கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இஸ்லாமிய வரலாறு 1.1

Page 1


Page 2


Page 3
ii
Title- ISLAMIYAWARALARu
(History of Islam)
VO. || Part. i
Author:- A.M. ABOOBUCKER
Publisher:- Islamic Research facademy
62,Osman Road,
Sointhomoruthu-5
Sri Lonko
Printer- An-Noor Graphics Offset,
Kalimuntai. TPhone : 067-20336
Firts Edition:- October 1977
Second Edition:- June 1982
Revised Edition:- December 1998
CopyRight:- GOAuthor
Pages:- vi + 234 F 240
Copies:- 2000
Price:- ܧ܋
ISBN 955-96.577 - O - 4
 

முதலாம் பதிப்பின் முனனுரை ஏக காலத்தில் உலகின் பெரும் பகுதியை ஆட்சி செய்த சில மக்கட் சமூகங்களை வரலாறு தன் பக்கங்களிலே பதிந்து வைத்திருக்கிறது. அத்தகைய மக்களுள் முன்னிற்போர் அறேபிய முஸ்லிம்களாவர்.
நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன், பண்பாடோ நாகரிகமோ தெரியாத நாடோடிகளாகத் திரிந்த அறேபியர், பிற்காலத்தில் இஸ்லாம் மத போதனைகளால் நாகரிகச் சிறப்புமிக்கவர்களாய் மாறியிருந் ததோடு, உலகின் பெரும் பகுதியை ஆட்சி செய்யும் வலிமையையும் பெற்றிருந்தனர். உலகின் நாகரிக, பண்பாட்டு வளங்களுக்காகப் பெரும் பணியாற்றிய மக்கள் உலகில் அவர்களைப் போல் வேறு எவருமே இல்லை எனலாம். அவர்கள் தம் பிற்காலச் சந்ததியினருக்காக விட்டுச் சென்ற கலை, கல்வி, கலாசாரச் செல்வங்களைப் பற்றித் தற்கால ஆய்வுலகு ஆய்வுகள் செய்யுமளவுக்கு அவர்களின் பணி மேலோங்கி இருந்தது): இத்த கைய பெருமைக்குரிய சமூகத்தாரின் வரலாற்றை விளக்குவதே இந்நூலாகும்.
வரலாறு என்பது மக்கட் சமூகத்தின் கண்ணாடியாகும். அதன் மூலம் தம்மையும், தம் முன்னோரின் குறைநிறைகளையும் பார்க்கமுடியும். ஆனால் கண்ணாடி கீறல்கள், விரிசல்கள் அற்றதாயும், களங்கமற்றதாயும் இருக்க வேண்டியது அவசியம். அவ்வாறின்றேல், அது யதார்த்தமான உருவத்தைப் பிரதிபலிக்க இயலாது.
இந்த வகையில் நோக்கும் போது, வரலாறு எழுதுவோனின் பணி மிகப் பொறுப்பு வாய்ந்தது. களங்கமற்ற வரலாற்றுக் கண்ணாடியை உருவாக்கி அளிக்க வேண்டிய பொறுப்பு அவனைச் சார்ந்தது. உண்மையை அறிவதும் அதனை வெளிப்படுத்துவதுமே அவனது நோக்கமாய் இருக்க வேண்டும். காய்தல், உவத்தலின்றிச் சம்பவங்களை நோக்கவும், உணர்ச்சிகளுக்கு அடிமைப்படாதிருக்கவும் அவன் முயல வேண்டும். இந்த நிலையில் வரலாறு உருவாக்கப்படும் போது தான், மக்கள் அதன் மூலம் தம் இனத்தின் கடந்த கால, நிகழ் கால உருவத்தை யதார்த்த பூர்வமாகப் பார்க்க முடியும்.
இந்த அடிப்படையிலேயே இவ் வரலாற்று நூலை எழுத முயன்றுள்ளேன். இஸ்லாமிய வரலாறு எழுதிய பலர் பக்கச் சார்புடையோராய் இருப்பதை அவர்களின் நூல்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ள்லாம். இதற்குக் காரணம் குறிப்பிட்டதொரு வர்க்கத்தாரை அவர்கள் ஏதோ ஒரு வகையில் சார்ந்திருந்தமையே ஆகும். ஆனால், நான் முடிந்தவரை, எவரையும் சாராமல் நடுநிலை நின்று, இந்த வரலாற்றை எழுத முயன்றுள்ளேன்.
iii

Page 4


Page 5
பொருளடக்கம்
1. அறபு நாடும் அறேபியரும் O1
நிலமும் மக்களும் அறபு மக்கள் புவியியற் செல்வாக்கு சர்வதேசத் தொடர்புகள்
2. அறியாமைக்கால அறேபியா 30
&IDu/A5606 சமுக நிலை பொருளாதார நிலை கலாசார நிலை அரசியல் நிலை
3. நபி முவுறம்மதும் இஸ்லாத்தின் தோற்றமும் 110 தியானமும் வேதவெளிப்பாடும் மதினாவுக்கு ஹிஜ்ரத் மதினா வெற்றி போர்கள் பிரியாவிடை ஹஜ் பிணியும் மரணமும் ஒரு மதிப்பீடு தேசப்படங்கள் உசாத்துணை நூல்கள்

l- DO SITOÏD
அறேபியரும்
அறபு நாடு ஆசியாக் கண்டத்தின் தென் மேற்குப் பக்கமாக உள்ள ஒரு தீபகற்பம், ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா ஆகிய மூன்று கண்டங்களும் சந்திக்கும் இடத்தில் இந்த தீபகற்பம் அமைந்திருக்கிறது. இந்தப் புவியியல் அமைப்பே உலகளாவிய பேரரசு ஒன்றை இஸ்லாம் கட்டி எழுப்புவதற்குக் காரண்மாக இருந்தது. அறேபியாவின் சுமார் மூன்றில் ஒரு பகுதி மணற் பாங்கான பாலைவெளிகளால் மூடப்பட்டிருக்கிறது. இங்கே உள்ள குன்றுகள் பாழடைந்தவையாயும் பள்ளத்தாக்குகள் இறந்துபட்ட ஆறுகளின் உலர்ந்த பாறைகளாயும் காணப்படுகின்றன. தென்மேற்குப் பிரதேசத்தைத் தவிர வருடம் முழுக்க ஓடக்கூடிய ஆறுகள் இங்கு இல்லை. ஆயினும், சிறிய அருவிகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. இந்த நாட்டின் நிலப்பரப்பு உலகிலேயே மிகப் பெரியதாயினும், சுமார் மூன்றரைக் கோடி மக்களே அறேபியாவிலுள்ள நாடுகள் அனைத்திலும் வாழ்கின்றனர். கிழக்கு எல்லையாக பாரசீக விரிகுடா, உம்மான் (ஓமான்) விரிகுடா ஆகியவற்றையும் தெற்கு எல்லையாக இந்து சமுத்திரத்திலுள்ள அறபுக் கடலையும் மேற்கு எல்லையாகச் செங்கடலையும் வடக்கு எல்லையாக சிரியப் பாலைவனத்தையும் கொண்ட இந்த நிலப்பரப்பை அறேபியர் 'ஜவீரதுல் அறப் (அறபுத் தீவு) என்றே அழைத்து வந்தனர்.
இந்தப் பெருநிலப்பரப்பை அறேபியர் ஜஷிரதுல் அரப் (அறபுத் தீவு) என்று அழைத்தமைக்குக் காரணம், அறேபியாவின் வடக்கே யூபிரதிசு (புராத்) நதி அமைந்திருந்தமை ஆகும். கடலால் அல்லது நீரால் முற்றிலும் சூழப்பட்ட ஒரு நிலப்பரப்பையே தீவு (ஜஷிரா) என்பர். சின்னாசியாவில் உற்பத்தியாகி தென் கிழக்கே சிரியா, இராக் ஆகிய நாடுகளின் ஊடாக ஓடி, தைகிரிசு தேஜ்லா) நதியில் கலந்து ‘ஷத்துல் அறப்' என்ற நதியாக உருவெடுத்து, பாரசீக விரிகுடாவில் விழும் யூபிரதிசு நதியை அவர்கள் தமது நாட்டின் வடக்குப் புற எல்லையைச் சூழ்ந்திருக்கும் நீராகக் கருதியமையாலேயே இவ்வாறு அழைத்துவந்தனர். இந்தக் கணிப்பின் அடிப்படையிலேயே மகா அலெக்ஸாந்தரின் எழுச்சியோடு அறிமுகமான கிரேக்க எழுத்தாளர் பலர் அறேபியாவின் வடக்கு எல்லையாக யூபிரதிசு நதியைக் குறிப்பிட்டிருக்கின்றனர். ஆனால் அக்கால அறேபியரின் கணிப்பு தவறானது ஆகும். ஏனெனில், யூபிரதிசு நதிக்கும் அறேபியாவுக்கும் இடையில் அமைந்திருந்த சிரியாப் பாலைவனமும் பண்டைய பாரசீகத்தின் சில பகுதிகளும் அறேபியாவின்
1. முஅமுல் புல்தான் - யாகத் ஹமவி பாகம் i பக்கம் 137

Page 6


Page 7
இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
மாகாணங்களாகப் பிரித்திருக்கின்றனர்
நஜ்த் மாகாணத்தின் வடகிழக்கு எல்லைகளில் உள்ள இராக்கிற்கும் பாரசீக வளைகுடாவுக்குமிடையில் அமைந்து கிடக்கும் பிரதேசம் அரூழ் என அழைக்கப்படுகிறது. அரூழ் என்றால் ஒரம் அல்லது பக்கம் என்று
பொருள். அறேபிய தீபகற்பத்தின் கிழக்குப் பக்கமாக அரூழ ஒரப்பிரதேசமாக - இந்த மாகாணம் அமைந்திருப்பதால், இது இவ்வாறு அழைக்கப்படுகிறது. இந்த மாகாணம் யமாமா, பஹ்ரைன், உமான் (ஒமான்) ஆகிய மாவட்டங்கள் மூன்றையும் உள்ளடக்கியது. யமாமா மாவட்டம் கிழக்கே உமான், பஹற்ரைன் ஆகிய மாவட்டங்களையும் தெற்கே அஹற்காப் பாலைவனத்தையும் மேற்கே ஹிஜாஷ், யமனின் ஒரு பகுதி ஆகியவற்றையும் வடக்கே நஜ்த் மாகாணத்தையும் எல்லைகளாகக் கொண்டது. இந்த மாவட்டத்தின் வட பகுதி மிகவும் செழிப்பு வாய்ந்த பிரதேசம் ஆகும். பண்டைக் காலத்தில் யமாமாப் பிரதேசம் தஸ்ம், ஜதீஸ் ஆகிய வர்க்கங்களைச் சேர்ந்த மக்களின் வாழிடமாக இருந்தது. ஹிஜ்ர் (அல்லது கரிஆ), ஜட்தா ஆகியவை அவர்களது புகழ் பெற்ற நகரங்களாக விளங்கின.அவர்களது கட்டடங்கள், கோட்டைகள் ஆகியவற்றின் இடிபாடுகள் இஸ்லாத்தின் தோற்றகாலம் வரை யமாமாவில் காணப்பட்டன. இஸ்லாம் தோன்றுவதற்குச் சிறிது காலத்திற்கு முன்பு, பக்ர் பின் வாஇல் வர்க்கத்தின் கிளைக்குலமான பனூ ஹனிபா வர்க்கத்தினரின் வாழிடமாக யமாமா இருந்து வந்தது. இந்த வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு தூதுக்குழுவினர் ஹி. 8இல் மதினாவுக்கு வந்து இஸ்லாத்தைத் தழுவினர். போலித் தீர்க்கதரிசியாகத் தன்னைப் பிரகடனம் செய்திருந்த முஸைலமா இந்த வர்க்கத்தைச் சேர்ந்தவனே.
'அல் இஹற்ஸா' என்றும் அழைக்கப்படும் பஹரைன் மாவட்டம் ஒரு கரையோரப் பிரதேசம் ஆகும். இது கிழக்கே பாரசீக வளைகுடாவையும் தெற்கே உமானையும் மேற்கே யமாமாவையும் எல்லைகளாகக் கொண்டது. இந்த மாவட்டம் முத்துக்குளிப்புக்கு புகழ் பெற்ற இடமாக விளங்கி வருகிறது.
புராதன காலத்திலிருந்தே பல்வேறு வர்க்கங்களைச் சேர்ந்த மக்களின் வாழிடமாக இருந்து வந்த இந்த மாவட்டத்தின் வரலாறு பெரும்பாலும் யமாமாவின் வரலாறாகவே இருக்கிறது. யமாமாவில் வாழ்ந்த ஜதீஸ் வர்க்கத்தினர், யமாமாவின் அரசன் ஹிஸான் என்பானால் துரத்தப்படவே, அவர்கள் இங்கு வந்து வாழலாயினர். பின்னர், அத்னானின் மரபில் தோன்றிய
4 இஸ்லாமிய வரலாற்றை எழுத முனைந்த ஆங்கில எழுத்தாளர்கள் அறேபியாவை ஹிஜாஷ் நஜ்த் உம்மான் ஹழ்ரமவித் யமன் என ஐந்து மாகாணங்களாகப் பிரித்திருக்கின்றனர். இந்த ஒழுங்கே எமது நூலின் முதலாம் இரண்டாம் பதிப்புக்களில் பின்பற்றப்பட்டிருக்கிறது.
5 இந்த வர்க்கங்களின் மூலவர்களான தஸ்ம் ஜதீஸ் ஆகியோர் அல் அர்த் பினர் இரம் பினர் அவ்த் பின்
ஸாம் பின் நூஹர் எண்பாரின் வழித்தோன்றல்கள் ஆவர்.
GD

இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி 1 அப்துல் கைஸ் வர்க்கத்தினர் இந்த மாவட்டத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். ரபீஆ வர்க்கத்தாரும் இங்கு வாழ்ந்தனர். இஸ்லாத்திற்கு முந்திய பஹ்ரைனில் இவர்களே அதிகமாகக் காணப்பட்டனர். கி.பி. 6ஆம் நூற்றாண்டில், பாரசீக ஆட்சியாளர்களின் ஆதரவாளர்களால் இந்த மாவட்டம் ஆளப்பட்டது.இதற்கு பஹற்ரைனின் ஆட்சியாளனான அம்ர் பின் ஹின்த் என்பானால் கொல்லப்பட்ட அறபுக் கவிஞர் தரபாவின் கொலை விவரணம் சான்றாக இருக்கிறது. ஹி.6 ( கி.பி. 630) இல், பஹற்ரைன் ஆட்சியாளர் முன்திர் பின் ஸாவி தமது குடிகளோடு இஸ்லாத்தைத் தழுவினார். பிற்காலத்தில், கரமிதா இயக்கத்தாரின் எழுச்சிக்கும் நடவடிக்கைகளுக்கும் மத்திய தலமாக இந்த மாவட்டமே இருந்தது. இப்போது இந்த மாவட்டம் குவைத், கத்தர் (கட்டார்), அபுதாபி, துபாய் என பல சிறு துண்டுகளாகப் பிரிந்து, மன்னர்களின் ஆட்சியின் கீழ் ஆளப்பட்டு வருகிறது.
உமான் (ஒமான்) மாவட்டம் இந்து சமுத்திரத்தின் ஒரு கிளையான உமான் விரிகுடாக் கரையில் அமைந்திருக்கிறது. இது, கிழக்கே உமான் விரிகுடாவையும் தெற்கே அறபுக் கடலையும் மேற்கே அஹற்காப் பாலைவனம், ஹழரமெளத் ஆகியவற்றையும் வடக்கே பாரசீக விரிகுடா, பஹம்ரைன் மாவட்டம் ஆகியவற்றையும் எல்லைகளாகக் கொண்டிருக்கிறது. கரையோரங் களிலுள்ள நிலங்கள் செழிப்பானவை. இங்குள்ள மலைகளுள் மிகப்பெரியது அக்ழர் என்ற மலையாகும். இந்த மாவட்டத்திலுள்ள மலைகளில் சுரங்கங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. ஆறுகளில் இரத்தினக்கற்களும் பள்ளத்தாக்குகளில் தானியப்பயிர்கள், பழமரங்கள், நறுமணச்செடிகள் முதலியனவும் பெருமளவில் உள்ளன. இந்த மாவட்டம் நல்ல இனக்குதிரை கள், பசுக்கள், வெள்ளாடுகள் ஆகியவற்றுக்குப் பிரபல்யம் வாய்ந்தது. இஸ்லாத்திற்கு முன்பு இங்கே அவழ்த் வர்க்கத்தினர் வாழ்ந்தனர். இப்போது தனிநாடாக இருக்கும் இந்த மாவட்டம் உமான் ஸல்தானால் ஆளப்படுகிறது. மஸ்கத் இதன் தலைநகராகும்.
அறேபியாவின் மத்திய பகுதியில் நஜ்த் மாகாணம் அமைந்திருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ள இந்த மாகாணம் பாலைவனங்களும் மலைக்கணவாய்களும் நிறைந்த செழிப்பான ஓர் உயர் நிலமாகும். இடையிடையே பாலைவனச் சோலைகள் 面怨西 (Oases) என்று அழைக்கப்படும் பச்சைப் பெருந்தோட்டங்கள் பரவலாகக் காணப்படுகின்றன. இந்த மாகாணம் கிழக்கே அஹற்காப் பாலைவனம், பஹற்ரைன் ஆகியவற்றையும் தெற்கே யமாமாப் பிரதேசத்தையும் மேற்கே ஹிஜாஷ் பாலைவனத்தையும் வடக்கே சிரியாப் பாலைவனத்தையும் எல்லைகளாகக் கொண்டிருக்கிறது. இது மூன்று பக்கங்களில் பாலைவனங்களால் சூழப்பட்டிருக்கும் காரணத்தால் வெளியாரின் படையெடுப்புக்களில் இருந்து பாதுகாப்புப் பெற்ற ஒரு பிரதேசமாக இருந்து
G5)

Page 8
இஸ்லாமிய வரலாறு பாகம் பகுதி !
வருகிறது. இங்கு ஈச்சமரச் செய்கை பெருமளவில் மேற்கொள்ளப்படுகிறது.
ஆரம்பத்தில் இங்கே பக்ர் பின் வாஇல் வர்க்கத்தினர் குலைப் என்பாரின் தலைமையில் வாழ்ந்து வந்தனர். ஐந்தாம் நூற்றாண்டுகளில் இங்கே கின்தா அரசு நிலைபெற்றிருந்தது. மிகப் பூர்வீக காலத்தில் இங்கே அத்னானின் வழித்தோன்றல்கள் வாழ்ந்து வந்தனர். பின்னர், பனூ தய் என்ற கஹற்லானி வர்க்கக்கிளையினர் இங்குள்ள மலைப்பகுதிகளில் குடியேறி வாழ்ந்து வரலாயினர். பனூ ஹத்திம், பனு நவத்பான், பனு ஹவாஷின், பனூ ஸ்லீம் ஆகிய வர்க்கத்தினரும் இங்கு குடியேறி இருந்தனர். இப்போதைய ஸ"ஊதீ அறேபியாவின் தலைநகரமாக விளங்கும் ரியாழ் நகரம் இங்கேயே இருக்கிறது.
அறேபியாவின் தென் மேற்கு மாகாணம் யமன் என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சொல் செழிப்பு என்று பொருள் தரும் ‘யும்ன்' என்ற சொல்லின் அடியாகப் பிறந்தது. இந்த மாகாணம் மிகச் செழிப்பு LED 50i வாய்ந்த ஒரு பிரதேசமாக இருந்தமையால், இவ்வாறு அழைக்கப்பட்டிருக்கலாம். யமன், அதிக செழிப்பும் நாகரிகச் சிறப்பும் மிகுந்த ஒரு அறேபிய மாகாணமாகும். விவசாய விருத்திக்குப் போதுமான மழை இங்கு பெய்கிறது. பண்டைக்காலத்தில் இந்த மாகாணம் அறேபியா பீலிக்ஸ் (செழிப்பு வாய்ந்த அறேபியா) என அழைக்கப்பட்டது. இந்த நிலத்தின் செழிப்பும் இங்கு காணப்பட்ட செல்வங்களுமே இதற்கு இந்தப் பெயரைப் பெற்றுக் கொடுத்தன. இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னரும் தோன்றிய பின்னரும் இந்த மாகாணம் சிறந்த நாகரிகத்தின் மத்திய நிலையமாக விளங்கியது. பெருமளவில் இங்கே காணப்படும் கட்டடங்களினதும் கோட்டைகளினதும் சிதைவுகள் இதன் கடந்தகால மகிமைக்குச் சான்றாக இருக்கின்றன.
இந்த மாகாணம் கிழக்கே உமான் பிரதேசத்தையும் தெற்கே அறபுக்கடல், அதன் (ஏடன்) விரிகுடா ஆகியவற்றையும் மேற்கே செங்கடலையும் வடக்கே ஹிஜாஷ், நஜ்த், யமாமா ஆகிய பிரதேசங்களையும் எல்லைகளாகக் கொண்டிருக்கிறது. பண்டைக்காலங்களில் பல அரசுகளாகப் பிரிக்கப்பட்டிருந்த இந்தப் பிரதேசத்தில் அமாலிக்குகள், மானிகள், ஆதுகள், ஸபஇயர், ஹிம்யரியாக்கள் முதலான பல்வேறு வர்க்கத்தினர் காலத்திற்குக் காலம் தத்தமது அரசுகளை நிறுவி இருந்தனர். இந்த மாகாணத்தின் ஊடாகவே இந்தியா, பாரசீகம், அபிசீனியா (எதியோப்பியா), எகிப்து, மெஸொபோதேமியா முதலான நாடுகள் அறேபியருடன் வர்த்தகத் தொடர்புகள் வைத்திருந்தன. வாசனைச் சரக்குகள், கனிப் பொருட்கள் ஆகியவற்றின் வர்த்தக மையமாகவும் இது விளங்கியது. இங்கு உற்பத்தி செய்யப்பட்ட தங்கம், செம்பு, சாம்பிராணி முதலான பொருட்கள் பிற நாட்டு வணிகர்களைப் பெரிதும் கவர்ந்தன. நாகரிகவிருத்தி அடைந்த பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் இந்த மாகாணத்தின் உற்பத்திகளாலும் கணிப்பொருட்களாலும் கவரப்பட்டு,

இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
LL LLL LLLL L L LLTTL LL LMM MM MC CCT LL LL LL LMLL LLLLLLL MMCCLTMCCLSLC MCM CSLM LCLL S LLLTq SLLLML SLLL LLLS hat m ,
தென் அறேபியாவுக்கு வருகை தந்தனர். இன்றும் கூட இந்த மாகாணம் அறேபியச் செல்வங்களின் களஞ்சியமாகக் கருதப்படுகிறது.
இஸ்லாத்தின் தோற்றகாலத்திற்குச் சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் அபிசீனியர் இந்த மாகாணத்தைக் கைப்பற்றி, எழுபது ஆண்டுகள் ஆட்சி செய்தனர். பின்னர், அவர்கள் பாரசீகரால் தோற்கடிக்கப்பட்டனர். ஹி.7 இல், யமனின் பாரசீக ஆளுனர் பாதான் இஸ்லாத்தைத் தழுவினார். ஹி 10 இல், யமனின் குடியிருப்பாளர் அனைவருமே இஸ்லாத்தைத் தழுவினர்.
இந்த மாகாணத்தில் பெரிய ஆறுகள் இல்லை. ஆயினும்,
மலைகளிலிருந்து ஓயாமல் ஓடும் அருவிகள் இந்த மாகாணத்தைச் செழிப்பு நிறைந்ததாக வைத்துக் கொண்டிருக்கின்றன. யமனின் பண்டைய நகரங்களுள் அதிகமானவை மண்ணில் புதையுண்டோ பாழ்பட்டோ காணப்படுகின்றன. சில நகரங்களில் மக்கள் வசித்த போதிலும், அவற்றின் பெயர்கள் மாற்றப்பட்டி ருக்கின்றன. இந்த மாகாணம் இப்போது இரு குடியரசு நாடுகளாகப் பிரிக்கப்பட்டு வெவ்வேறு ஜனாதிபதிகள் இருவரால் ஆட்சி செய்யப்பட்டு வருகிறது. இந்த மாகாணத்தின் மாவட்டங்களுள் ஹழ்ரமெளத், அஹ்காப் நகரங்கள் (ருப்2-ல் காலீ), ஸன்ஆ, நஜ்ரான் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை.
இந்து சமுத்திரக் கரையில் அமைந்துள்ள யமனின் கிழக்கு மாவட்டம் ஹழ்ரமௌத் என அழைக்கப்படுகிறது. கிழக்கே உமான், தெற்கே இந்து சமுத்திரம், மேற்கே ஸன்ஆ மாவட்டம், வடக்கே ருப்உல் காலி பாலைவனம், அஹற்காப் பாலைவனம் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டது இந்த மாவட்டம், யமன் அறேபியரின் தந்தையான கஹற்தான் என்பாரின் தாயகம். இதுவே கிறித்தவரின் வேதநூலான வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டில் தேவ்ராத் வேதத்தில்) கஹற்தானின் புதல்வர் பன்னிருவருள் ஒருவர் ‘ஹஷரமவத் என்று பெயரிட்டிருந்தார் எனக்குறிப்பிடப்பட்டிருக்கிறது. (ஆதியாகமம் 10 25). எனவே இதன் முதலாவது குடியிருப்பாளரின் பெயரால் இந்த நிலப்பகுதி ‘ஹழ்ரமௌத் எனப் பெயரிடப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. ஆதுகளினதும் தமுதுகளினதும் ஆரம்ப வாழிடம் இதுவே. பின்னர், ஆதுகள் அஹற்காப் பிரதேசத்திற்கு இடம் பெயர்ந்து சென்று, அங்கே குடியேறி விட்டனர். இங்கு தேன் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இப்போது ஒரு தனிநாடாக இருக்கும் இந்த மாவட்டத்தின் தலைநகரமாக 'அதன் (ஏடன்) இருந்து வருகிறது.
யமன் மாகாணத்தின் இதயமாகவும் அறேபிய நாகரிகத்தின் மையமாயும் விளங்குவது ஸன்ஆ மாவட்டமாகும். இந்து சமுத்திரத்தினதும் செங்கடலினதும் கரையில் அமைந்திருக்கும் இந்த மாவட்டத்தை தலைநகராகக் கொண்டே மானிகளும் ஹிம்யரிய்யாக்களும் ஸபஇயர்களும் தத்தமது
○

Page 9
இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி 1
அரசுகளை யமனில் நிறுவி இருந்தனர். இங்கேயே உலகப் புகழ் பெற்ற ம.ரிப் அணை கட்டப்பட்டிருந்தது. அரசி ஷபா இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவரே. புகழ் பெற்ற கோட்டைகளான கும்தான், நாஇத், ருப்தா, ஸர்வாஹற், மதர் என்பனவும் இங்கேயே அமைக்கப்பட்டிருந்தன.
‘அஹற்காப்' பாலையின் நகரங்களை உள்ளடக்கிய மாவட்டம் உலகிலேயே மிக உலர்ந்த பாலைநிலமான “ருப்உல் காலி என்ற பாலைவெளியில் அமைந்திருக்கிறது. யமாமா, உமான், பஹரைன், ஹழ்ரமெளத், யமனின் மேற்குப் பகுதி ஆகிய பிரதேசங்கள் வரைநீண்டு கிடக்கும் இந்தப்பாலை நிலம் மக்கள் வசிப்பதற்குப் பொருத்தம் இல்லாதது. ஆயினும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் - குறிப்பாக ஹழ்ரமெளத்திலிருந்து நஜ்ரான் வரை நீண்டு கிடக்கும் பகுதியில் - மக்கள் குடியேறி வாழ்ந்தனர். இறைவனின் சாபத்திற்கு ஆட்பட்டு அழிந்து போன ஆதுகள் தமது அழிவின் போது இங்கேயே வாழ்ந்து வந்தனர். இப்போது இது மக்கள் நெருங்க அஞ்சும் பயங்கரப் பாலைவனமாக இருந்து வருகிறது. இப்போது இதன் பெரும் பகுதி ஸ"ஊதி அறேபியாவின் எல்லையுள் இருக்கிறது.
நஜ்ரான் என்பது அஹற்காப் பாலைவனத்திற்கும் அஸிர் மேட்டு நிலத்திற்கும் இடையே அமைந்துள்ள மிகச்சிறிய ஒரு மாவட்டமாகும். மிகப்புராதன காலத்தில், இங்கு முதன் முதலில் குடியேறி வசித்த நஜ்ரான் பின் ஷைதான் பின் ஸபா பின் யஷ்ஜ"ப் பின் யட்ருப் பின் கஹதான் என்பாரின் பெயரிலேயே இது நஜ்ரான் என அழைக்கப்பட்டது என்று அல் கல்பீ கூறுகிறார். பின்னர், நபி இஸ்மாஈலின் வழித்தோன்றல்களுள் ஒருவரான பஜீலா பின் நஸார் இங்கு குடியேறினார். இஸ்லாத்தின் தோற்றகாலத்திற்கு முன்னர் இங்கு வாழ்ந்த மக்கள் கிறித்தவர்களாக இருந்தனர். உரோமர் களினதும் அபிசீனியர்களினதும் இடையறாத உழைப்பால் கிறித்தவ மதத்தைத் தழுவியிருந்த அவர்களை மீண்டும் யூத மதத்தில் சேர்க்க யமனின் யூத அரசு பெரிதும் முயன்றது. அரசின் முயற்சி தோல்வியுறவே யூத மதத்தைத் தழுவ மறுத்த நஜ்ரானிகள் தீயில் எரிக்கப்பட்டனர். (இது பற்றி அல்குர்ஆனிலும் பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது 852-8) ஆயினும், உரோமப் பேரரசும் அபிசீனிய அரசும் தலையிட்டு, நஜ்ரானிகளைக் காப்பாற்றி, இங்கு மீண்டும் கிறித்தவ மதம் வளர உதவின. ஹி. 10 இல் நஜ்ரானிகள் இஸ்லாத்தைத் தழுவினர். இப்போது இந்த மாவட்டம் ஸ"ஊதி அரசின் ஒரு பகுதியாக இருக்கிறது.
அறேபியத் தீபகற்பத்தின் வடக்கே - நபூத் பாலைநிலம், ஷம்மர் மலை ஆகியவற்றிற்கு மேற்கே - உள்ள குன்றுகள் செறிந்த பகுதி ஹிஜாஷ் மாகாணம் என்று அழைக்கப்படுகின்றது. ஹிஜாஷ் என்றால் திரை அல்லது தடுப்பு என்பது பொருள். அறேபியாவின் தாழ்நிலப் பிரதேசமான
6. யாகத் ஹமவி. பாகம் V பக்கம் 266

இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
திஹாமாவுக்கும் உயர்நிலப் பிரதேசமான நஜ்துக்கும் இடையே இந்த மாகாணம் ஒரு தடுப்பாக அமைந்திருப்பதால் இது இவ்வாறு அழைக்கப்படு கிறது. இன்ஜில் வேதத்தில் இந்திப் பிரதேசம் 'பாரான்’ என்ற பெயரால் குறிப்பிடப்பட்டிருக்கிறது. செங்கடலுக்கும் ஜபலுஸ் ஸராத் ஹிஜா ଈ0 மலைத்தொடருக்குமிடையே வடக்கிலிருந்து தெற்காக நீண்டு, சூயஸ் பூ சந்தி முதல் இந்து சமுத்திரம் வரை செல்லும் இந்த மாகாணத்தின் பெரும் பகுதி மலைப்பாங்கானது; சிறு பகுதி மணற்பாங்கானது. இங்கு ஆறுகள் இல்லை. ஆங்காங்கே மலைகளின் ஊடாக ஓடும் அருவிகள் இந்த மாகாணத்தைச் செழிப்புள்ளதாக வைத்திருக்கின்றன. செங்கடற்கரை யோரமாக உள்ள பகுதி மிகச் செழிப்பானது; மற்றப்பகுதிகள் விவசாயத்திற்குப் பொருத்தமற்ற மணற்பாங்கான பாலைநிலம் ஆகும். கிழக்கே நஜ்த் பிரதேசமும் தெற்கே அஸர் மேட்டு நிலமும் மேற்கே செங்கடலும் வடக்கே சிரியாப் பாலைவனமும் இந்த மாகாணத்தின் எல்லைகளாக இருக்கின்றன.
மிகப் பழங்காலத்தில், இஸ்ரவேலரின் வேத காலத்தைச் சேர்ந்த எதோமியர்களும் மீதியானிகளும் இந்த மாகாணத்தில் குடியேறி வாழ்ந்து வந்தனர். கடந்த பதினான்கு நூற்றாண்டு காலமாக இந்த மாகாணம் அறேபியர்களுக்கு மட்டுமன்றி, அகில உலக முஸ்லிம்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரதேசமாக இருந்து வருகிறது. ஏனெனில், இப்புண்ணிய பிரதேசத்திலிருந்தே சத்திய சன்மார்க்கமான இஸ்லாம் உதயமாயிற்று; நபி (ஸல்) அவர்களின் தாயகமான மக்கா, அவர்கள் தமது வாழ்வை முடித்து அடங்கப்பெற்ற புனித நகரமான மதீனா, 'ஹிஜாஷின் சுவனம் என வருணிக்கப்படும் தாஇப், முஸ்லிம் யாத்திரிகள்கள் தரையிறங்கும் இடமான ஜித்தா, ஹிஜாஷின் இரண்டாவது பெரும் கரையோர நகரமான யன்பூ" முதலான மாநகரங்களும் ஜவ்ப் அல்லது வாதிஉல் குரா, தபூக், கைபர், மிதியன் முதலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பட்டினங்களும் இங்கேயே இருக்கின்றன. ஒவ்வோராண்டும் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காகவும் உம்ரா செய்வதற்காகவும் உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வரும் இலட்சக்கணக்கான யாத்திரிகர்கள் புனிதம் மிகுந்த இந்த மாகாணத்தைத் தரிசித்துச் செல்கின்றனர்.
இந்த மாகாணத்தின் பழம்பெரும் நகரங்களுள் மக்கா தலையானது. உம்முல் குரா (பட்டினங்களின் தாய்) என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் இந்த நகரின் புராதனப்பெயர் பக்கா என்பதாகும். ஹிஜாஷ் மாகாணத்தின் தலைமையகமாக விளங்கும் இந்த நகரம் நபி இப்றாஹீம் (அலை) அவர்களால் நிறுவப்பட்டது. பின்னர், அவரது மகன் நபி இஸ்மாஈல் (அலை) இங்கு குடிபெயர்ந்து வந்து வாழலானார். கடல் மட்டத்திலிருந்து சுமார் 300 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இந்த நகரம் கி.மு.2500 ஆம் ஆண்டளவில், வர்த்தகக் கூட்டங்களின் முக்கிய நிலையமாக விளங்கியது.
G9)

Page 10
இஸ்லாமிய வரலாறு பாகம் t பகுதி !
கி.மு. 2000 ஆண்டளவில் நபி இப்றாஹீம் (அலை) இறைவணக்கத்திற்காக கட்பா என்ற ஆலயத்தை இங்கே நிறுவினார். இந்த நகரில், கஹற்தானியரின் எழுச்சி ஏற்படும் வரை, நபி இஸ்மாஈலின் வழித்தோன்றல்களே மேலாதிக்கம் பெற்றிருந்தனர். பிற்காலத்தில் நபி இஸ்மாஈலின் வழித்தோன்றலும் குறைஷ் வர்க்கத்தாரின் மூலவருமான குஸய் என்பார் இங்கு ஒரு அரசை நிறுவினார். பல நூற்றாண்டுகள் வரை குறைஷகளே இந்த நகரைப் புரந்து வந்தனர்.
ஹிஜாஷின் மற்றொரு முக்கிய நகரமான மதீனா ஆரம்பத்தில் யத்ரிப் என்றே அழைக்கப்பட்டு வந்தது. பின்னர், நபி(ஸல்) அவர்கள் தமது வாழிடத்தை இங்கே அமைத்துக் கொண்டதைத் தொடர்ந்து மதீனதுந் நபி (நபியின் நகரம்) என்ற பெயரால் இது அழைக்கப்படலாயிற்று. அந்தப் பெயரே சுருங்கி, மதினா ஆயிற்று. கடல் மட்டத்திலிருந்து சுமார் 620 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த நகரில், ஆரம்பத்தில் அமாலிக்குகள் குடியேறி வாழ்ந்து வந்தனர். பின்னர் யூதர்களும் அவர்களுக்குப் பின் அஷ்த் வர்க்கத்தைச் சேர்ந்த அவ்ஸ், கஷ்ரஜ் குலத்தினரும் குடியேறி வாழலாயினர். இஸ்லாம் தோன்றிய பின்னர் அவ்ஸ், கஷ்ரஜ் ஆகிய இந்த வர்க்கத்தினர் இஸ்லாத்தின் வளர்ச்சிக்குத் துணை நின்று, ‘அன்ஸார் (உதவியாளர்) கள் என்ற பெயரைப் பெற்று சிறப்படைந்தனர்.
தாஇப் நகரம், ஹிஜாஷின் மிகச் செழிப்பான ஒரு நகரம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து 1800 மீட்டர் உயரத்தில், மக்காவுக்குத் தென்கிழக்கே அமைந்துள்ள இந்த நகரிலேயே ஹிஜாஷின் செல்வர்கள் தமது கோடைகாலத்தைக் கழித்து வருகின்றனர். மிகப் பழைய நகரங்களுள் ஒன்றான தாஇபில், ஹி. 59 ( கி.பி. 680) இல் கட்டப்பட்ட புராதன அணை ஒன்று காணப்படுகின்றது. ஹி 9 இல் இந்த நகரத்தவர்கள் இஸ்லாத்தைத் தழுவினர்.
சிரியாப் பாலைநிலம் முதல் யமன் வரைசெங்கடல் ஓரமாக நீண்டு கிடக்கும் பகுதி திஹாமா என்று அழைக்கப்படுகிறது. திஹாமா என்றால் தாழ்நிலம் என்று பொருள். இதன் கிழக்கு எல்லையாக அறேபியாவின் திஹாமா மிகப்பெரும் மலைத் தொடரான ஐபலுஸ் ஸராத் அமைந்திருக்கிறது. அறேபியாவின் வடஎல்லை முனையில் ஆரம்பித்து, அறேபியாவின் தென் எல்லை (யமன்) முனையில் முடிவடையும் இந்த மலைத்தொடர் தீபகற்பத்தைக் கிழக்குப்பகுதி, மேற்குப் பகுதி என இரண்டு பாகங்களாகப் பிரிக்கிறது. மலைத்தொடரின் கிழக்குட்பக்கமாக உள்ள நிலம் மேடாக இருப்பதால், அது நஜ்த் (உயர் நிலம்) என்று அழைக்கப்படுகிறது; மேற்குப் பக்கமாக உள்ள நிலம் தாழ்பகுதியாக இருப்பததால், அது திஹாமா (தாழ் நிலம்) என்று அழைக்கப்படுகிறது. மலைத்தொடரின் மேற்குப்பக்கம் (திஹாமா) கிழக்குப்பகுதியை (நஜ்தை) விடவும் பரப்பளவில் மிகச்சிறியது; சிரியாவின் எல்லையிலிருந்து யமனின் எல்லை வரை நீண்டும் ஸராத் மலைத் தொடரிலிருந்து செங்கடல்
GD

இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
வரை அகலத்தில் குறுகியும் கிடக்கிறது. தற்காலப் புவியியலாளர் பலர் ஹிஜாஷின் தெற்கு எல்லை வரை நீண்டு கிடக்கும் தாழ் நிலத்தை (திஹாமாவை) அதன் ஒரு பகுதியாகவே கருதுகின்றனர். சில சமயங்களில், ஹிஜாஷின் தெற்கு எல்லை முதல் யமனின் தெற்கு எல்லை வரை நீண்டு கிடக்கும் தாழ்நிலத்தை திஹாமா என்பர். வேறு சிலர் இதனை யமனின் ஒரு பகுதியாகக் கருதுவர். ஆயினும், திஹாமாவை தனிப்பிரதேசமாக அல்லது மாகாணமாகக் கருதிய சந்தர்ப்பங்கள் மிகக்குறைவு ஆகும்.
deHATgL LDéíñéh66ıñi
பண்டைய காலத்திலிருந்தே அறேபியா பல இன மக்களின் வசிப்பிடமாக இருந்து வந்திருக்கிறது. மிகப் புராதன காலத்தில்,நபி நூஹற் (அலை) அவர்களின் மூத்தபுதல்வர் ஷாம் என்பாரின் வழித்தோன்றல்களான செமித் தியர் செமித்தியரே (Semites) அறேபியாவில் குடியேறி இருந்தனர். அறேபியாவின் பெரும்பகுதி பாலைநிலமாகவும் குறுகிய ஒரு பகுதியே குடியிருப்புக்கு ஏற்ற பிரதேசமாகவும் இருந்தமையால் குடிப்பெருக்கம் ஏற்பட்ட போது, அவர்களுள் ஒரு பகுதியினர் தீபகற்பத்தின் மேற்குக் கடற்கரையினூடாக வடக்கு நோக்கி இடம் பெயர்ந்து சென்று, நைல் நதி பாயப்பெற்ற பள்ளத்தாக்குகளில் குடியேறினர். கி.மு.3500 ஆம் ஆண்டளவில், இந்தக் குடியேற்றம் நிகழ்ந்தது. அவர்கள் எகிப்தில் ஏற்கனவே வாழ்ந்து வந்த நபி நூஹற் அவர்களின் மற்றொரு புதல்வர் ஹாம் என்பாரின் வழித்தோன்றல்களான - ஹாமியரோடு (Hamites) இணைந்து வாழ்ந்து, எகிப்திய நாகரிகத்திற்கு வித்துன்றினார். இதே காலப்பகுதியில், தீபகற்பத்தின் கிழக்குப் பாதை வழியாக வடக்கு நோக்கிய மற்றொரு சமாந்தர குடிப்பெயர்ச்சியும் நிகழ்ந்தது. அறேபியாவில் வாழ்ந்த செமித்தியர்களுள் பெரும் தொகையானோர் தைகிரிசு, யூபிரதிசு நதிகள் பாயப்பெற்ற பள்ளத்தாக்குகளில் குடியேறி வாழலாயினர். அங்கே அவர்கள் மெஸொபோதேமியாவில் வாழ்ந்த சுமேரியர்களுடன் இணைந்து, பாபிலோனிய நாகரிகத்தின் தோற்றத்திற்கு வித்துான்றினர். இவ்வாறு அறேபியாவிலிருந்து பல செமித்தியக் குடிப்பெயர்ச்சிகள் தென்மேற்காசியாவில் உள்ள செழிப்பான நிலங்களில் (Fertie Crescent) நிகழ்ந்தன. இந்தக் குடிப்பெயர்ச்சிகள் பல்வேறு புதிய கிளை இனங்களும் வர்க்கங்களும் தோன்ற வழிவகுத்தன.
செமித்திய இன மக்களிடையே தோன்றிய வர்க்கங்களுள் ஆத், தமூத், தஸ்ம், ஜதீஸ் முதலான வர்க்கங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை; அல்குர்ஆனின் சமுதாயங்களோடு தொடர்புடையவை. புராதன அறேபிய சமுதாயத்தை உருவாக்கிய இந்த அறபு வர்க்கங்களும் கிளை இனங்களும் பின்னர் முற்றாக அழிந்து போயின. அதனால், இப்புராதன மக்களை அறபு வரலாற்றாசிரியர்கள் அல் அறபுல் பாஇதா' (அழிந்து L

Page 11


Page 12


Page 13


Page 14


Page 15
இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
போதும் எகிப்தின் தெற்கே உள்ள பிரதேசங்களிலிருந்து யானைத்தந்தம், புலித்தோல்கள், கருங்காலி மரங்கள், மணப்பொருட்கள் முதலியவற்றோடு அடிமைகளும் எகிப்துக்குக் கொண்டுவரப்பட்டார்கள்.இந்தப் பொருள்கள் *அதன் (ஏடன்) விரிகுடாவுக்கும், செங்கடலுக்கும் இடையே உள்ள 'பாபுல் மன்தப் வாயிலின் இருபக்கங்களிலும் பரந்து கிடக்கும் நாடுகளில் தாராளமாகக் கிடைத்தன. இந்த வாயிலின் மேற்கே புண்ட் பிரதேசமும் கிழக்கே யமனும் இருக்கின்றன. ஆயினும், இந்த இரண்டு பிரதேசங்களையும் எகிப்தியர் ‘புண்ட்’ என்றே அழைத்தனர்.இவ்வாறு , கடல்வழியாக தென் அறேபியாவுடன் ஏற்பட்ட வணிகத்தொடர்பும் நறுமணப்பொருள்கள் வர்த்தகமும் மத்திய எகிப்துக் கரையோரத்தில் உள்ள ‘வாதி அல் ஹம்மாமாத் ஊடாகவே நிகழ்ந்தன. இதுவே தென் அறேபியாவை எகிப்தோடு இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த மத்திய பாதையாக விளங்கியது.
எகிப்தியர் தென்அறேபியாவோடு மட்டுமன்றி, வடஅறேபியா வுடனும் தொடர்பு வைத்திருந்தனர். தென்அறேபியத் தொடர்பு செங்கடல் வழியாக நிகழ்ந்த அதேவேளையில், வடஅறேபியத் தொடர்பு தரைமார்க்கமாக நடைபெற்றது. ஸினாய் பாலைவனத்தில் இருந்த செம்புச் சுரங்கங்களையும் நீலக்கற் சுரங்கங்களையும் அடைவதற்காக எகிப்தியர் பாலைவனத்தினூடாகப் பாதை அமைத்த போது, ஹிஜாஷ"டனான இந்தத் தொடர்பு ஆரம்பமாயிற்று. ஸினாய் பாலைவனத்தினூடாகச் சென்ற இந்தப் பயணப்பாதை வட ஹிஜாஷினுடாகத் தொடர்ந்து தய்மாட்வினூடாக பாபிலோனுக்குச் சென்ற பாதையோடும் ஹிஜாஷிலிருந்து யமனுக்குச் சென்ற பாதையோடும் இணைந்தது. ஹிஜாஷ"க்குக் கீழாக யமன் நோக்கிச் சென்ற பாதையில் எகிப்தியக் குடியேற்றம் ஒன்றும் நிகழ்ந்தது. அதுவே பின்னர், யத்ரிப் (மதினா) ஆக உருவெடுத்தது. ஆயினும், இந்தக் குடியேற்றம் எப்போது நிகழ்ந்தது என்பதைச் சரியாகத் துணிவதற்குப் போதிய சான்றுகள் இல்லை.
வட ஹிஜாஷடனான எகிப்தியத் தொடர்பு மிகப் புராதன காலத்திலேயே ஏற்பட்டிருக்க வேண்டும் என்றும் ஹிஜாஷினூடாக ஒழுங்கான வணிகர்க் குழு வழி உருவாகுவதற்கு முன்பே எகிப்தியச் செல்வாக்குகள் வட அறேபியா வினுள் ஊடுருவி இருக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அறேபியாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதியான சிரியப் பாலைவனத்திலும் எகிப்தியச் செல்வாக்கு சுதந்திரமாக ஊடுருவி இருந்தது. தனது பேரரசின் ஒருபுற எல்லையாக யூபிரதிசு நதியைக் கருதிய எகிப்திய மன்னன் முதலாம் துட்மோஸ், கர்னக் கோயிற்சுவர்களில் உள்ள பொழிப்பின்படி, சிரியாப் பாலைவனத்தையும் தனது ஆதிக்கத்திலுள்ள ஒரு பகுதியாகக் கருதினான் என்று தெரிகிறது. அக்காடியப் பொறிப்புக்களில் மிஸ்ர் (அல்லது முஸர்) என்ற சொல் வடஅறேபியாவையும் சிரியாவையும் உள்ளடக்கிய எகிப்தைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது, கி. மு. 7 ஆம் நூற்றாண்டில்

இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி 1
அசீரியரின் ஆதிக்கம் நிறுவப்படுவதற்கு முன்னால் இந்த நிலப்பகுதிகள் எகிப்தின் பிரதேசங்களாகவே கருதப்பட்டன என்பதையே காட்டுகிறது.” ஆயினும், இந்தப் பிரதேசங்களில் எகிப்தியர் படையெழுச்சிகள் நடத்தியமைக்கோ இராணுவ வெற்றிகள் பெற்றமைக்கோ ஆதாரம் இல்லை. எகிப்தியர் வட அறேபியாவினுள் ஊடுருவ வணிக முயற்சிகளே காரணமாக அமைந்திருக்க வேண்டும்.
கி. மு. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எகிப்தில் குடியேறி, கி. மு. 1674 ஆம் ஆண்டளவில் அங்கே புதிய அரச மரபொன்றை நிறுவி, கி. மு. 1570 கள் வரை எகிப்தை ஆட்சிசெய்த ஹிக்ஸோஸ் (Hyksos) என்ற இனத்தினர் அறேபியரே என்ற உண்மை பல்வேறு சான்றுகளால் நிறுவப்பட்டிருக்கின்றது. இவர்கள் அறேபியாவிலிருந்து இடம்பெயர்ந்து சென்ற செமித்தியரே என்பதை மேலைத்தேச வரலாற்றாசிரியர்கள் கூட உறுதிப்படுத்தி இருக்கின்றனர். மேலும், அறேபியாவுக்கும் எகிப்துக்கும் மிகப்புராதன காலத்திலிருந்தே தொடர்பு இருந்தது என்பதை வேதாகமத்தின் பழைய ஏற்பாடும் நிரூபித்து நிற்கிறது. நபி இப்றாஹீமின் மனைவியும் நபி இஸ்மாஈலின் அன்னையும் ஹிஜாஷில் குடியேறி வாழ்ந்தவருமான ஹாஜரா ஓர் எகிப்தியர் ஆவர் (ஆதியாகமம் 16:3). இஸ்மாஈலின் ஒரு மனைவியும் எகிப்தைச் சேர்ந்தவர் ஆவர் (ஆதியாகமம் 21:21). நபி யஃகூபின் காலத்திலேயே அறேபிய வர்த்தகக் குழுக்கள் எகிப்தில் வர்த்தகப் பயணங்களை மேற்கொண்டு வந்தன (ஆதியாகமம் 37:25). குழியிலிருந்து மீட்கப்பட்டு, மீதியானிய வர்த்தகர்களால் இருபது வெள்ளிக் காசுகளுக்காக விற்கப்பட்ட நபி யூஸசபை வாங்கி, அவரை எகிப்துக்குக் கொண்டு சென்றவர்களும் அறேபியரே (ஆதியாகமம் 37:28). நபி யூஸ்"பின் காலத்தில், எகிப்திலும் அதனைச் சூழவிருந்த நாடுகளிலும் பெரும் பஞ்சம் ஏற்பட்டபோது, யமனின் இராணியாக இருந்த தஜா பின்த் தூ ஷபார் என்பாள் கோதுமை கேட்டு நபி யூஸுபுக்குத் தூது அனுப்பினாள். இது பற்றி ஹிஜ்ரி முதலாம் நூற்றாண்டில் யமனில் கண்டுபிடிக்கப்பட்ட பொறிப்பு ஒன்று கூறுகிறது." இவையெல்லாம் மிகப் பழங்காலத்திலிருந்தே அறேபியாவுக்கும் எகிப்துக்கும் இடையே இருந்து வந்த நெருங்கிய உறவுகளுக்குச் சான்று பகர்கின்றன.
அறேபியர் மெஸொபோதேமியாவோடும் தொடர்பு வைத்திருந்தனர். கிழக்கு அறேபியாவின் எல்லையாக அமைந்திருந்த மெஸொபோதேமியாவில் சுமேரியர்களும் அக்காடியர்களும் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கும் மெஸொபோதேமியத் அறேபியருக்குமிடையே போக்குவரத்துப் பாதைகள் தோன்றுவதற்கு முன்பே தொடர்புகள் தொடர்பு ஏற்பட்டிருந்தன. மிகப்புராதன காலத்தில்,
9. De Lacy O'Leary, History of Arabia Before Muhammad p. 37 10. J. Forster, Historical Geography of Arabia, Vol. ii. pp. 102-103
GD

Page 16


Page 17


Page 18
இஸ்லாமிய வரலாறு பாகம் பகுதி !
529) என்பான் கி. மு. 540 - 539 இல், அறேபியா மீது
ரசீ ძნჭნ படையெடுப்பு ஒன்றை நடத்தினான். இந்தப்படையெடுப்பின்
தொடர்பு நோக்கம், தய்மா.. நகரிலிருந்து நபதிய (அறேபிய) ரை
வெளியேற்றுதல் ஆகும் என்று கூறப்படுகிறது. இவனுக்குப்
பின்னர், பாரசீக ஆட்சியாளர் எவருமே அறேபியாவில் ஆதிக்கம் கொள்ள முயலவில்லை.
மகா சைரஸரக்குப் பின்னர் ஆட்சி பீடமேறிய அவனது மகன் இரண்டாம் காம்பிஸொஸ் (கி. மு. 529-521) என்பான் கி. மு. 525 இல், எகிப்தை வெற்றிகொள்ளப் புறப்பட்டுச் சென்ற வழியில் வட அறேபியாவினூடாகப் பிரயாணம் செய்து, அங்கு வாழ்ந்த மக்களோடு நட்புறவை ஏற்படுத்திக் கொண்டான். இது பற்றி ஹிரதோஸ் குறிப்பிடுகையில் பாரசீக அரசன் டாரியஸ் (கி. மு. 521-486) என்பானின் ஆணிலம் அறேபியாவைத் தவிர முழு ஆசியாவிலும் வியாபித்திருந்தது. அறேபியா பாரசீகரால் ஒரு போதும் அடிமைப்படுத்தப்படவில்லை. ஆனால், இரண்டு நாடுகளுக்கும் இடையே நட்பு ரீதியான உறவு, மன்னன் காம்பிஸொஸை அவனது எகிப்தியப் படையெடுப்பின் போது தமது நாட்டினுாடாகக் கடந்து செல்ல அறேபியர் அனுமதித்தது முதல் தொடர்ந்தது. ஏனெனில், இந்த உதவி இல்லாமல் எகிப்தியப்படையெடுப்பு அவனுக்கு சாத்தியமற்றதாக இருந்தது என்று கூறுகின்றார்."
அறேபியருடன் புராதன கிரேக்கரும் உரோமரும் தொடர்பு கொண்டிருந்தனர். இதனைத் தொடர்பு என்பதிலும் பார்க்க அறிமுகம் என்று கூறுதலே மிகப்பொருத்தமானது. இந்த அறிமுகத்துக்கு அறபு நாடு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் சென்ற பாதையில் குறுக்காக (fl.6:J 85 அமைந்திருந்தமையும் மேற்கு உலகச் சந்தைகளில் மிகவும் அறிமுகம் வரவேற்கப்பட்ட பண்டங்களை அந்த நாடு உற்பத்தி செய்தமையுமே முக்கிய காரணங்களாக அமைந்தன. தொன்முறை கிரேக்க, உரோம எழுத்தாளர்கள் அறேபியாவை அறேபியா பீலிக்ஸ், அறேபியா பீட்ரா, அறேபியா டெஸெர்ட்டா என மூன்று பிரதேசங்களாகப் பிரித்தனர். அவர்களது பிரிப்பின் படி, அறேபியா டெஸெர்ட்டா சிரிய - மெஸொபோதேமியப் பாலைவனத்தையும் (அல்பாதியா) அறேபியா பீட்ரா ஸினாய் பிரதேசம், நபதிய இராச்சியப் பிரதேசம் ஆகியவற்றையும் அறேபியா பீலிக்ஸ் அறேபிய தீபகற்பத்தின் எஞ்சிய பிரதேசங்கள் அனைத்தையும் உள்ளடக்கியவையாய் இருந்தன. அவர்கள் அறேபியரை சரசென்ஸ் என்று அழைத்தனர்.
அறேபியரைப் பற்றிய முதலாவது குறிப்பு கிரேக்க இலக்கியத்தில்,
16. Herodotus, The Histories, p. 240

இலல்லாமிய வரலாறு LifT35Lb 1 Lig5 l
LLTLSLSLSLSLM MLLLLLSLSLSLMM TT LLe e kAkT CT T SLLSLSLLSMS0C0SLLLSGLGLG SL LSS MC S LCLGCMG LS LMLS L SL L L L L L GAGGA L L LGS LSLGGLS LGLLS LLSLLe LLL LGSLSLG LGL L MST SLLL L Ce LCLLSLSLLGL LL LLS LSLSLSL LSLCSLL LM LGSLGM SLSGLS LGLSLSGS LC LLLLSLCGS GGGGSMLk LkGSLSLSLSSSLSLS SSLS L A LSSLLLSSS CSLLLLL L LLLLLLS A GLGk GLGGLGL LLL LLSLLLLLL
பண்டைய கிரேக்க நாடக ஆசிரியரான எஸ்கீலஸ் (கி. மு. 525-456) என்பார் கி. மு. 472இல் எழுதிய ‘பாரசீகர்’ (The Persians) என்ற நாடகத்தில் பாரசீக மன்னனான ஷேர்க்ஸிஸ் (கி. மு. 486-465) என்பானின் படையில் பணியாற்றிய அரும் திறமை வாய்ந்த அறபுப்படை அலுவலர் ஒருவரைப் பற்றிக் குறிப்பிட்டார். இதுவே அறேபியரைப் பற்றி கிரேக்க இலக்கியத்தில் இடம் பெற்ற முதற் குறிப்பு ஆகும். இதனைத் தொடர்ந்து புகழ்பெற்ற கிரேக்க வரலாற்றாசிரியரான ஹிரோதோதஸ் (கி. மு. 484-425) தமது வரலாறுகள் (The Histories) என்ற நூலில் அறேபியரைப்பற்றிய பல குறிப்புக்களையும் தகவல்களையும் தந்தார்.
கிரேக்கப் புவியியலாளரான எரொதோஸ்தினஸ் (கி. மு. 276-194) முதல் உரோம அறிஞரான மூத்த பிளினி (கி. பி. 23-79) வரை மேற்கு உலகில் வாழ்ந்த தொன்முறை எழுத்தாளர்களுக்கு அறேபியா செல்வங்களும் வாசனைத்திரவியங்களும் நிறைந்த ஒரு நாடாகவே இருந்து வந்தது. அங்கு வாழ்ந்த மக்கள், அவர்களது பார்வையில் காதல் உணர்வும் சுதந்திர காதலும் உடையவர்களாகத் தோன்றினர். அறேபியரின் காதல் உணர்வும் சுதந்திர நுகர்ச்சியுமே மேலைத்தேச எழுத்தாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. புராதன காலம் முதல் எட்வர்ட் கிப்பன் (1737-1794) என்பாரின் காலம் வரை வாழ்ந்த ஐரோப்பிய எழுத்தாளர்களுக்கு அறேபிய மக்கள் வியத்தகு கருப்பொருள் ஒன்றை உருவாக்கிக் கொடுத்தனர்."
அறேபியாவைப்பற்றி கிரேக்க எழுத்தாளர்கள் பல வியப்பான தகவல்களைத் தந்துள்ளனர். ஹிரோதோதஸ்"க்கு அறபு நாடு முழுவதும் வாசனைத் திரவியங்களை உற்பத்தி செய்யும் நறுமண நாடாகவே இருந்தது. அவரது கருத்துப்படி, “அறேபியாவே சாம்பிராணி, காஸியா, கறுவா, லெடனோன் (Ledanon) முதலான நறுமணப்பொருட்களை விளைவிக்கும் ஒரேநாடாக விளங்கியது." கிரேக்கப் புவியியலாளரான ஸ்ட்ராபோ (கி. மு. 63 - கி. பி. 24) என்பாருக்கும் அந்த நாடு வாசனைத்திரவிய நாடாகவே இருந்தது. அவர் தமது புவியியல் நூலிலே அந்த நாட்டில் காணப்பட்ட 'மனிதனின் இடுப்பளவு உயரத்திற்குப் பாயும் ஒருசாண் நீளமுடைய பாம்பைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். ஹிரோதோதஸ"ம் அறேபியாவின் பறக்கும் பாம்புகளைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். தையோ தொரஸ்ஸி கியூலஸ் என்பாரும் அறேபியாவை வாசனைத்திரவிய நாடாகவே குறிப்பிட்டு, அதன் மண்ணே நறுமணம் வீசியது என்கிறார். அறேபியாவில் தங்கச் சுரங்கங்கள் காணப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இவ்வாறு கிரேக்க, உரோம எழுத்தாளர்கள் அனைவரும் அறேபியாவை வாசனைத் திரவியங்களுக்குப்
GLLLL LLLL G LGLL LLL LLL LLEL L LLLLL LL LLL LLSLLLLLL
17. Hitti op.cit., p.45 18. Herodotus, op, cit, p. 248
GE)

Page 19
இஸ்லாமீப வரலாறு பாகம் 1 பகுதி !
புகழ்பெற்ற ஒரு நாடாகவே இனம் கண்டனர்.
ஒரு காலத்தில் உலகின் எசமானர்களாகக் கருதப்பட்ட உரோமர்கள் வெறும் அறிமுகத்தோடு மட்டும் அறேபியாவுடன் இருந்த இந்தத் தொடர்பை நிறுத்திக் கொள்ளவில்லை. அவர்கள் அறேபியா மீது படையெழுச்சியும் நடத்தினர். முதலாவது உரோமப் பேரரசனான ஒகஸ்டஸ் உரோ D சீஸர் (கி. மு. 63 கி. பி. 14) என்பானின் ஆட்சிக்காலத்தில், படையெடுப் அவனது தளபதியான ஈலியஸ் கல்லஸ் என்பானின் தலைமையில் 10,000 வீரர்களைக் கொண்ட ஒரு படை கி. மு. 24ல் எகிப்திலிருந்து அறேபியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. தென் அறேபியரின் தனியுரிமையில் இருந்து வந்த போக்குவரத்துப் பாதைகளைக் கைப்பற்றுதலும் யமனின் மூலவளங்களைத் தங்களது நன்மைக்காகப் பயன்படுத்தலுமே உரோமர் மேற்கொண்ட இந்தப் படையெடுப்பின் முக்கிய நோக்கமாக இருந்தன. நபதிய நேசர்களின் ஆதரவோடு மேற்கொள்ளப்பட்ட இந்தப்படையெடுப்பு உரோமரின் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நிகழ்வு ஆகும். பல மாத முயற்சியின் பின்னர், பல நூற்றுக்கணக்கான வீரர்கனைப் பலிகொடுத்த உரோமப் படையினர், இந்தப்படையெடுப்பின் போது ஏற்கனவே அவர்களால் கைப்பற்றப்பட்டிருந்த நஜ்ரானுக்கு வந்து, அங்கிருந்து கப்பல் ஏறிச் செங்கடல் வழியாக எகிப்தியக் கரையை அடைந்தனர். முதலும் கடைசியுமாக நிகழ்ந்த இந்தப்படையெழுச்சி உரோமருக்குப் பெரும் இழப்புக்களையும் துயரங்களையும் பரிசாக அளித்தது. இதன் பின்னர் எந்த ஒரு ஐரோப்பிய ஆதிக்கமும் அறேபியாவின் உள்நாட்டில் படையெழுச்சி நடத்த முயலவில்லை.
அறேபியரோடு இந்தியர், சீனர் ஆகியோரும் புராதன காலத்திலிருந்தே தொடர்புகள் வைத்திருதனர். பெரும்பாலும் இவை வணிகத் தொடர்புகளாகவே இருந்தன. இந்த வணிகத் தொடர்புக்கு அறபுக்கடல் பெரும் பங்களிப்புச் செய்தது. அறபுக்கடல் வழியாக பாரசீக விரிகுடாவுக்கு இந் தியத் வந்த இந்திய, சீன வர்த்தகர்கள் அங்கிருந்து அறேபியாவின் G தாடர்பு ஊடாகத் தரைப்பாதை வழியாகவும் செங்கடல் வழியாகவும் மேற்கு உலகிற்குத் தங்கள் வர்த்தகப் பயணங்களை மேற்கொண்டனர். கஸ்பியன் கடலிலிருந்து இந்து கூஷ கணவாய் ஊடாக இந்தியாவின் மேற்கு வடிநிலம் வரை நீண்டு கிடந்த பாதை, எல்பேசு (Elburz) மலையடிவாரத்திலிருந்து இந்து கூவிஷ் ஊடாக இக் வடி நிலம் வரை நீண்டு கிடந்த பாதை, தஷ - இ - லூத் (பாரசீகத்தின் உப்புப் பாலைவனம்) என்ற இடத்திற்குக் குறுக்காக வட மேற்கு வரை நீண்டு கிடந்த பாதை, பலுசிஸ்தான் ஊடாக இந்து ஆற்றுப் பள்ளத்தாக்கின் தென் பகுதி வரை நீண்டு கிடந்த பாதை ஆகிய தரைப்பாதைகளும் இந்தத் தொடர்புகளுக்குப் பெரிதும் உதவின. ஆயினும், இந்து கூவர்

இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி 1
கணவாய்களின் ஊடாக வடமேற்கிலிருந்து இந்தியாவை அடைந்த முதல் இரண்டு பாதைகளே இந்தியரின் வடமேற்கு நோக்கிய பயணங்களுக்கு மிக முக்கிய தரைப்பாதைகளாக அமைந்தன. இந்தப்பாதைகள் வழியாகவே இந்தியாவின் மீதான வெளிநாட்டுப் படையெடுப்புக்கள் அவ்வப்போது நிகழ்ந்து வந்தன.
இவ்வாறு, புராதன உலகில் புகழ்பெற்றிருந்த எல்லா நாடுகளோடும் பேரரசுகளோடும் - அறேபியா தொடர்பு கொண்டிருந்தது. இந்தத் தொடர்புகளுக்கு அறேபியாவின் புவியியல் அமைப்பும் அதன் விளைபொருள்களுமே முக்கிய காரணமாக அமைந்தன. இந்தத் தொடர்புகளின் விளைவாகப் பல சமய, கலாசாரத் தாக்கங்கள் அறேபியாவிலும் அறேபியரிலும் ஏற்படுதல் தவிர்க்க முடியாததாயிற்று.

Page 20


Page 21
இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
நம்புதல் என்பது இரண்டாவது வகை. ஒரு விடயத்தை உண்மையில் அதனைச் செய்ய வேண்டியதற்கு முரணான முறையில் செய்தல் என்பது மூன்றாவது வகை’ என்று அவர் குறிப்பிடுகிறார்.
இவற்றையெல்லாம் கூட்டுமொத்தமாக ஆராய்கையில், இஸ்லாத்திற்கு முந்திய அறேபியரைச் சுட்டும் 'அல் ஜாஹிலிய்யா' என்ற சொல் குறித்து நிற்கும் கருத்து நம்பிக்கை சார்ந்த அறியாமை, செயல் சார்ந்த அறியாமை ஆகியனவே ஆகும் என்பதை அறிந்து கொள்ளலாம். முதற்கருத்தான அறிவு சார்ந்த அறியாமையை இது குறிக்காது. ஏனெனில், அக்காலச் சூழலும் வாய்ப்புக்களும் இடம் அளித்த அளவுக்கு அறேபியர் எழுத வாசிக்கக் கற்றவர்களாயும் இலக்கிய ஆர்வம் உடையவர்களாயும் பொருள்களைப் பற்றிய அறிவு உடையவர்களாயும் இருந்தனர். குறிப்பாக, மற்ற அறேபியர் களை விடவும் தென் அறேபியர் நல்ல அறிவாற்றலும் நாகரிகச் சிறப்பும் உடையவர்களாக விளங்கினர். சில சமயங்களில், சமகால ஐரோப்பியரின் அறிவு நிலையை விடவும் அறேபியரின் அறிவு நிலை மேம்பட்டதாய் இருந்ததை அவதானிக்க முடியும். ஆனால், அறேபியர் மூடநம்பிக்கைகள், மடமை, வீண் பெருமை முதலானவற்றில் ஊறியவர்களாயும் அர்த்தமில்லாமல் போர் செய்யும் மூர்க்க சுபாவம் உடையவர்களாயும் இருந்தனர். அவர்களிடம் அறிவு இருந்த போதிலும், அந்த அறிவில் தெளிவு இருக்கவில்லை. அவர்களிடம் சில நல்ல பண்புகள் இருந்த போதிலும், ஆன்மீக விருத்தியோ பண்பாட்டு விழுமியங்களோ காணப்படவில்லை. அவர்களுள் மேல்மட்ட சமுதாயத்தாரிடம் நாகரிகச் சிறப்பு காணப்பட்டபோதிலும்,மனிதனின் அந்தஸ்தை உயர்த்தக்கூடிய சாந்தம், அமைதி, பொறுமை, மென்மை, அடக்கம், சிந்தனை முதலான குணங்கள் இருக்கவில்லை. இவை எல்லாம் ஜாஹிலிய்யத் என்ற மெளட்டியத்தின் பண்புகளாக இருந்தமையால், இஸ்லாத்திற்கு முந்திய அறேபியர் இப்பெயரால் அழைக்கப்பட்டனர்.
நன்கு கற்றறிந்த ஒருவர் உண்மைக்கு மாற்றமான ஒரு செயலைச் செய்து விட்டால் அல்லது பாமரன் ஒருவனிடம் இருக்கும் ஒரு மூடநம்பிக்கையை உடையவராக இருக்கக்காணப்பட்டால், அவரைப்பார்த்து 'ஜாஹில் (மடையன்) என்று கூறுதல் சாதாரணமான ஒரு வழக்கம். இங்கே இந்தச் சொல், அவர் கல்வியறிவு இல்லாதவர் என்ற பொருளில் பயன்படுத்தப்படுவதில்லை. அவரது செயல்சார்ந்த அல்லது நம்பிக்கைசார்ந்த முட்டாள்தனத்தைச் சுட்டிக்காட்டவே இப்படி அவரை அழைக்கிறோம். ஏனெனில், அவரது இத்தகைய செயலும் நம்பிக்கையும் ஒருவகை அறிவுச் சூன்யத்தின் விளைவே ஆகும். இதே போலவே 'ஜாஹிலிய்யத்’ என்ற சொல், இஸ்லாத்திற்கு முந்திய அறேபியரின் செயல், நம்பிக்கை அல்லது கொள்கை சார்ந்த அறியாமையைக் குறிப்பிடவே பயன்படுத்தப்படுகிறது.
2. lane's Arabic English Lexicon. Part. li. p. 477
G2)

இஸ்லாமிய வரலாறு Tabub 1 LUGbgó i
இத்தகைய ஒரு அறியாமை நன்கு கற்றறிந்த ஒருவரில் வெளிப்படுமாயின், அவர் கற்ற கல்வி பெறுமானம் அற்றதாகப் போய்விடுகிறது. கற்ற கல்வி பெறுமானம் அறறுப் போய்விட்டால் அங்கே எஞ்சுவது அறியாமையே தான். ஆகவே, ‘அய்யாமுல் ஜாஹிலியப் யா’ என்ற சொற்றொடரால் உணர்த்தப்படுவது, இஸ்லாத்திற்கு முந்திய அறேபியரின் உண்மைக்கு மாறான செயற்பாடுகளையும் நம்பிக்கைகளையும் தோற்றுவிக்கக் காரணமாக இருந்த அறியாமையே அன்றி, அறிவு அல்லது கல்வி சார்ந்த அறியாமை அன்று என்பதை நினைவிற் கொள்ளுதல் வேண்டும்.
இந்த அறியாமை யுகத்தில் அறேபியர் சமயம், ஒழுக்கம், குடும்பம், சமுதாயம், அரசியல், பொருளாதாரம் முதலான எல்லாத் துறைகளிலும் பின்தங்கியவர்களாயும் நெறி பிறழ்ந்தவர்களாயுமே காணப்பட்டனர். இந்தக் காலப்பகுதியைப் பற்றிய உண்மைகளை வரலாறு தன் இதழ்களிலே பக்கம் பக்கமாகப் பதிந்து வைத்துள்ளது.
சமய நிலை
இஸ்லாத்திற்கு முந்திய அறேபியாவில் யூதம், கிறித்தவம், மஜாஸிய்யா முதலான பெயர்களில் சில மதங்கள் மிகக் குறைந்த செல்வாக்கோடு நிலை பெற்றிருந்தன. நெருப்பு வழிபாடும் அங்கே இருந்தது. ஆயினும், அறேபியரின் பல்வேறுபட்ட வழிபாட்டு முறைகளிடையே உருவ வழிபாடே முதலிடம் வகித்தது. அறேபியரின் சமய - வழிபாட்டு முறைகளைப் பொறுத்தவரை, அவற்றில் புராதன வெளிநாட்டு நாகரிகங்களின் செல்வாக்கு படிந்திருந்தமையை அவதானிக்க முடியும்.
நபி முஹம்மது (ஸல்) அவர்கள் பிறப்பதற்குச் சுமார் முந்நூற்றெழுபது ஆண்டுகளுக்கு முன்பே உருவ வழிபாடு அறேபியாவில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் தூய மார்க்கத்தை மாற்றி, உருவ வழிபாட்டை கி. பி. 200இல் அறேபியருக்கு
9) (b. 6) அறிமுகம் செய்துவைத்த முதல் அறேபியன் குஷாஆ வழிப ாடு வர்க்கத்தைச் சேர்ந்த அம்ர் பின் லுஹை என்பவன் ஆவான். அப்போது புனித கட்பாவின் பாதுகாவலனாக இருந்த அவன் ஒருமுறை, சொந்த அலுவல் காரணமாக சிரியாவுக்குச் சென்றிருந்தான். அங்கே பல்கா. பிரதேசத்தில் உள்ள மஆப் என்ற இடத்தை அடைந்த
3. புனித கஃபா ஆரம்பத்தில் நபி ஆதம் (அலை) அவர்களால் கட்டப்பட்டது. நபி நூஹர் (அலை) அவர்களது காலத்தில் ஏற்பட்ட பிரளயத்தினர் பின்னர், நபி இப்ராஹீம் (அலை) அவர்களாலும் நபி இஸ்மாஈல் (அலை) அவர்களினாலும் அது மீளக்கட்டப்பட்டது. அந்த ஆலயத்தினர் பாதுகாவலராக நபி இஸ்மாஈலின் சந்ததியினரே இருந்து வந்தனர். பின்னர், ஜுர்ஹும் வர்க்கத்தினர் அதன் பாதுகாவலர்களாகி சுமார் 1000 ஆணர்டுகள் அதனை நிர்வகித்தனர். பின்னர் குஷாஆ வர்க்கத்தாரின் கைகளுக்கு அது மாறியது. 300 ஆண்டுகள் அவர்கள் அதனை நிருவகித்து வந்தனர். கிபி 200இல் அதன் பாதுகாவலனாக இருந்தவர்ை அப்போதைய குஷாஆ வர்க்கத் தலைவனான அம்ர் பினர் லுஹை என்பானே. பின்னர் கஃபாவினர் பாதுகாவல் பொறுப்பு குளை குறைஷ்) வர்க்த்தாரின் கைகளுக்கு மாறியது. G3)

Page 22
இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
போது, அங்கு வாழ்ந்த மக்கள் சிலைகளை வணங்கிக் கொண்டிருந்ததைக் கண்ட அவன் அது பற்றி அவர்களை விசாரித்தான். இவை சிலைகள்; இவற்றை நாங்கள் வணங்கி வருகின்றோம்; இவை எமக்கு மழை தருகின்றன; உதவிகள் செய்கின்றன, என்று அவர்கள் கூறியதும், அவன் அவர்களிடமிருந்து ஒரு சிலையை வாங்கி வந்து, அதனை மக்காவின் புனித ஆலயத்தில் வைத்தான்." அவனது முயற்சியின் விளைவாக, நபி (ஸல்) அவர்களைத் தோற்றுவித்த குறைஷ் குலத்தார் உட்படப் பெரும்பான்மையான அறேபியர் தங்கள் முன்னோரின் மார்க்கத்தைத் துறந்து, சிலைகளை வழிபடும் வழக்கத்தைப் பின்பற்றலாயினர்.
சுதந்திரமான உருவ வழிபாட்டுப் பழக்கத்தைத் தொடர்ந்து, உண்மையான ஏக இறைவனின் வணக்கத்திற்காகக் கட்டப்பட்ட கஃபா என்ற புனித ஆலயம் சிலைகளின் வடிவத்தைப் பெற்ற ஆண் - பெண் . பொய்த் தெய்வங்கள் வாழும் வீடாக மாற்றப்பட்டது. (b. 60 அறேபியர் வழிபட்டு வந்த பல்வேறு கடவுள்களைப் சிலைகளும் பிரதிநிதித்துவப்படுத்தும் முந்நூற்றறுபது விக்கிரகங்கள் அந்த ஆலயத்தினுள் வைக்கப்பட்டிருந்தன. அந்தச் சிலைகளின் தலைமை விக்கிரகமான ஹ"பல் என்ற பெயர் கொண்ட சிலை வைக்கப்பட்டிருந்தது. மனித உருவில், ‘கார்னீலியன் (Carnelian) என்ற விலை உயர்ந்த செந்நிறக் கல்லிலே செதுக்கப்பட்டிருந்த இந்தச் சிலை புனித கட்யாவினுள்ளே குழிவின் மேல் நிறுத்தப்பட்டிருந்தது. இதற்கு அருகிலே, ஆலயப் பூசாரி தெய்வத்தின் பெயரால் குறி சொல்லப் பயன்படுத்திய அம்புகள் வைக்கப்பட்டிருந்தன. இந்தச் சிலையின் இருமருங்கிலும் பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட இரண்டு மான் குட்டிகள் நிறுத்தப்பட்டிருந்தன. இவற்றைச் சூழவே ஏனைய முந்நூற்றறுபது விக்கிரகங்களும் வைக்கப்பட்டிருந்தன.
அறேபியர், சூரிய வருடத்தை முந்நூற்றறுபது நாள்களாகத் தவறான முறையில் கணித்து, ஒரு நாளுக்கு ஒரு விக்கிரகம் என்ற ரீதியில், இந்தச் சிலைகளை வழிபட்டு வந்தனர். இந்தச் சிலைகளைக் கொண்ட கஃபாவைத் தரிசித்து, கற்பனைத் தெய்வங்களை வழிபடுவதற்காக ஆண்டு தோறும் ஹஜ் காலத்தில் மக்கள் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக் கணக்கில் மக்காவுக்குத் திரண்டு வந்தனர். அவர்கள் பால்வேறுபாடின்றி முழுநிர்வாண கோலத்தில் க.பாவை இடம்சுற்றிச் சிலைகளை வழிபட்டதோடு, அவற்றிற்கு உயிர்ப்பலிகளும் செய்தனர்.க.பாவைத் தரிசிக்க இயலாதோர் தத்தம் வீடுகளிலும் இடங்களிலும் சிலைகளை நிறுவி வழிபட்டுவந்தனர்.
4. இப்ன் ஹிஷாம், அப்ளிரதுள் நபவிப்யா, பாகம் பக்கம் 94-95 5. ஹுயல் என்பது ஆவி அல்லது ஆன்மா என்ற பொருளைக் கொணட ஒரு அரேமிய மொழிச் சொல்லாகும் அம்ர் பினர் துறை என்பானர் சிரியாவிலிருந்து கொண்டு வந்து கஃபாவில் வைத்த விக்கிரகம் இதுவே

இஸ்லாமிய வரலாறு LFF Gbf l L}(3,5 l
அறேபியர் வழிபட்டுவந்த சிலைகளுள் அவர்களால் பெண் தெய்வங்கள் என கருதப்பட்ட அல்லாத், அல் உஷ்ஷா, அல் மனாத் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. புனித கட்பாவில் முக்கிய இடம் வகித்த இவற்றை 郸 அவர்கள் அல்லாஹற்வின் புதல்விகள் என்று கருதினர். இறைவி c) GDG) Ib என்ற பொருளில் 1 d
ருளல வழங்கபபடL அல லாத எனற கடவுள அறேபியரிடையே மிகுந்த பிரபல்யமும் முக்கியத்துவமும் பெற்றிருந்தது? இந்தக் கடவுளைப் பற்றி பண்டைய கிரேக்க வரலாற்றாசிரியரான ஹிரதோதஸ் தமது வரலாற்று நூலிலே குறிப்பிட்டிருக்கிறார். நபதியர்கள் இதனை அலிலாத் என்ற பெயரில் வழிபட்டு வந்தனர் என்று அவர் குறிப்பிடுகிறார். பண்டைய அறபுப் பொறிப்புக்களிலும் இஸ்லாத்திற்கு முற்பட்ட காலக் கவிதைகளிலும் இந்தத் தெய்வத்தைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. நபதியப் பொறிப்புக்களில் இந்தக் கடவுள் பற்றிய குறிப்புக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்த விக்கிரகம் பெரும் பெண் கடவுளாக வெவ்வேறு பெயர்களில் உலகெங்கும் வணங்கப்பட்டது. இக்கடவுள் வழிபாடு புராதன உலகெங்கும் பரவி இருந்த சூரிய வணக்கத்தின் மற்றொரு பிரதிமுறையாகவே இருந்தது. தகிப் குலத்தாரின் விருப்புக்குரிய தெய்வமாக அல்லாத்தே விளங்கியது: மக்காவுக்கு அண்மையில் உள்ள தாஇப் நகரம் இக்கடவுள் வழிபாட்டின் மத்திய தலமாகத் திகழ்ந்தது. தாஇபில் இந்த விக்கிரகம் நிறுவப்பட்டிருந்த இடத்தைச் சூழவிருந்த பிரதேசம் புனித பூமியாகக் கருதப்பட்டது. அங்கே வேட்டையாடுதலும் பசுமரங்களை வெட்டுதலும் மனித இரத்தம் சிந்தப்படுதலும் விலக்கப்பட்டிருந்தன.
வலிமை வாய்ந்தது என்ற கருத்தைக் கொண்ட அல் உஷ்ஷா என்ற பெண் தெய்வம் மக்காவில் அதிகமாக வழிபாடு செய்யப்பட்டது. மக்காவுக்கு அருகே உள்ள நக்லா என்ற இடம் இவ்வழிபாட்டு மரபின் மத்திய தலமாக இருந்தது. கத்பான் குலத்தாரின் 96l( 0 _600601 விருப்புக்குரிய தெய்வமாக விளங்கிய இந்தக் கடவுளின்ح வழிபாடு வெள்ளிக் கிரக வணக்கத்தின் பிரதிமுறையாக இருந்தது. கி.பி. 4ஆம் நூற்றாண்டிலிருந்து இத் தெய்வ வழிபாடு அதன் உச்ச நிலையை அடைந்திருந்தது. இந்தத் தெய்வத்திற்கு மனிதப் பலிகளும் கொடுக்கப்பட்டன. அத்தகைய ஒரு மனிதப் பலியைப் பற்றி நைலஸ் என்ற கிறித்தவ எழுத்தாளர் விரிவாக விவரித்திருக்கிறார். குறைஷ குலத்தாரும் இதனை மிகுந்த மரியாதைக்குரிய ஒரு விக்கிரகமாகக் கருதி வழிபட்டுவந்தனர் என்று அல் கல்பீ கூறுகிறார். இந்த விக்கிரகத்தை வழிபாட்டுக்குரிய கடவுளாக எடுத்துக் கொண்ட முதல் அறேபியன் தாலிம் பின் அஸ்அத் என்பானே என்று கூறப்படுகிறது. வெண்கல்லில் செதுக்கப்பட்டிருந்த இந்த விக்கிரகத்தின் கோயில் நக்லா பள்ளத்தாக்கில் உள்ள ஹரத் என்ற இடத்தில் அமைந்திருந்தது. 6 அல்லாத் என்ற சொல் இறைவி அல்லது பெணி கடவுள் சான்ற பொருளைத் தரும் அல் இலாஹா
என்ற சொல்லிலிருந்து பிறந்தது.

Page 23


Page 24
இஸ்லாமிய வரலாறு பாகம் பகுதி !
LSL LLL GSGLCS GG LSLS SLSLSLC M CSL L LSL LGG LG SGSL G LGCSL G GSGSMGLLLLSSSLLLSLLC SCS S CM SLLL L S GC S LLL SLLLS LLL LLLL LCC S LSLGCCS G LL S LLCLL LLLCLSLLLLLLGG LSLSLS M S M S M G CCCLS G G S L L L L LS LGLGLGLGLL LL GLLL LLLSLLLSLGSLGSLCSLCSLGSCSLCS G MTL LSLLLLLLGL LGG LSGSL SGS GGSCSGCS SCSMCCM S CCLMLM MM ee LL L S L L L LSLLL LLLL L LLLLL SLLLL LL LLLLL L M LLLL LL LLLLL L
என்பனவும் குறிப்பிடத்தக்கவை. இஸாப் என்ற சிலை ஸபா குன்றிலும் நாஇலா என்ற சிலை மர்வா குன்றிலும் வைக்கப்பட்டிருந்தன. வேதம் எதனையும் பின்பற்றாத அறேபியர் தமது ஹஜ் சடங்குகளுள் ஒன்றாக இந்தச் சிலைகள் இரண்டையும் தமது கரங்களால் தொட்டு வந்தனர். இந்தச் சிலைகள் வழிபாட்டின் ஆரம்பம் பற்றிப் பின்வருமாறு கூறப்படுகிறது: இந்தப் பெயர்களுக்கு உரியவர்கள் அறியாமைக் காலத்தில் வாழ்ந்த ஓர் ஆணும் ஒரு பெண்ணும் ஆவர். ஆணினி பெயர் இஸாப்: பெண்ணின் பெயர் நாஇலா, ஜுர்ஹ"ம் வர்க்கத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் ஒரு நாள் புனித கட்பாவினுள் நுழைந்து, அங்கே விபசாரம் செய்து விட்டனர். அதனால், இவர்கள் இருவரையும் இறைவன் அதே கணத்தில் கற்சிலைகளாக மாற்றி விட்டான். இவர்களுக்கு ஏற்பட்ட கதியை அறிந்து மக்கள் படிப்பினை பெறட்டும் என்ற நோக்கத்தில் அப்போது வாழ்ந்தவர்கள் கற்சிலைகளாக மாறிவிட்ட இவர்களை கட்பாவுக்கு வெளியே நிறுத்தி வைத்தனர். சில காலத்தின் பின்னர் வாழ்ந்த மக்கள் க.பாவுக்கு அண்மையிலுள்ள குன்றுகளான ஸபாவில் இஸாபின் கல்லுருவத்தையும் மர்வாவில் நாஇலாவின் கல்லுருவத்தையும் தூக்கி வைத்து விட்டனர். அத்தோடு அவர்கள் எந்த நோக்கத்திற்காக இவை க.பாவுக்கு வெளியே முற்காலத்தவரால் வைக்கப்பட்டனவோ அந்த நோக்கத்தை மறந்து, அவர்களால் வணங்கப்பட்ட ஏனைய விக்கிரகங்களைப் போல இவற்றையும் வழிபட ஆரம்பித்து விட்டனர். ஹஜ் யாத்திரையின் போது ஸபா, மர்வா குன்றுகளுக்கிடையே தொங்கோட்டம் ஒடிய சமயமெல்லாம் இந்தச் சிலைகள் இரண்டையும் தொட்டுத் தடவுதலை அவர்கள் வழக்கமாகக் கொண்டனர். இதனை ஹஜ்ஜின் சடங்குகளுள் ஒன்றாகவும் கருதினர். ஹிஜ்ரி 8இல், மக்கா நகரம் முஸ்லிம்களால் கைப்பற் றப்படும் வரை இந்தச் சிலைகள் அம்மலைக் குன்றுகளில் வழிபாட்டுருவங் களாக இருந்தன.
இவற்றைத் தவிர, வேறு பல விக்கிரகங்களையும் அறேபியர் வழிபட்டனர். அவர்களால் வழிபடப்பட்ட விக்கிரகங்களைப் பற்றி இப்ன் ஹிஷாம் தமது ஸிராவிலே குறிப்பிட்டிருக்கிறார்." ஒவ்வொரு குடும்பத்தினரும் தமது வீட்டில் ஒரு விக்கிரகத்தை வைத்து வழிபட்டு வந்தனர். ஒருவன் எங்காவது பிரயாணம் செய்யப்புறப்பட்டால், அவன் அந்தச் சிலையில் தன்னைத் தேய்த்துக் கொண்ட பின்னரே வீட்டை விட்டுப் புறப்படுவான். வீட்டிலிருந்து புறப்படுகையில் அவன் கடைசியாகச் செய்யும் செயல் அதுவாகவே இருந்தது. அவ்வாறே அவன் பிரயாணத்திலிருந்து திரும்பும் போதும் அந்தச் சிலையில் தன்னைத் தேய்த்துக் கொண்ட பின்னரே அவன்
6TER ம்பக்காரிடம் செல்வான்.
10 lirišs: ģikai 352i, ti i i i 96-5

g56öriè6":Tifô'LJ 5 6¥a sy ($4J5Iq பாகம் i பகுதி !
aLLLLSSSLLL LLC LL LSLC LLLLLL LLLLLLLLSGLS SLLLL LL LLLLLLLLSS SLGLLLLSLLLL LGLLLLLLL LLLLL LC CCGC LLC LL LS GS L LGLSGLLLLL LLLL L LLLLL G LLLLLGLLLLLLL LLSLLS LCLLLLL GL LLGLGLCCLL LLLCLLLGLTLLLLSLLLLLL
சந்திரன், நட்சத்திரங்கள், நெருப்பு, மணற்குவியல்கள்,கற்கள், கற்றுாண்கள், தாவரங்கள், விலங்குகள், கிணறுகள். நீரூற்றுக்கள் முதலான இயற்கைப் இயற்கைப் பொருள்களையும் வணங்கி வந்தனர்.
蝶 ஒவ்வொரு பொருளிலும் ஒரு தெய்வம் இருக்கிறது பொருள் LIII (6 என்று அவர்கள் நம்பினர். மேலும், இவற்றை யெல்லாம் ஊடகங்களாகக் கருதிய அவர்கள் இவற்றை ஒருவர் வழிபடுவதன் மூலம் அவர் இறைவனோடு நேர்தொடர்பு கொள்ள முடியும் என்று எண்ணினர். மனிதன் மட்டுமன்றி விலங்குகள், தாவரங்கள் முதலியனவும் உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக இருக்கும் சூரியனின் வழிபாடு பெரும்பாலும் விவசாய சமூகத்தாரிடையே காணப்பட்டது. அறேபியா பீட்றா, பல்மேரா ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்த ஹிம்யரியாக்களும் சூரிய வழிபாட்டில் அதிக ஆர்வம் காட்டினர். அறேபியரின் வழிபாட்டில் சூரியன் மிக முக்கிய இடம் வகித்தது என்பதற்கு அவர்களிடம் அதிக வழக்கில் இருந்து வந்த அப்துஷ் ஷம்ஸ் (சூரியனின் அடிமை) என்ற பெயரே சான்றாக இருக்கிறது.
சந்திரனை வழிபடும் வழக்கம் நாடோடி அறேபியரிடையே அதிகமாகக் காணப்பட்டது. சந்திரனின் ஒளியிலே தங்களது மந்தைகளைப் புல் மேயவிட்டு வந்த அவர்கள் சந்திரனே தங்களது வாழ்க்கையை ஒழுங்குபடுத்துகிறது என்றும் அதுவே நீரின் ஆவியைக் கெட்டியாக்கிப் பணியாகப் பெய்வித்து, தாவரங்களின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைகிறது என்றும் நம்பி அதனைத் திருப்தி செய்வதற்காக வழிபடலாயினர். சந்திரனை யமனியர் ஸின் என்ற பெயரிலும் மானிகள் வத்த் என்ற பெயரிலும் ஸபஈக்கள் அல்மகா என்ற பெயரிலும் கதபானியர் அம்ம் என்ற பெயரிலும் வழிபட்டு வந்தனர். கைஸ் வர்க்கத்தினர் அக்கினி நட்சத்திரத்தையும், அஸத் வர்க்கத்தினர் புதன் கிரகத்தையும் குறைஷ், லக்ம். ஜூதாம் ஆகிய வர்க்கங்களைச் சேர்ந்தவர்கள் சுக்கிரன் (வெள்ளி) கிரகத்தையும் ஜுர்ஹ"ம் வர்க்கத்தினர் வியாழன் கிரகத்தையும் வழிபட்டனர். மழை தரும் கடவுளாகக் கருதப்பட்ட அல் துரய்யா என்ற கிருத்திகை நட்சத்திரக் கூட்டமும் பலரால் வழிபடப்பட்டது.
இஸ்லாத்திற்கு முந்தியகால அறேபியரின் தெய்வங்களை உருவச் சிலைகள், புனித கற்கள் அல்லது கற்றுாண்கள் முதலான பொருள்களே பிரதிநிதித்துவப்படுத்தின. அஸ்னாம் (ஒருமை: ஸ்னம்) என்றும் அவ்தான் (ஒருமை: வதன்) என்றும் அழைக்கப்படும் உருவச் சிலைகள் பல்வேறு வடிவங்களில் கல்லில் அல்லது மரத்தில் செதுக்கப்பட்டிருந்தன. உலோகச் சிலைகள் பயன்படுத்தப்பட்டமைக்குப் போதிய சான்று எதுவும் இல்லை. பெரும்பாலும் இந்தச் சிலைகள் கலை நுட்பங்களைப் பெறாதவையாகவே
11. Philip K. Hitti, History of the Arabs, p. 60

Page 25
இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி 1
இருந்தன. அன்ஸாப் (ஒருமை: நுஸ"ப்) என்று அழைக்கப்பட்ட புனித கற்கள் அல்லது கற்றுாண்கள் வழிபடப்பட்ட அதேவேளையில் கடவுள்களுக்காகப் பலியிடப்பட்ட பிராணிகளின் பலி பீடங்களாகவும் பயன்படுத்தப்பட்டன. இந்தப் பீடங்களில் பலி விலங்குகளைக் கொன்று அவற்றின் குருதியைக் கற்றுண்களில் பூசிவந்தனர். அறேபியர் தங்கள் தெய்வங்களுக்காகப் பலியிட்டு வந்த பிராணிகளுள் ஒட்டகை, செம்மறிஆடு, வெள்ளாடு, (மிக அரிதாக) பசுக்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவ்வாறு பலியிடப்பட்டவற்றின் இறைச்சியை வழிபடுவோர் உண்டனர். குருதியோடு மட்டும் கடவுள் திருப்தியடைந்து கொள்ளும் என்ற நம்பிக்கையில் அதனை வணக்கத்திற்குரிய கற்களில் பூசி வந்தனர். இந்தப் பலிகள் குறிப்பிட்ட தெய்வத்தைச் சாந்தப்படுத்தவும் பலி கொடுப்பவரை அந்த தெய்வத்திடம் நெருங்க வைக்கவும் உதவும் என்று அவர்கள் நம்பினர். இதனாலேயே நெருங்குதல் அல்லது அருகிலாதல் என்ற பொருளைத் தரும் குர்ப் என்ற சொல்லிலிருந்து பிறந்த குர்பா அல்லது குர்பான் என்ற சொல் அறபு மொழியில் பலி கொடுத்தலைக் குறிப்பதாயிற்று.
மரங்களை வழிபடும் வழக்கமும் அக்கால அறேபியரிடம் பரவலாகக் காணப்பட்டது. இப்னு ஹிஷாம் நஜ்ரானில் வழிபடப்பட்டு வந்த ஒரு பெரும் மரத்தைப் பற்றியும் அந்த மரத்தில் ஆடைகளையும் பெண்களின் நகைகளையும் தொங்கவிடும் நிகழ்ச்சியை நஜ்ரான் மக்கள் ஆண்டு தோறும் திருவிழாவாகக் கொண்டாடிவந்தமை பற்றியும் குறிப்பட்டிருக்கிறார்.' தாத் அன்வாத் (தொங்க விடப்படும் பொருள்களைக் கொண்டது) என்ற பெயரால் அழைக்கப்பட்ட பெரிய பசுமரம் ஒன்று அறேபியரின் சமய வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் பெற்று விளங்கியது. இந்த மரத்தடிக்கு ஆண்டு தோறும் மக்கள் வந்து அதில் தமது போராயுதங்கள், ஆடைகள் முதலியவற்றைத் தொங்கவிட்டதோடு, அதற்கு அருகே உயிர்ப் பலிகள் கொடுத்து ஒருநாளை பக்தி சிரத்தையுடன் கழித்தும் சென்றனர். இந்த மரம் நக்லா என்ற இடத்தில் அல் உஷ்ஷா தெய்வத்தின் ஆலய வளவில் இருந்த மரமாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
கடவுள்களாகக் கருதப்பட்டு வணங்கப்பட்ட உருவச்சிலைகள் ஆலயங்களில் வைக்கப்பட்டிருந்தன. சில ஆலயங்களில் பல்வேறு கடவுள்களின் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது இதற்கு . _. உதாரணமாகப் புனித க.பாவைக் குறிப்பிடலாம். ஆலயங்கள ஆயினும் பல ஆலயங்கள் குறிப்பிட்ட ஒரு கடவுளுக்காக நிறுவப்பட்டு, அங்கு அந்தக் கடவுளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உருவச்சிலைகளே வைக்கப்பட்டிருந்தன. வழிபாட்டிடங்களாகப் பணியாற்றிய
12. இப்னி ஹிடிாம் பாகம் பக்கம் 47 13. மேற்படி பாகம் V பக்கம் 86

இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
இந்த ஆலயங்களில் மக்கள் தமது வணக்கச் சடங்குகளைச் செய்து வந்ததோடு, தமது நேர்ச்சைகளையும் சத்தியங்களையும் கூட நிறைவேற்றினர். இந்த ஆலயங்கள் அக்கால எகிப்திய அல்லது கிரேக்க ஆலயங்களைப் போன்ற பாரிய கட்டட அமைப்புகளைக் கொண்டிருக்கவில்லை. எளிய அமைப்பில் காணப்பட்ட இந்த ஆலயங்கள் சில சமயங்களில் வெறும் சுவர்களை அல்லது சுற்று மதில்களை மட்டும் கொண்டவையாய் இருந்தன. ஆலயங்கள் மட்டுமன்றி, ஆலயங்களைச் சூழவிருந்த மேய்ச்சல் தரைகளும் புனித இடங்களாக மதிக்கப்பட்டன. “ஹிமா’ என்று அழைக்கப்பட்ட இந்த புனித மேய்ச்சல் தரைகளை அறேபியர் ஆலயத்தில் பள்ளி கொண்ட கடவுளின் விஷேட பாதுகாப்பில் உள்ள பிரதேசங்களாகக் கருதினர். இந்த நிலங்களில் குறித்த கடவுளின் பெயரால் விடப்பட்ட விலங்குகள் மட்டுமே புல் மேய அனுமதிக்கப்பட்டன.
இந்த ஆலயங்கள் ‘ஸாதானா’ (ஒருமை: ஸாதின்) என்று அழைக்கப்பட்ட ஆலயப் பாதுகாவலரின் பொறுப்பில் இருந்து வந்தன. பூசகர்களாகவும் கடமையாற்றிய இவர்களே பக்தர்களை வரவேற்று, ஆலயத்தினுள் பிரவேசம் செய்ய அவர்களை அனுமதித்து வந்தனர். இவர்களது பதவி பரம்பரை முறையை அடியொற்றியதாய் அமைந்திருந்தது. அக்காலத்தில் வாழ்ந்த எல்லாச் சமுதாயங்களிலும் காணப்பட்டது போன்ற பூசகள் அல்லது ஆலயப் பாதுகாவலர் குடும்ப அமைப்பு முறை, அறேபியர் சமுதாயத்திலும் தோன்றி வளர்வதற்குப் பரம்பரை பரம்பரையாக வகிக்கப்பட்டு வந்த இந்தப் பதவியே வழி வகுத்தது. சில ஆலயங்களில் பூசகர், குறி சொல்வோராகவும் தொழிற்பட்டார். ‘காஹின் (குறி சொல்வோர்) என்று அழைக்கப்பட்ட இவர்கள் தெய்வங்களின் செல்வாக்கு உள்ளவர்கள் என்று மக்கள் நம்பினர். இவர்கள் வழிபாட்டுச் சடங்குகளை நிறைவேற்றப் பக்தர்களுக்கு உதவியதோடு, மக்களின் விவகாரங்களில் கடவுளின் விருப்பம் என்ன என்பதைப் பல்வேறு கற்பனையான முறைகளால் அறிந்து, அவர்களுக்குக் கூறி வந்தனர். குறி சொல்வதற்குப் பலமுறைகள் பின்பற்றப்பட்டன. அம்புகளைக் கொண்டு குறிபார்க்கும் முறையே அதிகமாகப் பின்பற்றப்பட்டது. இந்த ‘காஹின்கள் குறி சொல்கையில் மொழிந்த வார்த்தைகள், எதுகை மோனை அமைப்புக் கொண்ட ஒரு வகைச் செயற்கையான உரைநடையில் வெளிப்பட்டன. மிகச் சிறிய சொற்களையும் குறுகிய வசனங்கள் சிலவற்றையும் கொண்ட இந்தச் சொல்வெளிப்பாட்டு முறை ஸஜ" என்று அழைக்கப்பட்டது."
அறியாமைக் கால அறேபியர் எண்ணற்ற கடவுள்களில் மட்டுமன்றி பேய்கள், பிசாசுகள் முதலியவற்றிலும் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
14 பிற்காலத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட ஆரம்பகால அல் குர்ஆள் வசனங்கள் பெரும்பாலும் ஸஜ்ஃ’ என்ற இந்த மொழிநடையிலேயே அமைந்திருந்தன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மக்கள் இந்த மொழிநடைக்கு அதிகம் பரிச்சயமானவர்களாக இருந்தமை இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

Page 26
இஸ்லாமிய வரலாறு Ta5Ib i LöğÉ
அவற்றை அவர்கள் ஜின்கள் என்று அழைத்தனர். அவை மனிதர்க்குத் தீமை செய்யும் ஆற்றல் வாய்ந்தவை என்றும் மனிதர் நடமாட அஞ்சும் பாலைவனம், காடு முதலான நிலப் பகுதிகளிலேயே அவை வாழ்கின்றன 攀 谭 என்றும் இறைவனுக்கும் இந்த ஜின்களுக்கும் ds)lls) d IIhh இடையே நெருக்கமான உறவு உண்டு என்றும் மூடநம்பிக் ஒருஆர் அவர்கள் நம்பினர். மனிதனுள் ஜின் பிரவேசம் செய்து அவனில் ஆதிக்கம் செலுத்தும் போதுதான் அவன் பைத்தியமாகிறான் என்று கருதிய அவர்கள் ஜின்களைச் சாந்தப்படுத்துவதற்காகப் பூசைகளும் பலிகளும் செய்து, அவற்றிடம் உதவிகளும் தேடினர். பெரும்பாலும் நகரங்களில் வாழ்ந்தவர்களை விடவும் நாடோடியாக வாழ்ந்த அறேபியரிடமே ஜின்களைப் பற்றிய மூடநம்பிக்கைகளும் அச்சமும் அதிகமாகக் காணப்பட்டன. பாலைவனங்கள் ஜின்களுக்கு உரியவை என்று நம்பிய அவர்கள் தமது பாலைவன வாழ்வில் தெய்வங்களை விடவும் இந்த ஜின்களைத் திருப்தி செய்வதிலேயே அதிக அக்கறை காட்டி வந்தனர்.
விலங்குகளுக்கும் அவர்கள் தெய்விக அந்தஸ்தை அளித்து வந்தனர். சில விலங்குகள் அவர்களால் புனித உயிர்களாக மதிக்கப்பட்டன. இவ்வாறு அவர்களால் மதிக்கப்பட்ட விலங்குகளுள் மான் (ளப்யு), சிங்கம் (அஸத்). நாய் (கல்ப்), சிறுத்தை (பஹற்த்) முதலியவை குறிப்பிடத்தக்கவை. இவற்றின் பொதுப் பெயர்களைத் தங்களது வர்க்கங்களுக்கும் அவர்கள் சூட்டியிருந் தனர். மானை அவர்கள் மிகுந்த தெய்விகமுடைய ஒரு விலங்காகக் கருதினர். மான் இறந்தால், அதனைத் துணியால் போர்த்தி அடக்கம் செய்வதும் அதற்காகச் சில தினங்கள் துக்கம் அனுட்டிப்பதும் அறேபியரின் குறிப்பாக ஹாரிதாக் குலத்தாரின் வழக்கமாக இருந்தன. பாம்பின் உருவத்தில் ஜின்கள் வரலாம் என்று நம்பிய அவர்கள் அதனைக் கொல்ல அஞ்சினர். சில பிராணிகளின் அலறலை துர்ச்சகுனமாகக் கருதிய அவர்கள் காகம் கரைதலும் புறா அகவுதலும் விரும்பத்தகாத நிகழ்வுகளின் முன்னறிவிப்புக்கள் என்று நம்பினர். பெரும்பாலும் அறேபியரின் விலங்குகள் பற்றிய நம்பிக்கைகள் ஆரியரின் நம்பிக்கைகளை ஒத்திருந்தன.
மனித உயிர், அவனது உடலிலிருந்து முற்றிலும் வேறுபட்ட வளியை ஒத்த - பதார்த்தத்தால் ஆனது என்று நம்பிய அவர்கள் சுவாசத்தையே உயிராகக் கருதினர். மனிதன் இயற்கை மரணம் அடைகையில், அவனது உயிர் வாய் அல்லது மூக்குத் துவாரங்கள் வழியாக வெளியேறி விடுகிறது என்றும் அவன் கொல்லப்பட்டு உயிர் துறக்கையில் அவனது உயிர் மரணத் திற்குக் காரணமான பெரும் காயம் வழியாக வெளியேறுகிறது என்றும் அவர்கள் கருதினர். ஒருவன் கொல்லப்பட்டு உயிர் நீத்தால், கொன்றவனைப் பழிவாங்கும் தாகத்தால் அவன் துடித்துக் கொண்டிருப்பான் என்றும் பழிக்குப்பழி
GEO

இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
வாங்கப்படாவிட்டால் அவனது உயிர் ஆந்தையின் வடிவில் அவனது அடக்கத் தலத்தின் மீது தோன்றி, "இஸ்கூனி ' (குடிப்பதற்குத் தா) என்று பழிக்குப்பழி வாங்கப்படும் வரை அலறிக்கொண்டே இருக்கும் என்றும் அவர்கள் நம்பினர். மரணத்திற்குப் பின்னர் மனிதனுக்கு ஒரு வாழ்க்கை உண்டு என்ற கருத்தில் அவர்கள் நம்பிக்கை கொள்ள அவர்களது புறச் சமயவாதத்தில் இடம் இருந்ததா என்பதை அறிந்து கொள்வதற்கு உதவக் கூடிய போதிய ஆதாரங்கள் இல்லை. ஆயினும், மரணித்தவர்களைப் புதைக்கும் விடயத்தில் அவர்கள் நிறைவேற்றி வந்த சில சடங்குகள், மரணத்திற்குப் பின்னரும் மனித உயிருக்கு ஒரு வகை இருப்புண்மை உண்டு என்று அவர்கள் நம்பினர் என்பதைக் காட்டி நிற்கின்றன. அவர்களது தலைவர்களுள் ஒருவர் மரணமாகி அடக்கம் செய்யப்பட்டு விட்டால், பின்தொடைநாண்தசை வெட்டப் பட்டு முடமாக்கப்பட்ட ஒட்டகை ஒன்றை அவரது அடக்கத்தலத்தின் மீது கட்டிவைத்து, அதனைப் பட்டினி கிடந்து சாக விட்டுவிடுதலை அவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்த ஒட்டகம் இறந்தவர் சவாரி செய்வதற்குப் பயன்படலாம் என்ற கருதுகோளிலேயே அவர்கள் இவ்வாறு செய்திருக்கலாம். இறந்தவர்களின் ஆன்மாக்கள், அலறும் ஆந்தையின் வடிவத்தில் அவர்களது அடக்கத்தலங்கள் மீது வட்டமிட்டுக் கொண்டே இருக்கும் என்ற அவர்களின் நம்பிக்கையும் இந்தக் கருத்திற்கு வலுவூட்டுகிறது. இறந்தவர்களுக்காக அவர்களது அடக்கத்தலங்கள் மீது விலங்குகளைப் பலி கொடுக்கும் வழக்கமும் அக்கால அறேபியரிடம் இருந்தது. அக்கால அறபுக் கவிஞர்கள் தங்களது விருப்புக்கும் அன்புக்கும் உரியவர்களின் அடக்கத்தலங்கள் மீது மழை பொழிவதையும் பசு மரங்கள் பூத்துக் குலுங்குவதையும் விரும்பித் தமது வேட்கையைக் கவிதைகளில் வெளியிட்டு வந்தனர். அவ்வாறே பல சமயங்களில் இறந்தவர்களின் அடக்கத்தலங்களுக்கு முன்னால் நின்று, அவர்களை விழித்து வாழ்த்துக்கள் கூறியும் வந்தனர். இவை எல்லாம் உலகை விட்டுப் பிரிந்தவர்கள் உயிர் வாழ்கின்றனர் என்ற கருத்தில் அவர்களுக்கு இருந்து வந்த நம்பிக்கையையே காட்டுகின்றன.
மரணத்திற்குப் பின்னரும் மனித ஆன்மா வாழ்கிறது என்று அக்கால அறேபியர் ஒரளவுக்கு நம்பியிருந்த போதிலும், மரணத்திற்குப் பின்னர் உள்ள வாழ்க்கை பற்றிய தெளிவான கருத்து அவர்களிடம் காணப்படவில்லை. பிற்காலத்தில் யூத, கிறித்தவ மதங்களின் செல்வாக்கினால் இத்தகைய கருத்திற்கு அவர்கள் ஓரளவு பரிச்சயமானவர்களாக இருந்த போதிலும் மனிதன் மரணித்து மண்ணோடு மண்ணாகிப்போன பின்னர் அவன் எவ்வாறு மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவான் என்பது அவர்களது புத்திக்கு எட்டாத விடயமாகவே இருந்து வந்தது. அதனாலேயே மறுமையில் மனிதர் மீள எழுப்பப்படுதல் சம்பந்தமாக அல்குர்ஆன் வசனங்கள் அருளப்பட்டபோது மக்கா நகர குறைஷியர் நையாண்டி செய்தனர். அவர்களது கவிஞர்களுள்

Page 27


Page 28
இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
விக்கிரகங்களுக்காக ஒதுக்கப்பட்டவற்றோடு சேர்ந்து விட்டால், அதனை எடுத்து அல்லாஹற்வுக்குரிய பங்கோடு சேர்க்காமல் அப்படியே விட்டுவிட்டனர். அல்லாஹற் தேவையற்றவன்' என்று தங்கள் செயலுக்குச் சமாதானமும் கூறிக்கொண்டனர். ஆனால், விக்கிரகங்களுக்காக ஒதுக்கப்பட்டவற்றிலிருந்து ஏதாவது, அல்லாஹற்வுக்குரிய பங்கோடு சேர்ந்து கொண்டால், உடனே அதனைப் பிரித்தெடுத்து, விக்கிரகங்களின் பங்கோடு சேர்த்து விட்டனர். ‘அவை தேவையுடையவை' என்று சமாதானமும் கூறிக் கொண்டனர். அவ்வாறே அல்லாஹற்வுக்குரிய பங்கில் ஏதாவது அழிந்து விட்டால், அதனைப் பொருட்படுத்தாமல் விட்டனர். ஆனால், விக்கிரகங்களுக்குரிய பங்கில் எதாவது அழிந்துவிட்டால், அதற்குப் பதிலாக மற்றொன்றைச் சேர்த்து வைத்தனர். (அல்குர் ஆன் 6:136)"
எல்லாவற்றையும் படைத்த தனிப்பெரும் கடவுளாக அல்லாஹற் ஒருவன் இருக்கிறான் என்று நம்பிய அதே வேளையில், அவர்கள் அல் லாத், அல் உஷ்ஷா, அல் மனாத் ஆகிய மூன்று பெண் தெய்வங்களை அல்லாஹற்வின் புதல்விகள் என்றும் இன்னும் சில போலித் தெய்வங்களை அல்லாஹற்வின் புதல்வர்கள் என்றும் கருதினர் (அல்குர் ஆன் 6:100, 16:57, 53:19-21). அமரர்களையும் அவர்கள் அல்லாஹற்வின் புதல்விகள் என்று நம்பினர். தாம் வணங்கும் கற்பனைத் தெய்வங்கள் அல்லாஹற்வுக்கு மிக நெருங்கியவை என்றும் அவை தங்களுக்காக அல்லாஹற்விடம் பரிந்து பேசும் என்றும் நம்பியே அவர்கள் அவற்றை வழிபட்டும் அவற்றிற்குப் பலிகள் கொடுத்தும் வந்தனர் (அல் குர்ஆன் 10:18). மேலும், அல்லாஹ வுக்கும் “ஜினிகளுக்குமிடையே நெருங்கிய பந்தம் இருக்கிறது என்று கருதிய அவர்கள் அவற்றை அல்லாஹற்வின் பங்காளர்களாக்கி, அவற்றிற்குப் பலிகள் கொடுத்து, அவற்றிடம் உதவியும் கோரிவந்தனர் (அல்குர்ஆன் 6:100,128; 37:158; 72:6)
இவ்வாறு அவர்கள் அல்லாஹற்வுக்கு இணைகளைக் கற்பித்த போதிலும், அல்லாஹற் ஒருவன் இருக்கிறான் என்ற கொள்கையில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தனர். எதனை எழுதும் போதும் ‘பிஇஸ்மிக அல்லாஹ"ம்ம (அல்லாஹற்வே! உனது பெயரால்) என்ற வாசகத்துடனேயே ஆரம்பித்தனர். இதற்கு நபி முஹம்மத் (ஸல்) அவர்களையும் அவர்களது குடும்பத்தாரையும் ஒன்றியொதுக்கல் செய்த சமயம், மக்கா குறைஷகள் எழுதிய கூட்டிணைப்புப் பத்திரமும் ஹி.6 இல் எழுதப்பட்ட ஹ"தைபியா உடன்படிக்கைப் பத்திரமும் சான்றாகும். நபி அவர்களின் குடும்பத்தாரை வி’ப் அபீதாலிப் என்ற இடத்திலிருந்த மலைக் கோட்டைக்கு குறைஷகள் ஒன்றியொதுக்கிய சமயம், குறைஷ தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எழுதிய பிரசித்த ஆவணத்தை அவர்கள் ‘பிஇஸ்மிக அல்லாஹம்ம’ என்று
16. இப்னர் கதிர் தப்லீருல் குர்ஆனுல் அழிக் பாகம i பக்கம் 171

இஸ்லாமிய வரலாறு LufTabib i UGbgó i
குறிப்பிட்டே எழுத ஆரம்பித்தனர்." ஹ"தைபியா உடன்படிக்கை எழுதப்பட்ட சமயமும் நபி அவர்கள் 'பிஸ்மில்லாஹிர் ரஹற்மானிர் ரஹீம்' என்று எழுதப் பணித்தபோது, குறைஷ தலைவர்கள் அதற்கு ஆட்சேபனை தெரிவித்து, பிஇஸ்மிக அல்லாஹம்ம’ என்று தங்கள் பாரம்பரிய வழக்கப்படி எழுதுமாறே கோரினர். அவ்வாறே எழுதப்பட்டது.
அறியாமைக் கால அறேபியர் ஏகனான அல்லாஹற்வை ஓரளவு அறிந்து, அவனில் நம்பிக்கை வைத்திருந்தனர் என்பதற்குப் பண்டைய பொறிப்புக்கள், இஸ்லாத்திற்கு முற்பட்டகால அறபுக்கவிதைகள் என்பனவும் சான்றாக இருக்கின்றன. தென் அறேபியாவில் கண்டெடுக்கப்பட்ட பொறிப்புக்கள் இரண்டில் அல்லாஹற்வைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. அவற்றுள் ஒன்று வட அறேபியாவில் தய்மாவுக்கும் கைபருக்கும் இடையே உள்ள அல் உலா என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட மானி (கி.மு. 1400-700) பொறிப்பு மற்றது யமனில் கண்டுபிடிக்கப்பட்ட ஸபஈ (கி.மு. 950-115) பொறிப்பு. தொல் பொருள் ஆராய்ச்சியின் விளைவாக யமனில் கண்டுபிடிக்கப்பட்ட கி.பி. 4ஆம், 5ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த பொறிப்புக்களும் அக்கால அறேபியாவில் ஏகத்துவக் கோட்பாட்டில் நம்பிக்கையுடையோரும் வாழ்ந்தனர் என்பதற்கு ஆதாரமாக இருக்கின்றன. யமனில், ஆலயம் ஒன்றின் இடிபாடுகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட கி.பி. 378ஆம் ஆண்டைச் சேர்ந்த பொறிப்பு ஒன்றில், ‘வானங்களின் இரட்சகனாக இருப்பவனின் வழிபாட்டிற்காக இந்த ஆலயம் கட்டப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. கி.பி. 465 ஆம் ஆண்டிற்குரிய பொறிப்பு ஒன்றில் ஏகத்துவக் கோட்பாட்டைத் தெளிவாகச் சுட்டும் வார்த்தைகள் காணப்படுகின்றன. அலெப்போ (ஹலப்) நகருக்குத் தென் கிழக்கே ஷபத் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கி.பி. 512 ஆம் ஆண்டிற்குரிய பொறிப்பு ஒன்றில், 'பிஸ்மி இலாஹ" லா இஷ்ஷ இல்லா லஹ", லா ஷ"க்ர இல்லா லஹ’ என்ற வார்த்தைகள் காணப்படுகின்றன.
அறியாமைக்கால அறபுக் கவிஞர்கள் பலரின் கவிதைகளில் அல்லாஹற்வைப் பற்றிய குறிப்புக்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. அபீத் பின் அப்ரஸ் (மரணம் கி.பி. 554), உமய்யா பின் அபூ ஸல்த் (மரணம் கி.பி. 628), லபீத் பின் ரபீஆ (மரணம் ஹிஜ்ரி 41)* முதலான அறபுக் கவிஞர்களின் கவிதைகளில் ஏகத்துவக் கோட்பாட்டையும் அதனோடு சம்பந்தமுடைய விடயங்களையும் பற்றிய கருத்துக்கள் மிகுதமாகக் காணப்படுகின்றன. இவ்வாறு, அறியாமைக் கால அறேபியர் அல்லாஹற்வைப் பற்றிய கருத்தைக் கொள்கையளவில் ஏற்றுக் கொண்டிருந்தமைக்கும் அந்தக் கருத்தோடு பரிச்சயமுற்றிருந்தமைக்கும் அவர்களது முன்னோருட் பலர்
17 அபுல் ஹஸனர் அலி அல் நத்வீ அஸ்ஸீரதுந் நபவிய்யா, பக்கம் 161
18 தமது வாழ்வின் பெரும் பகுதியை அறியாமைக் காலத்தில் கழித்த லயித் பின் ரபீஆ பின்னர்,
இஸ்லாத்தைத் தழுவி தமது 145 ஆம் வயதில் மரணித்தவர்.

Page 29


Page 30
இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
உயர்ச்சிக்காக அந்தச் சமயத்தால் எத்தகைய பங்களிப்பையும் செய்யமுடியவில்லை. மேலும், வேரூன்றிய விக்கிரகத் தொழும்பின் காரணமாக யூத மதம் அறேபியரோடு வைத்திருந்த உறவைப் படிப்படியாக இழந்து விட்டது.
இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னால், கிறித்தவ மதத்தின் செல்வாக்கும் அறேபியாவில் ஓரளவுக்கு வேரூன்றி இருந்தது. கி.பி. 4ஆம் நூற்றாண்டில், உரோமப் பேரரசன் இரண்டாம் கொன்ஸ்தந்தைன் (334-61) என்பானின் ஆட்சிக்காலத்திலேயே கிறித்தவ மதம் அறேபியாவுக்கு அறிமுகம் செய்து கி றித்தவ வைக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. ஆயினும், இந்தக் காலப்பகுதியில் எந்த ஒரு அறேபியரும் கிறித்தவ மதத்தைத் மதம் தழுவியிருந்தமைக்கு ஆதாரம் இல்லை. இதற்குப் பிற்பட்ட ஒரு காலத்திலேயே கிறித்தவ மதம் அறேபியா வினுள் நுழைந்திருக்க வேண்டும் என்று வரலாற்றாசிரியர்கள் அபிப்பிராயப் படுகின்றனர். அறேபிய வரலாறு, பைமியூன் என்ற சிரிய கிறித்தவத் துறவியின் முயற்சியினாலேயே கிறித்தவம் தென் அறேபியாவுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது என்று கூறுகிறது. இவரது காலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியாகும். ஆயினும், கிறித்தவ மதத்தைத் தழுவி இருந்த அறேபியாவின் வடக்கு எல்லைப் புற நகரங்களின் வாயிலாக இதற்கு முற்பட்ட காலத்திலேயே கிறித்தவ மதம் அறேபியாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கலாம் என்று யூகிக்க இடமுண்டு.
கி.பி. 5 ஆம் நூற்றாண்டில், சிரியாவின் ஆட்சியாளர்கள் கிறித்தவ மதத்தைத் தழுவி இருந்தனர். அபிசீனியாவிலும் இதே காலப்பகுதியில் கிறித்தவ மதம் ஓரளவுக்குப் பரவி இருந்தது. இவர்களது செல்வாக்கால் அறேபியாவினுள் அந்தச் சமயம் மெல்ல மெல்ல நுழைய ஆரம்பித்தது. கிறித்தவ பிரசாரகர்கள் நஜ்ரான் உட்படப் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று, கிறித்தவ மதத்தைப் பரப்பும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதன் விளைவாக கல்ப், தனூக், தங்லிப், ஹாரித், ஹனிபா முதலான சிறிய - பெரிய வர்க்கங்களைச் சேர்ந்தவர்களும் தய்இ வர்க்கத்தவர்களுட் சிலரும் தனிமைப்படுத்தப்பட்ட நகரக் குழுக்களைச் சேர்ந்தவர்களும் கிறித்தவ மதத்தால் கவரப்பட்டு, அந்த மதத்தைத் தழுவிக் கொண்டனர். ஆயினும், அறேபிய தீபகற்பத்தின் வடக்கிலும் வடகிழக்கிலும் இருந்த ங்ஸ்ஸ்ான், ஹீரா ஆகிய எல்லைப் புற நகரங்களில் கிறித்தவம் செல்வாக்குப் பெற்றிருந்த அளவுக்கு நஜ்ரானைத் தவிர அறேபியாவின் வேறு எந்தப் பகுதியிலும் கிறித்தவ மதம் வேரூன்ற முடியவில்லை.
அறேபிய தீபகற்பத்தில், கிறித்தவ சமயத்தின் மிக முக்கியமான உறைவிடமாகத் தென் அறேபியாவில் உள்ள நிஜ்ரான் நகரமே திகழ்ந்தது.

இஸ்லாமிய வரலாறு UsTabib i LJ355 i
சிரியத் துறவியான பைமியூன் என்பாரின் முயற்சியாலும் அபீசீனிய அரசின் ஆதரவாலும் இங்கு கிறித்தவம் நன்கு காலூன்றி இருந்தது. பெரும்பாலும் இங்கு வாழ்ந்த கிறித்தவர்கள் யாகூபியப் பிரிவைச் சார்ந்தவர்களாக இருந்தனர். நஜ்ரானில், பனு அப்துல் முதான் பின் தய்யூன்அல் ஹரீதி குடும்பத்தாரால் மக்காவில் உள்ள கட்பாவுக்குப் போட்டியாகக் கட்டப்பட்டிருந்த ஆலயத்தைப் பின்னர், அங்கு வாழ்ந்த மக்கள் கிறித்தவ தேவாலயமாக மாற்றினர். கிறித்தவ மதத்தைத் தழுவியிருந்த அறேபியருட் சிலர் துறவற வாழ்க்கையை மேற்கொண்டனர். தய்இ வர்க்கத்தைச் சேர்ந்த ஹன்ளலா என்பார் கிறித்தவ துறவியாகி, யூபிரதிசு நதிக்கரையில்துறவு மடம் ஒன்றை அமைத்துத் தமது மரணம் வரை அங்கேயே வாழ்ந்து வந்தார். அந்தத் துறவு மடம் தய்ர் ஹன்ளலா’ என்று அழைக்கப்பட்டு வந்தது. அறபுக் கவிஞரான குஸ் பின் ஸாஇதா அல் இபாதி என்பார் துறவற வாழ்வை மேற்கொண்டு, தெருக்களையும் பாலைவனங்களையும் தமது வசிப்பிடம் ஆக்கிக்கொண்டார். ஹிராவை ஆட்சி செய்த லக்மிய மரபு மன்னனான மூன்றாம் நுட்மான் என்பான், அறபுக் கவிஞரான அதீ பின் ஷைத் என்பாரின் தூண்டுதலால் கிறித்தவ மதத்தைத் தழுவியதோடு, முடி துறந்து, மலைகளிலே தவ வாழ்க்கையை மேற்கொண்டிருந்தான்.
வாதிஉல் குரா என்ற இடத்தில் துறவு மடங்களை அமைத்திருந்த கிறித்தவத் துறவிகளும் மத குருக்களும் அறேபியாவில் சந்தை கூடும் இடங்களைத் தமது பிரசார மேடைகளாக்கி, மக்களுக்கு கிறித்தவ மதக் கோட்பாடுகளையும் ஒழுக்கங்களையும் போதித்தனர். அவர்களின் இத்தகைய முயற்சிகளாலேயே இஸ்லாத்திற்கு முற்பட்ட கால அறேபியர் மறுமைநாள், நீதி விசாரணை, சுவனம், நரகம் முதலியவை பற்றிய கருத்துக்களோடு பரிச்சயம் உடையவர்களாக இருந்தனர். கிறித்தவ மதத்தைத் தழுவி இருந்த குஸ் பின் ஸாஇதா அல் இபாதி, அதீ பின் ஷைத் முதலான அறபுக் கவிஞர்களின் கவிதைகளும் வேதத்தையுடைய சமயம் ஒன்றின் கோட்பாடுகளை அறேபியருக்கு அறிமுகம் செய்து வைக்கும் பணிக்கு உதவின. ஆயினும், யூத மதத்தைப் போலவே கிறித்தவ மதமும் அறேபிய மண்ணிலும் அறேபியரின் வாழ்விலும் வேரூன்றி வளரத் தவறி விட்டது. நன்கு காலூன்றி, இறுக்கமாகவும் அடர்த்தியாகவும் வளர்ந்திருந்த உருவத்தொழும்பு அதற்கு இடம் அளிக்கவில்லை.
ஷொராஸ்ட்ரியனிஸம் (Zoroastrianism) என்று அழைக்கப்படும் மஜஸிய்யா மதமும் அறியாமைக் கால அறேபியாவின் சில பகுதிகளில் வழக்கில் இருந்தது. இந்த மதத்தைப் பின்பற்றியோர் மஜூஸிகள் என்று அழைக்கப்பட்டனர். ஆரம்பத்தில் இந்த மதம், விண் IDಣ್ಣರೌ೧li பொருள்களை ஆராய்ச்சி செய்வதில் தமது நேரத்தின் பெரும் பகுதியைச் செலவிட்டுக் கொண்டிருந்த மிகப் புராதன தத்துவஞானிகளின்
GD

Page 31
இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி 1
கோட்பாட்டுப் பிரிவாகவே தோன்றியது. அவர்களும் அவர்களைப் பின்பற்றியோரும் தீயின் வடிவத்தில் கடவுளை வழிபட்டு வந்தனர். இந்த மதப் பிரிவு கி. மு. 7ஆம் நூற்றாண்டில், அஸர்பைஜானில் வாழ்ந்த ஷராதுஷ்த் (ஷொராஸ்டர்) பின் இஸ்பீமான் என்பாரால் சீர்திருத்தி அமைக்கப்பட்டு, பின்னர் இந்த மதம் அவரது பெயராலெயே ஷொராஸ்ட்ரியனிஸம் என்று அழைக்கப்பட்டது. தம்மை ஒரு நபி என அழைத்துக் கொண்ட அவரையும் அவரது புதிய சிந்தனைகளையும் பல்க் நாட்டின் ஆட்சியாளரான பிஷ்தாஸ்ப் (விஷ்தாஸ்ப்) என்பான் ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, இப்புதிய மார்க்கம் பல்க்கிலிருந்து பாரசீகம் முழுவதிலும் பரவி வேரூன்றத் தொடங்கிற்று. பிற்காலத்தில், இதுவே பாரசீகத்தின் அரச மதமாகவும் அங்கீகரிக்கப்பட்டிருந்தது.
பாரசீகம், அறேபியாவுக்கு அண்மையில் இருந்தமையாலும் யமன், உம்மான் முதலான அறேபிய மாகாணங்களுட் சில பாரசீக ஆட்சியாளரின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டிருந்தமையாலும் இந்த மதத்தைப் பின்பற்றிய அறேபியர் சிலர் ஆங்காங்கே காணப்பட்டனர். அல் பலாதுரீயின் கூற்றுப்படி, இஸ்லாம் அறேபியாவில் தோன்றிய காலப்பகுதியில் யமன், உம்மான், பஹற்ரைன் ஆகிய பிரதேசங்களில் இந்த மதத்தைப் பின்பற்றிய மக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களின் எண்ணிக்கை யூதம், கிறித்தவம் ஆகிய மதங்களைத் தழுவியிருந்தோரின் எண்ணிக்கையை விடவும் மிகக் குறைவாகவே இருந்தது.
இவற்றைத் தவிர, பாரசீகத்தில் மானிகியனிஸம், ஸாபிஈனிஸம், மஷ்தகிஸம் முதலான பெயர்களில் அறிமுகமாகி இருந்த சமய நெறிகளைப் பின்பற்றிய மக்களும் மிக மிகக் குறைந்த எண்ணிக்கையில் இஸ்லாத்திற்கு முந்திய கால அறேபியாவில் காணப்பட்டனர். ஆயினும், இவை இறைவனால் அருளப்பட்ட வேதங்களையுடைய யூதம், கிறித்தவம் ஆகிய மதங்களைப் போலன்றி, உருவ வழிபாட்டை அடிப்படையாகவும் பிரதான அம்சமாகவும் கொண்ட புறச் சமயவாதத்தின் (Heathenism) மறு வடிவங்களாகவே இருந்தன. அதனால், இந்தச் சமய நெறிகள் யாவும் அறேபியரிடையே ஏகத்துவக் கொள்கையும் நல்லொழுக்க ஆசாரங்களும் பொதிந்த ஒரு சீரிய வாழ்க்கை முறையை அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாக அவர்களது உருவத்தொழும்பையும் தீயொழுக்கத்யைம் ஊக்குவிப்பவையாகவே அமைந்தன.
இவ்வாறு, சமயங்களின் செல்வாக்கை விடவும் உருவ வழிபாட்டினதும் மூட நம்பிக்கைகளினதும் செல்வாக்கிற்கு அதிகமாக உட்பட்டிருந்த அறியாமைக்கால அறேபியாவில் நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் ஹ னி fui LIII சன்மார்க்கத்தைப் பின்பற்றிய மக்களும் மிக மிகக்குறைந்த எண்ணிக்கை யில் காணப்பட்டனர். இந்த மார்க்கம் ஹனீபிய்யா என்றும் இந்த மார்க்கத்தைப் பின்பற்றியோர் ஹனிப்கள் என்றும்
Ꮳ2Ꭷ

இஸ்லாமிய வரலாறு UT3bb 1 J(55 1
அழைக்கப்பட்டனர். புத்திஜீவிகளாயும் நல்ல சிந்தனைப் போக்கு உடையோராயும் இருந்த இந்த நெறியைப் பின்பற்றியோர் யூதர், கிறித்தவர் ஆகியோரை விடவும் மேம்பட்டவர்களாயும் சத்தியத்தை மிக அண்மித்தவர் களாயும் காணப்பட்டனர். ஏனெனில், இஸ்லாம் தோன்றும் வரை, மனிதரின் கையாடல்களுக்கும் கற்பழிப்புக்களுக்கும் உள்ளாகாத ஒரே தூய நெறியாக இப்றாஹீமின் மார்க்கம் ஒன்றே இருந்து வந்தது. பின்னர், அதுவே இஸ்லாமாகப் புதிய பரிணாமம் அடைந்தது. இந்த நெறியைப் பற்றி இறைவனும் தனது அல் குர்ஆனிலே பிரஸ்தாபித்திருக்கிறான். (10:105, 22:31, 30:30, 2:129, 3:60, 98:4)
இந்த நெறியைப் பின்பற்றியோர் யூத மதத்தையோ கிறித்தவ மதத்தையோ பின்பற்றாமல், உருவ வழிபாட்டை முற்றாகக் கைவிட்டு, நபி இப்றாஹீமின் ஒரே இறைவனான அல்லாஹற்வையே வணங்கி வந்தனர். மதுபானம் அருந்துதல், தாமாகச் செத்த பிராணிகளையும் இரத்தத்தையும் விக்கிரகங்களுக்ாக அறுக்கப்பட்டவற்றின் மாமிசத்தையும் உண்ணுதல், பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்தல் முதலான அறியாமைக் கால அறேபியரின் மூடச் செயல்களிலிருந்தும் அவர்கள் தம்மை முற்றாக விடுவித்திருந்தனர். இவ்வாறு ஹனீபியப்யா நெறியைப் பின்பற்றி வாழ்ந்தவர்களுள் வரகா பின் நவ்பல், உமய்யா பின் அபீ அல் ஸல்த், உத்மான் பின் அல் ஹ"வைரித், ஷைத் பின் அம்ர், உபைதுல்லாஹற் பின் ஜஹற்ஷ், அபூ கைஸ் பின் அபூ அனஸ் பின் ஸிர்மா முதலானோர் குறிப்படத்தக்கவர்கள். இவர்கள் தெளிந்த சிந்தனையும் ஆத்மீக விழிப்பும் உடையவர்களாக இருந்தனர். இறைவனால் அருளப்பட்ட பண்டைய வேதங்களில் நல்ல பரிச்சயம் உடையவர்களாய் இருந்த இவர்களுட் சிலர் துறவிகளைப் போல மக்களை விட்டும் ஒதுங்கி வாழ்ந்து வந்தனர்.
ஒருமுறை, குறைஷகள் அவர்களது திருநாள் ஒன்றில் கூடி, அவர்கள் வழிபட்டு வந்த விக்கிரகத்தைச் சுற்றி வந்தனர். இவ்வாறு அவர்கள் ஆண்டுதோறும் செய்து வந்தனர். அந்த விக்கிரகத்துக்குப் பலிகளும் கொடுத்து வந்தனர். அப்போது, அவர்களுள் இருந்த வரகா பின் நவ்பல், உபைதுல்லாஹற் பின் ஜஹற்ஷ், உத்மான் பின் அல் ஹ"வைரித், ஷைத் பின் அம்ர் ஆகிய நால்வரும் இரகசியமாக அவர்களை விட்டு விலகிச் சென்று, தங்களுக்குள் நட்புறவுப் பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டனர். தங்களது சமுதாயத்தினர் நபி இப்றாஹீமின் மார்க்கத்தை மாசுபடுத்தி விட்டனர் என்றும் அவர்கள் சுற்றி வருவது கேட்கவும் பார்க்கவும் நன்மையோ தீமையோ செய்யவும் முடியாத வெறும் கல்லே என்றும் கருதினர். எனவே, அவர்களுள் ஒருவர் மற்றவர்களிடம், “உங்களுக்காக ஒரு மார்க்கத்தைத் தேடிக் கொள்ளுங்கள்: அல்லாஹற்வின் மீது சத்தியமாக நீங்கள் எந்த மார்க்கத்திலும் இல்லை”
GSBD

Page 32
mivat Iso ni J ATB பாகம் 1 பகுதி 1
என்று கூறினர். பின்னர், அவர்கள் இப்றாஹீமின் மார்க்கமான ஹனிபிய்யாவைத் தேடி, பல்வேறு நிலங்களுக்குப் பிரிந்து போயினர்.*
இவ்வாறு சத்திய நெறியைத் தேடுவதிலும் அந்த நெறியைப் பின்பற்றுவதிலும் ஆர்வம் கொண்டிருந்த இவர்கள் யூத மதத்தாலோ கிறித்தவ மதத்தாலோ தங்களின் ஆத்மிக வேட்கையைத் தணிக்க முடியாது என்பதை உணர்ந்திருந்தனர். இவர்களுட் பலர் தவ்ராத், இன்ஜில் ஆகிய வேதங்களில் நல்ல பரிச்சயம் உடையவர்களாய் இருந்தமையால், அந்த வேதங்களால் முன்னறிவிப்புச் செய்யப்பட்ட மற்றொரு சத்திய மதத்தின் தோற்றத்தையும் இறுதித் தீர்க்கதரிசியின் வரவையும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
fp 06
இஸ்லாத்திற்கு முந்திய கால அறேபியாவின் மக்கள் தொகை சுமார் 1,50,000 ஆகும். குடிகளுள் அதிகமானோர் பாலைவனங்களில், கூடாரங்களில் வாழ்ந்த நாடோடிகளாகவே இருந்தனர். இவர்கள் ‘அஹற்லுல் பாதியா (பதவிகள் - பாலைவன நாடோடிகள்) என்று அழைக்கப்பட்டனர். கிராமங்களிலும் நகரங்களிலும் குடியேறி, நிரந்தரமான வீடுகளில் வாழ்ந்தோர் சிறு தொகையினராகவே இருந்தனர். இவர்கள் ‘அஹற்லுல் ஹழரா' (நிரந்தரக் குடியேற்றவாசிகள்) என்று அழைக்கப்பட்டனர். தீபகற்பத்தில் வாழ்ந்த அறேபியர் சுதந்திர ஆண்-பெண்களையும் அடிமைகளையும் கொண்ட வர்க்கங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். ஓர் அன்னியன் திருமண உறவின் மூலம் ஒரு வர்க்கத்தின் நிரந்தரமான சுதந்திர உறுப்பினனாக முடிந்தது. ஒரு வெளிநாட்டான் அல்லது விடுதலை பெற்ற அடிமை கூட பாதுகாப்பிற்காகத் தன்னை வர்க்கம் ஒன்றோடு கூட்டிணைத்துக் கொள்ள முடிந்தது. அத்தகைய மனிதன் மவ்லா ( சாருனன்) என்று அழைக்கப்பட்டான்.
அக்கால அறேபியரிடையே நன்கு நிறுவப்பட்ட ஒரு சமூக அமைப்பு எதுவும் இருக்கவில்லை. முழு அறேபியாவையும் குலங்களின் அமைப்புக்களே நிறைத்திருந்தன. அறேபியரின் - குறிப்பாக நாடோடி அறேபியரின் - சமுதாய .அடிப்படையாக வர்க்க அமைப்பே இருந்தது , , 2 سے گی ؟ 6 db db 9460)LDLL ஒவ்வொரு கூடாரமும் அல்லது விடும் ஒரு குடும்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியது. ஒரு குடும்பம் கணவன், மனைவி,
இவர்களுள் வரகா, கிறித்தவ மதத்தைத் தழுவி வேதங்களைக் கற்றுணர்ந்தவர் உத்மானும் கிறித்தவராகி பைஸாந்தியப் பேரரசில் நல்லபதவி வகித்தார். உபைதுல்லாஹர் ஒரு ஹனீப் ஆக இருந்து முஸ்லிம் மனைவியான உம்மு ஹபீபாவோடு வாழ்ந்து பின்னர், அபிசீனியாவில் கிறித்தவராக மரணித்தார். ஷைத் பின் அம்ரோ இறுதி வரை ஒரு ஹனீபாக இருந்து மரணித்தார். (மேற்படி, பாகம் பக்கம் 252-26)

இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
கணவனின் பெற்றோர், அவனது திருமணமாகாத சகோதர ககோதரிகள், அடிமைகள் ஆகியோரைக் கொண்டதாய் இருந்தது. கூடாரங்களின் கூட்டம் அல்லது முகாம் ‘ஹய்ய் (சிறுகுலப் பிரிவு) என்று அழைக்கப்பட்டது. சிறு குலப்பிரிவின் உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு ‘கவ்ம் (குலம்) என்றும் இனக்குலங்கள் பலவற்றின் உறுப்பினர்களைக் கொண்டஅமைப்பு கபீலா (கோத்திரம்) என்றும் அழைக்கப்பட்டன. குலத்தை அல்லது தோத்திரத்தைச் சார்ந்தவர்களைக் குறிப்பிட குலப்பெயருக்கு முன்னால் ‘பனு’ (பிள்ளைகள்) என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. ஒரு குலத்தின் உறுப்பினர்கள் அனைவரும் ஒரே இரத்தத்தை உடையவர்களாகக் கருதப்பட்டனர். ஒவ்வொரு குலத்தினரும் அந்தக் குலத்தின் மூத்த உறுப்பினர் ஒருவரின் தலைமையை ஏற்று, அவருக்கு முற்றிலும் கட்டுப்பட்டு நடந்தனர். ஸய்யித் அல்லது ஷைக் என்று அழைக்கப்பட்ட குலத்தலைவராக வயதில் மட்டுமன்றி அறிவு, அனுபவம், செல்வாக்கு முதலான ஆள்தகைமைகளிலும் முதிர்ச்சி அடைந்த ஒருவரே தெரிவுசெய்யப்பட்டார். நீதி, படையெடுப்பு முதலான பொது விவகாரங்களில் தன்னிச்சையாக நடந்து கொள்ளும் உரிமை குலத்தலைவருக்கு இருக்கவில்லை. குடும்பத் தலைவர்களிலிருது தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்பட்டிருந்த மன்றத்தோடும் மற்றக் குலத்தலைவர்களோடும் கலந்தாலோசித்தே இந்த விவகாரங்களில் அவர் முடிவெடுத்தார். குல உறுப்பினர்களின் நன்மதிப்பு இருந்த வரை அவர் பதவி வகித்தார். அவரது இடம் வெறுமையான போது, அந்த இடத்திற்குத் தகுதியான வேறு ஒருவர் தெரிவு செய்யப்பட்டார்.
ஒரு குலத்தோடு வேறு குலங்கள் நேச ஒப்பந்தமும் செய்திருந்தி ருந்தன. அதனால், நேசக் குலங்கள் தங்களுக்குள் ஒருவர் மற்றவர்க்கு உதவியாகச் செயலாற்றக் கடமைப்பட்டிருந்தனர். பொது விவகாரங்களில் நேசக்குலங்கள் அனைத்தும் ஒரே குலமாக நடந்து கொண்டன. ஒரு நேசக் குலத்தார் தாம் ஏற்றுக் கொண்ட மற்றொரு நேசக்குலத்தாரின் உரிமைகளை மதித்து செயற்பட்டு வந்தனர். ஆயினும், ஒரு கோத்திரத்தாருக்கும் அதன் நேசக்குலங்களுக்கும் இடையே போர் நிகழ்ந்த சந்தர்ப்பங்களும் இஸ்லாத்திற்கு முந்திய கால அறேபியரின் வரலாற்றில் காணப்படுகின்றன.
ஒரு கோத்திரத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் ஒரே மனிதனாகச் செயற்பட்டு, தமது வர்க்கத்தைச் சேர்ந்த தனி மனிதன் ஒருவனைப் பாதுகாப்பதில் இணைந்து கொண்டனர். தனி மனிதன் ஒருவனின் மாண்பையும் வர்க்க இழுக்கையும் அவர்கள் வர்க்கத்தின் மாண்பாகவும் இழுக்காகவுமே கருதினர். ஒவ்வொரு குலத்தினனும் தனது
உணர்வு குலப்பெருமையைப் பேணிப் பாதுகாப்பதி லேயே கண்ணுங்கருத்துமாய் இருந்தான். அறேபியரின் குருதியோடும் இயல்போடும் உறைந்து போயிருந்த வர்க்க உணர்வு (அஸபிய்யா) வேறு எந்தச் சமுதாயத்தினரிடமும் காணப்பட முடியாத அளவுக்கு ஆழமாயும் மிக இறுக்கமாயும் வேரூன்றி இருந்தது. இந்தக் காலத்தில் தேசப்பற்று (Patriotism) என்று கூறப்படும் உணர்வுக்கு அறேபியரின் இந்த, வர்க்க
G5)

Page 33


Page 34
இஸ்லாமிய வரலாறு பாகம் பகுதி !
என்பாரைக் கொன்று விட்டார். இவ்வாறு ஆரம்பித்த இந்தச் சண்டை ‘ஹர்புல் தாஹிஸ் வல் ங்ப்ரா.’’ என்ற போராக மாறி, சுமார் நான்கு தசாப்தங்கள் வரை தொடர்ந்தது. இருபக்கத்திலும் பெரும் இழப்புக்களை எற்படுத்திய இந்தப் போர் பின்னர், துப்யான் வர்க்கத்தின் இரு தலைவர்களான ஹாரித் பின் அவ்ப், ஹரிம் பின் ஸினான் ஆகியோரின் பெரு முயற்சியால் சமாதானமாகத் தீர்த்து வைக்கப்பட்டது.*
மதீனாவில் வாழ்ந்த அவ்ஸ் வர்க்கத்தாருக்கும் கஷ்ரஜ் வர்க்கத்தாருக்குமிடையே வெடித்த ‘புஆத்' போர் சில தலைமுறைகள் தொடர்ந்தது. இந்தப் போரில், அவ்ஸ் வர்க்கத்தார் தமது நேசர்களான குறைழா, நளிர் ஆகிய வர்க்கங்களைச் சேர்ந்த யூதர்களின் உதவியோடு கஷ்ரஜ் வர்க்கத்தாருக்கு மிகுந்த இன்னல்கள் இழைத்து வந்தனர். நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செல்லும் வரை இந்தப் போரால் விளைந்த கசப்பும் பகையுணர்வும் இரு வர்க்கத்தாரையும் பிரித்து வைத்திருந்தன.* நபி (ஸல்) அவர்கள் சுமார் பதினைந்து வயதுச் சிறுவராய் இருந்த போது, குறைஷ கோத்திரத்தாருக்கும் அவர்களது நேசர்களான கினானா, கைஸ் அய்லான் ஆகிய குலங்களுக்குமிடையே ஒரு கொலை காரணமாக வெடித்த பிஜார்’ போர் (ஹர்புல் பிஜார்), ஹவாஷின் வர்க்கத்தாருக்கு எதிரான சண்டையாகப் பல ஆண்டுகள் வரை நீடித்தது. குருதி சிந்த விலக்கப்பட்ட புனித மாதங்களில் நிகழ்ந்த இந்தப் போரில் நபி (ஸல்) அவர்களும் தமது பெரிய தந்தை அபூ தாலிபோடு பங்கு பற்றியிருந்தார்கள். அந்தப் போரில் தாம் எதிரிகள் விட்டெறிந்த அம்புகளைப் பொறுக்கித் தமது பெரிய தந்தையிடம் கொடுத்து வந்ததாக அவர்கள் குறிப்பிட்டார்கள்.*
அறியாமைக்கால அறபுக் கவிதை இலக்கியம் இத்தகைய குலப் போர்கள் பற்றிய அழகான விவரணங்களைப் பாதுகாத்துத் தந்திருக்கிறது. இஸ்லாம் தோன்றுவதற்கு முந்திய ஐம்பது ஆண்டுகளில் மட்டும் அறேபியா 132 போர்களைக் கண்டிருக்கிறது என்று அறபு வரலாறுகள் கூறுகின்றன. ஜோசப் ஹெல் என்பார் தமது ‘அறபு நாகரிகம்' என்ற ஜெர்மன் நூலில் கூறுவது போல ‘அறேபியரிடம் தேசிய ஒற்றுமை உணர்வு இருக்கவில்லை. ஏனெனில், அவர்களிடம் வர்க்கமும் குடும்பமும் இருந்தனவே அன்றி, அறபு
9 27
தேசம் என்று ஒன்று இருக்கவில்லை.
இஸ்லாத்திற்கு முந்தியகால அறேபியரின் சமுதாயத்தில், ஒழுக்காறு
24. lbid, pp. 61-62 25. அபுல் ரஜிஅன் இஸ்ஹானி கித#யுல் அக#னி ப#கம i பக்கம் 162 26. இப்ன் ஹரிஷாம், பாகம் பக்கம் 208.2II: இப்ன் ஸத் தயகரதுல் குப்ரா, பாகம
tiši 126. 128 27. Joseph Hell, the Arab Civilization (Eng. trans) pp. 14-15

இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
களுக்கோ ஒழுக்கத்திற்கோ இடம் இருக்கவில்லை. துன்னடத்தைகளும் ஒழுக்கநிலை இறக்கமுமே அவர்களது சமுதாயத்தில் ஆழமாக வேரூன்றியிருந்தன. அவர்களது பால்சார் ஒழுக்கம் அதன் மிகத் தாழ்ந்த வற்றல் நிலையை அடைந்திருந்தது. அவர்கள் பாலியல் ஒழுககம ஒரு முறைக்கு அதிகமாகத் திருமணம் செய்தனர். கட்டுப்பாடில்லாத பலதார மணத்தையும் சுதந்திரமும் பட்டவர்த்தனமும் உடைய கூட்டுறவையும் (Concubinage) அவர்கள் பழக்கப்படுத்திக் கொண்டனர். தாம் விரும்பிய எவரையும் எத்தகைய வேறுபடுத்தலுமின்றி, அவர்கள் திருமணம் செய்து வந்தனர். மறுதாரத் தாய்மார், தந்தையர்களின் மரணத்திற்குப் பின்னர், பிற சொத்துக்களோடு அவர்களையும் மரபுரிமையாக அடைந்து கொண்ட அவர்களது மறுதாரப் பிள்ளைகளுக்கு மணம் செய்து வைக்கப்பட்டனர். விரும்பியவாறு எத்தனை பெண்களைத் திருமணம் செய்யவும் ஆண்கள் முழுச் சுதந்திரம் பெற்றிருந்தனர். அவ்வாறே, பெண்களும் தாம் விரும்பிய எண்ணிக்கையில் வம்புச் சிசுக்களைப் பெற்றெடுக்க அனுமதிக்கப்பட்டனர். சில சமயங்களில் திருமணமான பெண்கள் கூட சந்ததி விருத்திக்காக அல்லது உபசாரத்தின் அடையாளமாகப் பிற ஆண்களுடன் உடலுறவு கொள்ள அவர்களது கணவர்களால் அனுமதிக்கப்பட்டனர். அறேபியாவின் சில பகுதிகளில் பல்புருட மணமும் வழக்கில் இருந்தது. ஒவ்வொரு செல்வ அறேபியனும் ஒரே நேரத்தில் மனைவியர் பலரின் கணவனாக இருந்தான். ஒருவனது மனைவிகளினதும் வைப்புகளினதும் எண்ணிக்கைப் பெருக்கம் அவனது தகுதியையும் அந்தஸ்தையும் உயர்த்தும் காரணிகளுள் ஒன்றாகக் கருதப்பட்டது. திருமணம் என்பது அறேபியர்களுக்கு மிக எளிய ஒரு சடங்காகவே இருந்தது. அவர்களது சமுதாயத்தில் விபசாரம் சாதாரணமான ஒரு குற்றமாகக் கூடக் கருதப்படவில்லை.
இஸ்லாத்திற்கு முந்திய அறேபியாவில் ஆண் ஒருவனுக்கும் பெண் ஒருத்திக்கும் இடையிலான உடலுறவை நியாயப்படுத்தக் கூடிய பல்வேறு திருமண முறைகளும் உறவு வழிகளும் இருந்தன. அவற்றைப் பின்வருமாறு சுருக்கி விளக்கலாம்.
1. ஒப்பந்த முறையிலான திருமணம் :
இது இந்தக் காலத்தில் நிகழும் திருமண ஒப்பந்தத்தைப் போன்றது. இதில், ஆண்கள் பெண்களை அவர்களது தந்தையரின் அல்லது பாதுகாவலரின் அனுமதியோடு அவர்களுக்கு "மஹற்ர் கொடுத்துத் திருமணம் செய்து கொண்டனர்.
2. “இஸ்திப்ழா. உடலுறவு:
நல்ல சந்ததியை உருவாக்கும் நோக்கத்தோடு இந்த உடலுறவு
GED

Page 35
இஸ்லாமிய வரலாறு LITéBlb l பகுதி I
மேற்கொள்ளப்பட்டது. இதில், கணவன் தனது மனைவியை வீரம், துணிவு, அறிவு முதலான பண்புகளிற் சிறந்த அன்னியன் ஒருவனோடு உடலுறவு கொள்ள விட்டு வந்தான். அந்த அன்னியன் மூலம் அவள் கருவுறும் வரை அவளது கணவன் அவளை நெருங்குவதில்லை. பெரும்பாலும், பிள்ளைகள் இல்லாத கணவர்களே தமது மனைவியரை இத்தகைய உடலுறவுக்கு அனுமதித்து வந்தனர். இந்த உறவின் மூலம் பிறந்த குழந்தை கணவனுக்குரியதாகவே கருதப்பட்டது.
3. ‘முத்ஆ' திருமணம்:
இது ஒரு குறிப்பிட்டகாலத்திற்கு மட்டும் மேற்கொள்ளப்பட்ட திருமணம். இந்தத் தற்காலிகத் திருமணத்தில் ஒருவன் பெண் ஒருத்தியை 'மஹர் கொடுத்து, ஒரு வரையறுக்கப்பட்ட காலத்திற்கு மனைவியாக்கிக் கொண்டான். குறித்த காலம் முடிந்ததும் இருவரும் பிரிந்து விடுவர். பெரும்பாலும், இந்தத் திருமணம் பிரயாணிகள், அந்நிய நாட்டார், தூர இடங்களில் போர் செய்த வீரர்கள் முதலானோரால் பிரயாணங்களின் போதும் போர்களின் போதும் செய்யப்பட்டது.
4. "அக்தான்' உறவு:
ஒருவரை ஒருவர் காதலிக்கும் இருவர் எத்தகைய திருமண ஒப்பந்தமும் இல்லாமல், தங்களுக்குள் இரகசியமாக உடலுறவு வைத்துக் கொண்டமை அக்தான் (காதலர்) உறவு என்று அழைக்கப்பட்டது. அவர்கள் தாம் விரும்பிய காலம் வரை தங்களுக்குள் உடலுறவு வைத்துக் கொள்ள அறியாமைக் கால அறேபியர் சமுதாயம் அனுமதித்திருந்தது. ஆனால், அவர்களுக்கிடையில் உள்ள உறவு ஒருமுறை அம்பலமாகி விட்டால், அது இழிவாகக் கருதப்பட்டதோடு உறவையும் அத்துடன் முடித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. இந்தக் கள்ள உறவு அந் தரங்கமாக இருந்த வரையிலேயே அனுமதிக்கப்பட்டது.
5. “வரிங்ார்’ திருமணம்:
ஒருவர் தமது புதல் வியை அல்லது சகோதரியை மற்றொருவருக்கு அவரது புதல்விக்கு அல்லது சகோதரிக்குப் பதிலாக 'மஹற்ர் எதுவும் பெறாமலும் கொடுக்காமலும் திருமணம் செய்து வைத்தல் வழிங்ார்’ என்று அழைக்கப்பட்டது. இந்த வகையில் சிலர் தங்களது மனைவியரையும் மாற்றுத் திருமணம் செய்து கொண்டனர்.

இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி 1
6. மரபுரிமைத் திருமணம்:
(சொந்தத் தாய் அல்லாத) விதவைப் பெண்கள் அவர்களது இறந்துவிட்ட கணவர்களின் வாரிசுகளால் மரபுரிமைச் சொத்துக்களாக அடையப் பெற்றனர். இவ்வாறு விதவை ஒருத்தியைத் தமது சொத்தாக அடைந்த ஒருவர் அவளைத் திருமணம் செய்ய விரும்பினால், அவளது கணவனால் கொடுக்கப் பட்ட அதே அளவு 'மஹற்ர் தொகையைக் கொடுத்து, அவளைத் திருமணம் செய்து கொள்ள முடிந்தது. சில சமயங்களில் அவன் அவளை ‘மஹற்ர் தொகையைப் பெற்றுக் கொண்டு வேறொரு வனுக்கும் மணம் செய்து கொடுத்தான். அவளை மறுமணம் செய்யாமல் நிரந்தரமாக விதவைக் கோலத்தில் வைத்திருக்கவும் அவளை மரபுரிமையாக அடைந்தவனுக்கு உரிமை இருந்தது.
7. மக்தி திருமணம்:
ஒருவர் தமது தந்தையின் மனைவியை அவர் இறந்து விட்ட பின்னர் அல்லது அவர் அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் மணம் செய்து கொள்தலே இவ்வாறு அழைக்கப்பட்டது. இது மிகவும் வெறுக்கத்தக்க ஒரு திருமணமாக இருந்தமை யாலேயே நிகாஹரல் மக்தி (மிகவும் வெறுக்கத்தக்க திருமணம்) என்று அழைக்கப்படுகிறது. ஆயினும், அக்கால அறேபியர் சமுதாயம் இந்தத் திருமணத்தை ஏற்றுக் கொண்டிருந்தது.
8. சேவைத் திருமணம்:
சில வர்க்கங்களிடம் இந்தத் திருமண முறை காணப்பட்டது. ஒருவர் பெண் ஒருத்தியை ‘மஹற்ர்’ கொடுத்துத் திருமணம் செய்ய வசதியற்றிருந்தால், அவர் அவளது தந்தைக்கு அல்லது உறவினர்க்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு - 'மஹர் தொகையைச் சம்பாதித்துக் கொள்ளும் அளவிற்கு - ஊழியம் செய்ய இணங்கி, அவளைத் திருமணம் செய்து கொள்ள முடிந்தது. 9. ‘எர்ரீபு திருமணம்:
இது ஒருவகை செமித்திய திருமணம், செமித்தியத் தந்தை ஒருவருக்கு ஆண் மக்கள் இல்லாத போது, அவர் இளைஞன் ஒருவனைத் தத்தெடுத்துத் தமது சொந்த மகனாகக் கருதி வளர்த்து வந்ததோடு, அவனைத் தமது புதல்விகளுள் ஒருத்திக்குத் திருமணமும் செய்து வைத்தார். பிதா வமிசவழிப் பாரம்பரியத்துக்குப் பழக்கப்பட்டிருந்த அறேபியர் சமுதாயத்தில், இவ்வாறு தத்தெடுத்து வளர்க்கப்பட்ட மணமகன் சுவீகாரத் தந்தையாக இருந்து, பிதா வமிசவழியைப் பேணுவதோடு,

Page 36


Page 37
இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
இஸ்லாத்திற்கு முந்திய அறேபியரின் சமுதாயத்தில் பெண்களின் நிலை நிச்சயமற்றதாயும் வேதனைக்குரியதாயும் இருந்தது. அவர்களது சமுதாய அமைப்பின் பிதாமுதன்மைப்படிவம் பெண்களை ஆண்களுடைய உடைமைகளின் ஒரு பகுதி ஆக்கிற்று. நித்தியமான ஒரு பெண்களின் 66), அடிமைத் தளையினால் பிணைக்கப்பட்டிருந்த நிலைமை அவர்கள் விலங்குகளாகவும் அசையும் சொத்துக்களாகவும் ஆண்களின் காமப்பசியைத் தணிக்கும் கருவியாகவுமே மதிக்கப்பட்டனர். அவர்களுக்கெனச் சிறப்புரிமை எதுவும் இருக்கவில்லை. பெண் குழந்தை பிறத்தல் குடும்பத்திற்கு மட்டுமன்றிச் சமுதாயத்திற்கும் ஏற்படும் பெரும் சாபக்கேடாகக் கருதப்பட்டது. அதனால், பிறந்த உடனேயே பெண் குழந்தைகள் உயிருடன் மண்ணில் புதைக்க்பபட்டன. பனு தமீம், பனூ முழர் ஆகிய வர்க்கங்களைச் சேர்ந்த அறேபியரிடையே இந்தப் பழக்கம் அதிகமாகக் காணப்பட்டது. பெண்களுக்குத் தங்கள் பெற்றோரினதும் கணவர்களினதும் சொத்துக்களை மரபுரிமையாக அடையும் உரிமை இருக்கவில்லை. மாறாக, அவர்களே ஏனைய சொத்துக்களோடு மரபுரிமையின் ஒரு பகுதியாக ஆண்களால் அடையப்பட்டனர்.
இதுவே அறேபியாவில் வாழ்ந்த பெண்களின் பொதுவான நிலையாக இருந்த போதிலும்,சில சமயங்களில் அவர்கள் அவர்களது சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தும் செல்வாக்கும் பெற்று விளங்கினர். அவர்களுட் சிலர் தாமே தமது கணவர்களைத் தெரிவு செய்து கொள்ளவும் அதிருப்தி அல்லது பிணக்கு ஏற்பட்ட வேளைகளில் தமது சொந்தக் குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்லவும் வேண்டாதபோது விவாகவிலக்கு பெறவும் சில சமயங்களில் தாமே தம்மைத் திருமண பந்தத்தில் இணைத்துக் கொள்ளவும் உரிமை பெற்றிருந்தனர். பல சமயங்களில் அவர்கள் ஆண்களுக்குச் சமமானவர்களாயும் கூட்டாளிகளாயும் கருதப்பட்டனர். கவிஞர்களைக் கவிதை பாடவும் வீரர்களைப் போராடவும் அவர்கள் தூண்டிவந்தனர். பல சமயங்களில் ஆண்களின் பழிவாங்கும் உணர்வைத் தூண்டி அவர்களை வீராவேசம் கொள்ளச் செய்யும் பெரும் சக்தியாகப் பெண்களே இருந்தனர். சில சமயங்களில், பெண்களே துணிந்து, நேரிற் சென்று போராடித் தம்மையும் தம் வர்க்கத்தையும் காத்துக் கொள்ளும் அளவுக்கு வீரம் மிகுந்தவர்களாக விளங்கினர். இத்தகைய பெண்களுள் பாத்திமா பின்த் குர்ஸ"ப், புகைஹா, உம்ம் ஜமீலா முதலானோர் அறேபியரின் வீர வரலாற்றில் இடம்பிடித்துக் கொண்டவர்கள் ஆவர். அவர்களுட் சிலர் கவிதை இயற்றும் ஆற்றல் கைவரப்பெற்றவர்களாயும் நுண்ணறிவு படைத்தவர்களாயும் விளங்கினர். அறேபியர் சமுதாயத்தில் பெண்கள் மதிக்கப்பட்டனர் என்பதற்கு அறபுக் கவிஞர்களால் இயற்றப்பட்ட எந்தக் கவிதையும் பெண்களின் அழகையும் சுபாவங்களையும் மெச்சும் குறிப்புக்கள் இல்லாமல் இருக்கவில்லை என்ற உண்மை ஒன்றே போதிய சான்றாகும். ஆயினும், இந்த மதிப்பும

இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி 1
மரியாதையும் அறேபியர் சமுதாயத்தில் வாழ்ந்த எல்லாப் பெண்களுக்கும் கிடைத்து வந்தன என்று கூறிவிட முடியாது. உயர் குடிப்பிறப்பு, செல்வ மிகுதி, கவர்ச்சி முதலான தகைமகளைக் கொண்ட பெண்கள் மட்டுமே அவர்களால் மதிக்கப்பட்டுவந்தனர். அந்த மதிப்புககுக் கூட தசைக் கவர்ச்சியும் செல்வ வேட்கையுமே பின்னணிக்காரணங்களாக அமைந்திருந்தன.
இஸ்லாத்திற்கு முந்திய கால அறேபிய சமுதாயத்தில், அடிமை முறை பொதுவான ஒரு பழக்கமாக இருந்து வந்தது. அடிமைகள் போர்கள், கொள்ளை, விற்பனை ஆகியவற்றின் மூலம் பெறப்பட்டனர். போர்களில் கைதிகளாகப் பிடிக்கப்பட்டோர் பால், வயது, இன 9. டிமைகளின் வேறுபாடின்றி அடிமைகளாக்கப்பட்டனர். கொள்ளைக்காரர் நிலை கள் சிறுவர் - சிறுமியரைப் பிடித்துச் சென்று, தூர இடங்களில் இருந்த அடிமைச் சந்தைகளில் விற்றனர். அறேபியாவில் இருந்த அடிமைகள் வெள்ளை நிறத்தவராயும் கறுப்பு இனத்தவராயும் காணப்பட்டனர். வெள்ளை நிற அடிமைகள் உரோம, பாரசீக நாடுகளையும் கறுப்பு இன அடிமைகள் ஆபிரிக்க நாடுகளையும் சேர்ந்தவர்கள். அறேபியாவின் எல்லா இடங்களிலும் அடிமை வர்த்தகம் சுதந்திரமாக நடைபெற்று வந்தது. அறேபிய நகரங்களுள் வர்த்தக முயற்சிகளுக்குக் கேந்திர நிலையமாக விளங்கிய மக்காவிலேயே மிக அதிகமான அடிமைகள் வாழ்ந்தனர். அங்கிருந்த உகாள், துல் மஜாஷ் ஆகிய சந்தைகளில் அடிமை விற்பனை கிரமமாக நடந்து வந்தது.
ஒவ்வொரு அறேபியனும் அடிமை வியாபாரத்திற்கு பழக்கப்பட்டவனாக இருந்து வந்தான். அடிமைகள் அவர்களது எசமானர்களால் மிக மோசமாகவும் மனித நேயமில்லாமலும் நடத்தப்பட்டனர். அவர்கள் மனித இனத்திலுள்ள மிகத் தாழ்ந்த சிருட்டிகளாகக் கருதப்பட்டனர். எசமானர்களுக்காக ஊழியம் செய்தல், போர்களிற் பங்குகொண்டு சண்டையிடுதல், பணம் சம்பாதித்துக் கொடுத்தல் முதலியன அவர்களது கடப்பாடுகளாக இருந்தன. அடிமைப் பெண்கள் எசமானரின் காமப்பசியைத் தணிப்பதற்காகவும் விபசாரத்தின் மூலம் பொருளிட்டிக் கொடுப்பதற்காகவும் குற்றேவல் செய்வதற்காகவும் பயன்படுத்தப்பட்டனர். அடிமைகள் தங்களுக்குள் திருமண உறவை ஏற்படுத்திக் கொள்வதை எசமானர்கள் விரும்பவில்லை. அதனால், மண வாழ்க்கை அவர்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்தது. எத்தகைய நியாய மான காரணமும் இல்லாமல் அடிமைகளைக் கொல்வதற்குக் கூட அவர்களது எசமானர்களுக்கு உரிமை இருந்தது. அப்பாவி அடிமைகள் கூட அவர்களது எசமானர்களால் கொடுரமாக வதை செய்யப்பட்டனர். அறேபியரின் சமுதாயத் தில் அவர்களுக்கு எந்த உரிமையும் அளிக்கப்படவில்லை. சமகால உலகின் வேறு பகுதிகளில் வாழ்ந்த அடிமைகளின் நிலையை விடவும் அறேபியரின் சமுதாயத்தில் வாழ்ந்த அடிமைகளின் நிலை மிக மோசமானதாய் இருந்தது.

Page 38
இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
மதுபானம் அருந்துதல், சூதாடுதல், கொள்ளையடித்தல் முதலிய துன்னடத்தைகள் இஸ்லாத்திற்கு முந்திய கால அறேபியருடைய சமூக வாழ்வின் பிரதான குணவியல்புகளாக இருந்தன. அறபு நாடெங்கும் மதுக்கடைகளும் மதுபானச் சாலைகளும் நிறைந்து hl60 60 Lb 60) bởb6 காணப்பட்டன. அவற்றின் எண்ணிக்கை அறேபியர் வழிபட்டு வந்த சிலைகளின் எண்ணிக்கையை விடவும் அதிகமாக இருந்தது. அவற்றில் இரவு - பகல் என்றில்லாமல் வியாபாரம் நடைபெற்று வந்தது. மதுக் கடைகளை மற்றக் கடைகளிலிருந்து வேறுபடுத்திக்காட்ட விசேடமான கொடிகள் தொங்கவிடப்பட்டிருந்தன. மதுபானங்களுக்கு அவற்றின் உற்பத்தி இடம், மதுசாரச் செறிவு விகிதம், மூலப் பொருட்கள் (பழங்கள்), தாக்க திறன், தூய்மை, நிறம், சுவை, தயாரிக்கப்படும் விதம் முதலான தன்மைகளுக்கு ஏற்ப நூற்றுக்கணக்கான பெயர்களை அறேபியர் சூட்டி இருந்தனர். மதுச்சாடிகள் இல்லாத எந்த வீடும் அங்கு இருக்கவில்லை. ஒவ்வொரு அறேபியனும் மதுவுக்கு அடிமையாகி இருந்தான். அதிகமாகக் குடித்தலும் மதுபானங்களை நண்பர்களுக்குப் பரிமாறலும் மாண்பு, வீரம், ஒழுக்கம், பெருந்தன்மை முதலான அவர்களது பண்புகளின் சின்னங்களாக இருந்தன. மதுபானம் அருந்துதலைக் கைவிட்ட தமது சொந்தக் குலத்தைச் சேர்ந்த மக்களைக் கூட அவர்கள் நிராகரித்தனர். பிஜார்’ சண்டைகளின் காரணகர்த்தாவான பர்ராழ் பின் கைஸ் என்பார் மது அருந்துதலையும் கற்பழித்தலையும் கைவிட்டமைக்காக அவரது சொந்தக் குலமான ழம்ரா வர்க்கத்தாலும் பின்னர் அவர் அபயம் தேடிய மற்றொரு வர்க்கத்தாலும் துரத்தப்பட்டார்."
சூதாட்டமும் அவர்களால் விருப்புக்குரிய ஒரு பொழுதுபோக்காகவும் தொழிலாகவும் கருதப்பட்டது. பணத்தையும் ஏனைய பண்டங்களையும் மட்டு மன்றித் தங்கள் மனைவிகளையும் பணயமாக வைத்து அவர்கள் சூதாடினர். கொள்ளையடித்தலும் அவர்களால் விழுமிய தொழிலாகவும் ஆண்மையின் அடையாளமாகவும் கருதப்பட்டது. அறபு நாடோடிகளைப் பொறுத்த வரை, கொள்ளையடித்தலே அவர்களது பிரதான தொழிலாக இருந்தது. உடைமை களை மட்டுமன்றிக் குழந்தைகளைக் கூட அவர்கள் அபகரித்துச் சென்று, அடிமைச் சந்தைகளில் விற்றனர். முழுச் சமுதாயமும் மூடநம்பிக்கை, துன்ன டத்தை, மிலேச்சம் ஆகியவற்றின் சகதியில் மூழ்கிக் கிடந்தது. குறிகேளாமலும் சகுனம் பார்க்காமலும் எந்த வேலையையும் மேற்கொள்ளாத அளவுக்கு அவர்கள் மூடநம்பிக்கை உடையவர்களாக இருந்தனர். அம்புகள், எதிர்வு காண்டல், மாந்திரீகம், பறவைகள், பாசிமணிகள் முதலியவற்றைக் கொண்டும் மறைவானவற்றைப் பற்றி அறிவுடையவை என்று அவர்களால் கருதப்பட்ட பிற பொருள்களைக் கொண்டும் குறிபார்த்தே அவர்கள் தமது அலுவல்களை ஆரம்பித்தனர். 30. S. Khuda Bukhsh, Contribution to the History of Islamic Civilization, Vol. 1
p. 168

இஸ்லாமிய வரலாறு Lumblib 1 Lig55 1
இத்தகைய ஒழுக்க சீர்கேட்டிற்கிடையிலும் அறியாமைக் கால அறேபியர் சிறந்த மொழி ஆற்றல், விருந்தோம்பல், வீரம் முதலான விழுமிய பண்புகளின் சொந்தக்காரர்களாயும் விளங்கினர். அறபு மொழியில் விழுமிய விழுமிய பண்புகள் ஆற்றல் பெற்றிருந்த அவர்களுட் பலர் நல்ல மேடைப் பேச்சாளர்களாக இருந்தனர். அவர்களது பேச்சுமொழி திருத்தமும் தூய்மையும் உடையதாய் இருந்தது. விருந்தோம்பலும் அறேபியரின் குறிப்பிடத்தகுந்த குணவியல்பாக இருந்தது. அது அவர்களது இயற்கைக் குணங்களுள் ஒன்றாகவும் விளங்கியது. 'நீ பட்டினி கிடந்தாலும் உனது விருந்தினனுக்கு உணவளி என்பது விருந்தோம்பலைப் பொறுத்தவரை அவர்களது பூட்கையாக இருந்தது. தங்கள் குழந்தைகளை விடவும் அதிகமாக நேசித்து வளர்த்த ஒட்டகைகளைக் கூட அவர்கள் தங்கள் விருந்தினர் களுக்காகக் கொல்வதற்கு ஆயத்தமாக இருந்தனர். இக்கால அறேபியாகூட விருந்தோம்பும் பண்பில் இணையற்றவர்களாகவே காணப்படுகின்றனர். அறேபியரைப் போல விருந்தோம்பலுக்குப் புகழ்பெற்ற வேறெந்த மக்கள் கூட்டத்தையும் உலகிலே பார்க்கமுடியாது. ஸ்டான்லீ லேன் பூல் என்பார் கூறுவது போல, “அறேபியரின் விருந்தோம்பல் ஒரு பழமொழியாக இருக்கிறது. ஆனால், அது பல மொழிகளைப் போலன்றி, நிச்சயமான ஒரு உண்மை ஆகும்.”
வீரமும் சுதந்திர காதலும் அறேபியரின் விழுமிய இயல்புகளாக இருந்தன. சுதந்திர உணர்வையும் வீரத்தையும் அவர்கள் வெகுவாகக் கண்ணியப்படுத்தினர். சுதந்திரத்திற்காக அவர்கள் ஆவி உட்பட அனைத்தை யும் தியாகம் செய்ய ஆயத்தமாக இருந்தனர். பல சமயங்களில், அவர்களுள் ஒரு சிறிய குழுவினரே சக்தி மிகுந்த உரோமர்களுக்கும் ஆற்றல் வாய்ந்த படையெடுப்பாளர்களுக்கும் எதிராகத் துணிச்சலோடு போரிட்டு, அவர்களை அறேபியாவிலிருந்து துரத்தினர்.
மேலும், போர்களில் வீரத்தைக் காட்டுதல், ஆபத்துக்களில் சகிப்புத்தன்மையோடிருத்தல், நண்பர்களுக்கு விசுவாசமாக இருத்தல், வாக்குறுதிகளை நிறைவேறறுதல், செல்வத்தைத் தாராளமாகச் செலவிடுதல், பலவீனரைப் பாதுகாத்தல், பலமுடையோர்க்குப் பணியமறுத்தல், யாத்திரிகர்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் உதவுதல், தன்மதிப்புணர்வு, பழிவாங்க அஞ்சாமை முதலியனவும் அறேபியரின் இயற்கையான இயல்புகளாக இருந்தன. இவை "முருஆ அல்லது 'முரூவா (ஆண்மை) என்று அழைக்கப்பட்டன.
நண்பர்களுக்கு நண்பராயும் பகைவர்க்குப் பகைவராயும் வாழ்ந்த அறேபியரின் பழிவாங்கும் சுபாவம் வரலாற்றுப் பிரசித்தம் வாய்ந்தது. நண்பர்களுக்காகத் தம் இன்னுயிரைக் கூட அர்ப்பணிக்கச் சித்தமாக இருந்த அவர்கள் பகைவர்களை மன்னிக்க எந்தச் சமயத்திலும் ஆயத்தமாக இருக்கவில்லை. அடித்தவனைத் திருப்பி அடிக்காதவன் கோழை என்பது
31.S. Lane Poole, The Table - Talk of Prophet Muhammad, p.7
G6)

Page 39


Page 40


Page 41
இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி 1
இந்த வர்த்தகக் குழுக்கள் பெரும் பாதுகாப்புடன் தமது பயணங்களை மேற்கொண்டன. வர்த்தகக் குழுவுக்குப் பாதுகாப்பு வழங்க அஹபிஷ்' என்று அழைக்கப்பட்ட அபீசீனியக் கூலிப்படை ஒன்றை அவர்கள் நியமித்திருந்தனர். போர் முனைக்குச் செல்லும் படையணிகளைப் போலபபயணம் மேற்கொண்ட இந்த வணிகர் குழுக்கள் தமது பயணங்களின் போது ‘தலில்’ என்று அழைக்கப்பட்ட வழிகாட்டிகள், கபிர்’ என்று அழைக்கப்பட்ட காவற்படை வீரர் முதலானோரின் சேவைகளையும் பெற்றுவந்தன.
இவ்வாறு, அறேபியாவின் பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வு காணப்பட்ட போதிலும், சமகால உலகில் ஓரளவு விருத்தி பெற்று விளங்கிய பிறநாடுகளின் பொருளாதார நிலையை விடவும் அறியாமைக்கால அறேபியாவின் பொருளாதார நிலை மிகத் தாழ்ந்ததாகவே இருந்தது. இத்தகைய ஒரு பொருளாதார மந்தம் அறேபியாவில் காணப்பட்டமைக்குப் பின்வருவனவற்றைக் காரணங்களாகக் குறிப்பிடலாம்:
1 அறேபியாவின் மண் விவசாயத்திற்குப் பொருத்தமற்றதாக இருந்தது. அங்கே போதிய மழை வீழ்ச்சியோ நீர்ப்பாசனத்துக்குரிய வேறு வசதிகளோ இருக்கவில்லை.
2. அறேபியாவின் பெரும்பகுதி வரண்ட பாலைநிலமாக இருந்தமையால், கைத்தொழில் முயற்சிகளுக்கு இன்றியமையாத மூலவளங்கள் அங்கு கிடைக்கவில்லை. நல்ல மூலதனம், கைத்தொழில்கள் பற்றிய அறிவு என்பனவும் அறேபியரிடம் போதிய அளவில் இருக்கவில்லை.
3. வெளிநாடுகளுடன் ஒழுங்கான வர்த்தகத் தொடர்புகளைப் பேணுவதற்குத் தேவையான வசதிகளும் போதிய அளவில் அறேபியாவில் இருக்கவில்லை. முறையான போக்குவரத்தை மேற்கொள்வதற்கான நெடுஞ்சாலைகளோ கால்வாய்களோ அங்கு அமைக்கப்பட்டிருக்கவில்லை.
4. பண்டைய அறபு சமுதாயத்தினர் மற்ற சமூகங்களைச் சேர்ந்த மக்களை விடவும் இயல்பிலும் பழக்க வழக்கங்களிலும் வேறுபட்டவர்களாக இருந்தனர். பெரும்பான்மையான அறேபியர் வெளிநாடுகளோடு எத்தகைய தொடர்பும் அற்றவர்களாகவே வாழ்ந்தனர். இத்தகைய காரணங்களால், அக்கால அறேபியர் வாழ்வில் பொருளாதார வளம் காணப்படவில்லை.

இஸ்லாமிய வரலாறு Issabib U(595. 1
GGDTFTJ GOOGD
இஸ்லாத்திற்கு முந்திய கால அறேபியாவில், அறேபியரது வாழ்வின் ஏனைய அம்சங்களை விடவும் அவர்களது கலாச்சார நிலை ஓரளவு மேம்பட்டதாக இருந்தது என்றே கூறவேண்டும். அறேபியா அறியாமையின் முழு ஆதிக்கத்தின் கீழ் இருந்த போதிலும், அறேபியரிடையே எழுத, வாசிக்கத் தெரிந்த சிலர் இருந்தனர். இஸ்லாம் தோன்றுவதற்குச் சற்று முன்னர் உள்ள காலப் பகுதியில், மக்காவில் மட்டும் எழுத, வாசிக்கத் தெரிந்தோர் பதினேழு பேர் இருந்தனர். பண்பாட்டுவிருத்தி அடைந்தோரின் எண்ணிக்கை குறைவாக இருந்தபோதிலும்,அவர்களின் அறிவும் இரசனையும் ஏழ்மைப்பட்டு இருக்கவில்லை. பண்பாட்டு விருத்தியும் கல்வியறிவும் பெற்றிருந்தோரை மதிக்கும் பண்பும் அந்த அறேபியரிடத்தில் இருந்தது.
அறேபியர் தமது கலாசார வாழ்வில், கவிதையின்பால் பெருவேட்கையும் உளச்சார்பும் கொண்டிருந்தனர். கவிதை அவர்களது பிரதான இலக்கிய ஊடகமாக மட்டுமன்றி, அவர்களது சமுக, கலாசார, அறிவியல் நிலைமைகளைப் பிரதிபலிக்கும் ஓர் ஆடியாகவும் இருந்தது. கவிதை
அவர்களது சமுதாயத்தில், கவிஞனுக்கு மிக உன்னதமான இடம் அளிக்கப்பட்டிருந்தது. அவன் மிகுந்த சிறப்புக்கும் புகழுக்கும் உரிய ஒரு மனிதனாக விளங்கினான். தான் விரும்பும் திசையில் மக்களின் பற்றுணர்வை அசைத்துவிடும் ஆற்றல்வாய்ந்தவனாகவும் அவன் இருந்தான். கவிஞனில் ஆவி குடிகொண்டிருக்கிறது என்று மக்கள் நம்பினர். அதனால், அவர்கள் கவிஞனின் ஆற்றல், அழகிய கவிதைகள் ஆகியவற்றிற்காக அவனுக்கு மதிப் பளித்து வந்த அதேவேளையில் ,அவனை அஞ்சியவர்களாகவும் இருந்தனர். “அறேபியரின் வர்க்கம் ஒன்றில் கவிஞன் ஒருவன் தோன்றினால், நேச வர்க்கங்களைச் சேர்ந்த மக்கள் 5تظإك வர்க்கத்தாரிடம் சென்று, அவர்களுக்கு நல்லதிர்ஷ்டம் ஏற்பட வாழ்த்துவார்கள்: விருந்து ஏற்பாடுகள் நடைபெறும்; அந்த வர்க்கத்தின் பெண்கள் கூட்டமாகக் கூடி, திருமண விழாக்களில் செய்வதைப் போல வீணை மீட்டுவார்கள்: ஆண்களும் சிறுவர்களும் ஒருவரை மற்றவர் வாழ்த்திக் கொள்வார்கள். இத்தனையும் அவர்கள் அனைவரினதும் கெளரவத்தைப் பாதுகாக்கும் அரணாகவும் அவர்களது நற்பெயரிலிருந்து அவமானத்தை அகற்றும் ஆயுதமாகவும் அவர்களது புகழார்ந்த செயல்களை நினைவுபடுத்தி, அவர்களது கீர்த்தியை எக்காலமும் நிலைநிறுத்தும் கருவியாகவும் கவிஞன் இருக்கிறான் என்பதற்காகவே நிகழும.”*
33. இப்னி ரஷீத் அல் உந்தர், பாகம் பக்கம் 65
G13)

Page 42


Page 43
இஸ்லாமிய வரலாறு L Tibib l .. (3535 |
சந்தை கூடும் இடங்களில் கவிதைப் போட்டிகளையும் அரங்கேற்றங்களையும் தவறாமல் ஒழுங்கு செய்யும் அளவுக்கு அறேபியர் கவிதை மேல் கொண்டிருந்த காதல் அதிகமானதாயும் தீவிரமானதாயும் p೨iqui' ಡಿಟ್ಲಕ್ಹ" ಸ್ನೈಕ್ಲಿಕ್ಹ முஹாரம ஆகிய மாதங்களால, தாயபுககும நக்லாவுக்கும் இடையில் உள்ள உகாள் என்ற சிறு நகரத்திலும் மக்காவில் உள்ள துல் மஜாஷ் என்ற இடத்திலும் கூடிய சந்தைகளில் கவிதைப் போட்டிகளும் அரங்கேற்றங்களும் நடத்தப்பட்டன. தீபகற்பத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்வேறு வர்க்கங்களைச் சேர்ந்த கவிஞர்கள் வந்து, போட்டிகளில் பங்கு கொண்டு, தத்தம் கவிதைகளை அரங்கேற்றினர். மிகச் சிறந்தது எனத் தெரிவு செய்யப்பட்ட ‘களிலிதா” எகிப்தியப் பட்டுத் துணியில் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்பட்டு, புனித கட்பாவின் சுவரில் தொங்க விடப்பட்டது. இத்தகைய ‘கஸிதாக்கள் முஅல்லகாத் (தொங்கவிடப்பட்டவை) என்று அழைக்கப்பட்டன. நபி (ஸல்) அவர்களது காலத்தில் இம்ரு உல் கைஸ், தரபா, அம்ர் பின் குல்தூம், ஹாரித் பின் ஹில்லிஷா, அன்தரா, ஷ"ஹைர், லபீத் ஆகிய அறபுக் கவிஞர்களால் இயற்றப்பட்ட ஏழு முஅல்லகாத்துகள் கட்பாவின் சுவர்களில் தொங்கவிடப்பட்டிருந்தன. இடைக்கால அறபு இலக்கிய விமர்சகர்கள் இந்த முஅல்லகாத்துகளை இஸ்லாத்திற்கு முந்திய அறபுக் கவிதையின் மிகச் சிறந்த இலக்கியப் படைப்புக்களாகக் கருதினர். இன்று கூட அவை அறபு இலக்கிய விமர்சகர்களால் சிறந்த படைப்புக்களாகப் போற்றப்படுகின்றன.
இஸ்லாத்திற்கு முந்திய அறேபியாவில், ஏழு முஅல்லகாத்துகளை எழுதிய கவிஞர்களோடு நாபிங்ா, அட்ஷா, அல்கமா, கன்ஸா முதலான பலர் புகழ்பெற்ற அறபுக்கவிஞர்களாக விளங்கினர், அவர்களுள் மகா கவியாக விளங்கிய இமருஉல் கைஸ் அக்கால அறபுக் கவிஞர்களின் மன்னராகக் கருதப்பட்டார். முதல் முஅல்லகாத்தை இயற்றிப் பரிசில் பெற்ற பெருமையும் இவரையே சாரும். இன்று கூட அறபு இலக்கிய விமர்சகர்களாலும் வாசகர்களாலும் போற்றப்படும் இவரது கவிதைகள் இஸ்லாத்திற்கு முந்திய கால அறபுக் கவிதை இலக்கியத்தின் வளர்ச்சியையும் மறுமலர்ச்சியையும் அளவிட உதவும் கருவியாக விளங்குகின்றன. இவருக்கு அடுத்த
பண்டைய அறபுக் கவிதையைப் பொறுத்தவரை, சுமார் 125 அறபுக் கவிஞர்களின் கவிதைகள் தொகுக்கப்பெற்று, இன்று கிடைக்கக் கூடியனவாய் இருக்கின்றன. ‘தீவான்’ (தொகுப்பு) என்று பொதுவாக அழைக்கப்படும் இந்தக் கவிதைத் தொகுதிகள் பல்வேறு பெயர்களில் கவிதைத் S S LL L LLL S S S
பிற்காலத்தில் தொகுத்து வெளியிடப்பட்டவை. அவற்றுள் தொகு திகள் முஅல்லபாத் கவிதைகள் ஏழும் உமய்யாக்கள் காலத்தில்

இஸ்லாமிய வரலாறு பாகம் i பகுதி 1
வாழ்ந்து அப்பாஸியாக்கள் காலத்தில் மரணமான ஹம்மாத் அல் ராவியா (மரணம் கி.பி.772) என்பாரால் தொகுக்கப்பட்டன. இந்தத் தொகுதி இன்று பல ஐரோப்பிய மொழிகளிலும் பெயர்க்கப்பட்டிருக்கிறது. அப்பாஸிய கலிபா அல் மன்ஸரின் சமகாலத்தவரான முபழழல் அல் ழப்பி என்பார் 47 பண்டைய அறபுக் கவிஞர்களின் ‘கஸிதாக்களைத் தொகுத்து 'அல் முபழழலிய்யாதீஎன்ற பெயரில் விெயிட்டார். அறபுக் கவிஞரான ஷன்பரா என்பாரின் புகழ்பெற்ற ‘லாமிய்யதுல் அறப் (லாமிய்யா) என்ற கவிதை உட்பட நாபிங்ா, அ.ஷா, அல்கமா முதலானோரின் 128 கஸிதாக்கள் இந்தத் தொகுப்பில் காணப்படுகின்றன. இந்தக் கவிதைத் தொகுதி ஸர். சார்லஸ் லையால் என்பாரால் மூன்று பாகங்களில், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
அப்பாஸிய கலிபாக்களான அல் ம."மூன், மு.'தஸம் ஆகியோரின் சம காலத்தவரான அபூ தம்மாம் (மரணம் கி. பி. 850) என்பார் ‘அல் ஹமாஸா' (வீரம்) என்ற பெயரில் மற்றொரு கவிதைத் தொகுதியைத் தொகுத்துத் தந்திருக்கிறார். பத்துப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இந்தத் தொகுதியின் முதற் பகுதியான ‘பாபுல் ஹமாஸா மற்றப் பகுதிகளை விடவும் நீளமானது. ஏழாம், எட்டாம் பகுதிகள் மிகக் குறுகியவை; சில பக்கங்களை மட்டும் கொண்டவை. வீரம் (ஹமாஸா), கையறு நிலை (மராதி), ஒழுக்கம் (அதப்), காதல் (நஸிப்), வசை (ஹிஜா."), விருந்தோம்பலும் புகழ்ச்சியும் (அழ்யாப் வல் மதீஹற்), வருணனைகள் (ஸிபாத்), பிரயாணமும் தூக்கமும் (ஸய்ர் வல் நுஆஸ்), கதைகள் (முலஹற்), பெண்களின் நிந்தனை (மதம்மதில் நிஸா..) முதலான தலைப்புக்களில் பண்டைய அறபுக் கவிஞர்களின் முழுமையான கவிதைகளும் நீண்ட கவிதைகளிலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகளும் சிறிய கவிதைகளும் இதில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. அல்ஹமாஸா’ என்ற இதே பெயரில் அபூ தம்மாமின் இளைய தலைமுறையைச் சேர்ந்த புஹற்துரீ (கி. பி. 820-97) என்பாரும் பண்டைய அறபுக் கவிதைகளைத் தொகுத்திருக்கிறார். ஆயினும், அபூதம்மாமின் தொகுப்பை விடவும் இது தரத்தில் குறைந்தது என்பதே விமர்சகர்களின் கருத்து ஆகும். ஸ்பானிய மொழியியலாளரான அல் அட்லம் (மரணம் கி.பி. 1083) என்பார் நாபிங்ா, அன்தரா, தரபா, ஷ"ஹைர், அல்கமா, இம்ருஉல் கைஸ் ஆகிய கவிஞர் அறுவரினதும் கவிதைகளை ஒரு ‘தீவானாகத் தொகுத்திருக்கிறார். மற்றொரு மொழியியலாளரான அல் ஸக்கரீ (மரணம் 888) என்பார் ஹ"தைல் வர்க்கத்தைச் சேர்ந்த அறபுக் கவிஞர்களின் கவிதைகளை “அஷ்ஆருல் ஹ"தலிய்யீன்' என்ற பெயரில் தொகுத்துத் தந்திருக்கிறார். கி.பி. 1000ஆம் ஆண்டளவில், அபூ ஷைத் முஹம்மத் அல் குரவr என்பாரால் தொகுக்கப்பெற்ற 'அல் ஜம்ஹரது அஷ்ஆரில் அறப் என்ற கவிதைத் தொகுதியில் பண்டைய அறபுக் கவிஞர்களின் 49 களிதாக்கள் காணப்படுகின்றன.
G)

Page 44
இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
இவற்றைத் தவிர வாழ்க்கை வரலாறு, மொழியியல் முதலான துறைகளில், பிற்காலத்தில் எழுதப்பட்ட பல நூல்களிலும் பண்டைய அறபுக் கவிதைகள் மேற்கோள்களாகக் காட்டப்பட்டிருக்கின்றன.அத்தகைய நூல்களுள் அபுல் பரஜ் அல் இஸ்பஹானி எழுதிய ‘கிதாபுல் அங்ானி, அபூ அலி அல் காலி எழுதிய ‘கிதாபுல் அமாலீ, அல் முபர்ரத் எழுதிய 'அல் காமில், அப்துல் காதிர் அல் பங்தாதி எழுதிய கிஷானதுல் அறப் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.இவ்வாறு தொகுக்கப்பட்ட கவிதைகளை இயற்றிய அறபுக் கவிஞர்கள் அனைவருமே கி. பி. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள். அவர்களுட் சிலர் பின்னர் இஸ்லாத்தை ஏற்று, முஸ்லிம்களாக வாழ்ந்தவர்கள்.
இந்தக் கவிதைகள் அனைத்துமே அக்காலத்தில் எழுத்துருப் பெறாதவை. ஏனெனில், அப்போது எழுதும் கலை அறேபியரிடையே பொதுப்புழக்கத்திற்கு வந்திருக்கவில்லை. இந்தக் கவிதைகள் யாவும் வாய் மொழி வழியாகவே பாதுகாக்கப்பட்டு வந்தன. L 600 60) | இதற்கு அறேபியரில் இயல்பாக அமைந்திருந்த கவிதையின் மரபு அபார நினைவாற்றல் பெரிதும் உதவியது. ஒவ்வொரு கவிஞருக்கும் சொந்தமாக ‘ராவி' (அறிவிப்பவர் அல்லது ஒதுபவர்) ஒருவர் இருந்தார். கவிஞர் சென்ற இடமெல்லாம் இந்த ‘ராவீயும் கூடவே சென்று, கவிஞர் அவ்வப்போது இயற்றிப் பாடிய கவிதைகளை மனனஞ் செய்து, மற்றவர்களுக்கு அறிவித்து வந்தார். அவற்றை மக்கள் மனனமிட்டு, சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் அவற்றைத் தாம் பாடியும் மற்றவர்களுக்கு அறிவித்தும் வந்தனர். சில சமயங்களில் ஒரு கவிஞரே மற்றொரு கவிஞரின் ‘ராவியாக இருந்து வந்தார். கவிஞர் ஷ"ஹைர், அவரது வளர்ப்புத் தந்தையும் கவிஞருமான அவ்ஸ் பின் ஹஜர் என்பாருக்கு ‘ராவியாக இருந்தார். அதேசமயம், கவிஞர் அல்ஹ"தய்ஆ, ஷ"ஹைரின் ‘ராவியாக இருந்தார். இவ்வாறே, அக்கால அறேபியரின் கவிதை மட்டுமன்றி, உரை நடை இலக்கியங்களும் பிற தகவல்களும் எமக்குக் கிடைத்திருக்கின்றன. ஆயினும், இந்த வாய் மொழிமரபில் காணப்படும் இயல்பான குறைபாடு காரணமாக, கலப்படம் செய்யப்பட்ட கவிதைகளும் பண்டைய அறபுக்கவிதை இலக்கியத்தில் புகுந்துவிடாமல் இல்லை.
அறியாமைக் கால அறேபியரின் இலக்கியத்தில் கவிதை சிறப்பிடம் பெற்ற அளவுக்கு உரைநடை இலக்கியம் முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை. எழுதும் கலை போதிய அளவுக்கு அவர்களிடையே அறிமுகம் பெறாமையே இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஆயினும்,
Ꭷ 60ᎠᎫ fᏏ60ᎠᏞ அறபு உரைநடை இலக்கியத்திற்கு அவர்களது இலக் கியம் காலத்திலேயே வித்திடப்பட்டது என்று கூறினால் அது மிகையான கூற்றாக இருக்காது. ஏனெனில்,

இஸ்லாமிய வரலாறு LT3bb 1 Lugg 1
உரைநடை சார்ந்த சில துறைகளில் அவர்களுக்கு இயல்பாக இருந்து வந்த ஆர்வம் பிற்காலத்தில், அந்தத் துறைகளில் நல்ல இலக்கியங்களை அவர்கள் படைப்பதற்குக் காரணியாக அமைந்தது. இதற்கு உதாரணமாகக் கதை சொல்லும் கலையைக் கொள்ளலாம். இந்தக்கலையில் அவர்கள் காட்டிய ஆர்வம் பிற்காலத்தில், வரலாற்றுத்துறையில் ஈடுபாடு கொள்ளவும் புகழ்பெற்ற வரலாற்று நூல்களை ஆக்கவும் அவர்களைத் தூண்டியது.
அக்கால அறேபியர் பேச்சுக்கலையில் வல்லவர்களாக இருந்தனர். அறபு நாடோடிகள் கூட மொழித் தூய்மையோடு நன்கு பேசும் ஆற்றல் பெற்றிருந்தனர். அந்த அறேபியரிடையே நல்ல நாவலர்கள் பலர் இருந்தனர். பேச்சுவன்மை ஒரு மாபெரும் அருளாகவும் மற்றவர்களிடம் பெருமையடித்துக் கொள்வதற்குரிய தகுதியாகவும் அவர்களால் கருதப்பட்டது. ‘மனிதனது அழகு அவனது நாவன்மையிலேயே இருக்கிறது என்று அவர்களது பழமொழி ஒன்று கூறுகிறது. நாவன்மையும், வில்லெறிதல், குதிரைச் சவாரி செய்யும் திறன் ஆகியனவும் ‘சம்பூரண மனிதன் (காமில்) ஒருவனின் மூன்று அடிப்படைப் பண்புகளாகக் கருதப்பட்டன. ஒவ்வொரு வர்க்த்திற்கும் அவர்கள் சார்பில் கவிதை பாடக் கவிஞர்கள் இருந்ததைப் போல பேச்சாளர்களும் இருந்தனர். அவர்கள், கவிஞர்கள் கவிதையிற் செய்த பணியை உரைநடையிற் செய்தனர்.
மரபுவழியாக வழக்கில் இருந்து வந்த பழமொழிகளும் அக்கால அறேபியரின் உரைநடை இலக்கியத்தில் பரவலாகக் காணப்பட்டன. பெரும்பாலும் 'ஸஜ்" என்ற எதுகை - மோனை அமைந்த உரைநடையைக் கொண்டிருந்த இந்தப் பழமொழிகள் அவர்களது மனப்பாங்கையும் அனுபவங் களையும் காட்டி நிற்கின்றன. அவர்களிடையே வாழ்ந்த அக்தம் பின் ஸய்பி, ஹாஜிப் பின் ஷராரா, ஹின்த் பின்த் அல்குவர் முதலான புத்திஜீவிகள் பலர் அறிவார்ந்த பொன்மொழிகள் பலவற்றையும் விட்டுச் சென்றிருக்கின்றனர். மரபு வழியாக அவர்களிடையே வழக்கில் இருந்து வந்த பழமொழிகளும் பொன்மொழிகளும் அல் மய்தானி (மரணம் கி. பி. 1124) என்பார் தொகுத்த ‘மஜ்மஉல் அம்தால்’ என்ற தொகுப்பிலும் அல் முபழழல் பின் ஸலமா (மரணம் கி. பி. 920) என்பார் தொகுத்த அம்தாலுல் அறப் என்ற தொகுப்பிலும் காணப்படுகின்றன.
அறியாமைக் கால அறேபியரின் உரைநடை இலக்கியத்தில் பேச்சுக்கள் ( குத்பா), பழமொழிகள் (அம்தால்) ஆகியவற்றை மட்டுமன்றி வரலாற்றுத் துணுக்குள், கதைகள், உருவகக் கதைகள் முதலியவற்றையும் காணமுடிகிறது. பெரும்பாலும் இந்தக்கதைகள் அவர்களது வமிசாவழி, வர்க்கங்களுக்கு இடையில் நிகழ்ந்த போர்கள், அறேபியரல்லாதோருடன் நடைபெற்ற சண்டைகள் ஆகியவற்றோடு சம்பந்தமுடையனவாகவே இருந்தன. காதல் அனுபவங்கள், அவதூறு கூறுதல் ஆகியவற்றின் பெயராலும் பல கதைகள் அவர்களிடையே வழங்கப்பட்டன. இந்தக் கதைகளில் எல்லாம்

Page 45
இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
பொய்யான கற்பனை பெருமளவுக்கு விரவிக் கிடந்த போதிலும், இவை அவர்களது உரைநடை இலக்கியத்தை அணிசெய்யத் தவறவில்லை. இத்தகைய பல கதைகள் அபுல் பரஜ் அல் இஸ்பஹானி தொகுத்த கிதாபுல் அங்ானி என்ற நூலிலும் பிற்காலத்தில் எழுதப்பட்ட அறபு வரலாற்று நூல்களிலும் காணப்படுகினறன.
இஸ்லாத்திற்கு முந்திய கால அறேபியர் - குறிப்பாகத் தென் அறேபியர் - கட்டடக்கலை, சிற்பம் முதலான கலைகளிலும் ஓரளவுக்குச் சிறந்து விளங்கினர். வட அறேபியரைப் பொறுத்தவரை, இந்தத் துறைகளில் அவர்களிடம் எத்தகைய விருத்தியும் காணப்படவில்லை. வட db Lill db அறேபியாவில் இருந்த குறிப்பிடத்தக்க ஒரே ஒரு கற்கட்டடம் (6)6) புனித கட்பாவே ஆகும். அதுவும் ஆளுயரத்திற்கு நாற்புறமும் முரட்டுக்கற்களால் கட்டப்பட்ட சுவர்களைக் கொண்ட கூரையற்ற ஒரு கட்டடமாகவே இருந்தது. அங்கு காணப்பட்ட சிலைகள் கூட, பெரும்பாலும் கலைநுட்பம் இல்லாத சிற்பங்களாகவே இருந்தன. வடஅறேபியாவில் வாழ்ந்த மிக அதிகமான மக்கள் ஒட்டகை மயிர்களாலான கூடாரங்களிலும் ஒலைக்குடிசைகளிலுமே வசித்து வந்தனர். களிக் கற்களால் கட்டப்பட்ட சிறு வீடுகள் மிகச் சிலவே காணப்பட்டன. ஆயினும், மிகப்புராதன காலத்தில் வாழ்ந்த அறேபியரின் மூதாதையினர் வட அறேபியாவில் கலைநுட்பம் பொருந்திய பலகட்டடங்களை நிறுவியிருந்தனர். வட கிழக்கு அறேபியாவில் வாழ்ந்த ஆத் வர்க்கத்தினர் மிக உயர்ந்த தூண்களைக் கொண்ட மாளிகைகளையும் கட்டடங்களையும் அமைத்திருந்தனர். இதற்கு அல்குர்ஆனே சான்றாக இருக்கிறது. (அல் குர்ஆன் 89:6-8; 26:128129).அவர்களுக்குப் பின்னர் வடமேற்கு அறேபியாவில் வாழ்ந்த தமூத் வர்க்கத்தினர் சம வெளிகளில் பெரும் கோட்டைகளையும் மலைகளைக் குடைந்து அழகிய மாளிகைகளையும் நிறுவியிருந்தனர். இதற்கும் அல்குர்ஆனே சான்றாக இருக்கிறது (அல் குர்ஆன் 7:74; 15:82; 89:9). அவர்கள் நிறுவிய கோட்டைகள், மாளிகைகள், சமாதிகள் முதலியவற்றின் சிதைவுகள் இப்போது மதாஇன் ஸாலிஹற் என்று அழைக்கப்படும் அல் ஹிஜ்ர் என்ற இடத்திலும் அல்உலா (வாதிஉல் குரா), பீட்ரா, மத்யன் ஆகிய இடங்களிலும் இன்றும் காணப்படுகின்றன.
இஸ்லாத்திற்கு முந்திய அறியாமைக் காலத்தைப் பொறுத்தவரை, கட்டடக்கலைத் துறையில் தென் அறேபியாவின் நிலை வடஅறேபியாவின் நிலைக்கு முற்றிலும் மாற்றமானதாய் இருந்தது. கட்டடக்கலை, சிற்பம் ஆகிய துறைகளின் விருத்திக்குத் தேவையான வசதிகளும் வாய்ப்புகளும் அங்கு காணப்பட்டன. கட்டடங்களுக்குத் தேவையான கருங்கல், பழுப்புக்கல், சலவைக் கல் ஆகியன தென் அறேபியாவில் தாராளமாகக் கிடைத்து வந்தன. அங்கு ஆற்றல் வாய்ந்த கட்டடக் கலைஞர்கள் பலர் இருந்தனர்

இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி 1
அவர்கள் அங்கே அழகிய மாளிகைகளையும் கோட்டைகளையும் நீரமைப்புக்களையும் நிறுவியிருந்தனர். தென்அறேபியரின் முக்கிய நகரங்கள் அவர்களது சிற்பத்திறனுக்கு உதாரணங்களாய் விளங்கின. உரோம வரலாற்றாசிரியரான மூத்த பிளினியின’ கூற்றுப்படி, தென் அறேபியாவில், கதபான் பிரதேசத்தின் தலைநகராக இருந்த தமன.'வில் மட்டும் அறுபத்தைந்து கோயில்கள் காணப்பட்டன. அந்த நகரத்தின் தென்புற வாயிலில் பெரும் கற்றுரண்களைக் கொண்ட இரண்டு கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தென்அறேபியா கோட்டைகளும் நகரரண்களும் நிறைந்த பூமியாக விளங்கியது. அவற்றின் இடிபாடுகள் இன்றும் அங்கே காணப்படுகின்றன. ஸன்ஆ நகரில் அமைக்கப்பட்டிருந்த இருபது மாடிகளைக் கொண்ட கும்தான் கோட்டை, அமெரிக்கத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட *அவ்வாம் கோயில், ம.ரிப் நகரின் பாரிய அணை" முதலியனவும் ஏனைய கட்டடங்களின் சிதைவுகளும் அறேபியாவில் - குறிப்பாகத் தென் அறேபியாவில் - ஏற்பட்டிருந்த கட்டடக்கலை வளர்ச்சியைப் பறை சாற்றி நிற்கின்றன.
அறேபியரின் - குறிப்பாகத் தென் அறேபியரின் சிற்பக்கலை நாட்டத்திற்கு அவர்கள் பயன்படுத்தி வந்த நாணயங்களும் சான்றுபகிர்கின்றன. அறேபியாவின் பண்டைய அரசர்கள் தங்கம், வெள்ளி, செம்பு ஆகிய bII 600 Uli ங்கள் உலோகங்களாலான நாணயங்களை வெளியிட்டு வந்தனர். அந்த நாணயங்களின் ஒரு பக்கத்தில் அரசர்களின் பல்வேறு விதமான உருவங்களும் மறுபக்கத்தில் ஆந்தை, எருமைத்தலை முதலானவற்றின் உருவங்களைக் கொண்ட சின்னங்களும் பொறிக்கப்பட்டிருந்தன. கி. மு. மூன்றாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹிம்யரிய (யமனிய) வெள்ளி நாணயம் ஒன்றின் ஒரு பக்கத்தில் அதெனா என்ற கிரேக்க இதிகாசத் தேவதையின் தலையும் அவளது கன்னத்தில் “நூன்" என்ற ஸபஈய எழுத்தும் மறுபக்கத்தில் ஆந்தை, இளம்பிறை, ஒலிவ மரக்கிளை ஆகியவற்றின் உருவச் சின்னங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த நாணயங்களின் அமைப்பில் கிரேக்க, உரோமச் செல்வாக்குகள் பெரிதும் காணப்படுவதை அவதானிக்க முடியும். தொல்பொருளியல் ஆராய்ச்சியாளர்களாலும் ஏனையோராலும் கணிசமான அளவில் கண்டெடுக்கப்பட்ட இந்த நாணயங்கள் அறேபியரின் சுயேச்சையான வளர்ச்சியையும் கலைத்திறனையும் வெளிப்படுத்துகின்றன.
இஸ்லாத்திற்கு முந்திய கால அறேபியரின் கலசார வாழ்வில் இசை முக்கிய இடம்பெற்றிருந்தது. பெரும்பாலும் மதுபானத்தோடு இணைந்து காணப்பட்ட ஆடலும் பாடலும் முழு அறேபியாவிலும் மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்களாக விளங்கின.
இசை மதுக்கடைகளில் மது அருந்த வருவோரை மகிழ்விக்கப் பாடகிகள்
36. இந்த அணை பற்றி அல்குர்ஆனிலும் மிரஸ்தாமிக்கப்பட்டிருக்கிறது (அல்குர்ஆன் 346)

Page 46


Page 47


Page 48
இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
5HПdFш5ї Пj'ял60
இஸ்லாத்திற்கு முந்திய கால அறேபியாவில் அரசியல் நிலை சமகால உலகின் பிற நாடுகளில் காணப்பட்ட அரசியல் நிலையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. அறபு நாடோடிகளிடையே எத்தகைய அரசியல் தாபனமும் இருக்கவில்லை. ஆனால், அறேபியாவில் வாழ்ந்த நிரந்தரக் குடிகளிடையே - குறிப்பாகத் தென் அறேபியரிடையே - நிறுவன ரீதியிலான ஒருவகை அரசாங்க அமைப்பு காணப்பட்டது. நாடோடிகள், வர்க்கத் தலைவர்களது ஆதிக்கத்தின் கீழ் வாழ்ந்தனர். நிரந்தரக்குடிகள் அரசர்களது ஆதிக்கத்தின் கீழ் வாழ்ந்தனர். எனவே, பண்டைய அறேபியரின் அரசியல் நிறுவகத்தை அரசர்களின் ஆட்சி, வர்க்கத் தலைவர்களின் ஆட்சி என இரு வகைப்படுத்தலாம்.
பண்டைய அறேபியாவில் - குறிப்பாகத் தென் அறேபியாவில் - நாகரிகப் பண்புகளை உடைய பேரரசுகள் சில இருந்தன. அவற்றுள் வரலாற்றுக்குத் தெரிந்த மிகத் தென்மையான பேரரசு மஈனி பேரரசு ஆகும். IDFFSof 9IUdi இந்தப் பேரரசு பற்றி இரதோஸ்தினெஸ், ஸ்ட்ராபோ, தொலமி, பிளினி முதலான கிரேக்க எழுத்தாளர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். மஈன் என்பதன் சரியான அறபு வடிவம் மஆன் என்பதாகும். ஊற்றுநீர் என்பது இதன் கருத்து. இந்த நகரம் யமனில், கிழக்கே ஹழரமவ்த், தென் மேற்கே ஸபா (இப்போதைய ஸன்ஆ) ஆகிய நகரங்களுக்கிடையே அமைந்திருந்தது. இந்தப் பேரரசு தென் அறேபியாவில், நஜ்ரானுக்கும் ஹழ்ரமவ்துக்கும் இடையே, யமனில் உள்ள அல் ஜவ்ப் பிரதேசத்தில் நிறுவப்பட்டிருந்தது. இதன் சுபீட்ச காலத்தில் கதபான், ஹழ்ரமவ்த் ஆகிய பகுதிகள் உட்படத் தென் அறேபியாவின் பெரும் பகுதியையும் மத்திய, வடமேற்கு அறேபியா, மெலுக்கா மாவட்டம் ஆகியவற்றையும் இந்தப் பேரரசு உள்ளடக்கியதாய் இருந்தது. இப்போது மான் என்று அழைக்கப்படும் கர்னாவ் நகரம் இதன் தலைநகராயும் இப்போது பராகிஷ் என்று அழைக்கப்படும் யதில் நகரம் சமயத் தலைநகராயும் இருந்தன. இது நன்கு அமைக்கப்பட்ட அரசாங்கம் ஒன்றையும் செல்வ விருத்தியையும் உடைய ஒரு பேரரசாக விளங்கியது.
இந்தப் பேரரசு, முழு அறேபியாவிலும் சிரியாவினதும் எகிப்தினதும் எல்லைப்புறங்கள் வரை வியாபித்திருந்தது என்று சாமுவல் லயின்க் என்பார் மஈனியப் பொறிப்புக்களை ஆதாரமாகக் காட்டிக் குறிப்பிடுகிறார்." இவர்கள் வட அறேபியாவில், அல் உலா மாவட்டத்தில் குடியேற்றம் ஒன்றையும் நிறுவி இருந்தனர் என்பது அந்தப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட
43. Samuel Laing, Human Origin, p. 89

இஸ்லாமிய வரலாறு T3E Lb 1 i Gögó l
பொறிப்புக்களிலிருந்து தெரிகிறது. இந்தக் குடியேற்றப் பிரதேசம் வர்த்தகத் தலமாக மட்டுமன்றி, மஈனி அரசனின் சார்பில் போர்களில் பங்கு கொள்ளும்
அரசியல் நகராகவும் இருந்தது.
இந்தப் பேரரசு நிலைபெற்றிருந்த காலம் குறித்து வரலாற்றாசிரியர் களுக்குள் கருத்தொற்றுமை இல்லை. ஏனெனில், யமனில் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் இரண்டாயிரம் பொறிப்புக்களில் இந்தப் பேரரசின் காலத்தைத் துணிவதற்கு உதவக் கூடிய குறிப்புக்களோ திகதிகளோ இல்லை. இந்தப் பேரரசு மிகத் தொன்மையானது என்றும் கி.மு. 20ஆம் நூற்றாண்டில் ஆரம்பமானது என்றும் சிலர் கூறுகின்றனர். இந்தப் பேரரசு கி. மு. 1400 முதல் கி. மு. 700 வரை நீடித்திருந்தது என்று ஜெர்மனியத் தொல்பொருளிய லாளர்கள் கருதுகின்றனர்; கி.மு. 800ஆம் ஆண்டளவில் ஆரம்பித்தது என்று பிரஞ்சுத் தொல்பொருளியலாளர்களும் ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் சிலரும் கூறுகின்றனர். கி.மு. 1700இல் ஏற்பட்ட ஆத் வர்க்கத்தாரின் வீழ்ச்சியைத் தொடர்ந்து இந்தப் பேரரசு உதயமாகி, கி.மு. 1000ஆம் ஆண்டு வரை நீடித்திருந்தது என்று கலாநிதி ஸய்யித் முளப்பருத்தீன் நத்வி அபிப்பிராயப்படுகிறார்." ஆயினும், சுமார் 700 ஆண்டுகள் இந்தப் பேரரசு நீடித்திருந்தது என்பதில் பெரும்பாலும் ஆய்வாளர்களுக்குள் கருத்தொற்றுமை காணப்படுகிறது. இந்தப் பேரரசை ஆட்சி செய்த இருபத்தைந்து அரசர்களின் பெயர்களைத் தந்துள்ள மூல்லர் என்பார் அரசர்களைத் தெரிவு செய்வதில் பரம்பரைக் கோட்பாடே பின்பற்றப்பட்டது என்று குறிப்பிட்டிருக்கிறார். சாமுவேல் லயின்கின் கூற்றுப்படி முப்பத்திரண்டு மானி அரசர்களின் பெயர்கள் தெரிய வந்திருக்கின்றன. இது வரை கண்டுபிடிக்கப்பட்ட பொறிப்புக்களும் தொல் பொருள்களும் மஈனிகளின் அரசையும் அவர்களது சமய கொண்டாட்டங்கள், சடங்குகள், வாழ்க்கை முறை, வர்த்தகம், சர்வதேச உறவுகள் முதலியவையையும் பற்றிய பல தகவல்களைத் தருகின்றன.
மஈனி பேரரசு வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்த காலத்தில், தென் அறேபியாவில் மற்றொரு பேரரசு தோன்றியது. இந்த அரசு, இதன் அரசர்களுள் ஒருவரும் ஸப." என்று அழைக்கப்பட்டவருமான அப்புஷ் ஷம்ஸ் என்பாரின் பெயரால் ஸபஇ பேரரசு என்று அழைக்கப்பட்டது. கி.மு. ஸபஇ அரசு 950ஆம் ஆண்டு முதல் நிலைபெற்றிருந்த இந்த அரசு மஈனி அரசுக்குப் பிந்தியதா அல்லது இரண்டும் சமகாலத்தவையா என்பதில் ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருக்கின்றனர். கலாநிதி மூல்லர் இரண்டும் சம காலத்தவை என்கிறார். ஆனால் அறபியல் அறிஞரான மார்ட்டின் ஹார்ட்மேன் என்பார் மானி அரசின் பொற்காலம் ஸபஇ அரசின் காலத்திற்கு முந்தியது என்கிறார்."
44. S.M. Nadvi, A Geographical History of the Quran, pp. 132-33 45. Encyclopaedia of Islam, Vol. i., p.378

Page 49


Page 50
இஸ்லாமிய வரலாறு UsTabib 1 LIG5g5 1
|கூறுகிறார்.* 'கதபானி”கள் என்று அழைக்கப்பட்ட இந்தப்பேரரசின் குடிகள் நறுமணப்பொருள் வர்த்தகத்தில் பிரபல்யம் பெற்று விளங்கினர்.
இதே காலப்பகுதியில், தென் அறேபியாவில் நிலைபெற்றிருந்த மற்றொரு அரசு ஹழ்ரமவ்த் பேரரசு ஆகும். இந்த அரசு பற்றிய விரிவான விவரணங்களை கிரேக்க எழுத்தாளர்கள் தந்திருக்கின்றனர். ஷப்வா நகரம் (பண்டைய ஸ்போட்டா) இதன் தலைநகராக விளங்கியது. கி. மு. 5 ஆம் { நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் கி.பி. 1 ஆம் ஹழரமவத அரசு நூற்றாண்டின் இறுதிவரை நீடித்த இந்த அரசு, கதபான் அரசைப் போலவே சில சமயங்களில் ஸபஇ ஆட்சியாளர்களால் வெற்றி கொள்ளப்பட்டு, அவர்களது ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. இந்த அரசும் நறுமணப்பொருள் வர்த்தகத்தில் கொடி கட்டிப் பறந்தது. இந்த அரசு நிலவிய பிரதேசத்தின் பண்டைய பெயர் ‘ரய்தான்’ என்பதாகும். அதனால், இதன் அரசர்கள் ‘து ரய்தான்’ (ரய்தானின் எசமானர்) என்று அழைக்கப்பட்டனர்.
கி. மு. 115 ஆம் ஆண்டளவில், தென் அறேபியாவில் தோன்றி வளர்ந்த ஹிம்யரிய மரபாரின் புதிய ஆட்சி ஸ்பஇகளின் அரசுக்கும் கதபான், ஹழ்ரமவ்த் ஆகிய இடங்களில் நிலைபெற்றிருந்த அரசுகளுக்கும் முற்றுப்புள்ளி ஹிம்யரிய 9 Udi வைத்தது. இவர்கள் ஸபஇகளின் அதே இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களைப் பற்றிய மிக ஆரம்பகாலக் குறிப்புக்கள் பிளினியின் வரலாற்று நூலிலேயே காணப்படுகின்றன. இவர்களது நாடு ஸப.வுக்கும் கடலுக்கும் இடையே நீண்டு கிடந்தது என்று அவர் குறிப்பிடுகிறார்.* ஆரம்பத்தில் இவர்கள் கதபான் பிரதேசத்திலேயே தமது அரசை நிறுவியிருந்தனர். பின்னர் ஸப. ரய்தான் ஆகிய பிரதேசங்களிலும் தமது ஆதிக்கத்தை விரிவாக்கம் செய்து கொண்டனர். இப்புதிய மரபைச் சேர்ந்த அரசர்கள் மலிக் ஸப.’’, ‘தூ ரய்தான் என்ற பட்டப் பெயர்களால் அழைக்கப்பட்னர். இந்த அரச மரபில் இருபத்தாறு அரசர்கள் இருந்தனர் என்று பெறிப்புக்களிலிருந்நு தெரிய வருகிறது.
இவர்களது ஆட்சி இரண்டு கால கட்டங்களைக் கொண்டது. முதற் கட்ட ஆட்சி கி.மு. 115 முதல் கி.பி. 300 வரை நீடித்திருந்தது. ஸன்ஆவுக்குச் செல்லும் பாதையில், இப்போதைய 'முகா நகருக்கு வடகிழக்கே சுமார் நூறு மைல் தொலைவில் உள்ள ளபார் (பண்டைய ஸப்பர்) என்ற பட்டினமே ஹிம்யரிய அரசின் தலைநகராக இருந்தது.இப்போதைய யரிம் பட்டினத்திற்கு அருகே உள்ள வட்டக் குன்றின் உச்சியில் இந்த நகரின் இடிபாடுகளை இன்றும் காணலாம். ஹிம்யரியரின் முதற்கட்ட ஆட்சியின் போதேதான் கி.மு. 24 இல், உரோமர் ஹிம்யரின் செல்வங்கள் மீது ஆசை கொண்டு,
52. De Lacy O'Leary, op.cit. p. 97 53. libid, p. 101

இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
ஈலியஸ் கல்லஸ் என்பானின் தலைமையில் அறேபியாவின் மேல் படையெடுத்து வந்தனர். ஆனால், முதலாவதும் கடைசியானதுமான அவர்களது இந்தப் படையெடுப்பு முழுத் தோல்வியிலேயே முடிந்தது. அப்போது இலிஷரிஹா யஹற்முப் என்பான் ஹிம்யரிய மரபு அரசனாக இருந்தான்.*
இவர்களது முதற்கட்ட ஆட்சியின் ஆரம்ப காலத்தில், யமனிலிருந்தும் ஹழ்ரமவ்த்திலிருந்தும் அறேபியர் மேற்கு நோக்கி இடம் பெயர்ந்து சென்று, குஷ்களின் நாடு' என அழைக்கப்பட்ட அபிசீனியாவில் குடியேற்றம் ஒன்றை அமைத்துக் கொண்டனர். இந்த அறபுக் குடியேற்றவாசிகள் அங்கே அபிசீனிய இராச்சியத்திற்கும் நாகரிகத்திற்கும் வித்திட்டதோடு, உள்நாட்டு நீக்ரோக்கள் முன் ஒருபோதும் அடைந்திராத ஒரு கலாசாரத்தையும் விருத்தி செய்தனர். இவர்களது குடியேற்றத்தைத் தொடர்ந்து கிழக்கு ஆபிரிக்கக் கரை முழுவதிலும் அறேபியரின் பரம்பல் நிகழலாயிற்று.* இந்தக் காலத்தில் ஹம்யரியர் பல கோட்டைகளை யமனில் நிறுவியிருந்தனர். இந்தக் கோட்டைகளைப் பற்றிய விரிவான விவரணங்களை அறபுப் புவியியலாளரான அல் ஹம்தானி தமது 'அல் இக்லீல்' என்ற நூலில் தந்திருக்கிறார். நாடோடி அறேபியரின் கொள்ளைத் தாக்குதல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஹிம்யரியர் இந்தக் கோட்டைகளை நிறுவினர். அவற்றுள் ஒன்று ஸன்ஆ நகரில் அமைந்திருந்த பாரிய கும்தான் கோட்டை ஆகும். இதனைக் கட்டியவன் லீஷர்ஹற் பின் யஹற்ஸ"ப் (இலிஷரிஹா யஹற்முப்) என்ற அரசனே என்று யாகூத் கூறுகிறார். ஒவ்வொன்றும் பத்து முழ உயரத்தை உடைய இருபது மாடிகளைக் கொண்ட இந்தக் கோட்டை கருங்கல், போர்பெரிக் கல், பளிங்குக் கல் முதலியவற்றால் கட்டப்பட்டிருந்தது. அரசனின் அரசவை இருபதாவது மாடியில் அமைந்திருந்தது. அங்கிருந்த அறைக்கு கருங்காலி, "பிளேன்’ மரம் ஆகியவற்றால் சட்டம் இடப்பட்ட பளிங்குச் சாளரங்கள் இருந்தன. அதன் கூரை ஆகாயம் தெரியக் கூடியவாறு ஊடுகாட்டும் ஒருவகை "பெல் லூசிய பளிங்குக்கற் பலகையால் வேயப்பட்டிருந்தது. கோட்டையின் நான்கு முகப்புகள் வெள்ளை, கறுப்பு, பச்சை, சிவப்பு முதலான பல்வேறு வண்ணங்கள் கொண்ட கற்களால் அமைக்கப்பட்டிருந்தன. அந்த அறையின் ஒவ்வொரு மூலையிலும் பித்தளையால் செய்யப்பட்ட சிங்கச் சிலை வைக்கப்பட்டிருந்தது. காற்று வீசிய போதெல்லாம் அது கர்ஜித்தது.* இஸ்லாத்தின் ஆரம்பகாலம் வரை இருந்த இந்தக் கோட்டையே வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட முதலாவது வானளாவிய கட்டடம் ஆகும். இப்போது இதன் இடிபாடுகள் காணப்படுகின்றன்.
இந்த முதற் கட்ட ஆட்சிக்காலத்தில், ஹிம்யரிய அரசன் மானியப்பிரபு
54. இவனது பெயரை ஸ்ட்ராபோ, இலஸரஸ்’ என்று குறிப்பிடுகிறார். 55. Philip K. Hitti , op.cit., pp.56-7 56. R.A. Nicholson, op.cit., pp. 24-5 Philip K.Hitti, op.cit.p.57

Page 51
இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி 1
ஒருவனைப் போலவே இருந்தான். கோட்டையில் வசித்து வந்த அவனுக்கு நிலங்கள் சொந்தமாக இருந்தன. தங்கம், வெள்ளி, செம்பு ஆகிய உலோகங்களாலான நாயணயங்களையும் வெளியிட்டான். இக்கால ஹிம்யரியர் வர்த்தகத் துறையில் கொடி கட்டிப்பறந்தனர். கடல்வழி வர்த்தகத்திலும் தரைவழி வர்த்தகத்திலும் இவர்கள் ஒப்பாரும் மிக்காரும் இன்றி விளங்கினர். ஐரோப்பாவை இந்தியாவோடு இணைத்த தரைவழி வணிகப்பாதைகளும் செங்கடல், அறபுக்கடல், மத்திய தரைக் கடல் ஆகியவற்றின் ஊடாகச் சென்ற கடல்வழிப் பாதைகளும் இவர்களது ஆதிக்கத்திலேயே இருந்தன. ஆயினும், ஹிம்யர்களுக்கு சர்வதேச வர்த்தகத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியும் இவர்களது காலத்திலேயே ஆரம்பித்தது. இவர்களது வீழ்ச்சியைத் தொடர்ந்து உரோமரும் தொலமிகளின் ஆட்சியின் கீழ் எழுச்சி பெற்ற எகிப்தியர்களும் சர்வதேச வர்த்தகத்தில் தனியுரிமை செலுத்தலாயினர்.
ஹிம்யரிய மரபாரின் இரண்டாம் கட்ட ஆட்சி கி. மு. 300 முதல் கி. பி. 525 வரை நீடித்திருந்தது. கி. பி. 340 முதல் கி. பி. 378 வரையிலான இடைவெளிக் காலத்தில் அபிசீனியர் தென் அறேபியாவைக் கைப்பற்றி ஆட்சி செய்தனர். இரண்டாம் கட்ட ஆட்சிக்காலத்தில் அரசு புரிந்த ஒன்பது ஹிம்யரிய மன்னர்களைப் பற்றிப் பொறிப்புக்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது. இந்த அரசர்கள் ‘துப்ப' என்று அழைக்கப்பட்டனர். இரண்டாம் கட்ட ஹிம்யரிய அரசர்களுள் அறபு இலக்கியத்திற்கு நன்கு அறிமுகமானவர்கள் ஷம்மர் யர்அவர், அபூ கரிப் அஸ்அத் காமில் (கி.பி. 385-420) ஆகியோர் ஆவர். இவர்களுள் அபூ கரிப் என்பான் பாரசீகத்தின் மீது படையெழுச்சி நடத்தியவன் என்று கூறப்படுகிறது.
ஹிம்யரியர்களின் இரண்டாம் கட்ட ஆட்சிக் காலத்திலேதான் யூத மதமும் கிறித்தவ மதமும் யமனில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டன. முதலில் யூத மதத்தைத் தழுவிய அரசன் அபூ கரிப் அஸ்அத் காமில் (திபான் அஸ்அத் அபூ கரிப்) என்பானே என்று கூறப்படுகிறது. இவனது மரபில் பிறந்தவனும் இறுதி துப்ப" ஆட்சியாளனுமான தூ நுவாஸ் அந்த மதத்தை தீவிரமாக யமனில் பரப்பினான். அவனது ஆட்சிக் காலத்தில், நஜ்ரானில் குடியேறியிருந்த பைமியூன் என்ற கிறித்தவத் துறவியின் முயற்சியால் அந்த நகரத்தில் வாழ்ந்த மக்கள் கிறித்தவ மதத்தை மிக ஆர்வத்தோடு தழுவினர். அதனால், ஆத்திரம் அடைந்த அவன் நஜ்ரானுக்குச் சென்று, அங்கு வாழ்ந்த மக்களை மீண்டும் பலவந்தமாக யூத மதத்தில் சேர்க்க முயன்றான். மதம் மாற மறுத்தவர்களைத் தீக்கிடங்கில் எறிந்து கொன்றான். இந்தச் சம்பவம் கி.பி. 523 அக்டோபரில் நிகழ்ந்தது. துர நுவாஸின் படுகொலை முயற்சியிலிருந்து தப்பிய தவ்ஸ் தூ த.லபான் என்பார் உரோமப் பேரரசனும் உலகில் வாழ்ந்த கிறித்தவர்களின் பாதுகாவலனாகக் கருதப்பட்டவனுமான முதலாம்ஜஸ்டின் என்பானிடம் சென்று, நஜ்ரான் கிறித்தவர்களுக்கு நேர்ந்த

இஸ்லாமிய வரலாறு LIT851b í LIG35 1
பயங்கரத்தை எடுத்தரைத்து, யமன் அரசனைப் பழிவாங்குவதற்கு அவனது உதவியைக் கோரினார். உரோம நாடு தென்அறேபியாவிலிருந்து வெகு தொலைவில் இருந்தமையால், உரோமப் பேரரசனால் நேர் உதவி எதுவும் அளிக்க முடியவில்லை. எனவே, அவன் உரோமப் பேரரசின் மேலாதிக்கத்தை ஏற்றிருந்த அபிசீனிய சக்கரவர்த்தி கலப் எலா அஸ்பெஹா அல் நஜாஷி என்பானுக்கு யமன் அரசனைப் பழிவாங்குமாறு எழுத்து மூலம் பணிப்புரை விடுத்தான். அவ்வாறே அல் நஜாஷி, கி.பி. 525இல் அர்யாத் என்பானின் தலைமையில் 70,000 வீரர்களைக் கொண்ட அபிசீனியப்படை ஒன்றை தென் அறேபியாவுக்கு அனுப்பிவைத்தான். செங்கடலைக் கடந்து தென்அறேபியா வினுள் நுழைந்த அபிசீனியப்டையினர் தூ நுவாஸை தோற்கடித்து, யமனைக் கைப்பற்றிக் கொண்டனர். தனது படை வீரர்களின் தோல்வியால் ஏமாற்றமுற்ற தூ நுவாஸ் தனது குதிரையோடு கடலில் இறங்கி, அதன் அலைகளிடையே சென்று மறைந்தான்.
இதன் பின்னர், அபிசீனியத் தளபதி அர்யாத், அல் நஜாஷியின் பெயரால் சிறிது காலம் தென்அறேபியாவை ஆட்சி செய்தான். பின்னர், அவன் ஸன்ஆ நகரைத் தாயகமாகக் கொண்ட ஸ"ம்யப." என்பானிடம் நாட்டை ஒப்படைத்து விட்டுத் தாயகம் சென்று விட்டான். அபிசீனியர் அவன் தாயகம் திரும்பியபோது தனது அபிசீனியப் ஆட் படையணிகளை யமனில் விட்டே சென்றிருந்தான். ஸம்யப. என்பவன் யூதனாக இருந்து, பின்னர் கிறித்தவ மதத்தைத் தழுவியவன்; அபிசீனியரின் படையெடுப்பின்போது அவர்களுக்கு மிகவும் உதவியாக இருந்தவன். கி.பி. 530 ஆம் ஆண்டளவில், யமனில் தங்கியிருந்த அபிசீனிய வீரர்கள் ஸ"ம்யப.வுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர்; உரோம வியாபாரி ஒருவனின் அடிமையாக இருந்தவனும் அபிசீனியப் படையில் ஓர் உயரதிகாரியாகப் பணிபுரிந்தவனுமான அப்ரஹா என்பானை யமனின் ஆட்சியாளனாக்கினர். இந்தக் கிளர்ச்சியை அடக்குவதற்காக அபிசீனிய சக்கரவர்த்தி இருமுறை படைகளை அனுப்பிவைத்தார். ஆயினும், அப்படையெழுச்சிகள் தோல்வியிலேயே முடிவடைந்தன. அப்ரஹா, ஸன்ஆவைத் தனது அரசின் தலைநகராக்கினான். அங்கே அவன் அறபு வரலாற்றாசிரியர்களால் 'அல் கலீஸ்' என்று அழைக்கப்படும் பெரும் மாதாகோயில் ஒன்றைப் பண்டைய மட்ரிப் நகரின் இடிபாடுகள் மீது அமைத்து, அதனை மக்கா நகரின் புனித கட்பா ஆலயத்திற்கு நிகரானதாக மாற்ற முயற்சிகள் செய்தான்.
இந்தக் காலப்பகுதியிலேயே மஃரிப் நகரின் பாரிய அணை நிரந்தரமாக உடைந்து, பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதற்கு முன்பும் இந்த அணை பலமுறை உடைப்பெடுத்தது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் ஏற்பட்ட உடைவு பற்றிய குறிப்பு கிடைத்திருக்கிறது. பின்னர், கி.பி. 447 - 450 அளவிலும் இந்த அணை உடைப்பெடுத்து, யமனில் பெரு வெள்ளம்

Page 52
இஸ்லாமிய வரலாறு LJТВБLib I LJфg5 1
ஏற்பட்டது. இந்த உடைப்பை அபிசீனிய ஆட்சியாளனான அட்ரஹா ஒரளவுக்கு திருத்தி அமைத்தான். இது சம்பந்தமான குறிப்பைக் கொண்ட பொறிப்பு ஒன்றையும் அவன் விட்டுச் சென்றான்." பின்னர், கி.பி. 542 ஆம் ஆண்டிற்கும் கி.பி. 570 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த அணை நிரந்தரமாக உடைந்து பெரும் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தி அழிந்து போயிற்று.* இறுதியான இந்தப் பேரழிவு பற்றியே அல் குர்ஆனில் பிரஸ்தாபிக்கப் பட்டிருக்கிறது.(34:16) இந்த அணை உடைப்புக்களையும் வெள்ளப்பெருக்கு களையும் தொடர்ந்து தென்அறேபியாவில் விவசாயம் அழிந்தது; செழிப்பும் மறைந்தது. அதனால், யமனியர் வடக்கு நோக்கி இடம்பெயர்ந்து சென்று, சிரியாவிலும் இராக்கிலும் ஹிம்யரியக் குடியேற்றங்களை அமைத்துக் கொண்டனர். இந்த அணை உடைப்புக்களுக்கு நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே இந்தப் பிரதேசங்களில் அறபு வர்க்கங்கள் வாழ்ந்து வந்த போதிலும், தென்அறேபிய வர்க்கங்களின் பரவலான குடியேற்றங்கள் அணை உடைப்புகளுக்குப் பின்னரே அதிக அளவில் இடம் பெற்றன. கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் ஏற்பட்ட உடைப்பைத் தொடர்ந்து ங்ஸ்ஸான் வர்க்கத்தினர் சிரியாவில் உள்ள ஹவ்ரான் பிரதேசத்திற்குக் குடிபெயர்ந்து சென்று, உரோமரின் மேலாதிக்கத்தை ஏற்று வாழலாயினர். லக்ம் (தனூக்) வர்க்கத்தினர் யூபிரதிசு நதியின் மேற்கே கிடந்த அல் ஹீரா பிரதேசத்தில் குடியேறி வாழலாயினர். பின்னர், அணையில் ஏற்பட்ட ஒவ்வொரு உடைப்பின் போதும் தென்அறேபியாவின் பல்வேறு வர்க்கங்களைச் சேர்ந்த மக்கள் வடக்கு நோக்கிப் பெருமளவில் குடிபெயர்ந்து சென்று, தமக்கு வசதியான இடங்களில் குடியேற்றங்களை அமைத்துக் கொண்டனர்.
யமனில் அப்ரஹாவும் அவனுக்குப் பின்னர் ஆட்சிபீடம் ஏறியோரும் கொடுங்கோன்மை புரிந்தனர். அவர்களது கொடுங்கோன்மையைச் சகிக்க முடியாத மக்கள் தூ நுவாஸின் ஆதரவாளர்களுள் ஒருவனான ஸய்ப் பின் தீ யஷன் என்பானின் தலைமையில் தேசிய இயக்கம் ஒன்றை III Jdf கர் அமைத்து, அபிசீனியரிடமிருந்து தமது புராதன இராச்சியத்தை விடுவிக்கப் பல்வேறு வழிகளில் முயன்றனர். இறுதியில், அல் ஆட்சி S S S SSLMS LLLLSSS SS SS SSL S S 를
ஹீராவின் அறபு மன்னன் ஏற்படுத்திக் கொடுத்த அறிமுகத்தோடு பாரசீகப் பேரரசன் குஸ்ராவ் அனுாஷர்வானை மதாஇன் நகரில் இருந்த அவனது அரசவையில் சந்தித்து, அவனது உதவியைக் கோரினர். ஆரம்பத்தில் சாதகமான பதில் எதுவும் அளிக்கத் தயங்கிய பாரசீகப் பேரரசன் பின்னர், புகழ்பெற்ற பாரசீகத் தளபதியான வஹற்ரிஷ் என்பானின் தலைமையில் படையணி ஒன்றை அனுப்ப இணங்கினான். அவ்வாறே, கி.பி. 575 இல் யமனினுள் பிரவேசித்த 800 வீரர்களைக் கொண்ட பாரசீகப்படை அபிசீனியரைத்
57. De Lacy O'Leary, op.cit. pp.49-50 58. Philip K. Hitti, op.cit.p.64

இளல்லாமிய வரலாறு LT35tb t (55
தோற்கடித்து, நாட்டை விட்டே துரத்தியது. இந்த வெற்றியின் பின்னர், முதலில் கூட்டு நிர்வாகம் ஒன்று யமனில் ஏற்படுத்தப்பட்டது. ஸய்ப் பின் தீ யஷன் யமனின் பட்டத்து ஆட்சித்தலைவனாக பாரசீகரால் பிரகடனம் செய்யப்பட்டான். அவன் அபிசீனியரின் ஆட்சியில் கைவிடப்பட்டுக் கிடந்த கும்தான் கோட்டையில் தனது வாசஸ்தலத்தை அமைத்து ஆட்சி செய்து வந்தான். ஆனால், அவன் மரணித்த சில ஆண்டுகளில், பாரசீகப் பேரரசின் ஒரு பகுதியாக யமன் இணைத்துக் கொள்ளப்பட்டது. இஸ்லாத்தின் அரசியல் எழுச்சி உருவாகும் வரை இது பாரசீகரின் ஆதிக்கத்திலேயே இருந்து வந்தது. கடைசி பாரசீக ஆளுநரான பாதான் கி.பி. 628 இல் இஸ்லாத்தைத் தழுவியதைத் தொடர்ந்து யமன் முஸ்லிம் மாகாணங்களுள் ஒன்றாயிற்று.
தென் அறேபியாவில் வலிமை வாய்ந்த அரசுகள் நிலைபெற்றிருந்த அதே காலப்பகுதியில் அறேபிய தீபகற்பத்தின் வட பகுதியிலும் மத்திய பகுதியிலும் சில சிற்றரசுகள் இருந்தன. அவற்றுள் வட அறேபியாவில் bll திய 9IUdi நிலைபெற்றிருந்ததும் மிகத்தொன்மை வாய்ந்ததுமான நபதிய அரசு குறிப்பிடத்தக்கது. நபதியர்கள், நபி இஸ்மாஈலின் புதல்வர்களுள் ஒருவரான நிப்த் என்பாரின் சந்ததியினர்.” இவர்கள் கி. மு. 6ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இப்போது ஜோர்தான் என்று அழைக்கப்படும் பகுதியிலிருந்து நாடோடி வர்க்கங்களாக எதோமியரின் நாட்டிற்கு வந்து, பின்னர் அங்கிருந்து பீட்ரா பிரதேசத்தினுள் நுழைந்து, அதனையே தமது வாழிடமாக மாற்றிக் கொண்டவர்கள். இப்போது ‘வாதி மூஸா’ என்று அழைக்கப்படும் பீட்ரா நகரமே இவர்களது தலைநகரமாக விளங்கியது. 3000 அடி உயரத்தில், வரண்ட மேட்டுநிலம் ஒன்றில் அமைந்திருந்த இந்த நகரத்தை அவர்கள் பாறைகளைக் குடைந்து எழிலுற நிர்மாணித்திருந்தனர். கி.மு. 4 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து சுமார் நான்கு நூற்றாண்டுகள் வரை, ஸப.".விலிருந்து மத்திய தரைக்கடற்கரை வரை நீண்டு கிடந்த வர்த்தகப்பாதையில் இதுவே மிகப்பிரதான நகரமாக விளங்கியது. இங்கு சுத்தமான நீர் பெருமளவில் கிடைத்தமையால், வணிகக் குழுக்கள் அனைத்தும் இந்த நகரத்தினூடாகவே தமது வர்த்தகப் பயணங்களை மேற்கொண்டன. இந்த அரசின் ஆரம்ப காலம் சரியாகத் தெரியவில்லை. ஆனால், கி.மு. 312 ஆம் ஆண்டளவில் மகா அலெக்ஸான்டருக்குப் பின்னர் சிரியாவை ஆட்சி செய்த முதலாம் அன்ரிகோனஸ் ( 382, 301) என்பானால் நபதியர்களுக்கு எதிராக அனுப்பப்பட்ட இரண்டு படையெழுச்சிகளை எதிர்த்து நின்று முறியடிக்கும் அளவுக்கு இவர்கள் பலம்பெற்றிருந்தனர் என்று தெரிகிறது. அப்போது, இவர்கள் எகிப்தை ஆட்சி செய்த தொலமியர்களின் செல்வாக்கினுள் சிக்குண்டு கிடந்தனர். பன்னர், உரோமர்களின் நட்பாளராக மாறிய இவர்கள் கி.மு. 24 இல்,
59. Syed Muzaffaruddin Nadvi , op.cit.,p42
G5)

Page 53


Page 54
இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
என்ற உயர் விருதை வழங்கிக் கெளரவித்ததோடு, கிழக்குலகில் இருந்த உரோமப் படையணிகளின் தலைவனாகவும் இவனை அங்கீகரித்தான். ஆயினும், ஒராண்டின் பின்னர், 266 - 67இல், இவனும் இவனது மூத்த புதல்வனும் ஹிம்ஸ் (எமெஸ்ஸா) நகரில், உரோமரின் சூழ்ச்சியினால் கொல்லப்பட்டனர்.
உபைதாவுக்குப்பின்னர், அவனது விதவை அல் ஷப்பா.. (ஷெனோபியா) அவளது பருவமடையாத மகன் வஹற்ப் அல்லாத் என்பானின் சார்பில் தத்ருமுர் ஆட்சி பீடமேறினாள். மிகுந்த துணிச்சலும் ஆற்றலும் வாய்ந்த பெண்ணாக இருந்த இவள் பண்டைய எகிப்தின் இராணி கிளியோபட்ராவைப் போல ஒரு பேரரசை நிறுவ முயன்றாள். உரோமர்களுக்கு எதிராகப் படை நடத்திச் சென்று, தனது இராச்சியத்தின் எல்லைகளை எகிப்து, ஆசியா மைனர் ஆகிய பிரதேசங்கள் வரை விஸ்தரித்தாள். 270இல், இவள் அலெக்ஸாந்திரியாவைக் கைப்பற்றி, அங்கே தனது பருவமடையாத மகனை எகிப்தின் அரசனாக்கினாள். உரோமப் பேரரசன் ஒரெலியன் (27075) என்பானின் உருவச் சின்னம் பொறிக்கப்படாத புதிய நாணயங்களையும் அங்கே வெளியிட்டாள். ஆயினும், உரோம அரசன் ஒரெலியன் இவளுக்கு எதிராகத் தானே நேரில் படை நடத்தி வந்து அன்தியொக், ஹிம்ஸ் ஆகிய இடங்களில் நடைபெற்ற சண்டைகளில் இவளைத் தோற்கடித்து, இறுதியில் கி.பி. 272 வசந்த காலத்தில், தத்ருமுர் நகரினுள் நுழைந்தான். இராணி அல் ஷப்பா. சிறைப்பிடிக்கப்பட்டு, ரோம் நகருக்குக் கொண்டு செல்லப்பட்டாள். தத்ருமுர் நகரினுள் நுழைந்த உரோம அரசன் நகரத்தை முற்றாக அழித்தான். அங்கே புகழ் பெற்று விளங்கிய “பெல்' (சூரியக் கடவுள்) கோயிலில் இருந்த ஆபரணங்களையெல்லாம் தத்ருமுர் இராச்சிய வெற்றியின் நினைவாகத் தான் ரோம் நாட்டில் கட்டவிருந்த சூரியக்கடவுளின் ஆலயத்திற்காக எடுத்துச் சென்றான். இந்தச் சம்பவத்தோடு தத்ருமுர் அரசும் அதன் நாகரிகமும் ஒழிந்தன. இந்த அரசு நிலவிய காலத்தில் இங்கே புகழும் சிறப்பும் பெற்று விளங்கிய பல்மைரா நாகரிகத்தின் நினைவுச் சின்னங்களாகப் பல கட்டடங்களின் இடிபாடுகள் இன்றும் காணப்படுகின்றன. ஆயினும், அவை இன்னும் முழுமையாக அகழ்வாய்வுகள் செய்யப்படவில்லை.
தென் அறேபியாவிலிருந்து அறேபியாவின் வடக்கே குடியேறிய யமனிய வர்க்கங்களைச் சேர்ந்தவர்களும் அங்கே வலிமை வாய்ந்த இரண்டு அரசுகளை நிறுவி இருந்தனர். அவற்றுள் ஒன்று ங்ஸ்ஸானிய அரசு ஆகும். ங்ஸ்ஸானியர்
• எனப்படுவோர் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில், நுஸ்ஸானிய ம.ரிப் நகர அணை உடைப்பெடுத்து வெள்ளம் அரசு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அம்ர் முஷைகியா.. பின் ஆமிர் மாட் அல் ஸமா." என்பாரின் தலைமையில் யமனிலிருந்து இடம் பெயர்ந்து வந்து, வடமேற்கு அறேபியாவில் உள்ள ஹவ்ரான்,

இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
ல்கா. ஆகிய பகுதிகளில் குடியேறிய யமனிய வர்க்கம் ஒன்றின் சந்ததியினர் ஆவர். இந்த அரசின் தாபகன் அம்ர் முஷைகியா.வின் புதல்வன் ஜப்னா என்பவன் ஆவான். இந்த இராச்சியத்தை ஆட்சி செய்த அரசர்களின் எண்ணிக்கை முப்பத்தொன்று என்று அபுல் பிதா'வும் முப்பத்திரண்டு என்று அல் இஸ்பஹானியும் பதினொன்று என்று அல் மஸ்ஊதி, இப்ன் குதைபா ஆகியோரும் கூறுகின்றனர்.*
இந்த வர்க்கத்தினர் சிரியாவில் அரசு ஒன்றை நிறுவியிருந்த முதல் அறேபியர்களான அல் ஸலிஹற் வர்க்கத்தவர்களை விரட்டிவிட்டு, ங்ஸ்ஸானிய அரசை அங்கு தோற்றுவித்தனர். தமஸ்கஸின் தென் கிழக்குப் பிரதேசத்தில், ம.ரிப் நகரை தமஸ்கஸோடு இணைத்த பெரும் போககுவரத்துப் பாதையின் வடமுனையில் அமைந்திருந்த இந்த அரசு ஆரம்பத்தில் ஸலிஹற் வர்க்கத்தைச் சேர்ந்த ழஜாஇமா குடும்பத்திற்குத் திறை செலுத்தி வந்தது. பின்னர், இரு வர்க்கத்தாருக்குமிடையே ஏற்பட்ட போராட்டத்தில் ங்ஸ்ஸானியர் வெற்றி பெற்று, அந்தப் பிரதேசத்தில் தமது ஆதிக்கத்தை நிறுவி, உரோமரின் பிரதிநிதிகளாக ஆட்சி செய்து வந்தனர்.° ஹவ்ரான், பல்கா., பீனிசியா, லிபனம், பலஸ்தீன் பிரீமா, சிகுண்டா ஆகிய மாவட்டங்களை இந்த அரசு உள்ளடக்கி இருந்தது." காலப்போக்கில் கிறித்தவ மதத்தைத் தழுவி சிரியமயமானவர்களாய் மாறி இருந்த ங்ஸ்ஸானியர் தமது தாய்மொழியான அறபைக் கைவிட்டு, சிரியாவின் அரேமிய மொழியைப் பேசலாயினர். ஆரம்பத்தில் நடமாடும் கூடாரம் ஒன்றே இவர்களது தலைநகரமாகத் தொழிற்பட்டது. பின்னர், ஜவ்ஹான் பிரதேசத்தில் உள்ள அல் ஜாபியா இவர்களது தலைநகராக இருந்தது. சிறிது காலம் ஜில்லிக் என்ற இடமும் இவர்களது தலைநகராக விளங்கியது. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில், உரோமப் பேரரசின் நேர் அரசியற் செல்வாக்கு வட்டத்தினுள் நுழைந்த இந்த அரசு உரோமரின் எதிரிகளான பாரசீகர், (அவர்களது நட்பாளர்களான) அல் ஹிரா அரசின் லக்மியர் ஆகியோரிடமிருந்து உரோமரின் எல்லைப் புறங்களைக் காவல் செய்யும் ஒரு ஏம நாடாகவே இருந்தது.
இந்த அரசைச் சேர்ந்த ஆட்சியாளர்களுள் நம்பத்தகுந்த வரலாற்றுக்குத் தெரிந்த முதலாவது அரசன் ஹாரித் பின் ஜபலா (கி.பி.52969) என்பவன் ஆவான். அறபு வரலாற்றாசிரியர்களால் அல் ஹாரித் அல் அ.ராஜ் (நொண்டியான அல் ஹாரித்) என்று அழைக்கப்படும் இவனைஉரோமப் பேரரசன் முதலாம் ஜஸ்டீனியன் (527-65) கி.பி. 529இல் சிரியாவின் அறபு வர்க்கத்தவர்களுக்கெல்லாம் தலைவனாக நியமித்து, தனது அந்தஸ்துக்கும் பட்டங்களுக்கும் அடுத்த தரத்திலுள்ள அந்தஸ்தையும்
62 libid., p, 78 63 R.A. Nlicholson, op.cit, p. 50 64 S.A. Q. Husaini, Arab Administration, p. 6

Page 55


Page 56
இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
*தனுக்’ கூட்டிணைப்பைச் சேர்ந்த அறேபியரின் முதலாவது தலைவனாக இருந்தவன் அஷத் வர்க்கத்தைச் சேர்ந்த மாலிக் பின் ஷ"ஹைர் பின் அம்ர் பின் பஹற்ம் என்பான் ஆவான். அவன் தனது மகன் ஜதீமா அல் அப்ரஷ் என்பானை பாரசீகத்தின் முதலாவது ஸாஸானியப் பேரரசனான அர்தஷிர் பாபகான் (கி.பி. 226-41) என்பானின் தொழும்பன் (Vassa) ஆக்கினான். ஹீரா அரசை நிறுவியவன் இந்த ஜதிமாவின் ஊழியன் ஒருவனைத் திருமணம் செய்திருந்த அவனது சகோதரியின் மகனான அம்ர் பின் அதீ பின் நஸ்ர் பின் ரபீஆ பின் ஹாரித் . பின் லக்ம் என்பான் ஆவான். இவன் லக்ம் என்பாரின் மரபில் பிறந்தவனாதலால், இவன் நிறுவிய அரசு லக்மிய அரசு என்று அழைக்கப்டுகிறது. இவனது பாட்டனாரின் பெயரால் நஸ்ரிய அரசு என்றும் சில சமயங்களில் அழைக்கப்படுகிறது. அல் ஹிரா நகரத்தைத் தலைகராகக் கொண்டு ஆட்சி செய்த லக்மிய அரச மரபைச் சேர்ந்த இருபது மன்னர்களின் பெயர்களை அல் கல்பி என்ற அறபு வரலாற்றாசிரியர் தந்திருக்கிறார். அம்ர் பின் அதீக்குப் பின்னர், இம்ருஉல் கைஸ் (மரணம் கி.பி. 328) என்பானின் காலம் வரை ஆண்ட ஹீரா மன்னர்களைப் பற்றி எதுவும் தெரியவில்லை. கிழக்கு ஹவ்ரானில், நமாரா என்ற இடத்தில் உள்ள அவனது சமாதியிற் காணப்படும் பண்டைய அறபு மொழிப் பொறிப்பு ஒன்று லக்மிய அரசன் இம்ருஉல் கைஸ் பற்றிய குறிப்பைத் தருகிறது. அவனுக்குப் பின்னர் அவனது மரபிற் பிறந்தவனும் அறபு இலக்கியத்தில் பெரிதும் கொண்டாடப்படுபவனும் அறபு வரலாற்றாசிரியர்களால் 'அல் அட்வர் (ஒற்றைக் கண்ணன்) என்று அழைக்கப்படுபவனுமான முதலாம் நுட்மான் (கி.பி. 400-418) என்பானிலிருந்து ஹீரா மன்னர்களின் வரலாறு பெரும்பாலும் ஒழுங்காகத் தெரிய வருகிறது. முதலாம் நுட்மானின் பெயர், ஸாஸானியப் பேரரசன் முதலாம் யஷ்தஜிர்த் (399-420) என்பானின் புதல்வன் பஹற்ராம் கோர் தான் வசிப்பதற்காக ஹிரா நகருக்கு அண்மையில் நிறுவிய கட்டடக்கலை நுட்பங்கள் பொருந்திய ‘கவர்னாக் கோட்டைக்காக அறபுக் கவிதை இலக்கியத்தில் இன்று வரை நிலைத்து வாழ்கிறது. ஹிராவுக்கும் சிரியாவுக்கும் இடையில் உள்ள பாலைவனத்தின் மத்தியில் ‘ஸதீர்’ என்ற மற்றொரு கோட்டையையும் அவன் கட்டினான். இறுதிவரை புறச்சமயியாக இருந்த அவன் கிறித்தவ மதத்தைப் பெரிதும் வெறுத்தான். கிறித்தவ மதத்தைத் தழுவிய தனது குடிகளைக் கூட வதை செய்தான். ஆயினும், தனது வாழ்வின் இறுதிக் காலத்தில், கிறித்தவர்களுக்கு இரக்கம் காட்டினான்."
அவனுக்குப் பின்னர், அவனது மகன் முதலாம் முன்திர் (418-62) ஹரீராவின் ஆட்சி பீடமேறினான். பாரசீக அரசன் முதலாம் யஷ்தஜிர்தின்மரணத்தின் பின்னர், அவனது புதல்வன் பஹற்ராம் கோர் ஆட்சி பீடம் ஏறுவதற்குத் தடையாக இருந்து கிளர்ச்சி செய்த பாரசீக மத குருக்களைப்
67 Philip K. Hitti, op. citip.82

இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
பணிய வைத்து, அவனுக்கே முடிசூட்ட அவர்களைப் பலவந்தப்படுத்தும் அளவுக்கு இவனது ஆற்றலும் செல்வாக்கும் ஓங்கியிருந்தன. 421இல், உரோமருடன் ஸாஸானியர் செய்த போரில், இவன் பாரசீகரோடு நின்று போர் புரிந்தான். இவனுக்குப் பின்னர் மூன்றாம் முன்திர் (505-54) என்பானின காலம் வரை ஆண்ட ஹீரா மன்னர்களைப் பற்றிய வரலாறு தெளிவாக இல்லை.
அறபு வரலாற்றாசிரியர்களால் இப்ன் மாஉஸ் ஸமா..' (வானத்து நீரின் மகன்) என்று அழைக்கப்படும் மூன்றாம் முன்திரின்° ஆட்சிக்காலம் லக்மியரின் வரலாற்றில் மிகவும் புகழ் பூத்த காலமாகும். உரோமரின் ஆதிக்கத்தில் இருந்த சிரியாவுக்கு இவன் ஒரு பெரிய சவாலாக இருந்தான். இவனது ஆட்சிக் காலத்தில், மத்திய அறேபியாவில் அரசு அமைத்திருந்த கின்தா மரபினர் மிகுந்த வலிமை பெற்றிருந்தனர். 505 ஆம் ஆண்டிற்கும் 529 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் கின்தா அரசன் ஹாரித் பின் அம்ர் என்பான் இராக்கில் படையெடுப்பு நடத்தி, இவனைத் துரத்தி விட்டு ஹிராவைக் கைப்பற்றிக் கொண்டான். ஆயினும், 531இல் பாரசீகப் பேரரசன் அனுாஷிர்வான் ஆட்சிபீடம் ஏறுவதற்கு முன்பே, இவன் தனது இழந்த அரசை மீட்டெடுத்துக் கொண்டான். கிறித்தவ மதத்தை வெகுவாக வெறுத்த இவன் ஒரு முறை 400 கிறித்தவ கன்னியாஸ்திரிகளைப் பிடித்து அல் உஷ்ஷா தெய்வத்திற்குப் பலிகொடுத்தான்.° உரோமர்களையும் அவர்களது தொழும்பர்களாக இருந்த ங்ஸ்ஸானியரையும் எதிர்ப்பதில் மிகுந்த துணிச்சலோடும் வீரத்தோடும் செயற்பட்ட இவன் அன்தியொக் நகரம் வரை படையெடுத்துச் சென்று சிரியாவை நாசமாக்கினான். 544இல், ங்ஸ்ஸானியரோடு செய்த சண்டையில் ங்ஸ்ஸானிய அரசன் இரண்டாம் அல் ஹாரிதின் புதல்வன் ஒருவனைச் சிறைப்பிடித்துச் சென்று, அல் உஷ்ஷா தெய்வத்திற்குப் பலியிட்டான். ஆனால், பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், 554இல் நிகழ்ந்த ஹலீமாச் சமரில், ங்ஸ்ஸானியர் இவனைக் கொன்று விட்டனர்.
இவனுக்குப் பின்னர், இவனது புதல்வன் அம்ர் (554-69) என்பான் ஆட்சி பீடம் ஏறி, பதினைந்து ஆண்டுகள் ஆட்சி செய்தான். ங்ஸ்ஸானிய ஆட்சியாளர்களைப் போலக் கவிஞர்களையும் கலைஞர்களையும் இவனும் ஆதரித்தான். அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த தரபா, அம்ர் பின் குல்தூம், ஹாரித் பின் ஹில்லிஷா முதலான அறபுக் கவிஞர்கள் இவனது ஆதரவில் வாழ்ந்தவர்களே. கொடுங்கோலனாய் இருந்த இவன், இவனால் ஆதரிக்கப்பட்டஅறபுக் கவிஞா’அம்ர் பின் குல்தூமால், அவரது தாயாரை அவமதித்ததற்காகக் கொல்லப்பட்டான்.
68 மTஉஸ் ஸ்மா..' என்பது இவனது தாய் ம# (மாவிய7 என்பாளின் செல்லப்பெயர்) 69. R.A. Nicholson, op.cit., p.43 Footnote No. 1
டு)

Page 57


Page 58


Page 59
இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி 1
வெளிநாடுகளுக்கு சூழியல் தூது சென்று, பேச்சுவார்த்தைகள் நடத்தும் ஸ்பாரா” என்ற பதவி பனூ அதீ கிளைக்குலத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இஸ்லாம் தோன்றிய காலத்தில் அந்தக் கிளைக்குலத்தைச் சேர்ந்த ஹழ்ரத் உமர் இந்தப் பதவியை வகித்து வந்தார். இவ்வாறே மற்றப் பொறுப்புகளும் பல்வேறு கிளைக் குலங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.
மிக ஆரம்ப காலத்திலேயே மக்கா நகரத்தவர்கள் அண்டை நாடுகளில் வர்த்தகம் செய்வதற்கும் குறிப்பிட்ட பாதைகளினூடாகப் பாதுகாப்பான வர்த்தகப் பயணங்களை மேற்கொள்வதற்கும் தேவையான அனுமதியை பாரசீக மன்னனோடும் உரோமப் பேரரசனோடும் செய்துகொண்ட உடன்படிக் கைகள் மூலம் பெற்றிருந்தனர். மக்காவின் வரலாற்றில் இந்த அனுமதி '60)856nofflooTg5ub (56bjei6OTg5ub splguiG (Guarantee of Caesar and Chosroes) என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு அபிசீனியாவின் நஜாஷி, நஜ்தின் ஷைகுகள், யமனின் ஆட்சியாளர், ங்ஸ்ஸானிய அரசன், அல் ஹிரா மன்னன் முதலானோரோடும் உடன்படிக்கைள் செய்திருந்தனர்." பிறநாட்டு வர்த்தகர்களும் இவ்வாறு மக்காவோடு வர்த்தக ஒப்பந்தங்கள் செய்திருந்தனர். அவர்கள், நாட்டினுள் பிரவேசிக்க அனுமதி பெறவும் தங்கியிருக்கவும் வர்த்தகம் செய்யவும் பல்வேறு வரிகளையும் கட்டணங்களையும் மக்கா அரசுக்குச் செலுத்த வேண்டியவர்களாக இருந்தனர். வரிகளும் இறுப்புக்களும் செலுத்தப்பட்ட பின்னரே அவர்கள் நகரினுள் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.
மக்கா ஒரு யாத்திரைத் தலமாக இருந்தமையால், மக்காவின் நகர அரசு யாத்திரிகர்களுக்காகப் பல வசதிகளைச் செய்து கொடுத்தது. யாத்தரிகள் களுக்கு நீர் இழுத்து வந்து கொடுக்கும் பணியில் அடிமைகளும் தொண்டர் களும் ஈடுபடுத்தப்பட்டனர். யாத்திரிகர்கள் இயற்கைக் கடன்களைக் கழிப்பதற்காகத் தற்காலிக மலசல கூடங்களையும் மக்கா நகர அரசு அமைத்துக் கொடுத்தது. அவை கடினமான மண்ணில் தோண்டப்பட்ட குறுகிய வாயை உடைய குழிகளாக இருந்தன. நகரத்தின் தெருக்களும் ஒழுங்கைகளும் செப்பனிடப்பட்டு, துடைப்பத்தால் பெருக்கிச் சுத்தம் செய்யப்பட்டன. கூலி பெற்றுக் கொண்டு குடிகளுக்கு குடிநீர் இழுத்து வந்து கொடுக்கும் பணியில் அடிமைகளும் விடுதலை பெற்ற அடிமைகளும் ஈடுபட்டிருந்தனர்.
சுருங்கச் சொன்னால், இஸ்லாத்திற்கு முற்பட்ட கால அறேபியாவில் ஆங்காங்கே இரண்டொரு அரசுகள் இருந்த போதிலும், சமகால அறேபியாவின் அயல் நாடுகளில் காணப்பட்டது போன்ற ஸ்திரமான அரச அமையம் எதுவும் இருக்கவில்லை.
72. Shorter Encyclopaedia of Islam p.368

இஸ்லாமிய வரலாறு UTBD 1 u(535. 1
இஸ்லாத்திற்கு முந்திய கால அறேபியாவின் நிலையைப்பற்றி, கி.பி. 616 இல் அபிசீனியாவுக்கு ஹிஜ்ரத் செய்த முஸ்லிம் அகதிகளின் சார்பில் அபிசீனிய மன்னர் அல் நஜாஷியின் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த ஜட்பர் பின் அபூதாலிப் மிக அழகாக் கூறினார்: “நாங்கள் அறியாமையில் ஜஃபரின் மூழ்கிக்கிடந்த மக்கள். நாங்கள் சிலைகளை வணங்கினோம்; வர்ணனை பிணங்களை உணவாக அருந்தினோம்; மானக்கேடான செயல்களைப் புரிந்தோம்; இரத்த உறவுகளைத் துண்டித்தோம்; அயலாரைக் கொடுமைப்படுத்தினோம்; எங்களுட் பலவீனரை வலியோர் சாப்பிட்டனர்; எங்களுக்குள்ளிருந்தே ஒருவரை அல்லாஹற் நபியாக அனுப்பும் வரை நாங்கள் இவ்வாறே இருந்தோம்” என்று அவர் குறிப்பிட்டார்.” இத்தகைய ஒரு இழிவான அறியாமையில் அறேபியர் சிக்குண்டிருந்த சமயத்திலேதான் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹற்வின் தூதராக அனைத்து உலகுக்கும் பொதுவான தூது ஒன்றோடு அறேபிய மண்ணிலே பிறந்தார்கள்.
73 இப்னி ஹிஜாம் பாகம் பக்கம் 362

Page 60
3. நபி முவுறம்மதும்
இஸ்லாத்தின் தோற்றமும்
ற்பி முஹம்மத் (ஸல்) அவர்கள் பிறந்த சமயத்தில், மக்காவின நகர அரசு குறைஷ கோத்திரத்தாரின் கைகளில் இருந்தது. இவர்கள் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும் குறைஷ என்ற மறுபெயரைக் கொண்டிருந்தவருமான பிஹற் என்பாரின் வழித் தோன்றல்கள். குறை)ெ நபி இஸ்மாஈல் (அலை) அவர்களின் சந்ததியினருள் (8dbII திரம் ஒருவரான மஆத் பின் அத்னான் என்பாரின் மரபில் தோன்றிய பிஹற்ரே இந்தக் கோத்திரத்திற்கு குறைஷ என்ற பெயரை இட்டார். குறைஷ என்ற மறுபெயரைப் பெற்றிருந்தவரும் பிஹற்ரின் பாட்டனாருமான நள்ர் பின் கினானா என்பவரே அந்தக் கோத்திரத்திற்கு குறைஷ என்ற பெயரை முதலிற் சூட்டியவர் என்று வரலாற்றாசிரியர்கள் சிலர் கூறுகின்றனர். அல் ஹாபிள் அல் இராகி தமது ‘ஸிரதுல் மன்ஷ"மா என்ற நூலில் இது பற்றிக் குறிப்பிடுகையில், ‘பெரும்பான்மையானோர் நள்ர் என்பாரை குறைஷகளின் மூதாதையாகக் கருதுகின்ற போதிலும், பிஹர் என்பாரின் வழித் தோன்றல்களே குறைஷியர் என்று கூறுதலே மிகச் சரியானதாகும் என்கிறார். குறைஷ என்ற சொல்லுக்குப் பண்டைய அறபு மொழியில் “வர்த்தகம் செய்து இலாபம் ஈட்டுதல்' என்பது பொருள். பிஹற்ர் என்பார் வர்த்தகம் செய்து இலாபம் ஈட்டும் ஒரு வணிகராக இருந்தமையால், அவர் இந்தப் பெயரால் அழைக்கப்பட்டார்.
குறைஷ வர்க்கத்தார் ஹாஷிம், உமய்யா, நவ்பல், ஷஹற்ரா, அஸத், தய்ம், மக்ஷம், அதி, ஜுமஹ, ஸஹற்ம் எனப் பத்துக் கிளைக் குலங்களாகப் பிரிந்திருந்தனர். ஆரம்பத்தில் இவர்கள் மக்காவின் புனித பிரதேசத்தைச் (60) ஸய் சூழவிருந்த சனசஞ்சாரமற்ற மலைகளில் மிகவும் துன்பகரமான வாழ்க்கை நடத்தி வந்தனர். இந்த வர்க்கத்தார் அனைவரையும் ஒன்று திரட்டி, செல்வாக்கும் செல்வமும் மிகுந்த ஒரு கோத்திரத்தாராக உருவாக்கியவர் பிஹரின் ஆறாவது தலைமுறையிற் பிறந்த குஸைய் பின் கிலாப் என்பவர் ஆவார். இவரது தாய் பாத்திமா பின்த் ஸ.'த் என்பவர். அவர் குஸைய்யின் தந்தை கிலாப் மரணமான பின்னர், உத்ரா குலத்தைச் சேர்ந்த ரபீஆ பின் ஹராம் என்பாரைத் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு அப்போது ஷ"ஹற்ரா, ஷைத் (குஸைய்) என்ற புதல்வர் இருவர் இருந்தனர். மறுமணமான பின்னர், அவர் வளர்ந்த மனிதராய் இருந்த ஷஹற்ராவை மக்காவிலே விட்டுவிட்டு, பாலகராய் இருந்த ஷைதை அழைத்துக்
1 அல் ஷுர்கானி ஷர்ஹர் அல் மவாஹிபுல் லதுணியா, பாகம் 1 பக்கம் 91

இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
கொண்டு தமது கணவரோடு அவரது தாயகமான சிரியாவின் எல்லைப்புறத்திற்குப் போய்விட்டார். ஷைத் தமது தாயாரோடு மக்காவிலிருந்து தொலைவில் உள்ள ஒரு பகுதியில் வளர்ந்து வாலிபரானார். (தூரத்திலுள்ள ஒரு பிரதேசத்தில் வளர்ந்தமையாலேயே ஷைத், குஸைய்துாரத்திலுள்ளவர் - என்று அழைக்கப்பட்டார்) பின்னர், தமது தாயகத்தையும் கோத்திரத்தையும் பற்றி அறிந்து கொண்ட குஸைய் மக்காவுக்கு வந்து வாழலானார். அப்போது, மக்காவிலே குஷாஆ வர்க்கத்தினர் மேலாதிக்கம் பெற்றிருந்தனர். அவர்களது வர்க்கத்தலைவரான ஹ"லைல் பின் ஹப்ஸிய்யா என்பாரின் கைகளிலேயே புனித கட்பாவின் பரிபாலனம் இருந்தது. நபி இஸ்மாஈலின் நேர் சந்ததியினரான குறைஷியரே கட்பாவின் பாதுகாவலராக இருக்க உரித்துடையவர்கள் என்பதை உணர்ந்த குஸைய் அதனை மீட்கும் முயற்சியில் குறைஷியரினதும் கினானா, குழாஆ ஆகிய வர்க்கங்களினதும் உதவியைக் கோரினார். அவர்கள் உதவ முன்வந்தனர். அதேசமயம், ஹ"லை லின் புதல்வி ஹ"ப்பாவையும் அவர் திருமணம் செய்தார். இந்தத் திருமணத்தின் பின்னரேனும் ஹ"லைல் க.. பாவைத் தம்மிடம் ஒப்படைப்பார் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால், ஹ"லைலோ தமது மரணப் படுக்கையில் அவரது உறவினருள் ஒருவனான அபூ குப்ஷான் என்பானிடம் கஃபாவின் திறவு கோல்களை ஒப்படைத்து விட்டார். ஆயினும், அவனக்கு மதுவைக் கொடுத்துப் போதையூட்டிய குஸைய், அவன் போதையில் இருக்கையில் மது நிரம்பிய தோற்பை ஒன்றை விலையாகக் கொடுத்து, அவனிடமிருந்து கஃபாவின் திறப்புகளை வாங்கிக் கொண்டார். இதனை ஏற்றுக்கொள்ளாத குஷாஆ வர்க்கத்தினர் குஸைய்யியோடு போர் தொடுத்தனர். குஸைய், அவர்களைப் போரிலே தோற்கடித்தார். க.பா அவரது நிருவாகத்தின் கீழ் வந்தது.*
இவ்வாறு, புனித க.பாவைப் பொறுப்பேற்றுக்கொண்ட குஸைய், மக்கா நகரின் பரிபாலகராயும் மாறினார். அது வரை மலைகளில் வாழ்ந்த குறைஷ கோத்திர மக்களை நகருக்குள் வரவழைத்து, ஷம்ஷம் நீரூற்றைச் சூழவிருந்த பத்ஹா.’’ பள்ளத்தாக்கில் குடியமர்த்தினார். இந்தப் பகுதியில் அவர்கள் நிரந்தரமாகத் தங்கி வாழ ஆரம்பித்தமையால், அவர்கள் அப்தஹி, பிதாஹி அல்லது குறைஷல் பிதா" என்றும் அழைக்கப்படலாயினர். இவ்வாறு அவர்களை குஸைய் ஒன்று திரட்டியமையினால் அவருக்கு முஜம்மி' (ஒன்றுசேர்த்தவர்) என்ற சிறப்புப் பெயரும் ஏற்பட்டிருந்தது. மக்காவின் பள்ளத் தாக்கிலே ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் ஒவ்வொரு பகுதி ஒதுக்கப்பட்டது. அதுவரை ஒலைக் குடிசைகளையும் கூடாரங்களையும் கொண்டிருந்த 2. R.A. Nicholson, A Literary History of the Arabs, pp. 64-5,
இப்ன் ஸஃத் தபகாதுல் குப்ரா, பாகம் 1 பக்கம் 66-8 3 மணலும் சிறு கற்களும் உள்ள - நீர் ஓடக் கூடிய அகலமான கால்வாய் போல அமைந்திருக்கும் - பள்ளத்தாக்கின் அடிப்பகுதியே பத்ஹாஃ' அல்லது அப்தஹர்' என்று அழைக்கப்படுகிறது.மக்காப் பள்ளத்தாக்கிலுள்ள இந்தப் பகுதி மக்கா பத்ஹாய்' என்று அழைக்கப்படுகிறது. இதிலேயே புனித கஃபா
அமைந்திருக்கிறது.

Page 61


Page 62
இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
தொடர்ந்த அவர் கி.பி. 500 ஆம் ஆண்டளவில், தாயகம் திரும்பாமலேயே ங்ஷ்ஷா என்ற இடத்தில் மரணமானார். சில மாதங்களின் பின்னர், அவரது மனைவி ஸல்மா ஒர் ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தார். அவருக்கு ஷைபா என்று பெயர் சூட்டப்பட்டது. ஷைபா எட்டுவயதுச் சிறுவராக இருந்தபோது, ஹாஷிமின் சகோதரரான முத்தலிப் என்பார் மதினாவுக்குச் சென்று, தமது சகோதரன் மகனை மக்காவுக்கு அழைத்து வந்து, அவருக்கு அப்துல் முத்தலிப் என்று பெயரிட்டுத் தமது சொந்தப் பிள்ளை போல வளர்க்கலானார்.
ஹாஷிம் மரணித்த பிறகு, அவரது சகோதரர் முத்தலிப் ஸிகாயா, ரிபாதா ஆகிய பதவிகளைப் போறுப்பேற்றார். ஹாஷிமை விடவும் வயதில் மூத்தவரான அவர் மக்களிடையே மிகுந்த மதிப்பும் செல்வாக்கும் அல் (p லிப் உடையவராக இருந்தார். அவர் குறைஷ்களின் छाोt']60 அவர்களது வர்த்தகம் சம்பந்தமாக அபிசீனிய சக்கரவர்த்தி அல் நஜாஷியோடு உடன்படிக்கை ஒன்றும் செய்து கொண்டார். அவரது தாராளத்தன்மை காரணமாக மக்கள் அவரை 'அல் பய்ழ் (அபரிதமானவர்) என்று அழைத்து வந்தனர். இயல்பாக அமையப்பெற்ற திறமையாலும் மக்களிடமிருந்து சம்பாதித்திருந்த மதிப்பாலும் இரண்டு தசாப்தங்களாகத் தமது கடமைகளை வெற்றிகரமாக நிறைவேற்றி வந்த அவர் கி.பி. 520இல் மரணமானார். அவருக்குப் பின்னர் அவரது சகோதரர் மகனும் ஷைபா என்ற இயற்பெயரைப் பெற்றிருந்தவருமான அப்துல் முத்தலிப் ஸிகாயா, ரிபாதா ஆகிய பதவிகளைப் பொறுப்பேற்றார்.
இதேவேளையில், அப்துல் தாரின் பேரர்கள் செல்வர்களாக வளர்ந்து கொண்டிருந்தார்கள். ஹாஷிம் குலத்தாரின் செல்வாக்கு பொதுமக்களிடையே வளர்ந்து வந்ததைக் கண்ட அப்துல் தாரின் பேரர்கள் அவர்கள் மீது பொறாமை கொண்டனர். அவர்களிடமிருந்து வந்த அபதுல முத் தலிப் அதிகாரங்களைப் பிடுங்கிக்கொள்ளவும் மக்காவின் ஆட்சியாளர்களாகத் தம்மை மாற்றிக் கொள்ளவும் அவர்கள் முயன்றனர். இந்த முயற்சியில் அப்துல் தாரின் பேரர்களுள் ஒருவரும் அப்துஷ் ஷம்ஷின் புதல்வருமான உமையா பெரும் முனைப்புக் காட்டினார். ஆனால், குறைஷ கோத்திரத்தார் அனைவராலும் நன்கு மதிக்கப்பெற்ற அப்துல் முத்தலிபை அவரால் தோற்கடிக்க முடியவில்லை. அவர் சுமார் 59 ஆண்டுகள் மக்காவைச் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் பரிபாலனம் செய்தார். மக்காவில் பிரதானமான பத்துக் குடும்பங்களின் தலைவர்கள் பரிபாலனக் கருமங்களில் அவருக்கு உதவி வந்தனர்.
அப்துல் முத்தலிபின் ஆட்சிக்காலத்திலே, மக்காவில் உள்ள புராதன ஆலயமான புனித க.பாவை அழித்து ஒழிப்பதற்காகவும் மக்காவைக் கைப்பற்றுவதற்காகவும் வெளியாரின் படையெடுப்பு ஒன்று நிகழ்ந்தது. கி.பி. 570இல் அல்லது 571இல், யமனை ஆட்சிசெய்த அபிசீனிய ஆட்சியாளன

இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
அப்ரஹா என்பான் யானைகள் சிலவற்றைக் கொண்ட படை ஒன்றோடு மக்காவக்கு வந்து, கட்பாவை அழிக்க முயன்றான். யாத்திரையின் பொருட்டு அறேபியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆண்டு தோறும் வந்து, 6060 କେଁଏଁ (6. ஆயிரக்கணக்கில் மக்காவில் ಆnqu யாத்திரிகர்கள் மூலம அநத நகரமும அதன ஆலயமும அடைந்திருந்த மதிப்பையும் செல்வாக்கையும் கண்டு எழுந்த பொறாமையே அவனது படையெடுப்பின் பிரதான காரணமாக இருந்தது. மக்காவின் செல்வாக்கைக் குறைப்பதற்காக அவன் அக்கால உலகில் எங்குமே இல்லாத பிரமாண்டமான கிறித்தவ மாதாகோயில் ஒன்றை யமனில், ஸன்ஆ நகரிலே நிறுவி, ஆண்டு தோறும் அங்கே உற்சவம் நிகழ ஏற்பாடுகள் செய்திருந்தான். ஆயினும், மக்காவின் சிறப்பையும் அங்கு யாத்திரை மேற்கொண்ட மக்களின் எண்ணிக்கையையும் குறைக்க அவனால் முடியவில்லை. இதேசமயம், புகைம் கிளைக் குலத்தைச் சேர்ந்த இருவர் உற்சவகாலத்தின் போது ஒருநாள், அந்த மாதா கோயிலினுள் நுழைந்து, அங்கே மலங்கழித்து, அதனை அசுத்தப்படுத்தி விட்டனர். இந்தச் சம்பவம் அப்ரஹாவின் படையெடுப்புக்கு உடனான காரணமாக அமைந்துவிட்டது. அவனது படையெடுப்பு அவனுக்கு வெற்றியளிக்கவில்லை. அவனும் அவனது படையினரும் புனித கஃபாவின் உண்மையான பாதுகாவலனான அல்லாஹற்வால் அழித்தொழிக்கப்பட்டனர். யானை அறேபியருக்கு ஒரு புதிய பிராணியாக இருந்தமையால், அப்ரஹா மக்கா மீது படையெடுப்பு நடத்திய அந்த ஆண்டிற்கு 'ஆமுல் பீல் (யானை ஆண்டு) என்று அவர்கள் பெயரிட்டனர். இந்தச் சம்பவம் பற்றி அல் குர்ஆனிலும் அதன் 105ஆம் அத்தியாயத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டிலேயே நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் பிறந்தார்கள்.
அப்துல் முத்தலிபின் பெரும் சாதனைகளுள் ஒன்று ஷம்ஷம் கிணற்றைக் கண்டுபிடித்து, அதனை மீண்டும் தோண்டி, மக்களின் பயன்பாட்டிற்காக விட்டமை ஆகும். இந்தக் கிணறு, பாலைவனத்தில் தாகத்தால் துடித்துக்கொண்டிருந்த நபி இப்றாஹீமின் 69D 69LO கிணறு மனைவி ஹாஜராவையும் அவரது பச்சிளம் புதல்வர் தோண்டப் LS) இஸ்மாஈலையும் காப்பாற்றுவதற்காக வானவர் ஜிப்ரீலால் தோற்றுவிக்கப்பட்டதாகும். இதனைச் சூழ கற்சுவர் ஒன்றைக் கட்டி, ஊற்றெடுத்துப் பெருகிக் கொண்டிருந்த இதன் நீரைப் பிடித்து நிறுத்திய முதல்வர் ஹாஜராவே ஆவர். இந்தக் கிணறு, மக்காவில் வாழ்ந்த மக்களுக்கும் பிராணிகளுக்கும் பயனுடையதாய் மிக நீண்டகாலமாக இருந்து வந்தது. இஸ்லாத்திற்கு முந்திய அறியாமைக் காலத்தில், ஜுர்ஹ"ம் வர்க்கத்தவர்கள் மக்காவைத் துறந்து வெளியேறிய சமயம், அவர்கள் தமது செல்வங்களை இந்தக் கிணற்றினுள் போட்டு மூடிவிட்டுச் சென்றனர். காலப் போக்கில் இந்தக் கிணற்றினுள் சேர்ந்த மணலும் குப்பைகளும் இதனை முற்றாக மூடி, இருந்த இடம் தெரியாமற்
(15)

Page 63
இஸ்லாமிய வரலாறு LJT86tb 1 LIG,5. 1
செய்து விட்டன. ஆயினும், இந்தக் கிணறு பற்றிய வரலாற்றையும் பழைய நினைவுகளையும் மறக்காத அறேபியர் இது மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுத் தோண்டப்படல் வேண்டும் என்று விரும்பிவந்தனர். இந்த விடயத்தில் மற்றெல்லாரை விடவும் அப்துல் முத்தலிபே அதிக முனைப்பும் அக்கறையும் காட்டினார். இறுதியாக, அவர் கனவுகளின் வழிகாட்டல் மூலம் இந்தக் கிணறு புதையுண்டிருந்த இடத்தைக் கண்டுபிடித்து, இதனை மீளத்தோண்டி மக்களிடம் ஒப்படைத்தார். அவர் இந்தக் கிணற்றைத் தோண்டியபோது தங்கத்தால் செய்யப்பட்ட இரண்டு மான்களின் உருவச் சிலைகள், சில வாள்கள், போர்க் கவசங்கள் ஆகியவற்றைக் கண்டெடுத்தார். மான் உருவச் சிலைகளில் ஒன்று க.பாவில் இருந்த ‘ஹ"பல் விக்கிரகத்திற்கு அருகே வைக்கப்பட்டது. வாள்கள், க.”யாவுக்காக கதவு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டன. இந்தக் கதவு, மற்ற மான்சிலையில் இருந்த தங்கத்தால் உறையிடப்பட்டு, கஃபாவுக்குப் பொருத்தப்பட்டது. புனித கஃபாவில் செய்யப்பட்ட முதலாவது தங்க அலங்காரம் இதுவே ஆகும்.'
அப்துல் முத்தலிபுக்குப் புதல்வர்கள் பன்னிருவரும் புதல்விகள் அறுவரும் இருந்தனர். புதல்வர்களுள் அபூதாலிப், அப்பாஸ், ஹம்ஸா, அப்துல்லாஹற் ஆகியோர் இஸ்லாமிய வரலாற்றில் சிறப்பிடம் பிடித்துக் கொண்டவர்கள். இஸ்லாத்தின் பரம வைரிகளாக இருந்த அபூலஹபும் அப்துல் முத்தலிபின் புதல்வர்களுள் ஒருவனே ஆவான். அப்துல் முத்தலிபின் கடைசிப் புதல்வரான அப்துல்லாஹற்வே இஸ்லாமிய வரலாற்றின் நாயகரான நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் தந்தை ஆவார்.
அப்துல் முத்தலிப் ஷம்ஷம் கிணற்றைக் கண்டுபிடித்து, அதனை மீளத் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவருக்கு உதவி செய்ய ஒரே மகன் மட்டுமே இருந்தார். அப்போது அவர், அல்லாஹற் தமக்குப் புதல்வர் பதின்மரைத் தந்தால் அவர்களுள் c) துல முதி தலிபின் ஒருவரை அவனுக்குப் பலியிடுவதாக நேர்ச்சை செய்து கொண்டார். அவ்வாறே அவரது (b 60) விருப்பம் நிறைவேறி, அவரது புதல்வர்களின் எண்ணிக்கை பெருகிய போது, அவர் தமது புதல்வர்கள் அனைவரையும் கஃபாவுக்கு அழைத்துச் சென்றார்; தமது புதல்வர்களுள் எவரைப் பலியிட வேண்டும் என்பதைக் குறிபார்த்துச் சொல்லுமாறு கஃபாவின் பூசாரியைக் கேட்டார். அவனது குறியில் அவரது இறுதிப் புதல்வர் அப்துல்லாஹற்வின் பெயரே விழுந்தது. அவர் தமது இளையமகன் அப்துல்லாஹற்வை மிக அதிகமாக நேசித்தபோதிலும், தெய்வ விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் எண்ணத்தோடு மகனை அழைத்துக்கொண்டு பலி கொடுக்கும் இடத்திற்குச் சென்றார். அவர்களோடு அவ்ரது மற்றப் பிள்ளைகளும் அங்கே சென்றனர்.
7 இப்ன் ஹரிஷாம் பாகம் 1 பக்கம் 163
GI)

இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
அவரது புதல்விகள் கண்ணி சிந்தி அழுதவாறு, அப்துல்லாஹற்வை விட்டுவிட்டு, அவருக்குப் பதிலாக பத்து ஒட்டகைகளைப் பலியிடுமாறு தந்தையிடம் கூறினர். எனவே, அவர் பூசாரியிடம் சென்று, பத்து ஒட்டகைகளா அப்துல்லாஹவா என்பதைக் குறிபார்த்துச் சொல்லுமாறு கேட்டார். அப்போதும் அப்துல்லாஹற்வின் பெயரே விழுந்தது. ஒட்டகைகளின் எண்ணிக்கை பத்துப் பத்தாக கூட்டப்பட்டு, மீண்டும் மீண்டும் குறிபார்க்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் அப்துல்லாஹற்வின் பெயரே விழுந்தது. ஒட்டகைகளின் எண்ணிக்கை நூறாக உயர்த்தப்பட்ட போதுதான் குறி ஒட்டகைகள் மீது விழுந்தது. இதனால், அப்துல் முத்தலிபும் மக்களும் மகிழ்ச்சியடைந்தனர். அவ்வாறே அவர் நூறு ஒட்டகைகளைப் பலியிட்டுத் தமது நேர்ச்சையை நிறைவேற்றின்ார்.
வியத்தகு அழகும் சிறந்த குணங்களும் உடையவராக இருந்த அப்துல்லாஹ், யத்ரிப் (மதீனா) நகரைச் சேர்ந்த குறைஷ கோத்திரத்தின் கிளைக்குலமான பனு ஷ"ஹற்ரா குடும்பத்தில் பிறந்தவரும் வஹற்ப் பின் அப்து மனாப் என்பாரின் புதல்வியும் அப்போது அவரது சிறிய தந்தை வுஹைப் பின் அப்து மனாப் என்பாரின் இல்லத்தில் c) துலலாஹ வளர்ந்து கொண்டிருந்தவருமான ஆமினா என்ற : திருமணம் நல்லாளுக்கு மணமுடித்து வைக்கப்பட்டார். அப்போது அப்துல்லாஹற் இருபத்தைந்து வயது இளைஞராக இருந்தார். தமது புதல்வருக்குத் திருமணம் நிகழ்ந்த அதே தினத்தில், அப்துல் முத்தலிபும் வுஹைப் பின் அப்து மனாபின் புதல்வி ஹாலாவைத் திருமணம் செய்து கொண்டார். இந்த ஹாலாவுக்கும் அப்துல் முத்தலிபுக்கும் பிறந்தவரே நபி அவர்களின் சிறிய தந்தையும் பால்குடிச் சகோதரருமான ஹம்ஸா ஆவர்.
அறேபியாவின் குல வழக்கப்படி, அப்துல்லாஹற் திருமணத்தின் பின்னர், மதீனாவில் ஆமினாவின் இல்லத்தில் மூன்று தினங்கள் தங்கினார். பின்னர், தமது மனைவியோடு அவர் மக்காவுக்குத் திரும்பிவிட்டார். சில நாள்களின் பிறகு, அவர் சிரியாவில் உள்ள ங்ஷ்ஷா என்ற நகருக்குச் சென்ற வர்த்தகள் குழு ஒன்றோடு வியாபாரத்திற்காகப் பயணமானார். அபதுல 0ெ1ழி) அவர்கள் வியாபாரத்தை முடித்துக் கொண்டு திரும்பிய மரணம் போது, அப்துல்லாஹற் திடீரென நோயுற்று மதினாவிலே ஒரு மாதம் வரை தங்கிவிட்டார். அவரோடு சென்றிருந்தவர்கள் மக்காவுக்குத் திரும்பினர். மகனின் சுகவீனம் பற்றி அறிந்த அப்துல் முத்தலிப் அவரைப்பற்றிய தகவல்களை அறிந்து வருவதற்காகத் தமது மூத்த புதல்வர் ஹாரிதை மதினாவுக்கு அனுப்பிவைத்தார். ஆனால், அவர் மதினாவை அடைந்த போது, அப்துல்லாஹற் மரணமாகி, அங்கேயே அடக்கம் செய்யப்பட்ட செய்தியை அறிந்தார். துயரமான இந்தச் செய்தியை அறிந்து ஹாஷிம் கினைளக்குலத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் பெரும்
GD

Page 64


Page 65


Page 66
இஸ்லாமிய வரலாறு UT35lb u(55 1
போலப் பெரும் செல்வராக இருக்கவில்லை. அதனால், முஹம்மத் (ஸல்) அவர்களால் வாழ்க்கை வழிதேடும் பளுவிலிருந்து விடுபட்டவர்களாக இருக்க இயலவில்லை. வறிய குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களைப் போலவே அவர்களும் வாழ்க்கை வழியைச் சம்பாதித்துக் கொள்வதற்காக உழைக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு ஆளானார்கள். எனவே, அவர்கள் சிறுவராக இருந்தபோதே மக்காவாசிகளின் ஒட்டகைகளையும் ஆடுகளையும் கூலிக்காக மேய்த்து வந்தார்கள். சுவாரஸ்யமான இந்தத் தொழில் பற்றி நபி (ஸல்) அவர்கள் பிற்காலத்தில் ஒருமுறை குறிப்பிட்ட போது, ‘நான் மக்காவாசிகளின் வெள்ளாடுகளையும் செம்மறி ஆடுகளையும் ‘கராரீத்தின் மீது மேய்த்து வந்தேன்’ என்று கூறினார்கள்.(புஹாரி)"
முஹம்மத் (ஸல்) அவர்கள் பதின்மூன்று வயதுச் சிறுவனாக இருந்த போது, முனைப்புள்ள வர்த்தகரான அபூதாலிப் வியாபாரத்தின் பொருட்டு சிரியாவுக்குச் செல்லப்புறப்பட்டார். அப்போது, அவர் தம் தம்பி மகனையும்
Պիչ (2; சிரியாவுக்குக் கூட்டிச் சென்றார். இதுவே நபி ஆலர் ար՝ முஹம்மத் (ஸல்) அவர்களின் முதலாவது வீெழ்டுர்ஆபணம் வெளிநாட்டுப் பயணமாகும். இந்தப்
స్కీ, ** பிரயாணத்தின் போதுதான் அவர்கள் طS முதன்முறைரேத்திகளது துயரங்களையும் அவர்களது சமய ஊழல்களையும் பி,ே வாழ்க்கை முறைகளையும் அவதானித்தார்கள்.
இந்தக் காட்சிகள் அள்ஆஸ்து பிஞ்சு உள்ளத்திலே நிலையான பதிவுகளைப் பதித்து விட்டன. இந்தப்'யணத்தின் போது, தமஸ்கஸுக்குத் தெற்கே உள்ள புஸ்ரா என்ற இடத்தில் வாழ்ந்தவரும் இறை வேதங்களில் ஆழமான அறிவு பெற்றிருந்தவருமான பஹிரா" என்ற கிறித்தவத் துறவி முஹம்மத் (ஸல்) அவர்களையும் அவர்களிடம் தென்பட்ட நபித்துவ அடையாளங் களையும் அவதானித்து விட்டு, ‘அபூதாலிபே இந்தச் சிறுவர்தான் உலகில் தோன்றவிருக்கும் இறுதி நபி, இவரைப் பத்திரமாக உடன் நாட்டிற்கு அழைத்துச் சென்று, யூதர்களிடமிருந்து இவரைக் கவனமாகப் பாதுகாத்துக் கொள்ளும். ஏனெனில், அல்லாஹற் மீது சத்தியமாக, அவர்கள் இவரைப் பார்த்து, இவரைப் பற்றி நான் கூறிய முன்னறிவிப்பைத் தெரிந்து கொண்டால், அவர்கள் இவரது உயிருக்குத் தீங்கு விளைவிக்கக் கூடும். ஆகவே, இவரை விரைவாக வீட்டிற்குக் கூட்டிச் செல்லும்’ என்று கூறினார் என்று
16. இந்த ஹதீதில் வரும் கராரித்' என்ற சொல்லின் கருத்து சம்பந்தமாக அறிஞர்களுக்குள் கருத்து வேறுபாடு காணப்படுகிறது. இமாம் இப்னர் மாஜாவின் ஆசிரியரான ஷைக் ஸாவைத் பிள் எuஈத் என்பார் கராரீத்" என்பது திர்ஹம்'என்ற பொருளைக்கொண்ட கீராத் என்ற சொல்லின் பன்மை என்றும் நபி அவர்கள் கூலிக்கே ஆடு மேய்த்தார்கள் என்றும் கூறுகிறார். இமாம் புகாரீஇந்த ஹதீதை இஜாரா' (கூலிவேலை) என்ற தலைப்பினர் கீழ் பதிவு செய்திருப்பதும் இங்கே நோக்கத்தக்கது. இப்ராஹீம் அல் ஹர்பி இப்னர் அல் ஜவ்ஹீஆகியோர் கரார்த்’என்பது அஜ்யாத் என்ற இடத்திற்கு அருகிலுள்ள ஒரு பகுதியின் பெயர் என்கின்றனர். ஸ்ஹீவரால் புகாரிக்கு விரிவுரை எழுதிய அல்அய்னி பிந்திய கருத்தையே உறுதிப்படுத்துகிறார்.
G2)

இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
சொல்லப்படுகிறது.' இந்தச் சம்பவத்தின் பிறகு, அபூதாலிப் அங்கே அதிக நாள் தங்காமல், தமது தம்பி மகனோடு மக்காவுக்கு திரும்பி விட்டார்.
முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு தமது வாழ்நாளில் பாடசாலைக்கு அல்லது ஆசான் ஒருவரிடம் சென்று கல்வி கற்கும் வாய்ப்போ எழுத, வாசிக்கக் கற்றுக் கொள்ளும் சந்தர்ப்பமோ கிடைக்கவில்லை. ஆயினும், * பிற்காலத்தில் அல்லாஹற்வின் அருளால் மிக உயர்ந்த ஞானம் உம்மீ LLLL S S SL S S S LLLLS S
நிறைந்தவர்களாயும் முந்திய இறைமறைகள் பற்றிய வியத்தகு அறிவு உடையவர்களாகவும் இருந்தார்கள். அதனால், எழுத வாசிக்கத் " தெரியாதிருந்த அவர்களை மக்கள் 'உம்மீ நபி' என்றே அழைத்தனர். இதனைப்பற்றி அல்லாஹ் தனது அல்குர்ஆனிலே, ‘எழுத்தறிவில்லாத (உம்மீ) ஜனங்களுக்காக அவர்களிலேயே ஒரு தூதரை அவன் அனுப்பி வைத்தான்” (62:2) என்று குறிப்பிட்டிருக்கின்றான்."
மிகச் சிறுவயதிலிருந்தே முஹம்மத் (ஸல்) அவர்களிடம் வாய்மை, ஒழுக்கத் தூய்மை, கடமையுணர்வு, நேர்மை, கட்டுப்பாடு, பிறர்க்கு உதவும் மனப்பாங்கு, நம்பிக்கைக்கு மாறுசெய்யாமை, அன்புடைமை முதலான அருங்குணங்கள முழுமையாகக காணபபடடன. c)6) அமீன் அவர்களது இனிய இயல்பும் நல்ல நடத்தையும் மக்களின் கவனத்தை ஈர்த்தன. குறைஷ் கோத்திரத்தார் மட்டுமன்றி, மக்காவில் வாழ்ந்த மக்கள் அனைவரும் அவர்கள் மீது அசையாத நம்பிக்கை வைத்திருந்தனர். அந்த மக்கள் இக்கட்டான சமயங்களில், தங்களது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு அவர்களது ஆலோசனையை நாடினர்; தங்கள் பிணக்குகளை
17இந்தச் சம்பவம் பற்றி ஹதீத் அறிவிப்பாளர்களும் அறபு வாரலாற்றாசிரியர்களும் பல்வேறு விதமாகக் கூறியிருக்கின்றனர். இந்தக் கதையில் முஸ்லிம்களை விடவும் கிறித்தவ எழுத்தாளர்களே அதிக ஆர்வம் காட்டி வந்திருக்கின்றனர். நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் ஈமான்’ பற்றிய அறிவையும் அதன் அடிப்படைகளையும் இந்தத் துறவியிடமிருந்தே கற்று அவரிடம் கற்றுக்கொண்டவற்றை அடிப்படையாக வைத்தே புதிய மதத்தை நிறுவினார்கள் என்ற கருத்தை நிறுவுவதற்கு கிறித்தவ எழுத்தாளர்கள் இந்தக் கதையையே பயன்படுத்துகின்றனர். இஸ்லாமிய கோட்பாடுகள் அனைத்துமே பஹீராஃவால் போதிக்கப்பட்ட அடிப்படைக் கருத்துக்களின் விரிவாக்கம் என்று அவர்கள் கருதுகின்றனர். முஸ்லிம் வாராற்றாசிரியர்கள் பலர் பஹீராஃ பற்றிய சம்பவம் ஆதாரமற்ற - நம்பமுடியாத - ஒரு கட்டுக்கதை என்கின்றனர். இக்கதை ஹிஜ்ரி 100ஆம் ஆண்டிலேயே எழுத்துருப் பெற்றிருக்க வேணடும் என்று அவர்கள் கருதுகின்றனர். இது பற்றிய விரிவான விளக்கங்களுக்குப் பார்க்க: Khuda Bukhsh, Contribution to the History of Islamic Civilization, Vol. 1 pp. 186-92, Shibli Numani, Siratun Nabi. (Eng. TranS), Vol. l. pp. 157-60, giysi gampamvisai gysở pagan? Grðveg நபவிப்யா, பக்கம் 16-18
18 உம்மீ’ என்ற சொல் அல்குர்ஆனில் சில இடங்களில் ஆளப்பட்டிருக்கிறது. இந்த வசனத்தில் வரும் உம்மீ என்ற சொல்லுக்கு அல் குர்ஆன் விரிவுரையாளர்கள் பலர் எழுத வாசிக்கத் தெரியாதவர் என்றே பொருள் கூறியிருக்கின்றனர். நபி (ஸல்) அவர்களும் நாங்கள் உம்மீ’ சமூகத்தவர்கள் நாங்கள் எழுதுவதோ கணக்கு வைப்பதோ இல்லை’ என்று கூறியிருக்கின்றார்கள். வேதம் அருளப்படாதோர் (அலகுர்ஆன் 320) கல்வி அறிவு இல்லாதவர் 278) ஆகிய பொருள்களிலும் இந்தச் சொல் அல் குர்ஆனிலே ஆளப்பட்டிருக்கிறது. அறேபியர் அறேபியரல்லாதோரை அஜமீ என்று அழைத்தமை போல யூதர்களும் அக்காலத்தில் யூதரல்லாத மக்களை - குறிப்பாக புறச்சமயிகளாக இருந்த அறேபிரை - உம்மீ’ என்று அழைத்து வந்தனர். 622 ஆவது வசனத்தில் உம்மீ' என்ற சொல் இந்தக் கருத்திலேயே ஆளப்பட்டிருக்கிறது என்று மெளலானா மெளதுரதீ கூறுகிறார். (Abul A'la Maududi, The Meaning of the Quran, vol. Xiv pp. 243-44 G23)

Page 67


Page 68


Page 69


Page 70


Page 71
இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
கூறி அவர்களுக்கு ஆறுதல் அளித்தார். (புகாரி, முஸ்லிம்) பின்னர், அவர் அண்ணல் அவர்களை அவரது பெரிய தந்தையின் புதல்வரும் புனித வேதங்களில் ஆழமான பரிச்சயம் உடையவருமான வரகா பின் நவ்பல் பின் அஸத் என்பாரிடம் கூட்டிச் சென்றார். அவர் அண்ணல் அவர்களிடமிருந்து குகையில் நடந்ததைக் கேட்டறிந்த பின்னர், 'நிச்சயமாக, அது முஸா நபியிடம் அல்லாஹற் அனுப்பிய அதே நாமுஸ்’ அமரரே தான்” என்று கூறி அவர்களது நபித்துவத்துக்குச் சான்றுரைத்தார்.
முதன் முதலாக அருளப்பட்ட இந்த வேத வெளிப்பாட்டின் மூலம் அண்ணல் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஒரு நபியாகவும் அல்லாஹற்வின் தூதராகவும் ஆனார்கள். இந்தச் சம்பவம் நிகழ்ந்தபோது, அண்ணல் அவர்கள் BTOLg5stid 6IJU J60 og 6ILlgU i - LD60ILLléG56)ILD 6)IIIU (Bgb cO6) குர்ஆன - மனிதராக இருந்தார்கள். முதன்முறையாக நிகழ்ந்த இந்த வேத வெளிப்பாட்டின் பின்னர், இருபத்து மூன்று ஆண்டுகளாக அல் குர்ஆனின் வசனங்கள் யாவும் சிறிது சிறிதாக ஜிப்ரீல் (அலை) மூலம் அருளப்பட்டுப் பூர்த்தியாயிற்று. இந்த அல் குர்ஆன், அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு முழு மனித சமுதாயத்திற்குமுரிய அவர்களது புதிய தூதத்தில் அருளப்பட்ட தெய்விக வழிகாட்டலின் தொகுதியாகும். ‘உலகிலே ஆத்மிகச் சுனைகளாக விளங்கும் - எல்லாத் தேசங்களினதும் எல்லாக் காலத்தினதும் - சமய ஆகமங்களுள் அல் குர்ஆன் ஒன்றே காலத்தின் ஊழல்களிலிருந்து தப்பியதாயும் அதன் தூய்மையிலும் போதனைகளின் நிறைவு, கருத்து விசாலம், கோட்பாட்டுப் பொதுமை ஆகியவற்றிலும் தனிப் பண்புடையதாகவும் ஈடிணையற்றதாகவும் இருந்து வருகிறது' மேலும், அது மனித இனத்தின் நன்மைக்காக அல்லாஹற்வால் அனுப்பி வைக்கப்பட்ட முற்கால நபிமார்களின் முயற்சிகள், செயற்பாடுகள் ஆகியவற்றின் பதிவேடாகவும் இருக்கிறது. இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னர் உலகிலே நிகழ்ந்த பெரும் சம்பவங்கள் அனைத்தையும் அது விவரிக்கிறது. திரு. கிரெல் (Krehl) என்பார் கூறுவது போல, அல் குர்ஆன் அற ஒழுக்கங்களின் முழுமையான கோவையை யும்அவற்றின் அடிப்படையில் அமைந்த சட்டங்களின் கோவையையும் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நீதித்தாபனத்திற்கும் படை அமையத்திற்கும் நிதிகளுக்கும் ஏழைகளுக்குரிய மிகக் கவனமான சட்டவாக்கத்திற்கும் கூட அது அத்திவாரம் இடுகிறது. இவை அனைத்துமே மனிதனது தலைவிதியைத் தனது கையிலே பிடித்திருக்கும் ஒரே இறைவனிலுள்ள நம்பிக்கை (ஏக தெய்வக் கோட்பாட்டின்) மீது நிறுவப்பட்டவை ஆகும்.*
நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் புதிய தூதம் 'இஸ்லாம் ' என அழைக்கப்படுகிறது. இஸ்லாம் என்ற சொல்லுக்கு பணிதல் என்பது பொருள்.
25. Fazlu! Karim , Al Hadith, Book 1 p. 1 26 T.P. Hughes, Dictionary of lalam, p. 526
G32)

இளல்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
சம் பூரணமாகப் பணிதலை இந்த மார்க்கம் அடிப் டையாகக் கொண்டிருப்பதனாலேயே இது இப்பெயரால் அழைக்கப் படுகிறது. இது இஸ் லாம் ஏகத்துவம், சகோதரத்துவம், சமத்துவம் முதலான அடிப்படைக்
கோட்பாடுகள் மீது கட்டியெழுப்பப்பட்ட ஒரு மார்க்கம்; இன, நிற வேறுபாடில்லாமல் முழு மனித சமுதாயத்திற்குமுரிய ஒரு பொது மதம். கருவறையிலிருந்து சமாதியறை வரையிலான - சமாதியறையிலிருந்து மறுவுலகு வரையிலான - மனித வாழ்வின் சகல அம்சங்களையும் உள்ளடக்கிய முழுமையான வாழ்க்கை நெறியான இஸ்லாம் ஏகமாய் இருக்கும் அல்லாஹற் ஒருவனே என்ற ஏகத்துவக் கோட்பாட்டையும் உலக மக்கள் யாவரும் சகோதர - சகோதரிகளே என்ற சகோதரத்துவக் கொள்கையையும் அல்லாஹற்வின் பார்வையில் இன, நிற, மொழி, தேசிய வேறுபாடுகளின்றி மனிதர்கள் அனைவரும் சமமானவர்களே என்ற சமத்துவச் சட்டத்தையும் போதிக்கிறது. இந்த மார்க்கம் தெய்விக வெளிப்பாட்டை (வஹீயை) அடிப்படையாகக் கொண்டிருப்பதனால், இதன் அடிப்படைக் கோட்பாடுகள் அனைத்தும் மாறாத் தன்மை உடையவை. இஸ்லாத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை மார்க்கக் கடமைகள் ஐந்து அவை ஏகத்துவப் பிரகடனம் (கலிமா), ஐவேளைத் தொழுகை, ஏழைகளுக்குரியதைக் கொடுத்தல் (ஸ்காத்), றம்ழான் மாத நோன்பு, புனித க. பாவுக்கு யாத்திரை செய்தல் (ஹஜ்) என்பனவாகும். அல்லாஹற்வால் அருளப்பட்ட இந்த வாழ்க்கை நெறியைப் பின்பற்றுபவர் முஸ்லிம் அல்லது முஸ்லிமான் என்று அழைக்கப்படுகிறார்.
இந்தத் தெய்விகத் தூதத்தால் ஆணை பெற்ற நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில், ஏகத்துவக் கோட்பாட்டையும் இஸ்லாத்தின் நம்பிக்கை களையும் மிக இரகசியமாக மக்காவில் வாழ்ந்த தமது நெருங்கிய உறவினர் கள், நம்பிக்கைக்குரிய நண்பர்கள் ஆகியோரிடையே போதித்து வந்தார்கள். முதன் முதலில், அவர்களது அன்பு மனைவி கதீஜா தமது கணவர் கொண்டுவந்த தூதை ஏற்று, இஸ்லாத்தைத் தழுவி, உலகிலே முதலாவது முஸ்லிம் பெண்மணியானார். அவரைத் தொடர்ந்து நபியவர்களின் பெரிய தந்தை மகன் அலி பின் அபூதாலிபும் அவர்களது வளர்ப்பு மகன் ஷைத் பின் ஹாரிதாவும் அவர்களது பிரிய தோழர் அபூபக்ர் பின் அபூ குஹாபாவும் இஸ்லாத்தைத் தழுவினர். பின்னர், உத்மான் பின் அப்பான், அல் ஷ"பைர் பின் அல் அவ்வாம், அப்துர் றஹற்மான் பின் அவ்ப், ஸ.'த் பின் அபீ வக்காஸ், தல்ஹா பின் உபைதுல்லாஹற் முதலானோர் முஹம்மத் (ஸல்) அவர்களின் நபித்துவத்தில் நம்பிக்கை வைத்து முஸ்லிம்களாயினர். பெரும் பாலும் இவர்களுட் பலர் ஹழரத் அபூபக்ரின் தூண்டுதலாலேயே இஸ்லாத் தைத் தழுவினர். நபியவர்களின் அணியில் இணைந்து கொண்ட இந்த நல்லோர் சிலரின் மூலம் இஸ்லாம் படிப்படியாகவும் இரகசியமாகவும் மற்ற

Page 72
இஸ்லாமிய வரலாறு பாகம் பகுதி !
மனிதர்களிடையேயும் பரவ ஆரம்பித்தது. ஆயினும், இஸ்லாமியத் தூது அருளப்பட்ட பின்னர், நான்கு ஆண்டுகளாக முயற்சி செய்தும் சுமார் நாற்பது நபர்களையே நபியவர்களால் முஸ்லிம்களாக மாற்ற முடிந்தது.
நபித்துவத்தின் மூன்றாம் ஆண்டின் முடிவில் முஹம்மத் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் பகிரங்கமாக அவர்களது உறவினர்களுக்கும் குலத்தவர்களுக்கும் போதிக்குமாறு அல்லாஹற்வால் ஆணையிடப்பட்டார்கள்.
பொதுப்பிரசாரமும் .'
ஏகத்துவக் கோட்பாட்டைப் பகிரங்கமாகப் குறைஷியர் எதிர்ப்பும் பிரசாரம் செய்ய ஆரம்பித்தார்கள்:
முட்டாள்தனமான விக்கிரக வழிபாட்டைக் கைவிடுமாறும் எல்லாவற்றையும் சிருட்டித்த அல்லாஹற் ஒருவனையே வழிபடுமாறும் மக்களுக்குப் போதித்தார்கள். ஆனால், மக்காவில் வாழ்ந்த உருவத் தொழும்பர்களான குறைஷகளுக்கு நபியவர்களின் போதனை புதுமையாகத் தோன்றியது. முதலில், அந்த மக்கள் நபியவர்களையும் அவர்களது புதிய மார்க்கத்தையும் எள்ளி நகைத்தனர். ஆனால், அந்த மக்கள் நபியவர்கள் தமது பிரசாரத்தில் காட்டி வந்த ஆர்வமும் புதிதாக இஸ்லாத்தைத் தழுவியோரின் எண்ணிக்கையும் பெருகக் கண்டபோது, அவர்கள் தங்கள் நகைப்பைத் துன்புறுத்தல்களாகவும் சூழ்ச்சிகளாகவும் மாற்றிக் கொண்டனர்; அவர்களது ஏகத்துவப் பிரசாரத்தை நிறுத்துவதற்காகத் தங்களால் இயன்ற நடவடிக்கைகள் அனைத்தையும் எடுத்தனர். குறைஷ வர்க்கத்தின் செல்வாக்கு மிகுந்த கிளைக் குலத்தினரான உமய்யாக்கள் நபியவர்களை நல்லுள்ளம் கொண்ட ஒருவராகக் கண்டபோது, ஆசை காட்டி மோசம் செய்ய முயன்றனர். பெருமானாரின் புதிய தூதும் போதனைகளும் அவர்களது உயர்குடிமைப் போக்கைப் பெரிதும் பாதித்தன; மூட நம்பிக்கைகளின் மூலம் அவர்கள் பெற்று வந்த வருமானத்திலும் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தின. அதனால், அவர்களுட் சிலர் நபியவர்களின் பெரிய தந்தை அபூதாலிபிடம் தூது சென்று. “உங்கள் தம்பி மகனுக்கு அவரது புதிய போதனைகளைக் கைவிடுமாறு புத்தி கூறுங்கள்’ என்று கேட்டுக் கொண்டனர். அவ்வாறே அவர் தமது சகோதரர் மகனை அழைத்து, அவரது புதிய போதனைகளால் உருவான நெருக்கடி நிலைமை பற்றி விளக்கிய போது அவர்கள், “பெரிய தந்தையே! அல்லாஹற்வின் மீது சத்தியமாக, அந்த மக்கள எனது வலது கையில் சூரியனையும் இடது கையில் சந்திரனையும் வைத்தபோதிலும் நான் எனது தூதத்தைக் கைவிட மாட்டேன்; அந்தப் போராட்டத்தில் நான், எனது வாழ்வை இழக்க நேரிட்டாலும் சரியே’ என்று துணிச்சலோடு கூறினார்கள்.
தமது முயற்சிகள் யாவும் தோல்வியில் முடிந்தமையைக் கண்ட

இளல்லாமிய வரலாறு பாகம் பகுதி !
...
குறைவுகள் துன்புறுத்தல் மூலம் நபியவர்களின் புதிய தூதத்தை நசுக்கிவிட முயன்றனர். ஆயினும், அபூதாலிப் தமது சகோதரர் மகனுக்குப் பாதுகாப்பும் அடைக்கலமும் அளித்துக் கொண்டிருந்தமையால், முஹம்மத் (ஸல்) அவர் களுக்கு எத்தகைய தீங்கும் செய்ய் அவர்களால் முடியவில்லை. ஆனால், அவர்கள் நபியவர்களுக்கு மன வேதனைகளை அளித்தனர்; அவர்களது தோழர்களைத் துன்புறுத்தினர்; குறிப்பாக, இஸ்லாத்தைத் தழுவிய அடிமை களை மிகக் கொடுரமாகச் சித்திரவதை செய்தனர்; அவர்களிற் சிலரை வதை செய்து கொன்றும் விட்டனர்.
இவ்வாறு, குறைஷ குலமக்கள் நபி (ஸல்) அவர்களையும் அவர்கள் கொண்டுவந்த தூதையும் எதிர்த்தமைக்குப் பலகாரணங்கள் இருந்தன. அவற்றைப் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்:
1. முஹம்மத் (ஸல்) அவர்களால் பிரசாரம் செய்யப்பட்ட இஸ்லாமும் அதன் போதனைகளும் குறைஷ் குல மக்களுக்குப் புதுமையானவை யாகவும் அவர்களது முன்னோரின் மார்க்கத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டவையாகவும் இருந்தன. தங்களின் புராதன நம்பிக்கையைக் கைவிட்டு, மற்றொரு புதிய நம்பிக்கையைச் சி ணித்துக் கொள்வதற்கு அவர்களால் இயலவில்லை. எனவே, தங்களின் உருவ வழிபாட்டுச் சமயத்திற்கு எதிராக முஹம்மத் (ஸல்) அவர்களது தலைமையில் (b. புதிய இயக்கம் உதயமாகியிருக்கக் கண்டபோது, அவர்கள் பெரிதும் சினமுற்று, அதனை எதிர்க்கலாயினர்.
2. நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் விக்கிரகத் தொழும்பிலிருந்து முற்றாக விலகி இருந்ததோடு, குறைஷகளின் பொய்க் கடவுள்களைப் பகிரங்கமாகப் பழித்தும் வந்தார்கள். குறைஷகள் உருவ வழிபாட்டிற்கு மிக நீண்டகாலமாகப் பழக்கப்பட்டிருந்தமையாலும் நன்மை, தீமை அனைத்திற்கும் விக்கிரகங்களே பொறுப்பானவை என்று நம்பியமையாலும், தங்கள் தெய்வங்களைக் கைவிடுதல் பற்றி எண்ணிப்பார்க்கக் கூட அவர்களால் முடியவில்லை. அவர்கள் அண்ணல் அவர்களையும் அவர்களது புதிய தூதத்தையும் தங்களது சமயத்திற்கு ஏற்பட்ட பயங்கர அச்சுறுத்தலாகவும் தங்கள் கடவுள் களுக்கு விடப்பட்ட ஒரு சவாலாகவும் கருதினர். எனவே, முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வால் அருளப்பட்ட புதிய நம்பிக்கையை அறிமுகப்படுத்திய போது, அவர்கள் அண்ணலவர்களை எதிர்க்க ஆரம்பித்தனர்.
3. குறைஷகளுள் ஹாஷிமியாக்களும் உமய்யாக்களும் மிக முக்கியத்துவம் வாய்ந்த இரு கிளைக் குலத்தவர்களாக இருந்தனர். அவர்களுக்குள் ஒற்றுமை இருக்கவில்லை; ஒருவர் மற்றவரோடு போட்டிபோட்டுக் கொண்டும் சண்டையிட்டுக்கொண்டுமே இருந்தனர்.
டுS)

Page 73
இஸ்லாமிய வரலாறு LJIT&E5tib 1 L J(ğ5g5 1
அப்துல் முத்தலிப் தமது விவேகத்தாலும் கடுமையான பூட்கையாலும் ஹாஷிமியாக்களின் புகழை உயர்த்தியிருந்தார். ஆனால், அவருக்குப் பின்னர் இந்தக் கிளைக் குலத்தில் எவருக்கும் இத்தகைய செல்வாக்கு இருக்கவில்லை. இந்தக் குலத்தில் பிறந்த அப்பாஸ் செல்வராக இருந்த அதேவேளையில், செல்வாக்கற்றவராகவும் இருந்தார். அதேசமயம், அபூதாலிப் ஏழையாக இருந்தார். அபூலஹபோ தகுதியற்ற ஒரு மனிதனாக இருந்தான். இந்தக் காரணங்களுக்காக குறைஷகளிடையே உமய்யாக்களின் கைகளே மேலோங்கியிருந்தன. எப்போதும் தங்களைப்பற்றி மேலெண்ணம் உடையவர்களாக இருந்த அவர்களால் ஹாஷிமிய்யாக்களிலிருந்து ஒருவர் தங்கள்மீது மேலாதிக்கம் செய்வதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஹாஷிமிய்யா ஒருவரின் நபித்துவ உரிமைக் கோரிக்கை தங்கள் எதிரிகளுக்குக் கிடைத்த ஒரு வெற்றியாகவே அவர்களுக்குப் பட்டது. மக்காவில் வாழ்ந்த பிற குலத்தவர்களை விடவும் உமய்யாக்கள் மிக அதிகமாக நபியவர்களை எதிர்த்தமைக்கு இதுவே காரணமாக
இருந்தது. இதே காரணத்திற்காகவே குறைஷ் வர்க்கத்தின் செல்வாக்கு மிக்க பிற கிளைக் குலங்களைச் சேர்ந்த மக்களும் அண்ணலவர்களை எதிர்த்தனர்.
4. முஹம்மத் (ஸல்) அவர்கள் குறைஷ குலத்தில் பிறந்த போதிலும்,
அவர்கள் செல்லுராகவோ வர்க்கத்தலைவர்களுள்-ஒருவராகவோ. இருக்கவில்லை. அவர்களின் எளிய - வறுமை படிந்த - வாழ்வின் காரணமாக குறைஷகள் நபியவர்களைச் சாதாரண மக்களுள் ஒருவராகவே கருதினர். நபித்துவம் எவருக்காவது அளிக்கப்படுவதாக இருந்தால், அது மக்காவை அல்லது தாஇப் நகரத்தைச் சேர்ந்த செல்வாக்கு மிகுந்த மனிதர் ஒருவருக்கே கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது குறைஷ வர்க்கத்தலைவர்களின் கருத்தாக இருந்தது. எனவே, அபூ ஸ"ப்யான் பின் ஹர்ப், உக்பா பின் அபூ முஅய்த், வலீத் பின் முBரா, உமய்யா பின் கலப், ஆஸ் பின் வாஇல், அபூ மஸ்ஊத் அல் தகபீ முதலான தங்கள் தலைவர்களைப் பற்றிப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்த குறைஷகள் செல்வமோ புதல்வர்களோ அதிகாரத்தின் வேறு உலகாயதச் சின்னங்களோ இல்லாத முஹம்மத் (ஸல்) அவர்களின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்வதற்கு ஆயத்தமாக இருக்கவில்லை.
5. குறைஷகள் மக்காவில், பெருமையடித்துக் கொள்ளும் உயர்குடி வர்க்கம் ஒன்றை விருத்தி செய்திருந்தனர். அந்த வர்க்கத்தினர் தங்களது பொய்க்கடவுள்களின் பெயரால் ஒழுக்கக் கேடான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். அவர்களது உருவ வழிபாட்டின்

இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
மத்திய தலமாக இருந்த ..Lո, ஆலயம் அவர்களது சமூக, பொருளாதாரத் தராதரங்கள்ை உயர்த்திக் கொள்ள அவர்களுக்குப் பெரிதும் உதவியது. அறேபிய தீபகற்பத்தின் பல்வேறு பகுதிகளி லிருந்து மக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொண்டு-வந்த மக்கள் அனைவரும் தங்கள் புனித பூமியின் எசமானர்களாக அவர்களையே
கருதினர். இத்தகைய வழிகளால் தங்களைப் பெரிய மனிதர்களாக
மாற்றிக் கொண்ட குறைஷ்கள், முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களது மார்க்கத்திற்கும் தீபகற்பத்திலே இடம் கொடுத்தால், தங்களது பெருமையும் செல்வாக்கும் தலைமைத்துவமும் முற்றாக ஒழிந்துவிடும் என்று எண்ணினர். எனவே, அவர்கள் என்ன விலை கொடுத்தேனும் அண்ணலவர்களின் புதிய நெறியைத் தடுக்கத் தீர்மானித்து, அதனை எதிர்த்தனர். :۰۰ . . . . . . . . . . . . . . . - . ... و
இத்தகைய காரணங்களால் குறைஷகள் நபி முஹம்மத் (ஸல்) அவர்களையும் அவர்களது சன்மார்க்க நெறியையும் எதிர்த்ததோடு, அந்த நெறியைப் பின்பற்றிய மக்களுக்குத் தொல்லைகளும் அளித்து வந்தனர்.
குறைஷகள் புதிய முஸ்லிம்களுக்கு கொடுத்து வந்த 0ᏝᏰᏏ6ᎠlI துெ தொல்லைகளும் கொடுமைகளும் பெருகியமையால், நபி ஹிஜ் J முஹம்மத் (ஸல்) அவர்கள் அடக்கலுக் கெதிராகத் தம்மைக்
காத்துக் கொள்வதற்கு இயலாத ஏழை முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக முக்கியமான தீர்மானம் ஒன்றை எடுக்கவேண்டியவர்களாக இருந்தார்கள். நபித்துவத்தின் ஐந்தாம் ஆண்டில், ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம், 'நீங்கள் அபிசீனியாவுக்குச் சென்றால் உங்களுக்கு நல்லது அதன் அரசர் அந்தியைச் சகிக்க முடியாதவர்; மேலும் அது ஒரு நேசநாரும்கூட. ஆகவே, அல்லாவற் உங்களைத் துயரத்திலிருந்து விருவிக்கும் நாள் வரும்வரை, அங்கேயே தங்கியிருங்கள” என்று கூறினார்கள். அவ்வாறே நபித் தோழர்களுள் ஒரு குழுவினர், நபித்துவத்தின் ஐந்தாம் ஆண்டு றஜப் மாதத்தில் (கி.பி.615இல்), தென் செங்கடலின் மறுகரையில் உள்ள அபிசீனியா (இக்கால எதியோப்பியா) வுக்கு ஹிஜ்ரத் சென்றனர். இந்தக் குழுவில் ஹழ்ரத் உத்மான், அவரது மனைவியும் நபிகளாரின் புதல்வியுமான ருகuய்யா உட்படப் பதினொரு ஆண்களும் நான்கு பெண்களும் இடம் பெற்றிருந்தனர். அபிசீனியா குறைஷ்களின் வர்த்தக நிலையங்களுள் ஒன்றாக மிக நீண்டகாலமாக இருந்து வந்தது. அப்போது இந்த நாடு நஜாஷி என்ற பட்டப் பெயரால் அழைக்கப்பட்ட அஸ்ஹத் பின் அம்ஜர் என்ற கிறித்தவ அரசரால் ஆளப்பட்டது. பிற்காலத்தில் இஸ்லாத்தைத்
Të: dhr turr druri.". h-u-- .
தழுவிக்கொண்ட அந்த மன்னர் குறைஷிகளை ஏற்கனவே அறிந்திருந்தமையால், அகதிகளாகத் தமது நாட்டுக்கு வந்த முஸ்லிம்களை
டு)

Page 74
இஸ்லாமிய வரலாறு பாகம் பகுதி !
அன்போடு ஆதரித்தார். முஸ்லிம்கள் அபிசீனியாவுக்கு மேற்கொண்ட இந்த ஹிஜ்ரத் இஸ்லாத்தின் அரசியல் வரலாற்றில் நிகழ்ந்த முதலாவது ஹிஜ்ரத் ஆகக் கருதப்படுகிறது.
அபிசீனியாவுக்குச் சென்ற இந்தக் குழுவினரைத் தொடர்ந்து, அதே ஆண்டில், ஜட்பர் பின் அபூதாலிப் உட்பட வேறு முஸ்லிம்கள் சிலரும் ஒருவர் பின் மற்றவராக அபிசீனியாவுக்குப் புகலிடம் தேடிச் சென்றனர். இவ்வாறு முஸ்லிம்கள் அபிசீனியாவுக்குப் புகலிடம் தேடிச் சென்றமை பற்றிக் கேள்வியுற்ற குறைஷ் தலைவர்கள் சினமுற்றனர்; அம்ர் பின் அல் ஆஸ், அப்துல்லாஹற் பின் அபீ ரபீஆ ஆகிய இருவரையும் தங்கள் பேராளர்களாக அபிசீனிய சக்கரவர்த்தி நஜாஷியிடம் அனுப்பி வைத்தனர்.) அரசனுக்கும் அரச மன்றத்தவர்களுக்கும் தனித்தனியாக விலைமதிப்பற்ற பரிசுப் பொருள்களைக் கொண்டு சென்ற அவர்கள் இருவரும் நஜாஷியைச் சந்தித்து, அபிசீனியாவுக்குப் புகலிடம் தேடி வந்த முஸ்லிம் புறக்குடியேறிகளை மக்காவுக்குத் திருப்பி அனுப்பிவிடுமாறு கோரினர்; அவர்கள் தங்கள் முன்னோரின் மார்க்கத்தைத் துறந்து, கிறித்தவ மார்க்கத்தில் இணையாழல் புதிய மதம் ஒன்றைத் தழுவிக் கொண்டனர் என்றும் தங்கள் சொந்த நாட்டில் அவாகள் பெரும் குற்றங்களைச் செய்துவிட்டு, இங்கு ஓடி வந்திருக்கின்றனர் என்றும் அந்தப் பேராளர்கள் முஸ்லிம் அகதிகள் மீது குற்றமும் சுமத்தினர். ஆனால், புறக்குடியேறிகள் மூலம் புதிய மார்க்கத்தின் உண்மையைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்ட அபிசீனியச் சக்கரவர்த்தி, குறைஷகளின் கோரிக்கையை நிராகரித்து, பேராளர் இருவரையும் அவர்கள் கொண்டு வந்த பரிசுப் பொருள்களோடு அங்கிருந்து விரட்டிவிட்டார்.
இந்தச் சமயத்தில், நஜாஷியின் கேள்விகளுக்கு பதில் கூறும் முகமாக அகதிகளுள் ஒருவரும் நபியவர்களது பெரிய தந்தையின் புதல்வருமான
கருத்தியல் உயர்வுபற்றிய அதன் உணர்வு நிலையைப் Ꭷ 60ᎠᎫ பிரதிபலிப்பதாய் அமைந்திருந்தது. அவர் பேசினார்: “அரசே!
அறியாமைக் கால மக்கள் நாங்களே! நாங்கள் சிலைகளை வணங்கினோம் பிணங்களை உண்டோம்; இழிவான செயல் களைப் புரிந்தோம்; உறவினைத் துணி டித் தோம் ; அயலவர்களைத் துன்புறுத்தினோம்; எங்களுள் பலம் வாய்ந்தோர் பலவீனரை விழுங்கினர்; எங்களுக்குள்ளிருந்தே ஒருவரை அல்லாஹற் துாதராக எங்களிடம் அனுப்பும் வரை நாங்கள் இவ்வாறே இருந்தோம். அவரது வமிசவழியை நாங்கள் அறிவோம். அவரு டைய வாய்மையையும் நம்பகத் தன்மையையும் தூய்மையையும் கூட நாங்கள் அறிவோம். அல்லாஹவின் ஏகத்துவத்தை ஏற்று,

இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி 1
அவனையே வணங்குமாறும் அந்த ஏகனுக்குப் பதிலாக நாங்களும் எங்கள் முன்னோரும் வழிபட்டு வந்த கற்களையும் சிலைகளையும் கை விடுமாறும் அவர் எங்களுக்கு அழைப்பு விடுத்தார். உண்மையே பேசுமாறும் வாக்குறுதியை நிறைவேற்றுமாறும் உறவைப் பேணுமாறும் அயலவர்களோடு அன்பாக நடந்து கொள்ளுமாறும் குற்றங்கள் செய்வதிலிருந்தும் குருதி சிந்துவதி லிருந்தும் விலகியிருக்குமாறும் அவர் எங்களைப் பணித்தார். மானக்கேடானவற்றைச் செய்தல், பொய் கூறுதல், அனாதைகளின் சொத்துக்களை உண்ணுதல், கற்புடைய பெண்டிர்மீது அவதூறு சுமத்துதல் ஆகியவற்றிலிருந்து அவர் எங்களைத் தடுத்தார். அல்லாஹற் ஒருவனையே வணங்குமாறும் அவனுக்கு எதனையும் இணையாக்க வேண்டாம் என்றும் அவர் எங்களுக்கு ஏவினார். தொழுமாறும் ஷகாத்” கொடுக்குமாறும் நோன்பு நோற்குமாறும் அவர் எங்களுக்குக் கட்டளை இட்டார். நாங்கள் அவரை உணி மைப் படுத் தினோம் ; அவரை நம் பினோ மீ ; அவர் அல்லாஹவிடம் இருந்து கொண்டுவந்ததில் நாங்கள் அவரைப் பின்பற்றினோம். நாங்கள் அல்லாஹ ஒருவனையே அவனுக்கு எதனையும் இணையாக்காமல் வணங்கினோம்; எங்களுக்கு விலக்கப்பட்டவற்றிலிருந்து நாங்கள் எங்களைத் தடுத்துக் கொண்டோம்; எங்களுக்கு ஆகுமாக்கப்பட்டவற்றையே நாங்களும் எங்களுக்கு ஆகுமாக்கிக் கொண்டோம் . ஆனால், எங்கள் சமுதாயத்தவர்கள் எங்களுக்கு எதிராக எழுந்தனர்; எங்களது (புதிய) சனி மார் கி க தி தைக் கை விட்டு, அல லாஹர்  ைவ வழிபடுவதற்குப் பதிலாகச் சிலைகளையே மீண்டும் வழிபடுமாறும் நாங்கள் முன்பு செய்த இழிசெயல்களை ஆகுமானவையாகக் கருதுமாறும் கூறி, எங்களைத் துன்புறுத்தினர். அவர்கள் எங்களை வதை செய்து, எங்களுக்கு அநீதம் இழைத்து, எங்கள் வாழ்வைச் சுருக்கி, எங்களுக்கும் எங்கள் சன்மார்க்கத்திற்கும் இடையே அவர்கள் வரவே, மற்றவர்களிலெல்லாம் சிறந்தவராக உங்களை நாங்கள் தெரிவு செய்து, உங்கள் நாட்டுக்கு வந்தோம். இங்கே உங்கள் பாதுகாப்பில் நாங்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறோம். அரசே! நாங்கள் உங்கள் பாதுகாப்பில் இருக்கையில், நாங்கள் அநீதி இழைக்கப்படமாட்டோம் என்று நம்புகிறோம்”
நபித்துவத்தின் ஆறாம் ஆண்டில், குறைஷ வர்க்கத்தின் மிகப்பலம் வாய்ந்த மனிதர்களான ஹம்ஷா, உமர் ஆகிய இருவரும் இஸ்லாத்தைத் தழுவினர். ஹம்ஷா நபியவர்களின் சிறிய தந்தை ஆவர். நபியவர்களும்
27 இப்னர் ஹறிஷாம் பாகம் பக்கம் 362

Page 75
இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
ஹம்ஷாவும் ஒரே வளர்ப்புத்தாயிடம் சிறிதுகாலம் பால் அருந்தி வளர்ந்தவர்கள். அதனால் அவர் அண்ணலவர்களின் பால் குடிச் சகோதரருமாவர். வீரத்திற்குப் புகழ்பெற்ற மனிதராக விளங்கிய அவர் "அஸ்துல்லாஹ’ (அல்லாஹ்வின் சிங்கம்) ஹமஷாவும உமரும என்னும் பெயராலும் அழைக்கப்பட்டார். முஸ்லிம்களாதல் குறைஷ்வர்க்கத்தின் புகழ்பெற்ற போர் வீரரான உமர் உருவ வழிபாடு ஓங்கி வளர உழைத்தவர்களுள் ஒருவர்நபியவர்களினதும் அவர்கள் அறிமுகப்படுத்திய சன்மார்க்கத்தினதும் மிகக் கசப்பான எதிரி. அவர் நபியவர்களைப் பிடிவாதத்தோடும் வெறித்தனத்தோடும் எதிர்த்து வந்தார். அவர் உதவியற்ற ஏழை முஸ்லிம்களை அடித்துத் துன்புறுத்தினார்; இறுதி முயற்சியாக நபியவர்களின் உயிருக்கே உலை வைக்கத் தீர்மானித்தார், இஸ்லாத்தைத் தழுவுவதற்குச் சொற்ப நேரத்திற்கு முன்னால், அண்ணலவர்களைக் கொல்லும் எண்ணத்தோடு, உருவிய வாளைக் கையிலே ஏந்தி, இல்லத்தி லிருந்து புறப்பட்டுச் சென்றார்; வழியிலே, அவரது தங்கையின் இல்லத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைத் தொடர்ந்து, அவருடைய இரும்பு இதயத்திலே மாற்றம் உருவானது; தங்கையின் இல்லத்திலிருந்து நேராக நபியவர்கள் தங்கியிருந்த இடத்திற்குச் சென்று, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.
இந்த இரண்டு ‘சிங்கங்களினதும் மத மாற்றம் இஸ்லாத்தின் பிடியைப் பலப்படுத்தியதோடு, இஸ்லாத்தின் ஆரம்ப வரலாற்றில் ஒரு திருப்புமுனை யாகவும் அமைந்தது. அவர்கள் இஸ்லாத்தைத் தழுவியமை பலதெய்வத் தொழும்பர்களுக்கு மரண அடியையும் ஏகத்துவவாதிகளுக்கு பலத்தோடு சேர்ந்த மனத் திண்மையையும் அளித்தது. அதுவரை பயத்தோடும் கண்ணிரோடும் வாழ்ந்த முஸ்லிம்கள் துணிவும் திறனும் பெற்றுத் தலை நிமிர்ந்து வாழலாயினர். முஸ்லிம்களின் இரகசிய சந்திப்பிடமாக இருந்த அல் அர்கம் என்பாரின் வீட்டிலிருந்து நபியவர்கள் வெளியேறி, மக்களை இஸ்லாத்தின் பால் பகிரங்கமாக அழைக்க ஆரம்பித்தார்கள்.* முஸ்லிம்கள் தங்கள் தொழுகையையும் புனித கட்பாவில் பகிரங்கமாக நிறைவேற்றத் தொடங்கினர்.
முஸ்லிம்களுட் சிலர் அபிசீனியாவில் பாதுகாப்பாக வாழ்ந்து வந்தமையும் ஹம்வடிா, உமர் ஆகியோர் இஸ்லாத்தைத் தழுவியமையும் குறைஷகளின் சினத்தைப் பன்மடங்காக்கிற்று. எனவே, அவர்கள் மக்காவில்
28 அல் அர்கம் என்பார் மிக ஆரம்பகாலத்தில் இனல்லாத்தைத் தழுவியவர்களுள் ஒருவர். அல் அர்கம் பினர் அப்த் மனாப் என்பது இவருடைய முழுப் பெயர் மக்ஷரம் கிளைக் குலத்தைச் சேர்ந்தவர். இவரது குலத்தவர்கள் நபியவர்களை மிகக் கடுமையாக எதிர்த்த போதிலும் இவர் ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தைத் தழுவினார்; முஸ்லிம்கள் குறைவுக்களால் துன்புறுத்தப்பட்டபோது, இவர் தமது இல்லத்தை நபியவர்களுக்கு வழங்கி மக்காவின் சிறுபான்மைச் சமுகத்தவர் கூடும் இடமாக அதனை மாற்றினார். இங்கே நபியவர்கள் சுமார் மூன்றாண்டு காலம் தங்கியிருந்து இரகசியமாக இஸ்லாமியப் பிரசாரம் செய்து வந்தாகள்

இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
வாழ்ந்த முஸ்லிம்களை - குறிப்பாக உதவியற்ற ஏழை முஸ்லிம்களை - அதிக வேகத்தோடு வதை செய்யலாயினர். சிலர் அவர்களால் கொல்லப் பட்டனர். அவர்களது கருணையற்ற வதை வளரவே, நபி (ஸல்) அவர்கள்
. மக்காவில் எஞ்சியிருந்த தமது சீடர்களுட் சிலரை இரண்டாம் அபிசீனியாவுக்குச் சென்று அடைக்கலம் பெறுமாறு ஹிஜ்ர த் பணித்தார்கள். அவ்வாறே எண்பத்துமூன்று முஸ்லிம்கள்
FL يتمتع يدي يلعبيد يقيFHP طالب ".
அபிசீனியாவுக்குச் சென்று அடைக்கலம் புகுந்தனர். இஸ்லாமிய வரலாற்றில் இரண்டாவது ஹிஜ்ரத் எனக் கருதப்படும் இந்தப் புலப்பெயர்ச்சி நபித்துவத்தின் ஏழாம் ஆண்டில் நிகழ்ந்தது. இவ்வாறு அபிசீனியாவுக்குச் சென்ற முஸ்லிம்களின் மொத்த எண்ணிக்கை சுமார் நூறு ஆகும். அவர்களுட் சிலர், "மக்காவின் இறைமறுப்பாளர் அனைவரும் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டனர் என்ற தவறான தகவலைச் செவியுற்று, மக்காவுக்குத் திரும்பி வந்து, மீண்டும் குறைஷ்களின் வதையில் மாட்டிக்கொண்டனர். திரும்பியவர்களுட் சிலர் மீண்டும் அபிசீனியாவுக்குத் தப்பிச் செல்ல, மற்றவர்கள் இரகசியமாக நகரினுள் நுழைந்தனர். நபி (ஸல்) அவர்கள் மதினாவுக்கு ஹிஜ்ரத் மேற்கொண்ட சமயம், அபிசீனியாவில் அடைக்கலம் பெற்றிருந்த முஸ்லிம்களுட் பலர் மதினாவுக்குத் திரும்பினர். ஏனையோர் ஹிஜ்ரி 7இல் நபியவர்களால் மதினாவுக்கு திருப்பி அழைக்கப்பட்டனர்.
முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களது சீடர்களுக்கும் தாம் கொடுத்து வந்த அச்சுறுத்தல்களும் இன்னல்களும் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுக்கத் தவறியமையையும் முஸ்லிம்களின் எண்ணிக்கை ன் றியொ gil க்கல் படிப்படியாகப் பெருகிக் கொண்டிருந்தமையையும் கண்ட குறைஷகள் நபியவர்களைத் தோற்றுவித்த ஹாஷிம் கிளைக் குலத்தைச் சமுகரீதியில் ஒன்றியொதுக்க மற்றொரு சூழ்ச்சியை உருவாக்கி அடைகாக்கலாயினர். குறைஷ் வர்க்கத்தைச் சேர்ந்த கிளைக் குலங்கள் எல்லாம் ஒன்றுகூடி, பகைக் கூட்டிணைவு ஒன்றை உருவாக்கி, ஹாஷிம் கிளைக் குலத்தாரைச் சமுக ரீதியில் ஒன்றியொதுக்க உடன்பட்டன. அவர்கள் ஹாஷிம் கிளைக் குலத்தாருக்கு எதிராகக் கூட்டுப் பிரசித்தம் ஒன்றை வரைந்தனர். அதில், ஹாஷிம் கிளைக்குலத்தார் நபி முஹம்மத் (ஸல்) அவர்களை குறைஷ்களிடம்_ஒப்படைக்கும் வரை அவர்களோடு எவரும் திருமணமோ வாங்கல் - விற்றலோ செய்யக் கூடாது என்றும் அவர்களோடு எவரும் இணைந்திருக்கவோ அவர்களுக்கு உணவுப் பொருட்கள் செல்ல அனுமதிக்கவோ கூடாது என்றும் எழுதப்பட்டிருந்தது. மன்ஸர் பின் இக்ரிமா என்பாரால் எழுதப்பட்ட இந்தப் பிரசித்தம் அடங்கிய பத்திரம் கிளைக் குலத்தலைவர்களால் கைச்சாத்திடப்பட்டு, க.பாவின், உட்புறத்தே பத்திரமாக வைக்கப்பட்டது. இது நபித்துவத்தின் ஏழாம் ஆண்டு முஹர்ரம் முதலாம் நாள் நிகழ்ந்தது.”
29 இப்னர் அல் தைபங் பாகம் பக்கம் 326

Page 76


Page 77


Page 78


Page 79
இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
மதீனா நகரத்தவர்கள் அவர்களைப் பரிவோடும் பாசத்தோடும் வரவேற்றனர். சில மாதங்களிலே மக்காவில் முஸ்லிம்கள் வாழ்ந்த பகுதிகள் வெறுமையாகின; பெரும்பாலும் மக்கா நகர முஸ்லிம்கள் நபிகளாரின் அனைவருமே மதரீனாவுக் குச் சென்றுவிட்டனர். ஹிஜ்ர குறைஷகளால் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டோர், பிரயாணம் செய்ய இயலாதோர் ஆகிய சிலரும் அபூபக்ர், அலி முதலான நபித்தோழர் சிலருமே மக்காவில் தங்கியிருந்தனர்.
முஸ்லிம்களின் புலப்பெயர்ச்சிபற்றி குறைஷகள் அறியவந்தபோது, அவர்கள் ஆத்திரத்தின் உச்சக்கட்டத்திற்கே சென்றுவிட்டனர்; அவர்கள் வழக்கமாகக் கூடும் தாருன் நத்வா' மண்டபத்தில் புதிய நிலைமை பற்றி ஆராய்வதற்காக ஒன்று கூடினர். பிரச்சினையைச் சமாளிப்பதற்குப் பல்வேறு எடுத்துரைகள் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன. குறைஷ தலைவர்களுள் ஒருவர், “ முஹம்மதை மக்காவிலிருந்து புறக்கழிப்புச் செய்துவிட னேன்டும்” என்று கருத்துத் தெரிவித்தார். மற்றொருவர், “முஹம்மதை இரும்புச் சங்கிலியால் பிணைத்து மரணம் ஏற்படும் வரை சிறையில் அடைத்து விட வேண்டும்’ என்று ஆலோசனை தெரிவித்தார். அபூ ஜஹற்ல், “ஒவ்வொரு கிளைக்குலத்திலிருந்தும் ஆற்றல் வாய்ந்த வீர இளைஞன் ஒருவன் தெரிவு செய்யப்படல் வேண்டும்; இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட வீரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, முஹம்மதைத் தத்தம் வாள்களால் வெட்டிக் கொன்று விடவேண்டும்; இவ்வாறு கொல்வதால், பழி எல்லாக் குலங்கள் மீதும் விழுந்து விடும்; எல்லாரையும் பழிவாங்குதல் இயலாதது; ஆதலால், குருதி முதலை மட்டும் கொடுத்து, நாங்கள் தப்பிக் கொள்ளலாம்” என்று கருத்துக் கூறினான்.* இறுதியில், அபூஜஹற்லின் பயங்கர ஆலோசனையே குறைஷ தலைவர்கள் அனைவராலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்தச் சமயத்தில், நபி (ஸல்) அவர்கள் ஹழ்ரத் அபூபக்ர், ஹழ்ரத் அலி ஆகியோரோடு, தமது சொந்த ஹிஜ்ரத்தை மேற்கொள்வதற்காக அல்லாஹற்விடமிருந்து தெளிவான ஆணையை எதிர்பார்த்துக் கொண்டிருந் தார்கள். குறைஷகள் அண்ணலவர்களைக் கோழைத்தனமாகக் கொல்வ தற்குத் திட்டமிட்ட சமயம், அவர்கள் அதனைச் செயற்படுத்துவதற்கு முன்பே அது பற்றி அல்லாஹற் தன் அன்புக்குரிய தூதருக்கு அறிவித்து விட்டான். குறைஷ்களது திட்டம் நிறைவேற்றப்படவிருந்த அன்றிரவு, நபி (ஸல்) அவர்கள் தமது சொந்த 'ஹிஜ்ரத்தை மேற்கொள்வதற்கு அவசியமான தெளிவான ஆணையை அல்லாஹவிடமிருந்து பெற்றார்கள். எனவே, அன்றிரவு, கொலைஞர்கள் நபியவர்களைக் கூட்டாகத் தாக்கிக் கொல்லும் எண்ணத்தோடு அவர்களது வீட்டைச் சூழ்ந்து நின்ற வேளையில், அண்ண லவர்கள் தமது போர்வையை ஹழ்ரத் அலீயிடம் கொடுத்து, அவரைத்
35. இப்னர் ஹரிஷாம் பாகம் i பக்கம் 23 - 4

இளல்லாமிய வரலாறு ībb (55 l
தமது படுக்கையில் படுத்துத்துங்குமாறு பணித்து விட்டு, எவருக்குமே தெரியாமல் அங்கிருந்து வெளியேறினார்கள். நேராக ஹழ்ரத் அபூபக்ரின் இல்லத்திற்குச் சென்ற நபியவர்கள் அவரையும் அழைத்துக் கொண்டு, மக்காவிலிருந்து சுமார் ஒரு மணிநேர நடைதூரத்தில் அமைந்துள்ள 'தவ்ர் குகைக்குச் சென்றார்கள், நபியவர்களின் தலைமறைவால் மக்காவில் ஏற்பட்ட சந்தடி ஒயும் வரை, மூன்று இரவுகள் அந்தக் குகையில் ஒளிந்திருந்தனர். பின்னர், அவர்கள் இருவரும் அங்கிருந்து வெளியேறி, கூலிக்கு அமர்த்தப்பட்ட அப்துல்லாஹற் பின் அர்கத் என்ற வழிகாட்டியின் உதவியோடு மதீனாவுக்குப் பயணமாகினர்.
பழக்கமற்ற பாதைகள் வழியாகப் பல நாள்கள் பயணம் செய்த பின்னர், நபியவர்களும் அவர்களது பிரிய தோழர் அபூபக்ரும் மதீனாவின் சுற்றுப்புறத்தில், சுமார் ஆறுமைல் தொலைவில் இருக்கும் குபா." என்ற கிராமத்தை நபித்துவத்தின் பதின்மூன்றாம் ஆண்டு ரபீஉல் அவ்வல் எட்டாம் நாள் (செப்டம்பர் 20,622) அடைந்தனர். அங்கே மக்கள் நபியவர்களை மலர்ந்த முகங்களோடு வரவேற்றனர். அங்கு பதினான்கு தினங்கள் தங்கியிருந்த நபியவர்கள் ஒரு பள்ளிவாயிலை நிறுவினார்கள். இதுவே இஸ்லாத்தில் நிறுவப்பட்ட முதலாவது பள்ளிவாயிலாகும். இப்பள்ளி வாயிலுக்குரிய முதலாவது கல்லை நபியவர்கள் தமது திருக்கரங்களால் வைத்து, ‘கிப்லா திசையையும் அடையாளமிட்டார்கள். நபியவர்கள் குபா. வில் தங்கியிருந்த போதுதான், அவர்கள் மக்காவிலிருந்து புறப்பட்டு மூன்று தினங்களின் பின்னர் அங்கிருந்து வெளியேறிய ஹழ்ரத் அலீ குபா..வை வந்தடைந்தார். இரண்டு வாரங்களின் பின்னர், நபியவர்கள் தமது தோழர்களோடு மக்காவுக்கு வடகிழக்கே சுமார் 300 மைல் தூரத்திலுள்ள மதீனா நகரத்தை ரபீஉல் அவ்வல் இருபத்திரண்டாம் நாள் (அக்டோபர் 4, 622) வெள்ளிக்கிழமை காலையில் அடைந்தார்கள். நபியவர்கள் மக்காவிலிருது மதீனாவுக்குப் புறப்பட்ட தினத்திலிருந்து தான் முஸ்லிம்களின் ஹிஜ்ரி ஆண்டு கணக்கிடப்பட்டு வருகிறது. . . . . . .
'ஹிஜ்ரத் என்ற அறபுச் சொல்லுக்கு, ‘ஒருவர் மற்றொருவரை நேச உறவிலிருந்து துண்டித்தல்' என்று பொருள். இத்தகைய ஒரு துண்டிப்பை விளைவாக அளிக்கும் புலப்பெயர்ச்சியைக் குறிப்பிடப் பொதுவாக இந்தச் சொல் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், நபி (ஸல்) ஹிஜ்ரத் தின் அவர்களது புலப்பெயர்ச்சியைப் பொறுத்தவரை இந்தச் காரணங் கள் சொல் மிக ஆழமான கருத்துக்களைக் கொண்டது. கிறித்தவ எழுத்தாளர்கள் இந்தச் சம்பவத்தை குறைஷ்கள் மீதான ஆச்சத்தில் நபியவர்கள் மேற்கொண்ட தப்பிச்செல் முயற்சி என்றே விமர்சித்திருக்கின்றனர். ஆனால், இது ஹிஜ்ரத்தின் புனித நோக்கத்தையும் சிறப்பையும் நிலையிறக்கும் எண்ணத்தோடு வெளியிடப்பட்
G15)

Page 80


Page 81


Page 82
இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
நிலையை அவர் மாற்றியிருந்தார். அங்கே ஒவ்வொரு நாளும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே இருந்தது. மக்கா நகர முஸ்லிம்கள் அனுபவித்து வந்த இன்னல்கள் பற்றிய செய்தி மதீனா நகர முஸ்லிம்களின் உள்ளுணர்வுகளைத் தொட்டு, தங்கள் சகோதரர்களை விடுவிக்கும் முயற்சியில் அவர்களை இறக்கிவிட்டது. எனவே, அவர்கள் நபித்துவத்தின் பன்னிரண்டாம் ஆண்டில் நபியவர்களை அல் அகபா மலைக் கணவாயில் சந்தித்த போது, தங்கள் நகருக்கு வந்து, தங்களோடு வாழுமாறு அவர்களை அன்போடு அழைத்தனர்.
எல்லாவற்றிற்கும் மேலாக, அல்லாஹற்வின் ஆணை அண்ணல் அவர்களின் மதீனா “ஹிஜ்ரத்திற்கு உடனடிக் காரணமாக அமைந்தது. அல்லாஹற் தனது மார்க்கத்தையும் தனது தூதரையும் பாதுகாப்பதற்காக , , , , மதீனாவுக்குப் புலம்பெயர்ந்து செல்லுமாறு நபி (ஸல்) அல்லாஹற்வின் அவர்களுக்கு ‘வஹரீ மூலம் ஆணையிட்டான். ஆணை அவ்வாறே நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது சீடர்களோடு மதீனாவுக்குப் புலம் பெயர்ந்து சென்று, அதனைத் தங்கள் வாழிடமாக்கிக் கொண்டார்கள். இது பற்றி அல்லாஹற்வே தனது அல் குர்ஆனில் (நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரை விட்டு) வெளியேற்றிவிடவோ உமக்கு விரோதமாக நிராகரிப்போர் சூழ்ச்சி செய்து கொணர்டிருந்ததை நினைத்துப் பாரும். அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹர்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். ஆனால், சூழ்ச்சி செய்வோரிலெல்லாம் அல்லாஹற் மிக்க மேலானவன்’(8:30) என்று கூறியிருக்கிறான்.
நபி (ஸல்) அவர்களது ஹிஜ்ரத், வரலாற்றிலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சியாகும். அது இஸ்லாத்தின் வரலாற்றிலே புதிய யுகம் ஒன்றின் குறியீடாகக் கருதப்படுகிறது. உண்மையில், இந்த நிகழ்ச்சி இஸ்லாத்தின் பூர்வாங்க பலத்திற்கும் பரவலுக்கும் ஹிஜ் Jġib தின் ஒரு படிக்கல்லாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களது முக் கியத்துவம் நபித்துவப் பணியில் ஒரு திருப்புமுனையாகவும் அமைந்தது. அது இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு ஓர் உத்வேகத்தையும் முஸ்லிம்களின் ஆன்மாவுக்கு ஒரு புதிய உயிர் நிலைத்தன்மையையும் அளித்தது. அதுவரை இஸ்லாம் ஒரு கோட்பாட்டு நெறியாகவே இருந்து வந்தது. மதீனா ஹிஜ்ரத்தோடு உருவான சுதந்திரமான சூழலைத் தொடர்ந்து, அது தன்னைப் பலம் வாய்ந்த ஒரு சக்தியாக அமைத்துக் கொள்ளத் தொடங்கிற்று. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சம்பவத்தின் பின்னர், இஸ்லாமிய இயக்கம் ஒழுங்கான ஒரு வடிவத்தைப் பெற்று, ஒரே தலைவரின் கீழ் சகோதரத்துவம், சமத்துவம், நீதி ஆகியவற்றின்

இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
அடிப்படையில் அமையப்பெற்ற திட்டமான ஒரு சமுதாயமாக உருவானது. இப்போது அது தனது விருத்திக்குப் பொருத்தமான - உறுதியான - விரிவான - தளம் ஒன்றை மதீனாவிலே பெற்றுக்கொண்டது. அதன் வணக்கச் செயல்முறைகள் ஒருசீரமைக்கப்பட்டன. பகிரங்கமாக இஸ்லாத்தைப் பரப்பவும் அதன் பல்வேறு கடமைகளை அனுட்டிக்கவும் தேவையான செயல்முறைச் சாத்தியமான நடவடிக்கைகளை எத்தகைய அச்சமுமில்லாமல் எடுப்பதற்கும் முஸ்லிம்களால் முடிந்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சம்பவத்திலிருந்தே முஸ்லிம்களின் காலக் கணிப்பான ஹிஜ்ரி ஆண்டு கணக்கிடப்படுகிறது. இந்த ஆண்டுக் கணக்கை முதன் முதலில் கலீபா உமர் கி.பி. 637இல் ஆரம்பித்து வைத்தார்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஹிஜ்ரத் சம்பவம் நபி (ஸல்) அவர்களது வாழ்க்கையில் ஏற்பட்ட புதிய அவத்தை மாற்றத்தின் ஆரம்பத்தையே குறிப்பிடுகின்றது. இந்தச் சம்பவத்தோடு நபியவர்களது மக்கா வாழ்க்கைக் காலம் முடிவுற்று, மதீனா வாழ்க்கைக் புதி LI LDII J) DID காலம் ஆரம்பமானது; தோல்விகளும் சோதனைகளும் வேதனைகளும் உடற்றல்களும் நிறைந்த ஆண்டுகள் அஸ்தமித்து, வெற்றிகளும் மாண்பும் மகிமையும் நிறைந்த ஆண்டுகள் உதயமாகின; இந்தச் சம்பவம் ஆயாசத்தின் வாயிலை மூடி, ஆறுதலின் வாயிலைத் திறந்து விட்டது. மக்களால் வெறுக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்ட மனிதராகத் தமது தாயகத்தைத் துறந்த நபியவர்கள் ஒரு சமுதாயத்தின் உன்னத தலைவராக - மக்களால் விரும்பப்பட்ட மனிதராக - மதீனாவினுள் பிரவேசித்தார்கள். நபியவர்களின் மதீனப் பிரவேசத்தைக் கொண்டாடும் முகமாக அந்த நகர மக்கள் தங்கள் நகரத்தின் ‘யத்ரிப்' என்ற பண்டையப் பெயரை மதீனதுன் நபி (நபியின் நகரம்) என்று மாற்றினார்கள். நபியவர்களின் மகோன்னதமான பண்புகளாலும் புதிய மார்க்கத்தின் உண்மை, எளிமை ஆகியவற்றாலும் கவரப்பட்ட மக்கள், கூட்டம் கூட்டமாக வந்து இஸ்லாத்தைத் தழுவியதோடு, 'முஹாஜிரீன் (குடியேறிகள்) என அழைக்கப்பட்ட தங்கள் மக்கத்துச் சகோதரர்களுக்கு தங்கள் வீடுகளிலும் நிலங்களிலும் பிற உடைமைகளிலும் பங்குகள் அளித்தனர். ஒருவருக்கு அதிகமான மனைவிகளை வைத்திருந்தோர் அவர்களுள் ஒருவரை மணவிலக்கு செய்து, அவரை மனைவியற்ற மக்கத்துச் சகோதரருக்குத் திருமணம் இசய்து கொடுத்தனர். மக்கா முஹாஜிர்களுக்காக அவர்கள் செய்த தியாகங்கள், உதவிகள் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவாசிகளுக்கு 'அல் அன்சார்’ (உதவி செய்தோர்) என்ற பட்டத்தைச் சூட்டிக் கெளரவித்தார்கள்.

Page 83


Page 84


Page 85


Page 86
இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
"கட்பாவுக்கு மாற்றப்படவேண்டும் என்று அண்ணல் அவர்கள் அல்லாஹற்வால் ஆணையிடப்பட்டார்கள். இந்த மாற்றம், நபி முஹம்மத் (ஸல்) அவர்களது தோற்றத்தோடு பனு இஸ்ராஈல் நபிமார்களது யுகம் முடிந்து விட்டது
என்பதன் தெளிவான அத்தாட்சியாகவே அமைந்தது.
அதே ஆண்டு ஷட்பான் மாதத்தில், ரம்ழான் மாதத்தில் நோன்பு நோற்றல் முஸ்லிம்கள்மீது அல்லாஹ்வால் கடமையாக்கப்பட்டது. முஸ்லிம் களுக்கு முன்பு வாழ்ந்த சமுதாயங்களைச் சேர்ந்த மக்கள்மீதும் நோன்பு , , நோற்றல் விதியாக்கப்பட்டிருந்தது. அதே ஆண்டில் Cbl60illf சுதந்திரமும் புத்தித் தெளிவும் வசதியும் கொண்ட ஷகாத்தும் முஸ்லிம்கள்மீது ஷகாத்' என்ற ஏழைகளுக்குரிய கொடுப்பனவை அளித்தலும் கடமையாக்கப்பட்டது. ஈதுல் பித்ர், ஈதுல் அழ்ஹா ஆகியவை முறையே மகிழ்ச்சியையும் தியாகத்தையும் "குறிக்கும் கொண்டாட்ட தினங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டன. இந்த மாற்றங்கள் அனைத்தும் அல்லாஹற்வின் ஆணைகளைக் கொண்டே செய்யப்பட்டன.
இவ்வாறு, மக்காவிலே தமது சொந்த மக்களான குறைஷகளால் நிராகரிக்கப்பட்டுக் கைவிடப்பட்ட முஹம்மத் (ஸல்) அவர்கள் மதீனாவிலே மிகக் குறுகிய காலத்தில் சமூக - அரசியல் தலைவராகவும் ஆட்சியாளராகவும் மாறினார்கள். தமது சொந்தத் தாயகத்தில் பதின்மூன்று ஆண்டுகளாகத் தாம் கொண்டுவந்த தூதைப் மதீனா வெற்றியின் பரப்ப முயன்று தோல்வியுற்ற நபியவர்கள் காரணங்கள் மதரீனாவிலே ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவராகவும் வீர நாயகராகவும் மாறினார்கள். மதீனாவிலே அவர்கள் பெற்றிருந்த அந்தஸ்து மக்காவில் அவர்களுக்கு இருந்த அந்தஸ்தை விடவும் முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. மக்கா வாழ்க்கையின் போது, தாம் சந்தித்த ஒவ்வொரு மனிதராலும் நிந்திக்கப்பட்டு, ஜீவ மரணப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த ஒரு போதகர் என்ற அந்தஸ்திலிருந்து விடுபட்டு, அவர்கள் பெரிய நகரம் ஒன்றை முழு அதிகாரத்தோடு ஆளும் ஆட்சியாளரானார்கள். மதீனாவிலே, அவர்கள் முழு அறேபியாவும் முன்னொரு போதும் கண்டிராத மாபெரும் சீர்திருத்தப் புரட்சி ஒன்றை அல்லாஹற்வின் உதவியோடு உருவாக்கி, அல் குர்ஆனின் மகோன்னதமான தூய கருத்துக்களின் அடிப்படையிலே மதீனா அறேபியரின் சமய, சமூக, கலாசார, அரசியல் வாழ்க்கையை மாற்றி அமைத்தார்கள். உண்மையில், இது மனித இன வரலாற்றில் முன்னொரு போதும் ஏற்பட்டிராத ஒரு மாபெரும் வெற்றி ஆகும். நபியவர்களுக்கு மதீனாவில் கிடைத்த இந்த வெற்றிக்குச் சில முக்கிய காரணங்கள் இருந்தன.
மக்காவில் இருந்தது போல மதீனாவில், உருவ வணக்கத்தில்

இஸ்லாமிய வரலாறு LIIIGlid ! ! J(Ggó l
நிலையூன்றிய பற்றுக்களுள்ள உயர்குடிக் குருத்துவ வகுப்பாரோ சிறப்புரிமையுள்ள மக்களோ இருக்கவில்லை. மதீனாவாசிகள் இத்தகைய பகட்டிலிருந்து முற்றாக விடுபட்டவர்களாக இருந்தனர். அதனால், தமது 播 தூதத்தை அங்கே எத்தகைய எதிர்ப்புமில்லாமல் சிறப் புரிமையுள்ள பிரசாரம் செய்வதற்கு நபி (ஸல்) அவர்களால் (Lplç2 b g5 ğB5]. LD é#5 éE6 FT (95 60) AD6)ş éE5 6íT , 2D. (B56)j வகுப LI FTf6i GOLD வழிபாட்டின் மீது அவர்கள் காட்டிய விசுவாசத்தின் காரணமாக நபியவர்களையும் அவர்கள் கொண்டுவந்த சன்மார்க்கத்தையும் எதிர்க்கவில்லை. ஆனால், நபியவர்களது பிரசாரம் அவர்களது பொருளாதார, சமூக, அரசியல் நலன்கள் மீது ஏற்படுத்தவிருந்த - குறிப்பாக நபியவர்கள் போதித்த ஏகத்துவக் கோட்பாடு அவர்களது பொருளாதார சொத்துக்களான ஆலயங்கள் மீது ஏற்படுத்தவிருந்த விளைவுகளைப் பயந்தமை காரணமாகவே எதிர்த்து வந்தார்கள். மேலும், அவர்கள் பகுத்தறிவுக்கேற்ற மதமான இஸ்லாத்தைத் தாங்கள் ஏற்றுக்கொண்டால், அது தங்களது சில்லோராட்சிச் சமுதாயத்தில் எதிர்க்க முடியாத புதிய அரசியல் அதிகார முறை ஒன்றை அறிமுகம் செய்து விடும் என்பதை நபியவர்களுக்கு முன்பே உணர்ந்திருந்தார்கள். வேறுவிதமாகச் சொன்னால், நபியவர்கள் மீதும் அவர்களது தூதத்தின் மீதும் மக்கா குறைஷகள் காட்டி வந்த எதிர்ப்பு பிரதானமாகப் பொருளாதார, அரசியல் காரணங்களையே அடிப்படையாகக் கொண்டிருந்தது எனலாம். மதீனாவாசிகளைப் பொறுத்தவரை, அவர்களுக்கு இத்தகைய நிலையூன்றிய பற்றுக்களோ தாழ்ந்த நோக்கமோ இருக்கவில்லை. எனவே, தயக்கமின்றிச் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளவும் தங்களது சமய, சமூக, அரசியல் தகுதிகளை உயர்த்தவல்ல தலைவர் ஒருவரின்கீழ் ஒன்றுபடவும் அவர்களால் முடிந்தது.
கஹற் தானின் வழிவந்தவர்களும் யமனைத் தாயகமாகக் கொண்டவர்களுமான மதீனிாவில் வாழ்ந்த அவ்ஸ், கஷரஜ் ஆகிய இரு வர்க்கங்களையும் சேர்ந்த மக்கள் அறிவு ரீதியில் மக்காவாசிகளை விடவும் மேம்பட்டவர்களாகவும் வளர்ச்சியடைந்தவர் களாகவும் இருந்தனர். அவர்களது மனோபாவம் மக்காவாசிகளின் மதீனாவாசிகளின் மனோபாவதி தை விடவும் சிறந்த தெளிந் நோக்கு பண்பாடுடையதாய் இருந்தது. மேலும் அவர்கள் வேதத்தையுடைய சமயம் ஒன்றைத் தழுவி வாழ்ந்த யூதர்களோடும் கிறித்தவர்களோடும் மிக நெருங்கிய தொடர்பு வைத்திருந்தமையால், அவர்கள் மக்காவாசிகளை விடவும் அதிக தெளிவும் சிறந்த விளக்கமும் உடையவர் களாக இருந்தனர். யூதர்களோடும் கிறித்தவர்களோடும் அவர்களுக்கு இருந்து வந்த நெருங்கிய தொடர்பின் விளைவாக, இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன்பே அவர்கள் ஏகத்துவம்,

Page 87
இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி 1
வேதவெளிப்பாடு முதலியவைபற்றிய கருத்துக்களோடு பரிச்சயமுள்ளவர்களாக இருந்தனர். எனவே, அவர்களது இதயங்களையும் நிலத்தையும் எத்தகைய போராட்டமும் இன்றி வெற்றி கொள்ள நபியவர்களால் முடிந்தது.
அவ்ஸ் வர்க்கத்தாரும் கஷ்ரஜ் வர்க்கத்தாரும் நீண்டகாலமாகச் செய்து வந்த போர்கள் மூலம் உருவாகியிருந்த நிலையான குடியியல் பிணக்கால் மதீனா நகர மக்கள் களைப்படைந்து, பலவீனமுற்றிருந்தனர். பயத்திலும் உறுதியின்மையிலும் வாழ்ந்த அவர்கள் நடுவர் a ཆ - ༤ தங்கள் நகரத்தில் அமைதியும் ஒழுங்கும் ஒருவரின் தேவை ஏற்படவேண்டும் என்று பேராவல் கொண்டனர். போரில் ஈடுபட்டிருந்த அவ்ஸ் , கவர் ரஜ் வர்க்கங்களைச் சேர்ந்த மக்களும் தங்கள் பிணக்குகளைத் தகுதியான ஒருவர் மூலம் தீர்த்துக் கொள்ளவும் அமைதியான வாழ்க்கை வாழவும் ஆவலுற்றிருந்தனர். அவர்கள் முதன் முறையாக நபி முஹம்மத் (ஸல்) அவர்களை மக்காவில், அல் அகபா கணவாயில் சந்தித்த போது, தங்கள் நீண்டகாலப் பிணக்குகளை நேர்மையாகத் தீர்த்து வைப்பதில் இருபக்கத்தாரும் நம்பிக்கை வைக்கவல்ல விழுமிய பண்புகளைக் கொண்ட மனிதப் புனிதர் ஒருவரை அவர்கள் அண்ணல் அவர்களிலே கண்டனர். இஸ்லாத்தையும் அதன் ஒழுக்க வாழ்வையும் ஏற்றுக் கொள்வதன் மூலம், தங்கள் நகர மக்களைப் பற்றியுள்ள பிணிகளுக்குப் பரிகாரம் தேடமுடியும் என்றும் அவர்கள் நம்பினர். எனவே, அவர்கள் நபி (ஸல்) அவர்களைத் தமது நடுவராக மட்டுமன்றித் தங்கள் வழிகாட்டியாகவும் இஸ்லாத்தைத் தங்கள் மார்க்க மாகவும் ஏற்றுக் கொள்ளத் தீர்மானித்து, புதிதாகச் சுவீகரித்துக் கொண்ட மதத்தின் பொருட்டு நபியவர்களிடம் தங்கள் வாழ்வையும் தங்கள் மண்ணை யும் ஒப்படைத்தார்கள்.
மதீனா நகர மக்கள் மக்கா குறைஷகளின் ஏற்றத்தின் மீது பொறாமையுற்றிருந்தனர். கட்பாவின் மூலம் முழு அறேபியத் தீபகற்பத்திலும் சமய ஆதிக்கம் ஒன்றை நிறுவியிருந்த மக்காவின் உயர்குடி வர்க்கத்தினரான குறைஷகளின் சமயத் தலைமையை அவர்களால் மேலாதிக்க சகித்துக்கொள்ள முடியவில்லை. முழுத் தீபகற்பத்தையும் விரும் LI Lö தழுவிய குறைஷகளின் இந்தச் சமயத்தலைமை மதீனா வாசிகளுக்குப் பொறாமையை அளித்தது. அதனால், அவர்கள் மக்காவின் ஆதிக்கத்தை வீழ்த்தி விட்டு, அறபு நாடெங்கும் தங்களது சொந்தச் செல்வாக்கையும் மேலாதிக்கத்தையும் நிறுவத் தீர்மானித்தனர். நபி முஹம்மத் (ஸல்) அவர்களைத் தங்கள் தலைவராகவும் வழிக்ாட்டியாகவும் ஏற்றுக் கொண்டால், தங்கள் இலட்சியத்தை இலகுவாக அடையப்பெறலாம் என்று அவர்கள் எண்ணி, தமது இதயங்களையும் பதியையும் அண்ணல் அவர்களுக்கு அளிக்க முடிவு செய்தனர். எனவே,

இளல்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி 1
நபியவர்கள் ஆட்சித்தலைவராக மதீனாவினுள் பிரவேசித்து, தமது நபித்துவப் பணியில் வெற்றிபெற்றார்கள்.
இத்தகைய காரணங்களால் நபியவர்களின் போதனைகளுக்கும் சாதனைகளுக்கும் சாதகமான சூழ்நிலை ஒன்று மதீனாவிலே உருவானது. அதனால், மனித இனத்தின் வழிகாட்டலுக்காகப் பொதுத் தூது ஒன்றுடன் அல்லாஹற்வால் அனுப்பிவைக்கப்பட்ட நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் அங்கே தமது உயர்ந்த கருத்துக்களைப் போதிக்கவும் தமது தூதத்தின் இறுதி இலக்கை அடையவும் முடிந்தது. அண்ணல் அவர்கள் மதீனாவில் அடைந்த வெற்றியே அவர்கள் இறந்து சில ஆண்டுகளின் பின்னர், அவர்களது சீடர்கள் பெற்ற உலகளாவிய வெற்றிகளுக்கு ஆரம்பமாகவும் அடித்தளமாகவும் அமைந்தது.
BLITEGGI
நபி முஹம்மத் (ஸல்) அவர்களும் அவர்களது சீடர்களும் மதீனாவுக்குப் புலம் பெயர்ந்து சென்றுவிட்ட பின்னர், மக்கா குறைஷகள் சிறிது காலம் திருப்தியுற்றவர்களாய் இருந்தனர்; தங்கள் நகரப் புதல்வர் முஹம்மத் பின் அப்துல்லாஹற்வையும் அவர் பிரசாரம் செய்த புதிய மார்க்கத்தையும் பற்றிய கசப்பான நினைவுகளை மறக்கவும் அவர்கள் முயன்று கொண்டிருந்தனர். ஆனால், அவர்களது அமைதியும் ஆனந்தமும் நிலையானவையாய் இருக்கவில்லை. மதீனாவில் இஸ்லாம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வந்ததையும் நபி முஹம்மத் (ஸல்) அவர்களை யூதர்கள் கூட பொருத்தனை ஒன்றின் மூலம் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டமை யையும் அவர்கள் அறிந்தவுடனேயே பழிவாங்கும் ஆசை அவர்களது கொடிய இதயங்களிலே மீண்டும் ஒருமுறை கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. நபியவர்கள் மதீனாவிலே அடைந்து வந்த பெருவெற்றி தங்கள் ஏற்றத்தினதும் ஆதிக்கத்தினதும் ஆணிவேரையே அசைத்துக் கொண்டிருந்த மையை உணர்ந்த மக்கா குறைஷ்கள் இஸ்லாத்தின் துரித வளர்ச்சியும் ஓங்கிக் கொண்டிருந்த மதீனாவின் செல்வாக்கும் எத்தகைய குறுக்கீடுகளும் இல்லாமல் பல தலைமுறைகளாகத் தாங்கள் பேணிவந்த தங்கள் கீர்த்திக்கும் அதிகாரத்திற்கும் சமாதி கட்டிவிடலாம் என்று எண்ணினர். எனவே, அவர்கள் மதீனாவிலே நிறுவப்பட்ட இஸ்லாமிய புரட்சி அரசை வேரோடு அழித்துவிடத் தீர்மானித்தனர். மக்கா குறைஷகளின் இந்தத் தீர்மானம் போர்களிலே முடிவுற்றது.
மதீனாவில் வாழ்ந்த மக்கள் யாவரும் இஸ்லாத்தை ஏற்று ஆதரித்த போதிலும், அதன் வளர்ச்சியை விரும்பாத நயவஞ்சகர் சிலரும் அங்கே இருந்தார்கள். அவர்கள் புறத்தே இஸ்லாத்தை ஏற்றிருந்த போதிலும், அகத்தே

Page 88
இலல்லாமிய வரலாறு LIT&BLb 1 LIGGbó
இஸ்லாத்திற்கு எதிராகச் செயற்பட்டு வந்தனர். அப்துல்லாஹற் பின் உபய் என்பானின்” தலைமையில் அணி திரண்டிருந்த அவர்கள் இஸ்லாத்தின் துரித வளர்ச்சியையும் வளர்ந்து வந்த அதன் செல்வாக்கையும் கண்டு வஞ்சகரின் ಇಕ್ಷ್ இஸ்லாமிய வரலாற்றில் முனாபிகின்’ (நயவஞ்சகர்கள்) என்று
சூழ்ச்சி அழைக்கப்பட்டனராயினும், இவர்கள் இஸ்லாம் மார்க்கத்திற்கு முற்றிலும் எதிரானவர்களாகவே இருந்தனர். இறுதியில் இவர்களை எப்படியோ இஸ்லாத்திற்குத் திருப்பிவிடலாம் என்று நம்பிய நபியவர்கள் இவர்கள்பால் பொறுமையும் சகிப்புத் தன்மையுமே காட்டி வந்தர்கள். ஆயினும், இவர்கள் மதீனாவில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு மிகப் பெரும் ஆபத்தாக மாறிக்கொண்டிருந்தனர். வதந்திகளைப் பரப்புதலும் ஒத்துழையாமையும் இவர்களது ஆயுதங்களாக இருந்தன. மதீனாவின் இஸ்லாமியப் பொதுநலவாயத்தை முளையிலேயே கிள்ளி எறியச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மக்கா குறைஷகள் இந்த நயவஞ்சகர்களைப் பற்றிக் கேள்வியுற்று, இவர்களோடு நட்புறவை ஏற்படுத்திக் கொண்டனர். இவர்களின் உதவியோடு மக்காவாசிகள் மதீனாவின் எல்லைப்
"Privu- ..
புறங்களுக்கு வந்து, அங்கு வாழ்ந்த முஸ்லிம்களுக்குத் தொல்லைகள் கொடுக்கலாயினர்; மதீனாவுக்கு வெளியே இருந்த முஸ்லிம்களின் விளை நிலங்களையும் தோட்டங்களையும் அழித்து, அவர்களது கால்நடைகளையும்
ஒட்டிச் சென்றனர்.
மேலும், புனித கட்பாவின் பாதுகாவலர் என்ற வகையில் தீபகற்பத்தின் அனைத்து வர்க்கங்களாலும் மதிக்கப்பட்ட மக்கா குறைஷகள் மக்காவுக்கும் மதீனாவுக்குமிடையே வாழ்ந்த வர்க்கங்கள் மீது தமது செல்வாக்கைப் பிரயோகித்து, நபியவர்களுக்கும் அவர்களது மக்காவாசிகளின் சீடர் களுக்கும் எதிராகப் பகையையும் வெறுப்பையும் அந்த வர்க்கங்களைச் சேர்ந்த ܐ ܪ ܘ . சூழ்ச்சி : یہ ۱جلسہ ہے LLLL S SSS S SS SS SSAS SSSSS S S S S S SS SS SSLSS S STS SS S S L
மக்களின் இதயங்களில் ஏற்படுத்திவிட்டனர். அவ்வாறே மக்காவுக்கும் சிரியாவுக்குமிடையே அடிக்கடி பிரயாணம் செய்த அவர்களது வர்த்தகக் கூட்டங்களும் இஸ்லாத்திற்கெதிராகப் பிரசாரங்களை மேற்கொண்டு, அவர்களது சமய ஆதிக்கத்தின் கீழிருந்த மக்களை நபியவர்களுக்கும் நபித்தோழர்களுக்கும் எதிராகத் திருப்பிவிட்டன. இவ்வாறு, ஏறக்குறைய முழு அறேபியாவையும் இஸ்லாத்திற்கெதிரான பகையினதும்
39. அப்துல்லாஹற் பின் உபய் பின் எலுரல் என்பது இவனது முழுப்பெயர் கஷ்ரஜ் வர்க்கத் தலைவனாக இருந்த இவனை மதீனாவாசிகள் ஹிஜ்ரத்துக்கு முன்பு தமது அரசனாக்க ஆயத்தங்கள் செய்தனர். ஆனால் நபியவர்களின் ஹிஜ்ரத்தும் இஸ்லாத்தின் துரித வளர்ச்சியும் இவனது இந்தக் கனவைக் கலைத்து விட்டன. பெரும் நயவஞ்சகனாக இருந்த இவன் வாயளவில் தன்னை ஒரு முஸ்லிமாகக் காட்டிக்கொண்ட போதிலும் சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் விசுவாசிகளினர் முதுகில் குத்த இவன் தயங்கவில்லை. தனது வாழ்வினர் இறுதிவரை இவ்வாறே இருந்த இவள் நயவஞ்சகனாகவே மரணித்தான். இவனது மகள் அப்துல்லாஹர் நபித்தோழர்களுள் ஒருவராக இருந்து இறைமறுப்பாளர்களை எதிர்த்துப் போராடியவராவர்.

இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி ! வெறுப்பினதும் நஞ்சினால் மக்கா குறைஷகள் மாசுபடுத்தியிருந்தனர்.
ஒருமுறை , நபித் தோழர் களுள் ஒரு வரும் அவ் ஸ் வர்க்கத்தலைவருமான ஸ..த் பின் முஆத். 'உம்ரா’ கடமையை நிறைவேற்றுவதற்காக மக்காவுக்குச் சென்றிருந்தார். அவர் அங்கே நபியவர்களின் கொடிய விரோதியும் குறைஷ 6f).) பின் முஆதி தலைவர்களுள் ஒருவனுமான உமய்யா பின் நிந் தி க்கப்பட்டமை கலப் என்பானின் இல்லத்தில் தங்கியிருந்தார். ஒரு நாள் மதியம், அவர் தமது சிநேகிதனான உமய்யாவோடு கட்பாவுக்குச் சென்று, ‘தவாப் செய்தார். அப்போது, அபூஜஹற்ல் அங்கே உமய்யாவைக் கண்டு, “உம்மோடு இருக்கும் மனிதர் யார்?’ என்று கேட்க அவன், ‘இவர் எனது நண்பர் ஸ,'த்” என்று கூறினான். உடனே அவன் ஸ.'தின் பக்கம் திரும்பி, ‘தங்கள் மார்க்கத்தை மாற்றிவிட்ட மக்களுக்கு நீங்கள் அபயம் அளித்திருக்கிறீர்கள். இப்போது நீங்கள் மக்காவிலே பாதுகாப்பாக உலவிக் கொண்டிருப்பதைக் காண்கிறேன். அல்லாஹற்வின் மீது சத்தியமாக, இப்போது உம்மோடு உமய்யா இல்லாதிருந்தால், நீர் உமது குடும்பத்தாரிடம் பாதுகாப்பாகத் திரும்பிச் செல்லமுடியாது” என்று கூறினான். அதற்கு ஸ.'த் தமது குரலை உயர்த்தி, ** அல்லாஹற்வின் மீது சத்தியமாக, இந்தச் சடங்கை நிறைவேற்றவிடாமல் நீர் என்னைத் தடுத்தால் மதீனாவினூடாகச் செல்லும் உங்கள் வர்த்தகப் பாதையை நான் தடுத்து விடுவேன்’ என்று சூடாகப் பதிலளித்தார். (புகாரீ) இதன் பின்னர் அவர் கனத்த இதயத்தோடு மதீனாவுக்குத் திரும்பிச் சென்றார். ஸ்.துக்குச் செய்யப்பட்ட இந்த நிந்தை நபியவர்களையும் மதீனாவின் முழு முஸ்லிம் சமுதாயத்தையும் அதிர்ச்சியடைய வைத்தது.
இந்த நிலையில், நபி (ஸல்) அவர்கள் எதிரிகளின் தீய திட்டங்களை முறியடிப்பதற்கு உடனானவையும் வாஸ்தவமானவையுமான நடவடிக்கை களை எடுக்க வேண்டியவர்களாக இருந்தார்கள். இந்த விடயத்தில் அவர்கள் இரண்டு திட்டங்கள் பற்றிச் சிந்தித்தார்கள். ஒன்று நபிகளாரின் மக்காவிலிருந்து மதீனாவினுடாக சிரியாவுக்குச் செல்லும் வர்த்தகப் பாதையை குறைஷிகளுக்கு முன்னேற் பாடுகள் மூடி விடுதல். இதனால் அவர்கள் முஸ்லிம்களோடு சமாதானமான முறையில் ஒத்துப்போக நிர்ப்பந்திக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. மற்றது மதீனாவின் சுற்றுப்புறங்களில் வாழ்ந்த பல்வேறு வர்க்கங்களைச் சேர்ந்த மக்களோடு சமாதான ஒப்பந்தங்கள் செய்து கொள்ளல். இதற்காக நபியவர்கள் அயல் வர்க்கங்களிடம் அவர்களோடு நட்புறவை ஏற்படுத்திக் கொள்வதற்காகப் பயணவெழுச்சிகள் (expeditions) சிலவற்றை அனுப்பி வைத்தார்கள். இரண்டொரு தடவை நபியவர்களே நேரில் சென்று, அவர்களோடு தொடர்பு கொண்டார்கள். குறைஷகளின்

Page 89


Page 90
இஸ்லாமிய வரலாறு UITGbib i UGbf l
நக்லாச் சம்பவம் குறைஷகளைக் கோபமடையச் செய்ததோடு, மக்காவாசிகளிடையே பரவலான தேசிய உணர்வையும் தூண்டிவிட்டது. இந்தச் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டவுடனேயே, நபியவர்களுக்கும் அவர்களது சீடர்களுக்கும் எதிராகப் போர்ப் பிரகடனம் செய்த குறைஷகள் மதீனாவின் மீது தாக்குதல் ஒன்றை நடத்துவதற்கு ஆயத்தங்கள் (8Lj FIFi செய்யலாயினர். படையெழுச்சிகளின் செலவுகளைச் ஆயத்தங் கள் சமாளிப்பதற்கு அதிக பணம் தேவைப்பட்டமையால், அவர்கள் தங்கள் குலத்தலைவரான அபூஸ்ப்யானைத் தங்களது வணிகப் பொருள்களோடு வர்த்தகத்திற்காக சிரியாவுக்கு அனுப்பினர். இந்தச் சமயத்திலேயே, குறைஷகளின் செல்வத்தோடு சிரியாவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த அபூ ஸாப்யானின் வர்த்தகக் கூட்டத்தை முஸ்லிம்கள் இடைமறித்துத் தாக்கியதாக ஒரு வதந்தி மக்காவில் பரவலாயிற்று. இந்த வதந்தியின் விளைவாக, குறைஷகள் சீற்றம் கொண்ட புயலாகச் சீறி எழுந்து, ஆயுதம் தரித்த ஆயிரம் வீரர்களைக் கொண்ட படை ஒன்றை அபூஜஹற்லின் தலைமையில் மதீனாவைத் தாக்கி, அபூஸப்யானின் வர்த்தகக் கூட்டத்தை விடுவிக்க அனுப்பி வைத்தனர். குறைஷ்களின் இந்த நடவடிக்கை பற்றி ஒற்றர்கள் மூலம் அறிந்த நபியவர்கள் தமது தோழர்களோடு ஆலோசனை நடத்திய பின்னர், சிரியாவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த அபூஸ"ப்யானின் வர்த்தகக் கூட்டத்தை இடைமறித்துச் சிறைப்பிடிக்கத் தீர்மானித்தார்கள்.
அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் நிராயுதபாணிகளான 313 முஸ்லிம்கள் கொண்ட ஒரு படையைத் திரட்டிக் கொண்டு, மதீனாவுக்குத் தென் மேற்கே சுமார் இருபது மைல் தூரத்திலுள்ள பத்ர் பள்ளத்தாக்கிற்கு ஹிஜ்ரி 2 றமழான் பன்னிரண்டில் புறப்பட்டுச் சென்றார்கள்." அவர்கள் பத்ர்’க்கு அருகிலுள்ள ‘தபிரான்’ பள்ளத்தாக்கை அடைந்தபோது, குறைஷகளின் வர்த்தகக் குழுவினர் அண்மையில் வந்து கொண்டிருந்தமை பற்றி அறிந்து, புதிய தகவல்களைத் திரட்டி வருவதற்காக ஹழ்ரத் அலியின் தலைமையில் முஸ்லிம்கள் சிலரை அனுப்பி வைத்தார்கள். 'பத்ர் கிணறு வரை சென்ற அலியும் அவரது குழுவினரும் சிறுவர் இருவரோடு திரும்பி வந்தனர். அந்தச் சிறுவர்கள் மூலம் குறைஷிப் படையொன்று மலைக்குப் பின்னால் பதுங்கியிருப்பதையும் குறைஷ தலைவர்கள் அனைவரும் அங்கு
42 இந்தப் படையெடுப்பில் பங்குபற்றிய முஸ்லிம்களின் சரியான எணர்ணிக்கை என்ன என்பதில் கருத்து வேறுபாடு உண்டு அவர்களின் எண்ணிக்கை 313 என்றும் அவர்களுள் முஹாஜிர்களின் எணர்ணிக்கை 74 என்றும் எஞ்சியோர் அன்னார்கள் என்றும் எண்மர் படையெடுப்பில் பங்குபற்றவில்லையாயிலும் அவர்களுக்கும் கொள்ளைப் பொருள் பங்கு கொடுக்கப்பட்டது என்றும் இப்னர் ஸஃத் கூறுகிறார். அவர்களது எண்ணிக்கை 34 என்றும் அவர்களுள் முஹாஜிர்களின் எண்ணிக்கை 33 என்றும் அன்ஸார்களினர் எண்ணிக்கை 23 என்றும் இப்னர் இஸ்ஹாக் கூறுகிறார். ஸஹரீஹவில் புகாரீயில் வரும் ஒரு அறிவிப்பில் முஹாஜிர்களின் எணணிக்கை அறுபதுக்கு மேல் என்றும் அள்ளார்களின் எண்ணிக்கை இருநூற்று நாற்பத்தொன்பதுக்கு மேல் என்றும் காணப்படுகிறது.

இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி ! 3}(İbjLJ60)ğulqLİ5 3355ğı tədbir 3037 யtொகள் குறைவடிகள் 6) கூட்டத்தை இடைமறிக்கும் தமது எண்ணத்தைக் கைவிட்டு, பகைவர்களைப் போர்க்களத்திலே சந்திக்கத் தீர்மானித்தார்கள். இதே சமயம், சிரியாவிலிருந்து மக்காவுக்குத் திரும்பிக் கொண்டிருந்த அபூ ஸ“ப்யான் முஸ்லிம்களின் வருகை பற்றி அறிந்து, வழக்கமான தமது பாதையைக் கைவிட்டு, மேற்குப்புறக் கடற்கரை வழியாகத் தப்பிச் சென்றுவிட்டார்.
முஸ்லிம்கள் பத்ர் பள்ளத்தாக்கை அடைந்த போது, குறைஷகள் அவர்களுக்கு முன்பாகவே அங்கு சென்று, மிக வசதியான ஓர் இடத்தில் முகாமிட்டு இருந்தமையை அவர்கள் கண்டனர். எனவே, அவர்கள் கிணறோ ஊற்றோ இல்லாத ஓர் இடத்தில் முகாமிட்டு, முழுக்க Jiji G8III i 를
முழுக்க ஆயுதம் தரித்த - மிகத்திறமை வாய்ந்த - போர் வீரர்களைக் கொண்டிருந்த குறைஷகளின் படையைச் சந்திக்கத் தம்மை ஆயத்தப்படுத்தினர். முஸ்லிம்களின் குருதியைக் குடிக்க அடங்காத் தாகம் கொண்டிருந்த குறைஷ்களே ஹிஜ்ரி 2 ரமழான் பதினேழாம் நாள் காலையில், முதன் முதலாகப் போரைத் தொடக்கினர். இந்தப் போரில், குறைஷ படை வீரர்களின் எண்ணிக்கை முஸ்லிம் படை வீரர்களின் எண்ணிக்கையை விட மூன்று மடங்குகள் அதிகமாக இருந்தபோதிலும், அவர்களை எத்தகைய போர்ப் பயிற்சியுமற்ற முஸ்லிம்கள் மிகக் குறுகிய நேரத்தில் தோற்கடித்தனர். நபி முஹம்மத் (ஸல்) அவர்களையும் அவர்களது தோழர்களையும் ஓட்டம் காட்டத் தமது படையணிகளின் வெறும் காட்சி ஒன்றே போதும் என்று கற்பனை செய்திருந்த குறைஷகள் தங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டு, போர்க்களத்திலிருந்து தப்பி ஓடினர். அவர்களின் தலைவர்களான அபூ ஜஹற்ல், உத்பா, உமய்யா, வலீத் உட்பட எழுபது குறைஷிகள் கொல்லப்பட்டனர். வேறு எழுபது குறைவர்கள் முஸ்லிம்களால் போர்க்கைதிகளாகச் சிறைப்பிடிக்கப்பட்டனர். முஸ்லிம்களின் பக்கத்தில் பதின்மூவர் மட்டுமே கொல்லப்பட்டனர். மனிதத் தன்மையோடு நடத்தப்பட்ட குறைஷ கைதிகளுள் வசதியானோர் பின்னர் மீளிறை மீது விடுவிக்கப்பட்டனர்; வசதியற்றோர் மீளிறை இல்லாமலேயே விடுவிக்கப்பட்டனர். எழுத வாசிக்கக் கற்றிருந்த கைதிகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மதீனக் குழந்தைகளுக்குப் படிப்பறிவைக் கற்றுக் கொடுத்து விட்டுத் தங்கள் விடுதலையைப் பெற்றுக் கொண்டனர்.
ஒரே நாளில் நடந்து முடிந்த இந்தப் போர் இஸ்லாத்தின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இந்த முதற் போரில் முஸ்லிம்கள் தோல்வியுற்றிருந்தால், இஸ்லாம் உலகிலிருந்து முற்றாக அழிந்து போயிருக்கும்; ஸ்லிம்களைப் பற்றிய ஒரு lb | வெற்றியின் ၈#ရှူးဗါး ဓါးရုံး၊းနှံ့ போயிருக்கும். இந்தப் போரில் விளைவுகள் முஸ்லிம்கள் அடைந்த வெற்றி அறேபியரின் சமய,
GD

Page 91
இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
அரசியல் நிலைமைகளில் பல விளைவுகளுக்குக் காரண்மாய் அமைந்தது.
உண்மையில், அது உருவ வழிபாட்டின் மீதான இஸ்லாத்தின் முதல் வெற்றியாகவும் முன்னேற்றத்தை நோக்கிய இஸ்லாத்தின் முதற்படியாகவும் இருந்தது. குழந்தைப் பருவத்திலிருந்த இஸ்லாத்தை குறைஷ உருவத் தொழும்பர்களின் பயங்கரக் கரங்களிலிருந்து காப்பாற்றி, அறபு நாடெங்கும் இஸ்லாம் தனது சொந்த ஆதிக்கத்தை நிறுவிக் கொள்ள அது உதவியது. அறேபியத் தீபகற்பமெங்கும் பரவியிருந்த உருவத் தொழும்புக்கு அது மரண அடியைக் கொடுத்து, முஸ்லிம்களின் உறுதிப்பாட்டைப் பலப்படுத்தவும் இஸ்லாத்தின் எதிர்கால முன்னேற்றத்திற்கு வழி சமைக்கவும் துணை புரிந்தது. தீபகற்பத்திலே நபி (ஸல்) அவர்களது அந்தஸ்தை உறுதிப்படுத்தி, அறபு வர்க்கங்களிடையே அவர்களுக்குப் புதிய கீர்த்தியை அது பெற்றுக் கொடுத்தது. இஸ்லாமிய இயக்கத்திற்கு அது புதிய உற்சாகத்தை அளித்ததோடு, அந்த இயக்கத்தைச் சார்ந்தவர்களுக்கு மனத்திண்மையையும் அவர்களது புகழ்பூத்த எதிர்காலம் பற்றிய நம்பிக்கையையும் கொடுத்தது. மதீனாவில் பயத்தோடும் உறுதியின்மை யோடும் வாழ்ந்துகொண்டிருந்த முஸ்லிம்கள் ஊக்கத்தோடும் உறுதியோடும் கீர்த்தியோடும் வாழ ஆரம்பித்தனர். மிகக் குறைவான எண்ணிக்கையில் போர் அனுபவம் இல்லாத முஸ்லிம்களைக் கொண்ட சிறிய படை ஒன்றால் அடையப்பெற்ற இந்த வெற்றி இஸ்லாத்தை நம்ப மறுத்த மக்களுக்கு அதன் உள்ளார்ந்த ஆன்மா பற்றிய விளக்கத்தை வழங்கியது; இஸ்லாம் மார்க்கத்தின் தெய்விகத் தன்மையை நிரூபித்து, அதனை எதிர்த்த மனித சக்திகளைப் பலவீனப்படுத்தியது. கீழைத் தேசவாதிகளுள் ஒருவரான அல்பிரட் கில்லாமீ கூறுவது போல, “பிற்காலத்தில் ஏற்பட்ட முஸ்லிம் படைகளின் வெற்றிகளுக்கெல்லாம் அத்திவாரமாக இந்தச் சண்டையே கருதப்படல் வேண்டும்”.*
மக்கா குறைஷகள் ‘பத்ர் போரில் தோல்வியுற்ற போதிலும், உதவியற்ற ஏழை முஸ்லிம்களின் கரங்களில் தாம் தோல்வியுற்றமையை அவர்களால் மறக்கமுடியவில்லை. அது அவர்களுக்கு ஒரு மாபெரும் _. அவமானமாக இருந்தமையால், அடிபட்ட அரவம் போல பழிவாங்கும் அவர்கள் பழிக்குப்பழி வாங்கும் வேட்கையால் சீறிக் வேட்கை கொண்டிருந்தனர். அவர்களது சீற்றமும் பகைமையும் எல்லை கடந்து வளர்ந்தன. ஒவ்வொரு மக்கத்துக் குழந்தையும் பழிவாங்கும் பசியால் துடித்து அழுதது. அவர்களது கவிஞர்கள் மக்காவாசிகளின் பழிவாங்கும் உணர்வுகளுக்குத் தமது தீ நாக்குகளால் சூடேற்றிக் கொண்டிருந்த அதேவேளையில், அவர்களது பெண்கள் தமது ஒப்பாரியாலும் வஞ்சப் புகழ்ச்சியான குறிப்புக்களாலும் மற்றொரு புதிய
43. Alfred Guillaume, islam, p. 43

இளல்லாமிய வரலாறு usTibb Li(535
போருக்குத் தங்கள் ஆண்களைத் தயார்படுத்தலாயினர். இவ்வாறு, மக்கா குறைஷிகள் புதிய போர் ஒன்றுக்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்த அதேசமயம், முஸ்லிம்கள் வெற்றிக் களிப்பில் தம்மை மறந்து விடவில்லை. ஒருமுறை உறையிலிருந்து உருவப்பட்ட எதிரியின் வாள், அது முற்றாக உடைக்கப்படும் வரை அமைதி கொள்ளாது என்பதைத் தெளிவாக உணர்ந்திருந்த நபி (ஸல்) அவர்கள் எதிரிகளின் திடீர்த் தாக்குதலை எந்த வேளையிலும் எதிர்கொள்வதற்கு ஏற்றவாறு தமது சீடர்களை ஆயத்த நிலையில் வைத்துக் கொண்டார்கள்.
ஹிஜ்ரி 3இல், மக்கா குறைஷகள் ஆயுதம் தரித்த 3200 வீரர்களைக் கொண்ட ஒரு படையை பத்ர் போர்க்களத்தில் அடைந்த படுதோல்விக்குப் பழிவாங்குவதற்காகத் தயாரித்தனர். மூவாயிரம் ஒட்டகைகளைக் கொண்ட இந்தப் படையில் எழுநூறு கவச வீரர்களும் குறைவர்களின் புதிய இருநூறு குதிரை வீரர்களும் இடம்பெற்றி LI GOL GUILI Gli ருந்தனர். அவர்களோடு வீரர்களைப் புகழவும் கோழைகளை இகழவும் அவர்களது பெண் களும் சேர்ந்து கொண்டனர். குறைஷ்களின் தலைவரான அபூ ஸாப்யானின் தலைமையில் மதீனாவை நோக்கிப்புறப்பட்ட இந்தப் படையினர் மதீனாவுக்கு வடக்கே சுமார் மூன்று மைல் தூரத்திலுள்ள உஹத் மலைக்கு அருகே வசதியான இடம் ஒன்றில் முகாம் இட்டனர். மக்காவிலே தங்கியிருந்த தமது சிறிய தந்தை அப்பாஸின் மூலம் குறைஷகளின் இந்தப் படையெடுப்புபற்றி அறிந்த நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களையும் அண்ணல் அவர்களால் வெளியிடப்பட்ட பட்டயத்தின் மூலம் நகரத்தைப் பாதுகாப்பதில் முஸ்லிம்களுக்கு உதவக் கடமைப்பட்டிருந்த யூதர்களையும் கூட்டி ஆலோசனை நடத்தினார்கள். குறைஷகளிடமிருந்து நகரைப் பாதுகாக்கும் முறை குறித்து ஆராயப்பட்டது. முஸ்லிம்கள் நகருக்குள்ளிருந்தே தமமைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் எதிரிகள் தாக்குதலை ஆரம்பித்தால் உள்ளிருந்தவாறே தற்காப்புப் போர் செய்யவேண்டும் என்றும் அண்ணல் அவர்கள் கருத்துக் கூறினார்கள். இதனை யூதர்களும் முஸ்லிம் முதியோரும் ஏற்றுக்கொண்டனர். நயவஞ்சகர் தலைவனான அப்துல்லாஹற்
r r = BLP
a
பின் உயூ கூட இந்தக் கருத்துக்குத் தலைசாய்த்தான். ஆனால், பத்ர் களத்தில் போராடி, போரின் சுவையை அறிந்த முஸ்லிம்களும் அந்தப் போரில் பங்கு கொள்ளாத முஸ்லிம் இளைஞர்களும் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளத் தயங்கினர். சுவர்களுக்குப் பின்னால் ஒட்டிக்கொண்டிருப்பது கோழைத்தனம் என்று கருதிய அவர்கள் நகருக்கு வெளியே சென்று, திறந்த வெளி ஒன்றில் எதிரிகளைச் சந்தித்துப் போரிடுவதையே விரும்பினர். நகருக்கு வெளியே சென்று, பகைவர்களைச் சந்திக்க விரும்பியோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தமையால், அவர்களது நம்பிக்கைக்கும்

Page 92
இஸ்லாமிய வரலாறு LITE LB 1 LI(55. 1
ஆர்வத்துக்கும் கண்ணியம் அளித்து, அவர்களது கருத்தையே ஏற்றுக்கொண்ட நபி (ஸல்) அவர்கள் சுமார் ஆயிரம் வீரர்களோடு உஹ"த் மலைச்சாரலை நோக்கிப் புறப்பட்டார்கள். நடுவழியிலே, முஸ்லிம்களோடு களம் நோக்கிச் சென்ற அப்துல்லாஹற் பின் உபய், முஹம்மத் அவர்கள் தமது சொந்த எண்ணப்படி செயலாற்றவில்லை என்றும் அனுபவமற்ற இளைஞர்களைத் திருப்தி செய்வதற்காகத் தமது முந்திய திட்டத்தையே மாற்றி விட்டார் என்றும் குறை கூறித் தனது 300 யூதத் தோழர்களோடு மதீனாவுக்குத் திரும்பச் சென்று விட்டான். இதனால் படை வீரர்களின் எண்ணிக்கை எழுநூறாகக் குறைந்த போதிலும், முஸ்லிம்கள் அல்லாஹற்வின் மீது முழு நம்பிக்கை வைத்தவர்களாக எதிரிகள் முகாமிட்டிருந்த ‘உஹத் மலைச் சாரலை அடைந்தனர்.
அன்றிரவை அங்கே கழித்த அவர்கள் அடுத்த நாள் காலையில் சம வெளியை நோக்கி முன்னேறிச் சென்றனர். குறைஷ குதிரை வீரர்கள் இலகுவில் நுழைய முடியாத மலைச் சரிவில் இடம்பிடித்துக் கொண்ட நபியவர்கள் குன்றின் உச்சியிலிருந்த கணவாயில் ஐம்பது வில் வீரர்களை அப்துல்லாஹற் பின் ஷ"பைரின் தலைமையில் நிறுத்தி, போர்க்களத்தில் வெற்றியோ தோல்வியோ எது நிகழ்ந்தாலும், அந்த இடத்தை விட்டு நகரக் கூடாது என்றும் எதிரிகள் மீது ஒயாது அம்புகள் எய்து கொண்டிருக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள். எதிரிகள் பின்புறமிருந்து முஸ்லிம் களைத் தாக்கலாம் என்ற பயத்திலேயே நபியவர்கள் வில் வீரர்களுக்கு இவ்வாறு கண்டிப்பான ஆணை பிறப்பித்திருந்தார்கள்.
ஹிஜ்ரி 3 ஷவ்வால் ஆறாம் நாள் (மார்ச் 22, 625) போர் ஆரம்பமானது. முஸ்லிம்கள் எதிரிகளோடு போராடித் தமது வீரத்தையும் ஆற்றலையும் வெளிப்படுத்தினர். குறைஷ்களின் கொடியினை ஒருவர் பின் மற்றவராகத் தாங்கி நின்ற எழுவரும் முஸ்லிம்களால் கொல்லப் உஹ”த (III பட்டனர். #fiခိ##း சிங்கங்களைப் போலக் கர்ச்சித்துக் கொண்டு நின்ற முஸ்லிம்களோடு சண்டையிட முடியாத குறைஷ் வீரர்கள் போர்க் களத்திலிருந்து பின் வாங்கினர். முஸ்லிம்கள் அவர்களைத் துரத்திச் சென்று தம் வாள்களுக்கு இரையாக்கினர். சந்தேகத்துக்கிட மில்லாதவாறு வெற்றி தெளிவாகத் தெரிந்தமையால், முஸ்லிம்கள் பின்விளைவுகளைப் பற்றிச் சிறிதும் எண்ணாமல், கொள்ளைப் பொருள்களைச் சேகரிப்பதில் ஈடுபடலாயினர். மலைக் கணவாயைக் காவல் செய்வதற்காக நபியவர்களால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வில் வீரர்கள் இதனைக் கண்டு, போர் முடிவுற்றிருக்கலாம் என நினைத்து, நபியவர்களதுகண்டிப்பான கட்டளையையும் அவர்களது தளபதியின் எச்சரிக்கையையும் மீறிப் பகைப் பொருள்களைப் பொறுக்கக் கீழே ஓடிவந்தனர். இப்போது, மலைக் கணவாய் பாதுகாப்பற்றுக் கிடந்ததைக் கவனித்து விட்ட குறைஷகளின் குதிரைப்படைத்
(7)

இஸ்லாமிய வரலாறு பாகம் பகுதி !
தளபதி காலீத் பின் வலீத் தமது இருநூறு குதிரை வீரர்களோடு மேலே பாய்ந்து சென்று கணவாயைப் பிடித்துக் கொண்டார். முஸ்லிம்கள் கொள்ளைப் பொருள்களைச் சேகரிப்பதிலேயே கண்ணுங்கருத்துமாக இருந்தமையால், கணவாயில் என்ன நடந்தது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. கணவாயைப் பிடித்துக் கொண்ட காலித், குதிரை வீரர்களின் உதவியோடு பின்புறமாகவிருந்து முஸ்லிம்களைத் தாக்கலானார். எதிர்பாராத இந்தத் தாக்குதல் முஸ்லிம்களுக்கு முற்றிலும் சாதகமாக இருந்த போரை வேறு பக்கம் திருப்பிவிட்டது. முஸ்லிம்கள் நிலைகுலைந்து சிதறலாயினர். அறபு வரலாற்றாசிரியர்களுள் ஒருவரான இப்ன் ஸ.'த் கூறுவது போல ‘நிமித்தம் திரும்பியது; காற்று தனது திசையை மாற்றிக் கொண்டது. கிழக்குத் திசையில்
HHHHLLLLHS LSL MSAqSLL L L S LLLLSLS HHHH SH S LLTL ASLSS L LLLLLLLA S Suu CL LLLLLL A LLLS LLSL LLLLLLLAA S S S A AAA S S S . . . . . r = r * *
அடித்த அது மேற்குத் திசையில் வீசலாயிற்று. முஹம்மத் அவர்கள் கொல்லப்பட்டுவிட்டார் என்று ஷைத்தான் கூக்குரலிட்டான். முஸ்லிம்கள் நிலை குலைந்து, தங்கள் வழமைக்கு மாறாகப் போராடலாயினர். அவசரத்திலும் குழப்பத்திலும் அவர்கள் ஒருவரை மற்றவர் தாக்கலாயினர்" அங்கு ஏற்பட்ட குழப்பத்தில் குறைஷகளின் புகழ்பெற்ற வீரனான அப்துல்லாஹற் பின் கமீஆ, நபி (ஸல்) அவர்களை நோக்கிக் கற்களை வீசினான். அந்தக் கற்கள் அவர்களது முன் பற்கள் இரண்டை (மற்றோர் அறிவிப்பின் படி ஒரு பல்லை) உடைத்து விட்டன. இறுதியில், மிகக் கடுமையான சண்டையின் பின்னர், முஸ்லிம்கள், எதிரிகள் நுழைய முடியாத மலைப்பக்கத்திலிருந்த ஓர் இடத்திற்குப் பின் வாங்கினர். கடைசி வரை சண்டையிட விரும்பாத குறைஷ வீரர்களும் பின்வாங்கி, இரவோடிரவாக மக்காவுக்குத் திரும்பிச் சென்றனர்.
இவ்வாறு, இந்தப் போர் முஸ்லிம்களுக்குத் தோல்வியில் முடிந்தது. நபி (ஸல்) அவர்கள் மயிரிழையில் உயிர் தப்பினார்கள். நபியவர்களின் சிறிய தந்தை ஹம்வடிா உட்பட எழுபது முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்; நாற்பதின்மர் காயப்பட்டனர். மக்காவாசிகளுள் இருபத்து மூன்று பேர் மட்டுமே கொல்லப்பட்டனர்.
‘உஹதில் கிடைத்த வெற்றியூால் போதையுற்ற குறைஷ்கள் தங்கள் வெற்றியை அவர்களது கால மிலேச்சர்களின் பாணியில் கொண்டாடினர். பத்ரின் கசப்பான நினைவுகளால் சினமூட்டப் பெற்றிருந்த குறைஷ பெண்கள் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் உயிரற்ற குறைவழி பெண்களின் உடல்கள் மீது தம் பழியைத் தீர்த்துக் மிலேச் சத்தன If கொண்டனர். அவர்கள் அந்த உடல்களைத் துண்டாடி, அவற்றின் காதுகளையும் மூக்குகளையும் கொண்டு வளையல்களும் மாலைகளும் செய்து, தம் கரங்களிலும் கழுத்துகளிலும் அணிந்து கொண்டனர். உத்பாவின் புதல்வியும்
டு
44. இப்ன் ஸஃத் பாகம் i பக்கம் 42

Page 93
இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
அபூ ஸ"ப்யானின் மனைவியுமான ஹின்த் தமது தந்தையை'பத்ர் களத்தில் கொன்ற ஹம்வடிாவின் வயிற்றைப் பிளந்து, ஈரலை வெட்டியெடுத்து, அதனை மென்று உமிழ்ந்தார்’ சுருங்கச் சொன்னால், குறைஷ பெண்களும் ஆண்களும் தங்கள் பழிவாங்கும் உணர்வுப் பசியைத் தணித்துக் கொள்வதற்காகக் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் உயிரற்ற சடலங்களோடு வெறி நாய்களைப் போல நடந்து கொண்டனர்.
‘உஹத் போரில் முஸ்லிம்கள் தோல்வியுற்றமைக்கு ஒழுக்காற்றில் அவர்கள் விட்ட தவறே காரணமாகும். இதுபற்றி அல்லாஹற் தனது அல் குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகிறான்: "அல்லாஹற்வுடைய கட்டளைப்படி, நீங்கள் சத்துருக்களைச் சம்ஹாரம் செய்து கொண்டிருந்த தோ ல்வியின் சமயத்தில், நீங்கள் விரும்பியதை அவள் உங்களுக்குக் காரணம் காணர்பித்த பினர்னரும், நீங்கள் மாறு செய்து, அவ்விடயத்தில் நீங்கள், உங்களுக்குள் தர்க்கித்துக் கொணர்டு தோல்வியுற இருந்த சமயத்தில், அல்லாஹற் தன்னுடைய வாக்கை நிச்சயமாக நிறைவேற்றி வைத்தான். உங்களில் இவ்வுலகை விரும்புவோரும் உண்டு உங்களில் மறுமையை விரும்புவோரும் உணர்டு ஆகவே, உங்களைச் சோதிக்கும் பொருட்டு உங்களை அவர்களுக்குப் பின்னடையும் படி செய்தான். நிச்சயமாக, அவள் உங்களை மன்னித்து விட்டான். ஏனெனில், அல்லாஹற் விசுவாசிகள்மீது அருள் புரிவோனாக இருக்கிறான். தூதர் உங்கள் பின்னிருந்து கொணர்டு உங்களை அழைத்துக் கொணர்டிருந்த சமயத்தில், நீங்கள் ஒருவரையுமே திரும்பிப் பாராது வெருணர்டோடிக் கொணர்டிருந்ததையும் நினைத்துப் பாருங்கள் இத்துக்கத்தின் காரணமாக உங்களுக்கும் துக்கத்தையே பிரதிபலனாகக் கொடுத்தான். உங்களிடமிருந்து தவறிவிட்ட சமயத்திலும் உங்களுக்குக் கஷ்டம் ஏற்பட்ட சமயத்திலும் நீங்கள் துக்கத்தில் ஆழ்ந்து விடாமல் இருப்பதற்காகவே (இத்தகைய துக்கத்தை உங்களுக்குக் கொடுத்தான) நீங்கள் செய்பவற்றை எல்லாம் அல்லாஹர் நன்கறிந்தே இருக்கிறான்' (3:152-3)
முஸ்லிம்கள் - குறிப்பாகக் கணவாயில் நிறுத்தப்பட்டிருந்த வில் வீரர்கள் - நபி (ஸல்) அவர்களின் ஆணைக்கு முழுமையாகப் பணிந்திருந்தால், பத்ர்’யில் கிடைத்த வெற்றியை விடவும் மிகப் பெரிய வெற்றி ஒன்றைஅடைந்திருப்பார்கள்; உருவ வழிபாடு அறேபியாவிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டிருக்கும். உஹ"த்’ போரும் அதன் விளைவுகளும் முஸ்லிம்களுக்கு மிகப் பெரிய பாடத்தையும் நபியவர்களின் ஆணைக்கு
45. ஹிஜ்ரி 8இல் நிகழ்ந்த மக்கா வெற்றியின் போது இந்த ஹினர்த் தமது கணவர் ஆ எரப்யானோடு
இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டார்.

இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
முற்றாகக் கட்டுப்படல் வேண்டும் என்ற ஞானத்தையும் கற்பித்தன. முஸ்லிம்கள் மறக்க முடியாத இந்தப் பாடத்தால் முழுமையான பயன் பெற்றார்கள் என்பதற்குப் பிற்காலச் சம்பவங்களும் வெற்றிகளும் சான்றாய் நின்றன.
‘உஹத் போரில் முஸ்லிம்கள் பெற்ற தோல்வி, பாலைவன வர்க்கங்களிடையேயும் மதீன யூதர்களிடையேயும் அவர்கள் சம்பாதித்திருந்த கீர்த்தியை வெகுவாகக் குறைத்து விட்டதோடு, முஸ்லிம்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யவும் அவர்களைத் தூண்டிவிட்டது. ‘பத்ர் வெற்றியின் பின்னர் முஸ்லிம்களுக்கு ஆதரவு காட்டிய வர்க்கங்களின் கிளர்ச்சியும்' படுகொலைகளும் சேர்ந்தவர்கள் இப்போது ‘உஹற்தில் பெற்ற முற்றுப்பெறாத வெற்றியின் மூலம் உருவத் தொழும்பர்களிடையே தமது கீர்த்தியைத் தற்காலிகமாக வளர்த்துக் கொண்ட குறைஷ்களைச் சார்ந்து கொண்டனர். கொள்ளையடித் தலையும் வழிப்பறியையும் தமது தொழிலாகக் கொண்டிருந்த இந்த நாடோடி வர்க்கங்களைச் சேர்ந்த அறேபியர் இஸ்லாம் ஏற்றம் பெற்று அரசு அமைத்து விட்டால், தமது கூடா வாழ்க்கை வழிகள் யாவும் தங்களுக்கு நிரந்தரமாக மறுக்கப்பட்டுவிடும் என்று எண்ணினர். மேலும், மக்கா குறைஷ்கள் புனித கஃபாவின் எசமானர்கள் என்ற வகையில், இந்த வர்க்கங்கள் மீது மிகுந்த செல்வாக்கு பெற்றிருந்தனர். ஹஜ் காலத்தின் போது இந்த வர்க்கங்களைச் சேர்ந்தவர்கள் மக்காவுக்கு வந்த சமயங்களில், குறைஷ்கள் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகக் கிளர்ந்தெழ அவர்களைத் தூண்டினர். எனவே, அவர்கள் இஸ்லாத்திற்கு எதிராகக் கிளர்ச்சி செய்யலாயினர். நபித் தோழர்கள் சிறு சிறு குழுக்களாக மதீனாவுக்கு வெளியே சென்றபோதெல்லாம், அவர்கள் இந்த நாடோடிகளால் இரக்கமின்றிக் கொல்லப்பட்டனர். ஹிஜ்ரி 4 ஸபர் மாதத்தில், கிலாப் வர்க்கத்தினருக்கு இஸ்லாத்தைப் போதிப்பதற்காக அவர்களது வேண்டுகோளின்மீது நபியவர்களால் அனுப்பப்பட்ட எழுபது முஸ்லிம்களை ஆமிர் வர்க்கத்தைச் சேர்ந்தோர் பிள் மஊனா என்ற இடத்தில் மிலேச்சத்தனமாகக் கொன்றனர். அதே காலப்பகுதியில் சன்மார்க்க போதனைக்காக நபியவர்களால் அனுப்பப்பட்ட பதின்மரைக் கொண்ட ஒரு குழுவினரை இடைமறித்த லிஹற்யான் வர்க்கத்தினர் அவர்களுள் எண்மரை ரஜி" என்னுமிடத்தில் கொலை செய்தனர்; குபைப் பின் அதீ, ஷைத் பின் ததின்னா ஆகிய இருவரையும் மக்கா குறைஷ்களுக்கு அடிமைகளாக விற்றுவிட்டனர். அவர்கள் இவர்களை மக்காவில் பகிரங்கமாகக் கொன்று விட்டனர்.
ஆரம்பத்தில் இருந்தே மக்கா குறைஷகளோடு இரகசிய நட்புறவு வைத்திருந்த யூதர்களும் முஸ்லிம்களுக்குத் தொல்லைகள் கொடுக்கத்

Page 94


Page 95
இஸ்லாமிய வரலாறு UTabLb Lu(g5g5 l
கொன்று விட்டனர்.
இந்தக் குறும்புச் சம்பவத்தின் பின்னர், கொல்லப்பட்ட முஸ்லிமின் உறவினர்களுக்கும் பனூ கைனுகா. யூதர்களுக்குமிடையே சண்டை வெடித்தது. துரதிர்ஷ்டவசமான இந்தச் சம்பவம் பற்றி அறிந்த நபியவர்கள் அந்த யூதர்களிடம் சென்று, சமாதான ஒப்பந்தத்தைப் பேணும் வகையில் தாக்குதலை நிறுத்துமாறும் இல்லையேல், குறைஷகள் பத்ர் களத்தில் பெற்றது போன்ற அல்லாஹற்வின் தண்டனையை சந்திக்கத் தயாராகுமாறும் கேட்டுக் கொண்டார்கள். ஆனால், அந்த யூதர்கள் நபியவர்களின் கோரிக்கை யையும் சாபத்தையும் பழித்து, “நாங்கள் குறைஷகளைப் போன்றவர்களல்லர்; அல்லாஹற் மீது சத்தியமாக, நீர் எம்மோடு மோத வரும்போது போர் என்றால் என்ன என்பதை நாம் உமக்குப் புரிய வைப்போம்” என்று அகங்காரத்தோடு கூறினர். உண்மையில் அவர்களது இந்தப் பதில் நபியவர் களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிரான அவர்களது போர்ப் பிரகடனமாகவே இருந்தது.
யூதர்களின் இந்தப் போர்ப் பிரகடனத்தைத் தொடர்ந்து, நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் ‘பத்ர் போரின் பின்னர், ஹிஜ்ரி 2 ஷவ்வால் மாதத்தில் (மார்ச் 624இல்), பனூ கைனுகா. யூதர்களுக்கு எதிராகப் படை நடத்திச் . சென்றார்கள். முஸ்லிம் படையின் வருகை பற்றி கைனுகாஃ பூதா அறிந்த அந்த யூதர்கள் அவர்களது ஒரே வெ ளியேற்றம் புகலிடமாக இருந்த கோட்டையினுள் புகுந்து தாழிட்டுக் கொணி டனர் . மதரீனா வில் , முஸ்லிம்களுக்கெதிராகத் தம்மைக் கிளர்ந்தெழத் தூண்டிய தமது நண்பர்கள் தமக்காகப் பேசி, விடயத்தை சிநேகயூர்வமாகத் தீர்த்து வைப்பார்கள் என்று அவர்கள் நம்பினர். ஆனால், அவர்களது விவகாரத்தில் தலையிட எவருமே முன்வரவில்லை. அவர்களது மீறலுக்காகவும் வன்செயல்களுக்காகவும் அவர்களைத் தண்டிக்க விரும்பிய நபியவர்கள் தமது தோழர்களை அவர்களது கோட்டையை முற்றுகையிடவும் உணவும் நீரும் அவர்களை அடையாமல் தடுக்கவும் அனுப்பி வைத்தார்கள். இந்த முற்றுகை பதினைந்து நாள்கள் வரை நீடித்தது. இறுதியில், தம்மை விடுவித்துக் கொள்ள வழிதெரியாத அந்த யூதர்கள் நிபந்தனையின்றிச் சரணடைந்து, நபியவர்களின் தீர்ப்புக்குக் கட்டுப்பட இணங்கினர். நபியவர்கள் அந்த யூதர்கள் அனைவரையும் வாள்களுக்கு இரையாக்கவே விரும்பினார்கள். ஆனால், அப்போது அங்கே தோன்றிய நயவஞ்சகர் தலைவனான அப்துல்லாஹற் பின் உபை தனது நேசர்களுக்காகப் பரிந்து பேச முன்வந்தான். அண்ணல் அவர்கள் அந்த நயவஞ்சகனுக்குப் பதில் கூற விரும்பவில்லையாயினும், ‘மூன்று தினங்களுக்குள் தங்கள் பொருள்களைக் கைவிட்டு மதீனாவிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்ற நிபந்தனை மீது அந்த யூதர்களை விடுவிக்கச்

இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி 1
சம்மதித்தார்கள். இறுதியில்,அவர்கள் சிரியாவிலுள்ள - யூதர்கள் குடியேறி வாழ்ந்து வந்த - அத்ரிஆத் என்னும் இடத்திற்கு நாடு கடத்தப்பட்டனர். இவ்வாறு நாடு கடத்தப்பட்ட யூதர்களின் எண்ணிக்கை சுமார் எழுநூறு ஆகும்.
மதீனாவில் வாழ்ந்த மற்றொரு யூத வர்க்கத்தார் பனூ நழிர் யூதர்களாவர். இவர்கள் பாலைவனச் சோலையின் தென் கிழக்கு மூலையில், அரணால் சூழப்பட்ட பலம்வாய்ந்த கோட்டைகளில் வாழ்ந்து வந்தனர். பிற வர்க்கங்களைச் சேர்ந்த யூதர்களைப் போலவே இவர்களும் பனு நழ்ர் இஸ்லாத்தின் செல்வாக்கு வளர்ச்சியையும் விரைவான யூதர்கள் படர்ச்சியையும் காணச் சகிக்காமல் பொறாமையுற்று, நபியவர்களோடு முடித்திருந்த உடன்படிக்கை விதிகளை மீறும் விதத்தில் செயலாற்றலாயினர். மக்காவின் இறைமறுப்பாளர்களோடு இரகசியமாக இணைந்துகொண்ட இவர்கள் மதீனாவில் அமைதியாக வாழ்ந்த முஸ்லிம்களின் ஒருமைப்பாட்டையும் ஐக்கியத்தையும் குலைப்பதற்குத் தம்மால் இயன்ற வஞ்சகமான வழிகளிலெல்லாம் அவர்களுக்கு உதவினர்; சில சமயங்களில் நபியவர்களை இரகசியமாகக் கொல்வதற்கும் முயன்றனர்.
ஒரு நாள், பனூ நழிர் யூதர்களின் நேசர்களாக இருந்த ஆமிர் வர்க்கத்தைச் சேர்ந்த இருவரை அன்ஸார் முஸ்லிம்களுள் ஒருவரான அம்ர் பின் உமய்யா என்பார் தவறுதலாகக் கொன்றுவிட்டார். இந்தக் 制 கொலைகளுக்குரிய குருதிமுதல் இன்னும் நபியவர்களுக்கு செலுத்தப்படவில்லை. யூதர்கள் நபியவர்களோடு செய்திருந்த ஒப்பந்தப்படி குருதிமுதலின்
எதி JII 601 சதி ஒருபகுதியை பனூ நழிர் யூதர்கள் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். எனவே, குபா.வுக்கு அருகே வாழ்ந்து வந்த அந்த யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் ஹழ்ரத் அபூபக்ர், ஹழ்ரத் உமர், ஹழ்ரத் அலி ஆகியோர் உட்படத் தமது தோழர்கள் பதின்மரோடு சென்று, குருதி முதலின் ஒரு பகுதியைச் செலுத்துமாறு கோரினார்கள். மிக நீண்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர், அவர்கள் குருதிமுதலின் தங்கள் பாகத்தைச் செலுத்த இணங்கினார்கள். அதே நேரம், சற்றுத் தூரத்தில் பாதுகாப்பான ஓர் இடத்தில் நின்று கொண்டிருந்த நபியவர்களுக்கு எதிராக ஏதோ ஒரு சதி அங்கே நிகழ்ந்து கொண்டிருந்ததையும் கவனிக்கக் கூடியதாக இருந்தது. அந்த யூதர்கள் அம்ர் பின் ஜிஹாஸ் என்ற மற்றொரு யூதனைக் கோட்டையின் மேல்மாடிக்குச் செல்லுமாறும் அங்கிருந்து பாறைக்கல் ஒன்றை நபியவர்களின் தலைமீது உருட்டி விடுமாறும் இரகசியமாகப் பணித்திருந்தனர். அப்போது நபியவர்கள் கோட்டைக்கு வெளியே மேல்மாடிக்குக் கீழ் இருந்த சுவரில் சாய்ந்தவாறு நின்றிருந்தார்கள். வரவிருந்த ஆபத்தை எப்படியோ உணர்ந்து கொண்ட நபியவர்கள் ‘இயற்கைக் கடனை நிறைவேற்றச் செல்லும் ஒருவரைப்

Page 96


Page 97
இஸ்லாமிய வரலாறு JITä5b 1 Lugo 1
இதற்கிடையில், மதீனாவை நோக்கிப் படையெடுத்துவந்த பகைவர்கள் முஸ்லிம்களை உஹ"தில் சந்திக்கலாம் என்ற நம்பிக்கையில் அங்கு சென்றனர். ஆனால், அங்கு எவரும் இல்லாமையால், மதீனா நகரை நோக்கி அவர்கள் வந்தனர். அங்கே தமக்கு முன்னால் கடக்கமுடியாத ஆழமான அகழ் வெட்டப்பட்டிருந்தமையைக் கண்டு, அதிர்ச்சியடைந்த அவர்கள் புதுமையான இந்தப் போர் உத்தியினால் வெறுப்புற்றனர். நகரினுள் நுழைய வழி எதுவும் இல்லாமையால், அவர்கள் அகழிக்கு முன்னால் முகாமிட்டு, அகழியைக் காவல் செய்து கொண்டிருந்த முஸ்லிம்களை அம்புகளால் தாக்கலாயினர். அவர்கள் அகழியைக் கடக்க முயன்ற போதெல்லாம் முஸ்லிம் வில்வீரர்கள் தமது அம்புகளால் அவர்களை அடித்து விரட்டினர். எதிரிப் படையணிகளின் இந்த முற்றுகை வாரக்கணக்கில் நீடித்தது. இந்த முற்றுகையின் போது முஸ்லிம்கள் பசியாலும் பயத்தாலும் பெரிதும் வருந்தினர். பின்னாலிருந்து யூதர்கள் தாக்கலாம் என்ற பயம் ஒரு புறம்; முன்னாலிருந்து கூட்டுப் படைகள் தாக்கலாம் என்ற பயம் மறுபுறம். ஆயினும், நிலைமை எதிரிகளுக்குச் சாதகமாக இருக்கவில்லை. அவர்களது போர்ச் செலவுகள் அதிகமாயின; அவர்களது உணவுப்பொருட்களும் தீர்ந்து போய்க் கொண்டிருந்தன. நீண்டகால முற்றுகை அவர்களைக் களைப்படையச் செய்தது. இதே சமயம், மூன்று தினங்களாகக் கடலிலிருந்து வீசிய கடும் புயல் அவர்களது நிலைமையை மேலும் மோசமாக்கிற்று. கடும் மழையோடு வீசிய புயற் காற்றில் அவர்களது கூடாரங்கள் பறந்தன; கயிறுகள் அறுந்தன; முளைகள் உடைந்தன; அவர்களது குதிரைகளும் ஒட்டகைகளும் மடிந்தன. இறுதியில் சுமார் ஒருமாதகால முற்றுகையின் பின்னர், குறைஷகளும் அவர்களது கூட்டாளிகளும் மனச் சோர்வும் உடற் களைப்பும் அடைந்தவர்களாக, இரவின் இருளோடு இருளாகக் களத்திலிருந்து பின் வாங்கிச் சென்றனர். இந்தப் போர் இஸ்லாமிய வரலாற்றில் ‘ங்ஷவதுல் கன்தக் (அகழ்ப் போர்) என்று அழைக்கப்படுகிறது. இந்தப் போரில், இஸ்லாத்திற்கு எதிராகப் பல வர்க்கங்களைச் சேர்ந்த அறேபியர் இணைந்திருந்தமையால், இது ‘ங்ஷவதுல் அஹற்ஷாப் (கூட்டிணைந்தோரின் போர்) என்றும் அழைக்கப்படுகிறது. இது ஹிஜ்ரி 5 துல் க..தா மாதத்தில் (பெப்ரவரி 627இல்) நிகழ்ந்தது.
இந்தப் போரின் போது, மதீனாவில் எஞ்சியிருந்த பனு குறைளா யூதர்கள் தங்கள் நடுநிலைப் போக்கைக் கைவிட்டு, எதிரிகளை இரகசியமாக ஆதரித்தனர். மதீனாவின் தென் கிழக்குப் பகுதியில் வாழ்ந்து வந்த இந்த யூதர்கள் ஏனைய யூதர்களைப் போல நபி (ஸல்) (5600 GTI பூதி அவர்களோடு சமாதான உடன்படிக்கை செய்திருந்தனர். வெ ளியேற்றம் ஆனால், அவர்கள் அந்த உடன்படிக்கை விதிகளுக்கு மதிப்பு அளிக்கவில்லை. உடன்படிக்கை விதிகளின்படி, வெளியாரின் படையெடுப்புக்கு எதிராக முஸ்லிம்களுக்கு உதவி செய்ய

இஸ்லாமிய வரலாறு Lisblib | L}G5 1
அவர்கள் கடமைப்பட்டிருந்தனர். ஆனால், அகழ்ப் போரில், முற்றுகையின் போது, இந்த யூதர்கள் உடன்படிக்கையை மீறவும் குறைஷ்களோடு இணைந்து கொள்ளவும் மக்காவாசிகளாலும் ஏற்கனவே நாடுகடத்தப்பட்ட பனூ நழிர் யூதர்களாலும் தூண்டப்பட்டனர். கோட்டைகளில் பாதுகாப்புக்காகத் தங்கியிருந்த முஸ்லிம் பெண்களையும் குழந்தைகளையும் கொன்றுவிட்டு, அகழியைக் காவல் செய்து கொண்டிருந்த முஸ்லிம் வீரர்களைத் தாக்குவதற்கும் இவர்கள் ஏவப்பட்டிருந்தனர். இவர்களது துரோக உணர்வின் விளைவாக உருவான நிலைமை முஸ்லிம்களுக்கு மிகப் பயங்கரமானதாக இருந்தது. முன்னாலிருந்து எதிரிகளின் தாக்குதல் அபாயத்தை எண்ணிப் பயந்த அதேவேளையில், முஸ்லிம்கள் பனூ குறைளா யூதர்களிடையே பாதுகாப்புக்காகக் கோட்டைகளில் தங்கியிருந்த தமது பெண்களையும் குழந்தைகளையும் எண்ணிக் கலங்கிக் கொண்டிருந்தனர். இந்த யூதர்களின் துரோகம் எந்த வேளையிலும் மதீனாவின் அழிவுக்கு வழிகோலலாம் என்று நபியவர்கள் பெரிதும் பயந்தார்கள். எனவே, அவர்கள் அகழ்ப் போரிலிருந்து திரும்பிய உடனேயே, பனூ குறைளா யூதர்களைத் தண்டிக்கும் எண்ணத்தோடு அவர்களுக்கு எதிராகப் போர்ப் பிரகடனம் செய்தார்கள்.
நபியவர்களின் போர்ப் பிரகடனம் பற்றிக் கேள்விப்பட்டவுடனேயே, தங்கள் குற்றத்தை ஏற்கனவே உணர்ந்திருந்த அந்த யூதர்கள் தங்கள் கோட்டைகளுக்குள் புகுந்து தாழிட்டுக் கொண்டனர். முதலில், அவர்கள் உடன்படிக்கையை மீறியமைக்குக் காரணம் காட்டுமாறு நபியவர்களால் கேட்கப்பட்டனர். அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்படவே, அந்த யூதர்கள் முஸ்லிம்களால் முற்றுகையிடப்பட்டனர். சுமார் ஒரு மாதகால முற்றுகையின் பின்னர், நிபந்தனையின்றிச் சரணடைந்த அந்த யூதர்கள் தாம் நட்புறவு வைத்திருந்த அவ்ஸ் வர்க்கத்தின் தலைவர் ஸத் பின் முஆத் என்பவராலேயே தமது தலைவிதி தீர்மானிக்கப்படல் வேண்டும் என்று கோரினர். அவர்களது கோரிக்கை நபியவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அகழ்ப் போரில் பெற்ற படுகாயங்களின் விளைவாக, அடுத்த நாள் மரணிக்கவிருந்த ஸ.த் பின் முஆத் நபித் தோழர்களால் அங்கே கொண்டுவரப்பட்டார். மரணப்படுக்கையில் படுத்தவாறே அவர் யூதர்களின் 'தெளராத் வேதத்தின்படி, யூதர்களுள் வளர்ந்த ஆண்கள் கொல்லப்படல் வேண்டும் என்றும் அவர்களது பெண்களும் சிறுவர் - சிறுமியரும் அடிமைகளாக்கப்படல் வேண்டும் என்றும் அவர்களது உடைமைகள் பறிக்கப்படல் வேண்டும் என்றும் தீர்ப்புக் கூறினார்." இந்தத் 46. "நீ ஒரு பட்டனத்தின் மேல்யுத்தம் பண்ண நெருங்கும் போது, அந்தப்பட்டணத்தாருக்குச் சமாதனம் கூநக் கடவாய் அவர்கள் உமக்கு சமாதானமான உத்தரவு கொடுத்து வாசலைத் திறந்தால், அதிலுள்ள ஜனங்கள் எல்லாரும் உனக்குப் பகுதி கட்டுகிறவர்களாகி உனக்கு ஊழியம் செய்யக் கடவர்கள் அவர்கள் உணர்னோடே சமாதானப்படாமல் உன்னோடே யுத்தம் பண்ணுவார்களானால் நீ அதை முற்றுகை போட்டு உனர் தேவனாகிய கர்த்தர் அதை உன் கையில் ஒப்புக் கொடுக்கும் போது, அதிலுள்ள புருஷர்கள் எல்லாரையும் பட்டயக் கருக்கினால் வெட்டி, எய்திகளையும் குழந்தைகளையும் மிருக ஜீவன்களையும் மாத்திரம் உயிரோடே வைத்து பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஒப்புக் கொடுத்த உள் சத்துருக்களின் கொள்ளைப் பொருளை அநுபவிப்பாயாக’ (உபாகமம் 2010-14) டு

Page 98


Page 99


Page 100


Page 101
இஸ்லாமிய வரலாறு Täbib Lugo
ஒப்பந்தமாகவுமே தோன்றியது. ஆனால், உண்மையில் அது முஸ்லிம்களுக்கும் அவர்களது மார்க்கத்திற்கும் கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியாகவே அமைந்தது. இப்னு கல்தூன் கூறுவது போல "இந்த வெற்றியை விடவும் மாபெரும் வெற்றி ஒருபோதும் இருந்ததில்லை. ’ நபி (ஸல்) அவர்கள் இந்த உடன்படிக்கையின் பின்னர், ஹ"தைபியாவிலிருந்து மதீனாவுக்குத் திரும்பியபோது அருளப்பட்ட அல்குர்ஆனின் ‘அல் பத்ஹற் (வெற்றி) என்ற அத்தியாயம் இந்த ஒப்பந்தத்தை பத்ஹ(ன்) முபீன(ன்) (தெளிவான வெற்றி) என்று வருணித்தது.* உண்மையில், ஹ"தைபிய்யா வெற்றியை விடவும் முக்கியத்துவம் வாய்ந்த மாபெரிய வெற்றி ஒன்றை மனித இன வரலாற்றில் ஒருபோதும் சந்திக்க முடியாது. அது போரில்லாத ஒரு பொது வெற்றி மட்டுமன்றி, குருதி சிந்தாமல் உருவத் தொழும்பர்களுக்குக் கிடைத்த மாபெரும் தோல்வியுமாகும்.
நபி (ஸல்) அவர்களுடைய செய்முறை அரசறிவின் மிகச் சிறந்த சாதனையான இந்த உடன்படிக்கை அவர்களது அசாதாரண சூழியல் ஆற்றலுக்குச் சான்றாக அமைந்தது. இந்த உடன்படிக்கை மூலம் மக்கா குறைஷகள், முஸ்லிம்களுடனான நீண்டகால நெகிழ்ச்சியற்ற முரண்பாட்டின் பின்னர், முதன்முதலாக இஸ்லாம் மார்க்கத்தையும் மதீனாவின் இஸ்லாமிய அரசையும் அங்கீகரித்தனர். மேலும், இந்த உடன்படிக்கை முஸ்லிம்களுக்கு அவர்களது தாயகத்தைத் தரிசிக்கும் அரிய சந்தர்ப்பத்தையும் அடுத்த ஆண்டில் அளித்தது.
இந்த உடன்படிக்கையால் ஏற்பட்ட சமாதானம் மதீனா முஸ்லிம்களும் மக்காவின் முஸ்லிமல்லாதோரும் சுதந்திரமாகக் கலந்துறவாடுவதற்கேற்ற மிக அரிய சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுத்தது. இரண்டு தசாப்தங்களுக்கு மேலாகத் துண்டிக்கப்பட்டிருந்த குடும்ப உறவு உடன்படிக்கையின் களும் வர்த்தகத் தொடர்புகளும் மீண்டும் முக் கிய த்துவம் புதுப்பிக்கப்பட்டன. மக்காவாசிகள் மதீனாவுக்கு வரவும் மாதக் கணக்கில் அங்கு தங்கியிருந்து மதீனாவாசிகளோடு பழகவும் முடிந்தது. அவ்வாறே மதீனா முஸ்லிம்கள் மக்காவுக்குச் செல்லவும் அங்கே தங்கியிருக்கவும் முடிந்தது. இதற்கு உடன்படிக்கையின் நான்காவது விதி வசதி செய்து கொடுத்தது. கட்டுப்பாடற்ற இந்தக் கலப்புறவு மக்கா குறைஷகளுக்கும் ஏனைய வர்க்கங்களைச் சேர்ந்த மக்களுக்கும் இஸ்லாத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றியும் அறிவு ரீதியாகச் சிந்திப்பதற்கேற்ற சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுத்தது. இந்தக் கலப்புறவைத் தொடர்ந்து, முஸ்லிமல்லாதோர் புதிய மார்க்கத்தில் ஆர்வம்கொண்டதோடு, முஸ்லிம்களைச் சந்தித்தபோதெல்லாம் இஸ்லாத்தைப் பற்றியும் அதன் போதனைகள் பற்றியும் விசாரித்து அறியவும் ஆரம்பித்தனர்.
SLLCMMMLMC LLSLLC LLLLSLLLLLLLL LL LLL LL LLL LLL LLL LLLL LLLL LS S L
52 நிச்சயமாக நாம் உமக்கு தெளிவான ஒரு வெற்றியைத் தந்தோம்.” (குர்ஆன் 48)

இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
ஒவ்வொரு வீட்டிலும் இஸ்லாமிய கருத்தியலே உரையாடலின் பொதுவான தலைப்பாயிற்று. இவ்வாறு ஏற்பட்டஅனுகூலங்களின் விளைவாக, அறபு வரலாற்றாசிரியர்களுள் ஒருவரான இப்னு ஹிஷாம் கூறுவது போல, “1400 தோழர்களோடு ஹ"தைபியப்யாவுக்குச் சென்ற நபியவர்கள் இரண்டு ஆண்டுகளின் பின்னர், மக்கா வெற்றி நிகழ்ந்த ஆண்டில், 10,000 தோழர்களோடு மக்காவுக்குச் சென்றார்கள்.” இந்தப் போரோய்வு காலப்பகுதியிலேதான் குறைஷ்களின் இரு பெரும் வீரர்களான காலித் பின் வலிதும் அம்ர் பின் அல் ஆஸ"ம் இஸ்லாத்தைத் தழுவினர். இந்த உடன்படிக்கை குறைஷகள் மீது மட்டுமன்றி, அறேபியாவின் பிற உள்ளுர்க் குலங்கள் மீதும் வியத்தகு விளைவுகளைத் தோற்றுவித்தது. அந்த வர்க்கங்களைச் சேர்ந்த மக்கள் மதீனாவுக்கு வந்து, நபி (ஸல்) அவர்களோடு நட்புறவை உருவாக்கிக் கொண்டனர்; பலர் இஸ்லாத்தைத் தழுவினர். உண்மையில், நபி (ஸல்) அவர்களுக்கும் அவர்களது தோழர்களுக்கும் ஒரு தெளிவான வெற்றியாக அமைந்த இந்த உடன்படிக்கை முழு அறேபியாவிலும் பின்னர் அங்கிருந்து முழு உலகிலும் இஸ்லாம் விரைவாகப் பரவுவதற்கு ஏற்ற வாயில்களைத் திறந்து விட்டது.
ஹரதைபிய்யா உடன்படிக்கையின் விளைவாக உருவான சமாதானமும் அமைதியும் அயற் பிரதேசங்களில் இஸ்லாத்தைப் பரப்பவும் வெளிநாடுகளுக்கு அதன் பொதுவான தூதை அறிவிக்கவும் பொருத்தமான சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொடுத்தன. இந்தக் 96) நாடுகளுக்குத் காலப் பகுதியிலேயே அல்லாஹற், நபி தூதமைச் சர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களது துTது சர்வதேசங்களுக்கும் பொதுவானது என்ற உண்மையை வஹி மூலம் அறிவித்தான். ஒருநாள், நபியவர்கள் தமது தோழர்களை அழைத்து, "மக்களே! அல்லாஹற் என்னை மனித குலத்திற்கோர் அருட்கொடையாக அனுப்பியிருக்கிறான். ஆகவே, நீங்கள் உங்களுக்குள் பிணக்குற்று, மர்யமின் மகன் ஈஸா (அலை) அவர்களின் சீடர்கள் அவருக்குப் பின்னர் பிரிந்து விட்டதைப் போலப் பிளவுபட்டு விடாதீர்கள். நீங்கள் என்னிடமிருந்து தெய்விகத் தூதை எடுத்துச் செல்லுங்கள்” என்று கூறினார்கள். பின்னர், ஹிஜ்ரி 7 முஹர்ரம் மாதத்தில் (மே 628 இல்), நபி (ஸல்) அவர்கள் பைசாந்தியப் பேரரசன் ஹிரக்ளியஸ், பாரசீகப் பேரரசன் கிஸ்ரா பர்வேஷ், எகிப்து மன்னன் முகவ்கஸ், அபிசீனிய அரசர் நஜாஷி ஆகியோரையும் அறேபியாவில் ஆங்காங்கே ஆதிக்கம் செலுத்திய சிற்றரசுத்தலைவர்களையும் இஸ்லாத்தின்பால் அழைத்து, அவர்களுக்குக் கடிதங்கள் எழுதி, அரச தூதர்கள் மூலம் அனுப்பி
53. Shibli Nu’mani op.cit. vol. Il p. 146

Page 102


Page 103
இஸ்லாமிய வரலாறு LJпањtip 1 LJøђg5 i
என்று அவனிடம் கூறினர். இது அவனுக்கு மிக இலாபமான பேரமாகப்படவே அவன் முப்பது யூதர்களோடு கைபரிலிருந்து மதீனாவுக்குப் புறப்பட்டான். முஸ்லீம்களும் அவர்களோடு புறப்பட்டனர். முற்காப்பைக் கருத்திற்கொண்டு முஸ்லிம் ஒருவரும் யூதன் ஒருவனும் இணைந்து ஒரே வாகனத்தில் பிரயாணம் செய்தனர். அவர்கள் கர்கரா திபர் என்ற இடத்தை அடைந்தபோது உஸைர் தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு அவனோடு பிரயாணம் செய்த அப்துல்லாஹற் பின் உனைஸ் என்பாரின் இடுப்பில் கைபோட்டு அவரது வாளை உருவ முயன்றான். அவனது எண்ணத்தைப் புரிந்து கொண்ட அவர் அவனைக் கொன்று விட்டார். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சண்டையில் ஒருவனைத் தவிர மற்ற யூதர்கள் அனைவரும் முஸ்லிம்களால் கொல்லப்பட்டனர். ஒருவன் மட்டும் தப்பியோடி விட்டான். இந்தச் சம்பவம் ஹிஜ்ரி 6 ஸவ்வால் மாதத்தில் (பெப்ரவரி 628ல்) ஹ”தைபிய்யா உடன்படிக்கைக்கு முன்னர் நிகழ்ந்தது.
இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் ஒருநாள், யூதர்களின் நேசர்களாக இருந்த ஹதபான் வர்க்கத்தைச் சேர்ந்த அறபு நாடோடிகள் சிலர் மதீனாவின் எல்லையில் அமைந்திருந்த தாத் கரத் புல்வெளியைத் திடீரென முற்றுகையிட்டனர். அப்போது அங்கே நபியவர்களது பெண் ஒட்டகைகள் புல்மேய்ந்து கொண்டிருந்தன. ஹழ்ரத் அபூதரின் புதல்வர் அவற்றைக் காவல் செய்து கொண்டிருந்தார். புல்வெளியினுள் அத்துமீறி நுழைந்த அந்த நாடோடிகள் அபூதரின் புதல்வரைக் கொன்றுவிட்டு, அவரது மனைவியையும் இருபது ஒட்டகங்களையும் கவர்ந்து கொண்டு ஓடிவிட்டனர். இந்தச் சம்பவங்களே பின்னர் நிகழ்ந்த கைபர் படையெடுப்புக்குக் காரணங்களாய் அமைந்தன.
யூதர்களின் பகைமையும் அவர்களது போர்ப் பிரகடனமும் மதீனாவின் மீதான புதிய தாக்குதல் எதனையும் ஆரம்பத்திலேயே அமுக்கிவிடும் வகையில் உடனடி நடவடிக்கைகளை எடுப்பதற்கு நபியவர்களைப் பலவந்தப்படுத்தின. எனவே, நபி (ஸல்) அவர்கள் 200 குதிரை வீரர்கள் 6) உட்பட 1600 வீரர்கள் கொண்ட படையொன்றைத் படையெடுப்பு திரட்டிக் கொண்டு. ஹிஜ்ரி 7 முஹர்ரம் மாதத்தில் மதீனாவுக்கு வடகிழக்கே சுமார் 200 மைல் தூரத்திலுள்ள கைபரை நோக்கிப் புறப்பட்டார்கள். இந்தப் படையெடுப்பில், நபியவர்களது மனைவியருள் ஒருவரான உம்மு ஸலமா உட்படப் பெருந்தொகையான பெண்களும் முஸ்லிம் வீரர்களுக்குப் பணிசெய்வதற்காகப் பங்குபற்றியிருந்தனர். கைபர் பல கோட்டைகளால் அரண்செய்யப்பட்டிருந்த மையால், இந்தப் படையெடுப்பு முஸ்லிம்களின் திறமைக்கும் ஆற்றலுக்கும்

இஸ்லாமிய வரலாறு LjTebb i l (55 1
Hl ..H."
பெரும் சவாலாக அமைந்தது. அங்கே ஆறு கோட்டைகள் இருந்தன;' அவை அனைத்தும் இருபதினாயிரம் வீரர்களால் நிறைக்கப்பட்டிருந்தன. முதலில், யூதர்களது பெண்களாலும் உணவுப்பொருள்களாலும் நிரம்பியிருந்த அல் நாஇம் கோட்டை முஸ்லிம்களால் தாக்கப்பட்டது. மிக நீண்ட நேரப் போராட்டத்தின் பின்னர், அந்தக் கோட்டை அவர்களால் கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏனைய கோட்டைகளும் ஒன்றன்பின் மற்றொன்றாக முஸ்லிம்களால் வெற்றி கொள்ளப்பட்டன. ஆனால், மர்ஹப் என்ற புகழ்பெற்ற யூத வீரனின் பொறுப்பில் இருந்த அல் கமூளல் கோட்டையை மட்டும் எளிதில் வெற்றிகொள்ள அவர்களால் முடியவில்லை. முஸ்லிம்கள் அதைத் தாக்கிய போதெல்லாம், அவர்களது தாக்குதல்கள் மர்ஹபாலும் ‘யூதர்களின் அரசன் என்ற பட்டத்துக்கு உரிமை கொண்டாடிய யூதத்தலைவன் கினானா என்பானாலும் முறியடிக்கப்பட்டன. இறுதியில், அந்தக் கோட்டையும் இருபது நாள் முற்றுகையின் பின்னர், நபியவர்களது மருகர் ஹழ்ரத் அலீயினால் வெற்றி கொள்ளப்பட்டது. இஸ்லாமிய வரலாற்றில் ‘ங்ஷவதுல் கைபர்’ (கைபர் போர்) என அழைக்கப்படும் இப்போரில் தொண்ணுற்று மூன்று யூதர்களும் பதினைந்து முஸ்லிம்களும் கொல்லப் பட்டனர். இந்த வெற்றியின் பின்னர், கைபர் பிரதேசம் முழுவதும் முஸ்லிம்களால் வெற்றி கொள்ளப்பட்டு, மதீனாவின் இஸ்லாமிய அரசோடு இணைக்கப்பட்டது. தோல்வியுற்ற யூதர்கள் மன்னிப்புக் கோரி இறைஞ்சியமையால், விளைவிற் பாதியை வரியாகச் செலுத்தும் இணக்கத்தின்மீது அவர்கள் தங்கள் விளைநிலங்களை வைத்திருக்கவும் தொடர்ந்து அங்கு வாழவும் நபியவர்களால் அனுமதிக்கப்பட்ட னர். இந்தப் படையெடுப்பின் போது, நழிர் வர்க்க யூதர்களின் தலைவனாக இருந்து, பின்னர் குறைளா வர்க்க யூதர்களுக்கு எதிரான போரில் கொல்லப்பட்ட ஹ"யய் பின் அக்தப் என்பானின் மகள் ஸ்பிய்யா போர்க் கைதிகளுள் ஒருவராகச் சிறைப்பிடிக்கப்பட்டார். பின்னர், நபியவர்கள் அவரை விடுதலை செய்து, திருமணம் செய்து கொண்டார்கள்.
pr.H. ...
அந்தப் பிரதேசத்தில், அல் பதக், தைமா., வாதியுல் குரா ஆகிய குடியேற்றப்பகுதிகளில் வாழ்ந்து வந்த யூதர்களும் கைபர் யூதர்களுக்கு நேர்ந்த கதிகண்டு கலங்கி, எதிர்ப்பின்றியே நபியவர்களிடம் சரணடைந்தனர். அவர்களது பிரதேசமும் வெற்றி கொள்ளப்பட்டு, இஸ்லாமிய அரசுடன் இணைக்கப்பட்டது. கைபர் யூதர்களுக்கு விதிக்கப்பட்ட அதே நிபந்தனை மீது அவர்களும் தங்கள் இடங்களில் வாழவும் பயிர் செய் பூமிகளைப் பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட்டனர். நபி (ஸல்) அவர்களைப் பொறுத்த வரை, கைபர் சம்பவத்தோடு யூதர்களால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
57 இப்னர் லஃதின் கருத்துப்படி, கைபரில் ஒன்பது கோட்டைகள் இருந்தன. அவை அல் நதாஹர், அல் நாஇர், அல் வாதிஹர், அல் கிரலாலிம் அல் கமூள், சில:த்ே பினர் முஆத் கோட்டை, கல்அத் அல்ஸுடைர் கோட்டை, அல்
உபப்யி கோட்.ை நிஷார் கோட்டை என்பனவாம்

Page 104


Page 105


Page 106
இஸ்லாமிய வரலாறு UT35lb பகுதி !
வர்க்கத்தினர் முஸ்லிம்களின் நேச வர்க்கத்தினர்மீது நடத்திய தாக்குதலைத் தடுக்க எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, உடன்படிக்கை விதிகளை மதிக்காமல், தங்களால் இயன்ற உதவிகளை பக்ர் வர்க்த்தாருக்கு குறைஷகள் மறைமுகமாக அளித்தனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, குஷாஆ வர்க்கத்தைச் சேர்ந்த நாற்பது உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவினர் மதீனாவுக்கு வந்து, நபியவர்களிடம் நடந்ததைக் கூறி, அவர்களின் உதவியையும் பாதுகாப்பையும் கோரினர். எனவே, நபி (ஸல்) அவர்கள், குஷாஆ வர்க்கத்தாருடன் தாம் செய்து கொண்ட நட்பறவு ஒப்பந்தத்தின் பிரகாரம் அவர்களுக்கு உதவும் பொருட்டு, ழம்ரா என்பாரை குறைஷிகளிடம் அனுப்பிவைத்தார்கள். அவர் அவர்களிடம் சென்று, நபியவர்கள் ஆணையிட்டவாறு, 'இது ஹ"தைபியா உடன்படிக்கையை மீறும் செயலாக இருப்பதனால், கொல்லப்பட்டவர்களின் உயிர் களுக்காகக் குருதி முதல் கொடுக்கப்படல் வேண்டும்; அல்லது பக்ர் வர்க்கத்தாரோடு வைத்துள்ள நட்புறவைத் துண்டிக்க வேண்டும்; அல்லது உடன்படிக்கை இனிமேல் செல்லுபடியாகாது என்று பிரகடனம் செய்ய வேண்டும்’ என்று கூறினார். அப்போது குறைஷகளின் சார்பில் கர்தா பின் அம்ர் என்பார், 'நாங்கள் கடைசி நிபந்தனையையே ஏற்றுக் கொள்கிறோம்’ என்று முட்டாள்தனமாகப் பதில் கூறிவிட்டார்." ஆனால், அந்தத் தூதர் அங்கிருந்து மதீனாவுக்குப் புறப்பட்டுச் சென்ற பின்னரே, குறைஷகள் தாங்கள் அவசரப்பட்டுப் பெரும் தவறொன்றைச் செய்துவிட்டதை உணர்ந்தனர். எனவே, அவர்கள் தங்கள் செயலுக்காக மன்னிப்புக் கோரவும் உடன்படிக்கையை தாங்கள் மீண்டும் புதுப்பித்துக் கொண்டமை பற்றி அறிவிக்கவும் குறைஷ தலைவரான அபூஸ"ப்யானைத் தங்கள் பிரதிநிதியாக மதீனாவுக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், அது மிகவும் காலம் கடந்ததாக அமைந்து விட்டது. அபூஸ்ப்யான் நபியவர்களிடமும் அவர்களது முக்கிய தோழர்களிடமும் வந்து, குறைஷகளின் முட்டாள்தனமான பதிலுக்காக மன்னிப்புக் கோரினர். ஆனால், அவர்களுள் எவருமே அவருக்குப் பதில் கூறவில்லை. எந்தவிதத்திலும் நபியவர்களைச் சமாதானப்படுத்த முடியாத நிலையில், அவர் உடைந்த உள்ளத்தோடு மக்காவுக்குத் திரும்பினார்.
கசப்பான இந்தச் சம்பவங்களுக்குப் பின்னர், நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்காவின் மீது படையெடுப்பதற்குத் தேவையான ஆயத்தங்களை மேற்கொள்ளலானார்கள். தமது படையெடுப்பு வேலைகளை மிகக் கவனமான மக்காம் முறையில் இரகசியமாக வைத்துக்கொண்ட நபியவர்கள் குறைஷகளோடு வைத்திருந்த சகல தொடர்புகளையும் L160) Gull Gli புதுண்டித்து விட்டு, வடக்கே படையெடுப்பு ஒன்றை நடத்த
60 அல் ஷகிர்காணி பாகம் i பக்கம் 349

இஸ்லாமிய வரலாறு LTகம் i பகுதி !
..
ஆயத்தங்கள் செய்வதைப் போலக் காட்டிக் கொண்டார்கள். நபியவர்களின் மிக நெருங்கிய தோழர் சிலரைத் தவிர, வேறு எவருக்குமே கடைசிநேரம் வரை தெரியாத விதத்தில் இப்படையெடுப்பு வேலைகள் மிக இரகசியமாக மேற்கொள்ளப்பட்டன. கடைசி நேரத்திலேயே மக்காமீது படையெடுக்கும் நபியவர்களது திட்டம் நபித் தோழர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இறுதியில், நபி (ஸல்) அவர்கள், ஹிஜ்ரி 8 றம்ழான் பன்னிரண்டாம் நாள் (ஜனவரி 1, 630) ஆயுதம் தரித்த பத்தாயிரம் தோழர்களோடு மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள். வழியிலே நேச வர்க்கங்களைச் சேர்ந்தவர்களும் அவர்க ளோடு இந்தப் படையெடுப்பில் சேர்ந்து கொண்டனர். எட்டு நாள் பயணத்தின் பின்னர், முஸ்லிம்கள் மக்காவுக்கு அண்மையிலுள்ள மர்ருள் ளஹற்ரான் எனுமிடத்தில் முகாமிட்டு, நபியவர்களின் ஆணைக்கேற்ப அங்கே பத்தாயிரம் தீபங்களை ஏற்றினர். அந்தத் தீபங்கள் பாலைவனத்தை ஒளிவயலாக மாற்றின. நபியவர்கள் எல்லாவற்றையும் கடைசி நிமிடம் வரை மிக இரகசியமாகச் செய்தமையால், மக்கா குறைஷ்கள் மலை உச்சியிலிருந்து வீசிய பத்தாயிரம் தீபங்களின் ஒளியைக் காணும் வரை, முஸ்லிம்களின் படையெடுப்பு பற்றிய எந்தத் தகவலையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை.
முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் உருவான நிலைமையின் பயங்கர த்தை உணர்ந்து கொண்ட உடனேயே, குறைஷகள் அபூஸ“ப்யானை ஹகீம் பின் ஹிஷாம், புதைல் பின் வர்கா. ஆகிய இருவரோடு தகவல்கள் சேகரிக்கவும் முஸ்லிம்களின் படை பலத்தை மதிப்பீடு செய்யவும் அவர்கள் முகாமிட்டிருந்த பகுதிக்கு அதே இரவு அனுப்பிவைத்தனர். அவர்கள் நபியவர் களின் கூடாரத்தை நோக்கிச் சென்ற வேளையில், கூடாரத்தைக் காவல் செய்து கொண்டிருந்த நபித் தோழர்களால் கைது செய்யப்பட்டு, நபியவர்களின் முன்னால் கொண்டுவரப்பட்டார்கள். உமய்யாக்களின் அதிபதியும் கர்வம் பிடித்த குறைஷ் குலத்தலைவரும் நபியவர்களின் மிகக் கொடிய எதிரிகளுள் ஒருவருமான அபூஸ"ப்யான் அவரால் இருபது வருடங்களுக்கு அதிகமாக மிகக் கடுமையான துன்பங்களுக்குட்படுத்தப்பட்ட மனிதர் ஒருவரின் கருணையை எதிர்பார்த்துக் கொண்டு நின்றிருந்த காட்சி உணர்ச்சியைத் தூண்டுவதாய் இருந்தது. ஹழ்ரத் உமர் முதலான தோழர் சிலர் அவரைப் பழிவாங்கத் துடித்தனர்; மற்றத் தோழர்கள் நபியவர்கள் தமது எதிரிக்கு அளிக்கவிருந்த தண்டனையை ஆவலோடு எதிர்பார்த்தவாறு பொறுத்திருந்தனர். ஆனால், அண்ணல் அவர்கள் மனிதத் தன்மையற்ற விதத்தில் தம்மோடு நடந்து கொண்ட தமது கொடிய பகைவர் மீது காட்டிய கருணையைக் கண்டு தோழர்கள் அனைவரும் வியப்புற்றனர். அண்ணல் அவர்கள் கடந்த காலத்தில் அபூஸ“ப்யானால் தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் குற்றங்களையும் மறந்து, அவரை மன்னித்தார்கள். நபியவர்களது இந்தப் பெருந்தன்மை அபூ ஸாப்யானின் கல் நெஞ்சத்தைக் கரைக்கவே, அடுத்த நாள் காலை அவர் தாமாக முன்வந்து இஸ்லாத்தைத்

Page 107
இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி 1
தழுவிக்கொண்டார். பின்னர் அவர் நபியவர்களின் பிரவேசத்திற்கு நகரத்தை ஆயத்தம் செய்வதற்காக மக்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.
இறுதியில், றம்ழான் இருபதாம் நாள் (ஜனவரி 11, 630) வியாழக் கிழமை, மற்றோர் அறிவிப்பின்படி வெள்ளிக் கிழமை), முஸ்லிம்கள் வெறிச் சோடிக்கிடந்த மக்காவின் தெருக்களுள் முஹம்மத் (ஸல்) அவர்களின் மக்கா ଗରାj) தலைமையில்நுழைந்தனர். மக்காவாசிகள் அனைவரும் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு, முஸ்லிம்களிடம் மிக அமைதியாகச் சரணடைந்தனர். அபூ ஜஹற்லின் மகன் இக்ரிமா, உமையாவின் மகன் ஸப்வான் ஆகியோரின் தலைமையில் தீவிரவாதிகள் சிலர் மட்டும் நகரின் ஒரு மூலையில் இருந்து எதிர்ப்புக் காட்டினர். ஆயினும், காலித் பின் வலித் சிறிய சண்டை ஒன்றில் இவர்களைத் தோற்கடித்தார். இந்தச் சண்டையில் மூன்று அல்லது நான்கு முஸ்லிம்களும் பதின்மூன்று அல்லது இருபத்து நான்கு பகைவர்களும் கொல்லப்பட்டனர். இந்த ஒரேயொரு தடையைத் தவிர, நபி (ஸல்) அவர்கள் எட்டு ஆண்டு களுக்கு முன்பு அவர்களை 'தவ்ர் குகையிலிருந்து மதீனாவுக்குச் சுமந்து சென்ற அதே “அல் கஸ்வா ஒட்டகையில் அமர்ந்து, எத்தகைய எதிர்ப்பு மின்றி, வெற்றியாளராக மக்காவினுள் நுழைந்தார்கள். அவர்களது தூதத்தைப் பார்த்து எள்ளி நகைத்த நகரம் - அவர்களையும் அவர்களது ஏழைச் சீடர்களையும் இரக்கமில்லாமல் இம்சைப்படுத்திய நகரம் - அவர்களைத் தங்கள் பிறந்த இடத்திலிருந்தே விரட்டி அடித்த நகரம் - இறுதியாக அவர்களினதும் அவர்களது தோழர்களினதும் உயிர்களை உறிஞ்சுவதற்குச் சூளுரைத்த நகரம் - இப்போது நபியவர்களது கருணையை எதிர்பார்த்து, அவர்களது பாதத்தில் பணிந்து கிடந்தது. அவர்களது பாதங்களில் முற்றாகச் சரணடைந்து வீழ்ந்து கிடந்த அவர்களது பழைய எதிரிகள் தங்களது கடந்த காலக் குற்றங்களுக்கு வழங்கப்படவிருந்த தண்டனையை எதிர்பார்த்து நின்றனர். ஆனால், மனித இனத்துக்கு மாபெரும் அருட்கொடையாக அனுப்பப்பட்ட அண்ணல் அவர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கினார்கள்.
மக்காவினுள் பிரவேசித்த நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ" அக்பர், அல்லாஹ" அக்பர் (அல்லாஹற் மிகப் பெரியவன், அல்லாஹற் மிகப் பெரியவன்) என்று மிகப் பலத்த குரலில் கூறிக்கொண்டு, முதலில், புனித கஃபாவுக்குச் சென்றார்கள்; ‘சத்தியம் வந்தது; அசத்தியம் மறைந்தது; நிச்சயமாக, அசத்தியம் மறைந்தே திரும்.’ (அல்குர்ஆன் 17:81) என்று கூறியவாறு அங்கு வைக்கப்பட்டிருந்த சிலைகள் அனைத்தையும் உடைத்தெறிந்தார்கள். பின்னர், கஃபாவின் கூரையிலிருந்து எழுப்பப்பட்ட முஸ்லிம்களின் முதலாவது தொழுகை அழைப்பு (அதான்) மக்காவின் நான்கு திசைகளிலும் எதிரொலித்தது.

இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
ஸ்டான்லி லேன் பூல் என்பார் கூறுவது போல, “நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் எதிரிகள் மீது பெற்ற வெற்றி, அவர் மீதே அவர் ஈட்டிய பெருவெற்றியாகவும் இருந்தது. அவர், குறைஷ்கள் பல ஆண்டுகளாக அளித்த துன்பங்களையும் தூற்றிய பழிச் சொற்களையும் மறந்து, அவர்களை மன்னித்தார். மக்காவில் வாழ்ந்த மக்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கினார். தமது கசப்பான எதிரிகளின் நகரினுள் வெற்றியாளராகப் பிரவேசித்தபோது, நான்கு குற்றவாளிகளுக்கு மட்டுமே தண்டனை அளித்தார்." அவரது முன்மாதிரியைப் பின்பற்றி அவரது படையினரும் அமைதியாக மக்காவினுள் நுழைந்தனர். எந்த வீடும் கொள்ளையடிக்கப்
ን? &2
படவில்லை; எந்தப் பெண்ணும் நிந்திக்கப்படவில்லை”.
மக்கா வெற்றி 'அல் பத்ஹால் அ.ளம் (மகத்தான வெற்றி) என்று அழைக்கப்படுகிறது. இஸ்லாமிய வரலாற்றில் அது மிக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தைப் பெற்றிருக்கிறது. மக்கா வீழ்ச்சியுற்றதையும் தங்களுக் கெனச் சமயத்தலைமை ஒன்றைப் பிடித்து வைத்திருந்த குறைஷகள் * இஸ்லாத்தைத் தழுவியமையையும் தொடர்ந்து, முழு வெற் gó யின் அறேபியா வும் உருவத் தொழும்பின் உறுதியான முக்கியத்துவம் பிடியிலிருந்து விடுதலை பெற்றது; தனியாட்சி, இஸ்லாத்தின் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது; சத்தியத் தூதத்தின் பரவலுக்கு எதிராக இருந்து வந்த பெரும் தடை அகற்றப்பட்டு, இஸ்லாத்தின் விரைவான வளர்ச்சிக்குரிய பாதைகள் திறக்கப்பட்டன. வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த இந்த வெற்றியின் விளைவாக, நபியவர்களின் மிகக் கசப்பான எதிரிகளாக இருந்தவர்கள் அவர்களது மேம்பாட்டை ஏற்று, அவர்கள் மீது மிகுந்த ஆர்வம் காட்டும் ஆதரவாளர்களாயினர். சத்தியத்தை உணர்ந்த பின்னரும் குறைஷகளோடு வைத்திருந்த நட்புறவின் காரணமாக அல்லது அவர்கள் மீது கொண்டிருந்த
61. பெரும்பான்மையான வரலாற்ாசிரியர்களின் கருத்துப்படி நபியவர்களால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாகும் அவர்களுள் அறுவர் அல்லது எழுவர் பின்னர் இஸ்லாத்தைத் தழுவியதன் மூலம் மன்னிப்பு பெற்றுக் கொணடனர். அவர்களுள் மூவர் அல்லது நால்வர் மட்டுமே தண்டனை நிறைவேற்றத்துக்கு உள்ளாகினர். அவர்களுள் அப்துல்லாஹர் பின் கத்தல் மிக்யஸ் பின் ஸபாபா ஆகிய இருவரும் ஆரம்பத்தில் முஸ்லிம்களாக இருந்தவர்கள் பின்னர், கொலை செய்து விட்டு மதம் மாறிச் சென்றனர். கொலை செய்தமை, மதம் மாறியமை ஆகிய குற்றங்களுக்காக இவர்கள் இருவருக்கும் மரண தண்டனை அளிக்கப்பட்டது. ஹுவைரித் பினர் அல் அஸ்லத் என்பார் நபியவர்களின் மகள் ஷைனப் மக்காவிலிருந்து மதீனாவுக்குப் பிரயாணம் செய்துகொணடிருந்த போது அவரை இம்சைப்படுத்தினார். அதனால், கருவுற்றிருந்த அவருக்கு பின்னர் கருச்சிதைவு ஏற்பட்டது. இந்தக் குற்றத்திற்காக அவருக்கும் மரண தண்டனை அளிக்கப்பட்டது. (பின்னர் இவர் இஸ்லாத்தைத் தழுவியமையால், தண்டனையிலிருந்து இவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது என்று சிலர் கூறுகின்றனர்) இப்னர் கத்தலின் அடிமைப் பெண்ணான குறைபா நபியவர்கள்மீது வசைப் பாடல்கள் பாடி வந்தாள் அதனால் அவளுக்கும் மரண தண்டனை அளிக்கப்பட்டது. இவர்களது தண்டனைகள் மக்காவிலேயே நிறைவேற்றப்பட்டன.
62. Stanly Lane Poole, op. cit., p.29

Page 108
இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
பொருளாதாரச் சார்தல் காரணமாக அல்லது அவர்களது சமய - அரசியல் ஆதிக்கத்தின் அச்சம் காரணமாக இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளத் தயங்கிய அறேபிய வர்க்கத்தவர்களெல்லாம் மிகுந்த ஆர்வத்தோடு அந்த மார்க்கத்தைத் தழுவலாயினர். நபியவர்களின் தாயகமான நகரம் - முதலாவது வேத வெளிப்பாட்டைப் பெற்ற நகரம் - இஸ்லாமிய பிரசாரத்தின் முதலாவது களமாக அமைந்த நகரம் - பதின்மூன்று வருடகால இம்சைகளின் பின்னர், நபியவர்களையும் அவர்களது தோழர்களையும் விரட்டியடித்த நகரம் - மதீனாவின் இஸ்லாமிய பொதுநலவாயத்தின் ஒரு பகுதியாகவும் உலகளாவிய முஸ்லிம்கள் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு புனித நகராகவும் மாறிற்று. இந்த வெற்றியைப் பற்றி பேராசிரியர் பிலிப் கே. ஹித்தி குறிப்பிடுகையில், ‘பண்டைய வரலாறுகளிலுள்ள எந்த ஒரு வெற்றிப் பிரவேசத்தையும் அந்த வெற்றியோடு ஒப்பிடுதல் கடினமாகும்” என்று எழுதுகிறார்." உண்மையில், இது ஒரு மாபெரும் வெற்றியாகும். இந்த வெற்றியின் போது, நபியர்கள் காட்டிய பெருந்தன்மை குறைஷகளினதும் மற்ற மக்களினதும் இதயங்களை வென்றது. அதனால், அவர்கள் இஸ்லாமியக் கொடியின் கீழ் ஒன்றிணைந்து, மற்ற முஸ்லிம்களோடு சேர்ந்து கொண்டு, சன்மார்க்கப்பாதை மீது முழு உலகையும் வென்றெடுக்கப் புறப்பட்டார்கள்.
மக்காவின் வீழ்ச்சி, பல நூற்றாண்டுகாலமாக குறைஷகளின் உள்ளங்களிலே ஊறிப் போயிருந்த உருவத் தொழும்பின் - விக்கிரக வழிபாட்டின் - வீழ்ச்சியையே குறித்து நின்றது. அறபுநாட்டில் மக்கா நகரமே உருவ வழிபாட்டுக்குப் புகழ்பெற்ற இடமாக இருந்தது. பகட்டோடும் படாடோபத்தோடும் அங்கு வாழ்ந்த குறைஷகளே மூடநம்பிக்கைகளையும் விக்கிரக வழிபாட்டையும் பின்பற்றுவதில் பிரபல்யம் பெற்றவர்களாக விளங்கினர். மக்கா நகரம் முஸ்லிம்களின் கரங்களில் வீழ்ந்ததும் அறியாமை இருள் அகன்றது; இஸ்லாம் எனும் புதிய நம்பிக்கையின் ஒளி தனது பிரகாசமான கதிர்களை நாடெங்கும் பரப்பிற்று. இஸ்லாத்தின் ஏற்றம் உறுதிப்படுத்தப்பட்டது. மக்காவின் வெற்றியே இஸ்லாத்தின் பிற்கால வெற்றிகளின் வரலாற்றைத் தொடக்கி வைத்தது.
இந்த வெற்றியின் பின்னர், நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இரண்டு வாரகாலம் தங்கியிருந்தார்கள். இக்காலத்தில் அவர்கள் மக்காவின் சுற்றுப்புறங்களில் வாழ்ந்த நாடோடி வர்க்கங்களிடையே இஸ்லாமிய தூதைப் e பிரசாரம் செய்வதற்காகவும் அல்லாஹற்வுடைய ஹவாஷின்களும் சத்திய மார்க் கத்தினி பால அவர்களை b கீப் களும் அழைப்பதற்காகவும் தமது தோழர்களைப் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைத தாாக ள .
63. Philip K. Hitti, History of the Arabs, p. 118

இஸ்லாமிய வரலாறு UsTébb || LJ(35g5 4
குறைஷகளின் வீழ்ச்சியால் ஏமாற்றமுற்று, மக்காவின் சுற்றுப்புறங்களில் சிறு கலகங்களில் ஈடுபட்ட நாடோடி வர்க்கங்களை அடக்குவதற்கும் சிறு அளவிலான படையெடுப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக நபியவர்கள், ஹவாவழின் வர்க்கத்தாரின் வடிவில் எதிர்பாராத பேராபத்து ஒன்றுக்கு முகங்கொடுக்க வேண்டியவர்களாக இருந்தார்கள். பல கிளைகளைக் கொண்ட ஹவாஷின் வர்க்கத்தினர் தங்களுக்குள் கூட்டிணைப்பு ஒன்றை உருவாக்கி, நபியவர்களுக்கு எதிராகக் கிளர்ந் தெழுந்தனர். தாஇப் நகரத்தின் போர்க்குணமுள்ள வர்க்கமான பனூ தகிப் களுடனும் அவர்கள் கூட்டுச் சேர்ந்திருந்தனர். குறைஷகளுக்குப் பிறகு மிக ஆற்றல் வாய்ந்த வர்க்கத்தினராகக் கருதப்பட்ட ஹவாஷின்கள் அவர்களது மிகப் பழைய விரோதிகளாக இருந்தனர். நபியவர்களின் கரங்களில் மக்கா வீழ்ச்சியடைந்தமை, தாஇபில் உருவாகியிருந்த குறைஷகளுக்கு எதிரான இயக்கத்திற்குப் புதிய உத்வேகத்தை அளித்தது. எனவே, நட்பாளர் இருவரும் புனித க.'பாவைக் கைப்பற்றும் நோக்கத்தோடு நான்காயிரம் வீரர்களைக் கொண்ட ஒரு படையுடன் புறப்பட்டுவந்து, தாஇபுக்கும் மக்காவுக்குமிடையே,மக்காவின் கிழக்கே சுமார் பதினான்கு மைல் தூரத்திலுள்ள ஹ"னைன் பள்ளத்தாக்கில் முகாமிட்டனர்.
இது பற்றி அறிந்த நபி (ஸல்) அவர்கள் புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய இரண்டாயிரம் மக்காவாசிகள் உட்பட 12,000 வீரர்களோடு ஹிஜ்ரி 8 ஷவ்வால் மாதத்தில் (ஜனவரி - பெப்ரவரி 630 இல்), ஹ?னைன் பள்ளத்தாக்கை நோக்கிப் புறப்பட்டார்கள். தங்களது எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால், பகைவர்களை வெகு எளிதில் வென்று விடலாம் என்று முஸ்லிமகள் தங்களுக்குள் நம்பிக்கையை வளர்த்திருந்தனர்; சிலர் படைபலத்தைப் பார்த்து இறுமாந்து போயிருந்தனர். ஆனால், தங்களுக்காக என்ன களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் அறிந்திருக்கவோ கற்பனை செய்து பார்க்கவோ இல்லை. முஸ்லிம்களின் இந்த மனப்பாங்கு பற்றி நபியவர்கள் அறிந்திருந்த போதிலும், அவர்கள் எதுவுமே பேசவில்லை.
மூன்று அல்லது நான்கு நாள் பிரயாணத்தின் பின்னர், முஸ்லிம்கள் ஹ?னைன் பள்ளத்தாக்கில் எதிரிகளைச் சந்தித்தனர். ஹ"னைன் பள்ளத்தாக்கு பற்றி முழுமையாக அறிந்திருந்த எதிரிகள், முஸ்லிம்கள் அங்கு வருவதற்கு முன்பே, ஒடுக்கமான பள்ளத்தாக்கின் இருபக்கங்களிலுமுள்ள ஹுனைன குன்றுகளில், மிகப் பொருத்தமான - வசதியான - இடங்களைப் GLI ri பிடித்துக் கொண்டனர். முஸ்லிம்கள் ஹ"னைனின் ஒடுங்கியபள்ளத்தாக்கினூடாக அணிவகுத்துவர ஆரம்பித்த துமே, குன்றுகளில் பதுங்கியிருந்த எதிரிகள் - குறிப்பாக வில்வித்தையில் சிறந்த தேர்ச்சி பெற்றிருந்த ஹவாஷின் வர்க்க வீரர்கள் - அவர்கள் மீது திடீரெனப் பாய்ந்து, ஆவேசத்தோடு அம்புமாரி பொழியலாயினர். எதிர்பாராத

Page 109
இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி 1
இந்தத் தாக்குதல் முஸ்லிம் அணிகளுக்கிடையே பெரும் அச்சத்தையும் குழப்பத்தையும் எற்படுத்தி விட்டது. அவர்களுட் பலர் பின்வாங்கிச் சிதறி ஒடலாயினர். பெரும்பாலும், முஸ்லிம்கள் அனைவருமே நபியவர்களின் அழைப்பைக்கூடக் கவனிக்காமல், அவர்களைக் கடந்து அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். பகை வில்வீரர்களின் போர்த்திறமையால் அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர் என்றே கூறவேண்டும்." ஆயினும், நபி (ஸல்) அவர்களும் அவர்களது தோழர்கள் சிலரும் அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை வைத்தவர்களாக இடம்பெயராமல் நின்று, பகைவர்களை எதிர்த்துப் போர் செய்தனர். நபியவர்களின் தைரியத்தையும் உறுதியையும் கண்ட பின்வாங்கிய முஸ்லிம்கள் திரும்பவும் போர்க்களம் புகுந்து, தியாக சிந்தையோடு சண்டை செய்யலாயினர். இறுதியில் பகைவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். இந்தப் போரில் எழுபது இறைமறுப்பாளர் கொல்லப்பட்டனர்; ஆயிரக்கணக்கானோர் சிறைப்பிடிக்கப்பட்டனர். முஸ்லிம்களின் பக்கத்திலிருந்து நால்வர் மட்டுமே உயிர் நீத்தனர். மனித பலத்தில் நம்பிக்கை வைக்கக் கூடாது என்ற அரிய பாடத்தை இந்தப் போர் K స్క్రీ கற்றுக் கொடுத்தது. இந்தப் போரில் எதிரிகள் கவண், (၇၄öööööန္တီမိဳ႕၂စံ ம்ெஜி முதலான புதிய போர்க் கருவிகளைப் பயன்படுத்தினர். அவ்ர்களிட் 'இத்தகைய கருவிகளைப் பயன்படுத்தும் முறையை முஸ்லிம்களிகழ்த் கேண்டனர். இஸ்லாமிய வரலாற்றில் இந்தப்போர் ‘ங்ஷவத் ஹன்ை(ஜனன் போர்) என்று அழைக்கப்படுகிறது.
红
ஹ"னைன் போர்க்களத்திலிருந்து தப்பியோடிய எதிரிகள் - குறிப்பாக தகீப் வர்க்கத்தவர்கள் - நன்கு அரண் செய்யப்பட்ட கோட்டைகளைக் கொண்ட தாஇப் நகரத்தில் தஞ்சம் புகுந்தனர். முஸ்லிம்கள் அவர்களைப் பின் தொடர்ந்து சென்று, சுமார் பதினொரு ஆண்டுகளுக்கு தாஇப் bdb. முன்பு நபியவர்களைச் சொற்களாலும் கற்களாலும் முற்றுகை அடித்து, தனது எல்லைக்கப்பால் விரட்டிய தாஇப் நகரத்தை முற்றுகையிட்டனர். முற்றுகை இருபது நாள்கள் வரை நீடித்தது. ஆயினும், எதிரிகள் சரணடையும் அறிகுறிகள் தென்படவில்லை. இந்த முற்றுகையின் போதுதான் முஸ்லிம்கள் முதன் முறையாக நகரத்தின் கோட்டைச் சுவர்களை உடைப்பதற்காக கவண், கல்லெறியும் பொறி, உடை கருவிகள் முதலான உபகரணங்களைப் பயன்படுத்தினர். எதிரிகள் வெப்பமான இரும்புக் கோல்களைப் பொறிகள் மூலம் எறிந்து, முஸ்லிம்களைத் தாக்கினர். அதனால் அதிகமானோர் காயமுற்றனர். இறுதியில் முற்றுகையை
64 இந்தச் சம்பவம் பற்றி அல் குர்ஆனிலும் பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. "அநேக காலங்களில் நிச்சயமாக அல்லாஹர் உங்களுக்கு உதவி செய்திருக்கிறாள். எனினும் ஹானைன் யுத்தத்தன்று உங்களை அகமகிழச் செய்து கொண்டிருந்த உங்களுடைய அதிகமான (சனத் தொகை உங்களுக்கு யாதொரு பயனும் அளிக்கவில்லை பூமி இவ்வளவு பரந்திருந்தும் உங்களுக்கு மிக்க நெருக்கமாகி விட்டது. அன்றி நீங்கள் புறங்காட்டி ஒடவும் தலைப்பட்டீர்கள்” (925)

இஸ்லாமிய வரலாறு L35tib i LJ(535 i
மேலும் நீடிக்கவிரும்பாத நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுள் ஒருவரான நெளபல் பின் முஆவியா அல் தீலி என்பாரைக் கலந்தாலோசித்த பின்னர், முற்றுகையைக் கைவிட்டுத் தமது தோழர்களை அழைத்துக் கொண்டு மக்காவுக்கு திரும்பினார்கள். திரும்பிச் சென்ற வழியில் தகீப் வர்க்கத்தாருக்கு எதிராக இறைவனிடம் பிரார்த்திக்குமாறு நபித்தோழர்கள் நபியவர்களை வேண்டிக்கொண்டபோது, அவர்கள், “ ‘அல்லாஹர்வே! தகப் வாக கததாரு ககு வழிகாட்டுவாயாக! அவர்களை நேர்பாதைக்குக் கொண்டு வருவாயாக!” என்று பிரார்த்தனை செய்தார்கள்" அதிக காலம் செல்வதற்கு முன்பே அவர்களது பிரார்த்தனை நிறைவேறியது. அடுத்த ஆண்டு, அவர்கள் தாமாகவே முன்வந்து இஸ்லாத்தைத் தழுவினர்; தாஇப் நகரமும் குருதி சிந்தல் இல்லாமலே முஸ்லிம்களிடம் சரணடைந்தது. தாஇப் நகர முற்றுகையின் போது நிகழ்ந்த சண்டைகளில் முஸ்லிம்கள் பன்னிருவர் கொல்லப்பட்டனர்.
தாஇப் நகரிரிலிருந்து திரும்பிய நபியவர்கள் மக்காவுக்குச் செல்லாமல், மக்காவிலிருந்து தாஇபுக்குச் செல்லும் பாதையில் இருந்த ஜி.ரானா என்ற இடத்திற்குச் சென்றார்கள். அங்கேயே நபியவர்கள் ஹ"னைன் போரில் . சிறைப்பிடிக்கப்பட்ட போர்க்கைதிகளையும் கொள்ளைப் பெ (b6|T கிடைத்த கொள்ளைப் பொருள்களையும் விட்டு வினியோகம் வந்திருந்தார்கள். அங்கே 24,000 ஒட்டகைகள், 40,000 ஆடுகள், 4000 ஊகியா (அவுன்ஸ்) வெள்ளி ஆகியவற்றோடு 6000 போர்க்கைதிகளும் இருந்தனர்.* கொள்ளைப் பொருள்கள் அல் குர்ஆனின் ஆணைப்படி ஐந்து பங்குகளாகப் பிரிக்கப்பட்டன. வழக்கம் போல நான்கு பங்குகள் போர் வீரர்களுக்கிடையே வினியோகிக் கப்பட்டன. ஐந்தாவது பங்கு ஏழைகளுக்கும் தேவையுடையோருக்குமென ஒதுக்கி வைக்கப்பட்டது. புதிதாக இஸ்லாத்தை ஏற்று, போரில் பங்குபற்றிய மக்கா குறைஷ்களுக்கும் கொள்ளைப் பொருள்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. அபூ ஸPப்யான், அவரது புதல்வர்களான முஆவியா, யஸித் ஆகியோருக்கு ஒவ்வொருவருக்கும் நூறு ஒட்டகைகளும் நாற்பது ஊகியா வெள்ளியும் கொடுக்கப்பட்டன. போர்க்கைதிகள் அனைவரும் நபியவர்களின் ஆணைமீது விடுதலை செய்யப்பட்டனர். இதன் பின்னர், மக்காவுக்குச் சென்ற நபியவர்கள் அத்தாப் பின் உஸைத் என்பாரை மக்காவின் ஆளுநராக நியமித்து விட்டு, ஹிஜ்ரி 8 துல் கட்தா இருபத்தேழாம் ாள் (மார்ச் 18, 630) மதீனாவுக்குத் திரும்பினார்கள்.
அதேசமயம், மு."தாவில் வெற்றி தோல்வியின்றி முடிந்த போரினால் பைஸாந்தியப் பேரரசன் ஹிரக்ளியஸ் மனம் குழம்பித் துடித்துக்
65. இப்னி ஸஃத் i/159 66. GuppyLuigi ii /152

Page 110
இலல்லாமிய வரலாறு UTC-6tij | LJ(35g5 1
கொண்டிருந்தான். முஸ்லிம்களின் துணிச்சலும் வீரமும் அவனுக்குப் பெரும் சவாலாக அமைந்தன. தெற்கிலே ஏற்பட்டுக்கொண்டிருந்த முஸ்லிம் பொதுநலவாயத்தின் செல் வாக்கு வளர்ச்சியும் அவனுக்கு அமைதியின்மையை அளித்தது. முஸ்லிம்களால் அடையப் பெற்ற வெற்றிகளும் முஸ்லிம் பேரரசின் விரைவான படர்ச்சியும் {b,éb அவனது பொறாமையைத் தூண்டின; அடிபட்ட நாகம் படையெடுப் போலச் சீறினான். எனவே, அவன் இஸ்லாத்தையும் அதன் பொதுநலவாய அரசாங்கத்தையும் நசுக்கிவிடத் தீர்மானித்து, அவனோடு நட்பறவு கொண்டிருந்த லக்ம், ஜூதாம், ஆமிலா, ங்ஸ்ஸான் ஆகிய வர்க்கங்களைச் சேர்ந்த தலைவர்களின் உதவியோடு இருபது அல்லது முப்பது ஆயிரம் வீரர்களைக் கொண்ட பெரும் படை ஒன்றைத் திரட்டிப் போருக்கு ஆயத்தமானான். பைஸாந்தியப் பேரரசனின் போர் ஆயத்தங்கள் பற்றிய செய்தி அறிந்த நபியவர்கள் 10,000 குதிரை வீரர்கள் உட்பட 30,000 வீரர்களைக் கொண்ட பலம் வாய்ந்த 6). ஒன்றைத் திரட்டிக் கொண்டு, உரோமர்களை அவர்களது எல்லைப் புறத்திலேயே சந்திக்கப் புறப்பட்டார்கள். பைஸாந்தியப் பேரரசின் எல்லையில், மதீனாவிலிருந்து சுமார் இரு நூற்றைம்பது மைல் தூரத்திலுள்ள தபூக் என்ற நகரத்தை முஸ்லிம்கள் அடைந்தபோது, அந்த நகரம் அமைதியாக இருந்ததைக் கண்டு அவர்கள் ஆச்சரியம் அடைந்தார்கள். முஸ்லிம் படையணிகளின் பலத்தை ஒற்றர்கள் மூலம் அறிந்த பைஸாந்தியப் பேரரசன் முஸ்லிம்களைத் தாக்கும் எண்ணத்தைக் கைவிட்டு, அவர்கள் அங்கு வருவதற்கு முன்பே தனது படையணிகளோடு அங்கிருந்து ஓடிவிட்டான்.
நபியவர்களும் அவர்களது தோழர்களும் இருபது தினங்கள் வரை தபூக்கில் தங்கியிருந்து, சிரியாவின் எல்லைவரை சென்று பார்த்தனர். பகைவரின் நடமாட்டம் எதுவும் காணப்படவில்லை. இதற்கிடையில், அந்தப் 峰 பிரதேசத்திலிருந்த உள்ளுர் சிற்றரசர்கள் சிலர் மதீனா dhj ᎠᎫᏧi ᏧᏂᏲlI ஆட்சியாளரின் ஆற்றலையும் முஸ்லிம்களின் படை வெற்றி பலத்தையும் உணர்ந்து தெளிந்து, நபியவர்களிடம் வந்து,
சமாதான உடன்படிக்கைகள் செய்துகொண்டனர். அகபா குடாவின் முடிவிலிருந்த அய்லா என்ற சிறிய பட்டினத்தின் கிறித்தவச் சிற்றரசனான யூஹன்னா என்பான் ஆண்டொன்றுக்கு முந்நூறு தீனார் ஜிஷ்யா (தலை வரி) செலுத்துவதாகக் கூறி, நபியவர்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டான். ஜர் பா.. அத்ரூஹற் ஆகிய இடங்களின் தலைவர்களும்நபியவர்களிடம் வந்து, சமாதான உடன்படிக்கைகள் செய்து கொண்டனர். ‘தூமதுல் ஜன்தல்' என்ற பாலைவனச் சோலையின் கிறித்தவத் தலைவனான உகைதிர் பின் அப்துல் மலிக் என்டான் மட்டும் சற்று எதிர்ப்புக் காட்டினான். அவனது எதிர்ப்பு காலித் பின் வலீதால் நசுக்கப்பட்டது. பின்னர்,

இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
அவனும் ஜிஷ்யா செலுத்துவதாகக் கூறி, சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டான். வடக்கில் கிடைத்த இந்த வெற்றிகளோடு, நபியவர்கள் தமது தோழர்களுடன் மதீனாவுக்குத் திரும்பினார்கள். இஸ்லாமிய வரலாற்றில் ‘ங்ஷவத் தபூக் (தபூக் படையெடுப்பு) என்று அழைக்கப்படும் இந்தப் படையெழுச்சி ஹிஜ்ரி 9 றஜப் மாதத்தில் (நவம்பர் 630) நிகழ்ந்தது.
இஸ்லாத்தின் வரலாற்றில் ஹிஜ்ரி ஒன்பதாம் ஆண்டு 'ஆமுல் வுபூத் (பேராட் குழுக்கள் ஆண்டு) என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில், இந்த ஆண்டிலிருந்து அறேபியத் தீபகற்பத்தில் வாழ்ந்த பல்வேறு வர்க்கத்தவர்கள் நபியவர்களுக்குத் தங்கள் மரியாதையைச் பேராட் குழுக்கள் မိဳးမှူ##ရှူးစ် အမေဇုံး န္တန္တီး၏။#ရုံ தாங்கள் ஆண்டு விசுவாசத்தைத் தெரிவிக்கவும் தூதுக்குழுக்களை மதீனாவுக்கு அனுப்ப ஆரம்பித்தனர். அவர்களது வருகை நபியவர்களது மரணம் வரை நீடித்தது. இவ்வாறு, நபியவர்களிடம் வந்த பேராளர்களுள் சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மக்கா குறைஷகளால் துன்புறுத்தப்பட்டு, அபயம் தேடிச் சென்ற அண்ணல் அவர்களுக்கு அடைக்கலம் அளிக்க மறுத்து, தங்கள் நகரத்தைவிட்டே விரட்டியடித்த தாஇப் நகர மக்களும் இருந்தனர். அவர்கள் தங்களுள் மிகுந்த மதிப்பும் கெட்டித்தனமும் வாய்ந்த சிலரைத் தெரிவு செய்து, தங்கள் தவறுக்காக மன்னிப்புக் கோரவும் நபியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவும் அவர்களை மதீனாவுக்கு அனுப்பி வைத்தனர். மதீனாவுக்கு வந்த பேராட்குழுக்கள் யாவும் கேட்போர் கூடமாகவும் சமய, அரசியல் விவகாரங்கள் சம்பந்தமாகக் கலந்துரையாடல் நடத்தும் இடமாகவும் இருந்த “மஸ்ஜிதுல் நபவி பள்ளிவாயிலின் முற்றத்தில் நபியவர்களால் அன்போடு வரவேற்கப்பட்டன. அறபு வரலாற்றாசிரியர்களின் கருத்துப்படி, ஹிஜ்ரி ஐந்துக்கும் பன்னிரண்டுக்கும் இடைப்பட்ட எட்டு ஆண்டு காலத்தில் இத்தகைய எழுபத்திரண்டு துாதுக்குழுகள் மதீனாவுக்கு வந்தன. நபியவர்களின் ஏழைத்தோழர்களும் மதீனாவின் தலைமைக் குடிகளும் பேராட்குழு உறுப்பினர்களை அறேபியருக்கே உரிய பழைமைச் சிறப்பு வாய்ந்த விருந்தோம்பும் பண்பாட்டிற்கேற்ப நன்கு உபசரித்தனர். அவர்கள் விடைபெற்றுச் சென்றபோது, அவர்களது பிரதேச மக்களுக்கு இஸ்லாத்தையும் அதன் கோட்பாடுகளையும் போதிப்பதற்காகப் போதனாசிரியர்களும் அவர்களோடு அனுப்பிவைக்கப்பட்டனர்.
சுருங்கச் சொன்னால், பேராட்குழுக்கள் ஆண்டில், தென் அறேபியாவிலுள்ள யமன், பாரசீகக் குடாவிலுள்ள உமான் ஆகியவற்றிலிருந்து பாரசீக, சிரியா எல்லைகள் வரை வாழ்ந்த மக்கள் தொகுதி தொகுதியாக இஸ்லாத்தைத் தழுவினர். அறேபியரின் மலட்டு உள்ளப் பூமிகளில் நபியவர்களால் தூவப்பட்ட ஏகத்துவ விதைகள் இனிய
G21D

Page 111


Page 112
இஸ்லாமிய வரலாறு பாகம் பகுதி !
... H. ...
நபி (ஸல்) அவர்கள், மக்கா நகரம் முன்னொருபோதும் கண்டிராத
மாபெரும் மக்கள் கூட்டத்தோடு ஹஜ்ஜின் சடங்குகளை நிறைவேற்றினார்கள்.
D&E
ாவில் நான்கு நாள்கள் தங்கியிருந்தார்கள். ஐந்தாம் நாள் (துல்ஹஜ் எட்டாம் நாள்) வியாழக்கிழமை, மினாவுக்குச் சென்று,
இறுதிப் அன்றிரவை அங்கே கழித்தார்கள். அடுத்த நாள் வெள்ளிக் பிரசங்கம் கிழமை, வைகறைத் தொழுகையைத் தொழுத பின்னர்,
தமது விருப்புக்குரிய அல் கஸ்வா ஒட்டகையில் ஏறித்
தோழர்கள் புடைசூழ அரபாத்திற்குச் சென்று, அங்கே செய்யவேண்டிய சடங்குகளை நிறைவேற்றினார்கள். அங்கே தரித்திருந்தபோது, துல்ஹஜ் ஒன்பதாம் நாள், அரபாத் மலையின் சிகரத்தில், தமது ஒட்டகையில் அமர்ந்தவாறே அங்கு வெள்ளமெனத் திரண்டிருந்த மக்கள் முன்னால்
தமது இறுதிப் பேருரையை நிகழ்த்தினார்கள்:
மனிதர்களே! என் வார்த்தைகளுக்குச் செவி கொடுங்கள். இந்த ஆண்டுக்குப் பின்னர், நான் உங்களை இதே இடத்தில் மீண்டும் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.
இன்று என்ன நாள் என்று உங்களுக்குதி தெரியுமா? இறைவனுக்காக அர்ப்பணம் செய்யும் தியாகத் திருநாள் (யவ்முன் நவற்) ஆகும். இது என்ன மாதம் என்பது உங்களுக்குத் தெரியுமா? புனிதமான துல்வறஜ் மாதமாகும். இது எந்த நகரம் என்று உங்களுக்குத் தெரியுமா? தூய (மக்க) மாநகரமாகும். புனிதமான இந்தத் தினத்தையும் புனிதமான இந்த மாதத்தையும் புனிதமான இந்த நகரத்தையும் போலவே உங்கள் குருதியும் உடைமைகளும் நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திக்கும் வரை மீறப்படாதவை ஆகும். நிச்சயமாக, நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திப்பீர்கள். அப்போது நீங்கள் உங்கள் செயல்களைப் பற்றி வினவப்பருவீர்கள். நான் உங்களை எச்சரிக்கிறேன். உங்களுள் எவர் மற்றொருவரின் நம்பிக்கைப்பொருளை வைத்திருக்கிறாரோ அவர் அதனை அதற்குரியவரிடம் ஒப்படைத்து விடவேண்டும். வட்டிக் கடப்பாடுகள் யாவும் (இன்று முதல்) ஒழிக்கப்பட்டு விட்டன. ஆனால், உங்கள் முதல் உங்களுக்கு உண்டு. நீங்கள் அநீதி செய்யவோ அநீதி செய்யப்படவோ வேண்டாம். வட்டி எடுக்கக் கூடாது என்று அல்லாவற் ஆணையிட்டிருக்கிறான். அப்பாஸ் பின் அப்துல் முத்தலிபுக்கு நீங்கள் கொருக்க வேண்டிய வட்டிப் பாக்கிகள் யாவும் நீக்கப்பட்டு விட்டன. அறியாமைக்காலத்தில் செய்யப்பட்ட கொலைகளுக்குப் பழிவாங்கும் உரிமையும் இன்று முதல் அகற்றப்பட்டு விட்டது. இவ்வாறு நான் நீக்கும் முதலாவது பழிவாங்கல் உரிமை (லைத் வர்க்கத்தாரிடையே வளர்ந்து, வற"தைல் என்பாரால் கொல்லப்பட்ட) ரபீஆ பின் அல் வறாரித் பின் அப்துல் முத்தலிப் என்பாரின் கொலைக்குரியதாகும்.
மக்களே! இன்று உங்களின் இந்த நாட்டிலே, நான் இனி ஒருபோதும் வழிபடப்படமாட்டேன்’ என்பதை எண்ணி, வைடித்தான் ஏமாற்றம்
(D)

இஸ்லாமிய2 வரலாறு 135th J(355
T ... ...
அடைந்து போயிருக்கிறான். ஆனால், நீங்கள் மிக அற்பமாக நினைக்கும் விவகாரங்களில் நீங்கள் அவனுக்கு வழிபட்டால் கூட அவன் மிகச் சந்தோவடிப்பருவான். ஆகவே, உங்களுடைய மார்க்கத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்று நான் உங்களை எச்சரிக்கிறேன்.
மக்களே! உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றன. அவ்வாறே உங்கள் மீதும் அவர்களுக்கு உரிமைகள் இருக்கின்றன.பெண்களை அன்போரு நடத்துங்கள். ஏனெனில்,
ஆதிக்கமும் இல்லாத - கைதிகளாவர். நீங்கள் அவர்களை அல்லாவற் விடம் இருந்து அடைக் கலப் பொருள்களாகப் பெற்றிருக்கிறீர்கள் ...உங்கள் அடிமைகளைப் பற்றியும் எச்சரிக்கிறேன். நீங்கள் உண்பதைக் கொண்டே அவர்களுக்கும் உணவுபூட்டுங்கள். நீங்கள் அணிவதைக் கொண்டே அவர்களையும் அணிவியுங்கள். அவர்கள் ஏதாவது குற்றம் செய்து, அதனை மன்னிக்க நீங்கள் விரும்பாவிட்டால், அவர்களை விற்று விருங்கள். ஏனெனில், அவர்கள் அல்லாவற்வின் அடியார்களாவர். அவர்களை வதை செய்யாதீர்கள்.
மக்களே! நான் சொல்வதை கவனித்து விளங்கிக் கொள்ளுங்கள். முஸ்லிம்கள் ஒருவருக்கு மற்றவர் சகோதரர் ஆவர். ஒருவருக்குச் சொந்தமானது அவரது சகோதரருக்கு ஆகுமானதன்று. அவராக மனம் விரும்பித் தந்தால் மட்டுமே ஆகுமானது. அநீதி செய்வதிலிருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
இறைவன் ஒவ்வொருவருக்கும் மரபு வழிச் சொத்துப் பங்கை விதித்திருக்கிறான். எனவே, வாரிசுகளுக்கு மாறாக எழுதப்படும் உயில் செல்லுபடியாகாது. குழந்தை அதன் பெற்றோருக்குச் சொந்தமானது. திருமண பந்தத்தை மீறி, விபசாரம் செய்தவனுக்குரிய தண்டனை அவனைக் கற்களால் எறிந்து கொல்வது தான்.
மக்களே! உருவ வழிபாட்டைப் பற்றி நான் உங்களை எச்சரிக்கிறேன். திருடாதீர்கள். பொய் கூறாதீர்கள். விலக்கப்பட்ட எதனையும் செய்யாதீர்கள். எல்லா விதமான பாவங்களிலிருந்தும் விலகி இருங்கள்.
முஸ்லிம்களே! உங்கள் தலைவர்களுக்கு மதிப்பளியுங்கள். கறுப்பு அடிமை ஒருவர் உங்கள் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டு, அவர் உங்களை அல்லாவற்வின் வேதத்திற்கு ஏற்ப வழிநடத்தினால், அவருக்குக் கீழ்ப்படியுங்கள்.
மக்களே! உங்கள் இறைவன் ஒருவன்; உங்கள் மூதாதையும் ஒருவரே. நீங்கள் அனைவரும் மண்ணிலிருந்து படைக்கப்பட்ட ஆதத்தின் சந்ததிகளே. அல்லாவற்வின் முன்னிலையில் மிகவும் கண்ணியத்திற்குரியவர் அல்லாவற்வை மிகவும் அஞ்சுபவரே. அறேபியன் அறேபியனல்லாதவனைவிடவோ அறேபியனல்லாதவன் அறேபியனைவிடவோ உயர்ந்தவனல்லன். அப்படி முன்னுரிமை
(315)

Page 113
இஸ்லாமிய வரலாறு UTébb l Ligbgól l
ஏதாவது இருந்தால், அல்லாவற்வைப் பற்றிய அச்சத்தின் அடிப்படையில் மட்டுமே உண்டு.
நான் உங்களிடையே அல்லாவற்வின் வேதத்தையும் அவனது தூதரின் ஸ்சின்னாவையும் விட்டுச் செல்கிறேன். நீங்கள் அவற்றைப் பற்றிப் பிடித்திருக்கும் காலம்வரை, நீங்கள் ஒருபோதும் வழிதவறிச் செல்லமாட்டீர்கள்.* நிச்சயமாக எனக்குப் பின்னர் எந்த நபியும் வரமாட்டார். நபிமார்களுள் இறுதியானவன் நானே.
இங்கே வந்திருப்பவர்கள் வராதவர்களுக்கு எனது சொற்களைத் தெரியப்பருத்தட்டும்."
நபி (ஸல்) அவர்கள் தமது பேருரையை, ‘சின்ன767ர்வே நானர் உனது தூதைத் தொ"வித்து, எனது பE'யைப் பூர்த்த' செய்து விட்டேவர்” என்று கூறி முடித்தார்கள். அப்போது, அங்கு திரண்டிருந்த மக்கள் ஏககுரலில், 'ஆம் நாங்கள் அதனை உறுதப்படுத்துகிறோம்” என்று சொல்ல, நபியவர்கள் தமது முகத்தை வானத்தின் பால் உயர்த்தி, “இதற்த நீயே சான்று அன்னாவூர்வே' என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்களது இந்த இறுதிப் பேருரை இஸ்லாத்தின் வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது. பல சிறப்புக் களையும் முக்கியத்துவங்களையும் கொண்ட இந்தப் பேருரை இஸ்லாத்தால் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகளினதும் பேருரையின் கடமைகளினதும் மகா பட்டயமாக இருந்தது. அது, முக் கிய த்துவம் அக்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த மனித உரிமைகள் பற்றிய கருத்தை மாற்றி, முன்னர் ஒருபோதும் மனித இனத்திற்குத் தெரியாதிருந்த புதிய பரிமாணங்களை அதற்கு அளித்தது; இன, நிற, தேசிய வேறுபாடின்றி முழு மனித குலத்திற்கும் எல்லா வகையான உரிமைகளையும் சிறப்புரிமைகளையும் வழங்கியது; மனிதனுக்கும் மனிதனுக்குமிடையே பன்னெடுங்காலமாக இருந்து வந்த ஒற்றுமையின்மையை வேரோடு அறுத்தெறிந்தது; சமுதாயத்தில் புரையோடிப் போயிருந்த தீமைகள் அனைத்தையும் அகற்றி, சகோதரத்துவத்தினதும் சமத்துவத்தினதும் அடிப்படையில் அமைந்த நீதியான சமுதாயம் ஒன்றை நிறுவ வழிகோலியது. முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள் என்று பிரகடனம் செய்ததன் மூலம் அந்தப் பேருரை முஸ்லிம் களிடையே ஒற்றுமைப் பிணைப்பு ஏற்பட அடித்தளம் இட்டது. இந்த ஒற்றுமை அவர்களை உலகிலே மிகவும் வலிமைவாய்ந்த ஒரு சக்தியாக மாற்றியது.
* நம்பத்தகுந்த ஹதீத் தொகுப்புக்களில் வரும் ஹதீத்களில் "நான் உங்கள் இடையே இரண்டை விட்டுச் செல்கிறேன். ஒன்று அல்லாஹற்வின் வேதம் மற்றது எனது குடும்பம் (அவற்றுல் பைத்). இரணடையும் நீங்கள் பற்றிப்பிடித்துக் கொள்ளும் வரை வழிதவறமாட்டீர்கள்” என்றே காணப்படுகிறது. (முஸ்லிம் திர்மிதி) இதுவே மிகவும் நம்பத் தகுந்த கூற்று ஆகும்
71 இப்ன் ஹிஸாமினி எரீராவிலிருந்து தொகுக்கப் பெற்றது. பாகம் V பக்கம் 248 - 49

இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
LGG S LSSSLLLC S G SLL SLSS L SLLLLL LSLSLLS LSLS SLLLSL LSLSLLL L LSLSL
நபி (ஸல்) அவர்களின் இறுதிப்பேருரை, நிலையூன்றிய பற்றுக்களுக்காகத் தங்களுக்குள் பல தலைமுறைகள் வரை போராடிக் கொண்டிருந்த அறேபியரின் பகைமையைப் போக்கி, இஸ்லாமியக் கொடியின் கீழ் அவர்களை ஒன்றுபடுத்தியதோடு, உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த ஒரு சமுதாயமாகவும் அவர்களை மாற்றியது. முஸ்லிம்கள் மீது இஸ்லாம் விதித்த கடமைகளையும் கடந்த இருபத்து மூன்று ஆண்டுகளாக அவர்களது சமூக, கலாசார உயர்ச்சிக்காகப் போதிக்கப்பட்ட நபியவர்களது போதனைகளையும் அது அவர்களுக்கு நினைவூட்டியது. இலட்சிய முஸ்லிம் சமுதாயம் சம்பந்தமாக நபியவர்கள் கொண்டிருந்த மகோன்னதமான கருத்துக்களையும் சகோதரத்துவம், சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த நீதியான சமுதாயம் பற்றிய அவர்களது தத்துவத்தையும் அந்தப் பேருரை வெளியிட்டது. அந்த உரை இஸ்லாமிய இலக்கியத்தின் இணையற்ற ஒரு பகுதியாகவும் எல்லாக் காலங்களையும் எல்லா நாடுகளையும் சேர்ந்த மக்களுக்கு மறக்க முடியாத ஒரு பாடமாகவும் அமைந்து விட்டமையால், அது கலாசார முக்கியத்துவம் உடையதாகவும் இருந்தது. சுருங்கச் சொன்னால், இஸ்லாமிய கோட்பாடுகளின் சத்தாகவும் சுருக்கமாகவும் அமைந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்தப் பேருரையின் மூலம் நபி (ஸல்) அவர்கள் சகோதரத்துவமும் சமத்துவமுமே இலட்சிய முஸ்லிம் சமுதாயத்தின் உயிர் நாடிகள் என்ற கருத்தை வலியுறுத்தினார்கள்.
பிணியும் மரணமும்
நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜின் சடங்குகள் அனைத்தையும் ஒழுங்காக நிறைவேற்றிய பின்னர், தமது தோழர்களோடு மதீனாவுக்குத் திரும்பி, மாகாணங்களினதும் வர்க்க சமூகங்களினதும் அமைப்பைச் சீர்செய்வதில் ஈடுபட்டார்கள். இஸ்லாத்தின் ஆணைகளை மக்களுக்குப் போதிக்கவும் நீதி செய்யவும் ஷகாத் முதலான வரிகளைச் சேகரிக்கவும் மாகாணங்களுக்கும் பல்வேறு வர்க்கத்தவர்கள் வாழ்ந்த பகுதிகளுக்கும் அலுவலர்கள் (ஆமில்கள்) அனுப்பிவைக்கப்பட்டனர்.
ஹிஜ்ரி 11 ஸபர் மாதக் கடைசியில் (மே 26, 632இல்), மக்காவுக்கு மேற்கொண்ட நீண்டது.ாரப் பிரயாணத்தினாலும் தொடராகச் செய்த போர்களாலும் ஏற்கனவே களைப்புற்றிருந்த நபியவர்கள் காய்ச்சலாலும் கடுமையான தலைவலியாலும் பீடிக்கப் பட்டார்கள். நோயுற்றிருந்த போதிலும் கூட சுகதேகிபோலக் காணப்பட்ட அவர்கள் வழக்கம் போலப் பள்ளிவாயிலுக் குச் சென்று, தொழுகைக்குத் தலைமை தாங்கி வந்தார்கள். முடிந்த வரை தமது அறைக்கு அருகே இருந்த பள்ளிவாயிலில் தொழுகை நடத்தி வந்த போதிலும், அவர்கள் பல சமயங்களில் பேச முடியாத அளவுக்குப் பலவீனமுற்றுக் காணப்பட்டார்கள். சில தினங்களின் பின்னர், அவர்களது
(31D

Page 114


Page 115


Page 116


Page 117
இஸ்லாமிய வரலாறு பாகம் ! பகுதி !
அளிக்கப்பட்டன; சொத்துரிமை உட்பட எல்லா வகையான உரிமைகளும் சிறப்புரிமைகளும் வழங்கப்பட்டன. இத்தகைய சீர்திருத்தங்களின் விளைவாக அவர்கள் சமுதாயத்தில் பெருமைக்கும் மதிப்புக்குமுரிய ஓர் இடத்தைப் பிடித்துக் கொண்டனர். “மாதாவின் பாதத்தின்கீழ் சுவனம் இருக்கிறது” என்று கூறி, நபியவர்கள் பெண்களின் அந்தஸ்தை மேலும் உயர்த்தினார்கள். நபியவர்களால் பெண்களுக்கு வழங்கப்பட்ட உயர்ந்த அந்தஸ்து இன்றும் கூட உலகத்தால் போற்றப்படுகிறது. உண்மையில், நவீன உலக வரலாற்றில், பெண்களுக்கு உண்மையான சுதந்திரத்தையும் விடுதலையையும் பெற்றுக் கொடுத்த முதலாவது சீர்திருத்தவாதி முஹம்மத் (ஸல்) அவர்களே ஆவர்.
நபியவர்களது சமூக சீர்திருத்தங்கள் மூலம் அடிமைகளின் நிலைமை யிலும் மாற்றம் ஏற்பட்டது. அடிமைத்துவம் மனிதனின் நினைவுக்கெட்டாத காலத்திலிருந்தே இருந்து வந்திருக்கிறது. இஸ்லாத்திற்கு முன்னர் தோன்றிய எந்த மதமும் அதனை முற்றாக ஒழிக்க முயற்சி எடுக்கவில்லை. இஸ்லாத்திற்கு முந்திய அறேபியாவில், அடிமைத்துவம் ஒழிக்க முடியாத அளவுக்கு வேரூன்றி இருந்தது. அதனால், முஹம்மத் (ஸல்) அவர்கள் அதனை அடியோடு ஒழிக்க உடனானதும் தீவிரமானதுமான நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை. ஆயினும், அவர்கள் உலகத்திலிருந்து - குறிப்பாக அறேபியரின் சமுதாயத்திலிருந்து - அடிமைத்தனத்தை ஒழிக்க திட்டமிடப்பட்ட, செயல்முறைச் சாத்தியமான நடவடிக்கைகள் பலவற்றை ஒழுங்காகவும் படிப்படியாகவும் எடுத்து வந்தார்கள். இஸ்லாம் தோன்றும் வரை அறேபிய சமுதாயத்தில் சுதந்திரமாகவும் பரவலாகவும் நடைபெற்று வந்த அடிமை வியாபாரத்திற்கு அவர்கள் முற்றுப்புள்ளி வைத்தார்கள். “அடிமைகளை விடுதலை செய்தல் முஸ்லிம்களின் புனித கடமைகளுள் ஒன்று” என்று கூறி, அடிமைகளின் விடுதலைக்கு வழிவகுத்தார்கள். தமது அடிமையாக இருந்த ஷைத் பின் ஹாரித் என்பாரை விடுதலை செய்து, தாம் மற்றவர்களுக்குக் கூறியதைத் தாமே செயலில் செயற்படுத்திக் காட்டினார்கள். அடிமைகள் மீது அன்பும் இரக்கமும் உடையவர்களாக இருந்த நபியவர்கள் அடிமைகளைத் தங்களுக்குச் சமமாக நடத்துமாறும் அவர்கள் மீது கருணை காட்டுமாறும் தமது தோழர்களுக்கு ஆலோசனை கூறினார்கள். அடிமைகளை அடிமைகள் என்றும் அடிமைப் பெண்கள் என்றும் அழைப்பதையும் தடைசெய்தார்கள். இறுதியாக, முஸ்லிம்கள் அடிமைப்படுத்தப்படக் கூடாது என்று சட்டம் வகுத்து, அடிமைத்தனத்தை முற்றாக ஒழிக்க நடவடிக்கை எடுத்தார்கள். உண்மையில், உலக வரலாற்றிலே, அடிமைத்தனத்தை முற்றாக ஒழிப்பதற்கு ஆக்கபூர்வமான பணிகளைச் செய்து, அடிமைகளின் விடுதலைக்காகப் போராடிய முதலாவது மனிதப் புனிதர் நபி முஹம்மத் (ஸல்) அவர்களே ஆவர்.
முஹம்மத் (ஸல்) அவர்கள் ஒரு தேசத்தின் தந்தையாகவும்

இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
அல்லாஹற்வின் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகத் தாம் நிறுவிய அறேபியாவின் பொதுநலவாய அரசாங்கத்தின் தாபகராகவும் இருந்தார்கள். குறுகிய கால இடைவெளியான பத்து ஆண்டுகளில், அவர்கள் அவர்களுக்கு ஆட் f IIᏛJIIᏧᏏ முன்னரோ பின்னரோ அறேபியாவில் நிறுவப்பட்டி ராத
குடியாட்சிப் பொதுநலவாய அரசாங்கம் ஒன்றை நிறுவி, அதன் முதலாவது ஆட்சியாளரானார்கள்; வேற்றுமையில் மூழ்கிக்கிடந்த மக்களை சகோதரத்துவம், ஒற்றுமை ஆகிய பிணைப்புகள் மூலம் இஸ்லாமியக் கொடியின்கீழ் ஒரே மக்களாக ஒன்றுபடுத்தி, நாட்டில் நிலையான அமைதியையும் ஒழுங்கையும் நிலைநிறுத்தினார்கள். இந்தப் பிணைப்புகள் பல்வேறு வர்க்கங்களைச் சேர்ந்த மக்களிடையே உறவுகளை ஒன்றிணைக்கவும் அவர்களிடையே குடியாட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்கவும் உதவின.
தீவிர குடியாட்சியாளராக இருந்த நபியவர்கள் சகோதரத்துவம், சமத்துவம், நீதி, சுதந்திரம் ஆகிய குடியாட்சி அம்சங்களின் அடிப்படையிலே அறேபியாவில் தமது பொதுநலவாயத்தை நிறுவினார்கள். இஸ்லாத்திற்கு முந்திய அறேபியாவில் மக்கா குறைஷகளே ஆளும் வர்க்கமாக இருந்தனர்; ஆனால், நபியவர்கள் அதே உரிமைகளையும் சிறப்புரிமைகளையும் மதீனாவாசிகளுக்கும் வழங்கினார்கள். தமது இஸ்லாமிய அரசில் சகல உரிமைகளோடும் வாழ யூதர்களையும் கிறித்தவர்களையும் நபியவர்கள் அனுமதித்தார்கள்; தமது சொந்தக் குடிகளைப் போலவே அவர்களையும் நீதியோடும் சமத்துவத்தோடும் நடத்தினார்கள். தனியாள் சுதந்திரத்தையும் பொதுச் சுதந்திரத்தையும் அங்கீகரித்த அவர்கள் தமது குடிகளையும் அவர்களது உடைமைகளையும் பாதுகாத்ததோடு, குடியியல் ஒழுக்கங்களின் வளர்ச்சியையும் பேணிவந்தார்கள்.
நபியவர்களால் நிறுவப்பட்ட இஸ்லாமிய அரசில், குர்ஆனிய சட்டங்களே நடைமுறைப்படுத்தப்பட்டன. அரசாங்கத்தின் யாப்பு அல் குர்ஆனாகவே இருந்தது. நேர்மைக்கும் நீதிக்குமே நபியவர்கள் முதலிடம் அளித்தார்கள். குற்றம் இழைத்தோர் நபியவர்களின் மிக நெருங்கிய உறவினர்களாக இருந்த போதிலும்கூட, எத்தகைய பாரபட்சமுமின்றி அல்குர்ஆனின் சட்டங்களுக்கேற்ப அவர்கள் தண்டிக்கப்பட்டனர். வழக்குகள் யாவும் நிற, மத, குல, தேசிய வேறுபாடின்றி நீதியாகவும் நேர்மையாகவும் விசாரிக்கப்பட்டுத் தீர்ப்பளிக்கப்பட்டன. வழக்கு விசாரணைகளில் அவ்வாறே நடந்து கொள்ளுமாறு நபியவர்கள் தமது தோழர்களையும் பணித்தார்கள். நபியவர்களின் பயங்கர எதிரிகளாக இருந்த யூதர்கள்கூட தங்கள் பிணக்குகளைத் தீர்வுக்காக அவர்களிடம் கொண்டுவருமளவுக்கு அவர்கள் நீதிக்குப் பிரபல்யம் வாய்ந்தவர்களாக விளங்கினார்கள்.
நபியவர்களால் அறேபியாவில் நிறுவப்பட்ட இஸ்லாமியப்
(25)

Page 118


Page 119
இஸ்லாமிய வரலாறு பாகம் பகுதி !
போது, கிடைக்கும் சமயம் உதவுவதாக உறுதியளித்து வந்தார்கள். அவர்களது தயாளமும் பெருந்தன்மையும் வசியம் போல மக்களை அவர்கள் பால் ஈர்த்தன. அவர்கள் தமது எதிரிகள்பால் காட்டிய பெருந்தன்மையும் யூதர், கிறித்தவர் முதலான பிற மதத்தார்பால் காட்டிய சகிப்புத்தன்மையும் வரலாற்றுப் புகழ்வாய்ந்தவை. உண்மையில், அவர்களிடமிருந்து வெளிப்பட்ட மகோன்னத குணங்களே அவர்களை மனித இனத்தின் தலைவராகவும் பூரணத்துவம் வாய்ந்த ஒரு மனிதராகவும் உயர்த்தி நின்றன.
முஹம்மத் (ஸல்) அவர்கள் ஒரு நபியாக இருந்த போதிலும், மற்ற மனிதர்களைப் போன்ற ஒரு மனிதராகவே வாழ்ந்தார்கள். முழு மனித இனத்தினதும் நேர்வழிகாட்டலுக்காக ஒரு நபியாகவும் தூதராகவும் அல்லாஹற்வால் அனுப்பப்பட்ட அவர்கள் மக்களுக்கு ஆத்மிகத்தைப் போதித்த அதே வேளை, ஆத்மிகத்தையும் உலகாயதத்தையும் இணைக்கும் ஒரு பாலமாகவும் விளங்கினார்கள். குடும்ப வாழ்வில் ஈடுபட்ட அவர்கள் மனிதர்களுக்கு அல்லாஹ்வால் ஆகுமாக்கப்பட்ட அனைத்திலிருந்தும் பயன்பெற்று வந்தார்கள். தமது தோழர்களுக்கு வாழ்வில் ஆகுமாக்கப்பட்ட சுகங்கள் அனைத்தையும் அளவோடு அனுபவிக்குமாறு போதித்த அவர்கள் விலக்கப்பட்டவற்றிலிருந்து மட்டும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு பணித்தார்கள்; திருமண வாழ்வில் ஈடுபடுமாறும் வாழ்க்கை வழியைத் தேடிக் கொள்ளத் தொழில் புரியுமாறும் அதேவேளை ஆத்மிக உயர்ச்சியை அடைந்து கொள்ளும் பொருட்டு நல்ல செயல்களை அதிகம் அதிகம் இயற்றுமாறும் ஊக்கப்படுத்தினார்கள்.
நபி முஹம்மத் (ஸல்) அவர்களது வாழ்க்கை மிக எளிமையானதாக இருந்தது. அவர்களது வாழ்வில் ஆடம்பரமோ பகட்டோ இருக்கவில்லை. பேரீச்சமரக் கிளைகளாலும் களியாலும் கட்டப்பட்ட குடிசை ஒன்றிலேயே அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். தமது வேலைகள் ଗୋଗfill அனைத்தையும் தாமாகவே செய்தல் அவர்களது வழக்கமாக வாழ்க்கை இருந்தது. வீட்டுப் பணிகளில், அவர்கள் தமது மனைவியர்களுக்கு உதவினார்கள். கிழிந்த தமது ஆடைகளை அவர்களே சீராக்கிக் கொண்டார்கள்; தமது பாதணிகளைக் கூட அவர்களே திருத்திக் கொண்டார்கள். ஸ்டான்லி லேன் பூல் என்பார் கூறுவது போல, "அவர்கள் தம்மீது பெரும் கவனம் செலுத்தினார்கள். ஆயினும், தமது பழக்கங்களில் மிக எளிமையானவர்களாகவே இருந்தார்கள். அவர்கள் அதிகாரத்தின் உச்சத்தை அடைந்த போது கூட அவர்களது உணர்ணல், பருகல், ஆடை, தளபாடம் ஆகியன அவற்றினர் புராதன நிலையிலேயே இருந்தன. அவர்கள் மிக உயர்வாக மதித்த ஆயுதங்களைத் தவிர, அவர்கள் பயன்படுத்திய ஒரே ஒரு போகப்பொருள் அபிசீனிய அரசர் நஜாஷf அன்பளிப்புச் செய்த ஒரு சோடிச் சப்பாத்துக்களே. ஆயினும் நறுமணப்

இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
'' 6
பொருள்களை மிக ஆசையோடு நேசித்தார்கள .
வெற்றி வாய்ந்த சமயத்தலைவராகவும் வீரமும் திறமையும் உள்ள படைத் தளபதியாகவும் தூரநோக்குடைய சூழியல் அறிஞராகவும் விளங்கிய முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது அசாதாரணப் பண்புகளாலும் வெற்றி களாலும் உலக மாந்தர் அனைவரையும் விட மேம்பட்டவர்களாக இருந்தார்கள். அவர்களின் இந்த அற்புதப் பண்புகளுக்காகவே அவர்கள் காலத்தை வென்ற மகத்தான இலட்சிய புருடராகவும் பூரணத்துவம் வாய்ந்த மனிதராகவும் கருதப்படுகிறார்கள். உண்மையும் அதுவே ஆகும். புகழ் பெற்ற பிரஞ்சுக் கவிஞரான லாமர்டைன் கூறுவது போல, “தத்துவஞானி, பேச்சாளர், தீர்க்கதரிசி, சட்டமியற்றுநர், கருத்துக்களின் வெற்றியாளர், பகுத்தறிவுக்கேற்ற சித்தாந்தங்களை மீட்டுத் தந்தவர்; உருவங்கள் இல்லாத வழிபடு மரபு ஒன்றைத் தந்தவர்; இருபது நிலப் பேரரசுகளையும் ஒரு ஆத்மிகப் பேரரசையும் நிறுவியவர்; அவர் தான் முஹம்மத். மனித மேன்மையை அளவிடக்கூடிய நியமங்கள் அனைத்தாலும் அளந்த போதிலும், அவரை விடவும் பெரிய மனிதர் எவரேனும் இருக்கமுடியுமா என்று தான் கேட்கத் தோன்றுகிறது’." நபியவர்களது மகோன்னதமான பண்புகளையும் திறமைகளையும் கருத்திற் கொண்டே தான் ஒருமுறை அறிஞர் பெர்னாட் ஷா, “இன்றைய உலகின் சர்வாதிகாரத்தை முஹம்மதைப் போன்ற மனிதர் ஒருவர் ஏற்றுக் கொள்வாராயின், மிக அத்தியாவசியமாகத் தேவைப்படும் சமாதானத்தையும் சுபீட்சத்தையும் உலகுக்குத் தரும் ஒரு வழியில் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் அவர் வெற்றி அடைவார் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு” என்று கூறினார்." இத்தகைய உன்னத மனிதர் கொண்டு வந்த இஸ்லாத்தின் வரலாறு அன்னாரின் மரணத்தோடு அதன் இயக்கத்தை நிறுத்தி விடவில்லை. அது காலச் சக்கரத்தோடு சேர்ந்து சுழன்று கொண்டே வருகிறது. மறுமை நாள் வரை அதன் இயக்கம் கண நேர ஓய்வு கூட இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
☆☆☆
76. S. Lane - Poole, op. cit. p. 17
77. Quoted in Afzalur Rahman. op. Cit. I/185
78. A Collection of writings of some of the Eminent Scholors.
( Published by the Workig Muslim Mission. 1935) p. 77

Page 120


Page 121
,లో~ محی
------
A Yen மாமா عمصمحمد
கி ح حسبصحسسسسسسسسسسسس
6060 | lD6 سسسسسسسسسسستتسمح أسس سيستمسكة
لال! اسسسسسسي
| lg |
வட அறேபிய அரசுகள் 5
இஸ்லாத்திற்கு முன்பு
ஆங்கில மைல்
 
 
 

இஸ்லாமிய வரலாறு பாகம் 1 பகுதி !
உசாத்துணை நூல்கள்
ஆங்கிலம்
1. Ameer Ali, Syed: A Short HiStOry Of the SaraCenS
2.
Ameer Ali, Syed: The Spirit Of Slam
Bashumail, Muhamad Ahmed: The Great Battle of Badr
Brokemann, K. History of Islamic People
Bukhsh, Khuda: Contribution to the History of lalamic Civilization. VOl. i
Buksh, K: A History of Islamic People (Translation of a German Work)
Cambridge HİStory of lalam, The, VO. I A
Fidai, Rafi Ahmed: Concise History Of Muslim World, Vol.
Galwash, Ahmed A: The Religion of Islam. Vol.
O. Gibb, H.A.R.: MohammadaniSm
11. Gibb & KramerS (Ed): Shorter Encyclopaedia of lSlam
12. Glubb, Sir, J.B.: The Life and Times of Muhammad
3. Guillaume, Alfred: Islam
14. Haykal, Muhammad HuSSain: The Life of Muhammad
15. Hell, OSeph: The Arab Civilization (Eng. Trans.)
16. Hitti, Philip K. : History of the ArabS
17. Hitti, Philip K. : The ArabS
18. HuSSaini, S.A. Q. : Arab Administration
19. ldbal, Afzal: Culture of Islam
20. Landau, ROm: Islam and the ArabS

Page 122


Page 123
ஆசிரியரின் பிற
1.
2
11.
12.
13.
14.
15.
பரீட்சைகளி
அறிவுத்துை
மதுக்கலசம்
பாலியற் பிர
கவிதாஞ்சலி
இஸ்லாமிய
இஸ்லாமிய
இஸ்லாமிய
 
 
 

3 நூல்கள்
ற் சித்தி
பெறுவதெப்படி?
றயில் முஸ்லிம்கள்
ாச்சினைகள்
(கவிதை)
வரலாறு I
வரலாறு I
வரலாறு IV
வளர்த்த
தை)
)
மணிகள்
கவிதை)
இஸ்லாமும்
ISBN
முஸ்லிம்கள்
(கவிதை)
955 - 96577 - O - 4