கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: எட்டாந்தரப் புவியியல்

Page 1
Tா டாந்தர
புவியிய:
- வெட- இலங்கைத் த

வி. கந்தவனம், B. A.
-இபு-11
கம்
மிழ்நூற் பதிப்பகம்

Page 2
وفمبل"
ول .\ ?
اسمه

கர்
எட்டாந்தரப் பு வி யி யல்
புதிய பாடத்திட்டத்துக்கும் வழிகாட்டிக்கும்
அமைய ஆக்கப்பெற்றது
வி. கந்தவனம், B. A.
சான்றிதழ் இல.பா. பி. ஆ. ச.3/517
எட்டாந்தரப் புவியியல் 1952ம் ஆண்டு பெப்ருவரி மாதம் 29ந் திகதி வெளிவந்துள்ள இலங்கை அரசாங்க வர்த்தமானப் பத்திரிகையில், உதவி நன் கொடை பெறும் தன் மொழிப் பாடசாலைகளுக்கும், இருபாஷைப் பாடசாலைகளுக்கும், ஆங்கில பாடசாலைகளுக்குமான ஓழுங்குச் சட்டத்தின் 19( ஏ)ம் பிரிவில் பிரசுரிக்கப்பட்டதற்கமைய இப் புத்தகம் எட்டாம் வகுப்புக்கு படிப்பிப்பதற்கு ஒரு பாடப் புத்தகமாக 1971ம் ஆண்டு மார்கழி மாதம் 31ந் திகதி வரை உபயோகித்தற்கு மகா வித்தியாதிபதி அவர்களால் அங்கீகரிக்கப்பட்டுன் ளது.
சோமரத்ன விஜயசிங்க பாடநூற் பிரசுர ஆலோ சனைச் சபை,
செயலாளர் மலாய்வீதி, கொழும்பு 2, பாட நூற் பிரசுர ஆலோசனைச் சபை 25-10-1968,
சுன்னாகம் : வட- இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம்
1970

Page 3
முதற் பதிப்பு - 1968 புதுக்கிய பதிப்பு -1970
-காங்காகே சாஸ்தா
சகல உரிமைகளும் பதிப்பகத்தாருக்கு ரியன. பதிப்பகத்தாரிடம் எழுத்திற் பெற்ற அநுமதியின்றி இந் நூ லின் எப்பகு தியையே னும்
எவ்வகையிலேனும் எவராவது அச்சிடுதல் கூடாது.
கன்னாகம் : வட.- இலங்கைத் தமிழ் நூ ற் ப திப்பகத்தினருக்காக, குரும்பசிட்டி , திரு. முத்தையா சபாரத்தினம் அவர்களால் சுன்னாகம், திருமகள் அழுத்தகத்தில்
அச்சிட்டு வெளியிடப் பெற்றது,

நூன்முகம்.
நிறைவான அறிவையும் முறையான பண்பையும் புகட்டவல் ல பாடங் களுட் புவியியல் முதன்மை வாய்ந்தது. அறிவியல் வளர்ச்சி காரணமாகப் போக்கு வரத்து வசதிகள் நன்கு விருத்தியடைந்து, 'உலகஞ் சுருங்கப் பெற்று உலக நாடுகளுக்கிடையே நெருங்கிய தொடர்புகள் வளர்ந்துள்ள இக்காலத்தில், புவியியல் அறிவு ஒருவருக்கு மிக இன்றியமையாததாகின்றது . உழைப்பிலும் பொதுவான வாழ்விலும் உயர்வு பெறப் புவியியல் அறிவு முன்னின்று உதவுகின்றது. ஆதலாற் புவியியல் புகட்டப்படாத பாடசாலைக் கல்வி இக் காலத்திற் பொருளற்றுப் போகின்றதென்க.
எட்டாந்தர மாணவர்களின் புவியியல் அறிவை வளர்த்தற்பொருட்டு, கல்வி அமைச்சின் புதிய பாடத் திட்டத்துக்கும் வழிகாட்டிக்கும் அமைவாக, இந் நூல் ஆக்கப்பெற்றது. மாண வர் களிடத் தி லே தக்க ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலுஞ் சிந்தனையைத் தூண்டிவிடும் முறையிலும் பாடங்கள் பொறுப்புடன் எழுதப்பட்டுள்ளன . பல பொருள்கள் இடத்துக்குந் தேவைக்குமேற்றவாறு இக்கால முறையில் விளக்கப்பட் டுள்ளன. புவியியல் ஆசிரியர்கள் இப் புதுமுறைப் போக்கினை, அதன் பெரும்பயன் நோக்கிப் போற்றுவர் என்பதில் ஐயமில்லை.
இந் நூலின் மற்றுமோர் சிறப்பியல்பு தெளிவாகவுந் திருத்தமாகவும் அமைக்கப்பெற்ற விளக்கப் படங்க ளாகும். அவற்றுட் பல, மாணவர்களின் கவனத்தை ஈர்த்தற்பொருட்டுக் கவர்ச்சியான வண்ணப் படங்க ளாக அமைக்கப்பட்டுள்ளன. பாடப்பொருள் விளக்கத் துடன் படங்கள் பெரிதும் தொடர்புபடுத்தப்பட்டிருப் பதையும் ஆசிரியர்கள் அவதானிப்பார்கள். வண்ணங் களிலே தரப்பட்டுள்ள தலைப்புக்களும் உப தலைப்புக் "களும் நூலின் அமைப்பை மேலும் அழகு செய்கின்றன.

Page 4
ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் அதிக கவனத்துடன் தயாரிக்கப்பட்ட புதுமுறைப் பயிற்சி வினாக்கள் தரப்பட்டுள்ளன. இவற்றையும், வேறாக ஆக்கி வெளியிடப்பட்டுள்ள 'எட்டாந்தரப் புவியியற் படவேலைப் பயிற்சி களையும் மாணவர்கள் தக்கவாறு செய்து முடிப்பாரெனின், இப்பாடத்தில் நிறைவான தேர்ச்சி பெறுவர் என்பது உறுதி.
இந் நூலிலே தன்மொழி அலுவலகம் வெளி யிட்டுள்ள புவியியற் சொற்றொகுதிகளிலுள்ள கலைச் சொற்களே பெரிதுங் கையாளப்பட்டுள்ளன.
இந்நூலை ஆக்குவதில் என்னைப் பலவாறு ஊக்கப் படுத்தியவர் பிரபல பாடநூல் ஆசிரியர் திரு . இ. தர்மலிங்கம் அவர்களாவர். சுன்னாகம், திருமகள் அழுத்தக ஓவியர் திரு . K. K. V. செல்லையா அவர்கள் எனது படங்களை அச்சுக்கென்று அழகாக மீள வரைந் திருக்கின்றார்கள். சிறந்த புவியியல் ஆசிரியரும் சென்னை, இலண்டன் ஆகிய இரு பல்கலைக்கழகங்களின் பட்டதாரியுமாகிய திரு. கு. சோமசுந்தரம் அவர்கள் இந் நூலை மதித்து அணிந்துரை வழங்கியிருக்கின்றார்கள். இவர்களுக்கு எனது உளம் நிறைந்த நன்றி உரித்தாகும்
செய்வன திருந்தச் செய் ' என்பதே வடஇலங்கைத் தமிழ்நூற் பதிப்பகத்தாரின் குறிக்கோ ளாகும். இந்நூலைக் கவர்ச்சிமிக்க முறையில் வெளி யிட்டுள்ள அச்சுக்கலையின் நுட்பங்கள் தேர்ந்தவரும், வட- இலங்கைத் தமிழ் நூற் பதிப்பக முதல்வருமாகிய திரு. மு. சபாரத்தினம் அவர்கள் பாடநூற் பிரசுரத் துறையில் ஆற்றிவருஞ் சேவை அளப்பரியது. அவர் களுக்கும் எனது மனமார்ந்த நன்றி உரித்தாகுக.
குரும்பசிட்டி, தெல்லிப்பழை.
வி. கந்தவனம்

சாவகச்சேரி, இந்துக்கல்லூரிப் புவியியல் ஆசிரியர் திரு. கு. சோமசுந்தரம், B. A. (Madras) ; B. A. (London) அவர்கள்
அளித்த அணிந்துரை
மனிதனுக்கும் சூழலுக்கும் உள்ள தொடர்பை விளக்குவதே புவியியலாகும். சூழல் சில பாகங்களில் மனிதனுக்கு உடன்பாடாகவும் வேறு சில பகுதிகளில் முரண்பாடாகவும் உள்ளது. உடன்பாடான சூழலில் மனித வாழ்க்கை இலகுவாக முன்னேறிச் செல் கின்றது. முரண்பட்ட சூழலை வெல்லவும் தன்வயப் படுத்தவும் மனிதன் முயல்கிறான். தம் சூழலை அறிய, அதற்கும் தமக்கும் உள்ள தொடர்பை உணர, அதிலே தாம் எப்படி வாழவேண்டும் என்பதனை ஆராய, வாழ்க்கைப் பாதையைச் செப்பனிட்டுக் கொண் டிருக்கும் மாண வர் சமுதாயத்திற்குச் சந்தர்ப்பம் அளிப்பது புவியியல், மேலும், உலகின் பல்வேறுபட்ட சூழல்களிலும் மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதைத் தெரிந்து, தம் சூழல்களிலே தத்தம் வாழ்க்கையைச் சீர்ப்படுத்திக் கொள்வதற்கும் புவி யியல் துணைபுரிகின்றது. வாழ்க்கையோடு தொடர்பான இப்பாடம் இளைஞர்களை முழுமைபெறச் செய்து நல் வாழ்வு வாழச் செய்யும் கல்வியின் குறிக்கோளை நிறைவுபெறச் செய்கின்றது. மாணவனின் சிந்திக்குந் திறன், நினைவாற்றல், விவேகம், கற்பனை பரந்த மனப்பான்மை போன்றவற்றையும் புவியியல் வளர்க் கின்றது. இத்தகைய பயனுள்ள பாடத்தை. நாளைய உலகைத் தாங்கும் நன்மாணாக்கர் அனைவரும் கற்றுத் தேறவேண்டியது அவசியமாகும்.
IDாப்

Page 5
தமிழ்மொழியிற் சிறந்த புவியியல் நூல்கள் போதிய அளவில் இல்லாமை புவியியல் மாண வர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பெருங்குறையாக இருந்து வருகிறது. இக் குறையைப் போக்கும் குறிக்கோளுடனும், தாம் கற்றறிந்தவற்றைப் பிறருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற பெருநோக்குடனும், எட்டாந்தர மாணவர்களுக்கேற்ற வகையில், அவர்களுடைய பாடத் திட்டத்திற்கேற்ப இந் நூலை ஆக்கித் தந்துள்ளார், திரு . வி. கந்தவனம் அவர்கள். திரிபின்றித் தெளிவான எளிய நடையில், இனிய தமிழில், கண்கவர் விளக்கப் படங்களுடன் இந் நூல் அமைந்துள்ளது. நூலாசிரி யரின் அனுபவம், புவியியலில் உள்ள ஆழ்ந்த புலமை, ஆராயுந் திறன் அனைத்தும் இந் நூலிற் காணமுடி கின்றது.
இந்நூலிற் படங்களுக்கு நிறங்கள் தீட்டப்பட் டிருத்தல் ஒரு நல்ல உத்தியாகும். மாணவர்களின் கவனத்தை ஈர்த்துப் படப்பயிற்சிகளில் ஈடுபடச் செய்ய இது வழிவகுக்கும். பாடங்களின் இறுதியிற் சேர்க்கப் பட்டுள்ள பயிற்சிகளும் மாணவருக்குப் பேருதவியா யிருக்கும்.
புவியியல் மாணவர்களும், ஆசிரியர்களும் இந் நூலை உவந்தேற்பார்கள் என்பது எனது திடமான நம்பிக்கை.
கு. சோமசுந்தரம்
இந்துக்கல்லூரி, சாவகச்சேரி, 31-1 - 68.

பொருளடக்கம்
5 ...
42
4
47
முதலாம் பருவம்
அலகு
பக்கம் 1 புவியின் அசைவுகளும்
பருவ வேறுபாடுகளும் ..... 2 அகலக் கோடுகளும் நெடுங்கோடுகளும் 3 இலங்கைப் புவியியல்
16 4 நெல் வேளாண்மை
32 வியாபாரத் தானிய வகைகள் 6 இலங்கையின் வணிகப் பயிர்கள் 7 இலங்கையின் விளைபொருள்கள்
57 8 பருத்திப் பயிர்ச்செய்கை
இரண்டாம் பருவம் 1 காலநிலையை நிர்ணயிக்கும் காரணிகள்
65 2 உலகின் காலநிலைப் பிரதேசங்கள்..... 3 இலங்கையின் நீர்ப்பாசன முறைகளும்
காணியபிவிருத்தியும் ... --,
90 4 விலங்கு வேளாண்மை: 1. இறைச்சி ...
* 98 5 விலங்கு வேளாண்மை: 2. பால்
101 6 மீன்பிடித் தொழில்
106, 7 காடுகளும் காட்டுத் தொழில்களும் -
113
81
ពី
மூன்றாம் பருவம் 1 இலங்கையின் கைத்தொழில்கள் 2 இரும்பு-உருக்குக் கைத்தொழில் ... 3 நீர் மின்சக்தி 4 உலகின் குடிப்பரம்பல்
உலகின் பிரதான வியாபாரப் பாதைகள் 6 இலங்கையின் குடியிருப்புக்கள்
118 129 136
141 151
162

Page 6
படங்களின் அட்டவணை
2.
2 + ம.
16
21
படம்
பக்கம் 1. புவி தன்னச்சில் சுழலுதல் -
புவி சூரியனைச் சுற்றிவருதல் உலகத்தின் பிரதான விமானப் பாதைகள் ....
10 அகலக் கோடுகளும் நெடுங்கோடுகளும்
12 5. இலங்கையும் அதனைச் சூழவுள்ள
நீர், நிலப் பரப்புகளும் இலங்கையின் தரைத்தோற்றப் பிரிவுகள்
17 இலங்கையின் தரைத்தோற்றம் ...
18-19 8. தென்மேற்குச் சமவெளியின் தரைத்தோற்றம் |
19 9. இலங்கையின் வருட மழைவீழ்ச்சி 10. இறம்பொடை நீர்வீழ்ச்சி
27 11. இலங்கையின் வருடச் சராசரி வெப்பநிலை
28 12. உலர்வலயத் தாழ் நிலத்தின்
பிரதான நெல் விளையும் பகுதிகள்
33 13. மட்டக்களப்பில் முக்காலியில் நின்று
பொலி தூற்றுதல்
35 14: ஈரவலயத் தாழ்நிலத்தில் அரிவி வெட்டுதல்
37 15. மலை நாட்டிற் படியாக்கிய வயல்கள் '
38 16. உலகில் நெல் விளைவிக்கப்படும் நாடுகள் | 17. உலகின் கோதுமைப் பிரதேசங்கள்
44 18. |
மலை நாட்டிலே தேயிலை பயிராகும் பகுதிகள் ...
48 19.
இறப்பர் பயிராகும் பகுதிகள் .... 20.
இலங்கையின் தென்னை நிலங்கள்
51 21. உலகின் பருத்தி விளைவிக்கப்படும் பிரதேசங்கள் 62 2 2. வானியல் வலயங்கள் 23. பரனைற்று வெப்பமானி 24. அமுக்கப் பரம்பலும் புவி சுற்றாமலிருந்தால்
நேராக வீசவேண்டிய காற்றுத் தொகுதி களும்
69 25. புவியின் சுழற்சியாற் சரிந்து வீசுங்
காற்றுத் தொகுதிகள்
39
49
66
70

73
: : 1 :
110
படம்
பக்கம் 26. மலையியல் மழை |
72 27. மழை மானி 28. மழை பெறும் காலம்
76 29. கோடைப் பருவக்காற்று
78 30. குளிர்காலப் பருவக்காற்று
-
78 31. உலகின் இயற்கைத் தாவரப் பிரிவுகள்
83 32.
இலங்கையின் பிரதான நீர்ப்பாசனத் திட்டங்களும் குடியேற்றத் திட்டங்களும்
92 33. நியூசிலாந்தின் பாற்பண்ணை நிலையங்கள் |
103 34. உலர்வலயத் தாழ்நிலத்தின் மீன்பிடியிடங்கள்
107 35. தூண்டில் வலையால் மீன் பிடித்தல்
108 36. இழுவைக் கப்பலால் மீன் பிடித்தல்
109 37. உலகின் பிரதான மீன்பிடியிடங்கள் 38. காங்கேசன்துறையின் நிலையமும்
இலங்கையின் இருப்புப் பாதைகளும்
123 39. ஈரவலயத் தாழ்நிலத்தின் கனிப்பொருள்கள்
126 40. இரும்பை உருக்குமோர் ஊதுலையின் வெட்டுமுகம் 130 41. உலகில் இரும்பு காணப்படும் இடங்கள் - 132 42.
உலகத்தின் நிலக்கரிப் பரம்பல்
... 134
134 43.
இலக்சபானா - நோட்டன் பாலம்
: ... 13 8
138 44. உலகத்தின் பிரதான நாடுகளும் பட்டணங்களும் 142 45. உலகின் குடியடர்த்தி
144 46. கண்டங்களின் தரைத்தோற்றம்
146 47. உலகின் வருட மழைவீழ்ச்சி .
148 48. பிரதான கப்பற் பாதைகள்
154 49. இலங்கையின் குடிப்பரம்பல் (மாவட்ட வாரியாக) 163 50. ஈரவலயத் தாழ்நிலத்தின் தென்னை, இறப்பர்
நிலங்களும் இருப்புப் பாதைகளும்
165
- -
புவி; VIII - ii

Page 7

அலகு 1 புவியின் அசைவுகளும் பருவ வேறுபாடுகளும்
புவியின் வடிவம்: புவி உருண்டை வடிவமுடையது': புவியில், கொழும்பிலிருந்து எத்திசை நோக்கியாயினும் சரிநேராக ஒருவர் விமானத்திற் சென்றால் மீண்டும் அவர் வழியிற் கொழும்பு குறுக்கிடும். புவி உருண்டையாக இருப்பதனாற்றான் இது முடிகிறது. சமீப காலங்களில் விண்வெளியிலிருந்து எடுக்கப் பட்ட புவியின் படங்கள் அதன் கோளவடிவத்தை நன்கு எடுத்துக்காட்டுகின்றன. ஆயினும் அது பந்து போன்ற கோள் வடிவமுடைய தன்று. புவியின் வடக்கு, தெற்குப் பகுதிகள் சிறிது தட்டையுற்றும் மத்திய கோட்டுப் பகுதிகள் புடைப் புற்றும் உள்ளன. புவியின் சுற்றளவு 25,000 மைல் களாகும்.
புவியின் அசைவுகள் :புவி இரண்டு அசைவுகளில் ஈடுபட்டிருக் கிறது.) (1) தன்னிற்றானே சுழலுதல். (2) அவ்வாறு சுழன்று கொண்டு சூரியனையுஞ் சுற்றி வருதல். இவ்வசைவுகளினாற் பல விளைவுகள் ஏற்படுகின்றன. இவ்வசைவுகள் பற்றியும் அவை களின் விளைவுகள் பற்றியும் இவ்வதிகாரம் விளக்கும். புவி தன்னில் தானே சுழலுதல்
புவியச்சு : பம்பரம் சுழல்வதை நாம் பார்த்திருக்கிறோம். அதைப்போலவே புவியும் தன்னிற்றானே சுழல்கிறது. பம்பரம் ஒரு சிறிய ஊசி போன்ற காலிலே நின்றுகொண்டு சுழல்கிறது. இக் கால் பம்பரத்தின் அச்சாகும். சில்லுகளும் அச்சொன்றைத் துணையாகக் கொண்டு சுழல்வதை நாம் கவனித்திருக்கிறோம். புவிக்கு இதுபோன்ற அச்சு எதுவும் இல்லை என்றாலும், ஒன்று இருப்பதாக நாம் கற்பனை செய்து கொள்கிறோம். இந்தக் கற்பனை அச்சே புவியச்சு எனப்படும்.
இந்த அச்சில் புவி சுழன்று வருகிறது. ஆயின் புவியில் இந்த அச்சு நேராக இல்லாமல் அதன் ஒழுக்குத் தளத்தின் செங்குத்தி லிருந்து 234 சாய்ந்திருக்கிறது. இது புவிச் சாய்வு எனப்படும். இவ்வச்சின் முனைவுகள் வடமுனைவு, தென்முனைவு எனப்படும்.

Page 8
எட்டாந்தரப் புவியியல்
இம் முனைவுகளுக் கிடையில் நடுவில் புவியைச் சுற்றிக் கீறப் படும் கோடு மத்திய கோடு எனப்படும். மத்திய கோட்டுக்கு வடக்கேயுள்ள பகுதி வடவரைக் கோளமென்றும் தெற்கே யுள்ள பகுதி தென்னரைக் கோளமென்றும் அழைக்கப்படும்.
வட முனைவு
புவிஅச்சு,
இரவு
புவி
- [i:கல்
ஆரியன்
தென் முனைவு
பூமி
- ---
படம் 1: புவி தன்னச்சில் சுழலுதல்
புவியின் சுழற்சி : புவி தன்னச்சில் மேற்கிலிருந்து கிழக் காகச் சுழல்கிறது. ஒருமுறை புவி தன்னைத்தானே சுற்றிவர 24 மணித்தியாலங்கள் எடுக்கின்றது. மத்திய கோட்டுப் பகுதி ஒரு மணித்தியாலத்திற்கு 1000 மைல் வேகத்தில் அசைகிறது. முனைவுகள் நோக்கிப் போகப்போக மணித்தியாலச் சுழற்சி வேகம் குறைகிறது. வட முனைவிலும் தென் முனைவிலும் அசைவேயில்லை.
இரவு பகல் : புவி தன்னைத்தானே சுற்றுவதால் ஏற்படும் விளைவு இரவு பகலாகும். புவி ஒரு திண்மமான" கோளமாக இருப்பதனால் ஒரு நேரத்தில் அதன் ஓரரைப் பக்கத்தில் மட்டுமே சூரிய ஒளி விழக்கூடியதாகவுள்ளது. சூரிய ஒளியைப் பெறாத மற்றைய அரைப்பகுதி இருட்டில் இருக்கிறது. சூரிய ஒளியைப் பெறும் அரைப்பகுதிக்கு அந்நேரம் பகலாகவும், மற்றைய பகுதிக்கு இரவாகவும் இருக்கிறது.
புவி தன்னச்சில் சுழல்கின்றமையால் இரவு பகல் மாறி மாறி வருகின்றது. புவி தன்னைத்தானே சுற்ற 24 மணித்தி யாலம் எடுக்கின்றது. அரைப்பகுதி சுற்றிமுடிய 12 மணித்தி யாலம் எடுப்பதினால், பகல் 12 மணித்தியாலங்களாகவும் இரவு

புவியின் அசைவுகளும் பருவ வேறுபாடுகளும் 3
12 மணித்தியாலங்களாகவும் இருக்க வேண்டும். ஆயினும் இரவும் பகலும் சரிசமமாக இருப்பதில்லை. புவி சூரியனையும் சுற்றிவருவதனால் இந்த இரவு பகலில் நேர வேறுபாடுகள் ஏற்படுகின்றன.
புவி மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றுவதனால், கிழக்கில் உள்ளவர்கள் முன்னதாகச் சூரிய ஒளியைப் பெறுகின்றனர். அதாவது, கிழக்கில் உள்ளவர்களுக்கு முதலிற் பொழுது விடி கின்றது. புவி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் சுற்றுவதாலேயே சூரியன் கிழக்கில் இருந்து மேற்கில் மறைவதுபோல் நமக்குத் தெரிகிறது. புவி சூரியனைச் சுற்றி வருதல் < புவியொழுக்கு: புவி தன்னச்சில் தானே சுழன்றுகொண்டு நீள்வட்டமான ஒரு பாதையில் சூரியனையும் சுற்றுகிறது. இப் பாதைக்கு ஒழுக்கு என்று பெயர்.(சூரியனைச் சுற்றிவர புவி 3651 நாட்கள் எடுக்கின்றது. இது 'வருடக் கெதி' எனப்படும்.
புவியச்சுச் சரிந்திருப்பதனாலும் புவியின் சுற்றுகையினாலும் பருவகாலங்கள் ஏற்படுகின்றன,
- பருவங்கள் : புவி சூரியனைச் சுற்றிவருகையில், அது 2330 சாய்ந்திருப்பதினாலும், எப்பொழுதும் அதன் வடமுனைவு ஒரே திசையை நோக்கி இருப்பதினாலும், சூரியன் எப்பொழுதும் புவி யின் மேற்பரப்பில் குறிப்பிட்ட ஓர் இடத்திற்கு மேல் உச்சமாக நிலவுவதில்லை, வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு இடங் களுக்குச் சூரியன் உச்சங் கொடுக்கக்கூடிய முறையிற் புவியின் நிலையும், சாய்வும், சுழற்சியும் அமைந்திருக்கின்றன, இதனாற் புவியின் மேற்பரப்பிற் பெறப்படும் வெப்பமும், வெளிச்சமும் இடத்துக்கிடம் வேறுபடுகின்றது. இதனாற் பருவங்கள் மாறி மாறித் தோன்றுகின்றன.
மாச்சு 21 ஆம் திகதியிற் - சூரியன் மத்தியகோட்டுக்கு உச்சங் கொடுக்கக்கூடிய முறையில் (சூரியனின் கதிர்கள் நிலைக் குத்தாக விழக்கூடிய முறையில்) புவியின் நிலையுள்ளது. இந் நாளிலிருந்து.. - படிப்படியாக வடவரைக்கோளம் - சூரியனை நோக்கிச் சாய்கிறது. இதனால் மத்திய கோட்டுக்கு வடக்காக உள்ளவர் களுக்குச் சூரியன் உச்சங் கொடுக்கத் தொடங்கு கிறது. ஆனால், மத்திய கோட்டுக்கு வடக்காக 230க்கு அப்பால் உள்ள பகுதி களுக்குச் சூரியன் எப்பொழுதுமே உச்சங் கொடுப்பதில்லை. இந்த எல்லைக்குக் கடகக்கோடு என்று பெயர் . - சூரியன் இந்த எல்லையில் யூன் மாதம் 21 ஆம்
நாளிலிருந்து டிய முறையில், சூரியனின் கதை

Page 9
எட்டாந்தரப் புவியியல்
படம் 2: புவி சூரியனைச் சுற்றி வருதல்
திகதி நிலவுகிறது. இந்நாள் கோடைச் சூரிய - கண நிலை நேரம் எனப்படும். இந்நாளிலிருந்து வடவரைக் கோளம் படிப்படி யாகச் சூரியனுக்கு எதிர்முகமாகச் சாயத் தொடங்க, தென் னரைக்கோளம் சூரியன் பக்கமாகத் திரும்புகிறது. எனவே, சூரியன் கடகக் கோட்டுக்கு அப்பால் வடக்கே செல்லாமல் தெற்கு நோக்கிவரத் தொடங்குகின்றது. மீண்டும் மத்திய கோட்டுக்குச் செப்தம்பர் மாதம் 23 ஆம் திகதி உச்சங் கொடுக் கின்றது. எனவே, ஆறுமாதங்கள் சூரியன் வடவரைக் கோளத்தில் இருந்திருக்கின்றது. இம்மாதங்களுள் மே, யூன், யூலாய் மாதங்களில் ஆகக்கூடுதலான வெப்பம் அனுபவிக்கப் படுகின்றது. இம்மாதங்கள் வடவரைக் கோளத்திற் கோடை மாதங்களாகும் :7{ஆனால், இதே மாதங்கள் தென்னரைக் கோளத்துக்கு மாரி யா க ( குளிர் காலமாக ) இருக்கும், ஏனெனில், சூரியன் வடவரைக் கோளத்தில் இருப்பதினால் தென் னரைக் கோளத்துக்கு வெப்பம் குறைவாக இருக்கிறது.
செப்தம்பர் 23 இல் இருந்து தொடர்ந்து தென்னரைக் கோளம் சூரியன் பக்கமாகத் திரும்ப, சூரியன் தென்பகுதிக்கு உச்சங் கொடுக்கத் தலைப்படுகிறது. வடவரைப் பகுதிக்குப் படிப் படியாக வெப்பம் குறைகிறது. இதனால் ஓகத்து செப்தம்பர், ஒக்டோபர் மாதங்கள் வடவரைக் கோளத்துக்கு இலையுதிர் காலமாகின்றன. தென்னரைக் கோளத்துக்கு இக்காலத்தில் வெப்பம் கூடத் தொடங்குகின்றமையால் இம்மாதங்கள் இலை தளிர் காலமாகின்றன.
தென்னரைக் கோளத்தில் மத்திய கோட்டிலிருந்து 23 க்கு அப்பால் சூரியனின் கதிர்கள் எப்பொழுதும் நிலைக்குத்தாக

புவியின் அசைவுகளும் பருவ வேறுபாடுகளும் 5
விழுவதில்லை. இவ்வெல்லைக்கு மகரக்கோடு என்று பெயர். மகரக்கோட்டுக்கு உச்சியில் சூரியன் திசம்பர் மாதம் 21 ஆம் திகதி நிலவுகின்றது. இந்நாள் மாரிச் சூரிய - கண நிலை நேரம் எனப்படும். இந்நாளிலிருந்து மீண்டும் வடவரைக்கோளம் சூரியனை நோக்கிச் சரியத் தொடங்க, தென்னரைக்கோளம் சூரியனுக்கு எதிர்முகமாகத் திரும்புகிறது. எனவே, சூரியன் மீண்டும் வடக்காகச் செல்லத் தொடங்குகிறது. நவம்பர், திசம்பர், யனவரி மாதங்களில் வெப்பத்தைக் கூடுதலாகப் பெறும் தென்னரைக் கோளம் கோடையை அனுபவிக்கிறது. இதே மாதங்கள் குறைவான வெப்பத்தைப் பெறும் வடவரைக் கோளத்துக்கு மாரி மாதங்களாகும்.
தொடர்ந்து வடக்கு நோக்கிச் செல்லுஞ் சூரியன் மீண்டும் மாச்சு மாதம் 21 ஆம் திகதி மத்திய கோட்டைக் கடந்து வடவரைக் கோளத்துக்குச் செல்லத் தொடங்க, தென்னரைக் கோளத்துக்கு வெப்பங் குறைகிறது. இதனால், பெப்பிரவரி, மாச்சு, ஏப்பிரல் தென்னரைக்கோளத்துக்கு இலையுதிர் கால மாகவும், வடவரைக்கோளத்துக்கு இலைதளிர் காலமாகவும் இருக்கின்றன.
இவ்வாறு, கடகக்கோட்டுக்கும் மகரக்கோட்டுக்குமிடையிற் சூரியனது கதிர் கள் நிலைக்குத்தாக விழக்கூடிய முறையில் சாய்ந்தும், சமாந்தரநிலையொன்றினை மேற்கொண்டும் புவி தன்னொழுக்கிற் சூரியனைச் சுற்றிவருவதனாற் பருவவேறுபாடுகள் ஏற்படுகின்றன.
இரவு பகல் நேர அளவில் வேறுபாடு: புவி சூரியனைச் சுற்றி வருவதனால் இரவு பகல் நேர அளவிலும் வேறுபாடுகள் ஏற்படு கின்றன, ஒரு வருடத்தில் இரண்டேயிரண்டு நாட்களில் மட்டும் இரவும் பகலும் சரியளவாக இருக்கின்றன. (மாச்சு 21இலும் செப்தம்பர் 23இலும்) மத்திய கோட்டிற் சூரியன் உச்சங் கொடுக்கையில் வடவரைக் கோளமும் தென்னரைக் கோளமும் சமமான அளவு ஒளியைப் பெறுகின்றனர். இவ்விரு நாட்களி லும் உலகம் முழுவதும் இரவும் பகலும் சமமாக இருக்கும். அதாவது, பகல் 12 மணித்தியாலங்களாகவும் இரவு 12 மணித்தியாலங்களாகவும் இருக்கும். ஆதலால் இந் நாட்கள் சமவிராக்காலம் எனப்படும்,
எம்.இம் நடத்த நேர உறுபாm/
பிற நாட்களில் இரவும் பகலும் ஒரேயளவாக இருப்ப தில்லை. சூரியனின் நிலைக்கேற்ப அவ்வவ்விடங்களில் இரவும் பகலும் நேர அளவில் வேறுபடும்) எக்கோளத்திற் சூரியன் நிலவுகின்றதோ அக்கோளத்திற் பகற்பொழுது நீண்டும் இராப்

Page 10
எட்டாந்தரப் புவியியல்
பொழுது குறுகியும் இருக்கும். மறு கோளத்தில் இராப்பொழுது நீண்டும் பகற்பொழுது குறுகியும் இருக்கும்,
முனைவுப் பகுதிகளில் இரவு பகல் : முனைவுப் பகுதிகளில் இரவும் பகலும் எமக்கிருப்பதைப் போன்று மாறி மாறி வருவ தில்லை வடவரைக் கோளம் சூரியன் பக்கமாகச் சாய்ந்திருக் கும் ஆறு மாதங்களிலும் ( மாச்சு 21 - செப்தம்பர் 23) சூரிய ஒளி தொடர்ந்து வடமுனைவுக்கு விழுந்துகொண்டே யிருக்கும்.) இக்காலத்திற் சூரியன் தோன்றி மறையாது முனை வைச் சுற்றி வந்து கொண்டிருக்கும்: இந்த ஆறுமாத காலமும்' தென்முனைவு இருளில் இருக்கும்.
தென்னரைக் கோளத்தில் சூரியன் நிலவும் ஆறுமாத காலத் திலும் (செப் தம்பர் 23 - மாச்சு 21) தென் முனைவுப் பகுதி சூரிய ஒளியைத் தொடர்ந்து பெறக்கூடியதாக இருக்கும். இக் காலத்தில் வட முனைவு இருளிலிருக்கும். எனவே, முனைவுப் பகுதிகளில்ஆறுமாதம் பகலும் ஆறுமாதம் இருளுமாகும். இங்கு ஒரு வருடத்திற் சூரியன் ஒருமுறை மட்டுமே உதிக்கும்; ஒருமுறை மட்டுமே மறையும்.)
பொழிப்பு
மாதங்கள்
வட வரைக்கோளம் தென்னரைக் கோளம்
மே
யூன்
கோடை
மாரி (குளிர் காலம்)
பூலாய்
ஓகத்து -செப்தம்பர் ஒக்டோபர்
இலையுதிர்காலம்
இலை தளிர்காலம்
நவம்பர் திசம்பர் யனவரி
மாரி (குளிர் காலம்)
கோடை
பெப்பிரவரி மாச்சு ஏப்பிரல் 1
இலை தளிர் காலம்
இலையுதிர்காலம்
கை ,

புவியின் அசைவுகளும் பருவ வேறுபாடுகளும்
பயிற்சிகள் 1. புவி எத்தனை அசைவுகளில் ஈடுபட்டுள்ளது? அவை .
யாவை?
2, புவி தன்னில் தானே சுழல்வதனால் ஏற்படும் விளைவு யாது?
ஏற்படுத்துவதற்குரிய காரணங்கள்
பருவகாலங்கள் யாவை?
புவி சூரியனைச் சுற்றிவர எத்தனை நாட்கள் எடுக்கின்றது?
5. 'ஒழுக்கு' என்பது யாது?
6. வடவரைக் கோளத்தில் எம்மாதங்களில் கோடைகால
மாக உள்ளன?
7. தென்னரைக் கோளத்தில் குளிர்காலம் எப்போது?
8.
கடகக்கோட்டில் எந்நாளிற் சூரியன் உச்சம் கொடுக் கின்றது?
9. மகரக் கோட்டிற் சூரியன் உச்சங்கொடுக்கும் நாள் யாது?
10. 'சமவிராக்காலம்' என்பதனை விளக்குக.
இரவு பகல் நேர அளவில் வேறுபாடுகள் ஏற்படுவதற் குரிய காரணம் யாது?
1 2 .ர்
இலங்கைக்குச் சூரியன் எக்காலத்தில் உச்சங் கொடுக் கின்றது?
13.
இங்கிலாந்திலே கோடைகாலமாக இருக்கும்பொழுது அவுத்திரேலியாவிற் குளிர் காலமாக இருப்பதன் காரண மென்ன?
14.
15.
வட முனைவுப் பகுதியிற் பகல் மா தங்கள் யாவை? முனைவுப் பகுதி களில் ஆறுமாத காலம் பகலும் ஆறுமாத காலம் இரவுமாக இருப்பதற்குரிய காரணம் யாது?

Page 11
அலகு 2 அகலக் கோடுகளும்
நெடுங் கோடுகளும்
விமானப் போக்குவரத்தின் முக்கியத்துவம்: பண்டைக் காலத்தில் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு எளிதிற் செல்லமுடியாது. இதனால், பண்டைய மனிதனாற் பிற நாடுகளைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள முடியவில்லை. இக்காலத்திற் பிற நாடுகள்பற்றி எளிதாகவும் விரைவாகவும் அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் பெருகியுள்ளன. அறிவியல் வளர்ச்சி காரணமாகப் போக்குவரத்து வசதிகளுஞ் செய்தி அறிவிப்பு முறைகளும் பெரிதும் விருத்தியடைந்துள்ளன. நிலவழியாகச் செல்வதற்குப் பல்வகைப்பட்ட மோட்டார் வாகனங்களும் இறயில் வண்டிகளும் உள்ளன. நீர் வழியாகக் கப்பல் களிற் செல்லலாம். இவற்றுக்கும் மேலாக மிகவும் விரை வாகச் செல்லக்கூடிய விமானப் போக்குவரத்து இக்காலத்தில் நன்கு விருத்தியடைந்துள்ளது. ஒரு கப்பல் சாதாரணமாக மணித்தியாலத்துக்கு 12 இலிருந்து 18 மைல்வரை செல்ல வல்லது. ஆனால் விமானமோ மணித்தியாலத்துக்கு 200 இலிருந்து 250 மைல்வரை செல்லக்கூடியது .
பின்வரும் விவரத்தைப் படிக்க :
பயணம்
பருமட்டாக எடுக்கும் நேரம்
கப்பல்
விமானம்
கொழும்பு - இலண்டன்
-பம்பாய் - சிங்கப்பூர்
- சிட்னி இலண்டன் - கல்கத்தா நியூயோக்கு - புவனசு அயசு
18 நாட்கள் 18 ம. 30 நி.
2;
2 ம. 05 நி.
6 ம. 50 நி. 17
20 மணி 22
32 மணி 16
30 மணி
1 )

அகலக்கோடுகளும் நெடுங்கோடுகளும்
இவ் விவரத்திலிருந்து விமானத்தின் விரைவு புலனாகின்றது." விரைவாகச் செல்வதனால் தூர நாடுகள் மிகவும் அண்மையில் உள்ளன வென்பதோர் உணர்வு ஏற்படுவது இயல்பேயாகும். 3ஆம் படத்தை அவதானிக்க. உலகத்தின் பிரதான விமானப் பாதைகளை இப் படம் காட்டுகின்றது. விமானப்பாதைகள் விரித்துவிட்ட வலைபோல் அமைந்துள்ளன. இக் காலத்தில் உலகிலுள்ள எந்தப் பகுதிக்கும் விமான மூலம் விரைவாகச் செல்லமுடியும். கொழும்பிலிருந்து இலண்டன், நியூயோக்கு , சிங்கப்பூர், புவனசு அயசு, தொக்கியோ, சிட்னி ஆகிய 'பட்டணங்களுக்குச் செல்லும் விமானப் பாதைகளையும் இடையி
லுள்ள தங்கு நிலையங்களையும் கவனிக்க.
விமானங்களிலும் கப்பல்களிலும் பயணஞ் செய்யும் பிரயாணிகள் புவியின் மேற்பரப்பில் இடத்துக்கிடம் நேர வேறு பாடு இருப்பதைக் கவனிப்பார்கள். உதாரணமாக, கொழும்பி லிருந்து விமானத்தில் இலண்டனுக்குச் செல்ல 18 மணித்தி யாலங்கள் செல்கின்றன என்று முன்னர் கண்டோம். புதன் கிழமை காலை 6 மணிக்குக் கொழும்பிலிருந்து புறப்படும் விமானம் இலண்டனை அடையும்பொழுது இலங்கை நேரம் இரவு 12 மணி யாகும். ஆனால், இலண்டனில் நேரம் புதன்கிழமை பிற்பகல் 6.40 ஆகவேயிருக்கும். இலண்டனிலிருந்து புதன்கிழமை பிற்பகல் 6 மணிக்குப் புறப்படும் விமானம் இலண்டன் நேரப்படி இரவு 12 மணிக்குக் கொழும்பை வந்தடைகிறது. ஆனால் இலங்கை நேரம் அப்பொழுது வியாழன் அதிகாலை 5 - 20 ஆகவிருக்கும்.
உலக நாடுகளுக்கிடையில் இவ்விதம் நேரவேறுபாடு ஏற்படு வதற்குப் புவியின் சுழற்சியே காரணமாகும். புவி மேற்கி லிருந்து கிழக்கு நோக்கிச் சுற்றுவதால், கிழக்குத்திசை நாடு களில், மேற்குத்திசை
- நாடுகளைவிடமுன்னதாகவே சூரியோதயம் உண்டாகின்றது. எனவே, நேரம் இடங்களின் நிலையங்களுக்கேற்ப வேறுபடுகின்றது .
புவியின் மேற்பரப்பில் நேரங்களைத் திருத்தமாகக் கணிப்ப தற்கும், இடங்களைச் சரியாகக் கண்டுபிடிப்பதற்கும், திசை களையும், தூரங்களையும் சரியாக அறிவதற்கும், இன்னும் பல வசதிகளுக்குமென்று நிலையான் கோடுகள் கீறப்பட்டுள்ளன. இவைகள் கற்பனைக் கோடுகளே . கப்பலோட்டிகள் சமுத்திரங் களிலும் விமானமோட்டிகள் வளிமண்டலத்திலும் இக் கோடு களின் துணை கொண்டு தங்களின் நிலையைச் சரியாக அறியலாம். புவியியலில் நாடுகளின் அல்லது அரசுகளின் எல்லைகளை இக் கோடுகளால் திட்டவட்டமாக வரையறுக்கலாம். பல்வேறு வகைப்பட்ட புவியியற் படங்களைத் திருத்தமாகக் கீறவும்

Page 12
தென்னாதிக்க
இகலோ கெல்சிங்கி
* மொஸ்கோ
வான் கூ வர்
கிசான்
சர்சன் சிஸ் கொ
கோக்கோசி
நீR)-ம்
உலொஸ்
ஏஞ்சல்ஸ் !
திரிப்பொலி பக் தாது
கெகிறோம்
சங்காய் தில்லி : சங்காய்
45வரி கு
தாகர்
கல்கத்தா கொகா
காட்டூ ம்.
பம்பாம்
பாகம். சென்.."
கொழுமம்
குவிற்றே!
இலாபாசு
இார்வின்
இரையோடி
யொகனாக்பேக்கு.
பா ம க
போல
இயக
தொகையாண்ட அக்கம
படம் 3 : உலகத்தின் பிரதான விமானப் பாதைகள்,

2) )
அகலக்கோடுகளும் நெடுங்கோடுகளும்
அவைகளிற் காட்டவேண்டியவற்றைச் சரியாகக் குறித்துக் காட்டவும் இக்கோடுகளே உயிர் நாடிகளாய் விளங்குகின்றன .. இவை அகலக்கோடுகள் என்றும் நெடுங்கோடுகள் என்றும் இரு த வகைப்படும்.
அகலக்கோடுகள் : புவியின் மேற்பரப்பில் மிக இலகுவாகக் கண்டுபிடிக்கக்கூடிய சில இடங்கள் இருக்கின்றன. இவற்றுள் வடமுனைவும் தென்முனைவும் முக்கியமானவை. இவ்விரு முனைவு களுக்குமிடையே உள்ள தூரத்தை இரு சம் தூரமாகப் பிரிக்கும் வண்ணம் ஒரு கோடு கீறப்பட்டுள்ளது. இதுவே மத்தியகோடு ஆகும். இம் மத்தியகோட்டிலிருந்து வடமுனைவுவரை அல்லது தென்முனைவு வரை உள்ள தூரம் புவிச்சுற்றுத் தூரத்தின் } பகுதியாகும். அதாவது, ஒரு வட்டத்தின் 90° யாகும். எனவே, மத்தியகோட்டிலிருந்து இரு முனைவுகள் வரை பாகைக் கொன்றாகத் தொண்ணூறு தொண்ணூறு பிரிவுகள் வகுக்கப்பட் டுள்ளன. மத்திய கோட்டுக்குச் சமாந்தரமாகப் புவியைச் சுற்றி, இப் பிரிவுகளுக்கூடாகக் கீறப்பட்டுள்ள கோடுகள் அகலக் கோட்டுச் சமாந்தரங்கள் எனப்படும். ஒவ்வொரு அகலக்கோடும் முனைவை மையமாகக் கொண்டு கீறப்பட்ட வட்டமாக அமைகின்றது. பாகைக் கணக்கில் இவைகள் மத்திய கோட்டி லிருந்து வடக்காகவும், தெற்காகவும் கணக்கிடப்படுகின்றன. மத்தியகோடு 0° ஆகவும் முனைவுகள் 90° யாகவும் இருக்கின்றன. ஒவ்வொரு பாகையையும் 60 நிமிடங்களாகவும், ஒவ்வொரு நிமிடத்தையும் 60 செக்கன் களாகவும் பிரிக்கலாம்.
எனவே, மத்தய அதாவது, அரம், புவிச்சுற்றுத்"
எனவே, மத்திய கோட்டுக்கு வடக்காகவும், தெற்காக வும் இருக்கும் பாகைத் தூரமே (கோணத் தூரம்) அகலக் கோடாகும்.
மத்திய கோட்டுக்கு வடக்காகவுள்ள அகலக் கோடுகள் வட அகலக்கோடுகள் என்றும், தெற்கேயுள்ளவை தென் அகலக்கோடுகள் என்றும் பெயர் பெறும்.
அகலக் கோடுகளுள் மத்திய கோடும் கடகக் கோடும் மகரக் கோடும், மத்திய கோட்டிலிருந்து வடக்காக 66 ° யிலுள்ள ஆட்டிக்குவட்டமும், தெற்காக 66}' யிலுள்ள அந்தாட்டிக்கு வட்டமும் முக்கியமானவை.
வட்ட0 சம அம்படிகாடுகம்
நெடுங்கோடுகள் : மத்திய கோட்டு வழியாகவோ அல்லது வேறு எந்த அகலக்கோட்டு வழியாகவோ நாம் புவியைச் சுற்றி வந்தால் நாம் ஒரு முழு வட்டத்தை அல்லது 360° யைக் கடக்க லாம். இவ்வகலக் கோடுகளை 360 சம சிறு பிரிவுகளாகப் பிரித்து அப் பிரிவுகளுக்கு ஊடாகச் செல்லும்படி வடமுனைவையும், தென்முனைவையும் தொடுத்துக் கீறும் கோடுகளே நெடுங் கோடுகளாகும் . )

Page 13
எட்டாந்தரப் புவியியல்
இங்கிலாந்தில் இலண்டனுக்கு அண்மையில் இருக்கும் கிறீனிச்சு என்னுமிடத்திற் புகழ்பெற்ற வானோக்கு நிலையம் ஒன்றுள்ளது. இதனால் இவ்விடத்துக்கு ஊடாகச் செல்லும் நெடுங்கோடு கிரீனிச்சு உச்ச நெடுங்கோடு எனப்படும். இதனை 0° யாகக் கொண்டு இதற்குக் கிழக்காக 180 • வரையும் மேற்காக 180° வரையும் நெடுங்கோடுகள் கீறப்பட்டுள்ளன. எனவே பாகைக்கொன்றாக 360 கோடுகள் இருக்கின்றன. கிரீனிச்சு நெடுங்கோட்டிலிருந்து மேற்காகவோ கிழக்காகவோ 180° -நெடுங்கோட்டுக்குச் சென்றால் புவியைச் சுற்றி த் பகுதியைக் கடக்க இயலுமாதலால் 180° மே நெடுங்கோடும் 180° கி நெடுங்கோடும் ஒன்றாகவே இருக்கும்.
எனவே, நெடுங்கோடென்பது உச்ச நெடுங்கோட்டுக்குக் கிழக்காகவோ அல்லது மேற்காகவோ உள்ள பாகைத் தூர மாகும். இவ்விருவகைக் கோடுகளுக்குமிடையேயுள்ள வேறுபாடுகள் 1. அகலக்கோடுகள் கிழக்கு மேற்காகச் செல்கின்றன.
நெடுங்கோடுகள் வடக்குத் தெற்காகச் செல்கின்றன.
2, அகலக் கோடு ஒவ்வொன்
றும் ஒரு வட்டமாகவுள்ளது. நெடுங்கோடு ஒவ்வொன்றும் அரை வட்டமாக இருக்கிறது. அகலக் கோடுகள் ஒன்றிற் கொன்று சமாந்தரமாக உள் ளன. நெடுங் கோடுகள் முனைவில் சந்திக்கின்றன.
அகலக்கோடு ஒவ்வொன்றும் நீளத்தில் வேறுபடுகின்றது . மத்திய கோடே இவற்றுள் ஆகப்பெரிய கோடாகும். மற் றைய கோடுகள் முனைவுகள் நோக்கிச் செல்லச் செல்லச் சிறுத்துக்கொண்டே செல்கின் றன. நெடுங்கோடுகள் எல்லாம் கிட் டத்தட்ட ஒரேயளவுடையன.
படம் 4 : அகலக் கோடுகளும்
நெடுங் கோடுகளும்

அகலக்கோடுகளும் நெடுங்கோடுகளும்
இடங்களின் நிலையங் காணல் : இரண்டு நேர்கோடுகள். ஒன்றையொன்று ஓர் இடத்தில் தான் சந்திக்கமுடியும். இதைப் போலவே புவியின் மேற்பரப்பிலும் ஓர் அகலக்கோடும் ஒரு நெடுங்கோடும் ஓர் இடத்தில் தான் ஒன்றையொன்று வெட்டு கின்றன. புவியின் மேற்பரப்பிலுள்ள ஒவ்வொரு இடத்தின் நிலையத்துக்கும் இக் கோடுகளால் ஒவ்வொரு சந்திப்பை ஏற்ப டுத்தலாம். உதாரணமாக, கொழும்பு 7 ° வ அகலக்கோடும் 79' கி நெடுங்கோடும் சந்திக்கின்ற இடத்தில் அமைந்துள்ளது. 510 வ அகலக்கோடும் கிரீனிச்சு உச்ச நெடுங்கோடும் வெட்டு மிடத்தில் இலண்டன் இருக்கிறது. இவ்வாறு புவியின் மேற் பரப்பிலுள்ள ஒவ்வொரு இடத்துக்கும் கோட்டுக் கணக்கு உள்ளது .
தேசப்படத் தொகுதியில் உள்ள படங்கள் யாவும் அகலக்கோடுகளாலும் நெடுங்கோடுகளாலுமான எறியங் களின் துணைகொண்டே கீறப்பட்டுள்ளன; பெளதிக உறுப்புக் கள், இராச்சியப் பிரிவுகள், பட்டணங்கள், தீவுகள் முதலியன வற்றின் நிலையங்கள் யாவும் இக் கோடுகளின் துணைகொண்டு சரியாகக் குறிக்கப்பட்டுள்ளன; ஒவ்வொன்றினதும் கோட்டுக் கணக்கும் தரப்பட்டிருக்கின்றது. ஒரு குறிப்பிட்ட இடத்தை அதன் கோட்டுக்கணக்கின் உதவியோடு படத்தில் இலகுவாகக் கண்டுபிடித்துவிடலாம்.
நேரங் காணல் : புவியின் மேற்பரப்பில் ஒரு பகுதிக்கு இரு ளாக இருக்கும்பொழுது அதன் எதிர்ப்பகுதிக்குப் பகலாக இருக்கின்றது. நெடுங்கோட்டிடங்களுக்குப் பொழுது ஒரே நேரத்தில் விடிகிறது : ஒரே நேரத்திற் படுகிறது. ஏனென்றால் ஒரு நெடுங்கோட்டைச் சூரியன் ஒரே நேரத்தில் கடந்து விடு கிறது. அதனால் ஒரு நெடுங்கோட்டிலுள்ள இடங்கள் எல்லா வற்றிற்கும் நேரம் ஒன்றாகவே இருக்கும். ஆனால், கோட்டுக்குக் கோடு வேறாக இருக்கும். ஏனென்றால், புவி மேற்கில் இருந்து கிழக்காகச் சுழல்கிறது. கிழக்கிலுள்ளவர்களுக்குப் பொழுது முதலில் விடிகிறது; மேற்கிலுள்ளவர்களுக்குப் பிந்தி விடிகிறது.
- நெடுங்கோடுகளின் உதவியுடன் ஒவ்வொரு இடத்தின் நேரத்தையும் நாம் இலகுவிற் கணிக்கலாம். புவி 360°யை 24 மணித்தியாலத்தில் சுற்றுகிறது. எனவே, ஒரு பாகையைச் சுற்ற எடுக்கும் நேரம் 4 நிமிடங்களாகும். கிரீனிச்சு உச்ச நெடுங்கோட்டில் நண்பகல் 12 மணி யென்றால் 150 கி நெடுங் கோட்டிற் பி. ப. ஒரு மணியாக இருக்கும். ஆனால் 15° மே நெடுங்கோட்டில் மு.ப. 11 மணியாக இருக்கும். இவ்வாறு புவி கிழக்கு நோக்கிச் சுற்றுவதனால் கிழக்கிலே இருப்பவர்

Page 14
எட்டாந்தரப் புவியியல்
களுக்கு எத்தனை ம ணி த் தி யா ல ங் க ள் போய்விட்டனவோ அத்தனை மணித்தியாலங்கள் மேற்கிலிருப்பவர்களுக்கு இனிமேல் தான் வரவிருக்கின்றன. அதாவது கிழக்கில் ஒவ்வொரு பாகைக் கும் 4 நிமிடங்கள் கூடுகின்றன. மேற்கில் ஒவ்வொரு பாகைக்கும் 4 நிமிடங்கள் குறைகின்றன. உதாரணமாகக் கிரீனிச்சு உச்ச நெடுங்கோட்டில் பி. ப. 1 மணியென்றால் அதே நேரத்தில் அக் கோட்டுக்கு 80° கிழக்காய் இருக்கும் கொழும்பில் நேரம் மாலை 6 மணி 20 நிமிடங்களாக இருக்கும். 80° யையும் புவி சுற்ற எடுத்த நேரம் - 60
80 x 4)
* = 5 மணி 20 நிமி. இதனைக் கிரீனிச்சு நேரத்தோடு கூட்டவேண்டும். இவ்வாறே மேற்கிலுள்ள ஓர் இடத்தின் நேரத்தைக் காணவேன்டுமாயின் அது எத்தனை பாகைக்கப்பால் இருக்கிறதோ அத்தனை பாகையையும் புவி சுற்றவிருக்கும் நேரத்தைப் பி. ப. 1 மணியிலிருந்து கழிக்க வேண்டும்.
சர்வதேசத் திகதிக்கோடு : புவி உருண்டையாக இருப்பதனால் 180° கி நெடுங்கோடும் 180° மே நெடுங்கோடும் ஒரு கோடா கவே இருக்கின்றது. கிரீனிச்சு உச்ச நெடுங்கோட்டிலிருந்து ஒரு திங்கட்கிழமை காலை 8 மணிக்கு ஒருவன் மேற்காக 1809 வரை யும் இன்னொருவன் கிழக்காக 180° வரையும் செல்கின்றார்கள் என்று வைத்துக்கொள்வோம். மேற்காகச் செல்பவருக்கு நேரம் குறைந்து குறைந்து செல்கிறது. 180°யில் அவருக்கு நேரம் ஞாயிற்றுக்கிழமை மாலை 8 மணியாக இருக்கும். கிழக் காகச் செல்பவருக்கு நேரம் கூடிக்கூடிச் சென்று 180°யில் திங்கள் மாலை 8 மணியாக இருக்கும் .. சரியாக ஒரு நாள் வேறு பாடு இருப்பதைப் பார்க்கிறோம். ஆனால், நேரம் இருவருக்கும் ஒன்றே- மாலை 8 மணி. எனவே மேற்காகச் செல்பவர் 1800 யைக் கடக்கையில் நேரத்தை மாற்றாது திகதியை மட்டும் ஞாயிற்றுக்கிழமையைத் திங்கட்கிழமையாக மாற்றிக்கொள்ள வேண்டும். கிழக்காகச் செல்பவர் 180°யைக் கடக்கையில் திங்கட்கிழமையை ஞாயிற்றுக்கிழமையாக மாற்றல் வேண்டும். ஏனென்றால், அப்பாலுள்ளவர்களுக்கு திங்கட்கிழமை பிறக்க இன்னும் 24 மணி நேரம் வேண்டும். அதாவது புவி தன்னைத் தானே ஒருமுறை சுற்றி முடிக்கவேண்டும்.
ஆயின், இந்த 180° நெடுங்கோடு சில இடங்களில் தீவு களையும், நாடுகளையும் வெட்டிச் செல்கிறது. ஒரு நாட்டிலேயே நாள் வேறுபாடு இருக்கக்கூடாதென்பதற்காக அவ்வாறு வெட் டிச் செல்லும் இடங்களில் கோடு நீர் வழியாகச் செல்லவிடப்பட் டிருக்கிறது. இவ்வாறு சில இடங்களிற் திரும்பித் திரும்பிச்

அகலக்கோடுகளும் நெடுங்கோடுகளும்
15
செல்லும் இக்கோடு சர்வதேச திகதிக்கோடு எனப்படும். கப்ப லோட்டிகளும், விமானமோட்டிகளும், பிரயாணிகளும் இக் | கோடுகளைத் தாண்டுகையில் திசைக்கேற்பத் திகதியை மாற்றிக் கொள்ளவேண்டும்.
அரைக் கோளங்கள் : மத்திய கோட்டுக்கு வடக்காக உள்ள பகுதி வடவரைக்கோளம் என்றும், தெற்காகவுள்ள ப கு தி தென்னரைக்கோளம் என்றும், கிரீனிச்சு உச்ச நெடுங்கோட் டுக்குக் கிழக்காக இருக்கும் பகுதி கீழையரைக்கோளமென் றும், மேற்காக உள்ள பகுதி மேலையரைக்கோளம் என்றும்
அழைக்கப்படும்...
பயிற்சிகள் ---------
1. அகலக் கோடுகளுக்கும் நெடுங் கோடுகளுக்கு மிடையே
யுள்ள வேறுபாடுகள் நான்கு கூறுக. 2. அகல நெடுங்கோடுகளின் பயன்கள் மூன்று கூறுக. 3. பின்வரும் பட்டணங்கள் எந்நெடுங்கோடுகளுக்கிடையில்
அமைந்துள்ளன?
(அ) கொழும்பு
(ஈ) கன்பரா (ஆ) கல்கத்தா
(உ) உலொசேஞ்சல்சு (இ) இலண்டன்
(ஊ) மொஸ்கோ 4. கொழும்பில் (80° கி) புதன் மாலை 5 மணியாக இருக்கும்
பொழுது இலண்டனில் என்ன நேரமாக இருக்கும்? 5. சர்வதேசத் திகதிக்கோடு பற்றி ஐந்து வசனங்கள் எழுதுக .

Page 15
அலகு 3 இலங்கைப் புவியியல் இலங்கையின் நிலையமும் பருமனும்
நிலையம்: மத்திய கோட்டுக்கு வடக்காக உள்ள புவியின் பகுதி முழுவதும் வடவரைக் கோளம் என்றும், தெற்காக உள்ள பகுதி முழுவதும் தென்னரைக் கோளம் என்றும் அழைக்கப் படும் என்பது எமக்குத் தெரியும். இவற்றுள் எந்த அரைக் கோளத்தில் இலங்கை அமைந்துள்ளது ? அது மத்திய கோட் டுக்குக் கிட்டவாக உள்ளதா, அன்றித் தொலைவில் உள்ளதா என்பதனையும் படத்திலிருந்து (படம் 5] கண்டறிக.
:
இரோப்பா
ஆசியா
சீனா
உ இந்தியா, அராபியா) .
'அராபியச்'
கடல்)
(வங்காளக் !
குடா
ஆபிரிக்கா
மத்திய கோடு
இலங்கை
சுமாத்திரா | இந்து சமுத்திரம் யாவா -
2ாவா
அவுத்தி.
படம் 5: இலங்கையும் அதனைச் சூழவுள்ள
நீர், நிலப் பரப்புகளும்

இலங்கைப் புவியியல்
இலங்கை இந்தியாவுக்கு மிகவும் அண்மையில் அமைந்துள் ளது. இலங்கைக்கும் இந்தியாவுக்கு மிடையேயுள்ள ஆகக் குறைந்த தூரம் 18 மைல்களாகும். இந்த இரு நாடுகளையும் பிரிக்கும் நீர்ப்பரப்புக்குப் பாக்குத் தொடுகடல் என்று பெயர். இலங்கைக்குக் கிழக்கில் வங்காளக் குடாவும் மற்றைய பகுதி களில் இந்து சமுத்திரமும் உள்ளன.
இந்து சமுத்திரத்தில் 4 இலங்கை அமைந்துள்ள நிலையம் மிகவும் முக்கியமானது. படத்தில் இலங்கையையும் அதனைச் சூழவுள்ள கண்டங்களையும் அவதானிக்க . இக் கண்டங்களுக் கிடையேயுள்ள போக்குவரத்துத் தொடர்புகளுக்கு வாய்ப்பாக வுள்ள ஒரு மைய நிலையத்தில் இலங்கை உள்ளது.
பருப்பம் : இலங்கை, தென்பகுதி அகன்றும் வடபகுதி ஒடுங்கியுமுள்ள ஒரு சிறிய தீவாகும். வடக்குத் தெற்காக இதன் ஆகக்கூடிய நீளம் 270 மைல். கிழக்கு மேற்காக இது 140 மைல் அகலமுடை யது. இதன் பரப்பு , 25332 சதுர மைல்களா கும், மன்னார்த் தீவும் யாழ்ப்பாணக் குடா நாடும் அதற்கு மேற் காகவுள்ள காரைநகர் வேலணை, மண்டைதீவு, புங்குடுதீவு, நெடுந்தீவு, எழுவை தீவு, அனலை தீவு, நயினாதீவு முதலிய சிறு தீவுகளுந் தவிர்ந்த ஏ னை ய இ ல ங்  ைக தொடர்ச்சியான ஒரே பரப்பாக உள்ளது .
கங்த்ை
மாலி
இலங்கையின் புவியியல் தன்மைகள்
தரைத்தோற்றப் பிரிவு கள் : இல ங்  ைக யி ன் தரைத் தோற்றத்தை வண்ணப்படம் 7 காட் டுகின்றது. நிறங்களுக் குத் த ர ப்ப ட் டு ள் ள விளக்கத்தைக்கொண்டு
புவி. VIII - 2
படம் 6: இலங்கையின் தரைத்
தோற்றப் பிரிவுகள்.

Page 16
எட்டாந்தரப் புவியியல்
படத்தில் 1000 அடிக்கு மேற்பட்ட பகுதியையும் அதற்குக் கீழ் உள்ள பகுதிகளையும் அவதானிக்க. 1000 அடிக்கு மேல் உயர்ந் துள்ள பகுதி இலங்கையின் மத்தியில் உள்ளது. இப் பகுதியே மலை நாடு எனப்படும். மலை நாட்டிலிருந்து நிலம் படிப்படியாகக் குறைந்து நாற்புறமுஞ் சமதரையாக வியாபித்துள்ளது .
இலங்கையின் தரைத் தோற்றத்தைப் பின்வரும் பகுதி க ளாகப் பிரிக்கலாம்:
(அ) தென்மேற்குச் சமவெளி (3) (ஆ) தென்கிழக்குச் சமவெளி (4) (இ) வடக்குச் சமவெளி (2)
(ஈ) மத்திய மலை நாடு (1) தென்மேற்குச் சமவெளி
இலங்கையின் தென்மேற்குச் சமவெளியின் வட எல்லையாகத் தெதுறு ஓயாவையும் தென் எல்லையாக. வளவை கங்கை யையும் கிழக்கு எல்லையாக 1000! சமவுயரக் கோட்டையும் கொள்ளலாம். மேற்கில் கடல் உள்ளது.
தரைத்தோற்றம் : கடற்கரையோரம் 100 அடிக்கு உட்பட்ட உயரமுடையது. இத்தகைய கடற்கரையோரப்பகுதி தெற்கில் ஏறத்தாழ இரண்டு மைல் அளவில் ஒடுங்கியும் வடக்கில் 20 மைல் களுக்கு அகன்றும் உள்ளது. இந்தத் தாழ்வான வலயத்திலிருந்து நிலம் படிப்படியாகக் கிழக்குத் திசையிலுள்ள மலை நாடு நோக்கி உயர்கின்றது. தென்கிழக்கில் இறக்குவானைக் குன்றுகள் உள் ளன. வடக்குத் தெற்காகவும், தென்கிழக்காகவும் அமைந் துள்ள சமாந்தரக் குன்றுகள் தென்மேற்குச் சமவெளிக்கே உரிய நிலவுறுப்பாக உள்ளன.
நிலத்தின் சரிவுக்கேற்ப ஆறுகள் பாய்கின்றன. தெதுறு ஓயா, மகா ஓயா, களனி கங்கை, காலு கங்கை, வெந்தோட் டைக் கங்கை என்பன மேற்காகப் பாய்ந்து கடலையடைகின்றன. சின் கங்கையும் நில்வள கங்கையும் தென்மேற்காகப் பாய் கின்றன. ஆறுகள் , அவற்றின் கீழ்ப்போக்குகளிற் பரந்த வெள்ளச் சமவெளி களைத் தோற்றுவித்துள்ளன.
கடற்கரையோரமாக மாத்தறையிலிருந்து சிலாபம் வரை ஒடுங்கிய மண ற்பகுதி ஒன்று உள்ளது. ஆயினும் கொழும்புக்கு வடக்கிலிருந்து இது குருநாகல் வரை அகன்றுள்ளது. ஆற்றுப் பள்ளத்தாக்கும், பக்கநிலங்களும், மலைகளுக்கு இடைப்பட்ட வடி நிலங்களும் மலை களிலிருந்து கழுவிக்கொண்டுவரப்பட்ட வண்டல்

தொண்டைமானாறு
பாக்குத்
தொடுகடல்
வங்காளக்
யாழ்ப்பா ண க்.
குடா
கடன் ரேரி
பாக்குக்
இணை முடுக்
குபதி நந்திக்கடல்
குடா |
பற
காதரியான
நாயாற்றுக் கன்னரேரி
உகொக்கிளாய்
கடன் ரேரி
கட்ரு சகாரக் 2
குளம் அருவி
இக
மன்னார் விரிகுடா
தை
டு?
போத்துக்கல்
குடா
தம்பலகா டிம் - கொட்டியார்
1ல்சர், டிம்
1 குடா ..
குடா
கந்தளாய்க் அகல்லைக் (
எநவுரவிவர் டிம்.
தளம்
இடச்சுக் குடா
=நாச்சவைக் .
குளம்
உப்பு
மின்னேரியா க்
'கடன்
புத்தள 8 | கடனீரேரி 3
காலவவா குளம் ஒA
எலவீவா :-
ஓயா / பராக்கிரம
சமுத்தி
முந்தல் ஏரி
த று ஒயர்
மதசி
மறதியும் - கண்டி /.:: :, இது
மேட்டு
நீர்கொழும்புக் கடனீரேரி
களனி
=மேட் பேங்க வைபர்
லகாலை புகுன்றுகர நெலிக்குனகுலக நீதி மன்EE679 AE மேட்டுநிலம் 2 காலப்போக்கை
திருண்டி
இறக்குவானைக்
குன்றுகள்
பாட்
[ படம் 71
80 [அளவுத் திட்டம் : 1'=37 மைல்) 81

Page 17
தொண்டைமானாறு
வங்காளக்
பாக்குத்
தொடுகடல்
-யாழ்ப்பாணக்
குடா
கடனரேரி
பாக்குக்
கும்பம்
ணை முடுக்
நந்திக்கடல்
குடா
கனகராயன்கு.
நாயாற்றுக் கடன் ரேரி
கொக்கிளாய் கடன் ரேரி
கட்டு கரைக்க ( அருவி
குளம்
மன்னார்
இலா தரை;
விரிகுடா
தலசர் மம்
போத்துக்கல்
கொட்டியாரக்
குடா
குடா
ஒர
துரவீவர் கந்தளாய்க் அல்லைக் குள
EEETகுளம் இடச்சுக் குடா 61
நாச்ச=ை=
குளம்
உப்பார் மின் னே ரியாக் புத்தளம்
"கடனீரே கடனீரேரி
வீவா: ஒயா /
பராக்கிரம்
சமுத்திர் முந்தல் ஏரி
"தாறு ஒயா ”
மதுறு ஓயாம்
கண்டி மேட்டு நிலம்
சமுத்திரம்
நீர்கொழும்புக் கடனீரேரி
லுணுக இதில்காலை குன்றுக5ே) 28 வலிந்தனகுலகந்
மணEE679 A - மேட்டுநிலம் : கால் பொத்து
லி:கும்புக்கம்
கிருண்
5 மாணிக்கம்
- நக்குவான். உன் குன்றுகள்
வி.
வைகிங்கை
யா)
(படம் 7]
80 (அளவுத் திட்டம் : 1''=37 மைல்] 81

நிலம் : 5000'க்கு மேல்
1000' --- 5000' 1000' - 3000' 500 - 1000 100' - 100' 100' க்குக் கீழ்
கடல் !
01 - 100' 100 க்கு 4 கீ ழ்
ங்கையின் த் தோற்றம்
ம்
றுெக்
குடா
மட்டக்களப்புக்
கடனி (ரரி பிச்சைக்
கூயா
அயோri அறுகம், த. !
82

Page 18
ਕge

500' சமவுயரக்கோடு ---- 1000' சமவுயரக்கோடு
க .
குருநாகல்
பொல்காவ
மகாஓயா,
கொழும்புகள்
இரத்தினபுரி
ன க க ம்.
வேந்தோட்டை
அருன் * ஓயா
அம்பாந்தோட்டை
கீங்க.
படம் 7: தென்மேற்குச் சமவெளியின் தரைத்தோற்றம்

Page 19
எட்டாந்தரப் புவியியல்
மண் படிவுகளைக் கொண்டுள்ளன. தென்மேற்குச் சமவெளியின் குன்றுகளிலும், 100 அடிக்குக் கூடிய மேல் நிலங்களிலும் செம் மண் காணப்படுகின்றது. இவ்வாறு மூன்று முக்கியமான மண் வகைகள் இப்பகுதியில் உள்ளன. மணற்பகுதியிலே தென்னை யும் வண்டல் மண்ணில் நெல்லும் செம்மண்ணில் இறப்பரும் செழித்து வளருகின்றன.
காலநிலை : காலநிலை அடிப்படையில் இலங்கையின் தென் மேற்குச் சமவெளி ஈரவலயத் தாழ்நிலம் எனப்படும்.
ஈரவலயத் தாழ்நிலம் என்ற அளவிலேயே இப்பகுதிக் கால நிலையின் தன்மைகள் புலனாகவேண்டும்: பொதுவாக, ஈரவலயத் தாழ்நிலம் வெப்பமும் ஈரமும் மிக்கது. வெப்பம் ஆண்டு முழு வதும் 80°ப ஆகவுள்ளது. கோடைக்காலம் என்று ஒன்று இல்லை. ஆண்டு முழுவதும் மேற்காவுகை முறையாலும் மலை யியன் முறையாலும் அதிகமழை பெய்கின்றது; எவ்வளவு என்பதனை வருடமழை வீழ்ச்சிப் படம் 9 காட்டுகின்றது. ஆயினும் மற்றைய மாதங்களிலும் பார்க்க மாசியிலும் ஐப்பசி யிலும் மழை குறைவு. வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி மாதங்கள் ஆகக்கூடிய மழையைப் பெறும் காலங்களாகும். இதற்குரிய காரணங்கள் யாவை?
இயற்கைத் தாவரம் : தென்மேற்குச் சமவெளியின் இயற்கைத் தாவரம் ஈரவலயக்காடுகள் எனப்படும். மழை அதிகமாக இருப்ப தால் காடுகள் செழித்தோங்கி வளர்கின்றன. பலா, ஈரப்பலா, உலுனுமிதிலை முதலான வைர மரங்கள் இக்காடுகளிற் காணப் படுகின்றன. இக் காடுகள் முற்காலத்திலிருந்தே மனித முயற்சி களுக்காகப் படிப்படியாக அழிக்கப்பட்டு வந்திருக்கின்றன.
ஈரவலயத் தாழ்நிலம் நில்வளமும் நீர்வளமும் மிக்கது. இலங்கையின் ஏனைய பகுதிகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் இத் தாழ்நிலத்துக்கு இயற்கையாயமைந்துள்ள வாய்ப்புகளும் வசதிகளும் பன்மடங்காகவுள்ளன. இவற்றாலேயே, இலங்கை யின் பொருளாதார முயற்சிகளில் இப்பகுதி முக்கியமான ஓர் இடத்தை வகிக்கக்கூடியதாக இருக்கின்றது. தென்கிழக்குச் சமவெளி
தரைத்தோற்றம்; தென்கிழக்குச் சமவெளியின் எல்லைகளைப் படத்திற் கண்டறிக. இச் சமவெளியின் மலையடிவாரப் பகுதி கள் உயரமாகவும் ஏனைய பகுதிகள் 500 அடிக்குக் கீழ்ப்பட்ட தாழ்நிலமாகவும் உள்ளன. வடக்கில் அகன்றும் தெற்கில் ஒடுங்கியுமுள்ள இச் சமவெளியை - வடபகுதி, தென்பகுதி, மத்தியபகுதியென மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

210
இலங்கையின் வருட மழைவீழ்ச்சி
பானம்
25.50 அங். 50.75 அங். 75.100 அங் 100அங்குல துக்கு மேல், பண்
மன்னார்
வவுனியா.
திருகோணமலை
அகர மதம்
1 ககாபால்
சிலாபம்
கொழும்பு
களுத்துறை
தாலி
அம்பாந்தோட்டை. க தங்காலை மாத்தறை
படம் 9 : இலங்கையின் வருட மழைவீழ்ச்சி

Page 20
எட்டாந்தரப் புவியியல்
வடபகுதி மகாவலி கங்கை, மதுறு ஓயா என்பனவற்றின் வடிநிலங்களைக் கொண்டுள்ளது. மின்னேரியா, பராக்கிரம் சமுத்திரம் ஆகிய பண்டைய பெருங் குளங்கள் இப் பகுதியில் உள்ளன.
மத்தியபகுதி மிகவும் ஒடுக்கமானது. இது தெற்கில் கெட ஓயா வரை பரந்துள்ளது. இதன் படி, மத்தியிற் கல்லோயா பாய்கின்றது. கல் ஓயாவை மறித்துக் கட்டப்பட் டுள் ள நீர்த்தேக்கத்திற்குச் செனனாயக்கா சமுத்திரம் என்று பெயர். இப் பகுதியிற் பல பாறைக் குன்றுகள் உள்ளன.
தென்பகுதியில் வளவை கங்கை, கிருண்டி ஓயா, மாணிக்க கங்கை, கும்புக்கன் ஓயா, வில்ஓயா ஆகியன பாய்கின்றன. வளவை, கிருண்டி ஆகிய ஆறுகள் பாயும் சமவெளிப்பகுதி ஏனைய பகுதிகளிலும் பெரிதாக உள்ளது. இப் பகுதியிலும் பல ஏரிகளுங் குன்றுகளுங் காணப்படுகின்றன. கதிர்காமக் குன்று மாணிக்க கங்கைக்கு அண்மையிலே தெற்கில் உள்ளது.
தென்கிழக்குச் சமவெளியிற் பாயும் ஆறுகளின் கீழ்ப்போக்கு களில் வளமான வண்டல் மண்ணைக் கொண்ட வெள்ளச் சம வெளிகள் உள்ளன. இவை நெல் வேளாண்மைக்குச் சிறந்தவை.
தென்கிழக்குச் சமவெளியின் கடற்கரைப் பகுதியைப் படத்தில் அவதானிக்கவும். இப் பகுதியிற் கடலுடன் தொடர் புடைய பல ஏரிகள் காணப்படுகின்றன. இத்தகைய ஏரிகள் கடல்நீரேரிகள் எனப்படும். தென்கிழக்குச் சமவெளியின் கடல் நீரேரிகளுள் மட்டக்களப்புக் கடல்நீரேரி மிகவும் பெரியது. இலங்கையின் பிறபகுதிகளிற் காணப்படும் கடல் நீரேரிகளின் பெயர்களைப் படத்திலிருந்து தெரிந்து கொள்க.
காலநிலையும் இயற்கைத் தாவரமும்: (இவை 23 ஆம் பக்கத் தில் விளக்கப்பட்டுள்ளன). வடக்குச் சமவெளி
தரைத்தோற்றம் : இலங்கையின் தரைத்தோற்றப் படத் திலே தெதுறு ஓயா, மாத்தளை மலையடிவாரம், மகாவலி ஆகியனவற்றை அவதானிக்க. இவற்றுக்கு வடக்காக யாழ்ப் பாணக் குடா நாடுவரை வியாபித்துள்ள பகுதியே வடக்குச் சமவெளியாகும். இதற்குக் கிழக்கிலும் மேற்கிலும் உள்ள நீர்ப்பரப்புக்களின் பெயர் களை அறிந்து கொள்க. வடக்குச் சம வெளி மற்றைய சமவெளிகளிலும் பார்க்க மிகவும் பெரியது. முக்கோண வடிவமுள்ள இச் சமவெளியின் மாத்தளை மலையடி

இலங்கைப் புவியியல்
வாரப் பகுதியைத் தவிர்ந்த ஏனைய பகுதிகள் 500 அடிக்குக் குறைவானவை. தெற்கில் உயர்ந்துள்ள இச்சமவெளி மேற்கு, வடக்கு, கிழக்குத் திசைகளை நோக்கிச் சரிந்துள்ளது. இச் சரி வின் இயல்பை வடக்குச் சமவெளியிற் பாயும் ஆறுகளே நன்கு எடுத்துக்காட்டுகின்றன. அவை மீ ஓயா , கால ஓயா, அருவி ஆறு (மல்வத்தை ஓயா), பறங்கி ஆறு, கனகராயன் ஆறு. மர் ஓயா, யான் ஓயா ஆகியனவாகும். தென்மேற்கில் தெதுறு ஓயாவும் தென்கிழக்கில் மகாவலியும் வடக்குச் சமவெளியின் தென் எல்லையாக அமைகின்றன. இவை எவ்வெக் கடற்பரப் புக்களிற் போய்விழுகின்றன என்பதையும் வடக்குச் சமவெளி யின் பிரதான குளங்களின் பெயர்களையும் படத்திலிருந்து
அறிந்துகொள்க. (வண்ணப் படம் 7.)
வடக்குச் சமவெளியின் வடகிழக்குப் பகுதியில், மாத்தளை மலையடிவாரத்துக்கும் திருகோணமலைக்கும் இடைப்பட்ட பகுதி யைக் கவனிக்க." மாத்தளை மலையடிவாரத்திலிருந்து திருகோண மலையின் வடபகுதிவரை செல்லும் பாறைத் தொடர்கள் இப் பகுதியின் முக்கியமான தரைத்தோற்ற உறுப்பாக அமைகின் றன. மாத்தளை மலை களுக்குக் கிழக்கிலும் இத்தகைய பாறைத் தொடர்கள் இருப்பதைக் காணலாம்.
வடக்குச் சமவெளியின் பெரும்பகுதி கொண்டோலைற்று என் னும் பாறையைக் கொண்டுள்ளது. புத்தளத்திலிருந்து முல்லைத் தீவு, ஆனையிறவு வரையுள்ள கடற்கரைப் பகுதியும் யாழ்ப் பாணக்குடா நாடும் சுண்ணாம்புக் கற்பாறையாலானவை. யாழ்ப்பாணக் குடாநாட்டிற் பல இடங்களிற் சுண்ணாம்புக் கற்பாறைகள் வெளியரும்பியுள்ளன. சுண்ணாம்புக் கற்பாறைகள், தரையின் கீழ் நீரைத் தேக்கி வைக்கும் இயல்பு வாய்ந்தவை:
கடற்கரையோரப் பகுதிகளில் ஏறத்தாழ இரண்டு அல்லது மூன்று மைல் களுக்கு மணற்றன்மை வாய்ந்த வளமற்ற மண் காணப்படுகின்றது. பிற உள்ளூர்ப் பகுதிகளில் மண் மென்மை யாகவும் ஈரக்கழியாகவும் சுண்ணாம்புச்சத்து நிறைந்ததாகவும் உள்ளது .
காலநிலை : வடக்குச் சமவெளியும் தென்கிழக்குச் சமவெளி யுஞ் சேர்ந்த பிரதேசம் முழுவதும் உலர்வலயத் தாழ்நிலம் எனப்படும். ஆயினும் மன்னார், அம்பாந்தோட்டைப் பகுதி களில் வறட்சி அதிகமாதலால் அவை அதியுலர்வலயப் பிரிவில் அடங்கும். உலர்வலயத் தாழ்நிலமும் அதி உலர்வலயமும் இலங்கையின் மொத்தப் பரப்பில் ஏறத்தாழ * பங்கை அடக்கி யுள்ளன ..

Page 21
எட்டாந்தரப் புவியியல்
உலர்வலயத் தாழ்நிலத்திற் சராசரி வெப்பநிலை 81°ப ஆகவுள்ளது. வெப்பம் கார்த்திகை - மாசிக் காலத்திற் குறை வாகவும் வைகாசி -- புரட்டாதிக் காலத்தில் அதிகமாகவும் காணப்படுகின்றது. இதற்குரிய காரணங்கள் யாவை?
கார்த்திகை - மாசிக் காலம் வடகீழ்ப் பருவக் காற்றுக் காலமாகும். இக்காலம் உலர்வலயத் தாழ்நிலத்தின் மழைப் பருவமாகும். ஆயினும், ஈரவலயத் தாழ்நிலத்துக்குத் தென் மேற் பருவக் காற்றாற் கிடைப்பது போன்று உலர்வலயத் தாழ் நிலத்துக்கு வடகீழ்ப் பருவக்காற்றால் அதிக மழை கிடைப்ப தில்லை. தென்மேற் பருவக்காற்று இந்து சமுத்திரத்திலிருந்து அதிக நீரணுக்களுடன் வருகின்றது. வடகீழ்ப் பருவக்காற்று ஆசியாக் கண்டத்திலிருந்து வருவதனாற் குறைந்த நீரணுக் களையே கொண்டு வருகின்றது. மேலும், கூடிய நீரணுக்களுடன் வரும் தென்மேற் பருவக்காற்று குறைந்த நிலப்பரப்புக்கே மழையைக் கொடுக்கின்றது. ஆயின், குறைந்த நீரணுக்க ளுடன் வரும் வடகீழ்ப் பருவக்காற்று கூடிய நிலப்பரப்புக்கு மழையைக் கொடுக்கவேண்டியுள்ளது. இத்தகைய காரணங்க ளினால் உலர்வலயத் தாழ்நிலம் 50/-75/ மழைவீழ்ச்சியையே வருடத்திற் பெறுகின்றது. மன்னார், அம்பாந்தோட்டைப் பகுதிகளுக்கு 25ா.- 50/ மழை வீழ்ச்சியே கிடைக்கின்றது. பருவமழைக் காலத்திற் சூறாவளிக் காற்றுடன் கூடிய மழையும் சில காலம் பெய்கின்றது. அக்காலத்தில் மழை வழமையிலும் பார்க்க அதிகமாக விருக்கும். சில சமயங்களில் வெள்ளத்தினால் குடிகளும் பயிர்ச் செய்கையும் சேதமடையும். பங்குனி - சித்திரையிலும் ஐப்பசியிலும் மேற்காவுகை மழையும் பெய்வ துண்டு. வைகாசி - புரட்டாதி இப் பிரதேசத்தின் வறட்சிப் பருவமாகும். இப் பருவத்தில் ஈரவலயத்துக்கு அதிக மழை யைக் கொடுத்துவிட்டுத் தென்மேற் பருவக்காற்று மத்திய மலைகளைக் கடந்து, உலர் காற்றாக இப்பகுதியில் வீசுகின்றது. இக் காற்றுச் சோழகம் எனப்படும். சோழகம் 'பிறந்து' விட்ட தென்றால் வறட்சிப்பருவம் தொடங்கிவிட்டதென்று பொருள். இந்த உலர்ந்த காற்றுத் த ா வ ர ங் க ளி ன து பசுமையை உறிஞ்சும் ; குளங்கள், கிணறுகள், சிறிய ஆறுகள் போன்ற வற்றை வற்றச் செய்யும்; வானத்திற் காணக்கூடிய இரண் டொரு முகிற்கூட்டங்களையுங் கொண்டு செல்லும்.
இயற்கைத் தாவரம் : மன்னார், அம்பாந்தோட்டை ஆகிய அதியுலர்ந்த பகுதி களில் முட்பற்றைக் காடுகள் காணப்படுகின்றன. 50/' த்துக்குக் குறைவான மழை வீழ்ச்சியும் அதிக வெப்பமும், (82°ப) மணற்றன்மை வாய்ந்த நிலமும் இத்தகைய தாவர வளர்ச்சிக்குக் காரணமாகவுள்ளன . வறட்சியைத் தாங்கவல்ல

இலங்கைப் புவியியல்
கள்ளி இனங்களும் முட்செடிகளும் பற்றைகளும் இப் பகுதியிற் பெரிதும் உள்ளன. இவற்றுக்கிடையில் ஆங்காங்கு தடித்த பட்டைகளையுடைய விடத்தல், விளாத்தி, குட்டையான பாலை, நாவல் போன்றவையுங் காணப்படுகின்றன.
உலர்வலயத் தாழ்நிலத்திற் சராசரி 50ா - 75! மழை வீழ்ச்சியுண்டு. - இது பெரு மரங்களின் வளர்ச்சிக்குப் போது மானது. இப் பிரதேசம் இலங்கையின் முக்கியமான பெருங் காட்டு நிலங்களைக் கொண்டுள்ளது. பு, இவை வெப்பவலயக் காடுகள் அல்லது அயனமண்டலக் காடுகள் எனப்படும். உலர்வலயத் தாழ்நிலத்தில் மழைப்பருவம் வெப்பப் பருவமென இரு பரு வங்கள் உள்ளன. மழைப்பருவம் மரங்களின் வளர்ச்சிக்கும் வெப்பப் பருவம் அவற்றின் உறுதிக்கும் உகந்தனவாயுள்ளன. பாலை, முதிரை, கருங்காலி, வேம்பு, யாவறணை போன்ற பல வைர மரங்கள் இக்காடுகளில் உள்ளன. இவை வீடுகட்டவுந் தள பாடங்கள் செய்யவும் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. ஏனைய மரங்கள் நாட்டின் விறகுத் தேவையை நிறைவேற்று கின்றன. இத்தகைய காடுகள் மாங்குளம், வவுனியா, மதவாச்சி, அனுராதபுரம், த ம் புள் ளை, கெக்கிராவை, பொல்லனறுவை, திருகோணமலை, மட்டக்களப்புப் பகுதி களில் அதிகம் உள்ளன. " காடுகள் தொன்றுதொட்டே பயன் படுத்தப்பட்டு வருகின்றமையினாலும் சேனை வேளாண்மைக்காக அழிக்கப்படுவதனாலும் இக்காலத்திற் குறைந்துவருகின்றன. இதனால், மக்களுக்குப் பயன் தரும் மரங்களை அரசாங்கம் இப் பொழுது பல இடங்களில் நடுவித்து வருகின்றது. பயனில் லாத காட்டு நிலங்களை அழித்து அவற்றிற் பயன் தரக்கூடிய மரங்களை உண்டுபண்ணும் வேலைவனமாக்கல் எனப்படும். மாங்குளம், மதவாச்சி, மிகிந்தலை, புத்தளம், திருகோணமலை, மட்டக்களப்புப் பகுதிகளிலே தேக்கு மரங்களை அரசாங்கம் நடுவித்து வருகின்றது. மத்திய மலைநாடு
இலங்கையின் மத்திய பகுதியில் 1000 அடிக்கு மேல் உயர்ந் துள்ள மலை நாட்டின் தரைத்தோற்ற உறுப்புக்களைப் படதிற் கவனிக்க. 5000 அடியிலிருந்து 7000 அடிவரையுள்ள உயர் தொடர்களும், அத் தொடர் களிலிருந்து மேலும் உயர்ந்துள்ள உச்சிகளும் மேட்டு நிலங்களும், இப்பகுதியிலிருந்து ஊற்றெடுத்து நாற்றிசைகளிலும் பாயும் பல ஆறுகளும் மலை நாட்டின் பிரதான தரைத்தோற்ற உறுப்புக்களாக உள்ளன.
பாத காட்டு இடங்களில் நம் மரங்களை
தெற்கில் சிவனொளிபாதத்திலிருந்து கிழக்கு நோக்கி நமுன குலகந்தைவரை ஒரு தொடர் செல்கின்றது. இத்தொடரின்

Page 22
2)
எட்டாந்தரப் புவியியல்
நடுவிலே கோட்டன் சமவெளி உள்ளது. இச் சமவெளிக்கு மேற்கே உள்ள தொடரைப்போன்று கிழக்குத் தொடர் தொடர்ச்சியாக இல்லை. - இது பல # மலை இடைவெளிகளால் முறிவு பெற்றுள்ளது. இவற்றுள் எல்லா , அப்புத்தளை இடை வெளிகள் முக்கியமானவை.
கோட்டன் சமவெளியிலிருந்து வடக்கு நோக்கி நக்கிள்சு மலைகள் வரை வேறொரு தொடர் செல்கின்றது. இடையில் மகாவலி கங்கைப் பள்ளத்தாக்கினால் இத்தொடர் முறிவுபெற் றுள்ளது. மகாவலி கங்கைப் பள்ளத்தாக்குக்குத் தெற்கில் இலங்கையின் அதியுயர்ந்த மலையாகிய பீதுறுதாலகாலை உள் ளது. இது 8282 அடி உயரமுடையது.
கோட்டன் சமவெளி-பீ துறு தாலகாலை வரையுள்ள தொட ருக்கு மேற்கிலும் கிழக்கிலும் மேட்டு நிலங்கள் இருப்பதைப் படத்தில் அவதானிக்கலாம். மேற்கில் உள்ள அட்டன் மேட்டு நிலம் 3000 அடிக்கும் 5000 அடிக்கும் இடையில் வேறுபடும் உயரமுடையது.'; வடமேற்காகச் சரிந்து செல்லும் இம்மேட்டு நிலத்தில் மகாவலி கங்கையின் தலையருவிகள் பாய்கின்றன . கிழக்கில் உள்ளது வெளிமடை மேட்டுநிலமாகும். இதில் பதுலு ஓயா, உமா ஓயா, உலொக்கலை ஓயா ஆகிய அருவி கள் தெற் கில் ஊற்றெடுத்து வடக்காகப் பாய்ந்து மகாவலியுடன் கலக் கின்றன. அட்டன் மேட்டுநிலத்துக்கும் வெளிமடை மேட்டு நிலத்துக்கும் வடக்கில் கண்டி மேட்டுநிலம் உள்ளது. இது 1000-3000 அடி உயரமுடையது. மகாவலி கங்கை இம் மேட்டு நிலத்தை வளப்படுத்துகின்றது. மகாவலி கங்கை இலங்கையின் மிகப்பெரிய ஆறு ஆகும் . இது 208 மைல் நீளமுடையது. உலகத்தின் ஆகப்பெரிய ஆறான நைலின் நீளம் 4000 மைல் களுக்கு மேற்பட்டது. இதனுடன் எமது மகாவலியை ஒப்பு நோக்கும்பொழுது அது எவ் வ ள வு க் கு ச் சிறியதென்பது புலனாகும்.
மலை நாட்டின் தென்பகுதியிலிருந்து வளவை கங்கை, கிருண்டி ஓயா, கும்புக்கன் ஓயா ஆகியன ஊற்றெடுக்கின்றன . மேற்கிற் கா லு கங்கை, வளவை கங்கை முதலிய ஆறுகள் பாய்கின்றன . -
மத்திய மலை நாட்டுக்குத் தென்மேற்கில் இறக்குவானைக் குன்றுகள் காணப்படுகின்றன. மத்திய மலைத் திரளிலிருந்து இக் குன்றுகளைக் காலுகங்கை பிரிக்கின்றது . இறக்குவானைக் குன்று களுக்குக் கிழக்குப் பகுதியிலே புளுத்தோட்டை மேட்டு நிலம் உள்ள து. - இது ஏறத்தாழ 3000' உயரமுடையது. ..

இலங்கைப் புவியியல்
படம் 10: கடல் மட்டத்திலிருத்து 3150' உயரத்திலுள்ள
இறம்பொடை நீர்வீழ்ச்சி.
மலை நாட்டிற் பல நீர்வீழ்ச்சிகள் உள்ளன. நீர்வீழ்ச்சிகள் எவ்வாறு தோன்றுகின்றன? உயர்ந்த ஒரு மேட்டுநிலத்திலிருந்து தாழ்வான மேட்டு நிலத்துக்கு ஆறு திடீரென்று விழும் இடங்க ளில் வீழ்ச்சிகள் தோன்றுகின்றன. மலை நாட்டில் வெவ்வேறான உயரங்களில் மேட்டுநிலங்கள் உள்ளன. இவற்றுக்கூடாகப் பாயும் ஆறுகள் அழகான பல வீழ்ச்சிகளைக் கொண்டுள்ளன. களனி கங்கையின் தலையருவிகளில் இலக்சபானா - வீழ்ச்சியும் அபடீன் வீழ்ச்சியும் உள்ளன. தேவன் வீழ்ச்சி மகாவலியின் தலையருவியில் உள்ளது. மகா வலியின் கிளையாறுகளுள் ஒன்றா கிய பதுலு ஓயாவில் துன்கிந்தை வீழ்ச்சியும் கிருண்டி ஓயாவின் தலையருவியில் தியலும் வீழ்ச்சியும் உள்ளன.
காலநிலை : உயரம் நோக்கி ஒரு குறிப்பிட்ட எல்லைவரை வெப்பம் குறைகின்றது. ஒவ்வொரு 300! உயரத்துக்கும் 1°ப வெப்பம் வீழ்ச்சியடைவதனால் மலை நாட்டில் இயல்பாகவே வெப் பம் குறைவாக இருக்கின்றது. ஆயினும் உயரத்தைப்பொறுத்து இடத்துக்கிடம் வெப்பநிலை வேறுபடுகின்றது .1000' உயரத்தி லுள்ள ஓர் இடத்தின் வெப்பநிலையிலும் பார்க்க 6000' உயரத்தி 4பள்ள ஓர் இடத்தின் வெப்பநிலை குறைவாகவே இருக்கும். எவ்வளவு பாகை குறைவுபடும் என்பதைக் கணக்கிட்டறிக. .

Page 23
fly)
கமால்
படம் 111 இலங்கையின் வருடச் சராசரி வெப்பநிலை

இலங்கைப் புவியியல்
இனி, மழைவீழ்ச்சியாலும் ஓர் இடத்தின் வெப்பநிலை வேறுபடும் என்பதையும் நாம் அறிவோம். மலை நாட்டின் மேற்குப் பகுதிக்கு வைகாசி முதல் ஆவணி வரை தென்மேற் பருவக்காற்றினால் அதிக மழை கிடைக்கின்றது. எனவே, இம் மாதங்களில் மேற்குப் பகுதியிலுள்ள கண்டி, கம்பளை , நாவலப் பிட்டி, அட்டன் நுவரெலியா போன்ற இடங்களில் வெப்ப நிலை குறைவாகக் காணப்படும். இக் காலத்திலே தென்மேற் பருவக்காற்றின் ஒதுக்கிலுள்ள அப்புத்தளை, வெளிமடை, வதுளை, பசறை முதலிய இடங்களில் வெப்பம் அதிகமாக வுள்ளது. ஆயின், அவ்விடங்களில் கார்த்திகை, மார்கழி , தை, மாசி ஆகிய மாதங்களில் வெப்பம் குறைகின்றது. ஏன்?
மலை நாட்டின் மேற்குப்பகுதி தென்மேற் பருவக்காற்றினா லும் மேற்காவுகை முறையாலும் ஆண்டு முழுவதும் நல்ல மழையைப் பெறுகின்றது. குறிப்பிடத்தக்க அளவுக்கு வரண்ட பருவம் என்ற ஒன்று இப்பகுதியில் இல்லை. மலை நாட்டின் கிழக்குப் பகுதியில் இத்தகைய மழைவீழ்ச்சிப் பரம்பல் இல்லை. இப்பகுதிக்கு வடகீழ்ப் பருவக்காற்றினால் மழை கிடைக்கின்றது. ஆயின், இக்காற்று தென்மேற் பருவக்காற்றைப் போன்று அதிக நீரணுக்களோடு கூடியதன்று. இதனால், மேற்குப் பகுதி பெறும் மழையை விடக் குறைவாகவே கிழக்குப் பகுதி பெறு கின்றது. மேலும் வைகாசி முதல் ஆவணி வரை இங்கு மழை இல்லை. இக்காலத்திலே, தென் மேற் பருவக் காற்றுக்கள் மேற்குப் பகுதிக்கு மழையைக் கொடுத்துவிட்டு உலர்ந்த காற்று களாகக் கிழக்குப் பகுதியில் வீசுகின்றன. இதனால், வெப்பம் அதிகரிக்கின்றது. இக்காலம் கிழக்குப்பகுதியின் வரண்ட பருவ மாக உள்ளது. இத்தகைய காரணங்களினால் மலைநாட்டை (1) ஈரவலய மலை நாடு, (2) உலர்வலய மலை நாடு என இரண்டு காலநிலைப் பிரதேசங்களாகப் பிரிக்கலாம்.
இயற்கைத் தாவரம் : ஈரலிப்பான மலை நாட்டின் கிழக்குப் பகுதிகளில் மலைக்காடுகள் காணப்படுகின்றன. மலைக்காடுகள் மென்மையானவை; பெரிதும் பயனற்றவை. பீதுறு மலைப் பகுதிகளிலும் சிவனொளிபாதமலையின் அண்மைப் பகுதிகளிலும் பிற உயர்வான இடங்களிலும் இக் காடுகள் அடர்த்தியாக உள்ளன. மற்றைய பகுதிகளிற் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காக இவை அழிக்கப்பட்டுவிட்டன...-
உலர்வலய மலை நாட்டிற் காடுகள் மிகவும் குறைவு. பெரு மரங்கள் வேர்விட்டு வளரக்கூடிய அளவுக்கு இப் பகுதியில் மண்படை தடிப்பாக இல்லை. ஆதலால் மானா, இலுக் எனப் படும் புல் வகைகள் இப்பகுதியின் பிரதான இயற்கைத்

Page 24
30
எட்டாந்தரப் புவியியல்
தாவரங்களாக உள்ளன. இவை, 'பத்தனைகள்' எனப்படும். பத்தனைப் புல் நிலங்கள் - நுவரெலியா, வதுளை, பண்டாரவளை . ஆகிய இடங்களை இணைக்கும் முக்கோணப் பகுதிகளிற் பெருமள விற் காணப்படுகின்றன. உலர்ந்த வலய மலை நாட்டின் கிழக்குச் சரிவுகளிலே தலாவைப் புல் நிலம் உள்ளது. இந் நிலங்களில் இடையிடையே பெரு மரங்கள் காணப்படுகின்றன.
பயிற்சிகள்
1. இலங்கையைச் சூழவுள்ள பிரதான நாடுகள் யாவை?
இலங்கையின் தரைத்தோற்றப் பிரிவுகள் நான்கையும்
கூறுக.
இலங்கையின் அதியுயர்ந்த மலை யாது? அது எத்தனை
அடி உயரமுள்ளது? 4. இலங்கையின் பிரதான மேட்டு நிலங்கள் மூன்று கூறுக.
நீர்வீழ்ச்சிகள் எவ்வாறு தோன்றுகின்றன? இலங்கையின் பிரதான நீர்வீழ்ச்சிகள் ஐந்து தருக.
வடக் குச் சமவெளியின் எல்லைகள் யாவை?
தென்மேற்குச் சமவெளியின் தரைத்தோற்றத்தின் தனி
இயல்பு யாது? 8. தென்கிழக்குச் சமவெளியை வளப்படுத்தும் ஆறுகள்
நான்கு கூறுக.
9,
ஓர் இடத்தின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் காரணி கள் 3 தருக.
10. வெப்பநிலை அதிகமாகவுள்ள 3 பட்டணங்கள் யாவை?
11. நுவரெலியாவில் வெப்பநிலை குறைவாக உள்ளமைக்கு
2 காரணங்கள் தருக.
12. இலங்கையிற் பெய்யும் மழைவகைகள் யாவை?
13.
தென்மேற்குப் பருவக்காற்றினால் மழைபெறும் 8 இடங் களின் பெயர் தருக.
14. இக் காற்றொதுக்கிலுள்ள பட்டணங்கள் இரண்டு கூறுக .!

இலங்கைப் புவியியல்
31
15. வடகீழ்ப் பருவக்காற்று எம்மாதங்களில் வீசுகின்றது? 16. இலங்கையின் காலநிலைப் பிரதேசங்கள் யாவை?
17.
இலங்கைப் புறவுருவப் படமொன்றில் யாழ்ப்பாணக் குடாநாடு, மன்னார்த்தீவு, காரைநகர், வேலணை, மண்டை தீவு, புங்குடுதீவு, நெடுந்தீவு, எழுவைதீவு, அனலைதீவு, நயினாதீவு என்பவற்றைக் குறித்துப் பெயரிடுக.
18. இலங்கைப் புறவுருவப் படமொன்றிற் பின்வருவனவற்
றைக் குறித்துப் பெயரிடுக; தெதுறு ஓயா, வளவை கங்கை, மகாவலி, 10001 சம் வுயரக்கோடு, களனி கங்கை, மாணிக்க கங்கை, கல்ஓயா, அருவி ஆறு, சிவனொளிபாத மலை, பீதுறு தாலகாலை, கண்டி மேட்டு நிலம், வெளிமடை மேட்டு நிலம், அட்டன் மேட்டு நிலம், தும்பறைப் பள்ளத்தாக்கு ,

Page 25
அலகு 4
நெல் வேளாண்மை நெல் இலங்கை மக்களின் பிரதான உணவுப் பயிராகும். ஆதலால் எமது நாட்டில் அதிகமாக நெல்லே பயிரிடப்படு கின்றது .
நெற் செய்கைக்கு வேண்டிய புவியியல் நிலைமைகள் : நெல் பயிராவதற்கு (1) 70° ப-80°ப வெப்பம், (2) 60/' த்துக்குக் குறையாத மழை வீழ்ச்சி, (3) சமநிலம், (4) வண்டல் மண் என்பவை மிகவும் ஏற்றவை.
மழை குறையுமிடத்து நீர் பாய்ச்சப்படல் வேண் டும்; அறுவடைக் காலத்தில் வெப்பமும் பிரகாசமான வானிலையும் இருத்தல் வேண்டும்; மழை பெய்தல் கூடாது. நெல் வளருங் காலத்தில் நீர் நிலத்திலே தங்கி நிற்றல் வேண்டும். ஆதலால் நிலம் சமநிலமாக இருத்தல் வேண்டும். வண்டல் மண் அல்லது நீரை மேற்பரப்பில் வைத்திருக்கக் கூடிய வளமான களிமண் நெல் வேளாண்மைக்கு மிகவும் ஏற்றது.
நெல் விளைவிக்கப்படும் பகுதிகள் : எமது நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் நெல் விளைவிக்கப்படுகின்றது. குருநாகல் மாவட்டத்திற் பெரிய அளவு நிலப்பரப்பிலும் நுவரெலியா, மொனறாகலை மாவட்டங்களிற் சிறிய அளவு நிலப்பரப்புகளிலும் நெல் விளைவிக்கப்படுகின்றது.
உலர்ந்த வலயம்
நெல் பயிராகும் பகுதிகள் : உலர்வலயத் தாழ்நிலத்தின் பிர தான நெல்விளையும் பகுதிகளை 12 ஆம் படத்தில் அவதானிக்க. அம்பாறை, மட்டக்களப்பு, அனுராதபுரம், பொல்ல நறுவை, குரு நாகல் ஆகிய மாவட்டங்களில் நெல் பெருமளவில் விளைவிக் கப்படுகின்றது. இலங்கையின் மொத்த நெல் நிலங்களில் உலர்வலயத் தாழ்நிலம் கிட்டத்தட்ட 1 பங்கைக் கொண்டுள்
ளது.
- நெல் விளைவிக்கப்படும் முறை : உலர் வலயத் தாழ்நிலத்தில் நெல் வேளாண்மை பெரும்போகம் சிறுபோகமென இரு வகைப்படும், பெரும்போகம் மழைப் பருவத்தில் எல்லா வயல்களிலும் செய்யப்படும். இப் போகவிதைப்பு ஆவணி,

லேண்ட் கண்ணாடி
படம் 12: 1. உலர்வலயத் தாழ்நிலத்தின் பிரதான
நெல் விளையும் பகுதிகள், புவி. VIII -3

Page 26
எட்டாந்தரப் புவியியல்
புரட்டாதியிலும், அறுவடை மாசி, பங்குனியிலும் நடைபெறும். ஆவணியில் இடைமழை நன்றாகப் பெய்யவேண்டும். இல்லையேற் காய்ந்துள்ள வயல்களில் முதல் உழவை உழமுடியாதிருக்கும். அளவான மழை பெய்ததும் வயல்கள் உழப்படும். வயல்கள் உழவுயந்திரங்களினால் இக் காலத்தில் உழப்படுகின்றன. மலை நாட்டு வயல்போலன்றி இங்கு வயல்கள் பெரியனவாக உள்ளன : இதனால், இயந்திரங்களை இவ்வயல்களிற் பயன்படுத்தக்கூடிய தாக இருக்கின்றது. உழவு இயந்திரங்கள் விலை உயர்ந்தவை. அவற்றை எல்லோரும் எளிதில் வாங்கிவிட முடியாது. இதனால், உழவு இயந்திரம் வைத்திருப்போருக்குக் கூலியைக் கொடுத்துக் கமக்காரர் தங்கள் வயல்களை உழுவிப்பது வழக்கம் முன்பு மாடுகளாற் பல நாட்களாக உழுத வயல்களை இப்பொழுது இயந்திரங்கள் சில மணி நேரங்களில் உழுது முடிக்கின்றன . ஆயினும், பல பகுதிகளில் இன்றும் மாடுகளாலேயே வயல்கள் உழப்படுகின்றன.
வயல்களுக்குக் குப்பை கூளங்களும் எருவும் பசளையாகப் போடப்படுகின்றன . சிலர் விதைப்பதற்குமுன் உரம் வாங்கிப் பரவுவதுமுண்டு. விதைப்பு முதற் பருவமழையை யடுத்துத் தொடங் கப்படுகின்றது. முன்பு தமது வயல் நெல்லையே கமக் காரர் விதைப்பது வழக்கம். அந் நெல்லிலும் பார்க்க அதிக விளைச்சலைத் தரவல்ல சிறந்த விதை நெல் வகைகள் இப்பொழுது உள்ளன. இவற்றுள் H4 என்ற விதை நெல்லினத்தைக் கமக் காரர் இக்காலத்தில் மிகவும் விரும்பி விதைக்கின்றார்கள். இதனைக் குறைந்த விலைக்குப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங் களிலிருந்து வாங்கக்கூடியதாகவுள்ளது. இதிலிருந்து { அதிக விளைச்சல் பெறப்படுகின்றது.
நெல் கையினால் வீசி விதைக்கப்படுகின்றது. இத்தகைய விதைப்பு முறை அவ்வளவு சிறந்ததன்று. நாற்றுகளை மேடை களில் வளர்த்து, பின்னர் வயல்களில் அவற்றை ஒழுங்கான இடைவெளியில், வரிசை வரிசையாக நடுதலே சிறந்த முறை யாகும். வீசி, விதைக்கையில் நெல் சில இடங்களில் ஐதாகவும் சில இடங்களில் நெருக்கமாகவும் விழும். நெருக்கமாகப் பயிர் வளரும் இடங்களிற் பல பயிர்கள் ஒரு சிறிய இடத்திலிருந்து பசளையைப் பெறவேண்டியுள்ளது. நாற்று நடும் முறையால் எல்லாப் பயிர்களுக்கும் வயலின் "உசுளை நன்கு சுவறக்கூடிய தாக இருக்கின்றது. பயிர்கள் நன்கு மட்டமெறிந்து செழித்து அதிக விளைச்சலை அளிக்கும். இத்தகைய முறை யப்பானிய வேளாண்மை முறை எனப்படும். இதனைப் பலர் இப்பொழுது பின்பற்றி அதிக விளைவைப் பெற்று வருகின்றார்கள்.

நெல் வேளாண்மை
35.
கார்த்திகை, மார்கழியில் வயல்களில் நீர் நிறைய இருக்கும். கார்த்திகையில் களை பிடுங்கல் நடைபெறும். கார்த்திகைமுடிவில் அல்லது மார்கழித் தொ ட க் க த் தி ற் பயிர்கள் கதிர்களை ஈனும். தை, மாசி வெயில் கதிர்களை நன்கு முற்றச்செய்யும். அறு வடை மாசிக் கடைசியிலும் பங்குனியிலும் நடைபெறும்,
சூடு அடிப்பதற்குப் பல இடங்களில் இயந்திரங்களையே உபயோகிக்கின்றார்கள். மாடுகளைக்கொண்டும் - எருமைகளைக்
படம் 13 : மட்டக்களப்பில் முக்காலியில் நின்று பொலி தூற்றுதல்

Page 27
36
எட்டாந்தரப் புவியியல்
கொண்டும் சூடு மிதிக்கும் முன்னை ய வழக்கமும் சில இடங்களிற் காணப்படுகின்றது. பொலி, கையினாலேயே பெரிதும் தூற்றப் படுகின்றது. மட்டக்களப்புப் பகுதியிற் பொலியைத் தூற்று வதற்கு முக்காலி ஒன்றைக் கட்டி, அதில் ஒருவர் ஏறி நிற்பர். வேறொருவர் கீழே நின்று பொலியைச் சுளகில் அள்ளி முக்காலி யில் நிற்பவரிடங் கொடுக்க, அவர் அதனை வாங்கிக் காற்றிலே தூற்றுவர். யாழ்ப்பாணப் பகுதியில் நிலத்தில் நின்றுகொண்டே சுளகிற் பொலியை அள்ளித் தூற்றுவர். கையினாற் பொலியைத் தூற்றி எடுப்பதில் அதிக நேரம் விரயமாவ தனால் உழவு இயந் திரத்தில் விசிறியைப் பூட்டி நெல்லைத் தூற்றியெடுக்கும் வழக் கம் இப்பொழுது எங்கும் பரவி வருகின்றது. இவ்வாறு நெல் வேளாண்மையில் இந்நாட்களில் இயந்திரம் பெற்றுவரும் முக்கி யத்துவம் அவதானி க்கற்பாலது .
வறட்சிப் பருவத்திற் செய்யப்படும் நெல் வேளாண்மை சிறுபோகம் எனப்படும். சிறுபோக விதைப்பு சித்திரை, வைகாசியிலும் அறுவடை ஆடி, ஆவணியிலும் நடைபெறுகின் றன. பெரும்போகத்தைப் போன்று, சிறுபோகம் எல்லா வயல்களிலும் நடைபெறுவதில்லை. இது நீர்ப்பாய்ச்சல் வசதி யுள்ள பகுதிகளில் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றது. உலர் வலயத் தாழ்நிலத்திற் பல குளங்கள் உள்ளன. மழைப்பருவத்தில் இக்குளங்களில் நீர் தேங்கி நிற்கும். வறட்சிப் பருவத்தில் இக் குளங்களிலிருந்து பக்க வயல்களுக்கு வாய்க்கால் வழியாக நீர் பாய்ச்சப்படுகின்றது. இரணைமடுக் குளம், கட்டுக்கரைக் குளம், நுவரவீவா, நாச்சடுவாக்குளம், காலவீவா, கந்தளாய்க்குளம், அல்லைக்குளம், மின்னேரியாக்குளம், பராக்கிரம சமுத்திரம், உன்னிச்சைக்குளம், செனனாயக்கா சமுத்திரம் போன்றவற்றுக்கு அணித்தாகவுள்ள நிலங்களிற் சிறுபோகம் நன்கு செய்யப்படு கின்றது .
ஈரவலயத் தாழ்நிலம்
ஈரவலயத் தாழ்நிலத்திலுள்ள ஆற்றுப் பள்ளத்தாக்கு களிலும் குன்றுகளுக்கு இடைப்பட்ட வண்டல் மண் வடிநிலங்க ளிலும் நெல் விளைவிக்கப்படுகின்றது. நி ல் வ ள க ங்  ைக, வெந்தோட்டைக் கங்கை, சின் கங்கை என்பவற்றின் வெள்ளச் சமவெளிகள், கழிமுகப் பகுதிகள், இறாகமம், பொல் காவலை, குருநாகல் பகுதிகளில் நெல் அதிகமாக விளைவிக்கப்படுகின்றது. ஈரவலயத் தாழ்நிலத்தில் ஏறத்தாழ 5,00,000 ஏக்கர் நிலத்தில் நெல் விளைவிக்கப்படுகின்றது. இது இலங்கையின் மொத்த வயல் நிலத்தில் 4 பங்காகும்.

நெல் வேளாண்மை
37
ஈரவலயத் தாழ்நிலக் க ம க் க ா ர ன் நெல் வேளாண்மைக்கு மழை யையே நம்பி இருக்கின் றான். இங்கு 'மகா ' , 'யால' என்னும் இரு பரு வங்களில் நெல் விளைவிக் கப்படுகின்றது. 'மகா : என்பது பெரும்போகம்; ' யால ' என்பது சிறு போ கம் பெரும்போகம் தென் மேற் பரு வ க் காற்று மழை நன்கு பெய்தபின் தொடங்கப் படுகின்றது. விதைப்பு
ஆ வ ணி, புரட்டாதி படம் 14 : ஈரவலயத் தாழ்நிலத்தில் யிலும், அறுவடை மாசி,
அரிவி வெட்டுதல்
பங்குனியிலும் ந டை
பெறு கின் ற ன. சிறு போகப் பயிர் பங்குனி, சித்திரையில் விதைக்கப்பட்டு ஆடி, ஆவணியில் அறுவடை செய்யப்படுகின்றது. மழையை நம்பிச் செய்யப்படும் இவ்விரு போகங்களிலும் காலபோகமே பெரும் பயன் தருவது. சிறுபோகம் கடும் பருவக்காற்று மழையினாற் பெரிதும் பாழாவதுண்டு. சில இடங்களில் இடைப்போகத்திலும் நெல் விளைவிக்கப்படுகின்றது.
மலை நாடு
நெல் வேளாண்மைக்குச் சமநிலமும் கதிர் முற்றுகின்ற காலத்தில் வெப்பமும் வேண்டும் என்பதனை நாம் அறிவோம். இத்தகைய நிலைமைகள் மலை நாட்டில் மிகவுங் குறைவு. ஆயினும், அது எமது உணவுப் பயிராதலால் மலை நாட்டிலும் வாய்ப்பாக உள்ள பகுதிகளில் மழை நீரையும் ஊற்று நீரையும் நம்பி நெல் விளைவிக்கப்படுகின்றது. வெப்பம் அதிகமாக இருக்கக்கூடிய 3000! க்குக் குறைவான உயரமுள்ள பகுதி களில் நெல் ஓர ள வு பயிராகின்றது. நெற்பயிர் வளருங் காலத்தில் வயலில் நீர் தங்கி நிற்கவேண்டும். இதற்கு ஏற்ற வாறு மலைச் சரிவு களிற் சிறு சிறு தட்டை நிலங்கள் வெட்டி வரம்பிடப்பட்டுள்ளன..
இவை படியாக்கிய வயல்கள் எனப் படும். ஒரு வயல் - 2! அகலமாகவும் இருக்கும். ஒரு வயலி லிருந்து மற்றைய வயலுக்கு ஏறியோ இறங்கியோ செல்லல்

Page 28
38
எட்டாந்தரப் புவியியல்
:41:13
18!({F1 11:1%n,
படதக்.144 4 4 (14 11:/14l#1!'
பரிit 'யூட்ய:34!
41[ப:/41fi!:54:5!!htt444?*!!
வய:01{}} {{/11{}/fd5athils/fitl/?tit
படர், 19/01/1://i/181811/11:*
சாராTHrmnmானாார்.
எட்டாம் படி11:/Mirtifii!ப41:42:47
eே: 2111411 4ம்''
7:31:41fil,
|ா11!"
பார்11/11/1164//t: 18 : 1121 ம்
ப : சி{TIMIt 45 trt23 4: ராசா Ald0fiப்பிப்பு
பக்Ciார்
படம் 15 : மலைநாட்டிற் படியாக்கிய வயல்கள்
வேண்டும். இவ் வயல்களில் இயந்திரங்களைப் பயன்படுத்த முடியாது. கமக்காரரின் வீ டு க ள் பொதுவாக மலையடியில் இருக்கும். அரிவி வெட்டுக் காலத்திற் கதிர்க் கட்டுக் களை வீடுகளுக்குப் பக்கமாக உள்ள சூடு அடிக்கும் இடங்களுக்குக் கொண்டுவரல் வேண்டும். சில சமயங்களில் அதிக மழையினால் அறுவடை சேதமடைவது வழக்கம். இவ்வாறு மலை நாட்டுக் கமக்காரன் பல தொல்லைப்பட்டு நெல் விளைவிக் கவேண்டி யுள்ளது. நெல் கடுகண்ணாவை, கண்டி, நாவலப்பிட்டி, மாத்தளை, தும்பறைப் பள்ளத்தாக்குப் பகுதிகளிலும் பிற ஆற்றுப்பள்ளத்தாக்குகளிலும் விளைவிக்கப்படுகின்றது. உற்பத்தி
இலங்கையில் ஓர் ஏக்கருக்குச் சராசரி 37 புசல் நெல் விளை விக் கப்படுகின்றது. இத் தாலியில் ஓர் ஏக் கருக்கு 100 புசலுக்குமேல் அறுவடை செய்யப்படுகின்றது. யப்பான், அவுத்திரேலியா போன்ற நாடுகளில் ஏக்கருக்கான உற்பத்தி 75 புசலுக்கு மேல் உள்ளது. இந் நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் எமது நாட்டு உற்பத்தி மிகவுங் குறைவாக இருப் பதைக் காணலாம். ஆயினும் பல இடங்களில் ஏக்கருக்கான உற்பத்தி இப்பொழுது அதிகரித்து வருகின்றது. பொலன் -னறுவை, மொனறாகலைப் பகுதிகளில் ஓர் ஏக்கருக்கு 50 புச லுக்கு மேலும் விளைவிக்கப்படுகின்றது. அதிக பசளையிடுதல், கூடிய விளைவைத் தரவல்ல விதை நெல் இனத்தைப் பயன்படுத்து தல், நாற்று நடுதல், ஏற்ற காலத்தில் களை பிடுங்குதல், நோய்க் கிருமிகளைக் கொல்லுதல், நீர்ப்பாசன வசதிகள் அமைந்

நெல் வேளாண்மை
39
திருத்தல், இயந்திரங்களைப் பயன்படுத்துதல் போன்ற நவீன முறைகள் இதற்குரிய காரணங்களாகும்.
இலங்கையின் மொத்த நெல் உற்பத்தி ஆண்டுதோறும் அதி கரித்து வருகின்றது. எனினும், குடிப்பெருக்கங் காரணமாகத் தேவையுங் கூடிக்கொண்டே வருகின்றது. தற்போதைய உற் பத்தி எமது தேவைக்குப் போதாமல் இருப்பதனாலே பேமா, சீனா, வியற்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து அரிசி பெருமளவில் இறக்குமதி செய்யப்படுகின்றது.
உலகில் நெற் செய்கை
நெல் விளைவிக்கும் நாடுகள் : நெல் விளைவிக்கப்படும் பிரதான நாடுகளைப் படத்திற் கவனிக்க. எமக்கு நெல் அனுப்பும் நாடுகள் ஆசியாவின் தென் பகுதியிலும் தென் கிழக்குப் பகுதியிலும் அமைந்துள்ளன. இந் நாடுகளில் நெல் பெருமளவில் விளைவிக்கப் படுகின்றன. இவை பருவக்காற்று நாடுகளாகும். நெல் பருவக் காற்று நாடுகளின் முக்கியமான உணவுப் பயிராகும். இந்தியா, சீனா, யப்பான், பிலிப்பைன் தீவுகள், இந்தோசீனா, சீயம், பேமா, இந்தோனேசியா, பாகித்தான் ஆகிய நாடுகளின் பிரதான விவசாயப் பயிர் நெல்லாகும்.
இந்தியா : இந்தியாவில் மேற்கு வங்காளக் கங்கைச் சம வெளியிலும், மகாநதி, கோ தாவரி, கிருஷ்ணா, காவேரி ஆகிய ஆறுகளின் கழிமுகப்பகுதிகளிலும் நெல் பெருமளவு விளைவிக் கப்
அ.
அமெரிக்க
எத்
பிறேசில்
நெல்
படம் 16: உலகத்தில் நெல் விளைவிக்கப்படும் நாடுகள்

Page 29
40
எட்டாந்தரப் புவியியல்
படுகின்றது. கேரளத்தின் கா கடற்கரையோர வண்டல்மண் நிறைந்த வெள்ளச் சமவெளிகளிலும் நெல் பயிராகின்றது. இந்தியாவில் நெல் வேளாண்மை பழைய முறைகளைப் பின் பற்றியே பெரிதும் நடைபெறுகின்றது. பருவக்காற்று மழை பெய்யத் தவறுங் காலத்தில் நெல் வேளாண்மை பாதிக்கப்படு கின்றது. பெருமளவில் நெல் உற்பத்தி செய்யப்படுகின்ற போதி லும் குடி கூடுதலாக இருப்பதால் இந்தியா நெல்லை ஏற்றுமதி செய்வதில்லை...
சீனா: சீனாவில் யாங்ரிசிக்கியாங் பள்ளத்தாக்கிலும் மற் றைய ஆறுகளின் கழிமுகப் பகுதிகளிலும் நெல் விளைவிக்கப்படு கின்றது. உனான் மாகாணத்தில் நெல் அதிக அளவில் விளை விக்கப்படுவதால் அதனைச் சீனாவின் ' அரிசி வங்கி ' யென அழைப்பர்.
யப்பான்: யப்பான் தீவுகள் மலைப்பாங்கானவை. ஆதலால் விவசாயத்துக்கேற்ற சம நிலப்பரப்புக்கள் மிகவுங் குறைவு . கடும் முயற்சியால் மலைச்சரிவுகள் படியாக்கிய வயல்களாக்கப் பட்டுள்ளன. குறைவாகவுள்ள நிலப்பரப்புக்களிலிருந்து கூடுத லான விளைவைப் பெறும் பொருட்டுச் செறிவு வேளாண்மை முறைகள் பின்பற்றப்படுகின்றன. வயல்களை நன்கு வளப் படுத்தல், பயிர் நன்கு மட்டமெறிந்து வளரக்கூடிய முறையிற் போதிய இடம் விட்டு நாற்று நடுதல், உரிய காலத்தில் நீர்ப் பாசனஞ் செய்தல் என் பன இம் முறைகளுள் முக்கியமானவை. இதனால் ஏக்கருக்கான உற்பத்தி மிகவுங் கூடுதலாகவுள்ளது. (38ஆம் பக்கம் பார்க்க .)
பிறநாடுகள் : மலேசியாவிலும், எகிப்தில் நைல் கழிமுகத்தி லும், அவுத்திரேலியாவில் மறே வடிநிலத்திலும், வட இத்தாலி யில் போ பள்ளத்தாக்கிலும், அ. ஐ. நாடுகளில் மிசிசிப்பியின் கழிமுகப் பகுதியிலும் நீர்ப்பாசனஞ் செய்யப்பட்டு நெல் சிறப் பான முறையில் விளைவிக்கப்படுகின்றது.
பயிற்சிகள்
1.
நெற் செய்கைக்கு வேண்டிய பு வி யி யல் நிலைமைகள் நான்கு கூறுக.
உலர்வலயத் தாழ்நிலத்தில் நெல் பெருமளவிற் பயிராகும்
மாவட்டங்கள் ஐந்து கூறுக.

நெல் வேளாண்மை
41
3. அதிக விளைச்சலைத் தரும் விதை நெல்வகை ஒன்றின்
பெயர் தருக.
4. ' யப்பானிய வேளாண்மை முறை' என்றால் என்ன?
5. பெரும்போக சிறுபோக நெல் வேளாண்மைக்கிடையே
யுள்ள மூன்று முக்கியமான வேறுபாடுகள் கூறுக.
6.
ஈரவலயத் தாழ்நிலத்தில் நெல் வேளாண்மை பற்றி எட்டு வசனங்கள் எழுது க.
7.
மலை நாட்டுக் கமக்காரன் நெல் விளைவிப்பதிற் படும் தொல்லைகள் மூன்று கூறுக.
8. எமது நாட்டில் நெல் உற்பத்தி இக்காலத்தில் அதிகரித்து
வருவதற்குரிய காரணங்கள் ஐந்து தருக.
9. யப்பானில் அல்லது இந்தியாவில் நடைபெறும் நெல்
வேளாண்மை பற்றி ஐந்து வசனங்கள் எழுதுக.
10. நாம் அரிசி வாங்கும் நான்கு நாடுகள் கூறுக, 11. கீறிட்ட இடங்களை ஏற்ற சொற்களால் நிரப்புக :
(அ) 'யால' என்பது ..
.. ஆகும்.
(ஆ) இலங்கையின் மலை நாட்டில் ..
....... ஆகிய பகுதிகளில் நெல் விளைவிக்கப்படு கின்றது .
(இ)
மாகாணம் சீனாவின் 'அரிசி வங்கி
எனப்படும்,
(ஈ)
இத்தாலியில்
... பள்ளத்தாக்கில் நெல் விளைவிக்கப்படுகின்றது.
12.
உலகப்படம் ஒன்றில் நெல் விளைவிக்கப்படும் நாடுகளைக் குறித்துப் பெயரிடுக.

Page 30
அலகு 5
வியாபாரத் தானிய வகைகள் கோதுமை
வியாபாரத் தானிய வகைகளுள் உலகச் சந்தையில் பெரு மளவில் விற்பனையாவது கோதுமையாகும். எம் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் உணவுப்பொருள்களுள் கோதுமை மா முக்கியமானது. அவுத்திரேலியா, கனடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிரான்சு, மேற்கு யேமனி போன்ற நாடுகளி லிருந்து கோதுமை எமது நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படு கின்றது. இந் நாடுகள் இடை வெப்ப வலய நாடுகளாகும்.
வளர்ச்சிக்கு வேண்டிய நிலைமைகள் : கோதுமை பெரிதும் ஓர் இடைவெப்ப வலயப் பயிராகும். இதன் வேளாண்மைக்குக் குளிர்ச்சியான தும் உலர்வானதுமான காலநிலை வேண்டும். வருடத்திற் சராசரி 20” - 40/ மழைவீழ்ச்சி போதுமானது . அறுவடைக் காலத்திற் சூடும் பிரகாசமும் பொருந்திய வானிலை வேண்டும். மென் களியையுங் கனமான ஈரக்களி மண்ணையுங் கொண்ட நிலங்கள் கோதுமை வேளாண்மைக்கு மிகவும் ஏற்றன,
கோதுமை விளைவிக்கப்படும் நாடுகள் : கோதுமை மேலை நாட் டவரின் பிரதான உணவுத் தானியமாகும். கோதுமை விளை விக்கப்படும் நாடுகள் 19 ஆம் படத்திற் காட்டப்பட்டுள்ளன. அ. ஐ. நா., கனடா, சீனா, சோவியத்து இரசியா, பிரான்சு, இத்தாலி, இந்தியா, துருக்கி, ஆசெந்தீனா, அவுத்திரேலியா ஆகிய நாடுகளிற் கோதுமை முக்கியமாக விளைவிக்கப்படு கின்றது. இவற்றுள் அ. ஐ.நா., கனடா, ஆசெந்தீனா, அவுத்திரேலியா ஆகிய நாடுகளில் வியாபார நோக்கமாகவே கோதுமை விளைவிக் கப்படுகின்றது.
அ. ஐ. நா. விலும் கனடாவிலுமுள்ள பிரேரீப்புன்னிலங்கள் பரந்த கோதுமைப் பிரதேசங்களாக உள்ளன. உறொக்கி மலை களுக்கும் மிசூறி மிசிசிப்பிக்குமிடையில் அ. ஐ. நா. வின் பிர தான வேறொரு கோதுமைப் பிரதேசம் உள்ளது. கொலம்பியா மேட்டு நிலத்திலும் கோதுமை செய்கைபண்ணப்படுகின்றது. அ. ஐ. நா. கோதுமையைப் பெருமளவில் ஏற்றுமதி செய் கின்றது.
சோவியத்து இரசியாவின் கோதுமைப் பிரதேசம் தெற்கி லுள்ள தெப்பு வெளிகளில் உள்ளது. அ. ஐ. நா.வில் கோதுமைப்

வியாபாரத் தானிய வகைகள்
பிரதேசங்கள் வெவ்வேறாக மூன்று பகுதிகளில் உள்ளன. சோவியத்து இரசியாவிற் கோதுமைப் பிரதேசம் தொடர்ச்சி யான ஒரு பெரும் பரப்பாகவுள்ளது. இதனால் வேளாண்மை பாதிக்கப்படுகின்ற காலங்களில் உற்பத்தி மிகவுங் குறைவது வழக்கம்,
சீனாவின் வடபகுதியிலும் மஞ்சூரியாவிலும் கோதுமை விளை விக்கப்படுகின்றது. தென்பகுதியில் மழை. அதிகமாதலாற் கோதுமைச் செய்கை குறைவு ... ஆசெந்தீனாவின் கோதுமைப் பிரதேசம் பம்பாசு நிலத்தில் உள்ளது. அவுத்திரேலியாவில் மறேடாலிங் வடிநிலத்திலும் தென்மேற்குப் பகுதியிலுங் கோதுமை வேளாண்மை நடைபெறுகின்றது .
நெல் வே ள ா ண்  ைம யைப் போலன்றிக் கோதுமை வேளாண்மையில் இயந்திரங்கள் ஓரளவுக்கு எல்லா நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. வயல் கள் பெரிதாக இருப்பதனாலும் அறுவடைக்காலம் உலர்வாக இருப்பதனாலும் வேளாண்மையிற் பெரும் இயந்திரங்களைப் பயன்படுத்தக் கூடியதாக இருக் கின்றது. கோதுமை பயிராகும் பல நாடுகளிற் குடியடர்த்தி
குறைவு. இந்நாடுகளிற் கூ லி ய ாட் க ள் குறைவாதலால் வேளாண்மையில் இயந்திரங்கள் பயன்படுத்தப்படவேண்டிய
அவசியம் ஏற்படலாயிற்று.
சோளம்
சோளமும் முக்கியமானவொரு வியாபாரத் தானியமாகும். மிருக உணவுக்காக உலகச் சந்தையில் சோளம் அதிகம் விற்பனை யாகின்றது. அ. ஐ. நா., ஆசெந்தீனா என்னும் நாடுகளில் வியாபார நோக்கமாகச் சோளம் பெருமளவு பயிரிடப்படு கின்றது.
வளர்ச்சிக்கு வேண்டிய நிலைமைகள் : - வடவரைக் கோளத் திற் கோதுமைப் பிரதேசங்களுக்குத் தெற்கில் வெப்பம் சற்றுக் கூடிய இடங்களிற் சோளம் பயிராகின்றது. ஆதலாற் குளிரும் மென்சூட்டுத் தன்மையும் இதன் வளர்ச்சிக்குத் தேவை என்பது புலனாகும். சோளப் பயிர் மிகவும் பெரியது ; அகன்ற பெரும் இலைகளைக்கொண்டது. எனவே நியாயமான அளவு நீரும் அதன் வளர்ச்சிக்கு வேண்டியிருக்கின்றது. கோடையில் 68°- 72 ° ப வெப்பமும் 3/- 67) மாத மழையும் வேண்டும்.
சோளம் இடைவெப்ப வலயத்திலும் வெப்ப வலயத்திலும் விளையக்கூடிய பயிராதலின் கோதுமையை விடக் கூடிய நிலப் பரப்பில் இது விளைவிக்கப்படுகின்றது?

Page 31
எனனததறா.
K-3
-'தம்,
இல் சோவில்
சோவியத்து இரசியா
பிரான்
C
இந்தியா
அவுத்திரேலியா
ஆசெந்தீனா
பிரதானமாய்க் கோதுமை விளையும் பிரதேசங்கள்
வேகமாக படம் 17 : உலகின் கோதுமைப் பிரதேசங்கள்

வியாபாரத் தானிய வகைகள்
45
சோளப் பிரதேசங்கள்
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சோளப்பிரதேசம் : இப்பிரதேசம் ஐம்பெரும் ஏரிகளுக்குத் தெற்கில் பென்சில்வேனியாவிலிருந்து கான் சாசு இராச்சியம் வரை பரந்துள்ளது. நன்கு உகந்த புவியியல் நிலைமைகளும் மக் க ளி டை யே யு ள் ள ஊக்கமும் அ. ஐ. நா. வின் சோளப் பிரதேசத்தில் உயர்ந்த பணக்காரக் சுமக்காரர்களை உருவாக்கி இருக்கின்றன.
சோளப் பிரதேசத்தின் மண் வளமாகவும் விளைவினைத் தரக் கூடியதாகவும் இருக்கின்றது . மழை வீழ்ச்சி 20/-407 வரை யுள்ளது. கோடைச் சூடு சோளம் விரைவாக வளர்வதற்கு ஏற்றது. நிலம் தட்டையாகவும் சில இடங்களில் மென்னலைத் தன்மையாகவும் இருக்கின்றது. பெரும் இயந்திரங்களைப் பயன் படுத்துவதற்கு இது வசதியாகவுள்ளது . .
விளைவு இப்பிரதேசத்தில் அதிகமாகும். ஒரு சதுர மைலுக்கு 5000 புசல் சோளம் விளைவிக்கப்படுகின்றது. சோளம் மக்க ளுக்கு மட்டுமன்றிக் குதிரைகள், மந்தைகள், பன்றிகள், கோழிகள் முதலியனவற்றுக்கும் உணவாகப் பயன் படுத்தப்படு கின்றது. நல்ல விளைவுள்ள வருடங்களிற் கமக்காரருக்குப் பெருந்தொகையான நயம் கிடைக்கும். கட்டிடங்களைக் கட்டு வதற்கும், சிறந்த இயந்திரங்களை வாங்குவதற்கும், வானொலிப் பெட்டிகள், தொலைபேசிகள் போன்ற வசதிப் பொருள் களை வாங்குவதற்கும் இந்த நயத்தின் ஒரு பகுதியினைக் கமக்காரர் பயன்படுத்து வர் . அ. ஐ. நா. வின் சோளப் பிரதேசக் கமக் காரரின் வாழ்க்கை நிலை மிக உயர்ந்ததாகும்.)
ஆசெந்தீனாவின் சோளப்பிரதேசம் : ஆசெந்தீனாவின் பிரதான சோளப் பிரதேசம் பம்பாசுக்கு வடபகுதியில் அமைந்துள்ளது . இப்பகுதியில் நல்ல விளைவைக் கொடுக்கக்கூடிய முறையில் வருடத்துக்கு 28/ - 401 வரை மழை பெய்கின்றது. கோடை வெப்பநிலை 71-75" ப வரையுள்ளது. மண் வளமான து; கூடுத லான அழுகிய பொருட்சத்தினைக் கொண்டது.
ஆசெந்தீனாவின் சோளம் சிறந்ததாகவும், சிறியதாகவும், ஈரத்தன்மை கு றைந் த தா க வும் இருக்கின்றது. இதனால் ஐரோப்பியச் சந்தைகளில் இதற்கு நல்ல மதிப்புண்டு. மேலும், கடற்கரையோரங்களிற் சோளப் பிரதேசம் அமைந்திருப்பதால் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்புவதும் இலகுவாகின்றது. ஆசெந்தீனாவின் சோளத்தில் பெரும்பகுதி ஏற்றுமதிக்கென்றே விளைவிக்கப்படுகின்றது. அ. ஐ. நா. வைப் போன்று மந்தை களுக்கோ கோழிகளுக்கோ சோளம் பயன்படுத்தப்படுவதில்லை ,

Page 32
46
எட்டாந்தரப் புவியியல்
பிறநாடுகள்: கனடாவிற் சென்லோரன்சு ஆற்றுப்பள்ளத் தாக்குப் பகுதிகளிற் சோளம் விளைவிக்கப்படுகின்றது. ஐரோப் பாவிற் சிபெயின், போத்துக்கல், யுகோசிலேவியா, கங்கேரி, பல்கேரியா, உரூமேனியா, தென் சோவியத்து இரசியா ஆகிய நாடுகளிற் சோள வேளாண்மை நடைபெறுகின்றது. இந் நாடு களிற் சோளமே மக்களின் பிரதான உணவாகும். மெக்சிக்கோ, தென் ஆபிரிக்க நாடுகள் ஆகியவற்றிலும் சோளம் விளைவிக்கப் படுகின்றது.
1.
பயிற்சிகள் கோதுமை வேளாண்மைக்கு வேண்டிய புவியியல் நிலைமை கள் மூன்று தருக , கோதுமைப் பிரதேசங்கள் பெரும்பாலும் இடைவெப்பப் புன்னிலப் பகுதிகளிலே காணப்படுவதற்குரிய இரண்டு காரணங்கள் தருக. சோளப் பயிர் வளர்ச்சிக்கு வேண்டிய புவியியல் நிலைமை கள் மூன்று தருக. கீறிட்ட இடங்களை ஏற்ற சொற்களால் நிரப்பி எழுதுக; (அ) கனடாவின் சென்லோரன்சு ஆற்றுப்பள்ளத்தாக்
குப் பகுதியில் ...
... விளைவிக்கப்படுகிறது. (ஆ) ஆசெந்தீனாவின் சோளப்பிரதேசம் ...
'...::: :...க்கு வடபகுதியில் அமைந்துள்ளது . (இ).
அவுத்திரேலியா, கனடா, அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்து
... எமது நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றது. (ஈ• )
சோவியத்து இரசியாவின் கோதுமைப் பிரதேசம் அதன் தெற்கிலுள்ள ......
... உள்ளது. ஆசெந்தீனாவின் சோளப்பிரதேசம்பற்றி ஐந்து வசனங்கள் எழுதுக. ஆசெந்தீனாவின் சோள வேளாண்மைக்கும் அ. ஐ. நா. வின் சோள வேளாண்மைக்கு மிடையேயுள்ள மூன்று வேறுபாடுகள் கூறுக. அ. ஐ. நா. வின் சோளப் பிரதேசக் கமக்காரரின் வாழ்க்கை உயர்வாக உள்ளமைக்குரிய நான்கு கார
ணங்கள் தருக. நீர் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலுள்ள கோதுமை வய லொன்றில் வசிப்பவரெனக் கற்பனை செய்து கொண்டு கோதுமை விளைச்சலைப்பற்றி ஒரு கட்டுரை வரைக,
5.

--
அலகு 6 இலங்கையின் வணிகப் பயிர்கள்
இலங்கை ஒரு விவசாய நாடு. அதனால் அதன் ஏற்றுமதியில் விவசாயப் பொருள்களே முக்கிய இடம் வகிக்கின்றன. எமது நாட்டுக்குத் தேயிலை, இறப்பர், தென்னை ஆகிய வணிகப் பயிர்களால் அதிக வருவாய் கிடைக்கின்றது. நாட்டின் மொத்த ஏற்றுமதிப் பெறுமானத்திலே தேயிலை, இறப்பர், தெங்குப் பொருள்கள் ஆகிய மூன்றினதும் பெறுமானம் 97 சத வீதமாக வுள்ளது. இப் பொருள் களுடன் கொக்கோ, சித்திரனல்லாப் புல்லெண்ணெய், புகையிலை, கறுவா, ஏலம், மிளகு என்பனவும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
6ெ
தேயிலை
தேயிலை இலங்கையின் பிரதான வியாபாரப் பயிராகும். நாட்டின் மொத்த ஏற்றுமதிப் பெறுமானத்திலே தேயிலையின் பெறுமானம் மட்டும் 60 சதவீதத்துக்கும் அதிகமானது. இதி லிருந்து எமக்கு அதிக வருவாய் தேயிலையினாலேயே கிடைக் கின்றது என்பது புலனாகும்.
தேயிலைச் செய்கைக்கு வேண்டிய நிலைமைகள் : தேயிலை பயி ராகும் இடங்களைப் 18 ஆம் படம் காட்டுகின்றது. அவை அனைத் தும் மத்திய மலை நாட்டில் அமைந்திருப்பதை அவதானிக்க லாம். தேயிலைச் செய்கைக்கு இலங்கையின் மத்திய மலை நாடு மிகவும் ஏற்றதாகக் காணப்படுகின்றது.
தேயிலையின் வளர்ச்சிக்கு வேண்டிய மிகவும் சிறந்த புவியியற் காரணி கள் பின்வருமாறு :
1. 3000! உயரமான மலைச்சாரல் 2. செம்மண் கலந்த நிலம் 3. 807' வருட மழைவீழ்ச்சி 4. 70° வெப்பம்.
தேயிலை பயிராகும் இடங்கள் : இத்தகைய நிலைமைகளில் தேயிலை மாத்தளை, கண்டி, நாவலப்பிட்டி, தலவாக்கலை, அட்டன், மஸ்கெலியா, நுவரெலியா , வதுளை, பண்டாரவளை, வெலிமடை ஆகிய பகுதிகளிற் பெருமளவிற் பயிராகின்றது.

Page 33
48
எட்டாந்தரப் புவியியல்
இ தேயிலை உயர் நிலத் தேயிலை, தாழ்நிலத் தேயிலையென இரு பிரிவாகப் பிரிக்கப்படுகின்றது. இவற்றுள் உயர் நிலங்களில் விளையும் தேயிலையே சிறந்த இனத்தைச் சேர்ந்தது.
உற்பத்தி : 1964ஆம் ஆண்டு இலங்கையில் 4820 இலட்சம் இறாத்தல் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டுள் ளது. 1965 ஆம் ஆண்டு உற்பத்தி 5030 இலட்சம் இ றா த் த ல ா கு ம். இது போன்றே ஆண்டுதோறும் தேயிலை அதிகமாக உற் பத்தி செய்யப்பட்டு வரு கிறது.
கண்டிகை
9: பேராதனை நாவலப்பிட்டிலே
கற்றன்
பதுளை
ஏற்றுமதி :, உலகச் சந் தைக்குத் தேவைப்படும்
மாத்தளை தேயிலையை ஏற்றுமதி செய் யும் நாடுகளுள் இலங்கை, இந்தியாவுக்கு அடுத்ததா கத் திகழ்கின்றது. எமது
சிட் பண்டாரவளை மொத்த உற்பத்தியிற் கிட்
• இரத்தினபுரி டத்தட்ட 80% ஏற்றுமதி
மத்துகம செய்யப்படுகிறது . ஏற்று
.• கேஸ் மதியாகும் தே யி லை யி ன்
பத்தேகமம் பெரும் பங்கு பிரித்தானி யாவுக்கே செ ல் கி ற து. அமெரிக்க ஐக்கிய நாடுகள், படம் 18 : மலைநாட்டிலே. தேயிலை கனடா, அவுத்திரேலியா,
பயிராகும் பகுதிகள் நியூசிலாந்து, இ ர ா க் கு , தென் ஆபிரிக்கா, எகிப்து, அராபியா, சிரியா, இலிபியா, இரான், இரசியா முதலிய நாடுகளும் எமது தேயிலையை விரும்பி வாங்குகின்றன.
தேயிலை செய்ன:கபண்ணப்படும் பிற நாடுகள் : அண்மைக் காலம் வரை ஆசியாவின் தெற்கு, தென்கிழக்கு நாடுகளில் மட்டும் தேயிலை பயிராக்கப்பட்டது. அவை இந்தியா, இந்தோனேசியா, சீனா, யப்பான், போமோசா முதலிய நாடுகளாகும். இவற்றுள், இந்தியாவைத் தவிர மற்றைய நாடுகளில் அவற்றின் சுயதேவை களைப் பூர்த்தி செய்துகொள்வதற்காகவே தேயிலை விளைவிக்கப் படுகின்றது.

இலங்கையின் வணிகப் பயிர்கள்
49
சீனா, யப்பான், போமோசா போன்ற நாடுகளில் பச்சை நிறமான ஒரு வகைத் தேயிலையைத் தயாரிக்கிறார்கள்.
கினியா, உகண்டா, தன்சேனியா போன்ற ஆபிரிக்காவின் கிழக்குப்பகுதி நாடுகளில் தேயிலைச் செய்கை மிகத் துரிதமான முறையில் விருத்தியாகிவருகின்றது. தென் இரசியாவிலும் (திரான்சுகொக்கேசியானா) அண்மைக் காலத்திலிருந்து தேயிலைச் செய்கை தொடங்கப்பட்டுள்ளது.
ஆயினும் இந்நாடுகள் உற்பத்திசெய்யும் தேயிலையில் இல் லாத ஒருவகை 'இனிய மணம்' எமது நாட்டுத் தேயிலையில் உள்ளது. இதனால் இலங்கைத் தேயிலைக்கு உலகச் சந்தையில் நல்ல மதிப்பு இருக்கிறது. எனினும், கோப்பி, கொக்கோ போன்ற பிற பானங் களுடனும் மலிவான பிற நாட்டுத் தேயிலை யுடனும் எமது தேயிலை போட்டியிடவேண்டியுள்ளது. இதனால் வெளிநா டு க ளில் எமது தேயிலையை விளம்பரப்படுத்துவ திலும் உள்ளூரில் உற்பத்தியைப் பெருக்குவதிலும் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
இறப்பர்
எமது நாட்டு வணி கப் பயிர்களுள் இறப்பர் இரண் டாம் இடத்தை வகிக் கின்றது. இறப்பர் வளர்ச் சிக்கேற்ற சிறந்த புவியி யற் காரணிகள் (1) 2000க் குக் கீழ்ப்பட்ட நிலம், (2) நீர் வழிந்தோடக் கூடிய சரிந்த தரை, (3) 80' வருட மழை, (4) 80° வெப்பம் ஆகியனவாகும்.
அணுகல்
அவிசாவலை
{/te.
* *வெல்லவாயா
"Eாயjit;
இங்கிரியா
இறக்குவான
இத்தகைய புவியியல் நிலைமைகள் ஈரவலயத்
-எட்டியாந்தோட்ட தல்தேனை . தாழ் நிலத்திற் சிறப்பாகக் காணப்படுவதால் இறப் பர் அப்பகுதியில் அதிக ' மாகப் பயிராகின்றது. இலங்கையின் இறப்பர் நிலங்களை 19 ஆம் படம் காட்டுகின்றது. களனிப் பள்ளத்தாக்கு, இரத்தினபுரி படம் 19: இறப்பர் பயிராகும் பகுதிகள்
புவி. VIII - 4
* தெனியாயை
பத்தேகமம்
அக்குறமை

Page 34
50
எட்டாந்தரப் புவியியல்
மாவட்டம், கேகாலை மாவட்டம், களுத்துறை மாவட்டம் ஆகிய பகுதிகளில் இறப்பர் செழித்து வளர்கிறது.
இறப்பர் பலவழிகளில் இக்காலத்திற் பயன்படுத்தப்படு கின்றது. தயர், தியூப்பு, அழியிறப்பர், பந்து வகைகள், பொம்மைகள், பலூன்கள், காலணிகள் என்று எத்தனையோ வகையான பொருள்கள் இறப்பரிலிருந்து செய்யப்படுகின்றன. இன்று இறப்பரிலிருந்து பல பொருள்களை எமது நாட்டிலேயே தயாரிக்கிறார்கள். களனியாவில் தயர் - தியூப்புத் தொழிற் சாலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. நம் நாட்டுக் கைத்தொழில் களுக்குத் தேவைப்படுகின்ற இறப்பரின் தொகை நாளாந்தம் அதிகரித்து வருகின்றது. எமது நாட்டுத் தே வைக் கு வேண்டியது போக, எஞ்சிய பெருந்தொகைப் பகுதி முழுவதும் உலகச் சந்தைக்கு அனுப்பப்படுகின்றது. - பிரித்தானியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், சீனா போன்ற நாடுகளுக்கு எமது இறப்பர் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
இறப்பர் இலங்கையில் மட்டுமன்றி மலாயா , இந்தோ னேசியா, தாய்லாந்து, நைசீரியா, இலைபீரியா போன்ற நாடு களிலும் செய்கைபண்ணப்படுகின்றது. இவற்றுள் மலாயாவே அதிக இறப்பரை உண்டுபண்ணுகின்றது.
இந்நாடுகளுடனும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற வற்றிற் செய்யப்படும் செயற்கை இறப்பருடனும் உலகச் சந்தையில் இலங்கை கடுமையாகப் போட்டியிடவேண்டி யுள்ளது. இதனால் எமது இறப்பர் வியாபாரத்தில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்படுவது வழக்கம். இதனைச் சமாளிப்பதற்காக எமது அரசாங்கம் இறப்பர் உற்பத்தியைப் பெருக்கவும் உற்பத்திச் செலவைக் குறைக்கவும் பல திட்டங்களை வகுத்துச் செயற்படுத்திவருகிறது. இவற்றுள் * இறப்பர் புனர் நடுகைத் திட்டம்' என்பதுவும் ஒன்றாகும். இத்திட்டத்தின்கீழ்ப் பழைய மரங்களை வெட்டி வீழ்த்தி அதிக பலன் தரும் கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.
தென்னை
இலங்கையில் உள் நாட்டுத் தேவைக்காகவும் ஏற்றுமதி யின் பொருட்டும் தென்னை வளர்க்கப்படுகின்றது. தென்னை செழிப்பாக வளர்வதற்கு (1) 1500 ' க்குட்பட்ட உவர் மண் கலந்த தரையும், (2) 70/ - 80' வருட மழை வீழ்ச்சியும், (3) 80° ப வெப்பமும் வேண்டும்.
இத்தகைய புவியியல் நிலைமைகள் ஈரவலயத் தாழ்நிலத்தில் நன்கு காணப்படுகின்றன. அதனாலேயே இப்பகுதியில் தென்னை

இலங்கையின் வணிகப் பயிர்கள்
51
| யாழ்ப்பாணம்
பரிமோர்
TEE) 45ல்ெ
பெருமளவிற் பயிராகின்றது. இலங்கை முழுவதும் ஏறத்தாழ 10 இலட்சம் ஏக்கரில் தென்னை வளர்கின்றது. இதில் 2 பங்கு ஈரவலயத் தாழ்நிலத்திலுள்ளது. தென்னைச் செய்கையில் ஈரவல யத் தாழ்நிலம் வகிக்கும் முக்கியத்துவத்தை 20ஆம் படம் மேலும் உணர்த்துகின்றது.
ஈரவலயத் தாழ்நிலத் தில் தெற் கி லு ள் ள தங் காலை, மாத்தறைப் பகுதியி! லிருந்து கடற்கரையோர மாகக் களுத்துறை வரை தென்னைவலயம் ஒடுக்க மாகவுள்ளது. களுத்துறை யிலிருந்து வடக்காக இவ் வலயம் அகன்று செல்கி
திருகோணமலை றது. கொழும்பு, சிலாபம், குருநாகல் ஆகிய பட்ட ணங்களுக்கு இடைப்பட்ட முக்கோணவலயம் மிகவும் முக்கியமானது . பளை , திரு
மட்டக்களப்பு கோணமலை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளும் தென் னைச் செய்கைக்குப் பெயர் பெற்றவை.
எமது நாட்டிலிருந்து கொப்பறா, தேங்காயெண் ணெய், தேங்காய், தேங் காய்த்துருவல், தும்பு, பிண் ணாக்கு முதலிய தெங்குப்
அம்பாந்தோட்டை பொருள்கள் இந்தியா, பாக் கித்தான், பிரித்தானியா என்பவற்றுக்கும்சில ஐரோப்
படம் 20: இலங்கையின் பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி
தென்னை நிலங்கள் செய்யப்படுகின்றன.
உலகச் சந்தைக்கு இந்தோனேசியா, பிலிப்பைன் தீவுகள், பசுபிக் சமுத்திரத்திலுள்ள தீவுகள் என்பவற்றிலிருந்தும் தெங்குப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உலகச் சந்தை யில் தெங்குப் பொருள்களுக்குப் பெருந்தேவை இக்காலக்தில் ஏற்பட்டுள்ளது. எமது நாட்டில் இவற்றின் உற்பத்தியைப் பெருக்கினால் இவற்றை வெளி நாடுகளுக்கு விற்று அதிக வருவாயைப் பெறக்கூடியதாகவிருக்கும். எமது அரசாங்கம் தென்னைச் செய்கையை விருத்தி செய்யப் பல திட்டங்களை
நீர்கொழும்பு'
கொழும்பு
காலி;
'மாத்தறை

Page 35
52
எட்டாந்தரப் புவியியல்
வகுத்திருக்கின்றது. அவை (1) பழைய நிலங்களிலும் புதிய நிலங்களிலும் தென்னம்பிள்ளை களை நடுதல், "(2) தென்னை ஆராய்ச்சி நிலயத்திலிருந்து நடுகைக்கென்று சிறந்த இனத் தேங்காய்களை வழங்குதல், (3) தோட்டக்காரருக்குக் குறைந்த விலையிற் பசளை களைக் கொடுத்தல் என்று பலவகைப்படும்.
பிற பயிர்கள் 2 கொக்கோ : மத்திய மலை நாட்டிலே தேயிலைக்கு அடுத்தபடி யாக, கொக்கோ பிரதான பயிராக வுள்ளது. கொக்கோ | வுக்கு 70-80 ப வெப்பமும் 60-80/- மழைவீழ்ச்சியும் வேண்டும். மழை ஆண்டு முழுவதும் சீராகப் பெய்தல் வேண்டும். இவற்றிலும் மேலாக, காற்று வேகமாக வீசாத ஒதுக்கிடங்கள் அல்லது பள்ளத்தாக்குகள் கொக்கோ வளர்ச்சிக்கு வேண்டிய முக்கியமான ஒரு நிலைமையாகும். ஏனெனில், காற்று கொக்கோக் காய்களை அடித்து வீழ்த்தி விடும். கொக்கோ 1000 அடிக்கும் 2000 அடிக்கும் இடைப்பட்ட சரிவுகளிலேயே செழித்து வளருகின்றது.
இத்தகைய நிலைமைகள் அனைத்தும் கண்டி, மாத்தளை மாவட்டங்களிற் சிறப்பாகக் காணப்படுவதால் இம் மாவட் டங்களிற் கொக்கோ பெருமளவிற் பயிராகின்றது. காற் றொதுக்கில் உள்ள தும்பறைப் பள்ளத்தாக்கிலும் கொக்கோ நன்கு வளர்கின்றது.
கொக்கோப் பழங்களை உடைத்து அவற்றுள் இருக்கும் விதைகள் எடுக்கப்படுகின்றன. விதைகளை மூடியுள்ள சதைப் பாகம் புளிக்க வைப்பதனாற் கரைந்து விடுகின்றது. பின்னர் விதைகள் கழுவி எடுக் கப்பட்டு உலர்த்தப்படுகின்றன. உலர்த்திய விதைகள் தரமாக்கப்பட்டு உருமேனியா, யப்பான் , இரசியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நாடுகளிற் கொக்கோத் தூளிலிருந்து பானம், சொக்கி ளேற்று முதலியன தயாரிக்கப்படுகின்றன. 1966 ஆம் ஆண்டு 40,000 அந்தர் கொக்கோ ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
மிளகு - ஏலக்காய் : மிளகும் ஏலக்காயும் மலை நாட்டுக்கே உரிய பயிர் கள். இலங்கையின் பிற பகுதிகளில் இவை விளைவிக் கப்படுவதில்லை. மிளகு கண்டி, மாத்தளை, தும்பறைப் பள்ளத் தாக்கு ஆகிய பகுதிகளிற் பயிராகின்றது. மிளகு ஒரு கொடிப் பயிராகும். இது தேயிலை, கொக்கோத் தோட்டங்களில் நடப் பட்டுள்ள நிழல் மரங்களிற் படரவிடப்படுவது வழக்கம். ஏலக் காய் ஈரவலய மலை நாட்டில் 2000க்கு மேற் பட்ட இடங்களிற்

இலங்கையின் வணிகப் பயிர்கள்
53
செய்கை பண்ணப்படுகின்றது. நுவரெலியாவில் இது அதிகம் பயிராகின்றது. ஏலம் யோடானுக்கும், அராபியாவுக்கும் ஏற்றுமதியாகின்றது.
கறுவா : பண்டைக் காலத்திலிருந்தே ஈரவலயத் தாழ்நிலம் கறுவாச் செய்கைக்குப் பெயர் பெற்ற பகுதியாக இருந்து வந்திருக்கின்றது. வெப்பமும் ஈரலிப்புங் கொண்ட காலநிலை, மென்மையான மண் என்பன கறுவாவுக்கு ஏற்ற நிலைமைக ளாகும்.- நீர்கொழும்பு , களுத்துறை, காலி, மாத்தறை ஆகிய கரையோரப் பகுதிகளிற் கறுவா செய்கைபண்ணப்படு கின்றது. இலங்கையின் வேறு எந்தப் பகுதியிலும் கறுவா பயிராவதில்லை. முற்காலத்தில் - ஈரவலயத் தாழ்நிலத்தின் முக் கி ய ம ான ஒரு பயிராகக் கறுவா விளங்கியது. காலப் போக்கில் இது அதிக வருவாயை அளிக்காததினாற் - பல தோட்டங்கள் கைவிடப்பட்டன . இன்று ஏறத்தாழ 30,000 ஏக்கரிற் கறுவா பயிராகின்றது.)
கறுவா ஐக்கிய இராச்சியம், நெதலாந்து, அவுத்திரேலியா, பிரான்சு, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றது.
சித்திரனல்லா : மாத்தறை மாவட்டத்திலே சித்திரனல்லா என்னும் ஒருவகை எண்ணெய்ப் புல் பிரதானமாக விளைவிக்கப் படுகின்றது. இது 3-4! வரை வளர்வது. இதிலிருந்து பெறப் படும் எண்ணெய் ஐக்கிய இராச்சியத்துக்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றது. - இந்த எண்ணெய் நறு மணம் மிக்கது. சவர்க்காரம், வாசனைப் பொருள்கள் முதலிய அழகு சாதனங்களுக்கு நறுமணமூட்ட இது பயன்படுத்தப் படுகின்றது ..
பாக்கு : இது சப்பிரகமூவா மாகாணத்தின் கிராமத் தோட் டங்களில் அதிகம் பயிரிடப்படுகின்றது. பாக்கு இந்தியாவுக்கும் மாலைதீவுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. பெருந்தோட்டப் பயிர்கள்
இலங்கையிலே தேயிலை, தென்னை, இறப்பர், கொக்கோ என்பன பெருந்தோட்ட அளவிற் செய்கைபண்ணப்படுகின்றன. பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை என்பது - ஒரு குறிப்பிட்ட பயிரை, கூடிய உற்பத்திக்காகப் பெரிய அளவிற் சிறப்பாகச் செய்கை பண்ணுவதாகும். இப் பயிர்களிலிருந்து பெறப்படும் பொருள்களை விற்பனை செய்வதே முக்கியமான நோக்கமாகும். எனவே, பெருந்தோட்டப் பயிர் (1) உலகச் சந்கையில் விற்பதற் கென்று. (2) பரந்த நிலப்பரப்பில், (3) பெரும் முதலை விட்டு,

Page 36
54
எட்டாந்தரப் புவியியல்
(4) இக்காலமுறைகளைப் பின்பற்றி, (5) ஒரு மேற்பார்வையிற் செய்கை பண்ணப்படுவ தொன்றாகும். பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையில் ஒரு பொருளைக் குறைந்த செலவிற் கூடுதலாக உற் பத்தி செய்ய முடியும். இதனைச் சிறு சிறு தோட்டங்களில் ஒரு பயிரைச் செய்கைபண்ணுவதன்மூலம் சாதிக்கமுடியாது .
- பெருந்தோட்டப் பயிர்கள் நன்கு வளர்வதற்கு வேண்டிய புவியியல் நிலைமைகள் பற்றி முன்னர் படித்திருக்கின்றோம். அவற்றோடு: (1) கொழும்புத்துறைமுகம் அண்மையில் உள்ளமை, (2) சிறப்பான போக்குவரத்து வசதிகள், (3) திறமையான தொழிலாளர்கள் கிடைத்தமை என்பனவும் பெந்தோட்டப் பயிர்ச் செய்கைக்கு வாய்ப்பாகவுள்ள காரணிகளாகும்.
கொழும்பு உ ல க த் தி ன் பிரதான துறைமுகங்களுள் ஒன்றாகும். உலகின் பல பாகங்களிலுமிருந்து வணிகக் கப்பல்கள் கொழும்புக்கு வந்து போகின்றன. கொழும்புத் துறைமுகத் தின் பின்னணி நிலமாக ஈரவலயத் தாழ்நிலமும் மலை நாடும் அமைந்துள்ளன. ஈரவலயத் தாழ்நிலத்திலே - தென்னையும், இறப்பரும் பிரதான பயிர்களாகும், மலை நாட்டிலே தேயிலை யும், கொக்கோவும் பயிராகின்றன. இப் பிரதேசங்கள் பிரதான கற்பாதைகளாலும் இருப்புப்பாதைகளாலும் கொழும்புத் துறைமுகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இவற் றாற் பெருந் தோட்டப் பொருள்களைக் கொழும்புக்குக் குறைந்த செலவில் விரைவாகக் கொண்டுசெல்ல முடியும். உள்ளூரில் உலொறிகள் மூலமும் இறயில் மூலமும் பொருள்களை விநியோ கஞ் செய்யவும் பாதைகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.
பெருந் தோட்டப் பொருள்களாற் கிடைக்கும் வருமானமே எமது பொருளாதார வளத்தை நிர்ணயிக்கின்றது. இவ் வருமானம் நாட்டின் கைத்தொழில் வளர்ச்சிக்கும், பயிர்ச் செய்கை அபிவிருத்தித் திட்டங்களுக்கும் வேண்டிய உணவுப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கும் பயன்படுத்தப்படு கின்றது.
எமது ஏற்றுமதி வருமானம் என்றும் ஒரேயளவாக இருப்ப தில்லை. உலகச் சந்தையில் எமது பொருள்களுடன் பிற நாடு களின் பெருந்தோட்டப் பொருள்களும் போட்டியிடுகின்றன . இப்போட்டி காரணமாகப் பொருள்களின் விலைகளில் ஏற்ற இறக்கம் ஏற்படுவதுண்டு, பொருள்களின் விலை வீழ்ச்சியடையுங் காலத்தில் எமது வருமானமுங் குறைகின்றது. சில காலங் களிற் பெருந்தோட்டப் பிரதேசங்களில் நிலவும் பாதகமான வானிலை காரணமாக உற்பத்தி வீழ்ச்சியடைவதுமுண்டு. இத னாலும் எமது ஏற்றுமதி வருமானம் பாதிக்கப்படுகின்றது.

இலங்கையின் வணிகப் பயிர்கள்
55
இத்தகைய காரணங்களால் எமது வருமானம் வீழ்ச்சியுறாம் லிருக்கவும் அதனை மேலும் பெருக்கவும் அரசாங்கம் பல வழி களில் முயன்றுவருகின்றது. பெருந்தோட்டங்களிற் பயிர் வளர்ச்சியைப் பெருக்கி - உற்பத்தியை அதிகரிப்பதற்கு (1) அரசாங்க உதவிப் பணம் பெறுதல், (2) பசளையிடல், (3) தரையைப் பண்படுத்துதல், (4) அதிக பயனைத் தரும் உயர்ந்த இனப் பயிர்களைச் செய்கை பண்ணுதல், (5) பயிர் களுக்கு ஏற்படும் நோய்களைத் தடுத்தல், (6) ஆராய்ச்சிகளை நடத்துதல், (7) பயிர்ச்செய்கைபற்றி அரசாங்கம் தரும் அறிவுரைகளைப் பெறல் என்பன துணையாக அமைகின்றன. வெளியூர்களில் எமது பொருள் களை, குறிப்பாக அதிக வருவாயைத் தரும் தேயிலையை, நன்கு விளம்பரஞ் செய்து சந்தைப்படுத்துவதில் அரசாங்கம் அதிக அவதானமெடுத்தும் வருகின்றது.
பயிற்சிகள்
3. 92
1. ' பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை' என்றால் என்ன? 2. இலங்கையின் பிரதான பெருந்தோட்டப் பயிர்கள்
நான்கு கூறுக. தேயிலை வளர்ச்சிக்கு வேண்டிய நான்கு பிரதான புவி
யியல் நிலைமைகள் கூறுக. 4. இலங்கையில் தேயிலை பயிராகும் ஐந்து பிரதான இடங்கள்
எழுதுக. 5. தேயிலை ஏற்றுமதி செய்யப்படும் ஐந்து நாடுகள் கூறுக. 6. தேயிலையை விளைவிக்கும் வேறு நாடுகள் ஐந்து கூறுக. 7. இறப்பர்ச் செய்கைக்கு வேண்டிய புவியியல் நிலைமை கள்
நான்கு எழுது க. 8. இறப்பர் எவ்விடங்களில் அதிகம் பயிராகின்றது ? 9. எமது இறப்பரை வாங்கும் நாடுகள் மூன்றினைக் கூறுக. 10. ' இறப்பர் புனர் நடுகைத் திட்டம்' என்றால் என்ன ? 11. தென்னை - செழிப்பாக வளர்வதற்கேற்ற புவியியல்
நிலைமைகள் மூன்று கூறுக. 12. தென்னை முக்கோண வலயம் எப் பட்டணங்களுக்கிடை
யில் அமைந்துள்ளது ?

Page 37
56
எட்டாந்தரப் புவியியல்
13. இலங்கையிலிருந்து ஏற்றுமதியாகும்
ஆறு தெங்குப் பொருள்கள் கூறுக. 14. தென்னைச் செய்கையை விருத்திசெய்ய அரசாங்கம் வகுத்
துள்ள திட்டங்களுள் மூன்றினைக் கூறுக 15. பின்வருவன ஒவ்வொன்றும் இலங்கையிற் பயிராகும்
-ஒவ்வொரு இடங்கள் எழுதுக.
(1) கொக்கோ, (ii) கறுவா, (iii) ஏலம், (iv) பாக்கு: 16. இலங்கையிலிருந்து ஐக்கிய இராச்சியம் இறக்குமதி செய்
யும் பெருந்தோட்டப் பொருள்கள் மூன்று தருக. 17. உரூமேனியா, யப்பான், இத்தாலி ஆகிய நாடுகளுக்கு
ஏற்றுமதி செய்யப்படும் ஒரு பெருந்தோட்டப் பொருள்
யாது ? 18. தோட்டப் பொருள் வியாபாரத்தை இலகுவாக்கும்
நிலைமைகள் மூன்று தருக. 19, எமது ஏற்றுமதி வருமானத்தைச் சில சமயங்களிற் பாதிக்
கும் இரு காரணிகள் யாவை? 20. பெருந்தோட்டப் பொருள் உற்பத்தியை அதிகரிப்பதற்கு
மேற்கொள்ளவேண்டிய வழிவகைகள் ஏழு கூறு க

அலகு 7
இலங்கையின் விளைபொருள்கள்
எமது நாட்டின் முக்கிய பயிர்களான தேயிலை, இறப்பர், தென்னை, நெல் என்பவை மட்டுமன்றி இன்னும் பல பயிர்கள் சிறிய அளவிற் பயிராக்கப்படுகின்றன. இவை பிரதானமாக உள் நாட்டு உபயோகத்துக்கென்றே விளைவிக்கப்படுகின்றன. இதனால் உணவுப் பொருள்களுக்காக வெளிநாட்டுக்கு அனுப்பப் படும் பணத்தின் பெரும்பகுதி எமது நாட்டிலேயே தங்கு கின்றது .
மரக்கறிவகைகள் : எமது நாட்டின் புவியியல் தன்மைகளுக் கிணங்கப் பல்வேறுபட்ட மரக்கறிவகைகள் நாடுமுழுவதும் ஆங் காங்கு செய்கைபண்ணப்படுகின்றன. இவை சில இடங்களில் தோட்டச் செய்கையாகவும் பல பகுதிகளில் வீட்டுத்தோட்டச் செய்கையாகவும் மேற்கொள்ளப்படுகின்றன. மலை நாட்டுப் பகுதியில், குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில், - கறற்று, பீற்றுக் கிழங்கு, கோவா போன்றவை பெரிய தோட்டங்களிற் பயிராக்கப்படுகின்றன. யாழ்ப்பாணக் குடாநாட்டில் தக்காளி, பாகல், கத்தரி, புடோல், கிழங்குவகைகள் முதலியன தோட்டப் பயிர்களாகவுள்ளன. தக்காளி அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அதிக அளவிற் பயிரிடப்படுகின்றது. உலர்ந்த வலயத்தின் பிறபகுதிகளில் பல்வேறுவசுைப்பட்ட மரக்கறிகள் வீட்டுத் தோட்டங்களில் உண்டாக்கப்படுகின்றன. வருங் காலத்தில் எம் நாட்டு மரக்கறிவகைகளை வெளி நாடுகளில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவிருக் கின்றன.
பழவகைகள் : எமது நாட்டிற் பலவகையான பழமரங்கள் வளர்க்கப்படுகின்றன. பிபிலை, மொனராகலை போன்ற பகுதி களில் தோடை முக்கியத்துவம் பெற்றுவருகின்றது. யாழ்ப் பாணக் குடா நாட்டிலும் கிங்குராக்கொடையிலும் மாம்பழச் செய்கை காணப்படுகின்றது. அன்னாசி தென்மேற்குச் சம வெளியில் நன்கு பயிராகின்றது . வாழை யாழ்ப்பாணக் குடா நாட்டிலும் தென்மேற்குச் சமவெளியிலும் பெருமளவிற் செய்கை பண்ணப்படுகின்றது. இப்பழங்கள் தகரங்களில் அடைக்கப் பட்டும் சாறாகத் தயாரிக்கப்பட்டும் வெளி நாடுகளுக்கு அனுப் பப்படுகின்றன. நாரகன்பிட்டி என்னும் இடத்தில் பழங்களைத் தகரங்களில் அடைக்கும் தொழிற்சாலை ஒன்றுள்ளது.

Page 38
58
எட்டாந்தரப் புவியியல்
பிற பயிர்கள் : அண்மைக்காலங்களில்,
எமது நாட்டில் விருத்தி செய்யப்பட்டுவரும் சில பிரதான உப உணவுப் பயிர் களும் அவை பயிராகும் முக்கியமான இடங்களும் பின்வருமாறு :
(1) உருளைக்கிழங்கு
- நுவரெலியா மாவட்டம்
யாழ்ப்பாண மாவட்டம் (2), வெண்காயமும் மிளகாயும் - உலர்வலயப் பிரதேசம் (3) வேர்க்கடலை
-- உலர்வலயப் பிரதேசம் (4) பயறும் பயற்றங்காயும் -- உலர்வலயப் பிரதேசம்
அதிக உணவுற்பத்தி இயக்கத்தின் முயற்சியின் பயனாக, இவ் விளைபொருள்களின் உற்பத்தியில் துரித முன்னேற்றங் காணப்படுகின்றது. விளைவைப் பெருக்கி உணவில் எமது நாட்டைத் தன்னிறைவு பெறச் செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
சிறு கைத்தொழிற் பயிர்கள் : கரும்புச் செய்கை இலங்கை யில் முக்கியத்துவம் பெற்று வருகின்றது. கரும்புக்கு வேண்டிய காலநிலையும் மண் வளமும் உலர்வலயத் தாழ்நிலத்திலுள்ளன. 750-800 ப. வெப்பநிலையும் 60" மழைவீழ்ச்சியும் அழுகிய பொருட் சத்து நிறைந்த ஈரக்களி மண்ணும் கரும்பு நன்கு பயிராவ தற்கு ஏற்ற புவியியல் நிலைமைகளாகும். கல்லோயா, கந்தளாய் போன்ற பிரதேசங்களில் கரும்புச் செய்கை இப்பொழுது நடைபெறுகின்றது. கரும்பிலிருந்து சீனி தயாரிக்கப்படுகின் றது. சீனித் தொழிற்சாலைகள் கல்லோயாவிலும் கந்தளா யிலும் உள்ளன. இப்போதைய கரும்பு உற்பத்தி இத் தொழிற் சாலைகளின் தேவைக்குப் போதாமல் இருப்பதனால் அதிக நிலப்பரப்பில் கரும்புச் செய்கை நடைபெற விருக்கின்றது.
பருத்தி அம்பாந்தோட்டை, மொனராகலை மாவட்டங்களில் விளைவிக்கப்படுகின்றது. பருத்திப் பஞ்சு வெள்ளவத்தை நெசவாலைக்குப் பயன்படுத்தப்படுகின்றது.!
'புகையிலை * உலர் வலயத்திற் பரந்து காணப்படுகின்றது. யாழ்ப்பாணம், அங்குராங்கத்தை போன்ற பகுதிகளில் புகை யிலை அதிகமாகச் செய்கை பண்ணப்படுகின்றது. யாழ்ப்பாணக் குடா நாட்டிலுள்ள செம்மண் நிலத்தில் ஏறத்தாழ 6000 ஏக்கர் நிலத்தில் புகையிலைச் செய்கை நடைபெறுகின்றது. செய்கை பண்ணப்படும் புகையிலை இனங்களுள் 'தச்சன் '. * நரம்பன் ' என்பவை முக்கியமானவை. தச்சன் புகையிலை சுருட்டுவதற்கும் நரம்பன் புகையிலை உண்பதற்கும் பயனாகின்றன. சுருட்டுக் கைத்தொழில் எமது நாட்டில் முக்கியமான ஒரு தொழிலாகும்.

இலங்கையின் விளைபொருள்கள்
59
-- கால்நடை வளர்ப்பு : எமது நாட்டில் கால்நடை வளர்ப் பிலும் முன்னேற்றங் காணப்படுகின்றது. முக்கியமாகப் பால் மாட்டுப் பண்ணை கள் புல்வளர்ச்சியுள்ள பல இடங்களிற் பெருகி யுள்ளன. அம்பேவலை, போபந்தலாவை, + பொல நறுவை, இரிதியகமம் என்னும் இடங்களில் மாட்டுப் பண்ணைகள் காணப்படுகின்றன. தம்பன்கடவை என்னும் இடத்தில் தகரப் பாற் தொழிற்சாலை ஒன்றுள்ளது. வெலிசறையில் பால்மாவைத் தகரத்தில் அடைக்கும் ஒரு தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது. இதற்கு வேண்டிய பால்மா வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. இதுவே இலாக்ஸ்பிறே' என்ற பெயரில் விற்கப்படும் ஆடைப் பால்மாவாகும். ஆடைப் பால் மாவை எமது நாட்டிலேயே தயாரிக்கும் பொருட்டு அம்பேவலையில் ஒரு பால்மாத் தொழிற்சாலை நிறுவப்படவுள்ளது. * பால், வெண்ணெய், கட்டிப்பால், உலர்த்திய ஆடைப்பால்மா ஆகிய பாற்பண்ணைப் பொருள்களை 'தேசீய பாற்சபை ' இலங்கை முழுவதும் விற்பனை செய்துவருகின்றது.
இவ்விதம் காய்கறிவகைகள், பழவகைகள், கிழங்குவகை கள் முதலிய உப உணவுப்பொருள் உற்பத்தியிலும் பாற் பண்ணைப்பொருள் தயாரிப்பிலும் எமது நாடு வேகமாக முன்னேறி வருகின்றது.
பயிற்சிகள்
1. பின்வரும் பிரதேசங்களிற் செய்கைபண்ணப்படும் காய்
கறிவகைகளை அட்டவணைப்படுத்துக : 4 (அ) உலர்வலயத் தாழ்நிலம் (ஆ) ஈரவலயத் தாழ்நிலம் (இ) மலை நாடு.
2. -
பின்வரும் பழங்கள் பெறப்படும் இடங்களை அவற்றுக்கு
நேரே எழுதுக
(அ) தோடை :
(ஆ) மாம்பழம் :
(இ) அன்னாசி ;
(ஈ) வாழை : ...

Page 39
60
எட்டாந்தரப் புவியியல்
3. உருளைக்கிழங்கு எம்மாவட்டங்களில் செய்கைபண்ணப்படு
கின்றது? யாழ்பாணக்குடா நாட்டிற் பெறப்படும் ஐந்து கிழங்கு வகைகள் கூறுக. எமது நாட்டுக் கரும்புச்செய்கை அல்லது புகையிலைச்
செய்கைபற்றி ஒரு சிறு கட்டுரை எழுதுக. 6!
உமது பாடசாலைப்பகுதியில் மரக்கறித் தோட்டப் பயிர்ச் செய்கையிலீடுபட்டிருக்கும் ஒருவரைப்பற்றி உமது நண்பர்
ஒருவருக்குக் கடிதம் எழுதுக.. 7. பின்வரும் இடங்களிற் காணப்படும் தொழிற்சாலைகள்
யாவை?
(1) நாரகன் பிட்டி, (2) கந்தளாய், (3) வெலிசறை. 8, பின்வரும் தொழிற்சாலைகள் அமைந்துள்ள இடங்கள்
"யாவை?
(1) நெசவுத் தொழிற்சாலை, (2) த கரப்பாற் தொழிற் சாலை.
9. இலங்கையிற் பாற்பண்ணைகள் காணப்படும் நான்கு
இடங்கள் கூறுக.
10. எம் நாட்டில் தயாரிக்கப்படும் பாலுணவுப் பொருள்
களின் பெயர் களையும் அவை தாயாரிக்கப்படும் இடங் களின் பெயர் களையும் எழுது க.

அலகு 8 பருத்திப் பயிர்ச்செய்கை
வெப்பவலய நாடுகளில் வாழும் மக்களின் உடைகளைத் தயாரிப்பதற்குப் பருத்தித் துணிகள் அதிகமாகத் தேவைப் படுகின்றன. இலங்கை வெப்பவலயத்திலுள்ள ஒரு நாடாகும். எமது நாட்டு மக்களுக்கு வேண்டிய பருத்தித் துணிகளை எமது நாட்டிலேயே தயாரிப்பதற்கு வேண்டிய முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. பல இடங்களிற் கைத்தறி நிலை யங்கள் அமைத்து வேட்டி, சேலைகள் அடித்தல், குடிசைக் கைத்தொழிலாக நடைபெற்று வருகின்றது. இரு பெரும் நெசவாலைகள் வெள்ளவத்தையிலும் வியாங்கொடையிலும் உள்ளன. குடிசைக் கைத்தொழில் நிலையங்களிலும் பெரிய நெசவாலைகளிலும் தயாரிக்கப்படும் துணிகளுக்கு வேண்டிய நூல் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது'. நூல் பருத்திப் பஞ்சிலிருந்து நூற்கப்படுகின்றது. நெசவுத் தொழிலுக்கு முக்கியமான இம் மூலப் பொருளை உற்பத்தி செய்வதற்காக எமது நாட்டிலேயே பருத்திச் செய்கை
ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை மாவட்டத்தில் . ஏறத்தாழ 3000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் பருத்தி செய்கைபண்ணப்படுகின்றது. இங்கு பெறப்படும் பருத்தி முழுவதும் வெள்ளவத்தை நெசவாலைக்கு விற்கப்படுகின்றது.
இவ்விதம் நெசவுக் கைத்தொழில் எமது நாட்டில் துரித மாக முன்னேறிவருகின்றது. ஆயினும் நாட்டின் முழுத் தேவையையும் பூர்த்திசெய்யக்கூடிய அளவுக்கு இக் கைத். தொழில் இன்னும் விருத்தியாகவில்லை. அதனால் எமக்கு வேண்டிய உடுபுடைவைகள், சீத்தைத் துணிவகைகள், தயார் செய்யப்பட்ட உடுப்புகள் முதலியன இறக்குமதி செய்யப் படுகின்றன. இவை இந்தியா, சீனா, யப்பான், சோவி யத்து இரசியா, செக்கோசிலவேக்கியா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து பெறப்படுகின்றன. இந் நாடுகளுள் இங்கி லாந்தும் யப்பானும் இடைவெப்பவலயத்தில் அமைந்துள்ளன. பருத்தி வளர்வதற்கேற்ற புவியியல் நிலைமைகள் இந்நாடு களில் இல்லை. ஆயினும் நெசவுக்கைத்தொழில் இவ்விரு நாடு களிலும் நன்கு விருத்தியாகியுள்ளன. நெசவுக் கைத்தொழி லுக்கு வேண்டிய மூலப்பொருள்களை வெப்பவலய நாடுகளி லிருந்து இங்கிலாந்தும் யப்பானும் பெற்றுக்கொள்ளுகின்றன .
"பருத்திச் செய்கைக்கு வேண்டிய நிலைமைகள் : - பருத்தி அயன மண்டலத்திலும் அதன் அயற் பிரதேசங்களிலும் நன்கு

Page 40
62
எட்டாந்தரப் புவியியல்
வளர்கின்றது. கடும் வெப்பமோ - அதிக மழையோ இதன் வளர்ச்சிக்குக் கூடாது. மழை வீழ்ச்சி வருடத்தில் 23" - 60/' வரை இருந்தாற் போதுமானது. காய் முற்றி வெடிக்குங் காலத்தில் மழை பெய்தால் பஞ்சுகள் பழுதாகிவிடும். ஈரத்தை நன்கு வைத்துக்கொள்ளக்கூடிய கருங்களி மண்ணிற் பருத்தி நன்கு வளரக்கூடியது. மழை குறைவாகவுள்ள காலங்களில் நீர்ப்பாசனஞ் செய்தல்வேண்டும்.
பருத்தி விளையும் நாடுகள் : அ. ஐ. நா., எகிப்து, இந்தியா, ' சீனா, பிறேசில் ஆகிய நாடுகளிற் பருத்தி நன்கு பயிராகின் றது. இரசியா, நைசீரியா, மேற்கிந்திய தீவுகள் முதலியன பருத்தி விளையும் பிற நாடுகளாகும்.
அ. ஐ. நா. வில் ஏறத்தாழ 20,00,000 சதுரமைல்களுக்குத் தொடர்ச்சியாகவுள்ள ஒரு பெரும் பருத்திப் பிரதேசம் உள் ளது. இது சோளப்பிரதேசத்துக்குத் தெற்கில் பரந்திருக்கின் றது. நல்ல முறையிற் பசளையிட்டு நிலத்தைப் பண்படுத்துவத னாலும் சிறப்பான வேளாண்மை முறைகளைக் கையாள்வத னாலும் நியாயமான அளவு கூடுதலான உற்பத்தி பெறப்படு கின்றது. இயந்திரத்தினால் மூன்று அடி இடைவெளியில் தோண்டப்படும் சிறிய குழிகளிற் பருத்தி விதைகள் தாழ்க்கப் படுகின்றன. இவ்வாறு வரிசையாகப் பயிரை வளர்க்கும் முறை பயிர்களைச் சேதப்படுத்தாது இயந்திரங்களைப் பயன்படுத்த வசதியாகவிருக்கின்றது. களை பிடுங்கவும் பஞ்சு பறிக்கவும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆயினும் பருத்தி வெவ்வேறு நாட்களில் வெடிப்பதாற் பல இடங்களிற் கையி னாலேயே பறிப்பு நடைபெறுகின்றது. இவ்வேலை இரண்டு மூன்று மாதங்கள் வரை நீடிக்கும். சில பகுதிகளில் அரி வண்டுகள் பூக்களைச் சேதப்படுத்துவதுண்டு. அரிவண்டுகளைக் கொல்வதற்கு நச்சு மருந்து கள் தூவப்படும். பெரிய கமங்
உலகின் பருத்தி , விளைவிக்கப்படும் பிரதேசங்கள் -1
படம் 21

பருத்திப் பயிர்ச்செய்கை
63
களில் இவ் வேலை விமானங்களினாற் செய்யப்படுகின்றது. பறிக்கப்பட்ட பஞ்சிலிருந்து விதைகள் கடைந்தெடுக்கப்படு கின்றன. பின்னர் பஞ்சு சிப்பங்களாகக் கட்டப்பட்டு நெச வாலைகளுக்கு அனுப்பப்படுகின்றது. பருத்தி விதைகள் மிருக உணவாகவும் எருவாகவும் பயன்படுத்தப்படுகின்றன . பஞ்சு உற்பத்தியில் அ. ஐ. நா. உலகத்தில் முதலிடம் வகிக்கின்றது.
எகிப்தில் உயர்ந்த இனப் பருத்தி செய்கைபண்ணப்படுகின் றது. எகிப்தில் பருத்தி வேளாண்மைக்குப் பின்வரும் நிலைமை களும் வேளாண்மை முறைகளும் வாய்ப்பாகவுள்ளன : (1) நைல் ஆற்றினால் வளப்படுத்தப்படும் நல்ல ஈரக்களி. மண், (2) அளவான வெப்பநிலை, (3) உலர்வான காற்று (இக் காற்றினால் அரிவண்டுகளாலும் நோய்களாலும் ஏற்படக் கூடிய சேதம் குறைக்கப்படுகின்றது), (4) செறிவு வேளாண்மை, (5) ஏற்ற கால நீர்ப்பாசனம், (5) கடலுக்கு அண்மையாக இருத்தல். இத்தகைய காரணங்களினால், அ. ஐ. நா. விலும் பார்க்க இங்கு ஏக்கருக்கான உற்பத்தி கூடுதலாகவுள்ளது.
இந்தியாவிலே தக்கண மேட்டு நிலத்திலும் மத்திய கங்கைப் பள்ளத்தாக்கிலும் பருத்தி விளைவிக்கப்படுகின்றது. தக்கண மேட்டுநிலத்தின் கருங்களி மண் பருத்திச் செய்கைக்கு மிகவும் ஏற்றது. இங்கு மழை குறைவாக இருப்பதனாற் பருத்தி நிலங் களுக்கு நீர்ப்பாய்ச்சுவது வழக்கம். அ. ஐ. நா. வைப் போல் இந்தியாவின் கமங்கள் பெரியனவன்று. வேலைகள் கையினாற் செய்யப்படுகின்றன. ஆயினும் பஞ்சைக் கடைவதற்குங் கட்டுவ தற்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எகிப்திலும் இந்தியாவிலும் பருத்தி விதைகளிலிருந்து எண்ணெய் பெறப் படுகின்றது .
சோவியத்து இரசியாவில் காக்கேசு மலைகளின் இரு பகுதி களிலுமுள்ள சமவெளிகளிற் பருத்தி செய்கைபண்ணப்படு கின்றது. உலகத்தில் அ. ஐ. நா. வுக்கு அடுத்த பெரும் பருத்தி உற்பத்தி நாடு சோவியத்து இரசியாவாகும்.
சீனாவின் வடக்குப்பகுதியிலும் மத்திய பகுதிகளிலும் பருத்திச் செய்கை நடை பெறுகின்றது. குவாங்கோ, யாங்ரிசிக் கியாங் முதலிய ஆற்றுப்பகுதிகளிலுள்ள வளமான வண்டல்மண் பருத்திக்கு மிக ஏற்றதாகவுள்ளது.
இக்காலத்தில் - நைலோன், தெத்திரோன் போன்ற செயற்கைத் துணிகள் உலகச் சந்தையின் கவனத்தை தீர்த் துள்ளன. இதனாற் பருத்தித் துணிக்குப் பெரும் போட்டி யேற் பட்டுவருவதும் கவனிக்கற்பாலது.

Page 41
64
எட்டாந்தரப் புவியியல்
பயிற்சிகள்
1. எமது நாட்டில் எவ்விடங்களில் நெசவாலைகள் உள்ளன?
2.
அம்பாந்தோட்டை பருத்திப் பயிர்ச்செய்கைக்கேற்ற பிரதேசமாகக் காணப்படுவதற்குரிய காரணம் யாது?
5. எமது நாட்டுக்குப் பருத்தித் துணிகளை அனுப்பும் ஐந்து
நாடுகள் கூறுக.
4. அ. ஐ. நா. வில் பருத்திச் செய்கைபற்றி ஐந்து
வசனங்கள் எழுதுக.
எகிப்தில் பருத்தி வேளாண்மைக்கு வாய்ப்பாக இருக்கும் ஆறு நிலைமைகள் எழுதுக .
6. கோடிட்ட இடங்களை ஏற்ற சொற்களால் நிரப்பி
எழுதுக: (i) தக்கண மேட்டு நிலத்தின்
மண் பருத்திச் செய்கைகக்கு மிகவும் ஏற்றது.
பருத்திப் பூக்களை
சேதப்படுத்துவ துண்டு. (iii) சோவியத்து இரசியாவில்
இரு பகுதிகளிலுமுள்ள சமவெளிகளிற் பருத்தி பயி
ராகின்றது. (iv) பருத்தி விதைகள் மிருக உணவாகவும் எருவாகவும்
எடுப்பதற்கும் பயன்படு கின்றது.
7. உலகப்பட மொன்றிற் பின்வருவனவற்றைக் குறித்துப்
பெயரிடுக: (1) உலகில் பருத்தி விளைவிக்கப்படும் இடங்கள். (2) உலகில் நெசவுக் கைத்தொழில் நடைபெறும் பிரதான
- ஐந்து இடங்கள்.. (3) பருத்தியை ஏற்றுமதி செய்யும் மூன்று துறைமுகங்கள். (4) பருத்தித்துணியை ஏற்றுமதி செய்யும் மூன்று துறை
முகங்கள்.

இரண்டாம் பருவம்
அலகு 1 காலநிலையை நிர்ணயிக்கும்
காரணிகள்
காலநிலை மனிதனுடைய வாழ்க்கையிற் பெருஞ் செல்வாக்கைக் கொண்டிருக்கின்றது. அவன் இருக்கும் வீடு, செய்யுந் தொழில், உண்ணும் உணவு, உடுக்கும் உடை முதலியன எவ்வாறு இருக்கவேண்டுமென்பதைக் காலநிலை பெரிதும் நிர்ணயிக்கின்றது.
பயிர்ச்செய்கை இடத்துக்கிடம் வேறுபடுவதை நாம் அறி வோம். அதற்குரிய காரணம் காலநிலையாகும். காலநிலை வேறு பாட்டுக்கேற்பவே உலகிற் பயிர்ப் பரம்பல் அமைந்துள்ளது.
வெப்பநிலை, காற்றழுக்கம், காற்று கள், மழைவீழ்ச்சி என்பன காலநிலையை நிர்ணயிக்கும் காரணிகளாகும். எனவே காலநிலைப் படிப்பு என்பது இக் காரணிகள் பற்றிய படிப்பாகும். வெப்பநிலை
காலநிலையை நிர்ணயிக்கும் காரணி களுள் வெப்பபநிலை மிகவும் முக்கியமானது. ஏனென்றால் காற்றழுக்கம், காற்றுகள், மழைவீழ்ச்சி முதலிய பிற காலநிலைக் காரணிகளின் அவ்வப் போதைய நிலைமைகளும் வெப்பநிலையிலேயே பெரிதும் தங்கி யுள்ளன.
புவி, அதன் வெப்பத்தைச் சூரியனிலிருந்து பெறுகின்றது. இவ் வெப்பம் புவியின் மேற்பரப்பில் எங்கும் ஒரேயளவாக இருப்பதில்லை. வெப்பநிலைப் பரம்பலின் வேறுபாட்டுக்குப் பல காரணிகள் உள்ளன. அவற்றுள் (1) அகலக்கோட்டுத் தூரம் (2) தரைத்தோற்றம் என்பன பிரதானமானவை.
அகலக்கோட்டுத் தூரம் : அகலக்கோட்டுத் தூரம் நோக்கி வெப்பநிலை வேறுபடுகின்றது. இதற்குக் காரணம் புவி உருண்டை யாக இருப்பதுவும், 23;° சரிந்து ஒரே சமாந்தர நிலையிற் சூரியனைச் சுற்றி வருவதுமாகும். இதனால் சூரியன் எப்பொழுதும் கடகக்கோட்டுக்கும் மகரக் கோட் டு க் கு மிடையிலேயே
புவி. VIII -5

Page 42
66
எட்டாந்தரப் புவியியல்
காலத்துக்குக்காலம் மாறி மாறி உச்சங் கொடுக்கின்றது . இக்கோடுகளுக்கிடையில் சூரியனின் கதிர்கள் குத்தாக விழு கின்றன .அதனால் இப்பகுதிகளில் வெப்பங் கூடுதலாகவுள்ளது. முனைவுப் பகுதிகளிற் கதிர்கள் சரிவாக விழுவதனால் பரம்பலா கின்றன. இதனால் முனைவுப் பகுதிகளில் வெப்பங் குறைவாக வுள்ளது. மேலும், புவியின் மத்திய பகுதி சூரியனுக்குக் கிட்டவாகவும் முனை வுப் பகுதிகள் எட்டவாகவும் இருக்கின்றன.
இத்தகைய காரணங்களினால் வெப்பம் மத்தியகோட்டுப் பகுதிகளில் கூடுதலாகவும், மத்தியகோட்டிலிருந்து முனைவை நோக்கிச் செல்லச் செல்லக் குறைவாகவுமுள்ளது. இவ் வெப்பப் பரம்பலை யொட்டிப் புவியைப் பின்வரும் மூன்று வானியலுக்குரிய வலயங்களாகப் பிரிக்கலாம் : .
1. வெப்ப வலயம் அல்லது அயனமண்டலம் 2. இடைவெப்ப வலயம்
குளிர் வலயம்.
3 :
குளிர் வலயம்
66}'வ
இடைதெபடி வலயம்
23}வ
வெப்ப வலயம்
மத்தியகோடு
வெப்ப வலயம்
மகரக்கோடு
23;•G
இடைவெப்பு-வலம்
66!தெ
குளிர் வலயம் படம் 22 : வானியல் வலயங்கள் |
வெப்ப வலயம் கடகக்கோட்டுக்கும். மகரக் கோட்டுக்கு மிடையில் அமைந்துள்ளது. இடைவெப்ப வலயம் வடக்கில்

காலநிலையை நிர்ணயிக்கும் காரணிகள்
67. கடகக்கோட்டுக்கும் ஆட்டிக்கு வட்டத்துக்கு மிடையிலும் தெற்கில் மகரக்கோட்டுக்கும் அந்தாட்டிக்கு வட்டத்துக்கு மிடையிலும் உள்ளன. குளிர் வலயம் வடமுனைவிலிருந்து ஆட்டிக்கு வட்டம் வரையும் தென்முனைவிலிருந்து அந்தாட்டிக்கு வட்டம் வரையும் உள்ளது .
2. தரைத்தோற்றம்: வெப்பநிலை உயரம் நோக்கியும் வேறு படுகின்றது. வளிமண்டலம் கீழ்ப்படையிற் செறிவுற்றிருப்ப தாலும் புவிமேற்பரப்புடன் தொடர்புடையதாக இருப்ப தாலும் தாழ்நிலங்களில் வெப்பநிலை கூடுதலாகவுள்ளது. மேற் படைகளில் வளிமண்டலம் விரிந்து ஐதாக இருப்பதனால் வெப்ப நிலை குறைவாக இருக்கின்றது. உயரம் நோக்கி ஒவ்வொரு 300க்கும் 1°ப வெப்பநிலை சராசரி குறைகின்றது. இதனாலேயே இலங்கை வெப்ப வலயத்திலுள்ளபோதிலும், அதன் மலை நாட்டுப் பகுதியில் வெப்பம் குறைவாகவிருக்கின்றது.
- 1108
வெப்பமானி : வளியின் வெப்பநிலையை அளப்ப தற்கு வெப்பமானி என்னுங் கருவி பயன்படுத்தப் படுகின்றது. வெப்பமானிகள் பலவகைப்படும். புவியியலிற் பரனைற்று வெப்பமானியே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. பரனைற்று அளவையில் உறைநிலை 320 ஆகவும் கொதிநிலை 2120 ஆகவு மிருக்கும். வெப்பங் கூடினால் வெப்பமானிக்குள் இருக்கும் திரவம் விரிந்து மேல் எழும்; குறைந்தால் சுருங்கிக் கீழ்விழும்.
படபபடட்ட் பட்டப்பட
168
180
160
சமவெப்பக் கோடுகள் : ஓர் இடத்தின் அல்லது ஒரு நாட்டின் வெப்பநிலையை வெப்பமானியால் அளந்தறிந்து படங்களிற் சமவெப்பக் கோடுக ளாற் காட்டலாம். சமவெப்பக்கோடு என்பது. ஒரேயளவான வெப்ப நிலையுள்ள இடங்களைத் தொடுத்துச் செல்லுங் கோடாகும். (28 ஆம் பக்கம் பார்க்க.)
அமுக்கம்
வளிமண்டலம் நிறையுள்ளது. கடல் மட்டத் தில் ஒரு சதுர அங்குல வளிமண்டல அமுக்கம் 15 இறாத்தலாகும். ஆனால் மேற்படையில் வளி
படம் 23: விரிவுற்று இருப்பதால் அமுக்கம் குறைவாக பரனைற்று வுள்ளது.
வெப்பமானி,

Page 43
68
எட்டாந்தரப் புவியியல்
வளிமண்டல அமுக்கம் வெப்பநிலைக்கேற்றவாறு வேறுபடு கின்றது. வெப்பம் கூடுதலாகவுள்ள பகுதிகளில் அமுக்கம் குறைவாக இருக்கும். ஏனெனில் செறிவாகவுள்ள வளி வெப்பத் தினால் விரிவடைகின்றது. இதனால் அமுக்கமும் குறைகின்றது. குளிர் மிகுந்த பகுதிகளில் வளி விரிவடையாது. ஒன்றுசேர்ந்து அடர்த்தியாவதினால் பாரமாகவுள்ளது. இதனால்தான் வெப்ப வலயங்களில் அமுக்கம் குறைவாகவும் குளிர் வலயங்களில் அமுக்கம் கூடுதலாகவும் காணப்படுகின்றது .
உலகின் அமுக்கவலயங்கள் : அமுக்கம் கூடுதலாகவுள்ள பிர தேசம் உயரமுக்க வலயம் என்றும் குறைவாகவுள்ள பிரதேசம் தாழமுக்க வலயம் என்றும் அழைக்கப்படும்.
மத்தியகோட்டுப் பகுதியில் ஒரு தாழமுக்க வலயம் உண்டு. இப் பகுதியில் வெப்பநிலை கூடுதலாக இருப்பதனாற் காற்று விரிவடைந்து மேலே செல்லச்செல்ல அமுக்கம் குறைவாக வுள்ளது." இத் தாழமுக்க வலயம் அமைதிவலயம் என்றும் அழைக்கப்படும்.
வடக்காகவும் தெற்கா கவும் 35° அகலக்கோட்டுப் பகுதி யில் உயரமுக்க வலயங்கள் உள்ளன. மத்தியகோட்டில் சூட டைந்து விரிவுற்று மேலெழும் வளி, வெப்பங்குறைவான அயன வயற் பிரதேசத்தில் தேங்குவதே இதற்குரிய காரணமாகும்.
வடவரைக் கோளத்திலும் தென்னரைக் கோளத்திலும் 60° அகலக்கோட்டுப் பகுதியில் தாழமுக்க வலயங்கள் நிலவு கின்றன. புவியின் சுழற்சியால் ஏற்படும் முனைவுச்சுழி இப் பகுதியிலுள்ள வளியை அள்ளி எடுப்பதே இத் தாழமுக்கத் துக்குக் காரணமென்பர். |
முனைவுப் பகுதிகளில் உயரமுக்கங்கள் உள்ளன. கடுங் குளிர் காரண மாக வளி அடர்த்தியாவதே இதற்கான காரண மாகும்.
பார்மானி : வளிமண்டல அமுக்கம் பாரமானி என்னுங் கருவியால் அங்குலத்தில் அளக்கப்படும். வளிமண்டல ஆய்வு நிலையங்களிற் பொதுவாகப் பயன்படுத்தப்படுவது இரசப் பாரமானியாகும். அமுக்கம் கூடினால் இரசம் மேலெழும் ; குறைந்தால் கீழ் இறங்கும். கடல் மட்டத்தில் இது எழும் ஆகக் கூடிய உயரம் 30"மாகும். அதாவது, வளிமண்டலத்தின் ஒரு சதுர அங்குலக் கடல் மட்ட அமுக்கம் 15 இறாத்தலையும் பார மானி 30"த்தாற் காட்டுகின்றது .
சமவழுக்கக் கோடுகள் : ஓர் இடத்தின் அமுக்கப் பரம்பலைச் சம அமுக்கக் கோடுகளாற் காட்டலாம். சமமான வளி அமுக்க

காலநிலையை நிர்ணயிக்கும் காரணிகள்
69
முள்ள பிரதேசங்களை இணைத்துச் செல்லும் !
கோடுகள் சமவமுக்கக் கோடுகள் எனப்படும்.
காற்றுகள்
அமுக்கங் கூடிய பகுதியிலிருந்து அமுக்கங் குறைந்த பகுதி களை நோக்கி வளி இடம் பெயர்வதால் காற்று உண்டாகின்றது. புவி மேற்பரப்பில் நாம் மேலே படித்த அமுக்கப் பரம்பலுக் கேற்பக் காற்றுகள் வீசுகின்றன. இக்காற்றுகள் புவி சுற்றாமல் இருக்குமானால் வடக்கிலிருந்து தெற்காகவோ அன்றித் தெற் கிலிருந்து வடக்காகவோ நேராக வீச வேண்டும். ஆயின் புவியின் சுழற்சி காரணமாக இவை நேராக வீசாது சரிந்து வீசு கின்றன. புவி திரும்பு விசையின் விளைவு முதன்முதலில் பரெல் என்பவரால் விளக்கப்பட்டது. இதன்படி, புவியின் சுழற்சி காரணமாக வடவரைக் கோளத்தில் வீசுங்காற்று அதன் வலப் பக்கத்துக்கும், தென்னரைக் கோளத்தில் வீசுங்காற்று அதன் இடப்பக்கத்துக்கும் திருப்பப்படுகின்றது. காற்றுகள் பெரிதும் அவை தோன்றும் திசையின் பெயர்கொண்டு அழைக்கப்படு கின்றன.
தாழமுக்கம்
\உயரமுக்கம்
தாழமுக்கம்
உயரமுக்கம்
தாழமுக்கம்
படம் 24 : அமுக்கப் பரம்பலும் புவி சுற்றாமலிருந்தால்
நேராக வீசவேண்டிய காற்றுத்தொகுதிகளும்

Page 44
70
எட்டாந்தரப் புவியியல்
காற்றுத் தொகுதிகள் : உலக அமுக்கப் பரம்பலுக்குத் தொடர்பான முறையில் புவியின் மேற்பரப்பில் மூன்று பிரதான காற்றுத் தொகுதிகள் உள்ளன. அவை: (1) வியாபாரக் காற்றுகள், (2) மேலைக்காற்று கள், (3) முனைவுக்காற்றுகள் என்பனவாகும். --- 1. வியாபாரக் காற்றுகள்: இக் காற்றுகள் அயனவயல் உய "ரமுக்க வலயங்களிலிருந்து மத்திய கோட்டுத் தாழமுக்க வலயத் துக்கு வீசுகின்றன. ஆயின் புவியின் சுழற்சியால் வடக்கில் வட கிழக்கிலிருந்தும் தெற்கில் தென்கிழக்கிலிருந்தும் வீசுகின்றன. இதனால், இவை வடவரைக் கோளத்தில் வடகீழ் வியாபாரக்
காற்றுகள் என்றும், தென்னரைக் கோளத்தில் தென் கீழ் வியாபாரக் காற்றுகள் என்றும் அழைக்கப்படும். இவை கீழைக் காற்றுகள் என்றும் பெயர்பெறும்
வியாபாரக் காற்றுகள் பெரிதும் அமைதியானவை; உறுதி யானவை; சமுத்திரத்தில் மாறாத திசையில் வீசுபவை. இத் தகைய உறுதிப்பாட்டினாலும் முற்காலத்தில் வியாபாரக் கப்பல் களுக்குத் துணையாக இருந்தமையாலும் இவை வியாபாரக் காற்றுகள் என்ற பெயரைப் பெற்றன.
வடகீழ் முனைவுக்காற்று
தென்மேல் முரண் வியாபாரக் காற்றுகள்
வடகீழ் வியாபாரக் காற்றுகள்
தென்கீழ் வியாபாரக்
காற்றுகள்
வடமேல் முரண் வியாபாரக் காற்றுகள்
தென்கீழ் முனைவுக்காற்று படம் 25 : புவியின் சுழற்சியாற் சரிந்துவீசுங் காற்றுத்தொகுதிகள்

காலநிலையை நிர்ணயிக்கும் காரணிகள் 2. மேலைக் காற்றுகள் ! இவை வடவரைக் கோளத்திலும் தென்னரைக் கோளத்திலும் 300க்கும் 60°க்குமிடையில் அயன வயல் உயரமுக்கங்களிலிருந்து இடைவெப்பத் தாழமுக்கங் களுக்கு வீசுகின்றன. புவியின் சுழற்சியினால் வடவரைக் கோளத் தில் தென்மேற் காற்றுகளாகவும் தென்னரைக் கோளத்தில் வடமேற் காற்றுகளாகவும் உள்ளன. இதனால் இவை மேலைக் காற்றுகள் எனப்படுகின்றன.
இக் காற்றுகள் உறுதியானவையன்று ; வேகத்தில் அடிக்கடி வேறுபடுகின்றன ; திசைகளை மாற்றுகின்றன. இதனால் இவை முரண் வியாபாரக் காற்றுகள் எனப்படும். இக் காற்றுகளால் வேறுபடும் வானிலை, கடுங்காற்றுகள், கொந்தளிக்கும் கடல்கள் தோன்றுகின்றன. ஏறத்தாழ 40° அகலக் கோட்டுக்கும் 50° அகலக்கோட்டுக்குமிடையில் இக் காற்றுகள் பேரிரைச்ச லுடன் வீசுவதனால் இவ் வ கலக்கோடுகள் 'முழங்கு நாற்பதுகள்' எனப்படுகின்றன.
3. முனைவுக் காற்றுகள் : இருகோளங்களிலும் முனைவு உய ரமுக்கங்களிலிருந்து இடை வெப்பத் தாழமுக்கப் . பகுதிகளை நோக்கி இக் காற்றுகள் வீசுகின்றன. வடக்கில். வடகிழக்கி லிருந்தும், தெற்கில் தென்கிழக்கிலிருந்தும் வீசுவதனால் இவை முனைவுக் கீழைக் காற்றுகள் எனப்படும். இக் காற்றுகள் கடுங் குளிரானவை. இவை வீசும் பகுதிகள் புயற்பிரதேசங்களாகும்.
மழை வீழ்ச்சி
வளிமண்டலத்திற் கண்ணுக்குத் தெரியாமல் வாயுவடிவில் நீர் உள்ளது. இது நீராவி எனப்படும். சமுத்திரங்கள், ஏரிகள், சதுப்பு நிலங்கள், பனிக்கட்டிப் பரப்புகள் போன்றவற்றி லிருந்தும் பிற நீர்ப்பரப்புகளிலிருந்தும் நீர் சூரிய வெப்பத்தினால் ஆவியாகி வளிமண்டலத்துட் செல்கின்றது.
நீராவியோடு கூடிய வளி மேலே சென்று குளிர்ச்சியடை வதனால் மழை பெய்கின்றது. உயரம் நோக்கி வெப்பநிலை குறைவதனால் மேற்செல்லும் வளியும் குளிர்ச்சியடைகின்றது . வளியின் மேலுயர்ச்சி முக்கியமாக (1) மேற்காவுகையினாலும் (2) தரைத்தோற்றத்தினாலும் (3) சூறாவளியினாலும் நிகழ் கின்றது. எனவே, இம்முறைகளால் வளி குளிர்ச்சியடைந்து ஏற் படும் மழை வீழ்ச்சியும் மூன்றுவகைப்படும் :
1. மேற்காவுகை மழை 2. தரையுயர்ச்சி வேற்றுமை மழை அல்லது மலையியல்மழை 3. சூறாவளி மழை.

Page 45
72
எட்டாந்தரப் புவியியல்
1. மேற்காவுகை மழை : வெப்பத்தின் காரணமாகக் கீழே யுள்ள வளி விரிவடைந்து மேல் எழுந்து குளிர்ச்சியடைவதனாற் பெறப்படும் மழை மேற்காவுகை மழை எனப்படும். மேற் காவுகை மழை வெப்பங்கூடிய மத்திய கோட்டுப் பகுதிகளில் வருடம் முழுவதும் பொதுவாகப் பெய்யும். இலங்கையில் இம் மழை பங்குனி, சித்திரை மாதங்களிலும் புரட்டாதி, ஐப்பசி மாதங்களிலும் அதிகம் பெய்கின்றது. இம் மாதங்கள் வெப்பம் மிகுந்த மாதங்களாகும். சில சமயங்களில் மேற்காவுகை மழை இடிமின்னற் புயலோடு பெய்வதுமுண்டு.
2. தரையுயர்ச்சி வேற்றுமை மழை : தரைத்தோற்ற வேறு பாடு காரணமாகவும் வளி மேலெழுகின்றது. வீசுகின்ற காற் றுக்குக் குறுக்காக மலைகளிருந்தால் காற்று அத்தடையைக் கடப்
பதற்காக மேலுயர் கி ன் ற து. இதனால் குளிர் ச் சி ய டைந் து காற்று முகமாகவுள்ள மலைப் பகுதிக்கு மழை
பெய்கின்றது. மழை காற்றுமுகம்
மழையொதுக்கு யைப் பெய்துவிட்டுக்
காற்று உலர்ந்த நிலை யில் மலையைக் கடப்ப தனால் அப்பாலுள்ள காற்றொதுக்குப் பகு திக்கு மழை கிடைப்ப
தில்லை. இப் பகுதி படம் 26: மலையியல் மழை
மழை யொ து க் கு ப் பகுதி எனப்படும்.
எமது நாட்டில் வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி மாதங்களில் வீசும் தென்மேற் பருவக்காற்றுகளை மத்திய மலை நாடு தடுப்ப தனால் அக் காற்றுகள் மேலுயர்ந்து குளிர்ச்சியடைந்து பெரு மழையினைத் தென்மேற்குப் பகுதிகளுக்கு அளிக்கின்றன. இம் மாதங்களில் காற்றொதுக்குப் பகுதியிலுள்ள வடக்கு, கிழக்குப் பகுதிகள் மழையைப் பெறுவதில்லை. இவ்வாறு மலைகள் காரண மாக மேலுயர்ச்சி ஏற்பட்டுக் கிடைக்கும் மழை மலையியல் மழை என்றும் அழைக்கப்படும்.
சூறாவளி மழை : காற்றுச் சுழன்று அடிக்கையில் வளி மேல் நோக்கி எழுகின்றது. இதனால் வளி குளிர்ச்சியடைந்து மழை பெய்கின்றது. இம்முறையாற் பெறும் மழை சூறாவளி மழை எனப்படும்.

காலநிலையை நிர்ணயிக்கும் காரணிகள்
7 3
பயilululalultilini
untinulாயாயாயாய
11/11!
1) மழையை அளத்தல் : மழை வீழ்ச்சியை அளக்குங் கருவிக்கு மழைமானி என்று பெயர். மழை வீழ்ச்சி அங்குலத்தில் அளக்கப் படும். பெய்கின்ற மழை பெய்யும் இடத்திலேயே நிற்குமாயின், எவ் வளவு அங்குலத் தடிப்பில் அது நிற்கும் என்பதனை மழைமானி காட்டும்.
படங்களில் ஓரிடத்தின் மழை வீழ்ச்சிப் பரம்பலைச் சமமழை வீழ்ச் சிக் கோடுகளாற் காட்டலாம். ஒரேயளவான மழை வீழ்ச்சியைக் கொண்ட இடங்களை இணைத்துக் கீ ற ப் ப டு ம் கோடு சமமழை வீழ்ச்சிக் கோடு எனப்படும்.
படம் 27: மழைமானி
பயிற்சிகள் காலநிலையை நிர்ணயிக்கும் காரணிகள் யாவை ? வெப்பநிலைப் பரம்பலின் வேறுபாட்டுக்குரிய காரணங்கள் இரண்டு கூறுக. கடகக்கோட்டுக்கும் மகரக்கோட்டுக்குமிடையில் வெப்பம் அதிகமாக இருப்பதற்குரிய காரணங்கள் இரண்டு கூறுக. முனைவுப் பகுதியில் வெப்பங் குறைவாகவுள்ளமைக்குரிய காரணங்கள் இரண்டு தருக. வானியலுக்குரிய வலயங்கள் மூன்றையும் ஒரு புவி வட்டத்திற் கீறிக் குறிக்க. -- நுவரெலியாவில் வெப்பநிலை குறைவாக உள்ளமைக்கு
இரண்டு காரணங்கள் தருக. சரியான சொல்லின் கீழ்க் கீறிடுக.
(அ) வெப்பம் அதிகமாகவுள்ள இடங்களில் அமுக்கம்
குறைகிறது கூடுகிறது. (ஆ) மத்திய கோட்டுப் பகுதியில் உயரமுக்கம்/தாழ
முக்கம் உண்டு. (இ) அகலக்கோடுகள் 30க்கும் 60க்குமிடையில் வீசுங்
காற்றுகள் வியாபாரக் காற்றுகள்/முரண் வியா பாரக் காற்றுகள் எனப்படும்.

Page 46
7 4
எட்டாந்தரப் புவியியல்
(ஈ) புவியின் சுழற்சி காரணமாக வடவரைக் கோளத்
தில் வீசுங் காற்று அதன் இடப்பக்கமாக வலப்
பக்கமாகத் திருப்பப்படுகின்றது. (உ) உயரம் நோக்கி ஒவ்வொரு 300க்கும் 900க்கும்
1°ப வெப்பங் குறைகின்றது , 8, 1)
சமவெப்பக்கோடு என்றால் என்ன ? 9. அமுக்கத்தை அளக்கும் கருவியின் பெயர் யாது?
காற்றுத் தொகுதிகள் மூன்றையுங் கூறுக. 11. “ வியாபாரக் காற்று என்ற பெயர் உண்டானதற்குரிய
காரணங்கள் யாவை?
10.
12. எது 'அமைதி வலயம்' எனப்படுகின்றது ? ஏன் ? 13. ' முழங்கு நாற்பதுகள் ' என்ற பெயர் எக் காரணங்
கொண்டு தோன்றியது ? 14. மழைவீழ்ச்சி எத்தனை வகைப்படும் ? அவை யாவை? 15. மேற்காவுகை மழை அல்லது மலையியல் மழைபற்றி ஐந்து
வசனங்கள் எழுதுக. 16.
வெப்பமானி அல்லது தாழமுக்க வலயங்கள் பற்றி ஐந்து வசனங்கள் எழுதுக. பின்வருவனவற்றை வெவ்வேறாக இரு உலகப் படங்களிற்
குறித்துக் காட்டுக.
(அ) தை மாத 3 2°ப, 700ப சமவெப்பக்கோடுகள். (ஆ) ஆடி மாத 320ப, 700ப சமவெப்பக் கோடுகள்: (3200. வுக்குக் குறைவான வெப்பமுள்ள பகுதிகளை நீல நிறத்தாலும் 700ப வுக்கு மேற்பட்ட பகுதிகளைச் சிவப்பு
நிறத்தாலும் தீட்டுக.) 18. உலகப் படமொன்றில் அமுக்க வலயங்களையும் காற்றுத்
தொகுதிகளையுங் காட்டிப் பெயரிடுக..

அலகு 2 உலகின் காலநிலைப் பிரதேசங்கள்
புவியின் மேற்பரப்பில் இடத்துக்கிடம் காலநிலை வேறு படினும், சில இடங்களின் காலநிலைத் தன்மையில் ஒருமைப்பாடும் காணக்கூடியதாக இருக்கின்றது. அவ்விதம் காலநிலைத் தன்மைகள் ஒத்திருக்கும் பிரதேசங்களை ஒன்றுபடுத்தி அவற்றை ஒரு காலநிலைப் பிரதேசம் எனக் குறிப்பிடலாம்.. புவியின் மேற்பரப்பிற் பல காலநிலைப் பிரதேசங்கள் உள்ளன. ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒவ்வொருவகையான காலநிலை காணப்படு கின்றது. கடந்த அலகில் வெப்பநிலையையொட்டி உலகை (1) வெப்ப வலயம் (2) இடைவெப்ப வலயம் (3) குளிர் வலயம் என்று மூன்று வானியல் வலயங்களாகப் பிரிக்கலாமெனப் படித்தோம். இவ்வலயங்களிற் காணப்படும் காலநிலைப் பிரதேசங்கள் பற்றியும் அவற்றுக்குரிய இயற்கைத் தாவரம் பற்றியும் இவ்வலகிற் படிப்போம்.
வெப்பவலயம்
1. மத்தியகோட்டுக் கால நிலை
இவ்வகைக் காலநிலை வெப்பவலயத்தில் மத்தியகோட்டுப் பகுதியையண்டிக் காணப்படுகின்றது? வருடம் முழுவதும் சூரியன் நண்பகலில் உச்சியில் நிலவுகிறது. பகற் பொழுதில் அதிக வெப்பங் காரணமாக வளி விரிவடைந்து மேலெழுந்து குளிர்ச்சியடைவதனால் மேற்காவுகை மழை வருடம் முழுவதும் பெய்கின்றது. ஆதலால் இவ் வ ல ய ம் வெப்பமும் மிக்கது; மழைவீழ்ச்சியுங் கொண்டது. இந்த வெப்ப - மழை வீழ்ச்சி வலயத்தில் வருடச் சராசரி வெப்பநிலை 80° ப ஆகவும் வருட மழைவீழ்ச்சி கிட்டத்தட்ட 80/ மாகவுமுள்ளன.
மத்திய கோட்டுக் காலநிலை தென் அமெரிக்காவிலுள்ள அமேசன் வடிநிலம், மத்திய ஆபிரிக்காவிலுள்ள கொங்கோ வடிநிலம், கிழக்கிந்திய தீவுகள் ( இந்தோனேசியா ), மத்திய கோட்டு மலாயா ஆகிய பகுதிகளிற் சிறப்பாகக் காணப்படு கின்றது.
இயற்கைத் தாவரம்: மத்தியகோட்டுக் காலநிலையில் தோன்றி யுள்ள இயற்கைத்தாவரம் மத்தியகோட்டுக் காடுகள் எனப்படும். இக் காடுகள் அமேசன் பள்ளத்தாக்குப் பகுதியிலும் கொங்கோப்

Page 47
சீரோ: ஆம்
RS
ஏப்EMEEா2 in the ,
-->
அIIIII
வருடம் முழுவதும் மழை
கோடை மழை
மாரி மழை
மழை குறைவு பனியால் மூடப்பட்ட பாகம்
படம் 1 28. மழை பெறும் காலம்

உலகின் காலநிலைப் பிரதேசங்கள்
77
பள்ளத்தாக்கிலும் சில இந்தோனேசியத் தீவுகளிலும் நன்கு காணப்படுகின்றன. அமேசன் காடுகள் செல்வாசு என்று
அழைக்கப்படும்.
இக்காடுகளிற் பலவகைப்பட்ட மரங்கள் செழிப்பாகவும் அடர்த்தியாகவும் கலந்து வளர்ந்துள்ளன. இவற்றுள் மலைவேம்பு, கருங்காலி, முதிரை என்பன முக்கியமானவை. . காடுகள் அடர்த்தியாக இருப்பதனாற் சூரிய ஒளியைப் பெறும் பொருட்டு மரங்கள் மிக உயரமாக வளர்ந்துள்ளன. தடித்த பெருஞ் செடிகளும் கொடிகளும் மரங்களுடன் பின்னிப் பிணைந்து வளர்ந்திருப்பது இக்காடுகளுக்குரிய மற்றுமொரு தனி யியல் பாகும். மழைவளம் மிக்கதால் இக்காடுகள் வருடம் முழுவதும் பசுமையாகவே இருக்கும்.
மத்தியகோட்டுக் காடுகள் மக்கள் வாழ்க்கைக்கு ஏற்றவை யன்று. காரணம் : காடுகள் சூரிய வெளிச்சமே, உட்புக முடியாத அளவுக்கு மிக்க அடர்த்தியாகவுள்ளன. இதனால், தரை சேறும் சகதியுமாகவுள்ளது. மஞ்சள் காய்ச்சல், மலேரியா போன்ற கொடிய நோய்களைப் பரப்பும் நுளம்புகளும் நச்சுப் பூச்சிகளும் பெருந்தொகையிலுள்ளன. ஆயினும் இந்நிலைமை களுக்குப் பழக்கப்பட்ட பிக்மீ சு எனப்படும் குறளர் கொங்கோக் காடுகளில் வாழ்கிறார் கள்.
2. வெப்ப வலயக் கால நிலை
மத்தியகோட்டு வலயத்துக்கு வடக்காகவும் தெற்காகவும் சுமார் 50 - 2340 அகலக்கோடுகளுக்கிடைப்பட்ட பகுதிகளில் இக் காலநிலை நிலவுகின்றது. கோடையில் மேற்காவுகை மழை பெய்கிறது. ஆயினும் மத்திய கோட்டுக் காலநிலையிலும் பார்க்க இக்காலநிலைப் பகுதிகளில் மழை குறைவு. மாரி உலர்வானது. இவ்வுலர்ச்சிக்குக் காரணம் மாரியில் வீசும் வியாபாரக் காற்றுக ளாகும்.
வெப்ப வலயக் கால நிலை ஆபிரிக்காவில் சூடானிலும் உரொடேசியாவிலும் தென் அமெரிக்காவில் ஒறினொக்கோ வடிநிலத்திலும் பிறேசில் மேட்டுநிலத்திலும் காணப்படுகின்றது. இப்பகுதிகளின் கிழக்குக் கடற்கரையோரங்கள் வியாபாரக் காற்றுக்களால் மழை பெறக்கூடியன. எனவே இவ்வகைக் கால நிலையில் குறிப்பான அளவுக்கு வறட்சிப் பருவம் இல்லையாகும்.
இயற்கைத் தாவரம் : இவ்வகைக் காலநிலையில் பிரேசில் மேட்டுநிலத்திலும் கிழக்கு ஆபிரிக்காவிலும் புதர்களும் முட் காடுகளும் தோன்றியுள்ளன. இவை கூடிய வெயிலையும் குறை வான மழை வீழ்ச்சியையும் தாங்கவல்லன. மழை குறைவான பகுதிகளில் புல்நிலங்கள் தோன்றியுள்ளன. ஆபிரிக்காவில் காடுகளையடுத்துச் சவன்னாப் புல்நிலங்கள் உள்ளன. இப் புல்

Page 48
78
எட்டாந்தரப் புவியியல்
நிலங்களிலும் இடையிடையே புதர்களும் கட்டை மரங்களும் காணப்படுகின்றன. தென் அமெரிக்காவில் ஒறினொக்கோப் பள்ளத்தாக்குப் பகுதியிலுள்ள வெப்பவலயப் புல் நில ம் இலானோசு எனப்படும்.
வெப்பமான
, பருவக்காற்றுக் கால நிகில்
ஆறாந்தரத்திற் பருவக்காற்றுகள் பற்றிப் படித்திருக்கிறோம். ( ஆறாந்தரப் புவியியல்: பாடம் 3 ). ஆசியாக் கண்டத்தின் தெற்கு, கிழக்குப் பகுதிகளிற் பருவக்காற்றுகள் நன்கு விருத்தி யாகியுள்ளன. கோடைப் ப ரு வ க் காற்று கள் வைகாசியி
லிருந்து ஆவணி வரை வீசு கின்றன. இவை சமுத்திரத்தி
லிருந்து வீசுவதனால் அதிக நீரணுக்களைக் கொண்டு வரு கின்றன. இக் காற்றுகள் தெற்கு ஆ சி ய நாடுகளி
லுள்ள மலைகளை (இந்தியா, நிலம்
இலங்கை, பேமா) கடக்கும் போது காற்றுமுகப் பகுதி களுக்கு அதிக மழையைக் கொடுக்கின்றன. மாரிப் பரு வக் காற்றுகள் கார்த்திகையி லிருந்து மாசிவரை வீசுகின்
றன. இவை நிலத்திலிருந்து படம் 29: கோடைப் பருவக்காற்று
வீசுவதால் உலர்வானவை. எனவே, பருவக்காற்றுக் காலநிலை கோடையில் பெரும் மழை வீழ்ச்சியையும் மாரியில் உலர்வையுங் கொண்டது . இக் காலநிலை இந் தி ய ா,
குளிரான நிலம் இலங்கை, பேமா, மலாயா, சீனா, - யப்பான், இந்தோ னேசியா ஆகிய நாடுகளில் நிலவுகின்றது. சீனா, யப்பான் போன்ற நாடுகளில் கோடைக் காற்றுகள் தென் கிழக்கி லிருந்து வீசுகின்றன. அவுத்தி ரேலியாவின் வடபகுதியிலும் படம் 30: குளிக்கால (மாரி)ப் இக் காலநிலை ஓர ள வு க் குக்
பருவக் காற்று காணப்படுகின்றது.
காற்று

உலகின் காலநிலைப் பிரதேசங்கள்
79
பருவக்காற்றுக் காடுகள் : இக் காடுகள் இந்தியா, இலங்கை, பேமா, சீயம், மலாயா, வட அவுத்திரேலியா ஆகிய நாடுகளிற் காணப்படுகின்றன. இந்நாடுகளும் வெப்பவலய நாடுகளே .. ஆயினும் மத்தியகோட்டுப் பகுதி போன்று தொடர்ச்சியான மழைவீழ்ச்சி இப்பகுதிகளில் இல்லை. ஈரப்பருவம், வெப்பப் பருவமென இரு பருவங்களைக்கொண்ட பருவக் காற்றுக் கால நிலை இந்நாடுகளில் நிலவுகின்றது. மழை கோடையில் பெய் கின்றது. உலர்ந்த மாரியில் கடுங் காற்றுகள் வீசுகின்றன. இந்நிலைமைகளில் தேக்கு, வேம்பு, மூங்கில், எண்ணெய்மரம் முதலியன நன்கு வளர்ந்துள்ளன. மத்தியகோட்டுக் காடுகள் என்றும் பசுமையானவை என்று படித்தோம். ஆனால் பருவக் காற்றுக் காட்டுமரங்கள் உலர்ந்த பருவத்தில் இலையுதிர்க்கின் றன. பேமா, மலாயா போன்ற நாடுகளின் காடுகளிலுள்ள தேக்க மரங்கள் இதற்கு நல்லதோர் உதாரணமாகும். பருவக் காற்றுக் காட்டுமரங்கள் உயரத்திற் குறைவானவை. மத்திய கோட்டுக் காடுகள்போன்று இக்காடுகள் தொடர்ச்சியாக இல்லாது தொட்டத் தொட்டமாகவுள்ளன. சேற்றுநிலங்கள் இக்காடுகளிற் குறைவு .
4 - பாலை நிலக் காலநிலை :
மத்தியகோட்டின் வடக்கிலும் தெற்கிலும் கோடை மழை வலயங்களுக்கப்பால் வியாபாரக் காற்று வலயங்கள் அமைந் துள்ளன. இக்காற்றுகள் அயன வலய உயரமுக்கப் பகுதிகளி லிருந்து வெப்பப் பிரதேசங்களை நோக்கி வீசுவதால், இருக் கின்ற ஈரத்தையும் உறிஞ்சுகின்ற உலர்ந்த காற்றுகளாக வுள்ளன. ஆதலால் இக்காற்றுக்கள் வீசுகின்ற கடக, மகரக் கோட்டுப் பகுதிகள் பெரிதும் பாலை நிலங்களாகவுள்ளன. இப் பகுதிகள் வெப்பப் பாலைநிலங்கள் எனப்படும். வட ஆபிரிக்கா விலுள்ள சகாராப் பாலைநிலம், இலிபியன் பாலைநிலம், அராபியாப் பாலைநிலம், இந்தியாவிலுள்ள தார்ப் பாலை நிலம், மேற்கு அவுத்திரேலியா, தென் ஆபிரிக்காவிலுள்ள கால காரிப் பாலை நிலம், தென் அமெரிக்காவின் மேற்குக் கடக்கரையோரத் திலுள்ள அற்றக்காமாப் பாலைநிலம் ஆகியன யாவும் வெப்பப் பாலைநிலங்களாகும்.
இப் பாலை நிலங்களில் வருடச் சராசரி மழை வீழ்ச்சி 10/' த்துக்குக் குறைவாகும் (படம் 28). சராசரி வெப்பநிலை கோடையில் 80° க்கும் அதிகமாகவிருக்கும்; மாரியில் 65° யாக விருக்கும். இதைப்போலவே பகலில் ஆகக்கூடிய வெப்பமும் இரவில் ஆகக்கூடிய குளிரும் நிலவும்,

Page 49
80
எட்டாந்தரப் புவியியல்
வெப்பப் பாலைநிலங்கள் பெரிதும் மணற்பாங்கானவை : சகாராவில் வெயிலாற் பாறைகள் வெடிப்பதும் காற்றினால் மணற்புயல் வீசுவதும் வழக்கம்.
இயற்கைத் தாவரம் : மழை வீழ்ச்சிக் குறைவால் பாலை நிலப் பகுதிகளில் தாவர வளர்ச்சி இல்லை. ஆயினும் பாலை நிலங்களில் எல்லைப் புறங்களில் வறட்சியைத் தாங்கி வளர வல்ல கள்ளி இனங்களும் சிறு பரட்டைப் புதர்களும் காணப் படுவதுண்டு. சகாரா, அராபியா போன்ற பகுதிகளில் ஊற் றுள்ள இடங்களிற் பாலைநிலச் சோலைகள் தோன்றியுள்ளன. இச் சோலைகளில் பேரீந்து முக்கியமான ஒரு மரமாகும்.
இடைவெப்ப வலயம் 5. மத்தியதரைக் காலநிலை
இவ்வகைக் காலநிலை மத்தியதரைக் கடலைச் சுற்றியுள்ள நாடுகளிற் சிறப்பாக விருத்தியாகியுள்ளமையால் இப்பெயரைப் பெற்றுள்ளது. உலர்வும் வெப்பமுங் கொண்ட கோடையும் மப்பும் மழையுமுடைய மாரியும் இக்காலநிலையின் முக்கிய தன்மையாகும். மாரியிற் சூறாவளிகளோடு கூடிய மேலைக் காற்றுகள் வீசுகின்றன. இவை வடஅத்திலாந்துச் சமுத்திரத்தி லிருந்து நீரணுக்களுடன் வருவதனால் மத்தியதரைக் கடற் பகுதிக்கு மாரியில் மழை கிடைக்கின்றது.
மத்திய தரைக் கடல், வடவரைக் கோளத்தில் ஏறத்தாழ 30 - 450 அகலக்கோடுகளுக்கிடையில் அமைந்துள்ளது. இவ் வகலக்கோடுகளுக் கிடைப்பட்ட பிற கண்டங்களின் மேற்குப் பகுதிகளிலும் மத்தியதரைக் காலநிலை காணப்படுகின்றது. அப்பகுதிகளின் விபரம் பின்வருமாறு :
வட அமெரிக்கா - -
மத்திய கலிபோனியா தென் அமெரிக்கா - மத்திய சிலி
ஆபிரிக்கா
தென்மேற்கு மூலைப்பகுதி அவுத்திரேலியா - தென் மேற்கு, தென் பகுதிகள்.
மத்தியதரைக் காடுகள் : மத்தியதரைக் காலநிலையில் மழை கூடிய பகுதிகளில் கடுமரம், கசுக்கொட்டை மரம் போன்ற னவும், உலர்வான பகுதி களிற் பட்டைச் சிந்தூர - மரமும் அதனையொத்த மரவினங்களும் வளர்கின்றன.
பல மரங்கள் என்றும் பசுமையானவை. கோடையின் வறட்சியைத் தாங்கக்கூடியமுறையில் மரங்களின் அமைப்புகள்

உலகின் காலநிலைப் பிரதேசங்கள்
81
காணப்படுகின்றன. சிந்தூரம் தடிப்பான பட்டையை உடையது. ஈரத்தை இழக்கா வண்ணம் சிறிய இலைகளையும் முள்ளிலைகளை யும் சில மரங்கள் கொண்டுள்ளன. ஒலிவு, இலவெந்தர், உறோசு மேரி, புன்னாகம் போன்றன யாவும் இவ்விதம் கோடை வறட்சியைத் தாங்கும் மத்தியதரை மரங்களாகும். பொதுவில் இக்காடுகள் கலப்பானவை. மரங்கள் கட்டையானவை. மரங் களுக்கிடையில் புதர்த் தாவரம் மிகுந்து காணப்படும்.
இக் காடுகளிலிருந்து பல பயன்கள் பெறப்படுகின்றன. துருக்கியிலுள்ள வலோனியா என்னும் ஒருவகைச் சிந்தூர மர விதைகளிலிருந்து தோற்பூச்சுச் செய்யப்படுகின்றது. இத்தாலி, பிரான்சு, சிபெயின், போத்துக்கல் ஆகிய நாடுகள் தக்கைகளை . அதிகம் ஏற்றுமதி செய்கின்றன. இந் நாடுகளின் காடுகளில் இயல்பாகவே வளரும் தக்கைச் சிந்தூர மரத்தின் பட்டைகளி லிருந்து தக்கைகள் செய்யப்படுகின்றன. அடைப்புத் தேவை களுக்கும் மெத்தைகள், சைக்கிள் கைப்பிடிகள் முதலியன செய்வதற்கும் தக்கைகள் பயன்படுகின்றன. தென் பிரான்சின் தேவதாருக் காடுகளிலிருந்து கரிப்பிசினும் தெரப்பின்தைலமும் பெறப்படுகின்றன.
மத்தியதரைக் காலநிலை பழமரச் செய்கைக்குப் பெயர் பெற்றது. ஆதலாற் பல நாடுகளிற் பயனற்ற காட்டுப் பகுதிகள் அழிக்கப்பட்டு அவ்விடங்களிற் பழமரச் செய்கை வணிக அள விலே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பழங்களுள் தோடை, எலுமிச்சை, முந்திரிகை, அப்பிரிக்கொத்தி, மாதுளை முதலியன
முக்கியமானவை : 2, 13 , 7 2 y it )
(11 6. சீனவகைக் காலநிலை
ஏறத்தாழ 300-45' அகலக்கோடுகளுக்கிடையிற் கண்டங் களின் கிழக்கோரங்களில் மத்தியதரைக் காலநிலைக்கு எதிர் வகையான காலநிலையொன்று நிலவுகின்றது. இக்காலநிலையில் மழை கோடையிற் பெய்கின்றது. மாரி ஓரளவுக்கு உலர்வாக உள்ளது ; ஆயினும் முற்றாக உலர்ந்த பருவமன்று. மத்திய சீனாவிலும் தெற்கு யப்பானிலும் இவ்வகைக் காலநிலை நன்கு காணப்படுகின்றது. இந்நாடுகளில் பருவக் காற்றுகள் வீசு கின்றன. கோடையில் உள்நோக்கி வீசும் சமுத்திரக் காற்று களால் மழை கிடைக்கின்றது. மாரியில் குளிர் அதிகம். காற்று கண்டத்திலிருந்து வெளிநோக்கி வீசுவதால் மாரி உலர்வாக உள்ளது. இக்காலநிலை இளஞ்சூட்டு இடைவெப்பக் கிழக்குக் கரைக் காலநிலை என்றும் அழைக்கப்படும்.
புவி. VIII - 6

Page 50
82
எட்டாந்தரப் புவியியல்
இவ்வகைக் காலநிலை அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தென் கிழக்குப் பகுதியிலும் காணப்படுகின்றது. ஆயினும் சீனாவைப் போன்று பருவக்காற்று விருத்தியில்லை. மாரிகள் சீனாவிலும் பார்க்கச் சூறாவளிகளினால் கூடுதலான மழையைப் பெறுகின்றன. உள்நோக்கி வீசும் காற்றுகளால் கோடையில் பெருமளவு மழையுண்டு.
தென்னரைக்கோளக் கண்டங்கள் ஒவ்வொன்றிலும் கிழக்குக் கரைப் பகுதியில் இத்தகைய காலநிலைத்தன்மை காணப்படு கின்றது. இவை, கிழக்கு ஆசெந்தீனா, உருகுவே, தெற்குப் பிறேசில், தென் ஆபிரிக்காவின் தென்கீழ் மூலை, அவுத்திரேலி யாவின் நியூ சவுத்வேல் சு ஆகியனவாகும்.
இயற்கைத் தாவரம் : மேற் குறிப்பிட்ட நாடுகளிலுள்ள காடுகள் இளஞ்சூட்டு இடை வெப்பக் கிழக்குக்கரைக் காடுகள் எனப்படும். தேவதாரு, சைப்பிரசு, சீதர், கடுமரம், சிந்தூர மரம் போன்றன பெருந்தொகையில் இக்காடுகளிலுள்ளன. மரங்களுக்கிடையில் வளர்ந்துள்ள புதர் கள், பற்றைகள் போன் றனவற்றுள் பிசின் மரம், கருப்பூரம், சிங்கோனா ஆகியன பிரதானமானவை.
கருப்பூர மரங்களிலிருந்து இயற்கைக் கருப்பூரம் செய்யப் படுகின்றது. யப்பான், தென்சீனா, போமோசா ஆகிய நாடுகளில் இக்கைத் தொழில் முக்கியமானது. சிங்கோனா மரப் பட்டைகளிலிருந்து குயினின் பெறப்படுகின்றது.
7. குளிரான இடை வெப்ப மேற்குக் கரைச் சமுத்திரக்
கால நிலை இவ்வகைக் காலநிலை கிழக்குக் கனடாவிலும் வட கிழக்கு அ. ஐ. நாடுகளிலும் சிறப்பாகக் காணப்படுவதனால் இது சென் லோரன்சு வகை எனவும் அழைக்கப்படுகின்றது. மேற்கு ஐரோப்பா, பிரிட்டிசுத் தீவுகள், தென் சிகண்டினேவியா, பிரிட்டிசுக் கொலம்பியா, நியூசிலாந்து , தாசுமேனியா ஆகிய பகுதிகளிலும் இக் காலநிலை நிலவுகின்றது. கடற் செல்வாக்குள்ள இப் பகுதிகளில் வீசும் காற்றுகள் மேலைக் காற்றுகளாகும். மழை வீழ்ச்சி வருடம் முழுவதும் உண்டு. மழை தரையுயர்ச்சி வேற்றுமையால் அல்லது சூறாவளியாற்கிடைக்கின்றது . மாரிகள் குளிராகவும் கோடைகள் மட்டான இளஞ்சூடா கவும் இருக் கின்றன.
அகன்ற இலைக் காடுகள் : குளிரான இடைவெப்ப மேற்குக் கரைச் சமுத்திரக் காலநிலையில் அகன்ற இலைக்காடுகள் தோன்றி

அதாஅ மாறாக
"ரம்
கன்
பெ
மத்திய கோட்டுக் காடுக ளும் பருவக் காற்றுக் காடுகளும்.
EEது (அகன்ற இலைக் காடுகள்
வெப்ப வலயப் புன்னிலங்கள் பாலை நிலங்கள் |
இன இடைவெப்பப் புன்னிலங்கள்
மத்திய தரைக் காடுகளும் மென் - சூட்டு இடைவெப்பக் கிழக்குக்
E123 தண்டரா
கடற்கரைத் தாவரமும் UIIIா ஊசியிலைக் காடுகள் படம் : 31. உலகின் இயற்கைத் தாவரப் பிரிவுகள்
என்கிலைப்படுறவங்க கதகதகக்கதை கோதுமை மாலைங்கப்பண்ணிலமோன் சங்கடிக்கப்பட்டால் அல்

Page 51
84
எட்டாந்தரப் புவியியல்
"ஆகிய பகுசாகமரம், மாகளுக்கிடையில்
யுள்ளன. இவை, அ. ஐ. நாடுகளில் ஐம்பெரும் ஏரிகளைச் சூழ்ந்துள்ள பகுதிகளிலும், இங் கிலாந்து, பிரான்சு, யேமனி. போலந்து போன்ற ஐரோப்பிய நாடுகளிலும், மேற்கு இரசியா, வட சீனா, நியூசிலாந்து ஆகிய பகுதிகளிலும் உள்ளன. இக்காடு களில் சிந்தூரம், புங்கமரம், அசோகமரம், மாப்பிள், எலும் போன்ற மரங்கள் காணப்படுகின்றன. இவைகளுக்கிடையில் பல்வேறு வகைப்பட்ட முட்செடிகளும் பற்றைகளும் மிக வளர்ந்து காணப்படும்.
மாரி குளிராக இருப்பதாற் தாவர வளர்ச்சி குறைவு : குளிரைத் தாங்கும் வண்ணம் மரங்கள் தடித்த பட்டைகளைக் கொண்டுள்ளன. மாரிக்கு முன்னதாகவே ஆவணி, புரட்டாதி, ஐப்பசி மாதங்களில் மரங்கள் இலைகளையுதிர்த்துவிடும். இதனாற் றான் இக்காலம் இலையுதிர் காலம் எனப்படுகின்றது. இக்காடு களில் மரம் வெட்டுந்தொழில் நடைபெறுகின்றது.
8. குளிரான இடை வெப்பக் கண்டக் கால நிலை
மேலே நாம் படித்த மேற்குக் கரைச் சமுத்திர வகை, கிழக்கு நோக்கிப் படிப்படியாகக் கண்ட வகைக் காலநிலையாக மாறுகின்றது: மத்திய வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவின் மத்திய பகுதியிலும் ஆசெந்தீனாவின் தென்கீழ் மூலையிலும் இவ் வகைக் காலநிலையைக் காணக்கூடியதாக இருக்கின்றது. சமுத்திரக் காலநிலையிலும் பார்க்க இக் கண்டக் காலநிலையில் மாரியிற் குளிர் கூடுதலாகவுள்ளது. கோடையும் அதிக இளஞ் சூட்டினையுடையது. மழைவீழ்ச்சி பொதுவாகக் குறைவு ; கிடைக்கும் மழைவீழ்ச்சி கோடையில் மேற்காவுகை முறையாற் பெய்கின்றது. இப்பகுதி களில் வருடச் சராசரி மழைவீழ்ச்சி பொதுவாக 10--20ா மாகவும் சராசரி வெப்பநிலை 450-640ப. ஆகவும் உள்ளன.
இடைவெப்பப் புல் நிலங்கள் : இத்தகைய காலநிலைத் தன்மை களில் இயல்பான தாவரம் புல்லாகும். இவை இடைவெப்பப் புல்நிலங்கள் எனப்படும். இங்கு வெப்பவலயப் புல் நிலங்களைப் போன்று மரங்களில்லை. காரணம் மழை வீழ்ச்சி மிகவும் குறைவு. கோடை வறட்சியாகவும் மாரி கடுங் குளிராகவும் உள்ளன. இதனால் கோடைகால, மாரிகால வெப்பநிலைகளுக் கிடையில் அதிக வேறுபாடு காணப்படுகின்றது.
பல இடைவெப்பப் புல்நிலப் பகுதிகள் திருத்தப்பட்டுக் கோதுமை விளைவிக்கப்படுகின்றது. ஆயர் வேளாண்மையும் பல இடங்களிற் சிறப்பாக நடைபெறுகின்றது. இடை வெப்பப் புல்நிலங்கள் பின்வரும் பிரதேசங்களிற் காணப்படுகின்றன:

உலகின் காலநிலைப் பிரதேசங்கள்
85
பிரதேசம்
புல்நிலங்களின் பெயர்
தெப்புவெளிகள்
வ - v )
மத்திய ஐரோப்பாசியா
(ஐரோப்பா-ஆசியா) மத்திய வட அமெரிக்கா ஆசெந்தீனா தென் ஆபிரிக்கா அவுத்திரேலியா (மறேடாளிங் வடிநிலம்)
பிரேரீக்கள் பம்பாசு வெல்டு தவுண்சு
9. இடைவெப்பப் பாலை நிலக் கால நிலை
இடை வெப்ப வலயத்தில் கண்டங்களின் ஆக உட்பகுதிகளி லும் மழை ஒதுக்கிடங்களிலும் பாலைநிலங்கள் காணப்படு கின்றன. வெப்பவலயப் பாலைநிலங்களைப் போலல்லாது இப் பாலை நிலங்களிற் குளிர்ப்பருவம் ஒன்றுள்ளது. இப்பருவத்தில் வெப்பநிலை 430 ப.வுக்குக் கீழ்ச் செல்கிறது. கோடை வெப்ப நிலைக்கும் மாரி (குளிர்ப்பருவம்) வெப்பநிலைக்குமிடையிற் கடும் வேறுபாடுள்ளது. மழைவீழ்ச்சி 15ாக்குக் குறைவாகும். பொது வாக இப் பாலை நிலங்கள் குடியற்றவை. பின்வரும் பகுதிகளில் இத்தகைய பாலை நிலங்கள் உள்ளன:
1. மத்திய ஆசியா : இது கேக்கிசுத் தெப்பு வெளிகளுக்குத் தெற்கிலிருந்து மொங்கோலியாவின் கோபி அல்லது சாமோ வரை பரந்துள்ளது. ஆங்காங்கு சில புல்லினங்கள் வளர்ந் துள்ளன. இப்பகுதியில் வாழும் பிரதான குடிகள் மந்தை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள நாடோடிகளாவர்.
2. அ. ஐ. நா. வின் பெரும் வடிநிலம் : அ. ஐ. நா. வின் நெவாடா மாகாணத்திலுள்ள பெரும்வடிநிலம் என்ற பகுதியும் ஓர் இடைவெப்பப் பாலை நிலமாகும். நான்கு பக்கங்களிலும் மலைகள் உள்ளமையால் மழைக்காற்றுகளைப் பெறமுடியாத இப் பகுதி பரந்தவோர் அரைப் பாலைநிலமாக வுள்ளது. இங்கு சல்வியா எனப்படும் புதர், நிலத்தை மூடிப் பெருமளவில் வளர்ந்துள்ளது.
3. பற்றக்கோனியா : தென் அமெரிக்காவின் . ஆசெந்தீனா வுக்குத் தெற்காக, அந்தீசு மலையின் மழையொதுக்குப் பகுதியில் இப்பாலை நிலம் அமைந்துள்ளது. செம்மறியாட்டு வேளாண்மை இப்பகுதியில் நடைபெறும் முக்கிய தொழிலாகும்.

Page 52
86
எட்டாந்தரப் புவியியல்
நீண்ட கடு: இக் காலநி அகலக்கோ
குளிர்வலயம் 10. குளிரான இடை வெப்பக் காலநிலை
இக்காலநிலை கனடாவிலும் ஐரோப்பாவிலும் ஆசியாவி லும் ஆட்டிக்கு வட்டத்தை அண்டியுள்ள பகுதிகளிற் காணப் படுகின்றது. ஆயினும் மத்திய சைபீரியாவில் (ஆசியா) ஆட்டிக்கு வட்டத்தைக் கடந்து 700 அகலக்கோடுவரையும் இப் பிரதேசம் பரந்துள்ளது. இக்கால நிலையில் குறுகிய உலர்வான கோடையும் நீண்ட கடுங்குளிர் மாரியும் காணப்படுகின்றது. கோடையிற் சிறிய அளவில் மேற்காவுகை மழை பெய்வதுண்டு. மழை வீழ்ச்சி சுமார் 20// அளவிலுள்ளது. ஆறு மாதங்களுக்கு மேற் பட்ட கடுங்குளிர்ப் பருவத்தில் வெப்பநிலை 420 ப. வுக்குக் கீழ்ச் செல்கின்றது. குளிர்ப்பருவத்தில் மழைவீழ்ச்சி குறைவு; பெய்கின்ற மழையும் மழைப்பனியாகவே வீழ்கின்றது.
- ஊசியிலைக் காடுகள்: குளிரான இடைவெப்பக் கால நிலையில் ஊசியிலைக் காடுகள் தோன்றியுள்ளன. ஆட்டிக்கு வட்டத்தை அண்டியுள்ள இந்த ஊசியிலைக்காடுகளுக்குத் தைக்கா என்று பெயர். ஐரோப்பாவில் நோவே, சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து சைபீரியாவுக்கூடாகக் கிழக்கு எல்லை வரை ஒரே தொடர்ச்சியாகத் தைக்கா செல்கிறது. உலகத்தி லேயே ஆகப்பெரிய தொடர்ச்சியான காட்டுப் பிரதேசம் இதுவாகும். கனடாவிலும் கிழக்கிலிருந்து மேற்கு வரை தொடர்ச்சியாகவே இக்காடுகள் உள்ளன.
இக்காடுகளில் தேவதாரு, புரூசு. பீரு, இலாச்சு போன்ற மரங்கள் உள்ளன. இவை, விழுகின்ற மழைப்பனி இலகுவாக வழிந்தோடக்கூடிய முறையிலும் கடுங்குளிரைத் தாங்கக்கூடிய வகையிலும் கூம்புபோன்று வளர்ந்துள்ளன. இவற்றின் இலைகள் ஊசிபோன்றுள்ளன. இதனாலேயே இவை ஊசியிலைக் காடுகள் என்று அழைக்கப்படுகின்றன.
ஊசியிலைக்காட்டு மரங்கள் பொதுவாகச் சிறியவை. கடுங் குளிர் காரணமாக மரங்கள் மெதுவாகவே வளர்கின்றன. மரங்கள் இலைகளையுதிர்ப்பதில்லை. மத்திய கோட்டுக் காடுகளைப் போன்று இக் காடுகள் அடர்த்தியானவையன்று. செடிகொடி களோ, இருள் தன்மையோ இக்காடுகளில் இல்லை. சதுப்பு நிலங்களும் குறைவு. மத்திய கோட்டுக் காடுகளில் மரங்கள் கலந்து காணப்படுகின் றன. ஆனால் ஊசியிலைக் காடுகளில் ஓரின மரங்கள் கூட்டங்கூட்டமாக வளர்ந்துள்ளன.
மரம் வெட்டுதல் இக்காடுகளில் நடைபெறும் பிரதான தொழிலாகும். ஊசியிலை - ம ர ங் க ள் மென்மையானவை; வெட்டுதல், அரிதல், சீவுதல் போன்ற வேலைகளுக்கு உகந்தவை. இதனால் மரக்கூழ், காகிதம், தீப்பெட்டிகள் முதலியன செய்வ தற்கு இம் மரங்கள் சிறப்பாகப் பயன்படுகின்றன.

87
உலகின் காலநிலைப் பிரதேசங்கள் 11. தண்டரா அல்லது ஆட்டிக்குக் காலநிலை
வடமுனைவையண்டி இவ்வகைக் காலநிலை காணப்படு கின்றது. இதன் தென் எல்லையாக ஆட்டிக்கு வட்டத்தைக் கூறலாம். வட அமெரிக்கா, ஐரோப்யா, ஆசியா ஆகிய கண்டங் களின் வட எல்லைப் பகுதிகள் இக்காலநிலையை அனுபவி கின்றன. கோடை குறுகியது; குளிரான து; தொடர்ச்சியான வெயிலையுடையது. மாரி நீண்டது; இருண்டது; கடுங்குளிரைக் கொண்டது. இப்பகுதிகளில் மழைவீழ்ச்சி பெரிதும் இல்லை.
எப்பொழுதும் மழைப்பனியால் மூடப்பட்டுள்ள தண்டரா வில் பாசி, காளான், கோரை போன்றவையே இயற்கைத் தாவரமாகும். கோடையில் மழைப்பனி உரு க, நல்ல பூமரங் களும் செடிகளும் வளருகின்றன.
கனடா, அலாசுகா போன்ற பகுதிகளில் எசுக்கிமோவரும், ஐரோப்பாவில் இலாப்பியர், பின்லாந்தர் என்போரும், சைபீரி யாவில் சுக்கியரும் வாழ்கின்றனர். நாடோடி வாழ்க்கை நடத்தும் இவர்களின் தொழில் வேட்டையாடுதலும் மீன் பிடித்தலுமாகும். ஆசியத் தண்டரா மக்கள் துருவமான்களை வீட்டு மிருகங்களாக வளர்க்கின்றார்கள். இறைச்சி, பால், தோல் முதலியன இம் மிருகங்களிலிருந்து பெறப்படுகின்றன.
பொழிப்பு
கால நிலைப் பிரிவுகள்
இயற்கைத் தாவரப் பிரிவுகள்
பிரதான காலநிலைத்
தன்மைகள்
காணப்படும் இடங்கள்
1. மத்திய
கோட்டுக் | காலநிலை .
மத்திய கோட்டு மழைக் காடுகள்
வெப்பமும்
அமேசன், கொங்கோப் மழையும் மிக்கது பள்ளத்தாக்குகள்.
800; 80!!
2. வெப்ப
வெப்ப வல வலயக்
யக் காடுகள், காலநிலை
வெப்ப வலயப் புன் னிலங்கள்
கோடை மழை,
சூடான், உரொடே மாரி உலர்ச்சி
சியா, பிறேசில் உயர் நிலங்கள்; - புன்னி லங்கள்: சவன்னா. இலானோசு, கம்போசு.
3, பருவக்
காற்றுக் காலநிலை
பருவக் காற்றுக் காடுகள்
கோடை மழை, இந்தியா,
இலங்கை, மாரி உலர்ச்சி; சில
பேமா, சீயம், வட நாடுகளில் இருபரு அவுத்திரேலியா, சீனா. வங்களிலும் மழை

Page 53
காலநிலைப் பிரிவுகள்
இயற்கைத் தாவரப் பிரிவுகள்
பிரதான காலநிலைத்
தன்மைகள்
காணப்படும் இடங்கள்
4. வெப்பப்
வெப்பப்
கோடை கடும்
சகாரா, கால காரி, பாலைநிலக்
பாலை
வெயில்;மாரி கடும் மே. அவுத்திரேலியா, காலநிலை
நிலங்கள்
குளிர்; மழைவீழ்ச்சி தார், அற்றக்காமா.
10ாக்குக் குறைவு 3. மத்திய
மத்திய
உலர்வும் வெப்ப மத்தியதரைக் கடலைச் தரைக்
தரைக்
முங் கொண்ட)
சூழ்ந்துள்ள நாடுகள், காலநிலை
காடுகள்
கோடை; மழையும் மத்திய கலிபோனியா, மப்புங் கொண்ட மத்திய சிலி, ஆபிரிக் மாரி
காவின் தென் மேற்குப் பகுதி, அவுத்திரேலி யாவின் தென்மேற்கு ,
தென் பகுதிகள். 6. சீன
கீழைச் சூட்டு மத்தியதரைக்
மத்திய சீனா, தெற்கு வகைக்
இடை
கால நிலைக்கு
யப்பான், தென் காலநிலை
வெப்பக்
மாறானது.
கிழக்கு அ. ஐ. நா. காடுகள்
கோடை மழை,
மாரி வறட்சி 7. குளிரான
அகன்ற
குளிரான மாரி; பிரிட்டிசுக்.
கொலம் இடை
இலைக்
மட்டமான மென் பியா, வட மேற்கு வெப்ப
காடுகள்
சூட்டுக் கோடை, அ. ஐ. நா. , வட மேற்கோ
ஆண்டு முழுவதும் மேற்கு ஐரோப்பா. ரக் கடல்
மழை வகைக் . காலநிலை 8. குளிரான இடை வெப் நீண்ட மாரி, குறு
பிரேரீக்கள், தெப்பு இடை)
பப் புன் இ கிய மென் சூட்டுக்வெளிகள், பம்பாசு, வெப்பக்
னிலங்கள்
கோடை
தவுண்சு, வெல்டு. கண்டக்
மழை: 10-30// காலநிலை 9. இடை
இடை வெப் கடும் வெப்பநிலை / கோபி,
காலகாரி, வெப்பப் பப் பாலை வீச்சு; 15ாத்துக்குக் பற்றக்கோனியா. பாலைநிலக் நிலங்கள்
குறைந்த மழை காலநிலை 10. குளிரான )
ஊசியிலைக்
வெப்பம் : 400 ப;
ஆட்டிக்கு வட்டக் இடை !
காடுகள்
மழை: 20!
கனடா, சைபீரியா, வெப்பக்
சிகண்டினேவியா. காலநிலை
11. ஆட்டிக் தண்டரா)
நீண்ட கடுங்குளிர் |
வட அமெரிக்கா, குக் கால
மாரி, மழை 20".
ஐரோப்பா, ஆசியா நிலை
வெப்பம் மாரியில்
ஆகிய கண்டங்களின் உறைநிலைக்குக் கீழ் |
வட பகுதிகள்.

உலகின் காலநிலைப் பிரதேசங்கள்
89
1.
பயிற்சிகள் உலகில் மழை அதிகமாகப் பெறும் மூன்று பகுதிகள்
கூறுக.. பின்வரும் பாலைநிலங்கள் உள்ள கண்டங்கள் பிழையாகத் தரப்பட்டுள்ளன; அவற்றைத் திருத்தி எழுதுக :
(1) அற்றக்காமா - ஆசியா (ii) கோபி - வட அமெரிக்கா (iii) காலகாரி - அவுத்திரேலியா (iv) தார் - ஆபிரிக்கா
(v) சகாரா - ஐரோப்பா. 3. உலகத்தின் இயற்கைத் தாவரப் பிரிவுகள் யாவை?
செல்வாசுக் காட்டுப்பகுதி விருத்தியடையாமல் இருப் பதற்குரிய காரணங்கள் நான்கு கூறுக. 5: வடஅமெரிக்கா, தென் அமெரிக்கா, அவுத்திரேலியா
ஆகிய ஒவ்வொரு கண்டத்திலும் ஒவ்வொரு மத்திய தரைக் காலநிலைப் பிரதேசம் கூறுக, மக்கள் வாழ்க்கைக்கு உகந்த காலநிலைப் பிரதேசங்கள் யாவை? மத்தியகோட்டுக் காலநிலையின் பிரதான காலநிலைத் தன்மைகள் யாவை ? வெப்பப் பாலைநிலங்கள் நான்கு கூறுக. அகன்ற இலைக் காடுகள் காணப்படும் மூன்று நாடுகள்
தருக. 10.
பின்வரும் வசனங்களிற் கீறிட்ட இடத்தை ஏற்ற சொற் களால் நிரப்பி எழுது க :
tr அ.
6.
9 .
{i)
புன்னிலம் வட அமெரிக்காவில் உள்ளது.
(ii) ஊசியிலைக் காடுகள்
சத்திற் காணப்படுகின்றன.
காலநிலைப் பிரதே
வறட்சியும்
(iii) மத்தியதரைக் காலநிலை.
மழையும் உடையது.
(iv) கோபி பாலைநிலம்.
கண்டத்தில் உள்ளது.

Page 54
அலகு 3 இலங்கையின் நீர்ப்பாசனமுறைகளும்
காணியபிவிருத்தியும்
1963 ஆம் ஆண்டுக் குடிசனக் கணக்கெடுப்பின்படி இலங்கையின் குடித்தொகை 1,06, 24,507 ஆகும். இலங்கையின் குடித்தொகை ஆண்டுதோறும் பெருகிவருகின்றது. வருடா வருடம் 2 • 3%மாகப் பெருகிவரும் குடித்தொகையை எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகளுள் உணவுப் பிரச்சினை தலையான தாகும். பெருகிவரும் குடிசனத்துக்கு வேண்டிய உணவு, உற் பத்தி செய்யப்படல் வேண்டும்.
எமது பிரதான உணவுப்பயிர் நெல் ஆகும். நெல் பயிராவ தற்கு உலர்வலயத் தாழ்நிலமும் அதன் காலநிலையும் மிகவும் ஏற்றதென முன்னர்க் கண்டோம். தற்போது ஆண்டொன் றுக்கு ஏறக்குறைய 5 கோடி புசல் நெல் (7} இலட்சம் தொன் அரிசி) இலங்கையில் உற்பத்தியாகின்றது. ஆயின். ஆண்டொன் றுக்கு 13 இலட்சம் தொன்னுக்கும் அதிகமான அரிசி எமக்குத் தேவைப்படுகின்றது. மிகுதி வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யவேண்டியுள்ளது. 1965 ஆம் ஆண்டு 6,41,816 தொன் அரிசி இறக்குமதி செய்ததால் 34,17,86,360 ரூபா செலவாகி யுள்ளது. இவ்வாறு ஆண்டுதோறும் பெருந்தொகைப் பணம் அரிசி வாங்குவதில் செலவழிக்கப்படுகின்றது. அரிசி மட்டுமன்றி வேறு பல உப உணவுப் பொருள் களும் இறக்குமதி செய்யப் படுகின்றன. இதனால் உள்நாட்டு உணவு உற்பத்திக்கும் மக் களின் முழு உணவுத் தேவைகளுக்கும் இடையில் கணிசமான அளவு இடைவெளி ஒன்று இருப்பதைக் காணலாம். இந்த இடைவெளியை அடைக்க வேண்டுமாயின் உள் நாட்டில் உண வுப்பொருள் உற்பத்தியைப் பெருக்க வேண்டும். அவ்வாறு பெருக்கினால், 1. அதிக வெளிநாட்டுச் செலாவணியை மிச்சப்படுத்தலாம்;
இப் பணத்தைக் கொண்டு உள் நாட்டிலே கைத்தொழில் களையும் பிற தேவைகளையும் விருத்தி செய்யலாம்; இதனால் வேலையின்றி இருக்கும் ஏராளமானவர் களுக்குத் தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கும்; 4. மொத்தத்தில் எமது பொருளாதாரம் வளர்ச்சியுறும்.

இலங்கையின்,
காணியபிவிருத்தியும் 91
இத்தனைக்குஞ் செய்ய வேண்டியது யாது ? உணவுப்பொருள் உற்பத்தியை உள் நாட்டிற் பெருக்கவேண்டும். உணவுப்பொருள் களை ஈரவலயத்திலும் மலை நாட்டிலும் பெருமளவிற் பெருக்கு வதற்கான வாய்ப்புக்கள் இல்லை. இப்பகுதிகள் பிரதான உணவுப் பயிரான நெல்லுக்கு ஏற்றவையன்று. மேலும் இப் பகுதி களிலே தென்னை, இறப்பர், தேயிலை போன்ற அதிக பயன் தரும் பயிர்கள் ஏற்கெனவே நன்கு விருத்தியாகியுள்ள ன. எனவே, நாட்டின் மொத்த நிலப்பரப்பில் ஏறத்தாழ 2 பங்கைக் கொண் டுள்ள உலர்வலயத் தாழ்நிலத்திலேயே இலங்கையின் எதிர்கால விருத்தி தங்கியுள்ளது என்பது தெளிவு.
உலர்வலயம் சராசரி 50/-75ா மழை வீழ்ச்சியையே பெறு கின்றது. (படம் 9). மழை, வடகீழ்ப் பருவக்காற்றுக் கால மாகிய கார்த்திகை, மார்கழி, தை, மாசி மாதங்களிற் பெய்கின்றது. வடகீழ்ப் பருவக்காற்று எப்பொழுது வீசத் தொடங்கும், எப்பொழுது வீசி முடியும் என்று திட்டவட்டமாகக் கூறுவதற்கில்லை. அது இரண்டு மூன்று கிழமைகள் முந்தியோ பிந்தியோ வீசுவதுண்டு. இதனால் மழையையே நம்பி விதைக்கப் படும் பயிர்கள் பாதிக்கப்படுவது வழக்கம். மேலும் மழையையே நம்பிச் செய்யப்படும் விவசாயத்தால் எமது உணவுத் தேவையை நிறைவேற்ற முடியாது. வறட்சிப் பருவத்திலும் நாம் பயிர்ச் செய்கையில் ஈடுபடவேண்டும். இதற்கு நீர்ப்பாய்ச்சல் வசதிகள் அவசியமாகின்றன.
இப் பிரச்சனை பண்டைக்காலத்திலேயே நன்கு உணரப்பட் டுள்ளது. பண்டைய சிங்கள மன்னர்கள் கணக்கற்ற பல குளங்களைக் கட்டுவித்தனர். அவற்றுள் காலவீவா, பராக்கிரம் சமுத்திரம். மின்னேரியாக் குளம், கந்தளாய்க் குளம் போன் றவை மிகவும் பெரியவை. பெரும் வாய்க்கால்கள் வழியாக ஆற்று நீரை இவற்றுள் தேக்கி வைத்து வறட்சிப் பருவத்திலும் விவசாயம் மேற்கொள்ளப்பட்டது. அக் காலத்தில் இலங்கையி லிருந்து நெல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது.
1. நீர்ப்பாசனத் திட்டங்கள்
அரசாங்கம் பண்டைய குளங்களைத் திருத்தியும் புதிய திட்டங்களை அமைத்தும் உலர்வலயத்தில் நீர்ப்பாய்ச்சல் வசதி களை அளித்து வருகின்றது . அண்மைக்காலம் வரை உலர்ந்த வலயத்திற் காணப்படும் நெல் வயல்களுக்கு மட்டுமே நீர்ப் பாசனத் திட்டங்கள் மூலம் நீர் விநியோகஞ் செய்யப்பட்டது. ஆனால் தற்பொழுது உலர்ந்தவலயத்தில் விளையும் பிற தானியங் களுக்கும் உணவுப் பயிர்களுக்கும் நீர்ப்பாசனஞ் செய்யக்கூடிய வசதிகள் பெருமளவுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Page 55
6?,')
இரணைமடுக்
குளம்
கட்டுக்கரைக்
7 குளம்
பதவியாக் / குளம் 2
'அல்லைக் குளம்
* கந்தளாய்க்
{ குளம் நுரைவீவா
: குருக வீவா /
காலவீவா /
ம் ஒபா டி
1மின்னேரி
4ாக்குளம் பாாக்கிரம சமுத்திரம்
fல்கரா
தெதுறு
நாலந்தை
உருக்கங்க
குளம்
ன்னிச்சைக்,
குளம்
மதாவுல்
2 பிரிப்பே
எலா
மினிப்பே
கல் ஓயா
செனனாயக்கா 1
சமுத்திரம்"
வேவெ) கங்கை
கிருண்டி ஓயா
படம் 321 இலங்கையின் பிரதான நீர்ப்பாசனத் திட்டங்களும்
குடியேற்றத் திட்டங்களும்

இலங்கையின்........... காணியபிவிருத்தியும் 93
உலர்ந்த வலயத்தில் ஆங்காங்கு பரவலாகக் காணப்படும் சிறு குளங்கள், சிறிய நீர்ப்பாசனத் திட்ட வேலைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இக் குளங்களுக்கு நீர், மழைவீழ்ச்சி யால் மட்டுமே கிடைக்கின்றது.
பெரிய அளவிற் செயற்படும் நீர்ப்பாசனத் திட்டங்கள் கமக்காரருக்குத் வேவையான நீரை வருடம் முழுவதும் வழங்குகின்றன. இத்தகைய பெரிய நீர்ப்பாசனத் திட்டங் களின் விபரம் பின்வருமாறு :
1. பராக்கிரம சமுத்திரத் திட்டம் 2. எலகராத் திட்டம் 3. மினிப்பேத் திட்டம் 4. காலவீவாத் திட்டம்
மின்னேரியாத் திட்டம் 6. இரணைமடுத் திட்டம்
கந்தளாய்த் திட்டம் 8. கல்லோயாத் திட்டம் 9. உடவளவைத் திட்டம் 10. மகாவலியை வடக்காகத் திருப்புந் திட்டம். இத் திட்டங்களுட் சில பலநோக்கத் திட்ட அடிப்படையிற் செயற்படுகின்றன.
7 க* ~ ..
கல்லோயாத் திட்டம் : இதுவரை அமைத்து முடிக்கப்பட்டுள்ள திட்டங்களுள் கல்லோயாத் திட்டம் மிகவும் பெரியது. இதன் வேலைகள் 1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. கல்ஓயா 62 மைல் நீளமுடையது. கடலிற் சென்று வீணாகும் இதன் நீர் இங்கினியாக்கலை என்னும் இடத்தில் 1501 உயரமுள்ள பெரும் அணைக்கட்டினாலே தடுக்கப்பட்டுள்ளது. தடுத்த நீர் 35 சதுர மைல் கொண்ட நிலப்பரப்பிலே தேக்கப்பட்டுள்ளது. இம் மாபெரும் நீர்த் தேக் க மே செனநாயக்கா சமுத்திரமாகும். கல்லோயாத் திட்டம் ஒரு பலநோக்க அபிவிருத்தித் திட்டம். அந் நோக்கங்களுட் பிரதானமானவை பின்வருமாறு :
1. வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்தல்: 2 தேக்கிய நீரை நீர்ப்பாசனத்துக்குப் பயன்படுத்தல்; 3. புதிய நிலங்களில் விவசாயத்தை விருத்தி செய்தல்;

Page 56
94
இலங்கைப் புவியியல்
நீர் மின் வலு உற்பத்தி செய்தல்; 5. இவ் வலுவைக்கொண்டு கைத்தொழில் களை விருத்தி
செய்தல்; 6. குடியேற்றஞ் செய்தல்.
கல் ஓயா மழைக் காலத்தில் வெள்ளப் பெருக்கெடுப்பது வழக்கம். அதனாற் பயிர்ச்செய்கையும் குடிகளும் முன்பு அழிவுக் குள்ளாயின. நீரைக் கட்டுப்படுத்திய பின்னர் அத்தகைய சேதங்களுக்கு இடமில்லை. கட்டுப்படுத்தப்பட்ட நீர் சென னாயக்கா சமுத்திரத்திலும் வேறு குளங்களிலும் தேக்கிவைக்கப் பட்டு நீர்ப்பாசனத்துக்குப் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் வறட்சிப் ப ரு வ த் தி லும் விவசாயம் செய்ய முடிகின்றது. கல்லோயாத் திட்டத்தினால் இப்பொழுது 1,20,000 ஏக்கர் நிலத்துக்கு நீர் பாய்ச்சப்படுகின்றது .
கல்லோயாத் திட்டம் அடிப்படையில் ஒரு விவசாயத் திட்ட மாகும். கல் ஓயாப் பள்ளத்தாக்கில் நெல், 'சிகறற்றுப் புகை யிலை, கரும்பு, காய்கறி, தானிய வகைகள், கிழங்கு வகைகள் , பழங்கள் ஆகியன செய்கைபண்ணப்படுகின்றன.
செனனாயக்கா சமுத்திரத்திலே தேக்கப்படும் நீரைக் கொண்டு நீர் மின் வலுவும் பெறப்படுகின்றது. மின் நிலையம் ஒன்று செனனாயக்கா சமுத்திரத்தின் அடிவாரத்தில் உள்ள இங்கினியாக்கலையில் அமைக்கப்பட்டுள்ளது. கல்லோயாப் பள்ளத்தாக்கில் நீர் மின் பெறப்படுகின்றமையினாற் பல தொழிற்சாலைகள் தோன்றியுள்ளன. அவை சீனித் தொழிற் சாலை, செங்கல் - ஓட்டுத் தொழிற்சாலை, தச்சுத் தொழிற் சாலை , , தயர் தி ருத் தும் தொழிற் சாலை, அரிசி ஆலை முதலியனவாகும். அவற்றுள் சீனித் தொழிற்சாலை மிகவும் முக்கியமானது. சீனியை உற்பத்தி செய்கையிற் கரும்புப் பாகை பக்க விளைவாகப் பெறப்படுகின்றது. இதனை மூலப் பொருளாகக் கொண்டு ப ல வ கை ய ா ன மதுபானங்களைத் தயாரிக்கும் மதுசார வடிசாலை ஒன்றும் இங்குள்ளது. இக் கைத் தொழில்கள் யாவும் வெளி நாட்டுச் செலாவணியைச் சேமிக்க உதவுவதோடு பல மக்களுக்கு நிலையான தொழிலும் அளித் துள்ளன.
கல்லோயாப் பள்ளத்தாக்கின் காடுகளில் முன்னர் அங்கு மிங்குமாக வாழ்ந்த மக்களும் ஈரவலயத் தாழ்நிலத்தில் வேலை யற்று இருந்தோரும் இப் பள்ளத்தாக்கிற் குடியேற்றப்பட்டுள் ளனர். கடந்த 14 ஆண்டுகளில் இங்கு 60 புதிய கிராமங்களும் 15 பட்டணங்களும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் ...
... காணியபிவிருத்தியும் 95
உடவளவைத் திட்டம் : இத்திட்டம் 1963 ஆம் ஆண்டு ஆரம் பிக்கப்பட்டது. வளவையாற்றின் மேற்பகுதியை விருத்தி செய்வதே இதன் பிரதான நோக்கமாகும். 1968 ஆம் ஆண்டு உடவளவை அணைக்கட்டுக் கட்டி முடிக்கப்பட்டது. பிற அபி விருத்தி வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 1972 இல் இத்திட்டம் நிறைவுறல் வேண்டும். இத் திட்டத் தால் வரும் நன்மைகள் பின்வருமாறு :
ஐந்து நீர்த்தேக்கங்களை ஏற்படுத்தி நீர்ப்பாசன வசதி யளித்தல் :
உயர் நிலங்களை விருத்திசெய்தல்; 60000 ஏக்கர் உயர் நிலத்தில் பருத்தியைப் பயிரிடல்;
3. குடியேற்றங்களைச் செய்தல்:
4. கிராமப் புறங்களுக்கு மின்வசதியளித்தல்;
5. |
கைத்தொழில் களை விருத்திசெய்தல் ; சீனித் தொழிற் சாலையும் காகிதத் தொழிற்சாலையும் அமைக்கப்பட்டு வருகின்றன.
மகாவலி கங்கையைத் திருப்புத் திட்டம் : இது , மகா வலிகங்கை யின் நீர்ப்பாசன நீர்மின் வளங்களை அபிவிருத்தி செய்வதற்காக வகுக்கப்பட்ட ஒரு பலநோக்கப் பொறியியல் திட்டமாகும். 1970 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத் திட்டம் மூன்று கட்டங்களாகப் பிரித்து நிறைவேற்றப்படவுள்ளன. முதலாவது கட்டத்தில் மகாவலி கங்கை பொல்கொல்லை என்னுமிடத் தில் திருப்பப்படும். உக்குவளையில் ஒரு மின்சார நிலையமும் அமைக்கப்படும். இரண்டாவது கட்டத்தில் மினிப்பே ஆற்றுத் திருப்பமும் விக்ரோறியா நீர்த்தேக்க அமைப்பும் அடங்கும். மூன்றாவது கட்டத்தில் மொறகாக்கந்தை நீர்த்தேக்கம் உரு வாக்கப்படும்.
மகாவலி கங்கை இலங்கையின் மிகப்பெரிய ஆறாகும். இது 206 மைல் நீளமுள்ளது. மகாவலி கங்கையைத் திருப்புத் திட் டம் இலங்கையின் வரலாற்றில் ஆரம்பிக்கப்படும் மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டமாகும். இத்திட்டம் இலங்கை முழுவதற் கும் நன்மை பயக்கும். முழு நன்மைகளையும் அனுபவிக்க 30 ஆண்டுகள் செல்லுமென மதிப்பிடப்படுகின்றது. இத் திட்டம் முற்றாக நிறைவெய்தும்போது ஏற்படக்கூடிய பிரதான பயன் கள் பின்வருமாறு:

Page 57
96
இலங்கைப் புவியியல்
1.
ஒன்பது இலட்சம் ஏக்கர் நிலத்துக்கு நீர்ப்பாசன வசதி கிடைக்கும்; இரண்டு, மூன்று இலட்சம் குடும்பங்கள் குடியேற்றப் படும்;
பத்து இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும்;
4.
ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான கிலோவாட் நீர் மின்சக்தி உற்பத்தி செய்யப்படும்.
2. பிற நீர்ப்பாசன முறைகள்
மேட்டு நிலங்களிலுள்ள கமக்காரர்கள் உப உணவுப் பயிர் களை விளைவிப்பதற்காகப் பம்புதல் முறைகளைக் கையாளுகின் றார்கள். தாழ்நிலப் பகு தி யி லிருக்கும் குளங்களிலிருந்து வாய்க்கால் வழியாக மேட்டுநிலத்துக்கு நீரைக் கொண்டுசெல்ல முடியாது. ஆதலால் பம்பிகள் மூலம் மேட்டு நிலத் தோட்டங் களுக்கு நீர் இறைக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் தேவையான நீரைக் கிணறு களிலிருந்து பெறுகின்றார்கள். யாழ்ப்பாணக் குடாநாடு ஒரு சுண்ணாம்புக்கற் பிரதேசமாகும். சு ண் ணாம் புக் கல் நீரைத் தேக்கி வைத்திருக்குந் தன்மையுடையது. எனவே, இங்கு தரையின் கீழ் அதிக நீர் தேங்கி நிற்கின்றது. இந்நீரைப் பெறு வதற்குக் கிணறுகள் இங்கு அதிகமாக வெட்டப்பட்டுள்ளன. இக் கிணறுகளிலிருந்து பம்பிகளால் தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சப்படுகின்றது.
வற்றாத நீர் நிலைகளிலிருந்து வயல்களுக்கு நீரை அனுப்பு வதற்கு அணைக்கட்டு முறை க ளு ம் கையாளப்படுகின்றன. இம்முறை பெரிதும் ஈரவலயத்திற் காணப்படும். சதுப்பு நிலங்க ளில் தேங்கி நிற்கும் நீரை வழிந்தோடச் செய்வதற்குரிய திட்டங் களையும் ஈர வலயத்தில் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
3. குடி யேற்றத் திட்டங்கள்
குடியேற்றத் திட்டமென்பது சனநெருக்கமுள்ள பகுதிகளி லுள்ள குடும்பங்களை வேறு இடங்களில் மீண்டும் குடியிருத்தும் வேலைத்திட்டமாகும். குடியேற்றத் திட்டங்கள் பெரிதும் நீர்ப் பாசனத் திட்டங்களுடன் இணைந்தவை. மின்னேரியா, பொல்ல நறுவை, கந்தளாய், பதவியா, அல்லை, அம்பாறை ஆகிய இடங் களிற் பெருந் தொகை மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர்.

இலங்கையின் ... ....... காணியபிவிருத்தியும் 97
குடியேறியவர் களின் பிரதான தொழில் பயிர்ச்செய்கையாகும். கைத்தொழில், வியாபாரம் போன்றவற்றிலும் பலர் ஈடுபட் டுள்ளனர். மேட்டுநிலக் குடியேற்றத் திட்டத்தின்கீழ் மாத்தறை, இரத்தினபுரி, மாத்தளை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட் டங்களிலும் மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். குடியேற்றத் துடன் மக்களுக்குத் தேவையான வசதிகளை அளிக்குமுகமாக மற்றைய துறைகளும் குடியேற்றக் கிராமங்களில் விருத்தி செ ய் யப்பட்டுள் ள ன. அவற்றுள் போக்கு வரத்து வசதி. சுகாதார வசதி, பள்ளிக்கூட வசதி, தபால் தந்தி சேவை, பாது காப்பு என்பவை பிரதானமானவை. இவ்விதம் குடியேற்றத் திட்டங்களை அமைத்தல், மலேரியா போன்ற நோய்களை அழித்தல், காடுகளை வெட்டிச் சுத்தஞ் செய்தல், மக்கள் வசிப்பதற்கேற்ற வசதிகளைச் செய்து கொடுத்தல் போன்ற வேலைகளைக் காணி அபிவிருத்திப் பகுதி கவனித்து வருகின்றது.
பயிற்சிகள் 1. இலங்கையின் எதிர்கால விருத்தி எந்த வலயத்திலே தங்கி
யுள்ளது? ஏன்? உணவு உற்பத்தியைப் பெருக்குவதால் ஏற்படக்கூடிய நன்மைகள் நான்கு கூறுக. இலங்கையின் பெரிய நீர்ப்பாசனத் திட்டங்கள் ஐந்து கூறுக. கல்லோயாத் திட்டத்தின் பிரதான நோக்கங்கள் ஆறும் யாவை? 5.
கல்லோயாப் பள்ளத்தாக்கிலே தோன்றியுள்ள கைத்
தொழில் கள் மூன்றின் பெயர் தருக. 6. உடவளவைத் திட்டம் அல்லது மகாவலி கங்கைத் திட்டம்
பற்றி ஒரு சிறு கட்டுரை எழுதுக. இலங்கையின் பிரதான குடியேற்றத் திட்டங்கள் ஐந்து
கூறுக. 8. குடியேற்றப்பட்டவர்களுக்கு அளிக்கப்படவேண்டிய பிர
தான வசதிகள் ஐந்து யாவை?
7.
புவி. VII1.7

Page 58
அலகு 4
விலங்கு வேளாண்மை
1. இறைச்சி வியாபாரத்துக்காகத் தானி யங் களை விளைவிப்பதைப் போலவே, விலங்கு வேளாண்மையும் வியாபார நோக்குடன் பல பகுதிகளிற் செய்யப்படுகின்றன ..
வட அமெரிக்காவின் பிரேரீக்கள், தென் அமெரிக்காவின் பம்பாசு, அவுத்திரேலியாவின் தவுண்சு, தென் ஆபிரிக்காவின் வெல்டு ஆகிய இடைவெப்பப் புல் நிலங்களிலும், வடமேற்கு ஐரோப்பாவின் கமங்களிலும் விலங்கு வேளாண்மை புதிய முறை யிலும் பெரிய அளவிலும் விருத்தியாகியுள்ளது . சவன்னா ( ஆபிரிக்கா ) போன்ற வெப்பப் புல் நிலங்களிலும் விலங்கு வேளாண்மையே பிரதான தொழிலாக நடைபெறுகின்றது.
மாடுகள் இறைச்சிக்கென்றும் பாலுக்கென்றும் வெவ்வேறு முறைகளைப் பின்பற்றி வளர்க்கப்படுகின்றன. இறைச்சி, செம் மறிகள், பன்றிகள் என்பவற்றிலிருந்தும் பெறப்படுகின்றது. பாற்பண்ணை மாடுகளிலும் பார்க்க இறைச்சிக்காக வளர்க்கப் படும் மந்தைகளுக்கு வெப்பநிலை ஏற்றதாகவிருக்கும். இறைச் சிக்காக வளர்க்கப்படும் மந்தைகள் சிறப்பாகக் கொழுக்க வைக்கப்படுகின்றன. இதற்காகப் புல் மட்டுமன்றிப் பல்வேறு உணவுக் கலவைகளும் மந்தைகளுக்கு அளிக்கப்படுகின்றன. புல்லுடன் சோளம், பரு த் தி க் கொட்டை, பிண்ணாக்கு, அல்பால்பா என்னும் செழிப்பான புல் முதலியனவும் இறைச்சி மந்தைகளின் விசேட உணவுகளாகின்றன.
அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஆசெந்தீனா, வட அவுத்திரேலியா என்பன இறைச்சிக்காக மந்தைகளைப் பெருமளவில் வளர்க்கும் நாடுகளாகும். இந் நாடுகளில் விலங்கு வேளாண்மை விஞ்ஞான முறைகளை அடிப்படையாகக்கொண்டு சிறப்பாக நடத்தப்படு கின்றது. இம்முறைகளுள் -
1. நல்லின மந்தைகளைப் பெருக்கல், 2. அவற்றைச் சிறப்பாகவும் கவனமாகவும் வளர்த்தல்,
மந்தை நோய்களைத் தடுத்தல், 4. நல்ல சத்துள்ள உணவு வகைகளைத் தயாரித்தல் என்பன பிரதானமானவை.

விலங்கு வேளாண்மை
99
இறைச்சி உலகச்சந்தையில் அதிகம் தேவைப்படல், இறைச்சி யைப் பழுதுபடாமல் வெளி நாடுகளுக்கு அனுப்பக்கூடிய குளிர் சாதன வசதிகள், நல்ல போக்குவரத்து வசதிகள் என்பனவற் றாலும் இத் தொழில் இன்று மேம்பட்டு விளங்குகின்றது. குளி ரூட்டப்பட்ட இறைச்சி, பனிக்குளிரிறைச்சி, தகர இறைச்சி எனப் பல வகைப்பட்ட முறைகளில் இறைச்சி தயாரிக்கப் பட்டுச் சந்தைப்படுத்தப்படுகின்றது.
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இறைச்சி விலங்கு வேளாண்மை : அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மேட்டுச் சமவெளிப் பிரதேசங் களில் (100° மே. நெடுங்கோடு ) இறைச்சிக்காக மந்தைகள் வளர்க்கப்படுகின்றன. இங்கு பிரேரீக்கள் எனப்படும் இடை வெப்பப் புல் நிலங்கள் காணப்படுகின்றன. இப் புல் நிலங்களில் வருடச் சராசரி மழை வீழ்ச்சி 2011 த்திலிருந்து 4011 வரையு முள்ளது . புல், நீண்டும் செழிப்பாகவும் காணப்படுகின்றது.
வளர்க்கப்படும் முறைகள் : இப் புல்நிலங் களில் மந்தைகள் முதலில் மேயவிடப்படுகின்றன. பின்பு இவற்றையடுத்துள்ள சோள வயல்களுக்கு மந்தைகள் கொண்டுசெல்லப்படுகின்றன. சோள வயல்களிலுள்ள பெரிய பட்டிகளில் மந்தைகள் கொழுக்க வைக்கப்படுகின்றன. இக்காலத்திற் சோளமே மந்தைகளின் பிரதான உணவாகும். சில சமயங்களிற் சோளப் பொத்திகள் பறிக்கப்பட்டபின்னர் மாடுகள் அவ் வயல்களில் மேயவிடப் படுகின்றன. செழிப்பான சோளத் தண்டுகளைத் தின்று மாடுகள் தசைப்பற்றுள்ளவையாகின்றன , மாடுகளை விட்ட பிறகு. வயல் களுக்குப் பன்றிகள் கொண்டுவரப்படுகின்றன. பன்றிகள் மாடுகள் விட்ட மிச்சத்தைத் தின்று கொழுக்கின்றன. இவ்விதம் சோள வயல்களில் உணவு வகைகள் வீணாகாது மந்தைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. குளிர் காலங்களில் உயர் சமவெளி களில் விலங்குகளின் உணவுக்காக இரைபேணு கலன் கள் அமைக்கப்படுகின்றன.
பிரதான நிலையங்கள் : சிக்காகோ, கான்சாசு நகரம், ஓமகா , நியூயோக்கு, சென் உலூயிசு, இந்தியானாப் போலிசு என்னு மிடங்கள் இறைச்சிக் கைத் தொழிலின் மத்திய நிலையங்கம் ளாகும்.
பெறப்படும் பொருள்கள் : இவ்விடங்களிலுள்ள தொழிற் சாலைகளில் மாடுகள் வெட்டப்பட்டு இறைச்சி, எலும்பு, குடல், இரத்தம், குளம்பு, தோல், மயிர் முதலியன யாவும் வெவ்வே றாக்கப்படுகின்றன. இவற்றுள் எதுவுமே வீணாக்கப்படுவதில்லை. இறைச்சி, அப்படியேயோ அல்லது உப்பிடப்பட்டோ அல்லது

Page 59
100
எட்டாந்தரப் புவியியல்
புகையிடப்பட்டோ அடைக்கப்படுகிறது. குளிரூட்டும் வசதிகள் உள்ளூர்ச் சந்தை களுக்கும் ஐரோப்பியச் சந்தை களுக் கும் இறைச்சியை அனுப்ப உதவுகின்றன.
குளம்புகள் வச்சிரம் தயாரிப்பதற்கும், மயிர், பாய்வகைகள் செய்வதற்கும், எலும்புகள் கத்திப் பிடிகள், பொத்தான் முதலி யன செய்வதற்கும், குடல் இறைச்சிப் பைகள் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. ஏனைய யாவும் வளமாக்கிகளாக்கப் படுகின்றன.
பயிற்சிகள்
3.
1. இறைச்சி மந்தை வேளாண்மைக்கு வேண்டிய புவியியல்
நிலைமைகள் மூன்று கூறுக. 2. இறைச்சிக்கென்று வளர்க்கப்படும் விலங்கினங்கள் மூன்று
கூறுக. கண்டங்களின் இடைவெப்பப் புல் நிலங்கள் இங்கு பிழை யாகத் தரப்பட்டுள்ளன, அவற்றைத் திருத்தி எழுதுக. (அ) வட அமெரிக்கா - பம்பாசு (ஆ) தென் அமெரிக்கா -
பிரேரீக்கள் (இ) தென் ஆபிரிக்கா
---
தவுண்சு (ஈ) அவுத்திரேலியா - வெல்டு 4.
இறைச்சி மந்தை வேளாண்மைக்குப் பெயர்பெற்ற மூன்று நாடுகள் எழுதுக. விலங்கு வேளாண்மையில் மேற்கொள்ளப்படும் விஞ்ஞான முறைகளில் நான்கினைத் தருக. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இறைச்சி மந்தை வேளாண்மை சிறப்பாக நடைபெற வாய்ப்பாக இருக்கும் நிலைமைகள் ஐந்து கூறு க.
அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இறை ச் சி ம ந் தை க ள் கொழுக்கவைக்கப்படும் விதத்தை விவரிக்க . 8. அ. ஐ. நா. வின் இறைச்சிக் கைத்தொழில் நிலையங்கள்
நான்கு கூறுக. 9. அ. ஐ. நா. வில் இறைச்சி பதனிடப்பட்டுச் சந்தைகளுக்கு
அனுப்பப்படும் முறைபற்றி ஐந்து வசனங்கள் எழுதுக. 10.'
இறைச்சிக் கைத்தொழிலிலிருந்து பெறப்படும் பக்க விளைவுகள் யாவை?

அலகு 5
விலங்கு வேளாண்மை
II. பால்
இலங்கையின் பாற் பண்ணை கள்
பாற் பண்ணைப் பொருள்களை எமது நாடு இறக்குமதி செய் கின்றது. இவை பிரதானமாக மாவா கவும் கட்டிப் பாலாக வும் பெறப்படுகின்றன. இலங்கையிற் கால் நடை வளர்ப்புக்கு வேண்டிய வளங்கள் யாவும் பெருமிதமாக விருந்தபோதிலும் இப் பொருள்களை நாம் பெருந்தொகைச் செலவில் இறக்குமதி செய்யவேண்டியுள்ள நிலைமை வருந்தத்தக்கதே. ஆயினும் இப் பொருள்களை எமது நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான வழிவகைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் எதிர் காலத்தில் பாற்பண்ணைப் பொருள்களில் எமது நாடு தன்னிறைவு பெறும் என்பது உறுதி.
எமது நாட்டின் பாற்பண்ணை வியாபாரம் அரசாங்கத் தாபனங்கள் மூலமாகவும் தனிப்பட்ட தாபனங்கள் மூலமாக வும் நடைபெற்று வருகின்றது. இலங்கையின் பிரதான பாற் பண்ணைகள் தம்பன்கடுவை, அம்பேவலை, போபத்தலாவை, இரிதியாகமம் ஆகிய இடங்களில் உள்ளன. இவ்விடங்களில் இயற்கையாகவே வளர்ந்துள்ள நல்லினப் புற்கள் மாடுகளுக்கு ஏற்ற உணவாகின்றன.
எமது நாட்டுப் பாற்பண்ணைத் தொழிலை விருத்தி செய்ய ஆராய்ச்சியோடு கூடிய பல புதிய முறைகள் பின்பற்றப்படு கின்றன. உதாரணமாக: இந்தியா, பாக்கித்தான், நியூசிலாந்து
ஆகிய நாடுகளிலிருந்து உயர்ந்த இன மாடுகள் இங்கு கொண்டு வரப்படுகின்றன. அம்பேவலை அரசினர் பண்ணையில் நியூசி லாந்திலிருந்து பெறப்பட்ட ' யேசி' இனப் பால்மாடுகள் வளர்க்கப்படுகின்றன. எமது நாட்டுப் பசு நாளொன்றுக்குச் சராசரி 2 பைந்து பாலை மட்டுமே தரவல்லது. இப் பசுக்களை நல்ல இன வெளி நாட்டுக் காளை களுடன் சேர்த்துப் பெறப்பட்ட கலப்பின மாடுகளிலிருந்து நாளொன்றுக்கு 8 பைந்து பாலைக் கறக்கக் கூடிய தா க விருக்கின்றது. இத்தகைய முயற்சிக ளுடன் விலங்குகளின் உணவு, நோய்த் தடை சம்பந்தமாகவும் பரிசீலனைகள் நடைபெறுகின்றன.

Page 60
102
எட்டாந்தரப் புவியியல் தேசிய பாற்சபையின் சேவைகள் : தேசிய பாற்சபை பாற் பண்ணைப் பொருள்களைத் தயாரிப்பதிலும் அவற்றை விநியோ கிப்பதிலும் . ஈடுபட்டுள்ளது. இச் சபையின் பிரதான நட வடிக்கைகள் பின்வருமாறு :
* 1. நாட்டிலுள்ள பல்வேறு சேகரிப்பு நிலையங்களிலிருந்து
பாலைச் சேகரித்தல், 2. சேகரித்த பாலைப் பக்குவப்படுத்தும் நிலையங்களில்
'பாச்சர்' முறைப் பாலாகவும், கிரு மியழிக் கப்பட்ட பாலாகவும் தயாரித்தல்,
ஐஸ் கிரீம், நெய், வெண்ணெய், சுவையூட்டிய பால், 'யோகட்', தயிர், 'மில்க் பொப்ஸ்' முதலியனவற்றைத் தயாரித்தல், நாடெங்கணும் கடைகளைத் திறந்து இப்பொருள்களை
விற்பனை செய்தல், 5. வெளிநாடுகளிலிருந்து ஆடைப் பால்மாவை இறக்குமதி
செய்து தகரத்திலடைத்து விற்றல்.
பாலைப் பக்குவப்படுத்தும் நிலையங்களுள் கொழும்பிலுள்ள நிலையம் மிகவும் பெரியது. கட்டிப்பால், வெண்ணெய் போன்ற பாலுணவு வகைகள் இக்காலத்தில் எமது நாட்டிலேயே தயா ரிக்கப்பட்டு வருகின்றன. இலங்கையின் முதலாவது தகரப் பாற் தொழிற்சாலை தம்பன்கடுவையிலுள்ளது. நுவரெலியாவில் பெரிய பால்மாத் தொழிற்சாலை ஒன்று அமைக்கப்படவிருக் கின்றது.
எமது பாற்பண்ணைத் தொழில் வெளி நாடுகளின் உதவி யுடன் வேகமாக விருத்தியடைந்து வருகின்றது. இத்தொழில் விருத்திக்கு எமக்கு உதவியளித்துவரும் நாடுகளில் நியூசிலாந்து பிரதானமானது. நியூசிலாந்து, உயர்ந்த இன மாடுகளையும் பால் கறக்கும் இயந்திரங்களையும் ஏற்கனவே அளித்துள்ளது. மேலும் பல அபிவிருத்தி உதவிகளையும் ஆலோசனைகளையும் அது தந்து வருகின்றது.
நியூசிலாந்திற் பாற்பண்ணைத் தொழில்
உலகிற் பாற்பண்ணை வியாபாரம் நடாத்தும் நாடுகளில் நியூசிலாந்தும் முக்கியமானதாகும். பாற்பண்ணைத் தொழில் இங்கு முன்னேற்றமடைவதற்குப் பல புவியியல் நிலைமைகளும் பொருளாதாரக் காரணிகளும் வாய்ப்பாகவுள்ளன.

விலங்கு வேளாண்மை
103
புவியியல் நிலைமைகள் : நியூசிலாந்து பற்றி ஆறாந்தரத்திற் படித்திருக்கின்றோம். (ஆறாந்தரப் புவியியல் : பாடம் 24.) நியூசிலாந்தின் இரு தீவுகளிலும் முதுகெலும்பு போன்று ஒரு மலைத்தொடர் செல்கின்றது. ஏனைய பகுதிகள் சிறிய மடிப் புள்ள மேட்டு நிலங்களாகவும், சம வெளிகளாகவும் உள்ளன. இப்பகுதிகள் புல் வளர்ச்சிக்கேற்ற வளமான மண்ணைக் கொண். டிருக்கின்றன.
நியூசிலாந்தில் இடைவெப்பக் காலநிலை காணப்படுகின்றது. இரு தீவுகளும் மேற்கிலிருந்து வரும் காற்றுக்களினால் ஆண்டு முழுவதும் மழையைப் பெறுகின்றன. ஆயினும் கிழக்குக்கரை காற்றொதுக்கிலுள்ளமையால் குறைவான மழையையே பெறு கின்றது. நியூசிலாந்தின் மப்பான காலநிலையிற் புல்லும் பிற மந்தை உணவுப் பயிர்களும் நன்கு வளர்கின்றன. மாரியில் குளிர் அதிகமில்லை. அதனால் மாடுகள் மாரியிலும் புல் நிலங் களில் மேயக்கூடியதாக இருக்கின்றது.
கம்
வருடம் முழுவதும் மழை பெறும் பாகம் (செழிப்பான புல்)
வைகட்டோ
அவுரகிக் சூடா ஆக்லாந்து
கடற் போக்குவரத்து வசதி உண்டு
43°தே
காற்று
காற்றொதுக்கு
N முகம்
] பாற்பண்ணைத்
தலங்கள்
தென் தீவு
மலைப் பிரதேசம்
ப து ளேடின்
படம் 33 : நியூசிலாந்தின் பாற்பண்ணை நிலை யங்கள்

Page 61
104
எட்டாந்தரப் புவியியல்
- பாற்பண்ணை நிலையங்கள் : நியூசிலாந்தின் வடதீவில் பாற் பண்ணை வேளாண்மை மற்றைய பகுதிகளிலும் பார்க்கப் பெரு மளவில் நடைபெறுகின்றது. வடதீவிலுள்ள தாழ்நிலங்கள் காற்றுமுகப் பகுதியிலிருப்பதனால் அளவான மழையைப் பெறு கின்றன. அதனாற் செழிப்பான புல் நிலங்கள் இங்கு தோன்றி யுள்ளன. இப் புல்நிலங்களில் பால் மாடுகள் நன்கு வளர்கின் றன. இங்குள்ள ஆக்லாந்து என்னுமிடத்தில் பெருந் தொகை யான பால் மாடுகள் உள்ளன. வைகட்டோ, அவுரகி ஆகிய குடாக்களையடுத்த பாகங்களிலும் சிறிய அளவில் இத்தொழில் நடைபெறுகின்றது. தென் தீவில் துனேடின் என்னும் பகுதியிற் பாற்பண்ணை வேளாண்மை நடைபெறுகின்றது. .. பொருளாதாரக் காரணிகள் : பல பொருளாதாரக் காரணி களும் நியூசிலாந்தின் பாற்பண்ணைத் தொழில் விருத்திக்கு உதவி யாகவுள்ளன :
பாலுணவுப் பொருள்கள் கெடாதவாறு அதிக நாட்க ளுக்கு வைத்திருக்கக்கூடிய குளிர் சாதனங்களை யுடைய கப்பல்கள் உள்ளன . 2. இக் கைத்தொழிலின் எல்லாத் துறைகளிலும் இயந்தி
ரங்கள் உபயோகிக்கப்படுகின்றன. 3. பண்ணைப் பொருள்கள் தயாரிக்கப்படுதலும் சந்தைப்
படுத்தலும் கூட்டுறவு அடிப்படையில் நடைபெறுகின்றன. 4. பரிசோதனை செய்தல், நல்ல மந்தை உணவுகளைத் தயா
ரித்தல், உயர்ந்த இன மாடுகளைப் பெருக்கல் முதலிய
விஞ்ஞான முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 5. பாற்பண்ணை மாவட்டங்கள் கடலுக்கண்மையில் இருப்
பதனால் கொண்டுசெல்லலும் மலிவாகின்றது .
உற்பத்தியும் வியாபாரமும் : நியூசிலாந்தின் முக்கியமான பாற்பண்ணைப் பொருள்கள் வெண்ணெயும் பாற்கட்டியுமாகும். உலர்ந்த பால்மாவும் பெருமளவில் ஏற்றுமதியாகின்றது. இப் பொருள்களால் நாட்டின் முழு வருமானத்தில் 1 பங்கு பெறப் படுகின்றது." 12,000 மைல்களுக்கு அப்பாலுள்ள பெரிய பிரித்தானியா நியூசிலாந்தின் பிரதான சந்தையாகும்.
பிற நாடுகள்
உலகத்தின் பெரும் வணிகப் பாற்பண்ணைப் பிரதேசங்கள் இடைவெப்பவலய நாடுகளிலேயே காணப்படுகின்றன. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மத்திய பாகங்கள் (விசுகொன்

விலங்கு வேளாண்மை
105
சினைச் சுற்றியுள்ள பகுதிகள்), தென்மாக்கு, நெதலாந்து, சுவிச்ச லாந்து, பெல்சியம், கிழக்கு அவுத்திரேலியா, ஆசெந்தீனா என்ப வற்றிற் பாற்பண்ணைத் தொழில் வணிக அளவிற் சிறப்பாக நடைபெறுகின்றது.
4 |
பயிற்சிகள்
1.
எமது நாட்டிற் பாற்பண்ணைகள் உள்ள இடங்கள் நான்கு
கூறுக. 2. தேசீய பாற்சபையின் தொண்டுகளை வரிசைப்படுத்துக. 3. உலகிற் பாற்பண்ணைத் தொழில் சிறப்பாக நடைபெறும்
ஐந்து நாடுகள் கூறுக. இந்நாடுகள் எவ்வகலக் கோடுகளுக்கிடையில் அமைந்
துள்ளன? 5. பாற்பண்ணைத் தொழில் இடைவெப்ப வலய நாடுகளிற்
சிறப்பாக நடைபெறுதற் கேற்ற --
(அ) புவியியல் நிலைமைகள் மூன்று கூறுக;
(ஆ) பொருளாதாரக் காரணிகள் நான்கு கூறுக.
6.
பாற்பண்ணைப் பொருள்களை அட்டவணைப்படுத்துக. இவற்றுள் எப்பொருள்களை எமது நாடு இறக்குமதி செய் கின்றது? 8. அவை எந்நாடுகளிலிருந்து பெறப்படுகின்றன? 9. பாற்பண்ணைப் பொருள்கள் எவ்வாறு சந்தைப்படுத்தப்
படுகின்றன? 10. நியூசிலாந்தில் எவ்விடங்களிற் பாற்பண்ணை கள் உள்ளன?
11. )
நியூசிலாந்தில் பாற்பண்ணைத் தொழில் நன்கு விருத்தி
யாகக் காரணமாயிருந்த நிலைமைகளைக் கூறுக. 12.
உலகப் படமொன்றிற் பிரதான பாற்பண்ணைப் பிரதேசங் களைக் குறித்துப் பெயரிடுக.

Page 62
அலகு 6
மீன்பிடித் தொழில் இலங்கையில் மீன்பிடித் தொழில்”
புவியியல் நிலைமைகள் : மீன் முக்கியமான ஓர் உணவுப் பொருளாகும். மீன்பிடித் தொழில் பண்டைக்காலத்திலிருந்தே இலங்கையில் நடைபெற்று வருகின்றது. உலர்வலயம் மீன் பிடித் தொழிலுக்கு முக்கியமானது. இலங்கையிற் பிடிக்கப்படும் மொத்த மீன் தொகையில் முக்காற்பங்கு உலர் வலயத்திலிருந்தே கிடைக்கின்றது. ஆழமில்லாத கடல் தளங்களில் மீன் நன்கு விருத்தியாகின்றது. படம் 7 இல் ஆழமில்லாத நீர்ப்பரப்பு மென்னீல நிறத்தாற் காட்டப்பட்டுள்ளது. வடபகுதியில் இத் தகைய நீர்ப்பரப்புகள் அதிகமல்லவா? இப்பகுதிகளில் மீனுக்கு உணவாகும் உயிரணுக்களும் நுண்ணிய தாவரப் பொருள்களும் பெருமளவில் வளர்கின்றன. இதனால் இங்கு மீன் கூட்டங்கள் அதிகம் உள்ளன. முறிவுள்ள கடற்கரையோரமும் மீன்பிடிப்பை இலகுவாக்குகின்றது. இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிக் கடற்கரையோரம் வளைவுற்றிருப்பதும் அதனாற் பல குடாக்க ளும் கடல் நீர் ஏரிகளும் உருவாகியுள்ளமையும் உலர்வலய மீன் பிடித்தொழில் விருத்திக்கு வாய்ப்பாக உள்ள தன்மைகளாகும்.
மீன்பிடியிடங்கள் : இலங்கையின் மீன்பிடி இடங்கள் படம் 34இல் காட்டப்பட்டுள்ளன. உலர்வலயத்தில் யாழ்ப்பாணம். மயிலிட்டி, பருத்தித்துறை, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக் களப்பு, அம்பாந்தோட்டை, சிலாபம், புத்தளம், மன்னார் என்பன பிரதான மீன்பிடியிடங்களாகவுள்ளன. வடபகுதியில் பீதுரு, வாட்சு ஆகிய பெரும் மீன்பிடித் தளங்கள் இரண்டு உள்ளன. ஈரவலயப் பகுதியில் தங்காலை, கொழும்பு, அம்பலாங் கொடை, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் மீன் பிடிக்கப்படு கின்றது. ஆயினும் இப் பகுதியில் மழை அடிக்கடி பெய்வதால் மீன் பிடிப்புப் பாதிக்கப்படுகின்றது. தென்மேற் பருவக்காற்றுக் காலத்தில் மழை அதிகமாக இருப்பதோடு கடல் அலைகளும் பொங்கி எழுந்து வீசும். இதனால், இக்காலத்தில் மீன் இங்கு பிடிக் கப்படுவதில்லை; இங்குள்ள மீனவருள்ளே சிலர், பேசாலை, முல்லைத் தீவு போன்ற இடங்களுக்குச் சென்று மீன்பிடிப்பர். உலர்வலயத் திலும் வடகீழ்ப் பருவக்காற்றுக் காலத்திலே பருத்தித்துறை. முல்லைத்தீவு, திருகோணமலை போன்ற இடங்களில் மீன்பிடிக்கப் படுவதில்லை. யாழ்ப்பாணம், யாழ்ப்பாணத்தின் தீவுப்பகுதி, மன்னார் போன்ற காற்றொதுக்கு இடங்களில் ஆண்டு முழுவதும் மீன் பிடிக்கப்படுகின்றது.

சிறை
பருத்தத்தில் சாவகச்சேரி
15
யாழ்ப்பாணம்
* மீன்பிடியிடங்கன்.
முத்துத் துறைகள் ப சங்குத் துறைகள்
முல்லைத்தீவு
குச்சவெளி,
நிலாவெளி திருகோணமலை
கற்பிட்டி
2 புத்தளம்
'பாலாவி
கற்குடா
ஏறாவூர் மட்டக்களப்பு
சிலாபம்
* டெபிக்தோட்டம்
படம் 34 : உலர்வலயத் தாழ்நிலத்தின் மீன்பிடியிடங்கள்,
முத்துத் துறைகள், சங்குத் துறைகள் (1)

Page 63
108
எட்டாந்தரப் புவியியல்
மீன்பிடி முறைகள் : மீன் வெவ்வேறு முறைகளாற் பிடிக்கப் படுகின்றது. கொய், திரளி, முரல், சூடை, நெத்தலி ஆகிய சிறிய மீன் கள் ஆழமான கடலின் மேற்பரப்பில் வாழ்கின்றன. இவை வள்ளங்களிற் சென்று வலை வீசிப் பிடிக்கப்படுகின்றன. ஆழ் கடலின் அடித்தளத்தில் பாரை, கட்டாப்பாரை, பாலை, பறவை, அறக்குளா போன்ற பெரிய மீன் கள் வாழ்கின்றன. இவை தூண்டில் வலையாற் பிடிக்கப்படுகின்றன. இவ் வலை பெரிய தூண்டில் களையுடைய நீண்ட பல கயிறுகளைக் கொண்டது. இத் தூண்டில்களில் இறால், குஞ்சுமீன் முதலிய இரைகளைக் கோத்துக் கயிறுகளைக் கீழே இறக்கிவிடுவர். இடையிற் கயிறுகளை இழுத்துத் தூண்டிலில் விழுந்த மீன்களை எடுத்துப் படகிற் போட்டுக் கொண்டு, தூண்டிலில் இரையைக் கோத்து மீண்டும் இறக்கி விடுவர். இவ்வாறு படகிலே தங்கி இரவுமுழுவதும் மீன்பிடித்து மறு நாட் காலை மீனவர் கரைக்கு வருவர்.
ஆழமில்லாத கடற்கரைப் பகுதிகளில் வீச்சுவலை, கரைவலை, விடுவலை போன்றவற்றாலும் சூழ்ப் பிடித்தும், பறிக்கூடு கட்டி யும் பலவாறாக மீன் பிடிக்கப்படுகின்றது.
கடற்றொழில் கூட்டுத்தாபனம் : பிடிக்கப்படும் மீன் நாட்டின் தேவையை நிறைவேற்றுவதாக இல்லை. பற்றாக்குறையை நிறைவு செய்ய மீன் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின் றது. இதனால், அதிக பணம் செலவாகின்றது. ஆதலால், அர சாங்கம் இத்தொழிலை விருத்தி செய்யக் கடற்றொழிற் கூட்டுத்
படம் 35: தூண்டில் வலையால் மீன்பிடித்தல்

மீன்பிடித் தொழில்
109
தாபனம் ஒன்றை அமைத்துள்ளது. இத்தாபனம் உருவாக்கப் பட்டபின்னர் மீன் பிடித்தல் முதல் விற்பனவு செய்யும் வரை பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பல இடங்களிற் புதிய பல முறைகள் மீன்பிடித் தொழிலிற் கையாளப்படுகின்றன. நைலோன் வலைகள், பொறி வள்ளங்கள், இழுவைக் கப்பல்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி மீன் பெருமளவிற் பிடிக்கப்படுகின் றது. நூல் வலைகளிலும் பார்க்க, நைலோன் வலைகள் நின்று பிடிக்கக்கூடியவை. வள்ளங்களில் எந்திரங்களைப் பூட்டுவதனால் மீன்களைக் கரைக்கு விரைவாகக் கொண்டுவரக்கூடியதாக இருக் கின்றது. இப்பொழுது மூன்று இழுவைக் கப்பல்கள் (பெரும் மீன்பிடிக் கப்பல்கள் ) அரசாங்கத்திடமுள்ளன. இவற்றைக் கொண்டு அதிக தூரஞ் சென்று ஆழ்கடலிற் பல தொன் நிறை யுள்ள மீன்கள் பிடிக்கப்படுகின்றன. பிடித்த மீன்களைத் தூர வுள்ள இடங்களுக்குக் குளிர் ஊட்டி அனுப்ப வேண்டும். முக்கிய மான மீன்பிடி இடங்களிற் குளிரூட்டும் நிலையங்களை அரசாங்கம் அமைத்து வருகின்றது. மேலும் மீனவருக்குக் கடனுதவி செய்தும், வீடு கட்டிக்கொடுத்தும் கூட்டுறவு மீன்பிடிச் சங்கங் களை உருவாக்கியும் அரசாங்கம் உதவி செய்து வருகின்றது.
கடலில் மட்டுமன்றி, நன்னீர்க் குளங்களிலும் எம் நாட்டவர் மீன் பிடிக்கின்றனர். பிடிக்கப்படும் மீனின் தொகை இக் காலத்தில் அதிகரித்து வருகின்றது. இதனால் வெளி நாடுகளி லிருந்து இறக்குமதி செய்யப்படும் மீனின் அளவு குறைந்துள்ளது.
( }. |
1:::
4. ட
படம் 36 : இழுவைக் கப்பலால் மீன்பிடித்தல்

Page 64
110
எட்டாந்தரப் புவியியல்
உலகத்தின் பிரதான மீன்பிடியிடங்கள்
மீன்பிடி நிலையங்களைக் காட்டும் 37 ஆம் படத்தைக் கவனிக் கின்றபொழுது ஓர் உண்மை புல னா கின் ற து. தென்னரைக் கோளத்திலும் பார்க்க வடவரைக் கோளத்திலேயே மீன் பெரு மளவிற் பிடிக்கப்படுகின்றது. வடவரைக் கோளத்திலும் இடை வெப்ப வலயத்திலேயே பிரதான மீன்பிடியிடங்கள் அமைந் திருக்கக் காணலாம். இடைவெப்ப வலயத்தில் நான்கு மீன்பிடி யிடங்கள் பிரதான மானவை :
(1) யப்பானைச் சுற்றியுள்ள கடல்கள். (2) வட அமெரிக்காவின் பசுபிக் கடற்கரை
(வடகிழக்குப் பசுபிக்கு), (3) வடமேற்கு அத்திலாந்திக்கு, (4) வடமேற்கு ஐரோப்பா (வடகடல்).
இப்பகுதிகளில் மீன் பண்ணைகள் விருத்தியானமைக்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் !
(1) ஆழமில் கடலடித் தளங்கள் உள்ளமை, (2) குளிர்ச்சியான காலநிலை காணப்படுகின்றமை, (3)
பிளாந்தன் போன்ற மீன் உணவுகள் பெருகுகின்றமை, (4) மீன்பிடித் துறைக்கு வாய்ப்பான முறிவான கடற்
கரையோரம் உள்ளமை என்பன பிரதானமானவை.
---- --------
வடமேல். அம்திலாந்திக்கு
மீன்பிடியிடங்கள்
படம் 37 : "உலகத்தின் பிரதான மீன்பிடியிடங்கள்

மீன்பிடித் தொழில்
111
நியூபவுண்லாத்தின் மீன்பிடிக் கைத்தொழில்
நியூபவுண்லாந்து வடமேற்கு அத்திலாந்துச் சமுத்திரத்தில் உள்ள ஒரு தீவாகும். இது கனடாவுக்குரியது. நியூபவுண்லாந் துக்கு அண்மையில் உலகின் மிகச் சிறந்த 'கிராண்பாங்' என்னும் மீன்பிடித் தளங்கள் உள்ளன. இங்குள்ள கடற்கரை முறிவுற் றிருப்பதனால் மீன்பிடித்துறைகளுக்கு வாய்ப்பாகவுள்ளது. காற் றொதுக்கில் வள்ளங்கள் நின்று பிடித்த மீனை அமைதியாக இறக்க முடியும். இங்குள்ள சென் யோன், பிளசத்தியா, உலூயி போட் என்பன இத்தகைய மீன்பிடித் துறைகளாகும். கட லடித் தளம் மிகவும் அகலமாகவும் ஆழமில்லாததாகவும் உள்ளது. மென்சூட்டு விரிகுடா நீரோட்டமும் குளிரான இலபிரடோர் நீரோட்டமும் இத்தளத்திற் சந்திக்கின்றன. இப் பகுதி, மீன் உணவாகிய பிளாந்தன் போன்ற நுண்ணிய உயிர்ப் பெருக்கத்துக்கு மிகவும் ஏற்றது. மேலும் கிறீன்லாந்திலிருந்து வரும் பனிக்கட்டி மலை களும் இங்குதான் உருகுகின்றன. அவை உருகுமிடங்களில் மீனுக்கு ஏற்ற சேதனப் பொருள்கள் விடப்படுகின்றன. ஆதலால் மீன் இப்பகுதியில் விருத்தியா கின்றது .
மேலும் குளிரான இடைவெப்பக் கால நிலையும் மீன் விருத் திக்கு ஏற்றதாகவுள்ளது. குளிர் நீரில் மீன் உணவுகள் அழிவது குறைவு. அத்துடன் பிடிக்கும் மீனையும் நெடுநேரத்துக்குப் பழுதுபடாமல் வைத்திருக்க முடியும். குளிர்ச்சியான காலநிலை யில் மக்களும் ஊக்கமுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால் பனிக்கட்டி மலைகளும் மூடுபனியும் மீன்பிடிப்புக்கு இடையூறு விளைவிக்கின்றன. மூடுபனியில் இடங்களைப் பார்க்க முடியாது. அதனாற் பல வள்ளங்கள் பனிக்கட்டி மலைகளுடன் மோதி அழிந்திருக்கின்றன. நி யூ பவுண் ல ாந் து க் கு வடக்காகவுள்ள கடல்கள் மாரியில் உறைந்துவிடுவதனால் அக்காலத்தில் தெற் கில் மீன்பிடிப்பு அதிகரிக்கும்.
கனடாவிலுங் கடுங்குளிர் காரணமாக விவசாயத்துக்கேற்ற நிலைமைகள் குறைவு. இங்கு நியூபவுண்லாந்துக்கும் நோவாசு கொட்டியாவுக்கு மிடைப்பட்ட 70,000 ச. மைல் பரப்பில் கொட், அடொக்கு, அலிபட்டு, எரிங்கு போன்ற இனங்கள் பிடிபடுகின்றன. நண்டுக் கைத்தொழிலிற் கனடா முதலிடம் வகிக்கின்றது. நியூபிறன்சுவிக்கு என்னுமிடத்தில் சாடின் மீனைத் த கரத்திலடைக்கும் முக்கியமான தொழிற்சாலை ஒன்றுள்ளது.
மீன் பிடிப்பில் நவீன முறைகளும் யந்திர உபகரணங்களும் "பயன்படுத்தப்படுகின்றன. பல்லாயிரக் கணக்கான நீராவி வள்ளங்களும் மோட்டார் வள்ளங்களும் நூற்றுக்கணக்கான

Page 65
112
எட்டாந்தரப் புவியியல்
இழுவைக் கப்பல்களும் இத்தொழிலிற் பயன்படுத்தப்படுகின் றன. பதப்படுத்தல், தகரத்திலடைத்தல் போன்ற தொழில்களை உடனுக்குடன் செய்யக்கூடிய வசதிகளுஞ் சில இழுவைக் கப்பல் களிலுள்ளன.
- மீன் களை வியாபாரத் தலங்களுக்கு அனுப்புவதற்காகப் பதப்படுத்தல், காய வைத்தல், குளிரூட்டல், புகையூட்டல், தகரத்திலடைத்தல் முதலிய வேலைகளைச் செய்வதற்கேற்ற வசதிகளுள்ள நவீன துறைகள் உள்ளன. மீனெண்ணெய், மீன் குளிகைகள், விலங்குத் தீன் முதலியனவும் இடைக்காலப் பயன் க ளாகப் பெறப்படுகின்றன. . .
மீன்பிடிக்குந் தொழில் மனிதனின் மிகவும் பழைய தொழில் களில் ஒன்றாகும். மனிதனின் முக்கியமான உணவுகளில் மீனும் ஒன்றாகவுள்ளது. மீன் மலிவாகக் கிடைப்பதுவும், அது புரதச் சத்தைக் கூடுதலாகக் கொண்டிருப்பதுவும் இதற்குரிய கார ணங்களாகும். இக்காலத்தில் மீன் , உணவுக்கென்று பிடிக்கப் படுவதிலும் பார்க்க வியாபாரத்திற்கென்றே நவீன வசதிக ளுடனும் இயந்திர உபகரணங்களின் உதவியுடனும் பல நாடு களிற் பெரு ம ள விற் பிடிக்கப்படுகின்றது. உலகத்திலேயே பெரிய மீன் பிடி நாடாக விளங்கும் யப்பான் இத்தொழிலில் அதிகம் முன்னேறியுள்ளது.
பயிற்சிகள் 1.
மீன்பண்ணை விருத்திக்கேற்ற நிலைமைகள் ஐந்து கூறுக. 2. உலகத்தின் பிரதான மீன்பிடியிடங்கள் நான்கு கூறுக. 3. கீறிட்ட இடங்களை நிரப்பி எழுதுக :
(அ) மீனில் ---- சத்து அதிகம் உள்ளது. (ஆ) இலங்கையில் -
ஆகிய இடங் களில் ஆண்டு முழுவதும் மீன் பிடிக்கப்படுகின்றது. (இ) ஆழமில் கடலில்
ஆகிய முறைகளால் மீன் பிடிக்கப்படுகின்றது. (ஈ) உலகத்திலேயே பெரிய மீன் பிடிநாடு
ஆகும். 4. நியூபவுண்லாந்தில் மீன்பிடிப்புப் பற்றிப் பத்து வசனங்கள்
எழுதுக'.. இலங்கையில் மீன் பெருமளவிற் பிடிக்கப்படும்
எட்டு இடங்கள் கூறுக. " 6, மீன்பிடித் தொழிலை விருத்தி செய்ய எமது அரசாங்கம்
மேற்கொண்டுவரும் வழிவகைகள் ஐந்து கூறுக.

அலகு 7
காடுகளும் காட்டுத் தொழில்களும்
காடுகளிலிருந்து பெறப்படும் பயன் களுள் மரம் முதன்மை யானது. வீடு கட்டுவதற்கும் எரிப்பதற்கும் ஆதிகாலத்தி லிருந்தே பயன்படுத்தப்பட்டு வந்த மரம், இன்று எத்தனையோ தேவைகளை நிறைவேற்ற உதவுகின்றது. குற்றிகள், பலகைகள் போன்ற பல்வேறு வடிவங்களில் அதன் தேவை இன்று கூடிக் கொண்டே வருகின்றது. காட்டுத் தொழிலின் மூலம் ஒட்டுப் பலகை, தீக்குச்சி, கடதாசி, செயற்கைப்பட்டு, கப்பல் போன்றவைகள் செய்யப்படுகின்றன.
வெப்பவலயக் காடுகளும் இடைவெப்பவலயக் காடுகளும் : மரம் வெட்டுந் தொழில் சிறிய அளவிலும் பெரிய அளவிலும் ஓரள வுக்கு எல்லாக் காடுகளிலும் நடைபெறுகின்றது. வெட்டுகின்ற அளவும் முறையும் காடுகளின் தன்மைக் கேற்பவுந் தரைத் தோற்றத்திற் கேற்பவும் இடத்துக்கிடம் வேறுபடுகின்றன. வெப்பவலயக் காடுகளிலும் பார்க்க இடைவெப்ப வலயக் காடு களிலேயே மரம் வெட்டுந் தொழில் பெருமளவில் நடைபெறு கின்றது. வெப்பவலயத்திலுள்ள கொங்கோ, அமேசன் ஆகிய மத்தியகோட்டுக் காடுகளின் நிலைமைகள் பற்றி முன்னர் படித் திருக்கின்றோம் (பக்கம் 77). மத்திய கோட்டுக் காடுகள் -
(1) மனிதன் உள்ளே போகமுடியாத அளவுக்கு அடர்த்தி
யானவை; (2) சேற்று நிலங்களையுடையவை; (3) நோய்களைப் பரப்பும் நச்சுப் பூச்சிகளையுங் கிருமி
களையுங் கொண்டவை; (4) கொண்டு செல்லல் வசதிகளற்றவை; (5) குடியடர்த்தி குறைவானவை.
இத்தகைய காரணங்களினால் மரம் வெட்டுந் தொழில் இக் காடுகளில் நன்கு விருத்தியாகவில்லை. ஆயினும் வசதியான இடங்களில் வேம்பு, கருங்காலி, முதிரை, தேக்கு முதலிய வன் மரங்கள் வெட்டப்படுகின்றன.
மத்தியதரைக் காடுகளும், அகன்ற இலைக் காடுகளும், ஊசி யிலைக் காடுகளும் இடைவெப்ப வலயத்தைச் சேர்ந்தவை, இக் காடுகள் காணப்படும் நாடுகள் யாவை? (படம் 31). இடை
புவி , VIII - 8

Page 66
114
எட்டாந்தரப் புவியியல்
வெப்ப வலயக் காடுகளுள் ஊசியிலைக் காடுகளிலேயே வணிக அளவில் மரம் வெட்டுந் தொழில் சிறப்புற நடைபெறுகின்றது. இதற்கான காரணங்கள் பல :
(1) ஊசியிலைக் காடுகள் அடர்த்தியற்றவை; உடல் நலத்
-துக்கு உகந்தவை. (2) இந்நாடுகளில் கடும் மழைவீழ்ச்சி இல்லை; ஆதலால்
சேற்று நிலங்கள் இல்லை; எனவே கொண்டு செல்லல்
எளிதாகின்றது. (3) ஓரின மரங்கள் தொடர்ச்சியாகவுள்ளன; இதனால்
தறிப்பு வேலையில் நேரம் செலவாவதில்லை. (4) மரங்கள் மென்மையானவை; நேரானவை; அதிக
கிளைகளற்றவை. இவை, தறித்தல், அரிதல், சீவுதல் போன்ற வேலைகளுக்கு வாய்ப்பாக வுள்ளன.
மேலும், ஊசியிலைக் காட்டுக்கு அண்மையிலுள்ள நாடுகள் கைத்தொழில் விருத்திபெற்ற நாடுகளாக வுள்ளன. கப்பல் கட்டுந் தொழில், கடற்றொழில், பெட்டிகளில் அடைத்தல், இரும்பு உருக்கு என்பவற்றோடு கூடிய பிற தொழில் கள் யாவற் றுக்கும் மரங்கள் தேவைப்படுகின்றன. எனவே, இந்நாடுகள் ஊசியிலைக்காட்டு மரங்களுக்குப் பெருஞ் சந்தைகளாக அமை கின்றன.
மரம் வெட்டுந் தொழில் நடைபெறும் நாடுகள் : அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய கண்டங்களின் அகன்ற இலைக் காடு களிலும் ஊசியிலைக் காடுகளிலும் மரம் வெட்டுந் தொழில் பெரு மளவில் நடைபெறுகின்றது. அ. ஐ. நா., கனடா, யேமனி, பிரான்சு, சிகண்டினேவியா, பின்லாந்து, சோவியத்து இரசியா, சீனா, யப்பான், நியூசிலாந்து ஆகிய நாடுகள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளன. பருவக் காற்று நாடாகிய பேமா அதன் தேக்க மரத்துக்குப் பெயர்பெற்றது.
சிகண்டினேவியாவில் மரம் வெட்டுந் தொழில் : தேசப் படம் ஒன்றில் ஐரோப்பாக் கண்டத்திலுள்ள சுவீடன், நோவே ஆகிய நாடுகளின் நிலையத்தைக் கவனிக்க.. சுவீடனும் நோவேயும் சேர்ந்த பகுதி முழுவதும் சிகண்டினேவியா எனப்படும். இந்நாடுகள் பயனுள்ள ஊசியிலைக் காடுகளைக் கொண்டுள்ளன. வருவாயின் பெரும் பகுதி இக் காடுகளிலிருந்தே பெறப்படு கின்றமையால், மரம் வெட்டுந் தொழில் செம்மையாகவுங் கவனமாகவும் இந் நாடுகளில் மேற்கொள்ளப்படுகின்றது. சுவீடனின் ஏற்றுமதியில் பகுதியும் நோவேயின் ஏற்று

காடுகளும் காட்டுத் தொழில்களும் 115
மதியில் பகுதியும் மரப் பொருள்களாகும். மரம், மரக் கூழ், காகிதம், இருப்புப் பாதைக் கட்டைகள், தீக்குச்சிகள் முதலியன இந்நாடுகளின் பிரதான ஏற்றுமதிகளாகவுள்ளன. நோவேயின் தலைநகரமும் பிரதான துறைமுகமும் ஒசு லோ ஆகும். மேற்கு ஓரத்திலுள்ள பேகன் துறைமுகமும் மரங்களை ஏற்றுமதி செய்கின்றது. சுவீடனின் தலைப்பட்டணம் இஸ் ரொக்கோம் ஆகும். கோட்டிபோக்கு, மால்மோ என்பன பிரதான துறை முகங்கள், காடுகளில் இந்நாடுகள் அதிக அக்கறை காட்டு வதற்கு மற்றுமொரு காரணம் விவசாயம் செய்வதற்கேற்ற நிலம் இல்லாமையாகும்.
மரங்கள் இலையுதிர் காலத்தில் வெட்டப்படுகின்றன. மாரியில் மழைப்பனி பெய்யும். மழைப்பனி படிந்த நிலம் மரங்களை ஆறுகளுக்கு இலகுவில் இழுத்துச்செல்ல உதவுகின்றது. இலை தளிர் காலத்தில் உருகி ஓடும் ஆறுகள் மரங்களை ஆலை களுக்கு எடுத்துச் செல்கின்றன. நோவேயின் கடற்கரையைக் கவனிக்க. அது இந்தியாவின் கடற்கரை போன்று நேராக இல்லாது பல உள்வளைவுகளைக் கொண்டுள்ள து. இதனால் நோவேயிற் பல நுழைகழிகள் தோன்றியுள்ளன. இந் நுழை கழிகள் மாரியிற் பனிக்கட்டியற்றவை. ஆதலால் ஆண்டு முழு வதும் ஆலைகளில் வேலை நடைபெறுகின்றது. பால்திக் கடற் கரைப் பகுதிகளில் ஆறுகளும் துறைமுகங்களும் மாரியிற் பனிக் கட்டிக்குள்ளாகின்றன. இதனால் மர ஆலைகளில் வேலைகள் தடைப்படுகின்றன.
நீர்மின் வலுவும் ஐரோப்பிய நாடுகளில் மரங்களை விற்கக் கூடிய வசதியும் இத்தொழிலைச் சிகண்டினேவியாவில் விருத்தி செய்ய உதவிய மற்றைய காரணங்களாகும்.
இலங்கையிற் காட்டுத் தொழில் : இலங்கையிலுள்ள காடுகளின் மொத்தப் பரப்பளவு 70 இலட்சம் ஏக்கராகும். அதாவது நாட்டின் நிலப்பரப்பில் 40% த்துக்கும் சிறிதும் அதிகமாகும். இவை -
(அ) ஈரவலயக் காடுகள் (ஆ) மலைக் காடுகள் (இ) வெப்பவலயக் காடுகள்
(ஈ) பற்றைக் காடுகள்
(உ) புல் நிலங்கள் (பத்தனைகள், தலாவை) எனப் பிரதானமாக ஐந்து வகைப்படும்.

Page 67
116
எட்டாந்தரப் புவியியல்
இவற்றுள் வெப்பவலயக் காடுகளிலேயே காட்டுத் தொழில் பெருமளவில் நடைபெறுகின்றது. வெப்பவலயக் காடுகள் இலங்கையின் உலர்வலயத் தாழ்நிலத்திற் காணப்படுகின்றன. இங்கு சராசரி 50/-75ா மழை வீழ்ச்சியுண்டு; மழைப்பருவம் வெப்பப் பருவமென இரு பருவங்களும் காணப்படுகின்றன. மழைப் பருவம் மரங்களின் வளர்ச்சிக்கும் வெப்பப் பருவம் அவற்றின் உறுதிக்கும் உகந்தனவாயுள்ளன. பாலை, முதிரை, கருங்காலி, மலைவேம்பு, யாவறணை போன்ற பல வைர மரங்கள் இக்காடுகளிலுள்ளன. இவை வீடு கட்டவுந் தளபாடங்கள் செய்யவும் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. ஏனைய மரங்கள் நாட்டின் விறகுத் தேவைக்காக வெட்டப்படுகின்றன. புகை யிரதப் பகுதிக்குத் தேவையான சிலிப்பர் கட்டைகளைச் செய்வ தற்கும் பிற தேவைகளுக்குரிய பலகைகளை அறுப்பதற்கும் மரங்கள் வெட்டப்படுகின்றன. இத்தகைய மரம் வெட்டுந் தொழில் மாங்குளம், வவுனியா, மதவாச்சி , அனுராதபுரம், தம்புள்ளை, கெக்கிராவை, பொல்லனறுவை, திருகோணமலை, மட்டக்களப்புப் பகுதிகளில் அதிகம் நடைபெறுகின்றன.
காடுகள் தொன்றுதொட்டே பயன்படுத்தப்பட்டு வரு கின்றமையினாலும், சேனை வேளாண்மைக்காக அழிக்கப்படுவத னாலும், இக்காலத்திற் குறைந்து வருகின்றன. இதனால், மக்க ளுக்குப் பயன் தரும் மரங்களை அரசாங்கம் இப்பொழுது பல இடங்களில் நடுவித்து வருகின்றது. பயனில்லாத காட்டு நிலங்களை அழித்து அவற்றிற் பயன்தரக்கூடிய மரங்களை உண்டு பண்ணும் வேலை வன மாக்கல் எனப்படும். உலர்ந்த வலயத்திற் பல பகுதிகளில் தேக்கு, மலைவேம்பு ஆகிய மரங்களை அரசாங்கம் நடுவித்து வருகின்றது.
பயிற்சிகள் 1. வெப்பவலயத்தைச் சேர்ந்த இயற்கைத் தாவரப் பிரிவுகள்
இரண்டு கூறுக. 2. இடைவெப்ப வலயத்திலுள்ள மூன்று இயற்கைத் தாவர
வகைகள் எழுதுக. 3.
மத்திய கோட்டுக் காடுகளில் மரம் வெட்டுந் தொழில் நன்கு விருத்தியடையாமலிருப்பதற்குரிய ஐந்து காரணங்கள் தருக. ஊசியிலைக் காடுகளில் மரம் வெட்டுந் தொழிலுக்கு வாய்ப் பாகவுள்ள ஐந்து புவியியல் நிலைமைகள் கூறுக. மரம் வெட்டுந் தொழில் பெருமளவில் நடைபெறும் ஐந்து நாடுகள் எழுதுக.

காடுகளும் காட்டுத் தொழில்களும் 117
சிகண்டினேவியாவில் மரம் வெட்டுந் தொழில் சிறப்பாக விருத்தியடைந்தமைக்குரிய புவியியல் நிலைமைகள் நான்கு
கூறுக. 7. சிகண்டி னேவியா பிரதானமாக ஏற்றுமதி செய்யும் ஐந்து
பொருள் கள் தரு க.
8. கீறிட்ட இடங்களை ஏற்ற சொற்களால் நிரப்பி எழுதுக:
(அ) பேமா
- மரத்துக்குப் பெயர் பெற்றது .
(ஆ)
ஆகிய இரு நாடுகளும் சிகண்டினேவியா எனப்படும். (இ) சிகண்டினேவியாவில் மரங்கள் ----- காலத்தில்
வெட்டப்படுகின்றன.
(ஈ) நோவே பல
க் கொண்டுள்ளது . (உ) பால் திக் கடற்கரைப் பகுதிகளில் ஆறுகளும் துறை
முகங்களும்
காலத்திற் பனிக்கட் டிக்குள்ளாகின்றன.
- 2.0,
(ஊ) நோவேயின் தலைநகரம் ------; -------
சுவீடனின் தலை நகரமாகும். 9. இலங்கையின் இயற்கைத் தாவரப் பிரிவுகள் ஐந்தையும்
கூறுக . 10. அவற்றுள் எப்பிரிவில் மரம் வெட்டுந் தொழில் அதிகம்
நடைபெறுகின்றது?
11. எமது காட்டு மரங்கள் பிரதானமாக எத்தேவைகளுக்குப்
பயன்படுகின்றன? 12. வனமாக்கல் என்றால் என்ன?

Page 68
மூன்றாம் பருவம்
அலகு 1
இலங்கையின் கைத்தொழில்கள்
1. இன்றைய நிலை
எமது நாடு முற்காலத்திலிருந்து ஒரு விவசாய நாடாகவே விளங்கி வந்திருக்கின்றது. இன்றும் எமது பொருளாதாரம் தேயிலை, இறப்பர், தென்னை முதலிய பயிர்களிலேயே பிரதான மாகத் தங்கியுள்ளது என்பதை நாம் அறிவோம். ஆயினும் கைத் தொழில் துறையிலும் இலங்கை இன்று முன்னேற்றமடைந்து வரு கின்றது குறிப்பாக, இலங்கை அரசியற் சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர், பொருளாதார சுதந்திரமும் அடைய வேண்டும் என்ற நோக்குடன் பல அபிவிருத்தி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றின் பயனாக, முன்னர் முற்றாக விவசாய நாடாக இருந்த இலங்கையில் படிப்படியாகக் கைத் தொழில்களும் முன்னேற்றமடையலாயின. இன்று சீமெந்து. உடுபுடைவை, சீனி, பிளாத்திக்குப் பொருள்கள், சிகரெட், சிற்றுண்டிகள், சவர்க்காரம், வாசனைப் பொருள்கள், உடை, இரும்பு, கயிறு, பிரப்பம் வேலை, தங்கம், வெள்ளி ஆகிய பல தொழில்களில் எமது நாடு பெரும் முன்னேற்றங் கண்டுள்ளது.
எமது நாட்டிற் காணப்படும் கைத்தொழில்களை,
1. குடிசைக் கைத்தொழில் 2. வேலைத் தளக் கைத்தொழில் 3. நவீன தொழிற்சாலைக் கைத்தொழில்
என மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1. குடிசைக் கைத்தொழில்: குடிசைக் கைத்தொழில்களின் கீழ் எமது நாட்டிற் பரம்பரை பர ம் ப ரை ய ா க த் தனிப்பட்ட வீடுகளில் நடைபெற்றுவரும் சிறு சிறு கைத் தொழில் கள் அனை த்தும் அடங்கும். பாயிழைத்தல், பெட்டிகள் இழைத்தல், மூங்கிற் கூடை வேலை, பிரப்பம் வேலை, தும்படித்தல், கயிறு

இலங்கையின் கைத்தொழில்கள்
119
திரித்தல், மரவேலை, வனை தல், தங்க – பித்தளை - வெள்ளித் தொழில் கள் போன்றவை இலங்கையிற் தொன்று தொட்டே நடைபெற்று வரும் தொழில் களாகும். இவை பெரும்பாலும் கிராம மக்களாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. குடிசைக் கைத்தொழில் அவ்வப் பகுதி களில் இலகுவாகப் பெறக்கூடிய மூலப் பொருள்களுக்கேற்ப வேறுபடுகின்றது. உதாரணமாக, யாழ்ப்பாணக் குடாநாட்டிற் பனைகள் அதிகமாக இருப்பதனால், பனையோலையைக் கொண்டு பாய், பெட்டிகள் போன்றவை இழைக்கப்படுகின்றன. மட்டக்களப்பு, பாணந்துறை ஆகிய பகுதிகளிற் புற்பாய் இழைத்தல் நடைபெறுகின்றது. மூங் கில்கள் அதிகமாகவுள்ள ஈரவலயப் பகுதிகளில் மூங்கிற் கூடைத் தொழில் செய்யக்கூடியதாக விருக்கின்றது. களுத்துறையில் 'சிண்டி' எனப்படும் ஓரின ஈச்சமரத்தின் இலையைக் கொண்டு தொப்பிகளும் பெட்டிகளும் செய்யப்படுகின்றன. ஆயினும் மரவேலை, வனைதல் போன்ற தொழில்கள் இலங்கையின் கிராமப் புறங்களிற் பரவலாகக் காணப்படுகின்றன. பெரும்பாலான குடிசைக் கைத்தொழில்களுக்கு -
(1) அதிக படிப்பு வேண்டியதில்லை; (2) பணம் வேண்டியதில்லை; (3) தனியான வேலைத்தளம் வேண்டியதில்லை; (4) இயந்திரங்கள் வேண்டியதில்லை.
சாதாரண கிராமவாசிகள் அதிக சிரத்தையின்றித் தமது வாழ்க்கைக்காகச் செய்துவரும் இத்தொழில் களை விஞ்ஞான முறையிற் சிறிது விருத்தி செய்தால் எமது பொருளாதாரத்தை வளப்படுத்தலாம். இந்த நோக்கத்துடன் அரசாங்கம் குடிசை , கைப்பணித் தொழில்களை விருத்தி செய்து வருகின்றது.
(1) வேலையில்லாத கிராம இளைஞர்களுக்குக் குடிசை,
கைப்பணிக் கைத்தொழில்களிற் பயிற்சியளித்தும், (2) மூலப்பொருள்களை வழங்கியும், (3) நிதியுதவியளித்தும் ,
(4) பொருள்களை விற்பனை செய்வதில் உதவி புரிந்தும் இக்கைத்தொழில் வளர்க்கப்படுகின்றது. இவ்வேலைகளைக் கிராம அபிவிருத்திக் குடிசைக் கைத்தொழிற் பகுதி கவனித்து வரு கின்றது.
2. வேலைத்தளக் கைத்தொழில் : இதன் கீழ் அலுமினியம், உலோகப் பொருள் கள், தோல், பிளாத்திக்குப் பொருள்,

Page 69
120
எட்டாந்தரப் புவியியல் தீப்பெட்டி, பேனா, சூட்கேசு, உடை, விசுக்கோத்து. இனிப்பு, சிற்றுண்டி வகை முதலியவற்றைச் செய்யுந் தொழில்கள் யாவும் அடங்கும். இத்தொழில்களுக்கு -
(1) தனியான வேலைத்தளம், (2) கூடுதலான தொழிலாளர்,
(3) சிறுதொகைப் பணம் என்பன வேண்டும். பல தொழில்களுக்கு மூலப் பொருள்களும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. பீடி யிலை, பருத்தி, பட்டுநூல், பித்தளைத் தகடுகள். பிளாத்தர், சாயங்கள், இரசாயனங்கள் என்பன இவ்வித வேலைத்தளக் கைத்தொழில் களுக் காக இறக்குமதி செய்யப்படுகின்றன. வேலைத்தளக் கைத்தொழில்கள் பிரதானமாக நடைபெறும் பட்டணங்கள் பின்வருமாறு : 1. கொழும்பு
உடைகள், விசுக்கோத்து, இனிப்பு, தீப் பெட்டி, சவர்க்காரம், வீட்டுத் தள பாடங்கள், பீடி. தோற் பொருள். பிளாத்திக்குப் பொருள்.
கண்டி
வீட்டுத் தளபாடம், செங்கல் , ஓடு, க் உலோகப்பொருள்.
3. யாழ்ப்பாணம்
அலுமினியப் பாத்திரங்கள், இனிப்பு, சவர்க்காரம், சுருட்டு, பீடி, வீட்டுத் தள் பாடம், உலோக வேலை.
4. காலி
கயிறு, தீப்பெட்டி .
3. நவீன தொழிற்சாலைக் கைத்தொழில்: நவீன தொழிற் சாலைக் கைத்தொழில் கள் --
(1) பெருந்தொகைப் பணத்தை முதலீடு செய்து (2) பார இயந்திரங்களைப் பயன்படுத்தி (3) பெரிய தொழிற்சாலை களில் (4) அதிக தொழிலாளர் களை அமர்த்தி
(5) சீரான ஒழுங்கமைப்பில் செய்யப்படுகின்றன.

இலங்கையின் கைத்தொழில்கள்
121
பின்வரும் இடங்களில் இத்தகைய பெருந் தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன : 1. கொழும்பு
-- பசளைத் தொழிற்சாலை , இரும்பு -
உருக்குத் தொழிற்சாலை;
நீர்கொழும்பு
---
பீங்கான் தொழிற் சாலை , ஓடு
செய்யும் ஆலை; 3. நாத்தாண்டியா - கண்ணாடித் தொழிற்சாலை;
4.
களனியா
தயர் - தியூப்புத் தொழிற்சாலை;
வெள்ளவத்தை) வியாங்கொடை துல்கிரியா
நெசவுத் தொழிற்சாலை ;
6. மட்டக்குளியா
தோற் கைத்தொழில்; 7. இரத்மலானை
-----
உடை, விசுக்கோத்து, கார் பற்றறி
ஆலைகள்; 8. மொறட்டுவை -
தச்சுத் தொழிற்சாலை; 9. சிந்தோட்டை
ஒட்டுப் பலகைத் தொழிற்சாலை; 10. காலி
சீமெந்து அடைக்கும் ஆலை; 11. காங்கேசன்துறை - சீமெந்துத் தொழிற்சாலை;
12. பரந்தன்
- இரசாயனத் தொழிற்சாலை; 13.
வாழைச்சேனை - காகிதத் தொழிற்சாலை;
~
14. கந்தளாய்
அம்பாறை
சீனித் தொழிற்சாலை.
எமது நாட்டின் கைத்தொழில்கள் அரசாங்க ஆதரவுக் கூட்டுத்தாபனங்களாலும் தனியார் நிறுவனங்களாலும் நடாத் தப்படுகின்றன. இக் கைத்தொழிற் பொருள் கள் யாவும் உள் நாட்டின் தேவை காரண மா கவே தயாரிக்கப்படுகின்றன. ஆயினும் அண்மைக் காலங்களில் கைத்தொழில் துறையில் ஏற் பட்ட துரித முன்னேற்றங் காரணமாக வெளி நாடுகளுக்கும் எமது கைத்தொழிற் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அவை விசுக்கோத்து, இனிப்பு வகை. உடைவகை, வாசனைப் பொருள் கள், சவர்க்காரம், சப்பாத்து, மின்கலங்கள் என் பனவாகும்.

Page 70
- 122
எட்டாந்தரப் புவியியல்
II. கைத்தொழில்களை ஓரிடப்படுத்துவதற்கான காரணிகள்
ஓரிடத்தில் ஒரு கைத்தொழிலை நிறுவுவதற்குப் பல கார ணிகள் சாதகமாக இருத்தல் வேண்டும். கைத்தொழில்களை ஓரிடப்படுத்துவதற்கு வேண்டிய முக்கிய ஏதுக்கள் பின்வருமாறு:
(1) மூலப் பொருள் (4) முதல் (2) வலு
(5) போக்குவரத்து வசதிகள் (3) தொழிலாளர் (6) சந்தை.
சீமெந்துத் தொழிற்சாலை : காங்கேசன்துறையிற் சீமெந்துக் கைத்தொழில் சிறப்பாக நடைபெறுவதற்கு மேற்குறிப்பிட்ட காரணிகளே உதவி புரிகின்றன.
1. மூலப்பொருள் : சீமெந்துக் கைத்தொழிலுக்கு மூன்று வகையான மூலப்பொருள்கள் தேவைப்படுகின்றன. இவற்றுள் 80% சுண்ணாம்புக்கல் ஆகும். மிகவும் முக்கியமான இம் மூலப் பொருள் யாழ்ப்பாணக் குடா நாட்டிலிருந்து புத்தளம் வரையி லுள்ள வடமேற்குக் கரையோரப்பகுதிகளில் அதிக அளவிற் காணப்படுகின்றது. காங்கேசன் துறைப் பகுதியில் சுண்ணாம்புக் கற்பாறைகள் பெருமளவில் வெளியரும்பியுள்ளன. இதனைக் குறைந்த செலவில் எளிதாக வெட்டி எடுக்க முடிகிறது. இதுவே சீமெந்துத் தொழிற்சாலை காங்கேசன்துறையில் அமைக்கப் பட்டமைக்குரிய முக்கிய காரணமாகும்.
சீமெந்து உற்பத்திக்குத் தேவைப்படும் மற்றைய மூலப் பொருள்கள் களி மண்ணும் சிப்சமுமாகும். களிமண் மன்னாருக்கு அண்மையிலுள்ள முருங்கனிற் கிடைக்கின்றது. இது புகை வண்டி மூலம் காங்கேசன் துறைக்குக் கொண்டுவரப்படுகின்றது. சீமெந்து உற்பத்திக்கு மிகவும் குறைந்த அளவிற் பயன்படும் சிப்சம் மட்டும் எகிப்து, சைப்பிரசு, பாக்கித்தான் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. சிப்சம் உப்பி லிருந்து பெறப்படும் ஒரு பக்கவிளைவுப் பொருளாகும். ஆதலால் இதனை இன்னுஞ் சில ஆண்டுகளில் எமது நாட்டிலேயே பெறக்
கூடியதாக இருக்கும்.
- 2. வலு : இக் கைத்தொழிலுக்கு வேண்டிய வலு நிலநெய். மின்னியக்கம் ஆகியவற்றிலிருந்து பெறப்படுகின்றது. நிலநெய்

*தேடிxaதேகங்களும்
காங்கேசன் துறை
இலங் கை. அ க ன் ற பா  ைத - ஒடுங் கி ய பா தை
J.!:3 (1)
கலம்.(னா!
மன்னார்,
திரிகோணமலை
மதவாச்சி
அநுராதபுரம் -
'கல்லோயா
புத்தளம்
மகோ.
மட்டக்களப்பு
பலாபம்?
மாத்தளை
பொல்காவலை
உகணடி
நீர்கொழும்பு
பேராதனை
ராக்கன்
கொழும்பு
அவிசாவலை
நனுஓயால் துளை
(ஓப்பனாயக்க
காலி
மாத்துறை
படம் 381 காங்கேசன்துறையின் நிலையமும்
இலங்கையின் இருப்புப்பாதைகளும்

Page 71
124
எட்டாந்தரப் புவியியல்
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுக் கொழும்பி லிருந்து புகைவண்டி மூலம் காங்கேசன் துறைக்குக் கொண்டு செல்லப்படுகின்றது (படம் 38).
3. தொழிலாளர் : இயந்திரங்களை இயக்குவதற்கும் கடின வேலைகளைச் செய்வதற்கும் வேண்டிய தொழிலாளர் இப்பகுதியிற் காணப்படுகின்றனர்.
4. முதல் : இத் தொழிற்சாலையை நிறுவுவதற்கு வெளி நாட்டு உதவி கிடைத்துள்ளது. இதனைப் பெருப்பிப்பதற்கும், காலியில் இரண்டாவது சீமெந்துத் தொழிற்சாலையை அமைப்ப தற்கும், புத்தளத்தில் வேறொரு தொழிற்சாலையை நிறுவுவ தற்கும் வெளிநாடுகள் உதவியளிக்க முன் வந்துள்ளன.
தற்கும் செத்தளத்தில் வேகத்துத் தொழிற்ச
5. போக்குவரத்து வசதிகள் : வேண்டிய கைத்தொழிற் பொருள்களைக் காங்கேசன்துறைக்குக் கொண்டுசெல்வதற்கும் அங்கிருந்து பிற இடங்களுக்குச் சீமெந்தை விநியோகஞ் செய் வதற்கும் ஏற்ற இருப்புப்பாதை. கற்பாதைப் போக்கு வரத்து வசதிகள் உள்ளன. காங்கேசன்துறைத் துறைமுகம் கப்பற் போக்கு வரத்துக்கும் வசதியளிக்கின்றது (படம் 38).
6. சந்தை : எமது நாடு முன்னேறிவரும் ஒரு நாடாகும். பாரிய திட்ட வேலைகள், பொதுக் கட்டிடங்கள், வீடுகள் என்று கட்டிட வேலைகள் பெருகிக்கொண்டே வருகின்றன. இதனால் சீமெந்துக்கான தேவையும் நாளுக்குநாள் கூடிக்கொண்டிருக் கிறது.
III. எதிர்காலம்
எதிர்காலத்தில் நம் நாட்டுக் கைத்தொழில்களை மேலும் விருத்தி செய்து எமது பொருளாதாரத்தைப் பெருக்கக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன.
எமது நாட்டில் நிலக்கரி, நிலநெய் போன்ற வலுப்பொருள்கள் குறைவு. ஆயினும் முக்கிய இயற்கைச் செல்வங்களில் ஒன்றான நீர்வீழ்ச்சி களிலிருந்து கைத்தொழில்களுக்கு அத்தியாவசிய மான மின் சக்தியைப் பெறலாம்.
இலங்கையிற் பலவகையான கனிப்பொருள்கள் காணப் படுகின்றன. பிரதான கனிப்பொருள்களும் அவை காணப் படும் இடங்களும் பின் வருமாறு :

இலங்கையின் கைத்தொழில்கள்
125
கனிப் பொருள்கள்
காணப்படும் இடங்கள்
1. சுண்ணாம்புக் கற்கள்
இலங்கையின் வடமேற் பகுதி - புத்தளத்திலிருந்து காங்கேசன் துறை வரை,
2, சீனக்களி
புத்தளம், பொ ற ல ஸ் க மு  ைவ , மீட்டியாகொடை.
கண்ணாடி மணல்
சிலாபம் -- நீர்கொழும்புக் கடற் கரைப்பகுதி, அம்பாந்தோட்டை, - பருத்தித்துறை, ச ா வ க ச் சே ரி.
4. காரீயம்
உறூவான்வலை, குருநாகல், இரா கெதரை, களுத்துறை, அனுராத புரம், வவுனியா .!
5. இரும்புத் தாது |
ஒப்பநாயக்கா, பலாங்கொடை பத்தேகமம், அக்குறசை.
6. இல்மனைற்று
புல்மோட்டை.
7.
களிமண்
நீர்கொழும்பிலிருந்து காலி வரை யுள்ள கடற்கரைப் பகுதி.
இக் கனிப்பொருள் களை மூலப் பொருள்களாகக் கொண்டு மேலும் பல கைத்தொழில்களை நிறுவலாம். இக் கனிப்பொருள் களிற் பெரும்பாலானவை தென்மேற்குச் சமவெளிப்பகுதியிற் காணப்படுகின்றன - (படம் 39). தென்மேற்குச் சமவெளி அபிவிருத்தியடைந்த பிரதேசமாகும். இங்கு குடிசனமும் கூடுத லாகவுள்ளது : போக்கு வரத்து வசதிகளும் உள்ளன. ஆதலால் இக் கனிப்பொருள்களைக் கைத்தொழில் களுக்குப் பயன்படுத்து வதும் எளிதாகும்.
இவை தவிரக் கைத்தொழில்களுக்கு ஏற்ற பல விவசாய மூலப்பொருள்களும் எமது நாட்டில் உள்ளன. தென்னம் பொருள்கள், பருத்தி, கரும்பு போன்றவற்றை மூலப்பொருள்க ளாகக் கொண்டு ஏற்கெனவே பல கைத்தொழில்கள் நடை பெற்று வருகின்றன. ஆயினும் பருத்தி, கரும்பு என்பவற்றின் தற்போதைய உற்பத்தி அளவு போதாது. இவற்றின் உற்பத் தியைப் பெருக்குவதன் மூலம் நெசவுக் கைத்தொழிலையும் சீனிக் கைத்தொழிலையும் நாம் மேலும் விருத்தி செய்ய

Page 72
காரீயம் இரத்தினக்கற்கள்
இரும்பு படிகமணல் வெண்களி
சிலாபம்
மாதம்பை?
குருநாகல் ஓ மாரவில்லா நாத்தா ண்டி யா வென்னப்புறவம்
போல்காவரை
நீர்கொழும்பு 9 • கேகாலை
- இராகமம் 4
0 எட்டியாந்தோட்டை
கொழும்பு
உழவலை
இரத்தினபுரி
பலாங்கொடை ஓப்பனாயக்கா 2
களுத்துறை
9 அகலவத்தை
வெந்தோட்டை
- தெனியாமை!
அம்பலாங்கொடை
இமாறவாக்கை தகம்]
அதிதிநிசை
பாந்தோ
மாத்தறை
படம் 39: ஈரவலயத் தாழ்நிலத்தின் கனிப்பொருள்கள்

இலங்கையின் கைத்தொழில்கள்
12
முடியும். இறப்பர், பனம்பொருள் கள், பழவகைகள் போன்ற வற்றை மூலப்பொருளாகக் கொண்டு சில கைத்தொழில்கள் நிறுவப்படவுள்ளன .
இக் கைத்தொழில் களைக் கொண்டு நடாத்தும் வல்லுநர் களும் தொழிலாளர்களும் எமது நாட்டில் உள்ளனர். மேலும் வெளி நாடுகளின் உதவியோடு பல்வேறு வகைப்பட்ட கைத் தொழிற் துறையில் எம்மவர் பலர் இப்பொழுது பயிற்சி பெற்றும் வருகின்றனர்.
அரசாங்கமும் கைத்தொழில்களை விருத்தி செய்யத் திட்ட மிட்டு முயன்று வருகின்றது. வெளிநாடுகளின் உதவியுடன் மேலும் பல கைத்தொழில்களை நிறுவ அரசாங்கம் உத்தேசித் துள்ளது. தனிப்பட்டவர்களையும் கைத்தொழில் துறையில் அரசாங்கம் ஊக்குவித்து வருகின்றது. (1) வேண்டிய மூலப் பொருள்களை இறக்குமதி செய்ய அனுமதித்தும், (2) வரிச்சலுகை அளித்தும், (3) கடன் கொடுத்துதவியும் கைத்தொழிலாளர்களை அரசாங்கம் ஆதரித்து வருகின்றது.
எக்கலை , இரத்மலானை ஆகிய இடங்களில் அரசாங்கம் கைத்தொழிற் பேட்டைகளை அமைத்துள்ளது.
இவ்விதம் வருங்காலத்தில் கைத்தொழில்களால் எமது தேவைகளை நாமே நிறைவேற்றுவது மட்டுமன்றி வெளி நாடு களுக்கும் எமது பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன. இதனால் வருவாய் பெருகி எமது பொருளாதாரம் வளம் பெறும்; வேலையில்லாப் பிரச்சினைகள் தீரும்; வாழ்க்கைத் தரம் உயரும்.
பயிற்சிகள் 1. கைத் தொழில் கள் எத்தனை வகைப்படும்? 2.
குடிசைக் கைத்தொழில் என்றால் என்ன? 3. பின்வரும் பகுதி களிற் காணப்படும் குடிசைக் கைத்
தொழில் களை அட்டவணைப் படுத்துக :
(அ) ஈரவலயம் (ஆ) உலர்ந்தவலயம்
(இ) யாழ்ப்பாணக் குடா நாடு. 4. வேலைத்தளக் கைத்தொழில் களுக்கு வேண்டிய புவியியல்
நிலைமைகள் யாவை?

Page 73
128
எட்டாந்தரப் புவியியல்
5. பின்வருங் கைத்தொழில் கள் நடைபெறும் இடங்களை
எழுதுக : (அ) இரும்பு - உருக்குக் கைத்தொழில் - (ஆ) கண்ணாடிக் கைத்தொழில் (இ) காகிதக் கைத்தொழில் (ஈ) தோற் கைத்தொழில்
பின்வரும் இடங்களில் நிறுவப்பட்டுள்ள தொழிற்சாலைகள் யாவை? (அ) காங்கேசன்துறை (ஈ) துல்கிரியா (ஆ) கந்தளாய்
ப ய (உ) பரந்தன் (இ) மொறட்டுவை
எமது நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் - கைத் தொழிற் பொருள் களை அட்டவணைப்படுத்துக.- 4
8.
கைத்தொழில்களை ஓரிடப்படுத்துவதற் கான காரணிகள் யாவை?
காங்கேசன்துறையில் சீமெந்துக் கைத்தொழிலை நிறுவு வதற்கு வாய்ப்பாக இருந்த புவியியல் நிலைமைகளைக் கூறுக.
10.
எமது நாட்டிற் காணப்படும் கனிப்பொருள் கள் ஐந்து கூறுக.
11.
பின்வரும் இடங்களிற் காணப்படும் கனிப்பொருள்களை எழுது க:
(அ) பொரலஸ்கமுவை --- (ஆ) பலாங்கொடை - (இ) புல்மோட்டை எமது கைத்தொழில்களை எதிர்காலத்தில் விருத்தி செய்ய வாய்ப்பாகவுள்ள நிலைமைகளைக் கூறுக.
12.
13.
நீர் வசிக்கும் பிரதேசத்தில் நடைபெறும் குடிசைக் கைத் தொழில்களைக் குறிப்பிட்டு, அவை எவ்வாறு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன என்பதை விளக்குக.
14. இலங்கைப் படம் ஒன்றில் பிரதான கனிப்பொருள்களையும்
கைத்தொழிற் பட்டணங்களையும் குறித்துப் பெயரிடுக.

அலகு 2
இரும்பு - உருக்குக் கைத்தொழில்
இரும்பு - உருக்குக் கைத்தொழில் மற்றைய கைத்தொழில்கள் யாவற்றுக்கும் மூலமாக அமைந்துள்ள ஒரு கைத்தொழிலாகும். தொழிற்சாலைகளுக்கு வேண்டிய இ ய ந் தி ர ங் க ள், கருவிகள் முதலியன செய்வதற்கும் கொண்டுசெல்லல், செய்தியறிவிப்புப் போன்றனவற்றுக்கும் இரும்பும் உருக்கும் மிகவும் பயன்படு கின்றன.
இரும்பு - உருக்குக் கைத்தொழிலில் மேற்கொள்ள வேண்டிய தொழில் முறைகள் பல. (1) இரும்புத் தாது, நிலக்கரி, சுண்ணாம்புக்கல் போன்றவற்றை வெட்டி எடுத்தல்; (2) அவற்றை ஊ துலை களுக்குக் கொண்டு செல்லல்; (3) இரும்புத் தாதைச் செம்மை செய்தல்; (4) இரும்புப் பாளம், கூழ்இரும்பு, கழிவு இரும்பு ஆகியவற்றை உருக்காக மாற்றுதல்; (5) உருக்குத் தண்டவாளங்கள், தகடுகள், குழாய்கள், சட்டங்கள் முதலியன வற்றைச் செய்தல்; (6) அவற்றை அப்படியே விற்றல் அல்லது இயந்திரங்கள், கருவிகளாகச் செய்து விற்றல் முதலிய பல வேலைப்பாடுகளைக் கொண்ட து தான் இவ்விரும்பு - உருக்குக் கைத்தொழில்.
இரும்பு உருக்கப்படும் முறை : நிலத்திலிருந்து எடுக்கப்படும் இரும் புத்தாது பல பொருள் களுடன் கலந்திருக்கும். இப் பொருள்களை நீக்கி இரும்புத் தாதைத் தனியாக எடுத்தல் முதல் வேலையாகும். தாது, நிலக்கரியுடனும் சுண்ணாம்புடனும் கலந்து புனல் வடிவமுள்ள பெருங் கலத்திலிட்டு எரிக்கப்படுகின்றது. பின்னர் கீழிருந்து சுடுகாற்று தொடர்ச்சியாக ஊதப்படுகின்றது. ஒட்சிசன் உட்பட இரும்பின் பல அழுக்குகள் எரிந்துபட, கூழ்இரும்பு கலத்தின் கீழ்த் துவாரத்தினால் வெளிப்பாய்கின்றது. இவ்வாறு உருக்கப்பட்டுக் குளிர்ந்துவரும் இரும்பு பாளம் (காய்ப்பிரும்பு) எனப்படும். இது ஒடிந்து போகக் கூடியது. இதனை ஒடியாது வளைந்து கொடுக்கக்கூடிய இரும்பாக்குவதற்கு மேலும் பதப்படுத்த வேண்டும். இதற்குப் பலமுறைகள் கையாளப்படுகின்றன. கூழ்ப்பாள இரும்பை ஒரு கலத்திலிட்டு அதற்கூடாகக் குளிர்ந்த காற்றைச் செலுத்தி, பின்னர் குறித்த அளவுக்குக் காபனையும் மங்கனீசையுங் கலந்து காய்ச்சுதல் ஒரு முறையாகும். இவ்விதம் காய்ச்சி வார்த்த இரும்பு உருக்கு
புவி. VIII - 9

Page 74
-கபோக
காற்றுக்கு ! அன லூட்டும்
அடுப்பு
11 -
222
உருக்கப்படுகின்றது. - னுஞ் சேர்க்கப்பட்ட அசுத்தமான இரும்பு
சுட்ட கரியுடனும், சுக்கான் கல்லுட
களிம்பு வெளியேறும் குழாய்
- இக -------- -- -
சுடுகாற்றுச் செல்லும்
குழாய் -
(3 காய (கம்
கரை உருகிய.* இரும்பு
2 குழாய்வழியாகப் பாய்கின்றது. 2 3 =
படம் 40 : இரும்பை உருக்குமோர் ஊதுலையின் வெட்டுமுகம்

இரும்பு - உருக்குக் கைத்தொழில்
131
அல்லது எஃகு எனப்படும். இது எவ்விதத்திலும் மெதுவாக வளையக்கூடியது. இதனை யடித்து வேண்டியவாறு வளைத்துத் தேவையான கருவிகளைச் செய்யலாம்.
இரும்பு - உருக்குக் கைத்தொழில் விருத்திக்கு வேண்டிய நிலைமைகள் : (1) இரும்பை உருக்குவதற்குப் பெருமளவு நிலக் கரி வேண்டும். எனவே, இக் கைத்தொழில் நிலக்கரிச் சுரங்கப் பகுதிகளிலேயே விருத்தியாகிறது. இரும்பு காணப்படும் இடங் களைக் காட்டும் 41 ஆம் படத்தையும் நிலக்கரிப் பரம்பலைக் காட்டும் 42 ஆம் படத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க. (2) மூலப் பொருள்களைக் கொண்டுவரவும் இயந்திரங்கள், கொதிகலங்கள் போன்ற உருக்குப் பொருள்களைக் கொண்டு போகவும் போக்கு வரத்து வசதி இலகுவாகவும் மலிவாகவும் இருத்தல் வேண்டும். இதற்குக் கடலோரம் அல்லது ஆற்றோரம் பெரிதும் விரும்பப் படும். மற்றும் (3) திறமையான தொழிலாளர் கள், (4) பெருந் தொகையான முதல், (5) அண்மையாகவுள்ள சந்தை . (6) கைத் தொழிலுக்கான பொறித்தொகுதிகளை நிறுவுவதற்கு வேண்டிய மலிவான சம நிலம் முதலியனவும் இருத்தல் வேண்டும்.
இரும்பு - உருக்குப் பிரதேசங்கள்
ஐரோப்பாவின் வடமேற்குப் பகுதி, அ. ஐ. நா. வின் ஐம்பெரும் ஏரிக்கரைப் பிரதேசம், சோவியத்து இரசியா, பெரிய பிரித்தானியா, யப்பான், இந்தியா, சீனா போன்ற வற்றில் இரும்பு - உருக்குக் கைத்தொழில் பெருமளவில் நடை பெறுகின்றது. இப்பகுதிகளே உலகின் பிரதான கைத்தொழிற் பிரதேசங்களாகவும் விளங்குகின்றன:
ஐரோப்பாவின் மிகவும் முக்கியமான இரும்பு-உருக்குப் பிரதேசம் அதன் வடமேற்குப் பகுதியாகும். இது யேமனியின் உறூர்ப் பகுதி, வட பிரான்சு, பெல்சியம், இலட்சம்பேக்கு ஆகியவற்றை அடக்கியுள்ளது. இந் நான்கு நாடுகளும் பெருமளவில் இரும்புப் பாளத்தையும் உருக்கையும் உற்பத்தி செய்கின்றன. பல ஊதுலை களும் உருக்காலை களும் பிற தொழிற் சாலைகளும் கூட்டங்கூட்டமாக இறைன் ஆற்றோரங்களிலே தோன்றியுள்ளன. உறூர் இறைனின் ஒரு கிளையாறாகும்.
யேமனியின் இறைன் கைத்தொழிற் பிரதேசம் : யேமனியி லுள்ள இறைன் ஆற்றோரப் பகுதியில் இரும்பு-உருக்குக் கைத் தொழில் நன்கு வளர்ந்துள்ளது. இதற்குரிய காரணிகள் பல:
1. மூலப் பொருள்கள் : இரும்புத் தாது பிரான்சிலுள்ள உலொ றெயின் பிரதேசச் சுரங்கங்களிலிருந்து கிடைக்கின்றது.

Page 75
படம் 41 : உலகில் இரும்பு காணப்படும் இடங்கள்
قديمقره
حتی در میهS
کمرها)

இரும்பு - உருக்குக் கைத்தொழில்
133 2. வலு : யேமனியில் நிலக்கரி அதிகம் காணப்படுகின்றது. உறூர், சைலீசியா, சாக்சனி ஆகிய பகுதிகளிலிருந்து நிலக்
கரி பெறப்படுகின்றது . 3. போக்கு வரத்து : கொண்டு செல்லல் வசதிகள் மிகவும் வாய்ப்பாகவுள்ளன. நீர்வழிப்பாதைகள் கொண்டுசெல்லலை மலிவாக்குகின்றன. இறயிற் பாதைகள் (1) இரும்புத் தாது வயல்களையும், (2) நிலக்கரி வயல்களையும், (3) கைத் தொழில் நிலையங்களையும், (4) துறைமுகங்களையும் சிறப்பாக இணைக்கின்றன. கற்பாதை வசதிகளும் உதவியாகவுள்ளன. 4. தொழிலாளர் : யேமனியில் நெடுங்காலமாக இக் கைத் * தொழில் நடைபெற்று வருகின்றது. எனவே கைத்தொழிலில்
அனுபவமும் ஆற்றலும் வாய்ந்த தொழிலாளர் கள் இங்கு உள்ளனர். நவீன முறைகள் : நெடுங்கால ஆராய்ச்சியோடு கூடிய கைத் தொழிலாக இது விளங்கு கின்றமையால், அடிக்கடி கையாளப்பட்டு வரும் பரிசீலனைகளின் பயனாக, நவீன முறைகளிற் பல பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. 6. சந்தை : பல்வேறு வகைப்பட்ட கைத்தொழிலில் விருத்தி யடைந்த பல ஐரோப்பிய நாடுகள் இதன் பிரதான சந்தைக ளாகும். இரும்பு, உருக்கு, உருக்குச் சாமான்கள் முதலிய வற்றை இலகுவாகச் சந்தைப்படுத்துவதற்கு இப் பிரதே சத்தின் நிலையம் மிகவும் வாய்ப்பாகவுள்ளது.
யேமனியின் இறைன் கைத்தொழிற் பிரதேசத்திற் பல மத்திய நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஒவ்வொரு மத்திய நிலையமும் இரும்பு - உருக்குக் கைத்தொழில்களுக்குப் பெயர் பெற்று விளங்குகின்றது . அத்தகைய நிலையங்களும் அவற்றின் பிரதான கைத்தொழில்களும் பின்வருமாறு :
எசென்
இரும்பு-உருக்குப் பொருள்கள் உடோற்மண் |
போர்க் கருவிகள் தெசல்டோப் | கைத்தொழில் உபகரணங்கள் துயிசபேக்
--
கப்பல் கட்டுதல்
இரெம்செட் சொலின்சன்
போர்க் கருவிகள், கத்தரிக்கோல், கத்தி, கரண் டி , முட் கரண்டி ஆகியவற்றைச் செய்வதற்கு வேண் டிய உருக்கைத் தயாரித்தல்,
இயந்திர உபகரணங்கள்.
கொலோன்

Page 76
* * *
படம் 42: உலகத்தின் நிலக்கரிப் பரம்பல்

இரும்பு - உருக்குக் கைத்தொழில்
135
இவை பிரதான கைத்தொழில்கள். இவற்றோடு வேறு பல கைத்தொழில் களும் இந் நிலையங்களிற் காணப்படுகின்றன. இத்தகைய பிற கைத்தொழில் களுள் பசளை, இரசாயனப் பொருள்கள், உடுதுணி (கம்பளி, பட்டு, பருத்தி), வாசனைத் திரவியங்கள், சொக்களேற்று முதலியவை பிரதானமானவை.
இலங்கை உருக்குக் கூட்டுத்தாபனம் : இது 1961 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இத் தாபனத்தினால் 1964 ஆம் ஆண்டு ஒரு வலை என்னுமிடத்தில் ஓர் இரும்பு உருக்குத் தொழிற்சாலை அமைக்கப்பட்டது.
இலங்கையில் இரும்பு காணப்படும் இடங்களை 39ஆம் படம் காட்டுகின்றது. எமது இரும்புத் தாதினையும் இறக்குமதி செய் யப்பட்ட தாதினையும் உபயோகித்து ஓருவலையில் உருக்கு உற் பத்தி செய்யப்படவிருக்கின்றது. இப்பொழுது உள் நாட்டுத் தேவைக்கேற்ற பாரமற்ற இரும்பு, உருக்குப் பொருள்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன,
ல -
பயிற்சிகள் 1. உலகத்தில் இரும்புப் படிவுகள் அதி கமாகவுள்ள ஐந்து
நாடுகள் கூறுக. நிலக்கரி பெருமளவிற் காணப்படும் ஐந்து நாடுகள் எழுதுக. இரும்பு உருக்குக் கைத்தொழிலில் மேற்கொள்ளவேண்டிய
பிரதான ஆறு தொழில்முறை களும் யாவை? 4. (அ) இரும்புப் பாளம் என்பது யாது?
(ஆ) இரும்புப் பாளத்துக்கும் உருக்குக்குமிடையேயுள்ள
முக்கியமான வேறுபாடு யாது? 5. இரும்பு - உருக்குக் கைத்தொழில் வளர்ச்சிக்கு வேண்டிய
நிலைமைகள் ஆறு கூறுக. 6. உலகின் இரும்பு - உருக்குப் பிரதேசங்கள் நான்கு கூறுக.
யேமனியின் இறைன் பிரதேசம் முக்கியமான இரும்பு - உருக்குப் பிரதேசமாக வளர்ந்தமைக்குரிய ஐந்து புவியியல் நிலைமைகள் தருக. யேமனியின் மத்திய கைத்தொழில் நிலையங்கள் ஐந்து கூறி
அங்கு நடைபெறும் கைத்தொழில்களையும் எழுதுக. 9. :
இலங்கையில் எவ்விடங்களில் இரும்புத்தாது காணப்படு
கின்றது? 10. எமது நாட்டில் எவ்விடத்தில் இரும்பு உருக்குக் கைத்
தொழில் நிறுவப்பட்டுள்ளது?

Page 77
அலகு 3
நீர் மின்சக்தி
மனித வாழ்க்கையில் எந்த வேலையைச் செய்வதற்கும் ஏதாவது ஒரு சக்தி (வலு) அவசியமாகின்றது. மிகவும் பொது வானதும் முக்கியமானதுமான சக்தி மனிதசக்தியாகும். ஆயின் , மனித சக்திக்கும் அப்பாற்பட்ட வேலைகளைச் செய்வதற்கு மேலதிகமான சக்தி தேவைப்படுகின்றது. ஆதிகால மக்கள் மாடுகள், குதிரைகள் போன்றவற்றைக் கொண்டு பல வேலை களைச் செய்தனர். ஓடும் நீர், பொருள்களை நகரச்செய்யும் சக்தி வாய்ந்தது. இந்தச் சக்தியைப் பயன்படுத்தியும் பண்டைய மனிதர் பல வேலைகளைச் செய்தனர். ஆறுகள் வழியாக மரங் களைக் கொண்டு சென்றனர்; நீர் வீழ்ச்சிகளினாலே சில்லை நகரச் செய்து பொறிகளை இயக்கினர். இப்பொறிகள் தானியங்களை அரைத்து மாவாக்கவும் மரங்களை அரியவும் பயன்படுத்தப் பட்டன. காற்றின் சக்தியைக் கொண்டு பாய்மரக் கப்பல்களைச் செலுத்தினர்; பொறிகளை இயக்கினர். பிற்காலத்தில் நிலக்கரி. பெற்றோலியம், இயற்கை வாயு ஆகிய வலுப்பொருள்கள் கண்டு பிடிக்கப்பட்டன. இக் காலத்திற் கைத்தொழில்களை இயக்கு வதற்கு நிலக்கரி உதவுகின்றது. நீராவிக் கப்பல், இறயில் முதலியனவும் நிலக்கரியைப் பயன்படுத்துகின்றன. பெற்றோ லியம் கனமில்லாதது; வசதியாகக் கொண்டு செல்லக்கூடியது . எனவே சிறிய வாகனங்களுக்கும் விமானங்களுக்கும் பெற்றோ லியம் மிகவும் அவசியமாகின்றது.
நீர்வலு
இவ்வகையான சக்திகளுள் நீரிலிருந்து பெறப்படும் சக்தியே நிலையான து. நிலத்திலிருந்து எடுக்கப்படும் நிலக்கரியும் பெற் றோலியமும் படிப்படியாகக் குறைந்து ஒரு நாளைக்கு இல்லாமற் போய்விடக்கூடியன. ஆயின், நீரிலிருந்து சக்தியைப் பெறத் தொடங்கிவிட்டால் என்றைக்கும் அதிலிருந்து சக்தி தொடர்ந்து கிடைப்பது உறுதி. நீர்வீழ்ச்சிகளிலிருந்து நீர் மின்வலு பெறப் படுகின்றது. ஆறுகளுக்குக் குறுக்காகப் பெரும் அணை களைக் கட்டி நீரைத் தேக்கிவைத்து, அந்நீரை வேகமாகச் செலுத்தியும் நீர்மின்வலுவைப் பெறக்கூடியதாக இருக்கின்றது. ஆயினும், இயற்கையான நீர்வீழ்ச்சிகளே நீர் மின்வலுவைப் பெறுவதற்கு ஏற்றவை. ஒரு நீர்வீழ்ச்சியிலிருந்து நீர் மின் வலுவைப் பெறுவ தற்குப் பின்வரும் புவியியல் நிலைமைகள் முக்கியமானவை :
இயகன் வரத் தேவைகளுகழ்ச்சி அதிவது சதம்

நீர் மின் சக்தி
137
1. நீர்வீழ்ச்சி பெரும் உயரத்திலிருந்து விழல் வேண்டும். 2. வீழ்ச்சி சரிவாக இல்லாது குத்தாக இருத்தல் வேண்டும். 3. நீர்வீழ்ச்சியையுடைய ஆறு பாயும் பிரதேசம் அதிக மழை
பெறும் பிரதேசமாக இருத்தல் வேண்டும் . 4. மழை ஆண்டு முழுவதும் சீராகப் பெய்தல்வேண்டும். அப்
பொழுது தான் நீர்வீழ்ச்சி ஒரு சீரான தாக இருக்கும். 5. நீர்வீழ்ச்சியையுடைய இடம் உறுதியான பாறைகளைக்
கொண்டிருத்தல் வேண்டும். 6. நீர்வீழ்ச்சி அழுக்கு அற்றதாக இருத்தல் வேண்டும். 7. நீர்வீழ்ச்சியுள்ள பகுதியில் இடவசதி, போக்கு வரத்து
வசதி முதலியனவும் இருத்தல் வேண்டும்.
இலங்கையின் நீர்மின் திட்டங்கள் : இலங்கையில் நீர்வலுவைத் தவிர எளிதிற் கிடைக்கக்கூடிய வேறு வலுப்பொருள்கள் (நிலக் கரி, பெற்றோலியம், இயற்கை வாயு) இல்லை. ஆதலால், நீர் வலுவைப் பயன்படுத்துவதில் அரசாங்கம் மிகுந்த அவதானம் எடுத்து வருகின்றது. மலை நாட்டிற் பல நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இவற்றுள் இலக்சபானா, அபடீன், கித்துல் கலை, மகாவலி, உலப்பனை, சென் கிலேயர், நுவரெலியா, எல்கின், பெலிகுல் ஓயா, துன்கிந்தை ஆகிய வீழ்ச்சிகள் நீர்மின் வலுவைப் பெறு தற்கேற்ற புவியியல் நிலைமைகளைக் கொண்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி நீர்மின்வலு பெறுவதற்குப் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் இலக்சபானா - அபடீன் நீர் மின் திட்டம் முக்கியமானது. இலக்சபானா நீர்வீழ்ச்சி களனி கங்கையின் பிரதான கிளை யாறாகிய மஸ்கெலிய ஓயாவில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2400' உயரத்தில் உள்ள இவ் வீழ்ச்சி 377! உயரமுடையது. இதிலிருந்து நோட்டன் என்னுமிடத்தில் நீர் மின் வலுப் பெறப்படுகின்றது . இதுவே இலங்கையின் முதல் நீர் மின்வலுத் திட்டமாகும். இத் திட்டத்தி லிருந்து மின் விநியோகம் 1950 ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. அட்டன், நுவரெலியா, கண்டி, கொழும்பு ஆகிய பகுதிகள் இலக்சபானா நீர் மின் திட்டத்திலிருந்தே மின்சாரத் தைப் பெறுகின்றன. அதிக அளவு மின்சாரத்தைப் பெறும் நோக்கத்துடன் இத் திட்டம் படிப்படியாக விருத்தி செய்யப் பட்டு வருகின்றது. இதன்பயனாக யாழ்ப்பாணப் பகுதிக்கும் இப்பொழுது இலக்சபானா மின்சாரம் கிடைத்துள்ளது.
ஆறு களைத் தடுத்து அணை கட்டி நீரைத் தேக்குவதா லும் நீர் மின் உற்பத்தி செய்யலாமெனக் கண்டோம். கல்லோயாப் பள்ளத்தாக்கிலே செனனாயக்கா சமுத்திரத்தின் அடிவாரத்தி

Page 78
138
எட்டாந்தரப் புவியியல்
லுள்ள இங்கினியாக்கலை என்னும் இடத்திலும் நீர் மின்வலு பெறப்படுகின்றது. இப்பொழுது 10,000 கில்லோவாற்று மின்வலு உற்பத்தி செய்யப்படுகின்றது. இதில் 3500 கி. வா. மின்வலு கல்லோயாப் பள்ளத்தாக்குக்கும், மட்டக்களப்பு, வாழைச்சேனை, அக்கரைப்பற்றுப் பகுதிகளுக்கும் வழங்கப்படு கின்றது. எஞ்சிய பகுதி இலக்சபானா மின் திட்டத்துடன் ஊவா மாகாணத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இவ்விணைப்பின் பயனாக ஊவா மாகாணத்திலே தேயிலை, இறப்பர் தொழிற்சாலை களுக்கு மலிவான மின்சாரம் கிடைக்கின்றது.
தற்பொழுது நீர்மின் வலு பெறப்படும் நிலையங்களும் பெறும் அளவு விபரங்களும் பின்வருமாறு :-
திட்டம்
பெறப்படும் நீர்மின்வலு (கி. வா.) இலக்சபானா வலு நிலையம்
25,000 இலக்சபானா இரண்டாவது நிலையம்
25,000 இங்கினியாக்கலை நிலையம்
10,000 விமலசுரேந்திரா நிலையம்
50,000
1000 - 3000
3000-5000 5000-7000' 7ooo'க்கு மேல்
பிலாவை:-
களனி கங்கை
இனி கித்து:
இருந்தால் கா # பங்ரேலியா
அIEI ச.
சிவிைென
காலிப்பொதுத்
காலு கங்கை.
படம் 43 : இலக்சபானா - நோட்டன் பாலம்

நீர் மின் சக்தி
139
நாட்டின் கைத்தொழில் விருத்தி காரணமாக மின்வலுவின் தேவை அதிகரித்து வருகின்றது. பொய்யிட்டியாவிலும், உட வளவைத் திட்டத்தின் கீழும் நீர் மின் பெறுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. நீர் மின் வலுப் பெறமுடியாத இடங் களில் வெப்பச் சக்தியிலிருந்து மின்சாரம் பெறப்படுகின்றது. இத்தகைய நிலையங்கள் களனி, புறக்கோட்டை, சுன்னாகம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
நீர்மின்வலு வின் பயன்கள் : மின் சாரம் பல வசதிகளை அளிக்கவல்ல ஒரு வலுவாகும். எமது நாடு நிலக்கரியையும் பெற்றோலியத்தையும் இப்பொழுது இறக்குமதி செய்கின்றது. இதனால், ஆண்டுதோறும் பெருந்தொகைப் பணம் செலவா கின்றது. நீர் மின்வலுவை விருத்தி செய்வதனால் இப்பணச் செலவு இல்லாது போகும். நிலக்கரியைப் பயன்படுத்தும் ஒரு தொழிற்சாலை அதன் புகையால் அழுக்கடைவதுண்டு. மின்சா ரத்தைப் பயன்படுத்தும் தொழிற் சாலை க ள் துப்புரவாக இருக்கும். நிலக்கரியை வைத்திருப்பதற்குத் தனியான கட்டிட வசதிகள் வேண்டும். மின்சாரத்தால் இத்தகைய மேலதிகச் செலவுகள் இல்லை. உபயோகிப்பதற்கு மின்சாரத்தைப்போன்று வசதியான வலுப் பொருள் வேறு எதுவுமில்லை. இவை எல்லா வற்றுக்கும் மேலாக மின்சாரம் மிகவும் மலிவானது என்பதனை நாம் கருத்திற் கொள்ளல் வேண்டும்.
இக்காலத்தில் மின்சாரம் எமது வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஓர் இடத்தை வகிக்கின்றது. வீடுகள், வீதிகள் முதலியனவற்றுக்கு ஒளியேற்றவும், சிலவகையான வாகனங்களை இயக்கவும் மின்சாரம் பயன்படுகின்றது. மின்சாரத் தால் வானொலிப் பெட்டி பாடுகின்றது; விசிறி இயங்குகின்றது; ஒலி பெருக்கி வேலை செய்கின்றது; தொழிற்சாலைகள் இயங்கு கின்றன. அலுமினியக் கைத்தொழில், பல இரசாயனக் கைத் தொழில்கள், உலோகத் தொழில் நிலையங்கள் போ ன் ற ன பெரிதும் மின் சாரத்திலேயே தங்கியுள்ளன. எனவே, மற்றைய நீர்மின் வலுத் திட்டங்களையும் விருத்தி செய்தாற் பல கைத் தொழில்கள் தோன்றி நாட்டின் பொருளாதாரத்தை வளப் படுத்தும் என்பதில் ஐயமில்லை.
பிற நாடுகள்
சுவிச்சலாந்து, யப்பான் , சிகண்டினேவியா, இத்தாலி, கனடா ஆகிய நாடுகள் மிகச்சிறந்த முறையில் நீர் மின்சக்தியை விருத்திசெய்து, பொருளாதார அபிவிருத்திக்காக அதனைப் பயன்படுத்தி வருகின்றன. நீர் மின் சக்தியை விருத்தி செய்வதற்

Page 79
140
எட்டாந்தரப் புவியியல்
கேற்ற புவியியல் நிலைமைகள் இந் நாடுகளில் நன்கு காணப்படு கின்றன. உதாரணமாக, யப்பான் நாடு மழைவளம் மிக்கது; மலைப்பாங்கானது. வேகமாக விழும் பல நீர்வீழ்ச்சிகள் இங்கு காணப்படுகின்றன. யப்பானில் பெற்றோலியம் இல்லை; நிலக் கரி மிகவும் குறைவு. எனவே, நீர் வீழ்ச்சிகளிலிருந்து நீர் மின் வலு நன்கு விருத்தி செய்யப்பட்டுள்ளது. இந் நீர் மின் வலுவால் பல்வேறு வகைப்பட்ட கைத்தொழில்களில் யப்பான் முன்னேறி யுள்ளது.
பயிற்சிகள் வலுவைத் தரவல்ல கனிப்பொருள்கள் இரண்டு கூறுக. 2. இவற்றிலும் பார்க்க நீர்வலு எக்காரணத்தினாற் சிறப்
புடையது? 3. நீர்மின் வலுவை இரண்டு வகையாகப் பெறலாம். அவை
யாவை?
5.
இலங்கையில் நீர் மின் வலு பெறக்கூடியதாக இருக்கும் நான்கு நீர்வீழ்ச்சிகள் கூறுக. தற்பொழுது நீர்மின் பெறப்படும் நான்கு நீர்மின் திட்டங் களும் யாவை? இலக்சபானா நீர்வீழ்ச்சியிலிருந்து நீர் மின் வலுவைப் பெறு வதற்கு வாய்ப்பாக உள்ள ஐந்து புவியியல் நிலைமைகள்
கூறுக. 7. இலக்சபானா நீர்மின் திட்டத்தினாற் பயன்பெறும் பகுதிகள்
நான்கு கூறுக. 8. இங்கினியாக்கலை நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோ
கிக்கப்படும் பகுதிகள் நான்கு கூறுக.. 9. இலக்சபானா நீர்மின் திட்ட த் தை யும் கல்லோயாத்
திட்டத்தையும் இணை த் த தி னாற் பயனடையும் ஒரு
மாகாணம் யாது? 10. நீர்மின்வலுவின் பயன்களுள் ஐந்து கூறுக. 17.
உலகில் நீர்மின் வலுவை நன்கு விருத்தி செய்துள்ள
நான்கு நாடுகள் கூறுக. 12.
அவற்றுள் ஒன்றைத் தெரிவுசெய்து, நீர் மின்வலு விருத் திக்கு அங்கு காணப்படும் புவியியற் காரணிகளை விவரித்துச் சிறு பந்தி ஒன்று எழுதுக.

அலகு 4
உலகின் குடிப்பரம்பல்
உலகத்திற் பல நாடுகள் உள்ளன. 44 ஆம் படம் சில பிரதான நாடுகளையும் பட்டணங்களையும் காட்டுகின்றது. தேசப்படத்தில் நாடுகள் வெவ்வேறு நிறங்களாற் காட்டப்பட் டிருப்பதைக் கவனிக்கலாம். ஓர் ஆட்சிக்குட்பட்ட நிலப்பரப்பை ஒரு நாடு என்று பொதுவாக அழைப்பது வழக்கம். ஆசியாவிற் பல நாடுகள் உள்ளன. அவ்வாறே ஐரோப்பா, ஆபிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களும் பல நாடுகளைக் கொண் டுள்ளன. வட அமெரிக்காவையும் அவுத்திரேலியாவையும் ஒரு தேசப்படத்தில் அவதானிக்க. அவுத்திரேலியாக் கண்டம் முழு வ தும் ஓர் ஆட்சிக்குட்பட்டதாகும்.
ஆசியாவில் உள்ள நாடுகளுள் சீனா மிகவும் பெரியது. அடுத்துப் பெரிய நாடு யாது ? வட அமெரிக்காவில் எத்தனை நாடுகள் உள்ளன ? ஆபிரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உள்ள நாடுகளை ஒரு தேசப்படத்தில் அவதானிக்க.
இந்நாடுகளில் வெவ்வேறு இனத்தைச் சார்ந்த மக்கள் வாழ்கின்றார்கள். மொழி, சமயம், பண்பாடு என்பவற்றிற் குறைந்தது ஒன்றினாலேனும் நாடுகள் வேறுபடக் காண்கின்றோம். பழம்பெரும் கலாசாரங்களையுடைய சில பெரும் நாடுகள் ஒன்றுக்கொன்று முற்றாக வேறுபடுகின்றன. சீனர், இந்தியர், அராபியர், ஐரோப்பியர் என்போர் மொழியாலும், சமயத் தாலும், பண்பாட்டாலும் வேறுபடுகின்ற இனத்தவராவர்.
உலக நாடுகளுள் சீனாவிலேயே அதிக மக்கள் வாழ்கின்றனர். சீனா எவ்வளவுக்குக் குடி மிகுந்த நாடு என்பதனைக் கீழே தரப் பட்டுள்ள சில பிரதான நாடுகளின் குடித்தொகைப் புள்ளி விவரங் காட்டுகின்றது :
7100 இலட்சம் இந்தியா
4980 இரசியா
2330 அமெரிக்க ஐக்கிய நாடுகள்
2000 யப்பான்
990 4 பிறேசில்
840 மேற்கு யேமனி
590
* சீனா
United Nations Demographic Yearbook, 1967.

Page 80
ஆட்டிக்குச் சமுத்திரம்
ஆட்டிக்குச் சமுத்திரம் -
ஆட்டிக்குச் சமுத்திரம்
An லி(32)
.ெ
ம்) "
> .
ரஷ்யா
ஆசியா
இண்டர்
மொஸ்கோ
-பேரின்
வட அமெரிக்கா
இங்கிலாந்து *
ஐரோப்பா
இ-ரோம்
வான்கூவர்
இலண்டன்
பாரிசு
தொக்கியோ
அமெரிக்க ஐக்கிய நாடுகள் ?
நியூயோக்கு-y
வாசிங்..ன் -
இல்லி
அத்திலாந்திக்குச்
சன)
கல்கத்தா
கியூபா
கெயிறோ -
எகித்து
* *காப்
அராபிஷா
ப இந்தியா
040
பம்பாய்
சமுத்திரம்
சென்னை
ஆபிரிக்கா
பசுபிக்குச் சமுத்திரம்
ஆக்கின
கொழும்பு - இலங்கை!
பசுபிக்குச் சமுத்திரம்
கொழும்பு -
சுமாத்திரா (3
பிறேசில்
T)
- சிவா
- பிறேசிலியா
இந்து சமுத்திரம்
தென் அமெரிக்கா
பிறிஸ்பேன் அவுத்திரேலியா |
பேத் -
புவனெக அயறிக
நன்னம்பிக்கைமுவை
ஆசெந்தில்
'அடி வெயில்'
நியூ சிலாந்து
மெல்போன்
, கன்பெரர்
படம் 44: உலகத்தின் பிரதான நாடுகளும் பட்டணங்களும்

உலகின் குடிப்பரம்பல்
143
உலகில் ஏறத்தாழ 33560 இலட்சம் மக்கள் உள்ளனர். இதில் அரைப் பங்கிற்கும் அதிகமான தொகை ஆசியாவில் உள்ளது. ஆசியாவின் தொகையில் 5 க்கும் அதிகமானோர் சீனாவில் வாழ்கின்றனர். ஆசியாவிற் குடித்தொகை கூடிய இரண் டாவது பெரிய நாடு இந்தியாவாகும். இது, ஆசியாவின் மொத்தக் குடித்தொகையில் 1 பங்கைக் கொண்டுள்ளது. சீனாவினதும் இந்தியாவினதும் குடித்தொகையை இரசியா, அ. ஐ. நா., யப்பான், பிறேசில், மேற்கு யேமனி ஆகிய நாடுக ளுடன் ஒப்பிட்டுப் பார்க்க. இந்தோனேசியா, பாக்கித்தான், நைசீரியா, ஐக்கிய இராச்சியம், இத்தாலி என்பன குடி மிகுந்த பிற நாடுகளாகும்.
45ஆம் படத்தை அவதானிக்க . நிறங்களுக்குத் தரப்பட் டுள்ள விளக்கத்தைக் கொண்டு இப்படத்தைப் படிக்கையில் ஓர் உண்மை புலனாகின்றது. மக்கள் சில பகுதிகளில் அதிகமாகவும் சில பகுதிகளிற் குறைவாகவும் வாழ்கின்றார்கள் என்பதனைப் படம் காட்டுகின்றது. சீனா, இந்தியா போன்ற நாடுகளை அவதானிக்க. இவை அதிக குடித்தொகையையுடைய நாடுகள். அந் நாடு களிலும் எல்லா இடங்களிலும் குடி ஒரு சீராகப் பரம்பியிருக்க வில்லை. சில இடங்களில் நெருக்கமாகவும் சில இடங்களில் ஐதாக வும் குடி பரம்பியிருக்கக் காணலாம். இதற்குரிய காரணம் யாது? ஒருசில இடங்களில் மட்டும் மக்கள் அதிகமாக ஏன் வாழ வேண்டும்? படம் முழுவதையும் அவதானிக்கின்றபொழுது புவியின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் தொகை குறை வாகவே காணப்படுகின்றது. ஏன்? அவற்றுக்குரிய காரணங்களை ஆராய்வாம்.
குடியடர்த்திப் படத்தையும், கண்டங்களின் தரைத்தோற்றத் தைக் காட்டும் படத்தையும் (படம் 46) ஒப்புநோக்கிப்பார்க்க. குடியடர்த்திப் படத்திற் சிவப்பு நிறமாகவுள்ள பகுதிகளைத் தரைத்தோற்றப் படத்தில் அவதானிக்க. இந்து. ' கங்கை, பிரமபுத்திரா, யாங்ரிசிக்கியாங், நைல், போ ஆகிய ஆற்றுப் பள் ளத்தாக்குகளிற் குடியடர்த்தி கூடுதலாக இருப்பதைக் கவனிக் கலாம். இப் பள்ளத்தாக்குகள் வளமான வண்டல் மண் நிறைந்த பிரதேசமாக உள்ளன. வண்டல் மண் பயிர்ச்செய்கைக்கு மிகவும் ஏற்றது. இவ் வாற்றுப் பள்ளத்தாக்குகள், அவை காணப்படும் நாடுகளின் முக்கியமான விவசாயப் பிரதேசங்களாகும். நீர் வசதியாலும், விவசாயத்துக்கேற்ற வண்டல்மண் நிலங்கள் 82.ள்ளமையினாலும் இப்பகுதிகளிற் குடியடர்த்தி கூடுதலாகக் காணப்படுகின்றது. யாவா, தக்கண மேட்டுநிலம், தென் மேற்கு இரசியா ஆகிய பகுதிகளிலும் குடி கூடுதலாக உள்ள
மைக்கு வளமான மண்ணே காரணமாகும்.

Page 81
அதுரமைலுக்கு
2 க்குக் கீழ்
2 - 25
25-100
100 - 250
250 க்கு மேல்
படம் : 45. உலகின் குடி யடர்த்தி

உலகின் குடிப்பரம்பல்
145
தரைத்தோற்றப் படத்திலுள்ள மலைப்பிரதேசங்களைக் குடி யடர்த்திப் படத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க. இமயம், அதனை அடுத்துள்ள குவென்லுன், பமீர் முடிச்சு, அல்தின் தாக்கு, தியன்சான், இந்துக்கூசு, சுலைமான் முதலிய தொடர்கள் அடங்கிய மலைப்பிரதேசம், அவுத்திரேலியாவின் பெரும் பிரிவுத் தொடர், ஐரோப்பாவின் அற் பிசு, தென் அமெரிக்காவின் அந்தீசு மலைப் பிரதேசம், வட அமெரிக்காவின் உறொக்கீசுப் பிரதேசம் ஆகியவற்றில் குடி பெருமளவுக்குக் குறைவாகவே காணப்படுகின்றது. இதற்குரிய காரணம் யாது?
மனிதன் போக்குவரத்து இல்லாத இடங்களில் வாழ விரும்புவதில்லை. தான் வாழும் சமுதாயத்துடனும் அதனைச் சூழ்ந்துள்ள பிற சமுதாயங்களுடனும் தொடர்பு கொண்டு வாழும் இயல்பினன் மனிதன். பல மலைப்பிரதேசங்கள் ஏற்ற இறக்கமுள்ளவை; கரடுமுரடான தரைத்தோற்றத் தன்மை யுடையன. இத்தகைய மலைப்பிரதேசங்களிற் போக்குவரத்துப் பாதைகளை அமைப்பது அதிக தொல்லையும் மிகுந்த செலவுங் கூடிய செயலாகும். மேலும் விவசாயஞ் செய்வதற்கு ஏற்ற சமநிலங்களும் குடியிருப்புகளுக்கு உகந்த இடவசதிகளும் இப் பகுதிகளிற் குறைவு. இத்தகைய காரணங்களினால், மலைப்பிர தேசங்களிற் குடியடர்த்தி குறைவாகக் காணப்படுகின்றது. ஆயினும், சில இடங்களிற் குடியடர்த்தி சற்று அதிகமாக இருப்பதை அவதானிக்கலாம். இவை மலைத்தொடர்களுக் கிடைப்பட்ட மேட்டு நிலங்களாகும். மேட்டு நிலங்களிற் குடி யிருப்புகளுக்கேற்ற இடவசதி ஓரளவுக்கு உண்டு.
தேசங்களிற் 9டெங்களிற் கு+வை மலைத்தெ"
போக்குவரத்து வசதிகளைச் சமநிலப் பகுதிகளில் எளிதில் அமைத்துக்கொள்ளலாம். கு டி யிரு ப் பு க ளை அமைத்தற்குப் போதுமான நிலமும் சமநிலப் பகுதிகளிற் கிடைத்தல் வேண்டும். ஆசியாவின் வட பகுதியையும் ஆபிரிக்காவின் வடபகுதியையும் அவதானிக்க. பரந்த சம நிலங்களைக் கொண்ட இப் பகுதி களிற் குடியடர்த்தி மிகக் குறைவாக இருக்கக் காரணமென்ன?
ஆசியாவில் "மும் சமநிலப் பகுதிநேர க ளை அமைக்க
குடியடர்த்திப் படத்தையும், உலகத்தின் மழை வீழ்ச்சிப் பரம்பலைக் காட்டும் 47 ஆம் படத்தையும் ஒப்புநோக்குக (பக். 148). குடி குறைவாகவுள்ள பிரதேசங்களும் மழைவீழ்ச்சி குறைவாகவுள்ள பிரதேசங்களும் ஏறத்தாழ ஒன்றாக இருப்பதை அவதானிக்கமுடிகிறது. சகாரா, அராபியா, கோபி, தார், கா லகாரி, மேற்கு அவுத்திரேலிய மேட்டுநிலம், அற்றக்காமா, பற்றக்கோனியா, கொலராடோ மேட்டுநிலம் ஆகிய பாலை
புவி , VIII - 10

Page 82
மனைவலைவாகைண்டிப்பவர்களை காப்பாற்றுமாலை
--2
* மு த் தி ரம் -
94)
'ன ஐ.லானே,
ஐரோப்பம்
3
-நிலைக
அல
இறா யா துதேர்
அலப்,
குவென்லள்.
8 மிரிதிப்பு
32
இமாலய டி
நரம்புத, ;ெ
* தி
அ த் ல்: த் தி ச் ச மு த் தி ர ம்
?கதுதா)
பாம்
ப சி பி கீ ச மு த் தி ர ம் சி.
'ச மு த் தி ர ம்
por
77டுதின்!-)
ச மு த் தி ர ம்"
*; அமெரிக்கா
தென் ச மு த் தி ர ம்
இது பிரதான .மலைகள்
-->ா பிரதான ஆஅக்கன்
ஆடே பூமிகள்
படம் 46: கண்டங்களின் தரைத்தோற்றம்

உலகின் குடிப்பரம்பல்
147
நிலப் பகுதி களிற் குடி மிகவுங் கு றை வாக உள்ளது. இப் பகுதிகள் வருடத்திற் பெறும் மழை வீழ்ச்சியைப் படத்தில் அவதானிக்க ..
மழைவீழ்ச்சி அதிகமாகவுள்ள பிரதேசங்கள் யாவை? அப் பிரதேசங்களைக் குடியடர்த்திப் படத்தில் அவதானிக்க. பாலை நிலப் பகுதி களில் மழைவீழ்ச்சி போதாமையாற் குடி குறைவாக உள்ளதெனக் கண்டோம். ஆயின் மழைவீழ்ச்சி அதிகமாகவுள்ள அமேசன் ஆற்று ப்பள்ளத்தாக்கு, கொங்கோப் பள்ளத்தாக்கு என்பவற்றிற் குடியடர்த்தி குறைவாக இருக்கக் காரணம் யாது?
உலகத்தின் இயற்கைத் தாவரப் பிரிவுகள் 31 ஆம் படத்திற் காட்டப்பட்டுள்ளன (பக். 83). இப்படத்தினைக் குடியடர்த்திப் படத்துடன் ஒப்புநோக்கும்போது இயற்கைத் தாவரப் பரம் பலுஞ் சில பகுதிகளிற் குடிப்பரம்பலைக் கட்டுப்படுத்தும் ஒரு காரணியாக விளங்குவதை அவதானிக்க முடிகிறது.
படத்தில் ஆபிரிக்காவினதும் தென் அமெரிக்காவினதும் மத்தியகோட்டுப் பகுதிகளை நோக்குக. இப் பகுதிகளில் வரு டத்தில் 80" மழைவீழ்ச்சியுண்டு. வருடச் சராசரி வெப்ப நிலை 80° ப. ஆகும். மழை அதிகம் பெய்வதினால் அடர்த்தியான காடுகள் இப் பகுதி களிலே தோன்றியுள்ளன. அமேசன் பள்ளத் தாக்குக் காடுகளுக்குச் செல்வா சு என்று பெயர். செல்வாசும் கொங்கோக் காடுகளும் சூரிய வெளிச்சமே உட்புக முடியாத அளவுக்கு அடர்த்தியானவை. தரை, சேறும் சகதியுமுடையது. மஞ்சட் காய்ச்சல், மலேரியா, உறங்குபிணி போன்ற கடும் நோய்களைப் பரப்பும் நுளம்புகளும், நச்சுப் பூச்சிகளும் பெருந் தொகையில் உள்ளன. காட்டு விலங்குகளின் தொல்லையும் இக் காடுகளில் அதிகம். ஆதலால் மத்திய கோட்டு மழைக் காடுகள் மக்கள் வாழ்க்கைக்கு ஏற்றவையன்று. ஆயினும் இந் நிலைமை களுக்குப் பழக்கப்பட்ட பிக் மீ சு எனப்படும் குறளர் கொங்கோக் காடுகளில் வாழ்கிறார்கள். செல்வாசுக் காடுகளிலும் நாகரிக மற்றோர் உள்ளனர்.
குடியடர்த்திப் படத்தோடு காலநிலைப் பிரிவுகளை ( அல்லது அப் பிரிவுகளோடொத்த இயற்கைத் தாவரப் பிரிவுகளை ) ஒப்பிட்டுப் பார்க்கையில் (1) பருவக்காற்றுக் காலநிலை, (2) மத்தியதரைக் காலநிலை, (3) சீன வகைக் காலநிலை, (4) குளிரான இடை வெப்பக் கண்டக் காலநிலை (இடை வெப்பப் புன்னிலப் பகுதிகள்), (5) குளிரான இடைவெப்ப மேற்கோரக் கடல்வகைக் காலநிலை ஆகியன மக்கள் வாழ்க்கைக்கு ஏற்றவை என்பது புலனாகும்.

Page 83
m/
- - - - - -
60
ட10 அங்குலத்துக்குள். மே 10-25 1)
E25-50 >>
50 அங்குலத்துக்கு மேல்
'காவல்வேக்வலண்ணைரைாைலகைள
படம் 47 உலகின் வருட மழைவீழ்ச்சி

உலகின் குடிப்பரம்பல்
149
இதுவரை படித்ததிலிருந்து ஒரு பிரதேசத்தின் குடிப் பரம்பல் அப்பிரதேசத்தின் தரைத்தோற்றம், காலநிலை, இயற்கைத் தாவரத்தின் தன்மைகள் என்பவற்றிலே தங்கியுள்ள தென்பது தெளிவாகின்றது. (1) கரடு முரடான தரைத் தோற்றம், (2) குறைவான மழைவீழ்ச்சி, (3) அடர்த்தியான பெருங்காடுகள், (4) கடுங்குளிர் ஆகியன காணப்படும் இடங் களிற் குடியடர்த்தி மிகவுங் குறைவென்றும், (i) சமநிலம், (ii) பயிர்ச்செய்கைக்கு ஏற்ற வளமான மண், (iii) நீர் வசதி, (vi) வாய்ப்பான காலநிலை முதலியனவுள்ள இடங்களிற் குடி யடர்த்தி அதிகமென்றுங் கண்டோம். இவற்றோடு கனிப் பொருள்கள் எடுக்கப்படுகின்ற இடங்களிலும் கைத்தொழிற் பிரதேசங்களிலும் குடியடர்த்தி கூடுதலாகக் காணப்படுகின்றது என்ற கருத்தையும் மனதிற் கொள்ளல் வேண்டும்.
1. (அ)
பயிற்சிகள் ஆசியாவிற் குடியடர்த்தி கூடிய மூன்று ஆற்றுப் பிர தேசங்கள் கூறுக. அவற்றுள் ஒரு பிரதேசத்திற் குடியடர்த்தி அதிக மாக இருப்பதற்குரிய புவியியற் காரணங்கள் மூன்று தருக.
(ஆ)
2. யெனிசி, ஒபு ஆகிய ஆற்றுப் பள்ளத்தாக்குகளிற் குடி
குறைவாக உள்ளமைக்கு இரண்டு காரணங்கள் கூறுக.
3. (அ) குடியடர்த்தி குறைவாகவுள்ள நான்கு மலைப்பிர
தேசங்கள் கூறுக. (ஆ) அப்பிரதேசங்களிற் குடியடர்த்தி குறைவாக உள்ள
மைக்குரிய காரணங்கள் மூன்று கூறுக.
4. அ. ஐ.நா.வில் எப்பகுதியிற் குடி கூடுதலாகவுள்ளது ?
எப்பகுதியிற் குடி குறைவாகக் காணப்படுகின்றது?
5. (அ) ஆபிரிக்காவிற் குடி மிகவுங் குறைவாகக் காணப்
படும் ஆற்றுப்பள்ளத்தாக்கு யாது? (ஆ) அதற்குரிய காரணங்கள் நான்கு கூறுக.
6. ஐரோப்பாக் கண்டத்தில் எப்பகுதியிற் குடி கூடுதலாக
வுள்ளது? அதற்குரிய காரணங்கள் மூன்று தருக.

Page 84
150
எட்டாந்தரப் புவியியல்
7. உலகில் மழை அதிகமாகப் பெறும் மூன்று பகுதிகள்
கூறுக,
'8.
செல்வாசுக் காட்டுப்பகுதி விருத்தியடையாமல் இருப்ப தற்குரிய காரணங்கள் நான்கு கூறுக.
9. (அ) உலகிற் குடித்தொகை ஆகக் குறைவாகக் காணப்
படும் பகுதிகளைக் கூறுக. (ஆ) அதற்குரிய காரணங்கள் யாவை?
10.
மக்கள் வாழ்க்கைக்கு உகந்த கால நிலைப் பிரதேசங்கள் யாவை?
11.
ஓரிடத்தின் குடிப்பரம்பலைக் கட்டுப்படுத் தும் காரணிகள் மூன்று கூறுக.
12.
'எட்டாந்தரப் படவேலைப் பயிற்சிகள் ' என்னும் நூலில் 7ஆம், 8ஆம் பயிற்சிகளைச் செய்க.

அலகு 5 உலகின் பிரதான வியாபாரப் பாதைகள்
புவி மேற்பரப்பிற் புவியியல் தன்மைகள் எங்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. தரைத்தோற்றமும் காலநிலையும் பிற தன்மைகளும் இடத்துக்கிடம் வேறுபடுகின்றன. அதனால் உணவு, உடை, வீடு என்பவற்றின் தன்மைகளும் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுகின்றன. உணவு, உடை, வீடு என்பன மனிதனின் அத்தியாவசியத் தேவைகளாகும். ஆயினும் இவற் றில் தன்னிறைவு பெற்ற நாடுகள் உலகில் இல்லை. புவியியற் காரணிகளின் வேறுபாடுகளாற் சில பொருள் கள் சில நாடுகளில் அதிகமாகவும் வேறு நாடுகளில் மிகவும் குறைவாகவும் உள்ளன. இதனால் ஒரு நாடு அதனிடமில்லாத பொருளை அது காணப்படும் நாட்டிலிருந்து பெற விரும்புவது இயல்பே. இத் தகைய அடிப்படைக் காரணத்தால் உலக நாடுகளுக்கிடையே வியாபாரத் தொடர்பு ஏற்படலாயிற்று.
பண்டைக் காலத்தில் விற்பனை செய்வதற்குத் தனது பொருள் களை மனிதனே சுமந்து சென்றான். பழக்கப்பட்ட மிருகங்களும் பொருள்களைக் காவிச்செல்லப் பயன்பட்டன. காலப்போக்கில் பொருள்களை விரைவாகவும் அதிக அளவிலும் நெடுந் தூரத் துக்குக் கொண்டு செல்லக்கூடிய சுமைகாவிகள் படிப்படியாக விருத்தியாக்கப்பட்டன. இக்காலத்தில் நீராவி வண்டிகளும், இறயில் களும், மோட்டார்ப் பார வண்டிகளும் நிலவழியாகப் பொருள்களைக் கொண்டுசெல்லுங் கருவிகளுள் முக்கியமானவை. நீர்வழிக் கொண்டுசெல்லலிற் கப்பல்கள் முக்கியமான இடத்தை வகிக்கின்றன. விமான மூலம் கொண்டுசெல்லலும் பெருமளவில் விருத்தியாகியுள்ளது.)
கப்பற் பாதைகள்
கப்பற் பாதைகளின் முக்கியத்துவம் ! நீர் வழியாற் பொருள் களைக் கொண்டு செல்வது மற்றைய எல்லாக் கொண்டு செல்லல் முறைகளிலும் பார்க்க மிக மலிவானது , இறயிலால் ஏற்படுஞ்

Page 85
152
எட்டாந்தரப் புவியியல்
செலவிலும் பார்க்க ஃ பங்கே நீர்வழியாற் செலவாகின்றது. இதற்காண காரணங்கள் பல :
1. சமுத்திரப் பாதைகள் இலவசமானவை; அமைப்பதிலோ அல்லது பேணுவதிலோ எவ்வித செலவுங் கிடையாது. மாறாக, கற் பாதை களையும் இருப்புப் பாதைகளையும் அமைப்பதிலும் பின்னால் அவற்றைப் பழுது பார்த்துப் பேணுவதிலும் பெருந்தொகைப் பணஞ் செலவாகின்றது. 2. நீர்வழியாற் கொண்டு செல்வதற்குக் குறைவான வலுவே தேவைப்படுகின்றது. நிலத்தைப் போன்று ஏற்ற இறக் கங்கள் நீரில் இல்லை.. 3. இறயில் அமைப்புச் செலவிலும் பார்க்கக் கப்பல் கட்டுஞ் செலவு மிகவுங் குறைவு; ஓரளவுக்கு பங்கு எனலாம்.
4. நிலத்திலும் பார்க்க நீரில் விபத்துக்கள் குறைவு.
5. விமான மூலம் பொருள்களை அதிக விரைவாகக் கொண்டு
செல்லலாம். நிலப் போக்குவரத்து விருத்தியடையாத இடங்களுக்குப் பொருள்களைக் கொண்டு செல்லவும் விமானம் பயன்படுகிறது. ஆயின் கொண்டு செல்லற் செலவு மிகவும் அதிகமாகவுள்ளது.
பிரதான கப்பற் பாதைகள் : உலகத்தின் கப்பற்பாதைகள் 48 ஆம் படத்திற் காட்டப்பட்டுள்ளன. கப்பற் போக்குவரத்து அதிகமாகவுள்ள பாதைகள் தடிப்பாகக் காட்டப்பட்டுள்ளன. அதற்கேற்ப மூன்று முக்கியமான பாதைகளை அவதானிக்கலாம். அவை: (1) அத்திலாந்துப் பாதைகள்; (2) இந்து சமுத்திரப் பாதைகள்: (3) பசுபிக்குப் பாதைகள் என்பவையாகும்.
இவற்றுள் அத்திலாந்துப் பாதை முதன்மை வாய்ந்தது. வட அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்குமிடையிற் பெரு மளவு வியாபாரம் நடைபெறுகின்றது. வட அமெரிக்கா தானிய வகைகள், பழவகைகள், இறைச்சி, எண்ணெய், கோப்பி, மரக் குற்றிகள், மோட்டார்கள், இயந்திரங்கள் என்பவற்றை அதிக அளவில் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றது. ஐரோப்பாவிற் குடியதிகமாதலால் இவற்றை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. நியூசிலாந்திலிருந்தும் பனாமாக் கால்வாய் வழி யாகப் பாலுணவுகளும் இறைச்சிகளும் ஐரோப்பாவுக்கு வந்து சேருகின்றன.

உலகின் பிரதான வியாபாரப் பாதைகள் 153
* - -'
181 - அத்திலாந்திற் பின்வரும்- கப்பற் பாதைகள் பிரதான
மானவை;
1. நியூயோக்கு |
இலண்டன் மொந்திரீல்
கம்பேக்கு குவிபெக்கு 2. இலண்டன் - பனாமா
உலொஸ் ஏஞ்சல்ஸ் - சான்பிரான்சிஸ்கோ
கவாய் அம்ஸ்ரடாம் )
புவனசு அயசு மாசேல்சு நேப்பிள்சு
மொன்டி விடியோ
>>
இந்து சமுத்திரக் கப்பற்பாதைகளைப் படத்தில் அவதானிக்க. ஐரோப்பிய நாடுகளுக்கும் ஆசிய நாடுகளுக்குமிடையே நெடுங் காலமாக இப் பாதைகள் வழியாகத் தொடர்பு இருந்து வரு கின்றது. 19 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதிக்கு முன்னர் கப்பல்கள் நன்னம்பிக்கைமுனை வழியாகவே சென்று வந்தன. ஆயின் சுவெசுக் கால்வாய் வெட்டப்பட்டபின் மேலை நாடு களுக்கும் கீழை நாடுகளுக்கு மிடையேயிருந்த போக்குவரத்துத் தொடர்பும் வியாபாரத்தொடர்பும் பன்மடங்கு பெருகலாயின. சுவெசுக் கால்வாய் செங்கடலையும் மத்தியதரைக் கடலையும் இணைக்கும் பொருட்டு 1865 ஆம் ஆண்டு வெட்டப்பட்டது. இக் கால்வாய் எகிப்து நாட்டுக்குரியது. போட்செட் இக் கால்வா யின் கரையிலுள்ள முக்கியமான ஒரு துறைமுகமாகும். மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அரசியற் கொந்தளிப்பால் இப்பாதை இப்பொழுது மூடப்பட்டுள்ளது. கப்பல்கள் முன்புபோல் நன்னம் பிக்கைமுனைப் பாதையைப் பயன்படுத்துகின்றன.
இந்து சமுத்திரக் கப்பற் பாதையிலுள்ள பிரதான துறை முகங்களை அவதானிக்க. இப் பாதை களில், ஒரு மைய நிலை யத்தில் கொழும்பு அமைந்திருக்கக் காணலாம். ஆசியா, அவுத்திரேலியா, ஆபிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கிடையே வியாபாரத் தொடர்பை ஏற் படுத்தும் கப்பற் பாதை கள் கொழும்புக் கூடாகவே செல் கின்றன. பிரதான பாதைகளும் எமது வெளிநாட்டு வியாபாரம் பற்றிய விவரமும் பின்வருமாறு :
1. சிட்னி, மெல்போண் பிரதேசங்களிலிருந்து பேத் ஊடாகக் கொழும்புத் துறைமுகத்துக்குப் பெருமளவிற் கோதுமை யும் பாலுணவுப் பொருள்களும் வந்து சேருகின்றன.

Page 86
154
எட்டாந்தரப் புவியியல்
வா
அடக
கொனோலுலு
முனை
படம் 48 : பிரதான கப்பற் பாதைகள் 2. நியூயோக்கு, குவிபெக்கு என்பவற்றிலிருந்து ஆபிரிக்காவின் கேப்ரவுண் (நன்னம்பிக்கை முனை) வழியாக விவசாய இயந் திரங்களும் பிற இயந்திரங்களும் கொழும்புக்குக் கொண்டு
வரப்படுகின்றன. 3. இரங்கூன், பாங்கொக், சங்காய் ஆகிய துறைமுகங்களி லிருந்து அரிசியும் தொக்கியோவிலிருந்து மோட்டார் வாகனம், உடைகள் என்பவையும் சிங்கப்பூருக்கூடாகக் கொழும்புக்கு வருகின்றன. 4. கொழும்பிலிருந்து கேப்ரவுண், இலிசுபன் வழியாக இலா கவிரே, இலண்டன், கம்பேக்கு ஆகிய ஐரோப்பிய துறை முகங்களுக்குத் தேயிலை அனுப்பப்படுகின்றது.
பசுபிக்குச் சமுத்திரப் பாதைகளைப் படத்தில் அவதா னிக்கவும். பசுபிக்கின் மேற்கில் யொக்ககாமா, சங்காய், கொங்கொங் போன்ற துறைமுகங்களும் கிழக்கில் வான்கூவர், சான்பிரான்சிஸ்கோ ஆகிய துறைமுகங்களும் உள்ளன. கவாய்த் தீவுகளின் துறைமுகமான கொனோ லுலு வின் நிலையத்தை நோக்குக. நெடுந்தூரஞ் செல்லும் கப்பல் கள் தங்கிச் செல்வ தற்குக் கொனோலுலு நன்கு பயன்படுகின்றது. பசுபிக்குப் பாதைகள் முக்கியம் வாய்ந்த வியாபாரப் பாதைகளன்று. பசுபிக்குக் கரைப்பகுதிகளிற் கைத்தொழிலிலும் விவசாயத் திலும் வளர்ச்சியடைந்த நாடுகள் குறைவாக இருப்பதே இதற்
குரிய காரணமாகும்.

உலகின் பிரதான வியாபாரப் பாதைகள் - 155
விமானப் பாதைகள்
முதலாம் பருவத்தில் விமானப் போக்கு வரத்தின் முக்கியத் துவம் பற்றிப் படித்திருக்கின்றோம். (அலகு 2: பக். 8-9.) சர்வ தேசப் போக்குவரத்து முறைகளில் இன்று விமானப் போக்கு வரத்தையே மக்கள் அதிகம் விரும்புகின்றனர். விமானப் போக்கு வரத்தின் மூலம் நீண்ட தூரத்தைக் குறைந்த நேரத்தில் அடைய முடிகின்றது. அவசியமான பொருள்களை விரைவாகக் கொண்டு செல்லவும் விமானம் உதவுகின்றது. 3 ஆம் படத்தை அவதா னிக்க (பக்கம் 10). உலகத்தின் பிரதான விமானப் பாதைகளை இப்படம் காட்டுகின்றது. அதில் (1) கொழும்பு - இலண்டன், (2) கொழுப்பு - நியூயோக்கு , (3) கொழும்பு - சிட்னி, (4) கொழும்பு தொக்கியோ ஆகிய விமானப் பாதைகளையும் இடையிலுள்ள தரிப்பிடங்களையும் அவதானிக்க.
தரைப் பாதைகள்
தரைப்பாதைகள் பிரதானமாக (1) இருப்புப் பாதைகள், (2) கற்பாதைகள் என இருவகைப்படும். இவற்றுள் இருப்புப் பாதைகள் மிகவும் முக்கியமானவை. இறயில் மூலம் எவ்வகைப் பொருள்களையும் கொண்டு செல்ல முடியும். இறயிற் சேவை -- (1) வசதியான நெடுந்தூரப் பயண த்தை ஒருவர் மேற்
கொள்ள உதவுகின்றது. (2) பிற போக்குவரத்து முறைகளால் எடுத்துச் செல்ல
முடியாத பாரமான பொருள் களையும் கொண்டு செல்ல உதவுகின்றது .. (3) பொருள்களை அதிக அளவில் ஒரே முறையிற் கொண்டு
செல்லப் பயன்படுகின்றது. (4) பொருள் களை உள்ளூர்களில் விநியோகிக்கத் துணை செய்
கின்றது. (5) ஒழுங்கான தபாற் சேவையை நடத்த வசதியளிக்
கின்றது.
ஆயினும் இருப்புப்பாதை களை அமைக்கவும், இறயில் நிலையங் களைக் கட்டவும் அதி கஞ் செலவாகின்றது. இறயில் வண்டி களும் இயந்திரங்களும் விலை யு யர்ந்தவை. இதனாலேயே பொருளாதாரத் துறையில் வளர்ச்சி பெற்ற நாடுகளில் இறயில் போக்குவரத்து முறை காணப்படுகின்றது. உதாரணமாக, மேற்கு ஐரோப்பாவிலும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கிழக்குப் பகுதியிலும் சிறந்த இருப்புப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Page 87
156
எட்டாந்தரப் புவியியல்
சில கண்டங்களில் ஒரு கரையிலிருந்து மறு கரை வரையும் செல்லும் நீண்ட இருப்புப் பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. கண்டத்துக்குக் குறுக்காகச் செல்லும் இத்தகைய இருப்புப் பாதைகள் கண்டக் குறுக்குத் தண்டவாளப் பாதைகள் என்று அழைக்கப்படும். பின்வருவன சில பிரதான கண்டக் குறுக்குத் தண்டவாளப் பாதைகளாகும்:
(1) சைபீரியன் தண்டவாளப் பாதை : இது ஆசியாக் கண் டத்தின் வடபகுதியிலுள்ள சைபீரியச் சமவெளியில் அமைக்கப் பட்டுள்ளது. உலகத்திலேயே மிகவும் நீளமான இப்பாதை விளாடிவோஸ்ரொக்கிலிருந்து மொஸ்கோ வரை செல்கிறது. தைசெற்று, ஒமிசு. சிவதிலோவோசு என்பன இப்பாதையிலுள்ள பிரதான நிலையங்களாகும்.
(2) கனடா பசுபிக்குத் தண்டவாளப் பாதை: கனடாவின் அத்திலாந்துக் கரையிலிருந்து பசுபிக்குக் கரைக்கு இரு பெரும் தண்டவாளப் பாதைகள் செல்கின்றன. அவற்றுள் ஒன்று அத்தி லாந்துக் கரையிலுள்ள கலிபாக்சிலிருந்து பசுபிக் கரையிலுள்ள வான்கூவர் வரை செல்கின்றது. குவிபெக்கு, வின்னிப்பெக்கு என்பன இப்பாதையிலுள்ள இரு பிரதான நிலையங்களாகும்.
(3) அவுத்திரேலியக் கண்டக் குறுக்குத் தண்டவாளப் பாதை : இது அவுத்திரேலியாவிலுள்ள பேத்திலிருந்து சிட்னி வரை செல் கின்றது. கால்கூளி, புரோக்கின்கில் என்பன இப்பாதையிலுள்ள பிரதான நிலையங்களாகும்.
உள் நாட்டு நீர்ப்பாதைகள்
உள் நாட்டு நீர்ப்பாதைகள் வழியாகக் கப்பல்களாலும் வள்ளங்களாலும் பொருள்களை மிகவும் மலிவாகக் கொண்டு செல்ல முடியும். ஆனால் விரைவாகப் பொருள்களை எடுத்துச் செல்ல முடியாது: அமேசன், கிழக்குப் பாக்கித்தான் போன்ற இடங்களில் உள் நாட்டு நீர் வழிப் பாதைகள் மிகவும் முக்கியமானவை. உள் நாட்டு நீர்ப்பாதைகள் பிரதானமாக (1) ஆறு கள். (2) ஏரிகள், (3) கால்வாய்கள் வழியாக உள்ளன.
(1) ஆறுகள் : போக்குவரத்துக்கு ஆறுகள் நேராகவும் ஆழமாகவும் நீர்வீழ்ச்சிகள் இல்லாமலும் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்படாமலும் இருத்தல் வேண்டும். இத்தகைய தன்மை களைக் கொண்ட மிசிசிப்பி, அமேசன், இறைன், நைல், கங்கை, யாங்ரிசிக்கியாங் ஆகிய ஆறுகளின் கீழ்ப்போக்குகள் போக்கு வரத் துக்கு மிக வாய்ப்பாகவுள்ளன;

உலகின் பிரதான வியாபாரப் பாதைகள் 157
(2) ஏரிகள் : அ. ஐ. நா. விலுள்ள ஐம்பெரும் ஏரிகளும். ஆபிரிக்காவிலுள்ள நியாசா, தங்கனீக்கா, விக்ரோறியா, உருடோல்பு என்பனவும் போக்குவரத்து நடைபெறும் பிரதான ஏரிகளாகும்.
(3) கப்பற் கால்வாய்கள் இரு கடல் களையோ, இரு ஏரி களையோ, இரு ஆறுகளையோ இணைக்கக் கால்வாய்கள் வெட்டப் படலாம். இவற்றுள் மிகவும் ஆழமாகவும் அகலமாகவுமுள்ள கால்வாய்கள் கப்பற் கால்வாய் க ளாகும். கீல் கால்வாய், பனாமாக் கால்வாய், சுவெசுக் கால்வாய் என்பன உலகிற் பெயர் பெற்ற கப்பற் கால்வாய்களாகும். கீல் கால்வாய் வட கடலையும் பால்திக்கடலையும் இணைக்கின்றது. பனாமாக் கால்வாய் பனாமாத் தொடுநிலத்துக்கூடாக 1914ஆம் ஆண்டு வெட்டி முடிக்கப்பட்டது. அத்திலாந்துச் சமுத்திரத்தையும் பசுபிக் சமுத்திரத்தையும் இணைக்கும் இக் கால்வாய் 50 மைல் நீள முடையது. சுவெசுக் கால்வாய் மத்தியதரைக் கடலையுஞ் செங் கடலையும் இணைக்கின்றது. (பிற விவரம் பக். 153)
துறைமுகங்கள்
துறைமுகங்கள் பெரும் வணிக மாநகரங்களாக விளங்கு தற்குப் பல சிறப்பான இயல்புகளைக் கொண்டிருத்தல் வேண்டும். சுற்றியுள்ள நாடுகளுக்குத் தொடர்பான முறையில் நிலையமும் கூடுதலான நிலப்பரப்பைக் கொண்ட பின்னணி நிலமும் வாய்ப்பாக இல்லாது போனால் துறைமுகம் வளர்ச்சியடைய முடியாது.
கொழும்பையும் சிங்கப்பூரையும் போன்று நெடுந்தூரக் கப்பற் பாதையின் இடையிலே துறைமுகங்கள் அமைந்திருத்தல் நன்றாகும். வானிலை வாய்ப்பாக இல்லாதபோது கப்பல்கள் பாதுகாப்பாக நின்று செல்ல இத் துறைமுகங்கள் உதவியாக இருக்கின்றன. மேலும் மலாக்காத் தொடுகடலிலுள்ள சிங்கப் பூரின் நிலையம் நெருக் கடியான காலங்களில் ஓர் உபாயப் பயனையுங் கொண்டிருக்கின்றது.
துறைமுகங்கள் கல்கத்தா, இலண்டன், சங்காய் போன்று கூடுதலான நிலப்பரப்பைப் பின்னணி நிலமாகக் கொண்டிருத்தல் வேண்டும். வளமற்ற பின்னணி நிலங்களாற் பயனில்லை. அவை பல்வேறு வகைப்பட்ட தொழில்களுக்கு இடமளிக்கக்கூடியதாக அமையவேண்டும். உதாரணமாக, நியூயோக்கின் பின்னணி நிலம் கனிப்பொருள் வளத்திற் கூடியது; கைத்தொழில்மயத்திற் சிறந்தது. கொழும்பின் பின்னணி நிலத்தில் தேயிலை, இறப்பர், வாசனைத் திரவியங்கள் முதலியன பயிராகின்றன, தென்னை

Page 88
158
எட்டாந்தரப் புவியியல்
வேளாண்மையும் சிறப்பாக நடைபெறு கின்றது (பக். 51). திருகோணமலை நல்ல இயற்கைத் துறைமுகமாக விருந்தும் வள மற்ற பின்னணி நிலங் காரணமாகக் கொழும்பின் நிலையை அடைய முடியவில்லை.
பின்னணி நிலம் தட்டையான தரைத் தோற்றத்தைக் கொண்டிருத்தல் நன்று. போக்குவரத்துப் பாதைகளை அமைப்ப தற்கும் பண்டசாலை கள், கடைகள், வணிக நிலையங்கள் முதலியன கட்டுவதற்குந் தட்டை நிலம் வாய்ப்பளிக்கும். சுமைகளை விரை வாக இறக்கவும் ஏற்றவும் இறக்கிய பொருள் களைப் பாது காப்பாக வைப்பதற்குந் து றைமுகத்தில் வசதிகள் இருத்தல் வேண்டும். இத்தகைய நிலைமைகளைக் கொண்ட துறைமுகங்களே இன்று உலக வியாபாரத்தில் முன்னணியில் உள்ளன.
-நியூயோக்கு : மேற்கூறப்பட்ட நிலைமைகள் யாவும் அமையப் பெற்ற இத்துறைமுகம் உலகத்திலேயே மிகவும் பெரிய துறை முகமாகும். ஆழமான அட்சன் ஆற்றுமுகத்தில் இது அமைந் துள்ளது. கப்பல்கள் தொடர்ச்சியாக வருவதும் போவதுமாக இருப்பதனால் நியூயோக்கில் ஓய்வின்றி விரைவாக வேலைகள் நடைபெற்றுக்கொண்டே இருக்கும். இதன் பின்னணி நிலம் கனிப்பொருள் வளம் மிக்கது: கைத்தொழில்கள் பலவற்றைக் கொண்டது : போக்குவரத்து வசதிகள் சிறப்பாக அமைக்கப் பட்டுள்ளன. அமெரிக்காவின் பிரதான சந்தையான ஐரோப்பா வுக்கு இது கிட்ட வாகவுள்ளது. கோதுமை, இறைச்சி, எண்ணெய், இயந்திரங்கள், மோட்டார் வாகனங்கள் முதலி யன ஏராளமாக நியூயோக்கிலிருந்து ஏற்றுமதியாகின்றன. நியூயோக்கில் ஏறத்தாழ ஒருகோடி மக்கள் வாழ்கிறார்கள். இது
இலங்கையின் குடித்தொகைக்குச் சமமாகும்.
பம்பாய் : கல்கத்தாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டா வது துறைமுகம் பம்பாய் ஆகும். இந்தியாவின் மேற்குக் கரைக்கும் பம்பாய்த் தீவுக்குமிடையில் இருப்பதனால் துறை முகத்தின் நிலையம் மிகவும் பாது காப்பான தொன்றாகும். சாட்சு மலையின் குறுக்கேயுள்ள கணவாய்களுக்கு அண்மையில் அமைந் திருப்பது ஒரு விசேட தன்மையாகும். சுவெசுக் கால்வாய் திறக்கப்பட்ட பின்னர் பம்பாய் வேகமாக வளர்ச்சியடைந்தது. பம்பாயின் பின்னணி நிலத்திற் பருத்திச் செய்கை நடைபெறு கின்றதென முன்னர் கண்டோம். காற்றுமுகப் பகுதியில் ஈர வலயப் பயிர்களும் காற்றொதுக்குப் பகுதியில் உலர்வலயப் பயிர்களும் விளைவிக்கப்படுகின்றன. இந்தியாவின் மொத்த இறக்குமதியில் ஏறத்தாழ 4 மடங்கு பம்பாய் மூலம் இறக்குமதி யாகின்றது.,

உலகின் பிரதான வியாபாரப் பாதைகள் 159
பம்பாய் ஓர் இயற்கைத் துறைமுகமாகவும் விமானத் தள் மாகவும் விளங்குகின்றது . மேலும் இது ஒரு கைத்தொழில் மத்திய நிலையமாகவும் முழு இந்தியாவினதும் முக்கிய விற்பனை நிலையமாகவுமுள்ளது. நிர்வாகத் துறையிலும் பம்பாய் ஒரு மத்திய நிலையமாக விளங்குகின்றது. பிரதான இருப்புப் பாதை களினதும் கற்பாதை களின தும் மைய நிலையமாகவும் இது முக்கியத்துவம் வெறுகின்றது.
இலண்டன் : சில காலத்துக்கு முன் தனிப்பெருந் துறைமுக மாக இருந்துவந்த இலண்டன் இன்று உலகின் இரண்டாவது பெரிய துறைமுகமாக விளங்குகின்றது. இது தேமிசு ஆற்றோ ரத்தில் அமைந்துள்ளது. இங்கிலாந்தின் பிரதான கைத்தொழில் நிலையமாக இலண்டன் உள்ளது. வடமேற்கு ஐரோப்பாவின் கைத்தொழிற் பிரதேசத்துக்கு மிக அண்மையாக இது அமைந் திருக்கின்றது. தேயிலை, இறப்பர், தகரம், உரோமம் முதலியன பெருமளவில் இலண்டனில் இறக்குமதியாகின்றன. ஆடை வகைகள், இயந்திரங்கள் உட்பட இங்கிலாந்தின் எல்லா வகை யான கைத்தொழிற் பொருள்களும் ஏற்றுமதி யாகின்றன. இலண்டனிலும் ஒருகோடி மக்கள் இன்று வாழ்கின்றனர்.
இலிவப்பூல் : இது பிரித்தானியாவின் இரண்டாவது பெரிய துறைமுகமாகும். மேசி ஆற்றுமுகத்தில் உள்ள இலிவப்பூலும் மாஞ்செஸ்டரும் கப்பல்கள் செல்லக்கூடிய ஒரு கால்வாயால் இணைக்கப்பட்டுள்ளன . இலங்காசயர் கைத்தொழிற் பிரதேசத் துக்கு வேண்டிய மூலப்பொருள்கள் இலிவப்பூலில் இறக்குமதியா கின்றன. கனடாவிலிருந்தும் அ. ஐ. நா. விலிருந்தும் கப்பல்கள்
அடிக்கடி வருகின்றன .
கம்பேக்கு : கம்பேக்கு யேமனியின் எல்பு ஆற்றோரத்தில் அமைந்துள்ளது. ஐரோப்பாவின் சிறந்த துறைமுகமாக முன்னர் இது விளங்கிற்று. யேமனியைக் கிழக்கு மேற்காகப் பிரித்ததி லிருந்து இதன் சிறப்புக் குன்றிவிட்டது. நாட்டின் பிரிவு காரண மாக இதன் பின்னணி நிலம் குறுகிவிட்டது. இன்று மேற்கு யேமனியின் பிரதான துறைமுகமாயுள்ளது. இங்கு நடைபெறும் பல கைத்தொழில்களிற் கப்பல் கட்டுந் தொழில் முக்கிய மானது.
சங்காய் : யாங்ரிசிக்கி யாங்கின் கழிமுகப் பகுதியிலுள்ள சங்காய், மத்திய சீனாவின் பிரதான துறைமுகமாகும். சங்காய் பிரதான மானதொரு கைத்தொழில் நிலையமுமாகும். இதன்

Page 89
160
எட்டாந்தரப் புவியியல்
பின்னணி நிலம் பரந்த பயிர்ச்செய்கைப் பிரதேசமாகவுள்ளது. பருத்தி ஆடைகளும் பட்டாடைகளும் பெருமளவில் ஏற்றுமதி யாகின்றன. இறப்பர், எண்ணெய், இரசாயனப் பொருள்கள் முதலியன பிரதான இறக்குமதிப் பொருள் களாகும். இதன் குடித்தொகை 75 இலட்சமாகவுள்ளது.
பயிற்சிகள்
1.
கப்பலாற் - பொருள்களைக் கொண்டு செல்வதிலுள்ள நன்மைகள் ஐந்து கூறுக.
2. வட அமெரிக்காவின் துறைமுகங்கள் நான்கு கூறுக.
3."
சுவெசுக்கால்வாயின் முக்கியத்துவம் பற்றி ஐந்து வசனங்கள் எழுதுக.
4.
துறைமுக வளர்ச்சிக்கேற்ற புவியியல் நிலைமைகள் நான்கு கூறுக.
5. பின்வருந் துறைமுகங்களிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும்.
பிரதான பொருள்கள் யாவை?
(அ) நியூயோக்கு
(ஈ) கொழும்பு (ஆ) இலண்டன்
(உ) பம்பாய்.
(இ) சங்காய்
6. பம்பாய்த் துறைமுகம் பற்றி ஐந்து வசனங்கள் எழுதுக.
7. விடை தருக :
(அ) சுவெசுக் கால்வாய் எந்த ஆண்டில் வெட்டப்பட்டது?
(ஆ) நியூயோக்கு அமைந்துள்ள ஆறு யாது? (இ) மேற்கு யேமனியின் துறைமுகம் யாது? (ஈ) கொனோ லுலு எந்தத் தீவில் அமைந்துள்ளது? (உ) இலண்டனின் குடித்தொகை என்ன? (ஊ) பசுபிக்குக் கப்பற்பாதைகள் முக்கியத்துவம் பெறா
மைக்குரிய காரணம் ஒன்று கூறுக.

உலகின் பிரதான வியாபாரப் பாதைகள் 161 8. கீறிட்ட இடங்களை ஏற்ற சொற்களால் நிரப்பி எழுதுக!
(அ) நியூசிலாந்திலிருந்து
கால்வாய் வழி யா கப் பால் உண வுகளும் இறைச்சியும் ஐரோப்பா வுக்கு வந்துசேருகின்றன.
(ஆ)
சிங்கப்பூர் ------------- தொடுகடலில் உள்ளது. (இ) நியூயோக்கின் பின்னணி நிலம் ----- வளத்திற்
கூடியது.
(ஈ) திருகோணமலை நல்ல ------- துறைமுகமாக விருந்
தும் -
--------- காரணமாகச் நிலையை அடைய முடியவில்லை.
(உ)
-- உண* *-
முதலியன இலண்டனிற் பெருமளவில் இறக்குமதியாகின்றன.
(ஊ) கம்பேக்கு
--- ----- ஆற்றோரத்தில் அமைந்துள்ளது.
புவி. VIII - 11

Page 90
அலகு 6
இலங்கையின் குடியிருப்புக்கள்
1963ஆம் ஆண்டுக் குடிமதிப்புக் கணக்கின்படி இலங்கையின் குடித்தொகை 1,06, 24,507 ஆகும். இத் தொகையில் 80 சதவீதமான மக்கள் கிராமப் புறங்களிலேயே வாழ்கின்றனர். எமது நாடு பிரதானமாக ஒரு விவசாய நாடாகும். விவசா யத்தைத் தொழிலாகக் கொண்டு பெரும்பாலான மக்கள் வாழ்க்கையை நடாத்துகின்றனர். விவசாயத்துக்கு ஏற்ற நிலம் கிராமப் புறங்களிலேயே அ தி க மா கக் காணப்படுகின்றது. இதனாலேயே பெருந்தொகையான மக்கள் கிராமப்பகுதிகளில் வாழ்கின்றனர்.
வராலோ, மங்க
எஞ்சியுள்ள 20 சத வீதமானவர்களே நகர்ப் புறங்களில் வாழ்கின்றனர். நகர்ப்புறங்களில் வாழும் மக்களிலும் பெரும் பாலானவர்கள் தென் மேற்குச் சமவெளியிலேயே (ஈரவலயத் 'தாழ்நிலத்திலேயே) காணப்படுகின்றனர். இலங்கையின் குடிப் பரம்பலை மாவட்ட வாரியாகக்காட்டும் 49 ஆம் படத்தை அவதா னிக்க, அதில், ஈரவலயத் தாழ்நிலத்திலுள்ள கொழும்பு, கேகாலை, களுத்துறை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங் களிற் குடியடர்த்தி கூடுதலாகவிருப்பதை அவதானிக்கலாம், இவ்விதம் ஈரவலயத் தாழ்நிலத்திற் குடித்தொகை அதிக மாகக் காணப்படுகின்றமைக்குப் பல காரணங்கள் உள்ளன. (1) சமநிலம், (2) நல்ல மழைவீழ்ச்சியோடு கூடிய வாய்ப்பான காலநிலை என்பன இங்கு காணப்படுகின்றன . (3) தொழில் வசதிகள் அதிகம் உள்ளன. தென்னை, இறப்பர், நெல் முதலியன இங்கு பயிராகின்றன (படம் 50). கனிப்பொருள் வளமும் கைத் தொழில் வசதிகளும் இங்கு அதிகம் (படம் 39). மீன்பிடித் தொழிலும் இங்கு பிரதானமானது. (4) கொழும்பு உலகத்தின் பிரதான துறைமுகங்களுள் ஒன்றாகும். உலகின் பல பாகங்களிலு மிருந்து வணிகக் கப்பல்கள் கொழும்புக்கு வந்து போகின்றன (படம் 48). இதனால் வர்த்தகத் தொழிலும் இப்பகுதியில் நன்கு வளர்ந்துள்ளது. (5) கொழும்பு இலங்கையின் தலை நகராகும். எல்லா அமைச்சுகளும் நிருவாக அலுவல கங்களும் இங்கேயே யுள்ளன. இதனால் இவ் அலுவலகங்களிற் கடமையாற்றும் பல்லாயிரக் கணக்கான ஊழியர்கள் கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் வாழவேண்டியுள்ளனர், (6) சுகாதார வசதிகள், படிப்பு வசதிகள், விளையாட்டு வசதிகள், பொழுது

ஒரு சதுர மைலுக்கு ?
100 க்குக் கீழ்
100 பட்ட 500
"1800 - 1000
"1000 - 1500
மளாணர்
11
2500 க்கு மேல்
-வவுனியா --
- திருகோணமம்
அனுராதபுரம்
'13|1|1|1
17
சT 'ft
பொல்லநறுவை:
குருநாகல்
மாத்த
அம்பாறை
:11
III தி !!
இகாமம்பு
இரத்தின
அம்பாந்தோட்டை
படம் 49 : இலங்கையின் குடிப்பரம்பல் (மாவட்டவாரியாக)

Page 91
164
எட்டாந்தரப் புவியியல் போக்கு வசதிகள், போக்கு வரத்து வசதிகள் என்பனவும் இலங்கையின் வேறு எப்பகுதியிலும் இல்லாத அளவுக்கு இங்கு சிறப்பாகக் காணப்படுகின்றன
கா!
இவ்வாறு (1) பொருளாதார முன்னேற்றமும் (2) வாழ்க்கை வசதிகளும் (3) நா கரிக வாழ்க்கையும் நகர்ப்புறக் குடியிருப்புக் களையும் கிராமக் குடியிருப்புக்களையும் வேறுபடுத்துகின்றன.
எமது நாட்டில் இவ்வித நகரக் குடியிருப்புக்கள், கிராமக் குடியிருப்புக்கள் என்பவற்றுடன் வேறு சில குடியிருப்பு வகை களும் காணப்படுகின்றன. அவை பின்வருமாறு :
(1) குளக் குடியிருப்புக்கள் ) (2) கோட்டைக் குடியிருப்புக்கள் (3) சந்திக் குடியிருப்புக்கள் (4) சந்தைக் குடியிருப்புக்கள் (5) தோட்டக் குடியிருப்புக்கள்
கணவாய்க் குடியிருப்புக்கள்.
1. குளக் குடியிருப்புக்கள்: இவை உலர்வலயத் தாழ்நிலத்தி லுள்ள குளங்களையடுத்துக் காணப்படுகின்றன. உலர்வலயத் தாழ்நிலத்து மக்களின் பிரதான தொழில் பயிர்ச்செய்கை யாகும் . பயிர்ச்செய்கைக்கு நீர் வசதி வேண்டும். உலர் வலயத்தில் மழை வீழ்ச்சி குறைவு. மழைப்பருவத்து நீரைத் தேக்கி வைப்பதற்கென்று ஆயிரக்கணக்கான குளங்கள் ஆங் காங்கு வெட்டப்பட்டுள்ளன. குளத்து நீரைக் கொண்டு உலர் பருவத்தில் விவசாயம் செய்யப்படுகின்றது. இவ்விதம் குளங்கள் உலர்வலயத்தில் முக்கியமான இடத்தை வகிக்கின்றன. இதனால் நீர்வசதி குறித்து மக்களும் குளங்களையடுத்துக் குடியிருக்கின் றனர். இத்தகைய குளக்குடியிருப்புக்கள் வடமாகாணம், வட மத்திய மாகாணம், கிழக்கு மாகாணம் ஆகியவற்றிற் காணப் படுகின்றன (படம் 32).
2. கோட்டைக் குடியிருப்புக்கள் ? கோட்டைகள் பண்டைய மன்னர்களாற் பாது காப்புக்காக அமைக்கப்பட்டவை. கோட்டைகளை மையமாகக்கொண்டும் மக்கள் வாழ்ந்து வருகின் றனர். கோட்டைக் குடியிருப்புக்கள் பழைமையானவை. கண்டி, கம்பளை, பொலன்னறுவை, பதுளை ஆகியன இத்தகைய பழைய குடியிருப்புக்களாகும்:

தென்னை
இறப்பர்
குருநாகல்
1N1) பம்மல்.
Sரி காமம்
: போலகாவலை Mix கேகாலை
தா பு).
1ா -
1ாந்தோட்டை
கொமம்
31:15lid
IN
இரத்தினபுரி மத்பவாசை',
கடுமைததை';
கருத்து (1)
வத்தை
atsA' '''
இக்காட்டை
மாத்தறை
படம் 50 : ஈரவலயத் தாழ்நிலத்தின் தென்னை, இறப்பர்
நிலங்களும் இருப்புப் பாதைகளும்

Page 92
156
எட்டாந்தரப் புவியியல்
3. சந்திக் குடியிருப்புக்கள் : போக்குவரத்துப் பாதைகள் சந்திக்கும் இடங்களிற் சந்திக்குடியிருப்புக்கள் தோன்றியுள்ளன. பொல்காவலை, மாகோ, மதவாச்சி, கல்லோயா , பேராதனை, கபறணை, தம்புள்ளை என்பன இத்தகைய சந்திக் குடியிருப்புக்க ளாகும் (படம் 38).
4. சந்தைக் குடியிருப்புக்கள் இவை சந்தைகள் உள்ள இடங்களைச் சூழ்ந்து வளர்ந்துள்ளன. மாவத்துகாமம், சுன்னாகம், சாவகச்சேரி என்பவற்றைச் சந்தைக் குடியிருப்புக்குச் சிறந்த உதாரணங்களாகக் கூறலாம்.
5. தோட்டக் குடியிருப்புக்கள் : மலை நாட்டிலும் அதனையடுத் துள்ள தாழ்நிலப் பகுதிகளிலும் விருத்தியாகியுள்ள தேயிலை, இறப்பர்த் தோட்டங்களில் தோட்டக் குடியிருப்புக்கள் தோன்றி யுள்ளன. இவை இப்பகுதிகளின் பிரதான வியாபார நிலையங்க ளாகவும் விளங்குகின்றன. நாவலப்பிட்டி, அட்டன், தலவாக் கலை, வட்டக்கொடை, பூண்டுலோயா, எட்டியாந்தோட்டை (படம் 18, 19) முதலியன சில பெருந்தோட்டக் குடியிருப்புக்க ளாகும்.
6. கணவாய்க் குடியிருப்புக்கள்: மலைத் தொடரிலுள்ள முறிவுகள் கணவாய்கள் எனப்படும். தாழ்நிலப் பகுதியிலிருந்து மலை நாட்டுக்குச் செல்லக் கணவாய்கள் வாய்ப்பாகவுள்ளன. மலை நாட்டிலிருந்து அதனைச் சூழ்ந்துள்ள தாழ்நிலங்களுக்குச் செல் லும் பாதைகள் கணவாய்களுக் கூடாகவே அமைக்கப்பட் டுள்ளன. நாலந்தை, கலகெதரை , கடுகண்ணாவை, கினிகத்தனை, இறம்பொடை, பசறை, அப்புத்தளை, பலானை என்பன இலங்கையின் பிரதான இடைவெளிகளும் கணவாய்களுமாகும். இவ்விடங்களிற் போக்குவரத்து வசதிக்காகப் பாதையின் இரு மருங்கிலும் பெருந்தொகையான மக்கள் வாழ்கின்றனர். கண வாய்க் குடியிருப்புக்கள் மலைநாட்டுக்கேயுரிய குடியிருப்புக்க ளாகும்.
இவற்றைத் தவிர, சில புதிய குடியிருப்பு வகைகளும் இக் காலத்தில் தோன்றிவருகின்றன. இவற்றுக்கு உதாரணமாகக் குடியேற்றக் குடியிருப்புக்களை யும் கைத்தொழிற்பேட்டைக் குடி யிருப்புக்களை யும் கூறலாம். அரசாங்கம் குடியேற்றத் திட்டங் களின் கீழ் சில இடங்களில் மக்களைக் குடியேற்றியுள்ளது. இதன் விளைவாகப் பொல்லநறுவை, கந்தளாய், பதவியா,

இலங்கையின் குடியிருப்புக்கள்
167
அம்பாறை போன்ற இடங்களிற் குடியேற்றக் குடியிருப்புக்கள் உருவாகியுள்ளன (படம் 3 2). எக் கலை, இரத்மலானை ஆகிய இடங்களிற் கைத்தொழிற் பேட்டைகளை அரசாங்கம் அமைத் துள்ளது. இதனால் இவ்விடங்களிற் கைத்தொழிற் பேட்டைக் குடியிருப்புக்கள் வளர்ந்து வருகின்றன.
பயிற்சிகள் 1. இலங்கையின் குடித்தொகையிற் பெரும்பாலான பகுதி
கிராமப்புறங்களில் வாழ்வதற்குரிய பிரதான காரணம் யாது?
2. நகரக் குடியிருப்புக்கள் எவ்வலயத்தில் அதிகமாகக் காணப்
படுகின்றன?
3. அதற்குரிய காரணங்கள் யாவை?
4.
கிராமக் குடியிருப்புக்களையும் நகரக் குடியிருப்புக்களையும் வேறுபடுத்தும் காரணிகள் யாவை?
இலங்கையிற் காணப்படும் பத்துக் குடியிருப்பு
வகை களையும் கூறுக. பின்வரும் இடங்களுக்கு நேரே அவ்வவ்விடங்களிற் காணப் படும் குடியிருப்பு வகைகளை எழுதுக :
6.
(அ) கொழும்பு' ---
(ஆ) கண்டி
(இ) சுன்னாகம்
(ஈ) அட்டன்
(உ) பதவியா
பின்வரும் குடியிருப்புக்கள் ஒவ்வொன்றும் காணப்படும் ஒவ்வோர் இடந் தருக:
(அ) சந்திக்குடியிருப்பு | (ஆ) குளக் குடியிருப்பு (இ) கிராமக் குடியிருப்பு -

Page 93
168
எட்டாந்தரப் புவியியல் (ஈ) கண வாய்க் குடியிருப்பு - (உ) கைத்தொழிற்பேட்டைக் குடியிருப்பு -
8. குளக் குடியிருப்புக்கள் பற்றி எட்டு வசனங்கள் எழுதுக
9. இலங்கையின் மிகப் பழைய குடியிருப்புக்கள் எவ்விடங்
களிற் காணப்படுகின்றன ?
இப் பழைய குடியிருப்புக் களுக்கும் குடியேற்றக் குடி யிருப்புக்களுக்கு மிடையேயுள்ள பிரதான வேறுபாடுகள்
இரண்டு கூறுக. நீர் வாழும் இடம் எக் குடியிருப்பு வகையைச் சார்ந்தது? அதன் மாதிரி உருவமொன்றைக் கழிமண் அல்லது காகிதக் கூழ் கொண்டு அமைக்க .
11.
12.
இலங்கைப் படமொன்றில் அதன் மாகாணங்களையும் - 4 மாவட்டங்களையும் வேறுபடுத்திக் காட்டுக. மாகாணங் களினதும் மாவட்டங்களினதும் பிரதான பட்டணங்களைச் சிவப்பு நிறத்தாற் குறித்துப் பெயரிடுக.

, ම මම

Page 94
2/apt


Page 95
GEOGRAPEL
FOR
V. KANDAVr
Based on the new and the Course Guir by the Ministry of
TAMIL W
TUMAKAL. PRESS, CHUNNAKAM

Price: Rs. 4-00
Gim
NORTH-CEYLON ORKS PUBLISHING HOUSE
CHUNNAKAM