கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பாட்டும் கதையும்

Page 1


Page 2

பாட்டும் கதையும்
நா. மகேசன்
கிடைக்குமிடம்:- 59, மூர் வீதி, கொழும்பு-6
வ. ரிமைப் பதிப்பு) (வில் கு. 350

Page 3
6. சமர்ப்பணம்
பண்டத்தரிப்பில் வாழ்ந்த கதிர்காமர் சின்னத் தம்பி என்பவரின் புதல்வியும் என் அருமைத் தாயா ருமாகிய
நாகலிங்கம் பெண் சின்னம்மா அவர்களுக்கு
துள்ளித் திரியும் வயதிலென்றன்
துடுக்கை அடக்கிப் படிக்கவைத்து அள்ளி அனைத்தும் அடித்துரைத்தும் அன்பால் என்னை ஆளாக்கி வெள்ளி இட்ட காலினுக்கோர்
வெறுங்கால் அடிமை அல்லவெனும் தெள்ளிய பண்பைத் தெருட்டியவென்
தெய்வம் அன்னைக் கர்ப்னமே
saaSSSSSSSSSSSSSSSSSaSSSSSS

பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள்
வழங்கிய ஆசியுரை
* காலை மாலே வேளையில்
கடுகி வரும் பஸ்வண்டி
பாலர் நாங்கள் சென்றிடும்
பள்ளிக் கூட பஸ்வண்டி
காத்து நிற்கும் பெரியவர்
கடிதிற் செல்ல வேண்டினும்
ஏற்றிச் செல்ல மறுத்திடும்
எங்கள் பள்ளி பஸ்வண்டி.’’
இப்பாடல் கையெழுத்தில் இருந்தபடியால் அதனைப் படித் தற்குக் கண்களின் ஒத்துழைப்புக் கைகூடியது. பாடலைத் திருப்பித் திருப்பிப் படித்தேன். ஆக்கியோர்பால் கவி செய் யும் ஆர்வமும் ஆற்றலும் இருப்பது ஒருவாறு தெரிந்தது. ஆக்கியோருக்குக் கவிதாசக்தி மேன்மேலும் சித்திப்பதாக என்று திருவருளைப் பிரார்த்திப்போமாக.
சி. கணபதிப்பிள்ளை
கலாசாலை வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம். 74-سس-9--12

Page 4
கவிஞர் இ. முருகையன் அவர்கள்
வழங்கிய முன்னுரை
ஈழத்தில் எழுத்தறிவு மிக்கவர்களின் விகிதாசாரம் உயர்ந்தது என்று புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. ஆசிய நாடு கள் பலவற்றுடன் ஒப்பிடும்போது, ஈழத்தவர்களின் எழுத்த றிவையிட்டு நாம் பெருமைப் படலாம்.
எனினும், எம்மவர்கள் இந்த எழுத்தறிவினைத் தக்க அளவுக்குப் பிரயோகிக்கிருர்களா? எம்மவரின் வாசிப்புப் பழக்கம் எவ்வாறுள்ளது? இவ்வாறன கேள்விகளை எழுப்பு வோமானல், அவற்றுக்குக் கிடைக்கும் விடைகள் திருப்திகர மானவையாக இல்லை.
எழுத வாசிக்கத் தெரிந்தவர்கள் அத்திறமையினை வீண் போகாமற் பயன்படுத்த வேண்டும் , எழுத்தறிவைத் தகுந்த வாறு பயன்படுத்துவதற்கு, வாசிக்கத் தகுந்த நூல்களும், பிர சுரங்களும் பெருந்தொகையில் அவசியமாகும். இதனை மகத் தானதொரு தேசிய பண்பாட்டுத் தேவை என நாம் விபரிக்கலாம்.
இத் தேசிய பண்பாட்டுத் தேவை, எங்கள் நாட்டிலே வளர்ந்தோர் இலக்கியம், சிறுவர் இலக்கியம் ஆகிய இரண்டு துறைகளில் உண்டு. ஆயினும், சிறுவர் இலக்கியத்தைப் பொறுத்தவரையில் இது மிகப் பெருந்தேவையாக உள்ளது. என்பது பலரும் ஒப்புக்கொள்ளும் உண்மையாகும்.
சிறுவர்களுக்கெனப் பள்ளிப்பாட நூல்கள் வெளிவருகின் றன. வாசிப்பு, எழுத்து, கருணிதம் முதலான பாடங்களைப் புகட்டுவதற்கு இவை உதவும். ஆனல், இவை போதுமா?
இல்லை. இல்லவே இல்லை.

iii
பாடநூல்களைத் தவிர்ந்த சிறுச்சிறு நூல்கள் சிறுவர்சளு க்கு வேண்டும். அவர்கள் வாசித் துப் பழகுவதற்கு மட்டுமன்றி, பாடி மகிழ்வதற்கும் பார்த்துக் களிப்பதற்கும் புத்தகங்கள் வேண்டும். வாசிப்பதற்கு இலகுவான, பெரிய, தெளிவான எழுத்தில் அவை அச்சிடப் படல் வேண்டும். நெஞ்சை அள் ளும், சித்திரங்கள் நிறைந்தவையாக அவை இருத்தல் வேண் டும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, விழுமிய கருத்துக் களையும் விரும்பத்தக்க சொல்லாட்சியையும் உடையவை யாக அவை அமைதல் வேண்டும். இப் பண்புகளெல்லாம் வந்து பொருந்துமானல், பொன்னுற் செய்த மலர் நறுமணம் பரப் புவதுபோல் ஆகும். “பொன் மலர் நாற்றம் உடைத்து" என்று குமரகுருபரர் கூறிஞரே- அதுபோல் ஆகும். அத்த கைய பண்பு வாய்ந்த புத்தகத்தைத் தமிழ் கூறும் நல்லுலகம் மனமுவந்து வரவேற்கும்.
திரு. நா. மகேசன் எழுதி வெளியிடும் ‘பாட்டும் கதை யும்’ என்னும் இப்புத்தகம் சிறுவர் இலக்கியத் துறையில் நில வும் தேவையினை ஒரளவு நிறைவேற்ற முற்படுகிறது. இதில் உள்ள பாட்டுகள் சிறுவர்களுக்கு மிகவும் ஏற்றவை. ஏனென் ருல், இவை மிகவும் இலகுவான சொற்களால் ஆனவை; எளி மையான ஒசை அமைப்புக் கொண்டவை. அத்துடன் சுவை யான கதைகளையும் சொல்வனவாய் உள்ளவை.
முதலில் உள்ள "எல்லாம் தெரிந்த எமநாதர்” ஒரு முசுப் பாத்தியான கதை. ‘ஆணு அறிந்த அந்தோனியார் கதை, சிங்கள மக்களிடையே வழங்கும் "மகதன முத்தா கதை என் பனவற்றை எமநாதரின் க ைக நினைப்பூட்டுகிறது. ‘இராசா வீட்டு முற்றமதில் நனைந்த சீனி காய்ந்ததுவே." என்ற பழம்பாட்டிற் சொல்லப்பட்டு வந்த வேடிக்கைக் கதையொன் றினையே ஒரு புதிய பாட்டாக ‘எங்கள் வாயில் மண்ணடர்” என்ற தலைப்பிலே பாடியுள்ளார் அன்பர் மகேசன், "சும்மா தின்றன் பழம்" என்ற பாட்டில், புத்திசாதுரியமுள்ள கெட் டிக்காரச் சிறுவனெருவனை நாம் சந்திக்கிருேம். "ஆபத்தில்

Page 5
iv
நண்பன்', ‘நல்லோர்க்கு அழகு', 'புள்ளிமானின் சுள்ளிக் கால் கள் முதலிய பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் நீதிபோதனை செய்கின்றது. இந்த நீதிகளெல்லாம் கதை வாயிலாகப் பாட்டுருவிலே புகட்டப்படுவது, இதனைப் படிக் கும் சிறுவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் எனலாம்.
‘பாட்டும் கதையும்’ என்னும் இச் சிறுவர் நூல், ஒரு பிரதானமான தேசிய பண்பாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யமுற்படுகிறது. ஆகையால் இது மனமுவந்து வரவேற்கத்தக்கது.
இ. முருகையன் 31/1, சிறிபால ருேட், மவுன்ற் லவினியா.

பிள்ளைக் கவியரசு அழ. வள்ளியப்பா அவர்கள்
வழங்கிய அணிந்துரை
சில ஆண்டுகளுக்கு முன்பு, சிறுவர்கள் ஏற்பாடு செய்த ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டேன். அப்போது 'உங்க ளுக்குக் கதை கேட்க விருப்பமா? அல்லது, பாட்டுக்கேட்க விருப்பமா? கதையை விரும்புவோர் கை தூக்குங்கள். கை தூக்காதவர்கள் எல்லாம் பாட்டை விரும்புகிறவர்கள் என்று எடுத்துக் கொள்வேன்' என்று கூறினேன்.
ஆண் குழந்தைகளில் பெரும்பாலோர் கதையை விரும் பிக் கை தூக்கினர். பெண் குழந்தைகளில் பெரும்பாலோர் பாட்டை விரும்பிக் கை தூக்காதிருந்தனர். m
உடனே நான் “சரி, உங்களில் சிலர் கதை வேண்டும் என் கிறீர்கள்; வேறுசிலர் பாட்டு வேண்டும் என்கிறீர்கள்; ஆகை யால், நான் கதையும் பாட்டும் கலந்த கதைப் பாடல்களைக் கூறப் போகிறேன்’ என்று கூறிச் சில கதைப் பாடல்களைப் பாடிக் காட்டினேன். அனைவரும் அவற்றைக் கேட்டு ஆனந் தங் கொண்டனர்.
கதைப் பாடல்களுக்கே ஒரு தனி மகிமை உண்டு. தமி ழிலே குழந்தைகளுக்கான பாடல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் நன்கு பெருகி வந்த போதிலும், கதைப் பாடல் கள் மிகக் குறைவாகவே உள்ளன. ஆங்கிலத்தில் உள் 6ாவை போல, தமிழ் மொழியிலும் கதைப் பாடல்கள் (Story Poems) பெருமளவில் வெளிவர வேண்டுமென்று குழந்தை கள் விரும்புகின்றனர். அந்த விருப்பத்தைப் பூர்த்தி செய்து வைக்கும் நற்பணியில் பங்கேற்க முன் வந்துள்ளார் கவிஞர் நா. மகேசன் அவர்கள். கதைப் பாடல்கள் எழுதுவது கடி :ம். அதிலும், நகைச் சுவைப் பாடல்கள் எழுதுவது மிகவும்

Page 6
vi
கடினம். 'எல்லாம் தெரிந்த எமநாதர்”, “எங்கள் வாயில் மண் னடா? இரண்டும் நகைச்சுவை ததும்பும் நல்ல பாடல்கள்.
பசித்தோர்க்கு உதவுவதே, ஆண்டவனுக்குச் செய்யும் அரிய தொண்டு என்பதை உணர்த்தும் வகையில், "அற்ருர் பசியை அகற்றுக’ என்னும் பாடலில்;
'பசித்தோன் உண்ட பழங்கள்தான் பழனி ஆண்டார்க்கு எட்டிற்று”
என்று கவிஞர் அழகாகக் குறிப்பிடுகிருர், இப்பாடலும் “குட்டிச்சிவலிங்கன்’ என்னும் பாடலும் உள்ளத்தைத் தொடுவன.
பாட்டியின் முன்னுல் ஒரு போட்டி நடக்கிறது. அப் போட்டியில் ரவியும், மலரும் பன மரத்தைப் பற்றிப் போட்டி போட்டுக்கொண்டு பாடுவது, பன நுங்கு போலச் சுவையாக உள்ளது. அடேயப்பா பனமரத்தின் உபயோ கத்தை எப்படி எப்படியெல்லாம் எடுத்துக் கூறுகிறர்கள்! எங்கள் பாட்டி,
'கற்பக தருவென் றுனையழைப்பாள்
காசினி மருந்தென் றுனைப்புகழ்வாள்' என அவர்கள் கடைசியில் சேர்ந்து பாடுகிருர்கள். அவர் களைப் போலவே, இப்பாடலைப் படிக்கும் மற்றக் குழந்தை களும் மகிழ்ச்சியுடன் பாடத் தொடங்குவர் என்பதில் ஐய மில்லை.
இப்படிப் பயனுள்ள பதினுேரு கதைப் பாடல்களைப் பாலர் உலகுக்குஅளித்துள்ள கவிஞர் மகேசனப் பாராட்டு வது தமிழறிந்தோர் கடமையாகும். மேன் மேலும் பலகதைப் பாடல்களை அவர் இயற்றி, குழந்தை இலக்கியம் செழிக்கச் செய்வாராக.
அழ. வள்ளியப்பா ‘உமா இல்லம்’ சென்னை -40 8-10-1974

கலாநிதி அ. சண்முகதாஸ் அவர்கள் வழங்கிய அணிந்துரை
குழந்தைகளைப் பாடிய பாடல்கள் தமிழிலே பெருவா ரியாக உண்டு. பாண்டியன் அறிவுடை நம்பி தொடக்கம் இன்றுவரை தமிழ்ப்புலவர்கள் குழந்தைகளைப் பற்றிப் பாடி வந்திருக்கின்றனர். குழந்தைகளைப் பற்றிய பல இலக்கியங்கள் கமிழ் மொழியிலே இருப்பினும், குழந்தைகளுக்கெனப் பாடப் பட்ட இலக்கியங்கள் மிக அருகியே காணப்படுகின்றன. குழந் தைகளுக்கு இலக்கியம் படைப்பதற்கு விசேட திறமை வேண் டும். பாரதியார் படைக்கும் கண்ணன் தன் தாய் கதை சொல் லுவதைக் கூறும்போது,
'இன்பமெனச் சில கதைகள் எனக் கேற்ற மென்றும் வெற்றியென்றும் சில கதைகள் துன்பமெனச் சில கதைகள். கெட்ட தோல்வியென்றும் வீழ்ச்சியென்றும் சில கதைகள் என்பருவம் என்றன் விருப்பம்- எனும் இவற்றினுக் கிணங்கவென் னுளமறிந்தே அன்போ டவள் சொல்லி வருவாள்."
என்கிருர். குழந்தைகளின் பருவத்தினையும் அவர்கள் விருப்பத்தினையும் அறிந்து இலக்கியம் படைப்பதில்தான் தனித்திறமை தங்கி யுள்ளது. திரு. நா. மகேசன் குழந்தைப் பருவமறிந்து, அவ ரின் விருப்பமுணர்ந்து, அவற்றினுக்கிணங்க அக்குழந்தையின் உளமறிந்து, அன்போடு பாட்டுகளும் கதைகளும் படைக்கும் வல்லமை உடையவராயுள்ளார். இலங்கை வானெலியிலே பல வருடங்களாகச் சிறுவர் மலர் நிகழ்ச்சியைத் தயாரித்து வானெலி மாமாவாக குழந்தைகள் உலகிலே ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்ட திரு. மகேசன் குறளும் கதையும் என் தனும் நூலைச் சென்ற ஆண்டு அக்குழந்தை உலகுக்கு அளித் w தார். இந்த ஆண்டு அவர் பாட்டும் கதையும் என்னும் இந்
நூலை அளிக்கின்ருர்,

Page 7
viii
குழந்தைகள் கற்பன சக்தி மிகுதியாக உடையவர்கள். அவர்களுடைய கற்பணு சக்திக்கு விருந்தளிப்பது போல இவ ருடைய கதைப்பாடல்கள் அமைகின்றன.'வத்தகைப் பழம்' என்னும் கதைப் பாட்டு பிள்ளைகளின் மனத்தைக் கவர்ந் ததை நான் நேரடியாக என் அனுபவத்திலே கண்டு கொண் டேன். இந்நூல் கிடைத்தவுடன் படித்த நான், அடுத்த நாள் குழந்தைகளுக்கு ஒரு சிறிய சொற்பொழிவு ஆற்றும் பொழுது இக்கதைப் பாட்டினை வேண்டுமென்றே அவர்களி டம் கூறினேன். என்னுடைய நண்பர்கள் சிலரின் குழந்தைகள் அக்கூட்டத்திலே இருந்தனர். கூட்டம் முடிந்து சில மணித் தியாலங்களின்பின் அந்நண்பர்கள் வீட்டுக்குச் சென்று, கூட் டத்தினைப் பற்றி அவர்கள் குழந்தைகள் என்ன கூறினர்கள் என்று நான் கேட்பதற்கு முன்னரே ‘வத்தகைப் பழக்கதை’ யைக் குழந்தைகள் மூலமாக அறிந்த தந்தைமார் எனக்கு ஒப்பு விக்க முனைந்தனர். குழந்தைகளை இக்கதை கவர்ந்துவிட் டது என்பதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டியிருக்கின்றது? திரு. மகேசனின் ஏனைய கதைப்பாட்டுகளும் இவ்வாறே குழந் தைகளைக் கவரக் கூடியன என்று துணிந்து கூறலாம்.
குழந்தைகளுக்கேற்ற வகையில் எளிய தமிழ்ச் சொற் களில் இனிமையான சந்தத்தில் கவிதைகளை அமைத்த போதும் பண்டைய இலக்கியச் சுவைக்கும் பாமர இலக்கியப் பண்புக்கும் அவற்றிலே குறைவில்லை.
‘‘அட்டைக் கடியும்
அதிக வழிநடையும்
கட்டை இடறலும்
காணலாம் கண்டியிலே'
என்னும் மலையகக் கிராமியப் பாடலமைப்பு திரு. மகேசனின் "குட்டிச் சிவலிங்கன் ” என்னும் கதைப்பாட்டில்,
'கட்டைகால இடறுகின்ற
கண்டிபோன்ற ஊரிலும்
அட்டைக்கடி அதிகமான
அப்புத்தளை மேவியும்'
என்று அமைந்துவிடுகின்றது.

ix
எங்கள் நாட்டின் பொதுச் சொத்துக்களை எங்களு டைய பொருள் போல உபயோகிக்கும் மனப்பாங்கு பலரிடம் காணப்படாமல் உள்ளது. இத்தகைய மனப்பாங்கு குழந்தைப் பருவத்திலிருந்தே வளரவேண்டும். அதற்கேற்ற வகையில் ஆசிரியர்* பள்ளிக்கூட பஸ்வண்டி’ என்ற கதைப்பாட்டினை அமைக்கிருர்,
உள்நாட்டில் எமக்கு நல்ல பலன்தரக் கூடியது பன. அப்பனைமரத்தின் பல்வேறு பயன்களையும் குழந்தைகள் விரும் பும் வசையிலே “பனையின் கதை" கூறுகின்றது.
ஒவ்வொரு கதைப்பாட்டிலும், ஆசிரியர் கதை கூற எடுத்துக்கொண்ட பொருள் ரசனையுடன் கையாளப்பட் டுள்ளது. அதன் மூலமாக கூறவந்த போதனை தெளிவுடன் புலப்படுத்தப்பட்டுள்ளது. பாடற் சந்தம் பொருளுக்குஞ் சந்தர்ப்பத்துக்கு மேற்றவகையில் அமைகின்றது. இவை யாவற்றுக்கும் மேலாக ஆசிரியர் கையாளும் நாடகப் பண்பு இக் கதைப் பாட்டுகளேக் குழந்தைகள் சுவையுடன் படிப்ப தற்கு வெகுவாகத் துணைபுரியும். திரு. மகேசன் இத்தகைய குழந்தை இலக்கியங்களை மேலும்மேலும் ஆக்கி எங்கள் நாட் டுக்குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணை புரியவேண்டும். அதற்குரிய தகைமைகள் யாவும் அவரிடம் காணப்படுகின்
றன. பாட்டும் கதையும் அதற்கு நல்லதோர் ஆதாரம்.
அ. சண்முகதாஸ் இலங்கைப் பல்கலைக் கழகம், (3t prints;257.25-10-74.

Page 8
என்னுரை
சிறுவர்களுக்கான நூல்கள் எழுத வேண்டுமென்று கனவு கூடக் கண்டவனல்ல யான். ஆனல் இன்று தெய்வாதீனமாக அப்படியான ஒரு சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டவணுக இருக்கி றேன். குறைந்த விலையிலே சிறந்த நூல்களைச் சிறுவர்களுக் குத் தரவேண்டும் என்பது எனது நோக்கம். நமது நாட்டில் சிறுவர்களுக்கான நூல்கள் வெளிவருவது மிகக் குறைவு. புத் தகவெளியீட்டுத் தாபனங்களும் சிறுவர் இலக்கியங்களில் அதிகம் அக்கறை எடுப்பதும் இல்லை. ஊக்குவிப்பதும் இல்லை. இந்நிலையில் தனிப்பட்டவர்களின் முயற்சிகள் விருத்தியடைவ தில்லை. நூல்களைச் சிறந்த முறையில் அச்சிட்டு வெளியிடு வது தனிப்பட்டவர்களுக்கு இயலாத கருமம். இருந்தாலும் இயன்ற மட்டில் சிறுவர் நூல்களைப் பயனுள்ளனவாகவும் சிறப்புடையனவாகவும் அமைக்க வேண்டும் என்பதே எனது ஆவல்.
சிறியேனுடைய "குறளும் கதையும்? என்ற முதலாவது நூலுக்குக் கிடைத்த வரவேற்பு உற்சாகமளித்தது. அந்த உற் சாகத்தின் பிரதிபலிப்புத்தான் இந்த “பாட்டும் கதையும்’’. நூலைப்பற்றி யான் கூற விரும்பவில்லை. அறிஞர்களின் அபிப் பிராயங்கள் கூறட்டும். நூலின் பெயருக்கு அமையாத "பனையின் கதை’, 'பள்ளிக்கூட பஸ் வண்டி’ என்ற இரு பாடல்கள் இந்நூலிற் சேர்க்கப்பட்டுள்ளன. முடிவான ஒரு கதையை இப் பாடல்கள் கூருவிட்டாலும் அவற்றின் சொல் நயமும் பொருள் நயமும் சிறுவர்களுக்குப் பயன் தருமென் பது என் நம்பிக்கை.
அச்சுத்தாளின் விலை பன்மடங்காக அதிகரித்து விட்ட காலமிது. இலாபம் பெறவேண்டுமென்று வியாபார நோக்கத் தோடு இந்நூலை வெளியிட யான் முற்படவில்லை. நூலின் விலையை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவுக்குக் குறை த்திருக்கிறேன். அன்பர்கள் இதைக் கவனித்து ஆதரவளிப்பார் களாயின் எனது ஊக்கம் பெருகும் என்பதிற் சந்தேகமில்லை.

Χί
எனது நூல்வெளியீட்டு முயற்சிக்குப் பக்கபலமாக இருப் பவர்கள் என் நண்பர்களே. பலர் பல வழிகளில் உதவியிருக் கிருர்கள். எல்லோரையும் பெயர் பெயராகக் கூறுவதாயின் விரியும். இருப்பினும் முக்கியமான ஒரு சிலரைக் குறிப்பிடா மல் விடவும் முடியாது. வழிகாட்டுவதற்கு அன்பர் திருமு. சிவ ராசா அவர்களும், அறிவுரை கூற நண்பர் திரு சி. மெளனகுரு அவர்களும், படம் வரையும் பணிக்கு நண்பர் எஸ். கே. செளந் தரராஜன் அவர்களும் முன்னின்று உழைத்தார்கள். இவர் களுக்கும், இங்கு பெயர் குறிப்பிடா மற்றும் நண்பர்கள் அனை வருக்கும் எனது நன்றியும் கடமைப்பாடும் என்றும் உரியன.
உடல் நலக்குறைவையும் பொருட்படுத்தாது, என் முயற் சிக்கு ஆசியுரை வழங்கிய பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களுக்கும், பெருமனத்தோடு கேட்டவுடனேயே முன் னுரை எழுதி உதவிய கவிஞர் இ. முருகையன் அவர்களுக் கும், நூலைப்பற்றி அபிப்பிராயங்கள் தெரிவித்துள்ள அன்பர் கள் கலாநிதி அ. சண்முகதாஸ், திரு எஸ். எம். கமால்தீன் ஆகி யோருக்கும் எனது பணிவான வணக்கத்தையும் நன்றியையும் தெரிவிக்கிறேன்.
குழந்தைகளுக்கென்றே கவிபாடி பிள்ளைக் கவியரசு? என்று புகழ் பெற்றவர் தமிழ்நாட்டு அன்பர் திரு அழ. வள்ளி யப்பா அவர்கள். நமது நாட்டிலும் அவருடைய நூல்களுக்கு அதிக மதிப்பு உண்டு. அன்னரை நேரிற் கண்டு பழகாதவன் யான். இருந்தும் எவருடைய அறிமுகமும் இல்லாமல் என் வேண்டுகோள் கண்டமாத்திரத்தே அணிந்துரை எழுதி அனுப்பினர்கள். இப்பேருதவிக்குச் சிறியேன் எவ்விதத்தி லும் ஈடுசெய்ய முடியாத நிலையில் இருக்கிறேன். கவிஞரு டைய புகழும் தொண்டும் மேன்மேலும் பெருகுக என்று நன்றியோடு இறைவனை வழுத்துகின்றேன்.
என்னுரை நீளுகின்றதென அஞ்சும்போது அன்பர் திரு க. தியாகராசா அவர்கள் மனக்கண்முன் வருகிருர்கள். "ஓ'டோ' அச்சக உரிமையாளர் அவர்தான். அவரது பொறு

Page 9
xii
மையான சேவை போற்றற்குரியது. அவருக்கும் அவரது தாபன ஊழியருக்கும் என் மனமார்ந்த நன்றி உரித்தாகுக.
இதுவரை நூலின் கதையை என்னுரையிற் கண்டீர்கள். பாட்டு வேண்டாமா? அதிகம் இல்லை; மேலே படித்துப் பாருங்கள். t
நாட்டில் வழங்கி வரும்
நல்ல பல கதைகளையே பாட்டும் கதையு மென்றிப்
பனுவல் தனிற் சேர்த்து வீட்டின் சிறுவ ரெல்லாம்
விரும்பிக் கற் றின்புறவே நாட்ட மிகவும் கொண்டு
நவின்றேன் பா நயமறியேன்.
சும்மா இருக்கும் சுகமறிய மாட்டாமல் எம்மா தவத்தோரின் பாமரபைக் கல்லாமல் இம்மா நிலத்திற் கவிபுனைய நான் வந்தேன் அம்மா பிழைபொறுப்பீர் அறிவுடைய பெரியோரே.
ஓசை நயமொன்றே உறுதுணை ஆகுமென்றென் ஆசை மிகுதியினுல் ஆக்கினேன் இப்பாக்கள் காசைக் கொடுத்திந்நூல் கருனையொடு பெற்றவர்கள் பூசைக்கு மலர்கொடுத்த புண்ணியம்தாம் பெறுவாரே.
நா. மகேசன் 59, மூர் வீதி, கொழும்பு-6 16-11-1974.

A.
பொருளடக்கம்
எல்லாம் தெரிந்த எமநாதர்
வத்தகைப் பழம்
எங்கள் வாயில் மண்ணடா
அற்றர் பசியை அகற்றுக நல்லோர்க்கு அழகு பனேயின் கதை
சும்மா தின்றன் பழம்
வேட்கை தடுப்பது அறிவன்றே
ஆபத்தில் நண்பன் புள்ளிமானின் சுள்ளிக்கால்கள் குட்டிச் சிவலிங்கன்
பள்ளிக்கூட பஸ்வண்டி
பக்கம்
15
2 II
30
34 49
56
62
67
72
82

Page 10

எல்லாம் தெரிந்த எமநாதர்
உங்களுக்கு எல்லாம் தெரிந்த எமநாதரைத் தெரியுமா? எதுவுமே தெரியாத அவர், தனக்கு எல்லாம் தெரிந்ததாக எண்ணிக் கொண்டிருப் பவர். அதனல் இறுமாப்பும் கொண்டவர். முன் பின் யோசிக்காமல் புத்திமதிகளைத் தாராளமாக அள்ளி வழங்குவார் இந்த எமநாதர். இவர் புத்தி களைக் கேட்பவர்களின் கதி இருக்கிறதே, அதை நான் சொல்லவில்லை; கதை சொல்லும்.
இவரைப் போலப் பலர் உலகிலே இருக்கி றர்கள். இவரைப் போன்றவர்கள் மட்டுமன்றித் தமது சொந்தப் புத்தியை உபயோகிக்காத ஏமா ளிகள் பலரும் உலகில் இருக்கிருர்கள். இவர்கள் தாமாக எதையும் யோசித்துச் செய்யமாட்டார் கள்; எதற்கும் பிறருடைய புத்திமதிகளையே எதிர் பார்ப்பர். இவர்கள் வாழ்வில் அடைவது துன்பமே.
இந்த எமநாதரையும் ஏமாளிகளையும் பார்க்க வேண்டும் போலிருக்கிறதா? சரி வாருங்கள்.

Page 11
- 2 -
ஊரின் பேரைக் கேளாதீர்
உண்மைக் கதையோ பாராதீர் பாரின் நன்மை கருதியொரு
பகிடிக் கதைநான் பகர்வேனே பேரின் நல்ல எமநாதன்
பெயரை உடைய சான்றேனும் ஊரின் நல்ல ஊரொன்றில்
உயர்வாய் வாழ்ந்து வந்தானே.
அந்த ஊரின் அதிசயத்தை
அறியச் சொல்வேன் அயராதீர் எந்தச் சிக்கல் ஏற்படினும்
எல்லாந் தெரிந்த எமநாதர் வந்தே புத்தி சொல்லிடுவார்
வகையாய் மக்கள் வாழ்வதற்கு அந்தப் புத்தி கேட்டவர்கள்
ஆரே அங்கு உருப்பட்டார் !
எல்லாந் தெரிந்த எமநாதர்
ஏற்றம் உரைக்கப் போமானுல் சொல்லுந் தரமும் ஆகாதே
சோலி உரைத்துத் தீராதே நல்ல காட்டாய் ஒருநாளில்
நடந்த செய்தி சொல்வேனே கொல் லென் றேநிர் நகைத்திடவே
கோடி நாட்கள் நினைத்திடவே.

--سس- 3 --
சொன்ன ஊ:ரின் மத்தியிலே
சோமர் கோயிற் கோபுரத்தில் என்ன விதமோ தெரியவிலை
ஏகப்பட்ட புல் முளைத்துப் பொன்னே அனைய அதனுச்சி
பொலிவை இழந்த ததுகண்டு என்ன செய்வோம் புல்லகற்ற
என்றே மக்கள் ஏங்கினரே.
ஒடிச் சென்றன் நாதரிடம்
ஒருவன் அவரே கதியென்று தேடிப் புத்தி சொல்லுமையா
தேவன் கோவிற் புல்லகற்ற. நாடி வந்தோன் முகம்நோக்கி
நன்றே சொன்னுர் எமநாதர் பேடிப் பயலே இதுவுமொரு
பெரிய பொறுப்பாய் வந்தாயோ?
நல்ல பசுவாய்ப் பார்த்தந்த
நம்பன் கோபுரத் தேற்றிவிடின் மெல்லப் புல்லை மேய்ந்துவரும்
மேலும் கோபுரம் மிளிருமெனச் சொல்லக் கேட்ட சோணகிரி
சோரா தோட்டம் பிடித்துமொரு செல்லப் பசுவாய்த் தேடிவந்து
சேர்ந்தான் சோமர் கோபுரமே .

Page 12
- 4 -
பார்த்தான் உச்சிக் கோபுரத்தை
பசுவை ஏற்ற வகையறியான் தீர்த்தான் அந்தச் சந்தேகம்
திரும்பிச் சென்று நாதரிடம் மூர்க்கன் போல அவர்சீறி
மூடா நானே வந்திடுவேன் கோத்தோர் கப்பிக் கயிற்றினிலே
கோபுரந் தன்னில் கட்டிடுவேன்.
கட்டிய கப்பி அதன்வழியே
கறவை தன்னை ஏற்றிடவே எட்டி நடந்து அவர் வரவே
எல்லாச் சனமும் கூடிடவே பெட்டிகள் தொகையாய்க் கொணர்வீரே
பேடிகளாய் நிற்காதி ரெனத் தட்டி விட்டார் மக்களையும்
தானே ஏறிக் கப்பிகட்ட.
எங்க பெட்டி உங்கபெட்டி
எதிரோர் வீட்டு மரப்பெட்டி தங்க மூளை எமநாதர்
தாவி ஏறத் தக்கபெட்டி அங்கே வந்து குவிந்திடவே
அடுக்கி அடுக்கி எமநாதர் பங்கம் இன்றி மேலேறப்
பார்த்து மகிழ்ந்தார் மக்களுமே.

- 5 -
ஒன்றன் மீது ஒன்றக
ஒர் ஆயிரமாய்ப் பெட்டி வைத்து குன்றே ஒத்த கோபுரத்தில்
கொடியை எட்டிக் கட்டிடவே ஒன்றே பெட்டி இனும்வேண்டும் ஒன்றும் இல்லை ஊரினிலே நன்றே எல்லாம் தீர்ந்ததனுல் நா எழாமல் நரர்நின்றர்.
உச்சிப் பெட்டியில் ஏறிநின்ற
உத்தமர் ஊக்கம் தனேயிழந்து *சிச்சி? எங்கே பெட்டியடா ?
சிக்கிரம் கொணர்வீர் பெட்டியென சச்சா! பெட்டி தீர்ந்ததையா
சான்றேர் நீர்தான் சாற்றிடுவீர் மெச்ச ஒண்ணு இந்நிலையின்
மீண்டும் மேலே செல்வதற்கு.
அடடா உங்கள் மூளைகளை
அவித்துக் குடித்தால் நல்லதடா எடடா அடியிற் பெட்டியினை
என்றே எமனும் கூறிடவே குடடா மேலே என்றுசொல்லி
குறுக்கே இழுத்தான் ஒருமூடன் தடதட என்று பெட்டிகளும் தலை கீழாக வந்திடவே,
* ஒலிக்குறிப்பு

Page 13
سس- 6 ----
எல்லாந் தெரிந்த எமநாதர்
என்ன ஆணுர் என்பதனைச் சொல்ல நாவும் எழவில்?லச்
சொல்லாமல் நீர் சிந்திப்பீர் ! எல்லாந் தெரிந்தோர் இறுமாப்பு
ஏற்றம் என்றும் தாராது நல்லாய் உணர்ந்து நடப்பதுடன்
நமது புத்தி தீட்டிடுவோம் .

வத்தகைப் பழம்
அதோ நடந்து செல்கிருனே ஒரு பையன், அவன் யார் தெரியுமா? அவன்தான் ஐயன். ஐயன் ஒரு பொய்யன், எந்நேரமும் பொய்யே பேசுவான். தான் பொய் சொல்வது மட்டுமல் லாமல் பிறரையும் பொய் சொல்லத் தூண்டு வான்.
* பொய் சொல்லாதே, பொய்சொல்லாதே’’ என்று சொல்லுகிருர்களே, எதற்காக? பொய் சொல்கிறவர்கள் எந்நேரமும் பயந்து கொண்டே இருக்க வேண்டும். ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு, அதை மறைப்பதற்கு ஒன்பது பொய்கள் சொல்ல வேண்டும். இருந்தும் என்ருே ஒரு நாள் உண்மை வெளிவந்துவிடும். உண்மை வெளிவரும்போது பொய் சொன்னவரின் ம ன ம் பெரிய வேதனை அடையும். அதனுற்ருன் 'பொய் சொல்லாதே’’ என்று வற்புறுத்துகிருர்கள் .

Page 14
-- 8 -
நமது ஐயன் இருக்கிருனே, அவன் தன் னுடைய நன்மைக்காக மற்றவர்களைப் பொய் கூறவைப்பான். தான் நன்மை அடைந்த பின் மெதுவாக நழுவி விடுவான். இவனைப் போன்றவர் களின் நட்பு கூடாது என்று நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை.
இன்று ஐயன் எங்கே போகிருன்? தனது நண்பன் கந்தையாவின் வீட்டுக்குத்தான் போகி முன், கந்தையாவின் வீட்டில் என்னதான் நடக்கப் போகிறதோ!.
கந்தை யாவின் தந்தையார்
சந்தை சென்று வந்தனர் விந்தை யான கனியொன்றை
விரும்பி வாங்கி வந்தனர் எந்தையே நீர் ஏந்தியே
வந்த காயின் பெயர் என்ன? உந்தக் காயை உண்ணுதல்
ஒவ்வா தென்றன் கந்தையன்.
தம்பி! இதுதான் வத்தகை நம்பு இதுஓர் பழமடா தும்பு கிம்பு இல்லையே
தோல்தான் பச்சை நிறமடா அம்பி மாமா நாளைக்கு
அழைத்தார் நம்மை விருந்துக்கு நம்பி இக்கனி அவருக்கு
நல்கு வோமே நாளைக்கு.

- 9 -
இந்தச் செய்தி சொல்லியே
எங்கோ சென்றர் தந்தையும் அந்த நேரம் நண்பனும்
ஐயன் அங்கே வந்தனன் கந்தன் தனியே வீட்டிலே
காத்தி ருக்கக் கண்டுமே அந்தப் பழத்தை உண்டிட
ஐயன் ஆசை கொண்டனன்.
பச்சைக் காயாய் இருக்கின்ற
பருத்த காயும் என்னவோ? இச் சகத்தில் இன்றுதான்
இதனைக் கண்டேன் என்றனன் அச் சமயம் கந்தையன்
அடடா இது பழமென்றன் பச்சைக் கள்ளன் ஐயனின்
பாசாங் கைஅறி யாமலே.
கல்லுப் போலக் கடினமாய்க்
கனியா திருக்கும் காயினை சொல்லிக் கணிஎன் றேய்த்தவர்
சொல்லுக் கேட்டாய் மூடனே நல்ல காயைக் கனியெனின்
நண்பர் உன்னை நகுவரே மெல்ல எனக்குச் சொன்னதை
மேலும் யார்க்கும் சொல்லாதே.

Page 15
ஐயன் சொன்ன பொய்களை
அலசி அறியாக் கந்தனும் மெய்யாய் அப்பா கூறினுர் மெத்த நல்ல பழமிது ஐயோ வேண்டாம் பேச்சினி
அதனை விட்டு அகன்றிடு பொய்யன் அப்பா என்றுநீ
புகல்வாய் சொற்ப வேளையில்.
 

---- 1 l| سس
இல்லை இல்லை என்றுமே
இருவர் வாதம் பெருக்கவே நல்ல கணிதான் இதுவெனின்
நன்றே வெட்டிக் காட்டென பொல்லா ஐயன் புகலவே
பொறுமை இழந்த கந்தையன் மெல்லச் சூன்றிக் காட்டுவேன்
மேலே மூடி மறைக்கலாம்.
என்று சொல்லி இருவரும்
ஏட்டி போட்டி தீர்த்திட நன்றே சூன்று பார்க்கவே
நாடிக் கண்டார் கனிஉள்ளே தின்று பார்க்க ஆசையைத்
தூண்டச் சிறிது தின்றனர் நின்று தந்தை கூற்றினை
நினைத்துக் கந்தன் ஏங்கினுன்.
தொட்ட கனியை விட்டினித்
தோண்டி உண்ட கதைசொன்னுல் கட்டி அடியே போடுவார்
காயும் தந்தை உனக்குமே விட்டு இதனை வைக்காமல்
விரைந்து முழுதும் உண்ணுவோம் இட்டேன் பிச்சை இக்கனி
இரந்த ஒருவர்க் கென்றுரை.

Page 16
مسس۔ 12 -سیس۔
தீட்டி ஐயன் திட்டமிட
தீர்த்தார் கனியை இருவரும் தோட்ட மண்ணைத் தோண்டியே
தோலும் விதையும் மறைத்தனர் ஆட்டம் தீர்த்த ஐயனும்
அகன்றன் அவன்தன் வீட்டுக்கே வீட்டை வந்த தந்தைக்கு
விளக்கம் தந்தான் கந்தையன்.
கேட்ட விளக்கம் தந்தைக்குக்
கிளற வில்லைச் சந்தேகம் வாட்டம் தீர்ந்தான் கந்தனும்
வந்த பழியும் அகன்றதால் நாட்கள் பலவும் சென்றன
நல்ல மழையும் பெய்தது தோட்டம் தன்னில் வத்தகை
தொகையாய் வளர்ந்து நின்றன.
காற்று வாங்கத் தோட்டத்தில்
தந்தை மகனும் செல்லவே நாற்று வத்தகைக் கன்றுகள்
நாடிக் கண்டார் தந்தையும் சாற்ற ஒண்ணுச் சந்தேகம்
சடிதிற் கொண்டார் மைந்தன்மேல் தோற்றுப் போன கந்தையன்
தேம்பித் தேம்பி அழுதனன்.

- 13 -
அப்பா என்னை மன்னிப்பீர்
ஐயன் சொன்ன புத்தியால் தப்பே செய்தேன் தந்த்ைநீர்
தந்த கனியை உண்டபின் அப்பா சொன்னேன் பொய்யினை அன்று தப்பிக் கொள்ளவே தப்புச் செய்த என்மீது
தயவு செய்க என்றனன்.
நடந்த செய்தி அறிந்ததும்
நல்ல தந்தை கூறினர் கடந்து போகும் பொய்யென்று
கனவு காணுய் என்மைந்தா திடமாய் ஒருபொய் மூடவே
தீட்ட வேணும் பொய்பல தடங்கி மறையும் பொய்யது
தானே உண்மை வெளிப்படும்.
உணர்வாய் இந்த உண்மையை
உலகிற் பொய்யை உரைத்திடாய்
கொணர்வாய் உண்மை கொள்கையாய்
கோடி நன்மை தந்திடும்
பிணமாய் உன்னை ஆக்கினும்
பிதற்றப் பொய்மை வாழ்விலே
சணமே இனிக்கும் பொய்யினை
சாகுந் தனக்கும் மறந்திடு.

Page 17
حساس۔ 14 نبیہ
என்று தந்தை சொன்னதை
எமது கந்தன் கேட்டனன் நன்று நன்று இனியுமே
நானும் பொய் உரைப்பணுே இன்று தொட்டுப் பொய்யினை
எனது வாயாற் பேசேனே என்று சொல்லிக் கந்தனும்
இதயம் மகிழ இருந்தனன்.

எங்கள் வாயில் மண்ணடா
யாராவது தமது வாயிலே மண்ணே அள்ளிப் போட்டுக் கொள்ளுவாரா? இல்லையே. அப்படிச் செய்தால் அவருக்குப் பயித்தியம் பிடித்து விட்டது என்றுதான் சொல்வோம். ஒருவருடைய வாயில் இன்னெருவர் மண்ணை அள்ளிப் போட்டால் என்ன நடக்கும்? மல்யுத்தந்தான் நடக்கும். எனவே மனிதருடைய வாயில், மனிதர் மண்ணைப் போடுவது வழக்கமல்ல. இருந்தாலும் ‘என்வா யில் மண்ணைப் போட்டான்' என்று சொல்லு கிருர்களே எதற்காக?
ஒருவன் இன்னெருவனுக்கு அநீதி செய்த போது 'அவன் என் வாயில் மண்ணேயிட்டான்' என்று சொல்லுகிருன் , மனித வாழ்க்கையிலே துன்பமும் அநீதியும் ஏற்படும்போது மனிதன் ‘ எ ன் வா யி ல் மண் வீழ் ந் த தே ’’ என்று கலங்குகிருன்.

Page 18
- 16 -
அதோ இருவர் தங்கள் வாய்களில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்கிருர்கள் என்ருல் நம்பு வீர்களா? அவர்கள் வாயிலே போட்டுக் கொள்வது நிச்சயமாக மண்ணுக இருக்காது என்றுதானே சொல்கிறீர்கள். நல்லது, அவர்கள் யார், வாயில் எதைத்தான் போட்டுக் கொள்கிருர்கள் என்று
Luft filoi:GLuntuDir?
நம்மை நாமே ஆளுகின்ற
நாட்கள் இந்த நாட்களாம் எம்மை ஆண்டார் மன்னர்கள்
ஏகப் பட்ட நாட்களாய் தம்மைப் பேணும் மன்னரும்
தார ணியில் வாழ்ந்தனர் செம்மை அற்ற மன்னனின்
சேவகன் செயல் சாற்றுவேன்
இன்று சீனி என்றதும்
ஈய்க்கள் தமக்கும் தெரியுமாம் அன்று சீனி என்றிடில்
ஆரும் அதனை அறிந்திலர் நன்று வெல்லம் நன்றென
நாட்டு மக்கள் இருந்தநாள் தின்று சீனி சுவைக்கவே
தீரன் மன்னன் எண்ணினுன்,

- 17 -
முதன் முதலிற் சீனியை
மூத்த குடிகள் சீனர்தான் பதன் படுத்தி வந்ததாற்
பாரிற் சீனி என்றபேர் அதன் நிமித்தம் வந்ததே
ஆன்றேர் பலர் கூறவே இதன் நிமித்தம் சீனியை
இறக்கு வித்தான் மன்னனும்.
இறக்கு வித்த சீனியில்
ஈரம் சிறிது கண்டதால் திறந்த வெளி தன்னிலே
தீக்கும் வெயிலில் இட்டனர் பறக்கும் காகம் போலவே
பறந்து திரியும் சேவகன் மறந்து அவ்வழி வந்தனன்
மறைந்து சீனி சுவைத்தனன்.
விரித்த பாயிற் காய்கின்ற
வீட்டுப் பொருளும் என்னென்று
தரித்துக் கேள்வி எழுப்பினுன்
தான் அறியச் சேவகன்
விரித்துக் கூறி விளக்கிட
வேறு பேர்கள் அற்றதால்
நெரித்துக் கையைப் பிசைந்துமே
நேரிற் கேட்டான் மன்னன.

Page 19
நண்ணிக் கேட்ட சேவகன்
நாளும் குறும்பு செய்பவன் மண்ணிற் சீனி இதுவென்று
மாண்பு கூறின் இதையுண்ண பண்ணி வைப்பான் பாடுகள் பாவி இவனை ஏய்த்திட எண்ணிச் சொன்னுன் மன்னனும் ஏவலா அது மண்ணடா.
 

ہ۔ . 19 -----
மன்னர் இந்தப் பூமியில்
மண்னைக் காய விடுவரோ? என்ன எண்ணம் கொண்டுமே
ஏட்டி சொன்னுர் ஏந்தலும் தின்னும் பண்டம் அதனுடைத்
தித்திப் பேனுே மறைத்தனர்? பின்னர் செய்வேன் வேலையே
பிரியம் இல்லா மன்னர்க்கே,
என்று நினைந்த சேவகன்
ஏகி வீட்டில் மைந்தனை நன்று நானும் அரண்மனை
நண்ணி நிற்பேன் முன்றலில் இன்று நீயும் வந்தங்கு
இறந்தாள் அன்னை என்றுரை தின்று சுவைக்கப் பண்டம் நான்
திண்ணம் தருவேன் என்றனன்.
அந்த வார்த்தை சொல்லியே
அரண் மனைக்குச் சென்றனன் இந்த நேரம் பார்த்துமே
இளைஞன் அங்கு ஓடினுன் எந்தை யேளன் ஐயனே
எந்தன் அம்மா செத்தனள் இந்த உலகில் இனித்துணை
இல்லை யேளன் றழுதனன்.

Page 20
- 20 -
போனி யோடி! என்கண்ணே
போனி யோடி என்றுமே சீனிப் பாய்முன் வீழ்ந்துமே
சீறி அழுதான் சேவகன் தீனி உண்ட வாயிலே
தீது மண்தான் வீழ்ந்ததே மேனி பத்தி எரிகுதே
எங்கள் வாயில் மண்ணடா.
எந்தன் வாயில் மண்ணடா
உந்தன் வாயில் மண்ணடா நொந்தோம் நாங்கள் இருவரும்
நொந்தோம் என்று இருவரும் அந்தப் பாயின் சீனியை
அள்ளி வாயில் இட்டனர் மந்த மாக இருவரும்
மனதுக் குள்ளே சிரித்தனர்.
காயும் பொருளிற் பதியைக்
காவ லாளி உண்டதை ஆயும் மன்னன் அறிந்தனன்
ஆணுல் என்ன செய்குவான்? மாயும் பொய்யை உரைத்ததால்
மண்ணிற் கேடு வந்ததே வாயும் நெஞ்சும் ஒன்றதாய்
வாய்மை என்றும் நன்றென்றன்

அற்றர் பசியை அகற்றுக!
அதோ அந்த வாழைத் தோட்டத்தைப் பாருங்கள். உருண்டு தி ர ண் ட காய்களைக் கொண்ட குலைகள் நிறையக் காணப் படுகின்றன. அது யாருடைய தோட்டம்? வாழைகள் சிறப் பாகக் காணப்படுவதற்கு யார்தான் காரணம்? இவ்வளவு தொகையாக வாழைக் குலைகளை உடை யவர் நமக்கும் சுவைக்க ஒரு பழம் தருவாரா?
அடடே! அதோ பெருத்த தொந்தியோடு, விசிறி மடிப்புச் சால்வையும் போட்டுக் கொண்டு நிற்கிருரே, அவர்தான் அந்த வாழைத் தோட்டச் சொந்தக்காரர். அவர் குனிந்தால் நிமிரமுடியாது கஷ்டப்படுவார். இருந்தால் எழும்ப முடியாது அவதிப்படுவார். அவரிடம் சென்று;

Page 21
- 22 -
இந்த வாழைத் தோட்டம் மிகச் சிறப்பாக இருக்கிறதே இதற்கு யார் காரணம்?’ என்று கேளுங்கள்.
‘எல்லாம் என் அப்பன் முருகப் பெருமான் தந்த பாக்கியம்’ என்று தொந்தியைத் தடவிச் கொண்டே சொல்வார்.
அந்த வாழைத் தோட்டத்தை உண்டுபண் னியவன் அவர் வீட்டு வேலைக்காரன் வேலன் . இரவு பகலாய் உழைத்த வேலனைப் பெரியவர் மறந்து விடுகிறர். அவன் உண்டான, உறங் கினை என்றுகூடக் கவனிக்க மாட்டார். இது நீதியா? தர்மமாகுமா? உழைக்கின்ற வேலனை மறந்து, முருகப்பெருமானப் போற்றினல் முரு கன் அதை விரும்புவாரா? விருப்பு வெறுப்பு இல் லாத முருகப் பெருமானுடைய பதிலைத்தான்
பார்ப்போ மே!
பொருளை வாரிச் சேர்த்திட
பொல்லாச் செல்வ ைெருவனும் உருளைக் கிழங்கு வாழையும்
உண்ணத் தக்க பயிர்களும் இருளைப் போக்கிக் காட்டிலே
இனிதே தோட்டம் அமைத்திட அருளை வேண்டி ஈசற்கு
அன்றேர் நேர்த்தி வைத்தனன்.

- 23 -
குன்று தோறும் ஆடிடும்
குமரா உந்தன் பூசைக்கு நன்று வாழைக் குலேயொன்று
நல்கு வேன்நை வேத்தியம் நின்று வாழைக் கன்றுகள்
நெடிய குலைகள் ஈன்றிடில் என்று சொல்லி வேலைகள்
எடுபிடி யாய்ச் செய்தனன்.
வீட்டு வேலைக் காரணும்
வேலன் தன்னை விரட்டியே காட்டை வெட்டிக் கழனியிற்
காய்கள் கறிகள் பயிர்களும் மேட்டு நிலத்தில் வாழையும் மெத்தச் செய்ய ஏவியே வாட்டி அவன்தன் உடலையே
வருத்தி வேலை வாங்கினுன்
வேலைக் காரன் வியர்வையும்
வேலன் தந்த சக்தியும் சோலே யாகி வாழைகள்
சுறுக்கிற் குலைகள் ஈன்றன காலை மாலை யாகவே
காத் திருந்த செல்வனும் வேலைப் பிடித்த வேந்தர்க்கு
வெகு மதியை அனுப்பினுன்

Page 22
ܓܠܠ எட்டுக் கட்டை தொலைவிலே
எழுந் திருக்கும் வேலர்க்கு வெட்டிப் பெரிய குலையொன்றை
வேலன் தலையிற் சுமத்தியே கட்டுக் குலையாப் பழங்களை
கந்தர் கோவில் சேர்த்திடு முட்டப் பழுத்த கனியிவை
மூடிக் கொண்டு சென்றிடு.
 

- 25 -
என்று கூறிக் காலையில்
எழுந்த வுடனே வேலனை தின்று குடிக்க முன்னரே
திரிகை போல ஒட்டியே நன்று வேலை செய்திட்ட
நம்வே லனைநம் பாமலே குன்றுக் கோயிற் குருக்களுக்குக்
கொடுத்த கடிதம் இதுவேயாம்.
துண்டு தன்னைத் தந்திடும்
தூதன் கையிற் தொண்ணுாறு குண்டு வாழைப் பழமுண்டு
குமரர் மாலைப் பூசைக்கு கொண்டு வந்தான் குறைவின்றி
என்று குறித்துத் துண்டையே மண்டுப் பையல் கையிலே
மறு மொழியை அனுப்புக.
பள்ளி சென்று கற்றிடாப்
பாவி அந்த வேலனும் கள்ளிக் காட்டுப் பாதையிற்
கால் நடையிற் செல்கையில் கிள்ளி வயிறு பசிக்கவே
கிறுதி போலுந் தோன்றவே வள்ளி நேசன் பழங்களை
வாயி லிட்டு உண்டனன்.

Page 23
-- 26 -
ஆறு பழங்கள் உண்டபின்
ஆறிப் பசியும் தேறியே வீறு கொண்ட வேலையா
வெந்த உடலை ஆற்றிட வேறு வழியே அற்றதால்
வினை யிதனைச் செய்தேனே சோறு நன்று தராதஈச்
சோப்பி செல்வனைக் கேளையா,
என்று கூறி மீதியாய்
உள்ள வாழைப் பழங்களை குன்றுக் கோயிற் குருக்களின்
கூடந் தன்னிற் சேர்க்கவே நன்று விளைந்த பழங்கண்டு
நாவூற் றெடுத்த குருக்களும் இன்று வந்த பழங்களில்
இவைதான் நல்ல பதமென்றர்.
பதமாய் வந்த பழங்களைப்
பாவி யந்தக் குருக்களும் இதமாய் உண்ண இல்லுக்கு
ஈந்து அனுப்பி வைத்தபின் மிதமாய் அன்பு செய்துநீர்
மேன்மை யாக அனுப்பிய பதமிகுந்த பருத்த ஆறு
பழங்கள் காணுேம் என்றுமே.

- 27 -
குறித்தார் அந்த ஒலயிற்
கொடுத்தார் வேலன் கையிலே தறித்த ஒலே தனவேலன்
தந்தான் செல்வன் கையிலே வெறித்து நோக்கிச் செல்வனும்
வெகுண் டெழுந்து தாக்கினுன் முறிப்பே லுந்தன் முதுகின
மூடா வென்று சாடினுன்.
பூசைப் பழத்தை உண்டவுன்
போக்கு என்ன போக்கடா ஆசை கொண்டாய் பழத்திலே
அதனுல் உண்டாய் வீணனே தூசை யொத்த உன்னைநான்
தொலைப் பேணிந்தக் கணத்திலே பூசை போட்டுக் கொல்லுவேன்
பொல்லாப் பயலென் றடித்தனன்.
ஐயா போட்ட பூசையால்
அலறித் துடித்த வேலனும் மெய்யாய் நெஞ்சம் நொந்துமே
மேலும் கொஞ்சம் எண்ணினுன் ஐயோ ஏழை பாடுகள்
அறியா அரனுர் மைந்தனே ம்ெய்யோ உந்தன் புகழுமே
மேன்மை யான முருகனே.

Page 24
- 28 -
நெஞ்சின் அலைகள் தன்னையே
நேரிற் கண்ட முருகனும் துஞ்சிச் செல்வன் துயில்கையில்
தோன்றி மாற்றம் கூறினுன் பிஞ்சிலிருந்து காத்து நீ
பெருமை யாகத் தந்ததில் அஞ்சும் ஒன்றும் தான்பெற்றேன்
அறிவாய் இந்த உண்மையை.
மிச்சம் என்ன ஆனதோ
மேலும் சொல்க என்றனன் அச்சம் மிகுந்த செல்வனும்
அயர்ந்த தூக்கம் தன்னிலே அச்சம் இன்றிக் குருக்களே
அவற்றை உண்டு தீர்த்தனன் மிச்சம் எனக்கு ஆறுதான்
மெய்யன் வேலன் உண்டவை.
பசித்தோன் உண்ட பழங்கள்தான்
பழனி ஆண்டார்க்கு எட்டிற்று புசித்தான் வேலன் கனிகளைப்
பூசை நாச மாயிற்றே என்று நானும் எண்ணியே
ஏழை தன்னை வாட்டினேன் குன்றுக் குமரன் ஏழையிற்
கொண்ட அன்பை என்சொல்வேன்.

حســـــــ 29 -۔
ஓடிச் சென்று காலிலே
ஒல மிட்டு வீழ்ந்தனன் தேடிக் கொண்ட பழியினைத்
தீர்ப்பாய் வேலா என்றனன்
கூடி வாழும் உன்னைநான்
குறைந்தோன் என்று எண்ணினேன்.
நாடி வந்தான் முருகனும்
நானே பாவி நீமேலோன்.
என்று சொல்லி ஏழையை
ஏத்திப் புகழ்ந்து பாடியே இன்றில் இருந்து நீயெந்தன்
இளையோன் என்று அறிகுவாய் நன்றே நீயும் வாழ்ந்திட
நன்மை நானும் செய்குவேன் குன்றுக் குமரன் கட்டளை
கூடி நாமும் வாழவே.
அற்றர் பசியை அகற்றியே
அன்பு செய்தல் பண்பதாம் உற்றர் என்று கருதியே
உணவு தருதல் உதவியாம் பெற்றர் பசியைப் போக்குதல்
பிள்ளை களின் கடமையாம் விற்றர் பண்பை விற்றரே
வீம்புக் காக வீசுவோர்

Page 25
* பச்சைக் கிளியே வா வா வா,
பாலும் சோறும் உண்ண வா ???
என்று கிளியைக் கூப்பிடுகிறீர்கள், கிளி வந்து விடு கிறதா? இல்லையே. நீங்கள் எவ்வளவு அன்பாகக் கூப்பிட்டாலும் கிளி ஏன் வருவதில்லை? உலகிலே ஒருவரும் தரமுடியாத ஒன்று அதற்கு உண்டு. அது தான் அதன் சுதந்திரம். பொற் கூட்டிலே அதை அடைத்து, நெய் கலந்த அன்னம் தந்தாலும் கிளி தன் சுதந்திரத்தை இழக்கத் தயாராக இல்லை.
 

- 31 -
ஐந்தறிவுள்ள கிளிக்கே தன் சுதந்திரத்தில் இவ்வளவு பிரியம் என்ருல் ஆறு அறிவு படைத்த மனிதனுக்குச் சுதந்திரத்தில் எவ்வளவு விருப்ப மாக இருக்கும்? தன்னிச்சையாகப் பிறருக்குக் கட் டுப்படாமல் வாழ்வதுதானே சுதந்திரம். தாம் சுதந்திரமாக வாழ விரும்பும் மனிதர், பிறருடைய சுதந்திரத்தைப் பறிப்பதற்கு எத்தனை முயற்சிகள் எடுக்கிருர்கள்!
உங்களிற்கூடச் சிலர் பிற உயிர்களின் சுதந்தி ரத்தைக் கெடுக்க முயல்வதுண்டல்லவா? உயிர் களை இம்சைப் படுத்தலாகாது. வாயில்லாச் சீவன் களை வாழவைப்பவன் கடவுள் அல்லவா? இதோ நால்வரின் இம்சைத் திட்டம். அந்தத் திட்டம் எப்படியாகிறது என்று நீங்களே பாருங்கள்.
பட்ட தென்னை மரமொன்றில்
முட்டை யிடவே கிளியிரண்டு திட்டம் போட்டு நாள் மூன்றில்
திடமாய்ப் பொந்து அமைத்திடவே துட்டர் நால்வர் அதுகண்டு
துடித்தார் கிளிகள் வளர்த்திடவே கிட்டும் வாரம் ஐந்தாறில்
கிளியின் குஞ்சு பிடித்திடவே.

Page 26
- 32 -
பாலன் வேலன் பாஞ்சாலன்
பாண்டி என்போர் நால்வரவர்
சாலங் காட்டித் தாம்தாமே
தனியே குஞ்சு பிடித்திடவே
காலம் பார்த்துக் காத்திருந்தார்
கட்டுக் கதையும் கட்டிவிட்டார்
சாலப் பெரிய பேயொன்று
சார்ந்த தோப்பில் உண்டென்றர்.
முட்டை பொரித்துக் குஞ்சாக
மூன்று மாதம் வேண்டுமென்றன் தட்டை மூக்கன் பாலனவன்
தானே குஞ்சைப் பிடிப்பதற்கு செட்டை முளைத்தாற் போதாது
சொண்டும் சிவக்க வேண்டுமென்றன் குட்டை வேலன் குறும்பாக
குஞ்சைத் தானே அப்பிடவே.
நல்லாய் வளர வேண்டுமடா
நால்வரும் சேர்ந்தே பிடிப்பமடா பொல்லாப் பேய்க்குப் பயந்தவனுய் போட்டான் போடு பாஞ்சாலன் எல்லார் தனையும் ஏமாற்ற
ஏற்பா டுரைத்தான் பாண்டியனும் பொல்லாப் பாம்பு பொந்திருக்கும்
பொறுத்து வீழ்த்துவம் மரத்தினையே.

---- 33 --س--
பற்பல சாட்டுகள் அவர்சொல்லி
பகிர்ந்து கொள்ள விரும்பாமல் சொற்பல கூறிச் சோடித்து
சூழ்ந்து பிடிப்போம் ஒருநாளில் செத்தல் மரத்தை நிலம்வீழ்த்தி
சேரும் குஞ்சை நாம்பகிர்ந்து இத்தல மீதில் ஒற்றுமையாய்
இருப்போம் என்றர் உதட்டாலே.
உரிய காலம் காத்திருந்து
ஒருவரை யொருவர் பார்த்திருந்து
தெரியா தெவரும் இல்லாது
தனியே தாம்தாம் மரமேற
அரிய காலம் கடந்ததனுல்
s அகன்றன குஞ்சுகள் அன்னையுடன்
பெரிதாய் அவையும் வளர்ந்ததனுல்
பெடியர் வெட்கித் தலைகுனிய.
குடியைக் கெடுப்ப தொருபாவம் கூடா எண்ணம் மறுபாவம் மடியக் கூட மார்க்கமுண்டு
மரத்தில் பாம்புகள் தீண்டிவிடும் கடிவார் பெற்றேர் உமையென்றும்
கஷ்டம் பலவும் சூழ்ந்துவிடும் அடியோ டிம்சை மறந்திடுவீர்
அதுவே நல்லோர்க் கழகாகும்.

Page 27
பனையின் கதை
உங்கள் வீட்டிலே பாட்டி இருக்கிருளா? என்ன; இல்லை என்று சிலர் தலையை அசைக்கிறீர் களே! உங்களுக்குச் சொந்தப் பாட்டி இல்லாவிட் டால் என்ன. எந்தப் பாட்டியும் உங்கள் சொந்தப்
பாட்டி போலத்தான் பழகுவாள்.
பாட்டிமாரிலே பல விதம். வடை சுட்டுத் தரும் பாட்டி, அப்பம் விற்கும் பாட்டி, தாலா ட்டுப் பாடும் பாட்டி, கதை சொல்லும் பாட்டி. இவர்களிலே எந்த பாட்டியில் உங்களுக்கு அதிக விருப்பம்? சொல்ல வெட்கமாய் இருக்கிறதா? எனக்குக் கதைசொல்லும் பாடடியிற்தான் பிரி யம் அதிகம்.

-- : 35 ۔۔۔
கதை சொல்லும் பாட்டி கலகலப்பாக இருப்பாள். அவளுடைய கதைகளோ ஒரு தனி ரகம், தன்னுடைய கதைகளைக் குழந்தைகள் எப்போதும் கேட்க வேண்டும் என்று ஆவலாய் இருப்பாள். உங்களுக்கு மட்டும் என்னவாம்! பாட் டியின் கதை என்ருல் வேண்டாம் என்ரு சொல் வீர்கள்? அடடே! அதோ பக்கத்து வீட்டுப் பாட் டியின் குரல் கேட்கிறது. என்ன சொல்கிருள் என்று
கேட்போமா ?
பாட்டி: கதை சொல்லணை ஆச்சி, கதை சொல் லணை ஆச்சி எண்டு கையிக்கை நிண்ட என்ரை பேரன் ரவி, இப்ப கூப்பிட்டா லும் ஏனென்டு கேக்கிருனில்லை. என்ரை கதை கேட்ட காலம்போய், இப்ப அவர் கவிதை எழுத வெளிக்கிட்டிட்டார். அங்கை பாருங்கோ, அந்தத் தனிப் பனையை அண்ணுந்து பாத்தபடி நிண்டு கற்பனை செய்யிருf. ...
ரவி:- (பனையையும் பாட்டியையும் மாறிமாறிப் பார்த்த வண்ணம் தான் எழுதிவைத்திரு க்கும் கவிதையைப் படிக்கிருன்.)

Page 28
பாட்டி
ரவி:
- 36 -
பனையே பனையே உன்கதையை பாட்டி சொன்னுள் பலநாளாய் கற்பக தருவென் றுனையழைப்பாள் காசினி மருந்தென் றுனைப்புகழ்வாள் பிச்சை எடுக்க வேண்டாமே பெரும்பனக் கூடல் உண்டானுல் உச்சி இருந்துன் உள்ளங்கால் ஊதியம் மானிடர்க் கென்றுரைப்பாள்.
எங்கை பாப்பம், நீ கெட்டிக்காரன் எண் டால், பனையின்ரை உச்சியிலை இருந்து உள்ளங்கால் வரைக்கும் உள்ள பிரயோ சனங்களைச் சொல்லு பாப்பம்.
/ என்னுலை சொல்ல முடியாதெண்டே நினைச்சியள் ஆச்சி?. ஆச்சி
குருத்தை வெட்டிச் சார்வாக்கி கூடை கடகம் பெட்டிகுட்டான் பட்டை பறிகள் சுளகுதட்டு பாயும் Laduad பன்னமுமாய்
உறியும் உமலும் திருகணையும்
ஊற்று இறைக்கக் கொடிதானுய்
எத்தனை எத்தனை ஏதனமாய் ஏடாய்த் தருவாய் உன்குருத்தை.

| UT"|11:-
u 1 :-
- 37 -
குருத்தோலைச் சார்விலை செய் ......... ! هر@ யிற பொருள் எல்லாம் சொல்லிப் போட் டாய். அங்காலை சொல்லன் பாப்பம்.
ஒன்றை விட்டு ஒருவருடம் ஒலை வெட்டி வீடுவேய்வார் மறைத்து வேலி கட்டிடுவார் மாட்டுக் குணவாய்த் தந்திடுவார் பழைய ஒல பசளையென பாங்காய்த் தாட்டு நெல்விதைப்பார் இரவிற் செல்ல இருட்டாணுல் ஈர்க்காற் கட்டிச் சூழ்பிடிப்பார்.
சரி, பச்சை ஓலை, பழஒலை, காவோலை இதுகளின் ரை பயன்களைச் சொல்லிப் போட்டய். இன்னும் எத்தினை பிரயோ சனம் இருக்குது தெரியுமே?
மட்டை வெட்டி உரித்திடவே மாறும் நாராய்க் காய்ந்திடவே
நல்ல நாரின் உரமுண்டோ
நாட்டில் உள்ள கயிற்றுக்கு குத்துக் கண்ணி நார்க்கடகம் குடில்கள் வரிய நாரன்றே சொன்ன நல்ல பொருளாகும் சோரா துழைக்கும் பலகாலம்.

Page 29
பாட்டி:-
ரவி:
பாட்டி:
ரவி:-
- 38 -
பனமட்டை நாரைப் பற்றிச் சொன்னப் போலை போதுமே?
கொஞ்சம் பொறுமையாய்க் கேளணை ஆச்சி.
கங்கு மட்டை பன்னுடை காய்ந்த பாளை பணுவிலுடன் வெட்டுக் கருக்கு ஊமலுடன் வேலி மூரி ஒலைகளும் கொத்துச் சிராயும் சோற்றிகளும் கோணல் மாணல் துண்டுகளும் மெத்தப் பெரிய விறகாகி மேதினி மாதர் துயர்தீர்க்கும்.
அது சொன்னியோ சரிதான். உன்ரை கொம்மாவுக்கு விறகு இல்லை யெண்டால் நாங்கள் எல்லாரும் பட்டினி கிடக்க
வேண்டியதுதான்.
இன்னும் கேளணை ஆச்சி.
அருமருந் தன்ன உந்தனையும் ஆணும் பெண்ணுய் ஆண்டவனுர் படைத்துப் பலகலி தீர்த்திடவே பாணன் பெற்ற மணற்றிடரில்

- 39 -
பலித்து வளர்ந்து பயனிய பாங்காய்ப் பணித்தான் பரவசமே பரவசமே இது பரவசமே பாளைகள் இருவிதம் பனையினிலே,
(பார்த்தீர்களா! பாட்டிக்கும் ரவிக்குமிடையில் நடக்கும் உரையாடலை. முன்னர் பாட்டி சொல்லிக் கொடுத்த பனையின் கதையைக் கவிதையிலே வடித் துக் காட்டுகிருன் ரவி. அதோ! ரவியின் தங்கை மலர் வருகிருள். அவள் என்னதான் சொல்லப்
போகிருளோ!)
D6):-
பாட்டி:-
மலர்:
UT :-
ஆச்சி! ஆச்சி! ரவி அண்ணுவின் ரை பாட் டெல்லாம் பிழையணை ஆச்சி. பனை ஆக யாழ்ப்பாணத்திலைதான் வளருதே? மன் னர், புத்தளம் இந்தப் பகுதிகளிலே இல்லையே?
எடி விசரி. இடையிலை வந்து குழப்பாதை கண்டியோ. கொண்ணன் யாழ்ப்பாணத் திலை செழிச்சு வளருது எண்டுதானே சொல்லிருன்.
அண்ணுவின்ரை பாட்டெண்டால் உங்க ளுக்கு நல்லாய்ப் பிடிக்கும்; அதுதான்.
அல்லாட்டி நீ பாடிப் போடுவியோ எண்டு கேக்கிறன்?

Page 30
- 40 -
மலர்:- நான் பாடினுல் பாட்டுப் படாதோ என்று
கேட்கிறன்?
பாட்டி:- அடியடா புறப்படலையிலை! என்ரை நாச்சி
யார், எங்கை ஒரு வரி பாடு பாப்பம்.
மலர்:- ஒரு வரியென்ன ஒன்பது வரியும் பாடுவன். நீங்களும் கேளுங்கோ, உங்கடை பேரனை யும் கேட்கச் சொல்லுங்கோ.
பாட்டி:- சரி சரி, பாடு பாப்பம்.
 

Cama) it :: -
ரவி:-
LJпL3: -
ரவி:
ー 41 ー
கணிய முன்னுன் காயதனை காத்து இருந்து வெட்டிடுவார் ருங்கு நுங்கு என்றுரைப்பார் நூதன மாக நுகர்ந்திடுவார் முற்றும் போது சீக்காயை மூளை வெட்டி முட்டிகட்டி கள்ள இறக்கிக் களித்திடுவார் காளை மாட்டிற் குணவிடுவார்.
இந்தா மலர், என்னேடு போட்டியா போடப் பார்க்கிருய்? இதோ இதற்கு மேலே பாடு பார்ப்போம்.
அதிக பதநீர் இறக்கிடவே ஆண்பனைப் பாளை தனச்சீவி நல்ல முட்டி தனிற்சேர நாளும் பொழுதும் ஏறிடுவார் பச்சைப் பிளாவைக் கைப்பிடித்து பாரிய மனிதர் பருகிடுவார் அளவில்லாமல் அது பருகி அவஸ்தை மிகவும் கொள்வாரே.
பெரியாக்கள் செய்யிற வேலையளையும் பார்த்திருக்கிருய் போலை கிடக்கு.
இன்னும் சுவையான விடயங்கள் இருக்கு, கேளணை ஆச்சி,

Page 31
I til 1 : -
is 6) ( :-
- 42 -
சுண்ணம் சிறிது முட்டியுள்ளே சூழப் பூசிப் பாளைகட்டி கருப்ப நீரைக் கறந்திடலாம் காய்ச்சி வெல்லம் ஆக்கிடலாம் கல்லாக் காரம் பனங்கட்டி காய்ச்சிய கருப்ப நீரன்றே மஞ்சள் கருப்ப நீர்பருக
மாங்காய்க் கெத்தல் உவப்பன்றே.
கீரிமலைக் கருப்பணி குடிச்ச ஞாபகம் இன்
னும் உனக்கு இருக்குப் போலை கிடக்கு.
எடி பிள்ளை; கொண்ணனுக்குப் பதில் சொல்லன் பாப்பம்.
விடுவேனு ஆச்சி? பனம் பழத்தைப் பற் றிச் சொல்லிறன் கேளுங்கோ.
குலை குலையாக நீகாய்த்து கூடல் முழுதும் கொட்டுகிறப் தட்டி ஒருவர் பறிப்பதில்லை தானுய் கனிகள் சொரிகின்றப் 'தொப்தொப்' என்று பழஞ்சொரிய தோரைப் பழமாய் நாந்தெரிந்து உண்ணும் விதமே உவப்பாகும்
ஊரார் அறிவார் பிறரறியார்.

LI I 'l q:-
psh)i :-
- 43 - -
கரிய தோலே உரித்தெடுத்து காடிப்புளியை அதிற் தெளித்து கையாற் பிசைந்து கழியாக்கி காந்திக் கறந்து அருந்திடவே மெய்யாய் அமிர்தம் தாணுகும் மேலும் சுவைக்க வேறுண்டோ கத்தி வெட்டாக் கணிதந்தாய் கையும் வாயும் மணத்திடவே.
அச்சா! அச்சா! நீயும் கெட்டிக்காரிதன்.
நல்ல பழமாய்த் தெரிந்தெடுத்து நாலு ஒலே தனிற்குவித்து செல்லக் கழுவிச் சீர்செய்து சோரக் கல்லில் அடித்துரித்து வெள்ளைக் கடகம் தனிலிட்டு வேண்டும் நீரை விரைந்துாற்றி * களக் களக் ' என்று பிணைந்திடவே கழியாய்க் கனிந்து நிறைந்திடுமே.
சீலைத் துண்டிற் கழிவடித்து ஒலைப் பாயிற் தடவிவர பணுட்டுப் பாயாய் அதுமாறும் பார்த்து வெயிலிற் காயவிட தட்டுத் தட்டாய் அதைக்கீறி தகட்டாற் செதுக்கி மடித்திடவே தங்கப் பணுட்டாய் அதுமிளிரும் தாரணி மாந்தர் சுவைத்திடவே.

Page 32
பாட்டி
ரவி:
பாட்டி:
ரவி:-
புதிய பனுட்டைத் துண்டாடி
- 44 -
இந்தக் காலத்துப் பிள்ளையஞக்குப் பினட் டெண்டால் என்னெண்டு கூடத் தெரி
யாது. நீ சொன்னப்போலை முடிஞ்சுதே.
எங்கை, உன் ரை கொம்மா வை ஒருக்கால் பனங்களி பினையச் சொல்லு பாப்பம்?
சும்மா குழப்பாதையணை ஆச்சி.மலர் நான் சொல்வதைக் கேட்ட பின் அதற்கு மேலே பாடு பார்ப்போம்.
பொன்னின் நிறமாய்ப் பொலிகின்
பனையின் பாணி காரத்துாள் பொரித்த அரிசி மாவுடனே சின்னப் பானை தனிலிட்டு சீராய் மூடிச் சிலநாளால் பகர வேண்டாம் அதனருமை
பாணிப் பணுட்டு அதுதானே.
பாணிப் பினட்டுக் கன நாளைக்குப் பழு
தாகாமல் இருக்கும் கண்டியோ,
விதையை வீசி எறிவரென்று வீணே கனவு காணுதீர் கொத்திப் பாத்தி தாமமைத்து குன்றயக் குவித்து விதையடுக்கி
கொட்டி மண்ணுல் மூடிடுவார்
கோடை காலம் அதுபறிப்பார் கிழங்கு கிழங்கு பனங்கிழங்கு
கிண்டி எடுக்கும் பனங்கிழங்கு

一 45 一
அவித்துக் கிழித்து அதுவுண்டால் ஆயிரம் உணவு வேண்டுவதோ துவைத்துத் தேங்காய்த் துருவலுடன் தூளாய் மிளகாய் வெங்காயம் உப்புச் சேர்த்துப் பிடிசெய்து ஊறும் வாயிற் போட்டாலோ உவமை சொல்லப் பொருளுண்டோ உண்டவர் தானே அறிவாரே.
அவித்த கிழங்கின் தும்பகற்றி அழகாய்க் கிழித்து உலரவிட்டால் புழுக் கொடியல் தானுகும் புதிய பல்லுக் கிதமாகும் ஒடியல் என்று சொல்லிடுவார் உலர விட்ட பனங்கிழங்கை இடியல் செய்து மாவாக்கி இதமாய்த் தெள்ளி எடுத்திடலாம்.
நீரில் மாவை ஊறவிட்டு நெய்த துண்டிற் பிழிந்தெடுத்து பிட்டும் கூழும் ஆக்கிடலாம் போசன மிவைக்கு நிகருண்டோ ? பருத்த பெருத்த தேகத்தார் பானை வயிறர் பிணியுற்றர் ஒடியற் கூழை அருந்திடவே ஒழுங்காய்த் திருந்தி நிமிர்வாரே.

Page 33
பாட்டி:
ரவி:
பாட்டி:
цо6һ0fї:-
-س- 46 -س--
எட தம்பி, நீ பெரிய புகையனுய்க் கிடக்கு. நான் மாதக் கணக்காய்ச்
சொன்ன கதையெல்லாம் நீ அப்பிடியே
நறுக்கெண்டு சொல்லிப் போட்டாய்.
அது இருக்கட்டும் ஆச்சி, என்னேடை போட்டிக்கு வந்த மலரை ஏலும் என்ருல் மேலே பாடச் சொல்லணை பாப்பம்.
இனி என்னத்தைச் சொல்லப் போறியள். ஒண்டும் விடாமல் சொல்லிப் போட்டியள் தானே. அவள் சின்னப்பிள்ளை, அவளே வெருட்டாதை.
சின்னப் பிள்ளை என்று சொல்லி எனக்கு ஒரு சலுகையும் வேண்டாம். இதோ கேளண்ணு !
உச்சி மகிமை தானுரைத்தேன் உடலின் பெருமை சொல்வேனே கச்சிதமான மரந் தறித்து கனத்த வேலை பலசெய்வார்
துலாவாய் வளையாய்ச் சலாகையுமாய்
தூணுய்த் துடுப்பாய்த் தொட்டிலுமாய்
பேணுய்ச் சேற்றுக் குற்றியுமாய்
பீலி வாய்க்கால் தானுவாய்.

- 47 -
பாட்டி:- எட எட, நானும் மறந்துபோனன்.
மலர்:
ரவி:-
шо60fї:-
மருந்தென் றுரைத்தாள் பாட்டியெனின் மாற்றம் அதிலே இல்லையண்ணு
அமையும் ஆண்பனைப் பாளையது
அருந்தும் மருந்துக் கனுபானம் அல்லி வேரும் அதன் பொருக்கும் சொல்லிச் சேர்ப்பார் மருந்தினிலே வயிற்றுப் புண்ணை வகைப்படுத்த
வாய்க்கும் பனங்கள் ஒளடதமாய்.
சபாஷ்! மலர், நீ உண்மையிலே என் தங் கைதான். உன்னுடைய கெட்டித்தனம் தெரியாமல் உன்னை அவமதித்துவிட் டேன். என்னை மன்னித்துவிடு மலர்.
பரவாயில்லை அண்ணு, மேலும் கேளுங் கள்.
இன்ன பலவும் இனியவையும் சொன்ன படியே நீதரவே பாட்டி காலப் பரம்பரைகள் ஏட்டி இன்றி உனைப்போற்றி நாட்டில் வாழ்ந்தார் நெடுநாளாய் நாமது சொன்னுல் நம்பாரே அன்று வீட்டுப் பணம் பண்டம்
இன்று காட்டில் அழியுதையோ,

Page 34
பாட்டி:
ரவி,
цp50fї:-
-س- 48 --
ஐயையோ! அதென்றல் உண்மைதான். இனிமேல் ஒரு வழிதான் உண்டு; சொல்கி றேன் கேள்.
அன்னிய நாட்டுப் பொருள்வந்து அழித்தது நம்ம கைத்தொழிலை சிக்கனப் பொருளை நாம்மறந்து சிறுமை பெருமை நாங்கொண்டோம் பாழும் பகட்டில் நாந்தோய்ந்து பனையின் பயனை நாமிழந்தோம் வாழும் வழியினி வேண்டுமெனின் வளர வேண்டுமுன் அபிவிருத்தி.
சரியாய்ச் சொன்னியள் போங்கோ.
பனையே பனையே உன்கதையை பாட்டி சொன்னுள் பலநாளாய்
கற்பக தருவென் றுனையழைப்பாள்
காசினி மருந்தென் றுனைப்புகழ்வாள் பிச்சை எடுக்க வேண்டாமே பெரும் பனைக்கூடல் உண்டாணுல்.
ASLSLALLSLLLAALLLLLALLSAMSAqLSLMSeALSLSLSLSLLLLLLLALSLMSLSELALALALA LALALA ALLS

சும்மா தின்றன் பழம்
சுட்டி என்பது அவன் பெயர். அவன் ஓர் ஏழைப் பையன். சிறு சிறு வேலைகள் செய்து அத ணுற் கிடைக்கும் வருவாயைக் கொண்டு இசீவித்து வந்தான். அன்று அவனுக்கு ஒருவித வேலையும் கிடைக்கவில்லை. அவனுக்குப் பசி தாங்கமுடியா மல் இருந்தது. பிச்சை ஏற்று உண்ண அவன் விரும்பவில்லை.
களவு செய்யக்கூடாது, பொய் சொல்லக் கூடாது, கையிலோ பணமில்லை. அப்படியாயின் அவன் பசியை எப்படித் தீர்த்துக்கொள்வது? நீங் களே ஒரு வழி. சொல்லுங்களேன் பார்ப்போம். முடியாதா? சரி சுட்டியன் என்னதான் செய் தானே? பாட்டைப் படித்துப் பாருங்கள்.

Page 35
- 50 -
பள்ளிக் கூட வாசலிலே
பண்டம் விற்கும் பாட்டியவள் கிள்ளிக் கொடுக்கும் பண்டங்களிற் கிருமி நிறைய இருந்திடினும் தள்ளி அதனை உண்ணுது
தவிர்த்து வைக்க மனமின்றி துள்ளிச் சிறுவர் அவையுண்டு
துன்பம் விலையாய்க் கொள்ளுவரே.
எக்காலத்தும் இத் தன்மை
எங்கெங் கெல்லா மிருக்கையிலே
அக்காலத்தி லொரு சிறுவன்
அறிவாற் பழத்தை உண்டதுவும்
முக்காற் பருவம் அடைந்துவிட்ட
மூத்த பாட்டி தோற்றதுவும்
இக்காலத் தோர் நீரறிய
இனிதே எடுத்து இயம்புவனே.
பழங்கள் பாட்டி விற்றிடுவாள்
பருப்பும் பொரித்துத் தந்திடுவாள் கழகச் சிறுவர் கருத்தெல்லாம் கனிந்த பாட்டி யவளிடமே பழத்தில் நல்ல பலாப்பழமும்
பதமாய்ப் பொரித்த பலாவிதையும் அழகுப் பாட்டி அவள்தருவாள்
அருந்திச் சிறுவர் இன்புறவே.

- 51 -
பலாப்பழம் விற்கும் பாட்டியவள்
பலாவிதை மீண்டும் வாங்கிடுவாள் உலாவிடும் சிறுவர்க் கவைபொரித்து உவப்பாய் உண்ண விற்பதற்கு பலாவிதை நூற்றுக் கொருபணந்தான்
பாட்டி தருவாள் விலையாக எலாரும் அறிவார் இவ்வழக்கம்
எழில் மிகுமந்த ஊரினிலே,
அன்றெரு நாளிற் பாட்டியவள்
ஆர்வத் தோடே பொருள்விற்க நன்றென வந்தான் சுட்டியனும்
நாவில் நீரும் ஊறிடவே தின்றெரு பலாப்பழம் சுவைத்திடவே
தீட்டினன் திட்டம் திடமுடனே கன்றிக் கனிந்து பெருத்தபழம்
காத்துக் கிடந்ததோர் மூலையிலே.
காகம் கொத்தி அப்பழத்தைக்
கனத்த சேதம் செய்ததஞல் பாகம் பண்ணி அதுவுண்ணப்
பலபேர் அதனை விரும்பவில்லை மோகம் கொண்டான் சுட்டியதில்
முந்திக் கேட்டான் விலையினையே பாகம் பண்ணி யுண்டிடலாம்
பழத்துக் கொன்றரைப் பணமென்றள்,

Page 36
سس- 52 --سس
நல்லது ஒன்றரைப் பணமுனக்கு
நானே தருவேன் பாட்டியதை மெல்லவங் கிருந்து உண்டபின்னே
மேலே பசியும் மிகவென்றன் சொல்வது உண்மை என்றுணர்ந்து
சொக்கப் பாட்டி பழமீய நல்லது நல்லது என்றுசொல்லி
நயந்தொரு மூலையில் அமர்ந்தானே.
காக்கை யுண்ட கணிகளையும்
கனிந்து அழுகிய பழங்களையும் தூக்கி உண்டு துன்பத்தை
தொட்டுக் கொள்ள வேண்டாமே தாக்கி நோய்கள் உனைவாட்டும்
தவிர்வாய் இந்தச் செயலென்ற வாக்கிது அன்னை வாக்கிதுவும்
வந்தது சுட்டியன் சிந்தையிலே.
அழுகிய பலாப்பழம் உண்ணும்ஸ்
ஆங்குள சிறுகனி உண்டிடவே பழுதறு உபாயம் அவன்கண்டான்
பருத்த பழத்தின் விதைசேர்த்தான் அழுகிய பழமே யானுலும்
அதன் விதைமிக்க இருந்திடவே மெழுகிய தரையில் அவையிட்டு
மெல்ல எண்ணிப் பார்த்தானே.

- 53 -
மொத்தம் ஒருநூற் றைம்பதுடன் மூன்று பத்தும் ஐந்தாக மெத்த நன்று எனமகிழந்து
மெல்லப் பாட்டி தனைநாடி சித்தம் என்ன பாட்டியந்தச்
சிறிய கனியும் தருவதற்கே மெத்தப் பசியும் ஆனதணுல்
மேலும் உண்டபின் பணந்தரவே.
பசித்த பையன் பசிதீர்க்க
பாட்டி பண்பாய் மனமிரங்கி புசித்த பின்னர் இருகணிக்கும்
பொதுவே இரண்டரைப் பணமெனவே கசிந்த அச்சிறு கணிபெற்று
கண்டோர் ஏழை யொடுபகிர்ந்து புசித்த பின்னர் விதையெண்ணிப்
பூரிப் படைந்தான் சுட்டியனும்,
முந்திய தில்நூற் றைம்பதுடன்
முப்பத் தைந்தும் இருந்திடவே பிந்திய பழத்தில் பத்தெட்டும்
பின்னும் ஒன்றய வந்திடவே குந்தி யிருந்து அவைகூட்டி
குட்டிக் கணக்கு அவன்போட்டு அந்திய காலப் பாட்டிக்கு
அன்பாய் மாற்றம் சொன்னுனே.

Page 37
- 54 -
எந்தன் கையில் இருநூறும்
அறுபத் தாறும் விதையுண்டு உந்தன் வழக்கம் போலின்றும்
உவந்திவை நன்றே பெறுவாயே தந்திடு வாய்பதி ஞறுசதம்
தயவாய் நானென் பிசகறுக்க எந்தப் பிசகும் செய்யேனே
எந்தன் பாட்டி யுனக்கென்றன்.
பக்குவமாக அவன் சொல்லப்
பொக்கு வாயைத் திறந்தாச்சி மக்குக் கிழவி யானேனே
மடக்கி விட்டான் சுட்டியனும் தக்கோன் என்று கணக்கிட்டு
தம்பி விதைகள் தந்திடடா மிக்காய் உள்ள ஒருசதத்தை
மேனை கேளாய் என்றளே.
தப்பாய் என்னை எண்ணுதே
தங்கப் பாட்டி நானுென்றும் தப்பாய்ச் செய்ய எண்ணவில்லை
தயவாய்ப் பார்த்தேன் வியாபாரம் விற்பாய் என்று நீயெண்ணி
விலையைப் பேசி வீழ்ந்தாய்நீ கப்பாய் நின்று ஏங்காதே
காசது எனக்கு வேண்டாமே.

கெட்டிக் காரன் நீயென்று
தட்டிக் கொடுத்தாள் மூதாட்டி சுட்டியன் சூரத் தனங்கண்டு
சும்மா தின்றன் பழமென்று திட்டி அவனைத் தூற்றமல்
தீட்டிய புத்தி தனைமெச்சி குட்டிப் பையன் ஆணுலும்
குழந்தை புத்தி பெரிதென்றள்,

Page 38
வேட்கை தடுப்பது அறிவன்றே.
பலநாளும் களவு செய்கின்ற ஒருவன், என்ரு வது ஒரு நாள் அகப்பட்டே தீருவான். அவன் அறியாமலே அவனுடைய உள்ளம் அவனைக் காட் டிக் கொடுத்துவிடும்.
குற்றம் செய்த நெஞ்சம் எப்போதும் குறு குறுத்த வண்ணமேயிருக்கும். பிறர் கஷ்டப்பட்டுத் தேடுகின்ற பொருளை அபகரிக்கின்றவன் பாவி. அவன் செய்த குற்றத்தைப் பிறர் அறிந்து விட் டால் என்னே அவமானம்! தான் உடல் வருந்தித் தேடாமல் பிறர் பொருட்களைக் களவெடுப்பவனை எல்லோரும் வெறுப்பர்.

- 57 -
இவற்றையெல்லாம் சிந்தித்தால் ஒருவனு டைய உள்ளம் களவு செய்ய ஒவ்வாது. ஆளுல் மனிதர் சிந்திக்காமலும், ஆசையை அடக்க முடி யாமலும் களவு செய்கிருர்கள். அதனுற் துன்ப மும் அடைகிருர்கள். தமது அறிவைப் பயன்படுத்தி இப்படியான துன்பத்திலிருந்து மனிதர் தப்பிக் கொள்ளலாம்.
அறிவைப் பயன்படுத்தி நல்லவனுக வாழாத ஒருவன் களவு செய்தான். அவனுடைய உள்ளமே அவனைக் காட்டிக் கொடுத்து விட்டது. கதைப்
பாட்டைப் படியுங்கள்.
சோமு நல்ல கமக்காரன்
சொகுசாய் வாழ்வ தவனறியான் ஏமம் சாமம் பாராது
என்றுந் தோட்ட வேலையிலே மாடாய் உழைத்து மகிழ்வெய்தி
மன்னன் போல வாழ்கையிலே தேடார் பலரும் தேடிவந்து
தித்திப் பாகப் பேசினரே.

Page 39
"س- 58 . س
தோட்டம் நன்றல் வந்ததனுல்
தொகையாய்ப் பணமும் சேர்ந்ததனுல் வாட்டம் நீங்கி அவன்வாழும்
வாழ்க்கை கண்டு சகியாளும் ஆட்டம் பாட்டு அவைநாடும்
அண்டை வீட்டு ஐயப்பன் நோட்டம் பார்த்துச் சோமனுடைத்
தோட்டந் தன்னிற் களவெடுப்பான்.
பலநாட் களவு செய்கின்ற
பாவிகள் தம்மை அறியாமல் சிலநாட் சோமு இருந்திடவே
சிறிதும் அஞ்சா ஐயப்பன் பலப்பல பொருட்கள் களவாடி
பாவி போல நடந்திடவே நிலப்பயன் இழந்த சோமனுமே
நீசரைப் பிடிக்க நினைத்தானே.
பாடுபட்டுப் பயன் அடையாப்
பாவிகள் சொத்தைத் திருடுவதேன் நாடுமுழுதும் இவர் போலே
நஞ்சர் பலபேர் வாழ்கின்றர் தேடுவர் பொருளைத் திருட்டாலே
தினம்தினம் பற்ப்ல வழிகளிலே சாடுவர் வேண்டும் இவர்தம்மை
சரியாய் நாட்டில் வாழவைக்க.

سے 590 ۔
கன்று கட்டி நின்றிடவே
கயிறு மேய்ந்து வருமென்ற அன்றைய நொடியைச் சொன்னுலே அதுதான் பூசினிக் கன்றென்பீர் நன்று அந்தப் பூசினியை
நட்டான் வயலிற் சோமனுமே நின்ற கொடிகள் இருவிதமாம்
நீற்றுப் பூசினி சர்க்கரையாம். .
நீறு பூத்த பூசினிக்காய்
நிறையச் சோமன் தோட்டத்தில் தாறு மாறய்க் காய்த்திடவே
தட்டித் தின்னி ஐயப்பன் நூறு காசு பெறத்தக்க
நீற்றுக் காயைத் திருடியதை மாறு செய்து தோள்மேலே
மறைத்துச் சுமந்து விற்றனே.
விதைக்கு வேண்டும் காயென்று விரும்பி விட்ட பூசினிக்காய்
அதையும் களவு செய்தொருவன்
ஐயோ கொடுமை பண்ணுகிறன்
எதையும் என்னுற் கண்டறிய
இயலா திருக்குப் பெரியோரே
இதைநீர் தீர்க்க வேண்டுமென
இரந்தான் சோமு கூட்டத்திலே,

Page 40
சந்தைக் கூட்டம் அதுதானும்
சகலரும் அங்கே நின்றர்கள் அந்தக் கூட்டந் தன்னிலொரு
அருமைக் கிழவன் முன்வந்து உந்தன் காயைத் திருடியவன்
தோளில் நீறு தோன்றுமென அந்தக் கூட்டந் தனில்நின்ற
ஐயனும் தோளைத் தட்டினனே.
 

- 6! -
குற்ற முள்ள நெஞ்சன்றே
குதர்க்கம் கேட்டுக் குழம்பிற்று
உற்ற செய்தி சொல்லாயேல்
உதைப்போம் என்றர் ஊராரும்
சற்றும் தப்ப முடியாத
சமயம் கண்ட ஐயப்பன்
விற்றேன் காயைத் திருடியன்று
விடுவீர் என்னைத் தயவென்றன்.
கள்ளந் தன்னை ஒப்பியபின்
கனிவு காட்டும் மாந்தரிடம் உள்ளம் என்றும் நல்லதுதான்
உணராத் தன்மை பிழைசெய்யும் கள்ளம் இல்லா உள்ளமன்றே
காட்டிக் கொடுத்த திவனையின்று வெள்ளந் தடுப்ப தனையென்றல்
வேட்கை தடுப்பது அறிவன்றே!

Page 41
g) ” ܒܘ ISOOo I L1 60 لا
உங்கள் அனைவருக்கும் நண்பர்கள் இருப்பார் கள். நண்பர்களிலே பல வகையானவர்கள் உளர். உங்களுடைய நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று எனக்குத் தெரியாது. யாராவது உங்களு டைய நண்பர்கள் கெட்டவர்கள் என்று சொன்னு அலும் உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கும்.
 

- 63 -
நல்ல நண்பர்களையுடையவர்கள் பாக்கியசாலி கள். அவர்களுக்குத் துன்பமே வராது. நல்ல நண் பர்களை நம்பி எதுவும் செய்யலாம். ஆனல் ஆபத்து வேளையிலே கைவிடுகின்ற நண்பர்களை நம்பக் கூடாது. அவர்களுடைய தொடர்பு துன்பம் தரும்.
இதை நான் கூறவில்லை. காட்டிலே வாழும் கரடி கூறுகிறது. கதையைப் படித்து பாருங்கள்.
வண்டன் குண்டன் என்றிருவர் வளர்ந்த நட்பின் பயணுக பண்டம் விற்றுப் பங்காக
பண்ணினர் வணிகம் சிலநாளாய்.
கண்ட கண்ட ஊர்களுக்கு
கால் நடையாக அவர்சென்று கொண்ட பொருளைச் சந்தையிலே
கூட்டி விற்றுப் பணஞ்சேர்த்தார்.
ஒற்றுமையாக அவர் செய்த
ஒற்றி இரட்டி வியாபாரம்
பற்றப் அவரைப் பற்றிடவே
பாரிற் தாமே நண்பரென்றர்.

Page 42
-- ... 64 -س--
குற்ற மற்ற தமதன்பு
குறையா துாழி வரையென்று
சற்றும் சிந்தனை செய்யாது
சான்று பகர்ந்து திரிந்தாரே
இப்ப டியாக வாழும் நாள்
இருந்தாற் போல ஒருநாளில் எப்படியோ ஒரு காட்டுடே
இருவரும் செல்ல நேர்ந்ததுவே.
9յնuւգ அவர்கள் செல்கையிலே
அந்தக் காட்டின் மத்தியிலே
'தப்படி தப்படி’’ என்றசைந்தே
தனித்தோர் கரடி வந்ததுவே.
கரடியைக் கண்ட வண்டனுடன்
கால்கள் பிடரி தனிற்படவே
இடறி ஓடி மரமொன்றில்
ஏறிக் கொண்டு இளைத்தானே.
குண்டன் கட்டைக் கால்களுடன்
குதித்து ஏற வகையற்று கண்டம் நீங்க மூச்சடக்கிக்
கட்டை போல நிலம் வீழ்ந்தான்.

-- 65 سس--
வீழ்ந்து கிடக்கும் குண்டன்முன்
விரைந்து வந்த கரடியது
தாழ்ந்து மோந்து அவனையொரு
சடமென் றப்பாற் சென்றதுவே.
வந்த மிருகம் சென்றிடவே
வண்டன் மரத்தால் இறங்கிவந்து
எந்தன் நண்பா எழுந்திரடா
ஏதும் பயமினி இல்லையென்றன்.
செத்தவன் போலக் கிடந்தகுண்டன் செய்தி கேட்டு எழுந்திடவே மெத்த ஆவல் கொண்டவனுய்
மேலும் வண்டன் கேட்டானே.
உந்தன் காதில் அக்கரடி
உரைத்த செய்தி சொல்லாயோ
எந்தன் நண்பா என்றிரந்தான்
ஏதோ நன்மை தான்பெறவே.

Page 43
- 66 - ஆபத் தான வேளையிலே
அகன்றிடும் நண்பனை அண்டாதே தாபத் தாலே உனைவிட்டேன்
தப்பிடு என்றது கரடியென்றன்.
குண்டன் சொன்ன இவ்வார்த்தை
குத்த நொந்த வண்டனுமே
தண்டனை பெற்றவன் போலுருகி
தன்பிழை யுணர்ந்து கொண்டானே.
aaaara/ra/rs Malak

புள்ளிமானின் சுள்ளிக்கால்கள்
மிருகங்களுக்குத் தடித்த தோலும் உரோம மும் இருக்கிறதே, அது எதற்காக? ஒ! குளி ரைத் தாங்கிக் கொள்வதற்காக என்றுதானே சொல்கிறீர்கள். சரிதான். பறவைகளுக்கு இறக்கை

Page 44
- 68 -
கள் இருக்கின்றனவே, எதற்காக? இது தெரியாதா பறப்பதற்காகத்தான்.
மனிதருக்கும் இறக்கைகள் இருந்தால் நல்லா யிருக்குமல்லவா? விரும்பிய இடங்களுக்கெல்லாம் விரைவிலே பறந்து சென்று விடலாமல்லவா?
மனிதனுக்கு அபாரமான மூளையிருக்கும் போது இறக்கைகள் எதற்கு என்று சொல்கிறீர் களா? உண்மைதான்; நன்ருகப் பறக்கக் கூடிய எந்தப் பறவையிலும் பார்க்கத் திறமாகப் பறக்க மனிதன் ஆகாயக் கப்பல்களைக் கண்டு பிடித்திருச் கிருனே . அப்படி இருக்கும்போது மனிதருக்கு இறக்கைகள் எதற்கு?
எது எது, எப்படி எப்படி, இருக்கவேண்டும் என்று இறைவனுக்குத் தெரியும். இதை உணரா மல் நாம் இயற்கையின் படைப்பைக் குறைவாக எண்ணிக் கொள்கிருேம். அப்படி எண்ணுவது தவறு. ஒத்துக் கொள்வீர்களா? முடியாதா? மேலே படியுங்கள் பாட்டை.
புள்ளி மானைப் பார்த்திருப்பீர்-அதன் பூப்போல் மேனியில் மனமிழப்பீர் துள்ளி ஒடும் காலாலே - வெகு
தூரம் பாயும் துடுக்காயே அள்ளி அணைக்க ஆசைவரும்-அந்த ஆசை மானை ஒடவைக்கும் எள்ளி நகைதான் செய்வதுபோல்-மான்
ஏய்த்தே ஒடி மறைந்துவிடும்.

- 69 -
இந்த வகையாம் மானுென்று-இருள் இல்லாப் பகலின் வேளையிலே வந்த விடாயைப் போக்கிடவே-பெரும்
வாவியை நாடிச் சென்றடைந்தே அந்த வாவிக் கரையினிலே-அது
அழகாய் நீரைப் பருகையிலே சொந்த நிழலைத் தான்கண்டு-அங்கு
சொக்கி நீரைப் பார்த்ததுவே
என்னே எந்தன் உடலழகு-பாரில்
எவரே எனக்கு இணையாவார் பொன்னே போலும் மேனியிலே-அள்ளிப்
புள்ளிகள் இட்டவர் யாருலகில் மின்னே அனைய என்கண்கள்--மருள்
மேன்மை கொண்டோர் யாருண்டு மன்னே அழகு மாமணியே-என்று மாந்தர் அழையா திருப்பாரோ?
சிந்தை தன்னில் இவ்வாறே-சிறு
சீருடல் பார்த்து வியப்போடு விந்தை எந்தன் உடல்செய்தான்-ஒரு வித்தகன் ஆண்டவன் என்றலும் கந்தை சுற்றிய கழிபோலே-எந்தன்
கால்கள் நாலும் வைத்ததென்னே எந்தை ஈர்க்குக் கால்தந்தே-என்
எழிலுக் கூறு செய்தானே.

Page 45
- 70 -
என்றே ஏங்கி மனம்நொந்து-அது
ஏற இறங்கப் பார்க்கையிலே நன்றே அதனை உண்பமென-டபுலி நாடிப் பதுங்கி வந்திடவே நின்றே கண்ட நொடியதினில்-மான் நீட்டிக் காலாற் பாய்ந்தோட சென்றே புலியும் பின்னுலே-வெகு
சீற்றம் கொண்டு துரத்தியதே.
வில்லிற் பிரிந்த அம்பெனவே-வெகு விசையாய் மானும் ஒடிடவே கல்லிற் கர்ட்டிற் பாய்ந்தோடக்-கடும் புலியின் கால்கள் ஏவாமல் சொல்லிற் கெட்டாச் சோர்வெய்திப்-புலி
சோம்பித் தேம்பி நின்றிடவே புல்லிற் தேகம் வளர்க்கின்ற-பொடிப் புல்வாய் ஒடி மறைந்ததுவே.
மறைந்த மானும் களைபபெய்தி-மனம் மாற்றி நினைவைச் சரிசெய்து நிறைந்த அழகு மேனியுடன்-நெடிய நுண்ணிய கால்களை நான் முன்பு குறைந்த தென்றே குறைபட்டு-இறை
குணத்தை நானும் மறந்தேனே நிறைந்த அன்பால் அவன்தந்த-என்
நெடிய கால்கள் இல்லையெனின்.

- 71 -
கொடிய புலியின் வாயினிலே-நான்
கோர மாகக் கொலைபடுவேன் நெடிய நாட்கள் வாழாமல்-என்
நேசர் தம்மைப் பிரிந்திருப்பேன் மடிய எம்மை வைக்காமல்-மின்
மாண்புக் கால்கள் வைத்ததனுல் முடிய மாட்டா தெம்வாழ்வு-முழு
முரடர் எவர்தான் வந்தாலும்.
இப்படியாக மான் எண்ணி-இறை
இரக்கம் மெத்தப் போற்றியதே எப்படியாக வேண்டு மென்றே-அவன்
ஏற்றதைச் செய்வான் ஏங்காதீர் செப்படியாக வித்தை செய்தே-பரன்
செவ்வனே உலகை நடத்துகிறன் அப்படியாக அவன் செய்யும்-அறம் அன்பால் என்றே கொள்வீரே!

Page 46
குட்டிச் சிவலிங்கன்
பல சிறுவர்கள் வீடுகளிலே வேலைக்காரப் பிள்ளைகளாக இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்
ፊm86ኽT•
சிறுவர்களை வீடுகளிலே வேலைக்காரர்களாக வைத்திருப்பது சட்ட விரோதமான ஒரு செயல். சிறுவருடைய நன்மையைக் கருதி அரசாங்கம் இச் சட்டத்தைப் பிறப்பித்திருக்கிறது. குறிப்பிட்ட ஒரு வயதுக்குக் குறைந்த சிறுவர்களை எந்தவித மான தொழிலிலும் ஈடுபடுத்தக் கூடாது என் பதுதான் இதன் நோக்கம்.

- 73 -
இருந்தாலும், பல சாக்குப்போக்குகளைச் சொல்லிச் சிறுவர்களை வீடுகளிலே வேலைக்காரர் களாக அமர்த்திக்கொள்வோர் அநேகர் இருக்கி ருர்கள். இவ்விதம் சிறுவர்களிடம் வேலைவாங்கு வோர் சிலர் அவர்களை அன்பாக நடத்துவதில்லை.
தாம் பெற்ற பிள்ளைகளைத் தங்கமெனப் போற்றும் அவர்கள் பிறர் பிள்ளைகளைத் துரசென மதிக்கிறர்கள். இவ்வகைப் பட்டவர்களைத் திருத் துவது கடினம். அவர்களுடைய பிள்ளைகளே முன் வந்து அவர்களைத் திருத்தினுல் ஒருவேளை திருந்து
வார்கள் போலும்.
உங்களுடைய வீட்டிலே வேலைகாரப் பிள்ளை கள் இருந்தால் அவர்களை நீங்கள் அன்பாக நடத் துவீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனல் அப் படி அன்பாக நடத்தாத ஒரு வீட்டை உங்களுக்குக் காட்டினுல் நலமாயிருக்குமென்று எண்ணுகிறேன். பாட்டைப் படியுங்கள்; இடையே அந்த வீட்டைக்
கண்டுகொள்வீர்கள்.

Page 47
- 74 -
உச்சிமலை உயர்ந்தமலை
ஊசிமலைக் காட்டிலே பச்சைத்தளிர்க் கொழுந்தெடுக்கும்
பாட்டாளிகள் பலருமே இச்சகத்தில் ஏற்றமுள்ள
இலங்கைவள நாட்டினை மெச்சஉழைத் தேநலிந்தார்
மேவியிந்த நாட்டிலே.
கண்ணுக்கிருட் டோடெழுந்து
கடுங்குளிரைத் தாமறந்து விண்ணுக்குயர் மலைகளிலே
விரும்பியவர் தொழில்புரிந்து பண்ணைக்காரத் துரையினுக்குப்
பண்புடனே சேவைசெய்து எண்ணற்கரும் பொருளைத்தந்த
ஏழைக்கென்ன தந்தாரையா?
கட்டைகால இடறுகின்ற
கண்டிபோன்ற ஊரிலும் அட்டைக்கடி அதிகமான
அப்புத்தளை மேவியும் கிட்டும்பனிக் குளிர்மழையைக்
கிழிந்தபோர்வைத் துண்டுடன் முட்டித்தொழில் புரிந்தமக்கள்
முயற்சிக்கென்ன ஈடையா?

- 75 --
ஒட்டைக்கூரை ஒடிந்தநெஞ்சம்
உளுத்துப்போன வாழ்வுதான்
பாட்டுக்கீடாய்க் கிடைத்ததையா பரந்ததோட்டக் காட்டிலே
வீட்டிற்பல பிள்ளைகுட்டி
விரைவிற்பெற்று விட்டவோர்
தோட்டத்தொழி லாளிபாலன்
துயரக்கதை சாற்றுவேன்.
பத்துப்பிள்ளை பெற்ற அவன்
பாலுக்கென்ன செய்குவான் செத்துப்போகும் பிள்ளையெனச்
சிணுங்கிமனம் ஏங்குவான் நித்தம்சோறு உண்டுநல்ல நிம்மதியாய் வாழவே சத்தியமாய் உண்டுவழி
என்றெருவன் சாற்றினுன்.
நன்றுநன்று அந்தவழி
நன்றெனவே எண்ணியே
தின்றுகுடித் தேவளர்வான்
என்றுமணம் தேறியே
சென்றுவாடா என்றனுப்பிச்
* சொன்னபையல் தன்னுடன்
குன்றில்வாழ்ந்த குழந்தைதன்னைக்
கொழும்புச்சீமை போக்கினன்.

Page 48
- 76 -
*கோச்சி யேறிக் கொழும்புபோகும்
குட்டிச்சிவ லிங்கனும் ஆச்சியப்பு அனைவரையும் அழுதழுது பிரியவே சிச்சியிது என்னதம்பி
சின்னவன்போல் அழுகிறய வாச்சிருக்கு வங்களாவு’
வந்துபாரு என்றனன்.
வந்துசேர்ந்தான் * வங்களாவில்"
வாழவழி அற்றவன் நொந்த அவன் நோயறியா
*நோனு' அங்கு நின்றனள் இந்தப்பெடி யேனிங்கு
என்னவேலை செய்குவான் அந்தவழி யேயனுப்பு
அடுக்களைக்கு என்றனள்.
கூட்டிவந்த கோணங்கி
கொடுத்தகாசைப் பெற்றதும் போட்டுவாறன் என்றுசொல்லிப் பொடிநடையைக் கட்டினன் வீட்டுவேலே செய்யவேறு
வக்கில்லாத மங்கையும் போட்டுவாட்டிப் பொடியனுக்குப்
பெருத்தவேலை வைத்தனள்,

. سس- 77 --سس
சொன்னசொன்ன வேலையெல்லாம்
சோர்விலாது லிங்கனும் சின்னஇரு கைகளாலே
செய்துசெய்து வைப்பினும் என்னவேலை செய்தாயென்று
ஏசியவள் பேசியே கன்னஅடி போட்டுநிதம்
கடுகடுத்து வாட்டுவாள்.
உண்ணத்தராள் உடுக்கத்தராள்
ஊற்றுவாளே கஞ்சிதான் பண்ணத்தகா வேலையெல்லாம்
பாலனுக்கே சாற்றுவாள் எண்ணத்தகா இடுக்கண்தரும்
இந்தமாதின் போக்கினை கண்ணனென்பான் அவள்புதல்வன்
கண்டுமனம் ஏங்கிஞன்.
என்னையொத்த வயதுடைய எழையந்தச் சிறுவன அன்னையேணுே அடித்தடித்து
அச்சுறுத்தல் செய்கிறள் என்னவிதம் இவளுக்குநான்
ஏற்றபுத்தி புகட்டுவேன் என்றுகண்ணன் ஏற்றநாளை
எதிர்நோக்கி நின்றனன்.

Page 49
- 78 -
நல்லசிவ லிங்கணுேடு
நயந்துபல பேசியே சொல்லரிய வேலையொன்று
செய்வோமெனத் தேறியே மெல்லச்சிவ லிங்கனைத்தன்
மெத்தைக்கட்டில் தன்னிலே நல்லுறக்கம் செய்யவிட்டு
நமதுகண்ணன் அகன்றனன்.
நாடிஅவன் லிங்கன்பாயில்
நல்லதுாக்கம் கொள்ளவே மூடிக்கொண்டு படுத்திருந்து மூச்செறிந்து தூங்கவே தேடிக்காலை வந்ததாய்க்குத்
தெரியவில்லைச் செய்தியே மூடிக்கொண்டு படுத்திருந்தோன் லிங்கனென்று எண்ணினுள்.
எழுந்திரடா கழுதையின்னும்
ஏணுேதூக்கம் கொள்கிறாய் பொழுதுடனே எழுந்திருக்கப்
புத்திசொன்னேன் கேட்டியா? கொழுகொழுத்த மாடுபோலக் குறட்டைவிட்டு தூங்கிறாய் எழுந்திரடா எழுந்திரடா
எருமைமாடே என்றனள்

- 79 -
படுக்கையிலே கிடந்தஅவன்
பாயைவிட்டு எழுந்திலன் தடுக்கவொண்ணுக் கோபங்கொண்டாள்
தாயுமந்த வேளையில் விடுக்கெனவே சென்றுஉள்ளே
விறகுக்கொள்ளி ஒன்றினை துடுக்குடனே எடுத்துவந்து
தூங்குவோனைச் சுட்டனள்.
ஐயோஐயோ சுட்டுவிட்டாய்
அம்மாஎன்று கத்தியே பையன்விழுந் தடித்தெழுந்து
பதைபதைத்துச் சோரவே மையல்தீர்ந்த மங்கையவள்
மைந்தனைத்தான் சுட்டதை மெய்யாயுணர்ந் தேநலிந்து
மேலும்பல சாற்றுவாள்.
பாலுஞ்சோறும் ஊாட்டுமுன்னைப் பாவிநானே சுட்டனே நாலுமாதஞ் செல்லுமேயுன்
நலிவுதீர என்றுமே தோலுரியும் தொப்பையாகும்
தொந்தரவென் றேங்கியே மேலுஞ்சிவ லிங்கனையே
மெத்தஏசித் தூற்றினுள்.

Page 50
- 80 -
வெந்தபுண்ணில் வேலையேணுே விரைந்துபாய்ச்சு கின்றன நொந்தவென்னைக் கண்டுமனம் நோவெடுக்கும் அன்னையே அந்தச்சிவ லிங்கனநீ
அடித்துவாட்டும் போதிலே இந்தத்துயர் கொள்ளாவுந்தன் இதயமென்ன இதயமோ?
என்றுகேள்வி எழுப்பியந்த
ஏக்கமுற்ற மாதினை நன்றேகுத்தி நலியச்செய்து நல்வழியைக் காட்டவே நன்றுஎந்தன் கண்திறந்தாய் நல்லனந்தன் மைந்தனே இன்றுதொட்டு எங்கள்சிவ
லிங்கனநான் வாட்டேனே.
என்றுகூறி ஏழைச்சிவன்
இன்னல்தனைப் போக்கியே நின்றுநின்று நல்லவளாய்
நீதியாக வாழவே குன்றிலிருந்து வந்தசிவன்
குறைகள் நீங்கிப் போகவே நன்றுநன்று கண்ணன்மனம்
நன்றெனவே போற்றினர்.

- 81 -
பெற்றபிள்ளை தன்னைப்பேணும்
பெண்மணிகள் யாவரும் உற்றபிள்ளை துயர்துடைக்க
உவந்துமனம் கொள்ளணும் கற்றுவாழும் கண்ணன்போன்ற
கனிவுடைய பாலரும் உற்றவேலைக் காரச்சிறுவர்
உயர்வுக்காக உழைக்கணும்.

Page 51
பள்ளிக்கூட பஸ்வண்டி
கணிர் கணிர் என்று "சைக்கிள்' மணியை ஒலித் துக்கொண்டு விளையாட்டு மைதானத்தில் வந்திறங் கினன் குமரன். அது அவனுக்குப் பிறந்த நாட் பரி சாகக் கிடைத்த புதுச் 'சைக்கிள்’. புதுச் சைக் கிள்’ என்ருல் யாருக்குத்தான் விருப்பம் இருக் காது. குமரனுடைய "சைக்கிள்" வண்டியைக் கண்டு அவனுடைய நண்பர்கள் ஆசைப்பட்டார் கள். தமக்கும் இதுபோல ஒரு "சைக்கிள் கிடைக் காதா என்று ஏங்கினர்கள். ஒருசிலர் குமரனின் *சைக்கிளில் ஏறி ஒடவும் விரும்பினர்கள். ஆனல் குமரனே ஒருவரையும் தனது "சைக்கிளை நெருங்க

س- 83 --
விடவில்லை. ‘தூசி துடைத்து, எண்ணெயிட்டுப் பக்குவமாகக் கொண்டு வந்திருக்கிறேன். "செயின் கவறிலே கீறல் பட்டால் பின்னர் "சைக்கிள்" எதற்குக் கூடும்' என்று கூறி மறுத்துவிட்டான். தன்னுடைய "சைக்கிள் வண்டியிலே அவனுக்கு அத்தனை கரிசனை.
ஒரு "சைக்கிள் வண்டியிலே பாடசாலைக்குப் போக வாய்ப்புக் கிடைக்குமாயின் உங்களுக்கு எப் படி இருக்கும்? எல்லோருக்கும் அந்த வசதி கிடைப் பதில்லை. சிலருக்குச் "சைக்கிள் வாங்கித்தரக்கூடிய வசதியுள்ள பெற்ருர் இருக்கமாட்டார்கள். சில ருக்குச் சைக்கிள் இருந்தும் தொலைவுக்கு அதை ஒட்டிச் செல்ல அனுமதிக்கக் கூடிய மனத்தைரிய முள்ள பெற்ருர் இருக்கமாட்டார்கள்.
குமரன் “சைக்கிள் இருந்தும் அதிலே பாட சாலைக்குச் செல்ல முடியாத வகையினன். எனவே குமரன் தினமும் பள்ளிக்கூடத்துக்கு எப்படிச் செல் வான்? அதற்குத்தானே இருக்கிறது பள்ளிக்கூட பஸ்வண்டி. நண்பர்களோடு குதூகலமாகப் பள்ளிக் கூட பஸ்வண்டியிலே பிரயாணஞ் செய்யும் குமரன் அதனை எப்படிப் பேணிஞன் என்று நினைக்கிறீர் கள்? தனது "சைக்கிள்" வண்டியைப் பேணுவது போலத்தான் பேணியிருப்பான் என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா? அதுதான் இல்லை. குமரன் பாடசாலை பஸ்வண்டியிலே பிரயாணஞ் செய்யும் போது நடத்தும் அட்டூழியங்களுக்கு அளவேயில்லை.

Page 52
- 84 -
குமரனைப்போன்ற பல மாணவரின் வசதிக்கா ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் பொதுச் சாதன தானே பள்ளிக்கூட பஸ்வண்டி, குமரன் அதன் பெருமையை அறியாமல் நடந்துகொள்வது அவனு டைய நண்பன் பாலனுக்கு வேதனையாக இருந்தது பாலனுடைய வேதனைக் குரலைப் பாட்டாகவே கேளுங்கள், -
காலை மாலை வேளையில்
கடுகி வரும் பஸ்வண்டி
பாலர் நாங்கள் சென்றிடும்
பள்ளிக் கூட பஸ்வண்டி.
காத்து நிற்கும் பெரியவர்
கடிதிற் செல்ல வேண்டினும் ஏற்றிச் செல்ல மறுத்திடும்
எங்கள் பள்ளி பஸ்வண்டி,
பள்ளிச் சிறுவர் நாங்களும்
பார்த்து நிற்கும் இடத்திற்கே
அள்ளி இரைந்து வந்திடும்
அன்பாய் நம்மை ஏற்றிடும்.
சாரி சாரி யாகவே
சனங்கள் நின்று தூங்கினும்
பாரிற் சலுகை எமக்குத்தான்
பக்குவ மாய்ச் செல்லவே,

须
?
2
须
努
後
டைத் தட்டு Lusiu GB6)
இரட்
இருக்கை நிறைய இருக்குமே
அரட்டை அடித்துச் செல்லலாம்
அழகுக் காட்சி காணலாம்.
பள்ளிக் கூட வாசலில்
பஸ்வண்டி சென்று நின்றதும்
துள்ளி நாமும் இறங்கியே
துரித ஒட்டம் பிடிப்பமே.

Page 53
- 86 -
கூட்ட மாக நாங்களும்
கூடிக் கூடிச் செல்லலாம்
வாட்ட மான சிறுவரை
வலிந்து இழுத்துச் செல்லலாம்.
வீட்டை நோக்கி வருகையில்
விரைந்து ஓடி வந்திடும்
நாட்டுச் சொத்து பஸ்வண்டி
நன்கு பேண வேண்டுமே.
மிக்க நல்ல வாகனம்
சிக்க னத்தின் சாதனம்
திக்குத் திக்காய் ஒடியே
தினமும் சேவை செய்குதே.
அருமை அறியாப் பலருமே
அழிவு மெத்தச் செய்கிறர்
பெருமை கொள்ள வேண்டுவோர்
பிழைகள் செய்தல் நீதியோ?
இருக்கை குத்திக் கிழிக்கிறர்
இடை யிடையே எழுதுவார்
துருப் பிடித்த பாகத்தைத்
தோண்டி முறித்து எறிகிறர்.

- 87 -
எழுதக் கொப்பி இருக்கையில்
ஏணுே பஸ்சில் எழுதுவான்?
அழுது அழுது சொல்லினும்
அறியார் அவர்தம் மடமையை.
நல்ல சேவை செய்கின்ற
நாட்டுச் செல்வம் பஸ்வண்டி
சொல்ல வேண்டாம் பிறரதைப்
பேணு தம்பி என்றுமே.
கீறிக் கிழித்து அதனுடல்
கிஞ்சல் செய்ய மாட்டமே
ஏறி அமரும் போதிலே
பேணிக் காத்து நடப்பமே.

Page 54
ஓட்டோ அச்சகம் 122, சென்றல் ருேட், கொழும்பு-12.


Page 55
இந்நூலேப்பற்றி
A č*f* 47. I_T 5 er a hேன்று இழந்தைகள் விரும்பு பூர்த்தி சோப் த லை க்கும் நற் ᎬiᎢ Ꭵrri- *வித்தர் நா ஃகசன் 'சித்துே க.ம்ை, அதிலும் أنه من : " مقي يضم إل تلك النبتة "ه") أول ممثلة. *ள் வாயில் மண்ண்டா இ! நீள்சி பாடல்கள். பஃனதுங்கு "புனேயின் கதை." இப்படியா கஃாப் பார் உஸ்துக்கு அளித் 'Tட்டுவது தமிழரிந்தோர்
-பிள்ளேக் க
* பல அரிய கருத்துக்கஃ 'ப் படிப்பதற்கே : El T. J. T. ** கதைகளினுரட்ாக ஃழங்கி *:'r "ராட்டுகி தேன். பழ. ஆசிரியரின் தெளிவர்ன எளிய திலுைம் تھا "L-J பொலிவு பே பாடடையும் படித்து முடித்தத் சிதொரு நற்பண் 1 ஆழப்பதி தல் இக்கதைகளின் தனிச் சிறு
— T
F.5 இலங்கைத் ே
革 ஒவ்வொரு கதைப்பாட் எடுத்துக்கொண்ட பொருள் ர ளது. அதன் yaமாக கூறவந்த
த்ெதப்பட்டுள்ளது. டாடற்
தர்ப்பத்துக்கும் எற்றவகையில் 町 *ஆம் மேலாக ஆசிரியர் கைய தைப் " பாட்டுகளத் இழந்தைக வெகுவாகத் துஃனே புரியும்.
- ஆங்"
 

"தாரளவில் வெளிவர வேண்டு கின்றனர். அந்த விருப்பத்தைப் ஈரிரிந்: பங்கேற்க புன் ந்ெதுன் ஆrர ஸ். அதேப் பாடல்," நகைச்சுனனப் பாடல்கள் i r : 'ார் தெரிந்த ாேமதாதர்" "ரங் "ஈண்டும் நகைச்சுவை தேர்பும் ,
போலச் சுவையாக உள்ளது சுப் பதிஒேரு %oa.5 T Lurr_i} துள்ா கவிஞர் தா. மகேசஃப்
கடனோசியாகும்.
விடரசு அழ. வள்ளியய்பாட
ச் சிறுவர் ஆர் விக்கோடு விரும் ட்டும், சிெனேழாம் பிரவிய து ள்ேள ஆசிரியரின் எ_ ப்பாற் மையான சில கதைக் ருேக்கள் நடையிலும், *ற்பஃன எரேக் கின்றன. ஒன்னொரு கதைப் நாம் சிறுவர் *ள்ாேத்தே சரதா பும் தன்:ை o "- TIF.3, * نقل في " ، قال
காம், கமால்தீன்
* வி நெறியார+ தேசிய நூலக சேவைகள் சை
*? 53Ydfa, gyfî. Ffurf *ఈ + j வேயுடன் கையாளப்பு டுள் போதஃr தெளிவுடன் புளிப்ப *ந்தம் பொருளுக்கு ஞ் சத் அமைகின்றது. இவை யாவற் "இரும் நாடகப் பண்பு இக்க ள் சுவையுடன் படிப்பதற்கு
நிதி அ. சண்முகதாஸ்