கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய பொற்காலச் செந்தமிழ் இலக்கணம்

Page 1
NEW GOLDEN ERAS
புதிய டெ செந்தமிழ் |
(4, 5, 6- ஆம் வகு
ஆ சிரி
கா. அப்பாத்துரைப் [M. A. (Litt) M. A. (T
பதிப்பாசிரியர்: ந. சி
Jupiter Publishing
(Copy )
194
SOLB 'ENT : ஆனந்தா !

SENTAMIL GRAMMAR பாற்காலச் இலக்கணம் தப்புகளுக்குரியது)
யர்: பிள்ளை M. A. L T. amil) Visalad (Hindi)]
- கந்தையாபிள்ளை 9 H0488 Madra8,
iேght)
புத்தகசாலை, மட்டக்களப்பு.

Page 2

1349
NEW ERA SENTAMIL GRAMMAR
புதிய பொற்காலச் செந் த மிழ் இலக் க ண ம்
1392
//- HUNINAKAM
ஆ சி ரி யர் : கா. அப்பாத்துரைப் பிள்ளை M. A. L. T'. M. A. (Litt) M. A. (Tamil) Visarad (Hindi)
தர 171
பதிப்பாசிரியர்: ந. சி. கந்தையாபிள்ளை
பதிப்புரிமை. 1946
(விலை அணா 6.
சதம்-40
காபிரைட்)

Page 3
First Edition Sep. 2946.
Printed at The Sri Magal Vilasam Press, Madras. Q.H, M.S. No. 44.
Copies 1000.
18-9-46.

038 மு ன்னுரை :
A1 -----
இச் சிறு நூல் 4-5-6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படும் வகையில் எளிதாகவும் தெளிவாகவும் எழுதப் பட்டு தற்காலப் பேச்சுமொழி யியல்பையும், பழங்காலச் செந்தமிழின் வேறுபாட்டையும் ஆங்காங்கு இவ்விலக்கண நூலுள் பிரித்துக் காட்டப்பட்டதுடன் கூடியமட்டும் கீழ் வகுப்புக்களில் இச் செந்தமிழுக்குச் சிறப்பான பகுதிகளும் கடினமான சிறப்பு விதிகளும் விலக்கப்பட்டுள்ளன. எடுத் துக்காட்டுகள் பெரும்பாலும் மாணவன் மொழி யறிவுக்கு உட்பட்டே தரப்பட்டுள்ளன.
ஆசிரியர்க்கு கவனிப்பு:-விதிகளைப் போதிக்கு முன் எடுத்துக் காட்டுகள் வாயிலாக அவற்றை விளக்குவதே போதனா முறை. அதோடு அவற்றை வெளிப்படுத்தக் கேள்விகள் பயன்படு மாதலால் இந் நூலில் பெரும்பகுதி வினா விடைவடிவில் தரப்பட்டுள்ளது.
வொ த
வட
இலக்கண விதிகளின் வரும் உண்மைகளே கீழ் வகுப் பிற் குரியன. நுணுக்கங்கள் மேல் வகுப்பில் விளக்கப்பட வேண்டும், கவனிப்புகள் ஆசிரியர் வேண் டும்போது அறிந்து, விளக்குவதற்கே ஏற்பட்டன வாதலால் குறுகிய வடிவில் அச்சிடப்பட்டுள்ளன.
இச் சிறு நூல் மாணவர் ஆசிரியர் ஆகியவர்களுக்கு பேருதவியாகும் என்று நம்புகிறோம்.
ஆசிரியர்.

Page 4
பொருள் அடக்கம்
பக்கம்
1
இலக்கணமும் மொழியும் பயிற்சிப் பாடம் எழுத்துக்களின் இலக்கணம் பயிற்சிப் பாடம்
9.? N
இன வெழுத்துக்கள் தேர்வு வினாக்கள் | சொல் இலக்கணம் பயிற்சிப் பாடம்
10 14 15 17
19
3)
23
26
26
27 31
பி
32
வேற்றுமைகளும் அவற்றின் உருபுகளும் தேர்வு வினாக்கள் II பயிற்சிப் பாடம் 8 வினைச்சொல் இலக்கணம் பயிற்சிப் பாடம் 9 தேர்வு வினாக்கள் III இடை உரி இலக்கணம் பயிற்சிப்பாடம் 10 சொற்றொடர் இயல் நிறுத்தப் புள்ளிகள் பயிற்சிப்பாடம் 11 புணர்ச்சி இலக்கணம் பயிற்சிப்பாடம் 12 செய்யுளியல் பயிற்சிப்பாடம் - 13
33
34 37 38
39
43
2) 44

புதிய பொற்காலச் செந்தமிழ் இலக்கணம்
இயல் 1. இலக்கணமும் மொழியும் 1. இலக்கணம் என்றால் என்ன ?
ஒரு மொழியைப் பிழை இல்லாமல் பேசவும் எழுத வும், அதிலுள்ள நூல்களைப் படிக்கவும் உதவும் நூலுக்கு இலக்கணம் என்று பெயர்.
நாம் பேசும் மொழி தமிழ். அதைப் பிழை யில்லா மல் பேசவும் எழுதவும் அதிலுள்ள எண்ணற்ற நூல்களைப் படிக்கவும் நமக்கு உதவிசெய்யும் நூலே தமிழ் இலக்கணம்.
உலகில் பல நூற்றுக் கணக்கான மொழிகள் உள்ளன. அவற்றுள் பழங்காலத்திலிருந்து இன்று வரை மிகச் சிறப் புடன் இருந்து வளரும் மொழி நம் தமிழ்.
2, மொழி என்றால் என்ன ? - மனிதர் தம் மனத்தில் தோன்றும் கருத்துக்களை மற்ற வர்களுக்குத் தெரிவிப்பதற்கு வழங்கும் கருவியே மொழி ஆகும்.
மொழிக்கு இரண்டு வடிவங்கள் உள்ளன, ஒன்று ஒலிவடிவம் (பேச்சு); இன்னொன்று வரிவடிவம் (எழுத்து).
நம் கருத்துக்களின் குறியீடு, மொழியின் ஒலி வடிவம் (பேச்சு); ஒலி வடிவத்தின் குறியீடு வரி வடிவம் (எழுத்து).
கள
சு

Page 5
புதிய பொற்கலச் செந்தமிழ் இலக்கணம்
3. இலக்கணத் தில் நாம் எவற்றைப் பற்றிப் படிக்க வேண்டும் ?
இலக்கணத்தில் நாம் மொழியைப் பற்றிப் படிக்க வேண்டும்.
மொழிக்கு உறுப்பா யிருப்பது வாக்கியம். வாக்கி யத்துக்கு உறுப்புச் சொற்கள். சொல்லுக்கு உறுப்பு எழுத்து.
- வாக்கியம் ஒரு முடிந்த கருத்தைக் குறிக்கும். சொல் ஒரு கருத்தை அல்லது பொருளை அறிவிக்கும்.
எழுத்துச் சொல்லுக்கு உறுப்பாக அமைந்த ஒலியின் குறியீடு.
தமிழ் இலக்கணத்தில் நாம் வாசகம், சொல், எழுத்து ஆகியவற்றைப்பற்றிப் படிக்கிறோம்.
பயிற்சிப்பாடம் 1. 1. இலக்கணம் என்றால் என்ன ?
2. தமிழ் இலக்கணத்தில் எவற்றைப்பற்றிப் படிக்கி றோம் ?
3. தமிழ் மொழியின் சிறப்பு யாது ?
4. மொழி என்பது என்ன ? அதன் வடிவங்கள் எத்தனை ? அவை எவை ?
இயல் 2. எழுத்துக்களின் இலக்கணம் எழுத்து என்றால் என்ன ? சொல்லின் பகுதியாய் வரும் ஒலிக் குறியீடே எழுத்து ஆகும்.

புதிய பொற்காலச் செந்தமிழ் இலக்கணம் 2. தமிழில் மொத்தம் எழுத்துக்கள் எத்தனை?
தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள் உள்ளன. 3. அத் தமிழ் எழுத்துக்கள் 'எத்தனை வகை ?
மொத்தத்தில் தமிழ் எழுத்துக்கள் நான்கு வகை. அவை : (1) உயிர் எழுத்துக்கள்
(2) மெய் எழுத்துக்கள் (3) உயிர் மெய் எழுத்துக்கள் |
(4) ஆய்த எழுத்து அவற்றுள் உயிர் எழுத்துக்களும் மெய் எழுத்துக்க ளும் முக்கிய மானவை.
4, உயிர் எழுத்துக்கள் என்றால் என்ன? அவை எவை?
தமிழில் உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டு.
அவை : அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ,
ஒள என்பவை. இவை மற்ற எழுத்துக்களின் உதவி இல்லா மலே ஒலிக்கக் கூடியவை. அதனால் இவை உயிர் எழுத் துக்கள் என்று அழைக்கப்படுகின் றன.
5. மெய் எழுத்துக்கள் என்றால் என்ன? அவை எவை?
தமிழில் மெய் எழுத்துக்கள் பதினெட்டு.
அவை : க். ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம் ய், ர், - ல், வ், ழ், ள், ற், ன் என்பவை. மெய் என்றால் உடல் என்று பொருள். உடல் உயி சில்லாமல் தானே இயங்காது. மெய் எழுத்துக்களும் உயிர் எழுத்துடன் சேர்ந்து இக் இங் அல்லது க, ங (க் அ) (ங்அ) என்று ஒலிக்குமே யல்லாமல் தனியாக ஒலிக்க மாட்டா. அதனால் இவை மெய் எழுத்துக்கள் என்று! அழைக்கப் படுகின் றன.

Page 6
கடை!
காணல்
புதிய பொற்காலச் செந் தமிழ் இலக்கணம் 6. ஆய்த எழுத்து என்றால் என்ன ? அது எது ?
ஆய்த எழுத்து ஃ என்பது. இது மெய் எழுத்துக்களைப்போல் உயிருடன் கலக்
• காமல் இருப்பதால் இதனைத் தனிப்பட வைத்து ஆய்த எழுத்து என்றனர்.
கவனிப்பு 1:- தமிழர் பழங்காலத்தில் சண்டையில் வழங்கிய கேடயத்தில் மூன்று புள்ளிகள் இருந்தன. ஆய் தம் அதுபோ லிருப் பதனால் அதன் பெயராகிய ஆய் தத்தை இவ் வெழுத்திற்கும் இட் டனர்.
கவனிப்பு 2:-ஆய் தம் சொல்லுக்கு முதலிலும் வராது, கடைசியிலும் வராது என்பது காணலாம்.
(உ-ம்) அஃது, இருபஃது, கஃசு (ஒரு நிறை). 7. உயிர்மெய் எழுத்து என்றால் என்ன ? அவை எத்தனை ?
- தமிழில் ஒரு மெய்யின் பின் ஓர் உயிர் வரும் போது இரண்டையும் சேர்த்து ஒரே எழுத்தாக எழுதுகின்றோம். இவை உண்மையில் இரண்டு எழுத்துக்களே யானாலும் ஒன்றாக எழுதப்படுவதனால் 'இணை எழுத்துக்கள்' (கூட் டெழுத்துக்கள்) எனப்படும்.
பதினெட்டு மெய் யெழுத்துக்களுள்ளும் ஒவ்வொன் றன் பின்னும் பன்னிரண்டு உயிரெழுத்துக்களும் வரும் போது இணை எழுத்துக்களான உயிர் மெய் எழுத்துக்கள் மொத்தம் (18x12) 216 ஆகின் றன.
கீழ் வரும் அட்டவணையில் உயிர் மெய் எழுத்துக்கள் 216-ம் காணப்படும். அவற்றுக்கு நேர் இடப்புறத்தில் அவைகளில் முதலில் வரும் மெய் எழுத்துக்களும், நேர் மேலாக அவற்றில் கலந்துள்ள உயிர் எழுத்துக களும் தரப்பட்டிருக்கின் றன.
Dாக
வெள்ள

எ
கா
நா
சா
910
தா
நா
பா
2.18. 2.6• 2. 2. • E• 5• [• 5. மு. 2. [.இ. 4. 5. அ. 28 2 6 2 3 4 5 6 ( 8 டு 4 5 5 2 @ 3 2 2 2 = = = = = = 8 [ 4 = 8 9
இ 56 5 5 5 8999* 66566 5 5 5 5 5 2 ° sே, A9 9 2 = "66 45%a8 லி 5 55 56) தி இ 5) - 8 = 5 6 : 5 5 5 6 3 தி இ 569 இ இ இ ஒ 5 ஐ 5 5 20 25 5 6
68 688868886888688
82 *** 3 9 8 22 23 22 & 2 3 2
க க 58555555885:58
5 5 555 53
8 916 மாறான 'மை "
உயிர் மெய் எழுத்துக்கள்
ஏ ஐ ஒ ஓ ஒள உயிர்-12 கே கை கொ கோகௌ
ஙே ஙை ஙொ நோ நெள செ சே சை சொ சோ செள ஞெ ஞே ஞை ஞொ ஞோ ஞெள
டே டை டொ டேடாடௌ ணு ணணெ ணே ணை ணெ ணேணௌ தெ தே தை தொ தோ தௌ நே நை நொ நோ நெள பே பை பொ போ பெள மே மை மொ மோ மெள யே யை யொ யோ யௌ ரே ரை ரொரோ ரௌ லே லை லொ லோ லெள வே வை வொ வோ வெள
ழே ழை ழொ ழோ ழெள ளெ ளே ளை ளொ ளோளெள றெ றே றை றொ றோ றெள னூ னெ னேனை னொ னோ னெள
புதிய பொற்காலச் செந்தமிழ் இலக்கணம்
மா
யா
ரா
லா
வா

Page 7
புதிய பொற்காலச் செந் தமிழ் இலக்கணம்
கவனிப்பு 1:-உயிர் மெய் என்ற சொல்லில் முதலில் உயி கும் பின் மெய்யும் வருகிறது. ஆனால் உண்மையில் உயிர் மெய் எழுத்தில் உயிரும் மெய்யும் வரும் முறை இதுவன் று. மெய் முதவி
லும் உயிர் பின்னும் தான் வருகிறது என்று காண்க.
(உ-ம்) க் + அ = க; க் என் ற மெய் முதலில் வரு கிறது. அ என்ற உயிர் பின் வருகிறது.
கவனிப்பு 2!-க், ங், என மெய்யெழுத்துக்களுக் கெல்லாம் மேலே புள்ளி உண்டு. அதனால் அவை புள்ளிகள் என்றும் அழைக்கப் படும். அவற்றினுடன் அ சேரும்போது புள்ளி நீங்கிவிடும். ஆ, இ, ஈ முதலிய உயிர் நீண்டு வரும்போது புள்ளி நீங்கிய இவ்வடிவுடன் சில குறிகள் சேர்க்கப்படுவது காண்க.
பயிற்சிப் பாடம் 2 1. எழுத்து என்றால் என்ன ?
2. தமிழ் நெடுங் கணக்கில் உள்ள எழுத்துக்கள் எத்தனை?
3. தமிழ் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும் ? எவை ? அவற்றில் முக்கியமான வகைகள் எவை ?
4. உ.யிர் எழுத்துக்களுக்கும் மெய் யெழுத்துக்க ளுக்கும் அவ்வப் பெயர்கள் வரக் காரணம் என்ன ?
5. உயிர் எழுத்துக்கள் எவை ? மெய் யெழுத்துக் கள் எவை?
6. ஆய்த எழுத்து என் ற பெயர் வரக் காரணம் என்ன ? அதை ஏன் மெய் எழுத்துடன் சேர்க்காமல் தனித்துக் கூறுகிறோம் ?
7. உயிர் மெய் எழுத்து ஏன் இணை யெழுத்து எனப் படுகிறது? எவ்வெவ்வகை எழுத்துக்கள் சேர்ந்து

புதிய பொற்காலச் செந்த விழ் இலக்கணம்
உயிர் மெய் எழுத்தாகின் றன ? அவற்றுள் எது முதலில் வரும், எது பின் வரும் ?
8. இ, ப், பூ, ண், ழ, சை இவை என்ன வகை எழுத்துக்கள் ?
8. உயிர் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும் ? உயிர் எழுத்துக்கள் குறில் நெடில் என இரு வகைப்படும்.
உயிர் எழுத்துக்களில் அ, இ, உ, எ, ஒ என்ற ஐந்து எழுத்துக்களும் குறுகிய ஓசை உடையவை. குறுகிய ஓசை யுடைய எழுத்துக்களை நாம் குறில் என்கிறோம். எனவே அ, இ, உ, எ, ஒ ஆகிய இவ் ஐந்து எழுத்துக்களும் உயிர்க் குறில் ஆகும்.
உயிர் எழுத்துக்களில் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்ற ஏழும் நீண்ட ஓசையுடையவை என்று காணாலாம். நீண்ட ஓசையுடைய எழுத்துக்களை நாம் நெடில் என்கிறோம். எனவே ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழு எழுத்துக் களும் உயிர் நெடில் ஆகும்.
கவனிப்பு:-1 அ, இ, உ, எ, ஒ; என் ற 5 குறில்களுக்கும் சரியான நெடில் கள் ஆ, ஈ, ஊ, ஏ, ஒ, என்பவை. ஐ, ஒள என்பவை உண்மையில் அ, இ என்பவையும் அ, உ என்பவையும் ஒன்றாகச் சேர்ந்த இணை எழுத்துக்களே யாகும். நீண்ட ஓசையை உடையவை ஆதலால் இவை நெடில்க ளாயின. அவற்றோடு தொடர்புடைய குறில்கள் முறையே இ, உ, ஆகும்.
9. உயிர் மெய் எழுத்துக்களில் குறில் நெடில் என்ற பாகுபாடு உண்டா ? அவை எத்தனை ?
உயிர் மெய் எழுத்துக்களிலும் உயிர் மெய்க் குறில், உயிர் மெய் நெடில் உண்டு.

Page 8
ஐளை
-மம்
5ாது.
/ 8
புதிய பொற்காலச் செந்தமிழ் இலக்கணம் மெய் எழுத்துக்களுடன் உயிர்க் குறில்கள் வந்து சேர்ந்தால் உயிர் மெய்க் குறில் உண்டாகும்.
(உ-ம்) க் + உ=கு. இங்கே க் என்ற மெய்யுடன் உ என்ற உயிர்க் குறில் சேர, கு என்ற உயிர் மெய்க் குறில் உண்டாயிற்று.
18. மெய்களுடனும் தனித்தனி 5 உயிர்க் குறில்கள் சேர, (18x5=)90 உயிர் மெய்க் குறில்கள் ஏற்படுகின் றன.
இதுபோலவே மெய்களுடன் உயிர் நெடில்கள் சோ உயிர் மெய் நெடில் உண்டாகும். (உ-ம்) க்+ஆ = கா.
18 மெய்களுடனும் தனித்தனி 7 உயிர் நெடில்களும் சோ (18x7=) 126 உயிர் மெய் நெடில்கள் ஏற்படுகின் றன.
10. மெய் எழுத்துக்களில் எத்தனை வகை உண்டு ? அவை யாவை?
மெய் எழுத்துக்கள் மூன்று வகைப்படும். அவை, வல்லினம்,மெல்லினம், இடையினம் என்பவை.
11. வன்மையான ஓசை உடையவை வல்லினம் அல்லது வல்லெழுத்துக்கள் 'ஆகும். இவற்றை வாயின் மேல் பகுதியையும் கீழ்ப் பகுதியையும் முற்றிலும் மூடியே ஒலிக்கமுடியு மென்பதைக் காணலாம்.
வல்லெழுத்துக்கள் 6. அவை: க், ச், ட், த், ப், ற், என்பவை
இவற்றைப் புள்ளியில்லாமல் ( க, ச, ட, த, ப, ற" என்ற வாய்பாட்டால் நினைவில் வைக்கலாம்.
12. மென்மையான ஓசை உடையவை மெல்லினம் அல்லது மெல் எழுத்துக்கள் ஆகும். இவற்றை நாம் மூக்கு

புதிய பொற்காலச் செந்தமிழ் இலக்கணம்
வழியாக ஒலிக்கிறோம். மூக்கை அடைத்துக்கொண்டு இவற்றை ஒலிக்க முடியாது என்பதைக் காணலாம்.
மெல்லெழுத்துக்கள் 6. அவை: ங், ஞ், ண், ந், ம், ன், என்பவை.
இவற்றைப் புள்ளியில்லாமல் ' ங, ஞ, ண, ந, ம, ன' என்ற வாய்பாட்டால் நினைவில் வைக்கலாம்.
13. வன்மையாகவும் மென்மையாகவும் ஒலிக்கா மல் இடைப்பட்ட ஓசையை உடைய எழுத்துக்கள் இடை யினம் அல்லது இடை எழுத்துக்கள் ஆகும். இவை வல் லினத்தையோ மெல்லினத்தையோ போல வாயின் மேல் பாகமும் கீழ்ப்பாகமும் பொருந்தாமல் சற்றுத் திறந்து ஒலிக்கும்.
14. இடை யெழுத்துக்கள் 6. அவை: ய், ர், ல், வ், ழ், ள், என்பவை.
இவற்றைப் புள்ளி யில்லாமல் ' ய, ர, ல, வ, ழ, ள' என்ற வாய் பாட்டால் நினைவில் வைத்துக் கொள்ளலாம்.
பயிற்சிப் பாடம் 3 1. குறில் என்றால் என்ன ? நெடில் என்றால் என்ன?
2. அ, இ, உ ஆகியவற்றின் நெடில்கள் எவை ? ஓ, ஒள ஆகியவற்றின் குறில்கள் எவை ?
3. இணை உயிர்கள் எவை? அவை குறில் நெடில் என்பவற்றுள் எதில் சேரும் ? ஏன் ?
4. உயிர் மெய்யில் குறில், நெடில் என்பது யாது?
5. உயிர்க் குறில் எத்தனை? உயிர் மெய்க்குறில் எத் தனை ? உயிர் நெடில் எத்தனை, உயிர் மெய் நெடில் எத்தனை?

Page 9
10
புதிய பொற்காலச் செந்தமிழ் இலக்கணம்
(6. கீழ் வருபவற்றில் எது உயிர் ' எ து மெய் ? எது உயிர் மெய் ? உயிர், உயிர் மெய் ஆகியவற்றில் எது குறில்,
எ து நெடில் என்று கூறுக.
உடு, கூன், ஆவடுதுறை.
7. கீழ் வரும் மெய்களுள் எவை வல்லினம், எலை மெல்லினம், எவை இடையினம் ?
க், ய், ர்,ன், ப்,வ்.
8. வல்லினம் என்றால் என்ன ? மெல்லினம் என் றால் என்ன ? இடையினம் என் றால் என்ன ? அவை எத் தனை? எவை ? மூக்கில் ஒலிக்கும் எழுத்துக்கள் எவை?
இன எழுத்துக்கள் உயிர் எழுத்துக்கள் 12 ல் குறில் 5, நெடில் 7. தமிழ் நெடுங் கணக்கில் குறில் எழுத்துக்கள் முடிந்த பின் நெடில் எழுத்துக்கள் எழுதப்படவில்லை. ஒரு குறிலும் அதன் பின் ஒரு நெடிலுமாக எழுதப்பட்டிருக்கின்றன.
(உ-ம்) அ (குறில்) ஆ (நெடில்)
இ (குறில்) ஈ (நெடில்)- உ (குறில்) ஊ (நெடில்) எ (குறில்) ஏ (நெடில்)
ஒ (குறில்) ஓ (நெடில்) இவை ஏன் இப்படி எழுதப்பட்டிருக்கின் றன ? - அ என்ற குறிலும் ஆ என்ற நெடிலும் ஒரே இடத் தில் பிறக்கின்றன. அவை இரண்டும் ஒரே இனத்து எழுத் துக்கள். அவை போலவே இ, ஈ; உ-ஊ; எ -ஏ; ஒ-ஓ; ஒரே இன எழுத்துக்கள்.
ஐ என்ற எழுத்துக்கு இ இனம் ஒள என்ற எழுத்துக்கு உ இனம்.
ககள்
அ தா

புதிய பொற்காலச் செந்தமிழ் இலக்கணம்
11.
1 4, இன எழுத்துக்கள் என்றால் என்ன ?
ஒரே இடத்தில் அல்லது கிட்டத்தட்ட ஒரே இடத்தில் பிறக்கும் எழுத்துக்கள் இன எழுத்துக்களாகும்.
குறில் எழுத்துக்களுக்கு நெடில் எழுத்துக்கள் இனம்,
15. இது போலவே நெடுங் கணக்கில் வல்லினம் 6-ம் வந்தபின் மெல்லினம் 6-ம் வருவதில்லை. வல்லினம் ஒன்றும் மெல்லினம் ஒன்றுமாக வருகின் றன.
(உதாரணம்)
க (வல்லினம்)
ந (மெல்லினம்)
27.
(5
1)
ளெ
5 / 5 2
”
Lம்
12
2)
ன ஏனெனில் வல்லினமாகிய க, ச, ட, த, ப, ற ஆகிய வற்றுக்கு ங, ஞ, ண, ந, ம, ன ஆகிய மெல்லெழுத்துக்கள் முறையே இனமாகும்.
கவனிப்பு:-1. தமிழில் மெல்லெ ழுத்தின் பின் வல்லெழுத்து வரும்போது அவற்றவற்றுக்கு இனமான எழுத்தே வருவது காண்க.
(உ-ம்) குரங்கு (பஞ்சு
வண்டல் மந்தை
தின்றான் |வம்பர் கவனிப்பு 2:-தமிழில் ந்ன் ண் என்னும் மெய் எழுத்துக் களுக்குப் பின் த், ற், ட் என்ற மெய்களே பெரும்பாலும் வரும்.. எனவே,

Page 10
12
புதிய பொற்காலச் செந்தமிழ் இலக்கணம்
5 என்பதைத்
தந்நகரம் என்றும் றன்ன காம்
டண்ணகரம் -அழைக்கிறார்கள்.
ன்
ண
>)
கவனிப்பு 3:-ல, ள, ழ, என்ற எழுத்துக்கள் ந, ன, ண என்பவற்றைப்போலவே வேறு வேறு ஒலிகள். ல நாக்கின் நுனியி லும், ள நாவளைந்தும், ழ இன்னும் வளைந்து பின்னோக்கியும் ஒலிக் கும். தமிழில் இவ் எழுத்துக்களை மாற்றி எழுதினால் சொல்லும் பொருளும்வேறு பட்டுப் போவதைக் காண்க.
(உ-ம்) தலை = ஓர்உறுப்பு. !கலை = கல்வி
தளை = கட்டு.
|களை = வேண்டாத செடி. தழை = இலைகள், கழை = கரும்பு. 16. சுட்டுக்கள் (சுட்டுக் குறிப்புக்கள்)
தமிழில் சில எழுத்துக்கள் தனித்து ஒரு சொல்லாக வும் மற்றச் சொற்களில் முதற் பகுதியாகவும் பொருள்க ளைச் சுட்டும் சுட்டுக்குறியாய்விடும். அவற்றைச் சுட்டுக்கள் (சுட்டுக்குறிகள்) என்று கூறுகிறோம்.
அம் மனிதன் (அ என்ற சுட்டு தனியே ஒரு சொல்லாக வந்தது)
அவன்
அ என் ற சுட்டு சொல்லின் பகுதி
யாக வந்தது அங்கே
1)
அது
2)
தமிழில் அ, இ, உ என்ற உயிர்க் குறில் எழுத்துக்கள் மூன்றும் சுட்டு ஆய் வரும். உ என் ற சுட்டு இக்காலத்தில் அருகி வழங்கும்.

புதிய பொற்காலச் செந்தமிழ் இலக்கணம்
13 அ தொலைவிலுள்ள பொருளையும் இ அருகிலுள்ள பொருளையும் உ அருகிலும் தொலைவிலும் அல்லாத பொருள்
களையும் சுட்டும். (உ-ம்)
அவன், இவன், உவன் அப்போது, இப்போது, உப்பக்கம்.
17. வினாக் குறிப்புக்கள் தமிழில சில எழுத்துக்கள் தனித்தும் சொல்லுடன் கலந்து அதற்கு உறுப்பாகவும் வந்து அச் சொல்லை ஒரு கேள்வி ஆக்கும். இவற்றை வினாக் குறிப்புக்கள் என்று கூறுகிறோம்.
எவன் ) இவற்றில் எ, யா, ஏ என்பவை சொல் யாவன்
}லின் உறுப்பாக முதலில் வந்து விடக் ஏது
J குறிப்புக்கள் ஆயின. எப் பக்கம் எ , யா தனித்துச் சொல்போல முதலில் யா மனிதர் நின்று வினாக்குறிப்புக்கள் ஆயின. வேலனா இங்கே ஆ, ஓ என்பவை கடைசியில் வேலனோ 3 தனியாகவந்துவினாக்குறிப்புக்கள் ஆயின.
வேலனோ ? என்பதுபோல வேலனே? என்னும் முற் காலவழக்கில் கேள்வி கேட்டலுமுண்டு; எனவே ஏ முதலில் மட்டுமன்றிக் கடைசியிலும் வரும்.
தமிழில் வினாக் குறிப்புக்கள் 5. அவை: எ, ஏ, யா, ஆ, ஓ என்பவை.
கவனிப்பு:-1. சுட்டுக்கள், வினாக்கள் ஆகியவற்றைச் சிலர் சுட்டு எழுத்துக்கள், வினா எழுத்துக்கள் என்று கூறுவர். ஆனால் உண்மையில் அவை சிறு சொற்களே யாகும்.
பயிற்சிப் பாடம் 4 1. இன எழுத்துக்கள் என்றால் என்ன ?
2. உயிர்களில் குறிலுக்கு எவை இனம் ? ஐ, ஒள ஆகிய நெடில்களுக்கு இன மான குறில் எவை ?

Page 11
14
புதிய பொற்காலச் செந்தமிழ் இலக்கணம் 3. வல்லினத்துக்கு எவை இனம் ? 4. சுட்டுக்கள் என்றால் என்ன ? அவை எவை ?
5. தொலைவிலுள்ளதை எச்சுட்டுச் சுட்டும். அருகி லுள்ளதை எச் சுட்டுச் சுட்டும். இப்பொழுது அருகி வழங்கும் சுட்டு எது? அது எதைச் சுட்டும்.
6. வினாக் குறிப்புக்கள் சொல்லில் எங்கெங்கே வரும்? அவை யாவை ?
7. எந்த எந்த இடத்தில எ இப்போது வினாக் குறிப் பாய் வழங்குவதில்லை.
தேர்வு வினாக்கள் 1. 1. நீ, வா, போ, கை, பூ என்ற உயிர் மெய் எழுத் துக்களில் மெய்யையும் உயிரையும் பிரித்து எழுதுக.
2. க்+ஏ, ள் + ஊ, ச்+ஈ, ஞ்+ஒ சேர்த்து உயிர் மெய்யாய் எழுதுக.
3. கவனம், சட்டம், கண்மணி என்பவற்றில் தனித் தும் உயிருடன் கலந்தும் வரும் மெய்களில் வல்லினம், மெல்லினம், இடையினம் எவை என்று பிரித்துக் காட்டுக.
4. உவர், அம்மணி, இத்தாலி என்ற சொற்களில் அ, இ, உ சுட்டுக்கள் ஆனால் என்ன பொருள் ; சுட்டு அல்லாதபோது என்ன பொருள் ?
5. எ து, எரு, யானை, யாவை, ஏது, ஏர், எட்டு, எப்போது, அவனா, அம்மா, இளங்கோ, குரங்கோ ஆகிய வற்றில் எவற்றில வினா எழுத்து வருகின் றது? எவற்றில் | "வாவில்லை ?
6. எ, இ என்ற குறில்களுக் கின மான நெடில்
ஆ, ஊ, ஓ என்ற நெடில்களுக்கு இனமான

புதிய பொற்காலச் செந் தமிழ் இலக்கணம்
15
(ஆம்
பவை
குறில். தொ பொ என்ற உயிர் மெய்க் குறில் களுக்கு இன மான உயிர் மெய் நெடில் தருக.
தந்நகரம், றன் னகரம், டண்ணகம் என்பவை ஏன் அப்பெயர் பெற்றன? அவை வரும் சொற் களுக்கு உதாரணம் தருக.
இயல் 3.
சொல் இலக்கணம் 1. சொல் என்றால் என்ன ?
ஓர் எழுத்துத் தனித்தோ ஒன்றுக்கு மேற்பட்ட -எழுத்துக்கள் சேர்ந்தோ ஒரு பொரு ளுடையதாக வரும்
போது அஃது ஒரு சொல் ஆகும்.
(உ-ம்) ஓர் எழுத்துச் சொற்கள் : தீ, கை, வா, போ, தா.
: கல், வீடு, கடை, கண். : இடம், பகல், வண்டு. : பட்டம், சுண்டல்,
அப்பம். : பம்பரம், வணக்கம்,
அம்பலம். : ஆராய்ந்தான்,
விளை யாடினான் முதலி
யவை. 2. சொற்கள் எத்தனை வகைகள் ? அவை யாவை?
சொற்களின் பொருளைக் கவனித்து அவற்றை மொத் தம் நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
அவை: 1. பெயர்
2. வினை
4. உரி
6 7 டி 09
T
3. இடை

Page 12
16 ..
16
புதிய பொற்காலச் செந்தமிழ் இலக்கணம்
பாபன்
இவற்றுள் பெயர், வினை ஆகிய இரண்டுமே தமிழில் முக்கியமானவை. இடையிலும் உரியிலும் ஒரு சில சொற் களே உள்ளன.
3. பெயர்ச்சொல் என்றால் என்ன ? பெயரைக்குறிக்கும் சொல் பெயர்ச் சொல் ஆகும்.
(உ-ம்) மனிதன், விலங்கு, பறவை, சமையல், கரும்பு, ஆண்டு, நாடு .
4. வினைச் சொல் என்றால் என்ன ?
தொழில் நடை பெறு வதைக் குறிக்கும் சொல் வினைச் சொல் ஆகும்.
(உ-ம்) நடக்கிறான், ஒடினான், தருவான்.
கவனிப்பு:-உண்டு, இல்லை, என்பவை ஒரு நிலைமை ையக் குறித்த வினைச் சொற்கள்.
5. இடைச் சொல் என்றால் என்ன ?
தனித்து முடிந்த பொருள் தராமல் பெயரையும் வினை யையும் ஒட்டியே பொருள் தரும் சொல் இடைச் சொல் ஆகும்.
வேலனும் முருகனும் வந்தார்கள் (உம் என்ற இடைச் சொல் இரண்டிடத்தில் வந்து இருவரும் என்ற பொருள் தந்தது). அவன் வருவானானால் நல்லது. (ஆனால் என்பது வருவான் என்பதனுடன் வந்து காரணங் காட் டிற்று). 6. உரிச் சொல் என்பது யாது ?
பெயரையும் வினையையும் சார்ந்து அவற்றின் பொரு. ளைத் தழுவும் சொற்கள் உரிச்சொற்கள் ஆகும். அவை பெயர் வினை ஆகியவற்றின் பண்புகளை உணர்த்தும்.

17
புதிய பொற்காலச் செந்தமிழ் இலக்கணம் நனி பேதை (= முழுமூடன்) இதில் நனி. பெயர்
சார்ந்த உரிச்சொல். . கவின் மலர் (= அழகிய மலர்) அதில் கவின்
பெயர் சாந்த உரிச்சொல். சாலப் பேசினான் (மிகுதியும் பேசினான்) இதில்
சால வினைசார்ந்த உரிச்சொல். கவனிப்பு:-உரிச்சொல் பெரும்பாலும் பழைய பாடல்களில் தான் மிகுதியும் வரும்.
பயிற்சிப்பாடம் 5. 1. சொல் என்பது என்ன ?
2. சொல்லில் எத்தனை எழுத்துக்கள் இருக்க லாகும்.
3. ஓர் எழுத்து, ஈர் எழுத்துச் சொற்கள் 3 தருக.
4. சொற்கள் தமிழில் எத்தனை வகையின? அவற்றில் முக்கியமானவை எவை ? எவை மிகவும் சிறுபான்மை யானவை?
5. பெயர்கள் வினை கள் எவற்றைக் குறிக்கும் ?
6. இடைச்சொல் என்றால் என்ன ? ஓர் உதார ணம் தருக,
7. பழைய செய்யுளில் மட்டும் வரும் சொற்கள் எவை ? அவை எங்ஙனம் வரும் ?
இயல் 4.
பெயர் இலக்கணம் 1. பெயர்ச் சொல் எவற்றைக் குறிக்கும்?
பெயர்ச் சொல், பெயரைக் குறிக்கும் சொல் என்று படித்தோம். அது எவற்றின் பெயரைக் குறிக்கும் ?

Page 13
18
புதிய பொற்காலச் செந்தமிழ் இலக்கணம் ஒரு பொருள், அல்லது அதன் குணம் அல்லது அதன் தொழில், அல்லது அ து காணப்படும் இடம், நிக ழும் காலம் ஆகியவற்றின் பெயர்களை அப்பெயர்ச் சொல் குறிக்கும்.
பொருள் என்பது உயிருள்ள பொருள் களாகிய மனி தன், விலங்குகள், மற்ற உயிர் வகைகள், செடி கொடிகள் ஆகியவற்றையும் உயிரில்லாதவையாகிய மண், நீர், காற்று ஆகியவற்றையும் குறிக்கும்.
2. பெயர்ச் சொற்களை எத்தனை வகையாகப் பிரிக்க லாம் ?
பெயர் சொற்களை 6 வகையாகப் பிரிக்கலாம். அவை:
(1) பொருள்
(4) சினை (2) இடம்
பண்பு (3) காலம்
(6) தொழில் (1) மேலே கூறியபடி உயிருள்ள பொருளையோ உயிரில்லாத பொருளையோ குறிக்கும் பெயர் பொருட் பெயர் ஆகும்.
(உ-ம்) வேலன் மனிதரின் பெயர்
நங்கை நங்கை மனிதர்கள் பெயர்
குதிரை காகம் உயிர் வகைகளின் பெயர் பாம்பு மாதுளை :
செடி கொடி வகைகளின் பெயர் முந்திரி | (2) இடத்தைக் குறிக்கும் பெயர் இடப் பெயர் ஆகும், (உ-ம்) நாடு, மலை, காடு. (3) காலத்தைக் குறிக்ரும் பெயர் காலப் பெயர்
ஆகும்.

புதிய பொற்காலச் செந்தமிழ் இலக்கணம்
19
திங்கட்கிழமை
நாள் ஆடி மாதம்
இரவு விபவ ஆண்டு
நாழிகை. பொருள்களின் உறுப்புக்கள் அல்லது பாகங் களைக் குறிக்கும் பெயர் சினைப் பெயர் ஆகும். சினை எள் றால் உறுப்பு என்று பொருள்.
கண்
கால்
> உடலின் உறுப்புக்கள்
காது
செடி வகையின் உறுப்புக்கள்.
இலை பழம் உச்சி
கள்.
7 மலை, பேனா முதலியவற்றின் பாகங் அடிவார |
முனை (ம்) . (5) பொருளின் குணத்தைக் காட்டும் பெயர் பண் புப் பெயர் ஆகும். பண்பு என்றால் குணம் என்று பொருள்.
(உ-ம்) வெண்மை, மென்மை. (6) தொழிலின் பெயர் தொழிற் பெயர் ஆகும். (உ-ம்) உழவு அல்லது உழுதல், தொழுகை.
பயிற்சிப் பாடம் 6. 1. பெயர்ச் சொல் எவற்றைக் குறிக்கும் ?
2. பெயர்ச் சொல்லின் வகைகள் எத்தனை > அவை எவை?
3. பொருட் பெயர் எவற்றைக் குறிக்கும்?
4. கிளி, தலை, பச்சை, வா வு, மார்கழி, கடல், மாணிக்கம், வேனில் - ஆகிய இவை என்ன பெயர்கள்.

Page 14
20
புதிய பொற்காலச் செந்தமிழ் இலக்கணம்
3. பெயர்ச் சொல்லில் எவற்றை நாம் அறிதல் வேண்டும்?
பெயர்ச் சொல்லில் திணை, எண், இடம், பால், வேற் றுமை ஆகியவற்றை அறிதல் வேண்டும்.
4. திணை என்பது என்ன ? அவை எவை ?
பெயர்களின் குலம் அல்லது உயர்வு தாழ்வு திணை ஆகும்,
தமிழில் பெயர்களின் திணைகள் இரண்டு. அவை உயர்திணை, அஃறிணை என்பவை.
உயர் திணை என்பது உயர்வு உடைய பொருள்களின் பெயர், மனிதர்களின் பெயர்கள் உயர்திணை. மனிதர்கள் போன்ற தேவர்கள், அசுரர்கள் முதலியவர்களின் பெயரும் இத்திணையே.
(உ-ம்) வேலன், வள்ளி, திருவள்ளுவர், சிறுவன்,
அஃறிணை என்பது உயர்வு அற்ற பொருள்களின் பெயர். மனிதர்களைத் தவிர மற்ற எல்லா உயிர்ப்பொருள் கள், உயிரில் பொருள்கள் ஆகியவற்றின் பெயர்களும் அஃறிணையே ஆகும்.
(உ-ம்) ஆடு, குயில், தாமரை, பாறை. கவனிப்பு:-அஃறிணை என்பது அல் + திணை..
அதாவது உயர்திணை அல்லாத திணை என்று பொருள்படும்.
5. எண் என்பது என்ன ?
பெயர் குறிக்கும் பொருளின் தொகை அல்லது எண்ணிக்கையே எண் ஆகும்.
தமிழில் எண்கள் இரண்டு. அவை ஒருமை, பன்மை என்பவை.

21
அ 8
புதிய பொற்காலச் செந்தமிழ் இலக்கணம் (1) ஒருமை :-பெயர். ஒரு பொருளைக் குறித்தால், அது ஒருமை எண்.
(2) பன்மை :-பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட அதா வது இரண்டு அல்லது இரண்டினும் மிகுதியான பொருள் களைக் குறித்தால், அது பன்மை எண்.
(உ-ம்) நாற்காலிகள், மனிதர், சிறுமியர்.
கவனிப்பு:-உயர் திணையில் பன்மை பெரும்பாலும் அர் என் றும், அஃறிணையில் கள் என்றும் முடியும்.
6. இடம் என்பது என்ன ? அவை எவை ?.
பேசும் போது பேசுபவன், கேட்பவன், பேசப்படும் பொருள்கள் ஆகிய மூன்றையும் வேறு பிரித்துக் காட்டுவது இடம் ஆகும்.
இலக்கணத்தில் இடங்கள் 3 ஆகும். அவை தன்மை, முன்னிலை, படர்க்கை என்பவை.
(1) தன்மை:-பேசுபவனைக் குறிக்கும் பெயர் தன் மை இடம்.
(தன்மை என்றால் தன்னைக் குறிப்பது என்று பொருள்).
(உ-ம்) நான், யான் (ஒருமை)
நாம், யாம், நாங்கள், யாங்கள் (பன்மை) (2) முன்னிலை:-கேட்பவனைக் குறிக்கும் பெயர் முன்னிலை இடம்.
(முன்னிலை என்றால் முன் நிற்பது என்று பொருள்) (உ-ம்) நீ (ஒருமை)
நீர், நீங்கள் (பன்மை) கவனிப்பு:-தன் மையிலும் முன்னிலையிலும் மேல் உதா ாணங்களாகக் காட்டிய சில சொற்களே உள்ளன. மற்ற எல்லாப் பெயர்களும் படர்க்கையே என்பதை அறிதல் வேண்டும்.

Page 15
22
புதியபொற்காலச் செந் தமிழ் இலக்கணம் (3) படர்க்கை :-பேசப்படும் பொருளை அல்லது ஆளைக் குறிக்கும் பெயர் படர்க்கை இடம்.
(படர்க்கை யென்றால் வெளியே படர்ந்து செல்வது என்று பொருள்)
(உ-ம்) '/ வன் )
//வள்
ஒரு மை.
-1) து அவர் ப/ #1) வ |
பன் மைம்.
Tெ!
கவனிப்பு:-மேற் குறித்தபடி, இவ் ஐந்து பெயர்களும் படர்க்கை இடத்தின் சிறப்பான பெயர்கள். ஆனால் பொதுவாக தன்மை முன்னிலையில் குறிக்காத எல்லாப் பெயர்களும் படர்க் கையே ஆகும்.
(உ-ம்) மனிதன், குரங்கு, செடி, பழம், காற்று. 1. பால் என்பது என்ன ? அவை எவை ?
பெயர் குறிக்கும் பொருளின் தன்மையைப் பாகு படுத்திக் கூறுவது பால் ஆகும். (பால் என்றால் பிரிவு, பாகுபாடு என்று பொருள்.)
தமிழில் பால் 5. அவை ஆண்பால், பெண்பால், பலர் பால், ஒன்றன் பால், பலவின்பால் என்பவை.
(1) ஆண்பால் ஒரு ஆணின் பெயரைக் குறிக்கும். (உ-ம்) கண்ணன், முருகன், மனிதன், அரசன்.
(2) பெண்பால் ஒரு பெண்ணின் பெயரைக் குறிக் கும்.
(உ-ம்) வள்ளி, சிறுமி, அரசி, மாது.
(3) பலர்பால் ஆணாயினும், பெண்ணாயினும் மனி தர் பலரைக் குறிக்கும்.
(உ-ம்) ஆடவர், பெண்டிர், மனிதர், அரசர், மக்கள், பிள்ளைகள்.

புதிய பொற்காலச் செந்தமிழ் இலக்கணம்
23
- (4) ஒன்றன் பால் மனிதால்லாத உயிர் வகை, அல் லது உயிரற்ற பொருள் (அதாவது அஃறிணைப் பொருள்) ஒன்றைக் குறிக்கும்.
(உ-ம்) எருது, மயில், செடி., ஆறு, ஊர்.
(5) பலவின் பால் மனிதால்லாத உயிர் வகைகள், அல்லது உயிரற்ற பொருள்கள் (அதாவது அஃறிணைப் பொருள்கள்) பலவற்றைக் குறிக்கும்,
(உ-ம்) எருதுகள், பறவைகள், செடிகள், ஆறுகள், ஊர்கள்:
கவனிப்பு:- 1. ஆண் பால் உயர்திணை ஒருமை.
பெண்பால் ) பலர்பால்
29
பன்மை. ஒன்றன் பால் அஃறிணை ஒருமை. பலவின்பால் . ,, பன்மை. ஆண்பால், பெண்பால், பலர்பால் உயர்திணை. ஒன்றன்பால், பலவின்பால் அஃறிணை. ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால்
ஒருமை எண். பலர்பால், பலவின்பால் பன்மை எண். 4. தன்மை, முன்னிலை இடங்களுக்கு எண்
மட்டும் உண்டு. திணை, பால் கிடையா. படர்க்கைக்கு எண்ணும், திணையும் பாலும்
உண்டு.
பயிற்சிப் பாடம் 7 1. பெயரில் எவற்றை அறிதல் வேண்டும்?
2. திணை என்றால் என்ன ? எது உயர் திணை ? எது) அஃறிணை ?

Page 16
24
புதிய பொற்காலச் செந்தமிழ் இலக்கணம்
3. பால்கள் எத்தனை ? ஆண்பால், பெண்பால் என்ன திணை, என்ன எண் ? ஒன்றன்பால் என்ன திணை, என்ன எண் ?
பலர்பால் என்ன திணை, என்ன எண்? பலவின் பால் என்ன திணை, என்ன எண் ?
6. பாண்டியன், எருதுகள், அரசி, நீங்கள், கட்ட டம், நான், தூண்கள், பெண்டிர் இவற்றின் திணை, பால், எண், இடங்களை அட்டவணை யிட்டுக் காட்டுக.
8. வேற்றுமை என்பது என்ன ?
பெயர், வாக்கியத்தில் மற்றச் சொற்களுடன் வரும் போது பல மாறுதல்களை அடையும். அம் மாறு தல்களுக்கு வேற்றுமை என்று பெயர், (வேற்றுமை என்ற சொல்லுக்கு வேறு படுத்துவது என்று பொருள்).
9. தமிழில் வேற்றுமைகள் எத்தனை ?
தமிழில் வேற்றுமைகள் 8. அவை முறையே 1, 2, 3, 4, 5, 6, 7, 8-ம் வேற்றுமைகள் எனப்படும்.
முதல் வேற்றுமை என்பது பெயரின் இயற்கை வடி வமே. இது எழுவாய் வேற்றுமை என வும்படும்.
மற்ற வேற்றுமைகளில் பெயர் பலவகை மாறுபா டுகள் அடையும்.
10. வேற்றுமையில் பெயர் என்ன
மாறுபாடு அடையும் ?
2 முதல் 8-ம் வேற்றுமைகள் வரை பெயர்களுடன் சிலஉருபுகள் சேரும். 8-ம் வேற்றுமையில் உருபு சேராமல் மாறுபாடு அடைவது உண்டு. உருபு என்பது பெயரை ஒட்டி வரும் இடைச்சொற்கள்.

புதிய பொற்காலச் செந்தமிழ் இலக்கணம்
25
 ே19 வேற்றுமைகளும் அவற்றின் உருபுகளும் எவை?
உதாரணங்கள் வேற்றுமைகள்
உருபுகள் 1. கண்ணன்.
|2. கல்.
4 மானான்.
கல்
இன் இல்
1. முதலாம் வேற் றுமை
கண் கான் (எழுவாய் ,, ) 2. இரண்டாம் ),
கண்ணனை
கல்லை செயப்படுபொருள் 3. மூன்றாம் ,, |
ஆல்
கண்ணனால்
கல்லால் ஓடு (ஒடு)
கண்ணனோடு
கல்லோடு உடன்
கண்ணனுடன்
கல்லுடன் 4. நான்காம் 3)
கண்ணனுக்கு
கல்லுக்கு -5. ஐந்தாம்
கண்ணனின்
கல்லின் கண்ணனில்
கல்லில் (= இருந்து (= கண்ணனிட
(= கல்லி மிருந்து)
லிருந்து) விட கண்ணனைவிட
கல்லைவிட(ல போ ல) கண்ணனைப்போல
கல்லைப் போ - 6. ஆறாம்
அது
கண்ணன து
கல்லினது கண்ணனின்
கல்லின் (= உடை
(= கண்ணனுடைய) (= கல்லினு (ய
டைய) 7. ஏழாம்
இல்
கண்ணனிடத்தில் (இட 8. எட்டாம்
கண்ணா ! (விளி
கண்ணனே!
கல்லே
க
- 1)
இன்
3)
அ த
கவனிப்பு 1. 8-ம் வேற்றுமையில், கண்ணன் என்பதோடு -ஆ உருபு சேரும்போது அன் என்ற கடைசி முடிபு கெட்டுவிடுவது
காணலாம்.
உருபு வராமல் 'ன்'' கெட்டு கண்ண என்னும் வரும்.
தம் பி என இயல்பாகவும் தம்பி என நீண்டும் உருபு பெறாமல் -வருவதுமுண்டு.

Page 17
26
புதிய பொற்காலச் செந்தமிழ் இலக்கணம்
கவனிப்பு 2. 5-ம் வேற்றுமையில் இன் உருபு பழந் தமிழி லும் பாடலிலும் வரும். இதனிடமாகத் தற்காலத்தில், இருந்து, விட, போல என்ற மூன்று சொற்களும் வரும்.
3. 'அது' உருபு அஃறிணையில் வரும்போது 'இன்' சாரியை) பெற்று 'கல்லினது' என் றும் வரும்.
பயிற்சிப் பாடம் 8 1. வேற்றுமை என்றால் என்ன ? 2. தமிழில் எத்தனை வேற்றுமைகள் உண்டு ? 3. பெயரின் இயற்கைவடிவம் எவ்வேற்றுமை ?
4. 1, 2, 7, 8-ம் வேற்றுமைகளின் மறு பெயர்கள் யா வை !
5. 5-ம் வேற்றுமையின் உருபுகள் எவை ? அவற் றுக்குப் பதில் எவ்விடைச் சொற்களை இன்று வழங்கு கிறோம்.
6. கீழ்வரும் வாக்கியத்தில் வரும் பெயர்கள் என்ன வேற்றுமை ? கண்ணன் கடைக்குப் போகும் சமயத்தில் வேலனைக் கண்டு அவனுடன் அவ்விடத்திலிருந்து அவ அடைய வண்டியிலேறி வீட்டுக்குச் சென்றான்.
தேர்வு வினாக்கள் II 1. விரல், அன்பு, மதுரை, தீ, அமைச்சன், நாழிகை, புகைச்சல், சூடு ஆகிய இவை என்ன வகைப் பெயர்கள் ?
- 2. வேலன் சிங்கத்தை எய்தான். சீதையை இராவ ணன் கவர்ந்தான், பாண்டவர் காட்டில் வாழ்ந்து அங்கி ருந்து நாட்டுக்கு வந்தார்கள். இவ் வாக்கியங்களிலுள்ள பெயர்களின் திணை பால் எண் இடம் வேற்றுமைகளைத் தருக.
3. இது, அது, ஆல், இல்- இவை எந்த வேற்றுமை உருபுகள்?
கன 10T 67 5ம்

புதிய பொற்காலச் செந்தமிழ் இலக்கணம்
27
4. கோடிட்ட இடத்தில் முருகன் என்ற சொல்லின் வேற்றுமைகளுள் ஒன்றைத் தக்கபடி நிரப்புக.
--வேட்டை ஆடினான். ஒரு சிங்கம் ---நோக்கிப் பாய்ந்தது.----வாளால் சிங்கம் வெட்டுண்டது.--சில காயங்கள் ஏற்பட்டன.
நடப்
இயல் 5. வினைச்சொல் இலக்கணம் 1. வினைச் சொல் எதனைக் குறிக்கும் ?
அது தொழில் நடை பெறுவதையோ அல்லது ஒரு நிலைமை ஏற்பட்டிருப்பதையோ குறிக்கும்.
(உ-ம்) தொழில் நிகழ்வதைக் குறிப்பவை :
ஓடிற்று. நடக்கிறான். உடைப்பான். நிலைமை ஏற்பட்டிருப்பதைக் குறிப்பவை.
இருக்கிறான்; உண்டு; இல்லை; ஆகும்; 2. வினைச் சொல் எத்தனை வகைப்படும் ?
வினைச் சொல் இரண்டு வகைப்படும். அவை முற்று வினை, எச்சவினை என்பவை.
(1) முற்றுவினை ஒரு தொழில் அல்லது நிலை முடிவு பெற்றதைக் காட்டும். இது பெரும்பாலும் வாக்கிய முடி. வில் வந்து முற்றுப் புள்ளியுடன் முடியும்.
(உ-ம்) எழுதினான். ஓடிற்று.
(2) எச்சவினை ஒரு தொழில் அல்லது நிலை முடிவுறா மல் இன்னொரு வினைச்சொல்லை எதிர்பார்த்து நிற்பதைக் காட்டும்.

Page 18
28
புதிய பொற்காலச் செந் தமிழ் இலக்கணம் (உ-ம்) எழுதி (எழுதித் தந்தான் என்று முடியும்)
எழுதின (எழுதின ஏடு என்று ஏட்டைத் தழுவி நிற்கும்)
ஆய் (விட்டது என்று முடியும்) ஆன (தொழில் என ஒரு பெயரைத் தழுவி
நிற்கும்) 3. எச்சவினை எத்தனை வகைப்படும் ? அவை எவை?
எச்சவினை இரண்டு வகைப்படும். 2'வை பெயரெச் சம், வினையெச்சம் என்பவை.
(1) பெயரெச்சம் என்பது பெயரைச் சென்று தழுவும் எச்சவினை அல்லது எச்சம்.
(உ-ம்) எழுதின (ஏடு); வந்த (மனிதன்)
வருகிற (மனிதன்), வரும் (எருது) (2) வினை எச்சம் என்பது இன்னொரு வினை முற் றுடன் முடியும், அல்லது இன்னொரு எச்சவினையைத் தழுவி நிற்கும்.
(உ-ம்) (1) எழுதி(ப்படித்தான்)-
வினைமுற்றுடன் முடிந்தது. (2) எழுதி (வாசித்துக் காட்டினான்)-
வாசித்து என்ற வினை எச்சம் தழுவிற்று. (?) எழுதி(க்காட்டிய ஏடு)-
- காட்டிய என் ற பெயரெச்சம் தழுவியது. 4. வினைச்சொல்லில் நாம் எவற்றை அறியலாகும் ?
வினைச் சொல்லில் நாம் முக்கியமாகக் காலத்தையும் திணை, பால், எண், இடத்தையும் அறியலாகும்.

புதிய பொற்காலச் செந்தமிழ் இலக்கணம்
29 5. காலம் எத்தனை ? அவை யாவை?
காலம் மூன்று. அவை இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் என்பவை.
(1) இறந்த காலம் தொழில் முன்பே நடந்ததென்று காட்டும்
(உ-ம்) சென்றான்; இருந்தாள்; ஓடிற்று.
(2) நிகழ்காலம் செயல் இப்போது நடக்கிறது என்று காட்டும்.
(உ-ம்) செல்கிறான் இருக்கிறான். ஒடுகிறது. (3) எதிர்காலம் செயல் இனி நடக்கும் என்று கூறும் ..
- செல்வான்; இருப்பான்; ஓடும். 6. காலங் காட்டாத வினைச்சொற்கள் உண்டோ?
ஆம். உண்டு, இல்லை, நன்று, உடையன் என்பவை போன்ற வினைகள் மூன்று காலத்திலும் வரும். இவை. காலம் காட்டாததால் குறிப்பு வினைகள் எனப்படும். காலம் காட்டும் வினைகள் தெரிநிலை வினைகள்.
7. பெயர் எச்சம், வினை எச்சம் இவை காலம் காட். மோ?
ஆம். கண்ட, காண்கிற, காணும் என்னும் மூன்றும் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றைக் காட் டும் எச்சங்கள்.
கண்டு, காண, கண்டால் ஆகியவை மூன்றும் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றைக் காட்டும் வினை எச்சங்கள்.
8. தெரிநிலைவினை எப்போது காலம் காட்டாது ? வினைச்சொற்கள் எல்லாம் உடன்பாட்டிலும் எதிர்மறை யிலும் வரும். உடன்பாடு செயல் நிகழ்வதைக் குறிக்கும்..

Page 19
30
புதிய பொற்காலச் செந்தமிழ் இலக்கணம்
அது
Tன்
ம ன
(உ-ம்) நடந்தான். ஓடிற்று. எதிர்மறை அது நிகழ வில்லை என்பதைக் குறிக்கும். (உ-ம்) நடக்கவில்லை, ஓடாது.
உடன்பாட்டில் மூன்று காலமும் உண்டு. எதிர்மறை காலம் காட்டாது.
9. திணை, பால், எண், இடங்களை வினைச் சொல்லில் எவ்வாறு அறியலாம் ?
பெயர் எச்சம், வினை எச்சம் இரண்டிலும் திணைபால் எண் இடம் தெரியவராது. ஆனால் முற்று வினையில் அவை தெரியவரும்.
(உ-ம்) எழுதினான் என்ற உடனேயே (அவன்) எழு. தினான் என்று பெறப்படும். 'உடனே அது உயர்திணை, ஆண்பால், ஒருமை என்று அறிகிறோம்.
9. வினைச்சொல்லின் உறுப்புக்கள் எவை?
வினைச் சொல்லின் உறுப்புக்கள் முக்கியமாக மூன்று -அ வை பகுதி, விகுதி, இடைநிலை என்பவை.
(1) பகு தி:- இது வினைச்சொல்லின் பொருளைக் காட் திம்.சொல்லின் முதலில் வரும். இது ஒரு சொல் .ஆக வரும்.
(உ-ம்) அடித்தான், பகுதி அடி. அடித்தல் என் னும் பொருளைக் காட்டிற்று.
(2) விகு தி:- இறு தியில் வந்து திணைபால் எண் இடம் காட்டும்.
வந்தான் என்பதில் ஆன் உயர்திணை ஆண்பால், ஒருமை படர்க்கை என்று காட்டிற்று.
வருகிறேன் என்பதில் ஏன் தன்மை
ஒருமை -என்று காட்டிற்று.

புதிய பொற்காலச் செந்த மிழ் இலக்கணம்
31
(3) இடைநிலை பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வந்து காலம் காட்டும்.
கண்டான் ) என்பவற்றில் ட், கிறு, ப் என் காண்கிறான் பவை இறந்தகாலம், நிகழ்காலம், காண்பான் எதிர்காலம் காட்டின.
பயிற்சிப் பாடம் 9. 1. வினைச்சொல் எவற்றைக் குறிக்கும் ?
2. வினைச்சொல் எத்தனை வகைப்படும்? எச்சம் எ த்தனை வகைப்மடும்?
3. முற்றுவினை, எச்சவினை என்றால் என்ன ? பெயர் எச்சம் வினை எச்சம் என்ற பெயர்கள் வருவானேன் ?
4. வந்தான், ஒடுகிறான், செய்வான், செய்த, செய் யும், செய்து, செய்தால்-என்ன வினைகள் ?
5. வினை யில் எவற்றை அறிதல் கூடும் ?
6. காலங்கள் எத்தனை ? வினை யில் காலத்தை அறி விக்கும் பகுதி எது? உதாரணம் தருக..
7. திணை பால் எண் இடங்களை எவ்வினையில் அறிய லாம், அதை அறிவிக்கும் உறுப்பு எது ?
8. வினை யின் உறுப்புக்கள் எவை ? குடித்தார் என் பதில் அவற்றைப் பிரித்துக் காட்டுக!
8. வந்தான், வாான், உண்டு, இல்லை, வந்து, வரா 3மல், வந்த, வராத- இவற்றில் எவை எதிர் மறை?
தேர்வு வினாக்கள் III, 1. வா என் ற வினை யிகள் முற்றுவினை, பெயரெச்சம், வினை எச்சம் ஆகியவற்றில் தக்க ஒன்றை வைத்துக் கோட்டை நிரப்புக.

Page 20
32
புதிய பொற்காலச் செந்தமிழ் இலக்கணம்
இங்கே-பையன் என் தம்பி.
இச்சிறுவன் நேற்று இங்கே-, நாளைக்கும்--- 2. அடிக்கிறான், அடித்து, அடித்த, போனாள், போய்.. போக, போன ஆகியவற்றில் முற்றுவினை எவை ? பெயரெச் சம், வினை எச்சம் எவை?
3. காலங்காட்டும் வினைகளுக்கும் காட்டாத வினை களுக்கும் என்ன பெயர்கள் ?
4. விழுவான், தொழுதான், வெட்டுகிறான் என் பவை என்ன என்ன காலம்? மற்றக் காலங்கள் தருக.
5. ஓடிற்று, தின் றன, படித்தனர், அறிகிறான், உடைத்தாள் திணை பால். எண் கூறுக. இவை என்ன இடம் ?
6. ஒடு, தின் என்பவற்றின் தன்மை ஒருமை பன்மை தருக. ஒடினாய், ஒடினீர் என்ன இடம், என்ன எண்?
7. வினை எச்சம் எவ்வெவற்றைக் கொண்டு முடியும்? உதாரணம் தருக.
இயல் 6. இடை உரி இலக்கணம் 1. இடைச் சொல் என்பவை எவை ?
பெயர்ச் சொல்லைப்போலவும் வினைச் சொல்லைப்போல வும் தனித்து வராமல் பெயர் வினைச் சொற்களைச் சேர்ந்து வரும் சொற்கள் ; வேற்றுமை உருபுகள், வினைச் சொல் லின் இடை நிலைகள், விகுதிகள் .. முதலியவை இடைச் சொற்கள் ஆகும்.

33
புதிய பொற்காலச் செந் தமிழ் இலக்கணம் அவை இரண்டு வாக்கியங்களைச் சேர்க்கவோ, இரண்டு பெயர்களை அல்லது வினை களைச் சேர்க்கவோ, பெயர் வினை களின் பொருளைச் சற்று விரிவு படுத்தவோ செய்யும்.
(உ-ம்) 1. அவன் வந்தான், ஆனால் புத்தகம் கொண்டு வரவில்லை. (இரண்டு வாக்கியங்களைச் சேர்த்தது.)
2. கண்ணனும் முருகனும் வந்தார்கள். (உம் இரண்டும் இரண்டு பெயர்களைச் சேர்த்தன).
3. அவன் வருவனாயின் நான் வருவேன் (ஆயின் என் ற இடைச் சொல் வருவான், வருவேன் என்ற இருவினைகளையும் சேர்த்தன).
4. அரசனே வந்தான், முருகனோ வந்தான் (ஏ-ஓ பெயரை அடுத்துச் சிறப்பையும் கேள்வியையும் குறித்தன.
2. உரிச் சொல் என்ன குறிக்கும் ?
பெயர் வினைகளின் பண்புகளைக் குறிக்கும். இது தற் காலத் தமிழில் சிறுபான்மையாக வரும். அவை பெரும் பான்மையும் செய்யுளிலேயே வரும். (உ-ம்) நனி பேதை (நல்ல மூடன்) .. பெயர் உரி.
கழி மடம் (மிகுதி மூடத்தனம்) " சால உண்டான் ) பையச் சென்றான் வினை உரி.
பயிற்சிப் பாடம் 10 1. இடைச் சொல் என் ன தொழில் செய்யும்? 2. சுட்டும், வினாவும் என்ன சொற்கள் ?
3. வினைச் சொல்லின் உறுப்பாக வரும் இடைசி சொற்கள் எவை ?
4. பெயர் உரி, வினை உரிக ளுக்கு உதாரணம் தருக,
3

Page 21
34
புதிய பொற்காலச் செந்தமிழ் இலக்கணம்
இயல் 7.
சொற்றொடர் இயல் 1. சொற்றொடர் என்றால் என்ன ?
பொருள் தொடர்புடன் சொற்கள் தொடர்ந்து வந் தால் அது சொற்றொடர் ஆகும்.
(உ-ம்) ஓடும் குதிரை. பையன் நடந்து வருகிறான்.
ஆடு மாடுகள். 2, சொற்றொடர் எத்தனை வகை ?
சொற்றொடர் இரண்டு வகை. அவை முடிவு பெறாத் தொடர், முடிவு பெறும் தொடர் அல்லது வாக்கியம் என்
4.1வை.
(உ-ம்) ஆடு மாடுகள் ....
> முடிவுபெறாத் தொடர்கள். ஓடும் குதிரை | பையன் நடந்து வருகிறான் ) குதிரை இறந்தது. முடிவு பெற்ற தொடர். இராமன் நல்ல பையன் 3. முடிவு பெற்ற தொடர் அல்லது வாக்கியத்தின் உறுப்புக்கள் எவை?
வாக்கியத்தின் உறுப்புக்கள் எழுவாய், பயனிலை, செயப்படு பொருள் என்பவை.
4. எழுவாய். ஒரு வாக்கியம் எதைப்பற்றிக் கூற எழுந்ததோ அது எழுவாய்.
(உ-ம்) (இராமன் நல்ல பையன் ' என்ற வாக்கியம் இராமனைப்பற்றிக்கூற எழுந்தது. எனவே இராமன் எழு வாய்.
கவனிப்பு: எழுவாய் பெரும்பாலும் வாக்கியத்தின் முதலில் வரும்.

புதிய பொற்காலச் செந்தமிழ் இலக்கணம்
35
குதிரை இறந்தது. (குதிரை எழுவாய்)
பையன் நடந்துவருகிறான். (பையன் எழுவாய்) 5. பயனிலை:-எ ழுவாயைப்பற்றி என்ன முடிவாய்க் கூறுகிறோமோ அது பயனிலை. > அது பெரும்பாலும் எழு வாய் செய்யும் தொழிலையோ அதன் நிலையையோ கூறும், (உ-ம்) குதிரை இறந்தது-(இறந்தது பயனிலை)
பையன் நடந்து வருகிறான் (வருகிறான் பய
னிலை)
இராமன் நல்ல பையன் (பையன் பயனிலை) கவனிப்பு: பயனிலை பெரும்பாலும் வாக்கியத்தின் முடிவில் வரும்.
6. செயப்படுபொருள்:- பயனிலையாக வரும் தொழி லைச் செய்பவன் எழுவாய் ; அத்தொழிலுக்கு ஆளாயிருப் பது செயப்படு பொருள்.
(உ-ம்) பூனை எலியைப் பிடித்தது. (பிடித்தது என்ற
தொழிலைச் செய்வது ஏழுவாயாகிய பூனை. அதற்கு ஆளான து எலி, எலியே செயப்படு பொருள்) வள்ளி சோறு உண்டாள். (சோறு செயப்படு
பொருள்) கவனிப்பு 1. இறந்த து, வரு கிறான் என்ற தொழில்கள் செயப்படுபொருள் வேண்டா தீவை, எனவே எல்லா வாக்கியங் க ளிலும் செய்யப்படு பொருள் வர வே ண் டுமென் றில்லை.
2. எல்லா வாக்கியங்களிலும் எழுவாய் பயனிலை கட்டாயம் இருக்க வேண்டும்.
3. எழுவாய் முதல் வேற்றுமையாய் இருப்பதனால் தான் முதல்வேற்றுமையை எழுவாய் வேற்றுமை என்

Page 22
36
புதிய பொற்காலச் செந் தமிழ் இலக்க ண ம்
கிறோம். செயப்படுபொருள் இரண்டாம் வேற்றுமையாய் வருவதால் அதனைச் செயப்படுபொருள் வேற்றுமை என் கிறோம்.
7. பயனிலை என்ன சொல்லால் வரும் ?
பயனிலை பெரும்பாலும் வினை முற்றாக வரும். தமி ழில் பல இடங்களில் பயனிலை பெயர்ச் சொல்லாகவும் வினாவாகவும் வரும்.
(உ-ம்) கண்ணன் சோறு உண்டான். (வினை முற்றுப்
பயனிலை) அவன் நல்ல பையன் (பெயர்ப் பயனிலை)
அவன் இராமனா? (வினாப்பயனிலை) 8. எழுவாயும் பயனிலையும் எவ்வகைகளில் ஒத் திருக்கவேண்டும்?
எழுவாயும் பயனிலையும் திணை, பால், எண், இடம் ஆகியவற்றில் ஒத்திருக்க வேண்டும். அப்படியில்லாவிட் டால வாக்கியம் பிழையான தாய் விடும்.
(உ-ம்) கண்ணன் உண்டான் (ஆண்பால் உயர்
திணை ஒருமை
படர்க்கை) வள்ளி
வருகிறாள்
(பெண்பால் படர்
க்கை) மனிதர்கள் வருகிறார்கள்
(பலர்பால் உயர் திணை ர் பன்மை
படர்க்கை) கன்று
துள்ளிற்று
(ஒன் றன்பால் அ
ஃறிணை ஒருமை படர்க்கை)

புதிய பொற்காலச் செந்தமிழ் இலக்கணம்
37
கம்பிகள்
துள்ளின்
நான்
வருவேன்
(பலவின்பால் அ
ஃறிணை பன்மை படர்க்கை)
(தன் மை
ஒரு மை) (முன்னிலை ஒரு
மை) (தன்மைபன்மை) (முன்னிலை பன்
வருவாய்
நாம் நீர்
வருவோம் வருவீர்
மை
9. நிறுத்தப் புள்ளிகள்
வாக்கியத்தின் இறுதியிலும், இடையில் முக்கிய இடங்களிலும் நிறுத்தப் புள்ளிகள் இடுகிறோம்.
10. நிறுத்தப்புள்ளிகள் எத்தனை வகை ? நிறுத்தப் புள்ளிகள் 4 வகை.
1. முற்றுப் புள்ளி
முக்காற்புள்ளி 3. அரைப்புள்ளி
4. காற்புள்ளி 11. முற்றுப்புள்ளி வாக்கியமுடிவில் வரும். இது அமைந்த இடத்தில் நான்கு நொடிப்போது நிறுத்த வேண் டும்.
12. முக்காற்புள்ளியும் அரைப்புள்ளியும் காற்புள்ளி யும் வாக்கியத்தின் இடையில் முக்கியமான இடங்களில் வரும்.
முக்காற்புள்ளிக்கு மூன்று நொடிப்பொழுதும் அரைப் புள்ளிக்கு இரண்டு நொடிப்பொழுதும் காற்புள் ளிக்கு ஒரு நொடிப்பொழுதும் நிறுத்தி வாசிக்கவேண்டும்.

Page 23
38
புதிய பொற்காலச் செந்தமிழ் இலக்கணம் 13. வாக்கியங்களில் நிறுத்தப்புள்ளி தவிர வேறு ? என்ன குறிகள் வரும் ?
1. கேள்விக்குறி 2. வியப்புக்குறி 3. மேற்கோள் குறி ஆகியவை வரும்.
கேள்விக்குறி (?) இது கேள்வி வாக்கியங்களின் முடி வில் முற்றுப் புள்ளிக்குப் பதிலாக வரும்.
வியப்புக்குறி (!) இது வியப்பைத் தெரிவிக்கும் வாக்கி யங்களில் முற்றுப்புள்ளிக்குப் பதிலாக வரும்.
மேற்கோள் குறிகள். ( ' ' , '' '')
இவை ஒருவர் பேசும் பேச்சுக்களுக்கும் நூலின் மேற்கோள்களுக்கும் முதலிலும் கடைசியிலும் வரும்.
இவற்றை ஒற்றையாக இடுவதும் உண்டு. இரட்டை யாக இடுவதும் உண்டு.
- (உ-ம்) அவன் (' தான் வருகிறேன் '' என்று சொன் னன். திருக்குறளில் ( அகரமுதல எழுத்தெல்லாம் ' என்று கூறப்பட்டிருக்கிறது.
பயிற்சிப்பாடம் 11 1. சொற்றொடர் என்றால் என்ன ?
வாக்கியம் என்றால் என்ன ? 3. வாக்கியத்தில் வரும் உறுப்புக்கள் எவை ?
பயனிலை என்ன சொல்லாக வரும் ? 5. வாக்கியத்தின் முடிவில் வரும் குறிகள் யாவை ? 6. வாக்கியத்தின் இடையில் வரும் குறிகள் யாவை?
7. மேற்கோள் குறி எது ? அது எங்கே எவ்விடங் களில் வழங்கும் ?
2.

புதிய பொற்காலச் செந்தமிழ் இலக்கணம்
கை நட
எனென் |
வகை
இயல் 8. புணர்ச்சி இலக்கணம் 1. புணர்ச்சி என்றால் என்ன ?
வாக்கியத்தில் ஒரு சொல்லுக்குப் பின் ஒரு சொல் ..வரும்போது சில மாறுதல்கள் அச் சொற்களில் ஏற்படும்.
அவற்றைப் புணர்ச்சி என்று கூறுகிறோம். ( 2. இரண்டு சொற்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து வரும்போது முதல் சொல் நிலைமொழி என்றும் பின்வரும் சொல் வருமொழி என்றும் அழைக்கப்படும். (11 தங்கை நடக்கிறாள் என்ற தொடரில் தங்கை நிலை மொழி. நடக்கிறாள் வருமொழி.
3. புணர்ச்சி எத்தனை வகைப்படும்? புணர்ச்சி இரண்டு வகைப்படும். அவை இயல்புப் --புணர்ச்சி, விகாரப்புணர்ச்சி என்பவை.
இயல்புப் புணர்ச்சி:-நிலைமொழி வருமொழி இரண்டி லுமே மாறுதல் ஏற்படாவிட்டால் அப்புணர்ச்சி இயல்புப் புணர்ச்சி ஆகும்.
மரம் வளர்கிறது.
விகாரப்புணர்ச்சி:-நிலைமொழியிலோ வருமொழி பிலோ இரண்டிலுமோ மாறுதல் ஏற்பட்டால் அது விகாரப் புணர்ச்சி ஆகும்.
பனை + காய் = பனங்காய்
அல் + திணை = அஃறிணை. 4. நிலைமொழியின் கடைசியில் என்ன எழுத்துக்கள் - வரும் ?
நிலைமொழியின் கடைசியில் மெய், உயிர் இரண்டுமே வரும்.

Page 24
40
புதிய பொற்காலச் செந்தமிழ் இலக்கணம்
கவனிப்பு உயிர் சொல் முடிவில் தனியாக வராது - மெய்யில்கலந்து உயிர் மெய்யாகவே வரும்.
(உ-ம்) மான் (மெய் முடிவு)
- புழு. (உ என்ற உயிர் முடிவு) 5. வருமொழி முதலில் என்ன எழுத்துக்கள் வரும்? வருமொழி முதலில் உயிர் எழுத்தும் மெய் எழுத்தும்
வரும்.
தி க
வெல்
உயிர் க.
கவனிப்பு சொல்லின் முதலில் மெய் தனித்து வராது. உயி ருடன் கலந்து உயிர் மெய்யாகவே வரும்.
6. நிலைமொழியின் கடைசி எழுத்துக்களும் வரு. மொழியின் முதல் எழுத்துக்களும் எத்தனை வகையில் சேரும். நிலைமொழி முடிவிலுள்ள வருமொழி முதலிமுள்ள
மெய்
உயிர்
மெய் ஆகியவற்றுடன் சேரும். இவற்றுள் (L) மெய் முன் உயிர்
(2) உயிர் முன் உயிர் (3) உயிர் முன் மெய்
(4) மெய் முன் மெய் ஆகிய வகைப் புணர்ச்சிகளில் சிலவற்றைப்பற்றிப் படிப் போம்,
7. மெய் முன் உயிர்
மெய் முன் உயிர் வந்தால் பெரும்பாலும் இயல்புப் புணர்ச்சியாம். ஆனால் மெய்யும் உயிரும் ஒன்றாகக் கலந்து உயிர் மெய்யாகவும் எழுதப்படும். தனியாகவும் எழுதப் படும்.

புதிய பொற்காலச் செந்தமிழ் இலக்கணம்
41
என்று
ருTL)
(உ-ம்) பழம் + இனிமையானது
8. ஆனால் தனிக்குறில் அடுத்த மெய்க்குப்பின் உயிர் வந்தால் அம்மெய் எழுத்து இரட்டிக்கும்.
(உ-ம்) புல் + அரிசி = புல்லரிசி
எள் + உருண்டை = எள்ளுருண்டை = பழம் இனிமையானது (அல்லது) பழமினிமையா ன து. குரல் + அழகானது = குரல் அழகானது (அல்லது) குரலழகான து.
9. உயிர் முன் உயிர்.
உயிர் முன் உயிர் வருமிடங்களில் இக்காலத்தில் அவற்றை அப்படியே பிரித்து எழுதுவதுண்டு. அப்பா + இவர். தம்பி + இவன் என்பவற்றை அப்பா இவர், தம்பி இவன் என்று நாம் எழுதுகிறோம். ஆனால் அவற்றைச் சேர்த்து ' அப்பா விவர்' 'தம்பி யிவன்' என்றும் எழுத லாம். பாட்டுக்களில் இவை பெரும்பாலும் சேர்த்தே எழு தப்படும்.
சேர்த்து எழுதும் போது இவ்விரண்டு உயிர்களுக்கு மிடையே ய், வ் என்ற மெய்யெழுத்துக்கள் வருகின்றன. இவறறை உடம்படு மெய்கள் என்கிறோம்.
10. இ, ஈ, எ, ஏ, ஐ, என்ற உயிர்களுக்குப்பின் உயிர் வந்தால் இடையில் ய் என்ற உடம்படு மெய் தோன்
றும்.
மணி + அழகான து == மணியழகான து.
அ வனே -+ இவன் - அவனேயிவன்
கலை + ஆர்வம் = கலையார்வம். 11. 4, ஆ, உ, ஊ, ஒ, ஓ, ஒள என்ற உயிர்களுக் குப்பின் உயிர் வந்தால் இடையில் வ் என்ற உடம்படு மெய் தோன்றும்.

Page 25
42
புதிய பொற்காலச் செந்தமிழ் இலக்கணம்
பலா + இலை = பலாவிலை - புழு + அசைகிறது = புழு வசைகிறது.
பூ+ அ ழுகிற்று = பூ வழுகிற்று.
இளங்கோ + எழுந்தான் = இளங்கோவெழுந்தான் 12. உயிர் முன் மெய்
உயிர் முன் மெல்லெழுத்து, இடையெழுத்து வந்தால் பெரும்பாலும் இயல்புப் புணர்ச்சியாம்.
விளா+மரம் = விளாமரம். கரும்பு வளர்கிறது - கரும்பு வளர்கிறது.
இளங்கோ +வந்தான் - இளங்கோ வந்தான் உயிர் முன் வல்லெழுத்து வந்தால் அவ்வல்லெழுத் துக்கு முன் அதே வல்லெழுத்துப் பெரும்பாலும் மிகுந்து வரும்.
* மயில் ஆட +கண்டேன் = மயில் ஆடக்கண்டேன்
கறுப்பு + கொடி = கறுப்புக்கொடி, புலி +தோல் = புலித்தோல்
வாழை - கன்று = வாழைக்கன்று. கவனிப்பு: 10.யிர் முன் வல்லினம் வந்தால் சில இடங்களில் மிகா மல் வருவதும் உண்டு. அற்றை மேல் வகுப்புக்களில் படிப்போம்.
13. மெய் முன் மெய்
நிலை மொழி கடைசியில் (ம்' வந்து வருமொழியில் க ச த என் ற வல்லெழுத்துக்கள் வந்தால் ' ம் ' என்ற எழுத்து அவற்றுக்கு இன மான ங் ஞ் ந் என்ற மெல்லெ
ழுத்துக்கள் ஆகும். (உ-ம்) பழம் + கனிந்தது = பழங் கனிந்தது.
மனம் + சலித்தது = மன்ஞ் சலித்தது. மரம்- தழைத்தது = மரந் தழைத்தது,

புதிய பொற்காலச் செந்தமிழ் இலக்கணம்
43.
பயிற்சிப் பாடம் 12 1. புணர்ச்சி என்றால் என்ன ? புணரும் சொற்கள் என்ன பெயர் பெறும்?
2. உடம்படு மெய் என்றால் என்ன ? அது எவ் வகைப் புணர்ச்சியில் வரும் ?
3. எந்த உயிர்களுக்குப்பின் யகர உடம்படு மெய்(ய்) வரும் ?
4. மெய் முன் உயிர் வரும்போது மெய் இரட்டிப் பது எப்போது ?
5. உயிர் முன் எந்த மெய் இரட்டிக்கும்? உதாரணம் தருக..
6. மலைவாழை, வளஞ்செறிந்த, செல்லரித்தது, கட லோரம், பழ்ச்சொல் - பிரித்துப் பணர்ச்சியை விளக்குக.
7. மா + இலை, பனை + ஒலை, வேல் + எடு, கண் + ஆடிற்று -சேர்த்தெழுதுக.
இயல் 9.
செய்யுளிலக்கணம் 1. செய்யுள் என்றால் என்ன ?
கேட்பதற்கு இனிமையான வகையில் எளிதில் மனப் பாடம் செய்யும்படி சொற்கள் அமைக்கப்பட்டு எழுதப்படு வது செய்யுள் அல்லது பாட்டு ஆகும். இவற்றுள் சில வற்றை நாம் பண்ணோடு பாடவும் செய்யலாம்.
2. செய்யுளில் உறுப்பு எது ?
பேச்சில் உறுப்பு வாக்கியம், செய்யுளில் பாட்டுக்கு உறுப்பு அடி. ஒவ்வோர் அடியையும் ஒரு தனி வரியில் எழுதிப் படிக்கிறோம்.

Page 26
ச0 !
44
புதிய பொற்காலச் செந்தமிழ் இலக்கணம்
! பலி
ப டி.
3, தமிழ்ப்பாட்டுக்களில் எத்தனை அடிகள் இருக்கும். 2, 4, அடிகள் வரும். அல்லது பல அடிகள் வரும். 4. இரண்டு அடி உடைய செய்யுள் வகை எது ? இரண்டு அடி உடைய செய்யுள் வகை குறள். கவனிப்பு.--திருவள்ளுவர் திருக்குறள் இவ்வகைச் செய்யு ளில் எழுதப்பட்டிருக்கிறது.
5. நான்கு அடிச் செய்யுள் வகைகள் எவை ?
நான்கு அடியில் வெண்பாக்களும், விருத்தங்களும் உண்டு.
கவனிப்பு:--மூதுரை, நல்வழி முதலியவை வெண்பாக்கள். கம்பராமாயணம், பாரதம் முதலியவை விருத்தங்களால் பாடப் பட்டவை.
6. பல அடிப் பாட்டுக்கள் எவை ?
பல அடிப் பாட்டுக்களில் முக்கியமான து அகவல். வெற்றிவேற்கை, ஆத்திசூடி அடிகள் அகவல் அடிகளே.
7. செய்யுளில் எவ்வகை அழகுகள் உண்டு ?
செய்யுளில் சொல் அமுகும் பொருளழகும் உண்டு. - வற்றைக் கூறும் 2) லக்கணப் பகுதி அணி இலக்கணம் எனப்படும்.
பயிற்சிப்பாடம் 13 L, செய்யுள் என் றால் என்ன? அதில் என்ன அழகு கள் உண்டு?
2. உரை நடையில் வாக்கியம்போலச் செய்யுளில் உறுப்பாவது எது? ஒரு பாட்டில் எத்தனை அடிகள் வரும் ?
3. தமிழில் உள்ள முக்கிய பாட்டு வகைகள் யாவை?
4. ஆத்திசூடி, மூதுரை இராமாயணம் இவை என்ன பாட்டு வகைகளால் ஆக்கப்பட்டன?


Page 27
வி ள !
செந்தமிழ் வாசகம் மு
55 59
2)
பொது அறிவு வி
புத்திப் பரீட்சை இன்னும் எல்லா வகை களும் எங்களிடம் கிடைக்கு
ஆன்,

ம் பரம்
சீதம்
30
தலாம் புத்தகம் ழ்ப்பிரிவு)
தலாம் புத்தகம் மற்பிரிவு) 2-ம் 3-ம்
55
19
45
55
4-ம்
60 70
5-ம் னாவிடை
70 25
யான பள்ளிக்கூடப் புத்தகங்
ம்.
ந்தா புத்தகசாலை,
மட்டக்களப்பு.