுடைய சம்பளம் மிகக் குறைவு. அதை உயர்த்தவேண்டுமென்று அரசாங்கத் துக்குச் சொன்னர்கள். அரசாங்கம் அவர்களுடைய கோரிக்
 

73
கைகளுக்கு இணங்கிற்று. கொஞ்சக்காலத்தின் பின்னர் அவர்கள் மறுபடியும் வேலைநிறுத்தஞ் செய்தார்கள். ஈற்றில் எல்லா வருமானமும் அவர்களுக்கே சென்றது. நாங்கள் அதிகம் சம்பளம் பெறக்கூடிய முறையில் நீ ஏன் எங்கள் சம்பளத்தை உயர்த்தவில்லை' எனக் கூறி அரசனைக் கொன்ருர்கள்.
சட்டமின்றி நாட்டில் மக்கள் வாழமுடியாது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதானுல் கடுமையான சட்டஞ் செய்ய வேண்டும். இதில் எல்லா அரசாங்கங்களும் சேர்ந்து சட்டத்தைப் பாதுகாக்கவேண்டும்.
பொல்ஷிவிக் கொள்கைப்படி பலாத்காரத்தினலே தான் சமத்துவம் நிலை நிறுத்தப்படுகிறது. உயர் பதவியி லுள்ளவர், செல்வர் ஆகியோருக்கெதிரான பொதுமக்கள் அவர்களின் நன்மையைப் பகிர்ந்துகொள்ள வி ரு ம் பு கின்றனர்.
ஆனல் தெய்வீகப் போதனைகளில் சமத்துவம் சுயேச்  ைச யா ன விருப்பத்தின்படி கொண்டுவரப்படுகிறது. செல்வரும் உயர் குடிமக்களும் தமது சொந்த நலனையே கருதி வறியவருக்கு உதவிபுரிய வேண்டும். இது சுயவிருப் பத்தின்படி உண்டாக வேண்டும். மனிதகுலத்தின் உயர்ந்த குணத்தினலும் உத்தமமான பண்பினுலும் இந்தச் சமத் துவம் உண்டாக வேண்டும். 9ܓܢ

Page 40
உண்மையின் பிரமாணங்கள்
கடந்த வருடம்* நான் லண்டனுக்கும், பாரிஸுக்கும் போனபோது ஐரோப்பாவிலுள்ள உலோகாயத தத்துவ ஞானிகளைச் சந்தித்துப் பேசினேன். இயற்கை பற்றிய அறிவைப் பெறுவதானுல் மாருத ஒரு விதியை அனுசரித்தே அதைப் பெறவேண்டுமென்பதும் அந்த விதிப்படி புலன்கள் மூலமே கணக்குப் பிசகாது அச்சொட்டாக அறிவைப் பெற வேண்டுமென்பதும் அவர்கள் முடிவின் அடிப்படையாகத் தெரிந்தது. உதாரணமாகக் கண் ஒரு நாற்காலியைக் காண்கின்றது. ஆனபடியால் அந்த நாற்காலி உண்டு என முடிவு செய்யவேண்டும். கண் வானவெளியைப் பார்க் கிறது. அங்கே சூரியன் தோன்றுகிருன். நான் இந்த மேசையிலே பூக்களைக் காண்கிறேன். அவற்றின் நறு மணத்தைச் சுவாசிக்கிறேன். வெளியே சத்தங்களைக் கேட்கிறேன். இத்தியாதி. இதுதான் காட்சிக்கும் அனு மானத்துக்கும் உதவும் நிலையான கணிதவிதி. இதில் எவ்விதச் சந்தேகமுமில்லை. இந்தப் பிரபஞ்சம் எங்கள் புலன்களுக்கு விஷயமாகும் பொருளானபடியால், இதற்கு நிரூபணம் தேவையில்லை. அது தானகவே போதரும் ஒரு
விஷயமாகும். அதாவது நமது அறிவெல்லாம் புலன்கள் மூலமாகவே பெறப்படுகிறது என்பது. அதாவது மனிதன்
சகல அறிவையும் புலன்களின் காட்சி மூலம் பெறுகிறன்; அறிவுக்குப் பிரமாணம் புலக்காட்சியே என உலோகாயதர் கருதுகிருர்கள். கிரேக்கரும் ரோமரும் பகுத்தறிவுதான்
உண்மையை ஆராய்வதற்குப் பிரமானம் எனக் கொண்"
டார். நிரூபிக்கக் கூடியதும், விவேகத்துக்கு ஏற்புடையதும், உண்மையெனக் கொண்டன்ர். மற்ருெரு பிரமாணம், சுருதியும் தீர்க்கதரிசிகளின் வாக்குமென்பர், இறைமை
நூலார். சமயவாதிகளும், பிரமவித்தையில் வல்லுநரும்.
*五9覆及
 

75
அருட்கிளர்ச்சி மூலம்தான் மனிதன் தெரியாதவற்றைத் தெரிந்து கொள்கிருன் என்பர். சுருக்கமாகக் கூறுவதானல், இந் நான்கு பிராமணங்களும் பின்வருமாறு: முதலாவது புலக்காட்சி, இரண்டாவது விவேகம், மூன்ருவது சுருதி (ஆகமம்), நாலாவது அருட்கிளர்ச்சி.
ஐரோப்பாவிலே, லோகாயதச் சார்பான தத்துவ ஞானிகட்கும், விஞ்ஞானிகட்கும் புலக்காட்சிப் பிரமாணம் , நம்பத்தக்க பிரமாணமன்றெனக் கூறினேன். உதாரண மாக ஒரு கண்ணுடியையும் அதிலே எதிரொளிக்கும் நிழல் களையும் பாருங்கள். இந்த நிழல்கள் உடலுள்ள உருவங்க ளல்ல. அவை நிழல்களே, ஆனல் கண்ணுடியை முன்னர்க் காணுத நீங்கள் அவை பிரத்தியட்ச உருவங்களென்றே கருதுவீர். வனந்தரத்திலே போனல், கானல் நீரைக் கண்டு அது உண்மையான நீர்த்தடாாமென்று நினைப்பீர்கள். அது வெறும் போலித்தோற்றமே. ஒரு கப்பல் தளத்திலே நிற்கும்போது கரையானது நகர்ந்து கொண்டிருப்பது போலத் தெரியும். ஆனல் நிலம் அசையாதிருப்பதையும் நாம் நகர்ந்து கொண்டிருப்பதையும் அறிவோம். பூமி அசையாதிருக்கச் சூரியன் அதைச் சுற்றி வட்டமிடுவது போலத் தெரியும். இது வெறுந்தோற்றம். சூரியன் நிலையாயிருக்கப் பூமி சுற்றுகிறதென்பதே இப்போது அறியப்பட்ட உண்மை. சூழை விரைவாகச் சுற்றினுல் தீவட்டம் கண்முன் தோன்றும். ஆனல் அது ஒரு சூழ் என்பது எமக்குத் தெரியும். நிலத்திலே ஒரு நிழல் அசை வதைக் காணுகிருேம். ஆனல் அது வெறும் நிழல். அதற்குத் தூலமான வடிவங் கிடையாது. வனந்தரங் களிலே மாயத்தோற்றங்களுண்டாவது சக சம். நான் ஒரு முறை கானல் நீர்க் காட்சியைக் கண்டேன். அதில் சாத்துக் கூட்டம் வானத்தை நோக்கிச் செல்வதைக் கண்டேன். வடக்கே வெகு தொலைவில் வேறு வகையான மாயத்தோற். றங்கள் தோன்றி எமது காட்சியை மயங்க வைக்கின்றன. சில சமயம் மூன்று அல்லது நான்கு சூரியர் பிரகாசிப்பதைக் காணுகிருேம். விஞ்ஞானிகள் இவற்றைப் "போ லி

Page 41
76
ஞாயிறு" என்று கூறுவர். ஆனல் சூரியன் ஒன்றே. அது அசைவதில்லை என்பதை நாம் அறிவோம். சுருக்கமாகக் கூறுவதானல், புலன்கள் அடிக்கடி வஞ்சிக்கப்படுகின்றன என்பதையும், போலியை யதார்த்தமானதிலிருந்து பிரிக்க முடியாதிருக்கிருேமென்பதையும் நாமறிவோம்.
இரண்டாவது பிரமானத்தை நாம் பகுத்தறிவு என்று கூறுனுேம். இதுவும் நம்பிக்கை வைக்கக்கூடியதொரு பிராமணமன்று. இந்த உலகில் எத்தனையோ விதமான அபிப்பிராயங்களுண்டு. மாறுபட்ட அபிப்பிராயக் கடலால் நாம் சூழ்ந்திருககிருேம். பகுத்தறிவுதான் உண்மையை அறிவதற்குப் பிரமாணமானல், அபிப்பிராயங்கள் ஏன் வேறுபடுகின்றன. தத்துவஞானிகள் தம்முள் வித்தியாச மான கருத்தை வைத்திருப்பதற்குக் காரணமென்ன? மனிதனுடைய பகுத்தறிவில் அதிக நம்பிக்கை வைக்கக் கூடாது. அது ஒருபோதுந் தவருத பிரமாணமாகக் கொள்ளக்கூடாது என்பதற்கு இது சான்ருகும். உதாரண மாக முன்னை நாள்களில் கண்டறிந்த புதிய கண்டுபிடிப்பு களும், விஞ்ஞானப் பிரகடனங்களும் இன்றைய அறிஞரால் அடிக்கடி தவறெனக் காட்டப்படுவதோடு கைவிடப்பட்டு வருகின்றன. கணித வல்லுநரும், வானநூலாராய்ச்சி யாளரும், ரசாயன விஞ்ஞானிகளும், முன்னையோர் கண்ட முடிவுகளை அடிக்கடி தவருனவையே நிரூபித்து அவற்றைத் தள்ளி வருகிருர்கள். ஒன்றும் உதவியுடையனவன்று; ஒன்றும் முடிவானதன்று. எல்லாம் மாறிக்கொண்டே வரு கிறது. மனிதனுடைய பகுத்தறிவு புதிய புதிய வழிகளில் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது. தினமும் புதிய முடிவுகள் செய்யப்படுகின்றன. இன்று உண்மையெனக் கண்ட பல விதிகள் வருங்காலத்தில் தவருனவையென நிரூபிக்கப்பட்டுத் தள்ளப்படும். இவ்வாறே இம் முயற்சி எல்லையின்றி நடைபெறும். ليا
மூன்ருவது பிரமாணமான ஆகமும் அத்தகையதே. இறை நூலாளர் அறிவுக்குப் பிரமாணமெனக் கொண்டவை

77
யெல்லாம், நம்பத்தகாதவையாகவும், உறுதியற்றவையாக வும் காணப்படுகின்றன. சமய மரபுகள், சமய ஆசுமங் களின் விளக்கமாகவும், விரிவுரையாகவுமிருக்கின்றன. இவ் விரிவுரைகளும் விளக்கங்களுப் எவ்வாறு பெறப்பட்டன. மனிதனுடைய விவேகத்தினலேதான் இறைவனுகமத்தை, வாசிக்கும் போது முடிவு செய்வதற்கும் விளக்கம் பெறு வதற்கும் சாதனமாயுள்ளது விவேகம். விவேகமென்பது மனமே, பூரணமான விவேகமில்லாவிட்டால், கடவுள் வாக்குகளின் பொருளை எவ்வாறு விளங்கிக் கொள்வோம். மேலே எடுத்துக்காட்டியவாறு மனிதனுடைய விவேகம் அதன் இயல்புக்கேற்றவாறு முடிவுள்ளதும் தவறுடையது மாகும். அது மெய்ம்மையை ஆராய மு டி யா து. மெய்ம்மையே எல்லையற்ற வாக்கு. ஆகமத்துக்கும் விளக்கங் களுக்கும் மூலமாயுள்ளது மனிதனுடைய விவேகமானபடி யாலும், மனிதனுடைய விவேகம் தவறுடையதாயிருப்ப தாலும். அதன் துணையாக வரும் முடிவுகளை எவ்வாறு உண்மையான அறிவாகக் கொள்வது?
நாலாவது பிரமானம் உள் ள க் கிளர்ச்சியென்று கூறினுேம். இதனல் உண்மையறிவு பெறலாமெனக் கூறப் படுகிறது. உள்ளக் கிளர்ச்சியென்ருல் என்ன? அது மனித னுடைய உள்ளத்தின் உட்பாய்வு, மனித குலத்தைத் துன்புறுத்தும், அசுரத்தூண்டுதல்கள் எவை? அவையும் உள்ளத்தின் உட்பாய்வே. இவற்றிடையே உள்ள வித்தியாச மென்ன? ஒரு கேள்வி பிறக்கிறது. நாம் கடவுளிடமிருந்து வரும் அருட் கிளர்ச்சியினல் தூண்டப்படுகிருேமா? அசுரத்தன்மையின் தூ ண் டு த லா ல் உள்ளக்கிளர்ச்சி பெறுகிருேமா என்று நாம் எவ்வாறு கண்டுகொள்வது. சுருக்கமாகக் கூறுவதானல் மனிதனுடைய சடப்பிரபஞ்சத் திலே இந்த நான்கு பிரமாணங்களின் மூலமே அறிவைப் பெறுகிருேம். இவையெல்லாம் தவறுடையன; நம்பிக்கைக்கு ஆதாரமற்றவை. இவற்றைவிட மிஞ்சியிருப்பது என்ன? அறிவின் மெய்ம்மையை எவ்வாறு பெறுவது? இறைவன்

Page 42
78
திருவருளின் பரிசுத்த ஆவியின் மூச்சினுலும் அருட்புதலினு லுமே அதைப் பெறலாம். அதுவே ஒளியும் அறிவும் ஆகும். அது மனிதனுடைய மனத்துக்கு உயிர்ப்புக் கொடுத்து உண்மையான முடிபுகளையும், பூரணமான அறிவையும் உறுதிப்படுத்துகின்றது. இது முடிவான வாதமாகும். தற் போது எமக்குக் கிடைக்கக்கூடிய மனிதச் சார்பான பிரமாணங்களெல்லாம் த வறு ம் குறைபாடுமுடையன, என்பதை அவை காட்டுகின்றன, ஆனல் தெய்வீக அறிவின் பிரமாணம் தவறில்லாதது. எனவே மனிதன் "நான் புலன் களைக் கொண்டு அறிவதால், எனக்கு அறிவுண்டாகிறது என்று சொல்வது பொருத்தமற்றது; விவேகத்தினுல் நிரூ பணஞ் செய்யப்பட்டபடியால் எனக்கு அறிவுண்டாகிறது; மரபுக்கு ஏற்றபடியும், பரிசுத்த ஆகமத்தின் விளக்கப்படியு மிருப்பதால் எ ன க் கு அறிவுண்டாகிறது." அல்லது எனக்கு உள்ளக் கிளர்ச்சியுண்டாகியிருப்பதால் எனக்கு அறிவுண்டாகிறது' என்றெல்லாம் சொல்வது பொருத்த மற்றதாகும். மனிதச் சார்பான சகல பிரமாணங்களும் தவறுடையன. அவை எல்லைக்குட்பட்டன.
4.
 
 

மனிதனும் இயற்கையும்
உலகத்துச் சிருஷ்டியைக் கூர்ந்து கவனிக்கும்போது உலகப் பொருள்களைப் பி ன் வ ரு மாறு பிரிக்கலாம். முதலாவது நிலக் கணிப்பொருள். அதாவது சகல விதமான கூட்டுப்பொருள்கள் வடிவில் காணப்படும் திரவியங்களோ, சடப் பொருள்களோ இரண்டாவது தாவரம். இதனிடம் நிலக்கணியின் பண்போடு வளரும் சக்தியுமுண்டு. இதனல் இது நிலக்கணி உலகிலும் பார்க்க உயர்ந்த நிலையிலுள்ளது. மூன்ருவது மிருகம். இதனிடம் நிலக்கணிப் பண்பும், தாவரப் பண்பும், புலனறிவுச் சக்தியுமுண்டு. நாலாவது மனிதன்-இவனே சிருட்டியில் மிகச் சிறந்தவன். இவனிடம், நிலக்கணி, தாவரம், மிருகம், என்ற உலகங்களின் பண் போடு இயற்கையின் இரகசியங்களை நுனித்து ஆராயும் சக்தியும் உண்டு. இது கீழ்ப்படியிலுள்ள ஏனைய உலகங் களில் இல்லை. இந்த விவேகசக்தியின் விளைவே விஞ்ஞானம். இது மனிதனுடைய விசேடப் பண்பாகும். இந்த விஞ்ஞானச் சக்தி சிருட்டிப் பொருள்களை ஆராய்ந்து அறிவதோடு அவற்றை ஆட்டுவிக்கும் விதிகளையும் ஆராய்ந்தறிகிறது. சடப் பிரபஞ்சத்திலே அடங்கியிருக்கும். விளக்கமற்ற இரகசியங்களைக் கண்டுபிடிப்பது விவேகமே. அது மனித னிடத்து மாத்திரமே காணப்படுகிறது. மனிதனிடத்துக் காணப்படும், உன்னதமானதும், பாராட்டுக்குரியதுமான' சாதனை விஞ்ஞான அறிவும் அதில் கிடைத்த விளைவுகளுமே
யாகும்.
விஞ்ஞானம் வெளியுலகத்து இரகசியங்களின் நிழல்கள் பதியும் கண்ணுடி போன்றது. புராதன காலப் பொருள் களின் அறிவை எங்களுக்கு எடுத்துக் காட்டுகின்றது. நிகழ் காலத்தை இறந்தகாலத்தோடு அது இணைக்கின்றது. கடந்த தூற்றண்டுகளில் வெளியான தத்துவக் கோட்பாடு

Page 43
80
களையும். தீர்க்கதரிசிகளின் போதனைகளையும், முற்காலத்து இருடிகளின் ஞானத்தையும் இன்றைய விஞ்ஞானம், உருவாக்கி வெளிப்படுத்துகின்றது. பழங்காலத்து விஷயங் களை அது கண்டுபிடிக்கிறது. அது முற்காலத்தைப் பற்றியும் இக் காலத்தைப் பற்றியும் வழங்கும் தரவுகளைக் கொண்டு வருங்காலத்தைப் பற்றி நாம் முடிவு செய்யலாம். விஞ்ஞானம் இயற்கையின் ஆளுநர். அதன் இரகசியங் களையும் அதுவே ஆட்சி செய்கிறது. சடப் பிரபஞ்சத்தின் தாபனங்களை ஆராயும் ஒரு செயல் முதல்வர். சிருட்டிக் கப்பட்ட எல்லாம் இயற்கையின் சிறையில் அடங்கியவை. அதன் விதிகளுக்குட்பட்டவை. இந்த விதிகளை அவை அணு வளவும் மீறமுடியாது. எல்லையற்ற, விண்மீன்களைக் கொண்ட வானமும், விண்மண்டலக் கிரகங்களும், அதற்கு அடங்கியவையே. உலகமும், அதன் எண்ணற்ற உயிரினங் களும், சகல நிலக்கணி வகைகளும், செடிகொடிகளும், மிருகங்களும், அதன் இராச்சியத்துக் கடமைப்பட்டவரே. ஆனல், மனிதன் தனது விவேகத்தின் பயனுலும், விஞ்ஞானச் சக்தியைப் பயன்படுததுவதஞலும், இந்த நிலைமையிலிருந்து நீ ங் கி த் தனது விருப்பத்துக்கும் பயனுக்கும் ஏற்றவாறு இயற்கையை மாற்றி மிதப்படுத்தி ஆட்சிக்குட்படுத்தலாம். ‘விஞ்ஞானம் இயற்கை விதிகளை
உடைக்கும்' சக்திவாய்ந்தது.
உதாரணமாக இயற்கை விதியின்படி நிலப்பரப்பிலே வாழ வேண்டியவன் இந்த விதியை வென்று அவன் சமுத்தி ரத்திலே கப்பலில் செல்லுகிருன். விமானங்களின் மூலம் வானத்திலே பறக்கிருன். நீர்மூழ்கிக் கப்பல் மூலம் கடலின் ஆழத்திலே சஞ்சரிக்கிருன், இது இயற்கை விதிக்கு மாமுனது. இயற்கையின் இறைமைக்குப் பங்கம் விளை விப்பது. இயற்கையின் விதிகளும், முறைகளும், மறைந்து இடக்கும் இரகசியங்களும் பிரபஞ்சத்தின் புதிர்களும், மனித ருடைய புதுப்புனைவுகளும், புதிய கண்டுபிடிப்புகளும், எமது விஞ்ஞானப் பேறுகளும், எல்லாம் மக்களுக்குப் புலப்
 

-
8 Ι
படாமல் மறைந்துகிடக்கும். ஆனல், மனிதன் தனது விவேகத்தின் கூர்மையினல் மறைந்த இடங்களிலிருந்து தேடிப்பிடித்து, தெரியும்படி செய்து அவற்றுக்கு விளக்கங் கொடுக்கிருன். உதாரணமாக இயற்கையுள் அடங்கியுள்ள
மர்மங்களில் ஒன்று மின்சக்தி. இயற்கையின் விதியின்படி
இந்தச் சக்தி வெளிப்படாது மறைந்திருக்க வேண்டும். ஆனல், மனிதன் விஞ்ஞான அறிவினல், இயற்கை விதிகளை உடைத்து அதைப் பிடித்துத் தனது உபயோகத்துக்காக அடைத்து வைத்திருக்கிருன்.
சுருக்கமாகக் கூறுவதானல், மனிதன் இந்த விஞ்ஞான ஆராய்க்சிக் கொடையினுல், சிருஷ்டியில் மிக உன்னதமான படைப்பாகவும், இயற்கையின் ஆளுநராகவுமிருக்கிருன். இயற்கையின் கையிலிருந்த வாளைப் பறித்து அதன் தலையிலே பதம் பார்க்கிருன், இயற்கையின் நியதிப்படி இரவு இருள் சூழ்ந்தது. மனிதன் மின்சக்தியின் பயனக இருளை நீக்கி ஒளிமயமாக்குகிறன். மனிதன் இயற்கையிலும் பார்க்க உயர்ந்தவனகிருன், இயற்கையைத் தன் கட்டளைக்கு அடங்கி நடக்கச் செய்கிருன், மனிதன் உணர்ச்சியுள்ள வன்; இயற்கைக்கு உணர்ச்சியில்லை. மனிதனிடம் ஞாபகசக்தியும் பகுத்தறிவுமுண்டு. இயற்கையிடம் அது இல்லை. மனிதன் இயற்கையிலும் பார்க்க உயர்ந்தவன். அவனிடமுள்ள சக்தி இயற்கையிடமில்லை. இந்தச் சக்தியெல்லாம் இயற்கையிட மிருந்தே கிடைக்கின்றனவென்றும், மனிதன் இயற்கையின் ஒரு பகுதியென்றும் கூறப்படலாம். இதற்கு விடையாக இயற்கை முழு நிலையிலுள்ளதென்றும் மனிதன் அதன் ஒரு பகுதியென்றும் வாதித்தால், முழு நிலையிலுள்ள இயற்கை யிடமில்லாத குணங்கள் எப்படி மனிதனிடமுண்டெனக் கேட்கலாம். முழு நிலையிலுள்ள தன்னிடத்துள்ள பண்புகள் பகுதியிடமிருக்க வேண்டுமல்லவா? உதாரணமாக மயிர் மனிதனின் ஒரு பகுதியே. அதனிடம், உடலின் வேறு பகுதி களில் காணப்படாத கூறுகளை அதுகொண்டிருக்க முடியாது. ஏனெனில் உடவின் கூறுகள் ஒன்றே. எனவே, மனிதன்
ஐ,உ.அ.-6

Page 44
82
உடலைப் பொறுத்தவரை இயற்கையின் சுருஞலும் ஆன் மாவைப் பொறுத்ததவரையில், இயற்கைக்கு அப்பாற் பட்ட ஒரு சக்தியைக் கொண்டுள்ளான். அவன் இயற்கை பின் ஒரு பகுதியாயிருந்தால், சடசம்பந்தமான சட்டங் களுக்குட்பட்டவணுயிருந்தால், அவ னி ட ம் இயற்கை மயமான பொருள்களே இருந்திருக்கும். கடவுள் மனிதனுக்கு விசேஷமானதொரு சக்தியைக் கொடுத்திருக்கிருர், அது தான் சிருஷ்டியின் இரகசியத்தை ஆராயக்கூடிய சக்தி. அதனுல் உயர் அறிவைப்பெறலாம். அதன் பயணுகப் பெறக் கூடிய மிக உயர்ந்த பயன் விஞ்ஞான அறிவாகும்.
இந்தக் கொடைதான் மனிதனிடத்துள்ள புகழத்தக்க சக்தி. இதன் துணையினல் மனிதகுலத்தைச் சீர்படுத்த லாம். கடவுளின் இரகசியங்களும், அருளும் வெளிப்படும்.
உலகியல், பெளதிக விஞ்ஞானங்கள் இங்கே போதிக்கப் படுவதாலும்* அவை படிப்படியாக விரிவடைந்து பல பெரும் பேறுகளே வழங்குவதாலும், இதையடுத்து ஆத்மீக அபிவிருத்தி உண்டாகுமெனவும, புற உலக நன்மைகளோடு அது ஒரு சேர வளர்ச்சியடையுமென்றும் நம்புகிறேன். இக் க்லாலயத்திலே உள்ளவர்க்கு உலகியல் அறிவு ஒளியைக் கோடுப்பது போலவே உண்மையான தத்துவ ஞானத்தின் தெய்வீக ஒளியான அக ஒளி, ஆன்மீக ஒளி இந்தத் தாபனத்தை மகிமைப்படுத்துவதாக, தெய்வீக தத்துவ ஞானத்தின் முக்கியமான கொள்கை, உலகம் ஒன்று என்ப தாகும். அதாவது மனித குலத்தின் ஒற்றுமை. கிழக்கை பும் மேற்கையும் இணைக்கும் பந்தம்; மனிதருள்ளத்தை இணைக்கும் அன்புத்தளை.
ஆதலால், மனித இனத்தை ஒன்றுபடுத்த நாம் பெரு முயற்சி செய்யவேண்டும். ந ம து சக்தியனைத்தையும் பயன்படுத்த வேண்டும். டல்லாயிர வருடமாக நாம் போரிலும் இரத்தஞ் சிந்துதலிலும் ஈடுபட்டிருந்தோம்.
* கொலம்பியா பல்கலைக்கழகம், நியுயார்க் நகரம்.

83
இது இனிப்போதும். ஒன்றிணைந்து அன்போடு கூடிவாழ் வதற்குக் காலம் வந்துவிட்டது, பல்லாயிர ஆண்டாக வாளெடுத்துச் சண்டை செய்தோம். சற்றே கொஞ்ச கால மாவது மனிதகுலம் சமாதானமாக வாழட்டும். சரித்தி ரத்தை ஆராய்ந்து பாருங்கள். எவ்வளவு காட்டுமிராண்டித் தனமும், எவ்வளவு இரத்தப் பெருக்கும், யுத்தமும் நடந்து விட்டன. அது ஒன்றில் சமயப் போராயிருந்தது. அல்லது அரசியற் போராயிருந்தது. அல்லது மனிதருடைய நன்மை நீமைகளுக்கான போராயிருந்தது. உலக சமாதானத்தை மனிதகுலம் அனுபவிக்கவில்லை, வருடா வருடம் யுத்தப்படை செய்து குவிக்கப்படுகின்றன. புதிய நுட்பமான கருவிகள் செய்யப்படுகின்றன. கடந்த நூற்ருண்டுகளிலே நிகழ்ந்த யுத்தங்களை எண்ணிப்பாருங்கள். பத்து, ப தி னை ந் து, இருபது ஆயிரம்பேர்தாம் கொல்லப்பட்டார்கள். இன்று லட்சம் பேரை ஒரே நாளில் கொன்றுவிடலாம். முற்காலத் திலே வாளேந்திச் சண்டை செய்தார்கள். இன்று புகையில் லாத துப்பாக்கி. முந்திய காலத்திலே பிரயாணக் கப்பல் களே யுத்தக் கப்பல்களாயிருந்தன. இன்று யுத்தஞ்செய் வதற்கென்றே ஆற்றல்வாய்ந்த கப்பல்கள் உண்டு. யுத்த ஆயுதங்கள் எவ்வளவு பெருக்கமடைத்துள்ளன. அவை எவ்வளவு நுட்பமாகச் செய்யப்படுகின்றன. எம்மையெல் லாம் கடவுள் மனிதராகப் படைத்துள்ளார். ஒரே பூகோ ளத்தின் பகுதிகளே தேசங்கள். நாமெல்லாம் ஆண்டவ னுடைய அடியவர். அவர் எல்லாரிடத்தும் நீதியாகவும் அன்பாகவுமிருக்கிருர், நா மே ன் ஒருவருக்கொருவர் விரோதிகளாயிருக்கவேண்டும்? அவர் எல்லாருக்கும் தேவை யானவற்றைக் கொடுத்திருக்கிருர், நாமேன் ஒருவருடை யதை மற்றவர் பறிக்கவேண்டும்? எல்லாரையும் அவரே பாதுகாத்துப் பரிபாலிக்கிருர், நாமேன் நமது தோழரைக் கொல்லவேண்டும்? இந்தம் பூசலும் பிணக்கும் சமயத்தின் நிமித்தமானல், அது சமயத்தின்'கருத்துக்கும், அத்திவாரத் துக்கும் மாருனது. திர்க்கதரிசிகளெல்லாம் கடவுள் ஒன்று, மனிதகுலம் ஒன்றென்று பிரகடனஞ் செய்துள்ளனர். மனிதர்

Page 45
84
ஒருவரையொருவர் நேசித்துப் பரஸ்பரம் உதவிபுரிய வேண்டுமென்றும், அதுவே முன்னேற்றத்துக்கு வழியென்றும் கூறியிருக்கிருர்கள். சமயம் சம்பந்தமான இக் கொள்கை சரியானல் அதன் மூலாதாரமான கோட்பாடு மனிதகுலம் ஒன்று என்பதே. கடவுள் தூதரின் உண்மை உலக சமா தானமே. இதுவே எல்லாச் சமயத்துக்கும் நீதிக்கும் அடிப் படை. தெய்வீக நோக்கம் மக்கள் ஒற்றுமையாகவும் சமா தானமாகவும் வாழவேண்டும். ஒருவரையொருவர் நேசிக்க வேண்டுமென்பதே. மனித உலகின் பண்பைக் கருதுங்கள். மனிதகுலம் ஒன்று என்பதே அவற்றின் அடிப்படைத் தத்து வமாகும். விவிலிய சுவிசேஷத்தை வாசியுங்கள். வேறு மத ஆகமங்களை வாசியுங்கள். அவற்றின் மூலக்கொள்கைகள் ஒன்றென்பதை அறிவீர்.

அண்டமும் பிண்டமும்
பிண்டத்தின் மெய்ம்மையை ஆராயுமிடத்து அதிலே மூன்று மெய்ம்மைகள் அடங்கியிருப்பதைக் காண்கிருேம். மனிதனிடம் புறமெய்ம்மை அதாவது சடசம்பந்தமான மெய்ம்மையொன்றிருப்பதை அறிகிருேம். இது சட உல கைச் சேர்ந்தது. அதாவது மிருக உலகுக்குரியது. ஏனெனில் சட உலகிலிருந்தே இது தோன்றியது. இந்த மிருகச் சார் பான மெய்ம்மையை மிருகங்களோடு அவன் பகிர்ந்துகொள் கிருன்.
இயற்கையின் நியதிக்கு அடங்கிய முறையில் மனித உடல் மிருகத்தின் உடலைப் போன்றது. மனிதனிடம் மற் ருெரு தத்துவமுண்டு. அது விவேகமென்னும் தன்மை. இந்த விவேகத் தன்மை இயற்கைக்கு அதீதமாக அதன் மேலொங்கி நிற்கிறது.
இன்று நாம் அறிந்து அனுபவிக்கும் விஞ்ஞானங்களெல் லாம் இயற்கையில் மறைந்துகிடந்த இரகசியங்கள். இயற்கை இவற்றை அறியமாட்டாது. இந்த இரகசியங்களை அறிய முடியாத இராச்சியத்திலிருந்து அறிவுக்கு விஷயமாக்கினன் மனிதன். அறியமுடியாத தளத்திலிருந்து அறியக்கூடியி தளத்துக்கு அவன் கொண்டுவந்தான்.
மேலும், வேருெரு மெய்ம்மை மனிதனிடத்துண்டு. அதுவே ஆன்மீக மெய்ம்மை. அதன்மூலம் அவன் ஆன்மீக உண்மைகளை அறி கி ரு ன். இது தெய்வீகமானதொரு இயற்கை உளச் சார்பு, விவேகத்தனம், சடத்தனம் என் பவற்றைச் சார்த்தி மதிப்பிடும்போது இது எல்லையற்யது. இது பரிசுத்த ஆவியின் உயிர்ப்பினுல் இந்தச் சக்தி மணி தனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது சாசுவதமானது:

Page 46
86
அழியாதது; தெ ய் வீ க ப் பரப்பைச் சேர்ந்தது. இயற் கைக்கு அதீதமான இராச்சியத்தைச் சேர்ந்தது. உலகத் துக்கு ஒளிகொடுப்பது இது. மனிதனுக்கு நித்திய வாழ்வை அளிப்பது. இதுவே இறந்தகால நிகழ்ச்சிகளைக் கண்டு வருங் காலத்தைக் காண்பது. சத்திய சூரியனின் ஒளிக்கதிர் இதுவே. இதன்மூலம் ஆன்மீக உலகம் ஒளிபெறுகிறது. தேவ இராச்சியம் முழுவதும் இதனுல் பிரகாசமடைகிறது. இதுவே பேரின்ப உலகை அனுபவிப்பது. இதற்கு ஆதியு மில்லை அந்தமுமில்லை.
பிண்டத்தின் மூன்ருவது மெய்ம்மையான தெய்வீக மெய்ம்மை, உலக பாசங்களிலிருந்து மனிதனை விடுதலை செய் கிறது. இயற்கை உலகிலிருந்து இதன் சக்தி மனிதனைத் தப்பச் செய்கிறது. இவ்வாறு தப்பினுல், ஒளிமயமான தொரு மெய்ம்மையைக் காண்பான். அது கடவுளின் எல்லை யற்ற தன்மை. குருட்டு நம்பிக்கை, கற்பனை உலகம் என் பவற்றிலிருந்து மனிதனை ஒதுக்கிச் சத்திய சூரியனின் கிரணங்களில் மனிதனை அமிழ்ந்தச் செய்யும்.
இது விஞ்ஞானச் சான்றுகளாலும், ஆத்மீகச் சான்று களாலும் நிரூபிக்கப் படுகின்றது.
இயற்கையின் நிலைகளைச் சிந்தித்துப் பார்க்கும்போது எல்லா இயற்கைத் தோற்றங்களும் தனிப்பட்ட கூறுகளால் ஆக்கப்பட்டதைக் காண்கிருேம். இந்தத் தனி உயிர்மக் கூறு உயிருள்ள பொருள்களின் சகல கட்டத்திலும் பிரயாணஞ் செய்து சுழன்று வருகின்றது. இதைப் பற்றி நன்கு சிந்திக்குமாறு வேண்டுகிறேன். இந்த உயிர்மக்கூறு சில காலத்திலே நிலக்கணியுலகத்திலிருந்தது. அவ் வுலகத் திலிருந்தபோது அது பல வடிவங்களையும் மாற்றங்களையும். அடைந்தது. நிலக்கணியுலகில் தனது யாத்திரையை நிறை வாக்கிய பின்னர், தாவர உலகுக்கு ஏறிற்று. அங்கேயும் பல உருமாற்றங்களையும் வடிவங்களையும் எடுத்த பின்னர் உயிர்மக்கூறு மிருக உலகத்துக்கு உயர்ந்தது.

87
மிருக உலகத்திலே பல வடிவங்களை யடைந்த பின்னர் மனிதருலகுக்கு உயர்கிறது. மனித உலகத்திலும் பல உருமாற்றங்களையும், திரிபுகளையுமடைந்து வ ரு கிற து. சுருக்கமாகக் கூறுவதானுல் இந்த மூலமுதலான அணு வாழ்வின் சகல படிகளிலும் பெரும் பிரயாணங்களைச் செய் துள்ளது. ஒவ்வொரு பிரயாணத்திலும் விசேடமான தனிப்பட்ட பண்பையோ குணத்தையோ பெற்றுள்ளது.
இதனைக் கருத்திற் கொண்டே தெய்வீகத் தன்மை வாய்ந்த பெரும் தீர்க்கதரிசிகள் பின்வரும், திட்பநுட்ப உரையைக் கூறியுள்ளனர். 'எல்லாப் பொருள்களும் ம ற்  ைறய ப் பொருள்களெல்லாவற்ருேடும் தொடர் புடையன. ' தனிப்பட்ட ஒவ்வொரு இயல் நிகழ்ச்சியும், இறைவனின் அடிக்கோளை அனுபவித்துள்ளது. இந்த எல்லை? யற்ற உள்ளணுத் துகள்கள் ஒவ்வொன்றும் நிறைவுப் பண்பைப் பெற்றுள்ளன. -
இந்தப் பூ ஒரு காலத்திலே மண்ணிலிருந்து, தோன் றிற்று. மிருகம் இதனை அல்லது இதிலிருந்து உண்டாகும் பழத்தை உண்டது. இவ்வாறு அது மிருக உலகத்துக்கு உயர்ந்தது. மனிதன் மிருகத்தின் மாமிசத்தை உன்கிருன். அதனல் அது மனித உலகுக்கு உயர்கிறது. ஏனெனில் எல்லா இயற்கைத் தோற்றமும் உண்பதும், உண்ணப்படு வதுமான இரு பிரிவாகப் பிரிந்துள்ளது. இந்த அணுக்களின் ஒவ்வோர் ஆதிமூல அணு தனிப்பட்ட முறையில், கூருகாத நிலையில், புலனறிவாற்றலுடைய படைப்புகளெங்கும், சஞ்சரித்துப் பலவகையான மூலக்கூறுகளின் கூட்டத்தில் அடிக்கடி கலந்திருக்கிறது. இதனுலேதான் சக்தி சேமிக்கப் படுதலும் இயற்கை நிகழ்ச்சியின் எல்லையில்லா நிலையும் உண்டாகிறது. இதனுலேதான் இ ய ம்  ைக நிகழ்வு அழியாதும் மாருதும், திரி யா து ம் உண்டாகிறது. ஏனெனில், உயிர் அழியாது ஆணுல் மாற்றத்துக்குள்ளாகும்.
தோற்றத்தளவில் உண்டாகும் அழிவு இதுதான். வெளி உருவம், இந்த மாற்றங்களெல்லாவற்றுக்கும் ஆளாகிறது"

Page 47
88
மறுபடியும் இந்தப் பூவை உதாரணமாகக் கொள்ளுவோம். இது அழிவற்றது. ஆனல் அதன் வெளியுருவம் அழிகிறது. ஆனல் மூலக்கூறுகள் இதன் ஆக்கத்துக்கு ஏதுவாயிருந்த பகுக்க முடியாத மூலக்கூறுகள் நிரந்தரமானவை. மாற்ற மில்லாதவை. எனவே, எல்லா இயற்கைத் தோற்றங்களின் தன்மையும் மாற்றமில்லாதவை. அழிவு, மரணம் என்பன உருவங்கள், படங்கள் என்பவற்றின் மாற்றமே. இவற் றுக்குப் பின்னலிருக்கும் தத்துவங்கள் அழியாதவை. தத்து வங்களின் ஒவ்வொரு தத்துவமும் கடவுளின் வரப்பிர சாதமே.
கடவுளின் தெய்வத்தன்மைக்கு ஒரு தொடக்கமுண் டெனச் சிலர் நம்புவர். இந்தத் தொடக்கத்துக்கு முன்னர் க டவு னி ன் தெய்வீகத்தைப்பற்றி அறியவில்லையென்பர். இதனுல் கடவுளின் செல்வாக்கின் செயற்பாட்டை எல்லைப் படுத்தியுள்ளனர்.
உதாரணமாக மனிதன் இல்லாக் காலமொன்றிருந்த தென்றும், எதிர்காலத்திலும் அவன் இல்லாத காலமொன் றுண்டென்றும் அவர்கன் எண்ணுகின்றனர். இத்தகைய கருதுகோள் கடவுளின் சக்தியை எல்லைப்படுத்துகிறது. ஏனெனில், கடவுளின் குணங்களது வெளிப்பாட்டை விஞ்ஞான ரீதியில் அறிந்தாலன்றி வேறெவ்வாறு அறிய
Gυπτι ο .
நெருப்பின் தன்மையை அதன் சூட்டைக் கொண்டே அறிய வேண்டும். அதன் ஒளியைக் கொண்டே அறிய வேண்டும். வெப்பமும் ஒளியும் இந்த நெருப்பிலிருக்க வில்லையானல் நெருப்புண்டென்று நம்மால் கூறமுடியாது.
கடவுள் தமது குணங்களை வெளிப்படுத்தாதிருந்தால், கடவுளுண்டென்று கூற முடியாது. ஏனெனில் கடவுளின் குணங்களிருப்பதனுலேதான் இயற்கைத் தோ ற் ற ம் சிருஷ்டிக்கப்படுகிறதெனக் கூறலாம். உதாரணமாக இப் போது நாம் கடவுளே கர்த்தா என்று கூறுகிருேம். ஆன
 
 

89
படியால் சிருட்டி இருக்க வேண்டும். கடவுளின் இந்த இலட்சணத்தை ஒரு மனிதனே மனிதரோ உணரும்போது தான் அவருக்கு அந்த இலட்சணங்களிருந்தனவென்று கூற முடியாது. நாம் ஒவ்வொன்முகக் கடவுளின் குணங்களைக் கண்டறிகிருேம். இந்தக் குணங்களிருந்த படியாலேதான் அவற்றை நாம் கண்டறியக்கூடியதாயிருந்தது. கடவுளுக்கு ஆதியுமில்லை; அந்தமுமில்லை. அவருடைய சிருட்டியும் ஒரு படித்தன்று. சிருட்டிக்கப்பட்ட பொருள்களுக்குத்தான் கால எல்லையும், படிநிலையுமுண்டு. சிருட்டித் தொழிலுக்கு அவையில்லை. அவை பொருள்களின் வடிவத்துக்கேயுண்டு. அவற்றின் சொரூப லட்சணத்துக்கில்லை. கடவுளின் ஒளியை நிறுத்திவைக்க முடியாது. கடவுளின் இறைமையை இடை மறிக்க முடியாது.
கடவுளின் இ  ைற  ைம காலங் கடந்ததானபடியால், எல்லையில்லாத காலமாக உலகம் சிருட்டிக்கப்பட்டுவந்த தென்பது யூகிக்கப்படுகிறது. இவ் விஷயத்தின் மெய்ம் மையை ஆராயுமிடத்து கடவுளின் வரங்கள் எல்லையில் லாதன; ஆதியந்தமில்லாதன என்பதை அறிகிருேம்.
வியப்புக்குரிய இந்த உலகத்திலே கடவுளின் அவதாரங் களே மிகப்பெரிய வரப்பிரசாதங்களாகும். இதுவே மிகப் பெரிய தரவு. இந்த அவதாரங்களே மெய்ம்மையின் சூரியன் கள். அவதாரங்கள் மூலமே மெய்ம்மை அறியக்கூடியதாகி மனிதனுக்கு உறுதிப்படுத்தப்படுகிறது. அவதாரங்களின்? செல்வாக்கு இல்லாவிட்டால் மனிதன் மிருகத்தின் நிலையை அடைகிருன், தனது விவேகத்தைப் பயன்படுத்தி மனிதன் மிருகத்தின் நோக்கத்தை வளர்க்கிருன். வருங்காலத்திலே கடவுளவதாரம் இல்லையென்று கூறமுடியாது. கடவுள் எல்லையற்றவர். அவர் நோக்கத்துக்கு முடிவேயில்லை. கடவுளுடைய நோக்கத்தை எல்லைப்படுத்தினல், சர்வ வல்லமைக்கு எல்லை வகுக்க முற்பட்டவராகிருேம். சிருட்டிப் பொருள் சிருட்டிகர்த்தாவின் இயல்புக்கு வரைவிலக்கணம் கூற முற்படுகிறது.

Page 48
90
சத்திய ஞாயிற்றின் ஒளிக்கிரணங்களை நிறை மனிதன் எப்பொழுதும் காண்கிருன். கடவுளின் ஒளியின் வருகையை நிறை ம னித ன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிருன், கடவுளின் காரண காரியங்கள் நோக்கங்கள் என்பவற்றைப் பற்றிச் சிந்திக்கிருன், தெய்வத்தின் உண்மைகளுக்கு எல்லை யில்லை என்பதை அறிவான். தெய்வத்தின் பெயர்களுக்கும், குணங்களுக்கும் எல்லையில்லை. கடவுளுடைய அருளும், வரங் களும் எல்லையற்றவை. கடவுளவதாரத்தின் வருகைக். காலத்தினுல் எல்லைப்படுத்தப்பட்டதன்று.
(ل
 
 
 

எல்லாக் காலத்துக்கும் பொருத்தமான
காலவட்டம்
எல்லையற்ற வானமண்டலத்திலே சுழலும், ஒவ்வொரு கோளும், பற்பல காலத்துக்கமையச் சுழன்று கொண்டிருக் கின்றன. ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட கோள்வீதி யுண்டு. அதை அனுசரித்துச் சுழலுகிறது. மறுபடி புதியதொரு கால வட்டத்தை உண்டாக்குகிறது. அவ்வாறே நமது பூமியும் ஒருதரம் சுற்றிவர 365 நாள் ஐந்து மணித்தியாலம் நாற்பத் தெட்டு நிமிஷம் ஒரு பின்னம் அளவான காலத்தையெடுக் கிறது. அதன் பின்னர் அது புதியதொரு காலவட்டத்தை ஆரம்பிக்கிறது. அதாவது, முதல்வட்டம் மறுபடியும் திரும்ப நிகழ்த்தப்படுகிறது. இவ்வாறே முழுப் பிரபஞ்சத்துக்கும், வானமண்டலத்துக்கென்ருலென்ன, ம னி த ரு க் கென்iரு லென்ன பெரிய நிகழ்ச்சிகளின் காலவட்டமுண்டு. இவை முக்கியமான நிகழ்ச்சிகளாகவும், விருத்திகளாகவுமிருக்கும். ஒரு கால வட்டம் முடிந்தாவ், புதியதொரு காலவட்டம் துவங்கும். புதிதாக உண்டாகும் பெரிய நிகழ்ச்சிகளின் பயணுகப் பழைய காலவட்டத்தை "மக்கள் முற்ருக மறந்து போவார். அதைப்பற்றி எந்த விதமான அடையாளம்கூடக் கிடையாது போகும். இருபதினுயிரம் வருடத்துக்கு முற் பட்ட கருமங்களைப் பற்றிய பதிவுகள் இன்று எங்களிடம் கிடையாது. ஆனல், இப் பூமியில் மிகப் பழங்காலந் தொட்டே உயிர்வாழ்வு நடைபெற்றிருக்கிறதென்பதற் குரிய காரணங்களைக் கூறியுள்ளோம். இது ஒரு லட்சமோ இரண்டு லட்சமோ ஆண்டல்ல; பத்து லட்சமோ இருபது லட்சமோ ஆண்டல்ல; இது மிகவும் பழமையானது. அந்தப் பழைய பதிவுகளும் அடையாளங்களும் முற்ருக அழிக்கப் பட்டுவிட்டன.

Page 49
92
அவ்வாறே அவதார புருஷர் ஒவ்வொருவர்க்கும், ஒரு காலவட்டமுண்டு. இந்தக் கால வட்டத்திலே அவருடைய சட்டங்களும், கட்டளைகளும் நிலைநிற்கின்றன. அவை அனு சரிக்கப்படுகின்றன. அவருடைய கால வட்டம் முடிந்தால், புதியதோர் அவதார புருஷர் தோன்றுவார். அவரோடு புதியதொரு காலவட்டம் தோன்றும். இவ்வாறு காலச் சக்கரங்கள் தோன்றி மறைந்து புதுப்பிக்கப்படுகின்றன. இது எல்லாருக்கும் பொதுவானதொரு காலச்சக்கரம் நிறை வாகும்வரை நடைபெறும். அ ப் போது முக்கியமான நிகழ்ச்சிகளும், பெரிய காரியங்களும் ந  ைட பெறு ம். இவை பழைய சம்பவங்களின் அடையாளங்களையும், பதிவு களையும் முற்ருக அழித்துவிடும். பின்னர் மறுபடி புதிய தொரு சாதாரணமான காலச் சக்கரம் உண்டாகும். ஏனெனில், இந்த பிரபஞ்சவிருத்திக்கு முடிவில்லை. இது சம்பந்தமான நிரூபணங்களையும் சான்றுகளையும் முன்னமே கூறியுள்ளோம். இதைத் திருப்பிக்கூற வேண்டிய அவசிய மில்லை.
சுருக்கமாகக் கூறுவதானுல், உலகளாவிய காலச் சக்கரம் நீண்ட காலப் பகுதியையும், கணக்கற்ற அளவிட முடியாத பருவங்களையும், யுகங்களையும் குறிக்கும். அத் தகைய காலச்சக்கரத்திலே கடவுளவதாரங்கள் மிக்க பிரபை யோடு, காணக்கூடிய ராச்சியத்தில் தோன்றும். பின்னர் பெரிய உலகளாவிய அவதாரம் உலகைத் தனது பிரபைக்கு மையமாகக் கொள்ளும். அவருடைய தோற்றம், உலகை முதிர்நிலையடையச் செய்யும். அத்துடன் அந்தக் காலச் சக்கரத்தின் விரிவு மிகப் பெரியது. அவருடைய நிழலிலே வேறு அவதாரங்கள் தோன்றும். அவர்கள் காலத்துக்கேற்ற வகையில், உலகியல் பிரச்சினைகள், கருமங்கள் சம்பந்தமாகச் சில கட்டளைகளைப் புதுப்பிக்கும். ஆனல் அவருடைய நிழ லில் நின்றுகொண்டே இது ந்டக்கும்.
ஆதாரமுடன் ஆரம்பித்த காலவட்டத்தில் இருக்கிருேம். அதன் உலகளாவிய அவதாரபுருஷர் பஹவுல்லா.

片
கல்வி
மக்களிடையே மிகத் தாழ்ந்த படியிலிருந்து மிக உயர்ந்தபடி வரையுள்ள மனிதர் வித்தியாசமுடையவரா யிருப்பதற்குக் காரணம் தத்துவஞானிகளின் கூற்றுப்படி கல்வியேயாகும். இதற்கு அவர்கள் காட்டும் சான்றுகள் இவை, அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் நாகரிகம் சிறந்திருப்பதற்குக் காரணம், அங்கே கல்வி சிறப்படைந் திருப்பதே. ஆனல், ஆபிரிக்க மக்கள் அரை நாகரிகமும், மிலேச்சத் தன்மையுமுள்ளவராயிருப்பதற்கு ஏது அவர் களுக்குக் கல்வியறிவில்லாமையே. கல்வியானது அறிவற்ற வரை அறிவாளிகளாக்குகின்றது. கொடுங்கோலனை நீதி யுள்ளாணுவக்குகிறது. ம க் க ளி  ைட யே சந்தோஷத்தை அதிகரிக்கிறது. மனத்தைப் பலப்படுத்துகின்றது. மனித னுடைய சங்கற்பத்தை அதிகரிக்கின்றது. பலனற்ற மனித மரங்களைப் பயனுள்ளனவாக்குகின்றது. எனவே, மனித உலகில் சிலர் உயர்ந்த தானத்தை அடைகின்றனர். வேறு சிலர் ஆழ்ந்த குழியிலே கிடக்கின்றனர். ஆனல் மனித குலத்திலுள்ள எவரும் தீர்க்கதரிசியுட்பட மிகப் பெரிய பதவியை அடையலாம். இதுதான் தத்துவஞானிகள் கூறிய கூற்று. அவர்களுடைய வாதம் இதுவே.
கடவுளின் தூதுவரே முதற்பெரிய ஆசிரியர்கள். அவர் கள் எல்லாருக்கும் கல்வியளிக்கிருர்கள். கீழான காட்டு மிராண்டித்தனமான நிலையிலிருந்து ஆன்மஞானம் கைவரப் பெற்ற மேலான நிலைக்கு அவர்களை உயர்த்துகின்றனர். தத்துவஞானிகளும் விவேகத்தைப் பயிற்றும் ஆசிரியர்களே, அவர்கள் தமக்குக் கல்வியளித்து தம்மைச் சுற்றியுள்ள சிலர்க்கும் கல்வியளிக்கிருர்கள். த ம து ஒழுக்கத் ைத. விருத்தி செய்கிருர்கள். தம்மை நாகரிகமானவராக்கு, கின்றனர். ஆனல், எல்லாருக்கும் கல்விபுகட்ட அவர்களால்

Page 50
94
முடியாது. காட்டுமிராண்டித்தனத்திலிருந்து நா க ரி க நிலைக்கு எந்தத் தேசத்தையும் முன்னேற்ற அவர்கள் தவறி விட்டனர்.
கல்வியானது, மனித குலத்தின் ஒழுக்கத்தை விருத்தி செய்து, நாகரிகப் பயனைக் கொடுத்து மனிதனைக் கீழான நிலையிலிருந்து மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தினுலும் மனித னுடைய தனிப்பட்ட தகைமையில் வித்தியாசமுண்டு. ஒரே வயதுடைய பத்துச் சிறுவர், ஒரே வகையான நிலையில் பிறந்தவர்கள், ஒரே பாடசாலையிற் படித்தவர்கள், ஒரே வகையானி உணவு உண்போர், ஒரே வகையான சூழ்நிலை யிலுள்ளவர்கள், ஒரே வகையான பொருள்களில் கவர்ச்சி யுடையவர்கள், வித்தியாசமான தகைமையும், முன்னேற்ற முடையவராயிருக்கிருர்கள். சி ல ர் மிக விவேகமும் முன்னேற்றமுமுடையவராய்க் காணப்படுகின்றனர். சிலர் மட்டமான திறமையுடையவராயிருக்கின்றனர். வே று சிலர் வரைறைக்குட்பட்ட திறமையற்ற நிலையிலிருக் கின்றனர். ஒருவர் கல்வி நிறைந்த பேராசிரியராக வரு வார். வேருெருவர் அதே கல்வியைப் பெற்றவர், மந்த புத்தியுடையவராகின்ருர், எ ல் லா வகையிலும் சம சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. ஆனல் விளைவுகள் வித்தியாச மாயிருக்கின்றன. மிக உயர்ந்த பெறும்பேறும் மிகத் தாழ்ந்த பெறும்பேறும் காணப்படுகின்றது. எ ன வே மனித குலம் அதன் உள்ளார்ந்த விவேகத்தில் வித்தியாசப் படுகிறது. திறமைகள் ஒரே மாதிரி இல்லாவிட்டாலும், மனிதகுலத்து உறுப்பினர் ஒவ்வொருவரும் கல்வி பெறும் தகைமையுடையவராயிருக்கின்றனர்.
யேசுநாதர் மனித குலத்துக்கு ஆசிரியராய் விளங் கினர். அவருடைய போதனைகள் பிறர் நலம் பேணும் பண்புடையதாயிருந்தது. அவர் அரு வி ய கொடை உலகளாவியதாயிருந்தது. அவர் பரிசுத்த ஆவியின் சக்தி யால் போதனை செய்தார். மனித பலத்தால் போதிக்க வில்லை. ஏனெனில் மனித பலம் எல்லைக்குட்பட்டது.
 

95
பரிசுத்த ஆவியின் பலம் எல்லையற்றது. யேசுநாதரின் செல்வாக்கும் சாதனையும் இதற்குச் சான்று பகரும். கிரேக்க வைத்தியரும், தத்துவஞானியுமான கேலன் என்ப
வர் கி. பி. இரண்டாம் நூற்ருண்டிலே வாழ்ந்தார். அவர்
தேசங்களின் நாகரிகம் பற்றி ஒரு நூல் எழுதினர். அவர் கிறிஸ்து சமயத்தைச் சேர்ந்தவரல்லர். நாகரிகப் பிரச்சினை கள் விஷயத்திலே சமய நம்பிக்கை அசாதாரணமானதொரு செல்வாக்கையுண்டாக்குகிறதென அவர் குறிப்பிட்டார். "எங்களிடையே சில மனிதர் இருக்கிருர்கள். ஜெருசலேத் திலே கொலை செய்யப்பட்ட யேசுநாதரின் போதனைப்படி நடப்பவர். இவர்களிடமுள்ள ஒழுக்கத்தைக் கண்டு தத்துவ ஞானிகளும் பொருமைப்படுவர். அவர்கள் கடவுளிடம் நம்பிக்கையும் பயபக்தியுமுடையவர். அவர் அருள் புரிவா ரென்பதில் நம்பிக்கையுடையவர். அத ஞ ல் த கா த செயல்களைச் செய்யமாட்டார். போற்றுதற்குரிய ஒழுக்கத் தையும் தருமத்தையுமே நாடுவர். தமது செயல்போற்றத் தக்கதாயிருக்க வேண்டுமென்றும், மனிதகுல நன்மைக்குத் தாம் தொண்டு செய்ய வேண்டுமென்றும் அல்லும் பகலும் முயல்பவர். அதனுல் அவர்கள் ஒவ்வொருவரும் தத்துவ ஞானி. ஏனெனில் அவர்கள் தத்துவசாரத்தையும் அதன் நோக்கத்தையும் அடைந்தவர்கள். இவர்கள் கல்வியறி வற்றவராயிருந்தாலும் போற்றத்தக்க ஒழுக்கமுடைய வர்.' என அவர் கூறுகிருர்,
இதன் நோக்கம் பரிசுத்த அவதாரங்களும், தெய்வீக" தீர்க்கதரிசிகளும் மனிதகுலத்தின் முதல் ஆசிரியர் என் பதைக் காட்டுவதே அவர்கள் உலகளாவிய ஆசாரியர். அவர்கள் மொழிந்த மூலாதாரமான கொள்கைகள் தேச அபிவிருத்திக்கு காரணமாயுள்ளவை. -
)

Page 51
பரிசுத்த ஆவி
பூதங்களுக்குரிய அணுக்களே புலன்களுக்கு விஷய மாகும். பிரபஞ்சத்தை உருவாக்குபவை. அவை இந்த எல்லையற்ற பிரபஞ்சத்தில் ஓயாது சுழன்று கொண்டிருக் கின்றன. அவை இடையருத முன்னேற்றப்படிகளில் ஈடுபட் டிருக்கின்றன. உதாரணமாக நாம் நிலக்கணி உலகிலுள்ள ஒர் அணுவை எடுத்துக் கொள்வோம். அது தாவர உலகில் ஒரு மரத்தின் அமைப்பிலோ செடியின் அமைப்பிலோ ஈடு படுகிறது. பின்னர் அது மிருக உலகில் சேருகிறது. பின்னர் அமைப்புச் சட்டப்படியும் முறையின்படியும் மனிதனுடைய உடலின் ஒரு பகுதியாகிறது. அதாவது அது புலனறிவுக்கு விஷயமாகும் பொருள்களின் அமைப்பிலேயுள்ள இடைப் பட்ட மட்டங்களையும் தானங்களையும் தாண்டிப் பலபட்ட சேதனப் பொருள்களின் அமைப்பில் தனது சஞ்சார காலத் தில் பிரவேசித்துவிட்டது. இந்தச் சஞ்சாரமும் மாற்றமும் நிரந்தனமானதாகவும், முன்னேற்றமுடையதாகவுமிருக் கின்றது. மனித உடம்பு பூதங்களாகப் பிரியும்போது அந்த உடம்பைவிட்டு அது எங்கிருந்து வந்ததோ அந்த நிலக்கணி உலகை அடைகிறது. பின்னர் அவ்வாறே புலனுக்கு விஷய மாகும் பொருள் பிரபஞ்சத்தில் மறுபடியும் சஞ்சரிக்கும். "தோற்றப்பொருள்களின் அமைப்பான பெளதிக அணுக்கள் மேலும் மேலும் மாறி மாறிப் பிரபஞ்சராச்சியத்தில் சஞ்சரிக்கின்றன என்பதை இது காட்டுகிறது.
அணுவானது அதன் முன்னேற்றத்தின்போதும், சஞ்சா ரத்தின்போதும், ஒவ்வொரு மட்டத்திலும், இராச்சியத்தி லும் உள்ள பண்புகளையும் சக்திகளையும் மீட்டிக் கொள்ளு கிறது. நிலக்கணி மட்டத்திலே அது நிலக்கணிப் பற்றுக் களைப் பெறுகிறது. தாவர உலகில், வளர்ச்சித் தத்துவத்தை வெளிப்படுத்துகிறது. மிருக உருவில் அம் மிருக உலகுக்
 
 

a .
97
குரிய விவேகத்தை வெளிப்படுத்துகின்றது. மனித உலகிலே மனிதப் பண்புகளைப் பெறுகின்றது.
தோற்றப் பொருள்களின் உருவமும் அமைப்பும் பிரபஞ் சத்தின் பல உலகங்களிலும் எண்ணற்றனவாயிருக்கின்றன. தாவர உலகிலே எல்லையற்ற இனங்களும் பெளதிக அமைப் புகளும் உண்டு. அவை தம்முள் வித்தியாசப்பட்டவை. இரு செடிகள் ஒன்று போலிருக்கமாட்டா. இயற்கையிலே ஒன்று மற்றதைப் போல அமைவதில்லை. வளரும் சக்தி குறிப்பிட்ட ஒர் உருவுக்கோ வடிவுக்கோ மாத்திரிம் சேர்ந்த தன்று. ஒவ்வொரு இலைக்கும் அதன் தனித் தன்மையுண்டு. எனவே அளவிறந்த பெளதிக அணுக்கள் நிலைபேற்றின் இராச்சியங்களிலே ஒயாத சலனத்தின்போது, உருவமைப் பின் பகுதியாயிருக்கும். நிலையில் தான் சுழன்றுவந்த இராச்சியங்களின் சக்தி, பண்பு என்பவற்றைப் பெறுவ தோடு அந்த இராச்சியங்களின் உருவங்களுடைய பண்புகளை யும் குணங்களையும் பிரதிபலிக்கின்றன. இந்த உருவங்கள் ஒவ்வொன்றுக்கும், தனிப்பட்ட விசேஷப் பண்பு இருப்பதால் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு பெளதிக அணுவும், அந்தத் தனிப்பட்ட பண்புகளின் எல்லையற்ற பிரிவுகளை வெளிப் படுத்தச் சந்தர்ப்பம் பெறுகிறது. இந் த ச் சந்தர்ப் பத்தையோ வெளிப்படுத்தும் உரிமையையோ எந்த அணு
வும் இழக்கமாட்டாது. மற்ற அணுக்களோடு சமசந்தர்ப்
பம் எந்த அணுவுக்கும் வழங்கப்படவில்லையென்று சொல்லக் கூடியவாறில்லை. அந்த உலகங்களிலே காணப்படும் பண்பு களைக் கொண்டிருக்கும் விசேட உரிமை எல்லாருக்குமுண்டு. அவ்வாறே அந்த உயிர்ப்பொருளின் குணங்களைப் பிரதி பலிக்கும் உரிமையுமுண்டு. அணு ஒருலகத்திலிருந்து மற்ருே ருலகத்துக்குச் செல்லும்போதோ உருமாறும்போதோ ஒவ்வொரு மட்டத்திலும் வெளிப்படுத்தப்படும் பண்புகள், அந்த மட்டத்துக்கே சேடமானவை. உதாரணமாக நிலக்கணி உலகில் அணுவானது தாவர உருவையோ உயிர்ப் பொருளையோ வெளிப்படுத்தமாட்டாது. ஆனல் உருமாறும்
உ ஐ.அ.-7

Page 52
98
போக்கிலே அது தாவர மட்டத்தின் பண்பை அது எடுக்கும் போது மிருகத்தின் பண்பையோ வேறு உலகின் பண்பையோ பிரதிபலிப்பதில்லை.
பிரபஞ்சத்தின் ஒவ்வொரு பெளதிக அணுவும் பிரபஞ் சத்தின் பண்புகளையெல்லாம் வெளிப்படுத்தும் தகைமை யுடையதாயிருக்கிறது என்பது உறுதியாகிறது. இது சூக்கு மமான கருத்துமயமான அறிவு. இதைச் சிந்தியுங்கள். இதிலேதான் இயல்வன யாவும் இறையுருவே என்றும் கோட் பாட்டுக்கு உண்மையான விளக்கம் தங்கியுள்ளது. இந்த நோக்கின்படி இயல்வன யாவும் இறையுருவே என்ற கோட் பாடு உண்மையானது. பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வோர் அணுவும், வாழ்வின் பண்புகளெல்லாவற்றையும் பிரதிபலிக் கின்றது. இந்தப் பண்புகளின் வெளிப்பாடு மாற்றத்தினு லும் உருத்திரிபினுலும் ஏற்படுத்தப்படுகிறது. எனவே புலனுக்கு விஷயமாகும் தோற்றமெல்லாம் எங்கும் பிரகாச மான கடவுளே. தோற்றமாக இயல்வனவெல்லாவற்றின் மெய்ம்மையும் அவன் மூலமேயுண்டாகின்றன. கடவுளின் நிமித்தமின்றி மெய்ம்மையுமில்லை. மெய்ம்மையின் வெளிப் பாடுமில்லை. இயலும் தன்மை கடவுளின் வரத்தினலேதா னுண்டாகிறது இங்கேயுள்ள தீபத்தின் சுடர் இந்த விளக் கின் கொடையினுல் உண்டாவதுபோல, அவ்வாறே எல்லாத் தோற்றங்களும் தெய்வீகக் கொடையினலேதானுண்டா ன்றன. உண்மையான இயல்வனயாவும் இறையுருவே என்ற கோட்பாட்டின் விளக்கம் பிரபஞ்சத்தின் தோற்றம் எல்லாப் பொருள்களிலும் அந்தரியாமியாயிருக்கும் ஒரு சக்தியின் மூலமே பெறப்படுகிறது. அதுவே எல்லாப் பொருள்களையும் ஆண்டு அவற்றுக்கு உயிர்ப்புக் கொடுத்து வருகிறது. எல்லாப் பொருள்களும் அதன் சக்தியையும், கொடையையும் வெளிப்படுத்துகின்றன. இயல்வதும், இருத்தலும் அதனுடைய முகாமையினலேதான். எனவே பஹவுல்லாவின் வார்த்தைகளின்படி முதலாவது போதனை, மனித குலம் ஒன்று என்பதே.

99
லெளகீக நாகரிகத்திலே உலகம் எவ்வளவுதான் முன் னேறினுலும், அதற்கு ஆத்மீகப் பண்புகளும் கடவுளின் பரப்பிரசாதமும் வேண்டும். மனிதனுடைய ஆன்மா லெளகீக மூலகாரணங்களால் ஒளிபெற்று உயிர்ப்புப் பெறுவதில்லை. சடப் பிரபஞ்சத்தின் தோற்றத்தை ஆராய் வதினுல் அது உயிர்ப்புப் பெறுவதில்லை. மனிதனுடையே ஆன்மாவுக்கும் பரிசுத்த ஆவியின் பாதுகாப்பு வேண்டும். அவன் கேவலம் பூத உலக இருப்பிலிருந்து விவேக உலகுக்குப் படிப்படியாக முன்னேறுவதுபோல அவன் ஒழுக்கப் பண்பினுலும் ஆன்மீக அழகுகளினலும் மேனேக்கி உயரவேண்டும். இந்தப் போக்கிலே அவனுக்குப் பரிசுத்த ஆவியின் அருட்கொடைகள் அவசியம். லெளகீக அபிவி ருத்தி தீபத்தைச் சுற்றியுள்ள க ண் ணு டி போன்றது. தெய்வீகப் பண்புகளும் ஆன்மீக உ ண ர் வு க ஞ ம் கண்ணுடிக்குள்ளிருக்கும் ஒளிபோன்றது. ஒ விரி யி ல் லா விட்டால் விளக்கின் சி ம் னி யா ல் பயனில்லை. அது போலவே மனிதன் லெ ள கீ க நிலையிலிருக்கும்போது தெய்வீக அழகுகளும் கருணைப் பண்புகளும் தரும் ஒளியை யும், உயிர்ப்பையும் வேண்டி நிற்கிருன், பரிசுத்த ஆவியின் பிரகாசமில்லாவிட்டால் அவனுக்கு உயிரில்லை. உடலும் மனமும் இருந்தாலும் அவன் ஆன்மீக வகையில் இறந் தவனே. யேசுநாதர் 'மாமிசத்தினுற் பிறந்தது மாமிசமே, ஆன்மாவிற் பிறந்தது ஆன்மாவே' என்று கூறியுள்ளார். இதன் கருத்து மனிதன் புனர்சென்மம் அடைய வேண்டு மென்பதே. குழந்தை இந்தச் சடசம்பந்தமான உலகிலே பிறப்பதுபோல உடல்மயமான மனுேமயமான மனிதன் தெய்வீக ஒளியிற் பிறக்கவேண்டும். தாயின் கருப்பையில் குழந்தை சட் உலகின் அறிவில்லாதிருக்கிறது. ஆனல் அது பிறந்த பின்னர் புதியதொரு வாழ்வினுலகில் உள்ள அற்பு தங்களையும் அழகுகளையும் காண்கிறது. கருப்பையில் அது அறியாமையுடையதாய், இப் புதிய நிலைகளைக் காண முடியாதிருந்தது. ஆனல் அது உருமாறிய பின்னர் ஒளி மிக்க சூரியனையும், மரங்களையும் பூ க் களை யு ம் பல

Page 53
100
கொடைகளையும் ஆசீர்வாதங்களையும் கண்டுபிடிக்கிறது. அவை அதற்குக் காத்திருந்தன. மனித உலகில் இயற்கை யின் கைதியாய், தெய்வீக உலகைப் பற்றி அறியாதவனய், பரிசுத்த ஆவியின் உயிர்ப்பினுல் சடநிலைமைகளின் கட்டுப் பாட்டிலிருந்து விடுபடுகிறது. பின்னர் ஆன்மீக இராச்சியத் தினதும், தெய்வீக இராச்சியத்தினதும், மெய்ம்மையைக் காண்கிறது. கேவலம் மனித வாழ்வின் குறுகிய கட்டுப் பாட்டை உணர்ந்து எல்லையற்ற அகண்டமான இறை யுலகின் மகிமைகளை அறிகிறது. எனவே, மனிதன் சட உல. கிலும் விவேக உலகிலும் எத்துணை முன்னேறினலும் தெய் வீகத்தின் எல்லையற்ற பண்புகளையும் பரிசுத்த ஆவியின் பாதுகாப்பையும் இறைவன் சந்நிதியையும் அ வா வி நிற்கிருன்.
 

விஞ்ஞானம்
மனித குலத்தின் சிறப்புகள் பல; அவற்றுள் விஞ் ஞானமே எல்லாவற்றுள்ளுஞ் சிறந்தது. மிருகத்தின் நிலைக்கு மேலாக மனிதன் அனுபவிக்கும் சிறப்பு இந்தப் பண்பினல் உண்டானது. இது கடவுளால் கொடுக்கப் பட்டதொரு கொடை. இது லெளகீகமானதன்று. தெய் வீகமானது. மெய்ம்மையென்ற சூரியனின் பிரகாசமே விஞ்ஞானம், பிரபஞ்சத்தின் உண்மைகளை ஆராய்ந்து கண்டுபிடிக்குஞ் சக்தி: கடவுளை அடைய மனிதன் வகுத்த தொருபாதை. மனிதனுடைய சக்திகளும், பண்புகளும், மனிதச் சார்புடையவை. பரம்பரையில் தோன்றியவை, இயற்கையின் போக்குகளின் பெறும்பேறு. விவேகம் வேறு. அது இயற்கைக்கு அதீதமானது. அறிவினுலும் விவேகத்தி னலும் பரிசீலனை செய்து விஞ்ஞானம் எல்லாப் பொருள் களையும் கண்டுபிடிக்கிறது. நிகழ் காலத்தை இறந்த காலத்தோடு பொருத்துகிறது. முன்னிருந்த தேசங்கள் சம்பவங்கள் என்பவற்றின் வரலாற்றை வெளிப்படுத்து கிறது. மனித அறிவின் சாரத்தையும் அவன் காலா காலமாகச் சாதித்தவற்றையும் அவனுக்கு வழங்குகிறது. அறிவினுற்றலாலும், தர்க்க அனுமானங்களாலும், மனித னிடத்துள்ள இந்த மேலான சக்தி வருங்காலத்து இரகசியங் களையெல்லாம் ஊடுருவிப் பார்த்து வரக்கூடிய விஷயங்களை முன்கூட்டியே அறிகின்றது.
மனிதனுக்குக் கடவுளிடமிருந்து வந்த முதல் வெளிப் பாடு விஞ்ஞானமே சிருஷ்டிக்கப்பட்ட எல்லாப் பொருள் களிடத்தும் சடசம்பந்தமான நிறைவின் சக்தி காணப் படுகிறது. ஆனல் அறிவினல் ஆராய்ச்சி செய்வதும், விஞ்ஞான ஈட்டமும் விசேடமாக மனிதனுக்கே கொடுக்கப் பட்டது. இந்தத் திறமையும் ஈட்டமும் மற்றப் பிராணி

Page 54
102
களுக்குக் கிடையாது. மெய்ம்மைமீதுள்ள இந்தப் பாசத் தைக் கடவுள் மனிதனிடத்து உறைய வைத்துள்ளான். ஒரு தேசத்தின் முன்னேற்றம் அந்தத் தேசத்தின் விஞ் ஞானப் பெறும்பேறுகளின் அளவினதாயிருக்கும். இதன் மூலம் அதன் பெருமை அதிகரிக்கும். அம் மக்களின் சுபீட்ச மும், நன்மையும் தினமும் உறுதி செய்யப்படும்.
எல்லாச் செளபாக்கியங்களும் தெய்வீகமானவை. ஆனல், அறிவாராய்ச்சியென்னுஞ் சக்தியோடு எதனையும் ஒப்பிடமுடியாது. இது சாசுவதமான கொடை இதன் பயனுக எல்லையற்ற இன்பங்களுண்டாகும். மற்றைச் செள பாக்கியங்களெல்லாம் தற்காலிகமானவை. இது நித்தியமானதொரு உடைமையாகும். இறைமைக்குக்கூட எல்லையுண்டு; அழிவுண்டு, இதனை எவரும் கவரவும் முடியாது. அழிக்கவும் முடியாது. சுருக்கமாகக் கூறுவ தானல் இது நித்தியமான செளபாக்கியமும் தெய்வாதீன மான கொடையுமாகும்.
மனிதனுக்குக் கடவுளாற் கொடுக்கப்பட்ட மேலான கொடை. ஆனபடியால் விஞ்ஞானத்தையும் கலைகளையும் ஈட்டுவதற்கு ஒல்லும் வகையால் முயற்சி செய்வீராக. எவ்வளவு அதிகமாக இதனை ஈட்டுகிறீர்களோ தெய்வீக நோக்கத்திலே உங்கள் பரிமானம் உயர்ந்ததாயிருக்கும். விஞ்ஞானி அறிவுடையவன். அவனுக்குக் காட்சியுண்டு. இந்த அபிவிருத்தியில்லாதவன் குருடன், ஆராய்ச்சி செய்யும் மனம் கருத்துடையதாயும், உயிர்ப்புடையதாயு மிருக்கும். அலட்சியமும், உணர்வுமற்ற மனம், செவிடா யிருக்கும். அது செத்தமாதிரியே. ம னி த கு லத் தி ன் உண்மையான பிரதிநிதி விஞ்ஞானியே. அனுமான சக்தியினலும், ஆராய்ச்சியினலும், ம னி த கு லத் தி ன் அந்தஸ்து நிலைமை, அதன் நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் அறியக்கூடியவனுயிருக்கிருன். அவன் மனித அரசியல மைப்பைப் படிக்கிருன்; சமூகப் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ளுகிருன், நாகரிகத்தின் இழையையும் இழையமைப்

103
பையும் நெசவு செய்கிருன். விஞ்ஞானத்தைக் கண்ணுடிக்கு ஒப்பிடலாம். அங்கே உள்ள பொருள்களின் எல்லையற்ற உருவங்களும் வடிவங்களும் பிரதிபிம்பித்து வெளிப்படுத்திக் காட்டப்படுகின்றன. தனிப்பட்ட அபிவிருத்தி, தேச அபிவிருத்தி என்பவற்றுக்கெல்லாம் அடிப்படை. ஆராய்ச் சிக்கான இந்த அடிப்படையில்லாவிட்டால், அபிவிருத்தி முடியாத காரியமாகும். இந்த அற்புதமான கொடையின் சக்தியில் அடங்கியுள்ள அறிவையும், பேற்றையும் சோர் வின்றி நாடுவீராக.
விஞ்ஞானம் அல்லது விஞ்ஞானக்காட்சி , இயற்கை கடந்த பண்பு என்றும், கடவுள் வழங்கிய ஏனைய கொடை களெல்லாம் இயற்கைக்குட்பட்டனவென்றும் முன்னரே கூறியுள்ளோம். இதற்கு அத்தாட்சியெங்கே? மனிதனைத் தவிர மற்றைச் சிருட்டிப்பொருளெல்லாம் இயற்கையின் சிறைக்குட்பட்டவை. எல்லையற்ற வானவெளியில் சுழன்று கொண்டிருக்கும் நட்சத்திரங்களும், சூரியரும் பூமியிலுள்ள சராசரங்களெல்லாம் அவை நிலக்கணியானலென்ன, தாவர மானலென்ன, மிருகமானலென்ன, இயற்கை நியதிகட்குட் பட்டவை. மனிதன் விஞ்ஞான அறிவினலும் சக்தி யினலும், இயற்கையை ஆட்சிபண்ணி அதன் நியதிகளைத் தன் தேவைக்குப் பயன்படுத்துகிருன். இயற்கைக் கட்டுப் பாடுகளின்படி அவன் பூமிக்குரியவன், பூமியின் மேற் பரப்பில் வாழ்பவன்; ஆனல், பெளதிக விதிகளை விஞ்ஞானத் துணைகொண்டு பயன்படுத்துவதனல், அவன் வானத்திலே சஞ்சரிக்கிருன், கடலில் பிரயாணஞ் செய்கிருன், சமுத்தி ரத்தின் ஆழத்தில் சஞ்சரிக்கிருன். தினசரி வாழ்விலே, நாம் காணும் விஞ்ஞானப் பொருள்கள் ஒரு காலத்தில் இயற்கையின் இரகசியங்களாயிருந்தன. உதாரணமாக மின் சக்தியை எடுத்துக்கொள்ளலாம். அது இயற்கையில் மறைந்திருந்தது. அதை மனிதன் வெளிப்படுத்திவிட்டான். அதை நோக்கிச் சிறைப்படுத்தித் தனது தேவைகளுக்குப் பயன்படுத்துகிருன். இவ்வாறு பல உதாரணங்களைக் கொடுக்கலாம். விரிவஞ்சிவிடுத்தோம். மனிதன் இயற்

Page 55
104
கையின் கையிலிருந்து வாளைப் பிடுங்கி அதைச் செங் கோலாகவைத்துக் கொண்டு இயற்கையை ஆளுகிருன் மனிதனுக்குரிய நுட்பத்திறமையும், பண்புகளும் இயற் கைக்குக் கிடையாது. மனிதனிடம் சேதன அறிவும், சிந்திக்கும் ஆற்றலுமுண்டு. இயற்கையிடம் இது இல்லை. தத்துவஞானிகள் இதை அடிப்படை வித்தியாசமாகக் கூறுவர். மனிதனிடம் ஞாபகசக்தியும், விருப்பத் துணி வாற்றலுமுண்டு. இயற்கையிடம் இவை இல்லை. இயற்கை யிலடங்கியுள்ள இரகசியங்களை ஆராய்வான். ஆனல், தன்னகத்து அடங்கியுள்ள இயல்நிகழ்ச்சிகளை இயற்கை அறியமாட்டாது. மனிதன் முன்னேற்றமுடையவன். இயற்கை அசையாது நிற்பது. அது முன்னேறவும் மாட்டாது; பின்னடையவும் மாட்டாது. மனிதனிடம் முன்மாதிரியான பண்புகளுண்டு; தன்னிச்சையாகச் செயல் புரிதல், அறிவாராய்ச்சி செய்தல் சிரத்தை, மறை மெய்ம்மை வெளிப்படுத்தல், இறைவனை ஒப்புக்கொள்ளுதல் என்பன அத்தகைய பண்புகள். இயற்கையிடம் இவை கிடையா. விஞ்ஞான ஆராய்ச்சி உட்பட மனிதனிடத் துள்ள முன்மாதிரியான திறமைகள் இயற்கையிடம் கிடையாது. ஏனைய உயிர்வடிவங்களிலிருந்து மனிதனைப் பிரித்துக்காட்டும் சக்திகளிவை, தெய்வீக இலட்சியத்தின் கொடை இதுவாகும். மனிதருடைய சிரசை அலங்கரிக்கும் மகுடம் இதுவாகும். இயற்கைக்கு அதீதமான சக்தியின் கொடையிருந்தபோதிலும், உலோகாயதர், தாம் இயற்கை பின் சிறையிலிருப்பதாகவே தம்மைக் கருதிக் கொள்ளு கின்றனர். உண்மையென்னவென்ருல், கடவுள் மனித னுக்குப் பண்புகளும், சக்திகளும், இலட்சியமான திறமை களும் இயற்கைக்கு இல்லாத வகையில் வழங்கப்பட்டிருக் கிறது. இதனுல் மனிதன் விசேடமாக, உயர்த்தப்பட்டுள் ளான். அதனுல் உயர்நலமுடையவனுகிருன். இந்தக் கொடைகளுக்காகவும், சக்திகளுக்காகவும், நமது தலைமேல் சூடப்பட்ட மகுடத்துக்காகவும் கடவுளுக்கு நன்றியுடையவ ராயிருக்க வேண்டும்.
 

፲05
இந்தக் கொடைகளை நாம் எவ்வாறு பயன்படுத்துவது? எவ்வாறு செலவு செய்வது. மனிதகுலத்தை ஒன்றுபடுத்து வதற்கு நாம் ஒல்லும் வகையால் முயலவேண்டும். இச் சக்தி களைப் பயன்படுத்தி மனிதகுலத்தை ஒ ன் று படுத் த வேண்டும். வெள்ளையர் கறுப்பர் என்ற சாதியாரை ஒன்று படுத்த இப் பண்புகளைப் பயன்படுத்தவேண்டும். இந்தத் தெய்வீக விவேகத்தை மனித குலத்தில் ஒற்றுமையும் இசைவும் உண்டாகப் பயன்படுத்த வேண்டும். கடவுளின் பாதுகாப்பினுலும், அருளினலும் கீழ்நாடுகளும் மேனடு களும் கைகோத்துக் காதலர் போல வாழவேண்டும். அப்போதுதான் மனிதகுலம் ஒற்றுமைப்பட்டு ஒருதேச மாகும். ஒரே கடலின் திரைகளைப் போலிருக்கும். இத் திரைகள் வடிவத்திலும் உருவத்திலும் வித்தியாசப்பட்டா லும், ஒரே கடலின் திரைகளே. பூக்கள் நிறத்தால் வேறுபட் டாலும், ஒரே தோட்டத்து மலர்களே. ஒரே தோட்டத்தில் வளர்ந்தாலும் மரங்கள் வித்தியாசப்படுகின்றன. ஒரே மழையின் கொடையினுல்தான் அவை உயிர்ப்புப் பெற்று வளர்கின்றன. ஒரே சூரியனின் வெப்பத்தினுலும் ஒளியின லுமே அவை வளர்ந்து அபிவிருத்தியடைகின்றன. ஒரே காற்றினலேதான் அவை கிளர்ச்சிப்பெற்றுப் புதுமையடை கின்றன.
அ வ் வா று அவை விதம்விதமான பழங்களைத் தருகின்றன. படைப்பு முறையின் ஒழுங்கு இதுவே. எல்லா மரங்களும் ஒரேவிதமான பழத்தைத் தருமானல் அது சுவையுடையதாயிருக்கமாட்டாது. அவை வித்தியாசப் பட்டு விதம் விதமாயிருப்பதனலேதான் மனிதன் சலிப் பின்றி இன்பத்தையடைகிருன்.
உங்கள் முகங்களை இப்போது நான் பார்க்கும்போது வருணத்தாலும் உருவத்தாலும் வேறுபட்டு அகப்புலன் களுக்கும் புறப்புலன்களுக்கும் இன்பந்தரும் சுவையுள்ள பழங்களைத் தருவதை நினைவில் கொண்டுவருகிறேன். இந்தக் கூட்டத்தில் காணப்படும் ஒளியும், ஆன்மீகத்

Page 56
106
ܢܛܪ
தன்மையும், கடவுளருளால் உண்டானவை. நாம் இறைவ
னுக்கு உள்ளங்கனிந்த நன்றி தெரிவிக்கின்ருேம். கடவுள்
நாமம் வாழ்க. நீங்கள் மேற்குக் கண்டத்திலே பூரணசுதந்
திரமும் பாதுகாப்பும், சமாதானமும் மல்க இந்த நதியான அரசின் கீழ்வாழுகின்றீர்கள். துயருக்கும் துன்பத்துக்கும் எவ்வித ஏதுவுமில்லை சகல விதமான சுகமும் இன்பமும்
இங்கேயுண்டு. மனித உலகில் சுதந்திரத்தை விட மேலான
செளபாக்கியமில்லை. இது உங்களுக்குத் தெரியாது. நாற்பது வருடமாகச் சிறையிருந்த எனக்குத் தெரியும்.
சுதந்திரத்தின் பெறுமதிப்பும், செளபாக்கியமும் எனக்குத் தெரியும். நீங்கள் சுதந்திரமாகவேயிருந்தீர்கள். இப்
பொழுதுமிருக்கிறீர்கள். உங்களுக்கு எவராலும் பயமில்லை.
இதனினுஞ் சிறந்த செளபாக்கியமேது? சுதந்திரம், விடுதலை, பாதுகாப்பு! இவைதாம் கடவுளின் பெருங்கொடைகள்.
எனவே கடவுளுக்குத் தோத்திரஞ் செய்வோமாக.

ஆன்மீக வசந்தம்
இயல் உலகிலே மனிதன் பலபடியான நிலைகளைத் தாண்டி மனித உ ல கு க் கு வந்திருக்கிருன். அவன் முன்னேறிய ஒவ்வொரு படிநிலையிலும், அடுத்த படிக்கும், நிலைக்குமான தகைமையை அடைந்துள்ளான். நிலக்கணி உலகிலே தாவர உலகுக்குச் செல்லும் தகைமையைப் பெற்ருன். தாவர உலகிலே மிருக உலகை அடைவதற்கான ஆயத்தங்களைச் செய்தான். அங்கிருந்து மனித உலகுக்கு வந்துள்ளான். இந்த முன்னேற்றப் பாதையிலே அவன் மனிதனுக்குரிய அகநிலைத் தகுதியுடையவனகவ்ேயிருந்து வந்தான்.
ஆரம்பத்திலே அவன் மாதாவின் கருப்பத்தில், முதிரா நிலையிலிருந்தான். பின்னர் மனித வாழ் வு க் கு ரிய தகைமையையும், கொடையையும் பெற்றன். வரையறை யுள்ள அந்த நிலையிலே இவ்வுலகுக்குத் தேவையான சக்தி யும், பலமும் பெற்ருன், இந்த உலகிலே அவனுக்குக் கண் வேண்டியிருந்தது. கருப்பை நிலையில் அது அவனுக்கு அக நிலைத் தகுதியாகக் கிடைத்தது. அவனுக்குக் காது தேவைப் பட்டது. அதுவும் அங்கே அவனுடைய புதிய வாழ்வுக்கேற்ற வாறு அமைக்கப்பட்டுள்ளது. உலக வாழ்வுக்குத் தேஒை யான கருவிகளெல்லாம் கருப்பத்திலேயே வழங்கப்பட்டது. உண்மையான வாழ்வில் அவன் பிரவேசித்ததும், எல்லாக் கருவிகரணங்களையுமுடையவனுயிருப்பது மாத்திரமின்றி அவனுடைய சீவ விருத்திக்குத் தேவையான ஏற்பாடுகளையும் பெற்றன்.
எனவே, இவ் வுலகில் மீறுமைக்கானவற்றை அவன் த யார் செய்யவேண்டும். பரலோக ராச்சியத்துக்குத் தேவையான தெல்லாம் இம்மையிலேயே பெற்றுக்கொள்ள வேண்டும். கருப்பையிலே வாழ்வுக்கவசியமானவற்றைத்

Page 57
108
தயார் செய்ததுபோலத் தெய்வீக வாழ்வுக்குத் தேவை யானவற்றை வேண்டும்போது செயற்படத் திறமுள்ளவகை யில் இங்கேயே தயார் செய்துகொள்ளவேண்டும்.
பரலோக ராச்சியத்திலே அவனுக்கு என்ன வேண்டும். இம்மையில் காணும் வரையறைக்கும் வாழ்வுக்கும் அதீத மான தேவைகள் என்ன? மறுமையானது தூய்மையும் ஒளியு முடையது. எனவே, இம்மையிலேயே இந்தப் பண்புகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும். அம்மையில் எமக்கு ஆன்ம ஞானம், சிரத்தை, உறுதி, கடவுளைப் பற்றிய ஞானம், கடவுள் பக்தி எல்லாம் வேண்டும். இவற்றை இங்கேயே தேடிக் கொள்ளவேண்டும். அப்போது இம்மையிலிருந்து பரலோக ராச்சியத்துக்குச் செல்லும்போது நித்தியவாழ் வான அவ் வாழ்வுக்குங் தேவையான எல்லாவற்றையும் சுணக்கமின்றிப் பெறுவான்.
அந்தத் தெய்வீக உலகம் ஒளிமயமானது. ஆதலால் மனிதனுக்கு இங்கேயே ஒளிவேண்டும். அது அன்புமயமான உலகம், கடவுள் அன்பு அவசியம். அவ்வுலகம் நிறைவு களுடையது. அதனுல் நற் குணங்களையும் நிறைவுகளையும் தேடிக்கொள்ளவேண்டும். அந்த உலகம், பரிசுத்த ஆவி யால் உயிர்ப்புப் பெற்றது. இவ்வுலகத்திலேயே அதைத் தேடவேண்டும். அவ்வுலகம் நித்தியவாழ்வுடையது. நிலை யற்ற இந்த வாழ்விலேயே அதைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
மனிதன் எவ்வாறு இவற்றைப் பெறலாம்? கருணை வடிவான இந்தக் கொடைகளையும், சக்திகளையும் மனிதன் எவ்வாறு பெறமுடியும்? முதலாவது கடவுளைப் பற்றிய ஞானம் வேண்டும். இரண்டாவது கடவுள் பக்தி வேண்டும். மூன்ருவது சிரத்தை வேண்டும். நாலாவது பிறர்நலம் பேணும் கொடைகள் வேண்டும். ஐந்தாவது தன்னைத் தியாகஞ் செய்யவேண்டும். ஆரு வ து பற்றற்றநிலை வேண்டும். அதாவது உலகத்தின் பற்றைவிடவேண்டும்.

109
ஏழாவது தூய்மையும் புனிதமும் வேண்டும். இந்தச் சக்தி களையும் பண்புகளையும் பெருவிட்டால் நித்தியவாழ்வு கிடை யாது. ஆனல், ஆண்டவன் அறிவு  ைட ய வ னு ய், கடவுளன்பு என்ற தீயினுல் சுடர்விட்டெறிந்து அபாராச் சியத்தின் பெருமை மிக்க அறிகுறிகளுக்குச் சாட்சியாயிருந்து மனிதரிடையே அன்புக்குக் காரணமாகி, தூய்மையும் புனித மும் நிறைந்த வாழ்வு வாழ்பவனனல், இரண்டாவது ஜன்ம மெடுத்து பரிசுத்த ஆவியினல் ஞானஸ்நானம் பெற்று நித்தியவாழ்வு பெறுவான்.
மனிதன் கடவுளை அறியவும், அவருக்கு அன்பு செய்ய வும், மனித உலகின் பண்புகளைப் பெறவும், ஆன்ம விலாசத் தையும், தெய்வீக ஒளியையும், நித்திய வாழ்வையும் பெறப் படைக்கப்பட்ட போதிலும், அவன் அறியாமை மிக்கவணுய் இவற்றில் அக்கறையின்றியிருப்பான். இது ஆச்சரியமா யிருக்கவில்லையா? கடவுளைப் பற்றிய அறிவின்றி மற்றெல்லா வித அறிவுகளையும் பெற முயல்கிருன். இதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். உதாரணமாக நிலத்தை அகழ்ந்து அதன் அடியிலுள்ள இரகசியங்களை அறிய முயல்கிருன். நிலத்தினடியில் 10 மீட்டருக்குக் கீழே என்ன இருக்கிறதென் பதை அறியத் தினமும் ஆவல் கொள்கிருன், கற்களிடையே என்ன காண்பான். புழுதியை ஆராய்ந்து கொள்வதால் புதைபொருளாராய்ச்சிக்கு அது எவ்வாறு பயன்படுகிறது என்பதை அறிய ஆவலுள்ளவனுயிருக்கிருன். பூமியின் அடி யிலுள்ள இரகசியங்களை அறிவதற்குப் பெருமுயற்சி செய் கிருன். ஆனல், தெய்வராச்சியத்தின் இரகசியங்களை அறிய அவன் ஆவல் கொள்ளவில்லை. நித்திய உலகின் எல்லையற்ற நிலங்களைத் தாண்ட அவன் அக்கறை கொள்னவில்லை. தெய்வீக மெய்ம்மைகளை அறிய அக்கறை காட்டவில்லை. கடவுளின் இரகசியங்களைக் கண்டுபிடிப்பதற்கு அவன் ஆவல் கொள்ளவில்லை. கடவுளைப் பற்றி அறிய அவன் விரும்ப வில்லை. சத்தியசூரியனின் பிரபையைப் பார்க்க அவன் விரும்பவில்லை. நித்தியவாழ்வின் மகிமையை உணர அவன்

Page 58
110
எத்தனஞ் செய்யவில்லை. இவற்றில் அவனுக்கு அக்கறை *கி  ைட யாது. சடப்பொருள்களின் இ ர க சி யங் களை அறிவதற்கு அவன் எவ்வளவு ஆர்வங் காட்டுகிறன். தெய்வீக இரகசியங்களை அறிவதில் அவன் எத்துணை அக்கறையற்றிருக்கிருன். முற்ருக அலட்சியமாகவும், மறதி யுடையவனுகவுமிருக்கிருன். அவனுடைய அ றி யா  ைம எத்தகையது. அவனுடைய இழிவுக்கு அது எவ்வளவு ஏதுவாயிருக்கிறது. அன்பும் கருணையுமுள்ள ஒரு தந்தை சிருஷ்டியின் இரகசியங்களை அறிந்து கொள்வதற்காக அற்புதமான நூல்கள் நிரம்பிய நூல் நிலையத்தை அமைத் துள்ளார். அதே நேரத்திலே அவனைச் சுற்றிச் சகல விதமான சுகபோகங்களையும் ஏற்படுத்தியுள்ளார். ஆனல் மகன் தன் தந்தையின் கொடைகளை அலட்சியஞ் செய்து விட்டு, கோளாகற்களோடும், விளையாட்டுச் சாமான் களோடும் பொழுது போக்குகிருன். மனிதன் எவ்வளவு அறியாமையும், அலட்சிய சுபாவமுமுடையவன். தந்தை மகனுக்கு நித்திய மகிமையை, விரும்பினர். ஆனல் மகன் குருடனகவும், பாக்கியமிழந்தவனுகவுமிருக்க விரும்புகிருன், தந்தை தன் மகனுக்கெனச் சிறந்த அரண்மனையைக் கட்டி யுள்ளார். ஆணுல், மகன் புளுதியிலிருந்து விளையாடுகிருன். பட்டாடை தைத்துக் கொடுத்திருக்கிருர், ஆனல், அவன் ஆடையின்றி நிற்கிருன். சுவையுள்ள உணவையும், பழங் களையும் உதவியிருக்கிருன், அவன் வயலிலுள்ள புற்களைத் தின்கிருன்.
கடவுள் நாமம் வாழ்க! நீங்கள் தேவராச்சியத்தின் அழைப்பைக் கேட்டிருக்கிறீர்கள். உங்கள் கண்கள் திறந்து விட்டன. கடவுள் பக்கம் திரும்பிவிட்டீர்கள். கடவுளைத் திருப்திபடுத்துவதும் உள்ளத்தின் இரகசியங்களை அறிந்து கொள்வதும், மெய்ம்மைகளை ஆராய்வதுமே உங்கள் நோக்க மாகும். தெய்வராச்சியத்தின் தாற்பரியங்களைப் பெறவும், தெய்வீக அறிகுறிகளைக் காணவும், உறுதியான அறிவைப் பெறவும், இந்த உலகம் ஒரு கர்த்தாவை உடையது, உயிர்

I
கொடுப்பவனையுடையது, உணவு கொடுப்பவனையுடையது. சிற்பியை உடையது, இவற்றைச் சான்றுகளாலும் நிரூபணங் களாலுமறிய வேண்டும். உணர்ச்சிகளால் அல்ல. நிச்சய மான வாதக் கோட்பாடுகளாலும் உண்மையான காட்சி களாலும் அறியலாம்; வெளிக்கண்ணுனது சூரியனைப் பார்ப்பது போல அதை அகக் காட்சியினுற் காண வேண்டும். இந் த வ  ைக யி ல் நீ ங் க ள் கடவுளின் சாந்நித்தியத்தை உணர்ந்து பரிசுத்தமான தெய்வீக வெளிப்பாட்டின் அறிவைப் பெறுவீராக.

Page 59
சாசுவத ஐக்கியம்
மெய்யான ஐக்கியம் என்பது யாது? இந்த மனித உலகை உற்று நோக்கினல் அங்கு ஐக்கியம் - ஐக்கியத்தின் பல்வகைக் கூட்டு வெளிப்பாடுகள் - நிலவுவதைக் காண் கிருேம். சான்ருக, மனிதன், விலங்கினின்று தனது அளவு, வாழ் நிலம் ஆகியவற்ருல் வேறுபட்டு நிற்கின்ருன். அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய இந்த வேறுபாடு ஆதாமின் சந்ததியினர் அனைவரையும் தழுவி நிற்கிறது. அதாவது, மனித குலத்தினர் அனைவரும் ஒரு குடும்பத்தினர்; அடிப்படை அல்லது புறநிலை ஐக்கியம் என இதைக் கருத லாம். பாரம்பரியம், இன ஒருமை ஆகியவை காரணமாக வேறுபாடு காணப்படலாம்; ஒர் இனம், மற்ருேர் இனத் தி னி ன் று வேறுபட்டுக் காணப்படலாம். அப்படியும் ஓர் ஒற்றுமை, ஐக்கியம் நிலவுகிறது. மொழி, ஒரு தொடர்பு சாதனம். ஒரே மொழியை வழங்குபவர்கள் என்ற முறை யால் ஓர் ஒற்றுமை நிலவுகிறது. ஒரு வகை அரசின் கீழ் வாழ்வதால் உண்டாகும் தேசிய ஒற்றுமை - பிரஞ்சு, ஜெர்மன், பிரிட்டிஷ் முதலிய தேசிய வழி ஒற்றுமை; அதே அரசின்கீழ் மக்களின் சிவில் உரிமைகள் அல்லது ஒரு கூட்டத் தாரின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதால் நி ல வும் ஒற்றுமை. இந்த ஒற்றுமைகள் அனைத்தும் கற்பனை மெய் யான அடிப்படை இல்லாதவை. ஏனெனில் இதனின்று எந்த மெய்யான பயனும் ஏற்படுவதில்லை. மெய்யான ஐக்கியத் தின் நோக்கம், யதார்த்த பூர்வமான, தெய்வீகப் பயன்கள் ஆகும். முன் சொன்ன இந்த வரம்புக்குட்பட்ட ஐக்கியங் கள், வரம்புக்குட்பட்ட பயன்களையே தோற்றுவிக்கும். எல்லையிலா வரம்பிலா ஐக்கியம், எல்லையில்லா வரம்பிலாப் பயன்களைத் தோற்றுவிக்கும். சான்ருக, இன, தேசிய ஐக்கியத்தின் பயன், பெரும்பாலும் வரம்புக்குட்பட்டதே. அது, ஒரு குடும்பம் தனித்து வாழ்வதைப் போன்றது;
 

I 13
விளைவாக, எல்லையில்லா அல்லது உலகு தழுவிய பயன்கள் ஏற்படுவதில்லை.
எல்லையிலா, வரம்பிலாப் பயன்களைத் தோற்றுவிக்கும் ஐக்கியமே, முதலில், மனிதகுல ஐக்கியம். இந்த ஐக்கியமே பரம்பொருளின் மகிமை நிழலில் அனைவரும் காக்கப்படு கின்றனர் என்ற உண்மையை அங்கீகரிப்பதாகும்; அனைவரும் ஒரே கடவுளின் சேவகர்கள் என்பதை அங்கீகரிப்பதாகும். ஏனெனில் அனைவரும் ஒரே புறவெளியை உணருகின்றனர்: அதே நிலத்தின்மீது வாழ்கின்றனர். அதே வானங்களில் இழ் உலவுகின்றனர். சூரியன் வழங்கும் சக்திகளைப் பெறு இன்றனர். ஒரே க ட வு விரி ன் பாதுகாப்பினைப் பெறு கின்றனர். இதுவே மிகப் பெரிய ஐக்கியம். அதன் பயன்கள் நிரந்தனமானவை. எப்போது? ம னி த கு ல ம், அ வ் வுண்மையை ஒட்டி நடந்து கொண்டால். ஆனல், மனிது குலம், இதுவரை இவ்வுண்மையை மறுத்து, மீறி வந்திருத் இறது. இன, தேசிய, சுயநலன்கள் போன்ற வரம்புக்குட் பட்ட ஒற்றுமை வழிச் சென்றிருக்கிறது. எனவே பெரும் பயன்கள் விளையவில்லை. இருப்பினும் இறை ஒளியும் இறுை வழங்கும் நற்பரிசுகளும் சூ ழ் ந் தே வந்திருக்கின்றன. மனங்கள் வளர்ந்திருக்கின்றன. உணர்நிலைகள் கூர்மை பெற்றிருக்கின்றன. விஞ்ஞான இயல்களும், கவின் கலை களும் எங்கும் பரவியிருக்கின்றன. மனிதகுலத்தின் மெய் யான, இறுதியான ஐக்கியத்தைப் பிரகடனப்படுத்தும் ஆற்றல் இருக்கவே செய்கிறது; இது. ஒப்பற்ற பயன்களை வழங்கும். மதங்களிடையே அது சமரசத்தைத் தோற்று விக்கும்; மோதிக் கொண்டிருக்கும் நாடுகளை நேசம் பாராட்டச் செய்யும். பகைமை பாராட்டும் ஆட்சித் தலைவர்கள் நண்பர்கள் ஆவர். இவ்வுலகுக்குச் சமாதானத் தையும் மகிழ்ச்சியையும் கொண்டு சேர்க்கும். மேற்கையும் கிழக்கையும் இணைக்கும். போரின் அடிப்படைகளை நிரந்தர மாக விலக்கும். * மாபெரும் சமாதானம்' பொறிக்கப் படும் - ஒங்கும். எனவே, இந்த வரம்புக்குட்பட்ட
گسسته او ه gع ۰ - oع

Page 60
114
ஒற்றுமைகள், அந்த மாபெரும் ஐக்கியத்துக்கான அடை யாளங்கள்தாம் . மனிதகுலம் அனைத்தையும் ஒரு குடும்ப மாக்கும்; மனித குலத்தின் மனச்சாட்சிப் பொலிவுகளைப் படைப்பதன்மூலம் இது சாத்யமாகும்.
மற்ருெரு ஐக்கியம், ஆன்மீக ஒருமை ஆகும். இது புனிதப் பேரொளி உயிர்ப்புகளிலிருந்து வளர்வதாகும். மனிதகுல ஐக்கியத்தைவிட இது மிகப்பெரிது. மனிதகுல ஐக்கியத்தை அல்லது ஒருமைப்பாட்டை உடலுக்கு ஒப்பிடு வதானுல் புனிதப் பேரொளி உயிர்ப்புகளிலிருந்து பிறக்கும் ஐக்கியம், உடலை இயக்கும் ஆன்மம் எனலாம். இது ஒரு முழுமையான ஐக்கியம். மானிடர் ஒவ்வொருவரும் பிறருக் காகத் தியாகங்களைச் செய்யுமளவு ஒரு நிலையை அது தோற்றுவிக்கும். அப்பொழுது ஒவ்வொருவருடைய பெரு விருப்பமும் வாழ்வினை, அதனை ஒட்டியவற்றை பிறர் நலன் களுக்காக விட்டுக் கொடுப்பதாக அமையும். இந்த ஐக்கியம் புனித இயேசு கிறிஸ்துவின் சீடர்களிடையே இருந்தது; சென்ற காலத்தின் தீர்க்கதரிசிகள், புனிதர்கள் ஆகியோ ரிடையே நிலவியது. இந்த ஐக்கியம்தான்"தெய்வீக ஆவித் தாக்கத்தின் மூலம் பஹாய்களிடையே பரவி நிற்கிறது. அப் பொழுதுதான் ஒவ்வொருவரும் தமது வாழ்வினைப் பிறருக் காக அர்ப்பணிக்கிருர்கள்; தமது பேரின்பத்தைப் பெற மணப் பூர்வமாக முயல்கிறர்கள். இந்த ஐக்கியம்தான், பாரசீகத்தில் இருபதாயிரம் மக்கள் தம் உயிர்களை அன்பில், அர்ப்பணிப்புணர்வில் அளிக்கக் காரணமாயிருந்தது. ஆயிரம் அம்புகளுக்கு பாப் இலக்காக நேர்ந்ததற்கு இந்த ஐக்கியமே காரணம்; நாற்பதாண்டுகள் பஹவுல்லா நாடு கடத்தப் பட்டு, சிறைகளில் வாழ்ந்ததற்கு இந்த ஐக்கியம்தான் காரணம். இந்த ஐக்கியம், உலகப் பருமையின் ஆன்மா. உலகம் ஒர் உடல், அது உயிர் பெய்யப்பட்டாலன்றி ஜீவ விரைவு பெறுதல் இயலாது. ஏசு பெருமான் - உயிர் அவருக்காக - இந்த ஐக்கியத்தை ம னி த ரி  ைட யே பிரகடனப்படுத்தினர். ஏசு பெருமானில் ந ம் பி க்  ைக

5
வைக்கும் ஒவ்வோர் ஆன்மாவும் மீண்டும் உயிர் உணர்வு நிலை பெறுகிறது; இந்த ஆவி மூலம் புத்துயிர் பெறுகிறது. சாசுவதப்பீடு நிலையின் உச்சத்தைத் தொடுகிறது. என்றும் நிலைத்த வாழ்வினை உணர்கிறது. இரண்டாவது பிறப்பை அனுபவத்தால் காண்கிறது; சிறந்த பேற்றின் உச்சத்துக்குச் செல்கிறது.
கடவுளின் சொல்லில் மற்ருேர் ஐக்கியம் இருக்கிறது; இறை வெளிப்பாடுகளின் - ஆப்ரஹாம், மோசே, ஏசு பெருமான், முகமது, பாப், பஹவுல்லா - ஒருமை அது. இது தெய்வீக ஐக்கியம்; விண் இட்ட, பேரொளி கூட்டும். தயை மிக்க ஐக்கியம். அடுத்தடுத்த வெளிப்பாடுகளில் இந்த உண்மை நிலை தோன்றுகிறது. சூரியன் ஒருவனே. ஆனல் அவன், எத்துணை முனைகளில் உதித்தெழுகின்ருன்! கோடையில் அவன் வடமுனையில் உதிக்கின்ருன் குளிர் காலத்தில் தென் முனையில் எழுகின்றன். இடைப்பட்ட ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசி மண்டலத்தின் ஏதோ வொரு நிலையில் தோன்றுகிருன். இந்த உதய முனைகள் வேறுபட்டிருப்பினும் சூரியன் அதே சூரியன்தான்; அந்த முனைகள் அனைத்திலுமிருந்து தோன்றுபவன். இதன் குறிப் பிடத்தக்க சிறப்பு யாது? தீர்க்கதரிசன மெய்ம்மை நிலை சூரியனுல் உவமிக்கப்படுகிறது; புனித வெளிப்பாடுகள் உதய முனைகள் அல்லது ராசி மண்டல முனைகள்.
தெய்வீக ஒருமை, ஐக்கியம், மனிதகுலம் சார்ந்த அனைத்துச் சிந்தனைகளாலும் புனிதம் பெறுகிறது. அதை உணர்வதும், உய்த்துணர்வதும் இயலாது. ஏனெனில் அது ஆதியந்தமில்லா யதார்த்தநிலை. அது கட்டுக் கடங்கிவிடக் கூடியதன்று. மனித மனங்கள் அந்த மெய்ம்மை நிலைமைச் சூழ்ந்து கொள்ள முடிவதில்லை. ஏனெனில் எல்லாச் சிந்தனை களும் அதன் கருத்து நிலைகளும் வரம்புக்குட்பட்டவையே; அறிவு சார்ந்த படைப்புகள். தெய்வீகத்தின் உண்மை நிலை அன்று. தெய்வீகமே அதனை உணர முடியும். சான்ருக,

Page 61
i 16
தெய்வீகக் கருத்து நிலை ஒன்றை, வாழும், சர்வவல்லறை உள்ள, தன்னைத்தானே நிலைபெறச் செய்யக்கூடிய சாசுவதப் பொருளாக உருவகப்படுத்துவோமானல் அது மனித அறிவு சார்ந்த யதார்த்தம் ஒன்றினுல் உணரத்தக்க கருத்து மட்டுமே. வெளிப்படையான புலனுக்கு எட்டிய யதார்த்த மாக அது இராது; உணர, தழுவிச் செல்ல மனித மனத்துக் குரிய ஆற்றலுக்கு அது அப்பாற்பட்டது; நமக்கே ஒரு வெளிப்படையான, புலனுகக்கூடிய பருநிலை உண்டு. ஆணுல் அதைப்பற்றிய கருத்து, நமது மூளையின் படைப்பு: வரம்புக் குட்பட்ட உணர்நிலையின் படைப்பு. தெய்வீக மெய்மை
இந்த அறிவுநிலை - உணர்வுநிலை அளவுக்கு மேலாக புனிதப்
படுத்தப்படுகிறது. அது எப்பொழுதும் மறைக்கப்பட்டே இருக்கிறது; நமது அறிவாற்றலுக்கு அப்பால் அதன் சொந்த புனித - தூய்மை நிலைகளில் தனி இடம் கொண்டு விடுகிறது. இது நமது உணர்வு நிலை கடந்து இருந்தாலும் அதன் ஒளிகள், பரிசுகள், அடையாளங்கள், சிறப்புகள் அனைத்தும் தீர்க்கதரிசிகளின் யதார்த்தங்களில் வெளிப்பட்டு நிற்கின்றன. இது பல்வேறு கண்ணுடிகளில் சூரியன் அதியற் புதமாக ஒளி சிந்தி நிற்பதைப் போன்றது. இந்தப் புனித மெய்மைகள் பிரதிபலிப்பு ஆடிகள் போன்றவை. தெய்வீக உண்மை சூரியனைப் போன்றது; கண்ணுடிகளில் பிரதி பலித்தாலும் அதன் சிறப்புகள், முழுமைகள் அதிலேயே ஒளிர்வன. அதன் மகத்தான காம்பீர்ய நிலையிலிருந்து கீழ் நோக்குவதில்லை. கண்ணுடிகளில் அடைக்கலம் புகுவதில்லை; அதன் புனிதமிக்க விண்ணிலேயே நிற்கிறது. அதிகமாகச் சொல்வதானுல். அதன் ஒளிகள் கண்ணுடிகளில் வெளிப்படு கின்றன. எனவே, வெளிநிலைகளிலிருந்து தோற்றம் தருவது அதன் எல்லையிலாச் செல்வம் ஒன்று. ஆனல் அந்த வரம் பிலாப் பேற்றினைப் பெறுவோர் பல்லாயிரவர். இது இறைவனின் ஐக்கியம். இது ஒருமை; தெய்வீகத்தின் ஐக்கியம். மேற் செல்லுதல் அல்லது கீழிறங்குதல், பிழம் புருவம், உணர்தல், கருத்து நிலை காணல் - இவை அனைத் துக்கும் அப்பாற்பட்டது, இந்த ஐக்கியம். தீர்க்கதரிசிகள்
an

17
அதன் கண்ணுடிகள். அதன் ஒளிகள் அவைமுலம் வெளிப்படு கின்றன. அதன் சிறப்புகள் அவற்றிலேயே ஒளி சிந்து கின்றன. ஆனல் யதார்த்த சூரியன், அதன் உச்சி முனையி லி ரு ந் து, நிலையத்திலிருந்து கீழிறங்குவதில்லை. இது ஐக்கியம்; ஒருமை, புனிதம்; இது மகிமைப்படுத்தல். இதன் மூலம் இறைவனைப் புகழ்கின்ருேம், அன்பால் அணி செய்கின்ருேம்.

Page 62
இருளடைந்த ஒளி
ஆதாம் சிருட்டிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை மனிதருக்கு இரண்டு மார்க்கங்களிலிருந்து வந்தன. ஒன்று லெளகீக மார்க்கம்; மற்றது ஆன்மீக மார்க்கம். லெளகீக மார்க்கமான இயற்கையின் மார்க்கம், மிருக உலகின் மார்க்கம். இயற்கையின் தேவைக்கேற்ப மிருகம் நடந்து கொள்கிறது. அது தனது இயல்பூக்கங்களின்படியும் இச்சை களின்படியும் இயங்குகிறது. அதனுடைய சார்புகளும் தூண்டுதல்களும் இருக்கின்றனவோ, அவற்றை நிறைவேற்ற அதற்குச் சுதந்தரமுண்டு. இருந்தும் அது இயற்கையின் கைதியே. அது விதித்த விதிக்குப் புறம்பாகச் செல்ல முடியாது. அதனிடம் ஆன்மீக உணர்ச்சிகள் துளியும் கிடையாது. தெய்வீக சமயம் பற்றிய அறிவோ, இறைவன் ராச்சியம் பற்றிய அறிவோ அதனிடம் கிடையாது. சிந்திக், கும் சக்தியோ, சேதன மயமான விவேகமோ அதனிடமில்லை. அது புலன்களுக்கு அடிமைப்பட்டது. அவற்றுக்கு அப்பாற் பட்ட விஷயங்கள் அதற்குத் தெரியாது. கண் காணுவதை யும் காது கேட்பதையும், மூக்கு மணப்பதையும் நா சுவைப் பதையும், மெய் உணர்வதையும்விட அதற்கு வேறு அறிவு கிடையாது. மிருகத்துக்குப் புலனுணர்வு போதுமானது. ஆனல் அப் புலன்களுக்கு மேற்பட்டதும், கடவுள் இராச் சியத்துக்கு இட்டுச் செல்வதுமான சோதனை மயமான ஆன் மீக உணர்ச்சியோடு கூடிய தெய்வீகச் சமயப் புலத்தை மிருகம் சிறிதும் அறியமாட்டாது. ஏனெனில், அது அடைந் துள்ள மிக மேலான நிலையில் அது இயற்கைக்குக் கட்டுப் பட்டதாகவே யிருக்கிறது.
இக் காலத்து உலோகாயதர் தமது இயல்புகளைப் பற்றி யும், பிந்தங்களைப் பற்றியும் பெருமையடித்துக் கொள்வது மிக நூதனமானதொரு காரியமாகும். தொடரு ஞ்,

I 19
சுட்டிடம் அறியக்கூடியவற்றைவிட மற்றையவை ஏற்றுக் கொள்ளப்படத்தக்கனவல்ல; அவற்றை உண்மையெனக் கொள்ளவேண்டியதில்லையென்று கூறுகிருர்கள். அவர்கள் சொந்தக் காற்றின்படியே இயற்கையின் கைதிகளாயிருப்ப தோடு, ஆன்மீக உலகைப் பற்றியறியாதவராயும், தெய்வீக ராச்சியத்தைப் பற்றித் தெரியாதவராகவும் தெய்வீகக் கொடைகளைப்பற்றி அறியாதவராயுமிருக்கிருர்கள். இது நற்பண்பானல் மிருகங்களிடத்தில் இது பெரிதும் காணப் படுகிறது. ஏனெனில் மிருகத்துக்கு ஆன்மீக உலகைப் பற்றிச் கிறிதும் தெரியாது; சேதனத்தோடு சம்பந்தப்பட்ட அனுபவமயமான அந்தரங்க உலகோடு அவற்றுக்குப் பரிச் சயமில்லை. புலன்களுக்கு அப்பாற்பட்ட தொன்று இல்லை யென உலோகாயதரோடு மிருகங்களும் உடன்பாடு தெரி விக்கும். புலனறிவோடு மாத்திரம் நின்று விடுவது ஒரு நற்பண்பானுல் மிருகமானது அந்தப் பண்பை மனிதனிலும் பார்க்க அதிகமாகப் பெற்றுள்ளது; ஏனெனில் புலனறிவுக் கப்பாற்பட்ட விஷயங்களெதுவும் அதற்குத் தெரியாது. தெய்வீக ராச்சியத்தைப்பற்றி அதற்கு ஒன்றுந் தெரியாது. அதைப்பற்றிய அறிகுறிகளுந் தெரியாது. ஆனல், கடவுள் மனிதனிடத்து இயற்கையைக் கட்டியாளக்கூடிய எல்லையற்ற சக்தியை இட்டு வைத்துள்ளார்.
ஏனைய இயற்கைத் தோற்றங்களும், உயிருள்ள பொருள் களும் எவ்வாறு இயற்கையின் கைதியாயிருக்கின்றன என்பதை ஆராயுங்கள், நமது வான மண்டலத்திலே பிரமாண்டமான சூரிய மண்டலங் காணப்படுகிறது. பெரிய நட்சத்திரங்களும் கிரகங்களும் காணப்படுகின்றன. உயர்ந்த மலைகளைக் காணுகிருேம். இந்தப் பூமியையே எடுத்துக் கொள்ளுங்கள். மனிதனுக்கீடாயயுள்ள உயிரினங் களைப் பாருங்கள, இவையெல்லாம் இயற்கையின் கைதி களே, மனிதன் அதற்கு விதி விலக்கு, இவையெல்லாம் இயற்கையின் விதிக்கு அணுவளவும் பிசகாது அடங்கி யவையே, மனிதனைவிட மற்றைப் பிராணிகள் இந்த

Page 63
120
இயற்கை விதிக்கு மாருகச் செல்ல முடியாது. இயற்கை விதிக்கு ஒர் அணுவளவேனும் மாருக படைக்கப்பட்ட மற்றைப் பொருள்கள் செல்ல முடியாது. சூரியன் மிக்க ஒளியும் பெருமையு முடையது. அது கோடிக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ளது. சதா சுழன்று கொண்டிருக் கும் அதன் வீதியிலே அது கைதியாக நியதிக்கடங்கியே இருக்கிறது. எல்லாவற்றையும் அடக்கியுள்ள விதிக்கு அடங்கியுள்ளது. இயற்கையைக் கட்டி ஆள்பவன் மனிதனே. இயற்கை விதியின்படி அவன் பூமியிலே இருக்க வேண்டியவன். ஆனல் இந்தக் கட்டளையை மீறி விமானங் களிலே மலைகளுக்கு மேலாகப் பறப்பதைப் பாருங்கள். கடலிலே கப்பலில் செல்லுகிருன். நீர்மூழ்கிக் கப்பல்களில் கடலின் ஆழத்தில் சஞ்சரிக்கிருன். மனிதன் இயற்கையைத் தனக்கு அடிமையாக்கி விட்டான். மின் சக்தியின் பெரிய ஆற்றலை ஒன்று திரட்டி ஒரு சிறிய விளக்கிலே சிறைப் படுத்தித் தனது தேவைக்குப் பயன்படுத்துகிருன் ஒரு கம்பியின் மூலம் மேலைத் திசையிலிருந்து கீழை நாட்டுடன் தனது குரலை ஒலி ப் பதி வு செய்கிருன், பேசுகிருன். நினைத் தற்க ரி ய தூரத்திலே இ ய ங் கு ம் நட்சத் திரங்களின் இரகசியங்களை இந்தப் பூமியிலிருந்து கொண்டே ஊடுருவி அறிய முற்படுகிருன். பூமிக்கு உள்ளே அடங்கிக் கிடக்கும் மறைவான தத்துவங்களைக் கண்டு பிடிக்கிருன். பொக்கிஷங்களை வெளிப்படுத்துகிருன், வெளி உலகத்துக்குப் பின்னல் அடங்கிக் கிடக்கும் இரகசியங்களையும் மறை பொருள்களையும் ஆராய்ந்து, அளக்க முடியாது மறை பொருளாய் ஒளிந்து கிடக்கும் விதிகளையெல்லாம் கண்டு பிடிக்கிருன். காணமுடியாத தளத்திலிருந்து, இந்தத் தத்துவங்களை யெல்லாம் மனிதன் தனது அந்தரங்க சக்தி யினல் காணக்கூடிய தளத்துக்குக் கொண்டு வந்துள்ளான். இது இயற்கையின் விதிக்கு முரணுனது.
இயற்கையின் எல்லைக்குட்பட்ட விஷயங்களை மனிதன் ஆட்சி செய்து வருகிருன் என்பது நிதர்சனமாகிறது.
 

12.
இயற்கை இயக்கமற்ற சடப்பொருள், மனிதன் முன்னேறும் இயக்கமுள்ளவன், இயற்கைக்குச் சேதனமில்லை. மனித னுக்குச் சேதனமுண்டு. இயற்கைக்குச் சங்கற்ப ஆற்றல் கிடையாது; திண்ணிதாய் எண்ணஞ் செலுத்துந் திறன் கிடையாது. ஆனல், மனிதனுக்குப் பிரமாண்டமான சங்கற்பத்திறனுண்டு. இரகசியங்களையோ மறைந்துள்ள உண்மைகளையோ, அறியுஞ் சக்தி இயற்கைக்குக் கிடை யாது. ஆனல், மனிதனுக்கு அந்தச் சக்தி விசேஷமாக வழங்கப்பட்டுள்ளது. இறைவனுலகத்தோடு இயற்கைக்குப் பரிச்சயமில்லை. ஆனல், மனிதன் இறைவனுண்மையின் சான்றுகளை அறிந்துணரும் இயல்புடையவன். இறைவனைப் பற்றி இயற்கைக்குத் தெரியாது. மனிதனுக்கு இறையுணர் வுண்டு, மனிதன் தெய்வீகப் பண்புகளைப் பெறுமியல் புடையவன்; இயற்கைக்கு அது கிடையாது. மனிதன் கெட்ட பண்புகளைத் தன்னிச்சைப்படி கை விடுவான். இயற்கை தன்னியல்பூக்கங்களின் செல்வாக்கை மாற்றும் சக்தியற்றது, மனிதன் உயர் நலமும், விசேடப் பண்பு முடையவன் என்பது நிரூபிக்கப்படுகிறது. இயற்கைக்கு அதீதமானதொரு முழு நிறைவான சக்தி மனிதனிட முண்டு. அவனிடம் சேதனமுண்டு, சங்கற்ப சக்தியுண்டு ஞாபக சக்தியுண்டு, விவேகமுண்டு, தெய்வீகப் பண்பு களுண்டு இயற்கையிடம் சற்றும் காணப்படாத பண்பு கள் அவனிடமுண்டு. ஆனபடியால் அவனிடம் மறைந்து அடங்கிக் கிடக்கும் முழு நிறைவான தெய்வீக சக்தி காரண 4மாக அவன் உயர்வும், உத்தமுமான பண்புடையவனு
கிரு:ன்.
இந்த முழு நிறைவான சக்தி மனிதனுக்கு வழங்கப் பட்டபோதிலும், தனது நிலைக்குக் குறைவான தானத் துக்கு இறங்கித் தானும் தனக்குக் குறைவானதற்குச் சமமானவனென்று கூறுவது எவ்வளவு நூதனமாயிருக் கிறது. இறைவன் மனிதனிடத்துச் சேதன உயிரை உண் டாக்கியிருப்பதால் அவனே உலகத்து உயிர்களுள் மிக

Page 64
122
அற்புதமானவன். இந்தப் பண்புகளை அலட்சியஞ் செய்வ தால், அவன் சட சம்பந்தமான மட்டத்துக்கு இறங்கி, இயலுலகின் ஆட்சியாளன் சடப் பொருளேயென்றும், எண்ணி புலக் காட்சிக்கு அதீதமானவை உண்மையல்ல வென்று கூறுகிருன். இது நற்பண்பாகுமா? பூரணமான அர்த்தப்படி இது மிருகப் பிராயமான தன்மையாகும். ஏனெனில் மிருகத்துக்கு வேறு உணர்வு கிடையாது. இந்த நோக்கைக் கொண்டு பார்க்குமிடத்து மிருகம் மனிதனை விடப் பெரிய தத்துவ ஞானியாகிறது. ஏனெனில் அதற்கு இறைவன்' ராச்சியத்தைப் பற்றிய எவ்வித அறிவும் கிடையாது. அதற்கு ஆன்மீக உணர்ச்சி கிடையாது. தெய்வீக உலகைப் பற்றிய அறிவு கிடையாது. சுருக்கமாகக் கூறுவதானல், இயற்கையின் வழி பற்றிய நோக்கு இதுவே.
இரண்டாவது வழி சமய வழி; தெய்வீக இராச்சியத் துக்கு இட்டுச் செல்லும் வழி இதுவே. இதில் புகழத் தக்க பண்புகளைப் பெறவேண்டும். தெய்வீக ஒளியைப் பெற வேண்டும். மனித உலகில் சரியான நடத்தையுடையவ ராயிருக்க வேண்டும். உலகின் முன்னேற்றத்துக்கும், உயர் வுக்கும் இவ் வழியே பொருத்தமானது. மனிதன் அறிவு விளக்கம் பெறவும், பயிற்சி பெறவும், ஒழுக்க முறையில் சிறப்புப் பெறவும் இதுவே மூலகாரணம். இது கடவு ளறிவை வழங்குவதால், கடவுள் பக்தியென்னும் காந்த சக்தியைக் கொண்டுள்ளது இதுவே. இறை தூதர்களின் வழி இதுவே. ஏனெனில், இவர்களே தெய்வீக ஒற்று மைக்கு அத்திவாரமாயிருப்பவர்கள் இந்த வழி யி ல் மாற்றமோ, திரிபோ கிடையாது. மனிதகுலம் முன்னேறுவ தற்கு இதுவே வழி; தெய்வீகப் பண்புகள் பெறுவதற்கும். மனித இனம் ஒளிபெறுவதற்கும் இதுவே வழி.
தெய்வீக மதத்தின் உண்மை " என்றும் மாரு திருந்த போதிலும், அந்தோ மனித குலம், பாவனைகளிலும், போலி களிலும் மு ற் ரு க மூழ்கியிருக்கிறது. மூலாதாரமான

123
தத்துவங்களை மூட நம்பிக்கைகள் மூடி மறைத்து விட்டன. உலகம் இருளிற் சூழ்ந்து கிடக்கிறது. சமய ஒளி தென்படு கிறதில்லை. இந்த இருளானது வேற்றுமைகளையும், பிணக்கு களையும் உண்டாக்குகிறது. பல வகையான கோட்பாடு களும் கிரியைகளும் நிலவுகின்றபடியால், பல சமய அமைப்பு களிடையிலும், பிணக்குகள் உண்டாகி விட்டன. ஆனல் சமயத்தின் ஒரே நோக்கம், மனித குலத்தை ஒன்று படுத்துதல், உண்மையான சமயம் மக்களிடையே இணக்கத் தையும் அன்பையுமுண்டாக்குகிறது. புகழத்தக்க நற் குணங்களை மக்களிடையே வளர்க்கிறது. ஆனல் அவர்கள் ஒற்றுமைக்கேதுவான மெய்ம்மையை அலட்சியஞ் செய்து, போலிக் கொள்கைகளை அவன் இறுகப் பற்றிக் கொண்டு, பாவனை செய்வதில் ஈடுபடுகிருன். இதனல் சமய ஒளியை அவர்கள் கைவிட்டு விடுகிறர்கள். தமது மூதாதையரிட மிருந்தும், முந்தையரிடமிருந்தும் பெற்ற மூட நம்பிக்கை களைப் பின்பற்றுகிருர்கள். தெய்வீக உண்மையின் விண் ணுெளியை அவர்கள் இழந்து போலிக் கற்பனைகளென்ற இருளில் குந்தியிருக்கிருர்கள். அவ்வளவு தூரம் அவர்கள் இந்தப் போலி வாழ்வில் மூழ்கி விட்டனர். வாழ்வுக்கு ஏற்றதாயமைந்த வி ஷ ய ம், மரணத்துக்கு ஏதுவாய் விட்டது. அறிவுக்கு ஏதுவான விஷயம், அறியாமையை நிதரிசனப்படுத்துகிறது. மனித இயற்கையை உன்னத மாக்குவதற்கமைந்த விஷயம் அதைக் கீழ் நிலைக்குத் தள்ளக் கூடியதாகி விட்டது. இதனுல் சமயாபிமானிகளின் உலகம் தேய்ந்து தேய்ந்து இருளடைந்து போக உலோகாயதரு டைய உலகம் விரிந்து முன்னேறுகிறது. சமயாபிமானிகள் தூய வாழ்வையும், சமயத்தின் பரிசுத்த மெய்ம்மையையும் அலட்சியஞ் செய்து கைவிட்டு போலிகளைக் கைப்பற்றிக் கொண்டனர். சூரியன் மறைந்தவுடன், வெளவால்கள் பறக்க ஆரம்பித்து விடும். அவை இருளில் உலாவும் பிராணிகளானபடியால், இரவானதும் அவை வெளியே வந்து விடுகின்றன. சமய ஒளி மறைந்தவுடனே, உலோ

Page 65
124
காயதர் வெளிப்படத் தொடங்கி விடுகின்றனர். அவர்கள் தான் இரவில் உலாவும் வெளவால்கள். சமயம் வலி குன்றத் துவங்கியதும் அவர்கள் தமது நடவடிக்கையில் ஈடு படுவார். உலகம் இருள் மண்டி, மேகங்கள் பரவிச் சூழ்ந் திருக்கும் போது அவர்கள், இருளைத் தேடிக் கொண்டு திரிவர்.
 

தெய்வீகக் கல்வியின் அவசியம்
தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலே மகிழ்ச்சி தரும் செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை முற்ருனா உண்மையானவையாகவும், சந்தேக மற்றனவுமாயிருக் கின்றன. உண்மையென்ற சூரியன் எப்பொழுதும் கிழக்கே தான் உதயமாயிருக்கிறது, இறையருள் பெற்ற தீர்க்க தரிசிகளெல்லாரும் அங்கேதான் தோன்றியிருக்கிருர்கள். அங்கேதான் இறைவனுடைய சமயங்கள் பிரகடனஞ் செய்யப்பட்டன. இறைவனுடைய போதனைகள் அங்கே தான் பரப்பப்பட்டன. கடவுளின் கட்டளைகள் அங்கே தான் முதலில் ஸ்தாபிக்கப்பட்டன. ஒளிக்கு இருப் பிடமாகக் கீழை நாடுகள் தாம் விளங்கி வந்திருக்கின்றன. கிழக்கிலிருந்து தான் மேனடுகள் ஒளியைப் பெற்றிருக் கின்றன. ஆனல் சில சந்தர்ப்பங்களில் அந்த ஒளியின் பிரதிபிம்பம் அதிகமாகக் காணப்படுகிறது. கிறிஸ்து சமயம் பற்றிக் கூறுமிடத்து இது உண்மையெனவே கருதலாம், யேசுநாதர் பலஸ்தீனத்திலே தோன்றினல், அங்கேதான் அவருடைய போதனைகள் நிலைநிறுத்தப்பட்டன. தேவராச்சி யத்தின் கதவுகள் அங்கேதான் திறக்கப்பட்டன. அங்கிருந்து தான் தெய்வீக அருளிப்பாடுகள் பரப்பப்பட்டன, இருந் தும், மேலை நாட்டவரே கீழை நாட்டவரைவிட அதிகமாகக் கிறிஸ்து சமயத்தைத் தழுவி, ஸ்தாபித்துப் பரப்பியிருக் கிருர்கள். உண்மையின் சூரியன், கீழை வானத்திலிருந்து தான் உதயமாயிற்று; ஆணுல் மேலை நாட்டிலேதான் அதனுடைய வெப்பமும் ஒளியும் மிகவும் பிரகாசமாயிருக் கிறது, மேலை நாட்டிலேதான் கிறிஸ்து நாதரின் பிரகாச மான வெற்றிக் கொடி பறந்து கொண்டிருக்கிறது. அதே போல பஹவுல்லாவின் பிரபையும், மேற்கு நாடுகளிலே தான் பூரணமாக ஒளி காணுமென்று நினைக்கிறேன். மேலை

Page 66
126
தாட்டவர்க்கே பஹவுல்லாவின் போதனைகள் மிகப் பொருத்தமுடையனவாயிருக்கின்றன. விஷயங்களை நன்கு புரிந்து கொள்ளும் திறமை மேலை நாட்டவரிடம் உண்டு, பஹவுல்லாவின் ஒப்பற்ற பகுத்தறிவு நிறைந்த சொற்களின் பொருளை அவர்கள் புரிந்து கொள்வார்கள். பஹவுல்லாவின் அருண் மொழிகளிலே முந்திய தீர்க்கதரிசிகளின் போதனை களின் சாரம் அடங்கியிருக்கிறதென்பதை உணர்ந்து கொள்
• 6) / Π Π ,
கிறிஸ்து நாதரின் போதனைகள் பஹவுல்லாவினல் பிரகடனஞ் செய்யப்பட்டதோடல்லாமல், இக் காலம் மனித குலத்துக்கேற்ற புதிய போதனைகளையும் வெளிப் படுத்தியிருக்கிருர், பரிசுத்த ஆவியின் சக்தியினலும், பாதுகாப்பினுலும் கீழைத் தேசத்து மக்களைப் பயிற்றி யுள்ளார், மனிதகுலத்தை ஒன்ருக்கிச் சர்வதேச ஐக்கியத் துக்கு அத்திவாரமிட்டுள்ளார்.
அவருடைய அருண் மொழிகளின் சக்தியால், சர்வ மதங்களையுஞ் சேர்ந்த மக்களின் உள்ளங்களும் இணைக்கப் பட்டன. உதாரணமாக பாரசீகத்திலுள்ள பஹாய் களிடையே, கிறிஸ்தவர், இஸ்லாமியர், ஸொராஸ்திரர், யூதர், முதலிய பல வகைச் சமயத்தவரும் கொள்கை யாளருமிருக்கின்றனர், இவர்களெல்லாரும் பஹவுல்லாவின் அருணெறி காரணமாக அன்பினுல் ஐக்கியப்பட்டுள்ளனர். முன்னெல்லாம் இவர்கள் ஒருவரை ஒருவர் பகைத்தனர். இரத்த வெறி கொண்டவராய்க் கொள்ளையடித்தனர், கடவுளே மகிழ்விப்பதானுல் பகைமையும், போரும் அவசிய மென எண்ணினர். இப்போது அவர்கள் பரஸ்பரம் அன்பும் தோழமையும் ஆர்வமும் சகோதரத்துவமும், உடைய வராயிருக்கின்றனர். எல்லாரும் மனிதகுலத்துக்கு நன்மை புரிவதையும், சர்வதேச சமாதானத்தை உண்டாக்குவதை யும், எல்லாத் தெய்வீக சமயங்களையும் ஒன்ருக்குவதையும், வள்ளன்மை நிறைந்த செய்கைகளில் ஈடுபடுவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கிருர்கள். அவர்கள் தமது
 

127
சொல்லாலும் செயலாலும் பஹவுல்லாவின் அருள் வாக்குகள் உண்மையென்பதை நிதரிசனப்படுத்துகிறர்கள்.
உலகத்துத் தேச மக்களிடையே நிலவும் பகைமையை யும், துவேஷத்தையும் எண்ணிப் பாருங்கள். எவ்வளவு பிணக்கும், பகைமைகளு முண்டாகின்றன. எத்தகைய போரும் பூசலுமுண்டாகின்றன. எவ்வளவு இரத்தஞ் சிந்து கிருர்கள்; எவ்வளவு அநீதியும் கொடுங்கோன்மையும் காணப்படுகிறது. இப்போது கிழக்குத் துருக்கியில் யுத்தம் நடக்கிறது. துருக்கிக்கும் இத்தாலிக்குமிடையில் சண்டை நடக்கிறது, தேசங்கள் இ ர த் த ஞ் சிந்துவதிலும், நாடுகளை வெற்றி பெறுவதிலும், மற்றை நாடுகளை வெற்றி பெறுவதிலுமீடுபட்டிருக்கின்றன. சமயத் துவேஷத்தினுல் மனம் நிரம்பியவராய், தம்மீது குருட்டுத் தன்மையால் விரோதிகளென்று கருதி மக்களைக் கொல்லுகிருர்கள். அதன் பயனுக இறைவனுக்கு உவப்பானதைச் செய்வதாகத் தவரு ய் எண்ணுகிருர்கள். இவர்களுடைய அறியாமை இருந்தவாறென்னே? கடவுள் விலக்கியவற்றைச் செய்வது அவருக்குப் பிரியமானதென்று நினைக்கிருர்கள். கடவுள் அன்புமயமானவர். கடவுள் தோழமையை நாடுகிருர், தூய்மை, புனிதம் நீண்டகாலம் துயரைச் சகித்துக் கொள்ளுதல் என்பவற்றை நாடுகிருர், தெய்வீகத்தின் பண்புகள் இவைதாம். எனவே போர்க் கோலங் கொண்டு யுத்த வெறியில் மூழ்கிய தேசங்கள் தெய்வீகத்துக்கு எதிராக எழுந்துவிட்டனர். இதனல் இறைவனுக்குத் தொண்டு செய்வதாக அவர்கள் நினைக்கிருர்கள். இஃது எவ்வளவு அறியாமை. எவ்வளவு அநீதி, குருட்டுத்தனம்; உண்மையை உணராத தன்மை. உலகத்தைச் சூழ்ந்த இந்த இருள் அகல வேண்டுமென்று நாம் ஆர்வத்தோடு முயல வேண்டும். பரலோக ராச்சியத்தின் ஒளி எங்கும் பரவ வேண்டும்; மனிதர் என்ற கண்ணுடியில் இறைவனின் உருவம் பிரதிபலிக்க வேண்டும். இறைவனுடைய கட்டளை நன்கு நிறுவப்பட வேண்டும். உலகின் எல்லாத் தேசங்

Page 67
128
களிலும் சமாதானம் நிலவ வேண்டும்; இறைவனுடைய
நீதியான பாதுகாப்பின்கீழ் சுகமும் அமைதியும் பெற வேண்டும். உங்களுக்கு நான் கூறக்கூடிய அறிவுரை இதுவே. எல்லாரிடத்தும் அன்பாயிருங்கள், மனித கு லத்  ைத நேசியுங்கள், மனிதகுலம் உங்கள் சுற்றமென எண்ணுங்கள்; அது இறைவனின் அடியவர் என்று நினையுங்கள். மனிதருள் ளத்திலிருந்து பகையும் பிணக்கும் அகல வேண்டுமென்றும், சகல சமயங்களும் வித்தியாசங்களை மறந்து இசைய வேண்டுமென்றும் , அ ல் லு ம் பகலும் முயலுங்கள். தேசங்கள் ஒன்றையொன்று நேசிக்க வேண்டும். சாதிப் பிணக்கோ, சமயப் பிணக்கோ, அரசியல் துவேஷங்களோ இருக்கக் கூடாது. மனிதகுலம், இறைவனையே வாழ்வின் தொடக்கமாகவும் முடிவாகவும் உணர வேண்டும். கடவுளே எல்லாவற்றையும் படைத்தார். அவையெல்லாம் ஈற்றிலே கடவுளையே போய்ச் சேரவேண்டும். ஆனபடியால் மனித சமுதாயத்தை மெய்யன்போடு நேசியுங்கள். வறியவனைச் சந்தித்தால் அவனுக்கு உதவி புரியுங்கள். பயமடைந்த வனுக்கு ஆதரவளியுங்கள்; கோழைத்தனமுடையவனை விரனுக்குங்கள்; உத்தமனக்குங்கள். அறிவில்லாதவர்க்குக் கல்வியூட்டுங்கள். அந்நியரோடு உறவாடுங்கள். கடவுளின் இனங்களைப் போற்றுங்கள். எவ்வளவு அன்பாக அவர் எல்லாரிடத்தும் கருணை காட்டுகிருர். அவருடைய முன் மாதிரியைப் பின்பற்றுங்கள். தெய்வீகக் கட்டளைப்படி நீங்கள் மற்றவர்களைக் கருணையோடு நடத்த வேண்டும். அதாவது கடவுள் அவர்களை நடத்துவதுபோல நீங்களும் நடத்துங்கள். மனித குலத்துக்கு இதுவே மேலான பெறும் பேருகும்.
மேலும், கடவுள் மனிதனுக்குப் பகுத்தறியும்"அறிவைக் கொடுத்திருக்கிருர், அதன் பயஞக அவன் மெய்ம்மையை ஆராயக்கூடியவனுயிருக்கிருன், மனிதர் தமது தந்தையர், மூதாதையர் ஆகியோரைக் கண்மூடித்தனமாகப் பின்பற்று மாறு கூறவில்லை. அவர் மனிதனுக்கு விவேகத்தைக் கொடுத்துள்ளார். அதன் பயணுக அவன் அறியக்கூடிய
శ

129
வணுயிருக்கிருன். அவன் எதை உண்மையெனக் காண் கின்ருணுே அதை அவன் ஏற்றுக் கொள்ள வேண்டும். மற்ற வர்களைப் போலித்தனமாகப் பின்பற்றக் கூடாது. கண் மூடித்தனமாக அவன் செய்வது போலச் செய்யக் கூடாது. தானுக விஷயங்களை ஆராயாமல் மற்றவர் சொல்வதை வேத வாக்காக ஏற்றுக் கொள்ளக் கூடாது. ஒவ்வொரு உ யி ரு ம், விவேகத்தோடும் தனிப்பட்ட முறையிலும் விஷயங்களை ஆராய்ந்து அதற்கேற்றவாறு உண்மையான ஒரு முடிவுக்கு வர வேண் டு ம். ம னி த குலம் அல்லற்படுவதற்கும் மனமடிவுறுவதற்கும் காரணம், கண் மூடித்தனமாக மற்றவர்களைப் பின்பற்றுவதால் உண்டாகும் அறியாமையேயாகும். இதனுலேதான் யுத்தங்களுண்டா கின்றன. இதனுலேதான் உலகத்து மக்களிடையே துவேஷ மும், பகையும் ஓயாமல் எழுகின்றன. உண்மையை ஆராயத் தவறிய யூதர், கிறிஸ்து நாதரை நிராகரித்தனர். அவருடைய வருகையை அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். இரவு பகலாக அவர்கள் "கிறிஸ்து நாதர் வருகையை விரைவு படுத்துங்கள்' என்று துயரடைந்து பிரலாபித் தனர். இறை தூதுவர் வருகையை ஆவலோடு காத்திருந் தனர். ஆனல், யேசு நாதர் தோன்றியதும் அவரை நிராகரித்து, மறுத்து, அவமானப்படுத்தி மரண தண்டனை விதித்துச் சிலுவையிலறைந்தனர். ஏனிது ந ட ந் த து. ஏனெனில் மக்கள் கண்மூடித்தனமாக மற்றவரைப் பின் பற்றியதாலேதான். தந்தையர்க்கும் மூதாதையர்க்கும், பிதிராச்சிதமாகக் கிடைத்ததை நம்பினர்கள். விடாப் பிடியாக அதைக் கைப்பற்றிக் கொண்டனர். கிறிஸ்து நாதரின் மெய்ம்மையைப் பற்றி அவர்கள் ஆராய்ச்சி செய்யவில்லை. அதனுல் கிறிஸ்து நாதரின் கொடைகள் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. போலிப் பின்பற்றுதல் களைக் கைவிட்டு இரட்சகரின் மெய்ம்மையை ஆராய்ந்திருந் தால், அவரில் நம்பிக்கை வைப்பதற்கேற்ற முறையில் வழி நடத்தப்பட்டிருப்பர். இதற்குப் பதிலாக அவர்கள் "யேசு நாதர் பெயர் தெரியாத ஒர் ஊரிலிருந்து வருவார் என்று
உ.ஐ.அ.-9

Page 68
130
எங்கள் தந்தையர் கூறியிருக்கிருர்கள். பழைய ஏற்பாட்டி லும் வாசித்திருக்கிருேம். ஆணுல் இவர் நாஸ்ரேத்திலிருந்து வந்திருப்பதைக் காண்கிருேம்' என்று அவர்கள் சொன்னர் கள். ஆனல் நூல்களில் எழுதியதைச் செம்பொருளாகக் கொண்டு தந்தையர் மூதாதைகளின் கொள்கைகளைப் பின் பற்றி யேசு நாதரின் உடல் நாஸ்ரேத்திலிருந்து வந்தாலும் யேசு நாதரின் மெய்ம்மை தெய்வீக இராச்சியத்திலே அறியப்படாத ஒர் இடத்திலிருந்து வந்ததென்பதை அறிய முடியாதவராயிருந்தனர். யேசுநாதரின் செங்கோல் இரும்பினுலானதென அதாவது அவர் வாளைச் சுழற்று வார் என அவர்கள் கூறினர். யேசுநாதர் தோன்றிய போது அவரிடம் வாளிருந்தது உண்மையே. ஆனல் அது அவருடைய நா என்னும் வாள். அதனுல் அவர் உண்மை யைப் பொய்யிலிருந்து பிரித்தார். இவை ஆன்மார்த்த மான மறை பொருள்கள், தீர்க்க தரிசனமான வார்த்தை களை யூதர் சரியாகப் புரிந்து கொள்ள முடியாதிருந்தனர். இரட்சகர் தாவீதின் சிங்காசனத்திலிருப்பார் என்று எதிர் பார்த்தனர். ஆனல் யேசுநாதரிடம் சிங்காசனமோ, இராஜ லட்சணங்களோ காணப்படவில்லை. அவர் ஏழை யாயிருந்தார். தோல்வியடைந்து ஈன தசையிலுள்ள
வராகக் காணப்பட்டார். அப்போது அவர் எவ்வாறு
சாட்சாத் கிறிஸ்துநாதராக இருக்க முடியும். இதுதான் அவர்களுடைய முக்கியமான ஆட்சேபமாயிருந்தது. அது அவர்களுடைய மூதாதையரின் போதனைகளிலும் விளக்கங் களிலும், ஸ்தாபிக்கப்பட்டதாயிருந்தது. யேசுநாதருக்கு நிரந்தரமான இறைமையும் என்றுமழியாத இராச்சியாதி காரமுமிருந்தது. அது லெளகீக உலகைச் சேர்ந்ததன்று. ஆன்மீக உலகைச் சேர்ந்தது. அவருடைய சிங்காசனமும்,
ராச்சியமும் மக்களுள்ளத்திலே ஸ்தாபிக்கப்பட்டன.
அங்கே அவர் என்றுமழிவில்லா அதிகாரத்தோடும், சக்தி யோடும் ஆட்சி நடத்தி வந்தனர். அவரிடம் தீர்க்கதரிசி கள் காட்டிய அறிகுறிகள் எல்லாமிருந்த போதிலும், யூதர் அவரை நிராகரித்தனர். போலியான பின்பற்றுதலாலும்,

131
மூதாதையரின் கிரியைகளிலும் ஈடுபட்டிருந்தபடியால், யேசுநாதரை அறிய முடியாத பருவத்தையடைந்தனர்.
* தீர்க்கதரிசிகளின் நாவினல் எமக்கு வாக்குறுதி யளிக்கப்பட்டுள்ளது. யேசுநாதர் வரும்போது, பழைய ஏற்பாட்டின் சட்டங்களைப் பிரகடனஞ் செய்வாரென்று கூறப்பட்டது. இப்போது அவர் பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து அத்தியாயங்களிலுள்ள கட்டளைகளை ரத்துச் செய்து விட்டார். எமது ஒய்வு நாள் ஒழுங்குகளைச் சீரழித்து விட்டார். விவாகரத்துச் சட்டத்தை நீக்கிவிட்டார். மோசேயின் புராதன சட்டங்கள் ஒன்றையும் அவ்ர் நிற்க விட வி ல் லை; எல்லாவற்றையுமழித்துவிட்டார். ஆன படியால் அவர் மோசேயின் பகைவன்' என்று கூறி வேறு பல ஆட்சேபங்களையும் தெரிவித்தனர். உண்மையில் யேசு நாதர் மோசேயின் கூட்டங்களைப் பிரகடனஞ் செய்து அவற்றை நிறைவேற்றினர். மோசேயின் துணைவராகவும் அவர்க்கு உதவி புரிபவராகவுமிருந்தார். மோசேயின் ஆக மத்தை அவர் உலகெங்கும் பரப்பி அவர் வெளிப்படுத்திய சட்டங்களின் அடிப்படைக்கொள்கைகளைப் புனர்ஸ்தாபனஞ் செய்தார். காலத்துக்குப் பொருத்தமில்லாத சில முக்கிய மற்ற சட்டங்களை ஒழித்தார். பல பெண்களை மணத்தல், விவாகரத்துச் செய்தல் என்பன அவற்றுட் சிலவாகும். யூதர் இவற்றின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியா திருந்தனர். அவர்கள் புராதனமான மரபுகளைப் பின் பற்றியதால் இது அவர்களுக்குப் புரியவில்லை. எனவ்ே ஈற்றில் யேசுநாதருக்கு மரண தண்டனை விதித்தனர்.
* உயேசுநாதர் தோன்றிய காலத்திலே இறைவனின் நீதி உலகெங்கும் பரவுமென்றும், கொடுங்கோன்மையும், ஆக்கிர மிப்பும் இருக்கமாட்டாதென்றும், மிருக உலகில்கூட நீதி பரவுமென்றும், கொடிய மிருகங்கள்கூட சமாதானமாகவும், இனிமையாகவும் பழகுமென்றும், ஒரே சுனையில் நின்று கொண்டு ஒநாயும் ஆட்டுக்குட்டியும் நீர் பருகுமென்றும், ஒரே புல்தரையில் சிங்கமும் மானும் கூடி நிற்குமென்றும்,

Page 69
32
ஒரே கூட்டிலே கழுகும் குவேய்ல் (quail) கூடி வாழுமென்றும், தீர்க்கதரிசிகளின் நாவினல் கூறப்பட்டதென்று அவர்கள் மேலும் கூறினர். 'ஆனல் இப்பொழுது கிறிஸ்து என்று சொல்லப்படும் இவர் காலத்திலே ரோமானியர் பலஸ் தீனத்தைக் கைப்பற்றிக் கொடுமையாக ஆட்சி நடத்து கிருர்கள். எங்கேயும் நீதியைக் காணவில்லை; சமாதானத் தின் அறிகுறிகளை எங்கும் காணவில்லை. ' என்றும் கூறினர். யூதரின் இந்தக் கூற்றுகளும், மனச் சார்புகளும், அவர் களுடைய தந்தையர் வழியாக வந்தவை. முன்னேசுவறிய உருவகப் பொருளை அவர்கள் புரிந்து கொள்ளாமல், நேரடிப் பொருளைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றினர். அதனல் அவர்கள் எண்ணியது யேசுநாதர் காலத்திலே நடைபெரு மற் போயிற்று. ஓநாய்கள் போலவும் ஆட்டுக்குட்டிகள் போலவுமிருந்த மக்கள், கூட்டத்தவர், இரட்சகரின் காலத் திலே அன்போடு ஒன்றுகூடுவர் என்பதே அந்த உருவகப் பொருளின் உண்மையான கருத்தாகும். ஒரே சுனையிலிருந்து குடிப்பார்கள் என்றதன் அர்த்தம் ஒரே போதனையைப் பருகி அவருடைய மெய்யடியார்களாக வருவார் என்ப தாகும். சகல மதத்தவரும், தேசத்தவரும், நிலைமையிலுள்ள வர்களும் ஒரே நம்பிக்கையுடையவராய், விநயத்தோடு கிறிஸ்து நாதரைப் பின்பற்றி அவருடைய தெய்வீகப் பாதுகாப்பின் கீழ் அன்போடும் சகோதரத்துவத்தோடும் கூடிய போது இதனை உணர்ந்தனர். யூதர்களுக்கு இது தெரியாமற் போய்விட்டது. அவர்கள் தமது மூடக் கொள்கைகளைப் பின்பற்றியதால் யேசுநாதரிடம் கர்வ முடையவராய் அவரை அவமதித்தனர். ஈற்றில் அவரைச் சிலுவையில் அறைந்தனர். கிறிஸ்து நாதரின் மெய்ம்மையை ஆராய்ந்தார்களானுல், அ வ ரு  ைடய அ ழ  ைக யு ம், உண்மையையும் அறிந்திருப்பார்கள்.
உண்மையை கண்டறிவ் தற்காகக் கடவுள் மனிதனுக்கு ஆராய்ச்சியென்ற கண்ணைக் கொடுத்திருக்கிருர், உண்மை யின் செய்தியைக் கேட்டறிவதற்காக அவர் மனிதனுக் குக் காதைக் கொடுத்திருக்கிருர், தானகவே விஷயங்களை

133
ஆராய்ந்தறிந்து கொள்வதற்காக விவேகத்தை அவனுக்கு வழங்கியிருக்கிருர், மெய்ம்மையை ஆராய்ந்தறிவதற்காகக் கடவுள் இக் கொடைகளை மனிதனுக்கு வழங்கியுள்ளார். மனிதன் மற்றவர் கண்ணுலே காணக்கூடாது. மற்றவர் காதாலே கேட்கக்கூடாது. மற்றவர் மூளையாலே அறியக் கூடாது. ஒவ்வொருவருக்கும், கடவுள் த னி ப் பட் ட கொடைகளையும், சக்தியையும், பொறுப்பையும் கொடுத் துள்ளார். கடவுளின் படைப்புத் திட்டத்திலுள்ள ஒழுங்கு இதுவே. எனவே, உமது சொந்த விவேகத்திலும், தீர்ப்பி லும் தங்கியிருங்கள்; உமது ஆராச்சியின் முடிவையே முடி வாகக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அறியாமையில் மூழ்கிக் கடவுளின் கொடைகளைப் பெறத் தகுதியற்ற வராவீர். கடவுளிடம் திரும்புங்கள்; அவருடைய சந்நி தானத்திலே விநயத்தோடு பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் காட்சியை மறைக்கும திரைகளை அகற்றிவிடுமாறும், உங்களுக்கு உத வி யும் உறுதிப்பாடும் அளிக்குமாறும் வேண்டிக் கொள்ளுங்கள். அப்போது உங்கள் கண்களில் ஒளி நிறைந்திருக்கும். கடவுளின் மெய்ம்மையை நேருக்கு நேரே கா ன் பீ ர் க ள். அறியாமையென்ற களங்கத்திலிருந்து முற்ருக நீங்கிவிடுவீர்கள். பரலோக ராச்சியத்தின் பிரபை யும், கொடைகளும் உங்கள் உள்ளத்திலே பிரதிபலிக்கும்.
பரிசுத்தமான உயிர் நல்ல முயற்சியோடு உழுது பண் படுத்தப்பட்ட நிலம் போன்றது. அந் நிலத்திலுள்ள புதரும் செடியும் அழிக்கப்பட்டுக் களைகளெல்லாம் வேரோடு ? களையப்பட்டுவிடும், இந் நிலம் நல்ல விளைவைத் தரும். இவ்வாறே மனிதன் அறியாமையென்ற களையை அகற்றி மூடநம்பிக்கையென்ற முள்புதர்களைக் களைந்து, போலி நடத்தைகளென்ற முள்களை நீக்கி விட்டால், உண்மையான அறிவென்ற விளைவாகிய மெய்ம்மையைப் பெறுவான். இல்லாவிட்டால் மெய்ம்மையைக் காண முடியாது. சமயத் துறையில் பிணக்கும் வேற்றுமையும் எப்பொழுதும் நிலைத் திருக்கும். மனித குலம் வெறி கொண்ட ஒநாய் போலப் பகையும் பகைமையுமுடையதாய் கோபங்கொண்டு பூசல்

Page 70
134
விளைக்கும். எமது காட்சியை மறைக்கும் திரைகளை அகற்று மாறும், ஒளி மயமாய்த் தோற்றமளிக்கும் அவதாரங்களின் வழியை ம  ைற த் து மேகக் கூட்டம் போல இருளை உண்டாக்கும் மறைப்புகளை நீக்கி பி ர கா ச மா ன  ெம ய் ம்  ைம  ெய ன் னு ம் ஒளி விடச் செய்யுமாறு க டவு ளை விநயத்தோடு வேண்டிக் கொள்வோமாக. இறைவனின் உதவியையும் உறுதிப்பாட்டையும் வேண்டி இறைவனைப் பிரார்த்திப்போமாக. மனிதன் கடவுளின் குழந்தை. அது உயர் நலமும் உன்னதமான குணமும் சிருட்டிக்கர்த்தாவின் கடவுளின் அன்பும் உடையது. அதற்கு அருளப்பட்ட தெய்வீகக் கொடைகளும், பண்புகளும் எப் பொழுதும் நிலைத்திருந்து அதனை ஆட்கொள்ள எப்பொழு தும் முயல்வோமாக. இப்பொழுது மனிதருடைய உள்ளம் கறுத்த மண் போலத் தெரிகிறது. ஆனல் அதன் அந்தரங் கத்தில் ஆயிரக்கணக்கான சுகந்த மலர்கள் மலர்வதற்குக் காத்திருக்கின்றன. மறைந்திருக்கும் சக்திகளை மலரச் செய்ய நாம் நிலத்தைப் பண்படுத்த வேண்டும். இந்தச் சுரங்கத்திலேயுள்ள மறைவான நிதிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். இது இறைவனின் களஞ்சியச் சாலை. இங்கே மக்களுள்ளத்தில் நெடுங்காலமாக மறைந்து கிடக்கும் ஒளி மிக்க சக்திகளை வெளியே கொண்டு வர முயல வேண்டும். அப்பொழுதுதான் இரு வேறு உலகத்து மகிமைகளும் ஒன்றிணைந்து பெருகி மனித வாழ்வின் சாரம் வெளிப்படும்.
நமது தந்தையர் பின்பற்றிய வழி என்று அதையே பின் பற்றுவதில் திருப்தி கொள்ளக் கூடாது. உண்மையை ஒவ்வொருவரும் தாமாகவே ஆராய வேண்டியது கடமை யா கும். மற்ருெருவருடைய ஆராய்ச்சியில் நாட்டம் திருப்தியடையக் கூடாது. உலகத்திலே எல்லாரும் தனவந்த ராயிருக்க ஒருவன் வறியவனயிருந்தால் அவனுக்கு அதனல் என்ன பயன்? உலகம் முழுவதும் நல்லொழுக்கமுடையவரா யிருக்க ஒருவர் அதர்மத்தில் மூழ்கியிருந்தால், அவனல் என்ன நன்மையுண்டாகப் போகிறது? உலகம் முழுவதும் சுபீட்சமுடையதாயிருக்க ஒருவன் பட்டினி கிடப்பானனல்

135
அவனுக்கு என்ன ஆதரவு கிடைக்கிறது? உலகெங்கும் ஒளி மயமாயிருக்க ஒருவன் குருடனுயிருந்தால் அவனுக்கு என்ன நன்மையுண்டாகிறது. எனவே, ஒவ்வொரு மனிதனும் தானகவே உண்மையை ஆராய்ச்சி செய்ய வேண்டும். முன்னேர் விட்டுச் சென்ற கருத்துகளும் நம்பிக்கைகளும் எமக்குப் பிதிரார்ச்சிதமாகக் கிடைத்தாலும் அ  ைவ போதுமா? அவற்றைப் பின்பற்றுவது போலியே. போலி யாகப் பின் பற்றுதல் ஏமாற்றத்தையும், தப்பான போக்கையுமே உண்டாக்கும் உண்மையை நீங்களாகவே ஆராயுங்கள். அப்போதுதான் வாழ்வின் தத்துவத்தையும் சத்தியத்தின், இறைவனிடத்து உதித்த ஆன்மா மறுபடி இறைவனை நோக்கி ஏன் போக வேண்டுமென்று கேட்டீர் கள். இக் கேள்விக்கு நான் கூறும் பதிலை அறிய விரும்பு கிறீர்களா? அல்லது உலகம் கூறுவதை நான் கூறுவதானுல் அது போலிப் பதிலாயிருக்கும். விஷயம் தெளிவாயிருக்க மாட்டாது.
இந் த க் கேள்வியிலடங்கியிருக்கும் தத்துவமென்ன வென்றல், தீமை என்று சொல்லப்படும் சாத்தான் மனித னிடத்துள்ள கீழான தன்மையைக் குறிக்கும். இந்தக் கீழான குணம் பலவகையாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. மனிதனிடத்து இரண்டு வகையான தன்மைகள் வெளிப்படு கின்றன. ஒன்று இயற்கையின் தன்மை. மற்றது ஆன்மீக உலகின் தன்மை. இயற்கையின் தன்மை குறைபாடுடையது. இதைத் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். மூடநம்பிக்கை களையும் கற்பனைகளையும் கைவிட்டு இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆப்பிரிக்காக் காட்டிலே ஒரு மனிதனைக் கல்வி யின்றிக் காட்டுமிராண்டியாய் வளரவிட்டால், அவன் அறிவற்றவனுயிருப்பானென்பதிற் சந்தேகமுண்டா? தீய வனக எவனையும் கடவுள் படைக்கவில்லை. அத்தகைய கருத்துகளும், பெயரும், , மனிதனுடைய லெளகீகத் தன்மையையும், மானுடத் தன்மையையும் காட்டுவதற்கேற் பட்ட அறிகுறிகள். நிலத்திலே முள்ளும், புதரும், பழந் தராத மரங்களுமிருப்பது இயல்பே. ஒப்பளவில் பேசும்

Page 71
136
போது இது தீமையே இயற்கையின் தாழ்ந்த நிலையையும் கீழான விளைவையுமே காட்டுகிறது.
மனிதனுக்குத் தெய்வீகக் கல்வியும், அருட்கிளர்ச்சியும் தேவையென்பது இதிலிருந்து தெரிகிறது. கடவுளின் நற் கொடைகளும், இயல்பும் அவனுடைய வளர்ச்சிக்கு அவசிய மென்பதே இதன் அர்த்தம். அதாவது கிறிஸ்து நாதரின் போதனையும், தீர்க்கதரிசிகளின் போதனையும் அவனுடைய கல்விக்கு அவசியம். அவையே அவனை வழி நடத்த வேண்டும். ஏன்? அவர்களே மனிதருள்ளமென்ற நிலத்தைப் பண்படுத்துபவர்கள். களைகளைக் களை ந் து முள்ளுகளே எரித்து, தரிசு நிலங்களைப் பழமரங்களும் பூச் செடிகளும் வளரக்கூடியவாறு செய்பவர்கள். இவர்கள் அளிக்கும் பயிற்சியின் நோக்கம் மனிதன் படிப்படியாக வளர்ச்சி யடைந்து பூரண நிலையைப் பெறுவதே. உதாரணமாக ஒருவன் தன் வாணுள் முழுவதையும் ஒரே நகரில் கழிப்பான ணுல், உலகத்தைப் பற்றிய அறிவைப் பெறமாட்டான். பூரண அறிவைப் பெறவேண்டுமானல், அவன் மற்றை நகரங்களுக்கும் போகவேண்டும். அங்கேயுள்ள மலைகளையும், பள்ளத்தாக்குகளையும் பார்க்க வேண்டும், ஆறுகளைக் கடக்க வேண்டும். சம நிலங்களில் நடமாடவேண்டும். அதாவது படிப்படியாக முன்னேறும் பரந்த கல்வியைப் பெரு விட்டால் பூரண நிலையை அடைய முடியாது.
மனிதன் மேல் நோக்கி உயர்ச்சியடையும் பாதையில் பல துறைகளிலும் அனுபவம் பெறவேண்டும். அவன் தாய் வயிற்றிலிருந்து பூரண மனிதனுக வெளிவருவதில்லை. கர்ப்பத்திலிருந்து சிறு சிசுவாகிப் பிறந்து குழந்தையாகிக் குமரணுகி, முதிர்ந்து, கிழவனுகிருன். அவன் சதா குமரணு யிருப்பானுணுல், முதுமை என்ன என்பதை அறியாதவணு யிருப்பான். முதுமையை அறியாதவனஞல், வாலிபப் பருவத்தைப்பற்றி உணரமாட்டான். முதுமைபற்றிய அனுபவமில்லாவிட்டால், அவனுக்கு இளமை முதுமை என்ப வற்றின் வித்தியாசம் தெரியாதிருக்கும். குழந்தைப் பருவ
 

37
அனுபவமில்லாவிட்டால், பக்கத்திலிருப்பது குழ ந்  ைத எப்படி உணர்ந்து கொள்ளமுடியும். பிழையென்று ஒன்று இல்லாவிட்டால் சரியென்பது ஒன்று உண்டென எவ்வாறு அறிந்து கொள்ளலாம். பாவமிருந்தாற்ருன் புண்ணியத் தைப்பற்றி உணரலாம். தீய செயல்களில்லாவிட்டால் நற் செயல்களை எவ்வாறு உணர்ந்து கொள்வது? நோயில்லா விட்டால் சுகமென்பது எவ்வாறிருக்குமென உணரலாமா? நன்மை யென்பது தீமை யில்லாத நிலையே. வறுமை என்பது செல்வமில்லாமையே, செல்வமில்லாவிட்டால் வறு  ைம நிலையை அடைகிருேம். பணப் பெட்டியைத் திறந்தால் அங்கே பணமில்லை. அறிவில்லாவிட்டால் அறியாமை குடி கொள்கிறது. அறியாமை என்பது அறிவில்லாமையே. உயிரில்லாத நிலையே சாக்காடு. ஒரு புறத்திலே வாழ்வு மறு புறத்திலே சாவு, வாழ் வில்லாவிட்டால் சாவு.
சுருக்கமாகக் கூறுவதானுல், உயிரி ன் யாத்திரை அவசியம். வாழ்வின் யாத்திரை மார்க்கந்தான் தெய்வீக அறிவிக்கும், பேற்றுக்கும் இட்டுச் செல்கிறது. பயிற்சியும், வழி காட்டுதலுமில்லாவிட்டால் மனிதனுடைய ஆன்மா அறியாமையும் குறைபாடுமுள்ள கீழ் நிலையிலிருந்து மேல் நிலைக்குப் போகமாட்டாது.

Page 72
5 Dub அவசியமானதும் அவசியமற்றதும்
கடவுளின் கருணைப் பண்பின் வெளிப்பாடுதான் உலகின் தோற்றநிலை, இயல்நிலை என்ற தோற்றத்தில் கருணை ஒளி யால் கடவுள் தம்மை வெளிப்படுத்துகிருர், தான் படைத்த சிருஷ்டி மாட்டு அவர் தயவும் அன்புடைமுயவராயிருக்கிருர், என்றுமுள்ள இறைவனிடமிருந்து மனிதகுலம் எப்பொழுதும் கொடைகளைப் பெற்றுக் கொண்டேயிருக்கும். கிறிஸ்து நாதர் 'பரமண்டலங்களிலுள்ள பிதாவைப் போல நீங்களும் பூரணமுடையவராயிருங்கள்' என்று கூறியுள்ளார். சூரிய னுடைய ஒளியையும் வெப்பத்தையும் போல இறைவ னுடைய கொடைகளும் எல்லாருக்கும் கிடைக்கின்றன. அன்பு, வள்ளன்மை என்ற பண்புகளை இறைவனிடமிருந்தே க ற் று க் கொள்ளவேண்டும். கடவுள் எல்லாரிடத்தும் அன்பாயிருப்பது போல மனிதனும், தனது சகாக்களிடம் அன்புடையவனுயிருக்க வேண்டும். தனது சகாக்களிடமும், ஏனைய பிராணிகளிடமும் அவன் நீதியாகவும், அன்பாகவு மிருப்பானனல், அவன் கடவுளின் உருவத்தில் படைக்கப் பட்டுள்ளான் என்ற கூற்றுக்குத் தகுதியுடையவனுவான்.
" சகோதரத்துவம் பல வ  ைக ப் படும். குடும்பத்
தொடர்பாய் இல்லத்துக்குரிய நெருங்கிய சம்பந்தமாயிருக்க லாம். இதுவரையறையுடையது; மாற்றத்துக்கும், அழிவுக் கும் இடமளிப்பது. குடும்பத்திலேயுள்ள அன்பும், இணக்க மும், பல தடவை பகைமையையும், பிணக்கையுமுண்டாக்கு கிறது. தேசாபிமானத்திலே ஒரு வகையான அன்பு நிலவு கிறது. மனிதன் தனது தேசத்திலே பிறந்தவர்களிடத்து நேசம் வைக்கிருன். இது வும் வரையறையுடையதே. இது வும் மாற்றத்துக்கும் அழிவுக்கும் உட்பட்டதே. உதாரணமாக, ஒரே தேசத்து மக்கள் தம்முள் பிரிந்து

739
சண்டையிட்டும் இரத்தஞ் சிந்தி யுத்தம் புரிவர். மற்ருெரு வகையான சகோதரத்துவமும் சம்பந்தமும் சாதி ஒற்றுமை யால் உண்டாவது. அதாவது ஒரே சாதி அடிப்படையின் காரணமாக உண்டாகும் நேசமும், மாற்றத்துக்கு இடமளிப் பதுமாகும். ஒரே சாதியில் தோன்றிய தேசத்து LDéig. ளிடையே யுத்தமும், கொடிய கொலைக்கேதுவான பிணக்கும் அடிக்கடி ஏற்பட்டு வந்துள்ளது. நாலாவது GJ 6056 u JFT (oof தொரு சகோதரத்துவத்தையுங் காண்கிருேம். இது மனிதன் மனித குலம் சம்பந்தமாகக் காட்டும் பிறர் நலம் பாராட்டும் அன்பு. இது மனித அடிப்படைச் சம்பந்தத்தை ஆதாரமாகக் கொண்டது. இதற்கு வரையறை இல்லா விட்டாலும், இதுவும் மாற்றத்துக்கும் அழிவுக்கும், உட் பட்டதே. உலகளாவிய இந்தச் சகோதர பந்தத்திலும், நாம் எதிர்பார்த்த பலன் தோன்றவில்லை. எதிர்பார்க்கும் பலன் என்ன? மனிதராய்ப் பிறந்த எல்லாரிடத்தும் அன்பா" யிருத்தல்; மனிதரிடையே உள்ள சகல தெய்வீகச் சாத்தியக் கூறுகளையும், மனிதனில் அடங்கியுள்ள தாற்பரியங்களையும் உள்ளடக்கிய உறுதியான, அழிவற்ற சகோதரத்துவம் மலர்தல். எனவே குடும்பம், தேசம், சாதி, பிறர் நலங் கருதும் மனுேபாவம் என்பவற்றினலுண்டாகும் சகோதரத் துவமும், அன்பும், நேசமும் போதுமானவையல்ல. அவை நிலையற்றவை. ஏனெனில் அவையெல்லாம் வரையறை யுள்ளவை, மாற்றத்துக்கும் அழிவுக்குமுட்பட்டவை. ஏனெனில் குடும்பப் பந்தமானல், அங்கே பிணக்கும், இசை
வின்மையும் காணப்படுகிறது. ஒரே நாட்டிலே பிறந்தவ்ர்
களிடையே பிணக்கும் சண்டையும் காணப்படுகிறது. ஒரே சாதியாரிடையிலும், பகைமையும், துவேஷமும் காணப்படு கிறது. பிறர் நலங் கருதுவோரிடையிலும் பல அபிப்பிராய பேதங்களும், தன்னலமற்ற தியாக உணர்ச்சியின்மையும் காணப்படுகிறது. இதனுல் மனித இனத்திடையே நிரந்தர மான, அழிவற்ற ஒற்றுமை உண்டாகுமோ என்ற சந்தேக மேற்படுகிறது.
எனவே, மனித இனத்தின் சிருட்டி கர்த்தாவான
線

Page 73
140
இறைவன் தனது புனிதமான தெய்வீக அவதாரத்தை
உலகில் தோன்றச் செய்துள்ளார். ஆன்மீக சகோதரத் ۔۔۔۔۔۔۔ துவத்தை நிலை நாட்டுவதற்காக அவர் தமது பரிசுத்த ஆகமங்களை வெளிப்படுத்தியுள்ளார். பரிசுத்த ஆவியின் -சக்தியினுல், மனித குலத்தில் பூரணமான சகோதரத்துவம் நிலவக்கூடியவாறு செய்துள்ளார். பரிசுத்த ஆவியின் மூச்சினல், பூரணமான இந்த ச் சகோதரத்துவமும், இணக்கமும் மனிதரிடையே நிறுவப்பட்டால், இந்தச் - சகோதரத்துவமும், அன்பும் ஆன்மார்த்தமானவையான படியால், இந்த அன்பும் தெய்வீகமானபடியால், மக்களை ஒன்றுபடுத்தும் இந்தப் பந்தம் தெய்வீகமானபடியால் * பிரிக்க முடியாததும் மாற்றமில்லாததும், மாருததுமான தொரு ஐக்கியமுண்டாகிறது. இது எப்பொழுதும் ஒரே மாதிரியேயிருக்கும்; என்றும் மாருது. உதாரணமாக யேசு நாதர் உலகிலே அமைத்த சகோதரத்துவத்தைப் பாருங் கள். இந்தச் சகோதரத்துவம், ஐக்கியத்துக்கும் ஒருமைப் பாட்டுக்கும் ஏற்றதாயிருந்ததை ஆராய்ந்து பாருங்கள். பலவகையான உயிர்களை ஒன்ருக இணைத்து, ஒவ்வொரு வரும் மற்றவர்க்காகத் தமது உயிரைத் தியாகஞ் செய்யக் கூடிய மனே நிலையை உண்டாக்கினர். தமது உடல் பொருள் ஆவியெல்லாவற்றையும் தியாகஞ் செய்ய ஆயத்த மாயிருந்தனர். அவர்கள் மிக்க அன்போடும், தோழமை யோடும் ஒன்ருக வாழ்ந்தனர். அதனல் புகழ் பெற்றவரும் கிறித்தவரல்லாதவருமான கேலன் என்ற கிரேக்க தத்துவ அறிஞர் கூடத் 'தேசங்களின் முன்னேற்றம்' என்ற தமது நூலிலே "உண்மையான நாகரிகத்துக்குச் சமய நம்பிக்கை கள் மிகத்துணை புரிகின்றன’ என்று எழுதினர். இதற்குச் சான்முக அவர் "எங்கள் காலத்திலே வாழும் கிறிஸ்தவர் என்ற சில மக்கள், இருக்கிருர்கள். இவர்கள் மிக உயர்ந்த ஒழுக்கமுள்ள நாகரிகத்தை உடையவர்; ஒவ்வொருவரும் மற்றவரோடு நிரம்பிய அன்போடும் தோழமையோடும் வாழுகின்றனர். ஒவ்வொருவரும் மற்றவர்க்காகத் தமது உயிரைத் தியாகஞ் செய்கிருர்கள். தமது உடைமைகளைப்
 

141
பகிர்ந்து கொள்ளுகிருர்கள்; இந்தக் கிறிஸ்தவர் ஒர்ே ஆளைப் போல ஒன்றி வாழ்கின்றனர். அவர்களிடையே காணப்படும் பந்தம் எவ்வாற்ருனும் அறுந்து போக. மாட்டாது. ’’ என்று கூறுகிருர்.
உண்மையான சகோதரத்துவத்தின் அத்திவாரமும் நேசப்பான்மையான ஐக்கியமும் பரஸ்பர அன்பும் உண்மை யான அன்பும், தன்னல மற்ற பக்தியும் எல்லாம் பரிசுத்த ஆவியின் மூச்சினுலேதான் உண்டாகின்றன. இந்தச் செல் வாக்கும் உயிர்ப்பும் இல்லாவிட்டால், இவை கைகூடி வேறு நோக்கங்களின் பயணுக ஒரளவு சகோதரத்துவத்தைப் பெற லாம். ஆன ல் அவை வரையறையுள்ளவை. மாற்றத் துக்கு இடமளிப்பன. பரிசுத்த ஆவியில் மனிதருடைய சகோதரத்துவம் வேரூன்றியிருக்குமானல் அது அழிவற்ற தாய், மாற்றமில்லாததாய், வரையறையற்றதாயிருக்கும்.
ஒரு காலத்திலே கீழை நாடுகளின் பல பகுதிகளில், சகோதரத்துவம், அன்பு, மனிதரிடத்துக் காணப்படும். சகலவிதமான புகழத்தக்க பண்புகளும் மறைந்து விட்டன போற் காணப்பட்டன. தேசாபிமானம், சமயாபிமானம் சாதியாபிமானம் என்பன சார்ந்த சகோதரத்துவமிருந்த தில்லை; முரட்டுப் பிடிவாதமும், குரோதமும், கடும் பற்றுள்ளமுமே காணப்பட்டன. ஒரு சமயத்தைச் சேர்ந்த வர் மற்றச் சமயத்தவர் மீது துவேஷம் பாராட்டி, இரத்தஞ் சிந்த ஆயத்தமாயிருந்தனர். தற்போது போலகன் பிரதே சத்தில் நடக்கும் சண்டையை இதற்கு உவமையாகக் கூற லாம். அறிவொளிமிக்க இந்த நூற்ருண்டிலேகூட அங்கே காணப்படும் பகைமை, கொடுமை, இரத்த வெறி என்ப வற்றைப் பாருங்கள். இவையெல்லாம் சமயத் துவேஷத் தினுல் உண்டானவை. இதிலே ஈடுபட்ட தேசத்தவர், ஒரே சாதியையும், ஒரே நர்ட்டையும் சேர்ந்தவர்கள். அப்படியிருந்தும் அவர்கள் ஒருவரையொருவர் கருணையின்றி அநாகரிகமாக நட்த்துகின்றனர். இதே மாதிரி நிலைமை பத்தொன்பதாம் நூற்ருண்டிலே பாரசீகத்தில் நடந்தது.

Page 74
142
நாட்டில் மதவெறி தாண்டவமாடிற்று; நாடு இருள் சூழ்ந் திருந்தது. சகோதரத்துவமோ தோழமையோ எவ்விடத் திலும் காணப்படவில்லை. மனிதருள்ளத்திலே கோபமும், பகைமையும் குடி கொண்டிருந்தது. மனிதர் வாழ்விலே எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. இத்தகைய ஒரு நிலையிலே தான் அருளாளர் பஹவுல்லா தோன்றினர்; சூரிய ஒளி போல உதயமானர். இருளும். நம்பிக்கையின்மையும் பரவி யிருந்த அந்தக் காலத்திலே பெரியதொரு ஒளி பிரகாசித்தது. அவர் மனிதகுலம் ஒன்று என்பதை உறுதிப்படுத்தினர். மன்பதை முழுவதும் ஒரு மந்தைக் கூட்டமென்றும் இறைவனே உண்மையான மேய்ப்பன் என்றும் பிரகடனஞ் செ ய் தார். இடையன் ஒருவனே; மனிதரெல்லாம் அவனுடைய மந்தையைச் சேர்ந்தவர்களே.
மனிதகுலம் ஒன்று, கடவுள் எல்லாரிடத்திலும் அன்புடையவராயிருக்கிருர், அப்போது மனித உலகில் பகைமையும் அன்பின்மையும் நிலவுவதற்குக் கார ண மென்ன? இந்த உண்மையான இடையன் தன் ஆடுகளெல்லா வற்றி ட மும் அன்பாயிருக்கிருன். பச்சைப்பசேலென்ற புற்றரைகளுக்கு அவற்றை இட்டுச் செல்லுகிருன். அவற்றை வளர்த்துப் பாதுகாக்கிருன், அப்போது மனிதரிடையே - பகைக்கும், குரோதத்துக்கும் காரணமென்ன? இந்தப் பிணக்கும் பூசலும் எங்கேயிருந்து வந்தது? இதற்கு உண்மை அான காரணம் சமயங்களிடையே ஒற்றுமையில்லாமையே. ஒவ்வொரு பெரிய சமயத்திலும் மூடநம்பிக்கைகளும், குருட்டுப் பின்பற்றுதலும், பிரமஞானச் சூத்திரங்களை வளரப் பின்பற்றிக்கொண்டு சமயத்தின் மூலாதாரமான கொள்கை களைக் கை விடுதலும் காணப்படுகிறது. இதுவே மனித ரிடையில் ஒற்றுமை வளராமல் வேற்றுமை மலிவதற்குக் காரணமாகும். இதன் பயனகப் பிணக்கும் சண்டையும் உண்டாகிவிட்டன. தெய்வீகச் சமயங்களின் அத்திவாரத்தை ஆராய்வோமானல் அவை ஒன்ருகவும், மாற்றமில்லாதன வாக வு ம், இருப்பதைக் காண்போம். உதாரணமாக தெய்வீகச் சமயங்கள் ஒவ்வொன்றும், இரண்டுச் விதமான

14.3
பிரமாணங்களையுடையனவா யி ரு க் கி ன் ற ன. ஒன்று ஒழுக்கம் தருமம் என்ற உலகு சம்பந்தமானது. இவை அவசியமான பிரமாணங்கள். இவை கடவுள் பக்தியையும், மனிதாபிமானத்தையும், உண்டாக்குகின்றன. ம னி த உலகின் பண்புகளையும், தெய்வராச்சியத்தின் குணங்களையும் மனிதனிடம் புகுத்துவதோடு, மறுபிறப்பு, இயற்கை ராச்சியத்திலிருந்து விடுதலை பெறுதல் என்ற அறிவையும் உண்டாக்குகின்றன. இவை ஒரு வகையான தெய்வீகச் சட்டமயமாகின்றன. இவை எல்லார்க்கும் பொதுவான தும் மாற்றத்துக்குட்படாததுமான சட்டமாகும். ஆதாம் காலத்திலிருந்து இன்றுவரை கடவுளின் இந்த மூலாதார மான சட்டம் மாற்றமின்றித் தொடர்ந்து வருகிறது. தெய்வீகச் சமயத்துக்கு இதுவே அத்திவாரமாகும்.
இரண்டாவது பிரிவு கால தேச நிலைமையை அனுசரித்து மனிதருடைய தேவை, நிலைமை என்பவற்றுக் கேற்ப அமைந்த சட்டங்களுந் தாபனங்களுமாகும். இவை சந்தர்ப் பங்களை ஒட்டி உண்டானவை. முக்கியமில்லாத இவற்றிற் காக மக்கள் பிணங்கிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. உதாரணமாக மோசே தீர்க்கதரிசி காலத்தில் அக் காலத்துத் தேவையை அனுசரித்து, விவாகரத்து அனுமதிக்கப்பட்டது. கிறிஸ்துநாதர் காலத்திலே விவாகரத்துச் செய்வது அக்காலத்துக்கு ஏற்றதாயில்லாதபடியால் அது விலக்கப்பட்டது" மோசே காலத்திலே பல தாரங்களை வைத்திருத்தல் அணு மதிக்கப்பட்டது. யேசுநாதர் காலத்திலே அதற்குத் தேவை யேற்படாதபடியால், அது விலக்கப்பட்டது. மோசே சிணுய் வனந்தரத்தில் வாழ்ந்தார். எனவே, அவருடைய கட்டளைகளும் பிரமாணங்களும் அந்த நிலைக்கு ஏற்றனவாயி ருந்தன. களவெடுத்தவனுக்கு அவனுடைய கையை வெட்டி னர்கள். இந்த வகையான தண்டனை வனந்தர வாழ்க் கைக்குப் பொருத்தமுடையதாயிருந்தது. ஆனல் இக் கால நிலைக்கு அது ஏற்றதன்று. இத்தகைய விதிகள், தெய்வீக சமயத்தின் அவசியமற்ற பகுதியைச் சேர்ந்தவை. இவை

Page 75
144
காலதேச நிலைமையை அனுசரித்து மாறும் மனித விவகாரம் பற்றியனவாயிருப்பதால் முக்கியமற்றவையாகும். எனவே தெய்வீகச் சமயத்தின் உண்மையான அத்திவாரம் ஒன்றே. இது உண்மையானபடியால் சமயங்களிடையே பகைமையும் பிணக்கும் ஏன் இருக்க வேண்டும்? இந்தத் துவேஷமும், பூசலும், கொடுமையும் இரத்தஞ் சிந்துதலும், எதற்காகத் தொடர்ந்து நடக்க வேண்டும்? இதை அனுமதிக்கலாமா? இது நீதியானதா? கடவுள் தடுப்பாராக!
 

சமயம் புதுப்பிக்கப்பட்டது
புடைபெயர்தல், சலனமுடையவராயிருத்தல், என்பது ஆக்க முயற்சி நடக்கிறதென்பதற்கு அறிகுறியாகும். புடை பெயர்ச்சியே வாழ்வு. அசைந்து கொண்டிருக்கும் பொருள் உயிருள்ள பொருளாகும். அசைவற்ற பொருள் உயிரில்லாத பொருளே. சிருட்டிக்கப்பட்ட எல்லா உருவங்களும், தத்தம் உலகில் முன்னேற்றமுடையன. அவை உயிர்ப்பின் சக்தி யினுல் தூண்டப்பட்டு, இம் முன்னேற்றத் தன்மையைப் பெறுகின்றன. எங்கும் பரவியுள்ள சக்தி சலனமுடையதே. இயற்கையின் வெளித்தோற்றமான சட உலகில் எதுவும் அசையாதிருப்பதில்லை. விவேகம், சேதனமென்ற அந்தரங்க உலகிலும் எதுவும் அசையாது நிற்பதில்லை.
தெய்வீக மெய்ம்மையின் புறவெளிப்பாடே சமயம். ஆனபடியால் அது உயிர்ப்புடையதாய், வாழ்வுடையதாய், சலனமுடையதாய், மு ன் னே ற் ற முடையதாயிருக்க வேண்டும். அது சலனமின்றி முன்னேற்றமின்றியிருக்கு மானுல், அதற்குத் தெய்வீக வாழ்வு கிடையாது. அது உயிரற்றதே. தெய்வீகத் தாபனங்கள் தொடர்ந்து உயிர்ப்புள்ளனவாகவும், வளர்ச்சியுடையனவாகவுமிருக்கும். ஆன படியால் அவை வெளிப்படுத்தும் அருளிப்பாடுகள் முற்போக் குடையனவாகவும் இடையருதனவாகவுமிருக்கும். எல்லாப் பொருள்களும் மறுவடிவம் எடுக்கும் நியதிக்குட்பட்டனவே. இந்த நூற்ருண்டு, புனர் ஜென்மமெடுக்கும் நூற்ருண் டாகும். இது வாழ்வு சிறக்கும் நூற்ருண்டு. விஞ்ஞானங் களும், கலைகளும், கைத்தொழிலும், புதியன கண்டு பிடித் தலும், சீர்திருந்தியுள்ளன. சட்டமும் ஒழுக்கமும் புதுப்பிக் கப்பட்டன. புனர் அமைப்புகள் செய்யப்பட்டன. சிந்தனை யுலகம் புனர் நிர்மானஞ் செய்யப்பட்டது. முற்காலத்து விஞ்ஞானங்களும், பழங்காலத்துத் தத்துவங்களும் இன்று:
உ. ஐ.அ.-10

Page 76
146
பயனற்றனவாகிவிட்டன. இக் காலத்துக்குப் பிரச்சினை களைத் தீர்க்கப் புதிய முறைகள் அவசியம், முன்தோன்ருத பல உலகப் பிரச்சினைகள் தோன்றியுள்ளன. பழைய கருத்து களும், சிந்தனை முறைகளும் வழக்கிறந்து வருகின்றன. பழைய சட்டங்களும், புராதனமான ஒழுக்க முறைகளும் இக் கால நிலைகளுக்கு ஏற்றனவல்ல. ஏனெனில் இந்த நூற்றண்டு புதுவாழ்வுக்குரியது. தத்துவததின் தன்மைகளை வெளிப்படுத்தும் நூற்ருண்டு. இதனுல் மற்றை நூற்றண்டு களைவிட மிகச் சிறப்பு வாய்ந்தது. கடந்து ஐம்பது ஆண்டு களிலே ஏற்பட்ட விஞ்ஞான அபிவிருத்திகள் முந்திய நூற்ருண்டுகளெல்லாவற்றிலும் அடைந்த விஞ்ஞான அறிவு களையும், பெறுபேறுகளையும்விடச் சிறப்பானது. சூரிய மண்டலங்களைப் பற்றி யும், கிரக மண்டலங்களைப் பற்றியும் நமக்கு இன்றுள்ள அறிவைப் புராதன வானிய
குமா? மத்திய காலத்தை அடுத்த நூற்ருண்டுகளின் அறிவைத் திரை மறைத்ததுபோல, மூடியிருந்த மறைப்பு இக் காலத்துத் தெளிவான காட்சிக்கு நிகராக நிற்க முடியுமா? இவ்வாறு நோக்குமிடத்து புராதன காலத்துக் கோட்பாடு களும், பிரமஞான விளக்கங்களும் இன்றைய மனித குலத்தின் சமய வாழ்வையும், ஆன்மீக வளர்ச்சியையும் வழி நடத்தி ஆட்சி செய்ய முடியுமா? பகுத்தறிவுள்ள ம்னிதன் இந்த ஒளிமிக்க தத்துவத்தின் இந்த நூற்றண்டில் நிலவும் விவேகபூர்வமான ஆராய்ச்சிக்கு ஈடு நிற்க முடியாத க்ோட்பாடுகளையும், கொள்கைகளையும் பரம்பரையான கருத்துகளையும் யோசனையின்றிப் பின்பற்ற முடியுமா? விஞ்ஞானிகளுக்கு இது நிச் ச ய மா கத் திருத்தியளிக்க மாட்டாது. இக் காலப் பிரமானங்களுக்குப் பொருத்தமற்ற அத்திவாரமில்லாத மு டி வு க ளே க் காண்பார்களானுல் முன்னே பிரமாணமாகக் கொண்டவற்றை நிராகரிப் பார்கள். புதிய அத்திவாரங்களிருந்து தமது ஆராய்ச்சியை மேற்காள்ளுவார்.
தெய்வீகத் தன்மை வாய்ந்த தீர்க்கதரிசிகள் அருளிப்

I 47
பாடுகளை வழங்கிச் சமயத்துக்கு அத்திவாரமிட்டனர். மனித குலத்தை வழி நடத்துவதற்காக அவர்கள் சில சட்டங்களையும் தெய்வீகக் கோட்பாடுகளையும் விதித்திருக் கிருர்கள். இறைவனைப் பற்றிய அறிவை அவர்கள் பிரகட னஞ் செய்து போதித்துள்ளனர். சிறந்த ஒழுக்க முறைகளை நிறுவியுள்ளனர். மனித குலத்துக்கென உயர்ந்த தருமத்தை அறிவுறுத்தி வந்தனர். படிப்படியாக இந்தத் தெய்வீகப் போதனைகளும், மெய்ம்மையின் அத்திவாரங்களும், மனிதர் கொடுக்கும் விளக்கங்களாலும் பழங்காலத்துக் கோட்பாடு களைப் போலித்தனமாகப் பின்பற்றுவதாலும் மறைக்கப் ப ட் ட ன. எவ்வளவோ இன்னல்களை அனுபவித்துக் கொண்டும், சித்திரவதை செய்யப்பட்டதால் உண்டான துன்பங்களைச் சகித்துக் கொண்டும் மனிதருள்ளத்திலே அவர்கள் மூலாதாரமான உண்மைகளைப் பதிக்க முயன்ருர் கன். அவை இப்பொழுது ஏறக்குறைய மறைந்து விட்டன. இவ்விறை தூதரிற் சிலர் கொல்லப்பட்டனர். சிலர் சிறை யிலடைக்கப்பட்டனர். தெய்வீக உண்மைகளை அவர்கள் பிரகடனஞ் செய்து கொண்டிருக்கும் போதே அவர்களை மன்பதை அவமானப்படுத்தி நிராகரித்து விட்டது. அவர் கள் இவ்வுலகை நீத்த பின்னர் அவர்களுடைய போதனையின் தத்துவத்தை மக்கள் மறந்துவிடவே போலிக் கோட் பாடுகள் தலைதூக்கின.
மனிதருடைய விளக்கங்களும், குருட்டுப் போக்கான போலி அனு கிருதிகளும் தம்முள் பெரிதும் வித்தியாசப் படுவது சகசம். அதனல் மனிதரிடையே சமயப் பிணக்கு களும் வேற்றுமைகளுமுண்டாயின. உண்மைச் சமயத்தின் ஒளி மங்கிற்று. மனித இனத்திடையே உள்ள ஒற்றுமை அழிந்தது. இறைவனின் தீர்க்கதரிசிகள் மனித ஒருமைப் பாட்டையும் ஐக்கியத்தையும் எடுத்துக் கூறினர். தெய்வீக மெய்ம்மைக்கு அத்திவாரமிட்டவர்கள் அவர்களே. எனவே உலகத்து மக்கள் போலிப் பின்பற்றுதல்களைக் கைவிட்டு இறைவனருளிய வார்த்தைகளில் அடங்கிய மெய்ம்மையை

Page 77
148
ஆராய்வார்களானல், அவர்கள் தம்முள் ஒற்றுமைப்பட்டு ஐக்கியமடைவார். ஏனெனில் மெய்ம்மையென்பது பல திறப்பட்டதன்று. அஃது ஒன்றே.
தேசங்களும், சமயங்களும் குருட்டுப் போக்கான போலிப் பின்பற்றலிலும், விடாப்பிடியான கோட்பாடு களிலும் அமிழ்ந்தியிருக்கின்றன. தன் தந்தை யூதணுயிருந்த படியால் ஒருவன் தானும் யூதன் என்கிருன். முகமதியர் தமது முன்னேர் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின் பற்றுகிருர், பெளத்தரும் தமது பரம்பரைச் சமயத்தைப் பின்பற்றுகின்றனர். அதாவது ஆராய்ச்சியில்லாமலே, அவர்கள் தமது முந்தையர் கொள்கைகளைப் பின்பற்று கின்றனர். அதனுல் மனிதரிடையே ஐக்கியமுண்டாவ தில்லை. சமயத்திலே சீர்திருத்தமுண்டானல்தான் இந்த நிலை மாறும். அதாவது தெய்வீகச் சமயங்களின் மூலாதார மான மெய்ம்மை புதுமை பெற வேண்டும். சீர்திருத்த மேற்பட வேண்டும். அதனை மறுபடியும் மனித குலத்துக்கு விளக்கிக் காட்ட வேண்டும்.
மெய்ம்மையென்ற விதையிலிருந்து ச ம ய மா ன து மரமாய் வளர்கிறது. அது கிளைகளையும் இலைகளையும், பூக்களையும் கனிகளையும் உண்டாக்குகிறது. சில காலத்தின் பின்னர் இந்த மரம் அழிகிறது. இலைகளும் பூக்களும் வாடி வீழ்கின்றன. மரம் பட்டுப் பழமில்லாது போகிறது. மனிதன் பழைய மரத்தையே பற்றிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. மரம் உயிரோடிருக்கிறதென்றும், அதன் கனி நிகரற்றதென்றும், அது அழிவற்ற மரமென்றும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. மெய்ம்மை யென்ற விதையை மறுபடியும் மனிதருள்ளத்திலே விதைக்க வேண்டும். அப்போதுதான் புதிய மரம் முளைக்கும். அதிலிருந்து புதிய தெய்வீகக் கனிகள் தோன்றி உலகுக்குப் புதிய வாழ்வுண்டாகும். இப்போது சமயத் துறையில் மாறுபட்டிருக்கும் மக்கள் குல ம் ஒன்றுபடும். போலிப்

49
போக்குகள் கைவிடப்படும். சர்வதேச சகோதரத்துவம் உண்டாகும். சண்டை சச்சரவுகள் ஒழியும். கடவுளடியவ ரென்ற முறையில் எல்லாரும் இணக்கம் பெறுவர். ஏனெனில் எல்லாரும் ஆண்டவன் கருணையின் நிழலிலேயே தங்கியிருக்கிருர்கள். கடவுள் எல்லாரிடத்தும் அன்புள்ளவ ராயிருக்கிருர். அவரே எல்லாருக்கும் ஒரே விதமாக அருள் வழங்குகிருர், "நீதியானவர்க்கும் நீதியற்றவர்க்கும் இறைவன் ஒரு சேர மழையைக் கொடுக்கிருர்' என்று யேசு நாதர் கூறினர். அதாவது கடவுளின் கருணை எல்லார்க்கும் பொதுவானது. மனிதரெல்லாரும் அவருடைய கருணை, அருள் என்பவற்றின் பாதுகாப்பிலிருக்கின்றனர். அவரே எல்லாருக்கும், வழி காட்டி முன்னேற்றப் பாதையில் உய்க்கிருர்,
முன்னேற்றம் இரண்டு வகைப்படும். அவை லெளகீக முன்னேற்றம், ஆன்மீக முன்னேற்றம் என்பன. லெளகீக முன்னேற்றம் நாகரிகத்துக்கு அடிப்படை சூழ்ந்துள்ள சராசரங்களை அவதானித்து ஆராய்வதால் அது உண்டா கிறது. ஆ ன் மீ க முன்னேற்றம் ம னி த னு  ைட ய சேதனத்தை அருட்டித்துத் தெய்வீகத்தின் மெய்ம்மையை உணரச் செய்வது. அது பரிசுத்த ஆவியின் உயிர்ப்பின லுண்டாவது. லெளகீக முன்னேற்றம் மனிதனுக்கு உலகி" இன்பங்களைக் கொடுக்கிறது. அது உயிர் நிலைத்திருக்கச் செய்கிறது. ஆன்மீக முன்னேற்றம் ஆன்மாவின் நித்தியத் துவத்தையும் சுகத்தையும் கொடுக்கிறது. இறைவனின் தீர்க்கதரிசிகள் தெய்வீக நாகரிகத்துக்கு அடியூற்ருக இருக் கிருர்கள். அவர்களே சகல அறிவுக்கும் மூல காரணமாக வும், அடிப்படையாகவுமிருக்கின்றனர். மனித சகோதரத் துவத்தின் கோட்பாடுகளை அவர்களே நிறுவினர். இச் சகோதரத்துவ சம்பந்தம் பல வகைப்படும். குடும்ப சம்பந்தம், சாதிச் சம்பந்தம், தேச சம்பந்தம், தரும சம்பந்தம் எனப்பகுக்கலாம். இச் சம்பந்தங்களெல்லாம் தற்காலிகமானவை. அவை இணக்கத்தை நிலை நாட்டு

Page 78
150
பவையல்ல; பிணக்கை உண்டாக்கக் கூடியவை. சண்டை சச்சரவை அவை ஒழிக்கமாட்டா. அவை தன்னலம் வாய் ந் த  ைவ. வரையறையுடையவை. மனிதரிடையே பகையையும் துவேஷத்தையுமுண்டாக்குபவை. பரிசுத்த ஆவியின் மூச்சினல் உண்டாக்கப்படும் ஆன்ம சம்பந்தம் தேசங்களை ஒன்று படுத்தி, யுத்தத்துக்கேதுவான காரணங் களே அகற்றுகிறது. அது உலகத்தை ஒரு குடும்பமாக இணைக்கிறது. மனித ஒருமைப்பாட்டுக்கு அத்திவார மிடு கிறது. சர்வதேச ஒற்றுமைக்குரிய உணர்வைப் பிறப்பிக் கிறது. அதன் பயனகச் சர்வதேச சமாதானம்'உறுதியாகும். ஆனபடியால் இந்தத் தெய்வீக சம்பந்தத்தின் அடிப்படை என்ன என்பதை ஆராய வேண்டும். போலிப் பின் பற்றல்களைக் கைவிட்டுத் தெய்வீக போதனைகளின் மெய்ம் மையைப் பரப்ப வேண்டும். இந்தக் கோட்பாடுகளின் படியும் நடவடிக்கைகளின் படியும் பரிசுத்த ஆவியின் துணையோ லெளகீக சுகமும் ஆன்மீக சுகமும் உண்டாகும். இந்த உண்மையான சம்பந்தத்தில் பரிசுத்த ஆவியின் பரிச்சயத் தினல் சகல தேசங்களும் மக்களும் ஐக்கியப் பட்டாலன்றி தேசீயத் தப்பெண்ணங்களும் சர்வ தேசத் தப்பெண்ணங் களும் நீக்கப்பட்டாலன்றி உண்மையான முன்னேற்றமும் சுபீட்சமும், நிரந்தரமான சுகமும் மனிதனுக்குக் கிடை யாது. இந்த நூற்ருண்டு புதியது; சர்வதேசங்களும் ஒ ன் றிணை ந் த ஒரு தேசமாயிருக்கும் நூ ற் ரு ண் டு. விஞ்ஞானங்கள் முன்னேறியுள்ளன. கைத் தொழில்கள் சிறப்படைந்துள்ளன. அரசியலில் மாற்றங்களுண்டாகி யுள்ளன. சுதந்திரம் பிரகடனஞ் செய்யப் பட்டுள்ளது. நீதி விழித்துக்கொண்டிருக்கிறது. இந் நூற்ருண்டு அசைவுக் குரிய நூற்ருண்டு; தெய்வீகத் தூண்டலும், பெறும் பேறும் கிடைக்கக்கூடிய நூற்ருண்டு. மனிதகுலம் ஒன்று படும் நூற்ருண்டு; த ன் ன ல மற்ற சேவை செய்வோரின் நூற்றண்டு. சர்வதேச சமாதானமும், தெய்வீக இராச்சியம் மும் தோன்றும் நூற்ருண்டு.

தெய்வீக அன்பு
கருத்துள்ள ஒரு கூட்டத்தவர்க்குக் கூ ற ப் ப டு ம் ஒவ்வொரு விஷயமும், சரியான சான்றுகளோடும், தர்க்க ரீதியான ஆராய்ச்சிகளோடும் எடுத்துக் கூறப்பட வேண்டும். சான்றுகள் நான்கு வகைப்படும். முதாவது புலக்காட்சியா லுண்டாவது; இரண்டாவது அனுமானத்தாலுண்டாவது; மூன்ருவது மரபு பற்றி வந்த நூல்கள் முதலியவற்ருல் கிடைப்பது. (இதை ஆகமம், உரை என்ப.) நாலாவது அ ரு ட் காட்சியால் கிடைப்பது, அதாவது மனிதன் உண்மையை ஆராய்ந்து முடிவு காண்பதற்குப் பிரமாணமா யுள்ளவை இந்த நான்குமாகும். முதலாவது புலனறிவால் உண்டாவதை ஆராய்வோம். உலோகாயதக் கொள்கை. யுடைய தத்துவ அறிஞர் இந்தக் காட்சிப் பிரமாணத்தையே மேலாகக் கொள்வர். புலன்களால் காண்பவையெல்லாம் உண்மையென அவர்கள் கருதுவர். அது நிச்சயமான தென்றும் ஐயமின்றி உள்ளதென்றும் கூறுவர். உதாரண மாக அவர்கள் கூறுவர்: "இதோ இந்த விளக்கை நீங்கள்
பார்க்கிறீர்கள். இது உங்கள் காட்சிக்கு விஷயமாயிருக்கிற படியால் அதில் ஐயங்கொள்ள வேண்டியதில்லை. ஒரு மர
மிருக்கிறது. அதை நீங்கள் கண்ணுல் பார்க்கிறீர்கள். அதன் உண்மையைப் பற்றிச் சந்தேகமில்லை. இவன் ஒரு மனிதன். அவன் மனிதன் என்பது உங்களுக்குத் தெரி கிறது. ஆனபடியால் அவன் இருக்கிருன் என்பது தெளிவா கிறது' சுருக்கமாகக் கூறுவதானுல் புலன்களால் காண் பவையெல்லாம் உண்மையானவை. அதில் சந்தேகமோ ஆட்சேபமோ இல்லை. ஐந்தை ஐந்தினல் பெருக்கினுல் அதன் பெறுபேறு 26 ஆகவ்ோ, இருபத்தைந்திற் குறை வாகவோ இருப்பதில்லை. எனவே புலக்காட்சியே மிகப் பிரதானமான பிரமாணவென உலோகாயதப் போக்குள்ள
தத்துவ அறிஞர் கருதுவர்.

Page 79
52
ஆனல் தெய்வீகத் தத்துவ அறிஞரின் கருத்தில் இந்தப் பிரமாணம் ஏற்றுக் கொள்ளக்கூடியதன்று. புலக்காட்சி குறைவுடையதானபடியால் அது தவருண பிரமாணமென அவர் கருதுவர். கண்ணுல் வ ரு ம் காட்சி அறிவு மிக முக்கியமானதே. அது புலன்களுள் விசேஷமானது. ஆனல் காட்சி சில சமயம் சரியான அறிவைக் கொடுக்க மாட்டாது. பல விபரீதங்களும் மயக்கங்களும் அதில் உண்டாகலாம். கானல் நீரை அது நீராகவே கருதுகிறது. கண்ணுடியிற் காணும் பிரதிபிம்பத்தை உண்மையின் தோற் றமாகவே கருதுகிறது. ஆற்றிலே படகில் போகும்போது கரையிலுள்ள பொருள்கள் அசைவது போலத் தெரியும். ஆனல் அவனே உண்மையில் அசைந்து கொண்டிருக்கிருன். கரையிலுள்ளவை அசையாதிருக்கின்றன. பூமி கண்ணுக்கு அசையாதிருப்பது போலவும், சூரியனும், நட்சத்திரங் களுமே அசைவதாகவுந் தெரிகின்றன. உண்மையில் உலகம் தனது அச்சில் சுழன்று கொண்டிருக்கிறது. வான மண்டலம் நிலையாகவே இருக்கிறது. பிரமாண்டமான பரிதிகளும், கிரகங்களும், நட்சத்திர மண்டலங்களும், மனிதனுடைய கண்ணுக்குச் சிறியவையாக, மிக அற்பமானவையாய்த் தெரிகின்றன. ஆனல் உண்மையில் அவை பூமியை விட எத்தனையோ மடங்கு பெரியவை. கொள்ளி வட்டம் கண்ணுக்குச் சுழலும் அக்கினி போலத் தெரிகிறது. இவ் வாறு பல உதாாணங்களைக் காட்டலாம். புலன்களால் வரும் காட்சி தவறுடைய தென்பது அவற்றிலிருந்து தெளி வாகும். எனவே, புலன்களால் வரும் அறிவு குறைவுடைய தென்றும் நம்பத்தக்கதன்றென்றும் தெய்வீக தத்துவ அறிஞர் கூறுவர்.
இரண்டாவது பிரமாணம் அனுமானம், அது விவேகத் தினுல் ஆராய்ந்து முடிவு செய்யப்படுகிறது. புராதன தத்துவ அறிஞர் அனுமானத்தையே மிக முக்கியமான பிரமாணமாகக் கொண்டனர். கிரேக்க, ரோம, பாரசீக, எகிப்திய அறிஞர் அனுமானமே சிறந்த பிரமாணமெனக் கொண்டனர். மனிதனிடத்துள்ள நியாயிக்குந் திறமை
క్రs

53
எல்லா விஷயங்களையும் ஆராய்ந்து சரி, பிழை கூறுமானல், அந்தத் தீர்ப்பை ஏற் று க் கொண்டு விஷயங்களைக் கொள்ளவோ தள்ளவோ முடியும். ஆனல், அகக் காட்சி யுள்ள அறிஞர் இந்தப் பிராமணத்தையும் ஏற்றுக் கொள்வ தில்லை. ஏனெனில் நியாயித்தல், விவேகம் என்பவை உண்மையை அறியப் பிரமாணமென்று கொண்ட இதே தத்துவ அறிஞர் தாம் ஆராய்ந்த விஷயங்களில் ஏகோபித்த முடிவுக்கு வர முடியாதிருந்தனர். கிரேக்கத் தத்துவ அறிஞரின் கூற்றுக்கள் பாரசீக ஞானிகளின் முடிவுகட்கு முரணுனவையாயிருக்கின்றன. கிரேக்க தத்துவ அறிஞரே தம்முள் முரண்படுகிருர்கள். கிரேக்க ஞானிகளிடையிலும் ரோமானிய தத்துவ அறிஞரிடையிலும் சிந்தனை முரண்பாடு காணப்படுகிறது. எனவே, விவேகமும் நியாயித்தலுமே சிறந்த பிரமாணமாகக் கொள்வதானல் அப் பிரமாணத் தைப் பயன்படுத்துவோர் ஏகோபித்த முடிவுக்கு வந்திருக்க வேண்டும். ஆனல், அவர்கள் முரண்படுவதால் அவர்கள் மேற்கொண்ட பிரமாணம் தவறுடையதெனக் கொள்ள வேண்டும்.
மூன்ருவது பிரமாணம், ஆகமம் அல்லது உரை. அதாவது பழைய ஆகமங்களிலே கொண்ட கருத்துகளுக்குத் நாம் செய்யும் முடிவுகள் பொருத்தமுடையனவாயிருக்க வேண்டும். ஆகமங்களை மதிப்பிற் கொள்ளும் போது **இவற்றை யார் புரிந்து கொள்வர்; யார் கூறும் விளக்கம் பிரமாணமானதெனக் கேட்கத் தோன்றும். விவேகமும், நியாயித்தலுமே பிரமானமென்று கொண்டால் அவை சில வினுக்களுக்கு விளக்கந் தர முடியாதிருக்கின்றன. விவேக முள்ளவர் மரபு வழி வந்த கருத்துகளுக்கு விளக்கங் கொடுக்கும்போது முரண்படுவார்களானல், அத்தகைய பிரமாணம் உண்மையைக் காண எவ்வாறு பொருந்தும்?
நாலாவது பிரமாணம் அருட் காட்சி; அது அருட் கிளர்ச்சியாலுண்டாவது. கடந்த நூற்ருண்டுகளில் பல தத்துவ அறிஞர் ஒளி பெறுதல், அருள் விளக்கம் பெறுதல்

Page 80
154
என்ற நிகழ்ச்சியை ஒப்புக் கொண்டுள்ளனர். 'இவ் விஷயம் என் மூலம் அருளப்பட்டது' என்ருே, 'இதை அருட்
கிளர்ச்சியின் பயணுகக் கூறுகிறேன்' என்றே தமது கூற் றுக்கு முன்னுரையாகப் பகர்வர். அறிவொளி பெற்ற தத்துவ அறிஞர் கூட்டத்தை இவர்கள் சேர்ந்தவர்கள். அருட் கிளர்ச்சிகள், மனித உள்ளத்தின் அருட்டல்கள், அல்லது உணர்ச்சிப்பாட்டைச் சேர்ந்தவை எனலாம். உள்ளத்தின் அருட்டல்கள் சில சமயம் சாத்தான் சார்புடையவை. நாம்
இதை எவ்வாறு பகுத்தறிவது. ஒரு கூற்று அருட் கிளர்ச்சி
யின் பயனக உண்டானதோ, இறைவனின் கருணையாலுண் டான உள்ளத்தின் அருட்டாலோ என்று நாம் எவ்வாறு கூறுவது? அல்லது அது சாத்தானுடைய அருட்டாலோ என எவ்வாறு பகுத்தறிவது. எனவே, உண்மையை நா டி
அறிவதற்குரிய நாலு பிரமாணங்களும் தவறுடையன வென்பது நிதர்சனமாகிறது. இப் பிரமாணங்களெல்லாம்
அனுமானங்களைச் செய்யும் போது தவறு ஏற்படுகிறது.
நிரூபணங்களோடு கூடிய கூற்றை, புலன்கள் சரியென
ஏற்றுக்கொண்டால், நியாயிக்கும் திறன் ஒப்புக் கொண் டால், ஆகமங்களுக்கு ஏற்றதாயிருந்தால், மனத்திலேயுண் டா கும் அருட்டல்களுக்கு ஏற்றதாயிந்தால், அதை ஆராய்ந்து சரியானதெனக் கொள்ளலாம். ஏனெனில்
பிரமாணங்களுக்கு ஏற்றவாறு அவை அனுமானிக்கப்
F6
பட்டன. அதனுல் அக் கூற்று பூரணமாக ஏற்புடைய தெனக் கொள்ளலாம். ஆணுல், ஒரு பிரமாணத்தை மாத்திரம் பிரயோகித்து முடிவு காண்போமானுல் தவறுண் டாவதற்குச் சந்தர்ப்பமுண்டு. இது தானகவே போதரும் விளக்கமுடையது.
இப்போது 'அன்பு' எ ன் ற விஷயத்தை இப்
பிரமாணங்களைக் கொண்டு ஆராய்வோம். அவ்வாறு
ஆராய்ந்து முடிவைக் காண்போம்.
எல்லாத் தோற்றங்களுக்கும் காரணம் அன்பே என்று கூறுகிருேம். அன்பில்லாவிட்டால், சீரழிவும், அபாவமும்
 
 

55
உண்டாகிறது. அன்பு கடவுளால் அறிவறிந்து வழங்கப் பட்ட கொடை. இதுவே எல்லாத் தோற்றங்களிடத்து முள்ள பந்தமாகும். முதலில் புலக் காட்சிமூலம் இதற்குச் சான்று காண்போம். இந்தப் பிரபஞ்சத்தைப் பார்க்கும் போது, கூட்டத்தினல் (ஸ்கந்தம்) உண்டான பொருள்கி ளெல்லாம் முதலில் தனிப்பட்ட மூலப் பொருள்கள் ஆகர்ஷண சக்தியினல் பந்திக்கப்பட்டிருப்பதைக் கான போம். இந்தக் கவர்ச்சிச் சக் தி யி னல் மூலக்கூறுகளில் ஒன்று சேர்ந்திருக்கும், அணுக்களிடையே சேர்க்கை இருப் பதைக் காண்கிருேம். இதன் பயனக உண்டாவுது உலகி அ ஸ் ள கீழ் நிலை வர்க்கத்தின் தோற்றமென்பதை அறிகிருேம். தாதுப் பொருளுலகில் காணும் சேர்க்கை உண்மையில் அந்த உலகின் தேவைக்கேற்றபடி தாழ்ந்தபடி யில் காணப்படும் அன்பு அல்லது சம்பந்தமாகும் ஒருபடி உயர்ந்து தாவர உலகை ஆராய்வோம். அங்கே அந்தத் தோற்றத்தை உண்டாக்கும் மூலப் பொருள்களிடையே அதிகமானதொரு கவர்ச்சி இருப்பதைக் காணலாம். இந்த உயர் கவர்ச்சியின் பயனுகக் கூறுகள் கலந்து கொள்கின்றன. இது ஒரு செடியின் உடலாகப் பரிணமிக்கிறது. எனவே தாவர உலகின் படியில் அன்பு காணப்படுகிறது. மிருக உலகை ஆராயும்போது, தாது உலகிலுள்ள தனி மூலங்களை இணைக்கும் கவர்ச்சிச் சக்தியோடு, தாவர உலகிலுள்ள கூறுட களின் சேர்க்கையும், உணர்ச்சியும் காணப்படுகிறது. மிருகங்களிடையே ஒரு வகையான சேர்க்கையும் தோழழை யுமிருப்பதையும் இயற்கையான தேர்வு முறை பயிலப்படு வதையும் காண்கிருேம். இவ்வாறு மூலங்களிடையேயுள்ள கவர்ச்சியும், கலத்தலும், தேரும் சம்பந்தமும் மிருகங் களிடையேயுள்ள அன்பாகும்.
ஈற்றில் மனிதர் உலகைப் பார்ப்போம். இதுவே மிக உயர்ந்த உலகமானபடியால் அன்பின் ஒளி பெரிதும் பிரகா சிக்கிறது. மனிதனில் அவனுடைய சட உடலை உண்டாக் கும் மூலங்களிடையே கவர்ச்சிச் சக்தியைக் காண்கிருேம். அதனேடு கூறுகள் கலப்பதென்னும் விருத்திச் சக்தியும்,

Page 81
156
மிருக உலகில் காணும் உணர்ச்சிப்பாங்கும் உண்டு. இவற்றுக்கு மேலாக மனிதனிடத்து உள்ளத்தைக் கவரும் சக்தியும் மனிதரை ஒன்றிணைக்கும் உணர்ச்சிகளும் உண்டு. இவை மனிதர் ஒன்றுகூடி உறுதியாய்ச் சேர்ந்து வாழ வசதி * யுண்டாக்குகிறது. எனவே மனிதனிடத்திலே மிக உயர்ந் தது அன்பாகும். இந்த அன்பை அழித்து கவர்ச்சிச் சக்தியைக் கலைத்து மனித உள்ளம் சேர்வதை நீக்கிவிட் டால் மனித வாழ்வு மறைந்தொழியும்.
இந்த நிரூபணம் புலன்களுக்கு விஷயமாகக் கூடியது. நியாயிக்கும் சக்திக்கு ஏற்புடையது. ஆகமங்களிற் கூறிய வெற்றேடு பொருத்தமுடையது. மனிதனுடைய உள்ளத்தி லுண்டாகும் அருட்டுதலினல் ஆராய்ந்து முடிவு செய்யக் கூடியது. இந்தச் சான்றை நாம் முற்ருய் ஏற்றுக் கொள்ள *லாம். இது பூரணமான நிரூபணமென்று கொள்ளலாம். ஆனல், இவை இயற்கை உலகிலே படிமுறையாகக் காணப் படும் அன்பாகும். இவை இயற்  ைக நிலைகளுக்கும்
பிரமாணங்களுக்கும் ஏற்றவாறே வெளிப்படுகின்றன.
உண்மையான அன்பென்பது கடவுளுக்கும் பக்தர்களுக்கு மிடையில் உண்டாகும் அன்பாகும். பரிசுத்தமான ஆன் மாக்களை இணைப்பது இதுவே. இது ஆன்ம உலகிலுள்ள "அன்பு, சடமயமான உடல்களிலும் சேதனப் பொருள்களி லும் காணும் அன்பன்று. கடவுளுடைய அருட் கொடைகள் அடுத்தடுத்து எவ்வாறு மனிதனிடம் வருகின்றன என்பதை ஆராய்ந்து பாருங்கள். தெய்வீக ஒளி எவ்வாறு மனித உலகில் எப்பொழுதும் வீசுகிறதென்பதை ஆராயுங்கள். இக் கொடைகளும், வள்ளன்மைகளும், ஒளியும் அன்பி லிருந்தே தோன்றுகின்றன எ ன் ப தி ல் சந்தேகமில்லை. அன்பானது  ெத ய் வீ க க் குறிக்கோளுடையதாயிரா விட்டால், மனிதன் அதைப் பெற முடியாது. அன்பு இல்லா விட்டால், தெய்வீக ஆசீர்வாதம் எந்த ஒரு பொருளிலும் இறங்க மாட்டாது. அன்பில்லாவிட்டால், தெ ய் வீ க ஒளியைப் பெறுபவன் அந்த ஒளி  ைய ப் பிரதிபலிக்க
པའི་ས་

157
மாட்டான். ஞாயிறு மண்டலத்திலிருந்து ஓயாமல் ஒளி வெளிவருவது போலவே கடவுளுடைய அருளும் ஓயாது. வெளிப்படுகிறது. சூரியப் பிரபையினல், உலகம் ஒளியும், பிரகாசமும் உடையதாயிருக்கிறது. அவ்வாறே உள்ளத்து இராச்சியமும் ஆன்ம இராச்சியமும் உண்மையென்னும், சூரியனுடைய ஒளியாலும், கடவுள் பக்தியினலுண்டாகும் அருட் கொடையினலும் ஒளி பெற்று உயிர்ப்புப் பெறு கின்றன. இதனுல் சராசர வாழ்வும், உள்ளத்து இராச்சியங் களும் ஆன்ம இராச்சியங்களும், எப்பொழுதும் புத்துயிர் பெறுகின்றன. கடவுளின் அருட் கருணையில்லாவிட்டால் உள்ளமெல்லாம் சடமாகி, ஆன்மாக்கள் வாடி, மனித னென்னும் மெய்ம்மைக்கு நிரந்தரமான கொடைகள் கிடை யாமற் போய்விடும்.
கடவுளின் கருணை எவ்வளவு தூரம், வெளிப்படுகிற. தென்பதை ஆலோசித்துப் பாருங்கள். உலகில் தோன்றும் அவனுடைய அன்பின் அறிகுறிகளுள் ஒன்று அவனுடைய அவதாரங்களின் உதயமாகும். அ வ தா ர புருடர்கள் எத்துணை அன்பை வெளிப்படுத்தியுள்ளனர். மக்களுக்கு வழி காட்டுவதற்காகத் தமது உயிரையே மனமுவந்து தியாகஞ். செய்துள்ளனர். அவர்கள் சிலுவையை ஏற்றனர். மிக உயர்ந்த முன்னேற்றத்தை மக்கள் அடைவதற்காக தமது வாழ்நாளின் பல கஷ்டங்களை அனுபவித்தனர். மன்பதை மீது யேசுநாதருக்கு அன்பில்லாவிட்டால், அவர் சிலுவை யில் மரித்திருக்கமாட்டார். மனிதரிடத்துள்ள அன்பினல்ே தான் அவர் சிலுவையை ஏற்ருர். அவருடைய அன்பின் உயர்வைப் பாருங்கள். மன்பதை மீது அன்பில்லாவிட்டால், யோவான் தமது உயிரைத் தியாகஞ் செய்திருக்கமாட்டார். சகல தீர்க்கதரிசிகளும் பரிசுத்த ஆன்மாக்களும் இவ்வாறே யிருந்தனர். பாப் அருளாளர் மனித குலத்துக்கு அன்பு காட்டியிராவிட்டால், அவர் ஆயிரம் துப்பாக்கிக் குண்டை எதிர்த்து நின்றிருக்கமாட்டார். மன்பதை நிமித்தம் , அன்பென்ற அக்கினிச்சுவாலையை பஹவுல்லா எரியவிடா
--

Page 82
158
திருந்தால் நாற்பது வருடச் சிறைத் தண்டனையை ஏற்றி
இருக்கமாட்டார்.
மனிதர் மற்றவர் நன்மைக்காகத் தமது சுகங்களை மிக அருமையாகவே தியாகஞ் செய்வார். மற்றவன் நன்மைக் காக ஒரு மனிதன் தன் கண்ணைத் தியாகஞ் செய்வானு? உறுப்புகளைத் துண்டிப்பான? ஆனல் தீர்க்க தரிசிகளெல் லாம் தமது உயிரைத் தியாகஞ் செய்து இரத்தத்தைச் சிந்தி ஞர்கள். தமது உடைமைகளையெல்லாம் மற்றவர்க்காகக் கொடுத்தனர். அவர்களிடம் எத்துணை அன்புண்டென் பதைச் சிந்தித்துப் பாருங்கள். மன்பதையிடத்து அவர்கள் அத்துணை அன்பு வையாவிட்டால், ஆன்மீக அன்பென்பது பெயர் மாத்திரையாகவே யிருக்கும். அவர்களிடம் ஒளியில் லாவிட்டால், ஆன்மாக்களிடம் ஒளியைக் காண முடியாது. அவர்களுடைய அன்பு எத்துணைப் பயனுடையது. கடவு ளுடைய கருணைக்கு இது ஒர் அறிகுறி. உண்மை யென்ற சூரியனின் ஒரு கதிர்.
எனவே நாம் இறைவனைப் போற்றுவோமாக. அவனு டைய அருட்கொடையென்னும் ஒளி, அவருடைய நிரந்தர அன்புக் கூடாகப் பிரகாசிக்கிறது. எங்கள் மீதுள்ள அன்பி னலேதான் இறைவனின் அவதார புருஷர்கள் தமது டியிரை எமக்காக அர்ப்பணஞ் செய்தார்கள். கடவுளின் அன்பு எத்தகையது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். கடவுளன்பில்லாவிட்டால் உயிர்களெல்லாம் அசேதனப் பொருளாகிவிடும். அதாவது சடமயமான சாக்காட்டை நாம் கருதவில்லை. யேசுநாதர் "செத்தவர் செத்தவர்களைப் புதைக்கட்டும், மாமிசத்திலிருந்து பிறப்பது மாமிசமே, ஆவியிலிருந்து தோன்றுவது ஆவியே' என்று கூறியது இந்த நிலையைக் குறித்தே, கடவுளின் அன்பு இல்லாவிட்டால் நமது உள்ளங்கள் ஒளியைப் பெறமாட்டா. கடவுள் கருணை யில்லாவிட்டால், வானவர் நாடு வழி திறக்கமாட்டாது. கடவுள் கருணையில்லாவிட்டால் பரிசுத்த ஆகமங்கள் அருளப்படமாட்டா. க ட வு ள் கருணையில்லாவிட்டால்,

1.59
தீர்க்கதரிசிகள் உலகுக்கு அனுப்பப்பட்டிருக்கமாட்டார்.
இவ் வ ரு ட் கொடைகளெல்லாவற்றுக்கும் அடிப்படை
கடவுளின் கருணையே. எனவே, மனித உலகில் கடவுள்
கருணையிலும் பார்க்க மேலான சக்தி கிடையாது. இன்று நாம் இங்குக் கூடியதற்குக் காரணமும் கடவுள் கருணையே. கீழை நாட்டையும் மேலே நாட்டையும் ஒன்ருக இணைப்பதும் கடவுள் கருணையே. அதுதான் உலகுக்குப் புது வாழ்வு கொடுத்து வருகிறது. இவற்றுக்கெல்லாம் நாம் இறைவனைப் போற்றுவோமாக.
இவ் விஷயம் பற்றிய மற்ருேர் அமிசத்தை இப்போது ஆராய்வோம். அன்பின் தொழிற்பாடும், பலனும் இந்த உலகத்தை மாத்திரம் சேர்ந்ததா? வேறு பிறப்புக்கும் அவை பரவுமா? இம்மையில் எமது வாழ்வுக்கும் மாத்திரம் உறுதுணையாயிருக்குமா? அல்லது நித்திய வாழ்வுக்கும் அது துணை புரியுமா? மனித ராச்சியத்தைப் பார்க்கும் போது அது மற்றை உலகங்களைவிட உயர்ந்ததென்பதை உடன டியாக அறிகிருேம். சராசரங்களெல்லாம் நாலு இராச்சி யத்திலடங்கும். அவை தாதுப் பொருளுலகம், தாவர உலகம், மிருக உலகம், மனித உலகம் என்பன வாகும். தாது உ ல கம், ஒன்று சேர் த ல் என்ற பண்பையுடையது. தாவர உலகில் இந்தப் பண்போடு
வளரும் சக்தியும் காணப்படுகிறது. மிருக உலகு தாது "
உலகப் பண்பும், தாவர உலகப் பண்புமுடையதாய் புலனு ணர்ச்சிச் சக்தியையும் பெற்றிருக்கிறது. புலனுணர்ச்சி" யிருந்தாலும், மிருக உலக்குச் சேதனம் கிடையாது. சேதனம், ஆவி என்ற உலகோடு கொஞ்சமும் பரிச்சயம் கிடையாது. புலனறிவுக்கு அப்பாலுள்ள விஷயங்களை ஆராய்ந்து புதியவை கண்டு பிடிக்கும் சக்தி அதற்கு இல்லை. அதற்கு விவேகம் கிடையாது. உதாரணமாக ஐரோப்பா விலுள்ள மிருகத்துக்கு அமெரிக்க்ாக் கண்டத்தைக் கண்டு பிடிக்கும் ஆற்றல் கிடையாது. தன் புலனறிவுக்கும் இயல் பூக்க எல்லைக்கும் அடங்கியவற்றையே அது புரியக் கூடிய தாயிருக்கிறது. எந்த விஷயத்தையும் நியாயிக்கும் ஆற்றல்
-

Page 83
160
அதனிடமில்லை. பூமி ஒர் அச்சில் சுழன்று கொண்டிருக்கிற தென்பதை அது புரிந்து கொள்ளமாட்டாது. வானத்திலே மின்னும் சிறிய நட்சத்திரங்கள் பூமியிலும் பார்க்கப் பெரியவை என்பதை அது உணர்ந்து கொள்ளமாட்டாது. விவேகம் இருப்பதைக் கருத்தளவில் அது உணர்ந்து கொள்ளமாட்டாது. இந்தச் சக்திகள் மனிதனுக்குத் தானுண்டு. மனிதராச்சியத்திலே மிருக உலகில் காணுத ஒரு மெய்ம்மை உண்டு என்பது நிரூபிக்கப்படுகிறது. அந்த மெய்ம்மை என்ன? அதுவே மனிதனுடைய ஆன்மா. இந்த ஆன்மா மனிதனை ஏனைய இயற்கை உலகங்களிலிருந்து பிரித்து வைக்கிறது. கீழ்நிலையிலுள்ள உலகத்துக்குப் பொருத்தமான பண்புகளை அவன் பெற்றிருந்தாலும், அவனுக்கு விசேடமாக ஆன்மீகப் பண்பும் சேதனத் திறமும் கடவுளால் கொடுக்கப்பட்டிருக்கிறது.
சடசம்பந்தமான தோற்றமெல்லாம் இயற்கைக்கு அடங்கியவையே. சடமயமான சேதன. பொருள் அனைத் தும் இயற்கையின் அடிமையே. இயற்கை விதியிலிருந்து அவை அணுவளவும் மாறமாட்டா. இந்தப் பூமியும், இப் பெரிய மலைகளும், அற்புதமான வல்லமையும் இயல்பூக்கமு முள்ள மிருகங்களும், இயற்கையின் எல்லையை மிஞ்சிப் போகமாட்டா, மனே தனைவிட மற்றெல்லாம் இயற்கைக்குக்
"கட்டுப்பட்டனவே. மனிதனே இயற்கையின் அரசன்.
அவன் இயற்கை விதிகளை மீறுவான். பூமியின் தரையில் வாழ்வதெற்கென இயற்கையாயமைந்த இயல்புடைய இந்த மிருகம், பறவைபோல வானத்திலே பறக்கிறது. அவன் சமுத்திரத்திலே பிரயாணஞ் செய்கிருன். நீர்மூழ்கிக் கப்பலில் கடலின் அடியில் சஞ்சரிக்கின்றன். இயற்கையின் விதிகளைக் கண்டுபிடிக்கும் சக்தியைப் பெற்றிருக்கிருன். காணுத உலகிலிருந்து காணும் உலகுக்கு அந்த விதிகளைக் கொண்டு வருகிருன். மின்சிக்தி ஒரு காலத்தில் இயற்கையில் வெளிப்படாது அடங்கிக் கிடந்தது இயற்கையின் விதிகளின் படி அது மறைந்திருக்க வேண்டியது. ஆனல் மனிதனுடைய ஆராய்ச்சி அதைக் கண்டு பிடித்தது; அதன் இரகசியமான

161
களஞ்சிய சாலையிலிருந்து அதை வெளி யே எடுத்து எல்லாரும் பார்க்கக் கூடியவாறு வைத்தான். இயற்கையின் விதிகளை மனிதன் மீறத் திறமை வாய்ந்தவன் என்பது தெரிகிறது. இதை எவ்வாறு செய்கிருன்? அவனைப் படைத்த அன்றே கடவுள் அவனுக்கு ஒர் ஆன்ம சக்தியை வழங்கியுள்ளான். இதனுல் அவன் கீழான படைப்புகளி லும் புறம்பானவன்; தன்னை அவன் வேறுபடுத்திச் சிறப்ப டைய லாமென்பது தெரிகிறது. இதற்கு அவனுடைய ஆன்ம சக்தியே காரணம். பழைய ஏற்பாட்டுப் பாசுரமொன்றிலே மனிதன் ** கடவுளின் வடிவில் அவரைப் போலப் படைக் கப்பட்டான்' என்று கூறப்பட்டது. இந்த ஆன்ம சக்தி யையே குறிக்கிறது. கடவுளின் மெய்ம்மைகளை ஊடுருவிப் பார்க்கும் தி ற  ைம யு ம் ஆண்டவனுடைய தெய்வீகக் கொடைகளிலே பங்கு பெற்றுவதற்கும் மனிதனுடைய இந்த ஆன்ம சக்திக்கு மாத்திரமே திறமையுண்டு.
உ. ஐ.அ.-14

Page 84
சமயத்தின் அடிப்படை
கடவுள் ஒருவரே. அவருடைய ஒளியும் ஒன்றே. அந்த ஏக தெய்வத்தின் அடிமைகளே மனிதர். கடவுள் எல்லா ரிடத்தும் அன்புடையவராயிருக்கிருர், அவர் உலகைப் படைத்துக் காக்கிருர், எல்லார்க்கும் வேண்டியவற்றை வழங்குகிருர், இறைவனின் வார்த்தையென்னும் சத்திய சூரியன் மனித குலத்துக்கெல்லாம் ஒளியைக் கொடுக்கிறது. தெய்வீக மேகம் தன் அருள் மழையைப் பெய்கிறது. அவன் கருணை யென்னும் மந்த மாருதம் வீசுகிறது. ஆண்டவனு டைய நிரந்தரமான நீதி, அன்புக் கருணை என்ற கடலில் மனித குலம் மூழ்கியிருக்கிறது.
ஆனல் நாம் ஆண்டவனின் விருப்பத்துக்கும் சங்கற்பத் துக்கும் மாருக ஒழுகுகிருேம். வேற்றுமை பகை என்ற குணங்களுக்கு நாமே காரணமாயிருக்கிருேம். ஒருவர்க் கொருவர் மாருக எழுந்து பிணங்கிக் கொண்டிருக்கிருேம். தேசங்களும் மக்களினங்களும் தம்முட்கலகம் விளைத்து எத்தனை போர்களைத் துவக்கினர்கள். எவ்வளவு இரத்தஞ்
சிந்தினேம். எத்தனை நகரங்களையும் வீடுகளையும் பாழ7 க்
கினுேம். இவையெல்லாம் ஆண்டவன் விருப்பத்துக்கு மாருனவை. அவர் மனித இனம் அன்பாயிருக்க வேண்டு மென விரும்பினர். தன் படைப்புகளிடம் அவர் கருணை யும் அன்புமுடையவராயிருக்கிருர், மனிதர் அன்பாகவும்
இணக்கமாகவும் வாழ வேண்டுமென விதித்துள்ளார்.
சமயத்தின் பெயரால் எவ்வளவு பிரிவுகளை உண்டாக்கி யுள்ளோம். மற்றச் சமயத்தவரை ஒதுக்கி வைத்து அவர் கள், சமயப் பற்றில்லாதவரென்றும் தப்பான வழியிற் செல்பவரென்றும் இதுவே நமது சமயத்தவரின் மேலான கடமையென்றும் எண்ணுகிருேம். இது மிகவுந் துக்கத்துக்

163
கிடமான விஷயம். தெய்வீக சமயங்களின் அடிப்படை உண்மையில் ஒன்றே. வித்தியாசங்களுக்குக் காரணம் விடாப்பிடியான கோட்பாடுகளைக் குருட்டுத்தனமாகப் பின் பற்றுதலும், முந்தையோர் அனுசரித்த வழிபாட்டு முறை களையும் பின்பற்றுவதுமேயாகும். ஆபிரகாம் மெய்ம்மைக்கு அத்திவாரமிட்டார். மோசேயும் யேசுநாதரும் முகம்மது நபியும் மெய்ம்மையை வெளிப்படுத்தியவர்கள். பஹவுல்லா மெய்ம்மையின் பிரபையாயுள்ளவர். இது வெறும் கூற்றன்று. இதனை நிரூபிக்கலாம்.
இதைக் கருத்தோடு கவனியுங்கள். தெய்வீக சமயங் களிலே இரண்டு வகையான விதிகளுண்டு. முதலாவது இறைவனுடைய அருள்வாக்குகளின் போதனைகள். இறை வனில் நம்பிக்கை, பூரண மனிதத் தன்மையை வெளிப் படுத்தும் பண்புகளைப் பெறுதல், புகழத்தக்க ஒழுக்க முறை கள், தெய்வீக ஒளியிலிருந்து வெளியாகும் கொடைளைகயும் அருட் பிரசாதங்களையும் அடைதல், என்பனவாகும். சுருக்க மாகக் கூறுவதானல், இவை ஒழுக்கம், தருமம் என்பவை சம்பந்தமானவை. இந்த அமிசம் கடவுள் அருள் நெறியின் மூலாதாரமான தன்மையாகும். இது மிக முக்கியமானது ஏனெனில் கடவுளை அறிதலே மனிதன் அடையக் கூடிய
பெரிய பேருகும். மனிதன் தெய்வம் ஒன்றென்பதை ,
உணர வேண்டும். இறைவனின் கட்டளை மனிதன் அறிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். மனித குலத்தின் ஒழுக்க அபிவிருத்தி சமயத்திலே தங்கியுள்ளதென்பதை மனிதன் உண்மையென உணர்ந்து கொள்ள வேண்டும். தன்னிட முள்ள குறைபாடுகளை நீக்கித் தெய்வீகப் பண்புகளைப் பெற்றுத்தான் கடவுளின் வடிவத்தில் சிருட்டிக்கப்பட்டவ னென்பதை உலகுக்கு நிதர்சனப்படுத்த வேண்டும். "நாம் மனிதனை எமது வடிவில் எம்மைப் போலப் படைப்போ' மென்று பரிசுத்த வேதாகமத்திலே கூறப்பட்டுள்ளது. தெய்வீக மெய்ம்மை வடிவம் உருவம் என்பவற்றுள் அடங் காது. எனவே, இது மனிதனுடைய வடிவத்தையும் உருவத்தையும் குறிக்கவில்லை. கடவுளுடைய குணங்கள்

Page 85
164
பண்புகளென்பனவே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. இறைவன் நீதியின் வடிவமானபடியால், மனிதனிடத்தும் நீதியிருக்க வேண்டும். கடவுள் எல்லாரிடத்தும் அன்புள்ள வராயிருப்பதால் மனிதனும் அவ்வாறேயிருக்க வேண்டும்.
* 'இறைவனின் வடிவமும் ஒப்புமையு' மென்கிற போது ஆண்டவனுடைய குணங்களையே குறிக்கின்ருேம். தெய்வ அருட் குணங்கள் அவனிடம் பிரதிபலிக்க வேண்டும்.
இதுவே தெய்வச் சமயங்களெல்லாவற்றுக்கும் அடிப்படை யாயுள்ளது. இதுவே எல்லாச் சமயங்களுக்கும் பொது
வான மெய்ம்மை. ஆபிரகாம் அருளாளர் இதனைப் பிரகடனஞ் செய்தார். மோசே அருளாளர் வெளிப்படுத்திக் கூறினர். யேசு நாதர் முதலிய தீர்க்கதரிசிகள் இந்த அமிசத்தைப் பிரமாணமாகக் கொண்டனர். இரண்டாவது தற்காலிகமான, முக்கியமற்ற கட்டளைகள். இவை மனித
விவகாரங்கள் சம்பந்தமானவை. இவை தடித்தமானவை; கால தேச வர்த்தமானங்களுக்கு ஏற்றவை. மாற்றத்துக் குட்பட்டவை. இவை நித்தியமானவையல்ல; மூலாதார மானவையுமல்ல. உதாரணமாக நோவா காலத்திலே கடல்படும் உணவுகள் நியாயமானவையெனக் கருதப்
பட்டன. அதனல், கடல் செந்துக்களைச் சாப்பிடலாமெனக் கடவுள் கட்டளையிட்டார். மோசே காலத்திலே இவை ஏற்புடையனவாகக் கருதப்படவில்லை. எனவே க ட ல் செந்துகளை உ ண் பது ஒ ர ள வு தவிர்க்கப்பட்டது.
ஆபிரகாம் காலத்திலே, (அவர் மீது சாந்தியுண்டாக) ஒட்டகத்தின் பால் உணவாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவ்வாறே ஒட்டகத்தின் மாமிசமும் ஏற்றுக் கொள்ளப் பட்டது. யாக்கோபு ஒரு விரதத்தை மேற்கொண்டபடி யால் இது தவிர்க்கப்பட்டது. இ  ைவ முக்கியமற்ற தற்காலிகமான கட்டளைகளாகும். பரிசுத்த வேதாகமத்
திலே அக் காலத்துக்குப் பொருத்தமானவையெனக் கருதப்
பட்ட சில கட்டளைகளிருந்தன. உதாரணமாக தோரா கட்டளைச் சட்டங்களின் படி ஒரு தொகைப் பணத்தை ஒருவன் களவாடினல் அவனுடைய கையை வெட்டினர்கள்.

165
ஒரு டாலர் காசை ஒருவன் திருடினுல் அவனுடைய கையை வெட்டி விடுவது இக் காலத்துக்குப் பொருத்த மானதா? கொலை சம்பந்தமான தண்டனைகள் பற்றி தோராவிலே பத்துக் கட்டளைகளுண்டு. அவை இக் காலத் துக்குப் பொருந்துமா? கண்டிப்பாகப் பொருந்த மாட்டா. காலம் மாறி விட்டது. வேதாகமத்திலே ஒய்வு நாள் கட்டளையை ஒருவன் மீறுவானுணுல், அல்லது அந் நாளில் நெருப்பு மூட்டுவானனல், அவனைக் கொன்றுவிட வேண்டு மென்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இக் காலத்தில் அது ரத்துச் செய்யப்பட்டுள்ளது. தந்தைக்கு மரியாதைக் குறைவான வார்த்தையை ஒருவன் சொன்னுல் அவனைக் கொன்று விடுமாறு தோரு கூறுகிறது. இது இக் காலத் துக்குப் பொருத்தமா? இல்லை மனிதனுடைய நிலைமைகள் மாறி விட்டன. அவ்வாறே யேசு நாதர் காலத்திலும், அக் காலத்துக்குப் பொருத்தமான சில சிறிய கட்டளைகள் நடை முறையிலிருந்தன.
எனவே கடவுளருள் நெறியின் அத்திவாரம் மாழுது நிரந்தரமாயிருக்கிற தென்பது உறுதியாகக் கா ட்ட ப் பட்டுள்ளது. உறுதியான அந்த அத்திவாரந்தான் சமூகத் தின் முன்னேற்றத்துக்குத் துணை புரிகிறது. அதுவே மனித குலத்துக்கு ஒளி கொடுக்கிறது. மனிதரிடையே அன்பும்ஆ , நீதியும் நிலவுவதற்கு அதுவே என்றும் காரணமாயுள்ளது. மனிதரிடையே உண்மையான தோழமையும், ஒற்றுமையும் உண்டாவதற்கு இதுவே துணை புரிகிறது. ஏனெனில் அது ஒரு போதும் மாறுவதுமில்லை; வேறெதுவும் அதனை மீறி உயர்த்தப்படுவதுமில்லை. தாற்காலிகமானவையும், முக்கிய மற்றவையுமான சட்டங்கள் சமூகத்தின் சரி விவகாரங்களை ஒழுங்கு செ ய் வன. அவை மாற்றத்துக்குட்பட்டன அவற்றை நீக்கி விடலாம்.
தீர்க்கதரிசிகளின் நோக்கமென்ன? அவர்களைக் கடவுள் ஏன் அனுப்பினர்? அவர்களே மனிதகுலத்தின் ஆசாரியர் கள். மனிதருக்குப் போதனை செய்பவர் அவர்களே,

Page 86
166
அவர்கள் மன்பதைக்குக் கல்விபுகட்டி அதற்குப் பயிற்சி யளிப்பவர்கள். மனமடிவு அழிவு என்பவற்றிலிருந்து மனித குலத்தை விலக்கி முன்னேற்றம், மகிமை என்பவற்றின் உச்ச நிலையை அடையச் செய்பவர். மக்கள் இருளில் வாழ் கிருர்கள். தீர்க்கதரிசிகள் அவர்களுக்கு ஒளி கொடுக் கின்றனர். ம னி த ர் குறைவுடையவராயிருக்கின்றனர். தீர்க்கதரிசிகள் அவர்களுக்கு நிறைவையுண்டாக்குகின்றனர், மக்களுக்கு நல்லறிவு வழங்கி அவர்களை வழி நடத்துவதே தீர்க்கதரிசிகளின் நோக்கமாகும். எனவே தீர்க்கதரிசிகள் எங்கேயிருக்கிருர்களென்று தேடியறிவது மனிதரின் நோக்க மாயிருக்க வேண்டும். அதாவது மனித குலத்தின் ஆசாரிய ராயிருப்பவர், மன்பதைக்குப் போதனை செய்பவர் அந்த யுகத்தின் தீர்க்கதரிசி என்பதில் ஐயமில்லை.
மோசேயின் காலத்து நிகழ்க்சிகளை நாம் ஆராய்வோம். அவர் நாமம் வாழ்க. அவர் மிதியான் என்ற இடத்திலே வாழ்ந்தார். அப்போது இஸ்ரவேல் சாதியார் எகிப்து நாட்டிலே அடிமைகளாயிருந்தனர். சகலவிதமான கொடுங் கோற் கொடுமைக்கும், கொடிய துன்பங்களுக்கும் ஆளா யிருந்தனர். படிப்பு வாசனையற்று அறியாமையில் மூழ்கி யிருந்தனர். பெருந் துன்பங்களை அனுபவித்தனர். ஆதர வற்றவர்களாய் வலிமை குன்றியவராயிருந்தபடியால் ஒரு எகிப்தியன் பத்து இஸ்ரவேலருக்குச் சமமானவனுய் இருந் தான். இத் தருணத்தில் மோசே தோன்றி அருள் ஒளியோடு விளங்கினர். பரோபனுடைய கொடுங்கோலாட்சியிலிருந்து அவர் இஸ்ரவேலரை மீட்டார். எகிப்து நாட்டிலிருந்து இஸ்ரவேலரைப் புனித நாட்டுக்கு அழைத்துச் சென்ருர், இஸ்ரவேலர் பிரிந்து பல திசையிலும் சிதறியிருந்தனர். மோசே அ வ ர் க ளை ஒன்று படுத் தி க் க ட் டு ப் பாடுடையவராக்கினர். அவர் க ஞ க்கு அறிவையும் ஞானத்தையும் வழங்கினர். அடிமைகளாயிருந்தவர்களை அரசகுமாரராக்கினர். கல்வியறிவற்றவராயிருந்தவர்க்குக் கல்வியைக் கொடுத்தார். குறைவுடையவராயிருந்த அவர் களை நிறைவுடையவராக்கினர். சுருக்கமாகக் கூறுவதானல்,

67
ஆதரவற்றிருந்தவர்களுக்குத் திறமையையும், நம்பிக்கையை யும் வீரத்தையும் கொடுத்தார். புராதன உலகத்திலே அவர்களுடைய புகழ் எங்கும் பரவிற்று. அவர்களுடைய புதிய நாகரிகம் சாலமன் காலத்திலே பெருஞ் சிறப்பை யடைந்தது. மோசே உதவிய பயிற்சியினலும் வழி காட்டு தலினலும் இந்த அடிமைகள், உலகிலே சிறந்த மக்களாக விளங்கினர். தேக பலத்திலும் ராணுவ பலத்திலும் மாத்திரமன்றி கலைகளிலும், கல்விகளிலும், பண்பாட்டிலும் சிறந்து விளங்கினர். அவர்களுடைய புகழ் எ ங் கும் பரவிற்று. கிரேக்க நாட்டிலேயுள்ள தத்துவ அறிஞர்கூட ஜெரூஸலத்துக்குச் சென்று, இஸ்ரவேல் சாதுக்களோடு சேர்ந்து அறிவு பெற்றனர். இத் தத்துவ அறிஞருள் புகழ் மிக்க சோக்கிரதருமிருந்தார். அவர் புண்ணிய பூமியை அடைந்து இஸ்ரவேல் தீர்க்கதரிசிகளோடு படித்தார். அவர்களுடைய தத்துவக் கோட்பாடுகளையும் அவர் களுடைய முன்னேற்றமான கலைகளையும் விஞ்ஞானங்களையு மறிந்தார். கிரேக்க நாட்டுக்குத் திரும்பிய பின்னர் கடவுளின் ஒருமை என்ற கொள்கையை ஸ்தாபித்தார். கிரேக்க மக்கள் அவரை வெறுத்து அரசனுக்கு முன்னல் அவருக்கு நஞ் சூட்டினர். ஹிப்போகிராட்டிஸ் முதலான பல கிரேக்கத்துவ அறிஞர் இஸ்ரவேல் பண்டிதர்கள் பாதத் திலிருந்து அவர்களுடைய ஞானத்தையும் தத்துவத்தின் அந்தரங்கத்தையும் மாந்தினர்.
மோசே தமது பெரிய அருட் பண்யின் செல்வாக்கினல் கீழ் நிலையில் அவமான மனுபவித்துக் கொண்டிருந்த இஸ்ர வேலரை உயர் நிலைக்கு உய்த்து அவர்களுக்குக் கட்டுப் பாட்டையும், கல்வியையும் புகட்டினராணுல் அத்தகைய சிறந்த அற்புதமான ஆசிரியரைப் பற்றி நீதியான முடிவுக்கு வர வேண்டும். இப் பெரிய, சாதனையில் அவர் தனிப் பெருமையோடு விளங்கினர். இ  ைத அவர் தெய்வ அருளின்றி நிறைவேற்றியிருப்பாரா? அவமானம் அடைந் திருந்த ஒரு சாதியாருக்குப் பெருமையான நிலையை

Page 87
168
உண்டாக்க ஒருவர்க்குத் தெய்வ அருள் வேண்டாமா? தெய்வீக சக்தியின்றி இதனை அவர் செய்திருக்க முடியாது. தீர்க்கதரிசி என்பதற்கு இதுதான் சான்று. தீர்க்கதரிசியின் அருட்பணி மோசே செய்தது போல மனித குலத்துக்குக் கல்வியூட்டுவதே. அதனல் அவர் தீர்க்கதரிசிகளுட் சிறந்த வராக விளங்கினர். அவர் அருளிய நூல் கடவுளாக மாறிற்று. இது நியாயத்துக்குப் பொருத்தமான நேரான நிறைவான சான்ருகும்.
சுருக்கமாகக் கூறுவதானல் மோசே அருளாளர், (அவர் மீது சாந்தியுண்டாவதாக) இறைவனின் கட்டளையை வகுத் தார். இஸ்ரவேலரின் ஒழுக்கத்தைத் தூய்மைப் படுத்தினர். உத்தமமான சிறந்த சாதனைகளை யடைய அவர்களுக்கு உற்சாகமளித்தார். ஆனல் மே 1ா சே மறைந்ததும், சாலமனின் மகிமை பொருந்திய யுகம் முடிவுற்றதும் ஜெரபோம் ஆட்சியில் மக்களிடையே பெரிய மாற்றமுண் டாயிற்று. உயர்ந்த ஒழுக்க நெறிகளும், ஆன்மீக நிறைவு களும் ஒழிந்தன. நிலைமைகளும் ஒழுக்கங்களும் தேய்ந்து போயின. ச ம ய ம் கீழ் நிலையடைந்தது. மோசேயின் நிறைவான கொள்கைகள் மங்கி மூட நம்பிக்கையும் பல தெய்வ வழிபாடும் தோன்றிற்று. சாதி மக்களிடையே பிணக்கும் பூசலுமுண்டாகி ஒற்றுமை கலைந்தது. ஜெரொ போமைப் பின்பற்றியவர்கள் தாம் சரியான வழியிற் செல் வதாகவும், தாமே அரசுக்கு வாரிசு யுள்ளவரென்றும் பிரகடனஞ் செய்தனர். ரெஹொபோமின் ஆதரவாளர் தாமே அரசுக்கு உரிமையுடையவரெனக் கூறினர். துவேஷ மும் பகைமையும் மக்கள் இனத்தவரிடையே தாண்டவ மாடிற்று. இஸ்ரவேலின் மகிமை மங்கிற்று. சீரழிவு உச்ச நிலையை அடையவே டையர் நகரில் பொன்னலான கன்றுக் குட்டியை வைத்து மக்கள் வணங்கினர். பின்னர் இறைவன் எலிஜாவைத் தீர்க்கதரிசியாக அனுப்பினர். அவர் மக்களை நல்வழிப்படுத்தி மீட்டு இறைவன் சட்டத்தைப் புனருத் தாரணஞ் செய்து இஸ்ரவேல் மக்களுக்குப் புது வாழ்வளித் தார். பின்னர் மறுபடியும் மாற்றங்களுண்டாயின. மறு

169
படியும் இனங்கள் பிரிவடைந்தன. பபிலோன் இராச்சியத் தின் அரசனுன நெபுசட்னிசர் புண்ணிய பூமி மீது படை யெடுத்தார். எழுபதினுயிரம் இஸ்ரவேலரைச் சி  ைற பிடித்துச் சல்டீயாவுக்குக் கொண்டு சென்ருர், அங்கே பல தோல்விகளும் சோதனைகளுமுண்டாயின. இந்த அபாக்கியம் நிறைந்த மக்கள் பெருந் துன்பமடைந்தனர். பின்னர் இறைவனின் தீர்க்கதரிசிகள் தோன்றி மறுபடியும் சீர்திருத்த முண்டாக்கி இறைவனின் கட்டளைகளைப் புனருத்தாரணஞ் செய்து அவமானமடைந்த அம்மக்கள் அவற்றைப் பின் பற்றினர். இதனுல் அவர்களுக்கு விடுதலை கிடைத்தது. பின்னர் பாரசீகத்து மன்னனன சைரஸின் சாசனப்படி அவர்கள் புனித நகருக்குத் திரும்பிப் போயினர். ஜெரூசல மும் சொலமனுடைய கோவிலும் மறுபடி புனர் நிர்மாணஞ் செய்யப்பட்டன. இது சொற்ப காலமே நிலை நின்றது . மக்களுடைய ஒழுக்கம் குன்றியது. பின்னர் ரோமத் தளபதியான ரைட்டஸ் என்பவன் ஜெரூசலேமை அடிமைப் படுத்தி ஜெரூசலம் நகரை நிர்மூலமாக்கினன். கொள்ளையும், எ தி ரி யி ன் வெற் றி யு ம் அழிவைப் பூரணமாக்கின. பலஸ்தீனம் பாழடைந்தது. யூதர் தமது முன்னையோரின் புனித பூமியை விட்டு ஓடினர். இதற்குக் காரணம் இஸ்ர வேலர் மோசே அருளிய கடவு னி ன் கட்டளைகளை மீறியமையே. அதாவது தெய்வீகக் கு ண ங் களை க்
கைவிட்டமையும், ஒழுக்கம், அன்பு என்பவற்றைக் ਫ
விட்டு, கலைகள் விஞ்ஞானங்கள், மனித இன ஒற்றுமை என்ப வற்றைப் புறக்கணித்தமையுமாகும். O
உங்களால் மதித்து ஆராயப்படவேண்டிய சில விஷயங் களையும் கூற்றுக்களையும் ஆராயும்படி கேட்டுக் கொள்ளு கிறேன்.* எனது நோக்கம் மக்களிடையேயள்ள சமயத் துவேஷங்களை அக ற் றி அவற்றிடையே ஒற்றுமையை உண்டாக்குவதாகும். இந்த 'வேற்றுமைகளும் துவேஷங்
*வாஷிங்டனிலுள்ள எட்டாவது தெருக் கோவிலில் கூடியவர்கள்.

Page 88
170
களும், விடாப்பிடியான கோட்பாடுகளும், சகிப்புத்தன்மை யில்லாத நிலையும் தப்பெண்ணங்களால் உண்டானவை யானபடியால் இவற்றை அகற்றி விட்டால் சமய ஒற்றுமை யுண்டாகும். தெய்வீகச் சமயங்களின் அடிப்படை ஒன்றே. அருளிப்பாடுகள் போதனைகளெல்லாம் ஒன்றே, அந்தோ நாம் அந்த அத்திவாரத்திலிருந்து விலகி விட்டோம். சில விடாப்பிடியான கோட்பாட்டு முறைகளைப் பிடித்துக் கொண்டிருக்கிருேம். புரா த ன மா ன கொள்கைகளைப் போலித்தனமாகப் பின்பற்றுகிருேம். பகைமை, துவேஷம் , இரத்தஞ், சிந்தல் என்பவற்றுக்கு இதுவே உண்மையான காரணம். இதுவே மனிதரிடையே காணும், புறக்கணிப்புக் கும், வேற்றுமைக்கும் காரணம். பின்னே நான் கூறும் கூற்றுகள் பற்றி நீதியாகவும், நியாயமாகவும் மதிப்புக் கூறுமாறு வேண்டிக் கொள்ளுகிறேன். நான் முன்னே கூறிய நிலைமைகளில் துன்புற்ற இஸ்ரவேலரிடையே யேசுநாதர் தோன்றினர். நாசரேத்து யேசுவானவர் யூத இனத்தைச் சேர்ந்தவர். அவர் தனித்து நின்ருர், ஒப்பற்ற வராய்க் காணப்பட்டார். அவருக்கு வேறு துணையில்லை. யூதர் அவரை மோசேயின் பகைவரென உடனடியாகப் பிரகடனஞ் செய்தனர். அவர் மோசேயின் விதிகளையும், கட்டளைகளையும் அழிக்கவந்தவரெனக் கூறினர். நிகழ்ந்த தென்னவென்பதை நீதியோடு ஆராய்வோம். உண்மையைக் கண்டு கொள்வோம். இதற்கு நாம் விருப்பு வெறுப்பின்றி ஆராயவேண்டும். மோசே கடவுளால் அனுப்பப்பட்ட நீர்க்கதரிசியென்றும், இஸ்ரவேல் தீர்க்கதரிசிகளெல்லாம் கடவுளால் அனுப்பப்பட்டவரென்றும் கூறினர். தோரு கடவுளாகமமென்றும், அதை எல்லாரும் பின்பற்ற வேண்டு மென்றுங் கூறினர். 1500 வருடமாக இஸ்ரவேல் அரசர், யூதர் சமயத்தைப் பிரகடனஞ் செய்து பரப்ப முடியாதிருந் தனர். அக்காலத்திலே மேரசேயின் சரித்திரம் பலஸ்தீன் தேசத்தில் மாத்திரமே அறியப்பட்டிருந்தது. தோரு ஆகம மும் அந் நாட்டில் மாத்திரமே அறியப்பட்டிருந்தது. யேசு நாதர் அருளிய புதிய ஏற்பாட்டின் பயணுகப் பழைய ஏற்

171
பாடானதோடு அறுநூறு பாஷைகளில் மொழி பெயர்க்கப் பட்டு உலகெங்கும் பரப்பப்பட்டது. கிறிஸ்து மதத்தின் காரணமாகவே பழைய ஏற்பாடு பாரசீகத்தை அடைந்தது. அதற்கு முன்னர் அந் நூலைப்பற்றி பாரசீகத்தில் ஒருவரும் கேள்விப்படவில்லை. யேசுநாதர் அந் நூல் பரவவும், மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவும் வகை செய்தார்.
அவர் மூலமாகவே மோசே சிறப்படைந்து நன்கு மதிக்கப் பட்டார். அவரே இஸ்ரவேல் தீர்க்கதரிசிகளைப் பற்றிய செய்திகளைப் பரப்பினர். இஸ்ரவேல் மக்கள் கடவுளின் சனங்கள் என்பதை அறியப்படுத்தினர். இஸ்ரவேல் அரசருள் யார் இந்தத் தொண்டைச் செய்யக் கூடியவர். யேசு நாதர் இல்லாவிட்டால் பழைய ஏற்பாடும் வேதாகமமும் அமெரிக்காவுக்கு வந்திருக்குமா? மோசேயின் பெயர் உல கெங்கும் பரவுமா? சரித்திரத்தை ஆராய்ந்து பாருங்கள் .ெ கிறிஸ்து சமயம் பரவியதும், அதே சமயம் பழைய
ஏற்பாடும், யூ தே ய சமயமும் பரவிற்று. கிறிஸ் து சமயமே பழைய ஏற்பாட்டைப் பாரசீகத்தில் பரப்பிற்று.
அதற்கு முன்னர் அந்த நூல் அங்கு அறியப்படவில்லை.
கிறிஸ்து சமயம் பரவியதாலேதான் இன்று பாரசீகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் வேதாகமம் காணப்படுகிறது.
கிறிஸ்து நாதர் மோசேயின் நண்பர் என்பது இதனுல் தெரி கிறது. அவர் மோசேயிடம் அன்புள்ளவராய் அவருடைய போதனைகளில் நம்பிக்கை வைத்தார். இல்லாவிட்டால் மோசேயின் பெயரையும் அவருடைய தீர்க்கதரிசி நிலையை யும் பிரபலப்படுத்தியிருக்க மாட்டார். இது தானகவே போதரும் உண்மை. ஆனபடியால் யூதரும் கிறிஸ்தவரும் ஒருவர்க்கொருவர் அன்புள்ளவராயிருக்கவேண்டும். இப் பெருஞ் சமயங்களின் ஸ்தாபகர் இருவரும் தம்முள் இணக். கங் கொண்டவராய் ஆகமங்களிலும் போதனைகளிலும் ஒற்றுமையுடையவரா யிருந்தனர். ஆனபடியால் அச்
சமயங்களை அனுட்டிப்பவரும் அவ்வாறே யிருக்கவேண்டும்.
தீர்க்கதரிசிகள் பற்றி நல்ல சான்றுகளை எடுத்துக் காட்டினுேம். மோசேயிடம் காணப்பட்ட தகைமை கள்?

Page 89
72
* கிறிஸ்து நாதரிடமுங் காணப்பட்டன. யேசு நாதரும் இஸ்ரவேல் குலத்தில் பிறந்து தனித்துவம் பெற்ற தனி
ஆளாகவேயிருந்தார். அவர் தமது வாக்குத் திறத்தினலே
ரோமர், கிரேக்கர், சால்டியர், எகிப்தியர், அசீரியர் ஆகிய
மக்களை ஒன்று படுத்தினர். அவர்களோ கொடியவராய் இரத்த வெறி கொண்டவராய், ஒருவரை ஒருவர் கொன்று,
சூறையாடி, சிறைப்படுத்தி வந்த னர். அன்பினுலும் ஐக்கியத்தினலும் அவர் இச் சாதியாரை ஒன்றுபடுத்தினர்.
அவர்களிடையே யேசு நாதர் இணக்கத்தையும் ஒற்றுமை யையும் உண்டாக்கினர். ஒர் ஆளாக நின்று இம் மகத்தான தொண்டைச் செய்தார். கடவுளே அவருக்குத் துணை நின்ருரென்பது இதிலிருந்து தெரிகிறது. மோசே ஒரு தீர்க்க
தரிசி என்பதை இன்று எல்லாக் கிறிஸ்தவரும் ஒப்புக் கொள்ளுகின்றனர். அவர் அருளிய ஆகமம் கடவுளுடைய தென ஒப்புக் கொள்ளுகின்றனர். இஸ்ரவேல் தீர்க்கதரிசிகள் உண்மையானவரென்றும் இஸ்ரவேல் மக்கள் கடவுளுடைய மக்களென்றும் கூறுகின்றனர். இதனல் என்ன தீமை வந்து விட்டது? யேசு நாதரும் கடவுளின் தீர்க்கதரிசி
யென்று யூதர் கூறுவதனல் என்ன தீமை வந்து விடப் போகிறது? மோசேயில் நம்பிக்கை வைத்ததால் கிறிஸ்த வருக்கு என்ன தீமை வந்து விட்டது? மோசே ஆண்டவன்
அனுப்பிய தீர்க்கதரிசியென்றும், பழைய ஏற்பாடு கடவுளு *டைய ஆகமம் என்றும், இஸ்ரவேல் தீர்க்கதரிசிகளெல்லாம், கடவுளுடைய தீர்க்கதரிசிகளென்றும் கூறுவதால் அவர் கஞ்டைய சமய ஆர்வம் குறைந்து விட்டதா? நம்பிக்கைக்குக் கெடுதியுண்டானதா? இதனுல் எவ்வித நாட்டமும் வரா தென்பது நிதர்சனமாகி விட்டது. யேசு நாதர் கடவுளின் வார்த்தையாயிருக்கிருர் என யூதர் சொல்வதற்குக் காலம் வந்து விட்டது. அப்போது இந்த இரு பெரிய சமயங்களி டையேயுள்ள பகைமை நீங்கி விடும். இரண்டாயிரம் வருடமாக இந்தப் பகைமை நீடித்து வந்துள்ளது. இரத்தஞ் சிந்தப்பட்டது. பல கஷ்டங்கள் அனுபவிக்கப்பட்டன. நாமிங்கு கூறிய சில வார்த்தைகளால் ஒற்றுமையுண்டா
pri

173
கும். இதனல் வரக்கூடிய தீமையென்ன? கிறிஸ்தவர்* மோசேயைப் போற்றி வணங்குவது போல், கிறிஸ்துவின் பெயரையும் யூதர் போற்றி வணங்கலாம். யேசு நாதர் கடவுளின் வார்த்தையென்று பாராட்டலாம்; இறைவனல் தேர்ந்தெடுக்கப்பட்ட தூதுவர் யேசு நாதர் என்று கூறலாம்.
P- திருக்குரானைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும் சில வார்த்தைகள். முகமதுநபி தோன்றியப்ொழுது மோசே கடவுள் அனு ப் பி ய ம னி தன் என்று கூறினர். திருக்குரானிலே மோசேயின் வாக்குகளைப் பற்றி ஏழு இடங் களிற் கூறியிருக்கிருர், அவர் தீர்க்கதரிசியென்றும், ஆகமம் உடையவர் என்றும், கட்டளைகளை உண்டாக்கியவர் என்றும், கடவுளின் ஆவியென்றும் கூறுகிருர், "யார் அவரிடம் நம்பிக்கை உடையவரோ கடவுளால் கணிக்கப் படுவார் என்றும், அவரையோ வேறு தீர்க்கதரிசிகளையே நிராகரிப்பவர் கடவுளால் நிராகரிக்கப்படுவார்" என்றும் அவர் கூறினர். முடிவுரையாகக்கூடத் தமது சுற்றத்த வர்க்குப் பின் வருமாறு கூறினர்: "நீங்கள் மோசேயிடம் ஏன் நம்பிக்கை வைக்காது அவரை நிராகரித்து விட்டீர்கள். பழைய ஏற்பாட்டை ஏன் நீங்கள் அங்கீகரிக்கவில்லை. யூத தீர்க்கதரிசிகளின் மேல் ஏன் நம்பிக்கை வைக்கவில்லை: திருக்குரானிலுள்ள ஒரு சூருவில் இஸ்ரவேல் தீர்க்கதரிசிகள் இருபத்தெட்டுப் பேரைக் குறிப்பிட்டு ஒவ்வொருவரையும் புகழ்ந்துள்ளார். இந்த அளவுக்கு அவர் யூத தீர்க்கதரிசி களையும் இஸ்ரவேலருடைய சமயத்தையும் வியந்து கூறி யிருக்கிருர். இதன் அர்த்தமென்ன? முகமதுநபி மோசே யைப் போற்றிப் புகழ்ந்ததோடு யூதர் சமயத்தையும் ஒப்புக் கொண்டுள்ளார் என்பதே. மோசேயை யார் நிராகரிக் கிருர்களோ, அவர் களங்கமுடையவரென்றும், அவர்கள் பச்சாத்தாபமடைந்தால், அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாதென்றும் கூறி யு ள் ளா ர், தீர்க் க தரிசிகளை நிராகரித்தபடியால் தமது சுற்றத்தவர் சிலர் சமய விரோதி"

Page 90
174
ஆகளென்றும் களங்கமுடையவரென்றும் கூறியுள்ளார். **யேசு நாதரில் நம்பிக்கை வையாத படியாலும், மோசே யிடம் நம்பிக்கை வையாத படியாலும், சுவிசேஷத்தில் நம்பிக்கை வையாத படியாலும் நீங்கள் சமய விரோதிகள், களங்கமுள்ளவர்' என்று அவர் கூறியுள்ளார். இவ்வாறு முகம்மதுநபி, பழைய ஏற்பாட்டையும், மோசேயையும், கிறிஸ்து நாதரையும் பழங்காலத்துத் தீர்க்கதரிசிகளையும் புகழ்ந்துள்ளார். நாடோடிகளாகவும், எழுத்து வாசனை யற்றவராகவும் இரத்த வெறி கொண்டவராயுமுள்ள அராபிய மக்களிடையே அவர் தோன்றினர். அவர்களுக்கு வழி காட்டி அவர்களைப் பயிற்றியதால் அவர்கள் உயர்ந்த முன்னேற்றமடைந்தனர். அவர் போதித்த போதனை யாலும், பயிற்றிய கட்டுப்பாட்டினுலும் அறியாமை யிலிருந்து விடுபட்டு மிக்க அறிவும், கல்வியும் தத்துவஞான மும் நிரம்பியவராய் விளங்கினர். ஒரு தீர்க்கதரிசி விஷயத்தில் காட்டிய சான்றுகள் மற்றவர்க்கும் பொருத்த முடையதாயிருக்குமென்பதைக் காண்கிருேம்.
சமய ஸ்தாபகரான தீர்க்கதரிசிகள் தம்முள் அன்பும், மதிப்புமுடையவராய் ஒருவருக்கொருவர் ஆதாரமாயிருந் திருக்கிருர்கள். இந் நிலையில் நாமெதற்காகப் பிரிந்து
, பிணங்க வேண்டும்? கடவுள் ஒருவரே, அவரே எல்லாருக்கும்
மேய்ப்பனயிருக்கிருர், நாமெல்லாம் அவருடைய மந்தை கள். அதனுல் அன்போடும் ஐக்கியத்தோடும் வாழ வேண்டும். ஒகுவர்க்கொருவர் நீதியும் நல்லெண்ணமும் உடையவராயிருக்க வேண்டும். நாம் இதைச் செய்வோமா? அல்லது எம்மையே புகழ்ந்து கொண்டு மற்றவர்களை இகழ்ந்து திரிவோமா? இதனுல் என்ன நன்மை வரப் போகிறது? பகைமையும், துவேஷமும். மனிதாபிமான மில்லாத பண்புமே யுண்டாகும். முன்னெல்லாம் இதனல் போரும், துயரும், துன்பமும் உண்டாகவில்லையா?
இறைவன் நாமம் வாழ்க! நீங்கள் சுதந்தரம் நிலவும் நாட்டில் வாழுகின்றீர். பல சமயங்களையும் ஒப்பு நோக்கி

I75
அறிந்த கல்விமான்களிடையே வாழ்கின்றீர்கள். ஐக்கி
யத்தின் அவசியத்தை உணர்ந்திருக்கிறீர்கள். தப்பெண்
ணம், மூடநம்பிக்கை என்பவற்ருல் வரக்கூடிய தீமையை
உணர்ந்திருக்கிறீர்கள். சமூகத்திலே அன்பும் ஒற்றுமையு மிருப்பது நன்மை பயக்குமல்லவா? பகையும், துவேஷமும் அவசியமா? விடை சொல்லாமலே போதரும். கடவுளுக்கு அன்புடையவராயிருப்பதானுல், அன்பும் தோழமையும் அ வ சி ய ம், கடவுளுக்குப் பிரீதியுடையவராயிருப்பதே மேலான இலட்சியம். ஐக்கியமாகவும், அன்புள்ளவராகவும் இருக்க வேண்டும். ஒருவரையொருவர் நாம் புகழ வேண்டும். எல்லாரையும் நல்லவர்களென்று நினைக்க வேண்டும். அதனல் பிணக்கும் துவேஷமும் நீங்கும். இல்லா விட்டால் பழைய நிலைமையே உண்டாகும் எம்மைப் புகழ்ந்து கொண்டு மற்றவரை இகழ்வோம். சமயச் சண்டை களுக்கு முடிவுண்டாகாது. இதற்குக் காரணமான சமயத் தப்பெண்ணங்கள் வளரும். இதைக் கைவிட வேண்டும். இதற்கு வழி சமயங்களின் அடிப்படை உண்மைகளை ஆராய்தல். இந்த அடிப்படைத் தத்துவமே மனித இனத்தில் அன்பு வைத்தல். கடவுள் ஒன்றே மனிதகுலமும் ஒன்றே. அன்பும் ஐக்கியமுமே தீர்க்கதரிசிகள் போதித்த மேலான கோட்பாடாகும்.

Page 91
உயிர்ப்பூட்டும் ஆன்ம சக்தி
இந்த அற்புதமான கொள்கைகளையும் நோக்கங்களையும் நிறைவேற்றுவதற்கு இன்று மனிதரிடையே பெரியதொரு சக்தி தேவைப்படுகிறது. சமாதானம் பெ ரிய தொரு கொள்கையாகும்; அது கடவுளுக்குச் செய்யுந் தொண்டு. உலகிலுள்ள எல்லாச் சக்திகளும் அதற்கு எதிராக இருக் கின்றன, ராணுவந்தான் மனிதருடைய முன்னேற்றத்துக்கு அவசியமென அரசாங்கங்கள் நினைக்கின்றன. மனித இனம் பிரிந்து இருந்தால்தான் தேசாபிமானமும் கெளரவமும் உண்டென நினைக்கின்றன. பொருளீட்டுவதும், தேசங்களைப் பிடிப்பதும், அதனல் புகழடைவதும், ஒரு நாடு மற்ற நாட்டுடன் சண்டை செய்வதால் வருகிறது. இத்தகைய யுத்தமும், வெற்றியும், இத்தகைய இரத்தஞ் சிந்தலும், கொடுமையும், ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு அறிகுறி யெனக் கருதப்படுகிறது. இது முழுவதுந் தவருன கருத் தாகும். உலகத்துத் தேசங்கள் ஒரு குடும்பத்தின் அங்கத் தவர் போன்றிருக்கின்றன. ஒரு குடும்பம் ஒரு தேசத்தின் குறுகிய வடிவம் போன்றது. குடும்பத்தைப் பெருக்கினல் தேசமாகிறது. தேசங்களைப் பெருக்கினல் உலகமாகிறது. குடும்பம் என்ன சூழ்நிலையிலிருக்கிறதோ தேசமும் அதே சூழ்நிலையிலேதானிருக்கிறது. குடும்பத்தில் என்ன நிகழ் கிறதோ அதேதான் தேசத்திலும் நிகழ்கிறது, குடும்பத் தவரிடையே பிணக்குண்டானுல், பரஸ்பரம் அவர்கள் டையிட்டு ஒருவரையொருவர் சூறையாடிக் கொண் டால், ஒருவர்க்கொருவர் பொருமை கொண்டு வஞ்சந் தீர்க்க முற்பட்டால், சுயநலத்தை நாடுவார்களானல், அவை குடும்பத்தின் முன்னேற்றத்துக்கு உகந்ததாயி ருக்குமா? இல்லை. எல்லா விதமான முன்னேற்றத்தையும் இது பாதிக்கும். தேசங்கள் என்ற குடும்பத்திலும் இதுவே நிகழும். தேசங்கள் குடும்பங்களின் தொகுதியே. பிணக்
 

177
கும், பூசலும் குடும்ப வாழ்வைக் குலைத்துவிடுவது போலவே, தேசங்களையும் நிலைகுலையச் செய்து முன்னேற்றத்துக்கு இடர் விளைக்கும்
போர் மனித குலத்தின் வளர்ச்சிக்கு அழிவையுண் டாக்குமென்றும், ஆக்கபூர்வமான சமாதானத்துக்குப் பங்கம் விளைக்குமென்றும் சகல வேதாகமங்களும் தெய்வீக தீர்க்கதரிசிகளும், சாதுக்களும், தத்துவ அறிஞரும் கூறு கிருர்கள். மனிதகுலத்தின் அத்திவாரத்தையே அது அழித்து விடுமென அவர்கள் கருதுகின்றனர். எனவே யுத்தத்தைப் போக்கவும், மனிதகுலம் ஒன்றென்பதைப் பிரகடனஞ் செய்யவும் ஒரு சக்தி தேவைப்படுகிறது.
ஆனல், அது அவசியமென அறிந்து கொண்டால் மாத் திரம் போதாது. தனம் அவசியமென்று உணர்வதால் மாத்திரம் தனவானக வந்துவிட முடியாது. விஞ்ஞானம் அவசியமெனக் கூறுவதால் விஞ்ஞான அறிவு வந்துவிட மாட்டாது. கெளரவம் சிறந்த குணமென்று கூறுவதால் மாத்திரம் மனிதன் கெளரவமுடையவனுகமாட்டான். மனிதருடைய நிலைமைகளையும் அவற்றை நிவர்த்தி செய்வு தற்குரிய மார்க்கங்களையும் அறிந்து கொள்வதால் மாத்திரம். நிலை  ைம அபிவிருத்தியடையமாட்டாது. மனிதனுக்கு ஆரோக்கியம் அவசியமென்றுணர்வதால் மாத்திரம் தேச சுகம் உண்டாகமாட்டாது. நல்லதொரு வைத்தியன் நோயையும் அதன் தன்மைகளையும் அறிந்து வைத்தியஞ் செய்ய வேண்டும். அவ்வாறே மனிதகுலத்தின் வைத்தி யனும் சாதுரியமுடையவனயும் புத்தியுடையவனயும் இருந் தால்தான் சுகமுண்டாகும். அவன் குணங்களை அறிந்து வியாதியைக் கண்டுபிடித்தால் மாத்திரம் போதாது. அவன் வைத்தியஞ் செய்ய வேண்டும். W
எந்த ஒரு விஷயத்தையும் நிறைவேற்ற வேண்டுமானல் அறிவும், செயல் திறமும், செயலும் அவசியம். இம் மூன்று விஷயங்களுமில்லாவிட்டால் ஒரு காரியத்தை நிறைவேற்ற
உ. ஐ.அ.-12
=്

Page 92
178
மூடியாது. வீடுகட்ட வேண்டுமானல் முதலில் நிலத்தை அறிய வேண்டும்; அதற்கேற்றவாறு திட்டமிட வேண்டும், பின்னர் வீடு கட்டுவதற்குரிய பணத்தைத் தேடவேண்டும். பின்னர் கட்டவேண்டும். மனிதகுலத்தின் நோயென்ன, அதைத் தீர்க்க வழியென்ன என்பதை அறிந்த பின்னர் அதை நிறைவேற்ற ஒரு சக்தி வேண்டும். மனிதகுலம் ஒற்றுமைப்பட வேண்டும். இதை சடசம்பந்தமான முறை கணாலோ சாதனங்களாலோ செய்ய முடியாதென்பது நிதர் சனமாகிவிட்டது. இந்த ஒற்றுமையை இனங்களின் சக்தி யால் உண்டாக்க முடியாது. ஏனெனில் அவை போக்கில் பல திறப்பட்டனவாயிருக்கின்றன. தேசாபிமானத்தால் நிறைவேற்ற முடியாது. ஒவ்வொரு தேசமும் ஒவ்வொரு போக்கையுடையனவாயிருக்கின்றன. அரசியல் அதிகாரத் தால் இதை உண்டாக்க முடியாது. ஏனெனில் அரசாங்கங் களின் கொள்கைகளும், தேசங்களின் கொள்கைகளும் வேறு படுகின்றன. ஒவ்வொருவரும் தனிப்பட்ட நலவுரிமைகளு டையவராயிருப்பதாலும் அவை ஒரே தன்மையற்றனவாயு மிருப்பதால், இத்தகைய லெளகீக சாதனங்களால் மனித குல ஒற்றுமையை உண்டாக்க முடியாது. அவ்வாறு செய் தால் அது சிலருக்கு நன்மை பயப்பதாகவும் வேறு சில ருக்குத் தீமை பயப்பதாகவுமிருக்கும். போலிப் பின்னு தலாலும், விளக்கங் கொடுப்பதாலும் இதை உண்டாக்கலா மெனச் சிலர் நினைக்கலாம். இதுவும் அடி அத்திவார மில்லாததாய், பயனற்றதாய் முடியும். இதற்கு ஆன்மீக ஆசாதனங்களே அவசியம், பூரணமான தன்மையுடைய சாதனங்களே வேண்டும். இறைவனின் அருட் கொடைகள் வேண்டும். பரிசுத்த ஆவியின் மூச்சு வேண்டும். அப்போது தான் உலகின் பிணியைக் களையலாம். வேறு எந்த வைத்தி யமும் சுகந்தராது. வேறு வழியைக் காணவே முடியாது. ஆன்மீக சக்தியினலும் தெய்வீக அருளாலுமே இதை நிறை வேற்றலாம். இதுவே காரிய சாத்தியமான முறை.
சரித்திரத்தைப் பாருங்கள், தேசங்களிடையே ஒற்று மையையும், மக்களிடையே ஒழுக்கத்தையும், மனித குலத்

179
துக்கு நன்மையையும் எது கொண்டு வந்தது. இதைச் சிந்தித்துப் பார்த்தால், தெய்வீகச் சமயங்களை ஸ்தாபிப்பதே மனித குல ஒற்றுமைக்குக் காரணமாயிருந்ததை அறியலாம். சமயத்திலே தெய்வீக தத்துவ அடிப்படை உண்டு. அது தான் ஒற்றுமையை உண்டாக்குகிறது. முன்னையோருடைய சமயக் கிரியைகளை அனுகிருதி செய்வதன்று. போலித்தன மாகப் பின்பற்றுவதன்று. இது ஒன்றுக்கொன்று முரணுனது. இதனல் பூசலும் பகைமையும் பொருமையும் யுத்தமு முண்டாகின்றன. தெய்வீகச் சமயங்கள் கூட்டு மத்திய நிலையங்கள். இங்கே பலவிதமான அபிப்பிராயங்கள் சந்திக் கின்றன. சந்தித்து ஒன்றுபடுகின்றன. தேசங்கள், சாதி கள், கொள்கைகளெல்லாம் ஒன்றுபடுகின்றன. உதாரண மாக யேசு நாதர் பல சாதியினங்களை ஒன்று படுத்தினர். தம்முள் பூசல் விளைத்த சாதியாரிடையே சமாதானத்தை உண்டாக்கி மனித குலத்தை ஒன்ருக்கினர். வெற்றி வாகை சூடிக் கொண்டிருந்த கிரேக்கரும் ரோமரும், தப்பெண்ணங் கொண்ட எகிப்தியரும் அசீரியரும், முரண்பட்டுப் பகை கொண்டு போர் புரிந்து வந்தனர். யேசு நாதர் எல்லாரை யும் ஒன்றுபடுத்திப் பகைமைக்குரிய காரணத்தை அகற்றி, பரிசுத்த ஆவியின் சக்தியால் ஒற்றுமைப்படுத்தினர். இதை அவர் சாதி அபிமானத்தினலோ தேசாபிமானச் சக்தி யாலோ, அரசியல் அதிகாரத்தாலோ செய்யவில்லை. அருட் சக்தியினுற் செய்தார். வேறு சக்தியினுல் இது நடந்திருக்க மாட்டாது. மனிதரும் தேசங்களும் எடுத்த ஏனைய பிரயதீ தனங்கள் சரித்திரத்திலே குறிக்கப்பட்டுள்ளனவேயன்றி செயற்படுத்தப்படவில்லை.
இந்தப் பெறும் பேறு கடவுளருளால் கிடைப்பவை; இறைவனுடைய சக்தியினல் உண்டாவன. உலகம் அந்தச் சக்தியை எங்கே பெறப் போகிறது. கடவுள் புராதனமான வர்; சாசுவதமானவர்; புதியவரல்லர், s9 GMI (T560L -- ULI இறைமை புராதனமானது. புதியதன்று; ஐயாயிரம் ஆரு யிரம் வருடங்களாக நிலைத்து வருவதன்று. எல்லையற்ற

Page 93
180
இந்தப் பிரபஞ்சம் முடிவில்லாதகடவுளருளால் உண்டானது, இறைவனின் இறைமை, சக்தி, நாமங்கள் குணங்களெல் லாம் புராதனமானவை; சாசுவதமானவை. அவருடைய நாமங்களைக் கொண்டு, உலக சிருட்டி இருந்ததையும் , அவர் சங்கற்பமும் உண்மையும் நிலவியதையும் அறியலாம். கடவுள் சிருஷ்டி கர்த்தாவென்று கூறுகிருேம். சிருஷ்டியைக் குறிப்பிடும் போது இந்தப் பெயர் தோன்றுகிறது. இறைவன் காப்பவர் என்று சொல்லும் போது காக்கப்படும் பொருள்களிருந்ததைக் கருதுகிருேம். கடவுளே அன்பு என்னும் போது அன்பு செய்யப்படுபவரைக் கருதுகிருேம். இவ்வாறே கடவுள் கருணையாகவும், நீதியாகவும், வாழ்வாக வும் வேறு பலவாகவும் குறிக்கப்படுகிருர் . எனவே கடவுள் படைப்பவராகவும் நித்தியராகவும் புராதனமானவராகவும் இருந்தபடியால் படைக்கப்பட்டவையுமிருந்தன. தெய்வீக மான இறைமை சாசுவதமானதென்பதில் ஐயமில்லை. இறைமையென்றல், குடிகள், மந்திரிகள், தருமகர்த்தாக் கள் முதலியோர். அந்த இறைமைக்கு அடங்கியவரா யிருப்பர். நாடு, குடி, ராணுவம் என்பன இல்லாத அரசன் இருக்க முடியுமா? படைப்புகளும், அடிமைகளும், குடி களும், இல்லாவிட்டால் கடவுளும் இல்லையென்று கூறலாம். கடவுள் இல்லாத காலமொன்றிருந்ததென்றும் கூறலாம். கடவுளைச் சமீபத்திலேதான் நியமித்து மனிதன் அவருக்கு இந்தப் பெயர்களை வழங்கியிருப்பதாகி விடும். இறைவனின் இறைமை புராதனமானது; நித்தியமானது. ஆதியிலிருந்தே கடவுள் அன்பாகவும் நீதியாகவும். சக்தியாகவும், படைப் போனுகவும், காப்போனுகவுமிருக்கிருர், அவர் எல்லா மறிபவர்; வள்ளன்மை நிறைந்தவர்.
கடவுள் சாசுவதமானவரானுல் அவருடைய குணங் களும் சாசுவதமானவை." அவருடைய வரப்பிரசாதங் களுக்கும் தொடக்கமில்லை. முடிவுமில்லை. கடவுள் ஆதி யந்தமில்லாதவர். அவருடைய ஈசத்துவமும், நிறைவும்: முடிவற்றவை. பரிசுத்த ஆவியின் அருட் கொடையாம்

18,
முடிவும் தொடக்கமுமில்லாதது. எனவே அவரும் முடிவும் தொடக்கமுமில்லாதவர். அ வ ரு  ைட ய கொடைக்கு முடிவுண்டு என்ருல் அவருக்கும் முடிவுண்டென ஆகிறது. சூரியனை நினைக்கிருேம்; அதன் ஒளியும் வெப்பமுமில்லை யென எண்ணினுல், சூரியன் இல்லையெனக் கூறுவது போலா கிற து. கிரணங்களும், வெப்பமுமில்லாத சூரியனைச் சந்திக்க முடியாது. அவ்வாறே கடவுளின் அருட் கொடை களுக்கு எல்லை வகுத்தால் அவருடைய குணங்களுக்கும் எல்லை வகுத்துக் கடவுளுக்கே எல்லை வகுக்கிருேம்.
ஆதலால் கடவுளின் வள்ளன்மையிலும் அருட்கொடை யிலும் நம்பிக்கை வைப்போமாக. தெய்வீக உயிர்ப்பினுல் மகிழ்ச்சியடைவோமாக. தெய்வீக நற்செய்திகளால் ஒளி பெற்று உயர்வடைவோமாக, கடவுள் மனிதர்மீது அன்பு டையவராயிருக்கிருர், முன்னெல்லாம் தெய்வீக சக்தியை மனிதருக்கருளியவர் அதே அருட் கொடைகளை எப்போதும் கொடுக்கக்கூடியவராயிருப்பார். எனவே நாம் நம்பிக்கை யுடையவராயிருப்போமாக. முன்னே உலகுக்கு அருள் செய்த கடவுள் இப்போதும் வருங்காலத்திலும் அருள் செய் வார். தொண்டருக்குப் பரிசுத்த ஆவியை வழங்கிய கடவுள் இன்றும் இனிமேலும் அதை வழங்குவார். கடவு ளின் கொடைக்கு முடிவில்லை. கடவுளருள் எப்பொழுதும்
SO எம்மோடு கலந்திருக்கிறது. அது தெய்வக் கொடை, நிரந்தரமானது. இறைவனுடைய சக்தி அணுத்தன்ழை யுடையதென வரையறை செய்யலாமா? இன்று நிலவும் உயிர்களில் அவருடைய கொடையில்லையென்று கூறலாமா? இந்தக் கிண்ணத்தில் அணுச் சேர்க்கையாயிருக்கும் சக்தி இல்லாமற் போகுமா? கடல் நீரில் அமைந்த சக்தி மறைந்து கடல் இல்லாமற் போக் முடியுமா? இன்று பெய்யும் மழை நாளைக்கு இல்லாமற் போகுமா? சூரியனுடைய கதிரும் வெப்பமும் இன்றிருந்து நாளை ம்றையக் கூடுமா?
தாதுப் பொருள்களின் உலகில், தெய்வீகக் கொடை இடையருதிருக்கிறது. அப்போது ஆன்மீக ராச்சியத்திலே

Page 94
182
அது எவ்வளவு தூரம் நிலைத்திருக்கும். இறைவனுடைய ஒளி ஆன்மாவில் எவ்வளவு தூரம் பிரதிபலிக்கும். பிரபஞ் சத்தின் இடையருது அழிவுற்றிருப்பதுபோலவே தெய்வீக ஆவியின் கொடைகளும், வரப்பிரசாதங்களும் நித்திய
DIT Gð Goð) (6) I
வணக்கத்துக்குரிய இந்தச் *சங்கத்துக்கு வரும் சிலாக் கியம் கிடைத்ததற்காகக் கடவுளுக்கு வாழ்த்துக் கூறு கிறேன். இச் சங்கம் ஆன்மீக உணர்ச்சிகளும் தெய்வீகக் கவர்ச்சிகளும் உடையது. இதன் அங்கத்தவர் தத்துவத்தை ஆராய்பவர், சர்வதேச சமாதானத்தை நிறுவுவதே அவர் களுடைய இலட்சியம். அவர்களுடைய பெரு நோக்கம் மன்பதைக்குத் தொண்டு செய்வதே.
உலகத்து இயற்கைப் பொருள்களை நோக்கும்போது ஒவ்வோர் அணுவும் சேதனப் பொருள்களில் பல படியாகச் சலனமடைவதைக் காண்கிருேம். உலகத்துப் பொருள்கள் மூலம் ஊடுருவிச் செல்லும் கட்புலனுகாத மூலங்களைப் பற்றிச் சிந்தியுங்கள். அந்த நுண் மூலப் பொருளில் அசைவு அல்லது இயக்கமிருந்தால் அது கட்புலனுக்கு விஷயமாக வெளிச்சத்தைக் காண்கிருேம்.
ܗ ܐ
அவ்வாறே கடவுளின் அருட் கொடைகளும் சிருட்டிப் பொருளனைத்திலும் ஊடுருவி அசைந்து வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. எல்லையற்ற இந்தத் தெ ய் வீ க க் கொடைக்குப் தொடக்கமுமில்லை, மு டி வு மில்லை. அது அசைந்து கொண்டு வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. அதை வாங்கத் தகுதியுடையவரிடத்துப் பயன் தருகிறது. ஒவ்வொரு படிநிலையிலும் விசேடமானதொரு தகைமை காணப்படுகிறது. கடவுளருளால் எல்லா உயிரினங்களி
*பிரம்மஞான சங்கம்.

183
லும் செறியும் உயிரானது மனிதரிடத்து உயிர்ப்பைக் கொடுத்து அருள் செய்வதால் மனித உலகம், தெய்வீக உலகமாகிறது. இந்தப் பூவுலகம் தெய்வீக உலகைப் பிரதி பலிக்கும் கண்ணுடியாகிறது. மனிதகுலத்தின் பண்புகளும் நிறைவுகளும் வெளிப்படுத்தப்படுகின்றன. இறைவனின் உருவமும், வடிவமும் இந்தக் கோவிலிலேயே நிழல்விடும்.

Page 95
கடவுளின் கட்டளை
ஒரு பொருளைப்பற்றிய சகல விஷயங்களைப் பற்றியும் அறிந்து கொள்ளக்கூடிய விசேடமாக வாழ்வு சம்பந்தமான பெரிய காரியங்களைப் பற்றி அறிந்து கொள்ளக் கூடிய ஞானம் ஒன்று உண்டென்பது நிச்சயம். மனித உலகத்திலே நிகழும் மிகச் சிறப்பான முக்கிய நிகழ்ச்சி கடவுள் தமது தூதுவரை வெளிப்படுத்துதலும், அவருடைய கட்டளைகளைத் தோன்றுதலும், பரிசுத்தமான திவ்விய அவதாரங்கள், ஒரு தேச இனத்தை உண்டாக்கவோ, ஒரு மதக் கிளையையோ பிரிவையோ உண்டாக்கவோ தம்மை வெளிப்படுத்தவில்லை. ஒரு தொகையினர், தம்மைத் தீர்க்கதரிசியென ஏற்றுக் கொள்வதற்காக அவர்கள் தோன்றவில்லை. ஒரு மதக் கோட்பாட்டை நிறுவும் நோக்கமாக அவர்கள் தமது தெய் வீகச் செய்தியையும் பணியையும் வெளிப்படுத்தவில்லை. கிறிஸ்து நாதர்கூட நாம் அவரைக் கிறிஸ்து என்று அவரைப் பின்பற்றி அவர் நாமத்தைப் போற்றுவதற்காக அவதரிக்கவில்லை. இவையெல்லாம், குறுகிய எல்லைக்குட் பட்டவை. யேசு என்ற மெய்ம்மை எல்லையற்ற சாரமா யுள்ளது. அகண்டிதமானதும் எல்லையற்றதுமான தத்து 63த்தை எல்லைக்குள் வரையறுக்க முடியாது. இல்லை. யேசு நாதர் மனித இனத்துக்கு ஒளி கொடுக்க வந்தார். மண்ணுலகத்தை விண்ணுலகாக்க வந்தார். மானிட இராச் சியத்தைத் தேவ தூதரின் இராச்சியமாக்க வந்தார். உள்ளங்களை ஒன்றுபடுத்தி, அங்கே அன்பென்னும் தீயை மூட்டி, ஆன்மாக்கள் சுதந்திரமடையவும், ஒற்றுமையும் தோழமையும் பெறவும், கடவுளிடம் திரும்பவும், தெய்வீக உலகில் பிரவேசிக்கவும், இறைவனின் நற் கொடைகளைப் பெறவும், மக்கள் பர மண்டலத்திலிருந்து ஆன்மீக உணர்வைப் பெறவும், தோன்றினர். யேசு நாதர் மூலமாக

| 85
பரிசுத்த ஆவியிடமிருந்து ஞானஸ்நானம் பெற விதிக்கப் பட்டனர். அவ்வாறு புதிய தன்மையைப் பெற்று, நித்திய வாழ்வையடைய வேண்டுமென நியமிக்கப்பட்டனர். இந்த நோக்கங்களுக்காகவே புனிதமான விதிகளும், தீர்க்கதரிசி களின் கட்டளைகளும் வெளிப்படுத்தப்பட்டன. ஆனபடி யால் தேவனுக்குத் தோத் தி ர ஞ் செலுத்துகிருேம். எம்மிடையே மண்ணகத் தொடர்புகளில்லாவிட்டாலும், - கடவுள் நாமம் வாழ்க - பூரணமான தெய்வீகப் பந்தங்கள் எம்மைப் பிணைத்துள்ளன. தெ ய் வீ க க் கொடைகளை வெளியே காட்டலாமென்ற ஆவலோடு இங்கே கூடியிருக் கிருேம்.
முந்திய நூற்ருண்டுகளிலே உலகத்து மக்கள், கடவுளின் கட்டளைக்குப் பணிவதானல், நம் மூதாதையருடைய நம்பிக்கைகளையும், வழிபாட்டு முறைகளையும் குருட்டுத்தன மாகப் பின்பற்ற வேண்டுமென நினைத்தனர். உதாரணமாக யூதர், தமது சாதியாரிடையே இருந்து வந்த சமய அனுட் டானங்களைப் பின்பற்றினர். இஸ்லாமியரும் அவ்வாறே. மரபு பற்றி வந்த முறைகளையும் கிரியைகளையும் பின்பற்றி னர். கிறிஸ்தவர்களும் புராதன மரபுகளையும், வழிவழி வந்த போதனைகளையும் பின்பற்றினர். அதே சமயம்,
இறைவன் அருள் நெறியின் மூலாதாரமான கொள்கை
களான அன்பு, ஒற்றுமை, மனித இனத் தோழமை என்வ வற்றைக் கைவிட்டு முன்னேர் பின்பற்றிய முறையே மேலான தெனக் கொண்டனர். ஐக்கியத்துக்கும் அன்புக்கும் பதிலாக பகைமையும், விரோதங்களு முண்டாயின. இதனுல் சமய அபிமான முடையவர்கள் இணங்கி ஒன்று சேர முடியாது
போயிறு. தொடர்பு கொள்வதும், கூடிப் பழகுவதும்
கூடத் தூய்மையைக் கெடுக்குமென்றும் நினைத்தனர். அதனுல் பரஸ்பரம் வேற்றுமையும் மத வெறியுங் கொண் டனர். மெய்ம்மையின் அடிப்படை என்ன என்பதை ஆராய்
வதைக்கூட விட்டனர். யூதனுடைய மகன் யூதணுகவும், முகமதியனுடைய மகன் முகமதியணுகவும் இருந்தனர். தந்தை பெளத்தனன படியால் மகனும் பெளத்தனனன்.

Page 96
I86
இவ்வாறே மற்றைச் சமயத்தவரும், சமயத்தின் தத்து வத்தை ஆராயாமல் வழிவழி பிதிராச்சிதமாகச் சமயம் வந்து கொண்டிருக்கிறது. இதனுல் சமயங்களெல்லாம் திரை யினல் மறைக்கப்பட்டு, மறைவுற்று வேறுபட்டன,
கடவுள் நாமம் வாழ்க, மனிதனுடைய ஆராயும் சக்தி யும் கருத்துக் காட்சியும் அபிவிருத்தியடைந்துள்ளன. மணி தன் அடிப்படைத் தத்துவங்களை ஆராய்ந்தான். தனிப்பட்ட முறையிலும், கூட்டுமுறையிலும் மனிதன் அக நாட்டமும் புற நாட்டமும் உடையவன யிருக்கிருன். அதனல் குருட்டுத் தனமாகப்,பின்பற்றும் பண்பு கைவிடப்பட்டது. பக்கச் சார் பில்லாமல் சுதந்தரமாக ஆராய்கின்ருேம். தெய்வீகச் சமயங் களின் மெய்ம்மை என்ன என்பதைப் பார்ப்போம். கிறிஸ்தவன் ஒருவன், மரபுபற்றி வந்த முறைகளையும், குருட்டுத்தனமாக கிரியைகளைப் பின்பற்றுவதையும் கை: விட்டு சுவிசேஷங்களின் உண்மையை ஆராய்வானனல் யேசு நாதரின் போதனைகளிலேயுள்ள அடிப்படைத் தத்துவங்கள், தயை, அன்பு, தோழமை, வள்ளன்மை, பிறர் நலங்கருதல், தெய்வீகக் கொடைகளால் வரும் தேஜஸ், பரிசுத்த ஆவி யின் மூச்சைப் பெறுதல், கடவுளோடு சாயுச்சியமாகக் கலத்தல் என்பனவே யென்பதை அறிவான். மேலும், சூரியனை நல்லவர் மீதும், கெட்டவர் மீதும் பிரகாசிக்கச் செய்வதோடு, நீதியற்றவர், நீதியுள்ளவர் எல்லார் மீதும் மழையைப் பொழியச் செய்கிருர் பரம பிதா என அவர் கூறி யுள்ளதையும் அறிவான். கடவுள் அருள் எல்லாரையுஞ் சூழ்ந்திருக்கிறது; கடவுள் அருள் எவருக்குமுண்டு. இறை வனின் அருட்கொடைகள் எல்லாருக்கும் உண்டு. இறை வனின் அருட்கடலிலே எல்லாரும் மூழ்கியிருக்கிருர்கள். நாமெல்லாம் ஒரே தெய்வீக மேய்ப்பனின் மந்தைகளே என்பதே இதன் அர்த்தம். எங்களிடையே குறைபாடுகளிருந் தால் அவற்றை நிறைவு படுத்த வேண்டும். உதாரணமாகக் கல்வியில்லாதவர்க்குக் கல்வி உதவி, அவர்களை அறிவுடைய வராக்க வேண்டும். நோயாளருக்குச் சிகிச்சை உதவி நோயைத் தீர்க்க வேண்டும். முதிர்ச்சி அடையாத வரை

187
முதிர்ச்சியடையச் செய்யவேண்டும். உறங்குவோரைவிழிக்கச் செய்யவேண்டும். இவையெல்லாம் அன்பினல் செய்யப்பட வே ண் டி ய  ைவ. துவேஷத்தினலோ பகைமையினலோ அன்று. மேலும் ஈசாயாவின் தீர்க்கதரிசனத்தைப்பற்றிக் குறிப்பிடும்போது யேசு நாதர் 'கண்ணிருந்தும் காணுத. வரைப்பற்றியும், காதிருந்தும் கேளாதவரைப்பற்றியும், உள்ள மிருந்தும் உணராதவரைப்பற்றியும்' குறிப்பிட்டார். இருந்தும் அவர்களையும் சுகப்படுத்த வேண்டும். யேசுநாதரின் அருட் கொடை, குருடனுக்குப் பார்வையளித்தது. செவிடனைக் கேட்கச் செய்தது, கடினமான உள்ளத்தை மென்மையும், உணர்ச்சியுமுடைய தாக்கிற்று. அதாவது ஊனக் கண்ணிருந்தாலும், ஞானக் கண்ணில்லாது மக்கள் குருடராயிருக்கிருர்கள். புறக் காது இருந்தாலும் அகக் காதில்லாதிருக்கிறர்கள். உள்ளத்திலே உணர்ச்சி யிருந் தாலும், உள்ளொளி யில்லாதிருக்கிருர்கள். யேசுநாதரின் அருட் கொடை இக் குறைகளைத் தீர்க்கிறது. எனவே தெய்வ ரட்சகரின் தோற்றம் உளகளாவிய தயையைக் குறிக்கின்றது. அவருடைய அருள் எல்லார்க்கும் பொது வா ன து. அவருடைய போதனையும் அத்தகையதே. அவருடைய ஒளி குறிப்பிட்ட ஒரு தொகையினர்க்கு மாத். திரமன்று. ஒவ்வொரு "கிறிஸ்து" ஆனவரும் மனிதரினத் திடையே தோன்றினர். ஆனபடியால் தெய்வீகச் சமயத்தின் அத்திவாரத்தை ஆராய்ந்து தத்துவத்தைக் கண்டு, அதைப் புனர் ஸ்தாபனஞ் செய்து உலகெங்கும் அந்தச் செய்தியைப் பரப்ப வேண்டும். அப்போது அது மனிதகுலத்துக்கு ஒள் கொடுத்து ஞானமுத ஊற்ருயிருக்கும். உயிரற்ற ஆன்ம சக்தி உயிரைப் பெறும்; குருடான ஆன்ம சக்தி பார்வையைப் பெறும். இறைவனைப்பற்றி அயர்ந்து போனவர்கள் விழிப் படைவர்.

Page 97
محریر
அருளிப்பாடுகளின் தொடர்ச்சி
பிரத்தியட்ச உலகின் தத்துவத்தைப் பற்றி அறியாத * வர்கள், உள்ள பொருள்களைப் பற்றி அறியாதவர்கள், சிருஷ்டியின் அந் தரங்க உண்மையை அறியாதவர்கள், சட உலகினதும், ஆன்மீக உலகினதும் உண்மையான இரகசியங் களை ஊடுருவி அறியாதவர்கள், அகிலமுமளாவிய வாழ்வைப் பற்றியும் உள்பொருளை பற்றியும் மேலெழுந்தவாரியான கருத்துடையவர்கள், மெளட்டீகத்தில் அமிழ்ந்தினவர்களே. தமது தந்தையரிடமும் முந்தையரிடமும் கேட்டறிந்தவற் றிலேதான் அவர்கள் நம்பிக்கையுடையவர்கள். தாமாகவே அவர்கள் பார்க்கவோ, கேட்கவோ, சக்தியற்றவர். தமது விவேகத்தையோ அறிவையோ பயன்படுத்தாதவர்கள். சம்பிரதாயத்தில் மாத்திரம் தங்கியிருப்பவர். அத்தகை யோர் கடவுளின் ராச்சியம், தற்செயலாக உண்டான ராச்சியமென்று நினைக்கிருர்கள்.
உதாரணமாக இந்த உலகம், ஆருயிரம் ஏழாயிரம் வருடங்களுக்கு முன்னே படைக்கப்பட்டதென நினைக் கிருர்கள். அதற்கு முன்னர் கடவுள் ஆட்சி செய்யவில்லை யெனவும், உலகம் சிருஷ்டிக்கப்படவில்லையெனவும் நினைக் கீழுர்கள். தெய்வமென்பது தற்செயலாக உண்டான "தென்று நினைக்கிருர்கள். உள்ள பொருள்களிலேதான் தெய்வம் தங்கியிருக்கிறதென்றும் நினைக்கிருர்கள். ஆனல் கடவுள் எப்போது இருக்கிருரோ அப்போது சிருஷ்டியு மிருக்கவே செய்யும். ஒளியிருக்கும்வரை அதனைப் பெறுகிற வர்களுமிருப்பார்கள். ஒளியைக் கண்டு அதைப் பயன்படுத் தக்கூடியவர்கள் இல்லாவிட்டால் ஒளி வெளிப்படாது. தெய்வீக உ ல க ம் இருப்பதால் சிருஷ்டியிருந்தேயாக வேண்டும். கடவுளருட் கொடையைப் பெறுவோர் இருந்தே யாக வேண்டும்; உலகங்களுமிருந்தேயாக வேண்டும்.

189
சிருட்டிக்குப் புறம்பாகக் கடவுள் இல்லை. மக்களில்லாமல் ஒரு இராச்சியத்தைக் கற்பனை செய்ய முடியாது. அரசனிருந்: தால் ராச்சியமுமிருக்க வேண்டும். அவனுக்குப் படையும் குடிகளுமிருக்க வேண்டும். நாடும் படையும் குடியுமில் லாமல் அரசன் என்று சொல்லிக் கொள்ள முடியாது. அப்படியானல் அது அர்த்தமற்றதாகும். நாடில்லாத படை யில்லாத குடிகளில்லாத காலமொன்றிருந்ததென நாம் கூறிக்கொண்டால், அரசனே, ஆட்சியாளனே எப்படி யிருக்க முடியும்? அரசனுக்கு இவையெல்லாம் அவசியம்.
எனவே தெய்வீகத்துக்குத் தொடக்கம் கிடையாது. அதாவது கடவுள் எப்பொழுதும் சிருஷ்டிகர்த்தாவாக இருந்திருக்கிருர், எ ப் பொழுது ம் வேண்டியவற்றைக் கொடுப்பவராயிருந்திருக்கிருர், எப்பொழுதும் உயிர்ப்புக் கொடுப்பவராயிருக்கிருர், கொடைவள்ளலாய் இருந்திருக் கிருர். கடவுளுடைய குணங்கள் வெளிப்படாத காலமில்லை. சூரியனுக்கு ஒளியும் வெப்பமும் இருக்கிறபடியால்தான் அது சூரியனுயிருக்கிறது. வெப்பமும் ஒளியுமில்லாத சூரியன் இருந்தால்தான் என்று கூறுவோமோனல் அது சூரியனல் ல என்றே கருத வேண்டும். அவ்வாறே கடவுள் சிருஷ்டி செய் யாமலிருந்தால், சிருஷ்டிக்கப்பட்ட பொருள்களிருக்கவில்லை: அவருடைய அருட்கொடைகளை எவரும் வாங்கவில்லை! அவருடைய பெயரும் குணங்களும் வெளிப்படவில்லை என்று சொன்னல், கடவுள் இல்லை என்று கூறுவதற்குச் சமம்! ஏனெனில் அவ்வாறு கூறுவதானல் கடவுள் தற்செயலாக உண்டானவர் என்று கூறுவது போலாகும். உதாரணமாக ஐம்பதினயிரம் வருடங்களுக்கு முன்னரோ, ஒரு லட்சம் வருடங்களுக்கு முன்னரோ சிருட்டியில்லை என்ருே, உலகங் களில்லை என்ருே மனிதரோ மிருகங்களோ இல்லையென்ருே சொல்லுவோமானல் அதற்கு முன்னர் கடவுளில்லையென் பதற்குச் சரி; அரசன் என ஒருவன் இருந்தான். ஆனல், குடிகளோ, ராணுவமோ, நாடோ அவன் ஆட்சி செய்ய இருக்கவில்லையென்று கூறுவோமானுல், அரசனில்லை, அவன்

Page 98
190
தற்செயலாக உண்டானன் என்று கூறுவதோடு ஒக்கும். கடவுளுக்குத் தொடக்கமில்லையென்பது நிரூபணமானல், சிருஷ்டிக்குத் தொடக்கமில்லை. வானத்துச் சூரியன் போல இது தெளிவாகிறது. எங்கும் பரந்து வியாபித்துள்ள இந்தப் பிரமாண்டமான யந்திரத்தைக் கற்பனை செய்யும் போது, எல்லையற்ற ஆகாசத்தையும், அதிலியங்கும் எண்ணற்ற உலகங்களையும் சிந்திக்கும்போது இந்த முடிவில்லாத சிருஷ் டியின் வயது ஆருயிரம் வருடமென்று நினைக்க முடியாது. அது மிகமிகப் புராதனமானது. இஃது இவ்வாறிருக்க பழைய ஏற்பாட்டின் ஆதி ஆகமத்திலே சிருட்டியிள் வயது ஆருயிரம் வருடமெனக் கூறப்பட்டுள்ளது. ஆனல் இக் கூற்றுக்கு வேறு கருப்பொருள் உண்டு. வேறு தாற்பரிய முண்டு. சொல்லொடு பொருளாக இதை அர்த்தம் பண்ணக் கூடாது. உதாரணமாகப் பழைய ஏற்பாட்டிலே முதலாம் நாள் சில பொருள்கள் சிருட்டிக்கப்பட்டன என்று கூறப் பட்டுள்ளது. அப்போது சூரியன் படைக்கப்படவில்லை யெனக் கூறியுள்ளனர். வானத்தில் ஞாயிறு இல்லாவிட் டால் எப்படிப் பகல் உண்டாகும்? சூரியனில்லாதபோது முதலாம் நாளென எப்படிக் கணக்கெடுப்பது? எனவே இக் கூற்றுகளுக்கு மறைபொருள் உண்டு.
சுருக்கமாகக் கூறுவதானல், தெய்வீக இறைமை, கீடவுளின் இராச்சியம், புராதானமானதொரு இறைமை. தற்செயலாக ஏற்பட்ட இறைமையன்று. இராச்சிய மென் ருல் அதற்குக் குடி, படை, நாடு என்பன இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இராச்சியமோ, அதிகாரமோ, கிடை யாது. அதைக் கற்பனை செய்யவும் முடியாது. சிருஷ்டி தற் செயலாக உண்டானதென்று கொள்வோமானுல், கடவுளும் தற்செயலாகவே உண்டானவர். ஆனல் இறைவனின் கருணை வெள்ளம் பாய்கிறது. சத்திய சூரியனின் ஒளி எங்கும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. அதன் கிரணங் களுக்கு முடிவில்லாதது போலவே தெய்வீக அருட் கொடை களுக்கும் முடிவில்லை. இது குன்றிலிட்ட விளக்குப் போலத் தெளிவாயிருக்கிறது.
8عيش+

--
7.91
இவ்வாறே கடவுளின் திருஅவதாரங்களும் பல. ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், பத்து லட்சம் வருடங்களுக்கு முன்னர், கடவுளின் அருட்கொடை பாய்ந்து கொண்டேயிருந்தது. இறைவனின் ஒளி பிரகாசித்துக் கொண்டேயிருந்தது. இறைவனின் இராச்சியமிருந்து கொண்டே யிருந்தது.
இத் திரு அவதாரங்கள் தோன்றுவதன் நோக்கமென்ன? அவர்கள் வருவதின் ஞானப் பொருள் என்ன? அவர்களு டைய அருட்பணியின் விளைவு என்ன? மனித்னுடைய ஆளுமை இரண்டு வடிவில் தோன்றும். ஒன்று கடவுளின் வடிவம். மற்றது சாத்தானின் வடிவம். மனிதனுடைய தத்துவம் இந்த இரண்டுக்குமிடையே நிற்கிறது. இந்தப் பூத உடலுக்கு அப்பால் மனிதனுக்கு வேருேர் உடலுண்டு. அது தெய்வீக உடல், அது உதாரண புருஷரின் உலகத்தைச் சேர்ந்தது. பேசும்போது மனிதன், 'நான் கண்டேன்' 'நான் போனேன்' என்றெல்லாம் சொல்லுகிருன். இந்த 'நான் மனிதன் சிந்தனை செய்யும்போது வேருெருவ ரோடு ஆலோசனை நடத்துகிருன் என்பது தெளிவு. அவன் யாரோடு ஆலோசனை நடத்துகிருன். "நான் இந்த வேலையைச் செய்யவா' 'இதனுல் என்ன விளைவு உண் டாகும்' என்று மனிதன் நினைக்கும்போது அவன் இந்த உடலுக்கு வேருன ஒருவரோடுதான் ஆலோசனை நடத்து கிருன் 'இதனைச் செய்வதில் என்ன ஆட்சேபம்' என்று அவன் மற்றப் பொருளைக் கேட்கும்போது அது தன்னபிப் பிராயத்தை அவனுக்குக் கூறுகிறது. எனவே அந்தத் தத்துவம் அவனுடைய உடலுக்கு வேரு னது. அது அவனு டைய அகம். அதனுடைய அபிப்பிராயத்தையே அவன் நாடுகிருன் என்பது தெளிவாகிறது.
மனிதன் ஒரு விஷயத்தைப் பற்றி நிச்சயம் பண்ணு கிருன். உதாரணமாக அவன் ஒரு பிரயாணஞ் செய்யத்
தீர்மானிக்கிருன். பின்னர் அதைப் புணராலோசனை செய்

Page 99
192
கிருன். அதாவது தன்னுடைய அகத்தோடு ஆராய்ச்சி செய்த பின்னர் அந்த எண்ணத்தை விடுகிறன். என்ன நடந்தது? ஏன் தனது முதல் யோசனையைக் கைவிட்டான்? அவனுடைய அகம் அந்தப் பிரயாணத்தால் உண்டாகும் வசதியீனங்களைக் கூறுகிறது. அதைக் கேட்டதும் அவன் தனது எண்ணத்தை மாற்றுகிருன்.
மேலும், மனிதன் சொப்பனத்திலே கிழக்கிலும் மேற்கி லும் பிரயாணஞ் செய்கிருன். அவனுடைய உடல் அசை யாமல் இங்கேயே இருக்கிறது. உடல் நித்திரையாயிருக்கும் போது அகம் எங்கும் பிரயாணஞ் செய்கிறது. எனவே வெளியுடலை விட அந்தரங்கமான தத்துவமொன்று அவனிட மிருப்பதைக் காண்கிருேம். மேலும் உதாரணமாக ஒருவன் இறந்து போகிருன். அவன் உடலைப் புதைத்து விடுகிருர் கள். அவன் கனவில் தோன்றுகிருன். அவனுடல் பூமியில் புதைக்கப்பட்டிருந்த போதிலும் அவனேடு பேசுகிறீர்கள். இறந்து புதைக்கப்பட்ட உடல் போக வேருெரு தத்துவ மிருப்பதை அறிகிறீர்கள். சில சமயம் உடல் இளைத்துப் போகிறது. ஆனல் மற்றத் தத்துவம் சாதாரண நிலை யிலிருக்கிறது. உடல் அயர்ந்து நித்திரையானலும், அந்தத் தத்துவம் அசைந்துகொண்டு பொருள்களை அறிந்து கூறிக் கொண்டு தன்னைப் பற்றிய உணர்வுடையதாகவும் இருக் கிறது.
இந்த அந்தரங்க தத்துவமே தெய்வீக உடல் எனப் படும். அது பூத உடல் போன்ற சூக்கும சரீரம். இந்தச் சேதன தத்துவமே பொருள்களின் அந்தரங்கப் பொருளை அறிவது. மனிதனுடைய பூதவுடல் பொருள்களைக் கண்டறிய மாட்டாது. அந்தரங்கமான சூக்கும தத்துவம் இருப்பின் இரகசியங்களை அறிகிறது. விஞ்ஞான உண்மைகளைக் கண்டறிகிறது. அவற்றின் தொழில் நுணுக்கச் செய்முறை களைக் காட்டுகிறது. அது மின் சக்தியைக் கண்டு பிடிக் கிறது. தந்திக் கம்பி மூலம் செய்தியனுப்புவதைக் கண்டு

93
பிடிக்கிறது. தொலைபேசியைக் கண்டுபிடிக்கிறது. கலை களின் வாசலைத் திறக்கிறது. பூதவுடல்தான் இதைச் செய்கிறதென்ருல் மிருகங்களுமிவற்றைச் செய்யலாம். மிருகத்துக்கில்லாததும் மனிதனிடத்துக் காணப்படுவது மான இந்தச் சக்தி என்ன? இதுதான் அந்தரங்கத் தத்துவம். இது பொருள்களே அறிகிறது; வாழ்வின் இரகசியங்களை அறிய ஒளியைக் கொடுக்கிறது. தெய்வீக இராச்கியத்தைக் கண்டுபிடிக்கிறது. கடவுளின் இரகசியங்களைத் திறந்து வைக்கிறது. மனிதனை மிருகத்திலிருந்து வேறுபடுத்து கிறது. இதைப்பற்றி ஐயமில்லை. இந் த த் தத்துவம் மனிதனின் உயர்ந்த தன்மைக்கும் கீழான தன்மைக்குமிடை யில் நிற்கிறது. மிருக உலகுக்கும் தெய்வீக உலகுக்குமிடை யில் நிற்கிறது. மிருக சுபாவம் தலையெடுக்குமானல் மனிதன் மிருகத்திலும் கீழான நிலையை அடைகிருன். தெய்வீக சக்திகள் வெற்றி பெறுமானல், சிருட்டியில் அவனே மிக உயர்ந்த உன்னதமான படைப்பாக விளங்கு கிருன், மிருகத்திடம் காணப்படும் குறைபாடுகளெல்லாம் மனிதனிடமும் காணப்படுகின்றன. பகைமை, துவேஷம், தன்னலங் கருதிய பிணக்கு என்பன அவனிடமுண்டு. பொருமை, தந்திரம், பாசாங்கு, பேராசை, அநீதி, கொடுங்கோன்மையென்பன வெல்லாம் அவனிடமுண்டு, எனவே மனிதனுடைய புறவுடல் மிருகத்தைப் போன்றது. மிருக சுபாவங்கள் நிறைந்தது. இருள் உலகைச் சேர்ந்தது. குறைபாடுகளும் எல்லையில்லாத கயமையும் சேர்ந்தது.
ஆனல் மறுபுறத்தில் அவனிடம் நீதி, நேர்மை, விசுவாசம், அறிவு, ஞானம், ஒளி, தயை, அனுதாபம், விவேகம், விளக்கம், பொருள்களின் தத்துவத்தைப் புரியும் ஆற்றல், இருப்பின் உண்மையை ஊடுருவிப் பார்த்தல் என்ற பண்புகளும் அவனிடம் காணப்படுகின்றன. இப் பூரணங்களெல்லாம் மனிதனிடமுண்டு. எனவே மனிதன் இருளுக்கும், ஒளிக்குமிடையிலுள்ள தத்துவமெனக் கூறு கிருேம். இந்த நோக்கிலிருந்து பார்த்தால், அவன் மிருக
13 خسته ای ۰ g ۰ - «ع

Page 100
194
சுபாவமும் மனித சு பாவ மு ம் தெய்வீக சுபாவமும் உடையவனுகக் கா ண ப் படு கி ரு ன். மிருக சுபாவம் இருள் மயமானது; தெய்வ சுபாவம் ஒளிக்கு ஒளி கொடுப்பது. மனிதனிடமுள்ள மிருக சுபாவமான இருளை நீக்கி அதாவது சட சுபாவத்தை நீக்கி அவனுடைய குறை பாடுகளை அகற்றித் தூய்மைப்படுத்தி, தெய்வீக, ஆன்மீக சுபாவங்களுக்கு உயிர்ப்பளித்து தெய்வீக சுபாவங்களை விழிக்கச் செய்து, நிறைவுகளை வெளிப்படுத்தி, மறைந்திருந்த திறமைகளை வெளியாக்கி, உயிர் பெறச் செய்வதற்கே கடவுளின் திரு அவதாரங்கள் உலகில் தோன்றுகின்றன. இவர்கள் உலகத்து ஆசாரியர்கள். உலக மக்களுக்குப் பயிற்சி அளிப்போர். மனித குலத்தின் ஆசிரியர்கள். இயற்கைச் சுபாவத்திலிருந்து மனிதரை விடுதலை செய் கின்றனர். நம்பிக்கையிழப்பைப் போக்குகின்றனர். தவறு, அறியாமை, குறைபாடுகள், தீய சுபாவங்கள் என்பவற் றைப் போக்கடிக்கின்றனர். உயர்ந்த பண்புகளைக் கொடுக் கின்றனர். மனிதர் அறியாமையுடையவர். கடவுள் அவ தாரங்கள் அவர்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றனர். அவர்கள் மிருகப் பிராயமாயிருக்கின்றனர். அவதாரங்கள் அவர்களை மனிதராக்குகின்றனர். மனிதர் காட்டுமிராண்டி களாகவும், கொடுமை நிறைந்தவராகவுமிருக்கின்றனர். அவதாரங்கள் அவர்களை ஒளிக்கும் அன்புக்கும் இட்டுச் செல்லுகின்றனர். ம னி த ர் அநீதியுடையவராயிருக்கின் றனர். கடவுள் திருஅவதாரங்கள் அவர்களை நீதியுடைய வராக்குகின்றனர். மனிதர் த ன் ன ல மு  ைட ய வ ர். திருஅவதாரங்கள் அவகளைத் தன்னலம், ஆசை என்பவற்றி லிருந்து விடுவிக்கின்றன. மனிதன் பெருமையுடையவனு யிருக்கிருன் அவதாரப் புருஷர் அவனை தாழ்மையும், வி ந ய மு ம், நட்புமுடையவனுக்குகின்றனர். அவ ன் லெளகீகச் சார்புடையவனுயிருக்கிருன். அவர்கள் அவனைத் தெய்வீகச் சார்புடையவனுக்குகின்றனர். மனிதர் முதிர்ச்சி ய ற் ற குழந்தைகளாயிருக்கின்றனர். அவர்கள் அவரை முதிர்ந்த அறிவுடையவனுக்குகின்றனர். மனிதன் வறிய

195
வணுயிருக்கிருன். அவர்கள் அவனுக்குச் செல்வத்தை வழங்குகின்றனர். ம னித ன் கயமையும் கீழ்மையும் வஞ்சனையுமுடைவனுயிருக்கிருன் அவர்கள் அவனுக்குப் பெருந் தன்மையும், உதார குணமும் உத்தம நற்பண்பும் வழங்குகின்றனர்.
திரு அவதாரங்கள், மனித குலத்தைச் சூழ்ந்துள்ள குறைகளை நிறைவு படுத்தி அது தெய்வீக அழகில் தோற்ற மளிக்கச் செய்து அதனை விடுதலை செய்கிருர்கள். இவர்கள் அவதரிக்காவிட்டால் மக்கள் மிருகங்களாகவே யிருப்பர். பள்ளிக்கூடஞ் சென்று ஆசிரியரிடம் படியாதவர்களைப் போல இருளில் இருப்பார்கள். துர்ப்பாக்கியவான்தளாகிய இவர்கள் தேவைகள் நிரம்பாத வறியவராகவேயிருப்பர்.
குன்றுகளிலும், மலை களி லு ம், பசுந்தரைகளிலும் விவசாயஞ் செய்யாவிட்டால் அந் நிலங்கள் தரிசாகக் காடு மண்டிக் கிடக்கும். அங்கே பழந்தரும் மரங்களைக் காண முடியாது. நல்ல தோட்டக்காரன் இவற்றைத் தோட்ட மாக மாற்றுவான். புல்லும் புதரும் முட்செடிகளும் நிறைந்த இடங்களில், பழமரங்களும் பூஞ் செடிகளும் காணப்படும். அவதார புருஷர்கள் இந்தத் தோட்டக் காரன் போன்றவர்களே. அவர்கள் மனிதனுடைய உள்ளத் தைப் பயன்படுத்துவர். மனித இனம் காடு போன்றது. எங்கும் ஒழுங்கீனமும், குழப்பமும் காணப்படுகிறது. இயற்கை நிலையிலிருக்கிறது. அங்கே பயனற்ற மரங்களே வளரும். இந்தக் காட்டை அவதார புருஷர்கள் திருத்திப் பழந்தரும் மரங்களாக்கி, நீர் இறைத்துப் பயிர் செய்து அழகான பூஞ்சோலையாக்குகிருர்கள்.
எனவே, தெய்வீக அருட் கொடை ஓய்ந்து விட்ட தென்று கூறமுடியாது. தெய்வீக மகிமை மங்கிவிட்ட தென்று கூறமுடியாது. சத்திய சூரியன் நிரந்தரமாய் மறைந்து விட்டான் எனக்கூற முடியாது. இருள் சூழ்ந்து விட்டது. ஒளி உதயமாகாதெனக் கூறமுடியாது. இரவின்

Page 101
196
பின்னர் உதயம் ஆகாதெனக் கூறமுடியாது. சாவு சூழ்ந் தது; உயிர் வரமாட்டாதெனக் கூறமுடியாது; தப்புறு நெறி சூழ்ந்தது, உண்மை உதயமாகாது என்று கூறமுடியாது. மெய்ம்மையென்ற சூரியன் நிரந்தரமான இருளில் மூழ்கிக் கிடப்பானென்று நினைக்கவே முடியாது. இல்லை! உலகத் துக்கு ஒளியைக் கொடுக்கவும், உயிர் வாழ்வன வெல்லா வற்றுக்கும் பயிற்சியளிக்கவுமே படைக்கப் பட்டான். பூரண மான சத்திய சூரியன், கடவுளின் வாக்கு, சதாகாலமும் அஸ்தமிக்கும். அப்படியானல் தெய்வீக அருட் கொடை நின்றுவிடும். ஆனல் அது தன் சுபாவப்படி இடையருத தாகவும், முடிவில்லாததாகவுமே யிருக்கும். அதனுடைய சூரியன்” எப்பொழுதும் ஒளி கான்றபடியே யிருக்கும். அதனுடைய மேகம் எப்பொழுதும் மழையைப் பொழிந்து கொண்டேயிருக்கும். அதன் தென்றல் எப்பொழுதும் வீசிக் கொண்டேயிருக்கும். அதன் கொடைகள் எல்லாவற்றையு மடக்கியவை. அது எப்பொழுதும் பூரணமாகவே யிருக் கும். எனவே நாம் கடவுளைப் பிராத்திப்போமாக. எப் பொழுதும் எதிர்பார்த்தபடி நம்பிக்கையோடிருப்போமாக, இறைவன் தமது திரு அவதாரங்களை அவர்களுடைய பூரண பலத்தோடும், அவரது ஊடுருவும் சொல்லின் சக்தியோடும் எமக்கு அனுப்புவாராக! சூரியன், நட்சத்திரங்களிலும் பார்க்கச் சிறந்திருப்பதுபோல அவர்களும் மற்றை உயிர்களி லும் பார்க்க எல்லா வகையிலும் விசேடமானவராய்ச் சகல "குணங்களாலும் சிறந்தவராயிருப்பாராக எனப் பிரார்த்திப்
5. JTLDIT35, ...)
நட்சத்திரங்கள் ஒளியும் பிரபையுமுடையனவாயிருந் தாலும் சூரியனுக்கு நிகராகமாட்டா. சூரியன் அவர்களை விட ஒளியினுல் சிறந்தது. அவ்வாறே திருஅவதாரங்களும் மகிமையாலும், கல்யாண குணங்களாலும் மற்ற மனிதரை விடச் சிறந்தவர்கள். அவர்களே உண்மையான ஆசிரியர் கள் பயிற்சியளிக்கக் கூடியவர்கள் என்பதை இவற்ருல் உலகத்துக்கு உறுதி செய்யலாம். அவரே உண்மையின்
 

197
சூரியன். மேலான ஒளியுடையவர். கடவுளின் அழகைப் பிரதிபலிப்பவர்; இல்லாவிட்டால் நாம் ஒருவருக்குத் தேர்ச்சியளித்து அவரை அவதார புருஷர் எனக் கொள்ள முடியாது. உண்மையான இறைதூதர் தெய்வீக அறிவு டையவராயிருக்க வேண்டும். பாடசாலைகளிலே பெறும் அறிவில் அவர் தங்கியிருப்பதில்லை. அவரே ஆசிரியர், மாணுக் கராயிருக்கமாட்டார். அவருக்கு ஞானக்காட்சியுண்டு. கல்லாத அறிவுண்டு. அவர் பூரணமானவராயிருப்பார். குறைவுடையவராயிருக்கமாட்டார். உயர்வும் மகிமையு முடையவராயிருப்பார். பலவீனமும், சக்தியற்ற தன்மை யும் அவரிடம் கிடையாது. ஆன்மீகச் செல்வங்கள் நிறைந்த வராயிருப்பார். வறுமை அவருக்கில்லை. சகல" அமிசங் களிலும் பண்பிலும் அவர் மற்றவர்களைவிடச் சிறந்தவரா யிருப்பார். அப்பொழுதுதான் மனித சமூகத்தை அவர் நன்ருகத் திருத்துவார். உலகின் இருளை அகற்றுவார். தாழ்ந்த இராச்சியத்திலிருந்து உயர்ந்த இராச்சியத்துக்கு உயர்த்துவார். தமது வாக்கின் ஊடுருவும் சக்தியினுல், சர்வதேச சமாதானத்தைப் பரப்புவார். வெளிப்படையான தெய்வீக சக்தியினல், சமய நம்பிக்கையில் மனித குலத்தை ஒற்றுமைப்படுத்துவார், சகல பிரிவினரையும், கட்சியின ரையும் இணங்கச் செய்வார். சகல தேச இனங்களையும் ஒன்றுபடுத்தி உலகை ஒரு தேசமாக்குவார்.
கடவுளின் அருட் கொடை எங்கள் எல்லாருக்கும் கிடைப்பதாக, கடவுளின் கொடைகள் வெளிப்படுவதாக. உண்மையென்னும் சூரியனின் ஒளி எமது கண்களுக்கு ஒளியைக் கொடுத்து, சிந்தனைகளை உயர்வுடையனவாக்கி, இறைவனின் நற்செய்தியை எம் உள்ளங்களுக்கு உணர்த்தி அருட் கிளர்ச்சியுண்டாக்கி, மகிமைமிக்க நற்பயன்களை விளையச் செய்வாராக. சுருக்கமாகக் கூறுவதானல், மக்கள் குலம் மேலானதாக எண்ணும் நலன்களையும் அபிலாஷை களையும் பெறுவோமாக.
BFLUID

Page 102
i
o
15. 16.
17.
8.
9. 2ዕ.
2 II . 22。
23.
24.
25。
26.
27.
28.
பொருளடக்கம்
உண்மையான நவீனம்
மெய்ம்மையின் தோற்றுவாய்
சமாதான உதயம்
யுத்தத்துக்குக் காரணம்
உலக சமாதானம்
தீர்க்கதரிசிகளும் போரும்
உலக ஐக்கியத்துக்கு அத்திவாரம்
சாதி ஒற்றுமை
நீதிப் போக்கு
கூட்டுறவு
உண்மையின் பிரமாணங்கள்
மனிதனும் இயற்கையும்
அண்டமும் பிண்டமும்
எல்லாக் காலத்துக்கும் பொருத்தமான
é55fTG6)G0)ILL L. LD)
கல்வி
பரிசுத்த ஆவி
விஞ்ஞானம்
ஆன்மீக வசந்தம்
சாசுவத ஐக்கியம்
இருளடைந்த ஒளி
தெய்வீகக் கல்வியின் அவசியம்
சமயம் :- அவசியமானதும் அவசியமற்றதும் .
சமயம் புதுப்பிக்கப்பட்டது தெய்வீக அன்பு சமயத்தின் அடிப்படை உயிர்ப்பூட்டும் ஆன்ம சக்தி கடவுளின் கட்டளை அருளிப்பாடுகளின் தொடர்ச்சி
2.
17
24
28
32
44
54.
59.
62
74
79.
85.
9
93.
96.
I 0 1
07
1 12"
8:
125.
138:
及45
51
162
176
184
88.

பஹாய் மதம் கடவுள் ஒன்றெனவும், அவர் அனுப்பிய தீர்க்கதரிசிகளெல்லாம் ஒன்று எனவும் நம்புகிறது. உண் மையைத் தடையின்றி ஆராய வேண்டுமென்றும், சகலவித மான கு ரு ட் டு நம்பிக்கைகளும், தப்பெண்ணங்களும், தவிர்க்கப்படவேண்டும் என்றும் கருதுகிறது. சமயத்தின் மூலாதாரமான நோக்கம் மக்களிடையே ஒற்றுமையையும், இணக்கத்தையும் உண்டாக்குவதேயெனவும் சமயமும், விஞ்ஞானமும் தோளோடுதோள் செல்ல வேண்டுமெனவும், உலகில் சமாதானமும், ஒழுங்கும், முன்னேற்றமும் தேவை யானல் அதுவே அதற்கு முடிவான தனிப்பட்ட அடிப்படை யெனவும் கருதுகிறது. ஆண் பெண், இருபாலருக்கும் சம சந்தர்ப்பமும், சம உரிமையும், சலுகைகளுமிருக்க வேண்டு மென்றும், எல்லாருக்கும் கட்டாயமாகக் கல்வி வழங்கப்பட வேண்டுமென்றும் கூறுகிறது. சமூகத்திலே அதிக செல் வமோ, அதிக வறுமையோ இருக்கக்கூடாதென்றும் மக்கள் சேவையாகச் செய்யும் தொழில் இறைவனுக்குச் செய்யும் வழிபாடென்றும், உலகில் சர்வதேச மொழி ஒன்று துணை மொழியாக எல்லோருக்கும் பொதுவாயிருக்கவேண்டு மென்றும் கூறுகிறது. உலகளாவிய சமாதானத்தை நிறுவு தற்கும் அதைப் பாதுகாப்பதற்கும் அவசியமான சாதனங் களை ஏற்பாடு செய்கிறது.
-ஷோகி எபெண்டி

Page 103
இதுவரை வெளிவந்த பஹாய் நூல்கள்
10.
ll.
l2.
13.
14.
15.
6.
17.
18.
9.
32I
ஒளி உதயம் வாழும் நெறி புதிய தோட்டம் பாரிஸ் பேருரைகள்
பஹாய் வாழ்வு முறை (தொகுப்பு) பஹவுல்லா-பல்யூஸி ஆண் பெண் சமத்துவம் (தொகுப்பு) பஹாய் பிரார்த்தனைகள் ஆண் பெண் சமத்துவம் புதியதொரு மெய்ம்மை (தொகுப்பு) உள்ளூர் ஆன்மீக சபைகளின் மாண்பும் உயர்வும்
பஹாய் ஆவது எப்படி? மறை மொழிகள்-பஹவுல்லா பஹாய் பிரார்த்தனைகள்
மறை மொழிகள்-பஹவுல்லா ஒன்றே உலகம், ஒன்றே சமயம் மனிதனின் தத்துவம் பஹவுல்லாவின் உலகப் பொதுநல அரசு பஹாய் செய்தி (துண்டுப் பிரசுரம்) பஹாய் கல்வி
பஹாய் அஞ்சல் பாடம் ஆன்மீக சபை அபிவிருத்தி திட்டம் உலக ஐக்கியத்துக்கு அத்திவாரம்


Page 104

,

Page 105
அளித்திருக்கிருர்: Glo ாேட்கலாம். அவனே வி இது அவரது வரப்பிரசாத் உதவும் கருவி. வின்
வேண்டும் என் ܐܸܞܼܲ ܐܶܢܬܬܐ
بریگور
தனித் த வரி 5ாதமுண்
திட்டத்தில் மனித
KONGE TUTTGARTR = 9 நாடுங்கள். உங்க ள் செய்யும் திர்ைகளே அவர் உங்கள் கண்கள் ஒளி டெ மையை நேருக்கு நேர் க துகள்கள் நீங்கி நெஞ்சம் மு இறைவனது மகிமைகளை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܓܒܬܐ
* 588 690 մ): (Մ(Ք60մ:
அவர் அவனுக்குக் ய்மையின் செய்தியை 蠶
ಸ್ಥಿರಾಸೆ ಹಾಡಿಗೆ அறிய ○pリ மெய்மையைப் பரிசிலிக்
F- s 。。 கண்களின் மூலம் பார்
இமென்பதோ 」 ணு கு வொரு மனித ஜீவனுக்கும் இறைவனின் படைப்புத்
காரண காரிய அறிவு,
செல்லுங்கள் இ
வந்து துறை உறுதியை ார்வையைக் கலக்கமுறச் ബഖT്. > ലേ? ; றும் இறைவனின் ாண்பீர்கள். ற்றிலும் தூய்மை