கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஜீவநதி 2013.03

Page 1


Page 2


Page 3
நதியினு
கவிதைகள்
ஆரையூர் தாமரை க.சட்டநாதன் வெலிகம ரிம்ஸா முஹம்மத் கு.எலிசெபத் தியத்தலாவ எச்.எவ்ரிஸ்னா நீலா பாலன் செல்வராசா குர்சினி
கட்டுரைகள்
கெகிராவ ஸஹானா எஸ்.முத்துமீரான் கெகிறாவ ஸிலைஹா அபூர்வன் அந்தனிஜீவா இ.சு.முரளிதரன் முருகபூபதி லோ.தேனுஷா Bມກວິaຮອງືອນຫົ ຫົວມມືພົງຮກຫມື
குறுங்கதை
வேல் அமுகுன்
பேசும் இதயங்கள்
அட்டைப்படம் - நன்றி இணையம்

சிறுகதைகள்
ப.விஷ்ணுவர்த்தினி திக்குவல்லை கமால்
எஸ்.குணேஸ்வரி थ-Jlठ्गाiी
நேர்காணல்
குந்தவை
குறுநாவல்
ஆனந்தி

Page 4
ஜீவநதி
2013 பங்குனி இதழ் - 54
பிரதம ஆசிரியர்
கலாமணி பரணிதரன்
துணை ஆசிரியர்
வெற்றிவேல் துஷ்யந்தன்
uğ5lü unraflflur
கலாநிதி த.கலாம60ரி
தொடர்புகளுக்கு : கலை அகம் சாமனந்தறை ஆலgப்பிள்ளையார் வீதி அல்வாய் வடமேற்கு அல்வாய்
ෆිඛffiගdb.
ஆலோசகர் குழு:
திரு.தெரிையான் திரு.கி.நடராஜா
தொலைபேசி 0775991949 0212262225
E-mail: jeevanathy Gyahoo.com
வாங்கித் தொடர்புகள் K. Bharaneetharan Commercial Bank Nelliady A/C - 80802 1808 CCEYLKLY
ச்சஞ்சிகையில் இடம்பெறும் அனைத்து |ஆக்கங்களின் கருத்துக்களுக்கும் அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப் புடையவர்கள். பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படு பம் படைப் புகளைச் செம்மைப்படுத்த ஆசிரியருக்கு உரிமை உண்டு.
- ஆசிரியர்
ஜீவநதி
g பெண்களி முக்கியத்து ரீதியாக மக "(c நடத்தப்பட இலக்கியங்
(GL 600T 600ft எழுப்பப்பட் அவ்வாறு 6 தற்போதை كك களும் பா பத்திரிகைச் ஒடுக்குமுை இல்லை 6 சிந்தனைக தொடுவதாக இ என்ற வில் இலக்கியங் களாகத் த படிப்பதற்கு, செய்துகொ இலகுவில் எழுத்துக்கல் 'LC பலிப்பதாக தெறித்தாற்( பெண்களின் வன்முறைக கொள்ளப்ப
 

ஜீவநதி
(கலை இலக்கிய மாத சஞ்சிகை)
அறிஞர் தம் இதய ஓடை
ஆழ நீர் தன்னை வமாண்டு செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றி. புதியதோர் உலகம் செய்வோம்.!
- பாரதிதாசன்
வதேச மகளிர் தினம்
ம்மாதம் சர்வதேச மகளிர் தினத்தை உள்ளடக்கிய மாதம். ன் சுதந்திரத்துக்கும் உரிமைகளுக்கும் அந்தஸ்துக்கும் வமளித்தலே மார்ச் 8 ஆம் திகதி அன்று அனைத்துலக 5ளிர் தினத்தைக் கொண்டாடுதலின் நோக்கமாகும். பண்கள் இந்த உலகத்தில் ஆண்களுக்குச் சமானமாக வில்லை; அவர்களை இழிவுபடுத்தும் வகையிலேயே களும் படைப்புகளும் உருவாக்கம் பெற்றுள்ளன என்ற குரல் பச் சிந்தனையாளர்களாலும் ஆதரவாளர்களாலும் டு வருகின்றது. அதேவேளை, பெண் உடலை எழுதலும், ாழுதுவதனூடாக பெண் உடல்வலியை எடுத்துக் காட்டுதலும் ய படைப்பு முயற்சிகளில் முனைப்புப் பெற்று வருகின்றது. பூனால், நடைமுறையில் பெண்களுக்கெதிரான வன்முறை லியற் துஷ்பிரயோகங்களும் அதிகரித்து வருவதாகவே செய்திகளும் அறிக்கைகளும் சுட்டுகின்றன. ஆயின், பெண் றக்கெதிராக நாம் எடுக்கின்ற நடவடிக்கைகள் போதியதாக ான்பதையும் பெண்ணியத்துக்காக குரல் கொடுக்கும் 5ளும் கருத்துக்களும் படைப்புகளும் மக்கள் மனதைத் 5 இல்லை என்பதையுமே இவை எடுத்துக்காட்டுகின்றன. ந்நிலையில், இலக்கியங்களாற் சாதிக்கக்கூடியவை யாவை 1ா எம்முள் எழுகின்றது. வாழ்வியலோடு ஒட்டாத களாற் பயனில்லை. வாழ்வியற் கோலங்களைப் படைப்பு ரும்போது மொழியின் பிரயோகம், அப்படைப்புகளைப்
வாசகர்களுக்குத் தடையாக இல்லாதிருப்பதை உறுதி ள்ள வேண்டும். மொழியினூடாக நகாசு வேலைகள் செய்து, விளங்கிக் கொள்ளக் கூடிய ஒன்றையும் சிக்கலாக்கும் ரினால் எவ்வித பயனுமில்லை. க்கள் இலக்கியம் மக்களின் வாழ்வியலைப் பிரதி
அவ்வாழ்வியலின் சில அம்சங்களை, பொறிகள்
பால உணர்த்துவதாக அமையவேண்டும் என்பர். இது
அவலங்களை, அவர்கள் மீதான ஒடுக்குமுறைகளை, ளை வெளிப்படுத்த முனையும் இலக்கியங்களிலும் கருத்திற் வேண்டும்.
- க.பரணிதரன்
2 இதழ் 54

Page 5
தமிழில் தோன்றிய சித்தர் இலக்கியம் தமிழுக்கு என்றும் பெருமை சேர்ப்பது. சங்க காலந் தொட்டே சித்தர் இலக்கியம் வளர்ந்து வருவதாகக் கொள்ள முடியும், இன்றுவரை தொடர்ந்து செல்கின்ற இவ்விலக்கியவகை சமயம் சார்ந்ததாகவே பெரும் பாலும் காணக்கிடக்கிறது.
மனம், வாக்கு, காயம் ஆகியவற்றில் சித்தி பெற்றவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர். அதாவது தெளிந்த ஞானம் பெற்றவர்கள், மக்களின் மனவிருளைப் போக்கியோர்கள் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர். சித்தத்தை வென்றவர்களும், சித்து விளையாட்டுக்களை விளையாடியவர்களும் கூட சித்தர்கள் எனப்பட்டனர். தத்துவங்களைக் குப்பை யென்றும், வேத சாத்திரங்களைப் பொத்தல்கள் என்றும் கூறிய அவர்களது பாடல்களில் கடுஞ்சொற்களும், நேரடித் தன் மையும் , இகழ்ச்சி மொழிகளும் மேலோங்கிக் காணப்படுகின்றன. ஒரு மலத்தன் என்கின்ற மாட்டை முறுக்கிக் கட்டுவது பற்றிக் கூறுவதனூடாக மனவடக்கம் பற்றிப் பாடிய இடைக் காட்டுச் சித்தர் பாடல்களும், மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்குத் தேங்காய்ப்பால் ஏதுக்கடி என்ற குதம்பாய்ப் பாடல்களும் நாம் இனிது ரசிக்கத் தக்கன. நந்தவனத்திலோர் ஆண்டி எனும் பாடலைப் பாடியதால் பண்டைத்தமிழிலக்கியத்தில் குறியீட்டுக் கலையை மேலோங்கச் செய்த கடுவெளிச் சித்தர் பாடல்களும் என்றும் சிந்தித்துப் போற்றத்தக்கவை.
சித்தர் பாடல்கள் தொகுக்கப்பட்ட முறைகள் குறித்து குழப்பங்கள் காணப்படுகின்றன. அவை பிழை
களின்றி அச்சிடப்பட்டனவா, சிதைவுகளுக்கு இடமா
கினவா என்பது போன்ற கேள்விகள் எம்முள் தொக்கி
ஜீவநதி 3
 

išgir VS Ausdressit
கெகிறாவ ஸவறானா
ܢܟܣܬܐ
நிற்பது போலவே, இவர்களின் பாடல்களின் உண்மைப் பொருள்களும் மறைவாகவே தோன்றுகின்றன.
எது எப்படியிருப்பினும் நாம் அறிந்து
வைத்திருக்கின்ற சில பாடல்கள் உயர்ந்த பல கருத்துக் ளைக் கூறுகின்றன. உதாரணமாக,
என்றும்,
என்றும்,
என்றும்,
என்றும்,
என்றும்,
வாயிலே குடித்தநீரை எச்சில் என்று சொல்லுறீர் வாயிலே குதப்ப வேதமெனப்படக் கடவதோ வாயில் எச்சில் போக என்றுநீர்தனைக்குடிப்பீர்காள் வாயில்எச்சில்போனவண்ணம்வந்திருந்துசொல்லுமே,
காலைமாலை நீரிலே முழுகும் அற்பமூடர்காள் காலைமாலைநீரிலே கிடந்ததேரை எண்பெறும்
வேணும் வேணும் என்றுநீர்வீண் உழன்றுதேடுவீர் வேணும்என்றுதேடினாலும்உள்ளதல்லதுஇல்லையே வேணும்என்றுதேடுகின்றவேட்கையைத்துறந்தபின் வேணும்என்றஅப்பொருள்விரைந்துகாணல்ஆகுமே
புலால்புலால் புலால் அதென்றுபேதமைகள்பேசுறீர் புலாலைவிட்டு எம்பிரான் பிரிந்திருந்ததுஎங்ங்னே புலாலுமாய்ப்பிதற்றுமாய் பேருலாவும்தானுமாய்
புலாலிலேமுளைத்தெழுந்தபித்தன்காணும்அத்தனே
ஆட்டிறைச்சிதின்றதில்லைஅன்றும்இன்றும்வேதியர் ஆட்டிறைச்சிஅல்லவோயாகம்நீங்கள்ஆற்றலே மாட்டிறைச்சிதின்றதில்லை அன்றும்இன்றும்வேதியர் மாட்டிறைச்சிஅல்லவோமரக்கறிக்கிடுவது
நீரிலேபிறந்திருந்துநீர்ச்சடங்குசெய்கிறீர் ஆரைஉன்னிநீரெலாம் அவத்திலே இறைக்கிறீர்
இதழ் 54

Page 6
வேரை உண்ணிவித்தை உன்னிவித்திலை முளைத்தெழும் சீரை உண்ண வல்லிரேல் சிவபதம் அடைவிரே என்றும் பாடிய சிவாக்கியர், "சுட்ட சட்டி சட்டுவL கறிச்சுவை அறியுமோ?" எனக்கேட்கும் நவீன சிந்தனை மரபைப் பாடல்களில் இயல்பாகவே தவழவிட்டவர்.
சுட்டெரித்த சாந்து பூசும் சுந்தரப் பெண் மதிமுகத் திட்டநெட்டு எழுந்தறியாது ஏங்கிநோக்குமதவலீர் பெட்டகத்துப்பாம்புறங்கும்பித்தலாட்டம் அறியிரோ கட்டவிழ்த்துப்பரமன்பார்க்கில் கதிஉமக்கும் ஏதுகாணி என்று பெண்களைப் பாம்புக்கு ஒப்பிட்டுப்பாடுகிறார். இன்னொரு பாடலில்,
யோகசாலைகாட்டுவார் உயரவும் எழும்புவார் வேகமாக அட்டசித்துவித்தை கற்று நெட்டுவார். மோகம் கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கிப்பின் பேயது பிடித்தவர்போல் பேருலகில் சாவரே என்று மிக அசிங்கமாகப் பாடுகிறார்.
இவரைவிட மேலாக பட்டினத்தார் பாடல்கள் அமைகின்றன. குடும்பமாக வாழ்ந்து, குழந்தை ஒன்றையும் எடுத்து வளர்த்துப் பின்னர் அக்குழந்தை பெரியவனாகியதும் அவனால் ஞானம் கிடைக்கட் பெற்றவர் பட்டினத்தார் என்ற கூறப்பட்டாலும் அவருடைய பெயரில் பலர் இருந்ததாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. தன்னுடம்பை ஆசைக்கயிற்றில் ஆடும் பம்பரம் என்று குறிப்பிட்ட இவர்,
வேர்த்தால் குளித்து பசித்தால் புசித்து விழிதுயின்று பார்த்தால் உலகத்தவர் போலிருப்பர் பற்றற்றவரே என்று மிகச் சிறந்த சித்தர் வரைவிலக்கணப் பாடலைட் பாடிய அவர், "பெண்ணாகி வந்ததொரு மாயப் பிசாசு என்று பெண்ணைச் சாடுகிறார்.
நாறும் உடலை நரிப்பொதிசோற்றினை நான்தினமும் சோறும் கறியும் நிரப்பியபாண்டத்தைத்தோகையர்தம் கூறும் மலமும் இரத்தமும் சோருமங்குழியில் விழாது ஏறும்படியருள்வாய் இறைவாகச்சிஏகம்பனே என்றும்,
சீயும் குருதிச் செழுநீர் வழும்பும் செறிந்தெழுந்து பாயும் புடவை ஒன்றில்லாதபோது பகல் இரவாய் ஈயும் எறும்பும் புகுகின்ற யோனக்கு இரவுபகல் மாயும் மனிதரை மாயாமல் வைக்க மருந்தில்லையே என்றும் பாடுகிறார். பெண்ணோடு வாழ்ந்து இல்லறம் நடத்திப் பின் பெண்ணைப் பழித்துப் பாடும் இப்பாடல்கள் காரணமாக பட்டினத்தார் தனது தத்துவத்தில் பலவீன மானவரென்றே தோன்றுகிறார். பாம்பாட்டிச் சித்தர் எனப்படுபவர் பாம்பு வடிவாகவுள்ள ஆன்ம சக்தியை மேலெழுப்பி விடுதலை பெறுவதை நோக்காகக் கொண்ட பல பாடல்களைப் பாடியவர்.
சிக்குநாறுங் கூந்தலையே செழுமை மேகமாய்ச்
செப்புவார்கள் கொங்கைதனைச் செப்புக்கொப்பதாய்
ஜீவநதி |

நெக்குநெக்குஉருகிப்பெண்ணைநெஞ்சில் நினைப்பார் நிமலனை நினையார் என்றுஆடுபாம்பே என்று இவர் பாடுகிறார்.
இன்னும், முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள் பலர் சித்தர்களாகக் காணப்பட்டுள்ளனர். ஆனால், அவர் களது பாடல்களில் இறைவனோடு ஒன்றிப்போதல் என்ற சூபித்துவக் கொள்கை மேலோங்கிக் காணப்படு கின்றது. ஆண்டாளைப் போன்று இறைவனைக் கணவனாக உருவகித்துப் பாடிய குணங்குடி மஸ்தான் என்னைவிட்டால் மாப்பிள்ளைமார் எத்தனையோ உன்றனுக்கே உன்னைவிட்டால் பெண் எனக்கு உண்டோ
மனோன்மணியே என்று பாடுகிறார்.
சோற்றுப் பொதியைச் சுமந்தேயலைந்துசுழற் காற்றுத்துரும்பானேன்கண்ணேறகுமானே என்று பாடுகின்ற இவரும்.
கொட்டிய கருந்தேள் நிகர்த்தமின்னார் குவிந்தவிரு பொற்கொங்கையுங்கையுங் கோசமொடுமும்மதமிறைக்கின்ற கர்விதக் குஞ்சரக் கொம்புதானோ என்று பாடுகிறார். கோதையிள மின்னார்களின் யோனிப் பெருங்கேணி பற்றி இவரும் பாடத்தவற வில்லை என்பது ஈண்டு கவனிக்கற் பாலது.
இவர் திருமண வாழ்வைத் துறந்தவர் என்று சொல்லப்படுகிறது. ஆயினும், பல முஸ்லிம் புலவர்கள் பெண்களுடன் உறவு கொண்டிருந்து பின்னர் அவர்களைத் துறந்தவர்களாகக் காட்சிதருகிறார்கள்.
இவ் வாறு எல் லாப் புலவர்களும் - சித்தர்களும்-பெண்களை வெறும் உடம்புகளாகவே கருதிப் பாடியது ஏன்? அக்காலத்தில் தாசியர் வாழ்ந்தமை என்பது உண்மை என்றாலுமே, பெண் களை- அவர்கள் தாசிகளே ஆயினும்- கனிவோடு பார்க்க இயலாத இவர்களது பாடல்கள் இவர்தம் மதிப்பைக் கீழிறக்கவே செய்கின்றன. பத்தினியைப் பழிக்காதே என்றும், பெண்ணைத் தாயாகப் பாரென்றும், ஆணும் பெண்ணுமாகி நின்ற பரம் பொருளைப் போற்று என்றும் கூறுகின்ற ஒன்றிரண்டு பாடல்கள் தவிர ஏனைய அனைத்தும் இவ்வாறே அமைந்தமைக்கு வேறேதும் காரணங்களுண்டா?
பாரதியும், ஜெயகாந்தனும்கூட சித்தர் பரம் பரையைச் சேர்ந்தவர்கள்தான். பாரதி பெண்ணைப் பராசக்தியாகக் கண்டான். அதையே அடியொற்றிச் சென்ற ஜே.கே. இன்றும் எம்முடன் இருந்து அதை நிரூபித்துக்கொண்டிருக்கிறார். முன்னைய சித்தர்கள் இவ்வாறு பாடி பெண்களை இழித்துரைத்தது ஏன்?
இதழ் 54

Page 7
ப.விவஷ்ணனுவர்த்தினி
நினைவு
நல்லது
புதிய இடம் அறிமுகம் இல்லாத மனிதர்கள் பேச வாய் இருந்தும் புரிந்து கொள்ள முடியாத மொழி: உதவிக்கு யாரும் இல்லாத கையறு நிலை. சாந்தினிக்கு, வந்த வழியே திரும்பிப் போய்விடலாம் போலிருந்தது.
யாரிடம் கேட்பது, எல்லோரும் இயந்திர கதியில் தம்வேலைகளில் ஆர்வமாக இருந்தனர். மடியில் கனம் இல்லாவிடில் வழியில் பயம் இல்லை என்பார்கள். இப்போது மடியில் கனம் இருப்பதனால்தான் வழியில் பயப்படவேண்டியிருக்கிறது. இரண்டு லட்சம் ரூபாய் காசைக் கையில் வைத்துக் கொண்டு அலைவது சாந்தினிக்குப் பயத்தை உண்டு பண்ணியது.
அவள் பிறந்தது முதல் இந்த இருபத்தியெட்டு வயது காலப் பகுதியில் ஒரு முறைகூட கொழும்புக்கு வரவேண்டிய தேவை இருக்கவில்லை, இது தான் முதல் முறை "சொன்ன இடத்தில் பஸ் ரைவர்” கொண்டு வந்து விட்டுவிட்டார். பஸ்சில் கூடவந்தவர்களுடன் சேர்ந்து போனதால் லொட்ஜில் எந்தப்பிரச்சினையுமின்றிறுாமும் கிடைத்துவிட்டது. - தனியாக தாங்கள் இரண்டுபேரும் எப்படி இங்கு சமாளிக்கப்போகிறோமோ என்று அவளின் அம்மாவிற்கு ஒரே யோசனை. அதை அவர் வெளிக் காட்டிக்கொள்ளாவிட்டாலும் முகம் அதனைப் பிரதி பலித்துக்காட்டியது. அம்மா பயப்படுவது போல சாந்தினிக்கும் பயம் தான். ஆனாலும், அதை வெளிக் காட்டிக் கொள்ளாது இருந்தாள். தன்னுடைய தைரியத்தை நம்பித்தான் தன் அம்மா கொஞ்சம் தெம்பாக இருக்கிறார் என்பது அவளுக்குத் தெரியும். தாங்கள் போகவேண்டியது "றோயல் கொஸ்பிற்ரலுக்கு" என்பது மட்டும் தான் அவளுக்கு தெரியும். அங்கு எப்படிப்போவது, யாரைப் பார்க்கவேண்டும் என்ப
தெல்லாம் தெரியாது.
பஸ்ஸில் அவர்களோடு கூட வந்து லொட்ஜில் நிற்பவர்களிடம் உதவி கேட்கலாம் என்பது அவளின்
ஜீவநதி 5
 
 
 

அம்மாவின்யோசனை. தங்களுடைய தேவையை நிறைவேறுவதற்காக மற்றவர்களை குழப்பக்கூடாது என்பது சாந்தினியின் நியாயம். ஆனாலும் அம்மாவின் வற்புறுத்தலாலும் வேறு வழியில்லை என்பதாலும் சாந்தினியும் அவளின் அம்மாவும் அவர்களது றுாமிற்கு சென்றனர். ஆனால் அவர்களது றும் பூட்டி இருந்தமை அவர்களுக்கு பெரும் ஏமாற்றமாகவே இருந்தது.
நடக்கிறதைத் தவிர மற்ற எல்லாவற்றிக்கும் காசு இல்லாமல் கொழும்பில் இருக்கமுடியாது: வீணடிக்கிற ஒவ்வொரு நிமிசத்துக்கும் காசுதான். பிரயோசனம் இல்லாமல் கழிகின்ற ஒவ்வொரு நிமிசமும் அவர்களின் சொந்த காணியைத்தான் சாந்தினிக்கு நினைவு படுத்துகின்றது. அந்தக்காணியை விற்ற காசைக்கொண்டு தானி, தானும் அம்மாவும் கொழும்பில் நடமாடுகின்றோம் என்பதை அவளின் உள்மனசு அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தது.
இவ்வளவு தூரம் வந்துவிட்டோம், என்ன பாடு பட்டாவது வந்தவேலையை முடித்துவிட்டுத்தான் முல்லைத்தீவிற்கு திரும்பவேண்டும் என்பதே அவளின் எண்ணம். ஆம்பிளைத் துணையில்லாமல் ஒரு காரியத்தை செய்து முடிப்பது என்பது எளிதான காரியம் இல்லைத்தான்.
சாந்தினியின் இரு தம்பிமாரும் ஒரு முறை அவளுடைய மனக் கண்ணில் தோன்றி மறைந்தனர். அன்பான அவளுடைய இரு சகோதரர்களையும் போரின் தீப்பிழம்புகள் எரித்துச்சாம்பலாக்கியதை இன்றுவரை அவளால் தாங்கிக் கொள்ளமுடிவதில்லை. சின்ன வயதிலிருந்தே சாந்தினியின் இரு தம் பிமார்களும் அவள் மேல் நிறைய அன்பு கொண்டிருந்தது போல, சாந்தினியும் அவர்கள்மேல்
இதழ் 54

Page 8
பாசமாய் இருந்தாள். சாந்தினிக்கு இருபது வயது ஆகும்போது, அவர்கள் அவளுடைய கல்யாணத்தையார் நடத்திவைப்பது என்பதில் போட்டிபோடுவார்கள்" அக்கா உனக்கு டொக்ரர் மாப்பிள்ளை பார்த்து நிறைய சீதனம் கொடுத்து, உன்ர கலியாணத்தை நடத்திவைப்பன்", "நீ இல்லை நான்தான்டா அக்காவின் கலியாணத்தை நடத்தி வைப்பன் பார்” என ஆளுக்காள் செல்லச் சண்டை போடுவதை நினைத்தும், 30 வயதாகியும் தாம் முதிர் கன்னியாகவே இருப்பதை நினைத்து சாந்தினியின் கண்கள் அவளை அறியாமலேசில துளிகளைச் சிந்தின.
வழமைபோல சாந்தினியின் சகோதரர்கள் அன்றிரவும் வேலையால் வந்தவுடன் கைகால் முகம் அலம்பி, முற்றத்தில் குவிந்துள்ள மணல் மேடையில் சாப்பிட உட்கார்ந்து விட்டார்கள். சாந்தினி அடுப்படிக்குள் இருந்தபடி சுடச்சுட தோசை சுட்டுக் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தாள். தீடீரென எங்கிருந்தோ வந்த ஷெல் முற்றத்தில் விழுந்ததில் அவர்கள் இருவரதும் உடலும் சிதறி வீசியெறியப்பட்டன. வீட்டுக்குள் இருந்த சாந்தினியின் தாயும் அதிர்ச்சியில் இருந்து மீளப் பல மணி நேரமாயிற்று. சாந்தினி அந்த அதிர்ச்சியோடு மயக்கமடைந்து விட்டாள். தம்பிமாரின் உடலை பதம்
பார்த்த ஷெல் துண்டு ஒன்று அவளது கழுத்தையும் பதம்
பார்க்க தவறவில்லை.
போதிய வைத்திய சேவையின்மையால் சாந்தினிக்கு கண்முழிக்க ஏழு நாட்கள் ஆயிற்று. அதன் பின் அம்மாவின் தயவுடன் அவள் கொஞ்சம் கொஞ்சம் உடல்தேறி வந்தாள்.
யுத்த சூழலில் எல்லோருக்கும் எமுதப்பட்ட தலைவிதி அவர்களுக்கும் விதிவிலக்காக அமைய வில்லை மற்றவர்களைப்போலவே இவர்களும் படாத பாடு பட்டு சொந்த இடத்துக்குள்ளேயே இடம் பெயர்ந்து, குறிப்பிட்ட கால முகாம் வாழ்க்கை - மீள்குடியேற்றம் என்று எத்தனையோ கண்டங்களையும் தாண்டி மீண்டும் சொந்த இடத்திற்கு வந்து, தையல், ஊறுகாய்போடல் போன்ற கைத்தொழில்களின் உதவியோடு தாயும் மகளுமாக ஒருவாறு காலத்தை ஒட்டினர்.
சாந்தினி, தன் கடந்த கால வாழ்க்கையை மறந்து புதுவாழ்வைத் தொடங்கியபோது தான் போரின் வடுக்கள் வலியைத் தந்தன. ஷெல் துண்டு சாந்தினியின்
கழுத்தில் பெரும் வலியைக் கொடுத்தது. ஒபரேசன் 囊 மூலம் தான் ஷெல் துண்டை எடுக்க வேண்டும் எனவும், முல்லைத்தீவு வைத்திய சாலைகளில் போதிய வசதியின்மையால் கொழும்புக்கு கொண்டு சென்றுதான் ஒபரேசன் செய்யவேண்டும் எனவும் டொக்டர்மார் முடிவாகக் கூறிவிட்டனர்.
சொந்தக்காணியைத் தவிர வேறு சொத்துப் பத்து அவர்களிடம் இருக்கவில்லை. அந்தக்காணியை வைத்துத்தான் சாந்தினிக்கு எப்படியாவது ஒரு
ஜீவநதி
 
 
 
 

துணையை அமைத்துக்கொடுக்க வேண்டும் என்பதே அவளின் தாயின் கனவு.
கனவை கனவாக மட்டும் இருக்கவிடாது அதனை நனவாக்க அவள் பல முயற்சிகளை எடுத்திருக்கிறாள். ஆனால் இப்போது அக்கனவு கனவாகவே இருந்துவிடும் போலிருந்தது.
சாந்தினி எவ்வளவு தடுத்தும், அவளது தாய் அக்காணியை விற்று, கொழும்பு செல்ல ஏற்பாடு செய்தாள் யாருடைய துணையும் இன்றி கொழும்பிற்கு வந்து விட்டார்கள். ஆஸ்பத்திரிக்குச் செல்ல இடம் வலது தெரியாமல் நட்டாற்றில் நிற்கும் அவல நிலைதான் அவர்கள் இருவருக்கும்.
இவர்கள் பயத்தில் மிரளுவதைக்கண்டு, ஒட்டோக்காரன் ஒருவன் அவர்களுக்குத் தான் உதவி செய்வதாகக் கூற, இவர்கள் வேறு வழியின்றி ஏறிக் கொண்டனர்.
ஒட்டோக்காரனின் உதவியோடு சந்திக்க வேண்டிய டொக்ரரைப்பார்த்து, ஒப்பரேஷனுக்கு நாளும் குறித்து, ஒருவாறு வைத்திய சாலையிலேயே தங்க அனுமதித்ததும் சாந்தினிக்கு ஆறுதலாக இருந்தது. இல்லாவிடில் றுமுக்கும் ஆஸ்பத்திரிக்கும் அலைய வேண்டி இருந்திருக்கும்.
இவர்களுக்கென உதவி செய்ய ஒரு நேர்ஸ் அனுப்பப்பட்டாள் அவள் மற்ற நோயாளிகளுடன் அன்பாக பழகுவதையும் எல்லா உதவிகளையும் செய்து கொடுப்பதையும் பார்த்ததும் சாந்தினிக்கும் தாய்க்கும் திருப்தியாக இருந்தது. ஏனெனில் நவீன வசதிகள் கொண்ட அவ்விடத்தை அவர்களுக்கு கையாள்வது கஷ்டமாக இருந்தது. பாத்றுமை எப்படி பாவிப்பது என்றே தெரியவில்லை அந்த நேர்ஸைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்பது அவர்களது எண்ணம்.
ஒவ்வொரு நோயாளியையும் கவனித்து விட்டு இவர்களது முறை வந்ததும் அங்கு வந்த நேர்ஸ் அவர்களது நடை உடையைப்பார்த்து விட்டு கடுகடுப் பானாள். இதுவரை நேரமும் அவளது முகத்தில் இருந்த சிரிப்பு எங்கோ ஓடி மறைந்தது, அவர்களை நிமிர்ந்து கூடப்பார்க்க அவள் விரும்பவில்லை சாந்தினியின் கட்டிலில் தொங்கவிடப்பட்ட அறிக்கை யில் எதையோ பதிந்து விட்டு சட்டென்று அங்கிருந்து சென்றுவிட்டாள். நேர்ஸ்சின் இத்தகைய நடத்தை அவர்களுக்கு ஆச்சரியமாகவிருந்தது. முன்பின் அறிமுகமில்லாத அந்த நேர்ஸ் இவர்களிடம் இவ்வாறு நடந்து கொண்டதற்கு காரணம் ஏதும் இருக்குமா என சாந்தினி நினைத்துப்பார்த்தாள். ஒன்றும் பிடிபடவில்லை.
அன்றைய தினம் காலைப்பதிவு முடிந்ததும் மீண்டும் அறிக்கையை பதிவு செய்ய அந்த நேர்ஸ் தான் வந்தாள். அவளது நடத்தையில் எதுவித மாற்றமும்
இதழ் 54

Page 9
இல்லாது காலையில் நடந்து கொண்டது மாதிரியே நடந்து கொண்டாள். மற்றவர்களிடம் சந்தோசமாகவும் இவர்களிடம் மட்டும் கோபமாகவும் நடந்து கொண்டாள்.
சாந்தினி, நேர்ஸ்சிடம் ஏதோ கேட்கப்போக உடனேயே அவள் நிமிர்ந்து பார்த்த பார்வை, சாந்தினியைப் பயங்கொள்ள வைத்தது. பேசாமல் இருந்து விட்டாள்.
மதிய நேரச்சாப்பாட்டு வேளை வந்ததும், சாந்தினி தாயை நிற்பாட்டி விட்டு, சாப்பாடு வாங்கச் சென்றாள். அந்த ஆஸ்பத்திரியில் கன்ரின் எங்கிருக்கிறது என கண்டு பிடிப்பது அவளுக்கு சிரமமாக இருந்தது. குறிகாட்டிகள் அனைத்தும் சிங் களத்திலேயே எழுதப்பட்டிருந்தன. ஆஸ்பத்திரி முழுவதையும் சுற்றி ஒருவாறு கன்ரீனைக் கண்டு பிடித்துவிட்டாள். சாப்பாட்டுப்பாசல் கட்டிவிட்டு, உள்ளே தண்ணீர் நிரப்பச் சென்ற வேளை, நெற்றியில் பொட்டுடன் சாறிகட்டிக் கொண்டு ஒரு அம்மாள் வேலை செய்து கொண்டி ருந்தாள். உடனேயே சாந்தினி சென்று "நீங்கள் தமிழ் தானே” எனக் கேட்க அதற்கு அவவும் "ஒமோம்” எனத் தலையாட்ட அந்தக்கணம் முதல் அவர்களிடையே ஒரு நட்புப் பிணைப்பு உருவாயிற்று.
பொழுது போகாத நேரங்களில் சாந்தினி அந்த அம்மாளைச் சென்று பார்ப்பதும் அந்த அம்மா இவர்களை வந்து பார்ப்பதும் என அவர்களின் தொடர்பு விசாலித்தது. அப்போது தான் கதையோடு கதையாக சாந்தினி அந்த நேர்ஸ் பற்றியும் கூறினாள்.
அதற்கு அந்த அம்மாள் "அந்த நேர்ஸ் ஒரு நல்ல பிள்ளை. எல்லோருக்கும் விழுந்து விழுந்து சேவை செய்யும். ஆள் வித்தியாசம் பார்க்காது. ஆனால், பாவம் பிள்ளை, அந்த நேர்ஸ். யுத்த பூமியில் படை வீரரான தன்ரை புருசனைப் பறி கொடுத்திட்டாள். அதற்குப்பிறகு ஒரு பகுதி ஆட்களைக் கண்டாலே அவவுக்குப் பிடிக்காது. இருக்கும் தானே பிள்ளை." என்றாள்.
அந்த அம்மாளுக்கு சாந்தினி விளங்க வைத்தாள். "யுத்தத்தாலை நாங்கள் எல்லோரும் தான் பாதிக்கப்பட்டிட்டம் அம்மா. போர் ஒஞ்சாலும் அதன் வடு மாற கனகாலம் எடுக்கும் தான் அம்மா. நானும் என்ர சகோதரர்கள் இரண் டு பேரை போரில பறி கொடுத்திட்டன், நாங்கள் நடந்துபோனதை நினைச்சுக் கொண்டிருக்காமல் இனிமேல் ஆளுக்காள் விசுவாசமா இருந்தால் தான் சமாதானமா வாழலாம். இதை யெல்லாம் அந்த நேர்ஸிடம் நான் சொல்ல சொன்னதாக ۔۔۔۔۔
ஒருக்காச் சொல்லுங்கம்மா."
அந்த அம்மாள் சாந்தினியை இடை மறித்தாள் "நீ சொல்லுறதும் சரிதான் பிள்ளை. ஏதோ நடந்தது எல்லாம் நடந்து போச்சு இனிமேல் அதையெல்லாம் மறந்திட்டு ஆளுக்காள் உதவியாய் வாழவேணும்"
"நானும் அப்படித்தான் நினைக்கிறன் அம்மா
ஜீவநதி
 

இந்த விசயத்துக்காக அந்த நேர்ஸ் என்னோட கோவிக்கிறதை நான் விரும்பவில்லை. அம்மா, உங்களுக்கு அவவின்ர மொழி தெரியும்தானே, எங்களுக்காக நீங்கள் அந்த நேர்ஸ்சிட்டப்போய் இந்த விஷயத்தை விளங்க வையுங்க. இழப்புகள் அவை
யளை விட எங்களுத் தான் அதிகமாக ஏற்பட்டது. மீளமுடியாத்துயர் எங்களுக்கு தான். இனிமேல் நாங்கள் கோவிச்சு நடக்கிறதில பிரயோசனம் இல்லை.
"ஓம் பிள்ளை நீ சொல்லுறதை நானும் நேர்ஸிட்ட சொல்லிப்பார்க்கிறன். அதற்குப்பிறகு அந்தப் பிள்ளை என்ன செய்யுமோ தெரியேல. அப்ப நான் வாறன்பிள்ளை” என்றபடி அந்தஅம்மாள்சென்றுவிட்டாள்.
இருநாட்களின் பின், சாந்தினி ஒபரேஷனுக்கு "ரெடி"யாகிநிற்கிறாள்.
வழமைபோல் வந்த அந்த நேர்ஸ், மற்றவர் களின் அறிக்கையைப் பதிந்து விட்டு, சாந்தினியின் அருகில் வருகின்றாள் அவர்களைக்கண்டதும் ஏற்படும் கடுகடுப்பு அவளின் முகத்தில் இன்று இல்லை. சற்றே முறுவலித்து விட்டு அவள் கேட்டாள். "எப்பிடி இருக்கிறீங்க. கவலைப்படாதீங்க, ஒப்பரேஷன் நல்ல படியா முடியும்". நேர்ஸாக இருக்கும் அவளுக்கு எங்களின் மொழியும் தெரிந்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லைத்தான்.
அந்த அம்மாள் இவளுடன் கதைத்திருக்க வேண்டும் என சாந்தினி நினைத்தாள். ஆனால் இவ்வளவு விரைவாக அந்த நேர்ஸ் மாறி விடுவாள் என்றுதான் சாந்தினி நினைக்கவில்லை. அவள் உண்மையான ஒரு சேவகிதான் என்ற மனப்பதிவோடு தாங்ஸ் அக்கா” என்றாள், சாந்தினி.
அந்த நேர்ஸ் பதிலுக்குப் புன்னகையைப் புரிந்து விட்டு, சாந்தினியின் தலையை ஒரு முறை தடவிவிட்டு "ஒப்பரேஷன் தியேட்டருக்குப் போகனும் றெடியாகுங்க” என்று கூறிவிட்டு தனது கடமையைத் தொடர சென்று கொண்டிருக்கிறாள்.
இதழ் 54

Page 10
எஸ்.முத்துமீரான்
முஸ்லிம்களின் நாட்டுப்qறப்பாடல்களும் ஒருல்தல் நிலப்பரப்qம்
இப்பகுதியில் வாழும் மக்கள் ஏழைகளாகவும், மீன்பிடியை நம்பித்தங்கள் வாழ்க்கையை ஒட்டுபவர் களாகவும் இருக்கின்றனர். கடற்கரை ஓரங்களில் தாழை மரங்கள் அதிகமாக வளர்ந்து நிற்பதையும் காணலாம். இங்கே தாழம்பூவின் மணம் எப்பொழுதும் உள்ளத் திற்கு ரம்மியமளித்துக் கொண்டிருக்கும். ஆழியின் அலைகளின் ஆர்ப்பரிப்பும் தென்றலும், மண்மேடுகளும், நண்டுகளின் விளையாட்டும் மனதிற்கு மகிழ்ச்சியை தந்து கொண்டிருக்கும்.
நெய்தல் நிலங்களில் கூடுதலாக அடம்பன் கொடிகளும், இராவணமீசைப்புல்லும் அடர்த்தியாக வளர்ந்திருக்கும். மணற்பாங்கான இப்பகுதிகளில் கள்ளிச்செடிகளும், காசான்பற்றைகளும், முள்ளு மரங்களும், நீரின்றி நீண்டகாலமாக நிலைத்து நிற்கும் மரங்களும் நிறைவாக காணப்படும்.
வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வாழும் இப்பகுதி மக்கள் ஒலைக்குடிசைகள் அமைத்து அக்குடிசைகளில் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருப் பார்கள். அள்ளிக் கொடுக்கும் கடலோசையின்
இரைச்சலில் இனிமை காணும் இம்மக்கள், ஓயாது வீசும்
கடற்காற்றில் வறுமையை மறந்து வாழ்ந்து கொண்டிருப் பார்கள். இனிமையும், எளிமையும் நிறைந்த இம்மக்களின் வாழ்க்கை இறை நம்பிக்கை நிறைந்ததாக இருக்கும். மாரிகாலம் வந்தால், கடல் சீற்றமடைந்து மலைபோன்ற அலைகளை எழுப்பிக் கொண்டிருக்கும். இக்காலத்தில் இவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வ தில்லை. இதனால் கடலை அண்டியுள்ள முகத்துவாரம் களப்புகளுக்கு சென்று கைவலையால் மீன்பிடித்து வாழ்வார்கள்.
இவர்கள் கைத்தோணி, கரைவலைத் தோணி களைக் கொண்டே கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வார்கள்.
ஜீவநதி
 
 

இx
வங்களா விரிகுடா வாழ்த்தொலி முழங்க, இறைவனை யும், தங்கள் துணிவையும் முழுமையாக நம்பி, ஆர்ப்பரிக்கும் ஆழியோடு அல்லும், பகலும் ஓயாது போராடிக் கொண்டிருக்கும் இம்மக்களின் நாட்டார் பாடல்கள் இனிமையும் எளிமையும் நிறைந்தவைகள். மீன்பிடித் தொழிலோடு ஒன்றித்த இம்மக்களின் நெய்தல் நிலப்பாடல்கள் குறைவாகவே எனக்கு கிடைத்தன. விவசாயத் தொழிலோடு சம்பந்தப்பட்ட மருதநிலப் பாடல்கள் கிடைத்த அளவிற்கு, நெய்தல் நிலப் பரப்பில் வாழும் மக்களின் பாடல்கள் கிடைக்க வில்லை. என்றாலும் என் முயற்சியில் சளையாது பாடு பட்டு சில பாடல்களைச் சேகரித்து இக்கட்டுரையில் தந்துள்ளேன். தேடுதல் செய்தால் இன்னும் கிடைக்கலாம்.
உழைத்து உழைத்து ஓய்வின்றி கஷ்டப்படும் இம்மக்கள் தங்கள் துயரங்களையும், வேதனை களையும் மறப்பதற்கும், காதல், அன்பு, மகிழ்ச்சி போன்ற உணர்வுகளை வெளியிடவும், துன்ப நிகழ்வு களை வெளித்தள்ளி, மனச்சுமையை இறக்கி வைத்திடவும், கவலைகளை வெளிக்காட்டி ஆறுதல் பெறவும் படிப்பறிவில்லா நாட்டுப்புற இவ்வேழை மீனவர்கள் தங்கள் உள்ளத்து உணர்வுகளை ஓசை யோடு பாடி மகிழ்வார்கள். நாட்டுப்புற இலக்கியத்தில் இன்று, வாய்மொழிப் பாடல்களே முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு நாட்டுப் புறத்தான் ஒரு மொழியின் இயல்பை அறியாமல் இலக்கண, எதுகை, மோனை புரியாமல், தன் வாய்க்கு வந்த படியெல்லாம் தன் இன்பத்திலோ, துன்பத்திலோ மன உழைச்சலை அள்ளிச் சொரியும் பாடல்களே நாட்டுப்புற இலக்கியம்
இதழ் 54

Page 11
எனப்படுகின்றன.
இப் பொழுது, கிழக்கிலங்கை முஸ்லிம் மீனவர்களின் நெய்தல் நில நாட்டார் பாடல்கள் சிலதைப் பார்ப்போம். முஸ்லிம்கள் இறை நம்பிக்கையும், துணி வும் உள்ளவர்கள் அதிலும் சதா கடலோடு போராடிப் பேராடித் துணிவோடு வாழும் இவர்கள் மனப்பக்குவம் நிறைந்தவர்கள். இவர்கள் மீன்பிடிப்பதற்கு கடலுக்குள் தங்கள் தோணிகளைத் தள்ளும் போது, இறைவனை நம்பியே தள்ளுவார்கள். கீழ்வரும் இந்நாட்டுப்புறப் பாடல் இவ்வுண்மையை தெளிவாகக் காட்டுகிறது. இறைவன் மேல் இம்மக்களுக்குள்ள நம்பிக்கையின் வெளிப்பாடே இப்பாடலாகும்.
"ஆழிக்கடலுக்குள் ஆண்டவனே ஒன்னநம்பி தோணியைத் தள்ளுறெண்டா - நீ தொணபுரிடாரகுமானே.”
ஓவென்று ஓலமிடும் ஆழிக்கடலுக்குள், இறைவனை மட்டும் நம்பித் தோணியைத் தள்ளும், இம் மீனவர்களுக்கு வாழ்வில் இறைவனைத் தவிர வேறு எந்தத் துணையுமில்லை. வறுமையின் விளிம்பில் வாழும் இம்மக்களுக்கு இறைவன்தான் துணைபுரிய வேண்டும். பசியின் கொடுமை ஒரு பக்கம், ஆழியின் பயங்கரம் மறுபக்கம் இடையில் இந்த ஏழை மீனவர்கள் படும் வேதனைகள் இதை, இந்நாட்டுப் புறப்பாடல் அழகாகவும், ஆணித்தரமாகவும் எடுத்துக் கூறுவதைப் இப்பாடலில் பார்க்கலாம். நெய்தல் நிலப்பரப்பில் வறுமைக் கோட்டில் வாழ்வியலை சுவைத்துக் கொண்டிருக்கும் மீனவ மக்களின் இந்நாட்டுப்புற பாடல் புகழ்பெற்ற கவிஞனின் கவிதைக்கு ஈடாகத் திகழ்வதைக் காணலாம். நெய்தல் நிலம் வரட்சியும், வறுமையும் நிறைந்த நிலப்பரப்பாகும். இங்கே வாழும் நாட்டுப்புற ஏழைக் கிராமத்து மக்களின் காதல் புனிதமானது. உள்ளத்தால் உணரப்படுவதே காதலின்பம், உள்ளத்தின் மலர்ச்சியிலிருந்து வெளிப்படும் தேன்தான் அது. காதல் வயப்படும் ஆணும் பெண்ணுமாகிய இருவரின் உள்ளத்துணர்ச்சிகள் தேனாய், தீங்கனியாய், அமுதமாய் வெளியிடும் சொல்லோவியங்களே கவிதைகள், இப்பண்புகளை உள்ளடக்கிய நெய்தல் நிலப்பரப்பில் வாழும் கிழக்கிலங்கை முஸ்லிம் மீனவர்களின் காதல் பாடல்களை இப்பொழுது பார்க்கலாம்.
இரவில் தலைவன் மீன்பிடிப்பதற்கு தோணி யுடன் கடலுக்குப் போய்விட்டான். போனவன் இன்னும் திரும்பவில்லை. தலைவி வேதனைப்படுகிறாள். கடலும் சீறிக் கொண்டிருக்கிறது. காற்றும் வேகமாக வீசுகிறது. கலக்கமடைந்த தலைவி தன் தலைவன் எவ்வித ஆபத்துமில்லாமல் கரை சேர்ந்து விட வேண்டுமென்று இறைவனிடம் கெஞ்சிக் கொண்டிருப்பதைச் சிறப்பாக இந்நாட்டுப்புறப் பாடல் காட்டுகிறது. கடலும், காற்றும்
ஜீவநதி -

இறைவனின் படைப்பே. இவளுக்குத் தான் தலைவன் மீது எவ்வளவு பாசம்.
“கடலே இரையாதே காற்றே நீ வீசாதே, நெலவே எறியாதே- என்ர நீலவண்டார் வந்து சேருமட்டும்”
நாட்டுப் புறங்களில் நீலவண்டு சர்வசாதாரண மாகக் காணப்படும். இவ்வண்டு மிக வீரியமுள்ள வண்டாகும். கடினமான மரங்களில் கூட இவ்வண்டு மிக எளிதாக ஓட்டைகளைப் போட்டு விடும். இங்கே தலைவி இவ்வண்டைத் தன் தலைவனுக்கு உவமையாக்கி, அவன் வீரத்தையும் சிறப்பையும் எடுத்துக் காட்டு கிறாள். சதா கடலோடு போராடிப் போராடி கறுத்து விட்ட தலைவனின் மேனியின் நிறத்தை நீலநிற வண்டுக்கு உவமையாக்கிய இவளின் அன்புக்குத்தான் ஈடேது?
மேற்சொன்ன நெய்தல் நிலப்பரப்பில் வாழும் முஸ்லிம்களின் நாட்டுப்புற காதல் பாடலுக்கு ஒப்பான இன்னொரு பாடலைப் பார்ப்போம். இப்பாடலும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தலைவன் ஒருவனுக்காக ஏங் கி இறைவனிடம் இரஞ்சும் பாடலாகவே இருக்கிறது.
“உக்கலடித்து அலயெல்லாம் ஒயரக் கெழம்புதுகா, கடலுக்கு போன மச்சான் - அல்லாஹ் நீ
கரைக்கு கொண்டு சேத்திருரா." (உக்கல் - கடல் கொந்தளிப்பு.) அன்பும் பாசமும் ஒருங்கே இணைந்து மச்சானுக்காக ஏங்கும் மச்சியின் இதயதாபத்தை, இந்நாட்டுப்புறப் பாடல் உயிர்த் துடிப் போடு காட்டுவது படிப்போரின், உள்ளத்தை கிள்ளி விடுகிறது. அன்பும், இன்பப் பாசமும், உணர்வுகளும் எழுத்தறிவில்லா ஏழைக்கிராமத்து மக்களின் வாழ்வி யலில் எவ்வளவு இறுக்கமாகப் பிணைந்து உள்ளதை இப்பாடல்உணர்வோடு காட்டுவது சிறப்பாக இருக்கிறது.
இதேபோல், கிழக்கிலங்கை நெய்தல் நிலப் பரப்பில் வாழும் கிராமத்து முஸ்லிம்களின் அன்பும், பாசமும், காதல் உணர்வுகளும் நிறைந்துள்ள நாட்டார் பாடலொன்றை, இப்பொழுது பார்ப்போம். இப்பாடல் காதலியை கடற்கரையில் கண்ட காதலனின் உள்ளம் எப்படித் துடிக்கிறது என்பதை அழகாக சித்திரிக்கிறது.
"தாழமரத்தடியில், என்ர தங்கம் வந்து நிக்கிதுகா, என்னென்டு கேட்டுவாறன் - நீ கொஞ்சம்
ஏத்துக்காலப் பாத்துக்ககா. (ஏத்துக்கால் - தோணியால் வளைந்து வலைக்குள் கிடக்கும் மீன்களை வெளியில் போகாமல் தடுத்து
வைத்திருக்கும் கயிற்று வலை.)
கரைவலையை இழுத்துக் கொண்டிருக்கும் போது கடற்கரையில் அவன் காதலியைக் கண்டவுடன்,
-இதழ் 54

Page 12
எல்லாவற்றையும் மறந்து, தாழமரத்தடியில் வந்து நிற்கும், காதலியைப் பார்க்கப் போகிறான். அவளின் மேல் இவனுக்குள்ள பாசத்தையும், காதலையும் இப்பாடல் சிறப்பாகக் காட்டுவதைக் காணலாம். அவள் கடற்கரைக்கு வந்த காரணத்தை அறிவதற்கு, அவனுக்குத் தான் எவ்வளவு அவசரம். கிராமிய மக்களின் காதலொழுக்கத்தை யதார்த்தமாக காட்டி நிற்கும் இப்பாடல் படிக்கப் படிக்கச் சுவைக்கிறது. நெய்தல் நிலப் பரப்பு மற்ற நிலங்களைப் போல் வளமாக இல்லா விட்டாலும் இங்கு வாழும் மக்களின் உள்ளம் வளமும் அன்பும், பாசமும் நிறைந்து இருப்பதை கீழ்வரும் நாட்டுட் புற பாடல் பறைசாற்றுகின்றது. இம்மக்கள் ஏழையாக இருந்தாலும் அவர்களிடம் மற்றவர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் பண்பும், காதல் உணர்வுகளும் பஞ்சமில்லா திருப்பதைப் இப்பாடலின் மூலம் நாம் காண்கிறோம் இவர்கள் தோணில்களுக்கு கூடுதலான, மீன்கள்பிடி பட்டால் வாரிக் கொடுக்கும் வள்ளல்களாக இவர்கள் மாறி விடுகின்றனர்.
"சள்ள பொறுக்க, வலையில்
சாளமீன் அடிச்சிரிக்கு,
அள்ளிக் குடுக்க - என்ர
அன்னமெங்கே போயிற்றுகா.?"
தோனில் வலையில் சாளமீன் கூடுதலாகப் பட்டு இருக்கிறது. இதில் தன் காதலிக்கு கொஞ்சம் அள்ளிக் கொடுத்து, அவளை அகம் குளிரச் செய்யத் தேடித் தவிக்கும் காதலனின் இதயதாபத்தை இந்நாட்டுப் புறப் பாடல் சிறப்பாக காட்டுகிறது. எவ்வளவு துன்பம் துயரம் இம்மக்களின் வாழ்வில் இருந்தாலும், அவை களையெல்லாம் மறந்து காதல் வாழ்வில் மூழ்கி விடுவார்கள். நெய்தல் நில மக்களின் வாழ்க்கை கடினமானது. சொல்ல முடியாத வேதனைகளும், ஏழ்மையும் நிறைந்த அவர்களின் வாழ்வியல் என்றுமே சோகமானது. கடலை மட்டுமே பெரிதாக நம்பி வாழும் இவர்கள், சின்னக் குடிசைகளுக்குள் பெரிய கனவு களோடு வாழும் துணிவும், நெஞ்சுரமும் கொண்ட வர்கள். இவர்களின் நாட்டுப்புற பாடல்களில் தான் எத்தனை கனிவு, பாசம் கீழ்வரும் பாடலில், இப்பண்புகள் நிறைந்திருப்பதைக் காணலாம்.
கடலுக்கு போன என்ர
கண்டு மச்சான் வரும் வரைக்கும்,
பூங்காரம் காட்டாம-கடலே நீ
பொறுமையுடன் கொஞ்சமிரி, (பூங்காரம் - கோபம்) கிழக்கிலங்கை நெய்தல் நிலப் பரப்பில் வாழும் முஸ்லிம்களின் காதல் வயப்பட்ட நாட்டுப்புறப் பாடல்கள் எல்லாம் காதலன் அல்லது கணவனக்காக ஏங்கிப் பிரார்த்தனை செய்யும் முறையிலே பாடப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கடலுக்கு மீன்பிடிக்க சென்ற காதலன் அல்லது
ஜீவநதி

கணவனுக்கு ஏதும் தீங்கு நேரக் கூடாது என்று இறையிடம் கெஞ்சிப் பிரார்த்தனை செய்யும் நிலை யிலேயே அதிகமான பாடல்கள் உள்ளன. காத லொழுக்கம் நிரம்பப்பட்ட நாட்டுப்புற முஸ்லிம் பெண்களின் காதற்பாடல்கள் இறையோடு ஒன்றித்த நிலையில் எழுந்துள்ள பண்பு நிறைந்துள்ளதைக் காணலாம். காதலும் இறைபக்தியும் ஒழுக்கமும் ஒருங்கே சேர்ந்து இவ்வேழைக் கிராமத்துப் பெண் களால் பாடப்பட்ட இக்காதல் பாடல்கள் யாவும், நெய்தல் நிலப் பண்புகளோடு புணர்ந்து வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டார் இலக்கியங்கள் இன்று உலகத்தின் பல நாடுகளில் பல்கலைக்கழகங்களில் பாடமாகவும் ஆய்வுப் பொருள்களாகவும் வைத்துள்ளார்கள். இவ்வரிய இலக்கியச் செல்வத்தை இழந்து விடாமல் இலக்கிய ஆர்வமுள்ள பெருமக்களும், இளைஞர் களும் முன்வந்து இவற்றைச் சேகரித்துத் தொகுத்து ஆய்வு முறையில் நூலாக வெளியிட முயல வேண்டும். குறிப்பாக பல்கலைக் கழகங்கள் தீவிரமாக இப்பணியில் பாடுபட வேண்டும்.
எண் மதம் அன்பு
எண் இனம் இயற்கை
எண் ஜாதிமனிதம் எண் பாதிஉதவிமனப்பான்மை எண் வழி அஹிம்சை
எனர் மொழி மெல்லிசை நி எண் கடவுள் பெற்றோர் எண் குரு அம்மம்மா T எண் ஆனந்தம் குழந்தைகுட்டிகள் E" எண் ஆறுதல் பண்டாகுட்டிகள் எண் சீதனம் கலைகள் எண் ஆதனம் குறும்புகள் எண் அழகு அமைதி f எண் செலவுபுத்தகம்
எண் ருசிப்புநீ
என் சகிப்புநான் fy எண் பலம் நம்பநடப்பது என் பலவீனம் நம்பியிருப்பது எண் வெற்றி கவிதை U எண் சுயவிபரக்கோவை இது என்பதால் நிராகரிக்கப்படுகின்றேன் என்னைப்
பெணி பார்க்கும் படலத்தின் ஒவ்வொரு தடவையிலும்!
ஆரையூர் தாமரை
இதழ் 54

Page 13
சிங்களத்தில் ஜயந்த தர்மசிறீ விதான தமிழில் திக்குவல்லை கமால்
மற்றைய நாட்களில் பாடசாலை விட்டு வேனில் வீட்டுக்குவரும் சிரியலதா டீச்சர், குறுகிய கால லீவு எடுத்துக் கொண்டு தனது மகன் கஸலினையும் இழுத்தபடி நேரகாலத்தோடு வீடு வந்து சேர்ந்தாள். இன்று அவளுக்குப் பசிகூட விளங்கவில்  ைல. மனதில் மட்டுமன்றி உடலிலும் கூட என்றுமில்லாத களைப்பு தெரிந்தது.
அவள் அடிமனதால் கூட நினைத்துப் பார்க்காத விடயம், புலமைப் பரிசில் பரீட்சையில் மகன் சித்தியடைய வில்லையென்ற செய்தி காதில் விழுந்த கணத்திலிருந்து அவள் உயிரற்றவள் போலவே நடந்து கொண்டாள். அதை அவளால் நம்பவே முடியவில்லை.
கஸலின் மதுரங்க ஒரு பின்நிலை மாணவனல்ல. பாட சா  ைலக் கற் றல் நட 6) 12 5 60) 5 J. GIf Gë e GJ Goi எப் பொழுதும் திறமை காட்டியே வந்துள்ளான். கணித பாடத்தில் கெட்டிக்காரனான அவன், அதிக புள்ளிபெறும் மாணவர் குழுவைச் சேர்ந்தவன். மொழி இலக்கணம் நன்கு அறிந்திருந்தாலும், கட்டுரை எழுதுவதில் காணப்பட்ட ஆற்றல் காரணமாகவும் சிரியலதா டீச்சர் மாத்திரமன்றி, வகுப்பாசிரியையும்
கஸலின் தொடர்பாக பலத்த நம்பிக்கை கொண்டிருந்தார்.
ஜீவநதி
 
 

"என்னால இத ஏற்றுக்கொள்ளவே முடியாது. அறுபத்தைந்து பள்ளி. இவன் எப்படி இவ்வளவு மோசமானன்?"
பெறுபேற்றுப் பத்திரத்தைப் பார்த்த சிரியலதா டீச்சரின் கண்கள் இருண்டுபோய் உடல் பலவீனமடைந்து, விழுந்துவிடாமல் அருகிலுள்ள கதிரையில் அமர்ந்து கொண்டாள்.
பெறுபேற்று அறிக்கையைக் காட்டிய அதிபரும் இன்னும் சில ஆசிரியர்களும் அவளைச் சூழ்ந்து கொண்டு ஆறுதல் கூறினர்.
"இது நடக்க முடியாத விஷயம். கஸ்பினைவிட எவ்வளவோ மோசமான பிள்ளைங்க பாஸ் பண்ணி யிருக்காங்க. நேரந்தான்" கஸலினின் வகுப்பாசிரியை சாந்தனி டீச்சர் கவலை மிகுந்து கூறினாள்.
"யாருக்குத் தெரியும். ஏதாவது தவறு நடந்திருக்கலாம், நாங்க ரி கெரக்ஷனுக்கு போடுவம்" அதிபர் கூட அவளை ஆறுதல் படுத்திக் கூறிய தோற்றம் டீச்சரின் கற்பனைக் கண்ணில் தெரிந்தது.
உடற் பலத்தை மீளுறுதிப்படுத்திக் கொண்டு அவள். மனதிற் கிளர்ந்து கோபத்தை வெளிக் கக்குவது போல் கஸலினைத் தேடிச் சென்று வெறியோடு குமுறினாள்.
"அந்த வகுப்பு இந்த கவுப் பென்றெல்லாம் போனோமே. போதுமா? எங்கட எதிர்பார்ப்பு எல்லாமே தொலஞ்சிது. நான் எப்படி பள்ளிக்கூடத்தில மற்ற வங்கட முகம் பார்ப்பன்." கண்கள் கொட்டிய நீரைக் கைக்குட்டையால் துடைத்தபடி அவள் அழாக் குறையாகச் சொன்னாள்.
அம்மாவின் ஏச்சைவிட அவளது கவலை ததும்பும் தோற்றப்பாடு கஸலினின் கண் களைப் பொங்கச் செய்தது.
"வா போவம். மற்றது வீட்டில். இன்றைக்கு வேனில்  ேப ா கே ல |ா து . GTGü GDIT (5Lô UITGTOT? ப ா ஸ T ன று கேட்பாங்க. ம்... என்னால பொய் சொல்ல முடியுமா? அதவிட பஸ்ஸில போறது நல்லது"
சிரியலதா டீச்சர் பஸ்ஸில் வரும் போது கஸலினோட ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அம்மா தன்னோட கதைக்காமல் கோபமாகவிருப்பது, பரீட்சையில் தோல்வியடைந்ததைவிட அவனது
இதழ் 54

Page 14
ஜீவநதி
மனதை நோகடித்தது.
பஸ்ஸில் பயணிக்கும்போது அவன் எந்வி இலக்குமின்றி வெளியே பார்த்துக் கொண்டிருந்தால் பஸ் போகின்ற வேகத்தில் தான் பின்நோக்கி இழுத்து செல்லப் படுவதாக அவனது சின்ன மனதுக்கு தோன்றியது.
பரீட்சையில் சித்தியடையாமல் விட்டதைவி அறிந்த தெரிந்தவர்கள் அதுபற்றிக் கேட்கும் போது தா? அவனது மனதில் கவலை கரைபுரண்டது. தான் முதலி தோற்றிய பரீட்சையில் தோல்வியடைந்தமை அவனுக் அப்படியொரு பிரச்சினையாகத் தெரியாவிட்டாலு கூட அடுத்தவர்களுக்கு அதுவொரு பாரிய பிரச்சி6ை யாகவிருப்பது கஸனுக்கு வியப்பைக் கொடுத்தது.
பரீட் சையரில் தோல் வியடைந் த ை! அம்மாவுக்கு இவ்வளவு தூரம் துன்பமளிக்குமென்று தெரிந்திருந்தால், தான் இதைவிட முயற்சித்து பரீட்ை எழுதியிருக்கலாமென்று கஸலின் நினைத்தான். இழந்து விட்ட புத்தியை எத்தனை யானைகளைப் பயன்படுத்த இழுத்தாலும் கூட திரும்பப் பெற முடியாதென்று Gig Tobo) Tsig5(36T.
வேறொரு பரீட்சையாகவிருந்தால் அடுத் தடைவ எப்படியும் சித்தியடைவேனென்று அம்மா6ை ஆறுதல் படுத்தலாம். ஆனால் புலமைப் பரீட்ை தொடர்பாக அப்படியொரு உறுதிப்பாட்டைக் கொடுக் முடியவில்லை. ஏனென்றால் ஐந்தாம் தரப் புலமை! பரீட்சைக்கு வாழ்க்கையில் ஒரேயொரு தடவைதான் தோற்ற முடியுமென்று கஸலின் கெள்விப்பட்டிருக்கிறான். பாடசாலை உடை, சப்பாத்துக் காலுறை என்பவற்றோடு கட்டிலில் விழுந்து கிடந்த கஸலினைட் பார்க்க எவருமில்லை. அவன் தலையணையைக் கட்டிட் பிடித்துக் கொண்டு அழுதான். கோபத்தால் சிவந்துபோன அம்மாவின் முகம் அவனுக்குத் தெரிந்தது. அம்மாவின் கடும்சொல் அவன் செவிகளுக்குள் எதிரொலித்தது அவன் அறிந்தவரையில் அம்மா இப்படி ஒருநாளும் அவனைக் கடிந்து கொண்டதில்லை.
சொல்லித்தப்ப அவனுக்கு எதுவுமிருக்க வில்லை. எதையும் கேட்பதற்கு அம்மா தயாராக இருக்கவுமில்லை. தான் கதைக்கச் சென்றால்
அம்மாவின் கோபம் இன்னும் உச்சமடையும்
மெளனமாகவிருப்பதே மிகவும் பொருத்தமானதென்று அவனது இளமனசு சொன்னதால், கட்டிலில் சாய்ந்தபடி கண்மூடி யோசனையில் ஆழ்ந்தான்.
அவனது அதிர்ஷ்டம் அப்பா இன்னும் வீட்டுக்கு வந்திருக்கவில்லை. அப்பா வந்த பின்னர் அம்மா எல்லா விபரங்களையும் சொல்லக்கூடும். அப்போது அப்பாவும் சினம் கொண்டு தன்னைத் தண்டிப்பாரென்று கஸலின் பயந்தான்.
மற்றைய நாட்களில் வீட்டுக்கு வந்ததும் சோற்றுத் தட்டைத் தூக்கும் கஸனுக்கு இன்று பசியே

T
தெரியவில்லை. மனதில் கொழுந்து விடும் நெருப்பு பசியைப் பொசுக்கிவிட்டது போலும்,
இந்த நிமிடமே வேலைவிட்டு அப்பா வந்துவிடுவாரோ என்ற பயத்தில் அவள் அப்படியே நித்திரையாகிவிட்டான்.
வழமையாக உணவு பகிர்ந்து கொடுக்கும் அம்மாவுக்கு இன்று அவ்வாறு செய்வதற்கு ஆர்வ மிருக்கவில்லை. ஏன் அவருக்குக்கூட சாப்பாடு தேவையற்றநிலை. வாசல் கதிரையொன்றில் அமர்ந்திருந்த அவள், மகனின் சித்தியின்மையால் தான் அடுத்தவர் மத்தியில் அவமானத்திற்குள்ளாகி யிருப்பதாக நினைத்தாள். கேட்கிற பார்கிற எல்லோருமே பாஸ். இவனால் மாத்திரம் ஏன் பாஸ்பண்ண முடியாமல் போனது?
கூடவே அவளுக்கு கஸலின்மீது மீண்டும் கோபம் மூண்டது. கஸலின் அறையினுள் அமைதியாக என்ன செய்கிறானென்று எட்டிப் பார்த்தாள். அவன் தலையணையில் முகம் புதைத்து பாடசாலை உடை யோடு தூங்கும் பாங்கைப பார்த்தபோது, மனதில் கிளர்ந்திருந்த சோகம் தணிந்து திடீரென்று கவலை மூண்டது.
"பாவம் பசியோடு தூங்கிறான். ஏச்சுக் கேட்டு கவலை வந்திருக்கும். பரவாயில்ல. கொஞ்ச நேரம் தண்டனைக்கும் சேர்த்து பசியோடிருக்கட்டும்"
கணப் பொழுதில் அந்த அனுதாபம் அற்றுப்போய் அவளது மனதுள் கோபம் புகுந்தது.
கஸலினின் அப்பா சிரிதாஸ் வீட்டுக்கு வரும் போது அவன் கட்டிலில் புரண்டபடி தூங்கிக் கொண்டி ருந்தான். தனது மனைவியிடம் சகல விபரங்களையும் அறிந்து கொண்ட சிரியதாஸ் நேரே மகன் தூங்கும் அறைக்குச் சென்றார். பாடசாலைச் சீருடையோடு தூங்கிக் கொண்டிருந்த கஸலினைக் கண்டதும் அவருக்கு அனுதாபம் மேலிட்டது. அவர் மகனின் காலுறைகளை சிரியலாதாவைத் அதட்டியபடியே ថាហ៊្វានាfff.
"நீயும் ஒரு டீச்சர் தானே. ஃபெயிலானதுக் காக இப்பிடியா பிள்ளய நடத்திறது? சாப்பாடு கூட கொடுக்கல்ல! ம். என்ன எங்களுக்கு நிறையப் பிள்ளைங்க இருக்கிறாங்களா??"
"அதத்தான் நானும் சொல்றன். எங்கட எதிர்பார்ப்பு இவன் தான். இனி நல்ல மொறயில படித்து பெரியாளா வருவதப் பார்க்கத்தானே நாங்க கஷ்டப் பட்டுக் கொண்டு இப்படியெல்லாம் செய்றம்" சிரியலதா டீச்சர் அதிர்வு கலந்த உடைந்த குரலில் கூறினாள்.
"பெரியாளா வராட்டியும் யாருக்கும் தொல்லை கொடுக்காத நல் மனிதனா வந்தாப் போதும்."
"ம். வருவான் வருவான் பார்த்துக்
இதழ் 54

Page 15
கொண்டிருங்கோ. உங்களுக்கு நான் மொதல்லயே சொன்னான். ஒன்னாம் வகுப்பில பெரிய ஸ்கூலாப் பார்த்துப் போடச் சொல்லி நடந்ததா?. நீங்க தான் சொன்னிங்க பிள்ள கெட்டிக்காரன். ஸ்கொலவழிப் பாஸ் பண்ணுவான். நல்ல ஸ்கூல் கிடைக்குமென்று. ம் இப்ப என்ன சொல்லப்போறிங்க? இனி பெரிய ஸ்கூல் போகுறதெங்கிறது பொய். எல்லாத்துக்கும் இப்போ பரீட்சை புள்ளியத்தானே பாக்கிறாங்க."
"இப்ப சும்மா சத்தம் போட்டு என்ன தான் நடக்கப்போகுதென்று கேக்கிறன்?"
"சரி இனியாவது நல்ல ஸ்கூல்லொன்றுக்கு போடுங்க பாப்பம். இவ்வளவு செய்தும் பலனில்லாமப் போயிட்டே. அதுதான் எனக்குக் கவல!"
பெற்றாரின் வாக்குவாதத்தால் கண்விழித்து சுற்றும் முற்றும் பார்த்தான் அவன். தலைவைத்திருந்த தலையணை கண்ணிரால் தோய்ந்து பொயிருந்தது. தான் இன்னுந்தான் பாடசாலைச் சீருடையிலேயே இருப்பதும் அவனுக்கு ஞாபகம் வந்தது.
அணிந்திருந்த சேட் வியர்வையில் ஊறி உடலோடு ஒட்டியிருந்தது. கஸலின் சேட் மேல் பொத் தான் களைக் கழற்றினான். கூடவே அப்பா மீண்டும் அறைக்கு வரும் சத்தம் கேட்க, அவருக்கு முகம் கொடுக்க முடியாத இக்கட்டான நிலையில் கண் களை மூடியபடி மறுபக்கம் புரண்டான்.
" சாரி போ ன து போகட்டும். உடுப்பை மாற்றிக் கொண்டு கால்முகம் கழுவிட்டுச் சாப்பிடு”
அப்பாவின் அழைப் பினால் கண்திறந்த கஸலின் அப்பக்கமாக வியப்போடு பார்த் தான். எதிர்பார்ப்பு சிதைந்து போன கவலை கவிந்த முகம் கஸனுக்குத் தெரிந்தது. இருந்தும் அவர் அம்மாவைப் போல் கோபம் கொள்ளாமல், குற்றம் கூறாமலிருந்தால் அதுவரை யிருந்த பயம் அகன்று விட்டதை அவன் உணர்ந்தான். அதனால் உற்சாகமடைந்த கஸலின் கட்டிலிருந்து எழுந்து காற்சட்டையையும் சேட்டையும் கழற்றிவிட்டு வீட்டுக்குரிய உடைகளை அணிந்து கொண்டான்.
இருந்தும் அவனுக்கு உணவில் நாட்டம் வரவில்லை. வாழ்க்கையில் தான் பெருந்தேல்விக்கு உள்ளாகிவிட்டதாக அவன் நினைத்தான். எவ்வளவு
ஜீவநதி
 

தான் அழுதுபுரண்டாலும் ஈடுசெய்ய இயலாதது நிச்சயம். பரீட்சை வினாத்தாள்கள் கஷ்டமானதாலோ, தான் திறமையற்றவன் என்பதினாலோ அல்ல; தன் கவனயீனத்தினாலேயே இந்நிலை ஏற்பட்டதென்பது என நினைக்கும் போதே அவன் அதிகம் வேதனைப் பட்டான். அதுபற்றி அவன் அம்மா அப்பாவிடம் எடுத்துக் கூறப் பயந்தான். அதைத் தெரிந்து கொண்டால் தனக்கு எந்தவகையிலும் மன்னிப்புக் கிட்டப் போவதில்லை யென்பதை வெகுவாக உணர்ந்தான்.
காலம் ஓடிக் கொண்டிருந்தது. ஆறாம் வகுப்புக்கு இன்னும் பாடசாலை கிடைக்காததால் கஸலின் வீடே தஞ்சமெனக் கிடந்தான். எப்படியாவது அவனை நகரப் பாடசாலையொன்றுக்கு அனுப்புவதே பெற்றாரின் தேவையாகவிருந்தது. போட்டி குறைந்த கிராமத்து பாடசாலைகளுக்கு அனுப்ப முடியுமாகவிருந்த போதிலும் அதனை அவர்கள் கெளரவக் குறைவாகக் கருதினர் அதன்
விளைவு, சமவயது நண்பர்கள் பள்ளிக்கூடம் போகும் போது கஸனுக்கு அந்தவாய்ப்பு வராமல் வீணே காலம் கடந்ததுதான்.
இதற்கிடையில் மீள்பரிசீலனை விண்ணப்பத் திற்கு பரீட்சைப் பகுதியிலிருந்து பதில் வந்திருந்தது. அதில் கஸலின் எடுத்திருந்த புள்ளி சரியென உறுதிப்படுத்தப்பட்டிருந்ததைத் தவிர வேறெந்தப் பதிலும் காணப்படவில்லை.
அவனது அம்மா சிரியலதா டீச்சர் அதுபற்றிப் பேசுவதற்குக் கூட விரும்புவதில்லை. காலம் மெல்ல மெல்ல நகர்ந்து முதலிருந்த கோபம் குறைந்தபோதும்,
3 இதழ் 54

Page 16
கஸலினுக்கு பாடசாலை கிடைப்பது காலதாமதமாகிய தால் அதுபற்றி யோசித்து அவள் பட்ட வேதனை லேசானதல்ல. இருந்தும் அடுத்தவர்களுக்கு அதனைக் காட்டிக் கொள்ளாமல் நடந்து கொண்டாள்.
ஒருநாள் சிரிதாஸ, மகனை அருகழைத்து தலையைக் கோதியபடி கேட்டார்.
"உண்மையாக பிள்ளைக்கு பரீட்சையில என்ன நடந்தது, மற்ற நாட்களில் எல்லா பேப்பரிலயும் நிறையப் புள்ளி எடுத்ததல்லவா? டியூஷன் டீச்சர்கூட உயர்தர மட்டத்தில் பாஸ்பண்ணுவான் என்று தானே சொன்னா..?"
கஸலின் யோசித்தான். இவ்வளவு நாளும் ரகசியம் போல் பாதுகாத்ததை அப்பாவிடம் சொல்வதா? இல்லையா? அப்பாவுக்குச் சொன்னால் அவர் மூலமாக அம்மா தெரிந்து கொள்ளக் கூடும். அப்புறம் எந்த சந்தேகமுமில்லை. அம்மாவுக்குக் கோபம் வரும், அதைத்தொடர்ந்து இடைவிடாது திட்டித் தீர்ப்பா. சரி இப்போது இதைச் சொல்லி என்னதான் பயன்? கஸலின் யோசித்து யோசித்துக் குழம்பினான்.
"என்ன நேரம் காணாமல் போய்விட்டதா tᏝᏭ56Ꮱ1? "
"Lb...." "அப்படியென்ற மற்ற நாட்களில பேப்பர் செய்யும்போது நேரத்துக்கு எழுதிக் கொடுத்தீங்க லல்லவா?" சிரிதாஸ் விதவிதமாகக் கேள்வி எழுப்பினார்.
"கொஞ்சம் கஷ்டந்தான். இருந்தாலும்." அவனது கதை திக்கி நின்றது. மகன் தன்னிடம் எதையோ மறைக்கிறானென்பதை சிரிதாஸ் மோப்பம் பிடித்துக் கொண்டார்.
மகனை மிகுந்த ஆதரவோடு அருகிழுத்துக் கொண்டார்.
"என்ற தங்கம் என்னோட சொல்லு. அன்றக்கி என்ன நடந்தது.?"
"ம் நான் சொல்றன். ஆனா அம்மாவோட சொல்லக்கூடாது. சத்தியம் செய்ங்கப்பா"
"GT66T 3), JULg?" "அம்மாவுக்குத் தெரிந்தா எனக்கடிப்பா" "சரி நான் உறுதியளிக்கிறன். சொல்லு?" சிரிதாஸ் நம்பிக்கையூட்டினார்.
"அப்பாவுக்கு தெரியாது. அன்னக்கி பரீட்சை நடந்த நாள் நல்ல இதமான நாள். பாடசாலை மைதானத்துக்கு அருகிலிருந்த அறையொன்றிலதான் எனக்கு இடம் கிடைத்தது. வகுப்பறைக் கம்பிமறைப்புக் கூடாக வயல்வெளி எனக்கு அழகாகத் தெரிந்தது.
பிள்ளைங்க கொஞ்சப்பேர் வந்து பட்டம் விட்டாங்க.
ஜீவநதி 1.

நான் அந்தப் பக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தன். நாங்க என்ன, அந்த பிள்ளைங்க எவ்வளவு சுதந்திரமா விளையாடுறாங்க. நான் ரொம்ப ஆசையோட பார்த்துக் கொண்டிருந்தன்."
"இனி இனி சிரியதாஸ் இன்னுமின்னும் ஊக்கமூட்டிக் கதை கேட்டார்.
"நான் ஒருநாளும் அப்படி அழகான பட்டம் கண்டதேயில்ல அப்பா. ஒன்று நீலநீறமாக வால் கொண்ட பாம்புபோல. இன்னொன்று வெளவால் போல. இப்பிடி சிறகுகள்." கையால் செய்து காட்டினான்.
"gFff) gFff"
"அப்பாவுக்கு சொல்லணும். அது மேலே விட்ட பிள்ளைங்க ரொம்பக் கெட்டிக்காரங்க பாருங்க. போட்டிக்குப் போல மேலே பட்டம்
விட்டாங்க. பார்க்கப் பார்க்க ஆசை. மேலே மேலே
விட்டாங்க. ஒரு புள்ளிபோல வரும் வரையில விட்டாங்க. மேகத்தோட முட்டுமாப்போல மேலே பட்டம் விட்டாங்க. எனக்கும் ரொம்ப ஆசை வந்த தப்பா. நான் ஒருநாளும் பட்டம் செய்ததுமில்ல. பட்டமொன்று விட்டதுமில்ல."
சிரிதாஸவுக்கு தனது கடந்தகாலம் ஞாபகம் வந்தது. வயல் வெளியில் ஓடிப்பாய்ந்து பட்டம்
விட்டதும். வாய்க்காலில் வாவிகளில்துள்ளி பாய்ந்து நீச்சலடித்து நீர்க்குமிழி விட்டு. இப்படியான ஞாபகத் தொடர்.
"இனி விடையெழுதாம என்ன செய்றதென்று யாருமே கேட்கவில்லயா?"
இல்  ைல. நானி யோசிப் பதாக நினைத்திருக்கலாம். பிறகு பார்க்கும்போது பதில் எழுத எனக்கு நேரம் காணாமல் போயிற்றப்பா."
சிரிதாஸவுக்கு எல்லாம் தெட்டத்தெளிவாக விளங்கிவிட்டது. மனைவியின் சொல்லைக் கேட்டுக் கேட்ட கஸ்பினை புத்தகம் கொப்பிகளோடு எல்லைப் படுத்திக் கொண்டமை, தான் செய்த பெருந்தவரென்பது அவருக்குத் தெளிவாகியது. பெற்றார் என்ற வகையில் தாங்கள் இதைவிட அதிகம் சிந்தித் திருக்க வேண்டுமென்று அவருக்கு இப்போது புரிந்தது.
"பரவாயில்ல பிள்ள. போனது போகட்டும். அடுத்த பரீட்சைகளில் இதை நல்ல பாடமாகக் கொண்டு நல்ல முறையில எழுதி பாஸ்பண்ணப் பாருங்க.." சிரிதாஸ மகனின் தலையைத் தடவி இறுக அணைத்துக்
கொண்டார்.
- இதழ் 54

Page 17
சத்யஜித்ரேயின் படங்களை பார்க்காம
கொண்டே சூரியனையும் சந்திரனையும்
கனதியான முயற்சிகளின் பதேர் பாஞ்சா
*s
இந்தியப் புனைவு சினிமாவின் தளத்திலிருந்து பூரணமாக புறமொதுங்கி தூயயதார்த்த உலகை நேர்த்தியான திரைக்கதையூடாக வெளிக்கொணர்ந்த முதல் முயற்சியாக "பதேர் பாஞ்சாலி” அமைந்துள்ளது. இயக் குனர் சத்யஜித் ரே நிகழ்த்திய அதிர்வு சாமன்யமானதன்று. நாலாந்தர சினிமாவின் மைய நீரோட்டத்திலிருந்து விடுபட்டு, பிராமண குடும்ப மொன்றின் வாழ்வியற் போராட்டத்தினையும் சிதிலமடையும் கனவுகளையும், மகிழ்நெறி பயணிக்கும் குழந்தை உலகத்தினையும் அதிக பட்ச சாத்தியங் களோடு துல்லியமாகச் சித்திரித்துள்ளார். நாளாந்த சிக்கல்களிலிருந்து குறுநேர மா வது ம°ட சரி பெற ( E S C A P I S M ) D 5 GA|| Ló புகலரண் என்று கருதப்பட்ட சினிமாவின், இன்னொரு முகத் த ைன பார்  ைவ யாளனுக்கு அறிமுகப் படுத்தினார் . இந் தரிய சினிமாவின் அகல்வெளி யில் இதுவரை நிகழ்ந்துள்ள கனதியான முயற்சிகளின் கால்கோளாக பதேர் பாஞ்சாலியே திகழ்ந்தது என்றால் அபரிமிதமாகாது.
ஜீவநதி 1
 
 
 

b இருப்பது இந்த உலகத்தில் வாழ்ந்து
பார்க்காமலே இருப்பதற்கு சமம்,
-அகிராகுரோசேவா
விபூதிபூஷன் பானர்ஜி எழுதிய பதேர் பாஞ்சாலி நாவலின் முற்பகுதியை மையமாகக் கொண்டு 1955இல் வங்க மொழியில் உருவாக்கப் பட்டுள்ளது. (நாவலின் ஏனைய பகுதிகளை அபுராஜிதோ, அபுசன் சார் என்றவாறாக "ரே" திரைப்படமாக்கியுள்ளார்.) வங்கத்திலுள்ள நிஷின் த புர் என் னும் கிராமத் தரின் பிராமணக் குடும்பமொன்றின் வறுமை படர்ந்த வாழ்வின் வலியை நம்பகத்தன்மையோடு "பதேர் பாஞ்சாலி” வெளிக் து கொணர்ந்துள்ளது. ஹரிஹார் என்ற பிராமணர், அவரது மனைவி யான சர்போஐயா, பிள்ளை களான துர்கா, அபு மற்றும் தூரத்து உறவுக்காரக் கிழவி யான பிஷி என்போரை சுற் றரி நகரும் யதார்த்த நிகழ்வுகளின் திரை வடிவமாக அமைந்துள்ளது. ஏழ்மையில் வாழு கின்ற தம்பதிகளான ஹரிஹர் - சர்போஜாவை பிஷி என்ற கிழவி அண்டி வாழ் கிறாள். பிஷரியரின் நட்பினால் மகளான துர்கா துர்நடத்தை களுக்கு உள்ளாகி விடுவதால் சர்போஐயா, பிஷியை வீட்டைவிட்டு துரத்துகிறாள். எனினும் சர்போஜாவிற்கு
5 இதழ் 54

Page 18
படங்களில் பிரதி பலிக்கப்
மற்றொரு குழந்தை பிறக்கும் காலத்தில் பிஷி மீளவும் வந்து ஒட்டிக்கொள்கிறாள். அபு சிறுபராயமடையும் போது சகோதரியான துர்காவோடு சேர்ந்து குழந்தை உலகின் கொண்டாட்டங்களை நுகர்கிறான். பிஷியின் மரணத்தை அடுத்து ஹரிஹர் தொழில் நாடி வெளியூர் செல் கிறார். மழையில் நனையும் துர் கா காய்ச்சலால் மரண மடைகிறாள். அந் நாளில் வீசிய புயலால் அவர் களது வீடும் சிதைகின்றது. மகளின் மரணத்தை அறியாத ஹரிஹர் அவளுக்கு புத்தாடை வாங்கிக் கொண்டு வெளியூரி லிருந்து தரும் பு கிறார். அனைத்தை யும் அறிந்து துன்புற்று தன் குடும்பத்தோடு காசிக்கு செல்வதோடு படம் நிறைவடைகிறது.
எண் பது அகவையுள்ள கூன் விழுந்த கிழவியான பிஷி கதாபாத்திரம் பார்வையாளனிடம் பேரதிர்வினை நிகழ்த்துகிறது. கிழவியின் ஒவ்வொரு அசைவும் நுணுக்கமாக பட 鞅 மாக்கப்பட்டுள்ளமை வியப் பினைத் தருகிறது. சத்யஜித்ரே என்ற மாபெரும் கலைஞனின் மேதமையை ஒவ்வொரு கதாபாத்திரமும் உறுதிப் படுத் து கன றது . " அற வொழுக்க நோக்கு (moral attitude) GT66T60fullb 9 60cr (B. அந்தநோக்கு எனது திரைப்
படுகின்றது. நேர்மை போன்ற அ டி ப ப  ைட ய T ன நல்லொழுக்கங்களில் எனக்கு நம்பிக்கையுண்டு" என்று "ரே செவ்வி ஒன்றில் (News week June 16-1986) (öfflỦLjìL' (66ỉTGITITIT. J.íTG3LJT93u JIT(kanu Banerjee) GTGöI[D கதாபாத்திரம் "ரே"யின் நேர் மை சார்ந்த உளப்பாங்கினை வெளிப் படுத்துகின்றது. துர்கா (umadas Gupta) (335|Tuju Tö5560s, LD600ft DIT60)Gl) UTC) போன்றவற்றை திருடும் சந்தர்ப்பங்களில் தயார் மனவேதனையடைகிறார். வறுமைச் சூழலில் தன்னிலையில் தாழாமல் பாத்திரங்களைவிற்று அரிசி முதலியன வாங்குகிறாள்.
ஜீவநதி -
 
 
 
 

இயல்புநிலையில் நெருடலற்ற நுட்பத்தோடு துர்கா காட்சிப் படுத்தப் பட்டுள்ளாள் துர்கா அறிமுகமாகும் காட்சியில் ஒலிக்கும் ரவிசங்கரின் கிதார் இசை அபாரம் மூங்கிற் காடுகளிடையே துர்கா பயணிக் கும் போது மாறுபட்ட குழந்தை உலகினுள் பார்வை யாள னு ம நு  ைழ கிறான். அவள் மழை யில் நனைகையில் பார்வையாளனிடமும் ஈரம் சுவறுகிறது. சத்ய ஜித்ரேயால் மட்டும் இது எ ப் படி சாதி தய மாயிற்று என பலமுறை எண்ணி வியந்திருக் கிறேன். துர்கா மரணிக் கும் போது நாம் சிறுகணம் நெகிழச் செய்யும் ஒரு போலி உணர்ச்சியை அடையவில்லை. உள்வலியாக ஊடுருவி நிரந்தரமாக வாழ்ந்து அமைதியைச் சீர்குலைக்கும் மாறுபட்ட உணர்ச்சியையே அடைகிறோம்.
eHL (Subir Banerjiee) g5c5afl6ốTAD LD60T6îrf6 அலாதி யானது. துர்காவின் மரணத் தின் பின்னரான S து அவனது ஒ வி வொரு நடவடிக்கையும் ஆழமான தத்துவச் சாரலை துாறிச் செல் கிறது. இறுதியில் சிதிலமடைந்த வீட்டினுள்ளே பாம்பு நுழையும் காட்சி நுட்ப மான வாழ்வியல் அபத்த நிகழ்தகவை ஆளுமை யோடு இனங் காட்டுகிறது. SADIrfƏMD5ñT (Kanu Banerjee) குடும் பத் தோடு ஊரை விட்டுச் செல்லும் போது மாட்டுவண் டியின் கீழே
ஆடுகின்ற "ஹரிக் கேன்" விளக்கு துன்பியல் கவிதையாக ஒளிர்கிறது. "பேய் அடிப்பதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதே உக்கிரத்தோடு ஒரு படம் கூட அடிக்கும் என்பதை அன்று தான் உணர்ந்தேன். பதேர் பாஞ்சாலி என்னைப் பலமாக அடித்தது. அதன் தாக்கத்திலிருந்து இன்றுவரை என்னால் வெளியே வர முடியவில்லை" என்று இயக்குனர் பாலுமகேந்திரா குறிப்பிட்டுள்ளமையும் அவதானத்திற்குரியது.
16 - இதழ் 54

Page 19
கெகிறாவ ஸ?லைவுறா
பெண் சிந்தும் கண்ணீர்
ஒரு பெயரறியாக் கவிஞனின் ஆங்கிலக் கவிதையொன்றை சமீபத்தில் இணையத்தில் வாசித்தேன் தமிழில் மொழிபெயர்த்துப் பார்த்தால் இவ்வண்ணம் அர்த்தம்தருவது அது. ஏன் பெண்கள் அழுகின்றனர்? ஒரு சின்னஞ்சிறுவன் கேட்டான்தன்தாயிடம் "ஏன் நீஅழுகிறாய்?" என்று. “ஏனெனில் நானோர் பெண்." அவள் பதிலிறுத்தாள் அவனுக்கு. “எனக்குப் புரியவில்லை." அவன் சொன்னான். அன்னையவள் தன் மகனைக் கட்டியனைத்துச் சொன்னாள், "உன்னால் ஒருக்காலும் முடியாது தான் புரிந்து கொள்ள" பின்னர் அச்சிறுவன்தன்தகப்பனிடத்தேகேட்டான், "ஏன் அம்மா காரணம் ஏதுமின்றி அழுவது போலிருக்கிறாள்?" "எல்லாப் பெண்களும் காரணங்கள் ஏதுமின்றி அழுதபடியிருக்கிறார்கள்." அவன்தந்தையால் சொல்ல முடிந்தது அவ்வளவே.
சிறுவன் வளர்ந்து பெரியவனானான். பெண்கள் அழுவது பற்றிய வியப்பு மாறாமல் மிகைத்தேயிருந்தது அவனுள் இன்னும், கடவுளோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவனையழைத்துக் கேட்டான், "ஏன் பெண்கள் மிக இலகுவாய் அழுத்தலைப்பட்டு விடுகிறார்கள்.?" கடவுள் சொன்னான், "விஷேடத்துவம் மிக்கவளாய் மிளிர வேண்டி
பெண்ணையான் சிருஷ்டித்தேன். உலகின் சுமைகளை சுமக்கின்ற அளவுக்கு அவள் தோள்கள் வலுவுடையதாய் இருக்கவேண்டியும்,
ஜீவநதி 1
 

হািন வருடிக் கொடுக்க மென்மையாயும் இருக்கவேண்டியும் உள்ளார்ந்த ஆத்மபலம் கொடுத்தேன் அவளுக்கு. பிள்ளைப்பேற்றுக்கும், கூடவே தன் குழந்தையரிடமிருந்து அவ்வப்போது எதிரே வரும் புறக்கணிப்புக்கும் முகம் கொடுக்க, அனைவரும் கைவிட்டாலுமென்ன தொடர்ந்து நடந்து செல்ல கடினத்தன்மையும் கொஞ்சம் கொடுத்தேன் அவளுக்கு. நோயில் வீழ்ந்து இல்லம் துயருற்று வாடுகையில் முறைப்பாடுகள் ஏதும் செய்யாமல்
குடும்பத்தைக்
கவனித்திடவும், தன் குழந்தையருக்கு உணர்வுபூர்வமாய் இருக்கட்டுமென்று
அன்பும் கொடுத்தேன் அவளுக்கு எச்சந்தர்ப்பத்தின்போதும்
அவள் குழந்தை மோசமாய் அவளைக்காயப்படுத்தினாலும், விலா எலும்புக்குள்ளிருக்கும் அவள் இதயம் எல்லாவகைத் தவறுகளினூடும் காப்பாற்றப்படும்வரை. அவள் இல்லானைச் சுமந்திருக்கும் பலம் கொடுத்தேன். அவளுக்கு யான் ஞானமும் தந்தேன். நற்றுணையாயிருக்கும் கணவன் ஒருபோதும் தன்துணையைக் காயப்படுத்தான்
இதழ் 54

Page 20
என்பதையறிய வேண்டி ஆயினும் சிலபோது பரீட்சிக்கப்படுகையில் அவள் பலத்தைத் தவறிவிடாதிருக்க உறுதி கொள்ளவேண்டி, இறுதியாய்த் தந்தேன் கண்ணிர்த்துளிகள் கொஞ்சம் அவளுக்குஅவ்வப்போதைய தேவைப்பாட்டின் போதெலாம் சிந்தப்படுதற்காய்."
"பார் மகனே!"கடவுள் சொன்னான், "பெண்டிர்தம் அழகு அவள் அணியும் ஆடையிலன்று: அவள் சுமக்கும் உடல் வடிவிலுமன்று. அவள் தன் தலைமயிர் சீவும் விதத்திலுமன்று பெண்ணினதழகு அவள் கண்களில் இருக்கலாம். அஃது அவள் இதயத்து வாசலாம் ஆதலால், அவ்விடம் அவள் காதலின் இருப்பிடமுமாம்."
பெண்கள் சரித்திரம் தொடங்கிய காலத்தி லிருந்தே அழுத வண்ணமிருக்கிறார்கள். பெண் தொடர்ச்சியாய் அழுகின்ற, அல்லது பெண்ணின் துயரத்தின் பால் உந்தப்பட்டு உலகமே அழுகின்ற இன்றைய காலகட்டத்தில் மறுபடியும் ஒரு மார்ச் 08 மகளிர் தினத்தை ஞாபகமூட்டுவதாய் மலர்ந்திருக்கிறது.
பெண் பாலியல் இயந்திரமாய் மட்டும் பார்க்கப் படுகின்றாள். ஆங்கே அவள் சுதந்திரம் மோசமாய்ப் பறித்தெடுக்கப்பட்டு விடுகின்றது. உலகில் இன்று கல்வி கற்கின்ற, தொழில் செய்கின்ற பெண்களில் பாதிப்பேர் ஆணின் வன்புணர்ச்சிக்கு ஏதோ ஒரு வகையில் சிக்கி
ဗွို யிருக்கிறார்கள் என்கின்றன ஆய்வுகள். குடும்ப
வன்முறை, பாலியற் தொல்லைகள், சீதனத்தின் பல்வேறு கொடூரங்கள், அகதி வாழ்க்கையில் மற்றும் சிறை வாழ்க்கையில் அனுபவிக்கிற தொல்லைகள் என்று பல கொடூரக் கோணங்களில் பெண் துன்புறுத்தப்படுகிறாள்.
இந்திய தேசத்தின் தலைநகரத்தில் ஓடும் பேருந்து ஒன்றில் வைத்து அறுவரால் கடந்த டிசம்பர் 16 இல் கற்பழிக்கப்பட்டு 29ம் திகதிவரை உயிருக்குப் போராடி இறந்து போன ஜோதிசிங் பாண்டே என்கிற மருத்துவக் கல்லூரி மாணவிக்காக உலகமே அழுது நின்றது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கடத்தல் என்று எல்லாக் குற்றச்சாட்டுகளோடும் அவ்வழக்கில் கைதாகி யிருக்கும் ஆறு பேரில் ஒருவன் பதினெட்டு வயதுக்குக் குறைந்தவன் என்பது ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலாக நம்மை வந்தடைந்திருக்கிறது. எல்லா அவலச் செயற்பாடுகளும் முடிந்த பின்னர், அவன் புரிந்த குரூரத் தாக்குதல் காரணமாகவே ஒரு அழகிய கொடையென உலகுக்குக் கிடைக்கவிருந்த "ஃபிஸியோதெரபி" வைத்தியரை அவசர அவசரமாய் இழந்தும் போனோம் நாம். இச்சம்பவம் நடந்து மறுநாட்களில் அது மாதிரி இன்னுமோரிரு சம்பவங்களும் இந்தியாவில் நடந்ததை செய்திகளில் பார்த்தோம். தெற்கு டில்லியில் உள்ள பிரபலமான பாடசாலையில் கற்கும் பதினேழு வயதான
ஜீவநதி
 
 
 
 
 
 

பதினொராம் தர மாணவி ஃபேஸ்புக்கில் அறிமுக மாகிப் பழகிய ஒருவரால் மயக்க மருந்து கலக்கப்பட்ட பானம் வழங்கப்பட்டு வன்கொடுமைக்கு ஆளாக்கப் பட்டாள். போலவே டில்லியில் தந்தையொருவர் தன் 15 வயது மகளை தாய் வீட்டிலில்லாத வேளையில் கற்பழித்துப் பின் தலைமறைவாகியிருக்கிறார். மத்தியதரவர்க்கத்தைச் சேர்ந்த குடும்பம் என்பதால் டில்லி மாணவி விடயத்திற்கு முக்கியத்துவம் தரப்பட்டிருப்பதாகவும், ஹரிஜனப் பெண்களுக்கு இது போன்ற அவலங்கள் நாளாந்தம் நடந்தேறுவதாகவும் கூட செய்திகள் சொல்லின, இதிலே யாரைக் குற்றம் சாட்டுவது? அந்தளவு மோசமான ஒரு வன்புணர்ச்சி யாளன் ஆணுக்குள்ளிருந்து அரக்கத்தனமாய்த் தலைநீட்ட ஏது காரணம்? பெண்ணினது நடத்தையா? ஆடை அணிந்த விதமா? ஆண்கல்வியூட்டப்பட்ட விதமா? ஓட்டைகள் நிறைந்த சட்டங்களா? சினிமாவா? செல்ஃபோனா? இணையமா? இயற்கையா? தாங்க முடியாமல் தொடர்ந்தபடியிருக்கிறது பெண் கண்ணிர். உச்சத்தையெட்டிய போராட்டங்கள், கோஷங்கள் யாவும் ஒரு செய்தியைத்தான் நமக்குச் சொல்லிப் போகின்றன. அது அ.மார்க்ஸ் அவர்கள் சொல்வது போல நம் எல்லோருக்குள்ளும் ஒளிந்துள்ள வன்புணர்ச்சியாளர்களைப் பிடுங்கி எறிவதில் தான் அது தங்கியிருக்கிறதேயன்றி மரணதண்டனையில் மட்டும் அன்று. ஆயினும் டெல்லி மாணவி விடயத்தில் ஊடகங்கள் ரொம்ப நாகரீகமாக நடந்து கொண்டதை பாராட்டாமலிருக்க முடியாது.
ஏதோ ஒரு சந்தர்பத்தினது கைதியாகி மரணத்தை தழுவவேண்டியதான மூதூர் றிஸானாநபீக் இன்னுமொரு கண்ணிர்க் காவியம் எனலாம். வறுமையான குடும்பச்கழல் சவூதி நோக்கி அவளைக் கொண்டு போயிற்று போலியான கடவுச்சீட்டோடு முடிவில் முடிவற்றுத் தொடர்கிறது பெண் கண்ணிர்.
இலங்கையில் பன்னல ஹெட்டிக்கப்புவ பகுதியில் அறுபது வயதான வயோதிபப் பெண் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப் பட்டார். போலவே, யாழ்ப்பாணப்பகுதியில் நான்கு வயதுச்சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். 2012ம் ஆண்டில் மட்டும் இலங்கையில் சுமார் 1600 வரையான பாலியல் துஷ்பிரயோகங்கள் பதிவாகியுள்ளன. இன்னொரு பெண்ணை மணந்திடக் கருதி ஆசிரியையான தன் மனைவியையும், குழந்தைகள் இருவரையும் தீயிற் சுட்டுச் சாகடித்த கணவன் பற்றிய சேதியையும் நம்நாட்டிலே மிக அண்மையில் கேள்வியுற்றோம். இன்னும் இதுபோன்ற வெளிவராத கண்ணிர்க்கதைகள் எத்தனையோ? ஆக கடவுள் சொன்னதுபோல தொடர்ந்து அழுதபடியேயிருக்கிறாள் பெண்.
18 - இதழ் 54

Page 21
குந்தவை
பரணி - ஈழத்து
சுருக்கமாகக்சு
குந்தவை - 6 தொடர்ந்து செt விற்பது. அவருக் அண்ணன்மாரு
நான்
பள்ளிக்கூடத்திலு கல்லூரியிலும் 1966ல் கலைப்பு ஏற்பட்ட தேக்க
பயிலுநருக்கு வி பயிலுநராகவும்
புரிந்தேன். ஐ மாற்றலாகி உடு இறுதியில் கொ ஒய்வுபெற்றேன்.
பரணி ~ உங்
இருந்தவர்கள்
குந்தவை - நின்றார்கள் என் அண்ணா பாலே
வயதிலிருந்தே ஒ O O
சந்திப்பு நினை co வந்து கொண்டிரு பரDDT ஆகியவற்றை வ 560) GOLD556ft (3 ஈழத்தின் மூத்த வீரகேசரியும் வீ பெண்படைப்பாளியான மூத்த அண்ணை குந்தவையின் சிறுகதைகள் விட்டு କ୍ଷୀ ପୂର୍ଣ୍ଣ, SLLSLL SASqSSSLL வாழநத எனககு தனித்துவம்மிக்கவை. இவர் எண்ணம் தோன் ஆசிரியையாக பக்கங்களுக்கு ( கடமையாற்றி வரும் எழுதியத uj6)IGhumbmbit. “GurrgjLib சட்டக் 9ջեւ 16) றறவா. படிக்கும் ஆர்வL இருக்கிறது என்னும் கருத்துக் கூறி எ சிறுகதைத்தொகுப் ஒருவராகத்தான்
பொன்றையும் வெளியிட்டுள்ளார். பரணி . இன்று தொடர்ந்தும் எ
குந்தவை - 2 அவ்வப்பொழுது உதாரணத்துக்கு
ஜீவநதி 1.
 
 

ன் மூத்த பெண் எழுத்தாளராகிய உங்களைப்பற்றிச் றுவீர்களா?
னது தகப்பனார், பாட்டனார் செய்த வணிகத்தையே து முக்கியமாக மலபாரிலிருந்து ஓடுகள் தருவித்து த நாங்கள் ஒன்பது பிள்ளைகள். அவர்களில் நான் எட்டு குப் பின் பிறந்த ஒரே பெண்.
தொடக்க கல்வியை உள்ளுர் (தொண்டைமனாறு) |ம் இடைநிலைக்கல்வியை சுன்னாகம் இராமநாதன் ற்றேன். பின் பேராதனை பல்கலைக்கழகப் பிரவேசம் ட்டதாரியாக வெளியே வந்தேன். ஆயினும், வாழ்வில் நிலையால் பத்து ஆண்டுகளுக்கு பின்னர், பட்டதாரி ண்ணப்பிக்க முடிந்தது. முதலில் வவுனியா கச்சேரியில்
பின் புத்தளம் மாவட்டத்திலும் ஆசிரியையாகவும் பணி
ந்துவருட கால சேவை முடிவில் யாழ்ப்பாணத்திற்கு ப்பிட்டி மகளிர் கல்லூரியில் பணி புரிந்தேன். 1990 "ண்டு வரப்பட்ட சுய விருப்பு ஒய்வுத் திட்டத்தில்
களின் எழுத்துலக பிரவேசத்திற்கு உறுதுணையாக பற்றிக் குறிப்பிடுங்கள்.
அப்படி பெரிதாக யாரும் எனக்கு உறுதுணையாக ாறு சொல்ல முடியாது. வேண்டுமானால் என் இளைய ந்திராவைச் சொல்லலாம். அவருக்குக்கும் எனக்கும் சிறு ஒத்த வாசிப்பு ரசனை இருந்தது. வு தெரிந்த காலத்திலிருந்தே வீட்டிற்கு கல்கி தபாலில் நந்தது. அதனோடு நாங்களும் அம்புலிமாமா, கண்ணன் ாசிக்கும் பருவத்தைக் கடந்து ஆனந்தவிகடன், குமுதம், பான்ற சஞ்சிகைகளைத் வாசித்தோம். அதோடு ட்டிற்கு வந்தது. யாழ். நகரக்கு கடைக்குச் செல்லும் என் , அங்கு தினகரனும், Daily News ம் வாங்கிப் படித்து
வீட்டுக்கு கொண்டு வருவார். இவற்றின் மத்தியில் இயல்பாகவே நானும் எழுதிப் பார்த்தால் என்ன? என்று றியிருக்கலாம். முதலில், பத்திரிகைகளில் வரும் சிறுவர் நட்டிக்கதைகள். விடுகதைகள் ஆகியவற்றை நாங்களிரு ாக நினைவு. 5ல்லூரி நுழைவோடு இளைய அண்ணாவின் கதை குறைந்து விட்டதென்றாலும் என் கதைகளைப் படித்து ன் கதை வெற்றிகளைக் கண்டு பெருமைப்பட்டவர். அவர்
இருக்க முடியும்.
ம் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் உங்களுக்கு
ஓதவேண்டும் என்ற உந்துதலைத் தருவது எது?
ந்துதல் என்பது அந்தந்த காலத்து புறச்சூழல்களாலும் நாட்டின் நிகழ்வுகளாலும் வந்திருக்க வேண்டும்.
பல்கலையில் முரண்பட்டிருந்த மாணவ(பிற்காலத்தில்
இதழ் 54

Page 22
பிரபலமான) ஒரு எழுத்தாளரைப் பற்றிய சி: தகவல்களை அறிந்த பொழுது அவற்றை கதையாக் வேண்டுமென்ற உந்துதல் எழுந்தது. 1995 யாழ்.குடா கடலை படகின் மூலம் கடந்த அனுபவமும் பிெ கேள்வியுற்ற தென்மராட்சி இடப்பெயர்வின் பொழுது மக்களின் அவலங்களும் - இடப்பெயர்வுகளுL கதைகளை எழுத உந்துதல் தந்தன.
பரணி- உங்கள் படைப்புகளில் முக்கிய கரு
பொருள்களாக அமைபவை எவை?
குந்தவை - குறிப்பிட்ட கருப்பொருளை மட்டுL வைத்துக் கொண்ட கதை எழுதுவதும், முன்னே தீர்மானிக்கப்பட்ட கதை முடிவை நோக்கி கதையை நகர்த்துவதும் சிலருக்கு சாத்தியமாயிருக்கலாம். எனக்கு குறிப்பிட்ட ஒரு கருப்பொருளை வைத்துதான் கதை எழுத வேண்டுமென நியதி எனக்கு இல்லை. எந்த ஒரு சம்பவம் மனதை தைக்கிறதோ மனதில் சலனத்தை சஞ்சலத்தை ஏற்படுத்துகிறதோ, அதைப் பற்றி எழுதுகிறேன்.
பரணி - இன்றைய ஈழத்துப் பெண் படைப்பாளிகளில் உங்களுக்கு யாரின் படைப்புகள் விருப்பமானவை என்பதை காரணத்துடன் கூறுவீர்களா?
குந்தவை - என்னைப் பொறுத்தவரையில் பெண் படைப் பாளிகள் என்னும் பொழுது கோகிலா மகேந்திரன், தாமரைச்செல்வி போன்றவர்கள் தான் மனதில் நிற்கிறார்கள். யுத்தத்தின் முன், பல இளம் பெண் எழுத்தாளர்கள் வன்னியில் தோன்றியிருக்கிறார்கள் ஆனாலும் அவைகளின் படைப்புகளை முழுமையாக படிக்க முடியாமையால் என்னால் அதிகம் சொல்ல முடியவில்லை. தாட்சாயணியிடம் எனக்கு முன்பு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. வசீகரமான துள்ளல் நடை அவரிடமிருந்தது. இப்பொழுது அது குறைந்து ஒரு சராசரி எழுத்தாளராக மாறி விடுவாரோ என்று பயமாயிருக்கிறது.
பரணி - “பெண் உடலின் வலியை" எழுதுவதாக வரும் படைப்புகள் பற்றி உங்களின் கருத்துகள்
uUTGOpG?
குந்தவை - காலம் காலமாக ஆண்களால் ஆக்கிர
மிக்கப்பட்ட பெண் உடலின் அவஸ்தையை வலியை உணர்த்தி ஆணுக்கு தம் உடலை வழங்குவதிலிருந்து விடுவிக்கும் எத்தனத்தில் நம் "விட்டுவிடுதலையாய் நிற்கும் நம் சில பெண் கவிஞர்கள் கவிதை எழுதுகிறார்கள். கால மாறுபாட்டின் அடிப்படையில்
ஜீவநதி

முன்பு ஆண்களுக்கு வழங்கப்பட்ட அந்த பெண் உடலையே ஆயுதமாக கொள்கிறார்கள். அவர்களின் தரப்பிலும் நியாயமிருக்கலாம். மேற்கொண்டு கருத்து கூறவிரும்பவில்லை.
பரணி - உங்களின் நீண்ட எழுத்துலக வாழ்வில் நீங்கள் சிறப்பாகக் கற்றுக் கொண்டவை என எவற்றைக் குறிப்பிடுவீர்கள்?
குந்தவை - கற்றுக் கொண்ட பாடங்கள் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் எனத் தெரியவில்லை. ஆனாலும் எழுத்துலகில் என் அனுபவங்கள் சற்று வித்தியாச மானவை தான்.
நான் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு நுழைந்த ஆண்டும், என் கதை ஒன்றும், "சிறுமை கண்டு பொங்குவாய்" என்ற தலைப்பில் "ஆனந்த விகடனில்" முத்திரைக்கதையாக வெளிவந்த ஆண்டும் ஒன்றாக இருந்தன.(1963) சாதாரணமாக இது குறித்து நான் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்ள வேண்டும். ஆனால் நான் சங்கடமும் தவிப்பும் மயக்கமும் அசட்டுத் துணிச்சலுமாக ஒரு வினோதமான அனுபவக் கலவையில் இருந்தேன்.
இதற்கு காரணம் அந்தக் கதை அங்குள்ள ஒரு தமிழ்பேராசிரியரைப் பற்றியதென பலராலும் கருதப்பட்டதேயாகும்.
நான் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த பொழுது என்னை அந்த பேராசிரியருக்கு ஆதரவாக செயல்படும் ஒரு மாணவர் அணியும்எப்பொழுதும் பேராசிரியரோடு முறுகல் நிலையில் இருக்கும் இன்னொரு தமிழ் பேராசிரியருக்கான மாணவர் அணியும் என்னைத் தேடியிருக்கிறார்கள்.
நான் முதலில் முதல் அணியினருக்குத் தெரிய வந்த பொழுது அவர்களின் பயமெல்லாம் நான் மாற்று அணியினருக்கு தெரிய வரக்கூடாதென்பதே. அந்த மாணவ எழுத்தாளர் சொன்னார், "நீங்கள் இன்னார் என்று வெளியில் தெரிவது நல்லதல்ல. அந்த பேராசிரியர் உங்களை குறைந்த புள்ளிகள் போட்டு பரீட்சையில் சித்தியடைய விடமாட்டார் ஆகவே மறைந்திருங்கள்"
நானும் அவர்கள் சொன்னதை ஏற்று அப்படியே இருந்தேன். ஆனாலும் மாற்றுக் குழுவினருக்கு எப்படியோ தெரிந்து விட்டது. அவர்கள் தாம் வெளியிடப்போகும் சிறுகதைத்தொகுப்பிற்கு கதை கேட்டனர். நான் இதை அப்பாவியாய் முன்னைய குழுவிற்கு தெரிவித்தேன். அவர்கள் சுரண்டு விட்டனர். அவர்களின் பயமெல்லாம் "இவள் தாம் பயமுறுத்தி யதை, மாற்றுக் குழுவினருக்குச் சொல்லி விட்டாளா" என்பதாக இருந்தது. நானும் வேண்டுமென்று அவர்கள்
20 - இதழ் 54

Page 23
கருத்தியதை உறுதி செய்வது போல நடந்து கொண்டேன். கோபத்தில் அவர்கள் கன்னா பின்னா எனக் கத்துவதை வேடிக்கை பார்த்தேன்.
முதலாம் வருட கலைப்பீடப் பரீட்சை முடிவில் நான் (தமிழ் பாடம் உட்பட) சித்தியடைந்தேன். இதன் மூலம் தனக்கு வேண்டாதவர்களை சித்தியடைய விடமாட்டார் என்று உலவிய கருத்தை பொய்யாக்கி அந்தப் பேராசிரியர் கனவானாய் காாட்சி தந்தார். நான் தான் இந்தக் கதையை எழுதியிருக்க வேண்டாமே என்று சங்கடப்பட்டக் கொண்டேன்.
பரணி- உங்களைக் கவர்நீத சிறுகதைப் படைப்பாளிகள் யாவர்?
குந்தவை - அசோகமித்திரனைப் பிடிக்கும். அவரின் அலட்டிக் கொள்ளாத நடை, எளிய வர்ணணை லேசாக நகைச்சுவை, கடைசியில் கதையை முடிக்கும் விதம் எல்லாம் பிடிக்கும். ஒரு காலத்தில் வண்ணதாசன் கதைகளில் எனக்கு ஒரு விதபோகம் இருந்தது. இப்பொழுது குறைந்து விட்டது.
பரணி - உங்களைப் பிரமிக்கச் செய்த படைப்புகள் என சிலவற்றைக் குறிப்பிடுவீர்களா?
குந்தவை - பிரமிப்பு ஊட்டும் கதை என்ற ஒன்றைப் படித்ததாக நினைவு இல்லை. ஒரு கதையை படித்து நான் அதிர்ந்து நின்றது நினைவிற்கு வருகிறது. சில காலத்திற்கு முன் சரிநிகரில் சக்கரவர்த்தி எழுதிய கதை. கதை, கிழக்கில், முஸ்லிம்களும் புலிகளும் முறுகிக் கொண்டு இருந்த காலம். ஒரு முஸ்லிம் சிறுவனை புலிகள் ஒரு தமிழ் கடைக்காரரிடம் இழுத்து வருகிறார்கள். "அலைந்து திரிகிறான், உளவாளியாக இருப்பானோ என்று அவர்களின் சந்தேகம். இவனைத் தெரியுமா?" என்று கேட்கிறார்கள்.
அந்தச் சிறுவன், சற்று முன்தான் அவரைப் பார்த்து விட்டுத் திரும்பியிருந்தான். தன் தகப்பனார் தந்துவிட்ட, இந்த கடைக்காரருக்கு சொந்தமான கொடுக்குமதியான பணத்தை இவரிடம் கொடுத்து விட்டுத்திரும்பியிருக்கிறான். 滚 "கடைக்காரர் அவனைத் தெரியாது" எனச் சொல்கிறார். புலிகள் நினைப்பதற்க ஆதரவாய் கருத்தை கூறுகிறார். புலிகள் அச் சிறுவனை இழுத்துச் செல்கின்றனர். சிறிது நேரத்தில் துப்பாக்கி வேட்டு கேட்கிறது. 3. நல்ல முறையில் எழுதப்பட்ட கதை. இப்படியும் நடக்குமா??? என்னால் நம்ப முடியவில்லை. இரண்டாம் வாசிப்பில் அக்கதையில் சில காழ்ப்புணர்ச்சி இருப்பதாக தோன்றியது. என்னை சுந்தரராமசாமியின் சில
ஜீவநதி
 
 
 

கட்டுரைகளும் ஜெயமோகனின் சில கதைப்பகுதி களும் வியக்க வைத்திருக்கின்றன.
பரணி- இன்றைய சிறுகதைப் போக்கு எவ்வாறு உள்ளது?
குந்தவை - இன்றைய ஈழத்து சிறுகதைப் போக்கு அவ்வளவு நல்ல நிலையில் இல்லை என்பது தான் என் கருத்து. புதுபுது போக்குகள் எம்மிடம் காணப்படுவ தில்லை. இளம் எழுத்தாளர்களிடையே நவீன சிந்தனைகள் புகுந்தது மாதிரியும் தெரியவில்லை. இ.சு.முரளிதரன், ஜீவகுமாரன் போன்ற சிலர் இதற்கு விதிவிலக்காயிருக்கிறார்கள்.
பரணி - உங்களின் எழுத்துலக அநுபவங்களின் அடிப்படையில் வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு ஏதாவது சொல்ல விரும்புகின்றீர்களா?
குந்தவை - நன்றாக வாசிக்க வேண்டும். தமிழ் நூல்களை மட்டுமல்ல பிறமொழி நூல்களையும் வாசிக்க வேண்டும். அப்படியானால் நல்ல கதைகளின் உலகத்தரம் பற்றி அறிந்து கொள்ளலாம். வெறுமனே அரைத்த மாவை அரைப்பது போல கதைகள் எழுதுவதால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை.
பரணி - நூல்களாக வந்த உங்கள் படைப்புகள் பற்றிக் கூறுவீர்களா?
குந்தவை - எனக்கு அனாயசமாக கதை எழுத வராது. அதோடு சற்று வித்தியாசமான தரமான கதைகளை எழுத விரும்புகிறேன். அதோடு என் சோம்பலும் கூட இந்தக் காரணங்களால் என்னால் அடிக்கடி கதைகள் எழுத முடிவதில்லை. இதுவரை "யோகம் இருக்கிறது" என்ற ஒரு சிறுகதைத் தொகுப்பே வெளிவந்திருக்கிறது.
இதழ் 54

Page 24
அந்தனி ஜீவாவின் அரை
பேராசிரியர் கா.சிவத்தம்பியின் வழிகாட்ட லுடன் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது மலையக தழிழா ராய்ச்சி மாநாடு 1996-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நான்கு நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட மாநாட்டில் பேராசிரியர் கா.சிவத்தம்பி யின் பேருரை மாநாட்டிற்கு சிகரம் வைத்தாற் போல் அமைந்தது. அவரது உரை நம்பிக்கை தருவதாக அமைந்தது. "எந்த மக்களுக்காக எழுதுகின்றோமோ அந்த மக்களின் மொழியில்எழுதப்படவேண்டும்" என்றார்.
மாநாட்டை முன்னின்று செயற்படுத்திய மத்திய மாகாண இந்து கலாசார கல்வி அமைச்சர் கெளரவ வி.புத்திரசிகாமணி "மலையக தமிழா ாய்ச்சிக்கு செயலகம் அமைத்து செயல்படும். ஆண்டு
ட்டுரைகள் வாசிக்கப்பட்டன.
முதல்நாள் "பத்தொன்பதாம் நூற்றாண்டில் லம் பெயர்ந்த இந்தியர்களும், வெளிநாடுகளில் இந்த சமூகங்கள் ஓர் ஒப்பீட்டுக் கண்ணோட்டம்" என்ற தலைப்பில் பேராதனைப்பல்கலைக்கழக பொருளியற் துறை விரிவுரையாளர் ஆய்வுரை நிகழ்த்தினார். அதனை அடுத்து பேராசிரியர் சோ.சந்திரசேகரன் தலைமையில் "இலங்கை வாழ் (இந்திய வம்சாவளி) மலையகத் தமிழர் வரலாற்றின் ஆரம்பம் பற்றிய சிலகுறிப்புகள்" என்ற தலைப் பில் பேராசிரியர் அம்பலவாணர் சிவராஜா உரையாற்றினார்.
ஆய்வுரைகளுக்கு பின்னர் இளந்தலைமுறை ஆய்வாளரும் ஆசிரியருமான லெனின் மதிவாணன், நல்லாயன் கல்லூரி தமிழ்த்துறை தலைவி திருமதி லலிதா நடராஜா, பத்திரிகையாளரும் ஆய்வாளருமான பெ.முத்துலிங்கம் கருத்துரைகள் வழங்கினார்கள்.
இரண்டாம் நாள் ஆய்வரங்கு "மலையகத் மிழரின் பிரச்சினை மையங்கள்" என்ற தலைப்பில் பராசிரியர் கா.சிவத்தம்பி தலைமையில் நடை
ஜீவநதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாற்றாண்டு அனுபவங்கள் ாடியின் கதை
பெற்றது. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புவியியற் ಜ್ನ துறை பேராசிரியர் மப.செ.மூக்கையா "இலங்கை மலையக மக்களின் கல்வி நிலை அதன் வளர்ச்சியும் போக்கும்" என்ற தலைப்பில் தனது ஆய்வுரையை சமர்ப்பித்து உரையாற்றினார். அவரது உரைக்கு விரி வுரையாளர் மா.கருணாநிதி கருத்துரை வழங்கினார். அடுத்த அமர்வில் "மலையக மக்களின் கல்விப் பிரச்சினைகளும் எதிர்பார்ப்புகளும்" என்ற தலைப்பில் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் தனது ஆய்வுரையை சமர்ப்பித்து உரையாற்றினார். ருநீபாத பத்தனை கல்வியல் கல்லூரியில் துணை அதிபராக பணியாற்றிய சு.முரளிதரன் கருத்துரை வழங்கினார். மூன்றாம் நாள் ஆய்வரங்கு "இந்திய வம்சாவளியினரும். அடிப்படை உரிமைகளும்" என்ற அமர்வுக்கு பேராசிரியர் சோ.சந்திரசேகரன் தலைமை வகித்தார். "அடிப்படை உரிமைகளும் இந்திய வம்சாவளி மக்களும்” என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து பெ.முத்து லிங்கம் உரையாற்றினார். மலையக பட்டதாரியான மேனகா கந்தசாமி கருத்துரை வழங்கினார். அதனை அடுத்து நடைபெற்ற அமர்வில் "மலையகத்தழிழரின் அரசியலும் சமூக அசைவியக்கமும்” என்ற தலைப்பில் சட்டக்கல்லூரி விரிவுரையாளர் வி.ரி.தமிழ்மாறன். ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து உரையாற்றினார்.
மாலை நடைபெற்ற அமர்வில் "மலையகத் தழிழரின் சமூகப் படைப்பாக்கம்" என்ற தலைப்பில் இலங்கை திறந்த பல்கலைக்கழக சிரேஷ் ட விரிவுரையாளர் திரு.ஏ.எஸ்.சந்திரபோஸ் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து உரையாற்றினார். இறுதி நாள் மாநாட்டில் முடிவின் போது மலையகத் தழிழாராய்ச்சி மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுகளைப் பற்றி பேராசிரியர் கா.சிவத்தம்பி விரிவான ஒரு விளக்கம் அளித்ததுடன் இந்த மாநாட்டை முன்னின்று செயல் படுத்திய செயற்பாட்டுக்குழுத்தலைவர் திரு.டி.வி. மாரிமுத்து, செயலாளர் அந்தனிஜீவா, முரீபாதக் கல்வியல் கல்லூரி விரிவுரையாளர் சுமுரளிதரன் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள் என வாழ்த்தினார்.
1996ம் ஆண்ட நடைபெற்ற மலையகத் தழிழாராய்ச்சி மாநாட்டை தொடர்ந்து 1997ம் ஆண்டு "மலையக நாட்டார் வழக்காற்றியில்" என்ற கருத்தரங்கு பேராசிரியர் எஸ்.தில்லைநாதன் தலைமையில் மாத்தளை மாநகரில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் எழுத்தாளர் மாத்தளை வடிவேலன் "மலையக நாட்டார் கலைகளை” பற்றிய ஆய்வுரையை
22 இதழ் 54

Page 25
நிகழ்த்தினார். இதனை தொடர்ந்து கண்டி மாநகரில் பேராதனைப் பல்கலைக்கழக தலைவராக இருந்த பேராசிரியர் க.அருணாசலம் தலைமையில் ஒரு ஆய்வரங்கு நடைபெற்றது. இதில் "மலையக இலக்கியத்திற்கு கிறிஸ்தவர் பங்களிப்பு" என்ற தலைப்பில் தெளிவத்தை ஜோசப்பும், "மலையகத் தமிழ் இலக்கியத்தற்கு முஸ்லீம் எழுத்தாளர்களின் பங்களிப்பு" என்ற தலைப்பில் அந்தனி ஜீவாவும், "மலையகம் பற்றிய ஆங்கில ஆக்கங்கள்” என்ற தலைப்பில் ஆய்வாளரும் எழுத்தாளருமான சாரல்நாடனும் உரையாற்றினார்கள்.
மேலும், இதன் தொடர்ச்சியான அமர்வு நாவலப்பிட்டியில் பேராசிரியர் எம்.சின்னத்தம்பி தலைமையில் இடம்பெற்றது. "மலையக மக்கள் இலக்கியம்" என்னும் தலைப்பில் மொழித்துறை தலைவர் சப்ரகமுவ பல்கலைக்கழகம் கனகசபாபதி நாகேஸ்வரன் ஆய்வுரை நிகழ்த்தினார் அதனை தொடர்ந்து "மலையக இலக்கிய தோற்ற வளர்ச்சிக்கான பின்னணித் தளங்கள்" என்ற தலைப்பில் கவிஞர் சு.முரளிதரன் ஆய்வுரையை வழங்கினார். 1996 ம் ஆண்டு மலையகத் தமிழாராய்ச்சி மாநாடும், அதன் தொடர்ச்சி 1997 மலையக தமிழாராய்ச்சி செயலகம் நடத்திய கருத்தரங்க ஆய்வு களும், "மலையகத் தழிழாராய்ச்சி ஆய்வுக்கட்டுரைகள்" என்ற தலைப்பில் நூலாக, நுவரெலியாவில் நடைபெற்ற மத்திய மாகாண சாகித்திய விழாவில் வெளியிடப் பட்டது. 1977ம் ஆண்டு வெளியிடப்பட்ட முதற்பதிப்பு மீண்டும் இரண்டாம் பதிப்பாக பலரின் வேண்டு கோளுக்கிணங்க 2007 ம் ஆண்டு பிரதி நீதி அமைச்சராக இருந்த கெளரவ புத்திரசிகாமியால் வெளியிடப்பட்டது.
நுவரெலியாவில் நடைபெற்ற மத்தியமாகாண சாகித்திய விழாவுக்காக மலையக கலை இலக்கிய வாதிகள் நூறு பேர்களைப்பற்றிய படத்துடன் தகவல்கள் கொண்ட "முகமும் முகவரியும்" என்ற நூலை தயாரித்து இருந்தேன். ஆனால் அது அன்றைய விழாவில் வெளியிடப்படமாட்டாது என அறிந்தேன். பின்னர் காரணம் என்னவென விசாரித்த போது அமைச்சரின் நண்பர் ஒருவர் "முகமும் முகவரியும்" நூலை பார்த்து விட்டு அதில் இடம்பெற்றுள்ள நடேசய்யரின் படத்தைப் பார்த்துவிட்டு அமைச்சர் தொண டமானுக்கு நடேசய்யரைப்பிடிக்காது அதனால் நடேசய்யரின் படத்துடன் அந்த நூல் வெளிவந்தால் புத்திரசிகாமணி யின் அமைச்சர் பதவிக்கு ஆபத்து வந்துவிடும் எனக் கூறியுள்ளார். அதனால் தனது அமைச்சர் பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்ற அச்சத்தில் அதனை அமைச்சர் என்னிடம் சொல்லத் தயங்கி கவிஞர் முரளிதரனினடம் கூறியுள்ளார்.
சாகித்திய விழாவில் முன்னின்று செயல் பட்ட கவிஞர் முரளிதரன் என்னிடம் வந்து மிகுந்த தயக்கத்துடன் "முகமும் முகவரியும்" இன்று வெளியிட முடியாத சூழ்நிலை என்று கூறினார். நான் மிகவும் சிரமப்பட்டு தயாரித்த எழுத்தாளர்களின் பதிவுகள் அடங்கிய முகமும் முகவரியும் என்ற நூலை இந்த விழாவில் வெளியிடாவிட்டால் அதனை விழா நடைபெறும் மணி டபத்திற்கு முன்பாக நூலை
ஜீவநதி
 
 
 
 
 

வெளியிட்டு விழாவை நடத்துவேன் என கோபத்துடன் கூறி இதனை அமைச்சர் புத்திரசிகாமணியிடம் தெரிவிக்கச் சொன்னேன். பின்னர் கவிஞர் முரளிதரனும், எழுத்தாளர் சாரல் நாடனும் அமைச்சர் புத்திரசிகாமணி யிடம் நியாயத்தை எடுத்துக் கூறி "முகமும் முகவரியும்" என்ற நூலை வெளியிட ஏற்பாடு செய்தார்கள். மலையக ஆக்க இலக்கிய முன்னோடி தேசபத்தன் சோ.நடேசய்யரின் இலக்கியம், பத்திரிகை, தொழிற் சங்கம், அரசியல் பங்களிப்புகளை சிறப்பாக எடுத்துக் கூறிமுகமும் முகவரியும் நூலை வெளியிட்டு வைத்தேன். கெளரவ அமைச்சர் புத்திரசிகாமணிக்கு பிறகு மத்திய மாகாண கல்வி அமைச்சராக வே.இராதாகிருஷ்ணன் பதவி வகித்தார். இவர் நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்தவர். எல்லோருட னும் அன்பாக பழகக் கூடியவர். இவர் 2000ம்ஆண்டு சாகித்திய விழாவை அட்டன் மாநகரில் நடத்தினார். அந்த விழாவில் எனது "அக்கினிப் பூக்கள்" நாடக நூலுக்கு எனக்கு விருதும், பணப்பரிசும் தரப்பட்டது. இரண்டாவது விழாவை மாத்தளையில் நடத்தினார். அங்த விழாவில் "மாத்தளை இலக்கிய வரலாறு" என்ற நூலையும், மலையக எழுத்தாளர்களின் தேர்ந் தெடுக்கப்பட்ட சிறுகதைத் தொகுப்பு ஒன்றையும் வெளியிட்டார்.
மூன்றாவது விழா 2003ல் கண்டியில் நடத்தப்பட்டது. இதனை சிறப்பாக நடத்துவதற்கு ஓர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் "கண்டி மாவட்டத் தமிழர்கள் வரலாறு" ஒரு நூலை வெளியிட வேண்டும் என்று கருத்து தெரிவித்தேன். விழா நடைபெற இன்னும் ஒரு மாதம் இருப்பதால் ஓர் ஆய்வு நூலையும் வெளியிட முடியுமா என பலரும் கருத்து தெரிவித்தனர். "சாகித்திய விழா கோலாகலமாக திருவிழா போல நடந்து முடிந்து விடும் ஆனால் விழாவில் வெளியிடப்படும் நூலும், பதிவுகளாக இருக்கும். கண்டி மாவடடத்தழிழர்களின் வரலாற்று நூலை தனி ஒருவர் எழுதாமல், ஒரு குழுவாக மிக முக்கிய தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதி ஒரு தொகுப்பாக வெளியிடலாம் அது எவ்வாறு தொகுக்கப்பட வேண்டும் என்று தெளிவாக எடுத்து கூறினேன். சாகித்திய விழா ஆலோசனைக் குழுவில் இருந்த சிலருக்கு எனது கருத்துப் பிடிக்கவில்லை. அது மாத்திரமல்ல அந்த நூலை தொகுக்கும் பணி என்னிடம் கொடுக்கக் கூடாது என்பதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது. ஆனால் முடிவாக அமைச்சர் இராதாகிருஷ்ணன் என் மீது நம்பிக்கை வைத்த அதனை தொகுத்து பதிப்பிக்கும் பணியை என்னிடமே ஒப்படைத்தார்.
கண்டி மாவட்டத்தழிழர்களின் வரலாற்றை தொகுப்பது என்றால் அதற்குரிய ஆலோசனையை வழங்குவதற்கு பொருத்தமானவர் மூத்த தமிழறிஞர் எஸ்.எம்.ஏ.ஹசன் என்பவரே என்பது நான் அறிந்த உண்மை. இவருக்கும் எணக்கும் நீண்ட காலமாக தொடர்புண்டு. இவரைத் உடனே தேடிப்போனேன்.
- தொடரும்
3 இதழ் 54

Page 26
நீரின் நிறம்
துளிகள் விழுந்த போது விழித்துக் கொணர்டேன். அருகில் பார்த்தேன்
உன்னைக் காணவில்லை.
If மழையில் நனைந்தபடி. ஏனர்
எதற்கு
என்ன கூத்திது?
மழை உனக்குப்பிடிக்கும் அதனால், கடும் மழையிலுமா..?
நனைந்து விறைத்த உன்னை அனைத்தபடி வந்து கட்டிலில் கிடத்தினேன்.
TÉ திணர்மநிலை அழிந்து திரவமானாய்
நீரானாய்
நீரின் தொடுகையில் உறைந்தவன்; திடுக்குற்று விழித்தேன் If
அசையாமல்
எனினருகில்
கிடப்பது தெரிந்தது அசப்பில்
2 fa) to
இன்றுதான் என்றனர், எழுந்து நடந்தேன். இங்குதான் என்றனர், எட்டிப் பார்த்தேன்
இருட்டாயிருந்த எங்கள் வீட்டு உட ஓரிடம், தலைக்கறுப்புகள் சில தெரிந்தன. கேட்டேனர்:
ԺոււԼի... 7 நடக்குமாம்.! தலைவர், பேச்ச வருவினம்.! நான் சற்றுச் சோ வேளை, திமுதிமுவெனுL கனத்த சப்பாத்து தடதட ஒலிகளும்
Lਨੇਪl. காக்கி, பச்சை, ச
6 TGÖT உடையணிந்த ஆ நுழைந்தது. இப்படி
அப்படி,
அப்படி
இப்படி
என்று கட்டளை இட்டன ஏதேதோ எங்களைக் கேட்( எழுதிக் கொணர்ட அடையாள அட்6 பதிவும் நடந்தது. என்ன கூட்டம் எ6 ஏதோ மரபுரிமை என்றதும் - உரிமை உரிமைய உனக்கு வேணும என்று என்னை மாறிமா உதைத்தனர். இன்னும் சிலரை பின்னர், தலைவர் வரும் வ காத்திருந்தனர். தலைவருக்கும் உ
ஜீவநதி
 
 
 
 
 
 
 

ဖ်ဇာ ၅%,၀ါ2 3 انهاش (12 )) تا 2 و 2--
Spl; ட்கூடம் மாதிரி
TGT iii... ?
ர்ந்திருந்த
ம் சத்தம்.
ទាំងនោះវិនហ៊ា
ாம்பல், வெள்ளை
பூளணி
ତTର07 நான் எதிர்பார்த்திருந்தேன்.
T. கவிதை
பூ உதிரும் ஓசைதான்
அவள் வரும் போது கேட்கும்.
டை பார்த்துப் உள் ஊறலாய் ஏதோ ஒர் ஒளி
கூடவே தாழம்பூ வாசம்.
ர்றனர் உணவுத் தட்டோடு
பற்றியது வரும் அவள்,
பிசைந்து பிசைந்து
|TP விரலிடையே வழியும்
IT... ? உணவை உணர்ணுவாள்.
இடைஇடையே
5. எனக்கும் ஊட்டுவாள். ஊட்டும்போது, அவள்
பும். "ஆ.ஆ.”சொல்லும் அழகு
எண் கணர்முன்னே
ரை விரியும் கவிதை,
தைவிழும்
24- இதழ் 54

Page 27
୭_ତ୪fରold அறிந்தவள்
வெயிலில் எரிகிறாளா குளிரில் உறைகிறாளா 2) 60076), 2-600 LT 6ITT உறக்கம் தொலைத்தாளா என்ன செய்து கொணர்டிருப்பாள்?
கைச்சேதப்பட்டு இப்படி ஆனாளா அல்லது பிள்ளைகள் கைவிட்டதனால் இப்படி ஆனாளா?
பாதையோரம் அவளுக்கு வீடு உடைந்த குடை அந்த வீட்டின் கூரை!
வேளாவேளைக்கு உணவு? படைத்தவனுக்குத் தெரியாதா ԼյլգԱյ6)T35357 ஏதோ சாப்பிடுகிறாள்!
ஒரு போத்தல் தணர்ணிரை மூடியில் ஊற்றியூற்றிக் குடிக்கிறாள். தணர்ணிரின் பெறுமதி எம் எல்லோரையும் விட அவளுக்குத் தெரிந்திருக்கிறது!
சொந்தங்கள் இல்லை அதனால் சோகங்களும் இல்லை
பொதியொன்றைத் தவிர es: அவளிடம் வேறெதுவுமே இல்லை!
உலகம் நிரந்தரமில்லை என்பதை ( உலகுக்கு அறிவிக்கும் ஞானியா அவள்? V,
அதனால்தான் t பேராசை, பொறாமை, டாம்பீகம், வீணர்பெருமை ( எல்லாம் மறந்து ( அவளது உலகில் இன்பமாயிருக்கிறாளா???
- வெலிகம ரிம்ஸா முஹம்மத்
 
 
 
 

இதயவீ6063 கூடைச் சுமையழுத்தி கூண் வீழு மிளமையிலே
கூவுஞ் சேவலுக்கு முதலெழுந்து படித்திடு ஆடைகூட நனைந்திடு மாறாத பனியிலே
ஏழைத்தாயின்
ஆசைமகளே இதுவேண்டாம் கற்றிடு.
தேயிலை சாற்றோடு தேகத்தை சூடேற்றி தேர்போல கொழுந்தை தோளிலே சுமந்து நோயிலே வீழ்ந்தாலும் நோவினை தாங்கிடும் நிந்தையது நீங்கிடட்டும் கற்றிடு.
றாத மலையெங்கிலும் ஏறிநாண் சென்றது ற்காத கல்வியை ஏழையுனக்கு ஈந்திட ஆறாய்ப் பெருகிய அத்தனையுந் தாங்கியது ஆளாக்கியுனை பார்த்திடவே கற்றிடு.
பொங்கிடும் வறுமையும் பொசுக்கிடும் வேதனையும் பொற்காலந் தந்திட்டு புதுவழி காட்டிடட்டும் அங்கஞ் சுருக்கியெண் அரைவயிறு பொறுத்ததும் அறிவுலகம் பார்த்திடத்தான் கற்றிடு.
பொன்னோப் பொருளோ பொக்கிஷமில்லை யுனக்கு பெருவாழ்வு கொணர்டிடும் பெறுமைகளு மில்லை ணர்ணிலே உயர்ந்திடும் மகத்துவமே கல்வி னதிலே கொணர்டுநீகற்றிடு.
த.எலிசபெத் தலவாக்கலை
25. இதழ் 54

Page 28
இ.சு.முரளிதரன்
மாறுபட்ட திரைக்கதை நுட்பத்தோடு மனித தர்க்கத்தினை வசீகரமான தருணங்களின் தொகுப்பாக படைப்பாக்க முயற்சியே Rashomon! யப்பானிய சிை ஆளுமையாக விளங்கும் அகிரா குரோசோவா திரைப்படிமம். "ரியு நொசுகெ அகுதகவ" எழுதிய சிறுகதைகளை பின்புலமாகக் கொண்டு திரைக்கதை உள்ளது. கதையோடு இழையோடும் பாத்திரங்களின் கதை சொல்லும் உத்தியினை வெகுலாவகமாகக் கை
 
 

ܠܼܲ
வாழ்வின் முரண்
வெளிக்கொணர்ந்த ரிமாவின் முதன்மை வின் அற்புதமான இரு யப்பானிய
3
கட்டமைக்கப்பட்டு பார்வைத்தளத்தில் யாண்டு அபாரமான படைப்பொன்றை இயக்குனர் அகிரா குரோசேவா உருவாக்கியுள்ளார். 1950- ஒகஸ்ற் - 24ம் திகதி அரங்கிற்கு வந்த இத்திரைப்படம் இன்றளவும் தெவிட்டாத உண்ர்வுகளை மீள் பார்வையாளர்களுக்கும் வழங்கிக் கொண்டிருக்கிறது. உலகின் தலைசிறந்த திரைப்படக்கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
பங்கேற் போர் பட்டியல் அறிமுகத்தில் யப்பானின் மரபுவழி அரசவை இசையான Gagaku வின் ராகம் பின்னணியாகிறது. பாழடைந்த மண்டபத்தில் Rashomon(தலைவாசல்) என்று யப்பான் மொழியில் எழுதப்பட்டுள்ளது. மண்டபத்தில் புத்தபிக்குவும் (Minoru Chiaki) LDgub Gle), gugub(Takashi Shimura) eLDi bilobi, கிறார்கள். வழிப்போக்கன் ஒருவன் அந்நேரம் வந்து சேர்கிறான். அடைமழை பொழிந்து கொண்டிருக்கிறது. மரம்வெட்டி காட்டுக்குச் சென்றபோது, அங்கு பின மொன்றைக் கண்டதாகச் சொல்கிறான். மரம் வெட்டி காட்டிலே நடந்து செல்லும் பின்னோக்குநிலை உத்திக் காட்சியில் ஒளிப்பதிவின் பல்வேறு கோணங்கள் அற்புதமாகப் பதிவாகியுள்ளன. இலைகளினூடே சூரியன் தெரியும் போது வெளிப்படும் பின்னணி இசை அக்காட்சியின் கவித்துவத்தை நன்கு மெருகேற்றுகிறது. (3166603 (8L) Theme music edit ULLb cupcp6OLDub விரவியுள்ளது). சாமுராய் வீரனின் கொலையானது கதாபாத்திரங்களின் பார்வை வழியே மாறுபட்ட வகையில் சித்திரிக்கப்படுகின்றது.
26 - இதழ் 54

Page 29
() gTégp5(Toshiromitune) Tiflub
கொள்ளைக் காரனான த ஜோமரு மர மொன்றின் அடியிலே படுத்திருக்கிறான். காட்டுப் பாதையில் சாமுராய் வீரனும், அவனது மனைவியும் செல்கின்றனர். குதிரை மீதமர்ந்திருக்கும், சாமுராய் மனைவியின் முகத்திரை விலகும் போது வசீகரமான வதனத்தைக் கண்ட தாஜோமரு அவளை அடைய விரும்புகிறான். சாமுராய் வீரனைக் கட்டிப்போட்டுவிட்டு பலவந்தமாக அவ்வழகியை அனைணத்து முத்தமிடு கிறான். ஒரு கட்டத்தில் எதிர்ப் படங்கி மெய்ம்மறந்த அப்பெண் தன்னை இழக்கிறாள். தனது கணவனைக் கொல்லுமாறு தாஜோமருவிடம் வேண்டுகிறாள். சாமுராய் வீரனின் கட்டுகளை அவிழ்த்த தாஜோமரு அவனோடு சண்டையிடுகிறான். அச்சண்டை யில் சாமுராய் வீரனைக் கொன்ற தாகச் சாட்சியமளிக்கிறான்.
(ii) 3FTypIJMTulij 1D6EDØTaf) (Machiko Kyo) 8 Tilalub
தா ஜோ மருவினர் வண் புணர்ச் சிக்கு உள் ளான மனைவியை சாமுராய் தவறான அர்த்தத்தில் நோக்குகிறான். அ நி த ப பார்  ைவ ய  ைன மனைவியால் பொறுத்துக் - கொள்ள முடியவில்லை, உளப்பாதிப்பும் கோபமும் அடைந்து அவ்வாறு பார்க்க வேண்டாமெனக் கெஞ்சுகிறாள். தன்னைக் கொன்று விடுமாறு வேண்டுகிறாள். சாமுராய் ஏளனமாகச் சிரிக்கிறான். சாமுராயின் மனைவி அதிஉச்ச கோபத்திற்கு உள்ளாகி சாமுராய் வீரனை நெருங்கு கறாள். தானே தனது கணவனைக் கொன்றதாகச்
சாட்சியமளிக்கிறாள்.
(ii) சாமுராய் வீரனின் (Massayku i mori) &allulair 3FMTillafu Unib
(தெய வம் ஏறி
ஆடும் இயல்புடைய தேவ ராட்டியின் உடலில் புகுந்த
சாமுராய் வீரனின் ஆவி கூறும் வாக்குமூலமாகப் பதிவாகின்றது)
&& தஜோமருவோட மகிழந்து கலந்த சாமுராயின்
மனைவி சாமுராய் வீரனை கொல் லு மாறு தஜோமருவிடம் கூறுகிறாள். அவளது அடம்பிடிப்பால்
ஜீவநதி
 
 
 

கோபமுற்ற தஜோமரு அவளைத் துரத்திச் சென்று, சிறிது நேரத்தின் பின்பு திரும்புகிறான். மனஅவஸ்தைக் குள்ளான சாமுராய் கத்தியால் குத்தி தற்கொலை புரிந்ததாக ஆவிசாட்சியமளிக்கிறது.
இயக்குநர் பன்முக நோக்கிலான மெய்யினை வெளிப்படுத்தி நிரந்தர நிஜத்தை பார்வையாளனுக்கு காட்சிரத்து செய்து விடுகிறார். மூலத்துக்கும் நகலுக்குமான மோதுகையாக படம் அமைகின்றது. மெய்யினை அடையாளங்காண முடியாத தவிப்பின் அழகியல் படைப்பினை வேறொரு தளத்திற்கு நகர்த்து கின்றது. மனிதர்களின் பலவீன மான தருணங்களை அகிரா குரோசேவா அற்புதமாக வெளிக் கொணர்ந்துள்ளார். மனிதம் சார்ந்த ஒளிக்கீற்றின் அதீதத்தை படத் தனி முடிவு இனங் காட்டுகின்றது. இறுதிக்காட்சியில் மண்டபத்தில் அழுகின்ற குழந்தை யொன்றின் ஆடைகளை வழிப் போக்கன் எடுத்துக் கொண்டு அடைமழையில் நனைந்தபடியே ஓடுகிறான். மழை ஓய்கிறது. பரிக் குவினி கை யரிலுள் ள குழந்தையை தானே வளர்ப்பதாக மரம்வெட்டி கூறுகிறான். தனது ஆறு பிள்ளைகளோடு சேர்த்து அந்தக்குழந்தையையும் வளர்ப்ப தாக உரைத்து குழந்தையை வாங்கிக் கொண்டு பயணிக்கிறான். பாழ் மண்டபத்தில் Rashomon என்ற யப்பானிய எழுத்துக்கள் காட்சிப்படுத்தப்பட படம் நிறைவடைகிறது.
1864 இல் இயக்குனர் மார்ட்டின் ரிட் The Outrage GT60s D ULLDT35 ரஷோமோனை மீளுரு வாக்கினார். தமிழில் இயக் குநர் எஸ்.பாலச் சந்தரின் "அந்தநாள்", கமலஹாசனின் " விரு மாண்டி" போன்ற படங் 356rfhab Rashomon gp ğ5ğ5) பயன்படுத்தப்பட்டுள்ளது. பல புனைகதை இலக்கியங் களிலும் இவ்வகை நுட்பத் தினை தரிசிக்க முடிகிறது. சு நீ தர ராம சா மரியரினி "திரைகள் ஆயிரம் குறநாவலை யும், என்னுடை "கடவுளின் கைபேசி எண்" சிறுகதையினையும் (ஜீவநதி 50 ஆவது இதழில் உள்ளது) எளிய உதாரணங்களாகக் கூறலாம்.
இதழ் 54

Page 30
சொல்லவேண்டிய கதைகள்
IBITIÖBETTİTGİLb
ஜீவநதியில் குந்தவையின் சிறுகதை நீட்சிை படித்ததும் சில நிமிடங்கள் ஆழ்ந்த மெளனத்தி கரைந்தேன். அச்சிறுகதை எனக்குள் ஏற்படுத்திய அதிர் களை கட்டுப்படுத்திக்கொள்ளவே அந்த மெளனம்,
மெளனம் களைந்ததும் ஜீவநதி ஆசிரிய பரணிதரனுடன் தொலைபேசியில் தொடர்புகொண் குந்தவை எங்கே இருக்கிறார்? அவருடன் உரையா வாழ்துக்கூற விரும்புகின்றேன்" எனச்சொன்னேன்.
" ஏன்..சேர்.?" " உங்கள் ஜீவநதியில் வெளியான குந்தை யின் நீட்சி சிறுகதை என்னை மிகவும் பாதித்துவிட்டது அவருடன் தொடர்புகொண்டு உரையாட விரும் கின்றேன். தொலைபேசி இலக்கம் தாருங்கள்” என்றேன் மறுமுனையில் சில கணங்கள் மெளனம் "சேர். உங்கள் வாழ்த்துக்களை அவரை நேரில்
சந்தித்து சொல்கின்றேன். ஆனால் நீங்கள் தொலைபேச யில் உரையாடுவது சற்று சிரமம். வாருங்கள் அவரது
இருப்பிடத்திற்கே அழைத்துச்செல்கிறேன்." என்றார் இந்த உரையாடல் நடந்தபோது அவுஸ்திரேலியாவிc நின்றேன். குறிப்பிட்ட சிறுகதை பற்றி இந்தப் பத்தியின் நான் எதனையும் சொல்லமாட்டேன். இதனைப் படி கின்றவர்கள் குறிப்பிட்ட சிறுகதை வெளியான ஜீவநதி இதழை தேடி எடுத்துப்படித்தால் அதுவே எனக்கு மனநிறைவுதரும்.
அவுஸ்திரேலியாவில் வதியும் இலக்கிய நண்பர்கள் மற்றும் இலக்கிய ஆர்வமுள்ள சகோதர களிடம் அச்சிறுகதை பற்றி சிலாகித்தேன். அவர்களின் சிலர் படித்துவிட்டு, "ஆமாம் சமகாலத்தில் தரமான நல்ே சிறுகதை" என்றார்கள்
ஜனவரி மாதம் நண்பர் தெணியானின் பிறந் நாளை முன்னிட்டு ஜீவநதி நடத்திய இலக்கிய நிகழ்வுக்கு தலைமைதாங்குவதற்காக வடமராட்சிக்கு வந்தேன் வந்ததும் பரணிதரனிடம் எனது முதலாவது வேண் கோள்,"குந்தவையிடம் அழைத்துச் செல்லுங்கள்."
அவரது மோட்டார்சைக்கிளில் தொண் மனாறுக்கு புறப்பட்டோம். 1981 இல் முதல்தடவையா
ஜீவநதி
 
 
 
 
 

செல்வச்சன்னிதிக்கு வந்திருக்கிறேன். பல ஆண்டு களின் பின்னர் சன்னிதியானையும் தரிசித்துவிட்டு குந்தவையின் அந்த நாற்சார் இல்லத்தின் வளவுக்குள் வந்தோம்.
அந்த இல்லம் என்னை பெரிதும் கவர்ந்தது. அப்படி நாற்சார் இல்லங்கள் இலங்கையில் அபூர்வ மாகவே எனது கண்களுக்கு தென்பட்டிருக்கின்றன. தமிழ்த்திரைப்படங்களில் தமிழக நாற்சார் வீடுகளை பார்த்திருக்கின்றேன். எனது ஆயுளுக்குள் எனக்கு வசதி வாய்ப்பு கிட்டுமானால் ஒரு நாற்சார் இல்லம் அமைக்க விரும்புகின்றேன். அதுவும் எனது கனவுகளில் ஒன்று.
குந்தவை வசிக்கும் இல்லத்தின் சுற்றுப்புறம் சரியான கவனிப்பும் பராமரிப்புமின்றி தனிஅழகோடு காட்சி அளிக்கிறது. அந்த இல்லத்தில் முன்பு வாழ்ந்த வர்கள் நன்றாக செழிப்போடு வாழ்ந்திருக்க வேண்டும்.
முற்றத்திலிருந்து குரல் கொடுத்தோம். " HLOLOT... c9LOLOT..." எமது குரல்கேட்டு அயல்வீட்டுப்பெண்தான் வெளியே வந்து, "ரீச்சர் உள்ளேதான் இருக்கிறாங்க. அவுங்களுக்கு கொஞ்சம் சுகமில்லை. மீண்டும் கூப்பிட்டுப்பாருங்க.." எனச்சொல்லிவிட்டு அகன்றார்.
இப்போது உரத்த குரலில் அழைத்தோம். "SLibLOT. SlbLDT." "வாரன். வாரன்." உள்ளிருந்து குரல் வந்தது.
"சேர். அது குந்தவையின் குரல்தான். வந்து இருங்கள்." விறாந்தாவில் அமர்ந்தோம்.
"யார் .?" எனக் கேட்டவாறு வெளியே வந்தவரை, "சேர். இவர்தான் குந்தவை. நீங்கள் பார்க்கவிரும்பிய படைப்பாளி" என்றார் பரணி.
கண்களை இடுக்கியவாறு " யார்.தம்பி பரணியா? யார். வந்திருப்பது?" எனக்கேட்டவரின் அருகில் சென்று என்னை அறிமுகப்படுத்தினேன்.
அவரது தோற்றம் என்னை அதிர்வுகலந்த வியப்பில் ஆழ்த்தியது.
பலவருடங்களுக்கு முன்னர் குரும்பசிட்டியில்
இதழ் 54

Page 31
இரசிகமணி கனகசெந்தியையும் அளவெட்டியில் அ.செ. முருகானந்தனையும் நேரில் சந்தித்தபோதிருந்த உணர்வுகளையும் மீறியதாக அக்கணங்கள் என்னை வெகுவாகப்பாதித்தது. செவிப்புலன், கட்புலன் பாதிப்புக் குள்ளாகியிருந்தபோதிலும் தொடர்ச்சியான வாசிப்பு, எழுத்தூழியம் என வாழ்ந்துகொண்டிருக்கும் குந்தவை யின் சிறுகதையொன்றை நாடக வடிவமாக்கி, லண்டனில் வதியும் பாலேந்திரா-ஆனந்தராணி தம்பதியர் தங்களின் அவைக்காற்றுக்கழகத்தின் ஊடாக ஐரோப்பிய நாடுகளில் மேடையேற்றினர்.
ஈழத்துச்சிறுகதையொன்று ஐரோப்பாவில் மேடையேறியதற்கு என்ன காரணம்? அதற்கு சர்வ தேசத்தரம் இருந்தமையே காரணம். அகதி வாழ்வில் குழந்தைகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் ஈழத்து தமிழ் அகதிகளின் கதை மட்டுமல்ல. பாலஸ்தீனிய, அல்பேனிய, சோமாலிய அகதிகளுக்கும் பொதுவானது தான். தொண்டமனாறு என்ற ஒரு புறநகர்பிரதேசத்தை வாழ்விடமாகக்கொண்டிருப்பவரிடம் ஒரு சர்வதேச தரம் வாய்ந்த கதையொன்று உருவானது தற்செயலான தாக இருக்கலாம். ஆனால் குந்தவைக்கு அந்த அங்கீகாரம் ஒரு பேறுதான்.
சிலநாட்கள் காய்ச்சலினால் அவதியுற்றதாகச் சொன்னார். அவரது முகத்தில் அந்த தாக்கம் தெரிந்தது. அந்த நடுப்பகலிலும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தவரை,
எங்கள் "அம்மா. அம்மா." குரல்தான் துயில்
எழுப்பியிருக்கிறது.
தன் னைத்தான் தேடிவந்திருக்கிறோம் என்டறிந்து உற்சாகம்மேலிட இலக்கியம்பேசினார். சமீபத்தில் வெளியான மகுடம், கணையாழி இதழ்களை அவர் படித்துவிட்டு கருத்துச்சொன்னார். அ.யேசுராசா, பத்மநாப ஐயர், உட்பட சிலரை குறிப்பிட்டார். தற்கால விமர்சனங்கள் தனிநபர் தாக்குதலாக வெளியாவது குறித் து புனர் முறுவ லோடு ஆ. வருந்தினார்.
கோகிலா மகேந்திரன், சித்திரலேகா மெளனகுரு, அன்ன லட்சுமி இராஜதுரை முதலான சில பெண எழுத தாளர் க  ைள விசாரித்தார்.
"ஜீவநதியில் வெளியான நீட்சி சிறுகதைதான் அவுஸ்திரேலி யாவிலிருந்து உங்களை தேடிவரச் செய்தது" எனச்சொன்னபோது ஒரு குழ நீ  ைத  ைய ப் போன று நாணிச்சிரித்தார். தன்னைப்பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை.
தனக் கிருந்த ஒரு அணி ணன் காலமாகிவிட்டதைச் சொல் லி சுவரில் மாட்டியிருந்த அவரின் படத்தை காண்பித்தார்.
ஜீவநதி
 

அருகே எவரும் இல்லை. சில உறவுகள் வெளிநாட்டில். தனிமையில் அந்த வீடும் அவரும்.
தனிமைதான் அவரது உற்றசொந்தமோ என்று யோசித்தேன். இல்லை. இலக்கியம் அவருடன் வாழும் சொந்தம். என்பது ஆறுதலானது.
ஜனவரி 6 ஆம் திகதி தெணியானின் விழா முடிந்ததும் அன்றிரவே புறப்படவேண்டிய நிகழ்ச்சிநிரல் எனக்கு, மீண்டும் வருவேன் எனச்சொல்லிவிட்டு புறப்பட்டேன் பயண ஒழுங்குகளில் திடீர் திருப்பங்கள், மாற்றங்கள். இதற்கிடையில் தமிழகப்பயணம். திட்ட மிட்டவாறு அவரை மீண்டும் சந்திக்க தொண்ட மனாறுக்குச் செல்ல முடியாமல் அவுஸ்திரேலி யாவுக்குப் பயணமானேன். அவரது தோற்றமும் அந்த நாற்சார் இல்லமும் எனது மனதில் நிறைந்திருக்கிறது.
அவரது ஏற்கனவே வெளியான படைப்புகள் குறித்த மறுவாசிப்புகள் இலக்கியப்பரப்பில் நிகழ வேண்டும். அவரை எம்மவர்கள் அவ்வப்போது சென்று பார்த்து உரையாடவேண்டும். அவரை இலக்கிய உலகம் கனம் பண் ணவேண்டும். புதிய தலைமுறைப் படைப் பாளிகளுக்கு குந்தவையின் படைப்புகள் அறிமுகமாக வேண்டும். இதுவே இந்த சொல்ல வேண்டிய கதையில் நான் சொல்லவிரும்பும் செய்தி
இந்தப்பயணத்தின்போது, தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் பிரபல மாக்சிய இலக்கிய விமர்சகர் கோவை ஞானி அவர்களைச்சந்தித்து நீண்டநேரம் உரையாடினேன். முற்றாக கண்பார்வை இழந்திருக்கும் அவர் ஒரு உதவியாளரை வைத்துக் கொண்டு படிக்கிறார். எழுதுகிறார். நான்கு மாதங்களுக்கு முன்னர் அவரது மனைவியும் காலமாகிவிட்டார்.
அன்று மாலைவேளை எனது கரம் பற்றிய வாறு அருகில் வீதியோரமாக சுமார் ஒருமணி நேரம் நடந்தார். நடந்துகொண்டே இலக்கியம். அரசியல் பேசினார். சடுதியாக நின்று, "இவ்வளவு நேரம் உங்களுடன் பேசிக் கொண்டிருக்கின்றேன். ஆனால் ஒரு படைப் பாளிக்கே உரித்தான மேட்டிமைக் குணத்தை உங்களிடம் காணமுடிய வில்லையே முருகபூபதி. அது ஏன்?" எனக் கேட்டார். அதற்கு என்னிடம் அவர் கேட்கும் விதமான சிரிப்பு மாத்திரமே பதிலாக வெளிப்பட்டது. வார்த்தை களில் பதில் தெரியவில்லை.
கனக செ நீ த நா தனி , அ.செ.முருகானந்தன், குந்தவை முதலான எளிய மனிதர்களுடன் பழகும் சந்தர்ப்பங்கள் கிடைத்தமை தான் அதற்குக் காரணமா என்ற பதில் எனக்கு அப்போது உடனடியாக வரவில்லை.
9 இதழ் 54

Page 32
கோவலனின் மனம் ஒப்பிட்டுப் பார்த்துக்
கொண்டது. ஆடல் அழகி மாதவியின் உடல் சுகத்தில் தன் மனமும் உடலும் களிப் பெய்திய காலங்களை நோக்கினால் அருவெறுப்பாகவும் அர்த்தமற்றதாகவும் தெரிந்தது. கலைகளின் பொக்கிஷம், காதலின் அடையாளம், அழகுக்கு இலக்கணம், இளமையின் இருப்பிடம், அன்பின் வடிவம், பெண்மையின் உருவம் என்றெல்லாம் தெரிந்த மாதவி இன்று அவனுக்கு ஏமாற்றமாகத் தெரிந்தாள் போல . போலி வேஷக்கரி. பொல்லாங்கான பெண். அவள் குலத்தின் குணத்தைக் காட்டமாட்டாளா? என்ன என நினைத்துக் கொண்டான். ஒருபுறம் ஏமாற்றமும் மறுபுறம் தான் எல்லாவற்றாலும் தாழ்ந்து போய் விட்டதாகவும் தன்னை தன் மனம் ஏளனம் செய்வதாக உணர்ந்தான். தளர்ந்தான். மனமும் உடலும் சோர்ந்து நடக்கக்கூட ஸ்திராணி அற்றவனாக நின்று கொண்டு.
அந்தப் பருத்த நிழல் பரப்பில் ஆலமரத்தின் கீழ் கோவலன் களைத்து உட்கார்ந்திருந்தான். அதே வழியாக இந்திர விழாவை முடித்துக் கொண்டு பரத நாட்டை நோக்கி வந்து கொண்டிருந்த வழிப் போக்கர்களின் தாகமும் வெயில்தகிப்பும் அடங்கு வதற்கு அவ் ஆலமரத்தில் வந்து சேர்ந்தனர். அம்மரத்தின் சற்று அருகில் வந்த அவர்கள் கோவலனை அர்த்த புஸ்டியுடன் பார்த்தார்கள். தேற்றத்தில் ஆணழ
ஜீவநதி
 

எஸ்.தனேஸ்வரி
கனாகவும் செல்வத்தின் செழிப்பின் மமதையும்
அலட்சியம் குடி கொண்டாற்போல் ஆனால் தற்போது முகத்தில் வெறுப்பு தோல்வி களைப்பு இழப்பு என்ற நான்குமே கலந்து வைத்தாற் போல உணர்வைக் காட்டியது.
வழிப்போக்கரில் ஒருவன் இவன் தான் கோவலனாக இருக்க வேண்டும் என மற்றவனின் காதிற் குசுகுசுத்தான். ஆமாம் பார்க்கத் தெரிகின்றது. ஆனால் இவன் தான் மாதவி என்ற கணிகையின் வலையிற்சிக்கி விருத்தற்கல்ல விருப்புற்றிருந்தானே. இப்போது என்ன வாட்டமாகக் காணப்படுகின்றான். பெரியவர்கள் தெரியாமலா சென்னார்கள் "ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்” என்று என மற்றவர்களின் காதில் கூறினான். அப்படியென்றால் காதலி மனைவி போனால் என்ன? கற்பு மனைவி இருக்கிறாளே என்றான் மற்றவன். நண்பனின் பதிலுக்கு மறுபதில் கூறாது சற்று ஆழ்ந்து விட்டு கூறினான். அதுதானே (ஆண்களின்) எம்மவர் வாழ்வின் இந்தியோக எழுதப்பட்டுள்ளது. கோவலனைப் போன்று நமக்கு ஒவ்வொன்று கிடைத்தாற். அவர்கள் தங்கள் தங்கள் அனுபவத்திற்கேற்ப கற்பனையை திழைத்தனர். இவர்களது சம்பாசனை எதையுமே காதில் வேண்டாது அவன் உச்சிப் பொழுதைப் பார்த்தான். அவனோ குண திசையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டி ருந்தான். மெல்லமெல்ல வெம்மை நாக்குகளைக் குறைத்து வண்ணக் கைகளை நீட்டத் தொடங்கினான். இளம்தென்றலும் குளிர்மையில் மெதுவாக வீசுவதற்கு விண்ணப்பம் செய்த இயற்கையின் மாற்றங்களை உற்றுக் கவனித்தான். மாதவியில் அவன் எவ்வளவோ உயர்ந்த நம்பிக்கை கொண்டிருந்தான்.
இறைவனும் ஆண் மாவும் இணைந்தது போன்று காதலும் காமமும் இணைந்த கிழமை எப்படியிருந்தது. ஆனால் இப்போது கேவலத்தின் பாவத்தின் இருப்பிடமாக அப்பப்பா. இதோ.
3o இதழ் 54

Page 33
இதோ. இயற்கை போன்று சற்று நேரத்தின் சட்டெரித்த இந்த சூரியனும் இந்த பூதலமும் சுட்டெரித்த சூரியனாக மாதவியும் குளிர்மை இளம் மாலை கண்ணகியும் இரு வேறுபட்ட பிரமாண்ட விம்பமாக தெரிந்தனர். இப்போது எவ்வளவோ சுகம் தருகின்றதே அதே போன்றே தான் வாழ்க்கையுமா. ஏதேதோ தத்துவம் வந்து கண்ணகி யிடம் செல்ல வேண்டும் ஆர்வம் மேலும் தூண்ட மேலங்கியை சரி செய்து தலைப்பாத்துண்டினை உதறி தலைப்பாவாக அணிந்த பின் புகார் நகர் நோக்கி அவனது நடையில் கனவு/கனிவும் இதே போன்றதாக இளைத்திருந்தது. என் கண்ணகி எந்த வித எதிர்ப்பும் இன்றிய அற்புதமான மாலைப்பொழுது போன்றவள். தெளிந்த நீரோடை போன்றவள். எல்லாவிதமான இணங்கல்களுக்கும், பணிவுக்கும் வரைவிலக்கண மானவள் என்னை ஒரு நொடிப் பொழுது எதிர்த்ததும் இல்லை என் ஏவலை மறுத்ததுமில்லை. கண்ணகி கண்ணுக்கும் இனியாளே. கோவலனின் மனம் கண்ணகியுடன் தான் வாழ்ந்த நாட்களையும் மீள் நிரப்பு செய்து கொண்டது. இனிமையும் புதுமையும் தான்! முதன்முதலாக அவள் கழுத்தில் மாங்கல்யம் நாண் பூட்டியபோது அந்த மென்றுடலில் ஏற்பட்ட சிலிர்ப்பு அந்தப் பரிசத்தினால் அவள் துவண்டது நாணமும் ஆசை அன்றிப் புதுமை கலந்த ஐாடையாக பிரிந்து அப்பப்பா. அவனின் அழகு அவனின் பணிவு அவனின் நெகிழ்வு பெண் ஆணுக்காகப் படைக்கப்பட்டு ஆணின் எல்லா ※ விதமான தேவைகளுக்கும் ஆசைகளுக்கும் பிரதி செய்யப்பட்ட ஓர் உயர்யடமே தான் விரும்பியது
விரும்பிய இசையினை நுகர்வதற்கான ராகமாலை
பெண். இத்தகைய பெண்ணே கற்புடைய மனையாட்டி யாகின்றாள். அந்த யாகம் தான் கண்ணகி. மாதவி யென்ற மாய வலையில் வீழ்ந்து கிடந்தபோது கூட
பொருள் தேடிச்சென்ற போது இல்லையென்று கூறாத பிராட்டி அல்லவா! நான் இன்று மனம்மாறி அவளிடமே முற்றாக வந்து விட்டேன் என்ற உண்மையை அறிந்தால் கயல்விழியில் துள்ளுமே ஒரு மகிழ்வு, அது இந்தப் பிரபஞ்சத்தை விடவும் பெரிதாக இருக்கும். கோவலனுக்கு இப்போது குற்றஉணர்வு மறைந்து ஓர் பெருமிதம் குடிகொண்டது. எனினும் வரவேற்றுகும் கண்ணகியின் இயல்புநிலை அவன் தவறுகளை தானே மறுத்து பெருமனிதனாக அவனுக்கு காட்டியது. இப்போது அவன் நடையில் வேகம் மின்னலடித்து கண்ணகி. கண்ணகி. மாசறு பொன்னே. வலம்புரி முத்தே. காசறு கிளியே. தேனே. ஏதோ ஏதோ அவன் கண்ணகியை சுற்றிக் கொண்டது. கோவலனின் கால்கள் காற்றுக்கு போட்டி வைத்தது
ஜீவநதி
 
 
 

போன்று இதோ இதோ கண்ணகியின் அகம் வந்து சேர்ந்தான் கோவலன். காதலும் பெருமகிழ்ச்சியும் பற்றிக் கண்ணகியின் வாசற்கதவு தட்டப்படுகின்றது.
கண்ணகியின் மனதில் படபடப்பு, தவிதவிப்பு அத்துடன் கூடவேஆகர்ஷமான அழுத்தம். கதவை மெல்லத்திறக்க செல்கின்றாள். அப்போது கனாத்திறன் உரைத்த சேதியையும் தோழியின் கூற்று அவள் காதில் ஒலித்தது. நாதன் வருவாரே!. அவள் இதலோரத்தில் சிறு புன்னகை தவழ்ந்தது. அது ஏமாற்றம் அல்லது ஏளனமான அகராதி சண்டை செய்தது. மெல்ல கழுத்து வரை சுற்றிப்போர்க்கப்பட்ட முக்காட்டை இழுத்திப் போர்த்திக் கொண்டு மெல்ல வாசற் கதவைத் திறந்தாள். அவள் உள்மனம் மகிழ்ந்தது. இது கோவலன் என்று திடம் கொண்ட எந்தப்பெண்ணுக்கும் தீர்க்க தரிசனம் உண்டு. அவள் எதிர்பார்ப்பு வாசலில் சென்றது. நாதா! நீங்கள் வாருங்கள் ஒரு கணம் ஏறெடுத்துப் பார்த்தவள் மறுகணம் தலையைக் கவிழ்த்துக் கொண்டாள். பொருளுக்காகவே என்னிடம் வந்திருப்பீர்கள். என்னிடமுள்ள காற்சிலம்பை கழற்றி வருகின்றேன். வேறு ஆடவன் முன் ஒரு குடும்பப் பெண் எவ்வாறு நடந்து கொள்வாள் அதுபோன்றே கோவலன் முன்னே காற்சிலம்பைக் கழற்றாது நடந்து சென்றாள். கண்ணகி நில். என்னைக் கொல்லாதே. நான் உனக்கு செய்த இல்லறத்துரோகத்துக்கு தண் டனையை அனுபவித்து விட்டேன். நான் உன்னுடனேயே இருக்கப்போகின்றேன். குடிப்பதற்கு கொஞ்சம் ஐலம் தருவாயா? அப்போது உங்களையே நம்பிய இரண்டாவது பெண்ணாளின் இரண்டாவது நிலையும். வாய்வரை வந்த வார்த்தையை கேள்விக் குறியாக மாற்றி அவனை ஒரு கணம் குத்திட்டுப் பார்த்தாள். மறுகணம் பார்வையை எடுத்து எந்திரப் பாவைபோல விரைந்து செயற்பட்டாள். கண்ணகியின் வேகமும் பார்வையும் சராசரி ஆண் மகனான கோவலனுக்கு மகிழ் வைத் தந்தது. அவள் அறியாமையை அவனால் அப்போது புரிந்து கொள்ள முடியவில்லை. கண்ணிகி பாதஐலம் கொண்டு வந்து அவன் பாதத்தைக் கழுவினாள். ஆனால் அவளது மென்காந்தல் விரல்கள் அவன் காலில் தொடாத வகையாக இருந்தது. அதன் முகஸ்தானையைச் செய்த பின் கோவலன் வீட்டின் முன் சாளரத்தில் நடுப்பகுதி யில் வந்து ஆசுவாசமாக அமர வந்தாள். உணவு பரிமாறப்பட்டது. விருந்தோம்பல் தருணத்தில் வேறு ஒரு ஆடவன் வந்து இருந்தார். அன்னியமாக நின்று பெண்டீர் உணவு படைப்பார்களோ அதே போன்றே உணவு பரிமாறப்பட்டது. ஆனால் கண்ணகியின் அந்நியப்பட்ட நிலை கோவலனால் உணர்ந்து
இதழ் 54

Page 34
கொளர் ளப் படவில்  ைல, வாழி க கை யரி
தொடர்ச்சியாகவே தவறு விடுபவர்கள் மற்றவர்க
பற்றிக் கவலை கொள்ளவோ அவர் மனநிலைை
அறிந்து கொள்வோ துணிவதில்லைத்தானே! கோவல அவ்வாறே இருந்தான். சட்டென எழுந்த கோவல தானும் கண்ணகியும் வாழ்ந்த பள்ளியறையை ஒரு தர ஆர்வத்தோடு பார்த்தபின் நீள் பெருமூச்செறிந்தா பரினர் னார் ச ட டென கனர் ன கரி க ண க ை
மூடிக் கொள்கிறாள். கோவலன் ஆர்வத் தோ நோக்கினான். அவனது உள்நோக்கத்தின் உணர் அவளைச் சினமடையச் செய்தது. மீண்டும் கண்ண மாதவி மேல் கொண்ட வெறுப்பும் அவனால் அடைந் ஏமாற்றமும் அவமானமும் கண்ணகிபால் பேரார்வமா எழுந்தது. இந்தப் பிரபஞ்சத்தில் ஒரேயொரு காம கிளர்த்தியாக சகல காமாந்திர தேவைகளுக்கு பதி கூறுபவளாக கோவலனின் மனம் நிறைந்த காத குமரியாக கண்ணகி காட்சியளித்தாள். ஒருவர் பற்ற எவ்வாறு எண்ணுகிறோமோ அவர் பற்றி அவ்வாே எமக்குத் தெரிய வர இது எமது அறிவினாலுL அறிவீனத்தாலும் கட்டப்படும் ஓர் கோட்டைதான். இந்
அபிப்பிராயக் கோட்டை பொய்யாகவும் மெய்யாகவும்
இருக்கலாம். இதேபோலத்தான் கோவலன் தன் உணர்வு நிலைக்கேற்ப கண்ணகியைப் பிரதிட்டை செய்தான்.
பொழுது சாய்ந்து விளக்கேற்றும் நேரத்தினை அண்மித்துக் கொண்டு இருந்தது. தென்றல் காற்று இளைய இருளை வரவேற்க ஆலாபனம் செய்து கொண்டு இருந்தது. தூரத்திலே ஒற்றைக் குருவி ஏதோ ஒரு அர்த்தத்தில் கத்திக் கொண்டு இருந்தது. எதனையும் சாட்டை செய்யாத கண்ணகி பொழுது ஏற்ற
காரியங்களைக் கொண்டு இருந்தாள். கண்ணகியென்று காதலும் காமமும் சேர்த்து அழைத்தான் கோவலன்.
செய்யும் காரியத்தில் போட்டதைப்போட்டபடி போட்டு விட்டு கூப்பிட்டீர்களா நாதா1ஆம் கண்ணகி என் அன்புக்கினியாளே அந்திமைப் பொழுது சாய்வதற்கு
முன்பாக நாம் நமது பாண்டிய நாடு செல்வோம். ாதவியிடம் இழந்த சொத்துக்களை எல்லாம் வாணிபத் தினால் எடுத்துக்கொள்வோம். நாம் அற்புதமாக வாழலாம். ஒருயிர் ஈருடல் இணைவது போல் இன்றே இணை வோம் . கோவலனினி வார்த் தைகள் ஒவ்வொன்றும் களிப்பேறும் கூற்றாகவும் நம்பிக்கை யாகவும் காதல் நிறைந்ததாகவும் இருந்தது ஆர்வத்தோடு கண்ணிகியின் கரம் பிடித்து முத்தமிட ( சென்றான். அலைகள் தமக்குள் பிரச்சினையைத்
தீர்க்கவேண்டும் ஆவல் உடன் கரையை நோக்கி வருவதும் பின்னர் கரையைத் தாண்டாது அடங்கி
போகும் கடல் அலைபோன்று கோவலனைக் கண்ட
ஜீவநதி
 
 
 
 
 
 
 
 
 
 

T.
可
D
நேரத்திலிருந்து பல வினாக்களை எழுப்ப எண்ணிய கண்ணகி மரபு தந்திட்ட பெண்மைக் கோலத்தினால் பொறுத்து இருந்தாள். ஆனால் இப்போது அவள் கேட்ட கேள்வி மரபுகளைத் தாண்டி ஆழிப்பேரலை என நியாய கோபமாக வெளிப்பட தலை நிமிர்த்தினாள் அந்தப் பெண் மை, கண்ணகியின் தோரணை கோவலனுக்கு சற்றுப் பயமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. தன்னைச் சுதாகரித்துக் கொண்டு கண்ணகி என்னம்மா? ஒன்றுமில்லை என்ன கேட்டீர்கள் நாதா? என்றாள். பாணி டியநாடு சென்று புது வாழ்வு வாழ்வதற்காக என்னுடன் வா என்றான்.
நாதா. கண்ணகியின் குரல் கீச்சிட்டது. என்ன? உங்களுடன் மீண்டும் தாம்பத்திய உறவு கொண்டு வாழ்வதா? கண்ணகியின் கேள்வி அழுத்தத்துடன் கூடியதாக வந்து விழுந்தது. உங்களைக் கைப்பிடித்த நாளில் இருந்து பத்தினி தர்மத்தை விட்டு நான் விலகியதில்லை. கடவுள் ஸ்தானத்தில் வைத்தே உங்களை வணங் கினேன். எக் குறையுமின்றி உங்களுக்காக அர்ப்பணிக்கும்போது அதுவே என் வாழ்வு என எண்ணி பூரித்தேன். உங்கள் அளவு கடந்த ஆத்ம அன்பு ஒன்றே போதுமென எண்ணினேன். பெருமிதம் கொண்டேன். ஆனால் மாதவியென்ற ஆடல்மகளை கண்டு காமுற்று அவள் பின் சென்ற போது என் சார்பாக நீங்கள் கொண்ட அன்பு என் உள்ளம் சார்ந்தது அல்ல. உடல் சார்ந்தது என்று அதிர்ச்சி அடைந்தேன். மாசறு பொன்னே வலம்புரி முத்தே. என்று கொஞ்சியது எல்லாம் உதட்டளவில் பேச்சுத்தான் என புரிந்து கொண்டேன். அப்போது கோவலன் நான் உன் கணவன் என்பதை மறந்து பேசுகிறாயா? இல்லை இல்லைநாதா கணவனுக்குரிய அர்த்தத்தை தேடிக் கொண்டு இருக்கிறேன். வரையறை களை கடந்து பேசுகிறேன் என நினைக்கிறீர்களா? வரையறைகள் வரைவிலக்கணம் இழக்கும்போது அதைக் கடந்து செல்லல் என்பது தவறு இல்லையே நாதா?
கண்ணகி நீயா இப்படிப்பேசுவது? அச்சம், மடம், நாணம் என்ற அழகான மங்கையர் மங்கலத்துள் மடிந்து கிடந்தவளா இப்படிப்பேசுவது. என்னை வரையறுத்துக் கொண்டு தாம்பத்தியம் உங்களையும் வரையறுத்துக் கொண்டுள்ளது நாதா. தான் கட்டிய மனைவியரைத் தவிர ஏனைய பெண்களை தாயாகப் பார்க்கும் மரபு தமிழ் மரபுக்கு உண்டெல்வா? அப்படியிருக்க அம்மரபை உடைத்தெறிந்த நீங்களா மரபு பற்றிப் பேசுகிறீர்கள்! கேவலம்! உடல் இன்பத்திற்காக தாம்பத்திய தர்மத்தை உடைத்த உன்மத்தனல்லவா நீங்கள். அப்படியிருக்க நான்
32 இதழ் 54

Page 35
எப்படி இனி உம்முடன்.? நீங்கள் எச்சில் இலை யாக்கப்பட்ட பின்னர் நான் உங்களுடன் வாழ்ந்தால் நானும் அவ்வாறு மாறி விடுவேன் அல்லவா? பெண் எதனையும் வெளியே சொல்லக் கூடாது என்ற மரபை நான் உடைத்ததாகவே அமையட்டுமே இளவேனில் காலத்தில் நீங்கள் மாதவி என்ற நங்கையுடன் இன்பம் துயிர்த்து இன்பம் அனுபவித்தபோது எனக்கும் அந்த விருப்பம் இருக்காதா! மயக்கமாலை போய் இனிக்கும் இரவுகள் வரும்போது என்னுள்ளம் மலைஎன எரிந்ததை நீங்கள் நினைக்கவில்லையே. எனது கணவன் என்றால் இதனை நினைத்து இருப்பான் அல்லவா? பிரிவு நம் இருவர்க்கும் ஒத்ததாக இருந்தால் யாம் பொறுத்துக் கொள்வோம். ஆனால் நம் பிரிவில் நீங்கள் மட்டும் இன்பம் அனுபவிக்க நான் துன்பத்தில் வாடினேன். அப்போது எனக்கு எந்த தமிழ் மரபு காத்தது? இத்தகைய ஒரு தமிழ் மரபு இனியும் எனக்கு வேண்டாம். முடிவாகக் கண்ணகி எதனைக் கூறுகிறாய்?
உங்களுடன் வரமுடியாது என்று புகல்கிறேன் நாதா தனித்து வாழ்வதென முடிவெடுத்துவிட்டாயா? தவித்து வாழ்ந்தவளுக்கு தனித்து வாழ்வதென்பது புதிதல்ல நாதா கோவலனின் இருதயம் மிகவேகமாக அடித்துக் கொண்டது. மின்னும் நட்சத்திரமோ அந்த மாதவி கபட நாயகி ஆனால் நீ அவ்வாறில்லை உன்னைத் தஞ்சம் என்று வந்த எனக்கு நீ இவ்வாறாக
பிடிவாதமாகக் கூறலாமா? நன்றாய் இருக்கிறது நாதா.
மாதவி கபட நாயகி என்றால், நீங்கள் யார்? அவள் குல வழக்கப்படி யாருடனும் வாழலாம். ஆனால் நீங்கள் யார்? அவளிடம் எந்தப் பலவீனத்தையும் நான் உணரேன். அவளை நட்சத்திரம் என்றீர்களே! நானும் தான் வாழ்க்கை வானத்தில் அந்த ஊமைச்சோகத்தால் உதிர்ந்து விட்ட நட்சத்திரம். ஆனால் நான் உதிர்ந்து போக மாட்டேன். தன்னளவில் நிலை தடுமாறாத
பெண்கள் இவ்வுலகில் நீதியையும் நியாயங்களையும்
நிலைநாட்டுவதற்கும் பயன்படுவாள். நான் என்னை நன்கு அறிவேன் நாதா எனது வாழ்வு இவ்வுலகிற்கு
படிப்பினையாக அமையப் போகின்றது. நீயென்ன
ஞானியா? எனக்கோவலன் கோபமாகவும் ஏளன மாகவும் கேட்டான். தன்னைத்தானே காத்துக் கொள்ளும்
வலிமை படைத்த பெண் தீட்சண்ய பண்பினைப்
பெறுவாள். அப்படியானால் இனி நடக்கப் போவது உனக்குத் தெரிகிறதா? ஆம் நீங்கள் பாண்டி நாடு சென்றால் உங்களுக்கு உயிர்ச்சேதம் ஏற்படும் நாதா! கோவலன் ஏளனமாக சிரித்துக் கொண்டு நீ சொல்வதை எல்லாம் பொறுமையாக கேட்பதனால் கண்ணகி நீ என்னை இப்படி அச்சுறுத்துகிறாயா? பேதையே! நான்
ஜீவநதி

போகிறேன் ஆனால் எனக்கு முதலாக உனது காற் சிலம்பை தந்துவிடு என்றான். தருகின்றேன்! ஆனால்
ஊழ்வினை வந்து உறுத்தும் விதியை யார் வெல்வது
கோவலன் சிலம்புடன் வெளிச்செல்கின்றான். கண்ணகி இறுக்கி கண்களை பூட்டிக் கொள்கிறாள். மூடிய கண்களிலிருந்து கண்ணிர் வழிந்து கொண்டது. தீதும் நன்றும் பிறர்தர வாரா..! என்று சந்தப்பாடலை பக்கத்து வீட்டு வயோதிபர் படித்துக் கொண்டி
ருந்தார். கண்ணகியின் மனக்கண்ணில் பார்வதி
யின் துர்க்கா அவதாரமாக தான் நிற்பதாகவும் பாண்டி யனின் அரசசபையில் நீதி கேட்பதாகவும் காட்சி வந்து கொண்டிருந்தது. அதோ பாண்டிய நாடு தீப்பற்றி
எரிகின்றது.!
2á222Zvტ
நிர்ச்சலமான எண் மனதில் வாழ்வு பற்றிய எணர்ணங்கள் கருகியபடி!
முன்னேற்றங்கள் குறித்த என நம்பிக்கைப் புள்ளிகளை அழிக்கின்றன காலத்தின் கொடுர கைகள்!
வறுமைக்கோட்டின் கீழ் வழுக்கி விழுந்த எம் நிலையை உயர்த்திப் பார்க்க உறுதியில்லை!
தோள் சுமக்கும் துயர்களை விட மேலதிக பொருளாதாரச் சுமை முடக்கிப் போட்டதெம்மை!
கடந்த காலம் முடிந்துவிட்டது. நிகழ்காலம் கழிகிறது. எதிர்காலம்???
தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
இதழ் 54

Page 36
குறுநா
புதுவீடு
ஆனந்தி
அங்கம் நான்கு
தெளிவான உணர்ச்சியோடு சிரித்த பேசுகின்ற அந்தப் பாமரச்சிறுமி, துளசிக்கு ஓர் அற்பு; பிறவியாகவே தோன்றினாள். அவளுக்கு என்ன சொல் தென்றே புரியாமல், உணர்ச்சி பரவசத்தால், தேதி மெல்லாம் புல்லரித்துக்கொண்டிருந்தது. அவை யறியாமலே கண்கள் கலங்கின சிலிர்த்துப் போ முகத்தை நிமிர்த்தி ஊடுருவி அவளை ஆன் நேயத்தோடு, குழைந்து பார்த்தவாறே, அவள் பரி மிக்க, மெல்லிய குரலில் சொன்னாள்.
“ராணி! துருவநட்சத்திரம் சாகிறேலை அ மீண்டும் மீண்டும் என் காலடிக்கே வந்து கொண்டிருக்கு உன் பேச்சைக் கேட்க எனக்கு எவ் வளவே சந்தோஷமாக இருக்கு. இதெல்லாம் உண்மையா? நிறைய நாளுக்கு நல்லபடியாக இருக்க வேணுமே. உண்மையிலே என்னைவிடப் பெரிய ராணிதான இல்லை! தெய்வப்பிறவி! துருவநட்சத்திரம் இதுக் மேலே எனக்கு ஒன்றுமே சொல்லத் தெரியேலை. நல் மனிதர்களைச் சீக்கிரமே விதி கொண்டு போகிறது இதுக்காக அழுவதுகூடப் பாவம் உனக்கு அழிவில்லை இதை நான் மானஸீகமாகச் சாகாமல் இருந்து பார்க்கத்தான் போறன். நல்லவை என் நெஞ்சிலே நிலைத்து நிற்கும். அவை அபூர்வமாகத் தோன்றும், எ மனதையே கறை எரித்துப் பரிசுத்த மாக்கிவிட்டு போகும், உன்னைப் பார்க்கிற போது, சாந்தியா அமைதிநிலை கொண்ட உன் அன்பு முகத்தில் விசாகனையே கண்டு, தரிசிக்கிற மாதிரி, நான் உணர்ச்சியில் கரைந்து போறன். உன்னை நினைப்பது போல் என்றும் அவன் இருப்பான்”
ராணி! இந்த முத்துமாலை ஒரு ஜடம், இதுக் உயிர் கொடுத்தவன் விசாகன், ஆனால் இது கொடுத்து வைக்கவில்லை. நானோ நீயோ இதுக்குப் பொருளாக போவதில்லை. நாங்கள் மனிதர்களெல்லாம் பார்க்கு படி, பெரிய வானத்திலே, வலம் வந்து சோபிக்க போகின்ற ஒளிப்பிழம்புகளல்ல, கீழே நின்றாலும், அன் ஒளியே எங்கள் வெற்றி, இதைக் கண்ணாடி வைத்து
ஜீவநதி.

பல்
அ உ 2. C.
ள்
ன
உ 6
- ட- 3. > . > = 8 மு = ஈ ஈ - 9 (9
பார்க்கிற தென்றால், இந்த முத்துமாலையே போதும். இதன் கதையை நான் உனக்குச் சொல்லப்போறன். “குரலில் சுருதி ஏறித் தொடர்ந்து அவள் சொல்லிக் கொண்டிருந்தாள்”
“எனக்கு அப்ப ஒன்பது பத்து வயசிருக்கும் எனக்கு உலகம் பிடிபடுகிற வயது, வயசுக்கு மீறிய வளர்ச்சியுடன் இருந்ததால், நான் வெளியே போக முடியாது. இப்ப மாதிரிச் சுதந்திரம் இல்லை. கடைக்குப் போனாலே வம்புதான். கடைவீதி மட்டுமா? ஊரில் இன்னும் என்னென்ன இருக்கு, எத்தனை இடங்கள் இருக்கு. வயல்வெளி என்ன! குளக்கரை என்ன! காலாறப் போனால், எவ்வளவு சந்தோஷமாக இருக்கும். பெரியவர்களெல்லாம் விழித்த பிறகு, நான் வெறும் ஜடம், ஐயோ; என்னைப்பூட்டி வைத்து விட்டார்களே!, யாருக்குப்பூட்டு? எனக்கா? என்னைப் பூட்டி வைக்க முடியாதே”
நானென்றால், இது வெறும் உடம்பல்ல, இந்த 2. உடம்பு அழிந்து போகும், அப்ப நான்யார்? எனக்கே
அது புரிகிற மாதிரிப்படுகிறது. நிச்சயம் புரியும், ஜன்னலடியில் நின்று பார்க்கிற போது, தெருவும் வாசலும், ஊரும் மனிதர்களும், எல்லாமாய் என்னைக் காண்கிற போது, கறையற்ற வானம், எதிரே நின்று ஒளியில் சிரிக்கும் ஏனென்றால் எனது ஜன்னல், மனம் எப் போதும் விசாலமாகவே திறந்து கிடக்கும். தூங்காமலே விழித்துக் கொண்டிருக்கும்.
ஒரு நாள் வாசலிலே, தூணோரமாய், |
உட்கார்ந்து கொண்டு தெருவையே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்ப பூமியின் கறையை விழுங்கிக் கொண்டு, ஓர் துருவ நட்சத்திரம்! விசாகன் வந்து நிற்கிறான். அவனை நான் முன்பின் பார்த்ததில்லை.
டவுனிலிருந்து ஒரு புதுவிருந்தாளியாகத் தன் அப்பாவோடு அவன் வந்திருக்கிறான். அவன் அப்பாவைத்தான் எனக்கு நன்றாகத் தெரியுமே. என்ரை அப்பாவின் ஒன்ற விட்ட தம்பியாம் அவர். குகதாசன் சித்தப்பா என்று அவரை நான் கூப்பிடுகிறேன். பார்ப்
34
- இதழ் 54

Page 37
பதற்கு, அவர் சாதுவாக இருப்பார். வாய்திறந்து, அதிகம் பேச மாட்டார். அவர் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வந்து போவார். இன்றைக்கு அதிசயமாக ஒரு புது விருந்தாளி யோடு வந்திருக்கிறார். அவன்தான் விசாகன்.
அவன் எனக்கு முன்னால் வந்து, கம்பீரமாக நிற்கிறான். இந்தக் கிராமத்து மண்ணோடு ஐக்கியப்பட்டு, உயிர்விடக்காத்து நிற்கும் எனது நிலை, அவனுக்கு முன்னால் எடுபடாமல், என்னை வெட்கம் பிடுங்கித் தின்ன, தூண் மறைவில் நான் நிழலாக மறைந்து நின்றிருந்தேன். அவன் என்னிடத்தில் வரமாட்டான் என்பது என்ன நிச்சயம். நிச்சயம் வருவான். அவர் கால்கள் இன்னும் நிலத்தின் மீதே, இருந்தன. பார்ப்பதற்கு அவன் ஓர் அசல் வெள்ளைக்காரச் சிறுவன் போன்றே தோன்றினான். நல்ல சிவப்பு, நாகரீகமாய் உடை அணிந்து கொண்டு, காலில் சப்பாத்துடன் வந்து நிற்கிற அவனை இனம் காண முடியாமல், நான் தவித்துக் கொண்டிருந்தேன். அவனோ என்னைக் கண்டுவிட்ட மகிழ்ச்சியோடு முன்னால் வந்துநின்றான்.
எனக்குப் பேச வரவில்லை. மகிழ்ச்சியா துக்கமா என்று புரியாமல் தலையைக் கவிழ்த்துக் கொண்டிருந்தேன். அவன் கேட்டான்.
"ஓடி வந்து களைத்துப் போனேன். எவ்வளவு பெரிய இடமாக இருக்கு. இதுதான் பெரியப்பா வீடோ வென்று சந்தேகமாக இருக்கு. மம்மி காறி உமிழ்வாளே, ம்! எனக்கொன்றும் புரியேலை, நீர் தானே துளசி?"
அவன் குரல் தெளிந்த நீருற்றுப் போல், அன்பு லயம் மாறாமல், ஒலிக்கிற போது, நான் மெய்மறந்து அதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். (என்னை மறந்து அதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்). என்னை மறந்து அவனை நிமிர்ந்து பார்த்தேன். இவன் இந்த மண்ணுக்கு ஈடாகவே, இலக்கு மாறாமல் நின்று கொண்டிருந்தான். அவன் கண்கள், ஒன்றுமறியாத உனது வெள்ளை உள்ளத்திற்கு ஈடாகவே, களங்கமற்று, நிர்மலமாய் இருந்தன. அவனது பார்வையிலும், பேச்சிலும் தொனி யிலும், வக்கிரமற்ற, சூதற்ற, நிகரில்லாத அன்பே, உயிர் கொண்டு, நிலைத்திருப்பதாய், நான் உணர்ந்தேன். அதை முழுமையாகத் பிரதிபலிக்கிற அவன்மீது, என்னை யறியாமலே, ஒரு பாச ஈர்ப்பு ஏற்பட்டிருப்பதை, என்னால் நன்றாகவே உணர முடிந்த போதிலும், நான் இன்னும் தனியாகவே பிரிந்து நிற்பது போன்ற பிரமையை, என்னால் மறக்க முடியேலை, அவனிடம் எனக்கு வெட்கம் நிறைய இருந்தது. இதற்குக் காரணம் வயது வித்தியாசமல்ல. அவன் ஆண்பிள்ளை என்பதாலு மல்ல, சகோதரத்துவம், அன்பு இவைதவிர, நான் வேறொன்றும் அறியேன், அப்படியாயின் நான் ஏன், அவனிடத்தில் வெட்கம் அடைந்திருக்கிறேன்.
ஓ! அது எனக்குப் புரிகிறது, பரிசுத்தமும், எளிமையும், ஆடம்பரமற்ற தூய தெய்வீக அழகும்
ஜீவநதி

நிரம்பிய என்னுடைய கிராமத்துப் பாமரத்தனங் களுக்கு முற்றிலும் மாறுபட்டவனாக, அவன் வந்தி ருப்பதே, இதற்குக் காரணமாக இருந்தது. அவனிலும் குற்றமில்லை. அவன் அப்படி வளர்க்கப்பட்டிருக் கிறான். தோற்றம் இயல்பான நிலையிலிருந்து, போலி வழியில் திரிந்து போனாலும், அன்பு மாறாத, அவனது உள்ளப்பாங்கு, எனக்கு ஒத்ததாகவே இருந்தது.
ராணி அவள் சொல்வதைக் கேட்டவாறே தன்னை மறந்து, தூங்கிக் கொண்டிருந்தாள். துளசி அவளின் முதுகில் தட்டி,
"என்ன ராணி, தூங்கிறியா?" என்றாள் அவள் திடுக்கிட்டுப் பாதிகனவில் விழிக்கிற மாதிரிக் கண்ணைத்திறந்து, பார்த்துவிட்டு,
"இல்லையக்கா!" என்றாள் "பொய் சொல்கிறாய், உண்மைக்குத் திரை இருக்கு அந்தத் திரையிலே மறைந்து போய்நிற்கிற, ஒற்றைநிழல் நான், இது செத்துப்போன மாதிரிக் கூட இருக்கு, இந்த நிழலைத்தேடி, நீ வந்திருக்கிறாய்! உண்மையின் திரையைத்தாண்டி வந்திருக்கிற உனக்கு, இப்ப எல்லாமே விளங்கும், பொய் எங்கே இருக்கு? சொல் பார்ப்போம்"
"எனக்குச் சொல்லத் தெரியேலை" "சரி உனக்கு அது தெரிய வேண்டாம், மனதிலே அழுக்கு இல்லாமல் இருக்கிற அன்புமட்டும், உனக்கு புரிந்தால் போதும், எனக்கும் உனக்கும் உறவுவழியில் என்ன சம்பந்தமிருக்கு? வெறும் அன்பு என்று சொன்னால் உலகம் சிரிக்கும். நாம் அதுக்குப் பயந்து, வாழ்ந்தது போதும். நீயும் நானும் ஒன்றுதான். இந்த ஐக்கியத்திலே வேற்றுமைகளை மறந்துவிட்டுச் சந்தோஷமாக இருக்கத் தோன்றுது. நான் விசாகனோடு அப்படித்தான், ஒன்றாக உயிர் கலந்து இருந்தேன். அந்த நீண்ட பயணம், சில்லுமுறிந்து, இடையிலே நின்று போச்சு. அவன் மாதிரி, நீ வந்து நிற்கிறாய். இதை நான் மறக்கமாட்டேன். ராணி! நீ மீண்டும் வருவியே?"
துளசியக்கா! நான் சாகிறதே நிச்சயமாக இருக்கு. உங்களைக் கண்ட பிறகு, இன்னும் கொஞ்ச நாளைக்கு இருந்தாலென்ன என்று எனக்கு ஏக்கமாக இருக்கு, அதுக்கு வழியில்லை என்று நினைக்க, அழுகை அழுகையாக வருகுது. உங்களை நான் மறக்க மாட்டேன். நாளைக்கும் நான் இஞ்சை வருவன். விசாகனின் கதை இன்னும் இருக்கல்லே, கேட்க வேணும்"
"அது முடியாத கதை . தொடர் தொடராய்! அதன் அமுக்கம் வந்து கொண்டேயிருக்கு, அவன் அன்பை நினைத்துத் துக்கத்தை மறந்தவள் நான், அவனை நான் எப்படி நேசித்தேனோ, அதே மாதிரி உன்னிடமும், எனக்கு அளவு கடந்த அன்பு இருக்கு, அதே போல், அதுக்கு ஈடாக எனக்கு நீ என்னதரப்
இதழ் 54

Page 38
போறாய்?"
"அக்கா! நான் ஏழை, அம்மா தோட் வேலைக்குப் போவதோடு, மிகுதி நேரங்களில், பெட் கடகம் இழைத்துச் சந்தைக்குப் போய், வித்திட்டுவாறவ கஷ்டப்பட்டு, அவ இப்படி உழைக்காவிட்டால், எங்கை வயிறு நிரம்பாது. இது மட்டுமில்லை நானும் பை வடலிக்குள் போய் பனம்பழம், விறகு எல்லாம் பொறுக்கி கொண்டு வருவன். கஷ்டப்படாமல் இருக்க இயலா ஆனால் கடவுள் எனக்கு வருத்தத்தையும் தந் விட்டாரே! என்னைத் தந்தாலும், உங்களுக்கு பலனில்லை"
"அப்படிச் சொல்லாதே ராணி உன்னை பெறுவதிலே எனக்கு லாபமிருக்கு, ஏனென்றால், இப் வெல்லாம் காலம் மாறிப்போச்சு, பெரியோர்களிட பயம், பக்தி குறைவு, எல்லோருக்கும் எல்லாம் தெரியுL சிறியவர்களோடு பேச முடியவில்லை. எண் 6 சொன்னாலும், புத்தியில் ஏறாது, தீமை எம்ை அழித்துக் கொண்டு வருகுது. இதுக்கு மத்தியி:ே அன்பைப் பற்றி நினைக்கிறதே. கொஞ்சம் ஆறுதலா இருக்கு, அது இல்லாமல், இருக்க முடியாது. அப்ப இருக்கவேண்டு என்று தோன்றினால், அப்ப6ே செத்துவிட்டதிற்குச் சமம். அதனால்தான் இந்த பூம அலைந்து கொண்டிருக்கு ராணி வாழ்க்கையை விட்( விலகி நிற்கிற, கரையிலே நின்று கொண்டு என்னை போலச் சூரிய நமஸ்காரம் பண்ணுறது புண்ணியமல்லே இதுக்கு நீயும் வருவியா? சாகிறபோது, இதை
மலட்டு
மரணப்படுக்கையில் மனம் கல்யாணம் பேசுகிறது வாய் எந்தப் புற்றில் எந்தப் பாம்போ?
வாசங்கள் ஏந்தி வரும் குப்பைகள் மணங்களைச் சுமக்கும் மூக்குகள் இருட்டைப் பிரசவித்தது வானமா?. பூமியா?.
தென்றலை ஏந்திய சிரிப்பு தொணர்டையை அடைத்துக் கொணர்டிருக்கும் வெறுப்பு வானம்மழைபெய்தாலென்ன? விட்டாலென்ன?!
நிறக் காற்சட்டை போட்ட இளைஞன் அவன் வாய்வரை
வந்து போனது இங்கிலிஸ் மின்னல்
 
 
 
 
 
 
 
 

பார்த்துக் கொண்டே இரண்டு பேரும் ஒன்றாகச் gom (36)ITD"
"இல்லையக் கா! நான்தான் முதலிலே g|TG36).j66"
"உஷ் உரத்துப் பேசாதே ராணி அப்பா காதிலே விழப்போகுது. சாகிறதை நினைத்தாலே அவருக்குப் பயம் நீயோ தைரியமாக, அதுக்கு முகம் கொடுக்கிறாய்? எனக்கு இதெல்லாம் பெரிய ஆச்சரிய மாக இருக்கு. இந்த வயதிலே, உன்ரை இந்த மனப் பக்குவம், பெரிசில்லையா? இதை வழிபடுகிறதே எனக்குப் பெருமையாக இருக்கு, நான் உன்னை வணங்குகிறேனா? எனக்குப் பைத்தியம் தான் பிடிச்சிருக்கு"
வழிபாடு என்றால் என்ன என்றே அறியாத அந்தப் பாமரச்சிறுமி, ஒரு துருவத்தில் தான் உயர்ந்து நிற்பதைக் கூட அறியாதவளாக உண்மையின் திரையில், உயிர்ச்சித்திரமாக ஒளியாக நிற்கும் அவள்! இந்தத் துளசி ஒன்றுமேயில்லாத வெறும் ஐடத்தின் நிழலல்ல அவளும் மாறுபடாத இருள் கழாத சத்தியத்தின் ஒளித்தேவதைதான். அவளின் மாறாத அன்பு நிறைந்த சத்தியத்தையே, துணையாக நம்பி, ஏற்றுக்கொண்டு விட்ட மகிழ்ச்சிப் பூரிப்போடு, ராணி முகம் களை கொண்டு, துளசியிடம் சொல்லிவிட்டு, எழுந்து வெளியே கதவைத் தாண்டிப் போகிற போது, வாசலில் சன்னமான இருளில், வெறித்துக் காலியாகிக் கிடந்தது. (தொடரும்)
D.
I
冪 箏
அதை ஓசைப்படாமல் விழுங்கியதால். தொணர்டை முழுக்க நெருப்புப் புணர்கள்.
அவளென்றால். எண் உயிர் ஞாபகங்கள் மரத்துப் போனபின் காலடி ஓசை கேட்டது திரும்பிப் பார்த்தால். தீ ஏந்திநின்றாள்.
மலர்களைக் கொய்தன கரங்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டதோ விரல்கள்.
நாக்கை நீட்டிக் கக்குவது தென்றலின் கீதம். எப்படி. நம்புவது வானம் தரும் மழையை?!
36- இதழ் 54

Page 39
பெண்கள் அறிவுள்ளவர்களாக ஆற்றலுள்ள வர்களாக சமூகத்தை இயக்குபவர்களாக இயங்கி வருகிறார்கள். பெண்களை பலவீனப்படுத்து பவர்களாக நினைத்துக் கொண்டு பலமிழந்தவர்களும் ஓட்டம் பிடித்தவர்களுமாய் எம்மத்தியில் குறைபாடுடை யவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். சிந்தனையில் ஆழமும் படைப்பு வீச்சும் ஒருங்கே கொண்ட படைப் பாளிகள் ஆண், பெண் பாகுபாடின்றி பெண்ணியத்திற் கான சமூக மாற்றத்திற்கு ஓங்கி குரல் கொடுத்துள்ளனர். இந்தச்சமூகமானது பெண்களது பிரச்சினை களை உள்வாங்குவதில்லை. பெண்களின் பிரச்சினைக் கான மூலமே சமூகம் தான். பெண் களிற்கு எதிரானவர்கள் ஆணாதிக்கம் எனும் பெயரில் தத்தம் சுயநலத்திற்காக மற்றவர்களைப் பயன்படுத்துகிறார்கள். பெண்களின் ஒடுக் குமுறைக் கெதிரான ஒருமித்த எழுச்சிக்குரலாக ஆக்கங்கள் கதைகள் கட்டுரைகளாக கவிதைகளாக ஆய்வுகளாக வெளி வந்துள்ளன. ஒவ்வொரு படைப்பாளியின் பார்வையின் விரிவும் ஆழமும் அவரவரது சமுதாய உணர்வின் வளர்ச்சியாலும் அனுபவங்களின்று விருத்தி பெற்ற அறிவாலும் நிர்ணயமாகின்றன.
பெண் படைப் பாளிகள் அனைவரும் ஆணாதிக்கத்தின் கொடுமைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் கண்டறிந்தமையே அவர்களது படைப் பின் ஒருமைக்கு காரணம். பெண்களின் பிரச்சினை பற்றியோ, அவர்களது உரிமைகள் பற்றியோ பேசுவதையே சிலர் விரும்புவதில்லை. பெண்விடுதலை என்ற பெயரில் வெளியாகும் முற்போக்கு வாத சிந்தனைகளை எதிர்க்கும் போக்கும் பெண்ணுரிமை யின் குரலை நிசப்திக்க பாடுபடுபவர்களும் உள்ளனர்.
"நாங்களும் மனிதர்கள் தான்", "ஒரு சத்தியம்", "ஏனிந்த வித்தியாசங்கள்", "பலமான கேள்விகள்" போன்ற கவிதைகள் இளமைப் பருவத்திலேயே பெண்களிற்குமறுக்கப்படும் உரிமைகள் பற்றி கண்டன
ஜீவநதி
 

கேள்வி எழுப்பியுள்ளன. பெரும்பாலான கவிதைகள் சீதன முறையை வற்புறுத்தி பெண்களை திருமணம் செய்து வைக்கும் முறையை சாடுகின்றன. ஒரு சில அதற்குமப்பால் சென்று ஆணாதிக்க Lp(360TITUT615 திற்கே சவால் விடுகின்றன. "மணமில்லாவிட்டால் என்ன மாய்ந்து விட மாட்டோம்" எனும் வரிகளும்
எனும் பிரகடனமும்
எனும் ஏளனமும்
எனும் விரக்தியும்
எனும் சவாலும்
"உயிர் தப்ப வேண்டுமானால் ஊரை விட்டு ஒருவோம் ஆனால் விலை கொருத்து வாங்கியவனுடன் மட்டும் ஒட நான் தயாரில்லை"
"சீதனத்திற்கு வழியில்லாததால் எம்மைச் சுற்றி உரசிப்பார்க்கும் இளைஞரில் ஒருவன் கூட புருசனாய் வர தகுதி இழந்தான்"
"நாங்கள் எல்லோரும் பாபர் மசூதிகள் எல்லோரும் இடிக்கிறார்கள் கட்டுவார் எவருமில்லை"
"விலைகளை நிறுத்தி விருப்பு வெறுப்புகளிற்கு இனியேனும் இடங்கொடு"
"வாருங்கள் மாப்பிளையே
நம்
வருங்கால வாழ்வு பற்றி
வாதிடுவோம்" என தனி னோடு வாழ வந்த வரை
இதழ் 54

Page 40
வாதுக்கழைக்கும் குத்தலான வார்த்தைகளும் சொல் முனைவது என்ன? குமர்கள் கரை சேர்வதும் கணவனால் கைவிடப்பட்டவள் வாழாவெட்டியாவது நம் பொது வழக்கிலே பொதிந்துள்ள ஆணாதிக்கத்தின் ஆழ்ந்த சுவடுகள். "சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டு சொந்தமும் உறவும் நிர்ப் பந்திக்கும் திருமண அவசியத்தையே கேள்விக்குட்படுத்தும் இப்பெண கவிஞர்களது தைரியம் தரும் கவிதைகள் மனதிற்கு உற்சாகமூட்டுகின்றது. "திருமணம் அவசியமா?"எனுL கேள்வியும் அது அவசியமாயின் அந்த உறவு, சமத்துவம் பரஸ்பர மரியாதை, பரஸ்பர விருப்பு, நேர்பை ஆகியவற்றின் அடிப்படையிலே அமையக்கூடும் எனும் கருத்தும் தொக்கிநிற்கிறது.
ஆண்கள் பெண்களிற்கு தரும் அடி உதைகள்
நிந்தனைகள் போன்றவை திருமணம் எனும் உறவினுள்ளே நியாயப்படுத்தப்படுவதையும் திருமணத் திற்கு உள்ளும் வெளியும் பெண்கள் ஆண்களது போகப்பொருளாயும் காணப்படுவதை சாடும் வரிகள் பல உள்ளன. இவை பெண்கள் மீதான வன்முறைகளை வெளிப்படுத்தி நிற்கின்றன.
"எங்களை பாருங்கள்
எங்கள்
சேலைகளையல்ல
எங்கள் உணர்ச்சிகளை
எங்கள்
முகத்தையுமல்ல
மனக்குமுறலை." (சாம்பற்பூச்சிகள்)
"காரணமின்றி என் மீது
தோடரப்பட்ட
வன்முறைகள்
அவள் மீதும்
தொடரப்படநான் அனுமதிக்கப்போவதில்லை" (பிரகடனம்) பெண்கள் மத்தியில் பெண்மை பற்றிய பழமை
வாதக் கோட்பாடுகளை கேள் விக் குட் படுத்தும்
ஆக்கங்கள் சூழல் மாற்றத்தையே குறிப்பாக சமூக மாற்றத்தையே பெரிதும் விரும்பின. இன்னமும் பழமை யிலேயே தம்மைச் சிறைப்படுத்தி தம் சுயநலன்களிற்கு
பாழாக்குவதை மாற்றுகின்ற மூடிய மனங்களை திறக்கக்கோருகின்ற ஆக்கங்களை பல கோணங்களில் காணலாம். மனித சமத்துவம் பற்றிய குரலாக
"3LDLDT
மனிதனை மனிதனாக
பார்க்க முதலில்
பழகிக் கொள்வோம்" (ஒலிக்கிறது.}
பெண்கள் சகல அடக்குமுறைகளிற்கும், சுரண்டல்களிற்குமெதிராக போராடுவதில் ஆணுக்கு
ஜீவநதி
 

சமமாக மட்டுமன்றி ஆணை விட அதிகளவில் போராட வேண்டிய தேவை பெண்களிற்குண்டு. இதற்கான உரிமையை அவர்கள் எந்த ஆணிடமும் எதிர்பார்க்க வில்லை.
"உங்கள்
வரண்டு போன அதட்டல்களையும்
நொருங்கிப்போன கட்டளைகளையும்
நிறைவேற்றும் மனிதப்பிணமாக
வாழாமல்." எதிர்ப்புணர்வு கொழுந்து விட்டெரிகிறது. ஒடுக்கலிற்கு எதிரான குரலாக ஓங்கி ஒலிக்கிறது.
பெண்ணிலை வாதக்கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாதவர்கள் பல்வேறு சாட்டுக்களை கூறி மழுப்பி வந்துள்ளனர். காலா காலமாக ஆணாதிக்கம் எனும் போர்வையில் சீதனத்திற்காகப் பிறப்பெடுத்த சீமான்கள் பல பேர் விசப்பல்லை பொய்ப்பல்லாக கொண்டவர்களும், அநீதியே நட்பின் நன்னடத்தையாக உரைக்கும் கால்மாட்டு ராமர்களும், சுகமாக இருந்து சாப்பிடவும், வாழவும் எனக்கண்டுபிடித்த பால் அசமத்துவப்போக்கு விடைதேட முடியாமல் கேள்வி யாகவே உள்ளது.
எனவே பெண்கள் உறுதியும் உரமும் கொண்ட
பல்வேறு படைப்பாக்கங்கள் பெண் உரிமையை நிலைநாட்டி பால் சமத்துவத்தையே போதித்து சமூக மேம்பாட்டிற்கு அன்றிலிருந்து இன்று வரை அயராது பாடுபடுகின்றன எனலாம்.

Page 41
உநிசார்
இரத்தபாசம்
சுபகு நேரத் தொழுகையை முடித்து விட்டு, தேநீர் ஒரு கோப்பையும் அருந்திய பின்னர் அன்று நடக்க வேண்டிய கருமங்களை திட்டமிட்டுக் கொண்டிருக்கும் போதே சாதிக் ஹாஜியாரை நெஞ்சு வலி தாக்கியது. உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் என்பவற்றால் பீடிக்கப்பட்டிருந்த அவரை, வைத்தியர்கள் மிகவும் கவனமாக இருக்கச் சொல்லியிருந்தும் வியாபார விடயங்களுக்காக அங்கும் இங்கும் அலைந்ததும் மன உளைச்சலும் அவருக்கு திடீர் நெஞ்சு வலி வருவதற்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும்.
"உம்மா. ஏன்ட உம்மா. ஏன்ட நெஞ்சு வலிச்சுது. ஒடனே எங்க சரி என்னக் கொண்டு போங்கோ.
கதிரையொன்றில் உட்கார்ந்த வண்ணம் துடியாய்த் துடித்த அவரின் குரலைக் கேட்டு, அவரது தாயார் ரகுமத் உம்மா, அவர் இருந்த இடத்துக்கு ஓடோடி வந்தாள்.
"ஆசிக் மகனே, ஒடி வா. சாதிக் மாமா நெஞ்சு வலி என்டு கத்துறார்."
இரவு அதிக நேரம் படித்த களைப்பில் தூங்கிக் கொண்டிருந்த ஆசிக், தனது உம்மம்மாவின் குரலைக் கேட்டுத் திடுக்கிட்டவனாய் எழுந்து அவளுக்கு எதிரே வந்து நின்று கொண்டான்.
"மகன், மாமா நெஞ்சு வலியென்று துடிச்கிறார். ஓடிப் பெய்த்து வேன ஸ்டார்ட் பண்ணு, மாமாவ ஆஸ்பத்திரி ஒன்டுக்கு ஒடனே கொண்டு போவோம்."
இதைக் கேட்ட ஆசிக் மிகவும் பதற்றத்துடன் கராஜூக்குள் நுழைந்து வேனை வெளியே எடுத்து வைத்து விட்டு வீட்டுக்குள் வந்தான்.
"உம்மம்மா வேன எடுத்திட்டேன். சரி, மாமாவ இனிக் கொண்டு போவோம்."
"ஆசிக் மகன், மாமா போக வேண்டிய எடுத்துக்குப் பெயித்திட்டாரு. அவர இனி எங்கயும் கொண்டு போகத் தேவ இல்ல."
ஜீவநதி
 
 
 
 
 

"உம் மம்மா செல்லுறத்த வெலங் குற பாஷயில செல்லுங்கோ."
"ஆசிக் மகன், மாமாட ரூஹ8, அவர விட்டுப் பெயித்திட்டுது."
"உம்மம்மா அப்ப மாமா மவுத்து என்டு செல்லுரீங்களா? அத உறுதி செய்ரத்துக்கு நீங்க ஒரு GLITëSLUIT?”
" ஆசிக் தொரே, இதுக் கெலி லாம் டொக்டருக்குப் படிச்கத் தேவ இல்ல வாப்பா. எத்தனையோ பேருட ரூஹபிரியுறத்த நான் இந்த ரெண்டு கண்ணாலயும் கண்டீக்குறேன்."
இதைக் கேட்ட ஆசிக் மட்டுமல்ல அங்கு கூடியிருந்த அனைவரும் உரக்கக் கத்தி அழ, பக்கத்து வீடுகளில் இருந்தவர்களும் அங்கு கூடி விட்டனர்.
"அஸ்ஸமதுத் தம்பி இங்க வாங்கோ. சாதிக் மகன வந்து பாத்து ஏன்ட ஊகம் சரியா என்டு செல்லுங்கோ."
அஸ்ஸமது ஓர் ஆயுர்வேத வைத்தியர். அவர் உடனே சாதிக் ஹாஜியாரின் உடலை அணுகி அவரின் உடலில் உயிர் இருக்கிறதா என்பதை அவதானித்தார்.
"ரகுமத்து தாத்தா சென்ன விஷயமொன்டு எப்போதும் பொய்யாக மாட்டாதே. தாத்தா, ஒகட ஊகம் சரி. இனி அடுத்த விஷயங்களக் கவனிக்கிறது தான் நல்லம்."
"ஆசிக் மகன், இங்க வா வாப்பா. நீ கண் கலங்கினா நான் எப்பிடியென் அடுத்த வேலவெட்டி எல்லாத்தையும் செஞ்சி முடிக்கிற? ஹயாத்து மவுத்து என்டு செல்லுறது எல்லாம் உண்ம தொரே. மொதல் வேலயா இங்க ஈக்கிற நாலஞ்சி பேரக் கூட்டிக் கொண்டு மய்யத்தத் தூக்கி அந்தக் கட்டில்ல வச்சிடு வாப்பா."
9 இதழ் 54

Page 42
ஆசிக் தனது நனைந்த கணி களை துடைத்தவாறு, அங்கு கூடியிருந்த தனது நண்பர்க சிலருடன் சேர்ந்து, சாதிக் ஹாஜியாரின் உடலைத் தூக் ரகுமத் உம்மா காட்டிய கட்டிலில் வைத்தான்.
"அய்சா இங்க வா உம்மா, அந்த அலுமாரீ மடிச்சி வச்சீக்கிற வெள்ளப் பொடவயால ஒன் எடுத்திட்டு ஓடி வா உம்மா."
வீட் டு வேலைகளுக்காக இரு நீ பெண்ணுக்குக் கட்டளையிட்ட ரகுமத் உம்மா, தனது மகனின் மையத்தை வைத்திருந்த இடத்துக்கு வந்து சிறிது திறபட்டிருந்த மையத்தின் கண்களை கைகளால் கசக்கிநன்றாக மூடி விட்டாள்.
"பெரிய நோனா, இந்தாங்கோ வெள்ளட் (o) U TL6)JuJ."
அய்சாவிடம் இருந்து வெள்ளைப் புடவையைப் பெற்றுக் கொண்ட ரகுமத் உம்மா அதிலிருந்து சிறு துண்டுகளைக் கிழித்தெடுத்தாள். அதன் பின் மையத்தின் கால் இரண்டையும் நன்கு இழுத்து நீட்டி வைத்து கிழித்தெடுத்த புடவைத் துண்டால் பெரு விரல் இரண்டையும் இணைத்துக் கட்டி விட்டாள். பிறகு கைகள் இரண்டையும் சேர்த்து இடது கையின் மேல் வலது கையை வைத்து தக்பீர் கட்டி விட்டாள். வாய் திறபடாமல் இருப்பதற்கு நாடிக் கட்டையும் கட்டி விட்டாள். இத்தனை காரியங்களையும் சிறிதும் பதற்றம் இன்றிச் செய்து முடித்த ரகுமத் உம்மா, தனது மகனின் மையத்தை வைத்திருந்த கட்டிலின் முன்னே மண்டியிட்டு உட்கார்ந்து சிறிது நேரம் தேம்பித் தேம்பி அழுதாள்.
"மகனே சாதிக், ஏன்ட வாப்பா, ஒன்ட கையால கபுரடங்க ஈந்த என்ன உட்டுட்டு எனக்கு முந்திக் கொண்டாயே ராஜா. யா அல்லா ஒனக்குத்தான் எல்லாப் புகழும்."
சிறிது நேரம் தனது மகனின் மையத்தை உற்று நோக்கிய அவள் முந்தானைத் தலைப்பால் தன் கண்களை ஒற்றிய வண்ணம் எழுந்துநின்றாள்.
இதைக் கண்ணுற்ற அஸ்ஸமது அங்கே ஓடி
வந்தார்.
"ரகுமத்து தாத்தா, நீங்க இப்பிடிக் கண் கலங்கினா நாங்க எப்படியென் மத்த வேல வெட்டிகள செஞ்சி முடிச்சிற? நீங்க பெத்த புள்ள ஒகட கையாலயே கபுரடங்கப் போகுது. அதப் பத்தி நீங்க சந்தோசப் படுங்கோ."
"அஸ்ஸமதுத் தம்பி, அல்லா போதுமானவன்." 毅 ரகுமத் உம்மா தன் கையில் வைத்திருந்த வெள்ளைப் புடவையை விரித்து மையத்தின் உச்சிமுதல் உள்ளங்கால் வரை மூடி விட்டு, அடுத்து நடக்க வேண்டிய காரியங்களை ஒப் படைப் பதற்காக வேணி டி அங்கிருந்தவர்களின் முகங்களை உற்று நோக்கினாள்.
"மருமகன், மொதல்ல இங்க வாங்கோ. மையத்துச் செய்திய அறிவிக்கிற பொறுப்ப நீங்கதான் எடுத்துச் செய்ய வேணும். மொதலாவது பள்ளிவாசல்
ஜீவநதி
 
 
 
 

கதீபுக்கும் மோதினாருக்கும் அறிவியுங்கோ. அதுக்குப் பொறகு தாய்புள்ள இனசனங்களுக்கு அறிவிச்சிப் போடுங்கோ."
"மாமி, அது சரி. மையத்த எடுக்கிற நேரத்த முடிவு செய்திட்டீங்களா?."
"மருமகன், மூனு மணிக்கே மையத்த
ஊட்டுள ஈந்து எடுத்திடுவோம். அதுக்கேத்தமாதிரி =
காரியங்கள் எல்லாம் நடந்தாகோணும்."
"மாமி, தூரத்துல ஈர இனசனங்கள் வந்து சேரவும் வேணும். அதனால அஞ்சி மணி அளவுல
மையத்த எடுத்தா என்ன?”
"மருமகன், கொஞ்சம் கிட்ட வாங்கோ. ஒகளோட மட்டும் செல விஷயங்கள் கதச்ச ஈக்கு."
மருமகன் ரஷது ஹாஜியார் முன்பு இருந்ததை விட ரகுமத் உம்மாவிடம் நெருங்கி வர, சில விடயங்களை ரகசியமாக அவள் அவருடன் கதைத்தாள்.
"மருமகன், மூனு மணிக்கு மையத்த எடுப்போம் என்டு நான் சென்னது, மையத்து அந்த மருமகச் சிறுக்கீட கண்ணுல படாமல் ஈக்கோணும் என்டத்துக்காக வேண்டித்தான்."
"மாமி, அவ என்னத்துக்கென் மையத்தப் பாக்க இங்க வரவேணும்?"
"மருமகனே, பச் சத் தணர் ணக்குள்ள நெருப்புக் கொண்டோற பொம்புள அவள். யைமத்த ஊட்டுள வச்சீர நேரத்துல அவள் இங்க வந்தா, நான் அவளுக்கு மையத்தக் காட்ட மாட்டேன். பள்ளி வாசலுக்கு மையத்தக் கொண்டு போகக்குள்ள அவள் வந்தா, அவளுக்கு மையத்தக் காட் டாமல் ஈக்குறத்துக்கு நீங்கதான் பொறுப்பாக ஈக்க வேணும்."
"மாமி, நீங்க காலால உடுற கட்டளய தலயால செய்யக் காத்திருக்கிற மருமகன் நான். அதனால நீங்க ஒன்டுக்கும் பயப்புட வானாம். ஜெமீலா தங்கச்சி அப்பிடி வந்தா அத நான் பாத்துக் கொள்றேன்."
"சரி, இப்ப நீங்க பெய்த்து ஒகட வேல எல்லாத்தையும் சரியாகக் கவனியுங்கோ."
ரவீது ஹாஜியார் அங்கிருந்து அகன்று சென்றார்.
"ஆசிக் மகன் இங்க வா வாப்பா." ரகுமத் உம்மாவின் பேரன் ஆசிக் உடனே அவளிடம் ஓடி வந்தான்.
"உம்மம்மா, என்னால ஆக வேண்டிய வேலகள் ஏதாவது ஈந்தா இப்ப செல்லுங்கோ."
"ஆசிக் மகனே, மையத்துச் செய்திய பள்ளிவாசல் மூலமா ஊருக்கு அறிவிச்சிட வேணும். அதனால அத அழகாக எழுதிக் கொண்டு வந்து எனக்கு வாசிச்சிக் காட்டிட்டு வாப்பாட்டக் குடுத்திடுங்கோ தொரே. ரேடியோவுக்கு இப்ப குடுக்கத் தேவ இல்ல. மையத்த அடக்கிட்டு வந்தத்துக்குப் பொறகு மையத்துச்
இதழ் 54

Page 43
செய்திய ரேடியோவுக்கு அனுப்பி வச்சாப் போதும்."
"உம்மம்மா மையத்த அடக்கிறதுக்கு முந்தி ரேடியோவிலயும் அறிவிச்சாத்தானே நல்லம்."
"ஆசிக் மகன், அதெல்லாம் ஒனக்குத் தேவ இல்லாத விஷயம். நான் செல்லுற விஷயங்கள மட்டும் செய்திடு வாப்பா. அது ஒனக்கும் நல்லம், எனக்கும் நல்லம்."
"மதார் தம்பி, இப்ப நீங்க இங்க வாங்கோ." ரகுமத் உம்மாவின் தூரத்து உறவினரான, பக்கத்து வீட்டில் வசிக்கும் மதார் ஓடோடி வந்து கையிரண்டையும் கட்டிக் கொண்டு அவளின் முன்னே நின்று கொண்டார்.
"தாத்தா என்னால ஆக வேண்டிய வேலகள் ஏதும் ஈக்கா?"
"தம்பி நல்ல கத கதச்சிறீங்க. மையத்தக் குளிப்பாட்றத்துல ஈந்து கபுருல வச்சிறது வரக்கிம் உள்ள அத்தன கருமங்களும் ஒகட பொறுப்புலதான் நடக்க வேணும். மையத்தூட்டுக்கு வாரவங்களுக்கு பகல் சாப்பாடும் ஒகட ஊட்டுளதான் ரெடி பண்ண வேணும். தேவையான காசி பணமெல்லாத்தயும் கணக்குப் புள்ளேட்ட கேட்டு வாங்கிக்கோங்கோ."
மதார் அங்கிருந்து அகன்று சென்றார். அதன் பின் ரகுமத் உம்மா சமயலறை வரை சென்று, அங்கு வேலை செய்து கொண்டிருந்த பாத்துமுத்துவை அணுகினாள்.
"பாத்துமுத்து, வாற போற எல்லாருக்கும் தேத்தண்ணியோ, கோப்பியோ குடுக்க வேணும். அதெல்லாத்துக்கும் நீதான் பொறுப்பு"
அந்தப் பிரமாண்டமான வீட்டில் ரகுமத்
உம்மாவின் உதவி ஒத்தாசைகளுக்குப் பல பேர்
இருந்தாலும் அந்தத் தள்ளாத வயதிலும் கூட அங்கு நடக்கும் அத்தனை விடயங்களையும் மேற்பார்வை செய்வதில் அவள் கண்ணும் கருத்துமாக இருந்தாள். அத்துடன் அவளின் தேவைகள் அங்கு வேண்டுகோள் களாகவல்ல கட்டளைகளாகவே பிறந்தன.
அதன்படி ஜனாசாவுக்கான சகல ஏற்பாடுகளும் திறம்பட நடப்பதற்குக் கட்டளையிட்ட திருப்தியில், அவள்
தனது பேத்தி அனிசா இருந்த மேல் மாடி அறைக்கு வந்து
சேர்ந்தாள். அதன் பின் அங்கே அனிசாவின் துணைக்கு இருந்த தூரத்து உறவுக்காரப் பெண்ணை, கண் ஜாடை மூலம் அங்கிருந்து அகன்று போகும்படி உத்தரவிட்டாள்.
"என்ன மகள் இப்பிடி நொந்து பெய்த்து உக்கார்ந்து கொண்டு ஈக்கிறாய்? ஹயாத்து மவ்த்து
எல்லாருக்கும் உண்டு. அப்பிடி ஈக்க நீ என்னதுக்கென் உம்மா கவலப்படுறாய்?"
அனீசாவின் தலையை தடவிய வண்ணம் ரகுமத் உம்மா அவளுக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.
"வாப்பாட மையத்துக்கு உம்மா வருவாங்களா
ஜீவநதி 4

வாப்பம்மா?"
"அதுகளப் பத்தியெல்லாம் நீ யோசிக்க வானாம் மகள்.
"வாப்பம்மா, உம்மக்கு வாப்பட மையத்த மட்டும் பாத்திட்டுப் போக எடம் குடுப்போமே."
"அனீசா இதெல்லாம் பெரிய மணிசர் தீர்மானிக்கிற விஷயங்கள். சின்னப் புள்ளகள் இதுல தலயிடாம ஈந்தா அது மிச்சம் நல்லம் உம்மா."
ரகுமத் உம் மாவின் குரலில் உறுதி தொனித்தது.
"வாப்பாவும் மவுத்தாப் பெயித்திட்டாரு. உம்மாவாவது எனக்குப் பக்கதுல ஈந்தா அது எனக்கு ஆறுதலா ஈக்கும் வாப்பம்மா."
அனீசாவின் கெஞ்சும் விழிகள், ரகுமத் உம்மாவின் மிஞ்சிய விழிகளை நோக்கின.
கபடத்தனமும் துணிவும் மிக்க ரகுமத் உம்மா எவருடன் கதைத்தாலும் மிகவும் தந்திரமாகக் கதைக்கும் வல்லமை கொண்டவளாகவே இருந்தாள்.
"வாப்பாவுக்கு வாப்பாவா, உம்மாவுக்கு உம்மாவா நான் ஈக்க நீ என்னத்துக்கு மகள் பயப்பட வேணும்."
ரகுமத் உம்மா அப்படிச் சொன்னாலும் அனீசாவின் அழுகையையும் விம்மலையும் தணிக்க அந்த வார்த்தைகளுக்குச் சக்தி இருக்கவில்லை. அதனால் ரகுமத் உம்மா அனிசாவை மீண்டும் ஒரு முறை மிக அன்போடு அணைத்து அவளின் கண்களை தனது முந்தானைப் பட்டால் துடைத்து விட்டு, தலையையும் தடவி விடச் சென்ற நேரம் அனீசா தனது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கு அதை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி, ரகுமத் உம்மாவின் கையை வேகமாக உதறி விட்டாள். தன் வானாள் பூராக உதறியவர்களை யும் பதறியவர்களையும் கண்டு பழக்கப்பட்ட ரகுமத் உம்மா, அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
"இரி, ஒன்ட வாப்பாட நாப்பதாம் கத்தம் முடியட்டும். ஒனக்கு செய்ய வேண்டியத்த நான் செஞ்சி போடுறேன். அப்ப நீ ஏன்ட காலச் சுத்திச் சுத்தி வார பூனக் குட்டி ஒன்டுட அளவுக்கு சமஞ்சிடுவாய்."
இவ்வாறு ரகுமத் உம் மா சொல்லா விட்டாலும் அவளின் முகத்தில் தவழ்ந்த ஏளனச் சிரிப்பு, அவள் உள்ளத்தில் நினைத்ததை வெளியே எடுத்துக் காட்டியது. குள்ள நரிப் புத்தி கொண்ட அவள் மீண்டும் ஒரு முறை ஆறுதல் வார்த்தைகளைச் சொல்ல முற்பட்டாள்.
"ஏன்ட உம்மா, நீ எனக்கு நான் பெத்த புள்ள போல, அல்லா ஒன்னக் கையுட மாட்டான். நீசபூர் செய்
2_LOLOT."
இவை ஒன்றும் எடுபடமாட்டாதென்பதை உணர்ந்து கொண்ட ரகுமத் உம்மா அங்கிருந்து மெதுவாக முன் வாசல் வரை வந்தாள்.
இதழ் 54

Page 44
அங்கே சாதிக் ஹாஜியாரின் மரணச் செய்த கேள்விப்பட்டு வந்திருந்த ஊர் மக்களால் வீடு நிரம்ட வளிந்தது. அவர் சம்பாதித்த பணம், புகழ், பதவி அந்தஸ்து என்பவை அதற்குரிய காரணங்களாக இருந்திருக்க வேண்டும். அங்கு வந்தவர்கள் அவற்றைப் பற்றிப் பெருமையாகக் கதைத்துக் கொண்டாலும் இடையிடையே அவர் தனது மனைவிக்கு இழைத்த அநீதியைப் பற்றியும் அவரின் தாய் ரகுமத் உம்மாவின் தான்தோன்றித்தனமான கெடுபிடிகளைப் பற்றியும் காதோடு காது வைத்துக் கதைக்கத்தான் செய்தார்கள்.
"நாலஞ்சி வருஷத்துக்கு முந்தி ரகுமத்து தாத்தா மருமகளுக்கு படுகூறுகட்டி புள்ளயப் பறிச் செடுத்தது அல்லா ரகல் பொறுக்காத பாவமொன்டு."
"அது மட்டுமல்ல, ரகுமத்து தாத்தா தன்ட விருப்பத்துக்கு காதிக்கோடு நடத்தி மருமகளுக்கு தலாக்கும் வாங்கிக் குடுத்தீக்கிறா."
"நாட்டிலுள்ள சட்டங்களுக்கு உந்தத் தலாக்கெல்லாம் எடுபடாது."
ரகுமத்து தாத்தா, மருமகள் வந்தா மையத்தக் காட்டாமல் ஈக்கிறத்துக்கும் ஏற்பாடு செஞ்சீக்கிறாவாம்." "பணம், பதவி, அந்தஸ்து ஈந்தா எல்லா ஒட்ட ஒடிசலையும் மறச்சிக் கொள்ளலாம் என்டத்துக்கு ரகுமத்து தாத்தாநல்ல உதாரணம்."
"அல்லா போதுமானவன். இதெல்லாத்தயும் அல்லா பாத்துக் கொண்டுதானே ஈப்பான்."
ஊர் மக்கள், பிரமுகர்கள், அரசியல்வாதிகள் என மையத்து வீட்டுக்கு வந்த பலர் இடைக்கிடையே இவ்வாறு கதைத்த வண்ணம் இருப்பதை கேட்கக் கூடியதாக இருந்தது.
மற்றைய நாட்களைவிட ரகுமத் உம்மா மிகவும் உசாராகக் காணப்பட்டாள். தப்பித் தவறி மேருமகள் அங்கு வந்தால், அதை உடனே அறிந்து கொள்வதற்கு வீட்டுக்கு வெளியே இரண்டு மூன்று கையாட்களையும் அவள் நியமித்திருந்தாள். அத்துடன் திரைக்குப் பின்னால் இருந்த வண்ணம் மையத்தைப் பார்க்க வருபவர்களை மிக உன்னிப்பாக அவதானித்த படியும் இருந்தாள். : சரியாக பிற்பகல் மூன்று மணிக்கே சந்தூக்கு மூடப்பட்டது. அதன் பிறகு சாதிக் ஹாஜியாரின் இறுதி ஊர்வலம் ஆரம்பமானது. பச்சைப் புடவையால்
பூக்களும் மல்லிகைப் பூக்களும் தொங்கவிடப் பட்டிருந்தன. அன்று காலை முதல் எரிந்து கொண்டிருந்த சாம்பிராணிப் புகையின் வாசனையும் ஊதுபத்தியின் வாசனையும் வீட்டைச் சுற்றி சிறிது தூரம் வரை சுழன்று கொண்டு இருந்தது. சந்தூக்கின் இரு புறமும் உறவினர் இருவர் தமது கைகளில் வைத்திருந்த பன்னீர்ச் 說 செம்புகளால் பன்னீரைத் தெளித்த வண்ணம் நடந்து சென்றனர். இன்னுமொருவர் மீசான் பலகை
ஜீவநதி
 
 
 
 
 
 
 
 
 
 

இரண்டையும் தனது தோளில் வைத்துச் சுமந்து சென்றார். ஆசிக்கின் இளைய தம்பியின் ஒரு கையில் தண் ணிர் கேத்தலும் மறு கையில் பச்சை மரக்கொப்புகளும் இருந்தன. குடும்ப அங்கத்தவர்கள் நான், நீ என்றவாறு சந்தூக்கை சுமந்து சென்றனர். ஆசிக்கும் அவர்களுள் ஒருவனாகக் காணப்பட்டான். சாதிக் ஹாஜியார் மரணமடைந்த நேரத்தில் இருந்தே அவனின் மனம் கவலைப்பட்டுக் கொண்டு இருந்தது. மருமகன் என்ற அந்தஸ்தை விட்டு ஒரு நண்பன் என்ற அந்தஸ்துடனேயே அவர் அவனுடன் பழகியிருப்பதை நினைக்க அவனுக்கு அது மேலும் மனவருத்தத்தை அளித்தது. அனிசா உனக்குத்தான் என்று அவர் அவனிடம் சொல்லாவிட்டாலும் அவளை அவன்தான் மணம் முடிக்க வேண்டும் என அவரின் சொற்களும் செயல் களும் அவனுக்கு உணர்த்தி நின்றதை அவன் நன்கறி வான். அது அவ்வாறிருந்தாலும் இந்த விடயத்தில் ரகுமத் உம்மாவை பலரும் குறை சொன்னார்கள். சாதிக் ஹாஜியாரின் செல்வங்கள் ஜெமீலாவுக் கோ அவளது குடும் பத்துக் கோ சென்றடையாமல் இருப்பதற்கு ரகுமத் உம்மா விரித்த வலையாகவே ஆசிக் - அனிசா உறவை பலரும் கருதினர். ஜெமீலாவுக்குத் தலாக் கொடுத்துத் துரத்தப்பட்டதும் அதன் ஓர் அங்கமாகவே தான் என பரும் கதைத்துக் கொண்டனர்.
மையத்து ஊர்வலத்தில் கலந்து கொண்ட பெருந்திரளான சனக்கூட்டத்தைக் காண ரகுமத் உம்மாவின் உள்ளம் பூரித்தது. அவள் கண்ணுக்குத் தெரிபடும் தூரம் வரை ஊர்வலத்தில் கொண்டு செல்லப்பட்ட சந்தூக்கை வைத்த கண் வாங்காது பார்த்து நின்றாள். அதுவரை மருமகள் வராதது அவளது உள்ளத்தில் இருந்த சுமையை ஓரளவு அகற்றி விட்டது. ஊர்வலம் ரகுமத் உம்மாவின் பார்வையில் இருந்து மறைந்ததும் வேகமாக வந்த வேன் ஒன்று, ஊர்வலத்தை மறைத்த வணிணம் அருகே நிற்பாட்டப்பட்டது. அங்கிருந்து ஜெமீலாவும் அவளது தாயாரும் இன்னும் சில ஆண்களும் இறங்கிக் கொண்டனர். அவர்கள் எல்லோரும் ஜனாஸா ஊர்வலத்தை நோக்கி நடந்து வந்தனர். அவர்களில் ஒருவர் உறக்கக்கத்திக் கொண்டே வந்தார்.
“மையத்த தங்கச்சியும் நாங்களும் பாக்க வேணும்."
இதைக் கேட்ட ஊர்வலம் ஸ்தம்பிதமாகிப் போக ஊர்வலத்தில் வந்தவர்களிடையே ஒரு சலசலப்பும் ஏற்பட்டது.
அப் பொழுது ரகுமத் உம் மாவின் கட்டளையை ஏற்று வந்த மருமகன் ரவீது ஹாஜியார் முந்திக் கொண்டார்.
"ரோட்டுல வச்சி மையத்தக் காட்டுற வழக்கம் எகடகுடும்பத்துல இல்ல."
இதழ் 54

Page 45
"நானா, நீங்களும் ஒகட குடும்பமும் பாழாப் போக, நீங்க எல்லாரும் சேந்து என்ன இவரிட்ட ஈந்து பிரிச்சி வச்சத்துக்கு இன்னமும் இவர் எனக்கு கணவன்தான்."
"தங்கச்சி, அதெல்லாம் பழய கத. அஞ்சி வருஷத்துக்கு முந்தி சாதிக் மச்சான் ஒகலுக்கு முத்தலாக் சொன்னத்தோடமுடிஞ்சி போன கத."
"அவர் எனக்கு முத்தலாக் சென்னது ஊட்டுல வச்சி, கோட்டுல வச்சி அல்ல. சட்டப்படி நான் இன்னும் அவருட பொண்சாதி, நீங்க மையத்தக் காட்டாட்டி நான் சட்டப்படி வந்து மையத்தப் பாப்பேன்."
"சரி.சரி. மகளே, ஒனக்கு மையத்தத்தானே பாக்க வேணும். எல்லாரும் சந்தூக்க நெலத்துல வைங்கோ."
ஜெமீலா இருக்கும் இடத்துக்கு வந்த பெரிய மத்திசம், சந்தூக்கைத் தூக்கி வந்தவர்களுக்கு கட்டளை பிறப்பித்தார். அதன்படி சந்தூக்கு நிலத்தில் வைக்கப்பட்டது. அப்போது ரவீது ஹாஜியார் குறுக்கே வந்துநின்றார்.
“மையத்த ரோட்டுளவச்சி ஆருக்கும் காட்ட வானாம் என்டது மாமீட கட்டள. அதனால ஆருக்கும் மையத்த காட்ட நான் உடமாட்டேன்."
"மாமிக்கு, ஊட்டுள உள்ளவங்களுக்கு மட்டும் தான் கட்டள உடலாம். எனக்கு ஊருள உள்ள அத்தன பேருக்கும் கட்டள உடலாம். அமீன் ஹாஜி, சந்தூக்கத் தொறந்து இந்த மகளுக்கு மையத்தக் காட்டுங்கோ."
அதன்படி அமீன் ஹாஜியார் சந்தூக்கைத் திறக்க ஜெமீலாவுக்கு மையத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
ஜெமீலாவின் அழுகையும் ஒப்பாரியும் ஊர்வலத்தில் கலந்துகொண்ட பெரும்பான்மையினரை கவலையில் ஆழ்த்தியது. அதே சமயம் இடையிடையே சிலர் ரகுமத் உம்மாவுக்கு குற்றம் சுமத்தியது பலரது காதுகளிலும் விழத்தான் செய்தது.
ஜெமீலாவுடன் வந்தவர்கள் மையத்தைப் பார்வையிட்ட பின் சந்தூக்கு மூடப்பட்டது. அதன் பிறகு இறுதி ஊர்வலம் பள்ளிவாசல் வரை தொடர்ந்து சென்று, சாதிக் ஹாஜியாரின் ஜனாசாவை நல்லடக்கம் செய்து விட்டுக் கலைந்து சென்றது.
ஜனாசாவுடன் சென்ற குடும்பத்தவர்களும் நண்பர்களும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் ஜனாசா வீட்டுக்கு மீண்டும் திரும்பி வரும் போது, ஜெமீலாவும் அவளுடன் வந்தவர்களும் அங்கேயும் பிரசன்னமானதுடன், அவர்களின் கெடுபிடிகளைக் காட்டவும் தயாரானார்கள். அதிலும் ஜெமீலாவே முக்கிய பங்கு வகித்தாள்.
ஐந்து வருடங்களுக்கு முன்பு சாதிக் ஹாஜியாருடனான தனது குடும்ப வாழ்க்கை, அவரிடம் இருந்து தன்னைப் பிரிப்பதற்கு தனது மாமி செய்த சதிகள், தனது ஒழுக்கம் சம்பந்தமாக அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சுமத்தி தனது மகளை தன்னிடம்
ஜீவநதி
 

இருந்து பிரித்து மாமி அவரின் பாதுகாப்பில் வைத்துக் கொண்டமை, சாதிக் ஹாஜியாரின் சொத்து விவகாரம், தனது மகளின் எதிர்காலப் பொறுப்பு என்பவற்றுக்கு மட்டுமல்ல, இன்னும் பல விடயங்களுக்கு அவள் கூடியிருந்தவர்களிடம் நீதி கேட்டு நின்றாள். அவளின் கண்ணிரும், சொற்பிரவாகமும் அவளின் பக்கமே நியாயம் இருப்பதாக அங்கிருந்தவர்களுக்கு உணர்த்தி நின்றாலும் அவர்கள் யாரும் அவளுக்கு ஆதரவாகப் பேசுவதற்கு முன் வரவில் லை. இருந்தாலும் அவர்களின் முகபாவனைகளும் தலையசைத்தல்களும் ஏனைய குறிப்புகளும் அவர்கள் தன்னுடன் இருப்பதை ஜெமீலா புரிந்து கொண்டாள்.
"மாமி, எழுத்துல நான் இன்னமும் அவருக்கு மனைவி. அதனால் நாலு மாசமும் பத்து நாள் நான் இத்தா ஈக்க வேணும்."
இவ்வளவு நேரமும் எதுவும் பேசாமல் இருந்த ரகுமத் உம்மா பாய்ந்து வந்து ஜெமீலாவின் முன் நின்று கொண்டது, இந்த வீட்டில் ஆதிக்கம் செலுத்துவது நானா, நீயா என்பதைக் கேட்பதுபோல இருந்தது.
"அடிசக்கே, வாத்த கேட்டுக்கொண்டுபோனவள் வெக்கமில்லாம வந்திட்டாள் இங்க இத்தா ஈக்க."
"மாமி மரியாதயா பேசுங்கோ. காதிநீதவான் இல்லாம, அடிவருடி ஆலிம் ஒத்தரக் கூப்பிட்டு, அவருக்கு முன்னால வச்சி ஒகலுக்குப் பயந்த மகன் எனக்கு வாத்த சென்னதுக்கு, அது செல்லுபடியாக மாட்டாது. அதனால அவருக்காக வேண்டி நாலு மாசமும் பத்து நாள் இத்தா ஈக்குற கடம என்க்கு ஈக்கு அப்பிடி நான் இத்தா ஈக்காட்டி அல்லா என்ன தண்டிச்சுவான்."
"சரி மருமகளே, சரி, நீ இத்தா ஈக்குறத்த யாரும் வானாம் என்டு செல்ல இல்ல. அதுக்கு என்னத்துக்கென் என்ன வம்புக்கு இழுக்கிறாய்?"
"நான் மாமிய என்னத்துக்கென் வம்புக்கு இழுக்க வேணும்? மாமி, நீங்கதான் நான் இந்த ஊட்டுக்கு அடிவச்ச நாளில் ஈந்தே என்னோட வம்பு செஞ்சீங்க, அதப்பத்தியெல்லாம் எனக்குக் கவல இல்ல. ஆனால் அவர் மவுத்தாப் போன இந்த ஊட்டுள ஈந்துதான் நான் ஏன்ட இத்தாக் கடமய நெறவேத்த வேணும். அதுதான் ஊர்வலம."
"அந்தப் ஊர்வலம எல்லாம் இங்க சரி வராது மருமகளே. நீ இந்த ஊட்டுள இத்தா, ஈக்கிறதாயீந்தா இங்க ஈற ஆம்புளகள நான் எங்கென் அனுப்புற, அதனால நீஒன்ட உம்மாடஊட்டுள இத்தா ஈக்கிறதுதான் நல்லம்" "மாமி இது ஏன் ட புருஷன் கட்டின ஊடுவாசல். அவர் சம்பாரிச்ச சொத்து சொகங்கள். அதனால எனக்கும் ஒரு உரிம இந்த ஊட்டுள ஈக்கு."
"மருமகளே நீ இப்பிடி வழிக்கு வந்தது மிச்சமே நல்லம். சாதிக் மகன் ஒனக்கு இந்த ஊட்டுள என்ன உரிமயென் வச்சீக்குற என்டத்த பெருக்
இதழ் 54

Page 46
எண்னில் மட்டும் வீசாதே-வீ
கோருக்கு வரச் செல்லிப் பாத்துக் கொள்வோம்."
ஜெமீலாவும் அவளுடன் வந்தவர்களுப அதற்கிணங்க, ஊர்ப் பிரமுகர்கள் சிலரும் சாதிக ஹாஜியாரின் சட்டத் தரணியும் அங்கு வர வழைக்கப் பட்டனர். ரகுமத் உம் மா சாதிக் ஹாஜியாருக்குரிய சகல சொத்து விபரங்களையும் உறுதிகளையும் ஆவணங்களையும் எடுத்து வந்து அவர்களின் முன் வைத்தாள். சட்டத்தரணி அவை எல்லாவற்றையும் மிக நுணுக்கமாகப் பார்வையிட்ட பின் அவற்றை சபைக்கு வாசித்துக் காட்டினார். அதன்படி பல கோடி ரூபா பெறுமதி கொண்ட சாதிக் ஹாஜியாரின் சொத்துக்களில் எதுவும் ஜெமீலாவின் பெயரில் இருக்கவில்லை. சாதிக் ஹாஜியாருக்கிருந்த வீடு எஸ்டேட், தொழிற்சாலைகள், பங்களா என்பவை அனீசாவின் பெயரில் இருந்தன. ஒரு சில சொத்துக்கள் ஆசிக்கின் பெயரில் இருந்தன. எஞ்சியவை பொது ஸ்தாபனங்களுக்கு எழுதி வைக்கப்பட்டிருந்தன. ஜெமீலாவுக்குப் போலவே ரகுமத் உம்மாவுக்கும் அவர் தனது சொத்தில் எந்தப் பங்கும் ஒதுக்கியிருக்கவில்லை.
சட்டத்தரணி சகல விடயங்களையும் சபைக்கு அறிவித்த பின் ரகுமத் உம்மாவே முதலில் குரல் கொடுத்தாள்.
"பாத்தியா மருமகளே? நீ உரிம கொண்டாடிக் கொண்டு, இந்த ஊட்டுள இத்தா ஈக்க வந்தத்துக்கு சாதிக் மகன் ஒன்ட பேருள ஒரு துரும்பளவு சொத்தாவது எழுதி வச்சி இல்ல."
உணர்வு இல்லை உயிர்ப்பு இல்லை-நான் இன்னம் முழுமையாய் உறங்கவில்லை
எண் உடல் உலர்ந்து விட்டது எண்னில் உதிரமில்லை
அழுகின்ற வான்மழையே
எண்னில் வீழாதே அடிக்கின்றதென்றல் காற்றேNS
3. துன்பத்தை சுமக்காதே
விடியலே என்னில் விடிவு இல்லையே
நீயே என்னில் ஒளி இல்லை
- செல்வராசா தர்சினி ஜீவநதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"மாமி, நான் இந்த ஊட்டுள அல்ல, எந்த ஊட்டுளயும் இதுக்குப் பொறகு அவருக்காக இத்தா ஈக்கிறது இல்ல. அவரோட பதினஞ்சி வருஷம் குடும்பம் நடத்தின பொம்புள நான். அதனால எனக்குத் துரோகம் செஞ்ச மனிசனுக்கு நான் என்னத்துக்கென் இத்தா ஈக்க வேணும். அதுக்காக அல்லா என்னத் தண்டிச்சா தண்டிச்சட்டும். உம்மா, நானா, தம்பி எல்லாரும் வாங்கோ, நாங்க போவோம் போறத்துக்கு."
"அப்பிடிப் போ உம்மா போறத்துக்கு. அது மிச்சமே நல்லம், தலக்கி வந்த ஆபத்து தலப்பாகயோடு போனதென்டு நான் எடுத்துக் கொள்ளுறேன்."
இதைச் சொல்லும் போது ரகுமத் உம்மாவின் முகத்தில் எள்ளல் ஒன்று பிறந்தது. இதைக் கண்ணுற்ற அனிசா யாரும் எதிர்பாராத வண்ணம் முன்னே பாய்ந்து வந்து தனது தாயின் இரு கரங்களையும் பற்றிக் கொண்டாள்.
"உம்மா, என்னப் பத்து மாசம் சுமந்து, பெத்து வளத்த உம்மா, நீங்க எங்கயும் போக வானாம். வாப்பாவுக்கான நாலு மாசமும் பத்து நாள் இத்தாவ நீங்க இந்த ஊட்டுளதான் ஈக்க வேணும். வாப்பா ஏன்ட பேரில எழுதி வச்சுல்ல எல்லாச் சொத்துகளும் இண்டெய்ல ஈந்து எனக்குப் போல உம்மாக்கும் சொந்தம்."
இதைக் கேட்ட ஜெமீலாவின் கண்கள் ஆனந்தக் கண்ணிரைப் பொழிய அவள் தன் மகளை ஆரத் தழுவிக் கொண்டாள்.
இளமைக்காலம் இறந்து விட்டது
பூவோடும் கனியோடும் நான் வாழ்ந்த காலம் மலையேறி விட்டது
பூவை இழந்து எத்தனை ஆண்டு னியை இழந்த எத்தனையாண்டு ... . எண் கருவறைகள் கற்களால் கட்டப்பட்ட சமாதி அறையா? என இதயம் இடிதாங்கும் இயந்திரமா?
எண் கணக்கில் நான் இறந்து ஐந்து வருடமே.
முள்ளிவாய்க்கால்)
44. இதழ் 54

Page 47
வங்கியில் நடைமுறைக்கணக்கை வைத்திருப் போரால் பணம் மீளப்பெறுவதற்கு காசோலைகளே
பயன்படுத்தப்படுகின்றன. இக் காசோலைகள் வங்கி
களாலேயே வழங்கப்படுகின்றது. இவை பாதுகாப்பான முறையில் அச்சடிக்கப்படுகின்றன. தலைமையகத்தி
லிருந்த கொண்டு வரவியலாத நிலை ஏற்படும் போது
படிவங்களை அச்சிடுவதுபோல் காசோலைகளை அச்சிட முடியாது. அப்படி அச்சிட்டு வழங்கும் காசோலைகள் செல்லுபடியற்றவையென நிராகரிக்கப்படும்.
எனவே வேறு மாற்றுவழி எதுவுமில்லாததால் கூடிய தொகைக்காசோலைப் புத்தகங்கள் வைத்திருந்த
கிளைகளிலிருந்து அவற்றைப் பெற்று காசோலைப்
புத்தகங்கள் இல்லாத கிளைகள் உபயோகிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டது. காசோலையில் வங்கியின் பெயரும் கிளையின் பெயரும் அச்சிடப்பட்டிருக்கும். கிளையின் பெயரை வெட்டிவிட்டு உபயோகிக்கும் கிளையின் பெயரை இறப்பர் முத்திரையிட்டு பொறித்து விட்டு பாவனைக்கு அளித்தார்கள்.
குடாநாட்டில் அனைத்து வங்கிகளுக்கும்
நிலைமை விளங்கியிருந்ததால் இங்கு இக்காசோலை
களின் பயன்பாடு அதிக பிரச்சினையை ஏற்படுத்த வில்லை. ஆனால் இலங்கையின் ஏனைய பகுதி களிலுள்ள வங்கிகளில் அக்காசோலைகள் சமர்ப் பிக்கப்படும் போது சிக்கல்கள் பல ஏற்பட்டன. இதனால் வாடிக்கையாளர் சிரமப்பட நேர்ந்தது.
போர் நடைபெற்ற பிரதேச காசோலைகளை வியாபாரத்தின் பொருட்டு பெற்றுக்கொள்ள வெளியிடத் திலுள்ள வர்த்தகர்கள் மறுத்தனர். இங்கிருந்து பெற்றுச் செல்லும் வங்கி உண்டியல்களைப் பெற்றுக் கொள்ளக்
ஜீவநதி
 
 

யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
ji GleFITabeilGujair
கூடத் தயக்கம் காட்டினர். இதற்கு மேற்கூறப்பட்ட நடைமுறைதான் காரணமல்ல. போக்குவரத்து, தபால்சேவை போன்வற்றின் மூலம் பெறப்படும் பணம் நீண்ட காலத்தின் பின்னரே அவர்களின் கணக்கு களுக்கு வந்து சேரும் என்பது தான் முக்கிய காரணம். அத்துடன் போர்ப் பிரதேசத்திலிருந்த நிச்சயமற்ற நிலையும் அவர்களைத் தயங்க வைத்தது. திடீர்திடீ ரென நிலைமைகள் போர்பிரதேசத்தில் மாறுவது
61960LD.
அத்தகைய ஒரு திருப்புமுனைதான் 1995.10.30 ல் ஏற்பட்டது. வலிகாமம் முழுவதையும் இடம்பெயரவைத்த நாள். வலிகாமத்திலிருந்து வட மராட்சிக்கும், தென்மராட்சிக்கும் பெருக்கெடுக்துப் பாய்ந்த ஜனகங்கையுடன் வங்கிகளும் நகர நேர்ந்தது. அனால் கிடைத்ததையெல்லாம் எடுத்துக் கொண்டு செல்ல அவை வீடுகளல்ல. திட்டமிட்டு நிதானத்துடன் தான் நகர்ந்தன. இக்கட்டுரை எழுதுவதில் நான் காட்டும் கவனத்திலும் பார்க்க பன்மடங்கு கவனம் காட்டப் பட்டது என்பதை மட்டுந்தான் இங்கு என்னால் எழுதமுடியும்,
கொட் டில் களில் வங்கிக் கிளைகள் இயங்கின. மழைநேரம், கால்களில் வெள்ளமும் சேறும் தொட்டுக் கதைபேசும், தளபாட வசதிகளில்லை. மின்சாரமில்லை. இலத்திரனியல் சாதனங்களை நாம் கண்டதுகூடக் கிடையாது. பேரேடுகள் எதுவுமில்லை. பழைய பதிவுகளெதுவுமில்லை. அன்றாட சேவையின் போது பெறப்பட்ட முக்கிய ஆவணங்கள் கூட பாது காப்பாக வைக்க இடவசதியில்லை. கொடுப்பதற்குப் பணமில்லை. எடுத்து வந்த பணத்தில் தாராளமாகக் கொடுக்க வசதியில்லாவிட்டாலும் ஒருவருக்கு ரூபா 500/= வீதம் கணக்கிலிருந்து பணம்பெற உதவினேன். வாடிக்கையாளாருக்கு இயன்றவரை பணியாற்ற முயன்றது வங்கி அவசியமான கால கட்டத்தில் மக்கள்
தம் பணத்தைப் பெற்றுக்கொள்ள உதவவேண்டும். அதுவும் சட்டதிட்டங்களை அதீதமாக மீறிவிடாமல், வங்கி ஊழியர்களும் சாதாரண மக்கள் தானே. அவர்களும் இருக்க இடம், உண்ண உணவு என்று தேடி அலையும் நிலையிலேதானிருந்தனர்.
ஆனால் போர் முடித்து அனைத்தையும்
5. இதழ் 54

Page 48
சீராக்கி நாம் நிமிர்ந்த பார்த்தபோது பெருமைய சொல்லக்கூடிய முக்கிய செய்தி வங்கிகளில் எர் குற்றமும் நிகழ்ந்திருக்கவில்லை. தேவைதான் மனிதை குற்றம் செய்யத்தூண்டுகிறது என்று கூறுவது தவறோ எ எண்ணத்தோன்றுகிறது. வசதிகளும் படாடோபமும் த சுவையைக் காட்டிவிட அதனால் ஏற்படும் பேராசைத குற்றம் செய்ய வைக்கிறது. ஒரு ஏழை செய்யும் குற்றத் விட செல்வமும் வசதிபடைத்தவன் தான் அ; குற்றங்களை செய்கிறான்.
இங்கு மற்றொரு வங்கிச் செயற்பாட்டை பதிவு செய்வது அவசியம். இடம்பெயராமல் வலிகா திலேயே மக்கள் ஆங்காங்கே குடியிருந்தனர், இ களுக்கும் பணம் தேவைதானே. எனவே இவர்களுக் சேவையாற்றவென மக்கள் வங்கி சில ஊழியர் கன அனுப்பி வைத்தது. அவர்களும் பணக்கொடுக்க வாங்கல்களைச் செய்தனர். அவர்களிடமும் எந்தப் பத களும் இருக்கவில்லை. வாடிக்கையாளர் வைத்திரு வங்கிப் புத்தகத்தினையும் நம்பி அதில் பதிவு செய்திரு தொகைக்குள் பணத்தைப் பெற்றுக்கொள்ள உதவின் இங்கிருந்த ஓய்வுபூதியர்கள் எங்கு ஒய்வுபூதியம் பெற் வந்திருந்தாலும் அதுபற்றிக் கவனத்தில் கொள்ள மக்கள் வங்கி ரூபா 5000/= முற்பணமாக வழங்கிய போக்குவரத்து வசதிகளற்ற நிலையில் மக்கள் இரு இடங்களை தேடிச் சென்று அவர்களது தேவைகை இவ்வூழியர்கள் பூர்த்தி செய்தனர்.
இந்த இடப்பெயர்வுகாலம் நீடித்திருந்தால் என் வாகியிருக்குமோ தெரியவில்லை. ஆனால் சுமார் ஆறே
மாதங்களில் மீண்டும் தத்தமது கிளைகளைச் சீராக் இயங்கக்கூடிய நிலை ஏற்பட்டது. இதன் பின்பு கூட பே முழுமையாக ஒயும் வரை பல பிரச்சினைகள் தொடர்ந்த அவற்றின் பதிவு மிக முக்கியமானதல்ல எனக்கரு இத்தொடரை இத்துடன் முடிவுக்குக் கொண்டு வருகிறேன்.
இந்தத் தொடரின் ஆரம்பத்தில் வங்கி பற்றிய ஒ அறிமுகத்தையும் பிற்பகுதியில் போர்க்காலத்தி வங்கியின் வாடிக்கையாளர் சந்தித்த பிரச்சினைகளைய மேலெழுந்தவாரியாக எழுதியிருந்தேன். எல்லாவற்ை -- யும் எழுத முற்ப்பட்டால் பல புத்தகங்களாக எழுதலா போரின் போது ஒவ்வொரு துறை சார்ந்தோரும் ட அனுபவங்களைப் பெற்றிருந்தார்கள். வங்கித்துறை பற்றி ஒரு சிலவற்றையாவது பதிவு செய்வது அவசியம் என கருதியதால் இதனை எழுதினேன். பல முக்கியமா பக்கங்கள் இதில் பதிவு செய்யப்படவில்லை. அதற்கா காரணங்களை முன்னரே கூறியிருந்தேன். இத்துறையி அதிக அக்கறை கொண்டோர் இலக்கியச் சுவைஞர்கள இருக்க மாட்டார்கள் என்பது எனது கணிப்பு. எனினு என்றோ எப்போதோ இப்பதிவு இதில் ஆர்வம் காட்டு ஒருவருக்குப் பயன்படலாம் என்பது எனது எண்ணம்.
முற்றும்
ஜீவநதி
 
 
 
 
 
 
 

TT
OT.
frג
குறுங்கதை
கட்டுப் பெட்டி
வேல் அமுதன்
தாயும் அவளது விஞ்ஞானப் பட்டதாரி
மகனும் கருத்தாடலில் ஈடுபட்டனர்.
வாசுகி:
"தம்பி, உனக்குப் பொருத்தமான சாதகம்
தேடுவது லேசான காரியமல்ல. களத்தி ரத்தானத்தில் கரியனும் செவ்வாயும். பொருத்தமான சாதகம் தேட நான் பட்டபாடு. அப்பப்பா போதுமெண்டால் போதும், இப்பதான் பொருந்தும் சாதகம் ஒண்டு கிடைச் சிருக்கு அவள் பெடிச்சி வசந்தி வடிவு படித்தவள். உனக்கு இந்த மாதம் முடிய வயது நாற்பது தொடங் குது. நானும் உன்ரை அப்பாவும் இருக்கையிக்கை நீ செய்து போட வேணும். நாங்க மனநிம்மதியோடை போய்ச் சேருவது உன்னிலைதான் தங்கி இருக்கு
வசந்தியையும் அவளின்ரை வீட்டையும் ரகசியமாய்ப் பார்த்து வாரதாகச் சொல்லிப் போனாய். அவளைப் பாக்கக் கூடியதாக இருந்துதா? பிடிச்சிதா? வீடு எப்பிடி?”
Ꭷ][ᎢᏋᏠ6ᏡᎢ: "அவளின்ரை வீடு என்ரை அலுவலக நண்பன் சிவநேசனின் வீட்டுக்கு நேர் எதிராக போய், ஒரு வித சிரமமும் இல்லாமல் நல்லாப் பார்த்தன். அவையை மட்டிட நல்ல சந்தர்ப்பம்.
வசந்தி வீட்டு வெளிக்கொடியிலே அவை போட்ட ஈரத்துணிகளிலிருந்து வடிந்த தன்னி இரண்டாம் தட்டாரின் வீட்டு வெளிக் கொடியிலிருந்த விலையுயர்ந்த துணிமணிகளை நல்லா நனைத்துப் போட்டுது. அதுக்கு இரண்டாம் வீட்டார். ஆட்சேபிக்க, தாயும் மோளும் சத்தம் போட்டு நியாயம் பேசுகினம் மேலை பார்த்தல்லவோ துணியைக் காயப் போட வேணும். எப்பாட்மெண்டில் இருக்கத் தெரியாட்டில் தனி வீடு எடுத்துக் கொண்டு வேறை எங்கேயேன் போறதுதானே என விசர்க்கதை பேசுகினம்.
நான் வசந்தியவையைப் பற்றி விசாரித்தன். அதுகள் "கர்நாடகம்", "வாயாடிகள்” எண்டு ஆட்கள் GaftebgaOTLb."
வாசுகி: "தம் பி, ஒரு குறையும் இல்லாமல் ஒருத்தியையும் தேட ஏலா எல்லாம் ஒருத்தருக்குச் சரியாக இரா. ஏதோ ஒரு தியாகம் தான் திருமணம்”
Ꭷ]ᎱᎢᏌ+60Ꭲ: என்னைப் பொறுத்தவரை சூரியன் செவ்வாய் பெரிசல்ல, சோதிடம் வெறும் ஐதீகம் தான் அம்மா. நன்னடத்தை - நாகரிகம் இல்லாத இடத்திலை பெண் எடுப்பது பேராபத்து!"
இதழ் 54

Page 49
oேகன் இ
வணக்கம்,
சிறப்பாக வெளிவந்துகொண்டிருக்கம் ஜீவநதிய நிறைவையொட்டி 2011 ஒக்டோபர் இதழை விசேட மலர தாங்கள் என்ற முறையிலும் எனது அன்பார்ந்த நன்றிகளை Ignorance is bliss Tai UTfateft, ebulls) b (3660. போர்வைக்குள் நின்று கொண்டு நாகரிகமற்ற முறையி முற்படுவர். ஜீவநதி மாசி 2013 இதழிலே ஒரு நண்பர் அவருடைய மடைமையை அவருக்குத் தெளிவாக்கப் பின் பொருத்தமுடைமை கண்டு பிரசுரிக்க.
இஸ்லாம் தழுவிய ஈழத்து முஸ்லிம் எழுத்தாள கே.எஸ்.சிவகுமாரனின் பார்வைகளை இப்பட்டியலில் கா: இடம்பெற்றவை. இவற்றைவிட 100க்கும் அதிகமான கட் எண்ணிக்கை அதிகமானதால், அவைபற்றிய விபரங்கள் தேடிப் பார்த்து உண்மை விபரங்களைத் தரவேண்டும்.
கே.எஸ்.சிவகுமாரன் வேறு பணிகளில் ஈடு
பயன்படுத்தித் தனது புத்தகமதிப்புரைகளை எழுதி வந்துள்
அவர் தமது கணிப்புக்கு எடுத்துக்கொள்ளலாம். அனைத்து
செய்ய அவர் ஒரு மனித யந்திரம் அல்லவே.
பாரபட்சமின்றி அவர் தாம் படித்துப் பார்த்த
வருடங்களுக்கும் மேலாக அவற்றை எழுதி வருகின்றார்.
1974 Tamil Writings in Sri Lanka
1. A Southern Attempt poo 2. First novel by Ilankeeran 6,566TDgub Lugb
1992 Aspects of culture in SriLanka
l. Pages 11—12 2-pageS22-26 3.pages 62-63 4. page 116
1998– ஈழத்துச்சிறுகதைத் தொகுப்புகள் - திறனாய்வு
1. எம்.ஏ.ரகுமான் - பூ 2. நாகூர் எம்.கனி தூரத்துப் பூபாளம் 3. எம்.ஐ.எஸ்.முஸம்மில் - பிரார்த்தனை 4. எஸ்.எச்.நிஹற்மத் - எரிகொள்ளி
1998 - அண்மைக்கால ஈழத்துச்சிறுகதைத் தொகுப்புகள்
1. முஸ்லிம் மாதர் ஆராய்ச்சி செயல் முன்னைய சிறுகதைத்தொகுப்பு 2. ஹளிலினா வஹாப் - சுமைகள் 3.ஹஸினா வஹாப் - வதங்காத மலரொன்று
ஜீவநதி 区
 

தயங்கள்
பின் பிரதமகுபூசிரியர் என்ற முறையிலும் எனது 75ஆவது ாக வெளியிட்டதுடன் என்னை வெகுவாக கெளரவித்தவர்
மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். ர்டுமென்றே இருட்டடிப்புச் செய்வோர் "அறியாமை" என்ற ல் சிலரைத் தாக்கிப் பொய்யை உண்மை என்று நிறுவ பொய்யை மெய் என ஆதாரமின்றி எழுதியிருக்கிறார். வரும் இணைப்பை தங்கள் பார்வைக்கு அனுப்புகின்றேன்.
- 8க.எஸ்.சிவகுமாரண்.
ர் எழுதிய புனைகதைகள்/கவிதைகள்/கட்டுரைகள் பற்றிய ணலாம். இவை இதுவரை வெளிவந்த நூல்களில் மாத்திரம் டுரைகள் ஆங்கிலத்திலும், தமிழிலும் வெளிவந்துள்ளன. இங்கு தரப்படவில்லை. ஆய்வாளர்கள் தான் இவற்றைத்
பட்டிருக்கும் வேளையிற்றான், ஒய்வு நேரங்களையும் "ளார். தவிரவும் அவருக்குக் கிடைத்த புத்தகங்கள் பற்றியே துப் புத்தகங்களையும் படித்து குறுகிய காலத்தில் மதிப்பீடு
நூல்கள் பற்றிய தனது மதிப்பீடுகளை கடந்த 60
4. ஆதம்பாவா காணிக்கை
1999 - ஈழத்துநாவல்களிற் சில
1. ஒரு வெள்ளைப் பூ சிரிக்கிறது எம்.பி. முகம்மது ஜமீல் 2. சரித்திரம் தொடர்கிறது - எம்.பி.முகம்மது ஐமீல் 3. பனிமலர் - அ.ஸ.அப்துல்ஸமது 4. ஷர்மிலாவின் இதயதாகம் - ஸ்க்கீரா ஜூனைதீன் 5. வை.அஹமது - புதிய தலைமுறைகள்
2005 - இந்திய - இலங்கை இலக்கியம் ஒரு
கண்ணோட்டம் 1 . இஸ்லாமியப் பெண் கவிஞரின் கவிதா ஒவியங்கள் - அனார் 2.இளைய அப்துல்லாவின் இருநூல்கள் 3.இஸ்லாமியப் படைப்பாளிகளும் நானும் 4. விமர்சகர்களின் பார்வைக்கு எட்டாத சில
பக்கங்கள் - மானா மக்கீன்
- இதழ் 54

Page 50
2O O8 -
ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும் UTöbb — 1 (1962—1978) 1. எம் . ஏ. ரஹ மானினி மு னி னோடிப் பரிசோதனைக் கதை - ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
UT35lb -2 (198O 1998)
1. நாகூர் எம்.கனியின் கொழும்பு முஸ்லிம்களின் படப்பிடிப்பு 2. எம்./டிம் முஸமிலின் கிராமியப் பார்வைகள் 3. மாத்தறை ஹஸினா வஹாப்பின்-சிக்கனச் சித்திரிப்புகள் 4. எஸ்.எச்-நிஹமத்தின் நுட்பப்பார்வை 5. யூ.எல்.ஆதம்பாபாவின் தென்கிழக்கு சித்திரிப்பு
2OO8 GIFT6ŐTEOTIT) (BLIJFTIGO — 3
1. பி.எம்.புண்ணியாமீனின் தேடல்கள் 2. அ) நான்கு இஸ்லாமிர்களின் கவிதை
நூல்கள் - ஜின்னாஹ் ஷரிப்புத்தீன் - திரு நபிநாயகம்
ஆ) கிண்ணியா ஏ.எம்.எம். அலி குடையும் அடைமொழியும் இ) முல்லை முஸ்ரிபா - இருத்தலிற்கான அழைப்பு ஈ) பீன் கபூர் - திண்ணைக் கவிதைகள் 3.ரகுமான் ஏ.ஜமீல் - தனித்தலையும் பறவையின் துயர் கவியும் பாடல்கள் 4. யூ.எல். ஆதம்பாவா சாணையோடு வந்தது.
prt6ು - தெணியானின் படைப்புகள்
மீதான பார்வைகள்
தொகுப்பாசிரியர்: க.பரணிதரன்
வெளியீடு: ஜீவநதி
of langu: 2OOfF
ஜிவநதி
தனிபிரதி - SO/= ஆண்டுச்சந்தா
மணியோடரை அல்வாய் தபால் நிலையத்தில்
வேண்டிய (
K . Bharaneetharan, Kalaiah
வங்கி மூலம் சந்தா
K. Bhara
Commercial Banj
A/C No. - 810802
 
 
 
 
 
 
 

2008 சொன்னாற்போல -1
1. ஜூனைதா ஷெரிப்பின் அரசியல் நாவல் 2.மரபிலமைந்த புதுப்புனைவாக்கம் நஜிமுதீனின் பாடற்கதை 3. கீழைத்தேயப் பண்பாட்டுக் கோலங்கள் மானாமக்கீன் 4. றவுமி ஊடாக உளவியல் சமூக யதார்த்தம் 5.இளங்கீரன் என்ற ஆய்வறிவாளன் 6. ஹாஸிம் ஒமர் - ஓர் அறிமுகம்
2009 ஈழத்து எழுத்தாளர்கள்-ஓர் விரிவான பார்வை
1. நாச்சியாதீவு பர்வீன் - கவியுளம் கொண்ட சமூகப்பார்வைகள்
2010 காலக் கண்ணாடியில் ஒரு கலை இலக்கியப் பார்வை
1. எம்.ஏ.நுஃமானின் கவிதைகள் 2. இஸ்லாமிய பக்திப் பாடல்கள் 3. மன்னாரிலிருந்து ஒரு மனிதாபிமானக் குரல்
2011 சுவையான இலக்கியத்திறனாய்வுகள்
1. எம்.ஐ.எம்.முஸமில் கதைகள் 2. ம.பஹறிரீன் சிறுகதைப் பங்களிப்பு 3. அ.ஸ்.அப்துல் ஸ்மது எனக்கு வயது
பதின்மூன்று 2013 இல் வரவிருக்கும் இரு நூல்களில் மேலும் இஸ்லாமிய எழுத்தாளர்கள் பற்றி வரும். ஆங்கிலக் கட்டுரைகளும் அவ்வாறே பின்னர் தரப்படும்.
լերեն -։ தெணியானின் ஜீவநதிச்சிறுகதைகள்
நூலாசிரியர்: தெணியான்
வெளியீடு: ஜீவநதி
sfilansu: 200/=
சந்தா விபரம் - 12OO/= Golofsir - $50U.S
மாற்றக்கூடியதாக அனுப்பி வைக்கவும் அனுப்ப பெய்ர்/முகவரி
ham, Alvai North West, Alvai.
செலுத்த விரும்புவோர் neetharan
k-Nelliady Branch
1808 CCEYLKLY
as இதழ் 54

Page 51


Page 52
Whole Sale a
School and Office Equ
No:184, Hospital Road, JafÍsla
>ಣಾ
கிஇைவர் 929
 

nd Retail Dealers in Papers, Stationaries,
ments and Exercise Books.