கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2014.02

Page 1
www.gnanaminto www.gnanamik
பெப்ரவரி 2014
கலைஇலக்க
S 8

ம் ம்
கியச் சஞ்சிகை
விலை:
ரூபா 100/=
மலர்ச்சியின் வாரிசு காப்பாய் சிவம்

Page 2
r
2учолсо, 2}^-Jaა గిరాజ2ంగ్రిడ(
INagalijinga. )ே
Designers and MAamufa 22 kt Sovereign Gold Ouality Jewellery
101, Colombo Street, Kandy Te: O81 - 2232545
(GEN
Suppliers
DEALERS INI ALL KINI FOOD COLOURS, CAKE INGR
76B, Kings Tel: 081 - 2224187, 081
-ܓܠܠ

N
2so o so
03 MelligPAS
cturers of
الم.
-N
R/\L, ESSNKoo SÜPEPCO3RS
to Confectioners & Bakers
DS OF FOOD ESSENCES,
FOOD CHEMICALS, EDIENTS ETC.
Street, Kandy.
- 2204480,081 - 4471563
الـ

Page 3
ஒளி:14 பகிர்தலின் மூலம்
(ஞானம்
8 - 5 5 - 55 5 °) 9
ஒளி:14 சுடர்:09
165= வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவுமாயின், பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவிகொள்வர்.
ஆசிரியர் குழு ஆசிரியர், ஸ்தாபகர் : தி. ஞானசேகரன் இணை ஆசிரியர் : ஞானம் ஞானசேகரன் நிர்வாக ஆசிரியர் : ஞா. பாலச்சந்திரன்
தொடர்புகளுக்கு தொ.பேசி. 7 0094-11-2586013
0094-77-7306506 தொ.நகல் c 0094-11-2362862 இணையம் ( WWW.gnanam.info
WWW.gnanam.lk
தளம்.ஞானம்.இலங்கை மின்னஞ்சல் editor@gnanam.info
editor@gnanam.lk அஞ்சல் 3B-46h Lane, Colombo-6,
Sri Lanka வங்கி விபரம் r T. Gnanasekaran
ACC. No. - 009010344631 Hatton National Bank, Wellawatha Branch. Swift Code : HBLILKLX (மணியோடர்மூலம் சந்தா அனுப்பு பவர்கள் வெள்ளவத்தை தபாற் கந்தோரில் மாற்றக்கூடியதாக
அனுப்புதல் வேண்டும்) சந்தா விபரம் Sri Lanka
ஒரு வருடம் :ரூ 1,000/= ஆறு வருடம் :ரூ 5,000/= ஆயுள் சந்தா ரூ 20,000/=
ஒரு வருடம் Australia (AU$)
50) Europe (€)
40) India (Indian Rs.) 1250 Malaysia (RM)
100 Canada ($) UK (£) Singapore (Sin. $)
Other (US $)
9ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்பு களின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.) 9 புனைபெயரில் எழுதுபவர்கள் தமது சொந்தப் பெயர், முகவரி, ஆகியவற்றை வேறாக இணைத் தல்வேண்டும்.
பிரசுரத்திற்குத் தேர்வாகும் படைப்புகளைச் செவ்வைப்படுத்த ஆசிரியருக்கு உரிமை யுண்டு.
படைப்புகள் கணினியில் தட்டச்சு செய்யப்பட்டு மின்னஞ்சலில் அனுப்பப்படவேண்டும்.
இ 5 5 1. ஒ வ
398ம்
"G, E.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெய்ரவரி 2014 (165)

வீரிவும் ஆழமும் பெறுவதஞானம்?
தேதிள்ளே.......
27
-விதைகள் மிகிந்தலை A.பாரிஸ்
06 கலா விஸ்வநாதன் - முருகானந்தன்
28 புலோலியூர் வேல் நந்தன்
28 கல்வயல் வே. குமாரசாமி
28 -.க.சிந்துதாசன்
39 அம்பிகை சண்முகன்
39 நெடுந்தீவு யோகேஸ்
47 © கட்டுரைகள்
சிற்பி ஏ. இக்பால்
ஆன்யாழினி சதீஸ்வரன் சிறுகதைகள் சூசை எட்வேட்
அமரர் அன்புமணி
18 எஸ். முத்துமீரான்
29 எம். எம். மன்ஸுர் மூலம் - கலாநிதி கே. ஜயதிலக)
03 14 40
07
42
© பத்தி
பேரா. துரை மனோகரன் கே. ஜி. மகாதேவா கே. விஜயன்
45
48
ரல் விமர்சனம்
ன். செல்வராஜா
33
மகால இலக்கிய நிகழ்வுகள் க. பொன்னுத்துரை
51
வாசகர் பேசுகிறார்
54
யண இலக்கியக் கட்டுரை 1. ஞானசேகரன்
22

Page 4
ଅଷ୍ଟ୍
リ。
‘சர்வதேச வி என்ற வடமாகா ஜெனிவா மாநாட்டி0 தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்ப ஆகிவற்றை விசாரணை செய்வதற்கு, பக்க நாடுகள் சபையின் துணையுடன் உருவாக் தீர்மானம், 27 - 01 - 2014 அன்று இடம்பெற் நிறைவேற்றப்பட்டுள்ளது.
போர்க்குற்றம் தொடர்பான விடய நடத்துமாயின் அது பக்கச் சார்பானதாகவே அரசாங்கம் மூடி மறைக்கும். எனவே இ காணப்படவேண்டும். உண்மை வெளிப்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்ப தமிழ்மக்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடப்( தமிழ்மக்களைப் பொறுத்தவரை அரச தெருக்களைச் செப்பனிடுவதிலோ அவர்க
மக்களுக்கு வேண்டப்படுவது சுயகெளரவட
அரசாங்கம் உணர வேண்டும்.
இத்தீர்மானமானது இலங்கை அரசாா
யுள்ளது. மாகாண சபை ஒன்றிற்கு இவ்வி
நிறைவேற்ற 13ஆவது திருத்தச் சட்டத்தி கூறப்படவில்லை என்ற கருத்தைச் சில சிங்க இவ்விடயமானது சர்வதேச மட்டத்தில்,
ஏற்படுத்தக்கூடிய நிலைமைகள் இருக்கின்ற
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அ தடவையாகத் தீர்மானம் ஒன்றைச் சமர்ப்ட
எதிர்வரும் மார்ச் 28ஆம் திகதி இத்தீர்மான
இந்நிலையிலேதான் மேற்படி
நிறைவேற்றியுள்ளது.
உலக அரசியலைப் பொறுத்தவரை அ
கட்டுப்படுத்துகின்றன. அமெரிக்கா, பிரிட்ட
அரசாங்கத்தின் அணுகுமுறை திருப்திகரமா
அரசாங்கம் கடந்த காலத்தில் இழைத்
 
 
 
 
 
 
 
 

༽༼༽
சாரணை வேண்டும் ன சபையின் தீர்மானம் * ஏற்படுத்தக்கூடிய தாக்கம்
ட்ட போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள்
ச் சார்பற்ற சர்வதேச விசாரணையை ஐக்கிய
க அனைத்துலக சமூகத்தினை வேண்டுகின்ற ]ற வடமாகாண சபையின் ஐந்தாவது அமர்வில் |
ங்களை இலங்கை அரசாங்கம் விசாரணை அமையும். இராணுவத்தின் குற்றச் செயல்களை இவ்விடயத்தில் சுயாதீனமான செயற்பாடுகள் வேண்டும். இக்காரணங்களுக்காகவே மேற்படி டுகிறது. யுத்தக்குற்றங்களை மூடி மறைப்பதால் போவதில்லை. ாங்கம் அபிவிருத்திகளை மேற்கொள்வதிலோ, கள் திருப்தி கொள்ளப்போவதில்லை. தமிழ் ம், சுதந்திரம், சுயாதீனம் போன்றவைதான் என
ங்கத்திற்குப் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தி 罰 ாறு சர்வதேச விசாரணைகோரி பிரேரணை | ல் இது தொடர்பான ஏற்பாடுகள் எதுவும் ள அரசியல்வாதிகள் சுட்டிக்காட்டுகின்றனர். தற்போதைய நிலைமையில் பெரும் தாக்கத்தை
50T. மர்வில் இலங்கை தொடர்பாக, மூன்றாவது பிக்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
தீர்மானத்தை வடக்கு IL DIT 95TTGÕÕT 3FGÕ) LI
திகாரம் மிக்க ஒரு சில நாடுகளே அதனைக் டன், கனடா, இந்தியா போன்ற நாடுகளுடனான னதாக இல்லை. 毯 த பல்வேறு தவறுகள் காரணமாகவே இன்று ன்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட
ம் இன்று அதிக ஈடுபாட்டுடன் செயற்பட்டு கும் புலம்பெயர் சமூகமும் செயற்திறனுடனும்
பிழ் மக்களுக்குச் சாதகமான விடயங்கள் இடம் 1 நவாக்கியுள்ளன.

Page 5
"நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குக் காத்திரமான பங்களிப்பை வழங்கிய சஞ் சிகைகளின் வரிசையில் மணிக்கொடி, கலா மோகினி, கிராமஊழியன் முதலிய தமிழகச் சஞ்சிகைகளுடன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான வரதர் அவர்களின் 'மறுமலர்ச்சி யும் இடம்பெற்றிருப்பது பெருமைக்குரியது” என்பது இலக்கிய விமர்சகர்கள், இலக்கிய வரலாற்று ஆய்வாளர்கள் போன்றோரின் கருத்தாகும். அ. செ. முருகானந்தன், அ. ந. கந்தசாமி, க. இ. சரவணமுத்து, மஹாகவி து. உருத்திரமூர்த்தி, ச பஞ்சாட்சரசர்மா, நாவற்குழியூர் நடராஜன், தி. ச. வரதராசன், வை. ஏரம்பமூர்த்தி ஆகியோரைக் கொண்ட மறுமலர்ச்சி எழுத்தாளர் குழுவினரே ஆரம்பத் தில் சிலகாலம் கையெழுத்திதழாகவும் பின்னர், 1946ஆம் ஆண்டளவில் அச்சுப் பிரதியாகவும் அதை வெளியிடத் தொடங்கினர்.
"பஞ்சாட்சரசர்மா இல்லையென்றால் 'மறுமலர்ச்சி இல்லை” GT60T அதன் ஆசிரியர் தி. ச. வரதராசன் (வரதர்) பொறுப்புணர்ச்சியுடனும் நன்றியுடனும் குறிப்பிடும் அளவுக்கு சர்மா அவர்களின் ஆலோசனைகளும் உதவியும் ஒத்துழைப்பும் மிக அதிக அளவில் மறுமலர்ச்சிக்கு என்றுமே கிடைத்தன. இலக்கியக் கட்டுரை, இலக்கண விளக்கம், நூல் விமர்சனம், மொழிபெயர்ப்பு, சிறுவர் கதைகள் எனப் பல்வேறு பிரிவுகளில் இவர் எழுதிய ஆக்கங்கள் 'மறுமலர்ச்சியின் இலக்கியத் தரத்தை உயர்த்துவதிற் பெரும் பங்கு வகித்தன. தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளிற் புலமையும் மலையாளம்,
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெப்ரவரி 2014 (165)
 

வாரி 2.MUUMIU APQyo
> ஆங்கிலம், பாளி, ஹிந்தி ஆகிய மொழிகளை வாசித்து விளங்கிக்கொள்ளும் ஆற்றலும் கொண்டிருந்த அவர் சிங்களம், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, வங்காளம் ஆகியவற்றில் நியாயமான அளவுபரிச்சயம் உடையவராகவும் இருந்தார். இந்த மொழிகளில் வெளியான சில மூல நூல்களையும் கட்டுரைகளையும் வாசித்ததனால் ஏற்பட்ட சில நல்விளைவுகளை மறுமலர்ச்சி, ஈழகேசரி, கலைச்செல்வி, சோதிடமலர், விவிதவித்யா, சுதேசநாட்டியம், இந்துசாதனம், அருவி, காந்தியம், இலங்கை விகடன், ஈழநாடு, இசையருவி முதலான ஈழத்து இதழ்களிலும் கலாமோகினி, நவசக்தி முதலான தமிழக இதழ்களிலும் இடம்பெற்ற இவருடைய ஆக்கங்கள் பலவும் இலங்கை வானொலிப் பேச்சுக்களும் அவ்வப்போது பிரதிபலித்தன.
பஞ்சாட்சரசர்மா அவர்கள் இளவயதி லேயே பண்டிதர் பரீட்சையிற் சித்தியடைந்து புத்துரர் சோமாஸ்கந்தக் கல்லூரியிலே நீண்ட காலம் தமிழாசிரியராகப் பணியாற்றி மரபுத் தமிழ் இலக்கியங்களைக் கற்பித்ததுடன் இக்கால எழுத்தாளர்களின் சிறுகதை, நாவல், கவிதை போன்றவற்றைத் தம் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தியும் வந்தார்.
புகழையோ, விருதுகளையோ நோக்கமா

Page 6
கக் கொள்ளாமல் 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்பதற்கிணங்க அமைதியாகவும் அடக்கமாகவும் இலக்கியப் பணியில் ஈடுபட்டிருந்த இவரை பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, புலவர்மணி ஏ. பெரிய தம்பிப்பிள்ளை, சோ. சிவபாதசுந்தரம், இலங் கையர்கோன், சி.வைத்திலிங்கம், இராஜ. அரியரத்தினம், சம்பந்தன் முதலானவர்களின் வரிசையில் வைத்து இவருடைய இலக்கியப் பணிகளை விதந்துரைத்து 'ஈழத்துப் பேனா மன்னர்கள்' என்ற விமர்சன அறிமுகத் தொடரில், கரவைக்கவி கந்தப்பனார் (இரசிக மணி கனக. செந்திநாதன்) எழுதியதும் முற்போக்குப் பண்டிதர் என் அமரர் கலாநிதி க. கைலாசபதி இவரைக் குறிப்பிட்டதும் நினைவுகூரத் தக்கவை.
இத்தகைய பலசிறப்புகளுக்குரிய பண்டிதர் ச. பஞ்சாட்சர சர்மாவுக்கும் மனைவியார் இராசாத்தி அம்மாவுக்கும் இரண்டாவது மகனாக 1954ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி பிறந்து தம் தந்தையாரின் சமய இலக்கியப் பணிகளின் பொருத்தமான வாரிசு எனச் சொல்லத்தகுந்த வகையில் சாதனை படைத்து வருபவரே இம்மாத 'ஞானம்' இதழின் அட்டைப்பட அதிதியாகக் கெளரவிக்கப்பெறும் ப. சிவானந்த சர்மா B.A. (சிறப்பு) (கோப்பாய் சிவம்).
- "இலக்கியம் என்றன் பேச்சு, இன்கவி என்றன் மூச்சு” என்ற உள்ளத்தின் ஓசை கொடுத்த உந்துதலால் தமது பதின்மூன்றாவது வயதிலே 'ஜோதி' பத்திரிகையில் வெளியான 'ஈழவளநாடு' கவிதையுடன் எழுத்துலகில் பிரவேசித்த இவர், விரைவில் சிறுகதை, குறுநாவல், கட்டுரை, விமர்சனம், நாடகம் ஆகிய துறைகளிலும் தம் கைவண் ணத்தைக் காட்டத் தொடங்கினார். இவ ருடைய பல்துறை ஆக்கங்கள் இவர் ஏழு ஆண்டுகளாகக் கையெழுத்திதழாக வெளியிட்ட 'அம்புஜம்' இதழிலும் ஜோதி, வெற்றிமணி, ஈழநாடு, மத்தாப்பு, எழில், ரோஜாப்பூ, சிரித்திரன், கண்மணி, மல்லிகை, கலையருவி, பூம்பொழில், இதயம், புதுயுகம், கலைக்கண், வெள்ளி, பூரணி, வானொலிமஞ்சரி, - தினகரன், வீரகேசரி, ஈழமுரசு, சுடர், தினபதி, இந்துசாதனம், சிவானந்தம் ஆகிய சஞ்சிகைகள், பத்திரிகை

களிலும் வெளிவந்துள்ளன. கோப்பாய் சிவம், ஆனந்தபைரவி, சங்கீதா ஆகியவை இவ ருடைய புனைபெயர்கள்..
1976 முதல் காலாண்டில் வெளியான சிறுகதைகளில் சிறந்த சிறுகதைக்கான 'தகவம்' பரிசு, 'விடிவெள்ளி முத்தையா நினைவுச் சிறுகதைப் போட்டியில் சிறப்புப் பரிசு (1981), வீரகேசரி எழுத்தாளர் ஆண்டுக்கான கட்டுரைப் போட்டியில் பரிசு (1982), மட்டக்களப்பு தாரகை சஞ்சிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் மூன்றாம்பரிசு (1984), மட்டக்களப்பு 'களம்' கலை இலக்கிய வட்டம் நடத்தியதிருமதி றோஸ் பற்றிக் நினை வுச் சிறுகதைப் போட்டியில் பாராட்டுப் பரிசு (1985), ஆக்க உரிமைகள் வியாபாரக் குறிகள் பதிவகம் நடத்திய சிறுகதைத் தொகுதிக் கான போட்டியில் முதற்பரிசு ரூ 5.000 (1985), யாழ் இலக்கியவட்டம் நடத்திய கனக. செந்திநாதன் நினைவுக் குறுநாவல் போட்டியில் பாராட்டுப்பரிசு (1985), 198788 இல் வெளிவந்த சிறந்த நூல்களுள் ஒன்று என 'பூந்தோட்டம்' என்ற சிறுவர் கவிதை நூலுக்கு இலங்கை கலாசாரப் பேரவை வழங்கிய பாராட்டுச் சான்றிதழ், அதே காலப் பகுதியில் வெளியான சிறந்த சமய இலக்கிய நூல்களுள் ஒன்று என 'சைவ விரதங்களும் விழாக்களும்' என்ற நூலுக்கு இலங்கை கலாசாரப் பேரவை வழங்கிய பாராட்டுச் சான்றிதழ், வீரகேசரி புத்தாண்டுக் கவிதைப் போட்டியில் முதற்பரிசு ரூபா 5,000 (1990), வலிகிழக்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவு நடத்திய புத்தாண்டு கவிதைப் போட்டியில் முதற்பரிசு (1990) ஆகியவை இவருடைய எழுத்தாற்றலுக்குக் கிடைத்த பரிசுகள், பாராட்டுக்கள்.
“ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் இன்றைய ஆரோக்கியமான போக்கிற்கு இளந்தலை முறையினர் கணிசமான அளவு பங்கினைச் செலுத்தி வருகின்றனர் என்ற மெய்ம்மையின் அடிப்படையில் நோக்கும்போது, அவர் களில் முதன்மை வகிக்கின்ற ஒருவராகக் கோப்பாய் சிவம் விளங்குவதைக் காணலாம்” என நியாயமான போராட்டங்கள் என்ற இவருடைய சிறுகதைத் தெகுதியின் முன்னுரையிலே செங்கை ஆழியானும், "முதலாளி - தொழிலாளி பிரச்சினைகள்,
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெப்ரவரி 2014 (165)

Page 7
அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட மக்களின் அவலங்கள், யதார்த்தபூர்வமான காரணங்கள், விடிவிற்கான நம்பிக்கைகள் போன்றவை மட்டுமே சமுதாய நோக்குடைய இலக்கியத்தின் முக்கியமான அம்சங்கள் என்று சொல்லிவிட முடியாது. படிக்கவேண்டிய இளம் பருவத்திலே பாடசாலையை எட்டியும் பார்க்க அனுமதிக்கப்படாமல் வீடொன்றிலே வேலைக்காரியாக அடைபட்டுக் கிடக்கும் அவலம் (பிள்ளைத்தமிழ்), கோயில் குருக்கள் மாரைக் கசக்கிப் பிழியும் பொருளாதாரச் சிக்கல் (அன்னை சிரித்தாள், கூனல்), திறமை நிறைந்த - ஆனால் வேறு பின்புலம் இல்லாத மாணவர்கள் சில சந்தர்ப்பங்களில் எதிர்நோக்கும் புறக்கணிப்பு (தார்மீகக் கோபம் தலைதூக்குகின்றது), திறந்த மனத்துடன் திருந்திய உள்ளத்துடன் சிறையிலிருந்து வெளியேறுவோர் மீது சமுதாயம் கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சி (எனக்குரிய இடம்), பெண்களின் நியாயமான ஆசைகளுக்குக் குறுக்கே நிற்கும் சீதனக் கொடுமை (அரங்கேறாத ஆசைகள்) போன்றவை இங்கொன்றும் அங்கொன்று மாகத் தோன்றும் தனி மனிதப் பிரச்சினைகள் அல்ல. புற்று நோய்போல சமுதாயத்தை மெல்ல மெல்ல அரித்துச் சிதைக்கின்ற உடனடித் தீர்வை அவாவி நிற்கின்ற நிதர்சனங்கள். இவை மீது வாசகர்களின் கவனத்தை ஈர்க்கின்ற ஆசிரியரின் சமுதாயப் பொறுப்புணர்ச்சி பாராட்டப் படவேண்டி யது” என இவருடைய “தார்மீகக் கோபங்கள்” என்றசிறுகதைத்தொகுதியின் முன்னுரையிலே சிற்பி குறிப்பிட்டிருப்பதும் முறையே இவருடைய ஆக்கத் திறமையையும் சமுதாய அக்கறையையும் காட்டுகின்றன.
- பூந்தோட்டம் (சிறுவர் கவிதை), ரோஜாப்பூ (சிறுவர் கவிதை) என்னாலும் பேச முடியும் (சின்னஞ்சிறுவர்க்கான மேடைப் பேச்சுக்கள்), கனவுப் பூக்கள் (தமக்கை செளமினியும் இவரும் தனித் தனியே ஆக்கிய புதுக் கவிதைகளின் தொகுப்பு), இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள், வெள் ளோட்டம் (வெள்ளோட்டம், கரைசேரும் கட்டுமரங்கள் ஆகிய குறு நாவல்களைக் கொண்டது), நியாயமான போராட்டங்கள் (சிறுகதைத் தொாகுதி), தார்மீகக் கோபங்கள் ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெப்ரவரி 2014 (165)

(சிறுகதைத் தொகுதி), பொறுக்கிய முத்துக்கள் (பொன் மொழித் தொகுப்பு) முதலிய நூல்களை இவர் வெளியிட்டுள்ளார். திரு வள்ளுவர், மஹாத்மாகாந்தி, யேசுபிரான் போன்றோரின் பொன்மொழிகளுடன் ஈழத்து எழுத்தாளர்களான உதயணன் (இணுவில் - கனடா), நந்தி, எஸ். அகஸ்தியர், செங்கை ஆழியான், கோப்பாய் சிவம் ஆகியோரின் பொன்மொழிகளும் “பொறுக்கிய முத்துக்கள்' தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
வானொலிக் கலைஞராகவும் விளங்கும் இவரின் சமய இலக்கியப் பேச்சுக்கள், உரைச்சித்திரம், இசைச்சித்திரம், நாடகம், மெல்லிசைப் பாடல்கள் என்பன இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டுள்ளன.
அம்புஜம் (கையெழுத்திதழ்) ஆசிரியர், 'ஈழநாடு' நிருபர், 'புதுவை (சோமாஸ்கந்தக் கல்லூரித் தமிழ்மன்றம்) ஆசிரியர் குழு உறுப்பினர், 'அருவி, 'பேரருவி' (கிளி நொச்சி நீர்ப்பாசனத் திணைக்களத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் அரை யாண்டு வெளியீடு) உப் பத்திராதிபர், 'செங்கதிர்' (அறிவியல் ஏடு) உதவி ஆசிரியர், 'விவித வித்யா' ஆசிரியர் என்ற வகையில் பத்திரிகைத் துறை அனுபவங்கள் நிறையப் பெற்றவர்.
நான் ஏன் கவிஞன் ஆனேன்?, வாழ்க்கை ஒரு ராகமாலிகை (இதுவரை யாருக்குமே தோன்றியிராத ஒரு புதிய கற்பனையில் கர்நாடக இசைக்குரிய ராகங்களின் பெயர் களை மிகப் பொருத்தமாகப் பயன்படுத்தி எழுதப்பட்ட கவிதை), வீரகேசரி பரிசுக் கவிதை, 'நவீன சுயம்வரம்' முதலான சில மரபுக் கவிதைகளும் 'கனவுப் பூக்கள்' தொகுதியில் இடம்பெற்றுள்ள புதுக் கவிதைகளும், பூந்தோட்டம்' 'ரோஜாப்பூ ' தொகுதிகளில் இடம்பெற்ற சிறுவர் கவிதைகளும் பிள்ளைத் தமிழ், தார்மீகக் கோபம் தலை தூக்குகின்றது, அன்னை சிரித்தாள், கூனல், முற்றுப்பெறாத ராகங்கள், அம்மாவுக்கு உண்மை புரிந்து விட்டது முதலான பல சிறுகதைகளும் இந்த நாட்டின் கவிதை வளம், சிறுகதை வளம் பற்றிச் சிந்திப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும் என்பது நிச்சயம்.
உள்ளத்தின் உயர்வுக்காக - கலை, இலக்கியத் துறையில் ஈடுபட்டுவரும் அதே வேளையில், உயிரின் உறுதிக்காக ஆன்மீகத்

Page 8
துறையிலும் நாட்டம் கொண்டு அன்னை பராசக்தி, சைவாலயக் கிரியைகள், சைவ விரதங்களும் விழாக்களும் முதலான முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டும் பதினைந்துக்கும் மேற்பட்ட கோவில் திருவூஞ்சல் பாடல்களை ஆக்கியும் பல கோவில்களின் கும்பாபிஷேக மலர்களின் தொகுப்பாசிரியராகப் பணி புரிந்தும் வருகின்றார் என்பதையும் குறிப்பிட்டாற்றான் இவரது பன்முகப்பட்ட பணிகளின் விபரம் ஓரளவாவது பூர்த்தியானதாக அமையும். இத்தகைய ஆன்மீக சேவைகளை அவர் 'சர்வானந்தமயபீடம்' என்னும் தனிமனித சுதந்திர அமைப்பின்மூலம் நடத்தி வருகிறார். - மிக நீண்ட காலமாக சிவாசார்யப் பெருமக்களின் கைகளில் ஏட்டுப் பிரதிகளா கவும், - கையெழுத்துப் பிரதிகளாகவும் பேணப்பட்டுக் குரு - சிஷ்ய முறையிலும், தந்தை - மகன் வழியிலும் கையளிக்கப்பட்டு வந்த பல அரிய சம்ஸ்கிருத கிரந்த கிரியா பத்ததிகளை கணினி மயப்படுத்தி அச்சு வாகனமேற்றி வருவதன்மூலம், அவற்றை அழிவிலிருந்து பாதுகாத்து வருவதுடன் இன்று உலகெங்கும் உள்ள சைவ
ஆலயங்களில் சர்வானந்தமய பீடத்தின் பத்ததி நூல்களே பயன்பாட்டில் உள்ளன என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டு எல்லா இடங்களிலும் சமச்சீராக கிரியாமுறை நிகழ்வதற்கும், எல்லார் கைகளிலும் இலகு வான கிரியாபத்ததிகள் கிடைப்பதற்கும் வழிசெய்து வருகிறார். அவ்வகையில் சிறந்த ஒரு பதிப்பாளர் என்ற பெருமையும் இவரைச் சேர்கிறது.
- மறுமலர்ச்சியின் வாரிசு என அந்தனி ஜீவா இவரைப் பாராட்டியதும் மௌனி, ஜெயகாந்தன் ஆகியோரின் உத்திமுறை சிவத் திற்குக் கைவந்திருக்கிறது எனச் சொக்கன் குறிப்பிட்டதும் - பொருத்தமானவையே என்பதை இவருடைய ஆக்கங்களை வாசிப்போர் ஏற்றுக்கொள்வர். ஆன்மீகத் துறையில் முழுமையாக ஈடுபட்டிருக்கும் இவர் இலக்கியத் துறையை ஒரேயடியாகத் துறக்கக்கூடாது என்பதே வாசகர்கள் பலரின் வேண்டுகோள்.

இருக்கை இனங்கள் கருக்கி
தன் நிலை தப்பவைத்துக்கொள்கிறது
உலகம் முழுவதும்
ஒப்பாரிவைத்தாலும் அனைத்து இருக்கைகளும் அப்படித்தான் வாழ்கிறது
எத்தனை இனம் நசுங்கினாலும்
தன் குணம்
வளமோடு வாழும் தாழ்வுக்குணம் மாறாதவடுவாக!!
உலகம் எங்கும் விகடகவியாக மக்கள் கூட்டம்
ஊமைப் பிறவிகளாக எங்கள் இருக்கைகள்! நம்பிக்கைவைத்து
ஆசனம் அமைத்துகொடுத்தோரும் நம்பமுடியாதஆச்சரியத்துடன்
அகிலம் முழுவதும்
ஆள்காட்டிவிரல் அதிகாரம் ஊட்டுகிறது
ஆசை வார்த்தை உலகம் அசுத்தம் செய்கிறது
அச்சத்தின் உச்சம் ஆசனம் வாழ்கவென்று
எதார்த்தம் கூற மறுத்து தலமைஆசனம் வாழ்கவென்று தாய் மொழியும் வாழ்த்துகிறது...
இனங்கள் வாழ்வைவிடவும் இருக்கைவாழ்கை கூடுகிறது
மனங்கள் எல்லாம் மயக்கம் தெளியாமல் மாண்டேபோகிறது..
-மிகிந்தலை A.பாரிஸ்
ஆசனத்தின்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெய்ரவரி 2014 (165)

Page 9
இங்கு,
sசின்,
மணிவண்ணன் அரசாங்க மருத்துவ மனையில் படுத்துக்கிடந்தார். காயகனத்தில் (வாட்)தான் கிடந்தார். முழங்கை மூட்டில் காயத்தோடு எலும்பும் தாக்குப்பட்டு இருக்கிறது; சற்று பிசகியும் இருக்கிறது! இடது கையில் பெரிய பற்றுப் போட் டிருந்தார்கள்! கையை அசைக்காமல், கட் டிலை விட்டு இறங்காமல் இருக்க வேண் டும் என்ற கட்டளைப் பிரகாரம் அவர் காலம் கழிந்தது இரண்டு வாரம்.
முந்தா நேற்றுத்தான் கட்டு பிரிக்கப் பட்டது. புதுக்கட்டு போடப்பட்டிருக்கிறது சிறிதாக. இப்போது கொஞ்சம்பரவாயில்லை! நோவுவலி பெரிதாக இல்லை! எழுந்து நடமாடவும் அனுமதி கிடைத்திருக்கிறது!
அவருக்கு இப்போ குதூகலம்தான்!
இவ்வளவு காலமும் அவர் காயத்தைவிட மனக்காயம் பெரிதாகவே இருந்தது! எத்தனை வேலைகளைச் செய்த கையும் காலும், எங்கெல்லாம் ஓடுதாவடியாகத் திரிஞ்ச மனுசன்! என்றாலும் எப்படியான இட்டல் இடைஞ்சலிலும் அவர் மனநிம்மதியாக இருக்கக் கற்றுக் கொண்டவர். படுக் கையில் கிடக்கும் போதும் ஒரு நூல் அவர்கையிலிருக்கும்! அதைப் பார்த்துக் கொண்டே இருந்தாரென்றால் பொழுது ஆனந்தமாகக் கழியும்! வீட்டில் என்றால் நூலகத்தில் எடுத்து எத்தனையோ புத்த கங்களை மாறி மாறி வாசித்து இன்பம் கண்டிருப்பார்! இப்போது ஒரு புத்தகத்தைத் தான் பார்த்துக்கொண்டிருக்கிறார்!
இவரேன் இங்கு வந்துகிடக்கிறார்? அதுவும் ஒரு கதைதான்; பிள்ளைகள் வெளிநாட்டில், அவர்களும் அனுப்புவார்கள். இவரும் வாழை தென்னை மா பலா என்று பயன்தரும் மரங்களை வளர்த்தெடுத்து சிறு வருமானத்தை ஈட்டிக்கொள்வார்!
வேப்பமரமும், இப்பில் மரமும் சடைத்து வளர்ந்து நிழல்பரப்பி நிற்கிறது. இந்த ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெயரவரி 2014 (165)

ஒரு சமாதானக்
காற்று
செம்பியன் செல்வன்
ஞாபகார்த்தச் சிறுகதைப்போட்டி - 2013ல் மூன்றாம் பரிசு பெற்ற
சிறுகதை நிழலால் சூரியஒளிபடாமல் அருகிருக்கும் வாழைகளின் வளர்ச்சி குன்றிப்போகிறது! சின்னச்சின்னக் குலைகளைத்தான் ஈனு கின்றன!- இதைக்காணச் சகிக்காத அவர், கொப்புகளைத் தறிக்க முடிவெடுத் தார். ஏணி ஒன்றைக் கொண்டு வந்து சாத்தி மரத்திலேறி, மேல் கொப்புக்கும் தாவி ஏறினார். கொப்புகளைத் தறிக்கையில் ஒரு சிந்தனை உதயமாகியது; பேரினம் சிற்றினங்களை வளரவிடாமல் செய்கிறது. நான் இந்த வாழைகள் வாழவழி செய் வதுபோல், சிற்றினம் வாழச்செய்ய வழி இல்லையா!
இப்படிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில் ஒரு ஆவேசத்தில்தன்னையே மறந்துவிட்டார்! அவர் இப்படித்தான், சிந்தனையில் மூழ் கித் தன்னை மறப்பது இடைக்கிடை நடக்கும்! எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இது வாய்க்குமா!.......... மேல்கொப்பிலிருந்து கீழே விழுந்து போனார்!கையை ஊன்றியிருக்கிறார். அந்தக் கைதான் பாதிக்கப்பட்டது! நல்ல வேளை, வேறு ஆபத்தில்லை! மனையாள் பாமாயயயயயயயயயயயயயயயயயயயயயயயIIIIIIIIIIII
சூசை எட்வேட் திருகோணமலையைச் சேர்ந்த சூசை எட்வேட் கவிதை, சிறுகதை ஆகிய துறைகளில்
எழுதி வருபவர். இதுவரை 70க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். 'கருத்துக்கலசம்' கவிதைத் தொகுதி, “இவன்தான் மனிதன்' சிறுகதைத் தொகுதி ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன.

Page 10
கத்திக்குளற, அயலவர் ஒடிவர பாவம் இங்கே வந்து கிடக்கிறார்! கட்டிலை வரி டட் டு இறங்க முடியாத நாளில் படுத்தபடியே சுற்றுவட்டத்தை நோட்டமிடுவார் மணி வண்ணன். கால்கை முறிந்தவர்கள், இடுப்பு கழுத்து தெறித்தவர்கள், பெரும் பந்தனம் போட்டு தூக்கி கட்டியிருப்பார்கள்! பெரும் காயப்பட்டவர்களும் உளர்! அவர்கள் வேதனையில் துடித்துப் பெரும் குரலெடுத்து கத்துவார்கள் முக்கிமுனகி வேதனையை சகிக்க முயல்வாரும் உளர்! இவர்கள் வேதனையோடு ஒப்பிடுகையில் தன் துன்பம் பரவாயில்லை என்று தோன்றும் அவருக்கு! நம் துன்பங்களையே யோசித்துக் கொண்டிருப்பதால் மேலும் நிம்மதி இழக்கப்படும் பிறர் கஸ்டங்களை கேட்டறிந்தால் நாம் பரவாயில்லை என்று மன ஆறுதல் பிறக்கும்’ என்ற உண்மை புலப்பட்டது. பல நூல்களையும் வாசிப்பதால் இப்படியான கருத்துக்கள் வருவது அவருக்கு
சாசுவதம்! வேதனையில் கத்தும் போது, தாதிகள் ஒடிவந்து திட்டிப்பேசி அடக்குவார்கள்! தாய்க்கும் தாதிக்கும்
ஒரெழுத்துத்தானே பேதம்! தாயன்பு வேண்டாம், தயவான அன்புப் பேச்சாவது இருக்கவேண்டாமா? அடுத்த தெருவில் இருக்கும் ஒருத்தியை இவருக்குத் தெரியும். அவள் படிப்பை முடித்துக் கொண்டு ஒரு வேலைக்காக எப்படியெல்லாம் அலைந்த வள்! தகப்பனோடு திரிந்து எத்தனை பேரின் காலைப்பிடித்து கெஞ்சித் திரிந்தவள்! ஒரு வேலைக்காக தவமிருந்தவள் எப்படியோ இந்தத் தாதி வேலை கிடைத்தது! தகப்பன் உழைக்க முடியாதவன் ஆகிவிட்டதால் அவள் உழைப்பு மிகவும் வேண்டப்பட்டது. அவளால் இன்று தளைக்கிறது!
அவள் கூட நோயாளிகளை வருத்தக் காரரை திட்டுகிறாள்; அதட்டுகிறாள்; ஏனோதானோ பாவனையில் இயந்திரம் போல் இயங்குகிறாள். இவைகளைப் பார்த்துப்பார்த்து மனம்வெதும்பி போனார் மணிவண்ணன்! அருகில் போய் ஆறு தலளிக்க எண்ணுவார். கட்டிலைவிட்டு அரக்கமுடியாததால், தன் மனஆதங்கத்தை கட்டிப்போட்டுவிடுவார்! இப்போது அவ ருக்கு விடுதலை கிடைத்தது போலிருக்கிறது; நடமாடக் கூடியதாக இருக்கிறது; அனு மதியும் கிடைத்திருக்கிறது!
எதிர்ப்புறக் கட்டிலில் வேதனையில்

ஒருவன் அலறிக்கொண்டிருந்தான்! தாதிகள் வந்து திட்டித்தீர்க்கப் போகிறார்கள் என்று இவருக்கு விளங்கிவிட்டது. அவசரமாக அவனனன்டை போனார். அவன் நாடியை ஆதரவோடு தடவிக்கொடுத்தார். காயப்பட்ட காலையும் வருடிவிட்டார். தன்வாயிலே விரலை வைத்து சத்தம் போடவேண்டாம் என்று சயிக்கினை செய்தார் அவருக்குத்தான் சிங்களம் தெரியாதே! அவன் சத்தம் குறைந்து முனகலானது அன்பின் சக்தியே சக்தி “மாத்தயா வத்துறு ஒன." அவன் கேட்டான். இவருக்கு விளங்கிவிட்டது. தண்ணிர் எடுத்துக் கொண்டு வந்து பருக்கிவிட்டார். அவனுக்கு கையிலும் கட்டுப்போட்டிருந்தது! குடித்து முடித்ததும் "பொஹொமஸ்துதி மாத்தயா" என்றான். அப்போது தான் அவனை வடி வாகப் பார்த்தார். தேகமெல்லாம் பச்சைகுத்தி யிருந்தது இரண்டு புயங்களிலும் சிங்கத்தலை இருந்தது! கீழ்க்கையிரண்டிலும் குத்துவாள் மிளிர்ந்தது மார்பில் புத்தரின்சாந்த சொரூபம் சித்திரிக்கப்பட்டிருந்தது!. எப்படியான மோட்டுப் பிறவிகள் நடமாடுகின்றனர் நம் நாட்டில்! இம்சை அரசனாகவும் இருக்கவேண்டும்; அகிம்சா மூர்த்தியாகவும் விளங்கி கடவுள் அருள் கிடைக்கவேண்டும்! என்னே அறியாமை எத்தனை பேர் இவன் கத்திக்குத்துக்கு இலக்காகினரோ என்றாலும் அவர் அவனை வெறுக்கும் மனதாயில்லை! அவன் முனகிக் கொண்டிருந்தான். அவ ருக்கு கழிவிரக்கத்தை ஏற்படுத்தியது! தன் இருப்பிடம் ஏகினார். வைப்பறையில் இருந்த "பிஸ்கற்’ பெட்டியொன்றை எடுத்துப் பிரித்து நாலை அவன் கரத்தில் திணித்தார், அவன் புன்னகைத்தான். அடுத்த கட்டிலில் இருப்பவர்கள் இவரை வினோதமாகப் பார்த்த னர். அவர்களில் சிங்களவரும் தமிழரும் கலந்திருந்தனர். அவர்களுக்கும் பரிமாறினார் பொதி காலியாகும்வரை எல்லோருக்கும் இவரில் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது! அன்பளிப்பால் மட்டுமல்ல, புன்னகை எப்போதும் பூத்திருந்ததாலும்தான் இவர் கொஞ்சம்வசதியானவர்தான். என்றாலும்வசதி படைத்த எல்லோருக்கும் இந்தமனம் வருமா? இவர், வாழ்க்கையில் வைத்தியமனையைக் கண்டறியாதவர் அந்தப் பெருமிதத்தில் வாழ்ந்தவர். இன்று வைத்தியமனையில் படுத்துக்கிடப்பதைக் கேள்வியுற்று இனசனம் நண்பர்களுக்கெல்லாம்ஆச்சரியம்! ஆகையால் பலரும் அள்ளுப்பட்டு வந்தனர் பார்வையிட!
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெய்ரவரி 2014 (165)

Page 11
அதையும் இதையும் கொடுத்தே சென்றனர், இழுப்பறை நிரம்பிவிட்டது! அவர்களும் கடன் தீர்க்கவே இவற்றைக் கொடுக்கின் றனர். அயலிலோ, இனசனத்திலோ ஆரும் நோயுற்றோ நொந்துபோயோ இருப்பதாகக் கேள்விப்பட்டால் காணும், போய்ப்பார்த்து ஆறுதல் சொல்லி, பணமாகவோ பண்ட மாகவோ கொடுத்து விட்டே வருவார்! பார்வையாளர் நேரம் இவர் கட்டிலைச்சுற்றித் தான் பலர் சூழ்ந்திருப்பர்! இம்மாதிரி சூழ்நிலையில் ஒருவர் கூட எட்டியும் பார்க்காதவர் மனம் என்ன பாடுபடும்! இதை உணர்ந்து கொண்ட அவர், அவனண்டை சென்று குசலம் விசாரித்து, மிதமிஞ்சிப் போயிருப்பவற்றை, தோடம்பழம், முந் திரி, அப்பிள் வாழைப்பழம். என்று கொடுத்து ஆறுதல் படுத்திவருவார்! அவன் கையெடுத்துக் கும்பிடாத குறை யாய் அவருக்கு நன்றி சொல்வான்! அந்தக்களத்தில் வைத்திய நிபுணரைவிட மணிவண்ணன் கதாநாயகனா கிக் (ஹிரோ) கொண்டிருந்தார்!
அந்தக்களத்தில் புதிதாக ஒரு சிறுவனை கட்டிலிலே கிடத்தியிருந்தார்கள்! கர மொன்றில் பாரிய கட்டுப்போடப்பட் டிருந்தது. முகத்திலும் காயம். மருந்திட்டு ஒட்டுப் போடப்பட்டிருந்தது! எல்லாம் சிகிச்சை அறையில் ஆற்றப்பட்டு இங்கு விடப்பட்டிருக்கிறது! அவனும் ஈனக்குர லெடுத்து அழுது கொண்டிருந்தான்! தாதியர் இருவர் வந்து "அழவாணா. அழவாணா. சத்தம் போடவேணா! இது உங்கட வீடு இல்ல, ஆசுப்பத்திரி..!" சிறுவனுக்கும் அதே கண்டிப்புவார்த்தைகள்தான் தகப்பனாயிருக்க வேணும், அருகில் நின்று “சத்தம் போடாத அழாத பேசுவாங்கள்” என்று மெல்லியகுரலில் சத்தத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபாடு காட்டிக் கொண்டிருந்தார் பையன் குரல் குறைவதாயில்லை! “என்ரஉம்மா..! உம்மாவப் பார்க்கவேணும். பார்க்கவேணும்.!" என்று குமுறலானான்! மணிவண்ணனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. எழுந்துபோனார் கையில் பிடித்திருந்த புத்தகத்தை வைத்துவிட்டு.
"தம்பி. ராசா. அழாதையுங்கோ, மருந்து போட்டிருக்கு, கொஞ்ச நேரத்தால் நோக்குறைஞ்சி போயிரும் உம்மா கெதியா வந்திருவாங்க, வாப்பா பக்கத்திலதானே நிற்கிறார்! பயப்படாதேயுங்க!. " இப் படியே இரங்கலுரை ஆற்றும்போது, அவர்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெய்ரவரி 2014 (165)

கரங்கள் பையனின் முகத்தையும், காயப்பட்ட கரத்தையும் வருடியபடியே இருந்தன! ஆரஞ்சுச் சுளைகளை அவன் வாயில் வைக்க அவன் மென்று சுவைத்து சுவைத்து விழுங்கினான். 'கண்டோஸ்’ ஒன்றையும் வாயில்வைத்தார்! அதன்சுவையைநன்றாகவே இரசித்தான் அழுகையை மெல்ல மறந் தான் சில ஆரெஞ்சுகளையும், கண்டோஸ் பக்கற்றையும் பக்கத்தில் வைத்துவிட்டு, பக்கத்தில் நின்று நடப்பதை மெய்மறந்து இரசித்துக் கொண்டிருந்த தகப்பனைப் பார்த்தார். அவரைப்பார்த்ததும் இஸ்லாமியர் என்று விளங்கிவிட்டது. பாய்த்தாடியோடு இருந்தார். இவர் விசாரித்தார் சிறு வனுக்கு என்ன நடந்தது' என்று. "எங்கட கச்சுப் பெருநாள் முடிஞ்சும் இவங்கள்ற விளையாட்டு முடிய இல்லப்பாருங்க! பொடியங்களோடசேர்ந்துவெடிக்கொளுத்தி விளையாடியிருக்காங்க. பெரிய மூலவெடிய இவர் கையில் வைச்சு கொளுத்தியிருக்கிறார். எறியக்குமுன்னம் வெடிச்சிற்றுதுகைநல்லாக் காயம்பட்டிருக்கு முகத்திலயும் வெக்கபட்டு காயம்!” “கதையைக்கேட்டு ஆ1வென்று அனுதாப ஆச்சரியத்தில் வாயைத்திறந்தார் அவர்
இவங்கட உம்மா எங்க? ஏன் வரஇல்ல" அந்தக் கதைய ஏன் கேக்குறீங்க, அவ வயல் வேலசெய்ய ஈச்சிலம்பத்தைக்கு ப்ோனவ, அங்கதான் எங்கட வயல் இருக்கு. இப்ப சரியான மழைதானே, வெள்ளத்துக்க அகப்பட்டு வரமுடியாம இருக்கிறா. நான் வீட்டஇருந்து கிண்ணியா ஆசுபத்திரிக்கு கொண்டு போனனான். அங்க சுகப்படுத்த ஏலாதெண்டு அம்புலன்சுல எங்கள இங்க அனுப்பிவைச்சாங்கள் காயப்பட்ட உடனே நான் பயந்துபோனன் கை துலைஞ்சுதாக்குமெண்டு! இங்க வந்த பிறகுதான்தெரிஞ்சுதுபயப்படத்தேவையில்ல எண்டு "அம்மாவுக்கு சேதி தெரியுமா?"
"அவவுக்கு செல்போனில தெரிஞ்சாக் களிட்ட சொல்லியிருக்கிறன், கேள்விப் பட்டு அழுது குழறியிருப்பா"
மகனைக் காணமுடியாமல் அந்தத்தாய் மனம் எப்படியெல்லாம் சஞ்சலப்பட்டு அவதிப்பட்டிருக்கும். மனக்கண்ணால் நினைத்துப்பார்த்து வருத்தப்பட்டார் இவர்! தன் கட்டிலில் படுத்துக்கிடந்து புத்தகத்தைக்
9

Page 12
கையிலெடுத்தார். ஆனால் புலன் அங்கு செல்லவில்லை. பையனின் தாயின் வேதனையான முகமே முன் தோன்றியது! இப்படியாக அன்றாடம் நடக்கும் வேதனை யான காட்சிகளைக் கண்டும் கேட்டும் பழக் கப்பட்டுப்போன அவர்களுக்கு, அன்றைய பொழுதும் போய், நாளையபொழுதும் புலர்ந்தது.
காலைச்சாப்பாட்டுக்காக சத்தம் போட்டு அழைத்தனர் அதற்கான தாதியர்! தட்டு களோடு வரிசையில் நின்று வேண்டி வந்தனர். நடக்க முடியாதவர்களுக்கு உதவியாளர்கள் பெற்றுக் கொடுத்தனர்! சிறுவனின் வாப்பாக் காரன் காலையுணவைப் பெற்று ஊட்டியும் விட்டார். அதிகாலையில் சில பெண்கள் காலைப்பலகாரம் கொண்டுவருவர். சிலர் அதையும் வேண்டுவர். அவர் பார்த்துக் கொண்டே இருந்தார், வாப்பாக்காரன் சாப் பிட்டதாகத் தெரியவில்லை! வளாகத்துள் சிற்றுண்டிச்சாலையுண்டு, புறத்தில் கடை களும் உண்டு. இவர் வெளிக்கிட்டதாகத்
தெரியவில்லை!
மணிவண்ணன் அவரை அழைத்தார். "நானா இங்க வாங்கோ” அவர் வந்து நின்றார். “நீங்க ஒண்டும் சாப்பிட இல்லையா?!” இல்லை என்று தலையை மட்டும் ஆட்டினார் பரிதாபமாக! "ஏன்...?”
“நான் பொடியனுக்கு திடீரெண்டு இப் படியானவுடனே, எனக்கு 'அப்செற்றா' கிற் றுது! ஒரு ஆயத்தமுமில்லாமல் பக்கற்றுக்க காசும் இல்லாமல் கிண்ணியா ஆசுபத்திரிக்கு கொண்டு
போனனான்.
அவங்கள்
10

""இது எல்லாம் தேவையில்லாத பிரச்சினையும்,
சண்டையும்! தமிழரும் நல்லம்; முஸ்லீம்களும்
நல்லம்; சிங்களவரும் நல்லம்தான்! எல்லோரும்
நல்ல மாதிரித்தான் பழகிவந்தாங்க, இந்த அரசியல்வாதிகள்தான் பதவியப்பிடிக்க, அரசியல்
ஆதாயத்துக்காக,
இனத்துவேசத்த மூட்டி, சண்டைய உண்டாக்கி, நாட்டையும் மக்களையும் சீரழிக்குறாங்க” இங்க அம்புலன்சில அனுப்பினாங்கள். அதாலதான்...! ”இவர் பையிலிருந்து ஐம்பதுரூபாயை எடுத்து நீட்டினார். அவர் வேண்டத்தயங்கினார். பசிக்களை முகத்தில் தெரிந்தது! இவர் வற்புறுத்தி காசை சட்டைப்பையில் திணித்தார்! அவர் வெளியே போய்வந்தார் பசியாறி!அந்த நானா மணிவண்ணனோடு ஐக்கியமாகிவிட்டார். அடிக்கடி அவரண்டை வந்து வீட்டுநிலைமை நாட்டுநிலைமை, வாழ்க்கை நிலைமை எல்
லாம் பகிர்ந்து கொள்வார்! - - திடீரென்று அந்த பச்சைக்குத்துக்காரன் மணிவண்ணணை அழைப்பது தெரிந்தது! இவர் நானாவைத்தான் அனுப்பினார். இவருக்கு கொடுக்குமாறு ஆரெஞ்சுப் பழங் களை கொடுத்துவிட்டிருந்தான்!
அவருக்கும் நண்பர்கள் அன்பர்கள் தாராளம்தான்! நன்றிக்கடன் தீர்ப்பதில் அவர் முனைப்புக்காட்டினார்! தீமைக்குத் தீமை செய்து பழிதீர்ப்பது போல் நன்மைக்கு நன்மை செய்வதும் இருக்கும்தானே! இதே பாணியை மற்றவர்களும் பின்பற்றலாயினர். அவரளவு கொடுப்பனவுகள் இல்லாவிட்டாலும், அன்பு ஆதரவான கதைபேச்சு சரளமானதாகியது! சிங்களவர், தமிழர், இஸ்லாமியர் என்ற பேதத்தைக் காணமுடியவில்லை! மனிதம் முக்கிய இடம் பெற்றுக்கொண்டிருந்தது
அங்கே! மணிவண்ணனுக்கு வீட்டி லிருந்தும் சாப்பாடு வரும். சொந்தக்காரர் அருகில் இருப்பதால் அங்கிருந்தும் வரும். ஆசுபத்திரிச் சாப்பாட்டை நானாவுக்கே கொடுத்துவிடுவார். பையனுக்கு சுவைப் பண்டங்களைக் கொடுப்பதில் கவன மெடுப்பார். இப்படியே நாட்கள் சென்று
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெப்ரவரி 2014 (165)

Page 13
கொண்டிருக்கையில்,
இரண்டு பேரை புதிதாக படுக்கையில் அனுமதித்திருந்தார்கள் அவர்கள் சாரமும் சட்டையும் அணிந்திருந்தார்கள். சிiஉட வந்தவர்கள் இராணுவத்தினர் சீருடையில் நின்றனர். கொஞ்சநேரம் இவர்களைக் கவனித்து உரையாடிவிட்டு போயினர். கட்டி லில் கிடந்த இருவரும் இராணுவத்தினர் என்பது உறுதியாயிற்று.
அதன் பிறகு ஒருவரும் அவர்கள் பக்கம் திரும்பியும் பார்ப்பதில்லை!
மணிவண்ணன் அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் நிலைகுத்தி வேறெங்கோ பார்த்துக் கொண்டிருப்பார்! முகம் விறைப்பாக இருக்கும்! ஆனால் இருவரும் இளமையானவர்கள். இராணுவத்தில் சேர்ந்து அதிக காலமிருக்காது!
மணிவண்ணன் சும்மா உலாத்தல் போடுவார், உலாவுகையில் ஒரு சுகத்தைக் காண்பவர். தேகாரோக்கியமும் கூட அப்படி உலாவருகையில் அந்த இராணுவத்தினரை உற்றுநோக்கிக் கொண்டிருப்பார்! அவர் இதழ்கள் புன்னகையைச் சிந்தியவாறிருக்கும்! இதே புன்சிரிப்பு மெள்ள மெள்ள அவர்கள் முகத்திலும் திகழலாயிற்று! மேலுமது பரந்த சிரிப்பானது எல்லாம் பூப்பந்தின் இயற்கைக் குணம்தான; எதிர்விளைவுகள் தான்!
இவருக்கு உடனடியாக நெருங்கிக் கதைக்க பெருவிருப்புத்தான். ஆனால் சிங்களம் பேசவராதே! வைத்தியமனை முன் சுவரில் பல வாசகங்கள் பொறிக்கப் பட்டுள்ளன. அவற்றில் ஒன்று, 'புன்னகையே சமாதானத்தின் முதல்படி, என்று! அவர் அனுபவத்தில் கண்டுணர்ந்து வருகிறார் இதை நானாவை அழைத்துக் கொண்டு அவ்வீரரண்டை அடைந்தார்! நானாவுக்கு நல்லாச்சிங்களம் பேசவரும் திருகோணமலை மூவினமக்களும் சமமாக கலந்துறையும் இடம். இங்கு பலபேருக்கு இருமொழியும் பேசவரும் இருவரும் புன்னகைத்தபடி, "சனிப்ப கோமத.?” என்று கேட்டுநின்றனர். "சனிப்ப கொந்தாய்” என்று சிரித்தனர். அவர்களுக்கும் தமிழ் தெரியாது. இஸ்லாமிய நண்பர்தான் மொழி பெயர்ப்பாளரானார்! “உங்களுக்கு காலிலே பெரிதாகக் கட்டுப் போட்டிருக்கு, என்ன நடந்தது?" "கண்ணி வெடி எடுக்கிற வேலதான் இப்ப நடக்குது. நாங்க மேற்பார்வைக்குத்தான்நிற்கிறநாங்கள். எண்டாலும் மிதிவெடி எங்கடகாலப் பதம்பார்த்துற்று! பாதுகாப்பான சப்பாத்துப்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெப்ரவரி 2014 (165)

போட்டபடியா அவ்வளவு பாதிக்கல! அதிர்வில காலிரண்டும் வீங்கிப்போச்சுது! காலக்கீழ வைச்சு நடக்க ஏலல்ல!” இவர்கள் ஆறுதல் வார்த்தைகள் கூறி வந்துவிட்டனர். மணிவண்ணணைத் தெரியாதா, வைப்பறை யில் இருந்தவற்றை எடுத்து பரிமாறி விட்டு வந்தார்! அவர்கள் அகமும்முகமும் மலர்ந்தது! ஒருவரின் கால்தான் மிகவும் பாதித்திருந்தது. அவர் காலை கீழே ஊன்றி நடக்க மிகவும் கஸ்டப்பட்டார்! அடிக்கடி சலம்விட கழிவறைபோக மிகவும் சிரமப்பட்டார்! ஒவ்வொரு கட்டிலையும் பிடித்து அரக்கிக் கொண்டிருந்தார்! அவருக்கு உதவி தேவைப் பட்டது! இராணுவத்தினருக்கு வைத்திய மனையில் அனுமதித்ததோடுசரி, அவர்கள் கடமை முடிந்துவிட்டது உற்றவர்கள் எங்கோ தூரத்தூரில்!
மணிவண்ணனும் நானாவும்தான் தோள் கொடுத்தனர்! அவர்கள் உதவி அடிக்கடி வேண்டப்பட்டது! இப்போது இந்த இராணுவவீரர்களின் முகம் எப்போதும் சிரித்திருந்தது! இஸ்லாமிய நண்பரின் உதவிதான் எல்லோருக்கும் அடிக்கடி வேண்டப்பட்டது! வெளிக்கள வேலைகள் வேண்டப்பட்டவற்றை வேண்டிக்கொடுக் கும் உதவிகள் பெரிதும் வேண்டப்பட்டது! அவரும் முகம் கோணாமல் முகமலர்ச்சியோடு எத்தனை தரமும் வெளியே நடந்துதிரிவார்! முக்கியமாக சுடுகலனில் சுடுநீர் பெற்றுக் கொடுப்பதுதான் இடம்பெறும். சேவை செய்வதில் ஒரு ஆன்மதிருப்தியைக் காண்கிறார் போலும்!
இரவு பத்துக்குமேல் இருக்கும் நேரம்! எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் மணி வண்ணனுக்கு தூக்கம் வரவில்லை. அவர் வழக்கமான தன் புத்தகத்தைப் பிடித்தபடி நேரத்தைப் பயன்படுத்திக் கொண் டிருந்தார். அப்போது இரண்டு தாதிகள் அங்கே வந்தனர். ஒரு இராணுவ வீரனைத்தான் இமைவெட்டாமல் பார்த்து நின்றனர்! மணிவண்ணனின் புலன் புத்தகத் தில் இல்லை! "இவருக்கு ஊசிபோட வேணும்; நல்லா நித்திரை அடிக்கிறார்; கிட்டப்போகப் பயமாயிருக்கு ஆமிக்காரன் என்ன செய்வானோ தெரியாது! என்னப்பா செய்வம்!?"அவர்கள் தயங்கி நின்றனர்!
மணிவண்ணனுக்கு விசயம் விளங்கி விட்டது. அவர் எழுந்து நின்றார், அவர் கண்கள் நானாவைத்தான் தேடின. அவரும் ஆளில்லாத கட்டிலில் கிடந்து நல்லநித்திரை!
11

Page 14
மணிவண்ணன் துணிவை வரவழைத்துக் கொண்டு அந்தக் கட்டிலண்டை போனார். “மாத்தயா. மாத்தயா நகின்ட. நகின்ட. என்று தட்டித்தட்டி எழுப்பினார். அவன் மிகுந்த சிரமப்பட்டு கண் விழித்தான். நல்ல நித்திரை கெட்ட சினம் முகத்தில் தெரிந்தது! என்றாலும் மணிவண்ணனின் முகத்தைக் கண்டதும் சிரிப்பாக மாறியது! அவர் ஊசிபோட தாதிகள் நிற்கிறார்கள் என்பதை சயிக்கினையால் நடித்துக் காட்டினார்!
அவன் எழுந்திருக்க முயற்சித்தான், அதற் குள் தாதிகள் வந்துவிட்டனர். "எழுந்திருக்கத் தேவையில்லை” என்று சிங்களத்தில் சொல்லி, மருந்தைப்பூசி ஊசியேற்றிவிட்டுச் சென் றனர்.
மணிவண்ணன் அந்த இடத்தை தடவிக் கொடுத்துவிட்டு, அவரைப் படுக்கவைத்து போர்த்துவிட்டு வந்தார் இந்தச் சம்பவத் திற்குப் பிறகு தாதிமாரும் அவரில் ஒரு தனிமரியாதை மணிவண்ணன் ஐயா என்றே அழைத்துக் கொண்டுவருவர்!
எல்லோர் நெஞ்சிலும் ஒரு கேள்வி..? இவர் நெடுகிலும் ஒரு புத்தகத்தை பிடித்து பார்த்தபடி இருக்கிறாரே, உலகமே அதில் இருப்பதைப்போல! அப்படி என்னதான் அதில் இருக்கிறது? இந்தக் கேள்வி பலருக்கும் இருந்தாலும், பெரிதும் பொருட்படுத்தவில்லை எவரும்! இரு இராணுவத்தினருக்கும் இதை அலட்சியப் படுத்த முடியவில்லை! கொஞ்சம் நடக் கக்கூடியவன் அவர் அருகில் வந்தான். "மொக்கத பொத்த பலன?" அவர் அந்தப் புத்தகத்தை அவர் கையில் வைத்தார். அதைப்பார்த்ததும் மிகுந்த சந்தோசப்பட்டு சிரித்தான் சிங்கள எழுத்துக்களும் அதில் தெரிந்தன. “தமிழ் மூலம் சிங்களம், சிங்களம் மூலம் தமிழ் படிக்கும் புத்தகம்தான் அது!” தான் அதைப்படித்து விட்டு தருவதாக வேண்டிச்சென்றான் இருவரும் அதைச்சத்தம் போட்டு படிப்பது கேட்டது! அவர்களுக்கும் தமிழ் படிக்க மிகுந்த ஆவல் என்று தெரிந்தது! இருவரும் மாறிமாறிப் படிப்பதை பார்த்து இரசித்துவிட்டு, மணிவண்ணன் நானாவை யும் அழைத்துக்கொண்டு அவர்களண்டை போனார்.அவர்கள் அந்தப் புத்தகத்திலிருக் கும் சொற்களை எல்லோரும் கேட்க பெரி தாக வாசித்துக் காட்டினர். பள்ளா - நாய், பூஸா - பூனை, மியா- எலி, அரக்க - மாடு, எலுவ - ஆடு, அக்வெயா- குதிரை, சிங்கேயாசிங்கம், கொட்டியா- ? . " இதுக்கு அர்த்
12

தம் சொல்லத் தேவையில்ல, எல்லோருக்கும் தெரியும்" என்று சொல்லிச் சிரித்தனர்! எல்லோரும் சேர்ந்து சிரித்தனர்!
அப்போது சந்தர்ப்பம் பார்த்து மணி வண்ணன் ஒரு கதை சொன்னார், "எனக்குச் சிங்களம் தெரியாததால எத்தினையோ தரம் ஆமிக்காரரிட்ட அடிவாங்கியிருக்கிறன். அதுக்குப்பிறகுதான் சிங்களம் படிக்கிற இந்தப்புத்தகம் வாங்கினனான்!” நானா மொழி பெயர்த்துச்சொன்னதும், அவர்கள் அனுதாபத்தோடு அவரை ஏறிட்டுப்பார்த்து விட்டு வெட்கித் தலை கவிழ்ந்தனர். இவரைப்போல எத்தனை நல்லவர்கள், அப்பாவிகள் அடிவாங்கியிருப்பார்கள்! அடிமட்டுமா வாங்கினார்கள் சிறிதுநேரம் மெளனம் நிலவியது. மெளனம் அதிகம் பேசும் "இப்பவும் அப்படி நடக்கிறதா?" ஒருவன் கேட்டான், "இல்ல இப்ப இல்ல, இது சண்டைக்காலத்திலதான் நடந்தது!” மீண்டும் மெளனம் மற்றவன்பேசினான், “இது எல்லாம் தேவையில்லாத பிரச்சினையும், சண்டையும்! தமிழரும் நல்லம் முஸ்லீம்களும் நல்லம்; சிங்களவரும் நல்லம்தான்! எல்லோரும் நல்ல மாதிரித்தான் பழகிவந்தாங்க, இந்த அரசியல்வாதிகள்தான் பதவியப்பிடிக்க, அரசியல் ஆதாயத்துக்காக, இனத்துவேசத்த மூட்டி, சண்டைய உண்டாக்கி, நாட்டையும் மக்களையும் சீரழிக்குறாங்க”
மற்றவன் சொன்னான், "நாங்கள் வறுமை யால வேல இல்லாததால தான் இதில சேர்ந்து அநியாயத்துக்குத்துணை போறம்!”
இதன் பிறகு மணிவண்ணனில் அவர்களுக்கு அனுதாபம் பிறந்திருக்க வேண் டும்! அன்பளிப்புகளும் உபசரிப்புகளும் பலமாகவே இருந்தன!
LUGU சந்தர்ப்பங்களில் எல்லோரும் ஒன்றுகூடி அரட்டையரங்கம் ஆரம்பமாகி விடும்!சிரிப்புக்கும் குதூகலத்துக்கும் குறைவே இல்லை! மணிவண்ணன் இடைக் கிடை பகிடிகள்விட்டு எல்லோரையும் குதூ கலிக்க வைப்பார்! ஒரு வயதானவர் படுத்துக்கிடந்தார். அங்கு அப்போது அவர் தான் வயதில் கூடியவர். கோணமலை என்று பெயர். அவர் எழும்பித்திரியமாட்டார். அனேகமாக படுத்துத்தான் கிடப்பார்.
தாதிகள் கோணமலை ஐயா என்று கூப் பிட்டுக்கொண்டு அவரண்டை போவர். இப்படி அடிக்கடி நடக்கும்! ஒருநாள், "கோணமலை ஐயா. கோணமலை ஐயா என்று கூப்பிட்டுக்கொண்டு வந்தனர்தாதிகள்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெப்ரவரி 2014 (165)

Page 15
அவர், " கோணமலைக்கு முன்னால் 'திரு'வப் போட்டால் என்னவரும்?” திருகோணமலை. என்று சொல்லி சிரித்தனர் அவர்கள்! அவர்கள் சிரிப்போடு எல்லோரும் கலந்தனர்!
பார்வையாளர் நேரத்தில் அன்பர்கள் இனசனம் அதையிதை கொடுக்கும். அன்று கூடக்கிடைத்தவர், எல்லோருக்கும் பரிமாறி மகிழ்வார்! இது விசயத்தில் மணிவண்ணன் எப்போதும் முதலிடம்தான்! புன்னகை மன் னனும் அவர்தான்! புன்னகையால் அன் பளிப்பால் இந்த இனிமைச் சூழ்நிலைக்கு அடித்தளமிட்டவரும் அவர்தான்! இப் படியாக நல்லுறவு துளிர்விட்டு வளர்ந்து வருகையில் - அதற்கும் சோதனை வர லாயிற்று!
திடீரென்று மருத்துவமனை பரபரப் பானது! எல்லோர் முகத்திலும் கலவரம்! ஊழியர்கள் அங்குமிங்கும் ஓடித்திரிந்தனர்!
புதிதாக காயக்காரரை கொண்டுவந்து போட்டவண்ணமிருந்தனர்! அதிகம்பேர் எரிகாயங்களும், வெட்டுக்காயங்களும்தான்! அவர்கள் வேதனை தாளாது முனகியும் கத்துவதாயுமிருந்தனர்! ..ஆ! அம்மா.... ஐயோ.. தாங்கேலாமல் இருக்கே... என்ர பரமேசா! கோணேசா!
அத்தனைபேரும் - தமிழர் என்று விளங்கியது! பரபரப்பாக ஓடித் திரிந்த தாதியரில் ஒருவரை மறித்து என்ன நடந்தது?' என்று கேட்டார் மணிவண்ணன். அவள் மிரண்டு கதைக்கப் பயந்தவளாய் ஏதோ சைகை செய்துகொண்டு அப்பால் போனாள்!
இதற்குள் நானா வெளியிலிருந்து வந்தார். அவரும் பரபரப்பாகவே காணப்பட்டார்! மணிவண்ணனுக்குத்தான் - முதலில் விச யத்தைச் சொன்னார்! எல்லோருக்கும் விளங்கிவிட்டது! நானா சொன்ன செய்தி இதுதான், மணிக்கூட்டு கோபுரத்துசந்தியில் புதிதாக பெரிய புத்தர்சிலை அமைத் திருந்தார்கள். பலரின் எதிர்ப்பும் இருந்தே வந்தது! யாரோ இரவு வேளையில் கைக் குண்டை எறிந்திருக்கிறார்கள்!..... அதன் பிரதிபலிப்பாக அதன் அண்டையில் இருந்த கடைகளுக்கு தீவைத்திருக்கிறார்கள்! வாள் வெட்டும் நடந்திருக்கிறது! மீண்டும் இனக் கலவரம் மூளும்போலுள்ளது!
நானாவும் - சேதி சொல்லிவிட்டு ஒருமூலையில் போயிருந்து யோசித்துக் கொண்டிருந்தார்! ஊழியர்கள் ஓடித்திரிந் தார்கள். ஆனால் வழக்கமான கலகலப்பு; சிரிப்பொலி; பேச்சொலி எல்லாம் காணா ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெப்ரவரி 2014 (165)

மலே போய்விட்டன! எங்கும் நிசப்தமே நிலவியது! அது பயங்கர அமைதியாக இருந்தது! ஏதோ பயங்கரம் நிகழ்வதற்கு முன்னறிவிப்புப் போலுமிருந்தது! எல் லோர் இதயமும் பெரிதாக மேளம் தட்டிக்கொண்டிருந்தது! மூளை தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்தது!
சிங்களத்தாதிகளும் தமிழ்த்தாதிகளும் வேறுபட்டு நின்றனர்! தனித்தனியே கூட்டுச் சேர்ந்து குசுகுசுத்தனர்! இந்தத் திடீர் சூழ்நிலை மாற்றம் மணிவண்ணனுக்கு தலையில் இடித்துக் கொண்டே இருந்தது! இந்நிலை நீடித்துக்கொண்டிருப்பதை அவரால் சகிக்கவே முடியவில்லை!
படுக்கையை விட்டெழுந்து சுற்றிவர கண்களை மேயவிட்டார். - எல்லோரும் கிடந்தபடி எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்! சிலர் கண்களை மூடி நித்திரைபோல் பாசாங்கு காட்டினர்!
- புதிதாக வந்த காயக்காரர் வேதனைக்குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர்! இப்போது அவர்களிடம் குசலம் விசாரிக்கச் சென்றால், அவர்கள் வேதனையை - ஆத்திரத்தைக் கொட்டுவர்! அது நிலைமையை மேலும் மோசமாக்கிவிடும்!
பச்சை குத்துக்காரன், - நெஞ்சில் இருக்கும் புத்தர் சித்திரத்தில் அறைந்து அறைந்து ஏதோ புலம்பிப் புலம்பி ஆத்திரத்தை வெளிப்படுத்திக் கொண் டிருந்தான்! அவனையும் இப்போதைக்கு தவிர்க்கவேண்டும்! நானாவைப் பார்த் தார், குறிப்புணர்ந்து அவர் அருகில் வந்தார். அவரோடு இராணுவத்தினர் கட்டிலில் இருந்து ஒவ்வொரு கட்டிலாகச் சென்று பிஸ்கற்றுகளையும், --- ஆரெஞ்சுகளையும் மலர்ந்த முகத்தோடு பரிமாறி மார்புகளையும் வருடிக் கொடுத்துக்கொண்டே வந்தார்! அப்போது அவர் சொன்ன சமாதானச் செய்தி இது, " தோழர்களே! நாம் என்றும் அன்பான நண்பர்களாகவே இருப்போம்! சுமாதானமாய் வாழ்வோம்! மோடை யாக்களால் (மடையர்களால்) அரசியல் இலாபமீட்டுபவர்களால் ஏற்படும் . அசம் பாவிதங்களால் நீங்கள் உங்கள் மனதைப் பழுதாக்கிக் கொள்ளாதீர்கள்! - அன்பே சமாதானம்! அதுவே கடவுளின் இல்லம்!”
அந்தக்களம் பழையபடி களைகட்டியது!
0 0 0

Page 16
இலங்கைத் தமிழ்கி) நவீனப் போக்குகள்)
01.
பொதுவாக இன்று இலக்கியத்தின் எந்த வடிவமும் உலக இலக்கியங்களுடன் இணைந்து மரபு மாற்றம் பெற்றுள்ள தையும், பெறுவதையும் நாமறிகிறோம். தமிழ்க்கவிதையின் போக்கும் இந்த வீதியில் நடைபோட்டு மாற்றம் பெற்றிருப்பதையும் மேலோட்டமாக மட்டுமல்ல ஆழமாகவும் ஆய்ந்துணர
முடியும். 02. தமிழில் சங்க இலக்கியத்திலிருந்து
கவி வடிவம் எவ்விதம் துலங்கியதென் பதையும் மரபு ரீதியாகப் பா படிவங்கள் எப்படி மாறியதென்பதையும் பொருள் வேறுபட்டு வளர்ந்த முறையையும்
வரலாறு நமக்கு அறிவிக்கின்றது. 02.1 ஈழத்துப் பூதந்தேவனாரின் பாடல்
கள் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றபோதும் இவர் ஈழத்தவர்தானா? எனும் சந்தேகத்திற்கு இன்னும் தெளிவே யில்லை. இவரை - அகற்றிவிட்டுப் பார்த்தால் இலங்கை இலக்கியத் தொன்மை சோதிட, வைத்தியப் பாடல் களையே மையமாகப் பொருளாகப் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்றைய இலங்கைக் கவிதை வளர்ச்சி சோதிட வைத்தியப் பொருளில் அல்ல
என்பது புலனாகும். 03. தமிழ்க்கவிதைகளின் போக்கு பொருள்
மாறிய போதும் யாப்பியல் அடக்கத் துடன் வளர்ந்து வந்ததை மகாகவி பாரதி வரை அறிகின்றோம். மகாகவி பாரதியும் யாப்பு - அணியிலிருந்தும் முற்றாக மாறியதாகத் தெரியவில்லை. ஆனால், பாரதியின் கவிதைகள் அநேகம் இராக தாள அமைப்புடன் பாடப் பட்டிருப்பதைக் காணலாம். இவர் உண்மையில் இராக தாளம் தவறாமல் இக்கவிதைகளை யாத்திருக்கின்றாரா? என்பதை உரசிப் பார்க்க இலங்கையில்
14

கானான் )
കമിളിയി
கவிஞர் ஏ. இக்பால்
எம்.எம்.எம்.மஹ்றூப் இராக தாளம்
படித்து நிரூபித்திருக்கிறார். 03.1 ஒரு விடயத்தை விளக்குவதற்கெனக்
கையாளும் வசன நடையை, உணர்ந்து ஊகித்துப் பன்முகக் கருத்துப் பெறுமளவில் கவிதைக்குப் பயன் படுத்திய வல்லமை பாரதிக்குண்டு. தமிழ்க்கவிதைப் போக்கை உலகக் கவிதைப் போக்குடன் இணைத்து நின்றதிலிருந்து, தமிழ்க் கவிதைப் போக்கே மாறுபடுவதையும் உலகக் கவிதை வரலாறு எமக்கு எடுத்துக் கூறும். பாரதியின் வசன நடை, கவிதையின் இறுக்கம், அழுத்தமான தொனி என்ப வற்றை இணைத்து நிற்பதைக் காணச் செய்யும், பாரதி நவீனக் கவிதைப் போக்கின் ஆரம்பப் புள்ளி என்பதை
யாரும் மறுத்திடமாட்டார். 04. பாரதியின் இந்தக் கவிதைப்போக்கை
ஆதரித்தவர்களும், எதிர்த்தவர்களும், மெளனம் சாதித்தவர்களும் கவிஞர்களில் அதிகமானவர்கள் என்பதையும் அக்கால
வாதபிரதி வாதங்களின் வரலாறு கூறும். 04.1 இத்தொடச்சியில் தமிழ் நாட்டிலும்,
இலங்கையிலும் நவீனத்தமிழ்க் கவிதைப் போக்கில் - எவ்விதப்பாதிப்புமற்று பழைய கவிதை மரபின் தூவானமாகவே அநேக கவிஞர்கள் இன்று வரைக் கவிதை
படைக்கின்றனர். 05.
சி.சு.செல்லப்பாவின் "எழுத்து” புதிய கவிதை மரபொன்றை மேல்நாட் டிலக்கியத் தாக்கத்தால் ஏற்படுத்தியது. அது வசன கவிதை முயற்சிக்குக் காலாகியது. உண்மையில் வசன கவிதைப் பரம்பரை ஒன்றை “எழுத்து” தோற்றுவித்ததால், தமிழ்க் கவிதைப் போக்கு வேறொரு திசையில் வீறு நடை போட்டதை நாமறிவோம். இக்கவிதை கள் யாவும் அகத்தூண்டலை நம்பியே இயங்கி நின்றன. இக்கவிதைகள் ஜன
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெப்ரவரி 2014 (165)

Page 17
07.
ரஞ்சகமாகாமல் போனதற்கு இதுவே
காரணமாகும். 06. வசன கவிதையை இலேசாக்கித்
தன்னுணர்ச்சிப் பாடல்களாக வானம் பாடிகள் பாடி மகிழ்ந்தனர். அகத்தூண்டலையும் தன்னுணர்ச்சியை யும் தன்மனிதப் போராட்டத்தையும் பொருளாகக் கொண்டு புதுக்கவிதைகள் எழுந்ததால், மனிதன், சமூகம், வாழ்க்கை என்பன மறக்கப்படுகின்றதே எனும் உணர்வு மேலெழுந்தது. இப்படியான புதுக்கவிதைப் போக்கை க.சைலாசபதி, வானமாமலை போன்ற முற்போக்
காளர்கள் எதிர்த்தனர். 07.1 இவர்களின் எதிர்ப்பின் பயன், புதுக்
கவிதை, சமுதாயம், இயக்கம், உழைப்பு பற்றிய பொருள்களில் பாட எத்தனித்தது. அதன்பின், க.கைலாசபதி, வானமாமலை போன்ற முற்போக்காளர்கள் புதுக்
கவிதை உருவத்தை ஆதரித்தனர். 07.2 தேசிய இயக்க வழியில் “ஸ்ரீ” எதிர்ப்புப்
போராட்டத்தை "சுதந்திரன் பத்திரிகை” ஆரம்பித்த காலத்தில் இ.முருகையன், அ.ந.கந்தசாமி போன்றவர்களே மக் களுக்கு விளங்கும் மொழியில் கவிதை படித்தனர். அ.ந.கந்தசாமி "கடவுள் என் சோர நாயகன்”, “மீனினத்து வீதியெல்லாம்..” எனத் தொடங்கு கவிதைகள் கொடிகட்டிப் பறந்தன. புதுவை ரத்தினம், சாருமதி போன்றோர்
இந்த வழியில் நின்றிலங்கினர். 07.2.1 "இ. முருகையன், தான்தோன்றிக்
கவிராயர், மகாகவி, கந்தவனம், இ. நாகராஜன், கே.சி.எஸ். அருணாசலம், பாட்டாளிப்பாவலன் இரத்தின சிங்கம், நீலாவணன், பசுபதி, ஏ. இக்பால், பண்ணாமத்துக்கவிராயர், புதுவை ரத்தினம், இன்னும் பலர் இன்றைய பிரச்சினைகளை விளங்க வைக்கும் கவிதைப் போக்கைக் கைப் பற்றினர்” என அனந்த சுப்பிரமணியன் 06.11.1993 இல் வீரகேசரியில் எழுதிய ஒரு கட்டுரையில்
குறிப்பிடுகின்றார். 08. புதுமையான புனைவுதான் மற்றவர்
களிடமிருந்து மாறுபட்ட இலக் கியத்தன்மையை வெளிப்படுத்தும். இவ்விதச் சிந்தனையைக் கவிதைப் போக்காகத் திருப்பிவிட்ட பெருமையை
1969களில் வெளியான எம்.ஏ.நுஃமானின் ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெப்ரவரி 2014 (165)

"கவிஞன்” ஏடுதான் ஏற்படுத்தியது. 08.1 "இன்றைய தமிழ்க்கவிதை பல புதிய
பரிணாமங்களுடன் வளர்ச்சியடைந்து வருவதை - நம்மால் அவதானிக்க முடிகின்றது!” என்னும் ஆசிரியத் தலைப்புடன் இவ்வேடு ஆரம்ப மாகின்றது. அக்கவிதை ஏட்டில் கடை சிப் பக்கத்தில் எழுதப்பட்டுள்ள நீண்ட விளக்கக் கட்டுரையின் தலைப்பு! "பேச்சு மொழியும் கவிதையும்” என்ப தாகும். பாரதி வசனநடை பற்றி ஒரு சந்தர்ப்பத்தில் எழுதிய கூற்றோடு தொடர்கின்றது.
"கூடியவரை பேசுவதுபோல் எழுதுவது தான் உத்தமம் என்பது எனது கட்சி. எந்த விசயம் எழுதினாலும் சரி, ஒரு கதை அல்லது தர்க்கம், ஒரு சாஸ்திரம், பத்திரிகை விசயம், என்பதை எழுதினாலும் வார்த்தை சொல்லுகிற மாதிரியே அமைந்து விட்டால் நல்லது!” இந்தத் தெளிவுடன் 'கவிஞன்' வெளி வந்தபின், கவிதைப் போக்கில் ஏற்பட்ட மாற்றத்தை சண்முகம் சிவலிங்கம், எம்.ஏ.
நுஃமானின் கவிதைகள் கூறிநின்றன. 08.1.1 சாதாரணமாக அனுபவித்தறிந்த
போது, ஏற்பட்ட அசாதாரணபடைப்புக் கள் எம்.ஏ.நுஃமானின் “கவிஞன்” கவிதை ஏட்டுக்குப்பின்தான் இலங்கையில் எழுந்
தன எனலாம். 08.1.2 வளம் நிறைந்த புலமைப் போக்கை
வலிந்து மொழியில் சேர்க்காது. இயல்பாகப் பேசும் மொழியில் அப் புலமைப்போக்கு கவிதையாக எழத் தொடங்கியது. படைப்பாற்றலுக்கு உதவும் சூழல், காரணிகள் எளிதாகக் கவிதைகளை வெளியாக்கி நின்றன. இந்த போக்கு மரபு ரீதியான இலக் கணத்தை ஏற்காததினால் எதிர்ப்பு களும் கிளம்பின. புலவர் ஜின்னா ஷரிபுத்தீன் போன்றோர் "மரபுவழி தொடர்வோம்” எனப் பிரசாரம் செய்தபோதும், புதிய போக்கின் தீவிர வளர்ச்சி தடைபட வில்லை. “இலகுதமிழ் கொண்டுகவி மரபுமாறா தெழுதிவழி காட்டியவர் இன்றிருந்தால்.....” எனத் தொடர்வதிலிருந்து மரபுவழியும் இலகு தமிழை ஆதரிப்பதை உணரலாம். இலகு தமிழில் பேசுவதுபோல் எழுதும்
15
09.

Page 18
10.
11.
12.
12.1
கவிதைப் போக்கு மிகவும் விசாலமாகப் பரவியது. உலகத்தில் நடந்த பல போராட்டங்களின் பின்விளைவுகள் பேசுவதுபோல் எழு தும் கவிதை மரபுக்கு உறுதுணை செய்ததெனலாம். 1917 இல் நடந்த ருஷ்யப் புரட்சி, அதனால் வெளிவந்த "விளாடிமிர் மாயாகோஸ்க்கி" யின் கவிதைகளின் தாக்கம், ஜப்பானிய ஹிரோசிமா அணுகுண்டுத் தாக்கத்திற்கு முன், பின் எழுந்த கவிதைகளின் தாக்கம், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் விளைந்த கவிதைகளின், தாக்கம், பாலஸ்தீனப் போராட்டத்தில் விளைந்த கவிதைகளின் தாக்கம் யாவும் தமிழ்க் கவிதை உலகையும் தாக்கி நின்றன. போர்மீது போர் தொடுத்த கவிதைகளின் போக்கு இலங்கைத் தமிழ்க் கவிதையின் போக்கையும் மாற்றி நின்றதெனலாம். இப்போக்குகளின் இயல்புக்குள்ளே தோய்ந்த உருதுக்கவிஞர் 'பெய்ஸ் அஹமத் பெய்ஸ்’ கவிதைகள் தமிழ்க் கவிஞர்கள் அநேகரைத் தொட்டு நின்றன.
*அதனால் என்ன? எழுது கோலும் எழுதும் தாளும் என்னிடமிருந்து பறிக்கப்படலாம் ஆனால் அதனால் என்ன?
என் இதயத்தின் குருதியில்
எனது விரல்களைத் தோய்த் தெருப்பேன்
அதனால் என்ன?
எனது உதடுகளை
தைத்து மூடலாம்
ஆனால் அதனால் என்ன?
என்னைக் கட்டிய சங்கிலியின்
ஒவ்வொரு கண்ணும் ஒரு நாக்காகும்” இந்த வழியில் இலங்கையில் ஜெயபாலன், சண்முகம் சிவலிங்கம், சேரன், எம்.ஏ. நுஃமான், ரஷ்மி, இளைய அப்துல்லாஹற், திருமாளவன், ஷகீப், விஜயேந்திரன், சோலைக்கிளி, அஷ்வகோஸ், என். ஆத்மா, சிவசேகரன், வில்வரெத்தினம், வேதாந்தி, மு. பொன்னம்பலம் போன்று இன்னும் பலர் இதே போக்கில் எழுதும் கவிஞர்களாகப் புதிய போக்கில் செல்கின்றனர். இலங்கையில் 1. போராட்டப் பிரதேசங் கள் 2. வெளியேயுள்ள பிரதேசங்கள், 3.
16

புலம்பெயர்ந்தோர் வாழும் பிரதேசங்கள் யாவும் புதுமையான, சுதந்திரமான, இயல்பான கவிதைகளைத் தமிழில் கொட்டின. இந்தக் கவிதைக் குவியலைத் தெரிந்து கொள்வதினால், இன்றைய கவிதைப்போக்கை கணக்கெடுக்கலாம். இந்தப் புதிய போக்கினையுடைய கவிதைக் குவியலுக்குரியவர்கள் நான் முன்கூறிய கவிஞர்கள்தான் என்பதை அடையாளம் கூறுதல் அவசியம்.
12.1.1 இன்னுமொரு முக்கிய விஷ
யம் இலங்கைக் கவிதைப் போக்கில் புதுமையையும் சுதந்திரப் பார்வையை யும் செலுத்தியோர் பலருள் இ. முருகையன், இ. சிவானந்தன், சிவ சேகரன், வில்வரெத்தினம், சேரன், சன்முகசிவலிங்கம், ரஷ்மி, ଜTବର୍ତt. ஆத்மா, ஷகீப், இளைய அப்துல்லாஹற். அஷ்வக்கோஸ் வேதாந்தி போன்றோர் விஞ்ஞானக் கல்வித்தேர்ச்சி பெற்றோர். இவர்களது கவிதைப்போக்கு முற்றிலும் புதுமையும் வளமுமுள்ள அறிவுசார்ந்த போக்கென்பது எனதட்பிப்பிராயம்.
12.2 இன்றையத் தமிழ்க் கவிதைகளில் வாழ்
13.
வின் தரிசனங்கள், வாழ்வின் இயல்புகள், கதை நாடகங்கள், உவமை உருவகங்களை உதறிக் கொள்ளும் தன்மைகள், தன்னை மறைத்து நம்மைத் திகைக்கவைக்கும் அதிர்ச்சியும், ஒன்றைச்சொல்லி இன் னொன்றை உணர்த்தும் தன்மைகள், ஒருங்கிணைந்து ஒன்றாய்க் காட்சிதரும் புலப்பாடுகள், பேசாதன பேசும் பான் மைகள் யாவற்றையும் சொற்களைக் கடந்து செல்லும் இயல்பையுடைய போக்கைக் காணலாம்.
போராட்டப் பிரதேசங்களின் தலைமை வன்னிக்கேயுரியது. வன்னியில் வெளி யான "ஆணைஇறவு” கவிதை நூல், போராட்டத்தின் கெடுபிடியையும் மக்களின் அவஸ்தையையும் எடுத்துக் காட்டுகின்றது. போராட்டம் பற்றிய கவிதைகள் யாவற்றையும் கவிஞர்கள் பார்வையாளர்களாக நின்றும் பங்கு
கொள்ளும் மனப்பான்மையுடனும் எழுதியிருக்கின்றனர். மொழியை வீசியெறிந்து சுதந்திரமாகப்பேசும்
கவிதைகள் இவை. இதுதான், இன் றையத் தமிழ்க்கவிதையின் போக்கு. வெளியேயுள்ள போர்ப்பிரதேசமற்ற
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெப்ரவரி 2014 (165)

Page 19
13.1
பகுதியின் கவிதைகள் முற்றிலும் பார்வையாளர்களாக நின்று எழுதப் பட்ட வைதாம். புலம்பெயர்ந்தோர் அநுபவம், சட்டியில் இருந்து அடுப் பில் விழாமல் அடுப்புக் கல்லில் விழுந்த கதைபோன்றது. இந்தச் சட்டி, அடுப்பு, அடுப்புக்கல் மூன்றின் விவரணமும் இவர்களின் கவிதைகளில் தொனிக்கின்றன.
இன்றையக் கவிதைப் போக்கைச் சிற்றேடுகளும், வீடியோ, ஒடியோ நாடாக்களும், கவிதைத்தொகுதிகளுமே புட்டுக்காட்டுகின்றன. சிற்றேடுகள் கலைசார்ந்த அணுகுமுறைகளையும், இலக்கிய அர்ப்பணிப்புக்களான செயற் பாடுகளையும், உலக இலக்கியத்தைப் புரியச் செய்வதையும், உயர்ந்த இலக்கியத்தை உருவாக்குவதையும் பிரக்ஞை பூர்வமாத் தளமமைத்துச் செயல்படுகின்றன.
13.1.1 தேசிய ஊடகங்கள் எனக்கூறப்படும்
தேசியப்பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சிகள் இன்றைய கவி தைப் போக்கை முற்றிலும் அறியாக் குருட்டுத் தன்மையுடன்தான் நிற்கின் றன. இவ்வூடகங்களை மீறி, இன்றைய கவிதைப் போக்கு தொலை தூரம்வரை பரந்துவிரிந்து விட்டது. ஊடகங்கள் பாமர மட்டத்தை உயர்த்தும் இலக் கியப் பணியினைச் செய்வதேயில்லை.
13.1.2 இன்றைய கவிதைப்போக்கின் எடு
14.
பிடிதான் பெண்ணியவாதம் சார்ந்த கவிதைகளெனலாம். இதுவும் ஒரு போராட்டந்தான். ஆழியாள், சங்கரி எனும் சித்திரலேகா, சுல்பிகா, ஒளவை போன்றோர் மிகச் சுதந்திரமாக வீச்சும், பேச்சும் நிறைந்த தமிழில் கவிதைத்தொகுதிகளை வெளியிட் டுள்ளனர். இவர்களது கவிதைகள் ஏதோ ஒரு போர்ச்சூழலில் நின்று பாடுவது போல் தோன்றுகின்றன. இன்றைய கவிதைப் போக்கு இவ்விதந்தான் செல் வதையும் நாமுணரலாம். கீழ்க்கண்ட கவிதைகளை உதாரணங் களாகக் கொள்ளலாம். 1.சு. வில்லரெத்தினத்தின் சூரிய நமஸ்காரம் 2.திருமாவளவனின் புதிர் 3.சி. சிவசேகரத்தின் யாதும் ஊரே 4.சேரனின் சிம்மாசனமும் சவப்பெட்டியும்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மெய்ரவரி 2014 (165)

5.வ.ஐ.ச. ஜெயபாலனின் எட்டாவது பேய் 6.எம்.ஏ. நுஃமானின் புத்தரின் படுகொலை 7.என் ஆத்மாவின் ஆலைகள் 8.ஏ.இக்பாலின் போதும் என்ற மனமே போதும் 9.சுல்பிகாவின் பெண் 10.ஒளவையின் வீடு திரும்பிய எண்மகன் 1.சோலைக்கிளியின் எனது உள்ளங்கையில் 12.சண்முகம் சிவலிங்கத்தின் அவள் நினைவு 13."வேதாந்தியின்” வேதாந்த ரகஸ்யம் 14.*அஸ்வகோஸ்” எறின் அலைகள்
இன்றைய தமிழ்க் கவிதைப்போக்கிற்கு உதாரணங்களாகக் கூறலாம். இவ்விதம் எத்தனையோ கவிதைகளையும் கவிஞர் களையும் தரமுடியும். விரிவஞ்சி விட வேண்டியுள்ளது. 15. நவீனகால நோக்கில் ஆற்றல்மிக்க குறுகளை ஆக்கக் கூறுகளாக்கி வாழ் வுக்குப் பொருத்தமாக்கும் உயர் கவிதைகளை, தமிழ் மொழியை வாலாயமாக்கியவர்கள் சுதந்திரமாகவே ஆக்கியுள்ளனர். ஆனால் மொழிவளச் செல்வாக்கினால் ஒரு கவிதை உருவத்தை உயர் நிலைக்கு ஆக்குவதில் மொழி அதிகமறிந்தோர் தன்னையும் மறந்து செய்துவிடுவர். அப்படிச் செய்தாலும் சுதந்திரக் கவிதைப்போக்கு அதில் தொனிக்கும். இந்தப்போக்கு இன்றைய தமிழ்க் கவிதையில் நிலைத்து நிற்பதை நாம் மறந்து விடக்கூடாது. 15.1 எங்கள் கவிதையில் எந்த வடிவமுமில்லை என்று கூறுவோரது கவிதைகளில் ஒரு வடிவம் இருப்பதைத் தானாகவே மறந்து விடுகின்றார்கள். ஒரு மிகப்ழைய இலக்கணவாதி தற்காலக்கவிதை யாவற் றிலும் இலக்கணமுண்டு எனக் கூறியதை நான் கேட்டிருக்கிறேன். 16. யார் எதைத்தான் கூறியபோதும், இன்றையத் தமிழ்க்கவிதையின் போக்கு புதுமை நிறைந்ததே. சுதந்திரமான பார் வையுடையதே. அநுபவத்தின் கீறுகளும் அதிர்ச்சியான இயற்கைப் புனைவுகளும் அடங்கியவையாகப் பாதை புதுக்கிப் பரந்து செல்கின்றதெனலாம். இது வளர்ச்சியின் கூறுதான். காலந்தான் இதைக்கட்டிக் காத்துச்சொல்லும்.
O O O
17

Page 20
கிழக்கிலங்கையின் மூத்த படைப்பாளி கலாபூஷ னம் அன்புமணி இரா. நாகலிங்கம் சென்ற மாதத்தில் தனது 79 ஆவது வயதில் அமரரா னார் என்ற செய்தி இலக்கிய உலகில் Y பெரும் சோகத்தை எற்படுத்தியுள்ளது. இவர்
சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை, நாடகம் முதலிய துறைகளில் பல ஆக்கங்களைத் தந்தவர். அன்பு வெளியீடு பதிப்பகத்தின் மூலம் பல முக்கிய நூல்களை வெளிக் கொணர்ந்தவர். 1960களில் மட்டக்களப்பு தமிழ் எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கி அதன் செயலாளராகவும் பிற்பட்ட காலத்தில் அதன் தலைவராகவும் பணிபுரிந்து பல இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபட்டவர். "மலர் என்ற இலக்கிய சஞ்சிகையை 1970 முதன்97 வரை நடத்தியவர். 10 இதழ்கள் வெளிவந்த இந்த மலர் இதழ்கள் பற்றிய நினைவுகளை ஞானம் 67, 68, 69 ஆவது இதழ்களில் எழுதியுள்ளார். "ஞானம் இவரை அட்டைப்பட அதிதியாகத் தனது 69 ஆவது இதழில் கெளரவித்தது. இவரது முதலாவது சிறுகதை "கிராமபோன் காதல் 3-3-1957 கல்கி இதழில் வெளியாகியது. அன்று முதல் அவர் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை
எழுதியுள்ளார். அவர் அமராவதற்குச் சிலநாட் களுக்கு முன்னர் ஞானம் சஞ்சிகைக்கென எழுதிய சொந்த நாடு" என்ற சிறுகதையை இங்கு பிரசுரித்து அண்ணாருக்கு அஞ்சலி செலுத்துகிறோம். இக்கதையே அவர் எழுதிய கடைசிச் சிறுகதையாகும்.
 

5 Gill Dalf 7. நாகவிங்கர்
தம்பித்துரை காலையிலிருந்து மிகவும் பர பரப்பாக இருந்தார். மகன் லண்டனிலிருந்து குடும்பத்துடன் வருகிறான். தனிவேன்பிடித்து கட்டுநாயகா விமான நிலையத்துக்குச் சென்று அவர்களை ஏற்றி வரவேண்டும். விமானம் மாலை 6 மணிக்கு வரும். குடும்பத்தவரை அவசரப்படுத்திக்கொண்டே அவரும் அவசர அவசரமாக வெளிக்கிட்டார்.
வாசலில் வேன் வந்து நின்றது. தம்பித்துரை, மனைவி மங்களம், மகள் மஞ்சுளா, மகன் ஜீவகன் அனைவரும் வேனில் ஏறினர். வேன் புறப்பட்டது.
நல்லவேளை விமானம் வருமுன்பே அவர்கள் விமான நிலையத்துக்குச் சென்று விட்டனர். சுமார் 7 மணி அளவில் மகன் கிருபாகரன் விமான நிலையத்திலிருந்து வெளிப்பட்டான். அவர்களையும் மூட்டை முடிச்சுக்களையும் வேனில் ஏற்றியதும் வேன் மட்டக்களப்பை நோக்கிப் புறப்பட்டது.
இரவு 10 மணிக்கு சாப்பாட்டுக் கடையில் இராப் போசனத்தை முடித்துக்கொண்டனர்.
அதிகாலை 4 மணிக்கு வேன் ஆரை யம்பதியை அடைந்தது. அந்த நேரத்தி லும் அவர்களை வரவேற்க உறவினர் காத்திருந்தனர்.
மறுநாட்காலை ஊரெங்கும் செய்தி பரவிவிட்டது. கிருபாகரனைச் சந்திக்க உற வினர்களும் நண்பர்களும் வந்தனர். ஒரு வாறு காலை 10 மணியளவில் லீவாகி காலை சாப்பாட்டை முடித்தனர். மத்தியானச் சாப் பாட்டின் பின் உறவினர்களுக்குக் கொடுக்க வேண்டிய பொட்டலங்களை கிருபாகரன் வெளியே எடுத்தான். எல்லாம் விலாவாரியாக வைக்கப்பட்டன. பின்னேரம் 5 மணி அளவில் அவர்களது மாமனார் துரைசாமி அங்கே வந்தார்.
வழக்கமான குசலம் விசாரிப்பு நடை பெற்றது. கிருபாகரன் அவருக்கு ஒரு பெரிய பார்சலை அன்பளிப்பாகக் கொடுத்தான்.
“எப்பிடித் தம்பி லண்டன் வாழ்க்கை?" "பரவாயில்லை மாமா ஒரேகுளிர், அவ் வளவுதான்."
"நம்ம நாட்டவர்கள் நிறையப்பேர்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெப்ரவரி 2014 (165)

Page 21
இப்போது வெளிநாடு செல்கிறார்கள். ஏஜென்டுகளும் லட்சக்கணக்கில் வாரிக் கொட்டுகிறார்கள். சிலர் சொந்த நாட்டை மறந்து தாம் சென்ற நாடுகளிலேயே செட்டில் ஆகிவிடுகிறார்கள்.”
"அது நல்லதுதானே மாமா. நமது கிராமத்தில் கிடந்து உழலாமல், வெளி நாடுகளில் வசதியாக வாழலாம் தானே?
"வாழ்க்கையில் நிம்மதி பெற வசதிகள் மட்டும் போதுமா தம்பி”
"ஏன் வேறு என்ன வேண்டும்?" “நமது கிராமியம், பண்பாடு, ஆல யங்கள், வணக்க முறைகள் எல்லாம் கைநழுவி போய்விடுகிறதே.
"இவற்றினால் என்ன பிரயோசனம் மாமா? நமது மக்கள் இவற்றில் ஏனோ தானோ என்றுதான் வாழ்கிறார்கள்.”
"அவர்கள் எப்படி வாழ்ந்தாலும், ஆணிவேர் இந்த மண்ணில் தானே இறங்கி யிருக்கிறது.”
"இதெல்லாம் வாழ்க்கைக்கு அவ்வளவு முக்கியமா மாமா, பொருளாதாரம் தானே முக்கியம்”
“பொருளாதாரம் கண்டிப்பாகத் தேவை தான். ஆனால் மக்களது வாழ்க்கைத் தடம் நமது மண்ணில் வேரூன்றியிருக்க வேண்டும் அல்லவா.
"அதுவும் முக்கியம்தான் மாமா அதற்காக வறுமையில் கிடந்து உழலவேண்டுமா ?”
இடையில் தேநீர் வந்தது. மருமகள் மாலினி கொண்டு வந்தாள், புன்சிரிப்புடன் பரிமாறினாள்.
“எப்படியம்மா குழந்தை குட்டிகள் எல்லாம் நன்றாக இருக்கின்றார்களா?”
“ஓம் மாமா செந்தில் ஆறாம் வகுப்புப் படிக்கின்றான், மகள் மல்லிகா நேர்சரிக்குப் போகிறாள்.”
"நம்முடைய வணக்கமுறைகளைளல்லாம் அவர்கள் பின்பற்றுகிறார்களா?”
“அதற்கெல்லாம் நேரம் ஏது ஐயா? அங்கே ஒரு முருகன் கோயில் இருக்கிறது. எப்போதாவது அந்தக் கோயிலுக்குப் போவோம்.”
"அப்போ தைப்பொங்கல், சித்திரை
வருஷம், தீபாவளி எல்லாம் கொண் டாடுவதில்லையா?”
“அதெல்லாம் அங்கே அவ்வளவு முக்கியமில்லை LD/TLDTT. கிறிஸ்துமஸ்
மட்டும்தான் முக்கியம் நாங்களும் அதைக் கொண்டாடுவோம்."
"ஐயோ, அப்படியென்றால் நமது
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மெய்ரவரி 2014 (165)

வாழ்க்கையின் தனித்துவத்தை இழந்துவிடு கிறோம்' என்றுதான் ஆகிறது."
தம்பித்துரை குறுக்கிட்டார். “மச்சான் உங்கள் கேள்விக் கணைகளை நிறுத்து. ஒவ்வொருத்தன் வெளிநாடு செல்லும் வாய்ப்புக் கிடைக்காதா என்று ஏங்கித்தவிக்கிறான். எனது மகன் லண்டனில் வேரூன்றி வசதியாக வாழ்கிறான். மாதாந்தம் எனக்குப் பணம் அனுப்புகிறான். கஷ்டம் இல்லாமல் சீவியம் போகிறது. இது போதாதா?”
“எத்தின காலத்துக்கு இப்படி நடக்கும். இப்போதே அவனது பிள்ளைகள் தமிழை மறந்து விட்டன. ஆங்கிலத்தில் பேசுகின்றன. அடுத்த தலைமுறை தமிழாக இருக்காது. ஆங்கிலமாகத்தான் இருக்கும்.”
"அதனாலென்ன நஷ்டம். நமது சொந்தக்காரர் ஆங்கிலலேயராக இருப்பது நமக்குப் பெருமைதானே?"
“என்ன பெருமை? நமது இனம் கடலில் கரைத்த புளியாகி விடுகிறதே"
"ஏன் அப்படிச் சொல்கிறாய்?" “வெளிநாடு சென்றவர்கள் எல்லோரும் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் வளர்க்கத் தானே செய்கிறார்கள்."
"நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் அதெல்லாம் அளந்து கொடுப்பதுதான்."
“சேச்சே! பெரிய அளவில் இது நடக்கிறது. கனடா தமிழ்ச்சங்கங்கம் தமிழறிஞர் விழாக் களைக் கொண்டாடுகிறது. ஏராளமான தமிழ் ஆய்வு நூல்கள் வெளியியாகின்றன. அங்கு மக்கள் நிறையத் தமிழ்ப்பணி புரிகிறார்கள்.”
"அதெல்லாம் இந்தத் தலைமுறையோடு சரி. அடுத்த தலைமுறை?"
“சேச்சே! கனடாவில் தமிழ் வானொலி இயங்குகிறது. அவுஸ்திரேலியாவில் தமிழ் வானொலி இயங்குகிறது. ஜேர்மனியில், ஆண்டுதோறும் கலை இலக்கிய விழா நடைபெறுகிறது. இலக்கியப் போட்டிகள் நடைபெறுகின்றன. ஆண்டுதோறும் இது நடக்கிறது.”
"எல்லாம் ஒரு சில வருஷங்கள்தான் நடக்கும்”
“இங்கேமட்டும் என்ன வாழுதாம், ஒவ்வொரு நகரிலும் தோன்றும் இலக்கிய மன்றங்கள் ஒருசில வருஷங்கள் இலக்கிய விழாவினை நடாத்திவிட்டு மறைந்து போகின்றனவே”
“அவை மறைந்து போவதில்லை மண்ணில் புதைந்து கிடக்கின்றன. மீண்டும் முளைக்கின்றன. அப்படித்தான் அர்த்தம்!”
19

Page 22
"எதற்கும் பொறுத்திருந்து பாருங்களேன். இச்சமயத்தில் ஒரு சில இளைஞர்கள் காரில் வந்து இறங்கினார்கள். திமுதிமு என்று உள்ளே நுழைந்தார்கள்.”
"வாங்க, வாங்க என்று அவர்களை அனை வரும் வரவேற்றனர். வந்த இளைஞர்கள் ஆசனங்களில் உட்கார்ந்தார்கள்.”
- “சொல்லுங்க. என்ன செய்தி?”
“கிருபாகரன் ஜயா, நாங்க இந்த ஊர் இளைஞர் மன்றத்தை சேர்ந்தவர்கள். எங்கள் ஊரின் பெருமையை லண்டன் வரை எடுத்துச் சென்ற உங்களுக்கு ஒரு பாராட்டு விழா எடுக்க விரும்புகிறோம். ஒரு தேதி கொடுத்தீர்கள் என்றால் நல்லது.”
“சேச்சே! இதற்கெல்லாம் பாராட்டு விழாவா? என்னை விட்டுவிடுங்கள்.”
"நீங்கள் மறுக்கக் கூடாது. இது எங்கள் விருப்பம். எதிர்வரும் சனிக்கிழமை வைத்துக்கொள்வோமா?”
“விடமாட்டீர்கள் போலிருக்கிறதே” “சரி என்று சொல்லுங்க” “சரி சரி. ஆடம்பரம் இல்லாமல் அடக்கமாகச் செய்யுங்கோ”
"அதெல்லாம் நாங்கள் - பார்த்துக் கொள்ளுகிறோம்”
“வெளிநாட்டு இலக்கிய முயற்சிகள்” என்ற தலைப்பில் நீங்கள் பேசுங்கள்”
"ஐயோ! அது பெரிய சமுத்திரம்”
"அதில் ஒரு கையளவு எடுத்து நீங்கள் பேசுங்கோ”
"சரி. முயற்சிக்கிறேன்” “இறுதியில் ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சி இருக்கிறது. அதில் சபையோரின் கேள்வி களுக்கு நீங்கள் பதில் அளிக்கவேண்டும்”
"அது வேறயா? சரி செய்கிறேன்”
“அப்புறம் இன்னொரு விஷயம் நமது ஊர்க் கோவிலுக்கு தங்களால் முடிந்த அன் பளிப்பை வழங்க வேண்டும்”
“ம்... யோசித்துச் சொல்கிறேன்”
“சரி, நாங்கள் விடைபெற்றுக்கொள் கிறோம்”
“போய் வாருங்கள்” இளைஞர்கள் புறப்பட்டுச்சென்றனர். “இவனுகள் என்ன - சுழியனுகளாக இருக்கானுங்கள். பாராட்டு விழா என்று வந்தானுகள் கோயிலுக்கு அன்பளிப்புக் கேட்கிறார்கள்.”
“அது வழமைதான் மகன்” "சரி நீங்க சொல்லுங்க மாமா!”
“தமிழ் இளைஞர்கள் வெளிநாடு செல்வ தில் இலங்கை அரசாங்கம் ஏன் இவ்வளவு
20

தாராள மனப்பான்மை காட்டுகிறது என்று நினைக்கிறீர்கள்?”
"என்ன காரணம்?” "இலங்கையில் தமிழர்கள் எண்ணிக்கை யைக் குறைக்க விரும்புகிறது. அதில் இளைஞர்கள் வெளிநாடு செல்வது ஒரு உத்தி. 'இலங்கையில் தமிழர்களுக்கு ஆபத்து' என்ற காரணம் காட்டியே தமிழர்கள் எல்லோரும் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். இலங்கை அரசாங்கம் இதை ஆட்சேபிக்கவில்லையே. இதிலிருந்து என்ன தெரிகிறது.”
“அப்படியானால் -
சிங்களவர்களும் செல்கிறார்கள்தானே?”
"அது மிகவும் குறைவு” "எப்படிப் பார்த்தாலும், இளைஞர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே கொள்ள வேண்டும். வேலை கிடைக்காமல் இங்கே கிடந்து தவிப்பதைவிட வெளிநாடு சென்று ஏதாவது ஒரு தொழிலைப் பெற்றுப் பணம் சம்பாதிப்பது மேல் அல்லவா?”
“மேல் தான், ஆனால் அற் வட் கோஸ்ற்? இலங்கையில் தமிழர்கள் எண்ணிக்கை குறைவதே அதன் விலை”
“அதெல்லாம் பார்த்தால் நாம் வாழ முடியுமா மாமா?”
“இன்னும் ஒரு பத்துவருடத்தில் இலங்கைத் தமிழரின் நிலை எப்படியிருக்கும்? எண்ணிப்பாருங்கள்'
"அதற்குள் புதிய மாற்றங்கள் ஏற்பட லாம்”
அன்று மாலையில் சற்று
- ஓய்வு கிடைத்தது.
கிருபாகரன் சாய்மானக் கதிரையில் படுத்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தான்.
அவன் எண்ணங்கள் அன்று நடந்த உரையாடல்களை மேய்ந்தது. அவனுடைய மாமா சொன்ன கருத்துக்கள் சிந்தனையில் மேலெழுந்தன். அவற்றிலுள்ள உண்மை அவன் நெஞ்சைக் குடைந்தது.
அதற்கு அவனே பிரத்தியட்ச உதாரண மாக இருக்கிறான்.
லண்டனில் என்ஜினியர்
வேலை பார்ப்பதமாக வீட்டவர்கள் சொல்லிக் கொண்டாலும், உண்மையில் அவன் அங்கு ஒரு கடையில் சேல்ஸ்மனாக வேலை பார்க்கிறான். காலை 9 மணிமுதல் இரவு 11 மணிவரை வேலை செய்யவேண்டும் உட்காரமுடியாது. நின்று கொண்டே வேலை பார்க்க வேண்டும்.
ஆரம்பத்தில் அவனுக்கு ஒரு வேலை கிடைத்தது. பொருளாதார நெருக்கடியால் ஆயிரக்கணக்கானோரை _ வேலை நீக்கம்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெப்ரவரி 2014 (165)

Page 23
செய்யப்பட்டபோது, அதில் அவனும் ஒருவனானான்.
சொந்தநாட்டில் சுதந்திர மனிதனாக இருப்பதற்கும் அந்நிய நாட்டில் இரண்டாம் பிரஜையாக இருப்பதற்கும் உள்ள வித்தி யாசத்தை அவன் உணர்ந்தான்.
-- வெளிநாடுகளில் உள்ளவருக்கும் இதே நிலைதான். அவனுடைய தம்பி சசிகரன் ஜேர்மனியில் இருக்கிறான். வேலை பறிபோய் தற்போது நிவாரண முகாமில் இருக்கிறான். வேளா வேளைக்கு சாப்பாடு கிடைக்கும். ஆனால் வீட்டுக்குப் பணம் அனுப்பும் வாய்ப்புக் கிடைக்காது.
அன்று சனிக்கிழமை. நந்தகோபன் மண்டபத்தில் அவனுக்கு பாராட்டு விழா நடந்தது. பொன்னாடை போர்த்தினார்கள். பலர் பாராட்டுரை வழங்கினார்கள்.
இதன் பின்னணியில் ஆலயக் கட்டிட நிதி உதவிக்கோரிக்கை இருக்கிறதென்பதை அவன் உணர்ந்து கொண்டான். "வெளிநாடுகளில் இலக்கிய வளர்ச்சி” என்ற பெயரில் அவன் தனக்குத் தெரிந்த விடயங்களை எடுத் துரைத்தான்.
அனேகமாக எல்லா நாடுகளிலுமே இலக்கியப் பணிகள் நடக்கின்றன. கனடா அதில் முன்னணி வகிக்கின்றது. அவனுடைய பேச்சு முடிந்ததும் சபையோர் கேள்வி கேட்டனர். அவன் பதில் சொன்னான்.
"சொந்த நாட்டில் இருப்பதை விட வேற்று நாட்டில் இருப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”
“மாற்றாந்தாய் மடியில் இருக்கும் நிலைதான்”
“அங்கே என்ன தொழில் செய்கிறீர்கள். மாத வருமானம் என்ன?”
"குடும்பத்தைக் கொண்டு நடத்தக் கூடிய தொழில் செய்கிறேன். அதற்கான வருமானம் கிடைக்கிறது”
“உங்கள் பிள்ளைகள் தமிழ் படிக் கிறார்களா?”
“இல்லை, ஆங்கிலம் படிக்கிறார்கள்?” "அவர்களின் எதிர்காலம் எப்படி அமை யும்?”
"அவர்கள் ஆங்கிலேயர்களாகவே வாழ் வார்கள்”
“உங்கள் எதிர்காலம் எப்படி அமையும்?” “அநாதையாகி விடுவேன்”
சபையில் பரபரப்பு ஏற்பட்டது. கிருபாகரன் தன் ஆசனத்தில் அமர்ந்தான். சபையில் கசமுச தொடர்ந்தது.
0 0 0
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெப்ரவரி 2014 (165)

-கலா விஸ்வநாதன்
மனக் குரங்கு கிளைக்குக் கிளை தாவி
களைத்துப் போனது
பட்டி
பம்
மணக் குரங்கு
அடர்ந்த இருண்ட அடவியிலிருந்து வெளியேறி, மனிதனாய் பரிணாமமாகிட,
அவாவியது. அதனால் நாட்டுக்குள் ஊடுருவியது.
மனிதனாகிய பிரமையில் தனது நிர்வாணத்தைத்
திரும்பிப் பார்த்து நாணிக் கொண்டது. தனது வாலைக்கொண்டு
மூடிக் கொண்டது.
நாட்டுக்குள் நாகரீகப் போர்வையில் அழகுக்கு அழகு படுத்தி
ஆரோக்கியமற்று நடமாடும் மனிதர்கள்.
பொகர) நகலகம்
: $ 1, * * * *
மதவெறியில் மதங்கொண்டு
மோதிக் கொள்ளும் 5மர்னிடர்கள் (மானிட - இடர்கள்)
போரில்லாப் பூமி பாழ் என புகழும் நடைமுறை நிகழ்வுகள்.
மனக்குரங்கு மனதை
ஒரு நிலைப்படுத்தி, உலகை உற்றுப்பார்த்தது.
நாடா நமக்கெதற்கு!
காடே சிறந்தது. குரங்கேற்காத கொம்பில்லை,
விரைந்தே தாவியது.
21

Page 24
சென்ற அத்தியாயத்தின் இறுதிப்பகுதியில் எனது மைத்துனரது வீட்டின் பூசைஅறைக்குள் நுழைந்தபோது அங்கு ஒர் அற்புதம் நிகழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டு நான் அதிசயித்தது பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.
அவர்களுடைய பூசை அறையில் சுவாமி படங்களுக்கு மத்தியில் சத்திய சாயி பாபாவின் படம் காணப்பட்டது. அந்தப்படத்துக்கு அணியப்பட்டிருந்தமல்லிகைச்சரம் அறையின் மத்திய பகுதிவரை நிலத்திலே படர்ந்திருந்தது.
"ஏன் இத்தகைய நீண்ட மாலையை படத் துக்குச் சாத்துகிறீர்கள்?” என மைத்துனரின் மனைவி சோபனாவிடம் கேட்டேன்.
"நாங்கள் சிறிய மாலையாகத்தான் சாத்துகிறோம். ஆனால் அவ்வாறு அணியும் மாலைகள் தினம் தினம் வளர்ந்து பெரிதாகி நிலத்திலே படர்கிறது. மாதாமாதம் அவ் வாறு வளர்ந்து வரும் மாலைகளைக் கழற்றி மாற்றுகிறோம்” எனக்கூறி அவ்வாறு முன் னர் வளர்ந்த மாலைகளை ஒரு பெட்டியில் சேகரித்து வைத்திருந்ததையும் எடுத்துக் காடடினார.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது; நம்பு வதற்கும் முடியவில்லை.
எனது மைத்துனரின் தந்தையார் எஸ். பி.ஐயர் (எனது மாமா) அவர்கள் ஒரு சத்திய பாபா பக்தராக இருந்தவர். அவர் அமரராகிவிட்டார். அவரது LD529)ILD குடும்பத்தினரும் அவரது சத்திய பாபா வழிபாட்டைத் தொடர்ந்து மேற்கொள் கின்றனர். மைத்துனர், சாயிபாபா பஜனையில் குடும்பத்தினருடன் இணைந்து ஈடுபடுவார்.
22
 

மாமா கொழும்பில் இருந்த காலத்திலும் சாயிபாபா பஜனைகளில் தீவிரமாக ஈடு பட்டவர். சத்திய பாபாவின் இருப்பிடமான புட்டப்பத்திக்குச் சென்று பாபாவின் தரிசனம் பெற்றவர். அக்காலகட்டத்தில் அவர் எமக்கும் பாபாவின் மகிமைகளைப்பற்றிக் கூறி எம்மையும் புட்டப்பத்திக்குச் சென்று பாபாவின் தரிசனத்தைப் பெறவேண்டும் என அறிவுரை கூறினார். அதற்கமைய நானும் எனது தம்பியும் குடும்பமாக 1995ல் புட்டபத்திக்குச் சென்றோம். அக்காலத்தில் வருடா வருடம் புட்டப்பத்தி யாத்திரையை முன்னாள் பத்திராதிபர் எஸ் டி. சிவநாயகம் அவர்கள் ஒழுங்கு செய்து வந்தார். அவர் ஒழுங்கு செய்த யாத்திரையில் நாங்கள் சேர்ந்து கொண்டோம். 102 பேர்வரை அந்த யாத்திரையில் கலந்திருந்தனர். புட்டப்பத்தியில் நாங்கள் பாபாவைத் தரிசித்தபோது எனது மனைவிக்கு பாபாவின் ஆசிகிடைத்தது. பாபா எனது மனைவியிடம் எங்கிருந்து வந்தீர்கள் எனக்கேட்டு, கைகளை உயர்த்தி ஆசி வழங்கியதோடு விபூதி பிரசாதமும் வழங்கினார்.
பாபா, பக்தர்கள் மத்தியில் வலம் வந்து கைகளை உயர்த்தி விபூதி, இனிப்பு வகைகளை வரவழைத்து பக்தர்களுக்கு வழங்குவது வழக்கம்.
என்னைப் பொறுத்தவரை பாபா கையை உயர்த்தி விபூதி வரவழைப்பதெல்லாம் ஒரு சித்து விளையாட்டு என்றே நான் நினைத்தேன்.
ஆனால் இப்போது பாபா சமாதி அடைந்து விட்டாரே. எப்படி அவருக்கு அணியும் மாலை வளர்கிறது?
அன்று இரவு நித்திரைக்குப் போகுமுன் அவர்களது சுவாமி அறைக்குச் சென்று பாபாவின் மாலை வளர்ந்து நிலத்திலே படர்ந்திருக்கும் அளவில் ஒருவருக்கும் தெரியாமல் பேனாவால் ஒரு அடையாளம் இட்டுவிட்டு வந்து படுத்துக் கொண்டேன்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெப்ரவரி 2014 (165)

Page 25
மறுநாள் காலை சுவாமி அறைக்குச் சென்று பார்த்தபோது, என்ன அதிசயம்! மாலை முன்னரைவிட அரை அடி தூரம்வரை வளர்ந்திருந்தது.
பாபாவின் படத்தை நிமிர்ந்து பார்த்தேன். புன்னகை சிந்தும் அவரது முகத்தில் தெய்வீக ஒளிவீசிக்கொண்டிருந்தது. என்ன என்னைச் சோதித்துப் பார்க்கிறாயா? என அவரது கண்கள் என்னிடம் கேட்பது போலிருந்தது.
அவரது 91 L I LI I வரதம் என்னை ஆசீர்வதித்தது.
புலம்பெயர்ந்து வாழும் நம்மவர்கள், அவர்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தமது ஆன்மீகத் தேவைகளை நிறைவேற்றுவதில் மிகவும் அக்கறையோடு இருப்பார்கள் என்பதை நான் சென்றுவந்த நாடுகள் பல வற்றில் அவதானித்திருக்கிறேன். அவர்கள் முதலில் கூட்டாகச் சேர்ந்து கோயில்களை அமைப்பார்கள். இலண்டனில் இப்போது பன்னிரண்டு அம்மன் கோயில்களும், ஏழு பிள்ளையார் கோயில்களும், ஏழு முருகன் கோயில்களும், ஆறு சிவன் கோயில்களும் ஒரு ஐயப்பன் கோயிலுமாக எல்லாமாக முப்பத்து மூன்று கோயில்கள் இருக்கின்றன.
கோயில்களைவிட ஆன்மீகத் தேவை களைப் பூர்த்தி செய்யும் அமைப்புகளும் இருக்கின்றன. 'gFTus) IITLIT இயக்கம், ஹரேகிருஷ்ணா இயக்கம், குருமகராஜ் இயக்கம், சின்மியா மிஷன் ஆகியன நமது மக்களின் ஆன்ம ஈடேற்றத்துக்கு உதவுவதோடு பிறமக்களினதும் குறிப்பாக இலண்டன்வாழ் ஆங்கிலேயரது ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் இந்த அமைப்புகள் உதவுகின்றன. இலண்டனில் நாங்கள் இருந்தகாலத்தில் இத்தகைய பல அமைப்புகள் பற்றி அறிந்து கொண்டோம். சில கோவில்களுக்கும் சாயிபாபா இயக்க அமைப்பு ஒன்றிற்கும் சென்று அங்குள்ள வழிபாட்டு முறைகளை அவதானித்தோம்.
எங்களது இந்த இலண்டன் பயணத் தின் முக்கிய நோக்கம் அங்கு நடை பெறும் உலகத்தமிழியல் மாநாட்டில் கலந்து கொள்வதுதான் என்பதை இக் கட்டுரைத் தொடரின் ஆரம்பத்தில் குறிப் பிட்டிருந்தேன்.
இந்த இடத்தில் பிரித்தானியாவில் நிலவும் காலநிலை பற்றியும் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. இங்கு நான்கு
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெப்ரவரி 2014 (165)

பருவ காலங்கள் நிலவும். அவையாவன வசந்த காலம், கோடை காலம், இளவேனிற் காலம், குளிர் காலம் என்பன வாம்.
டிசம்பர் நடுப்பகுதியி லிருந்துமார்ச்நடுப்பகுதிவரை இங்கு குளிர்காலமாகும். குளிர் காலத்தில் இங்கு கடுங்குளிர் நிலவும். வெப்ப நிலை சிலநாட்களில் பூஜ்யம் செல்சியஸ்'க்கும் கீழே இறங்கிவிடும். இரவில் படுக் கும்போது மெத்தையில் படுத்துக் கொண்டு இன்னு மொரு குளிர் தாங்கும் மெத்தையால் போர்த்துக் கொள்ள வேண்டியிருக்கும். மாலை வேளைகளில் மூன்று மணிக்கே படிப்படியாக இருள் கெளவத் தொடங்கி விடும். மறுநாள் காலை எட்டு மணிக்குத்தான் பொழுது விடியும். இக்காலத்தில் தின மும் பதினைந்து மணித்தி யாலங்களுக்குமேல் இருள் மண்டியிருக்கும். நாடே சோபை இழந்து விடும்.
இந்தக் காலநிலையில் இலங்கை இந்தியா போன்ற நாடுகளிலிலிருந்து பிரித் தானியாவைச் சுற்றிப்பார்க்க வருவது உசிதமல்ல. இக் காலத்தில் விருந்தாளிகள் வீட்டுக்கு வந்துவிட்டால் அவர்கள் குளிர் தாங்கக்கூடிய அளவுக்கு வீட்டைச் சூடாக வைத்திருக்க எரிவாயு அல்லது மின்சாரத்தினால் இயங்கும் சூடாக் கிகள் வீட்டில் எந்த நேரமும் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். பிரித்தானியாவில் எரிவாயு, மின்சாரத்துக்கான கட்டணம் மிகவும் அதிகம்.
இக்காலத்தில் அணிந்து கொள்ள பிரத்தி யேகமான உடைகள் வேண்டும் உடைக்கு மேல் உடையணிந்து அதற்கு மேல் கம்பளிச் சட்டை அணிந்து அதற்கும்மேல் ஓவர்கோற்’ அணிய வேண்டும் கைகளையும் விரல்களையும் குளிரிலிந்து பாதுகாக்க கையுறை அணிந்து
23

Page 26
ni F1 1 |
பயம் இத .
.தா 1. அத4 இர்
ம்.
2013ஜூலை மாதத்தில் 32 டிகிரி செல்சியஸ் முடிகிறது. வில்லியம் ஷேக்ஸ்பியர் “எமிட் ச உச்சம் பெற்ற, வருடத்தின் மிகவும் இரவு நேரம்கு இங்கு குறிப்பிடலாம்.
- இந்தக் கோடைகாலத்தில் பலர் தமது பழ பவனி வருவார்கள். இதன் ஓர் அங்கமாக, இத் 'அன்ரீக் கார் பவனி வருவார்கள். இந்தக்கார் பு
ஆகஸ்ட் 23ஆம் திகதி நடைபெற்றது. அடுத்த ஆகஸ்ட் மாதத்தில் இடம்பெறும் என்றும் அறிவு பெரும் செலவில் இக்கார்களைப் பராமரித்து வ
இக்கோடை காலத்திலேதான் இலண்டனி நடைபெறுவது வழக்கம். இப்படியாக இல காலகட்டத்திலேதான் நாம் சென்றிருந்த உலகத்
இந்த மாநாடு நடைபெறும் நான்கு நாட்க போகவென மைத்துனர் லீவு எடுத்திருந்தார். 6 இலண்டனில் நாங்கள் ஒரு மாதகாலம் தங்கியி 24

கொண்டிருக்க வேண்டும். இவையெல்லாம் மனித இயக் கத்தையே குறைத்துவிடும்; வாழ்க்கையே வெறுத்து விடும்.
இங்கு கோடைகாலம் மே மாதத்தில் தொடங்கி ஆகஸ்ட் மாதம்வரை நீடிக்கும். கோடைகாலம் பிறந்து விட் டால் இங்குள்ள மக்களுக்கு குதூகலம் பிறந்து விடும். மக்கள் இக்காலத்திலேதான் வெளியிடங்களுக்கு அதிக மாகச் செல்வார்கள். சுற்றுலா மற்றும் கடற்கரைக்குச் செல் லுதல் போன்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவார்கள். கிரிக்கட், கால்பந்து, பாஸ்கற் போல், டெனிஸ், நீர்ச்சறுக்கல்,
போன்ற விளையாட்டுகளில் L)
ஈடுபடுவார்கள்.
பாடசாலைகள் ஜூலை மாத மத்தியல் விடுமுறை விடுவார்கள். பாடசாலை மாணவர்களுக்கும் இது குதூ கலமான காலம்தான். |
காலநிலை நன்றாக இருக் கும். காலை ஐந்து மணிமுதல் இரவு பத்து - மணிவரை வெளிச்சம் இருக்கும். நாங்கள் இலண்டன் செல்வதற்கு
இரண்டு மாதத்திற்கு முன்னர் = அளவுக்கு வெயில் சுட்டெரித்ததாக அறிய ம்மர்நைட் டிரீம்' என்ற நாடகத்தை கோடை றைந்த காலத்தில் அரங்கேற்றினார் என்பதையும்
மை வாய்ந்த கார்களில் இலண்டன் வீதிகளில் இதகைய கார்கள் வைத்திருப்பவர்கள் ஒருநாள் பவனி நாங்கள் இலண்டனில் இருந்த காலத்தில் 5 வருடம் இந்தக் கார்பவனித் திருவிழா 2014 பித்துள்ளார்கள். இந்தக்கார் வைத்திருப்ப வர்கள்
ருகிறார்கள் எனவும் அறிய முடிகிறது. ல் இடம்பெறும் உலகம் தழுவிய மாநாடுகள் ண்டன் மாநகர் மகிழ்ச்சியில் திளைத்திருந்த தமிழியல் ஆய்வு மாநாடும் நடைபெற்றது. களும் எம்மை அந்த மாநாட்டுக்கு அழைத்துப் எமக்கு அது சங்கடமாக இருந்தது. ஏனெனில் பருந்து இடங்களைச் சுற்றிப்பார்க்க வேண்டும்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெப்ரவரி 2014 (165)

Page 27
இந்த ஒருமாத காலம் அவர் லீவு எடுப்பதும் எம்மோடு வருவதும் சாத்தியமில்லை. அதற்கான ஒரு மாற்றுவழி - எமக்குத் தென்பட்டது. அவரது பிள்ளைகளுக்கு அது பாடசாலைவிடுமுறைக்காலம். 'பிள்ளைகளில் ஒருவரை எமக்கு வழிகாட்டியாக அனுப்புங்கள். நாங்கள் சமாளித்துக் கொள்வோம்' என்று மைத்துனரிடம் கூறினேன். அதற்கமைய அவரது மகள் சந்தியா நாங்கள் இலண்டனில் இருக்கும் காலம்வரை எமக்கு வழிகாட்டியாக அமைந்தாள்.
முதல் தடவையாக இலண்டன் மாநக ரில் இடம்பெற்ற இந்த மாநாடு உலகப் புகழ்பெற்ற இலண்டன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இந்தப் பல்கலைக்கழகம் - மாணவர் தொகை அடிப்படையில் ஐக்கிய இராச் சியத்தின் மிகப் பெரிய பல்கலைக் கழகமாகும். பல்லாயிரக்கணக்கான மாண வர்கள் இங்கு கல்வி பயில்கிறார்கள் என அறிய முடிகிறது. இந்தப் பல்கலைக்கழகம் பல பீடங்கள் கொண்ட - பல வளாகங்கள் கொண்ட மிகப்பெரிய பல்கலைக் கழகமாகும். - இப் பல்கலைக்கழகம் 1836ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. காலத்துக்குக் காலம் பல்வேறு பீடங்கள் இணைக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப் பட்டது. எங்கள் நாட்டவர்களில், பேராசிரி யர் சு. வித்தியானந்தன், பேராசிரியர் சி. பத்மநாதன், பேராசிரியர் ஆ. கந்தையா ஆகியோர் இந்தப்பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர்கள். சுவாமி விபுலானந்தர் 1920இல் இந்தப்பல்கலைக்கழகம் நடத்திய பி. எஸ். ஸி. தேர்வில் சித்தியடைந்தவர். இங்கு மாநாடு நடைபெற்ற காலகட்டத்தில் என்னைச் சந்தித்த எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் - அவர்கள் தானும் இந்தப்பல்கலைக்கழகத்தில் கல்விகற்றதாகக் கூறினார். ஆசிய ஆபிரிக்க மத்திய கிழக்கு நாடுகளுக்கான கல்விக்கான உலகின் முதல் தரமான பல்கலைக்கழகமாக விளங்கும் இந்தப்பல்கலைக்கழகம் பிரித்தானியாவின் அதியுயர்ந்த பல்கலைக்கழகமாகவும் விளங்கு கிறது.
இந்தப் பல்கலைக்கழகத்தின் ஒரு பீடமாக அமைந்திருப்பது S.0.A.S (School of Oriental and Affrica Studies) என்ற பகுதியாகும். இங்குதான் இந்த உலகத்தமிழியல் மாநாடு நடைபெற்றது.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெயரவரி 2014 (165)

இந்தப் பீடத்தின் முன்பாக எமது தமிழ்ப்பெரும் புலவர் திருவள்ளுவரின் பெரிய சிலை ஒன்றை அமைத்திருக்கிறார்கள்.
அதனைப்பார்த்த போது எமக்குப் பெருமையாக இருந்தது. எம்மை அங்கு அழைத்துச் சென்ற எமது மைத்துனரின் மகள் சந்தியாவுக்கு திருவள்ளுவர் பற்றியும் திருக்குறள் பற்றியும் விளக்கம்கொடுத்து அவர் இயற்றிய திருக்குறள் உலகின் 90 மொழிகளில் இதுவரை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்ற தகவலையும், 2500 வருடங்கள் பழமை வாய்ந்த மொழியின் சொந்தக்காரர் நாங்கள் என்பதையும் கூறி விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார் என் மனைவி.
அவள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து விட்டாள். அவளது ஆச்சரியத்தை அதிகரிக்கும் வகையில், 'எமது தமிழ்ப்புலவர்களில் ஒருவரான கணியன் பூங்குன்றன் எழுதிய "யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற வாசகம் ஐக்கிய நாடுகள் - சபையின் பிரதான மண்டபத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கிறது. அத்தகைய பெருமை மிக்க மொழியின் சொந்தக்காரர் நாங்கள்' என்பதனையும் நான் கூறினேன்.
பதினைந்து வயது நிரம்பிய அவள் ஒரு பாடசாலை மாணவி. அவள் பிறந்ததிலிருந்து இலண்டனிலேயே இருக்கிறாள். எக்காலத்தி லும் இலங்கைக்கு வந்தவலல்லள். இவள் போன்று எமது இளந்தலைமுறைகள் தமிழின் பெருமை தெரியாது வளரவேண்டிய சூழலில் இருக்கிறார்கள் என்பதை நினைத்தபோது
25

Page 28
எனக்கு மனதிலே உறுத்தலாக இருந்தது. சந்தியா நாம் கூறுபவற்றை ஆச்சரியம் மேலிடக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
அவளுடைய ஆச்சரியத்தை அதிகரிக் கும் வகையில் நான் மேலும் ஒரு தகவலைக் கூறினேன் "உலகில் முதலில் தோன்றிய மொழி தமிழ் மொழி. உலகின் மூத்த மொழி தமிழ் மொழி. மனித இனம் இந்த உலகில் தோன்றியபோது அந்த மனிதன் பேசிய மொழி தமிழ் மொழி. இதனை அமெரிக்கா வின் மிகப்பெரும் மொழி ஆராய்ச்சி வல்லுனரான அலெக்ஸ் கொலியர் (ALEX COLLIER) நிரூபித்து அறிஞர்கள் மத்தியில் உரையாற்றிய
தோடு அதனைப்பதிவும் செய்துள்ளார்.”
“வாவ்!” என அதிசயித்தாள் சந்தியா. | "இது தொடர்பான அலெக்ஸ் கொலிய ரின் உரையை வேண்டுமானால் கணினி 'யூ ரியூப்பில்' கேட்கலாம்” என, எனது கூற்றுக் கான அத்தாட்சியையும் சந்தியாவிடம் கூறி அவளது ஆர்வத்தை மேலும் தூண்டினேன். - இப்படி நான் சொன்னதற்கு வேறொரு காரணமும் இருந்தது. பரஸ்பரம் நாங்கள் உரையாடும்போது ஏற்படுகின்ற மொழிப் பிரச்சனைதான் அது. - ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொள்ளாத ஒருவர் ஆங்கிலத்தில் உரை யாடும்போது அவரது தாய் மொழியின் ஒலிக்கூறுகள் அவரது ஆங்கில உச்சரிப்பில் கலந்திருக்கும். தமிழர்களாகிய நாங்கள் பேசும் ஆங்கிலத்துக்கும் இலண்டனில் பிறந்து வளர்ந்த ஒரு சிறுமி பேசும் ஆங்கிலத்துக்கும் இடையில் உச்சரிப்பு வேறுபாடுகள் (Accent) இருக்கும். சில சந்தர்ப்பங்களில் நாங்கள் கூறுவதை அவள்புரிந்து கொள்வதற்கும் அவள் சொல்வதை நாங்கள் புரிந்து கொள் வதற்கும் சிரமங்கள் ஏற்படும்போது நாங்கள் கூறியவற்றை மீண்டும் கூறிப்புரியவைக்க 26

- வேண்டி ஏற்படும்.
மேலதிக விளக்கங்கள் தேவைப் படும்போது - இணையத்தில் - பார்த்துக் 5 கொள்ளும்படி நான் கூறுவது வசதியாக இருந்தது. உடனுக்குடன் அவற்றைத் தனது
கைத்தொலைபேசியில் உள்ள இணையத்தில் பார்த்துக் கொள்ளக்கூடிய வசதி அவளிடம் இருந்தது. - உலகத்தமிழியல் மாநாட்டின் தொடக்க - விழா இலண்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள கல்விப்பீடத்தின் 'லோகன் ஹோல்' என்னும் மண்டபத்தில் இடம்பெற்றது.அன்று சம்பிர - தாய பூர்வமான நிகழ்ச்சிகளே இடம்பெற்றன. இந்த மாநாட்டின் அமைப்பாளராக திரு. செல்வா செல்வராஜா அவர்களும், தலைவராக எமது நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அ. சண்முகதாஸ் அவர்களும் பணிபுரிந்தார்கள்.
காப்பாளராக கலாநிதி அவ்வை நடராஜன் அவர்களும் துணைத்தலைவர்களாக கலாநிதி. எம். முத்துவேலு, முனைவர் கே. சிதம்பரம், முனைவர் ஆர். சுந்திரசேகரன், திரு.மு. நித்தி யானந்தன் ஆகியோர் பணிபுரிந்தார்கள். பேராசிரியர் பாலசுகுமார் செயலாளராகவும் உதவிச் செயலாளராக எஸ். ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களும், இணைப்பாளராக திரு. எஸ். ஜே. பற்றிமாகரன், உதவி இணைப்பாளராக திரு. கெ. சஞ்சய் ஆகியோரும் கடமையாற்றினர். ஆய்வுத் தெரிவுக்குழுவில் பேராசிரியர் பீட்டர் ஷாக், பேராசிரியர் வி.அரசு, கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ், பேராசிரியர் ஏ. ஜே.வி. சுந்திரகாந்தன், பேராசிரியர் அறிவு நம்பி, பேராசிரியர் குமரன் சுப்பிரமணியன், திரு.எஸ். சச்சிதானந்தம், பேராசிரியர் செல்வா கனக நாயகம், பேராசிரியர் சேரன், திருமதி ரி. குணபாலசிங்கம் ஆகியோர் பணிபுரிந்தனர்.
தொடக்கவிழாவில்மேளக்கச்சேரி, மங்கல் விளக்கேற்றல் மற்றும் பிரமுகர்களின் உரைகள் ஆகியவை இடம் பெற்றன. இந்த மாநாட்டிற்கு தமிழியல் தொடர்பான பதினைந்து விட யப்பரப்புகளிலும் உட்பிரிவுகளிலும் விட யங்கள் கோரப்பட்டிருந்தன. கிடைக்கப் பெற்ற ஆய்வுக்கட்டுரைகளில் 124 ஆய்வுக் கட்டுரைகள் தேர்வின் பின்னர் மாநாட்டில் சமர்ப்பிப்பதற்கு ஏற்றுக் கொள்ளப்பட்டன. - இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், நியூசிலாந்து, கனடா, ஐக்கிய இராச்சியம், டென்மார்க், சுவீடன், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து ஆய்வுக்கட்டுரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தன. இலங் கையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 38 ஆய்வுக்கட்டுரைகளில் 15க்கும் மேற்பட்ட
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெப்ரவரி 2014 (165)

Page 29
வர்கள் மாநாட்டில் கலந்து தமது கட்டுரை களை நேரில் சமர்ப்பிப்பதற்குத் தயாராக இருந்தனர். - இவர்களில் - பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா, பேராசிரியர் துரை மனோகரன், பேராசிரியர் வ. மகேஸ்வரன், பேராசிரியர் கி. விசாகரூபன், கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ், கலாநிதி சிவ நிர்த்தானந்தா, டாக்டர் தி. ஞானசேகரன், திரு. இராசையாமகேஸ்வரன், திருமதிஞானம் ஞானசேகரன், ரூபி வலன்ரீனா பிரான்சிஸ் ஆகிய 10 பேராளர்களே மாநாட்டில் கலந்து ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்தனர். மற்றவர்களுக்கு உரிய நேரத்தில் விசா கிடைக்கவில்லை.
மாநாடு ஆரம்பமாகிய வேளையில் இந்த மாநாட்டின் நோக்கத்திற்கு எதிராக இலங்கையில் இருந்து இனவாதச் சக்தி களால் அரசியல் சாயம் பூசப்பட்டது. இந்த மாநாடு இலங்கை அரசாங்கத்துக் கெதிராக புலம்பெயர்ந்து வாழும் புலிகள் சார்பானவர்களால் நடத்தப்பெறும் மாநாடு எனப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இப்பிரசாரங்கள் ஒலி ஒளி அச்சு ஊடகங்கள் மூலம் பெரிது படுத்தப்பட்டன. இதற்கான காரணம் என்னவாக இருக்கலாம் என அறிந்து பார்த்ததில் இந்த மாநாட்டின் அமைப்பாளர் திரு. செல்வா செல்வராஜா நாடு கடந்த தமிழ் ஈழத்தின் முக்கிய உறுப்பினராக இருந்தவர் என்பது தெரிய வந்தது. ஆனால் அவர் இந்த மாநாடு நடப்பதற்கு ஆறுமாத காலத்துக்கு
acuation
2013
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெப்ரவரி 2014 (165)

முன்னரே தமது பதவியிலிருந்து நீங்கிவிட் டார் என்பதையும் அறிய முடிந்தது.
இந்தப்பிரசாரங்களால் பல்கலைக்கழகத் தைச் சேர்ந்த தமிழ் அறிஞர்களே பெரிதும் சங்கடத்துக்கு உள்ளானார்கள். அரசாங்கத் தின்கீழ் இயங்கும் - பல்கலைக்கழகத்தில் தொழில் புரிபவர்கள் அரசாங்கத்திற்கு எதி ராக இடம்பெறும் மாநாட்டில் கலந்து கொள் வதால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என இனவாதிகள் ஊடகங் களில் பிரசாரப்படுத்தினர்.
இங்குள்ள பல்கலைக்கழகங்களில், பங்கு பற்றியோர் தொடர்பான விசாரணைகள் ஆரம்பமாகின. இதனால் இலங்கையில் இருந்து சென்றவர்களும் இந்த மாநாட்டை முன்னின்று நடத்திய முக்கியஸ்தர்கள் சிலரும் கலக்கமடைந்தனர்.
மாநாட்டின் ஆய்வரங்குகள் 15, 16, 17 ஆம் திகதிகளில் இடம்பெற்றன. 18ஆம் திகதி ஞாயிறு காலை ஊர்வலமும் அதனைத் தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் சிறப்புச் சொற் பொழிவுகள், நாடகங்கள், சான்றிதழ் வழங்கல் ஆகிய நிகழ்ச்சிகள் 'இல்ஃபோட்' என்னும் இடத்தில் அமைந்த வலன்ரைன் பார்க்கில் இடம் பெற்றன.
- மறுநாள் இலண்டன் நகரினை பேராளர்கள் சுற்றிப் பார்ப்பதற்கும் மாநாட்டு அமைப்பாளர்கள் ஒழுங்கு செய்திருந்தனர். இதில் இந்திய இலங்கைப் பேராளர்கள் சிலர் கலந்து கொண்டனர்.
நன்நோக்கோடு நடைபெற்ற மாநாடு மகவும் சிறப்பாகவே நடந்தேறியது.
இந்த மாநாடு நிறைவு நாளன்று 18-8- 2013 அன்று மாலை 6 மணிக்கு நூல்தேட்டம் நூலியலாளர் என். செல்வராஜா அவர்கள் இலங்கையில் இருந்து வருகை தந்துள்ள தமிழறிஞர்கள் சிலருடன் சந்திப்பொன்றை ஈஸ்ட்காம் - திருவள்ளுவர் மன்றத்தில் ஏற்பாடு செய்திருந்தார். இந்தச்சந்திப்பில் இலண்டனில் இருக்கும் தமிழறிஞர்களும் கலந்து கொண்டனர். இச்சந்திப்பானது அங்கு வருகை தந்தோர் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் சந்தித்து உரையாடவும் புரிந்து கொள்ளவும் ஏதுவாக அமைந்தது. எனக்குப் பெரும் மகிழ்ச்சியை அந்தச் சந்திப்பு ஏற்படுத்தியது. நீண்ட நெடுங்காலமாக நான் சந்திக்க விரும்பிய சிலரை நான் அங்கு சந்தித்தேன்.
அது பற்றி அடுத்த இதழில் கூறுவேன்.
0 0 0
27

Page 30
பச்சைர் பூச்சிகள் பறந்து திரிகின்றன சுதந்திரமாய் குடியிருப்பு களிடையே கூடுகளைக் கட்டி கூட்டமாய் உலாவருகின்றன.
கூட்டைக் கலைத்து பூச்சிகளை விரட்டியடிக்க யாருமில்லை ஊரில் இப்போ பூச்சிகளின் தொல்லை பற்றி மக்கள் முன்றில் முறையிட்டனர். அவை இப்போது கடிப்பதில்லைத்தானே என பதில் கிடைத்தது.
தாங்கிய பழயே இருக்கின்றன.
கழப்பதில்லை யானாலும் ஊருக்குள்ளே பறந்து திரிந்து அவ்வப்போது தொல்லை தருகின்றன. முன்பு கடித்துக் குதறியநினைவில் முக்கள் இப்போதும் பயந்த பழயே உலா வருகிறார்கள். பூச்சிகளின் மீச்சல்களுக்குப் பயந்து பெண்கள் எல்லாம் அச்சத்துடன் புடவையால் மூழக்கொள்கிறார்கள்.
墊
பூச்சிகளை அகற்றும்படி புவியரசிடம் கெஞ்சிக் கேட்டும் பூச்சியமாகவே இருக்கிறது பதில். மக்களைப் பாது காத்திடலாம் பூச்சிகள் நிலை கொண்டிருக்கின்றன: 0
P
பூவினில் தொட்டுப் புனமடைஞ்சு சூரிய கிரணமாய் வந்து பாடித்திரிஞ்சு கெம்பீரநாட்டை தும்பியைப் போல வம்புப்பருவ வரவாய் இருள் பூசிக் கொண்டிருந்த மாலை பேடித்தனமாக வேடிக்கை பார்க்கிற காடைத் தனங்களுக்குக் காவல் அரண்சமைக்கும்
28
 
 
 
 
 
 
 

உடுவிட்டுப்போன அந்தக் குயிலின் நினைவுதலில் நின்றழுகிற8 ( () அந்தக் குயில் இருந்த ginčaoficò
( (n
இப்Uடிun இருந்த08 இன்றேn குருவிகள் திசைக்கொன்றல் െക്ര(ക്ര) ്തങ്ങെന്ധ്ര_ര്
UAĆUČĆbå
ෆිණNUJණතණ uൈā) அடகு வைக்கத் බැණෆජ්ර්‍ණිණිණin ෆිෆාවණතණෆ1 ග්‍ර ශීශී.j ിഖീതൺ ഗ്രൈ ஒற்றுமையின்
ക്രീ_a) இதைகளில் கற்ற 65C033/60. நிஜத்தில்
மட்டுமேன் அதை மறந்த 6Unணித்
இப்uேnagம் எங்கள் உடு விட்டுப்8unன அந்தக் குயிலின் ്തങ്ങഖ() நின்றழு கின்றன: (ിൽ ()
s
ஆத்மாவின் அர்த்தங்கள்
இரவு உறங்கும் வேளை
புளுக்கும் நேரம்
அறைக்கு வராத காற்று
ஒரு நிலா நிலம்தொடும்
பிரபஞ்சம் முழுதும்
இலட்சோ லட்சம் - கல்வயல் தீபம் கொழுத்தி வே, குமாரசாமி சொல்யனம் பாடும்
வேதாந்தமாகின்ற சங்கீதம்
ஆற்று ஆமையாய்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெப்ரவரி 2014 (165)

Page 31
ஒறுங்கிப் போயித்து
என் மனைவியின் தாய்க்கு வயது எண்பதுக்கு மேல்தான் இருக்கும். இன்றும், நல்ல தேகாரோக்கியத்தோடு, வீட்டில் உள்ள எல்லோரையும் அதிகாரம் செய்து கொண்டு, மனநிறைவோடு வாழ்கின்றா. வீட்டில் உள்ளவர்கள் எழும்புவதற்கு முன்னர் விடியலில் எழும்பி, நாலுமணிக்கு நடுநிசித் தொழுகையை முடித்து, தொழுத பாயிலேயே இருந்து பின்னர் சுபஹத்தொழுகையையும் முடித்தவுடன் வீட்டில் உள்ளவர்களுக்கு அடுப்பில் தேநீருக்கு தண்ணிரைக் கொதிக்க வைத்து விட்டு, வீட்டு முற்றத்தைக் கூட்டிக்கொண்டிருப்பா, எந்தக் களைப்பு மின்றி தன் வேலைகளில் ஈடுபட்டுக் கொண் டிருக்கும் என் மனைவின் தாயோடு, என் வீட்டில் பல வருடங்களாக வாழ்ந்து வரும் நாய் பொட்டுக்கு சொல்ல முடியாத பாசம். முற்றத்தை கூட்டிக் கொண்டிருக்கும் மாமி யைக் கண்ட நாய் பொட்டு ஊழையிட்டுக் கொண்டு வருகிறது. இரவு வீட்டிலுள்ளோர் சாப்பிட்டு விட்டு, கொட்டி வைக்கும் மீன் முள்ளு, மிச்சச்சோற்று குப்பைகளை எடுத்து, விடியலிலேயே நாய் பொட்டுக்கு போடுவது, என் மாமியின் பழக்கம். இதைக் கேட்டுத்தான் பொட்டு ஊழையிட்டுக் கொண்டிருக்கிறது. விடியச்சாமத்திலேயே குசினிக்குள் உள்ள குப்பைகளைக் கொண்டு போய் நாய்க்குப் போட்டுவிட்டு, அது உண்ணும் வரை பார்த் திருந்து, சாப்பிட்டு முடிந்தவுடன் அது சாப் பிட்ட பாத்திரத்தில் தண்ணிரை ஊற்றி விட்டு வருவா.
விடியலின் ஆரவாரத்தால், உறங்கிக் கிடந்த ஊர் சோம்பல் முறித்து விழிக் கிறது. ஊர் விழித்து விட்டதை, தென்னை மரவட்டுக்குள் கொடுகிக்கிடந்த காகங்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெப்ரவரி 2014 (165)
 

களும், குருவிகளும் பறைசாற்றிக் கொண் டிருக்கின்றன. அடுப் படியில் இரவு சமைத்த மீன்கறியை சூடு காட்டிக் கொண்டிருந்த மாமி “என்ன இன்னும் ஒங்களுக்கெல்லாம் விடியல்லியா? லாவு ஆக்கின சோறு கறியெல்லாம் சும்மா அப்படியே கெடக்கு. ஆரும் சோறு தின்னாட்டி, என்னத்துக்கு இவ்வளவு அரிசப் போட்டு சோறாக்கிற? ஒழைக்கிற பொறுப்புத் தெரிஞ்சா இந்த அநியாயம் செய்விங்களா? மனிசன் ஒரு புடிச்சோத்துக்கு பர்ற கஷ்டம் இந்த ஊட்டில ஆருக்குத் தெரியிது. சும்மா கண்கட தெரியாம அரிசப்போட்டு ஒவ்வொரு நாளும் அவிச்சி அவிச்சி நாய்க்கும் பூனைக்கும் கொட்டினா, இது அல்லாக்கு அடுக்குமா..? எதிலையும் பொம்பளைக்கு கொஞ்சம் பொறுப்பு சறுப்பு தெரியணும். புரிசன் பர்ற கஷ்டம் பொம்புளைக்குத் தெரியாட்டி, இந்த ஊடு ஒழுங்கா வருமா?" என்று என் மனைவிக்கு ஏசிக்கொண்டு, பானையில் கிடந்த சோற்றை வழித்தெடுத்துக்கு போய் கோழிக்கூட்டுக்குள் கிடக்கும் கோழிகளுக்கு போட்டுவிட்டு வரும் போது, நாய் பொட்டு ஊழையிடுகிறது. மாமியின் ஆரவாரத்தால் வீடு அல்லோலப்படுகிறது. தாயின் கட்டளைக்கு அடிபணிந்து என் மனைவி எழுந்து வருகிறாள். வரும்போது “ங். தொடங்கிற்ரியா., ஒண்ட சண்டித்தனத்த.? மனிசன் ஒழுப்புளம் கண்மூடிப் படுக்க உட மாட்டிய. காகம் குருவிகள் எழும்புறதுக்கு முன்ன எழும்பி அவட கூத்தக் காட்டத் தொடங்கிருவா." என்று கூறியபடி அடுப்படிக்கு வந்து தேநீரைக் கலந்து கொண் டிருக்கிறாள். விடியல் மறைந்து உலகை சூரியன் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறான். இரவெல்லாம் காலைக்குள் அடைபட்டுக் கிடந்த பசுமாடுகள் எங்கள் வீட்டிற்கு முன்னாலுள்ள சிற்றொழுங்கையால் கத்திப்
-எஸ். முத்துமீரான்
29

Page 32
போவதைப் பார்த்து பொறுக்க முடியாமல் வாழைப்பாத்திக்குள் மாமி போட்ட சாப் பாட்டை வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு படுத்துக்கிடந்த நாய் பொட்டு, எழுந்து போய் மாடுகளைப் பார்த்து குரைக்கிறது.)
அப்பொழுது என் மச்சினன் மம்மது வருகிறான். வுந்தவன் நேரடியாகக் கிணற் றடிக்கு போவதைப் பார்த்து என் மனைவி "என்னடாம்பி? என்ன நடந்த...? வந்த வாக்கிலேயே கெணத்தடிக்குப் போறாய்?” என்று கேட்க. மம்மது "இந்த நாசமத்துப் போவானுகள்ள மாடுகளெல்லாம் ஒழுங்கைக் குள்ள பீயெல்லாம் பேண்டு வெச்சிரிக்கி... கால்லயெல்லாம் நல்லாய் பட்டிட்டு” என்று கூறி கால்களைக் கழுவிக்கொண்டு வீட்டிற்குள் வரும் மகனைப்பார்த்து மாமி "நீ ஒழுப்புளம் பார்த்து வரப்புடாதா? அதெல்லாம் அறிவில்லாதசீவனுகள்... நல்லது கெட்டது அதுகளுக்குத் தெரியுமா? நாமதான் எல்லாத்தையும் பார்த்து நடக்கணும்... புள் ளேய்! தம்பிக்கு தேயில கொண்டு குடுகா... என்ன ஒண்ட ஆமவட்ட வயல் எப்படி இரிக்கி? புல்லெல்லாம் புடுங்கிப் போட்டியா? பயிரெல்லாம் நல்லாரிக்கா? மாரிப் போகம் கொஞ்சம் கவனமாப் பாத்துக்கணும்,” என்று கூறிக் கொண்டு வாசற் சுவரில் காயப் போட்ட சாக்குகளை எடுத்து வருகிறா.
- என் மனைவி, தம்பிக்கு தேநீரைக் கொண்டு வந்து கொடுக்கும் போது "என்ன மொதலாம் பசளய வயலுக்கு எறிஞ்சிற்றியா? நேரகாலத்தோட எல்லாத்தையிம் செஞ்சிர ணும். பிந்தினா நமக்குத்தான் கஷ்ரம். வாய்க்கால் எல்லாத்தையும் நல்லாக் கைபார்த்து, புல்லுக்கில்லு இல்லாம வெளி சாக்கி வெச்சிரு. அப்பதான் வடிச்சல் ஒழுங்கா ஓடும்.” என்று தம்பிக்கு சொல்லி வீட்டு அடுப்படிக்கு போகிறாள். அவளுக்கு பின்னால் படுத்துக் கிடந்த பூனை கத்திக் கொண்டு போகிறது.
- வீட்டுச் சுவர்க்கடிகாரம் ஏழு மணியைப் பறைசாற்றுகிறது. என் பிள்ளைகள் பாடசாலைக்கு ரெடியாகிப் போகிறார்கள். அவர்கள் போகும் போது வாசலில் பூத்துக் குலுங்கி நிற்கும் மாதுளஞ் செடிக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கும் மாமி “ங்... இப்பதான் ஒங்களுக்கு விடிஞ்சயா? வாத்தி பள்ளிக்குடத்தப் பூட்டிருவான். சட்டுப்பண்ணிப் போங்க... ம், அத்தீக்
30

மகன் தம்பிர கையப்புடிச்சிக்கு போகா வாப்பா... இவனுகள்ள காறு மொட்டச் சைக்கிள் வரும், றோட்டுச் சைற்ரால் போங்க. இந்த மொட்டச் சைக்கிள் ஓர்ற வழிசலுகள் என்ன பாஸ்ற்ரா வாரானுகள். உம்மா வாப்பா கடன்பட்டு ஒரு மொட்டச் சைக்கிள் வாங்கிக் குடுத்திற்ரா போதும்... ஏதோ ஏரப்பிளனில போறமாதிரித்தான் போவாங்க... வாப்பா உம்மாட இட்றமுட்ற தெரியாத பயலுகள்...” என்று தன் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசிக் கொண்டு தன் வேலையில் மும்மூரமாகிக் கொண்டிருக்கிறா. என் பக்கத்திலிருந்து தேநீரைக் குடித்துக் கொண்டிருந்த என் மச்சினன் “மச்சான்! லாவு நம்முட பேயலியாண்ட எளய மகள், அவன் எலிவாலண்ட மகன் கபூரோடக் கூடிக்கு ஓடிற்ராளாம்.. ஊரெல்லாம் திம்மிண்டு கெடக்கு... ஊருக்குள்ள மனிசரப்பத்தி ஒரே இங்காறு பேசித்திரியிற பேயலியான் இப்ப ஊருக்கு முகம் காட்ட முடியாம ஊட் டுக்குள்ள ஒளிச்சிக்கிரிக்கான். ஒரு நாளும் ஆரயிம் பத்தி இங்காறு பேசப்புடா... இப்ப எல்லாம் கண்ணுக்கு முன்னதான்.” என்று கூறி முடிப்பதற்குள் என் மனைவி | "இதெல்லாம் நடக்குமெண்டு - எனக்கு எப்பவே தெரியும். அவள் பள்ளிக்குடத்துக்கு
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெப்ரவரி 2014 (165)

Page 33
போற நேரம் காட்டிக்கு போற பிலுக்கும், நளினமும் வாயால் செல்ல ஏலா... பெரிய திமிர் புடிச்ச தொழுப்புறி...” - என்று பேயலியாண்ட மகளுக்கு ஏசிக்கொண்டு படுக்கையிலிருந்து எழும்பி கண்களைக் கசக்கி வரும் என் சின்ன மகள் யும்னாவை தூக்கி எடுத்துக்கு கிணற்றடிக்கு போகிறாள். வாசலில் நிற்கும் மாதுளைக்கு நீரை ஊற்றி விட்டு, மாமி குசினிக்குள் போகிறா. மச்சினன் பேயலியாண்ட மகளின் விசயத்தை விளக்கிவிட்டு என் புறவளவிற்குள் கட்டிக் கிடக்கும் பசுமாடுகளை அவிழ்த்து பால்கறப்பதற்கு போகிறான். பசுமாடுகள் கத்தும் சப்தத்தைக் கேட்டு “தம்பி மம்மதோ! இண்டைக்கு அயாத்து நபி அப்பாட நீயத்த பால்புக்க ஆக்கித்தான் ஒதணும், கொஞ்சம் துப்புரவா பாலக் கறந்துக்கா, மாட்ற மடிய நல்லாக் கழிவிக்க... முதல்ல அந்தக் கண்டுகள் குடிக்க வெச்சிடு” என்று
OADயின் கண்கள் உடைந்து நீர் வழி. இயங்கிக் கொண்டிருந்த என்வீடு, இ
மகனுக்கு கட்டளையைப் போட்டு விட்டு, மாமி பால் கறக்கும் மகனிடம் போகிறா. மாட்டுக்காலைக்குள் கிடக்கும் கன்றுகள் வாழிபாய்கின்றன.
காலைச் சூரியன் இதமாக வளவிற்குள் நிற்கும் இளந் தென்னைகளைத் தொட்டுத் தடவிச் சிரிக்கின்றான். அப்பொழுது, பூனைப்பல்லண்ட மகன் செலயிமான் எங்கள் ரோட்டால் கரத்தையில சோளகக் குலைகளை ஏற்றிக் கொண்டு “சோளகக் கொல இரிக்கோ! சோளகக் கொல... வேணு மெண்டா வாங்க? - விடியச்சாமம்தான் முறிச்ச கதிரு.. நம்முட பள்ளக்காட்டுக்க போட்ட சோளம், அவிக்கிறதுக்கு நல்ல சோக்கா இருக்கும். வேணுமெண்டா ஓடியாங்கோ...” என்று கத்திக் கொண்டு வருகிறான். இவனின் கத்தலைக் கேட்டு பசுமாட்டுக் காலையடியில் நின்ற மாமி, “புள்ளேய்! அன்னா பூனைப்பல்லன்ட மகன் செலயிமான் சோளக்கொல் வித்துக்காரான்.... ஒன்ட புரிசனப் போய் நல்ல பிஞ்சிக் கொலயாப் பார்த்து அம்பது ரூபாய்க்கு வாங்கிற்ரு வரச்செல்லுகா... பிள்ளைகளுக்கு அவிச்சிக் குடுக்கலாம். குந்தி இரிக்காம் எழும்பி போகச் செல்லுகா... அவனும்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெய்ரவரி 2014 (165)

நாலிடத்துக்கு போறவன்... கெதியாப் போகச் செல்லு, என்று சொல்லிவிட்டு பால் கறப்பதற்கு கட்டிக்கிடக்கும் பசுவொன்றை அன்போடு - தடவிக் கொண்டிருக்கிறா. தாயின் அதட்டலைக் கேட்டு என் மனைவி “இந்த மனிசிர வாய் ஒழுப்புளமாவது சும்மா இரிக்கிறெல்லியா? விடிஞ்சாப் போதும், பழஞ் சோத்துக்கு கத்திற காகம் மாதிரி ஒரே கத்துறதான்.. வயசுபோனகாலத்தில கொஞ்சம் சும்மா இரிக்கேலாதா?... எல்லாத்திக்கும் இட்டுமையும், சண்டித்தனமும் தான். எப்பதான் இந்த சண்டித்தனம் அடங்கப் போகிதோ? ஆடங்கினாத்தான் இந்த ஊடு ஒழுப்புளம் ஒறங்கும்...” என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டு கணவனோடு சோளக்குலை வாங்க றோட்டுக்கு வருகிறாள். செலயிமான் “சோளம்!... சோளம்!!.. போப் புறன் ஓடியாங்கோ... பால்மணக்கிற சோளன், பல்லுக்கு சப்ப பதமாய் இருக்கும்... பிஞ்சி
கிறது. நேற்று வரை உயிர்த்துடிப்/ேA)
ஸ்று அமைதியாகக் கிடக்கிறது.
கதிரி, கடிச்சாப் வாய்க்குள்ள பால் பறக்கும்” என்று கத்துகிறான். | எங்களைக் கண்ட செலயிமான் “வாங்கம்பி நல்ல பிஞ்சுக்கதிர் நூறு ரூபாய்க்கு நல்ல கதிராத் தரட்டா? இப்பதான் முறிச்சிக்கு வாரன்.” என்று கூறி சோளக் குலைகளை எண்ணி எடுக்கிறான். செலமானின் சோளக் கரத்தையை வளைத்து பெண்கள் கூடுதலாக நிற்கின்றனர். மனைவி சோளக் குலைகளை வாங்கி வரும்போது “என்ன இப்பதானா வாங்கி முடிஞ்சயா? வாங்கினா நில்லாம டக்கெண்டு வாறதான... பகலைக்கு அயாத்து நபி அப்பாட பேரில் பாத்திஹாவும் ஓதணும். அவன் மம்மதிர கலியாண விசயம் செரிவந்தா அந்தசீதவிர பேரில பாத்திஹா ஓதுவனெண்டு ஒரு மொறாது வெச்ச... கெதியா வாகா.” என்று மாமி பொரிந்து கொண்டிருக்கிறா. என் மனைவி மாமியப் பார்த்து “இனி ஒண்ட வாய்க்கு பூட்டுத்தான் போடணும். கொஞ்ச நேரம் ஒன்னால சும்மாரிக்கேலாதா? இந்தக் கிழட்டு வயசிலயிம், ஒனக்கு இப்பிடிக் கோவம் இரிக்கப்புடா” என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டு ஊட்டுக்குள் போகிறாள். என் சின்ன மகள் மாமியைப் பார்த்து கையால் கவனம் சொல்லி நளிப்புக்
31

Page 34
காட்டி, தாயோடு போவதைப் பார்த்து எனக்கு அடக்க முடியாத சிரிப்பு.
மாமியின் அட்டகாசமும் அதிகாரமும் அவவோடு ஒட்டிப்பிறந்த பழக்கம். அப்படி நடப்பதில் அவவுக்கு ஆத்ம திருப்தி, மாமி மென்மையான குணமும், ஆழங்காண முடியாத அன்பும், பாசமும் உடைய பெண். என் குடும்பத்தில் யாருக்காவது ஒரு சின்னக் காய்ச்சல் வந்தாப் போதும், கண்மூடிப் படுக்கையே மாட்டா. எந்த நேரமும் மருந்துகளைக் குடிக்கச் சொல்வதும் தலையைத் தடவி விடுவதும் தண்ணிரில் சீலையை நனைத்து நெற்றி உடம்புகளில் ஒற்றிக் கொண்டிருப்பா. மாமி எங்களிடம் எவ்வளவு கோபமாக நடந்தாலும், அதே போன்று ஆழ்ந்த இரக்கமும், அன்பும் உள்ளவ ராக நடந்து கொள்வா. என் பிள்ளைகள் மீது சிற்றெரும்பு கடிப்பதைக் கூடப் பொறுக்கா மல் உயிர்த்துடிப்போடு பார்த்துக்கொள்வா. மாமி மீது என் பிள்ளைகளுக்கும் பாசம்தான். முச்சினன் மம்மது பாலைக் கறந்து வந்து, குசினியில் வைத்துவிட்டு என் மகள் யும்னாவுடன் சரசம் செய்கிறான். வீடு கலகலப்பாகிக் கிடக்கிறது. என் மனைவி தன் தம்பியோடு பகடி பண்ணிச் சிரித்துக் கொண்டிருக்கிறாள். அப்பொழுது குசுனிக் குள் இருந்த மாமி தம்பேய் இஞ்ச வந்து தண்ணிச் சோத்தத் திண்டு போட்டுப் போ. லாவு மரத்தால உழுந்த விளாம்பழமும் பாலுமிருக்கு. சீனியப் போட்டு நல்லாக் கரச்சிக்குடி. வெறுங்குடல்ல கரச்சிக் குடிச்சா நல்லாரிக்கும்." என்று மகனைக் கூப்பிட்டுக் கொண்டு பகலைக்கு கறியாக்க முறித்துவைத்த முருங்கை இலைகளை உருவிக் கந்தப்பார்த்துக் கொண்டிருக்கிறா. பூனை கத்திக் கொண்டிருக்கிறது. வளவுக்குள் நிற்கும் இளந்தென்னைகளிலும் முருங்கை மரங்களிலும் சூரியன் தன் ஆட்சியைச் செலுத்தி, சக்தியை பறைசாற்றிக் கொண் டிருக்கிறான்.
அப்பொழுது சோளகண்ட அகமது, விடியச்சாமத்தில் களப்புக்க வீசிப் பிடித்த மீன்களை எடுத்துக் கொண்டு சப்தம் போட்டு றோட்டால் கத்திவருகிறான். குசினிக்குள் முருங்கை இலையை கந்தப் பார்த்துக் கொண்டிருந்த மாமி தன் மகளிடம் "புள்ளேய! அன்னா சொளகண்ட அகமது மீன் வித்துக்காரான், ஒன்ட புரிசனப் போய், நல்ல
32

கைமீனாப் பாத்து வாங்கிற்கு வரச்செல்லுகா. வெள்ளாப்பில புடிச்ச மீன் நல்ல ருசியா இருக்கும். குந்திக்கிரியாம எழும்பி போகச் சொல்லு" என்று கூறியபடி தன் வேலையில் மும்மூரமாகிக் கொண்டிருக்கிறா. மம்மது சாப்பிட்டுக்கொண்டிருக்கிறான். அவன் பக்கத்தில் எங்கள் வீட்டுப் பூனை கத்திக் கொண்டிருக்கிறது. புறவளவிற்குள் நிற்கும் முருங்கை மரத்தில் நங்கினங்களும், பொக் கான் குருவிகளும் பூச்சி புழுக்களை கொத்திக் கொண்டிருக்கின்றன.
O O. O.
வீடு சோகத்தின் பிடியில் கிடக்கிறது. அப்பொழுது என் பக்கத்து வீட்டு அலிமா ராத்தா வந்து “என்னம்பி மாமிர பாடு எப்படிக் கிடக்கு? கண் முழிச்சிற்ராவா?” என்று கேட்டு, மாமியப் பார்க்க அவ படுத்துக் கிடக்கும் அறைக்குள் போகிறா. அயர்வடையாச் சிற்றெரும்பு போல் என் குடும்பத்திற்காக சதா உழைத்துழைத்து ஒடாகிப் போன மாமி எழும்ப முடியாமல் பாயில் படுத்தபடி கிடந்து தன் காலத்தைக் கணக்கட்டுக்கொண்டிருக்கிறா. நேற்று இரவு நாலு மணியளவில் சுபஹ" தொழுவதற்கு வுழுச் செய்ய, கிணற்றடிக்கு போனமாமிகால்தடக்கி விழுந்து இன்று கையும், காலும் அடிபட்டு பேசவும் கூட முடியாமல் பாயில் கிடப்பதைப் பார்த்து என் மனைவி வேதனையைத் தாங்க முடியாமல் விம்மிக் கொண்டிருக்கிறாள். என் பிள்ளைகள் எல்லோரும் எதுவும் பேச முடியாமல் அமைதியாகப் படுத்துக்கிடக்கும் உம்மம்மாவின் பக்கத்திலிருந்து அவவின் கால்களையும் கைகளையும் பிடித்துப் பிடித்து தடவிக் கொண்டிருக்கின்றனர். என் மகள் யும்னா அவவின் தலையைத் தொட்டுப் பார்த்து அமைதியாக குந்திக் கொண்டிருக்கிறாள். மாமியின் கண்கள் உடைந்து நீர் வழிகிறது. நேற்று வரை உயிர்த்துடிப்போடு இயங்கிக் கொண்டிருந்த என்வீடு, இன்று அமைதியாகக் கிடக்கிறது.
என் வீட்டு நிலைமையை அலிமா ராத்தா பார்த்து "மூத்தம்மா இல்லாம இப்ப ஊடு ஒறங்கிப் பெயித்து” என்று பெருமூச்சை விடுகிறா. பாவம் என் நாய் பொட்டு, ம7மியின் கைய7ல் கிடைக்காத எந்த உணவையும் உண்ணாமல் அழுதபடி வாழைப் பாத்திக்குள் படுத்துக் கிடக்கிறது.
O O. O.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெப்ரவரி 2014 (165)

Page 35
ஒரு முன்னாள் போராளிய முள்ளிவாய்க்கால் நினைங் "முயற்சித் திரு வெற்றிச்செல்வி படைப்பாளுடை
ஈழப் போரின் இறுதி நாட்கள் என்ற தலைப்பில் கடந்த 2012இல் வெளிவந்த ஒரு நூல் அண்மையில் என் கைக்கெட்டியது. இந்நூலின் ஆசிரியர் வெற்றிச்செல்வி என்ற இயக்கப் பெயரைத் தாங்கியவரான வேலு சந்திரகலா. மன்னார் மாவட்டத்தில் அடம்பன் தாமரைக்குளம் கிராமத்தில் 1974 இல் பிறந்த சந்திரகலா, 1991இல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து வெற்றிச்செல்வியானவர்.
- இவர் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்த இறுதியுத்தம் வரை போராளியாகச் செயற்பட்டவர். முன்னர் 1993இல் வெடிவிபத்தொன்றில் தனது ஒற்றைக் கண்ணையும், ஒற்றைக் கையையும் இழந்த மாற்றுத்திறனாளி இவர். 1997 முதல் எழுத் துத் துறையில் பிரவேசித்த இவர் தனது கவிதைகள், சிறுகதைகள் வழியாகப் பெயர் பெற்றவர். குறுகிய காலத்தில் ஈழத்துத் தமிழ்மக்களின் சமகால இருத்தலைப் பதிவுசெய்யும் இவரது ஐந்து நூல்கள் பின் னாளில் அச்சுவாகனமேறியுள்ளமை பிர
-என்.செல்வராஜா
நூலியலாளர் லண்டன்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெப்ரவரி 2014 (165)

வர்
நாடகள்
(கள்: மகள்" பியின்
மிப்பூட்டுகின்றது.
1999 முதல் 2004 வரையிலான காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகச்சேவையில் இணைந்து, புலிகளின்குரல் வானொலியில் அறிவிப்பாளராகவும் நிகழ்ச்சித் தயாரிப் பாளராகவும் வெற்றிகரமாகச் செயற் பட்டவர் வெற்றிச்செல்வி. அத்துடன், பெண் புலிப் போராளிகளின் உத்தியோகபூர்வ வெளி பீடான சுதந்திரப் பறவைகள் பத்திரிகையிலும் ஊடகவியலாளராகக் களப் பணியாற்றியவர்.
இவரது “இப்படிக்கு அக்கா” என்ற கவிதைத் தொகுதி கிளிநொச்சியில் 2004இல் வெளியிடப்பட்டது. - இதுவே இவரது முதலாவது நூல். பின்னைய நூல்கள் அனைத்தும் விளம்பரமின்றி மெளனமாகப் பெய்யும் மழையாகின. அதுவே எனது இவ்வறிமுக உரைக்கான தேவையையும் வலி யுறுத்துகின்றது.
2009இல் துப்பாக்கிகள் மௌனிக்கப் பட்டு முள்ளிவாய்க்காலில் ஈழ யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் காரணமாக, இராணுவத்திடம் சரண டைந்த விடுதலைப் போராளிகளுடன் வெற்றிச்செல்வியும் இணைந்துகொண்டார். அதன் பின்னர் தடுப்புமுகாம் வாழ்க்கை, புனர்வாழ்வுமுகாம் வாழ்க்கை எனக் கழிந்து, புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பின்னர் மீண்டும் பீனிக்ஸ் பறவையாக மீண்டெழுந்த இவர் தீவிரமாகத் தன் உள்ளக்குமுறல்களை அமைதியாக எழுத்தில் வடிக்கத் தலைப்பட்டார்.
அதன்பின்னர் 2012இல் - வெளியான
33

Page 36
நான்கு நூல்களும் இவரது போர்க்கால அனுபவங்களையும் அதன் பின்னரான வாழ்க்கையையும் பிரதிபலித்கிருந்தன. இத்தகைய நேரடிப்பங்காளர்களின் முள்ளி வாய்க்கால் அனுபவங்கள் வேறெங்கும்
முன்னதாகப் பதிவானதாக என்னால் குறிப்பிட முடியவில்லை. இவர் எழுதிய முடியாத ஏக்கங்கள், காணாமல் போனவனின் மனைவி ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும், போராளியின் காதலி என்ற நாவலும், ஈழப்போரின் இறுதிநாட்கள் என்ற தலைப்பில் முள்ளிவாய்க்கால் இறுதிக்கட்டநினைவுகளை ஆவணமாக வெளிப்படுத்திய கட்டுரைநூலும் 2012 இலேயே அசுரவேகத்தில் வெளியாகி வெற்றிச்செல்வியின்பால் கவன ஈர்ப்பை வெளிப்படுத்தியிருந்தன.
புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப் பட்ட பின்னர் வெற்றிச்செல்வி, மன்னார் மாவட்டத்தில் தேனி என்ற பெயரில் மாற்றுத் திறனாளிகளுக்கென மாந்தை மேற்குப் பகுதியில் ஒரு அமைப்பினை நிறுவி அதன் செயலாளராகவும் பணியாற்றி வருகின்றார். இவ்வமைப்பினுரடாக தன்னையொத்த மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த சமூகத்தையும் முன்னேற்றும் நோக்கில் சிறுவர்களுக்கான கல்வி
34
 

முள்ளிவால்க்னால் சேரிகத்தை இலக்கிய மன ஆவணப்படுத்தி வலnற்றில் முக்கிய இடத்தைத் தக்கவைத்துக்ைெண்டுள்ள வெற்றிச்செல்வியின் வந்த்தைகளிலேயே அவ08 எழுத்ே முயற்சி எத்ைேன வலிள்ை மிக்ேை என்பதை நாம் உணந்த்ெேnைள்ள
(Qශුණිණිභ්‍රණ
வளர்ச்சியிலும் ஈடுபட்டுவருகிறார்.
வெற்றிச்செல்வியின் பணியினை
கெளரவித்து மன்னார் தமிழ்ச்சங்கம் தான் அண்மையில் நடாத்திய தனிநாயகம் அடிகளின் நூற்றாண்டு விழாவின்போது, முயற்சித் திருமகள் என்னும் விருதினையும் வழங்கிச் சிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத் தக்கது.
காணாமல் போனவனின் மனைவி என்ற நூல் வெற்றிச்செல்வியின் சிறுகதைத் தொகுப் பாகும். சென்னை சோழன் படைப்பகம் டிசம்பர் 2012 இல் இந்நூலை 80 பக்கங்களில் வெளியிட்டிருந்தது. இந்நூலில் காணாமல் போனவனின் மனைவி, குங்கும கேள்வி, எதிர்பார்ப்பு, முடியாத ஏக்கங்கள், சணல் 4, சிங்கிடி 1, சலோனி, நல்ல கதை, அம்மாவின் பிரச்சினை, சித்திரவதை, அவளின் பிரச்சினை, மைனாவே மைனாவே மழைவருமா, ஆகிய 12 கதைகள் இடம்பெற்றுள்ளன.
இறுதி நாட்களும் எனது பயணமும் என்ற பெயரில் இவர் எழுதிய யுத்தகாலப் பயணக்கட்டுரை இணையங்களில் முன்னர் வெளியாகியிருந்தது. இதுவே பின்னர் ஈழப் போரின் இறுதி நாட்கள் என்ற தலைப்பில் கடந்த 2012இல் நூலுருவிலும் வெளிவந்திருந்தது. இவர் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளையும், தொடர்ந்து தடுப்பு முகாம் காலகட்டத்து வாழ்க்கையையும் இந்நூலில் பதிவுசெய்திருக்கிறார். முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி நாட்கள் பற்றி யுத்தத்தின்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெப்ரவரி 2014 (165)

Page 37
இறுதித்தருணம் வரைகளத்தில் போராளியாக நின்று வந்த ஒருவராகவிருந்து எழுதிய இந்த நூல் ஈழ இறுதிப்போரின் சாட்சியமாக முக்கி யம் பெறுகின்றது. எந்தப் புனைவுகளுமின்றி இறுதிப் போரையும் அந்தப் போரின் துயரத்தையும் அங்கு நடந்தவைகளையும் தெளிவாக எழுதியிருக்கிறார் வெற்றிச்செல்வி. இவரால் வெளிப்படையாகச் சொல்லப்பட்ட விடயங்களைவிடவும், வரிகளுக்கிடையில் சொல்லாமல்விட்டுச்சென்ற செய்திகளே அதிகமாக வாசகரைக் கவர்ந்திழுக்கிறது.
ஈழப் போரின் இறுதி நாட்கள் என்ற இந்நூல் சென்னையிலிருந்து தோழமை வெளி யீடாக, டிசம்பர் 2012இல் 120 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது.
வெற்றிச்செல்வி, இராணுவத்தின் தடுப்பு முகாம் வாழ்வின்போது எழுதிய உயிரே உயிரே என்ற நாவல் தமிழகத்தின் தினமணி பத்திரிகையில் தொடராக அக்காலகட்டத்தில் வெளிவந்தது. ஈழப்போர்பற்றிய தமிழகத்தின் தேடல்மிகுந்த அவ்வேளையில் பரபரப்பாக உணர்வுடன் வாசிக்கப்பட்டது இக்கதை. வெற்றிச்செல்வியின் படைப்பாற்றலின் மற்று மொரு பரிமாணமாக உயிரே உயிரே என்ற இந்த நாவல் அமைந்தது. இதுவே பின்னர் போராளியின் காதலி என்ற பெயரில் நூலுருவாகியிருக்கிறது. சென்னை சோழன் படைப்பகம் இந்நாவலை டிசம்பர் 2012இல் 152 பக்கங்களில் வெளியிட்டிருந்தது.
முள்ளிவாய்க்கால் சோகத்தை இலக்கிய மாக ஆவணப்படுத்தி வரலாற்றில் முக்கிய இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ள வெற்றிச்செல்வியின் வார்த்தைகளிலேயே அவரது எழுத்து முயற்சி எத்துணை வலிகள் மிக்கது என்பதை நாம் உணர்ந்துகொள்ள முடிகின்றது.
கீழ்க்கண்ட வரிகள் போராளியின் காதலி என்ற அவரது நாவலின் முன்னுரையின் ஒரு சிறு பகுதியாகும்.
“சிறிலங்காப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் இதை எழுதினேன். அழப் பெட்டிக்குள் ஒளித்து வைத்திருந்த இந்நாவலை அவனிக்குத்தர இப்போதும் எனக்குத் தயக்கம் தான். காரணம் நான் எழுத வேண்டிய கதைகள் இன்னும் இருக்கின்றன. அதற்குள் என் முன்னால் நீண்டிருக்கும் துப்பாக்கி ஒருவேளை என்னைத் தீர்த்துக்கட்டிவிட்டால்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெப்ரவரி 2014 (165)

இனிமேல் என்னால் எழுதமுழயாமலே போய்விரும். அந்தக் கவலை தவிர வாழும் ஆசை அதிகம் இல்லை எனக்கு. ஏனெனில் மரணம் வராதவரைக்கும் வாழவேண்டி இருக்கிறதே என்ற கட்டாய வாழ்க்கை வாழும் என்னையொத்த தமிழர்களில் ஒருத்திதான் நானும்.
போரின் இறுதி நாட்களில் முள்ளி வாய்க்கால் பகுதியில் வாழ்ந்தவர்கள் எவரும் இப்பாத்திரப் படைப்புகளைஉண்மையெனவேஎற்றுக்கொள்வார்கள். அந்த வாழ்க் கையை நான் மீள எழுதும்போது மீண்டும் வன்னிமண்ணில்குருதிநெழயோரும்பினவாடையோரும் எறிகணை வீச்சுக்குள்ளும் வாழ்ந்த உணர்வையே பெற்றேன். வலியோரும் வேதனையோரும் இதனை எழுதிக்கொண்டிருந்த நாட்களில் வீதியில் பயணித்த ICRC வாகனத்தின் கொழயினால் ஏற்பட்ட சத்தம் கூட எறிகணை பராஜ்பண்ணப்படுவதாய் நினைத்து என்னை நிலத்தில் விழவைத்திருக்கிறது. காற்றால் அசைக்கப்பட்ட தகரத்தின் சத்தம்கூட எறிகணை கூவிக்கொண்டு வருவதாய் நெஞ்சை படபடக்கச் செய்திருக்கிறது. அந்த உயிராபத்தான சூழலுக்குள் மீண்டும் வாழ்ந்த உணர்வு எழுதி முழத்தபோது இருந்தது. இதை பதிப்பாக்கத்துக்காக கணனியில் பொறித்தபோதும் அதை மீள்வாசிப்புச் செய்தபோதும் மீண்டும் மீண்டும் குருதி பாய்ந்த வன்னிக்குள் கிடந்து எப்பழத் துழத்திருப்பேன் என்பதை இதை வாசிக்கும் ஒவ்வொருவரும் புரிந்துகொள்வீர்கள்.”
வெற்றிச்செல்வியின் மேற்கண்ட முன் னுரை இப்படியாக முடிகின்றது.
"மேலும் எழுதக்கூழயவர்களெல்லாம் உங்கள் வாழ்க்கையை வரலாற்றோரு எழுதி விருங்கள். முள்ளிவாய்க்கால் மணற்காட்டில் புதைந்துபோன தமிழிடங்களைப் போல தமிழர் வாழ்க்கையும் கனத்தில் மறைந்து விடக்கூடாது என்பது எழுதுகோல்களிடம் நான் கோரும் விண்ணப்பம். எங்கள் எலும்புக்கூடுகளுக்கு மேலாக உயிர்த்தெழப் போகும் புத்தர் சிலைகள் எப்போதும்போல இடங்களை மட்டுமல்ல வரலாற்றையும் விழுங்கிவிரும்”
எவ்வளவு சத்தியமான உண்மை. ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றை இலக்கியங்களுக்குள் தான் தேடவேண்டு மென்று முன்னொருபோது எங்கோ நான் கேட்ட வாசகங்கள் வெற்றிச்செல்வியின் மொழியில் மீண்டும் என் செவிப்பறையில் அதிர்கின்றது.
--
12.12.2013 O O O
35

Page 38
ஆனந்த, தான் நிர்மாணித்த நூல் நிலையக்க ஒன்றில் அமர்ந்தவாறு எதிர்ப்புறம் பார்த்துக் செ பார்வையும் நிகழ்வதற்கு நீண்டகாலமாக ஒரு இப்படி இருக்கையில் சிலநேரம் தான் சிறு வாழ்க்கையிலே செய்த ஒரே தவறாக அதனை வாசிக்கும் பழக்கம் அவனுள் ஆழமாக வேரூ விநியோகம் இடம்பெறவில்லை. அன்று அப்பகு பாலைவனமாகவே காட்சிதந்தது. நூல் பரிமாற் வசதிகள் காணப்படவில்லை. புத்தகம் ஒன்றை பன்னிரண்டு மைல்கள் நடந்துவர வேண்டியிரு தொலைவு நடந்து கம்பஹாவுக்கு வந்தால்தான்
அப்படி அவன் செய்த களவு என்னவென்று மேசை லாச்சியினுள்ளே தனது சிறிய கையை எடுத்துச் சென்று தபாலாபிஸில் கொடுத்து மூலமாக நகரத்தில் உள்ள புத்தகக் கடைக்கு கொள்வதுதான். மற்றய கிராமத்தவர்களைப் ே பெற்றுக் கொள்ளப்படும் புத்தகங்கள் அவர் குட்டியின் அளவு கூடப் பெறுமதிவாய்ந்ததாகத்
என்றாலும் ஆனந்த தனது நண்பர்களுடன் நண்பர்களுக்கும் இதில் ஆர்வம் உள்ளது நீண்டநாட்களாக உள்ளத்தில் உறைந்திருந்த தொடங்கியது. தன்னிடம் இருந்த பத்துப்பதி அடுக்கிவைத்து தனது வீட்டில் நூல்நிலையம் ஒ வெளிப்பட்டன என்றாலும் படிப்படியாக ( மாதங்களில் மாயமானது. புத்தகம் இன்றி அது ெ வீழ்ந்தது.
ஆனந்தவின் நூல்நிலையக் கனவு ப பலதடைகளைத் தாண்டிய பின்னர் நிறைவேறி அமைத்துக் கொண்ட நூல்நிலைய மேல்ம நீட்டிநிமிர்த்தி அமர்ந்தவண்ணம் யதார்த்தவாத காணப்பட்டான். அதில், முதலில் நன்றாகச் ெ அழகிய நெல்வயல்வெளியும்காட்சியளித்தன. க. ஓசை காதுக்கு இனிமை சேர்த்தது. நீலவானத்தி 36
 

மொழிபெயர்ப்புச் சிறுகதை மூலம் கலாநிதி கே. ஜயதிலக தமிழில் கலாபூஷணம் எம்.எம். மன்ஸ்ர்ே (மாவனல்லை)
ட்டிடத்தின் மேல் மாடியில் வசதியான கதிரை 5ாண்டிருந்தான். இந்த நூல்நிலையமும், இந்தப் யதார்த்தசிந்தனை அவனுள் எழுந்திருந்தது. வயதில் செய்த ஒரேயொரு களவு அல்லது எண்ணுவதுண்டு. அன்றுமுதல் புத்தகங்களை ன்றி இருந்தது. அங்கு கேள்வியின் அளவுக்கு தி, நூலகங்களைப் பொறுத்தவரையில் ஒரு சிறு ]றம் செய்யவோ, விலைகொடுத்து வாங்கவோ க் கொள்வனவு செய்வதாக இருந்தால் சுமார் ந்ததோடு பஸ் பிடிப்பதென்றால் நான்குமைல் சாத்தியமாகும். பார்த்தால், தனது தந்தையின் பணம் வைக்கும் நுழைத்து இரண்டு அல்லது மூன்று ரூபாவை காசுக்கட்டளை அல்லது தபால் கட்டளை அனுப்பி தனக்குப் பிடித்த நூலைப் பெற்றுக் பாலவே அவனது தந்தைக்கும் இப்படியாகப் கடையிலிருந்து வாங்கிவரும் கருவாட்டுக் தெரியவில்லை. இது பற்றிச் சொல்லிப் பெருமைப்படுவான். என்பதை அவன் உணர்ந்து கொண்டான். ஆசை காலப்போக்கில் வளர்ச்சியடையத் னைந்து புத்தகங்களை மேசை ஒன்றின் மீது ன்றினை ஆரம்பித்ததும்தான் அந்த உணர்வுகள் வளர்ச்சிகண்ட நூல்நிலையம் மூன்றுநான்கு வறுமை கண்டதன்மூலம் மரணப்படுக்கையில்
லவருடங்களுக்குப் பின்னர் நனவாகியது. பபோதும் அவன் முன்னரைவிடவும் சிறப்பாக ாடியில் வசதியான கதிரையில் கால்களை உலகத்தில் பார்வையைச் செலுத்தியவனாகக் சழித்து வளர்ந்த புற்தரையும், அதற்குமேலால் ல்லொன்றின்மீதுதவழ்ந்துவரும்நீரோடையின் ல் இடை இடையே வெண் மேகங்கள் நீந்திக்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெப்ரவரி 2014 (165)

Page 39
கொண்டிருந்தன. மழைக்காலங்களில் இருண்டாலும் நீடிப்பதில்லை. அதற்குச் கீழ் மிருகங்களினதும், வன ஜீவிகளினதும் நடமாடும் சந்தர்ப்பத்தை பிரதிநிதித் துவப்படுத்தும் அவை எவ்வளவு சமாதான மானவையாகக் காணப்படுகின்றன.
“உங்களைச் சந்திக்க யாரோ வந்திருச் கினம்” அது கீழ்மாடியில் அமைந்திருக்கும் நூல் நிலையத்தில் கடமையில் இருக்கும் பெண்ணின் குரல். அக்குரல் அவனது மெய்யுடம்புக்குக் கேட்டாலும் மானசீகச் செவிகளில் விழவில்லை. இது அந்தப் பெண்ணுக்குப் புதியஅனுபவமல்ல.
“உங்களைச் சந்திக்க ஒருத்தர் வந்திருக்கிறார். அரிதான நூல் ஒன்றைக் கொண்டு வந்திருக்கிறார்” மீண்டும் அவள் சொன்னாள்.
"அரிதானபுத்தகம் ஒன்று”என்ற சொற்கள் செவிகளை ஊடறுத்துச் சென்றதும்தான் தாமதம் கதிரையில் இருந்து அவன் எழுந்துநின்றான்.
ஆனந்த கீழே வரும்போது இரண்டு மூன்றுபேர் புத்தகத்தைப் பரிசோதித்துக் கொண்டிருந்தனர். காலத்தின் இயல்பான சேதத்தைத் தவிர வேறு பாதிப்புக்கள் அந்தப் புத்தகத்துக்கு ஏற்பட்டிருக்கவில்லை.
அது பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒருபுத்தகம். அதாவது "ஆயி ரத்துஎட்டு நூற்றி எண்பத்தோராம் ஆண்டுக் குரியது" ஒருவர் கூறினார்.
“சிங்கள இலக்கண நூல் ஒன்று அதியசமாக இருக்கிறது, எழுதி இருப்பவர் ஒரு வெள்ளைக்காரர்; அதுவும் வெள்ளைக்கார மதப்போதகர் ஒருவர்"
"அனேக இலக்கண அமைப்புக்கள் இன்றைக்கும் பொருந்தக் கூடியதாக இருக்கின்றன. என்னகருத்தில் எழுதினாரோ எனக்குத் தெரியாது."
“இதுவும் அக்காலத்தில் மார்க்கத்தைப்
மற்ற கிற்ாமத்தவர்களைப் போல இப்படியாகப் பெற்றுக் கொள்ளப் கடையிலிருந்து வாங்கிவரும் க பெறுமதிவாய்ந்ததாகத் தெரிவில்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெப்ரவரி 2014 (165)
 
 

பரப்புவதற்கு வெள்ளையர் மேற்கொண்ட ஒரு வழி முறையாகும். சுதேசியர்களுக்கு அவர்களது மொழியிலேயே சொன்னால்தான் அது இலகுவில் மனதில் பதிந்துவிடுகிறது. அதற்கு உதவும் விதத்தில் கிறிஸ்தவ போதகர்கள் சிங்கள இலக்கணத்தைக் கற்பிப்பதற்கு எழுதப்பட்ட புத்தகம்தான் இது. இதோ எழுதியவரின் பெயர் கூடக்காணப்படுகிறது. எஸ்.ஸி.லாஒஸ். கடதாசியும் நல்ல தரத்தில் இருக்கிறது, அச்சுப்பதிவும் அபாரம், யார் இதனைக் கொண்டுவந்தது?"
"இதோ இவர்தான்” ஒரளவு அழுக் கடைந்த ஆடையை அணிந்திருந்த இளைஞன் ஒருவனை அவள் காட்டினாள்.
"உமக்கு எங்கிருந்து இந்தப் புத்தகம் கிடைத்தது?” ஆனந்த அந்த இளைஞனைப் பார்த்துக் கேட்டான்.
"வளவு ஒன்றின் குப்பைத் தொட்டியில் கிடந்தது ஸார். இப்பொழுதெல்லாம் வளவுகளின் குப்பைத் தொட்டிகளில் தான் இத்தகைய புத்தகங்கள் இருக்கும்.”
"நீர் இதனை விற்பதற்கா கொண்டு வந்தனீர்?"
"இல்லை இல்லை ஸார், இதனை நூல் நிலையத்துக்கு அன்பளிப்பாகத் தரத்தான் கொண்டுவந்தேன். இது, இதுபோன்ற நூல் நிலையத்தில் இருந்தால்தான் யாருக்காவது பிரயோசனப்படும் எங்கள் யாருக்கும் பயன்படாது.”
ஆனந்த புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கலானான். “இது மிகவும் பெறுமதி வாய்ந்தபுத்தகம் ஒன்று. அழுக்குப் படிந்திருப்பதால் அதன் பெறுமதிவிலை ਘUTਕੁੰ தெரியவில்லை எங்களது திருப்திக்காக நீர் எவ்வளவாது எடுத்துக் கொள்ளவேண்டும்.” ஆனந்த ஒரு நூறு ரூபாநோட்டு ஒன்றை அந்த இளைஞனிடம் நீட்டியவண்ணம் சொன்னான்.
வே அவனது தந்தைக்கும் பரும் புத்தகர்கள் அவர் நவாட்டுக் குட்டியின் அளவு கூடப் Ο Ανα
37

Page 40
“இல்லை இல்லை, நான் இதற்கு விலையாக பணத்தைப் பெற்றுக் கொண்டால் அன்பளிப்பு என்ற சொல்லுக்கு அர்த்தம் இல்லாமல் போய் விடும் மனமகிழ்ச்சியும் இருக்காது.”
"ஹா... ஹா... அதுவும் அப்படியா? சரிசரி அப்படியானால் உமக்கு மிகவும் நன்றிகள். நீர் இன்பத்தை அனுபவியும். திருப்தி சந்தோஷம் என்பது பணம் கொடுத்து வாங்கமுடியாது.”
அந்த இளைஞன் சென்றதன் பின்னால் பலரும் அந்த நூலைப் பற்றி சிலாகித்துப் பேசத் தொடங்கினர்.
“இது அன்று சதக்கணக்கில் விற்பனை செய்யப்பட்டிருந்தாலும் இன்று அதன் பெறுமதி ஆயிரம் ரூபாவுக்கும் மேல் விலைபோகும்.”
"இப்படிப்பட்ட புத்தகங்கள் நாள் செல்லச் செல்ல பெறுமதி கூடிக் கொண்டேபோகும். ஐரோப்பாவில் - சிங்களம் கற்பிக்கின்ற சில பல்கலைக்கழகங்களில் இது போன்ற புத்தகங்களை பத்தாயிரம் ரூபா கொடுத்தும் வாங்குவார்கள்”.
சிறிது நேரத்தில் எல்லோரும் கலைந்து சென்றனர். விலைமதிப்பற்ற புத்தகத்தைப் பற்றி பேச்சு அத்தோடு நின்றுவிட்டது. மறுநாள் மீண்டும் அங்கு கடமைபுரியும் பெண்ணுக்குத்தான் அதன் நினைவுவந்தது.
- "ஸார், நேற்றுக் கிடைத்த அந்த கிடைப்பதற்கு அரிய நூலை எடுத்தீங்களா?” அவள் வழமைபோன்ற மனோலோகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த ஆனந்தவிடம் கேட்டாள்.
“இல்லை, நான் எடுக்கேல்ல”
"அது வைத்த இடத்தில்தான் இருந்தது. நான் இப்போ அதை எடுத்து பட்டியல்
- கலாபூஷணம் எம்.எம்.மன்ஸுர்
(மாவனல்லை)
38

படுத்தப் பார்க்கைக்க அதைக் காணல்ல. அரிதான புத்தகங்களின் கீழ் அதனைப் பதிவு செய்யவேணும், எல்லா இடங்களிலேயும் தேடிட்டேன் காணலியே ஸார்”.
- “வேறு புத்தகங்களுடன் கலந்து செக்ஷன் மாறியிருக்கலாம். அதுவுமல்லாமே எவரும் அதனைக் களவாடக் கூடிய புத்தகமல்ல அது.. ”
மீண்டும் நூல் நிலையம் முழுவதும் தேடியும் அந்தப் புத்தகம் கிடைக்கவே யில்லை. அதன் பின்னர் முன்தினம் நடந்த கலந்துரையாடல் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. - “நேற்று யார் அந்த இடத்தில் நின்றிருந்தார்கள்?”
- "அதைப்பற்றியென்றால்
சரியாக நினைவில்லை. ஆனாலும் எங்களுக்கு அறிமுக
மில்லாத இரண்டொருவர் இருந்தாங்க.” - "அவ்விடத்தில் புத்தகத்தின் பெறுமதி பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டதுதான் காணாமல் போனதற்கு காரணமாகும்.”
மூன்று மாதங்கள் கழியலாயின. இக்காலத் தில் காணப்படாத புத்தகம் கிடைக்கப்பெறாத புத்தகமாகக் கணிக்கப்பட்டது. மனதில் பதியக்கூடிய அளவுக்கு அது ஒரு பாரமாகத் தெரியவில்லை.
ஒருநாள் காலையில் முன்னர் கண்டிராத ஒருநபர் ஆனந்தவின் வீட்டுமுற்றத்தில் காணப்பட்டான். அவனது - கையில் காணப்பட்ட கடதாசி உறையில் ஏதோ
இருப்பதுபோலத் தோன்றியது.
”ஏன், என்ன?” ஆனந்த கேட்டான். “இல்லை ஒன்றும் இல்லை”
"ஒன்றும் இல்லாமல் இங்கு என்ன செய்கிறாய்?”
அவன் போலியான தனது நடிப்பை வெளிக்காட்டினான்.
“என்னிடம் மிகவும் பெறுமதி கூடிய பழைய புத்தகம் ஒன்று உள்ளது.”
"அரிதான புத்தகம்..? எங்கே கொடு பார்க்கலாம்”
அவன் தனது கையில் இருந்த கடதாசி உறையைத் திறந்து அந்த நிறம்மாறிய புத்த கத்தை எடுத்து ஆனந்தவிடம் கொடுத்தான். - புத்தகத்தைக் கண்டதும் ஆனந்த மேலே சென்று கீழேவிழுந்தவனானான். அது உள்ளார்ந்தமாக நிகழ்ந்ததால் வந்திருந்த வனுக்கு விளங்கவில்லை. அந்தப்புத்தகம் வேறு
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெய்ரவரி 2014 (165)

Page 41
எதுவுமல்ல. கொஞ்சக் காலத்துக்கு முன்னர் இங்கிருந்து காணாமல்போன விலைமதிக்க இயலாத புத்தகம்தான். அப்படியானால் அது அந்த லாஓஸின் இலக்கண நூல்தான்.
"எதற்காக இங்கே கொண்டுவந்தீர்? ஆனந்த எந்தவித பதற்றமும் இன்றிக் கேட்டான்.
“பழையதானாலும் இது மிகப்பெரிய பெறுமதியான புத்தகம். இது போன்ற புத்தகங்கள் புத்தகசாலைகளுக்குத் தான் நல்லது”
“யார் சொன்னது?" "இதை எனக்குத் தந்தவர்” “யார் அந்த ஆள்?" "எனக்கும் சரியாகத் தெரியாது, அமுணுகுபுர பக்கத்தைச் சேர்ந்தவர். இது அவருக்குக் கிடைத்த அன்பளிப்பாம். இது ஐயாயிரம் ரூபா மதிக்கும். வெள்ளைக்காரர் என்றால் பத்தாயிரத்துக்கு என்றாலும் எடுப்பாராம். ஆனால் அவர் பலரிடம் காண்பித்துப் பார்த்தாராம். எவரும் வாங்கவில்லையாம். வெள்ளைக் காரனிடம் கொடுத்தபோது தூக்கி எறிந்துவிட்டாராம்.”
'இது பின்னால் விரட்டக் கூடிய பிரச்சினையல்ல. அப்புத்தகம் தன்னு டையதோ, நண்பனதோ, தனது நூல் நிலையத்துக்கோ சட்டப்படி சொந்த மானதல்ல' வேறு எந்தவகையில் சிந்தித் தாலும் பிரச்சினைக்கு உள்ளாகக் கூடியதல்ல. அதிலிருந்து விலகிவிடுவதுதான் அறிவுக்கு நல்லது.
"உமக்கு இந்தப் புத்தகத்துக்கு எவ்வளவுவேண்டும்?”
"குறைந்தது ஆயிரம்”
“ஆயிரம் ரூபா?... ; இதனை இங்கே கொண்டு வந்ததால் ஐந்து ரூபாய் தருகிறேன்.”
“நல்லது ஸார், எனக்கு பத்துரூபா தாருங்கள்”
- ஆனந்த அவனுக்கு இருபதுரூபா கொடுத்துவிட்டு அந்த அரிய புத்தகத்தை விலைகொடுத்து வாங்கினான்.
- பெரிய இலாபம் கிடைத்ததைப் போல வந்தவன் மகிழ்ச்சியுடன் திரும்பிச் செல்வதை அதே இடத்தில் நின்றவாறே பார்த்துக் கொண்டிருந்தான் ஆனந்த.
0 0 0
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெப்ரவரி 2014 (165)

|தொலையாத பொலிகையூர்
நமல் சு.க.சிந்துதாசன்
மேட்டுநில நீராய்.......
என்னிலிருந்து பிடிப்பற்று வழிந்த “நம்பிக்கை”
காலக்கிடங்கிறங்கி
நானளைய முடியா ஊற்றோடு கலந்திற்று
குட்டையொன்றில் கால் நனைத்து நடக்கிறேன்.
பாதங்களில்........ ஒட்டிக்கொள்ளும்
"வெண்மணல்” வழிநெடுக சிந்திக்கிடக்கிறது.
விட்டோடியவையில்..... தொலைந்தெழுகிறேன். நான் தொலைத்தவற்றை
ஸ்பரிசித்து அடியொற்றி வருகிறது....... தொலைக்கமுடியா
என்நிழல்.
“ஐயோ ஐயோ' என்று நெஞ்சைப்பிடித்தபடி கத்தும்
அப்பாவுக்கு எப்படி ஆறுதல் சொல்லலாம்...
எங்கள் தாய்மனையைத் தகர்க்கும் அரக்கர்களின் ஆட்டத்தை எவ்வாறு நிறுத்தலாம்.
தாய்மனையைப்பிரிந்த துயரம் தாளாமல் தன்னுயிரையே விட்ட அப்பப்பாவைப் போல என் அப்பாவும் ஆகாமல் எப்படிக் காக்கலாம்...
கா
நாங்கள் அநாதையாகாமல் எப்படிப் பிழைக்கலாம்......
தாக்க...
அறிக்கை அரசியல்... அடையாள குந்தியிருத்தல் போதும் எழுக! குலம் காக்க!!
"பா# -
- அம்பிகை சண்முகன் /
39

Page 42
இலங்கைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைகளின் தாய்த் துறையாக விளங்கிவரும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையானது கடந்த டிசம்பர் மாதம் 7ம் திகதி 'தமிழியல் ஆய்வுப் போக்குகள் - அன்றும் இன்றும்' எனும் தலைப்பில் நடாத்திய தேசியக் கருத்தரங்கு தொடர்பான செய்திகளை ஞானம் தை இதழில் பேரா. துரை மனோகரன் அவர்கள் தொகுத்துத் தந்திருந்தார்கள். அந்தத் தரவுகளின் தொடர்ச் சியாக அந்நிகழ்வில் கவனத்தை ஈர்த்த மேலும் சில விடயங்களை இங்கே தொகுத்துத் தரலாம் என நினைக்கின்றேன்.
ஒவ்வொரு வருடமும் வெறும் கற் பித்தலுடன் மட்டும் நின்று விடாது பல் வேறு வெளிக்களச் செயற்பாடுகளில் ஈடுபட் டும், தனித்த கவனத்துடன் தம் துறை மாணவர்களைப் பயிற்றியும் மிகச் சிறப்பான மாணவர் குழாத்தை வெளியேற்றி வரும் தமிழ்த்துறை, வருடந்தோறும் வெளிவாரி மாணவர்களுக்கான கருத்தரங்குகளையும் நடாத்தி வருகின்றது.
இன்னும், பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தையும் தமிழ்த்துறையே பொறுப்பேற்று நடாத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், ஆள ணிப் பற்றாக்குறை மற்றும் பருவகாலத் தேர்வு முறையின் கீழான வேலைப்பளு அதிகப்பு என்பவற்றின் காரணமாக நீண்ட காலமாக தேசியக் கருத்தரங்கு எதனையும் ஒழுங்கு செய்ய முடியாத நிலையும் தமிழ்த்துறைக்கு இருந்து வந்தது. இந்த நிலையில், இளந் தலைமுறையின் விரிவுரை யாளர் குழாம் தமிழ்த்துறையில் இணைந்து கொண்டதை அடுத்து துறைத்தலைவர் பேராசிரியர் வ. மகேஸ்வரன் அவர்கள் ஒரு தேசியக் கருத்தரங்கை நிகழ்த்தத் திட்டமிட்டார். இத்தேசியக் கருத்தரங்கு குறித்த செய்திகள் பரவலுற்ற போது அது அறிவுசார் சமூகத்திடையே பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த எதிர்
- திருமதி ஆன்யாழினி
சதீஸ்வரன்
11-1111111111121114 11:41 11 11:47:41 +n 1444 114 11:14:14:11
தமிழ்த்துறை,
பேராதனைப் பல்கலைக்கழகம்.
A0

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையால் ஒழுங்குசெய்யப்பட்ட 'தமிழியல் ஆய்வுப் போக்குகள் - அன்றும் இன்றும்' - கருத்தரங்கு தொடர்பான ஒரு பார்வை.
பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், குறித்த கருத்தரங்கை நடாத்தி முடித்தனர், பேரா சிரியர் வ. மகேஸ்வரன் தலைமையிலான தமிழ்த்துறையின் இளம் விரிவுரையாளர் குழாம்.
இக்கருத்தரங்கைப் பொறுத்தவரையில் சிறப்பித்துக் கூற வேண்டிய சில விடயங்கள் உள்.
த முதலாவதாக, கட்டுரையாளர்கள் இலங் கையின் ஏனைய பல்கலைக்கழகங்களின் அனைத்துத் தமிழ்த்துறை, மொழித் துறைகளையும்சார்ந்தோராய் இருந்தமையைக் குறிப்பிடலாம். கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு கருத்தரங்கு குறித்த தமது கருத்துக்களைச் சொல்ல இறுதி அமர்வுக்குத் தலைமை தாங்கிய பேரா. எம். ஏ. நுஃமான் அவர்கள் வாய்ப்பளித்த | போது மேடையேறிய இரு மாணவர்களும் இதனையே விதந்து கூறியதோடு இது வரைகாலமும் புத்தகங்களில் பெயர்களாக மாத்திரமே தாம் பார்த்த பேராசிரியர்களை நேரில் கண்டு அவர்களது உரைகளைக் கேட்க வாய்ப்பளித்தமைக்காக மிக உணர்வு பூர்வமாகத் தமிழ்த்துறைக்கு நன்றி கூறினர். உண்மையில், ஏனைய பல்கலைக்கழகங்கள் நடாத்தும் கருத்தரங்குகளோடு ஒப்பிடுகை யில் இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள பல்கலைக்கழக மாணவருகளுக்கு வழங்கப் பட்ட வாய்ப்பும், தமிழ்த்துறையைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமன்றிப் பிறதுறை மாணவர்களும் பெரும் ஆர்வத்தோடு பங்கேற் பாளர்களாய்க் கலந்து கொண்ட விதமும் அவர்களது உற்சாகமும் கூட சிறப்பித்துக்கூற வேண்டியதாகவே காணப்பட்டது.
மேலும், எல்லோராலும் விதந்துரைக்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெப்ரவரி 2014 (165)

Page 43
கப்பட்ட விடயம் இந்தக் கருத்தரங்கக் கட்டுரைகளின் தலைப்பும் கட்டுரைகளின் கனதியுமாகும். தமிழ்த் துறைத் தலைவரின் ஆலோசனையுடன் தெரிவு செய்யப்பட்ட தலைப்புகள் அவற்றோடு தொடர்பு பட்ட துறைகளில் பாண்டித்தியம் பெற்ற பேராசிரியர்களுக்கு அவர்களது சம்மதத் துடன் வழங்கப்பட்டன. இதனால் கருத்த ரங்க அமர்வுகளில் ஒருமைப்பாட்டைப் பேண இயலுமாயிருந்தது. இன்னும், இக்கருத் தரங்கின்பால் கொண்ட சுய ஈடுபாடும், எம் துறையுடன் கொண்ட அன்புமாக மிகவும் தரமான கட்டுரைகளைப் பேராளர்களும் வழங்க முன்வந்தார்கள். இதன் காரணமாக, ஒரு பல்கலைக்கழகம் சார்கருத்தரங்கென்றால் இவ்விதம் தான் இருக்க வேண்டும் எனும் வகையில் ஒரு முன்மாதிரிகையை இக்கருத் தரங்கு ஏற்படுத்தியது எனலாம். இந்தக் கருத்தரங்கில் அளிக்கப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டு குமரன் பதிப்பகத்தால் வெளியிடப்படவுள்ளது எனும் செய்தியும் அறிவுலகத்துக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒரு செய்தியே.
இன்னும், இக்கருத்தரங்கைப் பொறுத்த வரையில் இதன் ஆரம்ப நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த துணை வேந்தர் பேராசிரியர் அதுல சேனாநாயக்க சிறப்பு விருந்தினராக வருகை தந்த உப துணை வேந்தர் பேராசிரியர் சாந்த ஹேன்னாயக்க, கெளரவ விருந்தினராக வருகையளித்த கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் நவரட்ண பண்டார ஆகியோருடன் கூடவே, பேராதனைப் பல்கலைக்கழகத்திலுள்ள பிற துறைகளைச் சேர்ந்த தமிழ் மொழி பேசும்
விரிவுரையாளர்களில் பெரும்பான்மை யோரும், கூடவே பல சிங்களப் பேராசிரியர், விரிவுரையாளர்களும் துறையினரின்
அழைப்பை ஏற்று இனமத பேதங் கடந்து வருகை தந்து ஆய்வரங்கைச் சிறப் பித்தமையானது தமிழ்த்துறையினர் பிற துறையினருடன் பேணிவரும் நட்பையும் உறவையும் வெளிப்படுத்தி நின்றது. கூடவே, பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் பிதாமகரான வாழ் நாள் பேராசிரியர். சி. தில்லைநாதன் அவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு ஆதார சுருதியுரை வழங்கியமையும் இந்நிகழ்வை மேலும் மெருகுபடுத்தியது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
குறிப்பிட்டுச் சொல்லத்தக்க இன்னுமொரு விடயம் கருத்தரங்கின் ஒழுங்கமைவாகும். நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டிருந்தபடி
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெப்ரவரி 2014 (165)

சரியான நேர முகாமையின் கீழ் அடுத்தடுத்து நிகழ்வுகளும், அமர்வுகளும் ஒழுங்கு செய்யப்பட கருத்தரங்க அமர்வுகளுக்குத் தலைமை தாங்கிய பேராசிரியர்களும் கூடவே கட்டுரையாளர்களும் அந்த நேர ஒழுங்கைப் பேணியமை பலராலும் பாராட்டப்பட்டது. விருந்தினர்களையும், கட்டுரையாளர்களையும் வரவேற்றதில் தொடங்கி அவர்களுக்கான உபசாரங்களையும் நிகழ்ச்சி ஒழுங்குகளையும் மிகவும் திட்டமிடலுடனும், எவ்வித மனங் கோணல்களுக்கும் இடங்கொடுக்காத வகையிலும் தம் துறைத்தலைவரின் வழி காட்டுதலின் கீழ் மிகச்சிறப்பாகச் செய்து முடிந்தனர், துறை விரிவுரையாளர்கள்.
இன்னும், கற்ற சமூகத்தின் ஏனைய கருத்தரங்க நிகழ்வுகளில் இருந்து மாறுபட்டு ஒரு குடும்ப ஒன்றுகூடல் நிகழ்வைப் போன்று இந்நிகழ்வு நடைபெற்றமையும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. வருகை தந்த பேராசிரியர்களில் பலர் பேராதனைப் பல்கலைக்கழக பழைய மாணவர்களாயும் ஆசிரியர்களாயும் இருக்க, அவர்கள் தமது பழைய நினைவுகளை மீட்ட, பல்கலைக்கழகங்கள் வெவ்வேறாக இருந்த போதும் நட்பால் ஒன்றுபட்ட விரிவுரையாளர்கள் பழங்கதை பேசு இதை விடப் பெரிதாக ஒரு சர்வதேசியக் கருத்தரங்கை நாங்கள் நிகழ்த்துவோம் எனக் கடைசி அமர்வின் இறுதியில் அனைவரின் கைதட்டல்களோடு பேராசிரியர் விசாகரூபன் சவால்விட மாணவர்களும் இந்த இனிய மனநிலைக்குள் உள் நுழைந்தார்கள். கருத் தரங்கு முடிந்த பின் மாணவர்களோடு உரையாடி மகிழ்ந்த பேராசிரியர்கள், அவர்களோடு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டும் சலிக்காது அவர்கள் நீட்டிய ஏடுகளில் எல்லாம் கையொப்பங்கள் இட்டுக் கொண்டும் நிற்க, பிரிய மனமில்லாமல் பிரிந்தார்கள் மாணவர்கள். அதன் பின் அனைத்துப் பேராசிரியர்களுக்கும் விரிவுரை யாளர்களுக்கும் தமிழ்த்துறையினருக்கும் துறைத்தலைவர் அவரது இல்லத்தில் அளித்த இராப்போசனமும் இந்த இனிய குடும்ப நிகழ்வு மனநிலையை இறுதிவரை தொடர்ச் சியாகப் பேண உதவி செய்தது.
இவ்விதம், ஒரு சிறப்பான கருத்தரங்கினை நடத்தி முடித்த மகிழ்வையும், பயன்மிக்க கருத்தரங்கில்கலந்துகொண்டதிருப்தியையும் பலருக்கும் அளித்துக் கடந்து சென்றது,
2013.
O O O
41

Page 44
எழுதத் து
ண்ெணா
யாருக்காக? - இது யாருக்காக?
நமது நாட்டில் விசித்திரமான சம்பவங் களுக்கு ஒருபோதும் குறைவே இல்லை. அந்த வகையில் விசித்திரமான அமைப்பு ஒன்று நமது நாட்டில் உண்டு. பல மதங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றுசேர்ந்து ஓர் அமைப்பை உருவாக்கியிருக்கின்றனர். பார்வைக்குச் சர்வ மதங்களும் கலந்த அமைப்பு என்றும் தோன்றும். ஏதோ சகல மதங்களைச் சேர்ந்த மக்களுக்கும் நன்மை செய்யப்போகின்ற அமைப்பு என்றுதான் எண்ணத் தோன்றும். ஆஹா! இப்படியொரு அமைப்பு இருப்பது நாட்டுக்கு எவ்வளவு நல்லது எனவும் கருதத் தோன்றும். ஆனால், அந்த அமைப்பின் நடவடிக்கைகள் விசித்திரமானவை. - இதுவரை அத்தகைய அமைப்பு மக்களுக்கு ஏதாவது நன்மை செய்திருக்கிறதா என்று பூதக்கண்ணாடி வைத்துத்தான் தேடவேண்டும். அதில் இணைந்திருப்போர் இடையிடையே ஒன்று கூடி ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்துவர். அவ்வப்போது அறிக்கைகளையும் வெளியிடுவர். ஏதோ மக்கள் நன்மைக்காகத்தான் இவ்வாறு ஒன்று கூடிச் சந்திப்புகளை நிகழ்த்துகிறார்கள், அறிக்கைகள் விடுகிறார்கள் என்று யாராவது நம்பினால், அவர்களைப் போன்ற ஏமாளிகள் உலகத்தில் இல்லை என்பதுதான் அர்த்தம்.
இத்தகைய அமைப்பின் செயற்பாடுகளை உன்னிப்பாக அவதானித்தால், அதன் உண் மைச் சொரூபம் வெளிப்படும். இந்து, இஸ்லாமிய கிறிஸ்தவ மதவழிபாட்டுத் தலங்கள் பேரினவாதிகளால் பாதிக்கப்படு வது தொடர்பில், இவ் அமைப்பினர் அக் கறைப்படுவதும் இல்லை. கவலைப்படுவதும் இல்லை, எவ்வகை - நடவடிக்கைகளும் எடுப்பதும் இல்லை. இவை பற்றி எடுத்துக் கூறுவோரை, சமய விடயங்களை அரசிய லாக்கப் பார்க்கின்றனர் என்று இவர்கள் குறை கூறுவர். ஆனால், உண்மையில் இவர்களுக்குப் பின்னால்தான் அரசியல் பின்னணி உள்ளது. 42

தூண்டும்.
ல்கள்
பேராசிரியர் துரை மனோகரன் இவர்கள் மக்களுக்கோ, மத நடவடிக் கைகளுக்கோ ஏதாவது பிரச்சினைகள் ஏற் பட்டால், அவை பற்றிப் பேசாமடந்தை களாக இருப்பர். ஆனால், தங்களுக்கு விசு வாசமான எசமானர்கள் மீது தூசு படவும் விடமாட்டார்கள். எசமானர்களுக்கு ஏதும் என்றால் பதறித்துடித்து, ஊடகவியலாளர் சந்திப்புகளை ஏற்படுத்தி, தமது விசுவாசத் தினை வெளிப்படையாக உணர்த்துவர். அறிக்கைகளை வெளியிட்டு, தமது விசு வாசத்தினைத் தமது எசமானர்களுக்கு இனங்காட்டுவர். எசமானர்களின் தலைகளில் புகழ்ச்சுமைகளைச்சூட்டி, பாராட்டுப்பத்திரம் வாசிப்பர். தங்கள் விசுவாசம் மிக்க எசமானர் கள் அப்பழுக்கற்றவர் என்று காட்டுவதற்குத் துடியாய்த் துடிப்பர். அதற்காக என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ள முடியுமோ, அவற்றையெல்லாம் செய்வர். ஆனால், மக்கள் எல்லோரும் மடையர்கள் அல்லர் என்பதை இவர்கள் புரிந்துகொள்வதில்லை. மனங்களுக்குள் அரசியலைவைத்துக்கொண்டு மத வேடம் போடுவது பாதகமான செயல்.
இத்தகையோர் தனிப்பட்ட முறையில், தங்கள் விசுவாசம் மிக்க எசமானர்களுக்கு அடிமைச் சேவகம் செய்வதைப் பற்றி யாரும் பொருட்படுத்தப் போவதில்லை. ஆனால், ஆண்டவன் பெயரைச் சொல்லிக்கொண்டு அரசியல் செய்வது முறையானது அல்ல. மதப் பெரியார்கள் என்றுதம்மைக்காட்டிக்கொள்ள முனைபவர்கள் உண்மையானவர்களாகவும், நேர்மையானவர்களாகவும், யார் தவறு செய்தாலும் கண்டிப்பவர்களாகவும், நீதி நெறிமுறையில் நடப்பவர்களாகவும் விளங்க வேண்டும். அதைவிடுத்து, விசுவாசம் மிக்க எசமானர்களின் தவறுகளை மூடிமறைப் பவர்களாகவும், அவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களாகவும் விளங்கக்கூடாது. மத அடையாளங்களைச் சுயநல அரசியல் நோக் கங்களுக்காகப் பயன்படுத்துவது மிகவும் கண்டனத்துக்கு உரியது.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெப்ரவரி 2014 (165)

Page 45
இந்த ஆண்டின் முதல் பெருநூல்
இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஒரு நிகழ்ச்சி நடை பெற்றிருக்கிறது. 19ஆம் நூற்றாண்டின் ஈழத்துப் பெரும்புலவர் உடுப்பிட்டிச் சிவ சம்புப் புலவர் (1829-1910) தொடர்பான நூல் வெளிவந்திருக்கிறது. உடுப்பிட்டிச் சிவசம்புப்புலவர் பிரபந்தப் பெருந்திரட்டு என்பது நூலின் பெயர். சமகாலத்தில் வாழ்ந்த ஆறுமுகநாவலரே வியக்கும்வண்ணம், அந் நூற்றாண்டின் பெரும்புலவராகச் சிவசம்புப் புலவர் விளங்கினார். எனது நூலொன்றில் (இலங்கையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி) அவர் பற்றிக் குறிப்பிடும்போது, "பத்தொன்பதாம் நூற்றாண்டிற் பழந்தமிழ் மரபை அடியொற் றிய போக்கின் பெரும்புலவராக உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர் விளங்குகின்றார். அந்த நூற்றாண்டிலே தமிழ்நாட்டில் மகாவித்து வான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம்பிள்ளை யும், இலங்கையில் உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரும் பழந் தமிழ் மரபின் இருபெரும் தூண்களாக விளங்கினர்”எனக் கூறியிருந்தேன். உடுப்பிட்டிச் சிவசம்புவுக்குப் புலவர் என் னும் பட்டத்தை வழங்கிக் கெளரவித்தவர், ஆறுமுகநாவலர். புலவரும் நாவலர்பால் மிகுந்த மதிப்புக் கொண்டவர்.
உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர் அறு பதுக்கு மேற்பட்ட பிரபந்தங்களைப் பாடியுள்ளார். இவ்வாறு பாடிய ஈழத்துப் புலவர்கள் வேறு யாரும் இலர். 19ஆம் நூற்றாண்டின் சிறந்த உரையாசிரியருள் ஒருவராகவும் அவர் திகழ்ந்திருக்கிறார். அந்நூற்றாண்டின் இயல்புக்கேற்பக் கண் டனக்காரராகவும் விளங்கியிருக்கிறார். அத்தோடு, சைவசித்தாந்தவாதியாகவும் அவர் திகழ்ந்தார். இலங்கைத் தமிழ்க் கீர்த்தனை மரபின் முன்னோடியாகவும் புலவர் விளங்குகிறார். அதேவேளை, நவீன மாற்றங்களையும் வரவேற்கும் ஒருவராக அவர் விளங்கினார். இத்தகைய ஆளுமை மிக்க உடுப்பிட்டிச் சிவசம்புப்புலவர் பற்றிப் பேராசிரியர் கா.சிவத்தம்பி குறிப்பிடும்போது, “உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரது வரலாறு பேசப்படாமல் போனால் ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் நாம் எதனை இழக்கிறோம் என நோக்குதல் அவசியமானதாகும்" என்று தெரிவித் துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புலவர் பற்றி இதுவரை இலங்கைப் பல்கலைக்கழக மட்டத்தில் பேராசிரியர்கள்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெய்ரவரி 2014 (165)

க. கணபதிப்பிள்ளை, சுவித்தியானந்தன், ஆ. சதாசிவம், ஆ. வேலுப்பிள்ளை, க. கைலாசபதி, கா.சிவத்தம்பி, இரா. வை. கனகரத்தினம்,துரை. மனோகரன், எஸ்.சிவலிங்கராஜா ஆகியோர் எழுதியுள்ளனர். பல்கலைக்கழகத்திற்கு வெளியே செவ்வந்திநாத தேசிகர், அ.குமார சாமிப்புலவர்.கு.முத்துக்குமாரசாமிப்பிள்ளை, ஆணல்ட் சதாசிவம்பிள்ளை, சி.கணேசையர், பண்டிதமணி கணபதிப்பிள்ளை, க.சி.குலரத்தி னம், மு.கணபதிப்பிள்ளை, சி. அப்புத்துரை, க. செபரெத்தினம் ஆகிய இலங்கைத் தமிழ் அறிஞர்களும், க.அ.இராமசாமிப் புலவர், மயிலை சீனி வேங்கடசாமி ஆகிய தமிழக அறிஞர்களும் எழுதியுள்ளனர்.
உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர் தொடர்பாகச் சிவசம்புப் புலவர் பிரபந்தத் திரட்டு என்னும் நூல் செவ்வந்திநாத தேசிகரின் உழைப்பினால் உருவாக்கப்பட்டு, நா.பொன்னையா அவர்களால் 1939இல் வெளியிடப்பட்டது. அதன் பின்னர், நீண்ட காலத்தின் பின் உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர் பிரபந்தப் பெருந்திரட்டு என் னும் நூல் இவ்வாண்டில் (2014) வெளி வந்துள்ளது.
இந்நூலின் பதிப்பாசிரியர்களாகச் சிவசம்புப் புலவரின் பூட்டன் புலவர்மணி கா. நீலகண்டனும், பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் செசுதர்ச னும் விளங்குகின்றனர். நீலகண்டன் ஒய்வு பெற்ற ஆசிரியர். பழந்தமிழ்ப் புலமையும் ஆங்கிலப்புலமையும் கைவரப்பெற்றதோடு, பல்வேறுஆலயங்கள்மீது பலபிரபந்தங்களைப் பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுதர் சன் எழுத்தாற்றலும், கற்பிக்கும் ஆற்றலும் கைவரப்பெற்றவர். 2009ஆம் ஆண்டில் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளராகப் பதவியேற்றிருக்க வேண்டிய அவர், தவிர்க்கக்கூடிய காரணங் களால் 2013 டிசம்பரிலேயே பதவி யேற்கவேண்டியதாயிற்று. காலம் கடந் தாயினும் உண்மையும், நீதியும் வெல்லும் என்பதற்கு இது ஒர் உதாரணம்.
இந்நூலுக்கான வெளியீட்டுரையை இராஜேஸ்வரிதில்லையம்பலமும்,நீலகண்டன் நித்தியானந்தனும் வழங்கியுள்ளனர். பேரா தனைப் பல்கலைக்கழக முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் பூசோதிநாதன் இந்நூலுக்குச் சாற்றுகவி எழுதியுள்ளார்.
இப்பெரும் நூல் தேவபாகம், மானுடபாகம் ஆகிய இருபெரும்பகுதிகளைக்
43

Page 46
கொண்டதாக விளங்குகிறது. தேவபாகத்தில் சிவசம்புப்புலவரின் தெய்வீகம் தொடர்பான பாடல்களும், மானுடபாகத்தில் அவரது உலகியல் தொடர்பான பாடல்களும் இடம்பெற்றுள்ளன. புலவரின் பெரும் பாலான பாடல்கள் இந்நூலில் திரட்டித் தரப் பட்டுள்ளன. நூலின் இறுதியில் பயனுள்ள நான்கு அநுபந்தங்கள் (பின்னிணைப்புகள்) இடம்பெற்றுள்ளன. நூலின் வெளியீட்டுரை, பதிப்புரை, சாற்றுகவி புலவர் வரலாறு, புலவரின் கவிதை மரபு ஆகியவற்றைத் தவிர்த்து, 593 பக்கங்களைக் கொண்டதாக இந்நூல் விளங்குகின்றது.
உடுப்பிட்டிச்சிவசம்புப் புலவர்பற்றிய அறி முகத்தைச் சிறந்த முறையில் கா.நீலகண்டன் வழங்கியுள்ளார். ஈழத்துத் தமிழ்க்கவிதை வரலாற்றில் சிவசம்புப் புலவர் கவிதை மரபு என்ற தலைப்பில் அவரது பாடல்களை மிக விரிவாகவும் சிறப்பாகவும் செசுதர்சன் ஆய்வுசெய்துள்ளார். 57 பக்கங்களில் சிவசம்புப் புலவர் ஈழத்துத் தமிழ்க்கவிதை வரலாற்றில் பெற்றுள்ள இடத்தினையும் அவரது முக்கியத்துவத்தினையும் அவரது முன்னோடி முயற்சிகளையும், அவரது கவியாற்றலையும் விமர்சனப்பாங்கான முறையில் நேர்த்தியாக நோக்கியுள்ளார். அவரது இத்தகைய ஆய்வுரை இந்நூலுக்குப் பொலிவையும், சிறப்பையும் வழங்குகிறது.
இந்நூலின் மூலமாக உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரை வாழவைக்கும் பெருமை கா.நீலகண்டனுக்கும், செசுதர்சனுக்கும் உண்டு. பேணவேண்டியதும், படிக்க வேண்டி யதுமான ஒரு நூலாக உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர் பிரபந்தப் பெருந்திரட்டு என்னும் இந்நூல் விளங்குகிறது. இந்த ஆண்டில் முதல் பெருநூலாகவும் இது திகழ்கிறது.
வீரகேசரி நிறுவனத்துக்கு ஒரு வேண்டுகோள்
இலங்கையின் ஊடகத்துறை பற்றிச் சிந்திக்கும்போது, இந்நாட்டின் அரசியலைப் போன்றே ஆச்சரியத்தையும், வேதனையையும் தருகிறது. சிங்கள, ஆங்கில பத்திரிகைகளில் பெரும்பாலானவை பேரினவாதத்தை வளர்த்தெடுப்பதிலேயே தீவிரம் காட்டு கின்றன. தமிழ்ப் பத்திரிகைகளில் பெரும் பாலானவை தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளைப் பத்திரிகை தர்மத்திற்கு ஏற்ப வெளிக்கொணர்ந்து வருகின்றன. மக்களுக்காகக் குரல் கொடுக்கின்றன.
44

ஆனால், தமிழ்ப் பத்திரிகையாளர்களிலும் சிலர் யாருக்காகவோ கூலிக்கு மாரடிக்கும் போக்கினை வழமையாகக் கையாண்டு, பேரினவாதிகளின் செயற்பாடுகளை நியாயப் படுத்துபவர்கள் போலச் செயற்படுவதுண்டு. அவர்கள் தமது மனச்சாட்சிக்கு விரோதமாக, வயிற்றுப் பிழைப்புக்காகப் பொய்யும் புரட்டும் எழுதி, தங்கள் வயிற்றையும், பத்
திரிகையையும் நிறைப்பதுண்டு.
இந்நாட்டின் பெரும்பான்மை இன மக்களைப் பொறுத்தவரை, அவர்கள்
சிறுபான்மை இன மக்கள் தொடர்பான பிரச்சினைகளை அறியமுடியாதவர்களாகவே விளங்குகின்றனர். நியாயமாகச் சிந்திக்கக் கூடிய கல்வியறிவு பெற்ற பெரும்பான்மை இன மக்கள் கூட தமிழ் மக்களுக்கு அப்படி என்ன பிரச்சினைகள் உண்டு?" என்று தனிப்பட்ட உரையாடல்களின் போது கேட்கிறார்கள். அவர்களுக்குத் தமிழ், முஸ்லிம் மக்கள் தொடர்பான செய்திகள் சென்றடையாதவாறு பெரும்பாலான சிங்கள, ஆங்கில பத்திரிகைகள் செயற்படுகின்றன. பேரினவாதப் பக்கங்களையே பெரும்பான்மை இன மக்களுக்கு இவை காட்டுகின்றன.
இந்நிலையில், பெரும்பான்மை இன மக்களுக்கு உண்மையான, நேர்மையான செய்திகள் சென்று சேரும் வண்ணம் புதிய ஆங்கில, சிங்களப் பத்திரிகைகள் தேவை. இதனை வீரகேசரி நிறுவனத்தால் செயற்படுத்த முடியும் ଗTତ୪T நான் கருதுகின்றேன். ஏற்கனவே 1970களில் சிங் களப் பத்திரிகையொன்றையும், 1990களில் ஆங்கிலப் பத்திரிகையொன்றையும் வீரகேசரி நிறுவனம் வெளியிட்டுவந்தது. ஆனால், அவை காலப்போக்கில் நின்றுவிட்டன. ஆயினும், இன்றைய நிலையில் புதிய ஆங்கில, சிங்களப் பத்திரிகைகளையும் அந்நிறுவனம் வெளியிட வேண்டிய தேவை உண்டு. இதனைச் செயற்படுத்தக்கூடிய ஆற்றலும், வளமும் வீரகேசரி நிறுவனத்துக்கு உண்டு. இதனை உடன் செயற்படுத்தவேண்டும் என, நியாயபூர்வமாகச் சிந்திக்கும் இலங்கை மக்கள் சார்பாக வீரகேசரி நிறுவனத்திடம் வேண்டுகோளாக விடுக்கின்றேன். விரைவில் இது தொடர்பான நல்ல செய்திகள் கிடைப்பதாக!
O O O
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மெய்ரவரி 2014 (165)

Page 47
பிரமாண்டமாக நடைபெற்ற சென்னை புத்தகத் திருவிழா
ஊர்கூடி தேர் இழுத்தமாதிரி, ‘புத்தகப் புழுக்கள் ஒன்று சேர்ந்து நூல் "நெய்து கோபுரம் எழுப்பி வாசகர் திருவிழா கொண் டாடியிருக்கிறார்கள் சென்னையில் சும்மா சொல்லக்கூடாது, பன்னிரண்டு நாட்கள் முழுவதும் வாசகர்களை வரவேற்ற இப்புத்த கக் கண்காட்சி சனி, ஞாயிறு நாட்களில் இரு மடங்காகி, வாசகர்கள் மத்தியில் திணறித்தான் போய்விட்டது! பல பல ஆயிரம் புத்தகப் பக்தர்கள்!
தென்இந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) புள்ளிவிபரப்படி இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவில் 777 அரங்குகளைக் கொண் டிருந்த புத்தகக் கண்காட்சியில் தமிழ், ஆங்கில பதிப்பாளர்கள் என்று 757 பேர் பங்குகொண்டிருந்தனர். ஐந்து லட்சத்துக்கும் அதிகமான தலைப்புகளில், ஐந்துகோடிக்கும் மேற்பட்ட புத்தகங்கள், குறுந்தகடுகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. கடந்த மாதம் 10ஆம் திகதிமுதல் 22ம் திகதி வரை நடைபெற்ற புத்தகக் காட்சியில் தினமும் கவியரங்கம், உரையரங்கம், கலை நிகழ்ச்சிகள், குறும்படங்கள் திரையீடு என்று நிகழ்ச்சிகள் களைகட்டின. 777 அரங்குகளும் எட்டுப்பிரிவுகளாக்கி, இவற் றுக்கு தமிழறிஞர்கள் பெயர்கள் சூட்டப் பட்டிருந்தன.
புத்தகக் கண்காட்சியின் முதல்நாள் விழாவில், பல துறைகளைச் சேர்ந்த ஒரு வருக்கு சிறப்புவிருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த தமிழறிஞருக்கான இந்த ஆண்டு விருது அவ்வை நடராஜனுக்கும், குழந்தை எழுத்தாளருக்கான விருது எஸ். பூவை அமு தன், ஆங்கில நூலாசிரியர் விருது எம்.ஆர். வெங்கடேஷ், பதிப்பாளருக்கான விருது
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெப்ரவரி 2014 (165)
 

அன்னம் பதிப்பகம், விற்பனையாளருக்கான விருது கிரி ஏஜன்ஸி, நூலகர்விருது மீனாட்சி சுந்தரம், ரவிச்சந்திரன் ஆகியோருக்கும் வழங் கப்பட்டன. வாசகர்களை முடிந்தவரை திருப்திப்படுத்த, தென்இந்திய புத்தக விற் பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் கடந்த ஆண்டுகளைவிட இம்முறை சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்ததைக் கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டும்.
வாசகர்களைத் திருப்திப்பருத்தப் போது மான சிறப்பு வசதிகள்
புத்தக கண்காட்சியை நெருங்கியதும், வாசகர்களின் நீண்ட வரிசையைப்பார்த்து மனம் சலிக்காதவகையில், நுழைவுச்சீட்டு களை தாமதமின்றிப் பெற்றுக்கொள்ள கணினி முறை பயன்படுத்தப்பட்டது. அமர்வதற்கு இடவசதி, நடந்துசெல்ல முடியாதவர்கள் நுழைவாசலில் இருந்து புத்தக அரங்குகள் வரை வாகனத்தில் பயணிக்க ஏற்பாடுகள், மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர இருக்கை, அவசர சிகிச்சைக்கான ஊர்திகள், பணத் தேவைக்கு ஏ.டி.எம். வசதிகள், புத்தகக் காட்சி வளாகத்தில் உணவகங்கள், கைபேசி இலக்கங்களைக் கொடுத்தால் தினமும் அன்றாட நிகழ்ச்சிகள் ரீங்காரமிடும் ஏற் பாடுகள், கூடுதல் கழிப்பறைகள், 1,500 கார்களை நிறுத்தக்கூடிய வகையில் விரிவான இடம் என்று மட்டுமல்ல, புத்தகங்களை வாங்கி விட்டு இந்தச் சுமையுடன் கூட்ட நெரிசலில் எங்கு பஸ்பிடிப்பது, எப்படி வீடு போய்ச்சேர்வது என்று மூளையைக் குழப்பாமல் இருக்க, கண்காட்சி வளாகத்
திலேயே ஆட்டோக்கள் தயாராக நின்றன.
அலைமோதிய வாசகர் வெள்ளம் புத்தககாட்சி திக்குமுக்காடியது.
புத்தகத் திருவிழாவில், என்ன இருக்
45

Page 48
கிறது என்பதைவிட எந்த நூல் வேண்டும் எனும் கேள்வி எதிரொலிக்கும் வகையில் பதிப்பகங்களும் நூல்களும் நிரம்பி வழிந்தன. இவற்றில் எண்ணிக்கை பிரமிக்கத்தக்க தாகவும், இந்த ஆண்டின் வாசகர்கள் தொகை பிரமாண்டமாகவும் விண்ணைத்தொட்டது. வாசகர்கள் வெள்ளம் அலைமோதியது. பதிப்பகங்கள், நூல்கள், வாசகர்கள் எண் ணிக்கை பல மடங்காக உயர்ந்திருப்பதை அவதானிக்கும்போது, தமிழ் மொழியின் (பல்துறை) அசுர வளர்ச்சியையும், அதன் அவசியத்தேவையையும் உணரக்கூடியதாக இருந்தது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவன அரங்கில் இலக்கிய ஆர்வலர்களைச் சுண்டி இழுக்கும் சங்க இலக்கியம், செவ்விலக்கியம், அயல்நாட்டு இலக்கியம் என்று இவை சார்ந்த நூல்கள் தாராளமாகக் காணப்பட்டன. நானூறு தலைப்புகளில் 15,000 நூல்கள் அலங் கரித்திருந்த இந்த அரங்கில் ஈழத்து அறிஞர் தனிநாயகம் அடிகளார் எழுதிய தமிழ்த்தூது’ நூல் மறுபதிப்பாக இடம் பெற்றிருந்தது.
ஆன்மீகம், மருத்துவம், யோகா, அறிவியல், மொழித்திறன், பொதுஅறிவு, விளையாட்டு, அரசியல், வரலாறு உள்பட பல தலைப்புகளில் புத்தகங்கள் மலைபோல் குவிந்திருந்தன. இல்லை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. பிரமாதம்!
காலைவேளையில்வீட்டுத்கதவைத்தட்டி நல்ல சகுனம் அளிக்கும் தினசரி பத்திரிகை களின் பக்கங்களைக் புரட்டி, தலைப்புகளில் நுனிப்புல் மேய்ந்து மேசைமீது தூக்கி வீசுவது வாசிப்புத் தகுதி பெற்றுவிடாது. வாசிப்பையும் சுவாசிக்க வேண்டும். வாசிப்பு மீதான ஆர்வத்தை தன்னிச்சையாக உண்டாக்கவேண்டும். இந்த உணர்வு, புத்தகக் கண்காட்சிக்கு சென்றவர்களுக்கு நிச்சயம் ஏற்பட்டிருக்கும். “ஒரு படிப்பறையில் அல்லது நூலகத்தில் அல்லது இதுபோன்ற பிரமாண்ட புத்தகத்திருவிழாவில் இருக் கும் போது, அங்கு பரவிக்கிடக்கும் நூல்களைத் திறந்து பார்க்காமலேயே அவை எல்லாவற்றின் ஞானத்தையும் உங்கள் தோல்வழியே இனம்புரியாத ஒரு வகையில் உறிஞ்சிக்கொண்டிருப்பதாக நீங்கள் உணர்வீர்கள்” என்று ஒர் அறிஞர் தீர்க்கதரிசனம் கூறியது, கண்காட்சியில் நூல் களை மேய்ந்தபோது இதமாகத் தழுவியது. வாசிப்பு ஒரு ஈர்ப்பினை உண்டாக்கி, ஒரு
46

மனிதனைப் பூரணத்துவமாக்கிறதென்றால், நமக்கெல்லாம் அது ஒர் ஊட்டச்சத்து என்று கொள்ளலாம். இது நமது தினசரி வாழ்க்கையின் அம்சமாக மாற வேண்டும். புத்தகக் கண்காட்சிக்குப் போனவர்களுக்கு நிச்சயம் இது ஒரு பாடமாக இருக்கும் என்பது நம்பிக்கை
குறையொன்றும் இல்லை: லண்டன் பத்திரிகையாளர்
கடந்த பத்து ஆண்டுகளாக சென்னை புத்தக கண்காட்சியை மேய்ந்து வருகின்றேன். இவ்வருட ஏற்பாடுகள் பிரமிப்பை உண்டாக்கிவிட்டன. நூல்களைத் தேடிக் கண்டுபிடிப்பதில்தான் வாசகர்களுக்கு எத்தனை ஆர்வம்! மிகவும் பலனுள்ளதாக இருந்தது. அடுத்தடுத்து நானும் துணைவியார் ராகினியும் மூன்று நாட்கள் சென்றுவந்தது பூரணதிருப்தியைக் கொடுத்தது. எதிர்பார்த்த நூல்களும் சிரம மின்றிக் கிடைத் தன. இத் தேடலில், தூக்குக்கயிறு முத்தமிடத் துடிக்கும் தனது மகன் பேரறிவாளனின் கயிற்று முடிச்சுகளை அவிழ்க்க, ஒர் நிரபராதி தண்டிக்கப்படுவதைக் தடுக்க உறுதியுடன் போராடும் அந்தத்தாய் - அற்புதம்மாளை அவரது திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம் அரங்கில் சந்தித்தது ஒரு ஆத்ம திருப்தியைக் கொடுத்தது. "மரணதண்டனை ஒரு காட்டுமிராண்டித்தனம். ஒருங்கிணைந்து குரல் கொடுப்போம். எனது மகனும், ஏனையவர்களும் நிச்சயம் நிரபராதிகளாக, தூக்குக்கயிற்றை பிய்த்தெறிந்து வெளியே வருவார்கள்” என்று எங்களிடம் நம்பிக்கை தெரிவித்த அந்த அன்னை, "கடந்த இருபது ஆண்டுகளாக புத்தக காட்சிக்கு வருகின்றேன்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெப்ரவரி 2014 (165)

Page 49
என் மகன்
பேரறிவாளன், சிறையிலிருந்து எழுதிய 'தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்' புத்தகத்தை அச்சிட்டு விற்க கடை கடையாக இறங்கியபோது ஏற்பட்ட மனக்கஷ்டம் - சொந்தமாக இந்த அரங்கை பணம் செலுத்தி எடுத்து மகன் நூல்களை மளமளவென்று விற்றது, எனது உடலை தென்றல் தழுவியது போல் இருக்கிறது...” என்று எங்களிடம் மனம்விட்டுப் பேசியது உணர்வுகளைத் தூண்டியது. கரம் தொட்டு வணங்கினோம்” என்று, லண்டனிலிருந்து வந்து புத்தக கண்காட்சியின் அனுபவத்தை 'புதினம்' சஞ்சிகை ஆசிரியர் ஈ.கே.ராஜகோபால் என்னிடம் தெரிவித்தபோது அவர் கண்கள் பனித்திருந்தன.
குறைகள் எதுவும் உண்டா என்று கேட்டபோது, குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா என்று - ராகம் இழுத்தார். "இம்மாதிரியான பிரமாண்ட கண்காட்சியை தரிசிக்க ஒரு மாதம் தேவை. நாம் தேடும் நூலைக் கண்டுபிடிக்க வேறு புத்தகங்களைப் பார்க்க பன்னிரண்டு நாட்கள் போதாது. முன்னர், புத்தக கண்காட்சியின் பின்புறமாக பழைய புத்தகங்கள் விற் பனைக்கு இருக்கும். இம்முறை காண வில்லை. புத்தகக்குவியல்களில் சிக்கி, பல முக்கிய நூல்களின் முகங்கள் காணாமற் போவது தவிர்க்கப்படவேண்டும். நூல் களை வாங்கினால் போதாது. வாசிக்கும் பழக்கத்தை நிரந்தரமாக்கவேண்டும்." என்று கருத்து வெளியிட்டார் லண்டன் ஈ.கே. ராஜகோபால்.
0 0 0
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெப்ரவரி 2014 (165)

அன்புள்ள
4TIFETF
மனைவிக்கு
-------------------------------------
வெக்கம் துறப்பதும்
விரகம் தீர்ப்பதும் சொர்க்கம் காண்பதும்
சுகம் பெறுவதும்
(El-E-E-E-B-5-2-2-t-a12-12-11
2-11-=-==-=+=+=+2 ---------- ==
--- 12 Fri -::-ti-;-1, ----11:55-5-5-5-----------
--15-2-1:--- 12ா----------------19------------- Fii 5ம்---------------Ti-------------------
- நெடுந்தீவு யோகேஸ்
---காடுத்தாபனம் -1
--------------11:ாத்ராக்ட்ரம் 4/11/14AH1424:54:14, பக்கம் - 36-4,-
உன்னிடமே உயிரே
எங்கிருக்கிறாய் முத்தம் கிடைப்பதும் மோகம் வளர்ப்பதும் சித்தம் தொலைப்பதும்
சீவன் இழப்பதும் உன்னிடரே உயிரே
எங்கிருக்கிறாய் மறுதாய் பார்ப்பதும்
மரணம் மறப்பதும் முழுதாய் தொலைவதும்
மூழ்கி எழுவதும்
-----------------1கரராமம்:12-----------பாகம்--------
-----------------------------------------
6 கோடி பொயம்
--------------rt-12-11-1-11-11-TTrar-irrாக்கா:+rthrit+T111111111111111111111111irlli 1-10:11:14:14:11:4ne+1 (212 ரக தா11:11-12-11/E-EEE.
7:47 -1:14:15:
ஈகட்டாயப்பட்ட 11----
உன்னிடமே உயிரே
ஏங்கிருக்கிறாய் தோல்விகள் துடைப்பதும்
வெற்றிகள் தருவதும் பழம் காதல் காயங்களிற்கு
மருந்திடுவதும் உன்னிடமே உயிரே எங்கிருக்கிறாய் அதட்டும் தமிழ் அழகு வாழ்க்கை இரண்டு குழந்தைகள்
இசையும் கவியும் உன்னிடமே உயிரே எங்கிருக்கிறாய்
----- ஈ--------------"2-12-2-ப-2-2
+-+12 12:42:27:41:17- 14-11:51:51:2-12-12-1=========== -ெ':/12-12
----------------------1ா:-Ti-61-7-t-si-Tiwitா:-Ti---nilli சர்சா-1:11:45:44:24- இந்து---------------
டி----1/2=1-4-2-ம்------------------------- =ரகாம்------- --------------
மரி-------- பாவோம்
-------------------------
=14-4-2-2-E-l+E-C-12+க
---------கோக--11ti-T:-:4t-Ei-a-Trthr:1-11-11-11,++Frl-Tாடி-11-15:11:11:Tri1:1ார்ப்ாசா' 44=ாகாசர்மா firinivel 41144%:-Twin-win-thatr.ச44154hai-4-;aerar-ரம்:15-11:45:14-11-11-iatri-l:-sr;--ட்-3-7-1
இன்னுமிருக்கிறது அதை பின்பு பேசிக்கொள்வோம்
47

Page 50
099) CேC)
கே.விஜய:
வத்துக்களை கருத்தர் திய வள்
அடப்பாவிகளா! உருப்பருவீங்களா நீங்க!
எழுத்தாளர் பாணந்துறை ரிஸ்வான் நல்லதொரு வாசகர் என்பதையும்கடிதப்பகுதி யில் அவர் அடிக்கடி எழுப்புகின்ற கேள்விகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
ஞானம் சஞ்சிகையை முழுமையாக வாசித்துவிட்டு சில ஆக்கங்கள் குறித்து கருத்துக்களை எழுதுவது நல்ல பணியாகும். இதன்மூலம் ஒரு கருத்தாடல் உருவாகும். இது ஓர் ஆரோக்கியமான இலக்கிய வளர்ச்சிக்கு வித்திடுவதாகும்.
நவம்பர் இதழில் மாற்றுச் சினிமா பற்றி எழுதியிருந்தேன். அதில் என் செறியச்சன் பற்றி சிறு குறிப்பு இருந்தது. தமிழ்ச் சினிமாவில் சித்தரிக்கப் படும் யதார்த்தமற்ற காட்சிகளையும், கதைகளையும் கடுமையாகச் சாடுவார். அது பற்றி ரிஸ்வான் கேள்வி எழுப்பியிருந்தார். இன்று என் செறியச்சன் இருந்தால் இன்றைய தமிழ்ச்சினிமாவில் இடம்பெறுகின்ற பாட்டுக்களையும் கூத்துக் களையும் பற்றி என்ன சொல்வார் என்பதுதான் ரிஸ்வானின் கேள்வி.
தமிழ்ப்படங்களை மட்டும் அல்ல இன்று வெளிவரும் சில மலையாளப் படங்கள் குறித்தும் இந்த ஆசாமி என்ன போடு போடுவார் என்பது ஒரு சுவாரஸ்யமான சமாச்சாரமாகும்.
நமது இலங்கை கலை இலக்கிய உல கில் பஞ்சையாய், பராரியாய் பரிதாபக் கோலத்தில் கிடப்பது இந்த கருத்தாடல் பகுதிதான். அதனால் இந்த திறனாய்வுப் புலிகளின் செயற்பாடுகளைக் கொஞ்சம் சந்திக்கு இழுத்து மோத விடவேண்டும் என்ற உள்ளார்ந்த உணர்வின் வெளிப்பாடே இந்தப் பத்தி.
சினிமா விமர்சகர்கள் என்றும், திறனாய்வாளர்கள் என்றும் தமது பத்தி களிலே பெயர் பதித்துக் கொள்ளும் பல
48

ஜாம்பவான்கள் நம்மிடம் இருக்கிறார்கள் என்பது என்னவோ உண்மைதான். ஆனால் எந்த மேடைகளிலும் இவர்கள் நல்ல புதிய கருத்துக்களை முன்வைப்பதே இல்லை. அப்படி முன்வைப்பவர்கள் குறித்து தமது குறிப்புகளில் வெளிப்படுத்துவதும் இல்லை. தமது கெளரவம் தலை தப்புவதற்கும் தாம் உயர்ந்த சிந்தனையாளர்கள் என்று நிரூபிப்பதற்கும் Silence is Gold என்ற தாரகமந்திரத்தைப் பயன்படுத்துகிறார்கள். அப்படி ஒரு சாக்குப் போக்கை இந்த ஜாம்பவான்கள் நீண்டகாலமாகவே தமது பதிவுப் பணியாக செய்து வருகிறார்கள்.
பதிவுப் பணி என்பது அவர்களையும் தமக்கு தேவையானவர்களையும் பதிவு செய்யவும் கருத்து முரண்பாடானவர்களை இருட்டடிப்புச் செய்வதுமாகும்.
அவர்களைப் பொறுத்தவரையில் அது தான் தலையாய இலக்கியப் பணி. ஈஸ்வரா! எங்கேதான் போய் முட்டிக்கிறது.
ஆனால் சமுதாய நோக்குடைய ஒரு விமர்சகனுக்கு அது சரியானதல்ல. அவர்கள் சமரசம் செய்து கொள்வதற்கு விரும்பு வதில்லை. சரி என்று படுவதை சட்டென சொல்லி விடுகிறார்கள். செறியச்சனும் அப் படித்தான். சரி என்று படுவதை சட்டென கூறிவிடுவார். இத்தகைய போக்குடைய வர்கள் கல்லடிக்கும் சொல்லடிக்கும் அச்சப் படுபவர்கள் அல்லர்.
அட்டா அப்டியானால் இந்த இருவகை யினரிலும் யார்தான் நல்ல விமர்சகன்.
இந்த கேள்வியை உற்றுப் படிக்கும் நமது ரிஸ்வான் நெஞ்சை கொஞ்சம் நிமர்த்திவிட்டு
'அட, இது தெரியாதா உங்கள் செறியச்சன் வகையினர்தான்'
என்று என் தலையில் ஓர் ஆனந்தக் குட்டு வைப்பார்.
ரிஸ்வானின் இந்தத் தீர்ப்பு சரியான
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெப்ரவரி 2014 (165)

Page 51
தாகுமா?
சரியானதல்ல. ஏன்? இந்த இருவகை யினருமேதிறனாய்வாளர்கள்அல்லர் என்பதை அடித்துச் சொல்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்பதை ஒர் அலசல் அலசிப் பார்ப்போம்.
விளாம்பழம் ஆச்சி பிளந்தால் போச்சி என்பார்கள். இந்த பழத்தை ஆட்டி ஆட்டிப் பார்த்துத்தான் விவசாயி தெரிவு செய்வான். சிலவற்றை ஒதுக்கி விடுவான்.
என்னங்க இதுகளை ஒதுக்குரிங்க' என்று கேட்டால் யானை தின்ற விளாம் பழங்க” என்பான்.
அடக்கடவுளே! பென்னாம் பெரிய யானைக்கு இது எந்த மூலைக்கு. அது வாயிலே போட்டா பழம் மிஞ்சுமா? இதைப் போய்..! என்று நாம் ராகம் இழுத்தால் அதற்கு பதில்தான் இந்த விளாம்பழம் ஆச்சி பிளந்தால் போச்சு' என்பது. இந்த பழங்களை உடைத்தால் சாப்பிடுவதற்கு உள்ளே ஒன்றும் இருப்பதில்லை என்பதுதான் பொருள்.
இந்த முதலாவது ரக விமர்சகர்களின் பதிவுகள் யானைதின்ற விளாம்பழங்களுக்கு சமன். உள்ளே ஆய்வு ரீதியாக புதியன ஒன்றும் இருப்பது இல்லை.
சிறுபடகுகளில்நதிகளிலும் ஓடைகளிலும் குளம் போன்ற பெரிய நீர்பரப்புகளிலும் மீன் பிடிப்பவர்கள் நீரின் அடியில் ஒரு பக்கமாக வலையை விரித்துவிட்டு துடுப்பினால் எதிர் பக்கமாக நீரின் மீது டமார் டமாரரென அடிப்பார்கள். அதன் விளைவாக நீரில் உண்டாகும் பெரிய அதிர்வில் மீன்கள் வலைப் பக்கமாக தப்பியோட முனைந்து சிக்கிக் கொள்ளும்.
செறியச்சன் போன்ற திறனாய்வாளரகள் இத்தகைய டமார் அடிகாரர்கள். எதிர்க் கருத்தாடலும் சபையில் எதிர்ப்பலைகளை உருவாக்குவதையும் பணியாகக் கொண்ட வர்கள். புதியன பிறக்கவேண்டும் என்ற காத்திரமான சிந்தனை படைத்தவர்கள். அவர் களின் கடுமையான போக்கின் எதிரொலி புதிய அறுவடைதான்.
குணம்நாடி குற்றமும் நாடி அதில் மிகை நாடுதலே நல்ல திறனாய்வு என்று நம் இலக்கியப் பெரியவர்கள் இலக்கணம் வகுத்திருக்கிறார்கள். ஆனால் நம்மிடையே குணம் நாடுபவர்கள் குற்றம் நாடுவதில்லை. குற்றம் நாடுபவர்கள் குணம் நாடுவதில்லை. மாற்றுச் சினிமா பற்றி பேசுபவர்கள் இப்படித்தான் நம் தமிழ்சினிமா பற்றி பேசுகிற
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெய்ரவரி 2014 (165)

போது அதன் அதீத தன்மைகளை மட்டுமே ஒரு பிடி பிடிக்கிறார்கள். அப்படிப் பேசுவது, அப்படி எழுதுவதுதான் புரட்சிகரமான சிந்தனை என்று புரட்சியாளர்கள் வரிசையில் இடம் பிடிக்கிறார்கள்.
தமிழ்சினிமா தயாரிப்பாளர்கள், கலைஞர் கள் அனைவரையும் மட்டரகமானவர்கள் என்ற வரிசையில் வைத்துவிடுகிறார்கள்.
ஞானம் நவம்பர் இதழில் தேவமுகுந்தனின் கண்ணிரினுாடே தெரியும் வீதி சிறுகதைத் தொகுதி பற்றி எழுதிய குறிப்பில் பேராசியர் நுஃமான் தமிழ் தேசிய எழுத்தாளர்கள் குறித்து தெரிவித்த ஒரு கருத்தினை வெளிப் படுத்தியிருந்தேன். நம்விமர்சனப்புலிகளும், எழுத்து ஜாம்பவான்களும் கொதித்துப் பாய்ந்து சாடப்போகிறார்கள் என்ற பயம் இருந்தது.
மூச்.1 சத்தமே இல்லை.!" குணம் நாடி குற்றமும் நாடி அதில் மிகை நாடும் நல்ல இலக்கிய இலக்கண பண்பாடு நம் படைப்புலகினர் மத்தியில் அரிது அரிது அரிதிலும் அரிது என்றாலும் தமிழ்ச் சினிமா உலகின் தயாரிப்பாளர், நெறியாளர், கலைஞர்கள் மத்தியில் அது கொடிகட்டிப் பறப்பதைக் காணமுடிகிறது.
அடப்பாவி! இவுங்க கிட்டயா இந்த மாதிரி கருத்தாடல் இருக்கு? இந்தப் பய புழுகுகிறதைப் பாருங்க” என்ற அங்கலாய்ப் புடன் மாற்றுச் சிந்தனையாளர்கள் நெற்றிக் கண்ணைத் திறக்கக் கூடும்.
பொங்கல் தினம் அன்று தமிழ்நாட்டு பாலிமர் அலைவரிசையில் திரையுலகைச் சேர்ந்தவர்களின் ஒரு கருத்தரங்கு இடம் பெற்றது. சினமாவால் சமூகம் பாதிக்கப்படு கிறதா? சினமா சமூகத்தைப் பிரதிபலிக் கிறதா? அதுதான் தலைப்பு. கலைஞர்களும், தயாரிப்பாளர்களும், நெறியாளர்களுமாக இருபக்கமாக அணிவகுத்து கருத்துப் போரிட்டார்கள்.
தமிழ்ச் சினிமாவைச் சேர்ந்தவர்கள் இந்த அளவிற்கு தமது குறைபாடுகளையும், இதன் கவர்ச்சியால் இந்த அளவிற்கு பாதிக்கப்படுகிறது, சமூகத்தை தாம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் என்றெல்லாம் அடித்துச் சொல்வார்கள் என்று நான் நினைக்கவே இல்லை.
சில பெரிய புள்ளிகள் தாம் பெரிய சமூக சேவை செய்வதாக பீத்திக் கொண்டாலும், தமது படைப்புக்களில் பெரிய அளவிற்கு சமூகம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது
49

Page 52
என்பதை அவர்களில் சிலர் மனம் திறந்து சுய விமர்சனம் செய்தார்கள். பலத்த சிரிப்புக்களுக்கு மத்தியில் முன்வைத்த சுய விமர்சனங்கள் மகிழ்ச்சியளித்தன.
தமிழ்ச்சினிமா உலகம் மிக விரைவில் அதன் மோசமான பகுதியிலிருந்து விலகிச் செல்லும் என்பதை பறைசாற்றுவது போல் அதன்பாதிப்புக்கள் குறித்து அக்கலைஞர்களே குறிப்பிட்ட கருத்துக்கள் அமைந்திருந்தன.
தயாரிப்பாளரும் நகைச்சுவைப் பாத்திரங் கள் ஏற்று நடிப்பவருமான ஆர். சுந்தரராஜன் பேசும்போது
'ஏன்'பா என்ன அப்படி நடிகைகள் மீது மோகத்தைக் காட்டிவிட்டோம்னு கூசாம கொதிக்கிறீங்களே நான் பத்து வயசிலே சினிமா பைத்தியம் பிடித்து சென்னைக்கு
ஓடிவந்தேன்.
ஏன் தெரியுமா?' என்று சபையைப் பார்த்தார். 'என்ன பாடுபட்டாவது சினிமாவிலே சேர்ந்தாத்தான் எப்படியாவது தாஜா பண்ணி பத்மினியை கட்டிக்கலாம் என்ற மோகந்தான். அந்தப் பத்து வயசுலே பத்மினி மோகம் ஆட்டிப்படைக்க வீட்டை விட்டு ஓடிவர மனம் பேயாய் அலைஞ்சதுன்னா எப்படிப்பட்ட மோகத்தை
நம்ம சினிமா இந்தப் பிஞ்சு மனசைக் கெடுத்து
வைச்சிருக்கும்.
நடிகர்கள் மீதான மோகம் பற்றி இன்னொரு தயாரிப்பாளர் பேசினார்.
'தாலியின் மகிமை பற்றி எத்தனை படங்கள் எடுத்திருக்கோம். என்ன நடந்தாலும் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை கழற்றக் கூடாது அப்படி இப்படின்னு டயலாக்கை மழையாகக் கொட்டியிருக்கோம் என்ன புண்ணியம்? நம்ம பொம்மனாட்டிங்க நடிகர் கள் மீது கொண்ட மோகம் கொறைஞ்சுதா?
ஏம்.ஜி.ஆர் சடலமாகக் கிடந்தபோது
| ஞானம் பிரதம ஆசிரியர்
தி.ஞானசேகரன்
எழுதிய “எனது இலக்கியத் தடம் - பாகம் - 1 (
“வட இந்திய பயண அனுபவங்கள்' - (3 ஆகிய நூல்களைத் தபால் மூலம் ஞானம் பன
பெற்றுக்கொள்ளலாம்.
50

“எதுக்கு இந்த வாழ்க்கைன்னு கேட்கும் கதறல்களோடு ஆயிரக்கணக்கான தாலிக் கொடிகள் பட்டு பட்டுன்னு அறுத்தெறியப் பட்டுதாமே!'
அடப்பாவிகளா! கலையின் பெயரிலே இந்த அளவிற்கு சமூகத்தைக் கெடுத்து வச்சிருக்கீங்களா? ஈஸ்வரா! எங்கே போய்த்தான் முட்டிக்கிறது என்று செறியச்சன் தலையில் அடித்துக் கொள்வது சரிதான் போலும்?'
அதனால்தான் தமிழ் இலக்கியம் நமக்கு நக்கீரனை தந்திருக் கிறது.
பொங்கல் திருநாள் அன்று பாலிமர் செனலில் இந்திய தமிழ் திரைப்பட கலைஞர்கள் பட்டி மன்றம் ஒன்றை நடத்தினார்கள். சினிமாவால் சமுதாயம் பாதிக்கப்படுகிறது, சினிமா சமுதாயத்தை பிரதிபலிக்கிறது. இவைதான் தலைப்புக்கள். தமிழ்ச்சினிமாவை சதா ஒரு பிடிபிடிக்கும் நம் நினிமா விமர்சகர்களுக்கு இது அதிர்ச்சியைத் தான் கொடுக்கும். அட சினிரக்காரர்கள் தாங்கள் சமுதாயத்தை சீரழிப்பதை எற்றுக் கொள்கிறார்களா அசந்து போவார்கள். ஆனால் தமிழ்ச் சினமா உலகில் பல நல்ல படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் இயக்குநர்கள் குறிப்பிட்ட கருத்துக்கள் அவர்களை வாய்பிளக்க வைத்துவிடும். ஐந்தாறு தசாப்தங்களுக்கு முன்னர் னெ செறியச்சன் சொன்ன கருத்துகளை அவர்கள் சொன்னது போலிருந்தது.
புகழ் பெற்ற இயக்குநர்களான வாசு, ரவிக்குமார் இருவரும் தலைமை வகிக்க ரமேஸ்கண்ணா. ஆர்சுந்தராஜன். வி. சேகர், மனோபாலா, தம்பிராமையா. ராதாரவி, சீமான் ஆகியோர் இருபக்கங்களிலுமாக இருந்து கருத்துக்களை முன்வைத்தார்கள்.
0 0 0
500/=) 00/=) சிமனையில்
5. Sான்
ஞானசேகரன்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மெய்ரவரி 2014 (165)

Page 53
உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர் பிரபந்தப் பெருந்தி "உடுப்பிட்டிச் சிவசம்பு புலவர் பிரபந்தப் எனும் பெருந் தொகுதி வெளியீட்டு விழா 2 உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூர் நகரபிதா வல்வை ந. அனந்தராஜ் தலைை நடைபெற்றது.
மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்ப விழாவில் யாழ். பல்கலைக்கழக இசைத்து வுரையாளர் திரு. ந.சஞ்ஜீவன் இறை வை இசைத்தார். புலவரின் கொள்ளுப் பேரரு யியலாளரும் வெளியீட்டாளருமாகிய திரு. னந்தன் வரவேற்புரை நிகழ்த்தினார். நகர தலைமையுரையில் தமிழினத்தின் சொத்துக்கள் பிராந்திய பாரபட்சமின்றி ஆவணப்படுத்தப்பு தன் வெளிப்பாடுகளில் ஒன்றே இந்நூல் வெ குறிப்பிட்டார்.
ஆசியுரையைச் சிவபிரம்ம பூரீ வைத்திய நிகழ்த்தினார்.
வாழ்த்துரையினை வழங்கிய யாழ். தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர். கி. விசr புலவர் மரபினை ஆராய்வதற்குரிய வரல கொண்ட தொகுதியாக இந்நூல் விளங்குகி பிட்டார். உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் சு. கிருஷ்ணகுமார், உடுப்பிட்டி மண்ணிற்கென பாரம்பரியத்தை அருளம்பலம் முதலியார் ( எனவும் அது இன்று வரை இலங்கை முழு எனவும் குறிப்பிட்டார்.
வெளியீட்டுரையினைப் புலவரின் பூட்டி ஆசிரியை திருமதி. இ. தில்லையம்பலம்வழங்கி மிஷன் கல்லூரி தீக்கிரையானபோது, புல தீக்கிரையாகின எனினும், அவற்றைச் சுதர்ச வருடமான தீவிர தேடுதலில் கண்டுபிடித்து ே பாராட்டத்தக்கது என்றும் கூறினார். புலவரி பாதுகாத்த புலவர்மணிக்கு நன்றியும் கூறினார் பின்னர் நூல்வெளியீட்டுவைபவம்நடைெ பிரதியைப் புலவர்மணி கா. நீலகண்டன் வழா கலாநிதி இருதய வைத்திய நிபுணர் ந. குகதாச கொண்டார். கெளரவப் பிரதியினை திரு. கி. வழங்க யாழ். பிரதம நூலகர் திருமதி இ கருணாகரன் பெற்றுக் கொண்டார். சிறப்புப்பி யாழ். பல்கலைக்கழக விஞ்ஞானபீட பீட பேராசிரியர் சி. பூரீசற்குணராஜா வழங்கினார். அறிமுகவுரையினை பேராதனைப் பல்ச கழக முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு சோதிநாதன் நிகழ்த்தினார்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெப்ரவரி 2014 (165)
 

ரட்டு - நூல் வெளியீட்டு விழா
பெருந்திரட்டு - தேவபாகமும் மானிடபாகமும் 14ஆம் ஆண்டு தை மாதம் 5ஆம் திகதி அன்று Ուլն)6Ն
மயில்
மாகிய றை விரி னக்கத்தை ம் பொறி நீ நித்தியா பிதா தமது ", சாதி மற்றும் பட வேண்டிய
ளியீடும் என்று
பநாதக் குருக்கள்
பல்கலைக்கழக கரூபன், சிவசம்புப் ாற்று ஆவணங்கள் ன்றது என்று குறிப் கல்லூரி அதிபர் திரு. ன அமைந்த இலக்கிய தொடக்கி வைத்தார் வதும் பரவியுள்ளது
தமிழ் புலமைமிக்க கினார். அமெரிக்கன் வரின் நூல்களும் ன் தனது நான்கு தொகுத்திருப்பது ன சுவடிகளைப
பற்றது. முதற் ங்க வைத்திய ன் பெற்றுக்
தவநேசன் மெல்டா ரதிகளை
டாதிபதி
லைக் // 历·马·
51

Page 54
நயப்புரையினைவழங்கியபேராசிரியர்எஸ், ச் தமிழ்ப் புலமையாளர்கள் என்ற பாரம்பரியட ஆரம்பிக்கின்றது எனக் கூறி சுவாமி விபுலானந்தர் ஆசிரியர்கள், சிவசம்புப் புலவரின் நேரடி மாண திரட்டில் அமைந்த மூன்று ஆய்வுக் கட்டுரைகை பத்தொன்பதாம் நூற்றாண்டு இலக்கியத்திற்கு மணி அவர்களையும் சுதர்சனையும் பல்கலைக் என்று கூறினார்.
ஆய்வுரை நிகழ்த்திய பேராதனைப் பல்கை வ. மகேஸ்வரன் அவர்கள். தமிழில் பதிப்புத்து ஒட்டத்தில் திரட்டு பெறும் முக்கியத்துவத்தை பகுப்பாய்வு முறையிலான பதிப்பினை மேற்கெ ஆரம்பமாக முன்னுதாரணமாக அமைகிறது எ யான இதுபோன்ற பதிப்புக்கள் தனியே பதிப்புறு விளங்குகின்றமை தமிழியலுக்கு பெரிதும் பய6 நீலகண்டன் எனும் புலமையும் முதுமையும் நிை விரிவுரையாளருமாகிய சுதர்சன் என்னும் இளை செய்த பதிப்புப் பணி இது. மரபு ஆளுமைமிக் மிக்க ஒருவரும் இணைந்து மேற்கொண்ட இட் நூல்கள் மேலும் வெளிவர வேண்டும் எனக் குறி ஏற்புரையினை பதிப்பாசிரியர் சார்பில் பே விரிவுரையாளர் திரு. செ. சுதர்சன் நிகழ்த்தினார் நன்றியுரையினை கொழும்பு ஆதார வைத் பதிவாளர் வைத்திய கலாநிதி பானுபிரசன்னா நி
மன்னார் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழாவு
மன்னார் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா மறைமமாவட்ட சமூகத் தொடர்பு அரும்பணி அன்றையதினம் அதிகாலை பொங்கல் பொங்குப் மன்னார் அமுதனின் தலைமையில் இடம்பெற சங்கத்தின் தலைவர் அருட்திரு. தமிழ் நேசன் ஆ ஆரம்பமாகியது
இந்நிகழ்வு | ULJIT6)TCO5 LD L J6Ö0 யாழ்ப்பாண தலைப்பில் அவர்களை
அறிமுகம் ெ தொடர் சமூக, கலை
அறிமுகம் உரையை இ (கொழும்பு மதிப்பீட்டு செயலாளர் தி கருத்துப் பரி இதைத்( நாவலாசிரிய
LD60TώύτΠΠ 91 கலந்துகொ
அமல்ராஜ் ெ றவுபெற்றன.
அனைத்தும் நிை
52
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிவலிங்கராஜாஇலங்கைப்பல்கலைக்கழங்களில் ம் சிவசம்புப் புலவரின் கல்வி மரபிலிருந்து ர், பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை ஆகியேரின் ாக்கர்கள் என்று சான்று காட்டிக் கூறினார். இத் )ளயும் அவற்றின் முக்கியத்துவத்தினையும் கூறி, கடின உழைப்பினால் தொண்டு செய்த புலவர் கழக புலமையாளர் சார்பில் வாழ்த்துகிறேன்
லக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர். நுறை பண்பாட்டுப் பின்னணியில், வரலாற்று விளக்கியும் பல்கலைக்கழகப் புலமையாளர்கள் ாள்வதற்கு இத்திரட்டு சிறந்த முன்னோடியாக, ன்றும் செவ்விதாக்கம் செய்யப்பட்ட செம்மை நூலாக மட்டுமன்றி, வரலாற்று ஆவணமாகவும் னளிக்கும் எனவும் குறிப்பிட்டார். புலவர்மணி றந்த ஒருவரும் எனது மாணாக்கனும் என்துறை மயும் புலமையும் நிறைந்த ஒருவரும் இணைந்து க ஒருவரும் மரபும் நவீனமும் கலந்த ஆளுமை பதிப்புப் பணி பாராட்டத் தக்கது. புலவரது ப்பிட்டார்.
ராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை
தியசாலை இருதயவியல் துறையின் சிரேஷ்ட கழ்த்தினார்.
ம் - "புதிய தளம்" சஞ்சிகை அறிமுகமும்
கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் திகதி மன்னார் மையமான கலையருவியில் இடம்பெற்றது. ம் நிகழ்வுதமிழ்ச்சங்கத்தின்நிர்வாகச் செயலாளர் ற்றது. தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் தமிழ்ச் அடிகளார் தலைமையில் காலை 9.00 மணிக்கு
வில் யாழ் பல்கலைக்கழக பகுதி நேர விரிவுரை ர்டிதருமான தமிழறிஞர் திரு. கடம்பேஸ்வரன் ம்) அவர்கள் "தமிழில் பிற துறைகள்” என்ற சிறப்புரையாற்றினார். திரு. கடம்பேஸ்வரன் திருமதி சுஜான அப்துல் றஹற்மான் அவர்கள் சய்துவைத்தார். ந்து புதியதளம்'என்ற பெயரில் வெளிவந்துள்ள U, இலக்கிய, பண்பாட்டு இரு மாத இதழின் இடம்பெற்றது. இச்சஞ்சிகை பற்றிய அறிமுக இச்சஞ்சிகையின் ஆசிரியர் திரு. ந. இரவீந்திரன் ) அவர்கள் வழங்கினார். இச்சஞ்சிகை பற்றிய ரையை மன்னார் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் திரு. எம். சிவானந்தன் வழங்கினார். தொடர்ந்து மாற்றங்களும் இடம்பெற்றன. தொடர்ந்து கவியரங்கம் இடம்பெற்றது. பர் எஸ். ஏ. உதயன் அவர்களின் தலைமையில் ற இக்கவியரங்கில் மன்னார் கவிஞர்களான முதன், நிசாந்தன், மயூறன், ஷிஹார்போன்றோர் ாண்டனர். கிராமிய நடனம் போன்ற கலை ம் இடம்பெற்றன. தமிழ்ச்சங்க உறுப்பினர்திரு. றவல் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வுகள்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெப்ரவரி 2014 (165)

Page 55
" சேர்க
1 )) 11 டி2
'ஞ
ஆசிரியர் தி. ஞானசே ஞானம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் : அனுபவங்கள்', 'எனது இலக்கியத் தடம்' 4 எழுத்தாளர்களான டொமினிக் ஜீவா, தெளி
ஞானம் சஞ்சிகை நடத்திய அமரர் செம்! பரிசளிப்பும் கொழும்புத் தமிழ்ச்சங்க சங்கரப்பு பெற்றது. இவ்விழாவுக்கு பேராசிரியர் சோ. சந், உமர் முன்னிலையில் இடம்பெற்ற இவ்விழாலை கதிர்காமநாதன்தம்பதி, திரு. திருமதி மு. தயாட தம்பதி, திரு. திருமதி நஜ்முல் ஹுஸைன் தம்பு வைத்தனர். தொடர்ந்து திருமதி வரதா ( வரவேற்புரையை ஞானம் இலக்கிப்பண்னை கந்தசாமி நிகழ்த்தினார். தலைமை உரை, ஞான அதிதிகள் கெளரவிப்பு, சிறுகதைப்போட்டிப் வடஇந்திய பயண அனுபவங்கள் நூலின் வி பத்மா சோமகாந்தன் அவர்களும், எனது ! தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் சிறுகதைப்போட்டியில் முதற்பரிசு பெற்ற பே கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்களின் சிறப்பு ஏற்புரையுடன் விழா இனிதே நிறைவேறியது. அவர்களும் அரங்க ஒழுங்கமைப்பினை திரு கே எஸ்.மோசேஸ் ஐந்தாவது முறையாகவும் அரச
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தி அவர்களுக்கு 2013ம் ஆண்டுக்கான சிறந்த க என்ற உயர் அரச தொலைக்காட்சி விருது வழா
இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாய முன்னிலையில் 2014.01.12 அன்று பண்டா இடம்பெற்ற விருது வழங்கலில் இந்த விருது என்ற கல்வி கலாசார நிகழ்ச்சி தயாரிப்புக்காக பெறுகின்ற ஐந்தாவது அரச தொலைக்காட்சி
அம்சமாகும். 'கணினியும் தமிழ் இலக்கியமும் இலக்கியக்க
ஞா. பாலச்சந்திரன் உரை.
கொழும்புத்தமிழ்ச்சங்கத்தில்158ஆவது இ களம் நிகழ்வில் 17-01-2014 அன்று மான மணியளவில் ஞா. பாலச்சந்திரனின் 'கணினியு இலக்கியமும்' என்ற உரை இடம்பெற்றது. இந்நி கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலை ஒருவரான செல்வி சற்சொரூபவதிநாதன் த தாங்கினார். உரையைத் தொடர்ந்து சபை ஆக்கபூர்வமான கருத்தாடலும் இடம் பெற்றது
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - யெய்ரவரி 2014 (165)

ானம்' சஞ்சிகை கரனின் இரண்டு நூல்கள் வெளியீடு. நி. ஞானசேகரன் எழுதிய 'வட இந்திய பயண ஆகிய இரண்டு நூல்களின் வெளியீடும் மூத்த வத்தை ஜோசப் ஆகியோருக்கான கௌரவமும், பியன் செல்வன் சிறுகதைப்போட்டி 2013இன் பிள்ளை மண்டபத்தில்26-01-2014 அன்று இடம் திரசேகரம் தலைமை வகித்தார். புரவலர் ஹாசிம் வதிரு. திருமதி பாலஸ்ரீதரன் தம்பதி, திரு. திருமதி பரன் தம்பதி, திரு. திருமதி ஜி. இராஜகுலேந்திரா பதி ஆகியோர் மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து யோகநாதனின் தமிழ்வாழ்த்து இடம்பெற்றது. எயின் உப செயலாளர் திரு. ஆழ்வாப்பிள்ளை ம் நிர்வாக ஆசிரியரின் வெளியீட்டுரை, கௌரவ பரிசளிப்பு என்பன தொடர்ந்து இடம்பெற்றன. மெர்சன உரையை மூத்த எழுத்தாளர் திருமதி இலக்கியத் தடம் நூலின் விமர்சன உரையை திரு க. இரகுபரன் அவர்களும் நிகழ்த்தினார்கள். மழிக்குமரன் அவர்களும் உரை நிகழ்த்தினார். ரை தொடர்ந்து இடம்பெற்றது. நூலாசிரியரின் விழாவின் நிகழ்ச்சித் தொகுப்பினை தம்பு சிவா க. பொன்னுத்துரை அவர்களும் நடத்தினர். - தொலைக்காட்சி விருது பெற்றார்
ன் தமிழ்ப்பிரிவுத் தயாரிப்பாளர் எஸ். மோசேஸ் ல்வி மற்றும் கலாசார நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ங்கிவைக்கப்பட்டுள்ளது.) "கர் கௌரவ சமல் ராஜபக்ஸ அவர்களின் மரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் து வழங்கிவைக்கப்பட்டது. 'சமாதான வாழ்வு' வே இவ்விருது வழங்கப்பட்டது. இது, இவர் விருது என்பது குறிப்பிடத்தக்கதொரு விசேட
களத்தில்
லக்கியக் "ல 6.00 ம் தமிழ் கழ்வுக்கு வர்களில் தலைமை யோரின்
53

Page 56
ஞானம் 163ம் இதழில் ஆசிரியர் ஞானம் நல்ல ஆரம்பமாக அமையப் பிரார்த்திக்கிறேன் அக்ஸா பயணம் தலைப்பில் பயண அனுபவங் சத்தியநாதன், ஏன் முடித்திர்கள். நன்றாகச் செல் ஆறாவது வாரமும் எழுதிய திருப்தியுண்டு, இ பார்ப்பு. இதுபோல புதல்வர் பாலச்சந்திரனின் வாளர் கலாபூஷணம் மானாமக்கீன் அவர் திய பொன்விழா கட்டுரையை வாசித்த பின்ட மொழி எழுத்தாளர் சங்கம் கடந்த மூன்று அ திருப்தியடைய முடிகின்றது. கட்டுரையில் ெ சங்கங்களின் நிலையோடு ஒப்பிடும்போது சிறு நகர்வது திருப்தி எந்த ஊரிலும் எழுத்தாளர் எ தொகையாக இருக்க மாட்டார்கள், வெகு சில நிதி பலமும் இருக்கும் என எமது உறுப்பினர்க 29.12.2014ன் எமது எழுத்தாளர்கூட்டத்திலும் ஞானம் இதழின் மானாவின் கட்டுரையையு அவர்களும் புரிந்து கொண்டதுடன் மானா அ
O எழுத்தாளர் எஸ்.அகத்தியரின் படைப்புகள் எனது வயது காரணமாக அவற்றின் உள்ளடக் உரைநடையில், கமழும் யாழ்ப்பாணத் தமிழில் அகலவில்லை. அவரது புதல்வியாரின் ஆணாதி (ஞானம் - 164) அந்த மணம் சிறிதேனும் கமழே
இலங்கைத் தொலைக்காட்சி நிலையங்கள் உரிய தனித்துவமான தமிழை மறந்து செயற்படு இந்த வாசனையை நாம் வரவேற்றே ஆகவேண் ஒரு காலத்தில் ஒரு பிரதேசத்துக்கு மட் அதிகமாகவே கேட்டு மனக் கசப்புற்றிருந்த இலத்திரனியல் ஊடகங்களின் இந்தப் போக் ஊடகங்களில் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்புக்
ஆயினும் இலங்கையில் பெரும்பான்ன புறந்தள்ளப்படுவதைப் பார்க்கும் போது "மெல் நிலையைத் தோற்றுவிக்கும் இலத்திரனியல் ஊ
இல.164ம் “ஞானம்” இதழின் ஆசிரியர் பக்க இந்த நூற்றாண்டின் எழுச்சிமிக்க ஒரு தலைவர் முறையில் விளக்கியிருப்பதைக் காண்கின்றேன தனது புத்தியெழுத்தில் இதையே பகர்கின்றார். அவர் மரணத்தைக் காணச்சென்றுள்ளதைப் பழ அத்துடன் தலைவர் மண்டேலா கற்றுக் கொ பலமான நிலையில் பழிவாங்காதே’ என்ற தார உலகம் கண்ட அரபாத் மறந்தார். யாஸிர் அர என்பதையும் நான் நினைவு கூர்கின்றேன்.
ஒலி, ஒளி நிகழ்ச்சிகள் தனித்தமிழிலே நடை லதீப் அவர்களின் ஆதங்கமும் வரவேற்கத்த உச்சரிப்புகளிலும் பிழை விடுகின்றனர். சிலருச் வாசிப்பை, பேச்சைக் கேட்கும் பொழுது ஐயோ மொழியைப் பயிற்றுவிப்பது நல்லது என நினை
54

அவர்களின் இலண்டன் பயண அனுபவங்கள் நானும் வாரமஞ்சரியில் ஐந்து வாரங்கள் அல் கள் எழுதி முடித்தபோது ஆசிரியர் திரு. அருள் கிறது, இன்னும் எழுதுங்கள் என உற்சாகமூட்ட துபோல இலண்டன் பயணமும் அமைய எதிர் கம்பூச்சிய பயன நவீனமும் அருமை. மூத்த ஆய் களின மலேசிய எழுத்தாளர் சங்கம் நடத் புதான் எனது தலைமையிலான புத்தளம் தமிழ் ஆண்டுகளாக முண்டியடித்து நகர்வதையிட்டுத் சால்லப்பட்ட பெரும் நகரங்களின் எழுத்தாளர் று நகரத்தின் பத்துபேரோடாவது எமது சங்கம் ன்போர் ஏனைய தொழில் புரிவோரைப் போலத் ரேயிருப்பர், அதற்கேற்பவே உறுப்பினர்களும், ளுக்கு வழமையான தலைமையுரையைக் கடந்த உரைத்ததுடன் கையில் எடுத்துச் சென்றிருந்த ம் வாசித்துக் காட்டித் திருப்தி கொண்டேன். வர்களுக்கும் நன்றிகள்.
- கலாபூஷணம் எம்.ஐ.எம்.அப்துல் லத்தீப். O Ol
பலவற்றை நான் இரசித்துச்சுவைத்திருக்கிறேன். க்கம் எனது நினைவில் நிற்காவிடினும் அவரது ன் வாசனை எனது நாசியை விட்டு இன்னமும் க்கம் குளவியாகக் கொட்டும் பரிசுக் கதையிலும் வே செய்கிறது. இந்திய ஊடகங்களைப் பின்பற்றி இலங்கைக்கே டும் இந்தக் காலத்தில் லண்டனில் இருந்து வீசிய டும். டுமே உரித்தான மொழி வழக்கை அளவுக்கு இந்திய வம்சாவழித்தமிழரைப் பொறுத்தவரை கு மகிழ்ச்சியைக் கொடுப்பதும் அவர்களுக்கு கிடைப்பதும் வரவேற்கத்தக்கதே. மையினர் கையாளும் தமிழ்ப் பிரயோகம் ல (இலங்கைத்) தமிழ் இனிச் சாகும்' என்ற அவல டகங்களைச் சாடாதிருக்க முடியவில்லை.
- வேதில்லைநாதன், திருகோணமலை. O Ol 5ம் என்றும் போல் இன்றும் என்னைக் கவர்ந்தது. நெல்ஸன் மண்டேலா என்பதை ஆசிரியர் நல்ல ர். பேராசிரியர் துரை மனோகரன் அவர்களும் அவர் அருகேயிருக்க தகுதியில்லாத தலைவர்கள் ற்றி பேராசிரியரின் ஆதங்கம் வரவேற்கத்தக்கது. டுத்த பலவீனமான நிலையில் சரணடையாதே க மந்திரத்தை இன்னொரு புரட்சித் தலைவராக பாத்தின் அந்திம காலம் இதை எண்பிக்கின்றது
பெறவேண்டும் எனக் கூறும் எம்.ஐ.எம்.அப்துல் க்கது. ஒலி, ஒளி நிகழ்ச்சிகளில் தமிழ்மொழி கு 'ழ' வருவதில்லை. இவர்களின் தமிழ் மொழி பாவம் எனக் கூறவேண்டியுள்ளது. இவர்களுக்கு க்கின்றேன். அத்துடன் தமிழ் பேசும் இன்னொரு
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெப்ரவரி 2014 (165)

Page 57
இனமான முஸ்லிங்களின் பெயர்களைச் சொ சோதனை- இவற்றுடன் தூய தமிழில் எழுவது உணர்ந்தால் மிக நன்றாக இருக்கும்.
கே.விஜயன் அவர்களின் சித பிரச்சினை சிங்கள உச்சரிப்பு இதுவும் இன்று பரவலாக பிரமுகர்களும் கண்டு கொள்ளாமல் இருப்பது என்ற வார்த்தைகள் 'நெலும்பொகுன' என்று த மொழி அமுலாக்கம். இப்படியாக பல தமிழ் சிங்கள மயமாக்கப்படுவதற்கு மெதுவாக நக சிங்கள மொழியில் மட்டுந்தான் இசைக்க வே போகின்றது. மொழிப் பற்று கட்டாயம் தேை
O. O.
ஞானம் சஞ்சிகையின் 164ஆவது இதழைப் னின் ' மெல்லுணர்வு' என்னும் சிறுகதை இன் கல்யாணச்சந்தையில் அடிமாடாக ஆண்பிள்ை ஒழிந்துபோகவில்லை என்பதைப் பறைசாற்றுக சாதாரண பெண்ணின் எதிர்பார்ப்புடன் வரும் கோபம், விரக்திகொண்டு அவனை விவாக தொலைத்த ஆனந்தன் தன் ஆண்மையையே ே உள்ளது. அத்துடன் இன்று ஆனந்தன் போ எம்மத்தியில் வாழ்கிறார்கள் என்பது அந்தக்க நடேசன் பாராட்டப்படவேண்டியவர்.
பொய்யாயின எல்லாம் என்ற சிறுகதை கல்யாணம் வரைக்கும்தான் என்ற செய்தியை மணாளனானபின்சாதாரணமனிதனாகஆணா விரசமான வார்த்தைப்பிரயோகங்களைப் ஆசிரியரும் பாராட்டுக்குரியவரே!
பயண இலக்கியக்கட்டுரை மூலம் இலண் டச் செய்து சம்பவங்களை விறுவிறுப்பாகவும் யில் எழுதும் ஆசிரியர் மேலும் பல பயணக்கட்
O. O.
இதழாசிரியர் அவர்களுக்கும், மற்றும் சக
நேற்று(19-01-2014 அன்று) என்னுடையட ஜீவா அவர்களும், கவிஞர், திரு. த. துரைசிங்க மட்டுமல்லாது, ஞானம் இதழை (ஜனவரி 2014 தமிழகச் செய்திகள் பகுதியில் (பக்கம்50), எ6 பற்றியும், திரு.கே.ஜி. மகாதேவா அவர்கள் எழு
உங்களைப் போன்ற ஒரு சிலரின் அன்புப் தமிழ்ப்பணிக்கும் கிடைத்த மாபெரும் அங்கீக
ஈழத்து அறிஞர்களும் இலக்கியவாதிகளு போற்றுதற்குரியது. யாழ்ப்பாணம் நல்லூர் பிள்ளை, க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, ஆ புஷ்பரட்னம், டொமினிக் ஜீவா, மு. தளையசிா காத்தான்குடி அப்துல்காதர் லெப்பை, இள் அறிஞர்களும் கலைஞர்களும் கவிஞர்களும் தமிழன்னையை அழகுபடுத்தினார்கள். ( முதன்முதலாக தமிழ் மொழிபெயர்ப்பு க போற்றுதலுக்குரியது.
இமாம் ஷிஹாபுத்தினுர்ரம்லி அவர்களுை அறிஞர்ஷைக் உதுமான் அவர்கள் தமிழில் மெ. இதுவே குர்ஆனுக்கான முதல் (அரபுத்) தமி பட்டுள்ளது.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெய்ரவரி 2014 (165)

ல்லும் பொழுதும் வேதனை இல்லை அது ஒரு தும் நன்றே என்பதையும் அப்துல் லதீப் அவர்கள்
நன்றாக இருந்தது. இதுபோல தமிழ் எழுத்து க் காணப்படுகிறது. இதையும் தமிழ், முஸ்லிம் ம் ஒரு புதுமை. உதாரணமாக தாமரைத் தடாகம் ானே எழுதப்பட்டிருக்கின்றது. இது தான் தமிழ் சொற்கள் சிங்கள மொழியிலே உள்ளன. இவை ாத்தப்படும் காய்கள். இலங்கை தேசிய கீதத்தை |ண்டும். இதுவும் ஒரு பிரச்சனையாக உருவாகப் வதான், ஆனால் மொழி வெறியாகக்கூடாது.
- பானந்துறை எம்.பி.எம்.நிஸ்வான் O படித்துச் சுவைத்தேன். மிகவும் அருமை. நடேச னும் எம்மவர் மத்தியில் வேரூன்றிக்காணப்படும் ளைகளை அதிக விலைக்கு விற்கும் சந்ததி இன்று கிறது. அதிக விலைகொடுத்து வாங்கப்பட்டாலும் மனைவி, எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாக, எரிச்சல், 5ரத்துச் செய்வதும் இதனால் வாழ்க்கையைத் சாதித்துப்பார்ப்பதும் சிந்தையைத் தூண்டுவதாக ால் எத்தனை ஆண்கள் வாய்மூடி மெளனமாக டவுளுக்கே வெளிச்சம். இந்தக் கதையைத் தந்த
இளம்காதல் பருவத்தில் காணும் கனவெல்லாம்
சொல்லிச் செல்கிறது. மனம் நிறைந்த காதலன் க்கத்தில்பெண்ணடிமைத்தனத்தைவெளிப்படுத்தி பிரயோகிப்பதன் மூலம் வெளிக்கொணர்ந்த
டன் மாநகரை மனத்திரையில் நிஜமாக நிழலா ), எதிர்பார்ப்புடனும் வாசிக்கத்துரண்டும் பாணி ட்டுரைகளைத் தரவேண்டுமென வேண்டுகிறேன். - சி. மனோரஞ்சன், கல்முனை -02
ஆசிரியர் குழுவிற்கும் வணக்கங்கள். ாரதிஆய்வுநூலகத்தில், எழுத்தாளர்திரு. அந்தனி ம் அவர்களும் என்னைச் சந்தித்து உரையாடியது !) எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். அவ்விதழில் னது பாரதி ஆய்வு நூலகம் பற்றியும், என்னைப் ழதிய ஆக்கம் கண்டு மகிழ்ச்சியடைந்தேன்.
அரவணைப்புமே என்னுடைய உழைப்பிற்கும் ாரமாகும். நம், தமிழுக்கு செய்த தொண்டு மகத்தானது. ஆறுமுகநாவலர், தென்புலோலியூர் கணபதிப் னந்தகுமாரசாமி, இந்திரபாலா, சி.பத்மநாதன், பகம், மஹாகவி, டேனியேல், செ. கணேசலிங்கன், லாமிய அறிஞர் அனஸ், முதலான எண்ணற்ற இலக்கியவாதிகளும் தங்களின் படைப்புகளால் இஸ்லாமிய திருமறையான அல்குர்ஆனுக்கு ண்டவர்கள் ஈழத்து அறிஞர்களே என்பதும்
டய ஃபைதாஹற்குர்ஆனை இலங்கையைச் சேர்ந்த ாழிபெயர்த்துகி.பி. 1863இல் வெளியிட்டுள்ளார். ழ் மொழிபெயர்பு என்று அறிஞர்களால் ஏற்கப்
55

Page 58
நான் எப்பொழுதுமே ஈழத்து அறிஞர்களின் தங்களுக்கும், தங்களைச்சார்ந்தோருக்கும் த தெரிவித்துக்கொள்கிறேன்.
என்னை என்னுடைய தமிழ்ப் பணிகை தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தன இக்கடிதத்தை முடிக்கிறேன். நன்றி! வணக்கம்!, -பழங்காசு. ப. சீனி O ஞானம் தனது இலக்கியப் பயணத்தைத் கால்பதித்திருப்பதை அதன்164 இதழ்(ஜன. 164 இந்த இதழில் வெளியாகியுள்ள அனைத்து அப்துல் லத்தீப் எழுதிய தமிழ் ஒலி, ஒளி கட்( ஆணி அடிக்கிறது. எமது நல்ல பாரம்பரியங் எம்மவர் வலம் வர பிரிட்டிஷ் மக்கள் தாங்க என்பதை இற்றை வரை சொல்லிலும் செயலி இலண்டன் பயண அனுபவங்கள்) ஒப்பு நோக்க கேள்விக்குறிதான் எழுகின்றது.(அதற்காக ஆங் நியாயப்படுததுதவதாக இல்லை.
ஞானம் தனது புற, அக வடிமைப்பிலு மகிழ்ச்சியாகவுள்ளது. இதழின் வடிவமைப்பாடு
ஞானம் 164 ஆவது இதழ் நெல்சன் மண்ே ஆசிரியர் பக்கத்தை அலங்கரிக்கிறது. அட்டை வித்தகர் கலாபூஷணம் கவிஞர். த. துரைசிங்கத் தந்திருக்கிறார்கள்.
டாக்டர் தி. ஞானசேகரனின் இலண்டன பாதுகாக்கும் மக்களைப்பற்றியும், அதனை அ பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை சொ பழங்காலத்தன்மையினைப்பற்றியும் விபரித்துவ
இதழில் இடம்பெற்றுள்ள மூன்று சிறுகை ஞாபகார்த்தச் சிறுகதைப்போட்டியில் இரண ஜோகரட்னம் எழுதியிருந்த பொய்யாயின எல்ல வசிக்கும் இலங்கையருக்கு அடிக்கடி ஏற்படும் மனைவிமீது அபாண்டமாகச்சந்தேகப்படுவது மூன்று பிள்ளைகளையும் வைத்துப் பராமரிப் சற்றுச் சிரமமான காரியமாக இருந்தாலும் கண வேண்டியிருக்கிறது. ஏதோ ஆபத்துக்கு உதவு இருக்கும் வரையில் ஆறுதல்தான்.
நடேசன்எழுதியிருந்த"மெல்லணர்வு'என்றச் விட்டுக்கொடுத்து ஒருவருக்கொருவர் புரிந்து விளக்குவதோடு, பணத்துக்காக விலைபோகும் நிலையில் ஆனந்தன் மேனகா திருமண வாழ்க் உடலுறவுகளின்றி பட்டுப்போயிருந்த ஆனந் என்ற எண்ணம் தோன்றியதில் வியப்பில்லை. தி செய்தும் பரிசோதனை அடையமுடியாமல் இரண்டு கதைகளும் புலம் பெயர்ந்தவர்களின் வ பேசுகிறது. நெடுந்தீவு மகேஷ் எழுதிய அவள் அரு நிற்கும் ரிச்சர் காந்திமதியினதும் மாணவச் பிடித்துக் காட்டுகிறது.
O. O.
56
 

ன் தமிழ்ப் பணியை வியந்து போற்றி வருபவன். தமிழ்ப்பணி சிறக்க என்னுடைய வாழ்த்துகளைத்
ள தங்களின் ஞானம் இதழ் மூலம் ஈழத்துத் மைக்காக மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்து அன்புடன்,
வாசன், திருச்சிராப்பள்ளி, தமிழநாடு, இந்தியா
O தொடர2014இல் மிகவும் ஒர் உத்வேகத்துடன் ) கட்டியம் கூறிநிற்கின்றது. அம்சங்களும் சிறப்பாக உள்ளன.திரு. எம்.ஐ.எம். டுரையானது எம்மவரின் அன்னிய மோகத்திற்கு களை உதைத்து விட்டு புதுமை மோகிகளாக ஸ் பழம்பெரும் நாகரிகத்தின் சொந்தக்காரர்கள்' லிெலும் காட்டிவரும் தன்மையை (ஆசிரியரின் கியபோது- எமது இனம் எங்கே போகிறது என்ற கிலேயர்களின் அத்தனை செயல்களையும் நான்
பங்கூட ஒர் ஈடுபாட்டுடன் திகழ்வதையிட்டு ாருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
- ஷெல்லி தாசன் O Ol
டலா யார் என்பதைபற்றிய விபரங்களைத்தந்து ப்பட அதிதி இலக்கிய ஆளுமைமிக்க இலக்கிய தைப்பற்றிய குறிப்புகளை அந்தனிஜிவா அவர்கள்
ள் அனுபவங்கள் காலத்தின் பெறுமதியைப் வர்கள் வாசிப்பின்மூலம் எத்தகைய முறையில் ல்லியிருப்பதோடு தெருக்களின் பசுமையையும் ஸ்ளார்.
தகளில் ஒன்று அமரர் செம்பியன் செல்வனின் டாம் இடத்தைப்பெற்ற லண்டன் நவஜேதி )ாம் என்ற சிறுகதை. இது புலம்பெயர் நாடுகளில் குடும்பப் பிரச்சினையைப்பற்றிப்பேசுகிறது. தன் குடும்பவாழ்க்கை சிதைவதற்கும் காரணமாகிறது. பது என்பது தனி ஒரு நபரான மனைவியினால் ாவனின் சகல இம்சைகளையும் தாங்கிக்கொள்ள ம் நம்நாட்டு 119போல அங்கும் 999 இலக்கம்
சிறுகதைகணவன்மனைவியர், ஒருவருக்கொருவர் ணர்வுடன் வாழ்வது தான் வாழ்க்கை என்பதை ம் திருமணங்கள் பலன் தருவது குறைவு என்ற கை விவாகரத்தில் முடிந்தாலும் நீண்ட நாட்கள் தனது ஆண்மையைப்பரிசோதிக்க வேண்டும் ருமணம் விவாகரத்தில் முடிந்தாலும் மறுமணம் போனது துரதிஷ்டம்தான். மேற்குறிப்பிட்ட வாழ்வில் நடந்தேறிய குடும்பப் பிரச்சனைபற்றிப் ழகிறாள்என்ற சிறுகதை ஏமாற்றத்தின்விளிம்பில் சிறுமி நிஷாவினதும் மனவேதனையைப்படம்
-எம். ஏம். மண்ஸர்ே, மாவனல்லை
O. O.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - பெப்ரவரி 2014 (165)

Page 59
விஸ்வநாத சா சாஸ்திரிகளின் மகனாகவும்
வித்துவரான இவர் அனை கிரகணம் கணிக்கும் விபரா இவர் இயற்றியுள்ளார் எ சாஸ்திரியாரும் "கணித வருகிறது. சிறப்பம்சம் யா தண்மையானது கடல் கடந்து இங் அறிந்த இங்கிலாந்தின் இவருக்கு “இராசாவின் அளித்துள்ளார்.யானைக்கும் அடிச 1828ஆம் ஆண்டு பங்குனி மாதம் 2 கிரகணத்தைக் கணிப்பதில் இவருக் விஸ்வநாதசாஸ்திரி அவர்கள் குறித்ததிலிருந் சந்திர கிரகணம் தொடங்கியது. அதேபோன்று 24 முடிவடைந்தது. இவ்வாறு ஏற்பட்ட பிழை குறித்து “கிரகணமோசம்” எனும் நூலை அச்சிட்டுள்ளாராம். கணித வல்லமை மட்டுமன்றி, கவிபாடுவதிலும் விஸ்வநாத சாஸ்திரி அவர்கள் விளங்கியுள்ளார். மையைப் பாடும் "மாவை குறவஞ்சி”, வண்ணார்பன பற்றிய "வண்ணைக் குறவஞ்சி”, “குருநாதர் கிள்ை களையும் இயற்றியுள்ளார் என்று வரலாறு கூறுகிறத
arC6
ஒளவைப் பாட்டி த6 பல பாடல்களில் பதிவு ெ ஒரு பாடலின் முதலிரு அமையப்பெறும்.
“எட்டேகால் லட்சணே மட்டில் பெரியம்மை வ எட்டேகால் லட்சன ஒருவனைப் 'புகழ்வதை யார் எட்டேகால் லட்சன் காரணத்தை விளங்குவ பற்றிய பரிசயம் எமக்குத்
தமிழிலே எட்டு எ6 எனும் எழுத்தின் வாயி பகுதியெண்னை "வ" எ கவும் எழுதுவார்கள். லட்சணமே எண்பதன் வா ஒளவை நிந்தாஸ்துதி ச்ெ
ஒளவைப் பாட்டியின்
 
 
 
 
 
 
 
 

പ്പീ
ன்னரிடம் /ட்டம் பெற்ற ஈழத்துக் கணித சிங்கும் ஸ்திரி அவர்கள் யாழ்ப்பானம் வட்டுக்கோட்டையில் நாராயன நடராச ஐயரின் பேரனாகவும் பிறந்தவர். வான சாஸ்திரத்தில் ாவர் மத்தியிலும் "கணிதசிங்கம்” என்று புகழ் பெற்றிருந்தார். ங்கள் அடங்கிய “வாக்கிய கரண கிரகணம்” என்னும் நூலை ான்று குறிப்புகள் உள்ளன. இவரின் தந்தையாரான நாராயன சிந்தாமணி” என்னும் நூலை இயற்றியுள்ளார் என்று தெரிய தெனில் விஸ்வநாத சாஸ்திரி அவர்களின் கணித வித்துவத் ங்கிலாந்துவரை பரவியுள்ளது. இவரின் கணித வல்லமையை
நான்காம் ஜோர்ஜ் மன்னர், ர் கணிதர்” எனும் பட்டத்தை ஈறுக்கும் என்பதற்கு அமைய 28ஆம் திகதி ஏற்பட்ட சந்திர த சிறுதவறு ஏற்பட்டுவிட்டது. து 15 நிமிடங்கள் பிந்தியே திடங்கள் பிந்தியே கிரகணம்
Rev. Dr. Poor eignfraser
பெயர் வாங்கிய புலவராக கள். மாவிட்டபுரத்தின் மகி rனை சிவண் கோயிலைப் ளவிடு தூது" போன்ற பாடல்
Ja
இல் லட்சணம்
ள் குறும்புத்தனங்களை
சய்துள்ளார். அவற்றில் வரிகள் கீழ்க்கண்டவாறு
ம எமனேறும் பரியே ாகனமே” ம் என்று ஒளவையார் க் காணலாம், ஒளவை னம் என்று கூறுவதன் தற்கு, தமிழ் எண்கள் தேவைப்படுகிறது. ர்னும் எண்னை "அ லாகவும் கால் என்னும் றும் எழுத்தின் வாயிலா இப்பாடலில் எட்டேகால்
s
1828 இல் ஏற்பட்ட கிரகணத் தின் உத்தேச வரைபடம். (1828 April 14th 9:55am)
யிலாக "அவலட்சனமே" என்று ஒருவனை கெட்டிக்கார
ய்கின்றாள். நறும்புதான் எண்னே!

Page 60
GNANAM - Registered in the Department of Pe
BSG IՈՈՍՈ
NATTARAN POTHA, KUN T: +94081 2420574,24202 E: lUckylanc
 

sts of Sri Lanka under No. GDI18News/2014
EUCUP
URERS
NDASALE, SRI LANKA. 17. F: +94081 2420740 0sfnet.Ik