கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஒளி அரசி 2014.10

Page 1
OLARAZI
இல்லத்தரசிகளின் அேழி
அன்பு + அறிவு + அழகு + திறன் + போட்டி + வாழ்த்து +K
 

ாத சஞ்சிகை
రాళ
ஒளி-01 இதழ்-1 ඔලිඅරසි ஒக்டோபர் 2014
ississins too
பொழுதுபோக்கு

Page 2
Build heCV
 

10иусом
en for you

Page 3
அழகுக்கலை ஆே p5TGDLDUTGITTC)
நிறுவனத்தின்
* துரித ஒரு A più(36TTLDI * கேக் ஐசிங் கட்டணக்க
அனைத்து பயிற்சிகளும் கூடுதலான ஒவ்வொரு மாணவர் மீதும் தனி பயிற்சியின் முழவில் சர்வதே
Güų : alygišãEDAVÜLuljód, Basă ediliki Wulijf Gug 10.30 umsöGlósu llsaflágúuti agúsiksá fja இணைந்துகொள்பவர்களுக்கு மேலும் விசேட கட்டணக்க SkinType Testers yalifoliusFrgiu G. Uỷ 2 #]h, til]|[ũ, lijññālạül!, 2 Lāj |]]ẩi ữn{6! சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும்
కS
 
 
 
 
 
 

ாசகர்கள், அழகுக்கலை சுயாதீன ளை உருவாக்கிய சுவீடன்நாட்டு யாழ் சேவைநிலையத்தினால் மாதகால அழகுக்கலைப் பயிற்சி
அழகுக்கலைப் பயிற்சிகள் பயிற்சிகள் அனைத்தும் 30% ழிவில் ග්‍රිජ් IIம்பமாகவுள்ளன.
III'ü)
NJLAJAVY செய்முறை விளக்கத்துடன் இடம்பெற்று த்தனியாகக் கவனம் செலுத்தப்பட்டு நசசான்றிதழ்கள் வழங்கப்படும். விக்கு(ஒவ்வொருமாதமும் முதல் திங்கள்) ரிக்கு(ஒவ்வொருமாதமும் முதல் சனி) ப்புகள் ஒவ்வொரு மாதமும் முதல் திங்கள் மற்றும் முதல் சனி அன்று fiuHSGyó GyuFöGyó SIígláIGIGIGIL, GUAIő la GugiklösůLIGIÓ. பருக்கள், கரும்புள்ளிகள் மற்றும் கண்கருவளையங்கள், gå), GapšgåBLIMEÁD LA GUEMESLUITEIT digó

Page 4
கர்ப்பிணித்தாய்மார்க அனைத்து பொ மொத்தமாகவும் சி ISLLITUILDTGUI Gi இரையின் கீழ் பெற்.
I Tel 012
3 ஒளிஅரசி தீபா
 
 

ளுக்கு தேவையான ருட்களையும் சில்லறையாகவும் iରାduଲିଗାଁd ଭୂ(Bot) { றுக்கொள்ளலாம்.
C க்லோத் ஹங்கள் ஜக்கெட் க்லோத் க்ளிட்
Strrrresiño பீடிங் போத்தல்
மொஸ்கிடோ நெட்ஸ் பாத் பேசின் Sääre | e Lotor Guéssio
பேபி பாஸ்கட்ஸ் பேபி ரெக்ஸ் Ese Ē tāsrrträtsfe
qGes, solio Garrollo ஆல்
Gespresör t. ger Ceseño பேபி ஹெபார் பிரஷ் 醛喜 GE SAGEAru Sana
பெட்டிகோட் ஸ்கூல் பேன்டி அண்டர்வெயர்
GRusiño (atássassistesifu
22 & 1966, J.B. Super Market. zer Street, Colombo - 11 452 969, O72 2927 036, 077. 644727.4

Page 5


Page 6
Shape Ir
Internationally gives you ast
Sinandonesia
Ananaca - Venus - Anugiya SA dykerves International Salon D
9, Stratford Avenue, a .
olombo OS саоа на гасе. 67. Negombo Road. og NASE
abole Wataa
eO 4944.94
 
 
 

stantly.
international
recognized Bodykerves
Inning attractive figure instantly.
16Bs BK24A
AvailableSizes: MLXLXXL
RS2500 Above.
Love parvey on NE 0777 700798

Page 7
6 ஒளிஅரசி
 

தீபாவளி மலரட்டும்!
அன்பான வாசகர்கட்கு, தீபாவளி சிறப்பிதழுடன் உங்களைச் சந்திப்ப தில் பெருமகிழ்ச்சியடைகிறோம். நூறு பக்கங்களு டன் சிறப்பான கட்டுரைகள் பலவற்றைத் தாங்கிய வண்ணம் இந்த இதழ் வெளிவந்துள்ளமை சிறப்பான அம்சமாகும். கடந்த இதழில் குறிப்பிட்டதைப் போல் இலங்கையில் இருந்து வெளிவருகின்ற தமிழ் சஞ் சிகை தீபாவளிக்கென ஒரு சிறப்பிதழை வெளியி டுவது இதுவே முதல்முறையாகும். அந்தப் பெருமை ஒளி அரசியையே சாரும் எனலாம், ஒளி அரசி யின் இந்தச் சாதனைக்கு ஆதாரமாய் அல்லது காரண மாய் அமைந்தவர்கள் வாசகர்களாகிய நீங்களே! இதுவரை காலமும் நீங்கள் தந்துகொண்டிருக்கின்ற அன்பும், ஆதரவும், ஊக்கமும், பின்னூட்டல்களுமே ஒளி அரசியின் இதழ்களை சிறப்பாக வெளிக்கொணர் வதற்கு எங்களைத் தூண்டும் சக்தியாக அமைந்துள் ளது என்றால் அது மிகையல்ல. இலங்கையில் அதிகம் விற்பனையாகும் மாதாந்த சஞ்சிகை என்ற பெருமையை அடைந்துள்ள ஒளி அரசி உங்கள் பேராதரவால் அதனைத் தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்வாள் என நம்புகிறோம்.
தீபாவளி சிறப்பிதழாக வெளியிடுவதன் காரண மாக ஒளி அரசியின் இந்த இதழில் சில மாற்றங்க ளைச் செய்துள்ளோம். வழமையாக வெளிவருகின்ற அழகுக்குறிப்பு, சமையல் குறிப்பு, பட்டுச்சேலை கட்டுரைப் போட்டி, கவிதைப்போட்டி, விந்தை உலகம் போன்றவற்றை இந்த இதழில் நிறுத்தியுள்ளோம். அதேநேரம், திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயம், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் போன்றவற்றின் தல வரலாறுகளையும் சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் வாழ்க்கை பற்றி கட்டுரையையும் இணைத்ததோடு அதிக கவிதைப் பக்கங்கள், சிறுகதைகள், இலக்கிய பக்கங்கள், சினிமா செய்திகள் போன்றவற்றையும் இந்த இதழில் இணைத்துள்ளோம்.
இது ஒரு தீபாவளி சிறப்பிதழாக வெளிவரு வதன் காரணமாக ஆன்மீகம் பற்றிய விடயங்களை அதிகமாகச் சேர்த்துள்ளோம் என்பதை வாசகர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ள விரும்பு கிறோம். அதேவேளை, வழமைபோல அனைத்து விடயங்களையும் சமஅளவில் தாங்கியவண்ணம் ஒளிஅரசியின் அடுத்த இதழ் வெளிவரும் என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்.
நிறைவாக, வாசகர்களாகிய உங்களது வாழ்வில் தீமைகள் விலகி, நன்மைகள் பெருக எமது தீபாவளி திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- ஆசிரியர் குழு -

Page 8
சிறப்புக்கட்டுரை இளநை
ജug) !
மலரட்டும் தீ
தமிழர்களின் குறிப்பாக, தீபாவளியை இந்துக்களின் முக்கிய பண்டி பொதுவான கைகளில் ஒன்றாக தீபாவளி உண்டாக டு திகழ்கின்றது. காக்கும் கடவுள நாம் ஆண் கிய திருமாலின் அவதாரமான தீமைகள் என் கிருஷ்ணர்தியவன் நரகாசுரனை மாறாக அதிக அழித்த நாளை இந்துக்களாகிய តាត្រ ក្រុង ទ្រ நாம் தீபாவளி எனக் கொண்டாடு கிறார்கள். கின்றோம். இலங்கையில் உள்ள ඉ)ණ්ණං ඛුණත්‍රි. இந்துத் தமிழர்கள் மத்திரமன்றி, செய்யமுடியு இந்தியாவின் பல்வேறு பகுதி ஆனால், கி களிலும் உள்ள இந்துக்களும் ருப்பதில் அர்த் ஏனைய நாடுகளில் உள்ள சமணம் டும். எமது அன் போன்ற வேறுசில சமயத்தவர் புத்திலோ அல் களும் தீபாவளிப் பண்டிகை போது அவர்க யைக் கொண்டாடுவதாக அறிய நரகாசுரர்களை முடிகின்றது. இலங்கையில் u gibi bügü: உள்ள நாமும் தென்னிந்தியா இன்றையது வைச் சேர்ந்த இந்துக்களும் g, நரகாசுரனை அழித்த நிகழ்வை ລing இருக் நினைவுகூர்ந்து தீபாவளியைக் வாழ்ந்துகொண் கொண்டாடும் அதேவேளை, பேணி மதித்து வடநாட்டைச் சேர்ந்த இந்தியர் துஷ்பிரயோக கள் தீபாவளிக்கு வேறு காரணங் றுக்கொண்டிரு கள் கூறுகின்றனர். ஆயினும், காப்பாற்ற எந்த எப்பாகத்தில் உள்ளோர் இத் இருக்கின்ற க
என்றைக்கு வரும் அச்சமன் தொழிக்கப்படு காத்திருப்போ
 
 
 
 
 
 
 
 
 
 
 

காசுரர்கள்
ாவளி
கொண்டாடினாலும் அங்கு காணப்படக்கூடிய சிந்தனை தீமைகள் அழிந்து நன்மைகள்
என்பதாகக் காணப்படுகின்றது. டுதோறும் தீபாவளியைக் கொண்டாடினாலும் னவே அழிந்து போவதாகத் தெரியவில்லை. த்துக்கொண்டிருக்கிறது. விதிக்கு வீதி, விட்டுக்கு னம் நரகாசுரர்கள் உருவாகிக்கொண்டே இருக் னால், கிருஷ்ணர்களைத்தான் காணமுடிய ாலத்தைக் குறைகூறுவதைத் தவிர, வேறு என்ன
என நொந்துகொள்வோரும் உள்ளனர். நஷ்ணர்கள் அவதரிப்பார்கள் என்று காத்துக்கொண்டி மில்லை. நாங்கள் கிருஷ்ணர்களாக உருவாகவேண் றாட வாழ்வில் வீட்டிலோ தெருவிலோ, காரியால து பொது இடங்களிலோநகரகர்களைக் காண்கின்ற ளை எதிர்க்கப் பழகிக்கொள்ளவேண்டும். எம்மால் தம் செய்யமுடியாதுதான். ஆனால், ஆகக் குறைந்த ளோடு சமரசம் செய்யாமலாவது இருக்கலாம்தானே? ரதிர்ஷ்டம் என்னவென்றால் நரகாசுரர்கள் பணம், க்கு என்கின்ற எல்லாவகையிலும் பலம் மிகுந்த கின்றார்கள். அப்பாவிகள் மட்டுமே நல்லவர்களாக டிருக்கின்றார்கள். அதனால்தான் பெண்மையைப் போற்றிவந்த இந்நாட்டில் பெண்களுக்கெதிரான களும் வன்முறைகளும் நித்தம் நித்தம் இடம்பெற் க்கின்றன. நரகாசுரர்களிடமிருந்து இவர்களைக் கிருஷ்ணரும் இங்கு வருவதாகத் தெரியவில்லை. ண்ணன்களுக்கும் அது முடிவதில்லை. இந்நாட்டில் பெண்களும் குழந்தைகளும் நலிந்த வாழும் வகையில் அனைத்துநரகாசுரர்களும் அழித் கின்றார்களே அன்றுதான் உண்மையான தீபாவளி மலரும் அந்த உண்மையான தீபாவளிக்காய்

Page 9
தீமைகள் விலகி நன் லாம் தீபாவளி கொண் என்றால் 'தீபங்களின் கொள்வோரும் உள்ள தினத்தன்று தீபங்களை ஆனால், இலங்கைய விளக்கீட்டு தினத்தில்
Թ/ԼՔ6ծ)ԼD.
இந்தத் தீபாவளி எதற் இதைக் கொண்டாட எழுவது இயல்பே.
பூரீகிருஷ்ண பகவான் கடைசி காலத்தில் பூரீகி மையால் அவனுக்கு 'நான் இருந்த காலத்தி கஷ்டங்களை உண்டா சம்ஹாரம் செய்த இந்த நன்மையையும் சந்.ே தினமாக இருக்கும்பட இருட்டு இருக்கக்கூட பிரகாசமாக இருக்கவே கொண்டான். அவனு இந்தத் தீபாவளியானது ஏற்பட்டது என ஆன்மி
 
 
 
 

மைகள் ஓங்கிட உலகெல் ாடாடப்படுகிறது. தீபாவளி வரிசை என்று அர்த்தம் னர். இந்தியாவில் தீபாவளி ஏற்றி கொண்டாடுகின்றனர். ர்களாகிய நாம் கார்த்திகை தான் தீபங்களை ஏற்றுவது
காக ஏற்படுகிறது? ஏன் நாம் வேண்டும் ? என்ற கேள்வி
நரகாசுரனை வதம் செய்தார். ருஷ்ணரால் கொல்லப்பட்ட ஞானோதயம் ஏற்பட்டது. ல் உலகத்துக்கு எவ்வளவோ க்கினேன். நீங்கள் என்னை நத் தினமானது உலகத்துக்கு தாசத்தையும் கொடுக்கும் டி அருள்புரிய வேண்டும். து. எங்கும் வெளிச்சமாக, ண்டும்' என்று பிரார்த்தித்துக் டைய பிரார்த்தனையினால் து ஒரு புண்ணிய காலமாக
நூல்கள் கூறுகின்றன.

Page 10
'நியாயம், தர்மம், நீதி இவையெல்லாம் நமக்குக் கிடைத்தால், நாம் மகிழ்வோம்தானே. கிடைக்காவிட்டால், துவண்டு கதறி அழுவோம். அப்படியானால் அதே நியாயமும், தர்மமும், நீதி யும் இந்த உலகம் முழுமைக்கும் தேவை என்பதை நாம் உணரவேண்டும். அநியாயம், அநீதி, அதர்மம் ஆகிய திசையின் பக்கம் ஒரு அடி கூட எடுத்துவைக்கா மல் தர்மத்தின் பாதையே நம் பாதையாக நியாயத் தின் வழியே நம்முடைய வழியாக இருக்கவேண்டும்.
செயல்கள் அனைத்திலும் இறைச்சக்தி நிறைந் திருக்கிறது என்பதைப் நாம் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.
ஒரு மனிதனுடைய வாழ்வில் இல்லறம் நல்லறமாக இருக்கவேண்டும். ஆனால், அதில் சிக்கல்களும், பிரச்சினைகளும் தற்போது அதிகரித்துவிட்டன. விவாகம் என்பது இந்தக் காலத்தில் ஆடம்பரம் நிறைந்ததாகிவிட்டது. எல்லாமுமே அவசர அவசரமாக நடைபெறுகிறது. எத்தனை வேகமும் பரபரப்புமாகக் கல்யாணங்கள் நிகழ்கிறதோ, அதற்குச் சற்றும் குறையாத பரபரப் புடன் அடுத்தடுத்த நிகழ்வுகள் நடந்து முடிகின் றன. கணவனை மனைவியும், மனைவியைக் கணவனும் ஏமாற்றி, வேறொரு இரகசிய வாழ்க்கை நடத்துகிற வேதனை அதிகரித்து வருகின்றது.
இதனால், விவாகங்கள் இரத்து if ( ஆகிற மோசமான நிலை உருவாகி ᎯᏐ5 ITᎶᏡᎢ யுள்ளன. தர்மத்தை உடைக்கவோ, மத்தி மீறவோ, மாற்றவோ நமக்கு எந்த களிட அதிகாரமும் அருகதையும் இல்லை. அற்பு அப்படியானவற்றை செய்யவும் கூடாது. if (
நல்ல இல்லறத்தின் விளைவுகள், அணி மணிமணியான குழந்தைச் செல்வங் தும் ! கள். ஒவ்வொரு வீட்டுக்கு மட்டு வாழ் மன்றி நாட்டுக்கும் தேவையான பரிம விடயம் நமது வாரிசுகள். நாம் நல்ல இல் 6 செயல்களைச் செய்தால்தான் அதைப் இருட் பார்த்து வளர்கிற நமது குழந்தை மனே களும் அவ்விதமே செயல்படுவார் களே. கள். எனவே, நல்ல விடயங்களை It ai) வெறுமனே போதனையாக மட்டுமல் ଘJଙt() லாமல் அதன்படி வாழ்ந்து காட்ட இ வேண்டிய பொறுப்பு நமக்கு இருக் L GT கிறது. அப்போதுதான் குழந்தைகள் அன்ன எனும் நாளைய தலைமுறைகள் வளர் நமது கலாசார, பண்பாடுகள் கெடா القياسي மல், கெடுக்காமல், அதை அடியொற்றி வாழ் வாழ்வார்கள். நமது பண்பாடும் கலாசாரமும், இறைவழிபாடுகளும் பிரம் மிகமிக உன்னதமானவை. எனவே, நாம் இவற்றை ஒருபோதும் கை ஜன விடக்கூடாது.
9 ஒளிஅரசி தீபா

Ugiörtq.6O)35356sir என்பவை வெறும் குதூகலத்துக்கான கொண்டாட்டம் மட்டுமல்ல, இந்து தர்மத்தின்படி உறவுகளிடத்தும் உலகில் உள்ள மனிதர்களிடத்தும் அன்பைப் பரிமாறிக் கொள்வதற்கான அற்புத நிகழ்வாகவே அவை திகழ்கின்றன.
ண்டிகைகள் என்பவை வெறும் குதூகலத்துக்
கொண்டாட்டம் மட்டுமல்ல, இந்து தர் ன்படி உறவுகளிடத்தும் உலகில் உள்ள மனிதர் த்தும் அன்பைப் பரிமாறிக்கொள்வதற்கான த நிகழ்வாகவே அவை திகழ்கின்றன. ண்டிகைகளில் புனித நீராடுவதும், புத்தாடை வதும், உடலையும், மனதையும் மலர்ச்சிப்படுத் உறவுகள், தோழமைகள் என எல்லோருக்கும் த்துச் சொல்லியும், பலகாரங்களையும் 1றியும், சந்தோசத்தைப் பகிர்ந்துகொள்கிறோம். ாதவர்க்கு முடிந்தளவு உதவிசெய்வதும், பதை எல்லோருக்கும் பகிர்ந்துகொடுப்பதுமான ாபாவத்தை நமக்குள் விதைப்பவை பண்டிகை நமக்குள்ளே நல்ல விடயங்கள் விதைக்கப்பட்
அது நம் குழந்தைகளிடம் விருட்சமென 5ம். பல்கிப் பெருகும். ந்து தர்மத்தின் தார்ப்பரியத்தைப் பேணிக்காத்து, டிகையைக் கொண்டாடுங்கள். பரஸ்பரம் பை விதைத்து, அதனை இன்னும் இன்னும் த்து விருட்சமாக்குங்கள். னைவருக்கும் எனது ஆசீர்வாதங்கள்! அனைவர் விலும் மங்களம் உண்டாகட்டும்.
ஓம் சாந்தி மறுரீ இராமச்சந்திரக்குருக்கள் பாபு சர்மா ாதிபதியின் இந்து சமய விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர்.

Page 11
ஒரசுரன் மாண்டதற்காய் உதித்தது இந்தத் தீபாவளி பாரதில் இன்றெங்கும் அசுரர்கள் Lញ្ជLüb តែយជាបងយចេuចិញ?
ஒன்றை அழித்ததன்மூலம் இன்னொன்றா | ផ្ទឹងបធសាធ ឆ្ងពាយ័ព្រៃវែង
தன்னைப் படைத்தது தானேசுண்ட griftiutfiu faltosit (urri.
நரகாசூரன் காலத்தில்கூட இப்படி இருந்திரா உலகம் பரக்கக் காணும்பகைமை முடிக்கும் Luflagsfiliulu Sisästmyrttia.
முதியோரைக் கனய் பண்ணாததோர் இளமை முறிக்கு எதிலும் அவசரம் எதற்கெடுத்தாலும் எடுப்பது கோடரி.
អ៊ែumuជើ ថាច់ ខ្ល ថាគំរgទីជិតបែថាថា நிட்டூழியம் அரசோச்சும் தயாபரம் கொண்டாளும் இருட்டுத் தேசம் ឆ្នាំurEយទា ច ញmu.?
குடிப்பது நடுவீதி நின்றே நட்டாந்திரம் 85டத்தrடுதல் மனைவியை அடிப்பது பிள்ளைகளை வீட்டைவிட்டுத் துரத்துதல் தானாமே..? தீயென்றால் நன்மை தீமை ரெண்டுஞ்செய்யும் štöntgĽi Limířšširrsiu பாவென்றால் கவிதை பாவத்துக்கும் முதலெழுத் தென்கையில்,
தீபாவளி இரண்டையும் தோற்றுவிக்கும் ភ្នំធំជាងវិធត់ ដោយពាំងសាជាថាយ தீபாவளி என்பது புராணக்கதைகள் *ភ្នំuff' ជាប្រាំឆៃយ៉ាងយោធាប៩ ផeLEយទាំ!
passjutsumi sistiartliiii ġlum 51ustifi alaismrtiiiot L-Imriiqஉற்பத்தி ஆக்கியயை புவ்விய அசுரர்களைத் தானென்பதால் பாறனைக்குத் தயாராவோம். கந்தசஷ்டி விரதத்தை ஆறுநாட்களும் விந்தைமிக ஒருவேளை பந்தியதில் பால்குடித்தே அனுபவிப்போம் சிந்தை குளிர இனியாவது
 


Page 12
Af
Costume, it
慧
 

.........8888
ܠܓܒܝ ܠܓܒܝܐ
)(Dallers fim g ewellery Cosmetics
orders and famсу Hoodstc.

Page 13
ஜோக்ஸ்
டாக்டர்: 'உங்க கணவருக்கு தலையில பண்ணினா எல்லாம் மறந்துவிடும். பரவாயி
நோயாளியின் மனைவி; "பரவாயில்லை டாக சமையல் பன்றது மட்டும் ஞாபகம் இருக்கிற ம பண்ணுங்களேன்."
ஆசிரியர்:- உன் பே
மாணவர்: 'கவிக்கு
ஆசிரியர்:- வீட்ல உ
மாணவர்:- 'துரம இருந்தா மெதுவா
நர்ஸ்:- "ஏங்க . மூச்சை இழுத்து விடுங்க."
நோயாளி:- 'விளையாடாதீங்க நர்ஸ், உங்களை பு இருந்து அதைத்தானே செய்துகிட்டு இரு
டாக்டர்: 'உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம் இந்தாங்க தூக்கமாத்திரை."
மனைவி;~ "ஒரு நாளைக்கு எத்தனை தடவை ெ
ffj; fi ? ***
டாக்டர்: "இது அவருக்கில்லை. உங்களுக்கு."
அரசன்: நேற்ற
கண்
அரசி:- கட்டில்
12 ஒளிஅரசி தீ
 
 
 

ஆபரேஷன் Gð6ð)Gvufr?'''
க்டர். ஆனா ாதிரி ஏதாவது
ரு என்ன?
ត្វtpjar*
உன்னை எப்படி கூப்பிடுவாங்க..?
ா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க. பக்கத்துல கூப்பிடுவாங்க."
- 'அழகு நிலையங்கள் பெரும்பாலும் ஏன்
பெண்களுக்கு மட்டுமே உள்ளன?
:- 'ஆண்கள் இயற்கையிலேயே அழகானவர்கள்
என்பதால் தான்.'
ப முக்கியம்.
காடுக்கணும்
றிரவு போர்க்களத்தில சண்டையிடுவது மாதிரி கனவு டேன்.
b தேப்பலாய் நனைஞ்சிருந்தப்பவே நினைச்சன்.

Page 14
" கட்டுரை
தெய்வத்திடுமகள் : தங்கம்மா அப்பாக்குட்
இலங்கையில் உள்ள இந்து ஆலயங்கள் எல்ல சமயப் பணியுடன் தம்மை மட்டுப்படுத்தியிருந்த க தில் ஆலயங்களும் சமூகப்பணியில் ஈடுபடலாம் என மாதிரியாக செய்து காட்டி அமைதியாக ஒரு ஆன்மீ புரட்சியை நிகழ்த்தி ஈழத் திருநாட்டின் சைவ சமய மலர்ச்சிக்கு வித்திட்ட பெண்மணி என்கின்ற ெ மைக்குரிய 'சிவத்தமிழ் செல்விதங்கம்மா அப்பாக்கு அவர்களுடைய வாழ்க்கை வரலாறு பற்றி இன்றைய இ தலைமுறையினரும் அறியும் வண்ணம் தீபாவளி பிதழிலே நோக்குதல் சாலப் பொறுத்தமுடையதோன்றா
13 ஒளிஅரசி தீபா
 

சிவத்தமிழ்ச் செல்வி س'L
fTL)
முன் கப்
DANDI
L1(5 ட்டி |ளந் Pறப் கும்.
நான்கு தசாப்தங்களுக்கு மேலாக சொற் பொழிவுப்பணி, எழுத்துப் பணி, ஆலய அறங்காவல் பணி, குழந்தைகளுக்கும், முதியோருக்கும் வாழ்வளிக்கும் மக்கள் பணி என்பவைகளை சிறப்பாகச் செய்து எம்மண்ணில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் தெய்வத்திருமகள் - சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி,
யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழை என்னும் கிராமத்தில் 1925ஆம் ஆண்டு தை மாதம் 07ஆம் நாள் பிறந்த சிவத்தமிழ்ச் செல்வி, மல்லாகத்தில் அமெரிக்கமிஷன் பாடசாலை யிலும், விசாலாட்சி வித்தியாலயத்திலும், அளவெட்டி சதானந்தா வித்தியாலயத்திலும் தொடக்கக் கல்வியைக் கற்றார். சுன்னாகம் இராமநாதன் கல்லூரி யிலே இடைநிலைக்கல்வி பயின்று 1941 முதல் 1944 வரை இராமநாதன் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பயிற்சி பெற்றார். ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம் நடத்திய பண்டிதர் தேர்விலும், சைவ சித்தாந்த சமாஜம் நடத்திய சைவப் புலவர் தேர்விலும் வெற்றிபெற்றார். பண்டிதையாகவும், சைவப்புல வராகவும் திகழ்ந்த சிவத்தமிழ்ச் செல்வி, 1946 முதல் மட்டக்களப்பு சென்ற சிசிலியா ஆங்கிலப் பாட சாலையிலும், 置949 முதல் கொழும்பு பாத்திமா பெண்கள் பாடசாலையிலும், பின்பு அள வெட்டி சதானந்தா வித்தியாலயத் திலும், 1964 முதல் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலும் ஆசிரியப் பணி செய்துள்ளார்.
சிவத்தமிழ்ச்செல்வியின்சொற்பொழி வுப்பணி அவருடைய அறிவுத் திறனை யும், புலமையையும் பெரிதும் வெளிப் படுத்தியது. சைவ இலக்கியம், சைவ

Page 15
சித்தாந்தம், சமய ஒழுக்கம் முதலாகப் ப6 விடயங்கள் பற்றி இவர் யாழ்ப்பாணத்திலும் இலங்கையின் பல இடங்களிலும் சொற பெருக்காற்றினார். இவரது எளிமையான தமிழ் இனிமையான குரல் எல்லோரையும் வசீகரி தன. ஒவ்வொரு சைவத் தமிழ் வீட்டிலும் தங்கம்மா என்னும் பெயர் இடம்பெறல யிற்று. தங்கம்மா அப்பாக்குட்டியிடம் படிக்க போகிறேன்” என்று கூறும் அளவிற்கு அவருடைய சொற்பொழிவுப் பணி சிறப்பாக அமைந்தது.
சமயப் பணி
நாவலர் பெருமானுக்குப் பின் யாழ். மண்ணி லிருந்து பாரெல்லாம் சமயப் பிரசாரம்செய்த பெருமைக்குரியவர் கலாநிதி தங்கம்மா அம் மையார், அவரின் பிரசாரப் பணிகளைப் பல ரும் பலவழிகளில் போற்றிக் கெளரவித்தனர்.
1966இல் மதுரை ஆதீனத்தில் 'செஞ்சொற் செம்மணி என்ற பட்டம் அவருக்கு வழங்கப் பட்டது. 1970இல் ஈழத்துச் சிதம்பரத்தில் 'சிவத்தமிழ்ச் செல்வி என்ற பட்டமும் பொன்னாடை, பதக்கமும் பெற்றார். 1971ஆம், 1972ஆம், 1974ஆம் ஆண்டுகளில் மலேசியா, சிங்கபூருக்குச் சொற்பொழிவுப் பயணம்செய்த அவருக்கு அங்கு திருவாசகக் கொண்டல் என்ற பட்டம் கொடுக்கப்பட்டு கெளரவிக்கப் பட்டது. 1973இல் தென்னிந்தியாவில் திருவிடை மருதூரில் நடைபெற்ற திருமுறை கருத்தரங்குக்குத் தலைமை தாங்கினார்.
இருபத்தியேழு சொற்பொழிவுகள், பத்துக் கட்டுரைகள், கந்தபுராணச் சொற்பொழிவுகள் என எட்டு நூல்களுக்கு இவர் ஆசிரியர். இவற்றுள் கந்தபுராணச் சொற்பொழிவுகள் 1978இல் சாஹித்திய மண்டலப் பரிசைப் பெற்றது. சமய இதழ்களிலும் கோயில் மலர்க ளிலும் பத்திரிகைகளிலும் பெருந்தொகையான கட்டுரைகளை எழுதியுள்ளார்.
ஆலயப் பணி
தெல்லிப்பழையில் சிறிதாக இருந்த ஒரு கோயில் பாரெல்லாம் போற்றப்படும் பெரும் திருத்தலமாக வளர்வதற்குக் காலாயிருந்தவர் சிவத்தமிழ்ச் செல்வி ஆசிரியராகவும், சமய பிரசாரகாரர் ஆகவும் இருந்த அவருடைய செல்வாக்கு தெல்லிப்பழையில் இளைஞரும் முதியோரும் ஒருங்கிணைந்த ஒரு பெரிய தொண்டர் சபையை உருவாக்க காலாயிற்று.
14 ஒளிஅர

தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயம் வான ளாவ எழும்பியது. இந்த அன்னையினுடைய ஆளுமை அந்த ஆலயத்தின் வளர்ச்சியுடன் சமூக வளர்ச்சியையும் சேர்ப்பதற்கு வழிகாட் டிற்று. ஆலய அறங்காவற்பணியுடன் சிறுவர் முதியோர் நிறைவாழ்வுப் பணியும் இணைற் தன. தேவி உறையும் ஆலயம் மக்கள் சேவை செய்யும் நிறுவனமாக எப்படி அமையும் என்பதற்குத் தெல்லிப்பழை தேவஸ்தானமும் அதன் அரவணைப்பிலேயுள்ள துர்க்காபு இல்லம் எல்லாம் சான்றுகளாக அமைகின்றன.
விருதுகள்
எங்கள் சமூகத்திலே ஒரு சாதாரண ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கிய ஒருவர் கல்வி கேள்விகளிலே வல்லவராகவும், ஆலய பணியையும், சமூகப் பணியையும் இணைத்து உலகளாவிய புகழ் பெற்றவராகவும், தனக்குப் பின்னே இப்பணியைச் செய்ய ஒரு பரம்பரை யையே உருவாக்கியவராகவும், சமயத் தொண் டுக்கும், சமூகத் தொண்டுக்கும் சைவ இலக்கிய சாஸ்திர சொற்பொழிவுத் தொண்டிற்கும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவராக வும் விளங்கிய சிவத்தமிழ்ச் செல்வி பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டிக்கு யாழ். பல்கலைக் கழகம் கெளரவ கலாநிதிப் பட்டத்தை வழங்கி கெளரவித்தது. அமெரிக்கா ஹாவாய் பூரீ சுப்பிரமணிய சுவாமி ஆச்சிரமம் 2005ஆம் ஆண்டுக்கான சிறந்த இந்துப்பணி விருதை வழங்கி கெளரவித்துள்ளது. அமெரிக்காவி லிருந்து இங்கு வந்த வணக்கத்திற்குரிய தொண்டுநாதன் சுவாமிகள் அன்னையை நேரிலே தரிசித்து கெளரவச் சின்னத்தை வழங்கிக் கெளரவித்தமையும் குறிப்பிடத்தக் கது. இவர் அகில இலங்கை இந்து மாமன்றத் தின் துணைத் தலைவராகவும், பின்னர் இறுதிமூச்சுவரை அறங்காவலர் சபை உறுப்பி னராகவும் இருந்துள்ளார்.
சமூகப் பணி
ஆலயப் பணியுடன் மட்டுமல்லாது ஆதரவற்ற சிறுமிகள் மற்றும் முதியவர்களுக்கு என துர்க்க புரம் ஆதரவு இல்லத்தை உருவாக்கி அவர்களை கருணையுடன் பராமரித்து வந்தார். வடக்கை குண்டு மழைகளும் கொடும் யுத்தமும் உலுக் கிக் கலக்கிய போதும் தான் வளர்த்துவரும் பிள்ளைகளை உயிரிலும் மேலாக நினைத்து தன் உயிரைத் துச்சமாக மதித்துக் காப்பாற்றி
தீபாவளி மலர் 2014

Page 16
கட்டுரை
னார். பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து அவர்களை வாழ வைக்க நேரிட்டபோதும் மனத்துணிவுடன் செயலாற்றிய துணிவுமிக்க பெருமாட்டி அவர் மக்கள் சேவையே மகேஸ் வரன் பூசை என்ற புனித வாக்கிற்கு உண்மையில் உயிர் தந்தார் சிவத்தமிழ்ச் செல்வி. இது ஏனைய ஆலயங்களுக்கும் அதன் நிர்வாகிகளுக்கும் ஒர் எடுத்துக்காட்டாகும்.
இவரின் சொற்பொழிவுகளை தமிழ் கூறும் நல்லுலகம் சிறப்பாகச் சைவ உலகம் நன்கு அறி யும். இவர் பெரிதும் பேச்சுத்திறமை படைத் தவர். சைவ சாஸ்திரங்களில் துறை தேய்ந்தவர். சைவ ஒழுக்கத்தையும் பெரிதும் பேணி நின்றவர். சைவத்தொண்டொன்றே இலட்சிய மாக 'என் கடன் பணி செய்து கிடப்பதே என்பது குறிக்கோளாகச் சைவத் தொண்டிற்கே தம்மை அர்ப்பணித்துச் சைவ வாழ்வு வாழ்ந்து வந்தவர். தம்மிடம் சிறந்து விளங்கும் சொற் செல்வத்தை இறைவன் புகழ் பரப்புவதற் காகவே செலவு செய்தவர் சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி செய்து வந்த இத்திருத்தொண்டின் தரம் அளப்பரியது."
சகலரும் போற்றி வணங்கும் வண்ணம் எங்கள் சமுதாயத்தில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்திய ஒர் ஆன்மீக அன்னையாக அறி வொளியாக ஒளிபரப்பி எங்களுக்கு வழிகாட்டி மிளிர்ந்தார். அவர் ஒரு வரலாற்று நாயகி. அந்த ஒளிவிளக்கு 15.06.2008 இல் அணைந்தது. வேத னைகளும் சோதனைகளும் வாட்டி வதைத்த ஒரு சகாப்தத்தில் அன்னையின் இழப்பு இந்துக்களுக்கு ஒரு பேரிடியாக அமைந்தது.
தெல்லிப்பழை துர்க்காபுர அம்மன் தேவஸ் தான புண்ணிய பூமியிலிருந்து பாரெல்லாம் ஆன்மீக ஒளிபரப்பிய ஞான விளக்கு அணைந்து விட்டாலும், அவர் எங்கள் ஒவ்வொரு வரினதும் உள்ளத்தில் ஏற்றிவைத்த அந்த ஆன்மீகச் சுடர் இன்னும் தொடர்ந்து ஒளிவீசும். அம்மையார் பூதவுடல் மறைந்துவிட்டாலும் அந்த புனித அன்னை எங்கள் இதயங்களிலும் ஒவ்வொரு எண்ணத்திலும் தொடர்ந்து வாழ் வார். வாழ்ந்து எங்களை வழிகாட்டி வருவார். அன்னை அவர்கள் விட்டுச் சென்ற சமய சமூகப் பணிகளை தொடர்வதே இவருக்கு நாம் செய்யும் நன்றியாக அமையும் என்பதை ஈழத் திரு நாட்டிலுள்ள ஒவ்வொரு இந்துக்களும் உணர்ந்துகொள்ளுதல் ஆவசியம்.
"மேன்மை கொள் சைவ நீதி
விளங்குக உலகமெல்லாம்."
15 ஒளிஅரசி தீப


Page 17
எண்சோதிடம் நைாராயணஸ்வாமி
பெயர் மாற்றம்
ஒருவர் தனது பெயரை மாற்றிக்கொண் டாலோ அல்லது தனக்கு உரிய அதிர்ஷ்ட எண் ணுக்கு ஏற்ப பெயரின் எழுத்துக்களை மாற்றிக் கொண்டாலோ, துயரங்களெல்லாம் நீங்கி, மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்துவிடும் என்ற அடிப்படையிலான விளம்பரங்களையும் செய்தி களையும் அதிகளவில் காணக்கூடியதாக இருக் கிறது. இது உண்மைதானா? எமது பெயர்களை மாற்றும்போது எங்களது அதிஸ்டம் மாறுமா? என்பதை இக் கட்டுரை ஆராய்கிறது.
நாம் ஒருவருடைய பிறந்த திகதி என்று குறிப் பிடுவதே ஆங்கிலத் திகதியைத்தான். அதை அடிப்படையாக வைத்துக்கொண்டுதான் ஒருவரது பிறந்த திகதியின் எண் கணக்கிடப்படுகிறது.
உதாரணமாக, ஜூன் 2, 1949-ல் ஒருவர் பிறந்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் தமிழரசன்
என்றும் வைத்துக்கொள்வோம். இவருடைய பிறந்த நாளை, 2.6. 1949 என்று குறித்துக் கொண்டு அதிலுள்ள எல்லா எண்களையும் கூட்டி, (2+6+1+9+4+9) என்று கணக்கிட்டால் கூட்டுத் தொகை 31 வருகிறது.
இதிலுள்ள இரண்டு எண்களையும் கூட்டி னால் (3+1=4) நான்கு வருகிறது. எனவே, பிறந்த திகதிப்படி அவரது எண் 4 என்று வைத்துக்கொள் கிறார்கள். அதோடு பொருந்தும்படியாக அவரு டைய பெயரை ஆங்கிலத்தில் TAMILARASAN என்று எழுதி, அதிலுள்ள ஒவ்வொரு எழுத்துக் கும் மதிப்பெண் போட்டு அவற்றை கூட்டி, மொத்தம் வருகின்ற எண், பிறந்த திகதியின் எண்ணுக்கு, அதாவது 4-க்கு பொருத்தமானதா என்று பார்க்கிறார்கள். பொருத்தமாக இல்லை யென்றால் ஒரு எழுத்தை மாற்றியோ, அல்லது அந்தப் பெயரையே மாற்றியோ, அல்லது ஒரு எழுத்தை புதிதாகச் சேர்த்துக்கொண்டோ, அதிர்ஷ் டப் பெயர்களை உருவாக்குகிறார்கள். இதன்படி தமிழரசன் என்ற தமிழ்ப் பெயரை, TAMIZH
16 ஒளிஅரசி
 

அதிஸ்ரம் தருமா?
AARASAN என்று ஒருவர்மாற்றிவைத்துக்கொண்டு, அதிர்ஷ்டத்தை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டி ருக்கிறார். இது எவ்வளவு தூரம் சரியானது என்று சற்று சிந்தியுங்கள்.
தமிழரசன் என்பது ஒரு தமிழ்ப் பெயர். அதிலுள்ள 'ழ'கரமானது தமிழ் மொழிக்கே உண் டான தனிச் சிறப்பு. இதற்குச் சமமான எழுத்து வேறு எந்த மொழியிலும் கிடையாது. ஆங்கிலத் தில் எழுதும்பொழுது (TAMIL) என்று எழுதினா லும், (TAMIZH) என்று எழுதினாலும் அது தமிழுக்கு ஈடாக எழுதப்பட்டதாகச் சொல்ல முடியாது. இதைப் போலத்தான் சேஷன், அபிஷேக் போன்ற வடமொழிப் பெயர்களை யும் அதற்கு இணையாக ஆங்கிலத்தில் எழுதுவது கடினம். ஒரளவு உச்சரிப்பையொட்டி எழுதலாம். எனவே, ஒரு பெயரை அதற்கு ஈடாக மற்றொரு மொழியில் எழுதிக்கொண்டு, அதற்கு எண்
ॐ
மதிப்பீடு செய்வது எவ்வளவு தூரம் சரியாக இருக்கும் என்று கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.
பொதுவாகதினசரிகாலண்டரில் ஆங்கிலத்திகதி, தமிழ்த்திகதி, இஸ்லாமிய மாதப்படியான திகதி என்று மூன்று திகதிகள் குறிப்பிடப்பட்டிருக்கும்.
உதாரணமாக, மார்ச் 31, 2000 இல் பிறந்த ஒரு குழந்தையின் பிறந்த திகதியை ஆங்கிலத்தில் 31.3.2000 என்று குறித்தால், அந்த குழந்தையின் பிறந்தநாள் எண் 9 என்று வரும். அதே பிறந்தநாளை தமிழ் ஆண்டின்படி குறிப்பிட்டால், தமிழ் வருடத்தின் 13ஆவது ஆண்டான பிரமாதி வருடத் தின் பங்குனி மாதத்தின் 18 ஆம் நாள் ஆகிறது. எனவே, அந்தக் குழந்தையின் பிறந்த நாளை 18.12.13 என்றுதான்குறிக்க வேண்டும். 18 பங்குனி மாதத்தின் திகதி, 12 என்பது தமிழில் பன்னிரண் டாவது மாதமான பங்குனியைக் குறிக்கிறது. 13 என்பது 60 தமிழ் வருஷங்களில் 13 ஆவது வருஷமான பிரமாதி வருடத்தைக் குறிக்கிறது. அப்படியானால், அந்தக் குழந்தையின் பிறந்த எண் (18+12 + 13:43), அதாவது, பிறந்த
தீபாவளி மலர் 2014

Page 18
திகதியின் எண் மதிப்பு 7 (4+3=7) என்றுதான் வரும். இப்போது, அந்த குழந்தையின் பெயரை எந்த எண்ணை வைத்து மாற்றுவது ? 9 -ஐ வைத்தா? 7-ஐ வைத்தா?
இதையே திருவள்ளுவர் ஆண்டு 2031 என்று வைத்து, ஏன் கணக்கிடக்கூடாது? கலி வருடம் 5102 என்று ஏன் கணக்கிடக்கூடாது ? மனிதன் தோன்றி, 2000 வருடம்தான் ஆகியுள்ளதா? அதற்கு முன் மனிதர்கள் வாழவில்லையா? சிந்தியுங்கள்.
''தமிழரசன்” என்ற தமிழ்ப் பெயரை, தமிழாண்டு கணக்கில் கணக்கிட்டு, அதற்கேற்ப பெயர் வைப்பதுதானே நியாயமாகும்?
அப்படியில்லாமல் எல்லாவற்றையுமே ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டு, பெற்றோர் வைத்த பெயரோடு தொடர்பு இல்லாத உச்சரிப்பைத் தரும் எழுத்துக்களைச் சேர்த்துக் கொண்டு, அதிர்ஷ்டப் பெயர்கள் வைத்துக் கொள்வதை எப்படி நியாயப்படுத்த முடியும்?
உண்மையிலேயே ஒருவருடைய அதிர்ஷ்ட எண்ணைக் கண்டுபிடித்து, அதற்கு ஏற்ப அவரின் பெயரையோ, எழுத்துக்களையோ மாற்றி, அவரைக் குபேரனாக மாற்ற முடியுமா னால், இந்த சாஸ்திரம் நமது நாட்டுக்கு மட்டு மல்ல, வறுமையில் வாடும் மக்கள் நிறைந் துள்ள எல்லா நாடுகளுக்கும் தேவைதான். அப்படி ஒரு சாஸ்திரம் இருக்குமானால், அதனை ஆராய்ந்து, முறைப்படுத்தி, நெறிப்படுத்தி, நாட்டு மக்கள் அனைவருக்கும் அதிர்ஷ்டமான பெயர்களை வைக்கும் பொறுப்பை, அரசாங் கமே ஏற்றுக்கொண்டு, அதற்காக ஒரு சட்டமி யற்றி, அதன்படி ஒவ்வொரு குழந்தையும் பிறந்தவுடன், அதன் அதிர்ஷ்ட எண்ணைக் கண்டுபிடித்து, அதற்குரிய சரியான பெயரைத் தேர்ந் தெடுத்து, அதை எந்த மொழியில், என்னென்ன எழுத்துக்களால், எப்படி எழுத வேண்டும் என்றும் நிர்ணயித்து விட்டால், நாட்டில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளும், பெரிய டாக்டர்களாகவோ, இன்ஜினீயர்களாகவோ, தொழிலதிபர்களாகவோ ஆகி, செல்வமும், புகழும் பெற்று, சீரும் சிறப்புமாக வாழ்வார்கள் அல்லவா? அப்போது நாட்டில் வறுமையும், ஏழ்மையும் இருக்காதே! அனைவரும் கோடீஸ் வரர்களாக அல்லவா இருப்பார்கள்?!
இதை ஏன் இதுவரை யாரும் செய்யவில்லை? அதில் ஏதாவது அர்த்தம் இருக்குமா? நீங்களே சிந்தித்துப் பார்த்து ஒரு முடிவு செய்துகொள்ளுங்கள்.
அவரவர் கர்ம வினைப்படி பிறவி ஏற்படு கிறது. அவரவர் பிறந்த கால நேரத்தின்போது, கிரகங்கள் அமைந்துள்ள நிலவரப்படி, அவரவர் வாழ்க்கை நடக்கின்றது. ஆயினும், தெய்வத்தின் அருளாலும், அயராத முயற்சியாலும், இடர்களை எதிர்த்து முன்னேறிச் செல்லும் சக்தி மனித
17 | ஒளிஅரசி தீப

னுக்கு தரப்பட்டிருக்கிறது. நமது வேதங்களும், சாஸ்திரங்களும் புராண இதிகாசங்களும்
இதைத்தான் வலியுறுத்தி வருகின்றன.
ராமாயண, மகாபாரத காவியங்களிலும், நமது சரித்திர பாரம்பரியத்திலும், யாரும் தங்கள் பெயர்களை மாற்றி வைத்துக்கொண்டதால் வாழ்க்கையில் வெற்றி பெற்றதாகவோ, விதியை மாற்றியதாகவோ வரலாறுகள் கிடையாது.
ஒருவருக்குப் பல பெயர்கள் இருக்கின்ற உண்மையை வரலாற்றில் பார்க்கிறோம். ராம
னுக்கு ரகுவரன், ராகவன், ராமச்சந்திரன் என்றெல் லாம் பெயர் உண்டு. கிருஷ்ணனுக்கு கண்ணன், கோபாலன், கோவிந்தன் என்று ஆயிரம் பெயர் கள் உண்டு. நாம் வழிபடும் தெய்வங்களுக்கெல்
லாம் ஸஹஸ்ர நாமங்கள் உள்ளன. அவையெல் லாம் அந்த தெய்வத்தின் ரூபத்தையும், குணத் தையும் சக்தியையும் விளக்குவது.
ஒருவர் குணத்தையும், சக்தியையும் விளக்க, ஒன்றுக்கு மேற்பட்ட பெயரால் அறியப்படுவதும், அழைக்கப்படுவதும் மரபு. அதில் தவறில்லை. ஆனால், அந்தப் பெயரால், பரம ஏழை ஒருவன் மிகப் பெரிய செல்வந்தனாகிவிடுவான் என்பதற்குத்தான் சரியான ஆதாரங்கள் இல்லை. கோழையான ஒருவன் வீரனாகிவிடுவான் என்பதற்கும் ஆதாரங்கள் இல்லை.
எனவே இந்த எண்ணும், எண்ணுக்கேற்ற பெயரின் எழுத்தும் மாறி, அதனால் ஒருவரது
விதியே மாறும் என்பது எவ்வளவு தூரம் சாஸ்திர அறிவுக்கும், உண்மைக்கும் ஒத்துவரக்கூடியது என்பதே ஒரு பெரிய கேள்விக்குறிதான். பெயரை மாற்றிக்கொண்டு, அதிர்ஷ்டம் வருமா, வராதா என்று போராடுவதைவிட, பெற்றோர்கள் வைத்த பெயருக்கேற்ப நல்ல குணாதிசயங்களை வளர்த் துக்கொண்டு, முயற்சியோடும், தெய்வ நம்பிக் கையோடும் உழைத்தால் நிச்சயம் வாழ்க்கையில் முன்னேற்றமும் மன நிறைவும் காணமுடியும்.
sாவளி மலர் 2014

Page 19
இரு வேறு தனித்தனி மனிதர்கள்.
தனித்தனி
சிந்தனை உள்ளவர்கள்.
தனிப்பட்ட
கருத்துக்கள்
உள்ளவர்கள்.
ஒருவராவது சாத்தியமா? நிச்சயமாக
சாத்தியம்தான்.
வர்கள். தான். தி
உதாரண
LD 650G விளையு பிறவும் அந்த பி ஏலக்கா அந்த பி
வெ பொருட் கொடுத் 2 (56)J Te பிறந்து, கொண் பந்தத்தி மனிதன
18 ஒளிஅரசி தீ
 
 
 
 
 

வனும் மனைவியும் எப்படி வாழவேண்டும் கு அர்த்தநாரீஸ்வரரை விடவும் சிறந்த எடுத்துக் உண்டா என்ன? ஆண் பாதி பெண் பாதியாக. பெண்ணாக. பெண்ணே ஆணாக. ஆணும் னும் சேர்ந்த ஒற்றை உயிராக. பிரித்தறிய மல் பிணைந்திருப்பதுதான் தாம்பத்யம்.
ால், இரு வேறு தனித்தனி மனிதர்கள். தனித்தனி எ உள்ளவர்கள். தனிப்பட்ட கருத்துக்கள் உள்ள ஒருவராவது சாத்தியமா? நிச்சயமாக சாத்தியம் னசரி நாம் செய்யும் சமையலே இதற்கு மிகச் சிறந்த
LO. லயில் விளையும் ஏலக்காயும், வட இந்தியாவில் ம் பாஸ்மதி அரிசியும், கடல் தரும் உப்பும் இன்ன சேர்த்து பிரியாணி செய்கிறோமே. கமகமக்கும் ரியாணியில் தனித்துத் தெரிவது அரிசியா? உப்பா? யா? இவையெல்லாம் தனித்தனியே தெரிந்தால் ரியாணிதான் வாயில் வைக்க சகிக்குமா? வ்வேறு குணங்களும் மணங்களும் கொண்ட ட்கள் சேர்ந்து, தங்களின் சிறப்புகளையெல்லாம் து, முற்றிலும் புதிய சுவை கொண்ட பிரியாணியை க்குவது போலத்தான் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு எண்ணங்களும் செயல்களும் டு வளர்ந்த இரு மனிதர்கள் திருமணம் என்கிற கில் இணையும்போது முற்றிலும் புதிய ஒரே ாக அல்லது மனுஷியாக மாறுகிறார்கள்.
தீபாவளி மலர் 2014

Page 20
அத்தனை நாளும் பெண் பற்றி என்னென்னே கொண்டிருந்த ஆண்தான், மனைவி மாதவிட துடிக்கையில் அவள் வயிற்றைக் கொஞ்சம் அ விடுகிறான். 'வீட்டு வேலை இன்னிக்கு நிறைய விரல்களை மென்மையாய் சொடுக்கெடுக் வாரிசைச்சுமந்து தலை சுற்றி, வாந்தி எடு மனைவியைக் கரங்களால் தாங்கி வசதியாகப் படுச் இடத்தையும் அருவருப்பு கொள்ளாமல் சுத்தம் ெ
ஆணைப் பெண்ணாக மாற்றுகிறது காதல்!
பிறந்த வீட்டில் எதற்கெடுத்தாலும் சிலிங்கி, க கரப்பான் பூச்சிக்கும் பயந்து மருள மருள விழித்தவ போயிருக்கும் கணவனின் தலையைக் கோதிச் 'அலுவலகத்தில பிரச்சினையா? கவலைப்படா வேலை போனா என்ன? உலகத்துல பிழைக்கிறது:
காலை வீசி எடுத்துவெச்சா வழியெல்லாம் பிழை
பெண்ணை ஆணாகவும் மாற்றுகிறது காதல்.
சிரிக்கையில் சிரித்து, அழுகையில் <9 (ԼՔ3:1, நெகிழ்ந்து, வியக்கையில் வியந்து, நீயாகவும் நா நாமாக வாழ்கிற அற்புதமான அனுபவமல்ல மனைவி உறவு என்பது.
பிரியாவும் சங்கரும்கூட அப்படி ஒரு தம்ட கவிதை என்பது 'நேரத்தை வீணடிக்கும் செயல் 6 ரகம் சங்கர். பிரியாவோ அரிசி மூட்டையைக் க ஒளியும் எலிக்குஞ்சை வீடே அடிப்பதற்குத் தேட, மாதிரி எவ்ளோ அழகு அந்த எலிக் குஞ்சு' என்று அ கவிதை எழுத வார்த்தைகளைத் தேடிக்கொண்டிரு
19 ஒளிஅரசி தீ
 

வோ நினைத்துக் ாய் சமயத்தில் ழுத்திப் பிடித்து இருந்துச்சோ.” க்கிறான். தன் த்து மயங்கும் ந்கவைத்து, அந்த சய்கிறான்.
ட்டெறும்புக்கும் 1ள்தான் சோர்ந்து சொல்கிறாள், தீங்கப்பா. இந்த
க்கா வழி இல்ல.
ப்புத்தான்."
நெகிழ்கையில் ானாகவும் அன்றி வா கணவன் .
திதான். கதை, ான்று சொல்லும் டித்துவிட்டு ஓடி 'பிறந்த குழந்தை புதை வர்ணித்துக் நப்பாள்.
திருமணம் முடிந்து தேனிலவுக்கு போன இடத்தில் நாலு வரியைக் கிறுக்கி 'கவிதை” என்று கணவனிடம் கொடுத்தாள். சத்தியமாக அதில் ஒரு வார்த்தைகூட புரியவில் லை சங்கருக்கு. ஆனா லும் விடாமல் திரும்பத் திரும்ப வாசித்தான்.
கடைசியாக உதடு பிதுக்கி, அவள் அருகில் அமர்ந்து, தோள்களைப் பற்றி, "நீ ஒருமுறை வாசி" என்றான். தெளி வான உச்சரிப்பில் அவள் அதை வாசிக்க, அவள் முகத்தையே உற்றுப் பார்த்தவன், "உன்கவிதை அழகா இருக்கானு தெரியல. ஆனா, அதை வாசிக்கும்போது உன்னோட உதடு ரொம்ப அழகா இருக்கு’ என்று அவள் காதுகளுக்குள் இ ர க சி ய ம |ா க ச் சொன்னான்.
அன்று மாலையே அருகில் இருந்த புத்தகக் கடையிலிருந்து ஒரு கவிதைப் புத்தகம் வாங்கி வந்து பரிசளித் தான். அன்று உருகத் தொடங்கிய வள்தான் பிரியா. இன்றுவரை அவர்களின் அன்பு ஊற்று உறைந்து போக வில்லை. இதோ! இன்று கூட அவனுக்கு ரொம்ப வும் பிடிக்கிற கர்நாடக இசைக் கச்சேரிக்கு 'சரிகம பதநி மொத்தம் எத்தனை எழுத்து என்றுகூடத் தெரி யாத பிரியா அழகாக உடுத்தி கிளம்பிக்கொண்டி ருக்கிறாள்.
ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் ஆர்வம். இதை விட கணவனையும் மனை வியையும் பசை போட்டு
சொல்லுங்கள் பார்க்க GUITLb. ரொமான்ஸ் தொடரும்.

Page 21
【川 |-}이 日日日伺们月阿e门月阿
20 ஒளிஅரசி தீ
 

Junoongí cocoooooo@filo – sfissoqomo ‘ole ogsong@g "Noĵigog@ito osuđìso qismuotoooooooooo) asiņoung) sjueuseəŋ eueɔ ɔuos) qisi@sqi qiú Josugoko Y0L00L0L LL LL LLLLL LLLL LLLLLLL LK LLL LL00YL0 0LL 00LYKK KYZY0YYLL 0000LLLLLL0YLY YSLLLLLL LLLLLLLL LLLYYY LLLLLL LLLYYYLLL LLLLLLL YYYLLLZ KK LLLYL LLLL LLLLL 000YLLLYYY 0000YLLLYLL YLLL 000LLLLLLLLLLLLTL LLLLLLY0000LL0LL00L LLLLLLLML LLLLYLLL0YYYL0YLLL00L 00000LLLLLLLLL YLLLLLLLYYLLLL os@1191,91$@sự1919 goudfirmaocoogs @đề gì@suđìsto qısmı9,09&#GŴnrı dogooogo@fiko LLLLLLLLLL0 YLT SLL0LLY0 Y0LLLLLLLLL LLLLL00 0000YYSLLLZ0KKYYYYYSYYYLLLL KSTY 0000YYYLLLL LLLLLLY LL0YYTLLL YLLLL

Page 22
நிமிடக்கதை
Uélôt
அன்று காலை, கொழும்பு வெள்ளவத்தை அருகே உள்ள அடுக்குமாடிக் கட்டிடம். அங்கு வெகு சமீபத்தில் குடியேறிய ஒர் உழைக்கும் வர்க்கம். அற்பமான பணத்திற்காகவும், பொருளுக்காகவும் மேலான ஒழுக்கத்தை விட்டுக்கொடுக்காத அந்த சமுதாயம். 'விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்ற புதுமொழிக்கு வழி வகுத்த அந்த கூட்டம். வியாபார தொடர்ச்சி முகாமைத்துவத்தை காலம் காலமாக அமுல்படுத்திவரும் அசத்திய அமைப்பு. இப்படியொரு சமுதாயத்திற்கு இந்த புது இடத்தில் ஒரு பேராபத்து! நேற்று முன்தினம் 150 பேர் இருந்த இந்த சமுதாயத்தில் இன்று வெறும் 148 உருப்படிகள் தான். 2 கொடுர கொலைகள். மேலும் ஒரு வனுக்கு கால்
துண்டிக்கப்பட்டுள்ளது. இவையனைத்திற்கும் தெரிந்தோ தெரியாமலோ காரணமாய் இருந்து வருவது ஒரு மூன்றரை வயதுக் குழந்தை- 'அம்பர். அன்று மதியம். இந்த பிரளயத்தில் இருந்து இனத்தைக் காப்பாற்ற ஒரு அவசர குழு அமைக் கப்படுகிறது. நம் கதையின் நாயகன் 'உத்தமன் ஒரு மனதாக தலைமை வகிக்க தேர்வு செய்யப் படுகிறான். உத்தமன் - புஜபல பராக்கிரமசாலி. கடும் உழைப்பாளி. தன்னை விட மும்மடங்கு எடையுள்ள மூட்டைகளையும் அசால்ட்டாக தூக்கி நடப்பவன். தெளிவாக திட்டமிடுவதில் பலே கில்லாடி உத்தமனின் உயிர் தோழன் - "சிபி நேற்று கால் துண்டிக்கப்பட்டவனின் அண்ணன். சிபி வயதில் மூத்தவன். நல்ல உடல் வலு. ஆனால், முன்கோபக்காரன். இவர்கள் இருவரின் தலைமையில் ஆரம்பமானது ஆபேரஷன் - 'அம்பர்."
அன்று மாலை சிபியும் உத்தமனும் நடந்து போய்க்கொண்டிருக்கையில் மெளனம் பொறுக்காமல் சிபி பொங்கினான்.
'அவனை ஏதாது பண்ணனும் உத்தமா. ரெண்டு நாள்ல ரொண்டு பேரு."
21 ஒளிஅரசி
 

தப் Uழி
'சும்மா இரு சிபி. எடுத்தோம் கவுத் தோம்னு பேசாத நீ நினைக்கிற மாதிரி அம்பர அவ்ளோ சுலபமாக நெருங்க முடியாது. பெரிய எடத்து பிள்ளை. நம்மைத் தடுக்க ஆயிரம் வழி வெச்சிருப்பாங்க. யோசிச்சி தான்."
'போதும் நீ யோசிச்சது. அடுத்த உயிர் போறத மொதல்ல தடுக்கணும்.”
"ம்ம்ம். கவனிச்சி பாத்தன்னா. இந்த ரெண்டு கொலை யுமே அம்ப ரோட விளையாட்டு அறையிலே சாயங்காலம் அஞ்சுல இருந்து ஏழு மணிக்குள்ளதான் நடந்துருக்கு. அவனா தேடி வந்து நம்ம ஆளுங்களக் கொல்லவில்லை.
இவனுகளா போய் தான் சிக்கிருக்கானுங்க. மடப் பயலுவ. நீ மொதல்ல நம்ம ஆளுங்க யாரையும் இன்னும் ரெண்டு நாளைக்கு அந்தப் பக்கம் போக வேண்டாம்னு சொல்லிவை."
'ஆகட்டும். எனக்கு அவனோட கால் வேணும் உத்தமா. சின்னப் பையன்னு கூடப் பாக்காம ஏந் தம்பியோட கால்ல கார ஏத்திருக் கான் அவன். அவங் காலைப் புடிச்சி கடிச்சி வெக்கிரனா இல்லையானு பாரு.’ உத்தமன் சிரித்தான். சிபியும் சிரித்தான்.
கதையில் திருப்பம். இருவரும் பேசிக் கொண்டே வந்திருப்பது அம்பரின் விளையாட்டு அறையின் வாசல். மின்னலென பாய்ந்தது அம்பரின் பொம்மை கார் சடாலென சிபிநகரவே, கார் உத்தமன் மீது ஏறியது. சிபியால் பொறுக்க முடியவில்லை. கண் முன்னே மூன்றாவது கொலை, உத்தமன் துடிதுடித்து செத்தான்.
அதைப் பார்த்த அம்பர் சிரித்துக்கொண்டே அம்மாவிடம் ஓடினான். "ம்மா. இன்னிக்கும் ஒரு ஏறும்பை கார் ஏத்தி கொன்னுட்டேன்."
அவன்திரும்பி விளையாட்டு அறைக்குள் வரு கையில் ஏதோ காலில் சுள்ளெனப்பட்டது. தட்டி விட்டு ஓடினான் அம்பர். அவன் காலைக் கடித்த சிபியின் முகத்தில் ஒரு உயிரற்ற புன்னகை.
தீபாவளி மலர் 2014

Page 23
பெட்டி இநேர்கண்டவர் : அப்துல்சலாம் யாசீம் கல்விப் பெருஞ்சேவை vař6.org/ýsaavzorů.
(புறப்பத்தியிரண்டு வருட கால ஆசிரியர் பணி நிறைவான சேவைகள் பல செய்து தற்பே திருகோணமலை பூரீசண்முக இந்து மகளிர் கல்லூரி அதிபராகக் கடமையாற்றிக்கொண்டிருக்கும் திரு சுலோசனா ஜெயபாலன் அவர்களை இம்மாத நட்சத் இல்லத்தரசியாகத் தெரிவுசெய்து 'ஒளி அரசி சார் நேர்காணும் பொருட்டு அணுகினோம்.
நீண்ட ஆசிரிய சேவையினால் வந்த அனு முதிர்ச்சியும் அதனால் உருவாகிய ஆளுமை கொண்ட இவர், மாணவர் சமுதாயத்தைத் தன்ட ஈர்க்கும் ஆற்றல் உடையவராக விளங்குகிறார் என்ப அவரைப் பார்த்த மாத்திரத்தில் புரிந்துகொள்ளக்கூ தாக இருந்தது. தன் வாழ்நாளில் எத்தனையோ மாண செல்வங்களை அறிவாளிகளாகவும், உயரதிகாரிகள் வும் உயர்த்திய ஒருவர் எம்முன்னே நிற்கிறார் என்கி மரியாதை மேலோங்க உங்களைப் பற்றி சிறிது கூறு ளேன் என்றவாறு எமது நேர்காணலை ஆரம்பித்தே
 

- I 6) / யும் | ITGói)
தை
LqltLI "வச்
TITES ன்ற ங்க
ாம்.
இலங்கைத் திருநாட்டில் எடுத்துக்காட்டாக இருக்கும் பெண்களின் பெருமைகளை ஒளிஅரசி மூலம் பிரசுரிக்கவே இப்பகுதி. அந்தவகையில் ஒக்டோபர் மாத நட்சத்திர இல்லத்தரசியாக திருகோணமலை பூநீ சண்முக இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி சுலோசனா ஜெயபாலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்.

Page 24
மூதூர் கட்டைபற்றிச்சான் கிராமத்தைச் சேர்ந்த தனது ஆரம்பக் கல்வியை கட்டைபற்றிச்சான் விபுலான கல்லூரியிலும், இடைநிலைக் கல்வியை சேனையூர் பு கல்லூரியிலும், உயர் கல்வியை யாழ்ப்ப பல்கலைக்கழகத்திலும் கற்றுக்கொண்டதுடன் பொரு பாடத்தைச் சிறப்புப்பாடமாகக் கொண்ட கலைப் தாரியாவார் பின்னர் தேசியக் கல்வி நிறுவகத்தில் பட்ட கல்வி டிப்ளோமா கற்கை நெறியை மேற்கொ தொழிற்றகமையையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
பாடசாலைக் காலத்தில் தமிழ்மொழிதினப்பே ஆங்கில தினப்போட்டி, கட்டுரைப் போட்டிகள் பல்வேறு போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெற்றது வகுப்புத்தலைவியாக, மாணவத் தலைவியாக, சா தலைவியாக, இல்ல விளையாட்டுத் தலைவியாக இ சகல ஆசிரியர்களினதும் நன்மதிப்பைப் பெற்றுக்கெ ஒர் நன்மாணவராக திகழ்ந்துள்ளார். நல்ல ஆசான் வழிகாட்டல்கள்தான் விட்டுக்கொடுக்கும் மனப்ப குருபக்தி, நேர்மை, பிறரை மதிக்கும் மனப்பா தற்றுணிவு என்பவற்றை எனக்குக் கற்றுத்தந்தது என தனது ஆசான்களை அவ்விடத்தில் நினைவு கூர்ந்தார்
அவருடைய ஆசிரிய சேவை பற்றி கோட்ட ( பின்வருமாறு கூறினார்.
கஷ்டப் பிரதேசமான மல்லி கைத்தீவு மகாவித்தியாலயத் தில் 1982ஆம் ஆண்டு எனது
பண்புகளை கல்விப்பணியை ஆரம்பித்
எனது கண6 தேன். ஒரு வருடகாலந்தான் நகரின் புனி அங்கு சேவையாற்றும் வாய்ப் 9 வருடங்க புக் கிடைத்தது. 1983 தொடக் அர்ப்பணி கம் 1992 வரை நான் கல்விகற்ற 蕊星_G莒彗摩 சேனையூர் மத்தியகல்லூரி அருட்சகே யிலேயே ஆசிரியராகக் கடமை நிறைய வி யாற்றச் சந்தர்ப்பம் கிடைத் வழிகாட்ட தமை எனக்கு மிகவும் சந்தோ காரணமென ஷமாக அமைந்தது. நான் பூரீ சண்முக கல்விகற்ற ஆசான்களுடன் நியமிக்கப் இணைந்து சேவையாற்றுவது ஆண்டு தி மனதுக்குச் சங்கடத்தை ஏற் அதிபராகப் படுத்தினாலும் எனது ஆசிரியத் தொழிலை வளம்படுத்திக்
பதவிகளில் கொள்வதற்கு நிறைய ஆலோ னைகளை அவர்களிடமிருந்து சந்தர்ப்பத் s G35" LGL un பெற்றுக்கொண்டேன்.
32 Gğð TG5) -” °’ “ ” ° ’ “ ” ° ॐ என்னிடம் நிறையவே தலைமைத்துவப் 6)
23 ஒளிஅரசி தீபாவி

?" 'errant to
கல்விகற்ற Dreorolesco ாண்டு gյրaրքրGaրրի: TILLq., | UNINGයි.
துடன், கழகம் சென்று ருந்து இன்று 9 Ui ផ្ទះត្រូវិសិr பதவிகளிலும் ாங்கு 9 GG|TIESG. 23
ாயும் பெற்றுக்கொண்டேன். 1992 ஆம் ஆண்டு வரின் இடமாற்றம் காரணமாக திருகோணமலை த மரியாள் கல்லூரியில் ஆசிரியராக இணைந்து ள் கடமை யாற்றினேன். அன்பான - 撃厅、 ஆசிரியர்களுடன் இணைந்து ற்றியதுடன் அப்போது அதிபராகவிருந்த ாதரி எஸ்.திரேஸ்ராணியின் வழிகாட்டலில் டயங்களைக் கற்றுக்கொண்டேன். அவரது லும் இன்றைய எனது நிலைக்குக் எலாம். 2000ஆம் ஆண்டு பதவியுயர்வு பெற்று இந்து மகளிர் கல்லூரிக்குப் பிரதி அதிபராக பட்டேன். அதனைத் தொடர்ந்து 2009ஆம் / பூரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியில் பொறுப்பேற்றுக்கொண்டேன் என்றார்.
டம் கல்வி கற்ற மாணவர்கள் பலர் உயர் இருப்பார்கள்; அவர்களை காணநேரிடுகின்ற தில் நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் எனக்
மயில் அது ஒரு மகிழ்வான தருணமே ஆகும். கல்விகற்ற மாணவர்களில் ஏராளமானோர் கழகம் சென்று இன்று உயர்பதவிகளில்

Page 25
பேட்டி இநேர்கண்டவர் அப்துல்கலாம் யாச்
உள்ளார்கள். அநேகமானோர் அதிபர்களாகவும், ஆசிரியர்களா கவும் கடமை யாற்றுவதையும் காணக்கூடியதாக வுள்ளது. பல மாணவர்கள் கட்டுரைப் போட்டி களில் பங்குபற்றி அகில இலங்கை மட்டத்தில் சாதனைகளை நிலை நாட்டியுள்ளனர். இவை எல்லாம் எனக்கு மகிழ்வையும் மனநிறை வையும் தரும் விடயங்களாகும்.
ஆசிரிய சேவையில் நீங்கள் புரிந்துள்ள சாதனைகள் பற்றி சிறிது குறிப்பிடுவீர்களா எனக் கேட்டபோது சற்று நிதானித்து ஆரம்பித்தார்.
1991ஆம் ஆண்டு அதிபர் சேவைப் போட்டிப்பரீட்சையில் வெற்றிபெற்று அதிபர் சேவையில் இணைந்து கொண்டேன். 1996 ஆம் ஆண்டு அதிபர் சேவைக்கு பதவியுயர்வு செய்யப்பட்டேன். 2013இல் இலங்கை அதிபர் சேவை தரம் 1 சேவைமூப்பு அடிப் படையில் இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் 111 (SLEAS 111) பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளேன். எனினும், பாடசாலையின் தேவை கருதி தொடர்ந்தும் பாடசாலை யிலேயே கடமையாற்றுகின்றேன். அதிபர் சேவையில் சிறந்த சேவைக் காக கல்வி அமைச்சினால் வழங் கப்பட்ட பிரதீபா பிரபா விருதை ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக் கொண்டமை, பாடசாலை அபி விருத்திச்சங்கம், பழைய மாணவர் சங்கம் என்பவற்றால் அளிக்கப் பட்ட கெளரவிப்பு, சிறந்த பெறு பேறுகளை மாணவர்கள் பொதுப் பரீட்சைகளில் பெற்றுக்கொண்ட மைக்காக பல்வேறு அமைப்பு களினால் கெளரவிக்கப்பட்டமை (சாயி சேவா சங்கம், MBSL, காப்புறுதி நிறுவனம், தரிசனம் அமைப்பு) திருகோணமலை நகரபிதாவினால் விருது வழங் கப்பட்டமை, மகளிர்தின விழா வில் திருகோணமலை பட்டிண மும் சூழலும் பிரதேச செயலாளரி
ಇಕTTಿಮೆ 6 கெளர6 ரீதியில்
Ꭵ ᎠfᎬᎶᏈᏈTᎧ விதான
 

s
களரவிக்கப்பட்டமை, வலயக்கல்வி அலுவலகத்தால் வம் பெற்றமை என்பவற்றைக் கூறலாம். தனிப்பட்ட இவ்விருதுகள் கிடைக்கப்பெற்றாலும் எனது பர்கள் பரீட்சைப் பெறுபேறுகளிலும், இணைப்பாட rச் செயற்பாடுகளிலும் சாதனைகளைப் பெற்றுக் வதே உயர்ந்த விருதுகளாகக் கருதுகின்றேன்.
கள் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் திரு ாமலை பூரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி கரமாக செயற்பட்டு வருகிறது என கூறப்படுகிறதே
யார் காரணம் என நம்புகிறீர்கள்? து கல்லூரியின் வளர்ச்சிக்கும் - வெற்றிக்கும் நான் காரணம் என்று கூறமுடியாது. தனிமரம் ஒருபோதும் பாகாது. முகாமைத்துவக் குழாமினதும், ஆசிரிய னதும் அர்ப்பணிப்பான சேவை, மாணவர்களினது உழைப்பு, கல்விசாரா ஊழியர்களது பங்களிப்பு, னய அதிபர்களது வழிகாட்டல்கள், பாடசாலை நத்திச்சங்கம், பழைய மாணவர் சங்கம் என்பவற்றின் ழப்பு, கல்வித்திணைக்களத்தின் உதவி என்பவை ந்த வகையிலேயே இவ்வளர்ச்சி ஏற்பட்டுள்ளது தெரிவித்தார்.
ரியப் பணியில் மேன்மைபற்றி ஒரு வசனத்தில் ாயின் எவ்வாறு கூறுவீர்கள் எனக் கேட்டபோது.
நாட்டில் நற்பிரஜைகளை உருவாக்குவது என்பது பர்களது கைகளிலேயே தங்கியுள்ளது. இந்தக் ரியத்தைச் செய்வதில் ஆசிரியர்கள் தங்கள் வாழ் யே அர்ப்பணிக்கிறார்கள் என்றாவரிடம் நன்றிகளைத் த்து விடைபெற்றோம்.
தீபாவளி மலர் 2014

Page 26
tures, Occi Brides an
ClaSSE 3) நவீன முறைcal International and general Cookery, as
Vegetable carving, Flower making, M Crystal Ornal
DR. D665 Eagle. St. Peters
Bambalapitiya, Colomb
el:2584333,0766444524Emai
892 III, Fussel's Lane, Colombo-06 Contact : O 34 683. Oil 4 Facebook: Henny's Bridal and Bea
25 ஒளிஅரசி
 
 
 
 
 
 
 

5635ToiolüLIGID asional Cakes, ld Hair Styles.
P ܦ
BS
*、
e சோடனைக்கான வகுப்புக்கள் 9|alifyib, witton sugar flowers, irror carving, Paper TTole and MenÉS.
lace (opp. St. Peters College) 3 - 04 Sri Lanka
Josephmalika Oyahoo.com
|WYS
A & AUTY CARE
· 8011, New Chety Street, Colombo 13. B5. 8756 Hot Little 077, 33 5.585 ty email : henyahenysbrida.com
தீபாவளி மலர் 2014

Page 27
தொடர்கதை இ ஆர். ராஜலிங்கம்
விட்டாளே! இப்பொழுதே போய் அவளை அடித்துக் கொல்லவேண்டும் என்னும் ஆத்திரம் ஏற்பட்டது. ஆனால், அதற்கு இப்போது நேரமில்லை. அவளைப் பழிவாங்கு வதில் தனது நேரத்தைச் செலவிடக்கூடாது.
தன் மனைவியின் முகத்தைப் பார்க்க வேண்டும். அவளுக்கு என்ன நடந்திருக்கிறது என்பதை அறியவேண்டும். அவன் பதறினான். முத்தம்மாவிடம் மீண்டும் கேள்வி கேட்டான். ஆனால், முத்தம்மாவைவிட இப்போது அவனுடைய குரலும் கம்மி யிருந்தது.
'முத். முத்தம்மா. இப்போ தேன்மொழி எங்கே... ??
திக்கித் திணறித்தான் கேட்டான். "ஆஸ். ஆஸ்பத்திரி.' என்று அவள் சைகையால் காட்டினாள்.
இனியும் தாமதித்துக்கொண்டிருக்கக் கூடாது. உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும்
ώ
26 ஒளிஅரசி தீபாவ
 

தலி தேடிக்கொடுத்த மனைவி
அத்தியாயம் - 12
தன் மனைவியைப் போய் உடனே பார்க்க வேண்டும். உயிர் பிரியும் முன் அவளைப் பார்த்துவிட வேண்டும். அவளின் இறுதி வார்த்தைகளைக் கேட்டுவிட வேண்டும்.
இப்படி அவன் மனம் அழுதது. அதேசமயம் அவன் மனதில் இன்னொரு நம்பிக்கையும் இருந்தது. அதாவது, தன்னைக் காணாமல் அவள் சாகமாட்டாள் என்ற நம்பிக்கைதான் அது.
கணவனையே தெய்வமாக நினைத்த அந்த உத்தமியின் சுயநலமற்ற ஆசையையாவது கடவுள் நிறைவேற்ற மாட்டாரா?
சுமங்கலியாகச் சாவதே பெண்ணுக்குக் கிடைக்கும் பெரும் பாக்கியம் என்று வாழ்ந்த அவளின் ஆசை நிறைவேறும் காலம் வந்துவிட்டதோ என்று நினைக்கையில் அவன் கண்கள் குளமாயின.
அவனுக்குக் கதறி அழவேண்டும்போல் இருந்தது. ஆனாலும் முயற்சி செய்து அந்த அழு கையை வரவிடாமல் தடுத்துக்கொண்டான்.
rf socoří 2014

Page 28
பொங்கிவரும் அழுகையைக் கஷ்டப் பட்டுத் தடுக்கும்போது மண்டையே வெடிப் பதுபோலிருந்தது. அதேவேளை, அவளைக் காணவேண்டும் என்னும் துடிப்பே அவனிடம் மிகையாக இருந்தது.
உடல் சக்தியிழந்து அவனை இயங்கவி டாமல் தடுத்தது.
தட்டுத்தடு மாறியபடி காரை நோக்கி நடந்தான். காரின் கதவைத் திறக்கக்கூட அவனுக்கு சக்தி இருக்கவில்லை.
எனினும், முயற்சி செய்து கதவைத் திறந்து உள்ளே ஏறி அமர்ந்துகொண்டான்.
இப்பொழுதுதான் அவனுக்குச் சிறிது தெம்பு ஏற்பட்டது.
காரை ஸ்டார்ட் பண்ணிய அவன் அதனை இயன்ற மட்டும் வேகமாகச் செலுத்துவதில் கவனத்தை ஈடுபடுத்தினான்.
தேன்மொழியைப் பற்றிய எண்ணம் அவனை நிலைதடுமாற வைத்தது.
‘தேன்மொழி, நீ கொடுத்துவைத்தவள். சுமங்கலியாகச் சாகவேண்டும் என்னும் உன் ஆசையை நிறைவேற்றிக்கொண்டாய்.
நான்தான் சுயநலக்காரன், ஜாதகம் பலித்திருந்தால் அது விதி என்றாவது மனத்தைத் தேற்றிக்கொள்ளலாம். அநியாயச் சாவு, உனக்கு வர இடம் வைத்துவிட்டேனே'
இப்படி நினைத்து அழுதவன் இயன்ற மட்டும் காரை வேகமாகச் செலுத்துவதில் முனைந்தான்.
கார் தரையிலா அல்லது ஆகாயத்திலா செல்கிறது என்பதைக்கூட அறியமுடியாத நிலையில் அவன் இருந்தான்.
ஏனென்றால், காரை வேகமாகச் செலுத்து வதில் மட்டும் அவன் கவனம் இருந்தது.
ரோட்டில் வருவோர் போவோரெல்லாம் அதன் வேகத்தைக் கண்டு அஞ்சி ஒதுங் கினார்கள். ஏதோ இராட்சத வாகனம் வருவது போல அதன் வேகம் அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.
எதிரில் வரும் வாகனங்கள் எல்லாம் தூரத்திலேயே அதற்கு வழிவிட்டு ஒதுங்கின.
அதேசமயம் லொறி ஒன்றும் எதிரில் வந்து கொண்டிருந்தது. அந்த லொறியும் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் அசுர வேகத்தில்தான் வந்துகொண்டிருந்தது.
வேகமாக வந்த லொறி திலீபனின் காருடன் மோதக்கூடிய சூழ்நிலை. கணப்பொழுதில் சுய நினைவுக்கு வந்த திலீபன் ஸ்டியரிங்கை இடது பக்கமாக ஒடித்துக் திரும்பினான். அத்துடன் பிரேக்கையும் அவன் கால் அழுத்தியது. காரின்
27 ஒளிஅரசி தீபா

வலது பக்க சைட் கண்ணாடி LD L" (6) Lib லொறியுடன் மோதி சுக்கு நூறாகத் தெறித்தது. லொறியும் பயங்கர சத்தத்துடன் போய் நின்றது. காரை நிறுத்திய திலீபன் யன்னல் ஊடாகப் பின்னால் பார்த்தான். லொறிச் சாரதி இறங்கி காரை நோக்கி வந்துகொண்டிருந்தார். தான் அவசரமாகப் போய்க்கொண்டிருப் பதாகவும் அதனாலேயே அதி வேகத்தில் வந்ததாகவும் காருக்கு ஏற்பட்ட சேதத்துக்காகத் தன்னை மன்னிக்கும்படியும் அவர் திலீபனிடம் கெஞ்சிக் குழைந்தார். பார்வைக்கு ஏழையா கவும் பரிதாபமாகவும் தெரிந்தது.
திலீபனுக்கு ஆளைவிட்டால் போதும் என்றி ருந்தது. அத்துடன் நடக்கவிருந்த விபரீதத்துக் குத் தானும் காரணம் என்பது அவனுக்குப் புரிந்தது. அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு காரை மீண்டும் ஸ்டார்ட் செய்தான். ஆனால், கார் இயங்க மறுத்தது. அவனுக்கு எதுவும் புரியவில்லை.
'கடவுளே! இது என்ன சோதனை ? கார் நகரமாட்டேன் என்கிறதே. இப்பொழுது எப்படிப் போவேன்? என்று கலங்கினான்.
விபத்து நடந்ததும். கார் இயங்காமல் இருப்பதும் அவனுக்கு ஒரு கெட்ட சகுனமாகத் தோன்றியது.
வேறு ஏதாவது வாகனம் வருமா என்று பார்த்தான். தூரத்தில் ஒரு வாகனம் வருவது தெரிந்தது.
அதனை எப்படியாவது நிறுத்தி அதில் தொற்றிக்கொண்டு போய்விடவேண்டும் என்று நினைத்தான்.
அருகில் வந்ததும் கையை நீட்டினான். அந்த எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை.
வாகனம் நிற்காமலேயே போய்விட்டது. வேறு வாகனங்களும் வருவதாகத் தெரிய வில்லை.
காரை பழுதுபார்ப்பதென்றால் அதற்கான பொறுமையும் மனநிலையும் அவனுக்கு இருக்கவில்லை.
மனமோ திக் திக்" என்று அடித்துக்கொண்டி ருந்தது.
வேறு வழியில்லை. காரை எப்படியாவது இயங்கவைக்க வேண்டும்.
காரின் பொனட்டைத் திறந்து துழாவிப் பார்த்தான். இயந்திரக் கோளாறு ஏதும் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், அது என்னவென்று அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
கண்டபடி ஏதேதோ செய்தான். மீண்டும் பொனட்டைப் பூட்டிவிட்டு காருக்குள் ஏறி அமர்ந்தான்.

Page 29
தொடர்கதை இ ஆர். ராஜலிங்கம்
'கடவுளே, ஸ்டார்ட் ஆக வேண்டும் பிரார்த்தித்துக்கொண்டு காரை மீண்டும் ஸ்டார்ட் 1 பார்த்தான்.
கார் உறுமிக்கொண்டு ஸ்டார்ட் ஆகியது. அ மகிழ்ச்சியாக இருந்தது.
காரை அவதானமாகச் செலுத்தினால்தான் மை முகத்தையாவது பார்க்கும் வாய்ப்பு கிடைக்கு எண்ணினான். அதன்படி காரை வேகமாக அே அவதானமாக ஆஸ்பத்திரியை நோக்கிச் செலுத்தி ஆஸ்பத்திரியை அண்மிக்கையிலேயே அவனு பய உணர்வு ஏற்பட்டது. மனைவியின் உயிரற்ற உ அல்லது உயிருக்குப் போராடும் மனைவி காணப்போகிறோம் என்னும் பய உணர்வுதான் அ
காரை நிறுத்திவிட்டு அவசரமாக இறங் பீதியுடன் கலந்ததுடிப்பு அவனிடம் காணப்பட்டது துடிப்பு அவன் நெஞ்சையே அடைப்பதுபோல இ ஆஸ்பத்திரிக்குள் நுழையும் முன் தன்னுடை நின்றுவிடுமோ என்றுகூட அவன் நினைத்தான்.
அதேசமயம் டாக்டரும் உள்ளிருந்து ெ வந்துகொண்டிருந்தார். அவர் திலீபனின் நண்பர்த திக்கற்றுத் தவிக்கும்போது ஒரு துணை கிை எப்படி இருக்கும் ? அந்த உணர்வுதான் திலீ அவரைக் கண்டதும் ஏற்பட்டது. அந்த ஆ நீடிக்கவில்லை.
காரணம். ? அவர் திலீபனைப் பார்த்த பார்6ை அந்தப் பார்வையில் ஒராயிரம் அர்த்தங்கள் புரிந்த எ. என்ன. டாக்டர். எப்படி..?’ தி வாயிலிருந்து வார்த்தைகள் தடுமாறி வெளிவந்தன 'திலீபன் 1 ம். மனதைத் திடப்பு கொள்ளுங்கள்."
இப்படி டாக்டர் சொன்னதும், ' டாக்டர் சொல்கிறீர்கள்?’ என்று அலறினான் திலீபன்.
'என்ன செய்வது மிஸ்டர் திலீபன். டாக்ட சிகிச்சைதான் அளிக்கமுடியும். உயிரைக் கொடு எடுப்பதும் ஆண்டவனின் வேலை.”
அவர் தத்துவம் பேசினார். 'டாக்டர். ம்.. ?’ என்று திலீபன் கேள்விக்கு பார்த்தான்.
"மிஸ்டர் திலீபன், நாங்கள் எவ்வளவோ முயற்! பார்த்தோம். ம். என்ன செய்வது. ? எங்கள பாற்ற முடியவில்லை."
இப்படி அவர் கூறியதும், "தேன்மொழி. 1’ என்று அலறினான் திலீபன் உள்ளே. கட்டிலைச்சுற்றி யார்யாரோ நி தார்கள். அவர்கள் எவர் மீதும் அவன் கவனம் வில்லை.
தட்டுத்தடுமாறியபடி கட்டிலை நோக்கிச் சென்றா? கூடியிருந்தவர்கள் ஒதுங்கி அவனுக்கு வழிவிட்ட கட்டிலை நெருங்கிய அவன் உயிரற்ற அந்த உ பார்த்தான். அந்த உடல். வெள்ளைத்து 28 ஒளிஅரசி தீ

என்று பண்ணிப்
வனுக்கு
னவியின் ம் என்று தசமயம் 6THör.
க்கு ஒரு
-Gð) (6DLIfT îl să ului IT
lg5l. கினான். . அந்தத்
இருந்தது. Lu elp'
வளியே Ta.
டத்தால் பனுக்கு றுதலும்
வதான்.
6ზT.
T
படுத்திக்
1 என்ன
ர்களால் டுப்பதும்
றியுடன்
F செய்து ால் காப்
ன்றிருந் செல்ல
ன். அங்கு ர்கள்.
டலைப் aரியால்
போர்த்தப்பட்டிருந்தது.
பொங்கிவந்த அழுகையை எவ்வளவோ கஷ்டப்பட்டு அடக் கிப் பார்த்தான். ஆனால், முடிய வில்லை. சத்தமிட்டு அழவேண் டும் போல் இருந்தது. அதனை அடக்க முயலும்போது மண்டை வெடிக்கப்போவது போல் வலி ஏற்பட்டது அவனுக்கு.
தாங்க முடியாமல் "ஐயோ! ஐயோ!' என்று குமுறினான்.
எவ்வளவோ முயன்றும் பொங்கி வந்த அழுகையை திலீபனால் அடக்கமுடியவில்லை. குமுறிக் குமுறி அழுதான். கண்களிலிருந்து கண்ணிர் தாரை தாரையாக விழுந்தது.
அப்பொழுது.! அவனுடைய கரத்தைப் பற்றிப் பிடித்தது ஒரு மென்மையான கரம். அது அவனுடைய கண்ணிரையும் துடைத்துவிட்டது.
அந்தக் கரத்தின் மென்மையி லும் ஸ்பரிசத்திலும் அவன் அந்த நிலையிலும் சிறிது தடுமாற்ற மடைந்தான். அந்தக் கரம் அவ னுக்கு மிகவும் பரிச்சயமானது என்பது புரிந்தது.
அந்தக் கரத்துக்குரியது யாரென்று ஏறிட்டு நோக்கினான்.
அவன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை. அங்கே நின்றவள் தேன்மொழியேதான்.
'தேன். தேன். தேன் மொழி. ம். நீ. நீயா..?
அதிர்ச்சியாலும் மகிழ்ச்சியாலும் அவனால் பேசமுடியவில்லை.
"ஏன் அத்தான்? தேன்மொழி தான் கேட்டாள்.
'நீ. நீ. சாகவில்லை ? 'ஏன் அத்தான், நானும் சாக வேண்டுமா?
"ஐயோ! தேன்மொழி நீ இறந்து
துடித்து வந்தேன்."
'இல்லை அத்தான். எனக்கு வந்த சாவு ஆள் மாறிப் போய் விட்டது.'
'என்ன! ஆள்மாறிப் போய் விட்டதா?

Page 30
"ஆமாம்.' "அப்படியானால் இறந்தது. ?” கேள்விக்குறியுடன் திலீபன் அவளை நோக்க, அவள் சொன்னாள்.
"இறந்தது பிரேமினிதான்.' 'பிரேமினியா? எப்படி. எப்படி அவள் இறந்தாள்?
தடுமாற்றத்துடனும் அதிர்ச்சியுடனும் கேட்டான் திலீபன். அவனது முகத்தில் சோகம் இழையோடியது.
“பிரேமினி, இன்று நம் வீட்டுக்கு வந்திருந் தாள். மிகவும் கலகலப்பாகத்தான் என்னுடன் பழகினாள். நீண்ட நாட்களுக்குப் பின் சந்திக்கி றோம் என்று அவளுக்கும் எனக்கும் தேநீர் போட்டுக்கொண்டு போனேன். எனக்குத் தெரி யாமல் நான் குடிக்கவிருந்த தேநீரில் நஞ்சைக் கலந்திருக்கிறாள்.
அவளுடைய கெட்ட நேரம், தேநீர் எப் படியோ கைமாறி அவளுக்கே போய்விட்டது. தேநீர் அருந்திய சிறிது நேரத்திலேயே அவளின் கண்கள் மேலே சொருகி மயங்கி விழுந்து விட்டாள். நான் மிகவும் பயந்துபோய்விட் டேன். உடனே அவளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தேன். டாக்டர்கள் எவ்வளவோ பிரயாசை எடுத்தார்கள். ஆனாலும் அவளைக் காப்பாற்ற முடியவில்லை. உயிர் பிரியுமுன் அவளே தேநீரில் நஞ்சு கலந்த விஷயத்தைக் கூறிவிட்டாள்.'
இப்படி தேன்மொழி கூறினாள். அவள் கூறியதைக் கேட்டதும்,
'அடிப்பாவி. இவளுக்கு ஏன் எண்ணம் இப்படி வேலை செய்தது என்று கலங்கியவாறு பிரேமினியின் உடலுக்கு அருகில் சென்றான். போர்த்தப்பட்டிருந்த வெள்ளைத்துணியை அகற்றி விட்டு அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்தான்.
அந்த முகத்தில் இப்பொழுது களங்கம் எதுவும் தென்படவில்லை. எதைப்பற்றியுமே கவலைப்படாமல் உறங்குவதுபோல் காட்சிய ளித்தது அந்த முகம். களங்கமற்ற அந்த நிலை யில்தான் அவள் முகத்தில் மிகுந்த அழகு பளிச்சிட்டது.
அந்த முகத்தைக் கூர்ந்து நோக்கிய திலீப னின் கண்கள் குளமாயின.
"பிரேமினி போய்விட்டாயா ? ஏன் அம்மா இப்படிச் செய்தாய்? உனக்கு நீயே தீங்கைத் தேடிக்கொண்டாயே!
நீ திருந்தி நல்ல பெண்ணாக வாழவேண்டு
29 ஒளிஅரசி

மென்றுதான் ஆசைப்பட்டேன். உன் வாழ்வு இப்படி முடியுமென்று நான் நினைக்கவில்லை. பிரேமினி. ம். பிரேமினி.'
திலீபன் இப்படிப் பலவாறு புலம்பினான். தேன்மொழியால் அவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை. y
தான் குடிக்கவிருந்த தேநீரில் அவள் நஞ் சைக் கலந்தபோதிலும் விதியின் விளையாட் டால் தனக்கு வரவிருந்த மரணம் அவளுக்குப் போய்விட்டதை நினைக்கையில் தேன்மொழி யின் உள்ளம் ஏனோ சிறிது குறுகுறுத்தது. அது அவளுக்கு மிகுந்த வேதனையையும் ஏற்படுத் தியது.
அருகில் சென்று அவள் முகத்தை உற்று நோக்கினாள்.
‘ஏண்டி பிரேமினி, ஏன் இப்படிச் செய்தாய்? நீ என்னிடம் எதைக் கேட்டிருந்தாலும் சந்தோஷ மாகத் தந்திருப்பேனே! சதி செய்துதான் பெறவேண்டுமென்று என்னைப்பற்றித் தவறாக எடைபோட்டுவிட்டாயே.
என் உற்ற தோழியாக இருந்த நீ என் உள்ளத் தைப் புரிந்துகொள்ளாமல் இருந்துவிட்டாயே. உன் உள்ளத்தை நானும் அறியவில்லையே! அறிந்திருந்தால் உன்னை அநியாய சாவிலிருந்து R காப்பாற்றியிருப்பேனே. சத்தியமாகக் காப் பாற்றியிருப்பேன். உன்னைச் சாகவிட்டிருக்க LDITl ʻ (3l LG365I... ʼ
இப்படி அவள் மனதுக்குள்ளேயே உருகி அழுதாள்.
திலீபனையும் கட்டுப்படுத்த வேண்டி இருந்ததால் அவளால் அங்கு தொடர்ந்து நிற்க முடியவில்லை.
எவ்வளவு கொடிய மனம் படைத்தவளாக இருந்தாலும் அவளுக்கு இவ்வளவு பெரிய தண்டனை கிடைத்திருக்கக் கூடாது என்று எண்ணியபோது அவளுக்கு விம்மல் ஏற்பட் டது. அது தோழியின் மீது அவளுக்குள்ள பாசத்தைக் காட்டியது.
இருந்தாலும் தன்னுடைய வேதனையைக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு திலீபனையும் பற்றிப்பிடித்தவாறு அந்த இடத்தைவிட்டு அகல முயற்சித்தாள் தேன்மொழி.
காரை நோக்கி இருவரும் சென்றனர். காருக்குள் அவன் கொண்டுவந்திருந்த மலர்கள் மற்றும் மங்களகர பொருட்கள் பிரகாசமாகக் காட்சியளித்தன. அவை அவனைப் பார்த்துச் சிரிப்பதுபோலிருந்தன.
(முற்றும்)
தீபாவளி மலர் 2014

Page 31
配鞑 《萨 訂 3정 盛 C | – ∞
 

urດກີ ດກໍ 2014

Page 32
கோணேஸ்வர ஆலயத்தைச் சூழ்ந்து இத்திருத்த எல்லைக் காளியம்மன் கோயில்கள் காணப்படுகி திருகோணமலை பத்திரகாளி அம்மன், உப்புவென பறையன்குளம் எல்லைக் காளி, படுக்கைப் பத் பாலம் போட்டாறு, பத்திரகாளி, திருகோன மாரியம்மன், தம்பலகாமம் முத்து மாரிய மாங்கனாய் மாரியம்மன், சல்லி முத்துமாரிய கிளிவெட்டி முத்துமாரியம்மன் என்பன திருக்கே வரத்தில் உள்ள காளிகோயில்களாகும்.
இலங்கையில் சோழமன்னர்கள் ஆட்சி செய்த தில் கோணேஸ்வரத்தில் பல எல்லைக்காளி கோ அமையப்பெற்றன என்று அறிகிறோம்.
இங்குள்ள அம்மன் கோயில்களின் முதன்ன திருக்கோணமலை பத்திரகாளி அம்மன் ஆலயம், பெற்ற கோணேஸ்வர ஆலயத்தை நோக்கியவாறு துள்ள திருவருடசித்தத்தினை நினைத்துப் பெரு அடைகிறோம்.
இம்மையில் செல்வம் சேகரித்து, மாங்க மக்கட்பேறு பெற்று இன்பந்துய்க்க வேண்டி இை வழிபட்ட பக்தர்கள் கோணையப்பனை நோக் முனையில் திருவடிப்பேறு நாடிநிற்பர்.
திருகோணமலையில் சிவநெறிக்கும், செந்தமிழ் கும் தொண்டாற்றி வருபவர் சைவப்புலவர் ப இ.வடிவேல். அன்னார் பாடிய பாடல்களில் திருக்கே வரத்தின் இயற்கை வனப்பினை அழகாக வர்ணி 'கோணேஸ்வரத்தினை நோக்கிக் காடும் ம கைகூப்புகின்றன. கடலோ வளைந்து மகி பெருக்கினால் ஆர்ப்பரிக்கிறது" என்று கூறியவர்,
"மோனத்தமர்ந்த முதுபதியே உன்னைப் பணிகின்றேன்” என்று பாடுகிறார்.
தம்பலகாமம் கூட்டாம்புளி தந்த தமிழறிஞர் கலாநிதி சி. சத்தியமூர்த்தி தமிழகத்தில் பல்ல வாழ்ந்து, தமிழ் ஆராய்ச்சியில் மூழ்கி, 'சிவலிங்க வ என்ற அரிய நூலை நமக்குத் தந்தவர். அவர் தி ணேஸ்வரத்தைப் பார்ப்பது ஒரு தனி அழகு.
'அலைகடலில் நடுவே செல்கலம் ஒக்கும் நகரே! அழகிய நகரே என்பார்.
'கோயில் கும்பிடச் செல்லும் அடியார்கள் தே சொட்டினை குரங்குகளுக்கு எறிகின்றனர். அ; பாய்ந்து பிடிக்கும் மந்தியின் குறும்பினால் கிந்தும் சிதைந்து சொட்டும் கொம்புத் தேனைக் கொம்பு ப சுவைக்கின்றன’’ இப்படி ஒரு காட்சியை நமக்குத்த தாயகம் வந்து தங்கி வாழினும் ஓயாது நிை நாடுமென் நினைவே என்று ஈற்றில் ஏங்குகிறார். தமிழத் தெய்வம் முருகனை மடியில் வைத்து, ம அம்மன் முத்தமிழ் மழலை கேட்டு இன்புறுகிறா மழலை இன்பம் பருகிய வள் உள்ளம் நெ குழைந்து பால் சுரக்கின்றது. மகன் அருகே அவ
315 ਧ

லத்தில் கின்றன. ரி காளி, திரகாளி
ᎢᏓ Ꭰ 6ᏡᎠ ᎶᏄᏪ ம்மன், ம்மன், னேஸ்
காலத் யில்கள்
FL DE figf
LİFTLGi) அமைந் மகிழ்வு
ல் யம், றவியை கி மறு
மொழிக் ண்டிதர் ாணேஸ் க்கிறார். லையும்
ழ்ச்சிப்
அமரர் பாண்டு ழிபாடு ருக்கோ
அழகிய
ங்காய்ச் நனைப் கனிகள்
ான்கள் நகிறார். னைவே
ாதுமை ஸ். அம் கிழ்ந்து ஒடிச்
சென்று அவன் திருமுகத்தைத் தன் திருக்கரத்தில் எடுத்துக் கொஞ்சி பால் ஊட்டுகிறாள் அம்மை. இதோ கவிஞர் பெ.பொ.சியின் பாடல் :
முருகனை மடியில் வைத்து முத்தமிழ் மழலை கேட்டு பருகிய உமையாள் குழைந்து பான்முலை சுரக்கத் தாங்காது அருகினில் சென்று மகனின் திருமுகம் தழுவக் கொஞ்சி ஒருமுலை கையால் திறந்தன்று ஊட்டிய எந்தாய் போற்றி!
திருக்கோணேஸ்வர திருத்தல யாத்திரையில் இவற்றை எண்ணி எண்ணி மகிழ்கிறோம்.
இத்தகைய சிறப்புவாய்ந்த திருக்கோணேஸ்வரம் 1624ஆம் ஆண்டு சித்திரைப் புத்தாண்டு தினத்தில் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. அன்று திருகோ ணேஸ்வரத்தில் தேர்த்திரு விழா வெகுசிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சிவனும், பார் வதியும் தேரில் எழுந்தருளி இருக்கப் பக்தர்கள் வடம்பிடித்து 'கோணேசா! கோணோசா' என்று குரலெழுப்பு கின்றனர். திரள் திரளாகப் பக்தர்கள் நாற்திசையும் திரண்டு நின்று வழி பாடு செய்கின்றனர்.
அப்போது போர்த்துக்கேயச் சிப் பாய்கள் இந்து சமயப்பூசகர்கள் போன்று வேடந்தாங்கி கோயிலி னுள் நுழைந்து புத்தாண்டுப் பூசை நடைபெறும் வேளையில் அனர்த் தங்களை விளைவித்தனர். கோயி லில் இருந்த விலை மதிப்புடைய பொருட்களைச் சூறையாடினர். கோயிலையும் இடித்துத் தரை மாட்டமாக்கினர்.
அப்போது பக்தர்களும், பூசகர் களும் இறைவன் திருவுருவங் களைக் கவனமாக எடுத்துச் சென்று பல இடங்களில் மறைத்துவைத்த னர் என்று அறியமுடிகிறது.
இத்திருக்கோயிலை இடிக்கக் கட்டளை பிறப்பித்த போர்த்துக் கேயர் அரசுக்கும், இம்மத வெறி
urta Grf. Davoří 2o14

Page 33
யாட்டத்துக்கும் தலைமை தாங்கிய அந் போர்த்துக்கேயத் தளபதி கொன்ஸ் கோ டன்டைன் டீசாவும் அவரது படை G3LI ITF யினரும் பதுளையில் அடர்த்தியான ஒல்ல நடுகாட்டில் வைத்து கொல்லப் படிப் பட்டனர். கோணேசர் கோயிலை அழி அவர்கள் அழித்த ஆறு ஆண்டு உயிர் காலத்தில் இது நிகழ்ந்தது.
மாதுமை அம்பாள் சமேத ଈ. திருக்கோணேஸ்வர பெருமான் வி
G எந்தப் போர்த்துக்கேய ஆட்சி G யில் இந்த அட்டூழியம் இழைக்கப் பட்டதோ, எந்தப் போர்த்துக்கேய நி ஆட்சியின் ஆசியுடன் இந்த நீ மதவெறி கட்டவிழ்க்கப்பட்டதோ, நி
32 ஒளிஅரசி தீ
 
 

ஆட்சியும் உரிய தண்டனைப் பெற்றது. ணேசர் திருக்கோயிலை அழித்த பின்னர் ர்த்துக்கேய ஆட்சி தள்ளாடித் தள்ளாடி ஈற்றில் ாந்தரிடம் தோற்றுப்போனது. இது ஒரு வரலாற்று பினை; தர்மம் குன்றி அதர்மம் ஓங்கி, சமுதாயம் வுப்பாதையில் விரையும்போது நீதி நிலைக்க, களைக் காக்க, உழவர்கள் பைங்கூழ்களைகட்டல் ன்று கோணேசர்திருக்கரத்து மழு இயங்கத் டங்கும் உயிர்களை வதைத்து, உடைமைகளை த்து, மனித சுதந்திரத்தை மறுக்கும் நீதிகொன்ற ாயத்தைக் காணின் 'ஆழ்க தீயது எலாம்' என்று பரிக்கும் கோணேசர் கைத்தல மழு என்பதை இவ் ாற்று நிகழ்வு பறைசாற்றுகிறது. ந்நிகழ்வினை நினைக்கும்போது கோணேசர் வட்டில் காணப்படும் பாடலொன்று எமது னையைத் தூண்டுகிறது. எனது செல்வத்தை எந்தன் உறவினருக்கு ஈயாமல்,
மரபினருக்கு பகிர்ந்து கொடுக்காமல் காணநாயகருக்கு அளித்துள்ளேன். இதற்கு அழிவு எப்பவர்கள், தீங்கு இழைப்பவர்கள் பொடிப் டியாவர். இது நிச்சயம் கோணநாயகர் சத்தியமாக நிச்சயம' - இவ்வாறு குளக்கோட்ட மன்னன் றுகிறார்.
தோ அந்தப் பாடல் :
ாறாத புனல்பாயும் திருக்குளமும் ாயல்வெளியும் வருந்திச் செய்தே றாக என்மரபோர்க்கு ஈயாமல் காணமலை விமலற்கு ஈந்தேன் பறான பெரியோரே இதற்கழிவு னைப்பவர்கள் டெட்பு நீங்கி றாகப் போவரிது நிச்சயம் ச்சயம் கோணைநிமல ரானை'

Page 34
தன்னம்பிக்கைத் தொடர்
O 尊 尊 bLDL15lb6|T! நீங்கு
நீங்கள்தான் உலகிலேயே அழகானவர். அறிவுள்ளவர். அனைவரிடமும் அன்பு பாராட் டுபவர். உங்கள் திறமையில் எந்தச் சந்தேகமு
மில்லை. நீங்கள் படிக்கின்ற பாடக்கல்வியில் தலைசிறந்தவர். என்று உறுதியாக நம்புங்கள்.
அதேநேரம் நீங்கள் படிக்கின்ற கல்வியுடன் கூடவே வளர்த்துக் கொள்ளவேண்டிய மென் திறன்தான் உங்களைத் தனித்திறனுள்ளவர் களாகக் காட்டி மற்றவர்களிடமிருந்து வேறு
செய்யும்.
பொதுவாக நாம் நம் முன்னேற்றத்தில் கவனம் கொள்ளாமல் அடுத்தவர்களைப் பற்றி அதிகம் சிந்திக்கின் றோம். நமக்குப் பிடித்த நபர்களுக்கு எது பிடிக் கும், எது பிடிக் காது
 
 
 

5ள்தான் சிறந்தவர்
என்ற ஆராய்ச்சியில் இறங்கிவிடுகிறோம். அது நண்பர்களாக இருக்கலாம், அல்லது பிடித்த நடிகர்களாகவோ, அல்லது விளையாட்டு வீரர்களாகவோ இருக்கலாம்.
ஆனால், நம் பலம் என்ன, பலவீனம் என்று ஆராயத் தொடங்குவதில் நமக்கு இன்று ஆர்வம் இல்லை. உங்களுக்குப் பிடித்தவர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளச் செலவிடும் நேரத்தில் பாதியாவது உங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதில் செலவிடுங்கள்.
மென்திறன் தகுதிகள் என்பது, படிப் பைத்தவிர, உங்களுடைய பேச்சுத் திறன், தலை மைப் பண்பு, நம்பகத் தன்மை, உங்களுடைய தனிப்
பட்ட குணாதிசயங்கள், நீங் கள் உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்த வல்லவரா, நீங்கள்

Page 35
பயந்தாங்கொள்ளியா, பொது இடங்களில் டே கூச்சப்படுவீர்களா, எதிர் பாலினத்தவரிட யோசிப்பவர்கள் போன்றவையாகும்.
இது தவிர, நேரக்கட்டுப்பாடு, எதுவும் (ԼՔԼ சாதகமானளண்ணம், கூர்ந்து கவனிக்கும் திறன், உ ஆளுமைத்திறன், தன்னையும் மற்றவரையும் உத்வேகப்படுத்துதல் உள்ளிட்டவையே இன்றைய யில் அவசியமாகின்றன.
இந்தத் தகுதிகள் அனைத்து மனிதர்களுக்கும் இளைஞர், யுவதிகளுக்கு இருந்தே ஆக வேண்டு யதார்த்தமாக வாழப்பழகிக்கொள்வது. கல்வி மென் திறன்களையும் தெரிந்துகொண்டு நடைமுை வது. நம்மால் முடியும் என்ற முழு தன்னம்பிக் மூன்றையும் கடைபிடித்தால் வெற்றி மீது 6ெ உங்களைச் சேரும்.
ஒரு நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடைபெ இவ்வளவு பேர்கள் நம் அலுவலகத்தில் பணி போதும், மற்றவர்களை அனுப்பிவிடலாம் எ வைத்துத் தீர்மானிக்கிறார்கள்?
வேலை செய்பவர்களில் யாருக்குப் சாதகமாக இருக்கிறது, மற்றவர்களுக்கு உதவி செய்பவ கம்பெனி மேல் நம்பிக்கை வைப்பவர்கள்
தகுதிகளை அலசியபின்பே நிறுவனம் அவர்களைத்
தக்க வைத்துக்கொள்கிறது.
வேலை தருகிற முன் கொள்ளவும் னணி நிறுவனங்கள் இளை நடைமு ஞர்களுக்கு ஏற்கனவே உறவைப் ெ இருக்கிற படிப்பைத் தவிர. வெகுகாலம் மென்திறன் தகுதிகள் இருக் நபரல்ல. கும் என்று கணக்கிடுகிறது. போகிறீர்கள் இந்த மூன்று அம்சத் ஏன், நீங் திட்டங்கள் இருந்தால் கூடிய சாத்தி இவர்களை வேலைக்கு தலைவராக எடுத்துக் கொள்ளலாம் அந்நேரத்தில் என்று தீர்மானித்து விடுகி தகுதியைக் ( றது. விவரம் அறிந்த முடியும், பெரிய நிறுவனங்கள் கல் உலகம் மு வித் தகுதியின் அடிப்படை இந்தச் சூழ் யில் மட்டுமின்றி, இந்த எவ்வாறு நா மென்திறன் தகுதியை நடந்து கொ
வைத்துத்தான் பெரும்பா
மட்டும் சாத்
லும் வேலை தருகிறார்கள். நீங்கள் L
அது தவிர நீங்கள் விரும் விடக்கூடாது பும் வேலையைப் பெறு நினைவில்ெ வதற்கு மட்டுமின்றி அத களுக்குள்ளு னைத் தக்க வைத்துக் இருக்கும் த
34 ஒளிஅரசி

நீங்கள்
பசுவதற்குக் _ம் பேச 毅
மனிதர்களாகப் டியும எனற & ': 接 பிறந்து, 5 Tf5 i 55 U (UPOLD 1. மனிதர்களாகவே
tdespises குறிப்பாக '99
El fò. விடக்கூடாது. ', நீங்கள்
றைப்படுத்து
க்கை. என்ற 翁教 m
வற்றி வந்து
Spóೇಟಿ©
றும்போது,
புரிந்தால்
ான்று எதை
ன எண்ணம் ர்கள் யார்; யார் என்ற
பெரிதும் உதவும். றை வாழ்க்கையில் பார்த்தால், ஒருவருடைய பறுவது மிகவும் சுலபம். ஆனால், அந்த உறவை தக்க வைத்துக்கொள்வது கடினம். நீங்கள் தனி நாளை நீங்கள் உயர்ந்த பதவியை அடையப் . உங்களிடம் பலர் வேலை செய்யப்போகிறார்கள். களே சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கக் யக்கூறுகள் உண்டு. அத்தகைய நிலையில், நீங்கள் இருந்துகொண்டு வழிநடத்தும் நேரம் வரலாம். நீங்களும், உங்களுடன் பணிபுரிபவர்கள் இந்தத் கொண்டிருந்தால்தான் குழுவாக நீங்கள் செயல்பட
முழுவதும் ஒன்றையொன்று சார்ந்தே இருக்கின்றன. நிலையில் நம் வெற்றி கைகூட, மற்றவர்களிடம் ம் பழகுகிறோம், அவர்கள் மதிக்கத்தக்க நாம் எப்படி ாள்ள வேண்டும் என்பதெல்லாம் மென்திறனால் தியம். மனிதர்களாகப் பிறந்து, மனிதர்களாகவே மறைந்து து. நீங்கள் தலைவராகப் பிறந்தவர்கள் என்பதை காள்ளுங்கள். ஏனெனில், ஒவ்வொரு இளைஞர் நம் ஒரு தலைவன் இருக்கிறான். உங்களிடம் லைவனை வெளிக் கொணருங்கள்.
தீபாவளி மலர் 2014

Page 36
68 (ថ្ងៃ ៣វិញ្ច្រា ឆ្នា
នៃ ក្លា ធ្វa 徽
ஸ்லோத் என்ற குரங்கு போன்ற ஒருவகை உ கடப்பதற்கு ஒருமாத காலம் எடுத்துக்.ெ என்னவோ இந்த வார்த்தைக்கு அசமந்தம் இதை 'அசையாக்கரடி என்றும் அழைக்கி
பூமியைச் சுற்றிவரும் விண் Gftu உதயங்களையும்
100 ஆண்டுகள் பழைமையான சாக்லெட்ப விற்கப்பட்டிருக்கிறது. &
கடல் மட்டத்தில் இயங்குவ சற்று வேகமாக ஓடும்
லண்டனிலுள்ள "பிக் பென் மணிக்கூன் செய்வதை தொலைவில் கணக்கிட்டா கிலோமீட்டர் கடக்கிறது -
ஆணின் இதயத்தை விட ெ
விஞ்ஞானிகள் கண்டுபிடித்
অৱ । இதுவரை ஒன்பது சமாதான . ព្រោទ៍ 雛 藻
அ உலகின் முதல் விண்வெளி முறை பூமியை வெற்றிகரம
வீட்டுவேலை செய்யும் வேலைக்கார சிறுமி கஷ்டங்களுக்கிடையே துவக்கினார்.
அனிதா சூட 8 மணி ே
函 ※ மிகக் குறைந்த ஆஸ்திரேலிய ஓபன்
徽
ॐ 雛
35 ஒளிஅரசி தீபா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வருக்கு 1922 முதல் 1990 வரை தொடர்ந்து பிரச்சினை இருந்திருக்கிறது. கிட்டத்தட்ட 49 விலகிய அடுத்த ஆண்டே 97 வயதில் இறந்து
வெளி வீரர்கள் ஒவ் வொரு நாளும் அதிகபட அஸ்தமனங்களையும் காணமுடியும்.
ண்ணின் இதயம் வேகமாக துடிக்கிறது என்று
ក្តៅអ៊ុំ
க தம் வாழ்க்கையை பல
Gousions நீந்திய ஒரே ខ្សត្រិយ வீராங்கனை நரத்தில் ព្រោម គ្វីអ៊ 888 雛
វិស្ណុ ព្រោ .

Page 37
சிறுகதை E அருணா செல்வம்
மலர் கொண்டுவந்து கொடுத்தக் தேனியை ஒரு வாய் குடித்துவிட்டு மலரை நிமிர்ந்து பார்த் தான் விக்ரம். மலர் சினேகிதமாக புன்னகைத்த படி அவன் எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தாள்.
மலர். உங்கிட்ட தனியாகப் பேசவேண் டும் என்று தான் மஞ்சுவைக் கூட கூட்டிட்டு வரவில்லை என்று பீடிகையுடன் தொடங் கினான்.
தன் கணவரின் நண்பன். எப்பொழுதும் மனைவியுடன் வரும் விக்ரம் இந்த முறை தனியாக வந்திருக்கிறானே. என்று யோசனை யில் இருந்த மலர், இவன் இப்படி சொன்னதும், இவருக்கு நம்மிடம் பேச என்ன இருக்கிறது என்பது போல் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். மலர். இந்த நவம்பர் வந்தால் என் தங்கை கெளரிக்கு முப்பது வயது தொடங்குது. உனக்குத் தெரியுமில்ல. ? அவன் கேட்டதும். கொஞ்சம் தெளிந்து, ஒரு பெருமூச்சு விட்டு விட்டும் தெரியும் என்றாள்.
அவ கிட்ட நீயாவது பேசி பாரேன் என்றான்
ᏯᏧᏏᎧ Ꭵ6ᏡᎠᏊᎧᎸᎩ ᎿᎥ ᏧᎥᎢᏯᏧᏏ .
நான் என்னங்க பேசுறது. நீங்கள் தான் ஒரு முடிவுக்கு வரணும். கெளரி மேல உங்களுக்கு இல்லாத அக்கறையா எனக்கு வந்திடப் போகுது. ?
உண்மைதான் மலர். ஆனால், எங்க பேச்சை அவ கேட்கலையே. நீ அவ கிட்ட கொஞ்சம்
36 ஒளிஅரசி
 

நெருக்கமா பேசுவே. அதோட பெண் என்றால் அவளும் மனம் விட்டு பேசுவா இல்லையா..?
ஏன். உங்க மனைவி மஞ்சு கெளரிகிட்ட நல்லா தானே பேசுவாங்க. பிறகென்ன?
பேசுவாங்க தான். ஆனாலும் அண்ணி மச்சாள் என்ற இடவெளி இருக்கத்தான் செய்யுது. அதனால நீ பேசு. அவளோட கல்யாணத்தைப் பத்தி அவ எந்த முடிவுக்கு வந்தாலும் நான் ஏத்துகிறேன்னு சொல்லு.
எந்த முடிவா. அப்படியென்றால்.. ? புரியாமல் கேட்டாள் மலர்.
மலர். உனக்குத் தெரியாதது எதுவும் இல்லை. எனக்கு படிப்பு முடியறதுக்குள்ள காதல் கல்யாணம் என்று அவசர அவசரமாக வாழ்க்கையைத் தொடங்க வேண்டியதாகி விட்டது. கெளரிக்கு என்னை விட்டா யாரும் இல்லை. வாழ்க்கையில கொஞ்சம் வசதியா வாழனும் ன்னா பணம் வேணும். அதுக்கு நல்லா படிச்சி பெரிய வேலைக்குப் போகனும். அதுக்கு முன்னால காதல் கீதல் என்று வந்துவிட்டால் என்னை மாதிரித்தான் கஷ்டப் படனும் என்று அவளிடம் சொல்லிக் கொண்டே இருப்பேன்.
படிப்பை முடிச்சிட்டா. நல்ல வேலை கிடைச்சுது. நானும் அவ வேலைக்குப் போனதும் மாப்பிள்ளை தேட ஆரம்பிச்சேன். எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம். ரெண்டு மூனு வருஷம் சம்பாதிக்கிறேன்.
தீபாவளி மலர் 2014

Page 38
அப்புறமா கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா. நானும் சரின்னு விட்டுட்டேன். கை நிறைய சம்பாதிக்கிறா. அஞ்சு வருஷமா மாசாமாசம் சம்பளத்துல பாதிய கொடுத்திடுறா. நானும் ரெண்டு வருஷம் கழிஞ்சதும் வரன் தேட ஆரம்பிச்சேன். மாப்பிள்ளை தேடித் தேடி எந்த மாப்பிள்ளையைக் காட்டினாலும் வேண்டாம். என்னை இப்படியே விட்டுடுங்க என்கிறாள். கொஞ்சம் கோபமாகப் பேசி னால். நான் உங்களுக்கு பாரமா இருந்தா சொல்லுங்க வீடு தனியாக எடுத்துக்கொண்டு போய்விடு றேன்னு சொல்லுறா. அவ சம்பளத்தைக் கொண்டு வந்து கொடுக்கிறதால தான் நான் அவளைக் கல்யாணம் செஞ்சி குடுக்க மாட்டேங்கிறேன்னு வெளிப்படை யாவே சிலர் பேசுகிறாங்க மலர். எனக்கு இதுவே பெரிய கவலையா இருக்குது என்றான் கவலையுடன் விக்ரம்.
மலர் கெளரியுடன் சினேகிதமாகப் பேசி இருந்தாலும் இதுவரையில் அவளின் திருமணத் தைக் குறித்துப் பேசியதில்லை. ஆனால் அவளிடம் இதைப் பற்றிப் பேசவேண்டும் என்ற எண்ணம் ஒர் ஒரத்தில் இருந்து அரித்துக் கொண்டேதான் இருந்தது. இப்பொழுது அவ ளின் அண்ணனே இது குறித்துப் பேசவந்ததும் வெளிப்படையாகப் பேச ஆரம்பித்தாள்.
மத்தவங்க பேசுறதையெல்லாம் விடுங்க. ஆமா. ஏன் கெளரி கல்யாணம் வேண் டாம்ன்னு சொல்றா..? ஏதாவது காதல் கீதல் இருக்குமோ. ? சந்தேகத்துடன் கேட்டாள் மலர்.
எனக்கு தெரிஞ்சி அதெல்லாம் இல்லை. ஆனால் இப்போ இருக்கிற நிலையில அவ யாரை கை காட்டுறாளோ அவனை கட்டி வைக்கத் தயாரா இருக்கேன் என்று சொல்லி நிறுத்தியவன், ப்ச்சி. ஒரு காலத்துல படிப்பு மட்டும்தான் முக்கியம். காதல் கீதல் என்று வந்திடாதே என்றேன். அவ வேலைக்கு போக ஆரம்பிச்சதும். ஏதாவது நம்ம ஊர்காரன், நம்ம ஜனமா இருந்தா கட்டி வக்கிறேன்னு ஜடைமாடையா சொன்னேன். ஆனா இப்போ. எந்த சாதி, மதமா இருந்தாலும் பரவாயில்ல, எந்த நாடு, மொழி மாறி இருந்தா லும் பரவாயில்லை என்ற அளவுக்கு இறங்கி வந்திட்டேன். என்றான் கவலையாக,
விக்ரமைப் பார்க்கும்பொழுது மலருக்குச் சற்று கவலையாகத்தான் இருந்தது.
என்ன செய்வது? பிடிவாதத்தைத் தளர்த்தும் போதுதானே தெரிகிறது. நாம் பிடித்திருந்தது பிடிக்காத ஒன்றை என்று.
சரி விக்ரம், நான் அவளிடம் பேசிப் பார்க்கி
37 ஒளிஅரச்

றேன் என்று மலர் சொன்னதும் பெருமூச்சுடன் கிளம்பினான்.
★ * ★ ★ ★ கெளரி மேடம் கூட்ட ஒன்றில் இருக் கிறாங்க. முடியிற நேரம்தான். நீங்கள் காத் திருப்ப தென்றால் அந்த வரவேற்பிடத்தில் காத்திருங்கள் என்று அந்த அலுவலக ஊழியர் சொல்லிவிட்டுச் சென்று அரை மணிநேரம் கடந்த பிறகுதான் கெளரி ஒரு கும்பல் புடை சூழ ஒர் அறையைவிட்டு வெளியில் வந்தாள். வந்தவள் மற்றவர்களிடம் ஏதோ சொல் லிக்கொண்டே இவளைக் கடந்து சென்றாள்.
மலர் அவளை வியப்புடன் பார்த்தாள். கெளரிக்குப் படிப்பு முடிச்சதும் அவள் படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைத்தது என்றும், அதே அலுவலகத்தில் மேலும் மேலும் பதவி உயர்வுகள் கிடைத்திருக்கிறது என்றும் விக்ரம் சொல்லி கேட்டிருக்கிறாள். அப்பொழுது அதையெல்லாம் மலர் பெரியதாக எடுத்துக் கொண்டது இல்லை. ஆனால், இங்கே பார்க் கும் பொழுது மலருக்குப் பிரமாண்டமாகத் தெரிந்தது.
அவள் பலபேருக்கு உத்தரவு இடுபவள் போல் தெரிகிறாள். இவள் சொல்வதைத் தலை யாட்டிக்கொண்டே குறிப்பு எடுத்தபடி மற்றவர் கள் அவள் பின் செல்கிறார்கள்.
இதையெல்லாம் பார்த்தபோது மலர், இவளே பல பேருக்குப் புத்தி சொல்கிற அளவிற்கு இருக்கிறாள். இவகிட்ட நாம என்னவென்று பேசுவது. பேசாமல் போய்விட லாமா. என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போதே. ஐ. மலரக்கா, ஐய்யோ. உங்களைப் பாத்து எவ்வளவு நாளாச்சி? எப்படி இருக் கிறீங்க. ? என்று குழந்தைத்தனமாக கேட்ட படி அவள் எதிரில் வந்து அவளைக் கட்டி முத்தமிட்டாள் கெளரி.
மலர் கொஞ்சம் இறுக்கம் தளர்ந்தாள். நல்லா இருக்கேன் கெளரி. ஒரு வேலையா இங்க வந்தேன். வந்த வேலை முடிஞ்சிடுச்சி. நீ இங்க தானே வேலை செய்யிற ? அப்படியே உன்கூடவே வீட்டுக்குப் போயிடலாம்ன்னு தான் உன் ஆபிசுக்கு வந்தேன் என்றாள் மலர்.
கெளரி இதை நம்பாதது அவளின் முகத்தில் தெரிந்தாலும் அதை மறைத்து அப்படியா? சரி வாங்க போகலாம் என்று சொல்லியபடி இறங்கி நடந்தாள். மலரும் அவளைப் பின்தொடர்ந் தாள்.
காரை ஒரு தேனீர்க் கடையில் நிறுத்திவிட்டு ஒர் அமைதியான சூழல் உள்ள இடத்தில் மலரை அமர வைத்துவிட்டு எதிரில் அமர்ந்த தும், இப்போ சொல்லுங்க அக்கா, என்ன
தீபாவளி மலர் 2014

Page 39
சிறுகதை இ அருணா செல்வம்
விசயமா என்னைப் பார்க்க இவ்வளவு தொலைவு வந்திருக்கிறீங்க ? மெல்லிய புன்முறுவலுடன் கெளரி கேட்டாள்.
மலர் அவளின் புத்திசாலித்தனத்தை உணர்ந்து அதற்கு மேல் இவளிடம் பொய் சொல்வது தவறு என்ற எண்ணத்துடன் நேரி டையாக விசயத்திற்கு வந்தாள்.
நான் உண்மையைச் சொல்லிடறேன். உன் னோட கல்யாணத்தைப் பற்றி பேசதான் வந்தேன். என்றாள்.
விக்ரம் அண்ணா எங்கிட்ட பேச சொல்லி உங்கள அனுப்பினாரா..? கெளரி கேட்டாள்.
விக்ரம் அண்ணா இருக்கட்டும். நானே ரொம்ப நாளா கேட்கனும்ன்னு இருந்தேன். நீ ஏன் கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்லுற?
இவளின் கேள்விக்கு அவள் பதில் சொல்லா மலிருக்க. உனக்கு வேற யாரையாவது பிடிச்சி ருக்கா? இருந்தா சொல்லு. நானே பக்குவமா விக்ரம் கிட்ட சொல்லுறேன் என்றாள் மெதுவாக,
அப்படியெல்லாம் எதுவும் இல்லைக்கா. நெஜமா சொல்லு. நீ யாரையும் காதலிக்கல.? கெளரி வெறுப்பாய் ஒரு புன்னகையை வெளியிட்டாள். காதலிக்கிற வயசு வந்தபோது, மனசைப் பிடிக்கனும் என்ற லட்சிய சங்கிலி யால கட்டி போட்டிக்கினு இருந்தேன். அது ரொம்ப இறுக்கிடுச்சின்னு நினைக்கிறேன். அதனால இப்போ மனசு மறுத்துப் போச்சின்னு நினைக்கிறேனுக்கா. என்றாள் கெளரி.
சற்று யோசித்த மலர், வாழ்க்கையில லட்சியம் எல்லாம் இருக்க வேண்டியதுதான். அதுக்காக மனசை கட்டுப்படுத்தி வாழுறதும் நல்லதுதான். ஆனால், இப்போ உன் லட்சியம் எல்லாம் நிறைவேறிடுச்சே, இப்போ கல்யா ணம் பண்ணிக்கலாம் தானே. கேட்டாள்.
இல்லக்கா. எனக்கு இப்போ அந்த ஆசையெல்லாம் வரலை.
அப்போ இப்படியே இருந்திடலாம்ன்னு முடிவு பண்ணிட்டியா..?
இன்னும் அந்த முடிவுக்கெல்லாம் வரலை; பார்ப்போம், பொதுப்படையாகச் சொன்னாள் கெளரி.
இனிமேல என்ன பாக்குறது ? எனக் கெல்லாம் வாழ்க்கையைப் புரிஞ்சிக்கிற வயசு வர்றதுக்கு முன்னாடியே பதினெட்டு வயசுல கல்யாணம் பண்ணிட்டாங்க. உன் வயசுல என்னோட குழந்தைங்க ஸ்கூலுக்கே போக ஆரம்பிச்சிட்டது தெரியுமா?
தெரியும்க்கா. ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா. அந்த பதினெட்டு வயசுல
38 ஒளிஅரசி தீபாவ

எதுவுமே தெரியாத பெண்ணை ஒருத்தனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறது தான் நல்லது. எதைப்பற்றியுமே யோசிக்காத வயது அது. இது தான் வாழ்க்கை என்று கிடைத்த வாழ்க்கையை தொடங்கிடலாம். கெளரி சாதாரணமாக சொன்னாள்.
என்ன சொல்ல வர்ற நீ? புரியலை. எங் களை மாதிரி நீங்களும் எதுவும் தெரியாமல் வாழ்க்கையைத் தொடங்கிடக் கூடாதுன்னு தான் பெண்களைப் படிக்க வைக்கறாங்க. அவ காலுல அவ நிக்கனும் ன்னு நெனச்சிதான் வேலைக்கி அனுப்புறாங்க. இப்போ படிச்சதால உனக்கு நல்ல தெளிவு வந்திருக்கும். வாழ்க்கை என்றால் என்னன்னு புரிஞ்சிருக்கும். இவனைத் தான் நீ கட்டிக்கனும் ன்னு யாரும் உன்னை
கட்டாயப் படுத்த முடியாது. உனக்கு பிடிச்சி நீயே தேர்ந்தெடுத்துக் கல்யாணம் பண்ணிக்கிற பக்கவம் வந்திருக்கு இல்லையா ? சற்று கோபமாகவே கேட்டாள் மலர்.
கெளரி ஒரு பெருமூச்சு விட்டாள். பக்குவம். அது வந்ததால தான் நமக்குச் சரியானது எது என்று தேர்ந்தெடுக்க முடியாமல் தடுமாற வைக்கிறது. எல்லாமே நமக்கு மேட்சாக னும்ன்னுநினைக்கவைக்கிறது. படிச்சிட்டு வேலைக் குப் போய் வெளியுலகத்தைப் பார்க்கிறதால யோக்கியன் யார் என்று மனசு அலசிப்பார்க்க நினைக்கிறது என்றாள் வெறுப்பாய். மலர் யோசித் தாள். கெளரி கொண்டு வந்து வைத்தக் காபியைக் குடித்து முடித்தாள். மலர் காபியைக்
னி மலர் 2014

Page 40
கலக்கிக்கொண்டே பேசாமல் இருந்தாள்.
அக்கா. உண்மையான காதல் என்று வர்ற வயசுல என்னையும் சிலபேர் காதலிப்பதாக சொன்னார்கள். காதலில் விழுந்தால் நாம் படிக்கனும், சம்பாதிக்கனும் என்ற லட்சியம் எல்லாம் போயிடும் என்ற பயத்தாலே அதெல்லாம் கூடாது என்ற மனக் கட்டுபா டோட இருந்தேன். இப்போ அவர்களுக் கெல்லாம் கல்யாணம் ஆகி பிள்ளைகளோட இருக்கிறார்கள். என்னை உயிருக்குயிராய் காதலிப்பதாக சொன்னவன் கூட இன்னைக்கு தன் குழந்தையை ஸ்கூலுல சேர்க்க லைனுல நிக்கிறான். என்னைவிட நன்றாக படித்தவர்கள் கூட காதல், கல்யாணம் என்ற ஒரு வட்டத்துக் குள் விழுந்து அதில் கஷ்டப்படுவதையும் சுக மாகத்தான் இருக்கிறது என்று சொல்கிறார்கள். அது உண்மையா பொய்யா என்பது வேறு விசயம். ஆனால், எனக்கு அந்த வட்டத்துக்குள் விழ ஆசை இல்லை மலரக்கா என்றாள் கெளரி மலர், இவளுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் பேசாமல் அவளைப் பார்த்துக்கொண்டு இருந்தாள். கெளரியே தொடர்ந்தாள். இவ்வளவு காலத்துல ஒன்று மட்டும் புரிஞ்சிக்கிட் டேன்க்கா. வாழ்க்கையில பணம் என்ற ஒன்று மட்டும் இருந்துவிட்டால் போதும். எதற்கும் கவலைப்படாமல் சந்தோஷமா வாழலாம் என்றாள் கெளரி.
நல்ல பாயிண்ட் கிடைத்தது என்ற நினைப் பில் மலர் நிமிர்ந்து உட்கார்ந்து அதுக்காக காசையே கட்டிக்கிட்டு வாழ்ந்திட முடியுமா? உடம்பு என்று ஒன்று இருக்கிறது. அதில் உணர்வு என்ற ஒன்று இருக்கிறதே. அதை நீ யோசிக்கிறதில்லையா..? கேட்டாள்.
வெறும் உடல் சுகத்திற்காக மனம் ஒட்டா மல் வாழனும்மின்னு எனக்கு ஆசையில்லை யக்கா என்றாள் சட்டென்று கெளரி.
சரி கெளரி. இந்த வயதைவிடு, பிற்காலத் தில் உனக்கு என்று ஒருவர் வேண்டாமா..? இப்படியே வாழ்ந்தால் கடைசியில் தனிமர மாகத்தான் இருக்கனும், கொஞ்சம் கோபமாகச் சொன்னாள் மலர்.
கெளரி ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு சொன்னாள். கல்யாணம் பண்ணி பல பிள்ளைகள் பேரப்பிள் ளைகள் எடுத்தவர்கள் கூட இன்னைக்கி முதி யோர் இல்லத்தில்தான் இருக்கிறார்கள் என்று சொல்லியபடி இந்தப் பேச்சை இத்தோடு நிறுத்துவோம் என்ற தோரனையில் கடைக்காரரி டம் "பில்லை’க் கேட்டு பணத்தை செலுத்தினான். தனது அஸ்திரங்கள் எல்லாம் கெளரியிடம் பயனற்றுப் போனதை உணர்ந்த மலர் சற்று கவலையும் ஏமாற்றத்தையும் அடைந்தாள்.
39 ஒளிஅரசி தீ

இறுதியாக ஒரு முறை முயற்சித்து பார்ப்போம் என்ற சிந்தனையுடன் எழுந்திருக்க முற்பட்ட கெளரியை கைபிடித்து அமர்த்தினாள்.
இவள் என்ன இப்படிச் சொல்கிறாளே என்று தப்பாக எடுத்துக்காத கெளரி நான் புரிஞ்சுக் கிட்டத உன்னிடம் சொல்லிடுறேன் அப்புறம் உன் இஷ்டம் என்று சொல்லி ஆரம்பித்தாள். முப்பது வயசில ஒரு பெண் அதிகமாக படித்துவிட்டு உயர்ந்த பதவியில கைநிறைய சம்பளம் வாங்கிக்கிட்டு இருக்கிறப்போ தனக்கு எல்லாமே கிடைத்துவிட்டதாக எண்ணத் தோன்றும் அதுவும் தனக்கு கீழே வேலை செய்கின்ற ஆண்கள் எல்லாம் கைகட்டிக் கொண்டு தான் சொல்வதை யெல்லாம் கேட்கிறபோது நான் ஏன் இன்னு மொரு ஆணுக்கு கீழே கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று யோசிக்க வைக்கும் இவையே திருமணம் பற்றிய எதிர்மறையான எண்ணங் களை உன்மனதில தோற்றுவிக்க காரணமாக அமைந்திருக்கலாம். ஆனால் இது மட்டுமல்ல வாழ்க்கை என்பதை நீ புரிஞ்சுக்கோ இப்ப நீ எல்லாம் புரிந்தவ மாதிரி பேசிக்கலாம் ஆனால் நாற்பது வயசிலே உன் வயசுப் பெண்க ளெல்லாம் தன் பிள்ளைகளைப் பற்றியும் குடும்பம் பற்றியும் பெருமையாகப் பேசும் போது நாம தப்பு செய்துட்டமோ என உணரத் தோன்றும்.
அதுவே ஐம்பது வயது ஆயிட்டா வாழ்க் கையே வெறுமையானதுபோல உணருவாய், அப்போது நீ நினைச்சாலும் எதையும் செய்திட முடியாத ஒர் நிலமை காணப்படும். ஆனால் இப்ப உனக்கு இன்னமும் காலம் கடந்து போக வில்லை எல்லாத்தையும் சரி செய்யக்கூடிய நிலையிலேயே இருக்கிக்கிறாய். ஒன்றை மட்டும் புரிந்துகொள்; காசிருந்தா எல்லாவற் றையும் பெற்றுவிடலாம் என்றில்ல காசால பெற்றுக்கொள்ள முடியாத விடயங்கள் எத்த னையோ இந்த பூமியில் இருக்கு அதில் ஒன்று தான் குடும்பம் என்கின்ற பந்தமும், அதனை சுற்றிய அன்பு என்கிற பிணைப்பும் அதை நீ எவ்வளவு காக் குடுத்தாலும் வாங்க முடியாது தெரியுமா? அத்தகைய உண்மையான அன்பு உனக்கு வேணுமா இல்லையா என்பதை நீயே தீர்மானித் துக்கொள் என தனது ஆதங்கத்தையொல்லாம் மலர் கொட்டித் தீர்த்த போது இருவர் மனதுக் குள் ஒர் மழை பெய்து ஒய்ந்தது போலிருந்தது. அங்கு நிலவிய நீண்ட மெளனத்தை கெளரி தான் உடைந்தாள், சரியக்கா நான் யோசிக் கிறன். ஒரிரு நாட்களில் நல்ல முடிவாக சொல் கிறன் என்று அண்ணாவிடம் சொல்லுங்கள் என்ற கெளரியின் கைகளை ஆதராமாய் பற்றினாள் மலர். TGJGff padň 2o14

Page 41
கவிதை எஸ்.பி. சித்தின் வத்தளை
 

ErguputäEmilisüsist to relating triotsui telligurgist
பொன்றுகூடி அகல்விளக்கேற்றுiெ
LLLL L TLSTC m mM TmmSTmTLT TYmaaTTaaaLaL
க்க இறைபோற்றும் அகமகிழ் கவிதைமொழி
றை வேள்விகொண்டு எள்ளுசாற்றி ஏந்துகளி DMYK TLm LmTTu TmmLmTTTmLmmLm TTTm mCmm
ப வாழ்வுநீங்க துயிலெழுப்பிய சுடரொளியே த்து துழாவிவர துணிவுபெற வேண்டும்நீயே ஹி அமைதிதேடி வளர்த்தர் பழமைவிழியே il Sairguli siileiri sisälsorsijällä.
கண்டுவரும் கயவர்செயல் கனவந்தே ம் சூலமெடுத்து துயர்நீக்க துணைத்தேட
தவித்துநிற்க தரணிதிருப் பாதாட នៅ ថ្ងៃក្រពើទៅឃើញ៉ថាត្រូព៌ា ត្រូiL
கவியகால வன்தங்கி மனம்துவங்கு
ற் புடன் வாழ தடுத்துநில் தடைவிழங்கு
L LmLL TmmTSLmT KmaLLMLLLLLL LLLLLLLLmLL mTmamT
உலகையாள நாளும்கொள் சங்கேமுழங்கு
ຂຶo14

Page 42
IDLDE/AL
Boalog Ukemm
Loea Parc specilies in mosquito net chin
Viscose mastin, T/C 65X Tic 66x36 chintz, Chalenger, Popline, Malpiece, Lance Co
Sarong, Cutton Lace, Katan 3 meter. Thread, Abaya Fiannel, Hanke chef, Pantes, factorya
IDEAAL I
Chits, Bed Jecket to Nappies, Baby Froc to Baby Blanket
Cup and Saucer an Available H # 128, 3rd Cross S.
Colombo - 1 1 , Sri L. EL: 011 233.0032 1077
பரந்த அளவிலான திருமணம், விளம்பரங்கள், பா ஒளிப்பதிவு மற்றும் புகைப்படப்பிடிப்பிற்கான தீர்வுகள் எ
We offers a wide range of Wedding cinematography, adver
T; +94772 911 184-9475712446
 
 
 
 
 
 
 

エA|ー R ● ann spoorkearv ko beUU e Galkion
zpopline, mal piece lace Cotton
35 White for School uniform
ton, Viscose, Maslin, Mosquito NetNet Fabric & Accessories, Fabric Bed Sheet Salvar Tai Coton Shirling ccessories items available. - BA-YA - 3 /
kers
dal babyteam | ere 上
treet, anka. - 2220646
டல் ஒளிப்பதிவுகள் மற்றும் குறும்திரைப்படங்கள் வரை ம்மால் வழங்கப்படும்.
TDIEin
M3 Production
isual production Solutions fրըm
tisements, music videos and short films
F: www.facebook.com/m3productionle on30gmail.com
தீபாவளி மலர் 2014

Page 43
படித்ததில் பிடித்தது
ஒரு பெண் தனது ஒரேயொரு மகனுடன் வா வந்தாள். அவளிற்கு ஒரு கண் இல்லை. தன் மற் கண்ணை வைத்துக்கொண்டு வாழ வேண்டிய நி கணவரின் இழப்பிற்கு பிற்பாடு அவளது சுவாச ஒவ்வொரு மூச்சும் தன் மகனின் எதிர்கால வ பற்றியதாகவே இருந்தது. தன்னிடம் இருந்த சொத்துக் ஒரு பகுதியை விற்று மகனை ஒரு நல்ல தர பாடசாலையில் சேர்த்தாள். மிகுதி சொத்தை தனது ம9 கல்வி தொடர்பான செலவுகளிற்கு தயார் செய்திருந்த நல்ல ஒழுக்கமிக்க மகன்; இரக்கமானவன்; புத்தி ஊரில் எல்லோரும் புகழும் வண்ணம் அவன் செயற் கள் இருந்தன. பாடசாலையில் முதல் தரத்தில் எய்துபவன் அவன். காலங்கள் உருண்டன. ஒரு மு அவன் மிகச்சிறந்த பெறுபேற்றினை ஈட்டி அந்த பிர திற்கும், அவனது பாடசாலைக்கும் பெருமை சேர்த்த இந்த செய்தியை அறிந்த உடனேயே அந்த தாய் ஆ டன் பாடசாலை நோக்கி ஓடினாள். மகனின் வகுப் எது என அறிந்து அங்கு சென்று அவனை வாரி அ6ை முத்தமிட்டாள். இறைவனை புகழ்ந்தாள். சந்தோஷத்து வீடு வந்து அவனிற்கு பிடித்தமான உணவை தய ஆரம்பித்தாள்.
மகனின் வரவை எதிர்பார்த்து வழிமேல் விழி ை
சென்றாள். ஆனால், மகன் முகத்தைத் திருப்பி கொண்ட தாயுடன் பேசவில்லை. நேராக அறைக்குள் சென்று ப விட்டான். அவளிற்கு ஒன்றும் புரியவில்லை. பதற்றத்து
毅
42 ஒளிஅரசி தீபாவ
 

ழ்ந்து றைய
ᎧᏈ0 ᎧᎧ . த்தின் ாழ்வு =Go மிக்க @floor
Th.
சாலி. }LIATG) சித்தி DഞD தேசத் #5ঠn.
1,61321 Ꮏ Ꮧ6ᏡᏰᎠ ணத்து லுடன் சரிக்க
வத்து ருகில் _Tr. டுத்து
துடன்
தாய்
ஒடிச்சென்று என்னவென்று கேட் டாள் கவலையுடன், மகன் சொன் னான், 'நீ ஏன் என் பாடசாலைக்கு வந்தாய்?" அங்கு அழகான பணக் காரர்கள் மட்டுமே வருவார்கள். நீயோ குரு டி. என் நண்பர்கள் என்னை குருடியின் மகன் என கூப்பிடுகின்றனர். இது பெரிய அவமானம் ; வெட்கம். இதன் பின்னர் நீ என் பாடசாலை பக்கமே வராதே' என கத்தினான் கோப மாக, அதிர்ந்து போனாள் தாய். ஆனாலும் மகனின் சந்தோஷம் கருதி இனி அவ்வாறு நடக்காது என சத்தியம் செய்தாள்.
இப்போது அவனது சுபாவம் மேலும் மாறுபட ஆரம்பித்தது. தன்னைத் தேடி வரும் நண்பர்கள் முன் வரவேண்டாம் என தாயை எச்சரித்தான். அவள் கண்கலங்க சரி என்றாள். பின்னர் சில நாட்கள் சென்ற பின், தனக்கு குருடியுடன் இருப்பது வெட்கம் என்றும், தான் ஹாஸ்டலில் தங்கி படிப்பதாக சொன்னான். ஒரு நாள் வீட்டை விட்டேசென்று விட்டான். அவள்

Page 44
கதறி துடித்தாள், தினமும் தன் மகனை நினைத்து. இறுதி பரீட்சையில் பாஸாகி, மருத்துவ கல்லூ தெரிவானது அவளிற்கு தெரியவந்தது. தலைந: படிக்க வேண்டும். நிறைய செலவாகும். தனது மி அனைத்து சொத்துக்களையும் விற்று மகனிற்கு வைத்தாள். 5 ஆண்டுகள் பறந்து சென்றன. இப்போ மகன் ஒரு மருத்துவன்.
அவனை பார்க்க அவள் பல முயற்ச்சிகளை மேற் எதுவும் பயனற்று போயின. ஒரு கடிதம் மகனிட வந்தது. அதில், 'அம்மா, நான் இப்போது இந்த நாட் சிறந்த வைத்தியர்களில் ஒருவன். குருடியின் மகன் 6 என்பது தெரிந்தால் எனது கொளரவம் பாதிப் ஆதலால் நான் இந்த நாட்டை விட்டும் உன் ப விட்டும் கண்காணாத தேசம் செல்கிறேன்." இது; கடிதத்தின் வரிகள். துடித்து போனாள் தாய்.
சில வருடங்கள் கடந்தன. முதுமையும், வ அவளது ஒற்றை கண்ணுமே அவளிடம் எஞ்சியிருந்: கள். பசி காரணமாக ஒரு பணக்கார வீட்டில் ஆயாவாக தினமும் வேலை செய்து வந் தாள் அந்தத் தாய். அந்த வீட் டின் எஜமானி இளவயதினள். நல்ல இளகிய குணம் படைத் தவள். இறையட்சமிக்கவள். அவளும் ஒரு வைத்தியராகவே இருந்தாள். இந்தத் தாயை தனது தாயாக நேசித்து போஷித்து வந்தாள். எல்லாம் நன்றாகவே நடந்தன.
அவளது கணவன் அமெரிக் காவில் இருந்து திரும்பி வந் தான். தனது எஜமானியின் கணவர் வருகிறார் என்பதனால் வாய்க்கு ருஷியாக நல்ல உண வுகளை தயார்படுத்தி வைத் திருந்தாள் அந்த குருட்டு தாய். வீடு வந்த அவளது கண வன், சில நாளிகைகளின் பின் னர் சாப்பிட அமர்ந்தான். உணவை ஆசையாக வாயில் அள்ளி திணித்தான். திடீரென அவன் முகம் மாறியது. கருமை அவன் முகத்தில் அப்பிக் கொண்டது. சடாரென தனது மனைவி யின் முகத்தைப் பார்த்து கேட்டான், 'இதனை நீ தான் சமைத்தாயா?" என்று. மனைவி குழப்பத்துடன் இல் லையே என்றாள். 'அப்படி யானால் யார் சமைத்தது' இது அவனது இரண்டாம் கேள்வி.
43 ஒளிஅரசி தீப
 

ரிக்கு மகன் கர் சென்று குெதமிருந்த அனுப்பி து அவளது
கொண்டும் ம் இருந்து டில் உள்ள வைத்தியன் படையும். ார்வையை தான் அந்த
றுமையும், த சொத்துக்

Page 45
படித்ததில் பிடித்தது
வீட்டு வேலைக்காரி சமைத்தாள் என்றாள் மனைவி. உடன் எழுந்த அவன் அடுப்படிக்கு சென்று எட்டி பார்த்தான். உள்ளே அவனது குருட்டு தாய்.
அதிர்ந்து போனார்கள் இருவரும். இவள் இன்னும் இங்கேயா எனும் ஆத்திரமும், வெறுப்பும் அவன் மூளையை ஆட்டுவித்தது. என் மருமகளா என் எஜமானி என்ற சந்தோஷ மும், மகிழ்ச்சியும் அந்த தாயின் இதயத்தை நிரப்பின. உணற்ச்சிகளால் இருவருமே பேசவில்லை.
மீண்டும் சாப்பாட்டு அறைக்கு வந்த வைத்தியன் சொன்னான் தன் மனைவியை பார்த்து, 'இந்த குருடியை உடனடியாக கொண்டு சென்று வேறு எங்காவது விட்டு விடு. கண்காணாத இடத்தில் கத்தினான். அவன் சத்தம் அடுப்படியில் நின்ற அந்த அபலை தாயின் இதயத்தில் முட்டி மோதி நின்றது.
துவண்டு போனாள். வாழ்க்கையை இதற்கு பிறகும் வாழ வேண்டுமா என எண்ணி அழுதாள்.
தனது கணவனின் பிடிவாதமும், கோபமும், ஆவேசமும் எல்லை மீறிச் செல்லவே, அவனது மனைவியான அந்த பெண் வைத்தியர் வேறு வழியின்றி அவளிற்கு போதுமான பணத்தினை வழங்கி பல நூறு கிலோ மீட்டர் தூரத்தில் முன்பு அவள் வாழ்ந்து வந்த இடத்திற்கே மீண்டும் அனுப்பி வைத்தாள் அழுகையுடன். காலம் மீண்டும் வேகமாக அசைந்தது. ஒரு நாள் காலை அவன் தொலைபேசிக்கு ஒரு செய்தி வந்தது. அவனது தூரத்து உறவினர் ஒருவர் பேசினார். 'உன் தாய் தள்ளாத வயதில் மரணிக்கும் தறுவாயில் இருக்கிறாள்' என்பதே அந்தச் செய்தி. உடனடியாகவே அவன் தனது காரில் கிளம்பி தாயிருக்கும் இடத்திற்கு சென்றான். அவன் சென்ற போது, அவளது உயிர் பிரிந்துவிட்டது. இப்போது 'அம்மா” என கதறினான்; கண்ணிர் விட்டான்.
இப்போது ஒரு கடிதத்தை அவனது உறவுக்காரர் கொடுத்தார். தான் மறைந்த பின்னர், மகன் வருவானாக இருந்தால் மட்டும் கொடுக்குமாறும், இல்லையெனில் எரித்து விடுமாறும் தாயார் கடைசி தருவாயில் வேண்டிக்கொண்டதாகவும் அவர் சொன்னார். பிரித்து வாசித்தான். அவன் கண்களில் இருந்த வழிந்த கண்ணிர் அந்த பாலைவெளியையே சகதியாக மாற்றியது.
அதில் இருந்த வரிகள் இதுதான்.
44 ஒளிஅரசி தீ

'அன்பின் மகனே!.
எனக்கு தெரியும், என் உருவத்தை பார்ப்பது உனக்கு ஒரு போதும் பிடிக்காது என்று. அதனாலேயே, எனது மரணத்திற்கு பின்னர் நீ வந்தால் மட்டும் இதனை கொடுக் கும்படி சொன்னேன்.
மற்றபடி எனது அன்பு என்றும் மாறாதது. அது இறைவனிற்கு மட்டுமே தெரிந்த விஷயம். மகனே நான் குருடிதான். உனக்கு குருடி தாய் இருந்திருக்கக் கூடாதுதான். எனக்கு உன் உள்ளம் புரிகிறது.
உனது உள்ளத்து உணர்வுகளை நான் பெரிதுமே மதிக்கின்றேன். நான் உன்னை சபித்தது கிடையாது. ஏன் கோபப்பட்டது கூட கிடையாது. எனக்கு ஒரு வாழ்க்கை வேண்டும் என்றிருந்தால் நான் இன்னொரு திருமணம் முடித்து நன்றாக வாழ்ந்திருப்பேன். உனக்கா கவே நான் வாழ்ந்தேன். அதை நீ புரிந்து கொள்ளாமல் போய் விட்டாய்!
மகனே உனக்கு தெரியுமா? நான் ஏன் குருடியானேன் என்று! அப்போது உனக்கு சின்ன வயது. பாதையில் நின்று நீ விளை யாடிக்கொண்டிருந்தாய். ஏதோ ஒரு பொருள் உன் கண்களில் பட்டு உன் ஒரு கண் குருடாகி விட்டது. வைத்தியர்கள் இன்னொரு வெண் படலம் இருந்தால் மட்டுமே உன் பார் வையை மீண்டும் கிடைக்க வைக்கலாம் என்றனர். என்ன செய்வதென்று தெரிய வில்லை. நேரமும் போதாது.
அதனால்.
என் ஒரு கண்ணை உடனடியகாவே தானம் செய்து உனக்கு பார்வை கிடைக்கச் செய்தேன். எனது கண்மணியே இன்று உன் கண்களாக இருக்கிறது. நீ இந்த உலகத்தை, வாழ்க் கையை பார்ப்பதும் அந்த கண்களாளேயே!.
உனக்கு இதுவும் அவமானம் என்றால் உனது வலது கண்ணை பிடுங்கி எறிந்து விடு. ஏனென்றால், அது ஒர் குருடியின் கண்ணல் லாவா? இல்லை மனமிருந்தால் அப்படியே விட்டு விடு. அந்த கண்களால் நான் உன்னை பார்த்துக் கொண்டிருப்பேன்."
இப்படிக்கு,
என்றுமே அன்புள்ள,
உன் குருட்டு அம்மா. 觀

Page 46
" வாசகர் கருத்து
முறைக்கு வல்
அண்மையில் வாரிய பொல பி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தி இந்த ஆடை உங்களுக்கு பொருந்த வர்ணித்த ஆணின் கன்னத்தில் அறை இந்த விடயம் சமூக வலைத்தள எல்லோரின் கவனத்தையும் ஈர்த்திரு. பெண் நடந்துகொண்ட விதம் பற் கருத்துக்களை தெரிவித்துவரும் நிை அப்பெண் நடந்துகொண்ட விதப் ஆனோர் அப்பெண் நடந்து கொன ஆனோர் அப்பெண் நடந்து கொன தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது கருத்துக்களை உங்களுக்காக தருகில்
ா பிழை
இன்றைய அரசியல் பொருளாதார நிலையில் பெண்களுக்கெதிரான வன்முறை பாதுகாப்பின்மைகள் அதிகரித்துச் செல்வ இந்தப் பெண் முன்மாதிரியாக துணிந்து இவ் நடந்துகொண்டமை பாராட்டத்தக்கது. அத்து அப்பெண்ணை இவ்வாறு செய்யுமளவுக்கு ஆண் சொற்பிரயோகங்களைப் பயன்ப உள்ளமை குறிப்பிடத்தக்கது.
என்.கே.வேணி - பலாங்கொ
og
45 ஒளிஅரசி
 
 
 

ரதேசத்தில் நடந்தவொரு சம்பவம் ருந்தது. தன் ஆடையைப் பற்றி "மிஸ் வில்லை, நல்லாவே இல்லை. என்று ந்து அவரை தாக்கியிருந்தார் ஒரு யுவதி. வ்களின் ஊடாக மிக வேகமாக பரவி ந்தது. இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட றி பல்வோறு தரப்பினரும் பல்வேறு லையில், ஒளிஅரசி தனது வாசகிகளிடம் ம் பற்றி கருத்துக் கேட்டபோது 56% ண்ட முறை தவறானது என்றும் 44% ண்டவிதம் சரியானது என்றும் கருத்து து. அவர்களில் ஒருசிலர் தெரிவித்த
ன்றோம்.
கோபத்தால் எடுக்கின்ற ஒரு சில முடிவுகள் எம்மை படு பாதாளத்துக்குள் தள்ளிவிடும். ஆத்திரத்தில் மனிதன் அறிவை இழப்பதுண்டு. அந்தப் பெண் சற்று யோசித்து வார்த்தைகளால் திட்டியிருக்கலாம்; அல்லது அக் கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் நடந்ததைக் கூறியிருக்கலாம். அதைவிடுத்து அவள் பொது இடத்தில் அந்த இளைஞனைத் தாக்கியது ஏற்றுக்கொள்ளமுடி
யாத செயல். இதனால் வரும் பின் சூழ் விளைவுகளை அவள் எண்ண கள், வில்லை. இன்று எவ்வளவோ தால் பிரச்சினைகளை பத்திரிகை வாயி 6) յոր}} லாகவும், தொலைக்காட்சி மூல டன், மாகவும் நாம் பார்த்துக்கொண்டி அந்த ருக்கின்றோம்.
த்ெதி | நிர்மலாதேவி ஆசிரியர்.
ୱିଣ୍ଟୁଷ୍ଟି
தீபாவளி மலர் 2014

Page 47
துஷ்பிரயோகமான வார்த்தைகள் பிரயோகித்திருந்தால் அந்தப் பெண் செய்தது சரி. ஆனால், சாதாரணமாக ஜொல்லு விட்டிருந்தால் அப்பெண் நடந் தது சரியெனக் கூறமுடியாது. ஆனால், பத்திரிகைகள் குறித்த ஆண் பயன்படுத் திய சொற்பிரயோகங்களைத் தெரிவிக் காமை குறைபாடேயாகும்.
சேபிறேமினி - கல்முனை.
ទាំងៀ ឆ្នាg - ខ្លាំ தைத் நாம் கையில் எடுப்பது தவறு. அதே வேளை, மக்கள் நடமாட்டம் கூடிய அந்த இடமானதால் அந்தப் பிரச்சினை சுமுகமா னது. இதே யாருமற்ற ஒரு மக்கள் நடமாட் டம் இல்லாத இடமாக இருந்து அந்த இளைஞன் கோபத்தால் ஏதும் விபரீதமாக நடந்திருந்தால் என்னவாகியிருக்கும் அந்த ៣ឆ្នាគ្រឿង ព្រឹយាលឆាយ ឫទាំ១pួលគេ சிறுவர்கள் பெண்களுக்கு துஷ்பிரயோகம் மற்றும் கொலைகள் அதிகரித்துள்ளன.
கெளசல்யா மேகம் - வைத்தியர்.
நிச்சயமாக இச்செயலை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம், ஒரு பெண் ணாகப் பிறந்தவள் பொறுமைக்கு இலக் கானவளாகத்தான் இருக்க வேண்டும். தவிர, இவ்வாறு கொலைவெறித்தனத் துடன் இருப்பது அழகல்ல. அதேசமயம், இருவேறுபட்ட கருத்துகள் உள்ளன. தற் போது நாட்டில் நிலவுகின்ற பிரச்சினைகள் மத்தியில் ஒர் இளம் யுவதி இவ்வாறு நடந்துகொண்ட விதம் இப்பெண்ணின் எதிர்கால பாதுகாப்பைப் பற்றி கொஞ்சம் சிந்திக்கவேண்டியுள்ளது.
டி.ஆர்.ருத்ராதேவி, பிரபல தொழில் வர்த்தகர்.
ஒரு பெண் அதாவது, அந்த யுவதி தன் பாதுகாப்புக் கருதி அந்த இளைஞனைத் தாக் கிய விதம் சரி என நான் கருதுகின்றேன். கார ம்ை இப்போது எங்கு பார்த்தாலும் பெண் கள்துஷ்பிரயோகம் கொலை கொள்ளை என நாளுக்குநாள் கூடிக்கொண்டே போகின்றது. எனவே, பெண்கள் இவ்வாறு எதிர்த்து நின்று ஆணுக்குப் பெண்நிகர் என்று இருப்பார்களா யிள் ஆண்கள் கொஞ்சம் விலகி நிற்பார்கள்
அருட் சகோதரி.
46 ஒளிஅரசி தீபா

பெண்களை வார்த்தைகளால் துஷ் பிரயோகங்களுக்குள்ளாக்கும் ஆண்களை தாக்குவதற்கு பெண்களுக்கு எந்தவொரு உரிமையும் இல்லை. பொது இடங்களில் இத்தைய தாக்குதல்கள் என்பது நாகரீக மற்ற செயல்களாகும். அதிலும் பெண்கள் பொது இடங்களில் இவ்வாறு நடந்து கொள்வது என்பது பெண்மைக்கே கலங் கம் ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகவே கருத வேண்டும். பெண்கள் தங்களை எந்த வொரு துஷ்பிரயோகத்திற்கும் உள்ளாக் கப்படாதவாறு தங்களை தாங்களே தயார்ப் படுத்தி வைத்திருக்க வேண்டும். எந்த வொரு மனிதனும் தன்னை மற்றவ னுடைய பார்வையில் எவ்வாறு விழிக்கச் செய்ய வேண்டும் என்ற கடப்பாடு அவனையே சார்ந்ததாகும்.
டீன் நூர் நாகூர் கனி, அதிபர்
துஷ்பிரயோகங்கள் பலவாறாக மலிந்து விட்ட தற்போதைய சூழலில் நடந்து விட்ட இச்செயல் சரியானதே என்னும் கூற்றை பலபேரிடம் தோற்றுவித்தாலும் உண்மையில் ஒரு பெண் அவ்விதம் நடந்து கொள்வது என்பது பெண் சமூகத்துக்கு இழுக்கான செயலே. ஒரு ஆணின் வார்த் தைத் துஷ்பிரயோகம், கோபமடையச் செய்யும். எனினும், அதற்காக அடிப்பது என்பது அப்பெண்ணின் பொறுமைக்குறை வையே சுட்டிக் காட்டுகின்றது. ஒருவேளை அந்த ஆண் திருப்பி அடித்திருந்தால் நிலைமை மோசமாக மாறியிருக்கும்.
கோபிகை, தருமபுரம்.
எனது பார்வையில் பஸ் நிலையத்தில் பெண்ணை சீண்டும் அளவுக்கு வார்த்தைப் பிரயோகம் செய்தமை தவறாகும். அதற்கு அப் பெண்அவசரமாக அந்த ஆணைபொது இடத்தில் தாக்கியமை பெரும் குற்றமாகும். அச்சம். மடம், நாணம், பயிர்ப்பு என்ற நாற்குணங் கள் அமைந்த பெண் பொறுமையைக் கையாண்டிருக்கவேண்டும். அந்த ஆண் பொலிஸாரிடம் முறையிட்டமை போல் இவரும் முறையிட்டிருக்கலாம். சட்டத்தைக் கையில் எடுக்க முற்படக்கூடாது.
ந. சிவரஞ்சினி, அல்வாய்.

Page 48
உலகில் நீங்கள் ஒர் வெற்றியாளரா நிகழவேண்டுமாயின் மற்றவர்களை வசப்படு தும் கலையை கற்றிருத்தல் அவசியமாகிறது.
ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒ பெண் இருக்கிறள் என்பதன் உண்மையா அர்த்தம் ஓர் பெண்ணினர்ல் வசப்படுத்தப்பட் ஆணே ஓர் வெற்றியாளனாக வருகிறான் எ பதே ஆகும். ஒர் ஆணை வசப்படுத்தி வெற். யாளனாக்குவதற்கு என்னென்ன வழிமுறைக உள்ளன என்பது பற்றி பார்ப்போம்.
ஆண் என்பவனுக்கும் பெண் என்பவளு கும் இருக்கும் ஒரே வித்தியாசம் அவனுக் "டெஸ்டோஸ்டீரோன்' என்கிற சுரப் அதிகமாக சுரக்கப்படுகிறது பெண்ணுக்கு அ மிக சொற்பமாகவே சுரக்கப்படுகிறது.
குழந்தை பிராயத்தில் இந்த டெஸ்டோ டீரோன் உற்பத்தி ஆவதில்லை. அதனால்தா ஆண் குழந்தைகளின் உடல் தோற்றமுட குரலும், தோலும், பெண்ணை போலே இருக்கின்றன. ஆனால், இந்த பையன் வயதிற் வரப்போகும் காலம் நெருங்க நெருங்க அவனுள் டெஸ்டோஸ்டீரானை மிக அதி அளவில் சுரக்க ஆரம்பிக்கின்றன. இதனா அவனுள் ஆண்மைபடுத்தும் படலம் அமுலி கிறது. இனப் பெருக்க உறுப்புக்களின் வளர்ச்
47 ஒளிஅ
 

ரோம வளர்ச்சி, குரல் மாறுதல், எலும்புகள் நீளுதல், தசைகள் புடைத்தல் என்று இந்த டெஸ்டோஸ்டீரோன் கலந்த உடன் அந்த
பையனின் உடலில் பல மாற்றங்கள் உருவாகு வதை நம்மால் வெறும் கண்ணாலேயே பார்க்க முடியும்.
ஆனால், அவன் வயதிற்கு வந்தபின், நம் கண்ணுக்கு தெரியாமல் அவன் மூளையில் வேறு சில மாற்றங்களும் ஏற்பட்டுக்கொண்டு இருக்கும். எதிர் பாலினத்தின் மீது ஈர்ப்பு, காமம் சார்ந்த சிந்தனை, எந்த விஷயத்திலும் தீவிர கவனம், இதெல்லாம் போக அவனுக்கு திடீரென்று ஆதிக்க மனப்பான்மையும் தோன்றிவிடும். எங்கு சென்றாலும் தான் முதன்மை இடத்தை பிடித்துவிட வேண்டும், எல்லோரையும் விட முந்திக்கொண்டு ஜெயிக்க வேண்டும் என்கிற வெறி அவனுக்கு தோன்ற ஆரம்பிக்கும். அதனால் வயதிற்கு வந்தவுடன் ஆண் குழந்தைகள் தங்கள் தகப்பனோடே சண்டை போடுவார்கள், தாயிடம் எதிர்த்து பேசுவார்கள், எல்லோர் எதிரிலும் தங்கள் வீர தீர பராக்கிரமங்களை காட்டிக்கொள்ள முயல் வார்கள்.
ஏன் இப்படி? என்றால் இயற்கை வல்லமையே வெல்லும், என்கிற ஒரு விதியை வைத்திருப் பதால், தான் மிகவும் வலிமையானவன் என்று
ரசி தீபாவளி மலர் 2014

Page 49
காட்டிக்கொண்டால் தான் அந்த ஆணை பி அப்போது தான் பெண் பாலினம் அவை மரபணுக்களை பரப்பிக்கொள்ள ஒரு வ இதனால்தான் இயற்கை எல்லா உயிரினத்தி மட்டும் இந்த அதிக்க குணத்தை டெஸ்டோஸ் தூண்டுகிறது.
ஆணின் உடலிலோ, ஒரு நாளின் 24 டெஸ்டோஸ்டிரோன் மேலும் கீழுமாய் அலைபாய்ந்துக் கொண்டே இருக்கும். எ இருக்கும் என்பதை முன்னறியவே முடியாது.
ஏன் அப்படி என்று தானே கேட்கிறீர்கள். கா டீரோனின் அளவு ஆணின் மனநிலையை பெ அவன் தன்னை ஒரு வெற்றியாளனாக, வீரன் எண்ணிக்கொண்டால் உடனே அவனுடைய டோஸ்டீரான் அளவு கூடிவிடுகிறது. இதுவே ஏமார்ந்தவனாகவோ, கோழையாகவே நிை சடாரென டெஸ்டோஸ்டீரான் அளவு சரிந்துவி ஒரு மனிதனின் டெஸ்டோஸ்டீரோன் அளவு போது, அவன் சந்தோஷமாய் இருக்கிறான். விடா முயற்சியும் சாதிக்க வேண் டும் என்கிற வைராக்கியமும் அப்
போது அவனிடம் அதிகமாக இருக் டெஸ் கும். ஆனால், அதே ஆணின் டெஸ் மேல் டோஸ் டீரான் அளவு குறைந்து போய்விட்டால் அவன் சோகமா டெஸ் கிவிடுகிறான். தேவையற்ற எரிச்சல், பெண் ஆத்திரம், பொறுமையின்மை, சுய இ பரிதாபம், தோல்வி மனப்பான்மை, G 6. கோழைத்தனம் எல்லாம் சேர்ந்து தான் அவனை ஆட்டி படைக்க ஆரம்பிக் நிலை கின்றன. இதனால் அவன் அதிக அதிக நோய்களுக்கு ஆளாகிறான். உடலா றான லும் மனதாலும் பெருத்த சங்கடத் List it
திற்கு உள்ளாகிறான். அதற்கு வெளி மேல் போட்டி இட்டு ஜெயிக்கும் திராணியை அவன் இழந்துவிடுவ தால் அவனால் வாழ்க்கையில் <。 ஜெயிக்க முடியாமல் போகலாம்.
e9Ꭵ ᎶiᎢ6
இதுதான் ஹீரே
டீரானின் தன்மை என்றால், யாரு
இப்போது சொல்லுங்கள், உங்கள் 6#9يس(.J66
ஆணின் டெஸ்டோஸ்டீரோன் G
2.L.
அதிகமாய் இருந்தால் உங்களுக்கு இன்
லாபமா, அல்லது குறைவாய் பெறு இருந்தால் உங்களுக்கு லாபமா? 9ئي
அவனுக்கு டெஸ்டோஸ்டீ அண் ரோன் அதிகமாய் இருந்தால் அவன் என்று
சுலபமாய் அதிகமாய் சாதிப்பான். இவ அவன் சாதனைகளின் மேல் நீங்கள் இலவச சவாரி செய்து சொகுசாய் வாழலாம். ஆனால், அவனுக்கு
48 ஒளிஅர
G3 It
E罗马

றர் கவனிப்பார்கள். ன தேர்ந்தெடுத்து, அவன் தான் ாய்ப்பைத் தரும்.
லும் ஆண்பாலுக்கு உயர்ந்தவன்,
டீரோனின் மூலமாக வெற்blurఇrgir । மணி நேரத்திற்குள் வீரன் என்று
நிலை இல்லாமல்
ப்போது எவ்வளவு அவன் நினைத்
ரணம், டெஸ்டோஸ் தாலே போதும், ாருத்தே இருக்கிறது. அவன் டெஸ் ாாக, உயர்ந்தவனாக 藻 --- இரத்தத்தில் டெஸ் I டோஸ்டீரான் அவன் தன்னை ஒரு
அதிகமாகி
னத்தாலும் போச்சு,
விடுமே.
(6)ւb.
அதிகமாய் இருக்கும் தன்னம்பிக்கையும்,
டோஸ்டீரான் குறைந்து போனால் அவனால் அதற்கு சாதிக்க முடியாது, அவனால் அவன் மனைவிக்கு ய பயன்பாடு இருக்காது. ஆக ஆணின் ஸ்டோஸ்டீரோன் அதிகமாய் இருந்தால் தான் எகளுக்கும், சமுதாயத்திற்கும் லாபம்! ந்த டெஸ்டோஸ் டிரானை எப்படி அதிகமாக்கி வது என்று தானே யோசிக்கிறீர்கள்? சிம்பிள், அவன் உயர்ந்தவன், வெற்றியாளன், வீரன் என்று அவன் னத்தாலே போதும், அவன் டெஸ்டோஸ்டீரான் மாகி விடுமே. வெளி உலகில் அவன் நிஜமாக ஜெயிக்கி தோற்கிறானா என்பதெல்லாம் பெண்களின் கட்டுப் டில் இருக்கும் விஷயமே அல்ல. அதனால் அவன் ரியே இருக்கும்போது அவன் டெஸ்டோஸ்டீரான் வை பெண்களால் கட்டுபடுத்த முடியாது. பூனால், வீடு என்கிற தனி சாம்ராஜ்ஜியத்திற்குள் அவன் விட்டால், அதன் பின் அவன் டெஸ்டோஸ்டீரானின் வை நிர்ணயிப்பதே பெண் தான். அவனை, பெரிய ா மாதிரி நடத்தி, உன்னை மாதிரி ஒரு வெற்றியாளன் மே இல்லையடா என்று நம்பவைத்தாலே போதும், ன் டெஸ்டோஸ்டீரான் அளவு வானளவுக்கு பாயும், iன சந்தோஷமும், உற்சாகமும் பீறிட்டு விட, அவன் னும் இன்னும் அதிகமாய் சாதிக்கும் ஆர்வத்தை வான். |தை விட்டு விட்டு, என் அப்பா மாதிரி வருமா? என் ணன் மாதிரி வருமா? எதிர்வீட்டுகாரன் மாதிரி வருமா, அவன் எதிரில் வேற்று ஆண்களை நீங்கள் பாராட்டி, னை மட்டம் தட்டிவிட்டீர்கள் என்று வையுங்கள் ச்சு, அவன் டெஸ்டோஸ்டீரான் அந்தர்பல் டி துவிடும், அவன் ஆக்ரோஷத்துடன் உங்களை அடிக்க
சி தீபாவளி மலர் 2014

Page 50
கட்டுரை இடாக்டர் என் ஷாலினி கிளம்பிவிடுவான், அல்லது வேண்டாத பழக்க தன்னை அழித்துக்கொள்ள கிளம்பிவிடுவான்
அதனால் ஆண்களை வசப்படுத்த வி நண்பிகளே, அவனை எப்போதுமே பாராட் உன்னால் முடியும், நீ சாதிக்கவே பிறந்த நினைத்தால் முடியாததா என்றெல்லாம் அ கொம்பு சீவி விடுங்கள் பிறகு பாருங்கள் எவ்வளவு சாதிக்கிறான் என்று!
உதாரணத்திற்கு சக்ரவர்த்தி திருமகன் ர எடுத்துக்கொள்ளுங்களேன். அவன் மனைவி ராவணன் கடத்திக்கொண்டு போய் அசோக வ சிறைவைத்தபோது, அவளைத் தேடி போய் பிடித்த அனுமான், என் தோளில் ஏறிக்கொ நான் இப்போதுமே உம்மை காப்பாற்றிக்ெ செல்வேன் என்று சொன்னான். அப்போது சீ நல்ல யோசணையாக இருக்கே, என்று உடனே தோளில் ஏறிவிட்டாளா என்ன? இல்லையே நினைத்தால் எப்போதோ இங்கிருந்து போயிருப்பேன், ஆனால் அது ராமனின் வீ கலங்கமாகிவிடும். அவர் மாவீரர், அவரால்
49 ஒளிஅர
 

ங்களால்
ரும்பும் டுங்கள். வன்,
வனுக்கு
அவன்
[Ꭲ1fᏍ ᎧᎼᎠ ᎧᎼᎢ
சீதாவை
கண்டு ண்டால் காண்டு mg, 'g f 916) 1607 1, நான் தப்பி த்திற்கு 2,5П55)
ஏதும் இருக்கிறதா? அவர் வந்து என்னை மீட்பார் என்கிற நம்பிக்கை எனக்கிருக் கிறது. போய் அவரிடம் இதை சொல்" என்றாள். இத்தனைக்கும் ராமன் காட்டில் சாப்பாட்டிற்கே கஸ்டப்பட்டும் கொண்டு, ஒரு குரங்கு கூட்டத்துடன் சுற்றிக்கொண்டு இருந்தான். அவனுக்கே இவ்வளவு ஊக்கம் தந்தாள் சீதை.
ராவணனோ பெரிய பராக்கிரமசாலி, ஏழு லோகத்தையும் வென்ற ஜித்தன் ஆனால், அவனை அவன் மனைவி மண் டோதரி, 'வேண்டாம், போருக்கெல்லாம் போய் நேரத்தை வினக்க வேண்டாம். ராமன் உன்னை விட பலசாலி” என்று ராமனோடு அவனை ஒப்பிட்டு மட்டம் தட்டினாள். இதனால் ராவணனின் டெஸ்டோஸ் டிரான் அளவு என்ன ஆகியிருக்கும்? சந்தேகமே இல்லாமல் சுரத்தல் குறைந்திருக்கும். விளைவு, எவ்வளவோ சக்திவாயந்தவனாக இருந் தும் இராவணன் தோற்று போனான்.
சரியான சாப்பாடு இல்லாமல், குரங்குகளின் உதவியோடு போரிட் டாலும் இராமனே ஜெயித்தான். கார ணம், அவன் மனைவி அவனை தூக்கி வைத்து பேசியதால் அவன் டெஸ்டோஸ் டீரோன் அளவு அதிகமாக இருந்தது. அதனால் அவனால் ஜெயிக்க முடிந்தது. இதெல்லாம் புராணகதையாக இருந்தா லும், இதில் இருக்கும் அறிவியல் துணுக்கு இதுதான்; பெண்ணின் பாராட் டுக்கு ரொம்பவே அதிக பவர் உண்டு. நீங்கள் உங்கள் கணவன்/காதலன்/ மகன்/சகா/நண்பன்/ஊழியனை ஒரு முறை பாராட்டிப்பாருங்களேன். அவன் பெரிய பெரிய சாதனைகளை சுலபமாக புரிவான். இதற்கு நேர்மாறாய், அவனை மட்டம் தட்டி, உதாசீனப்படுத்தி, உன்னால் பிரியோசனமில்லை என்று இழிவு படுத்தி பாருங்கள். இந்த காயம் அவனை தோற்கடித்துவிடும்.
விரும்பும் அன்பு நண்பிகளே. உங்கள் ஆணை ஹீரோ மாதிரிநடத்துங்கள், அவன் மென்மேலும் ஜெயித்துக் கொண்டே போவான். ஸிரோ மாதிரி நடத்தினீர்கள் என்றால் அவனுடன் சேர்ந்து நீங்களும் தோற்றுப்போவீர்கள்.
சி தீபாவளி மலர் 2014

Page 51


Page 52


Page 53
'கம் இன்.' வெள்ளுடுப்பில் சுத்தமான பேரர், தள்ளு வண்டியோடு உள்ளே வந்தார். தள்ளு வண்டியில் செல்பில் செந்நிற திரவம் அசையும் பாட்டில்கள். புனல் வடிவ டம்ளர்கள். ஐஸ் கியூப்ஸ் நிரம்பின பிளாஸ்க் சோடா பாட்டில் கள். பீங்கான் தட்டுகளில் பிங்கர் சிப்ஸ், வாட்டர் ஜக். பேரர் டம்ளர்களில் ஊற்ற நான்குபேரும் விஸ்கியை கொஞ்சம் கொஞ் சமாக வயிற்றுக்கு வார்க்க ஆயத்தப்பட்டார்கள்.
பிரணவ் கேட்டார். ' மார்த்தாண்டம் காட்ரோட்டில் காரோட்டி உங்களுக்குப் பழக்கம் உண்டா?
'பழக்கம் உண்டு. ஏன் கேட்கிறீர்கள்?" 'சென்டோசாவில் கார்ட் ரோடுகளைச் சந்திக்கவேண்டியிருக்கும். ஹேர்பின் வளைவுகள். நூலிளை தவறினாலும் அதலபாதாளத்துக்குப் போய்விடுவீர்கள்."
மார்த்தாண்டம் சிரித்தார். ' இந்தியாவில் பயங்கரமான கார்ட் ரோட்களில் காரை ஒட்டி ஒட்டி எனக்கு நிறைய அனுபவம் உள்ளது பிரணவ், பயப்படாதீர்கள். உங்கள் முழுக்காருக்கும் நான் உத்தரவாதம்.”
பிரணவ் புன்னகைத்தார். ' என் காரைப்பற்றி எனக்குக் கவலை யில்லை. நீங்கள் விபத்தில் சிக்காமல் வர வேண்டும் என்பதுதான் என் கவலை."
52 | ஒளிஅரசி தீ
 

சொல்லிக்கொண்டே கோர்ட பார்க்கட்டில் இருந்து கார்ச் சாவியை எடுத்து மார்த்தாண்டத் திடம் கொடுத்த பிரணவ், ரப்பர் தோட்டத் தைப்பற்றி மறுபடியும் பேசிவிட்டு நகர்ந்தார்.
காலை பதினொரு மணி.
மழை இலேசாய் தூறிக்கொண்டிருக்க சென்டோசா பாதையில் மாரிஸ் கார் வீறிட்டுக்கொண்டிருந்தது. மார்த்தாண்டம் காரை விரட்டினார். கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் கொங்கிரீட்ரோடும் ரோட்டின் இரண்டு பக்கமும் அடர்த்தியாய் வளர்ந்திருந்த கோரைப்புற்களும் கண்ணுக்குச் சிக்கின. குளிர் காற்று ஊசிமுனைகளாய் மாறி இருந்தது.
புவனேஷ் கேட்டான்.
அப்படியென்ன அட்ராக்ஷன்?
மார்த்தாண்டம் ஒரு வளைவில் திரும்பிக் கொண்டே சொன்னார். "பணத்தை எக்கச்சக்க மாய் வைச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னு தெரியாமல் முழிச்சிட்டிருக்கிற பணக்காரங்க எல்லோருமே சென்டோஸோவில் இருப் பாங்க. "உர்ராங் உடான் குரங்குகளோடு உட் கார்ந்து ப்ரேக்பாஸ்ட் சாப்பிடுவாங்க. லஞ்ச் சாப்பிடுவாங்க. கலைடாஸ் கோப்பிக் கலர்லே மியூஸிக்கல் பவுண்டனை வேடிக்கை பார்ப் பாங்க. மானோ ரயில்லே சுத்து வாங்க. வோர்ல்ட் ட்ரேட் சென்டர்க்குப் போய் திங்சை

Page 54
பேர்ச்சஸ் பண்ணுவாங்க."
பேச்சு திசை திரும்பியது. 'பிரணவ் மனசுவைத்து இந்தப் புதுக்காரை இரவல் கொடுத்தி ருக்கிறார். இந்தியாவில் யாருக்கும் இந்தத் தாராள மனசு வராது.”
"சிங்கப்பூர் ஜனங்களுக்கு கார் ஒரு பொருட்டே கிடையாது. தெரிந்த நண்பர்களுக்குக் காரைக் கொடுத்து உதவுவதை சந்தோஷமா நினைப்பாங்க."
திடீரென்று காரின் வேகம் குறைந்தது.
'ஏம்பா. ஸ்பீட்டைக் குறைச் சிட்டீங்க???
கண்ணாடி வழியே கையைக் காட்டினார் மார்த்தாண்டம், புவ னேஷ சம் யோகேஷ சம் குனிந்து @gr@TLT=6.
drive slowly.
மார்த்தாண்டம் சொன்னார். 'பிரணவ் சொன்ன காட்ரோடு இனிமேத்தான் ஆரம்பம். ரெண்டா வது கிலோ மீற்றரிலிருந்து இயற் கைக் காட்சிகள் ஆரம்பமாகிடும். சிங்கப்பூரிலேயே அழகு கொட்டிக் கிடக்கிற இடங்கள் இனிமேல் தான் வரும். எங்கே பார்த்தாலும் கிராஸ் லேண்ட்ஸ்தான்."
கார் வளைவுகளில் ஏறியது. மூன்றாவது வளைவைக் கடந் திருந்தபோது
“பீங்க். க். க்...”*
காருக்குப் பின்னால் நீளமான ஹார்ன் சத்தம் கேட்டது.
மார்த்தாண்டம் ரியர்வ்யூ கண் ணாடியில் பார்த்தார். ஒரு நீல நிறக்கார். தலைதெறிக்க வேகத்தில் வந்துகொண்டிருந்தது. மூர்க்கமான வேகம்.
'என்ன இவ்வளவு வேகமாக வர்றான்?' எரிச்சலாய்த் திட்டிக்
கொண்டே தன்னுடைய காரை ஒரம்கட்டினார் மார்த்தாண்டம். வேகத்தைக் குறைத்தபோது நொடிக்கும் குறைவான நேரத்தில் ஒரு தீற்றல் மாதிரி நீலநிறக்கார்
விருட்டெ குனிந்து ட
காரை ஒட்
s &
ஒடு ஒட்டறாள
அந்த ஏறிக்கொன் அதிகப்படு 'அப்ட கத்தினான் 'அவன் பண்ணிக் ஆக்ஸிலே காரின் அந்த நீல கொண்டே
"அப்ப மோசமா காணோம்
யோே
' (6) Πι
மார்த்த
கண்ண
முன்ன G3g mr L " G3L ஆக்ரோவி கொண்டு( உருண்டது LD fTfigğ5; தன்னிச்.ை நின்றது.
புவனே பக்கமும் இறங்கி ெ மார்த்தாண் மூன்று அருகே வ
அந்த பிசகாய் பு ருந்தது. துடித்துக்ெ
மார்த்த “(3լ մյ
'அந்த
(6) PT Di iT.
53 ஒளிஅரசி தீப

ன்று அவர்களைக் கடந்து போயிற்று. யோகேஷ் பார்த்துச் சொன்னான். 'அப்பா ஒரு பொண்ணு
டிக்கிட்டுப் போறா,'
பொட்டச்சி இவ்வளவு வேகமாக கார் ா? சரியான தைரியம்தான்." நீலநிறக்கார் 'விர்விர்’ என்று வளைவுகளில் ண்டு இருக்க, மார்த்தாண்டமும் காரின் வேகத்தை த்ெதினார். ா! நீங்க மெதுவாகவே போங்க' புவனேஷ்
ளை விடக்கூடாது. ஒரு தடவையாவது ஒவர்டேக் காட்டணும். மார்த்தாண்டம் கியரை மாற்றி பட்டரை அழுத்தினார்.
வேகம் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரித்தது. நிறக்கார் முன்புறக் கண்ணாடியில் நெருங்கிக் - வந்தது. ா வேண்டாம். ஹேர்பின் பெண்ட்ஸ் ரொம்பவும் இருக்கு, தடுப்புச்சுவர் வேற சில இடங்களிலே
கஷ் சொல்லிக்கொண்டிருக்கும்போதே ம்' என்று ஏதோ சத்தம். ாண்டம் நிமிர்ந்தார். ாடி வழியே அந்தக் காட்சி தெரிந்தது. ால் போய்க்கொண்டிருந்த அந்த நீலநிறக் கார் ாரமாய் நின்றிருந்த ஒரு பாறையின் மேல் 4 மாய் மோதி, பக்கவாட்டில் தேய்த்துக் போய் பக்கத்துப்பள்ளத்தில் யோசித்து யோசித்து . அந்தப் பெண்ணின் அலறல் தீனமாய் கேட்டது. தாண்டம் தன்னுடைய காரின் பிரேக்கைத் சயாக அழுத்த அது ரோட்டோரமாய்க் கிரீச்சிட்டு
ாஷ சம், யோகேஷ சம் காரின் கதவுகளை இரண்டு விருட் விருட்டென்று திறந்துகொண்டு கீழே விபத்து நடந்த இடத்தை நோக்கி ஓடினார்கள். எடமும் மகன்களைத் தொடர்ந்து ஓடினார்.
பேரும் மலைப்பாதையின் சுற்றுச்சுவருக்கு ந்து எட்டிப் பார்த்தார்கள். நீலக்கார் ஒரு மரத்தின் அடித்தண்டில் எசகு ாட்டிக்கொண்டு - சிரசாசனம் செய்துகொண்டி அந்தப் பெண் டிரைவிங் சீட்டில் ரத்தமாய்த் கொண்டிருந்தாள். கஷ் சுற்றுச் சுவரின்மேல் தாவி ஏறினான். ாண்டம் கத்தினார்.
யோகேஷ். என்ன பண்ணப் போறே ??
ப் பெண்ணுக்கு உயிர் இருக்கு. காப்பாத்திட
(தொடரும்)
Tவளி மலர் 2014

Page 55
இலக்கியம் இ இளநகை
கர்னனா? கும்
இலக்கியத்தில் சில சர்ச்சைகள் என்றுமே தீர்க்கப்பட முடியாதவை யாகவும் காலம் காலமாய் விவாதிக்கப் பட்டு வருமளவிற்கு சொற்சுவை பொருட்சுவை நிறைந்தவையாகவும் அமைந்து விடுகின்றன. உதாரணமாக கம்பராமயணத்திலே வருகின்ற வாலி வதைப்படலாம். எத்துனை அறிஞ்ஞர் கள் எத்தனை நூற்றாண்டுகள் விவா தித்தாலும் இந்த சர்ச்சை ஒயப்போவ தில்லை என்பது என்னவோ உண்மை
தான். அதே போன்ற ஒர் இலக்கிய சர்ச் சைதான் செஞ்சோற்று கடன் திர்ப் பதில் விஞ்சிநிற்பது மாகாபாரதத்தில் வருகின்ற கர்ணனா? அல்லது இராமா யணத்தில் வருகின்ற கும்பகர்ணனா? என்பதாகும்.
மகாபாரதத்தில் கர்ணன், செஞ் சோற்றுக் கடன் தீர்ப்பதற்காக தன் நண்பன் துரியோதனுக்காக பகைவர் பாண்டவருடன் போர் செய்து உயிர் விட்டவன் என்று புகழப்படுகிறான். இராமாயணத்தில் கும்பகர்ணன், செஞ் சோற்றுக்கடன் தீர்ப்பதற்காக தன்தமை யனுக்காக பகைவர் இராமனாதியோரு டன் போர் செய்து உயிர்விட்டவன் என்று புகழப்படுகிறான். இவ்விரு வரில் யார் உண்மையில் சிறந்தவர்?
கர்ணன், துரியோதனன் பாண்ட வருக்ககுத் துன்பமிழைத்தபோதெல் லாம் புத்திச் சொல்லித் தடுக்காது மேலும் பகை கொள்ளத் தூண்டிப் போர்நடக்கக் காரணமானவன். கும்ப கர்ணன் இராவணன் சீதையைக் கவர்ந்த தைக் கேட்டு அது பிழையென்றுணர்ந்து,
சீதையை சிறையிலிருந்து விடுவிக்குமாறு கேட்டு அது நடப்பதற்ாகப்பாடுபட்டவன்.
ஒருெ வெ
என்று
செய் திருந் கொ
βρ(5(ι கருதி
166.(I(G(ٹیلی அறிய அகங் என்று
54 ஒளிஅரசி
 

பகர்னனா?
ர்ணன் துரியோதனனின் பகைவராகிய பாண்டவருள் பனாகிய அருச்சுனனில் பொறாமை கொண்டு அவனை வத்தவன். அதனோடு அருச்சுனனைக் கொல்வேன்
சபதமிட்டவன். அதனை, புனந்த ரம்பொரற்கு நீகொ லந்த ரமெனக்கெனாத் னஞ்ச யன்செ யிர்த்தல் கண்டு தபனன் மைந்தன் பும் மனைந்த போரில் முடிது னித்துன் முகசரோரு னால் னந்த னிந்த ரங்க பூசை செய்வ னென்று சீறினான். ன்று வில்லிபாரத வாரணாவதச் சுருக்க அறுபத்தைந் பாவிற் காணலாம். னவே, கர்ணன் போர் புரியச் செல்வதற்குச் செஞ் றுக்கடன் தீர்ப்பது மாத்திரம் காரணமன்று. தனது ந்தக் காரணமும் இருந்ததென்பது தெளிவாகிறது. பகர்ணன் தனது தமையனின் பகைவனான இரா ன மூவரில் முதல்வனாகக் கண்டவன். அவனில் மதிப் அன்பும் கொண்டவன். இதனை அவன் இராவணன் ஷணன் என்பருக்குரைத்த புத்திமதிகளில் படிக்கக் ாலாம். கும்பகர்ணனுக்கு இராமனோடு போர் செய்வ சொந்தக்காரணம் எதுவும் இருக்கவில்லை என் கும்பகர்ணன் போர்புரியப் போவதற்குச் செஞ் *றுக் கடன் தீர்ப்பதொன்றே காரணமாக இருந்தது தும் தெளிவாகின்றன. ர்ணன், தன் வீரத்தின் மேலுள்ள நம்பக்கையால் ரில் தன் சபதப்படி அருச்சுனனைக் கொல்வேன் பும் உயிருடன் திரும்ப வருவேன் என்றும் நம்பியே ருக்குச் சென்றவன். கும்பகர்ணனோ அண்ணனுக்காக பேன் என்று சொல்லிப் போருக்குச் சென்றவன். னை அவன் இராவணனுக்குக் கூறிய பின்வரும் ால் அறிய முடியும். வன்றுநான் வருவனென் றுரைக்கி லேன்விதி ன்றது படர்படித் துந்த நின்றது பான்று பொன்றினாற் பொலன்கொள் சீதையை ன்றென நாய விடுதி நன்றரோ. |ங்ங்ணம் கூறியவற்றால் செஞ்சோற்றுக்கடன் கழிப் கர்ணனைவிட கும்பகர்ணன் சிறந்தவன் என்பது வாகிறது. ர்ணனும், கண்ணன் தனக்கெதிராகச் சூழ்ச்சிகள் த காலத்தில் போரில் தானிறப்பான் என்பதை அறிந் தான். ஆயினும், அவன் அகங்காரத்தால் அதில் உறுதி ண்டிருந்தானல்லன். அது அவன் நாகாஸ்திரத்தின் மறைப் பிரயோகத்தில் அருச்சுனன் இறப்பான் என்று யதாலும், தன் மகனை அருச்சுனன் கொன்ற போது னை ஒரம்பனாலே கொல்வேன் என்றழெந்ததனாலும் முடியும். கும்பகர்ணனும் போரிடை இடையிடை கரித்துண்டெனில் அவன் இராமனைக் கொல்வேன்
அகங்கரியாமையும் குறிப்பிடத்தக்கது.
தீபாவளி மலர் 2014

Page 56
நிமிடக்கதை
த7ய்மைக்கு
உலகத்தின் எல்லா சந்தோஷத்தையும் தானே அனுபவிப்பதைபோல உணர்ந்தாள் ஆனந்தி. டாக்டர்சொன்னதைக் கேட்டதும்பூரித்துப் போனாள். எத்தனைநாள்தவம்! எத்தனைநாள் கண்ணீர்! எத்தனைநாள்வேதனை இன்று முடிவுக்கு வந்தது; ஆனந்திக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
★★★ திருமணமாகி ஏழு வருடங்கள் ஆகியும் ஆனந்திக்கும், ரவிக்கும் குழந்தை இல்லை. குழந்தை இல்லை என்ற குறையை விட மலடி என்ற பட்டம் ஆனந்தியை வாட்டி வதைத்தது. எத்தனை கனவுகளோடு புகுந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தாளோ, அத்தனை கனவும் கண்ணீரில் கரைந்தன. கணவன் ரவி அன்பானவன் தான். எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவன்தான். ஆனால், குழந்தை இல்லாத குறையை எத்தனை நாள்தான் அவனும் ஜீரணிப்பது! ரவியும் சில நேரங்களில் ஆனந்தியிடம் முகம் சுளிக்க ஆரம் பித்தான். பார்க்காத டாக்டர் இல்லை; செய்யாத வைத்தியம் இல்லை. எல்லாமே வீண்
எந்தப் பெண்ணும் அவ்வளவு சீக்கிரம் முடி வெடுக்க முடியாத விஷயம். எந்த பெண்ணும் தன் கணவனைப் பார்த்து கேட்கக்கூடாத வார்த்தை. ஆனந்தி ஒருமுறை தன் கணவனை கேட்டேவிட் டாள். 'நீங்க வேறு ஒரு கல்யாணம் பண்ணிக் கிட்டா என்ன?' 'பைத்தியமா உனக்கு. குழந்தை வேணுங்கிறது நம்முடைய ஆசை தான். அதுக்காக என்னுடைய மனிதாபி மானத்தை பலிகொடுக்க முடியாது’ என்றான். நல்லவன் என்று எப்போதெல்லாம் நினைக்கி றாளோ, அப்போதெல்லாம் அதற்கு எதிர்மறையாகத் தான் இருப்பான். அவன் கெட்டவன் என்று ஒதுங்கி நிற்கும்போது, அவனே நெருங்கி வந்து அவளை
55 ஒளிஅரசி
 

இ இ
கெஞ்சலோடு கொஞ்சுவான். ஆனந்திக்கு வாழ்க் கையும் கேள்விக்குறி! கணவனும் கேள்விக்குறி! நடந்ததெல்லாம் போகட்டும். இத்தனைநாள் கஷ்டங்களுக்கு எல்லாம் ஒரு முடிவு வந்தது!
資 *韋 உறவினர்கள் எல்லோரும் குழந்தையைப் பார்க்க அனுமதிக்கப்பட்டார்கள்.
"அவர் வரலியா” என்றாள் ஆனந்தி. 'போன் பண்ணி விஷயத்தைச் சொல்லிட் டோம். முதலாளிகிட்ட கணக்கு ஏதோ கொடுத் துட்டு வரணுமாம். வர்றேன்னு சொன்னான்’ என்றார்கள். மனம் முழுக்கசந்தோஷம் நிரம்பிவழிய,
உறவினர்களின் பார்வை நேரம் முடியும் தருணத் தில் வந்தான் ரவி. அவனது நடையில் லேசான தள்ளாட்டம் இருந்ததை ஆனந்தி கவனித்தாள். 'இது என்ன புதுப்பழக்கம்?முதல் முதல் நம்ம குழந்தையை பார்க்க இந்த கோலத்திலேயா வரு வது ?" என்றாள். 'நல்லாருக்கானா நம்ம பை யன். ஏன் உங்க முகத்துல சந்தோஷத்தையே காணோம். ' என்றாள்.
"நீயும் கறுப்பு, நானும் கறுப்பு. குழந்தை மட்டும் வெள்ளையா இருக்கு. நம்ம வீட்ல உள்ள வங்க யாருடைய முகச்சாயலும் குழந் தைக்கு இல்ல. இதை நான் மட்டும் சொல்லல. வெளியில் பேசிக்கிறாங்க." அவன் குரலில் குடிகாரர்களுக்கே உரிய குழறல் இருந்தது. ஆனால், உளறல் இல்லை.
இத்தனை நாள் அனுபவித்த வேதனைகள் அத்தனையையும் மறுபடியும் ஒரே நொடியில் அனுபவித்த மாதிரி இருந்தது ஆனந்திக்கு!
நேற்று வரை அவள் சுமந்த துன்பம் வேறு! இனி அவள் சுமக்கப் போகிற துன்பம் வேறு!
தீபாவளி மலர் 2014

Page 57
சக்தி ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் போட்டியிட்டு இறுதிவ6
தனது திறமையை வெளிக்காட்டி மகுடத்தைச் சூடிக்கொண்ட தெஹிவளையைச் சேர்ந்த வைசாலின ஒளிஅரசிக்காக மனம் திறக்கிறார்.
 


Page 58
தனது கனவை நனவாக்கும் வெற்றிப் பயனத் மேற்கொண்டார் என்பதை வைசாலினி விள
நான் மூன்று வயது முதல் சங்கீதம் கற்கின்ே வில் நான் எதையும் எண்ணியதில்லை. எனது யரின் வேண்டுதலுக்கிணங்கத்தான் சக்தி ஜூ ஸ்டார் நிகழ்வில் இணைந்தேன். அவர்கள்த உற்சாகப்படுத்தினார்கள். இருந்தாலும் எனக்கு ஒரு பயம் இருந்தது. நான் பாடசாலையில் பல ே சிகளில் கலந்துகொண்டு பரிசில்களும், கேடயங்க ளேன். அண்மையில், அகில இலங்கை மட்டத்தில் தமிழ்த்தினப் போட்டியில் கலந்துகொண்டு த பெற்றுள்ளேன். சக்தி ஜூனியர் சூப்பர் ஸ்டார்நிச விய ரீதியில் தொலைக்காட்சி மூலம் பார்க் நிகழ்வொன்று என்பதால் எனக்கு மனதளவி பயமாகத்தான் இருந்தது. இருந்தும் முதல் நடந்தது. அதனை முடித்து நான் வீட்டுக் இறுதிமுடிவுகள் உடனே சொல்லவில்லை மறுநாள் தொலைபேசியூடாக அறிவித்தார்கள். குரல் வளமுண்டு என்றும் நான் நன்றாகப் ட என்றும் அதனால் நான் தெரிவுசெய்யப்பட்டுள் அவர்கள் கூறியதிலிருந்து எனக்குள் இருந்த பய எம்மாலும் முடியும் என்ற தன்னம்பிக்கையும்
ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் எனக்குச் சவா கள், என்னுடன் இறுதிவரை வந்த அந்த மூவரும் என்னுடன் நெருங்கிய நண்பியாக இருந்தவள்தா அவளும் சளைத்தவள் அல்ல. இறுதியாக வந்த எ லும் நாம் ஒவ்வொருவரும் ஒருவருக்கு ஒருவ ளர் என்ற வகையில், எமக்குப் பயிற்றுவித்த சரி, எம்முடன் இருந்த நடுவர்களும் சரி எம்மை ெ நான் இராமநாதன் இந்துக் கல்லூரியில் பயின்று 6 பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களும் எ கள் அனைவரும் எனக்கு நல்ல உற்சாகத்தையு தையும் ஊட்டினார்கள். அந்தவகையில், நான் சாலைக்கும் கடமைப்பட்டுள்ளேன்.
மேலும், திரைப்படப் பாடல்கள் என்றால் ச வுடைய பாடல்கள்தான் எனக்கு விருப்பமாக இ தேர்ந்தெடுத்த பாடல்கள்கூட எனது குரல் 6 வெற்றிக்கும் உறுதுணையாக இருந்தமை எ
57 ஒளிஅ
 

தை எவ்வாறு க்குகையில். றன். பெரியள தாய், தந்தை னியர் சூப்பர் ான் என்னை மனதளவில் மேடை நிகழ்ச் ளும் பெற்றுள் b இடம்பெற்ற ங்கப்பதக்கம் 5ழ்வு உலகளா கப்படுகின்ற ல் கொஞ்சம் குரல் தேர்வு கு வந்தேன். நடுவர்கள் எனக்கு நல்ல ாடுகின்றேன் ளேன் என்றும் ம் விலகியது. தோன்றியது.
லாக வந்தவர் ம்தான். அதில் ான் அம்ரித்தா. ங்கள் நால்வரி ர் போட்டியா ஆசியர்களும் வழிநடத்தினர். வருகின்றேன். ானது நண்பர் ம், உத்வேகத்
F GTGØgh L. HTL
சிலா அம்மா ருந்தன. நான் வளத்துக்கும், “ன்றால் அது
ரசி தீபாவளி மலர் 2014
மிகையாகாது. நான் மூன்றாவது சுற்று முடிந்து இறுதி நான்கு பேருக் குள் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் எனது ஒரே இலட்சியமாக இருந்தது நான் வெற்றி பெறு வேண்டும், எனது வெற்றி நிச்சயம் என்பதே.
இறுதி சுற்று வருவதற்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில் எனது மனதுக்குள் ஏதோ ஒருவித தயக்கம் ஏற்பட்டது. இருந்தும், வெற்றியும், தோல்வியும் சகஜம் என்றெண்ணிய நான் எதற்காகப் பயப்படவேண்டும் என்று கருதினேன். இறுதிநாள் எனது தாய் என்னை விடியும் பொழுது
பாடமுடியாது. உனக்கு கஷ்டம் என்று தானும் பயந்து என்னையும் பயத் துக்குள்ளாக்கிவிட்டார். எது எவ்வா றாயினும், நான் பாடுவேன் என்ற மன உறுதியுடன் இருந்தேன். மாலை வேளை மனம் சஞ்சலிக்கும் நேரம் போட்டி ஆரம்பமானது. குறுந் தக வல்கள் மூலமாக வெற்றிச் செய்தி கள் வந்தவண்ணமே இருந்தன. இறுதியில் பாடிமுடித்தபோது அச்சத்தில் திளைத்தேன்.
நடுவர் மூலமாக வெற்றியைக் கூறுவதற்காக மேடைக்கு வந்த அந்த அறிவிப்பாளர் சிறிதுநேரம் தாமத மானதால் எனக்கோ என்மனம் என் னிடம் இல்லை என்று சற்றுத் தடு மாறினேன் - பேதலித்தேன். பின்னர் அறிவிப்பாளரோ வெற்றி மகுடத் துக்காக எனது பெயரை உச்சரித் தார். நான் சில நிமிடம் என்னையும் மீறி வெற்றிக் களிப்பில் - ஆனந் தத்தில் மூழ்கியிருந்தேன்.
எனவே, என்னுடன் இறுதிவரை வந்த நண்பர்கள் அனைவருக்கும் நான் கூறுவது எவருக்கும் எவரும் சளைத்தவர்கள் அல்லர். இன்று நான். நாளை நீங்கள். முயற்சி செய் யுங்கள்; நிச்சயம் வெல்வீர்கள்.
இத்துடன் நானும் முற்றுப்பெற வில்லை. எனது முயற்சி தொடரும். இன்னும் கற்கவேண்டியதுநிறையவுள் ளது. நான் எதிர்காலத்தில் சிறந்த பாட கியாக வரவேண்டும் என்பதே எனது எதிர்காலக் கனவு. எனவே, அந்தப் பயணம் எனது வெற்றிப்பயண மாக இருக்கும் என்பது உறுதி.

Page 59
மருத்துவம் இவைத்தியர் முருகானந்தம்
பெண்களை மிரட்டும்
புற்றுநோய், என்பது உயிரிழப்பை ஏற்படுத்தும் கொடிய நோய்களுள் ஒன்றாக இருக்கிறது. அதிலும் மார்பக புற்றுநோய் உலக அளவில் பெண்களை பாதிக்கும் முக்கிய நோயாக உருவெடுத்து இருக்கிறது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மேற்கத்திய நாடுகளில் காணப்படும் புற்று நோய்களில் மார்பக புற்றுநோய் முதலிடத் தையும், நோய்களால் ஏற்படும் இறப்புகளில் இரண்டாம் இடத்தையும் வகிக்கிறது. தற்போதைய வாழ்வியல் மாற்றங்களினால் நகர்ப்புறங்களில் மார்பக புற்றுநோய் முதலிடத்தை பிடித்துவிட்டது. இது மேலும் அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக் கின்றன.
உலக சுகாதார அமைப்பின் புற்றுநோய் ஆய்வுக்கான சர்வதேச நிறுவனத்தின் தகவல் களின்படி உலகில் 2012 ஆம் ஆண்டில் மட்டும் 1.7 மில்லியன் பெண்கள் புதிதாக மார்பகப் புற்றுநோயால் பீடிக்கப்பட்டி ருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன், அதே ஆண்டு 522,000 பேர் மார்பகப் புற்றுநோ யால் இறந்தும் உள்ளனர். இந்நோயானது இலங்கையைப் பொறுத்தவரை பத்தாயிரம் பெண்களில் இரண்டு பெண்களுக்கு காணப் படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
மார்பகப்புற்று நோய்க்கான காரணங்கள் பல. அதில் மிக முக்கியமானது மரபணுவில் (BRCA 1 and BRCA 1 ) LIDITyöpš5Gir 6piö Lu (6) வது. இந்த மாற்றங்கள் ஏற்படும் பெண் களுக்கு மார்பகப்புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 10-30 மடங்கு அதிகரிக்கும். அதா வது, அவர்களுக்கு 85 சதவீதம் நோய் தாக்கு வதற்கான அபாயம் உள்ளது. இந்த நோய்க் கான மற்ற காரணங்களில் முக்கியமானது ஹார்மோன்கள்.
நம் உடலில் அதிக அளவு ஈஸ்ட்ரோஜன் சுரப்பது நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. குடும்பத்தில் தாய் அல்லது உடன் பிறந்த சகோதரிக்கு இந்த வியாதி இருந்தால் மற்ற சகோதரிகளுக்கு வருவதற் கான வாய்ப்பு அதிகம். மார்பகப் புற்றுநோயை பொறுத்தவரையில் அது பெருகி, பெண் களை மிரட்டத்தான் செய்கிறது. ஆனாலும் சத்தமில்லாமல் கொல்ல முயற்சிக்கும் இந்த நோயை பெண்களால் எளிதாக தவிர்க்கவும், தடுக்கவும் முடியும்.
புற்! ஏற்! வர்
சாத்
ᎯᏋᎶᏑᎠ
இஸ்
巴著ö等s
கவு
றது. களு tuff) {
அ
58 ஒளிஅரசி தீபாவளி
 

பெண்களைப் பொறுத்தவரையில் மார்பகப் றுநோய் இருபது வயதுக்குப் பின்னர்தான் படுகிறது. எனினும், முப்பது வயது கடந்த களிலேயே பரவலாக ஏற்படுகிறது. பெரும் ாணிக்கையானவர்கள் நாற்பது முதல் அறுபது துக்கிடையிலேயே இனங்காணப்படு றார்கள். மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்தி யே இனங்கண்டால் சிகிச்சையளிப்பதும், ணமாகக் குணமாக்குவதும் சாத்தியமா 1றது. அத்துடன் மார்பை இழப்பதையும் ர்க்க முடிகின்றது.
மார்பகப் புற்றுநோயை இனங்காணல் :
மார்பகப் புற்றுநோயின் குணம் குறிகள் 1ளியாகு முன்னரே இந்நோய் ஏற்படும் தியம் பற்றி அறிந்துகொள்வதற்கு மார்பகங் ளப் பெண்கள் சுயமாகவே பரிசோதிக்கவும், ரினிக்குகளில் வைத்தியர்களிடம் மற்றும் தார உத்தியோகத்தர்கள் மூலம் பரிசோதிக் மான அறிவூட்டல் ஏற்படுத்தப்பட்டு வருகின் இருபது வயதைக் கடந்த எல்லாப் பெண் 5ம் தமது மார்பைத் தாமே சுயமாகப் சோதிக்கும் முறை பற்றி வருமுன் காப்பு தார சேவை அணியினர் பரவலாக நாடளா ரீதியில் இதுபோன்ற அறிவுறுத்தல்களையும் றிவூட்டல்களையும் வழங்கி வருகின்றார்கள்.

Page 60
பெண்கள் மாதம் ஒருமுறையாவது தமது மார் பைத் தாமே சுய பரிசோதனை செய்வதன் மூலம் புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியப் பாடு இருக்கின்றதா என்பதைக் கண்டறிய முடியும்.
இளம் பெண்கள் மாதவிலக்கு ஏற்பட்ட தினத்திலிருந்து ஒரு வாரத்திலும், மாதவிலக்கு நின்ற பெண்கள் மாதாந்தம் ஒரு குறிப் பிட்ட திகதியிலும் சுய பரிசோத னையை மேற்கொள்ள முடியும். இதற்கு ஒருசில நிமிடங்களே தேவைப்படும். இந்த சுயபரி சோதனை மூலம் மிகவும் ஆபத் தான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய மார்பக புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலேயே இனம் காண உதவ முடியும். படுக்கைய றையிலோ அன்றி குளியலறை யிலோ தனிமையாக எதுவித சங்கடமும் இன்றி இப்பரிசோத னையை மேற்கொள்ள முடியும்.
பரிசோதனையை மேற் கொள்ளும் முறை :
மேலாடையை நீக்கிவிட்டுத் தனது மார்பில் தெரியும் ஏதாவது மாற்றங்களை அவதானிப்பது முதற்கட்டமாகும். இதனைக் கண் ணாடியின் முன்னின்றும் மேற் கொள்ளலாம். இருந்துகொண்டும், படுத்துக்கொண்டும் கூட மேற் கொள்ள முடியும். இதை ஒரு தடவை முறையாகச் செய்துவிட் டால் தொடர்ந்து மாதாமாதம் சிரமமின்றி மேற்கொள்ள முடியும். மார்பை அவதானிக்கும் முறையை Inspection என்கிறோம். அடுத்த கட்டம் கையால் பரிசோதித்தல், இதை Palpation என அழைக் கிறோம். மார்பையும், கழுத்துப் பகுதி யிலிருந்து தோற்பட்டை வரையிலான பகுதியையும், கமக் கட்டையும் கையால் நீவி கட்டிகள் ஏதும் இருக்கின்றனவா எனப் பரிசோதிக்க வேண்டும்.
இப்பரிசோதனைகளை ஒர் ஒழுங்கில் மேற்கொள்ள வேண் டும். பார்வை மூலம் பரிசோதிக்
கும்பே நிறமாற பகுதிக காம்புக Lр тiti ja வேண் ஏற்பட்ட
୧୬! ରJ$(TC) 6ĩ 6ổTL16õ (LYME LD fTff625) i. பரிசோ Lq.@i) 60) வைத்த நிலையி பரிசோ LDITή οδοι
LD TÜGOLJ மையத் அசைத் வேண்டு
Giri
| :56, 11
95 FITUTGŪSTOTLE புற்றுரே தானியா காய்கறி சேர்ந்த(
பெ கலந்திரு தன்மை விக்கும் வாய்ப்பு
-9յ6ծ) Ս ԼԸ (36.13, Lon Liu JGött ( நார்ச
.916Ꮱ6ᎧᏗ ©
6LD556) ரத்தத்தி தும் சக் இவ் தினசரி புற்றுநே L DIFTfil நோயை முன்வந் 56 it diff பரிசோத
59 ஒளிஅரசி:

து மார்பகத் தோலில் தெரியும் மாற்றங்கள், மார்பக றங்கள், வடிவ மாற்றங்கள், உட்குவிந்த தசைப் ள், ஏதாவது அழற்சிகள், புண்கள், முலைக் ளின் வடிவத்திலும் நிறத்திலுமான மாற்றங்கள், க்கட்டிகள் முதலானவை பற்றி அவதானிக்க டும். இரு மார்புகளுக்கும் இடையில் புதிதாக ருக்கும் மாறுபட்டதன்மையையும் (ASYMMETRY) ரிக்க வேண்டும். மார்பக தோல் தடித்திருக்கிறதா தயும், நிணநீர்க்கட்டிகள் தோன்றியுள்ளனவா HNODES) என்பதையும் பார்க்க வேண்டும். பப் பரிசோதிக்கும்போது மூன்று நிலைகளில் திக்கவேண்டும். கைகள் இரண்டையும் பக்கவாட் வத்தபடியும், கைகள் இரண்டையும் இடுப்பில் படியும், கைகள் இரண்டையும் உயர்த்திய லும் பரிசோதிக்க வேண்டும். மார்பை நீவிப் நிக்கும்போது ஒரு கையை உயர்த்தியபடி அப்பக்க மறுகையால் மெதுவாகப் பரிசோதிக்க வேண்டும். ச் சுற்றி வட்டமாக நீவியும், சுற்றுவட்டத்திலிருந்து தை நோக்கியும், குறுக்காகவும் கைவிரல்களை து கட்டிகள் இருக்கின்றனவா எனப் பரிசோதிக்க ம்ெ.
க்க வேண்டிய உணவுகள்: 0ான உணவுப் பழக்கமும் புற்றுநோய்க்கு ஒரு ாக இருக்கிறது. முறையான உணவுகளை உண்டால் நாயை பெருமளவு தடுக்கலாம். தவிடு நீக்காத கள், ஆடை நீக்கியபால், தயிர், பழங்கள், பச்சை கள், மீன், கீரை வகைகளை தினமும் உணவில் வேண்டும். ரும்பாலான காய்கறி, பழங்களில் பூச்சி மருந்துகள் நக்கின்றன. அவை புற்றுநோயை உருவாக்கும் கொண்டது. அதனால் இயற்கை முறையில் விளை உணவுப்பொருட்களை உண்ணுங்கள். அதற்கு
இல்லாவிட்டால் வாங்கிய பழம், காய்கறிகளை ணிநேரம் உப்பு கலந்த நீரில் முக்கிவைத்துவிட்டு, க பாயும் குழாய்த் தண்ணீரில் நன்றாக கழுவிவிட்டு டுத்துங்கள். த்து நிறைந்த உணவுகளை அதிகம் உண்ணுங்கள். ாளிதாக ஜீரணமாகி, உடலில் இருக்கும் விஷத்தன் ா வெளியேற்றும் சக்தி கொண்டதாக இருக்கிறது. ல் இருக்கும் சர்க்கரை, கொழுப்பை கட்டுப்படுத் நியும் நார்சத்துக்கு இருக்கிறது. வாறான முறையான உணவுகள் உண்பதோடு உடற்பயிற்சிகளும் மேற்கொள்வதன் மூலம் ாயின் பிடியிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். பக புற்றுநோயை பற்றி பயம்கொள்ளாமல் சர்க்கரை யும், கொழுப்பையும் கண்டறிய தாமாகவே து பரிசோதனை செய்வதுபோல், பெண்களே உங் பகங்கள் ஆரோக்கியமாக இருப்பதை தைரியமாக னை மூலம் உறுதி செய்யுங்கள்.

Page 61
sitoILru artislGli உள்ளத்தினுள்ளே உறங்கிடும் ஏக்கங்கள் 5jTrari signstit.
துயரமதில் தொலைகின்றபோது ឆ្នាដៃដ៏ ឆ្ង ខាយព័ទ្វិចយោជ្ជៈ ដែលធតែថ្ងៃដែ இன்னலுக்குள் இடர்படும்போது உடைத்திட ஒரு கரம்வேண்டும்.
ទោះជាយ៉ា ខាំធម៌ អ៊ែនជំរៅ ខាញ៉ងផ្សេងៃយទាr செவிகொடுத்து கேட்டிட வேண்டும் மறு கண்ணின் மகிழ்வு கண்டு பூரிப்பில் களித்திட வேண்டும்.
ខាងក្រៅថា រ៉ែ ដោយឆ្នាហៅថា கைதொட்டு துடைத்திட வேண்டும் கலக்கம் எனன சூழும்போது வார்த்தையால் தேற்றிடவேண்டும்.
Lommigritä, lurt EFLh Lala:Smrtsisir) மறையாத நேசம் தந்து துரணாகப் பற்றி நிற்க ផ្លយធoun៩ uffត្រូវៀតបជាសាធu.
உள்ளத்தின் ஏக்கங்கள் ទៅវិញដោយជាបur ជាឧកញ៉៩៩។ ஏக்கமே வாழ்க்கையென்று உணர்ந்தது நெஞ்சியிங்கு.
என்றோ ஒருநாள் sifilig. Llwyth artistirffilis;&Eis silis Lurg, all rugg|BitTitli தொடர்கிறது வாழ்வின் காலம்.
 
 
 
 


Page 62
Delazil Kobbelkaduwa Mar
| Battarramulla. +94. 114 222 722 494. 114 222 624
acebook.com/tamilfm
 


Page 63
ஆன்மிகம்
Álva/ Vesølv
பூமியில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்குமா ஆதாரமாகி சூரியனை வழிபடல் என்பது அதிகா6 இருந்துவந்த மரபாகும். தினமும் காலையில் நீராடிய திசைநோக்கி சூரியநமஸ்காரம் செய்வது உடல் ஆரே மிகவும் நல்லது. பிராணாயாமம் என்னும் மூச்சுப்பயிற் தொடர்ந்து காயத்ரீமந்திரம் ஜபித்தல் ஆகியவை, சூரிய அதன் கிரணங்களின் மூலம் பெறும் முறைகளாகும். கா வேளைகளில் சூரியனை நோக்கி இருகைகளாலும் அர்க்யம் விடுவதும் சூரிய தோஷத்திற்கு தகுந்த பரிகா நம்பப்படுகிறது. ஆதித்ய ஹ்ருதயம் போன்ற சூரிய சொல்வதால் நம் உடலும், மனமும் சூரியசக்தியை கொள்கின்றன.
வருடம் தோறும் நிகழ்கின்ற சூரிய கிரகணம் பற்றி கதைகள் உண்டு. பாற்கடலை தேவர்களும் கடைந்தபோது அதிலிருந்து அமிர்தம் வெளிப்பட்டது பகவான் விஷ்ணு ஒர் அழகான மோகினி வடிவம் தாங்கி மயக்கி, அந்த அமிர்தத்தை தேவர்களுக்கு மட்டும் ஆனால், சுவர்பானு என்ற அசுரன் மட்டும் தேவர்க உருவம் தாங்கி வந்தான். இதை அறிந்த சூரியனும் சந்தி மோகினியிடம் தெரிவித்தனர். உடனே மோகினி விஷ்ணு அசுரனின் தலையை கொய்து விட்டார். ஆன
欧 ၄၏ ဓမ္ဘာ့၏ ကြီးများ
 

ான சக்தியின் ஸ்ம் தொட்டு
பின் கிழக்கு ாக்கியத்திற்கு சி, அதனைத் னின் சக்தியை
ᎢᎶᎼ0ᎶᏌ , ᏞᏝfᎢᎧᎼ0ᎶᎠ நீரை எடுத்து TTLDT(35lb a I60T ப துதிகளைச் க் கிரகித்துக்
பல புராணக் அசுரர்களும் நு. அப்போது கி அசுரர்களை வழங்கினார். நளைப்போல நிரனும் அதை யாக இருந்த ால், அதற்குள்
loquef 2014
அமிர்தம் கழுத்துவரை சென்று விட்டதால் அவன் சாக வில்லை. அவனது தலை ராகுவாகவும், உடல் கேதுவாகவும் மாறின. தங் களைக் காட்டிக்கொடுத்த சூரிய, சந்திரரைப் பழிவாங் கும் விதத்தில் அவ்வப் போது ராகுவும் கேதுவும் சூரியனையும் சந்திரனையும் வி ழு ங் கு கி ன் ற ன ர் . வானசாஸ்திரப்படி சூரியன், சந்திரன், பூமி ஒரே கோட் டில் வரும்போது, நடுவில் சந்திரனோ, பூமியோ வரும் போது சூரிய சந்திர கிர கணங்கள் ஏற்படுகின்றன. கிரகணகாலத்தில் மக்கள் புனிதநதிகளில் நீராடி, பசுக் கள், பணம் மற்றும் தங் கத்தை தானமாக அளிக்க வேண்டும். கிரகணத்திற்கு மறுநாள் ஏழைகள் மற்றும் சாதுக்களுக்கு உணவளிக்க வேண்டும். கிரகணம் முடிந் த பின் வீடுகளைச் சுத்தம்

Page 64
செய்ய வேண்டும். கிரகண காலத்தில் ஒ தொடங்கும் நேரத்தில் முன் உண்ட உண யிருக்க வேண்டும். கிரகணம் விட் பார்த்தபின்னரே உணவு உட்கொள்ள வே
கிரகணத்தின்போது கர்ப்பமான பார்க்கவே கூடாது. அவர்கள் பார்த் குழந்தைகள் செவிடு, ஊமை அல்லது கு காரணத்திற்காகவே கிரகணநேரத்தி கொள்ளுதல் கூடாது. இந்தநேரத்தில் ஒரு
கொள்ளுவது அவசியம். இவற்றால் பய கிரகணநேரத்தில் ஒரு மண்புழுகடித்தால் கிரகண நேரத்தில் ஜபம், தியானம் செய்! அடைவார்கள். இவ்வேளையில் செய்ய (இறைவனைக் குறித்த பாடல்கள்) அ களையும் அகற்றும். தேவர்களின் ஆ சிற்றறிவினால் பிரபஞ்சத்தில் நிகழும் பல கொள்ள முடியாது. எனவே, முனிவர்களின் வார்த்தைகளை நம் புங்கள். உலக வாழ்வு நிலையற்றது என்ற ஆன்மஞானமாகிய நிஜத்தை, அறியாமை மறைக்கிறது. எனினும், இந்தத்திரையாகிய கிரகணம் நிச்சயம் ஒருநாள் அகலும். நீங்கள் உங்கள் இயற்கையான புகழுடன் ஒளிர்வீர்கள். இதுதான் கிரகணத்தின் ஆன்மிகத் தத்துவமாகும்.
சூரியனின் பிறப்பு குறித்தும் இரு வேறு கதைகளைப் புராணம் சொல் கிறது. மகாவிஷ்ணு தமது உந்திக்க மலத்தில் இருந்து பிரம் மாவைப் படைத்தார். திருமாலின் ஆணைப்படி பிரம்மா பல உலகங்களைப் படைத் தார். அவை அனைத்தும் இருள்மய மாக இருந்தது. அந்த இருளைப் போக்க 'ஓம்' என்ற பேரொலியை உண்டாக்கினார் விஷ்ணு, அந்த ஒலியில் இருந்து பிரகாசமான ஒளியு டன் சூரியன் தோன்றினார் என்பது ஒரு கதை. பிரம்மா தன் படைத்தல் தொழிலை விரிவுபடுத்த சப்தரிஷி களை உண்டாக்கினார். அவர்களில் மரீசி என்பவரும் ஒருவர். அவருக்கு காசியபர் என்னும் மகன் பிறந்தார். அவருக்கு 13 மனைவிகள். அவர்களில் மூத்த மனைவியான அதிதி பெற்ற மகனே சூரிய தேவன் என்பது மற் றொரு கதை. சூரிய புராணத்தில் இந் தக் கதைகள் சொல்லப்படுகின்றன. சூரியன் நவக்கிரகமண்டலத்தின் தலை
63
 

ஒருவன் சாப்பிடக்கூடாது. வு முழுவதும் ஜீரணமா ட பிறகு சூரியனைப் ண்டும்.
பெண்கள் சூரியனை தால் பிறக்கப்போகும் ருடாகப்பிறக்கும். இதே ல் தாம் பத்ய உறவும் ருவர் தேள்கடிக்காமலோ ளியேறாமல் பார்த்துக் பங்கரவிளைவு ஏற்படும். கூட விஷம் இருக்கும். பவர்கள் பெரும் நன்மை பும் ஜபம், சங்கீர்த்தனம் ல்லல்களையும், பீடை பூசி கிடைக்கும். நமது விஷயங்களைத் தெரிந்து
(Śī၂*tÉtp:II" t_J6 9-6ðsfélö6OGrÚ படைத்தார். அை
அனைத்தும் ՏԱ5cirԱՐԱՄԱՐré இருந்தது. அந்த இருளைப் போக்க
ూb? cep பேரொலியை உண்டாக்கினர்
விஷ்ணு. அந்த
ஒலியில் இருந்து
|SDG ஒளியுடன் சூரியன்
தோன்றினார்.
வனாகத் திகழ்கிறார். இவர் ஏழு குதிரைகள் பூட்ட பட்ட, ஒற்றைச் சக்கர ரதத்தில் மேருமலையை வலம் வ கிறார். இவருக்குச் சாரதியாக அருணன் விளங்குகிற சூரியனின் தேரோட்டியான அருணன், காஷ்யப கும், விநதைக்கும் பிறந்தவர். காஷ்யபரின் மற்றெ மனைவியான கத்துரு என்பவளுக்கு முதலில் குழந்ை கள் பிறந்தனர். இதனால், பொறாமை கொண்ட விந்ை ஆத்திரத்தில் தான் அடைகாத்த முட்டையை பருவ வரும்முன் உடைக்கவே, ஒரு கால் இல்லாதவன அருணன் பிறந்தான். இதனால் ஆத்திரமடைந்த அவ "என்னை கால் இல்லாமல் செய்த நீ, கத்ருவுச் அடிமையாகி, அதன்பிறகு என் சகோதரன் கருட மூலமாக சாபம் நீங்கப்பெறுவாயாக!' என்று த தாய்க்கே சாபம் விடுத்தான். இவன் மீது இரக்க கொண்ட சூரியன், தனது சாரதியாக நியமித்து கொண்டான். ஒருசமயம் அருணன் இந்திரலோகத்தி நடந்த கொலுவை வேடிக்கை பார்க்க, பெண் வடிவி சென்றான். இந்தப் பெண்ணின் பேரழகைக் கண் இந்திரன், அவளோடு இணைந்ததால் வாலி பிறந்தா இதன் காரணமாக இவன் சூரியலோகத்திற்கு தேரோட் தாமதமாகச் சென்றான். அருணன் இந்திரலோகத்தி நடந்ததைச் சொல்லவே, அந்தப் பெண் உருவை பார்க்க வேண்டுமென சூரியன் கூறினார். அருண மீண்டும் பெண் வடிவம் எடுக்கவே, அவள் பு
சுக்ரீவன் பிறந்தான். ராமாயணத்தின் இரு முக்கி கதாபாத்திரங்களுக்கு இந்த அருணனே காரணமாகிற எனப்புராண இதிகாசங்கள் கூறுகின்றன.
ஒளிஅரசி தீபாவளி மலர் 2014

Page 65
೧೮ki೫೧Tಛ: ೧೩
பெண்களை பூவோடு ஒப்பிட்டு கூறு 6 ஏனெனில், அவர்கள் மலர் போன்ற மனதை உடை ஒரு பெண் தன்னை உண்மையாக விரும்ப மனிதரிடம் தன்னைப் பற்றி வெளிப்படுத்த மாட்டாள். மேலும், அது பொய் எனத் தெரிந்தால், தாங்கவும் மாட்டாள். இன்றைய பெண்கள் நாகரீக வாழ்ந்து வந்தாலும். ஒவ்வொரு பெண்ணும் பெண் உரிய பண்புகளுடன்தான் காணப்படுகின்றாள்.
பெண்களை புரிந்துகொள்வது என்பது
கடினமான காரியங்களில் ஒன்றாகும். நீங்கள் எ காலம்தான் அவர்களோடு சேர்ந்து வாழ்ந்துவர் பெண்களை முழுவதுமாக புரிந்து கொள்வது என்ட மான ஒன்றாகும். நீங்கள் விரும்பும் பெண்ணை வதற்கு உங்கள் வாழ்நாள் முழுவதும் தேவைப்ப பெண்களை முழுவதும் புரிந்துகொண்டு. நமது வலுப்படுத்த பல வழிகள் உள்ளன.
நீங்கள் விரும்பும் பெண்ணை புரிந்துகொள்ள அ அதிகமாக பேசவேண்டும். இது ஒரு விட்டுகெ
 

Ti೧gaCS வழிகள்.
பார்கள்.
LIGuff-Ear. |ம் ஒரு
西山厦夺
அதனை 5 வாழ்வு ாணிற்கே
மிகவும் வ்வளவு தாலும். து கடின மதிப்பிடு It GυπLib.
ജ pഞഖ
புவரோடு ாடுத்தல்
முறையாகும். அதனால் நீங்கள் அந்தப் பெண்ணிடம் உண்மை யாகவும். வெளிப்படையாகவும் இருந்தால் அவர்கள் உங்களை முழுமை யாக நம்புவார்கள். உங்கள் அன்பையும். உறுதியையும் அவர்களுக்கு அளித்தால், உங் களிடம் நம்பிக்கை ஏற்பட்டு தன்னை பற்றி சொல்ல முன் வருவார்கள்.
நீங்கள் எவ்வளவு முயற்சி செய் தாலும் அல்லது எவ்வளவு நன்றாக முயற்சி செய்திருந்தாலும், அவர் களிடம் பொறுமையை கடைப் பிடிப்பது தான் மிகவும் முக்கிய மானதாகும். ஒரே இரவிலோ அல் லது ஒரே வருடத்திலோ நடக்கக் கூடியது அல்ல.

Page 66
பத்தாண்டுகள் பிறகு அவர் களிடம் ஏதேனும் புதிதாக கண்ட றிந்தால், அதற்காக ஆச்சரியப்பட வேண்டாம். அவர்களிடம் கனிவா கவும், அன்புடனும் புரிதலுடனும் இருப்பதுதான் முக்கியமாகும். ஒரு பெண்ணிடம் வெளிப்படையாக அணுகுவதே நல்லது. இதனால், அவர்களிடம் சிறு காரியங்களுக்கு எதிர்விளைவுறச் செய்து அவர்களை வருத்தப்படச் செய்யா தீர்கள்.
பொறுமை
ஒரு பெண்ணை புரிந்துகொள்ள சில காலம் தேவைப்படும். ஒரு பெண்ணை நன்றாக புரிந்து கொள்ள தேவைப்படுவது பொறு மைதான். சில நாட்களிலேயே அல்லது மாதங்களிலேயே புரிந்து கொள்ள எதிர்பார்க்கக்கூடாது. விதையை விதைத்து பூவிற்காக காத்திருங்கள்.
அன்பு
ஒரு பெண்ணை நன்றாக புரிந்துகொள்ள அன்புடன் அவரை எதிர்கொள்ள வேண்டும். தன்னை மிகவும் விரும்பும் ஒருவரிடம் எந்த ஒரு பெண்ணும் தன் எண் ணங்களை முழுவதுமாக வெளிப் படுத்துவாள். நீங்கள் அன்புடன் எதிர்கொண்டால் தன்னை புரிந்து கொள்ள அனுமதி அளிப்பாள்.
அன்பும் அக்கறையும்
நீங்கள் அன்புடன் அவர்களை எதிர்கொண்டாலும் உடனே தன்னை வெளிப்படுத்த தயங்கு வார்கள். தன்னை அன்புடனும் அக்கறையுடனும் கையாளும் ஒருவரிடம் மெல்ல அவர்களின் எண்ணத்தையும் உணர்ச்சியையும் வெளிப்படுத்துவார்கள்.
பேசுதல்
பெண்கள் அதிகம் பேச விரும்புவார்கள். ஒரு பெண்ணை புரிந்துகொள்வதற்கு அவருடன்
நன்கு புரிந்து அவர் FífluffT,
நீர் உறுதி உறுதி
அவர் வாதத்
(ԼՔ ԼԳ.Ա.
65 ஒளிஅரச்
 
 

பேசத் தொடங்க வேண்டும். இது ஒரு பெண்ணை து கொள்வதற்கான முதல் படியாகும். நீங்கள் களிடம் வெளிப்படையாக பேசுவதால் அவர்களை க மதிப்பிட முடியும்.
தல் படி ரு பெண்ணை புரிந்துகொள்ள இந்த முதல் படியை உங்கவேண்டும். அவர்களை வெளிப்படையுடனும் }மயுடனும் அணுகவேண்டும். இந்த முதல் படியான 5ல் மூலம் அவர்கள் தன்னை பற்றி நீங்கள் அறிந்து ாள அனுமதி அளித்து உங்களைப் பற்றி அவர்கள்
கொள்ள விரும்புவார்கள்.
வறுபாடு வ்வொரு பெண்ணும் அவர்களது வழியில் வேறுப் ட இருப்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளவேண்டும். ஒரு வெளிப்படையாகவும் ஒரு சிலர் நாணத்துடனும் பார்கள். அவர்களை ஒப்பிட்டு பார்க்காமல் எளிதாக களை புரிந்துகொள்ள முற்படுங்கள்.
கள்வி எழுப்புங்கள் பண்கள் அதிகம் பேச ஆசைப்படுவார்கள். ஏதாவது வி கேட்டு அவர்களை பேச அனுமதி அளியுங்கள். பாறு அவர்களை பேசவிட்டு உங்களின் சரியான விகள் மூலம் அவர்களை புரிந்துகொள்ளுங்கள்.
வர்களது கடந்த காலம் ன் சில பெண்கள் ஒரு சில நேரம் சரியாக பழகாமல் தற்கும் வெளிப்படையாக பகிராமல் இருப்பதற்கும் எம் இருக்கக்கூடும். அதனால், அவர்களை புரிந்து ாள அவர்களின் கடந்தகாலத்தை பற்றி தெரிந்து 1ள வேண்டும். அந்த கடந்தகால நிகழ்வுகளால்தான்
இப்படி இருக்கிறாள் என்பது தெரியவரும்.
ன்றாக சேர்ந்து நேரத்தை செலவழிப்பது ழக்கமாக அவர்களை சந்திப்பது மற்றும் அவர்களுடன் து சேர்ந்தே இருப்பது போன்றவற்றை ஏற்பாடு வேண்டும். அவர்களோடு நீண்ட நேரம் செலவிடு b அவர்களை பற்றி புரிந்துகொள்ள முடியும்.
றுதியளிப்பு
ங்கள் விரும்பும் பெண்ணிடம் உங்கள் உறவு யானதாக இருக்கவேண்டும். பெண்கள் பொதுவாக யான உறவின்போதுதான் தன்னை பற்றி பகிர்ந்து iளவும் வெளிப்படுத்தம் செய்வார்கள். நீங்கள் களுக்காக எதையும் செய்வீர்கள் என்ற உத்திர தின் மூலம்தான் அவர்களை நன்றாக புரிந்துகொள்ள
LD.

Page 67
சந்திரன் உச்சத்தில் வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருக்க - நட்சத்திரங்கள் கண்சிமிட்ட - ஆங்காங்கே சில ஆந்தைகளுடைய அசட்டுச் சத்தமும் தூரத்தில் நாய்களின் ஆக்கிரமிப்பு ஒசைகளும் கேட்டுக்கொண்டிருக்கும் அவ் வேளை, தேவனின் வீட்டில் அனைத்தையும் குலைக்கும் விதமான முனங்கல் சத்தம் கேட்கின்றது.
"என்னங்க நம்ம ரேணு படிப்பு படிப்புன்னு இருக்குதே. காலா காலத்துல கலியாணம் செய்து வைக்க எந்த முயற்சியும் இல்லாம் இருக்கிறீர் கள் வயசும் கூடிக்கொண்டே போகுது' என்று ரேணுவுடைய தாய் மகளின் திருமணப் பேச்சை எடுக்க, 'அவளின்ட இஷ்டப்படி படிக்கட்டும். பிறகு பார்ப்போம்" என்றார் தேவன்.
காலங்கள் சில உருண்டோடின. ரேணுவும் தனது மேற்படிப்பை நிறைவுசெய்துவிட்டாள். இதைக்கேட்டு அவளைத் தேடி ஒரு வரன் வந்தது. ரேணு தனது மனக்கண்ணில் வைத் திருந்தவனைப் போன்ற தோற்றமும் அழகான உடலமைப்பும் பார்ப்பவர்களின் உள்ளங் களைப் பறித்தெடுக்கும் பார்வை எல்லாம் சேர்த்து இரவில் பூத்த ஒளியைப் போன்று இருந்தான்.
இ
66 ஒளிஅரசி தீபாவளி
 

த்த தெவனகல.
திருமணப் பேச்சுகள் அனைத்தும் ஆரம்பத் ல் நன்றாகச் சென்றுகொண்டிருந்தன. பேச்சின் டையில் மாப்பிள்ளையின் தாய் போட்டாள் ரு குண்டு. 'நீங்க மகளுக்கு என்ன செய்வீங்க. ன்ட மகன் இப்ப இன்ஜினியரா இருக் ன்றான்” என்றாள். ஆனால், என்ன செய்வது 1ணுவின் குடும்பம் ஒர் ஏழைக் குடும்பம். ருப்பதோ அந்த ஒட்டைக் குடிசையும் அதற்கு பன்னால் உள்ள சிறு முற்றமும்தான். நாளை டிவை சொல்வதாக அனுப்பி வைத்தார் தவன்,
'அம்மா எனக்கு சீதனம் கேக்காத மாப் ள்ளதான் வேணும்’ என்று அடம்பிடித்தாள் ணு, 'நீசும்மா இரு பிள்ளை. இதப்பார்த்தாபொம் ளைப் பிள்ளைகளை வீட்லதான் வெச்சிருக் னும்’ என்கிறாள் தாய். தாய் எவ்வளவோ கூறிய பாதும் அவள் தனது கொள்கையில் உறுதியாய் ருந்தாள். சில வாரம் கழிந்திருக்கும். ஊர்த்தலைவர் ஈட்டியார் தேவனைச் சந்தித்து, "உனக்கு மகள் ன்னு இருக்கிறாள்தானே. அவளது மேற்படிப்பு டந்த வாரம் தானே முடிச்சுது’ என விசாரிக்க, ம்” என்று தலை அசைத்தான் தேவன்.
'என் மகன் ஒருத்தன் வெளிநாட்டு ல ருக்கான். அவனுக்கு உன்னுடைய மகளை

Page 68
முடிச்சு வெக்கலாமுன்னு இருக்கேன்’ என்று கூற இதைக் கேட்ட தேவன் மிக்க ஆனந்த மை 'எப்போது வீட்டிற்கு வருவீர்கள்' என்றெல் கேட்டுக்கொண்டார். அவரும் இந்தப் புதன்கி மகன் வருவதாகவும், வெள்ளிக்கிழமை அ6 வீட்டிற்கு வருவதாகவும் கூறினார்.
வெள்ளிக்கிழமை காலை சூரியன் கைகளை எழுந்துக்கொண்டிருக்கும் பொன்னான பொழு தேவன் தனது மகளுக்கு நல்வாழ்வு ஒன்று கிை போவதையிட்டு கடவுளுக்கு நன்றி கூறிய வண் அதை நினைத்து நினைத்து ஆனந்த வெள்ள ஜொலித்தார். அவர் மட்டுமா, அந்தக் குடுப் ஆனந்தமாக இருந்தது. ரேணுவுக்கு வெட்கம் பி( தின்றது.
காலை 10 மணியளவில் சூரியன் ஒளிக்கதிர்களைத் தேவனின் வீட்டின் ! வீசத்துவங்கியபோது வீட்டு முற்றத்தில் புழுதி கிளப்பிக்கொண்டு ஒரு கார் வந்து நின்றது. உ தேவன் ஒடிச்சென்று அவர்களை வரவேற்றார். மாப்பிள்ளை கோட்சூட் அணிந்து காலுக்கு வெளி ஷ ஸ்ைஸும் போட்டிருந்தார்.
வரவேற்பதற்காகக் கடன்பட்டு வா சிற்றுண்டிகளைத் தட்டுகளின் மேல்வைத்து ரேணு தாய் ராதிகா கொண்டுவந்து அவர்களின் முன் வைத்தாள். கேக் ஒரு துண்டை திண்டுக்கொ பேச்சைத் துவக்கினார் செட்டியார். தேவன், செ ருடன் பேசும்போது குறுகிக்குறுகிப் பேசி இதைக்கண்ட ரேணுவுக்கு தனது அப்பா இல் பேசுவது பிடிக்கவே இல்லை. என்றாலும் ஒ செய்யமுடியாத நிலையில் இருந்தாள்.
வெளிநாட்டு மாப்பிள்ளை இலேசாகப் ே ஆரம்பித்தான். இங்கேயே பெரியதொரு சுப்பர்ம போடப் போவதாகவும், வெளிநாட்டுக்கு போகப் போவதில்லை என்பதாகவும் கூறி "அதுவும் நல்லதுதான். நானும் என் மகளை விரு நேரம் வந்து பார்க்கலாம்' என்றான் ே தொடர்ந்தும் வெளிநாட்டு மாப்பிள்ளை பேசி நானும் உங்க மகளும் வாழ நல்ல வீடொன்று ே அது எனக்கில்ல. உங்க மகளுக்குதான். வே. ஒன்றும் தேவை. ஏன்னா நானும் உங்க மகளும் இடத்துக்குப் போய் பார்க்கவேணும்தானே அ தான். அடுத்து பெண்ணுக்குநகைநட்டெல்லாம் எவ் போடுவீங்க” என்று பேசி வாயை மூட முன்னே அப்பா எனக்கு இந்தக் கல்யாணம் வேணாம். டைய பெண்மையை நான் விலைக்கு விற்க வ வில்லை’ என்று அவர்களின் முன்னால் கத்தின இதைக் கேட்ட ஊர்த் தலைவரின் முகம் உ மாறியது. தனது மனைவியையும், பிள்ளைகை கூட்டிக்கொண்டுப்போக முற்பட்டார். அவரை ( எவ்வளவோ தடுத்தும் தகாத வார்த்தைகளை பெண்ணையா பெத்தாய் ? என்று கூறி
67 ஒளிஅரசி
 

றினார். டந்து, 6) TLb lip 60 LD Du ffig, Gör
ட்டி தினில் டக்கப்
எணம்,
οι 1 (βιρ டுங்கித்
தனது
上 リ 写5LD @ud உடனே
புதிய நாட்டு
ாங்கிய னுவின் @TTO) ண்டே LLq LLIFT
வ்வாறு ன்றும்
L 1 ᏧᎦᎶᏡ) Ꭿ
ார்க்கட் இனி ଚୋt it göt. நம்பிய தவன். FaծTITit.
தவை. ற கார் நிறைய புதுக்கு
16 1676| ரேணு, எனணு பிரும்ப TT.
GGST ளையும் தேவன்
விட்டு
வெளியேறிச் சென்றார். இதைக் கண்ட தேவன் மனமுடைந்து கதிரை யில் அமர்ந்தான். குடும்பமே அல் லோலகல்லோலப்பட்டது.
ராதிகாவும் அடுத்த வீட்டு கவி தாவும் ஒய்வு நேரங்களில் பேசிக் கொண்டிருப்பது வழமை. ஒருநாள் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போது மகளின் அவலநிலையை ராதிகா கூறி கண்ணிர் வடித்தாள். 'உன் தம்பியின் மகன் ஒருத்தன் இருக்கானே பேசாம அவனுக்கு முடிச்சு வைச்சுடு' என்று கவிதா அக்கா அறிவுரை கூற ராதிகாவின் முகம் கறுத்தது.
'என்மகள் மேல் படிப்பு படிச் சிருக்கு, அவனோ ஆட்டோ ஒட்டுற வன். போதாதற்கு குடிக்கிறான். மலைக்கும் மடுவுக்கும் முடிச்சு போட முடியுமா?’ என்று கூறும் போதே அவளின் தொண்டை அடைத்துக்கொண்டது. கவலை விம்மலுடன் கண்ணிராய் வெளிப் பட்டது. கவிதா அக்கா அவளை ஆறுதல் படுத்திவிட்டு சில விட யங்களைப் பேசி விட்டு விடை பெற்றுச் சென்றாள்.
ராதிகாவின் உள்ளம் தினமும் தனது மகளை நினைத்து கண்ணிர் வடித்தது. தனது கணவன் வரும் வரை காத்திருந்த ராதிகாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. 8.00 மணிக்கு முன்வரும் தேவன் இரவு 10.00 மணியாகியும் வரவில்லை. ராதிகா திகைத்துப்போய் இருக்கும் போதே தேவன் வந்தான். தனது 33 வயதான மகளை திருமணம் செய்ய தர்சன் ஆசிரியர் விரும்புவதாகவும் அதை பற்றித்தான் இவ்வளவு நேரம் பே சிக் கொண்டிருந்ததாகவும் கூறினான். சீதனம் இல்லாமல் தர்சன் சேர் ரேணுவை திருமணம் முடிப்பதாக ஒப்புக் கொண்டவுட னேயே திருமணப் பேச்சுகள் ஆரம்ப மாகின. திருமண நிச்சயதார்த்தங் களும் நடைபெற்று முடிந்தன. ரேணுவுக்கும் அவளது குடும்பத்துக் கும் சந்தோஷம் பொங்கியது.
திருமணத்திற்கு ஒரு கிழமை இருக்கும்போது தர்சன் சேர் தனக்கும் ரேனுவிற்குமான ஆடைகளை
தீபாவளி மலர் 2014

Page 69
சிறுகதை இ அப்துல்லா பாத்திமா நுஸ்கியா உய
எடுத்துவரச் சென்றவர் திரும்பி வருவதற்குப் பதிலாக ஒரு சோகமான செய்தியே வந்தது. அதுதான் தர்சன் சேர் சென்ற மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதி சம்பவ இடத்திலேயே தர்சன் சேர் இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டவுடனேயே திருமணம் தடைபட்டது மட்டுமல்ல, ஊரில் ரேணு ஒரு சாபக்கேடு. அவளை திருமணம் முடிக்கச் சென்றால் மரணம்தான் கிட்டும் என்ற செய்தியும் பரவலாகப் பரவியது. இதனைக் கேட்ட ரேணுவின் மனம் உடைந்தது. வாழ்க்கையை வெறுத்து மூலையில் குந்தினாள். பல மாதங்கள் கழிந்தன என்றாலும் பெற்றோரால் மகளை பழைய நிலைக்குக் கொண்டுவர முடியவில்லை.
தேவனின் கடனும் ஒருபுறம் அதிகரித்துச் சென்றது. ராதிகா என்ன செய்யலாம்? யாரை இவளுக்கு மணஞ்செய்து கொடுக்கலாம் ? என்று தனது மனதிடம் கேள்விக் கேட்ட வண்ணம் இருக்கும்போதுதான் அன்று, "உன் மகளை உன் தம்பிட மகனுக்குக் கட்டிக் கொடுக்கலாமே" என்று கவிதா அக்கா கூறியது ஞாபகம் வந்தது. இதை தேவனிடமும் ரேணு விடமும் கூறினாள். ரேணு வேறு வழியின்றி தனது தாய் தந்தைக்காக ஒப்புக்கொண்டாள்.
விடியற்காலை ஆறு மணியிருக்கும் வசந்த னின் வீட்டுத் தொலைபேசி அலறியது. எடுத்துப் பேசியபோதுதான் தெரிந்தது தனது அக்கா ராதிகா என்று. தனது தம்பியிடம் தனது எண்ணத்தைக் கூறியபோது அவனது உள்ளம் ஆனந்தமடைந்தது. வழியே வரும் சீதேவியை விடக்கூடாது என்று எண்ணினாலும் பணிந்து போக கர்வம் இடம்பெறவில்லை. எனவே, மகனிடம் பேசிவிட்டுச் சொல்வதாக வைத் தான். இரவு வீடு வந்த ரவி, சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நேரம் மாலதியும், வசந்தனும் விடயத்தைக் காதில் போட்டனர். தான்
68 ஒளிஅரசி தீபr
 

ன்வத்த தெவனகல.
இவ்வளவு காலமாக நினைத்துக் கொண்டி ருந்ததை அவர்களாகவே முடிவுபண்ணியதை நினைத்துக் துள்ளிக் குதித்தான்.
வசந்தன் இந்தச் சந்தோஷத்தை உடனே தனது அக்காவுக்குச் சொன்னான். ரவி, ரேணு இருவருடைய திருமணமும் எளிமையான முறையில் நடந்து முடிந்தது. மணமகள் வீடு போக அனைவரும் ஆயத்தமானபோதுதான் தெரிந்தது தேவனை காணவில்லை என்று. பக்கத்திலிருந்தவர்களிடம் தனது அப்பாவை அழைத்துவருமாறு ரேணு கூறவும் அனைவரும் தேவனைத் தேடினார்கள். அப்போதுதான் தேவன் தனது கூடுதலான கடன் தொல்லை யாலும் மகளுக்கு விருப்பமில்லாத திரு மணத்தை நடத்தியதாலும் பின்புறமுள்ள ரூமில் கடிதமொன்றை எழுதிவிட்டு நஞ்சு குடித்து மரணத்தைத் தழுவியிருந்தார்.
ரேணுவால் அதிர்ச்சியைத் தாங்கமுடிய வில்லை. இந்நிலை கண்ட ராதிகாவோ திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணத்தை வரவேற்றாள். யாருக்காக தனது கனவை உடைத்து திருமணம் செய்துகொண்டாளோ அவர்களது திருமண நாளிலே இழந்ததை நினைத்து தினம் தினம் கண்ணிர் வடிக்கின்றாள் அந்த அப்பாவிப் பெண்.

Page 70
இலக்கியம்
உண்மையில் ருவ
தொய்வப் புல எழுத சான்றுகள் எ என்று சிலரும், ெ சிலரும் சொல்கின் பிறந்ததாகவும் சில
அவர் கி.மு.31 இந்த வருடத்துடன் பிறந்த ஆண்டை ஆ பிரித்து பயன்படுத்
வள்ளுவர்
 
 
 
 
 
 
 
 
 

ள்ளு வர் வாழ்ந்தாரா?
வர் திருவள்ளுவரைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்பு துவுமே நம்மிடமில்லை. அவர் மதுரையில் பிறந்தார் சன்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்தார் என்று றனர். அவர் ஆதி - பகவன் என்ற பெற்றோருக்குப் ர் சொல்கின்றனர். ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார். திருவள்ளுவர் பிறந்து * 2045 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ் மக்கள் அவர் ஆதாரமாகக் கொண்டு தி.மு, தி.பி. என்று காலத்தைப் துகிறார்கள். ஒரு கிறித்தவர், அவர் ஒரு சமண மதத்தவர், அவர் என்றெல்லாம் அவரின் குறட்பாக்களில் இருக்கின்ற ந்துக்களை வைத்துக் கொண்டு எல்லோருமே சொந்தம் கொண்டாடுகிறார்கள். திருக்குறளில் உள்ள கருத்துக்கள் அனைவருக்கும் பொருத்தமானதாகவும் அமைந்துள்ளது. அதனால்தான் திருக்குறளை உலகப் பொதுமறை என்று சொல்லப்படுகிறது.
பொன்னும் பொருளும் நிறைந்த மூட்டை ஒன்று கேட்பாரற்று இருந்தால், எல்லோருமே அதை உரிமை கொண்டாட நினைப்பார்கள். வள்ளுவரின் தோற்றமும் கூட கற்பனையாக வரையப்பட்டது தான். அவருக்கு வாசுகி என்ற மனைவி இருந்ததாகச் சொல்வதற்கும் சான்றுகளே இல்லை.
மதுரையிலே தமிழ் அரசர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர். மூன்று சங்கங்கள் இருந்தன. கடைசியாக இருந்த சங்கம் கி.மு. 300க்கும் கி.பி. 250க்கும் இடைப்பட் டது. அப்போதுதான் திருக்குறள், புலவர்கள் நடுவிலே பாடி அறிமு
கம் செய்யப்பட்டது.
இ
ம து  ைர  ைய ஆரியப்படை கடந்த நெடுஞ் செழியன் என்ற பாண்டிய மன் னன் அன்று ஆட்சி புரிந்து ள் ளா ன் . கி  ைட க் கி ன் ற செய்திகளையெல் லாம் இணைத்துப் பார்க் கின்ற போது,

Page 71
வள்ளுவர் என்ற மனிதர் இருந்தார் என்பதும், அ திய நூலே திருக்குறள் என்பதும் உறுதியாகிறது. ஆனால், அவரைப் பற்றிய அத்தனை செய் அழிக்கப்பட்டுள்ளன. வள்ளுவர் காலத்துக்கு இருந்த புலவர்களைப் பற்றியெல்லாம் சா இருக்கிறபோது, இவரைப்பற்றி எதுவும் இல் இருப்பது வியப்புதான்.
அவர் கற்பனையான கடவுளர்கள் எவரையு வில்லை. சாதி பிரிவினையையும், விலங்குகளை யிட்டு நடத்தும் வேள்விகளையும் எதிர்த்தவர். பேசாமல், களவு செய்யாமல், நாகரிகமுடன் வா ணிைனார். அனைவரையும் கற்கும்படி வலியுறுத்தி இயற்கையை நேசித்தார். குடும்ப வாழ்க் முறையாகவும் பண்புடனும் பயன்படுத்தும்படி க ஆட்சி செய்கிறவர்கள் மனித நேயத்துடன் வேண்டும் என்று விரும்பினார். இக்கருத்துக்கவே
எழுதிய 1330 குறட்பாக்களில்
១_6Traff.
魏 o(U5 LIIT திருவள்ளுவர், வள்ளுவன் என்ற பெயர்களில் தாழ்த்தப் * பட்ட மக்களிடையே சில ←ቌቦD உட்பிரிவுகள் இருக்கின்றன. Gu, இவர் தொன்மையான தமிழ்க் குடியைச் சேர்ந்தவர் என்ற வல் கருத்து அன்றைய புலவர்களுக் Glgen கும் இருந்துள்ளது என்பதை காலம் காலமாய் வழங்கி வரும் சாதி சில கதைகளும், கி.பி.1050இல் பெறக்க எழுதப்பட்ட 'திருவள்ளுவ நூல்கை மாலை' என்ற நூலில் உள்ள வள்ளும் சில பாடல்களும் தெரிவிக் வாழ்வி கின்றன. என்பது அக்கதைகளில் ஒன்று இது திருக்கு தான். ஆனால், வள்ளுவருக்கும் திருவல் பிற புலவர்களுக்கும் இடையே அழுத்த ஏதோ ஒரு வகையான மோதல் 32G). நடந்துள்ளது என்பதை மட்டும் நிமிர புரிந்துகொள்ள முடிகிறது. அறிவிய சாதி, மதக் கருத்துக்களை அப்பெ எதிர்த்து பல குறட்பாக்களை லும், சி எழுதியுள்ளார் திருவள்ளுவர். எழுதிய அதை சுட்டிக்காட்டும் வகையிலே வழங்கி 'திருவள்ளுவ மாலை'யில் உலகின சில பாடல்கள் உள்ளன. அதில் பாரதிய
170 ஒளிஅரசி

61/7 61(Լք அவர்
திகளும் கற்பனையான முன்பு கடவுளர்கள் ன்றுகள் 滋 嫩 }ក្រោល LD) ଶ୍ରେ’ରJøy',Ավն) @ Dé
வில்லை. சாதி ம் ஏற்க ாப் பலி பிரிவினையையும், பொய் விலங்குகளை பலி ழ எண் 豪 尊 灘 @TT. யிட்டு 5 الت تنهاD gö}<写○エ)」 வேள்விகளையும் கூறினார். 徽 6. 獻 இருக்க எதிர்த்தவர். ா அவர்
'L_ග්o:
றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையைப் 1ற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் -
ஏட்டை எழுதி லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச் ல்லிடினும் ஆற்றல் சோர்வின்று
, மத சூழ்ச்சிகளை யாரும் அறிந்து தெளிவு கூடாது என்று ரிக், யசூர், சாம, அதர்வணம் என்கிற ளை ஆரியர்கள் மறைத்துவிட்டார்கள். ஆனால் வரோ அந்த நூல்களுக்கு எதிராக மூன்று வகையான ன் நெறிகளைச் சொல்லும் திருக்குறளை எழுதினார் தான் இப்பாடலின் பொருள். இக்கருத்துக்களையும், றளையும் படித்து புரிந்து கொள்ளும் போது, ாளுவர் சமூக சீர்த்திருத்த அறிஞராக மனதில் மாகப் பதிந்துவிடுவார்.
க மக்களின் முன் தமிழர்கள் பெருமிதமாக நெஞ்சம் நிற்கும் படி செய்த மாமனிதர் திருவள்ளுவர். பல் கண்டுபிடிப்புகளாலோ, அரசாண்டதாலோ அவர் ருமையை உருவாக்கித் தரவில்லை. தன் அறிவா ந்தனையாலும் உருவாக்கித் தந்திருக்கிறார். அவர் திருக்குறள் அப்பெருமையை தமிழர்களுக்கு யிருக்கிறது. இதனாலேயே வள்ளுவர் தன்னை சிற்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்றார்
f育。
தீபாவளி மலர் 2014

Page 72
OOKVI
IMPORTERS, EXPORTERS
#126/10A JAYASO (m) 49471444 1234, (E) bookvin Sril
■ 伍园町
வாழ்க்கை வரலாறு அரசியல் வரலாறு அறிவியல் இலக்கியம் எமது புத்தகங்களை விற்பனை செய்ய ஆர்வமுள்ள முகவ சிறியோர் முதல் பெரியோர் வரை படிக்க கூடிய பல தலை
: Nelliyady Chicamparaplai Book De Chunnagam - Thurikka Book Depot
Jafna
Fawn: A Bookshop
Killinochi : Pillayar Book Shop Wavuniya: Arivalayam Trincomalee: Happy Book Shop Batticoloa United Book centre
Raja Book Centre
அடுத்த இதழில்.
எழுதும்
O
ರು!
நெடுந்தொடர்
@II
 
 
 
 
 
 
 
 
 
 

N PVT. LTD
SELLERS & PUBLISHERS OF BOOKS DRITA MAWATHA HAPUGODA,KANDANA,
ர்கள் எம்முடன் தொடர்பு கொள்ளவும். u ji i u கம் )
ப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்கு. அறிவுத் தேடலுக்கு.
Negombo Colombo Wellawatte Cordova Book Shop 蠶 를 Windsor Book Shop
출 Poobalasingam book depot 三三ー -Shri Ram Book Centre
A Your Printing Neends.
I Digital offset Printing | Տորենց տերոց Pe
is is ※ gia Earne
5O154 Janpetah Street Colombo - 13. el = 01112 447 399 / E-mail - prodigital printing@ymai.COM

Page 73
இஜோதிர் வித்யா ரத்னா V. A. சிவராக
1st N
==
மேஷம் : வெளியூர்ப் பயணங்கள் அடைய முடியும். புதிய முயற்சிகள் நன்றாக இருக்கவேண்டியது அவசிய தன்மை, காலாவதியாகும் திகதியை யும் ஏற்படலாம். எதிரியின் அச்சம் நன்று. பொறுப்பின்றி பணமோ, நகை தலால் திருமணத்துக்கு விருப்பம் கள் ஏற்படலாம். ஆவணங்கள் தவறி
இடபம் : பணக்கொடுக்கல் வா கசப்பையும் எதிர்பாருங்கள். காலால் தேகநலம் பாதிக்கப்படும். பிள்ளை பவ்வியமான முறையில் திருத்தப் அறிகுறி கண்டு மகிழ்ச்சியடைவ பெற்றோருக்கு வெளியூர் செல்லு காணப்பட்டதால் வாடிக்கையை
கையெழுத்தை வைத்து பெரும் ே
மிதுனம் : வெளியூர்ப் பயணம் ப கையை எதிர்பார்க்கலாம். புதிய மனை ரின் தேகநலன் மேம்படுவதால் பதகள் கட்டையாவதுபோல் செய்தொழிலி அனுதாபக் கடிதங்கள் குப்பைக்கூ6 பார்த்த இலாபம் தராது போய்விட பயணங்கள் ஏற்படும். மார்புச்சளி ே கண்டிக்க - தண்டிக்க வெளிக்கிட்டு
கடகம் : மலைபோல வரும் சே தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங் புதிய விடயங்களில் தடம் பதிக்கவும் கள். தம்பதிகள் மத்தியில் ஏற்படும் உதவப்போய் உபத்திரவத்திலும் வீன் யுண்டு. துணையின்றித்தனித்துச் செ6 தால் அச்சம் அகன்றுவிடும். நீர்க்க குழந்தைப் பாக்கியம் இன்மையால்
சிங்கம் நல்ல குருநாதன் ஆரம்பத்தி விடுவார். பிறர் உதவினால் மட்டுமே ெ கண்டாலும், காணாததுபோல் சென்றத ஏற்படுவதால் கொண்டாட்டத்துக்கு ெ
கைகழுவிவிடல் நன்று. நோய் நீங்கின சயனிப்பதை முதியோர்கைவிடவும்.த. படும் அண்ண்னாலும் வல்லமை பே
கன்னி : புதிய இடத்தில் வியாப பாக இருக்கும். முரண்படும் துணை கிட்டியபோதிலும் பாவிக்க பெற்ே உறவு சுமுகநிலைக்கு வந்துவிடும். லாம். கல்விப் பெறுபேறு பாதிக்கப் தாரண வேகத்தைக் கைவிட்டால் வி களுக்குப் பிரமுகர்களின் சிபாரிசு அயலவர்களால் விவாகம் நிறை( நடவடிக்கைகளால் வேதனைகள் ெ
72 ஒளிஅரசி தீபா

ஒக்டோபர்
சற்றுத்தடைதாமதங்களை ஏற்படுத்தியே இலக்கை ஆரம்பிக்க விரும்பினால் நடப்பு மகா திசாபுத்தி பம். புதியன கொள்வனவு செய்யும்போது நம்பகத் யும் பாருங்கள். காதலில் சோதனையும், வேதனை அகன்றுவிடலாம். சர்ப்பக்கடி பற்றி அவதானம் நயோ கொடுக்கவேண்டாம். பெற்றோரின் வற்புறுத் தெரிவிப்பர். பூப்படைதல் முதலான சுபகாரியங் பிப்போகும் அபாயம் பற்றி விழிப்பாக இருங்கள்.
ங்குதலால் சகோதர உறவில் விரிசலையும், மனக் பதியான மருந்து வில்லைகளை உட்கொள்வதால் களின் ஒவ்வாத நடவடிக்கையை கண்டிக்காமல் பாருங்கள். குழந்தைப்பேறு ஏற்பட்டதற்கான சீர்கள். பிள்ளைகளின் அழைப்பின் பிரகாரம் ம் யோகமுண்டாகும். கணக்கில் தில்லுமுல்லு முறித்துக்கொள்வர். வெற்றுக் காசோலையில் மாசடிகளுக்கு உட்படவேண்டாம்.
ற்றிய இனிய செய்தி கிட்டும். புதிய ஜீவனின் வரு ன அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பெற்றோ ரிப்பு நீங்கும். உடையவன் பாராவிட்டால் ஒரு முழம் ல்ெ கவனஞ் செலுத்துங்கள். இடமாற்றம் பற்றிய டைக்குள் போடப்படலாம். கால்நடைகள் எதிர் லாம். தொழில் காரணமாக அடிக்கடி உள்ளூர்ப் நாய் தொடர்ந்தும் வருத்தலாம். மாணவர்களைக்
தி பெற்றோருடன் முரண்பட நேரிடும்.
தனைகள், வேதனைகள் கடுகாகிப்போக இஷ்ட கள். கிரகநிலைகள் ஜாதகத்தில் நன்றாக இருப்பின் ம். மனை, தொழில், நாடு மாற்றத்தை எதிர்பாருங் சந்தேகக்கோடு சந்தோஷத்தைக் கெடுத்துவிடும். ண் சிக்கலிலும் மாட்டுப்படவேண்டியதான நிலை ல்லவேண்டாம். பிதாவின்நாட்பட்ட நோய் நீங்குவ கண்டம் பற்றி மிகமிக விழிப்பாக இருக்கவும்.
தத்தெடுக்கும் கைங்கரியத்தில் ஈடுபடல்.
நில் வருத்தினாலும் பின்னர்நன்மைகளையே அளித்து வெளியூர்ப் பயணம் பற்றி முடிவெடுங்கள். எதிரியைக் 1ல் பிரச்சினை அற்றுவிடல். சுபகாரியம் எதிர்பாராமல் செலவழிக்கத்திண்டாட்டம் ஏற்படும். மனைவியின் பெருத்த மோசடிநீங்கிவிடும். புதிய அறிமுகத்தைக் தரியமும் வீரியமும்தக்கவைக்கும். இரவில் தனித்து ன்பங்கைக் கேட்கும்தம்பியலும், தம்பியுடன் முரண் சும் மனையாளாலும் கவின்நிலை கெட்டுவிடும்.
ார நிலையம் திறக்க முற்படல், பயணம் தித்திப் வியைக் கைவிட முடிவுசெய்வர். வாகனயோகம் றோர் தடைவிதிப்பர். முரண்பட்டிருந்த மாமன் நோயின் உபாதை நீங்க சத்திரசிகிச்சை ஏற்பட பட்டதால் வெளிநாடு செல்ல முற்படுவர். அசா பத்தினின்றும் தப்பிவிடலாம். கெளரவப் பதவி ஏற்படும். கோள் குண்டலம் மேற்கொள்ளும் வேறாது இழுபடும். பிள்ளைகளின் ஒவ்வாத கெளரவக் குறைவு ஏற்படும்.

Page 74
மாத இராசிபலன்
துலாம் : சொத்துரிமைப் பங்கீடு சம்பந்தமா மிடையே வாக்குக்கலகம் தோன்றும். நட்டம் கார வெளியூர் செல்லத்திட்டமிடுவர். மேலதிகாரிகளுட முன்னேற்றத்துக்கு ஆப்பு வைக்கப்படும். திருமண இருக்கும் முதிர்க்கன்னிகளை எண்ணிய பெற்றோர் முடிவாகும்நிலையில் காணப்பட்ட விவாகம் அப்படி எதிரி உறவுக்குக் கைகொடுப்பார். புதுயுகம் பிறக்க தே விட்டு சேமிப்பில் கவனமெடுங்கள். புதிய ஒப்பந்தங்
விருச்சிகம் : முன்னேற்றப்பாதை அகலவிரிய கி வெளியூர்ப்பயணயோகத்தைக் கைநழுவவிட வேண் வசந்த காலம் பிறக்கவைக்கும். முகம் பார்த்து வெளி மூலம்துயர்அகன்றுவிடும். தொலைந்த ஆவணங்கள்ட பிதாவின் தேகசுகம் திடீரென பாதிப்படையலாம். காரிய சித்தி தக்கவைக்கும். புதிய மனைகோல ஏற்ற குழந்தைப் பாக்கியம் கிட்டிய அறிகுறிகண்டு உவை வேளை கொண்டாட்டத்துக்குப் பணம் தேடி ந
தனு: ஏழரைச் சனி விரைவில் ஆரம்பிப்பதால் எடுங்கள். வெளியூர்ப்பயணம் பிறர்கருணைகாட்டின காலசர்ப்பதோஷம் உள்ளவர்கள் நாகவிளக்கை எரித் நிறைவேறும். தொடர்ந்து நோய் வாய்ப்படும் பிள் வாங்கவும். சூரியன் செவ்வாய் ஒரே கூட்டில் இரு திருமணம் அமங்கலி யோகத்தை ஏற்படுத்தும். பி முற்படுகையில் பொறுப்பைக் கேளுங்கள். கட செய்வதைக் கைவிடவும். பிரயாணத்தின்போது எதிர்ப்புகள் அடங்கிவிட தெய்வ வழிபாட்டை
மகரம் : கன்னியரின் ஆறாத கண்ணிர்வற்றிவிட படும். சொத்துப் பிரச்சினை சுமுகமான முடிவை இன்ப வெள்ளத்தில் நீச்சலடிக்கும். புதிய முயற்சி சகோதரர்கள் உதவிக்கரம் நீட்டுவர். செய்தியாளர்களு சோதனைக்காலமாகும். தொழில் இரகசியத்தைப் பிற மில்லாத சாதகங்களைப் பொருத்தி விவாகம் செய்வு சிக்கவேண்டி நேரிடும். ஒய்வுபெற்ற பின்னரும் பு சகுன சாத்திரங்களில் நம்பிக்கை வைத்துச் செய
கும்பம் : இந்த மாதம் சோதனைக்குமேல் சோ வழிபாட்டின் மூலம் சாதனைகள் புரிவீர்கள். ஒன்ை களின் கருத்துகளையும், கேட்டுச் செயற்படுங்கள் அவதிப்படவேண்டாம். எதிரிகளின் தொல்லைகளால் அரசியல்வாதிகளுக்குப் புதிய பொறுப்புகள் சுமத்த களைப் பூர்த்திசெய்யும் நிலையும் ஏற்படும். உங்க ஈடுபட்டு பணம் கறக்கும் முயற்சிகளில் ஈடுபடலா இறங்கிவிடலாம். காணாக்கடி மற்றும் விஷப் பிரான
மீனம் : புதிய பதவிகள் தேடிவரும். இழுபட்( என்பன போன்ற நிறைவேறும் சந்தர்ப்பம் ஏற்படு யோகம் மற்றும் புதியன கொள்வனவு செய்யல பட்ட பிரிவினைத் துயர் ஏற்படும். சிறைப்பயன முகங்கொள்ளவேண்டி நேரிடும். உங்களின் நட வருவதால் ஆபத்தில் சிக்கிக்கொள்ளது விழிப்பாகஇ உறவைப் பேணுங்கள். சிலருக்கு இரண்டாந்தரம் ( வதுவை செய்யவும் நேரிடலாம். வாக்குவாதத்
73 ஒளிஅரச்

த பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கு ணமாக செய்தொழிலைக் கைவிட்டு ன்சுமுகமான உறவைப் பேணாவிடின் எமாகாது கண்ணிரும் கம்பலையுமாக வாட்டமடைவர். பேதம் காரணமாக யேநின்றுவிடும். தொல்லை கொடுத்த டிவரும். ஆடம்பரச் செலவுகளைக் கை களில் கைச்சத்திடும் யோகம் ஏற்படும்.
ரகநிலைகள் சாதகமாக இருக்கின்றன. டாம். பிதா மற்றும் மூத்த சகோதரியால் ரியூர்ப் பந்தபாசங்களுடன் கதைப்பதன் ற்றியதகவல்கிட்டிகைக்குவந்துசேரும். நட்பு வட்டாரங்கள் விரிவடைவதால் இடத்தைத் தேட சோதிடரை நாடுதல். கை கொள்வீர்கள். சுபகாரியம் ஏற்பட்ட ண்பரை நாடவேண்டியிருக்கும்.
சேமிப்பில் செய்தொழிலில் கவனம் ால் மட்டுமே செல்ல முயற்சி எடுங்கள். து வணங்கிவர விவாகம் துரிதகதியில் ளையின் ஆயுள் விருத்திக்காக விற்று ப்பின் பெண்மணிகளுக்கு இளவயது றருக்குப் பணம், பொருள் கோடுக்க ல் மார்க்கமாக வெளியூர்ப் பயணம் து ஆவணங்கள் தவறிப்போகலாம். க் கைவிடவேண்டாம்.
திருமணம் நடைபெறும் திகதி குறிக்கப் ஏற்படுத்தும். காதல் ஏற்பட்டு மனம் தொடங்குவதற்கு பிதா மற்றும் மூத்த நக்குத்தத்தமது தொழிலை முன்னிட்டு ருக்குக் கசியவிடவேண்டாம். பொருத்த பிக்க முயல்வீர்கள். இலஞ்சவலையில் ள்ே நியமனம் பெற அழைப்பு வரும். ற்பட நன்மைகள் ஏற்படும்.
தனை ஏற்படும்போது இஷ்டதெய்வ றை ஆரம்பிக்க முன்னர் அனுபவசாலி ஆழமறியாது காலைவிட்ட பின்னர் அச்சஉணர்வும், பதகளிப்பும் ஏற்படும். ப்படுவதுடன், மக்களின் அபிலாஷை ளை வசியமாக்கும் செயற்பாடுகளில் ம். முதலாளி, தொழிலாளர்நிலைக்கு ணிகளால் தேகசுகம் பாதிக்கப்படலாம்.
டுக்கொண்டிருந்த விவாகம், பயணம் ம். மாமனின் கருணையால் வாகன ாம். பயணம், தொழில் சம்பந்தப் ாம், தடுப்புக்காவல் என்பனவற்றை வடிக்கையைச் சிலர் கண்காணித்து ருங்கள். மேலதிகாரிகளுடன்சுமூகமான முடிக்கவும், அயல்நாட்டு பெண்களை நால் நட்புக் கெட்டுவிடலாம்.
தீபாவளி மலர் 2014
حصہےے۔
Oce
ܒܐ
به مصر
p
! » À à !

Page 75
மருத்து க் கேள்வி - பதில் இவைத்தியர் ச
கே: வயது 25. இன் கொள்ளவுள்ளேன். திரும பெற நானும் எனது வருங் அதுவரை நாங்கள் பின்ட களைக் கூறமுடியுமா?
ப; குறைந்தகால குடு டவை. அதில் ஆண்களுக் 616Šip CONDOMS 9 LIGu இந்த உறையை அணிந்து யினுள் செல்வது தடைப் அந்தக் காலவேளைகளில் நேரத்தில் - மனைவியை வி மாவது - செளகரியமல்ல ஓங்கும் வேளையில் பிரிந்து பட்ட உறையை தமது பிறப் படுவதில்லை என்பதனால்
பெண்களுக்குக் கருத்த
கருத்தடை புதிய சாதனங்க
இவையாவும் ஹோர்பே உபயோகப்படுத்தப்படுகி வழிமுறைகள் என்பவற்றி தும் உடலமைப்பு, உடல் முறையைத் தேர்ந்தெடுட் பெறவேண்டியது அவசிய
கருத்தடை மாத்திரைக குறிப்பிட்ட நேரத்தில் எ(
*
விடின் சில வேளைகளில் எதிர்பாராமல் கருத்தரிப்பு பெறலாம். ஊசி மருந்து மூன்று மாதத்துக்கு ஒரு ஏற்றவேண்டிய வழிமுறை. MPLANT ஒரு மிகச்சிறி சிகிச்சை மூலம் சுரத்தின் மேற்பகுதியில் பதியம் ( படும். அந்த சாதனம் உடலில் இருக்கும்வரை கரு நடைபெறாது. இந்த முறைகள் எல்லாம் பெண் ஹே களோடு சம்பந்தப்படுத்தப்பட்டவை என்பதால் சில களுக்கு மாதவிலக்குப் பிரச்சினைகள், உடல் பருவம் அல்லது மெலிதல் போன்ற பக்க விளைவுகளைத் எனினும், இவை சரியான மருத்துவ ஆலோசை கைக்கொள்ளப்படும்போது பலன் கிடைக்கும். நீங்கள் உங்கள் கணவனுடன் கலந்தாலோசித்து ப ஆலோசனையுடன் உகந்த வழிமுறையைப் பின்பற் கருத்தடை முறைகளை பெண்கள் பின்பற்றுவதா டுத்தன்மை ஏற்படும் என்பதில் உண்மையில்லை. இம்முறையை கைவிட்ட பின்னர் ஒரு சிலருக்கு ஏற்பட காலதாமதம் ஏற்படுவதுண்டு.
திருமதி. பாத்திமா, அக் கே: வயது 30. கர்ப்பமாக இருக்கின்றேன். கர் மருத்துவ பரிசோதனைக்குப் பிரபல பிரசவ ை ஒருவரிடம் சென்று வருகின்றேன். இப்பொழுது காலம் எனக்கு 9 மாதம். ஆனால், இது தவிர, எனது
ஆரம்பித்த காலத்திலிருந்து 3 தடவைகளுக்கு
74 ஒளிஅரசி தீபா
 
 

ប្រៀលថ្ងៃ
செல்வி. பிரியா, சுன்னாகம், எனும் சில மாதங்களில் திருமணம் செய்து 1ணமாகி இரு வருடங்கள் கழித்தே குழந்தைப் கால கணவரும் திட்டமிட்டுள்ளோம். எனவே, 1ற்ற உகந்த குடும்பக்கட்டுப்பாட்டு வழிமுறை
ம்பக்கட்டுப்பாட்டு வழிமுறைகள் பலதரப்பட் கு ஒரு வழிமுறைதான் உள்ளது. அது ஆண் உறை ாகிக்கும் முறை. குடும்ப உறவுக்கு முன்னர் ஆண் உறவுகொள்ளும்போது விந்தணுக்கள் சூழப்பை படுத்தப்படும். ஆனால், உணர்ச்சிகள் பெருகும் - குடும்ப உறவுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் ட்டெழுந்து ஆணுறை அணியதயாராவது - சங்கட ாதது என்பதாலும், பெண்கள் தரப்பில் உணர்ச்சி எழுவதும் செயற்கையான பொருளால் தயாரிக்கப் பு உறுப்பினுள் செலுத்துவதும் அதிகமாக விரும்பப் b இந்த முறையைப் பலர் பயன்படுத்துவதில்லை. டை மாத்திரைகள், கருத்தடை ஊசி மருந்துகள், ள் எனப்படும் MPLANTS போன்றவை உள்ளன. மான்களைக் கட்டுப்படுத்தும் பயன்பாட்டில் ன்றன. இவற்றை உபயோகிக்கும் காரணங்கள், லும் வேறுபட்டவை. மேலும், ஒவ்வொருவரின ல் சூலம் என்பவற்றைக் கருத்திற்கொண்டு எந்த பது என்பதற்கு வைத்திய ஆலோசனையைப் Iம்.
ள் மாதவிலக்கு முடிந்த மாதத்திலிருந்து தினமும் டுக்கப்படவேண்டும். காலமும், நேரமும் தவற
Η Φ6δ)L
5Lഞഖ ய சத்திர ஸ்கேன் பரிசோதனை நடந்து வைக்கப் விட்டது. எனக்கோ, எனது நத்தரிப்பு கர்ப்ப நிலைக்கோ எதுவித பிரச்சினையும் இல்லாமல் ல பெண் இத்தனை ஸ்கேன் (SCAN) மடைதல் பரிசோதனை ஏன்? பல தட தரலாம். வைகள் ஸ்கேன் பரிசோதனை னயுடன் செய்வதால் கர்ப்பத்தில் உள்ள எனவே, குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு மருத்துவ ஏற்படுமா? றவும். ப; முதலில் ஸ்கேன் பரி ல் மலட் சோதனையால் கர்ப்பத்துக்கோ, ஆனால், குழந்தைக்கோ, தாய்க்கோ அல் ñi'i llib லது உள்ளுறுப்புகளுக்கோ எது வித பாதிப்பும் ஏற்படாது என்ப தைக் கூற விரும்புகின்றேன். குரணை. எக்ஸ் கதிர் பரிசோதனை என் iப்பகால பது நல்ல ஸ்கேன் பரிசோதனை. வத்தியர் எக்ஸ் கதிர் (X RAY) பரிசோத கர்ப்ப னையின்போது உபயோகிக்கப்ப asi b டும் கதிரியக்கம் (RADATION) Gшоартф திசுக்களில், கலங்களில் பாரிய

Page 76
மாற்றங்களை அடிக்கடி பரிசோதனைகள் நடத்தப்படும்போது ஏற்படுத்தும். முக்கிய மாக அவசியமின்றி கர்ப்ப ஸ்திரிகளை எக்ஸ் கதிர் பரிசோதனைக்கு உட்படுத்தக்கூடாது என்பது மருத்துவ நியதி. எக்ஸ் கதிர்கள் கருப் பையில் வளரும் குழந்தைகளின் உறுப்பு களைச் சேதப்படுத்தும்.
ஆனால், ஸ்கேன் பரிசோதனை அப்படிப் பட்ட ஒன்றல்ல. இங்கு ULTRA SOUND எனப்படும் ஒலி அலைகளே உபயோகப் படுத்தப்படுகின்றன. இதனை வெளவால்கள் பறக்கும்போது ஒலி அலைகளை ஏற்படுத்தி தடைகளை அறிந்து பறப்பதற்கு ஒப்பிட aortub. 3) 53, 91606.03,67. ULTRA SOUND மனதை ஒலி அலைகள் பட்டுத் தெறித்து உறுப்புகளின் அமைப்பை மருத்துவர் அறிந்து கொள்ள உதவும். இனி கர்ப்பகாலத்தில் இத்தனை ஸ்கேன் பரிசோதனைகள் ஏன் என்பதை அறிந்துகொள்வோம்.
கர்ப்பமடைந்ததும் TVS அல்லது TRANS VAGINAL SCAN எனப்படும் பிறப்புறுப்பி னுரடாக சிறிய ஸ்கேன்சாதனத்தைச் செலுத்திப் பார்க்கும் பரிசோதனை நடைபெறும். அநேக மாக முதல் இரண்டு கர்ப்பகால மாதங்களில் இது நடைபெறும். இந்தப் பரிசோதனைகளில்
L
75 ஒளிஅரசி தீப
 
 

ர்ப்பம் சரியான முறையில் கருப்பைச் சுவரில் பதிந் 1ள்ளதா என்பதையும், கருப்பை சுற்றுச்சூழலில் ள்ள சினைக்குழாய், சூலகம் என்பவற்றின்நிலை யயும் அறிந்துகொள்ளலாம். இதன்பின்னர் கருப்ப ாலம் 20 கிழமைகளில் நடைபெறும் ஸ்கேன்பரிசோ னை கருவின் வளர்ச்சி கருக்காலத்தோடு பொருத்த ாக இருந்துள்ளதா என்பதையும், கருவின்தன்மை ல் ஏதாவது பிரச்சினைகள் உள்ளதா என்பதையும் ாட்டும். இதனை DATING SCAN என்பார்கள்.
இதன்பின்னர் ANOMALYSCAN எனப்படும் கரு பின் வளர்ச்சியில் குறைபாடுகளை அறிதல் பொருட்டு கேன் செய்யப்படும். பின்னர் அவசியம் ஏற்படின் ல்லது மருத்துவ நிபுணர் கர்ப்பகால பரிசோத }னயில் தாயிடம் பிரச்சினைகள் இருந்தால் 32 பூவது கிழமையிலும், அடுத்ததாக பிரசவ காலத் க்கு அருகில் சுகப்பிரசவம் ஏற்பட வசதியுண்டா ன்பதை அறிவதற்கும் மேலும் இரண்டு அல்லது மன்று ஸ்கேன்கள் எடுக்கப்படும்.
நவீன உலகில் கர்ப்பிணித்தாயின் பராமரிப் க்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதன் காரண ாகத்தான் இத்தனை ஸ்கேன் பரிசோதனைகள். ங்கள் இதுபற்றி அஞ்சுவதற்கு எதுவுமில்லை.
செல்வி. கார்த்திகா, மட்டக்களப்பு. கே. வயது 18. எனது கால் பெருவிரல் நகம் சதை னுள் வளர்ந்து வீக்கத்தையும், வலியையும் தரு ன்றது. மருத்துவர் அந்த நகத்தைப் பிடுங்க வண்டும் என்கிறார். எனக்கோ பாதத்தின் அழகு தனால் போய்விடும் என்று பயப்படுகின்றேன். கத்தைப் பிடுங்காமல் சிகிச்சை செய்யமுடியுமா? ப; உங்களுக்கு ஏற்பட்டிருப்பது INGROWING OENAL என்ற பிரச்சினை. அழகுக்காக நகத்தை ட்ட கத்தரிப்பது, இறுக்கமான பாதணிகளை அணி து, ஈரலிப்பான சூழலில் வெறும் காலுடன்நடமாடு தைப் போன்ற காரணங்களால் இது ஏற்படுகின்றது. இதனால் நகம் வழக்கமாக வளரும் பாங்கினை ாற்றி குறுக்காக வளர்ந்து - சதையினுள் வளர்கின் து. இதனைத் தொடர்ந்து வீக்கம், வேதனை ற்றும் பங்கசு தொற்றுகள் ஏற்படும்.
ஆரம்பத்தில் பங்கசு கொல்லி (ANTIBIOTICS) ருந்துகள் உபயோகித்து தொல்லையும், வேதனை யயும், வீக்கத்தையும் குறைத்துத் தீர்வு காணலாம். னால், நோய் முற்றிப்போனால் சத்திரசிகிச்சைக் னத்தீர்வு அதிகம், நகத்தின் மற்றப் பகுதிகள் பழுது டாமல் இருந்தால் முழுநகத்தையும் கழற்ற வண்டிய அவசியமில்லை. WEDGEDSECTION ன்கின்ற முறையில் பாதிக்கப்பட்ட பகுதியை மற் ம் சுமுக வேர்வரை வெட்டி எடுத்து குணமாக்க ாம். நகத்தை வேரோடு பிடுங்கினால் ஒழிய புதிய 5ம் திரும்ப வளரும் என்பதால் நீங்கள் கவலைப் டவேண்டிய அவசியம் இல்லை.

Page 77
" கட்டுரை
சாமுத்திரிகா
ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும் என்று நம் முன்னோர் கள் வகுத்து வைத்துள்ளனர். இதை சாமுத்திரிகா லட்சணம் எனப் படுகிறது. எல்லா பெண்களுக்கும் சாமுத்திரிகா லட்சணப்படி எல்லா அவயங்களும் அமைவதில்லை. அமைந்தால் அது அதிஷ்டத்திலும் அதிஷ்டம் எனலாம்.
ஒர் இளம் பெண்ணுக்கு உச்சி முதல் பாதம் வரை உள்ள பகுதிகள் எப்படி இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் வகுத்து கூறியுள் ளனர். சாமுத்திரிகா லட்சணப்படி ஒரு பெண்ணுக்கு அழகு பாகங்கள் எப்படி இருக்க வேண்டும்? எனப் Llu Tiffa'r GLITLib.
1. கால், பாதம் : ஒரு பெண்ணின் பாதம் செந்தா மரைப் பூப்போன்று சிவப்பாக இருக்க வேண்டும். கால்களின் ஐந்து விரல்களும் பூமியில் பதிய வேண்டும். ஐந்துவிரல்களும் ஒன்றோ டொன்று பொருந்திய நிலையில் இருத்தல் வேண்டும். குதிகால் கொஞ்சம் அகலமாக மயிலிறகு போல் அமைந்திருக்க வேண்டும்.
பாதங்களின் பெருவிரல் நீண்டி ருந்தால் நல்லது. காலிலுள்ள நடு விரலுக்கு அடுத்த விரல் ஒண்டிருந் தால் செல்வச் செழிப்புடன் வாழ் வாள். குதிகாலின் மேல் வெள்ளை மச்சம் இருந்தால் மகிழ்ச்சியாக வாழ்வாள். மேலும் பிரதானமாக கெண்டைக்கால் பருத்து இல்லாமல் இருப்பது நலம். ஆணாக இருந்தா லும் பெண்ணாக இருந்தாலும் இடை குறுகி இருப்பது நலம் அதுபோல் இருப்பவர்கள் ஆரோக்கியமாகவும் யோகம் உள்ளவர்களாக (அதிர்ஷ்ட சாலியாகவும்) இருப்பார்கள்.
2. நெற்றி : சாமுத்ரிகா லட்சணத்தில் நெற்றி மிக முக்கியமான இடத்தில் உள்ளது. உயர்ந்த நெற்றி அறிவின் அடையாளம். கொஞ்சம் மேடாக
76 وoمیوی م
 
 
 
 
 
 
 
 
 
 
 

eot gieOoTtort Tits, CI) tregor.
இருந்தால் சிறப்பாக இருக்கும். றியின் பரந்து விரிந்த அமைப்பைவிட அதில் உள்ள 5ளுக்குத்தான் மிக முக்கியம். இரண்டு அல்லது கோடுகள் இருப்பது நலம். பலதரப்பட்ட சிந்தனை கொண்டவர்களாக இருப்பார்கள். அதற்குமேல் து நல்ல தற்கல்ல. வியின் அதாவது காதின் அமைப்பு பரந்து விரிந்து வேண்டும். செவி குறுக குறுக மனநிலையும் குறுகி ம், சிந்தனையும் குறுகலாக இருக்கும்.
தீபாவளி மலர் 2014

Page 78
3. கண்கள் : பெண்களின் கண்கள் சிவந்து நீண்டு அடிக்க மாவடு போல இருக்க வேண்டும். பாலில் வி போல கண்கள்துள்ள வேண்டும். கரிய விழிகள் ஒடியிருக்க வேண்டும். பெண்களுக்கு புருவப் போல் வளைந்திருக்க வேண்டும்.
உருண்டு திரண்ட கண்கள் யோகத்தின் ஆ என்று சொல்வார்கள். சற்றே உருண்டு திரண்ட அதற்காக ரொம்பவும் பெரிய விழிகள் அல்ல. என்று சொல்வார்கள் மருளக்கூடிய பார்வை வர்கள் கணவருக்கு ஏற்ற வராகவும் எல்லா இட மறை சிந்தனை கொண்டவராகவும் இருப்பார்க விழிகளில் சில அமைப்புகள் உண்டு.
உருண்ட விழி யோகம்; மருண்ட விழி கண6 தாக இருக்கும். பரந்த விழிகள் பிறரை எளிதில் தாகவும் பெரிய துறையில் பெரிய பதவியில் வராகவும் இருப் பார்கள். விழிகளைவிட விழித் முக்கியம். விழித்திரை வெள்ளையாக இருக்கி மஞ்சளாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டு விழியின் பின்னணி வெள்ளையாக இருந்தா திருட்டுத்தனம் செய்பவர்களாக இருப்பார்கள் சிவந்த விழித்திரையைக் கொண்ட பெண்க தெரியாதவர்கள் என்று சொல்வார்களே அதுே பார்கள். மஞ்சள் பின்னணியில் பரந்த விழியை ருப்பது கொஞ்சம் பயங்கரமானது. வாழ்க்கை ஏற்ற இறக்கங்களை சந்திப்பார்கள்.
விழி மற்றும் விழிப்பின்னணி இமைகள் பற்றி சொல்லப்படுகிறது. இமையில் இருக்கு அடர்த்தியாக இருக்கக்கூடாது. அவ்வாறு இரு குறைவு ஏற்படும். அடர்த்தி இல்லாமல் பரவி தால் ஆயுள் நிறைந்து இருக்கும்.
வளையக்கூடிய புருவங்கள் மிகப்பெரிய உட்காருவார்கள். இசையில் ஆர்வம் இருக்கும். முன் என்று சொல்லப்படும் கண்கள் உள்ளவர்க தந்தையில் யாராவது ஒருவர் இருக்கமாட்டா வயதிலேயே பெற்றோரில் ஒருவரை இழந்துவ உள்ளுக்குள் இருக்கும் கண்கள் கொண்டவர் அப்பா வியாக இருப்பார்கள்; பின்னர் இருப்பார்கள். 30 வயது வரை காசை செலவு பின்னர் பணத்தை சரியாக கையாள்வார்கள்.
4. மூக்கு : மூக்கு உயர்ந்து காணப்படுவது நலம். மூ அமைப்பு தான் முக்கியமாக சொல்லப்படுகிற நுனி கூராக இருந்தால் அதிபுத்திசாலி அரசாளு அமைச்சராதல் போன்ற யோகம் உண்டு.
எலியைப் போன்ற மூக்கு அதாவது லேசாக இருந்தால் காம உணர்வு அதிகமாக இருக்கும் ஒரு சிலருக்கு மூக்கின் நுனிப் பகுதி உருண்டு க அவர்கள் புத்திசாலியாக இருப்பார்கள். பயன்ப தூக்கி எறியும் குணம் இருக்கும் சந்தைப்
77 ஒளிஅர

ண் அகன்று, ழுந்த வண்டு
அடையாளம் விழிகள்தான் மான் விழி வ கொண்ட த்திலும் நேர்
GT. LD(5603TL
வருக்கு நல்ல கவரக்கூடிய அமரக்கூடிய திரை ரொம்ப றதா அல்லது ம், உருண்ட ல் அவர்கள்
ள் பிழைக்கத் போல இருப் பக் கொண்டி யில் பெரிய
போன்றவை கும் முடிகள் ந்தால் ஆயுள் பலாக இருந்
பதவியில்
ளுக்கு தாய் ர்கள். சிறிய விடுவார்கள். ர்கள் ரொம்ப செழிப்பாக
செய்துவிட்டு
0க்கின் நுனி து. மூக்கின் ரும் யோகம்
தூக்கிய படி 5@ Luff=6. ாணப்படும். டுத்திவிட்டு படுத்துதல்
சி தீபாவளி மலர் 2014
துறையில் சிறந்து விளங்குவார்கள்.
5. கூந்தல் : பெண்களின் கூந்தல் நீண்ட கருங்கூந்தலாக இருக்க வேண்டும். பெண்களின் கூந்தலில் மலர் மணம் வீசவேண்டும். கோர முடி குடி யைக் கெடுக்கும்; சுருட்டை சோறு போடும் என்று சொல்வார்கள்.
அதாவது, சுருட்டை முடி கொண்டவர்கள் எல்லோரையும் வைத்து சோறு போடுபவர்களாக வும் சுற்றுத்தார், நண்பர்களை மிகவும் நேசிப்பவர்களாகவும் இருப்பார் கள். அரவணைக்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.
கோரை முடி கொண்டவர்கள் தாய் தந்தையை துன்பப்படுத்து பவர்களாகவும் குடும்பத்திற்கு கெட்ட பெயரை கொடுப்பவர்களா கவும் இருப்பார்கள்.
கலப்பினத்தில் திருமணம் முடிப்பார்கள். ரோமக் கால்கள் எந்த அளவிற்கு மென்மையாக இருக்கிறதோ அந்த அளவிற்கு வாழ்க்கை மென்மையாக இருக் கும். ரொம்ப துன்பப்படாமல் அமைதியாக வீட்டிலேயே இருந்த படி வாழ்க்கை நடத்தும் யோகம் கிட்டும்.
கடினமான மொரமொரவென்று இருக்கும் தலைமுடி உள்ளவர் களுக்கு கடினமான வாழ்க்கையாக இருக்கும். உழைத்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்படும். அவர் களது முடி போன்றுதான் வாழ் க்கையும் அமையும். 6. கைவிரல் : பெண்ணின் கைகள் கொழுத்த மீன் போல் சிவப்பாக இருத்தல் வேண்டும். கைவிரல்கள் பயித்தங் காய் போல் அழகாக காட்சிதர வேண்டும்.
7. கழுத்து : பெண்ணின் முகம் முழு நிலவுபோல ஒளிமிக்கதாக விளங்க வேண்டும். பெண்ணின் உதடுகள் உருண்டு திரண்டு பவளம் போலிருந் தால் அழகு. பெண்ணின் பல் வரிசை முத்துக்களைக் கோர்த்தது போல
வரிசையாக இருக்க வேண்டும்.

Page 79
(கோயில்கள் சுற்றுல உள்ளடக்க
மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் மதுரை மீ6 பம், சுசீந்திரம், கன்னியாகுமரி பகவதியம்மன் திருச்செந்தூர் தீர்த்தம் 22 புனித கிணறுகளில் நீராடல் பிள்ளையார்பட்டி விநா பேஸ்வரர் சுரங்கபாணி கோயில் தஞ்சை பெரிய கோயில் திருவாரூர், மாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில் வரத ராஜப் பெருமாள் கோயில், மாரியம்மன், திருவேற்காடு கருமாரியம்மன், பெங்களூர் சி பொருட்காட்சியகம், பிருந்தாவனத் தோட்டம், நந்திக்கோயில், சாமு ஊட்டி ஏரி திருக்கடையூர் அபிராமி திருப்பதி ஐம்பூதஸ்தலங்கள் ஆறுப பாபா அண்ணா, எம்.ஜி.ஆர் நினைவு சதுக்கங்கள் மெரீனா கடற் சென்னையில் ஒருநாள் பொருட்கள் கொள்வனவு செ 1. இருவழி விமானக்கட்டணம். 4.
(Return Air Ticket all taxes) 2. உயர்தரத்திலான மூன்றுநேர சைவ உணவு காலை 5. மாலை தேநீர் மற்றும் குளிர்பானங்கள். 6. 3. சுத்தமான குடிதண்ணிர் (Minaral Water)
e ouis In .
Schengen Visa Vaild for 艺 countries) ஐரேயிறநறனEaவில்
குறைந்த aíndio CUPG
D. No IELTS D.G.C.E A/L 3 Pass onlyD very low course fee محکمے >High Vísa Success rate DEnglish Medium D20 Hours Part time Allowed
26222, O-7730306
78 ஒளிஅரசி தீபாவளி
 
 
 
 
 
 
 
 

ஈ சியம்மன், அழகர் கோயில், ஆயிரம்கால் மண்ட இராமேஸ்வரம், இராமநாதசுவாமி கோயில், அக்கினி பகர் திருச்சி ருநீரங்கம், சமயபுரம் மாரியம்மன் ஆடிகும் கும்பகோணம், சீர்காழி சிதம் பரம், நடராஜர் காஞ்சிகள் திருவண்ணாமலை இரு சைலேஸ்வரர் மாங்காடு uOCMGm TTmmmt TS sTL alLlL luDm m S SLLLHmmmTL0LLS S smmTmmttC mTTTTLLS ண்டேஸ்வரி கோயில் ஊட்டி தாவர வியல் பூங்கா, டைவீடுகள் நவக்கிரக கோயில்கள் சென்னை சீரடி
(Attached Bathroom, Colour TV) முழு சுற்றுலாவுக்கும் குளிரூட்டப்பட்ட சொகுசு பேரூந்து. திருப்பதியில் VTP வரிசையில் சென்று சுவாமி தரிசனம்
செய்ய ஏற்பாடு செய்துதரப்படும். இருவழி விமான நிலையத்திற்கான கட்டணம், (Airport transport)
த்தியா ஜூவலர்ஸ் Nithiya Jewellers
Jewellery & Gem Merchants.
\ Vilastor&Rativo Cold
Acreation of Golden Craving for Gold
Writy levellery for Estay
f) Locoñ 2o14

Page 80
O/M/M ܐ ܓ
HAMEMORINPS Printers Planet
愛
A NA OFFSET PRINTIIN Suzhou Kings Wood Pri
pics." CUTTING ST ఔరాష్ట్రాల్లో " PCS Graphic Art
seo AM Sehoelers
FUKURA BLANKE | G#Â: Fujikura R
BLACK
Be ES ETr
Suppliers of Offset Plates, Machinary & All Other Pri
So. EG1, Central Road, Col.
79 | ஒளிஅரசி
 
 
 
 
 
 
 
 
 
 

S
inting ink co Ltd-China
ICK Products - Spain
G PAPERs
Shammer - Germany
CTS ubber Ltd. - Japan
COVERING SPRAY. Spain
Chemicas, inting Requi
9,

Page 81
விக்கல் வ
சாதாரணமாக நாம் சுவாசிக்கும்போது காற்றை உ இழுக்கிறோம். அப்போது மார்புத்தசைகள் விரிகி றன. மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் நுரையீரன ஒட்டியுள்ள உதரவிதானமும் அப்போது விரிகிறது
உடனே, தொண்டையில் உள்ள குரல்நாண்கள் தி கின்றன. அப்போது நுரையீரலுக்குள் காற்றின் அழு தம் குறைகிறது. அதேநேரம் நுரையீரலுக்குள் காற் செல்ல அதிக இடம் கிடைக்கிறது. இதனால் ந சுவாசிக்கும் காற்று, திறந்த குரல்நாண்கள் வழியா
தங்கு தடையின்றி நுரையீரல்களுக்குள் நுழைந்துவி கிறது. இதுதான் இயல்பாக நிகழும் சுவாச நிகழ்வு சில நேரங்களில், மார்புப் பகுதியில் உள்ள நரம்பு உதரவிதானத்தை எரிச்சல்படுத்தினால், அது மூை கட்டுப்பாட்டை மீறி, தன்னிச்சையாகத் திடீர் தி ரென்று சுருங்க ஆரம்பித்துவிடும். அப்போது கு நாண்கள் சரியாகத் திறப்பதில்லை.
அந்த மாதிரி நேரங்களில் நாம் சுவாசிக்கும் கா
நுரையீரல்களுக்குள் சென்று திரும்ப வேண்டும். அப்டே அந்தக் காற்று, புல்லாங்குழலில் காற்று தடைப( போது இசையொலி உண்டாவதைப் போல, தொ டையில் 'விக். விக்..” என்று ஒரு விநோத ஒலி எழுப்புகிறது. இதுதான் 'விக்கல்’ என்கின்றோம்
என்ன காரணம்?
வேக வேகமாக உணவைச்சாப்பிடுவது, மிகச் சூட சாப்பிடுவது, தேவையான அளவுக்குத் தண்டு
80 ஒளிஅரசி தீ
 

ருவது ஏன்?
ள் அருந்தாதது போன்றவை விக்கலுக்கு ன் முக்கியக் காரணங்கள். வலிநிவாரணி Ηβι) மாத்திரைகளைச் சாப்பிட்டாலும் விக்கல்
வரும். றக் இரண்டு நாட்களுக்கு மேல் விக்கல் ழத் தொடர்ந்தால், அது நோய்க்கான அறி று குறி. உதாரணத்துக்கு, இரைப்பையில் TLb அல்சர் இருக்கும்போது, சிறுநீரகம் கத் பழுதாகி ரத்தத்தில் யூரியா அளவு அதி
கரிக்கும்போது விக்கல் வரும். உதரவி தானத்தில் நோய்த்தொற்று, கல்லீரல் கோளாறு, நுரையீரல் நோய்த்தொற்று, குடல் அடைப்பு, மூளைக் காய்ச்சல், கணைய அழற்சி, பெரினிக் நரம்புவாதம் போன்றவற்றாலும் விக்கல் வரும்.
நிறுத்த என்ன செய்வது? மூச்சை நன்றாக உள்ளிழுத்து அடக் கிக்கொள்ளுங்கள். 20 எண்ணும் வரை மூச்சை வெளியில் விட வேண்டாம். பிறகுதான் மூச்சை வெளியில் விட வேண்டும். இப்படி 5 முறை செய்தால் விக்கல் நின்றுவிடும்.
வேகமாக ஒரு சொம்பு குளிர்ந்த தண்ணீர் குடித்தால், விக்கல் நின்றுவி 独 டும். ஒரு தேக்கரண்டி சர்க்கரையை நாக்கில் வைத்து அதைத் தானாகக் கரைய விட்டால், விக்கல் நிற்கும்.
விடு ஏதேனும் ஒரு வகையில் தும்மலை |- உண்டாக்கினால், விக்கல் நிற்கும். கள் அடுத்த வழி இது. ஒரு காகிதப்பைக் Tម៌ குள் மூச்சை விடுங்கள். பிறகு அந்தக் }lo. காற்றையே மீண்டும் சுவாசியுங்கள். ரல் இவ்வாறு 20 முறை செய்தால், ரத்தத்தில் கார்பன்டை ஒக்சைடு அதிகரித்து, ற்று விக்கல் நின்றுவிடும். அடிக்கடி விக்கல் ான் ஏற்பட்டாலோ, 2 நாட்களுக்கு மேல் sgil விக்கல் நீடித்தாலோ மருத்துவரை ம்ெ ஆலோசிப்பது நல்லது. @r சில நிமிடங்கள் நீடிக்கும் விக்க 冥}彗 லுக்கே நாம் பயந்து போகிறோம்.
அமெரிக்காவில் சார்லஸ் ஆஸ்பார்ன்
என்பவர் 68 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து விக்கல் எடுத்துக் கின்னஸ் ரிக்கார்டு செய்திருக்கிறார். அம்மாடியோவ்! 劃

Page 82
யாழ்ப்பாணத்தின் அதி வடக்கே உள்ள புனித
தலங்களில் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயமும் மாவிட்டபுரம் கந்தசாமிக் கோவிலும் வரலாற்று சிறப்புமிக்கதாகும். யாழ்ப்பாண சரிதத்தோடு பின்னிப்பிணைந்த மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் பற்றிய பல்வேறு வரலாற்றுக் கதைகள் சொல்லப்படுகிறன.
சுவர்க்க லோகத்துள்ள சந்தானம், அரிச் சந்தானம், மந்தாரம், பாரிஜாதம், கற்பகம் என் னும் ஐந்து தருக்களின் தழைகளை உண்ணு நற்குக் கைநீட்டி முறித்து முழங்கும் யானைச் சேனைகளையுடைய கலிங்க தேயத்து அரசன் ஒருவன் இருந்தான். அவன் அரிய தவத்தால்
| 81| ஒளிஅரசி
 
 
 
 

என்னும் பெயருள்ளாள். மூர்த்த சேவையை விரும்பப் பல தலங்களைத் தரிசித்தும், தீர்த்தங்களில் தோய்ந்தும் மூர்த்தி களைப் பூசித்தும் வருவாளாயினள்.
செந்தமிழ் வளர்த்த அகத்திய முனிவர் வசிக் கும் பொதியமலைச் சாரலிலுள்ளதாம்பரவன்னி நதித்துறையிலே ஆடுவதற்கு வந்தாள். அங்கு பஞ் சாக்கினி நடுவினின்று அரிய தவத்தைச் செய்யா நின்ற அயக்கிரீவ முனிவரைப் பார்த்துநகைத்தாள். அது கண்டமுனிவனார், "மங்கையேநம்மை அவ மதித்து நகைத்தனை. அதனால் நீவரும் ஜனனத்திற் பலரும் இகழவருங்குதிரைமுகத்தைக் கொள்ளுதி. இதுவே நின்னகைக்குப் பிரதிபலனாகும்’
தீபாவளி மலர் 2014

Page 83
என்று சாபமிட்டார்.
கனகசுந்தரி முனிவர் சாபத் தைக் கேட்டு வருந்தி, அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கி, திருப்பரம் பொருளாகிய சண்முகக் கடவுளை நினைத்து இரவு, பகல் என்னும் இரு காலத்தும் காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக் குற்றமும் அகற்றி மனம், புத்தி, சித்தம், அகங்காரமென்னும் நாற் கரணத்தையும் அடக்கி ஐந்தக்கினி நடுவினின்று, ஆறெழுத்தையும் உச்சரித்து ஏழ் பாற்க்கடலையுஞ் சுவற்றி இமயம், நியமம், பராணா யாமம், பரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி எனும் எட்டுறுப் புடைய சிவயோகத்தினால் 'நவ பெரும் புவனரும் வந்து தொழ வீற்றிருக்கும் தசகாரியத் தாபதரே! நுண்ணறிவுடையராய் நூலொடு பழகினும், பெண்ணறிவென்பது பெரும் பேதைமைத்தே' என்றமை தேவரீர் அறிந்ததேயன்றோ? அடி யேன் தெரியாதுரைத்த குற்றத்தைப் பொறுத்துச் சாபம் நீங்கும் வழியை அருள்கவென்று பிரார்த்தித்தாள். முனிவரும் மனமிரங்கி, 'மடநல் லாய் கடல் துறைத் தீர்த்தம் ஆடுங் காற் கந்தப்பெருமான் திருவருளால் அகலும்' என்றார்.
பின்னர், கனகசுந்தரி இறந்து, மறுபிறப்பிலே உலகமெல்லாவற் றையும் பொதுவறத்துறந்த மதுரை மன்னவன் உக்கிரப்பெருவழுதிக் குப் புத்திரியாகப் பிறந்தாள். அக் காலத்தில் மிக்க அழகுடன் விளங் கினாலாதலின் அவளுக்கு அங்கசுந் தரி எனப் பெயரிட்டுத் தாய், தந்தை யர் அருமையாக வளர்த்தனர். சிறிது காலம் செல்லவும் முனி வரிட்ட சாபந் தொடுதற்கு ஆரம் பித்தது. புழுக்கள் வேட்டுவனாக வும், வண்டுகள் மயிர்க்குட்டி களாகவும் மாறினாற்போல் அங்க சுந்தரி குதிரைமுகங் கொண்டாள். தாய், தந்தையர்களாகிய அரசனும், அரசியும் வருந்தி துக்க சாகரத்தில் மூழ்கினர். அப்போது அசளித் தெய் வம், 'உங்கள் மகள் குதிரை முகத்தை விட்டு நல்ல முகம் பெற வேண்டுத லாயின் கடலிலும், நதியிலும் மூழ்கி வருபவளாக' என்று முழங்கிக்
கூறியது. முவகையுற ளையும் ே மகளைத் தீ அங்கசு சேர நாடு நாட்டிற்குக் கடலில் கு சுப்பிரமணி சென்று அ வேற்பெரு 'GILG3. சென்று கா அகலும்’ மகிழ்ந்து 6 நகுலகிரியி திற்கு கந்தக் முகம் நீங்கி களும் தோ அடைந்தன அறிவித்து
lL IT (6) 397 L II கந்தராலய வகுப்பித்து என்னுங் பெயருஞ் சிற்பலக்க வழியாக துறைக்குக் அத்திரு வித்து, பூசித் னாட்டினின்
அங்கசுந்தர் போலும் னாரது கெ தக்கிணசை இத்தை றாண்டில் பட்டது. இ துன்புற்ற கயிற்றில் க
616ծT 6) I Մ6Ծր அன்னியரா சிறப்புற்று காலத்தில் துடன் தற்ே வருவதைச் இந்துக் மாவிட்டட கப்பட்டா
அதன் சிற
82 ஒளிஅரசி தீபா

அது கேட்ட அரசனும், அரசியும் மன றிருந்தனர். சில வருடங்கள் கழிந்ததும், மந்திரிக சேனைகளையும் சேர்த்துத் தோழியர்களுடன் தன் ர்த்தமாடுமாறு அரசன் அனுப்பினார். ந்தரி பாண்டிநாடு, சோழ நாடு, தொண்டைநாடு, முதலிய தேசங்களிலுள்ள தீர்த்தங்களிலாடி, ஈழ சென்று இந்து சமுத்திரம் என்னும் மகேந்திரக் ளித்து பக்கத்திலே ஏமகூடம் எனப் பெயரிட்ட ரிய துவாத சாந்தத் தலமாகிய கதிர்காமத்திற்குச் அங்குள்ள மாணிக்க கங்கையில் முழுகி கதிரை மானை அன்புடன் துதித்துக் கண்ணிர் விட்டாள். காடியில் திவ்விய தீர்த்தமொன்றுள்ளது. அங்கு ங்கேயனை அன்புடனிணைந்து முழுகுவையேல் என்று அசாரீ கூறிற்று. அங்கசுந்தரி அன்புடன் வடகடல் துறையடைந்து யாழ்ப்பாணத்திலுள்ள ன் அருகே கடற்கரையிலுறிப் பெருகுந் தீர்த்தத் கேடவுளை எண்ணி முழுகினாள். உடனே குதிரை கிற்று. அரசகுமாரியும் மந்திரிமார்களும் சேனை ாழியர்களும் யாவரும் பெருமிதமும் உவகையும் ார். அவள் தந்தையாகிய உக்கிரம்பெருவழுதிக்கு கந்தக்கடவுளின் திருவருளினாலே நீங்கினமை பிரமணியப் பிரதிட்டை செய்ய விரும்பி மொன்று செய்வித்து மதில் முதலியனவும் து அவ்வூருக்குக் குதிரைமுகம் விட்டபுரம் காரணம் விளங்குமாறு மாவிட்டபுரம் எனச் சூட்டி சுப்பரமணியத் திருவுருவம் ஒன்று ணம் வல்லாராற் செய்வித்து, அங்கு கடல் வருவித்து இறக்கப்பட்டமையால் அக்கடல்
காங்கேயன்துறையெனப் பெயருமிட்டனர். வுருவத்தைச் சுபவேளையிலே பிரதிட்டை செய் ந்தல், தொண்டு செய்தல் முதலியவற்றிற்குத் தன் ன்றும் ஆதி சைவப் பிராமணர்களையும், சைவ ளையும் குடியேற்றிக் கந்தன் திருவருள் பெற்று கட்டழகுடையவளாய் மதுரை சென்றாள். இது மாவிட்டபுரத்திலுள்ள அத்தீர்த்தம் தன்னின் மூழ்கி ாடுநோய்களைப் பரிகரித்து வரல் கண்கூடே. 5லாய மான்மியமும் இதற்குப் சாட்சியமாகும். கய சிறப்புவாய்ந்த கோயில் பதினாறாம் நூற் அன்னியர் ஆட்சியின்போது இடித்து அழிக்கப் இக்கோயிலை இடிக்கும் போது அதைக்கண்டு ஆதின பூசகர்கள் ஆதிமூல உருவச் சிலையை ட்டி கிணற்றுக்குள் இறக்கி மறைத்து வைத்தனர் றுகள் கூறுகின்றனர். 19 ஆம் நூற்றாண்டிளவில் ாட்சி விலக ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு விளங்கியது. ஆயினும் யுத்தம் இடம்பெற்ற மீண்டும் இவ்வாலயம் தாக்கியழிக்கப்பட்ட போது அது படிப்படியாக மறுசீரமைக்கப்பட்டு * காணலாம். களின் பழம் பெரும் வரலாற்று சிறப்பு வாய்ந்த ரம் கந்தசாமி கோயில் பலமுறை இடித்தழிக் லும் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்படுவது ப்பை காட்டி நிற்கிறது எனலாம்.

Page 84
மழைமேகம் சூழ்ந்த மாலை வெயிலின் உக்கிரம் கரைந்து ឆេធជាផ្លយនៃប៉ា ជាយថាជា game =ញg. கருமேகம் கண்டு பயந்தோடி இருப்பிடம் விரையும் பறவைகள்.
EistrijGmmi, Bam Bij GlasTiszorg சந்தோஷமாய் தலையாட்டும் நெல்மணிகள். லேசான தூறலுக்கே விடு நோக்கிப் பாய்ச்சவெடுக்கும் பசுக்கள். ខាងជេងជាច្រូ ចម្អាកប្លែង BHuëជាថាជាប விடயாட்டோமென மேயும் எருமைகள்.
ជេរប្រuនៃប ធ្មេចចាចហៅuffចេថា ជាmខ្លរ៉េនៃ៣ចrer கொங்காணிகளுக்கும் உடலை ធេញអ័ក្រ្តដ៏ ជេរៅប្រ ឆេអ៊ែគ្រញ៉ា ហៅថាវិជ្ជាក់ជាចr. អ្នកតែងយកកែប ជាផ្លh ឆេធាធ្វgEffuជាប្រ tல்லுக்கு நிற்கும் மீன்குஞ்சுகள். குதிக்கும் மீன்களைக் குறிவைத்து தூறலில் தவமிருக்கும் கொக்கு.
83 ஒளிஅரசி
 

இருண்ட ஈசானிய மூலையில் ஒளிரும் மின்னலைத் தொடர்ந்து இடிக்கும் இடியின் வெடியோசை. தூறல் வருமுன்னே தூரமாய் ஓடி ஒளியும் மின்சாரம். மழையின் வேகம் கூடடக்கூட பெருக்கெடுத்து ஓடும் நீரின் சலசலப்பு.
எல்லாம் பார்த்துப் பழகிப்போன மழை வேகமெடுத்துப் பேய்மழையாய் சோவென்று கொட்டினாலும் சன்னலோரத்தில் அமர்ந்து சாயந்திர ឆេងថាប្រជាសាឃ ព្រះអិន្រ្ទវៃ ជេធទៅជាម៉ាគ្រូព៌ា . ஓடும் தண்ணில் விட்ட கத்திக்கப்பலும். ជេចក្តuថាយ អ៊ែចែងថាឯង ធ្វចចាមu. இன்னும் மரிக்காமல் மாம்பூவின் வாசமாய்.
தீபாவளி மலர் 2014

Page 85
ஆன்மிகம் இடி எஸ். நாராயணஸ்வாமி
அனுமன செய் தெரிந்த UIT
இறைவனிடம் செலுத்தும் பக்தியின் பரி மாணத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம். 'கடவுள் நம் கண்களுக்கும் புலன்களுக்கும் எட்டாத நிலை யில் எங்கோ வியாபித்திருக்கிறார். அவர் என்னைக் காத்து ரகசிக்கிறார். அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்" என்று கருதி, அவரைச் சரணடைந்து பக்தி செலுத்துவது முதல் வகை.
'கடவுள், உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளிலும் ஒவ்வொரு அணுவிலும் வியாபித்திருக்கிறார்;
矮 &
உயிர்களிடம் காட்டும் அன்பின் மூலம் இறை வனுக்குச் சேவை செய்யலாம் என்று கருதி, கடவுளை வழிபடுவது இரண்டாவது வகை. ‘கடவுள் என்னுள்ளேயே இருக்கிறார். அவரை வேறெங்கும் தேடத் தேவையில்லை. என்னுள்ளே இருந்து என்னை இயக்கும் இறைவனே என்னை வழிநடத்துகிறான்' என்று கருதி, தன்னைத் தூய்மைப்படுத்திக்கொண்டு, தன்னுள்ளே வாழும் இறைவனிடம் சரணாகதி அடைந்து சேவை செய்வது மூன்றாவது வகை.
அனுமனின் பக்தி, இந்த மூன்றாவது வகை யைச் சேரும். ராமாயண காவியத்தில் ராமனுக்கு அடுத்தபடியாகப் பேசப்படுபவன் அனுமன். நம்
84 ஒளிஅரசி தீபா
 

த தியாகம்!
ாணம். தெரியாத கதை!
தேசத்தில் பல வகையான ராமாயணங்கள், பல்வேறு காலகட்டத்தில், பல்வேறு மொழி களில் எழுதப்பட்டுக் காலம் காலமாகப் பேசப்பட்டு வருகின்றன. சம்ஸ்கிருத மொழி யில் வால்மீகி எழுதிய மூல ராமாயணம், இந்தியில் துளசிதாசர் எழுதிய ராமசரித மானஸ், தமிழில் கம்பர் எழுதிய கம்பராமாய ணம், தெலுங்கில் பக்த போத்தன்னா எழுதிய போத்தன்னா ராமாயணம் ஆகியவை மட்டுமின்றி, அத்யாத்ம ராமாயணம், ஆனந்த ராமாயணம், ஹனுமத் ராமாயணம் எனப் பல்வேறு ராமாயணக் காவியங்கள் உலகெங் கும் பன்னெடுங்காலமாகப் போற்றிப் பூஜிக்கப்பட்டு வருகின்றன.
இவற்றில் ஹனுமத் ராமாயணம் என் பதை ஹனுமானே அருளியதாகச் சொல்லப் படுகிறது. இந்த ஹனுமத் ராமாயணத்தில் பின்வரும் காவிய நிகழ்ச்சி ஒன்று இடம் பெறுகின்றது.
பூரீராமனின் பட்டாபிஷேகம் நடந்து முடிந்த பின்னர், ஒருநாள் இமயமலைச் சாரலில் ஒரு சிகரத்தின் மீது ஏறி நடந்து கொண்டிருந்தார் வால்மீகி, சிகரத்தின் சரிவுகளில் இருந்த பாறைகளின் மீதும், கற்களின் மீதும் கல்வெட்டுக்களாகச் சில வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவற் றைப் படிக்க ஆரம்பித்தார் வால்மீகி. அவருக்கு மெய்சிலிர்த்தது. அந்த வாசகங்கள் எல்லாம் பூரீராமனின் வாழ்க்கைச் சம்பவங் களைச் சித்திரிப்பதாக அமைந்திருந்தன. அவை, தான் எழுதிய ராமாயண வரிகளை விட, கவிதை நயமும் கருத்து நயமும் மிக் கவையாக இருப்பதை உணர்ந்து பிரமித்தார் வால்மீகி, இந்தக் கல்வெட்டுகளில் பூரீரா மனின் கதையை யார் உருவாக்கியிருப்பார்கள் என்று எண்ணியபடியே, இமயத்தின் சிக ரத்தை அவர் அடைந்தபோது, அங்கே மற் றோர் ஆச்சரியம் காத்திருந்தது.
அங்கே, அனுமன் யோகநிஷ்டையில் இருந்தபடி பூரீராம நாமத்தை ஜெபித்துக் கொண்டிருந்தார். அவரது யோக நிஷ்டை யைக் கலைக்க விரும்பாத வால்மீகி மஹ ரிஷி, தானும் ராம நாமம் ஜெபிக்க ஆரம் பித்தார். அந்த நாம ஜெபத்தைக் கேட்ட

Page 86
அனுமன் நிஷ்டையிலிருந்து விழித்தெழுந்து, வால்மீகியை வணங்கி நின்றார். அவரிடம், ராம காவியம் கல்வெட்டுக்களாக அமைந்த வரலாற் றைப் பற்றிக் கேட்டார் மஹரிஷி.
அதற்கு அனுமன் மிகுந்த விநயத்துடன், "பூரீராமனின் கல்யாண குணங்களையும் அவரது பெருமைகளையும் இங்கே காணும் கற்களில் நான்தான் எனது நகத்தால் செதுக்கி வைத்தேன். யுகம் யுகமாக பூரீராமனின் கதை பேசப்பட வேண்டும் என்பதற்காக இந்தக் காரியத்தைச் செய்தேன். பூரீராமனை ரிஷ்யமுக பர்வதத்தில் நான் சந்தித்தது முதல், பட்டாபிஷேகம் வரை எனக்குத் தெரிந்த ராம கதையை உருவாக் கினேன். ஆனாலும், தங்களின் ராமாயணத் துக்கு இது ஈடாகாது!’ என்றார்.
அப்போது வால்மீகி மஹரிஷியின் கண்க ளில் நீர் கசிந்ததை அனுமன்கவனித்தார். அதற்கான காரணத்தை மஹரிஷியிடம் பணிவோடு கேட் டார். மேலும், தான் கல்லில் செதுக்கிய ராமா யண காவிய வரிகளில் தவறேதும் இருந்தால், எடுத்துச் சொல்லும் படியும் வேண்டினார். வால்மீகியின் கண்களில் மேலும் நீர் பெருகியது. எத்தகைய சிறப்பான காரியத்தைச் செய்துவிட்டு, எவ்வளவு தன்னடக்கத்துடன் அனுமன் இருக் கிறார் என்பதை எண்ணிப் பெருமிதம் அடைந்தார். 'ஹனுமான்! நீ பூரீராமனின் சிரேஷ்டமான பக்தன். உன்னால் கல்லில் பொறிக்கப்பட்ட ராமாயணத்தில் தவறு இருக்க முடியுமா? நீ எழுதிய காவிய வரிகளில் காணும் பக்திப் பரவசம் என்னை நெகிழ வைத்துவிட்டது. இது, என் ஆனந்தக் கண்ணிர்தான். நான் எழுதிய ராமாயணம் இதற்கு ஈடு இணையாகாது. உன்னுடைய ராமாயணத்தை உலகோர் படிக்கும் போது, என் ராமாயணம் காலப் போக்கில் மறைந்துவிடும்’ என்றார்.
அதைக் கேட்ட மாத்திரத்தில், அனுமனின் கண்களில் தாரை தாரையாக நீர் சுரந்தது. உணர்ச் சிவசப்பட்ட அனுமன், பாறைகளில் தான் செதுக்கியிருந்த ராமாயண காவிய வரிகளை எல்லாம் தனது வாலால் துப்புரவாக அழித்து விட்டார். பின்னர் வால்மீகியை வணங்கி, "தாங் கள் எழுதிய பூரீராம காவியமே மிகச் சிறப்பா னது! காலத்தால் அழியாதது! நான் செதுக்கியது வெறுமே என் உணர்ச்சிகளின் பிரதிபலிப்பு தான். தாங்கள் உருவாக்கியதுதான் பூரீராமனே பாராட்டிய காவியம். அதற்கு ஈடு இணை எது வும் இருக்காது' என்று அமைதியுடன் கூறினார். அனுமனின் பக்தியைப் பற்றி வால்மீகி ஏற்கெனவே தெரிந்துகொண்டிருந்தார். அவரது தியாகத்தை இப்போது புரிந்துகொண்டார். அனுமனை மனமார வாழ்த்தினார். "ஹனுமான்!
85 ஒளிஅரசி

நீ எழுதிய ராமாயண எழுத்துக்களை அழித்து விட்டாய். ஆனால், அந்தக் கருத்துக்கள் என் மனதில் ஆழப் பதிந்துவிட்டன. எனது ராம காவியத்தில் நீ செதுக்கிய ராம கதையும் இடம் பெறும்’ என்று கூறி, வாழ்த்திச் சென்றார்.
அதன்படி, வால்மீகி ராமாயணத்தின் ஒரு பகுதியாக அமைந்தது ஹனுமத் ராமாயணம். அனுமன் கண்ட ராமனை இந்தக் காவிய வரி களில் இன்றும் நாம் தரிசிக்கிறோம். அனுமன் வாயுபுத்திரன். சிவபெருமானின் அம்ஸாவதா ரம். சூரியனைக் குருவாகக் கொண்டு நான்கு வேதங்களையும், சாஸ்திரங்களையும் கற்றவர். எளிமையே உருவானவர். அடக்கமானவர். அவரது திறமையும் வலிமையும் அவருக்கே தெரியாது. ராமாயண காவியத்தில் எங்கேயும் எப்போதும் கோபப்படாதவர், அனுமன்தான். இலங்கையை எரித்ததுகூட கோபத்தினால் அல்ல; ராவணனுக்கு புத்தி கற்பிக்கவேதான்.
சீதாபிராட்டியால் சிரஞ்ஜிவி என்று ஆசிர் வதிக்கப்பட்ட அனுமன், இன்றைக்கும் சிரஞ் ஜீவியாக நம்மிடையேதான் உலவிக்கொண்டி ருக்கிறார். அனுமன் இருப்பது, 60 அடி உயர சிலையிலோ, அல்லது அற்புதமாகக் கட்டப் பட்ட ஆலயத்திலோ மட்டுமல்ல ; பூரீராம நாமம் ஒலிக்கும் இடமெல்லாம் அனுமன் இருக்கிறார்.
யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம் பாஷ்பவாரி பரிபூரண லோசனம் மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம் - என்று அனுமனைப் பற்றிய ஸ்லோகம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘எங்கெல்லாம் பூரீராம நாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன் கண்களில் நீர் மல்கக் காட்சி தந்துகொண்டிருப்பவர் எவரோ, அவரே அனுமன் என்று தெரிந்துகொள்’ என்பது இதன் பொருள். கடைசி வரியில் உள்ள 'ராக்ஷஸாந்தகம்’ என்பது, அவர் உன் உள்ளத்தில் தேங்கி நிற்கும் ஆணவம், அஹங்காரம், கோபம், த்வேஷம் போன்ற ராக்ஷஸ குணங்களை அழிப்பவர் என்பதைக் குறிக்கும். ۔۔۔۔
அனுமனை உபாஸித்து அருள் பெற, பூரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம என்று ராம நாமத் தின் பெருமையைச் சொன்னாலே போதும்; அனு மன்அந்த பக்தர்களுக்கும் சேவகனாகி அருள்புரிவார். அஞ்சனை மைந்தனாம் அனுமனை வழிபடு வதால் நமது உள்ளத்தில் நேர்மை, தூய்மை, தியாகம், பக்தி, எளிமை, அடக்கம் போன்ற உயர்ந்த குணங்கள் உருவாகி, நம்மை உயர்த்துகின்றன என்று சாஸ்திரங்கள் கூறு கின்றன. 鬱
தீபாவளி மலர் 2014

Page 87
முறக்கமுடிலாத
சாப்பிளின் எனும் மகா கலைஞனின் எந்தப் படைப்பையும் குறைத்து மதிப்பிட முடியாது. என்றாலும் சாப்ளின் என்றதும் ஒவ்வொரு வருக்கும் சில படங்கள் பொதுவாக நினைவு களில் அலை மோதும். அவற்றில் மார்டன் டைம்ஸ், சிட்டிலைட்ஸ், க்ரேட் டிக்டேட்டர் ஆகிய படங்களுக்குத் தனியிடம் உண்டு.
மெளனப் படங்களின் காலம் முடிந்து, பேசும்படங்களின் யுகம் தொடங்கிய பிறகு பிடிவாதத்துடன் வெளிவந்த திரைப்படம் சாப்ளினின் மாடர்ன் டைம்ஸ். சினிமாவில் எத்தனையோ நவீனங்களைப் பார்த்துப் பழகிவிட்ட பார்வையாளர்களுக்கு இன்னும் அலுக்காத நகைச்சுவைக் காவியமாக மாடர்ன் டைம்ஸ் திகழ்கிறது.
மாடர்ன் டைம்ஸ் தன் பெயருக்கு ஏற்ப, சமகாலத்தன்மையுடையதாகவே இருக்கிறது. படத்தின் முதல் காட்சியி லேயே மந்தை மந்தையாக ஆடுகள் செல்வது காண்பிக்கப்படும். அந்தக் காட்சி மெதுவாக மறைந்து புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து கூட்டம் கூட்டமாகத் தொழிலாளர்கள் போவது காண் பிக்கப்படும். முதலாளித்துவ உலகில் வேலை என்பது மந்தைத்தனமாக மாறுவதை விமர்சிக் கும் அக்காட்சி இன்றைய காலத்திற்கும் பொருத்தமானதே.
எந்திர யுகத்தைக் கவலையுடன் எதிர்நோக் கும் படைப்பாக மாடர்ன் டைம்ஸ் திகழ்கிறது. உலகளாவிய அளவில், நவீன மாற்றங்கள் மனிதத்தன்மையை இல்லாமலாக்குவதை சாப்ளின் எந்திரத்தில் சிக்கிக்கொள்ளும் காட்சி அழகாகச் சித்திரித்திருக்கும்.
நல்ல பண்புள்ள, ஆனால் சமூகத்தோடு முழுமையாக ஒன்ற இயலாத, சிறிய சாகசங்கள் செய்து தோல்வி அடையக்கூடிய லிட்டில் ட்ராம்ப் கதாபாத்திரம் வசனம் பேசினால் படத்தின் மர்மமும், கனவுத்தன்மையும் குலைந்துவிடும் என்று சாப்ளின் நினைத்தார். ஆங்கிலம் பேசாத இடங்களில் அவரது ரசிகர்களைக் கவர முடியாது என்றும் கருதினார்.
86 ஒளிஅரசி தீபாடு
 


Page 88
திரைப்படம் என்பதைத் தாண்டியும் நவீன காலம் குறித்த மிகப்பெரிய அங்கத 0L00 S S L LLTT LLL LT S tLGGGY S LtTm sT LtlTe S Y00 tae a கடந்து நிற்கிறது.
சார்லி சாப்ளின் படங்களில் நகைச்சுவை சோகம், பொழுதுபோக்கு என அனைத்து அம்சங்களையும் கொண்ட படம் "சிட்ட லைட்ஸ்." இந்தப் படத்தில் நாயகன் சாப்ள னைப் பொருட்படுத்தாத, மதிக்காத நபர்களே அவருக்கு நண்பர்களாக இருப்பார்கள் இரவுக் குடியின்போது மட்டும் மாளிகைக்கு அழைத்துச் சென்று உபசரித்து விட்டு, காலையில் துரத்தி விடும் கோடீஸ்வர நண்பர்
காலம் வரை மறக்க முடியாத கதாபாத்திரம்.
நாயகன் காதலிக்கும் பூ விற்கும் பெண்ணோ பார்வை இழந்தவள். அவளுக்குப் பார்வை தெரியும்போது, அவனை அங்கீகரிக்க இயல சமூகத்தோடு தொடர்ந்து இயைந்து செல்ல விரும்பினாலும் தொடர்ந்து அந்நியனாகத் துரத்தப்படும் லிட்டில் டிரா ம்ப் கதாபாத் தி ர ம் த ர ன் இதிலும்,
gift affa fair சிட்டி லைட்ஸ் ப ட த் தி ன் மூ ல க் க  ைத த மி பூழி ல்  ெவ வ் வேறு 函厅Q)函是兰f_度序 களில் திரைப் | | | |i, 3, GT FT g, எடுக்க ப் பட் டுள்ளன. ஏழை படும் பாடு தொடங்கி மூன்றாம் பிறை வரை பல படங்களை சொல்லமுடியும். ஏழை படும் பாடு படத்தின் நாயகியும் பூ விற்பவள்தான். மல்லிகைப் பூ ஜாதி ரோஜா, முல்லைப் பூ வேண்டுமா என்ற பாடலை யூட்யூப்பில் கேட்டுப்பார்க்கலாம் சிட்டி லைட்சின் வெளிச்சம் தெரியும்.
ஹிட்லரின் சர்வாதிகாரத்தையும், இனவ
87 ஒளிஅர
 
 
 
 
 
 
 
 
 

罩 தத்தையும் நகைச்சுவையாகவும் அதேவேளை யில் ஆழமாகவும் விமர்சித்த திரைப்படம் கிரேட் டிக்டேட்டர் சார்லி சாப்ளினின் முதல் பேசும் படம் இதுவே ஆகும். கலையம்சம், பிரசாரம், சக்தி வாய்ந்த திரை வெளிப்பாடு, நகைச்சுவை அனைத்தும் இணைந்த இந்தப் படைப்பு, உலகையே தன் அதிகாரத்தால் உலுக்கிக் கொண்டிருந்த ஹிட்லரின் ஆளுமை உல கையே அதிரவைத்த காலத்தில் நாசிசத்தைக் கடுமையாக விமர்சித்தது. "கிரேட்டிக்டேட்டர்’
வேடத்தில் இருக்கும் முடிதிருத் தும் கலைஞனான சாப்ளின் ஆற்றும் உரை, பெரிய இலக்கி யமாக இன்றளவும் உலக மக்களால் வாசிக்கப்படுகிறது. மனித குலத்தின் சமாதானம் மற் றும் சகோதரத்துவத்தை வேண் டும் உரை அது. தி கிரேட் டிக் டேட்டர் படத்தில் யூத இனத் தைச் சேர்ந்த முடிதிருத்தும் கலைஞராகவும், சர்வாதிகாரி அடினாய்ட் ஹெய்ங்கெல்லாக வும் இரண்டு வேடம் சாப்ளி னுக்கு. நற்பண்பும், நேரெதி ரான தீமையும் வெளிப்படும் இரண்டு வேடங்க ளில் நடித்திருப்பார்
ஹிட்லருக்கு ம் சா ப் வி னு க் கு ம் ஒற்றுமைகள் அதி கம், இரண்டு பேருமே 1889, ஏப்ரல் மாதம் பிற ந் த வ ர் க ள் . இரண்டு பேரின் குழந்தைப் பருவ மும் வறுமை மிக் கது. இருவருமே
பிறகு மிகப் பெரிய புகழைச் சம்பாதித்த வர்கள். ஒருவர் உலக மக்களைச் சிரிக்க வைத்தார். இன்னொருவர் வெறுக்கக்
கற்றுத்தந்தார். சாப்ளினின் முதல் பேசும்படம் தி கிரேட் டிக்டேட்டர்தான் என்பது கவனிக்கத்தக்கது. ஏனெனில், ஹிட்லரின் கொடுங்கோன்மையை எதிர்க்க அவர் 'பேச' f வேண்டியிருந்தது.

Page 89
| w faurgóGBTLub(0.6DrITF
அவசர சிகிச்சைப் பிரிவு சிறு சத்திர சிகிச்சைப் பிரிவு X-கதிர் பரிசோதனை ஈ.சி.ஜி பரிசோதனை நோயாளர் ஊர்தி சேவை (அப்
மருந்தகம்
$ରି
 
 

NEWPIONEER HospiTAL ܒ ܒ
క్ష్ళ????######్య

Page 90
குறிப்புகள்
பயனுள்ள வீட்"
 ேதேங்காயில் உள்ள இளநீரை வீணாக் காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்.
 ேஎந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது.
* அப்பசட்டியில் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும். அப்பொழுது தான் அப்பம் செய்யும்போது எளிதாக செய்யலாம்.  ேகொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு 12 மணி நேரம் ஆகி குடித்தால் இரத்த கொதிப்பு சீராகும்.
 ேமண்பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சற்று நேரம் சூடேற்றி பின் கழுவினால் மண்வாச னையும் வராது விரிசலும் விடாது.
* தக்காளி சட்னி செய்யும்போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட் டால் ருசி அதிகமாக இருக்கும். தயாரிக்கும் போது அதில் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் ருசி அதிகமாக இருக்கும்.
* பொரித்த அப்பளம் மீதமாகிவிட்டால் அதை பொலிதீன்பையில் நன்றாக சுற்றி ஃபிரிஜ் ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரம் ஆனாலும் மொறு மொறுப்பு மாறாமல் இருக்கும்.
வோஷ் பேசினில் இரண்டு அல்லது மூன்று ரசகற்பூரம் போட்டு வைத்தால் எந்தவித துர்நாற்றமும் வராது.
 ேஅடைக்கு அரைக்கும்போது அரிசி பருப்புடன் இரண்டு வேக வைத்த உருளைக் கிழங்கு போட்டு அரைத்தால் ருசியாக இருக்கும்.
* இளம் காலை வெயிலிலும் மாலை வெயி லிலும் பிறந்தகுழந்தையை சிறிது நேரம் படுக்க வைத்தால் அந்த குழந்தைக்கு விற்றமீன் D கிடைக்கும்.
 ேகோடை காலத்தில் தாகம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் இது சரும வறட்சியை நீக்குவதோடு சிறுநீரகம் மலக்குடல் சிறப்பாக செயல்பட உதவும்.
 ேபழைய டுத்பிரஷ்களை தூக்கி எறிந்து விடாதீர்கள் மரக்கதவுகிரீல் கேட்போன்றவற்றின்
89 ஒளிஅரசி
 

டுக்குறிப்புகள்
இடுக்குகளில் உள்ள தூசிகளை அகற்ற இதை விட சிறந்த பொருள் வேறு எதுவும் கிடையாது.  ேமீன்தொட்டியில் உள்ள பழைய தண் ணிைரை மாற்றும்போது அதை கீழே கொட்டி விடாமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழித்து வளரும்.
 ேசாப்பாட்டு மேஜையை துடைக்கும் துணியில் சிறிதளவு உப்போ கற்பூரமோ வைத்து துடைத்தால் ஈ மற்றும் பூச்சிகள் உட்காராது.
* பழைய சென்ட் பாட்டில்களில் சிறிது தண்ணீர் விட்டு நன்கு குலுக்கி வைத்துக் கொண் டால் கைக்குட்டைகளை மணக்க செய்யலாம்.  ேஉங்கள் வீட்டு குளிர்சாதனப்பெட்டியி லிருந்து துர்வாடை வந்தால் ஏதாவது ஒரு எசன்ஸை ஒரு துண்டு பஞ்சில் தோய்த்து குளிர்சாதனப்பெட்டியில் உள் மூலையில் போட்டு விடுங்கள். இனி குளிர்சாதனப்பெட்டி திறந்தால் ஒரே கமகமதான்.
ஊதுவத்தி பாக்கெட்டுகள் காலியானதும் அவற்றை துணிவைக்கும் பீரோவில் போட்டு வைத்தால் பீரோவை திறக்கும்போது கம கமக்கும்.
துேணிகளை துவைத்து முடித்தபின் கடைசி யாக அலசும்போது அந்த தண்ணிரில் சில சொட்டு கிளிசரின் கலந்துவிட்டால் துணிகள் சுருக்கம் இல்லாமல் இருக்கும்.
 ேநைலான் கயிரை வாங்கியவுடன்சோப்பு நீரில் நனைத்து உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும்.
* தரையில் எண்ணெய் கொட்டிவிட்டால் அதன்மீது கோலப் பொடியை தூவிவிட்டு
ஏலக்காயை பொடித்து அதன் விதைகளை உபயோகத்திற்கு எடுத்தபிறகு தோலை எறிந்து விடாமல் குடிக்கும் நீரில் போட்டு வைத்தால் தண்ணீர் மிகுந்த ருசியாக இருக்கும்.
 ேநிறம் மங்கிய வெள்ளைதுணிகளை வினிகர் கலந்த நீரில் ஊற வைத்து துவைத்தால் துணி பளிச்சென்று இருக்கும்.
 ேமெழுகுவர்த்திகளை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து தேவைப்படும்போது உபயோகப்படுத்தினால் சீக்கிரத்தில் உருகாது அதிக நேரம் எரியும்.

Page 91
" சினிமா விமர்சனம்
சந்திரமுகியின் மனப்பிரமை பேய் முன பழிவாங்கும் பேய், யாமிருக்கப் பயமே-வில் சிரி போன்ற வரிசையில் ஹன்சிகா ராய்லட்சுமி, ஆண்ட் கவர்ச்சியாக பயங்காட்டி திகிலுடன் சிரிக்கவைக்கு படைப்புத்தான் சுந்தர்-சியின் அரண்மனை.
படத்தின் முன்பாதியில் வினய் தனக்குச் சொ மனையை விற்பதற்கு அவரது மனைவி ஆண்ட்ரிய களுடன் வருகிறார். ஆனால், அவர்கள் அனைவர் விரும்பத்தகாத பயங்கர சம்பவங்கள் நடக்கின்றன. பி ரியாவின் அண்ணன் கதாபாத்திரமாகவும் படத்தின் வரும் சுந்தர்-சி அதற்கான காரணத்தையும் தீர்வையு
அரண்மனை படத்தில் ஒரு புது முயற்சியாக ட நகைச்சுவையையும் கவலை வயாகக் காட்டப்பு முயற்சிக்காக இயக்குனரை பாராட்டினர்
சுந்தர்-சி அண்ணன் கதாபாத்திரத்தை ஏற்று பொறு நடித்திருக்கிறார். அதைவிட மற்றொரு கதாநாயக கொடுத்த பாத்திரத்தை சிறப்பாகச் செய்திரு. கதாநாயகர்கள் இருந்தாலும் நாயகிகளின் இர மேலோங்கி நிற்கின்றன. நாயகியாக வரும் ஆன பேயாட்டம் ஆடுகிறார். இவரின் உடம்பில் பேய் செய்யும் செய்கைகள் அருமை. ஹன்சிகா படத்தில் இ முன்பு சிறிது நேரமே வந்தாலும் ஒரு கிராமத்துப் ே உடை மற்றும் ஒப்பனை எதுவும் இல்லாத அழகு. பார்வையாளர்களின் மனத்தில் நிற்கிறார்.
சந்தானம் வழக்கம்போல் அவரது கலாய்த்த கோவை சரளா மனோபாலாவுடன் வயிறு வ
நகைச்சுவைச் சிரிப்பை வழங்கியிருக்கிறார். பரத்வா
கள் அனைத்துமே கேட்கும் வகையில் உள்ளன. பின்
 

காஞ்சனாவின் க்கவைக்கும் பேய் யா இவர்களுடன் ம் மற்றுமோர் பேய்
ந்தமான ஒர் அரண் மற்றும் உறவினர் க்கும் அங்கே பல ன்பாதியில் ஆண்ட் ன் இயக்குநராகவும்
ம் கண்டுபிடிக்கிறார்
யங்கர திகிலையும் ட்டுள்ளது இப்புது
ப்பான அண்ணன்ாக னாக வரும் வினய் க்கிறார். இரண்டு ஜ்யமே படத்தில் *flu L_ឆ្នា៨៦
புகுந்தவுடன் இவர்
டைவெளிக்கு சற்று
னும் நடிப்புடனும்
நகைச்சுவையில் லிக்கும் அளவுக்கு ஜ் இசையில் பாடல் எனணி இசையிலும் ாண்டம் மொத்தத்
ராய்லட்சுமி ஆன்ட்ரியா. இயக்குனர் சுந்தர்-சி බ්‍රගණි பரத்வாஜ்

Page 92
பா சினிமா
பங்கரின்
icial Teaser
ர் பாயான ,ெ யாய
இன்றைய திகதியில் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகத்தின் கவனமும் தீபாவளிக்கு வெளி வருகின்ற 'ஐ' படத்தின் மீதே உள்ளது. விக்ரம், எமிஜக்சன் மற்றும் பலரின் நடிப்பில் சங்கரின் இயக்கத்தில் ஏ.ஆர். ரகுமானின் இசையமைக்க பி.சி. சிறிராம் இன் ஒளிப்பதிவில் வெளிவர இருக்கின்ற 'ஐ' படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் காண்பிக்கப்பட்ட முன்னோட்டத்தை (டிஸர்) பார்த்து தமிழ்த் திரையுலகம் மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்தியத் திரையுலகமுமே பிரமித்துப்போயுள்ளது.
- 'ஐ' படம் தொடர்பாக நாளுக்குநாள் வெளிவருகின்ற செய்திகள் படம் பற்றிய எதிர் பார்ப்பை மேலும் அதிகரித்துக்கொண்டிருக் கிறது. இப்படத்தின் முன்னோட்டம் இதுவரை இந்திய திரையுலகில் எந்தப்படமும் சாதிக்காத ஒரு சாதனையைச் செய்துள்ளது. அதாவது, வெளியான ஒரே வாரத்தில் 57 இலட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். அது மட்டுமன்றி, இந்தியாவிலேயே அதிக செலவில் தயாரான படம் என்ற பெருமை கொண்ட இப்படம், உலகம் முழுவதிலும் இந்திய மதிப்பில் 5,000 கோடி ரூபாவுக்கு வியாபாரம் ஆகும் என எதிர்பார்க்கப்படுவதாக அப்படத்தைத் தயாரித்த நிறுவனம் கூறியுள்ளது. - இவ்வாறு அனைவரினதும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள 'ஐ' படம் ரசிகர்களைத் திருப்திப்படுத்துமா என அறிந்துகொள்வதற்கு தீபாவளி வரும்வரை பொறுத்திருப்போம்.
91 ஒளிஅரசி

சர்ச்சைக்குள்ளான
'கத்தி
தீபாவளிக்கு வெளிவருகின்ற மற்றுமொரு படம் இளைய தளபதி விஜய், சமந்தா மற்றும் பலரின் நடிப்பில் முருகதாஸ் இன் இயக்கத்தில் வெளிவர இருக்கின்ற கத்தி. ஆரம்பத்தில் இருந்தே இப்படம் பல சர்ச்சைகளில் சிக்கிவந்துள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளர் தொடர்பான எதிர்மறையான கருத்துகள் வெளிவந்த நிலை யில் இப்படத்தை வெளியிடக்கூடாது என தமிழ் நாட்டைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினராலும் போராட்டங் களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. ஆயினும், இவற்றையெல் லாம் சமாளித்தவாறு இப்படம் தீபாவளிக்கு வெளிவருவது உறுதியாகியுள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் இடம் பெற்றுள்ளது. அதில் கலந்துகொண்ட இளையதளபதி விஜய், தான் தியாகியும் அல்ல துரோகியும் அல்ல என ஒர் உருக்கமான உரையை ஆற்றியிருந்தார்,
அடுத்த சுப்பர் ஸ்டார் விஜய்தான் என செய்திகள் அடிபட்டுக்கொண்டிருக்கும் இவ் வேளையில், அதை நிரூபிக்கும் வகையில் 'கத்தி' படம் பெரு வெற்றியைப் பெற்றுக் கொடுக்குமா என்பதைக் காண தீபாவளிவரை காத்திருப்போம்.
நாடி 1 1 .2
- 5 AR.HUnu24)
ஆபாச து ASUSASUKANAN R KAMASTitt.
க க டா டா டா. :: பாகம் 1. 44815:Etாந்து
தி த அேதா 35கம் இ-4 இந்த, 11314
அர்: மாதம் சம் : 42
HEt:சா. 4453
தீபாவளி மலர் 2014

Page 93
சிரிக்க மட்டும்
ද්‍රාණIT6කJöT Toණගණ්‍ය
ஒரு கணவன் கடவுளிடம் மண்றாடி வேண்டினான், 'நாள்முழுவதும் நான்கடுமையாக உழைக்கிறேன். அலுவலகம் செல்ல வேண்டி யுள்ளது. அங்கு மேலதிகாரி, சக ஊழியர்கள் என எல்லோருடனும் மல்லுக்கட்ட வேண்டியுள் ளது. அதுபோக அலுவலகம் போகும்போதும் திரும்பி வரும்போது தெருவிலும் பஸ்ஸிலும் பலருடன் சிரமப்பட வேண்டியுள்ளது. ஆனால் என் மனைவி வீட்டில் ஒரு சிரமமும் இல்லாது மகிழ்ச்சியாக இருக்கிறாள். போதாக்குறைக்கு என்னிடம் வேறு குற்றம் குறை காண்கிறாள்.
எனவே, என்னை பெண்ணாக்கி என் மனை வியை ஆணாக்கிவிடுங்கள். அப்போதுதான் அவளுக்கு ஆண்களின் துன்பமும் சிரமமும் புரியும் என்றான்.
'கடவுளும் அவனது வேண்டுகோளை ஏற்று மறுநாளே அவர்கள் இருவரையும்; கணவனை மனைவியாகவும் மனைவியைக் கணவனாக வும் மாற்றிவிட்டார்.
மனைவி ஆணானவுடன் வேலைக்கு சென் றாள். பெண்ணான கணவன் காலை எழுந்து
 

TesStLTTeRST Teo...
வீடு வாசல் சுத்தம் செய்து அடுப்படி வேலைகளை முடித்து பிள்ளைகளை பள்ளிக்குத் தயார் செய்து அனுப்பிவிட்டு, கடைக்கு சென்று காய்கறிகள் வாங்கி வந்து சமையல் முடித்து, இப்படியாக இரவு நெடுநேரம் வரை வேலை இருந்தது.
மறுநாள் எழுந்ததும் முதல் வேலையாகக் கடவுளிடம்,
"ஐயோ கடவுளே! பெண்களுக்கு இவ்வளவு துன்பங்கள் இருப்பதை உணராது இருந்து விட்டேனே! என்னால் இந்த பொறுப்புகளை எல்லாம் சுமக்க முடியாது.
தயவுசெய்து என்னை மறுபடியும் ஆணாக்கி, என் மனைவியைப் பெண்ணாக்கிவிடுங்கள்’ என்று அழுது மண்றாடி வேண்டினான்.
கடவுள் சொன்னார்,
"உன் வேண்டுகோளை நான் ஏற்றுக்கொள் கிறேன். ஆனால், அதற்கு நீ நாற்பது வாரங்கள் காத்திருக்க வேண்டும். ' என்றார் அவன் ஒன்றும் புரியாமல் விழிக்க,
கடவுள் சொன்னார்,
'இப்போது நீ கருவுற்றிருக்கிறாய்."

Page 94
ஹரனி கேதீஸ்வரன் 01 ஆம் திகதி
ஜெ. அபிலாஷினி வாசுதேவ 11 ஆம் திகதி 盟2
டெனிலியா கிறிஸ்பெல் அஜினி அஜ்ஜிதன்
15 ஆம் திகதி
18 ஆம் திகதி
சகானா கஜேந்திரன்
பெ. பி 29 ஆம் திகதி 29 ஆம் திகதி 29 马
93 ஒளிஅரச்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏ.ஆர். அப்துல் ரகுமான் 05 ஆம் திகதி
டி. பாஷிக்கா ஆம் திகதி 04 ஆம் திகதி
விமலராஜன் லிந்துஜன் alum. அன்ரனி ஆம் திகதி 08 ஆம் திகதி
* ஹம்சத்வனி
ம் திகதி
செல்வன் ஜெசோன் ஜேசுநேசன் ஐசாயினி சந்திரபிரகாஸ்
28 ஆம் திகதி
திகதி 24 ஆம் திகதி
நிஜோன் வ.கவிவரதா ம் திகதி 30 ஆம் திகதி
30 ஆம் திகதி

Page 95
தரம் 4,5 மாணவர்களுக்கான
வழமையாக இப்பகுதியில் இடம் பெற்றுவந்த கணிதப்புதிர், விடுகதை போட்டி நிறைவுப்பெற்று இம் மாண வர் களின் பல்வேறுப்பட்ட திறன் களை விருத்தி செய்யும் பொருட்டு தமிழ் மொழி, சுற்றாடல், கணிதம், பொதுவிவேகம் ஆகிய நான்கு துறைகள் உள்ள டங்க ளாக இப்போட்டி அமைகின்றது. இலங் கையின் பிரபல்யமான ஆசிரியர்களி னால் இவ் வினாக்கள் தயாரித்து வழங்கு வது இதன் சிறப்பம்சமாகும், இப்பகு திக ளில் இடம்பெறும் வினாக் களுக்குரிய சரியான விடைகளுக்குரிய இலக் கத்தை அருகில் உள்ள விடைக் கப்ப னில் நிரப்பி மூன்றாம் பக்கத்தில் காணப் படும் எமது முகவரிக்கு இம் மாதம் 25
ஆம் திகதிக்கு முன்னர் எமக்கு கிடைக்கக்கூடியவாறு அ. இடம்பெற்று மாணவர்களுக்குரிய பரிசுகள் குறிப்பிட்ட
|1ஆம் பரிசு 2000/=
(2ஆம் பரிசு 1
3. L
3. .
1. வயது என்பதன் ஒத்தபதம் யாது?
1. ஆண்டு
2. அகவை |2. பதட்டம் என்பதன் திருத்தமான வடிவம் யாது
1. பதற்றம்
2. பதட்றம் யானை/தேர் செலுத்துவோரை எவ்வாறு அை 1. சாரதி
2. வாலன்
3. ! 4. தே.க.நி. என்பதன் விரிவாக்கம் யாது? 1. தேயிலை கலக்கும் நிலையம்
2. ( 3. தேசிய கல்வி நிறுவகம்
4. ! ''வாடிவதங்கி” என்பது எவ்வகையான சொல் 1. அடுக்குமொழி 3. இணைமொழி
4. ?
2. 8
கரப்பந்தாட்ட விளையாட்டில் ஒரு அணியில் வீரர்களின் எண்ணிக்கை ? 1.7
2.6
3.4
- N
தாவரமொன்றில் காய் காய்ப்பதற்கு உதவுவ 1.தேனீ
2.குருவி
3.மன்
நுகர்வுக்கான வர்த்தகப் பொருட்களின் தரத்த தும் இலங்கையின் இலச்சினை? 1.SLS
2.SOS
3.ISO
4.
தேசப்படங்களில் பெருந்தெருக்களை காட்டு பயன்படுத்தும் நிறம் எது ? 1.கறுப்பு
2.நீலம்
3. பச் ''பிரித் ஓதிய நீர் தெளித்தல்” இச்சமய சடங் 1. பௌத்தம்
2. இஸ்லாம் 3. இற்
94 ஒளிஅரசி தீபா

-பல்திறன் அறிவுப்போட்டி 02
தவிபான்
மிழ்
' போட்டி-2
இ த க ம்
விதம்
பொதுவிவேகம்
னுப்பிவைக்கவும். தெரிவு கள் குலுக்கல் முறையில் - காலப் பகுதிற்குள் அனுப்பி வைக்கப்படும்.
1500/=
3ஆம் பரிசு 1000/=
மாதம்
4. மணிவிழா
தமிழ்மொழி
4. பதடம்
பதற்டம்
ழக்கலாம் ?. இடையன்
4. பாகன்
தேசிய கல்வி நிலையம் தேசிய கலைஞர் நிறுவனம்
வி. அன்பழகன் யாழ்ப்பாணம்
இரட்டைக்கிளவி உவமைத்தொடர்
ல் இடம்பெறும்
சுற்றாடல்
4.11
எபுழு
4.எறும்பு
தினை உறுதிப்படுத்
4.ISBN
பி.எம். புண்ணியாமீன்
கண்டி
திவதற்காக
சை
4.சிவப்பு பகு காணப்படும் மதம்
4. கிறிஸ்தவம்
து
வளி மலர் 2014

Page 96
1. 1512 தைலத்தை 25m கொள்ளத்த அடைப்பதாயின் எத்தனை சிறிய ே
14 O 2.5O
2. 9பேர் 8 நாட்களில் செய்யும் வேலை
நாட்களில் செய்து முடிப்பார்? 118 நாட்கள் 3.16 நாட்கள்
3, 11 பெற்றோலில் 35km ஓடக்கூடிய
பெற்றோல் தேவை? 1.2oo亡上 2.2Ol
4. லீப்வருடத்தில் மட்டுமே ஒலிம்பிக்
2008 ஆம் ஆண்டு 29ஆவது ஒலிம் எத்தனையாவது ஒலிம்பிக் விளைய 1. 316igi 2.3O6ug!
--
5. பிற்பகல் தளவாடியில் பார்க்கும் ே உண்மையான நேரத்தை நியம நேர 1.19:Ooh 2.6:Ooh
1. A என்னும் நாட்டில் மாலை 3.00 மணி நாட்டில் அதேநாள் 8.00 மணியாக இரு 3.00 மணியாக இருக்கும் போது A எனு என்ன நேரமாக இருக்கும்? 1. Loftsoe) 1.OO Losoof 2. காலை 3. @g6, 1 o.ooLd6 Gof 4. 3 ye
2. EAT என்பதை 5,120 எனவும் ATE எ6 குறித்தால் TEA என்பதை எவ்வாறு கு 1. 20, 5, 1. 2. 2O,1,5, 3.
~.. ஒரு பால் போத்தலின் விலை ரூபா 10 ༣ விட பாலின் விலை ரூபா 6 அதிகம 1. Eblu TT. 6. OO 2. eblin 8.OO 3.
QSంత
5. இச்சதுரமுகி ஆக்கப்பட்ட அட்டைக்கீல
ತಿಣ್ಣೀರುಣಾ E3 DO GOD KAVA IN 2*
uuL E L L EELS eeLLL LLLL SLLLLS ee ee LLLLSLYSSS S
சென்ற மாத பல்திற
தமிழ் கணிதம்
3. 2. 2 1. 3. 2.
3. t 4. 3 2 4.
5。 2 5。
95 ஒளிஅர
 
 
 
 
 

க்க சிறிய போத்தல்களில் பாத்தல்கள் தேவை?
3.8 O a 30
ليصبح
யை 4 பேர் எத்தனை
2.72நாட்கள் 4.20நாட்கள்
கார் 700km ஓட எத்தனை லீற்றர்
3.1 ol 4s
விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப் படுகின்றன பிக் போட்டிகள் நடைபெற்றன. 2016 ஆம் ஆண்டு ாட்டு நடைபெறும்?
3.336.15! 4.326 g.
பாது 700 மணிகாட்டியதாயின் அக்கடிகாரத்தின் த்தில் எழுதுக?
3.05:Ooh 4.17:ooh
ரியாக இருக்கும் போது B எனும் பொதுவிவேகம் நக்கும். B எனும் நாட்டில் மாலை
ம் நாட்டில்
8.oошо600fl
o:30 upgoof
L6, 1,2O.5 616 64b
றிக்கலாம்? இ 3. 1, 5, 20 4.2O, i5 பிஅம்பிகைபாகன்
61&n(Լքլbւ
ஆகும். போத்தலின் விலையை ாகும். ஆகவே பாலின் விலை யாது? I. etöldi 9.OO
lனாக்குறி இடப்பட்ட இடத்திற்கு வரவேண்டிய
2.12 3.9 4.డీ
وع وع
ம் எது? 1, 13 2. Iurs · 3.
ਲਕ ਹਲਕon
3. La 6)
ை - المصير
ன் போட்டிக்கான விடைகள்
கற்றாடல் பொதுவிவேகம்
i. 3. 2. 箕、薰。 3. 2. 3.
B 3. 3. టీ. 3. 2 4. 2
5。 2 S 2
சி தீபாவளி மலர் 2014

Page 97
S/\
S
Typesetting Scanning Plate making Offset Printing Die Cutting Screen Printing Foiling and Binding Dealers in all kinds of paper & Board, wedding cards, invitation Cards, Tel: 0777271478 Email.jeyaoffsetOgmail.com No: 29, St. Sebastian Street, Kesawatha (Gunasingapura), Colombo - 12.
96 ஒளிஅரசி தீபா
 
 
 
 
 

No. 78, Sea Street, Colombo 1. el 2330937 Fax 2458581 Res: 2449792
இஜ் DNNA
29, Main Street.
Haputale T. P :- O5722682O5
Newspaper and Adverti Sement Agency
239/D/6, Lower Street Badula. LP-055 8053255 O779942876

Page 98
ஒளி हुआह9 குறுக்கெழு
போட்டி இல, 11
1 4
||2|| | | |
13
போட்டி முடிவு திகதி 25.10.2
இடமிருந்து வலம் 1) வாதாபிஎன்று அழைப்பட்ட மன்ன6 2) கேள்வி மாறியுள்ளது. 3) மனதுக்கு இதமளிப்பது. 5) நாற்பது திருடர்களை
சமாளித்தவர்! 7) கல்லில் இது உரிக்க
இயலாது. (மாறியுள்ளது) 12) தன் வாயால் கெடும்.
13) காப்பு
மேலிருந்து கீழ் 1) சர்பத்தில் கலக்கும் பொருள்
அது ?
2) அசாத்திய திறமை உள்ளவரை
இப்படி சொல்லலாம்.
4) வாசனை தரும் ஒரு மலர்
6) ஈழத்தில் உள்ள ஒரு நகரம்.
7) வரண்ட பிரதேசத்தில் வளரும் தாவரம்
8) சோகம்
9) அரைவாசி"
11) மருதம்
14) மரத்தின் பகுதி
iര
97 ஒளிஅரச்
 
 
 
 

குறுக்கெழுத்துப் போட்டி இல: 09 பரிசு பெறும்அதிர்ஷ்டசாலிகள்
வி. செல்வநாயகம். சிவன்கோயில் வீதி, புத்தூர். இரண்டாம் பரிசு ரூபா 1,000
கே. கந்தசாமி கே/அசோகா வித்தியாலயம்
கண்டிமூன்றாம் பரிசு ரூபா 500
கனகசபை நாகேந்திரன் 11 - 3/1, நெல்சன் இடம், வெள்ளவத்தை கொழும்பு - 06.
சரியான விடைகளை எழுதி பாராட்டு பெறுபவர்கள்
திருமதி வளந்தா பாலேந்திரா இல 21 நெல்ன் பிளேஸ், வெள்ளவத்தை | ներկtiլ - 06:
சதா தஷாரிகன்
is is செல்வி. வி. தாரங்கனி ,ே புதுமுகத்துவர வீதி, கல்லடி
jäi திருமதி. சாந்தி கி 10Չեմ հii ;լինի: மட்டுகக்கட்டிச்சேலை கே.எப். மில்ஹானி
4. புளிய குறுக்கு திர ஐ. தாஜுடின்
மன்ஸ் விதி,அட் ச்ைைேன செல்வி. ரங்கநாதன் லோஸ்னியா GJI Ismaili i si jGJI Ismaili If it if (i. If it) மொஹமட் உமை
01. குனுவில ரேட்ரெஸ்சின் அக்கு.ை திருமதி: எஸ். பாக்கியநாதன் பிரதம நூலகர், கெழும்புத் தமிழ்ச் சங்கம், இல்
, , , , 06 10. ஏறலுப்டீன்,
3/ தன்று வீதி,ாலமு ை02
ஒளி அரசி குறுக்கெழுத்துப்போட்டி இல08
t ජී.ජී
■■三
வீ ந் தே மா த | ர | ம் ல்ே ண் ம
3ổ# அமிழ் தினு மீ இனிது
ଜୁଟ୍ରୁ 。
| தீபாவளி மலர் 2014

Page 99

7STORIES Ranjanas
www.7 stories.k.
回澳° 絃3樵蔷鹫懿、
* 韃e馨蕊發燊

Page 100
and
Ladies only
Boque racial threading
Branch E. No. 13, Jer Street Colombo eE O777 O11
No, Colling WoodPlace( LeBO72099.546,077.
 

அனைத்துவிதமான மணப்பெண் அலங்கார
პolomboთ06. 408443
リる