கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழ் ஐந்தாந்தரப் பூமிசாஸ்திரம்

Page 1
NEW SYLLABUS T.
FOR STI By: V. SIVAK
தமிழ் ஐந்தாந்தர
இலங்கையும்

AMIL GEOGRAPHY D, V DIUNTHU. ப் பூமிசாஸ்திரம் உலகமும்.

Page 2

ஐந்தாந்தரப் பூமிசாஸ்திரம்
(இலங்கையும் உலகமும்)
புதிய பாடத்திட்டத்திற்கு அமைய எழுதப்பட்டது.
அ ன் அ க பு)
வித்தியா பிர சுர சபையாரால் அழ ங்கீ க ரி க்கப்பட்ட தா.
ஆக்கியோன்: திரு. வே, சிவக்கொழுந்து அவர்கள்
TEACHER; SIVAGURU /1THYASALAI, VALVETTITURAI, «AUTHOR OF; ALGEBRA, GEOMETRY, ARITHM ETC
FOR HIGHER FORMS GEOGRAPHY FOR STD. 11 To VIT ETC.
IN TAMIL
பன்னிரண்டாம் பதிப்பு.
பிரசுரம்: வ ட ல ங் கா புத் த க சா லை
பருத்தித்துறை.
" anitary 1956.
விலை ரூ. 1- 25

Page 3
முதற் பதிப்பு
1938 இரண்டாம் பதிப்பு
1941 மூன்றாம் பதிப்பு
1946 நான்காம் பதிப்பு
1947 ஐந்தாம் பதிப்பு
1947 ஆறாம் பதிப்பு
1948 ஏழாம் பதிப்பு
1949 எட்டாம் பதிப்பு
1950 ஒன்பதாம் பதிப்பு
1951 பத்தாம் பதிப்பு
1953 பதினோராம் பதிபபு
1954 பன்னிரண்டாம் பதிப்பு 1956
(All Rights Reserved)
SMERINO RAM
YDNEY HARBOUR BRIDGE
SYDNEY, AUSTRALIA
32
அச்சுப் பதிப்பு: கலாபவன அச்சகம், பருத்தித் து றை,

நூன்முகம்
வித்தியா பிரசுர சபையாரின் அங்கீகாரத்தோடு எமது ஐந்தாந்தரப் பூமிசாஸ்திரம் இன்று பன்னிரண் டாம் பதிப்பாக வெளிவருகின்றது. அன்பர்கள் அளித்து வரும் பேராதரவு காரணமாக எமது பிரசுரங்களை உரிய காலங்களில் வெளிவரச் செய்யப் பல அச்சகத்தாரும் எம் து உதவி எழுத்தாளரும் ஓயாது உழைக்கின் றனர். ஆயினும் கவிர்க்கமுடியாத நெருக்கடியினால் இடையிடை சிறிது தாமதம் ஏற்பட்டு விடுகின்றது. இவ்வாறு பேரா தரவளித்து எம்மையும் அச்சகத்தாரையும் திணறவைக் கும் அன்பர்களனைவர்க்கும் எமது வணக்கம்.
இன்று எமது கணித நூல் வரிசை போன்று பூமிசாஸ்திர நூல்களும் இரண்டாம் வகுப்பு முதல் ஜீ.சீ. Fஈ. வகுப்பு ஈறாக வெளிவந்துள்ளன. அண்மையில் வெளிவந் துள்ள ''உலக பூமிசாஸ்திர விளக்கம்” என்னும் நூல் யாவரும் வியக்கும் ஓர் உயரிய பாடப்புத்தகமாய்ப் பெரு மதிப்புடன் விளங்குகல்கண்டு பேருவகையடைகின்றோம். அன்பர்களின் மனப்பூர்வமான பாராட்டுதல்களுக்கு எமது நன்றி.
WRESTLING
இங்ஙனம்
''கலா பவனம்' மேலைப்புலோலி பருத்தித்துறை, 1--!--56
5. வே சிவ க்கொடு 14
13 23
BUICK
> SASAKIA CHARGNDA C
5 JAYA:

Page 4
வித்தியா பகுதியாரின் பாடத்திட்டம்.
வித்தியாதரிசி K. கந்தையா அவர்கள் (வித்தியா சமாசாரப் பத்திகையில் வெளியிட்ட விரிவான பாடத்திட்டம்)
ஐந்தாந்தரம் A. உணவுக்கும் உடைக்குமான பொருட்களை உண்டாக்குவோர்
(1) உலகத்தின் புல்நிலங்களும், அங்கு வசிப் போரின் தொழிலும். உலக வெளியுருவப் படத்தில் புல் நிலங்களைக் குறித் தல். இவ்விடங்களிலிருந்து எமக்கு வருகின்ற பொருட்களை அட் டவணைப் ப டு த் த ல். (2) கனிவர்க்கங்களுண்டுபண்ணுவோர் பழக்கடைக்குச் சென்று அங்கு காணப்படும் பழங்கள் எவ்வெத் தேசங்களிலிருந்து வருகின்றன வென ஆராய்தல். (3) பட்டு, பருத்தி, கம்பளி என்பன உண்டாக்குவோர். இவை உண்டாக்கு கின்ற தேசங்களைப் படத்திற் குறித்தல். (4) கோதுமை, நெல், என்பவற்றை விளைவிப்போர். இவைவிளையுமிடங்களைப் படத்திற் குறி த்தல். பிற இடங்களிலுருந்து வருகின்ற பொருட்களில் ஒட் டப்பட்டிருக்கும் விளம்பரச் சீட்டுகளைச் சேகரித்தல்.
B தேச இயற்கை, சீதோஷ்ண ஸ்திதி, மழை வீழ்ச்சி, தாவரச்செறிவு
(1) உலகத்தின் தரைத்தோற்றத்தைப் படத்திற் குறித்தல். (2) மலை நாடு, சமவெளி, பீடபூமி என்பனவற்றின் நிலையத்தை அறிதல். (3) சமரேகைக்கு வடக்கேயும் தெற்கேயும் உஷ்ணம் குறைந்துகொண்டு போவதை அறிதல். (4) நிலத்தினுயரத்திற் கும், கடலின் அண்மைக்குமேற்ப உஷ்ணம் குறைந்துபோவதை அறிதல். (5) மழைவீழ்ச்சிப் படத்தை வரைதல். (6) தாவரச் செறிவைக் காட்டும் படத்தை வரைதல்.
C. நிலக்கரி, இரும்பு என்பன எடுக்கப்படுமிடங்கள்.
(1) நிலக்கரிச் சுரங்கங்கள், இரும்புச் சுரங்கங்கள் காணப் படும் இடங்களைப் படத்திற் குறிக்தல். இரும்புத் தொழிற்படு. மிடங்கள் எவையென அறிந்து படத்திற் குறித்தல்.
D. குடிசனம் (1) உலகப் படத்திற் குடிசன நெருக்கத்தைக் குறித்தல். (2) பல்வேறு இடங்களிலுள்ள சாதியார், அவர்களின் நிறம், மார்க்கம், பாஷை முதலியவற்றை அறிதல், (3) குடிசன ஏற்றத் தாழ்ச்சிக்கு நியாயம் அறிதல்.

E. போக்கு வரவுப் பாதைகள் . (1) மார்க்கோபோலோ, கொ ல ம் ப ஸ், வாஸ்கோடகாமா, மகெலன், பாஹியன் செய்த பிரயாணங்களை அறி தல். அவர்கள் செய்த பாதைகளைப் படத்திற் குறித்தல். (2) பிரதான கப்பற் பாதைகளைப் படத்திற் குறித்தல். அவற்றின் தூரத்தையும் பிரயாணத்துக்குச் செல்லும் - க ர ல த்  ைத யு ம் அறிதல். (3) கொழும்பிலிருந்து சென்னை, கல்கத்தா, டெல்கி, பம்பாய் முத லிய இடங்களுக்குச் செல்லுகின்ற புகையிரதப் பாதைகளைப்படத் திற்குறித்தல். (4) திறான்சைபீரியன்புகையிரதப் பாதை,கனடியன் பசிபிக் புகையிர தப்பாதை என்பவற்றிற்செல்லும் பிரயாணத்தை விபரித்தல். (5) கேப்ரவுணிலிருந்து லண்டனுக்குச் செல்லும் ஆகாயவிமானப் பாதையைப் படத்திற் குறி த்தல்,
சுருக்கமான பாடத் திட்டம் (வித்தியாகர்த்தரின் சுற்று நிருபத்திற் தரப்பட்டது) (1) உணவுக்கும் உடைக்குமான பொருள் களைப் ப யி ரி டு வோர், வளர்ப்போர், செய்வோர், உ-ம்: கோதுமை, விளைவிப்! போர், கனிவர்க்கங்களை உண்டாக்குவோர், பரு த் தி விளைவிப் போர், ஆடு மாடு மேய்ப்போர், பட்டு நூல் நூற்போர் என்போ ரைப்பற்றிய கதைகள், (2) நிலக்கரி வெட்டியெடுப்போர், இரும்பு, உருக்குவோர், மண்ணெண்ணெய் எடுப்போர் ஆதியவர்களின் தொழில்கள், (3) தேச இயற்கையமைவு, சுவாத்தியம், பயிர் செடி கொடிகள்என்பவற்றால் மேற்குறிக்கப்பட்டவர்களின் சீவியத்தி லேற்படும்பயன்கள். (4)மார்க்கோபோலோ, கொலம்பஸ், மகெலன் ஆதிய தேச ஆராய்ச்சியாளரின் சரிதைகள். (5) சனங்கள் எங்கு -கூடுதலாகவும், குறைவாகவும் வசிக்கின்றனரென்பது.
--4
- கடந்த இரண்டு வருடங்களாக உயர்வகுப்புகளில் திரு. வே. சிவக் கொழுந்து அவர்களின் பூமிசாஸ்திர நூல்களை உபயோகித்து வருகிறோம். இந் நூல்களிலும் விசேடமானவை காணுதலரிதென மற்றும் ஆசிரியர்கள் அபிப் பிராயப் படுகின்றனர்,
-S. சுப்பிரமணியம் B. A. அதிபர், சுளிபுரம் அரசினர் விக்ரோறியா கல்லூரி.

Page 5
பொருளடக்கம்.
பக்கம்
0 0 3 -
1. நாம் வசிக்கும் பூவுலகம் 2. புல் நிலங்களும் அங்கு வசிப்போரும் 3. கோதுமை, நெல் என்பன விளைவிப்போர், 4. கனிதரு மரங்கள் உண்டாக்குவோர் 5. பட்டு, பருத்தி, கம்பளி உண்டாக்குவோர்
13 6. இரும்பு, நிலக்கரி என்பன வெட்டியெடுப்போர் 18 7. மண்ணெண்ணெய், பெற்றோல் அனுப்புவோர்" 21 8. உலகத்தின் தரைத்தோற்றம் 9. உலக மழைவீழ்ச்சி 10. உலகத்தின் குடிசன ச்செறிவு ... 11. பல்வேறு ஜாதியினரும் அவர்கள் து
| வாழ்க்கை முறையும் 12. தற்காலப் பிரயாண வசதிகள் 13. உலகத்தின் பிரதான கப்பற் பாதைகள் 14. உலகத்தின் பிரதான இருப்புப்பாதைகள்... 15. லண்டன் - கேப்ரவுண் ஆகாயவிமானப்பாதை
தேச ஆராய்ச்சியாளர்
44 17. இலங்கைப் பூமிசாஸ்திரக் குறிப்புகள்
5). 18. உலக பூமிசாஸ்திரக் குறிப்புகள் 19. இலங்கை வியாபாரம்
16.
ரம்
14 கம் 21


Page 6
......
அ
ஓர் இலங்கைக் காட்சி.
வரைக ளோங்கி வளரும் நாடு வழிந்து நதிகள் பாயும் நாடு கரையிற் பச்சை மரங்கள் கூடிக் கனகப் பூக்கள் சொரியும் நாடு.
-யாழ்ப்பாணன்

1. நாம் வசிக்கும் பூவுலகம்
4 சமு த தி ர
அலெர்
''ம்
நாம் வசிக்கும் இந்தப் பூவுலகமான து பந்துபோல் உருண்டை வடிவின தாய்ப் பரந்து வி சா லி த் திருக் கின்றது. இதன து மேற்பரப்பு மூன்றுபங்கு நீர்ப்பகுதி யாகவும், ஒருபங்கு நிலப்பகுதியாகவும் அமைந்திருக் கிறது. நிலப்பரப்பை ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா என ஐந்து கண்டங்க ளாகவும், நீர்ப்பகுதியை அத்திலாந்திக் ச மு த் தி ரம், பசிபிக் சமுத்திரம், இந்து சமுத்திரம், வட சமுத்திரம், தென் சமுத்திரம் என ஐந்து பெருஞ் சமுத்திரங்களா கவும் வகுத்துள்ளனர்
பூமியினது விட்டம் 8000 மைலும், சுற்றளவு 25000 மைலும் ஆகும். ஒருமைல் நீளமும் ஒருமைல் அகலமும் | உள்ள நிலப்பரப்பு ஒரு சதுரமைல் என அழைக்கப்படும். ...இந்த அளவு முறைப்படி நாம் வசிக்கும் இந்தப் பூவுலக மானது 19 கோடியே 70 லட்சம் (197000000) சதுரமைல் வரை: விஸ்தீரணமுள து. மாங்காய் வடிவுடைய எமது இலங்கைத் தீவு சுற்றளவில் 760 மைலும், விஸ்தீரணம் 25000 சதுரமைலும் பொருந்தியது. ஆனால் பரந்த (உலகத்துடன் ஒப்பிடப்படும்போது இலங்கை அதன்
ஓர் மிகச் சிறிய பகுதியாகும்.

Page 7
ஐந்தாந்தரப் பூமிசாஸ்திரம்.
ஓர் பெரிய வீட்டின து மத்தியில் ஓர் சிறிய பந்து அந்தரத்தில் நிற்பதுபோன்று எ ல் லை யற் ற பரந்த ஆகாயவெளியில் இப்பூவுலகமானது அந்தரத்தில் நின்று சுழன்று கொண் டிருக்கின்றது அது தன் அ ச் சி ல் 24 மணித்தியாலத்திற் கொருமுறை சுழலுவதோடு, 35 நாட்களுக்கொருமுறை சூரியனையும் வலம் வ ரு கி ற து.
ஒரு விளக்குக்கெதிரே நாம் ஒரு பந்தைப் பிடிக்கும் போது விளக்கை நோக் கி ய * அதன் அரைப்பாகம் வெளிச்சமாகவும், மறுபாகம் இருட்டாகவும் இருக்கக காண்போம். இவ்வாறே பூமி தன் அச்சில் சுழன்று கொண்டிருக்குங் காரணமாகப் பகல் இரவு என் பன உண்டாகின்றன, சூரியனை நோக்கிய பாகம் பகலாகவும்
அதற்கெதிர்ப்பாகம் இரவாகவும் இருக்கும்.
பூமி சூரியனைச் சுற்றி வலம்வருவது காரண மாக மாரி, 1 கோடை முகலிய பருவகாலங்களும் -- உண்டா கின் றன. பிள்ளைகளே! நீங்கள் உயர்தர வகுப்புகளில் வாசிக்குங் காலத்திற் பருவ காலங்களைப்பற்றிய விரிந்த அறிவைப் பெற்றுக்கொள்வீர்கள்.
வினாக்கள்.
(1) பூமியின் உருவமென்ன? (2) ஐந்து கண்டங்களெவை? சமுத்திரங்களெவை? (3) பூமியின் து விட்டம், சுற்றள வு, விஸ்தீரணம் என்பன எவ்வளவு? (4) பகல், இரவு, பருவகாலங்கள் ஆதியான எவ்வாறு உண்டாகின்றன?

2. புல்நிலங்கள் அங்கு வசிப்போர்
--a6-+-- தகரத்தில் அல்லது போத்தலிலடைக்கப்பட்டு நம் நாடுகளுக்கு வரும் வெண் ணெய், பாற் கட்டி, மா (Malted Milk) ஆதியவற்றை நாம் பார்த்தும் சுவைத்தும் இருக் கி  ேற ம். உலகின் பரந்த புல்வெளிகளில் வசிக்கும் மந்தைகளிலிருந்து இவை பெ ற ப் ப டு கின் ற ன. நமது நாட்டிலுள்ள புல்நிலங்களில் ஆடுமாடு கள் ஒட்டி உலர்ந் தன வாகவும், சிறு சிறு மந்தைகளாகவுங் காணப்படு கின்றன. அவற்றிலிருந்து இங்குள்ளோர் பெறும் பய னும் சீவனோபாயத்திற்குப் போகாத அற்ப அளவின தேயாகும். ஆனால் உலகிலுள்ள பரந்த புல்வெளிகளோ ஆயிரக்கணக்கான சதுர மைல் விஸ்திரணமுடையன. அங்கு வாழும் மங்கைகளும் கொழுத்தனவும் பெருந் தொகையினவுமாகும். அவை கொடுக்கும் பயனும் அத் ககைத்தே.
கே பிசவநீல்
வெல்ட்
-ஆர் ஸ்
ஓ பம்பான்
$ ய உ லயம் புரவரி
உச்ச வ ஜயச புல் சங்கம்
(உலகப் புல் வெளிகள்)
' கர்க்கடகரேகைக்கும் மகரரேகைக்கும் இடைப்பட்ட பகுதி உஷ்ணவலயம் எனப்படும். இப்பிரதேசத்தில் அதிக மழை வீ ழ்ச்சி பொருந்திய இடங்களில் அ டர் த் தி ய ா ன காடுகள் இருக்கின்றன. கோடைமழை மாத்திரமே பெய்யும் குறைந்த மழைவீழ்ச்சிப் பிரதேசங்களில் பற்றைக் காடுகளும், புல்வெளிகளும் காணப்படுகின் றன.

Page 8
ஐந்தாந்தரப் பூமிசாஸ்திரம்
மழைபெய்ய ஆரம்பித்ததும் உஷ்ணவலயப் புல்வெளி களில் புல் முளைத்துச் செழித்து வளர்ந்து நீர்ச்செறிவு அற்றுப்போகப் புல்லும் உலர்ந்துவிடும். மத்திய ஆபிரிக் காவில் சூடான் பிரதேசத்திலுள்ள இப்புல்வெளி 'சவனஸ்'' எனவும், தென் அமெரிக்காவில் "'பம்பாஸ்'' என வும், அவுஸ் திரேலியாவில் "டவுன்ஸ்” எனவும் அழைக்கப்படும். கர்க்கட கரேகைக்கு வடக்கேயும் மகரரேகைக்குத் தெற்கேயு முள்ள மத்திமவலயத்திலும் ஆயிரக்கணக்கான சதுர் மைல் விஸ்தீரணம் பொருந்திய பரந்த புல்வெளிகள் காணப்படுகின் றன. வட அமெரிக்காவிலுள்ள 'பிறெ யறீஸ்'', கென் அமெரிக்காவிலுள்ள ''பம்பாஸ்'' புல்வெளி யின் ஓர் பகுதி, தென்னாபிரிக்காவிலுள்ள ''வ்ெ ல் ட்", றஷ்யாவிலும் மத்திய ஆசியாவிலுமுள்ள '' ஸ்ரெப்பிஸ் '' என் பன மத்திமவலயப் புல்வெளிகளாகும் . அ வு ஸ் தி ரேலிய புல்வெளியின் தென் பகுதியும் இந்தப் பகுப்பின தாகும்.
2 / 17,
(பிறெய றீஸில் மந்தைக் கூட்டம்)
பரந்த இப் புல்வெளிகளில் வசிப்போரின் சீவியம் மிகவுங் கடினமான து. இவர்கள் நிலையான பாதுகாப் புள்ள வீடில்லாதவர்களாய்த் தங்கள் மந்தைகளை மேயக் கத்தக்க புதுப்புது நிலங்களைத் தேடி அலைபவர்களாவர். செழித்த புல் நிலங்களில் மாடுகளும் ஏ னை ய வ ற் றி ல் வெள்ளாடு, செம்மறியாடு, பன்றி என்பனவும் வளர்க்கப் படுகின்றன. மேற்குறித்த பரந்த புல்வெளிகளிலுள்ள இடையர் நமது நாட்டு இடையர் போன்று கால் நடை

புல் நிலங்களும் அங்கு வசிப்போரும்
யில் தமது பெரும் மந்தைகளை மேய்ப்பது சாத்திய மான காரியமல்ல. ஆகவே அவர்கள் குதிரைகளிற் சவாரி செய்து தமது மந்கைகளை மேய்ப்பர். போதிய மழைவீழ்ச்சியுடைய சில புல் வெளிகள் திருத்தப்பட்டுக் கோதுமை, ஓற்ஸ், சோளம் என்பன ஆங்காங்கு பயிரிடப் படுகின் றன.
மாடு என்பவறடனே ற்றங் காரணமாகவும் இப்ப
மேலைத் தேசத்தவராகிய வெள்ளையரின் பிரதான உணவு கோதுமை ரொட்டியும், வெண்ணெய்க் கட்டியும், ஆடு மாடு என்பவற்றின் இறைச்சியுமாகும். தற்போது எந்திர சாதன முன்னேற்றம் காரணமாகவும், இலகு வான போக்குவரவுச் சாகன ங் காரணமாகவும் இப்பிர தேசங்களிலிருந்து பழுது றப் பாது காப்புப் பெட்டிகளில் அடைக்கப்பட்ட இறைச்சி, வெண்ணெய், கட்டிப்பால் என்பவற்றையும், சப்பாத்து போல்வன செய்வதற்கு த வும் கோலையும் மேலைத்தேசத்து நகர வாசிகள் இலகுவில் பெற இயலுகின்றது. புல் நிலங்களில் வ சி ப்  ேப ார் மந்தை மேய்த்கல், தோல்பகனிடு கல், கம்பளி மயிர் கத்தரித்தல் ஆதிய பல கொழில்களையும் புரிவர். ந ம து நாட்டு க்கு வரும் வெண்ணெய், ககரப்பால் போல்வன அவுஸ்திரேலியா, டென் மார்க் என் னுமிடங்களிலிருந்து பெரிதுங் கிடைக்கின்றன.
வினாக்கள். (1) உஷ் ண வலயம் என்பதென்ன? (2) மத்திம வலயம் எங் குளது? (3) உலகப்படத்தில் இவ் வலயங்களிலுள்ள புல்வெளிகளை வெவ்வேறு வர்ணங்கொண்டு தீட்டுக. (4) வெவ் வேறு கண்டங்களி லும் மேற்குறித்த புல் வெளிகள் எவ்வெப் பெயர் பெறுகின்றன? (5) புல்வெளிகள் திருத்தப்பட்டு விளை விக்கப்படுந் தானியங்களெவை? (6) ஆங்கு வளர்க்கப்படும். மிருகங்களெவை? (7) மந்தை வளர்ப்போரின் சீவியத்தைப்பற்றிச் சில வாக்கியங்கள் எழுதுக. (8) புல் நிலங்களிள் வசிப்பேரர் புரியுந் தொழில் களெவை? (9) வெண்ணெய் தகரப்பால் என்பவற்றை நாம் எங்கிருந்து பெறுகிறோம் ?

Page 9
3. கோதுமை நெல் என்பன
விளைவிப்போர்.
- 3 அ&ை
நமது நாட்டினர்க்குப் பிரதான உணவாயிருப்பது நெல்லரிசிச் சோறாகும். வேறும் பலவகையான உணவு களை நாம் நெல்லரிசியிலிருந்து தயாரித்துக் கொள்ளு கிறோம் நெல்லரிசியைத் தமது பிரதான உணவாக்கிக் கொள்ளும் வேறும் பல தேசத்தினருமுளர். உகாரண மாக இந்தியரும். சீன ரும், யப்பானியரும், மலாயாகேய்த் தவரும் இப்பகுப்பினரே இ ங்கு கூறப்பட்டோர் கீழைத் .  ேகயத்தினராவர். எமக்கு நெல்லரிசி 1பிரதான உண வுப் பொருளாக உ கவுதல் போன்று மேல் நாட்டின ராகிய ஐரோப்பியர் அமெரிக்கர் ஆதியோருக்குக் கோதுமை முக்கிய உணவுப்பொருளாக அமைந்திருக்கிறது. நமது. நாட்டினரும் கோதுமையைப் பாண், ரொட்டி முத லி யன செய்வதற்கும், பலகார வகை தயாரிப்பதற்கும் சிறு 5 உபயோகிக்கின் றனர்.
- நல்ல அன.லும் ஈரலிப்பும் பொருந்திய காழ்ந்த பிர தேசங்களில் நெற்பயிர் செய்கைபெறு கின்றது. நெல் விளைவிக்கப் பெறுமிடங்களை நாம் இரு பிரிவுகளாகப் பகுக்கலாம். ஒன்று மழையை நம்பிப் பயிர்ச்செய்கை நடைபெறுமிடங்கள்; மற்றையது நீர்ப்பாய்ச்சனமூலம் நெல் விளைவிக்கப்பெறுமிடங்கள் கங்கை நதிச்சூழலும், தக்கண ஆற் றிடை மேடு பள்ளத்தாக்கு ஆதியனவும், பர்மா தேசத்துத் தாழ்ந்த பிரதேசங்களும் வெட்டுவாய்க் கால்கள் மூலம் நீர்பாச்சப்பெற்றுப் பெருந்தொகை நெல் விளைவிக்கப்படுமிடங்களாகும் மேலும் மலாயா, இலங்கை, /கிழக்கா பிரிக்கா. கெனியா, பிரித்தானிய கயானா, வட மேல் அவுஸ்திரேலியா ஆதியாமிடங்களிலும் சிடி அ ன வுக்கு நெல் விளைவிக்கப்பெறும். இந்தியா, சீனா, '*. பான், யாவா, சீயம், இந்துசீன ஆதியவற்றிலும் நெ, >> விருத்தியாகின் றது.
நெல் நன்கு செழித்து வளர்வதற்கு முளைக்கும் பரு வத்தில் நிலத்தில் நல்ல ஈரலிப்பும், வளருங்காலத்தில் பயிரின் அடிப்பாகத்தை மறைத்து நிற்கக்கூடிய ஜல த் தேக்கமும், கதிர் முற்றிப் பழுக்குங்காலத்துப் போதிய

கோதுமை, நெல் என்பன விளைவுப்போர்
அனலுந்தேவை ஆகவே பதிவான நீர்த்தேக்கமுள்ள உஷ்ண வலயப் பிரதேசங்களில் அதிகமாக நெல் விளை விக்கப்படுகின்றது.
காடுகள் பற்றைகள் எ ன் ப வ ற்  ைற அழித்து வயலாக்கல், வரம்புகட்டல், எருது களால் இழுக்கப்படும் ஏர்கொண்டு நிலத்தை உழுதல், பண்படுத்தல், நெல் விகைத்தல், வேண்டிய இடங்களில் நாற்று நடுதல், பயிர் வளருங்காலத்து அதனுடன் கூடி வளரும் களை பிடுங்கல், வேண்டிய இடத்திற்கு நீர்ப்பாய்ச்சல், கதிர் முற் றியவுடன் காரறுத்து உலர்த்தி மாடுகள் கொண்டு உழக்கி வைக்கோலையுந் தானியத்தையும் வேறாக்கல், தனது தேவைக்குப் போக எஞ்கிய தானியத்தைச் சாக்கிற் பொதிந்து பிற நாடுகளுக்கனுப்பல் என்பன நெல் விளைவிப்போன் புரியும் பலவகைத் தொழிக ளாகும்.
கோதுமை நன்கு வளர்வதற்குக் களிப்பாங்கான சிறிது கடினமான கரையும், மத்திமமான சூரியவெளிச் சமும், இளம் பயிராயிருக்குங் காலத்துச் சீதள சுவாத்தி
தயா
கர்' ஜகதற
எ க இ ம் இ-நெ ல்
(கோதுமை, நெல் என்பன விளை யுமிடங்கள் )
'': மும், 'கதிர்முற்றிப் பழுக்குங்காலத்து அனலோடு கட்டிய கோடையும் வேண்டும். ஆகவே சம 'சீதோஷ்
ணம் பொருந்திய மத்திம வலயத்திலேயே கோதுமை நன்கு விருத்தியாகின்றது அதிக உஷ்ணம், மிதமிஞ் சிய மழை, கற்தரை, கதிர் பழுக்குங்காலத்துப் பவன த் தில் ஈரலிப்பு என்பன கோதுமைவிளைவைக் கெடுப்பன வாகும், கனடா, ரஷ்யா, இந்தியா, அவுஸ்திரேலியா,

Page 10
ஐந்தாந்தரப் பூமிசாஸ்திரம்
ஆர்ஜெந்ரைனா என்னுமிடங்களில் கோதுமை அதிகம் விளைவிக்கப்படுகிறது
நெல்லைப்போன்று கோதுமையிலும் பல இனமுண்டு. மேலும் விளைவிக்கப்படும் போகமும் "அவ்வத்தேசச் சுவாத்திய நிலைக்கேற்ப மாறுபடும். உலகத்தில் விசே டித்த கோதுமை வயல்கள் வட அமெரிக்காவின் பெரும் பிரிவாகிய கனடாவிலிருக்கின் றன. அவை! ஆயிரக் கணக்கான சதுரமையில் விஸ்தீரண முடையன. அங்கு சென்று வாழ்க்கை நடாத்தும் கோதுமை விளைவிப் பவன் சுகசீவனஞ் செய்ய முடியாது பல கஷ்டங்களையும் அவன் பொறுமையோடு சகிக்க வேண்டியவனாவன்: கோதுமை வயல்களில் கடை வீதிகள் இவ்லாமை கார ணமாக அவன் தனது தேவைக்குரிய பொருட் க ளை இலகுவிற் பெறமுடியாது. கோதுமை வயலின் மத்தியில்
கோ பொனஞ் சொத்தும்"
( கோதுமை வயல் உழுதல் ) அமைக்கப்பட்ட மரக்குடிசையில் அவனுடன் கூடிவாக, ம் மனைவியே சமைத்தல், சுத்தஞ் செய்தல், பிள்ளைகளைப் பராபரித்தல், நோய்க்கு வைத்தியஞ் செய்தல், உடை தயாரித்தல், வேண்டிய காலத்து வயலிலும் உதவிபுரிதல் ஆதிய யாவையுஞ் செய்யவேண்டியவளாயிருக்கிறாள்..
மத்திம வலயத்திலுள்ள  ேக ா து மை வயல்களில் இலையுதிர் (Autumn) காலத்தில் உழவுத் தொழில் நடை

கோதுமை, நெல் என்பன விளைவிப்போர்.
பெறும் குதிரைகளால் இழுக்கப்படும் கலப்பை அல்லது
இயந்திரக் கலப்பை கொண்டு கோதுமை வயல் உழப் படும். பின்னர் மாரிகால இறுதியில் விதைகள் விதைக் கப்படுகின் றன. வசந்தகால ஆரபத்தில் பெய்யும் மழை விதைகளை முளைக்கச் செய்கின்றது. இவ்வாறு முளைத்த பயிர் வளர்ந்து கதிர் ஈன, அக்கதிர்கள் கோடைகால உஷ்ண ங் காரணமாக முற்றிப்பழுக்கின் றன. அக்காலத் திற் கோதுமை வயல் ஓர் பொன் நிறக் கடல் போன்று கண்ணுக்கெட்டுந் தூரம் வரையும் பரந்து தோற்றக் கதிர் களும் காற்றினாலலைப்புண்டு காணப்படுவது ஓர் அழகான காட்சியாகும். தற்போது இயந்திர சா தன ங் கொண்டே கோதுமை வெட்டப்பட்டுத் தானியம் உதிர்த்தப்படுகின் றது. பின்னர் தானியம் கிட்டிய தொழிற்சாலைக்கும் புகையிரதஸ் கான த்திற்கும் விற்பனைக்கு அனுப்பப்படும். தொழிற்சாலையில் தானியம் மாவாக அல்லது குருணலாக அரைக்கப்படுகின்றது எமக்கு வரும் கோதுமை, மா, றவை என்பவை இந்தியா அல்லது அவுஸ்திரேலியாவி லிருந்து தருவிக்கப்படுகின் றன.
வினாக்கள்
(1) இந்தியர், சீனர், யப்பானியர் ஆதியோரது பிரதான உண வுப்பொருள் எது? மேல் நாட்டி னரது பிரதான உணவுப்பொருள் எது? (2) நெல் விளைவதற்கு வேண்டிய சாதனங்கள் எவை? 3) உமது நாட்டு நெல் விளைவிப்போனைப் பற்றிய பத்துத் தொடர்பான வாக்கியங்கள் எழுதுக. (4) நெல் விளை விப்போன் புரியும் - பிரதான தொழில்கள் எவை? (5) கோதுமை விளைவதற்குரிய சாதனங்கள் எவை? கோதுமை விளைவைக் கெடுப்பவை எவை? (6) கோதுமை அதிகம் விளைவிக்கப் படும் தேசங்கள் எவை? (7) கோதுமை விளைவிப்பவனைப்பற்றிய ஐந்து தொடர்பான வாக்கியங்கள் எழுதுக. (8) கோதுமை விளைவிக்கப்படும் முறையைப் பற்றிச் சிறிது கூறுக. (9) கோதுமை மா, கோதுமைக் குருணல் என்பவற்றை நாம் எங்கிருந்து பெறுகிறோம்?, 10 உலகப்படத்தில் கோதுமை நெல் என் பன விளை விக்கப்படும் பிரதேசங்களை வெவ்வேறு வர்ணங்கொண்டு தீட்டுக.

Page 11
4. கனிதருமரங்கள் உண்டாக்குவோர்
இப் பூமியின் கண்ணே தேசங்களின் சுவாத்தியத் திற்கேற்பப் பல வகையான தாவரங்கள் வளர்கின்றன. இவற்றுள் கனிதருமரங்களும் ஓரின மாகும் உஷ்ண 1ெல யத்திலும், மத்திய வலயத்திலும் அவ்வத்தேசங்களின் சுவாத்திய நிலைக்கேற்பப் பலவகையான பழமரங் கள் விருத்தியாகின்றன. ஆங்கு வசிக்கும் மக்கள் அவற்றை விரும்பி உண்ணுகின்றனர். எமது நாட்டில் மா, பலா, வாழை, கோடை, அன்னாசி முதலிய கனி வர்க்கங்கள் போதிய அளவு கிடைக்கின்றன. திராட்சை, அப்பிள், மஞ்சள் கோடை ஆதியன நன்கு பயிராவதற்கு எமது நாட்டுச் சுவாத்தியம் ஏற்றதல்ல ஆகவே இவற்றை நாம் பிற நாடுகளிலிருந்து வருவித் துக் கொள்கிறோம்.
- கலீபா மச்சி
நெதர் அபிக்கா.
தென
- அவுஸ் திரேலியா?
(மத்தித்தரைக் கடற் சுவாத்திய நாடுகள்)
மத்தியவலயத்தில் கோடை அனலும் மாரி மழையும் பொருந்திய “மத்தித்தரைக்கடற் சுவாத்திய நாடுகள் ?
அப்பிள், திராட்சை, மஞ்சள் தோடை, அத்தி, லெமன். (ஓர்வகை எலுமிச்சை) முதலிய ப ழ ம ர ங் க ள் நன் (¥) செழித்து வளருவதற்கு ஏற்றன. மத்தித்கரைக் கடலை அடுத்துள்ள நாடுகளேயன்றி, இதே சு வாத்தியம் பொருந்திய கலிபோர்னியா, சிசிலி, கென்னாபிரிகாவைச் சேர்ந்த கேப்கொலனி, தென் கீழ் அவுஸ்திரேலியா, தஸ் மானியா என்பனவும் ''மத்தித்தரைக்கடல் சு வ ர த்திய நாடுகள்'' என்றே அழைக்கப்படுகின்றன.

- கனிதரு மர்ங்கள் உண்டாக்குவோர்.
11
எமது இலங்கைத்தீவில் இந் நாட்டிற்கேற்ற சுவாத்தி யத்தில் வெள ரத்தக்க கனித் தோட்டங்களை உண்டாக்கி, அவற்றின் பயனால் தமது ஜீவனத்தை நடத்துவோர் மிகச் சிலரேயாவர். ஆனால் மத்தித்தரைக் கடற் சுவாத் திய நாடுகளில் வசிப்போரது பிரதான தொழில் பழத் தோட்டச் செய்கையாகும். ஒவ்வோர் தோட்டக்காரனும் பல மைல் தூரமுள்ள கனித்தோட்டங்களை உடையவனா கக் காணப்படுவன். கொத்துக்கொத்கான கொடிமுந் திரிப் பழங்களும், கொம்பர் நிறைய அப்பிட் பழங்களும், அழகிய மஞ்சள் கோடம் பழங்களும் அவனது கோட் டங்களில் நிறைந்திருப்பது கண் க வ ர் காட்சியாகும்.
>* * *
(கொடி முந்திரித் தோட்டம்)
அப்பிள் மரம் வளருவதற்கு மத்திய சுவாத்தியமும் (அதாவது உஷ்ணமும் குளிருஞ் சமமான சுவாத்தியம்), திராட்சை வளருவதற்கு மத்தித்கரைக்கடற் சுவாத்தி யமும் (அதாவது அனலான மாரியும் உ ஷ் ண ம ா ன கோடையும்,) , பேரீந்து வ ள ரு வ த ற் கு மணற் றரையும் அதி கஷ்த்னசுவாத்தியமும் வேண்டியதாகும்.

Page 12
12
ஐந்தாந்தரப் பூமிசாஸ்திரம்.
பழத்தோட்டக்காரர் அதோடு தொடர்பான பலவித தொழில்களையும் புரிவர். நிலஞ்சீர்ப்படுத்தல், கன்று நடுகல், நீர்ப்பாய்ச்சல், கிளை கத்தரித்தல், ம ர ஞ் செடி களுக்கு நோயாலும் ஜெந்துக்களாலும் அழிவுவராகபடி பாதுகாத்தல், பழஞ்சேகரித்தல், உலர்த்தி வற்றலாக்கல், பழச் சாறு பிழிந்து உவைன்முதலிய குடிவகை வடித்தல், ஜாம் என் னும் பழச்சத்துத் தயாரித்தல், பிற நாடுகளுக் குப் பழங்களைப்பெட்டிகளில் அடைத்து அனுப்பல் என் பன அவர்கள் புரியும் பி ர த ா ன தொழில்களாகும். குடிவகை வடித்தல், ஜாம் தயாரித்தல் ஆதியவற்றிற் குதவும் கொழிற்சாலைகளும் ஆங்காங்கு நிறுவப்பட்டி ருக்கும். எமது ந ா ட் டி ல் மாட்டுவண்டி பொருட்களை அனுப்ப உதவுவதுபோன்று மேற்குறித்த கனித்கோட் டங்களில் ப ழ ங் க ளை யு ம் பழப்பிரயோசன ங்களையும் தொழிற்சாலைக்கும் கிட்டிய புகையிரதஸ் தானம் அல்லது துறைமுகத்திற்கும் னுப்பக்குதிரைவண் டி உதவுகின்றது.
அனுப்பு உது நாட்டி ல் மதகொங்கு நிறுவ
ஸ்பெயின், கலிபோர்ணியா, அவுஸ்திரேலியா என் னுமிடங்களிலிருந்து வரும் கப்பல்கள் எமக்கு வேண்டிய திராட்சைப் பழங்களைக் கொண்டுவருகின் றன. இத்கா லியிலும், பிரான்சிலும் வ ள ரு ந் திராட்சையிலிருந்து திராட்சை இரசம் வடிக்கப்படுகின்றது. எமது கடைக ளில் விற்பனையாகும் பேரீந் து பார்சியாவில் உள்ள 'பசிறா என்னுமிடத்திலிருந்து வருகிறது. சோடாப்பா னம் தயாரிப்பதற்கு உதவும் பழச்சத்துக்களையும் நம் ம்வர் பிற நாடுகளிலிருந்தே தருவித்துக் கொள் ளுகின்
றனர்.
வினாக்கள்.
(4) இட ங்கையிலுள்ள பழமரங்கள் உதவும் பத்துவகைக் கனிகள் கூறுக. (2) பிற நாடுகளிலிருந்து தருவிக்கப்படும் பழங்கள் எவை? (3) மத்தித் தரைக்கடற் சுவாத்தியமென்பது என்ன? (4) மத்தித் தரைக்கடற் சுவாத்திய நாடுகளைப் படத்தில் குறிப்பிடுக, (5) அப்பிள், திராட்சை, பேரீ ந்து என் பன முறையே விருத்தியாகுஞ் சுவாத்திய நிலையம் எவ்வாறு மாறுபட்டுள்ளது? (6) பழச்சத்து, பழச்சாறு என் பவற்றிலிருந்து என்ன பொருள் கள் தயாரிக்கப்படுகின்றன? (7) பழத்தோட்டக்காரன் புரியுந் தொழில்கள் எவை? (8) திராட்சை, அப்பிள் முதலிய கனிகள் எமக்கு எங்கிருந்து வருகின் றன ? )

5. பட்டு, பருத்தி, கம்பளி என்பன
உண்டாக்குவோர்.
உலகத்து மக்கள் அனைவரினதும் முக்கிய தேவை உணவு, உடை என்பனவாகும். நம் நாட்டினர் அணியும் உடைகள் பெரும்பான் மை பருத்தி நூலினாலும், சிறு பான்மை பட்டு நூலினாலும், மாரிகாலத்தில் குளிர் பீடிக் காவண்ணம் போர்த்துக்கொள் ளும் கம்பளிகள் செம்ம றி ஆட்டு உரோமத்தினாலுஞ் செய்யப்பட்டவை, எ ம து நாட்டில் பட்டு, பருத்தி, கம்பளி என்பன கிடையாத காரணமாக ஏராளமான பருத்திப்புடைவைகளும் பட்டு நூல் உடைக்ளும், கம்பளி நூற் பொருட்களும் பிறநாடு
அது 2 ' .
--...Nt 3
':AN |
சபki/gun!''
11 TNT$)
கம்பளி ஆ டு. களிலிருந்து கருவிக்கப்படுகின் றன. அன்னிய நாடுகளி
லிருந்து வரும் பருத்தி நூலை விலைக்கு வாங்கித் தறி! கொண்டு சேலை நெய்யும் வழக்கமும் எமது நாட்டிற் சில
இடங்களிற் காணப்படுகின் றது.
ப ரு ந் தி
பருத்திச் செடி உஷ்ண வலயப் பகுதிகளில் பயிரா கும்., இது வளருவதற்குப் போதிய அன் லும் மட்டான ஈரலிப்புக்  ேத  ைவ. கருமண்ணிலும் உப்புச்சத்துப் பொருந்திய தரைப் பாங்கிலும் பருத்தி செழித்து வள ரும். அதிக மழைபெய்யும் பிரதேசங்கள் பருத்திக்கு ஏற்றனவல்ல அமெரிக்க ஐக்கிய மாகாணம், இந்தியா, எகிப்து, பிறேசில், யப்பான் ஆதியன் பருத்தி விளைவிக் கப்படும் தேசங்களாகும்,

Page 13
1111111)
ஐந்தாந்தரம் பூமிசாஸ்திரம்.
ப ட் டு
7ே L I
5. பி 1.
('** 6
//uI 5 ம் ப ளி
(பட்டு, பருத்தி, கம்பளி என்பன கிடைக்குமிடங்கள்.)

பட்டு, பருத்தி, கம்பளி...உண்டாக்குவோர் 15
க பருத்திக்காய் நன்கு முற்றி வெடிக்கும் பருவத்தில் தொழிலாளர் அவற்றைச் சேகரித்து உலரவைப்பர். 1பின்னர் கோது வேறாகவும், விதையுடன் சேர்ந்த பஞ்சு வேறாகவும் பிரித்தெடுப்பர். இவற்றை நெசவுத் தொழிற் சாலைக்குக் கொண்டு சென்று யந்திரங்களின் உதவியால் பருத்திக்கொட்டை வேறாகவும், பஞ்சு வேறாகவும் பிரித் கெடுப்பர். பஞ்சைப் பின்னரும் யந்திரங்களிலிட்டே நூலாக்குவர். இத்தகைய நூல்களை ஒன்று சேர் த் து நெசவு யந்திரங்களைக் கொண்டு பலவிதமான புடவை களை நெய்வர்.
பவனத்திற் போதிய ஈரலிப்புப் பொருந்திய சீதள் வலயப் பிரிவுகளிலேயே பெரிய நெசவுத் தொழிற் சாலை கள் நிறுவப்பட்டிருக்கின்றன. ஆ யி ர க் க ண க் க ா ன தொழிலாளர் ஒவ்வோர் தொழிற்சாலையிலும் ப ஞ்  ைச வேற க்கல், நூல் நூற்றல், நூ லுக்கும் புடவைகளுக்கும் சாயமேற்றல், புடவை நெய்கல் ஆதியாம் பல தொழில் களையும் யந்திரங்களின் உதவிகொண்டு செய்வர். நெசவு செய்யப்பட்ட புடவைகள் இன மினமாகப் பகுக்கப்பட் டுக் கட்டுக் கட்டுகளாகக் கப்பல் மூலம் பிற இடங்களுக்கு அனுப்பப்படும். இந்தியா, பெரிய பிரித்தானியா, ஜப் பான் ஆதிய இடங்களில் பெரிய நெசவுத்தொழிற்சாலை களு ள. இத் தேசங்களி லிருந்து நாம் அணியும் உடைகள் வருகின்றன இலங்கையிலும் வெள்ளவத்தை என் னும் இடத்தில் ஓர் நெசவுத்தொழிற்சாலை நிறுவப்பட்டிருக் கின்றது.
பட்டு
செல்வந்தர் சாதாரணமாக உடுத்துக்கொள்வதும், ஏனையோர் விஷேடதினங்களில் அணிந்து கொள்வது மான பட்டுடைகள் நெய்வதற்குதவும் பட்டு நூல் ஓர் 'வகைப் பூச்சியிலிருந்து பெறப்படுகின்றது இது நம் நாட்டிற் காணப்படும் வண்ணாத்திப் பூச்சி இனத்தைச் சேர்ந்தது முசுக்கட்டைத் தளிரையே தின்று வளர் வ தினால் பட்டுப்பூச்சி முசுக்கட்டைச் செடியுள்ள இடங்களி லேயே காணப்படுகின்றது. ஆதிநாட்களில் பட்டுப்பூச்சி வளர்ப்பும், பட்டுநெய்தலும் சீனருக்கே தெரிந்திருந்தன. ஆனால் தற்போது அதிக ஊதிபந்தரும் இத்தொழிலில் ஜப்பான், இத்தாலி, பிரான்ஸ், இந்தியா அதிய நாடு
"", இத்தாலி., ஊதிபந்தரும் "கரிந்திருந்தன.

Page 14
16
ஐந்தாந் தரப் பூமிசாஸ்திரம்.
களும் ஈடுபட்டிருக்கின் றன. இலங்கையில் யாழ்ப்பாணத் தைச் சேர்ந்த புத்தூர் என்னும் இடத்திலும், பதுளை யைச் சேர்ந்த லுணுகல என்னும் இடத்திலும், இன்று பட்டுப்பூச்சிகள் வளர்க்கப்பெற்று நூல் சேகரிக்கப்படு கின்றது.
ஒவ்வோர் பட்டுப்பூச்சியும் நூற்றுக்கணக்கான முட்டைகளை இலைகளின் மேல் இடுகின் றது. சில தின ங் களில் அம் முட்டைகள் பொரித்து அவற்றினின்றும் சிறு புழுக்கள் வெளிவரும். சீதோஷ்ணம், ப ற ல வ , வேறு ஜந்துக்கள் முதலியவற்றினின்றும் காப்பாற்றப் படுவதற்காக இப்புழுக்கள் பாதுகாப்பு அறைகளில். வளர்க்கப்படும். கத்தரித்துப்போடப்பட்ட முசுக்கட்டை இலைகளை இவை உணவாகக் கொண்டு சீக்கிரம் வளர்ச்சி யடைந்து ஐந்தாம் வாரம் வரையில் ஒன்றரை அங்குலம் வரை நீளமடைகின் றன. இக்காலத்தில் அவை தமது
-?
$.50Iham எT
ஜப்பானில் பட்டு நூல் நூற்றல் வாயினின்றும் வெளிவரும் ஓர்வகை மெல்லிய பளபளப் பான பசை நூலால் தமது உடலைச் சுற்றி ஓர் கூட்டை அமைத்துக்கொள்கின்றன. கூடு கட்டுவதற்குப் பட்டுப் புழுக்கள் உபயோகப்படுத்தும் இந்நூலே பட்டு நூலாகும். புழுக்கள் இவ்வாறு சில தினங்கள் வரை கூட்டினுள் விடப்படின், அவை பட்டுப் பூச்சிகளாக மாற்றமடைந்து கூட்டைப் பிய் த் து க் கொண் டு வெளிப்பறந்துவிடும். அப்போது பட்டு நூலான து துண்டுகளாக அ அ ந் து

பட்டு, பருத்தி, கம்பளி...உண்டாக்குவோர். 17
உபயோகமற்றதாய்விடும். ஆகவே பட்டுப்பூச்சி வளர்ப் போர் புழுக்கள் கூட்டினுள் உறங்கும் புழுவாகச் செய லற்றுக் கிடக்கும்போது கூடுகளைச் சே க ரி த் து க் கொதிநீரில் இட்டு அவிப்பர். பின்னர் சுற்றுச் சுற்றா யுள்ள அந் நூலை இராட்டை முதலியன கொண்டு நேர்ப் படுத்தி இரண்டு மூன்று நூ ல் க ளை ஒன்று சேர்த்துத் திரிப்பர். பின்னர் இந் நூல்கொண்டு விலையுயர்ந்தபட்டு கள் நெய்வர். சில கூடுகள் மாத்திரம் சந்ததிவிருத்திக் காகப் பூச்சிகள் வளர்ச்சியடைந்து வெ ளி வரு ம் ப டி விடப்படும். செயற்கைப் பட்டுச் செய்யும் முறையும் சில இடங் களில் நடைபெறுகின்றது.
ஆண்டு மூனந் நூல்கொடுத்திரம் சர்வ ரும், பல் பர்: பின் கூடுகள் கடந்து செ "முறையும்
க ம் ப ளி
மத்திமவலயப் புல்வெளிகளில் மந்தை மந்தையாய் வளர்க்கப்படும் ஓர்வகைச் செம்மறியாட்டிலிருந்து கம் பளிரோமம் கத்தரிக்கப்படுகின்றது. கம்பளி ஆடுகள் அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா, ஆர்ஜென்ரைனா, இந்தியா ஆதியாமிடங்களில் அதிகமாக வளர்க்கப்படுகின் றன. பிரதான கம்பளி த் தொழிற்சாலை இங்கிலாந்திலுள்ள 'யோ க் செ யர்' மாகாண்த்திலிருக் கிறது. ஜெர்மனி, பெல்ஜியம், பி ரான் ஸ், 'தென் அமெரிக்கா எ ன் னுந் தேசங்களில் கம்பளி உடைகள் நெய்யப்படுகின் றன. ஒட்டக ரோமம், வெ ள் ள் ாட்டு ரோமம் என்பனவும் சில இடங்களில் கம்பளி நெய்' வதற்கு உதவுகின்றன,
வினாக்கள்.
(1) நீரணிந்திருக்கும் உடை எப்பொருளால் செய்யப்பட்டது. எந் நாட்டிற் செய்யப்பட்டது, எவ் வாறு செய்யப்பட்டது எனக்கூறுக, (2) பருத்திச் செடி வளருவதற்கேற்ற சாதனங்களெவை? (3) எத்தேசங்களில் பருத்தி பயிராக்கப்படுகின்றது? (4) நெசவுத் தொழிற்சாலையில் நடைபெறும் வேலைகளெவை? (5) பட்டு நூல் எவ்வாறு பெறப்படுகின்றது? (6) பட்டுப்பூச்சி வளர்க்கப்படும் நாடுகளெவை? (7) ஒரு பட்டுப்பூச்சியின து சீவிய சரித்திரத்தை எழுதுக. (8) கம்பளி ஆடுகள் காணப் படும் நாடுகளையும் கம்பளித் தொழிற்சாலைகளுள்ள நாடுகளையுங் கூறுக. (9) எமக்கு வேண்டிய பட்டு, பருத்தி, கம்பளி உடைகளை அனுப்பும் இவ்விரு நாடுகள் தருக. (10) உலகப் படத்தில் பட்டு, பருத்தி, கம்பளி என் பன பெறப்படும் தேசங்களை வெவ்வேறு வர்ணங்களால் அடையாளப்படுத்துக.

Page 15
6. இரும்பு, நிலக்கரி என்பன
வெட்டியெடுப்போர்.
நிலத்தைத் தோண்டிப் பெறப் ப டும் சுரங்கப் பொருட்களுள் இரும்பு, நிலக்கரி என்பன மிகவும் உப யோகமுடையனவாகும். எமது நாளாந்த வாழ்க்கையில் பலதொழில்களைப் புரிவதற்கும் இருப்பாயுதங்கள் உப யோகப்படுகின்றன உதாரணமாகக் கோடரி,கத்தி, மண் வெட்டி, அலவாங்கு என்பன இரும்பினால் செய்யப்படு வன. மேலும் ஆணிகள், பூட்டு கள், எந்திரவகைகள் என்பன பலவும் இரும்பினால் செய்யப்படுவன் வேடர்கும்,
(புகையிரதத் தொடர் )
பாடசாலைக்கு அண்மையிலுள்ள ஒரு புகையிரத ஸ்தா
ன த்திற்குச் சென்று பார்வையிடுவோமாயின் அங்கு இரும்பு, நிலக்கரி என்பவற்றின் உபயோகம் எவ்வளவு தூரம் பரந்திருக்கிறதெனக் காண்போம் புகையிரதத் தின் எந்திரங்கள், சில்லுகள், அது ஓடவுதவும் இருப்புப் பாதைகள், பாலங்கள், ஸ் கானக் கட்டிடச் சலாகைகள் ஆகிய யாவும் இரும்புகொண்டு அமைக்கப்பட்டனவே. மேலும் நீரை ஆவியாக்கி எந்திரத்தை இயக்க உதவுவது நிலக்கரியாகும்.
உலகில் அதிகப் பகுதியான நிலக்கரி, இரும்பு என்பவற்றினை உதவும் நாடு அமெரிக்க ஐக்கிய மாகா

இரும்பு, நிலக்கரி...வெட்டியெடுப்போர்.
19
= 'இரும்பு ,
(இரும்பு கிடைக்குமிடங்கள்)
நிலக்கம்
9ெ
நிலக்கரி
AIC::
(நிலக்கரி கிடைக்குமிடங்கள்)
ணங்களாகும் இவற்றினுக்கடுத்ததாகப் பெரிய பிரித்தா னியா, ஜெர்மனி என் னும் நாடுகள் இவ்விரு சுரங்கப் பொருள்களையும் உதவுகின்றன. நிலக்கரியும் இரும்பும் அதிகமாகக் காணப்படும் தேசங்களிலெல்லாம் இரும்புத் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டிருக்கின்றன. ஏனெனில் இரும்பை உருக்கிப் பல்வேறு பொருள்களையுஞ் செய்வ தற்கு நிலக்கரி மிகவும் வேண்டியதாகும். இ ரும் பு த் தொழிற்சாலைகளுள்ள இடங்களிலெல்லாம் எ ந் தி ரங் களின் சத்தமும் தொழிலாளர்களின் கூச்சலும் ஒருங்கு சேர்ந் து • ஒரே கலகலப்பாயிருக்கும். பு கையிரகம் போன்று நீராவிக் கப்பல்கள் செய்வதற்கு இரும்பும், .

Page 16
20
ஐந்தாந்தரப் பூமிசாஸ்திரம். அவற்றை இயக்குவதற்கு நிலக்கரியும் உபயோகப்படு கின்றன. ஜிபுறோல்ற்றர், மால்ற்ற, ஏடின் , கொழும்பு, சிங்கப்பூர் என்னுந் துறைகளிலெல்லாம் நிலக்கரி சேமிக் கப்பட்டு அங்கு வந்து தங்குங் கப்பல்களுக்குக் கொடுக் கப்படுகிறது.
சுரங்கங்களில் வேலை செய்வோரது சீவனம் மிகவும் அபாயகரமானது, விஷவாயுக்கள் உண்டாவதினாலும், நீர்வந்து மூடிவிடுவதனாலும், மண் சரிவு ஏற்படுவதனாலும், சடுதியில் வாயுக்கள் தீப்பற்றி எரிவதனாலும், சுரங்கத் தொழிலாளர் பலமுறையும் பெருவிபத்துக்குள்ளாகின் றனர். சுரங்கத் தொழில் நடைபெறும் இடங்களிலெல் லாம் சனங்கள் நெருங்கிக் குடியிருக்க ஆரம்பிப்பதால் பட்டினங்கள் தோற்றி வளர்ச்சியடைகின்றன. சுரங்கங் களிலிருந்து எடுக்கப்படும்போது இரு ம் பு சுத்தமான தாகக் காணப்படுவதில்லை. மண், கல் என்பனவும் இத்து டன் கலந்திருக்கும். தொழிலாளர் நி ல த் தி லி ரு ந் து வெட்டி யெடுக்கப்பட்ட கழிவுப் பொருட்களுடன் கலந்த இரும்புப் பாளங்களை உருக்கிக் கழிவு நீக்கிச் சுத்த 4 இரும்பு பெறுகின்றனர். இரும்பைக் க டி ன ம் பெற உருக்கி உ ரு க் கு பெறுகின்றனர். வெட்டாயுதங்கள், இரும்பறுக்கும் வாள், கடின யந்தி ரவகைகள் ஆதியன உருக்கு கொண்டு செய்யப்படுகின்றன.
வி னா க் க ள் :
(1) எமக்கு மிகவும் உபயோகமான சில சுரங்கப் பொருள் கள் கூறுக, (2) எமது வாழ்க்கையில் இரும்பு மிகவும் உபயோகமுடையது என்பதைக்காட்ட ஐந்து உதாரணங்கள் தருக. (3) - நிலக்கரி எவ்வாறு உபயோகப்படுகின்றது? (4) இரும்பு, நிலக்கரி என்பவற்றை அதிகமாக உதவும் நாடுக ளெவை? (5) நிலக்கரி அதிகமாகப் பெறப்படும் இடங்களுக்கு அண்மையிலே இரும்புத்தொழிற் சாலைகள் நிறுவப்பட்டிருப்பதன் காரணமென்ன? (6) சுரங்கங்களில் வேலை செய்வோரது சீவனம் ஏன் அபாயகரமானது? (7) சுரங்கப்பொருள் கிடைக்குமிடங்களில் எவ்வாறு பட்டினங்கள் தோற்றுகின்றன? (8) சுத்த இரும்பு எவ்வாறு பெறப்படுகின்றது? (9) உருக்கு என் பதென்ன? அதன் உபயோக மென்ன? (10) உலகப்படத்தில் இரும்பு, நிலக்கரி என் பன கிடைக்குமிடங்களை இரு வேறுவர்ணங்கள் கொண்டு அடையாளப்படுத்துக.

7. மண்ணெண்ணெய் பெற்றோல்
அனுப்புவோர்
9:20
எமது மு ன் னோர் தேங்காயெண்ணெய், இலுப் பெண்ணெய் ஆதியவற்றையே உபயோ கி த் து விளக் கேற்றி வந்தனர். ஆனால் இன்று இவ்வழக்கம் மிகவும் அருகிவிட, மண்ணெண்ணெய் உபயோகித்து வி ள க் கேற்றும் வழக்கம் சகல வீடுகளிலும் மிகுந்து காணப்படு கின் றது. பிள்ளைகளே! இலங்கையின் எப்பாகங்களிலும் மோட்டார் இரகம் ஓடித்திரிவதை நீங்கள் காண்கிறீர் கள். இதன து எந்திரத்தை இயக்குவதற்கு உபயோகப் படுவது "பெற்றோல் '' என்னும் எண்ணெயாகும்,
sகாடு,
( மோட்டார் இரதம் )
- கிணறுகளிலிருந்து தண்ணீர் எ டு க் கப் ப டு வ து உங்கள் அனைவருக்குத் தெரிந்த விஷயம். அதுபோலவே மண்ணெண்ணெய், பெற்றோல் என்பனவும் எண் ணெய்க் கிணறுகளிலிருந்து பெறப்படும் ஓர்வகை எண் ணெயிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. எ ண் ணெ ய் க் கிணறு.கள் எம் நாட்டிலில்லை. அ மெ ரி க் க ஐக்கிய மாகாணங்கள், ரஷ்யா, சுமத்திரா, பர்மா என்னுமிடங் களில் இத்தகைய கிணறுகள் ஏராளமாயுள்.

Page 17
22
ஐந்தாந்தரப் பூமிசாஸ்திரம்.
நில எண்ணெய் காணப்படுமிடங்களில் முதலில் யந் திரங்கொண்டு நிலத்தைத் துளைப்பர், பின்னர் அந்தத் துளையினூடு ஒரு குழாய் (பைப்பு) செலுத்தப்படும். நிலத் தினுள் எண்ணெயிருக்குமிடத்தைக் குழாயின் அடிப் பாகம் அடைந்தவுடன் எண்ணெய் பீறிட்டெழுந்து குழா யின் மேற்பாகத்தால் வடியும். இவ்வாறு வடியும் மண்டி யெண்ணெய் கொட்டிகளில் பாய்ச்சப் பெற்று ச் சுத்தி கரிக்கப்பட்டு வடிக்கப்படும். முதலாம் வடியே மிகவுந் திறமான து. அது பெற்றோலாகும், அதற்கடுத்த வடி மண்ணெண்ணெயாகும். யந்திர மண்டியெண்ணெய், கார், வஸ்லீன் என் பன வும் நில எண் ணெயிலிருந்தே. பெறப் படுகின்றன
மோட்டார்ப் போக்குவரவு அ திகமாயுள்ள பாதை களிலெல்லாம் இடையிடையே பெற்றோல் குதங்கள் இருக்க நாம் காண்கிறோம். கிணறுகளிலிருந்து தொட்டி களில் பாய்ச்சப் பெற்றுச் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வகைள் நீண்ட குழாயினூடு துறைமுகங்களுக்குக் கொண்டு செலுத்தப்படும். அங்குள்ள சேமிப்புகளில் அவை சேர்க்கப்பட்டுப் பின்னர் கப்பல்களில் அமைக்கப்பட்ட எண்ணெய்த் தொட்டிகளுள் பாய்ச்சப்பெற்றுப் பிற 'நாடுகளுக்கு அனுப்பப்பெறும்.
மோட்டார் இர தங்களுக்கு மாத்திரமன் விக் கப்பல் களை ஓடச்செய்வதற்கும், ஆகாய விமானங்களை இயக்கு வதற்கும் இன்று பெற்றோல் மிகவும் உபயோகப்படு கின்றது.
அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள், சுமத்திரா, பேர் சியா ஆதியாம் இடங்களிலிருந்து நாம் பெற்றோல், மண் ணெண்ணெய் என்பவற்றைப் பெறுகின்றோம்.
வி னா க் க ள் :
(1) பெற்றோல், மண்ணெண்ணெய் ஆதியவற்றின் உபயோகங் கூறுக, (2) இவை பெறப்படும் வழியை விபரிக்குக. (3) பெற்றோல், மண்ணெண்ணெய் ஆதியன் காணப்படும் தேசங்களெவை? நாம் எத்தேசத்திலிருந்து அவற்றைப் பெறுகிறோம்.

8. உலகத்தின் தரைத்தோற்றம்
எமது இலங்கைத்தீவின் மேற்பரப்பு எவ்விடத்தும் ஒரே சமமாக அமையவில்லை. சிலபகுதிகள் தாழ்ந்த பிர தேசங்களாகவும் சில சமவெளிகளாகவும், ஏனை ய உயர்ந்த மலைப்பாங்கான பகுதிகளாகவும் அமைந்திருக் கின்றன. இலங்கையின் கென்மேல்பாகம் பீடபூமிப்பிர தேசமாகும். அதனைச்சுற்றியுள்ள பாகம் தாழ்ந்த பூமி யா 5. இருக்கின்றது. யாழ்ப்பாணப் பகுதி கடல் மட்டப் பிர5ே, -ஈமாகவும், அனுரகபுரிக்குத் தெற்கே இலங்கை யின் மத்திய' பகுதி மலை நாடாகவும் அமைந்திருக்கின் றன. இவ்வாறு பரந்த உலகிலும் பூமியின் மேற் பரப்பு
இ
கடல்மடிப்ஸ் aே0 அடி வரவில்
oேap - பகுமேல்
(உலகத்தின் தரை அமைப்பு)
மலைகளாகவும் சமவெளிகளாகவும், பீடபூமிகளாகவும், பள்ளத்தாக்குகளாகவும் இருக்கின் றன.
கடல் மட்டத்துக்கு அதிகம் உயராத பரந்த பிரதே சங்கள் சமவெளிகளெனப்படும். இகனிலும் உயர்ந்த பாகங்கள் பீடபூமிகளாகும். பூமியின் மேற்பரப்பில் அதி யுயர்ந்த பகுதிகள் மலைகளெனப்படும். ஐரோப்பா, ஆசியா எ ன் னும் இரு கண்டங்களின் பாக மாகிய றஷ்யாவின் பெரும்பகுதி உலகத்திலுள்ள சமவெளி

Page 18
24
ஐந்தாந்தரப் பூமிசாஸ்திரம்.
களில் மிகக் கூடிய விஸ்தீரணமுடையது. , உலகத்தி லுள்ள மிகப் பரந்த பீடபூமி தீபேத் பீடபூமியாகும். இது றஷ்யாவின் தென் பாகத்தில் உள்ள து. மலைகளில் இந்தியாவின் வடக்கெல்லையான இ ம ய மலை யே அதிக உயரம் பொருந்தியது. அ தனது உன்ன த சிகரமாகிய 'எவறெஸ்ற்' 29000 அடிவரையில் உ ய ரமு டைய து. ஆகவே நாம் ஆசியாக் கண்டத்திலேயே உலகத்திலுள்ள வற்றில் மிகப் பரந்த சமவெளியும், பெரிய பீடபூமியும், நனி யுயர்ந்த மலையும் இருக்கக் காண்கிறோம்.
உலகத்தின் பெரும்பாகம் சமவெளிப் பிரதேசங் களாகும். இச் சமவெளிகளில் பெரும்பான்மை" "புல் நிலங்களாகப் பரந்திருக்கின்றன. இனி நாம் மலைகளைப் பற்றி ஆராயின் வட அமெரிக்காவின் மேல் பகுதியில் 'றொக்கீஸ்' மலைத்தொடரும் தென் அமெரிக்காவின் மேல்பகுதியில் 'அ ந் தீஸ்' மலைத் தொடரும் இருக்கக் காண்கிறோம். ஆபிரிக்காவில் அபிசீனியாவை அடுத் துள்ள பாகமும் மலைப்பிரதேசமாகும். ஐரோப்பாவில் இத்தாலியின் வடபகுதியில் ' அல்ப்ஸ்' மலை இருக்கின்றது. உலகத்தின் தரைத் தோற்றத்தை விளக்கும் பூகோள > உருண்டையை அல்லது உலகப்படத்தை அவதானிப் பின் மலைநாடு, சமவெளி, பீடபூமி என்பவற்றின் நிலை யங்களை நாம் ஒருவாறு அறிதல் கூடும்.
வி னா க் க ள் .
(1) இலங்கையிலுள்ள மலை நாடுகள் சிலவும் சமதரைகள் சிலவுங் கூறுக, (2) சமவெளி, பீடபூமி, மலை என்பவற்றின் பேதத்தை விளக்குக. (3) உலகத்தில் மிகப்பரந்த சமவெளி எது? பீடபூமியெது? (4) உலகப் புறவுருவப்படத்தில் ஆசியாவிலும், அமெரிக்காவிலும் காணப்படும் சமவெளிகளையும், மலைத் தொடர்களையும் குறிப்பிடுக, 45) உமது பாடசாலையிலுள்ள உலகத் தரைத்தோற்றப் படத்தை ஆராய்ந்து மலைகள், பீடபூமிகள், சமவெளிகள் என் பவற்றின் நிலையங்களை அறிந்துகொள்க."

9. உலக மழைவீழ்ச்சி
எமது இலங்கைத்தீவின் எல்லாப்பாகங்களும் ஒரே சம அளவான மழைவீழ்ச்சியைப் பெறுவதில்லை. கண்டி, மாத்தளை, அவிசாவலை போன்ற இடங்கள் அதிக மழை யையும், யாழ்ப்பாணம், திரிகோணமலை, சலாபம் - ஆதி யன மட்டான மழையையும், மன்னார், அம்பாந்தோட் டைப் பிரிவுகள் குறைந்த மழையையும் பெறுகின்றன. இவ்வாறு பரந்த இப்பூவுலகின் மேற்பரப்பிலும் மழை வீழ்ச்சி ஒரே சமமாக இராது கூடியுங் குறைந்துங் காணப்படுகின்றது. மழையே பெய்யாத பிரதேசங்களும் பூமியின் மேற்பரப்பிலுள. கடலின் அண்மை சேய்மை, காற்றுவீசுந் திசைகள், பவனத்தில் நீர்ச்செறிவு, மலைச் சாரலில் பவனத்தாக்கம் என்பன போன்ற ஏதுக்கள் மழைவீழ்ச்சியின் அளவை மாறுபடுத்துகின்றன.
பூமத்திய ரேகையை அடுத்துள்ள உஷ்ணவலயப் பகுதியிலே சூரியனது நேர்கிரணங்கள் மிகவும் காய் வுடன் தாக்குவது காரணமாகச் ஜலமட்டத்தின் மேற் பரப்பில் மிதமிஞ்சிய அளவுக்கு நீராவிமாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆகவே இப்பகுதியில் பவனமும் நீராவிசெறிந்து தெவிட்டல்நிலை அ டை ந் தி ருக் கும். நீரணு மிகச் செறிந்துள்ள இப்பவனம் மேலெழுந்து குளிர்ச்சியடைந்து மழைத் துளிகளாய் மாறுவது.காரண. மாகக் கற்கடக மகர ரேகைகளுக்குட்பட்ட உஷ்ணவ. லயப் பகுதி அதிக மழைபெறுகின்றது.
-- தென் அமெரிக்காவில் அமேசன் ந தி ச் சூ ழ லு ம், ஆபிரிக்காவில் கொங்கோ நதிப் பள்ளத்தாக்கும், சமுத். 'திரங்களிற்படிந்து நீராவியணுவை நிரம்பக் கொண்டுள்ள தென் மேற் பருவப்பெயர்ச்சிக் காற்று வந்து தாக்குவ கனால் ஆசியாவில் இமயமலையின் தென் சரிவும் உலகத் தில் அதிக மழை பெறுமிடங்களாகும். காசிக்குன்று களைச் சேர்ந்த சிகிறாப்பூஞ்சியில் வருடத்தில் 500 அங் குலம் வரையில் மழை பெய்கின்றது. உலகத்தில் அதிக மழை பெறுமிடங்களில் இது முதன்மையுடையது.
அவுஸ்திரேலியாவில் குவின்லாந்தும், தென்னாபிரிக் காவில் நேற்றால் என்னுமிடமும், வட அமெரிக்காவில் பிறேசில் பகுதியும், பிரித்தானியாவிலும் நோர்வேயிலு

Page 19
26
92)
niாம்
( உலக மழைவீழ்ச்சி)
ஐந்தாந்தரப் பூமிசாஸ்திரம்.
இணு
80'க்குமேல்
+. 49' 80'
-- உப். டில்
-- Fo', உd
ஜே92.01

உலக மழைவீழ்ச்சி.
27
முள்ள மலைகளின் மேல் சரிவுப் பிரதேசங் க ளு ம், பிரான்ஸ், பர்மா, யப்பான், சீனா என் னுந் தேசங்களின் சில பாகங்களும் நல்ல மழை வீ ழ் ச் சி பொருந்தியன. சுழல் காற்று வீசுவது காரணமாகக் கனடாவின் வடகீழ்ப் பாகமும் அமெரிக்க ஐக்கிய மாகாணங்களும் போதிய மழைபெறுகின்றன.
ஆபிரிக்காவில் சகாரா, கலகாரி என்னும் பாலை வனங்களும், ஆசியாவில் அரேபியா, ர ஜ பு த் தானா, கோபி போன்ற பாலைவனங்களும், தென்னமெரிக்கா வில் அற்றகாமாப் பாலைவனமும், அவுஸ்திரேலியாவின் மத்திய பாகமும் உலக மேற்பரப்பில் குறைந்த மழை பெறுமிடங்களாகும். வருட முழுமையும் இவ்விடங்களில் மழைவீழ்ச்சி 10 அங்குலத்துக்கு உட்படவேயிருக்கும். துருவப் பகுதியை அடுத்துள்ள கிறீன்லாந்து, தண்ட றாஸ் போன்ற இடங்களில் சூரியனின் மிகச் சாய்ந் த கிரணங்கள் உஷ்ணமின்றிப்படிவதனால் அவ்விடங்களில் நீர் ஆவியாதலும். பவனத்தில் நீரணுச் செறிதலும் நிகழ் வதில்லை. ஆகவே இவ்விடங்களில் மழைவீழ்சியுமில்லை.
உலக மழைவீழ்ச்சிப் படத்தைத் தே க ங் க ளி ன் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ள பிறிதொரு தேசப் படத் துடன் ஒப்பிட்டு மாணவர் ஆராயின் அவ்வத் தேசங்களி
ன தும் இட ங் க ளி ன து ம் மழைவீழ்ச்சியினளவை அவர்கள் நிர்ணயிக்க இயலும்.
வி னா க் க ள் :
(1) இலங்கையில் கூடிய மழைபெறுமிடங்களையும், மட்டான மழைபெறுமிடங்களையும், குறைந்த மழைபெறுமிடங்களையும் குறிப்படுக. (2) மழைவீழ்ச்சியினளவை மாறுபடுத்தும் ஏதுக்களெவை?. (3) பூமத்திய ரேகையை அடுத்துள்ள பாகங்கள் ஏன் அதிக மழை பெறுகின்றன? (4) உலகத்தில் அதிக மழைபெறும் மூ ன் று இடங்களும், மி க க் குறைந்த மழைபெறும் மூன்று இடங்களும் கூறுக. (5) துருவப் பகுதியில் மழைவீழ்ச்சிக் குறைவுக்குக் காரணமென்ன? (6) ஓர் உலகப் படத் தில் மழைவீழ்ச்சியின் அளவை வெவ்வேறு வர்ணங்கொண்டு தீட்டுக."

Page 20
10. உலகத்தின் குடிசன்ச்செறிவு
நமது இலங்கைத்தீவில் கொழும்பு, காலி, கண்டி யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் மக்கள் அடர்த்தி யாகவும், அநுரதபுரம் போன்ற பிரிவுகளில் ஐதாகவும் வசிக்கின் றனர் இவ்வாறு பரந்த இப்பூவுலகின் மேற் பரப்பிலும் குடிசன ச்செறிவு ஒரே தன் மையாயிராது கூடியுங் குறைந்தும் காணப்படுகிறது.
நல்ல சுவாத்தியம், போதிய தாவரச்செறிவு, கைத் தொழில் அபிவிருத்தி, இலகுவான போக்குவரவு வசதி, பாதுகாப்பான அரசாங்கம் என் பனபோன்ற ஏதுக்கள் ஓரிடத்தின் குடிசனச் செறிவைக் கூ ட் டு கின் ற ன. மழைக்குறைவு, மலேரியா முதலிய தொற்றுநோய்கள் பரவுதல், அடர்த்தியான காடுகள்,  ேப ா க் கு வ ர வுச் சாதனக் குறைவு, உணவுப் பொருட் பஞ்சம் என்பன மக்கள் நெருங்கி வசிப்பதற்குப் பாதகம் விளைப்பன.
மட்டான அன லும் சீதளமும் பொருந்திய சுவாத் தியம் மக்கள் வாழ்க்கைக்கு ஏற்றது. துருவப்பகுதியை யடுத்துள்ள பனிக்கட்டி வனாந்திரங்கள் க டு ங் கு ளி ரா யிருப்பது காரண மாகவும், அங்கு உணவுப்பொருள் பெற இயலாமை கே காரணமாகவும் ஒருவரும் அவ்விடத்தில் வசிப்பதில்லை. இதனை அடுத்துள்ள 'தண்டராஸ்' எனப் படும் தூந்திரபூமிப் பிரதேசங்கள் வருடத்தில் ஒன்பது மாதம் பனிக்கட்டியினால் மூடப்பட்டு மூன்று மாதம் சிறு அனலாகவும் இருக்கும் இங்கு 'எஸ்கிமோவர்' என் னுஞ் சாதியினர் ஐதா கவசிக்கின்றனர். இவ்வாறே உஷ்ண வலயத்தை அடுத்துள்ள பாலைவனங்களும் மிக உஷ்ணம் பொருந்தியிருப்பது காரண மாக வும் தாவரச் செறி வின் மை காரணமாகவும் குடிசனம் மிகக் குறைவாகவே கொண்டுள்ளன.
நல்ல சுவாத்தியம் பொருந்தியிருப்பது காரணமாக வும் கமத் தொழிலபிவிருத்திக்கு ஏற்ற சாதனங்கள் நிரம்பியிருப்பது காரணமாகவும் இந்தியா, சீனா, அவுஸ்தி ரேலியாவின் தென்கீழ்ப்பாகம், ஆபிரிக்காவில் நைல் நதி, கொங்கோநதி பாயும் பிரதேசங்கள், கேப்கொலனியை அடுத்துள்ள பாகம், வட தென் அமெரிக்காவின் கிழக் குப்பாகங்கள், ஐரோப்பாக்கண்டத்தின் பெரும்பகுதி என் னும் இடங்களில் குடிசனச்செறிவு கூடுதலாகக்

29
உலகத்தின் குடிசனச் செறிவு.
யோ.
சதுரமைலுக்கு,.00 சனங்களுக்குமேல்
200-400 சனங்கள் 190-200 ஒர) - (0)
1 சனங்களுக்கு கீழ் டிேசமற்ற பகுதி உலகின் கு டி சனம்

Page 21
30
ஐந்தாந்தரப் பூமிசாஸ்திரம்.
படுகின்றது. மேலும் அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள், பெரிய பிரித்தானியா, ஜெர்மனி, ஜப்பான் போன்ற இடங்களில் சுரங்கப் பொருட்கள் அதிகம் கிடைப்பது காரணமாகவும், கைத்தொழில் முன்னேற்றம் பெற் றிருப்பது காரணமாகவும் சனங்கள் நெருங்கி வசிக்கின்
றனர்.
வி னா க் க ள் .
(1) இலங்கையில் குடி சனம் மிகவும் நெருக்கமான பட்டினங்களும் குடிசனம் ஐதாகவுள்ள ஒரு மாகாணமுங் கூறுக, (2) உலகத்தில் எவ்வேதுக்கள் மக்களை அடர்த்தியாக வசிக்கச்செய்கின்றன? (3) உலகத்தில் அத்தகைய ஐந்து இடங்கள் கூறுக., (4) உலகத்தின் சில பகுதிகளில் மக்கள் நெருங்கி வசியாமைக்குக் காரணமென்ன? (5) குளிர் வனாந்திரங்களிலும் உஷ்ணப் பாலைவனங்களி லும் ஏன் குடிசனம் குறைவாகக் காணப்படுகிறது?
11. பல்வேறு ஜாதியினரும் அவர்களது வாழ்க்கை முறையும்
- 'எமது இலங்கைத்தீவில் சிங்களவர், தமிழர், முஸ் லீம்கள், பறங்கியர் என்னும் நால்வகைச் ஜாதியினர் நிலை யாக வசிக்கின்றனர். இவர்களது நடை உடை பாவ னைக்ளும், சமயக் கொள்கைகளும், தொழில் மு ய ற் சி களும் வேறுபட்டிருக்கின் றன. உதாராணமாகச் சிங்கள வரும், தமிழரும் பெரிதும் கமத்தையே செய்கின்றனர். முஸ்லீம்கள் வியாபாரஞ் செய்கின்றனர். சிங்களவர் சாரமுடுத்துச் சட்டை தரித்துத் தலையில் வளைந்த சீப்பை மாட்டுகின்றனர், தமிழர் வேட்டியுடுத்துச் ச ா ல்  ைவ தரிக்கின்றனர். பறங்கியர் காற்சட்டை, மேற்சட்டை, சப்பாத்து, தொப்பி முதலியன அணிகின்றனர்.
சீதோஷ்ண ஸ்திதி, நிலத்தின் தன்மை போன்ற, ஏதுக்கள் இலங்கை வாசிகளின் வாழ்க்கை முறையைப் பேதப்படுத்துகின் றன. உதாரணமாக யாழ்ப்பாணம், மன்னார், அம்பாந்தோட்டை முதலிய உஷ்ணப் பிரிவு களில் வசிப்பவர்கள் தமது அங்கங்களை அதிகம். மூடிக் கொள்ளும் உடை அணிவதில்லை. ஆனால் நுவரெலியா போன்ற குளிரான இடங்களில் வ சி ப் ப வர் க ள்

பல்வேறு ஜாதியினரும்... வாழ்க்கைமுறையும் 31
எந்நேரமுஞ் சட்டை முதலியன தரித்துக்கொள்ளுகின் றனர். கடலுக்குச் சமீபத்திலுள்ளோர் மீன்பிடிக்குந் தொழிலில் ஈடுபட்டு இருக்கின் றனர்; தூரத்திலுள்ளோர் வேறு முயற்சி பார்க்கின்றனர். விந்தனைக் காட்டிலுள்ள வேடர் மிருகங்களை வேட்டையாடிச் சீவிக்கின்றனர்.
4
( இலங்கையின் பல்வேறு ஜாதியினர் )
உலகத்தின் மிகச் சிறிய பகுதியாகிய எமது இலங் கைத்தீவில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைமுறையில் காணப்படும் மாறுதல் போன்று பரந்த இப்பூவுலகில் வசிக்கும் பல்வேறு தேசத்தினரின் வாழ்க்கைமுறை யிலும் பெரும் மாறு தல் காணப்படுகின்றது இவ்வாறு மக்களின் வாழ்க்கைமுறையை மாறுதல் செய்யும் ஏ துக் களாவன சுவாத்தியபேதம், தாவரவேறுபாடு தேச இயற்கை என்பன வா கும். பயிர்கள் வளராத வெற்று நிலங்களில் வசிப்போர் ஐதாகவும் நாகரீக முன்னேற்ற மடையாமலும் இருக்க, செழிப்பான தரைகளில் வதியும் மக்கள் நெருங்கி ஒன்றுகூடி நாகரீக முன்னேற்றமடைந் தும் வருகின்றனர். சீதள சுவாத்தியம் பொருந்திய மேல் நாடுகளில் வசிப்பவர் வெள்ளை நிறமுடையவர்களாகவும் உடல் முழுமையும் மூடிக்கொள்ளும் உடை அணிபவர் களாகவும் காணப்பட, உஷ்ணப் பிரதேசங்களாகிய கீழ்நாடுகளில் வசிப்பவர்கள் கருமை அல்லது மங்கல் நிறமுடையவர்களாகவும், உடலை அதிகம் மூ டா த

Page 22
32
ஐந்தாந்தரப் பூமிசாஸ்திரம்,
உலக மாந்தர் தொழில்
மந்தை வளர்த்தல் பயிர்ச் செய்கை 19 டிய முறைக்கமத் கைத்தொழில் மீன் பிடித்தல் வேட்டியாடல்ககேசித்தல் சுரங்கம்

பல்வேறு சாதியினரும்...வாழ்க்கை முறையும். 33
உடை தரிப்பவர்களாகவுங் காணப்படுகின்றனர். புல் நிலங்களில் வசிப்போர் மந்தை மேய்த்தும், செழிப்பான தரையில் வசிப்பவர் கமஞ்செய்தும், காடுகளிலும் குளிர் வனாந்தரங்களிலும் வசிக்கும் 'பிக்மீஸ்' 'எஸ்கிமோவர்' போன்ற சாதியினர் வேட்டையாடியும் வாழ்கின்றனர். இந்தியா வின் எல்லைப்புறம் போன்ற மலை நாட்டினர் சம் தரை களில் வசிப்பவர்களிலும் பலசாலிகளாகவும், மன த்தை ரியம் உடையவர்களாகவும், யுத்தப் பிரியர்களாகவும் காணப்படுவர்.
உலகத்தின் பல்வேறு வகுப்பினரதும் சமயக்கொள்
• கைகளையும் ஆராய்ந்தால் மேல் நாட்டினிற் பெரும்பாலார் கிறீஸ் தசமயத்தையும், அராபியர் துருக்கர் முதலானோர் இஸ்லாம் சமயத்தையும், இந்தியருள் பெரும்பாலோர் இந்து சமயத்தையும், சீனர் ஜப்பானியர் ஆதியோர் 'கொன்பூசியஸ்' அல்லது புத்தசமயக் கொள் கைகளையும் கொண்டொழுகுபவர்களாகக் காணப்படுவர். நாகரீகம் படைக்காத நீக்குரோவர், எஸ்கிமோவர், பி க் மீ ஸ் போன்ற சாதியினருக்குத் திருந்திய சமயக் கொள்கை களில்லை. இலங்கையில் வசிக்குந் தமிழரும் முஸ் லீ ம் களும் தமிழ்ப்பாஷையையும், சிங்களவர் சிங்களத்தை யும், பறங்கியர் ஆங்கிலத்தையும் சுதேச மொழிகளாக்க கொண்டிருக்கின்றனர். இவ்வாறு பரந்த உலகில் வசிக் கும் பல்வேறு சாதியினரும் வெவ்வேறு மொழிகள் பேசு கின் றனர். சீனர், ஜப்பானியர், அரேபியர் ஆதியோர் தமது சுதேச பாஷைகளையும், இந்தியர் தமிழ் ஹிந்தி முதலிய பாஷைகளையும், மலாயர் மலாயபாஷையையும், மேல் நாட்டினருள் பெரும்பகுதியினர் ஆங்கிலத்தையும், பயிலுகின்றனர். உலகத்து மக்களிற் பெரும்பகுதியி . னர்க்கு இன்று ஆங்கிலம் ஒரு பொதுப் பாஷையாக நில வுகின்றது.
வினாக்கள்.
(1) நீர் கண்டுள்ள பல்வேறு சாதியினருள் ஐந்து வகுப்பினரைக் கூறுக. (2) சிங்களவர், முஸ்லீம்க்ள், பறங்கியர், சீனர் என்போர் ஒவ்வொருவரதும் சமயம், பாஷை, உடை, தொழில் என் பவற்றை விளக்குக. (3) உலகத்து மக்களது வாழ்க்கை முறையைப் பேதப்படுத்தும் ஏதுக்க ளெவை? (4) மேல் நாட்டினர் வெள்ளை நிறமுடையவராயும், கீழைத் தேசத்தினர் கருமை நிற முடையவராயுங் காணப்படுவதேன்? (5) தேச சுவாத்தியம், தாவரச்செறிவு என்பன மக்களின் வாழ்க்கைமுறையைப் பேதப்படுத்துவதை உதாரண மூலம் விளக்குக, (6) உலகத்து மக்கள் கைக் கொள்ளும் பிரதான் சமயபே தங் தளையும் அவற்றைக்கைக்கொள்ளும் சாதியினர் யாவர் என் பதை யுங் கூறுக. (7) மக்கள் பேசும் பாஷை வேறுபாட்டை விளக்குக.

Page 23
போக்குவரவுச் சாதனங்களும் பொருட்களை அனுப்பும் முறைகளும் (.
12. தற்காலப் பிரயாண வசதிகள்.
இன்று நாம் இலகுவாகப் பொருட்களை அனுப்ப வும், விரைவாகப் பிரயாணஞ் செய்யவும் உகவும் மோட் டார்வண்டி, புகையிரதம், நீ ர ா வி க் க ப் ப ல், ஆ காய விமானம் என்னும் வாகன ங்கள் எமது மூதாதையர் காலத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை. அ வர் க ள் கால் நடையாகவும், மாட்டுவண்டி, குதிரைவண்டி, பாய்க்கப்பல் ஆதியவற்றாலும் பிரயாணஞ் செய்தனர். அந்நாளில் பொருட்களும் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குத் தலைச் சுமையாகவோ, அன்றேல் மாட்டுவண்டி, பாய்க்
சாக
(பழைய குதிரைக்கோச்சு வண்டி)
கப்பல் என்பவற்றிலோ கொண்டு செல்லப்பட்டன. எனவே எமது முன்னோரது நீடித்த தூரப் பிரயாணம் மிகவும், ஆயாசமும், அபாயமும், பொருட்களை அனுப்பு' தலில் மிகக் கஷ்டமும் பொருந்தி இருந்தது.
இன்று எங்கும் மோட்டார் இரதம், புகையிரதம், ஆகாய விமானம் என் பன சர்வசாதாரண மாகிவிட்டன. ஒருதேசத்தின் பிரதான பட்டின ங்களைக் .. கற்பாதை இருப்புப்பாதை என்பனவும், பிரதான தேசங்களைக்

தற்காலப் பிரயாண வசதிகள்.
- 35
கடற்பாகை, ஆகாயப்பாதை என்பனவும் இணைக்கக் காண்கிறோம். இவை காரணமாக, நாம் விரைவாகப் பிரயாணஞ் செய்யவும், தபாற் செய்திகளையும் பொருட் களையும் இலகுவில் அனுப்பவும் இயலுகின்றது.
நான்காம் வகுப்புப் பூமிசாஸ்திரத்தில் இல ங்கை பின் 17 ர கான புகையிரத வீதிகள், கொழும்பிலிருந்து லண்டன், சிங்கப்பூர், ஜப்பான் என்னுந் தேசங்களுக்குச் செல்லும் கப்பற்பாகை, லண்டனிலிருந்து கரைச்சிக் கும் றத்மலானாவுக்கும் வரும் ஆகாயவிமான மார்க்கம் என்னும் படங்கள் தரப்பட்டுள்ளன. இங்கு அடுத்து வரும்
அட்ரா :
ஒ

Page 24
போக்குவரவுச் சாதனங்களும் பொருட்களை அனுப்பும் முறைகளும் 11:
13. உலகின் பிரதான கப்பற்பாதைகள்
நீராவிக்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டகால ஆரம்பமாக உலகின் பிரதான து  ைற மு க ங் க ள் யாவும் கப்பற் பாதைகளால் இணைக்கப்பட்டு முன்னேறி வருகின் றன. மேல் நாட்டின ரால் அமெரிக்கா, அவுஸ்திரேலியா முத லிய தேசங்கள் கண்டுபிடிக்கப்பட்டுக் குடியேற்றம் பெற் றமையும் கப்பற்பாகை அபிவிருத்திக்கு மற்றோர் - கார. ண மாகும். லண்டனிலிருந்து அவுஸ்திரேலியா, சிங்கப் பூர், ஜப்பான் ஆதிய நாடுகளுக்குச் செல்லும் கடற்பாதை
( நீராவிக் கப்கல் ) வழியில் கொழும்பு இருப்பது காரணமாக அதுவும் உ ல கி லு ள் ள சி ற ந் த துறைமுகங்களிலொன்றாய் விளங்குகின்றது. உலகின் - ந ா னா ப க் க ங் க ளு க் கு ம் பரந்து செல்லும் கட ற் ப ா  ைத க ளை நாம் இங்கு ஆராய்வோம்.
வட அத்திலாந்திக் பாதை. கைத்தொழில் முன்னேற்றம் பெற் றி ருக் கும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஆ ர ம் பி க் கும் இப்பா தைகள் அமெரிக்காவின் கிழக்குக் கரையோரத் துறை களைச் சந்திக்கின் றன, (மிகக்கும் மாளிகை', களெனச் சிறப்புப் பெயர் பெற்ற பாரிய கப்பல்கள் இப்பாதைகளி

...
லிவர்ப்
--வெர்வீவர்
10x99 க
வயசாச்ய
மொக்காேமா..
உள்கூடலg 6
(சாந்தா!
சில**
அ.13ா காதசி
- சீமன்ஸ் பிக்கே4ங்த
உலகின் பிரதான கப்பற்பாதைகள்
{ாழிபால்
சம்ணியிலிருந்து ..
சையோடge ரேச !
ஃபர்:
அஸ்பாரப்ஜ
: உவெளிச்டர்
சாரி டிவிசெம.
அஹங் 8
அடையட்
உவேலித்டனிலிருந்து..
உலக கப்பற்பாதை |
37

Page 25
38
ஐந்தாந்தரம் பூமிசாஸ்திரம்.
னூடாக எந்நேரமும் போக்குவரவு செய்துகொண்டே யிருக்கும் வட அமெரிக்காவின் கி ழ க் கு க் கரையில் நியூயோர்க், நியூ ஓர்லியன்ஸ், ஹலிபார்ஸ் முதலிய துறைமுகங்கள் அமைந்திருக்கின் றன
சுவெஸ் கால்வாய்ப் பாதை ஐரோப்பாவின் து றை மு க ங் க ளை இணைத்துக் கொண்டு செல்லும் இப்பாதை மத்தியதரைக் கடல்களைக் கடந்து 1870-ம் ஆண்டில் வெட்டப்பட்டதும், நூறுமைல் வரையில் நீளமுள்ள துமான சுவெஸ்கால்வாயை அடையும். பின்னர் அங்கிருந்து செங் கடலை அடைந்து கிளை களா கப்பிரிந்து, ஒருகிளை பம்பாய்க்கும் மறுகிளை கொழும்புக்கும் . செல்லுகின்றன கொழும்பில் பின்னரும் இப்பாதை பிரிந்து ஒருபிரிவு சென் னை, கல்கத்தா முதலிய இடங்களுக் கும், ஒன்று றங்கூனுக்கும், ஒன்று சிங்கப்பூர், சீனா, ஜப்பான் முகலிய நாடு களு க்கும், எஞ்சியது அவுஸ்திரேலியாவுக்கும் செல்லுகின் றன. உலகில் இரண்டாவது முக்கியம் பெற்ற பாதை இதுவாகும்
நன்னம்பிக்கைமுனைப் பாதை லண்டன் முதலிய மேல் நாட்டுப் பிர கான துறைமுகங் களிலிருந்து புறப்படும் சில கப்பல்கள் ஆபிரிக்காவின் தென்பாகமாகிய நன் ன ம் பி க்கை முனையையடைந்து அங்கிருந்து பிடரி ந் து ஒரு கிளையினூடு இந்தியா வுக்கும் மற்றைய கிளையினூடு அவுஸ்திரேலியா வுக்கும் செல்லு கின்றன.
பாடசாலையிலுள்ள பெரிய உலகப்படத்தை அவதா னித்து மேற்குறித்த கப்பற் பாதைகளையும் அவற்றின் நீள ங்களையும், உலகின் பிரதான துறைமுகங்களையும் அறிந்துகொள்ளுதல் ஏற்றது.
வினா க் க ள் .
[1] கப்பற்பாதை விருத்தியடைந்த ஏதுக்கள் கூறுக. [2] சுவெஸ்கால்வாய் எப்போது வெட்டப் - பட்டது? அதன் நீள மென்ன? [3] ஐரோப்பாவிலுள்ள சில பிரதான துறைமுகங்களும், வட, தென்' அமெரிக்காவிலுள்ள சிலவும் உலகப் படத்தைப் பார்த்துக் கூறுக. [4] நான் காம் வகுப்புப் பூமிசாஸ்திரத் திலுள்ள விபரத்தை வாசித்துக் கொழும்பிலிருந்து லண்டனுக்கும், கொழும்பிலிருந்து சிங்கப்பூர், ஜப்பான் ஆதிய தேசங்களுக்கும் செல்லும் கடற்பிரயாண த்தை விபரிக்குக. (51) உலகப்புறவுருவப் படத்தில் நீர் இப் பாடத்தில் வாசித்த பிரதான கப்பற்பாதைகளையும், துறைமுகங்களையும் குறித்துக் காட்டுக.

போக்கு வரவுச் சாதனங்களும் பொருட்களை அனுப்பும் முறைகளும் III.
14. உலகின் பிரதான இருப்புப் பாதைகள்
இன்று ஒவ்வோர் தேசத்தின் பிரதான பட்டினங் கள் யாவும் புகையிரத வீதிகளால் இணைக்கப்பட்டிருக் கின் றன இது காரணமாக இலகுவாகப் பி ர ய ா ண ஞ் செய்தலும், உள் நாடுகளிலிருந்து பொருட்களைக் கொண்டு செல்லு க லும் சாத்தியமாகின்றன, இலங்கையின் பிர தான பட்டின ங்களை இணைக்கும் புகையிரத வீ” தி க ள்
அனைத் தும் தலை நகராகிய கொழும்பில் ஒன்றுகூடுகின் றன. இவ்வாறே இந்தியாவின் பலபாகங்களும் புகை
1
பிYRS
அலகபாட்
14ா
டெல்சிககு
--> கல் கற்ற
- பபா
[9]h/E..
சொ
காசிநாத
மதுரை
-கொழும்பு
(இந்தியாவின் பிர தம் புகையிரத வீதிகள் )
யிரத வீதிகளால் இணைக்கப்பட்டிருக்கக் காண்கின்றோம். இலங்கையிலிருந்து புகையிரத மூ ல ம ாய் இந்தியாவின் பிரதான பட்டினங்களுக்குச் செல்ல விரு ம் பு வோர்

Page 26
40
ஐந்தாந்தரப் பூமிசாஸ்திரம்.
தலைமன்னார் வரைக்கும் இலங்கைப் புகையிரதத்திற் செல்வர். அங்கிருந்து புகை வ ள் ள த் தி ல் ஏ றி, இந்தி யாக் கரையிலிருக்கும் தனுஷ்கோடியை அடைவர் தனுஷ் கோடியிலிருந்து மதுரை, சென்னை, பம்பாய், கல்கத்தா, காசி, டெல்கி முதலிய இடங்களுக்குச் செல்லும் பிரதம புகை யிரத வீதிகள் மேலே தரப்பட்டிருக்கும் படத்தில் குறிக் கப்பட்டிருக்கின்றன.
திறான் சைபீரியன் புகையிரதப் பாதை
உலகில் மிகக் கூடிய நீளமுடைய பு  ைக யி ர த ப் பாதை இதுவாகும். இப்பாதை அமைப்புக் காரணமாக ஐரோப்பாவுக்கும் கீழைத்தேசங்களுக்குமிடையே போக் குவரவு இலகுவாகிவிட்டது ஐரோப்பாவின் அத்தி லாந்திக் சமுத்திரக் கரையோரத்தில் ஆர ம் பி த் து ப் பெரிய மரக்காடுகள், விளை நிலங்கள். புல்வெளிகள் சுரங் கப்பொருள் கிடைக்குமிடங்கள் ஆதியவற்றை ஊடறுத்
லெனன் திறம்
19 யாத்ரி
(திறான் சைபீரியன், கனடியன் பஸிபிக் புகையிரத வீ திகள்)
துச்சென்று ஆசியாவின் பஸிபிக் சமுத்திரக் கரையோ ரத்தில் முற்றுப்பெறுகின் றது. லெனின்கிறாட்டிலிருந்துபுறப் படும் புகையிரதம் பிரதான புகையிரதச் சந்தியாகிய மொஸ்கோவை முதலில் அடைகின்றது. அங்கிருந்து றஷ்யசமவெளி, யூறல் மலைத் தொடரின் எல்லைப்புறம் ஆதிய வற்றைக் கடந்து, 'ஸ்ரெப்பீஸ்' புல்நிலங்களையுங் கடந்து, ஓம்ஸ்க், கிராஸ்நோயர்க், கித்திறாவே முதலிய இடங்களை யுங் கடந்து புகையிரதம் மஞ்சூரியாவுக்குச் செல்லுகின்றது. கார் பின் என்னுமிடத்தில் புகையிரதப்பாதை இருகிளைகளா கப் பிரிந்து ஒன்று விளாடிவெஸ்ரொக்குக்கும், மற்றைய்து போட் ஆதருக்கும் செல்லுகின்றன. லண்டன் மு த லி ய இடங்களிலிருந்து ஜப்பானை நீராவிக் கப்பல், மூலமடைய ஆறு அல்லது ஏழு வாரங்கள் வரையிற் செல் லு ம்.

உலகத்தின் பிரதான இருப்புப் பாதைகள். 41
TO
ஆனால், இப் புகையிரதப்பாதை மூலம் பி ர ய ா ண ஞ் செய்து .விளாடிவெஸ்ரொக்கை அடைந்து அங்கிருந்து கப்பல் மூலம் ஜப்பானை இரண்டு வாரத்தில் அடையலாம்.
கனடியன்--பஸிபிக் புகையிரத வீதி
வட அமெரிக்காவினூடாக அத்திலாந்திக் சமுத்திரத் தையும், பஸிபிக் சமுத்திரத்தையும் இணைத்து நிற்கும் இப்புகையிரதப்பாதை உலகத்தில் இரண்டாவது கூடிய நீளமுடைத்தாகும். அமெரிக்காவின் கீழ்க்கரைத் துறை முகமாகிய கலிபாக்ஸில் ஆரம்பித்துக் குவெபெக், ஒட்டாவா, போர்ட் வில்லியம் என்பன போன்ற கனடாவின் பிரதான பட்டினங்களை இணைத்து, மேல்கரைத் துறைமுகங்களுக் குப் பொருட்களை அனுப்புவதற்கும், மக்கள் பிரயாணஞ் செய்வதற்கும் இப்புகையிரதப் பாதை பெரிதும் பயன் படுகின்றது.
வி னா க் க ள்.
(1) புகையிரதத்தின் உபயோகமென்ன? (2) இலங்கையின் பிரதான புகையிர த வி தியெது? (3) புகையிரத வீதிகளால் இணைக்கப்பட்ட இலங்கையின் பிரதான பட்டினங்கள் கூறுக, (4) இலங் கையில் புகையிரதச் சந்திகள் ஐந்து கூறுக. (5) கண்டியிலிருந்து இந்தியாவுக்குப் புகையிரதமார்க்க மாகச் செல்லவேண்டிய ஒருவன் , தலைமன்னார்வரைக்கும் செல்லும் பாதையைப் படத்திற் குறிக்க. (6) அவன து வழியிலுள்ள ஐந்து புகையிரத ஸ்தானங்களும், மூன்று சந்திகளும் கூறுக. 7) இந் தி யாவின் புறவுருவப் படத்தில் சென்னை, கல்கத்தா, பம்பாய், டெல்கி முதலிய இடங்களுக்குச் செல்லும் பிர தான புகையிரத வீதிகளைக் கூறுக, (8) திறான் சைபீரியன் புகையிரதப்பாதை எவ்விருதேசங்களை இணைக்கின் றது? (9) இப்பாதையிலுள்ள பட்டினங்கள் சில கூறுக. (10) இப்பாதையமைப்பினால் ஏற்பட்ட பயன்களை விபரிக்குக. (11) உலகத்தில் இரண்டாவது முக்கியம் பெற்ற புகையிரதப்பாதை எது? உலகப் புறவுருவப்படத்தில் திறான் சைபீரியன் வீதி, கனடியன் பஸிபிக் புகையிரதப்பாதை ஆதியவற்றைச் சிவப்பு வர்ணங்கொண்டு தீட்டுக.

Page 27
போக்குவரவுச் சாதன ங்களும் பொருட்களை அனுப்பும் முறைகளும் IV. 15 லண்டனிலிருந்து கேப்ரவுணுக்குச் செல்லும் ஆகாயவிமானப் பாதை
உலகத்தின் பிரதான பட்டினங்கள் யாவும் இன்று ஆகாய விமானப் பாதையால் இணைக்கப்பட்டிருக்கின் றன, மக்கள் தூரதேசங்களை விரைவாகக் கிட்டிச் சேர் வதற்கும், தபாற்செய்தி ஆதியவற்றைச் சீக்கிரம் அனுப் புவதற்கும் ஆகாய விமானத்தை உபயோகப்படுத்து
* கொலன்
புடாபெஸ்ற
மார்செl
ன்ஸ்
பகடர்
• கராச்சி
கார்டூம்
நெய்பாபி
( ஆகாயக் கப்பற்பாதைகள் ) கின் றனர். இலங்கையிலிருந்து மேல் நா டு க ளு க்குக் கப்பல்மூலம் அ னு ப் ப ப் ப ட் ட தபாற் போக்குவரவு அண்மையில் நி று த் த ப் பட் டு, முற்றிலும் ஆகாய விமான த்தபால் ஒழுங்குமுறை கைக்கொள்ளப் பட்டிருக்

லண்டனிலிருந்து... ஆகாயவிமானப் பாதை. 43 கின்றது. இப்போது லண்டனுக்கும் கொ ழும் புக் கு மிடையே ஒழுங்கான ஆகாய விமானப் போக்குவரவு நடைபெறுகின்றது. கொழு ம் பி லி ரு ந் து புறப்படும் ஆகாயவிமானம் கராச்சியை அடைந்து, அ ங் கி ரு ந் து வெளிக்கிளம்பி பாஸ்ற, பக்டாட், அதென்ஸ், மார் செயில்ஸ், பரீஸ் என்னுமிடங்களையுங் கடந்து லண்டனை அடையும். இந்த மார்க்கமாக நாம் லண்டனை ஐந்து நாட்களில் அடையலாம். "ஜெற்'' விமான மூலம் எட்டு மணித்தியாலங்களில் அடையலாம்.
மணித்தியாலங்கலாம். "ஜெற்" அண்டனை ஐந்து
கே- லண்டனுக்கும் இலங்கைக்குமிடையே ஒழுங்கான ஆகாயவிமானப் போக்குவரவு நடைபெறுவது போன்று லண்டனுக்கும் ஆபிரிக்காவின் தென் கரையோரமாகிய கேப்ரவுணுக்குமிடையும் ஒழுங்கான ஆகாயவிமானப் போக் குவரவு நடைபெறுகின்றது லண்டனிலிருந்து பிரயா ணிகளையும், தபால்களையும் ஏற்றிக்கொண்டு ஆபிரிக் காவை நோக்கிப்பறந்துவரும் ஆகாயவிமானம் கொலன், புடாபெஸ்ட், அதென்ஸ் முதலிய நிலையங்களைத் தாண் டிக் கெயிறோவை அடையும், அங்கிருந்து பின்னரும் பறந்து கார்டூம், நெய்றோபி, யோகானஸ்பேர்க் முதலிய நிலை யங்களிலே தங்கிப் பத்தாம் நாள் கேப்ரவுனையடையும். இப்பாதையின் து மொத்த நீளம் 2300 மைல் வரையி லாகும்.
வினாக்கள். (1) லண்டனிலிருந்து கொழும்புக்குவரும் ஆகாய விமானப் பாதையை விபரிக்குக. (2) இதனை உலகப் புறவுருவப்படத்தில் நீலவர்ணத்தால் குறிக்குக. (3) லண்டனிலிருந்து கேப்ரவுனுக்கு வரும் ஆகாய
மார்க்கத்தைச் சிவத்த வர்ணப்பென்சிலால் குறிக்குக. (4) ஆபிரிக்காவிலுள் ளா மூன் று ஆகாய விமான நிலையங்கள் கூறுக.

Page 28
16. தேச ஆராய்ச்சியாளர்
விரைவாகப் பிரயாணஞ் செய்வதற்குதவும் வாக னங்கள் கண்டுபிடிக்கப்படாத முன்னை நாட்களில் பரந்த இப்பூவுலகத்தைப்பற்றி மாந்தர் அதிகம் அறியாதிருந் கனர். உலகம் தட்டை வடிவினதென்பதே பெரும்பகுதி யினரது நம்பிக்கையுமாயிருந்தது. வாசனைத் திரவியம் போன்ற பொருட்களின் பொருட்டுக் கீழைத் தேசங் களை நாடிவந் து சென்றுகொண்டிருந்த மேல்நாட்டு வியா பாரிகள் செங்கடல் வரைக்கும் தமது சரக்குகளை மாக் கலங்களில் ஏற்றிச்சென்று, அங்கிருந்து தரைமார்க்க மாக அவற்றை எடுத்துச் சென்றனர். ஆனால் துருக்கியர் இப்பாதையைத் தடைப்படுத்தியதும், மேல்நாட்டு மாலுமி கள் கீழைத் தேசங்களுக்குச் செல்லும் புதுப்புது வழி களைக் கண்டுபிடிக்க முயன்றனர். அவர்களுட் சிலர் இம் முயற்சியிற் சித்திபெற்றமையோடு முந்திய காலத்தில்
(கறுப்பு நிறத்தில் உள் ள இடங்கள் 15- ம் நூற்றாண்டுக்கு முன்
கண்டு பிடிக்கப்படாதவை )
அறியப்படாத அமெரிக்கா முதலிய நாடுகளையும் க்ண்டு பிடிக்க நேர்ந்தது. தேச ஆராய்ச்சியின் பொருட்டுத் தம்முயிரையும் திரணமாக மதித்துப் பல இன்னல்களை யும் பொறுமையோடு சகித்துப் பெரும் புகழீட்டிய தேச ஆராய்ச்சியாளர் சிலரின் தீரச் செயல்களை இங்கு ஆராய் வாம்.

தேச ஆராய்ச்சியாளர்.
ச
45
கொலம்பஸ்
கொலம்பஸ் இத்தாலி தேசத்தவன். அவன் உலகம் உருண்டை வடிவினதெனவும், மேற்குமுகமாகப் பிர யாணஞ் செய்யினும் கீழைத் தேசங்களை அடையலாம் எனவும் நம்பினான். தன் னுடைய எண்ணத்தை நிறை வேற்றுவதற்கு அவன் தனது சுயநாட்டினரதும், மற்றும் பல அரசர்களின தும் உதவியை நாடியபொழுது அவ னுக்கு அவ்வுதவி கிடைக்கவில்லை. ஈற்றில் அவனுடைய திடநம்பிக்கையால் தூண்டப்பட்ட ஸ்பானிய தேசத்து அரசனும் அரசியும் அவனுக்கு மூன்று கப்பல்களையும் உதவி, மற்றும் ஆகவேண்டிய வசதிகளையும் செய் து கொடுத்தனர். அவனால் புது நாடுகள் கண்டுபிடிக்கப்படின் அவை ஸ் ப ா னிய அரசாங்கத்துக்கே அளிக்கப்பட வேண்டுமென அவனிடம் ஒப்பந்தமும் பெற்றனர்.
1492ம் ஆண்டு ஆவணிமாத முற்பகுதியில் மூன்று கப்பல்களுடனும், 120 ஆட்களுடனும்  ெகா ல ம் ப ஸ் ஸ்பெயினினின்றும் புறப்பட்டுத் தனது இலட்சியத்தை நிறைவேற்றிவைத்த அரசனுக்கும் அரசிக்கும் வணக்கம் தெரிவித்துக்கொண்டு பரந்த அத்திலாந்திக் சமுத்திரத் தில் துணிவுடன் கப்பல்களை ச்செலுத்தினான். அவனுடைய பாய்க்கப்பல்கள் அலைகளால் எற்றுண்டும், காற்றினால் உந்தப்பெற்றும், பல நாட்களாகக் கரை துறை காணாது சென்றுகொண்டேயிருந்தன. ஆனால் காற்றுநின்றதும் அவனுடைய ஆட்கள் மனந்தளர்வுற்று ந ம் பி க் ைக யிழந்தமையோடு தமது தலைவனையும் எ தி ர் த் த ன ர். ஆனால் கொலம்பஸ் அவர்களைக் கையமர்த்தி உற்சாக மூட்டிப் பிரயாணத்தைத்தொடர்ந்து சென்றான். ஈற்றில் அவர்கள் புறப்பட்ட 10 - ம் வாரம் ஒரு பசிய மரக்கிளை நீரில் மிதந்து வருவதையும், பட்சிகள் ச ப் தி க் கும் ஒலியையுங் கேட்டுத் தரை அண்மையிலுள்து என்னும் நம்பிக்கைபெற்றனர். அடுத்த தினம் அவர்கள் அமெரிக் காவின் சமீபத்திலுள்ள சன்சல்வேடர் என் னுந் தீவை யடைந்தனர். கொலம்பஸ் வேறும் பல தீவுகளையும் கண்டு பி டி த் த யின் கன து சுய நாடு திரும்பினான். பின்ன ரும் மும்முறை அவன் இப்பிரயாண த்தைத்தொடர்ந்து கடைசிப் பிரயாணத்தில் அமெரிக்காவையுங் கண்டுபிடித் - தான்..

Page 29
46
ஐந்தாந்தரப் பூமிசாஸ்திரம். கொலம்பஸ் செய்த அரும்பெருஞ் செயல் காரண மாக அவன் ஸ்பெயினின் குடியேற்ற நாடுகளிலொன் றுக்குத் தேசாதிபதியாக நியமிக்கப்பட்டான். ஆனா ல் அரசியற் பொறுப்பைச் செவ்வனே நிர்வகித்து நடாத் துஞ் சக்தி அவனிடம் அமையாதபடியால் தன் தாய் நாட்டுக்கு அவன் மீண்டும் அழைக்கப்பட, 1501) - ம் ஆண்டில் வறுமை குடிகொண்ட நிலையில் கொலம்பஸ் இவ்வுலக வாழ்வை நீத்துப் புகழுடம்பு பெற்றான்.
கிழக்கிந்திய தீவுக் கூட்டங்களுடன் மாறி விளங்கா தபடி இன்றும் கொலம்பஸால் கண்டுபிடிக்கப்பட்ட தீவுக் கூட்டங்கள் மேற்கிந்திய தீவுகள்" என்று அழைக்கப் படுகின்றன.
வாஸ்கொட காமா
கொலம்பஸ் மேல்முகமாகப் பிரயாணஞ்செய்து புது உலகத்தைக் கண்டுபிடிப்பதற்குப் பல வருஷங்களுக்கு முன்னரேயே, ஹென்றி அ ரச குமாரனால் ஊக்கப்பட்ட பல போர்த்துக்கேய் மாலுமிகள், ஆபிரிக்காவின் கரை -யோரம் தென்முகமாகப் பிரயாண ஞ் செய்து புதிய நாடு களைப்பற்றிய ஆச்சரியம் விளைவிக்கும் கதைகளுடன் திரும்புவாராயினர். ஆனால் அவர்களால் இந்தியாவுக்குச் செல்லும் புதிய பாதையைக் கண்டுபிடிக்கமுடியவில்லை. ஆனால் 1487-ம் ஆண்டில் பர்தலோமியஸ் டயஸ் என்ப வன் ஆபிரிக்காவின் கரையோரம் நன்னம்பிக்கைமுனை வரைக்கும் பிரயாணஞ்செய்து தன து எண்ணம் முற்றுப் பெறுமுன்னர் திரும்பினான்.
- உயஸ் செய்த பிரயாணத்தைத் தொடர்ந்து நடத்தி இந்தியாவுக்குப் புதிய பாதை கண்டுபிடித்து வரும்படி 1497 ம் ஆண்டு வாஸ்கொடகாமா என்பவனைப் போர்த் துக்கேய அரசன் தூண்ட அவன் லிஸ்பனினின்றும். 3 மரக்கலங்களுடனும், வே ண் டி ய ஆயத்தங்களுடனும் புறப்பட்டு மிகவும் பிரயாசத்துடன் பயண ஞ் செய் து டயஸ் கண்டுபிடித்துத் திரும்பிய நன்னம்பிக்கைமுனையை அடைந் தான். அங்கிருந்து நத்தாலுக்குச்  ெச ன்று பின்னர் மொசாம்பிக் வரையுஞ் சென்று அராபிய 'வர்த்த கக் கூட்டத்தினருடன் சேர்ந்தான். ஆ ச ம் ப த் தி ல் இவர்கள் வாஸ்கொடகாமாவுக்கு ஆதரவு காட்டின ரா

47
தேச ஆராய்ச்சியாளர். யினும் பின்னர் பகைபாராட்டத் தொடங்கினர். ஆகவே அவன் அவர்களினின்றும் பிரிந்து ஒரு இந்திய மாலுமி யைத் துணைக்கொண்டு 1498-ம் ஆண்டு மே மாதத்தின் பிற்பகுதியில் மலையாளக் கரையிலுள்ள கள்ளிக்கோட் டையை அடைந்தான். அங்கு விலை யே றப் பெ ற் ற சரக்குகளை ஏற்றிக்கொண்டு தனது  ேத ச த் தி ற் கு மீண்டான்.
கேப்னோர்டு:
தீவுகள்
இமாம் பா ஜா
இநச்.
சரன் சிபார்
மொசாம்பிக்
கன்னம்பிக்கை- *.
( வாஸ்கொடகாமாவின் பாதை ) - இவன் கீழைத் தேசங்களுக்குப் புதியபாதை கண்டு பிடித்ததின் பயனாகப் போர்த்துக்கேயர் இந்தியாவிலும், இலங்கையிலும் வியாபார ஸ்தலங்களை நிறுவியதுமன் றி இவ்விரு நாடுகளின் சில பாகங்களைத் தமதாதீன த்துட் படுத்தவும் தொடங்கினர்.
பாஹியன்.
இவர் சீனா தேசத்துப் புத்த சந்நியாசிகளில் ஒருவ ராவர். 399-ம் ஆண்டில் இவர் சீனாவிலுள்ள சிங்கானி னின்றும் புறப்பட்டுப் புத்தாலயங்களைத் தரிசிப்பதற்கும் புத்தசமய நூல்களைப் பார்வையிடுவதற்குமாகப் 13 வருட காலம் இந்தியா, இலங்கை முதலிய இடங்களுக்கெல்லாம் யாத்திரை செய்தார். ஆசியாவிலுள்ள கோபி முதலிய பாலைவனங்களையும், பமீர் குன்றுகளையும் பெரும் பிரயா சத்துடன் கடந்து, இந்தியாவையடைந்து அங்கு 9 வருட மும், பின்னர் இலங்கையையடைந்து இங்கு 2 வருடமும் தமது ஆராய்ச்சியின் பொருட்டுத் தங்கலாயினர்.

Page 30
/ku,
S)
சேபிவரும்.)
காஸ்கார்',, ( 2...''
*,"யு+டி."
பனிப்ப11
196 ை&;, "
ஆமெ ரி க கா,
ஓபரோ
18ாடி
gோகிக்.
>> பொறிஸ்: /.'
அல் கேமில்
44 ;
தென்
73 பிலிப்பான்.
இலங்கை
/ \ -தீவுகள் இத்தலம் >>
11து
>>
அமெ ரி.
•க்கு.//
அக ல் ந),
- ரலியா.
பரிக.
- கொலம்பஸ். - ம ெத ல ண்.
- பரவிய .
றை யோடி வரப்பினாற்றே.
!!, 2L % * * ''' -
தேச ஆராச்சியாளர் பாதை கள்,

தேச ஆராய்ச்சியாளர்.
49
இலங்கையில் அவர் தங்கிய காலத்தில் அனுரத புரத்திலுள்ள புத்தசமய நூல்களை மொழிபெயர்ப்பதில் தமது பெரும் பகுதி நேரத்தைச் செலவிட்டார். இலங் கையைப்பற்றி அவர் குறிப்பிடுகையில் இங்கு புத்தசமயம் விருத்தியடைந்து வருகிறதெனவும், விகாரை,டகோபா முதலியன பொற்றகடுகளால் வேயப்பெற்று இரத்தினங் கள் பதிக்கப்பெற்றிருக்கின்றன எனவும், புத்தசமயக் குருமார் பெருகிவருகின்றனரெனவுங் கூறியிருக்கிறார். பின்னர் பாஹியன் கடல் மார்க்கமாக ஜா வ ாவுக்குச் சென்று அங்கிருந்து வியாபார மரக்கலங்களிற் பிரயா ணஞ் செய்து சுயதேசத்திற்கு மீண்டார். அவரது யாத் திரைப்பாதை படத்திற் குறிக்கப்பட்டிருக்கிறது மொத் தம் 17000 மைல் வரையில் அவர் யாத்திரை செய்துள் ளார். பூமிசாஸ்திரத்தின் பொருட்டு பாஹியன் தொண்டு செய்யாவிடினும், பண்டைக்காலத்திய தேச ஆராய்ச்சி யாளரென்ற தகைமையில் அவர் மேம்பாடுடையவராகக் கருதப்படுகிறார்.
மகெலன்.
மகெலன் ஓர் நல்ல குடும்பத்திற் பிறந்த போர்த் துக்கேய மாலுமி. இவன் 1517-ம் ஆண்டில் ஸ்பானியா அரசனிடஞ் சேவைக்கமர்ந்தான். போர்த்துக்கேயரைப் போன்று தானும் இந்தியாவுக்கு ஓர் புதுப்பாதை கண்டு பிடிக்கவேண்டுமென ஆர் வ ங் கெ ா ண் ட ஸ்பானிய அரசன் 1520-ம் ஆண்டில் மகெலனது தலைமையின் கீழ் சில கப்பல்களை இம்முயற்சியின் பொருட்டு அனுப்பி னான். மகெலனும் மற்றோரும் தென் மேற்கு முகமாகப் பிரயாணஞ்செய்து. அத்திலாந்திக் சமுத் தி ர த்  ைத க் கடந்து தென் அமெரிக்காவின் தென்முனையை அடைந் தனர். அங்கு அத்திலாந்திக் சமுத்திரத்தையும், பஸிபிக் சமுத்திரத்தையும் இணைத்து நிற்கும் நீரிணைக்கு மகெலன் '' நீரிணை எனப் பெயரிட்டு அதனூடாகப் பி ர ய ா ண ஞ்
செய்து, - பஸிபிக் சமுத்திரத்தையடைந்தனர். பின்னர் பஸிபி.க் சமுத்திரத்தையும் பெரும் பிரயாசையுடன் பல நாட்க்ளாகக் கடந்து பிலிப்பைன் தீவுக் கூட்டங் க ளை அடைந்தனர். இங்கு சுதேசிகளுக்கும் மகெலன் கூட்டத் தினருக்குமிடையில் நடந்த சண்டையில் ம கெ ல ன் இறக்க நேர்ந்தது. அதன் பின்னர் டெல்க்கானோ என்ப வன் தலைமை வகித்துக் கப்பற் கூட்டத்தைச் செலுத்திச்

Page 31
50
ஐந்தாந்தரப் பூமிசாஸ்திரம்.
சென்று இந்து சமுத்திரத்தைக் கடந்து, ஆபிரிக்காவின் தென்முனையை அடைந்து, பின் னர் ஆபிரிக்காக் கரை யோரமாகப் பிரயாணஞ்செய்து ஸ்பெயினை அடைந் தான், உலகத்தை முதன் முதற் சுற்றிவந்த பெருமை மகெலனது கப்பல்களுக்கும், கப்பற் கூட்டத்த வருக் குமே உரியதாகும்,
மார்க்கோ போலோ. கீழைத் தேசங்களுக்கும் ஐரோப்பாவுக்குமிடையே வியாபாரம் நடந்துவந்த பண்டைய நாட்களில் வெனிசிய வியாபாரிகளும் பொருள் கொள்வனவின் பொருட்டுக் கீழைத் தேசங்களுக்கு வருவாராயினர். இவர்களுள் நிக்கலோ, மவ்வியோ என்னும் இருசகோதரர் 1254-ம் ஆண்டு சீனாவுக்கு வந்து திரும்பினர் மீண்டும் அவர்கள் 1271 - ம் ஆண்டு சீனாவுக்குப் புறப்பட்டபோது, நிக்கொலோவின் 17 வயதுடைய மகனாகிய மார்க்கோபோலோ என்பானும் அவர்களுடன் கூடிச்சென்றான். வெனிசிலிருந்து மூவ ரும் புறப்பட்டு, மத்தித்தரைக் கடலைக் கடந்து ஏகரா வுக்குச் சென்று அங்கிருந்து பி ர ய ா ண ஞ் செ ய் து சைவாஸ் என்னுமிடத்தை யடைந் தனர். பின் னர் அவர்கள் ஒரு 'கரவான்' கூட்டத்தினருடன் சேர்ந்து பமீர் ஏறுபரவை, கோபி வனாந்தரம் முதலியவற்றையுங் கடந்து புறப்பட்ட 33 வருட எல்லையில் சீனா தேசத்து அரசனாகிய குப்ளாகானின் கோடைக்கால வாசஸ் தான மாகி ய சந்தூவை அடைந்தனர். அரசன் மார்க்கோபோலோமீது பிரீதிகொண்டு அவனைத் தன்னுடைய சேவையில் அமர்த் தினன். 17 வருடகாலம் மார்க்கோபோலோ சீனாவில் தங்கி' அத்தேசத்து அரசகுமாரிக்கும் பேர்சியா அ.ச னுக்கும் விவாக ஒப்பந்தஞ் செய்யப்பட்டபோது அரச குமாரியுடன் மணக் கூட்டத்தினரையும் பேர்சியாவுக்கு அழைத்துச்செல்லும் பொறுப்பு மார்க்கோபோலோ விடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து தனது தாய் நாடாகிய வெனிசுக்குத் திரும்பிப்போகவும் மார்க்கோப் போலோ உத்தரவு பெற்றான். அவன் மணக்கூட்டத்தின் ருடன் கடல் மார்க்கமாகப் பிரயாணஞ்செய்து, வழியில் இலங்கையையுந் தரிசித்துக்கொண்டு, பேர்சிய மாளிகை யில் அரசகுமாரியை விடுத்துத் தனது சுயதேசம் மீண் டான். அவன் ஊர் சென்றபோது அவனை இன்னா னென உறவின ராலும் முதலில் அடையாளங் கண்டு பிடிக்க முடியவில்லை. தான் செய்த பிரயாணங்களைப்

மார்க்கோ போலோ.
பற்றிய விபரங்களும் கீழைத்தேசத்து வினோதங்களும்
அடங்கியுள்ள ஒரு நூலை எழுதி வெளியிட்டான்.
வி னா க் க ள் . [1] நீர் படித்துத்துக்கொண்ட தேச ஆராய்ச்சியாளர் ஒவ்வொருவரையும் பற்றி ஐவைந்து வாக்கி யங்களெழுதுக. [2] அவர்கள் ஒவ்வொருவருடைய சரித்திரத்தையும் எழுதுக. [3] ஒவ்வோர் தேச ஆராய்ச்சியாளரதும் சுய நாடு எது? [4] தற்போது போலன்றி முற்காலத்தில் அவர்களுடைய பிரயா ணம் ஏன் மிகக்கஷ்டமான தும் நீடித்தகாலங்கொண்டதுமாயிருந்தது? [5] ஒவ்வொருவரும் பிரயாணஞ் செய்த பாதையை உலகப் புறவுருவப்படத்தில் வெவ்வேறு வர்ணங்கொ ண்டு காட்டுக
இலங்கைப் பூமிசாஸ்திரக் குறிப்புகள்
இ ந் தி யா
இ ல ங் கை
பொட்டி
1. நிலையமும் வடிவமும்:--
ஆசியாக் கண்டத்தின் தென் தேசமான இந்தியா வுக்குத் தென்கிழக்கே இந்துசமுத்திரத்தில் நமது இலங் 'கைத்தீவுள்ளது. மாங்காய் வடிவம் பொருந்தியது. பாக் குத்தொடுவாய் என்னும் கடல் இந்தியாவையுங் இலங்கை யையும், டபிரிக்கின் றது.
2. எல்லைகள்:- இலங்கைக்கு வடக்கில் பாக்குத்தொடுவாயும், கிழக் கில் வங்காளக்குடாக் கடலும், தெற்கும் மேற்கும் பரந்த இந்து சமுத்திரமும் உண்டு.

Page 32
52
ஐந்தாந்தரப் பூமிசாஸ்திரம்.
3. அளவுகள்:- இலங்கையின் கூடிய நீளம் வடக்குத் தெற்காய் 270 மைல், இலங்கையின் கூடிய அகலம் கிழக்கு மேற்காய் 140 மைல், இலங்கையின் சுற்றளவு 760 மைல், பரப்பு 25000 சதுரமைல் வரையிலாகும்.
லண
2ார்ச்
இலங் கை இயற்கை அம்ை வு
3000 அடி. மேல் 120. Scoா' 300'- 72ao' கடல் அட்மை - 800'
மு ன் அ
கடல்
வின்!
அ ல
பேரரு சிசு 8
829:
சிவனொளிபாதம்
300 கோலம்,
நேகேம்'
முடி த் தி ர
4. இயற்கையமைப்பு:- இலங்கையின் தென்மத்தியபாகம் உயர்ந்த மலைப். பிரதேசம், தென் மத்தியபாகத்தைச் குழ்ந்த பகுதி காழ்ந்தபிரதேசம், அனுரதபுரிக்குத் தெற்கே இலங்! கையின் சரி மத்தியபாகம் மலைகளும், குன்றுகளும், பள்

இலங்கைப் பூமிசாஸ்திரக் குறிப்புகள். ளத்தாக்குகளும் நிரம்பியபகுதி; யாழ்ப்பாணக் குடா நாடும், மற்றும் இலங்கையின் கரைப்பகுதிகளும் கடல் மட்டத்தை அடுத்துள்ள பிரதேசங்களாகும்.
மலைகள், ஆறுகள், சமவெளிகள்:
A. மலைகள்:-
மாகாணம்
மலை
உயரம் பேதுருதாலகாலை
8292! கிரிகாலப்பொத்தை
7857! தோட்டப்பாலை
7741! குடக்காலை .. -
7610! சிவனொளிபாதம்
7460!
மத்திய மத்திய மத்திய மத்திய சப்பிரகாம்
கடல்மட்டத்திலும் பார்க்க 3000' உயரந் தொடக்கம் 7300' உயரம் வரையுமுள்ள மற்றும் பல மலைகள் இலங்
கையில் உண்டு.
B. ஆறுகள்:- மகாவலிகங்கை: இது பேதுருதாலகாலை மலையில் உற் பத்தியாகிக் கண்டி, கம்பளை முதலாம் நாடுகளுக் கூடாக 205 மைல் நீளம்வரை பாய்ந்து திரிகோண மலைக்குக் கிட்ட குருகல்கங்கை, வெருகல்கங்கை என்னும் இரு கிளைகளாகப் பிரிந்து திரி  ேக ர ண
மலைக் கடலுக்குள் விழுகின்றது.
அருவியாறு: டம்புலா, சிகிரியா என்பவற்றிற்கிடைப் பட்ட மேட்டுநிலத்திலுற்பத்தியாகி 104 மைல் நீளம் வரையோடி மன்னாருக்குத் தெற்கே கடலைச் சேரு கின்றது.
கல்ஓயா: இது கறணப்பொத்தகண்டா மு த லி ய குன்றுகளில் உற்பத்தியாகி, 97 மைல் நீளம் வரை யோடி ம ன் னாரு க் கு ம் புத்தளத்திற்குமிடையே கடலில் விழுகின்றது. யான் ஓயா: சிகிரியா மலையில் உற்பத்தியாகி, 97 மைல் தூரம் ஓடித்திரிகோணமலைக்கு வடக்கே கடலைச் சேருகின்றது.

Page 33
54
ஐந்தாந்தரப் பூமிசாஸ்திரம்.
களனிகங்கை: சிவனொளிபாத மலையில் உற்பத்தியாகி 90 மைல் நீளம் வரையோடிக் கொழும்புக்குக்கிட்டக கடலைச் சேருகின்றது. 70 மைல் நீளம் தொடக்கம் 20 மைல் வரை நீள முள்ள மற்றும் பல ஆறுகள் இலங்கையிலுண்டு..
C. சமவெளிகள்:- கோட்டன் சமவெளி. உவில்சன் சமவெளி.
நுவரெலியாச் சமவெளி.
6. வீசுங் காற்றுகள்:- இலங்கை, பருவப்பெயர்ச்சிக் காற்று வலயத்தைச் சேர்ந்தது. சித்திரை மாதந்தொடக்கம் ஆவணி, புரட் டாதி மாதம் வரைக்கும் இங்கு தென்மேற்குத் திசையி லிருந்து காற்று வீசுகின்றது. இது ' தென் மேல் பருவப் பெயர்ச்சிக்காற்று' அல்லது சோழகம் எனப்படும். ஐ ப் ப சி மாதத்தில் ஆரம்பித்து, மாசி, பங்குனி மாதங்களில் முடி கின் ற இலங்கையின் இன்னோர் காற்று வடகிழக்குத்தி சையிலிருந்து வீசுவதால் 'வடகீழ்ப் பருவப் பெயர்ச்சிக் காற்று' அல் வது, வாடை எனப்படும்.
7., மழைவீழ்ச்சி:-
கென் மேல் பருவப்பெயர்ச்சிக் காற்றால் அதிகமழை யைப் பெறுமிடங்கள்; கொழும்பு, கண்டி, காலி, மாத் தளை, நுவரெலியா, எட்டியாந்தோட்டை, அவிசாவலை தொப்பிகோட்டம், இரத்தினபுரி முதலியன,
டெகீழ்ப் பருவப்பெயர்ச்சிக் காற்றால் அதிக மழை யைப் பெறுமிடங்கள்: திரிகோணமலை, மட்டக்களப்பு, வதுளை, யாழ்ப்பாணம், தியத்தலாவை ஆதியன.
வருடச்சராசரியில் இலங்கையில் அதிக மழைபெறுமிடங். களும் குறைந்த மழை பெறுமிடங்களும். இடங்கள் மழை அளவு :
இடங்கள் மழை அளவு .. பட்டிப்பளை
218/! - மன்னார்
39 எட்டியாந்தோட்டை 1795. அம்பாந்தோட்டை, 39// அவிசாவலை
174-5'' புத்தளம்
45-5'!

இலங்கைப் பூமிசாஸ்திரக் குறிப்புகள்.
5:)
இரத்தினபுரி மாத்தளை
151-5"
101''
யாழ்ப்பாணம் அநுராதபுரம்
49 '55
கன்
இலங்கை
{{கம்
அன்கிற
மணறர்க்குடாக்கடல்
ங்கா வரிகுட)
50அங்: தன்னூர்
கரகோரம்
அநுராதபுரம் :
50.75 அங்'
1ம் தேடும் பு!
பார்க்க
- காடி
து காமம்
நுவரெலியா - -
PIE0ாபர் 05
1000ாபாரச11
IIT00 Iொ
EFITTLTTTTET
محمد موقتی ای
அேம்பாநகராட்ன
|| சமுத்திரம்
இலங்கையின் வடமேற்கிலுள்ள மன்னார்ப் பிரிவும் தென் கிழக்கிலுள்ள அம்பாந்தோட்டைப் பிரிவும் காற்று வீசும் திசைப் பக்கமில்லாமையினால் மிகக் குறைந்த அள் வுக்கே மழைபெறும் வரட்சிப் பிரதேசங்களாய் இருக் கின் றன.

Page 34
55
ஐந்தாந்தரப் பூமிசாஸ்திரம்.
பி 27 14 3.. " Lம்
இ>
7ே80ல்,
8. விளைபொருள் கள்:-
1. தேயிலை:- கடல்மட்டத்துக்கு மேல் 2000' உயரம்தெர் டக்கம் 6000' உயர்ந்த இடமாய், வருடத்தில் 80!' க்கு மேற்பட இடையிடையே மழைபெய்வதாய், போதிய 1 அனல் பொருந்திய சுவாத்தியம் வேண்டும்.
தேயிலை விளைவிக்கப்பெறுமிடங்கள்: கண்டி, வதுளை நுவரெலியா, தொப்பிதோட்டம்.

இலங்கைப் பூமிசாஸ்திரக் குறிப்புகள்.
rr இடம் 2: க (7
யாழில்.
7. ரோயின்
E
-சுர்ே
உன்கிட்பம்
ஒழுக்கம் :
2. றப்பர்: கடல்மட்டத்துக்கு 2000 வரை உயர்ந்த தாய்
நல்ல மழைவீழ்ச்சியும் பொருந்திய பகுதிகளில் றப் பர் மரம் செழித்து வளரும்.
'றப்பர் விளைவிக்கப்படு மிடங்கள்:- க ழு த் து றை, கண்டி, காலி, மாத்தளை, களனிப்பள்ளத்தாக்கு.

Page 35
58
ஐந்தாந்தரப் பூமிசாஸ்திரம்.
இராசு 3 <<ா வலசாசலி - R
அதிரை கா
uuuuuu/
உதவி / ப/
முலகத்தவடி கனரு மிடங்கள்
கோண்மம்
=4" **** ச
சீதாஎம் .
மாடகாங் (1)
ஆப்பம்
தா, B18.
வேறஜம்பு
கொழுமடி 0
தேறை 67
4மபமா.தே.க,
3. தென்னை:- உவர்நிலத்தில், போதிய அனலும் ஈரலிப் பும் பொருந்திய சுவாத்தியத்தில், தென்னை வளரும். ஆகவே இலங்கையின் கரை நாடுகளில் இது அதிக மாகக் காணப்படுகின்றது.
இலங்கையில் தென்னை அதிகமாக வளருமிடங்கள்:- புத்தளம், கொழும்பு, காலி, மாத்தறை, குருநாகல், யாழ்ப்பாணம், திரிகோணமலை, மட்டக்களப்பு.

(8 இல்
நவீனயும்-துகள்
தி4: முலக்கூத்து
எலும்
தி3கோணமம்.
இமயம:ை2ாமம்
அரி: இன்று பல
மாதம்
ய்ய்யறை
கொ
இலிப்பாசிப்பயிறு
எம்.
ஏபசறை
4. நெல்:- நெல் நன்கு செழித்துவளருவதற்கு முளைக்கும் பருவத்தில் நிலத்தில் நல்ல ஈரலிப்புத்  ேத வை; வளருங்காலத்துப் பயிரின் அடிப்பாகத்தை மறை த்து நிற்கக்கூடிய சலத்தேக்கம் தேவை; கதிர் முற்றிப் பழுத்து அறுவடை செய்யுங் காலத்துப் போதிய அனல் தேவை.
இலங்கையில் நெல் அதிகமாய் விளை விக்கப்ப டு மிடங்கள்:- மட்டக்களப்பு, திரிகோணமலை - (தம்பல காமம்), மன்னார், யாழ்ப்பாணம், அநுரதபுரி, வவனியா,

Page 36
60
ஐந்தாந்தரப் பூமிசாஸ்திரம்.
மின்னேரியா, திசைமாற, மலை நாடுகள்
புகையிலை - பூமத்திய ரேகையை அடுத்துள்ள பாகங்
களாய்ச் சுண்ணாம்புச் சத்துக்கலந்த செழித்த கரை யில், அன லும் இரலிப்பும் பொருந்திய சுவாத்தியத் தில் புகையிலைச் செடி. நன்கு வளரும்.
இலங்கையில் புகை யிலை செய்கைபண்ணப்படும் இடங்கள்:- யாழ்ப்பாணம், தும்பறைப்பள்ளத்தாக்கு, திரிகோணமலை, மட்டக்களப்பு, குருநாகல்.
6. கொக்கோ:- கடல்மட்டத்துக்குமேல் 500 தொடக்கம் -
2000' க்கு உட்பட்ட இடமாய், வருடமுழுமையும் சமமழையாய், 60" முதல் 80" வரை மழைபெய்யும் பகுதிகளில் இது வளருகின்றது. கண்டி, மாத்களைப் பிரிவுகளில் இது அதிகமாகப் பயிரிடப்படுகிறது. பானத்துக்கும், சொக்களே ற் செய்வதற்கும் கொக்
கோ விதை உபயோகப்படுகின்றது.
7. பனை - இது தென்னையைப்போல் உயர்ந்து வளரும்
மாமாகும், வட, கீழ் மாகாணங்களில் எவ்வித சிரமமு
மின்றிப் பனைமரம் தானாகவே நன்கு வளருகின்றது.
8. கறுவா:- நீர்கொழும்புப்பகுதியில் விளைவிக்கப்படுகிறது. 19 மாப்பி, மிளகு, பாக்கு, புல்லெண் ணெய் என்பனவும் இலங்கை யில் பெறப்படுகின்றன மீன் பிடித்தல் இலங்கையின் கரை யோரங்களிலும், மாலைதீவிலும் ஏராளமாக நடைபெறு கின்றது. உப்பு ஆனையிறவு, நிலாவெளி, செம்மணி, புத்த ளம், கரணவாய், அம்பாந்தோட்டை முதலிய பிரிவுகளில் ஏராளமாகப் பெறப்படுகின்றது. சிலாபக்கடலில் முத்தும்' இரத்தினபுரியில் இரத்தின மும் காணப்படுகின்றன,
இலங்கையின் குடிசனச்செறிவு
இலங்கையின் குடிசனச்செறிவு எவ்விடத்தும் ஒரே தன்மையாயிராது, கூடியுங்குறைந்துங் காணப்படுகிறது. மழைகுறைந்த பிரதேசங்களிலும், மலேரியா முதலிய நோய்களை வருவிக்கும் சதுப்புநிலப் பிரதேசங்களிலும், காட்டுப்பாங்கான இடங்களிலும் போக்குவரவுச்சாதனக் குறைவுள்ள நாடுகளிலும் மக்கள் நொய்தாக வசிக்கின்

61
50. 2 150-500 '09-250 50-ர.
இலங்கைப் பூமிசாஸ்திரக் குறிப்புகள்.
றனர். நல்ல சுவாத்தி யம், போதிய காவரச்
இலங்கை குடிசளம் செறிவு, கைக்கொழி லபிவிருத்தி, வியாபார ஏற்றம், இ ல கு வா ன போக்கு வரவுச் சாத னம் ஆதியன பொருந் தும் இடங்களில் மக்கள் அடர்த்தியாக வசிக்கின் றனர். எனவே இலங் கையின் தென் மே ல் பாகத்திலும், மலைநாட் டிலும், யாழ்ப்பாணக் குடா நாட்டிலும் குடி ச ன ச் செறிவு அதிக மாகக் காணப்படுகின் மது. இலங்கையின் வட ம த் தி ய பாகத்திலும், கீழ்ப்பாகத்திலும் குடி சன ச்செறிவு குறைந்து காணப்படுகின்றது.
இலங்கை ஒன் ப து மாகாண ங் க ளா கப் பகுக்கப்பட்டுள்ள து. ஒவ்வொரு மாகாணத்தினதும் குடி சனச்செறிவு சதுர மைலுக்கு இத்தனையெனப் பின் வரும் அட்டவணையிற் காண்க.
சதுரமை லுக்குக் குடிசனச் மாகாணம்
செ றிவுச் சராசரி மேல்மாகாணம்
1000 மத்தியமாகாணம்
416 தென்மாகாணம்
359 சப்பிரகாமூவாமாகாணம்
306 வடமேல்மாகணம்
181 வடமாகாணம்
116 ஊவாமாகாணம்
93 கீழ்மாகாணம்
55 வடமத்தியமாகாணம்
24

Page 37
62
ஐந்தாந்தரப் பூமிசாஸ்திரம்.
இலங்கையிற் குடிசனங் கூடிய முதல் ஐந்து பட்டி ன ங்களும் குடிசன த்தொகையும்: கொழும்பில் 2,84,155 பேர்; யாழ்ப்பாண த்தில் 45,708 பேர்; காலியில் 38,424 பேர்; கண்டியில் 37,147 பேர்; மொறட்டுவாவில் 32,409 பேர்.
இலங்கை ஒன்பது மாகாணங்களாகப் பகுக்கப்பட் டிருப்பதுடன் இந்த ஒன்பது மாகாணங்களும் இருபது பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுமுள்ளன. ஒவ்வோர் பிரிவி ன தும் குடிசனச்செறிவு சதுரமைலுக்கு இ த் த னை யெனப் பின்வரும் அட்டவணையிற் காண்க.---
பிரிவுகள்
சதுரமைலுக்குக் குடிசனச்
செறிவுச் சராசரி கொழும்புப் பிரிவு
[மே. மா. ]
1338 கழுத்துறைப் பிரிவு
583 கண்டிப் பிரிவு
(ம. மா. ]
608 மாத்களைப் பிரிவு
144 நுவரெலியாப் பிரிவு
497 காலிப் பிரிவு
[தெ. மா.]
503 மாத்தறைப் பிரிவு
589 அம்பாந்தோட்டைப் பிரிவு
123 யாழ்ப்பாணப் பிரிவு (வ. மா.]
356 மன்னார்ப் பகுதி
26 முல்லைத்தீவுப் பகுதி
12 மட்டக்களப்புப் பகுதி (W. மா.]
63 திரிகோணமலைப் பகுதி குருநாகற் பிரிவு - [ வ, மே. மா.) 215 புத்தளப் பிரிவு சலாபப் பிரிவு
438 அநுரதபுரிப் பிரிவு
(வ. ம். மா. ]
24 வதுளைப் பிரிவு
(ஊ, மா.) இரத்தினபுரிப் பிரிவு
(ச. மா. |
211 கேகாலைப் பிரிவு
490
3)
36
11
39
29
03
1946-ம் ஆண்டுக் குடிசன மதிப்பின்படி இலங்கை யின் சனத் தொகை மொத்தம் 6657339 பேரும், 1953 - ம்
ஆண்டு மதிப்பின் படி 8103648 பேருமாகும்.

இலங்கைப் பூமிசாஸ்திரக் குறிப்புகள். 63
10. இலங்கையில் வசிக்கும் சாதியினர்:.
நமது இலங்கைத்தீவில் சிங்கள வர், தமிழர், பறங்கி யர், ஐரோப்பியர், முஸ்லீம்கள், மலாயர், வேடர் எனப் பல சாதியினர் வசிக்கின்றனர்.
சிங்களவர்:- இலங்கையின் குடிசனத் தொ ைக யி ல் இவர்கள் மூன்றில் இரண்டு பங்கின ராவர். ஆதிகாலத்தில் வட இந்தியாவில் இருந்து இவர்கள் இலங்கைக்கு வந்து குடியேறினர். மேல்மாகாணம், தென் மாகாணம், வட மத்திய மாகாணம், மத்திய மாகாணம், ஊவாமாகாணம், சப்பிரக்ாமூவா மாகாணம் ஆதியவற்றில் சி ங் க ள வ ர்
அதிகமாக வசிக்கின்றனர்.
தமிழர்:- இலங்கையின் குடிசனத்தொகையில் சிங்கள வருக்கு அடுத்த தொகையினர் தமிழராவர். இவர்கள் இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர் என இருபிரிவினர். இலங்கைத் தமிழர் வடமாகாணத்திலும், கீழ்மாகாணத் திலும் அதிகமாய் உளர். இந்தியத் தமிழர்  ேத யி லை, றப்பர்த் தோட்டங்களில் தொழில் செய்வற்காக இங்கு வந்து குடியேறி இருப்பவராவர்.
பறங்கியர்:- ஆங்கிலேயருக்கு முன்னர் இலங்கையை ஆண்ட போர்த்துக்கேய, ஒல்லாந்தரின் ச ந் த தி யார் பறங்கிக்காரராவர்.
ஐரோப்பியர்:- இவர்கள் இங்கு வந்து வியாபாரத்திலும், உத்தியோகத்திலும், தோட்ட மேற்பார்வையிலும், சம்
யத் தொண்டிலும் அமர்ந்திருக்கின் றனர்.
மலாயர்:- இவர்கள் இங்கு பொலீஸ் படையிலும், காவற்றொழிலிலும், மற்றும் பல முயற்சிகளிலும் அமர்ந் திருக்கின்றனர்.
- முஸ்லீம்கள். முற்காலத்தில் இங்கு வரநேர்ந்த அராபிய வியாபாரிகளின் சந்ததியாரெனக் கருதப்படும் இவர்கள் தமிழ்ப் பாஷையே பேசுபவர்களாய், இலங்கையின் பல பாகங்களிலும் பரவி வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கின் றனர்.
வேடர்:- இலங்கையின் சீர்திருந்தாத சாதியினராகிய இவர்கள் விந்தனை முதலிய காடுகளிற் காணப்படுகின் றனர், கிராமப்பகுதிகளில் வசிக்கும் வேடுவச்சாதியினர் நிலம் திருத்தி வேளாண் மை செய்கின்றனர்.

Page 38
64
ஐந்தாந்தரப் பூமிசாஸ்திரம்,
11. இலங்கையின் போக்குவரவுச் சாதனங்கள்:- .
இலங்கையின் போக்குவரவு வ ச தி யை இ ல கு படுத்துவதற்குத் தற்போது 4000 மைலுக்கு மேற்பட்ட நல்ல கற்பாதைகளும், 350 மைல்வரை நீளமான புகை யிரத வீதிகளும் அமைக்கப்பட்டிருக்கின் றன. கடற் கரையோரமாக 158 மைல் வரை நீளமான இலங்கை யின் பிரதான நான்கு வெட்டு வாய்க்கால்கள் மூலமாகவும் படகுப் போக்குவரவு நடைபெறுகின்றது.
A இலங்கையின் பிரதான கற்பாதைகள் (றோட்டுகள்) (அ) கொழும்பிலிருந்து கண்டிக்குக் கேகாலை, கடுகனவை,
பேராதனை ஆதியவற்றினூடாகச் செல்வது-78 மைல்
நீளம். (ஆ) கொழும்பிலிருந்து கண்டிக்கு அவிசாவலை, எட்டியாந்
தோட்டை, கம்பளை ஆதியவற்றினூடாகச் செல்லுவது
--98 மைல் நீளம். (இ) கொழும்பிலிருந்து புத்தளத்துக்கு நீர்கொழும்பு, சலாபம்
ஆதியவற்றினூடாகக் கரையோரமாகச் செல்வது - 80 மைல் நீளம். கொழும்பிலிருந்து அம்பாந்தோட்டைக்குக் காலி, மாத் துறை, தங்காலை ஆதியவற்றினூடாகச் செல்வது-147
மைல் நீளம். (உ) கண்டியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ம ா த் த ளை ,
டம்புலா, அனுரதபுரி, மதவாச்சி, வவனியா, ஆனையிறவு ஆதிய வற்றினூடாகச் செல்வது-207 மைல் நீளம்.
'மேற்குறித்த பாதைகளுடன் நுவரெலியாவிலிருந்து மட்டக்களப்புக்குச் செல்வதும், பாணந்துறையிலிருந்து அப்புத்தளைக்குச் செல்வதும், கொழும்பிலிருந்து திரி கோணமலைக்குச் செல்வதுமான மற்றும் பல பிரதான . வீதிகளும், அம்பம்பிட்டியிலிருந்து குருநாகலுக்குச் செல் வதும், கம்பளையிலிருந்து நுவரெலியாவுக்குச் செல்வதும், டம்புலாவிலிருந்து திரிகோணமலைக்குச் செல்வதுமான கிளை வீதிகளும், பிரதான பட்டினங்களை இணைக்குஞ் சிறு வீதிகள் அனேகமும் இலங்கையில் அமைக்கப் பட்டுள்ளன.

மாங்கோ நாடு
யாக
5 5 2
7 பருத்தித் துறை
இலங்கை
கற்பாதைகள்
தல்மன்னார்
ட்பம்
முல்லைத் தீவு
மாங்குடி
மன்னர் ..
ஒலிப்யா
22
மதவாச்சம்
"தோரம் போதும் திரிகோ னே மம் அநுாத புரம்
புத்தகம்)
சி.பி.சி lெ ய
சீழெ க
- பு ணன்
பொரொருவா வவப் யென்
2. மட்டக்களப்பு
(குருநாகல் மாந்தம்
அப்ாேபாத்
£ரகொ ழு
வெடித்த தோட்டை
அவேன் புகலம்
சிபில் ஒரு கண்டிப்
கேகாலை கமழ்
கொழும்பு
ஒறேறன.
ாேன றா காலா
பொத்துவி
இரான புரி
ஆடுகஅறை
ஈடகர் ஒன் எவெனனாஜை
பல் மகனை (1)
eே பதற ஓ0 )
லஸ் 36/
Rழ்aெ
44பாக கே ,.

Page 39
66
ஐந்தாந்தரப் பூமிசாஸ்திரம்.
காங்கேசன்துறை
நிக் ஷோ
இலங்கை
ஒகாம்
போக்கு வரவு
மாகாணப் பிரிவுகள் புகையிரதப் பாதைகள்
றோட்டுக் கல்
மா காலா1S
அக்ய
மொகாண ம
வடமேல்
சனதடி
வடக்கில்
'மாகானம் மத்தி
மாகாணம்
மாங்கா
மாகாணம்
அவாத்ங்ல)
கொழும்பு மேல்
காக
மாகாணம்
இரக்கம்
மே
மாகாணம்
தென்
மா க
பார்த்திங்சி
B. இலங்கையின் பிரதான புகையிரதவீதிகள்:- இலங்கையின் கலைநகராகிய கொழும்புடன் பிரதான பட்டினங்கள் அனைத்தும் புகையிரத வீதியால் இணைக்கப்பட்டிருக்கின் றன. அவ்வீதிகள் பின்வருமாறு:-
கொழும்பிலிருந்து மலை நாட்டுக்குச் செல்வது: இலங்கை யின் பிரதான புகையிரதவீதி இதுவாகும். கொழும்பில், ஆரம்பித்து றாகமம், வியாங்கொடை முதலிய ஸ்தானங்களுக் கூடாகப் பொல்காவலைச் சந்தி வரைக்கும் இவ்வீதி செல்லு கின்றது. அங்கிருந்து கிழக்கு முகமாகப் பிரிந்து பேரா

இலங்கைப் பூமிசாஸ்திரக் குறிப்பு.
67
{னைச்சந்தியை அடைந்து இரு பிரிவாகி, ஒரு பிரிவு கண்டிக் கூடாக மாத்தளை வரைக்குஞ் செல்ல, மறுபிரிவு நாவலப் பிட்டி கொப்பிகோட்டம் ஆகியவற்றினூடாக நனுஓயாச் சந்தி வரைக்குஞ் சென்று, அங்கும் பிரிந்து ஒருட்பிரிவு நுவரெலியாவினூடாக றாகலை வரைக்குஞ் செல்ல, மறு பிரிவு அப்புக்களை பண்டாரவளை ஆதியவற்றினூடாக வதுளைவரைக்குஞ் செல்கிறது."
கொழும்பு - யாழ்ப்பாணப் புகையிரதவீதி: இலங்கைப் புகை யிரத வீதிகளுள் மிகவும் நீளமான தும், மலை நாட்டு ப் புகையிரத வீதிக்கு அடுத்த பிரதானமானதும் இவ்வீதி யாகும். இவ்வீதி கொழும்பில் தொடங்கிப் பொல்காவலை, குருநாகல், மகோ, அநுரதபுரம், மதவாச்சி, வவனியா, மாங்குளம், ஆனையிறவு, யாழ்ப்பாணம் என்பவற்றி னூடாகச் சென்று காங்கேசன் துறையில் முடிவடையும் இவ்வீதி 256 மைல் நீளமுடையது.
மகோவிலிருந்து திரிகோணமலைப் புகையிரத வீதி பிரிந்து கல்ஓயாச்சந்தியைச் சார்ந்து இருகூறாக, ஒன்று திரிகோணமலைக்கும் மற்றது மட்டக்களப்புக்கும் செல் கின் றன.
5. கொ
வடபகுதிப் புகையிரதவீதியின் மற்றோர்களை மத வாச்சியில் பிரிந்து மன்னாருக்கூடாகத் த லை ம ன் னார் வரைக்கும் செல்கின்றது.
களனி - வெல்லப் புகையிரத வீதி: கொழும்பிலிருந்து மேட்டு நிலப் பிரதேசத்திற்குச்செல்லும் மற்றோர் புகையிரத வீதி இதுவாகும். குறுகிய அகலமுடைய இப்புகையிரத வீதி அவிசாவலை வரைக்குஞ் சென்று, அங்கு பிரிந்த (ஓர் பிரிவு எட்டியாந்தோட்டைக்கும், இன்னொன்று இரத் தின பரிக்கூடாக ஒப்பநாயக்கா வரைக்குஞ் செல்கின்
றது. .
கரையோரப் புகையிரதவீதிகள் : கொழும்பிலிருந்து செல் லுங் கரையோரப் புகையிரத வீதிகளில் ஒன்று தெற்கு நோக்கிக் ' கல்கிசை ' (Mt. Lavinia) , கழுத்துறை, காலி "என்பவற்றினூடாகச் சென்று வளைந்து மாத்தறையைச் சேருகின்றது. இன்னொன்று கொழும்பிலிருந்து வடக்கு நோக்கி நீர்கொழும்பு, சலாபம் என்பவற்றினூடு சென்று புத்தளத்தை அடைகின்றது. -

Page 40
68
ஐந்தாந்தரப் பூமிசாஸ்திரம்.
C. வெட்டு வாய்க்கால்:- இலங்கையின் வெட்டு வாய்க்கால் களுள் அதிநீளமுள்ள தும், மிகவும் உபயோகமுடையது மான து கொழும்பிலிருந்து நீர்கொழும்பு - சலாபம் என்ப வற்றினூடு புத்தளம் வரைக்குஞ் செல்வதாகும். ஏனைய பிரதானமானவை: யாழ்ப்பாண வெட்டு வாய்க்கால், கொற்றா - கொழும்பு வெட்டு வாய்க்கால், பொல்கொடை -பலப்பொத்தை வெட்டு வாய்க்கால் என்பனவாகும்.
களனிகங்கை, காலுகங்கை என்பவற்றினூடு சிறிது தூரம் வரைக்கும் சிறு படகுகள் செல்லத்தக்கன.
இலங்கையின் கரை யோர த் துறைமுகங்களில் கொழும்பு திரிகோணமலை என்பவை பிரதான மானவை.
12. இலங்கையின் பிர தான புகையிரதவீதிச் சந்திகள்: கொழும்பு - எல்லா வீதிகளுஞ் சந்திப்பன. பொல்காவலை - கண்டி, கொழும்பு, யாழ் ப் பா ண ப்
பாதைகள் சந்திப்பன. மாகோ - கொழும்பு, மட்டக்களப்பு, யாழ்ப் பாண ப்
பாதைகள் சந்திப்பன.
மதவாச்சி - கொழும்பு, யாழ்ப்பாணம் த லை மன் னார்ப்
பாதைகள் சந்திப்பன.
றாகமம் - கொழும்பு, யாழ்ப்பாணம், புத்தளப் பாதைகள்
சந்திப்பன.
அவிசாவலை, பேராதனை, நனுஓயா, கல்ஓயா என்பனவும்,
இலங்கையிலுள்ள பிற புகையிரத வீதிச் சந்திகளாகும்.
13. இலங்கையின் இயற்கை வலயங்கள்:-
இலங்கையை இயற்கை நோக்கி ஆறு வலயங்களாக வகுக்கலாம் அவையாவன: (i) யாழ்ப்பாணத் தட்டை நிலம் (ii) வடமேல்சரிவு (iii) தென்மேல் சரிவு (iv) தென் சரிவு. (v) கீழ்சரிவு (vi) மத்திய மலைப் பிரதேசம்.

இலங்கைப் பூமிசாஸ்திரக் குறிப்புகள்.
69
இரு இயற்கை வலயத்தின் விபரம் பின்வருமாறு:-
A. யாழ்ப்பாணத் தட்டை நிலம்
தாங்கேசன்துறை --- வடமராட்சி
மேற்கு
- பருத்தித்துறை
க துறை
வ லிகாமம் வலிகாமம் வடக்கு
\மேற்கு இழக்க,
வலிகாமம் !
வடக ராட்சி இ4
(யாழ்ப்பான
பதென்மராட்சி
- யாழ்ப்பார்ல பாக
ப ணி
யாழ்ப்பாணக்குடாநாடு
உட் பிரிவுகள்
நிலையம்:- வடமாகாணத்தின் வடபாகத்திலுள்ள து.
நிலப்பாங்கு - சமநிலமாய் மணல், களிமண், முருகைக் கற்பாறை ஆதியன பொருந்தியது.
தாவரம்:- உஷ்ணவலயப் புல்நிலங்கள் - இடையிடையே நெல் வயல்கள் - புகையிலை, மிளகாய், வெண்காயம், காய்கறிப்பொருட்கள் என்பன உண் டாக் கப் ப டும் தோட்டங்கள் - பனை, தென்னை மரச்செறிவுகள் - மா, வாழை முதலிய கனிவர்க்கங்கள் உடையது.
கைத்தொழில்கள் :- சுருட்டுவேலை, பன்னவேலை., செங்க லரிதல், ஆபரண வேலை ஆதியன நடைபெறுகின்றன.
பிரதான பட்டினங்கள் :- யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை, பருத்தித்துறை, வல் வெட்டித்துறை, சுன்னாகம், காங் கேசன் துறை, சாவகச்சேரி ஆதியன.
கட்டிடங்கள் :- பறங்கிக்காரரின் பழைய கோட்டை கள், டிஸ் திறிக் கோடுகள், பொலிஸ் கோடுகள், பல கல் லூரிகள் ஆதியன அமைந்துள்ள து.
குடிசனம்:- குடிசன நெருக்கம் அதிகமாயுடையது. யாழ்ப்பாண வாசிகளிற் பெரும்பகுதியினர் தமிழர்.

Page 41
70
ஐந்தாந்தரப் பூமிசாஸ்திரம்.
விசேடங்கள் : - பல பண்டைப் பெருமையுடைய இந்து ஆலயங்கள், கிறீஸ்தவ தேவாலயங்கள் கீரிமலை நீரூற்று, காங்கேசன் துறை, பருத்தித்துறை, ஊர்காவற்றுறை என் னும் துறைமுகங்கள், இத் துறைகளில் உள்ள கலங் கரை விளக்கங்கள் வெளிச்சவீடுகள்) போல்வன.
கவனிப்பு:
சிலவேலைகளில், "நீர் வசிக்கும் பிரிவின் பூமிசாஸ்திரத்தை எழுது' எனப் பரீட்சைகளிற் கேட்பதுண்டு. இதற்கும் மேற்குறித்த முறையிலேயே விடை எழுதல்வேண்டும்.
A. மத்திய மலைநாடு:
நிலையம்:- மத்தியமாகாணமும் அதனைச் சூழ்ந்துள்ள பகுதிகளும்.
நிலப்பாங்கு:- கடல்மட்டத்திலும் 12000 மேற்பட்ட உய ரமும் பேதுருகாலகாலை, கிரிகா லப்பொத்தை, தோட்டப் பாலை, சிவனொளிபாதம் ஆதிய மலைகளின் செறிவும் உடையது.
சுவாத்தியம்:- 80" தொடக்கம் 59" உட்பட உஷ்ணம். 150// தொடக்கம் 200/' வரை பொருந்திய மழைவீழ்ச்சிஎல்லாப் பருவ காலங்களிலும் மழை - பல ஆறுகளின் "உற்பத்திஸ் தானம் என்பன உடையது.
தாவரம்:- யானை, பன்றி, மான் ஆதிய மிருகங்கள் நிரம் பிய அடர்த்தியான காடுகள் .--மலைச் சாரல்களில் தேயிலை, ஹப்பர், கொக்கோத் கோட்டங்கள் என்பன அமையப் பெற்றது.
கைத்தொழில்கள்:- தேயிலை றப்பர் என் பன பதனிடுதல், கண்டியில் பித்தளை வேலை, ஆபரணவேலை என்பன.
குடிசன ம்:- மாத்தளைப் பிரிவிலும், ஊவாமாகாணத்தி லும் சதுர மைலுக்கு 90 - 11() வரை. ஏனைய பிரிவுகளில் சதுரமைலுக்கு 150-க்கு மேற்பட..
போக்குவரவுச் சாதனம் - புகையிரதப் பாதைகளும், கற் பாதைகளும்.

லெகை
இலங்கைப் பூமிசாஸ்திரக் குறிப்புகள்.
71
விசேடங்கள்:- டிஸ் திறிக் கோடுகள், பொலிஸ் கோடு கள், கலாசாலைகள் ஆதியன வும், கண் டி யி லு ள் ள கால தமாளிகையும், சிகிரியா என்னும் பழைய கற்கோட் டையும், டம்புலா என் னுங் குகைக் கோயிலும் குறிப் பிடத் தக்கவை.
14 இலங்கையிலுள்ள சரித்திரகால விசேடம் பெற்ற
பட்டினங்கள், கட்டிடங்கள், வாவிகள் என் பன.
அநுரதபுரி: பண்டைய சிங்கள அ ர ச ரி ன் தலை நகர். துட்டகைமுனுவினால் கட்டப்பட்ட ரூவான் வலைச் சமாதி, ஆயிரங்கால் மண்டபம் எனப்படும் லோகமகாபாயாவும், தேவநம்பியதீசன் காலத்தில் விசேடம்பெற்ற மிகுந்தலை மலை, மகாவிகாரை என்பனவும், பண்டைப் பெருமை யுடன் விளங்கும் மின்னேரியா, கந்தளாய் என்னுங் குளங்களும் இங்குள.
பொலநறுவை:- இலங்கையின் புராதன தலைநகரம். பல பழைய கோயில்களும், டம்புலா எனப்படும் குகைக் கோயிலும், காசியப்பனால் நிருமாணிக்கப்பட்ட சிகிரியா எனப்படும் மலைக் கோட்டையும் இங்குண்டு.
கண்டி:- கண்டி அரசர்களின் உறைவிடம் இதுவாகும். தாலத மாளிகை, கண்டிவாவி, பேராதனைப் பூந்தோட் டம் என்பன பழைய சரித்திரத்தை இன்றும் நினை வூட்டுஞ் சாதனங்களாகும்.
விசேடம்பெற்ற ஸ்தலங்கள் - அநுராதபுரி, டம்புலா, கள , னியா, பொலநறுவை, கண்டி, சிவனொளிபாகம், கதிர் காமம், மடு, திரிகோணமலையிலுள்ள சுவாமிமலை, யாழ்ப் பாணத்திலுள்ள நல்லூர், மாவிட்டபுரம் ஆதியன.
- இலங்கையின் தாவரச்செறிவு:-
வருட மழைவீழ்ச்சி 75 அங்குலத்திற்கு மேற்பட்ட பகுதிகளில் உஷ்ணவலயக் காடுகள் காணப்படுகின்றன. சப்ரகாம் மாகாணத்திலும், சிவனொளிபாதமலையைச் சூழ்ந்தபாகத்திலும் கருங்காலி, முதிரை, பாலை ஆகிய மரங்கள்

Page 42
72
ஐந்தாந்தரப் பூமிசாஸ்திரம்
இலங்கை இயற்கைத் தாவரம்
இ ஈரலிப்பான பிரதேசம் த முட பறறைகள் |
உஷ்ணவலயக்காரிகள்
ஈரலிப்பான் 22 ... மலைப் பிரதேசக ..
| பற் றாஸ்
---
நிறைந்த காடுகள் கா
ண ப் ப டு கின் ற ன. ஏனைய மலைப்பாங்கி லுள்ள அடர்த்தியற்ற காடுகள் திருத்தப்பட் டுத் தேயிலை, றப்பர் என்பன பயிரிடப்படு கின்றன. இலங்கை யில் ஐந்தில் ஒருபாகம் செய் கை பண் ண ப் படும் நிலமாகும். சே னைப் பயிர்ச் செய்கை ஊள வா மாகணத்தி லும், பொலநறுவை, புத்தளம், திசைமாற ஆதியா மிடங்களிலும் நடைபெறுகின்றது.
சேனைப் பயிர்ச்செய்கை | யெ ன் ப து அடர்த்தி யற்ற காடுகள் எரியூட் டிய ழி க் க ப் ப ட் டு க் குரக்கன், இ ஞ் சி, தினை, பூசினி, மிளகாய் போல்வன அந்நிலங்" க ளி ற் கலந்து பயிரிடப்படுதலாகும்.
'''''''''''''''''''', '''''''''''''
1 சிலாபம்
குருநாகல்
கொழும்பு
6 இரத்தினபும்
ஃபாந்தோட்டை
கொலி
16. இங்கையின் குடிசைக் கைத்தொழில்கள்:- / பித்தளை வேலை: கண்டி, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம்.
நெசவு வேலை: கொழும்பு, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், நெருப்புப்பெட்டித் தொழில்: கொழும்பு, காலி.
ஆபரண வேலை: கண்டி, கேகாலை, யாழ்ப்பாணம். செங்கல்லரிதல்: களனியா, மாத்தறை, கண்டி,யாழ்ப்பாணம். கயிறு திரித்தல்: காலி. தச்சுவேலை: மொறட்டுவா. சுருட்டுவேலை: யாழ்ப்பாணம். _ பன்ன வேலை: கழுத்துறை. கண்டி, யாழ்ப்பாணம்.
சீலைகட்குச் சாயமூட்டுதல்: யாழ்ப்பாணம்.

இலங்கைப் பூமிசாஸ்திரக் குறிப்புகள்.
73
17. இலங்கையின் ஏற்றுமதி இறக்குமதிப் பொருட்கள்:
இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்கள் வ ரி சைக் கிரமப்படி தேயிலை, ரப்பர், தென்னைப் பிரயோசனம், கறுவா, பாக்கு, கொக்கோ, காரீயம், புல்லெண்ணெய், மிளகு, புகையிலை என்பன வாகும்.
இறக்குமதிப் பொருட்கள்: த ா னி ய வ  ைக, மண் ணெண்ணெய், சீனி, குடிவகை, பருத்தியுடைகள், எந்திர
வகை ஆதியன்.
வி னா க் க ள் .
(1) இலங்கையின் எல்லைகள் எவை? (2) இலங்கையின் கூடிய நீள அகலங்களை யும், சுற்றளவையும், பரப்பையும் கூறுக. (3) இலங்கையின் இயற்கை அமைவைப்பற்றி ஓர் சிறு குறிப்பு எழுதுக (4) இலங்கையில் அதியுயர்ந்த மூன்று மலைகளும், நீளமான மூன்று ஆறுகளும், பரந்த மூன்று சமவெளிகளும் கூ றுக. (5) இலங்கை யில் வீசுங் காற்றுகளெவை? எம் மாதங்களில் வீசுகின்றன? இப்போது வீசுங் காற்று எது? (6) தென் மேல் 4பருவப்பெயர்ச்சிக் காற்றால் அதிக மழைபெறும் ஐந்து இடங்களும், வட கீழ்ப் பருப்பெயர்ச்சிக் காற்றால் அதிக மழைபெறும் ஐந்து இடங்களும் கூறுக. (7) இலங்கையில் 150 அங்குலத் துக்கு மேற்பட மழைபெறும் மூன்று இடங்களும், 50 அங்குலத்துக்கு உட்பட மழைபெறும் மூன்று இடங்களங் கூறி, மழைவீழ்ச்சி அள வுகளை யுந் தருக. (8) இலங்கையில்' மழை குறைவான இரு பிரிவுகள் எவை? மழை வீழ்ச்சிக் குறைவுக்குக் காரணமென்ன? இ ப் ப கு தி  ைய படத்தில் குறிக்க. (9) கொழும்பு; கண்டி, நுவரெலியா, மட்டக்களப்ப, அநுர தபரி, யாழ்ப்பாண ம் என்னு மிடங்களின் சுவாத்தியத்தை விபரிக்க. (10) இலங்கையின் குடிசனக் செறிவைக்காட்டும் படமொன்று தயாரிக்குக. (11) இலங்கையின், ஒவ்வோர் மாகாணத்திலும் குடிசனச் செறி வச் சராசரி சதுரமைலுக்கு இத்தனை யெனக் கூறு க. கீழ்மாகாணம், வடமத்திய மாகாணம் என்பவற்றின் குடி "சனச்செறிவு மிகக் குறைந்தும், மேல்மா காணம், மத்திய மாகாணம் என் -பவற்றில் அதிகங் கூடியும் இருக்கக் காரணமென்ன? (12) பின் வரும் பிரிவு களைக் குடி சனச் செறி வக்கேற்ப நி  ைரப்ப டு த் தி எழுதுக: அம்பாந் தோட்டை, புத்தளம், கொழும்பு, யாழ்ப்பாணம், குருநாகல், திரிகோண மலை, " மாவரெலியா, அநுரதபரி, கழுத்துறை, க ண் டி, இரத்தினபுரி. (13) இலங்கையின் பிரதான விளை பொருட்கள் ஐந்து கூறி, அவை ஒவ் வொன்றும் விளை வதற்கேற்ற சுவாத் தியத்தையும், விளை விக்கப்படும் இடம்
10

Page 43
74
ஐந்தாந்தரப் பூமிசாஸ்திரம்.
களையும் கூறுக. (14) இலங்கையில் உப்பு விளை விக்கப்படும் இடங்கள் எவை? (15) இலங்கைப் புற உருவப்படத்தில், தேயிலை விளை விக்கப்படும் இடங்கள், தென்னை வளரும் இடங்கள், புகையிலை செய்கை பண்ணப் படும் இடங்களை வெவ்வேறு வர்ணங்கொண்டு தீட்டுக. (16) இலங்கை யின் பிரதான கப்பற்பாதைகள் மூன்றைக் குறிப்பிட்டு அவை இணைத்துச் செல்லும் நாடுகளையும் ஒவ்வொன்றின து நீளத்தையுந் தருக. (17) இலங் கைப் புறஉருவப் படத்தில் கொழும்பு யாழ்ப்பாணப் புகையிரத வீ திபைக் குறித்து, அவ்வீதியிலுள்ள புகையிரதச் சந்திகள், பிரதான ஸ்தானங்கள் ஆதியவற்றையும் அடையாளம் பண் ணுக. (18) இலங்கையின் பிரதான புகையிரதவீ தி யா து? இதனைப் படத்திற் குறித்து விபரிக்குக (19) இலங் கையின் பிரதான வெட்டுவாய்க்கால்களெவை? (10) இலங்கையை எ த்தனை இயற்கைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம்? அவற்றிலொன்றை வி ப ரி க்க. (21) நீர் வசிக்கும் பிரிவைப்பற்றி ஓர் பூமிசாஸ்திரக் குறிப்பு எழுதுக. (22) இலங்கையின் தாவரச் செறிவைப்பற்றி ஒரு சிறு குறிப்பெழுதுக. (23) இலங்கையிலுள்ள சரித்திர விசேடம்பெற்ற பட்டினங்களெவை? ஒவ்வொன்றிலுமுள்ள விசேடமென்ன? (24) இ ல ங்  ைக யி ல் இந்துக் களுக்கு விசேடமான மூன்று புண்ணிய ள் தலங்களும், சிங்கள வர்க்கு விசேடமான மூன்று புரா தன கோயில்களும், கிறீஸ் தவர்க்கு விசேட மான ஒரு தேவாலயமும் கூறு க. ஒவ்வொன்றும் எங்குள்ளன? (25) இலங் கையில் நடைபெறும் ஐந்து குடிசைக் கைத்தொழில்கள் கூறி, அவை ஒவ்வொன்றும் நடைபெறும் இடங்களை யுங் கூறுக (26) சேனைப் பயிர்ச் செய்கை என்பது என்ன? இலங்கையில் சேனைப் பயிர்ச்செய்கை நடை பெறும் இடங்கள் எவை? (27) பின் வருவன சுகஸ் தானங்களாய்க் கருதப் படுவதேன்? நுவரெலியா, பண்டாரவளை, காங்கேசன் துறை, (28) இலங் கையின் பிர தான ஐந்து இறக்குமதிப் பொருட்களும், பிரதான ஐந்து ஏற்ற ம.' பொருட்களும் கூறுக. (26) யாழ்ப்பாணமிருந்து கொழும் புக்குச் சென்ற ஒரு புகையிரதப் பிரயாணத்தைப் பிரதான புகையிர சச் சந்திகள், பாதையோரமாயுள்ள நாட்டின் வளப்பம். சனங்களின் வாழ்க்கை முறை என்னுந் தலையங்கங்களின் கீழ் விபரிக்குக. (30) தேயிலைக் தோட்டக் கூலியாள், தென்னந்தோட்டக் கூலியாள், றப்பர் த் ேதாட்டக் கூலியாள், யாழ்ப்பாண த்து நெல் வேளாண்மை செய்வோன் என் போர். ஒவ்வொருவரினதும் சீவிய முறையை விபரிக்குக.
அம்பம்

உலக பூமிசாஸ்திரக் குறிப்புகள்.
1. பூமியின் வடிவமும் பாகுபாடும்:- பரந்த இப்பூவுலகமான து பந்துபோல் உருண்டை வடிவானது. மேற்பரப்பு மூன்றுபங்கு நீர்ப்பகுதியாக வும், ஒருபங்கு நிலப்பகுதியாகவும் அமைந்திருக்கின்றது. நிலப்பரப்பு ஐந்து பெரும் கண்டங்களாக வகுக்கப்பட் டுள்ளன அவையாவன: ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா என்பனவாகும். நீர்ப் பகுதியும் ஐந்து பெருஞ் சமுத்திரங்களாக வகுக்கப் பட்டுள்ளன. அவையாவன: அத்திலாந்திக் சமுத்திரம் பஸிபிக் சமுத்திரம், இந்து சமுத்திரம், வட சமுத்திரம்,
• தென் சமுத்திரம் என்பன வாகும்.
2. பூமியின் து அள வு கள்:- வட, தென் துருவங்களுக்கிடைப்பட்ட பூமியின து விட்டம் 7900 மை லும், பூமத்திய ரேகைக்கிடைப்பட்ட விட்டம் 7926 மை லுமாகும், மேலும் பூமி யி ன து சுற்றளவு 24800 மைலும், விஸ்தீரணம் 19, 70, 00, 000 சதுரமைல் வரையிலுமாகும்.
3. பூமியின் அசைவுகள்: - எல்லையற்ற பரந்த ஆகாய வெளியில் பூமி பிற கிரகங் இளின் கவர்ச்சியால் அந்தரத்தில் நிலைபெற்றுச் சுழன்று கொண்டிருக்கின்றது. இது தன் அச்சில் 24 மணித்தியா லத்திற்கொருமுறை சுழலுவகோடு 3653 நாட்களுக்கொரு முறை சூரியனையும் வலம் வருகிறது. பூமி தன் அச்சி

Page 44
76
ஐந்தாந்தரப் பூமிசாஸ்திரம்.
சுழலுவது காரணமாகப் பகல், இரவு என்பனவும், சூரியனைச் சுற்றி வலம் வருவது ! காரணமாக - மாரி, கோடை முதலிய பருவகாலங்களும் உண்டாகின்றன.
4. காற்றுகள் உண்டாகும் விதம் பூமியின் மேற்பரப்பை மூடிப் பவன மண்டலம் வியா பித்திருக்கிறது. சூரியன து உஷ்ணம் எவ்விடத்தும் ஒரே சமமாய் இருப்பதில்லை. சூரியன து காய்வு அதிகமாயிருக்கு
தெ. மே. எ. வி. காற்றுக்கள்
7
பவன அமுக்கம் எட்ட // / ! ! ! ! ! ////
வ. கி. வி. காற்றுக்கள்
பவன அமுக்கம் குறைவு . * * * * * * * * * * *
தெ. கி. வி. காற்றுக்கள் | * * * * * * * * * * */
15 பனை அமுக க ம் கூட
ܛܖ ܜܠ ܔܔ ܔܔ ܛ ܕ ܠ ܥܠ ܕ ܠ
வ. மே. எ வி. காற்றுக்கள்
ܛ ܡ ܝ ܠ ܥ ܠ ܥ
மிடத்தில் பவனம் விரிந்து இலேசாகி மேலெழுகின்றது. இந்த இடத்தை நிரப்புவதற்குக் குளிர்ந்த பிரதேசத்திலி ருந்து குளிர்மையான பாரமுள்ள பவனம் ஓடி வருகின் றது. இவ்வாறு பவன த்தில் ஏற்படும் அசைவை நாம் காற்று என்கிறோம்.
5. உலகத்தில் வீசும் காற்றுகள் கடற்காற்று, தரைக்காற்று என்பனவும், ப ரு வ ப் பெயர்ச்சிக்காற்றுகளும், முறைமைக்காற்று (வியாபாரக் (காற்று), எதிர் முறைமைக் காற்று என்பன வும், மேல் 5ாற்றுகளும் (Westerlies) உலகத்தில் வீசும் பிரதான
''ற்றுகளாகும்.

77
உலக பூமிசாஸ்திரக் குறிப்புகள். இலங்கைத்தீவு பருவப்பெயர்ச்சிக்காற்று வ ல ய த் தைச் சேர்ந்தது கு றி த் த பருவகாலங்களில் வீ சு ம் முறைமைபற்றிப் பருவப்பெயர்ச்சிக் காற்றுகளெனப் பெயர் பெற்றன. இந்தியா இந்துசீனா, சீனா, ஜப்பான், பிலிப்பைன் தீவுகள் என்பனவும் பருவப்பெயர்ச்சிக் காற்றுப் பிரதேசங்களாகும்.
6. மழை பெய்வதன் காரணம்
> பூமியின் மேற்பரப்பிலுள்ள சமுத்திரம், ஆறு, வாவி என்பவற்றிலுள்ள நீரான து சூரிய  ெவ ப் ப ங் காரணமாக நீராவியாகி மேலெழுகின் றது. இந்த நீரா விச் சேர்க்கையையே முகில் என்கிறோம். குளிர்ந்த பவ னம் தாக்குதலாலும், மலைச் சாரல்களிற் படிந்து உயரு வதாலும் முகிற் கூட்டங்களிலுள்ள நீரணுக்கள் பின் னரும் நீர்த்துளிகளாகமாறிப் பூமியை வந்தடைகின்றன. இதனை நாம் மழை என்கிறோம்.
மழை வீழ்ச்சியின் அளவை மாறுபடுத்தும் ஏதுக்கள்
கடலின் அண் மை சேய்மை, காற்று வீசுந் திசைகள். பவனத்தில் நீர்ச்செறிவு, மலைச்சாரலிற் பவன த்தாக்கம் என்பன போன்ற ஏதுக்கள் பூமியின் மேற்பரப்பில் மழை வீழ்ச்சியினள ைவ மாறுபடுத்துகின்றன.
7. உலக மழை வீழ்ச்சி
அமேசன் நதிச் சூழலும், கொங்கோ நதிப் படுக்கை யும், இமயமலையின் தென் சரிவும் உலகத்தில் மிக 'அதிக மழைபெறும் பிரதேசங்களாகும். காசிக்குன்றுகளைச் சேர்ந்த' சி ராப்பூஞ்சியில் வருடம் 500 அங்குலம்வரை மழை வருஷிக்கின்றது.
மேற்குறித்த இடங்களுக்கு அ டு த த ப டி ய ா க க் குவின்லந்து, நேத்தால், பி ஜே சி ல் என்னுமிடங்களும் பிரான்ஸ், பர்மா, ஜப்பான், சீனா என் னுந் தேசங்க ளின் சில ' பாகமும், கனடா, அமெரிக்க ஐக்கியமாகா. ணம் ஆதியனவும் நல்ல மழைவீழ்ச்சி உடையன வாகும் ?

Page 45
78
ஐந்தாந்தரப் பூமிசாஸ்திரம். உலகத்தில் மிகக் குறைந்த மழைபெறுமிடங்கள்: சகாரா, கலகாரி, அரேபியா, ரஜபுத்தானா, கோபி, அற்ற
வருடமழைவீழ்ச்சி
50' க்கு மேல்
காமா, மத்திய அவுஸ்திரேலியா என்னும் பாலைவனங் களும், தூ ந் திரபூமிப் பிரதேசங்களுமாகும். இந்த இடங் களிலெல்லாம் வருடமுழுமையும் 10 அங்குலத்திற்கு உட் படவே மழைபெய்கிறது.
8. பிரதான மலைகள், ஆறுகள், சமவெளிகள், பாலைவனங்கள்.
A. மலைகள்: (1) இமய மலைத்தொடர் - ஆசியாக்கண்டத்தில் 29000!
- உயரம். (2) -ெக்ஸ்ே மலைத்தொடர் - வட அமெரிக்காவின் மேற்
குப் பகுதியில். (3) அந்தீஸ் மலைத்தொடர் - தென் அமெரிக்காவின்
மேற்குப் பகுதியில். (4) அல்ப்ஸ்மலை - ஐரோப்பாவில் இத்தாலியின் வடபகுதி
யில். (5) அற்லஸ் மலைத்தொடர் ஆபிரிக்காவின் வடமேல்
பாகத்தில், B, ஆறுகள் :
மிதறி - மிசிசிப்பி: வட அமெரிக்காவிலுள்ள இந்நதி நீளத - தில் முதன்மையுடையது, மொத்தம் 4000) மைலுக்கு மேற்
பட நீளமுடையது.

உலக பூமிசாஸ்திரக் குறிப்புகள்.
79
நைல் நதி- ஆபிரிக்காவிலுள்ள து; எகிப்துதேசத்தின் செழிப்பிற்குக் காரணமாயுள்ள து; 4000 மைல்வரை நீள முடையது. முதற் கூறப்பட்டது மிசூறி, மி சி சி ப் பி என்பன இரு ஆறுகளின் சேர்க்கையாலமைவதால், நைல் நதியையே நீளத்தில் முதன்மையானதெனக்கொள் வாருமுளர். நைல் நதிக் கரைப் பட்டினங்கள் அலெக் சாந்திரியா, கைரோ, அஸ்வான், கார்டூம் என்பனவா
கும்.
அமேசன் - தென் அமெரிக்காவிலுள்ள து; பல கிளை கள் , பொருந்தப்பெற்றகாய் அ கலத்தில் முதன்மை பெற்றது; 3000 மைல்வரை நீளமுடையது
கொங்கோநதி - ஆபிரிக்காவிலுள்ள து; 3000 மைல்வரை நீளமுடையது.
நைகர்நதி- ஆபிரிக்காவிலுள்ள து; 3600 மைல்வரை நீளம் உடையது.
கங்கை- ஆசியாக்கண்டத்தில் இந்தியாவின் வடபா கத்தில் உள்ள து; 1200 மைல்வரை நீளம் பொருந்தியது; இந்துக்களுக்குப் புண்ணிய தீர்த்தமாய் அமைந்துள்ள து. கங்கை நதிக் கரையோரப் பட்டினங்கள் டெல்கி, அக்ரா, அலகபாத், காசி, பற்னா, கல்கத்தா ஆதியன.
யாங் சிக்யாங்- ஆசியாக் கண்டத்தில் சீனா தேசத்தினு டாகப் பாய்வது. 2500 மைல்வரை நீளமுடையது.
C. சமவெளிகள்: ஆசியா - ஐரோப்பாக் கண்டம் - சேர்ந்த றஷ்யாச் சமவெளி, வட அமெரிக்க சம்... கள், தென் அமெரிக்க சமவெளிகள், ஆபிரிக்காவின் 'வெல்ட்' என்னும் புல்வெளி, அவுஸ்திரேலிய 'டவுன்ஸ்”
என்பன உலகத்துப் பரந்த சமவெளிகளாகும்.
D. பெரும் பாலைவனங்கள் - ஆபிரிக்காவிலுள்ள சகாரா, கலகாரி என்பனவும், ஆசியாவிலுள்ள அரேபியா வனாந் தரமும், அவுஸ்திரேலியாவின் மத்தியபாகமும், தென் அமெரிக்காவிலுள்ள அற்றகாமாவும் பெரும் உஷ்ணப் பாலைவனங்களாகும்.
வட அமெரிக்காவின் தண்டராஸ், தென் அமெரிக் காவிலுள்ள பற்றகோனியா, ஆசியாவின் வடபாகம் என் பன குளிர் வனாந்தரங்களாகும்,

Page 46
80
ஐந்தாந்தரப் பூமிசாஸ்திரம். 9. உலகத்தின் காட்டுப் பிரதே சங்களும் புல்வெளிகளும்
A. உஷ்ண வலயக் காடுகள்: நல்ல அனலும் ஈரலிப்பும் பொருந்திய உஷ்ண வலயப் பகுதிகளில் க ரு ங் க ா லி, முதிரை, பாலை போன்ற உயரியமரங்கள் நிறைந்த பெரிய காடுகள் காணப்படுகின் றன. இவற்றுள் அமேசன் நதிப் பள்ளத்தாக்கு, கொங்கோ நதிப் பள்ளத்தாக்கு, மலாயாக் காடு, வட அவுஸ்திரேலிய காடு, மத்திய அமெரிக்காக்காடு (மெச்சிக்கோப் பகுதி), கிழக்காபிரிக்காக் காடுகள் என் பன விசேடம் பெற்றவை.
B. மத்தியவலயக் காடுகள்: கர்க்கடகரேகைக்கு வடக்கே யும், மகரரேகைக்குத் தெற்கேயும், வருட மழைவீழ்ச்சி 26 அங்குலத்திற்கு மேற்பட்ட சூடான பி ர தே சங் களில் அகன்ற இலைகளையுடைய மரங்கள் நிறைந்தகாடு கள் காணப்படுகின்றன. மேல்மத்திய ஐரோப்பா, வட அமெரிக்காவின் கீழ்ப்பாகம், ஆசியாவின் கீழ்ப்பாகம், அவுஸ்திரேலியாவின் கீழ்ப்பாகம், நியூசிலாந்து என்னு மிடங்களில் இத்தகைய காடுகள் காணப்படுகின்றன.
C. சீதள வலய ஊசியிலைக் காடுகள் : சூ ரி ய ன து மிகச் சாய்ந்த கிரணங்கள் படிகின்ற சீதளவலயப்பகுதிகளா கிய கனடா, நோர்வே, சுவீடன், ரஷ்யா, சைபீரியா என் னுமிடங்களில் ஊசிபோன் ற இ லை க ளை யு டைய நெடிய மரங்கள் நிறைந்த காடுகள் காணப்படுகின் றன. காகிதஞ் செய்வதற்கும் நெருப்புக்குச்சி செய்வதற்கும்
வம்மரங்கள் மிகவும் உதவுகின்றன.
2. உஷ்ண வலயப் புல்வெளிகள்: கர்க்கடகரேகைக்கும் மகரரேகைக்கும் இடைப் பட்ட உஷ்ண வலயப்பகுதி களில் - குறைந்த மழை பெறுமிடங்களில் - பரந்த புல் வெளிகள் காணப்படுகின் றன. ஆபிரிக்காவில் சூடான் பிரதேசத்திலுள்ள ச வ னா ஸ் புல்வெளியும், தென் அமெரிக்காவிலுள்ள பம்பாஸ் புல்வெளியும், அவுஸ் தி ரேலியாவிலுள்ள டவுன்ஸ் புல்வெளியும் இப்பகுப்பின் வாகும்.
E. மத்திம வலயப் புல்வெளிகள் : கர்க்கடரேகைக்கு வடக் கேயும், மகரரேகைக்குத் தெற்கேயுமுள்ள மத்திமவலயங் மகளில், ஆயிரக்கணக்கான ச து ர மை ல் விஸ்தீரண 'மள்ள பரந்த புல்வெளிகள் உள்ளன. வட அமெரிக்கா

2ார்
உலக பூமிசாஸ்திரக் குறிப்புகள்.
தூர்தரபிரதேசம் 2 உரபலிப்பூம். இள சியிலேக்காடு மத்திம வய அகன்ற இவக்காடு. மந் திம வலையப் புல்வெளிகள். மத்திம வலையப் பாலை வனங்கள். உய ன வ னைப் பிரலை வணங்க " 1) ஸ்வாறுமைப் புல் வெளிகள்,
எஸ் ன வ லை யரக் காடு உ பருவக்கார்னும் பிரதே சங்க'
10
( உல க இயற்கை வலயங்கள் )
18

Page 47
82
ஐந்தாந்தரப் பூமிசாஸ்திரம். விலுள்ள பிறெயறிஸ், தென் அமெரிக்காவிலுள்ள பம்பாஸ் புல்வெளியின் ஒரு பகுதி, தென் ஆபிரிக்காவி லுள்ள வெல்ட், றஷ்யாவிலும் மத்திய ஆசியாவிலுமுள்ள ஸ்ரெப்பீஸ் என்பன மத்தியவலயப் புல்வெளிகளாகும். அவுஸ்திரேலிய புல்வெளியின் தென்பகுதியும் இப்பகுப் பின தே.
10. உலகின் விளை பொருட்கள்:- கோதுமை: உலகத்து மக்களின் பெரும்பகுதியினர்க் குப் பிரதான உணவுப் பொருளாய் அமைந்திருப்பது கோதுமையாகும் இது மத்திம வலயத்தில் களிப்பாங்கா னதும், சிறிதுகடினமான தும், ம த் தி ம ம ா ன சூரிய வெளிச்சம் அனல், ஈரலிப்பு என் பன பொருந்தியதுமான தரையில் நன்கு விருத்தியாகின் றது. கதிர் மு ற் றி ப் பழுக்குங் காலத்தில் வரண்ட அனலான சுவாத்தியம் வேண்டும். கனடா, ரஷ்யா, இந்தியா, அவுஸ்திரேலியா, ஆர்ஜென்ரைனா என்னுமிடங்களில் கோதுமை அதிக மாக விளைவிக்கப்பட்டுப் பிற இடங்களுக்கு ஏற்றுமதி யாகிறது.
நெல்: உஷ்ணவலயப் பிரதேசங்களில் உள்ள பதிந்த தரைகளில் நல்ல நீர்த்தேக்கம் பொருந்திய சமவெளி களில் நெல் பயிராக்கப்படுகின்றது. நெல் நன்கு செழித்து வளர்வதற்கு முளைக்கும் பருவத்தில் நிலத்தில் நல்ல ஈர லி ப்பும், வளருங்காலத்தில் ப யி ரி ன் அடிப்பாகத்தை இறைத்து நிற்கக்கூடிய ஜலத்தேக்கமும், கதிர்முற்றிப்
குங்காலத்துப் போதிய வரட்சியுந் தேவை. இந்தியா, > கு, சீயம், ஜாவா, ஜப்பான், இந்துசீனா, ஐக்கிய அமெரிக்கா ஆதியாமிடங்களில் நெல் விளைவிக்கப்பெறு கின்றது.
கனிதருமரங்கள்: மத்திமவலயத்தில் கோடை அன லும். மாரிமழையும் பொருந்திய மத்தித்தரைக் கடலைச் சூழ்ந் துள்ள பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், போர்த்துக்கல்' போன் நாடுகளிலும், இதே சுவாத்தியம் (மத்திதகரைக் கடற் சுவாத்தியம்) அமைந்த நாடுகளான கலிபோர் ணியா, சிசிலி, தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த கேப் கலனி, தென் கீழ் அவுஸ்திரேலியா, தஸ்மானியா ஆதியாம் "நாடுகளிலும் திராட்சை, அப்பிள், மஞ்சள் தோடை
போன்ற கனிதரு மரங்கள் நன்கு பயிராகின்றன.

உலக பூமிசாஸ்திரக் குறிப்புகள்.
83
பருத்தி: உஷ்ண வலயப் பகுதியில், போதிய அன லும் மட்டான ஈரலிப்பும் பொருந்திய சுவாத்தியத்தில், கரு மண் ணும் உப்புச் சத்தும் பொருந்திய தரையில் பருத் திச் செடி செழித்து வளரும். அமெரிக்கா ஐக்கியமாகா ணம், இந்தியா, எகிப்து, சீனா, பிறேசில் ஆதியன பருத்தி விளைவிக்கப்படுந் தேசங்களாகும்.
தேயிலை: உஷ்ண வலயப்பகுதியில், கடல்மட்டத்திற்கு மேல் 2000 அடி தொடக்கம் 4000 அடிவரை உ ய ர் ந் த மலைச் சாரல்களில், வருடத்தில் 80 அங்குலத்துக்கு மேற் புட எக்காலமும் மழை பெய்யும் பிரதேசங்களில் தேயி லைச்செடி நன்கு விருத்தியாகும். இந்தியா, சீனா, இலங்கை, சுமாத்திரா என்னுமிடங்களில் தேயிலை விளைவிக்கப் பட்டுப் பிற நாடுகளுக்கு அனுப்பப்படுகின் றது.
இறப்பர்: உஷ்ண, மத்திம வுஷ்ண வலயங்களில் விருத் தியாகின்ற மார்ச்சனி மரங்களிலிருந்து றப்பர்ப் பால் வடிக்கப்பெறுகின்றது. ஏராளமான றப்பர் மரங்கள் அமேசன் நதிக் - காடுகளிற் க ா ண ப் ப டு கி ன் ற ன . ஆபிரிக்கா, இலங்கை, மலாயா ஆர்ச்சிப்பலாக்கோ என் லுமிடங்களிலும் அதிகமான
ரப்பர்த் தோட்டங்கள் உண்டாக்கப்பட்டிருக்கின்றன.
தென்னை: உஷ்ண வலயப் பிரிவுகளில், கடற்க்ரையை, அடுத்துள்ள மணற்பாங்கான இட ங் க ளில் தென்னை விருத்தியாகின்றது. இலங்கை, தென் இந்தியா, மல."" தேசம், மேற்கிந்தியதீவுகள் ஆதியாமிடங்களில் சென்Fை விருத்தியாக்கப்படுகின்றது.
புகையிலை : உஷ்ண, மத்திம வலயங்களில் விருத்தியா கின்ற் ஓர்வகைச் செடியாகும். புகையிலைச் செடியின் ஆதிபிறப்பிடம் அமெரிக்காவாகும். அமெரிக்க ஐக்கிய, மாகாணங்களுக்கு அடுத்தபடியாக இந்தியா, ற ஷ் ய ா, அவுஸ்திரிய கங்கேரி என்னுமிடங்களில் புகையிலை விளை விக்கப்படுகின்றது.
கரும் பு: உஷ்ணவலயப் பகுதிகளில் நல்ல அன லு ஏராள மான நீர்ச்செறிவுமுள்ள செழித்த த  ைர க ளி'

Page 48
84
ஐந்தாந்தரப் பூமிசாஸ்திரம். கரும்பு வளரும். இந்தியா, ஜாவா, சீனா, மேற்கிந்திய தீவுகள் ஆதிய நாடுகள் கரும்புச் செய்கைக்குப் பேர்போ னவை. பிறநாடுகளுக்குச் சீனி அனுப்பும் நாடுகள் ஐக்கி யமாகாணம், இந்தியா, சீனா, ஜப்பான், பெரிய பிரித்தா னியா, ஒல்லாந்து, சுவிற்சலாந்து ஆதியனவாகும்.
11. உலகின் கைத் தொழிற் பொருட்களும் பிறவும்:-
கம்பளி: கம்பளிப்புடவை நெசவு செய்வதற்குதவும் கம்பளி உரோமம் ஒரு சிறந்த வியாபாரப் பொருளாகும். மத்திம வலயப் புல்வெளிகளில் மந்தை மந்தையாய் வளர்க்கப்படும் ஓர்வகைச் செம்மறி ஆட்டிலிருந்து - கம் பளி உரோமம் கத்தரிக்கப்பெறுகின்றது. கம்பளியா டுகள் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா, ஆர்ஜென்ரைனா, இந்தியா ஆதியாமிடங்களில் அதிகமாக வளர்க்கப்படுகின்றன. இங்கிலாந்திலுள்ள யோக்ஷயர் மாகாணத்திலும், ஜெர்மனி, பெல்சியம், பிரான்ஸ், தென் னமெரிக்கா ஆதியாமிடங்களிகலும் கம்பளி உடைகள் நெய்யப்படுகின் றன.
பட்டு: நம் நாட்டிற் காணப்படும் வண்ணாத்திப்பூச்சி இனத்தைச் சேர்ந்த ஓர்வகைப் பூச்சி பட்டு நூலை உதவு தின்றது. முசுக்கட்டைச் செடியு ள்ள இடங்களில் பட்டுப்பூச்சி அதிகமாகவுள. ஆதி நாட்க ளி ல் பட்டுப் பூச்சி வளர்ப்பும், பட்டு நெய்தலும் சீனருக்கே தெரிந் சிதந்தன. அதிக ஊ திபந்தரும் இத்தொழிலில் ஜப்பான், இத்தாலி, இந்தியா, பிரான்ஸ் ஆதிய நாடுகளும் தற் 'ெபா - ஈடுபட்டிருக்கின்றன.
தோல்: பாதரட்சைகள் செய்வதற்கும், மற்றும் பல உபயோகங்கட்கும் மிருகங்களின் தோல் உதவுகின்றது. சைபீரியா, ஆசியா, ஆபிரிக்கா ஆதியாம் நாடுகளும், மற்றும் மந்தை வளர்க்கப்பெறும் பிரதேச ங் க ளும் 1 உலகுக்கு வேண்டிய தோலை உதவுகின்றன.
காகிதம்: பலவகை மரங்களின் சோத்திகளிலிருந்தும் பழைய பருத்தியுடை, கம்பளியுடை என்பவற்றிலிருந் தும் காகிதம் தயாரிக்கப்படுகின்றது. கா டு க ளி ன் *ண்மை காகிதச் செய்கைக்குச் சிறந்த சாதனமாகும்.

உலகப் பூமிசாஸ்திரக் குறிப்புகள்.
85 அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா, ஐக்கிய இராச் சியம், ஜெர்மனி, ஒல்லாந்து, பின்லாந்து முதலியநாடுகள் காகிதத் தயாரிப்புக்குப் பெயர்பெற்றவை. ஜப்பான் இந்தியா ஆதியாமிடங்களில் இப்பொ ழு து கா கி தச் செய்கை நடைபெறுகின்றது.
மரம்: கட்டிடநிருமாணிப்புக்கும், தளபாடச் செய் கைக்கும், புகையிரதப்பாதைகளுக்கும் மரம் (Timber) வேண்டிய பொருளாகும். மேலும்  ெப ன் சி ல் செய்வ தற்கும் மரம் வேண்டியதாகும். கனடா, அமெ ரி க் க ஐக்திய மாகாணங்கள், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா ஆதியாமிடங்களிலிருந்து ஏராளமான மரங்கள் பெறப்படுகின்றன.
பாற்கட்டி, வெண்ணெய் ஆதியன: இ  ைவ க ளு ம் பிர தான வியாபாரப் பொருள்களாகும். அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள், நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, டென் மார்க் ஆதியன இப்பொருள்களுக்கு விசேடம் பெற் றவை.
மீன்: வடகடலின் டொஹர் பாங்க் (Dogger Bank) என்னுமிடத்தில் சுறா முதலிய மீன்களும், நியூபவுண் லாந்தில் கொட்மீனும், பெரிய பிரித்தானியா, அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள், றஷ்யா, ஜப் பான், கனடா, பிரான்ஸ் முதலிய நாடுகளின் க  ைர க ளி ல் மற்றும் மீனினங்களும் ஏராளமாயுள்.
நிலக்கரி: எந்திர இய க் க த் து க் கும், மற்றும் பல தேவைகட்கும், எரியூட்டுவதற்குமுதவும் நில க் க ரி க் கு விசேடம் பெற்ற நாடுகள் அமெரிக்க ஐக்கிய மாகாணம், பெரிய பிரித்தானியா, ஜெர்மனி என்னும் மூன்றுமாகும். ஜிபிறோல்றர், ஏடின், மால்ற்றா, கொழும்பு, சிங்கப்பூர் என்னுந் துறைகளில் நிலக்கரி சேமிக்கப்பட்டு அங்கு வந்து தங்குங் கப்பல்களுக்கு உதவப்படுகின்றது.
இரும்பு: சுரங்கப் பொருட்களுள் விசேடம் பெற்றது இரும்பாகும். அமெரிக்க ஐக்கிய மாகாணம், பெரியபிரித் கானியா, ஜெர்மனி என்னும் மூன்று நாடுகளிலும் இரும்பு ஏராளமாய் உண்டு. இரும்பும், நிலக்கரியும் ஒ

Page 49
86
ஐந்தாந்தரப் பூமிசாஸ்திரம்.
மித்துச் சேர்ந்துள்ள இந்நாடுகளிலேயே இரும்புக் கைத் தொழில் அதிகமாக நடைபெறுகின்றது.
பெற்றோல்: எந்திர இயக்கத்திற்கும், விளக்கு எரிப் ப தற்கும் உதவும் பெற்றோல், மண்ணெண்ணெய் முதலிய கனிஜ் எண்ணெய்கள் சுமாத்திரா, பர்மா, பார்சியா, றஷ்யா, அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள் ஆதியாமிடங் களிற் காணப்படுகின்றன.
பொன்: பஞ்ச உலோகங்களில் மிகவும் விலை உயர்ந் ததும், ஆபரணங்கள் செய்வதற்குதவுவதுமான பொன் யூரல்மலைத் தொடர், யோகானஸ்பேர்க் (தெ, ஆ!') , அவுஸ்திரேலியா, கனடாவிலுள்ள யூகன் பிரிவு (Youicon) ஆதியாமிடங்களிலுள்ள சுரங்கங்களிலிருந்து பெறப்படு கின் றது.
சது

இலங்கை வியாபாரம்.
1. பிரதான இறக்குமதிப் பொருட்களும் அவற் றை
அனுப்பும் நாடுகளும்.
அரிசி (நெல்லு) - இந்தியா, பர்மா, சீயம், சீனா. கறிச்சரக்கு வகைகள் - இந்தியா, பிரான்ஸ், ஜாவா, எகிப்து,
தொடுவாய் நாடுகள். பால் உணவுகள்-பெரியபிரித்தானியா, அவுஸ்திரேலியா,
அமெரிக்க ஐக்கிய நாடுகள் , டென்மார்க்,
ஒல்லாந்து. தகரமீன்-ஜப்பான், அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா,
நோர்வே கோதுமை மா-இந்தியா, அவுஸ்திரேலியா. குடிவகை-பெரியபிரித்தானியா, ஒல்லாந்து, பிரான்ஸ்,
ஜப்பான். பழங்கள் -அவுஸ்திரேலியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்,
ஸ்பானியா, ஜப்பான், தென் ஆபிரிக்கா. கண்ணாடிச் சாமான்கள் - ஜப்பான், பெரியபிரித்தானியா,
ஜெர்மனி. இருப்புச் சாமான்கள் - பெரியபிரித்தானியா, ஜெர் ம னி,
பெல்சியம், ஜப்பான். சீமெந்து -ஜப்பான், பெரியபிரித்தானியா, இத்தாலி காகிதம்-நோர்வே, கனடா, பெரியபிரித்தானியா,சுட், ன். றப்பர் பொருட்கள் - பெரியபிரித்தானியா, அமெரிக்க ஐக்கிய
நாடுகள், ஜப்பான்.
பட்டு-ஜப்பான், சீனா, கொங்கொங், இந்தியா, பிரான்ஸ். பருத்தி உடைகள்--ஜப்பான், இந்தியா, பெரியபிரித்தானியா. பெற்றோல், மண்ணெண்ணெய் - சுமத்திரா, பாரசீகம்,
அமெரிக்க ஐக்கிய நாடுகள், பர்மா. மரம்-சீயம், பர்மா, அவுஸ்திரேலியா. கரி-இந்தியா, தென் ஆபிரிக்கா, பெரியபிரித்தானியா இரசாயனப் பொருட்கள்-பெரியபிரித்தானியா, ஜெர்மனி.

Page 50
2. பிரதான ஏற்றுமதிப் பொருட்களும் அவற்றை
வாங்கும் நாடுகளும்.
---------
தேயிலை-பெரிய பிரித்தானியா, அவுஸ்திரேலியா, அமெ
ரிக்கா, நியூசிலாந்து. றப்பர்-பெரியபிரித்தானியா, அமெரிக்க ஐக்கியநாடுகள்,
ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஒல்லாந்து,
அவுஸ்திரேலியா. தென் னைப்பிரயோசனம்-- இந்தியா, பெரியபிரித்தானியா, ஜெர்
மனி, எகிப்து, இத்தாலி, ஒல்லாந்து, ஸ்பானியா,
நோர்வே, டென்மார்க். கொக்கோ- பிலிப்பைன் தீவுகள், பெரியபிரித்தானியா,
கனடா, மெச்சிக்கோ..
கறுவா- ஸ்பானியா, ஜெர்மனி, அமெரிக்க ஐக்கியநாடுகள்,
பெரியபிரித்தானியா, மெச்சிக்கோ.
காரீயம்-பெரியபிரித்தானியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்,
ஜப்பான், ஜெர்மனி.
புல்லெண்ணெய்-பெரியபிரித்தானியா, அமெரிக்க ஐக்கிய
நாடுகள், ஜெர்மனி, அவுஸ்திரேலியா. (ஏலம்- அமெரிக்க ஐக்கியநாடுகள், டென்மார்க், பெரிய
பிரித்தானியா, ஏடின், எகிப்து. கையிலை- இந்தியா, பெரியபிரித்தானியா. பாக்கு - இந்தியா, மாலைதீவு.


Page 51
PIDLe
THE
(உலக பூமிசா for 8, J. S. C.,
V. SIVAK Part I & II (Complete
Pages-with numer tions and Past Exar
do Part I Rs. 4-00.
1 was struck by the a have been spent in produ
Also available by the s
Tamil Algebra Part I & II - Tamil Geometry Part I & Tamil Arithmetic (Urle a
all för 6 to G. ( 'By bringing out thes Complaints are made C I am of opinion Mr. Si a valuable service to our
AEG
PUBL NORTH CEYLON
MAIN STREET,
Printed at Kalapava

entantenemise
VORLD
ஸ்திர விளக்கம்) G. C. E. Prep. etc. by EOLUNTHU Edition) 80 Lessons -, 602 Pous Exercises, Illustran. Papers Price Rs. 7-75
Part II Rs. 4-00
mount of labour that must ucing this book'
--S. Ambihaipahan rincipal, Vaidyswara Vidyalaya, Jaffna,
same author.- | Approved
ns. 3-00 II Approved
Rs. 3-00 561ofil ) Approved
Rs. 3-50 . E. Prep. classes e books at this time whern E shortage of Tarnil Texts, vakolunthu has rendered country.
---N. James B. A. Principal, St. Joseph's, Mathagal.
ISHERS:
V BOOK-DEPOT.. -- POINT PEDRO.
Kemam May to use
eram Press, Point Pedro.