கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழ்மொழி இலக்கண இயல்புகள் (2ம் பதிப்பு)

Page 1


Page 2

، ،

Page 3

தமிழ்மொழி இலக்கண இயல்புகள்
பேராசிரியர் கலாநிதி அ. சண்முகதாஸ் தமிழ்த் துறை யாழ்ப்பாணப் பல்கலேக்கழகம் திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
முத்தமிழ் வெளியீட்டுக் கழகம்
Lirr build rairie,

Page 4
முதற் பதிப்பு: 1982-03-29 இரண்டாம் பதிப்பு (புதுக்கியது) 1989 உரிமை திருமதி மனுேன்மணி சண்முகதாஸ், M. A.
ஆய்வாளர் மொழியிலக்கிய பீடம் கக்சுயின் பல்கலைக் கழகம் தோக்கியோ, யப்பான். இரண்டாம் பதிப்பின் முழு விற்பனை உரிமையாளர்:
பூபாலசிங்கம் புத்தகசாலே,
LUFT počát. A FF SOUTửD. sa): eur 50s as
LLSLLLLLS SSSSS SSYSS SLSLLSLLLLSGGLG S S S S LSLSLL LSzLLLLLSS
(Aspects of Tamil Language and Grammar)
Ainsi kor: Professor Aruna Salam
Sanamn tigacijas, B.A. (Cey) Ph. D. (Edi Km.) Department of Tamil University of Jaffna, Jaffna,
Copyrigin: to: Virs. Vaiominami Sanm gadas RAMA, A Researcher Faculty of Letters
Gakushuin University
Tokyo, Japan. First Edition: 1982 Second Edition (Revised) : 1989
Publishers: Mutamii Veliyi iddu, Kalagarn,
a ffurfia.
Printers: Aseerwathan Press,
50, Kandy Road, Jaffna.
Price: 50/வ
 
 
 
 
 
 
 

砷。
எனக்கும் மஞேன்மணிக்கும் பல்கலேக் கழகத்தில் ஆசான்களாகயிருந்த இருவர் அண்மையில் மறைந்து விட்டனர். இந் நூல் தொடர்பாக அவர்களிருவரும் நினைவு கூரப்படவேண்டியவர்கள். சொல்லதிகார மூம் நன்னூலும் எனக்குக் கற்பித்தவரும் இந்நூலின் முதற் பதிப்புக்கு அணிந்துரை வழங்கியவரும் என்ன ஆளாக்கியவருமாகிய அமரர் பேராசிரியர் க. வித்தியானந்தன் அவர்களுக்கும் எனக்கு எழுத்ததிகாரம் கற்பித்த ஆசான் ਉਹੈ। ஆ. சதாசிவம் அவர்களுக்கும் இவ்விரண் Lryb பதிப்பினேக் குருதட்சனேயாகச் சமர்ப்பிக்கிறேன். ری

Page 5
| -
|
T
W” A
W,
”
),
。
 

திற்கு முறையாகக் கற்றுனர்ந்தவர். அதன்பின்மேனுட்டிலே
தாரங்களையும் கொடுக்க முடியும் என்பதும் ஆராயப்
பேராசிரியர் சு. வித்தியானந்தன் துணைவேந்தர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
முதற் பதிப்புக்கு வழங்கிய அணிந்துரை
இரு மொழிக்குச் சிறப்பை, அழகைக் கொடுப்பது இலக்கணம், உயிருள்ள எந்த மொழிக்கும் இலக்கணம் இன்றியமையாதது. மொழி சிதைந்து அழகு குன்றிச் சீர் கெட்ட நிலையை அடையாது காப்பது இலக்கணமாகும். தமிழிலக்கண இயல்புகளே மரபு வழி நின்று மொழியியற் கண்ணுேட்டத்தில் ஆராய்வது இந்நூல் கலாநிதி சண்முக தாஸ் தமிழ் இலக்கணத்தைக் கலேமாணிச் சிறப்புப் பட்டத்
தமது கலாநிதிப் பட்டப் பயிற்சி மூலம் மொழியியல் ஞானம் பெற்றவர். எனவே, இந்நூல் எழுதுவதற்குத் தகுதி படைத்தவர்.
முதலாம் இயலிலே தமிழ் ஒரு திராவிட மொழி எனக் கருதப்படுவதற்கு எத்தகைய பண்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது என்பதும், திராவிட மொழிகளுக்கும் இந்தோ - ஐரோப்பிய மொழிகளுக்குமுள்ள வேறுபாடுகளை விளக்குவதற்குத் தமிழ் மொழியிலிருந்தே எல்லாச் சான்ரு
kiL(Bir@T657
இலக்கணம் பற்றித் தமிழறிஞர்கள் என்ன கருதிஞர்கள்
என்பது இரண்டாம் இயலிற் காணப்படுகின்றது. ஐந்திலக் கணம் கூறும் மரபு தமிழிலே ஒரு நீண்ட வரலாற்றை

Page 6
Vi
உடையதென்றும் இலக்கணம் என்பது விதிமுறையாக அமைவதா விவரணமுறையாக அமைவதா என்பது பற்றித் தமிழிலக்கணநூலாரிடையே வழங்கிவந்த மரபு என்ன வென்றும் இவ்லியலில் ஆசிரியர் கூறுகின்ருர்,
தமிழிலக்கணக் கோட்பாடுகளின் அடிப்படைகள் என்னும் இயலிலே, தமிழ் இலக்கணக் கோட்பாடுகளுக்கு மொழி மாத்திரம் அடிப்படையானதன்று. சமய சமூகச் செல்வாக்கும் அரசியற் செல்வாக்கும் தமிழிலக்கண வகைமைகளையும் கூறுகளேயும் பாகுபாடுகளேயும் பாதித் துள்ளன என்பது விரிவாக ஆராயப்பட்டுள்ளது. தமிழ் இலக்கணக் கோட்பாடுகளிற் சமணருடைய சமயச் செல் வாக்குப் பெரிதும் காணப்படுகின்றதென்பதனே ஆசிரியர் அழுத்திக்காட்டியுள்ளார்.
எழுத்துப்பற்றிய சிந்தனைகள் நான்காம் இயலிலே இடம் பெற்றுள்ளன. எழுத்தின் வரைவிலக்கணமும், எழுத்து வகைகளுள் உயிரெழுத்து, மெய்யெழுத்து முதலெழுத்து. சார்பெழுத்து. சுட்டெழுத்து, விஞவெழுத்து, முதலிய வற்றின் விளக்கங்களும் மொழிமுதல் இடை இறுதியிலே வரும் எழுத்துக்கள் இன்று வழக்கில் எவ்வாறு காணப் படுகின்றன என்பதும், தமிழ் இலக்கணநூலார் எழுத்துக் களின் ஒலிப் பண்பிலே முக்கியகவனஞ் செலுததி அவற்றின் வரிவடிவம் பற்றி அழுத்தமாக ஆராயாமை பற்றியும் இவ் வியலில் ஆராயப்படுகின்றன. இவ்வியல் இந்நூலின் நான்கி லொரு பகுதியாக அமைகின்றது.
புணர்ச்சி விதிகளின் அடிப்படைகள் பற்றிய இயல் இரு பது பக்கங்களைக் கொண்டுள்ளது. அச்சுயந்திரங்கள் வருமுன் எழுது சுருலிகள் கொண்டு எழுதும் வழக்கமிருந்தகாலத்திலே சிக்கன முயற்சிக்குப் புணர்ச்சி விதிகள் பெருமளவுதவின. மேலும், செய்யுள் இலக்கணம் நோக்கியே பெரும்பாலான நீ புணர்ச்சிகள் அமைக்கப்பட்டன. புணர்ச்சி விகாரங்களின் பெருக்கத்துக்கு யாப்பின செல்வாக்கே முக்கிய காரணம்: புணர்ச்சி விதிகள் உச்சரிப்பினை இலகுவாக்குவதற்கும் எழுத்துக்களின் சொந்த ஒலிப் பண்பினைப் பேணுவதற்கும் உதவின. இரண்டு சொற்கள் புணர்ந்து தொடரும்போது
 
 
 
 

Wii
பொருள்மாற்றம் ஏற்படாது தடுப்பதற்கும் இலசொற்களின் பழைய வடிவம் என்ன என்பதைக் காட்டுவதற்கும் புணர்ச்சி விதிகள் தேவைப்படுகின்றன. இவ்வாறு புணர்ச்சி லிதிகளின் தேவைகளை விரித்துக்கூறி, தொல்காப்பியர் கூறிய புணர்ச் சியை நன்னூலார் கூறியவற்றேடு ஒப்பிட்டு, புணர்ச்சி விவகாரங்களின் அடிப்படையை விளக்கி, இன்று வழக்கிற் பல புணர்ச்சி விதிகள் கவனிக்கப்படாவிடினும் 马s呜 விதிகள் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் என்றும் நின்று நிலவுமென வற்புறுத்திக் அறிச் செல்கின்றர்.
பெயர், வினே என்ற இலக்கண அடிப்படையிலான சொற்பாகுபாடு பற்றி ஆரும் இயலில் இரத்தப்படுகின்றது. அப்பகுப்புப் பற்றிய மேலும் விவரங்களையும், அவற்றுடன் தொடர்பான இலக்கண வகைமைகள் பற்றியும் ஆசிரியர் ஏழாம் இயலில் நோக்குகின்ருர், பெயரும் வினையும் உருட னியல் அடிப்படையிலும் சொற்ருெடரியல் அடிப்படையிலும் எத்தகைய பண்புகளேயும் பணிகளையும் (ଇ&rtଶog(@, $r ଈଶ୍ୱି। என்பது விளக்கமாக இவ்வியலிற் காணப்படுகின்றது. பெயர் என்னும் பகுப்பின் முக்கியத்துவத்தைக் கூறுமிடத்து ஆசிரியர் வேற்றுமை பற்றிக் கூறியுள்ளவை மிகவும் பர் னுள்ளவையாக அமைகின்றன. அதன்மேல் ஜினேயின் வரை விலக்கணம் கூறி, அதன் பாகுபாடுகளை விளக்கி வினே காலம் உணர்த்துவது பற்றிய ஆராய்ச்சியோடு இவ்வியலை ஆசிரியர் முடிக்கின்ருர்
தமிழ் வாக்கிய அமைப்பு என்னும் எட்டாம் இயலிலே தமிழ் இலக்கண நூலார் தமிழ் வாக்கியம் எத்தகைய உறுப் புக்கள் கொண்டு எவ்வித ஒழுங்குகளிலே அமையுமென ஒர் அதிகாரத்திலே தொகுத்துக் கூருவிட்டாலும் பல அதிகாரங்களிற் கூறப்பட்ட செய்திகளை அடிப்படையாகக் கொண்டு பல விடயங்களைப் பெற்று வாக்கிய அமைப்புப் பற்றிய விளக்கத்தை இவ்வியலிலே ஆசிரியர் தருகின்ருர்,
சொற்கள் பொருளுணர்த்துவது பற்றிய ஆய்வினே ஒன்பதாவது இயலிலே ஆசிரியர் மேற்கொண்டுள்ளார். தமிழ் இலக்கணநூலார் கூறியுள்ள செய்திகளையும் நவீன மொழியியலாரின் அணுகு முறைகளேயும் அடிப்படையாகக்

Page 7
Wiji
கொண்டு தமிழ்ச் சொற்கள் பொருளுணர்த்துவது பற்றியும் சொற் பொருளிலே ஏற்பட்டுவரும் மாற்றங்கள் பற்றியும் பிற சொற்கள் தமிழிலே வந்து சேர்ந்தமைபற்றியும் இவ் வியலிலே விளக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் கூறியவற்றைத் தொகுத்து நோக்குமிடத்து, தமிழ் இலக்கணம் பற்றி அறியவேண்டியவற்றை மரபுவழி நின்று மொழியியல் நோக்கில் ஆசிரியர் ஆராய்ந்துள்ளா ரெனக் கூறலாம். கலாநிதி சண்முகதாசின் இலக்கண ஞானமும் மொழியியல் அறிவும் நூல் முழுவதும் இழை யோடுவதைக் காணலாம். இந் நூல் இத்துறையிற் கன்னி முயற்சியாகும். இம்முயற்சிக்குத் தமிழ் கூறும் நல்லுலகம் ஆதரவளித்து அவரை மேலும் இத்துறையில் ஊக்குவிக்கு மென எதிர்பார்க்கின்ருேம்.
தமிழியல் தொடர்பான ஆய்வு நூல்களே வெளியிடுவதில் முன்னணியிலே நிற்கும் முத்தமிழ்வெளியிட்டுக் கழகத்தினர் தமது ஐந்தாவது வெளியீடாக தமிழ்மொழி இலக்கண இயல்புகள் என்னும் இந்நூலை வெளியிடுகின்றனர். விலே போகாத இலக்கண நூலே வெளியிட அவர்கள் முன்வந்தது
பாராட்டுக்குரியது.
சு வித்தியானந்தன்
யாழ்ப்பாணப் பல்கலேக் கழகம் திருநெல்வேலி 潭4-0盈。置岛8易
 
 
 

。
முதற் பதிப்புரை
1977ஆம் ஆண்டிலே, ஈழத்து நல்லறிஞரின் ஆய்வு நூல்களை வெளியிடும் பணியிலே அடிவைத்து, இன்று தனது ஐந்தாவதாண்டினை நிறைவு செய்யும் முத்தமிழ் வெளியீட்டுக் கழகம், ஆண்டுக்கு ஒரு நூல் என்ற திட்டத்தில் தமிழ் மொழி இலக்கண இயல்புகள் என்னும் நூலினை மிகுந்த பெருமையோடும் மகிழ்வோடும் தமிழ் கூறும் நல்லுலகின்' முன்பு சமர்ப்பிக்கின்றது. இந்நூல் கழகம் வெளியிட்டுள்ள நூல் வரிசையிலே ஐந்தாவதாகும்.
கடதாசி விலேயேற்றம், வெளியான நூல்களின் விற்பனை யில் உண்டான தேக்க நிலை, பொகுளாதார நெருக்கடி ஆகியவற்றுக்கு முகங்கொடுத்துக்கொண்டும் கழகம் தனது பணியினைத் தொடரக் காரணம் இப்பணியின் மூலம் கழக உறுப்பினர்கள் அடையும் மனநிறைவு ஒன்றே எனலாம். இந்த நிறைவு ஒன்றிலேயே அவர்கள் தம்மை எதிர் நோக்கும் இடர்பாடுகளே மகிழ்ச்சியுடன் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று வெளியாகும் தமிழ்மொழி இலக்கண இயல்புகள் என்னும் இந்நூல் இக்காலத்துத் தமிழ் மிாணுக்கர் பலரதும் நெடுநாளைய தேவையை நிறைவு செய்வதாக அமைகின்றது. மரபுவழி இலக்கண அறிவு மட்டும் ஒரு மொழியின் இயல்புகளை முழுமையாய் அறிந்து கொள்ளப் போதியதன்று.
2

Page 8
※
இன்று மெத்த வளர்ந்து வரும் மொழியியல் அடிப்படை களையும் இணைத்துக் கொண்டு இலக்கணத்தையும் கற்பதன் மூலமே மொழிபற்றிய பல விடயங்களைத் தெளிவாக்கிக் கொள்ளலாம். எனவே காலத்தின் இன்றியமையாத் தேவையையும் தமிழ் மொழியிலே உயர் கல்வி கற்று அதன் இயல்புகளை அறிந்திட அவாவும் மாணவர்களின் தேவையை யும் முன்வைத்து இந்நூல் எழுதப்பட்டுள்ளமையால் மொழி யியல் ஆய்வாளகுக்கும் மாணவருக்கும் இது பெரும் பயன் நல்கும் என்பது உறுதி.
இந்நூலின் ஆசிரியர் கலாநிதி அ. சண்முகதாஸ் ஈழத்தின் மொழியியல் அறிஞர்களுள் ஒருவர். நீண்ட காலமாகப் பேராதனைப் பல்கலைக் கழகத்திலும் யாழ்ப் பாணப் பல்கலைக் கழகத்திலும் தமிழ்த்துறையின் சிரேட்ட விரிவுரையாளராய் விளங்கும் இவர் அண்மையிலே யாழ்ப் பாணப் பல்கலைக் கழகத்தின் மொழி, பண்பாட்டாய்வுத் துறைத் தலைவராயும் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழின் பல துறைகளும் கைவந்த இந்த நல்லறிஞர் சிறந்த கலைஞரு LDTE I Tsj . நல்லுள்ளமும் சிறந்த பண்பாடும் வாய்ந்த கலாநிதி அ. சண்முகதாஸ் எமது முத்தமிழ் வெளியீட்டுக் கழகத்தின் தலைவருமாவார். எனவே அன்னுரின் ஆய்வு நூல் ஒன்றினை வெளியிடுவதாலே கழகம் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகின்றது என்பதற்கு ஐயமில்லை.
நாற்பத்திரண்டே வயதான கலாநிதி அ. சண்முகதாஸ் அவர்களுக்கு நீண்ட எதிர்காலம் இருக்கின்றது. ஆய்வுக் கட்டுரைகள் பலவற்றினை ஆய்வுச் சஞ்சிகைகளிலே
3.
வெளியிட்டுப் பழமரம் உள்ளுர்ப் பழுத்தது போல விளங்
கும் இவரது இரண்டாவது நூலே தமிழ்மொழி இலக்கண இயல்புகள் ஆகும். எதிர்காலத்தில் மேலும் பல ஆய்வு நூல்களை அளித்துத் தமிழிய்லை வளஞ்செய்ய இவ்வறிஞர் முன்வருவார் என்று திடமாக நம்புகிருேம். ஏனெனில்

xi
தமிழ்த் தாய் இவர்போன்றேரின் அறிவுசார் பணிகளால் மேலும் விகசிதம் அடைதல் வேண்டும் என்பதே எமது
Gala T6. IIT.
இந்நூல் வெளியீட்டில் முனைந்து நின்று அயராது உழைத்த கழகத்துச் செயல் குழுவினர்க்கும். சிறப்பாக நூலாசிரியரான கழகத்தலைவர் கலாநிதி அ. சண்முகதாஸ் துணைச் செயலாளர் (பதிப்பு) மயிலங்கூடலூர் பி. நடராசன் ஆகியோர்க்கும் நூலைத் திறம்பட அச்சிற் பதித்துதவிய ஆசீர்வாதம் அச்சகத்தினர்க்கும் முத்தமிழ் வெளியீட்டுக் கழகச் சார்பில் நன்றி கூறுகின்றேன்.
க. சொக்கலிங்கம் பொதுச்செயலாளர் -82-03-29 முத்தமிழ் வெளியீட்டுக் கழகம்

Page 9
முதற் பதிப்பின்
முகவுரை
இமது பழந் தமிழ் இலக்கண நூல்களை வரன் முறை யாகவும் ஆய்வு முறையாகவும் ஒரளவு கற்கும் வாய்ப்புப் பேராதனைப் பல்கலைக் கழகத்திலே எமக்குக் கிடைத்தது. பேராசிரியர்கள் க. கணபதிப்பிள்ளை, வி. செல்வநாயகம், சு வித்தியானந்தன், ஆ. சதாசிவம் ஆகியோரிடமே அவற் றைக் கற்றேன். பேராசிரியர் சதாசிவத்திடம் தொல் காப்பியம் எழுத்தும், பேராசிரியர் வித்தியானந்தனிடம் சொல்லும், பேராசிரியர் செல்வநாயத்திடம் பொருளும் அறியும் வாய்ப்புக் கிடைத்தது. பேரா சிரியர் வித்தியானந்தன் நன்னூலையும் எமக்குக் கற்பித்தார். தமிழ்மொழியியல், திராவிட மொழியியல் பற்றிப் பேராசிரியர் கணபதிப் பிள்?ளயிடம் கற்கும் வாய்ப்புக்கிடைத்தது. தமிழ் இலக் சுணத்தில் ஒரளவு பெற்ற இவ்வடிப்படை அறிவுடன் எடின்பருேப் பல்கலைக் கழகத்தில் இரண்டு வருடங்களாக மொழியியலை வரன் முறையாகக் கற்கும் வாய்ப்பு ஏற்பட்டது. மரபு வழி இலக்கணக் கல்வியுடன் நவீன அறிவியல் சார்ந்த மொழியியற் பயிற்சி சேர்ந்தவிடத்து, பல புதிய கருத்துக்கள், நியாயமான ஐயங்கள், மேற்கொள்ளவேண்டிய வகைமைகள் பகுப்பாய்வுகள் பற்றிய எண்ணங்கள் எமது மனத்திலே தோன்றின. அவற்றைப் பல வருடங்களாக பயின்று சென்ற தமிழ் இலக்கண, மொழியியல் மாணவர் களிடமும் பட்டப் பின் ஆய்வு மேற்கொண்டவர்களிடமும் பகிர்ந்து கொண்டேன். இவற்றுக்கு நூல்வடிவங் கொடுத்தல் நல்லது என என் மனைவி மனேன்மணி அடிக்கடி கூறி
 
 

雙
xiii
வருவார். அவருடைய இடைவிடா ஊக்கம் காரணமாக இந்நூல் முத்தமிழ் வெளியீட்டுக் கழகத்தின் சார்பாக இன்று வெளிவருகின்றது.
சோக்கிறற்றிஸ், பிளேற்றே, அரிஸ்ரோற்றில் தொடக்க மான கிரேக்க சிந்தனையாளர்களின் இலக்கணக் கோட்பாடு களைப் படிக்குமிடத்து எமது தமிழ்மொழி இலக்கணநூலாரின் சிந்தனையோட்டங்களை நாம் வியக்காமலிருக்க முடியாது. பண்டைக்கால மேலைத்தேய, தமிழ் இலக்கணநூலாரிடையே காணப்பட்ட சிந்தனையொற்றுமை இள் வியக்கத்தக்கன வாகும். ஒப்பீட்டு அடிப்படையிலே அச்சிந்தனை ஒற்றுமைகள் இந்நூலில் ஆங்காங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.
மொழி சமூகவயப்பட்ட கருத்துத் தொடர்புச் சாதனம் என்ற காரணத்தால், அதற்கும் சமூகத்துக்குமிடையே பரஸ்பர பாதிப்பு ஏற்படுகின்றது. சமூகப் பாதிப்பு என்ருல், அதனுேடு சார்ந்த அரசியல், கலாசார, பொரு ளியற் பாதிப்புக்களையும் கோள்ளவேண்டும். இதஞல், மொழியின் இயல்புகளை அவதானித்து, இலக்கணம் எழுதி யோர் கொண்டிருந்த இலக்கணச் சிந்தனைகளுக்கு அடிப் படையாக இப்பாதிப்பு அமைந்து விட்டது. தமிழ்மொழி இலக்கண நூலாரின் இலக்கணக் கோட்பாடுகளின் அடிப்படை கள் எவையென்பதுபற்றி இந்நூலிலே சிறிது விளக்கப்பட்
டுள்ளது. மரபுவழித் தமிழ் இலக்கண அமைப்பினை,
வகைமைகளை, கூறுகளைத் தெளிவாக்க முயற்சிக்கும் அதே வேளையில், நவீன மொழியியல் நோக்கிலே அவற்றைத் தரிசிக்கும் பணியும் இந்நூலிலே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நூலினத் தமது ஐந்தாவது வெளியீடாக வெளிக் கொணர ஒப்புதல் தந்த யாழ்ப்பாணம் முத்தமிழ் வெளி யீட்டுக் கழகத்துக்கு என் மனங்கனிந்த நன்றி உரித்தாகுக.
இம் முயற்சியிலே அயராத ஆர்வம் காட்டிய கழகத்தின்
பொதுச் செயலர் க. சொக்கலிங்கம் (சொக்கன்"), துணைச் செயலர் (பதிப்பு) பி. நடராசன் ஆகியோருக்கு விசேட நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். இந்நூலுக்கு முன்னுரை வழங்கியுள்ளார் பாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணை

Page 10
xiw
வேந்தர் பேராசிரியர்ர் சு. வித்தியானந்தன். மரபு வழித் தமிழ் இலக்கணங்களை வரன் முறையாகவும் ஆய்வு முறை யாகவுங் கற்பிக்கக் கூடிய பேராசிரியர் வித்தியானந்தனிடம் நல்ல பயிற்சியினையும் இலக்கணக் கோட்பாடுகள் பற்றிச் சிந்திக்கும் ஊக்கத்தினையும் பெற்றுக் கொண்டேன். அன்னுர் இந்நூலுக்கு மனமுவந்து வழங்கிய முன்னுரைக்கு என் மனமுவந்த நன்றியினைக் கூறிக்கொள்கிறேன்.
இந்நூலை மிகச் சிறந்த முறையிலே அச்சேற்றி உதவிய ஆர்ேவாதம் அச்சகத்தினர்க்கும் சிறப்பாக அச்சமைப்பு முகவர் திரு. ருேக் யோசேப், அச்சுக்கோப்பாளர்களான திரு. ஆ. கோவிந்தராஜா, திரு. சூ. கிறிஸ்ரியன் ஆகியோர்க் கும் திரு. சி. எஸ். மனுேகரராஜனுக்கும் நன்றியுடையேன்.
அ சண்முகதாஸ்
வில்லிசிட்டி பாலாலி வீதி, திருநெல்வேலி
1982-03-29

இரண்டாம் பதிப்பின்
பதிப்புரை
'தமிழ்மொழி இலக்கண இயல்புகள்" நூல் 1982ஆம் ஆண்டு மார்ச் திங்களில் எமது கழகத்தின் ஐந்தாவது நூலாக வெளியாயிற்று. ஒர் ஆய்வுநூல் ஆறு ஆண்டுகள் கழித்து இரண்டாம் பதிப்பாய் வெளிவருவது என்பது மிக அருமையாகவே நிகழக்கூடியதாகும். பெரும்பாலும் நூலகங்களிலும் சிறுபான்மை குறித்த நூலோடு தொடர் புடைய ஆய்வை நிகழ்த்துவோர் கைகளிலுமே இத்தகைய நூல்கள் மதிப்புப் பெற்றுப் பேணப்படுவதால் இரண்டாம் மூன்ரும் பதிப்புக்கள் வருவது மிக அபூர்வமாகவே நிகழும் ,
ஆணுல் எம் கழகத் தலைவர், பேராசிரியர் அ, சண்முக தாஸ் அவர்களது 'தமிழ்மொழி இலக்கண இயல்புகள் என்ற நூல் ஆய்வாளர்களுக்கு மன்டுமன்றித் தமிழியல் மாணவருக்கும் பெரும்பயன் நல்குவதோர் இயல்பினேச் சிறப்பாசுப் பெற்றுள்ளமையால், இன்று அதன் இரண்டா வது பதிப்பு வெளியாகின்றது. இது மகிழ்ச்சி தருவதா கும். விரைவில் மூன்ரும் நான்காம் பதிப்புக்களும் வெளி வந்து தமிழியல் உலகில் நின்று நிலவல் வேண்டும் என்பது எமது வேணவா.
எமது கழக அமைப்பு விதிப்படி ஓர் ஆய்வு நூலின் முதற் பதிப்பை வெளியிடும் உரிமையே கழகத்திற்கு உண்டு.

Page 11
XV i
ஆனல் பேராசிரியர் அ. சண்முகதாஸ் கழகத்தின் மீது கொண்ட பற்றுக்காரணமாகத் தமது ஆய்வு நூலின் இரண் டாம் பதிப்பையும் எமது கழகத்தின் பெயராலேயே வெளிக் கொணர்வது அவர்தம் உயர்ந்த பண்பாட்டையே காட்டுகின்றது. அவர் கழகத் தலைவர் என்ற வகையில் தன்றி கூறுவது பொருத்தமற்றதாயினும் எம் உள்ளத்து நல்லுணர்வுகளை வெளிப்படுத்தும் குறியீடாக யாழ் முத் தமிழ் வெளியீட்டுக் கழகத்தின் இதயங்கனித்த நன்றியைத் அழகச் சார்பில் அத்ன் பொதுச் செயலாளன் என்ற வகையில் மிக மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
யாழ் முத்தமிழ் வெளியீட்டுக் கழகம், க. சோக்கலிங்கம் யாழ்ப்பாணம். பொதுச் செயலாளர் 08-03- 1989
*

இரண்டாம் பதிப்பின்
முகவுரை
இரண்டாம் பதிப்பாக வெளிவரும் இந்நூல் பல திருத்தங்களுடனும் சில புதிய விடயங்களுடனும் வெளி வருகின்றது. இந்நூலின் முதற்பதிப்பிலே தமிழிலேயுள்ள திணைப் பாகுபாடுபற்றி நான் குறிப்பிட்ட கருத்தினை டாக்டர் செ. வை. சண்முகம் அவர்கள் நன்கு மறுத்துக் கருத்துக் கூறியுள்ளார். அவர் தன்னுடைய சொல்லிலக் கணக் கோட்பாடு என்னும் நூலிலே குறிப்பிட்டவற்றை அப்படியே கீழே தருகிறேன் (பக். 130-33):
*சமீபத்தில் சண்முகதாஸ் (1982) திணை பாகுபாடு சமண தத்துவ அடிப்படையில் அமைந்தது என்று கூறி யுள்ளதும் இங்குக்குறிப்பிடத்தகுந்தது. 35.7 சண்முகதாஸ்
மக்களையும் ஏனையவற்றையும் வேறுபடுத்துவது உயிர் எனக் கொண்டால் தொல்காப்பியர் உயிரிகளை உயர் திணை என்றும், உயிரிலிகளை அஃறிணை என்றும், பாகுபடுத்தியுள்ளார் எனக்கூறலாம். ஆனால் உயிருடை யனவாகவுள்ள மிருகங்கள், பறவைகள், ஊர்வன தொல் காப்பியரால் உயர்திணைவாகக் கொள்ளப்படவில்லை. தமிழ்மொழியிலே இவ்விலக்கண மரபு நன்கு வேரூன்றி விட்டது. இதனாலே காளை என்னுஞ் சொல் ஒடுதல் என்னுந் தொழிலைச் செய்யும் வினைச் சொல்லைப் பயனிலையாகக் கொள்வதென்றால் காளை ஒடினான்; காளை ஒடிற்று; என இருவகையான வாக்கியங்களை அமைக்க வேண்டியதாயிற்து. 3

Page 12
xviii
சண்முகதாசின் (1982:46) இந்தக் கூற்று, திணை பாகுபாட் டின் அடிப்படையை விளக்கி அதை விமர்சித்திளுக்கிறது எனலாம். இங்கு அவர் திணை - பால் பாகுபாட்டில் இரண்டுவித குறைகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்: 1) திணை - பால் பாகுபாடு குறை உடையது; 2) அதனால் வாக்கிய அமைப்பில் அதாவது வினைமுற்று விகுதியில் கொஞ்சம் சிக்கல் உள்ளது என்று நாம் பொதுமைப்படுத்த லாம். இவை எவ்வளவுதூரம் உண்மையானது என்று பார்க்கவேண்டும்.
திணை-பாகுபாடு குறை உடையது என்ற முதல் கருத்து அதன் அடிப்படையைத் தவறாகப் புரிந்து கொண்டதால் ஏற்பட்டது. ஏனெனில் உயர்திணை-அஃறிணையை மக்கள்/ அவரல்லாத பிற என்று விளக்கியதை உயிரி/ உயிரிலி என்று பொதுமைப்படுத்தியதே தவறு. மக்களை உயிரி என்று கூறி யது மிகைபடக் கூறல் என்ற குற்றம் ஆகும். ஏனெனில் உயிரி என்பது மக்களையும் பிற உயிரிகளையும் குறிக்கும். ஆகவே உயிரியின் ஒரு பகுதியாகிய மக்களைக் குறிக்கும் உயர்திணையை உயிரி என்று பொதுமைப்படுத்துவது மிகைப்படக் கூறல் ஆகிவிடுகிறது. அதுபோல அஃறி ணையை உயிரிலி என்பது குன்றக்கூறல் என்ற குற்றம் ஆகும். ஏனெனில் மக்கள் அல்லாத பிற அஃறிணை என் றால் உயிரியின் ஒரு பகுதியும் (மக்கள் அல்லாதவை) உயிரிலியும் அடங்கும். ஆகவே திணைக்கு அடிப்படை உயிரி/உயிரிலி என்ற சண்முகதாசின் கருதுகோள் தவறாக அமைந்து விட்டது. ஆனால் இன்னொரு இடத்தில் (பக் 48. அந்தக் கருத்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது) அவர் திணை பாகுபாட்டைச் சரியாகவே புரிந்துகொண் டிருக்கிறார்.
திணை பாகுபாட்டை அமைத்த முறையால் ஒரு
9.
சொல் இரண்டு பொருளைக் குறிக்கும்போது இரண்டு
விதமாக வினைமுற்று விகுதியைப் பயன்படுத்தவேண்டி யிருக்கிறது என்பது இரண்டாவது கருத்து. இங்கு இலக் கியம் முதலாவதாகவும் இலக்கணம் இலக்கியத்திலிருத்ே

Xix
பெறப்படுகிற பொதுமை என்ற முறையில் இரண்டாவ தாகவும் அமைவதற்குப் பதிலாக இலக்கணம் முதலான தாகவும், இலக்கியம் இரண்டாவதாகவும் கருதப்பட்டிருக் கிறது. மேலும் இலக்கணம் மொழிப் பயிற்சியை உரு வாக்குவது போலக் கூறுவதும் தவறு. ஏனெனில் இலக் கியப் பயிற்சியின் அடிப்படையில் இலக்கணம் உருவாகி றதே தவிர, இலக்கணம் இலக்கியப் பயிற்சியை உரு வாக்குவதில்லை. இந்தக் கருத்தை இன்னொரு விதமாகவும் விளக்கலாம். மொழிப் பயிற்சியோ, வாக்கிய அமைப்போ சிறப்பாக மொழியோ இயற்கையாய் இருப்பது; அவை களில் காணப்படும் ஒழுங்கை, அமைப்பு முறையைக் கண்டுபிடிப்பதே இலக்கணம். அது ஒருவருடைய அறிவுக் கும், ஆற்றலுக்கும் ஏற்ப அமைவது. எனவே இலக்கண மரபால் இரு வகையான வாக்கியங்களை அமைக்க வேண்டியுள்ளது" என்று அவர் கூறுவது இலக்கணத்திற்கு முதலிடமும், மொழி அமைப்புக்கு இரண்டாவது இடமும் தருவதால் பொருந்தாது போய்விடுகிறது.
தொல்காப்பியர் காளை போன்று வேறு பல பெயர் கள் உயர்தினைக்கும் அஃறிணைக்கும் பொதுவாய் அமைந்து வினைமுற்றால் திணை-பால் வேறுபடுவதை உணர்ந்ததினாலேயே விரவுத்திணை என்ற இன்னொரு பாகுபாடும் பெயரியலில் அமைத்துள்ளார். (அதுபற்றி அடுத்த இயலில் விரிவாக விளக்கப்படும் :)
மேலே குறிப்பிட்டபடி உயிரியல் நோக்கிலும் மக்க ளைத் தனி இனமாகவே கருத முடியும். மனித இனம் உயிரியோடு, மூளை வளர்ச்சியும் நிமிர்ந்த தன்மையும் உடையது. ஏனைய உயிரிகள் மூளை வளர்ச்சி குன்றி
குனிந்த தன்மையும் உடையவை. சண்முகதாஸ் உயிரியல்
நோக்கில் அமையும் பாகுபாட்டைத் தவறாகப் புரிந்து
கொண்டதாலும் இலக்கணம் மொழிப்பயிற்சியை உரு வாக்குகிறது என்று கருதியதாலும்தான் அவருடைய
க்ருத்து தவறாகப் போங்விட்டது.

Page 13
XX
சண்முகதாஸ் திணைப் பாகுபாட்டின் அடிப்படையை விளக்கியதோடு அதற்குரிய காரணம் என்ன என்ற கேள்வி யையும் எழுப்பிச் சமண சமயத்தத்துவமே காரணம் என்று பதிலும் கூறியுள்ளார்.
ஒரு காளையை உயர்திணை என்றும் மற்றைய காளை யை அஃறிணை எனவும் செய்ததன் அடிப்படை என்ன?
(பக். 47) என்ற கேள்வியை எழுப்பிச் சமண சமயக் கருத்து கள் அடிப்படையில் மரபியலில் உயிரிகளின் பாகுபாடு விரிவாகக் கூறப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி,
சமண சமயக் கோட்பாட்டினே எவ்வாறு தொல் காப்பியர் தன்னுடைய மரபியற் சூத்திரங்களிலே குறிப்பிட்டுள்ளார் என்பதனை மேலும் வலியுறுத்த வேண்டியது அவசியமில்லே எனக் கருதுகிருேம். அச்சமயக் கோட்பாட்டிலே நன்கு மனம் ஊன் றிய தொல்காப்பியர் திணைப்பாகுபாடு செய்யு மிடத்து உயிரிகளாகிய ஆறறிவு அற்ற விலங்கு 33ளயும் வீடுபேறு அடையா நரகர், தேவரையும் விலக்கி உயர்தினை என்மனுர் மக்கட் சுட்டே என்று வகுத்துள்ளார். ஆகவே ஒரு காளை உயர் தினையாகவும் மற்றைய காளை அஃறிணையாகவும் தமிழ் மொழியிலே கொள்ளுதற்கு அடிப்படை யாக அமைந்தது சமய தத்துவமேயாகும் (பக், 48)
என்று முடிவு செய்துள்ளார். இங்கு சமணசமயக் கோட் பாடும் மொழி அமைப்பும் ஒத்துப்போகிறது. அப்படியிருக் கும்போது சமயக்கோட்பாடே அடிப்படை என்று எப்படிக் கூறுவது? மொழி அமைப்பில் வேறுபாடு இல்லாமல் இருந்து இலக்கணத்தில் வேறுபடுத்தியிருந்தால்தான் சமயச் செல்வாக்கு என்று உறுதியாகக் கூறமுடியும். மொழி அமைப்பையே இலக்கண ஆசிரியர் உருவாக்குகிருர் என்று தவருகக் கருதியதால் அப்படி உருவாக்குவதற்குச் சமயச் செல்வாக்குக் காரணம் என்று சண்முகதாஸ் கருதி விட்டார். மொழி அமைப்பே இயல்பானது; இலக்கண

XXi
ஆசிரியர் உருவாக்காதது என்னும்போது சமயச் செல்வாக்கு தான் இலக்கணத்தில் செய்யும் பாகுபாட்டுக்குக் காரணம் என்பதும் சிறப்பு இழந்து விடுகிறது.
இதுவரை திணை - பால் பாகுபாட்டுக்கு அடிப் படையாகக் கருதிய கருத்துக்களை கீழ்க்கண்டபடி தொகுத் துச் சொல்லலாம்.
தொல் - உயிரியல் கூறு
இளம் - சமூக மதிப்பீடு, மரபு தெய்வ, - மொழி அமைப்பு கால்டுவெல் தத்துவம், பொருள் சண்முகதாஸ் — EFLD GEMOT AF ADALJ Llo
இன்று மொழி அமைப்பிலுன்ள வேறுபாட்டை ஒட்டிய பாகுபாடே (தெய்வச்சிலையாரின் கருத்தை ஒட்டியது) சிறப் பானதாகக் கருதப்படுகிறது. '
மேற்காட்டிய டாக்டர் சண்முகத்தின் கருத்தினைப் படிப் பவர்கள் என்னுடைய குறைபாட்டினைத் தெற்றென அறிந்து கொள்வர். இப்பதிப்பிலே அக்குறை திருத்தப்பட்டுள்ளது. குறையினேச் சுட்டிய டாக்டர் சண்முகத்துக்கு நானும் அறி வுலகமும் கடமைப்பட்டுள்ளன. எழுத்தாளர் சுஜாதா அவர்கள் கட்டிக்காட்டிய இன்னுெரு குறையும் திருத்தப் பட்டுள்ளது (பார்க்கவும், பக்.56-58) நண்பர் கலாநிதி நா. சுப்பிரமணியம் (தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக் அழகம்) முதற் பதிப்பிலே காணப்பட்ட சில பிழைகளை எனக் குத் தனிப்பட எடுத்துக் கூறினர். இப்பதிப்பிலே ஆவன செய்துள்ளேன். அவர்கள் யாவருக்கும் என் மனமார்நத நன்றிகள்.
இவ்விரண்டாம் பதிப்பிலே பொருத்தமான இடங் களிலே யப்பானிய மொழி இயல்புகளுடன் தமிழ்மொழி இயல்புகளை ஒப்பிட்டுக் காட்டியுள்ளேன். தற்போது யப் பானிலே மேற்கொள்ளப்பட்டுவரும் 'தமிழ் - யப்பானிய உறவு பற்றிய ஆய்வின் பிரதிபலிப்பே இம்முயற்சி யாகும். வேறு பல புதிய விடயங்கள் இப் பதிப்பிலே சேர்க்கப்பட்டுள்ளன.

Page 14
xxii
இரண்டாம் பதிப்பின் தேவையினை என்னுடைய பல் கலைக்கழக நண்பர்களும், வெளிவாரியாகப் பட்டப் படிக் கும் பல மாணவர்களும் எனக்கு உணர்த்தினர். பூபா ல சிங்கம் புத்தகசாலை உரிமையாளர் நண்பர் திரு. பூ. சிறிதரசிங் ஊக்கந்தந்ததுடன் இந்நூலுக்குரிய செலவுத்
தொகையையின் அரைப்பகுதியினையும் தானே ஏற்றுக்
கொண்டார். இவர்களெல்லொருக்கும் நான் கடமைப் பட்டுள்ளேன்.
இப்பதிப்பினைத் தமது ஒன்பதாவது வெளியீடாக இவனிக்கொணர ஒப்புதல் தந்த யாழ்ப்பாணம் மூத்தமிழ் வேளியீட்டுக் கழகத்துக்கு என் மனமுவந்த நன்றி உரித் தாகுக. பதிப்புரை எழுதிய கழகப் பொதுச் செயலர் வித்துவான் க. சொக்கலிங்கம் (சொக்கன்) M. A. , அவர் அளுக்குச் சிறப்பாக நன்றி கூறுகிறேன். இந்நூலே மிகச் சிறந்த முறையிலே அச்சேற்றி உதவும் ஆசீர்வாதம் அச் சனத்தினருக்கும், அச்சக ஊழியர்களுக்கும் என் நன்றி உசித்தாகுக.
நெல்லண்டை வீதி, அ. சண்முகதாஸ் தும்பளை பருத்தித்துறை .

பொருளடக்கம்
சமர்ப்பனம் iii
முதற்பதிப்பின் அணிந்துரை V — Viii முதற் பதிப்புரை ix-xi முதற் பதிப்பின் முகவுரை xiii-xiw இரண்டாம் பதிப்பின் பதிப்புரை XV - XV i இரண்டாம் பதிப்பின் முகவுரை XVi i-xxii
1. தமிழ் ஒரு திராவிட மொழி 1-22
இலக்கணம்: தமது மரபும் நவீன தோக்கும் 23-45 தமிழ் இலக்கணக்கோட்பாடுகளின்
அடிப்படைகள் 46-73 4. எழுத்துப் பற்றிய சிந்தனைகள் 74-124 5. புணர்ச்சி விதிகளின் அடிப்படைகள் 125-146 சொல்லும் சொற்பாகுபாடும் 147-166 7. தமிழ் இலக்கண வகைமைகள்: 167-199
பண்பும் பணியும் - 8. தமிழ் வாக்கிய அமைப்பு 200-220 9. சொல்லும் போருளும் 221-251
நூற்பட்டியல் 252-26O.

Page 15

1.
தமிழ் ஒரு திராவிடமொழி
T ទ្រង៉ាយ សាយ៍ទាំង៦ மொழிக்குடும்பமும்
விஞ்ஞானத் துறைகள் பலவற்றிலே ஏற்பட்ட துரித மான வளர்ச்சி மொழி ஆய்வுத் துறையினையும் பாதிக்க லாயிற்று மொழியாய்வு பண்டைக் காலந்தொடக்கமே நடைபெற்று வந்துள்ளது. ஆணுல் மொழியாய்வுத்துறை பத்தொன்பதாம் நூற்ருண்டின் பிற்பகுதியிலேயே விஞ் ஞானத் துறையாக உருப்பெறத் தொடங்கியது. ஏனைய விஞ்ஞானத் துறைகளில் இடம்பெற்ற கோட்பாடுகள் மொழியியல் துறையிலும் ஏற்படலாயின. தாவரவியல், விலங்கியல் போன்ற துறைகளிலே தாவரம் அல்லது விலங்கினைப் பகுப்பாய்வு செய்து அவற்றினிடையே காணப் பட்ட ஒழுங்குகளை, பண்புகளை எடுத்து விளக்கியது போல் மொழியினையும் பகுப்பாய்வு செய்து விளக்கினர். மொழி யிலே ஏற்படும் மாற்றங்களுக்கு அடிப்படையாக அமைவது ஒலிம்ாற்றமே என்பதை அவதானித்து அம்மாற்ற ஒழுங்கினை ஒலிநியதிக் கோட்பாடாகக் காட்டினர். ஈர்ப்புக்கோட்பாடு, பிரதிபலிப்புக் கோட்பாடு போன்ற விஞ்ஞானக் கோட் பாடுகள் போல, ஒலிநியதிக் கோட்பாடும் உருவாயிற்று. உயிரியல் துறையிலே கையாளப்பட்ட morphology. structure, syntax போன்ற கலைச்சொற்கள் மொழியியல் துறையிலும் கையாளப்பட்டன. உயிரினங்களின் தோற்றம், வளர்ச்சி பற்றிய டார்வினின் பரிணுமக் கொள்கை இயற்கை

Page 16
2 தமிழ்மொழி இலக்கண இயல்புகள்
மொழிகளின் தோற்றம் வளர்ச்சி பற்றி ஆராயவும் வழி காட்டிற்று. உயிரினங்களுக்குள்ளே அடிப்படைத் தொடர்பு கொண்டனவற்றைக் குடும்பங்களாகப் பாகுபாடு செய்யும் போக்கினை அடியொற்றி, தொடர்புற்ற மொழிகளைக் குடும்பங்களாக இனங்காணும் முயற்சி மொழியியல் துறை யிலும் உண்டாயிற்று. வரலாற்று மொழியியல், ஒப்பீட்டு மொழியியல் ஆகிய மொழியியலின் உட்பிரிவுகள் இம் முயற்சிகளை மேற்கொண்டன.
பல தொடர்புள்ள மொழிகளே ஒப்புநோக்கி, அம் மொழிகளின் மூலமொழி எதுவாயிருக்கலாம் என இனங் கண்டு அம்மூலமொழியிலிருந்து மேற்குறிப்பிட்ட மொழிகள்
எவ்வாறு கிளேத்து வளர்ந்தன என்று ஆராய்வது ஒப்பியல் மொழியியலாகும். 19ஆம் நூற்ருண்டிலே இத்துறை பெரிதும் வளர்ச்சியடைந்தது. இலக்கண அமைதியிற்
காணப்படும் ஒற்றுமைகளையும் ஒலி இயல்பு போன்ற ஒற்றுமை இயல்புகளையும் துணைக்கொண்டு மொழிகளுக் கிடையேயுள்ள தொடர்புகளை மொழியியலாளர் காண முற்பட்டனர். இவ்வாறு மொழிகளை வகைப்படுத்தும் முயற்சி 19ஆம் நூற்ருண்டிலே துரிதமடைந்தது. ஓகஸ்ற் சிலைஷசர் (August Schleicher 1821-68) என்பவர் மொழிகளை இரு வகையிலே பாகுபாடு செய்யும் வழியினை விளக்கினர். முதலாவது உயிரியல் அறிஞர் குடிவழி அடிப்படையில் உயிரியற் குடும்பங்களை இனங்காணுவது போல, மொழியியற் குடும்பங்களையும் இனங்காணுதல். இரண்டாவது, வடிவா லும் பொருளாலும் ஆய மொழிகளை அவற்றின் அடிப்படை யிலேயே பாகுபாடு செய்தல், அதனுல், உலகில் உள்ள மொழிகளை அவர் மூன்று வகைகளாகப் பிரித்தார்.
1. 550 îGudryf (Isolating language):
இலக்கண உருபுகளின்றி, ஒவ்வொரு சொல்லும் சொற்ருெடரிலே சந்தர்ப்பத்துக்கேற்றபடி பொருள் பெறுதல். அவ்வாறு அச்சொற்கள் வெவ்வேறு பொருள் பெறுமிடத்து அவற்றின் வடிவங்கள் வேறுபடா. சீன மொழியினை இதற்கு உதாரணமாகக் காட்டுவர்.

தமிழ் ஒரு திராவிடமொழி
2. 52'66Lori (Agglutinative language):
வேர்ச்சொல், இலக்கண உறுப்புக்கள் என்ற முறையிலே ஒட்டப்பட்டன போன்று சொற்கள் இம்மொழிகளிலே அமையும். அதனுல், வேர்ச் சொல் லையும் அதனுடன் ஒட்டப்பட்ட இலக்கண உறுப்புக் களையும் இலகுவிலே தெளிவாகப் பிரித்துக்காணலாம். தேர்களின் என்னுஞ் சொல்லிலே தேர் + கள் + இன் என உறுப்புக்களைப் பிரித்துக் காணலாம், துருக்கி மொழி, யப்பானிய மொழி, தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளே இதற்கு உதாரணங் 5 GT (T5 is 5 TLLG) IT lib.
3. GlasgGGALDT yfi (1 inflexional languagc) :
தனி மொழியிலும், ஒட்டு மொழியிலும் காணப் படும் பண்புகள் விகுதி மொழிகளிலே காணப்படுவ தில்லை. வடிவிலும் பொருளிலும் சொற்கள் மாறுபாடு அடைதலும், வேர்ச்சொல்லோடு இணையும் இலக்கணக் கூறுகளைப் பிரித்தறிய முடியா நிலையும் இம்மொழி களிலே உண்டு. சமஸ்கிருதம் கிரேக்கம், லத்தீன் போன்ற மொழிகள் இதற்கு உதாரணங்களாகும்.
சிலேஷசர் காட்டிய மொழி வகைப்பாட்டு வழிகளில் முத லாவது வகையினையே நாம் இங்கு விரிவாக நோக்க வேண்டி யுள்ளது. குடிவழி அடிப்படையிலேயே மொழிகளுக்குரிய இயைபுகளை நோக்கி, மொழிக் குடும்பங்களை இனங்காணும் முயற்சியின் விளைவே இந்தோ-ஐரே ப்பிய, செமிற்றிக், திராவிடம் போன்ற மொழிக் குடும்பங்கள் ஆகும்.
2. திராவிட மொழிக் குடும்பம்
திராவிட மொழிக் குடும்பம் பற்றிய சிந்தனை 19 ஆம் நூற்றண் டிலேயே ஏற்பட்டது. "பத்தொன்பதாம் நூற் முண்டின் தொடக்கத்தில் கிழக்கிந்தியக் கம்பனியைச் சேர்ந்த எல்லிஸ் என்பவர், தமது சுட்டுரைகளில் மிக நெருங்கிய உறவுடைய ஒரு குழுவாக அமையும் முறையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழி களுக்கும் இடையேயுள்ள ஒற்றுமைகளைச் சுட்டிக் காட் டிஞர். ' 2 ஆணுல் திராவிடமொழிக் குடும்பம் பற்றிய

Page 17
4 தமிழ்மொழி இலக்கண இயல்புகள்
தெளிவான விளக்கமான ஆய்வு 1856 இல் கால்டுவெல் அவர்களின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலுடனேயே தொடங்கியதெனலாம். திராவிட மொழிக்
குடும்பம் பற்றிய எண்ணம் கி. பி. எட்டாம் நூற்ருண்டின்
இறுதியில் வாழ்ந்த குமரில பட்டரின் ஆந்திர-திராவிட பாஷா என்ற தொடருடனேயே தொடங்கி விட்டதெனக் கால்டுவெல் கருதுகின்ருர், இக்கருத்தினை தெ. பொ. மீனுட்சிசுந்தரன்,
'குமரிலபட்டரின் தந்திர வார்த்திகா வில் பிழை யான பாடத்தின் அடிப்படையில் கால்டுவெல்,
ஆந்திர-திராவிட' என்ற சொல்லைத் தெலுங்கு,
தமிழ் மொழிகளைக் குறிக்கும் நோக்கத்தில் குமரிலபட்டர் பயன்படுத்தியதாகச் சொல்கிருர், அச்சொல் உண்மையில் 'திராவிட-ஆந்திரா அன்று,
LorTCm? 5 š, * GUTTG? -- g2S)” (Dravida. Adi = திராவிட முதலியன) என்பதேயாகும். '4
என்று மறுத்துரைக்கின்ருர் . இந்திய உபகண்டத்திலே பேசப்பட்ட சில மொழிகள் திராவிட' என்னும் குடும்ப மொழிகள் என்று நிரூபிக்கத்தக்க ஆய்வு கால்டுவெல் அவர்களுடனேயே தொடங்கியதென்பதை எவரும் மறுக்க
pro tri,
கால்டுவெல் தன்னுடைய நூலிலே பின்வரும் 12 மொழிகளைத் திராவிட மொழிக் குடும்பஞ் சார்ந்தனவாகக் குறிப்பிடுகிறர்:
1. தமிழ் 7. துத 2. LD3%) uLf rT 6NTLib 8. தோத 3. தெலுங்கு 9. கோந்த் 4. கன்னடம் 10, சுய்
5. துளு 11. ஒரான்
6. கொடகு 12. ராஜ்மஹால்

தமிழ் ஒரு திராவிடமொழி 5
ஆணுல் இன்றே இருபதுக்கு மேற்பட்ட திராவிட மொழிகள் இனங்காணப்பட்டுள்ளன. அவை வருமாறு :
1. தமிழ் 2. தெலுங்கு 3. மலேயாளம் 4. கன்னடம் 5. கொண்டி 6. குருக் அல்லது ஒரான் 7. துளு 8. கூப் 9. குவி அல்லது கோத்த் 1 0. (35 T LLUIT 11. பிராகூய் 12, LDirgi) CLT 13. கொடகு l 4 - LI L 55 IT 1 5, (ο) εί του ΙτLή) 16. இருளா 17. குறவா 18. பார்ஜி 19. கொண்டா அல்லது கூயி 20, கதபா 21. நாய்க்கி 22. பெங்கோ 23. G)5ist L.L. Fr 24. ஒல்லாரி
25. (35 TLIT
மூலத் திராவிட மொழியினின்று இம்மொழிகள் யாவும் கிளேத்தெழுந்த வரலாறு பற்றிப் பல திராவிட மொழியியல் அறிஞர்கள் ஆய்வுகள் செய்து வெளியிட்டுள்ளனர். இவை கிளைத்தெழுந்த வரன்முறையிலே அவை வடதிராவிடம், மத்தியதிராவிடம், தென்திராவிடம் என மூன்று உப பிரிவுகளுக்குள் அடங்குவதாகக் கொள்ளலாம். தமிழ், மலையாளம் முதலாய மொழிகளை உள்ளடக்கிய தென் திராவிடம் ஏனைய வட, மத்திய திராவிடமொழிகளின்றும் சில பண்புகளிலே வேறுபட்டமைகின்றது.
1. மூலத் திராவிட மொழியிலே யகர மெய்யினை முதனிலையாகக் கொண்ட சொற்களில், தமிழ் தவிர்ந்த ஏனைய திராவிட மொழிகளிலே அவ் யசுரம் மறைந்து விட்டது. (உ-ம்: யாடு, யாமை, யானை). அவ்வாறு யகர மெய் மறைந்ததன் பலணுக அதனைத் தொடர்ந்து இடம் பெற்ற உயிர், வடதிராவிடம் மத்திய திராவிடம் ஆகியன வற்றில் ஏகாரமாகவும், தென் திராவிடத்தில் ஆகாரமாகவும் ஆயிற்று.

Page 18
6 தமிழ்மொழி இலக்கண இயல்புகள்
வடதிராவிடம், தென்திராவிடம்
மத்தியதிராவிடம்
துளு: ஏடு ( e du ) தமிழ் ஆடு ( at u)
- -- தெலுங்கு:ஏடிக் ( e d i k a) மலையாளம்: ஆடு (a t u )
στι (εt a ) கோத் ஆற் (a r )
கூர்க்: ஏழு - (e r a ) கன்னடம், ஆடு ( at u )
மால்தோ:ஏறெ (C1 e ) கொடகு ஆடி ( & d i )
பிராகுவி:ஹேட் ( h e t )
2. தென்திராவிடத்தில் உயர்திணையில் ஆண், பெண், பலர் என்னும் பாற் பாகுபாடும், அஃறிணையில் ஒருமை, பன்மை என்னும் பாகுபாடும் உண்டு. ஆனல் வட, மத்திய திராவிடங்களிலே பெண்பால் அஃறிணையாகவே கருதப்படுகின்றது. உதாரண மாகத் தமிழ், மலையாளம் ஆகிய தென் திராவிட மொழிகளில் இவன், இவள், இது என மூன்று கூட்டுச் சொற்கள் அமைய வட, மத்திய திராவிட மொழிகளான கொலாமி, கூவி ஆகியவற்றிலே பெண்பாலையும் அஃறிணை ஒருமையையும் குறிக்க
ஒரு சொல்லும், ஆண்பாலேக் குறிக்க இன்னுெரு
சொல்லும் அமையும்:
கொலாமி: இம் (im): "இவன்' (3) ġi, (id): “g)6) Il Gir'
*இது
குவி ஈவஸி (Wasi): "இவன்"
Ff G) (idi) இவன்'
3. தமிழ் ஒரு திராவிடமொழி
தமிழ் ஒரு திராவிட மொழி என்பதை வாய்பாடுபோல நாம் கூறி வருவது வழக்கம். அம்மொழி திராவிட மொழி எனக் கருதப்படுதற்கு எத்தகைய பண்புகளைத் தன்னகத்தே கொண்டமைந்துள்ளது என்பது கூர்ந்து நோக்கற்பால

தமிழ் ஒரு திராவிடமொழி 7
தாகும். திராவிட மொழிகளிற் காணப்படும் பொது இயல்பு களைக் கால்டுவெல் தன்னுடைய திராவிடமொழிகளின் ஒப்பிலக்கண நூலிலே விரிவாக எடுத்துக் காட்டியுள்ளார். அப்பொது இயல்புகள் யாவற்றையுமே விளக்குவதற்கு அவர் தமிழ் மொழியினையே பிரதான உதாரண மொழி யாகக் கொண்டுள்ளார். இது தொடர்பாக தெ. பொ. மீனுட்சிசுந்தரன் கூறிய கருத்தினை இங்கு குறிப்பிடுதல் அவசியம்:
'உலகு படைக்கப்பட்ட நாளில் ஒரே மொழிதான் இருந்தது" என்ற விவிலிய நூலின் கருத்தை நிறுவுவதற்காக இந்நூலின் பெரும் பகுதி திராவிட மொழிகளைப் பிற குடும்ப மொழிகளுடன் ஒப் பிட்டுக் காட்டுவதற்கே பயன்படுத்தப்பட்டிருக் கிறது. தமிழ்ச் சொற்களின் தொன்மையும் தூய்மையும் கால்டுவெல்லேப் பெரிதும் கவர்ந் திருக்கலாம். எனவே பழைமையானவை என இன்று கருதப்படும் பிற திராவிட மொழிச் சொற்களுக்குப் பதில் தமிழ்ச் சொற்களே பழைமை யானவை எனக்காட்ட அவர் விழைந்தார் எனக் கருதலாம்.9
தெ. பொ. மீனுட்சிசுந்தரனின் விமர்சன நோக்கினை நாம் வரவேற்கும் அதே வேளையில், கால்டுவெல் கூறியவை, தமிழ்மொழி எவ்வாறு திராவிட மொழியெனக் கொள்ளப் படலாம் என்பதற்குப் போதுமான சான்ருதாரங்களாக அமைகின்றன. அவற்றுட் சிலவற்றை இங்கு தருகிருேம்.
3. 1 இடைவெளி நிரப்ப உடம்படுமெய்
திராவிட மொழிகள் எல்லாவற்றிலுமே இரண்டு உயிர் ஒலிகள் அருகருகே இடம்பெறுவதைத் தடுப்பதற்குச் சில மெய்யொலிகளே அவ்விரு உயிரொலிகளுக்கிடையே புகுத்தும் வழக்கம் காணப்படுவதாகக் கால்டுவெல் (பக் 197 - 205), கூறுவார். அவ்வாறு புகுத்தப்படும் மெய்களென ய், வ், ம், ர், ன் ஆகியனவற்றை அவர் குறிப்பிடுவர். தமிழ்

Page 19
8 தமிழ்மொழி இலக்கண இயல்புகள்
மொழியைப் பொறுத்தவரையில் தமிழ் இலக்கணநூலார்
ய், வ் ஆகிய இரு உடம்படுமெய்களையே கொண்டனர். இச் சந்தர்ப்பத்தில் தமிழ்மொழியில் உடம்படுமெய்யின் வரலாற்றினை நோக்குதல் பொருத்தமாகும்.
நமது ஆதியிலக்கண நூலாசிரியராகிய தொல்காப்பியர்
எல்லா மொழிக்கு முயிர்வரு வழியே யுடம்படு மெய்யி னுருவுகொளல் வரையார்
(6τ(Lρ. 140)
என்று கூறுகின்ருர், அவருடைய சூத்திரத்தின் படி இரண்டு உயிர்கள் அருகருகே வருமிடத்து உடம்படுமெய் புணர்த் துதல் அவசியம் என வற்புறுத்தப்படவில்லை. ' உருவு கொளல் வரையார்' என்று கூறுவதனல் அது கட்டாய நியதியாகத் தொல்காப்பியருடைய காலத்திலே நிலவவில்லை யெனக் கொள்ளலாம். இந்நிலைமை தொல்காப்பியருடைய
காலத்தில் மட்டுமன்றிப் பிற்காலத்திலும் சாசன வழக்கிலே
நிலவியதற்கு ஆ. வேலுப்பிள்ளே பல ஆதாரங்கள் காட்டி யுள்ளார்.7 கோஇலுக்கு, திசைஓர், தேவரடிஆர், இறைஇல், நெற்றிஇல் ஆகியன அவர் காட்டும் உதாரணங்களுட் சிலவாகும். இக்கால எழுத்து வழக்கிலே அச்சுவாகனம், ஆங்கில மொழி ஆகியவற்றின் செல்வாக்கின் காரணத்தி னுலே சொற்களைத் தனித்தனியாகப் பிரித்தெழுதும் பண்பு காணப்படுகின்றது. இதனுல் ஒரு சொல்லின் இறுதியிலே உயிர் எழுத்து வந்து, அடுத்த சொல்லின் முதலிலேயும் உயிரெழுத்து வரின் அவற்றுக்கிடையே உடம் படுமெய் புணர்த்துதல் தவிர்க்கப்பட்டுள்ளது. உதாரணமாக சு. வித்தி யானந்தனின் தமிழர் சால்பு என்னும் நூலில் ஒரு பந்தியினை
நோக்கலாம்:
* திராவிட மக்கள் தமக்கே உரிய பல உயரிய பண் பினேயும் சிறப்பினேயும் உடையராய் இருந்தனர். ஆரிய மக்களின் பண்பாட்டு வளர்ச்சிக்கும் பெருமைக் கும் பலப்பல வழிகளில் துணைபுரிந்தனர். இவ்விரு கூட்டத்தாருக்கும் உரிய பண்புகள் யாவும் ஒருங் கியைந்தே இந்து நாகரிகம் என்னும் உயரிய பண்பாடு உருவாயிற்று'.8
طر)

தமிழ் ஒரு திராவிடமொழி 9
இப்பந்தியிலே தமக்கே உரிய, பல உயரிய, இயைந்தே இந்து என்னுஞ் சொற்ருெடர்கள் காணப்படுகின்றன. உடம்படு மெய்கள் புணர்த்தி எழுதப்படின் அவை தமக்கேயுரிய, பலவுயரிய, இயைந்தேவிந்து என அமையும். ஆனல் தமிழர் சால்பு ஆசிரியர் அவற்றைப் புணர்த்தாமல் தனிச் சொற் களாக எழுதி உள்ளார். சொற்களுக்கிடையே உடம்படு மெய் புணர்த்தாத நிலையே இன்றைய தமிழ் வழக்கின் இயல்பாகும். -
தொல்காப்பியர் 'உடம்படுமெய்யின் உருவு கொளல் வரையார்’ என்று கூறிய காலம் தமிழ்மொழியிலே பாகத
மொழியின் செல்வாக்கு ஏற்பட்ட காலமெனக் கூறலாம்.
இதற்கு ஆ. வேலுப்பிள்ளை, டாக்டர் க. கணபதிப்பிள்ளையின் விளக்கத்தினைத் துணையாகக் கொண்டு கொடுக்கும் விளக்கம் பொருத்தமாக அமைகின்றது:
'இரண்டு உயிரெழுத்துக்கள் இவ்வாறு தொடர்ந்து வருவதற்கு, அண்ணுமலைப் பல்கலைக்கழக வெள்ளி விழா மலரில் டாக்டர் க. கணபதிப்பிள்ளை கொடுக்கிற விளக் கம் பொருத்தமானது போலக் காணப்படுகிறது. இந்தி யாவில் திராவிட மொழிக்கு அயலிலேயே வழங்கி வரும் வடமொழியில், மிகப் பழைய காலத்தில், சொல்லி னிடையில், இரண்டு உயிர் எழுத்துக்கள் தொடர்ந்து வருவதில்லை. ஆணுல், பாகத மொழிக்காலத்தில், ஒரு சொல்லினுள்ளேயே, இடையில் ஒலிக்கும் சில மெய் யெழுத்துக்கள் மறைய இரண்டு உயிர் எழுத்துக்கள் தொடர்ந்து வந்தன.
உதாரணங்கள்:- சங்கதமொழி ராஜ பாதகம்: ரா.அ
g (5LI: 9 : Elijs9
இதேமாதிரியான மாற்றம் தமிழிலும் நிகழ்ந்திருக்
ές ου Πτι ο ' ' 9
மேற்காட்டிய கூற்றுக்களே அடிப்படையாக வைத்து நோக்கு மிடத்துத் தமிழிலும், ஏனைய திராவிட மொழிகள் போல உடம்படுமெய் புணர்த்துதல் ஆரம்பத்திலே அவசியமாக
岛一&

Page 20
10 தமிழ்மொழி இலக்கண இயல்புகள்
இருந்திருக்க வேண்டும். தொல்காப்பியருடைய உடம்படு மெய்க் குத்திரத்திற்கு (சூ. 140) உரை எழுதிய நச்சினுர்க் இனியர்,
'அவை யகரமும் வகரமுமென்பது முதனூல் பற்றிக் கோடும்;
உடம்படு மெய்யே யதார வகார முயிர்முதன் மொழிவரூஉங் கால யான
எனவும்,
இறுதியு முதலு முயிர்நிலை வரினே யுறுமென மொழி வுடம்படு மெய்யே
எனவுங் கூறினுராகலின், உயிர்க்குள் இகர ஈகார ஐகார ஈறு யகர உடம்படுமெய் கொள்ளும், ஏகாரம் யகாரமும் வகாரமுங் கொள்ளும். அல்லன வெல்லாம் வகர உடம்படுமெய்யே கொள்ளுமென்று உணர்க. 10
என்று கூறுவதை நோக்குக. இதனுல், தொல்காப்பியருக்கு முன்னர் உடம்படுமெய் புணர்த்துதல் அவசிய நியதியாக அமைந்திருக்க, பாகத மொழிச் செல்வாக்கினுலேற்பட்ட தமிழ் மொழியின் இலக்கணத்தைக் கூறிய தொல்காப்பியர் காலத்திலே அது அவசிய விதியாக அமைந்திருக்கவில்லை எனக் கொள்ள இடமுண்டு. அத்துடன் கி. மு. 3 ஆம் 2ஆம் நூற்றுண்டுகளைச் சேர்ந்தனவெனக் கருதப்படும் குகைக் கல்வெட்டுக்களின் மொழியும் உடம்படுமெய் தொடர்பாகத் தொல்காப்பியர் கால மொழியை ஒத்த தாகவே கானப்படுகின்றது. குகைக் கல்வெட்டு மொழியிலே உடம்படுமெய் புணர்த்துதல் அவசியமாகக் கொள்ளப்பட வில்லே. உதாரணமாக, "நிசுமத்தோர் கொட்டிஓர்' என்னுந் தொடரிலே 11 1கொட்டிஒர்' என்னுஞ் சொல்லில் இ ஒ என்னும் உயிர்கள் அருகருகே வந்துள்ளன. தொல் காப்பியர் இலக்கணம் வகுத்த மொழியிலும் உயிர் ஒலிகள் அருகருகே இடம்பெறுஞ் சந்தர்ப்பங்கள் இருந்துள்ளன. எனினும், தொல்காப்பியச் சூத்திரம், அதற்குரிய உரை, தன்காலத்து வழக்கு ஆகியனவற்றை நோக்கிய நன்னூலார்:

தமிழ் ஒரு திராவிடமொழி
இஈ ஐவழி யவ்வு மேனே உயிர்வழி வவ்வு மே முனிவ் விருமையும் உயிர்வரி னுடம்படு மெய்யென் ருகும்.
(சூத் 162)
என உடம்படுமெய் புகுத்துதல் ஒர் அவசிய நியதியாகக் குறிப்பிடுவர், ய், ள் ஆகிய இரண்டினையுமே தமிழ் இலக்கண நூலார் உடம்படுமெய்களெனக் கொண்டனர். ஆணுல், தமிழ் மொழியின் வழக்குகள் யாவற்றையும் நன்கு உற்று நோக்கின், ய், வ் ஆகியன மட்டுமன்றி. ம், ர், ன் ஆகிய மெய்யொலிகள் கூடஉடம்படுமெய்களாக இடம்பெறுவதைக் காணலாம். இவை பெரும்பாலும் பேச்சு வழக்கிலேயே இடம் பெறுகின்றன. பேச்சு வழக்குக்கு இலக்கணம் வகுக்காத நமது இலக்கண நூலார் இவற்றைக் குறியாது விட்டனர். என்ன + ஓ என்னுந் தொடர் என்னவோ என வ5ர உடம் படுமெய் பெற்று வருதல் போல என்னமோ என்று மகர உடம்படுமெய் பெற்றுத் தமிழ்ப் பேச்சு வழக்கிலே கையாளப் படுகின்றது. ஆா + உல் என்னும் தொடர் பகரமோ பரமோ பெருது ரகர உடம்படு மெய் பெற்றே காரும் என அமைகின்றது. இவ்வுதாரணத்தைக் கால்டுவெல் எடுத்தாண்டுள்ளார்.12 தமிழில், னகரம் உடம்படுமெய்யாக வருவதுபற்றிக் கால்டுவெல் பின்வருமாறு குறிப்பிடுவர் :
'தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்தால் இதற்கு மேலும் ஒரு புதுமையைக் காணலாம். 'வ சுரத்துக்குப் பதிலாக, *ன கரத்தை மேற்கொள்ளும் முறை தமிழில் காணப் படும். தமிழ் அஃறிக்ணப் பன்மைச் சுட்டு அவை என்பதேயாதலின், அம்மொழி அஃறிணைப் பன்மை வினேமுற்று விகுதியாக அவை அல்லது அதன் தொண்மை வடிவாகிய 'அவ்' என்பதே வருதல் வேண் டும். ஆஞல், அதற்குப் பதிலாக, 'அன' என்பதே வருகிறது. 'அ' கரச் சுட்டுக்கும் அஃறிணைப் பன்மைக் கும் இடையே "வ கரத்திற்கு பதிலாக, ன கரமே உடம்படுமெய்யாக வந்துள்ளது. "இருக்கின்றவ' என வருவதற்குப் பதிலாக இருக்கின்றன’ என்பதே வரும்.'13 -

Page 21
I 2 தமிழ்மொழி இலக்கண இயல்புகள்
தமிழ் இலக்கண நூலார் இருக்கின்றன’ என்னும் சொல்லில் வரும் ன கரத்தை 'அன்' எனுஞ் சாரியையின் ஒரெழுத் தாகவே கொள்வர். சாரியை பற்றிய தமிழ் இலக்கண நூலாரின் கொள்கை தனியே ஆராயப்பட வேண்டும். எனினும் அவர்களுடைய கொள்கை தெளிவற்றதாயுள்ளது என்பதே எமது அபிப்பிராயம். அதனுல், கால்டுவெல் கூறும் கருத்துப் பொருத்தமானது எனவே கொள்ள வேண்டும்.
3. 2. மென்மை புகுத்துதல்
வல்லெலுத்துக்களின் வல்லொலி ஆற்றலைக் குறைக்க மூக்கின எழுத்துக்களைப்புகுத்தும் இயல்பு திராவிட மொழி களுக்கு உண்டெனக் கால்டுவெல் கூறுவர். 14 இப் பண்பு தமிழ்மொழியிலும் நன்கு காண்ப்படுகின்றது. உதாரணமாக சிலப்பதிகாரம், குரக்குப் பட்டடை என்னும் தொடர்களே நோக்குக. இவற்றைப் பகுபதங்களாகப் பிரிக்குமிடத்து.
சிலப்பு + அதிகாரம்
குரக்கு + பட்டடை என்றே அமையும். சிலப்பு, குரக்கு என்பனவே பழைய வடிவங்களாக, அதாவது, மூலத் திராவிடமொழிவடிவங் களாக அமைந்திருக்க வேண்டும். ஆணுல், தமிழ்மொழியில் அச் சொற்களிலுள்ள வன்மையைக் குறைப்பதற்காக, சிலம்பு, குரங்கு என மென்மை புகுத்தி அச் சொற்களை நாம் வழங்குகின்ருேம். கு, டு, து, று ஆகிய ஈறுகளையுடைய ஈரெழுத்துச் சொற்கள் புதிய ஆக்கம் பெறுமிடத்து ஈறு இரட்டிப்பது இயல்பாகும். பகு என்னும் வினையடி, பெயர்ச் சொல்லாக ஆக்கம் பெறுமிடத்து, பக்கு எனவே அமைய வேண்டும். ஆணுல், மென்மை புகுத்தும் பண்பு காரணமாக அச் சொல் பங்கு என அமைகின்றது சுட்டுப்பெயர்களாகிய அது, இது, உது என்பன அகர ஈறுபெற்று அடைகளாக மாறுவதுண்டு. அவை அகர ஈறு பெறுமிடத்து.
அது+அ = அத்த இது + அ = இத்த உது + அ  ைஉத்த

தமிழ் ஒரு திராவிடமொழி
அத்து, இத்த, உத்த எனவே அமையும் ஆணுல் மென்மை புகுத்தும் பண்பு காரணமாக அவை முறையே அந்த, இந்த, உந்த என அமைந்துள்ளன. தமிழிலே நாம் அது, இது என வழங்குவனவற்றைக் கன்னட மொழியிலே முறையே அந்து, இந்து என வழங்குகின்றனர். இன்னுெரு திராவிட மொழியாகிய துளுவிலே இந்து, உந்து என்னுஞ் சொற்களுண்டு. தமிழ் மொழியிலே மென்மை புகுத்தும் பண்புக்கு இன்னுமோர் உதாரணமாக தான்கு என்னுஞ் சொல்லேக் காட்டலாம். நால் என்னும் எண் அடைப் பெயருடன் கு என்னும் விகுதியைச் சேர்ப்பதால் எண்ணுப் பெயரொன்று ஆக்கப்படுகின்றது. நால் + கு என்பது தமிழ் இலக்கணநூலார் கூறிய புணர்ச்சி விதிகளின்படி நாற்கு என அமையவேண்டும். ஆனல் வல்லின மெய்யாகிய றகரத் துக்குப் பதிலாக மெல்லின மெய்யாகிய னகரம் தோன்றி, அச்சொல் நான்கு என வழங்கப்படுகின்றது.
4. தமிழும் இந்தோ - ஐரோப்பிய மொழிகளும்
திராவிடமொழிகள் சமஸ்கிருத மொழியிலிருந்தே கிளைத்தெழுந்தன என்னுங் கருத்தினைக் கால்டுவெல் வன்மை யாகக் கண்டித்துள்ளார். 19 திராவிடமொழிகள் இலக்கண அமைப்பு முறையிலே இந்தோ - ஐரோப்பிய மொழிகளி லிருந்து வேருணவை என்று விளக்குதற்குக் காட்டக் கூடிய ஆதாரங்கள் யாவற்றையுமே தமிழ்மொழியில் இருந்து பெறக்கூடியதாயுள்ளது, அவ்வாறு காட்டப்படும் வேறு பாடுகள் பின்வருமாறு:
1. தமிழ்மொழியிலே எழுவாய்க்கும் பயனிலைக்கு மிடையே திணை, பால், எண், இடம் என்ற வகையிலே இயைபு காணப்படுகின்றது.
உதாரணமாக, அவன் வந்தான் அவள் வந்தாள் அது வந்தது
என்னும் வாக்கியங்கள் இந்தோ-ஐரோப்யிய மொழி சுளுள் ஒன்ருகிய ஆங்கில மொழியிலே,

Page 22
4.
தமிழ்மொழி இலக்கண இயல்புகள்
He came She came
It Caline
எனவே அமையும். தமிழ் மொழியிற் பயனிலையிலே வந்தான், வந்தாள், வந்தது என்னும் வேறுபாடுகள் ஆங்கில வாக்கியங்களின் பயனிலையிலே காணப்பட வில்லை. இது போலவே ஏனைய இந்தோ-ஐரோப்பிய மொழிகளிலும் இவ்வியல்பு காணப்படுகின்றது.
தமிழ்மொழியிற் பெயர்ச்சொல்லினே விசேடித்து வரும் அடை அப் பெயர்ச் சொல் கொள்ளும் இலக்கண இயல்பினைப் பெறுவதில்லை. ஆணுல் இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் அபபடி உண்டு. Ggf†LDsšr G)LDTßluflö), Der Man Und Die Frau என அமையும் தொடரினே நோக்குக. tேan என்பதனை விசேடிக்க 087 என்பதும், Frau என் பதனை விசேடிக்க 08 என்பதும் இடம் பெறு கின்றன. அத்தொடரினேத் தமிழ்மொழியிலே ஒரு ஆணும் ஒரு பெண்ணும் என்று பெயர்த்து விடலாம். ஆண், பெண் என்னுஞ் சொற்களுக்கு முன்வரும் அடை ஒரு என்னும் ஒரே சொல்தான். ஆனுல் ஜெர்மன் மொழியில் ஆணுக்கும் பெண் ணுக்கும் வெவ்வேறடைகள் இடம் பெறுகின்றன. தமிழ் மொழியிற் பெயர்ச் சொல் வேற்றுமை உருபேற்குமிடத்து அதற்கு முன்னர் விரும் அடை யும் அதே வேற்றுமை உருபினை ஏற்கும் வழக்கம் இல்லை. ஆனல் இந்தோ-ஐரோப்பிய மொழிகளிலே இவ்வழக்கம் உண்டு. சமஸ்கிருத மொழியிலிருந்து ஒர் உதாரணத்தைக் காட்டலாம். க்ருஷ்ணம் காகம் என்னும் தொடரினை நோக்குக, காக என்னும் பெயர்ச் சொல் க்ருஷ்ண என்னும் அடையினைப் பெறுகின்றது. இாக என்னும் பெயர்ச்சொல் ம் என்னும் இரண்டாம் வேற்றுமை உருபினை ஏற் கும்போது அதற்கு முன்னுள்ள அடையும் அவ்
%,

தமிழ் ஒரு திராவிடமொழி 5
வுருபினை ஏற்கின்றது. அதனுல் க்ருஷ்ண காக என்னுந் தொடர் க்ருஷ்ணம் காகம் என ஆகின் றது. ஆனுல் தமிழிலோ அத்தொடரை மொழி பெயர்க்குமிடத்துக் கறுப்புக் காகத்தை என்றுதான் கூறுவோம். இங்கு கறுப்பு என்னும் அடைச்சொல் இரண்டாம் வேற்றுமை உருபு ஏற்பதில்லை.
3. ஒன்றுக்கு மேறபட்ட பெயர்ச்சொற்கள் அடுக்காக வருமிடத்து இறுதிப் பெயர்ச்சொல்லுக்கு முன்பாக இணைப்பிடைச் சொல் ஒன்றினை வழங்குதல் இந்தோ-ஐரோப்பிய மொழிகளிலே காணப்படும் இயல்பாகும். உதாரணத்துக்குப் பின்வரும் ஆங் கிலத் தொடரினை நோக்குக -
Rama, Lakshmana, Sita and Hanuman
மேற்காட்டிய தொடரிலே and என்னும் இணைப் பிடைச் சொல் கையாளப்பட்டுள்ளது. ஆணுல், தமிழ் மொழியிலோ அத்தகைய சந்தர்ப்பங்களிலே ஒவ்வொரு பெயர்ச் சொல்லுடனும் எண்ணும்மை சேர்த்தல் வழக்காகும். மேற்காட்டிய ஆங்கிலத் தொடரைத் தமிழிலே மொழி பெயர்ப்பின்,
ராமனும் லட்சுமணனும் சீதையும் அனுமானும் என அமையும்.
4. தமிழ்மொழியிலே ஒன்றுக்கு மேற்பட்ட அடிப்படை வாக்கியங்களே இணைத்துத் தொடர்வாக்கியமாக்கு மிடத்து எச்சங்களே அவற்றைத் தொடர்புறுத்திச் செல்கின்றன. ஆணுல் இந்தோ-ஐரோப்பிய மொழி களிலே இணைப்பிடைச் சொற்களே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, செல்வி பாடசாலைக்குப் போனுள் நான் செல்வியைக் கண்டேன் என்னும் இருவாக்கியங்களும் இணையுமிடத்து,
நான் பாடசாலேக்குப் போன செல்வியைக்
கண்டேன்

Page 23
6 தமிழ்மொழி இலக்கண இயல்புகள்
என அமையும். ஆனல் ஆங்கிலத்திலே இன் வாக்கியங்கள் இணையுமிடத்து இணைப்பிடைச்சொல் உபயோகிக்கப்படுகின்றது.
Selvi went to School
I Saw Selv i
என்னும் இரு வாக்கியங்களும் இணைந்து ஒரு தொடர்வாக்கியமாக அமையும்போது,
I saw Selvi who went to school
என who என்னும் இணைப்பிடைச் சொல் பயன் படுத்தப்படுகின்றது.
5. தமிழிலே எதிர்மறை வினையுண்டு. தமிழ் வினைச் சொல்லைப் பாகுபாடு செய்யுமிடத்து, அப்பாகு பாட்டினுள் எதிர்மறை வினையும் ஒன்றுக அமையும்.
அவரோ வாரார்.
என்னுஞ் சங்கப் பாடலடியில் வாரார் என்பது எதிர்மறை வினைமுற்ருக அமைகின்றது. இன்று எங்களுடைய பேச்சுவழக்கில் அது வரார் என்று அமையும், ஆணுல், இந்தோ-ஐரோப்பிய மொழி களில் எதிர்மறையைக் குறிக்க அதற்கென ஒரு தனிச் சொல் பயன்படுத்தப்படுகின்றது:
Not (ஆங்கிலத்தில்) Nicht (ஜெர்மன் முதலிய மொழிகளில்) Na (சமஸ்கிருதத்தில்)
Na (சிங்களத்தில்)
மேற்காட்டியவாறு திராவிட மொழிகளுக்கும் இந்தோஐரோப்பிய மொழிகளுக்குமிடையே பல வேறுபாடுகளுண்டு. இவ்வேறுபாடுகளை விளக்குவதற்குத் தமிழ் மொழியிலிருந்தே எல்லாச்சான்ருதாரங்களையுங் கொடுக்கக் கூடியதாயுள்ளது.

தமிழ் ஒரு திராவிட மொழி II 7
5. தமிழும் யப்பானிய மொழியும்
யப்பானிய மொழி, இலக்கிய அறிஞரான சுசுமு ஓனே என்பவர் தமிழ்மொழிக்கும் யப்பானிய மொழிக்குமிடையே அடிப்படையான தொடர்பு உண்டு என்ருெரு கருதுகோளினை (Hypothesis) அண்மையிலே முன்வைத்து அது தொடர் பாக ஆய்வுகள் செய்து வருகின்றர். சென்ற தசாப்தத்திலே திராவிடமொழிகளுக்கும் யப்பானிய மொழிக்குமிடையே நெருங்கிய ஒற்றுமையுண்டென சுசுமு ஷிபா (1974) , அகிர புஜிவர (1974, 1975, 1976, 1981) மினுெருகோ (1977, 1980) ஆகிய யப்பானிய அறிஞர்கள் கருத்துத் தெரிவித்தனர். திராவிடமொழிகளுள் மிக நீண்ட இலக்கி
u ULI பாரம்பரியமுள்ள தமிழ்மொழியின் பண்டைய
நிலையினையும் யப்பானிய மொழியின் பண்டைய நிலையினை யும் சுசுமுஒணுே ஒப்பிட்டாராயத் தொடங்கிஞர். தமிழ் மொழிக்கும் யப்பானிய மொழிக்குமிடையே ஏதோ தொடர் பிருக்க வேண்டுமென்ற ஊகத்தினைச் சென்ற நூற் முண்டிலேயே கால்டுவெல் முன்வைத்துள்ளார். இரண்டு மொழிகளிடையேயும் ஒற்றுமைப்பட்ட வடிவமும் பொருளு முடைய சில சொற்களே அவதானித்து, அவற்றைத் தன்
ணுடைய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூலிலே குறிப்
il GgiT STITri:
தமிழ்மொழி யப்பானியமொழி
இரு அரி, இரி, ஒரி, உரி ಔ(ಗ್ರ குரோ, குரொஇ பர Lu(5 (baru) gap(5 Լմեք LHCT53) (burui) (15 g)
(furui)
சுசுமு ஓளுேவால் முன்வைக்கப்பட்ட கருதுகோளுக்கு ஆதாரங்கள் உள்ளனவா என்பது பற்றித் தற்போது தோக்கியோவில், அக்சுயின் பல்கலைக்கழகத்திலே, ஒனேவு டன் அ. சண்முகதாஸ், மனுேன்மணி சண்முகதாஸ் ஆகி யோர் சேர்ந்து ஆய்வுகள் நடத்திவருகின்றனர்.
த-3

Page 24
I
இலக்கணம்: நமது மரபும் நவீன நோக்கும்
தமிழ்மொழிக்கும் யப்பானிய மொழிக்குமிடையே பல வகையியல் ஒற்றுமைகள் (Typological Correspondences) காணப்படுகின்றன. அவை வருமாறு:
I.
இருமொழிகளிலுமுள்ள பெயர்ச்சொல் வடிவங் களும், வேற்றுயுருபுகள் போன்ற பின்னெட்டுக் களை ஏற்குமிடத்துத் தம்முடைய வடிவங்களிலே மாற்ற மடைவதில்லே. உதாரணம்:
தமி. கல் + இன் கல்லின் (kallin) யப் இலி + ஞெ இஸினுெ (isino) தமி, கல் + ஒடு : assid@aỪTT@ (kallotu)
யப். இஸி + தொ இஸிதொ (isito)
மேற்காட்டிய உதாரணங்களிலே 'உடைமை "உடனிகழ்ச்சித் தொடர்புகளைக் காட்டும் இன், "ஒடு" என்னும் தமிழுருபுகளும், ‘னுெ" தொ? என்னும் யப்பானிய உருபுகளும் கல்' என்னும் தமிழ்ப் பெயர்ச்சொல்லுடனும், "இஸி’ (கல்) என்னும் யப்பானியப் பெயர்ச்சொல்லுடனும் முறையே சேர்க்கப்பட்டுள்ளன. இருமொழிப் பெயர்ச்சொற்களின் வடிவங்களும் மாருமலமைந் துள்ளன.
இருமொழிகளிலும், வாக்கியத்தின் எழுவாய் முதலிலும் பயனிலை அதனைத் தொடர்ந்தும் இடம் பெறும் :
தமி @ລາວທີລ໌) போயிற்று uLuLu : LuGaj @m) if769)J (Faru sarinu)
பெயர்களே விசேடிக்கும் அடைகள் அப் (c) Llului aj: சொற்களுக்கு முன்னரேயே இடம்பெறும்:
தமி. கரு மலே Lil' . . (565 (9) (LLD (kuroi yama)

தமிழ் ஒரு திராவிடமொழி - 9
4.
வினையை விசேடிக்குஞ் சொற்கள் அவற்றுக்கு முன்னரேயே இடம்பெறும்:
தமி. : மெல்ல நட шL. : uligiji 9,05 Gla (yukkuri aruke) தமி. சிறுத்துத் தோன்றும் ALL'ů. : AKAMap-g5 Lóu (chifisha-ku miyu)
செயப்படுபொருள் வினைக்கு முன்னர் வரும்:
தமி. கல்லின் நாட்பலி யூட்டி யப். இஸி-ணுெ சஸ்கெமொனுெ சித்த (Isino sasagenmono sitta)
இந்தோ-ஐரோப்பிய மொழிகளிலே உபயோகிக்கப் - படும் தொடர்பிணைச் சொற்களுக்குப் பதிலாகப் பெயரெச்சங்கள் உபயோகப்படுகின்றன:
தமி. அவர் இருந்த என் நெஞ்சு யப் : சுர-க ஸந்தெஇரு வதஷினெ
கொகொரொ (Kara-ga sundeiru watashino kokoro)
ஆங்கில மொழியிலே துணை வினைகள் முதல் வினை களுக்கு முன்னரேயே இடம்பெறும், உதாரணமாக, எதிர்சுாலத்தைக் குறிக்கும் துணைவினையாகிய wit முதல் வினையாகிய ஜூ வுக்கு முன்னரே wil ge to school என்னும் வாக்கியத்திலே இடம் பெறுகின்றது. தமிழ், யப்பானிய மொழிகளிலே அத்தகைய உறுப்புகள் முதல் வினேகளுக்குப் பின்னரேயே வரும்:
தமி. மழை பெய்- யும் (peyy-um) யப் : அமெ புர- மு (Fura-mu)

Page 25
20
10.
தமிழ்மொழி இலக்கண இயல்புகள்
மேற்குறிப்பிட்ட வினைத்துணையுறுப்புக்கள் இரண்டு மொழிகளிலும் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கிலேயே ஒட்டப்படுகின்றன; பின்வரும் தமிழ் வினைச்சொல் லின் அமைப்பு (1) வினையடி, (2) பிறவினை யுறுப்பு, (3) செயப்பாட்டுவினையுறுப்பு, (4) எதிர் மறையுறுப்பு, (5) எதிர்கால உறுப்பு, (6) விஞ உறுப்பு:
நடத்தப்பட்டன்றுங்கொல்லோ
Nata — tta — ppatt - anr - um -- kollo
(1) (2) (3) (4) (5) (6) இதே ஒழுங்கிலேயே இப்பொருளைத் தரும் யப்பானிய வினையும் அமைகின்றது:
யுகஸெரரெனைமுக yuka - se - rare - Hai - Ilmu – ka (l) (2) (3) (4) (5) (6)
இரு மொழிகளிலும் சிறப்பான நுண்ணிதான
பொருளேத் தரும் இடைச்சொற்கள் பயன்படுத்தப் படுகின்றன. இவை பெயருக்குப் பின்னே வினைக் குப் பின்னுே இடம்பெறும். வகை மாதிரிக்கு ஒரு தாரணம் மட்டும் கொடுக்கப்படுகின்றது:
தமி. அருளும் அன்பும் அறனும்
arul-um anp-urn araan-urin
யப்.: மெகுனிமொ அஇமொ துதொமெமொ
meguni-mo ai-no tutome-mo
வினவிடைச்சொற்கள் பெரும்பாலும் வாக்கியத் தினிறுதியிலேயே இடம்பெறுகின்றன:
தமி : ஒரி கொல்லோ அல்லன் கொல்லோ யப் : ஒரி க னெஹித்தொக

இலக்கணம் : நமது மரபும் நவீன நோக்கும் 2.
இவ்வாறு இவ்விரு மொழிகளுக்குமிடையே பல வகை யியல் ஒற்றுமைகள் இருக்கின்றன. வகையியல் ஒற்றுமை களை மாத்திரம் இரு மொழிகளின் அடிப்படை ஒற்றுமைக் குச் சான்ருதாரங்களாகக் கொள்ளமுடியாது. இரு மொழி களும் இலக்கண அடிப்படையிலே எத்தகைய ஒற்றுமை சுளைக் கொண்டுள்ளன என்பதிலேயே அவ்வடிப்படை ஒற்றுமை தங்கியுள்ளது. அண்மையில் சுசுமு ஒனு நிஹொன் இஸென் (Nihor izen) என்ருெரு நூலை யப்பானிய மொழி யிலே எழுதி வெளியிட்டுள்ளார். அதிலே இருமொழிகளுக் கும் இலக்கண அடிப்படையிலே நெருங்கிய ஒற்றுமைகள் இருப்பதைக் காட்டியுள்ளார். இந்நூலின் தமிழ் வடிவம் வெளிவரும்போது தமிழறிஞர் அதன் குறை நிறைகளைக் காணமுடியும். இவ்வொற்றுமை ஆய்வு பண்டைத் தமிழ் மொழிக்கும் பண்டைய யப்பானிய மொழிக்குமிடையே யாகும். நவீன யப்பானிய மொழியினை நவீன தமிழ் மொழியுடன் ஒப்பிடமுடியாதுள்ளது. சுசுமு ஓனுேவின் *யப்பானிய - தமிழ்மொழியுறவு' பற்றிய கருதுகோள் தொடர்பாகப் பின்வரும் முக்கியமான கட்டுரைகளும் நூல் களும் எழுதப்பட்டுள்ளன: Susumu Ohno (1980, 1983a, 1983b, 1987a, 987 b), Sanmugadas (1987a. 1987b, 1987-c, 1988), San mugadas & Manoramani (1986), Kamil Zvelebil (1985). இருமொழிகளுக்குமிடையேயுள்ள அடிப் படை இலக்கண ஒற்றுமைகள் தொடர்பான சான்ருதாரங் களைத் தேடும் மூயற்சி தொடர்ந்து நடைபெறுகின்றது.
அடிக்குறிப்புக்கள்
1. இவ்வளர்ச்சி பற்றிய விபரங்களுக்கு:
Robins, R. H., A Short history of Linguistics pp, 162-192
முத்துச் சண்முகன், இக்கால மொழியியல், ப. 19-25
2. மீனுட்சிசுந்தரன், தெ. பொ., தமிழ்மொழி வரலாறு
LI ... li 7 ..

Page 26
0.
ll.
12.
13.
14.
தமிழ்மொழி இலக்கண இயல்புகள்
Caldwell, R., A Comparative Grammar of the
Dravidian Languages, p. 4
மூ. கு. நூ. ப. 17.
இக்கட்டுரையிற் சில பண்புகளே தரப்பட்டுள்ளன,
மேலும் விபரங்கள் அறிய வேண்டின், பார்க்க:
(a) Zvelebil, K., ʻʻFrom Proto-Dravidian to Oid.
Tamil and Malayalam”, 1971, pp. 54-70
(b) Bright, William., “Dravidian Metaphony' 1966,
pp. 311-322.
மீனுட்சிசுந்தரன், தெ. பொ., மு. . நூ. பக் 18. வேலுப்பிள்ளை, ஆ, வரலாற்றுத் தமிழ் இலக்கணம்,
Lsji. 75 - வித்தியானந்தன், சு. தமிழர் சால்பு, பக். 13. வேலுப்பிள்ளை, ஆ. மு. கு. நூ. பக். 75. தொல்காப்பியம், எழுத்து, நச்சினர்க்கினியர் பக். 143.
தெ. பொ. மீனுட்சிசுந்தரன் தமிழ் மொழி வரலாற்று நூலிலே குகைக்கல்வெட்டுகளிற் காணப்படும் தொட ரமைப்புக்கு இத்தொடரினை உதாரணமாக எடுத் தாண்டுள்ளார். பக். 66,
Caldwell, R., bid, p. 180. ibid, p. 177. ibid, p. 168.

2
நமது மரபும் இலக்கணம் : நவீன நோக்கும்
1. எழுத்துஞ் சொல்லும் கருவிநூலே
இலக்கணம் டற்றித் தமிழறிஞர்கள் என்ன கருதினர் என்பதுபற்றி முதற்கண் நாம் நோக்கவேண்டும். பண்டைத் தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திலே ‘இலக்கணம் என்னுஞ் சொல் இரண்டு சூத்திரங்களிலே எழுத்தாளப் பட்டுள்ளது.1 ஆனல், இலக்கணம்' என்னுஞ் சொல் தனியே மொழிபற்றிய விவரணத்துக்காகத் தமிழ் நாட்டிலே கையாளப்படவில்லை. மொழியாலான இலக்கியம், அவ் விலக்கியத்துக்குப் பொருளாகும் கரு உரிப்பொருள், மக்கள் வாழ்வு, ஆகியவற்றின் நெறிகளைக் குறிக்கவும் இச்சொல்
பயன்படுத்தப்பட்டுள்ளது. (ஐந்திலக்கணம் கூறுந் தமிழ்
மரபுபற்றி இவ்வியலின் 4-ஆம் பகுதியிற் கூறப்படும்). ஆனல் மொழியின் நெறிகளைக் கூறுந் துறைக்கு ‘இலக்கணம்' என்னுஞ் சொல் பொருத்தமாகவே அமைகின்றது. மொழியின் இலட்சணங்களைக் கூறுவதுதான் இலக்கணம் என்று கொள்ளின் அது நவீன மொழியியற் கோட்பாட் டினையே பிரதிபலிக்கின்றது எனக் கூறலாம். ஆணுல், தொல்காப்பிய இலக்கண நூலினைச் சுட்டுதற்கு ‘புலம்
பனுவல் என்ற சொற்களையே அந்நூலுக்குச் சிறப்புப் பாயிரம் வழங்கிய பனம்பாரனர் கைக்கொண்டுள்ளார்.2

Page 27
24 தமிழ்மொழி இலக்கண இயல்புகள்
*புலம்’, 'பனுவல்" என்னும் இரு சொற்களுமே சாஸ்தி ரங்களை’ அல்லது "மெய்ஞானத்தினை'க் குறிப்பனவாயுள்ளன. இந்நிலை மொழியாய்வு பற்றி எம் பண்டையோர் கொண்டிருந்த கருத்தினை ஒரளவு புலப்படுத்துகின்றது எனக் கொள்ள இடமுண்டு. முன்னர் மொழிபற்றிய ஆய்வுகளெல்லாம் இலக்கியத்தைப் படிப்பதற்கும் சாஸ்திர நூல்களின் பொருளைத் தெளிவுற அறிந்து கொள்வதற்காக வுமே நடைபெற்றுள்ளன. இறையனுள் அகப்பொருள் உரை é95 FT UT IT, -
'6T6ötä5ös எழுத்துஞ் சொல்லும் யாப்பும்
ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே பொருளதிகாரம் பெறேமேயெனில், இவை பெற்றும் பெற்றிலேம்' -
என்று கூறியுள்ளதை நோக்குக.
இதே நிலை மேலைத்தேய இலக்கண வரலாற்றிலுங் காணப்படுகின்றது.
Though as a recognized independent subject linguistics is fairly new, linguistic speculation and the analysis of languages have occupied men’s minds from the earliest days of civilization in a number of different cultures. In the history of European civilization linguistic thought, like thought in so many areas, began in ancient Greece under the cover-all title of “Philosophy’ (philosophia). The observations of Plato, Aristotle and the Stoics on
language appear as part of their general exposition
of the theory of Knowledge and of the principles of logic ..., Under the influence of Alexandrian literary criticism, linguistic studies developed some degree of independence in later antiquity, but subsequently other factors promoted close contacts between philosophers and grammarians”

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 25
என்று ருெ பின்ஸ் என்பவர் குறிப்பிடுவர் 4 எழுத்தையும் (அல்லது ஒலியையும் சொல்லையும் அடிப்படையாகக் கொண்ட மொழி மேலைத்தேயத்திற் பண்டைக்காலத்திலே
தத்துவ விசாரத்துக்கும், பண்டைய இலக்கியங்களின்
பொருளேத் தெளிந்து கொள்வதற்கும் கருவியாகவே அமைத்தது. தமிழ் இலக்கண மரபிலும் நன்கு வேரூன்றி யிருந்த இக்கருத்தினேச் சபாபதி நாவலர் நன்கு விளக்கு கின்ருர்:
"இவ்வதிகாரத்து எழுத்துச் சொற் கருவியாக உணரப்படும் பொருளிலக்கணம் உணர்த்தப்படும். எழுத்துஞ் சொல்லும் ஆராய்ந்தார் அவ்வுணர்ச்சி கருவியாகக் கொண்டு பொருளிலக்கணம் ஒரு தலையான் ஆராய்ந்தும் உறுதி தலைக்கூடக்கடவர் ஆவரென்சு”*
எழுத்துச் சொல் ஆகியன பற்றிய மொழியாய்வினைத் தனியாக மேற்கொள்ளாது அதனைக் கருவியாகக் கொண்டு ஏனைய பொருள்விடயங்களையும் சேர்த்து ஆராய்வதே "இலக்கணம்' என்று தமிழ்ப்பேசும் ஒர் அறிஞர் குழாம் கருதி வந்துள்ளது.
ஆணுல், எழுத்துஞ் சொல்லும் ஆராய்வதே இலக்கணம்' என்னும் கருத்தினைக் கொண்டதாக இன்னுேர் அறிஞர் குழாமும் தமிழ் நாட்டிலே இருந்து வந்துள்ளது. இவர்கள் சமயத்தாற் சமணராவர். எழுத்துஞ் சொல்லும் மட்டுமே ஆராய்கின்ற நூலாகிய நேமிநாதம் இலக்கணம்' என்னுஞ் சொல்லினேத் தன் நூலாய்வுக்குக் கொள்கின்றது. நேமிநாதர் ஒரு சமண சமயத்தினர். எழுத்துஞ் சொல்லும் என்னும் மொழியாய்வினைத் தனியாக மேற்கொண்ட குழாத்தினர் மற்றைய குழாத்தினரின் கண்டனத்துக் குட்பட்டனர். அவ் வாறெழுந்த கண்டன மரபுக்கு உதாரணமாக, சபாபதி நாவலரின் பின்வருங் கூற்றினேக் காட்டலாம்:
‘முகத்துக் கண்ணுடை யராயிஞர் அது கருவியாக உருவப்பொருள் நாடிக் காண்டலேப் பயனுகக் கொள் ளுதல் போல, எண்ணும் எழுத்தும் என்னும் அறிவுக் கண்ணுடையராயினுர் அவ்வுணர்ச்சி கருவியாகப்
岛一4

Page 28
26 இலக்கணம் : நமது மரபும் நவீன நோக்கும்
பொருளிலக்கணம் ஆராய்ந்து கண்டு உறுதி தலைக் கூடுதலைப் பயணுகக் கொள்ள வேண்டும் என்பதாயிற்று. இனி அவ்வாறு முயலாது அக்கருவிநூல் உணர்ச்சி மாத்திரையே அமையுமென்றிருப்பரேல், அக்கல் பி அவர்க்கு வீண் உழப்பாவதல்லது பயப்பாடு உடைத் தாமாறு இன்றென்பர்.
சத்தமுஞ் சோதிடமும் என்றங் கவைபிதற்றும் பித்தரிற் பேதையார் இல் என்ருர் நீதிநூலோர் என்க.
இனி எழுத்துஞ் சொல்லும் ஆராய்ந்து வல்லவராக முயல்வார் இக்காலத்துப் பலருளர் அவ்வாராய்ச்சி கருவியாகப் பொருளாராய்ந்து உறுதி தலைக்கூட முயல்வார் அரியர்'
மேற்காட்டிய கண்டனங்கள், மொழியினைத் தனியாக ஆய்வு செய்யும் ஒரு குழாத்தினர் தமிழ் நாட்டிலே உருவாகினர் என்பதைப் புலப்படுத்துகின்றன. ஆஞல், சமண சமயத்தைச் சாராது, மொழியினைத் தனியாக நோக்கியவர்களுள் ஒருவர் இலக்கணச் சுருக்கம் செய்த ஆறுமுகநாவலராவார். அவர்,
*இலக்கண நூலாவது உயர்ந்தோர் வழக்கத்தையுஞ் செய்யுள் வழக்கத்தையும் அறிந்து விதிப்படி எழுதுதற் கும் பேசுதற்குங் கருவியாகிய நூலாம்.
அந்நூல், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், தொடர் மொழியதிகாரம் என மூன்றதிகாரங்களாக வகுக்கப் Լ16լԻ. 8
என்று கூறியுள்ளமை மனங்கொள்ளத் தக்கதாகும். மொழியினேத் தனியாக ஆராயும் இக்கால மொழியியல் துறையின் போக்கிற்கேற்ப அவருடைய கூற்றுக்கள் ஒரளவு அமைந்துள்ளன.
2. மொழியின் தோற்றம்
எழுத்துச் சொல்லாராய்ச்சி கருவி மூயற்சியே என்று
கூறுவார் கருத்துத் தமிழ்மொழியின் தோற்றத்தினேப்
பற்றியும் அதன் தனித்துவத்தினைப் பற்றியும் மரபுரீதியான

- தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 27
ஒரு கொள்கை உருவாக ஏதுவாயிற்று. மொழியின் தோற்றம் மொழியாய்விலே ஈடுபட்டவர்கள் பலருடைய கவனத்தினையும் ஈர்த்தது ஆச்சரியப்படுவதற்கில்லை. மொழி யின் தோற்றம் பற்றிப் பலரும் பல்வேறு காரணங்களைக் கூறி வாதிட்டனர்.9 எழுத்துஞ் சொல்லும் கற்பது வீடுபேறு பயக்கும் பொருணுரல்களைக் கற்பதற்கென்று வாதிட்ட தமிழ் இலக்கணநூலார் தமிழ் மொழியுமே கடவுளாற் படைக்கப் பட்டதெனக் கூறினர். இலக்கண நூல்களாகிய தொல் காப்பியம், நேமிநாதம், நன்னூல் போன்றவற்றை யாத்த ஆசிரியர்கள் இக்கடவுட் கொள்கை பற்றி எங்ங்ணும் கூறிஞரில்லை. அவற்றுக்கு உரை வகுத்த சிலரும், பிற் காலத்திலே தமிழிலக்கண மரபு எழுதப் புகுந்த சிலரும், பக்திப் பாடல்கள், புராணங்கள் பாடிய சிலருமே இக் கொள்கையைக் கொண்டுள்ளராயிருந்துள்ளனர். தொல் காப்பியத்தின் இரண்டாவது அதிகாரமாகிய சொல் (அதிகா ரத்துக்கு உரையெழுதிய சேணுவரையர் சூத்திரங்களுக்கு முன் காப்புச் செய்யுட்கள் சிலவற்றைப் பாடியுள்ளார்.
அதிலொன்றிலே,
ஆதியிற் றமிழ்நூ லகத்தியர்க் குணர்த்திய மாதொரு பாகனை வழுத்துதும் 19
என்று பாடியுள்ளார். ஆனல் தொல்காப்பிய முதல திகார மாகிய எழுத்ததிகாரத்துக்கு உரையெழுதிய நச்சினுர்க் கினியரோ இவ்வாறு எதுவும் கூறியதாயில்லை என்பதை இங்கு நாம் மனங்னொள்ளுதல் வேண்டும். முதற்றமிழ் இலக்கணம் அகத்தியராலே இயற்றப்பட்டதென்றும், அதுவும் சிவனுலே அவருக்கு உபதேசிக்கப்பட்டதென்றும் கூறும் மரபு இன்றுவரை தமிழிலக்கணநூலாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவந்துள்ளது. இதற்கு மேலாக, தமிழ் மொழியும் வடமொழியும் சிவனலே படைக்கப்பட்டு நடை பெறும் தெய்வ மொழிகளென்றும், அவற்றுள்ளே தமிழ் அகத்தியர்க்கும் ஆரியமொழி பாணினிக்கும் ஒதப்பட்ட தென்றும் கூறப்பட்டது. இதற்கு ஆதாரமாக,

Page 29
28 இலக்கணம்: நமது மரபும் நவீன நோக்கும்
தம்மலர் அடியொன் றடியவர் பரவத்
தமிழ்ச்சொலும் வடசோலும் தான்நிழற் சேர
அம்மலர்க் கொன்றை அணிந்தவுெம் அடிகள்
அச்சிறு பாக்கம தாட்சி கொண் டாரே
என்னும் சம்பந்தர் பாடலும்,
வடமொழியைப் பாணினிக்கு
வகுத்தருளி அதற்கிணையாத் தொடர்புடைய தென்மொழியை
உலகமெலாந் தொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார்
கொல்லேற்றுப் பாகரெனில் கடல்வரைப்பி லிதன் பெருமை
யாவரே கணித்தறிவர்
என்னுங் காஞ்சிப் புராணச் செய்யுளும் எடுத்துக் காட்டப் படும், 11 இன்வாறு மொழிதொடர்பாகக் கடவுட்கொள்
கையை வலியுறுத்துவோரிடையேயும் ஒரு வகையான
கருத்து வேறுபாடு இருப்பதையும் இங்கு சுட்டுதல் வேண்டும். மொழிநூல் எழுதிய மாகறல் கார்த்திகேய முதலியார்,
அகத்தியணுகும், மார்க்கண்டே யஞரும், வான்மீகி ஞரும், கெளதமஞரும், தலைச்சங்கத்துச் சான்ருேர் களும் பின்னே முதலாசிரியர். அகத்தியணுருக்கு முன் னுள்ள சான்ருேர் முன்னை முதலாசிரியர். முன்னை முதலாசிரியர் வழக்கிற்கும் பின்னை முதலாசிரியர் வழக்கிற்கும் உள்ள முரண்பாடு சிறுபான்மையேயாம்.
சிவபெருமான் விநாயகன் முதலியோர், முன்னை முதலாசிரியர்க்கும் ஆசிரியராவர்.
முதல்முதல் தமிழ்மொழி, தளிர்த்துப் பூத்துப் பழுத்து மணங்கமழப் பெற்றிருந்தது.
பிறகு ஆரியமொழி, தளிர்த்துப் பூத்துப் பழுத்து மணங்கமழப் பெற்றிருந்தது. 12

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 29
என்று கூறிச்சென்றுள்ளார். கடவுட் கொள்கையை ஏற்றுக் கொண்ட போதிலும் தமிழ்மொழியே முதலிற் படைக்கப் பட்டது என்பது கார்த்திகேய முதலியாரின் கருத்து. இவருக்கு முன்னர் வீரசோழிய உரைகாரர் பெருந்தேவனுர்,
தமிழ்ச் சொல்லிற்கெல்லாம் வடநூலே தாயாகி நிகழ்கின்றமையின் அங்குள்ள வழக்கெல்லாம் தமிழுக்கும் பெறும், 13
என்று கூறியுள்ளதையும் இங்கு குறிப்பிடுதல் வேண்டும். ஆனல் சிவஞான முனிவர் வழிவந்தவர் தமிழும் ஆரியமும் சிவபிரானுல் ஒருங்கு படைக்கப்பட்டன என்பர் 14
இவ்வாறு சைவசமயத்தைச் சார்ந்தவர்கள் தமிழ் மொழியின் தோற்றத்தினைக் கடவுளோடு தொடர்புறுத்துதல் போல ஏனைய சமயத்தினர் அவவாறு தொடர்புறுத்துவதா யில்லை. தொல்காப்பியம், நேமிநாதம், நன்னூல் போன்ற இலக்கணங்களை எழுதிய பிறசமயத்தினரோ இளம்பூரணர், நச்சினுர்க்கினியர் போன்ற உரையாசிரியர்களோ கடவுட் கொள்கை பற்றி எதுவும் கூறினரில்லை. ஆனல் வீரசோழிய காரரோ, அகத்தியர் சிவனிடம் தமிழ் கேட்ட செய்திக்குப் பதிலாக, அவலோகிதீஸ்வரரிடம் தமிழ் கேட்டுணர்ந்ததாகக் கூறுவர். அவருடைய காப்புச் செய்யுட்களில் ஒன்று பின் வருமாறு:
ஆயுங்குணத்தவ லோகிதன்பக்க லகத்தியன்கேட் டேயும் புவனிக் கியம்பியதண்டமி ழங்குரைக்க
3. இலக்கியங் கண்டதற்கு இலக்கணம்
இலக்கியங் கண்டதற்கு இலக்கணம் இயம்பும் மரபு தமிழ்மொழி இலக்கணநூலாரிடையே பெருவழக்காயுள்ளது.
இலக்கியல் இன்றி இலக்கணம் இன்றே எள்ளின் முகில் எண்ணெயும் இன்றே எள்ளினுள் எண்ணெய் எடுப்பது போல இலக்கியத்தினின்றும் எடுபடும் இலக்கணம்

Page 30
30 இலக்கணம் : நமது மரபும் நவீன நோக்கும்
என்ற பழய பாடல் ஒன்றினை உதாரணமாகக் காட் டுவது வழக்கமாயுள்ளது. இப்பாடலை அகத்தியனுள் பாடினுர் என்று கூறும் வழக்கமும் உண்டு. நன்னூலார் இம்மரபினே
இலக்கியங் கண்டதற் கிலக்கண மியம்பலில் 13
என்று நேரடியாகவே கூறியுள்ளார். தமிழ் இலக்கணநூலார் எல்லோருமே இக் கொள்கையுடையர் என்று கூறின் தவருகாது. இக்கொள்கை மூன்று வகையான விளைவுகளைத் தமிழிலக்கண மரபிலே ஏற்படுத்திற்று,
31 எழுத்துக்கு முதன்மை கொடுத்தல்
எழுத்து வடிவமும் பேச்சொலியும் மொழி சுருத்துத் தொடர்புக்கேற்ற சாதனமாக அமைவதற்கு உதவும் இரு மூலங்களாகும். இவற்றுள் எழுத்து வடிவுக்கே தமிழ் இலக்கண நூலார் முக்கியத்துவங் கொடுத்தனர். இலக்கியங் கண்டதற் கிலக்கணம் இயம்பும் மரபு இத்தகைய நிலை யினைத்தான் தோற்றுவிக்கும். மேலேத்தேயத்திலும் இத் தகைய விளைவு ஏற்பட்டது பற்றி மொழியியலறிஞர் லயன்ஸ் பின்வருமாறு எடுத்துக் கூறுவர் :
Admiration for the great literary works of the past encouraged the belief that the language in which they were written was itself inherently “purel more 'correct’ than the current colloquial speech of Alexandria and the other Hellenistic centres. The grammars produced by Hellenistic scholars came therefore to have a double purpose : they combined the aim of establishing and explaining the language of the classical authors with the desire to preserve Greek from corruption by the ignorant and unlettered. This approach to the study of language fostered by Alexandrian classicism involved two fatal misconcepticns. The first concerns the relation

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 31
between written and spoken language; the second has to do with the manner in which language develop. 16
எழுத்து மொழி, பேச்சுமொழி ஆகிய இரண்டிலும் பேச்சு மொழியே முக்கியத்துவம் வாய்ந்ததெனக் கூறுவர் நவீன மொழியியலாளர். எனினும், எழுத்து மொழிக்குஞ் சில நற்பண்புகள் உண்டென்பதையும் தாம் மறந்துவிடலாகாது." மொழியறிவினை எழுத்து' எனவும், இலக்கண நூல்களே எழுத்து நூல்" எனவுங் குறிப்பிடும் வழக்கம் தமிழிலே யுண்டு. எண்ணென்ப வேனே யெழுத்தென்ப" எனவும், எழுத்தறியத் தீருமிழி தகைமை” எனவும் "எண்ணும் எழுத்தும் கண்ணெணத் தகும்' எனவும் தமிழிலே வழங்கப்பெறும் செய்யுளடிகளால் அவ்வழக்கம் தெளிவுறுத்தப்படும். வழக்குச் சொல் இலக்கணச் சொல்லாகக் கொள்ளப்படுவ தில்லை என்ற கருத்தினைத் தொல்காப்பியரே ஏற்றுள்ளார்,
ஒருவரைக் கூறும் பன்மைக் கீளவியு மொன்றினைக் கூறும் பன்மைக் கிளவியும் வழக்கி ஞகிய வுயர்சொற் கிளவி இலக்கண மருங்கிற் சொல்லா றல்ல'
என்னுஞ் சூத்திரம் இதற்குச் சான்று பகருகின்றது. அத்துடன் தொல்காப்பியம் போன்ற நூல்களை எழுத்து நூல் எனச் சுட்டப்படுவதை,
தொல்காப்பியம் வழக்கு வடிவும், செய்யுள் வடிவு மாகவுள்ள இயற்றமிழின் இயல்புகளே உரைத்தலால் இயற்றமிழ் எனப்படினும் பொதுவாக நிற்பதுமின்றிச் சிறப்பாக நின்று தொல்காப்பியம் போன்ற நூல்களை உணர்த்தாமையினுலன்ருே அந்நூல்களிலுள்ள புலனே எழுத்து எனவும் அந்நூல்களே எழுத்து நூல்களெனவும் சிறப்பாக வழங்குவதற்கும் அது அவற்றைச் சிறப்பாக உணர்த்துமென்பதற்கு மன்ருே மயங்காமரபின் எழுத்து எனவும் எண்ணென்ப வேனேயெழுத்தென்ப எனவும்

Page 31
32 இலக்கணம்: நமது மரபும் நவீன நோக்கும்
*எழுத்தறியத் தீருமிழிதகைமை எனவும் பண்டையோர்
கூறுவாராயினர் ஆகையால், இயல், இயற்றமிழ்
என்பதைவிட 'எழுத்து' என்பதே தொல்காப்பியம்
முதலிய நூல்களைப் பொதுவாக வழங்குவதற்குச் சிறந்த
பெயராகக் கொண்டனரென்பது சாலுமென்சு, 19 என்னும் மேற்போந்த கூற்றுக்கள் அரண் செய்கின்றன. அத்துடன் நேமிநாதம் ஆசிரியரும்,
புல்லா எழுத்தின் கிளவிப் பொருள்படினும்
இல்லா விலக்கணத் தென்றெழிக20 என்று கூறியிருப்பதும் மேற்போந்த கருத்துக்கு மேலுமொரு சான்ருகின்றது.
இவ்வாறு எழுத்து மொழி ஆய்வே இலக்கணம் என்று கருதும் வழக்கம் கிரேக்க மொழியறிஞரிடையேயும் காணப் பட்டது. Grammar என்னும் ஆங்கிலச் சொல் பிறந்த கிரேக்க மூலச் சொல்லினது பொருள் எழுத்துக்கலை என்பதேயாகும். அத்துடன் அவ்ர்கள் ஒலிகளுக்கும் எழுத் துக்களுக்கும் நெறியான எவ்விதத் தொடர்புகளையும் ஏற்படுத்தினரில்லை. 21 தமிழ் இலக்கண நூலாரும் பிறப் பியல்" என் ருெரு பகுதியினைத் தமது எழுத்ததிகாரங்களிலே அமைத்த போதிலும் தமிழ் எழுத்துக்களுக்கும் அவற்றின் ஒலிகளுக்குமிடையே நெறியான தொடர்புகளை ஏற்படுத்தினு ரென்று கூறுவதற்கில்லை. உதாரணமாக,
உந்தி முதலா முந்துவளித் தோன்றித் தலையினு மிடற்றினு நெஞ்சினு நிலை இப் பல்லு மிதழு தாவு மூக்கு மண்ணமு முளப்பட வெண்முறை நிலையா ணுறுப்புற் றமைய நெறிப்பட நாடி யெல்லா வெழுத்துஞ் சொல்லுங் காலப் பிறப்பி னுக்கம் வேறுவே றியல திறப்படத் தெரியும் காட்சி யான22 என்று தொல்காப்பியர் கூறுவதை நோக்குக, எழுதப்படும் ‘எல்லா எழுத்துஞ் சொல்லுங்காலேப் பிறப்பிளுக்கம் கூறுகின்ருரேயொழிய பேச்சிலே இடம் பெறும் ஒலிகளின்

- தமிழ்மொழி இலக்கண இயல்புகள் - 33
பிறப்புக் கூறிஞரில்லை. பொருளுள்ள சொல்லாயிருப்பினும் எழுத்தின் பாற்படாதாயின், அது இலக்கணத்தின் பாற் படாதென நேமிநாதம் கூறியதை இங்கு திரும்பவும் நினேவு கூரவேண்டியுள்ளது.23 இவ்வாறு எழுத்து வழக்கே இலக் சுணத்தின் பாற்பட்டதென்ற காரணத்தினலே, பேச்சு மொழியின் இலக்கணம் பற்றி எவரும் எழுத முற்படாதது மாத்திரமன்றி, பேச்சுமொழி இழித்துரைக்கவும் பட்டது. உதாரணமாக, வழக்கெனப்படுவ துயர்ந்தோர் மேற்றே24 என்னுஞ் சூத்திரத்தை நினைவிலே கொண்டு பேராசிரியர்,
'வழுவில் வழக்கமென்பார் உளராயின் இக்காலத் துள்ளும் ஒரு சாரார்க்கல்லாது அவர் சான்றே ரெனப் படாரென்பது உம், இங்ஙனம் கட்டளை செய்யவே காலந்தோறும் வேறுபட வந்த அழிவழக்கும், இழிசனர் வழக்கும் முதலாயினவற்றுக்கெல்லாம் நூல் செய்யின் இலக்கணமெல்லாம் எல்லைப்படாது இறந்தோடுமென் பதூஉம், இறந்தகாலத்து நூலெல்லாம் பிறந்த பிறந்த வழக்குப்பற்றிக் குன்றக்கூறல் என்னுங் குற்றந் தங்கு மென்பது உம் 23 - -
என்று கூறுமிடத்து உயர்ந்தோர் வழக்கன்றி, ஏனையோர்
வழக்கு "அழிவழக்கு எனவும் இழிசனர் வழக்கு’ எனவும் படும் என்று குறிப்பிட்டுள்ளமையை இங்கு சுட்டிக்காட்ட லாம். பேச்சு மொழியினை இவ்வாறு பேராசிரியர் இழிவு படுத்திக் கூறுவதற்குரிய காரணம் எழுத்து வழக்குக்கு முதன்மை கொடுக்கப்பட்டதேயாகும். எமது இலக்கண நூலார் பேச்சு மொழிக்கு இலக்கண நூல் எழுதவில்லை யென்று இங்கு நாம் குறையாகக் கூறவில்லை. அதனை எழுதப்புகின் வருமிடர்கள் யாவை எனப் பேராசிரியர் மேலே பொருத்தமாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனல் பிறந்து மொழிபயின்று எழுதுவதற்கு முன்னே பேசப்பழகிக் கொள் கின்ருேம் என்பதையும், பேச்சுமொழி இழிசனர் வழக்கு ஆகா தென்பதையும் பேராசிரியர் உணராது போனதற்குத் தமிழில் வேரூன்றிவிட்ட எழுத்து வழக்கிலக்கண மரபே காரணமாகும். குழந்தை என்ருல் 'உயர்ந்த குழந்தை'
த-5

Page 32
34 இலக்கணம் நமது மரபும் நவீன நோக்கும்
என்ருே தெய்வக் குழந்தை" என்ருே கருதாது குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச் சொல் கேளாதவர்' என்று வள்ளுவர் கூறியுள்ளார். குழந்தையின் பேச்சும் இழிசனர் வழக்கு ஆகுமோ?
தமிழ்மொழி, உலகிலுள்ள சில மொழிகளைப் போல, இரு வழக்குப்?6 பண்புடைய மொழியாகும். பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் என்ற இவ்விரு பண்புகளும் நம் மொழி யிலே உண்டு. இதனை நம் மரபுவழி இலக்கண நூலார் கூட ஏற்றுள்ளனர். வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின் 27 என்பதனுல் இவ்விரு வேறுபாடுகளையுமே கருதினர். அதனல், இவ்விரு வழக்குகளுமே பேணப்படவேண்டியனவாகும். பல பேச்சு வழக்குகளுடைய தமிழர்களே மொழியாலிணைப்பதற்கு எழுத்து வழக்கு அவசியமாகும். ஆனல் அதே வேளையில் பேச்சு வழக்கு இழிசனர் வழக்கு ஆகிவிடாதென்பதையும் நாம் உணர வேண்டும்.
3.2 இலக்கணக் கூறுகளுக்கு விளக்கம்
எழுத்தினுலாய இலக்கியங் கண்டு, அவ்விலக்கிய மொழிக்கு இலக்கணம் கூறப்புகுந்தமை காரணமாக, குறிப் பிட்ட ஒரு இலக்கணக் கூறு செய்யுள் மொழிக்காகவே அமைக்கப்பட்டதென விளக்கங் கூறும் மரபு தோன்ற லாயிற்று. இதனைத் தமிழிலக்கணக் கூறுகளுள் ஒன்றுகிய உரிச்சொல் என்பதனை ஆதா மாசுக் கொண்டு விளக்கலாம். தொல்காப்பியர் உரிச் சொல் என்னும் பாகுபாட்டினை ஏற்படுத்தி அதனே ஒரியலிலே நூறு சூத்திரங்களால் விளக்கிச் சொல்கின்ருர், அச்சூத்திரங்களிலே அவர் எங்கா யினும் உரிச் சொல் என்பது செய்யுளுக்குரிய சொல் என்று கூறினரில்லை. ஆனல் உரியியல் முதற் சூத்திரத்திற்கு உரை கூறும் சேணுவரையரோ, பெரும்பான்மையுஞ் செய்யுட் குரியவாய் வருதலின் உரிச்சொல்லாயிற்றென்பாருமுளர், 28 என்று கூறிப் போந்தார். இக்கருத்தினைக் கண்ணுற்ற நன்னூலாரோ,
பல்வகைப் பண்பும் பகர்பெய ராகி ஒரு குணம் வலகுணந் தழுவிப் பெயர்வினை ஒருவா செய்யுட் குரியன வுரிச்சொல் 29

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் - 35
என்று நேரடியாகச் சூத்திரத்திலேயே கூறியுள்ளார். தொல் காப்பிய உரியியல் முதற்குத்திரத்துக்கு உரையெழுதிய தெய்வச்சிலையாரோ உரிச்சொல் இலக்கணம் கூறும் நேமிநாத ஆசிரியரோ இலக்கணச் சுருக்க ஆசிரியரோ உரிச் சொற்கள் செய்யுட்குரிய சொற்கள் என்று கூறினரில்லை. உரிச்சொல் என்னும் இலக்கணப் பாகுபாட்டின் பொருத்தப் பாடு பின்னர் ஆராயப்படும். இவ்விடத்திலே, எழுத்தா லாகிய இலக்கியங்களை நோக்கி இலக்கணம் வகுத்தல் என்னும் மரபு தமிழ் இலக்கணக் கூறுகளுள் ஒன்றுகிய உரிச்சொல் லுக்கு இவ்வாறு விளக்கம் கொடுக்க வைத்துள்ளது என்பதை
மாத்திரங் கூறி அமையலாம்.
3 3 LISTET 6E8FALU @មur மொழியே தூய்மையும்
பொருத்தமும் வாய்ந்தது
இலக்கியங் கண்டதற் கிலக்கணமுரைக்கும் மரபிஞலே
தமிழிலே ஏற்பட்ட மூன்றுவது விளைவு பழந் தமிழ் இலக்கியச் சொற்களே தூய்மையானவை என்றும் அவையே பொருத்த
மானவையென்றும் தமிழறிஞர்கள் எண்ணியமையாகும். ஆறுமுகநாவலர் இலக்கண நூலுக்குக் கொடுக்கும் வரை விலக்கணம்30 இத்தகைய கருத்தினை அடிப்படையாகக் கொண்டே அமைந்ததெனப் புலப்படுகின்றது. திராவிடப் பிரகாசிகையில் இலக்கிய மரபியல் கிளக்கும் சபாபதி நாவலர் தனக்கு முன்னெழுந்த சங்க இலக்கியங்கள் போன்றவற்றைக் குறிப்பிட்டாரன்றி, முக்கூடற் பள்ளு, திருக்குற்றலக் குறவஞ்சி சித்தர் பாடல்கள் போன்றவற்றைக் குறியாது விட்டார். இவை தொல்காப்பியனுர் ஆணை இயற்றமிழ் இலக்கிய
பாய், சங்கச்செய்யுட் பிரயோகம் யாண்டும் பயின்று,
சொல்லணி பொருளணி துறுமி விளங்கும் நல்ல தமிழ்ப் பிரபந்தங்கள் 31 என்ற அவருடைய வரைவிலக்கணத்துக்குள் அமையவில்லைப்போலும், பண்டையிலக்கியச் சொற்களை விடுத்துப் பழகுதமிழ்ச் சொற்களிலே செய்யுட்கள் பாடிய பாரதியின் கவிதைகளை இலக்கியங் சுண்டதற் கிலக்கண முரைக்கும் மரபிலே வந்தோர் பலகாலமாக ஏற்றுக் கொள்ளாதிருந்தமையை இங்கு நினைவு கூருதல் தகும். இத்தகைய மரபுக்குச் சிகரம் வைத்தது போலப் பேராசிரிய ருடைய உரைப்பகுதியொன்று அமைகின்றது:

Page 33
36 இலக்கணம்: நமது மரபும் நவீன நோக்கும்
*ஆசிரியரும் அவர் போல்வாரும் அவர்வழி - ஆசிரியரும் செய்யுள் செய்த சான்ருேரும் சொல்லாதன சொல்லப்படாதென்பது உம் அவருடம்படாதன சொல் உளவென்று எதிர் நூலென ஒருவன் பிற்காலத்து நூல் செய்யுமாயின் தமிழ் வழக்கமாகிய மரபினெடுந் தமிழ் நூலொடும் மாறுபட நூல் செய்தானகுமென்பது உம் இனித் தமிழ் நூலுள்ளுந் தமது மதத்திற்கேற்பன முதனூல் உளவென்று இக்காலத்துச் செய்யுள் செய்து காட்டிலும் அவை முற்காலத்து இலவென்பது முற்கூறி வந்த வகையான் அறியப்படு மென்பது உம் 32
இவ்வாறு இலக்கியங் கண்டதற்கு இலக்கணங்கூற முற்பட்ட தால் ஏற்பட்ட மூன்று விளைவுகளும் எமது மரபுவழி இலக்கணநூலாரின் இலக்கியம் பற்றிய கோட்பாடுகளையும் கருத்துக்களையும் ஒரளவு தெளிவுறுத்துகின்றன.
4, தமிழ்மொழியில் ஐந்திலக்கண 10니
தமிழ் மொழியில் இலக்கணம் என்பது மொழியை மாத்திரம் ஆராய்வதாகவன்றி, அம்மொழியினுலான இலக்கியம், அவ்விலக்கியத்தின் பொருள், வடிவம் ஆகியன வற்றையெல்லாம் ஆராயும் ஒரு நெறியாக அமைந்து வந்த தற்கான காரணங்கள் இவ்வியலின் முதற் பகுதியிலே கூறப்பட்டுள்ளன. இதனுல் தமிழில் எழுந்த முதல் இலக் கணமாகிய தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்தினையுங் கூறுவதாக அமைந் துள்ளது. தொல்காப்பியத்தின் பின்னர் கி பி 11ஆம் நூற்ருண்டில் தொல்காப்பியம் போன்று ஐந்திலக்கணங்கள் கூறும் வீரசோழியமும், எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக் கணங் கூறுனைவாக முறையே கி. பி. 12இலும் 13இலும் எழுந்த நேமிநாதம், நன்னூல் என்பனவும், கி. பி 17ஆம் நூற்ருண்டிற் சொல்லிலக்கணத்தை மட்டுங் கூறும் பிரயோக விவேகம், இலக்கணக் கொத்து, ஐந்திலக்கணத்தினைக் கூறும்

( 19
தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 37
இலக்கண விளக்கம் என்பனவும் கி. பி. 18ஆம் நூற்ருண்டில் ஐந்திலக்கணத்தினைக் கூறும் தொன்னூல் விளக்கமும் தோற்றம் பெற்றன.
முழுமையான இலக் கணமென்ருல் அது எழுத்து, சொல், யாப்பு, பொருள், அணி ஆகிய ஐந்தினையும் உள் ளடக்கியதாக அமையவேண்டுமென்ற கருத்துத் தமிழ் இலக்கணப் பாரம்பரியத்திலே அழுத்தம் பெற்றிருந்தது. எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் கூறிய நன்னூல் ஐந்திலக்கணமும் கூறுகின்றது என வாதிட்டமை இதனை நன்கு தெளிவுறித்தும். நன்னூல் இலக்கணம் பல உரைகள் கண்ட நூலாகும். இதற்கு யாரோ ஒருவர் சிறப்புப்பாயிரம் வழங்கியுள்ளார். "இந்நூலுக்குச் சிறப்புப் பாயிரம்ாக விளங்கும் இப்பாடல் யார் இயற்றியது என்று தெரியவில்லை" என ஆறுமுகநாவலர் தான் பதிப்பித்த நன்னூற் காண்டிகை யுரையிலே ஒர் அடிக்குறிப்புக் கொடுத்துள்ளார். இப்
பாயிரத்திலே,
*அரும்பொரு ளைத்தையும் யாவரு முணர' என்ருெரு அடி இடம் பெறுகின்றது. இதனல், நன்னூலார் ஐந்திலக்கணங்களையும் வகுத்தார்; அவற்றுள் யாப்பு, பொருள், அணி ஆகிய மூன்றும் பிற்காலத்திலே இறந்து பட்டன என்று கூற முற்பட்டனர். இத்தகைய கருத்துக்கு நன்னூலிலே எவ்வித ஆதாரமும் இல்லை. அத்துடன் நன்னூல் எழுதப்பட்ட பொழுதே பாயிரமும் எழுதப் பட்டதெனக் கூறுதற்குமில்லை. இது ஐந்திலக்கணம் கூறும் மரபினுள் நன்னூலையும் அடக்குதற்கு எடுத்த முயற்சி போலத் தோன்றுகிறது. பிற்காலத்தில் உரை நடையில் இலக்கணச் சுருக்கங்கள் எழுதிய சிலரும் இன்வைந்திலக்கண மரபினைப் பின்பற்றியுள்ளார். விசாகப் பெருமாளேயரின் இலக்கணச் சுருக்க வினு விடை ஐந்திலக்கணம் கூறுவதாக அமைந்துள்ளது. இத்தகைய ஐந்திலக்கண மரபிலிருந்து ஈழத்து ஆறுமுகநாவலர் முற்ருக விலகிச் செல்கின்ருர், நாவலர் நன்னூல் இலக்கணத்தினை இலகுவான வசன நடையிலே தமிழ் மக்களுக்கு அளிப்பதற்கு எடுத்த முயற்சியே இலக்கணச் சுருக்கம் ஆகும். நன்னூல் ஐந்திலக்கணம் கூறியது பற்றி அவர் எங்கும் குறிப்பிட்டாரில்லை. அத்துடன்

Page 34
38 இலக்கணம்: நமது மரபும் நவீன நோக்கும்
இலக்கண நூல் ஒன்றின் அமைப்பு என்ன என்பதை 'அந் நூல், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், தொடர் மொழி யதிகாரம் என முன்றதிகாரங்களாக வகுக்கப்படும் என்று அவரே இலக்கணச் சுருக்கத்தில் எடுத்துக் கூறியுள்ளார்.
ஐந்திலக்கணம் கூறும் மரபு தமிழிலே ஒரு நீண்ட வரலாற்றையுடையதாக அமைந்திருக்கின்றது. அதனுலேயே தொன்னூல் விளக்கம் என்னும் நூலிலே,
எந்நூல் நிலையினும் இயைபெலாம் உணர்த்தும் அந்நூல் அரியதுஎன அஃகினும் ஒருநூல் காட்டிய பலநடைக் கடைப்பிடித்து அவற்றேடு கூட்டிய மற்றவை கொள்ப நல்லோர்என எழுத்துச் சொல்பொருள் யாப்பணி என்றுஇவண் வழுத்திய ஐம்பொருள் வழக்கம் 33
என்று வீரமாமுனிவர் குறிப்பிடுகின்ருர், பிறநாட்டிலிருந்து
வந்து தமிழ் நாட்டிலே தமிழ் கற்றுத் தமிழறிஞராஞர் பெஸ்கி பாதிரியார். வீரமாமுனிவர் எனத் தமிழ்ப்பெயர்
பூண்ட அவருக்குத் தமிழ் கற்பித்தவர் ஐந்திலக்கண
மரபினேயே கற்பித்திருக்க வேண்டும். அவ்வாறு இலக்கணம் எழுதுவதுதான் முறையானதும் முழுமையானதுமாகும் என்னும் வழக்கம் அவர் காலம் வரை தமிழறிஞரிடையே நிலவியிருந்திருக்க வேண்டும். ஐந்திலக்கணம் கூருத இலக் கனகாரர்கூட ஐந்திலக்கணமே சிறப்பானது எனக் கூறி
யுள்ளனர். உதாரணமாக, சொல்லிலக்கணத்தை மட்டுங் கூறும் இலக்கணக்கொத்து ஆசிரியர் தன்னுடைய நூற்பா
உரையிலே,
*அகப்பொருள் விளக்கம், ய்ாப்பருங்கலக்காரிகை,
தண்டியலங்காரமுதலிய நூல்கள் ஒன்றனையே யுணர்த்
தும்; நன்னூல் சின்னூல் முதலிய நூல்கள் இரண்
டனேயேயுணர்த்தும்; அவைபோலாது தொல்காப்பியம் ஐந்தனையுமுனர்த்தலிற் சுடலென்ரும், 34
என்று கூறியுள்ளதை நோக்குக. ஐந்திலக்கணம் கூறுவதே
சிறப்புடையது என்பதை மேற்காட்டிய கூற்று நன்கு வலியுறுத்துகின்றது.
 

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 39
இலக்கணம், இலக்கியத்தை நயப்பதற்கு அனுசரணை
யாக அமைவது என்னும் கோட்டாடே ஐந்திலக்கண மரபு
வேரூன்றுதற்குக் காரணமாக அமைந்தது. இத்தகைய மரபு மேலேத்தேய இலக்கணநூலாரிடமும் காணப்பட்டது. கிரேக்க மொழிக்கு இலக்கணம் எழுதிய டயனேஸியஸ்
திராக்ஸ் (Dionysius Thrax) என்பவர் இலக்கணம்
என்ருல் என்ன என்று கூறும் பகுதியினை இங்கு தருகிருேம்:
“Grammar is the practical knowledge of the general usages of poets and prose writers. It has six parts: first, accurate reading (aloud) with due regard to prosodies; second explanation of the literary expressions in the works; third, the provision of notes on the phraseology and subject matter; fourth, the discovery of etymologies; fifth, the working out of analogical regularities; sixth, the appreciation of literary compositions, which is the noblest part of grammar.”
மேற்காட்டிய கூற்றின்படி இலக்கணம் என்பது செய்யு
ளாசிரியர்களும் உரைநடையாசிரியர்களும் கையாளும் பொது வழக்குகள் பற்றிய அறிவேயாகும். அவ்விலக்கணம் ஆறு பகுதிகள் கொண்டதாக அமையுமென்க் கூறப்பட் டுள்ளது. அப்பகுதிகளாவன: முதலாவது, செய்யுள் வடிவ அமைதியினை அனுசரித்துச் சரியான முறையிலே (உரத்து) வாசித்தல்; இரண்டாவது, நூல்களிலுள்ள இலக்கிய வெளிப்பாடுகளின் விளக்கம்; மூன்றுவது, நூற்பொருள், தொடரமைதிகள் பற்றிய குறிப்புக்கள்; நான்காவது, பதங்களை அறிதல்; ஐந்தாவது, ஒற்றுமை ஒழுங்குகளை அறிந்து கொள்ளுதல்; ஆருவது, இலக்கிய ஆக்கங்களே நயத்தல். இதுவே இலக்கணத்தின் அதியுன்னத பகுதி
யாகும், இலக்கியத்தை நயப்பதற்கும் துருவி ஆராய்வ
தற்கும் இலக்கணம் எவ்வாறு மேலைத்தேய மரபிலே அவசிய மாயிற்று என்பதை மேற்படி கூற்றினலே உணரமுடிகின்றது. எமது ஐந்திலக்கண மரபும் இந்த அடிப்படையிலேயே அமைந்தது. இலக்கணம் எழுத்தையும் சொல்லையும் மாத் திரம் ஆராய்வதல்ல; அவற்ருல் அமைக்கப்படும் யாப்பு,

Page 35
40 இலக்கணம்: நமது மரபும் நவீன நோக்கும்
யாப்பினுல் அமைந்த செய்யுள், அச்செய்யுளில் அமைந் துள்ள அணி, அச்செய்யுள் நுதலும் பொருள் ஆகியன பற்றியெல்லாம் ஆராய்வதுதான் இலக்கணத்தின் அடிப் படையான நோக்கம் என எம்மவர் எண்ணியதாலேயே ஐந்திலக்கணம் கூறும் மரபு உண்டாயிற்று.
5 இலக்கணம் விதிமுறையா? விவரணமா?
இலக்கணம் என்பது விதிமுறையாக அமைவதா? விவரண முறையாக அமைவதா? என்பது பற்றியும் தமிழிலக்கணநூலா ருடைய மரபு எத்தகையது என்பது பற்றியும் அடுத்து நோக்கப்பட வேண்டும். தமிழிலக்கண மரபைப் பொறுத்த வரையில் விதிமுறை இலக்கணமும் விவரண இலக்கணமும் கலந்து இடம்பெற்றுள்ளனவென்றே கூறக்கூடியதாயுள்ளது.
இயற்சொற் றிரிசொற் றிசைச்சொல் வடசொல்லென் றனைத்தே செய்யு ளிட்டச் சொல்லே 39
என்று தொல்காப்பியர் கூறுவது, அவர் காலத்துச் செய்யுட் களிலே இடம்பெற்ற சொற்களின் விவரணமாயமையலாம்.
ஆஞல், அச்சூத்திரத்திற்கு உரைவகுத்த கி. பி. 13ஆம் நூற்ருண்டைச் சேர்ந்த சேணுவரையார்.
‘இயற்சொல்லாலுஞ் செய்யுட் சொல்லாகிய திரி சொல்லாலுமேயன்றித் திசைச் சொல்லும் வடசொல் லும் இடைவிராய்ச் சான்ருேர் செய்யுள் செய்யுமாறு கண்டு ஏனேய பாடைச் சொல்லுஞ் செய்யுட்குரியன வோ வென்றையுற்ருர்க்கு இந்நான்கு சொல்லுமே செய்யுட்குரியன பிறபாடைச் சொல் உரியவல்லவென்று வரையறுத்தவாறு. ' -
என்று கூறுவது விதிமுறை வாய்ப்பட்டதாயுள்ளது. இலக் கியங் கண்டதற் கிலக்கணம் கூறும் மரபின் மூன்ருவது விளைவாகிய பண்டையிலக்கிய மொழித்தூய்மை விதிமுறை யிலக்கண மரபினைத் தமிழிலே தோற்றுவிப்பதற்கு முக்கிய காரணமாயமைந்ததெனலாம். தமிழிலே விதிமுறை இலக்

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 41
கண மரபுக்கு வழிகோலியனவாகத் தொல்காப்பியரின் பொருளதிகார மரபியலிலே இடம் பெறுஞ் சில சூத்திரங்கள் அமைகின்றன.
மரபுநில திரிதல் செய்யுட் மரபுவழிப் பட்ட சொல்லி ஞன 38 மரபுநில திரியிற் பிறிதுபிறி தாகும்.9 வழக்கெனப் படுவ துயர்ந்தோர் மேற்றே
கழ்ச்சி யவர்கட் Lாக Gayfir 607.40 மரபு நிலை திரியா மாட்சிய வாகி யுரைபடு நூற மிருவகை யியல முதலும் வழியுமென நுதலிய நெறியின்'
என்ற சூத்திரங்களும் பேராசிரியர் போன்ருேர் அவற்றுக்கு
வழங்கிய உரைகளுமே தமிழ் விதிமுறையிலக்கண மரபுக்கு
வழிகாட்டின. பழைய இலக்கிய மொழி பேணப்பட
வேண்டுமென்பது இத்தகைய இலக்கண நூலாரின் நோக்க
மாகும். மொழிமரபு மாற்றமடையின் அது தூய்மையினை
இழந்து இழிநிலை அடைந்துவிடுமென்பது இவர்களின்
எண்ணமாகும். பேராசிரியரின் உரைப்பகுதி இவ் வெண்
னத்தினை நன்கு வலியுறுத்துகின்றது.
*அல்லதூஉம், இன்ன செய்யுட்கு இன்ன பொரு ளுரித்தெனவும், இனைப்பகுதியாற் பெயர் பெறு மெனவும், மரபுபற்றியே சொல்லப்படுமென்றற்கும் 9 இனி, நிறைமொழிமாந்தர் மறைமொழி போல்வன சில மிறைக் கவி பாடினருளரென்பதே பற்றி அல்லா தாரும் அவ்வாறு செய்தன் மரபன்றென்றற்கும், இது கூறினுனென்பது, அவை சக்கரஞ், சுழிகுளம், கோமூத்திரிகை, ஏகபாதம், எழு கூற்றிருக்கை, மாலை மாற்று என்ருற் போல்வன. இவை மந்திரவகையா னன்றி வாளாது மக்களைச் செய்யுள் செய்வார்க்கு அசுனைந்திணைக்கும் மரபன்றென்பது கருத்து அல்லாதார் இவற்றை எல்லார்க்குஞ் செய்தற்குரியவென இழியக் கருதி அன்னவகையான் வேறு சில பெய்துகொண்டு
த-6

Page 36
42 இலக்கணம்: நமது மரபும் நவின் நோக்கும்
அவற்றிற்கும் இலக்கணஞ் சொல்லுப. அம்ெ ெ இத்ததனையென்று வரையறுக்கலாகா என்ன? ஒற்றை, இரட்டை, புத்தி, வித்தாரம் என்ருற்போல்வன செய்யுள் செய்யினுங் கடியலாகாமையின் அவற்றிற்கு வரையறைவகையான் இலக்கணங் கூறலாகாதென்பது.
ஐயைதன் கையு ளிரண்டொழித்தெ னம்பான்மேற் பெய்தார் பிரிவுரைத்த லில்லையால்
இக் எனவும்
கோடாப் புகழ்மாறன் கூட லனேயா?ன யாடா வடனுேளுங் காணேன்
(திணைமாலை நூற். 4)
எனவும் சொல்லுவார் சொல்லுவனவற்றுக்கெல்லாம் வரையறையின்மையின் அவற்றிற்கு இலக்கணங் கூருர் பண்ணத்திப் பாற் படுப்பினல்லதென்பது. 142
* மரபன்று', 'அல்லாதார்’, ‘இழியக்கருதி", "சொல்லுவார் சொல்லுவன, வரையறையின்மை போன்ற சொற் பிரயோகங்கள் பேராசிரியரின் எண்ணக் கிடக்கையை நன்கு வெளிப்படுத்துகின்றன. இப்போக்கின் இன்றைய வளர்ச்சி நிலையின் தோற்றுவாயாக ஆறுமுகநாவலரின் வரைவிலக் கணம் அமைகின்றது.
*இலக்கண நூலாவது, உயர்ந்தோர் வழக்கத்தையும் செய்யுள் வழக்கத்தையும் அறிந்து விதிப்படி எழுது தற்கும் பேசுதற்குங் கருவியாகிய நூலாகும்.'
என்னும் வரைவிலக்கணத்திலே விதிப்படி எழுதுதற்கும் பேசுதற்கும் இலக்கணம் கருவியாக அமைகின்றது என்று ஆறுமுகநாவலர் நேரடியாகவே விதிமுறையிலக்கணம் வகுக் கின்றர்.

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 43 அடிக்குறிப்புக்கள்
1. தொல்காப்பியம் சொல்லதிகாரச் சூத்திரம் 27இல்
ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியு மொன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும்
வழக்கி னுகிய வுயர்சொற் கிளவி
யிலக்கண மருங்கிற் சொல்லா றல்ல
எனவும், பொருளதிகாரம் செய்யுளியலிற் சூத்திரம் 248இல்
செய்யுள் மருங்கின் மெய்பெற நாடி
இழைத்த இலக்கணம் பிழைத்தன போல வருவன உளவெனும் வந்தவற் திரியின்றி முடித்தல் தென்னியோர் கடனே:
எனவும் இரண்டு இடங்களில் இலக்கணம் என்னுஞ்
சொல் கையாளப்பட்டுள்ளது.
2. தொல்காப்பியம், எழுத்ததிகாரம், பாயிரம்:
வடவேங்கடந் தென்குமரி
யாயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலி னெழுத்துஞ் சொல்லும் பொருளு நாடிச் செந்தமி பூழியற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு முறைப்பட வெண்ணிப் புலந்தொகுத் தானே போக்கறு பனுவல்
3. இறையனூர் அகப்பொருள், Lig, 7
Robins, R. H., The Structure of Language",
In Linguistics at large, p. 16,
சபாபதி நாவலர், திராவிடப் பிரகாசிகை, ப. 75
4
சோம. இளவரசு, இலக்கண வரலாறு, பக். 120-21
சபாபதி நாவலர், மு. கு நூ, பக். 75-6 ஆறுமுகநாவலர், இலக்கணச் சுருக்கம், ப. 1 ,

Page 37
44
0.
11.
12.
13.
14 -
15.
6.
17.
18.
9.
20.
21.
22.
23。
24·
25.
26.
இலக்கணம்: நமது மரபும் நவீன நோக்கும்
மொழியின் தோற்றம் பற்றிய பல்வேறு கொள்கைகளின் விளக்கங்களே மு. வரதராசனின் மொழி வரலாறு (பக். 218-42) என்னும் நூலிற் காண்க.
தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனவரையம்
காப்புச் செய்யுள், ப. 1
சபாபதி நாவலர். மு. கு. நூ. L5. 5. a 31
கார்த்திகேய முதலியார், மாசுறல், மொழி நூல்,
பக். 34-35 வீரசோழியம், பெருந்தேவனுர் உரை, ப. 31 சபாபதி நாவலர், மு. கு. நூ. ப. 11 நன்னூல், சூ. 141 Lyons, J., Introduction to Theoretical Linguistics
p. 9 பேச்சு மொழியின் முக்கியத்துவத்தினைப் பற்றிய விளக் சுத்துக்குப் பார்க்க : சண்முகதாஸ், அ. "ஆக்சு இலக்கியமும் மொழியியலும், ஆக்க இலக்கியமும் அறிவியலும், ப. 54, - எழுத்து மொழியின் நற்பண்புகள் இந் நூலுட் கூறப்பட்டுள்ளன. பார்க்க இயல் நான்கு தொல்காப்பியல் சொல்லதிகாரம் கு. 27 நாராயணசாமி, பண்டிய சித. "மயக்கம், தமிழ்ப்
பொழில், துணர் 40 மலர் 10, 1965 ஜன. நேமிநாதம், கு, 95 Lyons, J., Ibid., p. 9 - தொல்காப்பியம், எழுத்ததிகாரம், சூ. 83 பார்க்க : அடிக்குறிப்பு 20 தொல்காப்பியம், பொருளதிகாரம், கு. மேற்படி, பேராசிரியர் உரை, ப. 687
இருவழக்குப் பண்பு' பற்றிய விவரங்களுக்குப் பார்க்க:
சண்முகதாஸ், அ. நமது மொழியின் இயல்புகள், ப. 8-9
v
 

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 45
27.
28,
29.
30.
3I.
32. 33.
84 ,
35.
36。
37.
38.
39.
40.
41.
42,
43。
தொல்காப்பியம், பாயிரம், ப. 1 மேற்படி, பேராசிரியர் உரை, ப. 331 நன்னூல் சூ. 442
பார்க்க: அடிக்குறிப்பு 8 சபாபதி நாவலர், மு. கு. நூ, ப. 340 தொல்காப்பியம், பேராசிரியர் உரை, பக். 686-87 தொன்னூல் விளக்கம், சூ. 370 இலக்கணக் கொத்து, 6ஆம் சூத்திர உரை ப. 4 Robins, R. H., A Short History of Linguistics, p. 3 தொல்காப்பியம், சொல்லதிகாரம், சூ. 397
மேற்படி சூத்திரத்துக்குச் சேணுவரையர் உரை, ப. 357
தோல்காப்பியம், பொருளதிகாரம், மரபியல், சூ 645 மேற்படி, கு. 646 மேற்படி, சூ. 647 மேற்படி, கு. 648
மேற்படி, கு. 645க்குச் சேணுவரையரின் உரை, பக்.
6 78-9
இலக்கணச் சுருக்கம், ப. 1

Page 38
தமிழ் இலக்கணக் கோட்பாடுகளின்
அடிப்படைகள்
1. தமிழ் இலக்கணக் கோட்பாடுகளுக்கெல்லாம்
மொழி மாத்திரம் அடிப்படையல்ல
நவீன மொழியிலார் மொழியினே மூன்று நிலைகளுடன் தொடர்புறுத்தி விவரணஞ் செய்வர். அவையாவன: ஒலியியல், இலக்கணம், சொற்பொருளியல் என்பனவாகும். ஒரு மொழியின் பேச்சொலிகளே விவரணஞ் செய்வது ஒலியியலாகும். அம்மொழியின் உருபன்கள் பற்றியும் அவ்வுருபன்களாலான சொல்வடிவங்கள் பற்றியும் அவை தொடர்களாக வாக்கியங்களாக அமையுந் தன்மை பற்றியும் விவரணஞ் செய்வது இலக்கணமாகும். இலக்கணம் என்ற பகுதியிலே நவீன மொழியியலாளர் உருபனியல், சொற்
ருெடரியல் என்ற இரண்டினேயும் அடக்குவர். சொற்கள், !
அச்சொற்களாலான ஏனைய வடிவங்கள் ஆகியனவற்றின் பொருள் சொற்பொருளியலினுலே விவரணஞ் செய்யப் படும்.1 நவீன மொழியியலின்படி இலக்கணமென்பது மொழியினை மாத்திரமே அடிப்படையாகக் கொண்டதாகும். இதஞல் ஒரு மொழியினுடைய இலக்கண அலகுகள், இலக்கண வகைமைகள் ஆகியனவெல்லாம் அம்மொழியின் இயல்புக்கேற்ற வகையிலேயே அமைக்கப்பட்டன. மொழி யியலல்லாத காரணிகள் எவையுமே இலக்கணந் தொடர்

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 4 7.
பான விடயங்களுக்குக் கொள்ளப்படுவதில்லை. ஆனல் தமிழ்
மொழிக்கு எழுதப்பட்ட மரபுவ்ழி இலக்கணங்கள் இந் நிலையிலிருந்து வேறுபடுகின்றன.
தமிழ் இலக்கணங்கள் மொழியை மாத்திரமன்றி வேறு விடயங்களேயும் விவரணஞ் செய்கின்றன . தொல்காப்பியம் பற்றிக் கூறும் ஒர் அறிஞர்:
*அது இலக்கண நூலாக அமைந்தபோதும், முற் காலத் தமிழருடைய சமூக, அரசியல் பற்றிய தகவற் சுரங்கத்தைக் கொண்டதாக அமைகின்றது; முற் காலத் தமிழரின் வழக்கங்கள், பழக்கங்கள் தொடர் பான செய்தியினை அறிதற்கு ஆராய்ச்சியாளர் இந் நூலிலேயே தங்கியுள்ளனர். (Though it is a work of grammar, it contains a mine of information about the Social Polity of the early Tamilians; and research scholars are mainly dependent upon this work for information relating to the eustoms and manners of the early Tamilians')? -
என்று கூறிச் செல்வதை இங்கு குறிப்பிடுதல் வேண்டும். இவ்வாறு மொழியல்லாது, அரசியல் சமூக, பண்பாட்டு விடயங்களுடனும் தமிழ் இலக்கணங்கள் தொடர்புறுகின்ற காரணத்தாற் சில இலக்கணக் கோட்பாடுகள் அரசியல், del.pdf, பண்பாட்டுச் செல்வாக்குக்கு உட்படுகின்றன. இவற்றுட் பண்பாட்டினுள் அடங்கும் சமயச் செல்வாக்கே கூடியதாக அமைந்துள்ளது. குறிப்பாக, சமண, சைவ சமயத் தத்துவக் கோட்பாடுகளுக்கும் தமிழிலக்கணக் கோட் பாடுகளுக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. குறிப்பிட்ட தமிழ் இலக்கணம் ஒன்றின் சூத்திரத்திலே சமயச் செல்வாக்குக் காணப்படாவிடினும், அச்சூத்திர த் துக்கு எவர் உரை எழுதுகின்ருரோ, அவர் தான் சார்ந்த சமய தத்துவத்துக்கேற்றபடி உரை வகுப்பதைக் காணலாம். சில வேளைகளிலே, இந்தியச் சமயங்களுக்கெல்லாம் பொது வான கோட்பாடுகளையும் உரையாசிரியர்கள் எடுத்தாளுவ துண்டு.
சமூக அமைப்பும் அரசியற் போக்கும் தமிழிலக்கண வகைமைகளையும், கூறுகளையும், பாகுபாடுகளேயும் தம் செல் வாக்குக்கு உட்படுத்தியுள்ளன. இவை பற்றிய விபரங்கள்

Page 39
| 48 தமிழ் இலக்கிய கோட்பாடுகளின் அடிப்பவடகள்
பின்னர் தரப்படும். இலக்கணக் கூறுகள், இலக்கண வகை மைகள் ஆகியன வெறுமனே மொழியியல் தொடர்பானவை
அல்ல என்பதற்கு மேலைத்தேய இலக்கணங்களும் சான்று
பகருகின்றன. ஆண், பெண் என்னும் பாகுபாடு மொழி யுடன் தொடர்புடையது அல்ல. அவை உலகிலுள்ள உயிர்களின் இயற்கைப் பாகுபாட்டைக் குறிப்பன. இது உலகிலுள்ள எல்லோருக்குமே பொருந்தக்கூடிய பொதுவான விடயமாகும். ஆனல், இப்பாகுபாட்டினே மொழியிலுள்ள சொற்களைப் பாகுபாடு செய்ய சில மொழிகளின் இலக் கணங்கள் வழிகாட்டியுள்ளன. இவ்வாறு உண்மையுலகு விடயங்களை மொழியமைதி விடயங்களுடன் இலக்கண நூலார் தொடர்புறுத்த முயல்வதுண்டு. இலக்கணநூலார் இம் முயற்சியினைச் செவ்வனே செயற்படுத்த வேண்டுமென ஒட்டோ ஜெஸ்பர்ஸன் கூறுவர். இவ்வாறு மொழியல்லாத காரணிகளும் மொழிபற்றிய விவரணத்திலே சில வேளை களிலே இடம்பெறுவதுண்டு. இனி, தமிழிலக்கணங்களிலே மொழியல்லாத காரணிகள் எவ்வாறு தம்முடைய செல் வாக்கைச் செலுத்தியுள்ளன என்பதை நோக்கலாம்.
2. சமய செல்வாக்கு
2.1 உயிரும் மெய்யும்
தமிழ் இலக்கணங்களையும் தமிழ் மொழியின் தோற்றத் தினையும் இறைவனுடன் தொடர்புபடுத்தும் தமிழிலக்கண மரபினே இந்நூலின் முதலாம் இயலிலே குறித்துள்ளோம். தமிழ் இலக்கணத்துக்கும் சமயத்துக்குமுள்ள நெருங்கிய தொடர்பினே இது காட்டுகின்றது. தமிழ் இலக்கணங்களை ஊன்றி ஆராய்வதன்மூலம் அவற்றுட் பொதியப் பெற்றுள்ள
சில கருத்துக்கள் சமயச் செல்வாக்கினுலேயே உருவாகின என்
பதை இப்பகுதியிலே எடுத்துக் காட்டவுள்ளோம்.
தமிழ் எழுத்துக்களைப் பாகுபாடு செய்யுமிடத்து உயிர், மெய் என்னும் பாகுபாட்டினைத் தமிழ் இலக்கணநூலார் முதன்மையாகக் கொள்வர்.
ஒளகார விறுவாய்ப் - பன்னிரெழுத்து முயிரென மொழிப?
s

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 望9
என அகரமுதல் ஒளகார ஈருகவுள்ள எழுத்துக்களை உயிர், எனப் பெயரிட்டழைக்கின்ருர் தொல்காப்பியர், அதே போன்று
னகார விறுவாய்ப் பதினெண் னேழுத்து மெய்யென மொழிய
எனக் ககர முதல் னகர ஈருகவுள்ள எழுத்துக்களை மெய் எனப் பெயரிட்டழைத்துள்ளார். உயிர், மெய் எனத் தமிழ் இலக்கணநூலார் பாகுபாடு செய்துள்ள எழுத்துக்கள் பிரதிநிதித்து:ஞ் செய்யும் ஒலிகளை ஒலியியலார் முறையே LLLLLSGL LLLLLL L S O TT TTTS SS LLLLLLLLmm mLLLL S TTTm TTTTTTT S TTTS நெஞ்சிலிருந்தெழும் காற்று தடையின்றிப் பேச்சுறுப்புக் களின் துணையுடன் ஒலிகளாக வெளிவருமிடத்து அவை
Vowels என்றும், தடையுடன் ஒலிகள் பிறக்குமிடத்து
அவை Con80nants என்றும் ஒலியியலார் அவற்றின் வேறு பாட்டினை அறிவியல் ரீதியாக விளக்கியுள்ளனர்.6 ஆணுல் சில தமிழ் இலக்கணநூலார் உயிர், மெய் என்பனவற்றுக்குக் கொடுக்கும் விளக்கம் சமயதத்துவ அடிப்படையைக் கொண்டதாயுள்ளது. உயிர் பற்றிய மேற்காட்டிய தொல் காப்பியச் சூத்திரத்துக்கு நச்சினுர்க்கினியர் வகுத்துள்ள உரையினை இவ்விடத்திலே நோக்குதல் பொருத்தமாகும்.
‘மெய் பதினெட்டினையும் இயக்கித் தான் அருவாய் வடிவின்றி நிற்றலின் உயிராயிற்று. இவை மெய்க்கு உயிராய் நின்று மெய்களே இயக்குமேல் உயிரென வேருேர் எழுத்தின்ரும், பிறவெனின், மெய்யினிற்கும் உயிரும் தனியே நிற்கும் உயிரும் வேறென உணர்க. என்ன? 'அகர முதல' (குறள் - சு) என்புழி அசுரந் தனியுயிருமாய் ககரவொற்று முதலியவற்றிற்கு உயிரு மாய் வேறு நிற்றலின் அவ்வகரத் தனியே நிற்ற லானும் பல மெய்க்கண் நின்று அவ்வம் மெய்கட்கு இசைந்த ஒசைகளைப் பயந்தே நிற்றலானும் வேறுபட்ட தாக்லின் ஒன்றே யாயும் பலவேயாயும் நிற்பதோர் தன்மையையுடைத்தென்று கோடும்; இறைவன் ஒன்றே யாய் நிற்குந் தன்மையும் பல்லுயிர்க்குந் தானேயாய் அவற்றின் அளவாய் நிற்குந் தன்மையும்போல,7 த-7

Page 40
50 தமிழ் இலக்கணக் கோட்பாடுகளின் அடிப்படைகள்
இவ்வாறு உயிருக்கு விளக்கந்தரும் நச்சிஞர்க்கினியர் "பன்னிருயிருக்குந் தான் இடங்கொடுத்து அவற்ருன் இயங்குத் தன்மை பெற்ற உடம்பாய் நிற்றலின். ' என்று மெய்க்கும் விளக்கந் தருகின்ருர், நன்னூற் காண்டிகை யுரைகாரரும், 'அகர முதலிய பன்னிரண்டும் உயிர்போலத் தனித்தியங்கும் வன்மை யுடைமையால் உயிரெனவும், ககர முதலிய பதினெட்டும் உயிரோடு கூடியல்லது இயங்கும் வன்மையில்லாத மெய்போல அகரத்தோடு கூடியல்லது இயங்கும் வன்மையில்லாமையால் மெய்யெனவும் பெயர் பெற்றன. 19 என்று கூறுவதை தோக்கலாம். மேற்காட்டிய உரைகளெல்லாம், தனித்தியங்கும் ஆற்றலுடைய எழுத் துக்களை உயிர் எனவும், அவ்வாறு இயங்காது உயிரின் கூட்டத்தினுல் இயங்கும் எழுத்துக்களை மெய் எனவும் பெயரிட்டமைக்கு உயிர் பற்றியும் உடல் பற்றியும் எம் முடைய சமயங்கள் கொண்டுள்ள தத்துவக் கோட்பாடு அடிப்படையாக அமைகின்றதெனக் கூறலாம். உடலி லிருந்து உயிர்போனல் அவ்வுயிர் தனித்து நிற்கின்றது எனக் காட்சியளவை யாலே கூறமுடியாதுள்ளது. ஆனல் இந்தியச் சமயங்கள் எல்லாமே உயிர் அல்லது ஆன்மாவின் அதியுன்னத நிலை உடலின்மையேயாகும் எனக் கூறுகின்றன. உடல் இல்லாமலே உயிர் இயங்கும் என்பதனையும் இந்து மதங்கள் ஏற்றுக்கொள்கின்றன.
அணுதி சிவருபயமாகி ஆன்மா தணுதி மலத்தாற் தடைபட்டு நின்று தணுதி மலமும் தடையற்றபோதே யணுதி சிவரூப மாகிய வாறே
என்னும் பாடல் 10 சைவசமயக் கோட்பாட்டினையும்,
'இவன் (ஆன்மா) பிறப்பதுமில்லை; எக்காலத்திலும் இறப்பதுமில்லை. இவன் ஒரு முறையிருந்து பின்னர் இல்லாது போவதுமில்லை. இவன் பிறப்பற்ருன்; அன வரதன். இவன் சாசுவதன்; பழையோன்; உடம்பு
கொல்லப்படுகையில் இவன் கொல்லப்படான்."

t
தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 5 I
என்னும் பகவத்கீதைக் கூற்று' வைணவ சமயக் கோட் பாட்டினையும் எடுத்துக் காட்டுகின்றன. சமணசமயத் தத்துவம் பற்றிக் கூறும் மயிலே, சீனிவேங்கடசாமி,
*உயிர்கள் எண்ணிறந்தன; அழிவில்லாதன; அநாதி யாகவுள்ளன. " என எடுத்துக் கூறுவர். 12 உயிர் - உடல் பற்றிய மேற் காட்டிய கூற்றுக்களிலிருந்து உயிரின் தனித்துவத்தினை நாம் உணரமுடிகின்றது. இச்சமய தத்துவக் கோட்பாடே தமிழ் எழுத்துக்களின் உயிர்-மெய் என்ற பாகுபாட்டுக்குக் கொடு க் கப்படும் சில விளக்கங்களுக்கு காரணமாயிற்று.
9 2 திணை, பாற் பாகுபாடு
தமிழ்ச் சொற்களே இரண்டு திணை ஐந்து பால் காட்டுவனவாகத் தமிழ் இலக்கணநூலார் வகைப்படுத்தி யுள்ளனர். -
உயர் திணை யென்மஞர் மக்கட்சுட்டே யஃறிணை யென்மனு ரவரல மீறவே யாயிரு திணையி னிசைக்குமண சொல்லே!
என்று தமிழ் மொழியிலே அமைந்துள்ள திணைப் பாகுபாட் டினைத் தொல்காப்பியர் எடுத்துக் கூறியுள்ளார்.
சமண சமய தத்துவத்தில் நவ பதார்த்தம் (ஒன்பது பொருள்கள்) எனக் கொள்ளப்படுவனவற்றுள் உயிரும் ஒன்ருகக் கருதப்படுகிறது. ஜீவ (உயிரி) அஜீவ (உயிரிலி). என்னும் பாகுபாடு சமணசமய தத்துவத்திலே முக்கியமாகக் கருதப்படுகின்றது. 'உயிர்கள் ஒரறிவுயிர், ஈரறிவுயிர் மூவறிவுயிர், நாலறிவுயிர், ஐயறிவுயிர் என ஐந்து வகைப் படும். ஐயறிவுயிர்கள் பகுத்தறிவு (மனம்) இல்லாதவை பகுத்தறிவு உடையவை என இருவகைப்படும்,' பகுத் தறியும் மனத்தினையுடைய மாத்தரே உயிர்களுட் சிறந்த வர்களாகச் சமணமதம் கருதுகின்றது. இந்த வகையிலே நரகர், தேவர்கூட மக்களுக்கு இணையாகார் . 'மாற்றது

Page 41
52 தமிழ் இலக்கணக் கோட்பாடுகளின் அடிப்படைகள்
எனப்படும் 'சம்சார ஜீவன் நல்வினை தீவினைகளிற் கட்டுண்டு அவ் வினைப் பயன்களைத் துய்ப்பதற்காக நரகத்திலும் சுவர்க் கத்திலும் பிறப்பதும் இறப்பதுமாக உழன்று திரியும் தன்மையுள்ளது. விலங்கு, நரகர், தேவர் என்றும் பிறப் புக்களில் பிறந்த உயிர்கள் அப்பிறவிகளிலே வீடு பேறடைய, மக்களாகப் பிறந்த உயிர்கள் மட்டும் வீடு பெறும் வாய்ப்பு உடையன. ’18 ஆகவே சமண சமயத்திலே மக்கட் சுட்டினர் பெறும் சிறப்பு, அவர்களுக்குரிய ஆருவது அறிவும், வீடுபேறடையும் வாய்ப்புமாகும். தொல்காப்பியர் உயிர்களின் அறிவுபற்றித் தானே தன்னுடைய நூலிலே விரித்துக் கூறியுள்ளார். -
ஒன்றறி வதுவே யுற்றறி வதுவே யிரண்டறி வதுவே யதணுெடு நாவே மூன்ஜறி வதுவே யவற்றெடு மூக்கே நான்கறி வதுவே யவற்றெடு கண்ணே யைந்தறி வது வே யவற்றெடு செவிய்ே யாஹறி வது வே யவற்றெடு மலே நேரிதி னுணர்ந்தோர் நெறிப்படுத் தி நே16 என்று மரபியலிலே தொல்காப்பியர் கூறுகின்ருர், ஒன் றறிவது என்பது ஒன்றினையறிவது; அஃதாவது, உற்றறிவ தென்பதும், இரண்டறி:தென்பதும் அம்மெய்யுணர்விகுேடு நாவுணர்வுடையதெனவும் மூன்றறிவுடையது அவற்ருேடு கண்ணுணர்வுடையதெனவும், ஐந்தறிவுடையது அவற்ருேடு செவியுணர்வுடையதெனவும், ஆறறிவுடையது அவற்ருேடு மனவுணர்வுடையதெனவும் 17 எனத் தொல்காப்பியர் நிரைப்படுத்தியுள்ளார். இவற்றுள் ஒவ்வொரு உயிர் வகைக்கும் உதாரணம் தரும் தொல்காப்பியர், ஆறறி வுயிர் பற்றிக் கூறுமிடத்து, !
மக்கள்தாமே யாறறிவுயிரே பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே' என்று கூறியுள்ளார். சமண சமயக் கோட்பாட்டினை எவ்வாறு தொல்காப்பியர் தன்னுடைய மரபியற் சூத்திரங் களிலே குறிப்பிட்டுள்ளார் என்பதனே மேலும் லலியுறுத்த
პიცა:

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 5@
வேண்டியது அயசியமில்லை எனக் கருதுகிருேம். இச்சமயக் கோட்பாட்டுக்கும் தமிழ்மொழியின் திணைப் பாகுபாட் டிற்கும் நெருங்கிய தொடர்புண்டு. தொல்காப்பியர் தன்னுடைய உயர் திணைக்கோட்பாட்டிலே தேவரையும் நரகரையுஞ் சேர்க்கவில்லை. பொருளதிகாரத்திலே வரு ணன், மாயோன், வேந்தன், சேயோன் என்று கடவுளர்க்கு னஃகானெற்றுக் கொடுத்துக் குறிப்பிட்டுள்ளார். எனினும்
அவர்களே உயர்திணைக்குள் அடக்காது விட்டதன் காரன
மென்ன? சமண சமயமே இதற்குக் காரணமெனக் கூறலாம். சமண சமயத் தத்துவத்தை விட வேறு பல தத்துவங் களும் தமிழ் நாட்டிலே செல்வாக்குப் பெற்றிருந்தன. இதஞல், சமணசமயச் செல்வாக்கு மாத்திரம் தமிழ் இலக்கணக் கோட்பாடுகள் யாவற்றையும் கட்டுப் படுத்தின எனக் கூறமுடியாது. சமணசமயத் தத்துவ அடிப்படையிலே தொல்காப்பியரால் உயர்தினே என்பது மக்கட்சுட்டே என குேக்கப்பட்ட இலக்கணக் கோட்டாடு நன்னூலாராலே மாற்றியமைக்கப்படுகின்றது.
மக்க டேவர் தரக ருயர்தின மற்றுயி குள்ளவு மில்லவு மஃறிணை 19 என்பது நன்னூற் குத்திரம். தேவ ரும் நரகரும் மக்களைப் போன்று ஆறறிவுடையவரென்றும் வீடுபேற்றுக் குடையவ ரென்றும் பிற சமய தத்துவங்கள் கருதிய காரணத்தினுல், நன்னூலார் இவ்வாறு சூத்திரம் செய்யவேண்டியேற்
பட்டுள்ளது.
உயர்திணையில் ஆண், பெண், பலர் என்னும் பாகு பாட்டினைக் கூறும் தமிழிலக்கண நூலார் எல்லோருமே அஃறிணையில் ஒன்று, பல என்னும் பாகுபாட்டினையே மேற்கொண்டுள்ளனர். அஃறிணையிலே அடக்கப்படும் உயி ருள்ள விலங்குகள், பறவைகளிடையே ஆண், பெண் வேறு பாடு காணப்படுகின்றன. மரபியலிலே தொல்காப்பியர் விலங்குகள், பறவைகளுக்குரிய ஆண் - பெண் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார். ஆணுல், அவ்வாருண் பெயர்கள் உயர் இணையில் ஆண்பால், பெண்பால் என்று கணிக்கப்பட்டு, உயர்திணை வினைமுடிபுகள் கொள்ளமாட்டா. களிறு என் னுஞ் சொல் ஆண் யானையைக் குறிக்கும்; பிடி பெண்

Page 42
5 4 தமிழ் இலக்கணக் கோட்பாடுகளின் அடிப்படைகள்
யானையைக் குறிக்கும். ஆணுல், களிறு வந்தான், பிடி வந்தாள் என்று நாம் எழுதுவதுமில்லை; பேசுவதுமில்லை. உயர்திணையிலே ஆண் - பெண் வேறுபாட்டினை இலக்கண அடிப்படையிலே உணரும் நாம் அஃறிணையிலே அவ்வாறு உணர்வதில்லை. ஆருவது அறிவில்லாத விலங்குகளிடையே இவ்வேறுபாடு அவசியமற்றதெனச் சமய தத்துவங்கள் கருதினமையை இதனுடன் ஒப்பிட்டு நோக்கலாம்.
2.3 பெண்ணின் இழிநிலையும் தமிழ் இலக்கணமும்
மக்களிடையே ஆண் - பெண் என்னும் வேறுபாட்டினை இலக்கண அடிப்படையிலே இனங்கண்ட போதும், அவற் றுள் ஆணே முதன்மையானவன் என்னுங் கருத்தும் தமிழ் இலக்கணநூலாரைப் பாதித்துள்ளது. இக்கருத்து, சமண சமய, வைதிக சமயக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டதாகும் பெண்பிறவி தாழ்ந்த பிறவி என்பதும், 'பாவம் செய்தவர் பெண்ணுகப் பிறக்கிருர்’ என்பதும் சமண சமயக் கொள்கை "பெண்ணுகப் பிறந்தவர் வீடு பேறு (மோட்சம்) அடையமுடியாது' என்பதும் சமண மதத் துணிபு ஆகும். 29 மேருமந்தபுராணம் என்னும் (நூலிலே செய்யுள் 738) ,
இந்திரன் தேவிமார்க்கும் இறைமை செய் முறைமை இல்லை
பைந்தொடி மகளிராவர் பாவத்தால் பெரியநீரார்
என்று பெண்களுடைய தாழ்ந்த நிலை கூறப்படுகின்றது. பிற்காலத்திலே சமூகத்தோடு தொடர்பான இவ்விடயத் துக்கு அடிப்படையாக அமைந்தது சமயமேயாகும். வைதிக சமயத்தினரும் பெண், புத்திரரைப் பெறுவதின் மூலம் 'புத் என்னும் நகரத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்கிருள் எனக் கருதினர். இவையெல்லாம் தமிழிலக்கணக் கோட் பாடுகளிலும் தம் பாதிப்பினை ஏற்படுத்தின. உதாரணமாக, தொல்காப்பியம் முதற் சூத்திரமாகிய,
எழுத் தெனப் படுவ அகர முதல எகர விறுவாய் முப்பஃ தென்ப
ܛܨ
در

தமிழ் இலக்கணக் கோட்பாடுகளின் அடிப்படைகள் 55
என்பதற்கு உரை கூறும் இளம்பூரணரும் நச்சினர்க்கினியரும் வீடுபேற்றுக்குரிய ஆண்மகன் பற்றிப் பேசுகின்றனர். சமண சமயத்தைச் சார்ந்தவராகிய இளம்பூரணர்,21 அகரம் தானும் இயங்கித் தனி மெய்களை இயக்குதற்குச் சிறப்பான் முன்வைக்கப்பட்டது. னகரம் வீடுபேற்றிற்குரிய ஆண்பாலே உணர்த்துதற் சிறப்பான் பின்வைக்கப்பட்டது" என்று உரையெழுதுகின்ருர் வைதிக சமயத்தைச் சார்ந்த நச்சினர்க் கினியரோ,? “ எழுத்துக்கட்கெல்லாம் அகரம் முதலாதற்குக் காரணம் மெய்யினியக்க மகர மொடு சிவனும் என்பதணுற் கூறுப. வீடுபேற்றிற்குரிய ஆண்மகனே உணர்த்துஞ் சிறப் பான் னகரம் பின் வைத்தார்' என்று உரை கூறியுள்ளார். பால் காட்டும் ஈறுகளைச் சொல்லதிகரரத்திலே தொல் காப்பியர் கூறும்பொழுது “னஃகா ணுெற்றே யாடுஉ வறிசொல்' என்னுஞ் சூத்திரத்தை முதலிற் கூறி ஆண்பாலை யுணர்த்தும் னகர விகுதியினை முதன்மைப் படுத்தியதற்கும் இவ்வீடுபேற்றுக் காரணமே முன்வைக்கப்பட்டது. -
சமய அடிப்படையிலே பெண் தாழ்வுற்றவளாகக் கருதப்பட்ட காரணத்தால் அவளுக்குப் பல உரிமைகளும் சலுகைகளும் மறுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்நிலையினை எம்முடைய தமிழ் இலக்கணம் ஒரளவு எடுத்துக் காட்டு கின்றதெனலாம். தமிழ் மொழியிலே எத்தனையோ ஆண் பாலை உணர்த்துஞ் சொற்கள் உள்ளன. ஆனல் அவற்றுக்கு நிகரான பெண்பாற் சொற்கள் அம்மொழியிலே இல்லை. உதாரணமாக, ஒளவையார் போன்ற பெண்பாற் புலவர்கள் தமிழ் நாட்டிலே வாழ்ந்து சிறப்புற்றபோதிலும், அவர்கள் புலவர் என்ற பொதுச்சொல்லாலேயே அழைக்கப்பட்டனர். புலவன் என்னும் ஆண்பாற் சொல் வழக்கில் இருக்கும் அதே வேளையில் அதற்கு நிகரான பெண்பாற் சொல் இல்லை. இதுபோன்று பின்வரும் ஆண்பாற் சொற்களுக்கு நிகரான பெண்பாற் சொற்கள் இல்லே:
சான்றேன், அறிஞன், ஒற்றன், வீரன் கலேஞன், மன்னன், அந்தணன், வணிகன், அமைச்சன் புரோ கிதன், காவலன், கவிஞன், விருந்தினன், அறிவாளன், பாகன், முனிவன், கணக்கன், சோதிடன்,

Page 43
56. தமிழ்மொழி இலக்கண இயல்புகள்
மேற்காட்டிய சொற்களைப்போன்று இன்னும் எத்தனையோ சொற்களை உதாரணங்களாகக் காட்டலாம். இத்தகைய சொற்களுக்குப் பெண்பாற் சொற்கள் இல்லாமைக்குப் பல காரணங்கள் கூறலாம். அவற்றுள் ஒன்று சமயக் காரண மாகும். பெண்கள் சமய அடிப்படையிலே தாழ்ந்தவர்கள் என்று கொண்ட காரணத்தால், சமூக, அரசியல், பொருளா தார அடிப்படையிலும் அவர்கள் தாழ்ந்தவர்களெனக் கொள்ளப்பட்டனர். இதஞல், அறிவுள்ளவர்களாகவோ, அலைஞானம் உடையவர்களாகவோ அவர்கள் கருதப்பட வில்லேப் போலும். அப்படி இல்லாவிடில், அறிஞன், கவிஞன், கலைஞன் போன்ற சொற்களுக்குப் பெண்பாற் சொற்கள் பண்டைக்காலத்தில் வழக்கில் இருந்திருக்கும்.
(இந்நூலின் முதலாவது பதிப்பினைப் படித்த பிரபல இலக்கிய எழுத்தாளர் சுஜாதா குங்குமம் (24-10-1966) என்னும் இதழிலே பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
சமீபத்தில் நான் படித்த மற்ருெரு புத்தகம் யாழ்ப் பானைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கலாநிதி அ. சண்முகதாஸ் அவர்களின் தமிழ் மொழி இலக் கண இயல்புகள்". பங்களூரிலிருந்து வெளிவரும் இன்று' பத்திரிகையின் ஆசிரியர் தமிழவன் எனக்கு இந்தப் புத்தகத்தைக் கொடுத்தார்.
மொழி என்பது சமூக சம்பந்தமான கருத்துத் தொடர்பு சாதனம் என்பதால் சமூகத்தோடு சார்த்த அரசியல், கலாசாரம், பொருளாதாரம் இவைகள் மொழியின் இலக்கணத்தையும் பாதிக்கும் என்கிற கருத்தின் அடிப்படையில் தமிழிலக்கணத்தை புது சாகப் பார்க்கிருர் கலாநிதி. அங்கங்கே "சோக்கிறற் றிஸ்" பிளேற்ருே” போன்ற வார்தைகளைச் சந்தித் தாலும் ஆராய்ச்சிமுறை நிச்சயம் வசீகரமாக இருக் கிறது. தமிழிலணக்கணத்தின் அடிப்படைக் கோட் பாடுகள் சமயம், சமூகம், அரசியல் என்று ஸ்தா

தமிழ் இலக்கணக் கோட்பாடுகளின் அடிப்படைகள் 57
பிக்க விரும்புகையில் பேராசிரியர் தமிழ் மொழியில் எத்தனையோ ஆண்பாலை உணர்த்தும் சொற்களுக்கு நிகரான பெண்பாற் சொற்கள் இல்லை. உதாரண மாக, ஒளவையார் போன்ற பெண்பாற் புலவர்கள் தமிழ் நாட்டிலே வாழ்ந்து சிறப்புற்ற போதிலும் அவர்கள் புலவர் என்ற பொதுச் சொல்லாலே அழைக் கப்பட்டனர். புலவன் என்னும் ஆண்பாற் சொல் வழக்கில் இருக்கும் அதே வேளையில் அதற்கு நிகரான பெண்பாற் சொல் இல்லே இது போன்று பின்வரும் ஆண்பாற் சொற்களுக்கு நிகரான பெண்பாற் சொற்கள் இல்லே.
சான்ருேன், அறிஞன், ஒற்றன், வீரன், கலைஞன் மன்னன், அந்தணன். வணிகன், அமைச்சன். புரோ கிதன், காவலன், கவிஞன், விருந்தினன், அறிவாளன் பாகன், முனிவன், கணக்கன், சோதிடன் இதற்குக் காரணம் சமயம்தான் என்கிருர்,
"பெண்கள் சமய அடிப்படையிலே தாழ்ந்த வர்கள் என்று கொண்ட காரணத்தால் பிற்காலத் தில் சமூக, அரசியல் அடிப்படையிலும் அவர்கள் தாழ்த்தப்பட்டனர். இதனுல் அறிவுள்ளவர்களாகவோ கலேஞானம் உடையவர்கவோ அவர்கள் கருதப்பட வில்லே போலும், அப்படிஇல்லாவிடில் அறிஞன் கவிஞன், கலைஞன் போன்ற சொற்களுக்கு பெண்பாற் சொற்கள் வழக்கில் வந்து சேர்ந்திருக்கும்' என்கிருர் Ꮷ8 ᎱᎢ 6Ꮫi) .
இந்தக் கருத்தை என்னுல் ஒப்புக்கொள்ள முடிய வில்லை. இன்றைக்கு ‘கவிதாயினி” என்று புதுசாக ஒரு சொல் கிளம்பியிருப்பது நிறைய பெண்கள் கவிதை எழுதக் கிளம்பியிருப்பதுதான் காரணம். தேவையிருப் த-8

Page 44
5 S தமிழ்மொழி இலக்கண இயல்புகள்
பின் வார்த்தைகள் ஏற்படும். அந்தக்காலத்தில் முனிவி களும் ஜோதிடிகளும் இல்லை. (இப்போதும் இல்லை!) இருந்தால் வார்த்தை வரும். அல்லது தேவைக்கேற்ப இலக்கணம் மாறும்.
கொஞ்சம் கொஞ்சமாக சண்முகதாஸ் குறிப்பிடும் வார்த்தைகள் எல்லாமே தத்தம் ஆண்மையை இழந்து இருபாலாருக்கும் பொதுவாகிவிடும்.
"அப்படி இல்லாவிடில், அறிஞன், கவிஞன் கலைஞன் போன்ற சொற்களுக்குப் பெண்பாற் சொற்கள் வழக்கில் வந்து சேர்ந்திருக்கும்’ என்னும் மயக்கமுடைய வாக்கியமே சுஜாதா அவர்கள் சுட்டிய குற்றத்துக்குக் காரணமாகும். அவ்வாருண மயக்கு வாக்கியம் அமைத்தது எம்முடைய குறையேயாகும் அவ்வாக்கியம் உண்மையிலே, "அப்படி இல்லாவிடில், அறிஞன், கவிஞன், கலைஞன் போன்ற சொற் களுக்குப் பெண்பாற் சொற்கள் பண்டைக்காலத்திலே வழக் கில் இருந்திருக்கும்” என்றே அமைய வேண்டும். சுஜாதா குறிப்பிட்டுள்ளதுபோல், வருங்காலத்தில் இ ச் சொற்கள் இருபாலாரையுமே குறிப்பனவாயலாம். அம்மன் என்னுஞ் சொல் பெண்பாலைக் குறிப்பதுபோல, அறிஞன், கலைஞன் போன்ற சொற்களும் பெண்பாலையுங் குறிக்க வாய்ப்புண்டு.
24 சமணசமயச் செல்வாக்கே பெரும்பான்மை
இலக்கணத் துறையிலே பெருந்தொண்டாற்றியவர்கள் சமணர்களேயாகும். அணுக்கொள்கையினே அனுசரிக்கு அவர்கள் சொற்களைப் பகுத்தாய்வு செய்யும் முயற்சியிலே பெருமளவு ஈடுபட்டது ஆச்சரியப்படுதற்கில்லே. அவர்கள் ஆற்றிய தொண்டு பற்றி தெ. பொ. மீனுட்சிசுந்தரன் பின் வருமாறு கூறுகின்ருர்:

தமிழ் இலக்கணக் கோட்பாடுகளின் அடிப்படைகள் 莎9
சிறந்த இலக்கண நூல்களில் பெரும்பான்மையான சமணர்கள் எழுதினவையேயாம். தொல்காப்பியம் சமண நூல் என உறுதி கூற முடியாமற் போனுலும், சமணம் பரவிய காலத்தெழுந்த தமிழ் வழக்கிற்கே இலக்கணம் கூறுகிறதெனலாம். இறையனரகப் பொருள், புறப்பொருள் வெண்பா மாலே, வீர சோழியம், இலக்கண விளக்கம், தொன்னுரல் விளக்கம், பிரயோக விவேகம் நீங்கிய மற்றைய இலக்கணப் பரப்பெல்லாம் சமணர் இட்ட பிச்சையே எனலாம்23
எனவே, சமணருடைய சமயச் செல்வாக்குத் தமிழிலக்கணக் கோட்பாடுகளிலே செறிவுற்றதற்கு, பெருமளவு தமிழிலக் கண நூல்களை அவர்கள் எழுதியமை காரணமாயிற்று. வைதீக சமயத்தினருடைய செல்வாக்கும் தமிழிலக்கணங் களிலே தென்பட்ட போதிலும், சமணசமயச் செல்வாக்கே
பெரும்பான்மையாகச் செறிவுற்றதெனலாம்.
3. சமூகச் செல்வாக்கு
3.1 தன்மை முன்னிலை இட்ப்பெயர்கள்
சமூக ஏற்றத் தாழ்வு இல்லா நிலையிலே, அச்சமூகத் தினர் பேசும் மொழியில் தன்மை ஒருமைக்கு ஒரு சொல் வடிவமும் முன்னிலை ஒருமைக்கு ஒரு சொல் வடிவமுமே காணப்படுகின்றன. இன்றைய ஆங்கில மொழியிலே என்பது தன்மை ஒருமைக்கும், We தன்மைப் பன்மைக்கும், you முன்னிலைக்கும் உரிய சொற்களாகப் பயன்படுத்தப் படுகின்றன. ஆணுல், பல்வேறு சமூகக் காரணங்களினுல் பல மொழிகளிலே இந்நிலை மாற்றமடைந்து காணப்படு கின்றது. முண்ட்கொ என்னும் மொழியிலே திருமணஞ் செய்த பெண்ணை முன்னிலேப் படுத்திக் கூறும்போது

Page 45
60 தமிழ் இலக்கண இயல்புகள்
இருமையிலேயே கூறவேண்டும் என்னும் வழக்கு உண்டு. திருமணஞ் செய்த பெண்ணைக் கணவனிலிருந்து பிரித்துப் பேசுவது இம்மொழியினரிடையே வழக்கமில்லை. அதனுலே இருவரையுஞ் சேர்த்துக் கூறக்கூடிய ஒருசொல் வடிவமே திருமணஞ் செய்த பெண்ணே முன்னிலைப்படுத்தும் போது உபயோகப்படுத்தப் படுகின்றது.24 இதுபோன்ற வேடிக்கை யான வேறுபாடுகள் உலகிலுள்ள மொழிகளின் தன்மை, முன்னிலைப் பெயர்களிலே காணப்படுகின்றன. தமிழ் மொழியில் இந்நிலை எவ்வாறு அமைந்தது என்றும், தமிழ் இலக்கண நூலாருடைய கோட்பாடு எவ்வாறு அமைந் துள்ளது என்றும் நாம் நோக்கவேண்டும்.
தமிழ்மொழியில் ஆரம்பகாலத்தில் தன்மை ஒருமைக்கு யான் என்னும் சொல்லும் முன்னிலை ஒருமைக்கு நீ என்னும் சொல்லுமே பயன்படுத்தப்பட்டன. சங்க இலக்கியப் பாட லொன்றிலே இவ்விரு வடிவங்களுமே கையாளப்பட்டுள்ளன.
யாயும் ஞாயும் யாரா கியரோ எந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர் யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம்கலந் தாவே?
என்னும் குறுந்தொகைப் பாடலில் யானும் நீயும் என்ற தொடரில் தன்மை, முன்னிலை ஒருமைச் சோற்கள் இடம் பெறுகின்றன. இந்நிலை நீடித்திருக்கவில்லை. சமூகத்தி லேற்பட்ட பல்வேறு மாற்றங்கள் காரணமாக யான், நீ என அமைத்த வடிவங்கள் மாற்றமடைந்ததுடன் பொரு ளிலும் வேறுபாடு தோற்றத் தொடங்கின. இவ்விடத்தில் தமிழிலக்கணநூலார் குறிப்பிட்டுள்ள தன்மை, முன்னிலைப் பெயர்கனை அட்டவணைப்படுத்தி நோக்குதல் பொருத்த மாகும்:
1 ↓ܐ

தமிழ் இலக்கணக் கோட்பாடுகளின் அடிப்படைகள் 61
தன்மை முன்னிலை
ஒருமை பன்மை ஒருமை பன்மை
தொல்காப்பியம் யான் யாம், நாம் நீ நீயிர்
வீரசோழியம் நான் நாம், நீ, நீர் நீங்கள் புத்தமித்திரஞர் நாங்கள் (நாம்)
உரையில்
நன்னூல் யான்,நான்யாம், நாம் 鹰 எல்லீர்
நீயிர் நீவிர், நீர்
தொன்னுரல் நான், யான்யாம், நாம் நீ 5uori
விளக்கம் நீவிர், நீர்
στουοθή
இலக்கணச் நான் யான் நாம், யாம் நீ நீர், நீயிர், சுருக்கம் நாங்கள் நீவிர்
யாங்கள் நீங்கள்
தன்மை ஒருமையில் யான், நான் என்னும் வடிவங் அ8ளயே தமிழ் இலக்கணநூலார் குறிப்பிட்டுள்ளனர், ஆணுல் இலக்கியங்களிலே பல சந்தர்ப்பங்களில் தன்மை ஒருமையிடத்துப் பன்மை பயின்று வந்துள்ளமையை அவதானிக்கக் கூடியதாயுள்ளது. இத்தகைய பண்பு உலக மொழிகள் பலவற்றிலே காணப்படுகின்றது. தன்மை ஒருமையினைப் பன்மையாகக் கூறுதல் தான் யாரென வெளிக்காட்ட விரும்பாத ஒரு வகையான பணிவு முறை

Page 46
62 தமிழ்மொழி இலக்கண இயல்புகள்
மையே பாகும் என ஒட்டோ ஜெஸ்பர்ஸன் குறிப்பிடு இன்ருர் 26 தமிழ் இலக்கியங்களிலே இப்பண்பு காணப் படுகின்றது. உதாரணமாக, பரிபாடலிலே செவ்வேள் பாடலைப் பாடிய ஆசிரியர்,
நின்னிழல் அன்னுேர் அல்லது இன்ஞேர் சேர்வார் ஆதலின், இரப்பவை பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்பால் அருளும் அன்பும் அறினும் மூன்றும் உருளினர்க் கடம் பின் ஒலிதா ரோயே27
என்னும் பகுதியில் யாஅம் இரப்பவை என்று பன்மையிலே கூறுகின்ருர் . உயர்ந்தோர் முன் தன்னைத் தாழ்த்திக் கொள்ளுதல், ஒருவனுய் நின்று பேசும்பொழுதும் தான் சார்ந்த குழுவினே மறவாதிருத்தல் என்னும் காரணங்க ளாலேயே ஆசிரியர் தன்னை ஒருமையிலே குறிப்பிடாது, பன்மையிலே குறிப்பிடுகின்ருர், இது போன்ற இலக்கிய வழக்கினேயும் பேச்சு வழக்கினையும் கண்ட தொல்காப்பியர்
ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியு மொன்ஜனேக் கூறும் பன்மைக் கிளவியும் வழக்கி னுகிய வுயர்சொற் கிளவி யிலக்கண மருங்கிற் சொல்லா ஒல்ல38
என்று சூத்திரஞ் செய்துள்ளார். "யாம் வந்தேம், நீயிர் வந்தீர், இவர் வந்தார்" என்னும் உதாரணங்களைக் கொடுத்து ஒருமையிடத்துத் தன்மை, முன்னிலே, படர்க்கை இடங்களிலே பன்மை பயின்று வருவதுபற்றிச் சேணுவரை யர் உரையிலே விளக்குவர். தொல்காப்பியர் இத்தகைய வழக்குகளை இலக்கண அந்தஸ்து இல்லாதனவாகக் கொள் கிருர், தொல்காப்பியர் இவ்வாறு கூறியபடியால் அவர் பின் வந்த இலக்கணநூலாரும் குறியாது விட்டனர். ஆனல் அவ்விலக்கணநூலார் யாவருமே இத்தகைய வழக்குகள் பற்றி அறிந்துள்ளனர். தன்மை ஒருமைப் பெயர்கள் என யான், நான் என்பவற்றைக் குறிப்பிடும் வீரசோழிய ஆசிரியரே,

தமிழ் இலக்கணக் கோட்பாடுகளின் அடிப்படைகள் 63
மேனு முரைத்த மரபே வரும் . 29 எனத் தன்னை நாம் என்று பன்மையிலே குறிப்பிடு கின்ருர், ஆகவே, தன்மை ஒருமையினேப் பன்மையிலே வழங்கும் நிலை பல நூற்ருண்டுகளுக்கு முன்னரேயே தமிழ் மொழியின் ஒர் இயல்பாக அமைந்துவிட்டதெனக் கொள் ளலாம். இதற்குச் சமயம் ஒரு காரணமாக அமையினும் சமூகக் காரணமே முக்கியமானதெனலாம். தன்னை இனங் காட்டிக்கொள்ளாது உயர்த்தோர்முன் தன்னைத் தாழ்த்திக் கொள்ளும் பண்பே இக் காரணமாகும்.
முன்னிலையிலே ஒருவரை விளித்துப் பேசுமிடத்துப் பன்மைப் பிரயோகமும் சமூகக் காரணத்தாலேயே ஏற்பட்ட தெனலாம். நீயிர் எனத் தொல்காப்பியர் குறித்த முன் னிலைப் பன்மை வடிவம் நீர் எனக் குறுகி, வீரசோழிய காலத்திலே ஒருமையிலும் வழங்கலாயிற்று. இன்று நாம் நீ, நீர், நீங்கள் என்னும் மூன்று வடிவங்களையும் முன்னிலை ஒருமைப் பெயர்களாகப் பயன்படுத்துகிருேம். இவை மூன்றும் வழங்குகின்ற வரன்முறைப் பண்பினை ஒத்தவர்' “மரியாதை’ என்னும் இரு தன்மைகள் மூலமாக விளக்கலாம்:
நீ : - ஒத்தவர்
- மரியாதை
நீர் : + ஒத்தவர்
- மரியாதை
நீங்கள் : - ஒத்தவர்
+ மரியாதை
மரியாதைக்காகப் பன்மையினை ஒருமையிலே உபயோகிக்கும் பண்பு உலக மொழிகள் பலவற்றிலே காணப்படு கின்றது. எங்களுடைய சமூகத்திலே வயது, அந்தஸ்து போன்றவற்றிலே குறைவுற்றவரை 'நீ என்றும், ஒத்த வயதுடையவரை, நண்பரை, நன்முகத் தெரிந்த நெருக்க மானவரை 'நீர்' என்றும், வயது, அந்தஸ்து போன்ற வற்றிலே கூடியவரை ‘நீங்கள் என்றும் அழைக்கின்றுேம். இதே நிலை சில ஐரோப்பிய மொழிகளிலும் காணப்படுவ தாக லயன்ஸ் கூறுகிருர் :

Page 47
64 - தமிழ்மொழி இலக்கண இயல்புகள்
The honorific” dinnension is introduced to account for the differentiatiora of the personal pronouns in certain languages, not in terms of their reference to the roles of the participants in the situation of utterance, but in terms of their relative status or degree of intimacy. Well known and obvious instances of this are to be found in a number of European languages 30
சாதி, வயது, பால், அந்தஸ்து போன்ற சமூகப் பிரிவுகள் கொண்ட தமிழ்ச் சமூகத்தினர் பேசும் மொழியிலே "மரி யாதைப் பன்மை" என்னும் இலக்கண வகைமை இடம் பெறுவது ஆச்சரியமில்லை. பொதுவாக இந்திய மொழிகளுக் கெல்லாம் இக்கருத்துப் பொருந்தக்கூடியதாகும்.
நீ, நீர், நீங்கள் என்னும் மூன்று முன்னிலைப் பெயர்களுள் யாதாயினும் ஒன்றனே உபயோகிப்பதே குற்றம் என்னும் சமூக மனப்பாங்கு கூடத் தமிழ்ச் சமூகத்திலே நிலவி வரு கின்றது. இதனுல், தன்மைப் பன்மை வடிவத்தினை முன் னிலையிலே உபயோகிக்கத் தலைப்பட்டனர். வீரசோழிய ぬ-@灰「5T灰「IT 。
* நாம் போகாமே நாம் நில்லும் நாம் போமின் நாம்
நிற்க என நாமென்னும் முன்னிலை யொருமைச் சிறப்புப் பதத்தானும் 931 எனக் குறிப்பிட்டுச் சென்றுள்ளார்.
நான், நாங்கள் என்னும் தன்மைப் பெயர் வடிவங்களே இக்காலத் தமிழ் மொழியில் வழங்குகின்றன. ஆணுல் மட்டக்களப்புப் பிரதேசத்திலும் யாழ்ப்பாணத்திற் சில இடங்களிலும், தமிழ்நாட்டிலும் நாம் என்னும் பன்மை வடிவமும் வழக்கிலுள்ளது. இவ்வடிவம் உளப்பாட்டுத் தன்மைப் பன்மை யாகவே அமைந்துள்ளது. உளப்பாட்டுத் தன்மைப் பன்மையென்பது ஒரு குழு மனப்பான்மையையே உணர்த்துகிறது எனலாம்.

தமிழ் இலக்கணக் கோட்பாடுகளின் அடிப்படைகள் 65
நாமள் நம்மட்ை பெண்டிலும் பிள்ளையும்
நடுவ எத்திலே திரியக்கே
நயந்து கவலைக் கிழங்கு கிண்டி
நாங்கள் திண்டு திரியக்கே.32
என்னும் ஈழத்து வட மாகாண நாட்டார் பாடலிலே நாமள், நம்மடை என்னும் சொற்பிரயோகங்களை நோக்குக பன்றிகள் தம்முடைய குடும்பத்தினை அல்லது கூட்டத் தினேச் சுட்டுவதற்கே நாம் என்னும் தன்மைப் பன்மை இப்பாடலிலே உபயோகிக்கப்பட்டுள்ளது. நான் என்னும் சொல்லுக்கு உண்மையிலே பன்மையே கிடையாது. அதன் பன்மை வடிவங்களென வழங்கும் சொற்கள் யாவும் பிறரை உளப்படுத்திக் கூறுவனவாகவே அமையும், இந்நிலை உலகிலுள்ள பல மொழிகளிலே காணப்படும் இயல்பாகும் பேசுபவர் - கேட்பவர் என்னும் தொடர்பு அடிப்படையிலே உளப்பாட்டுத் தன்மைப் பன்மை வடிவங்கள் பல மொழி களிலே அமைந்துள்ளன. பேசுபவர் தன்னைச் சார்ந்த வர்களே மாத்திரம் குறிப்பிட ஒரு வடிவமும், கேட்ப வரையும் கேட்பவரைச் சார்ந்தவரையும் குறிப்பிட இன்ஞெரு வடிவமும் பேசுபவர் பேசுபவரைச் சாந்தோர், கேட்பவர் கேட்பவரைச் சாந்தோர் ஆகியோர் யாவரையும் குறிப்பிட வேருெரு வடிவமும் தன்மைப் பன்மை வடிவங்
567 fTési eg|60) LDLLIG) TTLb.
தமிழ் இலக்கண நூலார் தன்மைப் பன்மைப் பெயர்களாக யாம், நாம், யாங்கள், நாங்கள் என்னுஞ் சொற்களைக் குறிப்பிட்டுள்ளனரேனும், அவற்றுள் உளப்பாட்டுத்
தன்மைப் பண்மை வடிவங்கள் எவையென விதந்து கூறினு ரில்லே. ஆனல் வினை வடிவங்களுக்கு வரும் ஈறுகள் பற்றிக் கூறுமிடத்து உளப்பாட்டுத் தன்மைப் பன்மை பற்றிக் குறிப்பிட்டுள்ளார். தன்மைப் பன்மை வினே ஈறுகள்,
9 = قانه

Page 48
66 தமிழ்மொழி இலக்கண இயல்புகள்
அவைதாம் அம்மா மெம்மே மென்னுங் கிளவியு மும் மொடு வருஉங் கடதஐ வென்னு மந்நாற் கிளவி யொ டாயெண் கிளவியும் பன்மை யுரைக்குந் தன்மைச் சொல்லே,83
எனத் தொல்காப்பியர் கூறுவர். ஆனல், தொல்காப்பியர் இச்சூத்திரத்திலே உளப்படுத்துதல் பற்றி எதுவும் கூறின ரில்லை. இச்சூத்திரத்துக்கு உரை வகுத்த சேணுவரையர், 'தனக்கு ஒருமை யல்ல திண்மையிற் றன்மைப் பன்மை யாவது தன்னெடு பிறரை உளப்படுத்ததேயாம். அவ் வுளப்படுத்துதன் மூவகைப்படும்; முன்னின்ரு ரை உளப் படுத்தலும், படர்க்கையாரை உளப்படுத்தலும், அவ் விருவரையும் ஒருங்குபடுத்தலுமென.
ஆம் ஆம் என்பன முன்னின் ருஏை உளப்படுத்தும்; தமராயவழிப் படர்க்கையாரையும் உளப்படுக்கும் எம் ஏம் என்பன படர்க்கையாரை உளப்படுக்கும். உம்மொடு வரூஉங் கடதற அவ்விருவரையும் ஒருங் குளப்படுத்தலுந் தனித்தனி யுளப்படுத்தலுமுடைய, 34 எனத் தமிழ் மொழியிலே உளப்பாட்டுத் தன்மைப் பன்மை யின் அமைப்பினேயும் வகையினையும் தெளிவுற எடுத்துக் காட்டியுள்ளார். இவ்வுரைப் பகுதியினேயே நன்னூலார்,
அம்மா மென் பச முன்னிலே யாரையும் எம்மோ மோமிவை படர்க்கை யாரையும் உம்மூர் கடதற விருபா லாரையுந்
தன் ஞெடு படுக்குந் தன்மைப் பன்மை 35
எனச் சூத்திரமாக வகுத்துள்ளார். இவ்வாறு அமைந்த வினேகளுக்கு எழுவாயாக அமைந்த உளப்பாட்டுத்தன்மைப் பெயர்கள் யாவை என்பதனை வெளிப்படையாக இலக்கண நூலார் குறிப்பிடவில்லே. ஆனல், யாம், நாம் என்னும் இரு தன்மைப் பன்மைப் பெயர்களுள் நாம் என்பதே உளப்பாட்டுத் தன்மைப் பன்மையாக அமைந்திருக்க

தமிழ் இலக்கணக் கோட்பாடுகளின் அடிப்படைகள் 67
வேண்டுமென்பதற்குச் சான்றுகள் பல உண்டு. "நம்மூர்ந்து வரூஉ மிகரவை காரமும்"36 எனும் தொல்காப்பியருடைய ஒரு சூத்திர அடிக் குக் கணேசையர் கொடுக்கும் விளக் கத்தினை இவ்விடத்தில் நோக்குதல் போருத்தமாகும்,
தம்மூர்ந்து வருஉ மிகர வைகார மென்றதனுல் நம் என்னும் அடியையே நம்பி நங்கை என்னும் இரண்டுங் கொள்ளுமென்பதும், அவை தமக்கு இன்னுரென்றும் பொருள்பட வருஉமென்பதும் பெறப்படும். . GT65T தம்பி என்பதை நம்பி என்றும் என் தங்கை என்பதை நங்கை என்றும் சொல்லுதலின் உயர் சொல் என்ருர் , 31 நம் என்னும் பெயரடியே உறவினரைத் தன்ணுெடு உளப் படுக்கும் பண்புடையதாக அமைந்துன்னது. இன்னும் நாம் என்னும் சொல்லே உளப்பாட்டுத் தன்மைப் பன்மையாகச் சிற்சில இடங்களிலே வழங்கப்பட்டு வருவதாலும், அச் சொல் வடிவமே பண்டைக்காலந் தொட்டு உளப்பாட்டுத் தன்மைப் பெயராகத் தமிழிலே பயிலப்பட்டு வந்திருக்கி வேண்டும். தமர் என்ற பிணைப்பு: குடும்பம், குடி, குழு என்னும் கூட்டு மனப்பான்மை போன்ற சமூக உளவியற் காரணிகளே தமிழ் மொழியிலும் உளப்பாட்டுத் தன்மைப் பன்மைப் பெயர்களையும் வினைகளேயும் இனங்காணுதற்கு வழிவகுத்தன எனக் கூறலாம்.
32 இயைபு வேறுபடல்
தொல்காப்பியருடைய இலக்கணத்தின்படி எழுவாய்ப் பெயர் சுட்டும் திணை, பால், எண், இடம் ஆகியன வற்றையே பயனிலை வினையும் சுட்டவேண்டும். தொல் 5; i + ' ' ? Luri,
வினையிற் ருேன்றும் பாலறி கிளவியும் பெயரிற் றேன்றும் பாலறி கிளவியு மயங்கல் கூடா தம்மர பிசாவே38
என்னுஞ் சூத்திரத்திலே அவ்வியை பினைக் குறிப்பிடுகின்ருர் . பண்டைக்காலத்தொட்டே இவ்வியைபு தமிழ் மொழியிலே

Page 49
68 தமிழ்மொழி இலக்கண இயல்புகள்
அமைந்து வந்துள்ள போதிலும், சிற்சில இடங்களிலே அவ் வீயைபு மீறப்பட்டும் வந்துள்ளது. உதாரணமாக சுந்தரன் பாடினுன் பணிந்தான்; பரவிஞன் என்றே தமிழ் வாக்கியம் அமையும்: சுந்தரன் சாதாரண ஒர் ஆளெனில், மேற் அாட்டிய வாக்கியம் அவ்வாறே அமையும். ஆணுல் எம் முடைய சமூகத்திலே மரியாதை, சமயம், அந்தஸ்து போன்ற காரணிகளாற் சிலரை ஆண்பால் ஒருமையிலே குறிப்பிடாது விடுகின்ருேம். சுந்தரனே' என்று இறைவனுல் விளிக்கப்பட்ட சைவசமய அடியாராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகளிலே சேக்கிழாருக்குப் பக்தியும் மரியாதையும் உள்ள காரணத்தினலே,
தெண்ணிலா மலர்ந்த வேனியா யுன் ஜன்
திருதடங் கும்பிடப் பெற்று மண்ணிலே வந்த பிறவியே யெனக்கு
வாலிதா மின்பமா மென்று கண்ணி லாந்த வருவிநீர் சொரியக் கைமல ருச்சிமேற் குவித்துப் பண்ணினு னிடி யறிவரும் பதிகம் பாடினுர் பரவிஞர் பணிந்தார்
என்று பெரியபுராணத்திலே பாடுகின்ருர், சுந்தரன் பாடிஞன், பரவிஞன், பணிந்தான் என்று அமையவேண்டிய தொடர் சமூகத்திலே சமய அடியாருக்குக் கொடுக்கவேண்டிய மரி
யாதை காரணமாக சுந்தரர் பாடிஞர், பரவிஞர், பணிந்தார்
என்று அமைகின்றது. சமயப் பெரியார்களே ஒருமையிலே
குறித்தலேத் தமிழ்ச் சமுகம் அவ்வளவு விரும்புவதில்லை.
புத்தர் சொன்னன், இராமகிருஷ்ண பரமஹம்சர் சொன் ஞன் என்று கூட்டமொன்றிலே பேசிக்கொண்டிருந்த ஒருவர், சபையோரின் முகத்தைப் பார்த்தவுடன், ‘புத்தர் சொன்னூர், இராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னர். ' என்று திருத்திக் கொண்டதை ஒரு நல்ல உதாரணமாக இங்கு குறிப்பிடலாம். சமூகத்திலே ஏற்பட்ட இவ்வழக்கினே தள்ளிவைக்க முடியாத காரணத்திகுலேயே தொல்காப்பியர் "ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும் 39 என்ற குத்இரத்
ܬܐ

தமிழ் இலக்கணக் கோட்பாடுகளின் அடிப்படைகள் 69
தைத் தன் நூலிலே அமைத்துக்கொண்டார். அச்சூத்திரத் துக்கு விளக்கக் குறிப்பு எழுதும் கணேசையர், 'தான் வித்தான் தொண்டன் என்பது தாம் வந்தார் தொண்டனூர் என உயர்த்திக் கூறப்பட்டது. இங்கே "தாம் வந்தார்’ என்பதளவில் உதாரணமாம். அதனை ஒருவனையும் தாம் வந்தார் என்ப" என நச்சினுர்க்கினியர் கூறுதலானு ஆணர்ந்து கொள்க. 140 என்று கூறுவதையும் நோக்குக.
4. அரசியற் செல்வாக்கு
தமிழ் மொழியிலே ‘செந்தமிழ்’, ‘கொடுந்தமிழ் என இருவகைகளைத் தமிழ் இலக்கணநூலார் இனங்கண்டுள்ளனர். நவீன மொழியியலாளர் மொழி', 'கிளேமொழி? என்ற வகையினை மேற்கொண்டுள்ளனர். இது போன்றதொரு அமைப்பாக ‘செந்தமிழ்', 'கொடுந்தமிழ் என்ற பாகுபாடு அமையாவிடினும், நவீன மொழியிலாளரின் பாகுபாட்டுக் சுமையும் சில அடிப்படைகளை இங்கு காணமுடிகிறது. ‘செந்தமிழ்" என்பது ஒருவகையிலே தராதரத் தமிழ்" என்றே தமிழ் இலக்கணநூலார் கொண்டுள்ளனர். தொல் காப்பியர் ‘செந்தமிழ் ‘செந்தமிழ் நாடு’ என்ற பதங்களைத் தன் நூலிலே குறிப்பீட்டுள்ளார். செந்தமிழ் எது என வர்ைவிஸ்க்கணங்கூற முற்பட்ட தமிழ் இலக்கணநூலார் அரசியற் செல்வாக்கானே பாதிப்புற்றிருப்பதைக் காணலாம்
பண்டைக்கால இலக்கிய வழக்கினையே எக்காலமும் போற்ற வேண்டுமென்று மரபுடையார் ‘செந்தமிழ்' செந்தமிழ் நாடு' என்று தொல்காப்பியர் கூறினவற்றுக்குக் குறுகிய அடிப்படையிலேயே வரைவிலக்கணங் கூறலாயினர். அகத்தியருக்கு முன்னர் தமிழ் வழுவுற்றிருந்ததென்றும், அலர் அவ்வழுக்களைக் களைந்து செம்மைப் படுத்தியதால் தமிழ் செந்தமிழாயிற்று என்றும் கூறுவர் திராவிடப் பிரகா சிகை ஆசிரியர்." அவரும் அசீர் சார்ந்த குழாத்தினருமே செந்தமிழ்’ என்பது செந்தமிழ் நிலத்து மொழியென்றும், அச்செந்தமிழ் நாடாவது பாண்டிவள நாடு' என்றும் தமிழ் முனிவராகிய அகத்திய்ருக்கும், தமிழை வளர்த்த பாண்டியர்களுக்கும் சங்கப் புலவர்களுக்கும் உறைவிடம்

Page 50
70 தமிழ்மொழி இலக்கண இயல்புகள்
அதுவாதலென்றறிக? என்றும் கூற முற்பட்டனர். தொல் காப்பியர் கூறிய செந்தமிழ் நிலத்து வழக்கு' என்பது சேணுவரையரின்படி "செந்தமிழ் நிலமான வைகையாற்றின் வடக்கும் மருத யாற்றின் தெற்கும் கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்குமாகும்’ என்ற பொருள் பெற்றது.* அவர் குறிப்பிட்ட குறுகிய நிலத்து வழக்குச் செந்தமிழ் வழக்காக அமைய ஏனைய தமிழ் நாட்டு வழக்குக் கொடுந் தமிழ் வழக்காயிற்று. இது சமயங்கலந்த அரசியற் போக் கினையும் மொழி மரபு பேணும் நோக்கத்தினையும் காட்டி நிற்கின்றது. சேணுவரையர், மயிலேநாதர், நக்சிஞர்க்கினியர் ஆகியோருக்குச் செந்தமிழ் நாடு சோழ நாடாக அமைய சங்கர நமச்சிவாயர், சிவ ஞான முனிவர், ஆறுமுகநாவலர் போன்ருேருக்குப் பாண்டி நாடாக அமைவது விந்தையாக உள்ளது. 44 வையாபுரிப்பிள்ளை குறிப்பிடுவது போலத் தொல்காப்பியர் செந்தமிழ் நாடு எது என்றே அதனைச் சூழ்ந்துள்ள 12 நாடுகளும் எவையென்ருே கூறினரில்லை.45 இந்நிலையினைத் தெய்வச் சிலையாரின் உரை ஒரளவு தெளி வாக்குகிறது எனலாம்.
"தமிழ் கூறும் நல்லுலகமென லிசேடித்தமையாலும் கிழக்கும் மேற்கும் எல்லை கூருது தெற்கெற்லே கூறிய வதனுற் குமரியின் தெற்காகிய நாடுகளே யொழித்து வேங்கடமலையின் தெற்கும் குமரியின் வடக்கும், குண கடலின் மேற்கும், குடகடலின் கிழக்குமாகிய நிலம் செந்தமிழ் நிலமென்றுரைப்ப அந்நிலத்து வழக்கொடு சிவணித் தம்பொருள் வழாமல் இசைக்குஞ் சொல் லாவன; சோறு, கூழ், மலை, மரம், உண்டான், தின்றன். ஒடிஞன், பாடினுன் என்னுத் தொடக்கத்தன. இவை அந்நிலப்பட்ட எல்லா நாட்டிலும் ஒக்க வியற்றின் இயற்சொல் ஆயின, இவற்றைச் செஞ்சொல் எனினும் அமையும். 46 செந்தமிழ் நாடு என்பது தமிழ்நாடே என்று தெய்வச் சிலே யார் கூறுவதுதான் பொருத்தமாகத் தென்படுகிறது.

தமிழ் இலக்கணக் கோட்பாடுகளின் அடிப்படைகள் 71
அடிக்குறிப்பு க்கள்
1.
Lyons, J, ibid, p. 54: To introduce now the terms generally used by 1inguists: the sounds of a given language are described by phonology; the form of its words and the manner of their combination in phrases, clauses and sentences by grammar; and the meaning, of content, of the words (and of the units composed of them) by Semantics.
Chakravarti, Prof A, Jaina Literature in Tamili,
p. 10.
Jesperson, Otto, "The Philosophy of Grammar, p. 55: “We are thus led to recognize that beside, or above, or behind, the syntactic categories which depend on the structure of each language as it is actually found, there are some extralingual categoies which are independent of the more or less accidental facts of existing languages ......... Some of thern radate to such facts of the World Without as Sex, others to mental states or to logic, but for want of a better common name for these extralingual categories, I shall use the adjective notional and the Substantive notion. It will be the grammarian's task in each case to investigate the relation between the notional and the syntactic categories”
தொல்காப்பியம், எழுத்ததிகாரம், சூ 8 மேற்படி, சூ, 9 Abercrombie, David., Elements of General Pho
netics, P. 39 : “The air so expelled needs for its escape to the outer air a relatively free and unres

Page 51
72
8
O.
12. 13.
4. 15.
16.
17.
8:
19.
20.
21.
22.
23.
தமிழ்மொழி இலக்கண இயல்புகள்
tricted passage through the vocal tract, and it is this moment of least restriction in the sequenee
of movements that make up the syllable that is the vowel ... ... The stream of air expelled by the chest pulse can be both released and arrested by accessory articulatory movements. These movements produce the consonants of the syllable
தொல்காப்பியம், எழுத்ததிகாரம், நச்சினர்க்கினியர்
உரை, சூ. 3, ப. 47.
மேற்படி, ப. 48 நன்னூல், காண்டிகையுரை, சூ. 63, ப. 51
Sivaj na na Bodham (Tr. Canagarayar, T.) GT sởT GJJ Lh நூலில் இப்பாடல் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. LJ. 30
1. பகவத்கீதை, தமிழாக்கம் மகாகவி சுப்பிரமணிய
பாரதியார், ப. 66, ,)'آپ' வேங்கடசாமி, மயிலே சீனி. , சமணமும் தமிழும், ப 9. தொல்காப்பியம், சொல்லதிகாரம், சூ. 1
வேங்கடசாமி, மயிலை, சீனி. , மு. கு. நூ. , ப. 9 மேற்படி, ப. 10
தொல்காப்பியம், பொருளதிகாரம், மரபியல், சூ. 582 மேற்படி, சூ. 582 க்குப் பேராசிரியரின் உரை.
மேற்படி, சூ. 588
நன்னூல், சூ, 261 வேங்கடசாமி, மயிலை- சீனி, மு. கு. நூ. ப. 185 இளவரசு, சோமு, தமிழ் இலக்கண வரலாறு, ப. 51 மேற்படி ப. 52-66 மீனுட்சிசுந்தரன், தெ. பொ, சமணத் தமிழ் இலகிக்ய வரலாறு, ப. 166

தமிழ் இலக்கணக் கோட்பாட்டின் அடிப்படைகள் 73
24.
25.
26.
27.
28.
29.
30. 31.
32. 33.
34.
35.
36. 37.
38.
39.
40.
41.
42.
43.
44.
45.
46.
Jesperson, Otto, libid, p. 194 குறுந்தொகை, பாடல் 40 Jesperson, Otto. Ibid, p, 195
៣.៩) பாடல் 54 தொல்காப்பியம், சொல்லதிகாரம், சூ. 27.
வீரசோழியம், ப. 38 Lyons, J., bid, p. 280 வீரசோழியம், ப. 43 வன்னி வள நாட்டுப் பாடல்கள், ப. 6. தொல்காப்பியம், சொல்லதிகாரம், சூ, 202 மேற்படி, சேணுவரையருரை, ப. 337-38 நன்னூல், சூ. 332 தொல்காப்பியம், சொல்லதிகாரம், சூ. 163 மேற்படி, ப. 203
மேற்படி, சூ. 11
பார்க்க அடிக்குறிப்பு 28
தொல்காப்பியம், சொல்லதிகாரம், ப. 52 - நன்னூல், ஆறுமுகநாவலரின் காண்டிகையுரை, ப. 261 சபாபதி நாவலர், மு. கு. நூ, ப 36-46 தொல்காப்பியம், சொல்லதிகாரம், சேனவரையருரை,
358
பாண்டிநாடும், சோழ நாடும் ஏன் செந்தமிழ் நில மாயின என்னும் விவரத்துக்குப் பார்க்க வேலுப் பிள்ளை, ஆ, தமிழ் வரலாற்றிலக்கணம், ப. 34-37 Vaiyapuripillai, S., History of Tami Language and Literature, pp. 73-77 தொல்காப்பியம், சொல்லதிகாரம், தெய்வச்சிலையா ரு ரை , ப. 216-17
த1ை0
y.

Page 52
எழுத்துப் பற்றிய சிந்தனைகள்
1. எழுத்து என்பது
எழுத்து என்பது மொழியினை நாம் விளங்கிக்கொள்வ தற்கு உதவும் ஒரு வகை மூலமாகும். ஒருவர் எம்முடன் பேசும்போது, அவருடைய பேச்சின் பொருளை அவரால் எழுப்பப்படும் ஒலிகள் மூலமாக விளங்கிக்கொள்கிருேம். ஒரு நூலை வாசிக்கும்போது, அந்நூற்பொருளே, அதில் இடம் பெறும் எழுத்துக்கள் மூலமாக விளங்கிக் கொள்கிருேம். ஆகவே மொழியினை நாம் விளங்கிக் கொள்ள “பேச்சொலி", எழுத்து ஆகிய இரண்டுமே மூலங்களாக அமைகின்றன. பெரும்பான்மையான மொழிகளிலே எழுதும் முறை பேசும் முறையோடு ஒத்திருப்பதில்லே. இவ்விரு மூலகங்களுள் எழுத்துக்கே பண்டைய மேலேத்தேய இலக்கண நூலார்களும் தமிழ் இலக்கண நூலார்களும் முக்கியத்துவம் கொடுத்தனர். மரபுவழி இலக்கணநூலார் எழுத்துவடிவத்துக்கு முக்கியத்து வங் கொடுத்ததற்குச் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த மொழியிய TT TTTTT S T T T T ST S T TTTT S SLLtLLLLLLL LL LLLL OLLL L 000S aure) என்பவர் பின்வருங் காரணங்களைக் கூறுவர்.1
(அ) மொழியின் ஒருமைப்பாட்டினை எல்லாக்காலமும்
நிலைநிறுத்த, ஒலிவடிவைவிட எழுத்து வடிவம்
நிலேபெற்றதொன்றென்னும் மனப்பாங்கை எமக்கு ஏற்படுத்துகின்றது. மொழிக்கும் ஒலிக்குமுள்ள தோடர்பே உண்மையான தொடர்பாகும். மொழிக்கும் எழுத்துக்குமுள்ள தொடர்பு
 
 
 

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 75
மேலோட்டமானதாகும். எனினும் இம் மேலோட் டமான தொடர்பினை விளங்கிக் கொள்ளுதல் இலகுவாயுள்ளது.
(ஆ) எழுத்து வடிவு கட்புலனுக்குரியது, ஒலிவடிவமோ செவிப்புலனுக்குரியது. கட்புலனுக்குரியவற்றை நாம் என்றுமே பார்க்கலாம். பேச்சொலிகளோ, பேச்சு நடைபெறுஞ் சந்தர்ப்பத்தில் மாத்திரமே காதில் வாங்கிக்கொள்ளலாம். ஆணுல் எழுத்து வடிவங்களை நாம் விரும்பிய நேரங்களிலெல்லாம் பார்த்துக்கொள்ளலாம். இதனுலேயே பெரும் பாலானவர் எழுத்து வடிவினை விரும்புகின்றனர்.
மேற்காட்டிய காரணங்களே விட இலக்கியங் கண்டதற்கு
இலக்கணம் இயம்பும் மரபே எழுத்து வடிவுக்கு முக்கியத் துவம் கொடுப்பதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்த தெனலாம். தமிழ் மொழியிலே இலக்கிய மொழிக்கென இலக்கணங்கள் எழுதப்பட்டன; நிகண்டுகள் அமைக்கப் பட்டன. இலக்கிய மொழிக்கு இலக்கணம் அமைத்த காரணத்தால் எழுத்துக்கே இலக்கணம் கூறப்பட்டது. இதஞல், தமிழ் இலக்கணங்களிலே ஒலியதிகாரம்' எ னு: பகுதிக்குப் பதிலாக எழுத்ததிகாரம்" என்னும் பகுதியே இடம்பெறலாயிற்று. தனக்கு முன்னெழுந்த இலக்கணக் கோட்பாடுகளைச் சுருக்கி உரைநடையிலே இலக்கணச் சுருக்க மாகத் தரும் ஆறுமுகநாவலர் :
எழுத்தாவது: சொல்லுக்கு முதற் காரணமாகிய ஒலியாம், 12
என்று கூறுகின்றர். இதன்மூலம் மொழிக்கு முதற் காரணமாக அமைவது ஒலியென்றும், அவ்வொலியினை வரிவடிவமாக்குவது எழுத்து என்றும் உணரக்கூடியதா யுள்ளது. ஆஞல், தமிழ்ப் பேச்சொலிகள் யாவற்றுக்கும் எழுத்து வடிவங் கொடுக்கப்படவில்லை என்பதனை இவ் விடத்திலே நாம் மனங்கொள்ள வேண்டும். முற்காலத்திலே தமிழ்ப்பேச்ச்ொலிகள் யாவற்றுக்கும் எழுத்து வடிவங் கொடுக்கப் பட்டதோ இல்லேயோ என்று கூறுவதற்கு எமக்கு

Page 53
76 எழுத்துப் பற்றிய சிந்தனைகள்
ஆதாரங்கள் இல்லே. ஆனுல் இன்று எம்மொழியில் நாம் உபயோகிக்கும் பேச்சொலிகள் யாவற்றுக்கும் எழுத்து வடிவங் கொடுக்கப்படுவதில்லை எனத் துணிந்து கூறலாம். உதாரணமாக, கண் என்னுஞ் சொல்லிலுள்ள 'க்' ஒலி யினையும் காகம் என்னுஞ் சொல்லின் இடைநிலையிலுள்ள 'க்' ஒலயினையும் ஒப்பிட்டு நோக்கலாம். இரண்டாவது *க் ஒலி உண்மையில் எம் பேச்சிலே ஹ் என்றுதான் உச்சரிக்கப்படுகின்றது. இவ்வொலியினை நாம் என்றுமே வரிவடிவில் எழுதுவதில்லை. நன்னூலார், ஆறுமுகநாவலர் காலத்திலும் ஒலிநுட்ப பேதங்களுக்கமைய வரிவடிவங்கள் அமையவில்லே என்பதையும் எடுத்துக்காட்டலாம்.
*உயிரெழுத்துக்களுள்ளே, உகரமும் இகரமும், சில விடங்களிலே தம் மாத்திரையிற் குறைவாக ஒலித்து நிற்கும். அவ்வுகரத்துக்குக் குற்றியலுகரமென்றும், அவ்விகரத்துக்குக் குற்றிய லகரமென்றும் பெயராம், 13
என்று கூறும் ஆறுமுகநாவலர், தொடர்ந்து அவைபற்றிய இலக்கணங்களேக் கூறுவர். நன்னூலிற் சூத்திரங்களாற் கூறப்பட்ட இலக்கணங்களேயும், அச்சூத்திரங்களுக்குரிய காண்டிகை உரையினையும் ஆறுமுகநாவலர் உரைநடையிலே வகுத்துள்ளார். நன்னூலாரோ ஆறுமுகநாவலரோ குற்றிய லிகரவொலியினையும் குற்றியலுகரவொலியினையும் வரி வடிவிலே காட்டும் எழுத்துக்கள் பற்றிக் குறிப்பிடவில்லை6 குற்றியலுகரத்துக்கு உதாரணங்களாக ஆடு, வண்டு என்னுஞ் சொற்களையும், முற்றியலுகரங்களுக்கு திரு, கதவு என்னுஞ் சொற்களையும் ஆறுமுக நாவலர் தருகின்ருர், இங்கு முற் றுகரவொலிக்கும் குற்றுகரவொலிக்கும் வெவ்வேறு எழுத்து வடிவங்கள் கொடுக்கப்படவில்லை. இவைபோன்று பல பேச்சொலிகளுக்குத் தமிழிலே வரிவடிவங்கள் கொடுக்கப்பட வில்லை. கற்பு, கறவை என்னும் இரு சொற்களே எடுத்துக் கொள்வோம். கற்பு என்னுஞ் சொல்லிலுள்ள 'ற்” ஒலி யினே யும், கறவை என்னுஞ் சொல்லிலுள்ள ‘ற்‘ ஒலியினையும் நரம் ஒரேமாதிரி உச்சரிக்கின்ருேமா? முதலாவதை இடை யண்ண அடைப்பொலியாவும் இரண்டாவதை ஆடொலி யாகவும் உச்சரிக்கின்ருேம், 7 ஆணுல். அவ்விரண்டையும்
 

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 77 ஒரே வரி வடிவிஞலேயே எழுதிக் காட்டிவிடுகிருேம்.
இதனுல் உலகிலுள்ள பல மொழிகளைப்போலத் தமிழ் மொழியிலும் ஒலிவடிவுக்கும் எழுத்துவடிவுக்கும் பூரணமான நேரிடை ஒற்றுமை இருப்பதாகக் கூறமுடியாது.
எழுத்து என்பது மொழியை விளங்கிக் கொள்ள உதவும் ஒருவகை மூலம் எனவும், அது வரலாற்றடிப்படையிலே, பேச்சொலி மூலத்திலிருந்து பிறந்தது எனவும் கூறுதலே பொருத்தமானதாகும். பேச்சொலி மூலத்தினை ஆய்ந்து, அவ்வாய்வின் பயணுகப் பேச்சொலி அலகுகளுக்குக் காட்சிக் குப் புலனுகும் அடையாளங்கள் கொடுத்ததின் பலனுகவே உலகிலே தற்போது நாம் அறியக்கூடிய எல்லாவரிவடிவ முறைகளும தோன்றின என்று கூறுவர் ஒலியியலறிஞரான டேவிட் அபெகுருெம்பி.8 வரிவடிவிலமைந்த எழுத்து மொழியை விளக்குவதற்குத் தன்னளவிலே தனித்துவமும் பூரணத்துவமும் பெற்ற ஒரு மூலமாக விளங்கிவந்துள்ளது. எழுத்து வடிவிலுள்ள ஒரு வாக்கியத்தைக் கற்றவர்கள் எவரும் விளங்கிக் கொள்வதற்காகப் பேச்சு வடிவுக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை. ஒரு வாக்கியத்தை எழுதுவதற்கு முன்னர் அதைப் பேசிப் பார்த்துத்தான் எழுதவேண்டு மென்பதுமில்லை. எழுத்து மூலம் பேச்சு மூலத்தின் பிரதி பலிப்பு என்பது உண்மையேயாயினும், எழுத்து மொழி நிச்சயமாகப் பேச்சு மொழியைப் பிரதிபலிக்க வேண்டுமென்ப தில்லை. இங்கு எழுத்து மொழி என்னுந் தொடர் இலக் கிய வழக்கு அல்லது எழுத்து வழக்கினையே குறிக்கின்றது. தமிழ்மொழி, உலகிலேயுள்ள, வேறு சில மொழிகளைப் போல இரு வழக்கு (diglossia) பண்புடைய மொழியாகும். இரு வழக்கு' என்பது "இலக்கிய வழக்கு' , 'பேச்சு வழக்கு, என்னும் இரண்டினையுங் குறிக்கும். இவ்விரு வழக்குகளும் சிற்சில விசேட சந்தர்ப்பங்களிற் பொருத்தமறிந்து உபயோ கிக்கப்படுகின்றன. பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலக்கிய வழக்கில்' அல்லது எழுத்து வழக் ல் விரிவுரை ஆற்றி விட்டு வீட்டுக்குவரும் நான் என் மனைவியிடமும் குழந்தை களிடமும் பேச்சு வழக்கிலேயே உரையாடுவேன். இத் தகைய மொழியியல் நிலையினைப் புலப்படுத்தவே இரு வழக்கு என்னும் தொடரினை மொழியியலாளர் கையாண்

Page 54
78 எழுத்துப் பற்றிய சிந்தனேகள்
டுள்ளனர். தமிழில் எழுத்து மூலத்தை அடிப்படையாகக் கொண்டே ‘இலக்கிய வழக்குச் சில விடே சந்தர்ப்பங்களிற் கையாளப்படுகின்றது. அதேபோன்று பேச்சொலி மூலத்தை அடிப்படையாகக் கொண்டே பேச்சு வழக்கு வேறு சில விசேட சந்தர்ப்பங்களிற் பயன்படுத்தப்படுகின்து. அத் தகைய விசேட சந்தர்ப்பங்களைப் பின்வரும் அட்டவனை நிரைப்படுத்தில் காட்டுகின்றது.
பேச்சு சந்தர்ப்பங்கள் དོན་ எழுதது
ழிேக்கு வழி கரு
1. உறவினர், நண்பர், ஆகியோருடன் Σς
في مسLLITTL و (68 سوي
易。 விரைவுரை, இமய, இலக்கியச் சொற் x
பொழிவுகள்
X
3. கடிதம்; படித்தவர்கள்
படியாதவர்கள் X
4. பத்திரிகை, g(jáæ# ஆகியவற்றில்
தட்டுரை, ஆசிரியர் தலேயங்கம், Χ
செய்திகள்
5. வானெலியில்:
செய்திகள் தொகுப்பாளர்
அறிவிப்பு இல கிராமிய நிகழ்ச்சிகள்
சமூக நாடகங்கள்
6. தற்காலச் சிறுகதை, கவிதை, நாவல், Χ
நாடகம்
7. அரசாங்க வர்த்தமானி%இளம்பரம் X.
முதலிகன. 霹
ܓܥܠܹܠܐ
 

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 79
தமிழ் மக்கள் உலகின் பல்வேறு நாடுகளிலே வாழ்கின்றனர். இவர்களுட் சில நாடுகளிலே வாழ்பவர்கள் தமிழ்மொழி யைப் பேசமாட்டார்கள், ஆளுல் தமிழ் நூல்களே அவர்கள்
வாசிக்கக் கூடியவர்களாயுள்ளன்ர். இதனுல், தமிழ்ப் பேசும்
மக்கள் யாவரையும் ஒன்றிணைக்கக் கூடிய மொழி மூலமாக
எழுத்து வழக்கு அமைகின்றது.
2. எழுத்து வகை 2. உயிர் எழுத்துக்கள்
பேச்சொலிகளுக்கு ஒரு குறிப்பிட்ட வகையிலே வரி வடிவங் கொடுப்பனவே எழுத்துக்களாகும். தமிழ் எழுத் துக்களை இலக்கணநூலார் உயிர், மெய் என இரண்டாகப் பாகுபாடு செய்துள்ளனர். உயிர் எழுத்துக்களே அவர்கள் குற்றெழுத்துக்கள், நெட்டெழுத்துக்கள் எனப் பின்வருமாறு பிரித்துள்ளனர்.
குறில் : அ, இ. 우-, GT, ஒ
கெடில் ஆ ஈ, ஊ, ஏ, ஓ, ஐ, ஒள
リ இப்பாகுபாட்டினை நோக்குமிடத்து, 'ஆ' தொடச்சும் *ప్రపై வரையிலான நெட்டெழுத்துக்களுக்கு நிகரான குற்றெழுத் துச்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆணுல் 'ஐ', 'ஒள' ஆகியன வற்றுக்கான குற்றெழுத்துக்கள் இல்லே என்பதை அவ தானிக்கலாம், தமிழ் இலக்கணநூலார் உயிர் எழுத்துக்கள் உச்சரிக்கப்படும்போது தேவைப்படும் கால அளவினே மாத்திரை என்று குறிப்பிடுவர். உயிர் எழுத்துக்களில் குற்றெழுத்துக்களுக்கு ஒரு மாத்திரையளவும், நெட்டெழுத் துக்களுக்கு இரண்டு மாத்திரையளவும் குறிக்கப்பட்டுள்ளன: இம்மாத்திரை அளவினைக் கொண்டே 'ஐ', 'ஒள' என்பன நெட்டெழுத்துக்சள வகுக்கப்பட்டன. ஏனெனில் 'ஐ' என்பது 'அ', "இ" என்றும் இரு குறில்களின் கூட்டெழுத் தாகவும், ஒள' என்பது 'அ', 'உ' என்னும் இரு குறில் களின் கூட்டெழுத்தாகவும் தமிழ் இலக்கணநூலாராற்
a v. கூறப்பட்டுள்ளது. ܬ ܢ ܐ  ̄
酥” ". .
w

Page 55
8O எழுத்துப் பற்றிய சிந்தனைகள்
அகர இகரம் ஐகார மாகும், 10 அகர உகரம் ஒளகார மாகும், 11
என்பன தொல்காப்பியச் சூத்திரங்களாகும். தொல்காப் பியரின் இவ்விரு சூத்திரங்களையும் தொகுத்து,
அம்மு னிகரம் யகர மென்றிவை எய்தி னையொத் திசைக்கு மவ்வோ டுவ்வும் வவ்வு மெளவோ ரன்ன 12
என்று நன்னூலார் சூத்திரஞ் செய்வர். நன்னூலாரின்படி 'ஐ' காரம் அ + இ எனவும் அ + ய் எனவும் அமையும் என்றும், 'ஒள' காரம் அ + உ எனவும் அ + ன் எனவும் அமையும் என்றும் அறிகிருேம் இலக்கணச் சுருக்ககாரர் 'அகரத்தோடு யகர மெய் சேர்ந்து ஐகாரம் போன்றும், அகரத்தோடு வகர மெய் சேர்ந்து ஒளகாரம் போன்றும், ஒலிக்கும். 13 என்று கூறுவர் இலக்கணச் சுருக்ககாரரின் படி இவ்வாறமையும் ஐகாரமும் ஒளகாரமும் போலி எழுத்துக்களாகும். ஆனல், நன்னூலாரோ இவற்றைப் போலி எழுத்துக்களாக்க் கொள்ளவில்லை.
ஒவ்வொரு மாத்திரை அளவுகொண்ட இரு குற்றெழுத் துக்கள் சேர்ந்து கூட்டெழுத்தாக அமையும் போது, அது இரண்டு மாத்திரையுடையதாக அமைவதால் நெட்டெழுத்து என வகைப்படுத்துதல் பொருத்தமற்றதாகத் தென்படு கின்றது. தனியே மாத்திரை அளவை மாத்திரங் குறிக்க ஐகாரத்தையும் ஒளகாரத்தையும் நெட்டெழுத்துக்கள் என வகைப்படுத்தினுல், அவற்றின் கூட்டெழுத்துப் பண்பு மறைக்கப்பட்டுவிடும். அத்துடன் அவை இரண்டு மாத்திரை அளவு கொண்டன என்னும் விடயத்திலும் தமிழ் இலக்கண நூலாரிடையே தெளிவான முடிபு இல்லை. நன்னூலார் (சூ. 125) அ + ய் சேர்ந்து ஐகாரமும் 14 அ + வ் சேர்ந்து ஒளகாரமும் அமையும் என்று கூறியுள்ளார். தமிழ் இலக்கண நூலாரின்படி மெய்யெழுத்துக்கு மாத்திரை அரையாகும். ஆகவே ஒரு மாத்திரை கொண்ட அகரமும் அரை மாத்திரை கொண்ட யகர மெய்யும் சேர்ந்து ஐகாரமென்னுங் கூட் டெழுத்தை உண்டாக்கின், அதன் மாத்திரை அளவு
ܬܐܵܐ

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 8.
ஒன்றரையேயாகும். இதுபோலவே, ஒளகாரமும் ஒன்றரை மாத்திரையுடையதாகின்றது. தனித்தனியே இரண்டு மாத்திரை கொண்ட நெட்டெழுத்துக்களுடன் ஐகாரத் தையும் ஒளகாரத்தையும் சேர்த்து வகைப்படுத்துதல் பொருத்தமாகத் தெரியவில்லை. ஆகவே, தமிழிலுள்ள உயிர் எழுத்துக்களைப் பின்வருமாறு மூன்றுவகைகளாகப் பாகு படுத்துதலே பொருத்தமாகும்:
குற்றெழுத்து: அ, இ, உ, எ, ஒ நெட்டெழுத்து: ஆ, ஈ, ஊ, ஏ, ஒ கூட்டெழுத்து ஐ, ஒள
உயிர் எழுத்துக்களை நாம் அவற்றை உச்சரிக்கும் முறை நோக்கியும் பாகுபாடு செய்யலாம். உயிர் எழுத்துக்களின் உச்சரிப்புப் பற்றித் தொல்காப்பியர் நான்கு சூத்திரங்கள் வகுத்துள்ளார்.
அவ்வழி பன்னி ருயிருந் தந்நிலை திரியா மிடற்றுப் பிறந்த வளியி னிசைக்கும்,
அவற்றுள் ஆ ஆ ஆயிரண் டங்காந் தியலும்,
இ ஈ எ ஏ ஐயென விசைக்கு மப்பா லேந்து மவற்றே ரன்ன வவைதா மண்பன் முதணு விழிம்புஜ லுடைய
உ ஊ ஒ ஓ ஒளவென விசைக்கு மப்பா லேந்து மிதழ்குவிந் தியலும்,
நன்னூலாரும் தொல்காப்பியர் கூறியவற்றையே திரும்பக் கூறியுள்ளார். அங்காத்தல், அண்பல் - அடிநா அசைவு, இதழ் குவிதல் ஆகியனவே உயிர் எழுத்துக்களின் உச்சரிப் புக்களுக்கு அடிப்படைகளாக இச் சூத்திரங்கள் கூறுகின்றன, நாவினுடைய அசைவும் இதழ்குவிதலும் உயிரொலிகளின்
த-11

Page 56
82 எழுத்துப் பற்றிய சிந்தனைகள்
செல்லுதல், இடையீல் நிற்றல், பின்னுக்குச் செல்லுதல், உயர நிற்றல், நடுவில் நிற்றல் அல்லது கீழே நிற்றல் ஆகிய முயற்சிகள் உயிரொலிகள் பிறக்க உதவுகின்றன. சில ஒலிகளுக்கு இதழ் குவிதலும் வேண்டப்படுகின்றன. இந்த அடிப்படையில் எமது உயிரெழுத்துக்களின் உச்சரிப் புக்களைப் பின்வருமாறு விவரணஞ் செய்யலாம்.
அ, ஆ நா, கீழ் - மேல் அடிப்படையில் கீழேயும், முன் - பின் அடிப்படையில் நடுவிலும் நிற்க, இதழ் குவிவு இன்றிப் பிறக்கின்றன.
இ, ஈ: நா, கீழ் - மேல் அடிப்படையில் மேலேயும், முன்; பின் அடிப்படையில் முன்னுக்கும் நிற்க, இதழ் குவிவு இன்றிப் பிறக்கின்றன.
உ, ஊ, நா, கீழ் - மேல் அடிப்படையில் மேலேயும், முன் - பின் அடிப்படையில் பின்னுக்கும் நிற்க இதழ் குவிவுடன் பிறக்கின்றன.
எ, ஏ. நா, கீழ்-மேல் அடிப்படையில் நடுவிலும், முன் -
ஒ, ஒ; நா, கீழ் - மேல் அடிப்படையில் நடுவிலும், முன். பின் அடிப்படையில் பின்னுக்கும் நிற்க, இதழ் குவிவுடன் பிறக்கின்றன.
22. மெய் எழுத்துக்கள்
மெய்யெழுத்துக்களை உச்சரிக்கும்போது ஏற்படும் ஒசை நயத்தை நோக்கித் தமிழ் இலக்கணகாரர்அவ்வெழுத்துக்களே வல்லினம் மெல்லினம். இடையினம் எனப் பாகுபடுத்தி யுள்ளனர், க், ச், ட், த், ப், ற் ஆகியனவற்றை உச்சரிக்கும் போது வன்மையான ஒலி உண்டாவதின் காரணமாக, அவை வல்லெழுத்துக்கள் எனப்பட்டன. ங், ஞ், ண், ந், ம், ன் என்பன மெல்லோசை உடைய காரணத்தால்

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 83
மெல்லெழுத்துக்கள் எனப்பட்டன. இவை இரண்டுக்கும் இடைப்பட்டனவாக ய, ர், ல், வ், ழ், ள் என்பன அமைவதால், அவை இடையெழுத்துக்கள் எனப்பட்டன. இப்பாகுபாடு ஒரு மேலோட்டமான பாகுபாடு என்றே கூறவேண்டும். தொல்காப்பியர் மெய்யெழுத்துக்கள் பிறக் கும் வகைபற்றிக் கூறியுள்ளவற்றை அனுசரித்து, ஒரளவு நவீன ஒலியியலாளரின் அடிப்படைகளைப் பின்பற்றி மெய் யெழுத்துக்களைப் பாகுபாடு செய்வதே பொருத்தமாகும். இந்த அடிப்படையில், மெய்யெழுத்துக்கள் பிரதிபலிக்கும் ஒலிகள் பிறக்கின்ற இடம் நோக்கியும், அவை பிறக்கின்ற தன்மை நோக்கியும் பாகுபாடு மேற்கொள்ள முடியும். -
எமது வாய் இதழ்கள் இரண்டும் இயைவதன் மூலம் "ப்" "ம்" எனும் ஒலிகள் பிறக்கின்றன. நா நுனி மேல் வாய்ப் பல்லில் ஒற்றுவதன் மூலம் "த்’ ‘ந்’ என்பன பிறக்கின்றன. கீழ்வாய் இதழ் மேல்வாய்ப் பல்லுடன் சேருமிடத்து 'வ்' பிறக்கும்; மேல்வாய்ப் பற்சுளுக்கு அருகிலுள்ள முன்னண்ணத்துடன் நாவின் சேர்க்கையால் ‘ல்‘, ‘ர்', 'ன்', 'ற்" ஆகியன பிறக்கின்றன. இடை யண்ணத்துடன் நா சேருமிடத்து ‘ச்‘, ‘ஞ்’, ‘ட்‘, ‘ண்" *ள்' , 'ழ்' ஆகியன பிறக்கின்றன. கடையண்ணத்துடன் அடிநா சேருமிடத்து 'க்' , 'ங்' பிறக்கின்றன. மேல்வாயி லுள்ள இரு தாடைகளிலுமுள்ள இடை வரிசைப் பற்க ளுடன் நாவின் இருபக்க முனைகளும் சேரும்போது "ய்" பிறக்கின்றது. இவ்வாறு மெய்யொலிகள் பிறக்கின்ற இடத்தினேப் பின்வருமாறு வரிசைப்படுத்திக் காட்டலாம்.
இதழ் : ப், ம்
LJ Go த், ந், வ் முன்னண்ணம் ல், ர், ன், ற் இடையண்ணம் : ச், ஞ், ட், ண், ள், ழ் கடையண்ணம் க், ங்
இடைப்பல் : uiu

Page 57
και 4
எழுத்துப் பற்றிய சிந்தனைகள்
இனி, மெய்யொலிகள் பிறக்கின்ற தன்மையினை நோக்கலாம்.
(1) மேய்யெழுத்துக்களிற் சிலவற்றை உச்சரிக்கும்
(2)
(3)
போது எமது குரல்வளையிலுள்ள ஒலித்தசைகள் (vocal cords) அதிர்வடைகின்றன. அவ்வாறு, ஒலித்தசைகள் அதிர்வடையாமல், சுவாசப்பையி லிருந்து வேளியேறும் காற்று சிறிதுநேரம் தொண் டையில் தடைப்பட்டு வெளிச்செல்லுமிடத்துச் சில ஒலிகள் பிறக்கின்றன. அவற்றை வெடிப்பொலிகள் (ple8ives) அல்லது தடையொலிகள் (stops) என்பர் ஒலியியலார், தமிழிலுள்ள ‘க்‘, ‘ச்‘, ‘த்", "ட்", 'ப்', 'ற்" ஆகியனவற்றை இவ்வொலிகளேப் பிரதி பலிக்கும் எழுத்துக்களாக வகைப்படுத்தலாம். தமிழிலுள்ள ஏனைய எழுத்துக்களின் ஒலிகள் ஒலித்தசைகள் அதிர்வுறப் பிறக்கின்றனவாகும்.
மெய்யெழுத்துக்களுட் பெரும்பாலானவற்றை உச் சரிக்கும்பொழுது, சுவாசப்பையிலிருந்து வரும் காற்று வாயிஞலேயே வெளிச்செல்லும். ஆனல், சில மெய்யெழுத்துக்களை உச்சரிக்கும் போது, அக்காற்று மூக்கின் வழியாக வெளியேறுகின்றது.
இவ்வாறு பிறப்பனவற்றை மூக்கொலிகள் (nasals)
என்பர். தமிழில் ‘ங்’, ‘ஞ்’, ‘ண்‘, ‘ந்’, ‘ம்", *ன்" ஆகியன மூக்கொலிகளாகும்.
சில எழுத்துக்களை உச்சரிக்கும்போது வாயிஞலே வெளியேறும் காற்றுத் தடைப்பட்டு வேளியேறு கிறது. நாவின் நுனி மேலண்ணத்திலே தொட்டுத் தடையேற்படுத்த, காற்றுப் பிரித்து நாக்கின் இரு
பக்கங்களாலும் வெளியேறும். இவ்வாறு பிறக்கும்"
ஒலிகளே பிரிவளி அல்லது மருங்கொலிகள் (laterals) என்பர். தமிழில் 'ஸ்', 'ள்' 'ழ்' ஆகியன மருங் கொலிகளாகும்.

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 8:
(4)
(5)
(6)
(7)
(8)
தமிழ்
சில எழுத்துக்களை உச்சரிக்கும்போது, நா மேவே கிழம்பி, பின்ளுேக்கி மடிந்து அண்ணத்தைத் தொட்டு விழுகின்றது. இவ்வாறு பிறப்பன வற்றை நாமடிஒலிகள் (retroftexp8)என்பர். தமிழில் '', 'ண்ை", 'ஸ்" என்பன் நாமடியொலிகளாகும்.
நாநூனி மேல்வாய்ப் பல்லின் அடியில் (முன்னண் ணம்) ஒரு தடவை ஒற்றி கீழே விழும்படி உச் சரிக்கும்போது தட்டொலி (tap) பிறக்கின்றது. தமிழில், "ர்" பிரதிபலிக்கும் ஒலி இத்தகையதே யாகும்.
நாநூனி மேல்வாய்ப் பல்லின் அடியில் ஒரு 35 kiவைக்கு மேலாக ஒற்றிக் கீழே விழும்படி உச்சரிக்கும் போது ஆடொலி (tri) பிறக்கின்றது. தமிழில் பற என்னுஞ் சொல்லிலே இடம்பெறும் 'ற' கரம் இவ்வாறுதான் உச்சரிக்கப்படுகின்றது.
மேற்குறிப்பிட்ட நாமடி ஒலி பிறக்கும்போது சிறிது உரசலுடன் பிறப்பின் அது நாமடி உரசொலி (retroflex fricative) 6T60TL'il Gub. 5 LÉlf.6/air 6t "th" இத்தகைய ஒலியாக விவரணஞ் செய்யலாம்.
மெய்யொலிகளுக்கேற்படும் தடை உயிரொலிகளுக் சுேற்படுவதில்லை. உயிரொலிகள் பிறக்கும்போது நிறையோ சைத் தன்மை (80n0rance) இருக்கும். மெய்யொலிகளிலே இத்தகைய நிறையோசைத் தன்மை ஒரளவு கொண்டமைவனவற்றை அரை யுயிர்கள் (semi-vowels) என்பர். தமிழில் ‘ய்', ‘வ்' ஆகியன அரையுயிர்களாகும்.
எழுத்துக்களை உச்சரிக்கும்போது மேற்காட்டிய
பண்புகளில் எவை அமைந்து கிடக்கின்றன என்பதைப் பின்வரும் அட்டவன் மூலம் விளக்கலாம் :

Page 58
哆
量-)-*
S,
ŋɔ sɔ
” །
器 磐十翡 。翡
--
• USA.
initia) م{- {
ଧୂର୍ତ୍ତି ।
| + i +
十二十 十二十+十 →|-|–| — | — | — 翻引劇***
|
49:17,| o gynhnesso Q)лgod9 гт
©-Too)ổ
siji ugi
gorlogs,"
岛崎d)
*4@可PQ•增增&g@ -i (no gỡ
quoqo loạormTao o

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 87
மேற்காட்டிய அட்டவணையில் இடமிருந்து வலமாக மெய் யெழுத்துக்கள் சொடுக்கப்பட்டுள்ளன மேலிருந்து கீழாக மெய்யெழுத்துக்களின் உச்சரிப்புகளுக்குரிய பண்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்பண்புகள் ஒலிகள் பிறக்கும் இட்ம், தன்மை ஆகியனவற்றை உள்ளடக்கியுள்ளன. ஒன் வொரு எழுத்தின் பிறப்புக்குரிய பண்புகளும் + எனும் அடையாளத்தினுற் குறிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, "ட்" எனும் மெய்யெழுத்தின் உச்சரிப்புப் பண்புகளாக இடையண்ணம், தடை, நாமடி என்பன குறிக்கப்பட்டுள்ளன. இவ்வெழுத்தின் ஒலிப் பிறப்பின் இடம் இடையண்ணமாக வும், அதன் பிறப்புத் தன்மைகள் தடையொலியுடைமையாக வும் நாமடியுடைமையாகவும் அமைகின்றன. இவ்வாறே ஏனையவற்றையும் நோக்கியுணரலாம்.
தமிழ் எழுத்துக்கள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் மேற் காட்டிய உச்சரிப்புக்களையுடையனவாக அமையுமெனக் கூற முடியாது. உதாரணமாகத் தடையொலிகள் அல்லது வெடிப்பொலிகள் எனக் கொள்ளப்படும் 'க்', 'ச்', 'ட்', *த்", "ப்" ஆகியன் தத்தம் மூக்கொலிகளைத் தொடர்ந்து இடம்பெறுமிடத்து அவை ஒலித்தசை அதிர்வுடைய, அதாவது ஒலிப்புடை ஒலிகளாக (Voiced stops) அமைந்து விடுகின்றன. சங்கு, பஞ்சு, துண்டு, பந்து, கம்பு என்னுஞ் சொற்களில் இறுதியிலே இடம்பெறும் வெடிப்பொலிகளே இவ்வாறு ஒலிப்புடை ஒலிகளாக அமைந்து விடுகின்றன. இவ்வாருன பல நுண்ணிய உச்சரிப்புப் பண்புகளை நாம் தமிழ் எழுத்துக்களை உச்சரிக்கும்போது அவதானிக்க முடிகின்றது. ஆனல் அவற்றையெல்லாம் தமிழ் எழுத்துக் களிஞலே எழுதிக்காட்ட முடியாது. உலக ஒலியிய சங்கத்தின் குறியீட்டெழுத்துக்களாலேயே அவற்றை எழுதிக் காட்ட முடியும்,
2.3 முதலெழுத்தும் சார்பெழுத்தும்
தமிழ் எழுத்துக்களை முதல் எழுத்துக்கள், சார்பெழுத்
துக்கள் என முதன் முதல் தெளிவாக வகைப்படுத்திக்
கூறியவர் நன்னூலாரேயாவர். அவருடைய சூத்திரம் (58) :

Page 59
88 எழுத்துப் பற்றிய சிந்த இனகள்
மொழிமுதற் காரண மாமனுத் திரளொலி எழுத்தது முதல்சார் பெனவிரு வகைத்தே
என அப்பாகுபாட்டினை எடுத்துக் கூறுகின்றது. தமிழ் எழுத்துக்கள் பற்றிய இப்பாகுபாட்டினைத் தொல்காப் பியரும் மேற்கொண்டுள்ளார் எனவே கருதப்பட்டு வந் துள்ளது. தொல்காப்பியருடைய முதற் சூத்திரம்,
எழுத்தெளப்படுவ
935 (p5 ஈகர விறுவாய் முப்பஃ தென்ப சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையே
என்றே அமைகின்றது. இச்சூத்திரத்தாலே தொல்காப்பியர்
தமிழ் எழுத்துக்களின் தொகை கூறினுரேயன்றி, முதல்
சார்பு என்ற வகை கூறிஞரல்லர், நச்சிஞர்க்கினியர் இச்சூத்திரத்துக்குக் கூறிய உரையில்,
*எழுத்து இனைத்தென்றலைத் தொகை வகை விரியான் உணர்க, முப்பத்து மூன்றென்பது தொகை, உயிர் பன்னிரண்டும் உடம்பு பதினெட்டுஞ் சார்பிற்ருேற்றம் மூன்றும் அதன் வகை அளபெடையேழும் உயிர் மெய் யிருநூற்றெருபத்தாறும் அவற்றேடுங் கூட்டி இருநூற் றைம்பத்தாறெனல் விரி. "
என்னும் பகுதியிலே இச்சூத்திரம் வகை கூறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலே கூட தொல்காப்பியர் முதல் - சார்பு என்னும் வகை கூறினுரென நச்சினுர்க்கினியர் குறிப்பிடவில்லே, அப்படியானுல் தொல்காப்பியருடைய சார்புக் கோட்பாடு என்ன?
தொல்காப்பியரின் சார்பு எழுத்துக்கள் நவீன மொழி யியலார் குறிப்பிடும் ஒலியன் (phoneme) வகையைச் சார்ந்ததா? அன்றேல், மாற் ருெலி (allophone) வகையைச் சார்ந்ததா? தோல்காப்பியர் குறிப்பிட்ட சார்பெழுத்துக் ஆளாகிய குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் என்னும் மூன்றும் ஒலியன்கள் அல்ல என அறுதியிட்டுக் கூறும்

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 89
தெ. பொ மீனுட்சிசுந்தரன் 'இவை முன்னரே விளக்கப் பெற்ற ஒலியன்களின் இடச்சார்பாக மாறும் மாற் ருெலிகளே" (positional Variants) ஆகும். . இக்கால மொழியியற் கலைச்சொல்லை ஆளுவதாயின், இவற்றை “மாற்ருெலிகள்" (allophones) என்று குறிப்பிடவேண்டும்'. எனக் கூறிச் செல்கின்றர். 15 தொல்காப்பியரின் சார் பெழுத்துக்கள் உண்மையிலேயே மாற்ருெலிகளா? ஒரு மொழியிலே காணப்படும் ஒலியன்கள் அம்மொழியின் சொற்பொருள் மாற்றங்களுக்குக் காரணங்களாகின்றன. ஒரு மொழியின் அடிப்படை உறுப்புக்க Tாக அமைபவை ஒலியன்களே. பட்ம். பதம் என்னும் இரண்டு சொற்களை வேறுபடுத்வன ட், த் என்னும் ஒலியன்களாகும். இந்த வகையில் தொல்காப்பியர் குறிப்பிட்ட அகரமுதல் ஒளகார ஈருகிய உயிரெழுத்துக்களும், ககரமுதல் னகர ஈருகிய மெய்யெழுத்துக்களும் தமிழ்மொழியின் ஒலியன்களே என்பதில் எவருக்குங் கருத்து வேறுபாடில்லே. ஆனல், அவர் கூறிய குறுகிய இதர உகரங்களும் ஆய்தமும் ஒலியன்களா என்பதிலே தான் கருத்து வேறுபாடுண்டு. தெ. பொ. மீனுட்சிசுந்தரன் அவை மாற்ருெலிகள் என்கிருர், மாற் ருெலிகள் என்ருல் எள்ன? கண், மகன் என்னும் இரு சொற்களிலே ககர ஒலியைக் குறிக்கும் க் எழுத்து இடம் பெறுகின்றது. அவ்விரண்டனேயும் நாம் ஒரே மாதிரியாக உச்சரிப்பதில்லையே. கண் என்பதிலுள்ள ககரவொலி ஒலிப் பில் வெடிப்பொலியாக (voiceless plosive) ஒலிக்க, மகன் என்பதிலுள்ள சுகரவொலி 'ஹ' எனும் ஒலிப்பில் உர சொலியாக (voiceless fricative) ஒலிக்கின்றது. இவை யிரண்டும் ககரத்தின் மாற்ருெலிகளாகக் கொள்ளப்படும். இந்த அடிப்படையில் உகர இசுரங்களின் மாற்ருெலிகளாக முறையே குற்றுயலுகரமும் குற்றியலிகரமும், இரட்டித்த மெய்யொலியின் மாற்று வடிவமாக ஆய்தமும் தெ. பொ.
மீனுட்சிசுந்தரனற் கொள்ளப்பட்டன. வேலுப்பிள்ளை மாற்
முெலி, சார் பொலி, துணையொலி என்னும் மூன்று வகை யான தொடர்களை உபயோகித்துள்ளார். முதலில் இவை மாற்ருெலி அல்ல எனக் கூறிவிட்டுப் பின்னர் குற்றிய
த-12

Page 60
90 எழுத்துப் பற்றிய சிந்தனைகள்
லுகரம் பொருட்புலப்பாட்டுக்கு அடிப்படையானதல்லவென வுங் கூறுகிருர், அவருடைய கருத்தினை அப்படியே இங்கு தருதல் பொருத்தமென எண்ணுகிறேன். குற்றியலுகரம் பற்றி அவர் கூறுமிடத்து,
"குற்றியலுகரத்துக்கு இதழ்குவி முயற்சியில்லை. முற்றியலுகரத்திற்கு அந்த முயற்சியுண்டு. இதுதான் நச்சிஞர்க்கினியர் இவற்றுக்கிடையில் சுட்டும் வேறு பாடு குற்றியலுகரம் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் மட்டும் வரும். இந்த இரண்டு காரணங்களால், இது மாற்ருெ?லியெனலாம். ஆணுல் தொல்காப்பியர் மாற் ருெலி என்ற பொருளில் இதனேச் சார் பொலி எனக் கூறவில்லையென்பது ஏனைய இரண்டும் அவ்வாறின்மை யாற் புலப்படும். வன்ருெடர், மென்ருெடர், உயிர்த் தொடர், நெடிற்ருெடர், ஆய்தத்தொடர், இடைத் தொடர் என்று கூறப்படுகின்ற பல தொடர்களில், இது வல்லெழுத்தையூர்ந்து துணையொலியாக வருகிறது. இது வருமொழியில் மெய் வரும்பொழுது நிலைபெறு கிறது; உயிர் வரும்பொழுது, மறைந்துவிடுகிறது. அதனல், இந்த உகரம் ஒலித்துணையாக வந்ததேயன்றிப் பொருட்புலப்பாட்டிற்கு அடிப்படை அன்று எனலாம்?16
என்று குறிப்பிட்டுச் செல்கின் முர், வேலுப்பிள்ளையின் படி தொல்காப்பியருடைய சார்பெழுத்துக்கள் ஒலியன்களுமல்ல; மாற்ருெலிகளுமல்ல; அவை ஒலித்துனேசு ளென்றே கொள்ள வேண்டும்.
தமிழிற் சார்பெழுத்துக்களுடைய வரலாற்றினை ஆராய்ந்த C, R. சங்கரனும் R. M. சுந்தரமும் தொல்காப் பியர் கூறிய சார்பெழுத்துக்கள் மூன்றும் ஒலியன்களே எனர் கூறி, அவை பிறக்கின்ற இடங்கள் உயிரினையும் மெய் யினையும் சார்ந்திருப்பதால், அவை சார்ந்து வரல் மரபின்? எனத் தொல்காப்பியராலே கூறவேண்டியேற்பட்டது எனக் குறிப்பிடுவர். 17 இவ்விருவரும் தம்முடைய கருத்தினேத் தக்க ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளனர்.

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 9
தொல்காப்பியரின்படி சார்பெழுத்துக்கள் மூன்றும் பிறக்கும் இடத்தினுல் மாத்திரம் சார்தல் தன்மையுடைய னவேயன்றி, வடிவினுலும் ஒலித்தன்மையிஞ்லும் தனித்துவ முடையனவாகும்.
சார்ந்து வரி எல்லது தமக்கியல் பிலவெsளத் தேர்ந்து வெளிப் படுத்த வேனே மூன்றுந் தத்தஞ் சார்பிற் பிறப்பொடு ஒவணி யொத்த காட்சியிற் றம்மியல் பியலும் 18
என்னுஞ் சூத்திரம் இதனை வலியுறுத்தும். அத்துடன் இம் மூன்று எழுத்துக்களுக்கும் தனித்துவமான வரிவடிவமும் தொல்காப்பியர் கூறியுள்ளார். அவருடைய,
அவைதாங் குற்றிய லிகரங் குற்றிய லுகர மாய்தமென்ற
முப்பாற் புள்ளியு மெழுத்தோ ரன்ன
என்னுஞ் சூத்திரம் குற்றியலிகரமும் குற்றியலுகரமும் தொல்காப்பியர்காலத்திலே புள்ளிபெற்று வழங்கின எனவும், ஆய்தம் புள்ளியாகவே அமைந்ததெனவும் கொள்ள இட முண்டு. பேராசிரியர், சில் ஞான முனிவர், சங்க யாப்புக்காரர் யாவரும் இம்மூன்றும் புள்ளியெழுத்துக்களென்றே கூறுவர். நச்சினர்க்கினியர் தொல்காப்பியச் சூத்திரத்தின் முப்பாற் புள்ளியு மென்ற தொடர் ஆய்தத்தை மாத்திரமே குறிக் கின்றதெனக்கொண்டு ஆய்த மென்ற ஒசைதான் அடுப்புக் கூட்டுப்போல மூன்று புள்ளி வடிவிற்றென்பது உணர்த்தற்கு ஆய்தமென்ற முப்பாற் புள்ளியுமென்ருர் என உரை வகுப்பது பொருத்தமற்றதாயுள்ளது. தொல்காப்பியர் அவ் வாறு கருதியிருந்தால் 'குற்றியலிகரமும் குற்றியலுகரமு மாய்த மென்ற முப்பாற் புள்ளியு மெழுத்தோரன்ன" என்று கூறியிருப்பார். தொல்காப்பியர் முப்பாற் புள்ளி' என்பது மூன்று சார்பெழுத்துக்களுக்கும் சேரக்கூடிய சூத்திரஞ் செய்துள்ளார். அத்துடன் தொல்காப்பியர் எழுத்ததிகாரம் 104ஆஞ் சூத்திரத்தில் * மெய்யீறெல்லாம்

Page 61
92 எழுத்துப் பற்றிய சிந்தனைகள்
புள்ளியொடு நிலையல்" என்று கூறிவிட்டு, அடுத்த சூத்
திரத்தில் குற்றிய லுகர மு மற்றென மொழிப' என்று கூறுவதினுல், குற்றியலுகரம் புள்ளி பெறும் நிலே தெளி வாக்கப்பட்டுள்ளது
இனி, ஆய்தத்தினுடைய வடிவம் என்ன என்பதை நோக்கவேண்டும். அது புள்ளி வடிவமாகவே இருந்தது என்பதற்குப் பல சான்றுகளைக் காட்டலாம். தொல்காப்பிய எழுத்ததிகார 38ஆம் சூத்திரம். -
குறியதன் முன்ன ராய்தப் புள்ளி யுயிரொடு புணர்ந்த வல்லாஜன் மிசைத்தே
என்றமைகின்றது. ஆய்தப் புள்ளி' என்றே தொல்காப்பியர் கூறுவதை நோக்குக, மெய்யெழுத்துக்கள் புள்ளியெழுத் துக்கள் எனப்பட்டன. மெய்யெழுத்துக்களுள் ஒன்றெனக் கூறப்படாத ஆய்தம் தனியான ஒரு புள்ளியாலேயே வழங் கப் பட்டிருக்கவேண்டும். இன்விடத்திற் புள்ளியீடும் வழக்கம் பற்றிய வரலாற்றினை நோக்குதல் அவசியம்.
இந்தியாவில் ஆரியபட்டருடைய காலத்திலே அளவை யிற் குறையும் இடங்களிலே, அவ்வாறு குற்ை யும் இலக் கத்தின் அல்லது வடிவத்தின் மேலே புள்ளியிடும் வழக்கம் இருந்து வந்தது. இவ்வழக்கம் பிற்காலத்திலே கல்விெ ட் டெழுதுவோராற் பின்பற்றப்பட்டது. கற்களிலே எழுத்துக் க3ளப் பொறிக்குமிடத்து, தேவையற்ற ஒன்று அல்லது பல எழுத்துக்களை நீக்கி வாசகர்கள் வாசிப்பதற்காக, அவ்வாறு நீக்கப்படவேண்டிய எழுத்துகளுக்கு மேலே புள்ளியிடுதல் வழக்கமாகும்.19 எனவே ஒன்றை நீக்குதற்கு அல்லது அளவின் குறைவினைக் காட்டுதற்குப் புள்ளியிடும் வழக்கம் இருந்து வந்துள்ளதென்பதை இவற்றின் மூலம் உணரு கின்ருேம். தொல்காப்பியர் புள்ளி பற்றிக் கூறிய சூத்திரங் க3ளயெல்லாம் நோக்குமிடத்து மாத்திரையிற் றைவுற்ற நிஜலயினை எடுத்துக்காட்டவே புள்ளி பயன்பட்டிருப்பதைக் காணக்கூடியதாயுள்ளது. இவ்வாறமைந்த புள்ளிகளெல் லாம் சில வரிவடிவங்களுடனேயே அமைகின்றன. ஆனல், ஆய்தம் மட்டும் எந்த வரிவடிவத்துடனும் தொடர்புருது
ܐ݂

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 9.3
தனிப் புள்ளியாகவே அமைந்துள்ளது. இது பொருள் வேறுபடுத்தும் ஒலியனைப்போல, ஒர் எழுத்தை நீக்கிவிட்டு அவ்விடத்திலே நின்று இசைக்கும் புள்ளியாகவே இருந் திருக்கவேண்டும். ஆய்தம் இடம்பெறும் வரன் முறையை முதலில் நோக்குவோம். அது என்பதன் பண்டைய வடிவம் அஃது ஆகும். இது அவ்+து என்பதன் விளைவு எனக் கூறுவர்.
ஆணுல் அவ்+து புணரின் அத்து எனவே வர வேண்டும்.
இது போலவே, அல்+திணை, அற்றிணை எனவும், முள் + தீது முட்டீது எனவும் புணர வேண்டும். இவ்வாறு அமை யின் அவை வேறு பொருளையும் பயக்கலாம் என்பதற்காக அத்து, அற்றிணை, முட்டீது என்னுஞ் சொற்களிலே முறையே த், ற், ட் ஆகிய ஒலிகள் நீக்கப்பட்டு, அவற்றின் நீக்கத் தைக் குறிக்கப் புள்ளிகள் இடப்பட்டிருக்கவேண்டும். அவ் வாறு அமையும் புள்ளி வெறும் பூஜ்ஜியமாகவன்றி பொருள் வேறுபடுத்தும் ஒலியனுசு அமைந்துவிடுகின்றது. அவ்வாறு பொருள்வேறுபடுவதைப் பின்வரும்இணைகள் காட்டுகின்றன:
அத்து அ0து அற்றிணை அ0றிணை முட்டீது மு012து மேற்கூறிய கருத்துக்களைத் தொகுத்து நோக்கின், (1) தொல்காப்பியர் சார்பெழுத்துக்கள் மூன்றினையும்
ஒலியன்களாகவே கொண்டார் (2) அம்மூன்றும் தனித்தனி வரிவடிவங்கள் கொண்ட
எழுத்துக்கள் என்னும் முடிபுகளைப் பெறக்கூடியதாயுள்ளது. ஆகவே சார்பெழுத்துக்கள் தொல்காப்பியர் காலத்திலே மாற்ருெலி எளாயிருந்தன எனக் கூறமுடியாது.
நன்னூலாருடைய சார்பெழுத்துக் கோட்பாடு தொல் காப்பியரினின்றும் வேறுபட்டதாக அமைந்தது. நன்னுர லாரின்படி முதலெழுத்துக்களுள் யாதாயினும் ஒன்றன் மாத்திரை அளவில் அல்லது வடிவத்தில் மாற்றமேற்படின், அது சார்பெழுத்தாகும்.

Page 62
94 எழுத்துப் பறுறிய சிந்தனைகள்
உயிர்மெய் ய்ாய்த முயிரள பொற்றள பஃகிய இடைஐஒள மஃகான் தனிநிலை பத்துஞ் சார்பெழுத் தாகும்
என நன்னூல் (கு. 69) சார்பெழுத்துக்களின் வகையினேக் கூறுகின்றது. இவற்றுள் முதலெழுத்தினின்று மாத்திரை அளவிலும், வடிவிலும் வேறுபடத் தோன்றுவனவற்றைப் பின்வருமாறு பாகுபாடு செய்யலாம்.
1. மாத்திரையிற் குறைவுற்றன.
குற்றியலிகரம் குற்றியலுகரம் ஐகாரக்குறுக்கம் ஒளகாரக் குறுக்கம் ஆய்தம் ஆயதக குறுக்கீடe ,


Page 63
96 எழுத்துப் பற்றிய சிந்தனைகள்
சுட்டெழுத்துக்களாலாகும் சுட்டுப்பெயர்கள் தமிழ் மொழியில் அமைந்திருப்பனபோல், உலகிலுள்ள வேறு சில மொழிகளிலும் காணப்படுகின்றன. உதாரணத்துக்குத் துருக்கி மொழியினையும் லத்தீன் மொழியினையும், யப்பானிய மொழியினையும் குறிப்பிடலாம்.
துருக்கி : bu SU O
s லத்தீன் hic f jste ille LJ LLUIT Gör : ko SO а /
சுட்டுப்பெயர்களின் பயன் என்ன? நாம் உரையாடும் போது, பேசுபவர் ‘நான்’ ஆகவும், கேட்பவர் "நீ ஆகவும் அமைவர். ஆகவே பேசுபவர் தன்மையிலும், கேட்பவர் முன்னிலையிலும் குறிப்பிடப்படுவர். பொதுவாக, பேசுப வரும் கேட்பவரும் உரையாடுமிடத்துக் காலமும் இடமும் ஒன்ருக அமையலாம் (சில விதிவிலக்கான அசாதாரண சந்தர்ப்பங்களும் உண்டு : தானே தனக்குள் பேசிக் கொள்ளுதல், தொலைபேசியிற் பேசும்பொழுது கேட்பவரும் பேசுபவரும் ஒரேயிடத்தில் இல்லாதிருத்தல் போன்றன.) ஆஞல், மூன்ரு மவர், அதாவது படர்க்கையிலிருப்பவர் சில சந்தர்ப்பங்களிற் பேசுபவருக்கு அண்மையிலும், வேறு சில சந்தர்ப்பங்களிற் கேட்பவருக்கு அண்மையிலும், இன்னுஞ் சில சந்தர்ப்பங்களிற் பேசுபவர் - கேட்பவர் ஆகிய இருவருக்குமே சேய்மையிலும் இருக்கலாம். ஆகவே படர்க்கையில் இம் மூவகை வேறுபாடுகளையும் நுண்ணிதாக உணர்த்தச் சுட்டுப் பெயர்கள் பெரிதும் பயன்படுகின்றன. இந்த ஆள் என்பது
பேசுபவருக்கு அருகிலிருப்பவரையும், உந்த ஆள் என்பது
கேட்பவருக்கு அருகிலிருப்பவரையும், அந்த ஆள் என்பது பேசுபவர் கேட்பவர் இருவருக்குந் தூரத்திலிருப்பவரையும் குறிக்கின்றன. பேசுபவர் சார்பாக நோக்குமிடத்து, ஐ அ என்பன சேய்மையைக் குறிப்பனவாகவும், இ அண்மையைக் குறிப்பனவாக 4ம் கொள்ளலாம். இந்த வகையி:ே அ, உ என்பன சேய்மைச் சுட்டுக்கள் என்றும், இ என்பது அண்மைச் சுட்டு என்றும் வகைப்படுத்தலாம்.
இ, உ, அ என்னும் மூன்று சுட்டெழுத்துக்களுடன் எ என்னும் எழுத்தினையும் சுட்டெழுத்தாகக் கூறுகின் ரூர் நச்சிஞர்க்கினியர். தொல்காப்பிய எழுத்ததிகார 31 ஆம்

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 97
சூத்திர உரையில், தன்னின முடித்தல் என்பதஞன் எகரம் விளுப்பொருள் உணர்த்தலுங் கொள்க’ என்று நச்சிஞர்க் கினியர் கூறி எப்பொருள் என்னும் உதாரணத்தையுங் கொடுத்துள்ளார். சுட்டெழுத்துக்களுக்கு அடிப்படையாக அமையும் பேசுபவர் கேட்பவர் தொடர்பு, கால இடத் தொடர்பு ஆகியவற்றினுக்கு அப்பாற்பட்டதாகவும், விஞப் பொருளே உணர்த்துவதாகவும் எ என்னுஞ் சுட்டெழுத்து அமைகின்றது. எப்பொருள் யார் பார்வாய்க் கேட்பினும். என்னுத் தொடரிலும், "எவன் ஒருவன் ' என்னுந் தொடரிலும் இடம்பெறும் எகரச் சுட்டினை இங்கு உதா ர6னமாகக் காட்டலாம்.
தொல்காப்பியரோ நன்னூலாரோ தமது சூத்திரங்களில் எகரத்தைச் சுட்டாகக் கூறவில்லே. நச்சிஞர்க்கினியரே அவ்வாறு கொண்டார். தமிழ் இலக்கணநூலார் எவருமே எகரத்தைச் சுட்டாகக் கொள்ளவில்லே. நச்சினர்க்கினி யரைப் பின்பற்றிச் சுவாமி ஞானப்பிரகாசர் எகரத்தையுஞ் சுட்டாகக் கொள்ளவேண்டுமென வற்புறுத்துவர்:
இடம்பற்றியனவாய், தமிழ் மக்களின் ஆதிப் பேச்சுக்களாய், எத் தமிழ்மொழிப் பரப்பு முழுதினுக் கும் மூலவேர்களாய் நின்ற சொற்கள் இலக்கணவாசி ரியரால் சுட்டுக்கள் என அழைக்கப்படுமவைகளாம். இச்சுட்டுக்கள் அ, இ, உ எனும் மூன்றுமே என்பது அன்ஞேர் மதமாயினும், யாம் எகரம் எனும் நான் காவதோர் கட்டையும் அவற்ருேடு சேர்த்தல் வேண்டும். 20 பேசுபவர் - கேட்பவர் தொடர்பின் அடிப்படையிலே சுட்டெழுத்துக்களுக்கு விளக்கங் கண்டோம். சுவாமி ஞானப்பிரகாசர் இன்ஞெரு பரிமாண அடிப்படையிலே இச்சுட்டுக்களுக்கு விளக்கங் கொடுக்கின்ருர் :
"அகரம் முதற்கண் அண்மையையும், உகரம் சேய்மையையும், இகரம் கீழுறுந் தன்மையையும், எகரம் மேலுறுந் தன்மையையும் சுட்டுகின்றனவா மென்பது பெறப்படும். 21
தக13

Page 64
98 எழுத்துப் பற்றிய சிந்தனேகள்
அவருடைய விளக்கம் கால - இடத் தொடர்பின் அடிப் படையிலே அமைகின்றது.
கட்டுதல் போன்று விணுவுதலும் மனிதப் பேச்சிலே முக்கியத்துவமுடையது. உலகமொழிகளிலே வின பல்வேறு வகையிலே உணர்த்தப்படுகின்றது. அவற்றைப் பின்வரு மாறு வகைப்படுத்தலாம் :
1 கூற்ருக அமையும் ஒரு வாக்கியத்தினை வினவுந் தொணியிலே கூறுதல். இப்பண்பு பொதுவாக எல்லா மொழிகளிலுங் காணப்படுகின்றது.
2. தனித்தனி வினுச் சொற்களை உபயோகித்தல். S-5n reyLD/Té5, -g|Á66) GuD Ttfluflói) what, why, when, where, who Gustairspair acad Gay Ts) 56tt is அமைந்துள்ளதைக் காட்டலாம்.
3. வின எழுத்துக்களை அல்லது உருபன்களைச் சொற் களுக்கு மூன் அல்லது பின்னக ஒட்டுதல். தமிழ், சிங்கள யப்பானிய மொழிகள் இதற்கு உதாரணங்
களாகும். பூ இருக்கின்றதா? " (பூ இருக்கின்றது) mal diyanawa-ta? (mal diyanawa)
hana wa desu- ka? (hana wa desu.) இங்கு - ஆ. ta, ka என்னும் விணு உருபன்கள் முறையே தமிழ் வாக்கியத்திலும், சிங்கள வாக்கி யத்திலும் யப்பானிய வாக்கியத்திலும் சேர்க்கப் பட்டுள்ளன. தமிழ் மொழியிலே விஞவினை உணர்த்துவதற்கென எ, ஏ ஆ, ஒ, யா என்னும் எழுத்துக்கள் இலக்கணநூலாராலே குறிப்பிடப்பட்டுள்ளன. இக்கால எழுத்து வழக்கிலே உபயோகப்படுத்தப்படும் வினச்சொற்கள் சிலவற்றை உதா ரணமாகக் காட்டி, இவ்விஞவெழுத்துக்களின் பயன் பாட்டினை உணர்த்தலாம் :
எ எவன், எங்கே, எது
ஏ ஏன், ஏது, அவனே

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 99
ஆ அவன, ஒடாதா ஒ அவனே, வந்தவனே யா : யார், யாது
மேற்காட்டிய உதாரணங்களின்படி ஏ, யர் இரண்டும் மொழிக்கு முதலிலும், ஆ, ஒ இரண்டும் மொழிக்கு இறுதியிலும், ஏ மொழி முதலிலும் இறுதியிலும் இடம் பெறுகின்றன. இவ்வரன்முறையை நன்னூலார் 67 ஆவது சூத்திரத்தில்,
எயா முதலும் ஆஒ வீற்றும் ஏயிரு வழியும் விணுவா கும்மே என்று கூறியுள்ளார். இக்கால வழக்கில் ஆ மொழி முதலிலே ஆர் (யார் என்பதன் திரிபாக) என்னும் விஞச் சொல்லிலே இடம்பெறுகின்றது.
மொழி இறுதியிலே இடம்பெறும் வின எழுத்துக்கள் ஒரு வாக்கியத்தில் வரக்கூடிய பல்வேறு அலகுகளுடன் வரக்கூடியனவாயமைகின்றன. உதாரணமாக,
செல்வி வெள்ளிக்கிழமை காலையில்
பாடசாலைக்குப் போனுள் என்னும் வாக்கியத்திலே ஆ, ஏ, ஓ என்னும் விஞவெழுத் துக்கள் இடம்பெறும் வரன்முறை பின் வருமாறு அமையும்:
ஆ: செல்வியா வெள்ளிக்கிழமை காலையில்
பாடசாலைக்குப் போனுள்? செல்வி வெள்ளிக்கிழமையா காலையில்
பாடசாலேக்குப் போனுள்? செல்வி வெள்ளிக்கிழமை காலயிலா
பாடசாலைக்குப் போளுள்? செல்வி வெள்ளிக்கிழமை காலையில்
பாடசாலைக்கா போனுள்? செல்வி வெள்ளிக்கிழமை காலையில் பாடசாலேக்குப் போஞளா?

Page 65
100 எழுத்துப் பற்றிய சிந்தனே ஈஸ்
ଶ୍ରେt: ଗଣ୍ଡୁ, ଶ୍ୱେତ ବଜ୍ଞ($!.!!! வெள்ளிக்கிழமை காலையில்
பாடசாலைக்குப் போளுள் ? டுசல்வி வெள்ளிக்கிழமையே
பாடசாலைக்குப் போளுள் : க்ெல்வி வெள்ளிக்கிழமை காலையிலே
பாடசாலைக்குப் போஞன் ? செல்வி வெள்ளிக்கிழமை காலைபில் பாடசாலைக்கே போளுள் ?
செல்வி வெள்ளிக்கிழமை காலையில்
பாடசாலைக்குப் போனுளே ?
செல்வியோ வெள்ளிக்கிழமை வாலயில்
பாடசாலைக்குப் போளுள் ?
ஒ:
செல்வி வெள்ளிக்கிழமையோ காலேயில்
பாடசாலேக்குப் போனுள் ? . செல்வி வெள்ளிக்கிழமை காலேயிலோ,
பாடசாலைக்குப் போனுள்? செல்வி வெள்ளிக்கிழமை காலையில்
பாடசாலைக்கே போனுள் ? செல்வி வெள்ளிக்கிழமை காலையில்
பாடசாலேக்குப் போளுளோ ?
முன்னர்க்காட்டிய உதாரண வாக்கியத்தில் எப்பகுதிக்கு
அழுத்தங் கொடுக்கி விரும்புகின்ருேமோ, அதனுடன்
இருவெழுத்தினைச் சேர்க்கலாம். அவ்வாறு சேர்ப்பதன் ஆலம் பொருள் மாற்றமடைகின்றது. ஐந்து சொற்கள் ேொண்ட உதாரண வாக்கியத்திலே எச்சொல்லுடனும் இதுவெழுத்தினைச் சேர்க்கக் கூடியதாயுள்ளது. ஆனல், அவ்வாறு சேர்ப்பதன்மூலம் ஐந்து வேறுபட்ட வாக்கி ந்த் ஜமைகின்றன என்பதை மேற்காட்டிய ೩.&#೧T ஆங்கள் நன்கு உணர்த்துகின்றன. எனினும், இத்தகைய இருவெழுத்துக்கள் வாக்கியங்களிற் சிற்சில இடங்களிலே
பெறமாட்டா என்பதனையும் இங்கு குறிம்பிடுதல்
ܐ ܬܪ
 

и и
தமிழ்மொழி இலக்கண இயல்புகள் I (91.
வேண்டும். உதாரணமாக, இன், உடைய, அது என்னும் வேற்றுமை உருபுகளையேற்ற சொற்களின் பின்னே விஞ) வெழுத்துக்கள் இடம்பெறமாட்டா
அது அனுெடைய புத்தகம் அவன் மரத்தின் கிளையை வெட்டினுன் அன்ே மகளினது சொல்லைக் கேட்டான் இவ்வாக்கியங்களிலே, அவனுடைய, மரத்தின், மகளினது என்னுஞ் சொற்கள் வினவெழுத்துக்களை ஏற்கமாட்டா, இது போ: று, குறிப்பாக ஆகார வினவெழுத்து இடம் பெருத பல இடங்களே இக்காலத்தமிழ் என்னும் நூலில் *வினு’ என்னும் அதிகாரத்தில் முத்துச் சண்முகன் குறிப் யிட்டு விளக்கியுள்ளார். 22
உலக மொழிகளின் விஞவாக்கியங்களை ஆராய்ந்த ஒட்டோ ஜெஸ்பர்ஸன், அவற்றை இரண்டு ைெககளாகப் பாகுபாடு செய்கின்ருர், "ஆம்" அல்லது இல்லே' என்னும்
மறுமொழியினை எதிர்பார்க்கும் வினுக்களை (Texts -
questions) ஒரு வகையிலும், விளக்கமான மறுமொழியினை எதிர்பார்க்கும் விளுக்களை (x - questions) லே ருெரு வகையிலும் அதிர் அடக்குவர்.? தமிழ்மொழிபிலும் சில
விஞரலெழுத்துக்கள் முதல் வகை வினுக்களை அமைக்கவும்,
வேறு சில விஞனெழுத்துக்கள் இரண்டாறு வகை விளுக் களேயும் அமைக்க உதவுகின்றன. உதாரணமாக அவன் வந்தானு? என்னும் வினவுக்கு "ஆம்-இல்லை" மறு மொழியே எதிர்பார்க்கிப்படுகின்றது. ஏன் வந்தான் என்னும் வினவுக்கு விளக்கி மறுமொழியே எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழ் இலக்கண நூலார் கூறியுள்ள விஞவெழுத்துக்களுள் மொழியிறுதியில்ே இடம்பெறுவன ஆம்-இல்லை மறு
மொழிக்குரிய வினவாக்கியங்களேயும், மொழிக்கு முதலில் இடம்பெறுவன விளக்க' மறுமொழிக்குரிய வாக்கியங்களை யும் ஆக்சுவல்லன எனப் பொதுவாகக் கூறலாம்.
4. எழுத்து நிலைகள் -
எந்த மொழியிறும் சொற்கள் ஒலியன்களுடைய சேர்க் கையினலேயே அமைக்கப்படுகின்றன. அளுடைய சேர்க்கை முறைக்கான விதிகள் அந்தந்த

Page 66
102 எழுத்துப் பற்றிய சிந்தனைகள்
மொழிக்கு ஏற்ற வகையிலே அமைந்துள்ளன. எழுத்து வழக்கினைப் பொறுத்தவரையில், எவ்வெவ்வெழுத்துக்கள் சொல்லாக்கத்துக்குச் சேருகின்றன என்பதில் தமிழ் மொழி
யிற் சில ஒழுங்குகள் உண்டு. தமிழ் இலக்கண நூலார்
சொற்களின் முதனிலைகள், இடைநிலைகள், இறுதிநிலைகள் பற்றிக் கூறுவதன்மூலம் அவ்வொழுங்குகளைக் குறிப்பிட் டுள்ளனர். -
ஒரு சொல்லின் முதலிலே நிற்கும் எழுத்தினையே முதனிலை எனத் தமிழ் இலக்கணநூலார் பெயரிட்டனர். சொல்லுக்கு முதனிலையில் வரும் எழுத்துக்கள் பற்றித் தொல்காப்பியரும் அவர் பின் வந்த இலக்கண நூலாரும் சூத்திரஞ் செய்துள்ளனர். தொல்காப்பியர் சொல்லில் முதல்வராத எழுத்துக்கள் எனக் குறிப்பிட்டவை பல நன் னுாலாருடைய காலத்தில் வழக்கில் வந்துவிட்டன. தொல் காப்பியர் இவைபற்றிக் கூறும் முதற் சூத்திரம் :
பன்னி ருயிரு மொழிமுத லாகும்24
என்பதாகும். இச்சூத்திரத்தின்படி அகரம் தொடக்கம் ஒளகாரம் ஈருகவுள்ள பன்னிரண்டு உயிரெழுத்துக்களும் சொற்களிலே முதனிலைகளாக வரும். தொல்காப்பியருக்கும் நன்னூலாருக்கும் இதிற் கருத்து வேறுபாடில்லே.
முதனிலை தொடர்பாகத் தொல்காப்பியர் அடுத்துக் கூறுகின்ற ஒரு சூத்திரம் தமிழ்மொழியின் ஒரு குறிப்பிட்ட இயல்பினை எடுத்துக்காட்டுகின்றது. அச்சூத்திரம், உயிர்மெய் யல்லா மொழிமூத லாகா என்பதாகும். முதற் சூத்திரத்திற் கூறிய உயிர் எழுத்துக் க3ளப் போல உயிர்மெய் எழுத்துக்களும் மொழிக்கு முதனிலைகளாக வரும். அவ்வுயிர் மெய் எழுத்துக்கள் தவிர்ந்த ஏனைய எழுத்துக்கள் எவையுமே தமிழ்ச் சொற் களுக்கு முதனிலைகளாக மாட்டா என இச்சூத்திரம் வரை யறை செய்கின்றது. இது வரிவடிவம் தொடர்பான ஒரு குத்திரமென்றே கூறவேண்டும். ஆங்கிலம் போன்ற மொழி குளிற் காணப்படாத உயிர்மெய் என்ருெரு வரிவடிவம்

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 103
தமிழிலே அமைந்துள்ளது. உயிர் ஒலிகளுக்கும், மெய் ஒலிகளுக்கும் தனித்தனி அமைக்கப்பட்ட வரிவடிவங்களி னின்று வேறுபட்டனவாக, ஆணுல், அவை இரண்டினையும் இணைப்பனவாக உயிர்மெய் எழுத்துக்கள் அமைக்கப்பட்டன. உயிர்மெய் என்னுந் தொடர் உயிர் ஒலியையும் மெய் யொலியையும் இணைத்துக்காட்டும் வரிவடிவத்தைக் குறிக் கின்றது.
தமிழ்ச் சொற்களிலே மெய் எழுத்துக்களின் வரன் முறையை உயிர்மெய் எழுத்துக்கள் கட்டுப்படுத்துகின்றன. மெய் எழுத்து வடிவங்கள் மொழியிறுதியில் அப்படியே வழங்கப்படுகின்றன. கண். பால், மான், நெய் முதலியன உதாரணங்களாகும். மொழியிடையில், இரண்டு உயி ரொலிகளுக்கிடையிலே மெய் வடிவம் இடம்பெறுவதில்லை. உதாரணமாக, அட்இ என எழுதாமல், அடி எனவே எழுதப்படும். மொழியிடையில், இரண்டு அல்லது மூன்று மெய்கள் இடம்பெறின், அவற்றுள் முறையே ஒன்று அல்லது இரண்டே மெய்வரிவடிவிலமையும். ஏனைய மெய்கள் உயிரோடு சேர்ந்து உயிர்மெய் வடிவங்களைப் பெறும். உதாரணமாக, அச்சம், ஈர்ப்பு என்னுஞ் சொற்களை எடுத்துக்கொள்வோம் முறையே அச்ச் அம், ஈர்ப்ப்உ என எழுதப்படாமல், முதற்சொல்லில் இரண்டாவது 'ச்' அகரத்துடன் சேர்ந்து ச ஆகவும், இரண்டாவது சொல்லில் மூன்ருவது மெய் வடிவாகிய 'ப்', உகரத்துடன் சேர்ந்து பு ஆகவும் எழுதப்படும். இவ்வாறே மொழி முதலிலும் மெய் வடிவம் எழுதப்படுவதில்லை. க்அண் என்பதற்குப் பதிலாக, கண் என்றே எழுதப்படும்.
இவ்வாறு மெய் வரிவடிவங்கள் சொற்களின் சிற்சில நிலைகளிலே எழுதப்படாமல் உயிர்மெய் எழுத்துக்கள் எழுதப் பட்டதன் நோக்கம் என்ன ? இது எழுது கருவிகளுடன் தொடர்பான நிலைப்பாடு எனவே கூறவேண்டியுள்ளது. கல்லிலும் ஒலையிலும் பிறவற்றிலும் எளிதிலே எழுத முடியாத அக்காலத்திலும், எழுதுஞ் சிரமத்தைக் குறைப் பதற்கு இது ஒர் உத்தியாக அமைந்திருக்கலாம். அவ் வுத்தி உயிர்மெய் எழுத்து உபயோகமாகும். ந்எட்உஞ்ச்எ ழ்இய்அன் (Netunceliyan) என்று 12 வரிவடிவங்களிலே

Page 67
104 எழுத்துப் பற்றிய சிந்தனைகள்
எழுதப்படவேண்டியதை உயிர்மெய் எழுத்துக்களின் உப யோகத்திஞல், நெடுஞ்செழியன் என்று 9 வரிவடிவங்களினலே எழுதிவிடலாம். இவ்வாறு மெய் ஒலியையும் உயிர் ஒலி யையும் சேர்த்துக் குறிப்பதற்குத் தனி வரிவடிவம் அமைக் கும் வழக்கம் இந்திய மொழிகளிலே காணப்படும் பண் பாகும். ஆனல், அவற்றுட் சில மொழிகளிலே (ஹிந்தி: உருது பேஈன்றன) சொல்லின் முதனிலையில் மெய்யெழுத் துக்கள் இடம்பெறுகின்றன. தமிழ் மொழியிலோ, மெய் பெழுத்துக்கள் மொழி முதலில் இடம்பெறும் வழக்குத் தொல்காப்பியர் இலக்கணம் அமைப்பதற்குக் காரணமா யிருந்த மொழியமைப்பிற் காணப்படவில்லே. அதன் பின்னரும் தமிழ் மொழிக்கே உரிய சொற்களின் முதனிலே மெய்யெழுத்துக்கள் இடம்பெறவில்லை. ஆணுல் இக்கால எழுத்து வழக்கிலே, குறிப்பாக நவீன ஆக்க இலக்கியங்களில் மெய்யெழுத்துக்கள் முதனிலையில் வரச் சொற்கள் பல கையாளப்படுகின்றன. உதாரணம் :
“சுரீரென சருமத்தை ஸ்பரிசித்து ஊடுருவும் உஷ்ணத்தை. 29
தூக்கியெறியப்பட்டு, ஸ்மரணை இழந்தான். 27 வேற்றுநிலக் கொள்கையே இவர்களுடைய ஆராய்ச் சிக்கு அடிப்படையாகையால், ட்ரபட்ஸ்காய், வேற்று நி3லகளில் காணப்படுகின்ற வேறுபாடுகளே எல்லாம் விரிவாக விளக்குகிருர், 138,
ஸ்பரிசித்து, ஸ்மரணை, ட்ரபட்ஸ்காய் என்னுஞ் சொற்கள் முதனிலே மெய் வடிவங்களுடன் நூல்களிலே கையாளப் பட்டுள்ளன. ஆணுல், அவவாறு இடம்பெறுஞ் சொற்கள் யாவுமே பிறமொழிச் சொற்களாகவே அமைகின்றன. பிறமொழிச் சொற்களைத் தமிழ்ச் சொற்களினின்றும் பிரித்தறிய, "உயிர்மெய் யல்லன மொழிமுத லாகா' என்னும் விதி நன்கு உதவக்கூடியது.
மொழிக்கு முதலிலே இடம் பெறும் உயிர் மெய் எழுத்துக்களெனத் தொல்காப்பியர் குறிப்பிட்டவற்றை மறுபக்கத்திலுள்ள அட்டவரே காட்டுகிறது.
( پ، ') '

| is ချုံး၊ နျ၊ ‘(၆) *_| 影 *18à .s ܀ ¬ܘs ܃s .܀ 8܀ @: ܓs% :ܣܛ ട്ര +
---- ----|-|-------------|-|---------------- — || ~ || _ || ~ | ~ | ~ || — | — | — | — | — | — gogostoliereg)----|øges soos sprog) Nossro@--------q; si so | Isogolao surtos (Tī£gosto ~ ! ----」 「- || - || - || || = || = || }} || 「 --------|--------------→---------------- ---- )|- |--| }~:: | , , ; : : T----------------らめた「g---- sĩ ươi@ ||- -1 ge」egg g*」g1Dおもに「Q*圈aé「T&T@*@??? || Noors) iş907 uoga, og Og" | quos ugnį garīgi song) so o urīg)suae| sponso | ocorro || Noorī£) | Qoreï || 4 osa|~709 si || @ a997 || @stao ur | soort Jesɛ) | ?? ligioso souse) qooqiaoqi soo | sgïose,IĶĪ | q: * IŤ|qodossugs | 1,9 Lá| 5īgigi 5gO Q」*)-si ugoto)sąornogo@嶼) *Q preö&q劑|* ag@4&5Lé 4白趙 ----) {----_ |- ----|-----|- -------------- — | — || ~ || — | — | — | — | — | — | — | — | — - -|-|----— !q2.191,9oC)----~ !----|-qTQ0 usē)---- ー “*C ーgoo | enTool @@ | golpo|4@鶴9749é4QL*---- — | — | — | — | — | — | — | — | — | — | _ | quae syanoloog) 601]*?)Figuos)塔g@42) @隱QQ2「1%。é49|fígog | uṣṇog | No uso** Isoặĝ | ©g | ae so• 闇 é 愈邢。 蟠 !----!

Page 68
  

Page 69
O 8
ஆச்
தொல் :
தொல்
இன்று :
தொல் :
தொல் :
இன்று :
தொல் :
இன்று :
தொல் :
இன்று
தொல் :
இன்று :
தொல் :
இன்று :
எழுத்துப் பற்றிய சிந்தனைகள்
ச்ச்: அச்சம் ஞ்ச்: காஞ்சி; ஞ்ஞ: மஞ்ஞை ஞ்ஜ்: பஞ்ஜாப் ட்க்: பூட்கை, ட்ச் மாட்சி; ட்ட் நாட்டம் , ட்ப் நட்பு
ட்ம் விட்மன்; ட்ல்: அட்லட்;
டல்: பட்வாரி: ட்ன் : சட்னி
ண்க் எண்கு, ண்ைச்: வெண்சாந்து; ண்ஞ்; வெண்ஞாண் ண்ட் பண்டம்: ண்ண்: அண்ணம்; னப் பண்பு; ண்ம்; வெண்மை; ன்ய் மண்யாறு: ண்ஸ்: எண்ட்ைடு, ண்ஞ், ண்ய், ண்ங் ஆகியன வழக்கிறந்தன ண்த்; வெண்தாடி ன்ட்ர்: ஜெண்ட்ரியே . ܟܐ த்த்; அத்தம் த்ப் குத்புநாயகம்; திம்: பத்மா, த்ய் வித்யா, த்ர்: காயத்ரி: த்ல்: பெத்லகேம்; த்வ்: மத்வாணி: ந்த் காந்தள்; ந்ந்: செந்நாய்; ந்ய: பொருந்யாது ந்ய் வழக்கிறந்தது.
ப்ப்: உப்பு ப்ச்: பெப்சி; ப்ட: காப்டன்; ப்த்: ஜப்தி: ப்ம் சாப்மன்; ப்ர்: பெப்ருவரி, ப்ள்: குப்ளகான் ம்ப் அம்பு; ம்ம்: அம்மை ; ம்ய்: காய்ம்புறம் ம்க்: சிம்கா; ம்ச்: இம்சை: ம்ட்: எம்டன்; ம்ல்: கம்லத்; ம்ள் சிம்ளா; ம்ன்: சிம்னி

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் - O9
பப் : தொல் : ய்க்: ஆய்க: ப்க்க் துய்க்க;
ய்ங்க்: காய்ங்கனி: ப்க்: எய்சிலே; ய்ஞ், ஆய்ஞர், ய்ஞ்ச்: தேய்ஞ்சது; ய்த் ஆய்தல், ய்த்த் பாய்த்தல்; ய்ந்: ஆய்நர்: ய்ந்த்; காய்த்தனம்; ய்ப் பாய்பு, ய்ப்ப் வாய்ப்பு; ய்ம் வாய்மை ய்ம்ப்: காய்ம்புறம்: ய்ய் செய்ய ; ப்ரல் செய்வோர்
a
இன்று ய்ர்: கய்ரோ
ர் : தொல் ர்க்: ஆர்க; ர்க்க் பீர்க்கு;
ர்ங்க்: நேர்ங்கல், ர்ச்: வார்சிலை; ர்ச்ச்: நேர்ச்சி; ர்ஞ் சேர்ஞர்; ர்ஞ்ச்: நேர்ஞ்சிலை; ர்த் ஆர்தல்; ர்த்த்! வார்த்தல்; ர்ந்: ஆர்.நர்; ர்ந்ந்: நேர்த்திலை ர்ப் சார்பு; ர்ப்ப் ஆர்ப்பு: hம்: நேர்மை; - ர்ம்ப்: நேர்ம்புறம், ர்ய் போர்யானே;
i si : UrTri gj) 6:1.
இன்று : ர்ட் வார்டன், ர்ண் பூர்ணிமா, ர்ல்: பிர்லா; ர்ன்: குர்ணுன்சிங், ர்ஜ் பர்ஜி. ல் தொல் ல்க் செல்க; ல்ச் வல்சி:
ல்ப் சால்பு; ல்ய்: கொல்யானை, ல்ல்: நல்லாள்; ல்வ் செல்வம்
r இன்று : ல்ட் : பல்டி; ல்த் கல்தா:
ல்ம் : வில் மட், ல்ர்: மில்ரோய்
வ் தொல் : வ்ய் : தெவ்யாது; வ்வ்: தெவ்வர்
இன்று : வ்ட் : ப்ராவ்டா : வ்ரி: சாவ்ரி

Page 70
O.
6ýt :
தொல் :
இன்று : இன்று : இன்று :
எழுத்துப் பற்றிய சிந்தனைகள்
ழ்க் ஆழ்க, பூழ்க்க்: வாழ்க்கை; ழ்ங்க்: தாழ்ங்குலை; ழ்ச்: வாழ்சேரி: ழ்ச்ச்: தாழ்ச்சி, ழ்ஞ் ஆழ்ளுர்; ழ்ஞ்ச்: தாழ்ளுசினை, பூழ்த் தாழ்தல்; ழ்த்த தாழ்த்தல்; jந்: ஆழ்நர் ழ்ந்த்! வாழ்ந்தனம், பூழ்ப் வீழ்பு ழ்ப்ப; தாழ்ப்பு: ழ்ம்: கீழ்மை . ழ்ம்ப் வீழ்ம்படை, ழ்ய்: வீழ்யானை,
ழ்வ் வாழ்வார்
ழ்ங்க், ழ்ஞ், ழ்ஞ்ச், ழ்ந், ழ்ம்ப் என் பன வழக்கற்றுவிட்டன. ள்க் கொள்கை; ஸ்க் நீள்சினை : ள்ப் கொள்ப; ள் ய் வெள்யாறு; ள்வ் கள்வன்; ஸ்ாள்: வெள்ளம் ள்ய் வழக்கற்றுவிட்டது.
ற்க் கற்க, ற்ச் முயற்சி; ற்ப் : கற்பு, ற்ற் : குற்றம். ற்ன்: விற்னே ன்க்: புன்கு; ன்ச்: புன்செய்; ன்ஞ் மென்ஞாண், ன்ப் அன்பு; ன்ம் வன்மை, ன்ய் இன் யாழ், ன்வ் : புன்வரகு, ன்ற் குன்று; ன்ன்; நன்னர். ன்ர்: சென்ரல் ஜ்ஜ்: பஜ்ஜி ஸ்க் பிஸ்கட் ஸ்ட் பிரிஸ்டல்; ஸ்ட்ர் : கஸ்ட்ரோ;ஸ்த் பிரஸ்தாபம்; ஸ்த்ம் : ஆஸ்த்மா, ஸ்ப் பஸ்பம்;
ஸ்ம பஸ் மாசுரன், ஸ்ர் : மிஸ்ரா; ஸ்லி : வெஸ்லியன்; ஸ்வ் ஈஸ்வரன்; ஸ்ற்: ஒஸ்றிக், ஸ்ன் பிரஸ்னேவ்

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 1 11
ஷ் : இன்று : ஷ்க் தாஷ்கன்ற் , ஷட் கோஷ்டி, ஷ்ண் உஷ்ணம்; வீடிப் புஷபம் : ஷ்ம்: காஷ்மீர், ஷ்ய்: ஹேஷ்யம், ஷ்வ் விஷ்வ
மொழியிறுதி நிலைகளாக உயிரெழுத்துக்களில் ஒள தவிர்த்த ஏனையவை வருமெனத் தொல்காப்பியர் கூறுவர் . உயிர்மெய் எழுத்துக்களாக, எகர ஒகரம் இணைந்த உயிர் மெய்யெழுத்துக்களைத் தவிர ஏனையவை இடம்பெறுமெனக் கூறுவர். மெய்யீறுகளுள், ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள் ஆகியன மொழியிறுதிகளாக வருமெனக் கூறப்பட் டுள்ளது. இவற்றுள் ஞ், ந் ஆகியன இக்கால வழக்கிலே மொழியிறுதிகளாக வருவதில்லை. ஆனல், தொல்காப்பியர் கூருத பல மெய்யெழுத்துக்கள் இறுதி நிலையிலே இடம் பெறுகின்றன.
க் கேக்) ட் கரட், த், பரீத்; ப் : ஜேக்கப், ற் ருெக்கற் ; ஸ் பஸ்
தமிழ் இலக்கணகாரர் மொழியிறுதியில் வருமெனக் கூறிய மெய்யெழுத்துக்களின் வரன்முறையில் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கு காணப்படுகின்றது.
(அ) எல்லா இறுதி நிலைகளுமே வினைச்சொற்களில் வருவதில்லை. ண, ம், ஆகிய எழுத்துக்கள் அப்படிப்பட்டனவாகும். இவ்விரு எழுத்துக் களும் பெயர்ச்சொற்களில் மட்டுமே இடம் பெறும் .
(ஆ) த னி க்கு ற் றெழுத் துக் குப் பின் சில மெய் யெழுத்துக்கள் இறுதி நிலைகளாக வருவதில்லை. உதாரணம் : ர், ழ்
(இ) இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் கொண்ட சொற்களில் ‘ய்‘ இறுதி நிலையாக வருமிடத்து அதன் முன்னர் வரும் உயிர் நெட்டெழுத் தாகவே அமையும். உதாரணம் : வந்தாய்.

Page 71
I 12 எழுத்துப் பற்றிய சிந்தனைகள்
5. தமிழ் வரிவடிவமும் தமிழ் இலக்கண மரபும்
தமிழ் வரிவடிவம் பற்றித் தமிழ் இலக்கண நூலார் கூறிய வற்றை நாம் இன்று மீளாய்வு செய்யவேண்டியுள்ளது. தமிழ் வரிவடிவங்களேத் திருத்தியமைக்கவேண்டுமென்ற கருத்து இன்று வலுப்பெற்று வருவதணுல், அவ்வரிவடிவங்களின் பழைய நிலைமைபற்றிய ஆய்வுகள் அவசியமானவையாகின் றன. தமிழ் இலக்கணநூலார் தமிழ் வரிவடிவங்கள் பற்றிக் கொண்டிருந்த விருத்துக்களேயும் கோட்பாடுகளையும் நோக்கி, அவற்றின் வளர்ச்சி நிலைகளைக் கவனிக்கும்போது தமிழ் எழுத்துக்களின் வரிவடிவங்கள் பெற்றுவந்த மாற்றத்தையும் நாம் கணிக்கமுடியும். வரிவடிவம்" என்ற சொல் தமிழ் இலக்கணங்களிலே காணப்படவில்லை. அதற்குப் பதிலாக *எழுத்து' என்னுஞ் சொற்பிரயோசுமே இடம் பெற் றுள்ளது. தொல்காப்பியர் தொடக்கம் பின்வந்த இலக்கண நூலார் அனைவரும் எழுத்து' என்னும் சொல்லை உபயோ கிக்கும் இடங்களை நோக்கும்போது இதனைக் கண்டுகொள்ள முடிகின்றது.
*எழுத்து' என்னுஞ் சொல் குறிப்பிட்ட ஒலிகளை மட்டுமன்றி வரிவடிவத்தையும் குறித்து நின்றதென்பதற்குப் பல இலக்கண ஆசிரியர்களின் சூத்திரங்கள் சான்று பகர் கின்றன. இன்று எமக்குக் கிடைக்கும் தொல் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தின் பாயிரச் செய்யுள் எழுத்துப் பற்றிய சில குறிப்புக்களைக் கொண்டுள்ளது.
தமிழ்கூறு நல்லுலகத்து வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலி செழுத்துஞ் சொல்லும் பொருளு நாடி .
என்னுஞ் சிறப்புப் பாயிர அடிகள் எழுத்துப் பற்றிய சிந்தனையைத் தூண்டுகின்றன. இவ்வடிகளுக்கு உரை யெழுதிய உரையாசிரியர், நச்சினர்க்கிளியர் ஆகியோர் *எழுத்து' என்பதனை வரையறை செய்து விளக்க முற்பட் டுள்ளனர்.
ي.

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 113
"எழுத்தென்றது யாதனையெனில், கட்புலனுகாவுருவுங் கட்புலனுகிய வடிவுமுடைத்தாக வேறுவேறு வகுத்துக் கொண்டுதன்னையே உணர்த்தியுஞ் சொற்கு இயைந்தும் நிற்கும் ஒசையையாம் கடலொலி சங்கொலி முதலிய ஒசைகள் பொருளுணர்த்தாமையாலும் முற்கு வீளை இலதை முதலயன பொருளுணர்த்தினவேனும் எழுத் தாகமையானும் அவை ஈண்டுக்கொள்ளாராயினர்.?
எழுத்துப் பற்றிய நச்சிஞர்க்கினியரது இவ்விளக்கம் தொல் காப்பிய எழுத்ததிகார முதற்குத்திரப் பொருளுடன் ஒப்பு நோக்க வேண்டியதொன்ருகும்.
எழுத்தெனப் படுப
அகரமுத ாகர விறுவாய் முப்பஃ தென்ப சார்ந்துவரன் மரபின் மூன்றலங் கடையே
என்பது தொல் காப்பிய எழுத்ததிகார முதற்குத்திரமாகும். எழுத்து என்ருல் ஒசையையும் அதற்கென ஒரு வரிவடிவை யும் விளக்குமோர் அலகாகத் தொல்காப்பியர் இச்சூத்திரத் திலே கருதியுள்ளாரென நச்சினுர்க்கினியரின் இச்சூத்திர உரை விளக்குகின்றது. தொல்காப்பியர் ஏனைய சூத்திரங் களாலும் இக்கருத்தினையே மனங்கொண்டுள்ளார் என
ஆ. வேலுப்பிள்ளை தமது நூலிலே குறிப்பிட்டுள்ளார்:
*எழுத்து என்பது ஒலிகளே மாத்திரமன்றி வரி வடிவையுங் குறித்ததென்பதற்குப் பல தொல்காப்பியச் சூத்திரங்கள் சான்று பகருகின்றன. மெய்யீறெல்லாம் புள்ளியோடு நிலையல்" எகர ஒகரத் தியற்கையு மற்றே குற்றிகு லுகரமு மற்றென மொழிப', 'உட் பெறு புள்ளி யுருவா கும்மே” என்னுஞ் சூத்திரங்களெல் லாம் வரிவடிவங்களைச் சுட்டும் சூத்திரங்களே. 30
பின்வந்த தமிழ் இலக்கணநூலார் தொல்காப்பியரது இக்
கருத்தினேயே அடிப்படையாகக் கொண்டனர் என்பது
அவர்களுடைய எழுத்துப் பற்றிய விளக்கங்களிலிருந்து
பெறப்படுகின்றது. தொல்காப்பியரது எழுத்ததிகாரச் சூத்
5-五邬

Page 72
l 4 எழுத்துப் பற்றிய சிந்தனைகள்
திரங்களில் எழுத்து என்ற சொற் பிரயோகம் நூற்றுக்கு மேற்பட்ட சூத்திரங்களிலே அமைந்துள்ளது. ஒசைக்கும் எழுத்துக்குமுள்ள தொடர்பினைப் பல சூத்திரங்களிலே தொல்காப்பியர் சுட்டிக்காட்டியுள்ளார். குற்றெழுத்து, நெட்டெழுத்து, வல்லெழுத்து, மெய்யெமூத்து, இடை யெழுத்துப் போன்றவற்றை நாம் உதாரணங்களாகக் காட்டலாம். அதே போன்று எழுத்துக்களின் அமைப்பு
முறையை விளக்கும் பிரயோகங்களுமுண்டு. ஒரேழுத்
தொருமொழி, ஈரெழுத்தொருமொழி ஒளகார இறுவாய், னகர இறுவாய் போன்றவற்றை உதாரணங்களாகக் 575 fTL "LLl6u) IT Ab.
வரிவடிவங்களை அமைப்பதிலே கடைப்பிடிக்கப்பட்ட ஒழுங்கு முறையினையும் தொல்காப்பியரது எழுத்ததிகார ச் சூத்திரங்கள் உணர்த்துகின்றது.
1. அவற்றுள் அஇஉ
எஒ என்னு மப்பா லைந்து மோரள பிச்சைக்குங் குற்றெழுத் தென்ப. 2. ஆஈஊஏஐ
ஒஒள என்னு மப்பா லேழு மீரள பிசைக்கு நெட்டெழுத் தென்ப
3. ஒளகார விறுவாய்ப்
பன்னி ரெழுத்து முயிரொ மொழிப
4. னகர விறுவாய்ப்
பதினெண் ணெழுத்து மெய்யென மொழிப.
இச்சூத்திரங்கள் எழுத்துக்களது பெயரையும், முறையை யும் தொகையையும் கூறுவதால் அவற்றின் வரிவடிவத்தை உனர்த்துகின்றன என நச்சிஞர்க்கினியர் தமது உரை வாயிலாகவும் விளக்குகின்ருர்,
இவை வல்லெழுத்தென்ப (எழு, 19 ) மெல்லெழுத் தென்ப (எழு 20 ) இடையெழுத்தென்ப (எழு. 21.) ஒளகார விறுவாய் (எழு 4) ணகார விறுவாய் (எழு. 9.)
 
 

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 15
என்பவற்ருற் பெற்ரும் இவற்ருனே எழுத்துக்கள் உருவாதலும் பெற்ரும். இவ்வுருவாகிய ஒசைக்கு ஆசிரியர் வடிவுகூருமை உணர்க. இனி வரிவடிவு கூறுங்கால் மெய்க்கே பெரும்பான்மையும் வடிவு கூறுமாறு உணர்க. 131
இச்சந்தர்ப்பத்தில் தொல்காப்பியர் சில எழுத்துக்களுக்கு
மட்டுமே வரிவடிவு கூறியதை நச்சிஞர்க்கினியர் சுட்டிக் காட்டிச் செல்கின்ருர், அவ்வாறு சிலவற்றுக்கு மட்டுமே தொல்காப்பியர் வரிவடிவு கூறிச் சென்ற்மை சிந்தனைக் குரியதொன்முக அமைகின்றது.
1. உட்பெறு புள்ளி யுருவா கும்மே
(σταρ. (35 , 14 - ) 2. மெய்யி னியற்கை புள்ளியொடு நிலையல்
( 6τ (Lρ. Θ5 - 15 ) 3. எகர ஒகரத் தியற்கையு மற்றே * , -
. (σταρ (35 - 16, ) 4. புள்ளி யில்லா வெல்லா மெய்யு -
முருவுரு வாகி யகரமோ டுயிர்த்தலு மேனே யுயிரோ டுருவுதிரிந் துயிர்த்தலு மாயீ ரியல வுயிர்த்த லாறே
(σταρ. Θύ 17 )
மேற்குறிப்பிட்ட சூத்திரங்கள் தமிழ் எழுத்துக்களின் வரி வடிவத்தைப்பற்றித் தொல்காப்பியரின் கிருத்துக்கரே உணர்த்துவனவாக ஸ்ளன. சூத். 14 பகரத்தோடு மகரத் தின் வரிவடிவு வேற்றுமையடைவதைக் குறிப்பிடுகின்றது. சூத், 15 தனிமெய்க்கும் உயிர்மெய்க்குமுள்ள வேற்றுமையைச் சுட்டுகின்றது. சூத் 16 எகர ஒகரங்களின் வரிவடிவும் அத்தகையதென்றும், சூத் 17 மெய்யும் உயிரும் கூடிப் புணருமாறும் ஆண்டு அவை திரியாதும் திரிந்தும் நிற்கு மாறுங் கூறுகின்றதென்றும் தச்சினர்க்கினியர் பொருள் கூறுகின்றனர். இச்சூத்திரங்கள் யாவும் வரிவடிவத்தைப் பற்றிய தகவல்களேத் தருபவையென்றே அவர் கொள்ளு கின்ருர், இதனைத் தனது உரையிலே உறுதியும் செய்
துள்ளார்.

Page 73
1 16 எழுத்துப் பற்றிய சிந்தனைகள்
'எனவே உயிர்மெய்சுட்குப் புள்ளியின்ருயிற்று. க், ங் ந், ன், எனவரும். இவற்றைப் புள்ளியிட்டுக் காட்டவே புன்னி பெறுவதற்கு முன்னர் அகரம் உடனின்றதோர் மெய்வடிவே பெற்று நின்றன வற்றைப் பின்னர் அப்புள்ளியிட்டுத் தனிமெய்யாக்கினு ரென்பது உம் பெறுதும். 32
வரிவடிவத்திலே தொல்காப்பியர் சில மாற்றங்களைச் செய்த தாக நச்சினர்க்கினியர் கூறுவதும் சிந்தனைக்குரியதாகும். எழுத்து என்று தொல்காப்பியர் கருதியது வெறும் ஒலி வடிவத்தை மட்டுமல்ல என்ற கருத்தினை நச்சினர்க்கினியர் பல்வேறு சூத்திரங்களில் வி லியுறுத்துவ  ைதயும் நாம் உணர முடிகின்றது. இதனுல் உரையாசிரியர்கள் தமது காலத்து நிலைமைகளுக்கு ஏற்பச் சூத்திரங்களுக்குப் பொருள் எழுது வதையும் நாம் அவதானிக்க முடிகின்றது .
நச்சினுர்க்கினியர். வரிவடிவம் பற்றித் தொல்காப்பியர் முழுமையாகச் சூத்திரங்கள் செய்யா மை ச்கும் பின் வருமாறு காரணம் கூறியுள்ளார்:
"இவ்வெழுத்துக்களின் உருவிற்கு வடிவுகூருராயினர், அது முப்பத்திரண்டு வடிவினுள் இன்ன எழுத்திற்கு இன்ன வடிவெனப் பிறர்க்கு உணர்த்துதற்கு அரிதென் பது கருதி, அல்ல டிவு ஆராயுமிடத்துப் பெற்ற பெற்ற வடிவே தமக்கு லடிவாம், குழலசுத்திற் கூறிற் குழல் வடிவுங் குடத்தகத்திற் கூறிற் குடவடிவும் வெள்ளிடை யிற் கூறின் எல்லாத்திசையும் நீர்த்தரங்கமும்போல. எல்லா மெய்யு முருவுரு லாகி (எழு. 17) எனவும், உட்பெறு புள்ளி உருவா கும்மே" (எழு. 14) எனவும், * மெய்யி னியற்கை புள்ளியொடு நிலையல்" (எழு, 15)
எனவுஞ் சிறுபான்மை வடிவுங் கூறுவர். அது வட்டம்
சதுரம் முதலிய முப்பத்திரண்டினுள் ஒன்றை உணர்த் தும், மனத்தான் உணரும் நுண்ணுணர்வு இல்லோரும் உணர்தற்கு எழுத்துகட்கு வேறுவேறு வடிவி ங்காட்டி எழுதப்பட்டு நடத் தலிற் கட்புலணுகிய ரிே 6 டிவும் உடையவாயின. பெரும்பான்மை மெய்க்கே வடிவு
', '

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் I 1 7
கூறினர். உயிர்க்கு வடிவின்மையின், எகர வொகரத் தியற்கையுமற்றே (எ.அ. 16) எனச் சிறுபான்மை உயிர்க்கும் வடிவு கூறிஞர். 133
தொல்காப்பியருக்குப் பின்னர் நன்னூலார் எழுத்து இன்னதென்பதைப் பினவரும் சூத்திரத்தில் குறிப்பிடுகிருர்:
மொழிமுதற் காரண மாமனுத் திரளொலி எழுத்தது முதல்சார் பென விரு வகைத்தே
மொழிக்கு முதற் காரணமும் அணுத்திரளின் காரியமுமாகிய எமுத்து என்று அவர் குறிப்பிடும்போது தொல்காப்பியரது கருத்தினேயே அடிப்படையாகக் கொண்டிருப்பதை உணர முடிகின்றது. எழுத்தின் தொகை பெயர் என்பவற்றிலும் தொல்காப்பியரையே பின்பற்றியுள்ளார் அவர் எழுத்துக் களைப் பற்றிக் குறிப்பிடும் சிறப்புச் சூத்திரமும் நன்கு அமைந்துள்ளது.
தொல்லை வடிவின வெல்லா வெழுத்துமாண் டெய்து மெகர வொகர மெய்புள்ளி,
‘எல்லா எழுத்துக்களும் பல்வேறு வகைப்பட்ட எழுதி வழங்கும் பழைய வடிவினை உடையனவாம். இவ் வடிவை யுடையனவாய் வழங்குமிடத்து எகரமும் ஒகர மும் மெய்களும் புள்ளிபெறும், 34
இங்கு எழுத்துக்களுக்கு வரிவடிவம்பழமைக்காலம் தொட்டே இருந்தது என்பதையும் காலத்தின் தேவைக்கேற்ப அவற்றில்
மாற்றங்கள் ஏற்பட்டன என்பதனையும் நன்னுரலாr
உணர்த்த முற்பட்டதை அறியமுடிகிறது.
தொல்காப்பிய உரையாசிரியர்களது கருத்துக்களை மனங் கொண்டு நன்னூலார் தமிழ் எழுத்துக்களுக்குப் பழமை யான வரிவடிவம் இருந்ததென்பதை ஏற்றுக்கொள்கிழுர், எழுத்து என்பது எழுதப்படுவது. அதனுல் அதற்கென ஒரு வரிவடிவம் இருந்தேயாக வேண்டும். அதன் அமைப்பு

Page 74
18 எழுத்துப் பற்றிய சிந்தனைகள்
வித்தியாசப்படலாம். தமிழ் எழுத்துக்கள் பற்றி டாக்டர் வை. சண்முகம் பின்வருமாறு கூறுகிருர்:
இன்றுவரை தமிழ் மொழிக்குக் கிடைத்துள்ள எழுத்துச் சான்றுகளில் பழைமையானது பிராமி-தமிழ் கல்வெட்டுகள் என்று அழைக்கப்படும் குகைக்கல் வெட்டுக்களே. அவை, பாண்டிதாட்டில் மிகுதியாகவும் சோழ, கொங்கு, தொண்டை நாடுகளிற் குறைவாகவும், கி. மு. மூன்ரும் நூற்ருண்டிலிருந்து கி. பி. 5-6 நூற் முண்டுவரை எழுத்திலும் மொழியிலும் சில வளர்ச்சிட். படிகளை உடையதாகவும் sa Giterrao (Mahadevan 1970 :12). அவைகளே அசோகன் பிராமியில் இருந்து உண்டாக்கியிருக்க வேண்டுமென்பதையும் அறிஞர்கள் 6673IT ở Guy Gir 6MTITrfø56řir. (T. P Meenakshisundaram 1956; Mahadevan, 1970 : 2) ஆயினும் தமிழ் மொழி அமைப் பிற்கேற்ப பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளமையை யும் அறிஞர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். அவைகளுள் முக்கியமானவை 1. தமிழ் மொழிக்கு வேண்டாத எழுத்துக்கனை விலக்கியது. 2. வேண்டிய புதிய எழுத் துக்களுக்கு அவற்ருேடு தொடர்புடைய எழுத்துக்களி லிருந்து இரண்டு முறையில், (அ) குறியீடுகள் சேர்த்தது (உயிர் மெய்க்கும் தனிமெய்க்கும் உள்ள வேறுபாடு எகர ஒகரங்களில் குறில் நெடில் வேறுபாடு - இந்த இரண்டிலும் புள்ளி சேர்த்து வித்தியாசப்படுத்தியது.) (ஆ) ஒலித்தொடர்புடைய வடிவங்களிலிருந்து சிறிது திருத்திப் புதிய ஒலியைக் குறிக்கச் செய்தது. (நகரத் திற்குரிய வடிவத்தோடு மேலே சிறிய வளைவு சேர்ந்ததன்
மூலம் னகரவொலியைக் குறிக்கச் செய்தது.) ஆகியவை
குறிப்பிடத்தக்கவை. பிராமித் தமிழ்க் கல்வெட்டுகளில் ஒலிகளும் தனியெழுத்தைப் பெறவில்லை (Mahadaven 1970 : 4) தொல்காப்பியர் காலத்தில்தான் ஒளகாரம் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அப்படியே ஆயிதமும் அவற்றுக்குப் பின்னரே நெடுங்கணக்கில் இடம் பெற்

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் I 9
றிருக்க வேண்டும். இப்படி எழுத்து எண்ணிக்கையிலும் வடிவத்திலும் காலந்தோறும் மாற்றம் ஏற்பட்டே வந்திருப்பதைப் பலரும் எடுத்துக் காட்டியுள்ளனர்." ஆனல் தமிழ் இலக்கண ஆசிரியர்கள் ஒலிக்கப்படுகின்ற ஒலிக்கு முக்கியத்துவம் கொடாது எழுதப்படுகின்ற எழுத் துக்கே முக்கியத்துவம் கொடுத்தாலும் தமிழ் எழுத்துக் அளின் வரிவடிவம் காலத்தின் தேவைக்கேற்ப மாறுபடும் என்ற சிந்தனையற்றவராகவே இருந்தனர் என்பது புலப்
படுகின்றது.
பிற்காலத்தில் இலக்கண நூல்களில் பிரயோக விவேகம், இலக்கணவிளக்கம் என்னும் இருநூல்களும் எழுத்துப் பற்றிய சில குறிப்புக்களைத் தருகின்றன. இவ்விரு நூலாசிரியர்களும் கூறுகின்ற கருத்துக்கள் தமிழ் எழுத் துக்கள் பற்றிய அவர்களது சிந்தனைகளைத் தெளிவு படுத்துகின்றன. ܦ
1. பிரயோக விவேகம்
ஆவியெழுத்தச் சொடுசுர மாறவற்றின் பின்லோ மேவிய மெய்கள் விளம்புமல் லோடுவியஞ்சனமாற் தாவியெதிர்த்து மதர்த்தரி பாய்ந்திரு தாழ்
குழைத்தோய் இச்செய்யுளின் உரைக்குறிப்பு வருமாறு,
இது முதலெழுத்துக் குறியீடு கூறுகின்றது. குறியே சமிக்கை கூறுங்காலே, இஃது உரைச் சூத்திரம், உயி ரெழுத்தெல்லாம் அச்சு எனவும் சுரம் எனவும் வியஞ் பனம் எனவும் பெயர்பெறும். 36
2. நேமிநாதம்
ஆதியுயிர் வவ்வியையின் ஒளவாம் அஃதன்றி நீதியினுல் யவ்வியையின் ஐயாகும் - ஏதமிலா எஒமெய் புள்ளிபெறும் என்ப சஞயமுன் அஐயாம் ஆதி யிடை சில எழுத்துப் போலியும் சில எழுத்து வடிசி வேற்றுமையும் ஆகுமாறு உணர்த்துதல் நுதலிற்று

Page 75
120 எழுத்துப் பற்றிய சிந்தனைகள்
அகரமும் வகர வொற்றும் கூடி ஒளகாரத்தின் பயத்த ஆகலும் அகரமும் யசுர வொற்றும் கூடி ஐகாரத் தின் பயத்த ஆகலும் எகர ஒகரங்கள் மெய்கள் புள்ளிபெற்று நிற்றலும் சகர, ஞகர யசுரங்களின் முன்னுய் மொழிக்கு முதலாய் நின்ற அகரமும் இடை நின்ற அகரமும் ஐகாரம் ஆகலும். ' இலக்கணவிளக்கம்
தொல்லை வடிவிலா வெல்லா வெழுத்து மாண்ட்ெய்து மெகரவொகர மெய் புள்ளி
இது நிறுத்த முறையானே வடிவுகூறுகிறது. இவ் வெழுத்து இவ்வடிவிற்றென யாம் எழுத்துக்களுக்கு வடிவு கூறுமிடத்து எல்லா எழுத்துக்களும் நெடுங்கணக் கினுள் எழுதப்பட்டு வருகின்ற பழைய வடிவே வடிவாக உடையனவாம். ஆயினும் அங்ஙனம் வரு மிடத்து எகரமும் ஒகரமும் மெய்களும் மேற்புள்ளி பெற்று நிற்கும். புள்ளியும் தொல்லை வடிவே யாயினும் எகர ஏகாரங்கட்கும் ஒகர ஒகாரங் கட்கும் தனிமெய் உயிர்மெய்கட்கும் வடிலொப் புமை கண்டு அவ்வொப்புமைமேல் வேற்றுமை செய்யும் பொருட்டு அவற்றிற்கு முன்னேர் பின்னர் புள்ளியிட்டு எழுதுகவென்ருர் என்பார் *ஆண் டெய்தும்" என்ருர், 38 4. தொன்னூல் விளக்கம் மதப்பணி புரிவதற்காக தமிழ் நாடு வந்த வீரமாமுனிவர் தமிழ்ப்பணி செய்யவும் முற்பட்டார் சிறப்பாக இலக் சுணத்தை ஆராய முற்பட்ட அவர் தமிழ் எழுத்துக்கள் பற்றியும் சிந்தித்தது வியப்பன்று. எழுத்திலக்கணத்தைத் தொல்காப்பியம் இயல்பாகக் கூற நேமிநாதம் ஏழாக வகுக்க, தொல்காப்பிய உரையாசிரியர்கள் எட்டிறந்த பல்வகையென விரிக்க, நல்னுாலார் பன்னிரண்டாக விரிக்க தொன்னூல் விளக்கம் மொழியியல் அடிப்படையில் G55T fò potř) (Origin of words), Gjegj t'i lly (Classification of sounds), தோன்றும் விகாரம் (Morpho-Phonetics) எனத் தெளிவாகவும் சுருக்கமாகவும் மூன்று நிலைகளில் உள்ளடக்கி யுள்ளது.

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 121
தோற்றமும் வகுப்பும் தோன்றும் விகாரமும் சான்றுளித் தோன்றும் தான் எழுத்து இயல்பே என்னும் தொன்னுரல் விளக்க முதற் சூத்திரமே இதனே விளக்கிநிற்கின்றது.
தமிழ் எழுத்துக்களின் வரிவடிவத்தில் வீரமாமுனிவர் மாற்றத்தைச் செய்துள்ளார். மெய்யின் இயற்கை புள்ளி
யொடு நிலையல்", "எகர ஒகரத்தியற்கையும் அற்றே" என்ற
நிலையில் ஏற்பட்ட மாற்றத்தை மேலும் வேறுபடுத்தினர்.
மெய்க்கிரு
என்ற நிலக்கு மாற்றிஞர். இவரது காலத்திலேயே
எழுத்துக்களின் வரிவடிவம் தேவைக்கேற்ப மாற்றப்பட்டதை நாம் காணமுடிகிறது.
எமது பழைய தமிழ் இலக்கண நூலார் எழுத்துக்களின் பெளதிக வடிவம் பற்றி அவ்வளவு கவனஞ் செலுத்திய தாகத் தெரியவில்லே, சாசன வழக் களுக்கு முக்கிய இடம் வழங்கிய விர சோழிய இலக்கண ஆசிரியரே சாசனங்களில் நூற்றண்டுகள் தோறும் மாற்றமடைந்து வந்த தமிழ் வரிவடி வங்கள் பற்றிக் குறிப்பிட்டாரில்லை. தமிழ் இலக்கண நூலார் வரிவடிவம் பற்றி விளக்கம் கொடுக்காததற்கு ஒரு காரண முண்டு. அதிTதுெ, அந்நாட்களிலே வாசிப்பவர்கள் குறைவாகவே இருந்தனர். கூறுதல் , மொழிதல்” என்பனவே எமது மரபாக இருந்த தென்பதற்கு எம் Ligju? GOLLI இலக்கியங்கள் சான்று பகர்கின்றன ஆணுல், வீரமாமுனிவருடைய காலத்திலோ அச்சுயந்திரம் தமிழ் நாட்டிலே செல்வாக்குப் பெற்ற காரணத்தினுல், வாசிப்ப வர்களுடைய தொகை தமிழ் நாட்டிலே அதிகரிக்கத் தொடங்கியது. இதன் காரணத்தினுல், எழுத்துக்களில் வரிவடிவம் பற்றிய சிந்தனை அவசியமாயிற்று. வீரமாமுனிவர் இக்காலகட்டத்திலேயே தமிழ் எழுத்துக்களின் வரிவடிவ மாற்றம் பற்றிச் சிந்தித்துச் செயலாற்றினர். \
த-16

Page 76
1 22 எழுத்துப் பற்றிய சிந்தனைகள்
தமிழ் எழுத்துக்களுக்கும் சமயத்துக்குமுள்ள தொடர்
கிருேம். சிவஞான போதத்திற்குச் சிற்றுரையும் விளக்கமும் எழுதிய மாதவச் சிவஞானமுனிவரர் எழுத்துப் பற்றி விளக்குமிடத்துப் பின்வருமாறு குறிப்பிடுகின்றர்.
*சொல் எழுத்தான் அன்றி இல்லே எழுத்து ஒசையால் அன்றி இல்லை அதனுலே ஒசை உலகை ஆட்டும் என்னும் மாசில் பழமொழியும் வழங்குவதாயிற்று. மேலும் சிலம்பொலிக்கத் திருக் கூத்தியற்றும் சிவ
பெருமானே ஒசையொலியெல்லாம் ஆணுய் நீயே"
என்று ஆளுடைய அரசரும் அருளிச் செய்வராயினர். போற்றல் நினைத்தல் பொருளழைத்தல் போக்கல் பிற தோற்றெழுத்தால் அன்றியின்றம் சொல் ஆவிக்கு வழுவில் காட்சியாகிய சவிகற்ப உணர்வு தோன்றுவதற்கு அசுப்புறக் கலன்களைச் செலுத்தும் எழுத்துக்களே முதற்றுணை என்பர். அவ்வெழுத்துக்கள் அ, உ, ம், ஒலிமுதல், முதல் ஒலி என்ப. இவற்றுள் ஒலி முதல் என்பது நம் செவிக்குக் கேட்கும் இசை யோசையோடு கூடிய எழுத்தோசைகட்கு எல்லாம் முதற்காரணமாய் உள்ளது. இதனை விந்து எனவும் கூறுவர். 40 விந்து, நாதம் என்னும் பிரயோகங்கள் சைவசித்தாந்தத்திலே முக்கியமான சொற்களாகும். அவை அரூபமானவை.
முனிவர் அவற்றின் அரூபப் பண்பாகிய ஒலியிஜனயே அழுத்தமாகக் கூறினரே தவிர அவற்றின் ரூபப் பண்பு பற்றி எதுவும் கூறவில்லை. வைதிக சமயங்கள் இறைமைக் கும் ஒலிக்குமிடையே தொடர்பு கானுவன. இச்சமயக் கருத்துக்களாலே பாதிப்புற்ற தமிழ் இலக்கண நூலார் எழுத்துக்களின் ஒலிப்பண்பிலேயே முக்கிய கவனத்தைச் செலுத்தினர். அவற்றின் வரிவடிவம் பற்றி அவர்கள் அழுத்தமாக ஆராய வேண்டிய தேவையிருக்கவில்லை.
U

t
தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 123
அடிக்குறிப்புகள்
1. Saussa ure, Ferdinand de..., Course in General
Linguistics, p. 25 2. ஆறுமுகநாவலர், இலக்கணச் சுருக்கம், ப. 1. 3. மேற்படி, ப. 5 4. மேற்படி, ப. 5-6 5. நன்னூல் சூ, 93, 94 6. தொல்காப்பியர் இவற்றுக்கு வரிவடிவு
ரெனப் பேராசிரியர் தம்முடைய உரையிலே குறிப்பிட டுள்ளார் . 7. ஆடொலி என்பதற்குரிய விளக்கத்தினை இவ்வியலில்
22 பகுதியிற் பார்க்கவும். 8. Abercrombie, David., ibid, pp. 17-18 9. Ferguson, Charles A., ** Diglossia”, In Dell Hymes, 1964, pp. 429-39. - 10. தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சூ, 54 11. மேற்படி சூ. 55 12. நன்னூல், சூ. 125 13. இலக்கணச் சுருக்கம், ப. 11 14. அகரமும் யகர மெய்யும் சேர்ந்து வருதல்பற்றித் தொல்
ாப்பியம், எழுத்ததிகாரம், சூ. 56
அகரத் திம்பர் யகரப் புள்ளியு மைய னெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும் எனக் கூறுகின்றது. 15. மீனுட்சிசுந்தரன், தெ பொ. தமிழ்மொழி வரலாறு,
L. 100 16. வேலுப்பிள்ளை, ஆ, தமிழ் வரலாற்றிலக்கணம், ப. 56-57 17. Sankaran, C. R. and Sundaram, R. M., “A Historical Study of Caarpezhuththu in Tamil Grammars and their Commentariegs”, In Asher, 1970, pp. 335-39. I 8.
தொல்காப்பியம், எழுத்ததிகாரம், சூ. 101

Page 77
1 24 எழுத்துப் பறுறிய சிந்தன்ைகள் 19. Meenakshisundaram, T. P., Foreign Models in
Tamil Grammar, pp. 19-21.
20. garrló) (SBT6örü19urgi Tári, How Tamil was Built
Lu , l l -
21. மேற்படி, ப. 12
22. முத்துச் சண்முகன், இக்காலத் தமிழ், ப. 85-91 23. Jesperson, Otto, bid, p, 303 24. தொல்காப்பியம், எழுத்ததிகாரம், சூ. 59 25. மேற்படி சூ. 60 26. கதிர்காமநாதன், செ., கொட்டும் பணி, L. 110 27. ஜீவா, டொமினிக், தண்ணீரும் கண்ணிரும், ப. 54 28. முத்துச் சண்முகன், இக்கால மொழியியல், ப. 30 29. தொல்காப்பிபம், எழுத்ததிகாரம்,நக்சிஞர்க்கினியருரை
LU . 9 - - 30. வேலுப்பிள்ளை, மு. மு கு. நூ. ப; 49 31. தொல்காப்பியம், எழுத்ததிகாரம், நச்சினுர்க்கினியருரை . 11 ܡܐ
- L u ... 2 7
82. மேற்படி, ப. 51
33. மேற்படி, ப. 32-33
34. நன்னூல், கு 98
35. சண்முகம், வை; செ., எழுத்துச் சீர்திருத்தம்
ப. 11-12 (சீர்திருத்தப்பட்ட எழுத்துக்களாலான
பந்தியினை இலங்கையிலுள்ள நடைமுறை எழுத்துக் களிலே வழங்கியுள்ளோம்.)
36. பிரயோக விவேகம், ப. 7
36. நேமிநாதம் - 38. இலக்கண விளக்கம் 39 வீரமாமுனிவர், தொன்னூல் விளக்கம், ப. 26
40. சிவஞானபோதச் சிற்றுரையும் விளக்கமும், ப. 220

Κα
புணர்ச்சி விதிகளின் அடிப்படைகள் 1. புணர்ச்சி விதிகனின் I Ju sår og sit
இந்திய மொழிகள் பற்றிய இலக்கணநூல்கள் யாவுமே புணர்ச்சி பற்றி லிரிவான முறையிலே சூத்திரங்கள் வருத் துள்ளன. பாணினி போன்ருேருடைய இலக்கண நூல் கனிலே கையாளப்பட்ட சொல்லாகிய சந்தி (sandhi) என்பது உலகப் பொதுச் சொல்லாக மொழியாராய்ச்சி யாளர்களாலே உபயோகிக்கப்படுகின்றது. சந்தி அல்லது புணர்ச்கி பற்றி இந்திய இலக்கணங்கள் ஏன் விரிவான முறையிலே கூறவேண்டும்? தமிழ் வரலாற்றிலக்கண (பக். 39.90) ஆசிரியர் ஆ. வேலுப்பிள்ளை,
புலமையையும் வித்துவத் தன்மையையும் காட்டுவதே முக்கியம் என்ற கருத்து நிலவிய காலத்தில் தோன்றிய உரைநடையிலும் செய்யுளிலும் கடின சந்தி விகாரங்கள் யாவற்றையும் அமைத்துக் கடின நடையில் தமிழறிஞர் எழுதிவந்தனர். கருத்துத் தெளிவே முக்கியம், கருத் தைப் புலப்படுத்த மொழி ஒரு கருவியே என்ற் கருத்து இன்று நிலவுவதால், இன்றைய தமிழ் நடையில், சந்தி லிகாரங்கள் பெரும்பாலும் அவசியமான இடங்களி லேயே இடப்பெறுகின்றன. என்று கூறுகின்ருர் இன்றைய நிலையில் விரிவான அளவிலே புணர்ச்சி முறைகள் நமது மோழிக்கு வேண்டியதில்லை என்னுங் கருத்தினை அவர் வலியுறுத்துகிறர். ஆணுல் பல

Page 78
26 புணர்ச்சி விதிகளின் அடிப்படைகள்
நூற்ருண்டுகளுக்கு முன்னர் விரிவான முறையிலே புணர்ச்சி விதிகள் பற்றித் தமிழ் இலக்கணநூலார் கூறவேண்டிய தேவையிலிருந்தது. அத்தகைய தேவைகள் என்ன என்பதை ஆராய்தல் வேண்டும்.
சொற்களுக்கிடையே இடைவெளியிட்டு எழுதும் வழக்கம் அச்சுயந்திர வரவாலும் ஆங்கில மொழிச் செல்வாக்காலுமே ஏற்பட்டது. அதற்கு முன்னர், எழுது கருவிகள் காரண மாக, எவ்வளவு தூரம் எல்லாச் சொற்களையும் தொடுத்து எழுத முடியுமோ, அவ்வளவுக்கு எழுது இடமும் எழுது முயற்சியும் சிக்கணப்படுத்தப்பட்டன. எழுதுகருவி எழுத் தாணி, எழுதுகின்ற இடம் ஒலே, எழுது கருவி உளி; எழுதுகின்ற இடம் கல். இந்நிலயில் எவ்வளவு சிக்கனமாக எழுதமுடியுமோ, அது பெரிதும் வரவேற்கக் கூடிய தொன்ருயிருந்தது. இத்தகைய சிக்கன முயற்சிக்குப் புணர்ச்சி விதிகள் பெருமளவு உதவின எனலாம். அருகருகே வரும் இரண்டு சொற்களின் எல்லைகளில் நடைபெறும் புணர்ச்சி காரணமாக அவற்றைத் தொடுத்து எழுதிச் செல்வது இலகு ரயிருந்தது.
மேற்கூறிய காரணத்தைவிட மின் முக்கியமான காரண
மாக அமைந்தது செய்யுள் வடிவமேயாகும். பெரும்பாலான தமிழ்ப் புணர்ச்சிகள் செய்யுள் இலக்கணம் நோக்கியே அமைக்கப்பட்டனவெனலாம். இக்கருத்தினைச் சொல்லிலக் கனத்தில் யாப்பின் செல்வாக்குப் பற்றி எழுதிய பண்டிதர் த வீரத்தியின் கருத்துக்கள் அரண் செய்கின்றன. அவ ருடைய நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள பின்வரும் மேற் தேTள் நீண்ட தாயமையினும் பயனுடையதாகுமென
வெவ்வேறு ஒசையின் ஒழுங்கான வரையறைகளே
யாப்பிலக்கணமாகி, இலக்கணத்துறைகளில் ஒன்ரு ய், விரிவும் தெளிவும் பெற்றுள்ளது. நேர்சீராயில்லாத சீரமைப்பும், தளைப்பிணிப்பும் பாவின் நீரோசையைச் சிதைத்து அதிலே உரைநடைக்குள் தள்ளிவைக்கும்.
, ر\
ذ

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 1 27
எழுத்திற்கு மாத்திரை கோடலும், அசைத்த லும் சீர்செய்தலும், தளேயறுத்தலும் ஒசைபற்றி அல்லது எழுத்துப் பற்றியன்று "
இவ்வாறு கூறும் சிவஞாண் முனிவரின் விளக்கம் ஒசைக் குள்ள செல்வாக்கைத் தெளிவாக தெரிய வைக் கின்றது. ஒசை மாசுபடாதிருப்பதற்காக எழுத்தும், சொல்லும், சொற்ருெ உரும் வேண்டிய இடங்களில் யாப்புக் கட்டுக்கோப்புக் கருதித் தம் இயல்பான அமைதிநிலையிழந்து, அஃதாவது இலக்கணத்திலிருந்து உறழ்ந்தோ பிறழ்ந்தோ அல்லது திரிந்தோ வழிவிலகி, ஒசை ஒட்டத்திற்குப் பாதை திறந்துவிடுதல் வேண்டும். அன்றி, ஒசை இற்ைறிற்கு விலகிக் கொடுக்காது. விலகின், யாப்புப் பொருத்துக்கள் விலகி, யாப்பு யாப்பற்றதாய் விடும் எனவே ஒசை வரையறை களுக்கு அமைதி கூறும் யாப்பிலக்கணம் பேராற்றல் வாய்ந்ததாதல் வேண்டும். அன்றேல் இலக்கண உறழ்ச்சி களும் விரிவும் ஏற்பட நியாயமில்லை.
ஏறத்தாழத் தமிழ் இலக்கியப் பரவை முழுவதும் செய்யுள் மயமே. அதனுல் செய்யுள் வடிவங்களின் வன்மையும், தன்மையும் எழுத்து, சொல் இலக்கணங் களேத் தம் செல்வாக்கிற்கு உட்படுத்தி இருப்பதில் வியப்பும் புதுமையும் இல்லை. யாப்பின் செல்வாக்கு இன்றேல் எழுத்திலக்கணம் இத்துணை விரிவடைய இடமில்லை. இலக்கண நூலோர்களும் உரையாளர்களும் ஆண்டாண்டுக் கூறிய விளக்கங்கள் இதனே அடித்துக் கூறுகின்றன. சார்பெழுத்துக்களின் விரிவு பல்வகைப்
பட்ட விகாரங்கள் எல்லாம் யாப்பின் தாக்கமே.
பண்டிதர் க. வீரசுத்தியின் மேற்போந்த கருத்துக்கள் சொல்லிலக்கண மாற்றங்களுடன், புன்னர்ச்சி விகாரங்க்ளின் பெருக்கத்துக்கும் யாப்பின் செல்வாக்கே காரணமெனத் தெளிவுறுத்துகின்றன. அவருடைய நூல் முழுவதையும் படித்துப் பார்ப்பின், தமிழ் இலக்கணங்களிலே ஏன் பெருந்தெஈ கையான புணர்ச்சி விதிகள் அமைக்கப்பட்டன

Page 79
1.ਏ8 - புணர்ச்சி விதிகளின் அடிப்படைகள்
என்பதற்குரிய காரணத்தினை ஒரளவு ஊகித்துணரக்கூடிய தாயுள்ளது. செறுத்த செய்யுள் இயற்ற வேண்டுமென்ருல், தொகைகளின் பிரயோகமும் சொற்களை விரித்துக் கூருது புணர்த்திக் கூறும் நிலையும் வேண்டப்படுவன. கபிலன் + பரணன் என இரு பெயர்களையும் தனித்தனியே கூருது
ஒரே தொடராகச் செய்யுளிலே கையாளவேண்டுமெனில்,
கபிலபரணர் எனப் புணர்த்திக் கூறலாம். இரா, நிலா என்னுஞ் சொற்களைப் போன்றனதான் இரு, புரு என்னுஞ் சொற்களும். ஆணுற் சங்கப் புலவர்கள் அவற்றை இறவு, புறவு எனத் தம்முடைய செய்யுட்களிலே கையாண் டுள்ளனர் இதற்காக விசேடமான புணர்ச்சி விதியொன் றினை வகுக்கின்றர் தொல்காப்பியர்.
குறியத னிறுதிச் சினைகெட் வுகர மறிய வருதல் செய்யுளு ஞரித்தே
என்னும் அச்சூத்திரத்துக்கு உரை வகுக்கும் நச்சிஞர்க்கினியர்
இறவுப்புறத் தன்ன பிணர்ப்படு தடவுமுதற் கறவுக்கோட் டன்ன முள்ளிலைத் தாழை
என்னும் நற்றிணே 19-ம் பாடலடிகளையும்,
புறவுப்புறத் தன் E புன்காயுகாய்
என்னும் குறுந்தொகை 274-ம் பாடலடியையும் உதாரணங் களாகக் காட்டுவர்.
தமிழ் இலக்கண நூலார் கூறிய புணர்ச்சி விதிகளுட் சில, உச்சரிப்பினை இலகுவாக்குகின்றன என்னும் ஒரு காரணத் தினையும் இங்கு குறிப்பிடலாம். உதாரணமாக அவ் + ஞாலம் என்னுந் தொடரினை எடுத்துக் கொள்ளலாம். அதனை அப்படியே அவ்ஞாலம் என அமைப்பின் உச்சரிப்பது எவ்வளவு கஷ்டமாயிருக்கும் என்பதை இங்கு விளக்க வேண்டியதில்லை. இக்கஷ்டத்தினே நீக்குமுகமாகத் தமிழ் இலக்கணநூலார் அத்தொடரினை அஞ்ஞாலம் என இலகுவாக உச்சரிக்கக் கூடிய வகையிலே புணர்த்தும்படி சூத்திரஞ் செய்துள்ளனர்.

τη
தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 19
சுட்டு வகரமூ வினமுற முறையே ஆய்தமு மென்மையு மியல்பு மாகும்.? -
என்பது இவ்விதிபற்றிக் கூறும் நன்னூற் சூத்திரமாகும்.
உச்சரிப்பினை இலகுவாக்குகின்ற அதே வேளையில், எழுத்துக்களினுடைய சொத்தமான ஒலிப்பண்பினைப் பேணு வதற்கும் சில புணர்ச்சி விதிகள் அவசியமாயின. உதாரண மாக, முள் + குறை என்னுந் தொடரை அப்படியே முள் குறை என அமைப்பின் அச்சொல்லிலுள்ள அகர மெய் யின் ஒலிப்பண்பிலே மாற்றமேற்பட்டுவிடும். நாமடிப் பிரிவளி ஒலியாகிய ளகரத்தை உச்சரித்துவிட்டு, கடை யண்ண ஒலிப்பில் தடையொலியான சுகரத்தை உச்சரிப்பது
இலகுவானதல்ல. அப்படி உச்சரிக்க் முயன்ருல், ககரம்
ஒலிப்புடைக் கடையண்ண உர சொலியாகவே மாறவேண்டி யேற்படும். இம்மாற்றத்தினைத் தடுப்பதற்கு நாமடிப் பிரிவளி ஒலியாகிய ளகரத்தை நாமடி ஒலிப்பில் தடை யொலியாக மாற்றியமைக்கலாம். அதாவது ளகரத்தை டகரமாக மாற்றுதல். எனவே முள் + குறை என்பது முட்குறை என அமைகின்றது. லகர, ளகரப் புணர்ச்சி
விதிகள் இந்த உண்மையினேயே எமக்குப் புலப்படுத்துகின்றன.
வழமையான முறையிலே இரண்டு சொற்கள் புணர்ந்து தொடராயின் அத்தொடர் வேறு பொருள் குறிப்பதாக
அமைந்துவிடக் கூடும். இப்பொருள் மாற்றத்தினைத்தடுப்
பதற்காகச் சில சந்தர்ப்பங்களிலே சிறப்பான புணர்ச்சி விதிகள் தேவைப்படுகின்றன. உதாரணமாக, மா + காய் என்னுந் தொடர் இயல்பான முறையிலே மாகாய் என்ருே, பொதுவான புணர்ச்சி விதியை அனுசரித்து மாக்காய் என்றே புணரின், அது பெரிய காய்' என்ற பொருளிலே அமைந்து
விடும். 'மாவின் காய்' என்னும் பொருள் தருவதாஅ அத்
தொடர் அமைய வேண்டியதால், வல்லெழுத்துக்குப் பதி லாக மெல்லெழுத்து வந்து மாங்காய் என அமையலாயிற்று.
தமிழ் இலக்கண நூலார் இச் சிறப்பு விதியினைத் தம் இலக்கண
நூல்களிலே கூறியுள்ளனர்.
த-17

Page 80
30 புணர்ச்சி விதிகளின் அடிப்படைகள்
சில புண்ர்ச்சி விதிகள் மூலம் தமிழ்ச் சொற்கள் சில வற்றின் பழைய வடிவம் என்னலென்பதை இலக்கண நூலார் காட்ட முற்பட்டிருக்கின்றனர் எனலாம். உதாரணமாக, தமிழ் + பிள்ளை என்னுந் தொடர் தொல்காப்பியரின் எழுத் ததிகார 385 ஆம் சூத்திரமாகிய தமிழென் கிளவியு மதனுே ரற்றே என்பதனுல், தமிழப்பிள்ளை எனவே புணரும். தமிழ்ப் பிள்ளை எனப் புணரவேண்டிய தொடரினை ஒரு சிறப்பு விதியாலே தமிழப்பிள்ளை எனப் புணர வைத்ததின் நோக்கம் என்ன ? தமிழ் என்னுஞ் சொல்லின் பழைய வடிவம் தமிழ என்பதாகும். பிற நாட்டவர்களுடைய வராற்றுக் குறிப்புக் களிலெல்லாம் அகர ஈறுடையதாக தமிழ என்ற சொல்லே குறிப்பிடப்பட்டுள்ளது என்பது இங்கு மனங்கொள்ளத் தக்கதாகும். இதே போன்று ஒலிநயத்துக்காக வல்லொற் றுக்களைக் கொண்ட பல பழைய சொற்கள் மெல்லொற் றுடன் வழங்கி வருகின்றன. அவற்றினுடைய பழைய வடிவங்களைப் புணர்ச்சி நிலைகளிலேயே காணக்கூடியனவா யுள்ளன. உதாரணமாக நன்னூலாருடைய,
மென்ருெடர் மொழியுட் சிலவேற் றுமையிற் ஹம்மின வன்ருெட் ராகா மன்னே.3
என்னுஞ் சூத்திரத்தினையும் அதற்குரிய உர்ையினையுங் காட்
டலாம். மென் ருெ டர்க் குற்றியலுசுரங்களான மருந்து கரும்பு, சிலம்பு, குரங்கு போன்ற சொற்கள் தம்மின வன் ருெடர்திகளாக ஆவதே வழக்கமாகும் . அதனல், மருந்து + பை, கரும்பு + வில், சிலம் பு+அதிகாரம், குரங்கு+மனம் என்னுந் தொடர்கள் முறையே மருத்துப்யை, கருப்புவில் சிலப்பதிகாரம், குரக்குமனம் என அமைந்து விடுகின்றன. மருத்து, கருப்பு, சிலப்பு குரக்கு என்பனவே தமிழ்மூலச் சொற்களாகும். அவை திராவிட மொழிகள் எல்லாவற்றி லுமே காணப்படும் மென்மை புகுத்தும் பண்பு காரணமாக முறையே மருந்து, கரும்பு, சிலம்பு, குரங்கு என்றமைந்தன. புணர்ச்சி நிலேயிலேயே இவற்றின் பண்டைய வடிவங்கள் தென்படுகின்றன. -
 

I και
தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 131
2 தொல் காப்பியர் கூறிய புணர்ச்சி
தொல்காப்பியர் எழுத்ததிகாரத்தில் ஆறு இயல்களிலே புணர்ச்சிபற்றிக் கூறுகிருர், புணர்ச்சி பற்றிய பொதுவான கருத்துக்களையெல்லாம் ‘புணரியல்’ என்னும் இயலிலே வகைப்படுத்துகிருர், முதலில் புணர்ச்சி நடை பெறக்கூடிய
இடமும் அதனுடன் தொடர்புடைய எழுத்துக்களும்
கூறப்படுகின்றன. தான் மொழிக்கு ஈருக வருமென்று முன்னர்க் கூறிய எழுத்துக்கள் ஈற்று நிலையிலும், மொழிக்கு முதலாக வருமென்று கூறிய எழுத்துக்கள் முதனிலையிலும் அமையவே புணர்ச்சி நடைபெறுமென்பர். ஈற்றிலே இடம் பெறும் மெய்யெழுத்துக்களும் குற்றியலுகரமும் புள்ளி யுடன் அமையுமெனக் கூறும் தொல்காப்பியர் உயிர் மெய்களாக எவையேனும் ஈற்றிலே இடம்பெறின், அவற்றை உயிர் ஈறுகளாகவே புணர்ச்சிக்குக் கருதவேண்டுமென்பர்.
புணர்ச்சிக்குரிய இரு மொழிகளின் இயல்பு அடுத்துக் கூறப்படுகின்றது. இரண்டு சொற்களின் எல்லைகளிலே
புணச்சி நடைபெறும். அவ்வாருன சொற்களில் புணர்ச்
சிக்குரிய ஈற்றினை நிறுத்தசொல் (நன்னூலார் நிலைமொழி
என்பர்) என்றும், முதனிலேயுடையதைக் குறித்தசொல்
(நன்னூலார் வருமொழி என்பர்) என்றும் கூறப்படும். அவ்விரு சொற்களின் ஈறும் முதனிலையும் வருமாற்றினேப்
பின்வருமாறு தொல்காப்பியர் வகைப்படுத்துகிருர் .
நிறுத்த சொல் குறித்தசொல்
gp u97 rif . gɔ u Sri
உயிர் மெய் மெய் உயிர்
மெய் மெய்,
இவ்வாறு நிறுத்த சொல்லின் ஈற்றெழுத்தோடு குறித்துவரு
சொல்லின் முதலெழுத்துப் புணருமிடத்து, அவ்விருவகைப்
பட்ட சொற்களும் எத்தகைய இலக்கண வகைமையைச்
சார்ந்தனவென்பதைத் தொல்காப்பியர் பின்வருமாறு வகைப்படுத்துவர்: ݂ ݂

Page 81
I 32 புணர்ச்சி விதிகளின் அடிப்படைகள்
பெயர் + பெயர் பெயர் + தொழில் தொழில் + பெயர் தொழில் + தொழில்
புணர்ச்சி காரணமாக ஏற்படும் மாற்றங்கள் மூன்று வகை எனக் குறிப்பிடுகிருர் தொல்காப்பியர். அவை மெய் வேறுபடுதல், மிகுதல், குன்றல் என்பனவாகும். வேறுபடுகின்ற பண்பு மெய்யெழுத்துக்கே உரியதாகும். மிகுதலும் குன்றுதலும் உயிருக்கும் மெய்க்கும் பொது வானவையாகும். இவ்வாறு நடைபெறும் புணர்ச்சியினைத் தொல்காப்பியர் வேற்றுமை குறித்த புணர்ச்சி என்றும், வேற்றுமையல்வழிப் புணர்ச்சி என்றும் இருவகையாகப் பாகுபாடு செய்வர். உருபுகள், சாரியைகள் புணர்ச்சியிலே எவ்வாறு இடம்பெறுகின்றன என்றெல்லாம் கூறி, புணர்ச்சி காரணமாகப் பொருள் வேறுபடுதலையுங் கூறி அவ்வியலை முடிக்கின்ருர், ஏனைய இயல்கள் இப்பொதுப் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு புணர்ச்சியில் ஏற்படக்கூடிய
சிறப்பு நிலைகளைக் கூறுகின்றன.
தொல்காப்பியருடைய காலத்தில் குற்றியலுகரம்
ஒர் ஒலியணுக அமைந்தது மட்டுமன்றி, அது செய்யுள் எழுத்தாகவும் (Metrical letter) கருதப்பட்டது. அதனலே, தொல்காப்பியர் குற்றியலுகரம் புணரும் எ கைகளேக் கூற ஒர் இயலையே தனியாக அமைக்க வேண்டியேற்பட்டது. ஆணுல், பிற்காலத்திற் குற்றியலுகரம் ஒலியணுகக் கணிக்கப் படாதது மாத்திரமன்றி, செய்யுள் எழுத்தாகவும் கொள்ளப் படவில்லை. இதனுல், தொல்காப்பியர் கூறிய விரிவான குற்றியலுகரப் புணர்ச்சி சுருக்கமாகக் கூறப்பட்டது.
தொல்காப்பியர் கூறியுள்ள புணர்ச்சி விதிகளை
ஊன்றிக் கவனிக்குமிடத்து ஒரு விடயம் தெற்றெனப்
புலனுகின்றது. அதாவது, அவர் கூறிய புணர்ச்சிகளெல்லாம் சொற்களின் எல்லைகளிலேயே நடைபெறுகின்றன என்ப
தாகும். குறிப்பாக நிறுத்தசொல் முழுச் சொல்லாகவே
அமைந்திருக்கும். அப்படியானல் ஒரு சொல்லினுள்ளே

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 133
நடைபெறும் புணர்ச்சி பற்றி அவர் கூறவில்லையா? இது ஆராயப்படவேண்டிய விடயமாகும்.
எஞ்சிய மூன்று மேல்வந்து முடிக்கு மெஞ்சுபொருட் கிளவி யிலவொ மொழிப*
என்னும் சூத்திரத்திலே தொல்காப்பியர் வந்து என்னுஞ் சொல்லினைக் கையாண்டுள்ளார். இச்சொல் எவ்வாறு, ஆயிற்று? அதனுள்ளே நடந்த புணர்ச்சிகள் என்ன? தொல்காப்பியச் சூத்திரங்களிலே இற்ைறுக்குத் தெளிவான விடையில்லை. வந்து என்னும் சொல் இக்கால வழக்கிலே இறந்த காலத் தெரிநிலை வினையெச்சமாகவும் வா + த்+த் + உ என்பன புணர்ந்து இந்த வடிவமாகவும் கொள்ளப்படும்.
தொல்காப்பியர் காலத்திலும் இப்படித்தான் இந்த வடிவம்
அமைந்ததோ என்னவோ தெரியவில்லே. வினைச்சொல் காலங்காட்டுமெனக் கூறும் தொல்காப்பியர் கோலங்காட்டும்
இடைநிலைகள் எவையெனக் கூறவில்லை. வினை செயன்
மருங்கிற் காலமொடு வருநஷ்ம் என இடையியலிலே தொல் காப்பியர் கூறியிருக்கிருரேயொழிய காலமொடு வருந எவை என எங்கும் கூறவில்லை. இதனல், வந்து என அமையும் சொற்களுக்கிடையே நடைபெறும் புணர்ச்சி பற்றிக் கூறமுடியாது போயிற்று.
୫୯୭ சொல்லின் உட்பகுப்புக்களைச் சிற்றின அடிப்படை
யிற் பகுத்து ஆய்வு செய்யும் முறை மேலேத்தேய இலக்கண
நூலாரிடம் தோன்றுதற்கு முன்னரேயே இந்திய இலக்கண நூலாரிடம் காணப்பட்டதென மேலேத்தேய அறிஞர்களே ஏற்றுக்கொள்கின்றனர். 3 மேலைத்தேயத்தில் விஞ்ஞான வளர்ச்சி துரிதமடைந்த காலத்திலேயே உயிரியல் விஞ் ஞானத்தில் உடற் கூறுகளேப் பகுப்பாய்வு செய்யும் பகுதியினை Mrophology என்று அழைத்தனர். உடற் கூறுகளேத் தனித் தனியாகவும் கூட்டாகவும் நோக்குதற்கு இப்பகுப்பாய்வு முயற்சி பெரிதும் உதவியது. இத்தகைய முயற்சி சொற் கூறுகளைப் பகுப்பாய்வு செய்வதற்கும் இட்டுச் சென்றது. விஞ்ஞானத்திலே உபயோகிக்கப்பட்ட Morphology என்னுஞ் சொல்லே இம்முயற்சியைக் குறிக்கவும் கையாளப்

Page 82
I 34 புணர்ச்சி விதிகளின் அடிப்படைகள்
பட்டது, பாணினியினுடைய இலக்கண நூல் பல்லாயிரக் கணக்கான இலக்கண விதிகளே உள்ளடக்கியது. சொல் லாக்கத்துக்குக் குறிப்பிட்ட விதிகளை ஒர் ஒழுங்கு முறையிலே பிரயோகிக்குமிடத்து, குறிப்பிட்ட சொல் பிறப்பிக்கப்படு கின்றது. சொல்லின் உட்பகுப்புக்களைக் கூறுவது மாத்திர மன்றி, அவற்றை வரிசைக்கிரமமாக, ஒழுங்கான விதிப் பிரயோகம் மூலம் சேர்த்துச் சொல்லாக்கும் வழியும் கூறப் பட்டுள்ளது. இது இக்கால மாற்றமைப்புப் பிறப்பாக்க gav SF 60 åg. Tufflsår (Transformational Generative Grammarians) விளக்க நெறியாகவும் அமைந்துள்ளது. 6
எமது பண்டைய இலக்கண நூலாகிய தொல்காப்பியத் திலோ சொல்லின் உட்பகுப்புக்கள் கூறப்பட்டுள்ளன. ஆளுல்
அவற்றின் சேர்க்கை எவ்வாறு சொல்லினை ஆக்குகின்றது
என்பதற்கு விதிகள் அந்நூலிலே கூறப்படவில்லே. சொல்லின் உட்பகுப்புக்களைப் பெயரிட்டுக் கூறிவிட்டு அவற்றுட் சில வற்றின் கூறுகளைக் கூருது விடுத்தமையை இங்கு சுட்டிக்
காட்டலாம். உதாரணமாக,
இறப்பி னிகழ்வி னெதிர்வி னென்றச் சிறப்புடை மரபி னம்முக் காலமுந் தன்மை முன்னிலை படர்க்கை யென்னு மம்மூ விடத்தான் வினேயினுங் குறிப்பினு மெய்மை யானு மிவ்விரண் டாகு மவ்வா றென்ப முற்றியல் மொழியே7
என்று எச்சவியலிலே வினைமுற்றுக்கு இலக்கணம் கூறுமிடத்து அதன் உட்பகுப்புக்களாகிய காலங்காட்டும் அலகும், மூவிடங் காட்டும் அலகும் (அதுவே தினே, பால் ஆகியவற்றையுங் காட்டும்) காட்டப்பட்டுள்ளன, அவற்றுள் திணை, பால், இடம் ஆகியன காட்டும் அலகின் கூறுகளின் விபரங்கள் கிளவியாக்கத்திலும் வினையியலிலும் கூறியுள்ளார். ஆனல், காலங்காட்டும் அலகினுடைய கூறுகள் பற்றிய விபரங்கள் எங்கும் கூறப்படவில்லே. ஆனல், தொல்காப்பியரே. உரைத்தனர் (பொருள் செய்யுளியல், சூ 313) , சொல்
 

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் - 1 : 5
லிசார் (பொருள்: மரபியல், கு 641) . உணர்ந்தோர் பொருள்: அகத்தினயியல், கு 4) என்னும் வினைமுற்றுச் சொற்களை உபயோகிக்கின்ருர், அவற்றுள் வினேயடிகள் தவிர, பல்லோர் மருங்கிற் படர்க்கைச் சொல்8 என்றும்,
ரஃகா ணுெற்றும் பகர விறுதியு மாரைக் கிளவி யுளப்பட மூன்று நேரத் தோன்றும் பலரறி சொல்லே?
என்றும் இறுதி அலகாகிய 'அர்/ஒர் பற்றித் தொல்காப்
பியர் கூறியுள்ளார். இடையிலே இருப்பனபற்றி எவ்விதி களும் வகுத்தாரில்லை. அன்று வாழ்ந்தாருக்கு அவையெல் லாந் தெரிந்திருக்குமெனச் சமாதானங் கூறின், ரஃகா னுெற்றுப் பலரறி சொல்லே’ என்பதும் தெரிந்திருக்க
வேண்டுமே.
*வினேயின் காலக்குறிகளைக் குறித்து ஒன்றேனும் தொல்காப்பியர் கூறவில்லையெனினும் வினேச்சொல் முக்காலமும் காட்டுமென்று அவரே கூறியிருப்ப தால் . . 10
என்னும் சிவராஜபிள்ளையின் கூற்று அமைவதை இச் சந்தர்ப்பத்திற் சுட்டுதல் பொருத்தமாகும்.
சொல்லின் உட்பிரிவுகள் கூறிய தொல்காப்பியர் அவற்றின் கூறுகள் புணருமாற்றைக் கூருது விடுத்துள்ளார். உதாரணமாக சொல் என்னும் வினையடியும் அர் என்னும் பல்லோர் படர்க்கையும் சேர்ந்து எவ்வாறு சொல்லினர் என்னும் வினைமுற்ருயிற்று என்பதற்கு விதிகள் புணரியலிலே வகுக்கப்படவில்லை. தனிச் சொல்லுக்குள் நடைபெறும் புணர்ச்சி பற்றித் தொல்காப்பியர் கூருது விட்டதன் காரணம் என்னவென்று தற்போது தெளிவாகவில்லை. முன் னிலே முன்ன ரீயு மேயு 11 என்னுஞ் குத்திரத்துக்கு சேன வரையர்,
"இவ்வெழுத்துப் பேறு புணர்ச்சி விகாரமாதலின் ஈண்டுக் கூறற்பாற்றன்றெனின், அன்றன்று. ‘இயற் பெயர் முன்ன ராரைக் கிளவி அப்பெயரோடு ஒற்றுமைப்பட்டு நின்ருற் போல முன்னிலை முன்ன

Page 83
136 புணர்ச்சி விதிகளின் அடிப்படைகள்
ரீயுமேயும் முன்னிலைச் சொல்லொடு ஒற்றுமைப்பட்டு நிற்றலான், நிலைமொழி வருமொழி செய்து புணர்க் அப்படாமையான், அம் மெய் புணர்ச்சி விகார மெனப்படா வென்சு, 12 என்று உரைவகுக்கின்றர். ‘நிலைமொழி வருமொழி செய்து புணர்க் கப்படாமையான் அம்மெய் புணர்ச்சி விகார மெனப் படா" என்ற பகுதி தொல்காப்பியரின் நிலையையும் ஒரளவு எடுத்துக் காட்டுகின்றது. தொல்காப்பியர் இரு தனிச் சொற்கள் அல்லது பெயர்ச்சொல்லும் வேற்றுமையுருபும் முறையே நிலைமொழியாகவும் வருமொழியாகவும் நின்று
புணரும் வகைக்கே விதிகள் கூறியுள்ளார். இன்னுஞ் சேணு
வரையர் வினைச்சொலிறுதி நிற்குமிடைச்சொற்ருமென வேறு உணரப்படாது அச்சொற்குறுப்பாய் நிற்குமன்றே, இவை யவ்வாறு பெயர்க்குறுப்பாகாது தாமென வேறுணரப் பட்டுறுதி நிற்குமென்பார் நிலை திரியாது" என்ருர், 13 என்று கூறிச் சென்றுள்ளதை இங்கு சுட்டிக் காட்டலாம்.
தொல்காப்பியரைப் பல்வேறு வகையிலே பின்பற்றும் நன்னூலார் பதவியல் என்ருெரு புதிய இயலினைத் தன் இலக்கண நூலிலே அமைத்துப் பகுதிகள் பற்றியும் விகுதி கள் பற்றியும் கூறுமிடத்து அவருக்கு எவ்வித பிரச்சினையும்
இருக்கவில்லை. தொல்காப்பியரும் இத்தகைய இலக்கணக்
கூறுகள் பற்றிக் கூறியிருக்கிருர் ஆணுல், அவர் இடை நிலைகள் பற்றி எதுவும் எங்கும் கூறினரில்லை. இதனுல், இடைநிலைகள் பற்றிப் பதவியலிலே கூறமுற்பட்ட நன் னுாலார்,
இலக்கியங் கண்டதற் கிலக்கண மியம்பலிற். பகுதி விகுதி பகுத்திடை நின்றதை ... " வினைப்பெய ரல் பெயர்க் கிடைநிலை யெனவே14
என்று கூறவேண்டியேற்பட்டது தொல்காப்பியர் இடை நிலைகள் பற்றிக் கூருத காரணத்தால், தான் எப்படி அதனேக் கூறமுடியும் என்ற தயக்கம் நன்னூலாருக்கு ஏற்பட்டதோ என்னவேர் தெரியவில்லை. பகுதி, விகுதி பற்றிக் கூறுமிடத்து "இலக்கியங் கண்டதற்கிலக்கணம்

a
தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 137
- இயம்பும் மரபு பற்றிக் கூருத நன்னூலார் இடைநிலைகள்
பற்றிக் கூறும் சந்தர்ப்பத்தில் மாத்திரம் அவ்வாறு கூறுவது சிந்திக்க வேண்டியேற்பட்டுள்ளது. 13
சொல்லின் உட்பகுப்புக்களைத் தெளிவுறக் கூறுவதற்கும், அவற்றின் பண்புகளை விளக்கமாக எடுத்தியம்பவும் நன் னுாலாருக்குப் பதவியல் என்னும் பகுதி நன்முக உதவி யுள்ளது. நாவலர் பதிப்பித்து வெளியிட்ட காண்டிகை யுரையில் பதவியலின் தொடக்கத்தே பின்வரும் அடிக் குறிப்பொன்று காணப்படுகிறது.
இவ்வியல் வடமொழி இலக்கணத்தையுந் தழுவிச் செல்கின்றமையால், பதம் என்னும் வடமொழியை முற்கூட்டிப் பதவியல் எனப்பெயரிட்டனர் போலும்' நன்னூலார் வடமொழியைப் பின்பற்றி இவ்வியலே அமைத் தாரோ என்னவோ, பதவியல் என்னும் இப்பகுதி தமிழ் மொழியிற் சொல் என்னும் இலக்கணப் பகுதியின் உட் பிரிவுகள், அவற்றின் பண்புகள் ஆகியவற்றைச் செவ்வனே எமக்கு அறிவுறுத்துகின்றன என்பதில் எவ்வித ஐயமுமில்லே. அத்துடன் அத்தகைய உட்பிரிவுகள் ஒன்று சேர்ந்து சொல் ஆகுவதற்கு நன்னூலார் தன்னுடைய இலக்கண நூலிலே விதிகளும் வகுத்துள்ளார். உதாரணமாக சிறியன் என்னுஞ் சொல் எவ்வாறு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை நோக்கு
●assraf)。
சிறுமை நன். பதவியன் 135
சிறுமை + அன் ]56üT 276 ,140 : وو په சிறி+அன் நன். 9 ܀ :
சிறி+ய்+அன் நன், புணரியல்: 162
சிறியன் - நன். , 204
நன்னூலார் கூட பெயர்ச்சொற்களின் ஆக்கத்துக்குச் சொல்லுட் புணர்ச்சி விதிகன் கூறியிருக்கின்ருரேயன்றி, வினைச்சொற்கள் சிலவற்றைப் பிறப்பிப்பதற்கு விதிகள் கூறவில்லையென்றே கொள்ள வேண்டியுள்ளது. பெயர்ச் சொற்களுங் கூட, அவர் சொல் எல்லைகளிலே புணர்ச்சி
த-18

Page 84
I 38 புணர்ச்சி விதிகளின் அடிப்படைகள்
நடைபெறுதற்குக் கூறிய பொது விதிகளாலேயே பிறப் பிக்கப்படுகின்றன. வினைச்சொற்களுக்குரிய காலங்காட்டும் இடைநிலைகளை நன்னூலார் குறிப்பிட்டுள்ளபோதும், அவை வினையடிகளுடன் சேருமிடத்து நடைபெறும் புணர்ச்சி பற்றி விதிகள் வகுக்கவில்லையென்றே கூறலாம். உதாரணமாக, நடந்தான் என்னும் வினை வடிவத்தில், நன்னூலார் கூறிய
தடஜவொற் றின்னே யைம்பான் மூவிடத் திறந்த காலந் தருந்தொழி லிடைநிலை 17
என்னுஞ் சூத்திரத்தின்படி தகரவொற்று காலங்காட்டும் இடைநிலையாக வந்துள்ளது என்று கொள்ளலாம். அப்படி யாயின் அவ்வினை வடிவத்தின் உட்கூற்றுப் பகுப்பு நட + த் + த் + ஆன் என்று அமைய வேண்டும். இதில், தகர வொற்று எவ்வாறு நகரவொற்ருகத் திரிந்தது என்பதற்குப் புணரியலிலே விதி அமைக்கப்படவில்லை. தொல்காப்பியரிலும் இதே நிலையே காணப்படுகின்றது.
3. புணர்ச்சி விகாரங்களின் அடிப்படை
31 தோன்றல்
புணர்ச்சி நடைபெறுமிடத்து மூன்று வகையான மாற்றங்கள் நிகழுமெனத் தமிழ் இலக்கணநூலார் கூறி யுள்ளனர். அம்மாற்றங்களாவன: தோன்றல், திரிதல், கெடுதல் ஆகிய மூன்றுமாகும். இவற்றின் அடிப்படை என்ன என்பதுபற்றி ஆராயவேண்டியது அவசியமாகும். முதலிலே தோன்றல் விகாரத்தினை எடுத்துக்கொள்வோம். புணர்ச்சி காரணமாக, சில இடங்களிலே எழுத்துக்களோ சாரியைகளோ தோன்றுவது பற்றித் தமிழ் இலக்கண நூலார் விதிவகுத்துள்ளனர். உதாரணமாக இரண்டு உயிரெழுத் துக்கள் புணர்ச்சி எல்லைகளிலே வருமிடத்து, அவற்றை ஒன்று சேர்ப்பதற்கு உடம்படுமெய் தோன்றுதல் பற்றித் தொல்காப்பியர் தொடக்கமான தமிழ் இலக்கணநூலார் விதிவகுத்துள்ளனர். “பொதுவாகத் திராவிட மொழிகள் எல்லாவற்றிலும், இரண்டு உயிர்களுக்கிடையேயுண்டாகும் இடைவெளி வ" கர அல்லது 'ய' கர வுடம்படுமெய்

-
魯
தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 39
நுழைவால் தடுக்கப்பெறும்' என்று கால்டுவெல் கூறுவர் 18 தமிழ் மொழியின் ஒட்டுநிலைத் தன்மையினை நிலைநிறுத்து வதற்காக அருகருகே வரும் உயிர்கள் தனித்துவமுடையன வாக, மாற்ற மெதுவுமின்றி, உச்சரிப்பதற்கேதுவாக உடம் படுமெய் தோன்றுகின்றதெனலாம்.
இரண்டு சொற்கள் சேருமிடத்து அவையிரண்டும் ஒரு சொன்னடையவாய் அமையவும் தோன்றல் விகாரம் நடை பெறுகின்றது. உதாரணமாக, அது குருவி கூடு என்று அறிந்தேன் என்னும் வாக்கியத்திலே இடம்பெறும் தொட ராகிய குருவி கூடு என்பது, அகர மெய் தோன்றி, குருவிக் கூடு என ஒரு சொன்னடையவாக அமையாவிடின் மேற்படி வாக்கியம் "அது குருவி என்றும் கூடு என்றும் அறிந்தேன்' என்னும் பொருளையே தரும். இதனுல் சொற்கள் இரண் டினைப் பிணித்து ஒரு சொற்ருெடராக ஆக்குதற்குப் புணர்ச்சியிலே தோன்றல் விகாரம் உதவுவதை உணரக் கூடியதாயுள்ளது.
மெய்யும் உயிரும் புணர்ச்சி எல்லைகளிலே வரின், உடன் மே லுயிர்வந் தொன்றுவ தியல் பே9 என்னுஞ் சூத்திரத் தின்படி மெய்யும் உயிரும் ஒன்றுபட்டு இணங்கி நிற்கும். ஆணுல், கண் + அழகு என்னுந் தொடரிலே இதே விதி பிரயோகிக்கப்படில் கணழகு என்றே புணர்ந்து முடியும். அச்சொற்ருெடரை உச்சரிப்பதிலேயுள்ள கஷ்டத்தினை எவரும் உணர்வர். அதனை நீக்கு தற்காக நிலைமொழியின் ஈற்றிலுள்ள எழுத்தின் இன்னென்றினை தோற்றுவித்தல் பொருத்தமாகும். அதன்படி கண் + அழகு என்பது கண்ண் + அழகு என அமைந்து, கண்ணழகு எனப் புணர்ந்து முடியும். இது போன்று, உச்சரிப்பினை இலகுவாக்குவதற் காக, மொழியின் பல இடங்களிலே தோன்றல் விகாரம் நடைபெறுகின்றது. தமிழ் இலக்கண நூலார் இத்தகைய இடங்களே அவதானித்து அவற்றுக்கேற்றபடி விதிகளே வகுத்துள்ளனர்.
பொருள் நிலைபேறுக்காவும் தோன்றல் விகாரம் நடை பெறுவதுண்டு. அதாவது வழமையான முறையிலே இரண்டு சொற்கள் புணரின், அவற்றின் பொருள் மாற்றமடைய

Page 85
40 புணர்ச்சி விதிகளின் அடிப்படைகள்
லாம். அம்மாற்றத்தினைத் தடுப்பதற்காக அச்சொற்கள் புணருமிடத்துச் சாரியை ஒன்று தோன்றுவதுண்டு. உதா ரணமாக புளி+ பழம் என்னுந் தொடர் வழமையான முறையிலே புணரின், புளிப்பழம் என அமையும். இத் தொடர் "புளியான ஏதோவொரு பழம்' என்னும் பொரு
ளேயுங் கொடுக்குமாகையால் அச்சொற்களுக்கிடையே
'அம் முச் சாரியை தோன்றி, புளியம்பழம் என அத்தொடர் அமைவது பற்றித் தமிழிலக்கணநூலார் கூறியுள்ளனர். புளிமரக் கிளவிக் கம்மே சாரியை28 எனத் தொல்காப்பியர்
மயங்கியலிலே இவ்விதியினை வகுத்துள்ளனர்.
ஒலிநயங்கருதிப் புணர்ச்சியிலே எழுத்தோ சாரியையோ தோன்றுவதுண்டு. புளி + கறி என்னுந்தொடர் பொதுவான புணர்ச்சி விதிகளின்படி கரவொற்று மிகுந்து புளிக்கறி
என அமையும். ஆணுல், ஒலிநயத்துக்காக இடையிவே
இன மெல்லெழுத்துத் தோன்றி, புளிங்கறி எனவும் அமைவ
(Լք -- துண்டு. தொல்காப்பியருடைய.
ஏனைய புனிப்பெயர் மெல்லெழுத்து மிகுமோ?!
வல்லெழுத்து மிகினு DTF 5G IF 66) 2an) யொல்வழி யறிதல் வழக்கத் தான22
என்னுஞ் சூத்திரங்கள் அவ்வியல்பினை எடுத்துக் கூறுவன
வாயுள்ளன.
3 2. திரிதல்
தமிழ் இலக்கண நூலார் கூறியுள்ள புணர்ச்சி விதிகளுள், திரிதல் விகாரம் பற்றியனவற்றை நோக்குமிடத்து அவற் றுட் பெரும்பாலன ஓரினமாகும் (assimilation) பண்பினையே தெளிவுறுத்துகின்றன் முயற்சிச் சிக்கினமே மொழியில் ஓரினமாகும் இயல்பினைத் தோற்றுவித்ததென ஒட்டோ ஜெஸ்பர்ஸன் விளக்குவர் 23 உச்சரிப்பதற்கு கஷ்டமான முறையிலே தொடர்கள் அமையுமிடத்து அக்கஷ்டத்தினே நீக்குதற்கும் திரிதல் விகாரம் உதவுகின்றது. உதாரணமாக, பழம்+லே என்னும் இரு சொற்களும், ஒன்று அடையா கவும், மற்றையது பெயராகவும் அமைந்து ஒரு சொன்

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 1 4 1
னடையவாக அமையும்போது நாம் பழஞ்சிலே என்றுதான் உச்சரிக்கிருேம் இங்கு பழம் என்னுஞ் சொல்லின் ஈற்றி லுள்ள மகரம், வருமொழியாகிய சீலையில் உள்ள சகர முதனிலைக்கேற்ற இனமெல்லெழுத்தாகத் திரிகின்றது. அதன் மூலமாக உச்சரிப்பு இலகுவாக்கப்படுவதுடன், முயற்சிச் சிக்கனமும் பேணப்படுகின்றது.
கல்+குவியல் என்னுந் தொடரிலே நிலைமொழி ஈற்றில் லகரமும் வருமொழி முதலில் ககரமும் வந்துள்ளன. தமிழிலக்கண நூலாரின் பாகுபாட்டின்படி ஒன்று இடை யினத்தினையும் மற்றையது வல்லினத்தினேயும் சார்ந்தன. ஒலியியலின்படி லகரம் முன்னண்ணப் பிரிவளி ஒலியாகும். ககரம் பின்னண்ண ஒலிப்பில் தடையொலியாகும். இவை யிரண்டையும் அடுத்தடுத்து இடையீடின்றி உச்சரிக்க முடியாது. செய்யுளிலே இடையீடு ர்ேகளுக்கிடையே ஏற்படுவதில்லை. அத்தகைய சந்தர்ப்பங்களில் இவ்வாருன இரு ஒலிகளே அருகருகே அமர்த்த முடியாது. இதனுல், இவ்விடத்திலே உச்சரிப்பு இலகுவாக்கப்படுதற்கு ஏதாவது மாற்றம் நிகழ்ந்தாக வேண்டும். இன்றையப் பேச்சு வழகிலும் எழுத்து வழக்கிலும் தோன்றல் விகார மூலமும் நிலைமையைச் சீர்செய்து விடுகிருேம். அதாவது கல் + குவியல் என்பதைச் கல்லு க்குவியல் என்று அமைத்து விடுகிருேம். ஆனல், செய்யுள் வழக்கினை மிக முக்கியமாகப் போற்றிய எம் முடைய தமிழ் இலக்கணநூலார் திரிதல் விசாரமே உகந்தது என்று கண்டனர். அதன் படிக்கு, இடையின லகரத்தை அல்வெமுத்துப் பிறக்கும் இடத்திலேயே பிறக்கக்கூடிய வல்லின ஒற்ருகிய றகரத்துக்கு மாற்றிவிடுகின்றனர்.
இதனுல், கல் + குவியல் என்பது கற்குவியல் என அமை
கின்றது. ஒலியியலன் படி, முன்னண்ணப் பிரிவளி ஒலி ud fr6)u i லகரம், தடையொலியாகிய கடையண்ணக் சுசுரத்தை நோக்கி, இடையண்ணத் தடையொலியாகத் (ற், ஆகத்) திரிகின்றது எனக் கூறலாம்,
33. கெடுதல்
இரண்டு ஒரே தன்மையான எழுத்துக்கள் அருகருகே இடம்பெறுமிடத்து, அவற்றுள் ஒன்று கெட்டுப்போதற்கு

Page 86
42 புணர்ச்சி விதிகளின் அடிப்படைகள்
நியாயமுண்டு இரண்டு உயிர் எழுத்துக்கள் அருகருகே இடம்பெறுமிடத்து, அந்நிலையினைத் தவிர்ப்பதற்கு மூன்று வழிகள் பொருத்தமான இடங்களிலே பின்பற்றக் கூடியன வாகத் தமிழ் இலக்கண நூலாராலே கூறப்பட்டுள்ளன:
(அ) உடம்படுமெய் புகுத்துதல் (ஆ) ஈற்றுயிர் அல்லது முதனிலையுயிர் கெடுதல் (இ) ஒரே இனமான உயிர்களெனில் இரண்டுஞ் சேர்ந்து
நீளுதல், ஈற்றுயிர் அல்லது முதனிலேயுயிர் கெடுதல் பற்றியே இங்கு நாம் நோக்கவேண்டும். அகரத்தின் முன்னர் வரும் அகரம்,
இகரத்தின் முன் வரும் இகரம், ஐகாரத்தின் முன் வரும் இகரம் ஆகியன கெடும் எனத் தொல்காப்பியர் பின்
வருஞ் சூத்திரங்களினலே கூறுவர்:
அத்தி னகர மகரமுனே யில்லே. 24 இக்கி னிகர மிகரமுனே யற்றே, 25 ஐயின் முன்னரு மவ்விய னிலையும். 26
இவற்றுக்கு உதாரணங்களாகப் பின்வருவனவற்றை நச்சி ஞர்க்கினியர் காட்டுவர்.
மக + (அ)த்து = மகத்து ஆடி + (இ) க்கு = ஆடிக்கு சித்திரை+(இ) க்கு = சித்திரைக்கு முதனிலை உயிர் கெடுவதுபோல இறுதிநிலை உயிரும் கெடுவதுண்டு இதற்குக் குற்றியலுகரப் புணர்ச்சி நல்ல எடுத்துக்காட்டாகும். உயிர்வரி னுக்குறண் மெய்விட் டோடும்?7என்னும் நன்னூற் சூத்திர அடி இதனை உணர்த்தும்.
ஒருசொன்னீர்மையைப் பேணுதற்கும் பொருள் மாற் றம் அடையாமற் காப்பதற்கும் சில விடங்களிலே புணர்ச் சியிற் கெடுதல் விகாரம் ஏற்படுவதுண்டு உதாரணமாக, * மரத்தினுடைய வேர்" என்னும் பொருள் புலப்படக்

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 1 4 3
கூடியதாக மரம்+வேர் என்னும் இரு சொற்கள் இறுதி மகரம் கெட்டு மரவேர் எனப் புணர்கின்றது. அவ்வாறு மகரங் கெடாமல் மரம்வேர் எனப் புணரின் அது ஒரு சொன்னீர்மையாக அமைந்துவிடாது.
ஒலிநயத்துக்காகவும் கெடுதல் விகாரம் ஏற்படுவதுண்டு. உதாரணமாக தேன் + மொழி, தேன்மொழி என்றும் னகர வீறு கெட்டு தேமொழி என்றும் புணருமென நன்னூலார் கூறுவர். இங்கு னகரவீறு கெட்டது செய்யுளிலே ஒலிநயங் சுருதியென்றே கூறவேண்டும்.
மூன்று வகைப்பட்ட விகாரங்கள் பற்றித் தனித்தனியே கூறினும், புணர்ச்சியிலே இவற்றுள் ஒன்ருே அதற்கு மேற் பட்ட விகாரங்களோ ஒரு சந்தர்ப்பத்திலே இடம்பெறலாம். நன்னூலார் இதனை ஒரு புணர்க் இரண்டு மூன்று முறப் பெறும் 38 என்னுஞ் சூத்திரத்தாற் குறிப்பிட்டுள்ளார். அச்சூத்திரவுரையில், யானைக்கோடு, நிலைப்பனே, பனங்காய் ஆகிய முன்றும் உதாரணங்களாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
யானை + கோடு = யானைக்கோடு
என்பதிலே ககரவொற்றுத் தோன்றியுள்ளது.
நிலம் + பனை = நிலப்பனே
என்பதிலே மகரவீறு கெட்டு, பகர மெய்தோன்றியுள்ளது. இவ்வுதாரணத்திற் கெடுதல், தோன்றல் ஆகிய இரு விகாரங்களும் இடம்பெற்றுள்ளன.
பனை + காய்
பன் - காய்
பன் + அம் + காய்
பன் + அங் - காய்
பனங்காய்
என்பதிலே கெடுதல் தோன்றல், திரிதல் ஆகிய மூன்று விகாரங்களும் இடம் பெற்றுள்ளன.

Page 87
I 44 与泷9 விதிகளின் அடிப்படைகள்
4。 புணர்ச்சி விதிகளும் இன்றைய நிலையும்
தமிழ் இலக்கணநூலார் கூறிய பெரும்பாலான புணர்ச்சி விதிகள் செய்யுள் வழக்கிலிருந்த காலத்துக்கு ஏற்றனவாக
அமைந்தன. செய்யுளிலே சீருந் தளேயும் ஒசையும் குறை யாமல் அமைவதற்குச் சொற்களிடையே பல்வகைப்
-
புணர்ச்சிகளைப் புலவர்கள் மேற்கொண்டனர். இலக்கியங்
சுளேயும் வகுத்தனர். ஆஞல் இன்ருே, செய்யுட்காலம்
போய் வசனநடைக் காலமாக மாறிவிட்டது. செய்யுளையே
வசனத்தில் எழுதவேண்டுமென்ற போக்குக்கேற்ப ‘வசன
. . . . ... به همسر கவிதைகள் எழுதப்படுங் காலம் இது. எனவே இக்
காலத்தில் தமிழ் இலக்கணநூலார் கூறிய பெருந்தொகை யான புணர்ச்சி விதிகள் வழக மறுப போயின. இன்றைய உரை நடையிலே பல புணர்ச்சி விதிகள் பின்பற்றப்படுவ தில்லை. உதாரணமாக, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளேன்யி
Ա9 Ս}
பொன்னம்பலப்பிள்ளே ஒரு தேன் குடம், அதை இரசிகர்களாகிய எறும்புக் கூட்டங்கள் சதா சூழ்ந்து கொண்டேயிருக்கும் 39
- என்று ஒரிடத்திலே 37ܢܶܐ
நூலார் கூறிய புணர்ச்சி விதிகள் யாவற்றையும் அப்படியே பின்பற்றி எழுதுவதெனின் இப்பகுதி,
பொன்னம்பலப்பிள்ளை யொரு தேக்குடம், அதை
பிரசிகர்களாகிய வெறும்புக் கூட்டங்கள் சதாசூழ்ந்து கொண்டே யிருக்கும்.
στοστίβου அமையும். பண்டிதமணிக்கு இப்புணர்ச்சி விதிகள் தெரியாமலில்லே. ൈ ഓ? '1') LIT rigs வாசிக்கக்கூடிய வசதியினை வழங்கும் அச்சுயந்திர காலத்திலே தேன் குடம் என்னுந் தொடரினே அப்படியே ஆறுதலாகத் தேன் குடம் என வாசிக்க முடியும் இங்கு சீரோ, ஒசையோ பிழைக்கப்போவதில்லே. ஆகவே செய்யுளுக்காக அமைக்கப் பட்ட தேக்குடப் புணர்ச்சி இன்று தேவையற்றதாகிவிடு
- கண்டதற்கிலக்கணம் இயம்பியவர்கள் அவற்றுக்கு விதி
எழுதிச் செல்கிறர் தமிழ் இலக்கண
1 ܝܕ ܬ ܐ
ܐ ܬܐ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 145
கின்றது. (தொல்காப்பியர் காலத்திலும் தேன்குடம் என்று எழுதும் வழக்கமும் இருந்தது என்பதை இங்கு நினேவுறுத்து கிருேம்). உடம்படுமெய் புகுத்தலும் அச்சில் வரும் எழுத்துக் களுக்கு வேண்டப்படாததாகி விடுகின்றது. எனினும் மொழியின் அடிப்படைப் பண்புகளைப் பேணும் புணர்ச் சிகள் சில எக்காலமும் எம்மொழியிலும் நின்று நிலவுவ னவாகும். உயிரீற்றின்முன் வல்லினம் இரட்டுதல், ஈற்று மகரம், வரும் வல்லெழுத்தின் இன மெல்லெழுத்தாக மாறுதல் போன்ற புணர்ச்சி விதிகள் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் என்றுமே நின்று நிலவக்கூடிய அடிப் படைப் புணர்ச்சி விதிகளாயுள்ளன.
அடிக்குறிப்புக்கள்
1. வீரகத்தி, க. சொல்லிலக்கணத்தில் யாப்பின் செல்வாக்கு,
ll. 9 - O 2. நன்னூல், சூ. 235 மேற்படி, சூ. 184
3.
தொல்காப்பியம், சொல்லதிகாரம், சூ. 484 Lyons, J., introduction to Theoretical Linguistics, pp. 49-20 Robins, R. H., A Short Histoty of Linguistics, pp. 137 - 48 - 6. மாற்றமைப்புப் பிறப்பாக்க இலக்கணம் பற்றிய விவரங்களுக்குப் பார்க்க: அரங்கன், கி. மாற்றிலக் கண மொழியியல்
தொல்காப்பியம், சொல்லதிகாரம், சூ. 427 மேற்படி, சூ. 205
9. மேற்படி, சூ. 7
10. சிவராஜபிள்ளை, கே. என். 'உந்து- என்னும் இடைச் சொற் பிரயோகம் அல்லது புறநானூற்றின் பழைமை, L. 47.
11. தொல்காப்பியம், சொல்லதிகாரம், சூ. 451.
த-19 -

Page 88
146
12.
33.
丑4。
5.
6.
17.
8.
l 9,
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
புணர்ச்சி விதிகளின் அடிப்படைகள்
மேற்படி, சேணுவரையருரை
மேற்படி
நன்னூல், சூ. 141 மேற்குறித்த கருத்தினையொட்டிச் சிந் தி ப் ப த ந் கு என்னைத் தூண்டியவர் பண்டிதர் க. வீரகத்தி ஆவர், இச்சித்தனேயோட்டத்திற் குறையிருப்பின், அது என் னுடையது. நிறையிருப்பின், அவரையுஞ் சாரும் . நன்னூல், காண்டிகையுரை. ப. 92 மேற்படி, சூ. 142 கால்டுவெல், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், (தமிழாக்கம்: கா. கோவிந்தன்). ப. 198
நன்னூல், சூ. 204
தொல்காப்பியம், எழுத்ததிகாரம், கு. 244 மேற்படி, ஞ. 245
மேற்படி, சூ. 246 Jesperson, Otto., Language, pp. 264-65 தொல்காப்பியம், எழுத்ததிகாரம், சூ. 125 மேற்படி, சூ. 126
மேற்படி, சூ. 127
நன்னூல், சூ. 164
மேற்படி, சூ. 157 கணபதிப்பிள்ளை, பண்டிதமணி சி., இலக்கிய வழி, ப. 91

(36
சொல்லும் சொற்பாகுபாடும்
1. சொல்லும் நவீன மொழியியற் கோட்பாடும்
சொல் என்ருல் என்ன என்பது பற்றித் தமிழ் இலக் கணகாரர் எத்தகைய கருத்துக்களைக் கொண்டிருந்தனர் என்று இதுவரை காலமும் மொழியியல் நூலெழுதியவர்கள் தெளிவாகக் கூறினரில்லே லரதராசன், சீனிவாசன்? போன்றேர் தம்முடைய நூல்களிலே சொல் என்றவுடன் தொல்காப்பியர் முதலியோர் கூறியசொற்பாகுபாட்டையே விளக்க முற்படுகின்றனர். வேலுப்பிள்ளை சொல் என்பது பற்றி இலக்கணகாரர் என்ன கூறினரென ஒரளவு ஆய்வு செய்ய முயன்றுள்ளார்.
சொல்பற்றித் தொல்காப்பியர் கூறியன நவீன மொழி யியலாரின் கோட்பாடுகளுக்கேற்ப அமைந்துள்ளன. நவீன மொழியியலின் தந்தை என அழைக்கப்படும் Ferdinand de Saussaure பின்வாறு கூறுவர்;
The bond between the signifier and the signified is arbitary. Since I mean by sign the whole that results from the assooiation of the signifier with the the signified. I can simply say: the linguistic sign is arbitary.'

Page 89
148 சொல்லும் சொற்பாகுபாடும்
அவருடைய கூற்றின்படி மொழிக்குறியீடாகிய சொல் இடுகுறியெனவே கொள்ள வேண்டும், தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே என்னுஞ் சூத்திரத்தின் மூலமாக இக்கோட்பாட்டினையே வெளிப் படுத்துகிருர் என்று தெய்வச்சிலையாருடைய உரை மூலம் அறியக்கூடியதாயுள்ளது.
‘இன்னும், "எல்லாச் சொல்லும் பொருள் குறித் தனவே” என்பதற்குப் பொருள் எல்லாச் சொல்லும் எல்லாப் பொருளையும் குறித்து றிற்கும் எஉறு, எனவே, இச் சொல் இப் பொருள் உணர்ந்தும் என்னும் உரிமை இல என்ற வாரும், என்னை உரிம்ை இல்லா கியவாறு எனின், உலகத்துப் பொருள் எல்வாவற்றையும் பாடை தோறும் தாம் அறிகுறியிட்டு ஆண்ட துணையல்லது, இவ்வெழுத்தினன் இயன்ற சொல் இப்பொருண்மை
உணர்ந்தும் என எல்லாப் பாடைக்கும் ஒப்ப முடிந்த
தோர் இலக்கணம் இன்மையான் என்க."
சொல் வடிவத்துக்கும் அது குறிக் கம்பொருளுக்குமிடையே எவ்விதத் தொடர்புமில்லை என்பதே நவீன மொழியிய லாரின் வாதமாகும் , தமிழ் இலக்கண நூலார் இதனே இடுகுறியென்பர். -
2. சொல் இடுகுறியா காரணமா?
சொல் இடுகுறியா, காரணமா என்பது பற்றித் தமி ழிலக்கண நூலாரிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன: தொல்காப்பியரின் மொழிப் பொருட் காரணம் விழிப்பத் தோன்ற7 என்னுஞ் சூத்திரத்துக்குச் சேனவரையர் உரை கூறுமிடத்து, -
பொருளோடு சொற்கியைபு இயற்கை யாகலான் அவ்வியற் கையாகிய இயைபாற்சொற்பொருளுணர்த்து மென்ப ஒருசாரார், ஒருசாரார் பிற காரணத்தா லுணர்த்துமென்ப, 18
11 ܛܘ

தமிழ்மொழி இலக்கண இயல்புகள 1 49
என்று கூறுவதிலிருந்து இக்கருத்து வேறுபாடு பற்றி அறிய முடிகின்றது. சொற்கள் இடுகுறி என்று தெய்வச்சிலேயார் தவிர ஏனையோர் கொண்ட மரபுக்கு அடிப்படையான ஒரு காரணம் இருந்தது. சேஞவரையர் பொருளொடு சொற் கியைபு இயற்கை யாகலான்" என்பதும் சிவஞானமுனிவர் *சொல்லும் பொருளும் பேதா பேதமாம்? என்பதும் அவர் தம் சமயச் செல்வாக்குக்குட்பட்ட இலக்கண மரபினையே சுட்டுகின்றன எனலாம் சேணுவரையரின் சொற்கியைபு இயற்கை என்பதற்குக் கணேசையரின் விளக்கம் இதனைத்
தெளிவுறுத்துகின்றது. "இயற்கையாகிய இயைபு என்றது
ஆற்றலை. இச்சொல் இப்பொருளுணர்த்துக என்னும் இறைவனுடைய சங்கேதமே ஆற்றலாதலின்இயற்கையாகிய இயைபு என்ருர் 10 என்பது கணேசையரின் விளக்கமாகும். இறைவன் தமிழ் மொழியைப் படைத்த காரணத்தினுல், சொல்லுக்குப் பொருள் ஏற்பட்டது. அதற்கு மனிதன் காரணம் கூறமுடியாதென்னும் கருத்தின் அடிப்படையே சேனவரையர், சிவஞான முனிவர் போன்றேர் (ଗଣf it ଜର୍ସି) இடுகுறி என்று கொண்ட மரபாகும். இம்மரபினேச் சபாபதி நாவலர் தன்னுடைய திராவிடப் பிரகாசிகையிலே, சாத்திர மரபோடொட்டி விளக்கம் தருவர்:
*சத்தப் பிரவஞ்சம், அர்த்தப் பிரவஞ்சமெனக் தாரியம் இருவகைப் படும். இவை இரண்டு தம்முள் வேறுபாடுடையனவாயினும், சுத்தம் என்னுஞ் சாதி யான் வேறுபாடின்மையானும், சத்தப் பிரவுஞ்சம் அர்த்தப் பிரவஞ்சத்தைப் பற்றியன்றி நில்லாமை யாலும், சுத்த மாயை ஒன்றுதானே சத்த ரூபமும் அர்த்தரூபமுமாகிய இரண்டு தன்மையுமுடைத்தாய் அவ்விரண்டிற்கும் முதற்காரணமாமெனக் கொள்ளப் լ յ (B)լք. * 11
இம்மரபுக்கு மாமுன கருத்துடையவராசு நச்சினர்க்கினியர் அமைகின்ருர், அவர் சொல் எழுத்தினுன் ஆக்கப்பட்டுத் திணையறிவுறுக்கு மோசை யென்றும் ஒருவன் பொருட் டன்மையை யறிதற்குச் சொற் கருவியாய் நிற்கும் என்றும் சொல்லதிகார முதற் சூத்திரவுரையிலே கூறிச் செல்கிருர்,

Page 90
i50 சொல்லும் சொற்பாகுபாடும்
சொல் காரணம் பற்றிய தென்கின்ற மரபு பிற்காலத்திலே நன்கு வேரூன்றியதெனலாம். மாகறல் கார்த்திகேய முதலியார் .
"பலவாண்டுகளாகத் தமிழ்முதலிய மொழியாராய்ச்சி செய்தலையே மேற் கொண்டு முயன்ற திறத்திஞனே சொல்லெல்லாம் காரணச் சொல் என்பது திண்ண மாயிற்று.”12
என்று கூறுவதினுலும், சுவாமி ஞானப்பிரகாசர்,
* எந் தமிழ் மொழியின் சொற்பரப்பை இனிது
ஆராயுமிடத்து. ஒலிக்குறிப்புக்களாயுள்ள சரசர, கறகற, என்றற்ருெடக்கமாக ஒரு கைம்மண்ணளவு சொற்களை ஒழித்து, ஒழிந்த உலகளவானவையெல்லாம் காரணப் பெயரீடாயுள்ளவைகளே என்பது தேற்ற மாகும். மானுடன் தனது ஆச்சரியமான சிற் சக்தியின் வலிமையினல், அவ்வப் பொருட்களிலும், செய்தி களிலும் புறப்படத் தோன்றும் சிறப்பில்புகளைக் கொண்டு அவ்வவற்றிற்கு வெகு சாதுரியமாய் நாம சுரணஞ் செய்திட்டான், 13 -
என்று கூறுவதனுலும் அவர்களிருவரும் காரணச் சொல் மரபினையே பேணுபவர் என அறிகிருேம். இறைவன் படைத்த சொல் இயற்கையாக இடுகுறியாக அமையு மென்ற மரபுக்கெதிராக, மானுடன் தன் சிற்சக்தி வலிமை யினுல் சொற்களுக்குக் காரணங்கள் கற்பிக்கின்றன் என்று சுவாமி ஞானப்பிரகாசர் வாதிடுகிருச். இத்தகைய வாத மரபு மேலைத் தேயத்திலும் நடைபெற்றதொன்று. லயன்ஸ் அதனைப் பின்வருமாறு எடுத்துக் கூறுகிருர்,
The Greek, philosophers debated, whether language was govemed by “nature' or “convention.
This opposition of “nature and “convention was a
common place of Greek philosophical speculation. To say that a particular institution was “natural was to imply that it had its origin in eternal and
1 ܚܪܬܐ

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 51 immutable principles outside man himself (and was therefore inviolable); to say that it was “conventional implied that it was merely the result of custom and tradition (that is, of Some tacit agreement, or “social contract, among the members of the community - a “contract which, since it was made by men, could be broken by men).” 14
3. சொல்லின் இரட்டைப் பரிமாணம்
நவீன மொ ழி யி ய லா ள ர் மொழிக்கென ஒதிய 'இரட்டைப் பரிமாண” (double articulation) நிலையி3னத் தமிழ் இலக்கணநூலார் சொல் மூலமாகவே விளக்க முற் படுவதை அவதானிக்கக் கூடியதாயுள்ளது. ஒருவர் ஒரு சொல்லினைக் கூறும் போது அதனுடைய ஒலிப்பண்பான வடிவம் மாத்திரமன்றி அதனேடு தொடர்புடைய எண்ணக் கோட்பாடும் நம் மனக்கண்ணிலே தோன்றுகின்றன. அவ் வாரு?ன எண்ணக் கோட்பாடு எழுவதற்கு ஒலிப் பண்பு கருவியாக அமைகின்றது. இத்தகைய இரட்டைப் பரிமாண நிலையையே தொல்காப்பியர்,
பொருண்மை தெரிதலுஞ் சொன்மை தெரிதலுஞ் சொல்லி னுகு மென்மனுர் புலவர் 15
என்று கூறினர். இச்சூத்திரத்துக்கு உரை கூறிய பலர் இவ்வுண்மையினை உய்த்துணரவைக்கவில்லேயென்றே கூற லாம். 'சாத்தன் வந்தான், பண்டுகாடுமன், உறுகால் என்பவற்றல் பொருளுணரப்பட்டவாறும், நீயென் கிளவி, செய்தெனெச்சம், தஞ்சக்கிளவி, கடியென்கிளவி என்பவற் முற் பொருளுணரப்படாது அச்சொற்ருமே யுணரப்பட்ட வாறும் கண்டுகோள்க16 என்று சேணுவரையர் கூறு மிடத்துப் பொருளுடைய சொல்", "பொருளில் இலக் கணச் சொல்' என்ற வேறுபாட்டினையே வெளிக்கொணரு கிருர், ஒரு சொல்லே பொருளுடையதாகவும் இலக்கண வடிவுடையதாகவும் அமையுமென்பதையே தொல்காப்பியர் தன் சூத்திரத்திலே கருதியுள்ளார். இக்கருத்தினை அச்

Page 91
... I 52 சொல்லும் சொற்பாகுபாடும்
சூத்திரத்துக்கு உரையெழுதிய தெய்வச்சிலேயார் நன்ருக வெளிப்படுத்தியுள்ளார் எனலாம். 'நிலம் என்பது பொருளின் தன்மை ஆராய்வார்க்கு மண்ணினுன் இயன்ற தோர் பூதம் என்ரு யிற்று. சொல்லின் தன்மை ஆராய் வார்க்குப் பெயர்ச் சொல்லாயிற்று. அதனுல் இரு பகுதிய சொல் நிலைமை என்றவாறு' என்னும் உரைப் பகுதியினை நோக்குவார்க்கு அது தெற்றெனப் புலப்படும். நன்னூலாரும் பொருளையுந் தன்னையும்' என்று இக்கருத்தினைப் பின் பற்றியே கூறியுள்ளார். காண்டிகையுரைகாரர் "பொருளை யுந் தன்னையு மென்றதனுல், உயிர்க்கு அறிவானது கருவியாய் நின்று தன்னையும் பொருளையும் உணர்த்துமாறு போல, ஒருவருக்குச் சொல்லானது கருவியாய் நின்று தன்னையும் இருதிணை ஐம்பாற் பொருளையும் உணர்த்தும் என்பது பெற்ரும்”19 என்று நன்னூலாரின் கருத்தினை விளக்கி உரைப்பர். விருத்தியுரைகாரர்20 இருதினே ஐம்பாற் பொருளை, "உள்பொருள், இல் பொருள், மெய்ப்பொருள், பொய்ப்பொருள், சித்துப்பொருள், சடப்பொருள், நித்தியப் பொருள், அநித்தியப்பொருள், உருவப்பொருள் , அருவப் பொருள், காட்சிப்பொருள், கருத்துப்பொருள், இயற்கைப் பொருள், செயற்கைப்பொருள், முதற்பொருள், சினைப் பொருள், இயங்கியற்பொருள், நிலேயியற்பொருள்' எனப் பலவாறு பாகுபடுத்திக்கூறியிருப்பது பயனுடையதாயுள்ளது சொல்லின் ஒலி வடிவத்தையும் பொருள் வடிவத்தையுமே 'சத்தப் பிரவஞ்சம், அர்த்தப் பிரவஞ்சம்’21 என்று சபாபதி நாவலரும் குறிப்பிட்டுள்ளார். ஆறுமுகநாவலர், *சொல்லாவது, ஒருவர் தங்கருத்தின் நிகழ்பொருளைப் பிறர்க்கு அறிவித்தற்கும் பிறர் கருத்தின் நிகழ்பொருளைத் தாம் அறிதற் குங் கருவியாகிய ஒலியாம்' என்று பொருத்த மாக விரைவிலக்கணஞ் செய்துள்ளார்.
ஒரு சொல்லுக்கு நாம் பொருள் காணுமிடத்து, அது இரண்டு வகைப்படும். ஒன்று இலக்கணப் பொருள், மற்றையது பதப்பொருள், மரம்' என்னுஞ் சொற் கேட்டவுடன் இலை, கிளை முதலியவற்றையுடைய பொருளை எம் மனக் கண்ணில் தோற்றவைப்பதே அதன் பதப்
1 ܬܐܬܐ

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 5
பொருளாகும். வசனத்திலே அச்சொல் இடம் பேறும் நிலேநோக்கி எழுவாய், அஃறிணை, ஒருமை என்னும் விபரங் கிளைத் தருமிடத்திலே அது இலக்கணப் பொருளாகும்.
4. பல பொருள் ஒரு சொல்
ஒரு சொல் பல பொருள் குறித்து நிற்குமிடத்து அது எழுத்தொப்புமையால் ஒரே வடிவமாகக் கொண்ட போதி லும், ஒவ்வொரு பொருள் குறிக்குமிடத்தும் அது வேறு சொல்லாகவே கருதப்படும் என்னும் மரபும் தமிழ் இலக் கண நூலாரிடையே காணப்பட்டது. இம்மரபு தொல் காப்பியச் சூத்திரங்களிலோ நன்னுரல் முதலிய இலக்கண நூற் குத்திரங்களிலோ குறிக்கப்படவில்லே. தொல் காப்பியச் சொல்லதிகாரக் கிளவியாக்கத்தில் "காலமுலக முயிரே (சூ. 57) என்னும் சூத்திரத்துக்குச் சேனவரையர் உரை கூறுமிடத்து ‘உலகம்" என்னும் சொல் இடத்தையும் ஆகுபெயரான் இடத்து நிகழ் பொருளாகிய மக்கட் தொகுதியையுமுணர்த்துமிடத்து அது ஒரு சொல்லாகக் கருதப்படாது இரண்டு சொற்களாகக் கருதப்படுமென்ருர், அச் சொல் 'இரு பொருட் கண்ணுஞ் சென்றதெனப்படாது இரு பொருட்கு முரிமையான் இரண்டு சொல் எனவே படுமென்பது' என்றும், "வேறு பொருளுணர்த்தலின் வேறு சொல்லாதலே துணிவாயினும், LU G) பொருளொரு சொல்லென்புழி எழுத்தொப்புமை பற்றி ஒரு சொல் லென்ருர்' என்றும் சேணுவரையர் உரைவகுத்துள்ளார்.? இக் கருத்தினைச் சபாபதி நாவலர் பின்வருமாறு விளக்கு
(п7 П":
"ஆ" ஆண்டு என்ருற் போல்வன வெவ்வேறு பொரு ளுணர்த்துதலின், ஒரு சொல்லெனப் படா, வெவ்வேறு சொற்களேயாமென்சு, இனி வெவ்வேறு சொற்க ளாயினும் எழுத்தொப்புமையானே பல பொரு ளொரு சொல்லென்று அங்ங்ணம் வழங்கப்பட்டன வென்பது, இன்னும், ஆ வென்பது பெற்றத்தினையும் மர விசேடத்தினையும் உண ர் த் தும் வழிப் பெயர்ச் சொல்லெனவும் இரக்கக் குறிப்பினை உணர்த்தும் வழி த 20

Page 92
I 54 சொல்லும் சொற்பாகுபாடும்
இடைச் சொல்லெனவும், ஆதற் புடை பெயர்ச்சியை உணர்த்தும்வழி உரிச்சொல் எனவுங் கொள்ளப்படு தலின், எழுத்தொப்புமை பற்றியே உபசாரத்தான் அவ்வாறு வழங்கப்பட்டன என்பது தெற்றென வுணர்க. 123
இவ்வாறு பல பொருட்கு ஒரு வடிவாகும் பதங்களை எழுத்து வடிவிலே வேறுபடுத்திக் காட்டமுடியாது ஆணுல் அச் சொல்லை உச்சரிக்கும் வகையிலே, அது ஒவ்வொரு பொரு ளையுங் குறிக்குஞ் சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு வடிவுடைய சொல்லாக ஆக்க முடியும், இலக்கணக்கொத்து ஆசிரியர் பல பொருட் கொருவடிவாகும் பதங்களை யோசையோடு கூறுவ ருனர்ந்தோர்"24 எனக் கூறிவிட்டு,
எடுத்தல் படுத்த லிரண்டே யோசை நலிதல் விலக்கலொடு நான்கென் பார்சிலர் மூன்றெனத் துணிந்தே மொழிகுவர் பலரே என்று அவ்வோசை விகற்பங்களை எடுத்துக் கூறுவர். இல்வாறு ஒரு சொல் பல பொருள் குறித்து வருமிடத்து வேறு வேறு சொல் எனக் கருதுபவர்கள், ஒரு பெயர்ச் சொல் வேற்றுமையுருபேற்று நிற்கும் போது, அது அச் அச்சொல்லின் திரிபுபெற்ற வடிவம் என்றும், வினேச்சொல் விகுதி இடைநிலை முதலியவற்றை ஏற்று நிற்குமிடத்து, அது சொல்லின் திரிபுபெற்ற வடிவம் என்றும் கொண்டனர். நன்னூலார், "எழுவா யுருபு திரிபில் பெயரே' என்று முதலாம் வேற்றுமைக்குக் கூறிய இலக்கணம் இங்கு மனங் கொள்ளத் தக்கது. முதலாம் வேற்றுமைச் சொல் 'திரிபில்’ பெயர் என்று கொண்டால், ஏனேய வேற்றுமைச் சொற்கள் திரிபுற்ற பெயர்கள் எனக் கொள்ளப்படும். இக்கருத்துக்களை நோக்குமிடத்துத் தமிழ் இலக்கணநூலாரின் சொல் பற்றிய மரபின் அடிப்படை நன்கு புலப்படுகின்றது. அவர்கள் *சொல்" என்பதனைக் கருத்து வடிவமாகவே கருதியுள்ளனர். உதாரணமாக ஆ என்னுஞ் சொல் கருத்து ரூபமாயுள்ளது. அது "பசு' என்னும் பொருள் குறித்து நிற்குமிடத்து காட்சி ரூபமாக இலக்கணக் குறியீடு பெறுகின்றது. அது போலவே சாத்தன் என்னுஞ் சொல் கருத்து ரூபமாய்

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 155
நிற்க, முதல் வேற்றுமையிற் சாத்தன், இரண்டாம் வேற்றுமையிற் சாத்தனை என்றமையும்போது காட்சி வடிவம் பெறுகின்றது. இவ்வாறு சொல்லினேக் கருத்து ரூபமாகக் கொள்ளும் மரபு மேலைத் தேய இலக்கண நூலாரிடையேயும் காணப்பட்டது. 27 சொல்லின் இத்தகைய இரு நிலைத்தன்மை சைவசித்தாந்திகளின் விளக்கங்களுடன் நன்கு ஒற்றுமைப் படலையும் நாம் இங்கு மனங்கொள்ளுதல் நலம். சிவஞான மாபாடியத்துப் பிரமாண இயலில் இரண்டாஞ் சூத்திரத்து நான்காம் அதிகார விளக்கவுரையிலே,
'தன்னை விளக்குவதுTஉம் விடயங்களே விளக்குவது உம் தானேயாகிய ஞாயிறு ஒன்று தானே விடயங்களை விளக்குழிக் கதிரெனவும் தன்னை விளக்குழிக் கதிரோ னெனவும் தாதான்மியத்தால் இருதிறப்பட்டியைந்து நிற்றல்போல, புறப் பொருளே நோக்காது அறிவு மாத்திரையாய்த் தன் இயல்பினிற்பதுTஉம் புறப் பொருளை நோக்கி நின்றுணர்த்துவதுர உமாகிய இரு தன்மையையுடைய பேரறிவாய சைதன்னியம் ஒன்றே அங்ங்ணம் புறப்பொருளே நோக்கி நிற்கும் நிலையிற் சத்தியெனவும் புறப்பொருளே நோக்காது அறிவு மாத்திரையாய் நிற்கும் நிலையிற் சில மெனவுந்தாதான் மியத்தால் இரு திறப்பட்டியைந்துநிற்கும் எனவுணர்க .
என்று சிவஞான முனிவர் கூறிச் சென்றுள்ளதை நோக்குக.
5. சொற்களஞ்சிய அடிப்படையிற் சொற்பாகுபாடு
தமிழ் இலக்கண நூலார் சொற்களே இலக்கண அடிப் படையிலும் சொற்களஞ்சிய அடிப்படையிலும் பாகுபாகு செய்துள்ளனர். சொற்களஞ்சிய அடிப்படையிலே தமிழ் இலக்கண நூலார் மேற்கொண்டுள்ள பாகுபாடு எமது மொழிக்கே தனித்துவமான பண்பினைக் காட்டுவதாகும். தொல்காப்பியர்,
இயற்சொற் றிரிசொற் றிசைச்சொல் வடசொல்லென் ஹனத்தே செய்யு ளிட்டச் சொல்லே

Page 93
56 சொல்லும் சொற்பாகுபாடும்
என்று கூறுமிடத்துத் தொல்காப்பியர் காலத்திலும் அதற்கு முற்பட்ட காலத்திலும் செய்யுளிலக்கியத்திலே கையாளப் பட்ட சொற்களின் வடிவு நோக்கி அவற்றை நான்காகப் பகுக்கக்கூடியதாயிருத்தது. இயற்சொல், திரிசொல், திசைச் சொல், வடசொல் என்பனவே அந்நான்கு வகையாகும், பல நூற்ருண்டுகளுக்குப் பின்னர், நன்னூல் நேமிநாதம் ஆகியவற்றின் ஆசிரியர்கள் அதே சொற் பாகுபாட்டை பெயர், வினே, இடை, உரி ஆகியவற்றுடன் உறழக் கூறுகின்றனர். ?
இயற் சொல் முதலிய நான்கு சொற் பாகுபாட்டினைத் தமிழ் இலக்கணநூலார் அமைத்ததின் அடிப்படை நோக்கம் என்ன? முதலில் உரையாசிரியர்கள் கூறியுள்ள கருத் துக்களை நோக்குவோம். சேணுவரையர்,
இயற்சொல்லானுஞ் செய்யுட்சொல்லாகிய திரி சொல்லானுமேயன்றித் திசைச்சொல்லும் வடசொல்லும் இடைவிராய்ச் சான்முேர் செய்யுள் செய்யுமாறு கண்டு ஏனப் பாடைச் சொல்லுஞ் செய்யுட்குரிய ைவோ வென்றையுற்ருர்க்கு, இந்நான்கு சொல்லுமே செய்யுட் குரியன பிற பாடைச்சொல் உரியவல்ல வென்று வரையறுத்தவாறு,' "
என்று கூறி தெய்வச்சிலையாரோ. செய்யுட்குரிய சொற் களின் பாகுபாடுணர்த்துதல் நுதலிற்று 31 எனக் கூறுவர். தமிழ் இலக்கணநூலாரின் இப்பாகுபாடு தமிழ்ச்சொற் களஞ்சியத்தினை அடிப்படையாகக் கொண்டு அமைந்த தாகும். தமிழ்ச் சொல் ஒன்று தனியாக நிற்கும் போது எப்பொருள் பயக்கின்றதோ, அதே பொருளேச் சொற் ருெடரிலும் பயக்கும் பொழுது அதனே ஒரு வகையாகப் பாகுபாடு செய்யலாம். சில சொற்கள் சொற்ருெடர்களிலே எவ்வாறு உபயோகப்படுத்தப்பட்டுள்ளன என்பதை நோக் ஒயே அவற்றின் பொருளை உணர்ந்து கொள்ள முடியும். உதாரணமாக அபி என்னுஞ் சொல், அடி மேல் அடி விழுந்தால் அம்மியும் நகரும்" என்ற கூற்றிலும், நின் :ெமல இரண்டடியான் மூவுலகும் இருள்தீரநடத்தனையே’ என்ற கூற்றிலும் வெவ்வேறு பொருள் பயப்பதைக் காண

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 157
லாம். இவ்வாறன சொற்கள் இன்ணுெரு வகைப் பாகு பாட்டினுள் அடங்கும். முதல் வகையை 'இயற்சொல்" என்றும் இரண்டாவது வகையைத் 'திரிசொல்' என்றும் தமிழிலக்கணநூலார் பாகுபடுத்தியிருக்க வேண்டுமென யாம் எண்ணுகிருேம். வரதராசன் இவ்விரு வகைச் சொற்கும் வேறு விளக்கம் கொடுக்கிருர், அவர்,
இயற்சொல் மக்களின் பேச்சுவழக்கிலுள்ள தமிழ்ச் சொற்கள் என்றும், திரி சொல் பேச்சு வழக்கிறந்த செய்யுளளவில் நின்ற தமிழ்ச்சொற்கள் என்றும் 32 எனக் கூறிச் செல்கிருர், சேணுவரையர் தன்னுடைய உரையிலே இயற் சொல்லானுஞ் செய்யுட் சொல்லாகிய திரி சொல்லானும் என்று கூறுமிடத்துத் திரிசொல்லையே செய்யுட் சொல்லாகக் கொள்வர். இதுவே வரதராசனின் கருத்து உருவாகக் காரணமாயிருக்க வேண்டும். தொல்காப்பியர் அனைத்தே செய்யுளிட்டச் சொல்லே என்று கூறியுள்ள ஈ ரா கையால், திரிசொல்லே மாத்திரம் செய்யுளிட்டச் சொல் என்று கூறுதல் எவ்வாறு பொருந்தும்? திரிசொல் என்பதே வினேத்தொகை, அது திரிந்த, திரிகின்ற, திரியும் என்று விரியுமாகையால், அதனை வெறுமனே பழமை குறிப்பதாகக் கொள்ள முடியாது. 33 ஆகவே சொல் தனியாகவும் தொடரிலும் திரியாது பொருள் வழங்கும் போது அதனை இயற்சொல்" என்றும், தனி யாகவும் தொடரிலும் திரிந்து பொருள் வழங்கும் போது அதனைத் 'திரிசொல்' என்றும் தமிழ் இலக்கணநூலார் வேறுபாடு கண்டுள்ளனர் என்று கூறுதலே பொருத்தமாகும்.
51 திசைச்சொல் பிற திராவிட மொழிச் சொற்கள்
தமிழ்ச் சொற் கோவையிலே தமிழ் மொழிக்கேயுரிய சொற்களே இயற்சொல், திரிசொல் என்று பாகுபடுத்திய இலக்கணநூலார் தமிழ்மொழியல்லாத சொற்களேத் திசைச் சொல், என்றும் "வடசொல்' என்றும் வேறு படுத் தி யுள்ளனர். பிற சொற்களை ஒரு கூருகப் பாகுபாடு செய்யாமல், திசைச் சொல், வடசொல் என்று பாகுபாடு
செய்தது தமிழ் இலக்கணநூலாரின் மொழி பற்றிய நுண்

Page 94
158 - சொல்லும் சொற்பாகுபாடும்
னுணர்வை எடுத்துக் காட்டுகின்றது. தமது பிரதேசத்தின் எல்லேகளிலே சில மொழிகள் பேசப்படுவதையும் அம் மொழிகள் ஒரளவு தமிழ்ச்சாயல் கொண்டிருப்பதையும் தொல்காப்பியர் உணர்த்திருக்க வேண்டும். இவை தமி ழோடு நெருங்கிய தொடர்புடைய கன்னடம், தெலுங்கு போன்ற திராவிட மொழிகளாயிருக்க வேண்டும். தமிழின் சகோதர மொழிச் சொற்கள் வழக்கிலுஞ் செய்யுளிலும் கையாளப்படுவதைக் கண்ணுற்ற தொல்காப்பியர் அவற்றை முற்ருகப் புறப் புறத் தன்மையுடைய வேற்று மொழிச் சொற்களாக எண்ணுது, தனியொரு பாகுபாட்டுக்குள் அடக்கினர் என்று கூறுதல் பொருத்தமாயுள்ளது, 'தொல் காப்பியம், சங்க இலக்கியம் போன்ற நூல்கள் தோன்றும் காலத்திலே கண்னடம் தமிழொழி நிலத்துப் பேச்சு மொழியாக இருந்தது’** என்று கமில் ஸ்வெலபில் கூறு வதும் இங்கு மனங்கொள்ளத் தக்கதாகும். இவ்வாறு தமிழொழி நிலத்திலிருந்து வந்த திராவிட மொழிச் சொற் அ8ளத் திசைச் சொல்” என்றும் பிறமொழியாகிய ஆரிய மொழியிலிருந்து வந்த சொற்களை "வடசொல்" என்றும் தொல்காப்பியர் பாகுபாடு செய்தார்.
52 தமிழ் பிறமொழி வினைகளை ஏற்காது
திசைச் சொல்லும் வடசொல்லும் தமிழிலே வந்து வழங்குவது பற்றித் தொல்காப்பிய உரைக்காரர் உரை கூறுமிடத்து மொழியியற் பண்பொன்றினை எடுத்துக் கூறியுள்ளமை இங்கு குறிப்பிடப்பட வேண்டும். 'திசைச் சொல்லுள் ஏனைச் சொல்லும் உளவேனும், செய்யுட் குரித்தாய் வருவது பெயர்ச் சொல்லே , வடசொல்லுள்ளும் பெயரல்லன செய்யுட்குரியனவாய் வாரா' என்று சேணு
வரையரும், 'திசைச்சொல்லும் வடசொல்லும் பெரும்
பான்மைப் பெயர்ப் பெயராயும் சிறுபான்மை தொழிற் பெயராயும் வரும்' என்று தச்சிஞர்க்கினியரும், திசைச் சொல்லும் பெரும்பான்மை பெயரும் சிறுபான்மை வினே யுமாகி வரும். வடசொல் பெயராயல்லது வராது"37 என்று தெய்வச்சிலையாரும் குறிப்பிட்டுள்ளனர். பிறமொழிகளில் இருந்து ஒரு மொழி சொற்களைக் கடன் வாங்குமிடத்துப்
te

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 159
பெரும்பாலும் பெயர்ச் சொற்களைப் பெற்றுக்கொள்வதே வழக்கமாகும். இம்மொழியியலுண்மையினேயே சேஞவ ரையரும் தெய்வச்சிலையாரும் வடசொல் பெயராயல்லது வராது என்று கூறுமிடத்துப் புலப்படுத்தியுள்ளனர். தமிழ் மொழியில் வந்து சேர்ந்துள்ள பிறமொழிச் சொற்களை நோக்குமிடத்து, அவற்றின் பெயர்ச் சொற்களே பெரும் பான்மையாகவுள்ளன. அவதானி, ஆலோசி போன்ற சில வடமொழி வினை வடிவங்களைத் தவிர பிற மொழி வினைச் சொல் வடிவங்கள் தமிழிலே வந்து சேரவில்லை.38
சொற்களஞ்சிய அடிப்படையியலமையும் இப்பாகுபாடு இக் காலத்துக்கு அவசியமில்லையென்று கருதிப் போலும் ஆறுமுகநாவலர் அப்பாகுபாட்டினைத் தன் இலக்கணச் சுருக்கத்திற் குறிப்பிடாது விட்டார்.
5.3 இலக்கண முறைப்படி சொற்பாகுபாடு
இனி, இலக்கண முறைப்படி தமிழ் இலக்கணநூலார் சொற்களே பெயர், வினை என்று பாகுபாடு செய்துள்ளனர். இடைச்சொல்லும் உரிச் சொல்லும் அவற்றைச் சார்ந்து வருமெனக் கொண்டனர். இலக்கண அடிப்படையில் பெயர், வினை, இடை, உரி என நான்கு வகைப் பாகுபாடு அமைந்தபோதிலும், பெயரும் வினையுமே சிறப்புடைச்சொல் எனக் கருதப்பட்டன.
சொல்லெனப் படுவ பெயரே வினையென் ருயிரண் டென்ப வறிந்திசி னுேரே39 என்று கூறிய பின்னர்தான் தொல்காப்பியர்,
இடைச்சொற் கிளவியு முரிச்சொற் கிளவியு மவற்றுவழி மருங்கிற் ருேன்று மென்ப
என்று கூறுவதை நோக்கலாம். தமிழ்ச் சொற்களை முதற் கண்ணேயே நான்காக வகுக்காது, சிறப்புடைச் சொல் பெயர், வினை என்று முதற்கண் வகுத்துப் பின்னர் அவற் றைச் சார்ந்து வருவனவாக இடையையும் உரியையும்

Page 95
160 சொல்லும் சொற்பாகுபாடும்
வகுத்தற்குத் தமிழ் இலக்கண நூலார் எவரும் பொருத்த மான காரணம் எங்கேனும் கூறிஞரில்லே பெயரும் வினையும் தமக்கெனச் சில இலக்கணக் கூறுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளன. பெயர். வேற்றுமை என்னும் இலக்கணக் கூறினை அடிப்படையாகக் கொண்டமைய, வினை, காலங் காட்டுதலே அடிப்படையாகக் கொண்டுள்ளது. இரண்டுமே திணை, பால், எண், இடம் என்பனவற்றை உணர்த்த
வல்லன. பெயர், எழுவாய் என்னும் சொற்ருெடர்க் கூருவுேம் வினை, பயனிலை என்னுஞ் சொற்ருெடர்க் கூருகவும் அமைவன. இத்தகைய பண்புகள் இடைச்
சொல்லுக்கோ உரிக்சொல்லுக்கோ இல்லாத காரணத்தி ஞலேயே, அவை சிறப்பில் சொற்களாகக் கருதப்பட்டிருக்க வேண்டும். ஆணுல் சொற்ருெடர் அடிப்படையிலே நோக்கு மிடத்துப் பெயரும் வினேயுமே இரு இலக்கணச் சொற்க
ளாகத் தமிழ் இலகண நூலார் கருதியுள்ளனர்.
வினையிற் ருேன்றும் பாலறி கிளவியும் பெயரிற் றேன்றும் பாலறி கிளவியும் மயங்கல் கூடா தம்மர பினவே49
என்னும் தொல்காப்பியச் சூத்திரமும்,
பொதுவியல் பாறையுந் தோற்றிப் பொருட்பெயர்
முதலறு பெயரல தேற்பில் முற்றே41 என்னும் நன்னூற் சூத்திரமும் பெயருக்கும் வினைக்குமுள்ள சொற்ருெடரியை பினையும், சொற்ருெடரிலே அவற்றுக் குள்ள இலக்கண நிலையினேயும் எடுத்துக் காட்டுகின்றன. தமிழ் மொழி செற் ருெடர்க் கூறுகளாக இரண்டு இலக் கணக் கூறுகளேயே கொண்டமைத்துள்ளது." என தெ. பொ. மீனுட்சிசுந்தரஞர் கூறுவர். 42 அவர் மேலும், 'பெயரும் வினையும் முழுச் சொற்கள் எனவும், சொல்லுட்பகுப்பாய்வு அடிப்படையிலே நோக்குமிடத்து உரிச்சொற்கள் வேர்ச் சொற்கள் எனவும், இடைச்சொற்கள் வேர்ச்சொல் அல்லா தன எனவும் தொல்காப்பியர் பாகுபாடு செய்துள்ளார்' என்றும் கூறியுள்ளார் 43 இடைச் சொற்களின் பயன் பாட்டினையும், உரிச்சொற்களின் பயன்பாட்டினேயும்
t

, ,
Z
தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 6
" நோக்குமிடத்துப் பெயர், வினைச் சொற்கள் முழுசீ சொற்களாக இயங்குவதற்கு அச்சொற்களின் உட்பகுப் பினுள் அங்கங்களாக இடைச்சொற்கள் அமைய, பெயரும் வினையும் சொற்ருெடரிலே தோன்றி இயங்கப் புறத்தே நின்று அவற்றுக்கு அனுசரணையாக நிற்பன உரிச்சொல் என்று கூறுதலும் ஒரு வகையில் பொருத்தமாக அமைய ல்ாம். அதாவது இல் டச்சொற்கள் பெயர், வினையின் அகக் கூறுகளாயமைய, உரிச்சொற்கள் புறக்கூறுகளாக யமைகின்றன. -
64 பெயர், வினை-வரைவிலக்கணம்.
பெயர், வினை ஆகிய இரு இலக்கணக் கூறுகளுக்கும் வரைவிலக்கணம் கூறுமிடத்து எதிர்மறை வழியைக் கடைப் பிடிக்கும் பண்பிலேயே மேற்கு நாட்டு இலக்கணநூலாரிட மும் இந்திய இலக்கணநூலாரிடமும் காணக்கூடியதாய் உள்
என்னும் நான்கு இலக்கணக் கூறுகளைக் கூறியபோதிலும், 010na, rhem3 ஆகிய இரண்டையுமே முதன்மையாகக் கூறிஞர் என அறிகிருேம் 44 onoma என்பது பெயர். rhena என்பது வினை. இவற்றை வரையறை செய்யு மிடத்து முதலிலே onoma என்பதற்கே வரைவிலக்கணம் கூறுகிருர், அவ்வாறு கூறுமிடத்து, அது வினைக்குரிய காலமுணர்த்தும் பண்பு இன்றி வரும் என எதிர்மறை யாகக் கூறுவர். தொல்காப்பியரிலும் இப்பண்பினைக் காணக் கூடியதாயுள்ளது.
பெயர்நிலைக் கிளவி காலந்தோன்ற தொழினிலை யொட்டு மொன்றலங் கடையே?
என்று வேற்றுமை இயலில் பெயர்ச்சொல்லினை 'காலந் தோன்று" என்று வினையின் பண்பின்மையைக் கூறி எதிர் மறை முசுத்தால் வரையறை செய்து விட்டு, வினையியல்லே,
வினேயெனப் படுவது வேற்றுமை கொள்ளாது நினையுங் காலேக் காலமொடு தோன்றும்46
-2.
岛

Page 96
62 சொல்லும் சொற்பாகுபாடும்
என வினைக்கு வரைவிலக்கணங் கூறுகிருர், பெயருக்குரிய பண்பாகிய வேற்றுமை ஏற்றல் இல்லை என எதிர்முகத் தாலும், வினைக்குரிய பண்பாகிய கால மொடு தோன்றல் உண்டு என விதிமுகத்தாலும் இங்கு வரையறை செய் θεότηri.
55 இடைச்சொல்
வேற்றுமை உருபுகள், திணை, பால் முதலியனவற்றை உணர்த்தும் ஈறுகள் ஆகியனவற்றைத் தொல்காப்பியரும் பின் எந்த இலக்கணநூலாரும் சொற்களாகவே பாகுபாடு செய்துள்ளனர். தொல்காப்பியர் இடைச்சொல்" என் ருெரு பாகுபாட்டினை மேற்கொண்டதினூலே, பின் வந்தோ ரும் அப்படியே பின்பற்றியிருக்க வேண்டுமெனத் தோன்று கிறது. எனினும் தொல்காப்பியர் 'உருபன்கள்’ என இக்
கால மொழியியலார் கருதும் அலகுகளே சொற்கள்"
எனக் கூறியமைக்கு என்ன காரணம்? தொல்காப்பியர் தன்னுடைய காலத்து எழுத்து வடிவ வழக்கின் செல்வாக் கினுலே அத்தகைய கருத்தினேக் கொண்டாரோ என ஐயுறு தற்கு இடமுண்டு. கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலப் பிராமிச் சாசனங்களிலே உருபுகளையும் ஈறுகளையும் புணர்த்தாமல் *சொல் வடிவம் போன்று எழுதுகின்ற வழக்கம் காணப் பட்டது. உதாரணமாக, பின்வரும் பிராமிச் சாசனத்தின் ஒரு வாக்கியம் இக்கால வரிவடிவிலே கொடுக்கப்பட்டுள்ளது:
நல்பி ஊர் அ படன் குறும் மகள்
‘நல்பி ஊரையுடைய படன் என்பவரின் இளைய மகள்
என்று இச்சாசன அடிக்குப் பொருள் கொள்ளப்படும்.
இதிலே ஊர் அ என்னும் பகுதியிலே ஆரும் வேற்றுமை உருபாகிய அ தனியாக ஊர் என்னும் பெயர்ச்சொல்லுக்கு அருகிலே எழுதப்பட்டுள்ளது. இது போலவே பல பிராமிச் சாசனங்களில் உருபுகளும் ஈறுகளும் தனியாக எழுதப்படும் வழக்கு" தொல்காப்பியர் காலத்திலே இருந்திருக்க வேண் டும். இதன் காரணமாகத் தொல்காப்பியர் இவ்வுருபன் களுக்குச் சொல் அந்தஸ்துக் கொடுத்திருக்கலாம். உருபு

re
தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 63
களையும் ஈறுகளையும் தனியாக வரிவடிவிலே வடிக்கும் பண்பு வட இந்தியப் பிராமிச் சாசனங்களிலே காணப்படவில்லை. இப்பண்பு தென்னிந்தியப் பிராமிச் சாசனங்களில் மட்டுமே காணப்படுகின்றது 8 இந்நிலை தொல்காப்பியரின் இடைச் சொல் பாகுபாட்டினை மேலும் வலியுறுத்துகின்றது. வரி வடிவ வழக்கின் செல்வாக்கினுற் பாதிப்புற்ற போதிலும் மெய்யினுடன் உயிர் சேருதல், இரண்டு உயிர்களுக்கிடையே உயிர்மெய் நுழைத்தல் ஆகிய புணர்ச்சிப் பண்புகளைத் தொல்காப்பியர் கூறுவதனல், இத்தகைய வரிவடிவ வழக்கம் அவருக்குப் பல காலங்களுக்கு முன்னரேயே நடைமுறையி லிருந்திருக்க வேண்டுமெனக் கூறவேண்டியுள்ளது.
இடைச்சொற்களை "minor particles” என விவர னஞ் செய்யும் வழக்கம் மேலேத்தேய மொழிவல்லார் தொடக்கி வைத்ததென்ருகும். இவற்றை அவ்வாறு விவரணஞ் செய் தல் பொருத்தமோ என்பது ஆராயப்படவேண்டியதாகும் தமிழ்மொழி ஒட்டுமொழி வகையைச் சார்ந்ததாகும். அடிச்சொல்லுடன் பல வேறு சொற்கள் ஒட்டப்பட்டு ஒரு சொன்னடைய வாக அமையும் பல வடிவங்கள் தமிழிலுண்டு. இவற்றுள் அடிச்சொற்களாகப் பெரும்பாலும் இடம்பெறும் பெயரையும் வினையையும் தவிர மற்றெல்லாவற்றையும் இடைச்சொற்களுக்குள்ளே அடக்கிக் கூறுவர் தொல் காம்பியர். இவ் விடைச்சொற்களுக்குள் பெரும்பாலான வற்றைச் சாரியைகள் என்று கூறும் வழக்கம் உண்டு. இச் சாரியைகளை வெற்றுச்சொற்களான நோக்கும் 6ழக்கினைச் சங்கப்பாடல்களுக்கு எழுதப்பட்ட உரைகளிலிருந்து அறிகி ருேம். ஆனல், சாரியைகளென்று கருதப்பட்ட அவ்வி டிவங் கள் நுண்ணிய பொருள் வேறுபாடுகளை உணர்த்தி நிற்பதைச் சங்கப்பாடல்களை நுணுகி ஆராய்வார் உணர்ந்துகொள்வர். புளி + பழம் என்னுமிரு சொற்கள் புளியம்பழம் என ‘அம்" சாரியை பெற்றுப் புணருமெனத் தொல்காப்பியர் முதலாய
இலக்கணநூலார் கூறுவர். இங்கு 'அம் வெறுஞ் சாரியை
யாகவன்றி உடைமைப் பொருளுணர்த்தும் ஒரு சொல்லாசு அமைவதைக் காணலாம். 'அம் சாரியை இல்லாமல், புளி + பழம் என்பன புளிப்பழம் எனப்புணர்ந்தால் அது

Page 97
164 சொல்லும் சொற்பாகுபாடும்
* புளியினுடைய பழம்” என்னும் பொருளினைத்தராது. 'அம்' சாரியை சேர்ந்து புளியம்பழம் என்று அமைந்தால்
தான் "புளியினுடைய பழம்' என்னும் பொருளினைத்தரும். எனவே, சாரியைகளும் பொருளுணர்த்துவனவாதலால், "எல்லாச் சொல்லும் பொருள்குறித்தனவே" என்னும் சூத்திரத்துக்கமைய அவையும் இடைச்சொற்களெனக் குறிப்பிடப்படுகின்றன. ஆகையால், தமிழிலுள்ள இடைச் சொற்கள் பற்றிய நமது இலக்கண நூலாருடைய கருத்துக் அளும், இவை minor particles என வகுத்தோருடைய கரு த் து க் க ரூ ம் விரிவான மீளாய்வுக்குட்படுத்தப்பட வேண்டும்.
அடிக்குறிப்புகள்
1. வரதராசன், மு , மொழிநூல், ப. 107-124 2. சீனிவாசன், ரா, மொழியியல், ப. 104-111 3. வேலுப்பிள்ளை, ஆ, தமிழ் வரலாற்றிலக்கணம்
L. 1 09-1 20
4. Sauss aure, Ferdinand de Course in General
Linguistics, p. 67 5. தொல்காப்பியம், சொல்லதிகாரம், சூ 155 6. மேற்படி, தெய்வச்சிலே யாருரை, ப. 107 7. மேற்படி, சூ. 394 8. மேற்படி சூத்திரத்துக்குச் சேஞ)வரையருரை 9. சிக ஞானமுனிவர், தொல்காப்பியமுதற் சூத்திர விருத்தி
Lu , 2ill 10. தொல்காப்பியம், சொல்லதிகாரம், சூ. 394, ப. 353,
கணேசையரின் அடிக்குறிப்பு. ll. a LITI 15 pToual) ri. திராவிடப் பிரகாசிகை, ப. 6-7 12. கார்த்திகேய முதலியார், மாற்றல், மொழிநூல், ங், 1 13. சுவாமி ஞானப்பிரகாசர், தமிழ் அமைப்புற்ற வரலாறு,
.. 7
4. Lyon, J., introduction to Theoretical Linguistics,
p. 4
is

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 65
15. தொல்காப்பியம், சொல்லதிகாரம், சூ. 156 16. மேற்படி சூத்திரத்துக்குச் சேனவரையருரை, ப. 197 17. மேற்படி சூத்திரத்துக்குத் தெய்வச்சிலேயாருரை, ப. 108 18. நன்னூல், சூ 259 19. மேற்படி சூத்திரத்தின் காண்டிகையுரை, ப. 249 20. மேற்படி சூத்திரத்தின் விருத்தியுரை, ப. 161 21. சபாபதிநாவலர், மு. கு. நூ, ப. 6 22. தொல்காப்பியம், சொல்லதிகாரம், சூ. 57, சேணுவரை
யருரை, ப. 97
23. சபாபதிநாவலர், மு. கு. நூ, ப. 8 24. இலக்கணக்கொத்து, சூ. 126 25. மேற்படி, சூ. 127 26. நன்னூல், சூ. 295 27. இம்மரபு பற்றிய விளக்கத்துக்குப் பார்க்க:
Lyons J., bid, p. 197 28. தொல்காப்பியம், சொல்லதிகாரம், சூ. 397 29. நேமிநாதம், சூ. 54
பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொல் இயற்சொல் முதஞன்கும் எய்தும் பெயர்ச்சொல் உயர்தினைப்பேர் அஃறிணைப் பேர் ஒண் விரவுற் றியலும் எனவுரைப்பர் ஈங்கு, நன்னூல், சூ. 270 :
அதுவே, இயற்சொற் றிரி சொ லியல்பிற் பெயர்வினை என்விரண் டாகு மிடையுரி யடுத்து நான்குமா ந்திசைவட சொலணு காவழி. 30. தொல்காப்பியம், சொல்லதிகாரம், சூ. 397, சேஞ
வரையருரை, ப. 357 - 31, மேற்படி சூத்திரத்தின் தெய்வச்சிலையாருரை, ப. 216 2ே. வரதராசன் , மு, மு. கு. நூ. ப. I 0.7 33. இதுபற்றிய விளக்கத்துக்குப் பார்க்க :
வீரகத்தி, சு.இலக்கண விளக்கம், பிற்சேர்க்கை ப. 2

Page 98
766
34.
35.
36.
37.
38.
39.
46。
4丑。
42。
44,
《5。
46。
47.
48。
சொல்லும் சொற்பாகுபாடும்
Zvelebi, K, ““From Proto-South Dravidian to Old Tamil’, In Asher, 1970, p. 72 - தொல்காப்பியம், சொல்லதிகாரம், சூ. 397, சேணுவ ரையருரை மேற்படி சூத்திரத்துக்கு நச்சிஞர்க்கினியருரை. மேற்படி சூத்திரத்துக்குத் தெய்வச்சிலே யாருரை. பிறமொழி வினைச்சொல் வடிவங்கள் இக்காலப் பேச்சு வழக்கில் இவ்வாறு கையாளப்படுகின்றன என்னும் விவரத்துக்குப் பார்க்க :
Kailasapathy, K., and Sanmugadas A., Tamil р. 27 தொல்காப்பியம், சொல்லதிகாரம், சூ, 158 மேற்படி, சூ. 11 நன்னூல், சூ. 323 Meenakshisundaran, T. P., Foreign Models in Tam Grammar, p. 320
bid, p. 323 Sandys, J. E., A Short History of Classical Scholarship தொல்காப்பியம், சொல்லதிகாரம், சூ. 70 மேற்படி, சூ. 198 இத்தகைய பல சாசனங்களின் விவரங்களுக்குப் பார்க்க: Mahade van, Iravatam, ** Corpus of the TamilBrahmi Inscriptions, assi) Gaul.(6 is as (b55 Tri (5, (Ed. Nagaswamy, R.), pp. 57-73. இத்தகவலை யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறையைச் சேர்த்த (1982) தொல்பொருளியல் ஆய் வாளரும் நண்பருமாகிய திரு பொ. இரகுபதி எனக்குக் கூறினர். அவருக்கு என் நன்றி
is

தமிழ் இலக்கண வகைமைகள் : பண்பும் பணியும்
பெயர், வினே என்ற இலக்கண அடிப்படையிலான சொற்பாகுபாடு பற்றிச் சென்ற இயலிலே விளக்கப்பட்டது. அவ்விலக்கணப் பகுப்புக்கள் பற்றிய மேலும் விவரங்களை யும், அவற்றுடன் தொடர்பான இலக்கண வகைமைகள் பற்றியும் இவ்வியலிலே நோக்குவோம். குறிப்பிட்ட ஒரு சொல்லின எப் பகுப்பினுள் அடக்குவது என்பது பற்றி முதலிலே நோக்கவேண்டும். ஒரு சொல்லேத் தனியாக எடுத்து நோக்குமிடத்து, அது பெயரா அல்லது வினையா என்று கூறுவது கஷ்டமான காரியமாகும். அடி, படி, கல், பார், வளை போன்ற சொற்கள் தொடர்பாகவே இக்
பெறும்போதுதான் இவற்றுள் ஒரு சொல் வினையா அல்லது பெயரா என்று கூறமுடியும். இக்கஷ்டத்தினை நீக்குதற்குத் தான் தமிழ் இலக்கணநூலார் ஒரு சொல், பெயர்ப் பகுப் தீபினைச் சார்ந்ததா அல்லது வினேப் பகுப்பினைச் சார்த்ததா என்று அறிதற்குத் தம்முடைய வரைவிலக்கணங்கள் மூலம் வழிகாட்டியுள்ளனர். ஒரு சொல் வேற்றுமை ஏற்கக் கூடிய நிலேயிலும் காலம் காட்டாத நிலையிலும் சொற்ருெடரிலே அமையின் அது பெயராகவும் வேற்றுமை ஏற்க முடியாத நிலையிலும் காலங்காட்டும் நிலையிலும் அமையின் அது வினை பாகவும் கொள்ளப்படும் எனத் தமிழ் இலக்கண நூலார் கூறியுள்ளதைச் சென்ற இயலிலே விளக்கியுள்ளோம். இவ்

Page 99
168 - - தமிழ்மொழி இலக்கண இயல்புகள்
விரு சொற் பகுப்புக்களும் உருபனியல் அடிப்படையிலும்
சொற்றெடரியல் அடிப்படையிலும் எத்தகைய பண்புகளே
யும் பணிகளையும் கொண்டுள்ளன என்பது பற்றி இன்னுஞ் சிறிது விளக்கமாக நோக்கலாம்
1 பெபூர்
1 1 G) tulisi என்னும் பகுப்பின் மூக்கியத்துவம்
மொழியின் ஒரு பகுப்புச் சொற்களைப் பெயர் என அழைப்பதற்கும் அப்பகுப்பினேயே முதற்கண் வைத்து நோக்குவதற்குமுரிய அடிப்படைக் காரணமென்ன? எந்த மொழி பேசுபவனும், முதலிலே அறிந்து கொள்ளுஞ் சொற்கள் பெயர்ச் சொற்களே. குழந்தைகள் பேசத் தொடங்கும் நிலையினை அவதானித்தால் இவ்வுண்மை விளங்கும். ஒன்றன் பெயரைக் குறிப்பிடும் சொல்லினையே குழந்தைகள் முதலிலே அறிந்துகொள்ளுகின்றனர் என இத்துறையிலே ஆய்வு செய்த மொழியியலாளரும் உளவிய லாளரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். மனிதனுடைய சிந்தனை தொடர்ந்து செல்வதற்கு வெறுமை அல்லது கருத்து நிலை ஒருபொழுதும் உதவமாட்டாது. அவனுடைய சிந்தனைக்குப் பொருண்மையும் பெயரும் அவசியமாகின்றன. இதன் காரணமாகவே, எல்லா மொழிகளிலும் பெயர் என்னும் சொற் பகுப்பே முதற்கண் வைத்துக் கூறப்படு கின்றது. தமிழ் மொழியிலும் எல்லா இலக்கண நூலாரும் பெயரையே முன்வைத்துக் கூறியுள்ளனர். தொல்காப்பியச் சொல்லதிகாரப் பதினேராவது சூத்திர உரைக்கு விளக்க உரை கூறும் சி. கணேசையர்,
பெயரென்றது ஈண்டும் பொருளையென்றது பெயர் என்ற சொல் பெயர்களையுங் குறிக்கும்; பொருள்களையுங்
குறிக்கும் பெயர் பொருள் என்பன ஒருபொருட் கிளவிகள் என்று சிவஞானமுனிவர் சூத்திர விருத்தியுட் கூறுவர்.'
என்று கூறியுள்ளமை மேற்படி கருத்தினை அரண் செய்வதாக அமைகின்றது.
7 ܬܐ

κός
தமிழ் இலக்கண வகைமைகள்: பண்பும் பணியும் 169
இன்னும், பெயர் என்னும் இலக்கணப் பகுப்பின் முக்கியத்துவத்தினே, அது வாக்கியவியலிலே பெறும் நிலை யினைக்கொண்டும் உணரக்கூடியதாயுள்ளது. ஒரு வாக்கியத் தின் எழுவாயாகவும், பயனிலையாகவும் பெயர் இடம்பெறக் கூடியதாயுள்ளது.
அவற்றுள், எழுவாய் வேற்றுமை பெயர் தோன்று நிலையே
என வேற்றுமையியலிலே கூறும் தொல்காப்பியர், அடுத்த சூத்திரத்தில்,
பொருண்மை சுட்டல் வியங்கொள வருதல் வினேநிலை யுரைத்தல் விணுவிற் கேற்றல் பண்புகொள வருதல் பெயர் கொள வருதலென் நன்றி யனைத்தும் பெயர்ப்பய னிலேயே
என்றும் கூறுகின்ருர், இவ்விரு சூத்திரத்திலும் பெயர்ச் சொல் எழுவாயாக வருவது மட்டுமன்றிப் பயனிலையாகவும் வருமெனக் கூறப்பட்டுள்ளது. எழுவாயுருபு திரிபில் பெயரே என நன்னூலார் கூறுவர். இது தமிழ் வாக்கியங்களின் ஆழமைப்பு மேலமைப்பு வடிவங்களே அடிப்படையாகக் கொண்ட ஒர் இலக்கணமாகும். சொல்லொழுங்கு அவ் வளவு இறுக்கமில்லாத எமது மொழியிலே எழுவாய், வாக்கியத்தில் முதனிலையிலேதான் வரவேண்டுமென்பது அவசியமில்லை இதஞல் எது எழுவாய் என்று ஐயந்திரி பின்றிக் சுறுதற்கு நன்னூலாருடைய எழுவாயுருபு திரிபில் பெயரே என்னும் இலக்கணம் உதவுகின்றது. உதாரணமாக,
கப்பல் பிடித்து இராமேஸ்வரம் சென்ற அவன் விடுதி தேடிப் போஞன்.
என்னும் வாக்கியத்திலே கப்பல், இராமேஸ்வரம், அவன், விடுதி என்னும் நான்கு திரிபில் பெயர்கள் இடம்பெறு கின்றன. இவற்றுள் எழுவாயாக அமையும் பெயர்ச்சொல் என்ன? மேலே குறிப்பிடப்பட்டுள்ள வாக்கியம் அதன் மேலமைப்பு வடிவத்திலேயே அமைந்துள்ளது. அதனுடைய
画一22

Page 100
70 தமிழ்மொழி இலக்கண இயல்புகள்
ஆழ்மைப்பு வடிவத்தினை நோக்கின், அவ் வாக்கியத்தின் எழுவாய் "திரிபில் பெயராக அமைவதைக் காணலாம். அதனுடைய ஆழமைப்பு வடிவம்.
சுப்பலைப் பிடித்து இராமேஸ்வரத்துக்குச் சென்ற அவன் விடுதியைத் தேடிப்போஞன். என அமையும், கப்பலே, இராமேஸ்வரத்துக்கு, அவன், விடுதியை என்னும் நான்கு பெயர்ச் சொற்களுள் அவன் என்பது 'திரிபில் பெயராக அமைவதை நாம் காண்கிருேம்.
உலகிலுள்ள எல்லா மொழிகளிலுமே எழுவாயாகப் பெயர்ச்சொல்லே அமைகின்றது. பேச்சு என்பது தொடர்ந்து அமையும் பல எடுப்புக்களே (propositions) உள்ளடக்கியதாக அமைகின்றது. ஒர் எடுப்புக்கு அடிப்படையாக அமைவன எழுவாயும் பயனிலையுமென்பதை அளவையியல் மாண வர்கள் நன்குணர்வர். நாம் பேசுவதற்கு ஏதாவது ஒன்று இருக்கவேண்டும். அது என்னவென்று தெரிந்தெடுத்த பின்னர், அதைப்பற்றி ஏதாவது நாம் கூறவேண்டும். பேசுதற்கு எடுத்துக்கொண்டது எழுவாயாகவும், அது பற்றிக் கூறுதல் பயனிலையாகவும் அமைகின்றன. இவை யிரண்டும் ஒர் எடுப்பின் இரு கூறுகளாக அமைகின்றன. பேசுதற்கு எடுக்கப்படும் விடயம் பெயராகவே எல்லா மொழிகளிலும் அமைகின்றது. இது பற்றி எட்வர்ட்சயிர் என்னும் மானிடவியல் மொழியியலாளர் பின்வருமாறு கூறுகிருர்:
st is well to remember that speech contains a series of propositions. There must be something to talk about and something must be said about this subject of discourse once it is selected. This distinction is of such fundamental importance that the vast majority of languages have emphasized it by creating some sort of barrier between the two terms of propositions. The subject of discourse is a noun. As the most common subject of discourse is either a person or a thing, the nour elusterg about concrete concepts of that order.'2

(και
தமிழ் இலக்கண வகைமைகள்: பண்பும் பணியும் 171
1 * 2. (o) u Ulu sir GN GYSG356ir
சொல் வகைமைகளுள் ஒன்ருகிய பெயர்ச்சொல்லினைத் தமிழிலக்கணநூலார் மேலும் பல வகைகளாப் பாகுபாடு செய்துள்ளனர். தொல்காப்பியர்
அவற்றுள் ம பெயரெனப் படுபவை தெரியுங் கா யுயர்திணைக் குரிமையு மஃறிணைக் குரிமையு மாயிரு திணைக்குமோ ரன்ன வுரிமையு மம்மூ வுருபின தோன்ற லாறே3
எனப் பொதுவான பாகுபாட்டினைக் கூறிவிட்டு, தொடர்ந்து
வரும் பல சூத்திரங்களிலே அப்பொதுப் பாகுபாட்டினுள் அடங்கும் பெயர் வகைகளைக் குறிப்பிடுகின்ருர், அவர் குறிப்பிட்ட பெயர் வகைகளைப் பின்வருமாறு வரிசைப் படுத்திக் கூறலாம்.
கட்டுப் பெயர் அவன், இவள் தன்மைப் பெயர் : யான், யாம், நாம் விஞப் பெயர் ; யாவன், யாவள்
நிலப் பெயர் ; செம்பாட்டான், சோழியன் குடிப் பெயர் : மலேயான் சேர மான் குழுப் பெயர் அவையத்தார், பசEக்கர் வி%ரப் பெயர் தச்சன், கொல்லன் உடைமைப் பெயர் : அம்பர்கிழான், பேரூர் கிழான் பண்புப் பெயர் கரியன், செய்யன்
முறைநிலைப் பெயர்: தந்தை. தாய் சினேநிலைப் பெயர் : பெருங்காலன், முடவன் திணை நிலைப் பெயர் : வேட்டுவர், வணிகர் இயற்பெயர் சாத்தன். செந்தூரன் முன்னிலைப் பெயர் : நீயிர், நீ

Page 101
172 தமிழ்மொழி இலக்கண இயல்புகள்
இத்தகைய பாகுபாட்டுக்கு விதிவிலக்காக அமையும் பெயர் கள் பற்றியும், இப்பாகுபாட்டினை அடிப்படையாகக்
கொண்ட நுண்ணிய வேறுபாடுகளை உணர்த்தும் பெயர்கள்
பற்றியும் தொல்காப்பியர் தன்னுடைய சூத்திரங்களிலே குறிப்பிட்டுள்ளார்.
பெயர்ச் செசற் பாகுபாடு என்பது பாற் பாகுபாடு என்றே தொல்காப்பியர் கருதியுள்ளார். தமிழ் வரலாற் றிலக்கணம் எழுதிய ஆ. வேலுப்பிள்ளேயும் பெயர்ச் சொற் பாகுபாடு என்ற பகுதியிலே தமிழ்ப் பெயர்ச் சொற்கள் பாலுணர்த்துவது பற்றியே விரிவாக கூறுகின்ருர் நன் னுாலாரும் தொல்காப்பியருடைய மரபினையே பெயரியலிற் பின்பற்றியபோதும். பதவியலிலே பெயர்ச் சொற்களின் பொதுவானதொரு பாகுபாடு கூறியுள்ளார். அது’
பொருளிடங் காலஞ் சினைகுணந் தொழிலின் வருபெயர் பொழுது கொள் வினைபகு பதமே
என்னுஞ் சூத்திரத்தாற் குறிக்கம்படுகின்றது. பெயர்ச் சொற் பாகுபாட்டினைப் பொறுத்தவரையில் நன்னூலாரு டைய பாகுபாடு மிகப் பொருத்தமான, பொதுத் தன்மை வாய்ந்த, சுருக்கமான பாகுபாடாக அமைகின்றது. அப் பாகுபாட்டினிடையே காணப்படும் ஒரு நுண்ணிதான தொடர்பு அமைப்பினை நாம் உற்று நோக்க முடிகின்றது. பொருள் என்பது பொருண்மையினைக் குறிப்பதாகும். அதாவது ஒரு பொருள் உண்டோ இல்லையோ என்ற ஐய மேற்படாவண்ணம் ஒரு பொருளினை உணர்ந்து அதற்கு இடப்படும் பெயரே பொருட்பெயராகும். * G) L J fritiloj " பொருளின் மெய்ப்பொருட்கு வேற்றுமையுண்மையாதலின் அவ்வுண்மையைப் பொருண்மை யென்றார்' எனச் சேனுவ ரையர் கூறியுள்ளதை இங்கு நாம் மனங்கொள்ளவேண்டும். இவ்வாறு உண்மை நிலைப்பாட்டினை உணர்ந்த நாம், அந் நிலைப்பாட்டின் இடத்தினையும் காலத்தினையும் உணர்தல் வேண்டும். இதன் விளைவே இடப்பெயரும் காலப்பெயரு மாகும். ஒரு பொருளுக்குப் ப்ல கூறுகள் உண்டு. அக் கூறுகளுள் ஒன்றினைக் குறிப்பிடச் சினேப்பெயர் உதவுகின்றது. பொருளுக்குரிய பல குணங்களிலே ஒரு குணத்தினைக் குறிக்கக்
s

தமிழ் இலக்கண வகைமைகள்: பண்பும் பணியும் 173
குணப் பெயர் உதவுகின்றது. பொருளின் அசைவு நிலை யுடன் தொடர்புற்றதாகத் தொழிற் பெயர் அமைகின்றது. ஆகவே எமது மொழியிலுள்ள எல்லாப் பெயர்ச் சொற் களையுமே பொருள், இடம், காலம், சினே, குணம், தொழில் என்ற இயற்கையான, தர்க்க ரீதியான தொடர்புமுறை யிலே பாகுபாடு செய்வது பொருத்தமாக அமைகின்றது. இத்தகைய பாகுபாட்டினை விடுத்து, திணை, பால் அடிப் படையிலே பெயர்ச் சொற்களைப் பாகுபடுத்துதல் பொருத்த மற்றதாகும். ஏனெனில், தமிழ் மொழியில் திணை, பால் என்னும் இலக்கணக் கூறுகள் பெயர்ச் சொற்களுடன் மாத்திரமன்றி வினைச் சொற்களுடனும் தொடர்புற்றிருப் பதேயாகும்.
2. பெயரும் வேற்றுமையும்
வேற்றுமை என்னும் இலக்கணக் கூறுடன் தொடர் புடைய சொல் வகைமை பெயராகவே எல்லா மொழி
களிலும் காணப்படுகின்றது. தொல்காப்பியரும்,
வினையெனப் படுவது வேற்றுமை கொள்ளாது நினையுங் காலேக் காலமொடு தோன்றும்
எனக் கூறிச் செல்கின்ருர், இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்த மொழிகள் பலவற்றிற் பெயர்ச் சொல்லுடன் தொடர்புடைய சொல்லுருமாற்ற இலக் கணக் கூறுகளாக எண், வேற்றுமை ஆகிய இரண்டுங் கொள்ளப்படும்
In effect, tradional definitions of the category of case for Latin and Greek (and other Indo-European languages) say little more than the following: of the two inflexional categories of the noun, one is number (definable in semantic terms and relatable to the Aristotelian category of quantity), the otiner is case? 7 என மொழியியல் அறிஞர் ஜோண் லயன்ஸ் கூறியுள்ளார். ஆனல், தமிழ் மொழியைப் பொறுத்தமிட்டில் எண் பெய ருக்கு மாத்திரம் உரிய சொல்லுருமாற்ற இலக்கணக்கூறு

Page 102
I 74 தமிழ்மொழி இலக்கண இயல்புகள்
அல்ல. அது வினைக்கும் உரியதாக அமைகின்றது. எனவே தமிழ் மொழியிற் பெயருக்கு மாத்திரம் உரிய சொல்லுரு மாற்ற இலக்கணக்கூறு வேற்றுமையேயாகும்.
வேற்றுமை என்ருல் என்ன? தொல்காப்பியர் தன் னுடைய இலக்கண நூலிலே வேற்றுமை என்பதற்கு வரைவிலக்கணம் கூறவில்லை. மேலைத்தேய இலக்கணநூலார் வேற்றுமையினே ஒரு சொல்லுரு மாற்ற வகைமையாகவே கொண்டனர். பெயர்ச்சோல் ஒன்றனது உண்மையான வடிவத்துக்கும், அதனின்று வேறுபட்டுவரும் வடிவங்களுக்கு
மிடையே காணப்படும் வேற்றுமையினே உணர்த்துதற்கு
Case என்னும் பதத்தினை உபயோகித்தனர். "எழுவாய்" ஆக நிற்கும் சாதாரண பதத்தினின்று வரும் உரு மாற்றங்களை லத்தீன் இலக்கணகாரர் Casus என்றனர். இதுபற்றி லயன்ஸ் பின்வருமாறு கூறுவர் :
“The Latin word casus (and the Greek word which it translates) means “falling or “deviation'. Whatever might be the precise metaphorical origin of the technical sense of the term in grammatical theory (and there is some dispute about this), it is clear that variation in the for is of a lexene according to the syntax of the language' was regarded as deviation from its normal upright form'8.
தொல்காப்பியர் முதலாவது வேற்றுமையை எழுவாய்'
என்று கூறுவதன் மூலம் பண்டைய கிரேக்காலத்தீன் இலக் கணநூலார் வேற்றுமை பற்றிக் கூறிய வரைவிலக்கணத் தினேப் போன்றதோர் அடிப்படையையே தமிழ்மொழி வேற்றுமைக்கும் கொண்டுள்ளார் என ஊகித்துணர முடி கின்றது. எனினும், தமிழ் மொழியைப் பொறுத்தமட்டில் ஒரு விசேட நிலை காணப்படுகின்றது. லத்தீன் போன்ற மொழிகளில் வேற்றுமை தொடர்பாக சொல்லுருமாற்றத் துக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருந்தது. ஆஞல், தமிழ் மொழியிலோ அவ்வாறு முக்கியத்துவங் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. தமிழ் ஒட்டுமொழி
 

தமிழ் இலக்கண வகைமைகள்: பண்பும் பணியும் 75
என்ற காரணத்தினுலே பெயர்ச்சொல்லின் உருவம் திரி படையாமல் வேற்றுமை உருபுகள் அதனுடன் ஒட்டப்படு கின்றன. இதனுல், பெயர்ச் சொல் வேற்றுமை உருபு ஏற்குமிடத்து அதனுடைய உருவ மாற்றத்தினைவிடப் பொருள் மாற்றத்துக்கே தமிழ் இலக்கண நூலார் முக்கியத் துவங் கொடுத்துள்ளனர். ‘நான்', ‘நீ’, போன்ற தன்மை முன்னிலேச் சொற்களே வேற்றுமை உருபு ஏற்பதற்கு முன் 'என்', 'உன்' என மாற்றமடைகின்றன. இவற்றைத் தவிரத் தமிழ் மொழியிலே பெயர்ச் சொற்கள் வேற்றுமை உருபுகள் ஏற்குமிடத்து உருவமாற்றம் அடைவதில்லை .
இதனுலேயே நன்நூலார் வேற்றுமை பற்றிக் கூறுமிடத்து.
ஏற்கு மெல்வகைப் பெயர்க்கு மீருய்ப்பொருள் வேற்றுமை செய்வன வெட்டே வேற்றுமை
என்று 231-ம்சூரத்தித்திலே பொருள் வேற்றுமை செய்வன என்று பொருள் மாற்றத்துக்கு முக்கியத்துவங் கொடுக்கின் ருர் . தமிழ் மொழியைப் பொறுத்தவரையில் வேற்றுமை பெயர்ச்சொல்லின் பொருள் மாற்றத்துடனேயே சிறப்பாகத் தொடர்புறுத்தப்படுகின்றது. ஐ, ஆல், கு, இன், அது, கண் என்றெல்லாம் வேற்றுமை உருபுகள் கூறப்பட்டுள்ளன.
அவற்றுள் ஒவ்வொரு வேற்றுமையும் ஒவ்வொரு விசேடித்த
பொருளுடன் தொடர்புறுத்தப்பட்டுள்ளது. அப்படியிருந்தி போதும் வெறும் உருபுகள் பெயர்ச் சொற்களுடன் சேரு வதைச் சிறப்பாகத் தமிழ் இலக்கணநூலார் கருதவில்லை. என்ன உருபைச் சேர்ந்தாலும் அது பயக்கும் பொருளே முக்கியமானது என்பது தமிழ் இலக்கண நூலார் கொள்கை யாகும். இதஞலேயே,
யாத னுருபிற் கூறிற் றயினும் பொருள்சென் மருங்கின் வேற்றுமை சாரும்
என்று தொல்காப்பியரும்? நன்நூலாரும் 10 ஒருமித்துக் கூறியுள்ளனர். உருபுகள் அல்ல பொருளே முக்கியம் எண்று கூறுவதை நோக்குமிடத்துத் தமிழ் வேற்றுமை அமைப்பு சொற்ருெடரியல் அடிப்படையிலான சொல்லொழுங்கையும்

Page 103
176 தமிழ்மொழி இலக்கண இயல்புகள்
அச்சொற்களின் பொருளையும் அடிப்படையாகக் கொண்டே ஆரம்பத்தில்அமைந்திருக்கவேண்டும்போல்தென்படுகின்றது.
பெரும்பாலான மொழிகளிலே வேற்றுமையின் ‘இலக் கண" ச் செயற்பாடுகளெனப் பின்வருவனவற்றைக் குறிப் 29? L. L5) rTub:
பேசப்படுவதன் பெயர் (எழுவாய்) அதனுற் செய்யப்படும் பொருள் அது ஒரிடத்திலிருந்து நீங்குதல் அது ஒரிடத்தை அடைதல் அது ஒரிடத்திலே நிற்றல் அது ஒன்றை வைத்திருத்தல் அது ஒன்றுடன் செல்லுதல் அதனுடைய கருவியாதல் அது விளியாதல்
தமிழ் மொழியில் இவை யாவற்றையும் எட்டு வேற்றுமை களாகக் கூறியுள்ளனர். அது ஒன்றுடன் செல்லுதல் , *அதனுடைய கருவியாதல்" ஆகிய இரண்டும் தொல்காப் பியருடைய காலத்திலே ஒரே வகையான உருபுகளினுலே உணர்த்தப்பட்ட காரணத்தினுல், அவை இரண்டினேயும் மூன்ரும் வேற்றுமைக்குள் அடக்கிக் கூறினர். ஆணுல், பிற் காலத்திலே ஒடு, ஒடு, உடன் ஆகிய உருபுகள் உடனிகழ்ச்சிப் பொருளையும், ஆல், ஆன், கொண்டு ஆகிய உருபுகள் கருவிப் பொருளேயும் உணர்த்தி நிற்கின்றன. இவ்வாறு இருவகைப்பட்ட பொருளே ஒரு வேற்றுமையினுள் அடக்கி நன்னூலார் போன்ற இலக்கணநூலார் கூறியமை பொருத்த மற்றதெனக் கால்டுவெல் கூறியுள்ளார். கால்டுவெலினுடைய குற்றச்சாட்டின் பொருத்தப்பாட்டினையும் வேற்றுமை பற்றி நன்னூலாரும் அவருக்குப் பிற்பட்ட இலக்கணநூலா ரும் கொண்ட கருத்துக்களின் மதிப்பீட்டினையும் வேலுப் பிள்ளை நன்கு தெளிவுறுத்தியுள்ளார். 19
தமிழ் வேற்றுமை அமைப்பினே, வடமொழி வேற்றுமை அமைப்பினைப் பின்பற்றியே இலக்கணநூலார் அமைத்துள் ளனர் என்ற குற்றச் சாட்டுப் பலராலே முன்வைக்கப்

தமிழ் இலக்கண வகைமைகள்: பண்பும் பணியும் 17 7
பட்டுள்ளது. தொல்காப்பியர் வடமொழி வேற்றுமை அமைப்பை மாதிரியாகக் கொண்டே தமிழ் வேற்றுமை அமைப்பைக் கூறியுளளார்.
வீரசோழியம், பிரயோக விவேடம், இலக்கணக்கொத்து ஆகியவற்றின் ஆசிரியர்கள் தமிழ் வேற்றுமை அமைப் பினே வடமொழி வேற்றுமை அமைப்புடன் தொடர் புறுத்தி இலக்கணஞ் செய்துள்ளனர். இவர்களுள் காலத் தால் முந்தியவர் வீரசோழியகாரராவர். வேற்றுமை உருபு அளே பிரத்யயம் எனக் கூறும் வீரசோழியகாரர் தமிழ் முதலாம் வேற்றுமைக்கு சு, அர், ஆர், ஆங்கள், கள், மார் என்னும் உருபுகளும் ஒதியுள்ளார். தொல்காப்பியரும் நன்னூலாரும் திரிபில் பெயர் முதலாம் வேற்றுமை எனக் கொண்டனர். இதனுல், முதலாம் வேற்றுமைக்கு அவர்கள் உருபு எதுவுமே கூறவில்லை. ஆணுல், வீரசோழியகாரரோ
உருபுகள் கூறுகின்றார். இதன் காரணம் என்ன? வட
மொழியிலே அஷ்டாத்யாயி எழுதிய பாணினியின்படி சமஸ் கிருத மொழியில் ஒவ்வொரு சொல்லும் திங் அல்லது சுப் என்னும் ஈறுடனேயே முடிவடைய வேண்டும். திங் வினே யிருகவும் சுப் எழுவாயிருகவும் அமைகின்றன. இவை இல்லாமல் சொல் இல்லே அவ்வாறு ஈறு பெற்று வருவது சொல்லடி அல்லது ப்ரீதிபதிக எனப்படும். முதலாம் வேற்றுமையில் பெயர்ச்சொல்லுடன் சுப் என்னும் ஈறு சேர்ந்து, பின்னர் அது கெட்டுவிடும். அப்படியானல், அவ்வீறு ஏன் சேர்க்கப்பட வேண்டும்? எழுவாய்ச் சொல் லுக்கும் வேற்றுமை உருபுகளை ஏற்கவிருக்கும் சொல்லுக்கு மிடையே ஒரு வேறுபாட்டினேக் காட்டவே ஈறு சேர்க்கப் பட்டது. இவ் வடமொழி இயல்பினைப் பின்பற்றியே வீர சோழியகாரர் முதலாம் வேற்றுமைக்கு உருபுகள் ஒதி புள்ளார். தொல்காப்பிய உரைகாரரும் நன்னூல் உரை காரரும் எழுவாய் வேற்றுமையின் உருபுபற்றிக் விருத்துத் தெரிவித்துள்ளனர். சொல்லதிகார வேற்றுமையியல் முதற் சூத்திரத்துக்குரிய சேஞவரையர் உரைக்கு விளக்கக் குறிப்பு எழுதும் கணேசையர்,
த-23

Page 104
178 தமிழ்மொழி இலக்கண இயல்புகள்
இச்சூத்திர உரைக்கண் இனம் பூரணர், சேஞவ ரையர், நச்சினர்க்கினியர் என்னும் மூவரும் பயனிலை கோடலையும் பெயர்க்கு இலக்கணமாகக் கூறல் எவ்வாறு பொருந்தும்? எழுவாயுருபேற்ற பெயர் ஏரனை வேற்றுமை உருபுகளை ஏற்காது. ஆதலால் எழுவாயுருபேற்ற பெயரும் வேறு, ஏற்கா பெயரும் வேறு என்க. மயிலைநாதரும் நன்னூலுரையுள் (பெய - 39) பெயர் வேற்றுமையும் ஏனையுருபுகளை ஏற்குமால் அஃதொழித்த தென்னையோவெனின், பெயர் எழுவாயுருபாவது தன் பயனிலை தோன்ற நின்ற காலையன்றே, ஆண்டுப் பிற வுருபுகளை ஏலாது. ஏற்பின் தன் பொருண்மையும், ஏற்கும் உகு பின் பொருண்மையும் ஒருங்குடைத்தாதல் வேண்டும். அதஞற் பயனிலை கொள்ளாது நின்ற பெயரே உருபுகளை ஏற்குமெனக் கொள்க எனக்கூறல்
காண்க. சங்கர நமச்சிவாயரும் இவ்வாறே கூறுவர்.
என விளக்கங் கூறுவதை நோக்கலாம். முதலாம் வேற் றுமையினை வட மொழி அடிப்படையிலே விளக்கும் போக்கினைப் பிரயோக விவேகத்தார் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ் முதலாம். வேற்றுமைக்குச் சமஸ்கிருத நெறியிலே விளக்கங் கொடுப்பதை அவர் கண்டித்துள்ளார்.
தமிழ் வேற்றுமைகள் உருபனியல் அடிப்படையிலே பாகுபாடு செய்யப்படத்தக்கன. வேற்றுமை உருபு பெயர்ச் சொல்லுடன் சேருமிடத்து ஏற்படும் சொல்லுரு மாற்றத்தினை அனுசரித்து பாகுபாடு செய்வதற்கு, தமிழ் மொழியிலுள்ள வேற்றுமை உருபுகளின் எண்ணிக்கை உதவும். உதாரணமாக இக்கால வழக்கிலே அவன் என்னுஞ் சொல் பெறக் கூடிய வேற்றுமை உருபுகளாவன : −
அவன்+ஐ- அவனை அவன் + ஆல்- அவனல்
ஒடு } - அவளுேடு
உடன் ) - அவனுடன்
'''
அவன் + {
s

தமிழ் இலக்கண வகைமைகள் : பண்பும் பணியும் 179
அவன் + கு - அவனுக்ரு
, ( இல் - அவனிலிருந்து அவன் -- { இட்ம்+இருந்து டவனிட்ருேது உடைய ) - அவனுடைய ピs@M60fー+ t அது - அவனது
இல் ) - அவனில் அவன்+ { இடம் - அவனிடம்
என்பனவாகும். இக்காலத் தமிழ் மொழியிலே ஒரு சொல் குறைந்தது 13 அல்லது 14 மாற்றுருவங்களை வேற்றுமை உருபுகளின் சேர்க்கையினல் அடையக்கூடியதாயுள்ளது. இத்தகைய உருபனியல் எண்ணிக்கை வெறும் பெளதிக வடிவினை அடிப்படையாகக் கொண்டமைந்ததாகும்.
தொடரியல் அடிப்படையிலும் தமிழ் வேற்றுமைகளைப் பாகுபாடு செய்யலாம். வினை மாத்திரம் கொண்டு முடிவன. பெயர் மாத்திரம் கொண்டு முடிவது. இரண்டுங் கொண்டு முடிவன என வேற்றுமை ஏற்ற பெயர்ச்சொற்களைப் பாகு பாடு செய்யலாம். இரண்டாம், மூன்ரும், ஐந்தாம், ஏழாம் வேற்றுமை உருபுகளை ஏற்கும் சொற்கள் வினையைக் கொண்டு மாத்திரமே முடிவனவாகும்.
அவன் பாடத்தைப் படித்தான். அவன் பேனையால் எழுதினன். அவன் ஊரிலிருந்து வந்தான். அவன் தெருவில் நின்ருன்,
இரண்டாவது வேற்றுமையின் செயப்படுபொருளோ, மூன்று வது வேற்றுமையின் கருவி, உடனிகழ்ச்சிப் பொருளோ ஐந்தாம் வேற்றுமையின் நீங்கற் பொருளோ, ஏழாம் வேற்றுமையின் இடப்பொருளோ இவ் வினைச்சொற்களால் உணர்த்தப்படாவிடினும், சொற்ருெடரொழுங்கில் அவை
ஆழமைப்பு வடிவத்திலே வினைச் சொற்களைக் கொண்டே
முடிவடையவேண்டியுள்ளன. எனவே இந்நான்கு வேற்றுமை களும் வினைப்பயனிலை கொள்வனவாகும்.

Page 105
180 தமிழ்மொழி இலக்கண இயல்புகள்
ஆரும் வேற்றுமை பெயரால் மாத்திரமே முடிவடையக் கூடியதாகும். உடைமைப் பொருளை உணர்த்தும் இவ் வேற்றுமை உடைமைப் பண்பினையுடைய பெயரையும் உடைமைப் பொருளைக் குறிக்கும் பெயரையும் தொடரிலே அருகருகே வரப்பெற்றமைவன. கண்ணனுடைய புத்தகம் என்னுந் தொடரினை உதாரணமாசுக் காட்டலாம். உடைய என்னும் ஆரும் வேற்றுமை உருபேற்ற கண்ணன் என்னும் பெயர்ச்சொல்லும், புத்தகம் என்னும் உடைமைப்பொருளைக் குறிக்கும் சொல்லும் அருகிருகே இடம்பெற்றுள்ளன.
எழுவாய் வேற்றுமையாகிய முதலாம் வேற்றுமையும், நான்காம், ஏழாம் வேற்றுமைகளும் பெயர் முடிபினையும் வினை முடிபினையும் கொள்வனாேகும். எழுவாய் வேற்றுமை பெயர்ப்பயனிலை கொள்வது பற்றித் தமிழ் இலக்கணநூலார் தெளிவாகக் கூறியுள்ளனர்.
எனக்கு விருப்பம்.
அவனுக்கு வீட்டில் விருத்து. என்னும் மூன்று உதாரணங்களைத் தருகிருேம். முதல் வாக்கியத்தில் அது என்னும் எழுவாய் வேற்றுமை வீேடு என்னும் பெயர்ப் பயனிலை கொள்ளுகின்றது. இரண்டாவது வாக்கியத்தில் நான்காம் வேற்றுமை உருபாகிய கு ஏற்ற விக்கு என்னுஞ் சொல் விருப்பம் என்னும் பெயர் கொண்டு முடிகின்றது. மூன்ருவதில், ஏழாம் வேற்றுமை உருபாகிய இல்" ஏற்ற வீட்டில் என்னும் சோல் விருந்து என்னும் பெயர் முடிபு கொள்ளுகின்றது. இம் மூன்று வேற்றுமை களுமே வினைமுடிபுகளையுங் கொள்ளுகின்றன.
NW,
அது ஒடியது - எனக்குப் பசிக்கின்றது. அவன் வீட்டில் இருக்கிருன்,
ன்னும் மூன்று வாக்கியங்களையும். உதாரணங்களாகக் Lலாம். ஓடியது, பசிக்கின்றது, இருக்கிறன் என்னும் விஜன முடிபுகளை முறையே அது, எனக்கு, வீட்டில் என்னும் வேற்றுமைகள் கொள்கின்றன.
 

தமிழ் இலக்கண வகைமைகள் : பண்பும் பணியும் 181
தமிழ்மொழின் வேற்றுமை உணர்த்தும் தன்மைக்கும் யப்பானிய மொழியிலே வேற்றுமை உணர்த்தும் தன் மைக்கும் நெருங்கிய ஒற்றுமை காணப்படுகின்றது. இரு மொழிகளுமே ஒட்டு மொழிகளாகையால் பெயர்ச் சொல் லுடன் பல உருபுகள் அல்லது பின்னெட்டுகள் (இவை syži 3) a Postfixes J9|ábav, Postpositions 9gúb.) சேர்ந்து வேறுபட்ட பொருள்களே உணர்த்துகின்றன. உதாரண மாக யப்பானிய ‘ண்‘ உருபினையும் தமிழ் 'இன்' உருபி னையும் எடுத்துக் கொள்வோம்.
(அ) இவ்விரண்டும் பெயர்ச் சொற்களேத் தொடர்ந்து
செயல் நடைபெறும் இடைத்தினைக் குறித் நிற்கும். உதாரணங்கள் பின்வகுமாறு:
தமிழ்: "நீர்திகழ் சிலம்பின் ஒராங்கவிழ்ந்த
வெண்கூதாளம்' குறு. 282
யப்பான். 'மிஹ"னெணுெ யமனி இரு குமோ?, மன்யோக; 50
(தமிழில்); மிஹ"னெமலேயின் இருக்கும் முகில்
(-24) இரண்டும் காலத்தினையுணர்த்தும் சொற்களுக்
குங் பின்னே இடம்பெறுகின்றன: தமிழ்: "அவ்வெண் நிலவின் எந்தையும் உடை
C3 u urTrfb** up to. II 2 யப்பான்: *த்ஸ் குயொமிஞெ ஹிக்கரிணி
கிமஸ்ெ’ D252
(தமிழில்) "திங்களுடைய ஒளியின் (நீ) வருக,
(இ) இரண்டும் கருத்தாவை உணர்த்துவன:
தமிழ், மறங்கெழு தடக்கையின் வாங்கி"
குறு. 255 யப்பான்: 'ஹருஞெ அமெணி ஸ்கரி நரிகெரி , D66: l 444
(தமிழில்) இலேயுதிர்காலத்து மழையின் அலர்வித்தன.

Page 106
182 தமிழ்மொழி இலக்கண இயல்புகள்
(ஈ) இரண்டும் அடைதற் பொருளை உணர்த்துவன:
தமிழ்: **அருங்கடி மூதூர் மருங்கின் போகி'
முல்லை. 7
யப்பான்; ‘நனிஹபெனி ஹிதொனெ யுகெரெப'
மன், 275
(தமிழில்) நனிஹபெயின் அவன் சென்றபடியால்
(உ) இரண்டும் பெயர்ச்சொற்களுக்குப் பின்னர் ஒரு
பொருளின் தன்மையினை உணர்த்தும். இவ்
விடத்தில் இரண்டும் உவமையுருபுகளாயமை
கின்றன:
தமிழ்: "பகன் மதி உருவின் பகன்றை மாமலர்'
- ஐங்குறு. 456 யப்பான்: 'தஹெனெ ஹொனி யொருனெ
ஸிமொ புரி' மன். 79
(தமிழில்) வெள்விரிப்பின் இரவு உறைபனி
யப்பானிய மொழியிலே வேற்றுமை இத்தனை வகைப் படும் என வகுக்கப்படவில்லை. பதிலாக, அம்மொழியிலே
பெயர்ச்சொற்களுக்குப் பின் இடம் பெறும் உருபுகளை
*ஜொஷி என்ருெரு சொற்பாகுபாடாக வகுத்துள்ளனர். அச்சொற்ருெகுதியில் அடங்கும் ஒல்வொரு உருபும் எவ்
வெவ் வகையிலே பெயர்ச் சொற்களுக்குப் பின் வந்து
பல்வேறு பொருள்களைத் தருமென்று யப்பானிய இலக்கண நூலார் விளக்கியுள்ளனர். இத்தகைய ஒர் இலக்கண விவர னமே தமிழ் மொழிக்கும் பொருத்தமாக அமையுமெனக் கூறத் தோன்றுகின்றது. ஒட்டு மொழிகளல்லாத இரேக்க, லத்தீன், சமஸ்கிருத மொழிகளுக்கமைந்த வேற் றுமை அமைப்பினை ஒட்டு மொழியாகிய தமிழுக்கு மாதிரி யாகக் கொண்டமை பொருத்தமற்றதாகும்.
Vʻ,
 

தமிழ் இலக்கண வகைமைகள்: பண்பும் பணியும் 1.83
3. வினை
3-1 வினை என்றல் என்ன?
வினை என்ருல் என்ன என்பது பற்றித் தொல்காப்பியர் வகுத்துள்ள வரைவிலக்கணம் பற்றி ஆரும் இயலிலே குறிப்பிட்டுள்ளோம். தொல்காப்பியர் சொற்களே இரு பெரும் பாகுபாட்டினுள் அடக்குகின்றர். அவற்றுள் வேற்றுமை ஏற்பண பெயர் என்றும்; வேற்றுமை கொள் ளாதன வினை என்றும் கூறுவர். காலங்காட்டுவது, (அது வும் ஆராயுமிடத்துத்தான்) வினையின் சிறப்பான ஒரு பண்பாகும். இது பற்றியும் தொல்காப்பியர் குறிப்பிட் டுள்ளார். எனினும் தொல்காப்பியர் விதிமுகத்தாலே வினைக்கு வரைவிலக்கணம் கூருமல் எதிர்முகத்தாலேயே கூறியுள்ளார். வீரசோழியகாரர் வினை என்ருல் என்ன வென்று வரைவிலக்கணம் கூறவில்லை. சேனவரையர் பெயருக்கும் வினைக்குமுள்ள வேறுபாட்டைத் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளார். சொல்லேப் பெயரென்றும் வினை யென்றும் வகுக்குந் தொல்காப்பியச் சொல்லதிகார 158ஆம் சூத்திரத்துக்கு உரை வகுக்குமிடத்து,
*பிறசொல்லுமுளவாயினும், இவற்றது சிறப்பு நோக்கிப் * பெயரே வினையென்ருயிரண்டென்ப" வென்ருர், இவற்றுள்ளும் பொருளது புடை பெயர்ச்சி யாகிய தொழில் பற்ருது அப்பொருள் பற்றி வருஞ்
எனச் சேஞவரையர் குறிப்பிடுவர். வினையென்பது டொருளது புடைபெயர்ச்சியாகிய தொழில் பற்றியது என அவர் கருதுகிருர், சேஞவரையர் வினைக்குக் கூறும் வரை விலக்கணம் பல இடர்ப்பாடுகளை ஏற்படுத்துவதாயுள்ளது. பெயர்ச் சொற்களைப் போன்று வேற்றுமை உருபுகளே

Page 107
84
ஏற்காது. அதே வேளையில் “பொருளது புடை பெயர்ச்சி யாகிய தொழிலையும்’ பற்ருது அமையும் பல சொற்கள் தமிழ் மொழியிலே உள. அவற்றை எதனுள் அடக்கலாம்? சேனவரையருடைய வரைவிலக்கணத்தை ஏற்குமிடத்து இவ்விடர்ப்பாடு ஏற்படுகின்றது. இதஞலேதான் தொல் காப்பியர் தொழிலை அடிப்படையாகக் கொண்டு வினைக்கு ைேரவிலக்கணம் வகுக்காது விட்டிருக்க வேண்டும். தொழிலே அடிப்படையாகக் கொண்டு வினைக்கு வரைவிலக்கணங் கூறின், குறிப்பு வினை என்ருெரு பாகுபாடு தமிழிலே அமையமுடியாது போய்விடும். உதாரணமாக, அவன் அறிந்தான் என்னும் வாக்கியத்தில் இடம்பெறும் அறிந்தான் என்னும் வினை எவ்வித செயலையும் அல்லது தொழிலையும்
உணர்த்துவதாயில்லை, அவன் நல்லவன் என்பதிலுள்ள
நல்லவன் ஆகிய குறிப்புவினை எவ்வித செயலையும் உணர்த்து வதாயில்லை. இவ்வினைவடிவத்துக்கும் மகன் என்னும் பெயர் வடிவத்துக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. எனவே பெயர்ச் சொல்லிலிருந்து வினைச் சொல்லை வேறு படுத்துவது தொழில் அல்லது செயற்பண்பு என்று கூற முடியாதுள்ளது. காலங்காட்டும் பண்பினை அடிப்படையாகக் கொண்டு வினையைப் பெயரிலிருந்து வேறுபடுத்தலும் பொருத்தமாகத் தெரியவில்லை. தொல்காப்பியர் ‘நினையுங் காலைக் காலமொடு தோன்றும் என்றுதான் கூறியுள் grrri. இத்தகைய இடர்ப்பாடுகள் தொல்காப்பியர் வினைக்குக் கூறிய "வேற்றுமை கொள்ளாது" என்னும் எதிர்முக வரைவிலக்கணத்தாலே தோன்ற பாட்டா.
சேணுவரையரின் வரைவிலக்கணத்தை இலக்கணக் கொத்துரைகாரர் ஏற்றுக் கொண்டது மாத்திரமன்றி ‘இனி ஒரு பொருளின் புடைபெயர்ச்சியே வினையென்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்தது" என்றும் கூறியுள்ளார். நன்னூலார் இவர்களினின்று வேறுபட்ட முறையிலே வினைக்கு இலக்கணங் கூறுகிருர்,
செய்பவன் கருவி நிலஞ்செயல் காலஞ் செய்பொருளாறுந் தருவது வினையே!
பொருண்மூத லாறினுந் தோற்றிமுன் ஞறனுள் வினைமுதன் மாத்திரை விளக்கல் வினைக்குறிப்பே?
 
 

தமிழ் இலக்கண வகைமைகள் : பண்பும் பணியும் 185.
என்பன நன்னூலார் வினையின் வரைவிலக்கணங் கூறுஞ் சூத்திரங்களாகும். செயலுக்குக் கருவி, நிலம், காலம், செய்பொருள் ஆகியன அவசியம். இவ்வாறு செயலே அடிப் படையாகக் கொண்ட செயல் வினைகளை முதலாவது சூத் திரத்திலும், செயலில் வினைகளை இரண்டாவது சூத்திரத்தி லும் நன்னூலார் குறிப்பிடுகின்ருர் எனலாம். பொதுவாக வினைச்சொற்களை மூன்று வகையாகப் பாகுபடுத்தலாமென வும், அவை செயல் வினே, புடைபெயர்ச்சி வினை, நிலைப் பாட்டு வினை எனவும் ஜெஸ்பெர்ஸன் குறிப்பிடுகின்ருர்:
“As for their meaning, verbs are what Sweet oalls phenomenon words, and may be broadly divided into those that denote action (he eats, breathes, kills, speaks, etc.), those that denote some process (he becomes, grows, loses, dies, etc.) and those that denote some state or condition (he sleeps, remains, waits, lives, suffers, etc.), though there are some verbs which it is difficul, to includc in any one of these classes (he resistst scorns, pleases, etc.) . ” 13
தமிழ் வினைகளிலும் இத்தகைய வேறுபாடுகள் அமைந் துள்ளன. அவன் கட்டுகிறன், பாய்கிறன், வெட்டுகிறன் என்பவற்றையும்; அவன் வளர்கிருன், சாகிருன் என்பவற் றையும்; அவன் வாழ்கிறன், வருந்துகிறன், காத்திருக்கிருன் என்பவற்றையும் ஒப்பிட்டு நோக்குமிடத்து இம் மூன்று வகையான வினைகளுக்கிடையே வேறுபாடு தென்படுகின்றது. குறிப்பிட்ட ஒரு சொல் வினையை உணர்த்துகின்றதா என்பதனை அச்சொல்லுடன் ஒரு பெயர்ச் சொல்லினைச் சேர்த்து நோக்குமிடத்து உணர்ந்து கொள்ளலாம் (It is nearly always easy to see whether a given idea is verbal or no, and if we combine a verb with a pronoun ... ... or with a noun.) 6T6OT Ggah) Guiténair கூறுவர். 14 பெரியன் என்னுஞ் சொல்லினை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். பெரியன் வந்தான் என்று அச் சொல் வினையொடு சேர்ந்து வருமிடத்து வினேப் பயனிலை
த-24

Page 108
86 தமிழ்மொழி இலக்கண இயல்புகள்
கொண்ட எழுவாய் வேற்றுமைப் பெயராக அது கொள்ளப் படும். பெரியன் அவன் என்று இன்னுெரு பெயர்ச்சொல் லுடன் சேருமிடத்து, அவன் என்னும் எழுவாய்ப் பெய ருக்குப் பயனிலையாக அமைகின்றது. தமிழ் மொழியிலே பயனிலைகள் எல்லாம் வினைகளாகமாட்டா. பெயர்ப் பயனிலைகள் பற்றியும் தமிழ் இலக்கணநூலார் கூறியுள்ளார். ஆகவே ஜெஸ்டர்ஸ்ெனுடைய இப்பரிசோதனை தமிழ் வினை எது என அறிவதற்கு உதவக்கூடியதாயில்லை. எனவே, மேற்காட்டிய இடர்ப்பாடுகள் காரணமாக, தொல்காப் பியர் கூறிய 'வினையெனப்படுவது வேற்றுமை கொள்ளாது" என்னும் வரைவிலக்கணமே தமிழ் வினைகளுக்கு ஒரளவு பொருத்தமாக அமைகின்றது எனக் கூறலாம். தெரிநிலைகுறிப்பு என்னும் பாகுபாடு பற்றிப் பின்னர் ஆராயுமிடத்து இவ்விடயம் மேலும் தெளிவுறுத்தப்படலாம்.
*வேற்றுமை கொள்ளாது" என்பதஞலே, பெயர்ச் சோற்களுக்குப் பின்னலே இடம்பெறும் வேற்றுமை உருபு a gir (post positions) 6833rdigli 19sir(69G6) GuTLDIt LIT என்பதேயாகும். அவற்றுக்குப் பதிலாக இடைச்சொற் ருெகுதியிலே அடங்கும் வினைத்துணைகள் (auxiliaries) வினையடிக்குப் பின்னலே இடம்பெறும். உதாரணமாக, "இன்" உருபு பண்டைத்தமிழிலே வேற்றுமையுருபாகப் பெயர்ச்சொல்லுக்குப் பின்னலே இடம்பெறும். அதேவேளை யில் அது வினைத்துணையாக வினையடிக்குப் பின்னும் வரும்.
மலேயின் வீழ் அருவி வரின் தருவேன்.
என்னும் இருவாக்கியங்களிலும் அவற்றின் பயன்பாட்டினே
நோக்குக.
32 வினைப் பாகுபாடுகள்
தமிழிலக்கணநூலார் தமிழ் வினைகளை முற்றுவினை, எச்ச வினை என இரு பெரும் பிரிவுகளாகப் பாகுபாடு செய்வர்.

தமிழ் இலக்கண வகைமைகள் பண்பும் பணியும் 187
தொல்காப்பியர் இப்பாகுபாடு பற்றி விண்யியலிலே கூருது
எச்சவியலிலேயே கூறுகின்றர். சொல்லதிகாரம் 427-ம்
சூத்திரத்தில்,
இறப்பி னிகழ்வி னெதிர்வி னென்றச் சிறப்புட்ை மரபி னம்முக் காலமுந்
தன்மை முன்னிலை படர்க்கை யென்னு
மம்மூ விட்த்தான் வினையினுங் குறிப்பினு மெய்மை யானு மிவ்விரண் ட்ாகு மவ்வா றென்ப முற்றியல் மொழியே
என்று முற்றுவினைக்கு இலக்கணங் கூறுகின்ருர், ஆளுல், எச்சம் என்னும் பாகுபாடு வினைக்கு மட்டும் உரியதாகத் தொல்காப்பியர் கருதவில்லை. அவருடைய சொல்லதிகார 432-ம் சூத்திரம்,
பிரிநிலை வினேயே பெயரே யொழியிசை யெதிர்மறை யும்மை யெனவே சொல்லே குறிப்பே யிசையே யாயி ரைந்து நெறிப்படத் தோன்று மெஞ்சுபொருட் கிளவி
எனப் பல வகைப்பட்ட எச்சங்கள் பற்றிக் கூறுகிருர், பிரிநிலை உணர்த்தும் ஏகாரம், உம்மை போன்றன இடைச் சொற்கள் இவை வாக்கியத்திலே தனியாகத் 'தாமென வேறுணரப்பட" நிற்பன எனச் சேணுவரையர் கூறுவர். சொல்லதிகார வேற்றுமையியலில் "கூறிய முறையின் ." என்னுஞ் சூத்திரத்துக்கு உரைவகுக்குமிடத்து,
வினைச்சொ லிறுதிநிற்கு மிடைச்சொற் மூமென வேறுஉணரப்படாது அச்சொற்குறுப்பாய் நிற்குமன்றே, இவை (அதாவது வேற்றுமை உருபுகள். ←፵ቌ=ff) யவ்வாறு பெயர்க்குறுப்பாகாது தாமேன வேறுணரப் வட்டிறுதி நிற்குமென்பார் "நிலை திரியாது' என்ருர், 15

Page 109
188 தமிழ்மொழி இலக்கண இயல்புகள்
எனக் கூறிச்செல்கிருர். இடைச்சொற்களான வேற்றுமை உருபுகள் தனியாக நிற்குந் தன்மையுடையன (இதஞலே தான் பிராமிக் குகைக் கல்வெட்டுக்களில் வேற்றுமை உருபுகள் தனியாக எழுதப்பட்டிருக்க வேண்டும். இது பற்றி, 6ம் இயலின் இறுதிப் பகுதியிற் காணவும்.) எனக் கூறப்படுவதால், ஏகார உம்மை இடைச்சொற்களும் தனியாக நிற்குத் தன்மையன. அவ்வாறு அவை தனியாக நிற்பினும் எஞ்சு பொருட் கிளவிகளே. இவ்வாறு பல
வகைப்பட்ட எச்சங்களை எச்சவியலிலே கூறுந் தொல்காப்பி
யர் வினையெஞ்சு கிளவியினையும் பெயரெஞ்சு கிளவியினையும் பற்றி வினேயியலிலே கூறிய காரணத்தால், இவை இரண்டுமே வினைச்சொல்லுடன் தொடர்புடைய எச்சங்க ளென நாம் கொள்ள முடிகின்றது. லினே, பெயர் எச்சங் களுடைய வாய்பாடுகள், முடிபுகள்பற்றி மட்டுமே தொல் காப்பியர் கூறினரேயொழிய,18 வினையெச்சம், பெயரெச்சம் என்ருல் என்ன என்று கூறவில்லை.
முற்று, எச்சம் பற்றிய நன்னூலாருடைய சூத்திரங்கள் தெளிவுடையனவாயுள்ளன. முற்றுவிண் என்ருல் என்ன என்பதனை 323-ம் சூத்திரத்தில்,
பொதுவியல் பாறையுந் தோற்றிப் பொருட்பெயர் முதலறு பெயரல தேற்பில முற்றே
என விளக்குகின்றர். 340-ம் சூத்திரத்தில்,
செய்த செய்கின்ற செய்யுமென் பாட்டிற் காலமுஞ் செயலுந் தோன்றிப் பாலொடு
செய்வ தாதி யறுபொருட் பெயரும் எஞ்ச நிற்பது பெயரெச் சம்மே
என்று பெயரெச்சமென்றல் என்ன என்பதற்கு வரை விலக்கணங் கூறுகின்(?ர். இதேபோன்று 4ே2சம் சூத்திரத்தில்,
தொழிலுங் காலமுந் தோன்றிப் tால்வினை ஒழிய நிற்பது வினையெச் சம்மே

தமிழ் இலக்கண வகைமைகள்: பண்பும் பணியும் 89
என்று வினையெச்சத்துக்கு வரைவிலக்கணங் கூறுகின்ருர், இவ்விலக்கணங்களையே இலக்கணச் சுருக்க ஆசிரியர்,
"முற்றுவினையாவது: பால் காட்டும் விகுதியோடு கூடி நிறைந்து நின்று பெயரைக் கொண்டு முடியும் 6)2Oru u rrib ... ' 17
"பெயரெச்சமாவது, பால் காட்டும் முற்று விகுதி பெருத குறைச்சொல்லாய்ப் பெயரைக் கொண்டு முடியும் வினையாம். ’18
- வினையெச்சமாவது, பால் காட்டும் முற்று விகுதி பெருத றைச் சொல்லாய், வினைச்சொல்லைக் கொண்டு முடியும் வினையாம். 19 -
என இலகுவான உரைநடைத் தமிழிலே கூறியுள்ளார்.
எச்ச வினே அவை கொள்ளும் முடிபுக்கு ஏற்றபடி பெயரெச்சம், வினையெச்சம் எனப்பாகுபடுத்தப்பட்டுள்ளது. இப்பாகுபாடு சொற்ருெடரியல் அடிப்படையிலான பாகு பாடாகும். எச்ச வினை வடிவங்கள் அவற்றின் ஈறுகளையோ, வினையடிகளையோ கொண்டு உருபனியல் அடிப்படையிலே வேறுபடுத்தக்கூடியன அல்ல. அவை சொற்ருெடரிலே இடம்பெறும்போது, அவற்றைத் தொடர்ந்து வரும் சொற் களாலேயே இனங்காணப்படுகின்றன.
முற்று வினைகளைத் தமிழிலக்கணநூலார் பல்வேறு @l@ 秀 யிலே பாகுபாடு செய்துள்ளனர். அத்தகைய பாகுபாடுகள் சில உருபனியல் அடிப்படையிலும், வேறு சில சொற்ருெட
ரியல் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முற்று
வினைகளிலே உள்ள ஈறுகள் அல்லது உருபன்கள் திணை, பால், எண், இடம் ஆகியனவற்றை உணர்த்தவல்லன. அவ்வீறுகளின் அடிப்படையிலே முற்றுவினைகள் பின்வரும் பாகுபாட்டினைப் பெறுகின்றன
தன்மை ஒருமை படித்தேன் தன்மைப் பன்மை படித்தோம்
முன்னிலே ஒருமை படித்தாய்

Page 110
190 தமிழ்மொழி இலக்கண இயல்புகள்
முன்னிலைப் பன்மை : படித்தீர் ஆண்பால் ஒருமைப் படர்க்கை : படித்தான் பெண்பால் ஒருமைப் படர்க்கை : படித்தாள் பலர்பாற் படர்க்கை : படித்தார்கள் ஒன்றன்பாற் படர்க்கை : படித்தது பலவின்பாற் படர்க்கை : படித்தன
ஈறுகளினலே வேறுபடுத்தியமைக்கப்படும் இப்பாகுபாடு உருபனியல் அடிப்படையிலானதாகும். இவ்வாறு உருப னியல் அடிப்படையிலேயே உடன்பாடு எதிர்மறை, ஏவல். வியங்கோள் ஆகிய வினைப்பாகுபாடுகளும் அமைந்துள்ளன.
தமிழ் முதலிய திராவிட மொழிகளில் எதிர்மறை,
வினை வடிவத்தாலே உணர்த்தப்படுவதுபற்றி முதலாவது
இயலிலே சுட்டப்பட்டது. தமிழிலே எதிர்மறைப் பொருளை, வினை பல்வேறு வடிவங்களிலே உணர்த்துகின்றது. இல்லை என்னும் எதிர்மறைச் சொல் தமிழிலே உண்டு. இது அவன் வீட்டில் இல்லை என்னும் வாக்கியத்திலே தனியாக இடம் பெறுகின்றது. ஏனைய இடங்களில் வினையெச்ச வடிவத் துடனும் வினைப் பெயருடனும் துணைவினையாகச் சேர்ந்து எதிர்மறைப் பொருளை உணர்த்துகின்றது. உதாரணம்: அவன் பாடசாலைக்கு போகவில்லை; இன்று பாடசாலையில் படிப்பில்லை. வினைமுற்றுடன் இல்லை சேர்த்து வருவதுமுண்டு: நீ விழுந்தாயில்லை. அல்ல என்னும் வடிவமும் எதிர்மறை வினைமுற்ருக உபயோகப்படுகின்றது. தமிழ் இலக்கண நூலார் இல், அல், ஆ என்னும் எதிர்மறை இடைநிலைகளாலே தமிழ் வினை, எதிர்மறைப் பொருளே உணர்த்து மெனக் கூறியுள்ளனர். இவற்றுள், இல், அல் என்பன முறையே இல்லை, அல்ல என்னும் எதிர்மறைச் சொற் களின் திரிபு நிலைகளே. ஆனல் ஆ இடைநிலையின் தோற்றம் வளர்ச்சிபற்றி இவ்வாறு கூறமுடியாது. இன்று எம்முடைய பேச்சு மொழியிலே எதிர்மறை இடைநிலைகள் என்று எவற்றையும் கூற முடியாமலுள்ளது. அவ்வாறு கூறவேண்டிய தேவையுமில்லை எனலாம். தெரிநிலை வினை முற்றிலே காலங்காட்டும் இடைநிலைகள் வருவதும் வராம
*M
با نام |

தமிழ் இலக்கண வகைமைகள்: பண்பும் பணியும் 191
லிருப்பதும் ஆகிய நிலைகளைக் கொண்டு உடன்பாடு - எதிர் மறை வினைகளை வேறுபடுத்தக்கூடியதாயுள்ளது. உதாரண மாசுக் கீழே கொடுக்கப்படும் இரண்டு உதாரணங்களையும் ஒப்பிட்டு நோக்குக:
படிப்பான் : படி+ ப்+ஆன்
படியான் : Luig- +?+乌6茄
இன்று எம்முடைய பேச்சு வழக்கிலும், பெருமளவு எழுத்து வழக்கிலுமுள்ள வினைச் சொற்களை நோக்குமிடத்து, தெரி நிலை வினைச் சொற்களிலே காலங்காட்டும் இடைநிலைகளின் இன்மை எதிர்மறையை உணர்த்தும் என வரைவிலக்கணங் கூறக்கூடியதாயுள்ளது. ஒன்றன மறுக்கு மிடத்து ஒரு காலத்தில் மட்டும் மறுக்க முடியாது. மறுத்தல் மூன்று காலங்களையும் ஊடறுத்துச் செல்லுகின்ற காரணத் தாலேயே, காலங்காட்டும் இடைநிலைகளின் தோற்றம் உடன்பாடாகவும், அவற்றின் இன்மை எதிர்மறையாகவும் அமைகின்றன. உடன்பாடு - எதிர்மறை என்னும் பாகு பாடும், அவற்றின் உபயோகமும் சொற் ருேடரியல் அடிப் படையில் அமைந்தனவல்ல. உடன்பாடாகவுள்ள ஒரு வாக்கியம் எதிர்மறையாக மாற்றப்படுமிடத்துச் சொற்ருெட ரொழுங்கிலே எவ்வித மாற்றமும் ஏற்படுவதில்லை.
உதாரணம்:
அவன் இன்று இங்கு வருவான். அவன் இன்று இங்கு வரஈன்.
வினை வடிவத்தில் மாத்திரம் மாற்றம் ஏற்படுகின்றதே தவிர சொல்லொழுங்கிலே எம் மாற்றமும் நிகழவில்லை.
ஏவல்-வியங்கோள் என அமையும் வினைகள் பொரு ளமைதியிலே வேறுபாடு கொண்டமையினும், சொல் லொழுங்கிலே அவை மாற்றம் எதனையும் ஏற்படுத்துவன

Page 111
192 தமிழ்மொழி இலக்கண இயல்புகள்
வல்ல. ஏவல் வினை முற்றுக்கள் கட்டளை பிறப்பிப்பனவாக அமைவன. முன்னிலை ஒருமையிலே ஒரேயொரு பெயர்ச் சொல் இருந்த காலத்திலே ஒரேயொரு வினைவடிவமே இருந்தது. அது பேரும்பாலும் வினையடியாகவே அமைத்தது. உதாரணம்: நீ ஒடு. பிற்காலத்தில், நீர், நீங்கள் என்னும் முன்னிலையொருமை வடிவங்கள் தோன்றிய காரணத்தினல், ஏவல் வினை வடிவங்களிலும் மாற்றம் ஏற்பட்டன: நீர் ஒடும், நீங்கள் ஒடுங்கள் என ஏவல் வினை முற்றுக்கள் அமையத் தொடங்கின. வாழ்த்துவதற்கும் வைவதற்குமாக க, இயர், இய, அ, அல் என்னும் விகுதிகள் கொண்ட வியங்கோள் வினைகளை முன்னேர் உபயோகித்தனர். வாழ்க, வாழிய, வீழ்க, செல்க போன்ற பல வியங்கோள் வினைகள் இலக்கியங்களிலே கையாளப்பட்டுள்ளன. ஆனல், இன்று வியங்கோள் வினை என ஒரு தனிவடிவம் எமது எழுத்து வழக்கிலோ பேச்சு வழக்கிலோ இருப்பதாகத் தெரியவில்லை. அத்தகைய வடிவத்துக்குப் பதிலாக,
மணமக்கள் இன்புற்று வாழவேண்டுமென
வாழ்த்துகிறேன். இந்நூல் சிறப்புற்றமைய வாழ்த்துகிறேன்,
என அமையும் தொடர்களே உபயோகப்படுகின்றன முன்னிலை ஏவலிலேயே, நீங்கள் ஒடுங்கள், தாங்கள் அமருங்கள், நீங்கள் சாப்பிடுங்கள் என்னும் மரியாதைப் பண்பு வந்துவிட்ட காரணத்தினுலே, வியங்கோள் என்னும் தனியான வினையமைப்பின் தேவை இல்லாமற் போய் விட்டது.
வினைப்பாகுபாடுகளுள், சொல்லொழுங்கிலே பெரிதும் மாற்றங்களை ஏற்படுத்துவன செயப்படுபொருள் குன்றிய வினை-செயப்படுபொருள் குன்ரு வினை, தன்வினை-பிற
لا

.
ܥܲ)ܲ
தமிழ் இலக்கண வகைமைகள்: பண்பும் பணியும் 193
வினை, செய்வினை செயப்பாட்டுவிரை' என்னும் வினைப் பாகுபாடுகளாகும். இவற்றுள், செயப்படுபொருள் குன்றிய வினை-செயப்படுபொருள் குன்ரு வினை என்னும் பாகுபாட் டினை இனங்கண்டு தெளிவுற விளக்கியவர் ஆறுமுக நாவலரே யாகும். வினேயடிகளைப் பார்த்த மாத்திரத்தே அது செயப்படுபொருள் குன்றிய வினையா அல்லது குன்ரு வினையா எனக் கூறிவிடலாம். ஒடு, நட, இரு போன்ற வினைவடிவங்கள் ஒருபோதும் செயப்படுபொருள் கொள்வன வல்ல. ஆஞல், படி, அடி, உழு, வெட்டு போன்ற வினை வடிவங்கள் செயப்படுபொருள் கொள்வன.
அவன் ஒடிஞன்.
அவன் பாடம் படித்தான். என்னும் இரு வாக்கியங்களையும் உதாரணங்களாகக் காட்ட லாம். செயப்படுபொருள் குன்றிய வினையாகிய ஒடினுன் எழுவாய்ப் பெயருடன் மாத்திரம் வருகின்றது. அது
வேண்டுமெனில்,
அவன் வீட்டுக்கு ஒடிஞன். - அவன் வீதியில் ஒடிஞன்.
என்றெல்லாம் இரண்டாம் வேற்றுமை தவிர்ந்த ஏனைய வேற்றுமைகளையேற்ற பெயர்ச் சொற்களையும் பெற்று அமையும். ஆஞல், படித்தான் போன்ற வினைகள் ஏனைய
வேற்றுமைகளேற்ற பெயர்களன்றி, இரண்டாம் வேற்றுமை
யேற்ற பெயரினையும் கொண்டு முடியும். ஆகவே இவ் வினைப்பாகுபாடு எத்தகைய சொல்லொழுங்கு மாற்றத்தினை ஏற்படுத்துகின்றதென்பதை இதன் மூலம் உணரக் கூடியதா யுள்ளது -
தன்வினை-பிறவினை என்னும் பாகுபாடு எவ்வாறு சொற்ருெடரியலை அடிப்படையாகக் கொண்டது என்ப தற்குப் பின்வரும் உதாரணங்களை விளக்குவதன் மூலம் விளக்கங் கொடுக்கலாம்:
கூட்டம் நடந்தது. தலைவர் கூட்டத்தை தடத்தினர். * தலைவர் செயலாளர் மூலம் கூட்டத்தை நடத்துவித்தார்.
Y , , * த-25 §

Page 112
194 தமிழ்மொழி இலக்கண இயல்புகள்
இம்மூன்று வாக்கியங்களுள், முதலாவதிலே நடந்தது என்னும் செயப்படுபொருள் குன்றிய வினை இரண்டாவதிலே நடத்தினர் என்னும் செயப்படுபொருள் குன்ருவினையாகவும் பிற வினையாகவும் மாற்றமடைகின்றது. மூன்ருவதிலே நடத்துவித்தார் என்னும் இரட்டைப் பிறவினையாக அல்லது இயக்க வினையாக மாற்றமடைந்துள்ளது. மிகக் குறைந்த வஈக்கிய்டிைவின் அடிப்படையிலே தன்வினையும் செயப்படு பொருள் குன்றிய வினையுமாகிய நடந்தது இன்ஞெரு பெயர்ச்சொல்லுடனேயே இணைந்து அமையும், பிறவினை யாகிய நடத்தினுர் என்பதற்குக் குறைந்த அளவில் இரண்டு பெயர்ச் சொற்களாவது வேண்டியுள்ளது. நடத்துவித்தார் இரண்டுக்கு மேற்பட்ட பெயர்ச் சொற்களை அவாவியுள்ளது. பிற வினையாக்கம் தமிழ் மொழியிலே இரண்டு வகையிலே நடைபெறுகின்றது: (அ) நடந்தான், விழுந்தான், ஒடிஞன், போஞன், பாய்ந்தது என்னும் செயப்படுபொருள் குன்றிய வினைகள் மென்மை என்மையாதல், ஈறு இரட்டித்தல், பகுதி விகாரமடைதல் போன்ற மாற்றங்களால் முறையே நடத்தினுன், விழுத்தினுன், ஒட்டினுன், போக்கினுன், பாய்ச்சி யது என்னும் பிறவினைகளாக மாற்றமடைதல், (ஆ) படித் தான், செய்தான் என்னும் செயப்படுபொருள் குன்ற வினைகள் வி, பி என்னும் விகுதிகளேப் பெற்று முறையே படிப்பித்தான், செய்வித்தான் என்னும் பிறவினைகளாக மாற்றமடைகின்றன. தன்வினைகள் இவ்விருவகையிலும் பிற வினைகளாக மாற்றமடையுமிடத்துச் சொற்ருெடர் அமைப்பிலேயும் மாற்றமேற்படுத்துகின்றன.
செய்வினை -செயப்பாட்டுவினை பொருளடிப்படையிலே எவ்வித வேறுபாட்டினையும் கொள்ளாது, சொற்ருெடர் வடிவிலே பாரிய மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது. உதா ரணமாக, நான் மாம்பழம் சாப்பிட்டேன் என்னும் செய் வினை வாக்கியம் செயப்பாட்டுவினை வாக்கியமாக மாற்ற மடையும்போது மாம்பழம் என்னுல் சாப்பிடப்பட்டது என அமைகின்றது. சாப்பிட்டேன் என்னும் செய்வினை வடிவம் சாப்பிடப்பட்டது எனச் செயப்பாட்டுவினை வடிவமாக மாற்ற மடைகின்றது. செய்வினை செயப்பாட்டுவினையாக் மாற்ற

(s
தமிழ் இலக்கண வகைமைகள்: பண்பும் பணியும் 195
மடையும்போது செய்வினையின் எழுவாய் மூன்றும் வேற்று மைக் கருவிப் பொருளுணர்த்தும் உருபேற்ற வடிவமாக மாற்றமடைய, செய்வினையின் செயப்படுபொருள் எழுவா யாக மாற்றமடைகின்றது. இந்த வகையிலே செய்வினை. செயப்பாட்டுவினை வேறுபாடு சொற்ருெடர் அமைப்பிலே மாற்றத்தினை ஏற்படுத்துவதாயுள்ளது. '
4. வினையும் காலமும்
பெரும்பாலான மொழிகளிலே வினைவடிவங்கனாலேயே காலம் உணர்த்தப்படுகின்றது. இதஞலே பெரும்பாலான இலக்கணநூலார் வினையின் முக்கியமான பண்பாகக் கால முணர்த்துதலைக் கொண்டுள்ளனர். " ஆஞல், "கால வேறு பாட்டினை உணர்த்தாத வினை வடிவங்களையுடைய மொழி களும் உலகிலே காணப்படுகின்றன என்பதை நாம் மனங் கொள்ள வேண்டும். தமிழ் இலக்கணநூலார் வினையும் காலமும்" என்னும் விடயம்பற்றி என்ன கருதினர்? தொல்காப்பியர் வினைச் சொற்கள் எல்லாம் வெளிப்படை யாகக் காலத்தினை உணர்த்தும் எனக் கூறவில்லை. நினையுங் காலைக் காலமொடு தோன்றும் (வினையியல், சூ. 1) என்று தான் தொல்காப்பியர் கூறுகின்றர். இச் சூத்திரத்துக்கு நேர்ப்பொருள் கூறும் சேனவரையர் 'வினையென்று சொல்லப்படுவது வேற்றுமையோடு பொருந்தாது, ஆராயுங் காற் காலத்தோடு புலப்படும் என்றவாறு" எனக் கூறுவர். ஆணுல், ‘நினையுங் காலை' என்பதற்கு விளக்கவுரை கூறு மிடத்து, 'வினைச் சொல்லுள் வெளிப்படக் காலம் விளக்கா தனவுமுள. அவையும் ஆராயுங்காற் காலமுடைய வென் றற்கு, "நினையுங்காலே" என்ருர்." எனக் கூறுகின்றர்.
நினையுங்காலை" என்பது தொல்காப்பியரின்படி எல்லா வினைச்சொற்களுக்கும் பொருந்துவதாகவே அமைக்கப்பட்
டிருக்கவேண்டும். சேஞவரையர் கூறும் விளக்கவுரை பிற் கால வினைக்கோட்பாட்டை அடிப்படையாகக்கொண்டமை
இன்றதெனவே கூறலாம். தொல்காப்பியருடைய காலத்துக்கு
முன்னர் வினைச்சொற்கள் காலம் உணர்த்தாமல் அமைந் திருக்கலாம். தொல்காப்பியருடைய காலத்திலேயே அவை
காலமுணர்த்தும் பண்பினைப் பெற்றிருக்க வேண்டும்.

Page 113
196 தமிழ்மொழி இலக்கண இயல்புகள்
இதஞலேதான் நினையுங்காலைக் காலமொடு தோன்றும் என அவர் கூறவேண்டியேற்பட்டதெனலாம். இவ்வாறு வினைக்குப் பொதுவிலக்கணம் கூறிய தொல்காப்பியர் அடுத்துவரும் மூன்று சூத்திரங்களில்,
காலந் தாமே மூன்றென மொழிப.
இறப்பி னிகழ்வி னெதிர்வி னென்ற வம்முக் காலமுங் குறிப்பொடுங் கொள்ளு மெய்ந்நிலை யுடைய தோன்ற லாறே.
குறிப்பினும் வினையினு நெறிப்படத் தோன்றிக் காலமொடு வரூஉம் வினைச்சொ லெல்லாம்
LLLLLLLLS ALSLLL S ES iC iiS MLLL LLLLLLLLS ALSC0 L LLLLL LSL LLLLS 0SLLL 0S D SqqS qq LLLL LL LLLLLLLLSSS S C CS LLLLS0LSLLLLLLLL L0LL LL 0LL
என்று கூறிச்சென்றுள்ளார். இம்மூன்று சூத்திரங்கள் 'மூலமாக இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் மூன்று காலங் களையும் குறிப்பாகவே வினை உணர்த்தும் எனக் கொள்ள வேண்டியுள்ளது. எப்படியிருப்பினும் வினை காலமுணர்த் தும் என்பதனை மூன்ருவது சூத்திரத்திலே தொல்காப்பியர் அழுத்தமாகக் கூறியுள்ளார். ஆனல், காலத்தினை உணர்த் துதற்கு இடைநிலைகளையோ, விகுதிகளையோ தொல்காப் பியர் எங்கேனும் கூறினரில்லை. வெளிப்படையாகக் காலத்தை உணர்த்துகின்ற குறியீடுகள் எவையுமே அவ ருடைய காலத்து வினைச்சொற்களிலே இல்லாமலிருந்திருக்க வேண்டும். அதஞலேதான், அம்முக்காலமும் குறிப்பொடு கொள்ளும் என அவர் கூறியுள்ளார். எனவே, குறிப்பு வினை தெரிநிலை வினை என்னும் பாகுபாட்டுக்குத் தொல் காப்பியர் காலத்தை அடிப்படையாகக் கொள்ளவில்லை என்றே கூறலாம்.
மூன்று காலமுங் குறிப்பொடுகொள்ளுமெனத் தொல் காப்பியர் கூறுவதால் தெரிநிலை வினை தெளிவாகக் காலங் காட்டும், குறிப்பு வினை குறிப்பாகக் காலங்காட்டுமெனப் பிற்கால இலக்கணநூலாரின் கோட்பாட்டினைத் தொல்காப் பியர் கொண்டிருக்கவில்லை. வெளிப்படக் காலம் விளக்குவன வற்றைத் தெரிநிலை வினைவெனவும், வெளிப்படக்
*
}

( ,
(.
தமிழ் இலக்கண வகைமைகள்: பண்பும் பணியும் 197
காலம் விளக்காதனவற்றைக் குறிப்பு வினையெனவும் கொள்ளும் மரபு தொல்காப்பிய உரைகாரர் எல்லோரிடமுங் காணப்படுகின்றது. தொல்காப்பியர் குறிப்புக்கும் வினைக்கு முள்ள வேறுபாட்டினை ஏற்படுத்துவதற்குக் காலத்தைக் கொள்ளாது தொழில் நிகழ்ச்சியையே கொண்டுள்ளார். இக்கருத்தினையே நன்னூலாரும் பின்பற்றியுள்ளார். அவ ருடைய தெரிநிலை வினை பற்றிய சூத்திரமும் (320) குறிப்பு வினை பற்றிய சூத்திரமும் (321) இதனையே வலியுறுத்து கின்றன. அத்துடன், முற்றுவினை பற்றி இலக்கணங் கூறுமிடத்து,
பொதுவியல் பாறையுந் தோற்றிப் பொருட்பெயர் முதலறு பெயரல தேற்பில முற்றே (கு 323)
என்றே கூறியுள்ளார். இங்கு அவர் தெரிநிலை குறிப்பு என்னும் பாகுபர்ட்டினை வலியுறுத்தவில்லை. அப்படி வலி யுறுத்தாவிடில் தொல்காப்பியர் கூறியதுபோல இரண்டுமே காலங்காட்டுவன; ஆளுல் அவற்றினுடைய வேறுபாடு தொழில் நிகழ்ச்சியே என உய்த்துணர வைக்கின்ருர், பிற்கால இலக்கணநூலார் யாவருமே தெரிநிலை-குறிப்பு என்பன காலத்தைக் காட்டும் பண்பினலேயே வேறுபடு கின்றன எனக் கூறுவர். இத்தகையோருடைய கோட்பாட் டினை நன்கு விளக்குவனவாக ஆறுமுகநாவலர் இலக்கணச் சுருக்கத்திற் கொடுத்துள்ள வரைவிலக்கணங்கள் அமை கின்றன (234, 235):
*தெரிநிலை வினையாவது, காலங்காட்டும் உறுப் புண்மையாலே, காலம் வெளிப்படத் தெரியும்படி நிற்கும் வினையாம்."
குறிப்பு வினையாவது காலங்காட்டும் உறுப்பின்மை யினலே, காலம் வெளிப்படத் தெரிதலின்றிச் சொல்லு வோனது குறிப்பினலே தோன்றும்படி நிற்கும் Garuruh. "
தெரிநிலை-குறிப்பு என்னும் வேறுபாடு தொல்காப்பியர் காலத்திலேயே தோன்றிவிட்டது. ஆனல், அது காலத்தை

Page 114
198 தமிழ்மொழி இலக்கண இயல்புகள்
அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. அப்படியெனில் குறிப்புவினை என்ருெரு பாகுபாடு எவ்வாறு தோன்றியிருக்
கலாம்? பின்வரும் வாக்கியங்களை நோக்குக !
1. I asalur 6VT säT கதிரையில் இருக்கிருன் 2. கண்ணன் வீட்டில் இருக்கிருன்
WW - WW...]
இவ்விரு வாக்கியங்களிலும் இரு என்னும் வினையடியாகப் பிறத்த நிகழ்கால வினைமுற்ருகிய இருக்கிறன் என்பது உப யோகிக்கப்பட்டுள்ளது. முதலாவது வாக்கியத்திலே “இருத் தல்" என்னும் தொழில் நடைபெறுகின்றது. ஆனல், இரண்டாவது வாக்கியத்தில் 'இருத்தல்" என்னும் பொருண்மை சுட்டப்படுகின்றது. இரண்டுமே கால முணர்த்தியபோதும், ஒன்றிலே "வினைநிலை உண்டு; மற்றை
யதிலே "பொருண்மை சுட்டல் உண்டு. 'வினைநிலை"
உணர்த்துஞ் சொல்லைத் தெரிநிலை வினையாகவும்,
*பொருண்மை சுட்டும் சொல்லைக் குறிப்பு வினையாகவும்
கொள்ளலாம். தொல்காப்பியர் எழுவாய்ப் பெயருக்குப் பயனிலையாக வருவன எனக் கூறும் : பொருண்மை கட்டல், வியங்கொள வருதல், வினைநிலையுரைத்தல், வினுவிற் சுேற்றல், பண்புகொள வருதல், பெயர்கொள வருதல் என்பனவெல்லாம் அவராலே வின்ேகளாகக் கொள்ளப்பட்
டிருக்க வேண்டும். இதனுல், வினை நிலையுரைக்குஞ் சொற்களை
ஒரு பகுதியாகவும், ஏனையவற்றை வேருெரு பகுதியாகவுங் கொள்ளவேண்டி ஏற்பட்டிருக்கலாம். வினை நிலையுரைக்குஞ் சொல் தவிர்ந்த ஏனையவை குறிப்பு வினைகளெனத் தொல் காப்பியராற் கருதப்பட்டிருக்க வேண்டும்."
குறிப்பு வினை பற்றிய புதிய கோட்பாடு ஒன்றின்
முன் வைக்கும் K. P. அருணுசலம் குறிப்பு வினை காலத்
தின் அடிப்படையிலேற்பட்டி பாகுபாடு எனின் அது
வினைக் குறிப்பு' என்று கூறுகதை விடக் கடலக் குறிப்பு என்று கூறுவதே பொருத்தமெனக் கூறியுள்ளார்.20 பொது வாக வினை தொழிலே வெளிப்படையாக உணர்த்தும்; குறிப்பு வினை தொழிலைக் குறிப்பாக உணர்த்தும் இக்கருத் தினேயே அருணுசலம் பல சான்ரு தன்ரங்கள் காட்டித் தன் கட்டுரை மூலம் முன்வைத்துள்ளார்."
,
إليك
﴿وہ
 
 
 
 
 
 

a
தமிழ் இலக்கண வகைம்ைகள்: பண்பும் பணியும் 199
அடிக்குறிப்புக்கள்
1. தொல்காப்பியம், சொல்லதிகாரம், சூ. 11, கணேசையர்
விளக்கவுரை.
2. Sapir, Edward. , Language, p. 119
3. தொல்காப்பியம், சொல்லதிகாரம், கு. 160
4. வேலுப்பிள்ளை, ஆ , தமிழ் வரலாற்றிலக்கணம்,
LJ . I 28 - 141
5. நன்னூல், சூ, 132
6. தொல்காப்பியம், சூ. 66, சேஞவரையருரை
7. Lyons, J., introduction to Theoretical Linguistics,
p. 289
8. bid -
9. தொல்காப்பியம், சொல்லதிகாரம், சூ. 106
10. நன்னூல், சூ. 317
11. மேற்படி, சூ. 320
12. மேற்படி, சூ. 321
13. Jesperson, Otto. , The Philosophy of Grammar, p. 86
14. A bid
15. தொல்காப்பியம், சொல்லதிகாரம், சூ. 69, சேணு
வரையருரை.
16. மேற்படி, சூ. 228 - 239
17. ஆறுமுகநாவலர், இலக்கணச் சுருக்கம், ப. 112
. . . . 18. மேற்படி, ப. 125
19. மேற்படி, ப. 128
20. Arunachalam, K. P. “A New Theory on Appellative
Werb, ' 1971.

Page 115
தமிழ் வாக்கிய அமைப்பு
1. தமிழ் இலக்கணநூலார் மரபு
தமிழ் வாக்கியம் பற்றி எமது தமிழ் இலக்கணநூலார்
என்ன கருதினர்கள் என்பதுபற்றித் தெளிவான விளக்க
மெதுவும் இதுவரை காலமும் வெளிவரவில்லையெனலாம். இன்று எழுதப்படும் தமிழ் வாக்கியங்களின் அமைப்புப் பற்றியும் எவரும் இன்னும் தெளிவாக விளக்கினரில்லை.
தமிழ் இலக்கணநூலார் தமிழ் வாக்கியம் இத்தகைய உறுப்புக்கள் கொண்டு எவ்வித ஒழுங்குகளிலே அமையுமென ஒர் அதிகாரத்திலே தொகுத்துக் கூறவில்லை. பல அதிகாரங் களிலே கூறப்பட்ட செய்திகளை அடிப்படையாகக் கொண்டு நாம் பல விடயங்களை உய்த்துணரவேண்டியுள்ளது. தமிழ் வாக்கியத்தின் அடிப்படை உறுப்புக்கள் பற்றிய விபரங்கள் பலவற்றை வேற்றுமைபற்றிக் கூறும் சந்தர்ப்பத்திலேயே தமிழ் இலக்கணநூலார் தெளிவுபடுத்தியுள்ளனர் என்க் கூறலாம். ,*
வேற்றுமைபற்றித் தமிழ் இலக்கணநூலார் கூறுமிடத்து முதல் வேற்றுமையினை எழுவாய் வேற்றுமையென்றும், அவ்வெழுவாயாகப் பெயர்ச்சொல்லே அமையுமென்றும் கூறியுள்ளனர். நன்னூலார் அப்பெயர்ச்சொல் 'திரிபில் பெயரே" என்பர் 2 இவ்வாறு பெயர்ச்சொல் எழுவாயாக அமைய, அதன் பயனிலையாக வினேச்சொல்லோ, பெயர்ச்
1 yܬ
 

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 20座
சொல்லோ, விஞச்சொல்லோ வந்தமையும் என எல்லாத் தமிழ் இலக்கணநூலாரும் கூறியுள்ளனர். தமிழ் வாக்கிய
எழுவாயும் பயனிலையுமே என்பது இவற்றினலே பெறப்படு கின்றது, ه.
− பெயர் + வினை ; செந்தூரன் பாடினன்.
பெயர் + பெயர் செல்வி அழகி. பெயர் + வினு ; நங்கை எங்கே?
என்னும் வகையிலே தமிழ் வாக்கியங்கள் பெரும்பாலும் அமைகின்றன. ஏனைய உலக மொழிகளிலும் இவ்வாறே வாக்கியங்களின் அடிப்படைக் கூறுகள் அமைந்துவிடுகின்றன. எழுவாய் என்பது கருத்தாகவும் (Topic) பயனிலை என்பது கருத்து விளக்கமாகவும் (Comment) அமைவதாக மொழி யியலார் குறிப்பிட்டுள்ளனர். உதாரணமாக செந்தூரன் பாடிஞன் என்னும் வாக்கியத்திலே, செந்தூரன் தருத்தாக வும் பாடிஞன் கருத்துவிளக்கமாகவும் அமைகின்றது. எழு வாயும் பயனிலையுமே வாக்கியமொன்றணின் மூலக்கூறுகளாக அமையுமென மொழியியலார் கருதுகின்றனர். ஆணுல் மேலெழுத்தவாரியாகத் தமிழ் வாக்கியங்களை நோக்கு மிடத்துப் பயணிலே இன்றி வாக்கியங்கள் அமைவதையும், எழுவாயின்றி வாக்கியங்கள் அமைவதையும் நாம் கண்டுள் ளோம். வினவொன்றுக்கு மறுமொழி கூறுமிடத்து இத் தகைய வாக்கியங்கள் தமிழிலே அமைவதுண்டு. செந் தூரன் என்ன செய்தான்? என்னும் வினவுக்கு விடை கூறும் போது பாடிஞன் என்று ஒரு சொல் வாக்கியமாக விடை கூறுவதும், யார் பாடிஞன் என்னும் வினவுக்குச் செந்தூரன் என்று ஒரு சொல் வாக்கியமாக விடை கூறுவதும் வழக்கம். ஆனல் அவ்விரு மறுமொழிகளின் ஆழமைப்பிலே முறையே எழுவாயும், பயனிலையும் இருப்பது கண்கூடு
செல்வி அழகி என்னும் வாக்கியம் செல்வி அழகி,ஆணுள் அல்லது செல்வி அழகி ஆவாள் என்றே அமையவேண்டு மென்னுங் கருத்துப் பொதுவாக இக்காலத்திலே நிலவி வருதலை தாழ் அறிவோம். உதாரணங்கள் சில்வற்றை இங்கு தகுதல் பொருத்தமென எண்ணுகிறேன்.
த-26

Page 116
80ዷ தமிழ் வாக்கிய அமைப்பு
"மற்றவர்க்கு இன்பமும் துன்பமும் வாழ்வின் இரு pians sir. 4 என்று வாக்கியமொன்றன எழுதும் டாக்டர் மு. வரத ராசனே தான் எழுதிய அதே நூலில்,
"அவளே ஒருவனுடைய வாழ்க்கைத் துணைவி ஆனபிறது அவனுடைய துன்பத்திற்காகவிடும்-கண்ணிர் துறவிகளின் நெஞ்சத்தையும் கலக்கும் சிறப்புடைய தாகும்* .
என்று எழுதிச் சென்றுள்ளார். அவர் எழுதிய முதல் வாக்கியத்தினைப் போன்று,
*அவளே ஒருவனுடைய வாழ்க்கைத் துணைவி ஆன பிறகு அவனுடைய துன்பத்திற்காக விடும் கண்ணிர் துறவிகளின் நெஞ்சத்தையும் கலக்கும் சிறப்பு உடை
யது. *
என்று எழுதியிருக்கலாமே. ஆகும் என்னும் ஆக்கவினைச் சொல் அங்கு வரவேண்டிய தேவை என்ன என்பதுபற்றி நாம் ஆ!ாய்வது பயனுடைத்தாகும். ஆ என்னும் தமிழ் வினையடியிலிருந்து பிறக்கும் ஆகும், ஆனது, ஆகியது, ஆவாள், ஆனுள், ஆன, ஆகிய போன்ற வினைவடிவங்கள் இக்காலத் தமிழ் மொழியிலே பெருமளவு கையாளப் படுகின்றன. இத்தகைய வினைவடிவங்களுள் முற்று வடிவங் களைத் தமிழ் வாக்கியங்களின் இறுதியிலே இன்று கையாளு வதற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம்.
முதலாவது காரணம் எம்மூடைய தமிழ் இலக்கண நூலாருடைய மரபேயாகும். தமிழ் வாக்கியமொன்றினிலே அமையும் எழுவாய் எப்பொழுதும் வினையொன்றினலேயே முடிவடையும் எனத் தமிழ் இலக்கணநூலார் எங்கும் கூறின ரில்லை. அதற்குப் பதிலாக வினை, பெயர், வின ஆகிய மூன்றில் ஒன்று பயனிலையாக அமையுமெனவே அவர்கள் கூறியுள்ளனர். ஆணுல், தொல்காப்பியர் தொடக்கம் இலக்கணச் சுருக்க ஆசிரியர் வரை ஆக்கச் சொல் பற்றிச் சில வரையறைகள் செய்துள்ளனர். தொல்காப்பியர் தன் னுடைய சொல்லதிகர்ரத்திலே,

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 209
இயற்கைப் பொருளே யிற்றெனக் கிளத்தல் (சூ. 19)
என்று கூறியுள்ளார். இய்ற்கையாகத் தன்னுடைய இயல்
பிலே திரியாத பொருளினைக் கூறுமிடத்து அதற்கு ஆக்கமுங் காரணமுங் கொடாது இத்தன்மைத்து என்னுந் தொனி பயப்பதாகக் கூறவேண்டுமென்பது தொல்காப்பியர் கருத் தாகும். நிலம் வலிது, நீர் தண்ணிது, தீ வெய்து என்னும் உதாரணங்களை இச்சூத்திரத்திற்கு உரையெழுதிய சேனல் ரையர் வழங்கியுள்ளார். காரண்மில்லாது மாற்றமெதுவும் ஏற்படாத பொருளைக் குறிக்குமிடத்து ஆக்கச் சொல் தேவை யில்லை என்பது ஆதித்தமிழ் இலக்கண ஆசிரியராகிய தொல் காப்பியரின் கருத்து. இதனையே அவர் அடுத்த சூத்திரத்திலே நிறுவுகிருர்,
ஆக்கந் தானே காரண முதற்றே (சூ. 20) என்பது தொல்காப்பியச் சூத்திரம். காரணம் பற்றி
செயற்கைப் பொருட்களிலே மாற்றமேற்படுமிடத்து ஆக்கச் சொல் இடம்பெற வேண்டுமென்பது தொல்காப்பியர்.
கருத்து. டாக்டர் மு. வரதராசன்
இத்தகைய சிறப்பு இந்தக் கண்ணிருக்கு அமைந்த காரணம் தம் துயர் மறந்த பிறர் துயருக்காக உருகும் அளவிற்கு நெஞ்சம் வளர்த்த வளர்ச்சியே ஆகும்.' என்று எழுதியுள்ள வாக்கியம் தொல்காப்பியரின் இலக் கணத்துக்கு நல்லதொரு இலக்கியமாகும். ஆனல், ஆதித் தமிழ் இலக்கண ஆசிரியராகிய தொல்காப்பியரே இக்கருத் தினை முடிந்த முடிபாகக் கொள்ளவில்லே என்பதை அவரு டைய அடுத்த சூத்திரமாகிய,
ஆக்கக் கிளவி காரண மின்றியும் போக்கின் றென்ப வழக்கி னுள்ளே என்பதஞலே தெளிவுறுத்துகிருர். இவ்வாறு ஆக்கவினை பற்றித் தொல்காப்பியர் மூன்று சூத்திரங்களிலே கூறிச் செல்ல, அவர் பின் வந்த நன்னூலாரோ

Page 117
204 தமிழ் வாக்கிய அமைப்பு
ஆக்க வினைக்குறிப் பாக்கமின் றியலா என்று அறுதியிட்டுக் கூறினர். ஆனல் நன்னூல் உரை E; frg Grfr,
சாத்தனல்ல ஞயினுன் சாத்த எல்லன்
என்று. உதாரணங்கள் கொடுத்துள்ளார். நன்னூல் உரை காரருடைய உதாரணங்களின்படி எதற்கும் ஆக்கவினை கொடுக்கலாம் அல்லது விடலாம். தொல்காப்பியருடைய காரண காரிய ரீதியான மரபு இங்கு கடைப்பிடிக்கப் படவில்லை. இதனல், எங்கு ஆக்கவினைகொடுக்க வேண்டும் எங்கு கொடுக்க வேண்டியதில்லை என்பதிலே மயக்கம் ஏற் பட்டது. இத்தகைய மயக்கமே இக்காலத் தமிழிலும் காணப்படுகின்றது. இம் மயக்கம் பற்றி நோக்குமிடத்திலே தான் ஆக்க வினைமுற்று வடிவங்க்ள் இன்று தமிழ் வாக் கியங்களின் இறுதியிலே கையாளப்படுவதின் இரண்டாவது காரணம் பற்றி நாம் சித்திக்க வேண்டியுள்ளது.
ஆங்கில மொழியுடன் ஏதோ வகையிலே தொடர்பு கொண்டுள்ளவர்களாக இன்றைய கல்வி கற்றேர் யாவரும் அமைகின்றனர். ஆங்கில மொழியிலே ஒரு ஜாக்கியம் வினை இன்றி அமையவே மாட்டாது ஆங்கிலந்தெரிந்தவர்கள் தமிழ் படிப்பதற்காக நன்னூல் இலக்கணத்தை ஆங்கிலத் தில் எழுதிய போப் ஐயர் போன்றவர்கள் தமிழ் வாக்கியம் ஒவ்வொன்றும் வினை கொண்டு முடிவடையும் பண்பினை விதந்து கூறினர். நாளடைவில் அது வழக்கமாக வந்ததின் காரணத்தினுல், இன்று, ஆகும், ஆசீனது, ஆயின, ஆனுள், ஆணுள், ஆயினர்ர், ஆயிற்று போன்ற வினைவடி? நீங்களே வாக்கியங்களின் இறுதியிலே உபயோகிக்கப் பழகிக் கொண் டோம் .
2. ஒட்டுமொழி வகையைச் சார்ந்தது தமிழ்
பத்தொன்பதாம் நூற்றுண்டில் உலக மொழிகளை அவற்றின் வடிவுடைமை நோக்கித் தனிமொழி, ஒட்டு மொழி, விகுதிமொழி எனப் பாகுபாடு செய்தனர் என்று
ܐ ܪ
 

(
தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 205
மூன்னர் குறிப்பிட்டோம். ஒட்டு மொழிக்குத் துருக்சி மொழியை மொழியியலார், ஒரு சிறந்த ஆதாரணமாகக் காட்டுவர். தமிழ் உட்பட திராவிட மொழிகளையும் ஒட்டு மொழிகளெனக் கொள்வர். ஒட்டு மொழிகளின் பண்பு digiriranae : 1. வேர்ச்சொல்லுடன் இணைக்கப்படும் உருபன்கள் தம் முடைய ஒலியியல் தனித்துவத்தினைப் பேணுவனவாக அமைதல்; 11. ஒரு சொல்லின் வடிவத்தினை நோக்குமிடத்து அதன் உறுப்புக்களை உடனடியாக இனங் கண்டு கொள்ளுதல் 11. சொல்லில் அடங்கியுள்ள ஒவ்வோர் உறுப்பும் ஒவ்வோர்
உருபணுக அமைதல்.
தமிழ் மொழியில் மேற்படி பண்புகள் எவ்வாறமைந்துள்ளன என்பதை நோக்குவோம். முதலாவது பண்பாகிய ஒலியியல் தனித்துவம் தொடர்பாகத் தமிழ்மொழியிலிருந்து சில உதாரணங்களைக் காட்டலாம். தமிழிலே பன்மை உணர்த்
தும் உருபன் { கள் ஆகும். மூன்றம் வேற்றுக9ம கருவிப்
பொருளை உணர்த்த ஆல் உடனிகழ்ச்சிப் பொருளு
ணர்த்த solileir ஆகிய உருபன்கள் உபயோகப்படுகின்
றன. கத்தி என்னும் 'திரிபில் பெயர்’ எனப்படும் எழுவாய் வேற்றுமைச் சொல், மூன்ரும் வேற்றுமை, ஒருமை, கருவிப் பொருள் ஆகியனவற்றை உணர்த்து மிடத்து கத்தியால் என அமையும், கத்தி + ஆல் என்னு மிடத்தில் உடம்படு மெய்யாக "ய்" இடம்பெறுவது தமிழ் மொழியின் புணர்ச்சி விதிகளின் விளைவாகும். மூன்ரும்
வுேற்றுமை கருவிப் பொருளையும் பன்மையையும் உணர்த்
தும் வகையிலே கத்திகளால் என்னுஞ் சொல் அமைய
லாம் கத்தி+சுள் + ஆல் என்னும் வகையிலே அச்சொல்லின் உறுப்புக்களை நாம் பிரித்து நோக்குமிடத்து ஒவ்வொரு உறுப்பினுடைய ஒலியியற் பண்பும் சொல்லிலே பேணப் பட்டிருப்பதைக் காணலாம்.

Page 118
206 தமிழ் வாக்கி அமைப்பு
இரண்டாவதான, ஒரு சொல்லின் உறுப்புக்களாக அமையும் உருபன்களை உடனடியாக இனங்கண்டு கொள்ளும் பண்பினைத் தமிழ் மொழியின் வினைச் சொல் ஒன்றினை உதர்ரணங்காட்டுவதன் மூலம் விளக்கலாம். இக்காலத்திலே வந்துகொண்டிருக்கின்றர்கள் ஏன்பது ஒரு கூட்டுவினைச் சொல்லாகத் தமிழ் மொழியிலே பயன்படுத்தப்படுகின்றது. இத்தகைய ஒரு வினைச்சொல்லை, வந்து + கொண்டு+இரு + கின்று + ஆர்+கள் எனப் பாகுபாடு செய்துகொள்வதற்கு அலற்றின் உறுப்புக்களை இனங்கண்டுகொள்ளக் கூடியதாக உள்ளது, இவற்றில் வா என்பது வேர்ச்சொல்லாகவும், அதன் அடியிலிருந்து பிறந்த வினையெச்சமாகிய வந்து என்பதுடன் கொள். இரு ஆகிய துணே வினைகளை ஒட்டி கின்று என்னும் நிகழ்கால உருபனைச் சேர்த்து, ஆர், கள் ஆகிய பன்மை உருபனக்ளே இணைத்துத் தற்கால வினைச் சொல் ஒன்று ஆக்கப்படுகின்றது.
மேற்காட்டிய உதாரணங்களில், அதாவது
கத்தி+ஆல் கத்தி+கள் + ஆல் வந்து+ கொள் + இரு+கின்று + ஆர்+கள்
என்பனவற்றில் ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வோர் உருபளுக அமைகின்ற தன்மை ஒட்டு மொழிகளின் மூன்ருவது பண்பு என்னும் வகையிலே தமிழ் மொழியிலும் அமைந்துள்ளது என்பதை எடுத்துக் காட்டுகின்றது.
தமிழ்மொழி ஒட்டுமொழி வகையைச் சார்ததெனக் கூறினும், அம்மொழியிற் சில சந்தர்பங்களிலே அவ் வொட்டுமொழிப் பணபு காணப்படாமலுள்ளமையினையும் இங்கு சுட்டிக்காட்டுதல் வேண்டும். உதாரணமாக, 5, நீங்கள், நான், நாங்கள் ஆகிய முன்னிலை தன்மை இடப் பெயர்கள் வேற்றுமை உருபுகளை ஏற்று வருமிடத்து அவற் றில் ஒட்டு மொழிகளுக்கு முன்னர் கூறிய மூன்று பண்பு சுளேயுமே காணமுடியாது. அப்பெயர்கள் வேற்றுமை உருபுகள் ஏற்பதன் முன்னர் முறையே உன், உங்கள் என்,
M 峰
رحم .

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 207
எங்கள் என்னும் வடிவங்களைப் பெற்றுவிடுகின்றன. இத் தகைய சில் சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய இட்ங்களி லெல்லாம் தமிழ் ஒர் ஒட்டுமொழி எனக் கூறும்படி அமைந் துள்ளது. es
3. எழுவாய் - பயனிலை இயைபு
3 மொழிகளிலே சொற்கள் தொடராக அமையு மிடத்து அவற்றிடையே “இயைபு' என்னும் பண்பு அவசிய மாக அமைய வேண்டியுள்ளது. ஆங்கில மொழியிலே எழு வாய்க்கும் வினைச்சொல்லுக்கு மிடையே "எண்" அடிப் படையிலே இயைபு அவசியமாகின்றது. He எனும் ஒருமை எழுவாய் runs எனும் ஒருமை குறிக்கும் வினையையே கொள்ளும். ஆளுல், They எனும் பன்மை எழுவாய் run எனும் பன்மை குறிக்கும் வினையையே கொள்ளும். ஆனல்,
ஆங்கிலமொழியிலே எண்" தொடர்பான இந்த இயைபு
எழுவாய்ப் பெயருக்கும் நிகழ்கால வினைக்குமிடையே காணப்படுகின்றது. இறந்த கால வினை இடம் பெறு மிடத்து இவ்வியைபு காணப்படுவதில்லை
He ran
They ran என்னும் வாக்கியங்களை நோக்குக. எழுவாயில் ஒருமைச் சொல்லாக He, பன்மைச் சொல்லாக They அமைந்த போதிலும் இறந்தகால வினைச்சொல்லாசு ran என்பதே இரண்டிற்கும் அமைகின்றது. இந்த வகையில் பிரான்சிய, ஜெர்மானிய மொழிகளிலும் சில சொற்ருெடர்களிலே 'எண்”, “பால்" போன்ற இலக்கணப் பண்புகள் அடிப்
படையிலே இயைபு காணப்படுகின்றது.
தமிழ் மொழியிலே எழுவாயாக அமையும் பெயர்ச் சொல்லுக்கும், பயனிலையாக அமையும் வினைச்சொல்லுக்கும் 'திணை' , 'பால் , *எண்' , 'இடம்" எனும் இலக்கணக்
கூறுகளின் அடிப்படையிலே இயைபு காணப்படுவது அம் மொழியின் அடிப்படைப் பண்பாக அழைகின்றது. இரண்

Page 119
208 தமிழ் வாக்கிய அமைப்பு
டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியதெனக் கருதப்படும் தொல்காப்பியம் எனும் தமிழ் இலக்கண நூல்
இவ்வியைபினக் குறித்துள்ளது. தொல்காப்பியர் தமது
சொல்லதிகாரத்தில் முதல் நான்கு சூத்திரங்களிலும் திணை' ‘பால்’ எனும் பாகுபாடு தமிழ் மொழியிலே எவ்வாறு அமைகின்றதெனக் கூறிய பின், ஐந்தாவது சூத்திரந் தொடக்கம் திணை' , 'பால்" என்னும் இலக்கணப் பாகு பாடுகளைக் குறிக்கும் உருபன்கள் பற்றிக் கூறியுள்ளார். பத்தாவது சூத்திரத்திலே அவ்விலக்கண்ப் பாகுபாடுகளைக் குறிக்கும் உருபன்கள் வினையுடன்தான் வருமென வரையறை செய்தபின், பதினேராவது சூத்திரத்தில்,
வினையிற் றேன்றும் பாலறி கிளவியும்
பெயரிற் றேன்றும் பாலறி கிளவியு
மயங்கல் கூடா தம்மர பினவே எனக் குறிப்பிடுவர். பயனிலையாக வரும் வினைச்சொல் எந்தப் பாலைக் குறிக்கின்றதோ, அதே பாலினைக் குறிப்ப தாகவே எழுவாயில் வரும் பெயர்ச்சொல்லும் அமையும் என்பது அச்சூத்திரத்தின் கருத்தாகும். விதிமுறையாக *மயங்கல் கூடா தம்மர பினலே!" என்று தொல்காப்பியர் கூறினும், அது அவருடைய காலத் தமிழின் சொற்ருெட ரியல்பின் விவரணமாகவே அமைகின்றது. அப்பண்பு தமிழ் மொழியின் சொற்ருெடரியல் அடிப்படையாக அமைகின்ற காரணத்திஞலே அது இன்றுவரையும் தமிழ் மொழியிலே நிலைத்து நிற்பதைக் காணலாம். இன்று, தமிழ்மொழி பேசுகின்ற நாம் அவன் வந்தாள்" என்ருே, அவள் வந்தான்* என்றே பேசுவதில்லை. இயற்கையாகவே, அப்பா வந்தான், அம்மா வந்தாள் எனப் பேசக்கூடிய குழந்தைகள் சில சந்தர்ப்பங்களில் திண்யை, மயக்கி, மாமா வந்துது, மாமி வந்துது எனப் பேசக்கூடும்; ஆளுல் அக் குழந்தைகள் கூட,
அப்பா வந்தாள்*
அம்மா வந்தான்*
兹 エ குறியீட்டவ்ை யாவும் தமிழ்மொழி இயல்பு இல்லா வாக்கியங்களாகும்.
":#
{

தமிழ்மொழி இலக்கண இயல்புகள்
மாமா வந்தாள்* மாமி வந்தான்*)
என மயக்கமுறப் பேசுவதில்லை. இதனல், எழுவாயாக அமையும் பெயரிலே தோன்றும் பாற்பாகுபாடும், பயனிலை ܗ
யாக அமையும் வினையிலே தோன்றும் பாற்பாகுபாடும் இயைபுற்று அமையுமென்பது தமிழ்மொழியின் வாக்கிய
வியல் அடிப்படைப் பண்பாக அமைகின்றது. இது தொல்
காப்பியர் காலத் தொடக்கம் இன்றுவரை தமிழ் மொழி
யிலே காண்ப்படுவது இதற்கு நல்ல சான்ருகும். ஆங்கிலம்,
சிங்களம் போன்ற மொழிகளிலே இப்பண்பு காணப்பட வில்லை. இதுபற்றி ஏற்கனவே யாம் ஒரு நூலிற் குறிப்பிட் டுள்ளனவற்றை இங்கு திரும்பத் தருகிருேம்.?
‘சிங்கள மொழியுடனும் ஆங்கில மொழியுடனும் தமிழ் மொழியை ஒப்பிட்டு நோக்குமிடத்து, தமிழ் மொழியிலே எழுவாய்ச் சொல்லுக்கும் பயனிலைச் சொல்லுக்கும் திண்ை, பால், எண், இடம், காலம் என்னும் வகையிலே பெரிதும் இயைபு வேண்டுகின்ற இயல்பினே நாம் அவதானிக்க முடிகின்றது: சிங்கள மொழியில்,
శ్యీ ஒஹ" காவா
GTi. ff ; EGIT6 nr :
----- t'. ஏகக காவா
என்றமையும் மூன்று வாக்கியங்களையும் நோக்குக. காவா என்னும் வினைச்சொல் எந்தவித மாற்றமுமின்றி மூன்று வாக்கியங்களிலும் இடம்பெற்றுள்ளது, ஆனல், தமிழ்மொழியியல்போ இதனின்றும் வேறுபட்டுள்ளது. அம்மூன்று வாக்கியங்களேயும் தமிழிலே மொழி , பெயர்க்குமிடத்து, அவ்வேற்றுமையினைக் கண்டு * கொள்ளல்ாம் ܕ,
அவன் சாப்பிட்டான். − அவள் சாப்பிட்டாள். அ சாப்பிட்டது. ?
- 3. து' த-27

Page 120
. . . 210 தமிழ் வாக்கிய அமைப்பு
காவா என்னும் சிங்க்ள வினைச்சொல்லின மூன்று விதமாகத் தமிழில் மொழிபெயர்க்கவேண்டிய தேவை யுளது. எழுவாய்ப் பெயர்ச் சொற்களாகிய அவன், அவள், அது என்பன முறையே ஆண்பால் ஒருமை, பெண்பால் ஒருமை, ஒன்றன் பால் என அமைவ தால், பயனிலை வினேச்சொற்களும் அவ்வாறே அமைய வேண்டியுள்ளன.
திராவிட மொழிகளுள் ஒன்றன மலையாளத்திலுங்கூடத் தமிழ்மொழியிற் காணப்படுவது போன்ற எழுவாய்-பயனிலை இயைபு காணப்படுவதில்லை. தமிழ்மொழியிலமைந்துள்ள வினைமுற்று வடிவம்போல் மலையாள மொழியிற் காணப் படாமை அவ்வியல்புக்கு ஒரு காரணமெனலாம். அம் மொழியிலே படர்க்கைப் பயனிலைகளாக வரக்கூடிய சொல்லிஞன், ஆக்கினுன், களஞ்ஞான் என்னும் வினைச் சொற்கள் முன்னிலையிலும் இடம்பெறுகின்றன:
tổ சொல்லினன். நீ ஆக்கினன். . நீ களஞ்ஞான். - ,
என அவை அமையும். ஆகவே இதுவரை கூறியவற்ருல் தமிழ் மொழியின் வாக்கியவியற் பண்புகளில் ஒன்ருக, அம்
மொழியின் சொற்ருெட்ரிலே எழுவாயும் பயனிலையும் திணை,
பால், எண், இடம் ஆகியன தொடர்பாக இயைபு பேணும்
மரபு அமைகின்றதெனலாம்.
4. சொல்லொழுங்கு
எழுவாய்பையனிலை இயைபுபற்றியும், 'திரிபில் பெயர் :
ஆகிய எழுவாய், வினே, பெயர், விஞச் சொற்களைப் பயுனிலையாகப் பெறுவதுபற்றியும் தமிழ் இலக்கணநூலார் கூறியுள்ளனர். இன்று எழுதப்படும் நூல்களை நோக்கின் அங்கு பெரும்பாலும் வாக்கியங்களிலே எழுவாய் முதலிலும் பயணிலே இறுதியிலும் வரும் அமைப்பே காணப்படுகின்றது. இந்த அமைப்புப் பற்றித் தமிழ் இலக்கணநூலார் வெளிப் படையாக எதுவும் கூறிஞரில்லை. தனக்கு முன்னெழுந்த

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 211
இலக்கணங்களில் இவ்விடயம் பற்றிக் கூறப்பட்ட கருத்துக் கண்யெல்லாம் திரட்டி ஆறுமுகநாவலர் தன்னுடைய இலக்கணச் சுருக்கத்திலே பின்வருமாறு கூறுவர்:
"ஆறனுருபொழித்த வேற்றுமையுருபுகளையும், வினே முற்றையும், வினையெச்சத்தையும் முடிக்க வருஞ் சொற்கள், அவைகளுக்குப் பின்னன்றி முன்வருதலு முண்டு."8 மேற்காட்டிய கூற்றின் மூலமாகத் தமிழ் மொழியின் ஓர். இயல்பு புலப்படுத்தப்படுகின்றது. ஆங்கிலம் போன்ற சில மொழிகளிலே சொற்கள் குறிப்பிட்ட ஒழுங்கிலே அமைய வேண்டியது அவசியமாகும். உதாரணமாக,
He went home , ; என்னும் வாக்கியம் அதே ஒழுங்கில் அமையாமல்,
என்ருே,
Home went he என்ருே,
Home he went
என்ருே அமையின் அது ஆங்கிலமொழி வாக்கியமானாது, ஆணுல், தமிழ் மொழியிலோ இத்தகைய ஒழுங்கு முற்ருகப் பேணப்பட வேண்டுமென்ற நியதி இல்லை. .
அவன் வீட்டுக்குப் போளூன். என்னும் வாக்கிய ஒழுங்கு,
வீட்டுக்கு அவன் போனுன் வீட்டுக்குப் போனுன் அவன். Joyenusir GBL unTE9sir வீட்டுக்கு போஞன் அவன் வீட்டுக்கு போளுன் வீட்டுக்கு அவன்

Page 121
272 ། .. .. : 7 1 * தமிழ் வாக்கிய அமைப்பு
என்று அமையினும், அவையெல்லாம் தமிழ் வாக்கியங்கள் என்றே கொள்ளப்படும். இவ்வாருன சுயாதீனப்பட்ட சொல்லொழுங்கு முறை தமிழ் மொழியில் எல்லா வாக்கியங்
களிலும் இடம்பெறும் எனக் கூறுதற்கில்லை. ஆறும் ,
வேற்றுமை உருபேற்ற பெயர்த் தொட்ரும் பெயரெச்சித் தொடரும் வாக்கியங்களில் இடம்பெறுமிடத்துச் சொல் லொழுங்கிலே சில கட்டுப்பாடுகள் ஏற்படுகின்றன.
உதாரணமாக,
அவன் மரத்தினது கிளையை வெட்டிஞன்.
என்னும் ஆரும் வேற்றுமைப் பெயர் தொடர் இடம்
பெற்றுள்ள வாக்கியத்தினே,
அவன் வெட்டினன் மரத்தினது சிளையை வெட்டினன் அவன் மரத்தினது கிளையை மரத்தினது கிளையை அவன் வெட்டினன் மரத்தினது கிளையை வெட்டினன் அவன். ', வெட்டினன். மரத்தினது கிளையை அவன்
எனச் சொல்லொழுங்கு மாற்றப்பட்ட நிலையிலும் நாம் எழுதலாம். ஆனல் எங்கேனும் மரத்தினது கிளையை என்னுத்
தொடரினே நாம் மாற்றியமைக்க முடியாது. அது போன்று,
கண்ணன் படித்த பெண்ணை விரும்பினுன்
என்னும் பெயரெச்சத் தொடருள்ள வாக்கியத்தின் சொல்
லொழுங்கினை மாற்றியமைக்குமிடத்தும் படித்த பெண்ணை
என்னும் பெயரெச்சத் தொடரினைப் பிரித்தெழுத முடியாது.
Luig-5 as விரும்பினன் கண்ணன் பெண்ணே*
என்ற ஒழுங்கிலே அவ்வாக்கியத்தை மாற்றியமைத்தால்
அது தமிழ் வாக்கியமாகிவிடாது. எனினும் பெயரெச்
சத்தை முடிக்க வரும் பெயர்ச் சொல்லுக்கு அடையாகச் இல சொற்கள் இடையே வருதல் பழந்தமிழ் இலக்கியம் களிலே காணப்படுகின்றது.
! 憩 .ھا
 

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 213
காதல்கொள்ளாப் பல்லிருங் கூந்தல் மகளிர்9,
ள்ன்னும் பாடலடியில், கொள்ளா மகளிர் என்னும் எதிர் மறைப் பெயரெச்சத் தொடரைப் பல்லிருங்கூந்தல் என்னுந்
தொடர் பிரிக்கின்றதைக் காணலாம் இக்காலத் தமிழ்
மொழி வழக்கிலும்
பஈர்த்த சண்டைப் படம் வந்த சண்டியன் சின்னத்தம்பி
போன்ற தொடர்கள் இடம்பெறுகின்றன. பிரிக்கமுடியாத வாறு இடம்பெயரக்கூடிய சில தொடர்களேயும், சொல்
லொழுங்கிலே காணப்படுத் வேறு சில வரையறைகளையும் பின்வருமாறு வகைப்படுத்திக் கூறலாம். . . . .
(1) அடை சிகண்முதல் என்னும் ஒழுங்கிலே அமையும்
தொடர் பிரிக்கமுடியாதவாறு அமைகின்றது. உதா ரணமாக, வட்டமூகப் பெண்ணுள் என்னுந் தொடரிலே வட்டம் என்பது அடையாகவும், மூகம் என்பது சினை யாகவும், பெண்ணுள் என்பது முதலாகவும் அமை கின்றன. இத்தொடரில் ஒரு சொல்லையேனும் இடம் பெயர்த்தெழுத முடியாது. இல்லையெனில், முகவட்டப் பெண்ணுள்* வட்ட்பெண்ணுள் முகம்" என்றெல்லாம் பொருளில்லாத் தமிழ்த்தொடர்கள் அமைந்துவிடும் இச்சொல்லொழுங்கினைத் தொல்காப்பியர்,
அட்ைசினை முதலென முறைமூன்று மயங்காமை நடைபெற் றியலும் வண்ணச் சினைச்சொல் otsi gy கூறியுள்ளார். இச்சொற்றெடரியல்பு இன்றும் தமிழ் மொழியிலே அமைத்து காணப்படுகின்றது.
(2) வேற்றுமை உருபேற்ற பெயர்ச்சொல்லும் வினையா லணையும் பெயரும் சேர்ந்து எழுவாய்த் தொடராக அமையுமிடத்து, அத்தொடரைப் பிரித்து மாற்றி யமைக்க முடியாது. உதாரணமாக, கண்டிக்குப் போனவன் நாளே வருவான் என்னும் வாக்கியத்தில், கண்டிக்குப் போனவன் என்னுந் தொடர் பிரிக்க முடி யாத ஒழுங்கிலே அமைவதாகும். . . . . :
, ge

Page 122
214
(3)
தமிழ் வாக்கிய அமைப்பு
என்னைப் படிப்பித்தவர் என்னுடன் வந்தர்ே எனக்குத் தெரிந்தவர் என்னிடமிருந்து பெற்றது
ம8லயில் ஏறியவன்
ஆகிய தொடர்கள் வாக்கியங்களிலே எழுவாயாக அமையுமிடத்து. அத்தொடர்களைப் பிரித்தெழுத
முடியாது. -
தொகைநிலைத் தொடர், வேற்றுமைத் தொகை,
வினைத் தொச்ை, பண்புத் தொகை, உவமைத் தொகை,
உம்மைத் தொகை, அன்மொழித் தொகை ஆகிய
ஆறு தொகைநிலைத்தொடர்களும் வாக்கியங்களில் ஏழுவாயாக அமையுமிடத்து அவற்றையும் பிரித்து
இடம் பெயர்த்து எழுதமுடியாது.
al-Lh:
வேற்றுமைத் தொகை:
பாடம் படித்தவள் தலை வணங்கினவன் ஊர் சென்றவன் ஊர் நீங்கினவன் மரக் கிளே மலைத் தீபம் வினைத் தொகை:-
சுடு சோறு பண்புத் தொகை:
செத்தாமரை வட்ட மேசை உவமைத் ெேதாசை'
பவள வாய் மலர்க் கண் உம்மைத் தொகை:
இராப் பகல் அண்ணன் தம்பி
لا بؤ
 

4"
தமிழ்மொழி இலக்கண இயல்புகள் als
(4)
அன்மொழித் தொகை:
தேன் மொழி எருங் குழல்
மேற்காட்டப்பட்ட தொகைகள் யாவும் எழுவாயாக வாக்கியங்களிலே அமையுமிடத்து, அவற்றைத் தொடர்ந்து வேறு பல சொற்கள் அவ்வாக்கியங்களிலே
இடம் பெறலாம். அவ்வாறமையும் வாக்கியங்களின்
சொல்லொழுங்கினை நாம் மாற்றியமைக்குமிடத்து, எழுவாய்ாக இடம்பெறும் மேற்படி தொகைகளுள் ஒன்றையேனும் பிரித்தெழுதமுடியாதவாறு, அவை ஒரு நீர்மைப்பட்ட தொடர்களாகவே அமையும்.
நான்காம் வேற்றுமை உருபேற்ற சொல்லின் பின்னர் திசைச் சொல் வரின், அத் திசைச் சொல் நான்காம்" லேற்றுமை உருபேற்ற சொலின் பின்னன்றி முன்
வருதலில்லை. உதாரணமாக,
இலங்கைக்கு வடக்கு யாழ்ப்பாணம் என்னும் வாக்கியத்தினை,
இலங்கைக்கு யாழ்ப்பாணம் வடக்கு
யாழ்ப்பாண்ம் இலங்கைக்கு வடக்கு
என மாற்றி அமைக்கலாமேயன்றி
வடக்கு யாழ்ப்பாணம் இலங்கைக்கு"
i. இதி
என்ருே
வடக்கு இலங்கைக்கு யாழ்ப்பாணம்*
என்ருே மாற்றியமைக்க முடியாது. சில இடங்களில் திசைச் சொல் அடையாக முன்வரும் இயல்பு காணப் பட்டுள்ளது. அத்தகைய இடங்களிலெல்லாம் அது மயக்கமுடையதாகவே அமைந்துள்ளது. இதற்கு நல்ல உதாரணமாக இலங்கைப் பண்டுவஸ்துவரக் கல்வெட் டிலே "தென்னிலங்கைக் கோன் பராக்ரமபாகு நிச் சங்கமல்லற்கு." என்ற தொடரிலே "தென்னிலங்கை' என்னுஞ் சொற்ருெடர் தெற்காகிய இலங்கை'

Page 123
2 1 β. தமிழ் வாக்கிய அமைப்பு
என்றும் இலங்கையின் தெற்குப் பகுதி" என்றும் பொருள் கொள்ளச் சாசனவியலாளரை ஊக்குவித் துள்ளது.
(5) சிறப்புப் பெயரும் இயற்பெயரும் அடுக்கிவருந் தொட
,ரினையும் பிரித்தமைக்க முடியாது. உதாரணமாக و
பேராசிரியர் நக்கீரன் வந்தார் என்னும் வாக்கியத்தில்,
பேராசிரியர் நக்கீரன் என்னுந் தொடரிலே பேராசிரியர்
சிறப்புப் பெயராகவும் நக்கீரன் இயற்பெயராகவும்
அமைந்துள்ளன. இத்தொடரினையும் பிரித்து இடம் பெயர்த்து எழுதமுடியாது.
இவ்வாறு இடம்பெயர்த்தெழுத முடியாத தொடர்கள் பல தமிழ் வாக்கியங்களிலே அமைகின்றன.
ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்ச்சொற்கள் தமிழ்ச் சொற் ருெடரிலே இடம்பெறுமிடத்து, அவை தொக்கு நிற்கா விடில் ஒவ்வொரு சொல்லுடனும் 'உம்' என்னும் உருபன் . ' சேர்ந்து வரும் பண்பு உண்டு. 'உம்' இடைச்சொல் பற்றிக் கூறுமிடத்துத் தொல்காப்பியர்,
எச்சம் சிறப்பே யைய மெதிர்மறை முற்றே யெண்ணே தெரிநிலை யாக்கமென் ஹப்ப்ா லெட்டே யும்மைச் சொல்லே.
(சொல். சூ. 225)
என்று கூறுவர். 'உம்' இடைச்சொல் எட்டுப்பொருளிலே வருமென பேற்படி சூத்திரங் கூறும். அவற்றுள் எண் ணும்மை பற்றி "நிலனு நீருந் தீயும் வளியுமாகா யமுமெனப் பூதமைந்து என்புழி எண்ணுதற்கண் வருதலின் எண் ணும்மை’ எனச் சேனவரையர் உரை கூறுவர். இன்றும் . இவ்வெண்ணும்மை நமது பேச்சுத் தமிழிலும் .ةTp و يمر فوق قم தமிழிலும் பயன்படுத்தப்படுகின்றது.
அம்மாவும் தம்பியும் அக்காவும் சென்ருரர்கள் இத்தகைய வாக்கியங்களை இன்று நாம் எழுதுகிருேம். தமிழ்ச் சொல்லொழுங்கில் உபயோகமாகும் எண்ணும்மை தமிழ் மொழியிலே காணப்படும் தனிப் பண்பாகும்.
 
 
 

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 217 5. தனி வாக்கியங்களை இணைக்க எச்சங்கள்
நாம் ஒவ்வொரு நாளும் பேசுகின்ற பேச்சிலும் எழுது கின்ற சந்தர்ப்பங்களிலும் எத்தனையோ நீண்ட வாக்கியங்
களை ஆக்கிப் பயன்படுத்துகிருேம். அந்நீண்ட தொடர்
வாக்கிப்ங்கள், தனி வாக்கியங்களை இணைப்பதன் மூல மாகவே உண்டாக்கப்படுகின்றன. உதாரணமாக,
கண்ணன் வந்தான். சுண்ணன் பாடம் படித்தான் என்னும் இரு தனி வாக்கியங்களே.
சுண்ணன் வந்து பாடம் படித்தான் என்னும் தொடர் வாக்கியமாக மாற்றமைப்புப் பெறு கின்றன, இவ்வாறு தனி வாக்கியங்களை இணைப்பதற்குத் தமிழ் மொழியிலே எச்சங்கள் உபயோகிக்கப்படுகின்றன. தமிழிலே வினை, முற்று வினையாகவும் எச்ச வினை ஆகவும்
அமையும். முற்று வினை தன்னளவிலே பூரணத்துவம்
பெற்ற சொல். அது வாக்கியங்களிலே முடிக்குஞ் சொல் லாக அமைந்து விடும்.
அவன் ஒடினன். - திராவிட மொழிகளுக்கும் ஆஸ்திரேலிய மொழிகளுக்கும்
சில ஒற்றுமைகள் காணப்படுகின்றன். தாயின் அழைப்பைக் கேட்டதும் கன்றுக்குட்டி பசுவின்
பக்கமாக ஓடி வந்துவிடுகிறது. என்னும் வாக்கியங்களிலே ஓடினுன் காணப்படுகின்றன. வந்துவிடுகிறது ஆகியன வினைமுற்றுக்களாக அவ்வாக்கியங் களை முடிக்குஞ் சொற்களாகப் பயன்படுகின்றன. ஆனல், எச்ச வினையோ இதற்கு மாமுகக் குறைச்சொல்ல்ாகவே நிற்கும். இன்னெரு சொல்லினை அவ்ாவி நிற்கும். பண்பு இதற்குண்டு. வந்த, வந்து என்னும் எச்ச வினைகள் வந்த
மனிதன் என்றும் வந்து படித்தான் என்றும் முடிவடையலாம்.
வந்த என்னும் எச்சவினை மனிதன் என்னும் பெயர்ச்
த-28

Page 124
21s - தமிழ் வாக்கிய அமைப்பு
சொல்லேக் க்ொண்டு முடிவதால் பெயரெச்சம் எனவும், வந்து என்னும் எச்சவினை படித்தான் என்னும் வினேயைக் கொண்டு முடிவதால் வினையெச்சம் எனவும் அழைக்கப்படு கின்றன. இவ்விரு எச்ச விண்களும் எமது மொழியிலே தனி வாக்கியங்களே இணைப்பதற்காகவே அழைந்துள்ளன. ஆகவே தமிழ் மொழியிலே ஒரு தொட்ர் வாக்கியத்திலே இடம்பெறும் எச்சங்களைக் கணக்கிட்டால், அத்தனே அளவு
தனி வாக்கியங்கள் அத்தொடர் வாக்கியத்திலே உண்டு
எனக் கூறலாம், -
ஆங்கில மொழியிலே ஒரு வாக்கியத்தில் முற்று வினைகள்
பல இடம்பெறினும் அதனை ஒரு வாக்கியமாகக் கொள்ளும் பண்பு உண்டு உதாரணமாக, s
He came, be saw hc conquered.
என ஆங்கில மொழியிலே அமையும். ஆளுல் தமிழ்
மொழியிலே இவ்வாறு அமையமுடியாது. மலையாள மொழியிலும் இவ்வாறு அமையமுடியர் தென லீலாவதி குறிப்பிடுவர் 11 தமிழ் மொழியிலே அத்தகைய வாக்கியம் இரண்டு முறையிலே அமையலாம்:
1. அவன் வந்தான்
அவன் கண்டான் அவன் அகப்படுத்தினுன் - g மூன்று தணிவாக்கியங்களாக அமையலாம். இல்லே யெனில், . . .
2. அவன் வந்து கண்டு அகப்படுத்திஞன்.
ats வந்து கண்டு ஆகிய வினையெச்சங்களே உபயோகித்து
ஒரு தொடர்வாக்கியமாகவே அமைக்க முடியும், ஆகவே
آر. )
தமிழ் மொழியைப் பொறுத்தமட்டில் ஒரு தொடர்
விாக்கியத்திலே எத்தனை எச்சங்கள் இருக்கின்றன என்று கணக்கிட்டால், அத்தனை தனிவாக்கியங்கள் அத்தொடர்
வாக்கியத்திலே இணைந்துள்ளன எனக் கூறலாம். அந்த
வகையிலே தமிழ், மலையாளம், சுன்னடம் போன்ற திராவிட
 

(
தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 92.194
மொழிகளிலே стајашћ என்னும் இலக்கண அலகினுடைய பயன் தனித்துவமானது, மலையாளத்தில், முற்று , எச்சம்
என்னும் வேறுபாடு வினயிலே பெரும்பாலும் இல்லை.
எங்கிள்க்கு ஸங்கடம் வந்து. .. என்பது ஒரு மலையாள வாக்கியமாகும். இதனைத் தமிழிலே மோழிபெயர்த்தால்,
ளங்களுக்குச் சங்கடம் வத்தது. என்று எழுதக்கூடும். மலையாளத்தில் வந்நு என்னும் வடிவமே விண்முற்ருக அமைகின்றது. அது எம்மைப் பொறுத்த வரையில் ஓர் எச்சவடிவமாகவே அமைகின்றது. ஆனல் மலையாளத்திலேயே,
வந்நான் அறிஞ்ஞான் உண்டு:
போன்ற வினேமுற்றுக்களுங் காணப்படுகின்றன. எனினும்
எச்சவடிவங்களே பெரும்பாலும் வினைமுற்றுக்கனாகப் பயன் படுகின்றன. இவ்வாறு எச்சங்கள் வினைமுற்றுகளாகப் பயன்பட்டபோதிலும், தனிவாக்கியங்கள் சேர்ந்து தொடர் வாக்கியமாகுமிடத்து அவற்றை இணைக்கவும் அங்கு எச்சங் கள் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக,
பூவுகள் பறிச்சு உடன் வேணியில் சூடி,
என்னும் வரக்கியத்திலே பறிச்சு, சூடி என்னும் @@
எச்சங்கள் காணப்படுகின்றன. இவை இரண்டும் இரு தனி வாக்கியங்களைக் குறித்து நிற்பன என்று கூறுதல் மலையாள மொழிக்கும் பொருந்துவதாகும். . . ."
இவ்வாறு திராவிட மொழிகளிலே எச்சம் தனி வாக்கி யங்களை இணைக்கும் அலகாகப் பயன்பட்ட போதிலும், ! மலையாள மொழியுடன் ஒப்பிடுமிடத்துத் தமிழ் மொழியிலே வினைமுற்று என்னும் ஓர் அலகு இருப்பதன் காரணத்தி ஞலே, எச்சத்தினுடைய செயற்பாடு தமிழ்மொழிக்குத் தனித்துவமானது எனக் கூறுவது பொருத்தமாகும்.

Page 125
ഉ20 ; தமிழ் வாக்கிய அமைப்பு
அடிக்குறிப்புகள்
1. தொல்காப்பியம், சொல்லதிகாரம், கு. 65 2. நன்னூல், சூ, 295 1 9. கருத்து-கருத்து விளக்கம் பற்றி மேலும் விபரங்களுக்கு:
− Hockett, C. F., A Course in Modern s
Linguistics, p. 20 Lyons, J., introduction to Theoretical
Linguistics, pp. 334-37 e. மீனுட்சிசுந்தரனர், தெ. பொ. தமிழ் மொழி வரலாறு, ப. 66 ܫ வரதராசன், டாக்டர் மு. புலவர் கண்ணிர், Lu . 5 . மேற்படி, ப. 7 4 - மேற்படி, ப. 8 பார்க்க: சண்முகதாஸ், அ., நமது மொழியின் இயல்புகள், ப. 14 ' " Sanmugadas, A., (With Kailasapathy, K.), Tamil, pp. 9-10.
)عربية
ஆறுமுகநாவலர், இலக்கணச் சுருக்கம், ப. 176
9. புறநானூற்று உதாரணமும் விளக்கமும் பின்வரும்
நூலிலிருந்து பெறப்பட்டது: -
Kotandaraman, P., Studies in Tamil Linguistics
p. 30.
10. இவ்வுதாரணம் பின்வரும் கட்டுரையிலிருந்து பெறப்
பட்டது: -
Leelawathy, M., “Syntactic Patterns in Malayalam” 11. ம்ேற்படி கட்டுரை . .
 
 
 

9 சொல்லும் பொருளும்
சொல்லே தொடரியலுக்கும் பொருளியலுக்கும் அடிப் படையாக அமையும் மொழியலகு என்று இலக்கணநூலார் யாவரும் குறிப்பிட்டுள்ளனர். ஒரு வாக்கியமோ தொடரோ பொருளுடையது அல்லது பொருளற்றது என நாம் பொது வாகக் கூறுவதுண்டு. ஆனல், சொற்கள் பற்றி நாம் இவ்வாறு ஐயுறுவதில்லை. ஏனெனில், மொழியின் பொரு ளுடைய மிகக் குறைந்த அலகு சொல் எனவே எவரும் கூறுவர். தமிழ் மொழியைப் பொறுத்த வரையில், தமிழ்
இலக்கணநூலாரும் இக்கருத்தினையே கொண்டுள்ளனர்.
தொல்காப்பியருடைய எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்னும் சூத்திரம் இக்கருத்தினையே புலப் படுத்துகின்றது என்பதுபற்றி முன்னர் விளக்கியுள்ளோம். ஒரு சொல் பொருளுடையதாக அமைவது வேறு; அது குறிப்பிட்ட பொருளை உணர்த்துவது வேறு. இவ்விரு நிலைகளையும் வேறுபடுத்தியுணர்ந்தால், சொல்லுக்கும் பொருளுக்குமிடையேயுள்ள 'ண்ணிய தொடர்பினை நாம் விளங்கிக்கொள்ள் முடியும். தொல்காப்பியருட்ைய 'எல்லாச் சொல்லும்." என்னும் சூத்திரம்முதல் நிலையையே எமக்கு அறிவுறுத்துகின்றது. சொற்பொருளாய்வில் ஈடுபட்டுள்ள நவீன மொழியியலறிஞரான ஜோண் லயன்ஸ் மேலே நாம் குறிப்பிட்டுள்ள கருத்தினைப் பின்வ ருமாறு விளக்குகின்மூர்:
'..... , although we commonly say that sentences or phrases are, or are not, "meaningful', we do not normally say that words are not "meaningful'

Page 126
222 - சொல்லும் பொருளும்
(for the present we shall oontinue to adopt the
traditional view, acoording to which words are the minimal "meaningful' units of language: “word' is here being used of course in the sense of lexeme-). This fact in itself suggests that the term
'meaningful' may be employed in two distinct
senses. We will assume that this is so and, for
convenience and clarity, introduce a terminological
distinction between having meaning and significance or (being significant)'.1
எல்லாச் சொற்களும் பொருளுடையன (having meaning) சன்று தமிழிலக்கணநூலார் கூறியுள்ளனர். ஆஞல் அவை எவ்வாறு குறிப்பிட்ட பொருளை உணர்த்துகின்றன என்பது பற்றிய அவர்களுடைய கோட்பாடு தெளிவற்றதாயுள்ளது. எனினும், உரிச்சொல் பற்றிப் பேசுமிடத்தும், திரிசொல் பற்றிப் பேசுமிடத்தும் சொற்பொருள் பற்றி அவர்கள் சில கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். சேணுவ ரையர் தொல் காப்பியச் சொல்லதிகார முதலாவது சூத்திரத்துக்கு உரை யெழுதுமிடத்து சொல் எவ்வாறு பொருளுணர்த்துமெனக் கறியுள்ளார்.? சமயவாற்றலானும், அவாய் நிலையானும்
தகுதியானும், அண்மை நிலையானும் இயைந்தே சொல்
பொருள் விளக்குத் தன்மையுடையதாக அமைகின்ற இதன்பதை அவருடைய விளக்கம் தெளிவுறுத்துகின்றது. சமயவாற்றல் என்பது ஒரு சொல் உபயோகப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தை உணர்த்து பொருள் கொள்ளுதலாகும். உதாரணமாக, மாவைக் கொண்டு வாருங்கள் என்னும்
வாக்கியத்திலே மா என்னுஞ் சொல் எப்பொருனை உணர்த்
திற்று என்பது சந்தர்ப்பத்தைக்கொண்டே உணரக்கூடியதா யிருக்கும். மா என்னுஞ் சொல் உணவுப் பொருள் தயாரிக்கக்கூடிய மா, குதிரை, மாங்காய் அல்லது மாம் பழம் என்னும் பல பொருட்களை உணர்த்தும். இவற்றுள்
எப்பொருளே மேற்கூறிய வாக்கியத்து மா உணர்த்துகின்றது
என்ப்தனை அக் கூற்றிணைக் கூறிவோனின் நிலை கொண்டே உணரலாம். கவசமெல்லாம் அணிந்து டோருக்குச் செல்ல விருக்கும் வீரன் ஒருவன். அவ்வாறு கூறின், அச் சொல்
 
 

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் ·,息25
குதிரையைக் குறிக்கும், அப்பம் அல்லது பிட்டு அவிப்ப தற்கு தயாராயிருக்கும் அம்மா"அவ்வாறு கூறின், அது
தின்னுமாவுைக் குறிக்கும். இவ்வாறு சமயவாற்றலுக் கேற்பவே சொல் பொருளை உணர்த்தும் என்னும் கோட்
பாடு இந்திய இலக்கணநூலார் எல்லோருக்குமே பொதுவான தாகும். இத்தியமெய்யியலாளர்கள் சொற்பொருள் பற்றிப்
பல்வேறு கோட்பாடுகளே முன்லைத்துள்ளனர். இவற்றினை ஒரளவு அறியும் வாய்ப்புடைய மேலைத்தேய மொழியிய
லாளர்கள் சொற்பொருள் தொடர்பாக இத்தகைய கோட் பாட்டினை முன்வைத்தனர். உதாரணமாக, பிரித்தானிய மொழியியற் குழுவினரைச் சார்ந்த J. R. பேர்த் என்பவர்.
The Central concept of the whole of Semantics considered in this way is the context of situation. In that context are the human participant or partieipants, what they say, and what is going on'
என இக்கோட்பாட்டினை முன்வைப்பதைக் காணலாம்.
இனி, அவாய் நிலை, தகுதி, அண்மை ஆகியன எவ்வாறு சொற் பொருளுடன் தொடர்புறுகின்றன என நோக்கலாம்.
சமஸ்கிருத இலக்கணநூலார் இவை மூன்றினையும் முறையே
ஆகாங்ஷா (akank88), யோக்யதா' (yogyata) சம்நிதி (saminidi)
என அழைப்பர். அவர்களுடைய கருத்தின்படி , ᎧᎮᏩᏪ .
வாக்கியம் ஏற்றுக்கொள்ளத்தக்க வாக்கியமாக அமைவதற்
கும் பொருளுடைய வாக்கியமாக அமைவதற்கும் இவை மூன்றும் அவசியமாகும். சேஞவரையர் அவற்றைத் தமிழாக்கஞ் செய்து தமிழ்மொழி இயல்புடன் தொடர் புறுத்துகிருரர். பிற்கால இலக்கண நூலாரும் இக்கருத்தினைப் பின்பற்றியுள்ளனர். இலக்க்ணச் சுருக்க ஆசிரியர் ஆறுமுக நாவலர் வாக்கியப் பொருளுணர்வுக்குக் காரணமென்னும் பகுதியிலே அவாய் நிலை" தகுதி அண்மை, கருத்துணர்ச்சி
என்னு நான்குமாம் என்று கூறி அவற்றைத் தனித்தணி,
யாக விளக்கியுள்ளார். 4 இவற்றுள், நான்காவதாக அவர்
கூறிய கருத்துணர்ச்சி" என்பது யாம் முன்னர் குறிப்பிட்ட

Page 127
224
சொல்லும் பொருளும்
மயவாற்றலாகும். சொற் பொருள், வாக்கியப் பொருள்
1.
s
சபற்றிப் பேசுமிடத்து இவை மூன்றினுடைய விளக்கம் மிகவும் அவசியமாகும்.
அவாய் நிலை: ஒரு சொல் தன்னெடு சேர்ந்து பொருள்
முடிப்பதற்கு உரிய இன்னெரு சொல்லினை அவாவி நிற்றல். உதாரணமாக, அவன் அவன் என்னும்
தொடர், வாக்கியமாகமாட்டாது. ஏனெனில் அவ்ன் என்னும் ஒரு பெயர்ச்சொல் அதே சொல்லால் அன்றி,
வேருெரு பெயரையோ, விஞவையோ, வினைய்ையோ
கொண்டு முடிந்தால்தான் ஏற்றுக்கொள்ளக் கூடிய
ஒரு வாக்கியமாகும். எனவே, அவன் வீரன், அவன் .
யார்?, அவன் ஓடினுன் என அமைந்தால் மட்டுமே சரியான வாய்க்கியத்தைப் பெறுவது மாத்திரமன்றி, நாம் பொருளுள்ள வாக்கியத்தையும் பெறலாம்.
. தகுதி: பொருள் விளங்குதற்கேற்றபடி சொற்கள்
சேர்ந்து நிற்றலையே தகுதி என்னும் நிலை குறிக்கின்றது.
வடமொழி இலக்கண நூலார் காட்டும் உதாரணத் தினையே தமிழ் இலக்கணநூலாரும் எடுத்துக்காட்டி
யுள்ளனர். அவ்வுதாரணம்: நெருப்பால் நன. நினை
என்னுஞ் சொல் கேட்டவுடன் அது நீருடன் தொடர்
புடையதொன்று என்பதை உணர்வோம். அச் சொல் லுடன் இணைந்து நின்று பொருள் தரக்கூடிய
யோக்கியதை அல்லது தகுதியுடைய சொல் நீர்
என்பதேயாகும். ஆனல், மேற்படி வாக்கியத்தில்
நெருப்பு என்னுஞ் சொல் உபயோகிக்கப்பட்டுள்ளது.
எனவே, தகுதி நிலையால், இவ்வாக்கியம் பொரு ளற்றது என்பர். சொல்லொழுங்கினை அனுசரித்து வாக்கியத்திலே சொற்கள் இடம்பெற்ற போதிலும், அவை தகுதிநிலையுடையனவாயிருக்க வேண்டும். இந்
நிலை அனுசரிக்கப்படாவிடில், பச்சை எண்ணங்கள்
கதறின, கதிரை நன்ருகப் பேசியது, புத்தகம் நடந்து சென்றது என்றெல்லாம் வாக்கியங்க்ள் அமைந்துவிடும்
அண்மைநிலை: தொடராக நிற்குஞ் சொற்களை இடை
யீடின்றி, அதாவது காலதாமதமின்றிச் சொல்லுதல்.

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 225
அவ்வாறு சொல்லுதலாலேயே அத்தொடரின் பொருள் உடனடியாக விளங்கும். உதாரணமாக, செல்வி பாட்டுப் பாடினுள் என்னும் வாக்கியத்திலுள்ள சொற் க3ளக் காலதாமதமின்றிக் கூறினல்தான், அது பொரு ளுடைய கூற்ருக அமையும். அப்படியில்லாமல், செல்வி என்னுஞ் சொல்லினைக் கூறிவிட்டு பல மணித்தியாலங் களுக்குப் பின் பாட்டு என்னுஞ் சொல்லினையும், அதன் பின்னர் பல மணித்தியாலங்களுக்குப் பின் பாடினுள் என்னுஞ் சொல்லைக் கூறுவதனுல் அவை மூன்றுஞ் சேர்த்து ஒரு வாக்கியம் என்னும் உணர்வினைக் கொடுக்கமாட்டாது. அதனுல், வாக்கியப் பொரு ளுணர்வு பெறப்படமாட்டாது. இம்மூன்றும் வாக்கியப் பொருளுடன் நெருங்கிய தொடர் புடையனவேனும்,சொற்பொருள் பற்றிச் சிந்திக்குமிடத்தும் இவற்றை விளங்கிக்கொள்ளுதல் அவசியமாகும்.
2 சொற்பொருளும் பண்பாடும்
மொழிக்கும் பண்பாட்டுக்குமிடையே நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை எவரும் மறுப்பதற்கில்லே.
ஒரு குறிப்பிட்ட மொழியின் சொற்பொருள் அம்மொழி
பேசுவோரின் பண்பாட்டிலே பெருமளவு தங்கியுள்ளது. இதனலேயே மொழிபெயர்ப்புத் துறை இன்னும் சிக்கல் வாய்ந்ததாக அமைந்து கிடக்கின்றது. பண்பாட்டுக்கும்
சொற்பொருளுக்குமுள்ள நெருங்கிய தொடர்பினைக் காட்டு
தற்கு நிறப்பெயர்கள், உறவுமுறைப் பெயர்கள் ஆகியன வற்றை மொழியியலார் உதாரணங்களாக எடுத்துக் காட்டுவர். பிலிப்பைன்ஸ் நாட்டிலே வழங்கும் நிறப் பெயர்ச் சொற்களை ஒரு மானிடவியல் மொழியியலாளர் ஆராய்ந்தார். 3 அவருடைய ஆய்வினலே பெற்ற தகவல்கள்
வருமாறு : பிலிப்பைன்ஸ் நாட்டு மக்கள் தாம் உட்
கொள்ளும் உணவின் தன்மை, புறத்தோற்றப்பாடு ஆகிய வற்றினை அடிப்படையாகக் கொண்ட தாவரங்களேத் தொடர்புறுத்தியே நிறச்சொற்களை வழங்குகின்றனர்.
தாவரங்களின் பசுமை, நீர்மை ஆகிய இரு பண்புகளை
gー29

Page 128
226 - - சொல்லும் பொருளும்
அடிப்படையாகக் கொண்டு அவர்களுடைய நிறச்சொற்கள் நான்கு வகையான பாகுபாட்டினுள் அ டருகின்றன. ♔ഞഖ: '
-- it digi) to -- Elgg.0) - நீர்மை - LJć948) ILI + நீர்மை s-Life — jiğrf6ö) LD
என அமையும், தமிழ்மொழியிலும் கருமை, பச்சை, நீலம் என்பன பொதுப்பண்புடையனவாகக் கருதப்பட்டு உபயோகத்திலிருந்து வந்துள்ளன. கண்ணனைக் கருமை
நிறமுடையவனெனவும், பச்சை மேனியன் எனவும், நீல
வண்ணன் எனவும் இலக்கியங்களிலே குறிப்பிட்டுள்ளமை இங்கு மனங்கொள்ளத் தக்கதாகும். மஞ்சள் என்னும் நிறம். ஒரு தாவரத்தின் பெயராகும். அதுவே நிறப் பெயராகவும் தமிழிலே வழங்கப்படுகின்றது. தமிழ்மொழி
யில் சொற்பொருளுக்கும் பண்பாட்டுக்குமுள்ள நெருங்கிய
தொடர்பினை அம்மொழியிலுள்ள உறவுமுறைப் பெயர்ச் சொற்கன் நன்கு உணர்த்துகின்றன. தமிழ்ச் சமூகத்திலே பின்வரும் உறவுமுறைச் சொற்கள் காணப்படுகின்றன.
அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, தம்பி, தங்லை. மாமா, மாமி, சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரி யம்மா, மச்சான், மச்சர்ள், தாத்தா, அம்மம்மா, மருமகன், மருமகள், அண்ணி முதலியன.
தமிழ்ச் சமுகத்திற் காணப்படும் குடும்ப நிலையைப் பிரதி பலிப்பனவாகவே மேற்படி உறவு முறைச் சொற்கள் அமைகின்றன. இவற்றுட் சிலவற்றைத் தெரிந்தெடுத்து ஆங்கிலமொழி உறவு முறைச் சொற்களுடன் ஒப்பிட்டு நோக்குமிடத்து, உறவுமுறைச் சொற்பொருள் எவ்வாறு அவ்வச் சமூக நிலக்கேற்ப அமைகின்றதென்பது புலப்படும். தமிழர் சமூகத்திலே மிக அண்மைக் காலம்வரை உறவினர்
சுளுக்கிடையே திருமணம் நடப்பதுதான் கூழக்கம். ஆஞல் ஆங்கிலமொழி பேசும் சமூகத்திலே இவ்வழக்கம் வெகு
குறைவாகவே காணப்பட்டது. இப்பண்பினை இவ்விரு
'.
في .
 
 

نر) را با
بله)
தமிழ்மொழி இலக்கண இயல்புகள் . 327
மொழிகளிலும் காணப்படும் உறுவுமுறைச் சொற்கள் நன்கு புலப்படுத்துகின்றன. ஆங்கில மொழியிலே அம்மாவின்
தம்பி அல்லது அண்ணன், அப்பாவின் தம்பி அல்லது அண்ணன் ஆகியோர் Uncle என அழைக்கப்படுவர். ஆனல், மணப்பெண்ணின் தந்தையை மணமகன் Father
in-law எள்பார். அப்பாவின் தங்கை அல்லது தமக்கை,
அம்மாவின் தங்கை அல்லது தமக்கை ஆகியோர் ஆங்கில மொழியில் Aune என அழைக்கப்படுவர், மணமகனின் தாய் Mother-in-law என அழைக்கப்படுவர். தமிழ் மொழியிலே Uncle, Father-in-law stari குறிப்பிடப்படுபவர்கள் மாமா என்னும் ஒரே சொல்லாலும், Aunt, Mother-in.taw எனக் குறிப்பிடப்படுபவர்கள் மாமி என்னும் ஒரே சொல்லாலும் வழங்கப்படுவதை நோக்குமிடத்து சமூக வேறுபாடுஎவ்வாறு மொழியிலே பிரதிபலிக்கின்றது என்பதை உணரக்கூடியதாக வுள்ளது. '' , , -
3. சொற்பொருள்மைப்பு 3 - 1. வகுப்பு, தொகுப்பு அனுமானங்கள்
பொருளுணர்ச்சி பற்றிப் பண்டைக்காலத் தொட்டே மெய்யியலாளர்கள் கருத்துத் தெரிவித்து வந்துள்ளனர். வகுப்புக் கூற்றுக்கள், தொகுப்புக் கூற்றுக்கன் என்னும் வேறுபாடு தொடர்பாகவே இவர்கள் பொருளுணர்ச்சி பற்றிச் சிந்தித்தனர். அவ்வேறுபாடு பின்வருமாறு அமை
கின்றது: வகுப்புக் கூற்று ஒன்றிலே பயனிலைப் பதமானது
எழு:ாயில் ஏற்கனவே சொல்லப்பட்டதையே கூறும். உதாரணமாக, முக்கோணங்கள் எல்லாம். மூன்று; பக்கங்களை உட்ையன, என்னும் வாக்கியத்திலே, மூக்கோணம், மூன்று பக்கம் என்பன பொருள்தொடர்புடையன. முக்கோணம் என்னும் எழுவாயின் விரிபொருளாகவே மூன்று பக்கம் என்னுந் தொடர் அமைந்து விடுகின்றது. இவ்வாறு தமிழ் மொழியில் எத்தனையோ வாக்கியங்களை உதாரணமாகக் காட்டலாம். தொகுப்புக் கூற்றிலே, பயனிலைப் பதம் எழுவாயில் ஏற்கனவே கூழுத புதிய சுருத்தைச் சேர்த்துக் கூறும். உதாரணமாக, ருேசாக்கள் சிவப்பு நிஜமானவை

Page 129
228 " , சொல்லும் பொருளும்
என்பதில் ருேசாக்கள் என்னும் எழுவாய், பயனிலையிலே கூறப்பட்டதைத் தன்னுள் அடக்கியதாக இல்லை. ஏனெ
னில், எல்லா முேசாக்களும் சிவப்புநிறமானவையல்ல. அதனுல் சிவப்பு நிறமானவை என்னும் பயனிலைத் தொடர் எழுவாயிலே கூறப்படாத, ஆனல் எழுவாயைப் பற்றிய கருத்தாகும். இவ்வாறு பொருளுணர்ச்சி தொடர்பாகத் தமிழிலே அமையும் வாக்கியங்களை வகுப்பு வாக்கியங்கள் எனவும், தொகுப்பு வாக்கியங்கள் எனவும் பாகுபாடு செய்யலாம். , W,
3.2 பல சொல் ஒரு பொருள்
தொல்காப்பியர் சொற்பொருள் பற்றி உரியியலிலே
ஒரளவு எடுத்துக் கூறுகின்ருர் உரிச்சொற்கள் பொரு ளுணர்த்தும் அமைப்புக்களுள் ஒன்ருக, பல சொல் லொரு பொருட் குரிமை தோன்றினும்" என்று அவர் கூறியுள்ளார். பின்னர், எச்சவியலிலே சொற்களை இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என நான்காக வகுத்துவிட்டு, திரிசொல் பற்றிக் கூறுமிடத்து,
ஒருபோருள் குறித்த வேறு சொல் லாகியும்
வேறுபொருள் குறித்த வொருசொல் லாகியு
மிருபாற் றென்ப திரிசொற் கிளவி 8
எனவும் குறிப்பிட்டுள்ளார். உரியியலிலே ஒரு பொருள்
குறிக்கும் பல சொற்கள் பறறித் தொல்காப்பியர் சூத்திரங்
களிலே குறிப்பிடுகின்றர். உதாரணமாக,
- பையுளுஞ் சிறுமையு நோயின் பொருள9
என்பதனைக் காட்ட்லாம்.
உலகில் எந்த மொழியிலுமே ஒரு சொல்லுக்கு ஒரு பொருள் என்னும் “இலட்சிய நிலை இருப்பதாயில்லை. ஒரு பொருளைக் குறிப்பதற்குப் பல சொற்கள் இருக்கும் நிலையினையே இன்று எல்லா மொழிகளிலும் காண்கிருேம்.
ty",
الذي

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் − 229
ஆனல், ஆரம்பத்தில் மொழிகளில்ே ஒரு சொல்-ஒரு பொருள் என்ற அமைப்பே இருந்திருக்க வேண்டும். காலகதியிற் பொருட்பரப்பிலே நுணுக்கமான அர்த்தப்பாடுகளைப் புலப் படுத்தச் சொற்கள் தேவைப்பட்டிருக்கலாம். இவ்வகையிலே ஒரு பொருளையுணர்த்தப் பல சொற்கள் உண்டாயின. சாதாரண மக்களும் புலவர்களும் இத்தகைய வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்துள்ளனர். உலகம் எனக் கையாளப்பட்ட சாதாரண பெயர், உலகத்து மக்களைக் குறிக்கும் ஆகு பெயராகச் சாதாரண மக்களாலும் வழங்கப்பட்டது. ஆனல், புலவர்களோ கயல் போல விழி என்னும் சாதாரண உவமைத் தொடரை, கயல்விழி எனத் தொகையாக்கினர். பின்னர், கயல்விழி வந்தாள் என அன்மொழித்தொகை யாக்கினர். இவ்வாறு சொல்லுக்கும் பொருளுக்குமுள்ள தொடர்பிலே மாற்றங்களேற்பட்டுவரலாயின. இந்த வகை யிலே, ஒரு பொருளுக்கு ஒரு சொல் என்னும் இயல்பான நிலை திரிபடைந்த காரணத்தினலே, ஒரு பொருள் குறிக்கும்
பல சொல் திரிசொல்லாகத் தமிழ் இலக்கணநூலாராலே
கொள்ளப்படலாயிற்று. தமிழ் இலக்கணநூலார் அவற்றைத் திரிசொற்கள் எனக் குறிப்பிட்டமை பொருத்தமாக அமைகின்றது. உதாரணமாக, தாமரை என்னும் சொல் குறிக்கும் பொருள் பங்கஜம், முளரி, அம்புஜம் என்னும் சொற்களாலும் உணர்த்தப்படுகின்றது. ஆனல், இவை யாவுமே தாமரை என்னும் மலரைப் பொதுவாகக் குறித்த போதும், அம் மலருடன் தொடர்புற்ற வெவ்வேறு செய்தி சுளை அவை அடிப்படையாகக் கொண்டுள்ளன. பங்கஜம் என்னும் சொல் சேற்றிலே பிறந்தது’ என்னும் பொரு ளுடையது. இதே போன்று அம்புஜம் என்பது "நீரிலே பிறந்தது' எனவும் முளரி என்பது 'தண்டையுடையது" எனவும் பொருள்படுகின்றன. ஒரே சொல்லையே கவிதையிலே உபயோகிக்காது, ஒரே பொருளுடைய வெவ்வேறு சொற் களை உபயோகிக்க வேண்டுமென்ற கவிஞர்களின் முயற்சி யினலே புதிய சொற்கள் ஆக்கப்பட்டிருக்க வேண்டும். இப் புதிய சொற்கள் ஒரே பொருளைக் குறிப்பினும், அப் பொருட்பரப்பினைச் சிறிது அகல்விப்பனவாகவும், அப் பொருளின் நுண்ணிய தன்மைகளை உணர்த்துவனவாகவும் அமைகின்றன.

Page 130
%39 சொல்லும் பொருளும்
a Seg பொருள் குறிக்கும் பல சொற்களாயின், வாக்கி யத்திலே, அவற்றுன் ஒரு சொல் இருக்குமிடத்திலே இன் ஞெகு சொல் வரக்கூடியதாகவும், உணர்ச்சிப் புலப்பாட் டில் அவ்விரு சொற்களுக்குமிடையே எவ்வித வேறுபாடு இல்லாமலும் அமைகின. உதாரணமாக ஒரு வாக்கியத் துக்கும், (வா ) இன்னெரு வாக்கியத்துக்கும் (வா)
இடையே எவ்வித கூேறுபாடுமில்லையெனக் காண்கிருேம்,
அந்நிலையினைத் தெளிவாகப் பின்வரும் சூத்திரம் காட்டும்: வா 0 வா எனில், வா, P வா எனில், வா = வா, ஆகும், அதாவது இரு வாக்கியங்களும் நேரொப்புடையன என்பதாகும். இவ்வாறு நேரொப்புடைய இவ்விருவாக்க யங்களும் ஒரே சொற்றுெடரமைப் புடையனவெனினும், வேறுபாடு அவற்றிற் காணப்படும் சொற்களிலேயே உண்டு. ஒன்றில் X என்னும் சொல் இருக்கின்றது; மற்றையதில்
அதற்குப் பதிலாக y என்னும் சொல் இருக்கின்றது.
அப்படியெனில் x, y ஆகிய சொற்கள் ஒரு பொருளுடை யன எனலாம். மரபுவழி இலக்கண நூலார் ஒரு பொருள் தன்மையினைச் சொற்களுக்கிடையே கண்டுகொள்வர்.
மேற்குறித்த வரைவிலக்கணமும் இதனையே வலியுறுத்து கின்றது. ஆனல் இதே வரைவிலக்கணத்தைத் தனிச்சொல்
ஒன்றுக்குப் பதிலாக ஒரே பொருள் குறிக்கும் சொற்ருெடர் உபயோகத்துக்கும் பிரயோகிக்க முடியும் என ஜோண் லயன்ஸ் கருதுகிருர், 19 உதாரணமாக, களிறு நடந்தது என்னும் வாக்கியத்தின் பொருளையே ஆண் யானை நடந்தது என்னும் வாக்கியமும் தருகின்றது. எனவே களிறு என்னும்
சொல்லுக்குப் பதிலாக ஆண் யானை என்னுந் தொடரினை
உபயோகிக்க முடிவதால், அவ்விருடிைவங்கள் ஒரு பொருள்
தன்மை (Synonymy) வாய்ந்தனவாகின்றன. இவ்வாறு எம்முடைய பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலுமிருந்து
பெருந்தொகையான உதாரணங்கள் காட்ட முடியும்.
சில வேளைக்ளிலே சந்தர்ப்பம் நோக்கிச் சில சொற்கள் ஒரு பொருள் தன்மையுடையனவாகின்றன. மருத்துவ மனையிலே வைத்தியர் மருந்தினைத் தத்து இதனை மூன்று நேரம் எடுக்க வேண்டும் என்று கூறுகிருர். அது திரவ
மருந்தாக இருத்தால், அச்சந்தர்ப்பத்திலே எடுக்க என்னும்
% هي
 

ها)
தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 23.
வினேயெச்சச் சொல் குடிக்க என்னும் வினையெச்சச் சொல்லின் பொருண்த் தருவதாகக் கொள்கிருேம். ஆகவே, இச்சந்தர்ப்பத்தில், எடு, குடி என்னும் இரு சொற்களும் ஒரு பொருள் பயப்பனவாக கொள்ளவேண்டியுள்ளது.
3.3 us) பொருள் ஒரு சொல்
பல பொருள் ஒரு சொல் பற்றித் தொல்காப்பியர் உரியியலிலும் எச்சவியலிலும் கூறியுள்ளார். ஒரு சொல் என்ன வகையிலே பல பொருள்களைப் பயக்கும் என்பதற்குத் தொல்காப்பியருடைய உரியியற் சூத்திரமொன்றினை உதாரணமாகக் காட்டலாம் : -
'கடியென் கிளவி
வரைவே கூர்மை காப்பே புதுமை விரைவே விளக்க மிகுதி சிறப்பே
ய்ச்ச முன்றேற் றயீ ரைந்து மெய்ப்படத் தோன்றும் பொருட்டா கும்மே. 11
கடி என்னும் சொல் வரைவு தொடக்கமான பத்து வகைக் குறிப்புப் பொருளை உணர்த்துமென இச் சூத்திரம் கூறு கின்றது. இத்தகைய மரபே நிகண்டுகள், அகராதிகள் தயாரிப்பதற்குக் காரணமாயிற்று, ஒரு சொல் பல பொருளைக் குறிக்கும் பண்பு வரலாற்றடிப்புடையிலேயே ஏற்பட்டதெனலாம். ஆரம்பத்தில் ஒரு பொருளையே குறித்து நின்ற சொல், புலவர்களுடைய உபயோகத்தினு லும், மக்கள் வழக்கினலும் காலத்துக்குக் காலம் வெவ் வேறு பொருள்களைப் பெற்றுவத்திருக்க வேண்டும்.
ஒரு சொல்லுக்குக் காலத்துக்குக் காலம் ஏற்பட்டுவந்த புதிய பொருள் பற்றி நுணுக்கமாக ஆராயின் ஒருண்மை புலப்படும். அதாவது ஒரு காலகட்ட அரசியல், சமூக, பொருளியல், சமயச் சூழ்நிலைகளே சொற்களுக்கு உண். டாகும் புதிய பொருள்களை திச்சயிக்கின்றன என்பதாகும். உதாரணமாக, கோயில் என்னுஞ் சொல்லினை எடுத்துக்
கொள்வோம். இச் சொல்லுக்குப் போருள் என அரசர்
மண், தேவாலயம், சிதம்பரம், பூரீரங்கம்' என்று சொற்

Page 131
232 t சொல்லும் பொருளும்
பொருள் விளக்கம் என்னும் தமிழகராதி கூறுகின்றது. எம்
முடைய பண்டைய இலக்கியங்களிலே இச்சொல் 'அரண்
மனை' என்ற பொருளிலே வழங்கப்பட்டது.
உயர்நிலை மாடத்துக் குறும்பறை யசைஇ வாயில் விடாது கோயில் புக்கெம் பெருக்கோக் கிள்ளி கேட்க.12 என்னும் புறநானூற்றுப் பாடலிலே கோயில் என்னும் சொல் "அரண்மனை" என்னும் பொருளிலேயே வழங்கப்பெற் றுன்ளது. இதே பொருளிலேயே.
நளிமலை சிலம்பின் சிலம்புக் கோயில்
என்னும் நெடுநல்வாடைச் செய்யுளடியிலும் அச்சொல்
பயின்று வந்துள்ளது. இச்சங்கப் பாடல்கள் எழுந்த காலத்துக்குப் பின் எத்தனையோ அரசியல், சமய, சமூக மாற்றங்கள் தமிழ் நாட்டிலே ஏற்பட்டன. மன்னன்
சமூகத்திலே பெற்ற இடத்தினைத் தம் இஷ்ட தெய்வத் துக்குச் சமய அடியார்கள் வழங்கத் தொடங்கினர், மன்னனையும் மகேஸ்வரனையும் ஒன்ருக நோக்கும் போக்கு ஏற்பட்டது. 'திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் காணலொக்கும்’ என்று கூறப்பட்டது. இதன் காரணமாக. மன்னனிலே கண்டு பாடப்பட்ட கல்யாண குணங்களை இறைவன் அமேலேற்றியும் பாடினர் அடியார்கள். மன்ன னுடைய இருப்பிடமான கோயில் இறைவனுடைய இருப் பிடத்துக்குரிய பெயராகவும் ஆயிற்று. தேவாரங்களும் திவ்யப் பிரபந்தங்களும் எழுந்த காலத்திலே கோயில் இறைவனுடைய இருப்பிடமாகக் கொள்ளப்பட்டது. நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப் புலவர்வதன்முன் அலகிட்டு மெழுக்குமிட்டுப்
பூமாலை புளைந்ாதத்திப் புகழ்ந்து பாடித் தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடித்
சங்கரா சயபோற்றி போற்றி யென்றும் அலைபுனல் சேர் செஞ்சடையேம் ஆதீ யென்றும்: ஆரூரா என்றென்றே அலற நில்லே44

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 238
என்னும் அப்பருடைய திருத்தாண்டகத்திலே கோயில் என்னும் சொல் சிவனுடைய திருத்தலத்தினைக் குறிக் கின்றது, நாளடைவில், கோயில்கள் பல தமிழ்நாடெங் அணும் இருப்பினும், அவற்றுள் சைவசமயத்தினர்க்குச் சிதம்பரமும், வைணவ சமயத்தினர்க்குச் பூரீரங்கமும் சிறப் புள்ளனவாயின். இதஞல், பிற்காலத்தில் கோயில் என்னும் சொல் பொதுவாக இறைவன் இருப்பிடத்தைக் குறிப் பிடினும், சிறப்பாகத் தில்லையையும், பூரீரங்கத்தையும் குறிப்பிடலாயிற்று. எனவே, ஒரு சொல்லுக்குக் காலத் துக்குக் காலம் புதிய பொருள் ஏற்படுவதற்கு அரசியல் சமய, சமூக மாற்றங்கள் காரணங்களாக அமைகின்றன என்பதற்குக் கோயில் என்னும் சொல்லுக்கு ஏற்பட்டு வந்த பொருள்கள் சான்று பகருகின்றன.
ஒரு சொல் பலபொருள் பயக்கும் போக்கின் விளைவே தமிழ் மொழியில் ஆகுபெயரிள் தோற்றமாகும், நீலம் என்னும் நிறத்தைக் குறித்த சொல், நீல நிறத்தாலான பொருளையுங் குறிக்கத் தொடங்கியது.
திருமாலின் மேனி நிறம் நீலம்.
என்னும் வாக்கியத்திலே நீலம் என்னும் சொல் பண்புப் பெயராக அமைகின்றறு. அதே சொல்,
அவன் கடையில் நீலம் வாங்கினன். என்னும் வாக்கியத்திலே 'நீல நிறப் பொடி' எனப் பொருள் பயந்து குண ஆகுபெயராகின்றது. நீலம் என்னும் ஒரே சொல் இரண்டு வகையான பொருளைத் தருகின்றது. ஆளுல் அவ்விரு பொருள்களும் ஏதோ வகையில் தொடர்புற்றன வாக அமைகின்றன. சில வேளைகளில் ஒரே சொல் தொடர்பற்ற பொருளையுந் தருகின்றது. உதாரணமாக,
அவன் காஞ்சிபுரத்துக்குச் சென்ருன்.
என்னும் வாக்கியத்திலே "காஞ்சிபுரம்' என்னும் இடப் பொருள் குறிக்கப்படுகின்றது. .
த-30

Page 132
சொல்லும் பொருளும்
அவள் காஞ்சிபுரம் உடுத்தாள்,
என்னும் வாக்கியத்திலே காஞ்சிபுரத்திலே செய்யப்பட்ட ஆடையை அது குறித்து இடவாகுபெயராகின்றது. இட மும் கீடையும் வெவ்வேருனவை. காஞ்சிபுரம் என்னும் ஒரு சொல் தொடர்பற்ற இரு பொருள்களைத் தருகின்றது.
Hலி பொருள் பயக்கும் சொற்கள் சில பொதுப் பெயர்களாகி, சிறப்புப் பெயர்களிற் பலவற்றிர பொருள் *ளத் தம்மூள்அடக்குவனவாக அமைகின்றன. பூ என்னுஞ் சொல் ஒரு பொதுப் பெயராகும். மல்லிகை என்பது ஒரு சிறப்புப் பெயர். மல்லிகை என்னும் சொல்லின் 'பொருள்" 2த் "அம் சொல்லின் பொருளினுள் அடங்கி விடுகின்றது. உதாரணமாக, செல்வி மல்லிகை வாங்கினுள் என்னும் வாக்கியத்தின் பொருளை, செல்வி பூ வாங்கினுள் என்னும் விாக்கியப் பொருள் உள்ளடக்கின்றது. காரணம் என்ன வெனில், பூ என்னும் பொதுப்பெயர் மல்லிகை, முல்லை, தாரை ரோசா, அல்லி முதலிய பூக்களைக் குறிக்கும் சிறப்புப் பெயர்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இத குல்தான் சில வேளைகளில், மல்லிகைப் பூ, முல்லைப் பூ, தாமரைப் பூ, ரோசாப் பூ, அல்லிப் பூ என்று கூறுகின்ருேம். இத்தகைய சிறப்புப் பெயர், பொதுப் பெயர் தொடர்பாக நாம் சில வரையறைகளை அவதானிக்கக் கூடியதாயுள்ளது. 1 பொதுச்சொல் ஒன்றின் பொருட்பரப்பு அகலமானதாக *&ய, சிறப்புச் சொல்லின் பொருட்பரப்பு கருத்துக் குPRபாக அமைகின்றது. பூ என்பதன் பொருட் பரப்பு அகலமானதாக அமைகின்றது. இதுபோலவே மரம், மிருகம், பறவை, பழம் போன்ற சொற்களின் பொருட்பரப்பு அகலமானதாக அமையும். ஆனல், மல்லிகை என்பதன் பொருட்பரப்பு கருத்துக்குறிப்பாக *விடிகின்றது. இதுபோலவே வேம்பு, யானை, கிளி, அணுசி என்பனவற்றின் பொருட்பரப்பும் கருத்துக் குறிப்பாக அமையும்.
சுருக்துக்குறிப்புப் பொருளேக்காட்டும் சொல்லையுடைய விTசிகியப் பொருளை, அகலக் குறிப்புப் பொருளேக்
*

الم
தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 235
காட்டும் சொல்லையுடைய வாக்கியப் பொருள் உணர்த் தும். வேம்பு விழுந்தது என்னும் வாக்கியத்துக்குப் பதிலாக மரம் விழுந்தது என நாம் கூறலாம். ஆனல், மரம் விழுந்தது என்னும் வாக்கியத்துக்குப் பதிலாக வேம்பு விழுந்தது என்னும் வாக்கியம் மாத்திரமன்றி புளி விழுந்தது, தென்னை விழுந்தது, தேக்கு விழுந்தது என்னும் வாக்கியங்களெல்லாம் கூறலாம். இவை எதனைக் குறிக்கின்றனவெனின் ஒரு கருத்துக் குறிப்புப் பொருள் ஒர் அகலக் குறிப்புப் பொருளே உணர்த்தலாம்; ஆனல், ஓர் அகலக் குறிப்புப் பொருள் பல கருத்துக் குறிப்புப்பொருள்களை உணர்த்தும் என்னும் இயல்பினைக் குறிக்கின்றன.
3.4 எதிர்ப்பொருட் சொற்கள்
சொற்பொருள் தொடர்பினை உணர்த்தும் இன்னுெரு வகையான சொற்கள் எதிர்ப்பொருள் பயப்பனவாகும். ஆங்கிலம் போன்ற மேலைத்தேய மொழிகளிலே 'எதிர்ப் பொருள் பற்றிய பதங்கள் முக்கியத்துவம் வாய்ந்தன வாகவும், சொற்பொருள் பற்றிய கருத்துக்களில் இடம் ெேபறுவனவாகவும் அமைகின்றன.எமது தமிழிலக்கணநூலார் எதிர்ப்பொருட் சொற்கள் பற்றி (ஆங்கிலம் போன்ற மொழிகளிலே கூறப்பட்டிருப்பது போல்) விதந்து கூற வில்லை. அதற்குக் காரணம் தமிழ் மொழியிலே எதிர்மறை வினை என்ருெரு வினேப்பாகுபாடு அமைந்துள்ளமையே யாகும். உடன்பாட்டு வினைகள் எவற்றையும் எதிர்மறை விளைகளாக மாற்றலாம்; அல்லது இல்லை என்னும் எதிர் மறை வினை வடிவத்தாலே எதனையும் மறுதலிக்கலாம். வினையிலே எதிர்மறைச் சொற்கள் அமைந்துள்ளன வெனினும், பெயரிலேயுள்ள எதிர்நிலைச் சொற்களைத் தமிழ் இலக்கணநூலார் ஏன் இனங்கண்டு தனியானதொரு பாகு பாட்டினைச் செய்யவில்லே என்பதற்குத் தகுந்த நியாயம் எதுவும் கூறமுடியாதுள்ளது. எனவே அத்தகைய சொற்கள் தமிழ் மொழியிலே எவ்வாறு எதிர்ப்பொருளை உணர்த்து கின்றன என்பதையும், அவற்றுடைய அமைப்பினேயும்
நாம் சிறிது விளக்கமாக நோக்குதல் பயனுடைத்தாகும்.
a

Page 133
236 சொல்லும் பொருளும்,
தமிழ் மரபு எழுதிய பொன். முத்துக்குமரன் சொல்மரபு” என்னும் பகுதியிலே 122 சோடி எதிர்ப்பொருட் சொற்களைத் g(56)(aprf. ஆனல், அவை எவ்வாறு எதிர்ப்பொருட் சொற்களாயின, இவை இமாத்திரந்தான் எதிர்ப்பொருட் சொற்களா என்பன போன்ற விடயங்களுக்குத் தமிழ் மரபு ஆசிரியர் விளக்கங் கொடுக்கவில்லை. எனவே, தமிழ் மொழியிலுள்ள எதிர்ப்பொருட் சொற்களை நாமே பாகுபாடு செய்து விளக்கவேண்டியுள்ளது.
ஆண் : பெண், இளமை : மூதுமை, இருள் : ஒளி போன்ற சோடிச் சொற்களுக்கிடையே காணப்படும் எதிர்ப்பொருள் தன்மையினை உணர்த்துவனவாகத் தமிழிலே ஒருவகை எதிர்ப்பொருட் சொற்கள் அமைகின்றன. இத்தகைய சோடிச் சொற்களுக்கிடையே காணப்படும் எதிர்ப்பொருள் தன்மையினைப் பின்வருமாறு கூறலாம்: அவை இரண் டனுள் ஒன்றை மறுதலிப்பின் மற்றையதை நிலைநாட்டுவ தாகும், ஒன்றை நிலைநாட்டின் மற்றையதை மறுதலிப்ப தாகும். உதாரணமாக, அங்கு தோன்றும் உரு ஆண் என்று கூறின், அங்கு தோன்றும் உரு பெண் அல்ல என்னும் வாக்கியப்பொருள் குறிப்பாக உணர்த்தப்படுகின்றது. அதேபோன்று அங்கு தோன்றும் உரு பெண் என்று கூறின், அங்கு தோன்றும் உரு ஆண் அல்ல என்னும் வாக்கியப் பொருள் குறிப்பாக உணர்த்தப்படுகின்றது. இத்தகைய சோடிப் பதங்களை மறுதலிப்புப் பதங்கள் எனக் கூறலாம்.
குணத்துடன் அல்லது பண்புடன் தொடர்பான பல எதிர்ப்பொருட் சொற்கள் தமிழிலேயுண்டு. அவற்றை இன்னெரு வகையாகப் பாகுபடுத்தலாம் பெரியது : சிறியது, நல்லது கெட்டது, உயரம் : கட்டை போன்ற சோடிச் சொற் களே அவ்வகையினுள் அடங்குவனவாகும். இவற்றி னிடையே காணப்படும் எதிர்ப்பொருள் தன்மையினைப் பின்வருமாறு கூறலாம் : அவை இரண்டினுள் ஒன்றை நிலைநாட்டின், மற்றையது மறுதலிக்கப்படும் ஆணுல் ஒன்றை மறுதலித்தால் மற்றையது நிலைநாட்டப்பட
மாட்டாது. அந்த வீடு பெரியது என்னும் வாக்கியம் அந்த
வீடு சிறியது என்பதை மறுதலிக்கின்றது. ஆனல், அந்த
" و

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 237
வீடு பெரியது என்பதை மறுதலிப்பதன் மூலம் அந்த வீடு சிறியது என்று கூறிவிட முடியாது இத்தகைய பொருள் தொடர்பு கொண்ட எதிர்ப்பொருட் சொற்களையே இரண் டாவது வகைப் பாகுபாட்டினுள் அடக்கலாம்."
மூன்ருவது வகை எதிர்ப்பொருட்சொற் பாகுபாட்டி னுள் வாங்கு : வில், கொடு : பெறு போன்ற சோடிகள் அடங்கும். இங்கு ஒவ்வொரு சோடியிலும் இரு சொற்களும் ஒன்றுக்கொன்று மறுதலையாக உள்ளன. ஆஞல், முதலாவது வகையிலே குறிப்பிட்ட ஆண் : பெண் போன்ற மறுதலிப்புப் பதங்களுக்கும் இவற்றுக்குமிடையே ஒரு பெரிய வேறுபாடு காணப்படுகின்றது. அதாவது, முதலாவது வகையிலே சொற்ருெடரியல் வேறுபாடு எதுவும்
ஏற்படவேண்டியதில்லை. ஆனல், இம்மூன்ருவது வகையிலே
சொற்ருெடரியல் மாற்றங்கள் ஏற்படவேண்டியுள்ளன். உதாரணமாக நான் கடைக்காரனிட்ம் பழம் வாங்கினேன் என்னும் வாக்கியம் கடைக்காரன் எனக்குப் பழம் விற்றன் என்பதையும் உணர்த்துகின்றது. இங்கு இரண்டு வாக்கியங் களிலுமுள்ள சொல்லொழுங்கு வேறுபாட்டினை நாம் நோக்க முடிகின்றது.
ஒரு தனிச் சொல் பல வேறு சொற்பொருளே நிரா கரிக்கும் தன்மையுடையதாயுமுளது. இத்தகைய எதிர்ப் பொருட்சொற்களை நான்காவது வகையினுள் அடக்கலாம். செல்வி பச்சைச் சிலை கட்டினுள் என்னும் வாக்கியம், சிவப்பு,
நீலம், மஞ்சள் என்னும் சொற்களுள் ஏதாவது ஒன்றினை
பச்சை என்பதற்குப் பதிலாகப் பெற்று வேறு பொருள் பயக்கலாம். வழக்கமாக, கறுப்பு என்னும் சொல்லுக்கு எதிர்ப் பொருட்சொல் என்ன என்று அேட்டால், வெள்ளை என்றே கூறுவர். பெளதிகவியலாளர் நிற எல்லேயிலே கருமை ஒர் அந்தத்திலும் வெண்மை மற்ருேர் அந்தத்திலும் இருப்பதற்குப் பல காரணங்கள் காட்டுவர். அவ்வாறு இரு முனைப்பட்ட எதிர்ப்பொருட் சொற்களாகலன்றி,ஒரு குணம் ஏனைய குணங்களுக்கெல்லாம் எதிரானது என்னும் அடிப் படையிலே அமையும் சொற்களையே நான்காவது வகையி னுட் காணுகின்ருேம்.

Page 134
288 - சொல்லும் பொருளும்
3.5 எதிரொலிச் சொற்கள்
தமிழ் இலக்கணநூலார் "இரட்டைக் கிளவி என்று கூறியதே இங்கு எதிரொலிச் சொல் என அழைக்கப் படுகின்றது. தொடர்ந்து நடைபெறும் நிகழ்வுகளை, ஒலிகளைக் குறிப்பதற்கு எதிரொலிச் சொற்கள் பண்டைக் காலந்தொட்டே தமிழில் உபயோகப்பட்டு வந்துள்ளன. உதாரணமாக, மின் என்னும் வினையடியிலிருந்து மின்னி என்னும் வினையெச்சம் ஆக்கப்படுகின்றது. இவ்வினையெச்ச வடிவம் ஒரு தடவை மின்னுதலைக் குறிக்கும். ஆனல் பல தடவை மின்னுவது போன்று ஒளியைக் காலும் பூச்சியினைக் குறிக்க மின்னி போதாதெனக் கண்டு மின் என்னும் வினையடி இரட்டித்து இசுரப் பெயரீறு பெற்று மின்-மின்+இ = மின்மினி எனவாயிற்று. குறுந்தொகை 72-ம் செய்யுளிலே மின்னி என்னும் வினையெச்ச வடிவமும், மின்மினி என்னும் பெயர் வடிவமும் இடம்பெற்றுள்ளன. விற்று வீற்று, மெல்ல மெல்ல, வைகல் வைகல் போன்ற எதிரொலிச் சொற்கள் சங்க*இலக்கியங்களிலே கையாளப் பட்டுள்ளன. அவை மிகுதிப் பொருளை உணர்த்துஞ் சொற் களாகவே கொள்ள வேண்டும். தொல்காப்பியர் இரட்டைக் கிளவி யிரட்டிற் பிரிந் திசையா என்று சூத்திரஞ் செய் துள்ளார்.19 இச் சூத்திரம் ஒரு வகையில் ள்திரொவிச் சொற்களின் அமைப்பினைக் கூறுகின்றது எனலாம்.
எதிரொலிச் சொற்களின் அமைப்புப் பல இசுைப்படு கின்றது. பட்பட, சரசர, முணுமுணு போன்ற எதிரொலிச் சொற்கள் ஒருவகையான அமைப்பினையுடையனவாயுள்ளன. இத்தகைய சொற்களிலே முதற்சீர் அப்படியே இரட்டித் துள்ளமையைக் காணலாம். வினேப்பொருளினை, அவை இரட்டித்து வருமிடத்துத்தான்தெளிவாக உணர்த்துகின்றன. பட, சர, மூணு என்னும் பதங்களைத் தனியாக நாம் எங்கும் பயன்படுத்துவதில்லை. அவை இரட்டித்து வருமிடத்துத் தான் பொருள் பயக்கக்கூடியனவாயுள்ளன, இங்கு இடம் பெறும் இரட்டிப்பு பூரண இரட்டிப்பாகும். மேற்காட்டிய மூன்றும் அப்படியே இரட்டிக்கின்றன.
**
4.
 

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 239
பூரண இருட்டிப்பு இன்றி, குறிப்பிட்ட ஒரு பகுதியே இரட்டித்து அமையும் எதிரொலிச்சொற்களை இரண்டாவது
வகையிலே அடக்கலாம். பின்வரும் உதாரணங்களை நோக்குக:
கத்திகித்தி லாம்புகீம்பு
குப்பைகிப்பை பாட்டுக்கீட்டு
பழம்கிழம் பன்னல்கின்னல்
மேற்காட்டிய உதாரணங்கள் யாவும் பேச்சுத் தமிழிலேயே
இடம்பெறுகின்றன. இங்கு நடைமுறையிலே உள்ள ஒரு சொல் தானுணர்த்தும் பொருட்பரப்பினைச் சிறிது அகல் விப்பதற்காகப் பேச்சுவழக்கிலே பல சந்தர்ப்பங்களிலே இர்ட்டிக்கின்றது. அவ்வாறு இரட்டிக்கும்போது, இரட் டித்த இரண்டாவது சொல்லிலுள்ள முதல் உயிர்மெய் குறுகியதென்ருல் கி ஆகவும், நெடிலென்ருல் கீ ஆகவும் மாற்றமடைகின்றது.
இன்றைய ஆக்க இலக்கியங்களில் பேச்சுத் தமிழ் பயின்று வருகின்ற காரணத்தினுல், விரைவு, பன்மை போன்ற பொருளைக் குறிச்கவும், ஏற்கனவே குறித்த பொருளை அகல்விக்கவும் எதிரொலிச் சொற்கள் பல உபயோகிக்கப் படுகின்றன.
4. சொற்பொருள் மாற்றம்
ஒரு மொழியிலே காலத்துக்கு காலம் சொற்பொரு ளிலே மாற்றம் ஏற்படுவது இயற்கையே, அவ்வாறு ஏற்படக் கூடிய சில மாற்றங்களை ஒரு சொல் பலபொருள், பல சொல் ஒரு பொருள் போன்ற பகுதிகளிலே விளக்கி யுள்ளோம். இப்பகுதியில், ஒரு காலத்தில் வழக்கிலிருந்த சொற்கள் தாம் குறித்துவத்த பொருளைக் குறியாது வேறு பொருளேக் குறித்து வந்தமையினையும், இருவேறு பொருள் களைக் குறித்து வந்த இரு சொற்கள் காலகதியில் அவற்றுள் ஒரு பொருளையே உணர்த்தியமையும், பல பொருள்களைக் குறித்து வந்த ஒரு சொல் பிற்காலத்தில் அவற்றுள் ஒன்றை மாத்திரம் சிறப்பாகக் குறிப்பிடுவதையும் பற்றியே விளக்கவுள்ளோம்.

Page 135
240 சொல்லும் பொருளும்
4.1 குறித்த பொருளேவிடுத்து வேறு பொருள் குறித்தல்
உலக மொழிகள் யாவற்றிலும் பொருள் தொடர்பாக இப்போக்கிலமைந்த மாற்றம் நடைபெற்றுள்ளது. பெரும் பாலும், மணம் என்னும் சொல் இம்மாற்றத்துக்கு உதா ரணமாக எடுத்துக் காட்டப்படுவது கிழக்கம். முற்காலத் தில் நறுமணத்தையே குறித்த இச்சொல் பிற்காலத்தில் கெட்ட மணத்தையும் குறிக்கலாயிற்று. நாற்றம் என்னும் சொல்லும் இவ்வாறே அமைந்தது. இவற்றை விட சான் றேன், கடன் என்னும் சொற்களே இம்மாற்றத்தினை தன்கு விளக்கக் கூடியனவாகும். புறநானூறு 312-ம் பாடலில்
ஈன்று புறந் தருத லென்றலைக் கடனே
சான்றே னுக்குத ஹந்தைக்குக் கடனே
வேல்வடித்துக்கொடுத்தல் கொல்லற்குக் கடனே நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே
ஒளிறுவாள் அருஞ்சம மூருக்கிக் - 。
களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே
மேற்படி பாடலிலே சான்றேன் என்னுஞ் சொல்லும் கடன் என்னுஞ் சொல்லும் பயின்று வந்துள்ளன. சான்றேன் என்பதற்கு உரைகாரருடைய விளக்கம் தன் குலத்துக் குரிய படைக்கலப் பயிற்சியாகிய கல்வி அதற்குரிய அறிவு'
என அமைகின்றது. வீரத்துக்குரிய பயிற்சியினையும் அறி
வினையும் பெற்ற ஒருவனே ‘சான்றேன்" எனப்பட்டான். ஆனல், சிறிது காலஞ் சென்றவுடன் இச்சொல் வேறு பொருளைக் குறிப்பதாயிற்று. வள்ளுவனுடைய திருக்குறளில்
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனச்
சான்றே னெனக்கேட்ட தாய்
என்னுங் குறளிலே இடம்பெறும் சான்றேன் என்னுஞ் சொல்லுக்கு ‘கல்வி கேள்விகளா னிறைந்தான்' என்று பரிமேலழகர் உரை கூறுகின்ருர், எனவே படைக்கலக் கல்வி பெற்றவணுகிய வீரனைக் குறித்த சான்றேன் என்னுஞ் சொல் கல்வி கேள்விகளில் நிரம்பியவனைக் குறிக்கலாயிற்று. இம்மாற்றத்துக்குரிய காரணம் சமயச் செல்வாக்கே எனலாம்.
**
 
 
 

| فېلم
ہم }
தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 24
போரை மதித்து அதுபற்றிய பாடல்கள் இயற்றப்பட்ட வீரயுகக் காலத்திலே வீரர் சமூகத்திலே மதிப்புப் பெற்றனர். ஆனல், கொல்லாமை போன்ற அறங்களைப் போதித்த சமண பெளத்த மதங்கள் தமிழ் நாட்டிலே செல்வாக்குப் பெற்ற பொழுது போர் வீரருக்குப் பதிலாக ஞானவீரருக்கே சமூகத்தில் மதிப்பு உண்டாக வேண்டிய தேவை உண்டா யிற்று. இதன் விளைவே இச்சொற்பொருள் மாற்றமாகும்.
மேற்படி பாடலிலுள்ள கடன் என்னுஞ் சொல்லுக்குக் ‘கடமை' என்று பொருள் கூறப்பட்டது. இதே பொரு ளிலேயே அப்பருடைய காலத்திலும் இச்சொல் வழங்கிற்று என்பதற்கு என்கட்ன் பணிசெய்து கிடப்பதே என்னுஞ்
செய்யுளடி சான்று பகருகின்றது. ஆணுல், கம்பனுடைய காலத்தில் இச்சொல் வேறு பொருள் குறிக்கத் தொடங்கி
விட்டது. கடன்பட்டார் நெஞ்சம்போலக் கலங்கினுன் இலங்கை வேந்தன் என்னும் பாடலடியில் கட்ன் என்னும் சொல் இன்று நாம் உபயோகிக்கும் தன்மையிலேயே கையாளப் பட்டுள்ளது. இன்று கடமை என்னுஞ் சொல்லினை ஒரு பொருளிலும், கடன் என்னுஞ் சொல்லினை வேறு பொரு ளிலும் நாம் கையாளுகிருேம். இதற்குக் காரணம் புதிய தலைமுறையினரின் புதுப் பொருள் மோக்மே எனலாம்.
திருப்பித் தகுவதாக ஒருவரிடம் பணம் வாங்குவதையே
பிற்கால்த்தில் கடன் என்னுஞ் சொல்லாற் குறித்தனர். தருவதாகக் கூறி வாங்கியதைத் திருப்பிக்
கொடுத்தல் கடமையென்ற காரணத்தினலே அச் சந்தர்ப்
பத்தினை மாத்திரம் குறிக்க கடன் என்ற சொல்லினைப் பிற் காலத்தோர் உபயோகித்திருக்க வேண்டும்.
ནི་ 4.2 பல பொருளுள் ஒன்று
பண்டைக் காலத்தில் பல பொருள்களைக் குறித்து வந்த ஒரு சொல், பிற்காலத்தில் அவற்றுள் ஒன்றையே குறித்து நின்றது. உதாரணமாக, மான் என்னுஞ் சொல் சங்க இலக்கியங்களிலே பல பொருள்களிற் கையாளப்படுகின்றது. அது குதிரை, சிங்கம், யானை, அசுணமா போன்ற மிருகங் களேயெல்லாங்குறிக்கும் பொதுச் சொல்லாகப்பயன்பட்டது.
த-31

Page 136
24 சொல்லும் பொருளும்
துன்னருந் துப்பின் வயமான் றேன்றல்
என்னும் புறநானூற்று 44-ம் செய்யுளடியில் இடம்பெறும் மான் என்னுஞ் சொல் “குதிரை" என்னும் பொருள் பயக் கின்றது. அகநானூறு 203-ம் பாடலில்,
勳 மானதர் மயங்கிய மலைமுதற் சிறுநெறி
என்னும் அடி இடம்பெறுகின்றது. இதற்கு உரைகாரர் *விலங்குகன் இயங்குதலால் உண்டான வழிகள் பலவும் பொருந்திய மலையின் அடிப்பகுதியில் அமைந்த சிறிய வழி என்று கூறுகின்ருர். மான் என்னுஞ் சொல் விலங்குகள் யாவற்றையுமே குறிக்கின்ற பொதுச் சொல்லாக இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பல மிருகங்களைக் குறிக்க வழங்கிய மான் என்னும் பொதுச் சொல் பிற் காலத்தில் ஒரு குறிப்பிட்ட விலங்கினேயே சிறப்பாகக் குறிக்கும் சொல்லாக வழங்கலாயிற்று. இது போலவே பொன் என்னுஞ் சொல்லும் இரும்பு, பொன் முதலாய உலோகங்களைக் குறிக்கும் பொதுச் சொல்லாகவிருந்து பிற் காலத்தில் அவ்வுலோகங்களுள் இன்று நாம் தங்கம் எனக் குறிக்கும் உலோகத்தை மாத்திரம் குறிக்கும் சொல்லாக வழங்கலாயிற்று. அரி என்னுஞ் செ'ல் சங்க இலக்கியங் களிலே “அரிகை, கதிர் அறுக்கும் பருவம், அரிக்கை, இடை விடுகை, வண்டு, பருக்கைக் கல், மென்மை, கண்வரி, பொன், நிறம், அழகு, ஒரு வகைப் பறை, கலம், நறவு, உள்ளிடு மணி. பகை, சூரியன், தவளே, மாமிசம், அரிசி" என்னும் பல பொருள் குறித்த சொல்லாசப் பயன்பட்டது. இன்று இச்சொல் "அரிதல்" என்னும் தொழில் நிகழ்ச்சியை மாத்திரங் குறிக்கும் சொல்லாகவே பயன்படுகின்றது. இவ்வாறு தமிழிலே பல சொற்கள்தாம் குறித்த பல பொருள்களுள், ஒரு பொருளை மாத்திரம் சிறப்பாகக் காலகதியிலே உணர்த்தி வருவதை நாம் காணலாம்.
4.3. பல சொல் ஒன்றதல்
ஒரு தொழில் நிகழ்ச்சியை நுண்பொருள் காரணமாகப்
பல சொற்களாலே உணர்த்தும் வழக்கம் மொழிகளிலே,
உண்டு, இன்று தா என நாம் வழங்கும் சொல் தொல்
.."
قر /
په اړ .

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 243
காப்பியருடைய காலத்தில் குறிப்பிட்ட ஒரு சந்தர்ப்பத் திலேயே வழங்கப்பட்டது. அவருடைய சொல்லதிகார 444, 445, 446. 447 ஆஞ் சூத்திரங்களை இங்கு நோக்குதல் அவசியம்:
ஈதா கொடுவெனக் கிளக்கு மூன்று மிரவின் கிளவி யாகிட னுடைய. அவற்றுள் ஈயென் கிளவி யிழிந்தோன் கூற்றே.
தாவென் ளவி யொப்போன் கூற்றே. கொடுவென் கிளவி யுயர்ந்தோன் கூற்றே.
இச்சூத்திரங்கள் ஈ, தா, கொடு என்னும் மூன்று சொற்களும் ஒரு தொழில் நிகழ்ச்சியைக் குறித்தபோதும், அந்நிகழ்ச் சியிற் பங்குபற்றுபவனின் தரத்துக்கேற்றபடி ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதை வலியுறுத்துகின்றது. ஆஞல், இன்று அச்சொற்களின் நுண்பொருள் வேறுபாடு மறைந்து விட்டது. உயர்வு தாழ்வு பற்றிச் சிந்திக்காத சமூகக் காரணத்தாலோ என்னவோ இவ்வேறுபாடு மறைந்து, தா என்னுஞ் சொல்லே அப்பொருளை உணர்த்துதற்கு எல்லாச் சந்தர்ப்பங்களிலும் வழங்கப்படுகின்றது. அத்துடன், தன்மையிடத்தான் முன் னிலேயிடத்தானிடமிருநது ஏதாவது பெற விரும்பின் தா என்று கேட்டலும், பெற விரும்பிய பொருளை அளித்தலைக் கொடு என்ற வினையடியால் உணர்த்துதலும் இக்கால வழக்குகளாக அமைந்துவிட்டன. அவன் எனக்குத் தந்தான், நான் அவனுக்குக் கொடுத்தேன் என்னும் வாக்கியங்களை ஒப்பிட்டு நோக்குக. ஆங்கிலத்திலே ஜive என்னும் ஒரு சொல்லாலேயே உணர்த்தப்படும் நிகழ்ச்சி இங்கு இரண்டு சொற்களாலே உணர்த்தப்படுகின்றது.
இவ்வாறு சொற்பொருள் பல்வேறு வகையிலே மாற்ற முற்று வந்த போதிலும், இன்றும் எம் மொழியில் எமது பண்பாட்டினடிப்படையான சொற்கள் நுட்பமான முறை யிலே பொருளுணர்த்தும் பாங்கிணைக் காணலாம். ஆங்கில

Page 137
244 சொல்லும் பொருளும்
மொழியிலே "காய் , "பழம்" என்னும் வேறுபாட்டினைக் குறிக்குஞ் சொற்கள் இல்லை. Fruit என்னுஞ் சொல் கனிந்தவற்றையே குறித்தது. பெரும்பாலும் கனிந்த பழங்களே உண்ணும் முறையினை மாத்திரம் ஆங்கிலேயர் அறிந்திருந்த காரணத்தால் ஒ சொல் அவர்களுக்குப் போதுமானதாக இருந்திருக்கலாம். ஆனல், தமிழ் நாட் டிலோ பழமாவதற்கு முன்னருள்ள காய்களைச் சமையலுக்கு பல்வேறு வகையிலே உபயோகிக்கும் வழக்கமுண்டு. மாங் காய்ச் சம்பல், மாங்காய்த் துவையல், மாங்காய் வற்றல் என் றெல்லாம் எங்கள் உணவுப் பழக்கத்துடன் தொடர்புடைய தொடர்கள் உண்டு. இதனல், காய், கனி என்னும் இரு சொற்கள் எம் மொழியிலே அமைவது இயல்பாயிற்று.
5. புதுப் பொருளுணர்த்தக் கடன் வாங்குகிறேம்
நாம் முன்னர்க் காணுத பொருளை, கேட்டறியாத கருத்துக்களை அறியும் வாய்ப்பு ஏற்படும்போது, அவற்றுக் கான சொற்களையும் நாம் கடனகப் பெற்றுக்கொள்ளுதல் வழக்கமாகிவிட்டது. இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயர்கள் தமிழ் நாட்டு மக்கள் தங்கள் உணவு வகைகளுள் ஒன்ருகத் தயாரிக்கும் மிளகுத் தண்ணி (இன்று ரசம் என வழங்கப் படுவது) பற்றி அறிந்தனர். அதனுடைய சிறந்த பயனேக் கருதிய ஆங்கிலேயர் சிலர் அதனை உட்கொள்ளவும் தொடங் கினர். நாளடைவில் தங்கள் மொழிச் சொற்களில் ஒன்ரு கவும் கடன் வாங்கிக்கொண்டனர். இன்று ஆங்கிலமொழியி லுள்ள எந்த அகராதியிலும் Muligatawny GTGör SDJ Lib சொல் இடம்பெறுகின்றது. The Concise Oxford Dictionary of Current English என்னும் அகராதி அச்சொல்லினைப் பின்வருமாறு நிரைப்படுத்தியுள்ளது;
Mulligatawny, N. (Also - soup) E. - Ind. highly seasoned soup; - paste, Curry paste used for this.
f. Tamil milagutati nir pepper - water]
இதுபோலவே தமிழ்மொழியும் காலத்துக்குக் காலம் பல தேவைகளுக்காக அம்மொழியுடன் நெருங்கித் தொடர்பு கொள்ளும் வாய்ப்புடைய மொழிகளிலிருந்து சொற்களைக்

ادب)
தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 245
கடன் வாங்கியுள்ளது. அவ்வாறு கடன் வாங்கிய சொற்களை இரண்டு வகையிலே பாகுபாடு செய்து அவற்றை விளக் கலாம். எம்மொழிகளிலிருந்து சொற்கள் தமிழ்மொழியீல் வந்து சேர்ந்தனவோ, அம்மொழி வாரியாக அச்சொற்களைப் பாகுபாடு செய்தல் ஒருவகையாகும். பிறமொழிச் சொற்கள் தமிழில் வந்து சேர்ந்த தேவைகளை அடிப்படையாகக் கொண்டு அவற்றைப் பாகுபாடு செய்தல் இரண்டாவது வகையாகும். இவ்விருவகைப் பாகுபாடுகளையும் கீழே விரிவாக நோக்குவோம்.
5.1 மொழிவாரியான பாகுபா
ஆரம்ப காலத்தில் வடமொழியிலிருந்தே தமிழ்மொழி பெருத் தொகையான சொற்களைக் கடன் வாங்கியது. ஒரு காலத்தில் இந்திய உபகண்டம் முழுவதிலுமே மிகச் செல்வாக்குப் பெற்ற மொழியாக சமஸ்கிருதம் அமைந்தது. அதனுடைய சமய, தத்துவ, அரசியல், இலக்கியச் செல் வாக்கு இந்திய உபகண்டம், இலங்கை, தென்கிழக்காசிய நாடுகள் ஆகியவற்றிலிருந்த எந்த மொழிகளையும் விட்டு வைக்கவில்லை. இதற்குத் தமிழ் மொழியும் விதிவிலக்காக அமையவில்லை. ஆரம்ப காலத்தில் சமஸ்கிருதச் சொற்கள் பாலி பிராகிருத மொழிகளினூடாகவே தமிழ் மொழியில் வந்து சேர்ந்தன. பெளத்தர்களுடைய பாலிமொழியும் சமணர்களுடைய பிராகிருத மொழியும் தமிழ் ஒலிவடிவுக் கேற்ப அமையக் கூடிய வகையிலே சமஸ்கிருதச் சொற்களை வழங்கக் கூடியனவாயமைந்தன. வேத சமயத்துக்கு எதிராக எழுந்த பெளத்த, சமண சமயங்கள் வேத சமய தேவபாஷை யாகிய சமஸ்கிருதத்தை விடுத்து மக்கள் மொழிகளாகிய பாலியினையும் பிராகிருதத்தையும் தம்முடைய போதனை மொழிகளாகக் கொண்டனர். சமஸ்கிருத மொழிச் சொற் சுளிலேயுள்ள கூட்டொலிகளிற் பெரும்பாலன இம்மொழிச் சொற்களிலே விடப்பட்டன. உதாரணமாக, க்ருஷ்ண, வர்ஷ என அமைந்த இரு சமஸ்கிருதச் சொற்களும் முறையே பிராகித மொழியிலும் பாலி மொழியிலும் கண்ண, வஸ்ஸ என்று அமைந்தன. . இவ்வடிவங்களையே தமிழ் மொழி கடன் வாங்கி முறையே கண்ணன், வசி என அமைத்துக்

Page 138
246 சொல்லும் பொருளும்
கொண்டது. தொல்காப்பியர் சமஸ்கிருதம், பிராகிருதம் பாலி என்னும் மொழிகளையெல்லாம் உள்ளடக்கும் வகை யிலே 'வடமொழி’ என்னுந் தொடரினை உபயோகித்தார். பிராகிருதம், பாலி மொழிகளூடாக வடமொழிச் சொற் களைக் கடஞகப் பெற்று கூத்த தமிழ்மொழி, பிற்காலத்தில், சமஸ்கிருத மொழியிலிருந்தே நேராகச் சொற்களைக் கடன் வாங்கத் தொடங்கியது. எனினும் அவ்வாறு பெறப்பட்ட சொற்கள் தமிழ் ஒலியமைதிக்கேற்ப அமைத்துக் கொள்ளப் Lu -- L-law;
(அ) சமஸ்கிருத உயிர்ப்பு ஒலியும் ஒலிப்புடை ஒலியும் தமிழில் முறையே உயிர்ப்பில் ஒலியாகவும் ஒலிப்பில் ஒலியாகவும் அமைதல்:
khanda —> kantam ( 55 GTL-Lib)
bana -> panan (ut 600 lb)
(-ზე) მზ, ჩ முதலிய எழுத்துக்களை முதனிலைகளாகக்
கொண்ட சொற்களுக்கு முன்னர் ஒரு துணைமுதல்
உயிரெழுத்தினேப் பெய்தல்:
GEG) Irój, -> உலகம் லங்கா -> இலங்கை
ரோம --> உரோமம்
(இ) கூட்டெழுத்துக்களைப் பிரித்து எழுதுதல்:
Lu 55 -> பக்கம்
ஷஷ்டி -> சட்டி
ரத்ன -> இரத்தினம்
வீரசோழியம், நன்னூல் ஆகிய இலக்கண நூல்களிலே வட மொழிச் சொற்கள் தற்சமமாக அல்லது தற்பவமாகத் தமிழ்மொழியில் வத்து சேருமிடத்து ஏற்படக்கூடிய மாற் றங்கள் தெளிவாக வகுக்கப்பட்டுள்ளன இவ்வாறு வட சொற்களேத் தமிழிலே பயன்படுத்தும்போது அனுசரிக்க வேண்டிய இலக்கண விதிகள் இருத்தபோதிலும், சில
"
 
 

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 247
பேச்சு வழக்குகளிலே (உதாரணமாக, தென்னிந்தியப் பிராமணத் தமிழ்) சமஸ்கிருதச் சொற்கள் எவ்வித
மாற்றமுமின்றி அப்படியே கையாளப்படுகின்றன. இன்றைய ஆக்க இலக்கியங்கள் இலவற்றிலும் இந்நிலையினைக் காணக் கூடியதாயுள்ளது.
வடமொழி தவிர, தமிழ்மொழி கடனுகப் பெற்ற சொற்களின் மொழிகளைப் பின்வருமாறு நிரைப்படுத்தலாம்:
மொழிகள் கடனுகப் பெற்ற சொற்கள் 1. தெலுங்கு கத்தரி பத்தர் 2. மலையாளம் அவியல்
சக்கை
u6op 3. மராட்டி குண்டான் 4. இந்துஸ்தான் அபின்
தபால் G5 To 5. சிங்களம் பில்லி 6. மலாய் கிட்டங்கி
மங்குஸ்தான் 7. சீனம் பீங்கான் 3・ <到 TH ஏலம் 9. கிரீக் சுருங்கை
ஒரை 10. போர்த்துக்கீஸ் அலவாங்கு
கடதாசி கதிரை 11. டச்சு உலாந்தா
கந்தோர் கக்கூசு 12. ஆங்கிலம் றப்பர்
வோட்டு
sтrf (Car)

Page 139
24& சொல்லும் பொருளும்
5.2 தேவைகளினடிப்பட்ையிலான பாகுபாடு
தமிழ்மெயழி பல தேவைகளுக்காகவே பிற மொழிகளி லிருந்து சொற்களைக் கடன் வாங்கியது. சமயம், கலை, உணவு, உடை, வீடு, அலங்காரம் ஆகியனவற்றை உள் ளடக்கிய கலாசாரத் தேவைகளுடன், அரசியல், வணிகத் தேவைகளையும் இங்கு குறிப்பிடலாம். அவை பற்றிய விவரங்கனைக் கீழே நோக்கலாம். - 5.2.1 கலாசாரத் தேவை
கலாசாரம் என்பது மனித வாழ்வுடன் தொடர்புடைய எல்லாவற்றையுமே உள்ளடக்குவதாகும். எனினும், சமயம், கலை, உணவு, உடை, வீடு, அலங்காரம் ஆகியன இது தொடர்பாகச் சிறப்பாகக் குறிப்பிடப்படுவனவாகும். தமிழ் நாட்டிலே ஆரம்ப காலத்தில் இருந்த சமயநிலை சமண, பெளத்த மதங்களின் வரவாலே மாற்றமுறத் தொடங்கியது. சமண, பெளத்த மதங்களின் போதனைகளடங்கிய மூல நூல்கள் யாவுமே வடமொழியிலிருந்தன. இச்சமயங்கள்
தமிழ் நாட்டிலே செல்வாக்குற்றபோது பல சமயக் கருத்துக்
களைக் குறிக்கும் வடசொற்கள் தமிழ்மொழியிலே சேர
லாயின. உதாரணமாக மணிமேகலை என்னும் பெளத்த
காவியத்திலே அளவைகள் பற்றிக் கூறுமிடத்திலே அச்சமயம் சார்ந்த பல வடமொழிச் சொற்களை இனங்காண முடிகின்றது: 18 t - a இப் பெற்றிய அளவைகள் பாங்குறும் உலோகா யதமே, பெளத்தம், சாங்கியம், நையாயிகம், வைசேடிகம் மீமாஞ்சகம், ஆம் சமயவா சிரியர் தாம்பிரு கற்பதி, சினனே, கபில63 அக்க பாதன், கணுதன், சைமினி, மெய்ப்பிரத் தியம், அனுமானஞ், சாத்தம், உவமானம், அருத்தாபத்தி, அபாவம் இவையே யிப்போ தியன்றுள அளவைகள். வடநாட்டுச் சமய தத்துவக் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்ட தமிழகம், அக்கோட்பாடுகளை விளக்கும் சொற் களையும் பெற்றுக் கொண்டது என்பதற்கு மேற்காட்டிய மணிமேகலைப் பாடலடிகள் சான்றுபகருகின்றன. உலோகா

۳ مه 2
தமிழ்மொழி இலக்கண இயல்புகள் · 249
யதம், பெளத்தம், சாங்கியம், நையாயிகம், வைசேடிகம், மீமாஞ்சகம், என்னுஞ் சமயப் பெயர்களையும், பிருகற்பதி,
சினன், கபிலன், அக்கபாதன், கணுதன், சைமினி, என்னுஞ்
சமயவாசிரியர் பெயர்களையும், அவர்களால் உபயோகிக்கப் பட்டி ம்ெய்ப்பிரத்தியம், அனுமானம், சாத்திரம், உவமானம், அருத்தாபத்தி, அபாவம் என்னும் அளவைகளின் பெயர் களையும். மணிமேகலை ஆசிரியர் தமிழ்மொழிக்கு அறிமுகஞ் செய்து வைத்துள்ளார். இவ்வாறு வேறு வேறு சமயங்கள் தமிழ் நாட்டிற்கு வந்த சந்தர்ப்பங்களில், அவற்றுடன் தொடர்பான பல சொற்களும் தமிழ் மொழியிலே சேர்ந் தன. உமறுப்புலவரின் சிறப்புராணம், வீரமாமுனிவரின் தேம்பாவணி ஆகியனவற்றிலே இத்தகைய சொற்களின் பிர யோகத்தினைக் காணலாம்.
கலைகள் தொடர்பாகவும் பல பிற மொழிச் சொற்கள் தமிழ்மொழிக்கு வந்து சேர்ந்துள்ளன. சிலப்பதிகார அரங் கேற்று காதையில் வடமொழி நாட்டிய, இசை நூல்களிற் கூறப்பட்ட கருத்துக்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. இலக்கியக் கலை தொடர்பாக மிக அண்மையில் தமிழ்மொழியில் வந்து
சேர்ந்த நாவல் என்னும் சொல் ஆங்கில Novel என்னுஞ் *சொல்லின் திரிபுற்ற வடிவமாகும். இவ்வாறே, சிற்பம்,
டிடம் போன்ற கலைகளின் தொடர்பான சொற்களும்
வ்ந்து சேர்ந்தன. சித்திரக்கரணம், வர்த்தனை, தர்ச்சனி,
கனிட்டன் என்னும் இசை, நடனந்தொடர்பான சொற்கள் வட மொழியிலிருந்து வந்து சேர்ந்தன. விருந்தை, போட்டிக்கோ, றிப்பை போன்ற கட்டிடக்கலே தொடர்பான சொற்கள் மேலைத்தேய மொழிகளிலிருந்து வந்து சேர்ந்தன.
பல்வேறு உணவுப் பழக்கமுள்ளவர்களின் தொடர்பு தமிழர்களுக்கு ஏற்பட்டது. அவர்களுடைய எல்லா உணவு வகைகளையும் பின்பற்ருவிடினும், சிலவற்றைக் கடன் வாங்கிக் கொண்டனர். அவை தொடர்பான சொற்களும் தமிழ்ச் சொற் களஞ்சியத்தில் சேர்ந்துவிட்டன. இன்று இலங்கைத் தமிழர் யாவருக்கும் நன்கு பரிச்சயமான பாண் என்னுஞ் சொல் போர்த்துக்கேய மொழியிலிருந்து பெறப் பட்டது. போர்த்துக்கேயர் இலங்கையை ஆண்ட பொழுது இவ்வுணவுப் பழக்கத்தை அறிமுகஞ் செய்தனர். இன்று வரை எம்மவரிற் பலர் பாண் தின்னுபவர்களாயுள்ளோம்.
岛一32

Page 140
250 சொல்லும் பொருளும்
பூரி, லட்டு, சப்பாத்தி, அல்வா, பாதாம்கீர், பிரியாணி, கேக், பிஸ்கற் போன்ற உணவு ச்சொற்கள் பிறமொழி பேசுவோரின் உணவுப் பழக்கத்தை நாம் பின்பற்றியபடியால் எம் மொழி யிலே வந்து சேர்ந்தனவாகும்.
உடை தொடர்பாகவும் பல பிறமொழிச் சொற்களை எமது மொழி பெற்றிருக்கின்றது. மேலைத்தேய உடை யலங்காரத்தில் ஈடுபட்டுவரும் எம்மவர் தவிர்க்க முடியாத படி அவர்கள் மொழிச் சொற்களைக் கடன் வாங்கவேண்டி யேற்பட்டது. சேர்ட், லோங்ஸ், பெல்ஸ் போன்ற சொற் கள் இன்று எம்மவராலே சர்வ சாதாரணமாக வழங்கப்படு கின்றன. அந்நிய நாகரிகத்தின் செல்வாக்கு இத்துறையிலே அதிகரித்து வருவதால், பிறமொழிச் சொற்களேயே உப யோகிக்கும் தமிழ் மக்கள் அவற்றுட் சில குறிக்கும் உடையமைப்புக்குப் பண்டைக் காலத்தொட்டு வழங்கி வந்த தமிழ்ச் சொற்களை மறந்துவிடுகின்றனர். அதனுல் அவை வழக்கிழந்து போய்விடுகின்றன. உதாரணமாக இன்று இளம் பெண்களுக்குச் சிற்றடை (பேச்சு வழக்கில் சித்தாடை) என்ருல் என்னவென்று தெரியாது. இதனை இடையினைச்சுருக்கு வதற்காகத் தமிழ்ப் பெண்கள் அணிந்து வந்தனர். ஆனல், இன்று அதே நோக்கத்துக்காக அணியப்படும் ஆடையினை Wrap - around என்னும் ஆங்கிலச் சொல்லாலே வழங்கு இன்றனர். அவரவர் தத்தமக்கேற்றபடி இச்சொல்லினை உச்சரிக்கின்றனர். எவராவது இதனைச் சிற்றடை என்று கூறுவதில்லை. உணவு, உடை தொடர்பான சொற்களைப் போன்றே வீடு, அலங்காரம் ஆகியன தொடர்பான கலாசாரச் சொற்கள் தமிழிலே வந்து சேர்ந்தன.
5.2.2 அரசியல் வணிகத் தேவைகள்
அரசியல் வணிகத் தொடர்புகள் காரணமாக, . பிறநாட்டு அரசியற் கோட்பாடுகளையும், வணிகப் பொருட்களையும் குறிப்பதற்கு அப்பிற நாட்டாரின்"
மொழிச் சொற்களையே நாம் சுடன் வாங்கிவிடுவதுண்டு. வட இந்திய அரசியல் தாக்கம் பண்டைக் காலந்தொட்டே தமிழ் நாட்டில் ஏற்பட்டுவந்துள்ளது. சானக்கியனின் அர்த்தசாஸ்திரம் இந்தியா முழுவதுமே அறிந்த ஒர் அரசியல் நூலாயிருந்தது. வள்ளுவர் அந்நூலிலிருந்து பல கோட் பாடுகளைப் பெற்றபோதிலும் அவற்றைக் குறிக்கும் வட சோற்களுக்குப் பதிலாகத் தமிழ்ச் சொற்களையே முடிந்த அளவிற் பயன்படுத்தியுள்ளார். ஆனல், அமைச்சு, தூது போன்ற சொற்களே அவராலே முற்ருகத் தமிழ் மயப் படுத்த முடியவில்லை. மேலைத்தேய அரசியற் கோட்பாடு

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 251
களைக் குறிக்கும் கொம்யூனிசம், சோஷலிசம் போன்ற சொற்களை இன்று பரவலாக உபயோகிக்கின்ருேம். வணிகப் பொருட்களைக் குறிக்கும் கடதாசி, றப்பர் போன்ற சொற் கள் பிறமொழியாளருடன் ஏற்பட்ட வணிகத் தொடர்பின் விளைவேயாகும். டிஸ்பிறின், ரெற்ராசைக்கிளின், பெனிசிலின் போன்ற மருத்துவச் சொற்களும் ஒரு வகையில் வணிகத் தொடர்பின் விளைவாக நாம் இன்று உபயோகிப்பனவாக அமைந்துவிட்டன. அடிக்குறிப்புக்கள் 1. Lyons, J. , lntroduction to Theoretical Linguis
tics, p. 412. 2. தொல்காப்பியம், சொல்லதிகாரம், கு. 1. சேணுவ
ரையருரை, ப. 2. - 3. Firth, J. R., “The Technique of Semantics', 1957,
p. 27. 4. ஆறுமுகநாவ்லர். இலக்கணச் சுருக்கம், ப. 177 - 78. 5. Conklin, Harold C. , “ Hanunoo Color Categories”” . In Dell Hymes, 1964, pp. 189 - 91. 5L6s56ù i5D
பெயர்கள் பற்றிய விளக்கமான ஆய்வுக்குப் பார்க்க விம்: ஆ. வேலுப்பிள்ளை, 1988. 6. இங்கு எடுத்தாளப்படும் உதாரணம் பின்வரும் நூலி
லிருந்து பெறப்பட்டது:
அளவையியலும் விஞ்ஞான முறையும், பகுதி 1 (தொகுப்பு: நவம்”) , ப. 25 7. தொல்காப்பியம், உரியியல் சூ, 297. 8. மேற்படி, எச்சவியல், சூ. 399, 9. மேற்படி உரியியல், சூ. 341.
s
10. Lyons, J., ibid., p. 416
11. தொல்காப்பியம், உரியியல், சூ. 383.
12. புறநானூறு, செய்யுள் 67. 13. நெடுநல்வாடை, செய்யுளடி: 100,
14. திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச் செய்த தேவாரப்
பதிகங்கள், 2397. 15. தொல்காப்பியம், சொல்லதிகாரம், சூ. 48. 16. மணிமேகலை, சமயக்கணக்கர் தந்திறங் கேட்ட காதை"
செய்யுளடி 78 - 85.

Page 141
a கிராமத்துக்குயில் 'ஓவியா' Θ βο εξυ 6δι வேலவ6ர்வு gтара Вијф, žitars
நூற் பட்டியல் (உசாத் துனே நூல்கள்)
அரங்கன், கி., மாற்றிலக்கண மொழியியல், தமிழ் நூலகம்,
சென்னை, 1975. ஆறுமுகநாவலர், இலக்கணச் சுருக்கம், வித்தியா நுபாலன
யந்திரசாலை, சென்னை, 1953 (22-ம் பதிப்பு), இலக்கண விளக்டம், கழக வெளியீடு, 1957. . இளவரசு, சோம. இலக்கண வரலாறு, தொல்காப்பியா )اۓ
நூலகம், சிதம்பரம், 1963. " இறையனுர் அகப்பொருள், கழக வெளியீடு, சென்னல்
1953. . கணபதிப்பிள்ளை, பண்டிதமணி சி., இலக்கிய வழி (திருத்த tử. பதிப்பு), திருநெல்வேலி சைவாசிரிய கலாசாஃல: பழைய மாணவர் சங்க வெளியீடு, யாழ்ப்பாணம் : 1964 - கதிர்காமநாதன், செ., கொட்டும்பனி, கொழும்பு, 1968 கார்த்திகேய முதலியார், மாகறல்., மொழி நூல், விவே
கானந்த அச்சகம், சென்னை, 1913. .الاست
கால்டுவெல், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (தமி ழாக்கம் : கா. கோவிந்தன்), வள்ளுவர் பண்ணை,
சென்னை, 1959.
குறுந்தொகை, எஸ். ராஜம் பதிப்பு, சென்னை, 1957s
 

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 25s
சண்முகதாஸ், அ., நமது மொழியின் இயல்புகள், பாவலர் தெ.அ.துரையப்பாபிள்ளை நினைவுப் பேருரை, மகாஜனக் கல்லூரி, தெல்லிப்பழை, 1976. சண்முகம், வை. செ., எழுத்துச் சீர்திருத்தம், அனைத் ".1978 ,திந்திய தமிழிமொழியியல் சுழகம்" " إنه
சண்முகம், செ. வை. , சொல்லிலக்கணக் கோட்பாடு, அனைத்
திந்தியக் தமிழ்மொழியியற் கழகம், அண்ணுமலை நகர், 1984. சபாபதி நாவலர், திராவிடப் பிரகாசிகை, கழக வெளியீடு,
சென்னே, 1960. - சிலப்பதிகாரம், அடியார்க்கு நல்லாருரை, சாமிநாதையர் பதிப்பு, வெ. நா. ஐ"பிலி அச்சுக்கூடம், சென்னை, 1892. சிவஞான சுவாமிகள், தொல்காப்பிய முதற் சூத்திரவிருத்தி, நாவல்ர் பதிப்பு, வித்தியாநுபாலன யந்திரசாலை, இரத்தாகF இu) சிவஞானபோதச் சிற்றுரையும் விளக்கமும், சைவசித்தாந்த : , , , , : | - நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1958.
சிவராஜபிள்ளை, கே. என்., "உந்து' என்னும் இடைச் சொற் பிரயோகம் அல்லது புறநானூற்றின் பழைமை, சென்னைப் பல்கலைக் கழகம், 1926. சீனிவாசன், ரா., மொழியியல், பாரி நிலையம், சென்னை,
1960. சுப்பிரமணிய சாஸ்திரி, ச, சொற்பொருள் விளக்கம் என் னும் தமிழகராதி,கலாநிதி யந்திரசாலே, பருத்தித் துறை, 1960. ஞானப்பிரகாசர், சுவாமி. தமிழ் அமைப்புற்ற வரலாறு (How Tanail Was Built), a Surturg. gp5 Su Fates வெளியீடு, சுன்னகம், 1927. ് திருக்குறள், பரிமேலழகர் உரை, நாவலர் பதிப்பு, வித்தியாதுபாலன யந்திரசாலை, சென்னை, பிரமோதூத ஞ. திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச் செய்த தேவாரப்பதிகங்கள்
சைவசித்தாந்த மகா சமாஜம், சென்னை, 1935. 岛一3°。
.» :7

Page 142
慧54 நூற் பட்டியல்
தொல்காப்பியம், எழுத்ததிகாரம், நச்சினர்க்கினியம், கணே சையர் பதிப்பு, திருமகள் அச்சகம், சுன்னகம், I 952。 . சொல்லதிகாரம், சேனவரையம், கணே சையர் பதிப்பு, திருமகள் அழுத்தகம், சுன்னகம், 1938.
. சொல்லதிகாரம், தெய்வச்சிலையாருரை, கரத்தைத் தமிழ்ச் சங்கப் பதிப்பு, 1929. ... பொருளதிகாரம் : பின்னன்கியல்களும் பேராசிரியமும், கணேசையர் பதிப்பு, திருமகள் அழுத்தகம், சுன்னகம், 1943. 'நவம்” (தொகுப்பு), அளவையியலும் விஞ்ஞானமூறையும், பகுதி 1. தமிழ்ப் பூங்கா அச்சகம், கரவெட்டி, 1979. நன்னூல், நாவலர் பதிப்பு, ஆறுமுகநாவலர் வி. அச்சகம்,
சென்னை, 1966 (24-ம் பதிப்பு). நாராயணசாமி, பண்டித சித. "மயக்கம்", தமிழ்ப் பொழில், துணர் 40, மலர் 10, 1965. *நெடுநல்வாடை", பத்துப்பாட்டு மூலமும் நச்சிஞர்க்கினிய ருரையும், பூரீ தியாகராசவிலாச வெளியீடு, 1961, பக். 434-65.
நேமிநாதம், (பதிப்பாசிரியர் : ரா. இராகவையங்கார்),
தமிழ்ச் சங்க முத்திராசாலைப் பதிப்பு, மதுரை, 卫9盟3。 ()
பகவத் கீதை, தமிழாக்கம் : மகாகவி சுப்பிரமணிய
பாரதியார், தமிழகம், Goersir barr, I 957 . பரிபாட்ல், மக்கள் பதிப்பு, அருணு பப்பிளி கேஷன்ஸ் 1958. பிரயோக விவேகம், (பதிப்பாசிரியர் : ப. கந்தசாமி), வித்தி
யானுபாலன யந்திரசாலை, சென்னை, 1957.
புறநானூறு, சாமிநாதையர் பதிப்பு, பூரீ தியாராச விலாச
வெளியீடு, சென்னை, 1963.

عمير
தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 55
மணிமேகலை, மக்கள் பதிப்பு, பாரி நிலயம், சென்னை,
196. மீளுட்சிசுந்தரன், தெ. பொ., சமணத் தமிழ் இலக்கிய வரலாறு, கலைக்கதிர் வெளியீடு, கோவை, 1965. ''' ess overeo 9 தமிழ் மொழி வரலாறு தமிழாக்கம் : ச. செயப் பிரகாசம், சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை, 1977. முத்துக்குமரன் பொன். தமிழ் மரபு, வரதர் வெளியீடு,
யாழ்ப்பாணம், 1961. முத்துச் சண்முகன், இக்காலத் தமிழ், சீயோன் பதிப்பகம்,
மதுரை, 1967. . இக்கால மொழியியல், மதுரை, 1971. மேற்ருஸ் மயில் (பதிப்பாசிரியர்), வன்னி வளநாட்டுப் பாடல்கள், முல்லை இலக்கிய வட்ட்ம், ஒட்டி dr LLIT6ër, 1980. வரதராசன், மு., மொழி நூல், தென்னிந்திய சைவநுாற்
பதிப்புக் கழகம், சென்னை, 1947. . மொழி வரலாறு, கழக வெளியீடு, சென்னை,
1954. .., புலவர் கண்ணீர், பாரிநிலையம், சென்னை, 1959. வித்தியானந்தன், சு. தமிழர் சால்பு, தமிழ் மன்றம்,
கல்ஹின்னை, கண்டி, 1954. வீரகத்தி, க, இலக்கண விளக்கம், வான்முகில் பதிப்பகம்,
கரவெட்டி, 1968. .., சொல்லிலக்கணத்தில் யாப்பின் செல்வாக்கு,
வாணி கலைக் கழகம், கரவெட்டி, 1968, வீரசோழியம், (பதிப்பு: க. குருமூர்த்தி ஐயரவர்கள்),
யாழ்ப்பாணம், 1942. வீரமாமுனிவர், தொன்னூல் விளக்கம், (பதிப்பு: ச. வே. சுப்பிரமணியன்), தமிழ்ப் பதிப்பகம், சென்னை,
1978.

Page 143
256 ',” நூற் பட்டியல்
வேங்கடசாமி, மயிலை சீனி. , சமணமும் தமிழும், கழக வெளியீடு, சென்னை, 1954, 黜° வேலுப்பிள்ளை, ஆ. வரலாற்றுத் தமிழ் இலக்கணம், பாரி
நிலையம், சென்னை, 1966. வேலுப்பிள்ளை, ஆ , தமிழில் நிறப்பெயர்கள்", K. Kaila
sapathy Memorial Volume, . Jaffna, 1988. ஜீவா, டொமினிக் , தண்ணீரும், கண்ணீரும், தமிழ்ப்
புத்தகாலயம், சென்னை, 1962. பூரீசுவாமிநாத தேசிகர், இலக்கணக் கொத்து, நாவலர்
பதிப்பு, வித்தியா நுபாலன யந்திரசாலை சென்னை,
இரத்தாrF இல்
Abercrombie, David, Elements of General Phonetics,
Edinburgh University press, 1967.
Ages thalingams é Passive in Tanil', In Asher, 1971,
pp. 401 ---- 406. Arunachalam, ; K. P. “A New Theory on Appellative verbs (KUTIPPUVINAI), In Asher, 1971,
Asher, R. E., Proceedings of the Second international conference - Seminar of Tami Studies,
Vol. I, ATR, Madras, 1971. Bright, Williain. , “Dravidian Metaphony” , Language
42, 1966, pp. 311 – 22. Caldwell, R. A comparative Grammar of the Dravidian Languages, University of Madras, 1956 (Reprinted) " . و Chakravarti, A. , jaina Literature in Tamil, Jaina
Siddhanta Bhavana, Arrah, 1941. - Conklin, Haroli C. , “Hanunoo Color Categories” , In
De1 a Hymes, 1964, pp. 189 — 191. Dell Hymes, Language in Culture and Society Allied Publishers, New Delhi, 1964, Ferguson, Charles A., “Diglossia', In Dell Hymes, 1964,
pp. 429 39 ج۔سی۔. *曇 。
ܝܠ ܐ

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் - 257.
Firth, J. R., "The Technique of Samantics', Papers in Linguistics 1934 - 1951, Oxford University Press, London, 1957. . . Hocket, C. F. , A Course in Modern Linguistics,
" " Macmillan, New York 1958.
Israel, M., “This So - Called Inflectioral
Increments in Tamil with Special Reference to Tholkappiyam", in Asher 1971, pp. 319 - 27, Jesperson, Otto. , language its Nature Development and origin, George Allen & Unwin, London,
1943. .." .................. The Philosophy of Grammar, (Seventh Impression), George Allen & Unwin Lid. ,
London, 1951, Kotandaraman, P., Studies in Tamil Linguistics, Tami!
Nulagam, Madras, 1972 Leelawathy, M., “Syntactic. Patterns" in Malayalam' Proceedings of The Second All India Conference of Dravidian Linguists, D. L. A., University of Kerala, Trivandrum, 1972 pp. 108 - 17.
Lyons, J., introduction to Theoretical Linguistics, Cambridge University Press, Cambridge, 1968.
Mahs devan, Hravatham. , “Corpus of the Tamil - Brahmi Inscriptions' Seminar on inscriptions, Madras, 1966, pp. 57 - 73. "
Meenakshisundaram, T. P., Foreign Models in Tamil Grammar, Dravidian Linguistics Association, Dept, of Linguisties, University of Kerala. 1974. Minnis, Noel (Editor) , Linguistics At Large, Victo
Gollancz Ltd., London, 1971.
".

Page 144
'8
Ohno,
Ohno,
Ohno,
Ohno
OanO
Oamo,
Obno,
Ohno,
Obno,
Ohno,
Ohno,
நூற் பட்டியல்
Susumu: , “The derivation of the Japanese language: the close affinity between the Dravidian and the Japanese languages: . A study especially on the terms o rice oulture”., Asahi Shinbun (Tokyo. Daily newspaper)., evening edition, 13-10-1879. .
Susumu., Sound Correspondences between
Tamil and Japanese (English), Tokyo, Gaku- .
shuin , University, 1980. Susumu, “Ta mil and Japanese A Comparative study', Gengo, Jan - Sept., Taishukan, 1980 Susumu., "Tamil and Japanese (No. 1)", Asahi
Shinbun, 22-l l-1980. susumu., “Tamil and Japaneso (No. 2)' , Asahi - Shimbun, 8-12-1980.
Susumu., “The relationship between Tamil and Japanese languages' (English), Proceedings of the With international Conference/Seminar of Tami Studies, Madurai, 1981. Susumu, “Tamil and Japanese (No. 3)' , Asahi
Shinbuar, 26-1-1981. susumu, Nihongo to Tamirugo, Tokyo, Shini chosha, 1981. - susumu., “Correspondences between Tamil and Japanese: a reply to S. Murayama', (English),
Kokugogaku, No. 130, Sept. 1982. s
Susumu., “The loss of initial c-in Tamil and
s-in Japanese (English)", The Departmental Journal of Tamil, University of Madras, 1986. Susumu, “A study on the relationship between Tamil and Japanese: inter vocalic stops in the two languages', (English), International Journa of Dravidian Linguisties, I, XII, 2. 1983. (DLA, Trivandrum.)

தமிழ்மொழி இலக்கண இயல்புகள் 259
Ohno Susumu., “The relationship between Tamil and Japanese', Kaishaku to Kansho, Jan - Nov.
1983 (to be continued).
Ohno, Susumu, o Sanmugadas, A. and Manom mani, S. , Worldview and rituals among the Japanese and Tamils, (English), Tokyo, Gakushuin University, 1985.
* Ohno, Susumu. , Nihongo zen (Japanese Language
As it was), Iwataami Shotten, Tokyo, 1987. Robins, R. H., A Short History of Linguistics, Long
mans, London, 1967. .............. “The Structure of Language” , in Minnis
Noel. 1971, pp. 15 - 33. Sandys, J. E., A History of Classical Scholarships
Cambridge, 1903. Sankaran, C. R. and Sundaram, R. M., “A Historical Study Carpezhuththu in Tamil' In Ashor (Ed.) 1971, pp. 335 – 39. Sanmugadas, A., (with Kailasapathy, K.), Tamil, National Languages of Sri Lanka II, Department of Cultural Affairs, Colombo, 1976. Sanmugadas, A., Tamil - Japanese Relationship: l/r Alternation', Sri Lanka Journal of South Asian Studies Vol. 1: No, 1 (New Series) , Faculty of Arts University of Jaffna, 1987.
Sanmugadas, A., “Japanese - Tamil Relationship: Sup
porting Evidences for Susumu Ohno's Hypothesis', Paper read at the 14th Intemational Congress of Linguists, East Berlin, 1987 b Sanmugadas, A., “A Comparison of Tamil - Japanese Quality Words", Paper accepted for present tation at the 6th International ConterOnce -
Seminar of Tamil Studies, Kuala Lumpur, 1987 c.

Page 145
260 : ' நூற்பட்டியல்
Sanmugadas, A., “A Comparative Study of JapaneseTamil Case Particles" Paper read at the 33rd International Congress of Orientalists in Japan, Tokyo, 1988. . ୋ; Sanmugadas, A. & Manonimani. , Cultural Similarities. -
between Japanese and Tamils - A View. Thros. ugh Their words” Journal || II of the linstitute of Asian Studies, Vol. 4:1, 1985. Sapir, Edward, language, Harcourt, Brace & World,
Inc., New York, 1921. . . . . . . Saussaure, Ferdinand de , Course in General Linguistics, McGraw-Hill Book Comp viny, * Lomdon, 1966. 崧 Sivajanana Bodham, (Translated by Camagi rayar, T.) ”
Vaiyapuripillai, S, History of Tamil an
Literature, New Century Book Madras, 1966 ,。 Velupillai, A, Viracoozhiyam as a Grammajöf ascři ptional Tamil', In Asher, 1971, pp. 345 - 48 Velupillai, A. , “ Opposition and Contrast in Tam
JDL, Vol. XII No:1, Dravidian Linguistics . . . Association, Trivandrum, 1984. به Velupillai, A., Co-ordinatioa in Tamil' :, Journal of . . "amii Studies, 1984, ് };" *。 Velupillai, A., “The Hyponymy and Hierarchical Stru- cture of Lexemes in Tamil”, Archiv. Orientalni, 1985. . . . . Zvelebil, K., “From Proto-Dravidian to Old Tamil and Malayalam”, In Asher, 1971, pp. 54-70 Zvelebil, K., “famil and Jhapanese - are they related? The Hyopothesis of Susumu Ohno, Bsoas, XLVI i II, 1985.
"حي
 
 
 
 
 
 
 
 
 


Page 146
,
'
E.
 


Page 147
引
நி
1
.
ணிைபு
ஆ
飘
リエ -
5 g)
事墨C區委
EPE
, ടൂ
}
7932
G
{نتیج>
考琴。
Gaు ధర్డ్
 ܸ 17
u_ான்
]
二酉
 

真 霹、高季”、 1949)
,。 一。。、、 க் தில் தமிழ்த்துறை இ ணேப்பேராசிரி
நஜீரியாவிலுள்ள
! s!-- . ܢ ܗ リr三リーリ
**
リ 、『リエ
L: 4. نہ تھی۔
壹 பதி
குல் சிறந்த சமீ
னேவுப்
முத்தமிழ் នោះ
^ i. e. 1 11 : ܨ ఒకికి கிேபன் கழக