கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யுத்தத்தின் இரண்டாம் பாகம்

Page 1


Page 2
சக்கரவ

. ܬ *
華
*
6oonLITLo LT35 so

Page 3

.

Page 4
யுத்தத்தின் இர
சக்கரவர்த
Geagu
EXIL (Exil Idée Lit B.P.204 92604 Asnieres Ced France.
E-Mail- exil-inbasa).
 

posrL TLD LUITGEGL b
G
térature)
EX
nfonie.fr

Page 5
வெளியீடு நூல்
நூல் உரிமை முதற்பதிப்பு Q616fluffs
பக்கம்
விலை அட்டை வடிவமைப்பு
அளவு
அட்டைகளில் விற்பனை உரிமை
Publication Subjet
CopyRight 1st Edition Publication By
No. of Pages Price
Size
Paper Printing Point
: யுத்தத்
சக்கர6 : யூன் 2 : 6th6the
B.P.2( 92604 Franc
: 176
: ரூபாய ஓவிய : GALLf : 03/09
: UTSl
6, Լl(Ա
தமிழ்

தின் இரண்டாம் பாகம் (சிறுகதைகள்)
வர்த்தி
000 b (No d'enreg: 13022670) )4
k Asnieres Cedex
C.
- 65/- Î đ5(5600III (660ILII)
1/8 /90- காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை Dids வத சிங்கராஜ தெரு நல்வேலி டவுன் - 627006 நாடு
HTHATHTHIN RANDAM PAHAM
(Short stories)
KARAWARTHI
2000
Publication (Nod’enreg: 13022670)
)4
! Asnieres Cedex
26
l: exil-inbagainfonie.fr
5/-
1/8 Maplitho 18.6 kg
Laser

Page 6
சிங்கள, தப
இனவெ பலியாகிப் டே

மிழ், முஸ்லீம் 1றிகட்கு
ானோர்க்கு.

Page 7


Page 8
சக்கரவர்த்தியிடமிருந்
இது "யுத்தத்தின் இரண் புகலிட வாழ்வியல் காலத்தில்தான் கதைகள் இலங்கையை அடிப்ப எமது “வீரத்தின் மறுபக்கம்” எனவு சூழலில், இங்கிருந்து வரும் ஒவ் பல கொண்டிருந்தது குறுகிய ஆப னது இருப்பும் என்றும் பேசப்படம் தொகுப்பில் அடங்கும் எனது சிறுக் நான்காவது பரிமாணம், பனியும்பனை ழகரம், எக்ஸில் போன்ற இதழ் தேவையறிந்து அவ்வக்காலங்களில் பத்திரிகையையும் நன்றியுடன் நில்
எனது புகலிட வாழ்வின் ஊக்குவித்த டி.பி.எஸ்.ஜெயராஜ்,
பரப்புக்குள் காலூன்ற காரணப பரிமாணம்), 1994இன் பின் சுமார் மூ காரணங்களால் காணாமற்போய் இழுத்துவந்து எழுதவைத்த பொன் அடிக்கடி உற்சாகமளிக்கும் சேர் நண்பனாயும் இலக்கியப் பங்காளன என்போரெல்லாம் என்றும் என்நன்
இலங்கை அரசியலில் | எதிர் கொள்வது என்ற அச்சம் பு போன சூழலில், நான் கொண்டுள்ள மறுதலிக்கும் நண்பர்களிடையே, வெளியிட முன்வந்த எக்ஸி சுதந்திரத்தின்பால் கொண்டுள் நன்றிசொல்லக் கடமைப்பட்டுள் நண்பர்களான ஜெபா, இன்பவல் போன்றோருக்கும் என் நன்றிகள்.

து...
டாம் பாகம்.” எனது பத்து வருட ன் இவை எழுதப்பட்டாலும், அதிக டையாகக் கொண்டவை. இவற்றை பம் கொள்ளலாம். புகலிட இலக்கிய வொரு சஞ்சிகைகளும், அவற்றில் புட்காலங்கள் எனினும், அனைத்தி வேண்டியவை. இவ்வகையில், இத் கதைகளை பிரசுரித்து ஊக்குவித்த னயும், செந்தாமரை, மஞ்சரி, காலம், களுடன் எனது பல கதைகளின் D மறுபிரசுரம் செய்து வரும் சரிநிகர் னைவு கூர்கிறேன். - தொடக்க காலங்களில் எனை தொடர்ந்து என்னை தீவிர இலக்கிய Dாயிருந்த க.நவம் (நான்காவது மன்று வருடகாலங்கள் காரணமறியா கொண்டிருந்த என்னை மீண்டும் னையா விவேகானந்தன், அதேபோல் ஏன், இன்றுவரை எனக்கு உற்ற Tயும் உடனிருக்கும் ஓவியர் கருணா
றிக்குரியவர்கள். மாற்றுக்கருத்தென்பது மரணத்தை கலிட மண்ணிலும் யதார்த்தமாகிப் T மாற்றுக்கருத்துக்காகவே என்னை எனது கதைகளைத் தொகுத்து ல் நிறுவனத்தினர், எழுத்துச் ள துணிவுக்கும் நேர்மைக்கும் ளேன். அவ்வகையில் எக்ஸில் ல்லி, கற்சுறா, எம்.ஆர்.ஸ்ராலின்
- பூச்சியம் பூச்சியம் ஆண்டு -
கனடா

Page 9
உங்களுடன்...
தமிழ் எழுத்து இயக்க விடயங்களுக்கும், அரசியல், பன அதுசார்ந்த விவாதங்களுக்கும் எக்ஸில் இந்த மே மாதத்து! கொள்கிறது.
எமது நிறுவனத் தி க.கலாமோகனின் நிஷ்டை சிறு தோம்.
சஞ்சிகை போன்றே 6 பேனாக்களை முன்னிறுத்திவரும் மிகக்கவனமாக கட்டமைக்கப் கருத்தியல்” வேலிகளுக்கு வெ

மத்தில் அதிகம் பேசப்படாத பல பாடு... என்ற புனிதங்களை மறுக்கும் பூரண களம் கொடுத்து வருகின்ற டன் மூன்றாவது ஆண்டில் நிலை
ன் முதலாவது வெளியீடாக கதைத் தொகுப்பை வெளியிட்டிருந்
மது வெளியீடுகளிலும் ஓரநிலைப் நாம், புகலிட இலக்கியச் சூழலிலும் ட்டு வருகின்ற “சைவ, வேளாள ளியே திமிறி எழுகின்ற படைப்பாளி

Page 10
யான சக்கரவர்த்தியின் "யுத்த அவரது முதல் சிறுகதைத் தொ கிராமியப் பேச்சு வழ கொண்டுவரும் ஆற்றல் கொண் பல சிறுகதைகள் சாட்சியமாகும். அந்நியமானதாகக் கருதப்படும் படு வாழ்வியலையும் எழுத்தாக்கிய இஸ்லாமியப் பேச்சுவழக்கை எழு வெற்றிகண்டுள்ளார்.
போர், புனிதம் என்ற டெ போய்விட்ட மானிட விழுமியங்களை அப்பாவி மக்களின் குரலாக துப்பாக்கிகள் எனப்படுபவை ய செலுத்தும் அதிகாரங்கை குள்ளாக்குகின்றன.
இவ்வாறாக போர்எதிர்ப்ை படைப்பியக்கம் தமிழ் பாசிஸ்டுக முஸ்லீம்கள் மீது நடாத்தப்பட்ட படுகொலைகள் என்று தமிழ்ே இலக்கியமாக்கியுள்ளதோடு தமி வாதத்தின் நேரடி விமர்சனமாகவ சக்கரவர்த்தி, தேசத்தில் துரத்தப்பட்டவர். அவலம் நிை ஆண்டுகள் பல கழிந்ததுண்டு. இவரது சிறுகதைகளான புளியம நானறிவேன், தரையிலும் மே உன்னையே கண்ணம்மா போன் வேண்டியவை ஆயினும் முடியவி பிரதிகள் கூட தொலைந்துவிட்ட படுவான்கரையும் அதன்தொடர சிறுகதைகளைத் தொகுத்திருச் எத்தனையோ நெருக்கடிகளுக்கு பாகத்தை” எமது இரண்டாவது மகிழ்ச்சியே.
எக்ஸில் (புகலிடக் கருத்து இல EXIL (EXil Idée Littérature)

த்தின் இரண்டாம் பாகம்” எனும் குதியை கொண்டுவருகின்றோம்.
க்குகளை தமிழில் கச்சிதமாகக் டவர் என்பதற்கு சக்கரவர்த்தியின் கிழக்கிலங்கை மக்களில் பலருக்கே }வான்கரை மக்களின் மொழியையும் பதில் இவர் குறிப்பிடத்தக்கவர். ழத்தில் கொண்டுவருவதிலும் இவர்
ருங்கதையாடலுக்குள் காணாமல்ப் ா தேடமுயலும் இவரது எழுத்துக்கள் ஓங்கி ஒலிக்கின்ற அதேவேளை ார் கையில் இருப்பினும் அவை ள பாரபட்சமின்றி கேள்விக்
பை இலக்காகக் கொண்ட இவரது 3ளின் இனச் சுத்திகரிப்பின் போது விரட்டியடிப்புக்கள், பள்ளிவாசல் தசியம் கடந்துவந்த நிஜங்களை Sழ்ச் சமூகத்தினது போலி ஒழுக்க பும் தன்னை இனம் காட்டுகிறது. b இருந்து யுத்த வெறியர்களால் றந்த நாடோடி வாழ்வில் இவரது இந்தப் பொழுதுகளில் எழுதப்பட்ட ரம், தழும்பு, இடறல், உன்னையே Bம், நின்னைச் சரணடைந்தேன், றவை இத்தொகுதியில் இடம்பெற பில்லை. அவற்றின் கையெழுத்துப் நிலையில் 1992 ல் இவர் எழுதிய TGES எழுதியவைகளுமாக பத்து க்கின்றோம். புகலிட வாழ்வின் ள் இந்த யுத்தத்தின் “இரண்டாம் தெரிவாக வெளியிடுவதில் பெரும்
க்கியம்)

Page 11
GALITb6 TIL
புத்தமும்.அதன் இ
படுவான்கரை
எண்ட அல்லாஹ்
நானும் ஒகஸ்டீனா6 குதிரையும்
ரூபம்
ஆடு புலி புல்லுக்க
D60 r
பிசாசுகளின் வாக்கு
முதிர்கன்னி
இறகுகள்

_ð5 Ö5|D
P
ரண்டாம் பாகமும் . 11
23
35
வும் ஒரு பந்தயக்
69
91
மூலம் ... 101
... 114.
... 32

Page 12
"இனச்சுத்தம் இனச்சுத்தம் எனச்செ சோனகரை எல்லாம் ஒற்றை நாள் இடைவெளியில் நாட்டைவிட்டு நாம் விரட்டியடித்தே நாமென்ன நாசிகளுக்கா பிறந்தோம்? நம் பூர்வீகம் என்ன ஜேர்மனியா?”
•.::44;
னிதம் நாகரீகம் அடையத் துவங்கி மஇக்கால கட்டத்தில்தான் இருட்டடி சித்தர்) விஜநகரத்தில் இருந்து படகே ஒட்டக இலேகியத்தை அறிமுகம் செய் உண்ட இராசர் அரிபுஜ பல பராக்கி அடைந்து -அதனால் மகிழ்வுற்ற இரா பிரதேசத்தில் ஒட்டகப்புலம் என்று ஓ உற்பத்திக்கு ஆவன செய்து கொடுக். நல்லூர் இராசதானியில் போர்ப்பணி கெ

Tல்லி
ாம்
ரப்பர்
பத்தமும்...
விட்டதாக நம்பத் துவங்கிய காலகட்டம். ப்பு செய்யப்பட்ட ஒட்டகச் சித்தர் (19ம் கறி நல்லூர் இராசதானி வந்து தனது தார். இலேகியத்தை மூன்று பொழுதும் ரமம் பெற்று அதி உன்னத வீரமும் சர் ஒட்டகச் சித்தருக்காக வடமறவர் 1 கிராமத்தை உண்டாக்கி இலேகிய கப்பட்ட அதே காலகட்டத்தில் எனக்கு
ய்யப்பணிக்கப்பட்டது.
யுத்தத்தின் இரண்டாம் பாகம் 111"

Page 13
நான் ஒன்றும் போர் செய்யப் வீரனோ கிடையாது வைரவன் கோயி காட்டுச்சாமியாம்.
"காட்டுமிராண்டிகளும் பள்ளரும் பறை
கும்பிட வேண்டும். இராசாக்களும் அவரை வேளாளரும் வணங்குவதற்கு வேறு க
என்று காஞ்சிபுரத்தில் இருந்து நல்லூர் இ பெரியவர் வாய் மொழிய என் ஐயன இருந்தாலும் இராசருக்கு அகன்ற பிரப ஆறுதல் சொல்லி என்னைப் படையில் உடலெங்கும் வியர்த்து - கிண்ணென்ரே
''அட மட மண்டு மகனே! நம் இராசன் அல்லது நம் இராசன் மீதுதான் எவன் தேசத்தைப் பொறுத்தவரை சும்மா ஒரு பாசாங்குக்காக இராசாவின் தோட பருத்தித்துறையிலும் - பூநகரி முனையில் என்பவன். நீ எதற்கும் கவலை கொள்
ஐயன் சொல்ல கொஞ்சம் தெம்பு வ பார்த்தேன். ஐயன் சொல்வது நிரம்பச் ச - பாட்டன் - மகன் - பேரன் என் இருக்கின்றார்கள். சோம்பேறி இராச தொடுப்பதில்லை.
வன்னி இராசன்கூட அநுராத இராசாக்கள் மீது போர் தொடுப்பது உ நெல் வியாபாரம் செய்யவரும் வணிகர் வேற்று தேசத்து இராசாக்கள்கூட, ஏன் என தெரியாது.
பனை மரக்காட்டையும் சுல் வேண்டும் என நினைத்தார்களோ என்
இராசாக்கள் என்றால் மண்ண வெறிகொண்டு அலையவேண்டும் என் எப்படியோ தெரியாது. மண்ணாசை எ6
சக்கரவர்த்தி

பிறந்த சத்திரியனோ அன்றி முக்குல ல் பூசாரியின் மகன். வைரவர் சாமி
பரும் பிணம் காவிகளும்தான் அதை அண்டி வாழ்வோரும் மற்றும் உயர்குல வுள்கள் உள்ளன''
ாசதானிக்கு சமூகம் தந்த பங்கரச்சாரிய க்கு தொழில் இல்லாமல் போயிற்று. ந்சம் போல்பரந்த மனம். அப்பாவுக்கு சேர்த்துக்கொண்டார். படை என்றதும் நார் பீதி பற்றிக்கொண்டது மனதுக்குள்.
எந்த நாட்டின் மீதுடா படை எடுத்தான். போர் தொடுத்தான். படை என்பது நம் சம்பிரதாயத்துக்குத்தான். சும்மா ஒரு டத்தை காவல் இருக்கவும் - றும் காவல் இருக்கவும்தான் போர் வீரன் ள வேண்டியதில்லை.''
பந்தது. நான் கூட சிறிது சிந்தித்துப் ரி. பரம்பரை பரம்பரையாய் முப்பாட்டன் று இவர்கள்தான் ஆண்டு கொண்டு ராக்கள். எந்த நாட்டின் மீதும் போர்
5புரம் சென்று அவ்வப்போது சிங்கள் உண்டு என்று வன்னி நாட்டில் இருந்து கள் சமயங்களில் சொல்ல கேட்பதுண்டு. எம் இராசன் மீது போர்தொடுப்பதில்லை
மணப்பாறைகளையும் ஏன் கட்டியாள
னவோ.
அசையும் பெண்ணாசையும் தலைக்கேறி பது நியதியல்லவா? பெண்ணாசையில் 1பது எம் மன்னருக்கு சிறு மண் அளவு

Page 14
கூடக் கிடையாது என்பது உண்மைதா
எங்கள் இராசன் மீது எவரும் ( இராசனும் எவர் மீதும் போர் தொடுக்க சேர்ந்து கொள்ளலாம். மனம் முடிவு எடுத்து விட்டது.
எடுத்த எடுப்பில் இராசா பணிக்கப்பட்டது. கையில் ஒரு ஈட்டியை - பதின்மூன்று காவலாளிகளில் நானும் நின்றேன்... நிற்கும் போதுதான் சிந்தனை வந்தது. பயிற்சி அளிக்கப்பட வேண்டும் அல்ல வழங்கப்படவில்லை. பக்கத்தில் நின்ற பு ஒரு காட்டெருமை பார்ப்பது போன்று ெ நின்றான். மாலை நேரம் சுற்றுப் பார்த்து அல்லவா அவரிடம் கேட்டால் தெரிந்து
நாம்தான் போர் செய்யப்போ சரித்திரத்தில் கிடையாதே. பின் எதற்கு அற்ற போர் வீரனும் எதற்காக? அது சும்மா ஒரு சம்பிரதாயத்துக்காக என்று.
சும்மா சும்மா எதற்காக மண்ன புரியவில்லை. உச்சிவெயில் மண்டை ை அசையாமல் நிற்பது எப்படி என்றாவது பு என்னும் போர்வையில் தலையில் கவி மண்டைக்குள் கிண் கிண் என்று வலி உத்தியோகமடா இது. வேண்டாம் 6 பார்க்கமுடியாது. இராச குற்றமாகிவிடும். விடுவார்களோ என்னவோ.
தோப்பின் உட்புறம் அரண்மனை கொண்டிருப்பார். மனைவிகளுடன் த கொண்டிருப்பாரோ?
இராசர் என்றால் அவருக்கு எத்த நாட்டின் முன்னேற்றம் பற்றி மந்திரி. தந்திரிகளுடன் தந்திரம் பேசக்கூடும். த அவருக்கு எங்கே தாயக்கட்டை உருப்

ன்..
போர் தொடுக்கப் போவதில்லை. எங்கள் ப் போவதில்லை. பயமற்று படையில்
வின் தோப்பிலதான் பணிசெய்யப் பக் கொடுத்து தோப்பின் பின்வாயிலில் ஒருவனாய் நிற்கவைக்கப்பட்டேன்.
போர் வீரன் என்றால் அவனுக்கு போர் வா. எனக்கு மட்டுமேன் போர்ப்பயிற்சி பிற காவலாளியிடம் கேட்டேன். என்னை வறுப்பாய்ப் பார்த்துவிட்டு விறைப்பாய் மாற்றுவதற்காக தளபதி வரவேண்டும் போகிறது.
வதில்லையே. போர் என்பதுதான் நம் த போர்ப்பயிற்சி. அதுதானே... பயிற்சி தானே... அதுதான் ஐயர் சொன்னாரே,
Dடயை போட்டு உடைக்கின்றேன் என்று
ய பிளந்தது. உச்சிவெயிலில் ஆடாமல் யிற்சி அளித்திருக்கலாம். தலைக்கவசம் ழ்த்துவிட்ட முண்டாசுக்குள் இருக்கும் 1 எடுத்தது. என்ன நாசமாய்ப் போன என்று விட்டு வேறு உத்தியோகமும் தலையைக் கிலையைக் கொய்து வீசி
மனக்குள் இராசர் இந்நேரம் எது செய்து தாயக்கட்டை உருட்டி விளையாடிக்
த்தனை பெரிய பொறுப்புகள் இருக்கும். களுடன் விவாதிக்கக் கூடும். இராச ளபதிகளுடன் வியூகம் வகுக்கக்கூடும். ட நேரம் இருக்கப் போகின்றது,
யுத்தத்தின் இரண்டாம் பாகம் 13

Page 15
தோப்பின் பின் வாயிலின் 6 மூட்டைகளை நிரப்பிக் கொண்டு விய வன்னி வணிகர்கள். ஒன்றிரண்டுபேர் வி நேரம் எல்லாம் தோப்பை நோக்கிக் ெ கொண்டும் நின்றார்கள்.
தலைக்கு முண்டாசும் முறுக்கிய பார்க்க அழகாய் இருந்தார்கள். பாவப் உத்தியோகம் செய்து சம்பாதித்து வேண்டியிருக்கிறது.
அவர்களை வேடிக்கை பார்ப்பு வன்னி வணிகர்களைத் தவிர வேறு வில்லை. மாடுகள் இரண்டையும் நிழ இருந்தார்கள். அவைகள் கூட கம் வைக்கோல்கூட வன்னியில் இருந்துதா6 சட்டி, பானைகள், குடம், விளக்கு போன்ற கொண்டு இருந்தது. வியாபாரம் முடிய உண்பார்கள் போலும், இரவில் ஏதேனு இவர்கள் வணிகர்கள் இல்லையோ என்கி ஏன் அப்படி தோன்றியது என சட்டென புரி கவனித்துக்கொண்டிருப்பதால் ஏற்படுக என்னவோ. காலையில் இருந்து மதியம் தடவைகள் அவர்களிடம் போய் சம்பாஷி
நாட்டு வணிகர்களுக்கும் என்ன சம்பர் அவர்களை இன்னும் உற்று நோக்கிே ஆயினும் அவர்கள் பார்வை தோப் வியாபாரத்தைக் காட்டிலும் தோப்ை விடுவதிலையே நாட்டமாக இருக்கின்றார் பார்த்துக் கொண்டார்கள்.
இல்லை.இல்லை. இல்லவேயில்லை வேறுயாரோ இவர்கள்.வணிக வேடமணி
இவர்களுக்கும் தளபதிக்கும் என்ன கொண்டது.
இங்கு ஏதோ சதி நடக்கப்பே
14 சக்கரவர்த்தி

ாதிர்த்திசையில் வண்டிநிறைய நெல் ாபாரம் செய்து கொண்டு நின்றார்கள் பாங்கிக் கொண்டு போனார்கள். மற்றய காண்டும் தங்களுக்குள் ஏதோ பேசிக்
ப மீசையுமாய் இருக்கும் வன்னியர்களை ) எத்தனை காததுாரம் கடந்து வந்து து மனைவி பிள்ளைகளைக் காக்க
பதில் என் நேரம் ஓடிக்கொண்டிருந்தது. எதையும் என்னால் கவனிக்க முடிய ல் வாகை மரத்தின் அடியில் மேயவிட்டு பீரமாகவும் அழகாகவும் இருந்தன. ன் கொண்டுவந்திருக்கிறார்கள் போலும். ன வண்டியின் அடிப்பாகத்தில் தொங்கிக்
வீதி ஓரத்திலேயே உணவு சமைத்து னும் சத்திரத்தில்தான் தூக்கமாக்கும். கின்ற எண்ணம் திடீரெனத் தோன்றிற்று. யவில்லை. நெடுநேரமாய் அவர்களையே கின்ற மன அதிர்வின் வெளிப்பாடோ வரைக்கும் எங்கள் தளபதியார் மூன்று த்து விட்டு வேக வேகமாய் தோப்புக்குள் ர் இராசதானியின் தளபதிக்கும் அன்னிய ந்தம்? இவர்கள் வணிகர்கள் இல்லை. னன். வாய் பேசிக்கொண்டே இருந்தது. பை நோக்கியதாகவே இருக்கின்றது. பயும் சுற்றுப்புறங்களையும் நோட்டம் கள் இடுப்பை வேறு அடிக்கடி தொட்டுப்
).இவர்கள் வணிகர்களே இல்லை. னிந்த வேறுயாரோ. யார் இவர்கள்.?
சம்பந்தம்? மனசுக்குள் திகில் பற்றிக்
ாகின்றது. வன்னியர்களுடன் சேர்ந்து

Page 16
நல்லூர் இராசதானியின் தளபதியுமாக எங்கள் இராசர்க்கு எதிராகவோ அல்லது கெடுதல் ஏதோ செய்துவிடப்போகின்றார்க எது செய்வேன் நான்... என் தேசத்தை
தெய்வமே எனக்கு வீரத்தைக் கொடு. கொடு.. வீரம் கொடு..! பலம் கொடு..!
உடல் எங்கும் வீர இரத்தம் கொதித்து அபாய மணியை ஓங்கி அடி அடியென
முதன் முதலாய் இப்போதுதான் இம்மா கனத்து ஒலித்தது மணிதிசையெங்கும்.
வணிக வேடதாரிகள் அபாயம் பாய்ந்து சென்று - ஈட்டி கொண்டு இருவ எங்கும் வீர இரத்தம் தொடர்ந்து கொத்து பிறகாவலாளிகளுக்கு எதுவும் புரியவில்
இராசர்: மந்திரிகள்: படைவீர கூடிவிட்டனர். தளபதியாருக்கு சம் படைவீரர்களின் முன்னால் நிற்பதற்கு ப கொண்டு நின்றிருந்தார் - என்நேரமும் ஓ
"இராசரே... இராசரே... இவர்கள் சதிக தளபதியாரும் சேர்ந்து நம் நாட்டுக்கு எ
ஆவேசமாய்ச் சொல்லி இராசரை வண கோப் ஆவேசத்தால் சிவந்து பழுத்தது.
"சிறை பிடியுங்கள் இவர்களை” கட்டளை கொல்லன் பட்டறை நெருப்பா
"உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்த த உறுமிக்கொண்டே இராசர் மந்திரிகளைப் பார்க்கும் போதே... 'அவுக்' என்றோர் 6 முட்டுக்கால் இட்டு மெதுவாய் தரையில் தலை ஒருபக்கம் சரிந்து தொங்கியது. கண்கள் மேற்திசையாய் செருகிக்கொன வலதுகை குறுவாளை இறுகப்பற்றி இரு குரல்வளையில் இருந்து குபுக்குபுக் என

சேர்ந்து, ஏதோ திட்டம் போடுகிறார்கள். 5 எங்கள் இராசதானிக்கு எதிராகவோ கள் என்பது தெளிந்து போனது எனக்கு.
எப்படிக் காப்பேன்...
-- எதிரிகளை அழிக்கும் பலத்தைக்
பாய்ந்தது.. கண்ணிமைப் பொழுதில் அடித்தேன்...
ணி ஒலிக்கின்றது போலும். துருவேறி
புரிந்து உசார் ஆகத்தொடங்குமுன் ரையும் பலமாய்த்தாக்கினேன்... உடல் தித்துப் பாய்ந்து கொண்டு இருந்தது.
லை.
கள் என எல்லோரும் அவ்விடத்தே பவம் தெளிந்துவிட்டது போலும். திலாய் - மந்திரிகளின் பின் பதுங்கிக்
டித்தப்புவதற்கு வசதியாய்...
ாரர்கள். இந்த வன்னியர்களும் நம் திராய் சதி செய்யப்போகின்றார்கள்.”
ங்கி நின்றேன். இராசரின் கண்கள்
ய் தெறித்தது.
பரோகத்தளபதி எங்கே..'' | பார்த்தார். பிநோதச் சத்தம் கேட்டது. தளபதியார்
சரிந்து கொண்டு இருந்தார்..
படு போனது. ந்தது. இரத்தம் பாய்ந்து கொண்டு இருந்தது...
யுத்தத்தின் இரண்டாம் பாகம்
1 15

Page 17
தளபதியார் தற்கொலை செய்து கொணி
சிறை பிடிக்கப்பட்டவர்களின் போது முழு உண்மைகளும் தெரியவந்த எங்கள் தளபதியாரும் சேர்ந்து கொண்டு எங்கள் இராசரைக் கொன்றுவிட்டு வி போவதாகவும்- அகன்ற இவ்வன்னியர் ட் முக்கிய முதன் மந்திரிப் பொறுப்பும் எங்க காட்டிக் கொடுப்பதற்காக வழங்க இ ஒற்றர்கள் பழுக்கக்காச்சிய இரும்பு மல செயலாக்க பூநகரிமுனை ஊடாகவும் u வணிகம் செய்பவர்கள் போல் எழுபத்தி பதுக்கப்பட்ட வேல், ஈட்டி, வீச்சரிவாள் அதிபயங்கர போர் ஆயுதங்களுடன் மு ஊடுருவியிருக்கின்றார்கள் என்கின்ற சே ஒலையில் படித்ததும் இராசர் கதிகலங் நாடு முழுவதும் பதட்டம்.
s'
தளபதி இல்லாப் படையால் இராசர் என்னை அர்த்தமாய்ப்பார்த்தார். ெ வன்னியரிடம் இருந்து காப்பாற்று. அர்த்தம். அந்நிய எதிரிகள் நாட்டுக்குள் தண்டோரா போட இராசர் முன் நான்
Dis856ft உசாரானார்கள். மக்களும் முனையையும் யானை இறங்கு துறைை தேட அத்தனை வன்னியர்களும் சிறை
யானை வந்து மாலை போட நான். நாட்டைக்காத்த புலி என்று நான்பேசப்பட்டேன்.
தோப்புக்கு உடனே வரும்ப ஓய்வு நாளில் இருக்கும் எனக்கு எதற்க தெளிவாகவில்லை. போர் வீரனுக்கு எதி நின்றேன். சபை கூடியிருந்தது. அர்த்த சபையைக் கூட்டியிருக்கின்றார்? பிடிபட் தண்டனை கொடுப்பதைப்பற்றி விவா என்னவோ?
“வாரும் தளபதியாரே.”
16 - சக்கரவர்த்தி

TLTŤ.
நெல்மூட்டைகளை பரிசீலனை செய்த ன: ஒலைகள் மூலம் வன்னியர்களுடன் பெரும் திட்டம் தீட்டியிருக்கின்றார்கள். பன்னியர் பிரதேசத்தை விஸ்தரிக்கப் பிரதேசத்தின் முழுப்படைப் பொறுப்பும் - 5ள் தளபதியாருக்கு - எங்கள் நாட்டைக் ருப்பதாகவும் சொன்னார்கள். பிடிபட்ட வாயுள் புகுத்தும் போது இத்திட்டத்தை பானை இறங்குதுறை ஊடாகவும் நெல் ஒன்பது ஒற்றர்களும் நெல் மூட்டைக்குள் ா, நான் முனை நீள் கூர்வாள் போன்ற ன்னுாறு போர் வீரர்களும் நாட்டுக்குள் தி தளபதியாரின் இடுப்பில் பதுக்கப்பட்ட கிப்போனார். எங்கும் ஒரே கொந்தளிப்பு
எது செய்வது என்று தெரியவில்லை. செய் ஏதாவது செய். எம் தாய்மண்ணை என்பதாய் இருந்தது அப்பார்வையின் ஊடுருவியிருக்கும் சேதி நாலாதிக்கும் கட்டளை இட்டேன். தண்டோரா போட
போர்வீரர்களுமாய் சேர்ந்து பூநகரி யயும் மறித்துக்கொண்டு தேசம் முழுக்கத்
பிடிக்கப்பட்டனர்.
ாமலேயே இராசர்க்கு நிகராய் ஆனேன் பம் மாவீரன் என்றும் நாடுமுழுக்க
டி இராசர் எனக்கு சேதி அனுப்பினார். Eாக இராசர் அழைப்பு விடுகின்றார் என நற்கு ஓய்வு? ஓடிச் சென்று இராசர் முன் மில்லாத சமயத்தில் எதற்காக இராசர் ட வன்னி தேசத்து எதிரிகளுக்கு மரண தித்துக் கொண்டு இருக்கின்றார்களோ

Page 18
இராசர் அரியாசனம் விட்டு எழுந்து நின்று தோன்றியது. அசூசையாகவும் இருந்த அழைத்தாரா? திக்கித்திணறி, உமிழ்நீர் விழுங்கி தடு
''வாரும் தளபதியாரே."
இராசர் மீண்டும் அழைத்தார்.
இராசரையும் சபையோரையும் வணங்கி
"என்னை நீங்கள் தளபதி என விழித்து சபையோரையும் இராசரையும் பார்த்துப் "இல்லை நீங்கள்தான் இனி எம் நல்லு
இராசர் உறுதியாய்த்தான் சொன்னார். ஆ வேறுதிசை திருப்பிக்கொண்டு இருந்தா
எனக்குக்கூட தளபதியாவதில் என்பது பெரும் பொறுப்பு. ஹிருதயம் ப
"நான் பயிற்சி அற்றவன். யுத்த தந்தி படையை முன் எடுத்துச் செல்வது? விடுகின்றேனே... இராசர் என்னை தயல் என்ன பயம் எனக்கு. பௌவியமாகச் (
இராசர் புன்னகைத்துக் கொண் இடிபோல சிரித்தார். தோப்பே ஆடி அ நேரமாய் தோப்பதிர சிரித்தார். நெடுவில் விட்டு எழுந்து வந்து என் தோள்களை
"இதுதான்... இந்த அடக்கம்தான் தேவை பயிற்சி பெற்று வன்னிநாட்டு எதிரிகளை சூழ்ச்சியை முறியடித்தீர்? எவ்விடத்தி குழிபறித்த எம் கூட இருந்த வஞ்சக நரி புத்தி..புத்திதான் தேவை. உடல் பலத்த முக்கியம். உம்மிடம் வீரமும் உண்டு எ அகன்ற நல்லூர் இராசதானியின் முதன்
இறுதியாய் இராசர் உறுதியாய் குரலுயர், எப்படி மீறுவது. நான் தளபதியானேன்.

எனை 'வரவேற்பது எனக்கு அந்நியமாகத் து. நான் தளபதியா? இராசர் என்னை
மாறி நின்றேன்.
பி.
நின்றேன்.
| கேலிபேசுகின்றீர்கள்." பேசி வெட்கப்பட்டேன். மர் இராசதானியின் தளபதி.”
னாலும் முதன் மந்திரி மட்டும் முகத்தை
சற்றேனும் ஒப்புதல் இல்லை. தளபதி டபடத்து துரிதமாய் துடித்தது.
ரங்கள் கற்றறியாதவன். நான் எப்படி வெறும் படை வீரனாகவே இருந்து 4 கூறவேண்டும்.'' சொல்லி கைகட்டி நின்றேன். -
எடே அரியாசனத்தில் அமர்ந்தார். பின், திர்ந்தது. சிரித்தார். சிரித்தார். நெடு னாடி கடந்து சிரிப்படங்க அரியாசனம் தட்டிக் கொடுத்தார்.
வ மாவீரனுக்கு. தளபதியாரே நீர் எந்த சிறைபிடித்து வன்னியனின் நயவஞ்சக ல் யுத்த தந்திரம் கற்று-கூட இருந்து யிடம் இருந்து எம் நாட்டைக் காத்தீர்? தைக் காட்டிலும் மூளை விவேகம்தான் பிவேகமும் உண்டு. நீர்தான் இனி இவ் மைத் தளபதி. இது இராச கட்டளை”
த்திச் சொன்னார். ராசரின் கட்டளையை
உ - 2 யுத்தத்தின் இரண்டாம் பாகம்
117

Page 19
தளபதியான நான் முதற்கட்டப முனைக்கும் படைகளை கொண்டு குவி எல்லையை பலப்படுத்தினேன். சூட்டோடு எங்கும் அனுப்பினேன்-ஊரில் உழாத ம உழவன் போர்வையில். இராசர் புளகாந் பாட புலவர்களுக்கு கூட பொன்முடி 6 ஒற்றர்களின் இரகசிய ஓலைகள் வர 8
* வன்னியன் அடிபட்ட புலியாக இரு தர்மத்தை மீறிய பேடியுத்தம் நடத்தலா
* இப்போதும் அவர்கள் நாகரீகம் அை மிராண்டிகளாகவும் - உடல்கறுத்தும் காட் இருக்கின்றார்கள். சில சமயம் ஒட்டக முன்பு இங்கு இருந்திருக்கலாம்.
* இப்போதும் நாகபாம்பு, வைரம் தெய்வங்களைத்தான் தொழுகின்றனர். 'ச தாழ்ந்தவன்' என்கின்ற வேறுபாடு தெரி
* நம் இராசரால் விரட்டியடிக்கப்பட்ட இ கரையோரமாய் செம்படவ தொழில் புரி
* சில ஆண்டுகளுக்கு முன்பு போர்த் செய்ய வந்த வென்நிறதோல்காரர்கள் நடமாடக்கூடாது என தடை விதித்தா இழிகுல மக்களை கத்தோலிக்கர்களாக
* நம் மதத்தை போல் அல்லாது . ஆலயத்துக்குள் அனுமதிக்கப்படுகின் யேசுசாமியை இழிகுல மக்களும் அனுமதிக்கப்படுகின்றனர்.
இராசரின் கண்கள் கோபத்து விரட்டியடித்த இழிகுல நாய்களும் - பறங்கியனும் கூட்டுச் சேர்ந்திருக்கின்ற கொள்கின்றானா?
இராசர் கர்ஜித்தாராம் வெறி கொண்ட
சக்கரவர்த்தி

ாய் யானை இறங்கு துறைக்கும் பூநகரி த்து- எங்கள் தேசத்தின் நுழைவாயில் சூடாய் ஒற்றர்களை வன்னியர் பிரதேசம் டுகளை வன்னிக்கு கொண்டு செல்லும் கிதம் கொண்டு எனை வாழ்த்தி பாடல் பழங்கினார். நாட்கள் செல்ல.. செல்ல ரம்பித்தன...
க்கின்றான். எந்நேரமும் எம்மீது யுத்த
உயாமலேயே இருக்கின்றார்கள். காட்டு டில் வாழ்வதால் யானைபலம் கொண்டும் ச் சித்தர் நல்லூர் இராசதானி வரும்
பன், ஐயனார் போன்ற இழிசாதி ாதிவேறுபாடு தெரியாதும் உயர்ந்தவன் பாதும் அறிவிலிகளாக இருக்கிறார்கள்.
ழிகுல சனக்கூட்டம் வன்னியின் மேற்கு ந்து பிழைப்பு நடத்துகின்றார்கள்.
எதுக்கல்லில் இருந்து மத வியாபாரம் - நம் இராசர் கூட எம் தேசத்துக்குள் ரே... அதே போர்த்துக்கேயர்கள் அவ் க மதம் மாற்றிவிட்டார்கள். "
அவர்கள் மதம்: எக்குலமக்களாயினும் றனர். கத்தோலிக்கர்களின் தெய்வமான - தொட்டு தடவி வணங்குவதற்கு
பல் சிவந்து பழுத்ததாம். நான் ஒதுக்கி தடை செய்த வெண்நிற மாடுண்ணும் மார்களா? இழிகுலத்தான் உயர் நிலை
காட்டு இராசாபோல்...
-- E..

Page 20
பூநகரிமுனையில் வன்னியர். படையணியின் உசார் நிலையை பரிசீல் எனக்கு அவசர ஓலை வந்தது. காலம் வரும்படி. இராசர் தன்கைப்பட எழுத எண்ணிக்கொண்டே அன்றைய தினமே
இராசர் கோபமாய் வாயிலை வி கால்போட்டுக் கொண்டு அரியாசனத்தில் . விஜயம் செய்த பங்கரச்சாரிய பெரிய அருகருகே சரியாசனத்தில் அமர்ந்திருந்
இடது புறமாய் மந்திரிகளும் பிரத பூணூல் பூண்ட பிராமணர்களும் பிரம் விநோதமாய்த் தோன்றியது. எங்கள் இ இடம் இல்லையே. பாரதகண்டத்தில் த அனுமதிக்கப்படுவதும் இராசரால் மதி. இராசருக்கு எதையும் புதிதாய் புகட்டின வணங்கி காத்து நின்றேன். இராசர் கே இருந்தார். மந்திரிகளும்கூட இறுக்கமா புரியவில்லை. என் மீதுதான் ஏதேனும் தன் நான் அசையாது நின்றிருந்தேன்.
"வன்னியின் மேற்குக்கரையோரமாய் எம்
இராசர் உறுமினார்?
“இனச்சுத்தம் கருதி தங்களால் விரட்டிய அங்கு மீன் பிடித்து வாழ்வதாக ஒற்றர்க
"அது மட்டும்தான் ஓலையில் உள்ளதா
"அவர்கள்: பறங்கியர்கள் சொல்கேட் விட்டதாகவும் சமூகநிலை உயர் வடை முழுதாய் முடிக்காது பொருளுரை மட்டு
"அங்கு பாரும் தளபதியாரே...''
இராசர் அரியாசனத்தில் இருந்து எழுந் பிராமணர்கள் திருதிருவென விழித்துக் ெ இராசர் மறுபடியும் அரியாசனத்தில் அம
"போர்த்துக்கேயரின் கத்தோலிக்கர்களின் 6

களின் ஊடுருவலை கண்டறியவும் பிக்கவும் எல்லையில் முகாமிட்டிருந்த தாமதியாது துரிதகதியில் தோப்புக்கு யிெருந்தார். என்ன அவசரமோ என
தலை நகரம்போனேன்.
றைத்துப்பார்த்துக்கொண்டு - கால் மேல் அமர்ந்திருந்தார். காஞ்சிபுரத்தில் இருந்து வரும் ஒட்டகச் சித்தரும் இராசருக்கு தனர்.
எனிகளும் அமர்ந்திருக்க வலது பக்கமாய் மை பிடித்ததுபோல் அமர்ந்திருப்பது இராசரின் சபையில் பிராமணர்களுக்கு னே பிராமணர்களும் இராசசபைக்குள் க்கப்படுவதும். காஞ்சிபுரப் பெரியவர் எனோ! இராசருக்கு மரியாதை செய்து ாபமாய் எனைப் பார்த்துக் கொண்டே ய் மௌனித்திருந்தனர். எனக்கேதும் பறோ? நெடுவினாடிகள் கரைந்தோடியது.
ன்ன நடக்கிறது...?'
டிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சனக்கூட்டம்
ள் சொன்னார்கள்.''
டு கத்தோலிக்க மதத்தைத் தழுவி ந்து விட்டதாகவும்...'' ம் உரைத்து முடித்தேன்.
எது நின்று சுட்டிக்காட்டிய திசையில் காண்டு இருந்தார்கள். நான் பார்த்ததும்
ந்து கொண்டார்.
காட்டம் தாங்கமுடியாமல் மனம் நொந்து
யுத்தத்தின் இரண்டாம் பாகம் 119

Page 21
போய் இப்பிராமணர்கள் எம்மிடம் வந் என்ன செய்யப்போகின்றோம். எம் மத இராசர் என்னிடம் கேட்டார்.
"தனக்கு அமைதியும் நின்மதியும் தா மனித உரிமைகளில் ஒன்று' நான் சொல்ல இராசர் எனை வெறித்து
ஒட்டகச்சித்தர் சடைபற்றிய கொண்டும் மறுகையால் சாடியில் இரு எடுத்து சிறு உருண்டையாய் உறுட்டி வாங்கி கடைவாயுள் குதப்பிக் கொண் பார்த்தார். காஞ்சிபுர பெரியவர் இராசரி தலையயாட்டினார். குசுகுசுப்பை ஆபே மொழி.
"இழிகுலத்தான் உயர்குலத்துக்கான உயர்வடைவதும் மகாபாவம். கீதை பெரியவர் கவலைப்படுகின்றார்.'' எனைப் பார்த்தும், மந்திரிகளைப்பா பிராமணர்களும் தலையசைத்து ஆமா மெளனமும் இராசரின் பேச்சுத்தோரனை சபை ஏற்கனவே அசம்பாவிதத்துக்கான புரியலானது.
''தாழ்ந்திருப்பவன் உயர்வது பாவம்
கோபுரம் கட்டி வாழ்பவன் குப்பைமேட் புரிவதும் காலத்தின் தீர்ப்பு. இதில் நாம்
"தளபதிவாள்! மனுலின் நீதி தெரியா காஞ்சிபுர பெரியவர் முதற்தடவையாய்
"தளபதியாரே..”
இறுக்கமாய்.. மென்குரலாய் எனை விழி நோக்கினேன்.
“இராசசபை முடிவெடுத்து விட்டது, கத் கொல்லப்பட வேண்டும் என இராச தளபதியாரே."
20 - சக்கரவர்த்தி

இருக்கின்றார்கள். நாம் இவர்களுக்காக ததை எப்படிக் காப்போம்?'
நம் மதத்தை ஒருவன் தேர்ந்தெடுப்பது
ப்பார்த்தார்.
தலைமுடியை ஒருகையால் உறுட்டிக் ந்து கருநிற வஸ்த்துவை சிறிது கிள்ளி இராசரின் கையில் கொடுக்க - அதை டு இன்னும் கோபமாய் இராசர் எனைப் ன் காதில் ஏதோ குசுகுசுத்தார். இராசர் ாதிப்பதாய் இருந்தது இராசரின் உடல்
அந்தஸ்துப் பெறுவதும்- சமூகநிலை ஒருபோதும் இதை அனுமதிக்காது என
ர்த்தும் இராசர் சொல்ல அத்தனை ரம் என்றனர். மந்திரிகளின் அர்த்தமான எயும் விபரீதமாய் எதையோ உறுத்தியது. விடயத்தை தீர்மானித்துவிட்டது என்பது
அல்ல வணக்கத்துக்குரிய இராசரே. -டு ஆண்டியாவதும் - ஆண்டி அரசாட்சி ம் ஆத்திரப்படுவதில் அர்த்தம் இல்லை.”
மல் பேசுறேள்”
வாய்திறந்தார்.
த்தார் இராசர். நேரிய பார்வையாய் அவரை
5தோலிக்க மதத்தைத் தழுவிய சகலரும் சபை ஏற்கனவே முடிவெடுத்துவிட்டது

Page 22
இராசர் சொல்லச் சொல்ல என அறுந்து போகின்றது போன்று துடிதுடித் போக்கணம் கெட்ட நீதியை எழுதிய பெற்றுப் போட்டாள் இந்த மனு நீதியை சாமியைத் தொழவேண்டும் என்பதுவும் எப்படி பாவம் ஆகிடமுடியும். நேற்று மு குழந்தைகள்: பெண்கள்: முதியவர்க யேசுசாமியை வணங்குபவர்கள் இரு கத்தோலிக்கர்களையும் அரிந்து அரிந் கொடுமை. குழந்தைகள் மட்டுமே ஆயிரம் குழந்தைகளின் கழுத்தை அரியப்ே இந்துசமுத்திரம் சிவந்து போகப்போகிற “இராசர் மன்னிக்க வேண்டும். நாம் கொடுக்காததும்- இந்துக்கோயில்களும் நம்குற்றம். அது மட்டுமல்லாது அவர் அவர்கள்மேல் கோபமோ தாபமோ கெ என்பணிவான கருத்து.”
“தளபதியாரே.” நான் சொன்னதைக் கேட்டு இராசர் : உருண்டையை உருட்டி இராசரிடம் கெ
“நான் அப்போதே சொன்னேன்: முட் இராசர் என் பேச்சைக் கேட்கவில்லை. முதன்மை மந்திரி முணுமுணுத்தார்.
“நீர் யாரிடம் உரைக்கின்றீர் என்று தெ இன்னோர் மந்திரியார் உணர்ச்சிவசப்பட் இனியும் நாம் வாதம் செய்தால் தப் அதுமட்டுமன்றி இராச குற்றபட்டம் வே வந்துவிடும்.
“மேன்மை பொருந்திய இராசரே. நான் அது தவறு என இராசரும் சபையோருட வேண்டும். இராசரே. உங்கள் மைத் பிரான்ஸிஸ் சேவியர் என்கின்ற கத்தோ மதம் மாறக் காரணம் என்று நேற்று வந்
நான் சொல்ல மன்னர் சிறிது தடுமா பிராமணர்களும் ஆமோதித்து தலையை

ானில் திகில் பற்றி எரிந்தது. ஹிருதயம் துக் கொண்டது. என்ன நியாயம் இது. மனு என்பவன் யார்? எந்தப் பாதகி எழுதிய கொடும் பாதகனை. தான் எந்த - அவன் உயர் நிலையை அடைவதும் ன் தினம் வந்த ஒற்றன் சொன்னானே. கள் என்று மூவாயிரத்துக்கும் மேல் க்கின்றார்களாமே. அத்தனை ஆயிரம் து குவிக்க வேண்டும் என்பது என்ன ) எண்ணிக்கை தாண்டுமே. கிறிஸ்தவக் பாகும் சங்கிலியனின் வாள்களால் தே. அவர்களுக்கு எதுவித சமூக உயர்வு க்குள் அவர்களை அனுமதிக்காததும் களை விரட்டியடித்ததும் நம்குற்றமே. Tள்ள நமக்கு உரிமையில்லை என்பது
உறுமினார். ஒட்டகச்சித்தர் இன்னோர் ாடுத்தார்.
-ாள்கள்தான் போரிடத்தேவை என்று.
לו
ரிந்துதான் உரைக்கின்றீரா?”
LTs. ானகாரியத்தில் வந்து முடிந்துவிடும். று பரம்பரை பரம்பரையாய் வழிநெடுக
ஒருபக்க நியாயத்தைச் சொன்னேன். b பெரியோரும் உணர்ந்தால் மன்னிக்க துணரான கனகராய முதலியார்தான் லிக்க குருவுடன் சேர்ந்து இத்தனைபேர் த ஒற்றன் வாய்வழியாய்ச் சொன்னான்.”
றினார். இடது புறமாய் அமர்ந்திருந்த சத்து விட்டு இராசரின் தடுமாற்றத்தைப்
யுத்தத்தின் இரண்டாம் பாகம் 21

Page 23
பார்த்து இலேசாய்ப் பயந்தது போன்று
தன்வீட்டுக்குள்ளேயே பேடி தெரிந்துவிட்டது என்பதைத் தெரிந்த இ
“அந்த பேடியை நான் இங்குவைத்தே செ உறவாடித்திரிகின்றான் என்பதைக் ே வேண்டும். அவனுக்கு மன்னிப்பு வழங்கிய இராசர் உண்மையில் கவலைப்பட்டார்.
“மேன்மை பொருந்திய இராசரே. ெ கட்டளைக்கு காத்திருக்கின்றேன்.” மன்னர் புன்னகைத்தார். அவர் முகம் ெ
மதம் மாறிய - உயர்நிலைய சிறுபிள்ளை முதியவன் உட்பட சகலன் கொன்றழிக்க வேண்டும். இது இராசகட் இராசர் கட்டளை இட மந்திரிமார் எழுந்து இராசகட்டளை பிரஸ்தாபிக்கும்போது இ
“இராசருக்கு முதலில் ஓர் சேதி தெ துப்பாக்கி என்கின்ற - நெருப்பும் ஈயமு வைத்திருக்கின்றார்கள். போர்த்துக்கே அவர்களை நெருங்க முடியாது. அது பட்சத்தில் நாம் அங்கு சென்று போரிட நான் என் கவலையைச் சொல்ல இரா
“ஒற்றணின் கடைசி சேதி உமக்கு கிட் கேட்டுவிட்டு விநோதமாய் இராசர் எனை பின் தொடர்ந்தார்.
“யேசுவின் பிறந்தநாள் மார்கழியில் வரு கொண்டாட கோவா நகருக்கும் போர்த்து இராசர் சொல்லி முடிக்கும் முன்பாகே விட்டது.
அர்த்த நடு நிசி.யேசுசாமி ே எல்லோரும் கண்மூடி பிரார்த்தனையி வேறு வெளிச்சம் இருக்காது. மார்க கொண்டும் ஈட்டி கொண்டும். இராச வணக்கஸ்தலமும் உகந்தது.
22 ப சக்கரவர்த்தி

இருந்தனர்.
இருக்கின்றான் என்பது சகலருக்கும் ராசர் சங்கடமாகித்தான் போனார்.
ாண்டிருக்க வேண்டும் பறங்கியர்களுடன் கள்வியுற்றதும் கழுவில் ஏற்றியிருக்க து தவறென இப்போதுதான் புரிகிறது’
சால்லுங்கள் எது செய்ய வேண்டும்
பியர்த்திருந்தது.
டைந்த இழிகுலத்தோர் எல்லோரையும் ரயும் வாள்கொண்டும் ஈட்டி கொண்டும் டளை”
நின்று உயரக்கை உயர்த்தி நின்றனர். இப்படி செய்வது வழமையாக்கும்.
ரிவிக்கவேண்டும். போர்த்துக்கேயர்கள் ம் துப்புகின்ற ஒருவித போர்க்கருவியை யரின் காவல் இருக்கும் வரை நாம் போன்ற ஆயுதம் எமக்கு இல்லாத முடியாது” சர் அர்த்தமாய்ப் புன்னகைத்தார்.
كمي L6i6b60D6ou JT தளபதியாரே? ப்பார்த்தார். சொற்பவினாடி மெளனத்தின்
வதால் எல்லா பறங்கியரும் அந்தநாளை க்கல் தேசத்துக்கும் சென்று விடுவார்கள்’ வ மனம் வியூகம் வகுக்கத் தொடங்கி
ாயில். யேசுசாமியின் பிறப்பை வேண்டி b இருப்பார்கள். மெழுகுவர்த்தி தவிர N மாத கும்மிருட்டு. அந்நேரம் வாள் கட்டளையை நிறைவேற்ற நடு நிசியும்

Page 24
உசிரோட எண்ட புள்ளய தந்திரு உசிரும் மசிரும் ஓங்களுக்கு ஒண் எண்ட புள்ளதாண்டா பாதகனுகே எனக்கு உசிரு.
**சர்
7 :
மெலிதான காற்று மரங்களை அ 9ம் நீண்டநேரத்திற்கு முன்பாகவே செய்திருந்தது. சொறி நாய் ஒன்று சும்மா சாம்பலுக்குள் ரோமங்கள் உதிர்ந்து கடத்தி கம்பிகளை காவு கொடுத்துவிட்டு கம்பங்கள். ஆக்காண்டி பறவை ஒ அங்குமிங்குமாய் அவசர அவசரமாய் பற ஊர் உறங்கி நெடுநேரமாகி இருந்தது.
சரசுவதி வேகமாய் ஓடி ஓடி ந பழக்கப்பட்டிருந்தது. இதயம் சமநிலை சரீரம் அதிகமாய்ப் படபடத்தது. கைக்கு தூக்கமும் விழிப்புமாகச் சிணுங்கியது. சுமை கொடுத்தது.
வேலியை இணைத்து மூடியி பலமாய் எழுந்தது. தாழ்வாரத்தில் மடு

பக சாமிமாரே டுதான்
ள
வான்கரை
'.. ---
சைக்க இரைச்சல் எங்கும் எழுந்தது. உஷ்ணம் சூழலை விட்டு வெளிநடப்புச் சும்மா ஊளையிட்டு ளிந்த குப்பைமேட்டுச் போன உடலைப் புரட்டி சிலிப்பிற்று. நீட்டுநீட்டு கறுப்புப்பூதங்களாக மின்சாரக் ன்று திசையைத் தொலைத்துவிட்டு ந்து கத்திற்று. முகம் தெரியாத இருட்டு.
டந்தாள். அவளது கண்களுக்கு இருட்டு தவறி வேகமாய்த் துடித்தது. அதைவிட ழந்தை இடுப்பினில் நிகழ்வுகள் புரியாமல் எட்டு மாதப் பிள்ளை வயிறு அதிகமாய்
ருந்த தகரக் கதவைத் திறக்க சத்தம் இத்தோண்டி படுத்திருந்த வீமன் சத்தம்
யுத்தத்தின் இரண்டாம் பாகம் - 23

Page 25
கேட்டு பலமாய் உறுமியது.
“வீமா...”
சரசுவதி சத்தம் எழுப்பினாள்.
தனக்குப் பழக்கமான குரல் அடக்கிக் கொண்டு முனகலுடன் ஓடி தடவை எம்பி அவள் மேல் தாவி விசு சரசுவதி அதை ஒதுக்கிவிட்டு கதவைத
<<
"அம்ம...!'' நிசப்தம்.
“அம்ம... அம்மேய்...” வீட்டுக்குள் சரசரப்புக் கேட்டது.
{{
“ஆரது..? தூக்கக் கலக்கமாய் குரல் கேட்டது.
“அது நான்தாங்கா சரசி! கதவ தெற்க கதவு திறபட்டது. எண்ணைப் பசை இல் இம்சையாய் எழுந்தது. கலைந்த தடை இடுப்பில் செருகிக்கொண்டே குப்பி வ வந்தாள்.
(6
“என்ன மெனை இந்த நடுஊத்தில? அ தூக்கித்து வந்திரிக்காய். எங்க புள்கை கிழவி முகத்தில் பரபரப்பு. படபடப்புட
“புள்ளைய ஒள்ளம் புடிகா”
“வா மெனேய்"
கிழவி சரசுவதியின் இடுப்பில் மாற்றிக் கொண்டாள்.சரசுவதி இடுப்ன பாரமாய் அமர்ந்தாள். கேவலுடன் அழு கிழவி திகைத்தாள்.
"என்ன மெனேய். ஏன் கொளறுறா வகுதி சொல்லி அனுப்பியிரிக்கலாமே. நான் வ
24 சக்கரவர்த்தி

என்பதை புரிந்து கொண்டு உறுமலை வந்து அவள் காலை உரசியது. ஒரு வாசத்தைக் காண்பித்தது. த் தட்டினாள்.
ாெ...."
எ 9,
ல்லாத பிணைச்சலில் உராய்வுச் சத்தம் லயுடன் குலைந்த சேலையை இழுத்து விளக்குடன் கிழவி கதவுக்கு வெளியே
துவும் புள்ள வகுத்துக்காரி. புள்ளையயும்
ளயிர அப்பன்?" ன் கேட்டாள்.
லிருந்த குழந்தையை தனது இடுப்புக்கு பைப் பிடித்துக் கொண்டு திண்ணையில்
-தாள்.
ததுக்க நோகுதா? புள்ளையிர அப்பனிட்ட ந்திரிப்பன். உள்ளுக்க வா. சுடுதண்ணிய

Page 26
வெச்சித்து நேசி மனிசிய போய்க் கூட் வாறாளோ தெரியாது. நேரத்தோடையே கிழவி சொல்லிக் கொண்டே இடுப்பிலிரு சரசுவதியை கைத்தாங்கலாய் தூக்க மு
“எனக்கு ஒண்டுமில்லகா”
"அவரப் பொடியனுகள் புடிச்சித்து போராலு அழுதாள். கிழவி விறைத்துப் போனாள் போய் நின்றாள்.
"புள்ளையாக் கெழவா” பலமாய் கிழவி
“காப்பாத்துப்பா..!" தலைமேல் கை தூக்கி வேதனையாய் ( கிழவியின் அழுகை சரசுவதியை ே இன்னுமின்னும் கவலையுடன் அழுத வாழ்ந்தவள். சரசுவதியின் நிலமை புரி மெல்ல அடக்கினாள்.
"ஏனாம் மெனேய் புடிச்சித்துப் போறானு
“எனக்கென்ன தெரியும். என்னவோ வெ சொன்னாள்.
"நாசமாய்ப் போவானுகள்” கிழவி மண்ணை அள்ளி கிழக்கு மூ6ை
"இவனுகள் நம்மளை வாழவும் உடமாட் கோபமும் சோகமும் கிழவியை ஏகமாய்
வீமன் முதுகில் கடித்த தேள் இடம் மாறிப் பலமாய்க் கடிக்க தரைய வேலிக்குள் எதுவோ சரசரக்க ஓடிப் பிறாண்டியது. வேகமாய் ஓடிவந்து திரு
வீட்டின் பின் பக்கம் இருந்த எழுப்பியது. சில விநாடி மெளனத்தி கிளையிலிருந்து பலமாய் அலறியது.

.டித்து வாறன். அந்த நாசமறுவாளும்
காச கேப்பாள்.”
ந்த குழந்தையை படுக்க வைத்துவிட்டு )னைந்தாள்.
ால் மூக்கில் ஊறிய நீரைத் துடைத்தாள்
ணுகள்” சொல்லிவிட்டு சரசுவதி பலமாய் எதையுமே பேசமுடியாமல் திகைத்துப்
பி சத்தமிட்டாள்.
வேண்டினாள். பின் அவளும் அழுதாள். மலும் பலயினப்படுத்தியது. சரசுவதி ாள். கிழவி அனுபவசாலி. அதிகம் ந்து தன்னை சுதாகரித்துக் கொண்டு
கள்?
ளங்கோணுமாம்!” விக்கிவிக்கி சரசுவதி
லப்பக்கமாய் வீசினாள்.
டானுகள். சாகயும் உடமாட்டானுகள்.” ப்த் தாக்கியது.
ஒன்றை முன்பல்லால் கடித்தது.தேள்
பில் ஒரு தடவை புரண்டு எழும்பியது. போய் வேலி மட்டையை காலால்
ம்பவும் குந்திக் கொண்டது.
கூமாமரத்தில் பறவை ஒன்று சலனம் தின் பின் ஆந்தை ஒன்று கூமாமரக் கூமாமர ஆந்தையின் அலறல் கேட்டு
யுத்தத்தின் இரண்டாம் பாகம் 125

Page 27
எங்கோ இருந்து இன்னொரு ஆந்தை முகம் பயத்தால் வெளிறியது. ஊருக்கு மரணம் நிகழும் என்னும் கிராமத்து ஐத் சரசுவதிக்கு கண் இருட்டுவது போல் இரு பிடித்துக்கொண்டாள். "என்ன மெனேய் ஊமத்தம் கோழி கத் சரசுவதியைவிட கிழவி அதிகம் பயந்த
“எனக்குப் பயமா இரிக்கி கா.” சரசுவதி
"அந்த நரகல் சும்மா கத்துது. அதுகள் போல. அதுதான் ஊருக்குள்ள வந்து க
' கிழவி சரசுவதியை சமாத சரசுவதியைவிட அவள்தான் அதிகம் ஆ காக்கைகள் வாசலில் வட்டமிட்டாலே ஆந்தை அலறினாலோ அதிகம் ஆடிப்ே தனக்குள் மட்டும் அல்லோலப் பட்டாள்
இல்ல, நீ சும்மா சொல்றா. ஊ எலுவா? எனக்குப் பயமா இரிக்கி. சொ போட்டு அழுதாள்.
"நான் என்ன மெனேய் செய்ய?”
"கண்ணா காட்டுப்பக்கம்தான் கூட்டித்து சரசுவதி அழைத்தாள். ஏக்கமாய், கவலை
“கொப்பனும் இல்ல. போடியாற்ர வெ இந்தப் புள்ளய ஆரிட்ட உட்டுத்துப் டே கிழவியில் கவலை ஏறிக்கொண்டது. சரசுவதி எழுந்து கிழவியை கையால்
"வெல நான் தூக்கிறன். நீ வா!” சொ! தூங்கும் குழந்தையை சரசுவதி நெருா
“இல்ல மெனேய் நீ புள்ளவகுத்துக்கா சரசுவதியைக் கிழவி தடுத்தாள்.
“ஒள்ளுப்பம் பொறு. அரிக்கன் லாம்ப
26 1 சக்கரவர்த்தி

விநோதமாய் அலறியது. சரசுவதியின் ( ஆந்தை அலறினால் அவசரமாய் ஒரு ம் உடனடியாய் மூளைக்குப் போயிற்று. ந்தது. வியர்த்தது. அம்மாவின் கையைப்
துது.”
ள்.
யின் குரல் நடுங்கியது.
க்கு இண்டைக்கு எரை கெடைக்கல்ல த்துதுகள்.”
Tனப்படுத்த முயன்றாள். ஆனாலும் ந்தையின் அலறலால் கலவரம் ஆனாள். கஸ்டகாலம் என்று கலவரமடைபவள். பாபவள். இப்போது அடக்கிக் கொண்டு
மத்தக்கோழி ஊமுனா ஆக்கள் சாகிற பல்லிவிட்டு சரசுவதி பலமாய்ச் சத்தம்
ப் போறானுகள். வாகா போய்ப்பார்ப்பம்.” லயாய் கிழவியின் முகத்தைப் பார்த்தாள்.
Tளாமைக்கு காவலுக்குப் பெயித்தாரு.
மாறது?
தள்ளி விலத்தினாள்.
ல்லிக் கொண்டே எதுவுமே உணராமல் பகினாள்.
B. நான் தூக்கித்து வாறன்”
பத்த வைச்சித்து வாறன். அதுக்குள்ள

Page 28
லாம் பெண்ணையும் இரிக்கோ தெரியாது சொல்லிக்கொண்டே கிழவி இருட்டுக்கு கால் அடிபட்டது. கால் இடறி வலித்தது எழுப்பிவிட்டு மெல்ல அசைந்தது. கிழவி லாந்தரைத் தேடினாள். பழைய சாமான் கண்டுகொண்டாள். லாந்தரை எடுத் பற்றிக்கொண்டது. அடியில் கொஞ்சமா.
“இன்னா லாம்ப புடி. நான் புள்ளைய சரசுவதியிடம் அரிக்கன் லாந்தரைக் கொ குழந்தையை தூக்கி இடுப்பில் வை சிணுங்கியது.
“கத்தாத மெனேய்” கிழவி சொல்ல அதை குழந்தை கிரகிக் சிணுங்கியது.
லாந்தருடன் சரசுவதி முன்னே இளைத்து இளைத்து நடந்தாள். இவர்க என்னவோ தெரியவில்லை. வீமன் ஓடிக்கொண்டிருந்தது.
உறங்கிக் கொண்டிருக்கும் ஊர் இடத்தை காட்டிக்கொள்ளாமல் சில்ல திசையிலிருந்தும் ஓசையை எழுப்பின இருந்தது. ”புள்ளையாரே அவர் காப்பாத் ஒன்னட்ட வந்து பொங்கிறன். காவடி எ எப்படியும் காப்பாத்து." கடவுளிடம் மன நேற்றிக் கடன் வைக்கப்பட்டது.
கண்ணாக் காடு இருட்டுக்க வெளிச்சமோ நிலவின் ஒளியோ அங்கு வெளிச்சம் தூரத்திலேயே தடைப்பட்டு
ஆற்றிலும் சேற்றிலும் பட்டுவரு அதிகமாய் நடுங்கவைத்தது. புல்லும் வே அழுகி நாறியது. காற்றோடு கலந்து சு இம்சையுடன் கத்தியது. அதுக்கு ஏதோ விழுங்க எத்தனிக்கின்றது போலும். த பாகம் எல்லாம் பாம்பின் வாயினுள் போ

[ போய்த்தடவினாள். பாரமான சட்டியில் 1. சருவச்சட்டி தன் பங்குக்கு ஓசையை வலியை அடக்கிக் கொண்டு அரிக்கன் களுடன் பறண் மேல் கிடக்க கையால் து தூசிதட்டி பற்றவைத்தாள். திரி க எண்ணை இருந்தது.
தூக்கித்து வாறன்” டுத்துவிட்டு கிழவி தூங்கிக்கொண்டிருந்த த்தாள். தூக்கம் கலைய குழந்தை
க்க முடியவில்லை போலும். தொடர்ந்து
செல்ல கிழவி இடுப்பில் பிள்ளையுடன் ள் போகும் இடம் புரிந்துகொண்டதாலோ இவர்களுக்கெல்லாம் முன்னால்
-பயங்கரத்தை தோற்றுவித்தது. இருக்கும் பறுகள் கத்தியது. இருட்டின் எல்லாத் - சரசுவதியின் மனம் பதறிக்கொண்டே து. ஒனக்கு வாழக்கொல நேந்து உடுறன். நிக்கிறன். அவர் அவனுகளிட்ட இருந்து து வேண்டியது. நிஜமாகவே நெஞ்சுருக
காடாய் இருந்தது. நட்சத்திரங்களின் பயன் தருவதாய் தெரியவில்லை. ஊர் ப் போயிருந்தது.
நம் காற்று உடலைப் பயத்துடன் சேர்த்து
ளாண்மையின் அடிக்கட்டையும் சேற்றில் வாசிக்க சுவாசிக்க குமட்டியது. தவளை ஆபத்து போலும். பாம்பு ஒன்று அதனை தவளையின் தலையைத் தவிர மற்றப் ரயிருக்க வேண்டும். தவளை திரும்பவும்
யுத்தத்தின் இரண்டாம் பாகம் 127

Page 29
கத்தியது. சத்தம் தேய்ந்து வந்தது. ச தவளையை விழுங்கிவிட்டதா? கண்ணா
தோன்றிற்று.
முன்னால் போய்க்கொண்டிருந்த நின்றது. சரசுவதி அதைத் தாண்டி முன் வரை புதைந்தது. புதைந்த காலை நிதா நிலை தடுமாறி குப்புற சாய்ந்தாள். வய
"அம்மா.ஆ.” வேதனையில் பலமாய் அலறினாள் கண் ஒரு தடவை எதிர் ஒலிக்க வைத்தது. “கடவுளே” சத்தமிட்டுக் கூவினாள்.
“கவனமாய் எழும்பு மெனேய் கைய கொ கொண்டே கிழவி ஒற்றைக்கையால் பிடித்துக்கொண்டு மறு கையால் சரசு6
சரசுவதிக்கு வயிற்றுக்குள் வி அடிபட வயிற்றுக்குள் இருந்த பிள்ளை அசைத்தது. அது அசைவைக் கொடுத்தது வலியால் முனகினாள். இடுப்பைப் பிடி நிதானமாய் நிற்க முடியாமல் வரப்பு ே உடலெங்கும் சேறாய் இருந்தாள்.
“ஆரது அங்க?" இருட்டுக்குள் தூரத்திலிருந்து முரட்டுச் தொடர்ந்து துவக்குகள் உசாராகும் சத்தப் இருட்டைப்பார்த்து.
“6LDT GbLDT @rs” நாயை அதட்டினாள்.
"அது நாங்க”
"நாங்க எண்டால் ஆரு?”
“அரிசி குத்தி விக்கிற பொன்னிக்கெழ8
“என்னயிறா இஞ்ச?”
28 சக்கரவர்த்தி

த்தம் முற்றாக மங்கிப் போனது. பாம்பு க்காடு உண்மையிலே படு பயங்கரமாய்
5 வீமன் வேகத்தைக் குறைத்து தயங்கி னேறினாள். கால் சேற்றில் முழங்கால் னமாய் வெளியே எடுத்தாள். ஆனாலும் பிறு அடிபட குப்புற விழுந்தாள்.
ணாப் புதர்கள் இவள் போட்ட சத்தத்தை கிழவி பதறினாள். கலவரமடைந்தாள்.
ண்டா. புள்ள வகுறுடாப்பா.” சொல்லிக் b இடுப்புக் குழந்தையை இறுகப் வதியை நிமிர்த்தினாள்.
பலித்தது. விழுந்த வேகத்தில் வயிறு ாக்கு வலிக்க அது கையைக் காலை தும் சரசுவதிக்கு வயிற்றுக்குள் வலித்தது. த்துக்கொண்டு இம்சையால் அழுதாள். மட்டில் அமர்ந்து கொண்டு துடித்தாள்.
சத்தம் வேகமாய் வந்தது. அதைத் b இருட்டில் எழுந்தது. வீமன் குரைத்

Page 30
"இஞ்ச ஒள்ளுப்பம் வாங்க கிளி” கிழவி இருட்டைப் பார்த்து கெஞ்சினாள்
நிமிடங்கள் சில இருட்டில் கரை சரசரப்பு நெருங்க நெருங்க இருட்டி தோன்றியது. சர்வ ஜாக்கிரதையாய் அடிபே முன்னேறி வந்து கொண்டிருந்தன.
சரசுவதி இடுப்பைப் பிடித்துக் இருந்தாள். வீமன் இருட்டை உற்று உற்று அதன் மோப்ப எல்லைக்குள் தென்பட வைத்தது. முன்னால் வைத்ததும்தான் பின்னால் ஓடி வாலை பின் காலிற்குள் ச பதுங்கிக்கொண்டது. இருட்டுக்குள் வ நெருங்கினார்கள். கிழவி அவர்களின் கண்டுகொள்ள முடியவில்லை. முகந் ெ
“என்ன செய்யிறேயல் இஞ்ச?” இரண்டு பேரில் ஒல்லியாய் குட்டையாய் முரட்டுத்தனமாய் இருக்க வேண்டுமெ6 முரட்டுத்தனமாய் முயற்சி செய்து கன கிச்சுத் தன்மைதான் தென்பட்டது. இன்னு காலம். அவனது வயதையும் தோற்றத்ை உதவியது.
"இந்தப் புள்ளயிர அவர பொடியனுகள் பு சரசுவதியை காட்டி அந்தப் பெடியன்கள்
"பொடியனுகள் எண்டால் ஆரு?” இரண்டு பேரில் உயரமாய் இருந்தவன்
உண்மையிலேயே அவன் குரல் படு பய
"ஆரெண்டு தெரியாது. கண்ணாவுக்குள் முனகி முனகி சொன்னாள்.
"அப்படி நாங்க இஞ்ச ஒருவரையும் கூட் பல்லைக் கடித்துக் கொண்டு கோபமாய்
"ஏன் மெனேய் கோவிக்கிறா? புள்ளத்தா

ந்தது. சரசரப்பு நெருக்கத்தில் கேட்டது. b இரண்டு உருவங்கள் மங்கலாய் ல் அடியெடுத்து இரண்டு உருவங்களும்
கொண்டு வலியால் முனகிக்கொண்டே துப் பார்த்தது. இரண்டு வேற்று உருவம் உறுமியது. இரண்டு அடி முன்னால் பயங்கரம் உறைத்தது. நான்கு அடி iருட்டிக் கொண்டு கிழவியின் பின்னால் ந்துகொண்டிருந்தவர்கள் இவர்களை முகத்தைக் கவனித்தாள். இனங் தரியாத இருட்டு.
இருந்தவன் கேட்டான். தனது குரல் ன்பதில் அவனுக்கு பிரியம்போலும். தத்தான். ஆனாலும் அவன் குரலில் லும் வாலிப வயதை எட்டாத விடலைக்
தையும் மறைப்பதற்கு இருட்டு பெரிதும்
டிச்சித்து வந்தித்தானுகளம் மெனேய்.” ரிடம் கிழவி சொன்னாள்.
கேட்டான். ங்கரமாய் இருந்தது. கிழவி பயந்தாள்.
ளதான் கூட்டித்து வந்தாங்க” சரசுவதி
டித்து வரல்ல"
பதில் சொன்னான்.
ச்சிக்காறி மெனேய் அந்தப் பொடியன
யுத்தத்தின் سپه uT85b 29

Page 31
உட்டுடுங்க கிளி.” கிழவி கெஞ்சினாள்
“என்னப்ப?” சின்னவன் கோபமாய் கிழ வேணா. இந்தப் பொட்டையையும் சு சொல்லிக் கொண்டே துவக்கின் பின் “அடிக்கப் போறயா..? அடி! எங்களு கொல்லுங்க. எங்க எல்லாரையும் சொன்னாள். வைராக்கியம் நெஞ்சில் ஏற வரப்புக் பீதியுடன் கிழவியை இறுக்க கட்டிக்ெ
"நாங்கல்லாம் உசிரோட இரிக்கதால எல்லாரையும் கொம குடுத்துப்போட்டு வாழுங்க. கொல்லுங்க. கொல்லுடா. மார்பில் அடித்து அடித்து சரசுவதி சத்
“பொட்ட கத்தாத.” சின்னவன் அதட்
"நான் கத்துவன். கத்தினா சுடுவெயா?
“பொட்டை நரகல் கத்தாத உண்ட புரு போட்டு இப்ப உடுவானுகள்” சரசுவதி அழுகையின் வேகத்தைக் கு
“உண்ட புருசனில எங்களுக்கு சந்ே குடுக்கிறான்.”
"எண்ட கடவுளே.! என்ன பொய்யச்
“பொய்யா..? பொய்யா..? அதுதான் ( இருந்து புதுசாய் இந்த ஏரியாவுக்கு ெ இஞ்ச ஒரு காட்டிக்குடுக்கிறவனும் இ கூடாத பேரு” சின்னவன் அழுத்தமா
தூரத்தில் கொட்டப்பாக்கல் எழுப்பியது. இரெண்டு பேரும் உசா
"சிக்னல் குடு” என்றான் மற்றவன்.
“கிக்.கீச்ச். கீச்ச். கீக்.” அசல் கொட்டப்பாக்கன் குருவி போல
30 சக்கரவர்த்தி

பியை நெருங்கினான். “இவடத்த நிக்க டித்துப் போ பாப்பம். இல்லாட்டி.” க்கத்தை ஓங்கினான்.
க்கொண்ணா. நாங்க போக மாட்டம். கொல்லுங்க.” கிழவி தைரியமாய்
கட்டில் அமர்ந்துவிட்டாள். குழந்தை ாண்டு பலமாய் அழுதது.
ானே இப்படிப் பாதகம் செய்யிறயல். நீங்க மட்டும் இந்த சவக்காலையில
தம் போட்டு அழுதாள்.
டினான்.
சுடு.”
சனுக்கு வெளக்கம் நடக்கிது. வெளங்கிப்
றைத்துக்கொண்டாள்.
தகம். எங்களப் பத்தி அவன்தான் ரிப்
சொல்றா நீ”
வளக்கம் நடக்கிறது. யாழ்ப்பாணத்தில் ாறுப்பாளரு வாறாரு அவரு வரக்குள்ள க்க போடாது. மறுகா எங்களுக்குத்தான் ப் சொன்னான்.
குருவி ஒன்று விநோதமாய் சத்தம் ானார்கள். சின்னவனின் தோளைத்தட்டி
வே சின்னவன் சத்தம் எழுப்பினான். சில

Page 32
வினாடி இடைவெளி விட்டு தூரத்தில் இ கிழவியும் சரசுவதியும் விழி வ பார்த்தார்கள். நான்கைந்து உருவம் இ முன்னேறி வந்துகொண்டிருந்தது. யாே காற்றோடு சேராமல் தனியாகப் பிரிந்து வே உருவம் தெரியும் தூரம். நான்கைந் கைத்தாங்கலாக இன்னொருவன். முகந் சரசுவதியால் இனங்காண முடிந்தது. ை தன் புருசன்தான் என அருகில் வந்த காட்டுக்குள் சலசலப்புக் கேட்டது.
"ஆராக்கள் இவைய?” வந்தவர்களில் ஒருவன் இருவரையும் ப கேட்டான்.
“இவண்ட பொஞ்சாதியும் மாமியும்” உட
"ஆரிஞ்ச உங்கள வரச்சொன்ன?” சரசுவதியும் கிழவியும் அழமட்டும் செய்
"இனி இந்த சேட்டை எல்லாம் வெக்காத தாட்டுப் போடுவன்.”
சரசுவதியின் புருசனால் அவர் புரிந்துகொள்ள முடியவில்லை. தலை, நீ கிடந்தது. பிடித்திருக்கும் கையை விட்டால் நிலை, கொடுரமான செயல்களை சில பிறகு தற்காலிகமாய் மூளை தனது
முக்கியமாக உணர்தலை அது நிறுத்தில் எதையுமே உணர முடியவில்லை.
"கூட்டிற்றுப் போங்க."
சரசுவதியின் புருசனைத் தள்ளிவிட்ட விழுந்தான். முனகலைத் தவிர அவனி குப்புற விழுந்தவனை சரசுவதி ஓடிப் சுமையை ஏலுமானவரை தாங்கி நடந் இருப்பது போன்று இருந்தது. இளகிய கண்டுகொள்ள முடியாமல் மனது பூராக
கிழவி குழந்தையை இடுப்பில்

ருந்து அதேமாதிரிச் சத்தம் வந்தது.
ரிய விரிய விநோதமாய் இவர்களைப் ருளிலிருந்து மெல்ல மெல்ல பிரிந்து ரா வலியால் மெல்ல முனகும் ஓசை றுபட்டு மெலிதாகக்கேட்டது. இருளிலும் து பேர் ஆயுதங்களுடன். கூடவே தெரியாத இருட்டுத்தான். இருந்தாலும் கத்தாங்கலாக அழைத்துவரப்படுவது தும் சத்தமிட்டு அழுதாள். கண்ணாக்
ார்த்து கடுமையாக, சற்று வேகமாகக்
பரமானவன் சொன்னான்.
தார்கள்.
. மறுகா தெரியும்தானே. தொம்பலுக்க
கள் என்ன சொல்கிறார்கள் என்பதை ரில்லாத முளைக்கீரை மாதிரி தொய்ந்து அந்தக் கணமே தரையில் விழுந்துவிடும் நிமிடங்கள் மூளை கிரகிக்கும். அதன்
சிலசெயற்பாடுகளை நிறுத்திவிடும். விடும். சரசுவதியின் புருசனால் இப்போது
ார்கள். உணர்ச்சி இல்லாமல் குப்புற ல் இருந்து எந்த அசைவும் இல்லை. போய் நிறுத்தி தன் தோளில் அவன் தாள். வயிற்றுவலி இப்போது இளகி வலி நிஜமா பிரமையா என்று இனம் விதமான இம்மை வியாபித்திருந்தது.
b வைத்துக்கொண்டு முன்னே செல்ல
யுத்தத்தின் இரண்டாம் பாகம் 31

Page 33
வீமன் அவள் பின்னால் ஓடிற்று. சரசுவதி நடந்தாள்.
வீட்டுக்கு வந்ததும் குழந்தை அதன்மீது நைந்துபோன நைலோன் 4 படுக்க வை புள்ள” என்றாள் சரசுவதி
சரசுவதி அவனை மல்லாக் அண்டமுடியாமல் முனகினான். சரசுவத்தி எடுத்தாள். எதிர்ப்பு இல்லாமல் உரு கண்டி நீல நிறக் கோடுகளாய் ஆங். முடியாமல் வாயால் சுவாசித்தான். வாய் மூச்சு வாங்கி வலியால் முனகினான்.
“பாதகனுகள்... ஒண்டும் தெரியாத ஆன இவனுகளெல்லாம் மனிசனுகளா? கன சரசுவதி கேவிக் கேவி அழுதாள். கு! அருகில் அமர்ந்திருந்தாள்.
"மெல்ல கத புள்ள அவனுகள் வேலி
""நிக்கட்டுமே... கேட்டுத்து வந்து எல்லாம்
"மெனேய்... மெனேய் சத்தமா கதைக்கா அவருக்கு ஒடம்பு நோகும். கரியபவளத் அடிச்சி குடுத்தா வருத்தத்த எடுக்கும் ஊட்ட போய் வாங்கித்து வாறன். நீ நல்லெண்ணையையும் சூடாக்கி வை கிழவி அரிகேன் லாந்தருடன் வெளிே
அம்மாக்காறி சொன்னதைெ நேரம் கடந்து கிழவி வந்தாள். வந் வைத்து அரைத்து நன்கு மாவாகியது சாராயத்தை ஊற்றி நன்கு கலக்கினாள் கருவை மாத்திரம் எடுத்து சாராய வெள்ளைக்கருவையும் நன்கு கலக் வாங்கிய சரசுவதி தனது புருஷனிடப் முடங்கினான். தலையை தன் கையா குடிக்க கொடுத்தாள். குடித்தான்! தூரத் கிழவியும் செவியை கூர்மையாக்கி
32 - சக்கரவர்த்தி

தட்டுத்தடுமாறி புருசனுடன் அணைத்தபடி
யை இறக்கிவிட்டு கிழவி பாயை விரித்து 'லை ஒன்றை விரித்து “இதுக்கு மேல பிடம்.
5 படுக்கவைத்தாள். முதுகு தரையில் 5 ஒருக்களித்து படுக்க வைக்க முயற்சி ண்டான். அவனது உடம்பில் இரத்தம் காங்கு தெரிந்தது. மூக்கால் சுவாசிக்க அகலமாக விரிந்து கிடந்தது. அதிகமாய்
ாப் போட்டு இப்பிடி அடிச்சிரிக்கானுகளே. எணழிஞ்சி போவானுகள்.” பந்தை எதுவும் அறியாமல் சரசுவதியின்
க்கட்டைக்குள் நிப்பானுகள்.”
வரயும் சுட்டுக் கொல்லட்டும் அரக்கனுகள்.”
த. அவனுகள்ற கொணம் தெரியும்தானே. தை அரச்சி சாராயத்தோட முட்டையையும் D. நான் போய் கிட்டுணன் பரிசாதியாரிட மஞ்சளையும் உப்பையும் அரச்சி வை. 1. ஒத்தணம் குடுப்பம்.” சொல்லி விட்டு
யறினாள்.
பல்லாம் சரசுவதி செய்தாள். அரைமணி மத உடன் கரியபவளத்தை அம்மியில் > அதை ஒரு சிறிய பாத்திரத்தில் போட்டு - பின் முட்டையை உடைத்து வெள்ளைக் ம் கரியபவளம் கலந்த கலவையுடன் நிய பிறகு சரசுவதியிடம் கொடுத்தாள். பருக கொடுத்தாள். வாங்க முடியாமல் ல் தூக்கி மடி மீது வைத்து அவனுக்கு தில் இணையல் ஏதோ கேட்டது. சரசுவதியும் னார்கள். உடனடியாக இனம் காண

Page 34
முடியவில்லை. சூடடிக்கப் போன போ முடிவு கொண்டது. விநாடிகள் கடந்து டே கேட்டது. ஏழெட்டு வாகனங்களின் தொt மிக மிக நெருக்கமாக வாகன யாரோ வீட்டைச் சுற்றி ஓடும் சத்தம். அர் கூடவே சொந்த மொழிச் சத்தங்களும். விபரீதம் புரியாமல் ஆச்சரியமாய் பார்த்து வீட்டு வாசலிலும் நடமாட்டம், ! தெரிந்தது. சரசுவதி எட்டிப் பார்த்தாள்.
தலை வளர்த்து, கறுப்பு நிற களி சேர்ட்டும் கொண்ட ஒருவன் துவக்குட6 நின்றான். சரசுவதியின் மனதுக்குள் ஏதோ பகீரென
“எங்கடி உண்ட புரிசன்?” சரசுவதியை பார்த்து வெறியாய் கத்தின
“என்னத்துக்கு கேக்கி." மிகுதி வரவில்லை. சரசுவதி அழுதாள்.
“எங்களுக்கு அவன் வேணும். அவன ந
"அவரு இஞ்ச இல்ல மய்யோரிச் சேவை
“காவலுக்கு பெயித்தானா? ஆருக்கு வி படுக்கிறது ஆரு?”
"அது அப்பரு”
"கொப்பரா? வாடா வெட்டைக்கு” அவன் அழைத்தது சரசுவதியின் புரிச அவனால் அசையக்கூட முடியவில்லை.
"அவர இப்பதான் பொடியனுகள் அடிச்சி
"பறவள்ளா. வாடா வெட்டைக்கு.”
"அவரு எழும்ப மாட்டாரு. எழும்ப அவ சரசுவதி ஓடிப்போய் புருஷன் அருகில்

டியாரின் உழவு இயந்திரமா? மனது பாக மனது மறுத்தது. சத்தம் நெருங்கி டர்ச்சியான இரையல். ங்களின் சத்தம். அதைத் தொடர்ந்து நிய மொழியில் கட்டளையிடும் குரல். கிழவியும் சரசுவதியும் ஆளாளுக்கு துக் கொண்டார்கள். திறந்த கதவு வழியாய் உருவங்களும்
ரிசானும் அதே நிற தொள தொளப்பான ன் கால்களை அகட்டி அசட்டையாய்
ன பற்றிக் கொண்டது.
ான்.
ாங்க வெளங்க வேணும்.”
எக்கு காவலுக்கு பெயித்தாரு”
பிசுக்கோத்துக்கால உடுறா? அன்னா
னுக்கு கேட்டது. முயற்சி செய்தான்.
ப் போட்டு கொண்டு போட்டவனுகள்.”
ரால ஏலா?” ஒமர்ந்து கொண்டாள்.
யுத்தத்தின் இரண்டாம் பாகம் 33

Page 35
பச்சை நிற உடுப்புப் போட்ட நிற்பவன் பக்கம் நெருங்கினான். " கேட்டான்.
“ஒவ் மாத்தையா. அத்துள புதிய கற
மிக குறுகிய காலத்தில் கற்றுச் பிழை விட்டான்.
"புதி.றஷத்தவாதி புதியகறுணுவா. ஹ சிரித்தான். சிரித்து விட்டு, கடுமையா6 என்றான்.
வாசலில் நின்றவன் வீட்டின் பிடித்து வெளியே கொண்டு வந்தான்.
கிழவி ஓடி வந்தாள். “மெனே உங்களுக்கு சப்போட்டாம் எண்டு அடி
நீங்களும் இப்பிடி இந்த ஐயாமாரோட வர்
* கிழவி கேட்டாள்.
சரத்தை மடித்துக் கட்டிக்கொன கிழவியை நெருங்கினான். “இவனில எங்களுக்கு சந்தேகம் இவன இவனுக்கு பழக்கம் இரிக்கி கொழும்புலி கொமாண்டர் வாறாரு அவரு வரக்குள் போடாது. மறுகா எங்களுக்குத்தான் வேணும்.” நெருங்கினவன் கிழவியிடம்
சொல்லிய மறுகணமே வாச காலை அவன் பிடிக்க உள்ளேயிருந்து
அவனை தூக்கிக் கொண்டு போய் ராஜ்
கிழவி பேச முடியாமல் திை வலி எடுத்தது. வயிற்றைப் பிடித்துக் ெ
வாகனங்கள் வேகம்ாய் புறப் புளுதி பரவுவதை உணர முடிந்தது.
செந்தாமரை - 1992
34 சக்கரவர்த்தி

அரசபடை அதிகாரி ஒருவன் வாசலில் 0ஷ்த்தவாதி இன்னவத.?” மெதுவாய்
னுவா" திக்கி திக்கி சொன்னான்.
5 கொண்ட சிங்களம் போலும் உச்சரிப்பில்
ா.ஹா.” கேட்டு விட்டு சிங்கள அதிகாரி ன குரலில் "எலியட்ட அறங்கெனவா”
உள்ளே போய் படுத்திருந்தவனை
ாய்.மெனேய். இப்பத்தான் அவனுகள் ச்சிப் போட்டு கொண்டு போட்டவனுகள். து அநியாயம் செஞ்சா எப்படி மெனேய்?”
ன்டு கறுப்பு சேர்ட் போட்ட இன்னொருவன்
0 இருந்து இந்த ஏரியாவுக்கு புதிசா ஒரு ள இஞ்ச ஒரு பயங்கரவாதியும் இரிக்கப் கெட்ட பேரு. நாங்க இவன வெளங்க } சொன்னான்.
லில் கிடந்த சரசுவதியின் புருஷனின் வந்தவன் கைகளை பிடிக்க இருவருமாக ணுவ வண்டிக்குள் எறிந்தார்கள்.
கத்து நின்றாள். சரசுவதிக்கு இடுப்பு கொண்டு திண்ணையில் சரிந்தாள்.
பட்டு போயின. இருள்தான் ஆனாலும்
O

Page 36
“போரின் பகைப்புலம் அறியாது போர்ப்பரணி பாடும் பாட்டுக்காரர்கள் எவரோ - அவரே ஈழம் இன்னமும் எரிந்துகொண்டிருக்க முதற்காரணி எ
லேசான கிறுகிறுப்பு பார்வை சத்தம் கூட தெளிவாக ே சுற்றிப்பறக்கின்ற ஈக்கள் உண்டாக்குகின்
தொடர்ந்தும் நின்றால் குப்புற தங்கராசா ஹாஜியாருக்கு தோன்றிற்று. விற்கின்றார்கள். தங்கராசா ஹாஜியார் ஐந்து மணித்தியாலமாக நிற்கின்றார். பெறுகின்ற மொத்த வியாபாரம் அவரு
 

6ÖTGLI GÖT.”
LeBli7 GIVITQLriŋi
வேறு இருட்டிக் கொண்டு வந்தது. கட்பதாக இல்லை. சாக்கடையைச்
ற சத்தத்தை போன்று ஒரே இரைச்சல்,
}ப் புரட்டப்படுவோம் என்கின்ற ஐயம் சில்லரை வியாபாரிகள் கூவிக்கூவி கடைக்குத்தான் யாரும் வரவில்லை. மூன்று நான்கு பேர்களுடன் முற்றுப் டையது; பன்னிரெண்டு மணியாயிற்று
யுத்தத்தின் இரண்டாம் பாகம் ப 35

Page 37
அம்பாறையில் இருந்து வெங்காயம் வரவில்லை.
சுவரை வலக்கையால் முட் மூடையில் குந்திக்கொண்டார். முப்பது 8 ஒரு நாள் முடங்குமானால் ஈரம் வற்ற ஒன்றுக்கு ஐநூறு ரூபாய் கையைக் க
வெற்று வயிறு கறுபுறுவென மிளகாயானால் தண்ணீரைத் தெளித்துத் ( நேற்று பிடுங்கிய வெங்காயத்தை எதுவு வைக்கமுடியாது. பச்சை வெங்காயம் 6 ஒரே இரவுக்குள் அழுகிநாற்றமடிக்கும்.
இப்படியான நேரங்களில் சி தோன்றும். ஐந்தோ பத்தோ வருமானம் கு கண்ணை மூக்கைப் பார்த்து எடை பிடி. நிகர லாபம் சும்மா கிடைக்கும். தங்கரா இல்லை என்பது களுதாவளை, தேத்த போவதற்கு முன்பு அப்படி இப்படியென் செய்ததுண்டுதான். தராசின் தட்டின் கீழ் முள் அடியில் விரலை விடுவது என்று சி ஆனால் இப்போதெல்லாம் அப்படியெது
“ஒழைக்கிறதுதாண்டா ஓப்பாய் ஒடம்புவ
வார்த்தைக்கு வார்த்தை யாரிடமாவது செ மக்காவுக்குப் போய் வந்து. போன வரு
முடியாமல் போய்விட்டது.
“என்னடாவாப்பா அத்துல்லா! என்னட் இல்லெண்டா செல்லப்போறன். மயண் இருவது இரிக்கி. தாறன் மறுகணித்தா.
சந்தையில் மூட்டை தூக்கும் ஒருத்திக்கு கலியாணம் செய்வதில் பயணத்திற்காக வைத்திருந்த பல கொடுத்துவிட்டார். மக்கா பயணத்திற்கு ! கல்யாணத்திற்கு பயன்படுத்துவது புண்
36 1 சக்கரவர்த்தி

வாங்கவருகின்ற வியாபாரிகள் யாரும்
டுக்கொடுத்துக் கொண்டு வெங்காய சுந்தர் வெங்காயமும் வியாபாரம் ஆகாமல் நி ஒரு அந்தர் எடை குறையும். நாள் டிக்கும்.
சத்தம் உண்டாக்கிற்று. செத்தல் தெளித்து எடை குறையாமல் பண்ணலாம். மே செய்ய முடியாது. மூட்டையாகக்கூட முடையுடன் இருக்குமானால் சூடுபிடித்து
ல்லரை வியாபாரம் தேவலாம் என்று -றைவாக வந்தாலும் கையைக் கடிக்காது. க்கலாம். பத்து கிலோவுக்கு ஒரு கிலோ சா ஹாஜியார் ஒன்றும் அப்படிப்பட்டவர் சத்தீவுக்குக்கூடத் தெரியும். மக்காவுக்குப் று சின்னச் சின்ன சில்லறைத் தனங்கள் ஓ பழப்புளி, காந்தம் ஒட்டுவது; தராசின் ல வியாபாரத்தனங்களைச் செய்தவர்தான். ரவும் கிடையாது.
) ஒட்டும்”
சால்லிக்கொள்வார். பத்து வருடமாயிற்று தடம் கூட மக்காவுக்குப் போகப்புறப்பட்டு
ட செல்லிரிக்கலாமெலுவா நீ. கேட்டா டைக்க ஊட்டுப்பக்கம் வாகண்டையோ
அப்துல்லாவின் சொந்தக்காரப் பெண் சிரமம் இருப்பது தெரிந்தது. மக்கா எத்தைத் தூக்கி அப்துல்லாவிடம் செலவாகும் பணத்தை ஏழைப்பெண்ணின்
ணியமாம்.
இ |

Page 38
“என்ன காசியாரு, ஒரு சாங்கமாய் இல்லையா?” இரையலாய் எதிர்க்க சத்தம் கேட்டது. சுற்றிற்று.
“ஆரடாப்பா சரிவா? தலசுத்துதுடாப்பா! இரிக்கி. ஒரு ஹறாம் குட்டியையும் ! ஒருவனாவது நேத்தே செல்லித்து பே தொறந்து வெச்சித்து இரிக்கன்”
“என்ன காசியாரு நீ ஒரு மயிரும் ெ மல்வத்தையில் வைச்சி முப்பது பேர அந்த உம்மாட மக்கள் காரதீவுக்கு வசாருக்குள்ள எல்லாக் கடையையும் குருவி இல்ல. கடய மூடித்து கெதிய்ய
தங்கராசா ஹாஜியாருக்கு கிறுகிறுப்பு 6 விரையும் மனிதர்களும் - மூடப்படும் கல்
கொல்லும் தூரத்தில் ரவைகள் சடுதியா அடங்கிற்று.
சந்தை சலனமற்று சிலகணம் ஸ்தம்பித்தது வாசலாக சனம் சிதறிற்று. காய்கறியு சந்தை வெற்றிடமாயிற்று.
இரண்டு மாடுகள் வேகமாய் சர் அவைகளுக்கு. தேவையான அளவு தி: சாணமும்போடலாம். இன்று விரட்டுவார் அதன் தோரணையில் சுதந்திரம், வெறி
தங்கராசா ஹாஜியார் எத்தை வீதிக்கு வந்தார் என்று அவரால் நிை செயற்படுவதாக இல்லை. தப்பித்தல், உ மூளை யோசித்தது. அவசரமாய் விரையு கொள்கிற சில விநாடிகளையும் விரய உயிர் அவரவருக்கு முக்கியம்.
உடலின் சகல பாகங்களும் 2 மறுபடி மிக நெருக்கத்தில் மிக நீள

குந்தித்து இரிக்காய்? சொகம்கெகம்
உற்றுப்பார்த்தார் சந்தைத் துாண்கள்
மார்கெட்டு நேச்சர் சரியான சவுப்பா காணல்ல. இந்த சிங்கள வள்ளா ாயிரிக்கலாம் எலுவா. சும்மா தட்டிய
தரியாத ஆளாய் இரிக்காய் விடியம் ஜீப்போட கெளப்பித்தானுகள் எலுவா, ஸ்ள அநியானம் செய்யிறானுகளாம். மூடிப்போட்டானுகள். வசார்ல ஒரு பா ஊட்டபோய்சேருபாப்பம்.”
Fட்டென்று நின்றது. எல்லா பொருளும், டைகளும் துலக்கமாய்த் தெரிந்தது.
ய் தீர்க்கப்பட்டு அடங்கும் ஓசை கேட்டு
து. மறுகணம் உசாராயிற்று. நால்திசையும் ம் சிதறிற்று. ஒரேயொரு நிமிடத்தில்
ந்தையுள் நுழைந்தன. பரமசந்தோஷம்
ன்று, தின்பன மீது மூத்திரமும் பெய்து, யாரும் இல்லை. வேகமாய் நுழையும் , ஆசை அத்தனையும் இருந்தது.
ன நிமிடத்தில் தட்டிகளை மாட்டிவிட்டு னைத்துப்பார்க்கும் அளவுக்கு மூளை யிர்காத்தல் எப்படி என்பதை மாத்திரமே ம் வாகனங்கள் எதுவும் அவரை ஏற்றிக் ம் செய்ய முடியாதிருந்தது. அவரவர்
உதறிற்று. இதயம் எகிறிக் குதித்தது. மாய் வேட்டுகள் செலவாகும் சத்தம்
யுத்தத்தின் இரண்டாம் பாகம் ப 37

Page 39
இழுபட்டது. எதிர்க்கக் கிளை விரிந் பின்பக்கம் பதுங்கச் சொல்லி மூளை பதுங்கிக் கொண்ட அதேகணத்தில் திடீரென இரண்டு தடவை எதுவோ 6 சுதாரித்துக்கொண்டு உற்றுப் பார்க்க, காகமும் சிதைந்த மீன்தலையும். இரை உண்ணும்போதில் கொலை 6
"அல்லாவே...!” மனசுக்குள் உரக்கக்கூவி அண்ணா தன்னிச்சையாய் பூமி நோக்கி வந்து
வாகனம் எதுவோ இரைய வெளியே நீட்டி அதேவேகத்துடன்
வாகனம்!
“ஹறாம் குட்டிகள் களுவாஞ்சிக்குடி
ஒவ்வொன்றாய் குறைந்த ( தாண்டிக் கொண்டிருந்தன. ஒவ்லெ இதயம் மேலும் மேலும் வேகம் எடுத் வாகனமும் கடந்தது. வியர்வை முது
ஹாஜியார் கணக்குப் பண்ணிக் கொ
"வம்புல பொறந்த உம்மாடமக்கள் ஒ தான் கைகாட்டியும் நிறுத்தாமல்பே தன்பாட்டுக்குத் திட்டிக்கொண்டு 9 நின்றுகொண்டு இருதிசையையும் பா
அரசமரத்தைப்பார்த்தார். எங்கோ வெறித்த பார்வையுடன் பின் ஹாஜியாருக்கு பிள்ளையாரைப் பார் இருந்தது.
“டங்கு டங்கு..." என்று ஐந்து பக்கமண்டையிலும் குட்டிக் கொண்டா போகின்ற பொழுதுகளில் 'களு குட்டிக்கொள்ளும் ஆட்களைப்பார்ப்பு இதுதான் என்பதில் அவருக்கு ஐய
"தார்றோட்டால போறத உட கெற
38 1 சக்கரவர்த்தி

து உயரமாய் நின்றிருந்த அரசமரத்தின் [ கட்டளை போட, பதுங்கிக் கொண்டார்.
அரசமரத்தின் கிளையில் இருந்து திடீர் விழுந்தது. ஒரு கணம் அதிர்ந்து போனார். தெரிந்தது உயிரற்று இரத்தமாய் கிடக்கும்
என்பது கொடுமை!
ந்து பார்க்க - சிதைந்த அரசம் இலைகள்
கொண்டு இருந்தன.
ம் சத்தம் கேட்டது. தலையை மெல்ல அமுக்கிக்கொண்டார். ஊத்தைப் பச்சை
யில் இருந்து வாறானுகள்போல..!”
வேகத்துடன் மெது மெதுவாய் மரத்தைத் வாரு வாகனமும் உறுமி உறுமி நகர 5து இயங்கியது. கடைசியாய் ஒரு கவச தப் பக்கத்தை முழுதாய் நனைத்திருந்தது. ரண்டார், மொத்தம் பதின்மூன்று வாகனம்!
ருவனும் ஏத்தமாட்டான் எண்டுதானுகளே...” பான வாகனக்காரர்களுக்கு வாய்விட்டே புரசமரத்தின் முன்பக்கம் வந்து வீதியில் ர்த்தார். நடமாட்டம் எதுவுமில்லை. மறுபடி
இளையார் கல். பத்து மண்டையில் குட்டவேண்டும் போல்
தடவை இரண்டு கைகளாலும் இரண்டு ர். களுதாவளைக்கு வெங்காயம் வாங்கப் தாவளைப் பிள்ளையார்' கோவிலில் பதுண்டு. பிள்ளையாரை வணங்கும் முறை
ம் இல்லை.
நவல் றோட்டால போறதுதான் உத்தமம்.

Page 40
நாசமறுவானுகள் திரும்பி கிரிம்பி வரு மனசு சொல்லி அவர் முடிவெடுக்கும் வெடித்து சத்தம் உண்டாக்கிற்று. பின்
தார்வீதியைவிட்டு கிழக்கு பச் சேர்த்து தசையை பிய்த்து இழுத்தது. புழுதி மணல் நிறைந்து கொண்டது. கால் இடறி குப்புறபுறட்டிற்று. எழுந்து வடிவத்தில் வானத்தில் புகை எழுந்த யாரோ வீட்டில் இருந்து நாயொன்று உ இழுபட்டது. செருப்பை உதறிவிட்டு ஒ
率
அங்க பதுங்கி இங்க பதுங்கி ஓடிய மருதமுனைக்கு வர மூன்று மணித்திய
“கடக்கர பள்ளிக்கு நேத்திக்கடன் உட்டுத்தாரு.”
“என்னது ஒங்கட கால்ல இருந்து எரத் தங்கராசா ஹாஜியாரின் மனைவி நஸி
“இரியிங்க. இரியிங்க. ஹறாமுல போயித்தானுகள். எண்டப்பே எனக்கி
“ஆ.சீ. சும்மா என்னத்துக்கு கொழர்றா உழுந்துத்தன். லாம்பெண்ணை ஒள்ளம் அசடு புடிச்சிரும். மரமஞ்சள் இருந்தா இவன் முசுதப்பா எங்க?"
"திண்றான். காயத்த காட்டுங்க."
நஸ்மாவின் அழுகை அடங்கிற்று.
"தின்றானா? இந்த ஊத்திலையா?”
காயத்தைக் காட்டினார். ஆழமான கிழ
“முசுதப்பா.”

வானுகள்.” முன்பே பெருத்த அதிர்வுடன் எதுவோ னணியில் தொடர்ச்சியாய் வேட்டு,
கமாய் ஓட முள்கம்பி வேலி சாறனுடன் நிதானந்தவறி குப்புற விழ வாய்நிறைய எழுந்து மறுபடி ஒட எத்தனித்தபோதே திரும்பி பார்க்க மிகப்பெரிய காளான் து. 'ஓடு ஓடு என்று மூளை விரட்டிற்று. -றுமிற்று. எழுந்து ஓட செருப்பு அறுந்து ட நாய் விரட்டிற்று.
来来来
பும் ஒளிந்தும் கல்முனையில் இருந்து ாலம் எடுத்தது தங்கராசா ஹாஜியாருக்கு,
வச்சனான். எண்டஅல்லா கொண்டந்து
த்தம் வழியிது. எண்ட அல்லோவ்.” மா பதறினாள்.
பொறந்ததுகள் என்னவோ செஞ்சி | uu ILDIT Grfëgs. 6JTILIT...”
? வாய பொத்திச்சு கெட, ஒடியரக்குள்ள எடுத்துக்கு வா! லாம்பெண்ணய தேச்சா ஒள்ளம் ஊறவை. கம்பியும் கிழிச்சித்து.
இயல்தான்.
யுத்தத்தின் இரண்டாம் பாகம் 39

Page 41
6 - 95
“முசுதப்பா...”
"ஓவ்...”
25 "எங்க இரிக்காய்?” எ ர்
“இஞ்ச... சோறு தின்றன்.”
“சோறு தின்றயா? என்னடா ஓப்பாய் இது நேரத்தில ஒழைக்க ஓணும் தின்ற ரே செல்லியிருக்கார்ரா வாப்பா... நீ ஊத்த மார்க்கத்துக்கு அடுக்குமா வயது வந்த இருக்கிறல்லையா? மார்க்கெற்றுக்கு
"உம்மோவ்... வெறும் சோத்த திண்றன் அடுக்களையில் இருந்து சத்தம் பல
"ஊத்தி தின்றுமேனேய். வாப்பாக்கு தேய்க்கிறன். தொட்டா கறியில நாறு
வீதியில் வாகனங்கள் இரை தொடங்கிவிட்டது போலும். சலசலப்பு ( தேசக் கணக்கெடுப்புகள் எல்லாம் க இருந்துகொண்டே வீதியில் இன்னதுத் தங்கராசா ஹாஜியார் ஊகித்துக் கெ
"என்ன வாப்பா கால்ல காயம்? உழு
முஸ்தபா ஈரவாயை சாறனால் துடை
“அதொண்டும் இல்ல. எங்க போனநீ !
“பந்தடிக்க!”
"என்னடா வாப்பா இது. பதினேழு வ திரிஞ்சா மார்க்கத்துக்கு அடுக்குமா?"
முஸ்தபா சாரனை உதறி உடுத்திக்
40 ]
சக்கரவர்த்தி ---

வ ஊத்துக் கெட்ட நேரத்தில... ஒழைக்கிற நரத்தில தின்னோணும் எண்டு அல்லா பக்கெட்ட நேரத்திலையெல்லாம் திண்டா த புள்ளக்கி ஒள்ளமெண்டாலும் லோசின
வராம எங்க போன நீ?”
பகா. ஒள்ளம் வந்து ஆணம் ஊத்தன்...” மாய் வந்தது.
கால்ல காயம். லாம்பெண்ண போட்டு
ம். »
பத் தொடங்கிற்று. சனம் கூட நடமாடத் கேட்டது. விசாரிப்புகள். எண்ணிக்கைகள். களைகட்டத் தொடங்கிற்று. வீட்டுக்குள் தான் நடக்கும் என்று ஊகிக்க முடியும். Tண்டார்.
ந்தித்தியா?”
த்துக் கொண்டு கேட்டான்.
பாற்கட்டுக்கு வராம?”
" - 5
பது புள்ள விசினச் பாக்காம ஹறாமா
கொண்டான்.

Page 42
"களுதாவளைக்கு பொயித்து வாறியா? ஹாஜியார் கேட்க - முஸ்தபா வெருன
“எனகொண்ணா!”
மொட்டையாய் மறுத்தான். ஒருவகை கொண்டது.
“புள்ளய ஏன் அங்க போகச்செல்றயா குமிஞ்சிபோய் கொடக்கானுகள். நேத்து ஆக்கள் புடிச்சிப் போன எண்டு நீங்கலு
வெங்காயம் மூட்டையா கெடக்கு. மயா போடவேணும். அப்புடியே உட்டா நான் களுதாவளைக்கு நான் இப்ப போனா
“நாளைக்கு நீங்களே போனா என்ன...?
“என்ன நம்பி வெங்காயத்த தந்தவனுக் அவனுகளும் சோத்த கீத்த ஆக்கிதின் ஒரு சாங்கமா இரிக்கி. ஒரு வெங்காயம் மார்க்கற்ட்டு நேச்சர் சரியான சவுப்பு. அம் தண்ணி வற்றும். ஒரு நாளைக்கு நான நம்மட நட்டம் நம்மளோட. அவனுகள் பாவம். ஒள்ளம் தண்ணி எடுத்துவா ரெ
நஸிமா தண்ணீர் எடுக்க உள்ளே கொண்டிருந்தான்.
“வஸி ஓடுல்ல வாப்பா. நான் எப்படி (6
“நீலாவணையில இருந்து வஸி ஓடும். இருந்து வஸிலை போ! அலுமாரி றாக் நாளக்கி வாறனாம் எண்டு கணவதித் இண்டைக்கு இவ்வளவையும் வெச்சி கொண்டு வாறனாம் எண்டு செல்லன் என் எடுத்துப் போடா ஓப்பாய். மறுகணி அ
முஸ்தபா பணத்தை எடுத்து அரைமனதுடன் வீதிக்கு வந்தான்.

நடு அவரை நோக்கினான்.
பீதி படீரென அவன் முகத்தில் பரவிக்
ர். எசக்ககாறனுகள் களுதாவளையில 1ம் ஆமிக்காறனுகள் றவுண்டப்பு செஞ்சி
வோ சென்ன.”
ன்டக்க மாக்கெற்றுக்குப் போய் சொரியப் ளைக்கு சூடு புடிச்சி அழுகிப்போயிரும். ஆரு சொரியப் போடுறது...?”
30
கள் எலுவா? நாம காசக் குடுத்தாலுவா ன ஏலும். எனக்கு நெஞ்சிக்குள்ளையும்
• கூட இண்டைக்கு யாவாரம் நடக்கல்ல. பது அந்தருகளும் நாளைக்கு ஒரு அந்தர் பாத்தம்பது ரூபா நமக்குத்தான் நட்டம். நக்கு காசைக் குடுக்கத்தானே வேணும் கஞ்சுக்குள்ள அடைக்கிது...”
போக முஸ்தபா அப்படியே நின்று
போறது?”
சக்கில்ல நீலாவணைக்கு போய் அங்க 5கயில ஆயிரத்தி ஐநுாறு இரிக்கி. எடு! த செல்லு, மாக்கட்டு சரியான சவுப்பு. க்க செல்லு. சொச்சத்த மறுகா நான் ன்ன. ஒண்ட அடையாள காட்ட மறக்காம து பெரிய ஓசரியா போயிரும்.”
பக் கொண்டு சைக்கிளை உருட்டியபடி
யுத்தத்தின் இரண்டாம் பாகம்
1 41

Page 43
ஆட்கள் நடமாடினார்கள். சிலகடைகள் ஒற்றைப்பலகையுடன் விய சைக்கிள்கள் மாத்திரம்தான் அங் கொண்டிருந்தன. வாகனங்களின் பூ
வாகனங்களைக்காணவில்லை.
சைக்கிளை மிதித்தான் முஸ்தபா.
அண்டங்காக்கை ஒன்று பள்ளிவாசல் பிராக்குப்பார்த்தது. காற்று பலமாய்வீக வீதிக்கு வந்தது. அண்டங்காக்கை இற சமநிலை பண்ணிக்கொண்டு அப்படியே
“ஒங்கட வாப்பா எங்க?” கணபதியின் வீட்டில் அவன் பத்து வ
"ஆரு?'
பையன் விழித்தான்.
"வாப்பா?” "வாப்பா?
“ஆரு?”
"உங்கட அப்பா!”
பையன் புன்னகைத்தான். "அவரு வெங்காயக் காலைக்குள்ள 6
“அம்மா?
“அவவு நெல்லுக்குத்த பொயித்தாவு!”
“வெங்காயக்கால எங்க இரிக்கி?” எப்போதோ வாப்பாவுடன் வந்தது. இப்டே
“சவக்காலக்கி கிட்ட!”
"சவக்கால எங்க இரிக்கி?”
42 - சக்கரவர்த்தி

ஒன்றிரண்டு கடைகள் திறந்திருந்தது. பாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தன. கொன்றும் இங்கொன்றுமாய் நகர்ந்து இரையல் சத்தம் மாத்திரம் கேட்டது.
ஸ்பீக்கரில் அமர்ந்து கொண்டு வீதியை = அரிசி ஆலையில இருந்து உமி பறந்து கை விரித்து காற்றில் சாய்ந்து விடாதபடி ப நின்றது.
***
யது மகன் மாத்திரமே நின்றான்.
--------
பாயித்தாரு.”
அட
ரது மறந்து போயிருந்தது முஸ்தபாவுக்கு.
--

Page 44
"எங்கட காலைக்கி கிட்டத்தான்!”
"வாவன் போவம், காசிகுடுக்கவேணும்.
“எனகொண்ணாப்பா அங்கபேய் இரிக்கி பையன் அசையமாட்டான் என்பது மு யாரிடமாவது வழி கேட்டுப் போவது பு
எதிர்க்க ஒருவர் வர வழி வி சொன்ன வழி முழுவதும் மணலாக இரு வெங்காயம் விளைவிக்கின்றார்களோ? மு: புதைந்து நடந்தான். வழியில் தென்ப என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டு
கடல் அலையின் ஓசை கிட் தெரிந்தது. புதிதாக கிட்டத்தில் யாரோ ெ ஒன்று கவுண்டு போய்க்கிடந்தது. வெட்டி கூடக் கிடந்தது.
பார்வையை சுற்றிச் சுழலவிட தடவை சந்தையில் பார்த்ததுண்டு.
"அண்ணாச்சி" முஸ்தபா கூவினான்.
மண்வெட்டியை வைத்துவிட்டு கணபதி கணபதி காணவில்லை. கச்சையை இறு
அரைஞாண் கயிறுடன் இணைத்துவிட்(
‘அண்ணாச்சி.!” மறுபடி கூவினான்
கணபதிக்கு அசூசையாக இருந்தது. சாறனை உடுத்திக் கொண்டான். ெ முஸ்த்தபா புன்னகைத்தான்.
“என்னம்பி நீ வந்திருக்காய் காக்கா வ
“வாப்பாவுக்கு ஒள்ளம் சொகம் இல்லை. அதுதான் காசி கொண்டு நான் வந்தது
முஸ்தபா காசை நீட்டினான். கணபதிய

அம்மா வந்தா ஏசிவாவு” ஸ்தபாவுக்கு புரிந்து போனது. வேறு த்தி என்றே தோன்றிற்று.
Fாரித்தான். வந்தவர் சொன்னார். அவர் தது. இந்த சொரி மணலில் எப்படித்தான் ஸ்தபா அதிசயித்துக் கொண்டே புதைந்து ட்டவர்களிடமும் சரியான வழிதானா நடந்தான்.
டத்தில் கேட்டது. சவக்காலை கூடத் சத்திருக்கின்றார்கள், வாடாத சவக்கட்டில் }ய இளநீர் கோம்பைகள். மண்குடங்கள்
கணபதி தென்பட்டான். ஒன்றிரண்டு
சுற்றும் முற்றும் பார்த்தான். முஸ்தபாவை க்கி பின்பக்கமாய் தொங்கியதை இழுத்து B மறுபடி நிலத்தைக் கொத்தினான்.
மண்வெட்டியை ஒரமாய் வைத்துவிட்டு காத்துவேலிவரை வந்து எட்டிப்பார்க்க
J656 out?"
வெங்காயமும் சொரியப் போடவேணுமாம்
92
பின் முகம் புன்னகையாயிற்று. வாங்கிய
யுத்தத்தின் இரண்டாம் பாகம் - 43

Page 45
பண்த்தை எண்ணிக்கொண்டு போ மெதுமெதுவாய் அடங்கி எண்ணி மு
“என்ன ஆயிரத்தி ஐநூறுதான் இரிக்
“வசாரில என்னவோ பிரச்சன எண்டு
"அதுக்கு? கணபதியின் குரல் இறுகிற்று.
“மறுகணி சொச்சத்த கொண்டு தாறார
“என்ன புழுத்தின வேல இது. நாங்க பூழலியாரு அவற்ர வேலய பாத்துத்து அவசியமா இந்த கோபத் தழும்பல் எ
“ஏன் அண்ணாச்சி இப்படிக் கதைக்கி முஸ்தபா கவலைப்பட்டுக் கொண்டான்
“கதைக்காம.” பேச்சை முறித்தான்.
தண்ணிர் இறைக்கும் இயந்த திசையை கணபதி பார்த்தான். மண்ெ
“பசள தந்தவன் வெத வெங்காயம் தர குடுக்கிறது.”
“ஒங்களுக்கென்ன நீங்கதொப்பிய பெர
“எங்க தொப்பி பெரட்டுன நாங்கள்?"
முஸ்தபா வார்த்தை கூட மென்மை இ
“என்ன கணபதி?” அடுத்த வெங்காயத் தோட்டத்திலிருந்
"இந்த தங்கராசா காக்கா வெங்காயம் ஐநூறு அனுப்பியிரிக்காண்டாப்பா.”
44 - சக்கரவர்த்தி

தம் போதே கணபதியின் புன்னகை ய முகம் சுருங்கிற்று.
ရှ၇??
பாவாரிமாரு வரல்லையாம்.”
Τιb.
வெங்காயத்தை புடுங்கிகட்டிக்குடுத்தா திரியிறாரா?”
ன்று கணபதிக்கு புரியாமல் இருந்தது
3 Tui?”
T.
நிரம் எங்கோ குடுகுடுத்தது. குடுகுடுத்த ணண்ணெய் புகை காற்றில் கலந்தது.
ந்தவனுக் கெல்லாம் என்ன பணியாரத்த
ட்டிப் போட்டு போயிருவியள்.”
ழந்தது.
து சிவலிங்கம் எட்டிப்பார்த்தான்.
வாங்கி பொயித்து வெறும் ஆயிரத்து

Page 46
"ஆங். நான் என்னவோ எண்டு நென கொத்து வேலிக்குள் சிவலிங்கத்தின் த கொண்டது.
"சும்மா தேவல்லாத கத கதக்க வேண
கத. முஸ்தபா போய்க் கொண்டே இரைந்:
来来本率
ஊர் முழுதாய் இருட்டி விட்ட போன்ற உறக்கம் வாகனம் எதுவும் வரு இரையும் சத்தம்கூட கேட்கவில்லை. கேட்டது.
“புள்ள குட்டிய பட்டினி போட்டுத்து கு பெண் ஒருத்தி புலம்பும் சத்தம் மெலித
"எண்டம்மோவ். எண்டம்மோவ். பாத இடை வெளிவிட்டு அதேபெண்ணின் ( பிள்ளைகள் விசும்பும் சத்தம்.
முஸ்தபாவுக்கு லேசாய் பயL என்ன செய்வது? எதிர்க்க இருந்த வாசி இருட்டிக்கிடந்தது. வாசிகசாலைதா அறியமுடிகிறது. கட்டாக்காலிமாடுகள் வெளிவந்தது.
"சே.சைக்கிலிலையே வந்திருக்கலாம் சலித்துக் கொண்டு சரிந்துகிடந்த தொலை துரத்தில் குளத்து வெளியால் பிள்ளைய தெருவோரமாய் ஒரு நாய் வேதனையா பின்னங்கால்களுக்குள் செருகிக்கொண
மூன்று நான்கு அடிகள் இடைவெளிவிட் நாயை விரட்டிப் போயின. ஓடுகின்ற நான பெரிதாய் இருந்தன. வேகமாயும் ஓடின. நாய் சுவாரஸ்யம் இல்லாமல் ஓடி அவ ஓட்டத்தை நிறுத்தி சடுதியாய் நின்றது. சி திரும்பிப் பார்த்தது. மெதுவான வேக

ச்சன். தலை சுவாரஸ்யம் இல்லாமல் முடங்கிக்
ாம். நான் வாப்பாட்டசெல்றன். அவரோ
தான்.
து வீதியில் நிசப்தம் ஆழ்ந்த நித்திரை நவதாய் இல்லை. தூரத்தில்கூட வாகனம் ஊருக்குள் மாத்திரம் ஏதேதோ சத்தம்
டிச்சித்திரியிறேடா பாதகா.” நாய் கேட்டது.
கன் கொல்றானே.” தரல் பலமாய்க்கேட்டது. பின்னணியில்
ம் வந்தது. பஸ் கிடைக்காது போனால் க சாலைக்குள் சரசரப்பு கேட்டது. அது ன் அது என்பது தோற்றத்தில்தான்
இரண்டு வாசிக சாலைக்குள் இருந்து
பேசிக்கம்பம் ஒன்றில் குந்திக்கொண்டான் ார்கோவில் மெர்குரி வெளிச்சம் தெரிந்தது. ால் முனங்கிக்கொண்டு. வாலை மடக்கி
டு அவனைக் கடந்து ஓடிற்று.
டு இன்னும் இரண்டு நாய்கள் முன்னைய யைவிட விரட்டுகின்ற நாய்கள் உருவத்தில் கொஞ்சம் இடைவெளிவிட்டு இன்னோர் னைக் கடந்தது. சில அடிகள் தாண்டி iலகணம் அப்படி நின்று வந்தபாதையைத் கத்தில் திரும்ப ஓடி வந்து முஸ்தபா
யுத்தத்தின் இரண்டாம் பாகம் 45

Page 47
முன்வந்தது. எதிர்க்க இருந்த விள பின்னங்காலைத் தூக்கி முட்டுக்கொடு
முடிந்ததும் முஸ்த்தபாவை உற்றுப்பா
“உஞ்சு... ஞ்சு... ஞ்சு... ஞ்சு...”
அதற்குபுரியும் பாசையில் முஸ்த்தபா 9 நெருங்கி வந்தது. முஸ்தபா பயந்தா
"ஆர்ராது நடு ஊத்தில...?” யாரோ ஒரு குடிகாரர் உளறிக்கொண் நாய் அவர் பின்னே ஓடிற்று...
“ச்தூ... போ...!” அந்தக் குடிகாரர் நாயைப்பார்த்து து மந்திரம் போலும். நாய் அவருக்குக் ( குரைத்த நாய்க்கு காலை ஓங்க - ஓங்கி
“எண்ட அம்மோவ்...!” கூவிக்கொண்டே அவர் ஓடினார். நாய விழுகின்ற சத்தம் கேட்டது. லேசாக
இருட்டின் தொலைவில் மேற்குப் ப வெளிச்சங்கள் தெரிந்தது. அது பழுகாம்
“டேய் ஆர்ரா நீ?” இனம் தெரியாத ஒரு குரல். அதுவும் முஸ்தபா அருண்டு போனான். கல்க முற்றும் பார்த்தான். வாசிகசாலைக்குள் வேலிக்குள் இருந்து இரண்டுபேர் வருவ யாரோ வருவதும் தெரிந்தது... மு முடிந்தது.
"அது நான் முஸ்தபா...!” குரல் தட்டுத் தடுமாறிற்று. நாக்கு வர மூன்று பேர் அவனைச்சுற்றி நின்று வைத்திருக்கிறார்கள். கையைத் து பார்த்தார்கள்.
"என்ன செய்யிரா இஞ்ச?” எவன் கேட்டான் என்று தெரியவில்ல
46 2 சக்கரவர்த்தி

பக்கு இல்லாத விளக்குக் கம்பத்தில் எதுக் கொண்டு சிறுநீர் கழித்தது. கழித்து ரத்தது... பார்த் துக்கொண்டே உறுமியது.
தழைக்க வாலை ஆட்டிக்கொண்டு அவனை
ன்! நாய் அவனை முகர்ந்து பார்த்தது.
படே அவனைத்தாண்டி இடறிப்போனார்...
ப்பினார். அது நாயின் வாயைக் கட்டும் தரைத்தது...
ப காலை நாய் கவ்விப் பிடித்து இழுத்தது.
ய் விரட்டிற்று. அப்புறம் துாரத்தில் ஆள் புன்னகைத்துக் கொண்டான் முஸ்தபா.
க்கமாய் ஆற்றுக்கு அப்பால் சிறு சிறு சமத்தில் ஏதாவது கோவிலாக இருக்கலாம்.
முரட்டுக் குரல். அசரீரி மாதிரிக் கேட்டது. லைவிட்டு எழுந்து கொண்டான். சுற்றும் 1 திரும்பவும் சரசரப்புக் கேட்டது. பின்பக்க து தெரிந்தது. வாசிகசாலைக்குள் இருந்தும் ஸ்தபாவுக்கு நிலமை புரிந்து கொள்ள
- - கண்டது.
று கொண்டார்கள். அவர்கள் துவக்கு மாக்கவைத்து ஆடைகளை அவிழ்த்துப்
லெ.--- - - லை.

Page 48
“வஸிக்கி நிக்கன்.”
“எவடம் நீ?”
- - "மருதமுனை !"
“இஞ்ச ஏன் வந்தநீ?”
"காசி குடுக்க!”
"ஆருக்கு?”
“கணவதிக்கு!”
“எந்தக் கணவதிக்கு?” வேறொரு கரகரத்த முரட்டுக்குரல்...
"எந்த கணபதி?” முஸ்தபாவுக்கு புரியாது வியர்த்தது.
“வெங்காயம் செய்யிற கணவதிக்கு!”
"டேய் நட்டா!”
முன்னைய குரல்காரன் உறுமினான்.
"எ..ங்... க?" முஸ்தபாவின் மண்டைக்குள் விறுவி மூளை புலம்பிற்று.
“ஒன்ன விசாரிக்க வேணும்.”
“கணபதி அண்ணனிட்ட கேட்டுப் பாரு
“எந்தக் கணவதிடா..?” உறுமலின் வேகம் முஸ்தபாவின் மார் முஸ்தபா மல்லாந்து விழுந்தான்.
“எண்ட உம்மோவ்...”
இந்த ஈனஸ்வர ஓசை பலமாய் எழுந்தது

-- -- - - - - -
க -
- -
- 4) --- கே.
காத்தா -
- - -
- - - - - -
றுத்தது. என்னவோ விபரீதம் என்று
படு 2
ங்க. நான் காசிகுடுக்கத்தான் வந்த.”
பினில் விழுந்த உதையில் தெரிந்தது.
தால் சில வீடுகளில் எரிந்து கொண்டிருந்த
யுத்தத்தின் இரண்டாம் பாகம் 1 47

Page 49
குப்பி விளக்குகளை உடனடியாய்
"எங்களுக்கு தெரியும்டா... வெங்கா எண்டு போட்டு ஊருக்குள்ள எங்க சொல்றாக்கள் ஆரெண்டு எங்களுக்கு
"நான் அப்படி இல்லை... இண்ை அண்ணனிட்டகேட்டுப் பாருங்க. எங்க குடுக்கிற. வேணும்டா கணவதி அண்
"ஒழும்புடா... ஒழும்பி நட... கணவதி முஸ்தபா தட்டுத்தடுமாறி எழுந்து நீ ஒருவன் ஓடிவந்து உதைத்தான். முஸ்த சிறுதூரம் இழுபட்டான். முகத்தில் எ அழுதான்... யாரும் அலட்டிக் கொள்ளவில்லை. சேர்ட்டை கொத்தாய் பிடித்து ஒருவன் மறுபடி உதைத்தான் ஒருவன் பின்பக்க எதிர்க்க போனவன் மார்பில் உதைக்க புதுவகை இதுவரை நுகராத வாடை கரிப்பது மாதிரியும் இருந்தது. கணபதியின் வீட்டைக் காட்டும்வரை அப்புறம் சரிந்து மணலில் முகம் புை
"கணவதி...!” சிறு இடை வெளி.
"கணவதி...!" பலமாய் ஒருவன் கணவதி வீட்டுவ மந்தமாய் உறங்கிக் கிடந்தது.
“கணவதி... கணவதி...”
“ஆர்ராது நடு ஊத்தில...?” கணபதியின் குரல் எரிச்சலாய் வீட்டி
"வெட்டைக்கு வா!” வாசல்வளை தலையில் இடித்துவிடா விளக்கொன்றுடன் அவன் மனைவி குள்ளமாய் இருந்தாள்.
48 4 சக்கரவர்த்தி

அணைய வைத்தது....
பம் வாங்கிறம், கத்தரிக்கா வாங்கிறம் எங்க நாங்க இரிக்கம் எண்டு ஆமிக்கி . தெரியும்டா... ஒழும்புடா... ஒழும்பு...!"
டக்கித்தான் மொதலாவந்த. கணவதி ட வாப்பா கூட பொடியனுகளுக்கு காசி ணனிட்ட கேட்டுப்பாருங்க.”
ஊட்டக் காட்டு." ன்ெறான். எழும்பி நின்றவனின் முதுகில் கபா தார்வீதியில் குப்புறவிழுந்து தேய்பட்டு ங்கிருந்தோ இரத்தம் கசிந்தது...
5 நிமிர்த்த முஸ்தபா சிரமமாய் எழுந்தான். -மாய். நிலைதடுமாறி குப்புற விழுகிறபோது முஸ்தபா விழாது இருந்தான். வாய்க்குள் யை சுவைக்க முடிந்தது. லேசாய் உப்புக்
முஸ்தபா நிலத்தில் விழவே இல்லை. தயவிழுந்து விட்டான்.
ரசலில் நின்றுகூவினான். கணபதி வீடு
போட்டோ
- அ
ன் உள் கேட்டது.
தபடி கணபதி குனிந்து வந்தான். குப்பி நிமிர்ந்தே வந்தாள். அவள் நிறையவே

Page 50
“ஆரது..?”
“இஞ்ச வா!” ஒழுங்கைக்குள் இருந்து சத்தம் வந்தது அடையாளம் கண்டுகொண்டு பவ்வியமா கட்டிக்கொண்டு,
அருள் 52
“நான் ஆரோ குடிகாறனாக்கும் எண்டு நெ தம்பி” என்றான் கணபதி.
“ஒனக்கு இவன தெரியுமா?” குளிர்காற்று ஒழுங்கையால் போனது.
"ஆரு?"
“ஒரு மருதமுனை முக்கால்.”
"ஒனக்கு காசி தர வந்தானாம் எண்டு ெ சுருண்டு முனங்கக் கூட முடியாது ஒழுங்ன அப்போதுதான் கணபதி கண்டுகொண்ட உற்றுப் பார்த்தான்.
“எண்ட கடவுளே எனக்கு காசி தர 6 கனக்க சி.ஐ.டி மாரு ஊருக்குள்ள திரியிற தேத்தாத்தீவில ரெண்டு சி.ஐ.டி.ய பொடி சொல்லிக்கொண்டே இரண்டு எட்டுப்பின் எதுவும் புரியாது மௌனமாய்த் திகைத்து
கணபதி சொல்வது முஸ்தபாவு புரிந்தது. முஸ்தபா மறுத்தான் அது அல்
முடியாதுகிடந்தான்.
முஸ்தபாவை காலைப் பிடித்து படர்ந்த கணபதியின் மனைவி கணபதி புன்னகைத்துக்கொண்டே பாயில் சரிந்தா
தூக்கம் வரமறுத்தது. புலன்அல் எதிர்பார்த்தது. நேரம் நீண்டது. அரைகு அற்ற மந்தமான மயக்க நிலை...

ਕੋਈਪ ਤੇ ਜਉ ਅੰਤ ਤੇ ਨੂੰ ਵੀ ਚ
1. நெருங்கிப் போய் யார் என்பதை ய் மார்புக்குக்குறுக்காய் கைகளைக்
-- 5
மனச்சிற்றன். பிழையா நினைக்காதிங்க
சால்றான்.” கையில் சுருண்டுகிடக்கும் முஸ்தபாவை என். மெளனமாய் குனிந்து அவனை
ஒருவனும் வரல்லப்பா. இப்படித்தான் மானுகள். நேத்தோ முந்தா நாளோகூட பனுகள் புடிச்சவனுகளாம்.”
வைத்தான் கணபதி. அவன் மனைவி துநின்றாள்.
க்கு இரையலாய் கேட்டது. ஆயினும் வனுக்கே புரியவில்லை. முனங்கக்கூட
இழுத்துக் கொண்டுபோனார்கள். பீதி ைெய மந்தமாய்ப்பார்த்தாள். கணபதி
ரன்.
லைந்தது. காது கூர்மையாய் எதையோ றைத் துாக்கம்... விழிப்பும் துாக்கமும்
யுத்தத்தின் இரண்டாம் பாகம் - 49

Page 51
துாரத்தில் ஒற்றை வேட்டு ஓடி வந்து தாழ்வாரத்தில் பதுங்கிக்
“ஆயிரத்திஐநூறு ரூபாய் கையோ கணபதி மனசுக்குள் பேய்கூவிற்று. திடுக்கிட்டு அவன் மனைவி கண்வி தாழ்வாரத்தில் பதுங்கிய வளர்ப்பு துாரத்தில் எங்கோ நின்று குரைக் கேட்டது.
எக்ஸில் - 1998
50 - சக்கரவர்த்தி

ச்சத்தம், தீர்ந்து அடங்கிற்று. வளர்ப்பு நாய் கொள்வதை உணரமுடிந்தது.
. கம்மாரிசு”
ழித்து கணபதியைப் பார்த்தாள்.
நாய் ஏனோ எழுந்து ஓடிற்று. கிற சத்தம் கொஞ்சம் இடைவெளி விட்டுக்
O

Page 52
“உனக்கு நாடு இல்லை” என்றவனை விட "நமக்கு நாடே இல்லை" என்று தூபமிட்டவன் எவனோ
அவனே என்னை விரட்டியடித்தவன் என்பேன்.
நானும்
ஒகஸ் * ஒரு பர்
-ஃ) 15 ---
அறிமுகம் ஒன்று:- நான்
நான் என்பது நான்! அதாவது உ நான்...! நான் வேலை பார்ப்பது ஒரு குதி யில் இருந்து 'ஜார்ஜ் டவுன்' போகும் சின்னதாக ஒரு மலை... அந்த மலையில் நடந்து போனால் அடிவாரம் வரும். அங்கு எனக்கு கொஞ்சம் கிறுக்குப் புத்தி. யோசனையெல்லாம் அடிக்கடி வருவது உட்பட) ஓர்நாள் இந்தக் குதிரைக்கெல் ஐந்தறிவு வந்தால் எப்படி இருக்கும் என சிரிப்பின் விளைவு ஒகஸ்டீனா அறிமுகம்
அறிமுகம் இரண்டு:- ஒகஸ்டீனா
17ம் நூற்றாண்டின் இறுதிக் க அழகியும் கிரேக்க தேசத்து இளவரசியுமா

பெ
பல்கள்
--
ਫੋਈ ਘਰ ਵਿਚ
வாக் - - - - - - - -
- கே
ਅਕ r.
உணரவும் ந்தயக்குதிரையும்
பாட் போட்ட - .
உ - ம் கட்
-) -
உங்கள் எல்லோருக்கும் தெரிந்த அதே ைெரப் பண்ணையில். 'மில்டன் சிட்டி' வளைவுப் பாதையில் இருக்கிறதே ன் அந்தப் பக்கம் நான்கு மைல்கள் தான் குதிரைப் பண்ணை இருக்கிறது. (தெரிந்திருக்கலாம்) விபரீதமான ன்டு. (மரணத்தை மகிழ்ந்து பார்ப்பது மலாம் ஆறறிவு வந்து டானியலுக்கு யோசனை வந்தது. விளைவு சிரிப்பு.
Tலத்தில் உலகப் புகழ்பெற்ற சிவப்பு ன ஃசோபியா இவளைப் போன்றுதான்
யுத்தத்தின் இரண்டாம் பாகம் - 51

Page 53
இருந்திருப்பாள் என்பது என் அபிப்பி பிரஞ்சுக்காரி. ஆங்கிலம் தவிர்த்து தெ கவிதைகள் கூட எழுதுவாளாம்.(?) வய குறைவானவள். இவளுக்கு 'பொணி குதிரையில் இவள் பயணிக்கும் போது தேவை.
அறிமுகம் மூன்று:- பந்தயக்
வயது ஐந்து. வெள்ளை நிற கூந்தல் போன்று அல்லாது மிக நீண்டு | தோன்றும். எத்தனை அழகு இருக்ே திமிரும் உண்டு. காரணம் ஒகஸ்டீனா என்னவோ? இதுவரை பந்தயத் தி சொல்லவொண்ணா மென்மை.
வண்ட விட கொஞ்சம் சின்னதா வைற்லக்கியோட மூக்குக்கு கிட்ட ( தலய சிலுப்பிப் போட்டு ஒரு மாதிரி கொசு மேல எழும்பி காணாம போய வந்து முதுகில் குந்திச்சுது.
ஒரு முப்பது செக்கன் இருக் அதோட வயிறு நெறம்பும் வரைக்கும் ! அசையாது 'நச்' செண்டு ஒரு அடி. தப்பயில்ல. உறுண்டு கொண்டு கொ
"ஹேய்..பாப்...” கொசுவுக்கு இன்னும் கொஞ்சம் உயி
“ஹேய் பாப் இங்கே வா!” -
உறுமல் சத்தத்த வச்சே தெ சொந்தக்காரன். அறுபது அறுபத்தி அ ஓடி ஆடி வேலை செய்வான். இவனு தவிர ஒருவரும் இல்லப்போல... நானு
“விரைவாய் வா மனிதா!” டானியல் உசார்படுத்த - கொள்ளுக்கு கிட்ட ஓடிப்போய் நிண்டான். சாம்ப
52 - சக்கரவர்த்தி

சாயம். தாய்மொழி ஆங்கிலம். அம்மா பரிந்த பாசை 'சூலு' அந்தப் பாசையில் 5 என்னைவிட இருபத்தி ஏழு மாதங்கள் டயில் மிகவும் எடுப்பாய் இருக்கும். | பார்ப்பதற்கு அழகுணர்ச்சி அவசியம்
குதிரை (வைற் லக்கி)
தம். இதனுடைய வால் ஒகஸ்டீனாவின் சடைத்திருக்கும். ஆயினும் கூட அழகாய் கா- இந்தக் குதிரைக்கு அதே அளவு மாத்திரமே இதில் சவாரி செய்வதனாலோ உடலில் ஓடாததால் உடலில் ஒருவகை
இருக்கும் அந்த கொசுவோட உருப்படி. போய் நாலஞ்சிதரம் வட்டம் போட்டுச்சி. யோ மூக்கால வைற்லக்கி சீற, அந்தக் பிட்டுது எண்டு நான் நினைக்க- திரும்ப
கும். அந்த கொசு அசையவே இல்லை. ரத்தம் உறிஞ்சி எடுக்கும். அதுவரைக்கும் வாலாலதான்! 'வைற்லக்கி' யோட குறி ஈ கீழே விழுந்திச்சி.
ரு இருந்திச்சி.
1 2
பிஞ்சி போச்சு. டானியல் தான்! பண்ணக்கி ந்சு வயது இருக்கும். இந்த வயதிலையும் க்கு சொந்தம் எண்டு ஒகஸ்டீனாவைத் ம் காணயில்ல.
ழச்ச கைய கழுவாமலேயே அவனுக்கு |் நிற குதிர ஒண்டோட புடறி மயிர

Page 54
கத்தரிக்கோலால் வெட்டிக்கொண்டே
“குதிரையுடன் நெருக்கமாய் உள்ளவன்எண்டான்.
அவன் பகிடியாகத்தான் செ எண்டாலும் எனக்கு என்னவோ கஸ்டப் "இன்று உனக்கு பண்ணையில் வேன் நகருக்குள் போய் வா! அவள் சில ஒப்ப
இப்பிடி என்னட்ட சொல்லிப்பு பின்னால நிண்ட ஒகஸ்டீனாட்ட எட்டிக் மண்டய ஆட்டிப் போட்டு பண்ண வி கவுஸ்'சுக்குள்ள போய் அங்க இருக்கிற பின்னால் என்னவோ அசையிற மாதிரி கைய நெஞ்சுக்கு குறுக்கா கட்டிக்கொ ஒகஸ்டீனா. நான் லேசா சிரிச்சன். அவளும் லே இருக்கிறாய்” எண்டாள்.
"நேற்றயப் போலவே...நீ?”
“எல்லா நாட்களையும் விட.” எண்டு என்னோட இமய லேசா சுருக்கிக் கேள்
"சந்தோசமாய் சொல்லவொண்ணா | சொல்லிப்போட்டு பயந்து போய் திரு தொழுவத்தில் நிண்டான்.
கிழவன் இருக்கேக்க ஒகஸ்டீன் கைய கழுவுற மாதிரி கழுவிக் கொ என்ன?" எண்டன்.
“நீயும் நானும் எதிர்வரும் தனிமையும்"
என்ன அர்த்தத்தில் சொல்ற கைய வடிவா கழுவித் துரைச்சிப் போ ஏறி இருந்தன். ஒகஸ்டீனா ஸ்ராட் பனை
-- இப்பிடி நானும் இவளும் நெ நினைச்சுக்கூட பாக்கயில்ல. மூணு மாதத் தேவதையும் ஒண்டுதான் எனக்கு. பாக் கூட பண்ணலாம் ஆனா தொட ஏலாது

குதிரை வேகத்தில் இருக்க வேண்டும்”
ால்றான் எண்டு எனக்குத் தெரியும். மா இருக்கு.
லயில்லை. ஒகஸ்டீனாவுடன் மில்டன் னைப் பொருட்கள் வாங்க வேண்டுமாம்.”
பாட்டு ஜீப்போட திறப்ப குதிரைக்கு குடுத்தான். நான் சரியெண்டு மண்டய ட்டுக்குப் பின்னால இருக்கிற 'கிறீன் பைப்ப திறந்து கைய கழுவ- எனக்குப் இருந்திச்சி. நான் திரும்பிப் பாத்தன். ன்டு என்ன பாத்துக் கொண்டு நிண்டாள்
சா சிரிச்சுப் போட்டு- "இன்று எப்படி
ஒரு மாதிரியாய் இழுத்தாள். நான் ள்வி மாதிரி அவள் பாக்க -
புத்துணர்வாய்” எண்டு சந்தோசமாய் ம்பிப் பார்த்தாள். டானியல் தூரத்தில்
மாவோட கதைக்க கொஞ்ச நாளா பயம். ண்டு “நீ மகிழ்வாய் இருக்க காரணம்
எண்டாள்.
ரள் எண்டு எனக்கு விளங்கையில்லை. ட்டு ஒண்டுமே கதைக்காம ஜீப்புக்குள்ள எணி ஓடினாள்.
நக்கமாகுவம் எண்டு நான் கனவுல கூட துக்கு முதல்- ஒகஸ்டினாவும் கனவுலவாற கலாம். ரசிக்கலாம். கண்ண மூடி கலவி 5. ஒகஸ்டினா எண்டால் கனவுக்கன்னி
யுத்தத்தின் இரண்டாம் பாகம் 153

Page 55
அவ்வளவுதான் 'வைற்லக்கில இருந்து ஒகஸ்டீனா முதுகக்கூட தொட்டுப் பாத்திருக்கிறன் நான் அடஞ்ச சந்தோசம். மத்தப்படி பாக்கிறது. மடிசார்கட்டி பூரீரங்கத்து ட அம்மா மாதிரி. சுடிதார் போட்டு, பட் அவள் எனக்கு சோறாக்கித் தந்து, அவளோட இலங்கைக்கு போய், படுவா காலம் முழுக்க தங்கி நான் போடியார இப்பிடி விதம் விதமா கற்பன பண்ணி பொயிட்டுது.
இப்பிடித்தான் ஒருநாள் குதி மேயிறதுக்கு அனுப்பிப் போட்டு அது கொண்டு கொட்டிப் போட்டு - லயத்தை புல்லுக்கட்டுக்கு மேல ஏறி வசதியா காணத் தொடங்கித்தன்.
புதுசா வித்தியாசமான கன6 வைற்லக்கில நான் வாறன். தோள்ள இருக்கிற தாடிய விட இன்னும் :ெ இடுப்பில மட்டும் வேட்டி. சட்ட போடா இடையில் வாள் தொங்கிது. நான் வே ஆவலா என்ன பாக்கிறாள். நான் வா கிளம்புது. ஒகஸ்டீனா என்னப்பாத்து புடிக்கிறான். திமிறிப் போட்டு ஓடிவா எனக்கு முன்னால வைற்லக்கில 6ை தப்பிப் போறன்.
சோக்கான கற்பன சுகத்தி புன்னகையோட கண் சொக்க கெறங்கி மூடுன கண்ணுக்கு முன்னால நிழல் போய் கண்ணைத் திறந்தன். ஒகள் என்னப்பாத்து அவள் நட்பா சிரிச்சாள்
“குதிரைக்கு ஆறறிவு வந்தது போ காண்கிறாயா?” ஒரு மாதிரியா என்ன பாத்துக்கொண் முக்கால் தொடை தெரியிற ம மேல்பக்கமா சுருட்டி விட்டிருந்தாள். : போல. வெள்ள வெனியனுக்கு மேலா இருந்திச்சி.சந்தோசமாயும் இருந்திச்சி
54 - சக்கரவர்த்தி

இறங்கிப் போனதுக்குப் பிறகு அதோட அவ்வளவுதான். அதிகபச்சம் அவளால அவள விதம் விதமா கற்பன பண்ணிப் Tப்பாத்தி மாதிரி. சீல கட்டின என்னோட டுக்கட்டி, நான் அவளுக்கு தாலிகட்டி, புள்ள பெத்துத் தந்து, தமிழ் கதைச்சு, ன்கரையெல்லாம் சுத்திக்காட்டி அங்கேயே ாகி அவள் போடியார் பொண்டாட்டியாகி. சந்தோசப்பட்டு காலம் கடத்தின காலம்
ரையெல்லாம் குளிப்பாட்டி புல்லுப்பக்கம் களோட சாணத்தையும் அள்ளி மடுவில பும் நல்ல வடிவா சுத்தமா கழுவிப்போட்டு
மல்லாக்கப் படுத்துக் கொண்டு கனவு
பு ஒண்டும் இல்ல. பிருதிவிராஜன் கனவு. பரைக்கும் வளர்ந்த சுருள் முடி. இப்ப காஞ்ச வளர்ந்த தாடி, முறுக்கின மீச. த வெறும் உடம்பு முறுக்கேறுன உடம்பு கமா வைற்லக்கியில வாறன், ஒகஸ்டீனா ற வேகத்தில எனக்கு பின்னால புழுதி ஓடி வாறாள். டானியல் அவள ஓடிவந்து றாள். ஓடி வந்தவள அலாக்கா தூக்கி வச்சுக் கொண்டு பண்ணையில இருந்து
ல. சிங்கார மயக்கத்தில வாய் நிறைய ப் போய் புல்லுக்கட்டுக்கு மேல கிடந்தன். மாதிரி என்னவோ அசைந்திது. பயந்து ஸ்டீனா எனக்கு முன்னால நிண்டாள். 1. நானும் சிரிச்சன்.
ன்று வேறு ஏதேனும் இனிப்புக் கனா
} இருந்தாள்.
ாதிரி காச்சட்டை போட்டிருந்தாள். அதக்கூட உள்ளுக்க கறுப்பு பிறா’ போட்டிருக்காள் 0 லேசா தெரிஞ்சிது. எனக்கு சங்கடமாயும்

Page 56
“சொல்லேன் ஏதேனும் கனவு கண்டாயா தலையை லேசாய் நான் ஆட்டினேன். எண்டு எனக்கே விளங்கையில்ல.
“எனக்கும் சொல்லு”
நான் பேசாம நிண்டன். பச்ச L கடிச்சி கீழ போட்டன். அவள் எண்ட மாதிரியா இருக்க தள்ளி நிண்டன்.
“முன்னேறு பாப். டானியல் பண்ணையி
"நீ டானியலிடம் சொல்வாய். நான் மாட்
நான் சொல்ல பேசாமல் நிண் கொஞ்ச நேரம் கண்ண இமைக்காம என்
வீட்டுப்பக்கமா நடக்க துடங்கினாள். என
“ஒகஸ்டீனா” நான் கூப்பிட்டேன்.
"ஒகஸ்டீனா” பேசாம நடந்து கொண்டிருந்தாள்.
"நான் சொல்கிறேன்” எண்டு நான் சொ புல்லுக்கட்டுக்கு மேல தள்ளிப் போட்டுத் ஆனா கண் கலங்கித்தான் இருந்திச்சி.
“எனக்கு சொல். எனக்கு சொல்.” எ6
“என்ன கனவு’ எண்டாள்.
“பிருதிவிராஜன் கனவு’ எண்டன்.
“யார் கனவு?
“பிருதிவிராஜன்”
"u”

”கண்ண அகட்டிக் கேட்டாள். இதோட அர்த்தம் ஓமா, இல்லையா
|ல்லொண்ட எடுத்து ரெண்டு துண்டா வயித்தில குத்தினாள். எனக்கு ஒரு
ல் இல்லை.”
டேன்.”
டாள். அழுவாள் மாதிரி இருந்திச்சி.
ன பாத்தாள். மறுகா ஒண்டும் பேசாம க்கு அவள பாக்க பாவமா இருந்திச்சி.
ால்ல எனக்கு கிட்ட ஓடி வந்து என்ன து லேசா கண்ணால மட்டும் சிரிச்சாள்.
ண்டு ரெண்டு தரம் கேட்டாள். பிறகு
யுத்தத்தின் இரண்டாம் பாகம் - 55

Page 57
“பிருதிவிராஜன்”
“யார்? அது பாத்திரமா? இல்லை மனி,
சுவாரஸ்யமாகி கண்ணெல்லா இருக்கிறதுக்கு போடுற 'மஸ்கரா' லேக்
“நிஜ மனிதன், பாத்திரம், ஒரு ராஜா, 6
"சொல்” நான் சுவாரஸ்யம் அடைகின்றேன்.
"நீ இலக்கியம் அறிவாயா? நான் கூட
இலக்கியமும் அறிவேன்.”
சொல்லிக்கொண்டே என்ன உர அவளோட தொட எண்ட கையில் லேச சுட்ட மாதிரியும் இருந்திச்சி.
“முன்னர் ஓர் காலத்தில் பாரத கண்டத் நாடு இருந்தது. அந்த தேசத்தை ஆண் சம்யுக்தை என்ற ஓர் மகள். அழகில் சிற என்கின்ற ராஜபுத்திர வீரவம்சத்தில் வந்த ஜெயச்சந்திரன் தடைபோட, சம்யுக்தை மணம் முடித்தான் பிருதிவிராஜா.”
ஒரு அரைமணிநேரம் அவளும் சொன்னன். இடையில் எதுவும் கேக்காம் நிமிசம் அப்பிடியே அசையாம அப்பிடி திடீரென்று என்ன ஒரு மாதிரியா பாத்து
"சரி. இந்த இலக்கியக் கனவில்... இப்ெ எந்த பாத்திரம் ஏற்றார்கள்?” எண்டு ே
“நீ சம்யுக்தை, அந்தக் குதிரை நமது : ஜெயச்சந்திரன்தான் உனது தாத்தா L
நான் சொல்லி முடிச்ச உட இல்ல. லயத்தை விட்டு ஓடிப்போய் ' அவள் எழும்பி போகேக்க அழுகிற ச
56 1 சக்கரவர்த்தி -

- விதம்
தனா?" --------
ம் அகட்டி கேட்டாள். கண் இமை வடிவா சா கரைஞ்சி இருந்திச்சி.
எங்கள் இலக்கியத்தில் உள்ளது.”
- 'சூலு' இலக்கியம் மற்றும் ஆங்கில
ரசிக் கொண்டு புல்லுக் கட்டுல இருந்தாள். 4 பட்டிச்சி. குளிர்ர மாதிரியும் இருந்திச்சி.
தின் வடதிசையில் கன்னோசி என்றோர் ட ஜெயச்சந்திரன் என்கின்ற ராஜாவுக்கு ந்த இளவரசி. அவள் மேல் பிருதிவிராஜா இன்னோர் ராஜாவுக்கு காதல் காதலுக்கு யை குதிரையில் வந்து கவர்ந்து சென்று
க்கு சுவாரஸ்யம் குறையாம் கதையைச் ) கதையக் கேட்டாள். பிறகு ஒரு ஐஞ்சு யே இருந்தாள். கொஞ்ச நேரம் கழிச்சி இப்போட்டு...
பாழுது... ஜதார்த்தத்தில் யார் யார் எந்த கட்டாள்.
அதிஸ்டவெள்ளை, நான் பிருதிவிராஜன், ரனியல்”
எ ஒண்டும் கதைக்கயுமில்ல, பேசயும் கிறீன் கவுஸ்' சுக்குள்ள பூந்தித்தாள். த்தம் வந்த மாதிரி இருந்திச்சி. அவள்

Page 58
அழுகிறாளா எண்டு நிச்சயமா என்ன எனக்கு பயம் புடிச்சித்து. தேவையில் இண்டயோட வேல காலி. கட்டாயம் ப ஒரு கூலி வேலக்காறன். குதிர கழுவு கனவு காணலாம். ஒரு வெள்ளக்கா பண்ணக்கிம் முப்பத்தேழு குதிரைக்கு விசயத்தைக் கேட்டுப்போட்டு சிரிக்கிற எதுக்கும் டானியல் கிழவன் வரமுதல் தான் நல்லது. எண்டு நான் யோசிச்சுக்ெ சிரிச்சுக்கொண்டு எனக்கு கிட்ட மறுக பேசாம வைற்லக்கிய பாத்தன். அது 6
"நீ எப்போது அப்படி வருவாய்...? வ கடத்திக்கொண்டு (கவர்ந்து) செல்வாய்?
"இல்லை. அது வெறும் கனவு”
“கனவாகவே இருக்கட்டும் அது. ஆய மீட்டுச்செல்லாயோ?” எண்டு கேட்டு எ
நான் தெகைச்சிப் போய் நிக்க கேவிக் கேவி அழுதாள். கன நேரமா திரும்பி அவளப் பாத்திச்சி. பிறகு கை பாவமா இருந்திச்சி. பிறகு புல்லுக்கட்டு தொறைச்சாள். நான் அப்பயும் பேசாம புல்லொண்டு ஒட்டிக்கொண்டிருந்திச்சி. - போன்று டானியல் ஒன்றும் என் பாட்ட விரக்தியா சொன்னாள். எனக்கு ஒரே
"ஹேய் பாப்”
காத்து முகத்தில நல்லா பட்டி நல்ல ஸ்டைலா ஜீப் ஓட்டிக்கொண்டு
"பாப்... ஏதேனும் கனவு காண்கின்றார் நான் தலய ஆட்டினன்.
கலியாணம் முடிக்க முதல் எண்டு உச்சரிக்க சொல்லிக் குடும் "பாப்... பாப்” என்னுறது ஒரு சாங்க

ல கண்டுபிடிக்க ஏலாம போயிட்டுது. Dலாம் அவளிட்ட சொல்லிப்போட்டன். னியலிட்ட சொல்லிப் போடுவாள். நான் றவன், அதுவுமில்லாம கறுப்பன். நான் நிய நினச்சு. அதுவும் இந்தப் பெரிய ம் சொந்தக்காரிய. டானியல் கிழவன் னோ, அடிக்கப்போறானோ தெரியாது. நான் இஞ்ச இருந்து ஓட்டம் பிடிக்கிறது காண்டு இருக்கேக்க ஒகஸ்டீனா கைப்பா பாயும் வந்து நிண்டாள். நான் ஒண்டும் பால வால ஆட்டிக்கொண்டு நிண்டிச்சி.
எது எப்போது நிஜமாகவே என்னை நீ ” எண்டு ஒரு ஆதங்கத்தோட கேட்டாள்.
பினும் என்னை எங்கேனும் இங்கிருந்து ண்ட சேட்ட புடிச்சி உலுக்கினாள்.
5 புல்லுக்கட்டுக்கு மேல சாய்ச்சிகொண்டு அழுதாள். வைற்லக்கி ஒரு மாதிரியா னச்சிது. எனக்கு ஒகஸ்டீனாவைப் பாக்க டுல சாய்ஞ்சி நிண்டுகொண்டே கண்ணை த்தான் நிண்டன். அவளோட சட்டையில அத எடுத்துக்கொண்டே “நீ நினைப்பது னார் இல்லை.” எண்டு ஒரு மாதிரியான
ஆச்சரியமா இருந்திச்சி.
ச்சி. ஓர வாக்கில திரும்பினன். ஒகஸ்டீனா இருந்தாள்.
பா?”
இவளுக்கு ஒழுங்கா எண்ட பேர பாபு க்கவேணும். டானியல் மாதிரி இவளும் மாய் இருக்கி.
யுத்தத்தின் இரண்டாம் பாகம் 5 57

Page 59
"பின் எதற்காய் மெளனமாய் இருக்கி
“ஒன்றுமே இல்லை.”
“வாயேன் நாம் இப்படியே ஓடிப்போய்வி நிறுத்திவிட்டு யாரிடமாவது உதவி கே போய் விடுவார்கள். நாம் அங்கு இலகு தெரியாமல்! உணவு விடுதியில் பாத் பண்ணியோ நாம் பிழைத்துக் கொள்வே நம்மை டானியலால் கண்டுபிடிக்க மு தருகின்றேன். தேவைக்கதிகமாய் கா டானியல் முட்டாள் நம்மைத் தேடட்டு இல்லையா?" கேள்விக்குறியோட ஜீப்பையும் றோட்
“இரண்டு வாரங்கள் பொறுமையா இரே தான் தங்கி இருக்கின்றேன் சிறிது நாட்க ஒரு இடம் ஏற்பாடுபண்ணிவிட்டு உ6 தேன் அல்லவா நீ!” எண்டு நான் அவளுக்கு ஆதரவா செ அமைதியா இருந்தாள். நான் அவளோட கண்ல இருந்து லேசா கண்ணீர் வந்தி
"டானியலின் கொடுமை தாங்க முடிய. மாதிரி இயங்க ஆரம்பித்துவிடுகின்றான் இத்தனை வயதாகியும் எப்படி இவனால் இரவானால் அவனுக்கு வரமாட்டேன் மற்றய நாட்கள் எல்லாம் நான் இறந்
குலுங்கிக் குலுங்கி அழுத அழுகையா வந்திச்சி. அவுந்து கெடந்த
“நன்றி அன்பானவனே!” லேசா முணுமுணுத்தாள்.
எனக்கு இவளப் பாக்கப்பாக்கம் வயதில் ஒரு பொம்புளப் புள்ளைக்கி இ சரியான பாவம்!
முன்பெல்லாம் இவளப்பத்தி இல்ல. என்னவோ பெரிய அழகு ரா மனசுக்குள்ள புழுங்கியவன்... வைற்
58 0 சக்கரவர்த்தி

ன்றாய்?”
- - - -
டலாம். இந்த வாகனத்தை இதே இடத்தில் ட்டால் ரொறண்டோ நகருக்குள் கொண்டு வில் தொலைந்துவிடலாம். டானியலுக்கு திரம் கழுவியோ, மலசலகூடம் துப்பரவு ம். ரொறண்டோ நகருக்குள் போய்விட்டால் டியாது. உனக்கு நான் குழந்தை பெற்று தல் புரிகின்றேன். வா ஓடிப்போயிடலாம்! ம். உனக்கு குழந்தை என்றால் பிரியம்
டோரமா நிப்பாட்டினாள்.
ரன். நான் இப்போது பிரம்மச்சாரிகளுடன் -ள் கொடுத்தாயேயானால் நாம் வாழ்வதற்கு ன்னை அழைத்துச் செல்கின்றேன். என்
Tால்ல எண்ட தோள்ள சாஞ்சி கொண்டு - தலய லேசா தடவி விட்டன். அவளோட
பச்சி.
வில்லை பாப், இரவாகிவிட்டால் மிருகம் தப்பு வழியில் பிறந்த அந்த வேசிமகன். ... நான் ஒரு மனிசி என்கின்ற எண்ணமே என்கின்றது. மூன்று நாட்கள் தவிர்த்து து விடுகின்றேன் பாப்.” rள். எனக்குக் கூட அடக்க முடியாம அவளோட கூந்தல லேசா கோதிவிட்டன்.
பாவமாய் இருந்திச்சி. இவ்வளவு சின்ன பவளவு கஸ்டம் வரப்போடாது. ஒகஸ்டீனா
எனக்கு அவ்வளவு நல்ல அபிப்பிராயம் ணி என்ற நெனப்பு இவளுக்கு எண்டு க்கி மாதிரி இவளுக்கும் திமிர் எண்டு

Page 60
அடிக்கடி நினப்பன்... அந்த நெனப்பு | அழுகிறவர இருந்திச்சி. அதுக்குப்பிற இரக்கம் வர அவள்ள இருந்த அவிப்பி அந்தச் சம்பவத்த இப்ப நெனச்சாலும் இ இருக்கும்.
“நீ நினைப்பது போன்று டானியல் ஒன் ஒரு மாதிரியான விரக்தியாச் சொன்னா எனக்கு ஒரே ஆச்சரியமாய் இருந்திச்சு
“ஓகோ... காலம் கடந்து பிறந்தவளா நீ என்று உனக்கு கவலை போலும் இல்
"முட்டாள்” எங்கேயோ பாத்துக்கொண்டு என்னத்த
"நீ நினைப்பது போன்று டானியல் எல் இல்லை.” உச்ச தொனியில் தொடங்கி மெல்ல (
எனக்கு இன்னும் ஆச்சரியம் அப்படியெண்டா? "நீ வளர்ப்புப் பேத்தி இருந்திச்சி. எண்டாலும் கேக்காம நி
"எனக்கே தெரியவில்லை பாப்...” லேசா அழுதாள். கொஞ்ச நேரம் பேசா
“டானியல் எனக்கு என்ன உறவு என பொறுத்தவரைக்கும் தசையும் அழகும், நான். அவ்வளவே...'' ஒகஸ்டீனாவில லேசா கோவம் வந்திக் “அப்படியெனில் நீ பணத்துக்காய் சுகம் எண்டன் ஆச்சரியத்தோடயும் ஆத்திரத்
"நீ என்னை தவறாகவே புரிந்து கொள் மாதிரி... அடிமையாக்கப்பட்ட மாதிரி... ( இரவு தோறும் மிருகத்தின் வேட்கைக்
“டானியல் அப்படிப்பட்டவனா.”

புல்லுக்கட்டுல அவள் சரிஞ்சுகொண்டு த இரக்கம் வரத் தொடங்கிட்டு, அந்த ராயம் மாறி காதல் வரத் தொடங்கிட்டு. இதயத்தில நட்டுவாக்காலி நடக்கிறமாதிரி
பறும் என் பாட்டனார் இல்லை.” எண்டு
ள்.
? அப்பா தாத்தா வயதில் இருக்கிறாரே லையா?”
என் அப்படிச் சொன்னாள்.
னக்கு தாத்தாவும் இல்லை. அப்பாவும்
முடிச்சாள். .. மெல்ல திரும்பி அவளப் பாத்தன். தியா?” எண்டு கேக்க வேணும் போல
1டன்.
ம இருந்தாள்.
ன்று தெரியவில்லை பாப். டானியலை இளமையும் கொண்ட அற்புத இயந்திரம்
சசி -
5 கொடுக்கும் பெண்ணா?” தோடயும்.
ரகிறாய் பாப். நான் சிறை பிடிக்கப்பட்ட வேறு வழி தெரியாது மல்லாக்கப்படுத்து
த இரையாகின்றேன்.”
யுத்தத்தின் இரண்டாம் பாகம் 1 59

Page 61
“நீ எப்படி அப்படி ஆனாய்?”
“ஒரு டால்மேசன் நாயால”
"டால்மேசன் நாயா?
“ஆமாம் வெள்ளை நிறத்தில் உயரம் இருக்குமே... அந்த உயர்வகை ஜா வாழ்க்கைக்கு காரணம், என்றால் உன் ஆமாம் பாப் நாய் ஒன்றுதான் என் சொல்லிப்போட்டு கொஞ்ச நேரம் பேக்
“என் துன்பத்தை யாரிடமாவும் சொல்ல பாப் கேட்குமா? பாப் எனக்கு ஆறுதல் நிமிர்ந்து அவளப்பாத்தன். அந்த பார் விளங்கிக் கொண்டாள்.
“நன்றி நண்பனே... நீ அறிவாயா? நா எனது சொந்த ஊர் தென் ஆபிரிக்கா பாட்டனார் நூறு வருடங்களுக்கு குடியேறியவராம். என் அம்மா அப்பு நினைத்திருந்தேன். ஆனால், அவர்களு தெரியாது போனது. ஆமாம் பாப். எ இனத்தவருடைய ஆண் நாயுடன் கள் என் முட்டாள் அப்பா என்ன செய்த இனத்தவனை அடித்தே கொன்றுவிட் இருக்குமா என்று புரியவே இல்லை. என்று அர்த்தமா? உணர்ச்சி இல் பதிலுக்குப் பழிவாங்கிவிட்டார்கள். 8 போதை வஸ்து வியாபாரிகளை வீதியி இந்த இயக்கத்தின் பெயரைச் சொல் வைத்து எரித்துவிட்டார்கள். நான் 6 எனக்கு செய்த கொடுமை...”
அவள் சொல்ல எனக்கு ஆ. விசயமும் மூன்று வரிசத்துக்கு மு செய்தியா படிச்சதும் பார்த்ததும் ஞா
"ஏன் பாப் மெளனமாய் உள்ளாப்
60 ]
சக்கரவர்த்தி

இ-பு
பாய் உடல் எங்கும் கறுப்பு புள்ளி போட்டு தி நாய் ஒன்றுதான் என் இந்த கொடிய னக்கு ஆச்சரியமாய் உள்ளது அல்லவா? ன் வாழ்வு சிதைய காரணம்.” எண்டு சாம இருந்தாள்.
வேண்டும் போல் இருக்கிறது. சொன்னால் ல் சொல்லுமா? தயவு செய் என் நண்பா” வையில் ஆதரவு தடவி இருந்தது. அவள்
'யா =
ன் இந்த நாட்டை சேர்ந்தவளே இல்லை. வில் உள்ள ஒரு சிறிய பட்டணம். எனது முன் லண்டன் நகரில் இருந்து வந்து பாவுக்கு நான் ஒன்றுதான் வாரிசு என்று க்கு ஒரு நாய்கூட வாரிசு என்பது எனக்குத் ங்கள் வீட்டு நாய் பக்கத்து வீட்டு கறுப்பு மவியில் ஈடுபட்டு விட்டது. இதைக் கண்ட தார் தெரியுமா? பக்கத்து வீட்டு கறுப்பு ட்டார். இப்படி ஒரு கொடுமை எங்கேனும்
கறுப்பு இனத்தவர் என்றால் அடிமைகள் கலாதவர் என்று அர்த்தமா? அவர்களும் அங்கு ஒரு தீவிரவாத இயக்கம் உள்ளது.
ல் வைத்து உயிருடன் எரித்துவிடுவார்கள். மலி என் பெற்றோரை உயிருடன் வீதியில் எப்படியோ தப்பித்தேன். அதுதான் யேசு
ச்சரியம் எண்டா ஆச்சரியம். இந்த ரெண்டு தல் பேப்பரிலையும் ரெலிவிசனிலையும் பகத்துக்கு வந்திச்சி.
ப? என் கதை உனக்கு இரக்கத்தை

Page 62
உண்டுபண்ணவில்லையா?
சிரிச்சிக் கொண்டே கேட்டாள். எப்படி இவளாலை சிரிக்க முடியுது.
“எனது பெற்றோர்கள் உயிருடன் எரிக் அது பாவத்தின் சம்பளமும் கூட. நான் : எனக்குப் புரியவில்லை.”
"நீ எப்படி டானியலிடம் மாட்டிக்கொண கொண்டு?”
“இல்லை பாப். நான் இந்த நாட்டுக்கு கொன்று விடுவார்களோ என்று பயந்து ! இப்போது புரிகிறது அப்படி வந்தது தொலைந்திருக்கலாம். டானியலுக்கு ஒரு இருக்கிறதே தெரியுமா உனக்கு?”
"தெரியும் நான் கூட அங்குதான் வேை மிகவும் பிடிக்கும் அதனால் இங்கு கூட்
“அங்குதான் டானியலிடம் மாட்டிக்கொல
“அங்கேயா? எப்படி?”
“நான் இந்த தேசத்துக்கு புதிது என் கடத்திக்கொண்டு வந்தமாதிரி- மதுவை கட்டாயப்படுத்தி பயம்காட்டி இங்கு கெ
“நம்ப முடியாமல் இருக்கின்றது. டானி
“இல்ல பாப் நீ டானியலைப்பற்றி தெரிந் மாபியா இயக்கத்தைச் சேர்ந்தவன். இத்தா முன் தப்பி ஓடி இங்கு வந்தவன். இத்த பயந்து இங்கு ஒளிந்து வாழ்கிறான் வந்துபோவார்கள். நீ இங்கு தங்காத்தா
எண்டு சொல்லிப்போட்டு வை காலத்தூக்கி உதறிச்சிது. நான் அவளே சரிச்சு கன்னத்த என்னோட புறங்கையில ஒகஸ்டீனாவை எப்படியும் காப்பாத்த ே

கப்பட வேண்டியது நியதி- நியாயம்ரன் தண்டிக்கப்படுகிறேன் என்பதுதான்
Tடாய். தென் ஆபிரிக்காவில் இருந்து
அகதியாய் ஓடிவந்தவள். என்னையும் இந்த நாட்டுக்குத் தப்பி ஓடி வந்தவள்.
தவறு என்று. அங்கேயே எரிந்து கிராமிய நடன அரங்கம் ஜார்ஜ்டவுனில்
ல பார்த்தேன். என்னை டானியலுக்கு டி வந்தான். எதற்கு கேட்கிறாய்?”
ன்டேன்.”
பதை புரிந்து கொண்டு ஏறக்குறைய அளவுக்கு அதிகமாய் அருந்தவைத்துTண்டுவந்துவிட்டான்.”
பல் மிக நல்லவன் அல்லவா?”
இது வைத்துக்கொள்ளவில்லை. அவன் ாலியில் இருந்து நாற்பது வருடங்களுக்கு தாலியக் காவலர்களின் கெடுபிடிக்குப் 1. இப்போதும் கூட இரவில் சிலர்
ல் உனக்குத் தெரிவதில்லை.”
ற்லக்கிய பாத்தாள். வைற்லக்கி ஒரு Tாட தோள்ள கைய வைச்சன். தலைய - வைச்சாள். கன்னம் ஈரமா இருந்திச்சி. வணும் எண்டு என்ர மனசில எண்ணம்
யுத்தத்தின் இரண்டாம் பாகம்
0 61

Page 63
வரத் தொடங்கிட்டுது. ஒகஸ்டீனாவோட மில்டன் சிற்றிக்குள்ள பண்ணக்க வரேக்க பொழுது லேசா ச கிட்ட ஜீப்ப நிப்பாட்டினாள். வைற்லக்கி மூலையில நிண்டிச்சி. அதப் பாக்க ஒகஸ்டீனாவும் அத கவனிச்சிட்டாள் நானும் பாத்தன். சடையா நல்ல வடி வெட்டி இருந்திச்சி. ஒகஸ்டீனா கவன பின்பக்கம் இருந்து வந்தான்.
"தேனே... உனது அதிஸ்ட வெள்ளை எண்டான் டானியல். ஒகஸ்டீனாவோட
"ஹேய் பாப்... இன்று போய் நாளை வ இருக்கப் போவதில்லை. பண்ணைை எண்டு என்னட்ட சொல்லிப்போட்டு ஒ வீட்டுக்குள்ள கூட்டிப் போனான். எதேச் என்ன பாவமா பாத்தாள். டானியல் வெட்டிக் கொல்ல வேணும் 6 கறுவிக்கொண்டு பஸ் புடிச்சி வீட்டு நடக்கத் தொடங்கினன்.
- ராவு முழுக்க நித்திர வர என்னென்ன செய்வான் எண்டு கற்பன | வந்திச்சி. விடியப் பண்ணக்கி போய் ே இருக்க மாட்டாங்க எண்டு நெனச்சு டே வாசல்லேயே நிண்டாள். என்னக் கண் கண்ணால சிரிச்சாள். இவள பாக்க | எவ்வளவு மென்ம இவளோட சிரிப்பு
“நீ பந்தயத் திடலுக்குப் போகவில்லை
“இல்லை. உடம்புக்கு முடியவில்லை 6 தனிமையில் இருக்க வேண்டும் என்று சிரிச்சாள். இண்டக்கி மாதிரி இவளோட பாக்கயில்ல.
“ஏன் நீ தாமதித்து வந்தாய்? சிரிச்சுக் கொண்டு ஆனா கோவமா ே
“நீ இருப்பாய் என்று எனக்குத் தெரிய
62 .
சக்கரவர்த்தி

போய் சாமான் எல்லாம் வாங்கிக்கொண்டு எஞ்சிகொண்டு இருந்திச்சி. கிறீன்கவுசுக்குக் கொள்ளுச் சாப்பிட்டுக்கொண்டு கிறீன்கவுஸ் - என்னவோ வித்தியாசமா இருந்திச்சி. போல... ஓடிப்போய் கிட்டப் பாத்தாள். வா இருக்கிற அதோட புடறி மயிர் ஒட்ட மலயா அதோட புடறிய தடவ - டானியல்
நாளை பந்தயத் திடலில் ஓடப் போகிறது” - தோள்ள கை போட்டுக்கொண்டு.
T! நாளை நாங்கள் யாருமே பண்ணையில் ய பத்திரமாய் பாத்துக் கொள்” கஸ்டீனாவை தோளுக்கால கை போட்டு சையா திரும்பிப் பாக்கிற மாதிரி ஒகஸ்டீனா
போல ஆத்திரம் வந்திச்சி. மனசுக்குள்ளயே க்குப் போக மலைக்கு அந்தப் பக்கம்
யில்ல... ஒகஸ்டீனாவ டானியல் இப்ப பண்ணிப்பாக்க பயம் பயமாவும் பாவமாவும் சரேக்க ஒம்பது மணியாயிட்டுது. ஒருவரும் பான எனக்கு ஒரே ஆச்சரியம். ஒகஸ்டீனா L உடன் ஓடிவந்து எனக்கு கிட்ட நிண்டு மனசுக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கு.
D.
லயா?”
என்று மறுத்துவிட்டேன். இன்று உன்னுடன் 1 இரவே திட்டமிட்டுவிட்டேன்.”
முகத்தில் நான் எப்பையுமே சந்தோசத்த
கட்டாள்.
பாதே.”
பாதே." ---------

Page 64
"வா பாப்! நான் உனக்கு உதவுகிறேன் பண்ணிவிட்டு அந்த மலையடிவாரம் வரை
என்னோட சேந்து எல்லா வே பரிவான புள்ள இவள்.
“பாப் உனக்கு நான் ஒரு 'சூலு' மொழிக் க
எண்ட கழுத்துக்குள்ளால ரெண்டு கேட்டாள். அவளோட வாயில இருந்து அவளோட உதடு எண்ட வாய்க்கு கிட்ட போல இருந்திச்சி, ஆனா பண்ணயில்ல.
“எனக்கு 'சூலு' பாசை தெரியாதே.” நான் சொல்ல சிரிச்சாள்.
“நான் சூலு பாசையில் சொல்லவில்லை பெயர்த்துச் சொல்கின்றேன்.”
“சரி படித்துக்காட்டு.”
புல்லுக்கட்டுல போய் இருந்தாள். என்ன இழுத்து அவளுக்கு பக்கத்தில இ சொன்னாள்.
சூரியன் இறந்து விட்டான் அவன் இன்னும் ஏமாற்றவில்ல எண்ணத் தோன்றுகின்றது
காத்திருப்பின் அர்த்தம்
அர்த்தமற்றதாகவே போய் விட இருட்டு சொல்லிற்று
கல் ஒன்றை வீச ஊனமான நிலா உடைந்து சிதறியது...............
ஓள் நான் நம்பிக்கை இழக்கவில்லை அண்ணாந்து பார்க்கின்றேன் நட்சத்திரங்கள் புன்னகைத்து. வலுத்தவன் உடைந்து சிதறிய
முழுதாய் இருட்டிற்று. நம்பிக்கை இன்னமும்

ன். இருவருமாய் லயத்தை துப்பரவு ர உல்லாசமாய் போய் வருவோம்” லையும் செஞ்சு தந்தாள். எத்தனை
கவிதை ஒன்று படித்துக் காட்டட்டுமா?"
B கையயும் போட்டு இறுக்கிக் கொண்டு ஏதோ ஒரு நல்ல வாசம் வந்திச்சி. இருக்கிறதால கிஸ் பண்ண வேணும்
ல. உனக்கு புரியும்படியாய் மொழி
நான் அவளுக்கு முன்னால நிண்டன். நத்தி தோள்ள சாஞ்சு கொண்டு கவித
லை
- - - -
--- 11-- --
டக் கூடும் என்று
டை நீரில்
ல.
க் கொள்கின்றன
பதில்
யுத்தத்தின் இரண்டாம் பாகம் 1 63

Page 65
பகல் நேர வெளவால் வடிவ ஒற்றை ரோசாப் பூவும் ஒவ்வொரு இதழ்களாய் ஒடை நீரில் உதர்ந்து ஒடிற் காம்பு மாத்திரமே என் சை அவன் வருகை
மறுபடி மறுபடிவரும் மாலைப் பொழுதல் ஒற்றை ரோசாப் பூவும் ஒடைக் கரையும் என் காதலும் உயிர்ப்புடனேயே இருக்கும் சூரியன் இறந்து விட்ட போ:
“எப்படி உள்ளது பாப்?”
எனக்கு கருத்துச் சொல்ல தெரிய ஆனா மனசுக்குள்ள என்னவோ கெட
“வாயேன் மலையடிவாரம் போய் வரு
நான் சரியெண்டு போட்டு நட கொண்டு கொஞ்ச தூரம் நடந்து ( அகலமா விரிச்சிக் கொண்டு ஓடுனா படுத்தாள். மறுகா ஓடிவந்து எண்ட ை பாவம் இந்தக் குழந்தைக்கு இவ்வளவு நான் இவளுக்கு கணக்கயா அன்பு கண்கலங்காம பாத்துக் கொள்ள வே
“பாப் இப்படி தரையில் அமர்ந்து கெ
புல்லு தரய காட்டினாள். நான் கட்டுப் எனக்கு கிட்ட இருந்து கொண்டு மடி
“பாப் உனக்கு சிரமம் இல்லையா?” தலய ஆட்டினாள்.
“என் தலையை தடவிக்கொடேன்.” தடவிக்கொடுத்தேன்.
64 - சக்கரவர்த்தி

பில்.
ப்படுகிறது.
திலும்
ல்ல. அதால பேசாமலேயே இருந்தன். ந்து அடிக்கிற மாதிரி பாரமா இருந்திச்சி.
வோம்.”
க்கத்தொடங்கினேன் எண்ட கைய புடிச்சிக்
'ள். புல்லுல மல்லாக்கா வானம் பாத்து கைய புடிச்சிக் கொண்டு நடந்து வந்தாள். கஷ்டம் வர என்ன பாவம் பண்ணுனாளே. காட்ட வேணும். கல்யாணம் முடிச்சி ணும்.
rள்ளேன்.”
பட்டு புல்லுத்தரயில இருந்தன். அவளும் பில தலய வச்சு படுத்தாள்.

Page 66
“ஏதேனும் கவிதை பாடேன்”
“உனக்கு புரியும் படியாய் கவிதை பாட 6
“இல்லை பாப் உன் மொழியில்... உனக் என்னை இறுக்க அணைத்துக்கொண்டு ம
அந்த நேரமும் நின்மையல் ஏ குறவள்ளி! சிறுகள்ளி! இந்த நேரத்திலே மலை வார; யோரத்திலே யுனைக் கூடி நி வீரத் தமிழ் சொல்லின் சாரத்த மன மிக்க மகிழ்ச்சி கொண்ட குழல் பாரத்திலே இதழிரத்தி யன்பு சூடி- நெஞ்சம்
ஆரத் தழுவி யமர நிலை பெ பயனையின்று காண்பேன்.
ம.
நான் பாடி முடிய அழுதாள். நான் இறு
அழுதாள்.
“பாப் நான் உனக்கு வேண்டுமா?” அவள விலத்தி முகத்த பாத்தன். என்ே போல.
“என்னை எடுத்துக் கொள் பாப்” சொல்லிக் கொண்டே புல்வெளியில என்
தீட்டிய வார்த்தைகளை தூர நுனி நாவால் இமை நுனியால் முலை முளையால் இதழால் என் உடல் மீட்டினாய்
இருளின் வெளியில் எங்கோ கறுப்பின் வண்ணங்கள் கிளர்
இன்று, எது இந்த மாய அழகு? சென்று, எங்கு பரந்தது உயிருடன் கா உறைந்த நம் நிலம்?

எனக்கு போதிய படிப்பறிவு கிடையாதே”
தத் தெரிந்த கவிதை பாடு. பாடும்போது ார்பில் தலை வைத்துக்கொண்டு பாடு..”
றுதடி றுதடி - --------
நதலே நத ----.
எறன் த்திலே சாடி
லே முலையோரத்திலே
ற்றதன்
க்கமா கட்டிப் புடிச்சன். தேம்பி தேம்பி
னாட விரசம் அவளுக்கு விளங்கிட்டுது
னில் அந்த வெள்ளைக்கொடி படந்திச்சி.
விட்டு - உக
- -
புதைந்திருந்த சந்தனம் சந்தன
சதல்
யுத்தத்தின் இரண்டாம் பாகம் 1 65

Page 67
இந்த மதுக் கிண்ணத்துள்ள
குருதி சுக்கிலம் செம்மவு தோய்ந்த குறி எல்லாக் கடவுளையும் துவக் எழுகிற போது பழமை வீரம் உலர்ந்து பே
நிலவும் பரிதியும் இரவும்
கூடும் அழகே அழகு நம் மொழியில் செறிந்த
விரசம் வாழும் உலகே உ6
மார்புக் குவட்டின் வியர்வை உப்புக் கரிப்பில் துளிர்க்குப்
இறுகிய படிமம் இணைகரம் மூடிய கண்களுள் மஞ்சல் காற்று வரைகிற கோலங்கள்
முதுகு வழியா வேர்வ ஓடி கி மத்தப்படி புத்தி முழுவதும் சுடாத றெ கொண்டு இருந்திச்சி. உடலும் மன சரிஞ்சு உடுப்ப எடுத்து அவள் போ அணச்சிக் கொண்டு நிமிர்ந்து இருந்த முதுகு முழுவதும் புள்ளி புள்ளியா ரெ நாய வெட்டிக் கொல்ல வேணும்.. “ஒகஸ்டீனா இன்று முன்னதாகவே வீட் போகலாம்." எண்டன் மல்லாக்காப் ப
“பாப் என்னை இன்று அழைத்துச் நினைத்தால் திகிலாய் இருக்கிறது”
“இன்று முன்னதாக போவதற்கு காரண இன்று ஒரு நாள் பொறுத்துக் அழைத்துப்போகிறேன். இனியும் உ விட்டுவிடமாட்டேன்.” நடந்துகொண்டு
பண்ணக்குள்ள நடந்து போக வெறி பிடிச்சவன் மாதிரி கத்திக்கொண் வைற்லக்கிய திட்டினான். வை தொங்கப்போட்டுக்கொண்டு நிண்டுச்
66 1 சக்கரவர்த்தி

ரா?
கம்
- - - -
=ம் செய்து விட்டது
ਅਗਰ ਕਿਸ -கிறது
காத்ਚ ਵੜ ਵੜ 440 ਨਿਬਗ ॥
அ - ஆ ---- மகு.
-- 2 அ அ அ அ
பட - - - த் துளிப்பின் » முறுவலில் - 2 இ பாலைவனத்தில்
ேேழ விழுகிற உணர்வு மட்டும் இருந்திச்சி. கருப்பு சுவாலைக்குள்ள தியானம் செய்து மும் பிரம சுகத்த கண்டதும் மெல்லச் த்திவிட்டன். உடுப்ப நெஞ்சோடு சேத்து ாள். புல்லு நுனி குத்தி ஒகஸ்டீனாவோட த்தம் கண்டி சிவந்து தெரிஞ்சிது. டானியல்
டுக்குப் போக வேண்டும். வா பண்ணைக்கு டுத்துக்கொண்டே.
சென்றுவிடேன். இரவு வரும் என்பதை
மே நமக்கு ஒரு வீடு தேடுவதற்காகத்தான். காள் நாளை நிச்சயம் உன்னை ன்னை நான் அந்தக் கொடியவனிடம் ட சொன்னேன்.
கொஞ்ச நேரம் எடுத்திச்சி. அங்க போனா நி நிண்டான். கெட்ட கெட்ட வாத்தையால லக்கி வழமைக்கு மாறா தலய சி. முதல் இருக்கிற அதோட திமிர்

Page 68
கொஞ்சமுமில்ல அதில.
"என்னை ஏமாற்றுகின்றாயா பேயே?... ஏன் பேயே என்னை ஏமாற்றினாய்.” பெரிய இரும்புக் கம்பியால வைற்லக்கி ஒகஸ்டீனாவுக்குக் கோவம் வந்திட்டுது.
“ஏய் டானியல் அதையேன் இம்சிக்கின்
“இந்தப் பேய் என்னை ஏமாற்றிவிட்டது. அமர்ந்து விட்டது. ஓடித் தோற்று இருந் எத்தனை அவமானம் இந்தப் பேயால்” எண்டு சொல்லிக்கொண்டே என்னையு "பாத்தான் டானியல்.
“ஏய் ஒகஸ்டீனா இவனுடன் நீ எங்கே பக்கமாய் இருந்து வருகின்றாய்?” ஒகஸ்டினா பேசாம நிண்டாள் எனக்கு !
“நீயும் என்னை ஏமாற்றுகின்றாயா பென ஆத்திரமா கேட்டு ஒகஸ்டீனாவோட கழு எனக்கு பே அறஞ்ச மாதிரி இருந்தி. உணர்வு வர டானியல் என்ன நெனச்சா கைய எடுத்து அவளோட தோளுக்க கொண்டான்.
என்னப் பாத்து - 12
"ஹேய் பாப் நீ இப்போது போய்விட்டு எண்டான்.
வீட்டுக்கு வந்து என்னால ஒண் மல்லிகைப்பூ மணக்கிற மாதிரி இருந்தி பட்ட இடத்தையெல்லாம் தொட்டு தொ கனவோடு சேந்து கவலையும் வந்திச்சி
ஒகஸ்டீனாவோடகழுத்த டா இல்ல... எனக்கும் அவளுக்கும் இருக்க தெரியல்ல... தெரிஞ்சா என்ன செய்வான்? இல்லாட்டி இதெல்லாம் சகசம் தானே 6 டானியல் வெள்ளக்காறன் தானே. அப்பு

யை அடிச்சான். அது கனச்சிது.
- - - - - புது
றாய்?”
பந்தயத்திடலில் ஓட முடியாது என்று தாலும் கூட கவலை இல்லை. எனக்கு
ம் ஒகஸ்டீனாவையும் ஒரு மாதிரியா
இந்தப் பக்கம். அதுவும் மலையடிவார
திக்கு திக்கு எண்டு இருந்தது.
ன் நாயே?”
த்த வலக்கையால் இறுக்கிப் புடிச்சான். ச்சி. அவன தடுக்க வேணும் போல னோ ஒகஸ்டீனாவை கழுத்தில இருந்த Tல போட்டு அவனோட அணைச்சுக்
==
நாளை வந்துவிடு.”
டுமே செய்ய முடியல்ல. உடம்பெல்லாம் பச்சி. ஒகஸ்டீனாவோட வெறும் உடம்பு ட்டுப் பாத்தன். கனவு கனவா வந்திச்சி.
வியல் புடிச்ச முற அவ்வளவு நல்லா திற தொடர்பு தெரிஞ்சி போயிட்டுதோ
அடிச்சிப் போட்டு தொரத்தி விடுவானோ? எண்டு லேசா எடுத்துக் கொள்ளுவானா? பிடித்தான் எடுத்துக்கொள்ளுவான்.
யுத்தத்தின் இரண்டாம் பாகம் 1 67

Page 69
விடியப் பண்ணைக்குப் போே செய்தது. ஏழு மணிக்கெல்லாம் போ பண்ணய பாக்க பயமா இருந்திச்சி. ஒ ஆவலா இருந்தது. இரவு கொடுமப் சொல்ல வேணும். இண்டைக்கு ஒக இண்டைக்குத்தான் கடைசி நாள் இந்த தயங்கி தயங்கி போய் வீட்ட எட்டிப் பு
“ஹேய் பாப் இங்கே வா”
டானியல் லயத்துக்குள்ள நில வித்தியாசமா இருந்தான். வைற்லக்கி உடம்பெல்லாம் காயம். ரத்தம் வழிஞ்சு டானியல் கையில் சின்னதா ஒரு துவ
“எனக்கு துரோகம் செய்பவரை பிடிக். உன்னுடன் பேச வேண்டும். இந்த கு எண்டான்.
எனக்கு பயம் புடிச்சித்து ன எப்படியாவது தடுக்க வேணுமே. ஒக. வேணும். ஒகஸ்மனாட்ட சொல்ல வீட்டு
“ஒகஸ்டீனா..........ஒகஸ்டீனா.......' என்டு கத்தினன். அவள காணயில்ல தேடுனன். காணவில்ல அவள. கிறீன் க அவள் இல்ல, ஜீப் வேற வெளிய நி பதட்டத்தோட அவளோட அறைக்குள்ள இல்ல. அவளோட கட்டில்ல என்னவோ ரத்தம். திட்டுத் திட்டா கட்டில் தலவா எண்டால் ஒகஸ்டீனாவை... எண்ட கட
தல சுத்தி மயக்கம் வாற மாத ஓடுறதா? இல்லாட்டி என்னையும் என் இவடத்தேயே இருக்கிறதா? லயத்துக்குள்ள துவக்கு வெடிக்கிற ச
கவிதை உதவி :- சுப்பிரமணியபாரதி
உ.சேரன் கரஷோக்கி இக்வான்
| ழகரம்' ஆனி - 1997
68 .
சக்கரவர்த்தி

கக்கை லேசான பதட்டம் இருக்கத்தான் ய் சேந்திட்டன். என்னவோ தெரியல்ல கஸ்டீனாவை பாக்க வேணும்போல ஒரே படுத்தினானா எண்டு கேட்டு ஆறுதல் ஸ்டீனாவை கூட்டித்து ஓடிர வேணும். 5 பண்ணக்கி வாறதா இருக்க வேணும். பாத்தன்.
ன்டு கூப்பிட்டான். அவன பாக்க சரியான முடங்கிப் போய் நிண்டிச்சி. அதோட கொண்டும் இருந்திச்சி. கிட்டப் போனன். க்கு வச்சிருந்தான்.
காது பாப், நீ வீட்டுக்குள் போய் இரு. திரையை கொன்றுவிட்டு வருகிறேன்”
மவற்லக்கிய கொல்ல போறானா? இத ஸ்டீனாட்ட சொல்லி எப்படியும் தடுக்க டுக்குள்ள ஓடிப்போய்
... வீட்டுக்குள்ள ஒவ்வொரு அறையா வுசுக்குள்ளயும் போய் பாத்தன். அங்கயும் க்கிது. எங்க போய் இருப்பாள் இவள். ஓடிப் போனன். அறைக்குள்ளயும் அவள் சிவப்பா தெரிய உற்றுப் பாத்தன். அது
ணி எல்லாத்திலையும் ரத்தம். அப்பிடி வுளே... என்ன கொடுமை இது. திரி இருந்திச்சி. நான் இந்த இடத்தவிட்டு னண்டான செய்யட்டும் எண்டு போட்டு
த்தம்... வைற்லக்கி ஈனமா கனச்சிது...
இரா

Page 70
- யா
*** பழ.
பிற்ப:-::ப்போம்'
"பா",'**' -', '""-">'' ---- +-',"' * ''
: த
டலை மயானத்தில் சுடுவதற்கு
- சுட்டாகவேண்டும்! மனதைச் . தெளிந்ததாக வேண்டும். வெறும் மயக் வாழ்க்கையில் மாற்றம் தேவை... நிஜம் தேவை...
ஸ்த்திரம் எதுவென்னும் உண்மை உள் எது? மண், மலை, மரம், செடி, பெண், காமம், காசு, ப்றஷ் மீன், றால், நண்டு,
இவ்வளவுக்காகவும் தானா இர இந்த உடலில் உணர்ச்சி? இவ்வளவில் 2 துவக்கம்? ஆசை அறுமீன்கள் ஆசை அறுமீன்கள்.
ஈசனோடாயினும் ஆசை அறுமி

சூபம்
5 முன்பாக மனதை தியானத்தில் எட்டு இங்கு ஸ்த்திரம் எதுவென்பதை க்கங்கள் மாத்திரமே உள்ள மாமூல்
னர்வுக்குத் தேவை. இங்கு ஸ்த்திரம் காதல், குழந்தை, இச்சை, வேலை, இவற்றில் நிலை எது? நிஜம் எது?
ந்த உடல்? இவ்வளவும் நுகரத்தானா உண்டாகும் ஆசைதானா துன்பங்களின்
ன்கள் ஈசனோடும் ஆசை வேண்டாமா?
யுத்தத்தின் இரண்டாம் பாகம் 1 69

Page 71
ஈசன்பால் ஆசையும் துன்பமாயின், ஈ எதுதான் ஸ்த்திரம்? புரிந்து கொள்வேனா? என்னால் முடி
தியானம் என்னால் சாத்தியம் பிரணவத்தை நிரப்ப முடியுமா? இருட மென் பொருளில் பெண் சுகத்தீண் வாலிபத்துக்கு ஒத்துவருமா? மூர்க்கமு காசு தேடும் வில்லங்கவாதிக்கு இயல்
வரும்... வரவேண்டும். வருந்தி வருந்தி வரவழைக் ப்ரமம் கண்டு ஸ்த்திரம் அறிந்
நான் இப்போது என்னவாய் இல்லை... பூச்சியம் அல்லது சூனியம் ! இருப்பதை உணர முடிகிறது... போ போகட்டும்... ஆனால், அடுத்த டெ பரமத்துக்குள் சகலதும் அடக்கம். ப் நிலையா, நிஜமா?
இமை மெதுமெதுவாய் தா நிலவு, சூரியன், நட்சத்திரங்கள் அற்ற போக உதிர்ந்த இறக்கையாய் இலகு ஒவ்வொன்றாய் உணர்வு தொலைந்த தெளிவு இருந்தது... பரந்த நீலத்தி பார்க்க முடிந்தது...
“பாபு...”
<< - 2) , ப -
“பாபூ...''
நீலத்துள் எங்கோ என் பெயர் பரந்து இதமாய் மென்மையாய், பெண் குரல்
“டோய் பாபு...”
உடல் துணுக்குற்றது... மறு கடை, சாமான், காசு, மீன், ஓடியோ, வீ
70 1 சக்கரவர்த்தி

சனும் ஸ்த்திரம் இல்லையா?
புமா?
பமா? மனதை அடக்கி சுவாசக்கூண்டில் த்தி மூன்று வயதுக்கு முடியக்கூடியதா? ல் உணருகின்ற விவஸ்த்தை கெட்ட ம் மூளை நிரம்ப விரோதமுமாய் விடிந்தும் மக்கூடியதா? ஒத்துவருமா?
க வேண்டும்... தவனே சத்புருஷன். அவனே பாக்கியவான்!
1, எதுவாய் இருக்கிறேன்? எதுவாகவும் ஆக என்னவாகவும் எதுவாகவும் இல்லாமல் Tகட்டும்... இப்போது நான் எதுவாகவும் பாழுதுகளில் சத்புருஷனாக வேண்டும். ரமம் என்பது என்ன? ப்ரமம் ஸ்த்திரமா,
னாக மூடிற்று... பரந்த நீலம்... மேகம், பரந்த நீலம்... உடலின் சுமை இல்லாமல் வாய் ஆனது... சுற்றி இருந்தவை எல்லாம் து... மயக்கம் அல்ல - தூக்கமும் அல்ல ன் ஊடாக, மூடிய இமையை கடந்தும்
ஒலித்தது... ய் ஒலித்தது...
|படி சகலதும் ஞாபகத்துக்கு வந்தது. பயோ எல்லாமும் ஞாபகத்துக்கு வந்தது.

Page 72
இமை மெதுமெதுவாய் சிரமப்பட்டு திற லேசாய் திறந்தது. கோடை வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாய் கலைய எதிர்க் அழகாய் புன்னகைப்பது தெரிந்தது.
"கடையில விஸ்னஸ்ஸைக் கவனிக் நிஷட்டையே?”
கேள்வி நிஜம்தான். ஆனால் தன் உணர்வின்றி சீண்டி விடுகின்ற கி வேதனையும் படமுடியாத சமநிலைக் க
(K e O B
ம். நிஷ்டைதான்!
“கடைக்கு சனம் வராத நேரத்தில நிஷ் அவள் புருவம் மெல்ல மேலெழுந்தது
திரண்டது.
“ஓம் அப்படித்தான்!” நான் சொல்ல நிலம் பார்த்து புன்னகை
அவள் மனதுக்குள் என்னைப் ட ஊர்ந்து படர்கிறது.
“நம்பலாமா?
“எத நம்பலாமா எண்டு கேக்கிறாய்?
“உன்னுடைய எல்லாத்தையும்"
“என்னுடைய எல்லாத்தையும் எண்டால்
”முதலாவது உன்னோட எழுத்து. பி விசயம் எண்ணேக்க நீ சொல்ற தத்துவப் முறை. இப்ப கடைக்கு சனம் வராத
எல்லாம் உன்னோடவயதுக்கு சரிப்படுப
இவள் முழுதாய் தீர்மானம வந்திருக்கிறாள். இது விமர்சனமா? இல்ை

க்க எத்தனித்தது. வினாடிகள் கடக்க கண்களை கூசப்பண்ணிற்று. கூச்சம் க நிற்பவள் புலனானாள்.
க்காமல் கண்ணை மூடிற்று என்ன
இது கிண்டல், எதிர்க்க இருப்பவனை ண்டல், சிரிக்க முடியாத, அதே நேரம் கிண்டல்.
டையே?”
போலியாய் ஆச்சரியம் பார்வையில்
க்கின்றான்.
ற்றிய தாழ்மட்ட அபிப்பிராயம் மெதுவாய்
உணர்ந்து கொண்டிருக்கிறாள்.
ృy
றகு, அதில நீ சொல்லுகிற விசயம். D, நடைமுறைக்கு ஒத்துவராத வாழ்க்கை நேரத்தில தியானம் செய்யிற்று. இது 2ா? நம்பக்கூடிய மாதிரியா இருக்கு?
ாய் ஒவ்வொன்றாய் அடுக்கி எடுத்து ல- விமர்சனப் போர்வையில் தாக்குதலா?
யுத்தத்தின் இரண்டாம் பாகம் - 71

Page 73
எங்கோ இருந்து கொண்டு முகம் தெரிய விட இது வலிமை மிக்கது. வலி மிக் ஹிம்சை வலியாய் பிரஸ்தாபிக்கும் எழு
“நம்ப முடியாது எண்டு சொல்ல உை எண்டு சொல்ல ஏலாது. என்ர வயதுக் ஏலாது. நம்பிக்கை, உண்மை, சாத்தியப் வேற வேற ஒவ்வொண்டுக்கும் இடையி
"அது என்னவோ எனக்குத்தெரியா. ஆ என்னப் பொறுத்தவரைக்கும் பொய்தான்.
இன்னும் அது முத்தியிருக்காது. அது
மனசும் முத்தும். ஆனா உன்ர பேச்ச ஆக்கள் மாதிரி, மனம், தியானம், மந்திர LDITërs..."
"ஏன் நான் எடுக்க ஏலாதே.?”
மெளனமானாள். சுற்றிவர பார்: நாக்கை துளைத்து ஒரு விதமாய் புன்ன “என்னை விட மூன்று வயது குறைந்தவி அர்த்தம் போலும், இங்கு எல்லோருமே சொன்னாலும் நம்புவதே இல்லை.
"என்னால முடிஞ்சிருக்குது. நான் கூட
மெளனமாய் நின்றவள் நான் ெ கேவலமாய் என்னைப் பார்த்துச் சிரிப் அவள் அதைக் காட்டிக்கொள்ளாது சி சிரிப்பை ரசித்தேன். அந்த நிலையிலும் அது கவிதை
“சன்னியாசி எண்டால் காவி? கமண்டலம் காணயில்லை.” கிண்டலாய்க் கேட்டால் ஆக ஆசைய அறுக்க வேணும் பாபு” 6 போல்,
எனக்கு இப்போதுதான் சிரிப் முகம் இறுகியே கிடந்தது.
“ஜடா முடியை கேக்கயில்ல.? உல
72 - சக்கரவர்த்தி

ாத ஒருவன் எழுதி எழுதி தாக்குவதை கது. தோற்றால் 'ஈகோ ஹிம்சிக்கும். 5 முனைகின்ற போதெல்லாம் வலிக்கும்.
க்கு உரிமை இருக்கு. ஆனா, பொய் த சாத்தியப்படாது எண்டும் நீ சொல்ல இது மூணும் ஒரே மாதிரி இருந்தாலும் ல பெரிய பெரிய இடைவெளி இருக்கு”
னா, நம்பிக்கையில்ல எண்டு சொன்னா கொஞ்சம் உன்ர மீசைய தொட்டுப்பாரு முத்தி நரைக்க வேணும். அப்பதான் ம், எழுத்தும் ஏதோ மனசு முத்தின ம் எல்லாம் பிறக்டீஷ் எடுத்த ஆக்கள்
வை அழகாய் அசைத்து கொடுப்புக்குள் ாகைத்தாள்.
பன் நீ” என்பதாய் அந்த புன்னகைக்கு இப்படித்தான் வயது குறைந்தவன் எது
இப்ப சன்னியாசிதான்!”
சான்னதைக் கேட்டு திடீரென சிரித்தாள். பதாய் எனக்கு தோன்றிற்று.ஆனால்
ரித்தாள். இமை அசைக்காது அவள் பெண்ணின் சிரிப்பை ரசிக்க முடிகிறது.
? உருத்திராக்கம், திருநீறு ஒண்டையும் 1. சற்று இடைவெளி விட்டு “சன்னியாசி ன்றாள். ஒரு குழந்தையிடம் சொல்வது
| வந்தது. ஆனால், சிரிக்கவில்லை.
கத்தில எந்த சன்னியாசி ஆசைய

Page 74
அறுத்திருக்கான்...? எல்லா சன்னியாசி. ஆசை இருக்கிறதாலதான் சன்னியாசி கமண்டலத்தோட வந்தால்த்தான் சன் இல்லையா? காவியோட வந்துதான் ; சேர்ட் போட்டுவந்து தத்துவம் சொ மனிசனுக்கும் தான் சார்ந்திருக்கிறதி எண்டு நினைக்கிறான். காவி கம் அங்கீகாரத்துக்குதான். சமூகம் தன்னை வேணும் என்ற ஆசையாலதான். சன்னி இல்ல. ப்ரமத்தோட சேவைக்காக பொறுத்தவரைக்கும் சன்னியாசம் என்ற அது எத்தின வயதிலையும் எளியலாம். மாதிரி அணைக்கவும் முடியாத தீபம். உ அழியாத தீபம்தான் ஞானம்.. ஞானத்து
அவள் விக்கித்து நின்றிருந்த கோடை வெயில் உஷ்ணத்தாலும் வியர்வையில்லை. நேற்றைய மழைய வேண்டும்... கண்ணாடி வழியாய் பார்க்
"தத்துவம் எண்டால் என்ன பாபு”
இவளிடம் இப்போது அடக்கம் இருந்தது. ஆரம்ப கேள்விகளில் அடி கேட்பது புதிராயும் தோன்றிற்று.
“இது தெரியாமலே இவ்வளவு நேரமும்
“தெரியும்... ஆனா... எதுக்கும் நீ சொல்
“உண்மை எண்டு நினைக்கிற பொய்யும்
“அப்பிடி எண்டால் உண்மைதான் தத்து
"ஏறக்குறைய.. ஆனா உண்மைய விட
அவள் என் அருகில் கதிர் கொண்டாள். அவள் முகத்தில், பார்வை தோன்றிற்று...

க்கும் ஆசை இருக்கு. சன்னியாசத்தில போறான்... அதுவும் ஆசைதான். காவி, னியாசியா? அப்பிடி இல்லாம வந்தால் தத்துவம் சொல்ல வேணுமா? பேண்ட உன்னால் நம்பமாட்டியளா? ஒவ்வொரு ல் சமூகத்தோட அங்கீகாரம் வேணும் மண்டலத்தோட அலையிறதும் ஒரு ன ஒரு சன்னியாசி எண்டு அங்கீகரிக்க யாசம் என்றது தன்னோட தேவைக்காக எண்டு வேதம் சொல்லுது. என்னப் இது தேடலுக்காக. தானா எரியிற தீபம், யாரும் ஏற்றி விட முடியாத தீபம். அதே டம்பு மட்டுமில்ல, ஆன்மா அழிஞ்சாலும் வக்கும் ஆசைக்கும் சம்பந்தமில்லை.”
எள். கண்கள் லேசாய் சிவந்திருந்தது. > பரப்பி விட்டிருந்தது. ஆனாலும் பின் எச்சம் பூமியில் இன்னும் இருக்க
கின்ற போது ஈரமண் தெரிந்தது...
D இருந்தது... கேள்வி பரிசோதிப்பதாயும் ஓத்து முடித்த பின் இப்போது இப்படி
» என்னோட சண்டை பிடிச்சனீ?”
ல்லன்...”
பொய் எண்டு நினைக்கிற உண்மையும்!”
துவமா? -- துவமா?
- உண்மை”
ரை ஒன்றை எடுத்து வந்து அமர்ந்து யில் ஏதோ தேடல் இருப்பதாய் எனக்குத்
யுத்தத்தின் இரண்டாம் பாகம் - 73

Page 75
"அப்பிடி எண்டால் இங்க உண்மைய “தேட வேணும்"
“தேடினா கிடைக்குமா?"
“கிடைக்கும்”
"உனக்கு கிடைச்சிதா?”
“கிடைக்கிறது. கிடைக்கும்”
“இப்ப எத தேடுறாய்”
“ஸ்த்திரத்த. நிலைய. பெரிய, மிகப்ெ துன்பம் இல்ல எண்டு சொல்றாங்க அறிஞ்சவன்தான் சத்புருஷன், சத்புருவி சொல்லுது அத்வேதம் ப்ரமம்தான் சிவ6 சிவனோடயும் ஆசை வைக்காத என நாமளும் பார்த்தால் ப்ரமமும் துன்பத்து ப்ரமமும் நிலையில்லை. ஐதார்த்தம் 6 எல்லாருக்கும் ஆசை இருக்கும். எதுவ இருக்கலாம். குரங்காயும் இருக்கலாம். வந்திட்டால் ஏதோ ஒரு ரூபத்தில துன் சாகிற வரைக்கும். அதாவது ஆறறி அவனுக்கு ஆசை இருக்கும். கூட து மெதுவாய் அவள் உடல் நடுங்குவது ஜலம் கசியும் போல் இருந்தது.
இவளை நான் பயம் காட்டுகி ஏன் இவளுடன் பேசுகின்றேன். கேள்வி வைத்திருக்கலாம். தானாக தெரிந்: கொள்ளாமலேயே போகட்டும். ஏன் ே அரைக்குடமா? அதனால்தான் தழம் மூச்சுத்திணற வைத்திருக்குமா? பாவ அதன் பாஷையிலேயே சொல்லியிரு வாங்க வந்தவனுக்கு சொன்னது போ
ஒவ்வொன்றும் தனித்தனி வி விதமாய் புரிந்து கொள்ளும் விதம்
74 ப சக்கரவர்த்தி

விட உண்மை எது?”
பரிய உண்மைய, ஆசைய அறுத்தால் 5ள். ப்ரமம்தான் ஸ்த்திரம். ப்ரமத்த டினுக்கு கவலையில்லை எண்டு வேதம் ன் எண்டும் சொல்லுது, ஆனா திருமூலர் ர்டு சொல்றார். அவரோட பார்வையில துக்குக் காரணமாகும். அப்படி எண்டால் ான்னெண்டால் ஆறு அறிவு உள்ளவன் ா இருந்தாலும். அது பொம்புளையாயும் சிவனாயும் இருக்கலாம். ஆசை எண்டு பமும் வரும். என்னோட முடிவு மனிசன் வு உள்ள மனிசன் சாகிற வரைக்கும் ன்பமும் இருக்கும்.”
எனக்குத் தெரிந்தது. கண் சிவந்து
ன்றேனா? எனக்கு சமனாக அமரவைத்து 5ளுக்கு வெறும் புன்னகையுடன் அனுப்பி து கொள்ளட்டும். அல்லது தெரிந்து பசினேன்? நான் முழுமையில்லையோ? பலா? தழம்பல் இவளை மூழ்கடித்து Iம் இந்தக் குழந்தை பாவம்! அதற்கு க்க வேண்டும். அல்லது நேற்று மீன் ல் சொல்லி இருக்க வேண்டும்.
சித்திரம். விதம்விதமாய் கேட்கும். விதம் விதமாய் கற்பனை பண்ணி கணக்குப்

Page 76
போட்டு வைத்திருக்கும். தனது கணக்கு விரித்து விசித்திரம் காட்டும். நிஜத்தை
“அண்ணா...!”
செதில் தட்டிய மீனை ஓரமாய் பார்த்தேன். என்னை அழைத்தவன் என்ன இருப்பான் என்று என்னால் ஊகிக்க மு என்பது ஒரு மரியாதை நாடகம். காரி அவனது அழைப்புக்கு நான் செவி சாய்க்
“உங்களிட்ட ஒரு விசயம் கேக்கவேணு
“இந்த மீன் 'ப்றஷா', இல்லாட்டி 'புறோ
“அது இல்ல...”
"பின்ன...''
“செந்தாமரையில் கதை எழுதுற சக்கரம் சீலா மீனின் முதுகு முள்ளில கத்தி அ
“யார் சொன்ன...?”
றப்பர் கத்தியாலை தூக்கி 8 வெட்டப்பட்டது. மறுபடி அடிக்க மீன் துன அப்பிற்று. மெளனமாய் சுவரில் சிதறிய ரத் அதை துடைத்து எடுக்க நீளமாய் சிவப்
"யார் சொன்ன?” --- மறுபடி கேட்டேன்....
"ஆனா நான் நம்பவில்லை...” காட்டிக்கொடுத்தவனை. காட்டிக்கெ உடன்பாடில்லைப் போலும்...
"சரி.. ” |
"நீங்கதான் கதை எழுதுற சக்கரவர்த்தி

நிஜத்துடன் ஒத்துவராத போது விழி நம்ப மறுக்கும்...
வைத்து விட்டு நிதானமாய் நிமிர்ந்து Dன விட பத்து வயதாவது அதிகமாக மடிந்தது. அனைவரையும் 'அண்ணை' பம் சாதிக்கும் சாமர்த்திய நாடகம். கின்றேன் என்பதை புரிந்து கொண்டான்.
ம்."
ஸினா'? ஸினா'?” - 5)
இப வர்த்தி நீங்களே..?” றுகி நின்றது...
கத்தியின் பின் பக்கம் அடிக்க முள் ண்டாயிற்று. இரத்தம் சிதறி எதிர்ச்சுவரில் தத்தை பார்த்து நின்றான். 'ஈரத்துணியால் பு இழுபட்டது.
- - - - - -
காடுப்பதில் இவனுக்கு அவ்வளவு
2 என்றத என்னால நம்ப முடியல்ல..”
யுத்தத்தின் இரண்டாம் பாகம் 1 75

Page 77
“ஏன்?”
"ஒராளால ஒண்டுதான் ஏலும். அது சக்கரவர்த்தி இல்லாம இருக்க வேணு தெரியாம இருக்க வேணும்... எழுது பாக்கிறதுக்கு அமைதியாகவும் இருப் மாதிரி இருக்கு...”
"சரி...”
அவனை முழுமையாய் ஒது திருப்பினேன்...
இதற்கு எதையுமே புரிய ை இதற்கு சொன்னால் புரியாது. மனித தத்துவம் என்றால் நம்பமறுக்கும். அது சொல்லும்.
எதிரி பலமானவனாய் இருந்த இருந்தால் நேரடியாய் மோது! பலம் இ அல்லது, “இன்று போய் நாளை வா'
இடத்துக்கு ஏதுவாய் நீ மாறு. புருஷனாய் இரு. அயலவனுக்கு நண் இதுதான் வாழ்வியல் தத்துவம். ஒன்
எழுத்து ஞானம், அனுபவம் மீன் வெட்டுதல் தொழில்... எனக்கெ கிழவனின் இளம் மனைவியை ரசித் பாரக்கத்தியால் மீன் தலை வெட்டுகில காதலோ கவிதையோ மூளைக்குப் ே துடிக்கும்... மீன் வெட்டுவதும் தியான ஒன்றில் நிலைப்பித்தல்.
அந்தந்த நேரத்தில் அது அதுவாக ! களத்தில் சத்திரியனாய் இரு. சபையில் சாணக்கியனாய் இரு.
அவனுக்கு விளக்கமாய் நேற்றைய பக்குவம் இன்று இல்லாம இன்மையல்ல... கற்பித்தல். தெரி
76 1 சக்கரவர்த்தி -

தான் உண்மை. மீன் வெட்டுற நீங்கள் 5.இல்லாட்டி சக்கரவர்த்திக்கு மீன் வெட்டத் ற ஆக்கள் எல்லாம் மென்மையாகவும் பினம். உங்களப் பாத்தா இயக்கக்காறன்
க்கி விட்டு மீன் வெட்டுவதில் கவனத்தை
வக்க முடியாது. கிருஷ்ண அவதாரத்தை ரில் பல வித ரூபம்தான் கிருஷ்ணவதார » ஒவ்வொரு பிறப்பென்று மறுத்து பதில்
நால் மறைந்திருந்து தாக்கு! சமமானவனாய் ழந்தவனாய் இருந்தால் மன்னிப்பு வழங்கு! ' என்று சொல்.
பிள்ளைக்கு அப்பாவாய் இரு. மனைவிக்கு =பனாய் இரு. விரோதிக்கு எதிரியாய் இரு. ஹாய் இருந்தால் முடியாது,
அடித்து அடித்து கற்றுக்கொடுத்த ஞானம். கன்று எழுதப்பட்ட தொழில். மொட்டைக் தால் மீனுடன் சேர்த்து விரல் அறுபடும். எற பொழுதுகளில் மெல்லுணர்வு விழித்து பானால் விரல் துண்டாகி எதிர்க்க கிடந்து எம்... மனதை அடக்கி, அலையவிடாமல்
இரு.
இரு.
சொல்லியிருக்கலாம்.. சொல்லவில்லை. ல் போனதெப்படி? இல்லை- இது பக்குவம் ந்ததை, கற்றதை இன்னொருத்தர்க்கு

Page 78
உணர்வித்தல். இன்னொரு இடத்திற் ே
"பாபு...!"
* {{.
"பாபூ..."
அவன் பலமாய் அழைக்க ( கவனம் மீண்டும் அவனில் நிலைத்தது.
"உன்னட்ட இன்னொரு விசயம் கேக்க
“கேளேன்”
“நீ எழுதுற சில விசயம் உண்மையா இருக்கு”
“எந்த விசயம்?”
<<
“ஒரு நாள், அதுவும் ரெண்டோ மூணு மணி இன்னொருத்தி தன் புருஷன பங்கு ஏற்றுக்கொள்ள முடியாது... எவ்வளவு நாறிப்போன மீனைப் பார்ப்பதுபோல் அவள்
இது தமிழ் பெண்களுக்கு ம மற்றவர்களும் நெளிகின்றார்களே எ நெளிப்பு. நெளிக்காது போனால் தூரத்தி எல்லாப் பெண்களும் போலியாகவே ே
"என்ன பாபு ஒண்டும் பேசாமல் நிக்கிற
“எதச் சொல்ல...”
"புருஷனோட பழய காதலிய தன்னோட மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளமுடியுமா
"நீ ஏன் அந்த உறவ சக்களத்தி 6 விட்டுக்குடுத்து வாழ்றது தர்மம்... அது என்றது என்னப் பொறுத்த வரைக்கும் ! பிச்சை... அதில கொஞ்சத்தை இன்ெ

பாய் தெரியாது விழித்தலை தடுத்தல்.
மேய்ந்த கவனம் சிதறியது. தேய்ந்த
வேணும்”
வே என்னால ஏற்றுக்கொள்ள ஏலாம்
ரித்தியாலமோதான் கதைக்க ஒருத்திக்காக போட ஓம் எண்டு சொல்றது... சே.. அசிங்கமா இருக்கு” ன் முகம் அஷ்ட கோணலாய் நெளிந்தது.
உத்திரமே உரிய அருவருப்பு நெளிப்பு. என்று தானும் நெளிக்கிற பம்மாத்து பில் வீசப்படுவோமோ என்கின்ற பயத்தில் பானார்கள்.
மாய் சொல்லன்”
சக்களத்தியா ரெண்டு மணித்தியாலத்தில
நண்டு அசிங்கமா உருவம் பண்றாய்?
பெரிய சந்தோசமும் கூட... வாழ்க்கை இச்சை... யாரோ நமக்கு கிள்ளிக் குடுத்த னாராளுக்கு கொஞ்சத்தை குடுக்கிறது
யுத்தத்தின் இரண்டாம் பாகம்

Page 79
பிழை இல்லை. பாவம் இல்லை... நீ
"பாவம் இல்லாம இருக்கலாம்... | பொம்புளைக்கு ரெண்டு புருஷன் இரு பொஞ்சாதி இருக்கிறதும் நம்மளோட
“கல்ச்சர் என்றது ஒவ்வொரு மனுசனு வேண்டிய விசயம். நம்மளோட கல்ச். பளபளப்பா போட்டுத்து உள்ளாடைை ரகுவத்தானே லவ் பண்றா? சின்சியர் ஒரு காலத்தில என்னோட நீ உரசி பிஸிக்கல் யூனியன்' எண்டு என்னட் மனதுக்குள்ள இன்னொரு எதிர்ப்பால் இல்ல எண்டு சொல்லுபாப்பம்? ஆன போறா. ரகுவ முடிக்க ஏலாட்டி வேற என்னில கனபேர் சுத்தினவைய... அ எண்டுதான் சொல்லுவாய்... அவன் வைச்சி பெருமையா கதைப்பான். பண்ணியிருக்காய் எண்டு உனக்குத் நம்மளோட கல்ச்சர் போல்... இது எல் நாமள் சுத்தம்... நம்மளோட கல்ச்சர் நம்மளையே நாம மடையன் ஆக்கி தெரியல்ல. உன்னைப்பத்தி எனக்கு ! பற்றி என்னட்டையே சொல்றாய் ஏன்... எல்லாத்தையும் விட மனிசனோட உ சக்தியும் அதிகம். ஒவ்வொரு தனி சேரேக்கதான் நம்புறது இல்ல. ஏற்று.
அவள் முகத்தில் ஈ ஒன்று 2 பின் பக்கத்தை பார்த்தாள். சில வில் பார்த்தாள். அவள் மனதுக்குள் உண்டா
"தனி ஒரு ஆள் உண்மையைச் உண்மையாத்தான் சொல்றாள் எண்டு ஏற்றுக்கொள்ளாது. கல்லெடுத்து எறி மாதிரி எல்லாம் கதைக்கும். என்ன எல்லாத்தையும் அசிங்க அசிங்கமா கல் எல்லாரையும் போல் நாமளும் இருந் உடைஞ்சு போறத்தவிட வளைஞ்சி குடு நல்லது."
78 ந சக்கரவர்த்தி -- -'

சால்றமாதிரி இது அசிங்கமும் இல்லை”
பிழையும் அசிங்கமும் இருக்கு... ஒரு தக்கிறதும்... ஒரு ஆம்புளைக்கு ரெண்டு
கல்ச்சருக்கு பிழை. அசிங்கம்”
க்கு உணர்வோட இயல்புலையே இருக்க சர் அப்படியா? அங்கவஸ்திரத்த பட்டுல 1 ஊத்தையாப் போடுற மாதிரி... நீ இப்ப ரத்தான் லவ் பண்றதாய் சொல்றா. ஆனா | உரசி நடக்கல்லையா? 'ஐ வோன்ட் ட கேக்கல்லையா? இப்ப கூட உன்ர ல் உடம்பு மேல விகாரமான எண்ணம் T நீ ரகுவத்தான் கலியாணம் முடிக்கப் யாரையாவது முடிப்பாய்... நான் பத்தினி, னா தான் கணக்கெடுக்கிறதே இல்லை நம்புவான். உன்ன தலையில தூக்கி
ஆனா நீ எவ்வளவு சுத்துமாத்துப் தான் தெரியும். நாம எல்லாரும்போல்... லாருக்கும் தெரியும்... ஆனா நடிக்கறம்... - சுத்தம் எண்டு தம்பட்டம் அடிக்கிறம். றெம். ஏன் அப்படிச் செய்யிறம் எண்டு நல்லாத் தெரியும். ஆனா நம்ம கல்ச்சரை ? கல்ச்சர் கட்டுப்பாடு, சம்பிரதாயம் இது உணர்ச்சியும் உணர்வும் பெரிசு. அதுக்கு மனிசனுக்கும் இது தெரியும். கூட்டமா க்கொள்றதில்லை. ஏன்...?”
உட்கார, விரட்டினாள். மெதுவாய் திரும்பி வாடி கடந்ததும் மறுபடி என் முகத்தைப் ன இம்சையை முகத்தில் பார்க்க முடிந்தது.
சொன்னால் சனம் ஏற்றுக்கொள்ளாது. 3 சனத்துக்கு தெரியும்தான். இருந்தாலும் பும். அது முடியாட்டி, கதைக்கும். கண்ட மட்டுமில்ல என்னோட பிறப்பு, வளர்ப்பு தைக்கும். இந்த அசிங்கம் எனக்கு எதுக்கு? தா பிரச்சனை இல்ல. உறுதியா இருந்து -த்து வாழ்றதுதான் நம்மளோட சமூகத்துக்கு

Page 80
-
இயலாமை என்பது இவளுக்கு இல்லாமல் எங்கும் பரவிப் போனது. இது எதிர்த்துப் போவதைவிட அள்ளுண்டு டே
இவளில் குற்றமோ குறையே இப்படித்தான் நமது பண்பாடு. என்று கற் பிள்ளைக்கும் இதுவே கற்றுக்கொடுக்கப்ப( தெரியாத மாதிரி அலையும். அலைந்துெ பேசும். போற்றும். இதில் மாற்றம் கிடை
"அப்ப காலம் பூரா இப்பிடி போலியாக6ே
“வேறவழி?”
“உன்ர புருஷனிட்ட பொய் சொல்லி வா
“தெரியாது”
“எது தெரியாது?”
“உறுத்துமா? உறுத்தாதா எண்டு தெரிய
"நான் சொல்லட்டா?”
y
LD...,
"உறுத்தாது. நம்மளோட ஆக்கள் ஒரு இப்படித்தான் எண்டு எல்லோருக்கும் தெரி சகஜம் எண்டு எல்லோருக்கும் தெரி ஒருவருக்குமே உறுத்தாது. கூச்சம் இ6 பாவத்துக்கு துணிஞ்சவனுக்கு நண்பனே
“ப்ளிஸ் பாபு. கதைக்காத எனக்கு என்ன
“ஏன்.?
“என்ன நீ பயம் காட்டுகிறாய். குழப்புறா
நிதானமாத்தான் இருந்தன். ஆனா இட் குறுகுறுக்குது. வாழ்க்கையில சந்தோச

மட்டுமல்ல ஆண் பெண் வேறுபாடு கல்ச்சர் கற்றுக் கொடுத்த இயலாமை. ாவதே இங்கு வாடிக்கையாகிவிட்டது.
ா காணமுடியாது. இதுதான் நாம். 1றுக்கொடுக்கப்பட்டுவிட்டது. இவளது நிம் அதுவும் அலையும் நாலு பேருக்கு விட்டு பண்பாடு, பத்தினி, கற்பு பற்றிப்
List g5).
வதானா?”
ழேக்க உறுத்தாதா?”
ாது.
த்தருக்குமே உறுத்தாது. எல்லோரும் யும், அதால உறுத்தாது. இது இயல்பு. யும். அதால உனக்கு மட்டுமில்ல ல்லாம பொய் சொன்னா உறுத்தாது. ா இல்ல என்ற மாதிரி.”
T(3LDIT Uul DITds déldsg.”
ய், கொஞ்ச நேரத்துக்கு முதல் நான் ப்ப இல்ல. மனதுக்குள்ள என்னமோ ஈத்த இழக்கப்போறனோ எண்டு பயம்
巽
யுத்தத்தின் இரண்டாம் பாகம் 79

Page 81
வருது.
இவளுக்கு ஸ்த்திரம் எது 6 வைத்த பற்று இவளை இம்சிக்கும். உள்ள அனைத்துக்கும் பற்றுதல் இரு ஆசை இருக்கும். வலி இருக்கும்.
அவள் நடந்துகொண்டிருப்பது கண்ணா அகன்ற பிருஷ்டமும் இவளுக்கு தனி
'றொக் இசையைப் பலம
அவளைக் கடந்து வேகமாய்ப் போனது பார்த்தாள். தூரத்தில் போய் அது ம6
LDSb5-j - 1993
80 து சக்கரவர்த்தி

ான்று புரியும். ஸ்த்திரம் அற்றவைகளில் காலம் முழுவதும் இம்சிக்கும். ஆறறிவு தக்கும். அழிந்து இல்லாது போகும் வரை
டி வழியாய்த் தெரிந்தது. மெலிந்த தேகமும்
அழகு.
ாய்ப் பாடிக்கொண்டு திறந்த ஜிப் ஒன்று து. நின்று அவசரமாய் ஆசையாய் அதைப் றைந்துவிட்ட பின்னரும்.

Page 82
'நீங்கள் அறிந்ததுண்டா பேனாகூட சரியாய்ப் பிடிக்கத் தெரியாத என்கைகளில் எறிகுண்டுகள் திணிக்கப்பட்டதை
ராத் :
- - - - -
- - -
-- - - -
- - - - -
AWAY
- டசடத்த ஒலியுடன் கிளைகள் 6 போதிமரம் உடைந்து சித மைனாக்களும் இன்ன பிற பட்சி சாதி இறக்கைகள் சிதறியும் செத்துச் சிதறு
வெள்ளைவெளேரென அழகாய் சிதறிய கற்குவியலாய்ச் சின்னாபின்னம் பிக்குகளையும் இடிபாட்டிற்குள் இருந் தனித்தனியாய் மீட்டெடுக்க மூன்று நா

2"---
--
5, புல், > புல்லுக்கட்டு
ஒடிந்து விழும். ஐந்நூறு ஆண்டு கால அம். பசும் கிளிகளும் குயில்களும் களும் உடல் கருகியும் பொசுங்கியும்
அமைதியாய் இருக்கும் இந்த 'போஹா' ய் உதிர்ந்து குவியும். தேரோக்களையும் து கை, கால், தலை, இதயம் என்று ட்கள் வரை செல்லலாம்.
யுத்தத்தின் இரண்டாம் பாகம் 1 81

Page 83
அதிஸ்டலாபச்சீட்டுக்காரன்நடைபாதைவியாபாரி- பிச்சைக்காரன்
4:15 பஸ்நிலையம் நிரம்பி- நெரு நான்காயிரம் பேராவது கூடியிருக்கும் ே இதே நேரம்.
இந்த வழமை நாளை ஏ; மூலைவீட்டில் எல்லாம் மார்பில் அடித்
அப்பனை இழந்த குழந்தை இழந்த குடும்பம் அழுகை ஓசை திை
இவ்விடம் இரத்தச் சதுப்பு நி உடலாய் யாருமே இறக்கமாட்டார்கள். 6 தனித்தனியாய்க் கிடக்க சிதைந்து சா
சிதறி- சிறு கோடாய் ஓடி ( மனிஷ இரத்தம். தெருநாய் மனிஷ இ
பேயும் நரியும் இடுகாட்டுக் போட்டுக்கொள்ளும்.
இறந்தவன் இறந்துபோகபறிச்சுக்கோ எனக் கிடப்பவனும் - இருதயத்தையோ ஈரலையோ இழந்த வெளித்தள்ள- உயிருடன் உள்ளவனு
ஒலம் இவ்விடத்தே ஈனசுரம ஊளித்தீ போன்றதொரு பிரல்
எழுநூற்றி ஐம்பது பேர் மு கொல்லப்படவேண்டும். கும்பல் குட பலவந்தமாய் இயற்கைக்குப் புறம்பா உயிர்த்திருட்டு செய்ய வேண்டும்.
இது கொடுமையல்லவா? ஜென்மங்கள் எடுத்து பாவத்தை தொ6 எப்படி நான் உடன்பட்டேன். கடவுளே. கட்டளைக்கு என்னை உட்படுத்தாது எ6
| " کار
82 - சக்கரவர்த்தி

றம்புட்டான்காரன். பிக்பாக்கட்காரன்பயணி இன்ன பிற மக்கள்.
சலில் பிதுங்கும். குறைந்தது மூவாயிரம் நரம் திட்டமிட்டபடி கட்டளைப்படி நாளை
து? எங்கெங்கோ மூலைக்கிராமத்தில்து அடித்து ஒப்பாரி வைப்பார்கள்.
கணவனை இழந்த மனைவி- தலைவனை ச தோறும் தெறிக்கும்.
லெமாய் கணப்பொழுதில் மாறிடும். முழு கையும் காலும் தலையும் ஈரலும் இதயமும் வார்கள்.
ஓடையாய்மாறி சாக்கடையில் கலக்கும் ரத்தம் நக்கி சுவைத்துப்பார்க்கும்.
குள்ளும் சுடுகாட்டுக்குள்ளும் கூய்.
அரையும் குறையுமாய் இழுத்துக்கோ கையையோ கண்ணையோ அல்லது வனும் குடல் மட்டும் வயிறு பிளந்து |ம்.
ாய் கசிந்து கசிந்து. எதிர் ஒலிக்கும். Tulib
தற்கொண்டு ஆயிரம் பேர் வரைக்கும் ம்பலாய் உயிர் பறிக்கப்படவேண்டும். ய் மனிஷ தர்மங்களுக்கு விரோதமாய்
மகா பாவமல்லவா? எத்தனை கோடி லைப்பது? இக்கொடும்பாவ கட்டளைக்கு
பகவானே. எனைக்காப்பாய். இப்பாவக் னைத்தடுத்தாட் கொள்ளயோ. தெய்வமே

Page 84
தெய்வமே. எனைத் தடுத்தாட்கொள்ளா
அர்ச்ஜ"னா!
போர் புரிதலும் நாட்டைக் கடமை. நீ உன் கடமையைச் செ உன்னை வந்தடையும். யுத்தம் இ கவலைகொள்ளாதே. பலன் என்னும்
'கிணி. ரென ஒலியை உண்ட பாத்திரத்தில் ரூவாய் நாணயம் உருண் எதிர்க்க அவள் தெரிந்தாள். என்னைப் ப
எல்லா நாளும் இதே நேரம் ே கும்பிட வரும் இச்சிறுமிக்கு என் வேசம் மீது.
“பிறவி ஊமையான இவனுக்கு முடியாத காரணத்தால் இவனுக்கு தான
கெந்தலப்பிட்டிய விதானையார் தொங்கும் பிச்சைக்கார அட்டையைப் ட முதலாய் தானம் பண்ணிய சிறுமி நாள் சிறுமியைக் கூடக் கொன்றுவிடுவேன். தான் எங்கேனும் நிற்பாள்.
இவள் எனக்கோ என் இனத்துக் கூடும்? வேற்றினம் என்கிற ஒன்றைத்தவி வயதைக் கூட எட்டாத இந்தச் சிறுமியும் அதிலுள்ள நியாய தர்மங்கள் தான் தாக்கவில்லை. தாக்கப்படும் இடத்தில் இ இவளும் சிதைந்து சாவது என்பது தவி
‘மஹே. அம்மே." அவள் தான் சத்தமிட்டுக் குப்புற இடைவெளிவிட்டு ஒருத்தன் வேகமாய் (
பாத்திரத்தினுள் கிடந்த காசைப் சிறுமியை வேகமாய் நெருங்கினேன் செயி: இரத்தம் கசிந்தது. முழங்கால் முழங்ை

யோ. தடுத்தா.
காப்பதும் மீட்பதும் சத்திரியன் ப்யாது ஒதுங்கும் பட்சத்தில் பழி டல் உன்கடமை. பலனைப்பற்றி அழிவுக்கு நானே பொறுப்பானவன்.
ாக்கிக்கொண்டு நெளிந்த அலுமினியப் டோடியது. சிந்தனை மெல்லக்கலைய ார்த்து புன்னகைத்துவிட்டு நகர்ந்தாள்.
பாஹாவுக்கு வரும் சிறுமி, புத்தரைக் புரியாது. எத்தனை இரக்கம் தான் என்
எத்தொழில் செய்து பிழைப்பதற்கும் தர்மங்கள் பண்ணுங்கள்”
ன் கையொப்பத்துடன் என் கழுத்தில் ார்த்து- என் வேசம் தெரியாது முதல் ர் தோறும் பொய்யனுக்கு ஈகையிடும் நாளை இதே நேரம் இந்த இடத்தில்
கோ என்ன துரோகம் பண்ணியிருக்கக் ர இவளது பாவம் தான் என்ன? பருவ ) கொல்லப்பட வேண்டிய தேவையோ
என்ன? இவளைக் குறி வைத்துத் வளும் இருக்கப் போகிறாள். ஆதலால் ர்க்க முடியாதது.
விழுந்தாள். அதிர்ந்து பார்த்தேன். ஓடி மறைந்தான் சங்கிலித்திருடன்,
பொறுக்கி பையுள் போட்டுக்கொண்டே
ன் இறுக்கி அறுபட்டதில் கழுத்தோரமாய் கயிலும் கூட சிராய்ப்பும் இரத்தமும்.
யுத்தத்தின் இரண்டாம் பாகம் = 83

Page 85
கீழே கிடந்தவளை நிமிர்த்தி தடவி வந்தது. இரத்தம் பார்க்கப் பயம் 6 வந்தது. மண்டையின் உட்புறமாய் 6 அமர்ந்தேன்.
என்னால் எப்படி முடியப் (BL
(UDçUTgl.
அர்ஜ"னா!
இரத்தம் பார்த்து மயங்கா கண்களும் கொலைகளுக்கஞ் எழுந்திரு. சத்திரிய இலக்கணத்ை - எழுந்து போர் செய்!
தலையை நிமிர்த்தி கண்க நெரிசலுக்கும். வாகன விரைதலுக்கும் இருந்தான். அலுமினியப் பாத்திரத்ை நெருங்கிப் போனேன். நான் வருவது: னான்.
குமார் சாமர்த்தியசாலி. அ மேலாய் யாராலும் இன்னாரென அ ஒன்றிப்போன போகும் சாணக்கியன்
முதலில் அவனைப்பார்த் கோட்டையில் ரெயின் நின்றதும்அப்பிற்று. கசகசத்த முகத்தை விறைப்பாய் மெலிந்த தேகத்துடன் சி.ஐ.டி. யோவென நினைத்துத் திை போனது.
'அர்ஜுன் என்றான். மனசு லேசாகி சொல்லப்பட்ட குமா சிரிக்க மறுத்தான். மறுபடி 'சைனை
நான் குமார்
எனக்கு முதுகுகாட்டிச் சொல்லிக்கொ வந்தது. அவனைப் பின் தொடர்ந்து அவனைப் பின் தொடர்வது என்கL பின் இரண்டு மணி நேரம் தொடர்ந்ே
84 ப சக்கரவர்த்தி

தூசு தட்டிவிட லேசாய் கிறுகிறுப்பு பந்தது. படபடப்புடன் கூடிய மயக்கம் பியர்த்தது. அவ்விடத்தே நான் மெல்ல
ாகிறது? இல்லை. என்னால் முடியவே
த மனமும்- சாவு பார்த்து கலங்காத சாத நெஞ்சமும் உடையோனே தை இழிவு நிலைக்கு உள்ளாக்காது
ளைக் கசக்கிவிட்டுப் பார்த்தேன். சன அப்பால் ஒரமாய் குமார் நிண்டுகொண்டு த கமக்கட்டுக்குள் இறுக்கிக்கொண்டு கண்டு முன்னோக்கி நடக்கத் தொடங்கி
சாத்திய ஒற்றன். பத்துவருடங்களுக்கு }டையாளம் காணப்படாது சூழலுடன்
.
த அன்றே விபரீதமாய் இருந்தான். கரியமிலக் காற்று முகத்தில் லேசாய் துடைத்துவிட்டு நிமிர்ந்து பார்த்தேன். எதிர்க்க ஒருத்தன் நிற்பது கண்டுகக்க- 'சைனைட்’ நினைப்பு மனசுக்குப்
இவனென புரிந்து சிரித்தேன். அவன் ட்' மூளைக்குப் போனது.
ண்டே நடக்கத்தொடங்கினான். நம்பிக்கை இடைவெளிவிட்டு நானும் நடந்தேன். மை. கேள்விகள் எதுவுமின்றி அவன் தன்.

Page 86
மூளை இடங்களைப் பதிவு செய்யத் போஹா சந்தி
விகாரை.
பஸ் நிலையம் இன்டிக்கா போஸ்ட் ஆபீஸ் - பீப்பிள்ஸ் பார்க் ஐந்து இலாம்படிச் சந்தி.
ஆறு முறை இவ்விடத்தே சுற்றி முடிய
நாலு பெடியள் சுவிஸ் போக நிக்கிற
கிசுகிசுப்பாய் சொல்லிவிட்டு தொலை முன்னோக்கி போகும் குமாரைப் பின்
போஹாச் சந்தியில் இருந்து ஐ நகர்ந்தவன் ஆட்டுப்பட்டித் தெருவுக்கு நின்றான். என் கழுத்தில் கிடந்த பி கழட்டி அவனிடம் கொடுத்தேன். தோள்
"நேற்று இரவு மண்டி வந்திது. நா6ை நடந்துகொண்டே சொன்னான். நான்
“எந்தப் பிரச்சனையும் இல்லத்தானே.”
“இல்ல”
“லொறி எடுக்கிறதில”
“இல்ல. முதல்லயே சொல்லிற்றன்.
குமார் முன்னேயும் நான் பி. சிலாபத்தில இருந்து
“காருண்’ன “கெந்தல'யில கொண்டு கொண்டுவர ஏலாது. பாலத்தில ரெ காக்காத் தீவில கொண்டு வந்து 6 பக்கம் தோணியில் வைச்சித்தான் ெ
நாளைக்கு பதினொரு ம கோவிலடியில நிக்கிறன். அந்த இடத்

தொடங்கியது.
நெருங்கி வந்து விலாசம் கொடுத்தான்.
ாங்கள். பார்த்து. ந்து போனான். தொடர்ந்தேன்.
ந்து இலாம்புச் சந்திவரை முன்னோக்கி ள் புகுந்து மூத்திர முடக்கில் ஒதுங்கி Fசைக்கார அடையாள மட்டையைக் பையுள் புகுத்திக்கொண்டான் குமார்.
ாக்கு கட்டாயம் முடிச்சிட வேணும்” சுரத்தில்லாமல் பின் நடந்தேன்.
பிரச்சின இல்ல. லொறி கிடைக்கும்.”
ன்னேயும் தொடர்ந்து நடந்தோம்.
வந்து வைச்சிருக்கன் களனி பாலத்தால ண்டு பக்கமும் செக்கிங், மட்டக்குளி வைக்கவேணும். அதால முகத்துவார
5ாண்டுவர வேணும்.
ணிக்கு முகத்துவாரம் மாரியம்மன் பக்கு லொறியோட வந்தாச்சரி. மூத்திர
யுத்தத்தின் இரண்டாம் பாகம் = 85

Page 87
முடக்கால் திரும்பி- செக்கடித் தெரு இருக்கும் தேனீர் கடைக்குள் போய் கொடுத்துவிட்டு தொலைந்து போனான் இருக்கும் வாளிக்கிணற்றில குளிக்
“என்ன அண்ண, எப்ப பிளைட்டாம்? நாள் தோறும் அறைக்குப் போனதும் யாராச்சும் ஒருத்தர் கேட்பார்கள். இை “நாளைக்கு”
பொய் சொன்னேன்.
“நாளைக்கா? வசந்தனுக்கு அதிர்ச்சியா சந்தோசமா
“ம். சிங்கப்பூருக்கு”
‘அண்ண குமார நம்பாதீங்கோ. நா எண்டு ஆறுமாதம் அலைஞ்சுபோட்டு
“பாப்பம் இந்தா சாப்பாடு. செக்கடித்ெ கள்?
“எதுக்கண்ண நீங்க வாங்கி வந்தனி கீதாகுமாரசிங்காவோட சலூனுக்கு டே
“எதுக்கு அங்க?"
"வேற எதுக்கு சரக்கடிக்கத்தான் சுத அனுப்பினவ. அத எடுத்துக்கொண்டு
“நீ ஏன் போகையில்ல.?”
“போக விருப்பம்தான். என்னவோ உ ஏலா எண்டு சொல்லிப் போட்டு படுத் தெளிவாய் இருந்தான் வசந்தன்.
சோற்று பார்சல்களை அை
களைக் கூட மாற்றாது மல்லாக்கப் ட இருட்டிற்று.
86 - சக்கரவர்த்தி

போய் மைலன் தியேட்டர் மூலையில் “பை”யை கொண்டு வந்து என்னிடம் குமார். கொச்சிக்கடை சத்திரம் தாண்டி
நடந்தேன்.
இதே கேள்வி.
று வசந்தன் கேட்டான்.
தெரியவில்லை.
ங்க எல்லாரும் சிங்கப்பூர் மலேசியா வந்தனாங்கள்.”
தருவில எடுத்த நான். எங்க மத்தவங்
பள். அவங்கள் லிபர்டி பிளாசாவுக்கு ாட்டாங்கள்.”
னோட அக்கா சுவிஸ்ல இருந்து காசு போட்டாங்கள்.”
றுத்தலா இருந்திச்சி. திட்டன்.”
ற மூலையில் வைத்துவிட்டு ஆடை டுத்து முகட்டை வெறித்தேன். மனசு

Page 88
பாவம் இந்த பையன்கள் வசந் கனவுகளையும் லட்சியங்களையும் சுமந் தப்பி வந்ததே பெரும்பாடு. அடைக்கல சேருவது அதைவிடப் பெரும்பாடு. இவை எதிர் நோக்கப் போகும் பிரச்சனைகள்
நான் தவறவிட்ட தடயங்களை வைத்து எங்கே தங்கியிருந்தேன் என்பவற்றை
எதுவுமே அறியாது விழிவிழிuெ இரத்தப் பூச்சு அறையில் இரத்தம் செ
"கனடா போகவந்தவன் இப்ப சிங்கப்பூ என்பதை தவிர வேறு என்ன சொல்ல
நேற்று ராசன் கேட்டான்
"ஏன் அண்ண. உங்க குடும்பத்திலதான் பேசாம இயக்கத்தில சேந்திருக்கலாம்த போய். நீங்கள் யாருக்கு உழைச்சிக் கு அக்கா, தங்கச்சி எண்டு ஏகப்பட்ட பிரச் சிரித்துவிட்டு அவனது சாறனுக்கு சோப்பு
“வேண்டாம் அண்ண. உங்கட உடுப்ப சரி. இந்த வேலயஞம் செய்ய வேணுே சத்தி எடுக்க நீங்கதானாமே அள்ளினது இப்பிடியெல்லாம் செய்யறியள்?” புன்னகைத்தேன்! என்னால் என்னென்ன போகும் இவர்களுக்கு என்னால் என்ன உறுத்தும் என் மனது எப்படிப் புரியும்
"இல்ல எண்ட தம்பிமார் மாதிரி இரிக்கி
“உங்களுக்கு எத்தின தம்பி? ரெண்டல்
“ம். ரெண்டு தம்பியும், ஒரு அண்ணனு
“எல்லாரையும் தான் கொண்டவங்கள்?
ராசன் கேட்க நான் இறுகிப் போனேன். அந்த நாள்

தன், ரவி, இளங்கோ, சுதன் எத்தனையோ து திரிவார்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து ம் தரும் ஏதேனும் ஓர் நாட்டுக்கு போய்ச் யெல்லாவற்றையும் விட நாளை இவர்கள் சொல்லி மாளாதவைகளாக இருக்கும்.
நான் யார் எந்த இடத்தை சேர்ந்தவன். எப்படியும் கண்டுபிடித்துவிடுவார்கள்.
பன விழிக்கும் இவர்கள் நாலாம் மாடியில் ாட்ட சொட்ட.
ர் போட்டான்”
முடியும் இவர்களால் என்னைப்பற்றி.
ஒருத்தரும் இல்ல எண்டு சொல்லுறியள். ானே. எதுக்கண்ண வெளிநாடெல்லாம் டுக்கப் போறியள்? அவங்களுக்குத்தான் Fசினைகள். உங்களுக்கு அப்பிடியே.” ப் போட்டேன். ஓடிவந்து பறித்தெடுத்தான்.
மட்டும் தோய்ங்க. டீ போட்டுத்தர்றியல் மே. நேற்று இளங்கோ குடிச்சிப் போட்டு து எண்டு சொன்னார்கள். ஏன் அண்ண
வோ கொடுமையெல்லாம் அனுபவிக்கப் செய்ய முடியும் இவைகளைத் தவிர
இவர்களுக்கு.
யள். அதுதான்”
33
)லே.
Iம் ஒரு அக்காவும்
யுத்தத்தின் இரண்டாம் பாகம் - 87

Page 89
அந்த நாளுக்கு அப்புறம்தான் நான் இ ஏறி ஆற்றைக் கடந்து ஓடி என் ஊ( இரத்தம் கொட்டிய சோலையாகியல்ல
வெள்ளைக்காரன் கூட இடி ஈஸ்வரர் கோவில் தடயம் கூட இல் தவழ்ந்து ஆடி, பாடி வளர்ந்த தெருக்க மாமன், மச்சான், சித்தப்பா உட்பட அயலவர்கள் எண்ணுாற்றி பதின்மூன் வாழுகின்ற கொக்கட்டிச் சோலையில் சுட்டும் எப்படியோ கொன்று குவித்துவி சிவந்து கிடந்தது. அன்றுதான் நான் மரத்தது மனது. பாளம்பாளமாய் பிளந் லேசாய் சிலிர்த்தது மனசு.
அமோனியா வாடை குப்பென்று அடித் கபூர்க்காவுக்கு என்னை பார்த் என் தலை தடவி, தோளோடு அணை
"இசுமயிலு டெலிபோன் செஞ்சாந்த கொழும்புக்கு வாறயளம் எண்டும் ஒங்க வேணும் எண்டு. ஆயத்தமா வெச்சிரு சொல்லிக்கொண்டே காக்கா லொறித்
“றைவர் இல்லாம எப்பிடித் தம்பி 2 வேணும் எண்டா நம்மட றைவர கூட்டி கபூர் காக்கா ரொம்பவும் அக்கறையுட
“இல்ல காக்கா நான் கொண்டு போவ காக்கா என்கை பிடித்து கண்கலங்கில்
“இந்த வாழக்க போடியார் போட்ட பிக் இப்பயும் முட்டாசிதான் தம்பி யாவா பொஞ்சாதி பதினொரு புள்ள ஒங்க வா தம்பி. அறுநூறு மூட்ட நெல்ல நம்பிக் தம்பி. என்ன கயித்த காலமோ. ஹ அழிச்சிப் போட்டானுகள். நீங்க கொன ஒடன யூரியாவுக்கு பதிலா நெல்லா கு ஊட்ட கொண்டு உட்டயல் எண்டா ே
88 ப சக்கரவர்த்தி

றுகிப்போனேன். பள்ளிவிட்டு தோணியில் நக்கு போனபோது கொக்கட்டிச்சோலை வா கிடந்தது.
க்காது திரும்பிப் போன தான்தோன்றி லாது தரைமட்டமாகிக் கிடந்தது. நான் 3ள். அம்மா, அப்பா கூடப் பிறந்தவர்கள். முப்பத்தி ஏழுபேர்கள் என் ஊரவர்கள். து பேர். ஆயிரத்தி இருநூறுபேர் மட்டுமே ) எண்ணுற்றி ஐம்பது பேரை வெட்டியும் பிட்டார்கள். அடையாளம் தெரியாது ஊர் இறுகிப்போனேன். அதற்கு அப்புறம்தான் த நிலத்தில் இன்று லேசாய் தூறல் விழ
தது. த உடனேயே கண்கலங்க தொடங்கிற்று. த்துக் கொண்டார்.
ம்பி காத்தான்குடியில இருந்து. நீங்க ளுக்கு ஐநூறு மூட்ட் யூரியாவும் லொறியும் நக்கன் தம்பி.”
திறப்பை நீட்டினார். வாங்கிக்கொண்டேன்.
ஊருக்கு கொண்டு போகப் போறயள். பத்து போங்க தம்பி” ன் கேட்க- நான் மறுத்தேன்.
ன். காசு எவ்வளவு எண்டு சொன்னா..?” OTTT.
*ச தம்பி, ஒங்க வாப்பா இல்லாட்டி நான் ரம் செஞ்சித்து இரிந்திரிப்பன். ரெண்டு ப்பாட்ட ஒரு நாள் செல்லிக் கொளறுனன் குடுத்தாரு எனக்கு விசுவாசம் இரிக்கி 3றாமுல பொறந்ததுகள் குடும்பத்தோட ன்டு போங்க தம்பி. வெள்ளாம வெளஞ்ச டுங்க தம்பி லொறிய காத்தான்குடியில பாதும்.”

Page 90
கபூர் காக்காவை நினைவு தெரி காத்தான்குடியில் இருந்து கலர்கலராய் செய்தவர். அப்பாவின் உதவியால் நெ ஐந்து லொறி காத்தான்குடியில் சொ சாகின்றவரை ஊரில் பிரச்சினை ஆரம்ட் தனது நன்றியை தெரிவித்து செல்பவர். என்னால் அழிந்து உருக்குலைந்து போக இடையில் எத்தனை வேறுபாடு. நன்றி யூரியாவும் லொறியையும் தந்தனுப்பும் பிரதி உபகாரம்தான் என்ன? சித்திரவதைசொத்து பறிமுதல் சிறை அல்லது மரணம்.
சிதைந்து சிதறிக்கிடக்கும் ெ இன்னாருடையது என்பதை ஆறு மணிக்கு என்ன? முதலில் இரத்த மூட்டையாக்குவா விழிவிழியென விழிக்கும் கபூர்காக்கா
உனக்கும் இத்தனைபேரின் என்றால் என்ன சொல்வார். என்மேல் சா சொல்ல முடியும்?
பாவம் கபூர்காக்கா, மிட்டாய் வி இப்போதுகூட இது எதுவுமே நடக்காமல் இருப்பவன். குமாரைக் கொன்றுவிட்டால் பிச்சைக்கார வேசத்தையே வழமையாக்
குமார் இறுகிய முகத்துடன் கோவில் முன் நின்றான். அவன் முகம் கிரகவாசியின் இயல்புடையோன் போல் ஆ என்பதே இல்லாது இருப்பவன். எத்தை
லொறியை அவன் அருகே நிறு அதன்படி ஒட்டினேன்.
“ஏன் லேட் நான் பயந்திட்டன். இரவும் முடிச்சிடச்சொல்லி.”

ந்த காலம் தொட்டே எனக்கு தெரியும். மிட்டாய் கொண்டுவந்து வியாபாரம் ல் வியாபாரியாகி கொழும்பில் கடை, ந்து என்ற ஏகப்பட்டவைகள். அப்பா க்கும்வரை வீட்டுக்கு அடிக்கடி வந்து அப்பாவால் வாழ்வு பெற்றவர் இன்று கப்போகின்றார். அப்பாவுக்கும் எனக்கும் விசுவாசத்திற்காய் ஐநூறு சாக்கு மனிதனுக்கு நான் செலுத்தப்போகும்
லாறியின் இலக்கத்தை வைத்து இது
முன்பாய் பிடித்துவிடுவார்கள். அப்புறம்
ர்கள் பின்னர்தான் கேள்வி கேட்பார்கள்
என்ன சொல்வார்?
கொடிய சாவுக்கும் என்ன சம்பந்தம் பம் இடுவதைத் தவிர அவரால் என்ன
யாபாரியாகவே அவர் இருந்திருக்கலாம். தடுக்கலாம் குமார் மட்டுமே இடையில் .? கொன்றுவிட்டு நாள்தோறும் போடும் கிவிட்டால்?
நின்றான். முகத்துவாரம் மாரியம்மன் ) எப்போதுமே அப்படித்தான் வேற்றுக் }வன் செயற்பாடுகள், சிரித்தல் உணர்ச்சி
ன கொடுமைகளை அனுபவித்தானோ.
புத்த ஏறிக்கொண்டு சைகை காட்டினான்.
போன் வந்தது. கட்டாயம் இண்டைக்கு
யுத்தத்தின் இரண்டாம் பாகம் 89

Page 91
{¢
“காக்கா நல்லா தெரிந்தவரு குடு சரி.. 'காருண்' எங்க?”
“மட்டக்குளி போறவழியில் சந்தியில ஓட்டினேன்.
"இனித்தான் கேன்ல வைக்க வேணு
“இல்ல இரவே நான் இறுக்கிட்டன். 6 கண்போடம் மட்டும் எட்டுக் கிலோ. கொஞ்சம் லேசா மிக்ஸ் பண்ணிய வச்சிருக்கன்.” பேசுவதை நிறுத்திவிட்டு மெதுவாக
பிரதீபா மண்டபம் தாண்ட விற்பவர்களை தாண்டி ஓரமாய் லொ அவன் மட்டும் லொறியை விட்டு இறங்க என்றுவிட்டு மீன் வியாபாரிகளுடன் நிமிட பேரத்தின் முடிவில் இரண்டு மூட்டையின் மேல் ஏற்றிவிட்டு பெருவி தொலைந்து போனான் பாவி.
ஆயிரம் பேரின் வாழ்க்கை , போதும் பாழ்வெளியில்... கடல் முற்றத்தில்... ஆற்றின் கரையில்... புல் கூட கருகாவண்ணம் என்னால் (
அர்ஜூனா!
நீ உன் போர் கருவியை நழுவ 6 போனாலும், வேறு ஏதேனும் வ தீர்வேன். இவர்கள் எல்லோரையும் உடலை கீழே விழுத்த மட்டுமே கீழே விழுத்து.
லொறியை ஸ்ராட் பண்ணத்தொடங்கி
( ழகரம்' - 1997)
90 1 சக்கரவர்த்தி

பக்கதை கதைக்கத் தொடங்கித்தாரு.
திரும்பி நேரா”
மா? இல்லாட்டி வச்சே இருக்கா?”
மாத்தம் பதின்மூணு கிலோவுக்கு மேல... ஜல்டின் ஐஞ்சுகிலோதான். டாலுவினும் ருக்கன். ஒண்டுக்கு ஆறா டிக்னேட்டர்
ஓட்டும்படி குமார் சைகை காட்டினான்.
2 சேர்ந்தாண்டி, தெருவோரமாய் மீன் றியை நிறுத்தினேன். அவன் சைகைப்படி கிக் கொண்டே என்னை இறங்க வேண்டாம் சிங்களத்தில் பேரம் பேசினான். ஐந்து கூடை மீன் லொறியின் பின்புறம் யூரியா பிரலை உயர்த்திக் காட்டினான். அப்புறம்
இப்போது என்கையில். நான் நினைத்தால்
முடியும்.
பிட்டாலும், இவர்களை நீ கொல்லாது நியில் நான் இவர்களை கொன்றே நான் ஏற்கனவே கொன்றாகிவிட்டது. 5. போ. போய் அவர்கள் உடல்களை
னேன்.

Page 92
பனி கொட்டலும்- கொட்டிய ப
பபட்டு உருகலும் வேடிக்கைய குறியீடா?
“சொல்லு; என்ட பிரச்சனைக்கு ஒரு முடியும். நீ கதை எழுதுறவன். கதையி முடிவு எடுக்கிறாய். உன்னை நம்பித்த என்ர வாழ்க்கைக்கு ஒரு முடிவு சொல்
கண்ணாடி ஜன்னலில் இருந்த பார்த்தேன். அவன் பார்வை வெறித்து அவை வெறித்தன...

--------
ਵਿਵਰਤਕੇ ਜਾਣ ਦੇ 15
ਰ, ਉਲੂ ਸਤ ਨੂੰ ।
-----
----
மரைசு
னிகொள்ளலும்- அப்புறமாய் உஷ்ணம் ா? இல்லையேல் எதுவேனும் தத்துவக்
முடிவு சொல்லு... ப்ளீஸ்... உன்னால ல எவ்வளவோ பிரச்சனைக்கு நீ லேசா ன் வந்திருக்கிறன். உன்னால முடியும் லு...
என் பார்வையைத் திருப்பி சீதாராமனைப் க் கிடந்தது. நிலைகுற்றி என்னையே
யுத்தத்தின் இரண்டாம் பாகம் 1 91

Page 93
“ஒளிபடைத்த கண்ணினாய் வா.வா. உறுதிகொண்ட நெஞ்சினாய் வா.வா சீதாராமனின் அப்பா இவனைப் பார்த்து கைபிடித்து களுதாவளைப் பிள்ளையார் தெருவுக்கோ அழைத்துப்போய் வேடிக்
"அன்னா போகுது பாரு. அதன் கப்ட
"கடலுக்குள்ள, அங்க தூரத்தில் ஆரு
"உஹிம். அது தண்ணியில ஒடுறது
"அது எங்க போகுது?”
“சிங்கப்பூருக்கு." சின்னக்காலத்தில் அப்பனும் பிள்ை பேசியிருக்கக்கூடும். நெஞ்சம் நிறைந்த கனவுகளோடு கொடுத்திருக்கக்கூடும், இவன் அம்மா. இழந்த நெஞ்சினையும் இவன் அப்ட அவர்களால் என்ன பேசத் தோன்றும்
“என்ன மண்ணாங்கட்டிய யோசிக்கிற புத்திஜீவியான உன்னால் முடிவு செ சீதாராமன் பார்வையை மாற்றாது அ விரட்டினான். விழி ஓரங்களைச் சுற் மாத்திரம் அகன்றும், சில சமயம் சுரு
"உன்னோட வாழ்க்கை நீயாக உ எடுக்கவேணும். நல்லா இருந்தால் ம
சீதாராமன் இமைகளை இறுக மூடிக்ெ மெளனம் மிக அழகான, அர்த்தமான, பொழுதிலும் மெளனம் பிரச்சினைக இல்லை.
மெளனம் தொடர்ந்தது. சிறு அசைவுகூட இல்லாது ஜடமாய்
“சீதா.
92 ன சக்கரவர்த்தி

..6) T...
.வா.” எப்போதேனும் இப்படிப் பாடியிருக்கக்கூடும். ா கோவிலுக்கோ களுவாஞ்சிக்குடி கடைத் க்கை காட்டியிருக்கலாம்.
த
பல்.
ந ரோட்டுப் போட்டது?
நீராவிக் கப்பல் அது.”
6Tuud Tul ஊர்க் கடற்கரையில் நின்று
தூரத்து நிலவைக் காட்டிச் சோறு இந்த ஒளியிழந்த கண்களையும் உறுதி ாவோ அம்மாவோ பார்க்கக்கூடுமாயின்,
நாய்? எனக்கொரு முடிவு சொல்லு. ஒரு ால்ல ஏலாதே.?” அப்படியே வெறித்துக்கொண்டு என்னை றியிருந்த கறுப்பு அரை வளையங்கள் நங்கியும் கொண்டன.
ருவாக்கின பிரச்சினை. நீதான் முடிவு றுக்கவும்தான் என்னால முடியும்.”
கொண்டான். மெளனித்திருந்தான்.
அற்புதமான மொழி ஆயினும் எந்த ஒரு ளை தீர்த்ததில்லை. தீர்க்கப் போவதும்
இருந்தான்.

Page 94
KK y
“சீத்தா.”
“ம்.ஆங்.” முனகலாக அடித்தொண்டைக்குள் சத் கிடந்தது.
“கண்ணைத்திற. கண்ணைத் திறந்து :
“வேணாம். நான் கண் திறக்கவேணாம். அனுபவிக்க முடியாது. ஐம் கோயிங் டு கண்ணைத் திறக்க மறுத்தான்.
“பயித்தியம். உளறாத, செத்திட்டால். வாழவேணும். இன்பமோ துன்பமோ அனு கண்களைத் திறந்தான் கண்கள் சிவந்து இடது கால் பெரிவிரலை, வலக்கால் படலம், விழியில் திரண்டது. வினாடிகள் கீழ் ஒரமாய் சேர்ந்தது. விழிப்படலத்தி வெளித்தள்ளப்பட்டது.
"ஆண் அழுவது வீரமோ?"
“வீரன் என்பவன் யார்?”
“இறுகிய மனதுடன் எப்போதும் கல்லா துன்பத்திலும் வெற்றியிலும் தோல்வியி மனதுடன் கல்லாக இருப்பானே, அ6 மகிழ்பவனும் கெட்டதில் கவலை கெ மனிதன்! உணர்ச்சிகளுக்கு கட்டுப் உணர்ச்சிகளுக்குக் கட்டுப்பட்ட சராசரி முடிகின்றது. இங்கு மெளனம் என்பது : பயன்படுகின்ற மொழி. ஜடமாய் அன முடியாது.அது வீரனால் கூட முடியாதது தவசிகள் கிடையாது. வீரர்கள் கிடைய சகலரும் அப்படியே."
“எது வாழ்க்கை?, எங்கேயோ குடிச்சுப்

தம் அசைந்தது. இமை மூடியேதான்
என்னப்பாரு”
சுகம் இல்லாத வாழ்க்கைய என்னால
60L.
பிரச்சினைக்கு முடிவு அதுதானா? பவிக்க வேணும். அதுதான் வாழ்க்கை” கிடந்தன. பார்வை நிலத்தை நோக்கிற்று. குதியால் மிதித்தான். மெல்லிய நீர் 1 கடந்து போக, திரண்ட நீர் விழியின் தின் கொள் அளவு காணாததால் நீர்
க இருப்பானே, அவனா? இன்பத்திலும் லும் நல்லதிலும் கெட்டதிலும் இறுகிய வனா வீரன்? ஆமெனில் இன்பத்தில் ாள்பவனும் யார்? அவன் ஒரு சராசரி பட்ட சராசரி மனிதன். சீதாராமன் மனிதன். அவனால் அழவும் சிரிக்கவுமே தற்காலிகமாய் தப்பித்தலுக்கு மாத்திரமே சையாது இருத்தல் கூட நிரந்தரமாய் து. தவசிகளால் முடியக்கூடியது. இங்கு பாது, மனிதர்கள். சராசரி மனிதர்கள்.
போட்டு விடியச்சாமம் ரெண்டு மணிக்கு
யுத்தத்தின் இரண்டாம் பாகம் 93

Page 95
எவனோ ஒரு ஆம்புளையோட வாற சொல்லு பாப்பம்?” ஜன்னல் வழியாய் பார்த்துக்கொண்ே வேறு திசையில்... அவன் முகத்தை என் உதட்டைக் காட்டிலும் கருமையா புகைக்கின்றானோ? இடது காதில் து6 மாதிரி காணப்பட்டது. கடுக்கனைக் 8 தலைமுடியில் இடைவெளிகள் அதிக கிடந்தது. முப்பது வயதுக்குள் முது இது முதுமையா? இல்லை. இது வெ
"சொல்லுடாப்பா. எப்படி வாழ ஏலும்? என்னைப் பார்ப்பதை தவிர்க்க விரு தொடர்ந்து வெறித்தான்.
“ஏன் முடியாது? முடியும். முடியிது. அந் கொண்ட சனத்தால அப்படி வாழ முடி
அப்படித்தான்.”
“எனக்கு பிடிக்கையில்லை... என்ன ப
(4
"அதெப்படி; நீ அப்படிச் சொல்ல ஏலு என் குரலை இறுக்க, முகமும் இறுகி உணரப்பட்டது... திடீரென என்னை ரே தரை பார்த்து மௌனித்தான்.
“உன் அம்மா அப்பாவோ இல்லாட்டி 6 கலியாணமா இது? நீயாகக் கட்டிக் வேணாம்டா எண்டு சொல்லியிருப்பா
அடங்கிட்டுத்தானே...” என் கோபம் நியாயம் என்பதை சீதா அவன் முகத்தை வைத்துக் கணிப்பி
பாவி... எப்படியெல்லாம் ஆ புத்தி தெளிகின்றது.
கடவுள் மனிதனுக்கு இரன பூந்தோட்டம். மற்றயது வாசல் மட்( பூந்தோட்டமா, குகைப்பொறியா வேன புத்தி. இந்த சீதாராமனின் பாழாய்ப்போன உள்ளே நுழைந்துவிட்டது.
94 1 சக்கரவர்த்தி,

பொஞ்சாதியோட எப்படி வாழ முடியும்,
- சீதாராமன் கேட்டான். அவன் பார்வை சங்கடம் இன்றி பார்க்க முடிந்தது. ப் இருந்தன அவன் உதடுகள். அதிகமாய் பாரம் மட்டும் கறுப்பு நிறத்தில் ஏதோ வடு காணவில்லை.
ம் தெரிந்தது. நரை கூட ஏகமாய் பரவிக் -மயா? ம்பல்.
ம்புகிறான் போலும். கொட்டும் பனியை
த வகையான கலாசாரம்- பண்பாடுகளைக் யும். வாழுதுகள். அதுகளோட வாழ்க்கை
ண்பாடும் கலாசாரமும்?”
ம்?”
க் கொண்டது. என் ஆத்திரம் அவனால் தாக்கினான். என்னை பார்த்த வண்ணமே
சாந்தக்காறங்களோ பார்த்துக் கட்டிவைச்ச கொண்டது. எத்தின் தரம் வேணாம்டா ர்... கேட்டியா? உடம்புத் திமிர்! இப்ப
ராமன் ஏற்றுக்கொள்கின்றான் என்பதை
டேன்.
னான். இப்போது இரத்தம் சுட்டுப்போக
சடு வழிகளை காட்டுகின்றான். ஒன்று இம் அழகாய் உள்ள குகைப் பொறி. | டும் என்பதை தீர்மானிப்பது மனிதனின் புத்தி குகைப் பொறியைத் தெரிந்தெடுத்து

Page 96
“தெரியல்ல மச்சான்... உண்மையில எ போகும் எண்டு நான் முதல்ல நினைச்சி சீதாராமன் வேதனைப்பட்டுக் கொண்டா
* "நீ ஆசைப்பட்ட வாழ்க்கை இதுதானே? நான் கேட்க, கை இரண்டையும் உயரத் கொண்டான். வியப்பாய் இருந்தது அவ.
இரண்டு கைகளையும் மெல்ல வந்து, கன்னத்துக்கு அருகே நிறுத்திக் இமை சிமிட்டாது பார்த்தான். வளர்த்த என்பதை மணந்து கொண்ட நாய் ஒரு ஈனம் கலந்த வெறிச்சென்ற பார்வை. வேகமாய் ஒடுங்கி ஒரே நேரத்தில் அவ சீதாராமனின் செய்கைக்கு அர்த்தம் புரி
இது உச்ச வலியின் செயற்பாடு சுயமாய் தன்னை தண்டிக்க, கேவல சீதாராமனைப்போல் எல்லாராலும் முடி உச்சவலியை உணர்கின்ற போது...
அடித்துக்கொண்டே இருந்தா அவனைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பார்வை இப்போது எங்கே? அந்த பேச்ச எங்கே?
"பயித்தியக்காரத்தனமான சுத்த பம்மாத்த தமிழிச்சிகள் தலையைக் குனியிறதும், போகக்கூட அவையளுக்கு ஆம்புள வே சோஷலாப் பழகவேணும். வேறுபாடு திரியவேணும். ஒண்டா இருந்து தண்ணி பொஞ்சாதியும் பாதி பாதியா பத்தவோ ஆடவேணும்...”
ஆசை ஆசையாய் கனவு கண்டு தேடிக் ! அத்தனையும் நான்கைந்து ஆண்டுக் சுட்டுவிட்டது.
தொடர்ந்து அறைவதற்கு ன

தர வாழ்க்கை இப்படி நாசம் கெட்டுப் க்கூடப் பார்க்கையில்ல."
I.
தூக்கி தலைக்கு மேலாகப் பிடித்துக் ன் செய்கை.
மெல்ல பதித்துக்கொண்டே வந்தான். கொண்டான். என் கண்களை நேராய் நாயை விட்டுப் பிரியப் போகின்றோம் வகையாய் பார்க்குமே... அதே மாதிரி கைகள் இரண்டும் அகல விரிந்தன. ன் கன்னத்தை படபடவென தாக்கின... ததது.
; சுயதவறின் உண்மையை உணர்தல், ப்படுத்த எல்லாராலுமா முடிகின்றது? யும்; இவனைப்போலவே எல்லோரும்
ன். நான் தடுக்கவில்லை. வெறுமனே அன்றைய அந்த முகம் எங்கே? அந்தப் + எங்கே? அந்த திமிர், கர்வம் எல்லாம்
த்து கல்ச்சர், நம்மளோட கல்ச்சர். இந்த ஓடுறதும், வெக்கப்படுறதும், வோஷ்ரூம் பணும். ச்சி சுத்தப் பம்மாத்து. கார்பேஜ்! - பார்க்காமல் தோள்ள கைபோட்டு அடிக்கவேணும். ஒரு சிகரட்ட புருஷனும் னும்... பார்ட்டியில கட்டிப்புடிச்சு டான்ஸ்
கண்டுபிடித்துக் கட்டிக்கொண்ட வாழ்க்கை. குள் வெறுத்துவிட்டது. உள்ளத்தை
ககள் வலுவிழந்தன. அடியின் வேகம்
யுத்தத்தின் இரண்டாம் பாகம்
0 95

Page 97
குறைந்து மெது மெதுவாய் கன் வலுவிழந்தன. கைகள் அசைவற்று, மூட்டெலும்பு க
32
"சீதா. மெல்லிய வருடலாய் அழைத்தேன்.
உடலில் சிறு அசைவு மா நிமிர்த்தினேன். நேராய் நிற்க மறுத்த
"ஏதாவது சாப்புடுறியா?”
“uፃluዘኸ?”
"த" அவசரமாய் விழி திறந்தான்.
ஒரு போத்தல் பியரை உடைத் போத்தலை எட்ட வைத்தான். இடப்பக் கசப்பாய் இடப்பக்க உதடு மாத்திரம்
"ஹொட் ட்றிங் இல்லையா?”
"இல்ல. நான் ஹொட் ட்றிங் பாவிக்
"க்ளவ்டியா இப்ப எங்க?"
"அங்கதான், மொன்றியல்ல.”
“வரேக்க சொல்லிட்டே வந்தனி?”
"இல்ல சொல்லயில்லை. சும்மா நி என்னத்துக்குச் சொல்லவேனும்? வே அவளிட்ட சொல்ல வேணும்?” பியரை எடுத்து மடமடவென்று அரைப்
“பிழைதான் மச்சான். யோசிக்காமல்
புருஷன் குடிச்சால் குடிக்காத எண்டு
96 - சக்கரவர்த்தி

த்தை தாக்கிற்று. கைகள் முற்றாக
pன்றுவிட்ட மாதிரி சும்மா கிடந்தன.
ந்திரம் தென்பட்டது. அவன் தலையை நு. கண்கள் இறுக மூடிக்கிடந்தன.
துக் கொடுத்தேன் ஒரு முடர் குடித்துவிட்டு, கக் கன்னமேடு மெல்ல மேல் எழுந்தது. புன்னகைத்தது.
கிறது இல்லை.”
ண்டவாக்கில பஸ் எடுத்து வந்திட்டன். ணாம் எண்டு போட்டு வந்தநான். ஏன்
போத்தல் காலியாகும் வரை குடித்தான்.
கல்யாணம் கட்டினது பிழைதான். ஒரு பொஞ்சாதி சொல்ல வேணும். பறிச்சிக்

Page 98
குடிக்கிற பொம்புளையோட எப்படிடா வாழ பொஞ்சாதியோட குடும்பம் நடத்திறது இப்பத்தான் தெரியுது” சொல்லிவிட்டு மறுபடி முழு பியரையும் ! போத்தலை என்னிடம் நீட்ட, வா முழுப்போத்தலைக் கொடுக்க, வாங்கி தடவினான். அறையின் தாக்கம் கன்னத்தில் வலிை
“வலிக்கிறதா?”
“ம்.! நீ பியர் குடிக்கயில்லையா?”
“வேணாம் நீ குடி!"
“எனக்கொரு முடிவு சொல்லன்”
"நீதான் முடிவு எடுக்கவேணும்”
“நான் ஊருக்கு போகட்டா?”
“போய்.?”
“தெரியல்ல. ஆனா போகவேனும் போ
“உன்ர பிள்ளை?”
“வெள்ளைக்காறிக்குப் பிறந்தது. எப்பிடி
“தப்பி ஓடப் போறாய். அப்பிடித்தானே.
“உயிரியல் விதி என்னால் எதிர்த்தாக்கு தப்பி ஓடத்தான் வேணும்.”
"ஒடு"
மறுப்பேன் என்று எதிர்பார்த்தானே என்னே பார்த்தான். பார்த்துக்கொண்டே ஐக்கட் ை பையாய் துழாவினான். கிடைக்கவில்ை
"சிகரட் இருந்தால் தா!"

றது? அசிங்கமான பழக்க வழக்கமுள்ள எவ்வளவு கொடுமை எண்டு எனக்கு
உறிஞ்சினான். உறிஞ்சி முடிய காலிப் ங்கிக்கொண்டேன். இன்னும் ஒரு ஒரமாய் வைத்தவிட்டுக் கன்னத்தைத்
ப உண்டாக்குகின்றது போலும்.
ால இருக்கு”
யும் அது பிழைச்சுக் கொள்ளும்!”
}9
தல் நடத்த ஏலாது பலயினமா இருக்கு.
வோ தெரியவில்லை, அதிர்ந்து என்னைப் பயுள் எதையோ தேடினான். ஒவவொரு ல போலும்,
யுத்தத்தின் இரண்டாம் பாகம் 97

Page 99
பெட்டியுடன் கொடுத்தேன். லைட்ட பற்றவைத்துக்கொண்டான். புகையை
“என்னட்ட சிகரட் இல்லாட்டி க்ளவ்டிய
குடுத்திட வேணும். இல்லாட்டித் திட்டு என்ர வாழ்க்கைதான். கட்டில் ஒண்டை பிள்ளையைக்கூட அவள் ஒரு நாள் - என்ர ரேண்ல பிள்ளைக்குச் சுகம் அவலட்ஷணமாகப் படுத்துக்கிடப்பால் சம்பாதிச்சு, தனியாச் சாப்பிட ஒரு தனித்தனியாகக் கொள்ளலாம். ஆனால் படுக்கவேண்டி இருக்கு. அது மட்டுந்த குடும்பம்? எனக்கு வெறுத்துப்போச்சு.' ரொம்பவும் அடிபட்டு நொந்துவிட்டான்.
குகைப் பொறிக்குள் இருந்த சகல விஷம் முழுதாய் பரவிவிட்டது. இப்ெ
பலமாய், இறுக்கமாய் என்னில் கேள் ஒரே தீர்வு. இவன் சொல்வது போல,
ஸ்நேகிதன் என்கின்ற நெருக்கம் ஒரு ப ஏதேனும் பிழை இருப்பதாய் தெரியவி
இது மனித இயல்பு. வேண்டப்பட்டவர்
அப்படியாயின் சீதாராமனின் வேண்டப்பட்ட உயிர். ஸ்நேகிதன் மடியில் தூக்கி வைத்து, முத்தமிட்டு
"இவன் அப்பன் அம்மாவை விட்டுட்டு பார்த்து எந்தப் பிள்ளையும் பள்ளியில்
“என்னுடைய அப்பா இவர். உன்னுன என்று கேட்கக் கூடும்.
பிள்ளை விழிக்கும். அம்மா போதையில் கிடக்கக்கூடும். இல்லையே கொண்டிருக்கக்கூடும். பிள்ளை தன்னிட ஆக ஆக மனது வக்கிரம் கொள்ளும்.
98 1 சக்கரவர்த்தி

ர் வைத்திருந்தான். ஒன்றை உருவி வெளியே விட்டுக்கொண்டே சிரித்தான்.
எட்ட கேட்டால் தருவாள். ஆனா திரும்பக் டுவாள். வாழ்க்கை பண்ட மாற்று என்றது த் தவிர மற்ற எல்லாமே வேறவேறதான்! நான் ஒரு நாள் பார்த்துக்கொள்ளவேணும். இல்லெண்டால்கூட கிட்ட வரமாட்டாள். ர். என்ன வாழ்க்கை சொல்லு... தனியா குடும்பம் வேணுமா? நித்திரையைக்கூட - ஒரு தேவைக்காக மட்டும் ஒரே கட்டில்ல என் வாழ்க்கையா? அதுக்கு மட்டுந்தானா
ஜந்துகளும் இவனைத் தீண்டிவிட்டன. பாழுது மீட்சி தேவைப்படுகின்றது.
ரவி எழுகின்றது. இவன் பிரச்சனைக்கு
தப்பித்து ஓடவே தீர்வு. )
க்க சர்பாய் நான் நினைத்துக் கொள்ளலில் பில்லை.
களுக்கு சார்பாய் இருத்தல் இயல்பு.
| பிள்ள? எனக்கு இன்னும் கொஞ்சம் பிள்ளை என்கின்ற சின்ன நெருக்கம். நடைபழக்கிய சில மணிநேர நெருக்கம்.
5 ஓடிட்டான்” என்று அந்த பிள்ளையை 5 கிண்டப்போவதில்லை. ஆனால்
டய அப்பா யார்?”
விடம் கேட்கும். அந்த நேரம் அம்மா பல் வேறு பிற புருஷனுடன் சல்லாபித்துக் ம் கேட்கும். விடை தெரியாது திகைக்கும். கேட்க, பார்க்க நாதி அற்று அலையும்.

Page 100
அக்கிரமம் பண்ணும். குற்றம் புரியும்.
ஆக மொத்தம், என் ஸ்நேகி விரோதியை பெற்றுக் கொள்ளப்போகின்
வேண்டாமே இது! இதை தவிர் வேண்டும்! நிமிர்ந்து பார்த்தேன். சீதாராமன் கண்கள் "சீதா”
<< )
“சீதாராமா”
64 })
“நித்திரையா? உள்ள வந்து கட்டில்ல பு சரிந்து சோபாவுக்குள் முடங்கிக்கொண்ட
"பாவம் சீதாராமன்” தவறுவது மனித இயல்பு. ஆசைப்படு அழிந்துபோவது கொடுமை. மகா கொடு
தூக்கம் வரமறுத்தது. எண்ணங்க இருந்தன.
சீதாராமன், க்ளவ்டியா, இவர் ஒன்றாகச் சேர்ந்தும் வந்தார்கள். நேரம் எட் இனி தூக்கம் வருமா?
"மச்சான் டேய்!” கால்மாட்டில் சத்தம் மெல்லிதாய் கேட்ட
கண்களைத் திறந்து பார்த்தே சீதாராமன் இருப்பது இருளில் தெரிந்தது
“என்ன நித்திரை வரயில்லையா? பசி
தரட்டா?
எழுந்து உட்கார்ந்து கொண்டேன்.
"மொன்றியலுக்கு இப்ப பஸ் கிடைக்கு

- - -
பு)
தன் மூலமாய் இந்தச் சமூகம் ஒரு
3து.
க்க முடியாதா? வேண்டும். தடுத்தாக
ள் மூடி இருந்தான்.
கம்
- - - - - -
அ - அ த
டன்." ான்.
வது பாவம் இல்லை. இவைகளால் மை.
ள், கவலைகள், ஆர்ப்பரித்துக்கொண்டே
கள் பிள்ளை மாறிமாறி வந்தார்கள். படியும் ஒரு மணியை கடந்திருக்கலாம்.
து.
கன். கால்மாட்டில், கட்டில் விளிம்பில்
க்கிதா? என்னமும் சாப்பாடு செய்து
மா?"
யுத்தத்தின் இரண்டாம் பாகம்
1 99

Page 101
ஒரு வகை அயர்ச்சி அவன் வார்த்ை புரிந்து கொள்ள சிரமமாய் இருந்தது.
"ஏன் கேட்கிறாய்?”
“நான் மொன்றியலுக்குப் போகவேணு
“ஏன்?
“ப்ளிஸ், கோ ஸ்ரேஷன்ல என்னைக் ெ போகவேணும்.”
"ஏன்?
s
மெளனமாய் தலை குனிந்தான். அது இயல்பாய் இருந்தான்.
நான்காவது பரிமாணம் - 1993
100 சக்கரவர்த்தி

தகளில் காணப்பட்டது. அதன் அர்த்தம்
9)
காண்டுபோய் விடு. நான் மொன்றியலுக்கு
இயல்பாய் இருந்தது. சீதாராமன் கூட

Page 102
“போரின் பகைப்புலம் அறியாது போர்ப்பரணி பாடும் பாட்டுக்காரர்கள் எவரோ - அவரே ஈழம் இன்னமும் எரிந்துகொண்டிருக்க முதற்காரணி என்
மிதப்பு நிலை.
கத்தரிப்பூ வர்ணக்கலவையின் ஒளி கலையாவண்ணம் மிதந்தேன். உதிர்ந்த இறகு போன்றும் - நீரில் மூழ்கு புலன் எட்டும் திசையெங்கும் கூசும் ஒலி காற்றில் கலைந்து - பின் சேர்ந்து மேக எதுவுமே இல்லை. என்வசம் எதுவுமே
துவக்கு
GESTIG
அதிகாரம்
960)L
உணர்ச்சி உயிர் என்று எதுவுமே இல்லை என்னி
 

TCLI6ir."
களின்
ашпsiыg5ец7tal7f7
வெள்ளம். ஒளிவெள்ளம் மெல்லவும்
ம் தகட்டுத் துண்டுபோன்றும் மிதந்தேன். ரியின் கசிவு, மும் அதிராது மிதந்தேன்.
இல்லை.
யுத்தத்தின் இரண்டாம் பாகம் 101

Page 103
இழப்புக்கு இத்தனை சுகம் உண்டா?
மிதந்தேன்.
மிதத்தல் முடிய தீர்ப்பு நிலையம் வரு
விசாரிப்பார்கள். விசாரிப்பின் முடிவில் கொப்பராவா என்பது முடிவாகும் சொர்க்க பாவங்களை பட்டியல் போட்டு எப்படி விடுவார்கள்.
கொலை:
கொள்ளை: ஆட்கடத்தல்: பாலியல் வன்முறை:
இனத்துரோகம். சித்திர குப்தன் பட்டிய "நான் ஆரெண்டுதெரியுமாடா?” என்று காட்டவும் கூடாது. தருகின்ற தண்ட வேண்டும்.
உர்ர்ர்.ரென்ற பேரிரைச்சலுடன் எனை
பறந்து கொண்டிருந்தது. ஒரு கணம் இணைந்து புள்ளியாய் தூரத்தே போகு
மயில்வாகனம்.முருகன் அதில்.சீச்சீ.
எத்தனை காலம் இப்படி மிதக்க நேரிடுே மரணம் சுகமானதே. பாவத்தின் சம்பள மரணம் தண்டனையா? அப்படி உணரமு சுகானுபவம் கண்டதில்லையே இந்த ஆ சுகம் உண்டா? ஆத்ம திருப்தி ஆத்ம
உடல் இழந்த பின்தானே இவ்வாத்ம
சே. இது முன்னமே தெரிந்திருந்தால் எ எத்தனையோ கொடுரம் நிகழாது இரு
மிதப்பு நிலை சீரற்று இருந்தது கூடிய இருந்தது. பூமி தெரியவில்லை. காற்று
102 ப சக்கரவர்த்தி

ம் போலும்,
ல் தேவர்களின் ஸ்நேகமா? எண்ணை 5ம் என்பது நிச்சயம் எனக்குக் கிடையாது. யும் ஏழெட்டு நரக தண்டனை தீர்த்து
ல் போடுவான். சீ. போடுவார். அவரிடம் அதிகாரம் எல்லாம் காட்ட முடியாது. னையை மனமுவந்து ஏற்றுக்கொள்ள
ாக்கலைத்து விட்டு வேகமாய் எதுவோ
துணுக்குற்று - கலைந்த நான் மறுபடி 5ம் அதைப் பார்த்தேன்.
இது பிரமை அது சட்லைற்.
மோ? இப்படியே மிதத்தல் தொடருமாயின் ம் மரணம் என்கிறார்களே அப்படியாயின் pடியவில்லையே. புவிவாழ்வில் இத்தனை த்மா. உடல் இழந்தால்தான் ஆத்மாவிற்கு திருப்தி என்கிறார்களே அது பொய்யா? ா திருப்தி என்பதைக் கண்டது.
ப்போதோ செத்துத் தொலைந்திருக்கலாம். ந்திருக்கலாம்.
பும் குறைந்தும் சிலகணம் அசையாதும் மண்டலம் கடந்து கணநேரம் ஆனாதாய்

Page 104
ஓம்ம்ம்... போன்றதோர் சங்கின் வயிற்றில் மிதப்பு நிலை முற்றாய் நின்றது.
லேசாய் பதட்டம் பரவியது. அடுத்த திக்திக்கென்றிருந்தது.
இயமரைப் பார்க்கலாம். சித்திரகுப்தனான முன்னமே சொல்லி கொஞ்ச தண்டனை அடைந்து சிவனாரையும் பார்க்கலாம். ரம்பு கூட இருக்கிறது.
1ம்
ஊதா நிறத்தின் ஊர்வலம் மெல்ல வெ என்னை மூடிக்கொள்கிறது. காற்று மாத வருகிறது. வந்தது என்னை கலை சின்னாபின்னமானேன். முயன்றேன்.
முடியவில்லை. நெடுநேரம் அது என்னை
கீழ் நோக்கி - பூமி நோக்கி கணப்பெ நிலத்தில் இருந்து மூன்றடி உயரத்தில்
தொடமுடியவில்லை.
பூமியில் நடப்பவையாவும் தெரிந்தது. துவக்கு சிறுவர்கள் துவக்கு மிருகங்கள் துவக்குக்கு பயந்த குருட்டுச் சனங்கள் வீரவணக்கம் செலுத்தப்படும் என் உட சகலமும் தெரிந்தது. என்னைத்தான் ய
உன்னி எம்பினேன். வேகமாய் மேல் சென்றுவிட்டு, மேல் செல்ல முடியாது கீழ் தெரியாது மேல் எம்மியும் வேகமாய் ! அவதியுற்று அல்லாடினேன். சாந்தியன.
உக்கியா...உக்கியா... ஊ ஊ ஊ... வாய்குவித்துக் கூவினேன். இருள் கவ சுடுகாட்டுக்கு பறந்தேன். சாம்பல் மே காற்றில் கலைந்த சாம்பலில் குளித்ே சுகம்... சுகம்..உக்கியா உக்கியா ஊ..2
இடுகாட்டு சிலுவையில் தலை கீழாய்

கேட்குமே அப்படியோர் வெற்றிரைச்சல்.
து என்னவோ என்கின்ற படபடப்பு.
ப் பார்க்கலாம். தவறுகளை நாமாகவே யை மட்டும் அனுபவித்துவிட்டு - முத்தி T, ஊர்வசி ஐயய்யோ... கிளு கிளுப்பாக
நல்ல கலைந்தது. செந்நிறம் படர்ந்து ரிெ எதுவோ என்னை தாக்க வேகமாக த்து சிதைத்தது. நான் சிதைந்து நான் ஒன்றாகி உருவம் கொள்ள எ சிதைத்து சிதைத்து சீரழித்தது.
ாழுதில் அது என்னை அமுக்கி விட உருவம் கொண்டு நின்றேன். பூமியை
( 5 )
ல்
ாருக்கும் தெரியவில்லை.
எழுந்து கீழ் மேகத்தின் உயரம்வரை
வந்தேன். ஆத்ம திருப்தி என்னவென்பது ழ்ே அமுக்கப்பட்டும் - மேலும் கீழுமாய் டயாத ஆத்மா அவதியுற்று அலைந்தது.
ழ்ந்து. நான் பிசாசானேன் ட்டுக்குவியலில் காற்றடித்தது. அடித்த தன்.
T..
தொங்கினேன்.
யுத்தத்தின் இரண்டாம் பாகம்
1 103

Page 105
சுகம் சுகம் உக்கியா உக்கியா ஊ..
களைப்பில்லை... சோர்வில்லை. பசி உருவம் துடித்துக் கொண்டிருந்தது.
எங்கேனும் ஓரிடத்தில் ஓய்ந்திருக்க ( பாய்ந்து பாய்ந்து பறந்தேன். ஓரிடமும் கிடைக்குமாயின்... புளியமரத்தில் மட் ஞாபகம் வந்தது. வேதக்கோயில் அ பட்டென பறந்தேன். பறந்தநான் உச்சா6 அசைவு கண்டு வெளவால் ஒன்று தூ சுகம்..சுகம்.உக்கியா..உக்கியா.. |
ஊள. ஊள...
"டேய் ஆர்ரா நீ?
முரட்டுச் சத்தம். பிசாசான பின்னும் ப அடிமரக்கிளை ஆடியது. உற்றுப்பார்த்
“இது எண்ட இடம். ஆர்ரா நீ?”
“நான் பிசாசு”
“நானும் அதுதாண்டா. நீ எந்த இயக்க அப்பிசாசு என்னருகே மிதந்து வந்தது.
(6)
"நான் ஒரு இயக்கமும் இல்ல..." நடுங்கியது என்குரல்.
“நீ இயக்கக்காறன்தான் எனக்கு தெரி நான் எதுவும் பேசாது மௌனமாய் இ
“இது எண்ட இடம். நீ இங்க இருக்கா
“நான் புதுசு. வேற இடம் ஒண்டும் என
"இப்ப நீ போறயா? இல்லையா?” உறுமிக்கொண்டே வாய்குவித்து என் வெடுக்கு நாற்றமும் நெருப்பும் வந்த எனக்கு அருவருப்பும் மயக்கமும் திட்டிக்கொண்டு கிறுகிறுத்து தூரத்தே
104 1 சக்கரவர்த்தி

..
பில்லை. ஆனாலும் பதட்டம் இருந்தது
வண்டும் போல் தோன்றுகிறது. பிடிக்கவில்லை. எங்கேனும் ஓர் புளியமரம் இமேனோ ஆவலாய் இருந்தேன். பட்டென வளவில் இருக்கும் கிழட்டுப்புளியமரம். விக் கொம்பில் ஒய்யாரமாய் தொங்கினேன். க்கம் கலைந்து பறந்தது.
பம் எனக்குப் போகவில்லை. பயந்தேன். தேன். இன்னோர் பிசாசு.
ம்டா?”
அதன் முகம் மிகக்கொடூரமாய் இருந்தது.
பும்.”
நந்தேன்.
த போ.” த போ..”
ஆம் க்கு தெரியாது.?
முகத்தில் ஊதியது. பச்சைப் புகையும் 1 அதன் வாயில் இருந்து. ந்தது. மனசுக்குள் “பிசாசு” என பறந்துபோனேன்.

Page 106
அல்லாடி அல்லாடி அலைய கவலை தொலைந்து விட்டோமோ என்று. இயற் வாழ்ந்து இருக்கலாம். கும்மிருட்டு. திசைகெட்டு அலைந்தே தனிமை... தனிமை... உக்கியா...உக்கியா...ஊள ஊ... உக்கியா...உக்கியா...ஊ ஊ... உக்கியா...உக்கியா...ஊள ஊ... உக்கியா...உக்கியா...ஊ ஊ...
எக்கச்செக்கமாய்: கிட்டத்தில் எங்கோ போட்டு கொட்டமடித்துக் கொண்டிருக் ஓசை வந்த திசை நோக்கி வேகமாய்ப் மரம் கிளைகட்டி இருந்தது. எக்கச்ெ கொட்டமடித்துக்கொண்டிருப்பது தெரிந்த நெருங்கிப்போக - பிசாசொன்று எனை வந்தது. எனக்கு சந்தோசமாயும் பயமா என்கிட்ட வர பயமில்லாது போய் ெ ஏனென்றால் அது றஞ்சன். என்னைக் கொண்டோம்.
"என்ன மச்சான் உன்னையும் தட்டிப் ( கவலையாய்க் கேட்டான் றஞ்சன்.
றஞ்சன் பாவம். என்னுடன்தான் நாட்டுக்குப்போறன் என்றுவிட்டு கட தட்டிப்போட்டான்கள் என்று படகு வ சிலநாட்கள் கவலைப்பட்டு மறந்துபோ பிசாசாய் அவனை சந்திப்பேன் என்று கவலையாயும் சந்தோசமாயும் இருந்த அழுதேன். கண்ணீர் வரவில்லை. பிசா
என்னை அணைத்துக் கொன பிசாசுகள் என்னைச் சூழ்ந்துகொண்டு வாய் குவித்து ஊதினான். சூ சத்தம் ே கிளைகளில் அடங்கின. றஞ்சன் தான் 8 அவன் செய்கைக்குக் கட்டுப்படுகின்ற பிசாசொன்று என்னை விநோதமாய்ப் பா கண்ணுக்குக் கறுப்புத் துணி கட்டின போல் தெரிந்தது. அந்தப் பிசாசைப் பா

வந்தது. வீணாகத் தற்கொலை பண்ணி கையாய் சாவு வரும் வரைக்கும் உயிர்
நடுநிசிப் பிசாசுகள் கூய் போட்டு, கூய் க்கும் சத்தம் சந்தோசமாய்க் கேட்டது. பறந்தேன். வைரவன் கோயில் இலுப்பை சக்கம் பிசாசுகள் கிளைகள் தோறும் தது. ஒரே சந்தோசம் ஆகிவிட்டதெனக்கு. க் கண்டுகொண்டு, மிதந்து என்னருகே யும் இருந்தது. நெருங்கி நெருங்கி அது வெறும் சந்தோசம் மட்டுமே இருந்தது. கட்டிப்பிடித்தான். புகையாய் பின்னிக்
போட்டானுகளா?”
இந்தியாவில் பயிற்சி எடுத்தவன். ல்கடந்தவன்தான். மூன்று மாதத்தால் ழியாய் வேதாரணியம் வந்தது சேதி. னேன். மறுபடியும் பத்து வருடம் கடந்து ய எதிர்பார்க்கவே இல்லை. மறுபடியும் தது. கவலையாலோ சந்தோசத்தாலோ சுகளுக்கு கண்ணீர் இல்லை போலும்.
ன்டே மரக்கிளைக்குக் கூட்டிப்போனான். கூய் போட்டு ஆரவாரித்தன. சூ... என்று கட்டு எல்லாப் பிசாசுகளும் அமைதியாய் இந்தப் பிசாசுகளுக்கெல்லாம் லீடர்போல. றனவே. வளைந்த கிளையில் இருந்த ர்த்தது. அதை எங்கோ பார்த்த ஞாபகம். பால் யார் என்று கண்டுபிடித்துவிடலாம் சர்க்க ஏதோ ஞாபகம் வருவதுபோன்றும்
யுத்தத்தின் இரண்டாம் பாகம் 1 105

Page 107
இருக்கிறது.
‘அண்ண.அண்ண. என்ன விட்றுங்கோ அண்ண. துவக்கக் காட்டி காசு ே சொல்றது. அதுதான் ஒரு புணயல் மா நான் அவங்கட இயக்கம் இல்ல.” உயிர்ப்பிச்சை கேட்டு முழங்காலில் நிை வீழ்த்தினேன். கையும், கண்ணும் கட்ட வெளிவந்தது.
“இவன்தான் .இவன்தான் என்ன மண்ணி விடமாட்டன்”
அப்பிசாசு என்னை நோக்க நடுங்கினேன். செய்த பாவத்தால் வருட பிசாசுகள் மாதிரி இவைகளும் என்னை எனக்கு என்ன தெரியும் பிசாசுகளின் சோகமாய்ப் பார்த்தேன் றஞ்சன் வேகமா அது அடங்கி வேறுஎங்கோ பார்த்தது.
"நாம மனிசனுகள் இல்ல. அந்த கெட்ட துவக்கு எல்லாம். நமக்கு அது ஒன நமக்கும் குத்த வேணும், பழிவாங்க வே மனிசனுக்கும் என்ன வித்தியாசம் விட்டுப்போகல்ல என்ன.”
றஞ்சன் அமைதியாய்ச் சொல்ல மற்றப் பேசின. நான் சோகமாய் றஞ்சனை ஒட கொடுத்த றஞ்சன் அது அருகே என் என்னை ஸ்சினேகமாகப் பார்த்து சிரித்த பெரிய மனசு, எல்லாப் பிசாசுகளும் எ
“இங்க இருக்கிற எங்க எல்லாருக்குள் நாங்க எல்லாரும் பிசாசாகினதுக்கு தமி காரணம். உனக்கும் அதுதான் காரணம் இருந்தாலும் நாம எல்லாரும் ஒண்டா இ எல்லாருக்கும் சொல்லு, பிறகு நாங்க உனக்கு சொல்றம்.”
"சொல்லு மச்சான் உன்ன ஏன் தட்
106 - சக்கரவர்த்தி

அண்ண. உங்க கால புடிச்சி கெஞ்சிறன் கட்டா எப்படி அண்ண இல்ல எண்டு ட்ட வித்து காசு குடுத்தனான். சத்தியமா
ன்டவனை மார்பில் உதைத்து மல்லாக்க ப்பட்டவனை மண்டையில் சுட மூளை
டையில போட்டவன். இவன நான் சும்மா
கி வேகமாக வந்தது. நான் பயந்து bபயன் நினைத்து நொந்தேன். புளியமர துரத்திவிடுமோ? நான் எங்கு போவேன். உலகம்? எனை நொந்து அதுகளை ய் அமைதியாய் அப்பிசாசைப் பார்த்தான்.
சென்மங்களுக்குத்தான் கோபம், தாபம், ன்டும் இல்ல. நம்மட உலகம் வேற. ணும், சுடவேணும் எண்டால் பிசாசுக்கும் ? உனக்கு இன்னும் மனிசப்புத்தி
பிசாசுகளும் அதனிடம் போய் சமாதானம் ட்டி மிதந்து நின்றேன். என்னை தடவிக் னை மிதந்து கூட்டிப் போனான். அது து. சே. பிசாசுகளுக்குத்தான் எத்தனை ன்னைச் சந்தோசமாய் வரவேற்றன.
ளயும் கனக்கக் கணக்க கதையிருக்கு. ழும், ஈழமும், துவக்கும், யுத்தமும் தான் என்று எங்க எல்லாருக்கும் விளங்குது. }ருக்கிறதால உன்னோட கதைய எங்க எல்லோரும் ஏன் பிசாசானம் எண்டு
டினவங்கள்" றஞ்சன் சொல்ல நான்

Page 108
பேசாமல் இருந்தேன்.
“உன்ன அறிமுகப்படுத்து மச்சான்: உ
“என்ன ஒருவரும் தட்டயில்ல.”
"பின்ன...?”
“நானாத்தான்!”
“நீயாத்தான் எண்டால்?”
"நானே எனக்கு வச்சித்தன் மண்டைய
“ஏன்?”
“இயக்கம் புடிக்கல்ல!”
“புடிக்கல்ல எண்டால், சாகிறதா?” றஞ்சன் வேதனையாயும் கோபமாயும்
"இப்படியான வேலை செய்ய மனச் தற்கொலை பண்ணினனான்.”
"அது சரிதான் மச்சான். அந்த எளிய ( வந்தது பெரிய விஷயம். நீ சந்திச்சி கோயில் புளியமரத்தில ஒரு நரகல் இரு மாஸ்ரர் வீட்டில நல்லா அடிச்சிற்று - தாட்டு வச்சித்து கொஞ்சத்தோட வெள் தட்டிப்போட்டாங்கள். பொழுதுபட்ட நே வருவம் எண்டு போறன். அவன் கழு சக்கிள்ல போறான். கணபதிப்பிள்ள பொடியனிட்ட சொல்றாரு 'அவன் போ தம்பி' எண்டு.”
“அவருக்கு எப்படி இருந்திருக்கும் ம6 அந்த நரகலுக்கு காசாச விட்டுப்போ நகைக்கும் காசுக்கும் காவல் இருக்கு விஷயம் தெரியும் அதுக்கு. கிட்டப்டே றஞ்சன் சொல்ல - நானும் விரட்டப்ப

ன்ன ஏன் தட்டினவங்கள்?”
பில.”
சொன்னான்.
சாட்சி இடம் கொடுக்காததாலதானே
செம்மங்கள் செய்யிறத விட நீ செத்து
யோ என்னவோ தெரியாது. வேதக் நக்கு. களுவாஞ்சிக்குடி கணபதிப்பிள்ள அந்த புளியமரத்தடியில கொஞ்சத்த நாடு கிளம்பேக்க விஷயம் தெரிந்து ரம் அலுப்பாயிருக்க சும்மா சுத்தித்து ஒத்து நிறைய தங்கச் சங்கிலியோட மாஸ்ரர் அவன காட்டி ஆரோ ஒரு ட்டு போறது எண்ட மகளின்ர சங்கிலி
அநில அந்த நேரத்தில செத்தபிறகும் கல்ல. புளியமரத்தடியில தாட்டுவச்ச து. கொஞ்சம் சீனியர் பிசாசு. கனக்க ானா புகை அடிக்கும்.” ட்டதைச் சொன்னேன்.
யுத்தத்தின் இரண்டாம் பாகம்
107

Page 109
“சரி சரி அது போகட்டும். இதுகள் எ வெளிச்சம் வரமுதல் உன்னை அறி சொல்லி விட்டு கிளையொன்றில் சா எல்லாவற்றையும் ஸ்சினேகமாய்ப் | அறிமுகப்படுத்தலானேன்.
“எண்டபேர் றெஜினோல்ட். உண்மை என்று பெயர் வைச்சது தேவன் ம மாஸ்ரர் இல்ல எண்டு உங்களுக்கு; ஏன் இயக்கத்துக்குப் போனேன் எண்டு கொலையும் கொடுமையும் கொள்ளை! தமிழும் ஈழமும் எண்டு சொல்லி ( நடந்திட்டுது.
இப்பிடித்தான் ஒருசமயம் படுவான்கரைக்கு நடந்து போய்க் 6 பேர். ஆனையிறவு கேம்புக்குப் பின்னா போய்- முல்லத்தீவுல இருந்து நிலா சேர்ந்து மூதூரில் இருந்து வாகர. அங்கப் இருந்து படுவான்கர இதுதான் எங்க நாற்பது பேரும் ஆளாளுக்கு ஐம்பது க பயணம் போய்க்கொண்டிருக்கிறோம் போறவழியில உப்பகந்த எண்டு ஒரு அந்த ஊர் தாண்டிப்போவம். ஏனென நாங்க பொழுது படமுதல் அந்த 2 கண்டுத்துகள். அதுகள் எங்கே? கொண்டிருந்துதுகள். எங்கள் தூ துடங்கிட்டுதுகள். ட்றக்டர் மறிச்சு என கண்ண மூடச்சொன்னம் அதுகளுக்கு | கஸ்ரப்பட்டு கண்டு பிடிச்ச ரகசியப்பு தெரிஞ்சா பிறகு என்ன நடக்கும் என
சனம் குய்யா முய்யா எண்டு பொம்பிள, குஞ்சுகுரால் எண்டு மொத்த சுட்டா ஊருக்குள்ள சத்தம் கேட்கும் செய்ய ஏலாது சனத்தையெல்லாம் ச கடந்து போய் எல்லாரையும் முழங்கால் கத்தியால - இருந்தது ஒரு கத்தித கூடத் தெரியல... தெரியல எண்டு இல்
108 1 சக்கரவர்த்தி

மலாம் காத்துக் கொண்டு இருக்குதுகள்
முகப்படுத்து.” பந்து உக்காந்து கொண்டது. அதுகள் பார்த்து புன்னகைத்து விட்டு என்னை
யான பேர் பெரியதம்பி. றெஜினோல்ட் -ஸ்ரர். மாஸ்ரர் என்றால் படிப்பிக்கிற த் தெரியும்தானே. உண்மையில் நான் இண்டவரைக்கும் எனக்கு விளங்கயில்ல. பும் தான் இயக்கம் எண்டு இருந்திட்டன். சொல்லி எத்தனையாயிரம் கொடுமை
நாங்க யாழ்ப்பாணத்தில் இருந்து காண்டு இருந்தம். மொத்தம் நாற்பது ல கடந்து - கடற்கர ஓரமா முல்லத்தீவு வளி - நிலாவெளியில இருந்து மூதூர் பிருந்து புலிபாஞ்சகல் - புலிபாஞ்சகல்லில களோட அந்தக்கால நடைபாத வழி. கிலோவுக்கு மேல பாரத்தோட ஈழமீட்பு(?)
வாகரையில் இருந்து புலிபாஞ்சகல் சிங்கள் ஊரிருக்கு எப்பவும் ராவிலதான் ன்டு மறந்து போயிற்றுது அந்தமுறை வரக்கடக்க கொஞ்சச்சனம் எங்களக் யா போயிற்று ட்றக்டரில வந்து ரத்தில் கண்டவுடனேயே பதறத் bலாச் சனத்தையும் இறங்கச் சொல்லி விளங்கிற்றுது. எங்கட பயம் எங்களுக்கு. எதையது. அது சிங்களச் சனத்துக்கு ர்டு தெரியும்தானே.
கத்தத் தொடங்கிற்றுதுகள். கிழடுகட்ட, ம் முப்பத்திமூணு உருப்படி. துவக்கால அந்த இடத்திலயும் வைத்து ஒண்டும் ய்ச்சிக் கொண்டு ஒரு அஞ்சாறு கட்ட ல நிப்பாட்டிப்போட்டு மொட்டையடிக்கிற ன். அந்தச் சனத்திற்கு தப்பியோடக் ல ஓடஏலாது. நாற்பதுபேர் துவக்கோட

Page 110
வளச்சி நிக்கிறம். முதல்ல நான்தான் ஒருவண்ட தலைமயிரப் புடிச்சு நிமித்தி கேட்கயில்ல தமிழ்...தமிழ் எண்டு மட்டு புடிய பெருவிரலால அமுக்க அவள் கண்ணிலயிருந்து தண்ணி வழிய என் நச்... குரல் வளையில இருந்து கா பிறகு ரத்தமும் வந்தது. முப்பத்திரெ ஆறுமாதக் கைக்குழந்தை ஒன்று மட்டு கை புள்ளய விடவேயில்ல அது வீ திச்சு. உயிர் போனபிறகும் அந்தப் டெ கொண்டே கிடந்திது. அந்த புள்ளயிட ஒருமாதிரியாப் பார்த்து சிரிச்சான் ராச
“இதக் கொண்டுபோய் தமிழனா வ6 வேணும்" எண்டு சொன்ன ராசனில் எனக்கு கோ பெரியவனாகி சிங்களவனக் கொல்ல அதுவரைக்கும் எங்களுக்கு தமிழீழம் மாஸ்ரர் இந்தியாவில் வச்சி சொன் தமிழீழத்தில் பொங்கலாமெண்டு அந்த எடுத்தன். ஒருத்தருக்கும் விளங்கயில் காலப்புடிச்சி தலைகிழாத் தூக்கி- பக்க ஓங்கி அடிக்க மண்டை நொருங்கி கெ கனக்க ரத்தமும் அடிமரத்தில ஒட்டியிரு தூக்கியெறிஞ்சி போட்டு கொண்டுவந்த தொடங்கித்தன். படுவான்கரைக்கு போ நல்லாப் பாராட்டினாரு.
"இப்படித்தான் இடர்வரும் தடைகளை எண்டு எல்லாரையும் கூப்பிட்டுச் செ சொல்லி இப்படித்தான் நீங்களும் செ போட்டாரு.
யாழ்ப்பாணத்தில இருந்து க அதுகள வச்சி ஏதாவது செய்ய வெண கேட்டன்.
“நீதான் பெரிய ஆளாச்சே. தேவையான கொளனிக்குள்ள பூரன்.” எண்டாரு.
யாழ்ப்பாணத்தில இருந்து எ

1 கத்தியெடுத்து முழங்காலில நிண்ட னன். என்னவோ சொன்னான். எனக்கது ம்தான் காதுக்குள்ள கேட்டுது. கத்திப் - குனிஞ்சு எண்ட காலப் புடிச்சான். எ பாத்தான். எனக்குப் பாவம் வரயில்ல ற்றும் “அவக்” எண்டொரு சத்தமும் ண்டும் இப்பிடியே சரிய - மிஞ்சினது 5தான். அந்தக் குழந்தையோட அம்மாட ல்வீல் எண்டு கத்திக்கொண்டேயிருந் பாம்பிளையிட கால் மண்ண உதைச்சுக் கையப்புடிச்சு இழுத்துத் தூக்கி அத
ன்.
எத்து சிங்களவனக் கொல்ல வைக்க
பம் வந்திட்டுது. பின்ன என்ன.. இவன் பதினஞ்சு பதினாறு வரிசம் எடுக்கும். D கிடைக்காமலா இருக்கும். தேவன் னவர் எப்படியும் அடுத்த பொங்கல் ப் பொடியன ராசனிட்ட இருந்து பறிச்சி ல நான் என்ன செய்யப்போறன் எண்டு. கத்தல இருந்த பால மரத்தில் தலைய சத்துப்போச்சுது. கொஞ்சம் மூளையும் நந்திச்சு. செத்தபிள்ளய பத்தைக்குள்ள சாமானத் தூக்கிக் கொண்டு நடக்கத் ய் பொறுப்பாளரிட்ட சொன்னன். என்ன
உடைத்தெறிய வேண்டும்.” மல்லி - என்னோட பெருமையையும் ய்ய வேண்டும் எண்டு கட்டம் வேறு
எக்கச் சாமான் கொண்டுவந்தம் தானே. ம் போல இருந்திச்சு. பொறுப்பாளரிட்ட
ஆட்களக் கூட்டிற்று முப்பத்தொன்பதாம்
ந்தம்தானே நாற்பது பேரும் அதோட
யுத்தத்தின் இரண்டாம் பாகம் 1 109

Page 111
றெயினிங் எடுக்காத ஏழுபேரையும் சேர் திக்கோடையில தான் எங்கட காம்ப். ந கண்டுபிடிக்க ஏலாது. அங்க ஒரு சில
திக்கோடையில இருந்து புலி அங்க இருந்து பொழுது பட்டதுக்கு - கூப்பன் கடையடியில வட்டமா முப்பத்தொம்பதாம் கொலனி சின்ன அவங்க, பிறகு பிறகு சிங்களவங்கள் வ அந்தச் சனம் எல்லாம் இப்ப வெல் கூடியேறிற்றுகள். முப்பொத்தொம்பதா எங்கட அப்பாதான் இந்த ஊருக்கு ப கணக்கத்தரம் வந்து இருக்கன். சின்ன இது ரெண்டும்தான் சீமேந்துக் கட்டிட
ஆக்காண்டிக்குகூட கேக்கா வெடிச்சத்தம் கேட்டாலும் சவளக்கடைய ஆமிக்காறன் வந்திடுவான். பிறகு அ
மொத்தம் நாப்பது வீடுதா6 தட்டினன். திறக்கயில்ல. இன்னும் -கடந்து ஒருவன் கதவ திறந்து வந் கருகின லாம்பெண்ண விளக்கு அவ முதலே - பழுகாமத்து ஆஸ்பத்திரி அவண்ட வாயில ஒட்டினன். இத்தில் உடுப்பு கலைஞ்சு போய்படுக்கிற பொஞ்
ஒரு வீட்டக்கூட தவறவிட நூத்திபதின்மூணு பேர் மொத்தம். எ பூட்டினம். மூச்சுக் காத்தத் தவிர வே பிளாஸ்டரில கட்டியும் ஒட்டியும் போ
இந்த நேரம்பாத்து குழந்த 1 கேட்டிச்சி. எங்கேயோ பிழை நடந்திட்டு தந்தவங்கள் சத்தம் வாற திசைய வ புடிச்சன் கூப்பன் கடை வளவுக்கு பக் பதுங்கிது. ஒடிப்போய் தலை LDulgı புள்ளய நிலத்தில போட்டுத்து எண்ட என்ன வேணும் எண்டா கொல்லு எ கெஞ்சிது போல. இரங்கிற மனமா
110 ம் சக்கரவர்த்தி

ந்துக் கொண்டு வடிவான திட்டம் போட்டன். லுபக்கமும் சின்னச்சின்ன மல. யாராலயும் எனக் குகை கூட இருக்கு.
ளையாரடி வரைக்கும் ட்ரக்டரில போய் - பிறகு முக்கோண வடிவத்தில முன்னேறி கி நேரம் விடியச்சாமம் ரெண்டுமணி.
ஊர்தானே. முதல் நம்மட சனம்தான் ந்து நம்மட சனத்த துரத்திப் போட்டாங்கள் லாவெளியிலையும் பழுகாமப் பக்கமும் ம் கொலனிய எனக்கு நல்லாத் தெரியும். ஸ் ஓடுனவரு சின்ன வயதில அவரோட தா ஒரு பள்ளிக்கூடம். ஒரு கூப்பன் கடை
D.
ம ஊரசுத்தி வளைச்சிட்டம், சின்ன ஒரு
பில இருந்தும் கெவிளியாமடுவில இருந்தும்
வ்வளவுதான்.
ன் அங்க. சரசரபபு கேக்காம ஒரு வீட்ட ) சத்தமா தட்டினன். கொஞ்ச நிமிசம் தான். முப்பது வயது இருக்கும். திரி பண்ட கையில. என்ன கண்டு பயப்பிட பில இருந்து எடுத்துப்போன பிளாஸ்டர ன அமளி நடந்தும் நித்திர கலையாம சாதியிட வாயிலையும் பிளாஸ்டர ஒட்டினன்
யில்லை. எல்லாரையும் சேத்து எடுக்க ல்லாரையும் கூப்பன் கடைக்குள்ள வச்சி ற சத்தம் இல்ல. கையையும் வாயையும் 'Llb.
புள்ள ஒண்டு விட்டு விட்டு கத்துற சத்தம் }து. நான் ரெயினிங் எடுக்கேக்க சொல்லித் ச்சி இடத்த கண்டு பிடிக்கிறதுக்கு. சரியா கத்து ஒழுங்கைக்குள்ளல ஒரு பொம்புள ப் புடிச்சி வாயில பிளாஸ்டர ஒட்டினன். காலப் புடிச்சி தலைய தலைய ஆட்டிச்சி. ண்ட புள்ளய ஒண்டும் செய்யாத எண்டு
இது புள்ள வேற வாள் வாள் எண்டு
- 1

Page 112
கத்திச்சுது. புள்ளய அந்தரத்தில தூ வாள ஓங்கி குறுகால் ஒரு போடு. "சக்'
இயக்கத்துக்கு போறதுக்கு வேலை செய்த நான். பாணுக்கு மாவ குழச் வெட்டி வெட்டி பிரிச்சி எடுப்பம். பச் இருக்குமோ அப்பிடித்தான் இருந்திச்சி: துண்டா புள்ள நிலத்தில விழுந்திச்சி -
புள்ளய கண்ணுக்கு முன்னால விழுந்திட்டுது அந்தப் பொம்புள. விழுந்த போய் மற்றச் சனத்தோட போட்டு அடச் வீட்டுக்கும் நெருப்பு வச்சிப் போட்டாங்கள் கொலனி பகல் மாதிரி வெளிச்சமாயும் கோரப்புல்லுதானே. பட படத்து சத்த பெருமையாயும் சந்தோசமாயும் இருந்தி
கூப்பன் கடையோட ஜன்னல மாதிரி இருந்திச்சி. எட்டு கிறனைட், ஆளுக்கு ஒண்டா உள்ள எறிஞ்சு போட்டு நடந்து விடிய முதல் திக்கோடைக்கு 6
என்னோட வளர்ச்சியப் பா வந்திட்டுப்போல என்ன தட்டுறதுக்கு பின் அவனுக்கு நான் பாடம் படிப்பிக்க வேன் போட்டன்.
எழுவான் கரையில இருந்து இருக்கிறது பட்டிருப்புப் பாலம் மட்டுந்த பட்டிருப்பு பாலம். ராவோட ராவா கொள்
அந்த ஏரியாவே அதிர பாலம் ரெண்டு
சனம் பயங்கரமா குழப்பத்துடங் இருந்து நாங்க கொண்டுவந்த சாமான் பாத்தவரு எண்டு ஊரெல்லாம் கதையட் நிலமைக்கு வந்திட்டுதுகள். யாழ்ப்பாம் தகவல் வந்திது, ஆள உடன் தட்டச் செ சொன்னன்.

க்கி எறிஞ்சி - ரெண்டு கையாலையும்
முதல் - நான் ஒரு பேக்கரியிலதான் சசப்போட்டு பெரிய கத்தியால குழச்சமாவ மாவ கத்தியால் வெட்டேக்க எப்படி - அந்த புள்ளய வெட்டேக்க. ரெண்டு
ரத்தம் கனக்க.
வெட்டினதப் பார்த்து மயக்கம் போட்டு பொம்புளயிட மயிரப் புடிச்சி இழுத்திட்டுப் சன். இந்த நேரத்தில இருக்கிற எல்லா மற்றப் பொடியனுகள். முப்பத்தொம்பதாம் வெக்கயாயும் இருந்திச்சி. கூர எல்லாம் கத்தோட பத்திச்சி. எனக்கு சரியான
ச்சி.
உடச்சி உள்ள பாக்க - மாட்டுக்காலை சேப்டி பின்ன கட்ட விரலால கழட்டி - ஜன்னல மூடிப்போட்டு, சர்வசாதாரணமா வந்திட்டம்.
த்து பொறுப்பாளருக்கு பொறாமை Tான் போட்டுத்தான். என்ன தட்ட முதல் னும். ஒரு நாள் முழுக்க நல்லா திட்டம்
படுவான்கரைக்கு போறது எண்டால் தானே. எனக்கு கிடைச்ச பகடைக்காய்
ண்டு வச்சித்தன் அம்புஸ்ஸ்.
துண்டா உடைஞ்சு சிதறிப்போச்சு.
கிற்று. பொறுப்பாளருதான் யாழ்பாணத்தில் எ டெஸ்ட் பண்ண பாலத்த உடச்சிப் 1 பரப்ப சனமே அவர் அடிச்சிக் கொல்ற ணத்துக்கு வேற விசயத்த அனுப்ப - பல்லி. விசயத்த நம்மட பொடியனுகளிட்ட
யுத்தத்தின் இரண்டாம் பாகம்
1 111

Page 113
வாய்க்குள்ள துணிய அட! போட்டுத்து பொறுப்பாளர் பின்னி விளங்கையில்லை. பொறுப்பாளருக்கு நடக்கிறது எண்டு. பகல்ல கொண்டு சனம் கண்டு என்னமும் கேக்கும். அதுக்குள்ள சவத்த தூக்கி பொடிய முழுக்க சரியான அடைமழை வேறு வாய்க்குள்ள இருந்த துணிய எடுக்க காத்து வந்தது. அந்த ஆள் இன்னு காஞ்சி மூக்க அடச்சி இருந்திச்சி
வரச்சொன்னன்.
- தூக்கிற்று வரேக்க அவனு சாகயில்லை எண்டு. என்னட்ட சாட்ட கொள்ளயில்லை. திருப்பி என்னமும் எண்டு தெரியாதா என்ன?
மடுவ வெட்டி ஆள உள்ள ( லேசா அசஞ்சிது. இன்னும் அள்ளிப் ே பிறகு அந்த ஏரியா முழுக்க நம்மட .
ஆத்துக்கு இந்தப் பக்கம் எழுவான் கரைப்பக்கம் என்னமும் படுவான்கரைப்பக்கம் செய்யிற மாதி எழுவான்கரையில் செய்யிறது. அதுவும் அவனுகள் எப்பவும் வாளோடையும்
ஆத்தக் கடந்து கடற்கரை இது எப்படியோ கல்லடியில ஆமிக்கும் தெரிஞ்சிட்டுது. எங்கள றவுண்டப் கெ விளங்கித்து, தப்பி ஓடத் துவங்கிட் விழுந்தது ஒரு சீதேவி.
வலைவாடியில இருக்கிற ! வருகிது போல. நிறமாத புள்ளத்த வயிற்றுக்குள்ள இருந்த புள்ள பொளுக் மோசமில்ல. எல்லாரும் தப்பி ஓடிட்டா
இப்பிடி ஒண்டில்ல ரெண்டி
112 u சக்கரவர்த்தி

"சிட்டு - கையையும் காலையும் கட்டிப் எடுத்திட்டாங்கள். பொடியனுகளுக்கும் D விளங்கையில்லை. இது எல்லாம் ஏன் போய் புதைக்க ஏலாது. பகல் எண்டால் குகை எண்டு முதல் சொன்னன்தானே னுகள் போட்டிருந்தானுகள். அண்டு இருட்டின பிறகு குகைக்குள்ள போய் - "அவ் அவ்” எண்டு வாய்க்குள்ளால மம் சாகயில்லை. மூக்குக்குள்ள ரத்தம் பொடியனுகள கூப்பிட்டு தூக்கித்து
களுக்கு விளங்கிற்று ஆள் இன்னும் மாடயா சொன்னானுகள். நான் கண்டு கதைச்சால் தமக்கும் இதுதான் கதி
போட்டு மண்ண போட உடம்பு கொஞ்சம் பாட அடங்கிற்று. இந்த சம்பவத்துக்குப் ஆச்சிதான்.
செய்து செய்து அலுத்துப்போயிற்றுது. செய்ய வேணும் போல இருந்திச்சி. ரி அவ்வளவு லேசான விசயம் இல்ல இல்லாம சோனிமாருக்கு ஜிகாத் இருக்கு. துவக்கோடையும் திரிவானுகள்.
ஓரமா மீராவோடைக் குள்ள பூந்திட்டம். காத்தான்குடியில இருக்கிற ஜிகாத்துக்கும் ய்திட்டாங்கள் எண்டு எங்களுக்கு ஆம். அந்த நேரம் பாத்து குறுக்க வந்து
ரிசனுக்கு சோறு கொண்டு குடுத்திட்டு ச்சி. குறுக்கால வயிற்ற ஒரு போடு. கெண்டு மண்ணில் விழுந்திச்சி. முதலுக்கு
Dல... இந்த இயக்கம் புடிக்காம வேற

Page 114
இயக்கத்துக்கு போனன். இந்தியன் ஆமி கொள்ளையடிச்சன். முஸ்லீம் பொட் பத்தவெச்சன் தமிழ் பொடியனுகள் த துவக்கும் குடுத்தன். இந்தியன் ஆமியும் அம்பிளாந்துறை சந்தியில வச்சி வ ஆகப்பெரிய கொடுமை. என்னால சொ செய்யிது"
நான் அழ ஆரம்பித்து வி விட்டுக்கொண்டு இருந்தன. இன்னும் சி வேறு வர ஆரம்பித்து விட்டது. உச்ச வெளிச்சம் பட கரைய ஆரம்பித்துவிட்
"இந்த சின்ன சின்ன விசயங்களுக்கா சாதாரணமாய் ரஞ்சன் கேட்டான். அழுத நான் விநோதமாய் அவனைப் !
“இதவிட பயங்கரமான விசயம் எல்ல ஒப்பிட்டா உன்ர வாக்குமூலம் தூசு. நா கேளு"
அவன் சொல்லி முடிய- கிளை கரையலானான். என்னிலும் வெளிச்ச
எக்ஸில் - 1999
-------- - - ਸਨ 1 ਨੂੰ ਬਰ ਤੋਂ ਉਬਹੁ ਕ 5 ਹੈ

பாட சேந்து காத்தான்குடியில கனக்கயா டையளுக்கு முலைபுடிச்சன். கடைகள் ரத்தி துரத்தி புடிச்சி பயிற்சி குடுத்து புடிக்காம வேற இயக்கத்துக்கு போய் ாஜிமார் கொண்டு குவிச்சன் அதுதான் ல்ல ஏலாம இருக்கு எனக்கு என்னவோ
ட்டேன். சில பிசாசுகள் கொட்டாவி D தூங்க ஆரம்பித்துவிட்டன. வெளிச்சம் ணிக் கொம்பில் இருந்த சில பிசாசுகள் டன.
கவா செத்துப் போன நீ”
பார்த்தேன்.
மாம் இதுகளிட்ட இருக்கு. இதுகளோட ள ராவைக்கு இதுகள் சொல்ல சொல்ரன்
Tகளை ஊடுருவி சூரிய ஒளி அவனில்பட
ம் பட நானும் கரையலானேன்.
0
ਤੇ ਚੰਦੀਲ
ਤੇ ਦਰਸ਼ਕ
- -
- ਅਮਨ ਕਾ
- - - -
யுத்தத்தின் இரண்டாம் பாகம் 1 113

Page 115
ந ன் முயற்சியில் சற்றும் மன
2 தொங்கும் பிணத்தை கீ முன்னேறினான். இதனைப் பார்த்த 6ே சட்டை செய்யாது முன்னேறினான் வி சிரித்தது.
“நில்... விக்கிரமாதித்தா நில்!” விக்கிரமாதித்தன் காதில் வாங்கிக்கெ
"இப்படி எத்தனை காலத்துக்குத்தான் உள்ளவற்றில் உனக்கு அக்கறை இ
14
சக்கரவர்த்தி

முதிர்கன்னி
ம் தளராத விக்கிரமாதித்தன்: மரத்தில் ழ வீழ்த்தி தோளில் சுமந்துகொண்டு பதாளம் எள்ளி நகையாடியது. அதனைச் க்கிரமாதித்தன். வேதாளம் எக்காளமாய்ச்
பண்டதாய் இல்லை.
பிணத்தைக் காதல் கொள்வாய்? உயிர் கலையா? பிணத்துக்கும் எனக்கும் தான்

Page 116
சம்பந்தம்.”
வேதாளத்தின் பேச்சில் ஏதோ தலையை மாத்திரம் லேசாய் திருப்பி: 1 முருங்கை மரத்தில்- வளைந்த கிளை நீளமாய்த் தரையைத் தொட்டிருந்தது.
“விக்கிரமாதித்தா..! உனக்கோர் பெண்ண அவள் வாழ்வில் ஏற்பட்ட வாழ்வியல் அவிழ்க்க வேண்டும். அல்லாது ே வெடித்துச்சிதறும்.”
வேதாளம் சொல்ல விக்கிரமா நிதானமாய் இருந்தது. ஆயினும் லேசா காலமாய் எத்தனை கதை கேட்டாயிற்
விக்கிரமாதித்தனை மீண்டும் ஏட என்று வேதாளத்துக்குப் புரிந்து புன்னகைத்துக்கொண்டு கதை சொல்லி
“யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் என்றோர் போனாலும் செல்வம் கொழிக்கும் செல்6 ஏழை உபாத்தியாயருக்கு அமுதா என்கி அறிவிலுந்தான். முப்பதைத்தாண்டி பழமுதிர்ச்சோலை."
வேதாளத்துக்கு விக்கல் வந்து உச்சாணிக் கொம்யில் போய் உட்கார்ந்து ஆகிவிட்டவன் போன்று மீதிக்கதை ே வேதாளம் வேறெங்கோ வெறித்தது. வெள்ளை நிறம் என்பதால் விக்கிரமாத
லேசாய்க் கோபம் வந்தது அவனுக்கு.
"ஏய் வேதாளமே கீழ்க்கிளைக்கு வா. வ
நிறைவேற்றி விட்டு அந்தப்புரம் ெ என்னைக்காணாது திண்டாடப் போகின்
வேதாளம் கீழ் இறங்கி வந்தது.
“அங்கே பார் விக்கிரமாதித்தா”

நெருடிற்று. விக்கிரமாதித்தன் நிதானித்து பின் பார்த்தான். வேதாளம்: ஒய்யாரமாய்
ஒன்றில் சாய்ந்திருந்தது. அதன் வால்
ரின் கதையொன்று சொல்லப் போகிறேன். ) துயரச் சிக்கலின் முடிச்சை; நீதான் பானால் உன் தலை சுக்குநூறாக
தித்தன் முகத்தில் சலனங்கள் ஏதுமின்றி ய் மனதில் சலிப்புத் தட்டிற்று. இத்தனை று. கேட்டு பதிலும் சொல்லியாயிற்று.
மாற்றி: பிணத்தைப் பறித்துக் கொள்ளலாம் விட்டது போலும், கொடுப்புக்குள் )த் தொடங்கிற்று.
குபேரப் பட்டணம், வளம் கொழிக்காது வந்த நகரம். அங்கு குமரவேல் என்கின்ற ன்ற ஆரணங்கு மகள் அழகில் சிறந்தவள்.
முதிர் கன்னியென்றும் அவளோர்
விட்டது போலும் கதையை நிறுத்திவிட்டு கொண்டது. விக்கிரமாதித்தன் சுவாரஸ்யம் கட்க மரத்தை அண்ணாந்து பார்த்தான். கும்மிருட்டு என்றபோதிலும் வேதாளம் நித்தனுக்கு அது தெரிந்தது.
ந்து மீதிக்கதை சொல் என் கருமங்களை சல்ல வேண்டும். சேடிகள் எல்லாம் றார்கள்.”
யுத்தத்தின் இரண்டாம் பாகம் - 115

Page 117
அது காட்டிய திசையில் சிதை எரிற் வெறுமையாய் வேதாளத்தைப் பார்த்த
"சிதையொளியில் பார் விக்கிரமாதித்த பார்த்தான். ஆமாம்! யாரோ அங்கு முக் அதிர்ந்த விக்கிரமாதித்தன் பிணத்தைக் க உருவினான்.
"வேண்டாம் விக்கிரமாதித்தா. வாளை 2 வேதாளம் சொல்ல வாளை உறையுள் சென்றான். நெருங்கி அவன்வர: அவ அவள் உருவம் தெரிய அதிர்ந்து போ
"ஏய் வேதாளமே...”
அதிவேகமாய் அவளில் ஆத்திரம். ஒளியும் காற்றும் கலந்த வேகத்தில் ( வேதாளம், காஞ்சின மரக்கிளையில் கு அவள் மிகப் பயந்தவளாய் மரத்தை !
"ஏய் வேதாளமே நீ என்னைச் சீண் பூலோகவாசியா? பின்னிச் சடைந்த கூர் புதிரான ஆடையும் வாடையும் கொண் என்னை ஏமாற்றி பிணத்தைப் பறிக்க சொல்லிக் கொண்டே நகர்ந்த விக்கிரம் வைத்துக்கொண்டு நகரத்தொடங்கினால்
“நில் விக்கிரமாதித்தா!” நிற்கவில்லை.
“இத்தனை காலமாய் நீ என்னைப் பு நினைப்பது தவறு விக்கிரமாதித்தா. அ என்னால் உருவாக்கப்பட்ட மாயப்பிசா கொண்ட இவ்லோகத்துப் பெண்தான்
அல்ல." வேதாளம் சொல்ல விக்கிரமாதித்தன்
"அமுதா இரண்டாயிரம் ஆண்டு கா தொள்ளாயிரத்தி தொண்ணூற்றி எட்டா சந்தித்திருக்கின்றாள். நீ மிகவும் சிக்கல அவிழ்த்து விடுவதால்- தன் வாழ்வில்
116
சக்கரவர்த்தி

5து கொண்டிருந்தது. எதுவும் புரியாது என் விக்கிரமாதித்தன்.
பா. காஞ்சின மரத்தடியில்.” காடு போட்டு அமர்ந்திருப்பது தெரிந்தது. 3ழே போட்டுவிட்டு உறைவாளை வேகமாய்
உறையுள் போடு. அவள் தான் அமுதா." ர் செருகிவிட்டு அவளருகே நெருங்கிச் ள் எழுந்து நின்றாள். சிதையொளியில் னான் விக்கிரமாதித்தன்.
- =32
முருங்கை மரம் விட்டு கரைந்து நகர்ந்த தந்திற்று. ஒட்டி ஒதுங்கி நின்றாள்.
டிப் பார்க்கிறாயா? இப்பெண்ணென்ன நதலும் ஒய்யாரமாய் நிமிர்ந்த முலையும், L இப் பெண்ணென்ன பூலோகவாசியா? சதி செய்கின்றாய்.” மாதித்தன் பிணத்தைத் தூக்கித் தோளில்
ன். ---------
- - - - ---- - - -
புரிந்து கொண்டது இவ்வளவுதானா? நீ வள் ஒன்றும் வேற்றுக்கிரக தேவதையோ சோ கிடையாது. தசையும் உணர்ச்சியும் - ஆனால், இக்காலத்தைச் சேர்ந்தவள்
நடப்பதை நிறுத்தினான்.
பலத்துக்குப் பிற்பட்டவள். ஆயிரத்தித் ம் ஆண்டைச் சேர்ந்தவள். உன்னையவள் என பிரச்சனைகளின் முடிச்சை இலகுவாய் > நிகழ்ந்த சிக்கல்களுக்கு விடைதேடி

Page 118
காலப்பயணம் செய்து இங்கு வந்திருக்
வேதாளத்தின் குரலில் கசிவ கவலையாய் போனது, இத்தனை கா: நினைத்துவிட்டோமே என்று பிணத்தை அருகே போனான். சிதையொளியில் மீ6 சொக்கிப் போனான். கன்னத்தில் கைை என்னே அழகு. என்னே உடல். எத்தனை நாழியானாலும் பார்க்கச் சலி வேதாளத்தின் திசை பார்த்து கைகாட்டி
"அது சொல்வது உண்மைதானா?”
என்பது போன்றதொரு பார்வை பார்த்தான் அவள் மேலும் கீழுமாய் தலையசைத்த விக்கிரமாதித்தன் நம்பித்தான் போனான்
“சொல் பெண்ணே. சொல். உன் கன் சொல்கிறேன்.” உருகினான் விக்கிரமாதித்தன்.
"எங்கட அப்பாவுக்கு நான்தான் மூத்த
6) Jugll. அமுதாவுக்குள் ஏதோ சங்கடம். தயங்கி
"ஏன் தயக்கம் சொல் அமுதா.”
"நால் திசை தீர்த்தம் கொணர்ந்து
பல்லாரெடுத்தேந்தி பூப்புனை கன்னிப்
காப்பு நான் கட்டக் கனாக் கண்டேன் இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்ற6ெ செம்மையுடைய திருக்கையால் தாள் ட அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தே உள்ளுரச் சிரிப்பெழுந்தது. ஆண்டாளுக்கு தெரியாத ஏதோ அமானுஷ்ய சமாச்சா கிருஷ்ணன் தாலிகட்ட வருவான் என் கூட தடவி விடுவானாமே கிருஷ்ணன். சுத்த பேத்தலான விசயம்.
சில சமயம் கிருஷ்ணன் பற்றி அந்த நூற்றாண்டில் கூட முதிர்கன்னி

கின்றாள்.”
தென்பட்டது. விக்கிரமாதித்தனுக்கு Uம் பழகிய வேதாளத்தைத் தப்பாக க் கீழே போட்டுவிட்டு அப் பெண்ணின் ண்டும் அவள் தோற்றம் பார்த்தான். வத்து அதிசயித்துக் கொண்டான்.
$காத தோற்றம்.
விக்கிரமாதித்தன். சிறுசிறு அசைவாய் T6i.
தை சொல். உன் வாழ்வுக்கோர் வழி
நபிள்ளை. எனக்கிப்ப முப்பத்தியாறு
னொள்.
நனி நல்கி பார்ப்பனச் சிட்டர்கள் புனிதனோடு என்றென்னை தோழி நான். பான் தம்மை உடையவன் நாரண் நம்பி பற்றி ாழி நான்.”
ஹிஸ்டீரியா. பின்னென்ன, கண்ணுக்குத் ரத்தை நினைத்து கனவு காண்பதும்பதுவும் சமயங்களில் முலைகளைக்
ய கனவு வடிகாலாகக்கூட இருக்கலாம். கள் இருந்திருக்கலாம். ஆண் துணை
யுத்தத்தின் இரண்டாம் பாகம் 117

Page 119
எதுவும் கிடைக்காத போதில் நாரண தீராக்காயோ என்று ஏங்கியிருக்கலாம். யா மாப்பிள்ளை கிடைக்காது வெந்து தன அபத்த சமுதாயம்.
"சும்மா ரூமுக்குள்ளேயே அடஞ்சி க எண்டால் சொல்லுங்கோ. கூட்டிப் போ என்று குலசிங்கம் கேட்க பட்டென வ பிடித்து கூட்டிப்போனான். “இந்தா, இந்த இடத்தில வச்சித்தான் கி தெரிமோ?" பிராமண வழிகாட்டி விவரித்தார்.
"ஆண்டாளுக்கு நடக்கக்கூட தெம்பு இ இருந்து தூக்கிண்டு வந்தார். கிருஷ்ண இந்த நாழிகையில... இந்த நட்சத்திரத் எத்தின வருச காத்திருப்பு. ஆண்டாள்
இதுக்கு மேல் பொறுக்க என்னால் பிரகாரத்துக்கு வெளியே வந்து விட்டே
அந்த ஆளுக்குக் காசைக் கொடுத்து
“சாமி கும்பிடலையா?” என்றான் குலசிங்கம்.
“ரூமிற்குப் போவம்”
“வேற எங்கேயும் போகவேணும் எண்ட
"வேற எங்கேயும் எண்டால்? எனக்கு எரிச்சல் வந்தது.
"இங்க முக்கொம்பு எண்டு ஒரு லவ்வ கொடுப்புக்குள் புன்னகைத்துக் கொண்டா அண்ணார்ந்து பார்த்தான். எனக்கு இல
"அங்க நாங்கள் எதுக்கு...? இல்லை. வலிக்குது... வயிறு வேற வலிக்குது. நான் சொல்ல- எதுவும் பேசாது ஆப் போக்கு ஒரு வாரமாய் அவ்வளவு ந
118 1 சக்கரவர்த்தி

நன் நம்பி நீயாவது என் இச்சையைத் ர் கண்டா? ஆண்டாள் கூட அக்காலத்தில் சியாது இருந்திருக்கலாம்.
டக்கிறியள். எங்காவது போகவேணும்
றன்."
ரயில வந்தது சிறிரங்கம்தான். ஆட்டோ
நஷ்ணன் ஆண்டாளுக்கு தாலி கட்டினான்
மல... பட்டர் தோள்ள வச்சி வில்லிபுரத்தில ன் சொல்லிட்டான். இந்த லக்கினத்தில... தில உனக்கும் எனக்கும் கல்யாணம்னு. நக்குப் பொறுக்க முடியல...”
முடியவில்லை. விறுவிறுவென நடந்து
டன்.
பிட்டு வந்து,
-=-=== -
டால் சொல்லுங்கோ.”
Tஸ் பார்க் இருக்கு.”
ன். புன்னகைத்துக்கொண்டே கோபுரத்தை ானும் எரிச்சல் வந்தது.
. நான் ரூமுக்கு போகவேணும். தலை
2)
டோ கூட்டி வந்தான். குலசிங்கத்தின் ல்லதாய் இல்லை. காவேரி பாலத்தை

Page 120
கடந்து ஆட்டோ குலுங்க- தோளில் சரி எதார்த்தமானதா அல்லது தூண்டிலா 6
“தம்பி இண்டைக்கும் காலையில் போ கேட்டு” எதிர் திசையில் கடகடந்த வாகனங்கள் சொன்னேன். மலை மீது உச்சிப்பிள்ளை
"போகலாம் என்ன அவசரம்?” சுரத்தில்லாத பதில்- நான் லேசாய் நெ
“ஆறு மாசம் ஆகுது திருச்சிக்கு வந்து ஒத்து வருகுதில்லை...” லொஜ்ஜிக்கு வரும் வரைக்கும் குலசி வந்ததும் கட்டில் விளிம்பில் வசதியில் பார்த்தான்...
சும் மா சொல்லக் கூடாது லட்சணங்களுடன்தான் இருக்கிறான். தம்ட் ஒன்றாக இருந்தவனாம், கிட்டத்தட்ட அ போக திருச்சி வந்து ஆறுமாசம் ஆயில் கொண்டு செல்வதற்கோ அல்லது அனுப் செய்பவராய் தெரியவில்லை. ஆத்திரம் வரும் சண்டைபோட வே முடியவில்லை. இவன் முகம் பார்க்க
“இண்டைக்கு அவரும் கதைச்சவர்.” லேசாய் வெட்கம் வந்தது. என்னை அவன் வெறுமையாய் பார்த்த
“மெட்ராசால போக ஏலாது. கல்கத்தா ஏர்போர்ட் - செட் பண்ண வேணும்."
"செட் பண்ண வேண்டியது தானே."
"செட் பண்ணத் தைரியம் இல்லாம இ நாக்கைக் கடித்துக்கொண்டான். இவன் என் இமைகளைச் சுருக்கிக்கொண்டே
“விளங்கயில்லையா?”

ந்து முழங்கையால் மார்பில் உரசினாள். என்று புரியவில்லை.
ன் பண்ணினவன். எப்ப பிளைட் எண்டு
- விரைந்தன... நான் வெளியே பார்த்துச் யார் கோவில் புளுதிக்கப்பால் தெரிந்தது.
பாருங்கிப் போனேன்.
இந்த புளுதியும் வெக்கையும் எனக்கு
சிங்கம் எதுவும் பேசவில்லை.அறைக்கு லாமல் உட்கார்ந்து கொண்டு என்னைப்
இருபத்தி எட்டு வயதிற் குரிய 5 ஏற்பாடு பண்ணின ஏஜென்சி அவனுடன் வனோட வயதுதான் இவனுக்கும், கனடா ற்று. குலசிங்கம் கனடாவுக்கு என்னை ப்பிவிடுவதற்கான எந்த வித ஆயத்தமும்
பண்டும் என்று தோன்றும், ஆயினும் “சே' என்று தோன்றும்.
கான். -----
இல்லாட்டி காட்மாண்டுதான்.
------
ருக்கு.” 1ா பேச்சு தடம் தப்பியிருந்தது.
ன்.
- - -
யுத்தத்தின் இரண்டாம் பாகம்
[ 119

Page 121
“என்னோட பொண்சாதியோட பா6 போகப்போறன்.” நகம் கடித்தான்.
“பொண்சாதி எண்டு கூட்டிப்போறது எ இடதுகால் பெருவிரல் நகத்தை வலது
"ஒரு நாளாவது என்னோட நீங்கள்” முடிக்காது கடித்த நகத்தைத் துப்பின படுக்கைக்கு அழைக்கிறான். இது தைரியமா. பேடித்தனமா என்று
இவன் அழைப்பு விடக்கூடும் என்னமோ எனக்கு அதிர்ச்சியாயும் இல் நம்பப்பட்டவன் நாய் போன்று சகலத்தி போதுதான் சற்று வேதனையாயிற்று
நான் இன்னொருத்தரைக் கல்ய பாவம் அந்த மனுஷன் ஏற்கனவே பொ6 பலி கொடுத்தவர். ஐந்து வருடத்திற் லொறிக் குண்டு அந்தப் பொம்பளைக் உலகத்தில் எங்கு வாழ்ந்தால் என்ன? சாகவேண்டும் என்று விதி போலும்.
இதில் வேடிக்கையான வே வாழ்வு கிடைக்கிறது என்பதுதான். அவ கல்யாணம் முடித்தவராக இருந்தால் இருந்தால் என்ன? என் கதையெல்6 முடிக்க சம்மதித்தாரே அவருக்கு எவ்
நமது சமுதாயத்தில் மாப்பி எவ்வளவு பெரிய விஷயம்? ஆண்பிள் வத்தலோ தொத்தலோ மாப்பிள்ளை
முன்னெல்லாம் சின்னத்தப் வைச்சுக்கொண்டு "அந்தோ வார அமுதாவையா ராசகுமாரன் கல்ய மேகமூட்டத்தைக் காட்டி அது போடு போதெல்லாம் நம்பித்தான் போனேன். செல்லப்போகிறான் என்று அந்த மே
120 - சக்கரவர்த்தி

ல்போட்டில்தான் உங்களைக் கூட்டிப்
ண்டால்” து குதிக்காலால் மிதித்து முக்கினான்.
ான்.
புரியவில்லை.
) என்று முன்னமே எனக்குப் புரிந்ததோ லை. அவன் மீது ஆத்திரமும் வரவில்லை. லும் வாய்வைக்க முற்படுகின்றான் என்கிற
பாணம் முடிப்பதற்காக நிச்சயிக்கப்பட்டவள். ண்டாட்டியையும் பிள்ளையையும் குண்டுக்கு கு முன் கொழும்பு வங்கியில் வெடித்த கும் பிள்ளைக்கும் எமனாகிப் போனது. குண்டு வெடித்தது அதுவும் இலங்கையில்
தனை- ஒருத்தியோட சாவில் எனக்கு ருக்கு எவ்வளவு பெரிய மனசு, ஏற்கனவே என்ன? பதின்மூன்று வயது கூடியவராக லாம் தெரிந்தும் என்னைக் கல்யாணம் வளவு பெரிய மனசு.
|ள்ளை என்பது என்ன சும்மாவா? அது ளை எனில் ஆணவமான விஷயம்தான். எனில் பிரமாண்டம்தான்.
bபி மாமா என்னை மடியில் தூக்கி ான் ராசகுமாரன் குதிரையில, எங்கட ாணம் முடிக்கப் போறான்.” என்று ம் கோலங்களைக் காட்டிச் சொல்லும்
இராசகுமாரன்தான் என்னைக் கவர்ந்து கம் போட்ட கோலத்திற்கும் மாமாவின்

Page 122
ஆசைக்கும் ரொம்ப வித்தியாசம் இல்லை
பாவம் மாமா இராசகுமாரர்களும் அல்லவா பெத்துப் போட்டிருந்தார். மாம் வழியில்லை. எனக்கு எது என்று இரு காட்டினாலும் சரி வானத்தில் இராசகுமா ஒரு சேவகனைக்கூடக் காட்ட முடியவ
எப்படி குமரவேல் லூசன்களை வயது குறைய எண்டாலும் பரவாயில்லை நேற்று ஆரோ கல்லால எறிஞ்சு போட் அழுதுட்டு வறாங்க.
“பெடியன்கள் குண்டு கட்டி இவன்கள் மண்ணுக்குப் புண்ணியமாப் போகும்.” போதெல்லாம் அப்பாவின் இயலாமை ந
நான் மறுபடி கனவுகளில் லயித்துப்போ என்றால் எனக்கு ஒரு சிவன் இல்லாமல் கனவு சோக்கான விசயம். ஊரில் உள்ள ஆண்களை எல்லாம்...
எவளும் சண்டைக்கு வரப்போவதில்லை. அல்லது அதுக்கு நிகராய் வேறு ஏதேனும் புரியவில்லை. தேவிக்கும் என் வயது ஓடிப்போனவள். அப்புறம் குழந்தை, புரு பிறகு திரும்பி வந்தபோது பெரிய மனு ரொம்பவும் ஆச்சரியம். என் வயதுக்கா முடியுமா? கல்யாணம் செய்துகொள்ள முடிந்திருந்தது எப்படி என்றுதான் புரிய போதவில்லை.
தேவி என் பால்ய சிநேகிதிதான் என்னுடன் ஒட்டிக்கொண்டதற்குக் 4 சிரிக்கும்போதும் அழும்போதும் ஏன், அவள் கூட தேவியைக்காட்டிலும் நான் தா நேரத்தைத்தவிர ஏறக்குறைய அவன் எ கால்களை, கால்விரல்களை தலைமயிரை புளகாங்கிதம் படும்போது கூட எனக்கு எ நான் ஆசைப்படவில்லை என்று | நம்பிப்போனேனோ என்னவோ.

ல்.
க்குப் பதிலாய் இரண்டு சொத்தைகளை காவிற்கு பயம் இல்லை. அப்பாவிற்கோ க்கிறது? மாப்பிள்ளை என்று எதைக் மரனைக் காட்டிய மாமாவால் தரையில் பில்லை.
- கட்டிக் கொடுக்கிறது? 28வயது, நாலு - இப்பவும் பாயில மூத்திரம் பேயறாங்க. டானுங்களாம் என்று ரெண்டு பேரும்
ளை கொழும்புக்கு அனுப்பினாக்கூட மாமா எங்கே? வெறித்துச் சொல்லும் சிந்துகொள்ளும்.
வேன். ஆண்டாளுக்கு ஒரு கிருஷ்ணன்
லா?
இருந்தும் - தேவி சண்டை போட்டாளா? அஸ்திரம் பயன்படுத்தினாளா என்றுதான் துதான். பத்தாவது படிக்கும் போது ஷன் என்று இரண்டு வருடங்களுக்குப் ஷி போலத்தான் இருந்தாள். எனக்கு ரியால் கூட பிள்ளை பெற்றுக்கொள்ள
முடியுமா? என்கின்றபோது தேவிக்கு பவில்லை. எனக்கு புத்திசாலித்தனம்
1. அந்த சிநேகிதம்தான் அவள் பிள்ளை காரணமோ என்னவோ? வினோதன் ன் என் முகத்தில் சூச்சா அடிக்கும்போது ன் சிலிர்த்துக்கொள்வேன். தூங்கும் ன்னுடன்தான் பன்னிரண்டு வயதுவரை ர தடவித்தடவி அதன் வளர்ச்சி பார்த்து ஒரு மகன் இப்படி வேண்டும் என்று ஏன் புரியவில்லை. என் மகன் என்று
யுத்தத்தின் இரண்டாம் பாகம்
ப 121

Page 123
பள்ளிக்கூடம் விட்டு ஒரு | வரவில்லை. மாலையாயிற்று அவன் பார்த்தேன். நடமாட்டம் தெரிந்தது. பத்து இப்படி ஒருநாள்கூட நடந்ததில்லைே வந்துவிடுமே அதற்குப் பிறகு நாளைக் இருந்தது. இனியும் என்னால் பொறுக்
தேவி வீட்டிற்கு போனேன்.
என்னை அவள் அசாதாரணமாய்ப் பார்த் புரியாது கூசினேன்.
"ஏன் இன்டைக்கு வினோதன் வீட்டை வீட்டிற்குள் எட்டிப்பார்த்தேன். வாசலை பின்னே வினோதன் ஓரவிழியால் என்
64
"வாடா கண்ணா” என்றேன் கை நீட்டி. அவன் தேவியில் தேவி அவனை வைத்து கதவை மூடி
"அமுதா அவன் சின்னப்பிள்ளை இல் தேவி பீடிகையாக இழுக்க நான் மெ
“பார்க்கிறவையள் ஒரு மாதிரி பேசின தெரிகிற வயது தானே... நீ மடியில் கட்டிப்பிடிக்கிறதும்- இதால அவன்ர | சுகத்துக்கு அவன வச்சுத்தேய்க்கிறது பேசாம கிழவனே கட்டையோ பார்த்துக் வைச்சு தேய்க்கிறதுல அப்படி என்ன மலத்தை மிதித்ததைப் போன்ற அருள்
சே... ஏன் இப்படி என் சமூ பெண் எல்லாம் ஆண் சுகத்திற்காய் வயது சிறுவனை- காலாகாலத்தில் க ஒத்தவனிடம் நான் என்ன காமத்தை தூக்கிவைத்துக்கொள்வதன் மூலம்தான்
இந்த தேவிக்காகவேனும் ஒரு வகுப்பு படிக்கும் போதே நானும் ஓடியிரு திரிகோணமலையில் இருந்து வந்து- எங்
122 . சக்கரவர்த்தி

மணிக்கெல்லாம் வந்துவிடுவான். அன்று
வரவில்லை. எதிர்வீடு தானே எட்டிப் வருடமாய் என்னிடம் தானே வளர்கிறான். ய ஆறுமணியானால் ஊரடங்கு சட்டம் காலைதான் பார்க்கமுடியும். பதட்டமாக க முடியவில்லை.
தோள். ஐந்தொன்றைப் பார்க்கின்ற தொனி
- வரல்லை? ஏதும் சுகமில்லையா?” - மறைத்து தேவி நின்றிருந்தாள். அவள்
னைப் பார்த்து மறுகி நின்றான்.
ன் முதுகைப் பார்த்தான். உவிட்டு படியிறங்கி வெளியே வந்தாள்.
''
ௗனமாக நின்றிருந்தேன்.
ம். அவன் வளர்ந்திட்டான்தானே... புத்தி தூக்கிவைச்சுக்கிறதும், கொஞ்சுறதும், மனம் வக்கிரமடைஞ்சிடும். உன்ர அற்ப | அவ்வளவு நல்லம் இல்ல அமுதா... நீ கட்டுறதுதான் நல்லது. சின்னப்பிள்ளையை
சுகம்?" பருப்பு.
கம் உள்ளது? கல்யாணம் முடிக்காத ரங்கிக் கிடக்கின்றார்களா? பன்னிரண்டு ல்யாணம் ஆகியிருந்தால் என் மகனை த அனுபவித்துவிட முடியும்? மடியில் என்ன காமத்தை தீர்த்துக்கொள்ளமுடியும்?
கல்யாணம் முடிக்க வேணும். ஒன்பதாம் க்கலாம். புத்திசாலித்தனம் போதவில்லை. கள் வீட்டில் தங்கிப் படித்துக்கொண்டிருந்த

Page 124
நேசன் அண்ணனுக்கு என் மீது சரிய காதல் என்று அந்த வயதிற்குப் புரிப அவருடன் ஒடிப்போய் பதின்மூன்று வய
நேசன் அண்ணன் ஒருநாள் : முதுகை தடவித் தடவிச் சொல்லித்தந்
"அமுதா உம்மை நான் கல்யாணம் மு
உம்மேல எனக்குச் சரியான விருப்பம் எ கையை எடுத்து என் மார்பு மீது வைக் கணமே அப்பா நேசன் அண்ணனின் மு போட்டு அடித்தார். ஏன் என்று அப்போது அப்பாவிடம் ஏதோ சொல்ல வந்தார். நேச தொடர்ந்து அப்பா போட்டு அவரை மி அப்போதே அவர் பின்னே நானும் போகத்தெரியவில்லை. புத்திசாலியாய் இருந்திருக்கும்.
ஒரு பெண்ணிற்கு ஆண் அவசி இல்லாது போனாலும் தேவிகளுக்கா விடுபடவேனும் அவசியம் திருமண! சொல்லிப்பார்க்கலாம். அப்பாவிடம் பே
எனக்கு முப்பத்தி நான்கு வய அப்பாவிடம் போய் எப்படி கேக்கமுடி அப்பாவிற்கு தெரியாதா என்ன? அம்ம பிறந்தேனாம். எனக்கு அந்த வயதில் பிள் கூட பிள்ளை பிறந்திருக்கும்.
தேவியிடம் மறுபேச்சு எதுவு பெரிதாய் உறுத்தியது. தற்கொலை ெ சே. வயது முப்பத்திரண்டு என் பாவ இருப்பது ஒரு குற்றமா?
அவமானப்பட மனசு வலித்த வீட்டிற்கு வந்து வீழ்ந்து படுத்துவிட்டே
"என்ன பிள்ளை ஒரு மாதிரியாய் இருக் அப்பா ஒப்புக்கு கேட்டாரா இல்லை

ான விருப்பம். அந்த விருப்பம் தான் டவில்லை. புரிந்திருந்தால் அப்போதே து பிள்ளைக்கு அம்மாவாக இருக்கலாம்.
கணக்குப்பாடம் சொல்லித் தரும்போது தார். கொஞ்சநேரம் செல்ல
டிக்கட்டே.?”
ன்று சொல்லிக்கொண்டே முதுகிலிருந்த க நான் பயந்து அதிர்ந்தேன். அந்தக் துகில் கைவைத்தார். மிக மோசமாகப் புரியவில்லை. அடிவாங்கிக்கொண்டே ன் அண்ணனை அப்பா கேட்பதாயில்லை. திக்க அவர் ஊருக்குப் போய்விட்டார். ஓடிப்போயிருக்கலாம். போகவில்லை. இருந்திருந்தால் பருவ வயதில் பிள்ளை
யம் தேவை. உடம்பு, மனசு இரண்டிற்கும் ாகவேனும்- அவர்கள் பேச்சிலிருந்து ம் தேவை. அம்மா இருந்தாலாவது ாய் எப்படி..?
தாயிற்றே. கல்யாணம் கட்டிவை என்று யும். எனக்கு வயதாகிவிட்டது என்று ாவின் பதினைந்தாவது வயதில் நான் 1ளை இருந்திருந்தால் என் பிள்ளைக்குக்
ம் பேசப் பிடிக்கவில்லை. அவமானம் சய்தால் என்ன என்றுகூட தோன்றியது. மா? மாப்பிள்ளை வாங்க வசதியற்று
து. ஆயினும் அழத்தோன்றவில்லை. ன் இருட்டிவிட்டிருந்தது.
கிறாய்?" ) அக்கறையுடன் கேட்டாரா என்று
யுத்தத்தின் இரண்டாம் பாகம் - 123

Page 125
விளங்கவில்லை. அவருக்கு முதுகை
மெளனமாய் அறையை வி கொளுத்தி வைத்தார். கிட்டத்தில் நாய் கேட்கத் தொடங்க கொளுத்திய விள வேண்டும். மண்டபம் இருண்டு கிடந்த
புரியாத மொழிச்சத்தம் வாசல் படுக்கையை விட்டு எழுந்து பார்த்தே6 அசாதாரணமாய் நின்றிருந்தார்கள். திக் சிப்பாய்கள் வெளியே இழுத்துப் போ
"அவர ஒண்டும் செய்யாதீங்கோ’ என அழுது கொண்டே அவர்களின் ச ஒருவன் முதுகுப் பக்கமாய் என்னை இ கொண்டுபோனான்.
புரிந்து போனது எனக்கு. 6 அறைந்தது போன்று பயந்து நான் அறை துாக்கி அறை மூலையில் போட்டுவிட்
கூசிக் குறுகினேன் நான்.
இறுகிய முகத்துடன் அவன் குப்பென்று அடித்தது. என்னை இறுக்க கடித்தான். அவன் வாயிலிருந்து வந்த சுவரோடு என்னைச் சாத்தினான். நான் கையாலும் கால்களாலும் என்கீழாை நிர்வாணமானேன். தப்பித்துப் போகவு இயலவில்லை. உயிரில் விதி பொய்த்து சரித்தான். நான் அடங்கி சடமானேன் என்னை கடித்துக் குதறியது. நான் ச
இடைக்கிடை ஈனசுரமாய் அப்பாவின்
வெறி அடங்கியதும் அந்த ல்ெ செய்வதறியாது நான் மல்லாக்கவே என்னை இறுக்கமாய்ப் பார்த்தான். கிழ நிர்வாணத்தை மறைத்தான். அப்புறம் அவன் மடிமீது வைத்து தலைகோதிவி
124 - சக்கரவர்த்தி

க் காட்டிப் புரண்டு படுத்தேன்.
ட்டு மணிமண்டபத்திற்குள் விளக்கைக் கள் குரைக்கின்ற சத்தம் தொடர்ச்சியாய் க்கை அப்பா சட்டென அணைத்திருக்க
து.
வழியேயும் சன்னல் வழியேயும் கேட்டது. ன். மண்டபத்துக்குள் நான்கு சிப்பாய்கள் கென்றது நெஞ்சுக்குள். அப்பாவை மூன்று க. நான் வேகமாய் விரைந்து
5ாலைப் பிடித்தேன். பின்பக்கமாய் வந்த இறுக்கிப் பிடித்து அணைத்து அறைக்குள்
ான்ன நடக்கப் போகிறது என்று- பேய் யின் மூலையில் ஒதுங்கினேன் துவக்கைத் டு அவன் நிர்வாணமானான்.
என்னை நெருங்க கடலெண்ணை வாடை கிப்பிடித்து மேலாடை கிழித்து மார்பைக் பீடிவாடை வேறு அருவருப்பாய் இருந்தது. 1 திமிறினேன். பலம் போதவில்லை. ஒரு டகளை கிழித்துக் களைந்தான். நானும் |ம் வழியில்லை . எதிர்த் தாக்குதலுக்கும் துப்போனது. தரையில் என்னை வேகமாய்ச் 1. அரை மணிக்கு மேலாய் வெறிநாய் Pன்னாபின்னமானேன் .
ரல் வெளியே கேட்டது.
வறிநாய் ஆடைகளை அணிந்துகொண்டது.
கிடந்தேன். ஆடைகளை அணிந்தவன் இந்த என் துணிகளை கொண்டுவந்து என் என் தலைநிமிர்த்தி என் அருகே அமர்ந்து |ட்டான். அவன் செயல் புரியாது விழித்து

Page 126
அதிர்ந்தேன். அவசரமாய் எழுந்துகொள் இயலவில்லை. உயிர்போக வலித்தது. ஆம் துப்பினேன். துவக்கைத் தூக்கியவன் என அழுதான்.
"என்ன கொன்றுடுங்க... நான் பாவி.... இன்னும் இன்னும் திகைத்தேன். ஆத்தி
"... காமம் புத்திய மறைச்சிடுத்து அமுக்கு...நாப்பத்திரண்டு புல்லட்டும் என் முழங்காலில் நின்று கொண்டே கையிரண் அழுது கொண்டிருந்தான்... பாவமாக சுகம் அடங்கி களைப்பில் இருந்தவனை
அவசர அவசரமாய் சட்டைப்பையில் இரு எடுத்து எதையோ எழுதி என்னிடம் sெ
"இது என்னோட விலாசம்... என்னோட கல்யாணம் பண்ணிக்கிறன். பாவத்துக்கு முறித்து முறித்து பேசிவிட்டு வேக வேக
எனக்கு வலியிலும் சிரிப்பு வந்தது கொடுத்தவனோ...? போக்கிரிப்பயல்.
கால்கள் நடுங்கியது... தொடை மெது மெதுவாய் நடந்து வெளியே வந்தே ஊரெங்கும் இருட்டிக்கிடந்தது. அப்பாவை இதயம் தொண்டைவரை வந்து போனது எதுவோ தெரிய உற்றுப்பார்த்தேன் . கொலையாகி அப்பா இறந்து போனார்.
இனி எனக்கு யார் இருக்கிற மகன்களையும் தவிர.
“அமுதா நீங்கள் எங்களோடையே எங்க மாமாவின் லுாசுப்பிள்ளை வாயில் இரு மாமா அடித்து விரட்டினார் அவனை.
ஊர் கூடி துக்கம் விசாரித்தது. காட்டிலும் என்னை விசாரிக்க வந்த

ாள முயற்சிக்க தொடைகள் இடம் தர
பினும் எழுந்து நின்று அவன் மூஞ்சியில் ன் காலடியில் வைத்துவிட்டு மண்டியிட்டு
என்னோட இனத்தவளையே...” ரம் வேறு தலைக்கேறியது.
1 தாயே... இந்தா இந்த டிகரை எனய கொல்லட்டும்” எடையும் தலையில் வைத்துக் கொண்டு இருந்தது அவனைப்பார்க்க இந்திரிய கப் பார்க்கப் பரிதாபம் வந்தது.
ந்து பேனாவும் ஒரு துண்டுக்காகிதமும் காடுத்தான்.
நாட்டுக்கு வாங்க... உங்களையே 5 பரிகாரம் வேண்டும்.” மாய் அறையைவிட்டு வெளியேறினான்.
வ. எத்தனை தமிழச்சிக்கு விலாசம்
களுக்கு இடையில் புண்ணாய் எரிந்தது தன். நாய்கள் கூட குரைக்கக் காணோம். க் காணோம். என்ன ஆயிற்று அவருக்கு? 4. மல்லிகைப் பந்தலின் கீழ் கருப்பாய் அது அப்பா. அப்பா இறந்திருந்தார்.
றார்கள்? மாமாவும் இரண்டு கிறுக்கு
களோட வீட்டுக்கு வாங்கோ” தந்து விரலை எடுக்காமல் சொன்னது.
துக்கத்தை விசாரிக்க வந்தவர்களைக் வர்களே அதிகம். என்னையே உற்று
யுத்தத்தின் இரண்டாம் பாகம் 1 125

Page 127
உற்றுப் பார்த்தார்கள். விதவிதமாய் இறந்த துக்கத்தைக் காட்டிலும் நான் கற்பழிக்கப்பட்ட துக்கத்தைக் காட்டி துக்கம் என்னை அமுக்கியது. இவ அழுகை குமுறியது.
தேவி வந்தாள் நான் எதுவும் அவன் வர இவள் விரும்பியிருக்க ப வினோதமாகப் பார்த்தாள். நேற்று அ தோன்றியிருக்குமோ என்னவோ அவளு
நெருங்கி வந்தாள்
"சொறி அமுதா.”
நான் மெளனித்திருக்க விலகிப் போன
ஆணின் பரிசம் என்ன சுகம் புரிந்து கொண்டேன் தேவி என்று தோன்றியது. தோன்றிய நேரம் துாரத்
துக்கம் முடிந்து உறவுச்சனம் இயக்கத்துக் குழந்தைகள் வந்திருந்த கொண்டு தங்களுக்குள் குசுகுசுத்துக் மாஸ்டர் மாஸ்டர் என்றும் பேசிக் கொன பிறகு நெருங்கிவந்தார்கள் மாஸ்டர் என எங்கேயோ பார்த்ததாய் ஞாபகம். "அக்கா. எங்களோட நீங்க வந்திடுங்ே சிறுவர்கள் அழைத்தார்கள்.
“எதுக்கு” புரியாதது போன்று கேட்டேன்.
“இந்த நாய்களை நாம கொல்ல வே வெறி நாய்கள் கற்பழிக்கப் போறாங் நாய்களை கொல்ல வேணும் அக்க அக்காவுக்கு நடக்கக் கூடாது. அக்கா
கணக்க அக்காக்கள் போராட வருவின நியாயம் கலந்த ஆவேசம் அவர்கள்
126 - சக்கரவர்ததி

வக்க்ணைய்ாய் விசாரித்தார்கள். அப்பா அநாதையான துக்கத்தைக் காட்டிலும் லும் இன்னும் ஏதோ ஒரு இனம் புரியாத ர்களின் பார்வையின் பாரம் தாங்காது
பேசவில்லை. அவள் மகன் வரவில்லை. ாட்டாள். துாரத்தில் இருந்தே என்னை ப்படி பேசியிருக்க வேண்டாமோ என்று நக்கு.
ாள்
கொடுக்கும் என்று நான் ஒரு விபத்தில் அவளிடம் சொல்ல வேண்டும் போல் தில் தேவி சென்றிருந்தாள்.
) அடங்கிய மூன்றாம் இரவுப் பொழுதில் ார்கள். துவக்கை தோளில் கொழுவிக் கொண்டும் வயதில் கூடிய ஒருத்தரை ண்டும் இருந்தார்கள். சிறிது நேரத்துக்குப் பவர் எட்டத்தில் நின்றிருந்தார். அவரை
கோ.”
ணாமா? இன்னும் எத்தின பேரை இந்த களே. அதுக்கு முதல் நாம இந்த 1. உங்களுக்கு நடந்தது இன்னொரு நீங்கள் வந்தால் தான் உங்களப்பார்த்து
வார்த்தையில். அவர்கள் எவ்வளவோ

Page 128
கேட்டும் நான் மறுத்து விட்டேன். வே விட்டு வெளியேறிப் போனார்கள். அந்த ! வந்தது... ஆனால் யார் என்று அடைய
இவர்கள் வந்துபோய் மூன்ற கனவில் கூட நினைத்துப்பாத்திராத இயக்கத்துக்கு ஓடிப்போன தம்பி, இயக் செத்துப் போய்விட்டதாக நினைத்து 3 ஏறக்குறைய அவனை மறந்துவிட்ட நின அதுவும் கனடாவில் இருந்து நம்ப மும் யார் தாலியை அறுத்துப்போனானோ . எனக்கொரு நம்பிக்கை ஒளிக்கீற்று ந
ஆறுதல்.
தோளில் கையொன்று அமு. நெருக்கமாய் உரசிக்கொண்டு அமர்ந்த சம்மதிப்பேன் என்று முழு நம்பிக்கை எத்தனை பெண்களைப் பார்த்திருப்பான்
கொஞ்சம் விலகி அமர்ந்தேன். : உடன்படாவிட்டால் கனடா என்பது கல
ஏற்கனவே சேதாரம் ஆனவள் போனால் மூழ்கியா போய்விடும்? கெடு வித்தியாசம் இருக்கிறதல்லவா? மனத பகிர்வது அவ்வளவு சாதாரண விசயமா? கட்டப் போகிறவனா? பாதகமில்லை இ
இவனுக்கும் இந்த சிப்பாய்க் வேறு வேறாயினும் குறி ஒன்றுதான். அவ பண்ண முடிந்தது. இவனிடம் அது இ மட்டுமே என் எதிர்காலம் முடிவெடுக்கட் எந்த ஊர் நியாயம்?
குலசிங்கம் திரும்பவும் அரும் என் தோள் மீது தலை வைத்து பிடரிை காது மடல் தொட்டான். கிறக்கம் வந்தது மயங்கிப்போ என்று உடம்பு சொன்ன கிறங்கி அவனுள் சொக்கிச் சரிந்தேன்.
எப்போது இருட்டியது என்று

ண்டா வெறுப்பாய் சலிப்புடன் வீட்டை மாஸ்டர் என்பவரின் முகம் ஞாபகத்துக்கு Tளம் கண்டு பிடிக்க முடியவில்லை.
1ம் நாளில் ஒரு அதிசயம் நடந்தது. விசயம். ஐந்து வருடங்களுக்கு முன் கமும் இயக்கமும் போட்ட சண்டையில் அவனுக்கு திவசம் கூட பண்ணினோம். >லயில் அவனிடம் இருந்து ஒரு கடிதம். டியவில்லை. ஆயினும் உண்மை. யார் தரியவில்லை . அது முக்கியமில்லை. மக்கு துணையிருக்கிறது என்கிற ஓர்
க்க அதிர்ந்தேன் குலசிங்கம் எனக்கு ான். அவன் ஆசைக்கு நான் எப்படியும் போலும். ஏஜென்சிக்காரன் அல்லவா
அவன் தரை பார்த்தான். இவன் ஆசைக்கு ாவாகிக்கூடப் போகும்.
ள் தானே... இன்னொரு தரம் சோரம் க்கப்பட்டதற்கும் கெட்டுப்போவதற்கும் நிந்து யாரோ ஒருவனுடன் படுக்கையை காதலிப்பவனா? ஸ்நேகிதனா? கல்யாணம் ஒவன் யார்?
தம் என்ன வித்தியாசம் அஸ்திரங்கள் னிடம் அதிகாரம் இருந்ததால் பலாத்காரம் இல்லை.. பிடி இருக்கிறது...! இவனால் படும் என்கிற பிடி... புரியவில்லை. இது
கே அமர்ந்தான். நான் விலத்தவில்லை. ய முகர்ந்தான். கூசியது. நுனி நாக்கால் 5. இடது கையால் இடுப்பு வளைத்தான். சது. மனசு மூன்றாம் நபரானது. நான்
புரியவில்லை. உடம்பு அசதி. நீண்ட
யுத்தத்தின் இரண்டாம் பாகம் : 127

Page 129
நேரம் குலசிங்கத்தின் நெஞ்சில் ( குலசிங்கத்தின் முகம் வியர்த்திருப்பது என் ஆடையால் அவன் முகம் துடைத்தது எழுந்தான். அவன் முகம் பார்த்தே பார்த்திருந்தான்.
"என்னை நீங்கள் பிழையா நினைக்கி குனிந்த தலை நிமிரவில்லை. அப்பா
“எதுக்கு” நானும் அப்பாவியாய் கேட்டேன்.
“உங்களத்தான்.”
“இதில என்ன இருக்கு நானும் தானே
ப்றா குக்கை மாட்டிக்கொண்டேன்.
"உங்களிட்டை ஒரு விசயம் சொல்ல
"சொல்லுங்கோ''
“உங்களை நான் கலியாணம் முடிக்க அவன் பட்டென கேட்க - நான் அதிர்ந்
“அது எப்படி? என்னை கல்யாணம் முடிக் நீங்க ஏற்கனவே கல்யாணம் முடிச்சு நடந்தது ஒரு விபத்து... விருப்பம் சம்மதிச்சித்தான் நடந்த விசயம். ே சம்மதிக்கிறேன்... கல்யாணம் கத்திரி நான் சொல்ல மௌனமாய் இருந்தான். . தொண்டையைத் தடவினான். மங்கிய (
"அது ஒண்டும் எனக்கு தெரியாது. நீ அவனுக்கு தொண்டை கட்டிக்கொண்ட
"நீங்க என்னை விட ஐந்து வயது குற பொம்ளைங்களோட தொடர்ந்து செக்ஸ் 1 தெரியாதே...”
"அது ஒண்டும் எனக்குத் தெரியாது !
128 2 சக்கரவர்த்தி

முகம் புதைத்துத் தூங்கியிருக்கிறேன். இருட்டிலும் தெரிந்தது. அவிழ்ந்து கிடந்த துவிட்டேன். விழித்துக்கொண்டு அவசரமாய் ன். தலை குனிந்து நெடுநேரம் தரை
றியளே” வியாய் கேட்டான்.
வேணும் போல இருக்கு.."
கட்டே?”
- - - - - - -
தேன்.
க்க வேற ஆள் இருக்கு. அது மட்டுமில்லாம ரெண்டு பிள்ளை வேற இருக்கு. இப்ப இல்லாத மாதிரி இருந்தாலும்- நானும் தவை எண்டால் இன்னும் நாலு நாள் க்காய் என்ற பேச்செல்லாம் வேணாம்" கண்கள் லேசாய் அவனுக்குக் கலங்கியது. வெளிச்சத்தில் அவன் அழகாய் இருந்தான்.
ங்க எனக்கு வேணும்”
-து.
பஞ்ச ஆள் குலசிங்கம்... வயதுக்கு மூத்த வெச்சிருக்கிறது பிழை எண்டு உங்களுக்கு
நீங்க எனக்கு வேணும்”

Page 130
ஏக்கமாய் இருந்தான் சிறு துளிர் க பாவமாய் இருந்தான். நான் அவனில் பாவப்பட்டேன்...
“எப்படிச் சாத்தியமாகும் குலசிங்கம்?” லேசாய் சலனப்பட்டேன்.
“நீங்க ஓம் என்று சொல்லுங்கோ மத்த அவன் சொல்ல என் மனம் முழுதாய்
ஊவென்ற பேரிரைச்சலுடன் பறக்க விக்கிரமாதித்தனின் குதிரை க வேதாளம் காற்றில் கலைந்து பின் ? மட்டும் அசைவற்று நின்றிருந்தான்.
தூக்கம் கலைந்த இரண்டு பி இருந்து கூய் போட்டு விட்டு எங்கோ விக்கிரமாதித்தன் வேதாளத்தை அண்ல அமுதாவைப் பார்த்தான்.
“இக்கதையில் அப்படி சிக்கல் எதுவும் | நீதான் அந்த குலசிங்கத்தை மணம் முடி இரண்டாம் தாரமாய் இருப்பதில் நில அவர்களுக்குத்தான் காதல் மனைவி, : முன்னவளைக் காட்டிலும் பின்னவளில் மேலிடும். நீ அவனுடனேயே வாழலாம் விக்கிரமாதித்தன் சொன்னான். அமுதா வேதாளத்தைப் பார்த்தாள். அது
“அவள் உனக்கு முழுக் கதையைப் வேதாளத்தின் குரலில் பிசிறு தட்டியது
காஞ்சினம் பழம் ஒன்று கீழ் விழ- அ( நின்றாள். நெருங்கி நின்ற அமுதாவை பார்த்தான் விக்கிரமாதித்தன்.
“அவன் என்னை கல்யாணம் முடிக்கிற நான் ஏஜென்சிக்காரன். கனடாவில் இருக்கிறன். இந்தியாவில் இருக்கிற கனடாவுக்குப் போனா அவளுடன்

ன்ணீர் அவன் கண்களில் தெரிந்தது.
தை நான் பார்த்துக் கொள்றன்.” சலனத்தில் மூழ்கியது.
காற்றடித்தது. சுடலைச் சாம்பல் எங்கும் னைத்தது. அமுதா பயந்து ஒடுங்கினாள். உருவம் கொண்டது. விக்கிரமாதித்தன்
சாசுகள் மூலையில் நின்ற மரம் ஒன்றில் பறந்து போயின... சார்ந்து பார்த்தான் பின் அதே வேகத்தில்
இருப்பதாய் தெரியவில்லையே பெண்ணே. க்க சம்மதித்து விட்டாயே அப்புறமென்ன..? றைய இன்பங்கள் உள்ளது தெரியுமா? ஆசை நாயகி என்றெல்லாம் பேர் உண்டு.
• தான் ஒருத்தருக்குக் காதலும் காமமும்
ம்..."
விக்கிரமாதித்தனை சோகமாய்ப் பார்த்தது.
பும் சொல்லவில்லை விக்கிரமாதித்தா”
முதா பயந்து விக்கிரமாதித்தனை உரசி அப்படியா என்பது போல் ஓர் ஓரப்பார்வை
என் எண்டு சொல்லி ஏமாத்திப் போட்டான்” ஆறுமாதம், இந்தியாவில் ஆறுமாதம் ஆறு மாதமும் உன்னோடு இருக்கிறன் இருக்கிறன் எண்டு சொல்லிப்போட்டுப்
யுத்தத்தின் இரண்டாம் பாகம்
ப 129

Page 131
போனவன்தான் ஒரு வருசமா எந்த என்ன செய்யிறான் எண்டு ஒண்டும் தம்பியும் என்னை வெறுத்திட்டான். இந்த விசயம் தெரிஞ்சு ஏலா எண் செய்வது எண்டு ஒண்ட் விளங்ாவில் அமுதா அழுதார் விக்கிரமாதித்தனுக்குப் பாவமாய் போ
கிட்டத்தில் ஏதோ சரசரப்பு மரத்தை உற்று நோக்கினான். ம ஒட்டுக்கேட்டுக்கொண்டு நிற்பது கை உருவினான். பிசாசுகள் பயந்தன. 6 வேதாளம் கன்னத்தில் கைவைத்து அே
“சரி பெண்ணே, அந்த பாதகன் போ சிப்பாய் உன்னைக் கல்யாணம் செய்லி அவனிடம் செல்லலாம் அல்லவா?” விக்கிரமாதித்தனுக்கு எப்படி ஞாபகம் பிரகாசம் ஆனது. அமுதா வேதனையாய் சிரித்தாள்.
“போனேன். அவனக்கூட தேடிப்போனே6 ஒண்டும் இல்லை. கண்ணி வெடியி இருக்கான். கால் இல்லாட்டியெண்டாலு கல்யாணம் முடிச்சவன். அவனோட பொ அடிச்சி அழுகிறார்கள். நான் என்ன ெ அமுதாவால் அழுகையை அடக்க முடி ஆறுதல் சொல்வது என்று புரியவில்லி சுற்றியது.
“சொல் விக்கிரமாதித்தா சொல். இப்
சொல்லிவிட்டு உன் விருப்பப்படி நீ பி. வேதாளம் சொல்லியது.
விக்கிரமாதித்தனுக்கு எதுவுட மாட்டிக்கொண்டோம் என்பது மட்டும் பு
"இன்னும் சில கணப்பொழுதுகள்தான போனால்- உன் தலை. சுக்கு நூறாக
130 ப சக்கரவர்த்தி

தொடர்பும் இல்லை. எங்க இருக்கான் தெரியாது. கடசியா இப்ப என்னோட கல்யாணம் முடிக்கிறதா இருந்தவரும்
சொல்லிப்போட்டாரு. எனக்கு என்ன
5ᏈᏍᎧY
lgbl.
கேட்க விக்கிரமாதித்தன் இலுப்பை ரத்தின் பின்னே மூன்று பிசாசுகள் ாடு கோபம் வந்தது. உறைவாளை பால் இழுபட எங்கோ ஓடி மறைந்தன.
த கிளையில் சோகமாய் சாய்ந்திருந்தது.
கட்டும். உன்னை மானபங்கம் செய்த தாய் சொல்லிச் சென்றான் என்றாயே.
வந்ததோ தெரியவில்லை. அவள் முகம்
ன். பாவி. இடுப்புக்குக் கீழே அவனுக்கு ல் மாட்டி ரெண்டு காலும் இல்லாம ம் பரவாயில்லை. அவன் கூட ஏற்கனவே ஞ்சாதியும் அம்மாவும் தலையில அடிச்சி gujuu.?”
பவில்லை. விக்கிரமாதித்தனுக்கு எப்படி )ல. அவனுக்கு கூட பலமாய் தலை
பெண்ணின் வாழ்வுக்கோர் வழிசொல். னத்தை கொண்டு செல்லலாம்.”
புரியவில்லை. மிகப்பெரிய சிக்கலில் ந்தது அவனுக்கு.
விக்கிரமாதித்தா. நீ விடைபகிராது ஞாபகம் இருக்கட்டும்.”

Page 132
விக்கிரமாதித்தன் மண்டைக்குள் ஜிவ் நம் கதை முடியப்போகிறதோ? அப்படி ஆள்வது? என் அந்தப்புரத்தில் உள்ள ( என் போகங்களையும் யார் சுவைப்பது? 6 ஏன் என்று தெரியவில்லை அர்த்த என்னவோ...
“இன்னும் சில கணப்பொழுதுகள் தா தலை வெடித்துச் சிதறிவிடும்.” வேதாளம் உறுமியது.
விக்கிரமாதித்தனுக்கு வியர்த் நொந்தாள். நம்மால் வீணாக ஒரு உய வெடித்துச் சிதறப் போகிறதே... வேதாள வேண்டுமே.
விக்கிரமாதித்தன் யோசித்தான். கணப் பொழுதில் பொறி தட்டியது.
வேதாளத்திடம் கெஞ்சிக் கேட்பு அமுதா காஞ்சின மரத்தை அண்ணார்ந்து நின்ற அமுதாவை இறுக்க அணைத் தூக்கி தோளில் கிடத்தி குதிரையில் 6
அமுதா என்ன நடக்கிறது எ அந்தப்புரம் நோக்கி வேகம் எடுத்தது... புளுதி மண்டலம் கிளம்பியது... பிணத்தைத் தூக்கிக்கொண்டு வேதாள
----
காலம் - 1998 |

வென்று எதுவோ ஏறிற்று... இன்றுடன் யென்றால், என் சாம்ராஜியத்தை யார் முப்பத்தி ஏழு தேசத்துப் பெண்களையும் பய்களின் நடமாட்டம் அதிகரித்திருந்தது. சாமம் முடியபோகிறது என்பதாலோ
ன் விக்கிரமாதித்தா... அப்புறம் உன்
தது. அமுதா பயந்தாள். வேதனையில் பிர் போகப்போகிறதே... அதுவும் தலை த்தின் சாபத்தை எப்படியும் நிறுத்தியாக
நி, விக்கிரமாதித்தனின் சாபத்தை தடுக்க S பார்த்தாள். விக்கிரமாதித்தன், அருகே தான். அமுதா அதிர்ந்தாள். அவளை ரறினான் விக்கிரமாதித்தன்.
ன்பதை ஊகிக்கும் முன்னே குதிரை
ம் மீண்டும்...
F - - - - - - -
யுத்தத்தின் இரண்டாம் பாகம் 1 131

Page 133
த்துவ வாழ்க்கையில் விரோ அதில் புரிந்து கொள்ளல் ம எடுத்தல் அல்லது புறம் தள்ளல். ச எந்த ஒரு அகாலப் பொழுதிலும் கூட எ கூட எனக்கும் அவளுக்குமிடையிலா நாட்களும் ஐந்து மணித்தியாலங்களும் இ
“உன்னோட உறவு என்னோட சிந்தன கணத்தில் இருந்து உனக்கும் எனக்கு தொடரப்போறதில்லை. தொடரக்கூடா என்று பூர்வாங்க ரீதியாக சக்கரக்கட்டிய சொல்லி பத்து நாட்களும் ஒரு மணித்
132 ப சக்கரவர்த்தி
 

ჯჭ: 33 ۴- عیع:
றேகுகள்
தமும் இல்லை. ஸ்நேகமும் இல்லை.
ாத்திரமே உண்டு புரிந்துகொண்டு உள் க்கரக்கட்டி புறந்தள்ளப்பட்டு விட்டாள். னக்கவள் விரோதியாகப்பட்டாள். ஆயினும் ான உறவு முறிக்கப்பட்டு பதின்நான்கு இருபத்திரெண்டு நிமிடங்களும் ஆகிவிட்டது.
]னப் போக்குக்கு தோதுப்படாது. இந்தக் மான உறவு இனி எந்த ஒரு பொழுதிலும் து!” பிடம் நான் அறிக்கை மாதிரி அறுதியிட்டுச் ந்தியாலமும் ஆகிவிட்டது.

Page 134
நேரம் இப்போது சரியாக பின்னிரவு 2.0
நான் கொஞ்சம் அப்படித்தா பொழுதுகளில்தான்! முடிவு எடுத்தல், பேசல், தொழில் பார்த்தல் என்று சகல ஊத்தில்தான்!
தூக்கமும் கனாக்காணலும் பகலில்!
முரண்பட்டு இருக்க வேண்டும் வாழ்க்கையை மாற்றி அமைக்கவில்லை கூடச் சேர்ந்து நானும் மாறிவிட்டேன். வா கருணை கொண்டு மாறப் போவதில்லை. |
வாழ்க்கைக்கு ஏதுவாய் ...! பருவ கால போல நாம்தான் மாறிக்கொள்ள வேண்
ஐப்பசி வந்தால் உதிர்வதற்கு மார்கழிக்கு முன்னதாய் முழுத தைக்குப் பின் விறைத்துப் பே சித்திரை கடந்தால் உயிர்த்து ஆனியில் கர்வமாய் தலை வி
காலம் மாறுகின்றது கூட நீயும் நானும்
முரண்பட்டு இருக்க முடியும்த பருவகாலம் பற்றி பயம் இல்லாது ஊச்சி விறைப்பாய் நிற்க முடியும்தான்! மரண அல்லது வருகின்றவரைக்கும் விறைப்பு ஆனால், முரண்பட்டு, முரண்கொண்டு என்பதுதான் என் கவலை எல்லாம்.
“ஏன் முடியாது? முடியும். முரணான சி
கூடிக் குலாவுவேன்” என்கின்ற என் சிந்தனைப் போக்கு அ எதற்கும் முரணாய்ப் போய் முட்டிக் ெ மிஞ்சியது என்ன? முறிந்த இறகுகள்
"உனக்கெதுக்கு கூட்டம்? ஒத்த இறக்க முரணான இறக்கைய கொண்ட கூட்ட கூட்டம்? உன்னால தனியா பறக்க முடிய தனியா பற.. அப்பதான் பூமியில இருக்

ர்... சகலமும் இராக்கால அகாலப் ழுதல், சிந்தித்தல், படித்தல், போன் ம் வண்ணான் பொண்ணுக்கு போகும்
என்பதற்காக நான் ஒன்றும் அப்படி வாழ்க்கை அப்படி மாறிக்கொண்டது. ழ்க்கை என்பது ஒருபோதும் நம் மேல் தாம் நாம்தான் மாறிக்கொள்ள வேண்டும்.
ங்களுக்காக உருமாறும் மரங்களைப் இம்!
ஆயத்தம் பண்ணு. ாய் உதிர்ந்துவிடு. பாய் இறப்பாய் நில். துளிர்த்துக்கொள். ரித்து கிளை அசைத்து ஆடி விடு.
மாறிக்கொள்கின்றோம். அவ்வளவே...
கான்! காலம் பற்றி கவலை இல்லாது = இலை மரங்கள் மாதிரி கர்வத்துடன் ம் என்கின்ற ஒன்று வராதவரைக்கும், பாய் முரண்பட்டு இருக்க முடியும்தான்! கூட்டம் கூட்டமாய் இருக்க முடியுமா
ந்தனை கொண்ட கூட்டத்துடன் நான்
ஓபட்டு போய்விட்டது. காள்கின்ற வயது... முட்டிக்கொண்டது! தானே ..?(!)
கய கொண்ட கூட்டமா இருந்தாலும் சரி டமா இருந்தாலும் சரி உனக்கெதுக்கு சதா? தனியா பற... தைரியம் இருக்கும்னா கிறவா உன்ன உற்று உற்று கவனிப்பா.
யுத்தத்தின் இரண்டாம் பாகம் 1 133

Page 135
அப்படியென்னாத்தான் மனுஷானோட ம
“சொல்லடி சிவசக்தி என்னை சுடர்மிகு அறிவுடன் படைத்து வல்லமை தாராயோ இந்த மாநிலம் ப அப்படின்னு நீ சிவசக்திய கேக்க வேண அழியிற சுடர் மிகு அறிவ பாதுகாத்து கலந்திட்டியென்னாத்தான் மேல.மேலி வேதனையில லிக்கர ஊத்தி சுடர்மிகு றெக்கைதானே. ஆத்மா இல்லியே? ஆத்ய தனியாப் பற.”
தொலைவில் இருக்கின்ற
புலம்பலைச் சொல்ல அவர்தான் அதற்
சக்கரக்கட்டிக்கும் எனக்கும் இடையில எப்போதோ தெரிந்து போனதுதான்! ஆ6 என் தீர்க்க தரிசனம் கண்டு கொள்ளே
“உயர உயர பறக்க வேண்டிய நீ எ சகவாசம் வைத்திருக்கிறாய்?” என்று
“நொண்டிக் குதிரையுடன் மூணு மாசம் நீயும் நொண்டத்தான் வேணும்.”
இப்படிக் கூட அடிக்கடி சொல் என்ன, அதுவும் குதிரைதானே என்பது என்னடாவென்றால் என்னைப் பின்னங்க
சக்கரக்கட்டி நொண்டிக்குதில் தெரிந்தது. முரணான இறக்கை என்று அதற்கு முன்னரெல்லாம் ஒத்த இறக்ை கணக்குப் பண்ணி வைத்திருந்தது.
என்னுடைய கருத்துக்கள் விரி கருத்துக்கள் சிந்தி சிதறி மாறுகின்ற
கருத்துக்களை கொண்டவன் மனித கருத்துக்களை மாற்றி மாற்றிக் கொள்
கருத்துக்களை மாற்றிக் கொள்வது யா நிலையான கருத்துக்களை கொண்ட ட
134 - சக்கரவர்த்தி

னசில உனக்கு சாகா வரம் கிடைக்கும்.”
விட்டாய். பனுற வாழ்வதற்கே! மோ? வல்லமைய கேளு. உனக்குள்ளார கே. சுடர் மிகு அறிவோட வல்லமைய பறக்க முடியும். றெக்கை முறிஞ்ச அறிவை அணைச்சிக்காத. முறிஞ்சது ாவ பத்திரப்படுத்திக்க றெக்க சரியானதும்
ஆஸானிடம் தொலைபேசியில் என் கு இப்படிச் சொன்னார்.
ான உறவு எப்போவோ முறியும் என்று ால் என் சிறகுகளும் முறியும் என்பதை வ இல்லை.
துக்கிடாப்பா நொண்டிக் குதிரையோட நவீனன் அடிக்கடி என்னிடம் கேட்பார்.
நீ நடந்தியெண்டால் மூணாவது மாதம்
வார். நொண்டிக் குதிரையாக இருந்தால் தான் என் எண்ணமாக இருந்தது. அது காலால் நெண்டியல்லவா தள்ளிவிட்டது.
ரை என்று எனக்கு அண்மையில்தான் கொஞ்சக் காலம் முன்னால் தெரிந்தது. கயை கொண்ட பறவை என்றே புத்தி
படைகின்றதா? அல்லது சக்கரக்கட்டியின் நா என்று தெரியவில்லை. நிலையான அல்ல. அவன் பயித்தியக்காரன். பவனே மனிதன்!
? நானா, சக்கரக்கட்டியா? பித்தியம் எது?

Page 136
முன்பெல்லாம் கற்பு விசயத்தி யார் இல்லை என்று சொல்வது?) அவ போனால் பொசுக்கும்.
“உலகத்தில் இருக்கிற பொம்பிளைய யார்? தமிழ்ப்பெண்கள்தான்!” என்று அ
“இந்த தமிழிச்சிக்குள்ளயெல்லாம் மகா, கேட்டால் நெஞ்சை நிமிர்த்தி கர்வமாய்
“எப்படி நம்புறது? கண்ணகி மாதிரி, சீ: மாதிரி நீ கற்பில சிறந்தவள் என்பன சந்தர்ப்பத்தில் கேட்டுவிட்டேன்.
சக்கரக்கட்டிக்கு ரொம்பவும் ( வெறும் “கிறியெட்டிவ் கறக்டர்” எ சொன்னாள்.
இந்தக் கண்ணகி, சீதை, அ பாத்திரங்கள் என்று முதன்முதலாய் (ந சக்கரக்கட்டியாகத்தான் இருக்கவேண்டு
“கற்பு என்றதே மிகப் பெரிய கற்பை நான் சொன்னதை சக்கரக்கட்டி நம்புவத கதைப்பதாகவும் எனக்கு பழங்கை புத்துலகத்தைப் பற்றியும் தெரியாது 6 இ(க)லக்கியவாதி என்றும் வாதிட்டாள்
அதுமட்டுமல்லாது கற்பு என்பது பிசி என்றாள். எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ஆனா
"அப்படி எண்டால் சக்கரக்கட்டி, கற்பு தானா?” என்று உண்மையாகவே 6 சக்கரக்கட்டி நீண்ட நேரம் யோசித்தாலி எனது தோற்றம் முரட்டுத்த இருப்பினும்கூட நான் ஒரு அப்பாவி முடியும் என்றும் சக்கரக்கட்டியினுடைய
“மட்டக்களப்பான் மடையன் மூன்று ஊ தயிரையும் திண்டு திண்டு அவன்ட மன ஏமாத்திறது லேசி. அவனுக்கு நாமதான்

ல் சக்கரக்கட்டி படு கறார். (இப்பவும்தான் |ளுடைய கற்பு நெருப்பு மாதிரி. கிட்டப்
பல்ல கற்ப கெட்டியாப் பாதுகாக்கிறது அடித்துச் சொல்வாள்.
மகா கற்புக்கரசி யார்?’ என்று யாரேனும் ப் “நான்” என்பாள்.
தைமாதிரி இல்லாட்டிப்போனா அருந்ததி தை நிரூபிக்க ஏலுமே?” என்று ஒரு
கோபம் வந்துவிட்டது. அவங்க எல்லாம் ன்று ஆவேசமாய் மிக யதார்த்தமாய்
அருந்ததி எல்லாம் வெறும் கற்பனைப் ான் அறிந்தவரை) சொன்ன தமிழ் பெண் Sub.
னதான். உனக்கது தெரியுமா?” என்று ாய் இல்லை. மறுத்தாள். நான் மடத்தனமா தகள் தெரியாது என்றும் அத்தோடு ான்றும் வெறும் கனவுலகில் வாழுகின்ற
.
க்கலாகவும் உண்மையான விசயம்
ல் காட்டிக்கொள்ளவில்லை.
என்றது வெறும் உடம்பு சம்பந்தப்பட்டது ாதுவும் அறியாதவனாகவே கேட்டேன். it. னமாகவும் பார்வையில் தீட்ஷண்யமும் என்றும் என்னை இலகுவாக ஏமாற்ற ய நீண்டகால எண்ணம்.
த்தும் சோறு தின்ற மடையன். அரிசையும் ண்டைக்குள்ள சக்குப் புடிச்சித்து. அவன ராசா. இதுதாண்டா தம்பி யாழ்ப்பாணிக்கு
யுத்தத்தின் இரண்டாம் பாகம் - 135

Page 137
நம்மளப்பத்தின் அபிப்பிராயம். யாழ்ப்பான தான். நம்மளோட அவன் ஒட்டுறான் வறுகப்போறான் எண்டுதான் அர்த்தம் யாழ்ப்பாணியோட உறவ கம்யூனிஸ் அவனுகளோட சவகாசம் வைச்சிருக்கிற நீ கொளறிக்கொண்டு திரிவாய் அப்பத
இயக்கத்துக்குப் பின்னால் வ அப்பா, அடிக்கடி இப்படிச் சொல்வார்.
சக்கரக்கட்டிகூட சுத்தமான u மாதிரி இயல்புகொண்ட சுத்தமான மன
நான் மூன்று வேளையும் சோறு சோறும் தயிரும் வாழைப்பழமும் சீனி பொரியல், குழம்பு, கடையல், செ மதியத்தானையும் விடியத்தானையும் முடியும். சீட்டுப் பிடிக்க முடியும். ஆள் இயக்கம் ஆரம்பிக்க முடியும்... இவை இருப்பதைவிட மூன்று வேளையும் சோழ போகின்றேன்.
வாழ்க்கை என்பதே ஆளை . வேறு விசயம்.
நான் ஏமாந்தவனாகவே காட்
"அப்படியெண்டால் சக்கரக்கட்டி, உல என்றேன். அது என்னமோ தெரியவில் எதைப்பற்றி என்றாலும் பலரது விளக்கம் அந்தப் பொழுதுகளில் என்னை ஏம் கொடுக்கின்ற விளக்கத்தைக் கிரகிப்ப
சக்கரக்கட்டிக்கு பேரானந்தம். அறிவிலும் அனுபவத்திலும் மெத்த முத் சொன்னாள்.
"கற்பு என்றது சுத்தம். பெண்னோட 8 உறவும் உடல் உறவும் கொள்ளாம் !
பிரமாதம்! புல்லரித்துப் போனது எனக்
கற்றுக் கொடுக்கப்படுகின்ற இ ஒழுக்கம், கண்ணியம், கடமை, கட்டுப் ஏகப்பட்டவைகளுடன் ஒன்றுக்கு மேற்பு
136 1 சக்கரவர்த்தி

ரியோட உறவு வெறும் பொருளுக்காகத்
எண்டால் நம்மட்ட என்னத்தையோ ). நான் கம்யூனிஸ்ட் இல்ல. ஆனா ட்டோட பார்வையிலதான் பாப்பன். நீ து நல்லது இல்ல. மறகா ஒரு காலத்தில
ன் தெரியும்.” ல் பிடித்தக்கொண்டு திரிந்த காலத்தில
பாழ்ப்பாணத்து மண். அப்பா சொல்வது ன் வாசனை மனம்.
3 தின்பவன்தான். (இப்பவும்) காலையில் பும் வேண்டும். மத்தியானம் சுண்டல், தியுடன் சோறு வேண்டும். இரவில் சேர்த்து வேண்டும். ஆனால் என்னாலும் கடத்த முடியும். கோயில் கட்ட முடியும். 1 எல்லாம் செய்கின்ற புத்திசாலியாய் று தின்கின்ற மடையனாக இருந்துவிட்டுப்
ஆள் ஏமாற்றவும் ஏமாறவும்தானே என்பது
டிக்கொண்டேன்.
ன்மையிலேயே கற்பு எண்டால் என்ன? மலை. என்னுடைய பெரிய கோளாறு... நத்தையும் அறிந்துகொள்ள நினைப்பது. ாளியாகக் காட்டிக்கொண்டு அவர்கள் து மகா சுவாரசியம்!
தன்னை ரொம்ப பெரிய மனுஷியாகவும் தியவளாகவும் பாவனை காட்டிக்கொண்டு
ஈத்தம். ஒன்றுக்கு மேற்படாத ஆணோட இருக்கிறதுதான் கற்பு!"
கு. யலே கற்பியல்! இதில் பணிவு, அடக்கம், பாடு, வாய்மை, நேர்மை, வாக்கு இன்னும் டாத உடற்கல்வியும் இதனுள் அடக்கம்.

Page 138
தொண்ணூற்றி ஒன்பது வீதமானவைகள கீழே சுத்தமாக இருப்பதே 'கற்பு' என பிடிக்கின்றார்கள்?
சிந்தனையில் மாற்றந் தேவை! சக்கரக்கட்டியை சீண்ட வேண்டும் போ
“நீ கற்புள்ள பொம்புளதானே..?
“ஓம்!”
“மழை பெய்யவை பாப்பம்?”
“உனக்கென்ன பைத்தியமா, நான் எப்பு
“நீ சொன்னா மழை பெய்யும் எண்டுதா சக்கரக்கட்டிக்கு கோபம் பொத்துக்கொ
குங்குமத்தையும் சந்தனத்தை நிறம்... அந்த நிறம்தான் சக்கரக்கட்டி கலவையில் அதிகமாய் குங்குமத்தை ெ
அவள் முகம்.
"வள்ளுவன் சரியான ஆணாதிக்கவாதி எழுதின குறளுகளுள் ஒண்டுதான் இந்த
அப்படித்தான் எழுதுவான். அந்த காலத்த பூமியில் இருந்து யதார்த்தத்தை எழுதி
சக்கரக்கட்டி சொன்னதைப் பார், இருந்தது...
சக்கரக்கட்டி ரொம்பவும் ய விசயத்தில்தான் என்னுடன் கொஞ்சம் கருத்துக்கு முரண்பாடு இல்லை என்பது
"சரி, சக்கரக்கட்டி உன்ன கல்யாணம் தானா எண்டு கேட்டால், நீ எப்படி நிரூ
"கற்ப நிரூபிக்க ஏலாது... என்ன என ஒராளத்தான் லவ் பண்றன். என்ன என
“இந்த வாழ்க்கையில் மிகப் பெரிய டெ தெரியும்! என்பதுதான். இங்கு யார் இ

ள ஓரத்தே ஒதுக்கி விட்டு இடுப்புக்குக் கின்ற ஒரு வீதத்தை ஏன் தூக்கிப்
ல் உணர்வு வந்தது...
டி மழை பெய்ய வைக்கிறது?”
னே வள்ளுவர் சொன்னார்.” ன்டு வந்தது. பும் ஒன்றாக குழைத்தால் வருமே ஒரு
அவளுக்கு கோபம் அதிகமானதும் கொட்டியது மாதிரி நிறத்துக்கு போனது
. எங்களை எல்லாம் முடக்கி வைக்க மழை விசயமும். அவன் ஆம்புளதானே திலையும் சரி எந்த எழுத்தாள ராஸ்கல் யிருக்கான்? த்தால் என்மீதும் ஏறிப் பாய்ந்த மாதிரியும்
தார்த்தமான பெண்... என்ன, கற்பு > முரண்பாடு! மனதால் என்னுடைய 1 அப்புறமாய் தெரிந்தது...
முடிக்கப் போறவன்! நீ கற்புள்ளவள் பிப்பாய்?
க்குத்தான் தெரியும். ஆறு வருஷமா க்குத்தான் தெரியும்!”
பாய் எது தெரியுமா? என்னை எனக்குத் நக்கின்றார் தன்னை அறிந்தவர்? ஒரு
யுத்தத்தின் இரண்டாம் பாகம்
- 137

Page 139
கடுகு அளவுக்கேனும் தன்னை அறிந்த
"நான் யோக்கியமானவள்" என்று சொ சக்கரக்கட்டியில் குற்றம் சொல்ல? ப வரைக்கும் எல்லா பெண்ணும் இடுப்புக்கு பத்தினியாகவும் கற்புடனும் பத்திரமாக
முன்னரெல்லாம் சக்கரக்கட்டி போவதே தெரியாது. படு சுவாரஸ்யம் இப்போது எல்லாம் அந்த சுவாரஸ்யரே
<<
"அவுத்துப் போடாத வரைக்கும்தான் பெ அவுத்துட்டா அப்பறம் ஒரு மண்ணும் க ஆஸான் அடிக்கடி சொல்வார்... அதன ஆறுமாதம் முன்பிருந்த சுவாரஸ்யம், பால் இப்போது கிடையாது...
கதைப்பது, பேசுவது, கொள்கை என் எல்லாம் சும்மா ஒரு பம்மாத்துக்கு.
இவையாவும், சக்கரக்கட்டிபை கெளரவத்துக்கும், சமூக மதிப்புக்கும்த
இந்த வகையில் வெள்ளைக். ஒழுங்காக அனுபவித்ததும் இல்லை. பீற்றுகின்ற அளவுக்கு அதை பாதுகாப்
மகா கொடுமையான விசயம்! அறிமுகம் கிடைத்திருக்கின்றது... வொல் இப்படி ஏகப்பட்ட அறிமுகங்கள்... சமாச்சாரங்கள்.
இவர்களின் அபிமான அணி சத்தம் எழுப்பும் கால் கொலுசுகள்.
காலில் அதை கட்டிக் கொ நெளிப்பு! ஒரு நாள் கேட்டுவிட்டேன்
"ஏன் சலங்கைய கால்ல கட்டிக்கொண் எல்லோரும் சிரித்தார்கள்.
“நீங்கள் மட்டக்களப்புத்தானே. அது கதைக்கிறியள். இது சலங்கை இல்லை அணிகலன்” என்று எவளோ ஒரு வழு
138 - சக்கரவர்த்தி

கவர் உண்டா? கிடையவே கிடையாது."
ல்லாதவள் இங்கு எவள் இருக்கின்றாள். லமான ஆணின் குறுக்கிடல் இல்லாத 5 கீழே சுத்தமாகத்தான் இருக்க முடியும்!
வும் இருக்க முடியும்தான்!
உயுடன் கதைக்க முயன்றால் பொழுது Tக கதைத்துக் கொண்டே போகலாம். D இல்லை.
பாம்புள் சுவாரஸ்யம். ஆச்சரியம் எல்லாம். கிடையாது.” பால்தானோ என்னவோ தெரியவில்லை. ஆச்சரியம் எல்லாம் சக்கரக்கட்டியின்
று பீற்றுவது, கற்பு என்று உளறுவது
ப பொறுத்தவரைக்கும் ஒரு வகையான பன்!
காரிச்சிகள் யோக்கியம்! நம்மவளுகள் பண்பாடு, பழக்கவழக்கம், மரபு என்று பதும் இல்லை.
சக்கரக்கட்டி மூலமாக எனக்கு அதிகம் ன்டலா, ரெக்ஸோனா, மிஸ் மில்குவைற், எல்லாம் விதம்விதமான வழுவழுப்பு
கலன் என்னவென்றால் 'சல் சல்' என
ண்டு நடப்பதில்... அப்பாடா எத்தனை
டு உழவு மாடு மாதிரி அலையிறியல்?”
பதான் மாடும் சலங்கையும் எண்டு .. கொலுசு! இது எங்களோட பாரம்பரிய வழுப்பு சொன்னது.

Page 140
“உங்களோட பாரம்பரியம் விபச்சாரமோ வழுவழுப்புக்கெல்லாம் கோபம் வந்துவி
“ஏன் அப்படி சொல்லுறீர்.”
"இல்ல இந்த சலங்கையை. சே. கெ நீங்கள் நடந்து போகேக்கை, என்னப் செய்யிற மாதிரி இருக்கு. அது என்னபே ஆம்புளைக்கு விடுக்கிற அழைப்பு மாதி எல்லா வழு வழுப்புக்களும் கொலுை ஆனால் ஒரே ஒருத்தி மாத்திரம் கொ மணியை கழற்றி வீசிவிட்டு,
“இப்போ எப்படி?” என்றாள். அவள்தான் வெல்லக்குட்டான். சக்கரக்கட்டி மூலமாக எனக்கு கிடைத் நம்ம கதையின் இரண்டாவது கதாநாய வெல்லக்குட்டானை சக்கரக்கட்டி ( வெல்லக்குட்டானின் பிரதாபங்களை மு:
வெல்லக்குட்டான் பிரபல்யமான இதர தோழிகளுக்கு சமயங்களில் இவளது சொல்லை எந்த ஒரு தோழி “எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் உங்கை (உடல்களை கற்பு) சக தோழிகளுக்கு வெல்லக்குட்டானை பற்றி சக்கரக்கட்டி
வெல்லக்குட்டானில் கள்வம் மி அறிவும் கலங்கிய மனமுமே வெல்லச் அறிந்து விட்டேன்.
இவளை நான் அறிந்ததை தெரியவில்லை. எனக்கு தெரியாத இல எழுதிய படைப்புக்களைப் பற்றியும் சும்ம என்னுடைய கதை, கவிதைகளைக் கூட 6 விவாதிக்கவும் விமர்சிக்கவும் கூட செய்
“ஒரு இலக்கியவாதிக்கு கிடைக்கக்கூடிய என்று ஒரு தடவை கேட்டாள்.

.၇%
L-gl.
ாலுச கட்டிற்று தையும் தக்கா எண்டு பாரு. என்னப் பாரு. எண்டு சத்தம் ா அந்த கொலுசோட சத்தம், பொம்புள ரி இருக்கு.”
ச உடனேயே கழற்றி வீசிவிட்டன. லுசை வீசாமல் சத்தம் எழுப்புகின்ற
த இன்னொரு பனங்கட்டி!
Él. எனக்கு அறிமுகப்படுத்தும் போது தலில் பிரஸ்தாபித்தாள்.
இயக்கமொன்றின் மாஜி தோழி என்றும் கற்பு பற்றி வகுப்பு நடத்துவதாகவும் பும் மீறியது இல்லை என்றும் ள நீங்கள் இழக்கக்கூடாது" என்றும்
கட்டளை பிறப்பித்திருந்தாள் என்றும், கதை கதையாக கதைத்தாள்.
கப் பெரிதாய் ஒளி வீசியது. மழுங்கிய குட்டான் என்பதை நான் அப்போதே
அறிந்து விட்டாளோ என்னமோ க்கியவாதிகளை பற்றியும், அவர்கள் சும்மா கதைக்கக் தொடங்கிவிட்டாள். ழுந்து விழுந்து படித்தாள் சமயங்களில் 35T6T.
கப் பெரிய சந்தோஷம் எது தெரியுமா?
யுத்தத்தின் இரண்டாம் பாகம் 1 139

Page 141
"அக்டமி எவோர்ட்” என்றேன்.
இல்லை என்று மறுத்து விட்டு,
“இலக்கியம் தெரிந்த மனைவியுடன் என்றாள்.
எங்கோ உதைத்தது. இது என்பதாய் எனக்குப் பட்டது.
வெல்லக்குட்டானும் நானும் எ தெரிந்த பையன்கள் இருவரையும் வெல்லக்குட்டான் புல்லரித்து பூரித்து
எந்த சந்தர்ப்பத்தில் அல்ல, இழக்கக் கூடியவள் என்றும் தன்ன உருவாக்கக்கூடியவள் என்றும் எனக்
என்னதான் இருப்பினும் பனங்குட்டான்தான்..! அந்தளவு தித்திட்ட யார், எது கேட்கினும் அவளிடம் மறுப்பு விரலை விட்டு அதை தோண்டி எடுத்
"நல்ல மனம் உள்ள பொம்புளையவ இருப்பாளவ..! அப்படியென்று வெற்றி முத்தத்தோட ஹீரோ) அடிக்கடி செ உண்மையாகிவிடுமா? இந்த விசயத் அதை நான் ஏற்றுக் கொண்டதே இல்
கொஞ்சம் யோசித்துப் பிள்ளைத்தாச்சியாகாமல் இருப்பவள் இல்லையா?
அதென்னமோ, யாருக்குமே ! (கெட்ட) ராசி! சகலதையும் தூர் அதி
ஒரு நாள் காலையில் எட்டு போகாத நேரம். வெல்லக்குட்டான் 6 பார்க்க பேய் அறைந்தவள் மாதிரி இ போய் மஞ்சள் காமாலைகாரி மாதிரி
“என்ன விசயம், சுகம் கிகம் இல்லை
140 1 சக்கரவர்த்தி -

இலக்கியக்கூட்டத்துக்கு போவது!”
என்னமோ தவறுக்கான முதற்புள்ளி
ங்கேனும் போகும் பொழுதுகளில் யாரேனும்
இணைத்து கிண்டல் பண்ணினால் பபோவாள்.
இவள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் தன்னை ன இழப்பதற்காகவே சந்தர்ப்பங்களை கு விளங்கிப்போனது.
வெல்லக்குட்டானின் மனம் ஒரு |..! ரொம்பவும் இளகிய மனம் படைத்தவள். ப கிடையாது. வாய்க்குள் இருப்பினும்கூட, துக் கொடுப்பாள்.
எப்ப பாத்தாலும் வயிறு பொருத்துத்தான் வேந்தன் (அவருதாங்க நம்ம யூதாஸின் பல்வார். அவர் சொல்லிவிட்டால் என்ன, த்தில் நான் அவருடன் முரண்பட்டவன்.
ல்லை."
பார்க்கவேண்டும். அப்படியென்றால் 1 எல்லாம் நல்ல மனம் படைத்தவர்கள்
இல்லாத மாதிரி எனக்கொரு வித்தியாசமான ஷ்ெடவசமாய் கண்டு அனுபவித்துவிடுவது.
மணியிருக்கும். நான் நித்திரைக்குக்கூட ன்னைத் தேடி வந்திருந்தாள். அவளைப் நந்தாள். முகம் வெளிறி, கண்கள் உள்ளே
வெப்புத்தனமாய் காணப்பட்டாள்.
மயா?” என்று அக்கறையாகக் கேட்டேன்.

Page 142
"டேட் பிந்துது.” என்றாள், ஒரு வகை
என்ன ஆச்சரியமடா! திகதி
கலண்டர் பார்த்தேனே. அப்படி எதுவும் இ
டேட் எப்படி பிந்தும்? குழம்பிப் போனே
“இல்லையே டேட் சரியாகத்தான் இருக் தினக்காட்டியை தூக்கி வந்து காட்டினே
"நீ ஒரு மரமண்டை மட்டக்கிளப்பான் 6 தலையில் அடித்துக் கொண்டாள். இன்னும் குழம்பினேன்.
“என்ர ப்பீரியட் டேட் பிந்துது” என்றா? ஒகோ. இது பொம்புளைங்க அதை ஏன் என்னிடம்.? மறுபடி குழம்
“சரி அதுக்கிப்ப என்ன?” விபரீதம் புரியாததால் சாதாரணமாகவே
“நான் பிரக்னன்டா இருக்கன்” என்றாள்
இப்போது உண்மையாகவே ே கல்யாணம் ஆகாத கன்னிப் பெண் அதுவ இழக்கக் கூடாது என்றும் கற்பு பற்றி 6 எப்படி கற்பிணியானாள்? சூரியனை வேண் அப்படியென்றால் இன்னொரு குருஷேத்தி இந்த பூமி? சே. இந்த கலிகாலம் மு மாம்பழம் சாப்பிட்டு நடக்கக் கூடிய விஷ டுயூப்பாக இருக்கலாம்.
"நீ எப்படி..?” தயங்கி இழுத்தேன்.
"உன்னைப் போலதான் ஒருவன், என்ர
இருந்திது. ஓம் எண்டுத்தன்.”
யப்பா. நான் தப்பிச்சண்டா. சா
சும்மா சொல்லக்கூடாது, நீங்கள் பெரிய
“என்ன வெல்லக்குட்டான் நீ, கற்பு பற்றி

பதட்டமாய். பிந்துமா? கொஞ்ச நேரம் முன்புகூட }ல்லையே. நேரம் முந்தலாம் பிந்தலாம். ன்.
கு. இஞ்சபாரு கலண்டர்.” л6ії.
ான்றது சரிதான்!”
iI.
சமாச்சாரம். சரி டேட் பிந்தட்டும். பினேன்.
கேட்டேன்.
1. கொஞ்சம் வெட்கத்துடன்,
பய் அறைந்தமாதிரி இருந்தது எனக்கு. பும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தன்னை விரிவுரை வழங்குபவளும் ஆன இவள் டி மாம்பழம் கீம்பழம் சாப்பிட்டிருப்பாளோ? திரத்திற்கும் இடம் உண்டோ? தாங்குமா
டிகின்ற காலத்தில் அப்படி எல்லாம் 2யம் அல்ல இது. சில நேரம் “ரெஸ்ட
பெஸ்ட் ப்ரண்ட் கேட்டான். பாவமா
மி அய்யா, வெற்றிவேந்தன் அவர்களே.
ஆள்தான்.
பெரிய வாதம் செய்யிற நீயா இப்பிடி
யுத்தத்தின் இரண்டாம் பாகம் 141

Page 143
நான் நம்பயில்லை...”
"கதைக்கலாம்... ஆயிரம் விசயம் வாப தனக்கு தனக்கெண்டு வரேக்கதான் ச
“அவன் உடனே கலியாணம் முடிக்க
"சே... ஐ டோண்ட் லைக்ஹிம்...”
எனக்கு ஆச்சரியமும் முளிச் அவனுடன் எப்படி இவள்...?
“அப்ப எப்படி? உன்ன பலவந்தமா, இல் செய்து போட்டானே..?”
“சேச்சே... நானும் விரும்பித்தான்... ஆ வெறும் பயல். பெரிசா படிப்பும் இல்ல வெல்லக்குட்டானின் வார்த்தையில் ஒ
திருமணத்துக்கு தகுதி வே ஸ்நேகித்தலுக்கு தகுதி வேண்டும். ஐ தகுதி வேண்டும்... ஆனால் உடம்பி. வேண்டாம். படிப்பு வேண்டாம். பணம்
உடம்பு என்பது தசையாலும் ஆகவே அது தனது இச்சையை தன உடல் கிடைத்தால் போதும். மொழி, எதிர்ப்பால் என்கின்ற கவர்ச்சியும் தி தெம்பும் போதும்.
ச்...சே... ரொம்பவும் கேவலம் கசக்கி கவிதைக் கடதாசியில் சுற்றி பிறப்புகள்... வெல்லக்குட்டான் மேல் கோபம் எகிற
“யாரிட்டையோ புள்ளய வாங்கிற்று...
5
“அபோஷன் பண்ண வேணும். உனக்கு
கூட்டிற்று போ...!”
இந்த வெல்லக்குட்டானின் பே கஸ்மாலங்களுக்கு முன்னமே கருச்சி ை எண்ணம் போலும்... இது எல்லாம் என்
142 4 சக்கரவர்த்தி

ப் கிழியக் கதைக்கலாம்... ங்கடம் தெரியும்.”
வேண்டியதுதானே.”
=ாட்டமுமாகி விட்டது. விருப்பம் இல்லாத
லட்டி மட்டக்களப்பு மாந்திரீகம் என்னமும்
ஆனா அவன கல்யாணம் முடிக்க ஏலாது
ல, வேலையும் இல்லை.” ருவகை தெனாவெட்டு இருந்தது...
பண்டும். காதலிக்க தகுதி வேண்டும்.
லைக் ஹிம் அல்லது ஸி என்பதற்கும் ன் ஆசைக்கு தகுதி வேண்டாம். தரம் வேண்டாம்.
) எலும்பாலும் இரத்தத்தாலும் ஆனது... விக்க, ஈடு கொடுக்கக்கூடிய இன்னோர்
மதம், இனம் கூட அதற்கு வேண்டாம். மிெருகின்ற போது அடக்கிக் கொள்ள
ாகிவிட்டது கலவி என்பது... கஞ்சாவை நெருப்பை மூட்டி புகையை இழுக்கின்ற
பிற்று...
என்னட்ட ஏன் வந்தனீ...?” என்றேன்.
| தெரிஞ்ச டொக்டர் யாராவது இருந்தால்
ச்சை பார்த்தால் நான் என்னமோ ஏழெட்டு தவு செய்ய சிபார்சு செய்தவன் என்கின்ற னுடைய விதி! கழுதையுடன் ஸ்நேகம்

Page 144
வைத்தால் உதைதான் வாங்க வேண்டு
"அவனோட போக வேண்டியதுதானே அ
“எவனோட?” என்னை முறைத்தாள்.
“எவனோடையா?”
நான் உறுக்கிக் கேட்டதும் தெரியவில்லை.
“என்னில உனக்கு சரியான பொறாமை
எனக்கென்றால் புரியவே இல்ை என்னை விட இவள் எதில் உசத்தி? புத்திசாலித்தனம் என்று தோன்றியது. பெற்றுக்கொண்டு கையெழுத்து வை எ
எவனோ இளநீரைக் குடிக்க அ வந்துவிடும்.
அவள் கூடப்போய் பத்திரத்தி எழுதி கை எழுத்தும் போட்டுக் ெ அனுப்பிவிட்டார்கள்.
அப்புறம் ஒரு பத்து பதினைந்து நாள் 8
“ஏன்டி நரகலே இப்படி செய்த நீ.” அதற்கு இந்த வெல்லக்குட்டான் என்ன
“நான்தான் உன்னோட உரசி உ கண்டுகொள்ளயில்லை. அதுதான் வே அது மட்டுமில்லை,
"நான் ஆம்புளையே இல்லையாம்” சகவாசம் வைத்திருக்கும் எனக்கு இது வேணும்)
ஆண்களின் வாழ்க்கையில் கி கொடுமையான, கேவலமான விசயம் 6 அவமதிப்புக்குள்ளாவது!
அவமதிப்புக்குள்ளாகும் ஆணின்

b. வாங்கினேன்.
போஷன் பண்ண.”
என்ன நினைத்துக் கொண்டாளோ
s
என்றாள்.
ல. இவளில் எனக்கென்ன பொறாமை? எதற்கும் இவள் கூடப் போய்விடுவது இல்லாட்டிப் போனால் பிள்ளையை ன்று சொல்லி விடுலியும் விடுவாள். ப்புறம் நான் கோம்பை சுமக்க வேண்டி
Iல் உள்ள கேள்விகளுக்கு பதிலை காடுக்க வயிற்றை சுத்தப்படுத்தி
5ழித்து கேட்டேன்.
என்று
தெரியுமா சொன்னாள்?
ரசி நடந்தேனே. நீதான் என்ன ற இடத்தில உரசிட்டன்.” என்று.
என்றும் சொன்னாள். பொம்புளைங்க எல்லாம் தேவையா? (வேணும், நல்லா
டைக்கக்கூடிய மிகப் பெரிய இம்சையான ன்ன தெரியுமா? பழகும் பெண்களால்
கடந்த காலம் பெண்ணுக்கு ரொம்பவும்
யுத்தத்தின் இரண்டாம் பாகம் 1 143

Page 145
மதிப்பு கொடுத்ததாகும்! பெண்ணை மதிப்பில்லை. சுற்றியிருக்கின்ற மற்ற
நம்ம தமிழிச்சிகளுக்கு ஆண் வேண்டும் என்று நினைக்கிறார்கள். மோதவைக்க வேண்டும். எதிர்த்தால் பி வார்த்தை பேச வேண்டும். வீதியில் போ தீண்ட வேண்டும்.
இப்படியெல்லாம் செய்கின்றவ பெண் நம்மை மதிப்பாளா? வேண்டா என்னும் மதிப்பு இந்த பெண்களால் எ6
"ஆம்புளையோட பெருந்தன்மையும்
கெடையாது தெரியுமா? பெண்ணுங்கன மேடையில பேசு. ஆனா, நெருங்க வி நிறுத்திக்க. தோள்ள மாத்திரம் தூக்க வகையான ஐந்து. தோள்ள உட்கார்ந்து
ஆஸான் முன்னொரு தடவை எனக்குச் சுப்பிரமணியம் கூட (நம்ம புரடியூஸர்)
“மெனேய் தம்பி, உண்ட கொம்மையிர இருந்திட்டு செவியக் கடிக்கிற சாதிடா” வெல்லக்குட்டான் செவியைக் கடித்தால்
வெல்லக்குட்டானை பற்றிய சகல சங்கதி நான் வெல்லக்குட்டானுடன் கதைக்கக் என்றும் என்னிடம் சொன்னாள்.
அது எப்படி கதைக்காமல் இரு ஆகா ஓகோ என்றெல்லாம் போற்றிப்பாடி எப்படி? குணம், நலம், தரம், தகுதி, ! பழக்கம் வைப்பதில்லை. ஏதோ, பழகி என்பாட்டுக்கு நான் போவேன் என்றேன்
வெல்லக்குட்டானுக்கும் எனக் சக்கரக்கட்டிக்கும் எனக்கும் ஜென்மப்பசை என்ன செய்ய முடியும் வெல்லக்குட்டானி வீசிவிடவா முடியும்?
冉、
144 ப சக்கரவர்த்தி

மதிக்கும் ஆணுக்கு அவளிடமும் வர்களிடமும் மதிப்பில்லை.
என்றால் எப்படித் தெரியுமா இருக்க கூந்தலை சுற்றி தலையை சுவரில் டறி வீங்க விளாச வேண்டும். தூசண கும் போது இடையையோ மார்பையோ
ன்தானா ஆண்? இப்படி செய்தால்தான் ம். இப்படியெல்லாம் செய்து ஆண்’ னக்கு கிடைக்க வேண்டாம்!
நல்ல மனசும் பொம்பளைங்களுக்கு )ளப் பத்தி ஆகா ஓகோன்னு எழுது. பிடாத, விட்டாலும் தொட்டுக்கிறதோட கி வைச்சி கூத்தடிக்காத. அது ஒரு பக்கிட்டு செவியக் கடிக்கும்.”
சொன்னது. ஆஸான் என்ன சொல்வது. அடிக்கடி சொல்வார்.
குடி இரிக்கேடா, அது தோளில ஏறி
களும் சக்கரக்கட்டிக்கு கசிந்து விட்டது. கூடாது என்றும் அவள் ஒரு தேவடியாள்
க்க முடியும்? நீதானே அறிமுகப்படுத்தி
விட்டு, இப்போது இப்படிச் சொன்னால் படிப்பு, பண்பாடு பார்த்தெல்லாம் நான் lனால் பழகுவேன். இல்லையென்றால்
கும் இனி சகவாசம் இருக்குமெனில் 5 தோன்றும் என்பதில் உறுதி இருந்தது. ல் எறும்பு ஊர்ந்து விட்டது என்பதற்காக

Page 146
ஒருத்திக்கு தெரியாமல் ஒருத்தி இருப்பினும், திருட்டுத் தனத்தில் ஒருவன “வெல்லக்குட்டான் உன்னட்ட வந்தாள சக்கரக்கட்டி கேட்க,
இல்லையே, யார் சொன்னா? அந்த தட்டு எவ்வளவு காலம். நீ என்னிலை சந்ே விடுவது, நிஜம் பிடிபட்டு அப்புறமாய் ச அசடு வழிவதும் படு சுவாரஸ்யம்.!
என்னதான் பத்தினி, பதிவிரை ஆண் நெருக்கத்தால் மனதின் ஓரமாய் ! விஸ்வரூபம் எடுப்பதை தடுக்க முடிவதி
“பூக்களை பறிக்காதீர்கள்”
என்ற பலகையை பார்த்த பின் பார்ப்பதில் ஒருவகை மீறல் இருக்கின் உண்மை இருக்கிறது. நான் பறிப்பேன். t பார்க்கலாம் என்பதில் மகா நேர்மை இ
“சே. அது தப்பு, அவங்க கட்டுப்பாட்டை வேணும்” என்றுவிட்டு, திருட்டுத்தனமாய் பூப்பறித்து முகர்ந்து பார்ப்பது மகா கேவலமான ஆசைகளை உணர்ச்சிகளை, இருட்டறைச் இயல்பு. இந்த கோழைகளில் திருட்டு மீறல்தான் மீற வேண்டுமென்று தோன்றினால் மீறு எதிர்த்துப் போ. நான் அப்படித்தான். செய்துக்கோ. என்கின்ற தைரியம் வே
தைரியம் இல்லை. சக்கரக்கட்டியிடமு இல்லை.
சக்கரக்கட்டி கேட்டாள் “ஏன் நீ இப் மாதிரி, நான் என்னமும் உன்னைப் பார்த்து என்று.
அது என் இயல்பு என்றும் கரடு முரட
\
W

யை வைத்துக் கொண்டேன். என்னதான் க த்றில் இருக்கத்தான் செய்கின்றது. (3D?”
வாணியோட நான் கதைக்காமல் விட்டு தகப்படுகிறாய்? என்று நான் உல்டா க்கரக்கட்டியிடம் வாங்கிக் கட்டுவதும்
த என்று காட்டுக் கத்தல் கத்தினாலும் இருக்கின்ற அந்த ஆசை பெண்ணுக்கு ல்லை.
உடனேயே பூவைப் பறித்து முகர்ந்து ாறது. இந்த மீறலில் கள்வம் கலந்த யார் என்ன செய்யமுடியும். செய்யட்டும் ருக்கிறது.
நாம மீறக் கூடாது. நேர்மையா நடக்க
கையுள் பொத்திவைத்து அப்புறமாய் மீறல். தைரியம் இல்லாத மீறல். குேள் நடித்துப் பார்க்கின்ற கோழைகளின்
நம் தமிழிச்சிகளிடம்.
தாண்டிப் பாய். எதிர்க்கவந்தால் உன்னால என்ன செய்ய முடியுமோ ண்டும்.
ம் இல்லை. வெல்லக்குட்டானிடமும்
பதான் ஏஜ்ரேன் பண்ணிய புள்ளயல் நுக் கேட்டால், கீழ பாத்து சிரிக்கிறனி.?
ாக நான் இருந்தாலும் வார்த்தையில்
யுத்தத்தின் இரண்டாம் பாகம் 1 145

Page 147
வன்மம் இருந்தாலும் கூட சில பெண் அதாவது ஆண் என்கின்ற அலட்டல் காலத்துக்கு நீ அறிந்ததில்லையோ 6 சக்கரக்கட்டி சிரித்தாள். சக விழும். கண் இமை சுருங்கும். (போன6 எழுத முடியாது. அப்புறம் இது பச்ை எல்லாம் இலக்கியமா)
“சரி பெண் தன்மையுள்ள ஆம்புளை பார்ப்பம்?” என்றாள்.
“மனதால் ஆம்புளத்தனமுள்ள பொம்புலி
ஆரம்பத்திலை பொய்யையும் பிறகு : குணமுள்ள பொம்புள.”
"சளி ஆம்புள தனமா இருந்து சொல்லு
“பொம்புளையிலை ரெண்டு வகை, ஒ தெய்வம்.”
“அப்பிடியெண்டால்..?”
“முதலாவது கை எடுத்துக் கும்பிட எ6 சாய்ச்சிட எண்ணம் வரும்!”
"நான் எத்தினியாவது.” சக்கரக்கட்டிக்கு ரொம்பவும் ஆவலாக
“ரெண்டாவது.”
நான் சொன்னதும் சக்கரக்க கொண்டேன். ஓர விழியால் என்னைப் ட LIT(5.
"அப்படி எண்டால் ஏன் என்னை நீ இ நெளிந்து கொண்டு கேட்டாள்.
“சந்தர்ப்பம் வரயில்லை”
“இல்லை, உன்னால முடியாது. நீதான் இவள் பேச்சில் என்னமோ சீண்டல் இ
146 ம சக்கரவர்த்தி

தன்மைகள் என்னிடம் உண்டு என்றும் இல்லாத ஆண் என்பதும் இத்தனை ன்றேன். கரக்கட்டி சிரித்தால் கன்னத்தில் குழி ல்ஸா இன்னும் ஒன்றும் நடக்கும். அதை ச இலக்கியமாகி விடும். அது சரி, இது
ாயா இருந்து என்னைப்பத்தி சொல்லு
நீ எல்லா பொம்புளையலைப் போலவும் உண்மையையும் சொல்லுற பொம்புளக்
| UTÜLub?”
ண்டு தெய்வம், மற்றது மிருகம் கலந்த
ண்ணம் வரும். ரெண்டாவது உடனேயே
5 இருந்தது.
ட்டி திக்குமுக்காடிப் போனதை கண்டு ார்த்து புன்னகைத்தாள். அட வெக்கத்த
ன்னும் சாய்க்கவில்லை?”
பொம்புளக் குணமுள்ள ஆம்புளயாச்சே." ருப்பதாய் நான் உணர்ந்தேன்.

Page 148
“ஆண் என்ற அலட்டலுக்கும் பெண்தனப் இருக்கு..."
“அதென்னமோ. ஆனா உன்னால முடிய
"முடியும்...!"
“இல்லை.”
முடியும்! முடிந்தது. சக்கரக்கட்டியை மீற முடிந்தது. மேத்தா எங்கேயோ சொல்லியிருந்தார்.
“உடுத்திக் கொண்டு இருக்கும் வரைக்கும் என்று.
உடுத்திக் கொள்ள முதல் எ சொன்னாள் “ஐ லைக் யூ” என்று.
சிரிப்பு வந்தது... எவனையோ ஆறு வரு சக்கரக்கட்டி?
“இப்பவும் நீ கற்புள்ளவள்தானா?”
“தொண்ணூத்தி ஒன்பது வீதம் கற்போடது ஒரு வீதத்தைத்தான் நான் இழந்திருக்கி வீதம் இருக்கே...”
“இப்போது முழுதாய் உடுத்தி இருந்தாள் வெல்லக்குட்டானுக்கு கல்யாணம்!
எக்கச்செக்கமாய் கறுப்பு வண் காரும் வைத்திருக்கும் முப்பத்து ஒரு ' பிரயாண முகவர் (அதுதான் ஆள் கடத்
இங்கு அதிகம் தமிழர் நடமாடுக அவர்தானாம்.
“என்ர கல்யாணத்துக்கு வருவியே?” என்
“அழைப்பு இருந்தா வருவன்” என்றேன்.

D உள்ள ஆம்புளைக்கும் வித்தியாசம்
"து.. >>
ாது... -
ம் எவளுமே உண்மை பேசுவதில்லை”
என் முதுகைப் பார்த்து சக்கரக்கட்டி
தடமாக காதலிக்கின்றாளாமே இந்தச்
ான் இருக்கன். உன்னோட கருத்தின்படி றன். இன்னும் தொண்ணூற்றி ஒன்பது
7. ',
பணம் பூசிய பணமும் இரண்டு வீடும் வயதுக்காரன் மாப்பிள்ளை. தொழில் திறவன்) கின்றார்கள் என்றால் அதற்கு காரணம்
றாள் சக்கரக்கட்டி.
யுத்தத்தின் இரண்டாம் பாகம் 1 147 .

Page 149
என்னதான் உறவாக இருந்தாலும் கல் நாமாகவே போவது அவ்வளவு நல்லத்
"கூப்பிட்டால்த்தான் என்ர கல்யாணத்து அதிகம் உரிமையுடன் உரசினாள்.
“கூப்பிடாமல் வாறது எண்டால் நான் உ என்று நான் சொன்னதும் நளினமாய் பத்து வருடமாய் ஜோக் ஏதும் கேட்கா போனேன்... தடபுடலாய் கல்யாணம் ந தமிழனின் எந்தப் பண்பாட்டையும் பழ. சாப்பாடு கூட வாழையிலையில்தான் ப
மனசுக்குள் அசிங்கமாய் கே கேவலமோ? இந்த சம்பிரதாயங்களும் ச யாரோ ஒருவனுடன் சல்லாபித்து 6 மனைவியாவதுதானா தமிழியல்? பழையவனின் சுகம் புதியவனால் கி ை புதியன கழிந்து, பழையன மீண்டும் பு பழையன மறக்குமோ?
முன்னம் நான் ஒருவனுடன் ஆவான்? சகஜம் என்று புன்னகைப்பா
சிங்கப்பூரில் ஆறுமாதமும் ம பன்னிரெண்டு மாதமும் கிடையாய் அரு வெல்லக்குட்டானால் முடியுமா? சக்கரக்கட்டியிடம் அங்கலாய்த்தேன்.
“நீ வெல்லக்குட்டானில் பிழை சொல்ல வயதத்தாண்டினா நாங்க உடம்போட ந தெரியுமா? கற்பு, பத்தினி, பிற புருஷ எண்டு எங்கள் கட்டுப்படுத்திற சமூக சொல்லாத... எங்களுக்கும் காமம் இரு ஒத்துக்கொள்ளுறன். கற்பு அது இது பொய்தான். என்ன செய்ய சமூகத்தே பதின்மூணு வயதில இருந்து உடம்போட அச்சம், நாணம், மடங்கள் காட்டி ஆ நடக்கத்தான் வேணும். எங்கள் சாய்ச் கெடுத்திட்டானே என ஆம்புளையின் போட்டால்தான் தப்பலாம் ஆம்புளையோ எண்டால்தான், என்ன பத்தினி எண்டு
148 4 சக்கரவர்த்தி

யாண விசயத்தில் அழைப்பு இல்லாமல் ல்ெலைத்தானே.
பக்கு வருவியோ?
னக்கு மாப்பிள்ளையா இருக்க வேணும்” வெக்கப்பட்டு சிரித்தாள். ஏதோ எட்டு தவள் மாதிரி. டந்தது... க்கத்தையும் விட்டுவைக்கவில்லை. பார்த்துக் கொள்ளுங்களேன்.
ள்வி நெளிந்தது. தமிழனாய் பிறந்தது டங்குகளும் தானா தமிழியல்? இருட்டில் பிட்டு, பகலில் எவனோ ஒருவனுக்கு
டக்காதபோது என்ன செய்வாள்? குமோ? புதியவன் தெம்பாய் இருந்தால்
கூடினேன் என்றால் புருஷன் என்ன னா? லேசியாவில் நாலுமாதமும் கிடப்பவன். பகேயே கிடக்க மாட்டானோ?
) ஏலாது. சமூகத்தை சாடு! பதின்மூணு டத்திற போராட்டம் எவ்வளவு கொடுமை ன பாக்காத, அது பாவம். இது பாவம் த்த சாடு! வெல்லக்குட்டானில் பிழை க்கு. அடிக்கடி உடம்பு முறிக்கும். நான் எண்டு நாங்க சொல்லுறது எல்லாம் ட அங்கீகாரம் வேணும் என்றதுக்காக - போராட முடியுமா? அத , இத கதைச்சி - புள எங்கள் சாய்க்கிற மாதிரி நாங்க சிட்டான் எண்டால் ஐயோ பாவி என்ன ல பழி போடத்தான் வேணும். பழி - கதைக்கிற பொம்புளையல தேவடியாள் சொல்லுவினம். என்ன செய்ய ஏலும்

Page 150
சமூகத்தோட வளர்ச்சி அந்த அளவில் சக்கரக்கட்டி என்னுடைய மனதில் முக்கி எத்தனை பாவம் நமது பெண்கள்.
அழ அனுமதிப்பவர்கள், கோ அனுமதிப்பவர்கள் நியாயமாய் பார்த்தால் அனுமதித்தாக வேண்டும்.
வீதியில் குடல் தள்ள சுடுட வேதனையும் அழுகையும் வருகின்றது என்றால் அது மனிதாபிமானம் என்றால் மார்பும் சுருள் முடியும் உயரமாய் திப கலவி எண்ணம் ஒரு பெண்ணுக்கு வ உந்துதலே - அது மனிதாபிமானமே அ
சமூகத்தில் மாற்றம் தேவை! க இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வேண்டும். பாவம் நம் பெண்கள்...
இந்த தமிழ் பெண்களுக்கு மீட்சியை எப்
எல்லா பெண்களுக்கும் ே ஒருத்திக்கேனும்... இந்த சக்கரக்கட்டி
முடியுமா?
சமூகக் கட்டுப்பாட்டை மீற அறியும்படி இவளை எப்படி மீற வைப்பு
காலம் காலமாய் அடித்து அ தகர்ப்பது?
கற்பு, பத்தினி, பதிவிரதை என் விளைவால் மீறலே உன் இயல்பு... மீறு என்று இவளிடம் சொன்னால் மீறுவாள
முடியாது. இவளால் முடியாது போனால் உடம்பு சுத்தம்! ஆனால் மா பிடித்து நாற்றமடிக்கும் குப்பை!
"ஏன் சக்கரக்கட்டி உன்ர மனசில உள்ள பேசி நடந்தால் என்ன?” சக்கரக்கட்டியிடம் கேட்டேன்...
“உலகம் என்ன வேசி எண்டல்லே செ

இருக்கு...'' யெமான இடங்களை கைப்பற்றிவிட்டாள்.
பத்தை அனுமதிப்பவர்கள், வெறுப்பை கல்யாணத்துக்கு முந்திய காமத்தையும்
பட்டு இறந்து கிடப்பவனைப் பார்த்து
என்றால் - அது உணர்ச்சி உந்துதல் ல்- அது நியாயம் என்றால் - அகன்ற காத்திரமாய் நிமிர்ந்து நடப்பவனுடன் ருகிறது என்றால் அதுவும் உணர்ச்சி து நியாயமே! ற்பு பற்றிய சர்ச்சை தீர்த்தாக வேண்டும். கற்பு பற்றிய சர்ச்சையை தீர்த்திருக்க
ப்படிக் கொடுப்பது? என்னால் முடியுமா? வண்டாம். ஒருத்திக்கேனும்? ஒரே க்கேனும்... நான் மீட்சியை கொடுக்க
க்கூடிய வெளிப்படையாய் சகலமும் பது? ஒத்துக் கற்றுக் கொடுத்ததை எப்படித்
பது உன் இயல்பல்ல... உணர்ச்சியின் j! தைரியமாய் யார் என்னை தடுப்பது
5. மீறினால் சமூகக் குற்றம். மீறாது னது மாத்திரம் குப்பை... அழுகி, சீழ்
மாதிரி நீ வெளிப்படையா உண்மையா
பல்லும்...”
யுத்தத்தின் இரண்டாம் பாகம் 1 149

Page 151
“சொல்லட்டுமே வேசி எண்டே சொல்ல ஆம்புள பொம்புள வித்தியாசம் இல்ல இருக்கு. வேசி எண்டு சொல்லட்டும். பாத்துக்க.”
“அதென்ன வேசி வேற. விபச்சாரி ே
“வேறதான். வேசி உடம்பு சுகம். விட
“இப்ப உடம்பு திமிர்ல அலையலாம். போன காலத்தில எனக்கெண்டு ஒரு து சமூக வட்டம் வேணாமா? அவனோட படு எண்டு சமூகம் என்ன விரட்டேக்க நா ஆதரவு தர ஏலுமா? நீயும் நானுமா ே ஏலுமா? சமூகத்துக்கு கட்டுப்படுறம்
அனுபவிக்கிறதுதான் புத்திசாலித்தனம். அப்ப இருந்தே இருக்குத்தானே. அை நானும் வாறன். தனியா அடிபட்டுப் விருப்பம்தான். கண்ட உடனேயே கண் பூக்களை பறிக்காதீர்கள்’ என்ற பலை
“தெரியாமல்தான் பிடுங்க வேணும். ந அசிங்கம் ஆகாதா? நியாயம் கதைப்பான் படுத்துவான். அந்த இடத்த விட்டு எ விருப்பம்தான். ஆனா தெரியாமல்தான்
சக்கரக்கட்டியின் பேச்சில் எல் முழுதாய் நியாயம் இருக்கிறது. வாத வாதம் பண்ணி ஜெயிப்பது என்பது ெ மாயை என்பது தோற்றவனுக்கும் தெரியு
சமூக மாற்றம் என்பதோ புரட்சி உருவம் கொள்கின்றது. பின் படிப்படியா சேர்கின்றது. பசுமைப் புரட்சியோ, ஆய யாவுமே இதற்குள் அடங்கும். ஆனா உடலின் உலகம் வேறு. அதன் பார் ஒவ்வொரு மொழி பேசி, வெவ்வேறு 2 என்பது தனி மனிதனால் சாத்தியப்பட
மாபெரும் படையில் ஒரே நேர
150 - சக்கரவர்த்தி

ட்டுமே. யாரிட்டை வேசித்தனம் இல்ல. Tம எல்லாரிட்டையும்தான் வேசித்தனம் ஆனா விபச்சாரி எண்டு சொல்லாமல்
higuur?”
ச்சாரி பொருள் சுகம்.”
ஆடி ஒஞ்சி ரெத்தம் எல்லாம் சுட்டுப் ணை வேணாமா, என்னைச் சுத்தி ஒரு த்தவள், இவனிட்ட புள்ளய வாங்கினவள் ன் எங்க ஓடுறது? உன்னால எனக்கு சர்ந்து இந்த சமூகத்தில மாற்றங்காண எண்டு சொல்லிப்போட்டு தெரியாமல் களவொழுக்கம் இப்ப மட்டுமா இருக்கு வயளோட சேர்ந்து ஆயிரத்தி ஒண்டா போக என்னால முடியாது. எனக்கு பூ ணை மூக்கப்பாத்து புடுங்கிப்போடுவன். க இருந்தால் என்ன செய்ய முடியும்?”
ாலு பேர் பாக்கிற மாதிரி பிடுங்கினால் ா! நாலு சனத்துக்கு முன்னால அசிங்கம் ன்ன ஓட ஓட விரட்டுவான். எனக்கு பூ
பிடுங்குவன்.”
iளளவேனும் குற்றம் காண முடியாது. ம் பண்ணி மடக்கலாம். ஜெயிக்கலாம்! வற்றியே அல்ல. அது மாயை. அது ம், மாயையில் எனக்கு உடன்பாடில்லை.
என்பதோ தனி மனிதன் ஒருவனால்தான் ப் குழுக்குழுவாய் ஊடுருவி சமூகத்தை தப் புரட்சியோ கம்யூனிஷப் புரட்சியோ ல் உடல் புரட்சி மாத்திரம் மாறுபடும். வை, திசைகள் வேறு. ஒவ்வொன்றும் உலகத்துக்குள் வாழும். இங்கு புரட்சி 35l.
ம் எண்ணம் தோன்ற வேண்டும். தோன்றி

Page 152
ஒரே நேரத்தில் புரட்சி வெடிக்க வேண்டும். வேண்டும்.
“உறவு பொய், பாசம் பொய், காதல் பெ எதுக்கு? சமூக அந்தஸ்த்துக்கு! செக் சமைச்சிக் கொடு! பதிலுக்கு உனக்கு சமூக மதிப்பு கொடுக்கிறன். உறவு மாற்று. அவ்வளவுதான்! வேணும்னா நீ அனுப்பாதை... அவாள் என்ன தெரியும் உறவ அறுத்துக்குவா... கடிதம் கூட
காப்பாத்துவான். கொள்ளி போட ஒருத்த அக்கா தங்கச்சிங்க எல்லாரும் எதுக்கு ? வரதட்சணை கொடுக்க நீ சம்பாதிச்சி மேல ஒருத்திக்கு ஆசை வந்திருச்சின்ன பொய்பா... இங்க அனுபவிக்கிறது 6 திருப்திப்பட்டால் மனம் சந்தோஷப்படும். திருப்தி!!!” ஆஸான் தொலைபேசியில் நேற்றிரவு (
ஆஸான் ஒரு கொம்னிஸவாதி. எல்லாவற்றையும் முழுமையாக ஒதுக் வாதி... முரணான விசயம்..!
கொம்னிஸ்டாக இருந்து ெ இருக்கின்றீர்கள் என்று யாரேனும் கேட்
ஆன்மீகம் என்பது மதம் அல்ல அல்ல... அது ஓர் மார்க்கம். ஆமாம் அமைதியான ஓர் வழி! ஆன்மீகம் என்ட உண்மையை உணர்தல்! காதல், உற உணர்தல்...
சக்கரக்கட்டிக்கு நான் உண் ஆன்மீகத்தை பற்றி சக்கரக்கட்டிக்கு எது வேண்டப்பட்டவர்கள் மதம் மாறி வி
கோபப்பட்டாள்.
வசதிகள் செய்து கொடுக்கின் மாறி விட்டார்களாம் என்றும் - அதை வசதியாக இருக்கலாமே என்று புலம்பி
மதம் என்பது வசதிகளை ன

கோடியாண்டுகால போலியை உடைக்க
ராய், திருமண பந்தம் பொய், கல்யாணம் கஸ் கொடு! புள்ள பெத்துக் கொடு! புள்ள கொடுக்கிறன். மனைவி எங்கிற பந்தம் எங்கிறதெல்லாம் ஒரு பண்ட உன்னோட அம்மா அப்பாவுக்கு பணம் மோ பண்ணுவா? உன்னோட இருக்கிற போடமாட்டாள். புள்ள நம்மளவைச்சி ன் வேணும்னுதான் உன்ன வளக்கிறா. உன்மேல் பாசமா இருக்கா? அவளுக்கு கொடுப்பாண்ணுதான்! உன்ர உடம்பு பா லவ் பண்ணுவாள். உறவு எங்கிறது ஒண்ணுதான் மெய்! மெய்! உடம்பு மனம் சந்தோஷப்பட்டால் ஆத்மாவுக்கு
சொன்னார்... -- தமிழ் பண்பாடு, சம்பிரதாயம், சடங்கு கி விட்டார். ஆனால் அவர் ஆன்மீக
கொண்டு எப்படி ஆன்மீகவாதியாக
டால் சிரிப்பார்...
1. ஆன்மீகம் எந்த மதத்தை சார்ந்ததும் அது ஓர் வழி!' மெல்லிய அழகான து கடவுளைக் காணல் அல்ல... அது வு, குடும்பம் என்பதை பொய் என்று
மையை உணர வைக்க முடியாது. புமே தெரியாது. யாரோ சக்கரக்கட்டிக்கு டார்களாம் என்று என்னிடம் வந்து
தார்களாம் அந்த மதத்தில் என்று, மதம் பிட விபச்சாரம் பண்ணினால் இன்னும் னாள்.
வத்துத்தான் தன் பக்கம் ஆக்களை
யுத்தத்தின் இரண்டாம் பாகம்
151

Page 153
இழுக்கின்றது. வாக்குகளுக்காக பல இழுக்கின்ற அரசியல் கட்சி மாதிரி!
அரசியலுக்கும் மதத்துக்கு இல்லை. ஆனால் ஒற்றுமை இருக்கின் எந்த ஒரு மதவாதியும் ஆன்மீகவாதிய
தன்னுடைய மதத்தை ஆக ஒரு நாள் முகம் கழுவாதவள் மாதிரி
அவளில் ஏதோ மாற்றம் தெ நாகரீகமாக இருப்பது போல் பாவலை
"என்ன விசயம் ஒரு மாற்றம் தெரியு
“நான் மதம் மாறலாம் எண்டு நினைக்
நெற்றியில் பொட்டு இல்லாதது, இத சின்னமா? மதச் சின்னமா?
"ஏன்" எனக்கு ரொம்பவும் ஆச்சரியம்.
"நம்மளோட மதம் சரியான பழசு. அ வேணும், சீலை கட்ட வேணும், பொட்டு
மொடனா மாற வேணும்.”
இவளுக்கு என்ன ஆகிவிட் நொந்து, வலியால் துடித்து, கடவுகே நான் வருகின்றேன் என்று மதம் மாறி இறைவனுக்கு தோத்திரம் சொன்னால் நாகரீகம் இல்லை என்றும் மதம் மாறு
“வசதிக்கு ஆசைப்பட்டு மதம் மாறி ஆசைப்பட்டு மதம் மாறினால் என்ன அது என்னொட விருப்பம். என்னோட
"நீ மதம் மாறப் போறது எல்லாருக்கு
“தெரியும்.”
“பத்துப் பேரோட படுக்கிறதும் கூட சுதந்திரம்தான். அதக்கூட எல்லாருக்கு
152. சக்கரவர்த்தி

எம் கொடுத்து மனிதர்களை தன் பக்கம்
ம் என்ன சம்பந்தம்? சம்பந்தம் எதுவும் எறது. அரசியல்வாதிக்கும் மதவாதிக்கும் க முடியாது என்பது மாபெரும் உண்மை. T ஓகோ என்று புகழ்பாடும் சக்கரக்கட்டி
என்னிடம் வந்தாள். | சிந்தது. விடியாத முகம். தான் ரொம்பவும் 7 காட்டினாள்...
தே” என்றேன்.
க்கிறன்" என்றாள்.
தன் அர்த்தம் தானோ. பொட்டு மங்கலச்
பதில் புதுமை இல்லை. செருப்பு கழட்ட வைக்க வேணும், நாட்டுக்கு ஏத்தமாதிரி
டது? ஏன் இப்படி ஆனாள்? அடிபட்டு, ா நீரே வழிகாட்டும். உமது பாதையில் ரால் நியாயம் இருக்கின்றது. மண்டியிட்டு
• சொன்னவரை வணங்கத் தோன்றும்... வார்களா இந்த உலகத்தில்...?
னால் அது விபச்சாரம். நாகரீகத்துக்கு ” என்றேன். சுதந்திரம்.
ம் தெரியுமா?”
உன்னோட விருப்பந்தான். உன்னோட ம் தெரிவிக்கலாமே...”

Page 154
"இது சமூகக் குற்றம்."
“மதம் மாறுறது மதக் குற்றம்.”
''என்னோட பழைய மதம் என்ன த
முடமாக்காதே...”
“முடமாக்குமெண்டால், விரட்டுமெண்டா
“வேற என்ன செய்ய ஏலும்... குண்டு க தான்."
பரம பிதாவே...! இந்த பாவிகளை மன்னியும். 'மனிதனை மன்னிக்கவும் தண்
மனிதர்களில் அரசன் எவனும் நீரே அரசன்!
மனைவியாகப்பட்டவளின் மிக புருஷன் தூரத்தில் இருக்கும் போது “ விரட்டுவதும்தான். புத்திசாலி புருஷனால் அழகாக கையாள முடிகின்றது. அருகில் விலத்தி இருந்துகொண்டே அருகில் இ மூலமும் பெண்ணை அடக்க முடியும். வெல்லக்குட்டானின் புருஷனால் இதை ஒரு முட்டாள் புருஷன்.
இரண்டு மாதம் கொஞ்சுவதும் தொழில் முறைச் சிக்கல். வெல்லக்குட்ட இந்த வாழ்க்கை.
"என்ன வாழ்க்கை இது? ச்சே... யாரைக் கூடாது. காசுதான்... காசுதான்... வாழ்க்
வெல்லக்குட்டான் ரொம்பவும் தேவைப்படுகின்றது போலும் இவளுக்கு இது எல்லாம் எந்த மனிதனுக்கும் சுகம் மனிதனுக்கு கெளரவம் கொடுக்கும்.

வரத்தாதே... வாழ முடியாத படிக்கு
ல்?
சட்டிக்குள்ள குதிரை ஓட்ட வேண்டியது
டிக்கவும் அரசனுக்கே உரிமை உண்டு! இல்லை...
கப் பெரிய பலஹீனம் என்ன தெரியுமா? ஏங்குவதும் அருகில் இருக்கும் போது மாத்திரமே மனைவி என்னும் பெண்ணை > இருந்து கொண்டே விலத்தி நடப்பதும் இருக்கிறது போன்று பாவனை காட்டல் அவள் இயல்பை முறியடிக்க முடியும். த முறியடிக்க முடியவில்லை. அவன்
பத்துமாதம் மறந்து போவதும் அவனது டானுக்கு சலிப்பு வந்துவிட்டது போலும்
கட்டினாலும் ஏஜென்சிக்காரன கட்டவே கையே இல்லையே. சுகம் இல்லையே." ந பாவம். என்னால ஏதும் ஆறுதல் 5. பணம், சம்பிரதாயம், சடங்கு, படிப்பு, D கொடுப்பதாய் இல்லை. அவையாவும் கெளரவம் வாழ்க்கையை எப்போது
யுத்தத்தின் இரண்டாம் பாகம்
1 153

Page 155
கொடுத்தது? வாழ்க்கை சோபிக்க சுக வேண்டும். துக்கமும் இல்லை, இவளு
"நீ தானே விரும்பிக் கட்டினது” என்றேன்.
"நேற்றைய விருப்பம் இண்டைக்கு விெ
"சலிப்பா? வெறுப்பா?”
"சலிப்பு. அதால வந்த வெறுப்பு” வெல்லக்குட்டான் இப்போது பேசவும் !
இங்கு சலிக்காத விசயம் ஏே ஒதுக்கி விட எந்த தமிழிச்சிக்கேனும் அதுதான், ஒதுக்கிட்ட அல்லது ஒதுங் இருக்கின்றதா?
“உனக்கு இந்த வாழ்க்கையில வெறு
“நீ ஒரு மர மண்ட, மட்டக்களப்பான் 6
இந்த வெல்லக்குட்டான் எப்பே விழித்தால் ஊர் சொல்லித் திட்டுவா உங்கட ஆக்கள்தான் கதைப்பினம். தானே. என்று லேசாக கிண்டலும் அடி
“ஓமடியம்மா நான் மட்டக்களப்பான்தான். ஆனா எனக்கு உண்மையாவே விளங்ே புருஷனில சலிப்பு வந்தால் என்ன செ வாழ்க்கையில சகஜம், அனுசரிச்சு வி பண்ணவா. உன்னைப் போல உள்ள அதிரடி நடவடிக்கைதான் சரிவரும்.”
"அது என்ன, என்னப்போல உள்ள பொ
“எதில வெறுப்பும் சலிப்பும் வந்திச்சே
"அப்படி எண்டால்?”
“உடம்பு ரீதியா என்னால உனக்கென்
154 ப சக்கரவர்த்தி

ம் வேண்டும். சுகத்தை உணர துக்கம் க்கு சுகமும் இல்லை.
பறுப்பா இருக்கே.”
கற்றுக்கொண்டாள்.
தனும் உண்டா என்ன? சலிப்பு வந்தால் தெம்பு வரினும் கூட சலிச்சுப் போச்சு
கிட்டன் என்று சொல்ல தெனாவெட்டு
ப்பெண்டால் என்ன செய்யப் போறாய்?”
ான்றது சரிதான்.”
ாதும் இப்படித்தான் நான் ஏதும் புரியாமல் ள். 'மறுகா', 'கிறுக்கி’ எண்டெல்லாம் இப்பிடி கதைக்கிற நீங்கள் மடையர் பத்தாள்.
மடையன் தான். நான் ஒத்துக்கொள்றன். கல்லை, உனக்கு உன்ர வாழ்க்கையில, ய்ய ஏலும் நான்? இது எல்லாம் குடும்ப
ாழ பழக வேணும் எண்டு அட்வைஸ் பொம்புளையலுக்கு அட்வைஸ் விட
ம்புளையலுக்கு அதிரடி நடவடிக்கை.?”
அதில முழுத்திருப்தி கொடுக்கிறது.”
னவும் உதவி தேவைப்படுதா?”

Page 156
வெல்லக்குட்டான் வெறுப்பாய் சினிமாத்தனம்) கோபம் கொண்டாள்.
“என்ன நீ, என்ன 'செக்ஸ்க்கு அலைய புருஷன் வச்சித்து இன்னொருவனோட ப உன்ர மட்டக்களப்பு புத்திய காட்டிட்டா நீ செக்ஸோடதான் பாத்திருக்காய் என் யாழ்ப்பாணத்தாள். தமிழிச்சி. இஞ்ச உட அவளுகளோட வைச்சிக்க உன்ர அதிர
வெல்லக்குட்டான் கத்திவிட்டு கொண்டு போய்விட்டாள் என்பது ஊர்ஜி அதே அளவு துக்கமாயும் இருந்தது.
யாரிடமோ வெல்லக்குட்டான் இப்போத வில்லனாம் என்று. ஆயினும்
"ஹீரோ எண்டு இங்க யார் இருக்கினம் ஹீரோதான். சந்தர்ப்பமும் சூழ்நிலையு சரியாக இருந்தால் ஹீரோ.'' ராம்நாத் அடிக்கடி சொல்லிக்கொள்வான்
யாரோ அவனுக்குத் தெரிந்த பையன் காதலித்தானாம். காதல் ஜே, போது பெட்டை 'பல்டி' அடிக்க.. பையன் பையன் இப்போது சிறுவர் சீர்திருத்தப் வந்து பெட்டையை பழிவாங்க போவ முன்னர் நாயகன். பின்னர் வில்லன்.
ஆனால் நான் ஒரு போதும் வ இதுக்கு முன்னர் எல்லாம் ஹீரோவாக ? தத்துவ வாழ்க்கை ஆயிற்றே. எனக்கு ந நானும் கூட யாருடனும் நண்பனும் விசயத்தில் மாத்திரம் ராம்நாத்தின் தத்
எல்லா தத்துவங்களும் எல்லாக் சந்தேகமான சமாச்சாரம். அதே மாதிரி என்பதும் சந்தேகம். ஒத்த இயல்புகளைக் கூட்டமாய் குழுமும் என்பது ஒரு கருத் மனிதன் எல்லாம் வகை வகையான இயல் என்று ஆஸான் சொல்வார். ஆஸானைப்

என்னைப் பார்த்து முறைத்தாள். (சுத்த
பிற பொம்புள எண்டு நினைச்சிட்டியே? நிக்கிறதுக்கு நான் என்ன தேவடியாளே? ப் பாத்தியா? இவ்வளவு நாளும் என்ன நன? அதுக்கு வேற ஆள பாரு. நான் ம்பு திமிரில் கன பேர் அலையிறாளவ. டி நடவடிக்கையை.”
போய் விட்டாள். உறவை முறித்துக் தம் ஆனது சந்தோஷமாய் இருந்தது.
சொன்னாளாம் நான்தான் அவளுக்கு நான் அவளுக்கு வில்லன் இல்லை.
P எல்லாரும் வில்லன்தான். எல்லாரும் ம் பாதகமாக அமைஞ்சால் வில்லன்.
"சோயா' என்னும் பெட்டையை ஒரு ஜே என்று போய்க் கொண்டிருக்கும் பெட்டைக்கு தொல்லைகள் கொடுக்க... பள்ளியில் இருக்கிறானாம். வெளியே தாக சபதம் வேறு செய்கின்றானாம்.
வில்லன் ஆகப் போவதில்லை. (ஏனோ இருந்த நினைப்பு) என் வாழ்க்கைதான் ன்பனும் இல்லை. விரோதியும் இல்லை. இல்லை. விரோதியும் இல்லை. என் வவம் பொய்த்து விடும்.
காலங்களுக்கும் ஒத்துவருமா என்பது எல்லா மனிதர்களுக்கும் ஒத்து வருமா கொண்ட உயிரினம் எல்லாம் கூட்டம் து. இது நம்பப்படுகின்றது. ஆயினும் புகளைக் கொண்ட தனிக் கூட்டத்தினன்
ம் நம்பித்தான் ஆகவேண்டும்.
யுத்தத்தின் இரண்டாம் பாகம் 1 155

Page 157
நான் சக்கரக்கட்டி வெல்லக் இருப்பினும் தனித்தனி இயல்புகளைக் முரணான இறக்கைகளைக் கொண்ட வெ6 ஒன்றாகப் பறக்க முடிந்தது. எப்படி?
இந்த ‘எப்படி என்பதற்குள்தான் வாழ்க்ை ஆழமாய் துழாவினால் கிடைக்கும். கிை
கவர்ச்சிதான் காரணம் என்றால் யாரு உண்மை. ஆண், பெண் என்கின்ற வே இந்த உறவில் இல்லை.
நால்வகைக் குணம் காட்டி, நெளிந்து, த கொள்கின்ற பெண்ணில் ஆணுக்கு கிற
முறைத்து, வெருட்டி, ஆர்ப்பாட்டம் பணி பெண்ணுக்கு மயக்கம்.
மென்மையும் முரடும் எதிர் எதிர் முனை
எட்ட நின்றால் ஸ்நேகம். தொட்டுப் ே
கல்யாணம். அடிப்படை காமம் உறவி சக்கரக்கட்டி தனம் அல்லது வெல்லக்கு
இயல்புகள் ஒத்துவராத போது காமம் உடையும். ஸ்நேகம் உடையும். காதல்
இயல்புகள் ஒத்துவராததால் அ தள்ளிவைக்கப்பட்டது. இன்னும் அனேக
சக்கரக்கட்டிக்கு பானுப்பிரிய தெலுங்கு (பழைய) மொழிமாற்றப் படங் ‘என்ன கண் அவளுக்கு. அந்த மாதிரி உ என்றெல்லாம் அடிக்கடி பானுப்பிரியா ப
“இங்க டான்ஸ் ஆட பானுப்பிரியா வாற எண்டு ஒரு நாள் வந்து கேட்டாள் சக்க
“படத்தில ஆடுறதத்தான் பாக்கிறமே. ே
156 ப சக்கரவர்த்தி

குட்டான் எல்லோரும் ஒரே குழுவாக கொண்ட தனித்தனி கூட்டத்தினர். வ்வேறு கூட்டத்துப் பறவைகள் ஆயினும்
கையின் சூட்சுமம் இருக்கிறது. ரொம்ப டத்தது.
ம் நம்ப முடியாது. ஆனா அதுதான் ற்றுமை உருவே தவிர வேறு எதுவும்
லைகுனிந்து சிரித்து தனக்குள் பேசிக் க்கம்.
ாணி, அடாவடித்தனம் செய்ற ஆணில்
மின் காந்தங்கள்.
பேசினால் காதல். கட்டிக்கொண்டால் வில் செக்ஸ் இல்லை என்றால் அது குட்டான் தனம்.
சலிக்கும். காமம் சலித்தால் சகலதும்
உடையும். கல்யாணம் உடையும்.
னேகமான உறவுகள் என்னால் உறவுகள் என்னை விலத்தி நடந்தது.
ா என்றால் சீவன். பானுப்பிரியாவின் களைக் கூட அவள் தவிர்ப்பதில்லை. டம்பா சும்மாறப்பர் மாதிரி நெளிகிறாள் ற்றி சிலாகித்துக்கொள்வாள்.
ரக்கட்டி.
நரிலை வேற பார்க்க வேணுமா?”

Page 158
“சும்மா போ... நேரிலை ஒரு றியலிட்ட
"சினிமா என்றதே கற்பனை. இதுல சில பாக்கிறது?"
"விருப்பம் இல்லெண்டால் விடன். அது என்று என்னில் கோபம் கொண்டாள் க
யாருடனோ எப்படியோ கஷ் நடனத்தை பார்த்து விட்டாள் சக்கரக்க
ஒரு நாள் முழுவதாய் பானுப் போதாக் குறைக்கு அவள் தங்கியிருந் கூட வாங்கினாளாம் என்று என்னிடம் ,
பானுப்பிரியாவின் கை எழுத்து கண் மாதிரியே குண்டு குண்டாக இருர் சக்கரக்கட்டி என்ன செய்யப் போகின்றா போல் இருந்தது. கேட்டால் அப்படி பிரபல்யங்களின் வெறும் கை எழுத்தா வாங்குகின்ற யாருக்குத்தான் தெரியும்?
எழுதுவது போல் படிப்பது ே திருப்திப்படுத்தக் கூடுமோ? யார் கண்ட திருப்தி கிடைக்கின்றது என்று!
அறிய வேண்டும். அறிய முயற் வகையாய் பதில் சொல்லும். ஒன்று இன்னொன்று 'கலக்ஷன்' என்று ெ வாங்குகிறார்கள் அதுதான் நானும்... ஒன்றுக்கும் சரியான தெளிவான நிலை பயித்தியக்காரக் கூட்டங்கள்.
பானுப்பிரியாவோட அண்ணனுட் இல்லை. என்னவோ ஒரு படத்திலையும் எண்டாங்கள். சக்கரக்கட்டியின் பேச்சு இம்சையாய் ப
நீ என்னென்ன சொன்னாலும் க வரைதான் உண்மையாய் தெரியும். இயல் தொட்டாலும் மயிர்க்கொட்டி புழுவின் த

இருக்கும்.”
மாக்காறியோட றியலிட்டிவ்வ என்னத்த
க்கேன் கனக்கயா கதைக்கிறாய்?" க்கரக்கட்டி. டப்பட்டு பானுப்பிரியாவின் குலுக்கல்
டி. பிரியா பற்றிய கதையாகவே இருந்தது. த அறைக்குப் போய் “ஓட்டோ கிராப்” காட்டி பெருமை பொங்கினாள்.
அழகாகத்தான் இருந்தது. அவளுடைய -தது. இதை வைத்துக் கொண்டு இந்த ளோ தெரியவில்லை. கேட்க வேண்டும் இப்படி என்று எதுவும் சொல்வாள். ல் என்னவாகும் என்று “ஓட்டோ கிராப்”
பால் இதுவும் சிலநேரம் ஆத்மாவைத் து யார் யாருக்கு எது எதுவால் ஆத்ம
சி செய்தால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு
'ஞாபகத்துக்கு' என்று சொல்லும். பருமைப்படும். மற்றயது எல்லாரும் ன்று இழுக்கும். வரிசைப்படுத்தினால் பயான கருத்து இல்லாது இருக்கும்.
வந்திருந்தான். ஆள் அவ்வளவு வடிவு நடிச்சானாம். வாக்குமூலமோ என்னவோ
டது. விதை என்பது பெண்ணை நெருங்கும் களுடன் ஒத்துவராத போது எங்கெங்கு ண்டலாய் போகும்.
யுத்தத்தின் இரண்டாம் பாகம் - 157

Page 159
“செந்தாழம் பூவுக்கு முள் ஒன்றும் குறையில்லை உள் ஒன்று வைத்தாலும் உன் மீது குறையில்லை."
வைரமுத்து உளறியிருக்கின்ற படும் என்பது உண்மைதான்.
இயல்புகள் ஒத்துவராத பெண் முடியாது. இயல்புகள் ஒத்துவராத இ விபச்சாரம்தான்.
கலவி கூட கவிதையானது. ஒ கொண்ட இருவரின் கலவி கவிதையா பசியில் அவசரமாய் இருட்டில் இணை
“பானுப்பிரியாவுக்கு சாரி வடிவாய் இ வடிவா இருக்குமா?” |
கேட்ட சக்கரக்கட்டி மேல் 5 வந்தது. ஒரு மனுஷியாகப்பட்டவளுக்கு ! பற்றி உறவுகள் பற்றி, குடும்பம் பற்றி பற்றி. எவ்வளவோ சர்ச்சை எழலாம். பா ஓர் சர்ச்சை இந்தப் பெண்ணிடம்.
"ஏன் சக்கரக்கட்டி நம்மட நாட்டில எ ஒரு உடுப்பில்லாமல் கூட அல்லாடுதுக குடும்பம் மாத்தி மாத்தி உடுத்துதுக கொண்டிருக்கு. இதுகளைப் பற்றி பானுப்பிரியாவுக்கு எந்த உடுப்பு வடிவா எந்த உடுப்பு வடிவாய் இருந்தால் உ
{{
“அது அவைய அவைய செஞ்ச பாவக் எனக்கு பானுப்பிரியாதான் முக்கியம்.”
ஈஸ்வரா... இது என்ன கொடும் நீயா... அல்லது இந்த மானிடர்களா? ய முட்டாளாக இருப்பது பாவம் இல்லை சிந்திக்க மறுப்பது மகாபாவம். இ ை சிந்திக்க மறுப்பவர் குற்றம். சக்கரக்க
“ஒரு மனுஷியா இருந்து ஜதார்த்தமா 8 விட, காட்டிப் பிழைக்கிற ப்ராஸ்டிட்டியூ
158
சக்கரவர்த்தி

ர். தூரக் கவர்ச்சிக்கு இது உண்மையாய்
ணுடன் கலவி கூட வைத்துக் கொள்ளல் ருவர் உடல் இணைந்தால் அது கூட
த்த இயல்புகளை, குணாதிசயங்களைக் னது. மற்றெல்லாம் விபச்சாரம். உடம்பு கின்ற விபச்சாரம்.
நருக்குமா? இல்லாட்டி மொடன் டிறஸ்
ஆத்திரமும் அருவருப்பும் சம அளவில் எத்தனையோ கேள்வி எழலாம் வாழ்க்கை , சமூகம் பற்றி, கலை பற்றி, அரசியல் னுப்பிரியாவுக்கு எந்த ஆடை அழகென்று
வவளவோ பிள்ளையல் மாத்தி உடுக்க கள். கிளிநொச்சியில் ஒரே உடுப்ப ஒரே ளாம். சனம் கற்காலத்துக்கே போய்க் யல்லாம் உனக்கு கவலையில்லை. இருக்கும் என்றதா கவலை. அவளுக்கு னக்கென்ன?"
5 கறுமம். அதுக்கு என்ன செய்ய ஏலும்.
மை. இங்கு யார் பிழை விடுகின்றார்கள்? புத்த பூமி பாவக் கருமங்களின் எச்சமா? - சிந்தனை வரட்சிகூட பாவம் இல்லை. றவரே உன் மீது குற்றமில்லை. இது ட்டி மேல் கோபம் வர மறுத்தது.
இந்திக்க மாட்டியா? கஷ்டப்படுகிற சனத்த ட்தான் உனக்கு கண்ணுக்கு தெரியுதா?

Page 160
“என்ன நீ பானுப்பிரியாவ ப்ராஸ்டிட்டியூ
“பொதுவாய் சொல்றன்.”
“என்ன பெரிய பொது”
“ச்சே. உன்னோட ஸ்நேகம் வச்சிருக்க உனக்கு விளங்காது. விடு.”
“எத விட.? எது எனக்கு விளங்காது.
“எல்லாம். மனிதம். காதல், கலவி விளங்காது.?”
“ஏன் எனக்கு விளங்காது. எனக்கு எல்
“gFf விடு”
“விட ஏலாது.”
ஆனால் நான் விட்டுவிட்டேன். அவள் 2
சக்கரக்கட்டி புறம் தள்ளப்பட்டு வி
எனக்கவள் விரோதியாகப்பட்டாள். ஆய
உறவு முறிக்கப்பட்டு பதின்நான்கு ந
இருபத்திஇரண்டு நிமிடங்களும் ஆகிவி எனக்குமென உறவு.
பின் குறிப்பு
நேற்று முன்தினம் தென் சென்றுவிட்டாள் கணவனுடன்.
மஞ்சரி - 1993

ட் எண்டே சொல்றாய்?
. வேண்டாம். எல்லாம் என்ர பிழை.
, உறவு ஒரு மண்ணும் உனக்கு
லாம் விளங்கும்.”
உறவை விட்டுவிட்டேன்.
பிட்டாள். எந்த ஒரு அகாலப் பொழுதிலும் பினும் கூட எனக்கும் அவளுக்குமான ாளும் ஐந்து மணித்தியாலங்களும் ட்டது. இனி ஒருபோதும் அவளுக்கும்
னமெரிக்காவுக்கு தேனிலவுக்குச்
ܣܛ,
أكبر யுத்தத்தின் இரண்டாம் பாகம் 1$

Page 161
LD னிதம் முற்று முழுதாய் நாக நம்பப்பட்ட காலகட்டம் இக்கா தும் - எதிரி ஸ்நேகிக்கப்பட்டதும் இக் அரசியல் காய் நகர்வுகளினால் மனிதம் எதுவும் ஆகிவிடவில்லை. மனித
தோன்றியதைத் தவிர. அசுரர்கள் ரகம பொழுதுகளில் மனித உரிமை அமைப்ட பட்சத்தில் கடவுள்கள் ஆயுதங்களுடன் மூலையிலும் - சந்திலும் பொந்திலும் கூரையிலும் - எங்கும் எங்கும் ஆயுதம் இக்காலகட்டத்தில்தான் சித்தாந்திகள்
160 சக்கரவர்த்தி
 

வர் இரலன்டாம்)
LIG77
கம் அடைந்து விட்டதாக ஐயம் திரிபுற லகட்டத்தில் தான் தலைவன் துரோகியான காலகட்டத்தில்தான். சில சமயம் காயம்பட்டாலும் பாரதூரமாய் உரிமை அமைப்புகள் ஆங்காங்கே ய் மலிந்து மனிதத்தை நசுக்க முற்படும் கள் நசியும் மனிதத்தைக் காக்கத்தவறும் அவதரிப்பர். அங்கும் இங்கும்மூக்கிலும் தூணிலும் துரும்பிலும் -குடிசையிலும் ரித்த கடவுள்கள் ஏகமாய் அவதரித்தனர். பின் ஆசீர்வாதம் பெற்ற நான் நசியும்

Page 162
மனிதத்தை மீட்க ஆயுதம் அணிந்து
ஆகாசம் நடுநடுங்க ஆயுத தாண்டவம் - ஆயிரமாயிரமாகி அழிந்தொழிந்தனர். அர தடுத்திட முடியவில்லை.
ஆயுதம் மானுடத்தின் விரோ மீட்சி கொடுப்பதன்று. ஆயுதமும் மா நிலையற்றவை. ஆயிரம் தாண்டிய உ அடைகிறது புத்தி ஆயுதம் மானிடத்
'துப்பாக்கி முனையில்தான் சுபீட்சம் பிறக் சொன்னார்களே. சித்தாந்திகள் புத்திசா சித்தாந்தமே பிறக்கிறது. என்னவோ த ரவைகள்தான் பிறக்கும் உயிர்களை கெ துப்பாக்கிக்கு?
மானுடம் மீட்க துப்பாக்கி எல் அப்படியாயின் சித்தாந்திகள் புத்தியற்ற மானுடம் மீட்க ஆயுதம் அணிந்த நான் ! உணர்கின்ற நேரத்தில் முட்டாளாகவும் மனிதனாகவும் தெளிவுறும் தத்துவார்த்
எது எப்படியோ முட்டாளாக இருப்பதில் கேள்விகள் ஒரு போதும் இல்லை.
காத்தான்குடியைக் கொழுத்து - சரி எல்லா சோனகனையும் துரத்து - சரி மக்காவுக்கு போறவனை ஒரேயடியாய் தொழும் நேரம் வெட்டிக் கொல் - சரி
எல்லா பதில்களும் திருப்தி கொடுக்கு
நம் மொழி தமிழ், நாம் தமிழர்கள் - 3 அவன் மொழி தமிழ், ஆனால் சோனக நம்சாமி பிள்ளையார், அவன் சாமி அல் சோனகன் காட்டிக்கொடுக்கிறான். - ஆ
உண்மைதான் முட்டாளாக இருப்பதில் செய்கிறது.
கொல் என்றால் கொல்லலாம். கொழுத்

அவதரித்தேன். அண்டம் கிடுகிடுங்க - ஆர்ப்பரித்தது. ஒன்றாகி பலவாகி நூறாகி ரக்கர்கள்... ஆயினும் மானுடம் நசிவதை
தி - அது ஒருபோதும் மானுடத்துக்கு னுடமும் முரண்பாடானவை. தொடர்பு யிர்கள் அழிந்த பிற்பாடு தெளிவுநிலை
த மீட்கும் என்பது முட்டாள்தனம்.
கும்' என்னும் அர்த்தத்தில் சித்தாந்திகள் லிகள் அல்லவா. மேதாவிகளிடம்தானே துப்பாக்கி முனையில் உயிர் பறிக்கும் கால்வதைத் தவிர வேறு என்ன தெரியும்
ன்பது எத்தனை பெரிய முட்டாள்தனம். சர்களா? அவர்கள் எப்படியோ போகட்டும். முட்டாளா புத்திசாலியா? சித்தாந்தி என - முட்டாள் என உணர்கின்ற நேரத்தில் தமா?
நிறையவும் சௌகரியம் இருக்கிறது.
மக்காவுக்கு அனுப்பு - சரி
ம்.
-- ;
பூமாம்!
ன் - ஆமாம்! ல்லாஹ் - ஆமாம்!
மாம்!
- - -
ம் நிறைய செளகரியம் இருக்கத்தான்
கதென்றால் கொழுத்தலாம்.
யுத்தத்தின் இரண்டாம் பாகம் - 161

Page 163
ரம்பாவின் தொடைகளையும் மந்தாராம் விவாதிக்கலாம். ஐஸ்வரியாராய் முன செதுக்கப்பட்டதா, இல்லையா என்பதை படிக்கலாம்.
டில்லிக்கு அந்தப் பக்கம் பஞ்சாப்பு
அங்க நான் பறிச்சன் றோசாப்பூ துருவி வச்ச தேங்காய்ப் பூ நெஞ்சில் முளைக்கிது வாழைப்பூ அக்கா பொண்ணு குஸ்பு இரண்டுபேருமா பண்ணினம் தப்பு - அவ திங்கிறா இப்போ மாங்காயோட உப்பு ஜலக்கு ஜக்கா ஜலக்கு ஜக்கா அடங் கொக்க மக்கா கொக்க மக்கா..
பாடல்களைக் காது குளிரக் குமுதம் குட்டிக் கதைகளைப் படிக்க நடிகையுடன் இத்தனை காலமாய் சரசம் பூ நடிகையை கைகழுவிவிட்டு மூ நடிகையுடன் உல்லாச விடுதிகளில் க தின முரசின் கிசுகிசுக்களில் சம்பந்தப்பு மண்டையைப் போட்டு உடைத்துக் கெ
முட்டாளாக இருப்பதில் நி செய்கிறது. சே... இப்போதெல்லாம் அநா என்னுள் எழுவதும் - அதைக் கேட்பது என்னவோ. நான் தனித்துவிடப்படுவது - இருள்சூழ்ந்த நிலத்தடியில் அடைக் நாய் நக்குவது போன்றும் உண்டாகும் உ போகிறது, கொலைகள் அற்ற ஒரு வா ஆளக்காணல்லயே..' என்று கவலைப்பட்
"குடல் வெள்ளாமைக்கு இல்லாட்டிக். கட்டுறத்துக்கு எண்டு கேட்ட ஒடனே மூ தம்பி நாங்க? காத்தான்குடியில் ஊடு ! எல்லாம் ஆத்துக்கு இஞ்சால தானே. நாங்க எப்ப இல்ல எண்டு செல்லிரிக் வெள்ளாமைய எரக்கமில்லாம் கொன தாச்சிய உயிரோட போட்டு பத்தவக் கொழுத்தினது. நீ இப்படி செய்யலாமா
162 - சக்கரவர்த்தி

வின் முலைகளையும் மணிக்கணக்காய் லகள் சிலிக்கோன் ஜெல்லால் நிரப்பி அறிய வாராந்திரிகளை வாரம் தவறாமல்
கேட்டு ரசிக்கலாம். கோபம் வராமல் கலாம். அதிகம் ஏன் மூன்றெழுத்து பூ
புரிந்த நான்கெழுத்து சுந்தர இயக்குனர்: கன்றெழுத்து தொடையழகியான ரம்ப கதை (!) டிஸ்கஸ் செய்கிறார் ! என்கிற பட்ட நடிகைகளை கண்டு பிடிப்பதற்காய் காள்ளலாம்.
றையவும் செளகரியம் இருக்கத்தான் வசியமென பிறர்க்கு படுகின்ற கேள்விகள் வும் பிறர்க்கு பிழையெனப்படுகின்றதோ போன்றும் - தப்பித்து ஓடுவது போன்றும் கப்படுவது போன்றும் - என் மூளையை உணர்வலைகளை கட்டுப்படுத்திட முடியாது ஈரம் சுகமாய் இருந்தது. 'ஆயுதத்தோட படு தேடிக்கொண்டிருப்பானுகள். தேடட்டும்.
கூட பரவாயில்ல எண்டு போட்டு சக்க ட மூட்டயா யூரியாவ தூக்கித்தரல்லயா பிள்ளயல் இருந்தாலும் வயவாய்க்கால் . நாங்க ஆரு மெனேய்? காசு கேட்டு கம் செல்லுபாப்பம். அறுத்துப் போட்ட ஒத்திப் போட்டயே... வகித்துப் புள்ளத் 5கிர மாதிரி எலவா நீ இந்த சூட்டக்

Page 164
பிசிறு தட்டிய குரலில் அழுகின்ற கண்க வெண்ணிற ஆடைகளில் எல்லாம் திட்
"எனக்கு இந்த விஷயம் தெரியாது க மனது உறுத்த தயங்கித் தயங்கிச் செ
"நீ யாழ்பாணத்தில இருந்து எங்கட இ நான் அவ்வளவா கவலப்படல தம்பி. எ எல்லாத்தையும் பத்தாயிரத்துக்கு மேல கிலோ ஆட்டுறைச்சி ஒரு ரூபாக்கும் விக்கெக்க நாங்க என்னமும் கதைச் போட்டாய்? விளைஞ்ச வெள்ளாமய சா காக்கா கேட்கக் கேட்க மனது பாரமாய் வீங்கியும் இருந்தது. நெடுநேரமாய் 8 மனது பாரமானதால் வெளிக்காட்டிக் ெ சாம்பலாகிப் போன சூடுகளில் இருந்து காற்று சுழன்றடிக்க சாம்பலுடன் சேர்ந் பறந்து போயின. இந்தக் கொடுங்காரி இல்லை என்பதை எப்படிப் புரியவைப் காக்கா விறுவிறுவென எங்கோ வேகமா ஆகப்போகிறது என நினைத்திருப்பாரே
"வெள்ளாம் போனாப்போகிது உசிரயா என நினைத்துக் கொண்டாரோ என்ன?
''இப்பல்லாம் நான் அப்படி இல்ல காக் என மனது சொல்லச் சொல்லியது. ந போகின்றார். வலது தோளில் இயமன் தோளில் தொங்குவதைக் கழற்றி இரு கொண்டுவந்து பார்க்கிறேன். ஜடம்! பா
விடியல் சூரியன் கொழுத்த எங்கும் வெகிர் அடித்துக் கொண்டிருந் ஆகின என்று கணக்கெடுக்க முடியாத கொண்டு இருந்தது.
எத்தனை தொழிலாளிகளின் நிரப்பப் போகும் நெல்மணிகள் எத்தன ஒரு இரவுக்குள் சாம்பலாகிக்கிடக்கிறது

ளுடன் பேசும் சின்னலெவ்வ காக்காவின் இத்திட்டாய் சாம்பல் அப்பியிருந்தது.
க்கா. நான் ஒரு கிழமையா...'' சான்னேன்.
னசனத்த தொரத்தி உட்டுத்தாய் அப்ப ண்பத்திநாலாம் ஆண்டு எங்கட ஆடுமாடு பழுகாமப் பக்கம் சாச்சித்துப் போய் ஒரு
மாட்டுறாச்சி அம்பது சதத்துக்கும் நீ =சமா தம்பி. ஏன் நீ இப்பிடி செஞ்சி
ம்பலாக்கிப் போட்டாயே" ப் போகிறது எனக்கு. கண்கள் சிவந்தும் அழுதிருப்பார் போலும். எனக்கும் கூட காள்ளாது அழுது கொள்கிறேன். கருகி 5 புகை புகைந்து கொண்டு இருந்தது. து நெருப்புத் துகழ்களும் மேலெழுந்து பத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் பேன் சின்னலெவ்வைக் காக்காவுக்கு? ய்ப் போகிறார். இதுகளிடம் பேசி என்ன ரா என்னவோ.
வது காப்பத்துவம்”
வா.
கா'' ன் சொன்னால் காக்கா என்ன நம்பவா தொங்குகின்றானே. | ககளாலும் பிடித்து முகத்துக்கு நேராக வம் இதற்கு என்ன தெரியும்?
ஆரம்பிக்கும் முன்னதாகவே பிரதேசம் நது. எத்தனை சூடுகள் எரிந்து சாம்பல் டி கண் எட்டும் திசையெங்கும் புகைந்து
உழைப்பு எத்தனை ஆயிரம் வயிறை னயோ இலட்சம் மனங்கள் எல்லாமும் | களத்து இருட்டில்.
யுத்தத்தின் இரண்டாம் பாகம் - 163

Page 165
ஏன்? நெஞ்செரியும் இந்தத் தீ ஏன்? எந்த சாமியை எந்த பகவானை குளிர்
“இந்த பொட்டணிக்காக்கா எங்க பொu அதுவுமா? மூத்தவள் பள்ளிக்கு ே வெள்ளைப் பப்பிளின் வாங்கிடலாம் எ கைச்சட்டயும் முதுகால பிரிஞ்சி பொயித் எண்டால் லேசிப்பட்ட வேலயா?” பொ சலித்துக் கொள்வாள்.
முன்னர் எல்லாம் காத்தான்கு புடவைகளை கட்டிக்கொண்டு இரு ஒட்டிக்கொண்டு அவர்கள் வந்தால்தான் உடுபுடவைகளுக்காய் அம்மாக்கள் : பொட்டணிக்காக்காக்கள்?
துணிகளையும் சைக்கிளையும் கொன்றவ காக்கா அரைகுறையாய் கிரான் குளக் தெரியும்? காத்திருந்து விட்டு அம்மா துணிவாங்க இப்போதும் காத்திருப்பாளே.
மூணு போகம் வெளஞ்ச ஒடன. ஒன மூத்த மாமன் கொண்டோடி வருவான் முன்னூறு சாக்கு நெல்லு ஆராரோ ஆரிரரோ. சித்தாண்டி சின்ன மாமன் ஆண்டி முருகன் தீர்த்தம் கொண்டு ஓடோடி வருவான்
ஆராரோ ஆரிரரோ. பாழாப்போன பழுகாமத்தானோட ஓடிப்போன உன்னோட மாமி மூத்த மகன உனக்கு கட்டித்தர பான உறுதிய
கொண்டோடி வருவான் ஆராரோ ஆரிவரோ.
வட்டானையாரு வயலையெல்லாம் பாட்
கூத்தாடப் போன உன்னோட அண்ணனார அண்ணாவியாரு பாப்பாரு
164 சக்கரவர்த்தி

விக்க இந்த வேள்வி?
பித்தான் ஒரு கிழமையா? வரிசகாலமும் ாட்டுப்போற சட்டைக்கு ரெண்டு யார் ண்டால் இவனைக் காணல்லயே. எண்ட து. புளியந்தீவுக்கு போய் சீத்த வாங்கிறது ட்டணிக் காக்காவை காணாது அம்மா
நடியில் இருந்து பொட்டணியில் துணி பத்தி ஐந்து மைல்கள் சைக்கிளை ஏழை அம்மாக்களுக்கு உடுதுணிகள். காத்திருக்க-எங்கே போனார்கள் இந்த
ர்கள் எடுத்துக்கொள்ள - மூளை சிதறிய காட்டுக்குள் புதைக்கப்பட்டது எப்படித்
புளியந்தீவு போய் இருப்பாள். உம்மா
iTL
லயடி வட்டைக்க கிடக்க வயலோட
UTOb

Page 166
பால நீ குடிச்சித்து படுத்துறங்காயோ
சோனகத்து முட்டாசைத்தவிர என்னை உ அம்மாவுக்கு. முன்னூறு சாக்கு நெல்மூட்டையைக் சித்தாண்டி முருகன் தீர்த்தத்தைக் கா காட்டிலும் மாமி வீட்டு மகளைக்காட்டிலும் கவர்ந்தது என்னவோ சோனத்து முட்ட
சோனகரும் நாங்களும் ஸ்நேகமாகத்தாே இருந்தோம். ஒரு மொழிதானே பே சமஸ்கிருதமுமா பேசினோம். இல்லைே சரஸ்வதி பூசைக்கு, இக்பால் வேஸ்டி
“ஆயகலைகள் அறுபத்தி நான்கினை என்று நெஞ்சுருகத்தானே பாடுவான்.
என் புறம் கையில் அருவருப்பாய்த் தே வேண்டி கல்முனைக் கடற்கரைப் பள்ளி கடன் வைத்தாளே அம்மா.
நான் கூட றம்ழான் நோன்பின் இறுதி இருக்கும் கடற்கரையில் நின்று த பார்த்திருக்கின்றேனே.
என்ன ஆயிற்று எங்களுக்கு?
கண்கள் கலங்கி வழிந்தன.
அடித்த காற்றில் கண்களுக்குள் சாம் கண்கள்.
சாம்பலாகிப் போன சூடுகள் புகைந்து (
யார்.யார்? யார் இட்ட தீ இது?
இதற்கோர் முற்றுப்புள்ளி வேண்டாமா? இதுவே கடைசியாக இருக்கட்டுமே. இந்த சித்தாந்தமும் வேண்டாம். சாந்தி வேண்டு வேண்டும். பூக்கள் பூத்திட வேண்டும்.

என்னோட சோனகத்து முட்டாசே.
வமிக்க வேறு பொருள் கிடைக்கவில்லை
ாட்டிலும் ட்டிலும் பாலையடி வெட்டை வயலைக்
ாசிதானே.
ன இருந்தோம் ஒன்றோடு ஒன்றாய்தானே சினோம். அவர்கள் அரபும் நாங்கள்
ய. ஒரே பள்ளியில்தானே படித்தோம். கட்டி. திருநீறு பூசி கைகூப்பி நின்று
பும் ஒய உணர்விக்கும் என் அம்மை’
ான்றிய உண்ணிகள் உதிர்ந்து போக வாசலுக்கு உப்பு தருவதாக நேர்த்திக்
மாலையில் இக்பால் வீட்டு முற்றத்தில் தலையில் துணிகட்டி பிறை நிலா
பல் அப்பிக்கொள்ள கசக்கி எரிகிறது
காண்டிருக்க பற்றி எரிகிறது நெஞ்சம்.
துவக்கும் வேண்டாம். சித்தாந்திகளின் ம், எரியும் தேசத்தில் புற்கள் முளைவிட ாம்பல் மேடெல்லாம் மீண்டும் களத்து
யுத்தத்தின் இரண்டாம் பாகம் 165

Page 167
மேடாக வேண்டும்.
துவக்கையும் மூன்று மகசினையும் மேன் விநோதமாய் என்னைப் பார்த்தார்கள்.
''வாரும்... ஒரு கிழமையாய் எங்க பே சுந்தர அம்மானின் கேள்விக்கு பதில் தோன்றவில்லை.
"இயக்க கட்டுக்கோப்பை மீறுறதால் எ6 தெரியும்தானே..?' சுந்தர அம்மானை வெறுப்பாய்ப் பார்த்தேன் இருந்தார். ஒட்டிக்கொண்ட பிறதேச த
“முஸ்லீம் சனத்தின்ர சூட்டுக்கு ஆரு கோபமாய்க் கேட்ட என்னை... விழிகளை இதமாய் ஒருவித வீரக்களிப்பாய் புல் அசைய தலையை மேலும் கீழுமாய் . உடல்மொழி எனக்குப் புரியவில்லை
''நான்தான்! நேற்று இரவு. மொத்தம் ஐ ஒரு கிழமையா எங்க போன நீர்?” என்
<< - 3)
சிறு விநாடி இடைவெளிக்குள் மெள்
"எத்தனை தரம் அவையளுக்கு கடிதம் . செய்யப்போடாது எண்டு. இனி வரமாட்ட சொல்லி முடிக்கும்போது நிதானமாகி !
"அதுக்கு நெல்லுச் சூட்டுக்கா நெருப்பு ை இதுதான் பாரம்பரிய மண்." என்னில் ஆத்திரம் தணியவில்லை.
"போராட்டம் எண்டு வந்த பிறகு நெ பாதைக்க குறுக்க வந்தால்...? அது என்ன இருந்து இரண்டுபேர் வந்திருக்கினம்.. ( சுந்தர அம்மான் சொல்ல நெஞ்சுக்குள்
'எதுக்கு இப்ப. இஞ்ச... மேலிடத்தில
166 - சக்கரவர்த்தி

சயில் வைத்தேன். அவர்கள் எல்லோரும் நான் இறுக்கமாய் நின்றிருந்தேன்.
-ன நீர்?'
சொல்ல வேண்டும் போல் எனக்குத்
ன்ன விளைவு ஏற்படும் என்று உனக்குத்
ன். ஒன்றரை வருடம் தான் யாழ்பாணத்தில் மிழை அவரால் கழற்ற முடியவில்லை.
நெருப்பு வச்சது?' - மட்டும் உயர்த்தி மேற்பார்வை பார்த்து, ன்னகைத்தார். பின் உடல் முழுவதும் ஆட்டி உடல் மொழி பேசினார். அவரது
என நினைத்தாரோ என்னவோ
பத்திமூணு. எல்லாம் சாம்பல். அது சரி Tறார் வாய் மொழியாய்.
எமாகி எனைப் பார்த்தார். பின்
அனுப்பினாங்கள். இந்தப் பக்கம் தொழில் டாங்கள்.'' இருந்தார்.
வக்கிறது? நமக்கு மாதிரி அவனுகளுக்கும்
ல் என்ன சோனி என்ன? நம்மளின்ர ஒரு மாதிரியா கதைக்கிறீர். மேலிடத்தில் தெரியுமா உமக்கு"
கு திக்கென்றது.
இருந்து.''

Page 168
ou is u சுருக்கிக் கொண்டேன்.
“நம்மளோட வேகம் காணாமல் இருக்குதா அவ்வளவு திருப்தியா இல்லையாம் சோனி சில ஒப்புரேசன் செய்ய வேணுமாம்.”
சுந்தர அம்மான் சொல்லச் சொல்ல தி
சிங்களவன்; சிறுபான்மையான எம்மை சோனகரை நாம் இம்சிப்பதா? சிங்களவன் மோடன் எனில்: நாம் யார்'
யுத்தத்தை நாம் விரும்பவில்லை. யுத்த ஆயுதம் ஏந்தி அதற்கு எதிராய் போராடாம செய்கின்ற துரோகமாகிவிடும். என நா: கவச அரண்களுக்குள் இருந்து கொண்டு தாங்குமா தாய் மண்? சாம்பலுக்குத்தான
“முஸ்லீம் சனத்தோட இன்னும் இன் விரும்பவில்லை. எண்பத்திமூணுக்கு மு என்ன வந்திட்டுது நமக்கு?”
“அப்ப நாமள் மடையரா இருந்திட்டம்.” எட்டத்தில் சத்தம் கேட்டது. புதிய கு துரிதப்படுத்தவும் முஸ்லிம்களுக்கு ஒப்புே ஒருவர் போலும்.
சத்தம் கேட்டு - ஒரு மெளன என் முன் நின்றனர். தலையை ஆட்ட புன்னகையுமாய் அறிமுகமாக்கிக் கெ அறிமுகத்தை ஏற்றுக் கொண்டேன். பல தென்னை தலைவிரித்து ஆடுகின்ற சத்த எரிந்த சூடுகளின் சாம்பல் திசை கெட்டு எங்கும்.
“மன்னார் பள்ளிவாசல் ஞாபகம் இருக்கு சுந்தர அம்மான் ஒருவரை காட்டி பெரு
அந்த ஒருவர்
“நீங்கள்தானாமே அம்பிளந்துறை சந்திய

ம் வடக்கு மாதிரி கிழக்கில நடவடிக்கை மாரோட நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி
கில் பற்றி எரிந்தது இதயத்துக்குள்.
இம்சிக்க - நமக்கு சிறுபான்மையான
ம் எம்மீது திணிக்கப்படும் போது. நாம் ல் இருப்போமாயின் அது எம் இனத்துக்கு ளை ஒரு இஸ்லாமியர் குழந்தைகளின் அறிக்கை விட ஆரம்பித்து விட்டால்.? * தேசமா?
னும் பிரச்சனையை வளர்க்க நான் pதல் ஒழுங்காத்தானே இருந்தம். இப்ப
ரல். வடதிசையில் இருந்து கிழக்கை ரேசன் செய்வதற்காகவும் வந்தவர்களில்
இடைவெளியின் பின் இருவர் வந்து டி: கண்களில் குரோதமும் உதட்டில் ாண்டனர். அதே பாசையில் நானும் }த்த காற்று அடித்துக்கொண்டிருந்தது. ம் பேயோசையாய்க் கேட்டது. இந்நேரம் பரவிப் பரந்து கொண்டிருக்கும் பிரதேசம்
தத்தானே. இவர்தான்!” மைப்பட்டுக் கொண்டார்.
பில வச்சி மக்காவுக்குப் போன மெளலவி
யுத்தத்தின் இரண்டாம் பாகம் 167

Page 169
மாரை..'' என்றார். நான் தலைகுனிந்து தோன்றவில்லை அதைத்தவிர.
"யாழ்ப்பாணத்தில இருந்து சோனக வெள்ளிக்கிழமை இஷாத் தொழுகை கூட்டம் நடத்தப் போறாங்களாம். உா மூலை முடுக்கெல்லாம் நல்லாத் தெரி அந்த ஒருவர் பேசிக்கொண்டே இருக் எகிறிக் குதிப்பது போலும் இருந்தது. நெடுநேரம் மௌனித்திருந்தேன். என் செய்திருக்க வேண்டும்.
"ஏன் ஒண்டும் சொல்லாமல் இருக்கிறீர்
“முஸ்லீம் சனத்தோட இனியும் பிரச்சனை இல்ல. அதுகள் நமக்கு என்ன செய்யுதி அவர் என்னை ஒரு மாதிரியாய்ப் பார்த்த
"நீர் விஷயம் எதுவும் தெரியாத ஆளா? குள்ள... தமிழன காட்டிக் குடுக்கிறவன் பாடம் 1 சற்று கோபமாகத்தான் இருந்தார்.
"ஏன், சோனகன் மட்டும்தான் காட்டிக் கெ குடுக்கல்லயா?' நான் கூட கோபமானேன். விழி விரித்தார்... புருவம் உயர்த்தினார்.
''யாழ்ப்பாணத்தான் காட்டிக் குடுக்கிறான அவர் கேட்க வேறுதிசையில் நான் முக அவருக்கு புரையேறியது- கனநேரம் ஆ
"அதுதான் அவங்களயெல்லாம் தட்டியா சமாதானம் ஆனார். ஆனாலும் வியர்த்திரு என்றோ எது செய்வது என்றோ எதுவும் நான் நிதானமாய் சுவாசித்துக் கொண்டி த.செல்வாவிற்கு. நாங்கள் பிறந்த 2 கண்டது இன்றவர் இருந்திருப்பின் அவ
“அதுமாதிரி காட்டி குடுக்கிற முஸ்லீம் ச
168 - சக்கரவர்த்தி

கொண்டேன். வேறு எதுவும் எனக்குத்
ச சனத்த துரத்தின் நாளான வார முடிய கண்டனம் கலந்த அனுதாபக் மகளுக்கு காத்தான்குடியில் இருக்கிற புமாமே..?' 5 தலை சுற்றுவது போன்றும் இதயம்
மெளனம் அவர்களை எதுவேனும்
ப் பட்டுக்கொண்டிருக்க எனக்கு விருப்பம் Sகள்?' கார். என்மேல் வெறுப்பாரோ என்னவோ..
- அவங்களாலதானே யாழ்ப்பாணத்துக்
டிக்க வேணும்.''
காடுத்தானா? யாழ்ப்பாணத்தான் காட்டிக்
? ஆதாரம் இல்லாமல் கதைக்காதேயும்” த்தை திருப்பிக்கொண்டேன்." டிப்போய் நிதானமானார்.
ச்சே.''
ந்தார். சுந்தரத்தாருக்கு என்ன பேசுவது தோன்றாது திணறிக் கொண்டிருந்தார். ந்தேன். காலம் நல்லதாய்ப் போயிற்று டனே அவர் செத்துப்போனார். யார்
கூட துரோகியாக இருப்பார்...
எத்த புடிச்சி வச்சி மண்டையில போட

Page 170
வேண்டியது தானே. அத விட்டுப்ே பள்ளிவாசலுக்குள் பூந்து வெட்டிக் கொ ஒரு நியாயம் சோனகருக்கு ஒரு நிய கொடுத்தான் எண்டு தானே கொண்ட அப்பவே யாழ்ப்பாணத்த விட்டுத் துரத் யாழ்பாண இசம் என்ன எண்டு விள நடந்தும் ஒரு சோனகரும் நாட்ட விட்டு போகயில்ல. சுத்தி சுத்தி இந்த தமிழ யாழ்பாண ஆக்கள் அப்படியா? அந்தக் நூலகத்த எரிச்சுப்போட்டான்கள் என்று ! ஓடிப்போய் எத்தினை பேர் யூரோப்பில பிரச்சனை நடந்தும் இன்னும் ஒரு சோல விட சோனகச்சனத்துக்குத் தான் தமிழ்
சொல்லி முடிக்கும் போது உடல் எ அவர்கள் நான் சொல்வதை மிக நிதா நெடு விநாடி மெளனத்தின் பின் கொடு
"நீர் வெளிநாட்டில இருக்கிற சனத்த கு காசில் தான் இண்டைக்கு சண்டையே பெருவிடயம் ஒன்றை எனக்கு புரியலை கொள்கின்றார் என்பது அவர்களில் தெ
எனக்கு பலமாய் சிரிக்க வேண்டும் போல் கொண்டேன்.
"வெளிநாட்டில இருக்கிறவன் காசு தரத் இலங்கையில் சண்டை நடந்தால்தாே நடத்த முடியும். இங்க சமாதானம் வந்தி அங்க நாறிடுமே. ஒட்டுமொத்தமா எல்ல வெள்ளக்காரனுகள். இலங்கையில் ச விரும்ப மாட்டான். சண்டை நடத்த கட்
என்பேச்சு அவங்களை கோபப்படுத்தி பேசாமல் நின்றிருந்த மற்ற ஒருவர் 6 பார்த்தார்.
''நீர் என்ன எடுத்ததுக்கெல்லாம் 6 சத்தியபிரமாணம் எடுத்தது ஞாபகம் இ அந்த ஆள் சொல்ல.. மண்டை விறை

பாட்டு ஊரைவிட்டுத் துரத்தினதும், எல்லுறதும் என்ன வேலை? தமிழனுக்கு பயமா? அல்பிரட் துரையப்பா காட்டிக் ம். எல்லாக் கத்தோலிக்கரையும் ஏன் தயில்ல? எனக்கு உங்களோடை இந்த ங்கயில்லை. எவ்வளவோ அநியாயம் ஓடயில்ல. ஏன் சிங்கள் ஊருக்க கூட
மண்ணுக்கதான் திரியுதுகள். ஆனா காலத்திலேயே எரிச்சுப் போட்டான்கள் சொல்லி சொல்லி யாழ்ப்பாணத்த விட்டு பணக்காரர் ஆயிட்டாங்கள். இவ்வளவு எகனும் நாட்ட விட்டு ஓடயில்ல. நம்மள - மண்ணுல பற்று மாதிரி தெரியிது"
பகும் எனக்குக் கூட வியர்த்திருந்தது. னமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ப்புக்குள் புன்னகைத்துக் கொண்டார்.
கற்றம் சொல்லாதேயும். அவங்கள் தாற
நடக்கிறது.'' என்றார். வத்து விட்டோம் என பெருமிதப்பட்டுக் ரிந்தது.
> இருந்தது. இருந்தாலும் புன்னகைத்துக்
தானே வேணும், சண்டை நடத்துறதுக்கு. ன வெளிநாட்டில அவங்கள் பிழைப்பு பட்டால் அவயலோட சொகுசு வாழ்க்கை பாரையும் கப்பல் ஏத்தி விட்டுருவாங்கள்
ண்டை முடிய வெளிநாட்டுத் தமிழன் டாயம் காசு தருவான்கள்தான்.''
விட்டது போலும். இதுவரையும் எதுவும் என்னை விரோதியாவும் விநோதமாயும்
விதண்டாவாதம் பேசிக்கொண்டு. நீர்
ருக்கோ...'' த்தது. மூளை பழையபடி கழுவப்பட்டு
யுத்தத்தின் இரண்டாம் பாகம் 4 169

Page 171
நிர்மலமாயிற்று. சத்தியப்பிரமாணம் ஞா இருக்கிறது.
..விடுதலை வேள்வியில் .என்னை நானே.
.உயிராயுதம். .தாகம். தாயகம்!
விட்டுவிட்டு மண்டைக்குள் ஓங்காரம் ஒலி மூளைக்குள் புகக்கூடாது. நான் என் தேச படைக்கப்பட்டேன். என் உடல், உயிர் தேசத்துக்கே.
மூளை வியூகம் வகுக்கத் தொடங்கியது
எக்ஸில்-2000
170 சக்கரவர்த்தி
 

பகம் இருக்கிறது. ஞாபகம் இருக்கிறது
லித்தது. பிற சிந்தனைகள் எதுவும் என் த்துக்காகவும் அதன் விடுதலைக்காகவும் சகலமும் சகலமும் என் தேசத்துக்கே

Page 172


Page 173
பிணங்களை ஒ முடியாத வேை மிதித்தே முன்ே
மனிதம் நசுங்கி
எக்ஸில் (

துக்கி ளயில் னேறினேன்...
த் தொலைந்தது!
THE பா ப ட் TE
வெளியீடு