கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விலங்கியல் க.பொ.த. (உ/த)

Page 1
- உயர் தர 6.
ஜீ.சீ.ஈ. உயர்தர
Advanced Le
பகு;
முள்ளந்தண்டில்
K. சங்கரஐ

விலங் கியல்
( வகுப்பு பாடநூல்
evel Zoology
தி 1
லா விலங்குகள்
யர் B.Sc.

Page 2
உயர் தர தாவர வி யல் 1
* Advanced Level Botany
தாழ்வகைத் தாவரங்கள் (Lower plants ) இமினுேசுப்பெருங்கள் ' (Gymnosperms) அங்கியோசுப்பெருகள் (Angiosperms )
ஆசிரியர்கள் : K. சங்கர ஐயர் B. Sc. C. இராமநாதன் B, Sc. H. W. பெரேரா B. Sc.
விலை ரூபா 7.50
விரைவில் வெளிவருகிறது
(அச்சில்)
உயர் தர விலங் கியல்
பகுதி 11 குழியவியல் - பிறபுரிமையியல் - கூர்ப்பு (Cytology. Genetics, Evolution )
ஆசிரியர்கள் : K. சங்கர ஐயர் B.Sc. C. இராமநாதன் B.Sc. 5. செல்வநாயகம் B.SC.
வெளியிடுவோர் :
விஜயலட்சுமி புத்தகசாலை
248, காலி வீதி, கொழும்பு-6.

JIk best Confali muth
(ouqவட்டி
Kalai cheli. Salalngam
11 8மய
20ு*8*
அன்பளிப்பு வாழ் மாணவர் பிரதிநிதி க ள்
குழு
CHUNDIKULY GIRE:- * -
3AFFN h,
- * - * {}
C., ITY *.
3. **: A A
'' *NYA :
(2!
!!.. > * * *

Page 3
ਨੇ ਵuਚਾi JaS 4 iwਦੀ ।
53 ਤੇ 4 5 ਹੋ
S3Sto e
}
ਉ ॥ w , , ( # ਮਾਂ ਦੇ ਦੀ ਸ
ਆਈ ਦੀ

9.200-2010
உயர் தர விலங்கியல்
ஜீ. 8. ஈ. உயர்தர வகுப்பு பாடநூல்
Advanced Level Zoology
பகுதி 1 முள்ளந்தண்டில்லா விலங்குகள்
ஆசிரியர் : K. சங்கரஐயர் B.Sc.
வெளியிடுவோர்;
விஜயலட்சுமி புத்தகசாலை 248, காலி வீதி - வெள்ளவத்தை - கொழும்பு-6.
தொலைபேசி: 88 930

Page 4
முதற் பதிப்பு ஒக்டோபர் 1967
பதிப்புரிமை விற்கப்பட்டது
விலை ரூபா 6.00
சரி ரட்கே
அச்சிட்டோர் : குமரன் அச்சகம் 201, டாம் வீதி கொழும்பு - 12

முகவுரை
விஞ்ஞான பாடங்கள் யாவும் கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்புகளில் தமிழில் கற்பிக்க ஆரம்பித்து மூன்று வருடங்களாகியும் விலங்கியல் பாடத்திட்டத்திற்குரிய நூல் ஒன்றேனும் இதுவரை வெளி வரவில்லை யென்பது எல்லோரும் அறிந்ததே. விலங்கியல் கற்பிக்கும் ஆசிரியர்களும் விலங்கியல் கற்கும் மாணவர்களும் இதனால் பெரும் இன் னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இக்குறையைத் தீர்ப்பதற்கு நாம் அரசாங்கத்தை மட்டும் நம்பியிராமல் எம்மாலான முயற்சியைச் செய்ய வேண்டிய நிலையிலேயுள்ளோம் என்பது கூறாமலே விளங்கும். அந் நோக்கை முக்கியமாகக் கருத்திற்சொண்டே இந்நூல் வெளியிடப் பட்டுள்ளது.
க. பொ. த. உயர்தர வகுப்பு விலங்கியற் பாடத்திட்டம் மிக விரிவானதாகும். எனவே, பாடத்திட்டத்திற்கு ஏற்ற ஒரே நூலை வெளி யிடுவதில் பல சிக்கல்கள் உள. காலதாமதமும் ஏற்படும், இக்காரணங் சுளாலேயே உயர்தர விலங்கியல் என்னும் நாலை சிறு பகுதிகளாகப் பிரித்து வெளியிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. சிறு நூல் களாக வெளியிடுவதனால் மாணவர்கட்குப் பலவகைகளில் அனுகூலங் களும் உண்டு.முதற் பகுதியான இந்நூலில் 1967-ம் ஆண்டு முதல் அமுலுக்குவரும் புதிய பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள முள்ளந் தண்டில்லா விலங்குகள் யாவும் விபரிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றின் பாகுபாடும் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. பாடங்களைத் தெளிவாக விளக்கும் பொருட்டும் செய்முறைப் பரீட்சைக்கு உதவும் வகையிலும் அநேக படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பு.
ஆங்கில மூல நூல்களின் மொழிபெயர்ப்புகளைவிட இலகுவான தமிழில் எல்லோருக்கும் விளங்கும் எளிய நடையில் எழுதப்பட்ட நூல் களை மாணவர்கள் விரும்பிப்படிக்கிறார்களென்பது அனுபவவாயிலாகக் கண்டறிந்த உண்மை.- விஞ்ஞான பாடங்களைப் பொறுத்தவரை மொழியைவிட பாடத்திற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டு மென்ற கொள்கை இப்பொழுது பொதுவாக கல்வித்துறையில் ஈடுபாடு டையவர்களிடத்தே பெரும் ஆதரவைப் பெற்றுவருகிறது. விலங்கு களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள சிறப்புப் பெயர்களும், கணம், வகுப்பு, வருணம் ஆகியவற்றின் பெயர்களும் பெரும்பாலும் இலற்றின் மொழி யிலேயே உள்ளன, இப்பெயர்களை உரோமன் எழுத்துக்களில் எழுது வதே சிறந்த முறையென்றும், இப்பெயர்களை சரியானமுறையில் உச்சரிப் பதற்கு தமிழ் மாணவர்களுக்கு மிகவும் பரிச்சயமான வடமொழி எழுத் துக்களை உபயோகிக்கலாமென்பதுவும் இலங்கைப் பல்கலைக்கழக விரிவுரை

Page 5
- ii --
யாளர்கள் பலரின் கருத்தாகும், இக்கருத்திற்கு விஞ்ஞான ஆசிரியர் களிடமிருந்தும் ஏனையோரிடமிருந்தும் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. மேலும், சமீபகாலத்தில் அரசகரும மொழித் திணைக்களத்தால் வெளி யிடப்பட்ட நூல்களிலும் வடமொழியெழுத்துக்கள் பிரயோகிக்கப்பட் டுள்னனவென்பதையும் - விஞ்ஞான ஆசிரியர்களும் மாணவர் களும் கவனித்திருப்பர். கூடுமானவரை கலைச்சொற்கள் யாவற்றிற்கும் அரசகரும மொழித் திணைக்களத்தினரால் மிக அண்மையில் வெளியிடப்பட்ட கலைச்சொற்களையே இந்நூலில் எடுத் தாண்டுள்ளோம், ஆங்காங்கே ஆங்கிலக் கலைச்சொற்களும் அடைப்புக் குறிகளுள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, தமிழ்க்கலைச் சொற்களில் சில சிறுய மாற்றங்களேற்படினும் மாணவர்கள் திருத்திக்கொள்வதற்கு வசதியாகவிருக்கும். விலங்குகளின் பாகுபாடு தழிழுடன் ஆங்கிலத் திலும் கொடுக்கப்பட்டுள்ளது.
- எனது வேண்டுகோளுச்கிணங்கி, வடமாகாண விஞ்ஞான ஆசிரியர் சங்கத் தலைவரும் வேலணை மத்திய மகா வித்தியாலய அதிபருமான திரு. J. S. அரியரத்தினம் B.Sc., Dip, in Ed. அவர்கள் அளித்த அணிந்துரைக்காக அவருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித் துக்கொள்கிறேன். இந் நூலை ஆக்குவதற்கு என்னை ஊக்குவித்தவர் களுள் வடமாகாண விஞ்ஞான ஆசிரியர் சங்க முன்னாள் தலைவரும் யாழ் மத்திய கல்லூரி அதிபருமான திரு. E. சபாலிங்கம் B.S., P. G. T. அவர்கள் குறுப்பிடத்தக்கவர். அவருக்கும் எனது நன்றி உரித்தாகுக். எனது சக ஆசிரியரான திரு.R. K. இராமசேனன் B. S. (Hons.) அளித்த உற்சாகமும் குறிப்பிடத்தக்கது. கையெழுத்துப் பிரதிகளை வாசித்து ஆங்காங்கே வேண்டிய திருத்தங்களைச் செய்வதற்கு உதவிய செல்வி நவம் யோசப் B.Sc. (Hons.) ஆசிரியை, யாழ். திரு. சுன்னியர் மடம், திரு. S. செல்வநாயகம் B.Sc., ஆசிரியர் ஸ்கந்தவரோதயா கல்லூரி, திரு. C. இராமநாதன் B. SC. ஆசிரியர் யாழ்.வைத்தீஸ்வரவித்தியாலயம் ஆகியோருக்கும் எனது நன்றி உறித்தாகுக.
கையெழுத்துப் பிரதி முழுவதையும் பிழையின்றி அழகாக எழுதி யுதவிய மாணவன் S. அன்ரன் செல்வகுமாருக்கு எனது நன்றி, தனது சிரமத்தைப் பாராது பொறுமையுடனிருந்து வெட்டிப் பரிசோதித்த விலங்குகளின் படங்களையும் ஏனைய படங்களையும் திறம்பட வரைந்துதவிய ஓவியர் V. பரமநாதனுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள் கிறேன். இந்நூலைச் சிரத்தையோடு அச்சிட்டு வெளியிட்ட குமரன் அச்சகத்தாருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்."
யாழ். மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம்.
K. சங்கரஐயர்

அணிந்துரை
1965 - ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் க. பொ. த. உயர் தர வகுப்புகளில் விஞ்ஞான பாடங்கள் தாய்மொழியிற் கற்பிக்கவாரம்பித் திருந்தபோதிலும் இதுவரை காலமும் விலங்கியல் நூலொன்றும் வெளி வரவில்லை. எனவே, திரு. சங்கர ஐயர் உயர்தர விலங்கியல் என்னும் நாவின் முதற் பகுதியை வெளியிடுவது வரவேற்கத்தக்கதாகும், திரு. சங்கர ஐயர் உயர்தர வகுப்புகளில் பல வருடங்களாகத் தாவரவியலையும், விலங்கியலையும் கற்பித்து அனுபவம் வாய்ந்த ஒரு ஆசிரியராக விளங்கு கிறார். இவ்வகுப்புகளில் கற்பிப்பதனால் அவர் பெற்ற அனுபவம், அவர் உயர்தர வகுப்புகளின் தேவைக்கேற்ற இந்நூலை எழுதிப் பிரசுரிப்பதில் உதவியுள்ளது. இந்நால் சு. பொ. த. உயர்தர பாடத்திட்டத்திற்குரிய முள்ளந்தண்டில்லா விலங்குகள் என்னும் பகுதியை முற்றாக அடக்கி யுள்ளது. இந்நாவை ஆக்குவதில் அவர் அனுபவம் வாய்ந்த பல விஞ் ஞான ஆசிரியர்களையும் கலந்தாலோசித்துள்ளார். மாணவர்களுக்குப் பெரிதும் பயன்படும் இந்நூலை மாணவர்கள் விரும்பி வாங்குவார்களென் பதில் சிறிதும் ஐயமில்லை. தற்போதைய நிலையில் தாய்மொழியில் கல்வி கற்பதற்கு அநேக நூல்கள் வெளியிடப்படுவது அவசியம். அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களே இந்நற்பணியை மேற்கொள்ளச் சிறந்தவர் களாவர். இதுவரைகாலமும் விலங்கியல் நூல் ஒன்றும் இல்லாதிருந்த போதிலும் இந்நேரத்திலாவது உயர்தர விலங்கியல் என்னும் நூலை வெளியிடுவதில் திரு. சங்கரஐயர் எடுத்துக்கொண்ட முயற்சியை நான் மிகவும் பாராட்டுகின்றேன். ஏனைய விஞ்ஞான ஆசிரியர்களும் இந்நூல் ஆசிரியரின் முன்மாதிரியைப் பின்பற்றி அநேக நூல்களைத் தமிழில் வெளியிடுவார்களென எதிர்பார்க்கிறேன்.
அதிபர், வேலணை மகா வித்தியாலயம், வேலணை, யாழ்ப்பாணம்,
J.S.அரியரத்தினம்

Page 6
பொருளடக்கம்
54
13
84
6. |
அத்தியாயம்
பக்கம் 1. விலங்கியல்
விலங்குகளின் பாகுபாடு 2. புரோற்றோசோவா (Protozoa)
ஊக்கிளினா (Euglena)
அமீபா (AImgtba)
14 சில னோசிஸ்றிஸ் (ZeylanOCystis)
21 பிளாஸ்மோடியம் (Plasmodium)
35 பரமீசியம் (Paramccium)
30 3. புரோற்றோசோவாவும் மெற்றாசோவாவும்
45 (Protozoa and Metazoa) 4. சிலெந்தராற்ரு (Coelenterata)
51 இதரா (Hydra) | ஓபீலியா (Obelia)
கடல் அனிமனி (Sea alemone) 5. முப்படையுள்ள விலங்குகள் (Triploblastia animals)
ஓ3 கணம் - பிளாத்தியெல்மிந்தெசு (Flatyhelminthes)
பசியோலா கெப்பற்றிக்கா (Fasciola hepatica) தீனியா சோலியம் (Taenia Soliபற)
116 அனலிடா (Annelida)
131 பெரத்தீமா (Pheretima)
13 8. கணம் - ஆத்திரப்போடா (Arthropoda)
157 கிறத்தேசியா Crustacea) பெனேயுஸ் (Penacus) இன்செக்ற்றா (Insecta) பெரிபிளனேற்ற அமெரிக்கானா Periplaneta americana) 180 தும்பி (Dragonfly)
192 வண்ணாத்திப்பூச்சி (Butterfly)
195 நுளம்பு (Mosquito]
1பி 8 தேனீ (Honey bee)
2012 அரக்கி நிடா (Arachnida) சிலந்தி (Spider)
311) கொடுக்கன் (Scorpion)
213 மட்டத்தேள் (Centipede)
316 8, புத்துயிர்ப்பு - ஒட்டுண்ணியியல்பு
[ Regeneration - Parasitisrm)
பி ஓf

ఆట)

Page 7

விலங்கியல்
உயிரினங்களைப்பற்றிப் படித்தல் உயிரியல் எனப்படும். உயிரினங் சுளெல்லாம் தாவரங்கள், விலங்குகள் என்னும் இரு பெரும் பிரிவுகளில் அடங்குவதால் தாவரங்கள் பற்றிய இயல் தாவரவியலென்றும், விலங்குகள் பற்றிய இயல் விலங்கியலென்றும் பெயர் பெறும்.
விலங்கியலைப் பல்வேறு முறைகளிற் கற்கலாம். உருவவமைப்பைப் பற்றிய இயல் உருவவியலெனப்படும் (Morphology). உடலமைப் பைப் பற்றிய இயல் உடலமைப்பியல் (Anatomy) எனப்படும், உடல் மைப்பை அறிவதற்கு ஒரு விலங்கை வெட்டி உள்ளிருக்கும் அங்கங்களின் அமைப்புகளை ஆராய்வதே சிறந்த வழியாகும். இழையங்கள் பற்றிய இயல் இழையவியல் (Histology) எனப்படும். உடலின் பல்வேறு அங்கங் களை ஆக்கும் இழையங்களைச் சாயமிட்டு நுணுக்குகாட்டியினூடாக ஆராயலாம். கலங்களின் நுண் அமைப்புகள் பற்றிய இயல் குழியவியல் CytologY) எனப்படும். முளையங்கள் விருத்தியடைவதுபற்றிய இயல்முனை யவியல் (Embryology) எனப்படும் உயிர் அங்கியினதும் அதன் கூறுகளி னதும் தொழில்கள் பற்றிய ஆராய்ச்சி உடற்றொழிலியல்(Physiology) எனப்படும் உடற்றொழில்கள் எல்லாம் மிகச் சிக்கலானதாயும் உடலின் வெவ்வேறு அங்கங்களெல்லாம் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர் புள்ளனவாயிருத்தலாலும் அங்கங்களின் தொழில் பற்றி ஆராயும் பொழுது ஏனைய அங்கங்களுடன் உள்ள தொடர்பையும் கருத்திற் கொண்டே ஆராய்தல் வேண்டும், சூழலியல் (Ecology) என்னும் பகுதி யில் விலங்குகளுக்கும் அவற்றின் வாழிடத்திற்குமிடையேயுள்ள தொடர்பு பற்றியும் ஆராயப்படும், பிறப்புரிமையியலில் Genetics) பரம் பரைகளுக்கிடையேயுள்ள தொடர்பு பற்றியும் தொல்லுயிரியல் (Palae] tology) என்னும் பகுதியில் பூமியில் பலவருடகாலங்கட்கு முன்பு இருந்து தற்போது மறைந்து போன உயிரினங்கள் பற்றியும் ஆராயப்படும் பண் டைக்காலத்தேயிருந்த அங்கிகளிலிருந்து தற்போது உயிருடன் காணப் படும் விலங்குகள் எல்வாறு சிறப்பியல்புகள் பெற்றுத் தோன்றியதென்று

Page 8
ஆராய்வது கூர்ப்பு (Evolution) எனப்படும். பூமியின் இயற்கை மாற்றங் களுக்கேற்ப உயர் உயிரினங்கள் தாழ்ந்தவகை உயிரினங்களிலிருந்து எவ் வாறு தோன்றினவென்பதை ஆராய்வதற்கு கூர்ப்பு ஒரு அடிப்படைத் தத்துவமாகும். மேற்கூறிய ஆராய்ச்சிப் பிரிவுகளிலிருந்து பெறப்பட்டுள்ள காரணிகளைக் கொண்டே உயிரினங்கள் பாகுபடுத்தப்பட்டும் பெயரிடப் பட்டுமுள்ளன. எனவே இதைப் பாகுபாட்டியல் Classification) என அழைப்பர். மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆங்கிலப் பெயர்களெல்லாம் கிரேக்க மொழியிலிருந்தே பெறப்பட்டுள்ளன வென்பது குறிப்பிடத் தக்கது.
உயிரினங்களின் சிறப்பியல்புகள் :
6
-- உயிரினங்களெல்லாவற்றிற்கும் பொதுவான , ஆனால் உயிரற்ற பொருட்களிற் காணப்படாத, சில இயல்புகள் உள்ளன. உயிரினங்களின் அடிப்படைப் பொருள் முதலுருவாகும் (Protoplasm), இரசாயனப் பொருள்களின் மூலக்கூறுகளாலான முதலுரு ஒரு சிக்கலான அமைப் பாகும் உயிரினங்களெல்லாவற்றிலும் போசண, வளர்ச்சி, சுவாசித்தல், கழித்தல், உறுத்துணர்ச்சி, அசைவு, இனப்பெருக்கம் ஆகிய செய்முறைகள் இடம்பெறுகின்றன. போசணை, சுவாசித்தல், கழித்தல் ஆகிய செய்முறை கள் அனுசேபம் (Metabolism) எனப்படும். உயிருள்ள அங்கி சுயாதீன மான 1 தொழிற்பாட்டையுடையதால் அதை உயிரற்ற பொருட் களிலிருந்து வேறுபடுத்திக்கொள்ளலாம். தொழில்புரிவதற்கு சக்தி அவசி யம். அனுசேபத்தின் போதே அங்கியினால் சக்தி பெறப்படுகிறது. சிக்க லான மூலக்கூறுகளை உண்டாக்கும் செய்முறை உற்சேபம் (Anabolism) என்றும், சிக்கலான மூலக்கூறுகள் உடைபட்டு சக்தி வெளிவிடப்படும் செய்முறை அவசேபம் (Katabolism) என்றும் அழைக்கப்படும்.1
எளி' தொ (கா.
தாவரங்களில் பச்சையவுருவம் இருப்பதனால் சூரிய ஒளியைப் பெற்று நீர், காபனீரொட்சைட்டு ஆகியவற்றை உற்றெடுத்து ஒளித் தொகுப்பு மூலம் மாப்பொருளைத் தயாரிக்கின்றன, ஆனால் விலங்குகளில் பச்சையவுருவம் இல்லாததால் - ஒளித்தொகுப்பு நடைபெறுவதில்லை, விலங்குகள் தாவரங்களையே தமதுணவிற்கு நம்பியுள்ளன. சில விலங்கு கள் ஏனைய விலங்குகளைத் தமதுணவிற்கு நம்பியுள்ளன. விலங்கின் இழையங்கள் பழுதடையும் பொழுது புதிப்பிப்பதற்கும், புதிதாக இழை யங்களையுண்டாக்குவதற்கும் புரதமும் சேதனவுறுப்புச் சேர்வைகளும் தேவை. எனவே - சிக்கலான சேதனவுறுப்புச் சேர்வைகள் - உடைக்கப் பட்டு, குறிப்பிட்ட 'கலங்களுக்கும் இழையங்கட்கும் - தேவையான பொருட்களாகவும் உயர்சக்தி சேர்வைகளாகவும் தொகுக்கப்படல் வேண்டும். எனவே போசணையின் போதே உணவு உட்கொள்ளப்பட்டு. சமிபாடடைந்து, அகத்துறிஞ்சப்படுகிறது. சமிபாடடையாத எஞ்சிய

_ 3 -
பொருள் கள் மலமாக வெளியகற்றப்படுகிறது. போசணை யினால் முதலுரு 'அளவிற் பருத்து கலங்கள் இழையுருப்பிரிவினால் (Mitosis) பிரிவடைந்து புதிய கலங்கள் உண்டாகி விலங்கு வளர்ச்சியடைகிறது! சுவாசித்தலின் போது ஒட்சிசன் உள்ளெடுக்கப்பட்டு, உணவு ஒட்சியேற்றப்பட்டு, காப னீரொட்சைட்டும் நீரும் சக்தியும் வெளிவிடப்படுகிறது. சுவாசித்தலின் போது நொதியங்களும் பங்கு கொள்கின்றன. உடலில் சில பதார்த்தன் கள் உடைபடுவதனால் விலங்கிற்குத் தேவையற்ற பொருள்கள் உண் டாகி, அவை விலங்கிற்குத் தீமையும் விளைவிக்கலாம். புரதங்கள் உடை படும் பொழுது நைதரசன்கழிவுப்பொருள்கள் உண்டாகின்றன. எனவே நீர், காபனீரொட்சைட்டு, நைதரசன் கழிவுப் பொருள்கள் ஆகியவை அகற்றப்படுவது கழித்தல் எனப்படும், விலங்குகள் தூண்டல்களுக்குத் தூண்டற்பேறடைகின்றன , குழலிலேற்படும் மாற்றங்களை உணர்வதற்கு உயர் விலங்குகளிலே புலன் அங்கங்கள் உள்ளன் விலங்குகள் தமது சந்த தியை விருத்தி செய்வதற்காக இலிங்கமில் முறை, இலிங்கமுறை ஆகிய முறைகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. இலிங்கமுறையினப் பெருக் கத்தின் போது ஒடுங்கற்பிரிவு [Mgiosit) நடைபெறுவது குறிப்பிடத்
தக்க அம்சமாகும்.
விலங்குகளின் பாகுபாடு
brata) என்ற Coele1Anuclida),
[ விலங்கு இராச்சியம் அனேக கணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முக்கிய இயல்புகளில் ஒற்றுமையுள்ள விலங்குகளெல்லாம் ஒரு கணத்தில் (Phylum) அடங்கும். முள்ளந்தண்டில்லாத விலங்குகளெல்லாம் இன் வேட்டெபிரேற்ரு (Invertebrata) என்னும் பிரிவிலடங்கும் இப்பிரிவு புரோற்றோசோவா (ProtoZOa) சீலெந்தரேற்றா (Coclenterata), பிளாத் திகெல்மென் தெசு (Flatyhelminthes), அனலிடா - (Annelida), ஆத்திரப்போடா (Arthrodopa). மொலஸ்க்கா (Mollusca), போன்ற பல கணங்களைக் கொண்டது. அமீபா, பரமீசியம், ஐதரா, சுடவ் அனி மனி, மண்புழு, பூச்சிகள், நத்தை ஆதியன முள்ளந்தண்டில்லா விலங்கு கட்கு உதாரணங்களாகும். முழுவுடவிவிலங்கிலாவது, விலங்குவிருத் தியடையுங் காலத்திலாவது. முதுகுநாண் (Notochord) காணப்பட்டால் அவ்விலங்குகளெல்லாம் கோடேற்றா (Chordata) என்னும் கணத்திலடங் கும், முதுகுநாண் உணவுக் கால்வாய்க்கு மேலாக, முதுகுப்புறமாக, வெற் றிடங்களையுடைய தண்டு போற் காணப்படும் பெரும்பாலான கோடேற்று களில் முதுகுநாண் கசியிழையத்தினால் அல்லது எலும்பினாலான துண்டம் களையுடைய தண்டாக மாறுசின்றது. இதுவே முள்ளந்தண்டு (Vertebral olபறா) என அழைக்கப்படுகிறது. எனவே கணம் கோடேற்றவிவ் முன் ளந்தண்டையுடைய விலங்குகள் வேட்டெபிரேற்றா (Vertebrata) என் றும் கணப்பிரிவிலும், முதுகுநாணையுடைய ஆனால் முள்ளந்தண்டற்ற

Page 9
விலங்குகள் புரோற்றோகோடேற்றா (Protochordata) என்னும் பிரிவிலும் சேர்க்கப்படுகின்றன. புரோந்ருேகோடேற்றாவில் செப்லோகொடேற்றா. கெமிகோடேற்றா யூரோ கோடேற்ற என்னும் கணப்பிரிவுகள் அடங்கும். மீன்கள் தவளைகள், ஊர்வன் (பாம்பு, பல்லி, உடும்பு, கீரி, முதலைபோன் நவை), பறவைகள், முலையூட்டிகள் ஆகியவை முள்ளந்தண்டுள்ளவை. எனவே அவை கணப்பிரிவு வேட்டபிரேற்றவிலடங்கும். கணப்பிரிவுகள் மேலும் வகுப்புகள், வகுப்புப்பிரிவுகள், வருணங்கள், வருணப்பிரிவுகள் குடும்பம் என்று பல சிறு பிரிவுகளாகப்பட்டுள்ளன.
குறிப்பிட்டவொரு விலங்கை எடுத்துக்கொண்டால் அதற்கு ஒரு சாதிப்பெயரும் இனப் பெயரும் உள்ளதை அவதானிக்கலாம், உ-ம் அமீபா புரற்றியசு, ஐதரா விரிடிஸ், விலங்கின் இயல்பைப் பொறுத்து அதை விலங்கிராச்சியத்தில் ஒரு கணம், வகுப்பு, வருணம் ஆகியவற்றில் அடக்கலாம்.

புரோற்றோசோவா
கணம் - புரோற்றோசோவா
கனப்பிரிவு :
பிளாஸ்மோடுறோமா
சலியோபோரு.
வகுப்பு !
மஸ்ரிகோபோரு றைசோபோடா ஸ்போரோசோவா வகுப்புப்பிரிவு :
சீலியேற்ற
சற்றேறியா
பீற்றோமஸ்றிகைனா குமஸ்றிகைனா
ரிலோஸ்பொறீடியா
வருணம் :
ஊக்சிளினோயிடினா உ-ம் : (ஊக்கிளினா)
அமீபினார் கிரிகரினிடா
கோலோடிரைக்கா
(அமீபா) (சிலனோசிஸ்றிஸ்) |
(பரமீசியம்) கொக்கிடியோமோர்பா ஈமோஸ் கபாடியா (பிளாஸ்மோடியம்)
வருணப்பிரிவு :

Page 10
கணம் - புரோற்றோசோவா புரோற்றோசோவாவிலடங்கும் அங்கிகளிலெல்லாம் ஒரு தலமே அங்கியின் தொழில்களெல்லாவற்றையும் செய்கின்றது, எனவே, இவ் வங்கிகளை ஒரு தலத்தானவை (Uni- Cellular Organisms) என்றழைப்ப திலும் பார்க்க கலமற்ற அங்கிகள் (Acallalar organisms) என அழைப் பதே சிறந்ததெனப் பல விஞ்ஞானிகள் கருதுகின்றனர், இக்கணத்தி லடங்கும் அங்கிகளெல்லாம் நுண் அங்கிகளாக விருப்பதுடன் எளிய உடலமைப்பையும் கொண்டுள்ளன.
அங்கிகளின் இடப்பெயர்ச்சியையே முக்கியமாகக் கருத்திற்கொண்டு இக்கணம் மேலும் சிறு பிரிவுகளாக்கப்பட்டுள்ளது. இரு கணப் பிரிவு களாவன : 1. பிளாஸ்மோடுறோமா (Plasmodroma) II. #லியோபோரு (Ciliophora) என்பனவாகும்.
1. பிளாஸ்மோடுறோமா :
இடப்பெயர்ச்சிப் புன்னங்கங்கள் போலிப்பாதம், அல்லது சவுக்கு முளை அல்லது ஒன்றுமில்லாதிருக்கக்கூடும். ஒருவிதமான கரு மட்டுமே உண்டு. '' -
II. சீலியோபோரு ;
பிசிர்கள் அல்லது உறிஞ்சப்ரிசக் கொம்புகள் உண்டு. பிளாஸ் மோடுறோமா என்னும் கணப்பிரிவில் மூன்று வகுப்புகளடங்கும். அவை யாவன : 1. மஸ்ரிகோபோற (Mastigophora) அல்லது பிளாஜெல் லேற்ரு (Flagellata), 2, சாக்கோடைனா (SarCodina), 3, ஸ்போறோ சோவா (SDOTOZOa) என்பனவாகும்,
சருமத்தால் அதற்கு மேற்பட்டர்ச்சிக்குரிய
வகுப்பு 1 - மல்றிகோபோர் :
இதிலடங்கும் அங்கிகளுக்கு வரையறைவான உடலமைப்புண்டு. ஆனால், மீள் சக்தியுடைய "சருமத்தால் மூடப்பட்டுள்ளதால் உருவம் ஓரளவிற்கு மாற்றத்திற்குரியது. ஓன்றோ அதற்கு மேற்பட்ட எண்ணிக் கையிலோ சவுக்குழுளைகளுண்டு, ... இவையே இடப்பெயர்ச்சிக்குரிய புன்னங்கங்களாகத் (organielles) தொழில் புரிகின்றன. முதலுருவில் ஒரு கரு மட்டுமேயுள்ளது. போசணை மாறுபாட்டிற்குரியது. தாவர முறைப்போசணை (holopbytic). அழுகல்வளரிப்போசணை (Saprophytic)

- -
விலங்கு முறைப் போசணை (Holozoic) ஆகிய போசணைமுறைகள் காணப் படுகின்றன, இனப்பெருக்கம் நெடுக்குமுகப் பிளவுமுறையால் நடை பெறுகிறது. இது இலிங்கமில் முறையினப் பெருக்கமாகும்.
இவ்வகுப்பில் இரு வகுப்புப் பிரிவுகளடங்கும்.
வகுப்புப் பிரிவு I - ன பற்றேமஸ்றிகைளா (Phytomastigina) :
இதிலடங்கும் அங்கிகளில் பச்சையவுருமணிகள் இருப்பதனால் இவை தாவரமுறைப் போசணை யுடையவை. அதாவது தமது உணவைத் தாமே ஒளித்தொகுப்புமுறையாற் தயாரித்துக்கொள்கின்றன. பெரும்பாலான அங்கிகள் சுயாதீனமாக நீந்தித் திரிவன.
வருணம் - ஊக்கிளிடேயிடினு (Euglenoidina) :
இதிலடங்கும் அங்கிகள் நீளமான கதிருருவானவை. சருமத்தின் மேலுள்ள தசையிழை (myonemes ) களினுதவியால் ஓரளவிற்கு உருவத்தை மாற்றக்கூடியன. பொதுவாக இவற்றில் கண் - புள்ளியும் சுருங்கத் தக்க புன் வெற்றிடமும் காணப்படும். ஒன்று அல்லது இரண்டு சவுக்குமுளைகளுண்டு.
கணம் - புரோற்றோசோவா கணப்பிரிவு - பிராஸ்மோடுமோ வகுப்பு - மஸ்றிகோபோரு
வகுப்புப்பிரிவு - பைந்றேமல்றிகைஏ
வருணம் - அக்கினினேயிடின. சாதி - ஊக்கிளினா
ஊக்கிளினா (Euglena) :)
ஊக்கிளினா கிறாசிலிஸ் (Euglena gracilis).
ஊக்கிளினா விரிடிஸ் (Euglena wiridis] ஆகிய இனங்கள் பொதுவாக நைதரசன் கழிவுப் பொருள்களுள்ள நீர்த் தேக்கங்களிலே சுயாதீனமாக நீந்தித் திரியும் பிளாஜெல்லேற்றுகளாகும், இவை பெருவாரியாகவுள்ளபொழுது நீர் பச்சை நிறமாகத் தென்படும், ஒரு கலத்தாலான இந்நுண் அங்கிகள், கதிர் வடிவானவை. அங்கியின் அசைவின் போது முன் நோக்கிச் செல்லும் மளுங்கியமுனை முன்முனையெனவும், ஏறத்தாழக் கூராகவுள்ள

Page 11
சவுக்குமுறை
குழியவாய்
குழியத் தொண்டை
கண் - புள்ளி) |
ஒளிவாங்கி
அடிச்சிறுமணி சி பயட்-1 டசாணி
நீர்தாங்கி -டொஈ-1
இட் ஈ' ||
சுருங்கத்தக்க புரா புன்வெற்றிடம்
4 சருமம்
- பராமைலம்
மணிகள்
பச்சையவுருமணி
- கரு
புன்கரு
படம் 1 - ஊக்கிளி

-- பு
எதிர்முனை பின்முணையெனவும் கொள்ளப்படுகிறது. முதலுருவைச் சுற்றி மெல்லிய, ஆனால் வன்மையானதும் மீள் சக்தியும் வளையுமியல்பு முள்ள சருமம் (pellicle) உள்ளதால் இட! க்கிளின ஒரு வரையறைவான உருவத்தையுடையது. ஊக்கிளினாவிற்கே சிறப்பியல்பான காக்கிளினா வசைவை யுண்டாக்குவதற்கு சருமத்தின் இவ்வியல்புகள் உதவுகின்றன. சருமத்தின் மேற்புறமாக சுருளிவடிவில் ஒன்றுக்கொன்று சமாந்தரமாக வரிகள் காணப்படுகின்றன. சருமத்தினகத்தே தெளிவான நிலையிலே மெல்லிய படையாக புறமுதலுருவும் (Ectoplasm) அதனகத்தே மணி யுருவான அகக் கலவுருவும் (endoplasm) காணப்படும். ஜாக்கிளினாவின் முன்முனையிலே புனல் வடிவான குழியவாயும் (Cytostome), அதைத் தொடர்ந்து குழாயுருவான குழியத் தொண்டையும் (Cytopharynx) உள்ளன, குழியத் தொண்டையின் கீழ் நிரந்தரமான நீர்தாங்கி (Reservoir) யொன்றுண்டு. தேவையற்ற திரவப்பொருள்களை வெளி யேற்றுவதற்கு இது உதவுகிறது. நீர்தாங்கியினருகே குழியவுருவில் பல மிகச் சிறிய புன் வெற்றிடங்கள் தோன்றி, அவை ஒன்று சேர்வதனால் ஒரு பெரிய சுருங்கத் தக்க புன் வெற்றிடமுண்டாகிறது. சுருங்கத் தக்க புன் வெற்றிடம் அதனுள்ளடக்கத்தை நீர்தாங்கியினுட் சேர்க்க, சிறிய வெற்றிடங்களின் சேர்க்கையினால் உடனேயே ஒரு புதிய சுருங்கத்தக்க புன் வெற்றிட முண்டாகிறது. உடலிலிருந்து மிதமிஞ்சிய நீரும் கரையக் கூடிய கழிவுப் பொருள்களும் நீர் தாங்கியினூடாக வெளியேற்றப்படு கிறதெனக் கருதப்படுகிறது.
க்கிளினாவின் குழிய' வாயினூடாக ஒரு சவுக்குமுறை வெளிநீட்டி யிருக்கக் காணலாம். சவுக்குமுறையில் ஓர் அச்சிழையைச் சுற்றி மடல் உண்டு. சவுக்குமுளை குழியத் தொண்டையினூடாகச் சென்று நீர்தாங்கி யினுள் இரு வேர்களாகப் பிரிகின்றது. ஒவ்வொரு வேரும் நீர்தாங்கி யினருகே அகக்கலவுருவில் ஒரு அடிச்சிறுமணியில் முடிவடைகிறது. அடிச்சிறுமணிகள் இமையடிமணிகளெனவும் அழைக்கப்படுவதுண்டு. அடிச்சிறுமணிகளிலொன்று சுருளின் மேற்பரப்பிலுள்ள சிறிய மணியுரு வொன்றுடன் மிக நுண்ணிய வேருருவினால் தொடுக்கப்பட்டுள்ளதென வும் கருதப்படுகிறது, சவுக்குமுளையின் ஒரு வேரிலே காணப்படும் ஒளி யுணர்வுள்ள வீக்கம் ஒளிவாங்கி என அழைக்கப்படும். ஒவ்வொரு அடிச்சிறுமணியிலிருந்தும் தனித்தனியாக இரு சவுக்குமுறைகள் உண் - டாகி, இதில் ஒன்று மட்டுமே வெளியே நீட்டப்பட்டு தொழில்படுகிற தெனவும், மற்றது தொழில் படாமல் குழியத்தொண்டையிலேயே முடிவடைந்துவிடுகிறது என்றும் ஒரு சாரார் கருதுகின்றனர். நீர் தாங்கியின் ஒருபக்கமாக குழியவுருவிலே கண்புள்ளி அல்லது செந்நிறப் பொட்டு ஒன்று உண்டு, இதுவும் ஓனியுணர்வுள்ள ஓர் புன்னங்க மாகும்.

Page 12
- 1) -
காத்தின் மையத்திலோ, அல்லது பின் முளைக்கருகாமையிலோ கோளவுருவான கரு' ஒன்று காணப்படும். 1 --குழியவுருவில் - நீண்ட கோலுருவான பச்சையவுருவங்கள் உண்டு, குழியவுருவிலே நீள்வட்ட வுருவான பராமைலம் (Paramylum) என அழைக்கப்படும் மணிகள் காணப்படும். இவை கிளைக்கோசனுக்கு ஒப்பான காபோவைதரேற்று உணவுச்சேமிப்புகளாகும்.
+ - 1ாடர் : - 'சடி -1 |
போசணை ;
நாக்கிளினுவில் குழியத்தொண்டையிருந்தாலும் - விலங்குமுறைப் போசனை நடைபெறுவதாக அவதானிக்கப்படவில்லை. ஆனால். T2க்கிளி னாவுடன் நெருங்கிய தொடர்புள்ள வேறு சில அங்கிகளிலே விலங்கு முறைப்போசணை நடைபெறுவது உண்மையே. ஊக்கிளினா விரிடிஸ், எக்கிளினா கிருசிலிஸ் ஆகிய இனங்களிலே குளோரபில்லைக் கொண்ட பச்சையவுருவங்கள் உள்ளதால் அவை தாவரமுறைப் போசணையை யுடையன, ஒளி, நீர், நீரிற் கரைந்துள்ள காபனீரொட்சைட்டு, குளோரோ பில் ஆகியவற்றைப் பயன்படுத்தி இவை ஒளித்தொகுப்பு முறையால் தமக்கு வேண்டிய காபோவைதரேற்றுகளைத் தயாரிக்கின்றன, தயாரிக் கப்பட்ட காபோவைதரேற்று பராமைலம் என்னும் பொருளாக சேமித்து வைக்கப்படுகிறது. பராமைலம் மாப்பொருளை ஒத்திருந் தாலும் அயடின் கரைசலுடன் நீல நிறத்தைக் கொடுக்கமாட்டாது.
சாதாரணமாக தூக்கிளினாவில் குளோரபில் தெளிவான பச்சை நிற முடையது. இதில் குளோரோபில் 8, b. மஞ்சள் நிற கரற்றின் ஆகியவையுண்டு.
பல ஊக்கிளினா இனங்களில் செந்நிறவுரு மணிகளும் இருப்பதுண்டு. மங்கலான ஒளியிலே ஏமற்றோ குரோம் (Haematochrome) என்னும் செந்நிறமணிகள் கலத்தின் மத்தியிலே பச்சையவுருமணிகளால் மறைக் கப்பட்டுள்ளதால் உனக்கிளினா பச்சை நிறமாகத் தோன்றும். ஆனால், பிரகாசமான ஒளியில் செந்நிறமணிகள் கவமெங்கணும் பரவியிருந்து பச்சைநிறத்தை மறைப்பதால் ஊக்கிளினா செந்நிறமாகத் தோன்றும். நிறமற்ற சில காக்கிளினா இனங்களும் உண்டு, ஊக்கிளினா கிறாசிலிஸ் இருட்டில் வைக்கப்பட்ட பொழுது அது குளோரபில்லை இழக்கக் காணப் பட்டது. நைதரசன் சேதனவுறுப்புப் பொருள்கள் ஊடகத்தில் சேர்க் கப்பட்ட பொழுது ஊக்கிளினா அவற்றை அழுகல் தாவரத்திற்குரியவாறு (அல்லது அழுகல் - விலங்கிற்குரியவாறு) உள்ளெடுத்து வளர்கிறது . ஊக்கிளினா... இனங்கள் தமக்கு வேண்டிய சேதனவுறுப்புக்குரியதும், அசேதனவுறுப்புக்குரியதுமான பொருள்களை அழுகல் வளரித் தாவர முறையில் தாம் வாழும் நீரிலிருந்து பெற்றுக்கொள்ளுகின்றன. அது

சுவாசித்தல் :
சுவாசித்தலின் பொழுது நீரிற் கரைந்துள்ள ஒட்சிசன் பரவல் முறை யால் காக்கிளினாவின் சருமத்தினூடாகச் செல்ல. காபனீரொட்சைட்டு வெளியேறுகிறது. உண்டாகும் காபனீரொட்சைட்டு ஒளித்தொகுப் பின்போது உபயோகிக்கப்படுவதுமுண்டு, கழித்தல் :
சுவாசித்தலின் போது காபனீரொட்சைட்டும் ஒளித் தொகுப்பின் போது ஒட்சிசனும் கழிவுப் பொருள்சு ளெனக் கூறலாம். இவை பரவல் முறையால் அகற்றப் படுகின்றன.
பிரசாரணச் சீராக்கல் ;
வா க்கிளினா நன்னீரில் வாழ்வதால் பிரசாரண முறை யால் நீர் கலத்தினுட் செல்கிறது. குழியவுருவிலிருந்து அந்நீர் சிறிய புன் வெற்றிடங்களால் சேகரிக்கப்பட்டு. பின் அவை ஒன்று சேருவதாலுண்டாகும் சுருங்கத் தக்க பெரிய புன் வெற்றிடம் நீரை நீர்தாங்கியினுள் சேர்க்கிறது நீர் தாங்கியிலிருந்து நீர் குழியத் தொண்டை வழியினூடாக வெளியேறுகிறது.
இடப்பெயர்ச்சி:
ஊக்கிளினாவில் இருவித இடப்பெயர்ச்சி முறைகள் காணப்படுகின்றன.
(i) தசையிழைகள் சுருங்கி த ள ர் வ த ால் .
(முள்ளந்தண்டுள்ள விலங்குகளின் சிறுகுடலில் தடைபெறும் சுற்றுச்சுருங்கல் போன்று) அங்கி யினுடலில் சுருங்கலும் விரிதலும் அலைகள் போன்று உண்டாகி அசைவு ஏற்படுகிறது. இவ்வித அசைவு மூக்கிளினாவசைவு எனப் படும்.
கக்கிளினா நீந்துவதற்குச் சவுக்குமுறையே உதவு
கின்றது. சவுக்கு முளை அடிப்பதனால் சக்கிளினா தனது நீள் அச்சை 'மையமாகக் கொண்டு சுழன்றவாறு ஒரு சுருளிப்பாதை வழியாக முன்னோக்கிச் செல்கிறது. மக்கினினா நீந்தும் பொழுது சவுக்குமுள்ள ஒரு கோணமாகப் பின்னோக்கி அடிக்கிறது. அடிப்பின்போது
படம் - 2 பக்கிளினாவசைவு

Page 13
- 11 -
அலைகள் போன்ற சுருங்கல் அடிப்பாகத்திலிருந்து நுனிப்பாகத் திற்கு அதிகரிக்கும் வேகத்துடன் செல்கின்றது. சாதாரண் அசைவின் போது சவுக்குமுளை பின்நோக்கி வளைந்திருக்கும். அங்கியை முன்னோக்கித் தள்ளுவதற்கான பின்விசை அங்கி சுழல்வதனால் ஏற்படுகிறது. அடி ச்சிறுமணரிகள் சவுக்குமுளை
களினடிப்பைக் கட்டுப்படுத்துகின்றன.
உணர்ச்சி :
' தனக்கிளினாவில் பச்சையவுருமணிகளிருப்பதால், அவை ஒளிக்கு நேர்த்தூண்டற்பேறடைகின்றன. ஆனால் மிகப் பிரகாசமான ஒளிக்கு எதிராக நீந்துகின்றன. அவை ஒளிக்கதிர்களுக்குச் சமாந்திரமாக உடலை அசைத்து, ஒளியை நோக்கி நகர்கின்றன. அவை அசையும்பொழுது தமது நீள் அச்சை மையமாகக் கொண்டு சுழல்கின்றன. ஒரு பக்கத்தில் மட்டுமே ஒளி விழும்பொழுது 2ாக்கிளினா அதிர்ச்சித் தாக்கத்திற்குள் ளாகி, உடலைத் திடீரென வளைத்து, ஒரு பக்கமாகச் சாய்கிறது. சுருளிப் பாதையின் அச்சு ஒளிக்கதிர்களுக்கு சமாந்திரமாக இல்லாதபொழுது. அதிர்ச்சித் தாக்கங்கள் அடிக்கடி நடைபெறும். சாதாரணச் சுழற்சியின் போது கண் - புள்ளி ஒளிவாங்கியை மறைக்கும் பொழுது உடல் ஓளித் திசைக்கு எதிர்ப்புறமாக, அதாவது கீழ்ப்புறமாக வளைகிறது. உடலின் அடுத்த சுழற்சியின் போது முன்முனை ஒளியை நோக்கி வரும். அப் பொழுது உடலும் சிறிதளவு நீளும். இதுபோன்று ஒரு தொடரான அதிர்ச்சித் தாக்கங்களுக்கு உட்பட்டு tsunக்கிளின ஒளியை நோக்கி மெல்ல மெல்ல வளைந்து செல்லும்.
இனப்பெருக்கம் :
காக்கிளினாவில் இனப்பெருக்கம் நின்பக்க இரு கூற்றுப் பிளவு முறை யால் நடைபெறுகிறது. இக்கிளினாளில் இலிங்கமுறை இனப்பெருக்கம் நடைபெறுகிறதென்பதற்குச் சான்றுகள் ஒன்றும் கிடைக்கவில்லை. கரு இரு கூறாகப் பிரிவடைய சவுக்குமுளை, அடிக்சிறுமணிகள், குழியத் தொண்டை, நீர்தாங்கி, கண்புள்ளி ஆகிய புன்னய்கங்களும் பிளவுபடுகின் றன. பின் அங்கி நீள் அச்சினூடாக இரண்டாகப் பிளப்பதனால் இரு புதிய அங்கிகள் உண்டாகின்றன. சில வேளைகளில் காக்கிளினு சவுக்கு முளையை உள்ளிழுத்து, ஓரிடமாகி, தன்னைச் சுற்றி சிதத்தால் ஒரு மடலை யுண்டாக்கிக் கொள்கிறது. கருவும் பச்சையவுருமணிகளும் பிரிவடைய, குழியவுருவும் இரு கூறுகளாகப் பிரிவடைகிறது. பின்னர் இரு ' பாதி களும் தனித்தனியே இயங்கக் கூடிய அங்கிகளாகின்றன.
சில வேளைகளில் சவுக்குமுளை உள்ளிழுக்கப்பட்டு இணக்கிளினா உடலைச் சுற்றி ஒரு சிறைப்பையையுண்டாக்கி அதனுள் பிளவு நடைபெறும்.

- 13 _
ஸ்)
படம் 3 - (1-9) ஊக்கிளினா இருகூறுப்பிளவு
(10) சிறைப்பையினுள் இருகூற்றுப்பிளவு

Page 14
- 14
சிறப்பான காபோவைதரேற்றலான சிறைப்பை மஞ்சள் கலந்த கபிலநிற மானதாகவிருக்கும். " உணவு கிடைக்கப்பெறாத காகங்களிலேயே சிறைப்பை உண்டாக்கப்படுகிறது. வகுப்பு II - றைசோபோடா (Rhizopoda) அல்லது
சாக்கோடை ஏ (Sarcodina) : இவ்வகுப்பிலடங்கும் அங்கிகளில் புறத்தோலோ Cuticle) சருமமோ (Pallicle) கிடையாது. எனவே, உருவம் அதிக மாற்றத்திற் குரியது. போலிப் பாதங்களெனப்படும் (Pseudopodia) நிரந்தரமற்ற வெளித்தள்ளல்கள் இடப்பெயர்ச்சிக்கும் உணவுட் கொள்ளலுக்கும் உதவு கின்றன, இவ்வகுப்பிலடங்கும் அங்கிகள் பெரும்பாலும் சுயாதீனமாக வாழ்வன, இனப்பெருக்கம் இருகூற்றுப்பிளவுமுறை, பல்கூற்றுப்பிளவு முறை என்னும் இலிங்கமில்முறைகளாலும் இலிங்கமுறையாலும் தடை பெறுகிறது. வருணம் - அமீபினா (Amoebina) :
இதிலடங்கும் அங்கிகள் புறக்கலவுரு அகக்கலவுருவென வேறுபடுத் தக்கூடிய முதலுருவைக் கொண்டவை, நன்னீர் இனங்களில் சுருங்கத் தக்க புன் வெற்றிடங்களுண்டு. போலிப் பாதங்கள் சோணைகள் போன் றிருக்கும்,
கணம் - புரோற்றேசோவா கணப்பிரிவு - பிராஸ்மோடுதேமா
வகுப்பு - றைசோபோடா வருணம் - அம்பி ை
சாதி - அமீபா முதலுருமென்சவ்வு
புறக்கலவுரு
அகக்கலவுரு
போலிப்பாதம்
உணவு வெற்றிடம்
சுருங்கத்தக்க " - கரு புன்வெற்றிடம்
படம் 4- அமீபா

- 15 -
அமீபா - புரற்றியசு (Amoeha proteus) :
11' -4!" வாழிடமும் அமைப்பும் : --19, அமீபா, மிக எளிமையான உடலமைப்பைக் கொண்ட ஒரு நுண் அங்கியாகும், இது நன்னீர்க்குளம், குட்டைகளில் வாழுகிறது. தெளி வான, நிறமற்ற, இழுது போன்ற முதலுருவைக்கொண்ட இவ்வங்கிக்கு வரையறைவான ஒரு உருவம் கிடையாது. முதலுருவைச் சுற்றி முத லுருமென்சவ்வு மட்டுமேயுள்ளதால் அங்கி எப்பக்கமும் மீள் சத்தியும் வளையுமில்புள்ளது. முதலுருமென்சவ்வினுள் அடக்கப்பட்டுள்ள முதலுரு குழியமுதலுருவையும் (Cytoplasm) ஒரு சுருவையும் கொண்டது. குழிய முதலுருவை புறக்கலவுரு (ectoplasm) வெனவும் அகக்கலவுருவெனவும் (endoplasm) பிரிக்கலாம், புறக்கலவுரு சிறுமணிகளற்று தெளிவான தாயும், அகக்கலவுரு சிறுமணிகளைக் கொண்டதாயுமிருக்கும். - அகக்கல வுருவில் உள்ள கரு உயிர்ச்செய்முறைகளை யெல்லாம் தனது சுட்டுப்பாட் டிற்குள் வைத்திருக்கிறதெனத் தெரிகிறது. குழியமுதலுருவில் ஒரு சுருங்கத்தக்க புன் வெற்றிடமும் அனேக உணவு வெற்றிடங்களும் காணப்படும்.
யார் செல்நிலையிலிருந்து
செரல்நிலையிலிருந்து - 1 சொல் நிலையாதல்
செல் நிலையாதல் -
c -3
த21:25:3%..
24/3 (தி
1 1 : க 4. 1,
42:2ா/
சுருங்கத்தக்க - குழியமுத லுரு
கரு
போலிப்பாதம் புன் வெற்றிடம்
படம் 5 - அமீபாவின் இடப்பெயர்ச்சி

Page 15
- 15 -
இடப்பெயர்ச்சி ;
அங்கியினுடலில் முதலுரு வெளித்தள்ளுவதனால் பொய்ப் பாதங்கள் போலிப் பாதங்கள்) உண்டாகி இடப்பெயர்ச்சி நடைபெறுகிறது. எனவே, அமீபா இடப்பெயர்ச்சியடையும் பொழுது அதன் கட்டமைப் பும் மாறுகிறது.
அமீபாவசைவை விளக்குவதற்கு பல கொள்கைகள் கொடுக்கப் பட்டுள்ளன. மாஸ்ற் (Mast ) என்னும் விஞ்ஞானியின் கூற்றுப்படி கூழ் நிலைப் பொருளான (colloidal) முதலுரு பாய்பொருள் போன்ற சொல்' நிலையிலிருந்து (Sol Condition) 'செல்' நிலைக்கு (gel condition) மாறு வதாலும் மீண்டும் 'செல்' நிலையிலிருந்து சொல்' நிலைக்கு மாறுவதா லும் போலிப் பாதங்களுண்டாகி அமீபா அசைகிறது ' என்ப தாகும். குழியமுதலுரு பெரிய புரத மூலக்கூற்றுகளின் சேர்க்கையினால் சங்கிலி போன்ற அமைப்புடையதாயுள்ளது. புறக்கவவுருவில் சங்கிலித் தொடர்கள் நீண்டும், அகக்கல்வுருவில் மடிந்தும் உள்ளன. போலிப்பாத முண்டாகும் முனையில் செல் நிலையிலுள்ள புறக்கலவுருவில் புரத மூலக் கூறுகள் மடிவதனால் சொல் நிலைக்கு மாறுகிறது. இச்செய்முறை மெது வாகத் தொடர்ந்து நடைபெறுவதால் போலிப்பாதம் நீண்டு இடப் பெயர்ச்சி ஏற்படுகிறது. பின் முனையில் புரத மூலக்கூறுகள் மடிவடைவ தால் சுருங்கி, செல் நிலையிலிருந்து சொல்நிலைக்கு மாற்றமேற்படுகிறது. இதனால் அகக்கலவுரு முன்னோக்கித் தள்ளப்படுகிறது. போலிப்பாத முண்டாகும் முன்முனை யரில் சொல் நிலையான அகக்கலவுருவின் புரதமுலக் கூறுகள் வெளித்தள்ளி. விரிவடைந்து, செல் நிலையிலான புறக்கலவுரு வாக மாறுகிறது. அமீபாவசைவை விளக்குவதற்கு வேறொரு புதிய கொள்கையும் கூறப்படுகிறது. இதன்படி போலிப்பாதமுண்டாகும் முனையில் சொல் நிலையான அகக்கலவுரு செல் நிலைக்கு மாறும்பொழுது ஒரு இழுவிசையேற்றப்பட்டு பின் முனையிலுள்ள அகக்கலவுருவிற்குக் கடத்தப்படுவதனால் பின்பகுதியிலிருந்து அகக்கலவுரு முன்னோக்கி யிழுக்கப்படுகிறது.
முதலுருமென்சவ்வினுள் நடைபெறும் முதலுரு வோட்டத்தினால் மட்டும் இடப்பெயர்ச்சி ஏற்படமுடியாது. கீழ்ப்படைக்கும் முதலுரு மென்சவ்விற்குமிடையே தற்காலிகமானவொரு ஒட்டற் பண்பு ஏற்படல் வேண்டும்,
டவுட்கொள்ளல் :
அமீபா ஏனைய புரோற்றோசோவன்களையும் தெசுமிட்டுகள் (Desmids) தயற்றங்கள் (diatoms) போன்ற நுண்அல்காக்களையும் உணவாக
1 1 | 211 படம் 1--21 - பட்டர்

2 YAA
1 AHL AL AL WEET L FIL MA KA, I,
14 " H 1
உணவுச்சிறு வெற்றிடம்.
போலிப்பாதம்
கரு
டி Uke 4
உணவுச்சிறு வெற்றிடம்
கரு
படம் 5 - அமீபா டவுட் கொள்ளல்
Z-3

Page 16
- 18 -
உட்கொள்ளுகின்றது. உடலின் - எப்பகுதியினூடாகவும் உணவுட் கொள்ளப்படலாம். போலிப்பாதங்களையுண்டாக்கி இரையைச் சிறி தளவு நீருடன் சேர்த்துமூடி ஒரு உணவுச்சிறு வெற்றிடத்தை அகக்கலவுரு வினுள் ஏற்படுத்துகிறது. அமீபா தொடர்ந்து உணவுட் கொள்வதனால் பல உணவுச்சிறு வெற்றிடங்கள் அதனுடலுள் காணப்படலாம், முதலுரு வோட்டத்தினால் உணவுச்சிறு வெற்றிடங்கள் அமீபாவினுடலினுள் இங்கு மங்குமாக அசைகின்றன (cyclosis). உணவு வெற்றிடமுண்டானவுடன் ஒரு அமிலத்தன்மையான பொருள் சுரக்கப்பட்டு இரை கொல்லப்படு "கிறது. பின்னர் நாடகம் காரத்தன்மையாக மாறி, அகக்சுலவுருவிலிருந்து சுரக்கப்படும் நொதியங்களினுதவியால் சமிபாடு நடைபெறுகிறது. + சமிபாடடைந்த உணவு உறிஞ்சப்பட்டு அங்கிக்குத் தேவையான சக்தி யைக் கொடுப்பதற்கு உதவுகிறது. பின்னர் உணவுச்சிறுவெற்றிடங்கள் சிறிதாகிசமிபாடடையாத உ.ணவு அமீபா அசையும்பொழுது உடலி லிருந்து அகற்றப்படுகிறது.
பிரசாரணச் சீராக்கல் :
அமீபா நன்னீரில் வாழ்வதாலும் முதலுருமென்சவ்வு ஒரு பங்கீடு உட்புகவிடுந் தன்மை பெற்றுள்ளதாலும் வெளியிலிருந்து நீர் அங்கி யினுட் செல்லும். எனவே, சுருங்கத்தக்க புன் வெற்றிடத்தினுள் நீர் சேர்ந்து இறுதியில் வெளியேற்றப்படுகிறது. எனவே, சுருங்கத்தக்க புன் வெற்றிடம் பிரசாரணச் சீராக்கலைச் செய்கிறதெனலாம். வெளி யேற்றப்படும் நீரில் கழிவுப் பொருட்களிருக்கக்கூடுமெனினும் சுருங்கத் தக்க புள்வெற்றிடத்தை கழித்தற் புன்னங்கமெனக் கூறமுடியாது.
சீராக்கலை”, எனவே, அதனுள் நீர்
சுவாசித்தலும் கழித்தலும் :
இத்தொழில்களைப் புரிவதற்கு அமீபாவில் சிறப்பான புன்னங்கங்கள் கிடையாது. அமீபாவாழும் நீரிலே கரைந்துள்ள ஒட்சிசன்வாயு அங்கி யின் மேற்பரப்பினூடாக பரவல் முறையால் உட்செல்கிறது. அங்கியி னுள் அனுசேபத்தின் போதுண்டாகும் நைதரசன் கழிவுப் பொருள்களும் காபனீரொட்சைட்டும் அங்கியின் மேற்பரப்பினூடாகவே வெளியேற் றப்படுகின்றன.
நடத்தை (Behaviour) :
தூண்டல்களுக்கோ, சூழலிலேற்படும் மாற்றங்களுக்கோ அமீபா தூண்டற்பேறடைவதே அதன் நடத்தை கானப்படுகிறது. பசி என்பது ஒரு உட்தூண்டலாகும், -- பசி ஏற்படும் பொழுது அமீபா இரையைத் தேடுகிறது. இரையை அது முட்டும்பொழுது வெளித்தூண்டலைப்

- 19 -
பெற்று தொடுகை உணர்ச்சியினால் தூண்டற்பேறடைந்து போலிப்பாதங் களையுண்டாக்கி உணவுட் கொள்கிறது. அமீபா நீரிலே மிதக்கும்பொழுது ஒரு திண்மப் பொருளைத் தொட்டால் நேர்த்தாண்டலடைந்து அதில் ஒட்டிக்கொள்கிறது. ஆனால், கீழ்ப்படையில் அசையும் அமிபாவை ஒரு பசியால் தொட்டால் அது உள்ளிழுத்து எதிர்த்திசையில் அசைகிறது. அதிக செறிவுள்ள ஒளிப்படும்பொழுது அமீபா ஒழுங்கற்ற முறையில் ஒளிக்கு எதிர்த்திசையில் அசைகிறது. ஒரிச் செறிவை திடீரென அதிகரித்தால் அமீபா கோளவுருவாகி அசைவற்றுப் போகிறது. ஆனால். சிறிது வேளைக்குப்பின் சூழலுக்கேற்ப இசைவுபெற்று அசையவாரம்பிக் கிறது. வெப்பநிலை 'ச நெருங்க உணவுட் கொள்ளலும் இடப்பெயர்ச்சி யும் மெதுவாகவே நடைபெறுகிறது. ஆனால், வெப்பநிலை உயர தொழிற்பாடு அதிகரித்து 30 ச க்கு மேல் தடைபடுகிறது. உணவி லிருந்து பரவும் இரசாயனப் பொருள்களின் தூண்டலுக்கு நேர்த் தூண்டற்பேறடைந்தாலும் மிகச் செறிவான இரசாயனப் பொருள் சுளுக்கு எதிர்த்தூண்டற் பேறடைகிறது.
சுருங்கத்தக்க பன் வெற்றிடம்
கரு
கருபிரிவடைதல்
4
மகள் அமீபாக்கள் படம் T - அமீபா இருகூற்றுப்பிளவு.
இனப்பெருக்கம் : 2 அமீபா ஓரளவுக்கு வளர்ச்சியடைந்தவுடன் இனப்பெருக்கம் செய் கிறது. அமீபா இருகூற்றுப்பிளவு : முறையாலும் பல்கூற்றுப்பிளவு முறையாலும் இனப்பெருக்கம் செய்கிறது.

Page 17
- 20 -
இருகூற்றுப்பிளவின்போது அமீபா கோளவுருவாகி, கரு இழை யுருப்பிரிவு முறையால் (mitosis) இரண்டாகப் பிரிகிறது. அப்பொழுது குழியமுதலுருவில் ஒடுங்கல் ஏற்பட்டு அதுவும் இருகூறுகளாகப்பிரிகிறது. இரு புதிய கருக்களையும் குழியமுதலுருப்பகுதி சூழ்ந்து கொள்ளுவ தால் இரு புதிய மகள் அமீபாக்கள் உண்டாகின்றன,
-- 2 -சரி!; சிறைப்பை
வித்திகள்
5 ..
கரு
பிரிவடைந்த கரு படம் 8 - அமீபா பல்கூற்றுப்பிளவு.
கோடை காலங்களில் அமீபா வாழும் குளம் குட்டைகளில் நீர் வற்றும் பொழுது அமீபா கோளவுருவாகி தன்க்லக ச்சுற்றி ஒரு சிறைப் பையையுண்டாக்கிக் கொள்கிறது. சிறைப்பையினுள் அமீபாவின் கரு பல கூறுகளாகப் பிரிய, குழியமுதலுருவும் பிரிவடைந்து ஒவ்வொரு சிறிய கருவையும் சூழ்ந்து கொள்கிறது. இச்சிறிய அமைப்புக்களைச் சுற்றித் தடிப்பான கவசம் உண்டாவதால் இவை வித்திகளென அழைக் கப்படுவதுண்டு. குளம் குட்டைகளில் நீர்நிறையும் பொழுது வித்திகளி லிருந்து மகள் அமீபாக்கள் விடுபட்டு வளருகின்றன. காற்றினால் வித்தி கள் பரம்பலடையவுங்கூடும். அமீபாவில் இலிங்கமுறையினப் பெருக்கம் நடைபெறுவதாகத் தெரியவில்லை. வகுப்பு II - ஸ்போருேசோவா (Sporozoa) :
இவ்வகுப்பிலடங்கும் இனங்கள் வேறு விலங்குகளில் வாழும் ஒட்டுண்ணிகளாகும். இவை உணவை பாய்பொருள் நிலையில் உள்ளு நிஞ்சுவதால் இவற்றிற்கு வாயோ குதமோ கிடையாது. சாதாரணமாக

_ 21 -
ஒரு கருவேயிருக்கும். இவற்றில் பிசிர்களோ சவுக்கு முளைகளோ கிடை யாது. ஆனால், இவை மந்தமான அசைவுக்குள்ளாகின்றன, இனப் பெருக்கம் இருங்கமுறையாகவோ இலிங்கமில் முறையாகவோ இருக் கலாம். ஓரே வாழ்க்கைச் சக்கரத்தில் இரு முறைகளும் இடம் பெறுவ துண்டு. இனப்பெருக்கத்தின்போது வித்திகளுண்டாகின்றன. ஏணய புரோற்றோசோவாக்களிலும் வித்திகள் உண்டாவதாயிருந்தாலும் ஸ்போறோசோவாவில் வித்திகள் பல கூறுகளாகப் பிளந்து ஒவ்வொன் றும் தனித்தனி உயிரினங்களாக விருத்தியடைவது ஓர் சிறப்பியல்பாகும்.
வகுப்புப் பிரிவு - சிலோ பொடியா (Telo3poridia) :
வித்துச் சிற்றுயிர்கள் நீண்டிருக்கும். வித்திகளில் முனைவுவில்லை இருக்கமாட்டாது. வருணம் 1 - கிரிகரினிடா Grcgarinida) :
முள்ளந்தண்டில்லாதவற்றிலுள்ள ஒட்டுண்ணிகள். இவை குடல், உடற்குழி, ஏனைய இழையங்கள் ஆகியவற்றில் காணப்படும், முழுவுடலி ஓட்டுண்ணி கலத்திற்கப்புறமானதாகும் (extra Cellular). நுகத்திலே எட்டு வித்திச் சிற்றுயிர்களுண்டு,
கன ம் - புரோற்றேசோவர கணப்பிரிவு - பிளாஸ்மோடுருேமா
வகுப்பு - ஸ்போறோசோவா வகுப்புப் பிரிவு - ரிலோஸ் பொநீடியா வருணம் - கிரிகரினிடா சாதி - சிலனேசில் ரிஸ்
சிலனோசிஸ் றிஸ் (Zeylandcystis):
சில னோசிஸ் றிஸ் என்னும் ஒட்டுண்ணி பெரத்திமாச் சாதியைச் சேர்ந்த மண்புழுவின் சுக்கிலப் புடகங்களிலே வாழ்கின்றது. மண்புழு வின் சுக்கிலப் புடகங்களிலேயுள்ள விந்துமுசுக்கட்டையுருக்களுடன் (Sperm HOTulae] இவ்வொட்டுண்ணிகள் காணப்படும். " உணவை உறிஞ்சும் நிலையில் இவை போசலைச் சிற்றுயிர்கள் (Tropbozoites) என அழைக்கப்படும். வட்டத்தட்டு வடிவான போசணைச்சிற்றுயிரின் குழியமுதலுருவிலிருந்து எறியங்கள் வெளி நீட்டியிருக்கக் காணலாம். முதிர்ச்சியடைந்த போசணைச் சிற்றுயிர் ஏறத்தாழ கிண்ண வடிவிலிருக் கும், முதலுருவின் மையமாக ஒரு கரு உண்டு. உடலைச்சுற்றி மழ மமப்பான சருமமொன்றுண்டு. புறசுகலவுருவிற் காணப்படும் தசை

Page 18
ட 21 -
யிழைகளினுதவியால் கிரிகரைனசைவு நடைபெறுகிறது. சிறுமணியுரு வான அகக்கலவுருவில் பராமைலம் மணிகள் என்னும் உணவுச்சேமிப்புப் * பொருள்கள் காணப்படும்.
போசணைச்சிற்றுயிர்
ஈட்டச் சிறைப்பை
புணரிகளுண்டாதல்
புணரிகள்
#6 மெடு,
எஞ்சியிருக்கும் குதியமுதலுரு
வித்தியரும்பர்
வித்திச்சிற்றுயிர்கள்
வித்திச்சிறைப்பை
கு.வெ.
படம் 8 - சிலனோசிஸ்றிஸ் - வாழ்க்கை வரலாறு

- 13 -
இடப்பெயர்ச்சி !
போசணைச்சிற்றுயிர்களைச் சுற்றி உணவுள்ளதால் இடப்பெயர்ச்சி நடைபெறுவதற்கு அவசியமில்லை. எனினும் தசையிழைகளின் சுருங்க லினால் மந்தமான கிரிகரைன் அசைவு நடைபெறுகிறது.
போசணை !
21 |
-1 E 11: புது போசனைச் சிற்றுயிர்களிலிருந்து சமிபாட்டு நொதியங்கள் சுரக்கப் பட்டு. மண்புழுவின் சுக்கிலப்புடகத்தினுள் உள்ள விந்துமுசுக்கட்டை யுருக்களின் முதலுரு சமிபாடடையப்பட்டு அகத்துறிஞ்சப்படுகிறது. புறச்சமிபாடு நடைபெற்று உணவு மேற்பரப்பினூடாக அகத்துறிஞ்சப் படுவதால் சிவனேசிஸ்றிசில் உணவுட்கொள்வதற்காக விசேட புன்னங் கங்கள் கிடையா, உணவுச்சிறு வெற்றிடங்களும் காணப்படுவதில்லை. பராமைலம்சிறுமணிகளாக (பராகிளைக்கோசனாக) சேமிப்புப் பொருட்கள் சேகரித்து வைக்கப்படுகின்றன, இனப்பெருக்கத்தின் போது உணவுட் கொள்ளப்படுவதில்லையாதலால் சேமிப்புணவிலிருந்து போசணை பெறப் படுகிறது,
இனப்பெருக்கம் :
வளர்ச்சியடைந்த போசணைச்சிற்றுயிர்கள் சோடி சேர்ந்து, ஒவ்வொரு சோடியையும் சுற்றி இரு சுவர்களாலான சிறைப்பை உண்டாகிறது. சோடி சேரும் போசணைச்சிற்றுயிர்கள் புணரிகளை யுண்டாக்குவதனால் அவை புணரிக்குழியங்கள் (gametocytes) என அழைக்கப்படும். புணரிக் குதியங்கள் சிறைப்பையினுள் ஒன்று சேராமல் ஒருமித்து அருகருகே மட்டும் காணப்படுவதால் சிறைப்பை - ஈட்டச்சிறைப்பையென ( associationCyst) அழைக்கப்படும். புணரிக்குழியங்களின் கருக்கள் 24, 8 என பல கூறுகளாகப் பிரிந்து குழியமுதலுருவின் வெளிப்புறமாக நகரு கின்றன. ஒவ்வொரு கருவையும் குழியமுத லுரு சூழ்வதனால் அனேக புணரிகள் உண்டாகின்றன, ஒவ்வொரு புணரிக்குழியத்திலிருந்தும் $4 புணரிகள்வரை உண்டாகக்கூடும். எஞ்சிய குழியமுதலுரு மையப் பகுதியிற் காணப்படும். ஒரு ஈட்டச்சிறைப்பையினகத்தேயுள்ள இரு" புணரிக்குமியங்களிலிருந்தும் உண்டாகும் புணரிகள் அமைப்பில் ஒத்திருப் பதால் அவை ஒத்தபுணரிகளெனப்படும்,' புணரிகள் எஞ்சிய குழிய முதலுருவிலிருந்து பிரிந்து, சோடி சேர்ந்து கருக்கட்டல் நடைபெறு கிறது. ஒரு புணரிக்குழியத்திலிருந்துண்டாகும் புணரிகளுக்கும் மறு புணரிக்குழியத்திலிருந்துண்டாகும் புணரிகளுக்குமிடையே கருக்கட்டல் நிகழ்கின்றது. எனவே சில னோசிஸ்றிசில் கடந்து கருக்கட்டல் (CroSS fertilization) நடைபெறுகிறதெனக் கூறலாம். கருக்கட்டலின் பின்

Page 19
நுகம் உண்டாகிறது. நுகம் வித்தியரும்பர் (Sporoblast) எனவும் அழைக்கப்படுவதுண்டு. வித்தியரும்பர் தன்னைச் சுற்றியொரு சிறைப் பையைச் சுரந்து வித்திச்சிறைப்பையாகிறது Sporocyth). வித்திச் சிறைப்பை நவி செல்லா என்னும் தயற்றத்தின் (ஒரு அல்கா) உருவத்தை ஓத்திருப்பதால் போலிநவிசெல்லா எனவும் அழைக்கப்படுகிறது. வித்தி யரும்பர் நெடுக்குமுகமாக மூன்றுமுறை அடுத்தடுத்துப் பிரிவடைவதால் எட்டு வித்திச் சிற்றுயிர்கள் (Sporozoites) உண்டாகின்றன.
மண்புழுக்கள் பறவைகளால் உணவாக உட்கொள்ளப்படும் பொழுது வித்திச் சிற்றுயிர்களும் பறவையின் குடலையடைகின்றன. ஆனால் வித்திச் சிற்றுயிர்கள் பறவையின் சமிபாட்டு நொதியங்களால் தாக்கப்படாது மலத்துடன் வெளியேற்றப்பட்டு மண்ணையடைகின்றன. மண்புழுக்கள் இறந்து அழியும் பொழுதும் வித்திச்சிறைப்பைகள் மண்ணை யடைகின்றன, இவை பின்னர் வேறோர் மண்புழுவால் உள்ளெடுக்கப் பட்டு, மண்புழுவின் சமிபாட்டு நொதியத்தால் சிறைப்பைச் சுவர் கரைக் கப்பட்டு, வித்திச்சிற்றுயிர்கள் குடற்சுவரைத் துளைத்து குருதிக்கலன் களினூடாக சுக்கிலப்புடகத்தையடைகின்றன.
சிலனேசிஸ் றிஸ் இனப்பெருக்கத்தின் போது அனேக வித்திச்சிறைப்பை களையுண்டாக்கித் தனது இனத்தை அழியாமல் வைத்துக்கொள்கிறது. இது தனது விருந்து வழங்கியான மண்புழுவிற்கு பாரதூரமான இடை யூறுகளை விளைவிப்பதில்லை. வருணம் II - கொக்கிடியோமோர்பா (Coccidiomorpha) :
போசணைச்சிற்றுயிர் கலத்தகத்துள் காணப்படும். வித்திப்பிறப்பும், பிளவுப்பிறப்பும் வாழ்க்கைச் சக்கரத்தில் மாறிமாறி இடம் பெறும். இலிங்கமுறையினப் பெருக்கத்தின் போது ஒவ்வாப்புணரிகள் உண்டா கின்றன. வருணப் பிரிவு -- ஈமோஸ்பொறிடியா (HaEOSporidia) :
இவ்வருணப் பிரிவிலடங்கும் ஒட்டுண்ணிகள் இளஞ்சூட்டுக் குருதி நிலையான விலங்குகளினுடலில் வாழ்வன.
சுணம் - - புரொந்ரேசோவா கணப் பிரிவு - பிளாஸ்மோடுறோ க.
வகுப்பு - ஸ்பொடிருப்சாவா வகுப்புப் பிரிவு - ரிலோஸ்பொடியா வருணம் - கொடியோகோர்பா வருணப் பிரிவு - ஈமோபொநீடியா சாதி - பிளாக்கோடியம்

15 இ - 25 -
- 1 கப்
பிளாஸ்மோடியம்
பிளாஸ்மோடியம் என்னும் புரோற்றோசோவா ஒட்டுண்ணியே மனிதரில் மலேரியாக்காய்ச்சலையுண்டாக்குகிறது. பிளாஸ்மோடியம் வைவாக்ஸ் (Plasmodiumvivaz), பிளோஸ்மோடியம் மலேரியே (P.Malariae), பிளாஸ்மோடியம் ஃபல்சிபாரம் (P. Falciparum) ஆகிய மூன்று இனங்களும் மனிதரில் மலேரியாக்காய்ச்சலையுண்டாக்கவல்லன. பிளாஸ் மோடியம் வைவாக்சின் வாழ்க்கைச் சக்கரமே இங்கு விவரிக்கப்பட்டுள் ளது. ஒரு மனிதனிலிருந்து மற்றொருவருக்கு மலேரியாக்காய்ச்சல் தொற்றுவதற்கு அனோபீலிஸ் சாதியைச் சேர்ந்த நுளம்பே காரண மாகும், எனவே நுளம்பு "காலி' (Vector) என அழைக்கப்படுகிறது, பிளாஸ்மோடியம் தனது சிக்கலான வாழ்க்கைச் சரிதையை மனி தனிலும் நுளம்பிலும் தொடர்ந்து பூரண மாக்குகிறது.
பிளவுப்பிறப்பு
வித்திப்பிடிப்பு
5 வித்திச் சிற்றுயிர்
ஈரலில்
பாப்
பிளவுப்பிறப்பும்
சிற்றுயிர்
செங்குழியத்துள்
(அல்-இ-இ-)
ல 5 5 6 ஏ 9 ®© @ 9. தெ..
படம் 10- பிராஸ்மோடியத்தின் வாழ்க்கைச் சக்கரம்

Page 20
- 25 -
பிளாஸ்மோடியத்தின் வாழ்க்கைச் சக்கரத்தை மூன்று' அவத்தை களாகப் பிரித்து ஆராய்வது எளிதாகும். முதலாவது அவத் ைதயான இலிங்கமில்முறை இனப்பெருக்க அவத்தை பிளவுப்பிறப்பு அவத்தை Schizogony) மனிதனின் ஈரற்கலங்களிலேயும், குருதிக்கலங்களிலேயும் நடைபெறுகிறது. இரண்டாவது அவத்தையான இலிங்கமுறையினப் பெருக்க அவத்தை மனிதனின் குருதிக்கலங்களில் ஆரம்பிக்கப்பட்டு நுளம்பின் குடலிலே முடிவடைகிறது. மூன்றவது அவத்தையான இலிங் கமில் முறை இனப்பெருக்க அவத்தை (வித்திப்பிறப்பு அவத்தை Sporogony) நுளம்பிலே நடைபெறுகிறது.
மலேரியாக்காய்ச்சலுள்ள ஒருவரைக்குத்தி குரு தியை உறிஞ்சிய அனோபிலிஸ் நுளம்பிலே பிளாஸ்மோடியத்தின் வாழ்க்கைச் சக்கரத் தின் சில நிலைகளுண்டு. எனவே இந்நுளம்பு ஒருவரைக்குத்தும் பொழுது அதன் உமிழ் நீர்ச்சுரப்பிகளிலிருந்து பிளாஸ்மோடியத்தின் வித்திச்சிற்றுயிர்கள் (Sporozoites) மனிதனின் குருதியோட்டத்துடன் சேருகின்றன. அரிவாளுருவான வித்திச்சிற்றுயிர்கள் அரைம ணித் தியாலத்திற்குள் ஈரலின் புடைக்கலவிழையத்தையடைகின்றன, அதைத் தொடர்ந்து பத்து நாட்கள்வரை நோயரும்புகாலமாகும். (Incubation period) இக்காலத்தே ஒருவர் மலேரியாவால் பீடிக்கப்பட்டுள்ளாரெனத் தெரியவராது. ஈரற்புடைக்கலவிழையத்தில் வித்திச்சிற்றுயிர்கள் விரைவாக வளர்ந்து பிளவுப்பிறப்புயிர்களாகின்றன (Schizonts ), இவை பிளவுப்பிறப்பு முறையால் (Schizogony) இவிங்கமில் முறையினப் பெருக்கமடைந்து அநேக பாத்துமுறைச் சிற்றுயிர்கள் (Merozoiles) உண்டாகின்றன. ஒவ்வொரு பிளவுப்பிறப்புயிரிலிருந்தும் ஆயிரம் பாத்துமுறைச்சிற்றுயிர்கள் உண்டாகலாம். இவை ஈரற்குடாப் போலி யினுள் (Liver sinusoids) விடப்படுகின்றன. பிளவுப்பிறப்பு நடைபெறும் பொழுது குழியமுதலுரு எஞ்சியிருக்கக் கூடும். இவை தின்கலக்குழியங் களினால் (Phagocytes) அழிக்கப்படுகின்றன. ஈரற்கலங்களில் நடை பெறும் இவ்வவத்தை முன்செங்குருதிக்குழிய அவத்தை (Pre - cry throCytic phase) எனவும் அழைக்கப்படும்.பாத்துமுறைச்சிற்றுயிர்கள் - மீண்டும் ஈரற்கலங்களைத்தாக்கி வளர்ச்சியடைந்து பெருகினால் அது செங்குருதிக்குரிய புறத்தவத்தை (ExO- Erythrocytic phase) எனப்படும். ஈரற்கலங்களிலுள்ள பொழுது குயினைன் (Quininc) போன்ற மருந்து களால் பாதிக்கப்படுவதில்லை.
ஈரற்கலங்களிலிருந்து விடுபடும் பாத்து முறைச்சிற்றுயிர்கள் குருதிச் சுற்றோட்டத்தையடைந்து செங்குழியங்களுட் சென்று அமீபாபோன்ற போசணைச்சிற்றுயிர்களாகின்றன, இவை சிலனோசிஸ்றிஸ் போன்று செங் குழியங்களின் குழியமுதலுருவை உணவாகக் கொண்டு வளர்ச்சி

- 21 -
யடைகின்றன. போசணைச்சிற்றுயிரின் குழியமுதலுருவில் ஒரு புன் வெற்றிடமுண்டாகி கரு ஒரு பக்கத்திற்குத் தள்ளப்படுகிறது. இந்த நிலை முத்திரைமோதிரநிலை (Signet ring stage) எனப்படும், அது தொடர்ந்து வளர்ச்சியடைந்து போலிப்பாதங்களுண்டாகிறதென அவதானிக்கப் பட்டுள்ளது. ஏறத்தாழ முப்பத்தாறு மணித்தியாலங்களின் பின் போசணைச்சிற்றுயிர் முழுவளர்ச்சியடைந்து செங்குழியத்தை நிரப்புகின் ரது. இந்தலையில் அது பிளவுப்பிறப்புயிர் (Schizont) எனப்படும், பிளவுப்பிறப்புயிர்களின் கரு பிரிவடையக் குழியமுதலுருவும் பிரிவடைந்து ஒவ்வொரு சிறிய கருவையும் சுற்றிக் கொள்வதால் ஏறத்தாழ இருபத்தி நான்கு பிளவுப்பிறப்புயிர்கள் (பாத்து முறைச்சிற்றுயிர்கள்) உண்டாகின் றன. இப்பிளவுமுறை இனப்பெருக்கம் பிளவுப்பிறப்பு (Schizogony) என அழைக்கப்படும். சுமார் நாற்பத்தெட்டு மணித்தியாலங்கட்குப் பின்னர் செங்குழியத்தின் பொன்சவ்வு வெடிப்பதனால் - பிளவுப்பிறப்புயிர்கள் குருதித்திரவவிழையத்துள் விடுபடுகின்றன . இவை புதிய செங்குழியங் களைத்தாக்கி வாழ்க்கைச் சக்கரத்தை நீடிக்கின்றன .செங்குழியங்களில்! நடைபெறும். இவ் அவத்தை செங்குருதிக்குரியவவத்தை (ErythrOCytic phase) எனப்படும். பிளவுப்பிறப்புயிர்கள் [வித்திச் சிற்றுயிர்களைவிடக் குறுகியதாகவும், பருமனாகவும் காணப்படுகின்றன. ஏறத்தாழப் பத்து நாட்களுக்குப்பின் பிளவுப்பிறப்புயிர்கள் பெருமளவு எண்ணிக்கையி லுள்ளதனால் செங்குழியங்கள் அழிக்கப்பட்டு ஒருவித நஞ்சுப் பொருள் குருதித்திரவ " விழையத்தினுள் சேர்க்கப்படுவதால் குளிர்காய்ச்சல் உண்டாகிறது. எனவே பிளாஸ்மோடியம்வைவாக்சினால் 48 மணித்தியா லங்களுக்கொரு முறை காய்ச்சல் உண்டாகிறது -
சில காலத்திற்குப்பின் பிளவுப்பிறப்பு முறையில் இனம் பெருகுவதற் குப்பதிலாக இலிங்கமுறையினப்பெருக்கம் ஆரம்பிக்கப்படுகிறது. பிளவுப்பிறப்புயிர்கள் செங்குழியங்களில் போசணைச்சிற்றுயிர்களாக மாறுவதற்குப்பதிலாக கோளவுருவாகி மெதுவாக வளர்ச்சியடைந்து புணரிக்குழியங்களாகின்றன. மாபுணரிக்குழியம் (பெண்புணரிக் குழியம்) நுண்புணரிக்குழியம் (ஆண்புணரிக்குழியம்) என இருவிதபுணரிக்குழியங் சுளுண்டாகின்றன. - மாபுணரிக்குழியத்தில் உணவுச் சேமிப்பைக் கொண்ட குழியமுதலுருவும், சிறிய கருவும் உண்டு. ஆனால் துண்புணரிக் குழியத்தில் தெளிவான குழியமுதலுருவும், பெரியகருவும் உண்டு. முதிர்ந்த புணரிக்குழியங்கள் மேற் கொண்டு மனிதனில் விருத்தியடைவ தில்லை.
அனோபிலிஸ் சாதியைச் சேர்ந்த பெண் துளம்பு மலேரியாக் காய்ச்ச லுள்ள ஒருவரைக்குத்தும் பொழுது புணரிக் குழியங்களுள்ள செங்" குழியங்கள் குருதியுடன் நுளம்பினால் உறிஞ்சப்பட்டு இரைப்பையை யடைகின்றன. நுளம்பினால் எடுத்துக் கொள்ளப்படாவிடில் புணரிக்

Page 21
- 28 --
குறியங்கள் அழிந்துவிடுகின்றன. புணரிக்குழியங்களைத்தவிர ஏனைய நின்ஸ் யிலுள்ள பிளாஸ்மோடியங்கள் நுளம்பின் உணவுக்கால்வாயினுட் சென்றால் அவை சமிபாடடைந்து விடுகின்றன. புணரிக்குழியங்கள் மட்டும் சமிபாட்டு நொதியங்களினால் பாதிக்கப்படாமல் செங்குழிய மென்சவ்விலிருந்து வெளிவருகின்றன, உமாபுணரிக்குழியத்தின் கரு ஒடுங் கற்பிரிவடைவதனால் நிறமூர்த்த எண்ணிக்கை பாதியாக்கப்பட்டு மாபுணரியுண்டாகிறது. கரு முதலுருவின் வெளிச்சுற்றிற்குவர அவ் விடத்தில் ஒரு எறியம் காணப்படுகிறது. நுண்புணரிக்குழியத்திலும் கரு ஒடுங்கற்பிரிவடைந்து நிறமூர்த்த எண்ணிக்கை பாதியாக்கப்படு கிறது. ஆனால் இங்கு நுண்புணரிகளுண்டாகின்றன, நீண்ட மெலிந்த உருவமுடைய நுண்புணரிகள் நீந்தித்திரிகின்றன. இறுதியில் நுண்புணரி மாபுணரியிற் காணப்படும் எறியத்தினூடாக உட்சென்று கருப் புணர்ச்சி நடைபெறுவதால் கோளவுருவான நுகம் உண்டாகிறது. நுகம் நிண்டு புழுவுருவாகமாறிய நிலையில் இயங்குமுட்டை என அழைக்கப் படும். இது நுளம்பின் இரைப்பைமேல ணிக்கலங்களுக்கும் மேலணிக்கீழ் கலங்களுக்குமிடையே (Sub - cpithelium) வந்தடைகிறது. அங்கே நுகம் நுளம்புக் கலங்களிலிருந்து உணவைப்பெற்று 2 பருமனடைந்து தன்னைச் சுற்றியொரு கட் சி ன ற ப் பை  ைய யுண்டாக்கிறது. இச்சிறைப்பை நுகத்திலிருந்தும், நுளம்பின் இழையங்களிலிருந்தும் பெறப்படும் பொருள்களாலானது, ஒரு நுளம்பிலே 50 முதல் 500 வரையில் நுகங்களுண்டாகலாம், ஆறு, ஏழு நாட்களுள் நுகக்கரு பிரி வனடய குழியமுதலுருவிலும் ஓர் புன் வெற்றிட முண்டாவதனால் அதன் பரப்பு விரிவடைகிறது. ஒவ்வொருகருவையும், குழியமுதலுருப்பகுதி சூழ அநேக வித்திச் சிற்றுயிர்கள் உண்டாகின்றன, நுளம்பிலே நடை பெறும் இவ் இலிங்கமில்முறையினப்பெருக்க அவத்தை வித்திப்பிறப்பு (Sporagony) எனப்படும்.
சிறைப்பை வெடிப்பதனால் நுளம்பின் குருதிக்குழிவான உடற்குழி யில் வித்திச்சிற்றுயிர்கள் (SporOzoites) விடுபடுகின்றன. உமிழ்நீர்ச்சுரப் பிகள் குருதிக்குழிவான உடற்குழியிலேயே யிருப்பதனால் வித்திச்சிற் றுயிர்கள் பெருமளவில் உமிழ்நீர்ச்சுரப்பிக்கலங்களை காடுருவி உட்செல் கின்றன. இந்நிலையில் நுளம்பு மனிதரைக் குத்தும்பொழுது வித்திச் சிற்றுயிர்கள் மனிதரின் குருதிச்சுற்றோட்டத்துட் செலுத்தப்படுகின்றன. இங்கிருந்து அவை மீண்டும் தமது வாழ்க்கைச் சக்கரத்தை ஆரம்பிக் கின்றன.
ஒட்டுண்ணி வாழ்க்கைக்கு உகந்த இயல்புகள் :
பிளாஸ்மோடியத்தின் அமைப்பு மிக எளிமையானதாயிருப்பதால் அது இலகுவில் ஈரற்கலங்களிலும், செங்குழியங்களிலும் வாழ்க்கையை

- 29 -
நடாத்த முடிகிறது. தாது பரம்பரை தொடர்ந்து இருப்பதற்காக பிளவுப் பிறப்பு முறையாலும், வித்திப்பிறப்பு முறை யாலும் இனத்தைப் பெருக் குகிறது. பிளாஸ்மோடியம் வாழ்க்கைச் சக்கரத்தை மனிதனிலும் நுளம் பிலும் பூர்த்தியாக்குகிறது. மனிதன் முதல் விருந்து வழங்கியாகவிருக்க, நுளம்பு காவியாகத் தொழில்புரிகின்றது. எனவே விருந்து வழங்கி இறந் தாலும் இனப்பெருக்க நிலைகள் நுளம்பிலேயுள்ளதால் ஒட்டுண்ணியின் விருத்தி அவ்வளவாகப் பாதிக்கப்படுவதில்லை.
ஒட்டுண்ணியால் விருந்து வழங்கிக்கு ஏற்படும் தீமை உள் :
பிளோஸ்மோடியத்தினால் மனிதரில் மலேரியாக்காய்ச்சல் உண் டாகிறது. வித்திச் சிற்றுயிர்கள் குருதிச்சுற்றோட்டத்திற் சேர்ந்து ஈரற் கலங்களையடைந்து விருத்தியடைகின்றன. அதன் பின்பு உண்டாகும் பாத்துமுறைச் சிற்றுயிர்களே செங்குழியங்களைத் தாக்குகின்றன. அது வரை உள்ள கால்ம் நோயரும்புகாலம் எனப்படும். பாத்துமுறைச்சிற்று யிர்களுடன் சேர்ந்து நஞ்சுப்பொருட் களும் விடுவிக்கப்படுகின்றன, பல முறை பிளவுப்பிறப்பு முறை நடைபெற்றபின் பெருமளவில் நஞ்சுப் பொருள் சேர்வதால் காய்ச்சல் உண்டாகிறது.
பி. வைவாக்ஸ் மூன்று நாட்களுக்கொருமுறை காய்ச்சலை உண்டாக்கிறது,
பி, மலேரியே
நான்கு நாட்களுக்கொருமுறை
காய்ச்சலை யுண்டாக்குகிறது.
பி, பல்சியாரம் ஒழுங்கற்ற முறையிற் காய்ச்சலையுண்டாக்குகிறது.
மலேரியாவைக் கட்டுப்படுத்தும் முறைகள் :
(i) மலேரியாக்காய்ச்சல் வந்த நோயாளிக்கு சிகிக்சையளிப்பது .
குயினைல் Quinine) பிறைமாகுயின் (Frimaquine), குளோ ரோகுயின் (Chloroquine), மெபாகிறைன் (Mepacrine) போன்ற மருந்துகள் கொடுப்பது.
(ii) நுளம்பு குத்தாமல் பாதுகாக்க நுளம்புவுலை உபயோகிக்கலாம்,
நுளம்பு வராமற் தடுப்பதற்கு புகையுண்டாக்கலாம்,
(iii) மலேரியாவைக்காவும் நுளம்பை அழித்தல் (D.D.T. டீ , டீ, ரி.)
கமக்சின், டீல்டிரிக் போன்ற கிருமிநாசினிகளையும், எண்ணெய் களையும் நீர்த் தேக்கங்களின் மேல் தெளிப்பதால் நுளம்பு முட்டைகளிலிருந்து வரும் குடம்பிகள் அழிந்துவிடும்,

Page 22
- 30 -
கணம் - புரோற்றேசொவா
கணப்பிரிவு - சீலியோபொரு வகுப்பு - ரீலியேற்றா வகுப்புப்பிரிவு - எயூசீலியேற்ற வருணம் - கோலோடிலாக்கா சாதி பரமீசியம்
கணப்பிரிவு - சீலியோபோரா :
இக்கணப்பிரிவிலடங்கும் அங்கிகளில் பிசிர்களோ உறிஞ்சும் பரிசக் கொம்புகளோ உண்டு.
வகுப்பு - சீவியேற்றா !
இவ்வகுபிலடங்குமினங்களில் பரிசக்கொம்புகள் கிடையா. ஆனால், பொதுவாக வாழ்க்கை முற்றாக பிசிர்களைக்கொண்டுள்ளன.
வகுப்புப் பிரிவு - எயூசீலியேற்று :
இப்பிரிவிலடங்கும் அங்கிகளில் குழியவாய் உண்டு. மாகரு, நுண் கரு என இருகருக்கள் - உண்டு. இணைதல்முறை இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
வருணம் - கோலோடிகாக்கா :
இவ்வருணத்திலட ங்கும் இனங்களின் உடல் முழுவதும் பிசிர் களுண்டு.
பரமீசியம் (Paramedium)
செருப்பு - நுண் விலங்கு என அழைக்கப்படும் பரமீசியம் அழுகும் தாவரப் பொருள்கள் பெருமளவிலுள்ள நன்னீரில் சாதாரண மாகக் காணப்படும். - நீண்ட வெண்புள்ளிகளாகக் கண்ணுக்குத் தென்படும் இவை 1 நுணுக்குகாட்டியினூடாக நோக்கும் பொழுது செருப்புவடிவமாகத் தோன்றும். பரமசியத்தின் உடல் நீண்டும், ஒரு முனை மறுமுனையைவிட மழுங்கியும் காணப்படும், கீழ்ப்பக்கம் தட்டை யாகவும், மேற்பக்கம் சிறிது புறம் குவிந்ததாயும் உள்ளது. இடப் பெயர்ச்சியின் பொழுது மழுங்கியமுனை முன்னோக்கிச் செல்வதால் அம் முனை முன்முனை எனக் கருதப்படும். தட்டையான பக்கத்தில் அகக்

0
சருமம்
418:1A)
ஆரைக்குரிய புன் வெற்றிடம்
பாபு
im Hinlittiin
பு11:41 If.1
சுருங்கத்தக்க புன் வெற்றிடம்
மாரு
மாகரு 1 - 4
வாய்த்தவாளிப்பு
நுண்கரு
பாபர்,
தொடரலை மென்சவ்வு
tvill
குரியக்குதம்
குழியவாய் உணவு வெற்றிடம் சு, பு, வெற்றிடம் அகக்கவுரு
புறக்கலவுரு
மயிர்ச் சிறைப்பை
வெளித்தள்ளப்பட்ட பயிர்ச் சிறைப்பை
11 14 - படம் 11- பரமீசியம்

Page 23
-- 32 -
கலவுருவிற்குச் செல்லும் வகையில் முன்னிருந்து பின்நோக்கிச் செல்லும் ஆழமற்ற தயாரிப்பு ஒன்று உண்டு. இது வாய்த்தவாளிப்பு எனப்படும்.
முதலுருவின் வெளிப்பக்கத்திலிருந்து சுரக்கப்படும் சருமம் திட மானதாய் இருப்பதால் பரமீசியம் வரையறைவான உருவத்தைக் கொண்டது. சருமம் மெல்லியதாயிருப்பதால் வளையுமியல்பும் மீள் சத்தியும் கொண்டுள்ளது. பரமசியத்தின் குழியமுதலுருவை அகமுத லுரு. புறமுதலுரு எனப் பிரிக்கலாம். அங்கியின் முன்முனைக்கும் பின் முனைக்கும் அருகில் இரு சுருங்கத்தக்க புன் வெற்றிடங்களுண்டு. புன் வெற்றிடங்களைச் சுற்றிப் பல ஆரைப்புன் வெற்றிடங்களுண்டு. பிரசா ரண முறையால் அங்கியினுட் செல்லும் நீர் ஆரைவெற்றிடங்களினால் சேகரிக்கப்பட்டு சுருங்கத்தக்க புன் வெற்றிடங்களினூடாக வெளிச்செல் கின்றன. சருமத்தின் மேற்பரப்பில் நீள் பக்கவரிசையில் நீள்சதுரமான அல்லது ஆறு பக்கங்களைக்கொண்ட பள்ளங்கள் காணப்படும், புறுக் கலவுருவில் உள்ள அடிச்சிறுமணிகளிலிருந்து உண்டாகும் - பிசிர்கள் பள்ளங்களின் மத்தியினூடாக வெளிவருகின்றன. அடிச்சிறுமணிகள் நீள்பக்கநரம்பு நார்களாலும், குறுக்கு நரம்பு நார்களாலும் ஒன்றே டொன்று தொடுக்கப்பட்டுள்ளன. எனவே, பிசிர்களில் அசைவு இயை பாக்கம் காணப்படுகிறது. அங்கியின் மேற்பரப்பிற்குச் செங்குத்தாக அடிச் சிறுமணிகளினிடையே மயிர்ச்சிறைப்பைகள் எனப்படும் கதிர்வடி
பிசிர்
மார்ச் சிறைப்பை
"அடிச்
சிறுமணி
படம் 12 --- தொடுக்கப்பட்டுள்ள அடி ச்சிறுமணிக்காயும்
பயிர்ச்சிதறப்பையையும் காட்டும் படம்

- 31
4 4 4. உடல் = MIAT - 4,
--டி. 14. 1-1 1. 4 1
வான அமைப்புகளுண்டு. அமுக்கம் அல்லது உறுத்துணர்ச்சியைக் கொடுக்கின்ற திரவத்தினால் மயிர்ச்சிறைப்பைகள் தூண்டற்பேறடைந்து நீண்ட நுண்ணிய இழைகள் வெளித்தள்ளப்படுகின்றன.
கலத்தின் வெளிப்புறமாகத் தெளிவான புறக்கலவுருவும், உட்புற மாக சிறும ணியுருவான அகக்கலவுருவும் உள்ளன. அகக்கவவுருவுள் காணப்படும் இரு சுருக்களும் பருமன், உருவம், தொழில் ஆகியவற்றில் வேறுபடுகின்றன. பெரிய மாகருவில் ஒரு புறமாகக் காணப்படும் குழிவான பகுதியின் நடுவில் சிறிய நுண்கரு உள்ளது. மா கரு அங்கி யின் பதியத்துக்குரிய தொழிற்களுடனும், நுண் கரு இனப்பெருக்கத் தொழிற்களுடனும் சம்பந்தப்பட்டுள்ளன.
பி
படம் 13 - பரமீசியத்தில் பிசிரடிப்பு
படம் 14 - பரமீசியத்தின் இடப்பெயர்ச்சி
புது 1 Tர் 17, (சி
- 1 |
இடப்பெயர்ச்சி : 1ா ப்ப ட ந ாபா புரா கப் நபப்ப TET 11 THAா 13
பரமீசியம் தன்னுடலைச்சுற்றியுள்ள பிசிர்களினுதவியால் நிமிடத் திற்கு 180 மி.மீ., வேகத்தில் நீரில் நீந்தக்கூடியது. பிசிரடிப்பு அடிர் சிறுமணிகளைத் தொடுக்கும் நரம்பிழைகளினால் இயைபாக்கப்படுகின்றது சாதாரணமாகப் பரமீசியம் நீந்தும்போது மழுங்கியமுகா யே முன்நோக் சிச் செல்கிறது. ஆன ல் பிசிரடிப்பை எதிராக மாற்றுவதனால் பின்பக்க மாதவும் அதனால் நீந்த முடியும். பரமீசியம் நீந்தும்போது தனது நீள் பக்க அச்சை மையமாகக்கொண்டு இடது புறமாகச் சுழல்வதுடன், ஒரு சுருளிப் பாதையிலும் செல்கிறது. சிர்கள் நேராகப் பின்னோக்கி யடிக்காமல் ஒரு பக்கத்திற்குச் சாய்வாக அடிப்பதனால் பரமீசியம் நீள்
Z - 3

Page 24
- 34 -
பக்க அச்சை மையமாகக் கொண்டு சுழல்கிறது. வாய்த்தவாளிப்பிலுள்ள பிசிர்கள் ஏனைய பிசிர்களைவிட விரைவாக அடிப்பதால் பரமீசியம் ஒரு சுருளிப்பாதையிற் செல்கிறது.
உறவயம்
Aக்கைக்க்கம்
:
உப்திகரி".
1I-1 +டா1TF
படம் 15 --- பரமீசியம் - இடப்பெயர்ச்சியின்போது தடையேற்பட்டால் விலகிச் செல்லும் முறை
உணர்ச்சி :
- TA
ஒளியடர்த்தி, ஒட்சிசன் செறிவு, காபனீரொட்சைட்டுச் செறிவு ஆகியவற்றிற்கும், நீரிலுள்ள இரசாயனப் பொருள்களுக்கும் பரமீசியம் உணர்ச்சியுள்ளதாய் இருக்கின்றது. அது நீந்திச் செல்லும் பொழுது ஓர் தடை ஏற்பட்டால் பிசிர் அடிப்பை எதிர்மாறாகச் செய்வதால் சிறிது தூரம் பின்சென்று மீண்டும் பிசிரடிப்பை மாற்றுவதனால் முன்சென்ற பாதையிலிருந்து சிறிது விலகி முன்னோக்கிச் செல்கிறது. இவ்வாறான
அசைவு தவிர்ப்பு அசைவு (avoiding reaction) எனப்படும்.
போசணை ;
" இரைகள் கொள்கிறது. சிறிய பு-ே.
பரமீசியம் நீரில் உள்ள பற்றீரியா, தயற்றம், சிறிய புரோற்றே சோவாக்கள் ஆகியவற்றை உணவாகக் கொள்கிறது. வாய்த்தவாகளிப் பிலுள்ள பிசிர்களினுதவியால் இரைகளைக்கொண்ட நீர் வாய்த்தவாளிப் பிலிருந்து குழியத்தொண்டையினுள் செல்கிறது. குழியத் தொண்டை யிலுள்ள தொடரலை மென்சவ்வின் அடிப்பால் குறியவாயினூடாக அசுக் கலவுருவை அடைந்து சிறிது நீருடன் உணவுச்சிறு வெற்றிடங்கள் உண் டாகின்றன. - மண்துணிக்கைகள் போன்ற கரணையான பொருள்கள் குழியவாயினூடாக - எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.- அகக்கலவுரு வோட்டத்தினால் உணவுச்சிறு வெற்றிடங்கள் குறிப்பிட்ட பாதை வழியாக அசைகின்றன, உணவுச்சிறு வெற்றிடங்களின் உள்ளடக்கம் முதலில்
அச்சிறு வயான அகக்கலக்.

- 35 -
அமிலத்தன்மையாகவும், பின்னர் காரத்தன்மையுடையதாகவும் காணப் படுகிறது. உணவுச்சிறு வெற்றிடங்களுள் சுரக்கப்படும் சமிபாட்டு நொதி யங்களால் உணவு சமிபாடடைந்து உறிஞ்சப்படுகிறது, அப்பொழுது உண்வுச்சிறு வெற்றிடங்கள் சிறிதாகி சமிபாடடையாத கழிவுப்பொருள் கள் கும்மியவாயினருகே ஓரிடத்தில் வெளியேற்றப்படுகின்றன. இதற்காக உண்டாகும் நிரந்தரமற்ற துவாரத்தை கலக்குதம் என அழைக்கலாம்.
ஈவாசித்தல் !
கீரிற் கரைந்துள் ள ஒட்சிசன் பரமீசியத்தின் சருமத்தினூடாகப் பரவல் முறையால் உட்செல்ல, அவசேபத்தின் போதுண்டாகும் காப! ரொட்சைட்டு வெளிவருவதால் சுவாசித்தல் நடைபெறுகிறது,
சுருங்கத்தக்க புன் வெற்றிடம் |
1TLTTTTTTT
III
துண்கரு
மாதரு
நுண்கரு
மாதரு
படம் If - குறுக்கு இருகூற்றுப்பிளவு
இனப்பெருக்கம் : 1 இலிங்கமில்முறை இனப்பெருக்கம் !
பரமீசியம் குறுக்கு இருகூற்றுப்பிளவு முறையால் இலிங்கமில் முறை இனப்பெருக்கம் செய்கிறது. அப்பொழுது நுண்கரு இழையுருப் பிரிவுமுறையால் இரண்டாகப் பிரிந்து கலத்தின் எதிர்த்திசைகளை நோக் கிச் செல்கின்றன. மாகரு குறுக்கு முகமாகப் பிரிவடைய ஒரு புதிய
ப : "பு : T. 1பப்

Page 25
- 36 -
குழியத் தொண்டையும், இரு சுருங்கத்தக்க புன் வெற்றிடங்களும் புதிய அடிச்சிறுமணிகளும் உண்டாகி, மின்னர் குழியமுதலுரு குறுக்குமுக மாக இருகூறுகளாக்கப்படுகின்றது. இவ்வாறுண்டாகும் மகட்பரமீசியங் கள் ஒரே பருமனை யும், புன்னங்கங்களெல்லாவற்றையும் உடையனவா யும் காணப்படும். இவை முழு வளர்ச்சியடைந்தபின் மீண்டும் குறுக்கு முகமாகப் பிரிவடைகின்றன. ஒருமுறை குறுக்கு இருகூற்றுப் பிளவு நடைபெறுவதற்கு இரண்டு மணித்தியாலங்கள் வரை எடுக்கும். குறுக்குப்பிளவு முறையாலுண்டாகும் பரமசியங்களெல்லாம் ஒரு முளை வகையையே (clone) சேர்ந்தவையாகும். பிளவுமுறை இனப்பெருக்க வீதம் உணவு, வெப்பநிலை, வளர்ப்பு ஊடகம், அகக் காரணிகளான பாரம்பரியம், உடற்றொழிலியல் ஆகியவற்றைப் பொறுத்துள்ளது.
1. இணைந்துள்ள
இணையிகள்
பா
2, 3, நுண்கரு
பிரிவடைதல். 2
4. ஒரு நுண்சுரு
எஞ்சியுள்ளது
5, நிலையான கரு,
குடிபெயர் கரு உண்டாதல்
3583
3 : .';
6. கருக்கள் ஒன்று
சேர்தல்
7. நுகக்கரு
உண்டாதல்
8. இணைந்த
சார்பிலிகள்
9, 10, 11, கரு
பாக் பிரிவடைதல்
பி 4
பப்
12. 'மகட்பரமீசியங்
களுண்டாதல்
படம் 17 - பாமீசியம் கோடேற்றம் - இணைதல்

இளைதல் :
IF 'கருப்பொருட்களை (நிறமூர்த்தங்களை) மாற்றிக்கொள்வதற்காக ஒரே இனத்தைச் சேர்ந்த இரு அங்கிகள் தற்காலிகமாக ஒன்றுசேருவதே இணைதல் எனப்படும். அடுத்து வரும் சந்ததிகள் இருபரமீசியங்களின் சேர்க்கையால் நேரடியாக உண்டாவதில்லையாதலால் இணைதலை இலிங்க முறை இனப்பெருக்கமெனக்கொள்ள முடி யாது. ஏனைய புரோற்றே சோவாக்களிலும் மெற்றாசோவாக்களிலும் நடை பெறும் புணரிச் சேர்க் கையிலிருந்து இது வேறுபடுகிறது.
பிளவுமுறையால் மட்டும் இனப்பெருக்கம் நடைபெற்றால் சிறிது காலத்திற்குப்பின் அவற்றின் வாழ்தகவு (Vjability) குறைகிறது. எனவே அவை இணைதல் முறையால் இனப்பெருக்கம் , செய்கின்றன. பரமீசியத்தில் இரு புணர்ச்சிவகைகள் (Mating types)உள்ளன. வளர்ப்பு ஊடகத்திலே இரு புணர்ச்சிவகைகளும் இல்லாவிடில் பரமீசியங்கள் இணை யமாட்டா.
இணைதலின் பொழுது பரசிமீயங்கள் சோடி சேருகின்றன. முதலில் முன்பக்கமாக ஒன்றோடொன்று முட்டி பின்னர் வாய்த்தவாளிப்புப் பகுதியில் தற்காலிகமாக இணைகின்றன. குழியத்தொண்டையும், குழிய வாயும் அற்றுப்போக முத லுருப்பாலமொன் றுண்டாகிறது. இவ்வாறு இணையும் பரமீசியங்கள் "இணை யிகள்' (Conjugants) எனப்படும். சுலத் தகத்தே மாகரு பிரிந்தழிந்து அகக்கலவுருவுடன் கலந்துவிடுகிறது. ஒவ் வொரு இணையியிலுமுள்ள நுண்கரு பருமனடைந்து இரு முறை பிரிவடைவதனால் நான்கு கருக்கள் உண்டாகின்றன். இப்பிரிவுகளி லொன்று ஒடுங்கற்பிரிவாயிருத்தல் வேண்டும். எனவே நிறமுர்த்த எண்ணிக்கை பாதியாக்கப்படுகிறது. நான்கு கருக்களில் மூன்று அழிந்து விட, எஞ்சியுள்ள கரு மற்றொரு முறை பிரிவடைகிறது. அப்பொழுது ஒரு பெரிய கருவும் ஒரு சிறிய கருவும் உண்டாகின்றன. பெரிய கரு நிலையான சுரு (Stationary nucleus) என்றும், சிறிய கரு குடிபெயர் கரு (Migratory nucleus) என்றும் அழைக்கப்படும், ஒவ்வொரு இணையியிலு முள்ள குடி பெயர்கரு மறு இணையியினுட்சென்று அதற்குள் உள்ள நிலை யான கருவுடன் சேருவதால் ந கக்கரு உண்டாகுகிறது.இரு இணை யி களும் இதன் பின்னர் வெவ்வேறாகப் பிரிந்து விடுகின்றன. இனவ இப் பொழுது இணைந்த சார்பிலிகள் (FX(0 jugarts) எனப்படும். இதன்பின் நடைபெறும் செயல்கள் வென்வேறு இனங்களில் மாறுபடக்கூடும், பரமீ "சியம் கோடேற்றத்தில் இணைந்த சார்பிலிகளிலுள்ள நுகக்கரு மூன்று முறை தொடர்ச்சியாகப் பிரிவடைவதனால் எட்டுக்கருக்கள் உண்டாகின் றன. இவற்றில் நான்கு மாகருக்களாகவும், நான்கு நுண்கருக்களாகவும் வேறுபடுகின்றன. குழியமுத லுரு குறுக்கு மூக்மாகப்பிரிவடைவதனால்
IHI

Page 26
- 38 -
இரு பரமீசியங்கள் உண்டாகின்றன. இவையொவ்வொன்றிலும் இரு மாகருக்களும், இரு நுண்கருக்களும் காணப்படும். மற்றொருமுறை பிரிவேற்படுவதால் ஒரு மாகருவையும் ஒரு நுண்கருவையும் கொண்ட நான்கு மகட்பரமீசியங்கள் உண்டாகின்றன், .
+1 (8) /.|2
படம் I - பரமீசியம் - தற்கருப்புணர்ச்சி
நற்கருப்புணர்ச்சி (Autogamy)
தற்கருப் புணர்ச்சியின்போது மாகரு அழிய துண்கரு இரு முறை பிரிவடைந்து நான்கு கருக்கள் உண்டாகின்றன, இவையொவ்வொன் றிலும் ஒருமடியான நிறமூர்த்தங்களே உண்டு. நான்கு கருக்களில் மூன்று அழிந்துவிட எஞ்சியிருக்கும் கரு பிரிவடைவதனால் இருகருக்கள் உண்டா கின்றன. இவ்விருகருக்களும், இணைதலின் போ துண்டாகும் புண்ரிக் கருக்களைப்போன்று தொழிற்படுகின்றன. அதாவது இரு கருக்களும் ஓன்று சேர்ந்து நுகக்கரு உண்டாகிறது. இந்நுகக்கரு மூன்றுமுறை பிரி வடைவதனால் நான்குசோடிக்கருக்கள் உண்டாகின்றன. இவற்றில் நான்கு மாகருக்களாகவும், ஏனைய நான்கு நுண்கருக்களாகவும் வியத்த மடைகின்றன. பரமீசியத்தில் குறுக்குப்பிளவு நடைபெற்று நான்கு மகட் பரமீசியுங்களுண்டாகின்றன,

- 3 -
சில பரமசியமினங்களில் மாகரு அழிய, நுண்கருபிரிவடைந்து அதிலிருந்து கிடைக்கப்பெறும் கருக்கள் முன்னர் விவரித்தது போன்று ஓன்று சேர்ந்து நுகக்கருவை உண்டாக்குவதில்லையெனவும், தாய்ப்பரம் சியம் குறுக்கு இருகூற்றுப்பிளவு அடைகிறதெனவும் கருதப்பட்டது. இச் செய்முறை அகக்கலப்பு (Endomixis) எES வழங்கப்பட்டது. ஆனால் ஆராய்ச்சிகளின் பயனாய் எப்பொழுதும் நுகக்கரு உண்டாகிறதெனவே காட்டப்பட்டுள்ளது. எனவே பரமீசியத்தில் அகக்கலப்பு நடைபெறு வதில்லையெனக் கருதப்படுகிறது.
- இனை தலின் போதும் தற்கருப்புணர்ச்சியின் போதும் மாகரு அழிந்துவிட துண்கருவின் ஒரு பகுதியிலிருந்து புதியதொரு மாகரு உண்' டாகிறது. மாகருவிலுள்ள சோடியான நிறமூர்த்தங்கள் அடிக்கடி இரட் டிப்படைவதனால் அது பன் மடியம் (Polyploid) கொண்ட கருவாகின்றது இரு கூற்றுப்பிளவின்போது மாகரு இழையுருவில் பிரிவடைவதனால் (Amitotic division) மகட்பரமீசியங்கள் ஒழுங்கற்ற முறையில் நிறமூர்த் தங்களைப் பெறுகின்றன. எனவே பலமுறை இருகூற்றுப்பிளவு நடைபெற்ற பின் மகட்பரமீசியங்களுக்கிடையே அமைப்புமாறுபாடுகளையும் , வாழ் தகவு குன்றுவதையும் அவதானிக்கலாம். எனவே இணைதலின்பொழுதும் தற்கருப்புணர்ச்சியின் பொழுதும் பழைய மாகரு அழிந்து புதிய மாகரு உண்டாகி நிறமூர்த்தச் சமநிலை ஏற்படுவதுடன் வாழ்தகவும் அதிகரிக்கப் படுகிறது. ஆகவே சமநிலைப்படுத்தப்பட்ட நிறமூர்த்த எண்ணிக்கையை உண்டாக்குவதே நுண்கருவின் முக்கிய தொழிலாகும். தற்கருப்புணர்ச்சி யின்போது ஒரே கருவிலிருந்து பெறப்பட்ட இரு நுண்கருக்களே ஓன்று சேருகின்றன. எனவே அடுத்துவரும் சந்ததிகளெல்லாம் ஓரினனுக முள்ள (Homozygous) வையாகவே காணப்படும். ஆனால் இணைதலின் போது ஒரு பரமீசியத்தின் குடிபெயர்கரு வேறோரு பரமீசியத்தின் நிலை யான கருவுடன் சேருவதனால் அடுத்து வரும் சந்ததிகளின் பரம்பரை யலகுகளில் மாற்றம் ஏற்படலாம். இதனால் வாழ்தகவு அதிகரிக்க வழி யுண்டாகிறது.
ஒரு விலங்கில் இலிங்கமுறையினப்பெருக்கம் நடைபெறும் பொழுது புணரிகள் உண்டாகி, அவை ஒன்று சேருவதனால் நுகம் உண்டாகிறது. ஆனால் இணைதலின் போது கருக்கள் மட்டுமே ஒன்றுசேருகின்றன. ஆகவே ஒன்று சேரும் கருக்களை புணரிக்கருக்களென்றும் அதன்பின் உண்டாகும் கருவை நுகக்கரு என்றும் அழைக்கிறோம். இணைதல் ஒரு இலிங்கச் செய் முறையேயல்லாது (Sexual process) இலிங்கமுறையினப்பெருக்கம் என்று கூறமுடியாது. இனைதலைத் தொடர்ந்து நடைபெறும் இருகூற்றுப்பிள் " வின் போதே இனம் பெருகுகின்றது.
"+ -ப-1

Page 27
- 40 -
தொகுப்பு புரோற்றோசோவாவில் நாம் காக்கிமீனா. அமீபா, பரமீசியம், சில னோசிஸ்றில், பிளாஸ்மோடியம் ஆகிய ஐந்து அங்கிகளையும் தனித்தனியே ஆராய்ந்தோம், இங்கு அவற்றிடையே காணப்படும் ஒற்றுமை வேற்று மைகளை நோக்குவோம், 5க்கிளின. அமீபா, பரமீசியம் ஆகியவை நன்னீரிலே சுயாதீனமாக வாழ்பவையாகும். சிலனோசிஸ்றிசும் பிளாஸ் மோடியமும் ஒட்டுண் கணினிகளாகும். எனவே அங்கிகள் தாம் வாழும் சூழ் நிலைக்கேற்ப வேறுபாடுகளடைந்துள்ளன, முதலில் சுயாதீன வாழ்க்கை யுடைய அங்கிகளை நோக்குங்கண் (Aாக்கிளினாவிலும் பரமீசியத்திலு முள்ள சருமம் அவ்வங்கிகளுக்கு வரையறைவானவொரு உருவத்தைக் கொடுக்கின்றது. சிக்கிளினா கதிருருவாகவும் பரமீசியம் செருப்புவடி வாகவுமுள்ளன. அமீபாவில் வெளிப்புறமாக மெல் லிய முதலுருமென் சவ்வு மட்டுமேயுள்ளது. ஆகையால் " அமீபாவிற்கு வரையறைவான வொரு உருவம் கிடையாது. ஒட்டுண்ணிகளை நோக்குங்கண், மண்புழுவின் சுக்கிலப்புடகத்தில் அகவொட்டுண்ணியாக வாழும், சிலனோசிஸ் றிசின் போசணைச்சிற்றுயிர் வட்டத்தட்டுருவாக இருப்பதைக் காண்கிறோம். அவற்றில் குழியமுதலுரு எறியங்கள் இருப்பதையும் அவதானிக்கலாம். பிளாஸ்மோடியம் மனிதரின்குருதியிலே அகவொட்டுண்ணியாக வாழ் கிறது. அரிவாளுருவான வித்திச்சுற்றுயிர்கள் ஈரற்கலங்களிலிருந்து போசணையைப் பெற்று வளர்கின்றன. ப க -
TEE -சர்
11 புகார் ஊக்கிளினா.. அமீபா, சிலனோசிஸ் றிஸ்), ஆகியவற்றில் ஒரு கரு மட்டுமேயிருக்க பரமீசியத்தில் இருகருக்கள் காணப்படுகின்றன. பரமீ சியத்தின் பெரிய கரு 'மாகரு' என்றும் சிறிய கரு 'நுண்கரு' என்றும் அழைக்கப்படும், மாகரு பதியத்திற்குரிய தொழில்களைக் கட்டுப்படுத்த நுண்கரு இனப்பெருக்கத்தில் ஈடுபடுகிறதெனப் பரிசோதனைகள் மூலம் காட்டப்பட்டுள்ளது.)
1 1 1 -4: ஈ' ஊக்கிளினாவின் நம் சருமம் மீள்சக்தியுடையதாயிருப்பதால் புறக் கலவருப் படையிலுள்ள தசையிழைகளின் சுருங்கலினால் அக்கிளினா வசைவு நடைபெறுகிறது. அத்துடன் முன் முனையிலுள்ள சவுக்குமுறையும் ஊக்கிளினாவின் இடப்பெயர்ச்சிச்கு உதவியளிக்கிறது. சவுக்குமுறையின சைவை அதனடியிற் காணப்படும் அடிச்சிறுமணிகள் கட்டுப்படுத்துகின் றன. 'அமீபாவில் குபியமுதலுரு செல்நிலையிலிருந்து சொல்நிலையாகவும் சொல்நிலையிலிருந்து செல்நிலையாகவும் மாறும் நிகழ்ச்சிகளால் போலிப் பாதங்கள் உண்டாகி இடப்பெயர்ச்சி நடைபெறுகிறது, அமீபாவுடலின் எப்பகுதியிலிருந்தும் போலிப்பாதங்கள் தோன்றலாம், பரமீசியத்தில் சருமத்தின் மேற்பரப்பில் நீள்பக்கவரிசையில் நீள்சதுரமான பள்ளங்கள்
7 18 +EE

- 41 ---
காணப்படும். புறக்கலவுருவிலுள்ள அடிச்சிறுமணிகளிலிருந்துண்டாகும் பிசிர்கள் பள்ளங்களின் மத்தியினூடாக வெளிவருகின் றன. அடிச்சிறுமணி கள் நீள்பக்க நரம்புநார்களாலும், குறுக்கு நரம்பு நார்களாலும் தொடுக் கப்பட்டுள்ளன. எனவே 1பிசிர்களில் அசைவு இயைபாக்கம் காணப்படு கிறது . அங்சியின் மேற்பரப்பிற்குச் செங்குத்தாக அடிச்சிறுமணிகளினி டையே மயிர் ச்சிறைப்பைகள் 6 னப்படும் கதிர்வடிவான அமைப்பு களுண்டு. அமுக்கம் அல்லது, உறுத்துணர்ச்சியைக் கொடுக்கின்ற திரவத் தினால் மயிர்ச்சிறைப்பைகள் தாண்டற்பேறடைந்து நீண்ட நுண்ணிய இழைகள் வெளித்தள்ளப்படுகின்றன. பரமீசியத்தினுடலைச் சுற்றியுள்ள பிபிசிர்களினடிப்பாலே பரமீசியம் மழுங்கிய முனையை முன்புறமாகக் கொண்டு நீரிலே நீந்துகிறது. ஆனால் பிசிரடிப்பை எதிர்த்திசையில் மாற்றுவதனால் பின்புறம!ாகவும் அதனால் நீந்தமுடியும். பரமீசியத்தின் பிசிர்கள் நேராகப் பின்னோக்கி அடிக்காமல் ஒரு பக்கப்திற்குச் சாய்வாக அடிப்பதனால் பரமீசியப் தனது நீள்பக்க அச்சை மையமாகக் கொண்டு சுழல்கிறது. வாய்த்தவாளிப்பிலுள்ள பிசிர்கள் ஏனைய பிசிர்களைவிட விரைவாக அடிப்பதால் பரமீசியம் ஒரு சுருளிப்பாதையிற் செல்கிறது. சிலனோசிஸ் றிசும் பிளாஸ்மோடியமும் அகவொட்டுண்ணிகாக விருப் பதாலும் அவற்றைச் சுற்றி உணவுள்ளதாலும் இடப்பெயர்ச்சி அவசியம் மில்லை என்பது தெளிவு. ஆகவே இடப்பெயர்ச்சிக்கென இவ்வங்கிகளில் புன்ன ங்கங்கள் கிடை யா. 61 னினும் சிலனோசிஸ்றிசின் புறக்கலவுருவி லுள்ள தசையிழைகளின் சுருங்கலினால் 1 கிரிகரைனசைவு நடை பெறுவதுண்டு. எக்கிளினாவில் கண்புள்ளியும் ஒளிவாங்கியும் ஒளித்தூண் டலைப்பெறும் பன்னங்கங்களாகத் தொ புல்படுகிறதெனக் கருதப் படுகிறது.
அக்கிளினாவில் குளோரபில் இருப்பதால் அது ஒளித்தொகுப்பு மூலம் தனதுணவைத் தயாரித்துக் கொள்கிறது. எனவே அதன் போசணை முறை தாவரமுறைப் போசணையாகும். தயாரிக்கப்பட்ட காபோவைத ரேற்று பராமைலம் என்னும் பொருளாகச் சேமித்துவைக்கப்படுகிறது. கொக்கிளினாவினங்கள் தமக்கு வேண்டிய சேதனவுறுப்புப் பொருள்களையும் அசேதனவுறுப்புப் பொருள்களையும் தாம் வாழும் நீரிலிருந்து அழுகல் றாவரத்திற்குரிய முறையில் பெற்றுக்கொள்ளுகின்றன. ஊக்கிளினாவில் குழியத் தொண்டையுள்ள பொழுதிலும் அதனூடாக உணவுட்கொள்ளப் படுவதில்லையென்பது கவனத்திற்குரியது அமீபாவும் பரமீசியமும் விலங்கு முறைப் போசணையையுடை யன. அவை நீரிலுள்ள சிறிய விலங்குகளை உணவாக உட்கொள்ளுகின்றன. அமீபா போலிப்பாதங்களையுண்டாக்கி தனதுணவைப் பிடித்து உட்கொள்ள, சிறிதளவு நீரினாற் சூழப்பட்ட உணவு அமீபாவின் அகக்கலவுருவில் உணவுச்சிறு வெற்றிடமாகின்றது,சமி பாட்டு நொதியங்கள் உணவுச்சிறு வெற்றிடங்களுள் சுரக்கப்பட்டு உணவு: 4,
- * ------- 1 12 13 14 1 பாகம் கூட பு:தே இச் 4

Page 28
- 41 -
சமிபாடடைந்து உறிஞ்சப்படுகிறது. உணவுச்சிறு வெற்றிடத்தின் அடக் கம் முதலில் அமிலத்தன்மையாகவும் பின்பு காரத்தன்மையாகவுமிருக்கக் காணப்படுகிறது. பரமீசியத்தில் வாய்த்தவாளிப்பிலுள்ள பிசிர்களினுத வியால் இரையும் சிறிதளவு நீரும் குழியத் தொண்டையையடைந்து. அங்குள்ள தொடரலை மென்சவ்வினடிப்பால் குழியவாயினுாடாக அகக் சுலவுருவையடைந்து உணவுச்சிறு வெற்றிடங்களாகின்றன. உணவுட் கொள்வதற்ரு அமீபாவிற் காணப்படாத புன்னங்கங்கள் பரமீசியத்திற் காணப்படுவது ஓர் சிறப்பியல்பாகும். பரமீசியத்தின் உணவுச்சிறு வெற்றி டங்களின் உள்ளடக்கமும் அமீபாவினதைப் போன்று முதலில் அமிலத் தன்மை வாய்ந்ததாகவும்பின் புகாரத்தன்மையுடையதாகவும் காணப்படு கிறது. இவ்விரு அங்கிகளிலும் கலத்தகச்ச சிபாடே நடைபெறுகிறது. பரமீ சியத்தில் அகக்கல்வுருவோட்டத்தினால் உணவுவெற்றிடங்கள்ஒருபாதையி னூடாக அசைவது குறிப்பிடத்தக்கது, சமிபாடடையாத கழிவுப்பொருள் கள் அமீபா அசையும் பொழுது அங்கியின் ஏதாவதொரு இடத்தில் வெளியேற்றப்படுகிறது - பரமீசியத்தில் சமிபாடடையாத கழிவுப்பொருள். கள் தவக்குதத்தினூடாக வெளியேற்றப்படுகின்றன. கலக்குதம் குழிய வாயினருகே தோன்றும் நிரந்தரமற்றவொரு துவாரமாகும். சிலனோ சிஸ்றிசும் பிளாஸ்மோடியமும் முறையே வித்து முசுக்கட்டையுருவை யும் குருதியையும் உணவாகக் கொள்கின்றன. இவ்வுணவுப்பொருள்கள் பெரும்பாலும் சமிபாடடைந்த நிலையிலேயே இருப்பதால் உணவுட் கொள்வதற்காகவோ சமிபாடு நடைபெறுவதற்காகவே இவற்றிற்கு புன்னங்கங்கள் பாடு இருக்கவேண்டிய அவசியமில்லை. இவ்வங்கிகள் சமிபாட்டு நொதியங்களைச் சுரத்து கலப்புறச்சமிபாடடைந்த திரவ வுணவை மேற்பரப்பினூடாக அகத்துறிஞ்சுகின் றன.
நன்னீரில் வாழும் அமீபா, ஊக்கிளினா, பரமீசியம் ஆகியவை தம் மைச்சூழ்ந்துள்ள நீரிலே கரைந்துள்ள ஒட்சிசனைப் பரவல் முறையாற் பெற்று சுவாசிக்கின்றன, சுவாசித்தலின்போது உண்டாகும் காபனீ" ரொட்சைட்டு உடலின் மேற்பரம்பினூடாக பரவல்முறையால் வெளி யேறுகின்றது. ஒட்டுண்ணிகளிரண்டிலும் அனுசேபம் குறைவாகவே நடைபெறுவதால் அவற்றிற்குச் சிறிதளவு ஒட்சிசனே போதுமானது. அவை தமது சூழலிலுள்ள ஒட்சிசனப் பரவல்முறையாற் பெற்று சுவாசித்து காபனீரொட்சைட்டை வெளிவிடுகின்றன.
1 " நாக்கினை, அமீபா, பரமீசியம் ஆகியவை நன்னீரிலே வாழ்வத னால் இவ்வங்கிகளின் உள்ளடக்கத்திற்கும் சூழலிலுள்ள நீருக்குமிடையே யுள்ள ' செறிவுவித்தியாசங்காரணமாக நீர் பிரசாரண முறையில் அங்கிகளினுட்செல்கிறது. தேவைக்கு மேலதிகமான , நீர் ஒன்று சேர்ந்து சிறிய புன் வெற்றிடமாகி வெடிப்பதனால் வெளியேறுகிறது ஊக்கிளினாவில் முன்முனையில் சிறிய புன் வெற்றிடங்களிலிருந்து சேகரிக்

-- 43 -
சுப்படும் நீர் ஓர் பெரிய சுருங்கத்தக்க புன் வெற்றிடத்திலிருந்து நீர் தாங்கியையடைகிறது. குடுவையுருவான நீர்தாங்கி குழியத்தொண் டையினூடாக நீரை வெளியேற்றுகிறது - அமீபாவில் அகக்கலவுருவி லுண்டாகும் சுருங்கத்தக்க புன்வெற்றிடம் , பெரிதாகி வெடிப்பதனால் நீர் நேரடியாகவே வெளியேற்றப்படுகிறது.. பரமீசியத்தினுடல் ஏனை ய புரோற்றே சொவாக்களுடன் ஒப்பிடும் பொழுது பெரிதாகவிருப்பதால் கூடுதலான நீர் உட்செல்லுமென்று எதிர்பார்க்கலாம், ஆகவே, பரமீ சியத்தில் முன்முனை யிலொரு சுருங்கத்தக்க புன் வெற்றிடமும் பின் முனை யிலொரு சுருங்கத்தக்க புன் வெற்றிடமும் காணப்படுகிறது. ஒவ்வொரு சுருங்கத்தக்க புன் வெற்றிடத்தையும் சுற்றியுள்ள ஆரைப்புன் வெற்றி டங்கள் உடலிலிருந்து நீரைச் சேகரித்து சுருங்கத்தக்க புன் வெற்றிடங் களுட் சேர்க்கின்றன. பின் இவற்றிலிருந்து நீர் வெளியேற்றப்படு கிறது. பின் முனையிலுள்ள சுருங்கத்தக்க புன் வெற்றிடம் குழியவுருவா யினருகேயுள்ளதால் அதனுள் விரைவில் நீர் சேருகிறது. எனவே, அது முன்முனையிலுள்ள சுருங்கத்தக்க புன்வெற்றிடத்தைவிட - அதிக விரைவில் தொழில்படுகிறது. - ஒட்டுண்ணிகளில் சுருங்கத்தக்க, புன் வெற்றிடங்களிருப்பதில்லை, சுருங்கத்தக்க புன் வெற்றிடங்கள் பிரசாமி ணச் சீராக்கலைச் செய்யும் புன்னங்கங்களேயாம். ஒரு சில விஞ்ஞானி கள் இவை கழித்தலங்கங்களாகவும் தொழில்படுகிறதெனக் கூறுகின். றனர்.
1.றோற்றோசோவாவில் இனப்பெருக்கம் இலிங்கமில் முறையாலும் இலிங்கமுறையாலும் நடைபெறுகிறது. பட் உக்கிளினாவிலும் - அமீபா வியும் பரமீசியத்திலும் இலிங்கமில் முறையில் மட்டுமே இனப்பெருக்கம் நடைபெறுகிறது. அமீபா இருகூற்றுப்பிளவுமுறையால் இலிங்கமில் முறை இனப்பெருக்கம் செய்கிறது. அமீபாவில் முன்முனை பின்முனை என்று கிடையாதாதலால் பிளவு குறிப்பிட்டவொரு அச்சினூடாக நடைபெற வேண்டுமென்பதில்லை, இலக்கிளினாவில் இருகூற்றுப்பிளவு நெடுக்குமுகமாகவும் பரமீசியத்தில் குறுக்குமுகமாகவும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும். குளங்கள் வரண்டு போகுங் காலத்தில் ஊக்கிளினா தன்னுடலைச்" சுற்றியொருசிறைப்பையை யுண்டாக்கிக் கொள்கிறது. இந்நிலையிலும் இருகூற்றுப்பிளவு நடைபெறலாம். அமீபா சிறைப்பையினுள் இருக்குங்காலத்தில் பல்கூற்றுப்பிளவுமுறை யால் இனத்தைப் பெருக்கிக்கொள்கிறது. 2ாக்கிளினாவிலும் அமீபா விலும் காணப்படாத வகையில் பரமசியத்தில் இணைதலும் தற்கருப் புணர்ச்சியும் இடம் பெறுகின்றன. இச்செய்முறைகளின்போது மாகரு அழிந்தொழிய நுண்கருப்பொருளிலிருந்து புதிய மாகரு உண்டாகிறது. இதனால் வீரியமுடைய இனங்கள் உண்டாக வழி ஏற்படுகிறது. -
ப: - ட 11 ". 11. '". யா - L : 41 411 -1

Page 29
- 44
ரிக்டர் நிக்க கை அ
இணைதயும் தற்கருப்புணர்ச்சியையும் இனப்பெருக்க முறைக ளெனக் கூறமுடியாது. ஏனெனில் இச்செய்முறைகளின் போது நுண் கருக்கள் பிரிவடைந்து, மீண்டும் அவற்றின் பகுதிகள் ஒன்று சேர்ந்து நுகக்கரு உண்டாகியபோதும் அங்கியின் எண்ணிக்கையில் மாற்றமேற் படுவதில்லை, இச்செய்முறைகளைத் தொடர்ந்து நடைபெறும் குறுக்கு இருகூற்றுப் பிளவுகளினாலேயே அங்கிகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்ற தென்பது குறிப்பிடத் தக்கது. சிலனோசிஸ்றிசுகள் முழு வளர்ச்சி யடைந்தபின் சோடி சேர்ந்து புணரிக்குறியங்களாகின்றன. இவை தம்மைச்சுற்றி இரு படையாலான ஈட்டச்சிறைப்பையை உண்டாக்கிக் கொள்கின்றன. புணரிக்குறியங்களிலிருந்து புணரிகளுண்டாகி, கடந்து கருக்கட்டல் நடைபெற்று வித்தியரும்பர்கள் உண்டாகின்றன, நெடுக்கு முகப்பிளவுகளினால் ஒவ்வொரு வித்தியரும்பரிலிருந்தும் எட்டு வித்திச் சிற்றுயிர்கள் உண்டாகின்றன. பிளாஸ்மோடியத்தில் இலிங்கமில்முறை யினப்பெருக்கமும் இலிங்கமுறையினப்பெருக்கமும் மாறிமாறி இடம் பெறுகின்றன இலிங்கமில்முறை மனிதனின் ஈரற்கலங்களிலும் செங் குழியங்களிலும் நுளம்பிலும் நடைபெறுகிறது. ஆனால், இலிங்கமு றை இனப்பெருக்கம் மனிதனின் செங்குழியங்களில் ஆரம்பித்து நுளம்பின் இரைப்பையரிலே தொடர்ந்து நடைபெறுகிறது. பிளாஸ்மோடியத்தின் வாழ்க்கைச் சக்கரத்தில் நுளம்பு காவியாக (vector) இருப்பது குறிப் பிடத்தக்கது. ---- 4 4 பச
பாப் பாபு - 1 --> போசணைச் சிற்றுயிர்கள் - 2
பாட்டி நம் - 14- Eாடர்
வித்திச்சிற்றுயிர்
- ஈ) படிமம் படு புணரிக்குழியம் - புண ரிக்குழியம்
14 பாய Tா 4 : பர் 1பயா' பு11பு |
ப ய அ --- 1140 | வித்தியரும்பர் 11 பா ETINALL 1 ப ஒத்தபுணரிகள் ஒத்தபுணரிகள்
1/A + 1 =ாடப் 1 - 1:
4 ப ா - - 111 ப
-- துசும் - 11:31 - 111 + 1 = fir-TT சகா-4 44:1-ரா
சிலருேசிஸ்றிசின் வாழ்க்கைச் சக்கரம்

- 44 -
பிளவுப்பிறப்புச் சிற்றுார்.
டோசணைச்சிற்றுயிர்
செங்குழியம்
T பார் -1
பய ப , 7 ( 41 ஈரல் - 1
ஈரல்
போசணைச்சிற்றுயிர்
"".
11 v 41 பிளவுப்பிறப்புச்சிற்றுயிர்
பா மாது புரம் - காதல் பாப்பா பாப்பாரப் காது (படம்) ' பார்ட் - 1 கப்
செங்குழியம் |
வித்திச் சிற்றுயிர்
மாபுணரிக்குழியம் நுண்புண ரிக்குழியம்
- பர |-4!
மாபுணரி
பு. ஆண்புணரி
கபட ;
நுகம் .
-'! 1 (E
11 பா புட்டிங்
1 11 , சி = 4 எப் பட்ட பிளாஸ்மோடியத்தின் வாழ்க்கைச் சக்கரம்
- ட ப ப் பு பா
படம் 'ரl+T) 4 படிப்பு:19 MLாழ். - =4- 1 -4 Fக -- 1 ஈ-- Es,H: ச =டி 4 = 4--டி படி. ---சரசா. சிலனோசிஸ் நி சினதும் பிளாஸ்மோடியத்தினதும் வாழ்க்கச் சக்கரங்கள் ஒப்பிடுதல் : 11
சபா - டிப்-பு: 11 ப ப ச ட தா 17: 141பாக
1இ ப எ 11 + 1 # 1ாடியா: "டட் ம் அடிப்படை இயல்புகளில் சிலனோசிஸ்றிசினதும் பிளாஸ்மோடியத் தினதும் வாழ்க்கைச் சக்கரங்கள் ஒத்திருக்கின்ற போதிலும்1 அநேக வேற்றுமைகளும் அவற்றிற்கிடையே காணப்படுகின்றன, பசிலனோசிஸ் றிஸ் பொத்திமாச்சாதி மண்புழுவின் சுக்கிலப் புடசுத்தில் வாழ்கிறது.. அதாவது விருந்துவழங்கி ஒரு முள்ளந்தண்டற்ற விலங்காகும். ஆனால், பிளாஸ்மோடியம் மனிதனின், ஈரற் கலங்களிலும் செங்குழியங்களிலும் வாழ்கின்றது. ஆகவே, இதன் முதன்விருந்துவழங்கி ஒரு முள்ளந்தண்டு விலங்காகும். இதன் வாழ்க்கைச் சக்கரத்தில் நுளம்பு ஒரு காவியாக ! உள்ளது, சிலனோசிஸ் றிசின் வாழ்க்கைச் சக்கரத்தில் காவி கிடையாது.

Page 30
_ 45 -
சிலனோசிஸ் றிசில் வித்திச் சிற்றுயிர்கள் முசுக்கட்டையுருவிலிருந்து போச ணை யைப் பெற்று வளர்ந்து போசணைச் சிற்றுயிர்களாக வளருகின்றன. பிளாஸ்மோடியத்தின் வாழ்க்கைச் சக்கரத்தில் நுளம்பினால் மனிதனின் குருதிக்கவனிற் சேர்க்கப்படும் வித்திச்சிற்றுயிர்கள் குருதிக் கலன்களி லிருந்து ஈரற்கலங்களை யடைந்து போசணை பெற்று வளர்ந்து போசணைச் சிற்றுயிர்களாகின்றன, இவை பிளவு முறையால் பல பிளவுச்சிற்றுயிர் களை (பாத்து முறைச் சிற்றுயிர்கள் உண்டாக்குகின்றன, பிளவுப் பிறப்புச் சிற்றுயிர்கள் மீண்டும் ஈரற் கலங்களைத் தாக்கக்கூடும், அல்லது செங்குழியங்களைத் தாக்கி வளர்ச்சியடையக்கூடும். செங்குழியங் சளிலே அமீபாப் போலி நிலை, முத்திரை மோதிரநிலை ஆகிய நிலைகளைக் கடந்தபின் பிளவுப்பிறப்பு முறையால் இலிங்கமில் முறை இனப்பெருக்கம் நடைபெறுகிறது. அப்பொழுது உண்டாகும் பிளவுப்பிறப்புச் சிற்றுயிர் கள் மீண்டும் செங்குழியங்களைத் தாக்குகின்றன. ஈரற்கலங்களிலும் செங்குழியங்களிலும் நடைபெறும் பிளவுப்பிறப்பு முறையிலான இனப் பெருக்கத்திற்கு ஒப்பாக சிலனோசிஸ் றிசில் ஒன்றையுங் கூறமுடியாது.
இலிங்கமுறையினப்பெருக்கத்தின் போது சிலனோசிஸ் றிசில் போச ணைச் சிற்றுயிர் ஒரு புணரிக்குழியுமாக மாறுகிறது. புணரிக்குழியங்கள் சோடி சேர்ந்து இரு படையா வான ஈட்டச் சிறைப்பையை உண்டாக்கிக் கொள்கின் றன. ஆனால், பிளாஸ்மோடியத்தில் பிளவுப்பிறப்புச் சிற்றுயிர்கள் செங்குழியங்களினுள்னே வளர்ந்து புணரிக்குழியங்களா கின்றன. பிளாஸ்மோடியத்தில் புணரிக்கு பிரியங்கள் இருவகைப்படும். மாபுணரிக்கு யம் சிறிய கருவையும் உணவுச் சேமிப்பைக் கொண்ட குழியமுதலுருவையும் கொண்டது. நுண் புணரிக்குழியம் பெரிய கரு வையும் தெளிவான குழ'யமுதலுருவையும் கொண்டது. - சிலனோசிஸ்றி சில் புணரிக் குழியங்களை மாபுணரிக் குழியம், நுண்புணரிக்குழியமென் வேறுபடுத்த முடியாது'. சிலனோசிஸ்றிசின் புணரிக்குரியங்களிலிருந்து உண்டாகும் புணரிகளும் ஒத்தபுணரி களேயாம்... ஆனால், பிளாஸ்மோ டியத்தில் புணரிக்குயங்கள் நுளம்பையடைந்தால் மட்டுமே மேலும் விருத்தியடைகின்றன. உமாபுணாரிக்குழியத்திலிருந்து ஒரு மாபுணரியும். நுண்புணரிக்குழியத்திலிருந்து பல நுண்புணரிகளும் உண்டாகின் றன. இரு ஒட்டுண்ணிகளின் வாழ்க்கையிலும் கருக்கட்டலின் பின் நுகங்கள் உண்டாகின்றன"யு சிலனோசிஸ்றிசில்" நுசும் வித்தியரும்பராசி வித்திச் சிறைப்பையைச் சுரக்கிறது: வித்திச்சிறைப்பையினுள் வித்தியரும்பர் மூன்று நெடுக்குமுகப்பிரிவுகளடைந்து எட்டு வித்திச் சிற்றுயிர்களையுண் பாக்குகிறது. ஆனால், பிளாஸ்மோடியத்தில் நுகம் நுளம்பின் இரைப் பைச் சுவரைத் துளைத்து - மேலணிக்கலங்களுக்கும் மேலணிக் கீழ்க்" கலங்களுக்குமிடையே சென்று வித்திப்பிறப்பு மூலம் இலிங்கமுறையில் இனத்தைப் பெருக்குகிறது. அப்பொழுது அநேக வித்திச் சிற்றுயிர்கள்

- 47--
உண்டாகின்றன. இவற்றைச் சுற்றி வித்திச்சிறைப்பை உண்டாவ தில்லை. வித்திச்சிற்றுயிர்கள் நுளம்பின் உமிழ்நீர்ச் சுரப்பிகளிலிருந்து மனிதனின் குருதிக்குக் கடத்தப்படுகின்றன. எனவே, பாதுகாப்புக் கவசம் தேவையில்லை. ஆனால், சில னோசிற்றிசில் வித்திச் சிற்றுயிர்கள் ஒரு விருந்து வழங்கியிலிருந்து வேறொன்றிற்குக் கடத்தப்படும் பொழுது ஏற்படும் அபாயங்களிலிருந்து பாதுகாப்பதற்காக வித்திச்சிறைப்பை இருப்பது அவசியமாகிறது.
 ெபாத்திமாவின் சுக்கிலப்புட கத்தில் சிலஞோசில்றில் இருக்கிறதெனக் காட்டல் |
அதை 0.1%ப்புடகங்களை மண்டிகாரக் கண்ணகட்டி உள்
மதிர்ந்த பெரத்திமாச்சாதியைச் சேர்ந்த மண்புழுவை பத்து நிமி டங்களுக்கு 70 அற்ககோலில் வைத்து இறக்கச் செய்யவும். பின்பு அதை 0.7 உப்புக்கரைசலில் வைத்து உடலின் மேற்புறமாக வெட் டவும். சுக்கிலப்புடகங்களை மண்புழுவிலிருந்து பிரித்தெடுத்து சிறிதளவு உப்புக்கரைசலைக் கொண்ட கடிகாரக் கண்ணாடியில் வைத்து கூரான ஆயுதத்தினால் (Blade) சுக்கிலப்புடகங்களை வெட்டி உள்ளடக்கத்தை ஒரு தூரிகையையுபயோகித்துக் கழுவவும். கடிகாரக்கண்ணாடியிலுள்ள திரவம் பால் நிறமாகும் பொழுது சுக்கிலப்புடகங்களை அகற்றிவிட்டு திரவத்தில் ஒரு பகுதியை வேறெரு கடிகாரக்கண்ணாடிக்கு மாற்றவும். இதற்கு 1% மெதலின் நீலம் (Methylene Blue) சேர்த்து பதினைந்து நிமிடங்கள் வரை சாயமூறவிடவும். பின்பு ஒரு வழுக்கியிலேஒரு துளி கிளிசரினை , எடுத்து அதில் சாயமிடப்பட்ட தொங்கலின் ஒரு துளியை விட்டு மூடுகண்ணாடியை அதன்மேல் வைத்து நுணுக்குகாட்டியினூடாக பார்க்கவும், வழுக்கியில் சிலனோசிஸ் றிசின் வாழ்க்கைச் சக்கரத்தின் பல நிலைகளை அவதானிக்கலாம்.
நிரந்தரமான சாயமிடப்பட்ட தயாரிப்பை ஆக்கல் :
மேலே விவரிக்கப்பட்ட வகையில் மண்புழுவைக் கொன்று சுக்கிலப் புடகங்களை எடுத்து ஒரு வழுக்கியின் மேல் சுக்கிலப்புடகத்தின் உள்ள டக்கத்தைப் பூசவும். பூசும் பொழுது வழுக்கியில் மெல்லிய படையாக அமையும்வண்ணம் பூசவேண்டும், அல்லது - அடிகாரக் கண் ணாடி யில் உப்புக்கரைசலை எடுத்து அதில் தொங்கலையுண்டாக்கி, அத்தொங்கலின் ஒரு பகுதியை சாய்வாக வைக்கப்பட்டுள்ள வழுக்கியில் விடவும். காற்றிலே உலரச்செய்து 7% அற்ககோன் அதன் மேல் ஊற்றி ஐந்து நிமிடங்களுக்கு மூடிவைக்கவும். ஏர்லிச்சின் ஈமற்றோட்சிலின் Ehrlicb8 Facmatoxylin) என்னும் சாயப்பொருளில் பதினைந்து நிமிட ங்கள் வரை வைத்துச் சாயமேற்றவும் பின்பு அமில அற்ககோலின லும் தொடர்ந்து 70. அற்ககோலினாலும் கழுவியபின் காரமாக்கப்பட்ட அற்ககோலைச் சேர்க்கவும். இளஞ்சிவப்பு நிறச்சாயம் நீலமாக மாறும். பின்பு 90% அற் ககோலையும் 100, அற்ககோக்லயும் உபயோகித்து நீரையசுற்றி சைவீன் (Xylene) என்னும் திரவத்தினாற் கழுவி கனடாபேர்ல்சத்தைச் சேர்த்து மூடுகண்ணாடியை வைக்கவும்,
ப பு:

Page 31
+ 1 TiH4
ஆ - I=பா நாட்
1-ராபு.- 4
புரோற்றோசோவாவும் மெற்றாசோவாவும்
பு: 15 - 21
பப்பப்பா.--- பல கலங்களாவான அங்கிகளெல்லாம் மெற்றாசோவாக்களெனப் படும், இவ்வரை விலக்கணத்தின்படி, புரோற்றோசோவாவைத்தவிர்த்து ஏனை ய அங்கிகளெல் லாம் மெற்றாசோவாவிலடங்கும்.. மெற்றாசோ வாக்கள் ஆதிகால புரோற்றோசோவாவிலிருந்தே உற்பத்தியாகியிருக் கவேண்டும், ஒரு புரோற்றசோவன் மெற்றாசோவனின் தனியொரு கலத்திற்கு ஒப்பானதென்று கூறமுடியாது. உண்மையில் புரோற்றே சோவன் உடற்றொழில்கள் யாவற்றையும் பிளவுபடாத கலத்தினா லேயே செய்யக்கூடியதாகவுள்ளது. அதில் வெவ்வேறு தொழில்களையும் செய்வதற்குப் + புன்னங்கங்கள் தோன்றியுள்ளன வென்றாலும் 'கலம் பிரிவடைந்திருக்கவில்லை." அமீபா, ஊரக்கிளினா, பரமீசியம் போன்ற புரோற்றோசோவாக்களிளெல்லாம் உடற்றொழிலியற் பங்கீடு காணப் படுகிறது. எனவே புரோற்றோசோலாக்களை ஒரு கலத்தாலான அங்கி யென்று சொல்வதிலும் பார்க்க கலமற்ற அங்கி (acellular organism) என அழைப்பது பொருத்தமாகும்.
ல் புரோற்றே."-ளன. முதலா ?-- ற்றோசோல்
ஆனால் புரோற்றோசோவன் ஒரு கலத்தாலான தென்று கூறுவதற்கும் சில சான்றுகள் கூறப்பட்டுள்ளன. முதலாவதாக மெற்றாசோவனின் ஒரு தனிக்கலத்தைப்போன்று சாதாரணமாக புரோற்றோசோவாவிலும் ஒரு கருவேயுள்ளது. இது இழையுருப்பிரிவு முறையால் (Mitosis) பிரிவடைகிறது. இரண்டாவதாக, மெற்றாசோவாவில் இலிங்கமுறை இனப்பெருக்கத்தின் போது ஒரு கலத்தாலான விந்தும், முட்டையும் உண்டாகின்றன். இளை ஒன்று சேர்வதனால் கருக்கட்டல் நடைபெறு சிறது. புரோற்றோசோவாவில் முழு அங்கி விந்திற்கும், முட்டைக்கும் ஒப்பான புணரிகளாக மாறி புணர்ச்சி நடைபெறுகிறது. மூன்றாவதாக, மெற்றாசோவாவில் விந்தும் முட்டையும் உண்டாகுமுன்பு மூலவுயிர்க் கலம் (Germ cell) ஒடுங்கற்பிரிவடைகிறது (Meiosis) அப்பொழுது நிற மூர்த்த எண்ணிக்கை பாதியாக்கப்படுகிறது. ரோற்றோசோவாவிலும் இன தலுக்கு முன் ஒடுங்கற்பிரிவு நடைபெறுகிறது. இவ்வியல்புகளை நோக்கும் பொழுது ஒரு புரோற்றோசோவன் மெற்றாசோவனின் நிலவு

-- 49 --
14 ப ம்
யிர்க்கலத்திற்கோ 2 வேறொருகலத்திற்கோ ஓப்பானதெனலாம். புரோற்றோசோவா ஒரு கலத்தைக்கொண்டிருந்தாலும் அது ஒரு முழு அங்சி என்பதை நினைவிற் கொள்ளவேண்டும்,
[if E ETIT, மெற்றாசோவாவில் அடங்கும் விலங்குகளில் பல கலங்களிலிருந் தாலும் அவையெல்லாம் ஒரே மாதிரியானவையல்ல. அவை வெவ்வேறு தொழில்களைப் புரிவதற்காக வேறுபாடடைந்துள்ளன. எனவே மெற்ற சோவாவில் உருவவியத்தமும் (Morphological differentiation) உடற் றொழில்முறைத்தொழிற்பங்கீடும் (Physiological division of labour) மிகத் தெளிவாகக் காணப்படுகின்றன. சிக்கலற்ற, தாழ்ந்த மெற்றாசோவா விலங்குகளிலே தனிக்கலங்கள் வெவ்வேறுவிதமாக வியத்தமடைந்து உடலின் எல்லாப்பாகங்களிலும் பரம்பியுள்ளன, ஒவ்வொரு கலமும் அ தன் சிறப்புத் தொழில்களைப் புரிகின்றது. ஆனால் உயர் விலங்குகளிலே ஒரேமாதிரியான பல சுலங்கள் ஒன்று சேர்வதனால் இழையங்களுண் டாகின்றன. பல்வேறு இழையங்களும் சேர்வதனால் அங்கங்களுண்டாகி வெவ்வேறு தொழில்களைப் புரிகின்றன, ஒரு மெற்றாசோவாவின் உடல் உணவுக் கால்வாய், நரம்புத்தொகுதி, கழித்தற்றொகுதி, இனப்பெருக் கத்தொகுதியென உருவவியத்தமடைந்து தத்தம் தொழில்களைப் புரிகின்றன.
'பா|| உருவவியத்தமும் உடற்றொழிற்பங்கீடும் விலங்கு பெரிதாக இருப் பதனால் இன்றியமையாதனவாகின்றன. பல கலங்களாலான விலங் குகள் ஒரு கலத்தாலான அங்கிகளைவிட உருவத்திற் பெரிதாக இருக்கு மென்பது எதிர்பார்க்கக் கூடியதே. விலங்கு பெரிதாக கனவளவிற்கு ஏற்றவாறு மேற்பரப்பு அதிகரிக்கப்படவில்லை. எனவே உடற்றொழில் கள்ளப் புரிவதற்காக கலங்கள் வியத்தமடைந்துள்ளன. மெற்றாசோ வாவின் உடலின் ஒரு பகுதி உண வுட் கொண்டுசமிபாடடையச் செய்து உறிஞ்சுவதற்காக வியத்தமடைந்துள்ளது. இதுவே உணவுக் கால்வாய் எனப்படுகிறது. பெரிய மெற்றாசோவாக்களிலும் சமிபாடடைந்த உணவு பரவல் முறையால் எல்லாக்கலங்களையும் அடையமுடியாது. உணவுக்கால்வாயிலிருந்து அதிக தூரத்திலுள்ள கலங்கள் தமக்கு வேண்டிய போசணையை விரைவிற்பிரசாரண முறையால் பெறமுடியாது. ஆகவே ஒரு கடத்தும் தொகுதியின் அவசியம் ஏற்படுகிறது. இது சிவ மெற்றாசோவாக்களில் உள்ளது போல் உணவுக்கால்வாயிலிருந்து செல்லும் சிறு குழாய்களாக விருக்கலாம் அல்லது உயர்விலங்குகளில் உள்ளது போல் குருதிச்சுற்றோட்டத் தொகுதியாகவிருக்கலாம், புரோற் ரோசோலாக்களில் விளைவுகாட்டும் புன்னங்கங்களெல்லாம் குழிய முத லுருவின் வெளித்தள்ளல்களேயாகும். பொதுவாகப் புரோற்றே சோவாவின் குழியமுதலுரு உணர்ச்சியையேற்று, கடத்தி தூண்டற் 7-4

Page 32
- 50 -
பேறடையும் தன்மை பெற்றுள்ளது. ஆனால் மெற்றாசோவாவில் விளைவு காட்டுமங்கங்கள் வாங்கிக் கலங்களிலிருந்து தூரத்தேயுள்ளதால் தூண்
ட்ல்களைக்கடத்துவதற்காகவும் இயைபுபடுத்துவதற்காகவும் -- நரம்புத். தொகுதிவிருத்தியடைந்துள்ளது. தாழ்ந்த மெற்றாசோவா விலங்கு கனிலே நரம்புத் தொகுதிக்குப் பதிலாக நரம்புவலையுண்டு பெரும் பாலான சிறியமெற்றாசோவாக்கள் நீரிலேயே வாழ்வதனால் ஒட்சிசனைப் பரவல் முறையிற் பெற்று சுவாசிக்கின்றன. சுவாசித்தலின் போதுண் டாகும் காபனீரொட்சைட்டும் பரவல் முறையால் வெளியேற்றப்படு கிறது. இச்சிறு விலங்குகளுக்கு மேற்பரப்பினூடாகப் பெறும் ஒட்சிசன் சுவாசித்தலுக்குப் போதுமானது. ஆனால் பெரிய மெற்றாசோவாக்களின் உடற்பரப்பு குறைவாகவுள்ளதால் சுவாசித்தலுக்காக சுவாசவங்கங்கள் விருத்தியடைந்துள்ளன. நிலத்தில் வாழும் - மெற்றாகோவாக்கள் காற்றிலுள்ள ஒட்சிசனைப்பெறவேண்டியிருப்பதால் அதற்கேற்ப சுவாச வங்கங்கள், வியத்தமடைந்துள்ளன. பெரிய மெற்றாசோவாக்களில் நைதரசன். கழிவுப்பொருள்களை அகற்றுவதற்சுக்க கழித்தலங்கங்களும் விருத்தியடைந்துள்ளன.- மெற்றாசோவாவில் இனப்பெருக்கத் தொகுதி யும் - விருத்தியடைந்துள்ளது. இலிங்கமுறையினப்பெருக்க அங்கங் களான சன்னிகள் (அதாவது விதையும், சூலகமும்) மூலவுயிர்க்கலங்களை யுண்டாக்குகின்றன். பல வகைகளில் இனப்பெருக்கக் கலங்களும் மிகச் சிறப்பியல்புகள் பெற்றுள்ளதெனக் கொண்டாலும் இக்கலங்களொவ் வொன்றும் ஒரு புதிய அங்கியை உண்டாக்கும் தன்மை பெற்றுள்ளதால் ஏனைய கலங்களிலும் குறைந்த நிலையிலேயுள்ளதெனக் கருதலாம். எனவே இனப்பெருக்கக்கலங்களை - மூலவுயிர்க்கலம் - Getm cell) என்றும், ஏனையவற்றை உடற்கலமெனவும் (Smatic Cell] பிரிக்கலாம்., மெற்றாசோவாவிலே உருவவியத்தமும் தொழில்முறைப்பங்கீடும் வெவ் வேறு நிலைகளிலுள்ளதால் மேலும் இரு பிரிவுகளாகப்பிரிக்கலாம்., இரு படைகளிற் கலங்களைக்கொண்ட விலங்குகளை டிப்ளொபிளாஸ்ரிக்கா, Diploblastica) இருபடை விலங்குகள் என்றும் மூன்று : படைகளிற் கலங்களைக்கொண்டவற்றை திரிப்ளொபிளாஸ்ரிக்கா (Triploblastic4) முப்படை விலங்குகள் என்றும் கூறலாம்.
14 2-4 1451, + 45%74 - 11ா. 4, 13, 1 கப் பு11, 1' " -- TET Tாய் பாபா-: 12ாரா பு ! 1,1ட்பட 4ாபைட் 41' பட பா 1 - 111 டிர-1, ப யபு4, '. " காட்ட புகார் - 44 4 - FF1 1 1:7 -1 - 11-11-11. பர 11 ' 2010. பப்,.1 7 கார் 12 - - - - - - - - - - 1, 1 1 - ரா.. ன் படி - 1 - எ-- பர்ன்- 1 -ப. 51,1... -
' ' 41-5)

--",1 - 1, 5-7,
சீலெந்தெராற்றா (Coelenterata) ர்ட1973 -
மெற்றசோவாக்சுளுள் மிகத் தாழ்ந்த விலங்குகள் இதிலடங்கும். இவற்றின் உடல் இழையங்களாலானது. இதிலடங்கும் விலங்குகள் தனி யன்களாகவோ, சமுதாயமாகவோ வாழ்கின்றன. சமுதாயமாக வாழும் இனங்களிலே பொலிப்பு (Polyp), மெதூசா (Medusa) என இருவகை யான தனியன்களுண்டு. குழாயுருவான பொலிப்பின் உடலின் ஒரு முனை ஒரிடத்தில் ஒட்டியிருக்க சுயாதீனமாக மறுமுனையில் வாயும் அதைச்சுற்றிப் பரிசக்கொம்புகளும் காணப்படும், சுயாதீனமாக நீந்தித் திரியும் மெதூசா குடையுருவான செலற்றினாலான உடலைக்கொண்டது. எல்வாசிலெந்தரேற்றுகளும் நீரில் வாழ்வனவே. இவற்றுட் பெரும் பாலானவை கட.ல் நீரிற் காணப்படுகின்றன. ஐதரா, கடல் அனிமொனி (Sea ahenone), இழுதுமீன் (Jelly fish), கோறல் (முருகைக்கல் விலங்கு) (Coral) ஆகியவை சிலெந்தெரேற்றுகளுக்குச் சிறந்த உதாரணங்களாகும்.
சலெங் தெராற்றாவின் இயல்புகள் :
சீலெந்தெரேற்று கள் இருபடைகளிற் கலங்களைக் கொண்ட, பையுரு வான உடலையுடைய விலங்குகளாகும் வெளியேயுள்ளபடை. புறமுதலுருப் படையென்றும் (Ectoderm)
உட்படை அகத்தோற்படையென்றும் (Endodern) அழைக்கப்படும். இப்படைகளினிடையே இழுது போன்ற இடைப்பசை (Mesogloea) உண்டு. " ஏதாவதொரு படையிலோ அல்லது இருபடைகளிலுமோ அழன் மொட்டுச்சிறைப்பைகள் (NematoCysts) காணப்படுகின்றன. பெரும்பாலான சீலெந்தெரேற்றுகள் (உ-ம். ஐதரா) ஆரைச்சமச்சீருடையன வென்றாலும் ' இருபக்கச்சமச்சீருடைய இனங்களும் உள்ளன (உ-ம் தீனோபோரா). வாயைக்சுற்றி பரிசக்கொம்பு களுண்டு. வாயைத்தொடர்ந்துள்ள பையுருவான சமிபாட்டுக்குழி கிளை சுளையுடையதாகவோ பிரிசுவர்களால் அறைகளாகப்பிரிக்கப்பட்டதா கவோ இருக்கும். குதம்கிடையாது. குருதிச் சுற்றோட்டத் தொகுதியோ சுவாசத்தொகுதியோ, கழித்தற்றொகுதியோ கிடையாது. - மையநரம் புத்தொகுதியில்லாவிட்டாலும் உடற்சுவரில் நரம்புக்கல்ங்களாலான வலையுண்டு. இலிங்கமில்முறையினப்பெருக்கம் அரும்புதல் முறையால்

Page 33
-- 51 -
நடைபெறலாம். இலிங்கமுறையினப்பெருக்கத்தின் போது புணரிகள் உண்டாகின்றன. எளிமையான சன்னிகள் காணப்பட்டாலும் அவற்றிற்குக் கான்கள்கிடையா, சீலெத்தேரேற்றுகள் ஓரில்லமுள்ள தாகவோ, ஈரில்லமுள்ளதாகவோ இருக்கலாம். வாழ்க்கைச் சக்கரத்தில் பிசிர்களையுடைய தட்டையம் (Planula] என்னும் குடம்பி காணப்படும் கிறது.
கணப்பிரிவு நைடேரியா !
இக்கணப்பிரிவிலடங்கும் விலங்குகள் சரியான ஆரைச்சமச்சீரு டையன. அழன் மொட்டுச் சிறைப்பைகளுண்டு. வகுப்பு ஐதரோசோவா :
இவ்வகுப்பிலடங்கும் விலங்குகளின் முழுவுடலிகள் ஐதராவுருவுள்ள வையாகும். இவை பெரும்பாலும் கடலில் வாழ்கின்றன. வாழ்க் கைச் சக்கரத்தில் ஐதராவுருக்களுடன் பொலிப்புகளுடன்) மெதூசா நிலையும் காணப்படலாம், வாய்வழி கிடையா. குறிக்குடல் (Coelenteron) பிரிசுவர்களால் அறைகளாகப் பிரிக்கப்படவில்லை. இடைப்பசை கலங்களற்றது.
1- III வருணம் ஐதரோயிடியா:- பு:
பொலிப்புச் சந்ததி நன்றாகவிருத்தியடைந்துள்ளது. சாதாரண மாக சிறிய மெதூசாக்கள் அரும்புகள் போல் உண்டாகி சுயாதீனயாசு நீந்தித்திரிகின்றன. வருணப்பிரிவு 1-- அந்தோ மெ தூசே அல்லது கிமி னோபிளாஸ்ரியா :
ஐதராவுருக்களுக்கு (பொலிப்புகள்) ஐதராவுறை கிடையாது. சனனிகள் மெதாசாவின் பிடியுருவில் அரும்புகின்றன. இவற்றில் நிலைச் சிறைப்பைகள் கிடையா. உ-ம் ஐதரா.
பூபா 1 | வருணப்பிரிவு II - லொற்றே மெதூசே அல்லது கலிப்ற்றோபிளாஸ்ரியா!"
ஐதராவுருக்களுக்களைச் சுற்றி எப்பொழுதும் ஐதராவுறையிருக்கும். சுயாதீனமாக நீந்தித்திரியும் மெதூசாக்கள் தமது ஆரைக்காலவாய்களில் சனணிகளைக் கொண்டுள்ளன. நிலைச்சிறைப்பைகளுண்டு. உ-ம் ஒப்லியா கணம் - சீ.லெந்தெராற்கு கணப்பிரிவு - ரைடேரியா வகுப்பு - ஐதராசோவா வருணம் - ஐதரோயி டியா வருணப்பிரிவு - அந்தோ மெதூசே அல்லது கிமினாபிளஸ்ரியா வகை = ஐநரப்

கணம் - சீலெந்தெராற்ற
சுணப்பிரிவு
நைடேரியா Cnidaria)
ஏநைடேரியா (Acnidaria)
வகுப்பு : ஐதரோசோவா
(Hydrozoa)
அந்தோசோவா
ஸ்கைபோசோவா ப (Anthozoa)
(SchyphoZOA)
வகுப்புப்பிரிவு :
சோ அன்தேரியா (Zசltharia)
அல்லது எட்சகொறல்லியா (HexaCorallia)
வருணம் !
சுதரோயிடியா - அக்ற்றினியேரியா (Hydroiden)
(Acliniaria) உ-ம்: கடல் அனிமனி
Sea anenone)
வருணப்பிரிவு : அந்தோமெது செ
லெப்ற்றோ மெதூசே Arnithomedusae)
LeptomeduSae) அல்லது
அல்லது ஜிம்னோபிளாஸ்ரியா பட கலிப்ற்றோபிளாஸ்ரியா
(Gymnoblasta)
Calyptoblastca)
-பட- - உ-ம்: ஐதரா
உ-ம்: ஓபீலியா (Hydra)
Obelia) 'ப் ப ம பா கர்

Page 34
பட 54
- ஐதராபஇலை
படம் 19 - ஐதரா -
சாதாழையில் ஒட்டியிருத்தல்
ஐதரா (Hydra) வாழிடமும் தோற்றமும் :
ஐதரா வல்காரிஸ் (Hydra vulgaris), கதரா விரிடிஸ் (Hydra viridis) ஆகிய இனங்கள் பொதுவாக நீரிலேயுள்ள தாவரங்களிலும் ஏனைய பொருள்களிலும் அடிப்பாகத்தினால் ஒட்டி வாழக் காணலாம், இவை தனியன்களாகவே வாழ்கின்றதன்றி சமுதாயமாகவல்ல. நீண்ட உருளை வடிவான உடலைக் கொண்ட ஐதரா சுருங்குந்தன்மை பெற்றது, சுயா தீனமான முனை யிலேயுள்ள கூம்புருவான பகுதியின் உச்சியில் வட்டவடி வான வாய் உள்ளதனால் அப்பகுதி வாய்க்கூம்பு alcoாக) எனப்படும். வாய்க்கூம்பின் அடிப்பாகத்தே வாயைச் சுற்றி ஒரு நிரையில் பரிசக் கொம்புகள் காணப்படும், இவற்றின் எண்ணிக்கை மாறுபடலாமென் றாலும் பத்திற்கு மேற்படாது, பரிசக்கொம்புகள் மையத்தே கோறை யாகவிருக்கும்." உடலின் அடிப்பாகத்திலுள்ள சுரப்புக்கலங்களினுத வியால் கதரா அடிப்படைப் பொருள்களில் ஒட்டியிலிருந்தாலும் அதனால் நீத்தவோ அல்லது குத்துக்கரணமாக அல்லது மயிர் கொட்டியைப் - போன்று - இடப்பெயற்சியடையவோ, முடியும். எனவே ஐதரா
ஓரிடத்தில் நிரந்தரமாக ஓட்டிவாழும் விலங்கெனக் கூறமுடியாது,

உ 55 --
வாய்
வாய்க்கூம்பு
பரிசக்கொம்பு
விதை
அரும்பு
சூலகம்
படம் 20 ஐதரா
உடற்சுவர் :
ஐதராவினுடல் இரு படைகளாவானது. புறமுதலுருப்படை எனப் படும் வெளிப்படை விலங்கிற்கு பாதுகாப்புப்படையாக இருப்பதுடன் சுருங்குந்தன்மை பெற்றதாகவும் உணர்வுடையதாகவுமுள்ளது. அசுத் தோற்படை எனப்படும் உட்படை சமிபாட்டுத்தொழிலைச் செய்வதற்கு உதவுகிறது. புறமுதலுருப்படை, அகத்தோற்படை ஆகிய இருபடைகளுக்குமிடையே மெல்லிய படையாக இடைப்பசை காணப் படுகிறது. ""இது "கலங்களற்ற - இழுது - போன்ற பொருளா லானது . ஐதராவின் உடல் பை போன்ற (Sac like) அமைப்புடையது.

Page 35
* 56 -
வாய்
வாய்க்கூம்பு
பிபிபி.110
பா.
10t 1:
44900:45:40
எiைtis)
பரிசக்கொம்பு
அரசியfla!
=119 பர[.5 (1 நடிப்பு
4:09:22
24:t: 2419
அழன்மொட்டு
புறமுதலுருப்படை
இடைப்பசை
TET - கம்பரபுபடிக்EEாபப்பர் AெDHEETHSILLADEIGHTS
அகத்தோற்படை
2014 EMINN
குழிக்குடல்
புப்3ப40:LHGH4 LEாட்
சுரப்புக்கலங்கள்
LIII பா பபா 11ட -க' -- 1
படம் 21 ட கதரா நெ. வெ.
உடற்சுவனாரில் மூடப்பட்டிருக்கும் குதிக்குடல் (Coelenteron) அல்லது உதரகனெகளுக்குரிய குழி (Gastrovascular Cavity) வாயினூடாக வெளித்திறக்கிறது, பத்து போட்டி படிப்பு

இடைப் பசை
உணவுச்சிறு வெற்றிடம்
தன்ச மேலணிக் களம்
சுரப்புக்
க வம்
111ாபாYHITITLVIIIா T111 11ா
4...
நரம்புக் சுயம்
இs மே 2)
அமீபாப்
போலிக் சுவும்
அழன் மொட்டுச் சிறைப்பை
புலன் காலங்கள்
சவுக்கு ச
முளை
தசைவால்
* * படம்_22 - ஐதரா உடற்சுவர்
-'T -1
புறமுதலுருப்படையில் ஏழுவித மரன கலங்கள் உள்ளன, இவை பருமனிலும், தொழிலிலும் வேறுபடுகின்றன. அவையாவன
(i) தசைமேலணிக்கலங்கள் (ii) சுரக்குங்கலங்கள் (iii) சிற்றிடைவெளிக்கலங்கள் (iv) அழன் மொட்டுகள் [+] நரம்புக்கலங்கள் | (wi] வாங்கிக்கலங்கள் அல்லது புலன்கலங்கள் (vii) மூலவுயிர்க்கலங்கள்
- பட பூட்டிப் |

Page 36
- 58 -
- (i) தசைப்பலணிக் கலங்கள் :
புறமுத்துருப்படையில் பெருமளவிற் காணப்படுவது இவையே, பெரிய கூம்புருவான கலங்களின் அகன்ற முனைகள் வெளிப்புறமாக வுள்ளன. இடைப்பசையுடனொட்டியிருக்கும் முனைகள் உடலின் நீள் அச்சிற்குச் சமாந்தரமாக தசைவால்களாக நீட்டப்பட்டுள்ளன. இத் தசைவால்கள் சுருங்குவதால் ஐதராவினுடல் குறுகுகிறது. அதே போன்று பரிசக்கொம்புகளிலுள்ள தசைமேலணிக்கலங்கள் சுருங்குவதால் - பரிசக்கொம்புகள் குறுகுகின்றன.
நரம்புக்
தலம்
தசைமேல்
யக்கலம்
சிற்றிடை வெளிக் 34
இடைப் - பசை
பு- கலம்
தசை
யால் -
வாங்கிக்
காம்
படம் 23- உடற்சுவர்
அ - காங்FA=!! (ii) சுரக்குங் கலங்கள் :
1ம் + +6 ஐதராவின் அடிப்பாகத்தேயுள்ள கலங்கள் நீண்டு சுரப்புக்கலங் களாகத் தொழில் புரிகின்றன. இக்சவங்களிலிருந்து பெறப்படும் சுரக் குங்கசங்ககரினுதவியால் ஐதரா நீரிலுள்ள தாவரங்களின் மேலும் ஏனைய பொருள்களின் மேலும் ஒட்டிக்கொள்கிறது. இக்கலங்களிலிருந்து வாயுக்குமிழ்கள் உண்டாவதால் ஐதராவினால் நீரிலே மிதக்கமுடிகிறது. )

(iii) சிற்றிடை வெ ளிக்கலங்கள் :
இவை தசை மேலணிக்கலங்களினிடையேயுள்ள இடைவெளிகளிற் காணப்படுகின்றன, சிறிய கோளவுருவான இக்கலங்கள் தொடர்ந்து உபயோகப்படுத்தப்படும், அழன் மொட்டுகளை உருவாக்குவதுடன் அரும்புகள், பாற்கலங்கள் ஆகியவற்றையும் இவை உருவாக்குகின்றன,
(iv) அடின் மொட்டுகள் :
புறமுதலுருப்படையில் தசைமேலணிக்கலங்களிடையேயுள்ள சிற்றி டைவெளிக்கலங்களிலிருந்து அழன் மொட்டுகள் விருத்தியடைகின்றன. அதிக சிறப்பியல்புகள் பெற்ற இக்கலங்கள் ஒவ்வொன்றும் ஒரு அழன் மொட்டுச்சிறைப்பையைச் சுரக்கிறது. அழன்மொட்டுகள் உணவுட் கொள்ளலிலும், பாதுகாப்பளித்தலிலும் இடப்பெயற்சியிலும் பங்கு கொள்கின்றன, ஐதராவிலே நான்குவிதமான அழன் மொட்டுச் சிறைப்பைகள் உண்டு. அவையாவன பாடுருவி ( Penetrant Or Stenotels) சுற்றி ( Volvent) அல்லது தெசுமோனீம் (Desmoneme), சிற்றொட்டி (Small glutinent or 5teroline), பேரொட்டி (Large glutinent Or Strepto line), என்பனவாகும்.
(து) ஊடுருவி :
ஐதராவிற்காணப்படும் நான்கு விதமான அழன் மொட்டுகளிலும் மிகப்பெரியதும், சிக்கலானதும் இதுவே கோளவுருவான ஊடுருவி உணவுட்கொள்ளலில் அதிக பங்கு வகிக்கிறது. ஒரு அழன்மொட்டுச் சிறைப்பையில் மூன்று முக்கிய பகுதிகளுண்டு.
1) முடியுடன் கூடிய வொரு உறையுண்டு. மூடியினருகே அழன் மொட்டிலிருந்து ஒரு அழன் மொட்டுமுளை (Caidocil) வெளியே நீட்டிக் கொண்டிருக்கும். இது உணர்வுள்ள ஒரு சிலிர்முள்ளாகும். அழன் மொட்டு உறையின் சுவரிலே முறிவுக்குரிய கோல்களுள்ளன. இவை அழன்மொட்டுச் சிறைப்பையினடிப்பாகத்துடன் சுருங்கத்தக்க இழை களால் தொடுக்கப்பட்டுள்ளன.
பாட்டுச் சிறையில் முறிவுக்கும் சிலிர்முள்ள
(2) உறையினுள் நேர் மாறான நிலையில் (Inverted) குறுகிய ஆனால் அகன்ற குழாயொன்றுண்டு. இக்குழாய் உட்புறமாகக்கூம்பி அகன்றதண்டுப் பகுதியாகவும் (Shaft), முட்தண்டுப்பகுதியாகவும் (SpinnGret) தொடர்கிறது. முட்தண்டின் உட்புறத்தே மூன்று கூரான புன் தம்பங்களும் (Stylets) சுருளிவடிவில் ஆறு வரிசைகளில் நுண்ணிய முட்களும் காணப்படும். 1. IE
ரசம் -.- ப்ப

Page 37
அழன் மொட்டுமுறை
முடி
தண்டு
புன்தம்பங்கள்
உள்ளிருக்கும் இழை.
சுருங்கத்தக்க இழை
கரு
துபை - 14 : சT இழை முட்தண்டு புன்தம்பம் 11- 9.
III ந பூப் 11 i 1 பேர்
சுருங்கத்தக்க இழை
கரு - டி ப ட
படம் 24 - அழன் மொட்டுச் சிறைப்பை ஊடுருவி இழை வெளித்தள்ளு முன்னரும் பின்னரும்

0
(3) புன் தம்பங்களின் முனைகள் முடியுள்ள பக்கமாகக் கூம்பி யுள்ளன. முட்தண்டுடன் சேர்ந்துள்ள சுருள்வடிவான இழையொன்று தண்டையும் முட்தண்டையும் சுற்றி உறையினகத்தேயுள்ள பாப்பொரு ளிற்காண ப்படுகிறது. அழன் மொட்டு தொழிற்படும் முறை : 31
நீரிலுள்ள இரை அழன் மொட்டுமுளையுடனோ அழன்மொட்டின் வேறெந்தப்பகுதியுடனோ மூட்டும் பொழுது அழன்மொட்டுச்சிறைப்பை யிலுள்ள தண்டுப்பகுதியும் முட்தண்டுப்பகுதியும் நீண்ட இழையும் வெளியே தள்ளப்பட்டு, இவை இரையை தடுருவுவதனால் புரத நிலையி லுள்ள நஞ்சுப் பொருளொன்று இரையினுட் செலுத்தப்படுகிறது. இதனால் இரை உணர்வற்ற நிலையையடைகிறது. அதன் மொட்டினுள் ளடக்கம் வெளித்தள்ளப்படுவதற்கான பொறிமுறை கீழே விவரிக்கப் பட்டுள்ள முறையிலிருக்கக்கூடும்.
பாக எ :
-- E E
சுற்றி லி வ ப சிற்றொட்டி பேரொட்டி படம் 25 - அமன் மொட்டுச் சிறைப்பைகள் |
வெளித்தள்ளலிள் முன்பும் பின்பும்

Page 38
1. -அழன்மொட்டுமுளையிலோ வேறெந்தப்பகுதியிலோ தொடுகையால் தாண்டஸ் பெறப்பட்டு, உறையிலுள்ள சுருங்கத்தக்க இழைகள் சுருங்கு வதனால் உறை : இமுக்கப்படுகிறது. இதனால் உறையின் உருவம் மாற்றத்திற்குள்ளாகி மூடி திறக்கப்படுகிறது. அப்பொழுது வெளியி லிருந்து நீர் தண்டினுள்ளும் முட்தண்டினுள்ளும் செல்கிறது. எனவே உள்ளிருக்கும் இழையின் விட்டம் பெரிதாகி உறையினுள் அமுக்கம் அதிகரிப்பதனால் இழை வெளியே தள்ளப்படுகிறது. அப்பொழுது தண்டுப்பகுதியும் முதலில் வெளித்திரும்பிய நிலையையடைய, இழையும் வெளித்திரும்பிய நிலையில் வெளிவருகிறது.
ஏனைய மூன்றுவிதமான அழன் மொட்டுகளும் ஏறத்தாழ ஊடுருளி யின் அமைம்பைக்கொண்டிருந்தாலும் சிறு வித்தியாசங்கள் காணப் படுகின்றன.
Fil T EL (ஆ) சுற்றி அல்லது தொழோனீம் !
இது பேரிக்காயுருவானது. இதன் இழை நீளங்குறைந்தது. வெளித்தள்ளப்பட்டபொழுது இழை இரையாகும் விலங்கின் பகுதிகளைச் சுற்றிக் கொள்வதால் இரை தப்பமுடியாது.
(இ) சிற்றெட்டி !
இதில் நேரான, முட்களற்ற இழை உண்டு. இது இடப்பெயர்ச்சி யில் உதவுகிறது.
(ஈ) பேரொட்டி :
மூன்று. - நான்கு சுருள்களைக் கொண்ட நீண்ட இழையில் நுண்ணிய முட்கள் உண்டு. எனவே இது சிறிய விலங்குகளை கடுருவக்கூடி யது. ஓட்டுந்தன்மை வாய்ந்ததால் இடப்பெயர்ச்சியிலும் டப்
உதவுகிறது.
இதராவுடலின் நடுப்பகுதியிலுள்ள புறமுதலுருப்படையின் வெளிக்கலங்களிலிருந்தே அழன் மொட்டுகள் உருவாகின்றன. பரிசக் கொம்புகளில் பெருமளவிற் காணப்பட்டாலும் இவை அங்கு உற்பத்தி யாவதில்லை, புறமுதலுருப்படையின் சிற்றிடைவெளிக்கலங் களிலிருந்து உருவாகி விருத்தியடையு முன்னரே புறமுத இருப்படை யிலிருந்து விடுபட்டு இடைப்பசையினுாடாக அகத்தோற்படையையடை கின்றன .. பு பின்பு அங்கிருந்து குழிக்குடலுள் செல்கின்றன. சிலவேளை களில் அவை அகத்தோற்படைக்கலங்களின் குழிய முதலுருவினால் சூழப் பட்டு குழிக்குடலயடைகின்றன.
- அமன் மொட்டுகளைக் கொண்ட

- 63 -
அகத்தோற்படைக்கலங்கள் அகத்தோற்படையிலிருந்து விடுபட்டு அமீ பாவைப் போன்று போலிப்பாதங்களையுண்டாக்கி குழிக்குடலில் நீந்தித் திரிவதுமுண்டு, = இவ்வாறு குழிக்குடலையடைந்த அழன் மொட்டுக்ளெல் லாம் மீண்டும் -அகத்தோற்படைக்கலங்களால் பெறப்பட்டு இடைப் பசையினூடாக தேவையான இடங்களுக்கு அனுப்பப்படுகின்றன. மீண்டும் புறமுதலுருப்படையையடையும் அழன் மொட்டுகள் சரியான இடங்களில் நிரந்தரமாகத் தங்கி முழுவளர்ச்சியடைந்து. - தொழில் புரிகின்றன. ஒரு முறை வெளித்தள்ளப்பட்ட இழை மீண்டும் உள்ளி ளுக்கப்படமுடியாது. எனவே ஒருமுறை தொழில்பட்ட அழன் மொட்டு கள் அகற்றப்பட்டு புதியவை அவ்விடங்களை நிரப்புகின்றன, -
பாபர் 1ம் '14 நதியப்
கா: 11
111 - 111 சதம்
-- உப -
1 11 12 ll பு: '
கார் பாகம் 1 | பாடக சபா - படம் 1
இடி: மத்-- 13. 1
கா" படா - 17:
- டாப் ' பங்கா), 1 1 1 1 1 1
நரம்பிணைப்பு நரம்புக்கலம் டட், டாடி E 1 - 45
பு", 1-4 - 211 .11. 7. பாட_ ---- டிகே 4. படம் 26 -- ஐதர - நரம்பு வகை : சாப்ட் 1 - - - -

Page 39
- 61 -
(iv) நரம்புக்கலங்கள் :
ஐதராவின் உடலசைவையும், பரிசக்கொம்புகளினசைவையும் இயைபாக்குவதற்கு நரம்பு வலை உண்டு. இவ்வல பல நரம்புக்கலங் களாலானது. "ஒவ்வொரு நரம்புக்கலத்திலும் கருவுள்ளபகுதியான கலவுடலும் பலகிளைகளாகப்பிரிந்துள்ள நரம்பு நார்களுமுள்ளன. ஒரு நரம்புக்கலத்தின் நரம்பு நார்க்கிளை முனைகள் அருகேயுள்ள வேறு நரம்புக் கலங்களின் நரம்புநார்க்கிளைகளுடன் தொடர்பு கொண்டுள்ளன, இவ் வாறான அமைப்பினாலேயே நரம்புவலையுண்டாகிறது. சிலாரம்பு நார்கள் தசைமேலணிக்கலங்களின் தசைவால்களுடனும் வேறு சில நரம் புநார்கள் புலனங்கங்களுடனும் தொடர்பு கொண்டுள்ளன,
(v) புலன் கலன்கள் அல்லது வாங்கிக்கலங்கள் :
இவை சிறிய சும்பம் போன்ற அமைப்பையுடை ய சலங்களாகும் அடிப்பாகம் நரம்பு நாருடன் தொடர்பு கொண்டிருக்க, சுயாதீனமான பாகம் சிறிய கூம்பிய எறியமொன்றைக் கொண்டுள்ளது. புலன்கலங் களால் பெறப்படும் தூண்டல் நரம்புக்கலங்களால் கடத்தப்பட்டு கருங்
கத்தக்க தசைவால்கள் தாண்டற்பேறடைகின்றன,
(vi) சுரக்குங் கலங்கள் :
ஐதராவின் அடிப்பாகத்தில் காணப்படும் நீண்டவுருவான கலங் களே சுரப்புக்கலங்களாகும். இவற்றிலிருந்து சுரக்கப்படும் சுரப்பியினு தவியால் ஐதரா அடிப்படையில் ஒட்டிக்கொள்கின்றது. வாய்க்கூம்புப் பகுதியிலுள்ள சுரப்புக்கலங்களிலிருந்து பெறப்படும் சிதம் பெரிய உணவுப்பொருள்களை உட்கொள்வதற்கு உதவுகிறது.
(vii) மூலவுயிர்க் கலங்கள் ;
வெப்பம் அதிகமான காலங்களிலே சிற்றிடை வெளிக்கலங்கள் பெருகி மூலவுயிர்க்கலங்களை உருவாக்குகின்றன, இவை உடலின் குறிப் பிட்ட ஒரு பகுதியிலேயே காணப்படுகின்றன. அப்பகுதி சனனி எனப் படும். விதை Testis) உடலின் சுயாதீன முணைக்கருகாமையிலும், சூலகம் Ovary) உடலின் அடிப்பாகத்துக்கருகாமையிலும் காணப்படும்.
அகத்தோற்படை !
ஐதராவில் குழிக்குடலைச் சுற்றியுள்ள அகத்தோற்படைக் கலங்கள் இடைப்பசையில் ஒட்டியிருக்கும், கலங்களின் அடிப்பாகத்திலுள்ள சுருங்கத்தக்க தசை வால்கள் உடலின் குறுக்கு முகமாக அமைந்துள்ள தனால் அவற்றின் சுருங்கலின் போது உடல் ஓடுங்கி நீள்கிறது. சில

- 61 -
அகத்தோற்படைக் கலங்கள் அமீபாவைப் போன்று போலிப்பாதங்களை யுண்டாக்கி இரையை முடி உணவுச்சிறு வெற்றிடத்தையுண்டாக்கி சமிபாட்டு நொதியங்களைச் சுரக்கின்றன. வேறு சில கலங்களின் சுயா தீனமான முனையில் சவுக்குமுறைகள் காணப்படுகின்றன. பெரிய தசை மேலணிக்கலங்களினிடையே சிறிய சிற்றிடைவெளிக்கலங்கள் காணப் படுகின்றன, A
1ா பா ப ய1, 4:11 Hi பார் ஐதரா விரிடிஸ் (Chloro hydra viridissina - குளோரோ கதரா
பட் ப் 11 விரிடிசிமா) என்னும் ஐதரா இனத்தில் பெரிய அகத்தோற்படைக்கலங் களிலே சூகுளோறெல்லாZoochlorella) என்னும் ஓர் பச்சை அல்கா வாழ்கிறது. அல்கா பெருமளவிலுள்ள பொழுது " ஐதராவும் பச்சை
சபாக புக் பரிசக்கொம்பு IIT க - உணவு 1 .
பாட ப் , 1 படி '
ட்ராப்பர்
: ரோதம்
17 *
பின் பாரா 1 - பட TN1 பி 14
'ப - 4
+ பாட்டியம்
பா. --- 11 -
பேரம் ப - பச காபி கப படி
1பிடி கப்டட்பும், பபடி -மாயாசமா 14ம் டாப்பு: 24 5 பாட படப ப பட்க
+ ப-1 5 - யூ ட! 14 12. பப்பபு - 4
'பய ப . பு- ததா பட்கர்
தவி / Hபு:-1974) TETல் பு)
பாபுட்: A
டர் கடIE 14 - - - -ந் : 1 - 4
பட் டி ய்: EL TH_11_1 ந படம் 27- கதரா - உணவுட்கொள்ளல். ம். எட'.12

Page 40
- 66 -
நிறமாகத்தோற்றமளிக்கும். ஐதராவினால் சுவாசித்தலின் போது வெளி விடப்படும் காபனீரொட்சைட்டை பச்சை அல்கா உபயோகித்து ஒளித் தொகுப்பை நடாத்துகிறது. அப்பொழுது வெளியிடப்படும் ஒட்சிசன் ஐதராவிற்கு சுவாசித்தலில் பயன்படுகிறது, ஐதராம் இரையிலேயுள்ள புரதங்ககச் சமிபாடடையச் செய்து ஒட்சியேற்றுவதனால் சக்தியைப் பெறுகிறது. அப்பொழுது உண்டாகும் சுந்தரசன் கழிவுப்பொருள் களையும் பொசுபேற்றுகளையும் அல்காபயன்படுத்தக்கூடியதாயுள்ளது. எனவே இதை ஒன்றிய வாழ்விற்கு ஓர் உதாரணமாகக் கொள்ளலாம்.
- 1, +1 413 1
''ப4 - 1
11-4 -1
உணவுட்கொள்ளவும் சமிபாடும் =ialif:14 11 பா = 111
டவுட்கொள்ளறும் சமிபாடும் '- 4. ங்க - 1
நீரில் வாழும் சிறிய கிறஸ்ரேசியன்களையும், பூச்சிக்குடம்பிகளையும் ஐதரா உட்கொள்கிறது. ஐதரா அடிப்பாகத்தினால் ஒட்டிய நிலையில் உடலை நீட்டி, பரிசக்கொம்புகளை விரித்த நிலையில் இரையை எதிர்பார்த் திருக்கும். இரையாகும் விலங்கு பரிசக்கொம்பில் முட்டியவுடன் அழன் மொட்டுகளிலிருந்து முட் தண்டும் இழையும் வெளித்தள்ளப்படுகின்றன. ஊடுருவி அழன்மொட்டுகளிலிருந்து சுரக்கப்படும் நஞ்சுப்பொருள் இழை பினூடாக இரையினுட் செலுத்தப்பட், இரை உணர்வற்றுப்போகிறது அல்லது இறக்கிறது. சுற்றிகளிலிருந்து வெளித்தள்ளப்படும் இழைகள் இரையின் தூக்கங்களையும் வேறுபகுதிகளையும் சுற்றிக்கொள்வதால் இரையைப்பிடித்துக்கொள்வதற்கு உதவுகின்றன. சிற்றொட்டிகளும் பேரொட்டிகளும் இரையில் ஒட்டிக்கொள்ளக்கூடும். பரிசக்கொம்புகள் குறுகி வாயைநோக்கி வளைவதால் இரை வாயினருகே கொண்டுசெல் லப்படுகிறது. வாய் அகன்று இரை உட்கொள்ளப்பட வாய்க்கூம்புப் பகுதியிலுள்ள தசை மேலணிக்கலங்களின் சுருங்கலினால் குழிக்குடலினுட் கடத்தப்படுகிறது. குழிக்குடலையடைந்த இரை சிறிது நேரத்திற்கு உயிருடனிருக்கக்கூடும். பின்னர் அகத்தோற்படைக்கலங்களாற் சுரக் கப்படும் நொதியங்களினால் இரை கொல்லப்பட்டு சிறுதுண்டுகளாக்கக் படுகிறது. உடல் விரிந்து சுருங்குவதாலும் சவுக்குமுள்ள சுளினடிப் பாலும் சுரப்புகள் உணவின் எல்லாப் பாகங்களையும் - அடையமுடிகிறது. ஒரு பகுதியுணவு குழிக்குடலிலேயே முழுர்சமிபாடடைந்து அகத்துறிஞ் சப்படுகிறது. இது கலப்புறச்சமிபாடாகும். சில அகத்தோற்படைக் கலங்களில் போலிப்பாதங்களுண்டாகி உணவைச் சுற்றிக்கொள்வதால் உணவுச்சிறு வெற்றிடங்களுண்டாகின்றன.
உணவுச்சிறு வெற்றிடங்களில் சமிபாட்டு நொதியங்கள் சுரக்கப்பட்டு உணவு சமிபாடடைந்து அகத்துறிஞ்சப்படுகிறது. இது கலத்தசுச்சமி பாடாகும். எனவே ஐதராவில் புரோற்றோசோ வாக்களில் நடைபெறு வதைப்போன்ற கல்லத்தகச்சமிபாடும் உயர்விலங்குகளில் நடைபெறு

-- 07 -
LI TIT=HTE EI.
JELENTETTE
a UEA. ET
JUNI
ULLO 28 — 850 AT 6L DE
SUL b 29 – 8STIGT GÅNG ET AMT DEN
LE TATT
PEN
EVIATO
- LAULUGA LIIT tu te uitae TEFË

Page 41
உ 68 -
வதைப்போன்ற கலப்புறச்சமிபாடும் உள்ளதைக் காணலாம். சமிபாட டையாத பொருள்கள் குழிக்குடலிலிருந்து சவுக்குமுளைகளினடிப்பாலுண் டாகும் நீரோட்டத்தினால் வாயினூடாக வெளியேற்றப்படுகின்றன, உடற்தசைநார்களின் திடீர்ச்சுருங்கலினால் குழிக்குடலிலுள்ள சமிபாட டையாத பெரிய உணவுத்துணிக்கைகள் யாவும் சடுதியாக வாயினூடாக வெளியேற்றப்படுகின்றன. ஐதராவில் வாயே குதமாகவும் தொழில் படுகிறது. உறிஞ்சப்பட்ட உணவு பிரசாரணமுறையால் ஏனைய கலங் கக யடைகிறது. அரும்புகளும், சனனிகளும் ப டண்டாகுமிடங்களில் அனுசேப வீதம் அதிகமானதால் அப்பகுதிகளில் அதிகளவு உணவு
சேர்கிறது.
இந்தும் இடதுகர்ந்து கொ
சுவாசித்ததும் கழித்தறுக் 1
ஐதராநன்னீரில் வாழ்வதால் நீரிற்கரைந்துள்ள ஒட்சிசன் பரவல் முறையால், உட்செல்ல காபனீரொட்சைட்டு வெளிவருகிறது. நைதரசன் கழிவுப்பொருட்களும் நேரடியாகவே நீரினுள் கழிக்கப்படு கிறது. புறமுத லுருப்படையே இச் செய்முறைகளில் அதிகமாக ஈடுபடுவ தென்றாலும் அகத்தோற்படையும் ஓரளவு பங்குகொள்கிறது. இடப்பெயர்ச்சி !
ஐதரா ஓரிடத்தில் அடிப்பாகத்தினால் ஓட்டி வாழ்ந்தாலும் தசை மேலணிக்கலங்களின் சுருங்கலினால் உடலையும் பரிசக்கொம்புகளையும் அசைக்கக்கூடியது, அடிக்கலங்களின் அமீபா போன்றவசைவால் ஐதரா கீழ்ப்படையில் நகர்ந்து செல்லும். அத்துடன் அழன் மொட்டுக்களினுதவி யாலும் இடப்பெயர்ச்சியடையக் கூடியது. ஐதரா நடத்தலின்போது கீழ்ப்படையில் அடிப்பாகம் ஒட்டியுள்ள நிலையில் உடல் நீண்டு வளைந்து சிற்றொட்டிகளிலுதவியால் பரிசக்கொம்புகள் கீழ்ப்படையில் ஒட்டிக் கொள்கின்றன. இந்நிலையில் அடிப்பாகம் கீழ்ப்படையிலிருந்து விடுபட்டு, உடல் குறுகி, பரிசக்கொம்புகளுக்கருகாமையில் கீழ்ப்படையில் ஒட்டிக் கொள்கிறது. பரிசக்கொம்புகள் விடுபட்டு பழைய நிலையையடை கின்றன. இவ்வாறு நடைபெறும் இடப்பெயர்ச்சி மயிர் கொட்டிகளில் நடைபெறுவதுபோன்ற தடவசைவு LOOping movement) ஆகும் ஐதரா குத்துக்கரணமாகவும் அசையக்கூடும். அப்பொழுது அடிப் பாகம் கீழ்ப்படையில் ஒட்டியிருக்க உடல் நீண்டு வளைத்து பரிசக்கொம்பு கள் சிற்றொட்டிகளினுதவியால் கீழ்ப்படையில் ஒட்டிக்கொள்கின்றன. பின்னர் அடிப்பாகம்விடுபட்டு, ஐதராதலைகீழாக இருக்கும் நிலையை யடைகிறது. அடிப்பாகம் முன்பு ஒட்டியிருந்த பாகத்திற்கு ஏதிர்ப்புற மாக வரைந்து கீழ்ப்படையில் ஓட்க்கொள்ள பரிசக்கொம்புகள் விடுபட்டு ஐதரா நேரான நிலையையடைகிறது.
ஐதராவின் சுரக்குங்கலங்களில் வாயுக்குமிழிகள் உண்டாவதால் ஜகரா நீரில் மிதப்பது முண்டு.

பட 69 -
இனப்பெருக்கம் : 1
ஐதரா அரும்புதல்முறையாலும், இலிங்கமுறையாலும் இனப் பெருக்கம் செய்கிறது. (1) அரும்புதல் முறையினப் பெருக்கம் :
உணவு மிகையாகக்கிடைக்கும் பொழுது அரும்புகள் உண்டா சின்றன. உடலின் நடுப்பகுதியில் ஓரிடத்தில் புறமுதலுருப்படையும் அகத்தோற்படையும் ஓர் எறியமாக வளர்கின்றன. இதனுள் குழிக் குடலின் ஒரு பகுதியும் காணப்படும். இந்த எறியம் பெரிதாகி, சுயாதீன மான முனையில் வாயும் அதைச்சுற்றி ஒரு வரிசையில் பரிசக்கொம்புகளும் விருத்தியடைகின்றன. பெரிய ஐதராவுடன் இப்புதிய ஐதரர் ஒட்டி யுள்ள பகுதி ஒடுங்கி ஈற்றில் அரும்பாக விருந்த ஐதரா விடுபடுகிறது. பின்னர் நீர்ட்பரப்பிற்குவந்து பரம்பலடைந்து ஓர் கீழ்ப்படையில் ஒட்டி வளர்கிறது. ஒரேவேளையில் ஒரு ஐதராவில் அநேக ஐதராக்களுண்டாகக் கூடும். இவ்வாறிருக்கும் பொழுது ஐதரா சமுதாயமாக வாழ்கிறதென எண்ணத் தோன்றும்.
(ii) இலிங்கமுறையினப் பெருக்கம் :
பெரும்பாலான ஐதரா இனங்கள் ஈரில்லமுள்ளவையென்றாலும் ஒரு சில இனங்கள் ' ஓரில்லமுள்ளவையாயுங் காணப்படுகின்றன, இலிங்க முறையினப்பெருக்கம் பெரும்பாலும் குளிர்ப்பருவகாலத்திலேயே நடை பெறுகிறது. ஒரில்லமுள்ள ஐதரா இனங்கள் ஈரிலிங்கத்துக்குரியவை அல்லது இரு பாலான விலங்குகள் எனவும் அழைக்கப்படுவதுண்டு. விந்துகளையுண்டாக்கும் விதை, முட்டைக்கலத்தை யுண்டாக்கும் சூலகம் ஆகியவற்றை சனனி என அழைப்பார். 1 ஆரம்பவிருத்திக் காலத்தில் விதைக்கும் சூலகத்திற்கும் வித்தியாசங் காணமுடியாது. இரண்டும் புறமுதலுருப்படையிலுள்ள - சிற்றிடைவெளிக்கலங் களிலிருந்தே விருத்தியடைகின்றன. விதை வாயுள்ள முனைக்கருகாமை யிலும் சூலகம் அடிப்பாகத்திற்கருகாமையிமும் விருத்தியடைகின்றன. ஆனால் சூல் முதிர்வடையுமுன்பே விதை முதிர்வடைந்து விந்துகள் விடு விக்கப்படுகின்றன. எனவே தற்கருக்கட்டல் நடைபெறுவதற்கு வழியில்லை.
சனௗவிருத்தியின் போது புறமுதலுருப்படையிலுள்ள சிற்றிடை வெளிக்கலங்கள் பெருகி மூலவுயிர்க்கலங்களாகின்றன. விதையிலுள்ள விந்துத்தாய்க்கலங்கள் (Spore inother cells) ஒவ்வொன்றும் ஒடுங்கற் பிரிவடைந்து நான்ரு விந்துகளையுண்டாக்குகின்றன. இவையே ஆண் புணரிகளாகும். ஆகவே ஒரு விதையில் அநேக விந்துகள் உண்டாகி,

Page 42
- 10 -
குழிக்குடல்
அகத்தோற்படை
புறமுதலுருப்படை பார்.
SE03:2007
14ர:00
விதை விந்துக்குழியம் விந்தாகுகலம் விந்து படம் 30 - ஐதரா - விதையினூடாக கு, நிவ.
விதைச்சுவர் வெடிப்பதனால் அவை வெளிவந்து நீந்தித்திரிகின்றன. சூலகவிருத்தியின் போது புறமுதலுருப்படையிலுள்ள சிற்றிடைவெளிக் - கலங்கள் அக்கலத்திற்கு கருவூணாகின்றன. பருமனடைந்து கருவண் கலங்களிலிருந்து போசணையைப்பெறும் கலம் முட்டைக்குழியம் (0ocyte) எனப்படும். இது ஒடுங்கற்பிரிவடைவதனால் ஒரு பெரிய முட்டைக்கலம் சூல்) உண்டாகின்றது. சூலகச் சுவரில் ஒரு சிறிய துவாரம் ஏற்படுவத னால் - முட்டை வெளித்தெரியக்கூடிய நிலையிலிருக்கும் ஆனால் ஐதரா வுடலிலிருந்து விடுபடமாட்டாது. முட்டைக்கலமே பெண்புணரி யாகும்... நீரிலே நீந்தித்திரியும் விந்துகள் முட்டையையடைந்து சற்றில் ஒரு விந்து முட்டையினுட் சென்று கருக்கட்டல் நடைபெறுகிறது.
பய ப ட கருக்கட்டியவுடனே நுகம் பிளவடைவதனால் ஒரே பருமனுடைய! கலங்களாலாகிய சிற்றரும்பர் (Blastula) உண்டாகிறது. இதன் மையத் தேயுள்ள குழி அரும்பர் ( Blastocol) எனப்படும், பின்னர்

- 71 பட
அகத்தோற்படை
புறமுதலுருப்படை 2
L, க.
ட"ட் சாட்
'பட்ட டா டயட்
HHHIபப்பா..
40:55 EL
gon
ERE
17 CC000
ECIVIL038620
11|-- ==
கரு
குழிக்குடல்
முட்டைக்குழியம் படம் 31 - 'ஐதரா- சூலகத்தினூடாக கு. வெ,
நடைபெறும் புன்னுதரனாதல் முறையினால் (Gastrulation சிற்றரும்பர் புன்னுதரனாக (Gastrula) மாறுகிறது. புன்னுதரனாதலின் போது சிற் றரும்பரின் சுவர்க்கலங்கள் உட்சென்று ஒரு படையாகின்றது. இதனா லேற்படும் குழி குழிக்குட்லாக (உணவுச் சுவடாக மாறுகிறது. இம் மாற்றங்கள் நடைபெறும் பொழுது வெளிப்படைக்கலங்கள் முக்யத் தைச்சுற்றி ஒரு சிறைப்பையையுண்டாக்குகின்றன. முளையம் இந்நிலையில் குலகத்திலிருந்து விடுபட்டு, நீரின் அடிப்பாகத்திற்குச் சென்று அடம் திப் பருவநிலையையடைகிறது. பின்னர் முளையம் சிறைப்பையிலிருந்து வெளிவரும் பொழுது வாயும் அதைச்சுற்றிப் பாசக்கொம்புகளும் உண்டாகி புதிய கதராவாக வளர்கிறது.
74. :+

Page 43
11!
-- 44 I'11ாடு
அரும்பாப்பாத்து
சிறைப்பை
அகத்தோற்படை
புறமுதலுருப்படை
NN
- Ti 1111)
புறமுதலுருப்படை
- அரும்பர்
க.
குழிக்குடன் |
EFA AS
2)
அகத்தோற்படை
அகத்தோற்படைக்
கவங்கள்
கப்ப
இடைப்பசை
படம் 32 - நுகவிருத்தி
-- - -

- 11 '"
கணம் - சிலெந்தொற்று கணப்பிரிவு - நைடேரியா வகுப்பு - ஐதரோசோவா வருணம் = இதரொயிடியா, வருணப்பிரிவு - லெப்டுரு ெமதூசே அல்லது கலிப்ற்றே பிளாஸ்ரியா சாதி - ஒபீலியா
ஒபீலியா (Obelia ) வாழிட மும் தோற்றமும் :
ஓபீலியா ஜெனிக்குலேற்ற கடல் நீரில் கடற்சாதாழைகளில் ஒட்டி வாழும் ஒரு சமுதாய விலங்காகும். ஒவ்வொரு சமுதாயத்திலும், விலங்குருப்போலிகளைக் கொண்ட ஒரு அங்குலமளவு நீளமான நீர்த் தண்டு (Hydrocadlus) உண்டு. நீர்த்தண்டு ஐதராவேர் (Hydrorhiza) எனப்படும் பகுதிகளால் கீழ்ப்படையில் ஓட்டியுள்ளது. நீர்த்தண்டும் ஐதராவேரும் ஒருமித்து பொதுச்சதை (CoenOSarc) என அழைக்கப்படும் பொதுச்சதையின் மையப்பகுதி புன் வெற்றிட முடையதாயிருக்கும். நீர்த்தண்டிலே பல கிளைகளுண்டு. முழுச்சமுதாயத்தையும் மூடியுள்ள பரிசதை (Perisarc) புறமுதலுருப்படையினால் சுரக்கப்பட்ட கியூற்றின் என்னும் பொருளாலானது. பரிசதை எல்லாப் பகுதியிலும் பொதுச் சதையுடன் ஒட்டியிராமல் ஒரு சில இடங்களில் மட்டுமே புறமுதலுருப் படையின் வெளித்தள்ளல்களுடன் முட்டியுள்ளது.
ஓபீலியாவில் பலவுருத்தோற்றம் (Polymorphism) உள்ளதெனக் கூறலாழ். பலவுருத்தோற்றமென்றால் ஒரு சமுதாயம் பலவகையான தனியன்களைக்கொண்டிருத்தலாகும். ஒபீலியாவில் மூன்றுவகைத் தனியன்களுள்ளதால் ஒபீலியா மூவுருத்தோற்றமுடையது (Trimorphic) எனக் கூறலாம். மூன்றுவகைத் தனியன்களும் (அதாவது விலங்குருப் போலிகள்) நீர்த்தண்டிலேயே உண்டாகின்றன.அவையாவன
(i) ஐதராப்பூ (Hydranth) அல்லது பொலிப்பு (polyp) (ii) அரும்பர்த்தம்பம் (Blastostyle)
| L" 'TH 4 (iii) மெதசா (Medusa) என்பனவாகும்.
141புக் டர் - -
(i) ஐதராப்பூ :
4. ஐதராவைப் போன்று பையுருவான ஐதராப்பூ ஒரு காம்பினால் நீர்த் தண்டுடன் தொடுக்கப்பட்டுள்ளது. இதன் குழியுடல் காம்பினூடாக

Page 44
- 74 -
ராய்
T - RT ஓகே 10 11
-- = I
பப்பு பாடப்பு
5.
1. பரிசக்கொம்பு 4. அரும்பர்த்தம்பம் T. அகத்தோற்படை 10. தட்டு 1ா, பொதுச்சதை
2. வாய் ப" - 1
3. ஐதராப்பூ மெதாசா அரும்பு
6. குழிக்குடல் சி.
புறமுதலுருப்படை .
ஐதராவுறை 11. ஒடுங்கல்
12.
சனனியுறை 14. பரிசனத
15. ஐதரா வேர்
1-11-12 13:4 படம் 33 - ஓபீளியா சமுதாயம்

- 15 -
பொதுச்சதையின் மையத்துள்ள குழியுடன் தொடர்பு கொண் டுள்ளது. ஐதராப்பூவின் உடற்சுவர் புறமுதலுருப்படை, அகத்தோற் படை என இரு படைகளாலானது. இவற்றிற்கிடையே இடைப்பசை யுண்டு. சுயாதீனமான முறையிலுள்ள வாய்க்கூம்பின் உச்சியில் வாய் உள்ளது. உடலின் மூன்றிலொரு பகுதி வாய்க்கூம்பென்று கூறுவது மிகை யாகாது, வாயைச்சுற்றி வாய்க்கூம்புப் பகுதியில் ஒரு வட்டமாக பல பரிசக்கொம்புகள் உண்டு, பரிசக்கொம்புகள் ஐதராவிலுள்ளது போல் மையத்தே குழிக்குடலின் பகுதியைக் கொண்டிராமல் கலங்களால் நிரப் பப்பட்டுள்ளன. சமுதாயத்தின் பொதுச்சதையைச் சுற்றியுள்ள குழா யுருவான பரிசதை ஐதராப்பூவுள்ள இடத்தில் விரிவடைந்து ஒரு கிண்ண வடிவில் அமைந்துள்ளது. ஐதராவுறை (Hydrotheca) என அழைக்கப் படும். கூம்புருளான ஐதராப்பூவிற்கு பாதுகாப்பளிக்கிறது. ஐதராப்பூ ஐதராவுறையினுள்ளிளுக்கப்பட்ட நிலையிலோ, அல்லது வெளியே நீட்டப் பட்ட நிலையிலோ காணப்படலாம். பரிசதை ஐதராவுறையாக விரியு மிடங்களில் ஒடுக்கங்கள் காணப்படும். ஐதராவுறையினடிப்பாகத்தில் உள்ள வட்டத்தட்டு Shelf) ஐதராப்பூவைத் தாங்கியுள்ளது.
ஓபீலியாச்சமுதாயத்தில் ஐதராப்பூவே உணவுட்கொள்ளும் விலங் குருப்போலியாகும். மெல்லிய புறமுதலுருப்படையில் சிற்றிடை வெளிக்கலங்கள் குறைவாகவும், தசை மேலணிக்கலங்கள் அதிகவள் விலும் உள்ளன. அதன் மொட்டுச்சிறைப்பைகள் ஐதராப்பூவின் அடிப் பாகத்திலும் பொதுச்சதையிலும் உண்டாகி, பரிசக்கொம்புகளை வந்த டைவதனால் அங்கே செறிவாகக் காணப்படுகின்றன. இடைப்பசை யினிருபுறமும் நரம்புவலை காணப்படுகிறது. அகத்தோற்படைக் கலங்கள் ஐதராவிலுள்ளவை போன்று சவுக்கு முளைகளைக் கொண்டோ, போலிப்பாதங்களை உண்டாக்கக் கூடியனவையாகவோ இருக்கும். சமிபாட்டு நொதியங்களைச் சுரக்கும் கலங்களும் உள்ளன. ஐதராவைப் போன்றே ஓபிலியாவின் ஐதராப்பூ இரையைப்பிடித்து உட்கொள்கிறது. உணவு ஐதராப்பூவின் குழிக்குடலில் கலப்புறச்சமிபாடும், அகத்தோற் படைக்கலங்களிலே உணவுச்சிறு வெற்றிடங்களினுள் சுலத்தகச்சமிபாடு மடைகிறது. சமிபாடடைந்த உணவு பொதுச்சதையின் மையமாகவுள்ள புன்வெற்றிடத்தினூடாக சமுதாயம் முழுவதும் சுற்றோட்டமடை வதனால் தேவையான பகுதிகளுக்கு உணவு கிடைக்கக்கூடியதாயுள்ளது.
(ii) அரும் பர்த்தம்பம் :
ஓபீலியாச் சமுதாயத்திலே நீர்த்தண்டிலுள்ள கதாாப்பூக்களின் கணுக்களிலே தோன்றும் சிறப்பான விலங்குருப்போலிகளே அரும்பர்த் தம்பங்களாகும். ஒடுங்கிய குழாயுருவான அரும்பற்றம்பத்தின் நுனி மூடப்பட்டிருக்கும். இதராப்பூவைச்சுற்றி ஜதராவுறையிருப்பதுபோல்

Page 45
- 16 -
அரும்பர்த்தம்பத்திலிருந்து - அரும்புகளுண்டாகி, மெதூசாக்களாக விருத்தியடைந்து, பின்னர் சமுதாயத்திலிருந்து விடுபட்டு, நீரிலே நீந்தித்திரிகுன்றன், பார் பட்ட
(iii) பெதரசா : : 1L -1
ர) பிடிப்பு மெதூசாக்கள் அரும்பர்த்தம்பத்திலிருந்து உண்டாகி நீலே சுயா தீனமான நீந்தித்திரிகின்றன. மெதூசா குடையுருவானது. அதன் விழிம்பில் அநேக பரிசக்கொம்புகள் உண்டு. ஐதராப்பூவிலுள்ளது போன்று மெதூசாவின் விழிம்பிலுள்ள பரிசக்கொம்புகளினது நடுப் பாகமும் அகத்தோற்படைக்கலங்களால் நிரப்பப்பட்டுள்ளது. மெதூ சாவின் மேற்புறம் குவிந்தும், கீழ்ப்புறம் குழிவாகவும் காணப்படும். குழிவான பக்கத்தில் குடையின பிடிக்கு ஒப்பான பகுதி பிடியுரு (Manzbrium) என அழைக்கப்படும். பிடியுருவின் முனையிலுள்ள வாயைத் தொடர்ந்துள்ள உணவுச்சுவடு நான்கு ஆரைக்கால் வாய்களாகப் (radialcanals) பிரிந்து சென்று மெதூசாவின் விழிம்பிலுள்ள வட்டக்கால் வாயுடன் இணைகின்றன. குழிக்குடலையும், கால்வாய்களையும் கற்றி அகத்தோற்படைக்கலங்களுள்ளன, ப், கால்வாய்களுக்கிடையேயுள்ள பட
, வட்டக் க குடைப்புறமான ஆரைக்குரிய 1 கால்வாய்
பரப்பு
கால்வாய்
பசனனி ப ர் படிபட்டார் போபாட்டி
/ 0
இப்பாட்டம்
ரl 114 1 டாரி ட
கம்
டட்குடைக்குரிய வாய்
பிடியுரு பரிசக்கொம்பு பரப்பு
பழம் - படம் 34 - மெதூசா

- Tா
மெல்லியபடை அகத்தோற்படைமென்றட்டு எனப்படும். புறமுதலுருப் படைக்கும் அகத்தோற்படைக்குமிடையே தடிப்பான இடைப்பசை யுண்டு. மெதூசாவின் பெரும்பகுதி இடைப்பசையேயெனலாம். ஆகையினால் மெது சாவின் தன்னீர்ப்பு அதிகரிக்கப்பட்டு மெதூசா மிதக் கிறது. இடைப்பசை அதிகரிப்பதனால் ஆரைக்கால்வாய்களின் அவசிய
- பட பட் யேர்: ர 1ா பரிசக்கொம்பு பரிசக்கொம்பு - வீக்கம்
க வாய்
பிடியுரு --- 1. ப* 1 1 1
1 கப | TET | |TF 1 டேட் |-1' - பாடா
11 பா புகார்
'ப்டாப்புக் பய. ம்யா |
ட 1:44:.mாயகம். 1 கப் *
14, ப4ந் MLi-1
1 கியாம)
18ம்
TET -
A++Lப்புமட்'
---
ni: ம ப பா க !
காப்பி )
பட்டர்
படம்
# କି
வட்டக்கால்வாய்
ஆரைக்கால்வாய் [iார்11
படம், 35.

Page 46
- 18
மேற்படுகிறது. நான்கு ஆரைக்கால்வாய்களையும் நான்கு முக்கிய ஆரை களெனக்கொண்டு அவற்றை நடாரைகள் (PEr Tadi]) எனவாம் ஊடாரையின் முனையிலுள்ள பரிசக்கொம்புகள் வடாரைக்குரிய பரிசக் கொம்புகளாகும் (Per-radial tentacles) ஊடாரைகளுக்கிடையேயுள்ள கோணங்களை இருசமவெட்டிகளாக்குவன இடைஆரைகள் (Inter radi1) எனப்படும். இவற்றின் முனையிலுள்ள பரிசக்சொம்புகள் இடையாரைப் பரிசக்கொம்புகள் (Inter fadial tentacles] எனப்படும். இடையாரை. கட்கு இடையேயுள்ள கோணங்களை இருசமவெட்டிகளாக்குவன அயலா ரைகளென்றும் அவற்றின் முனையிலுள்ள பரிசக்கொம்புகள் அயலாரைப் பரிசக்கொம்புகளென்றும் அழைக்கப்படும். அநேக சிற், நிடைவெளிக் தலங்களுள்ளதால் அப்பகுதி வீங்கியிருக்கக்காணலாம். பரிசக்கொம்பு களிலுள்ள அழன் மொட்டுகள் அடிக்கடி உபயோகப்படுத்தப்படுவதால் அவற்றின் இடங்களை நிரப்புவதற்காக புதிய அழன்மொட்டுகள் சிற்றி
டைவெளிக்கலங்களிலிருந்து உற்பத்தியாகின்றன. | சிலவேளைகளில் பரிசக்கொம்புகளின் அடிப்பாகத்தில் புறமுதலுருப்படையில் நிற மணிகள் காணப்பட்டாலும் அவை பார்வைத் தொழிலுக்குரியவையல்லவென்று அறியப்பட்டுள்ளது. அவை கழிவுப்பொருள்கள் வந்து சேருவதால் ஏற்பட்டவையாயிருக்கக்கூடும். மெதூசாவின் விழிம்பிலே உட்புறமாகச் செல்லும் ஒரு சிறிய தட்டுபோன்ற எறியம் காணப்படுகிறது. இது திரை (Velum) எனப்படும். மெதூ சாவின் மேற்பக்கத்திலும், கீழ்ப்பக்கத் திலும் உள்ள புறமுதலுருப்படைத் தனசமேலணிக்கலங்களின் தசை வால்கள் ஐதராவிலிருப்பதைவிட விருத்தியடைந்துள்ளன, கீழ்ப்பக் கத்தில் மிகநன்றாக விருத்தியடைந்துள்ள தசைவால்கள் ஒழுங்கான முறையில் சுருங்கும் பொழுது மெதுசாவினுடல் மூடுகிறது. மீள்தன்மை கடைா இடைப்பசை தனது பழைய உருவத்தையடைவதாலும், மேற் பரப்பின் மத்தியிலுள்ள தசைவால்கள் சுருங்குவதாலும் மெ தூசாவுடல் விரிவடைகிறது. ஒரு குடை மூடித்திறப்பது போல மெதூசாவினுடல் மூடிவிரிவதால் மெதூசாவினால் நீந்தமுடிகிறது -
ஐதராவிலும் பார்க்க ஒபீலியாவின் மெதூசாவில் நரம்புத்தொகுதி நன்றாக விருத்தியடைந்துள்ளது. இடைப்பசையினிருபுறமும் நரம்பு வலைகள் காணப்படுகின்றன, மெதூசாவின் விழிம்பிலே திரையின் ஓரமாக நரம்புக்கலங்களும், நரம்புநார்களும் செறிவாகவுள்ளதனால் இரு நரம்பு வளையங்களுள்ளன. மெதூசாவின் சுயாதீன வாழ்க்கை காரணமாக தசை நார்களும் அதிக விருத்தியடைந்துள் ளன.
அயலாரைக்குரிய பரிசக்கொம்புகள் ஒவ்வொன்றின் அடியிலும், விழிம்பின் உட்புறமாக, புறமுலுருப்படையாலான நிலைச்சிறைப்பை (Statocyst) அல்லது விழிம்புப்புடகம் (Marginal vesicle) ஒன்றுள்ளது.

- 79 -
புறமுதலுருப்படை
அகத்தோற்படை,
பரிசக்ரெம்பு வீக்கம்
பரிசக்கொம்டபின்
அடிப்பாகம்
lte:
வட்டக்கால்
வாய்
துணிக்கை நிலைக்கல்
புலன்கலம்
படம் 3தி - அயாரைப் பரிசக்கொம்பீகட எடுக்கப்பட்ட நெ. வெ
அதில் பாய்பொருளும் தனியொரு கலத்தால் சுரக்கப்பட்ட கல்சியங்காப் னேற்றுத்துணிக்கையும் உள்ளன பையைச் சுற்றியுள்ள புறமுதலுருப் படைக்கலங்களின் உட்பகுதியில் முதலுருமுளைகளுண்டு, இப்பகுதி உணர்ச் சியுடையது. உள்ளிருக்கும் துணிக்கை நிலைக்கல் (Statolith) எனப்படும். நிலைச்சிறைப்பைகள் மெதூசாவின் நிலை மாற்றங்களை அறிந்து புலனங்கங் களாகத் தொழில்படுகின்றன. மெதூசா கிடைநிலையிலுள்ளபொழுது நிலக்கல் புலன்கலங்களின் முதலுருமுளைகளைத்தொட்டு தூண்டல்களை யேற்படுத்துவதில்லை, ஆனால் மெதூசா சரிந்திருக்கும் பொழுது நிலைக்கல் கலன்களைத் தொடுவதால் அவை தூண்டற்பேறடைந்து கணத்தாக் தங்கள் உண்டாக்கப்பட்டு நரம்பு நார்களினூடாக நரம்பு வளையத்திற்குக் கடத்தப்படுகின்றன. இதனால் புறமுதலுருப்படையிலுள்ள தசை மேலணிக்கலங்களின் தசைவால்கள் சுருங்கி ஒபீலியா சமநிலையையடை கிறது.
மெதூசாவின் விருத்தி !
முதலில் அரும்பர்த்தம்பத்தின் குழியிலிருந்து ஒரு கிளைக்குழாய் அரும்பு போல் உண்டாகிறது. இக்கிளைக்குழாய் நீண்டு முனையிலே பருமனடையும். இந்நிலையில் அது புறமுதலுருப்படை, இடைப்பசை. அகத்தோற்படை ஆகியவற்றைக்கொண்டிருக்கும். பின்னர் சேய்மை யான புறமுதலுருப்படை(Distal edtoderm) இருபடைகளாகப்பிரிவடைய உட்படை யில் ஒரு குழி உண்டாகிறது. இக்குழி மணி விருத்தியிலி (Bell பdinent) எனவும் அழைக்கப்படுவதுண்டு, குழி பெரிதாகும்பொழுது பிடியுரு விருத்தியடைகிறது. குழியின் உட்புறம் ஒரு மென்சவ்வு போன்ற

Page 47
- 80 -
80
பு---
பரிசக்கொம்பு
பு:11:34
திரைப்பட ப 4.1
11 டிப் பக. வாய்
THIIIIIIIாம்
- பிடியுரு
-- அரும்பர்த் தம்பம்
Fாடி ELE
இடைப்பசை புறமுதலுருப்படை
அகத்தோற்படை பாப் பாட்டி பெட் பாய்ப"TN11 பட். 4. - புதிய படம் - +2 பட்டப் பய ப டேட ப அப்படி படி 1 41.
11 பா )".
ILN 1 | Tபு
மணிவிருத்தியிலி
படம் 37 - பெ தூசாவின் விருத்தி
-பாட் பப் பய
பாகம் -1
புறமுதலுருப்படையால் சூழப்பட்டுள்ளது பின்னர் இம்மென்சவ்வு வெடிப்பதால் அதன் பகுதி குடையின் விழிம்பிலே ஒரு தட்டுப்போல் காணப்படும் : இதுவே திரை (Velum) எனப்படுகிறது. ஒபீலியாவில் மெதூசா முற்றாக விருத்தியடைந்தபின் திரை மறைந்து விடுகிறது. பிடி யுருவின் முனையில் வாய் உண்டாகி மெதூசா அரும்பர்த்தம்பத்திலிருந்து விடுபடுகிறது. அடிப்பாகத்திலுண்டாகும் துவாரம் மூடப்பட்டு சனனியுறையின் முனையிலுண்டாகும் துவாரத்தினூடாக மெதூசா வெளிவந்து நீந்தித் திரிகிறது,
1: பப
- படம் 1 | மெதூசாவின் முக்கிய தொழில் இலிங்கமுறை இனப்பெருக்கம் செய்வதேயாகும். ஒவ்வொரு ஆரைக்கால்வாயின் நடுப்பகுதியிலும் கீழ்ப்புறமாக இடைப்பசையும் புறமுதலுருப்படையும் கீழே தள்ளப் படுவதனால், வளரிகளுண்டாகி - சனனிகளாகின்றன. ஆகவே, மெதரசாவின் உட்குடைப் பாகத்தில் சனனிகள் நான்கு எறியுங் களாகக் காணப்படுகின்றன, 'மெதூசாக்கள் சரில்லமுள்ளவையாகும்.

- $1 -
பெண்மெதூசாக்களில் சூலகங்களும், ஆண் மெதரசாக்களில் விதைகளும் ம.ண்டாகின்றன. இவற்றிலிருந்து முறையே முட்டையும், விந்துகளும் உண்டாகின்றன, மெதூசாவின் - முன்விருத்தி காலத்தே முலவுயிர்க் கலங்கள் பிடியுருவின் புறமுதலுருப்படையில் உண்டாகி, பின் அகத் தோற்படைக்குச் சென்று அதன் பின்னர் சனனிகளையடைகின்றன. அங்கே முதிர்வடையுமுன் அவை அகத்தோற்படையிலிருந்து வெளிச் சென்று உட்குடைப்புறத்தில் புறமுதலுருப்படைக்கலங்களுக்கிடையே தங்கியிருக்கின்றன. நன்றாக முதிர்ந்தபின் புறமுதலுருப்படை வெடிப் பதனால் விந்துகளும் முட்டைகளும் நீரிலே வெளிவிடப்படுகின்றன. கருச் கட்டலும் விருத்தியும் நீரிலே நடைபெறுகின்றன. 4
கருக்கட்டிய முட்டை பிரிவடைந்து சிற்றரும்பராக (Blastula) மாறுகிறது. ஆரம்ப காலத்திலே சிற்றரும்பரின் மையமாக குழி காணப்பட்டாலும் பின்பு அக்குழி - சிற்றரும்பர்ச் சுவரிலிருந்து பெறப்படும் கலங்களால் நிரப்பப்படுகிறது. வெளிப்படைக்கலங்களிலே
- கயாம் அரும்புகளுண்டாதல் ஒபீலியா சமுதாயம் - 1 மெதூசாக்கள் 14
சராம்
TWITTா)
==
ஈi 1 , 1. பாரி 4, ப மாட்டார் பு
11ா பாரு பேர்
*******
"டிராபா- 7 ப்யாடப்பு
பிளாவலா ஓரிடமாதல் பிளானுலா குடம்பி
28 ம், படம் 38 - ஓபிலியாவின் வாழ்க்கை வரலாறு பட்ட பி
Z-5

Page 48
- 12
திசைச் 1, .
பிசிர்கள் உண்டாவதனால் சிற்றரும்பர் நீந்தித்திரிகின்றது. இந்நிலை. யிலுள்ள குடம்பி தட்டையும் (Planula) எனப்படும், உள்ளேயுள்ள அகத்தோற்படைக்கலங்களிற் பிளவேற்படுவதனால் ஓர் குழியுண்டாகி தட்டையம் ஒரு ஐதராவுருப்போலியாகிறது. இது ஒரு முணையால் கல்லிலோ, கடற்சாதாழையிலோ ஒட்டிக்கொள்ள, மறு முனையில் வாயும் அதைச்சுற்றி பரிசக்கொம்புகளுமுண்டாகின்றன. இலிங்கமில் முறையில் சுதராவுருப் போலியிலிருந்து அரும்புகள் விருத்தியடைந்து சமுதாயம் உருவாகிறது. மேல் நோக்கி வளரும் நீர்த்தண்டுகளில் அரும்புகள் உண்டாவதைத் தவிர, கீழ்ப்படையில் கிடைநிலையில் வளரும் ஐதராவேர்களிலிருந்து ஒரு தொடராக அநேக சமுதாயங்கள் உண்டா கின்றன, குடம்பிகளும், மெதூசாக்களும் நீந்தித்திரியக் கூடியன வாகையால் ஒபீலியாச்சமுதாயம் பரவலடையக் கூடியதாயுள்ளது. 6 - 'ஓபீலியாவின் வாழ்க்கைச் சரிதையில் ஐதராவுருக்களும், மெதூசாக்களும் மாறிமாறி இடம் பெறுகின்றன. ஐதராவுருக்கள் இலிங்கமில் முறையில் இனப்பெருக்கம் செய்ய மெதூசா இலிங்கமுறை யினப்பெருக்கம் புரிகிறது. ஆகவே சிலர் ஓபீலியாவின் வாழ்க்கைச் சரிதையில் சந்ததிப்பரிவிருத்தி (Alternation of genaration) உள்ள தெனக் கூறுவர். ஆனால் உண்மையில் ஐதராப்போலியும் மெதூசாவும் இருமடியான சந்ததிகளேயானபடியால் ஒபீலியாவில் சந்ததிப்பரிவிருத்தி யுள்ளதெனக் கூறமுடியாது. ஒபீலியாவில் புணரிகள் மட்டுமே ஒரு மடியானவை. ஐதராப்போலி உணவுட்கொள்ளலுக்குச் சிறப்பியல்பு பெற்றிருக்க, மெதூசா சுயாதீனமாக நீந்தித்திரிந்து புணரிகளைப் பரவல டையச் செய்து இலிங்கமுறையினப்பெருக்கம் செய்வதற்குச் சிறப்பியல் பெய்தியுள்ளது. சனனிகளிற் காணப்படும் புணரிகள் அப்பகுதியிலே உண் டாவதில்லை. அவை அரும்பர்த்தம்பத்தின் புறமுதலுருப்படையில் உண்டாகி பின்னர் மெதூரசாவின் ஆரைக்கால்வாய்களின் கீழ்ப்புறத்தை வந்தடைகின்றன வென்பது குறிப்பிடத்தக்கது. பொவிப்பையும் மெதூசாவையும் ஒப்புநோக்கல் :
கூர்ந்து அவதானிப்போமாகில் ஒபீலியாவின் பொலிப்பிற்கும் மெதாசாவுக்குமிடையே அமைப்பு ஒற்றுமை இருப்பதைக் காணலாம், எளிமையான அமைப்பைக்கொண்ட பொலிப்பிலிருந்தே சிக்கலான அமைப்பையுடைய மெதூசா பெறப்பட்டுள்ளது. மெதூசா குவிந்த மேற்புறத்தினாலேயே அரும்பர்த்தம்பத்தில் ஒட்டியுள்ளதால் இப் பாகம் ஐதராப்பூவின் அடிப்பாகத்திற்கு ஒப்பானதாகும். ஐதராப் பூவின் சுயாதீனமுனையிலே வாய்க்கூம்பில் வாய் உள்ளது போல் மெதூசாவின் குழிவானபக்கத்தில் பிடியுருவில் வாய் உள்ளது. - 'இரு - டி விலங்குருப்போளிகளிலும் வாய்ப்புறத்தே பரிசக்கொம்புகளுண்டு. ஒரு

- 33 :
- 17)
******
20
படம் 39 - பொலிப்பையும் மெதசாமவயும் ஒப்பிடுதல்
சதராப்பூவை தலைகீழாகவைத்து, அதாவது பரிசக்கொம்புகளுள்ள. முனையை கீழ்ப்புறமாகவைத்து, 1, மேலிருந்து கீழாகத்தட்டையாக்கப் -15 பட்டு பின்னர் கிண்ணவடிவாக்கப்பட்டால் அப்பொழுது உண்டாகும் த. அமைப்பு மெசதுராவிற்கு ஒப்பானதாகும். பின்பு மணியின் அமைப் 1 1 பைக்தொண்ட் மெதாசாவின் விழிம்பிலே வட்டக்கால்வாயும், குறுக்.- H. காக நான்கு ஆரைக்கால்வாய்களும் குழிக்குடலிலிருந்து உண்டா 11. கின்றன, மெதூரசா இனப்பெருக்கத் தொழிலைச் செய்வதால் அதற்கான ட' சிறப்பமைப்புகள் மெதூசாவில் விருத்தியடைகின்றன.

Page 49
-- 84 -
வகுப்பு - அந்தோசோவா !
இவ்வகுப்பிலட கும் விலங்குகளில் ஐதராவுருக்கள் மட்டுமேயுண்டு வாயைத்தொடர்ந்து வாய்வழியுள்ளது (StomodaEபார் குழிக்குடல் நடுமடிப்புகளால் அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சனலகள் அகத் தோற்படையிலிருந்து உற்பத்தியாகின்றன,
வகுப்புப்பிரிவு - சொஅன் தெரியா |
பரிசக்கொம்புகளின் எண்ணிக்கை ஆறு அல்லது அதன் மடங்காக இருக்கும், வாய்வழியில் ஓட்டுகுழாய்த்தவாளிப்புகள் உண்டு. சில நடுமடிப்புகள் பூரணமாகவிருக்கமாட்டா.
-_
வருணம் - அக்ற்றினியேரியா :
பெரும்பாலும் தனியன்களாக வாழ்கின்றன. எப்பொழுதும் ஓரிடமாக ஒட்டி வாழும், வெளிவன்கூடுகிடை யாது .
சணம் - சீலெந்தொற்று கணப்பிரிவு - நைடெரியா வகுப்பு - அந்தோசொவா வகுப்புப்பிரிவு --  ேசா அன்தேரியா அல்லது எட்சகொ றல்லியா வருணம் - அகற்றினியேரியா சாதி - கடல் அனிமனி
கடல் அனிமனி (Sea Anemone) கடலோரங்களிற் காணப்படும் உயிரினங்களில் கடல், அனிமனியும் ஒன்றாகும். இது பொதுவாக உஷ்ணப்பிரதேசக்கடல்களில், ஆழமில்லாத " இடங்களிலே கரையோரமாகக்காணப்படும். கடல் அனிமனிகள் கடற் சாதாழை, பாறை, நத்தை ஓடு முதலியவற்றில் ஒட்டி வாழுகின்றன. மலர்களைப்போன்ற தோற்றத்துடன் பல நிறங்களிலும் காணப்படு வதால் இவைகளைக் கடற்பு என்றும் கூறுவர், நீரினுள்ளிருக்கும் பொழுது இவை நன்கு விரித்து பார்வைக்கு அழகுடன் தோற்றமளிக் கும். நீர்வடிந்த காலங்களில் இவை உடலைச்சுருக்கி நிறமற்ற நிலை யிலிருக்கும். இதனால் எதிரிகளிடமிருந்தும் தப்பித்துக் கொள்கின்றன. வெளித்தோற்றம் :
- ச, 1 - 41 ப இ - II - 1 * - - - H 1 IL
கடல் உருளைபோன்றுள்ளது.., அதை மூன்று பிரிவுகளாகப்பிரிக் டிடி *" கலாம்,டிங் பாறையில் ஒட்டியிருக்கும் பாகம் அடிவட்டத்தட்டு என்றும், அதைப்படுத்துள்ளபாகம், கம்பம் என்றும் அழைக்கப்படும், சுயாதீன - 1 மானப்முனையில் வட்ட வடிவில் விரிந்துள்ளபாகம் வாய்வட்டத்தட்டு + எனப்படும், வாய்வட்டத்தட்டின் மையத்தே பிளவுவடிவில் (நீளமான ஃபார்ம் கீறு) ஒருவாய் உள்ளது. வாயைச்சுற்றி வட்டமாகப் பல நிரைகளில் அறு க அல்லது அதன் பெருக்கு எண்ணுக அனேக பரிசக்கொம்புகள் உள்ளன, 1' -

வாய்
17 வாய்வட்டத்தட்டு
பரிசக்கொம்பு
#11:21
சும்பம் அடிவட்டத்
தட்டு நத்தை எடு .
சன்னியாசி
நண்டு | பானரி
3Asாபதி
*யா
1 II
பயம் - 1
11 டி" = " படம் 40 - கடல் அனிம னி - 2
17 பட்ட 11 - உதசகலனுக்குரியதொகுதி :
- பா- 'கடா ப-1
1 உடலின் வெளிப்புறத்தே புறமுத அருவும், அகத்தே அகத்தோர் படையும் உள்ளன. அவற்றை தடித்த இடைப்பசை பிரிக்கின்றது. வாயிலிருந்து செல்லும் வாய்வழி (Stomodaeum) பக்கவாட்டில் தட்டை யான குழா யாக, கடலினுள் குழியாக இருக்கும் பகுதியிற் தொங்குகிறது. இது '"புறமுத இருப்படையினால் மூடப்பட்டுள்ளது. " நீண்டகுழாய்

Page 50
= 85 -
பரிசக்கொம்பு
வாய்
குழிக்குடல் புறமுதலுருப்படை இடைப்பசை அகத்தோற்படை. வாயுரு இறுக்கி நீளப்பக்கத்தசை: குறுக்குத்தசை பிரிசுவர் சனனி
சுவர்த்தசை
அளியுடைப்புத்துவராம்
அம்பிழை படம் 41 - கடல் அளிகனியின் நெ. வெ.
போன்ற வடிவிலுள்ள வாய்வழியின் இரு ஓரங்களிலும் நீண்ட பள்ளங்கள் உள்ளன. இவை ஒட்டுகுழாய்த்தவாளிப்பு (Sliphonoglyph) எனப்படும். வாய்வழியைச் சுற்றி பிசிர்கள் உள்ளன, ஓட்டுகுழாய்த் தவாளிப்பிலுள்ள பிசிர்கள் ஏனையவற்றைவிட நீளமானவை. இப் பிசிர்கள் கீழ்நோக்கி அடிப்பதால் நீரை குழிக்குடலினுள் இழுக்கின்றன. எனவே சுவாசித்தலுக்குத் தேவையான ஒட்சிசன் உடற்கலங்களுக்குக் கிடைக்கிறது. வாய்வழியின் ஏனைய பிசிர்கள் மேல் நோக்கியடித்து நீரை வெளியேற்றுகின்றன. இந்நீருடன் காபனீரொட்சைட்டும் ஏனய கழிவுப்பொருட்களும் வெளியேற்றப்படுகின்றன. உணவுட்கொள்ளலின் பொது வாய்வழியின் பிசிர்கள் தமது அடிப்பை மாற்றுவதால் உணவு உள்ளேயிழுக்கப்படுகிறது. , குழிக்குடலே சமிபாட்டுக்குழியாகவும், சமிபாடடைந்த உணவை எல்லாப் பகுதிகளுக்கும் கொண்டுசெல்லவும் பயன்படுகிறது. எனவே இதை உதரகலன்களுக்குரிய தொகுதி யென்றும் கூறுவர், உடற் சுவருக்கும் வாய்வழிக்குமிடையே பிரி சுவர்கள் (Septs) உள்ளன. இவைகள் வாய்வழியைத் தாங்கியுள்ளன

முதல் நடுமடிப்புகள்
LF- 1 பட ப ச வாய்வழி
1
பா
பு
சூட்டுகுழாய்த்தவாளிப்பு
பLடா
"> திசைகொள் நடுமடிப்பு
வழிநடுமடிப்புகள்
புடைநடுமடிப்புகள்
டவழிநடுமடிப்புகள்
திசைகொள் நடுமடிப்புகள்
* புடைநடுமடிப்புகள்
- முதல்நடுமடிப்பு
- குழிக்குடல்
1 - 4
படம் 42 - கடல் அனிமனி - வாய்வழியினூடாகவும் அதற்குக் கீழ்ப்பகுதியினூடாகவும் எடுக்கப் பட்ட கு: வெ.
வாதலால் நடுமடிப்புகள் (Mesenteries) எனவும் பெயர் பெறும். வாய் வழியுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஆறு சோடி நடுமடிப்புகள் முதல் நடு. மடிப்புகள் (Primary me9enteries) எனப்படும். இவற்றில் இருசோடிகள் இருபுறமுள்ள ஓட்டுகுழாய்த்தவாளிப்புகளை உடற்சுவருடன் இணைக். கின்றன. இவை திசைகொள் நடுமடிப்புகள் (Directive Desentories) எனப்படும். முதல்நடுமடிப்புகளுக்கிடையே, வாய்வழியுடன் பிணைக்கப் படாமல் "சோடிசோடியாகவுள்ள தடுமடிப்புகள் - வழிநடுமடிப்புகள்

Page 51
உ 88 -
(Secondary mCSEnteries) எனப்படும், முதல் நடுமடிப்புகளும் வழிநடு மடிப்புகளுக்குமிடையேயுள்ள சோடிகள் புடைநடுமடிப்புகள் (Tertiary TCsen teries) எனப்படும். நடுமடிப்புகளுக்கிடையேயுள்ள பகுதி நமடிப் பிடையறை (Inter mesEnteric chamber) எனப்படும். இவ்வறைகள் நடு மடிப்புகளிலுள்ள வாயுருக்களினூடாக - (Ostia) ஒன்றோடொன்று தொடர்பு கொண்டுள்ளன. நடுமடிப்புகளின் பிணைக்கப்படாத முகன்கள் நூல் போன்று நீண்டு தடித்திருக்கும். இவை பிரிசுவரிழை Septal filament) அல்லது நடுமடிப்பிழை எனப்படும். 1 மிகநீண்ட இழைகளுள்ளவை அம்பிழைகளெனப்படும். (AContia) சிலவேளைகளில் இவைவாயினூடாகவோ அல்லது உடலிலுள்ள அளியடைப்புத்துவாரத் தினூடாகவோ - Cinclide) வெளியே நீட்டப்படுகின்றன. இவற்றிலே அநேக பிசிர்களும், அழன் மொட்டுகளும், சுரப்பிகளும் உள்ளதால் இவ்விழைகள் பாதுகாப்பிற்கும், சமிபாட்டிற்கும் உதவுகின்றன.
Lணவுட் கொள்ளல் :
கடல் அனிமனி சிறிய கிரத்தேசியாக்களையும் மீன்களையும் மொலக் காப்பிராணிகளையும் இரையாகக் கொள்கின்றன. இரையைப்பிடிப் பதில் பரிசிக்கொம்புகள் பெரும்பங்குகொள்கின்றன. பரிசக்கொம்பு களிலுள்ள அழன்மொட்டுச்சிறைப்பைகள் இரையினுள் நச்சுப்பொருள் களைச் சுரந்து உணர்ச்சியற்றவையாக்குகின்றன. பின்னர் இரை வாயிலூ டாகவாய்வழியையடைந்துவாய்வழியிலும் ஓட்டுகுழாய்த்தவாளிப்பிலும் இருக்கும் பிசிர்களினடிப்பால் குழிக்குடலையடைகிறது. " நடுமடிப்பிழை களிலுள்ள அழன் மொட்டுச்சிறைப்பைகளின் தாக்குதலுக்குள்ளாகி இரை இறந்தபின் சுரக்கப்படும் சமிபாட்டுநொதியங்களால் சமிபாடு நடை பெற்று அகத்துறிஞ்சப்படுகிறது. சமிபாடடையாத உணவு நீர்ச்சுற் ரெட்டத்துடன் வாயினூடாக வெளியேற்றப்படுகிறது.
தசைத்தொகுதி :
தசைநார்கள் கடல் அனிமனியில் நன்றாக வளர்ச்சியடைந்துள்ளன. பரிசக்கொம்புகள், வாய்வட்டத்தட்டு, கம்பம் ஆகிய பகுதிகளில் நீளப் பக்கத்தசைகள் உள்ளன. கம்பம் வாய்வட்டத்தட்டுடன் சேருமிடத்தில் வட்டத்தசைகள் உள்ளன. நடுமடிப்புகளில் மூன்று வகையான தசை கிளுள்ளன.அவையாவன நீளப்பக்கத்தசைகள், குறுக்குத்தசைகள் (வட்டத் தசைகள்), சுவர்த்தசைகள் (Parietal muscles என்பன, நீளப்பக் கத்தசைகளின் சுருங்கலினால் உடல் நீளம் குறுகுகிறது. சுவர்த்தசைகளின் சுருங்கலின் போது உடற்சுவர் அடிப்பாகத்திற் கருகாமைக்கு இழுக்கப் படுகிறது. நடுமடிப்புகளிலேயுள்ள நீள்பக்கத்தசைகள் ஒவ்வொரு சோடியும் ஒன்றையொன்று நோக்கியவாறுள்ள்ன.

- 85 -
F1 1' பட .
நாப்புத்தொகு தி 1 |
புறமுதலுருப்படைக் கலங்களிலிருந்து பெறப்படும் நரம்பு நார்கள் ஒரு தொகுதியாக அமைந்துள்ளன. பரிசக்கொம்புகள் வாய்வட்டத் தட்டு,வாய்வழி ஆகிய பகுதிகளிலே நரம்புக்கலங்கள் செறிவாகவுள்ளன. இனப்பெருக்கம் :
கடல் அனிமனி ஈரில்லமுள்ள விலங்காகும். அகத்தோற்படை யிலிருந்து உண்டாகும் சீனனிகள் முதல் நடுமடிப்புகளின் சுயாதீன முனை களிலே காணப்படுகின்றன. கருக்கட்டல் விலங்கிற்கு வெளியேயே நடைபெறுகிறது. அதாவது புறக்கருக்கட்டலே நடைபெறுகிறது. நுகம் தட்டையம் (Planula) என்னும் குடம்பியாகி சிறிது காலம் சுயாதீன வாழ்க்கை நடத்தியபின் ஓரிட மா கி நிறைவுடலியாக வளர்கின்றது.
- 1 ம் " * "
ா ? இட 41
ஐதரா
கடல் அனிமனி
1 1 1 11 1. நன்னீரில், வாழ்கிறது. ப. -'
கடல் நீரில் வாழ்கிறது.. 11 - !
2. தாவரங்களில் ஒட்டி வாழும்.
நத்தை ஒட்டிலோ, பாறை
களிலோ ஓட்டிவாழும். -"', பெரும்பாலும் நி ற மற்ற
நிறமுடைய பூப்போன்ற பெரிய சிறிய உருவமுடையது.
உருவமுடையது.
1. சுயாதீன முனையில் வாய்க்
வாய்க்கூம்பு கிடையாது. கூம்பு உண்டு. 5. வட்டவடிவான
வாயைச்
பிளவு போன்ற வாயைச் சுற்றிப் சுற்றி ஒரு வரிசையாக 6-10
பலவட்டங்களில் அநேக பரிசக் பரிசக்கொம்புகள் உண்டு.
கொம்புகள் உண்டு. இவற்றின் எண்ணிக்கை ஆறின் மடங்காகும்.
6. வாய்வழியும் ஒட்டு குழாய்த் தவாளிப்பும் கிடையாது.
வ ா ய் வ, ழி யு ம் ஓட்டுகுழாய்த் தாவளிப்பும் உண்டு.ப
7. குழிக்குடல் பை போன்ற ஒரு
குறியாகும். ம டி ப் பு கள் கிடையாது.
குழிக்குடல் மடிப்புகளால் அறை களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
பட ப.க.
8. நடுமடிப்பு இழை அம்பிழை
ஆகியவை கிடையா,
நடுமடிப்பிழை. அம்பிழை ஆகி யவை உண்டு.

Page 52
- 80 -
அளியடைப்புத் துவாரமுண்டு. " :
9. அளியடைப்புத் துவாரம்
கிடையாது. 10. இடைப்பசையில் கலங்கள்
கிடையாது.
கூடுதலாக விருத்தியடைந்துள்ள இடைப்பசையில் நரம்புநார் களும் அமீபாப்போலிக்கலங்களும் காணப்படும்.
11. தசைத்தொகுதி ந ன் மு க
விருத்தியடையவில்லை. தசை வால்கள் மட்டுமே காணப் படுகின்றன.
தசைத்தொகுதி நன்றாக விருத்திய டைந்துள்ளது, நீளப்பக்கத்தசை, வட்டத்தசை,, சுவர்த்தசை ஆகி யவையுண்டு. சன்னியாசி நண்டு நத்தையோட் டிற்குள் சென்று அனிமோனியை யும் வேறிடங்களுக்கு இட்டுச் செல்கிறது.
தடவசைவும், குத்துக்கரண வசைவும் உண்டு, சில வேளை களில் சுயாதீனமாக நீந்துவ தும் உண்டு.
13. ஆரைச்சமச்சீருடையது,
14, சனனி புறமுதலுருப்படை
யிலிருந்து உற்பத்தியாகிறது. இது ஒரு இரு பா வ ா ன
இருபக்கச் சமச்சீருடையது. சனனி ப் அகத்தோற்படையி லிருந்து உற்பத்தியாகிறது. ஆண், பெண் பாலங்கங்கள் வெவ் வேறு அனிமனிகளில் காணப் படும். 1 கிலோ படும்.
விலங்கு. "
15. பி ள ா னு வ ா குட ம் பி
கிடையா.
(தட்டையம்)பிளானுலா குடம்பி யுண்டு.
16, அல்காவுடன் ஒன்றிய வாழ்வு
காணப்படுகிறது.
ஓரட்டிலிலுண்ணுமியல்பு காணப் படுகிறது.
ஐதரா பொலிப்பு
ஒபீலியா பொலிப்பு
தனியன்களாக (நன்நீரிலே) தாவரங்களில் ஒட்டி வாழ் கின்றன.
கடல் நீரிலே சமுதாயமாக கதரா வேரினால் ஆதாரப் படையில் ஒட்டி வாழ்கின்றன. ஐதராவுறை உண்டு.
1. ஐதராவுறை கிடையா.

- 81_
கிடை
தட்டு உண்டு.
யாது.
4. ஒவ்வொரு பரிசக்கொம்பின் மையத்திலும் குழிக்குடல் தொடர்ச்சியாகவுள்ளது.
பரிசக்கொம்புகளில் குழிக்குட லின் தொடர்ச்சி கிடையாது. மையப்பகுதி கலங்களால் நிரப் பப்பட்டுள்ளது.
5. வாய், வாய்க்கூம்பு, பரிசக்
கொம்புகள் ஆ கி ய  ைவ உண்டு.
வாய், வாய்க்கூம்பு,பரிசக் கொம்புகள் ஆகியவை உண்டு.
6, உ ண  ைவ உட்கொள்வது மட்டுமன்றி இனப்பெருக்கத் தையும் செய்கிறது. சனனி கள் 1புறமுதலுருப் படையி விருந்து உற்பத்தியாகின்றன
உணவை உட்கொள்ளுவது மட் டுமே பொலிப்பின் தொழில், இனப்பெருக்கம் செய்வதற்கு சமுதாயத்தில் மெதரசாக்கள் உண்டாகின்றன. கப்ட
1 - L
ஒ32 ?
* ==ாபம்
- ரா. இடு un 01, 11
7-0+ இ,ம்
- படம் 2
1. - - - - பட்டப் படம் -... அபய-ம் பக... - 114", "பட்....! 4 பாட 11 ச 21 - பட - 1
1 - சர் "ட 1 -1
- - -
டாக, பட் -1
-பு ! " - 5 - - - - - - - - - - -' -1

Page 53
- 1, 2
முப்படையுள்ள விலங்குகள் ' பட
(Triploblastic animals) - 5 Ad, A1டிப்பு 14: - 7 - 11 14 புரோற்றசோவா அங்கிகள் கலமற்றலையெனவும், சீலந்தராற்ற வில் விலங்குடல் புறமுதலுருப்படை, அகத்தோற்படை என்னும் இரு படைகளைக் கொண்டுள்ளதெனவும் - விவரிக்கப்பட்டது. சீலெந்த ரேற்றுக்களில் இவ்விருபடைகளுக்குமிடையே இடைப்பசையுண்டு. சிலெந்தரேற்றுக்களைவிட உயர்நிலையிலுள்ள விலங்குகளெனக் கருதப் படுபவற்றில் மூன்று படைகள் காணப்படுகின்றன. புறமுதலுருப் படைக்கும், அகத்தோற்படைக்கும் இடையே புதிதாக விருத்தியடைந்த படை இடைத்தோற்படை எனப் பெயர் பெறும். இம்மூன்று படை களும் மூலவுயிர்ப்படைகள் எனவும் அழைக்கப்படுவதுண்டு. ஒரு விலங்கு முளையமாக இருக்கும் பொழுது மூலவுயிர்ப்படைகள் சாதாரண நிலையிற் காணப்படுகின்றன. விலங்கு விருத்தியடைய மூலவுயிர்ப் படைக்கலங்கள் சிறப்பியல்புகள் பெற்று இழையங்களாகத் தொகுக்கப் படுகின்றன. பல இழையங்கள் ஒன்று சேர்ந்து அங்கங்களாகின்றன. சிக்கலற்ற முப்படை விலங்குகளிலே புறமுதலுருப்படை விலங்கின் வெளிப்புறமாக பாதுகாப்புப்படையாக அமைய, அகத்தோற்படை உணவுச்சுவட்டைச் சுற்றி உட்போர்வையாக அமைகிறது. இடைத் தோற்படையிலிருந்து தசைநார்த்தொகுதி, இனப்பெருக்கத்தொகுதி, புடைக்கலவிழையம் ஆகியவை விருத்தியடைகின்றன. உடலங்கங்களைச் சுற்றிப் புடைக்கலவிழையுமே காணப்படுவதால் சமிபாடடைந்த உணவு உடலின் எல்லாப்பகுதிகளுக்கும் பிரசாரண முறையாலேயே கடத்தப் படுகிறது. கலங்களின் சுவாசித்தலுக்கான ஒட்சிசன் வாயுவும் சுவா சித்தலின் போது உண்டாகும் காபனீரொட்சைட்டும் புடைக்கலவிழை யத்தினாலேயே கடத்தப்படுகிறது. இவ்வாறான எளிய உடலமைப் பைக் கொண்ட விலங்குகள் ஓசிலோமேற்றா (Accelonata) என்னும் பிரிவிலடங்கும். (அதாவது உடற்குழி அற்றலை ), உயர்நிலையிலுள்ள

- 93 -
அகத்தோற்
படை
புறமுத லுருப்
படை !
சனனின் மேற்புறத்குரு
கான்"
திக்கலன்
சன்னி ",
குடல் |
"படை
-'A
*14 - 111 + சனனி _ இடைத்தோற் கழிவுக் கீழ்ப்புற = நரம்பு உடற்குழி
குழாய் குருதிக்கலன் நாண் -- படம் 49 » பொதுமைப்பாடடைந்த ஒரு ஏசீலோமேற்றினதும் - 3
சிலோபேற்றினதும் குறுக்கு வெட்டு முகத்தோற்றத்தின் வரைபடம் 17-11 11) பு12:11:1ர் 11, 1ாக் -.12
மூளை உடல் இடைத்தோற்படை"- அசுத்தோற்படை
உடற்குழி
t - - - - - - -14:11 E - -
கா கைது SMாளுயாபாரம்:M:கார் பாக்தாத்
843:48:24க32க: து "ராப் கார்
'பு: 117 செ/ா அAMuாசிகா A:21,ட்5ே1:39:24 5ா 1101) 4:11 444)
பா - பாகம் I
#1 - 74 பட்டி -----
1 - |--
வாய்வழி பட் நடுக்குடல் ப்ப உள்ளுடன் குதவழி - சப் .. கட், உ.ப இடைத்தோற்படை - 1,1,2,3:' பு: பட்ம் 44 4: பொதுமைப்பா டடைந்த ஒரு கிலோ மேற்றின் - * ஈமாசி நீர்பக்கவெட்டுமுகத் தோற்றத்தின் வரைபடம் ) 43.37 பாட், பட்டர், படசோ ர சிங் பேசி 4).-3111!யா,2, 13

Page 54
- 94 -
முப்படை விலங்குகளிலே இடைத்தோற்படை இரு படைகளாகப் பிரிந்து, ஒருபடை அகத்தோற்படையைச் சுற்றியும் மறுபடை புற முதலுருப்படைக்குக் கீழாகவும் காணப்படும். அகத்தோற்படையைச் சுற்றியுள்ள இடைத்தோற்படை உள்ளுடன் படை (Splanchnic layer) என்றும், புறமுதலுருப்படையின் அகத்தேயுள்ள இடைத்தோற் படை உடற்படை (Somatic layer) என்றும் அழைக்கப்படும், உள்ளுடன் படைக்கும் உடற்படைக்குமிடையேயுள்ள புன் வெற்றிடமே உடற்குழி ஆகும். உடற்குழியுள்ள விலங்குகள் 'தலோமேற்றா ' Coelomala) அல்லது. "குழியுடலி' என்னும் பிரிவிலடங்கும்
4 இன் 05'மி'
சீலோமேற்று விலங்குகளை ஏசிலோமேற்று (ACoelomate) விலங்கு களிலிருந்து பிரித்தறிவதற்கு உடற்குழிமட்டுமே ஒரு இயல்பெனக் கூறமுடியாது. சீலோமேற்றுக்களில் எல்லாத் தொகுதிகளும் ஏசிலோ மேற்றுகளிலுள்ளவற்றைவிட அதிக விருத்தியடைந்து காணப்படுகின் றன. இதனால் அதிக அளவில் தொழிற்பங்கீடும் காணப்படுகிறது. சீலோமேற்றுகளின் உடல் ஏசிலோமேற்றுகளின் உடலுடன் ஒப்பிடும் பொழுது அதிக பருமனுடையதாயிருப்பதால் உணவுச் சுவட்டிலிருந்து போசணை உடலின் எல்லாப் பாகங்களையும் பிரசாரண முறையில் அடைவது எளிதல்ல. எனவே போசணையைக் கடத்துவதற்காக இவற்றில் கடத்துந்தொகுதி - விருத்தியடைந்துள்ளது. + , குருதிச் சுற்றோட்டத் தொகுதி குருதி என்னும் பாய்பொருளைக் கொண்ட குழாய்களாலானது. குருதி சமிபாடடைந்த உணவைக் கடத்துவதுடன் சுவாசித்தலுக்கான ஒட்சிசனையும், சுவாசித்தலின் போது வெளிவிடப் படும் காபனீரொட்சைட்டையும் நைதரசன் கழிவுப்பொருள்களையும் கழித்தல் அங்கங்களுக்குக் கடத்துகின்றது. சீலோமேற்று விலங்குகளில் உணவை உட்கொள்வதற்காக வாயும், சமிபாடடைந்த பின் கழிவுப் பொருட்களை வெளியேற்றுவதற்காக - குதமும் உண்டு. - உணவுச் சுவட்டுச் சுவரிலுள்ள தசைகளின் சுருங்கலினால் உணவு உணவுக்கால் வாயில் சிறிது சிறிதாகச் செல்ல முடிகிறது. உணவுக் கால்வாயை வாய் , வழி (Stomodaeum), நடுக்குடல் (Mid gut), குதவழி (Proclodecum) என மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம், வாய்வழியும் - குதவழியும் புறமுதலுருப்படையாலான உட்போர்வையைக் கொண்டுள்ளன. நடுக்குடலின் உட்போர்வையாக அகத்தோற்படை உள்ளது. விலங்கினுடல் பருமனடையும் பொழுது அதற்கேற்ப விலங்கின் மேற் பரப்பு அதிகரிப்பதில்லையாதலால் மேற்பரப்பினூடாகப்பெறும் ஒட்சிசன் விலங்குக்கலங்கள் சுவாசிப்பதற்குப் போதுமானதல்ல. ஆகவே இதற் காக சிறப்பான அங்கங்கள் உண்டாகின்றன. நைதரசன் கழிவுப் பொருள்கள் அகற்றுவதற்காக பல்வேறு விதமான கழித்தலங்கங்கள் விருத்தியடைகின்ற்ன.""மையநரம்புத் தொகுதியும் ஏசிலேர்மேற்றுகளை
ளாகப் பிரிப10 gut), "வாயை வா

- 95 -
விட சிலோமேற்றுகளில் திறம்பட விருத்தியடைந்துள்ளது. மையநரம் புத்தொகுதியுடன் தொடர்பு கொண்டு புலனங்கங்களும் விருத்தியடைந் துயிர்ளன. லோமேற்றுகளில் தசை நார்த்தொகுதியும் நன்றாக விருத்தி யடைந்துள்ளன. விருத்திகுன்றிய விலங்குகளில் தசைநார்த்தொகுதி தொடர்படைகளாகக் காணப்படுகிறது, ஆனால் விருத்திகூடிய விலங்கு களில் தசைநார்த்தொகுதி துண்டங்களாக்கப்பட்டு இடப்பெயர்ச்சியில் உதவுகின்றது. ஆத்திரப் பொட்டுகள், - மொலாக்காப் பிராணிகள் ஆகியவற்றில் குருதிக்கலன்தொகுதி மிக விரிவடைந்துள்ளதனால் உடலசுச்சுற்றுக்குழி சிறிதாக்கப்பட்டு உடலகம் குருதியினால் நிரப்பப் பட்ட குழியினால் (குருதிக்குழி HacDOCOcle) சூழப்பட்டுள்ளது. கழித் தலங்கங்களின்குழி இனப்பெருக்கவங்கங்களின் குழி' ஆகியவையே உண் மையான உடற்குழியாகும்.
14 பல் (பட 11யப் 4
பாபு பாடப10டம் - - - - புறா 41 ( பிபா அது 2:11 5:3-5
பட க
1 கப் -
-14 1 1 - கே இE)
TI - பார் மப்புEE1. பாகம் -4ரோ, து|
பட 14 , பு | Fடிய பல ந ரப ட பா 4
பார்ப்பு பிப்பா பய க ட ப டார்
பை, கா.'- பு: --- 14-டிரா கப்ப டாப் - 1 -ப ம ய 4-11 ,

Page 55
- 111 ய 1 1 - 4, 14ா 4 4. ப். 1 - 14 ''1, 11:11 டி2 , பார்ட் - 1 - #ம் 1 - 111- 1..1 - 7), 1 - -.-1 4 '1
") 1 2 : .R, 4, F:, , - ,4 - - - - 14 யூயோர, - - - - - - டி 'பு:4 1 - * - 17 - 11 , கேக் - - // 4 = 4 , 5. + 1.1.-க. டம் ஏப். 1 கார் - 14. _12, : 4!! 1434 1 1 1 - 41 "ட"-4 ''
+1411 11 ப .'
----- - பூ - 11 i 11: +1 , பு: , சக", "சம் 4
ப41, 2, 10:11 . ட்பட 11
THI 41, 4, 7----11
----11 கணம் - பிளாத்தியெல்மிந்தெசு பட 11 Lu."
பட 4#1ா நீ
11 ப பப4 "பிளாத்தியெல்மிந்தெசு' என்னும் கிரேக்க மொழிச் சொல்லிற்கு 'தட்டைப்புழு' என்பதே பொருளாம், ஆகவே சுயாதீனமாகவும், ஒட்டுண்ணியாகவும் வாழும் தட்டைப்புழுக்கள் யாவும் இக்கணத்தில டங்கும். இவை முப்படையுள்ள, ஆனால் உடற்குழியற்ற மெற்றாசோ வாக்களாகும். உடல் மென்மையானதாகவும், தட்டையானதாகவும் இருபக்கச்சமச்சீருடையதாகவும் --- காணப்படும், உண்மையான அனுபாத்துமுறைத்துண்டுபடல் இவற்றிற் காணப்படமாட்டா. உடலை முன்முனை, பின்முனை, மேற்புறம், கீழ்ப்புறமென வியத்தப்படுத்தலாம், உடற்குழி கிடையாதாதலால் இடைத்தோற்படையிலிருந்து பெறப் பட்ட புடைக்கலவிழையம் உடற்ரேலுக்கும், பல்வேறு அங்கங்களுக்கு மிடையேயுள்ள இடைவெளிகளை நிரப்புகிறது உணவுக்கால்வாயில் வாய் உண்டு, ஆனால் குதம் கிடையாது. இவ்வியல்பில் பிளாத்தியெல் மிந்தெசு சீலெந்தெராற்றவை ஒத்துள்ளது. சாதாரணமாக சமிபாட்டுக் குழாய் அதிக கிளைகளையுடையதாயிருக்கும். சிலவற்றில் சமிபாட்டுத் தொகுதி கிடையாது, குருதிச்சுற்றோட்டத் தொகுதியும் கிடையாது. உடற்சுவர் மென்மையாக இருப்பதால் மூடுபடையினூடாகவே சுவா சித்தல் நடைபெறுகிறது, நரம்புத்தொகுதியில் ஒரு சோடி மூளையத் திரட்டுகளும் நரம்பு நாண்களும் உண்டு, இவற்றிலிருந்து பல நரம்புகள் உடலின் பல பாகங்களுக்குச் செல்லுகின்றன. நரம்பு நாண்களில் திரட்டுகள் சிடையா, தசைகள் நன்றாக விருத்தியடைந்துள்ளன. தசைநார்கள் நெடுக்குமுகமாகவும், குறுக்குமுகமாகவும், நிலைக்குத் தாகவும், ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. கழிவுத் தொகுதி அநேக சுவாலைக்கலங்களைக் கொண்டது. சுவாலைக்கலங்கள் கழிவுக்கால் வாயுடன் தொடர்பு கொண்டுள்ளன. (சுவாலைக்கலங்களின் அமைப்பு ஈரற்றட்டையனின் கீழ் விவரிக்கப்பட்டுள்ளது). பிளாத்தியெல்மிக் தெசுவைச் சேர்ந்த விலங்குகள் இருபாலானவை (Hermaphrodite). அதாவது ஒரு விலங்கிலேயே ஆண், பெண் இனப்பெருக்கத் தொகுதிகள்

- 91
உண்டு. இத்தொகுதிகள் மிகச் சிக்கல் வாய்ந்தவை, பெண் இனப்பெருக்கத்தொகு தியரில் மொட்டகம் (GerHariபா) அல்லது சூவகம் 4 Ovary) என்றும், கருவூணாக்கி ( Vitellarium) அல்லது கருவுண் சுரப்பி,, (Yolk gland) என்றும் இரு பகுதிகளுண்டு. கருவூணாக்கியிலிருந்து சுாக். கப்படும் கருவூண் முட்டையைச் சுற்றிக்கொள்வதால் கருக்கட்டியபின் முட்டைக்குத் தேவையான போசணை கிடைக்கிறது. விருத்தி நேரடி யாகவோ குடம்பி நிலைகளினூடாகவோ நடைபெறுகிறது. - பட்டர்
-கணம் - பிளாத்தியெல்மிந்தெசு
வகுப்பு: துர்பெல்லாறியா
திரமெற்றோடா செஸ்ற்றோடா (அல்லது தேபல்லேரியா)
(அல்லது செத்தோடா) (Turbellaria)"
(Trematods) )
உ-ம்: நாடாப்புழு
A (CAstoda)
வகுணம் : மொனோஜினியா - டைஜினியா (இடிகெனேயா) அல்லது
(அல்லது மொனோகெனே யா) -
மலக்கோகொற்றிலியா 1 (Monogenea)
---,- (Digenea or Malacocatylea).
உ-ம் : ஈரற்றட்டையன்
வகுப்பு - திரமெற்றேடா :
இவ்வகுப்பில்டங்குவனயாவும் ஒட்டுண்ணிகளாகும். நிறைவுடலி கள் பிசிர்களையுடையனவாயிருக்கலாம், - சமிபாட்டுத் தொகுதி உண்டு. வாயில் ஒரு உறிஞ்சியும் கீழ்ப்பரப்பில் ஒன்றே அதற்கு மேற் பட்ட உறிஞ்சிகளுமோ -காணப்படும். * --வடிவிலான சமிபாட்டுக் கால்வாய் கிளைகளைக் கொண்டது. தசைகளாற் சூழப்பட்ட தொண்டை உறிஞ்சுதலுக்கு உதவுகிறது. புலனங்கங்கள் புறவொட்டுண்ணிகளிலும் சில குடம்பிகளிலும் காணப்படும்,
வருணம் டை ஜீனியா :
இவ்வருணத்தைச் சேர்ந்தவை அகவொட்டுண்ணிகளாகும். சிக்கலான வாழ்க்கைச் சக்கரம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விருந்துவழங்கிகளில் முற்றுப்பெறுகிறது. - - 114, Z-7

Page 56
- 98 .
கணம் - பிராத்தியெல் மிக்தெகா பயர் வகுப்பு - திரமெற்குேடா ய 1 1 - ட் - - பு) வருணம் - டைஜீளியா - - - - -பொது படப்பிட சாதி - பசியோலா கெப்பற்றிக் கா கா ப 4 ப't - -
=ாடு சர் பட்டம் கட்டிட பாட்டு பருகப்பு - பார்ட் உற்பத்திக்
கட ர் கூடம்
வாயுறிஞ்சி
0 0 .
சூலகம்
தொண்டை
ஆண்குறி வீசற்கான் கீழ்ப்பக்க உறிஞ்சி சுக்கிலப்புடகம் கருப்பை,
ஓட்டுச்சுரப்பி நடுக்கோட்டு கருவூண்
சுரப்பிக்கான். அப்பாற்செலுத்திகள்
- விதை 1.
1- TETTI 1 - 1ட்ட பார்
கருவூண்சுரப்பி
F -1 - 1 இவர் !
மாம்
-பாட்
படி -பாடம் -விதை 11.14 . (1ார்பும் ஒரே மாதி Hi புப்பாளர் L - டெபு சகபய க நட 4 பர்'1 1 1 1 tir 4 )
- பாதய இது பாடி 11 பா - - பக.
1ா காயப போட்டி
டாடா (-:
" ப-1
படம் 45 ஈற்றட்டையன் 17 ப யகபு 144ா

- ஓடி _
பசியோலா கெப்பற்றிக்கா (Fasciola hepatica)
வாழிடமும் கட்டமைப்பும் :
பசியோலா கெப்பற்றிக்கா - ஐரோப்பாவிலுள்ள செம்மறியாடு களின் பித்தக்கான்களில் அகவொட்டுண்ணியாக வாழ்ந்து அவற்றில் ஈரல் அழுகலை (Liver rot) உண்டாக்குகின்றது. அரை அங்குலம் முதல் ஒரு அங்குலம்வரை நீளமான முழுவுடலியின் மென் உடல் இலை போன்று மேலிருந்து கீழாகத் தட்டையாக்கப்பட்டு, அகன்ற முன் முனையில் கூம்பு போன்ற எறியத்தைக் கொண்டுள்ளது. இப்பகுதி தலைச்சோணை என அழைக்கப்படும், உடல் இருபக்கச் சமச்சீருடையது. தலைச்சோணையின் முனை யிலுள்ள வாயைச் சுற்றி தசைகளாலான வாயுறிஞ்சி (அல்லது முன்பக்க உறிஞ்சி) உண்டு, தலைச்சோணைக்குப் பின்கால் கீழ்ப்புறத்தே கீழ்ப்புற உறிஞ்சி காணப்படும், கீழ்ப்புற உறிஞ்சிக்குச் சற்றுமுன்புறமாக உற்பத்திக்கூடம் உண்டு. உடலின் முன் முனையிலிருந்து மூன்றிலொருபங்கு தூரத்தில் மேற்புறமாக மையக் கோட்டில் உலோரரின் கால்வாய், திறக்கிறது. பின்முனைக்கருகே, கீழ்புறமாக, கழிவுத்துவாரம் உண்டு, ஈரற்றட்டையனின் உடற் பரப்பில் பிசிர்கள் கிடையாவெனினும் சிறிய முட்கள் பின்னோக்கியமைந் திருக்கக்காணப்படும்,
மே 18ா -
54 - F - -
- முள்
4ம் - 1 |
"மூடுபனடடா காடி கடன்
2EEEEEES
- 'EL
- வட்டத்தசை 11:
நீளப்பக்கத்தசை
(டா
| பாடபு |
கம்
பாய 11ம் -- மூடுபடை சுரக்குங்கலம்
- பாப்ட்
பாக்.
" சரி - பம்
- புடைக்கலவிழையம் பாட்
ப பாரடி'
--23: , படம் 46- உடற்சுவர் கு. வெ.

Page 57
- 100 -
முள் 11
மூடுபனட
அடித்தள மென்சவ்வு : - வட்டத்தசை யூ நீளப்பக்கத்தசை
காப ப, ராதாபு:- 1 :
- மூடுபடை சுரக்குங்கலம்
- 11 - 1ாப் 1 டி 1hn 117 (f=', 14, 154 ILL :
- கரு E-'.
பட 14:51:41
படம் 47-- நிலைக்குத்து வெட்டுமுகம் , *"வலர் t: 10 (இலத்திரன் நுணுக்கு காட்டியினூடக)
Lடற்சவர் : பட க
உடற்சுவரைச் சுற்றியுள்ள மூடுபடையிலே (Tegument) பின்னோக்கி அமைந்துள்ள சிறிய முட்களுள. பித்தக்கானிலிருந்து ஒட்டுண்ணி வழுக்கி விழாதிருக்க இம்முட்கள் உதவுகின்றன. மூடுபடைக்கு உட்புறமாக வட்டத்தசைப்படையும் அதற்குட்புறமாக நீளப்பக்கத் தசைப்படையும் உண்டு. வட்டத்தசைப்படையில் உள்ள தசை நார்கள் உடலைச் சுற்றி வட்டமாகவும் நீளப்பக்கத் தசைகள் உடலின் நீள் அச்சிற்குச் சமாந்தர மாகவும் அமைந்துள்ளன. நீளப்பக்கத் தசைகளுக்கும் உட்புறமாக உள்ள கலங்களிலிருந்தே மூடுபடை சுரக்கப்படுகிறதெனத் தெரிய வருகிறது. மூடுபடை இக்கலங்களுடன் தசைப் பகுதியினுடாகத் தொடர்பு கொண்டுள்ள தென்று இலத்திரன் நுணுக்குகாட்டியினூ
டாகப் பெறப்பட்ட படங்களிலிருந்து தெரியவருகிறது. மூடுபடை அகத்தேயுள்ள கலங்களுடன் தொடர்பு கொண்டுள்ளதால் இது ஒரு உயிருள்ள படையெனவே கொள்ளவேண்டும். முன்னர் மூடுபடை ஒரு இறந்த படையாகக் கருதப்பட்டு புறத்தோல் என அழைக்கப்பட்டு வந் தது. முடுபடையில் இழைமணிகளும் (Mitochondria), உணவுச் சேமிப்பு களும் காணப்படுகின்றன. இப்படையினூடாக போசணை 2ட்புகமுடியு மொவும் காட்டப்பட்டுள்ளது, உடலங்கங்களினிடையே புடைக்கல விழையம் உண்டு. உயிர் புடைக்கலவிழையமும் "தசைப்படைகளும் மூடுபடையுண்டாக்கும் கலங்களும் இடைத்தோற்படையிலிருந்தே உற்பத்தியாகியுள் ளன 7 - 8 த ப

- 10 -1
உள வுக்கால்வாய் !
தலைச்சோணையின் முக யிலுள்ள வாயுறிஞ்சியின் மையத்தே வாய் உள்ளது.. வாயைத் தொடர்ந்து தசைகளாலான உறிஞ்சற்றொன் டையும் அதைத்தொடர்ந்து குறுகிய களமும் உண்டு. களத்தைத் தொடர்ந்துள்ள குடல் வலது, இடது கிளைகளாகப் பிரிகின்றது. உடலின் நடுக்கோட்டிற்கு இரு புமுறம் இருகிளைகளும் பின்முனை வரை நீள்கின்றன, ஒவ்வொரு கிளையும் மேலும் சிறு குழாய்களாகக் கிளைத்து உடலெங்கும் ஏன் ய அங்கங்களுக்கிடையே பரவியுள்ளன. இவை குடற்குருட்டுக்குழல் எனவும் அழைக்கப்படுவதுண்டு. ஈரற்றட் டையனில் குதம் கிடையாதென்பது குறிப்பிடத்தக்கது.- தசைகளா வான தொண்டை போசணையை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. களத் தினதும் குடலினதும் சுவர்கள் கம்பமேலணிக் கலங்களாலானவை. இக்கலங்களைச் சுற்றி வட்ட த்தசை நார்களும் நீளப்பக்கத்தசைநார்களும் மெல்லிய படைகளாகக் காணப்படும். பசியோலா கெப்பற்றிக்கா முதன் மையாக பித்தக்கான் மேலணிக் கலங்களிலிருந்தும் சித்த்திலிருந்தும் போசணையை உறிஞ்சுகின்றது என்றே தோன்றுகின்றது. சில வேளை களில் குருதியையும் உறிஞ்சக்கூடும். போசணை சமிபாடடைந்த நிலையிலேயேயிருப்பதால் ஒட்டுண்ணியில் சமிபாட்டுத் தொகுதி மிக நன்றாக விருத்தியடைதல் அவசியமற்றதாகிறது. குடற்குருட்டுக் குழல்கள் உடலெங்கும் பரவியுள்ளதால் குருதிச்சுற்றோட்டத் தொகுதியும் அவசியமற்றதாகிறது. உடல் அங்கங்களெல்லாவற்றிற்கும் பரவல் முறையாலேயே போசணைகிடைக்கிறது.
கழிவுத் தொகுதி :
ஈரற்றட்டையனின் கழிநீரகம் முதற்கழி நீரகமாகும் (Protonephridium). கழிவுத்தைாகுதி சுவாலைக்கலங்கள் (Flame cells) அல்லது சுவாலைக் குமிழ்கள் (Flame bulbs) எனப்படும் பல சிறப்பியல்பு பெற்ற கலங்களைக் கொண்ட ஒரு தொகுதியாகும். ஒவ்வொரு சுவாகிக் கலமும் பருத்த கலமாகும். இதன் குழியமுதலுரு புடைக்கலவிழையத் தினுள் சிறிய எறியங்களாக நீண்டி ருக்கும்.. கரு குழியமுதலுருவில் ஒரு பக்கமாகக் காணப்படுவதுடன் குழியமுதலுருவின் மையமாக உள்ள புன்வெற்றிடத்தில் ஒரு கொத்தாக அநேக சவுக்கு முளைகளும் காணப் படும், சவுக்குமுளைகளின் அடிப்பு சுவாலையின் அசைவையொத்திருத் தலாலேயே இக்கவங்கள் சுவாலைக்கலங்களெனப் பெயர் பெற்றிருக் கின்றன, புடைக்கலவிழையத்திலிருந்து நைதரசன் கழிவுப் பொருள்கள் குழியமுதலுருவினூடாக பரவல் - முறையால் உட்செல்லுகின்றன. சவுக்குமுளைகளினடிப்பு புன் வெற்றிடத்தினுள் ஒரளவு உறிஞ்சலமுக்கத்தை
=ா டாக்-4 - 24

Page 58
வாயுறிஞ்சி தொண்டை உற்பத்திக்கூடம் - கீழ்ப்பக்க உறிஞ்சி
- குடற்குருட்டுக்குழல்
11- 1, வே ..
ட் - 1 டிட் -
பசம் பு:-
கம்.
1 114 பு: ப்ப - - 1ாசா - 1 - (உபு அடிப்பு 11ம் பா.
படம் 48 - உணவுக்கால் டாய்
வாயுறிஞ்சி
கர, டர்டி படியா |
கீழ்ப்பக்கவுறிஞ்சி
ப க = =ாம்
T11-12 |
F1 ட க ப ட எப் -1 (பம் - கம்
படபடப் பட்டாரா! 1ெ பட்ட பய பு7 14 2 பட ஈரப்பப்பா 11 4,4 : 15
- டி க -11:12
பு: 1ாம் ட்ப ர ட ம் - பிரதான கழிவுக் பா ப-1
கால்வாய் 12 ர
பய ப ப , -- 14 H பட்டிய 4 H 1ா
கழிவுத்துவாரம்
படம் 49 - கழிவுத்தொகுதி

- 103 -
உண்டாக்கி நைதரசன் கழிவுப் பொருள்களை உள்ளே உறிஞ்சுகிறது. மேலும், அவை திரவத்தில் சுற்றோட்டத்தையுண்டாக்குவதனாலும் கழி வுப்பொருள் உள்ளே உறிஞ்சப்படுகின்றன. நைதரசன் கழிவுப்பொருள் சுவாலைக் குமிழ்களுடன் தொடர்பாயுள்ள சிறுகுழாய்களினூடாக பெரிய குழாய்களை யடைந்து பின்னர் உடலின் நடுக்கோட்டில் நீளப்பக்க மாகவுள்ள பிரதான கழிவுக்கால்வாயை அடைகிறது. பிரதான கழிவுக் கால்வாய் பின்முசை யில் கழிவுத் துவாரத்தினூடாக வெளித்திறக்கின்றது.
1
- சுரக்குந்துளி
குழியமுதலுரு எறியங்கள் "கல்உள்ளிடம்
- கரு
• சவுக்குமுளைகள்
கலத்தகத்துள்ள கான்
சட் டாப் IN T # படிப்பு
பட 4 - E பா த ய ய 1 ம் -
2ாப்ட்ய புகாங்க பா படம் 50 - சுவாவைக்லம் பழம் - 2
நப க ப தி டிராப்ட் 1 கப்
(1ாடி 1 1 ட 11 ப்14:1. 14 ர்ட் கட் நரம்புத் தொகுதி :
பயன்பாடு கட்டி பட111AE Aர ஈ-- 4" - ஈரற்றட்டையன் ஓர் ஓட்டுண்ணியாகவிருந்த போதிலும் அதன் நரம்புத்தொகுதி விருத்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. களத் தைச்சுற்றி ஒரு நரம்புவனை யம் உண்டு. நரம்பு வளையத்திலே இரு மூளையத்திரட்டுகள் இரு பக்கங்களிலும் காணப்படுகின்றன. இவற்றி விருந்து இரு நரம்பு நாண்கள் பின்புறம் நோக்கிச் செல்கின்றன. மேலும், மூளையத்திரட்டுக்களிலிருந்து சிறு நரம்புகள் ஏனைய பாகங் கட்குச் செல்கின்றன. ஈரற்றட்டையனில் புலனங்கங்கள் கிடையா, அகவொட்டுண்ணிக்கு புலனங்கங்கள் தேவையற்றவையே.
= ITTTET

Page 59
_104 -
- 1 -ம் " 4. :ார் 11 + T 0 1 = 1 1 1 1 1
1. 14 15 ---- 9
ஏரம்பு வளையம்
முளையத்திரட்டு
#1ாட்ட ப * 11 E I, Tா' பட - 1 1, பாத;
பக்கதரம்புநாண்
ப: ப் - 4 4:11
J .
படம் 51 - நரம்புத்தொகுதி இனப்பெருக்கத் தொகுதி :
ஈரற்றட்டையன் இருபாலான விலங்காகும். அதாவது ஆண், பெண் பாலங்கங்கள் ஒரே ஈரற்றட்டையரில் காணப்படும்.
ஆண் இனப்பெருக்கத் தொகுதியில் ஒரு சோடி விதை, அப்பாற் செலுத்திகள், சுக்கிலப்புடகம், வீசற்கான், ஆண்குறி ஆகிய பகுதி களுண்டு. அதிகம் கிளைத்துள்ள விதைகள் ஒன்றன் பின் ஒன்றாக, உடலின் நடுக்கோட்டுப் பகுதியிலேயுள்ளன. இவற்றிலிருந்து செல்லும் -'அப்பாற் - செலுத்திகளெனப்படும் ஒடுங்கிய குழாய்கள் முன்னோக்கிச் + சென்று கீழ்ப்புற உறிஞ்சிக்கருகே ஒன்று சேர்ந்து அகன்ற குழாயுருவான சுக்கிலப்புடகமாகின்றன. சுக்கிலப்புடசும் வீசற்கான் என்னும் நுண் 1 குழாயாகத் தொடர்ந்து முனையிலே தடித்த தசைகளாலான ஆண் குறி
"யால் உற்பத்திக்கூடத்தினூடாக வெளித்திருக்கின்றது., - .
பெண் இனப்பெருக்கத் தொகுதியில் ஒரு குலகம், சூலகக்கான், கருப்பை, கருவூண் சுரப்பிகள், கருவூண்கான்கள், ஒட்டுச்சுரப்பி ஆகிய வையுண்டு. ஈரற்றட்டையனின் முன் முனையிலிருந்து மூன்றிலொரு பங்கு
| 1-1 |

- 105 -
தாரத்தில் "விதைகளுக்கு மேலாக நடுக்கோட்டிற்கு ஒரு - பக்கமர்சு கிளைகளைக்கொண்ட சூலகம் " காணப்படுகிறது. உடலின் இரு பக்கங் சுளிலும் சிறிய கோளவுருவான சுருவண்சுரப்பிகளுண்டு, ஒவ்வொரு பக்கத்திலுமுள்ள முன்புற நீளப்பக்கக்கானும், பின்புறநீளப்பக்கக்கானும் ஒன்று சேர்வதனால், குறுக்குக்கான் உண்டாகிறது. இருபக்கக் குறுக்குக் கான்களும் ஒன்று சேர்வதனால் உண்டாகும் நடுக்கோட்டுக் கருவண் சுரப்பிக்கான் கலகக்கானைச் சந்திக்கிறது. இச்சந்திப்பிலிருந்து கருப்பை அகன்ற குழாயாக ஆரம்பித்து, மடிப்புகளை யுண்டாக்கி, முன்னோக்கிச் சென்று உற்பத்திக் கூடத்தையடைகிறது. கருவுண்கான், சூலகக்கான், " கருப்பை ஆகியவற்றின் சந்திப்பைச் சுற்றி மேலிசுவின் சுரப்பி (Mehlis gland) உள்ளது. இதுவே முன்னர் ஓட்டுச்சுரப்பியென அழைக்கப் பட்டது. இச்சந்திப்பிலிருந்து உற்பத்தியாகும் மற்றொரு குழாய் மேற் "புறம் நோக்கிச் சென்று வெளியே திறக்கின்றது. இது உலோரரின் கால்வாய் (Laurer's Canal) எனப்படும், இக்கால்வாய் விந்துகளை உட்கடத்துவதுடன் மிகையான கருவூண்கலங்களையும் முட்டைகளையும் வெளியேற்றுகிறதெனவும் தெரிகிறது. உலோரரின்கால்வாய்
அப்பாற் செலுத்தி
-மூடுபடையோபே.1)
குலகம்
குடற்குருட்டுக்குழல்
நீளப்பக்கத்தசை
.
வட்டத்தசை
கருப்பை
மேலிசுவின் சுரப்பி
நடுக்கோட்டு கரு ஆண்சுரப்பி படம் 52
வாழ்க்கை வரலாறு 1
ஈரற்றட்டையன்கள் சோடி சேரும் பொழுது ஒரு ஈரற்றட்டை யனின் ஆண்குறி வேறொரு ஈரற்றட்டையனின் உலோரரின் கால் வாயினுள் செலுத்தப்பட்டு விந்துகள் கடத்தப்படுகின்றன. ஆகவே கடந்து கருக்கட்டலே ஈரற்றட்டையனில் நடைபெறுகிறதெனக்

Page 60
- 106 -'
கருதலாம். சூலகத்திலிருந்து விடுபட்ட முட்டைகள் சூலகக் கான் வழி' யாக வரும் பொழுது உலோரரின் கால்வாயினூடாக உட்செலுத்தப் பட்ட விந்துகளினால் கருக்கட்டப்படுகின்றன. கருக்கட்டல் சூலகக் கானின் கீழ்ப்பகுதியில் நடைபெற்ற பின் கருக்கட்டிய முட்டை கள் கருப்பையையடைகின்றன. கருக்க டி.யமுட்டைகள் முதிர்வுப் பிளவடைந்து கருப்பையை நோக்கிச்செல்லும் பொழுது கருவூண் கலங் களால் சூழப்படுகின்றன. கருக்கட்டிய முட்டை ஓவ்வொன்றும் கருவூண் கலங்களாற் சூழப்பட்டு, ஓட்டுச்சுரப்பிகளென அழைக்கப்படும் கலங் களிலிருந்துண்டாகும் சுரப்புகளினால் ஓடு உண்டாகிறதென முன்னர் கருதினர். ஆனால் ஓடு இவ்வாறுண்டாவதில்லையென F இப்பொழுது தெரியவந்துள்ளது.முன்னர் ஓட்டுச் சுரப்பியென அழைக்கப்பட்ட பகுதி இப்பொழுது மேலிசுவின் சுரப்பி (Mehlis gland) என அழைக்கப் படுகிறது. கருக்கட்டிய முட்டையைக் கருவண்கலங்கள் சூழ்ந்து கொள்ள, மேலிசுவின் சுரப்பியிலிருந்துண்டாகும் சுரப்பினால் கருவூண் கலங்களிலே ஒரு இரசாயன மாற்றம் ஏற்படுகிறது. கருவண்கலங் களினகத்தே அநேக நிறவுருமணிகளுண்டு. . இந்நிறவுருமணிகள் மேற் பரப்பிற்கு வந்து ஒன்று சேர்ந்து பின்னர் கடினமாவதால் ஒடு உண் டாகிறது. இதைத்தவிர கருவூண்கலங்கள் விருத்தியடையும் முளையத் துக்குத் தேவையான நீரையும் சேமித்து வைத்திருக்கிறதெனத் தெரி சிறது. மேலிசுவின் சுரப்பியிலிருந்து மசகிடலுக்கான சுரப்பும் (Lubricating secretion) சுரக்கப்படுவதாயிருக்கலாம்.முட்டையோட்டின் ஒரு முனையில் குடம்பி வெளிவருவதற்காக ஒரு மூடி இருக்கக் காணலாம்.
முட்டை
மூடி சுருவூண்கலங்கள்
TET |
இ
1 கபூர்
பி டட்டட்பு 4. ட்பு ச .
பட 17 பு பா படம் 53 - முட்டை - 1

- 107 -
ஒட்டினால் மூடப்பட்ட முட்டைகள் கருப்பையையடைந்து மேலும் விருத்தியடை கின்றன, ஆனால் சர் முட்டை வெளிவந்த பின்பே முழுவிருத்தி நடைபெற்று 'குடம்பி உண்டாகிறது. க 'கருக்கட்டிய வுடனேயே பிளவு நடை பெற்று விருத்தி ஆரம்பிக்கிறது. முதற் பிளவின் பின் ஒரு சிறிய கலமும், ஒரு பெரிய கலமும் உண்டாகின்றன. சிறுமணிகளையுடைய சிறிய து கலம் இனப்பெருக்கக்கலமெனவும் (Tropagative cell) பெரிய கலம் புறமுதலுருப்படைக்குரிய கலம் அல் லது உடற்கலம் (Ectodermal Or SOmatic cell) எனவும் பெயர்பெறும். சிறிது காலத்திற்கு உடற்கலத்தில் மட்டுமே பிளவு நடைபெற்று குடம்பி யிழையங்கள் உண்டாகின்றன. சிறிது காலத்திற்குப்பின் இனப்பெருக்க்க கலம் பிளவடையும் பொழுது இருகலங்களுண்டாகின்றன. இவற்றி லொரு கலம் குடம்பியின் இழையங்களைக் கொடுக்க மற்றையகலம் தாய்க் கலத்தை ஒத்துள்ளது. இக்கலம் குடம்பியின் பின்பகுதிக்குச் சென்று பிரிவடைவதனால் அநேக இனப்பெருக்கக்கலங்கள் உண்டா கின்றன. , இக்கலங்கள் மூலவுயிர்க்கலங்களெனவும் Germi cells) அழைக்கப்படும்.
- பாபர் பார்ட் 1
உடற் கலத்திலிருந்து பிளவின் போதுண்டாகும் கலங்களின் வெளிப் படைக் கலங்கள் குடம்பியினுடலைச் சுற்றி ஐந்து வளையங்களாக அமை கின்றன. இவை குடம்பியின் பிசிர்களையுடைய மேலணிக் கலங்களாகத்
-அா)
சிம்பி
சிம்பி - " ஊடுருவிச்சுரப்பி பி
கண்
முளை - கழிநீரகம் கழிநீரகம் :
கப்
மூள பட 7 - 1
இனப்பெருக்கக் கலங் ள்
கழிவுத்துவாரம்
பிசிர்கள்
பிசிர்கள் ! 11ாடர்பு காயம் - 1 | பி டி "யு/N\'ப் டாப் 1ாட ப க பய ப 11 11 111 |
1)

Page 61
108 -
தொழில் புரிகின்றன. முட்டை கருப்பையிலிருந்து விடுபட்டு பித்தக் கான்வழியாக செம்மறியாட்டின் குடலையடைந்து, அங்கிருந்து மலத்துடன் வெளியேற்றப்படுகிறது. முட்டை வெளிவந்த பின்பே அதனுள் குடம்பி முழு விருத்தியடைகிறது. மூன்று முதல் 'ஆறு வார காலத்திற்குள் முட்டையின் மூடி திறந்து மிராசீடி யம் (Miracidium) என அழைக்கப்படும் முதற் குடம்பி வெளிவருகிறது. பசியோலாவின் முட்டை ஓடு தடிப்படைந்த புரதத்தாலானது, இதன் உட்புறமாக ஒரு மென்சவ்வினுள் குடம்பியுண்டாகின்றது. கருக்கட்டிய முட்டை யைச் சுற்றியுள்ள கரு நண்கலங்கள் வெறும் சேமிப்புணவாக மட்டுமிரா மல் சாதாரண மான அனுசேபத் தொழில்களையும் செய்கின்றன. ஒட்சி சன், ஈரப்பற்று, 11 ச. வுக்கும் 28 ச.வுக்குமிடை ப்பட்ட வெப்பநிலை ஆகியவை குடம்பியின் விருத்திக்கு அவசியமாகும். எனவே, குளம் குட்டைகளில் - நீர் அருந்தச் செல்லும் செம்மறியாடுகள் அவ்விடங் களிலே மலங்கழிக்கும்பொழுது மலத்துடன் முட்டைகள் வெளிவந்தால் அம்முட்டைகளிலிருந்து மிராசீடியக் குடம்பி வெளிவரலாம். முட்டை யோட்டினுள் பிசிர்களை யுடைய மிராசீடியக் குடம்பியுடன் பிறைவடி வான பாகு நிலையிலுள்ள மெத்தையும் (Crescent shaped viscous " cushion ) 2 - 5 மீள்சத்தியுடைய பைகளும் காணப்படும். - மிராசி "டியக் குடம்பிக்கும் முழுவுடலி ஈரற்றட்டையனுக்கும் குறிப்பிடத்தக்க அளவு ஒற்றுமை கிடையாது. கூம்புருவான மிராசீடியத்தில் ஒரு சிம்பி (Papilla) காணப்படுகிறது, நீடுருவிச் சுரப்பிகளும், வேறு சுரப்பிகளும் சிம்பியிற் திறக்கின்றன. உடலைச் சுத்றி பிசிர்களையுடைய மேல ணிக் கலங்கள் ஐந்து வளையங்களாகக் காணப்படுகின்றன. மேலணிக் கலங் களுக்கு உட்புறமாக தசைநார்ப்படையும் -- இடைக்கலவிழையமும் (Mesenchyma) காணப்படுகின்றன. குடம்பியில் இரு கண்புள்ளிகளும் ஒரு "' மூளையும்'', பல்வேறு சுரப்பிகளும், கழித்தலங்கங்களாக ஒரு சோடி சுவாலைக்கலங்களும், பின்புறமாக மூலவுயிர்க்கலக்கூட்டங்களும் உண்டு, பரிசோதனைகளின் போது முழுவிருத்தியடைந்த முட்டைகள் இருளில் வைக்கப்படும் பொழுது பல வாரங்களுக்கு பொரிக்காமலிருக் கின்றமையால் முட்டை பொரிப்பதற்கு ஒளி உதவியளிக்கிறதெனத் தெரிய வருகிறது. முட்டையின் மூடி திறந்து குடம்பி வெளிவருவ தற்கு இங்கு கூறப்பட்டுள்ள இரு பொறிமுறைகளிலொன்று காரண மாயிருக்கலாமெனக், க ந த ப் ப டு கி ற து . பாகு நிலையிலுள்ள மெத்தை விரிவடைவதனால் உள்ளமுக்கம் அதிகரித்து மூடி திறக்கப் படலாம், அல்லது மிராசீடியத்திலிருந்து சுரக்கப்படும் நொதியமொன்றி னால் முடி சமிபாடடையப்பட்டு மிராசீடியம் வெளிவருவதாயிருக்கலாம். எந்தப் பொறிமுறை நடைபெற்றாலும் முட்டையினுள் நீர் சென்று முட்டையினுள்ளடக்கம் வீக்கமடைவதனாலேயே மிராசீடியம் வெளித் தள்ளப்படுகிறது. மிராசீடியம் ஒரியரெசனுக்கு நேர்த்தாண்டம்

- 109 -
பேறடைவதனால் அது முட்டை யிலிருந்து வெளிவந்தவுடனேயே நீரின் மேற்பரப்பையடைகிறது. அது பின்னர் இலிம்னியா திரங்கற்றுலா | (Linnaea traricatula) என்னும் நத்தையைச் சந்தித்து அதனுடலினுள்சென்றால் மட்டுமே மேலும் விருத்தி நடைபெறும். 1 துணை விருந்து - வழங்கியான, நத்தையை அடையாவிடில் மிராசீடியம் இறந்துவிடுகிறது!" நத்தையினால் கவரப்படுவதற்கு இரசாயனத்தூண்டல் காரணமாயிருக்கம் முடியுமா வென்பதைப்பற்றி ஆராய்ச்சியாளர் இன்னுமொரு முடிவுக் கும் வரவில்லை. ஆனால் மிராசீடியத்தினால் அதன் துணைவிருந்துவழங்கி நத்தையைத் தெரிந்துகொள்ள முடிகிறது. ! ஊடுருவிச் / சுரப்பிகளி. லிருந்துண்டாகும் சுரப்புகளினுதவியால் ", நத்தையின் மென்மையான, பாகத்தைத் துளைத்துக்கொண்டு உட்செல்கிறது. நத்தையின் மேலணிக்! கலங்காத் துளைக்கும்பொழுது : மிராசீடியம் தனது பிசிர்களையுடைய மேலணிக்கலங்களை இழந்து உருமாற்றமடைந்து வித்திச் சிறைப்பை (Sporocyst) ஆக மாறுகிறது, இம்மாற்றங்கள் நடைபெற அரைமணி, நேரமே தேவைப்படுகிறது. வித்திச்சிறைப்பையே இரண்டாவது குட ம்பி நிலையாகும், நத்தையின் குருதியிலிருந்து போசணையைப் பெற்று
இம்மாற்றியே இரண்ட" பெற்று
11 HFா
புறத்தோல்
இரேடியா
இனப்பெருக்கக் "கலங்கள்
படம் 55 ா வித்திச் சிறைப்பை

Page 62
- 110
வித்திச்சிறைப்பை வளர்ச்சியடைகிறது. பையுருவான வித்திச்சிறைப் பைக்குடம்பியைச்சுற்றி புறத்தோல் காணப்படும்.உடலினகத்தே இடைக் கலவிழையமும் மிராசீடியத்திற் காணப்பட்ட இனப்பெருக்கக் கலங்களி லிருந்து பெறப்பட்ட கலங்களும் காணப்படும். வித்திச்சிறைப்பையிற் காணப்படும் இனப்பெருக்கக் கலங்கள் இரேடியா (Redia) என்னும் மூன்றாவது விதக் குடம்பிகளை உருவாக்குகின்றன. "பு நீண்டவுருவான இரேடியாக் குடம்பியில் ஒரு வாயும் உறிஞ்சற்றெண்டையும் சிக்கலற்ற குடலும் உண்டு, உடலிலே முன்முனைக்கருகாமையில் ஒரு தசைக் காறையும் (Muscular Collar) பின்முனைக்கருகாமையில் ஒரு சோடி தசை எறியங்களும் காணப்படும். தசைக்காறையின் அடிப்பாகத்திற் காணப் படும் ஒரு துவாரத்தினூடாகவே அடுத்த சந்ததியைச் சேர்ந்த சேர்க் கேரியா என்னும் குடம்பிகள் வெளிவருகின்றன. ஆகவே, இத்துவாரம் பிறப்புத்துவாரமெனப் பெயர் பெறும். இரேடியாக்குடம்பிகள் வித்திச் சிறைப்பையிலிருந்து விடுபட்டு தசைக்காறையினதும் தசையெறியங்களி
E புய
பபி - ம், க
தொண்டை சிறுகுடல்
தசைக்காறை
பிறப்புத்து வாரம்
சேர்க்கேரியா
தசை எறியம்
பா படம் 56 - இரேடியா

- 111
னதும் உதவிகொண்டு நத்தையின் இழையங்களினூடாக அதன் சிமி பாட்டுச் சுரப்பியை அடைகின்றன. இரேடியாக்கள் இங்கிருக்கும் பொழுதே சேர்க்கேரியாக்குடம்பிகள் அவற்றுள் விருத்தியடைகின்றன. இரேடியாவின் குழியிலுள்ள இனப்பெருக்கக்கலங்கள் பெருகி துணை இரேடியாக்குடம்பிகளை உண்டாக்குகின்றன. வெப்பநிலை அதிகமா யிருந்தால் இரேடியாக்களிலிருந்து சேர்க்கேரியாக் குடம்பிகள் உண்டா கின்றன. குளிர்பருவ காலத்தே இரேடியாக்கள் துணை இரேடியாக்களை உண்டாக்குவதன்மூலம் நத்தையினுள்ளேயே குளிர் காலத்தைக் கடத்தி, சூழல் வெப்பம் உகந்ததாயிருக்கும் காலங்களில், அதாவது வெப்ப பருவ காலத்தில் சேர்க்கேரியாக்குடம்பிகளை உண்டாக்குகின்றன. இரேடியா.
1T114
ப- - வாயுறிஞ்சி
தொண்டை சிறைப்பையாக்கச்
சுரப்பி
டாட்டம் :
கீழ்ப்பக்க உறிஞ்சி சிறுகுடல்
சுழிவுக்கால்வாய்
14 44 பர் 14-ம்
தம்..
| ர்டாம்பார் -ட வால் காபா
( 1 - TEL -1 " பரிப11111 T LE)
|இம்: H பாட்டா ப-படபயர= பா 4 5) |
11 ELLA
படம் 57 - சேtக்கேரியா

Page 63
- 111
வினுள் உள்ள இனப்பெருக்கக்கலங்களிலிருந்தே சேர்க்கேரியாக்கள், உண்டாகின்றன. 0,5 மி, மீ, அளவு நீளமான இதயவடிவான சேர்க் கோரியாவில் ஒரு வால் உண்டு. நிறைவுடலியிற் காணப்படும், அங்கங். களின் விருத்தியிலிகளை இதில் அவதானிக்கலாம். மையத்தே வாயைக் கொண்ட ஒரு முன்பக்க உறிஞ்சியும், ஒரு கீழ்பக்க உறிஞ்சியும் உறிஞ்சற். ரெண்டையும், A வடிவான குறுகிய குட்டலும், சோடியான சவாலைக் குமிழ்களும், "கழித்தற் கால்வாய்களும், இனப்பெருக்கத் தொகுதியின் விருத்தியிலிகளும் சேர்க்கேரியாக் குடம்பியிற் காணப்படும். விருத்தி. யடைந்த சேர்க்கேரியாக்கள் இரேடியாவிலிருந்து பிறப்புத்துவாரத்தி னூடாக வெளிவந்து நத்தையின் சமிபாட்டுச் சுரப்பியிலிருந்து சுவாச வறைக்குச் சென்று, அங்கிருந்து நத்தையைவிட்டு வெளியேறுகின்றன. சேரிக்கேரியாக்களெல்லாம் ஒரே சமயத்தில் முதிர்ச்சியடைந்து வெளி யேறுவதில்லை. அவை வெளியேறுவதற்குச் சரியான சூழல் வெப்பநிலை யிருத்தல் அவசியம். 10 - 15 ச. வுக்குக் கீழான வெப்பநிலையில் சேர்க் கேரியாக்கள் வெளிவருவதில்லை. அதிகளவு ஈரப்பற்றிருத்தலும் அவசியமாகும். துணை விருந்து வழங்கியான இலிம்னியா திரங்கற்றுலா என்னும் நத்தை - ஈரூடக வாழ்க்கையையுடையதா மயிருப்பதால் சேர்க்கேரியா நீரிலே வெளிவிடப்படுவதற்கு நல்ல வாய்ப்பு உண்டு.
ஒரு முட்டையிலிருந்து ஒரு மிராசீடியம் உண்டாகி, அது வித்திச் சிறைப்பையாக மாறி, அதிலுள்ள இனப்பெருக்கக் கலங்களின் பிரிவால் அநேக இரேடியாக்களுண்டாகின்றன, ஒவ்வொரு இரேடியாவிலுமுள்ள இனப்பெருக்கக் கலங்களின் பிரிவால் பல துணை இரேடியாக்களும், பின் னர் சேர்க்கேரியாக்களும் உண்டாகின்றன. எனவே, ஒரு முட்டை யிலிருந்து பல சந்ததிகளில் குடம்பிகள் உண்டாகி ஈற்றில் அதிக எண்ணிக்கையில் சேர்க்கேரியாக்குடம்பிகள் உண்டாகின்றன. ஒரு ஒட்டுண்ணியின் அனுசேபச் செய்முறைகள் நத்தையின் அனுசேபச்செய் முறைகளுடன் மிக ஒத்துள்ளதென இதிலிருந்து தெரிய வருகிறது, அதிக வெப்பநிலையிலுள்ள பொழுது நத்தை உறங்கு நிலையையடைகிறது. எனவே, நத்தை அழிந்து அதன் காரணமாக ஒட்டுண்ணியும் அழிந்து போகாமலிருக்க வழியேற்படுகிறது. பசியோலா கெப்பற்றிக்காவின் சேர்க்கேரியாவில் நன்றாக விருத்தியடைந்த சுரப்பிகளுண்டு. இவற்றில் சீதப்புரதங்கள் உண்டு. நீரிலே நீந்தித்திரியும் சேர்க்கேரியாக்குடம்பி தாவரங்களின் இலைகளிலே ஓட்டி, வாலைக்களைந்து, சுரப்பிகளிலிருந்து சுரப்புகளை வெளிவரச்செய்து விரைவில் ஒரு சிறைப்பையை உண்டாக் சிக்கொள்கிறது. உள்ளடக்கம் உலர்ந்து போகாமலும் வைத்துக்கொள் வதுடன், பாதுகாப்பிற்கான வெளிவன்கூடாகவும் சிறைப்பை தொழில் படுகிறது. செம்மறியாட்டினால் சிறைப்பை உட்கொள்ளப்பட்டு கவசம் சழிபாடடைய இளம்ஈரற்றட்டையன் விடுபடுகிறது. இது குடற்சுவரைத்

- 113 -
துளைத்து உடற்குழியையடைகி றது. ஓரிரு நாட்களில் - இது ஈரலை யடைந்து அங்கிருந்து பித்தக்காணை யடைந்து முழு வளர்ச்சியடைகிறது.
படம் 48 - ஈரற்றட்டையனின் வாழ்க்கைச் சக்கரம் z- 3 )

Page 64
ஈரற்றட்டையனின் வாழ்க்கை வரலாற்றில் நுகத்திலிருந்து மூலவு யிர்க்கலங்களும், உடற்கலங்களும் உண்டாகின்றன. மிராசிடியம்வித்திச் சிறைப்பையாக மாற, மூலவுயிர்க்கலங்கள் மேலும் பிரிவடைந்து அவர் றிற் சில கலங்கள் இரேடியாக்குடம்பியாக விருத்தியடைய ஏனையவை குடற்குருட்டுக்குழல்
நீளப்பக்கத்தசை
வட்டத்தசை -
படுயடை
() )
முள்
சூலகம்
கருப்பை
புடைக்கலவிழையம் படம் 39 - ஈரற்றட்டையன் - கு. வெ. (முற்பகு தியினூடாக)
குடற்குருட்டுக்குழல் - நீ. தசை வ.தசை
புடைக்கல விழையம்
மூடுபனட
தர்பார்
Fiji Hான்பு
() )
முள்
கருவூண்சுரப்பி
விதை
கழிவுக்கால்வாய் படம் 60 - ஈரற்றட்டையர் - கு. வெ. (பிற்பகுதியினூடா)

- 115 -
மூலவுயிர்க் கலங்களாகவே இருக்கின்றன. ஆகவே, சேர்க்கேரியா முழுவுடலியாகும்பொழுது சேர்க்கேரியாவினகத்தே யிருந்த மூலவுயிர்க் கலங்கள் முழுவுடலியின் இனப்பெருக்கக் கலங்களாகின்றன. எனவே, முழுவுடலியும் அதன் மூலவுயிர்க்கலங்களும் முந்திய சந்ததியைச் சேர்ந்த முழுவுடலியின் முலவுயிர்க்கலங்களின் பெறுதிகளேயாம், ஈரற்றட்டை யனின் வாழ்க்கையில் இலிங்கமில் முறையில் இனம் பெருகுதல் பல முப யங்கொள்தன்மையெனக் கூறலாம்.
முள்
முடுயடை
=r{由比卡山
கீழ்ப்பக்கவுறிஞ்சி
வட்டத்தசை
நீளப்பக்கத்தசை
மெலிசுவின் சுரப்பி
விதை
அழLEாட்டியம்
குடற்குருட்டுக்குழல்
படம் 11- ஈரற்றட்டையன் - நெடுக்கு வெட்டுமுகம்

Page 65
- 115 -
தீனியா சோலியம், ( Taenia Solium) வாழிடமும் தோற்றமும் :
தீனியர் சோலியம் பன்றி இறைச்சி புசிக்கும் மனிதரின் குடலிலே ஒட்டுண்ணியாக வாழ்கிறது. நாடா போன்ற உருவத்தையுடைய இப்புழுவின் உடல் 15 அடி நீளம் வரை வளரக்கூடியது. உடலின் முன்
விருத்தி சிறுசஞ்சு உறிஞ்சிகள்
கழுத்து உடன் முட்டு
கொளுக்கிகள்
%286
A #2:56
(4.:::42)
ஐதேக
கொளுக்கி
படம் 62 - நாடாப்புழு - தீளியா சோலியம்

பட 117 -1
முனையில் டேசுச் சென்னி (Scalen) என்னும் தசைகளாலான குமிழ் போன்ற அமைப்பு காணப்படும், கீடகச்சென்னியில் நான்கு உறிஞ்சி களும், சிறு சஞ்சு (Rastellum) எனப்படும் சிறிய கூம்பும் உண்டு. இரண்டு உறிஞ்சிகள் கீழ்ப்புறமாகவும் ஏனைய இரண்டு மேற்புறமாகவும் இருக்கிறதெனத் தோன்றுகிறது. சிறு சஞ்சின் மேல் வளைந்த கொளுக்கி கள் இரு வட்டங்களில் காணப்படும். கொளுக்கிகள் கைற்றின் என் னும் பொருளாலும், தடிப்பான புரதத்தாலும் ஆனவை. கீடகச் சென்னியின் உதவியினாலேயே சீனியா சோலியம் குடலில் ஒட்டி வாழ முடிகிறது. " தலை ' ' என அழைக்கப்படும் டேகச்சென்னியைத் தொடர்ந்துள்ள ஒடுங்கிய பகுதி கழுத்து என அழைக்கப்படும், இப் பகுதியின் பின் முனையிலிருந்து விருத்தி உடன்ட்டுகள் (Froglottides) டண்டாகின்றன. இப்பகுதி விரைவிற் பெருகும் பகுதி (area of proliferation) எனப்படும், முதலில் உண்டான சிறிய விருத்தி உடன் மூட்டு கள் கிடகச் சென்னிக்கு அருகாமையிலும், முதிர்ந்த பெரிய விருத்தி உடன்மூட்டுகள் நாடாளின் பின் முளையிலும் காணப்படும். புதிய விருத்தி -உடன்pட்டு உண்டாகும் பொழுது பழைய விருத்தி-உடன் மூட்டுகள் பின்புறமாகத் தள்ளப்படுகின்றன. ஒரு தினியா சோலிய த்தில் 800 விருத்தி-உடன் மூட்டுகள் வரை உண்டு.
விருத்தி- 2 டன் மூட்டு :
நாடாப்புழுவின் நடுப்பகுதியிலுள்ள ஒரு விருத்தி - உடன்மூட்டு ஏறத் தாழ நீள்சதுரவடிவானது.விருத்தி-உடன் பூட்டின் வெளிப்படை உயிருள்ள படையாகவுள்ளதால் அதைப் புறத்தோல் சான அழைப்பதிலும் பார்க்க
1ாதிபத்யசாய நுண்சடைமுளை
மூடுபன்ட்
வட்டத்தசை நீளப்பக்கத்தசை
- மூடுபடைசுரக்குங்கலம்
நிலைக்குத்துத்தசை - புடைக்கலவிழையம்
படம் 63 - உடற்சுவர் - கு. வெ,

Page 66
= 113 -
நுண்சடைமுனை AAAAAANMAA- நுண்சடைமுனை
பி.கு--- மூடுபடை
மூடுபடை
--- அடித்தளமென்சவ்வு -- வட்டத்தசை
நீளப்பக்கத்தசை
கரு
முடுயடைசுரக்குங்கலம்
கொழுப்பு
படம் 64 - திளியாசோலியம் - நிலைக்குத்து வெட்டுமுகத் தோற்றம்
( இலத்திரன் நுணுக்கு காட்டியினூடாக )
முடுபடையென அழைப்பது பொருத்தமானது. இழைமணிகளைக்கொண்ட இப்படையின் வெளிப்புறமாக நுண்ணிய சடைமுளைகள் உண்டு, தீனியா சோவியத்தில் உணவுக்கால்வாய் கிடையாது. போசணை உடற்பரப்பி னூடாகவே உறிஞ்சப்படுகிறது. உடற்பரப்பில் நுண் ணிய சடை முளைகளுள்ளதால் பரப்பு அதிகரிக்கப்பட்டு உறிஞ்சல் திறமையாக நடை பெறுகிறது. முடுபடைக்கு உட்புறமாக அடித்தளமென்சவ்வும் (Basement membrane) அதற்கு உட்புறமாக தசைநார்ப்படையும் காணப்படும். தசைநார்ப்படையில் வெளிப்புறமாக வட்டத்தசையும் உட்புறமாக நீளப்பக்கத்தசையும் உண்டு. மூடுபடையைச் சுரக்கும் கலங் கள் நீளப்பக்கத்தசைக்கும் உட்புறமாகவுள்ள புடைக்கவவிழையத்தில் பதிந்திருக்கும். தீனியாசோலியத்தில் உடற்குழி இல்லாததால் அங்கங் களினிடையே புடைக்கலவிழையம் காணப்படும், சுரப்புக் கலங்களின் உட்புறமாக மற்றொரு படை நீளப்பக்கத்தசைகள் காணப்படும், முடு படையில் சில விடங்களில் நுண்ணிய கால்வாய் காணப்படும். இவற் றின் அடிப்பாகத்தே சுரப்புக்கலங்கள் திறக்கக்கூடும் அல்லது நரம்பு முனைகள் காணப்படலாம். சில நுண்கால்வாய்கள் கிளைத்துப் புடைக்கல விளையத்தினுள் திறக்கின்றன. உட்புறgளப்பக்கத்தசைக்கு உட்புறமாக விருத்திஉடன்மூட்டின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்குச் செல்லும் தசைப்படை குறுக்குத்தசைப்படை எனப்படும்.

-- 119 -1
விருத்திஉடன்மூட்டின் இருபக்க விளிம்புகளுக்கருகாமையில் பக்கத் திற்கொன்ருக நீளப்பக்கநரம்பு காணப்படும். நரம்புகளுக்கு உட்புறமாக கழிவுக்கால்வாய்கள் உண்டு. கழிவுக்கால்வாய்களைத் தொடுக்கும் வகையில் ஒவ்வொரு விருத்திஉடன்மூட்டின் பின்பகுதியிலும் ஒரு குறுக்குக் கசிவுக்கல்வாய் உண்டு. - விருத்தி -உடன்ட்டின் மையத்தில் பெரும்பகுதி இனப்பெருக்க அங்கங்களால் நிரப்பப்பட்டிருக்கும்.
உற்பத்திக்கூடம்
நரம்புப்பின்னல் வட்டத்தசை நிலைக்குத்துத்தசை நீளப்பக்கத்தசை
குறுக்குத்தனச
புடைக்கலவிழையம்
கருப்பை
முடுபடை
முட்டை
விதை
கீழ்ப்புறகழிவுக்கால்வாய் மேற்புறக்கழிவுக்கால்வாய் நரம்புநாண்
படம் 65 - தீனியாசேரலியம் - குறுக்கு வெட்டுமுகம்

Page 67
-- 120 -
உண்வுட்கொள்சல் :
தீனியா சோலியத்தில் உணவுக் கால்வாய் கிடையாது. ஒட்டுண்ணி குடற் சுவரில் ஓட்டியுள்ளதால் அதனுடலைச் சுற்றியுள்ள சமிபாடடைந்த உணவை மேற்பரப்பினூடாக அகத்துறிஞ்சிக்கொள்கிறது. உறிஞ்சும் பரப்பை அதிகரிக்கும் வண்ணம் விருத்தி -உடன்மூட்டுகளின் மூடுபடை யில் நுண்சடைமுறைகள் காணப்படுகின்றன. விருத்தி உடன் மூட்டுகளில் கிளைக்கோசன் சேமிப்புப் பொருளாகச் சேகரித்து வைக்கப்படுகிறது. அகத்துறிஞ்சப்படும் பொருள்களுள் வெல்லங்களும் அமினோவமிலங் களும் முக்கியமானவை', சுவாசித்தல் :
தீனியா சோலியம் குடலில் வாழ்வதனால் போதிய அளவு ஒட்சிசன் கிடைக்கமாட்டாது. எனவே, அது பெரும்பாலும் காற்றின்றிய சுவாசித்தவையே புரிகிறதெனத் தோன்றுகிறது. குளுக்கோசும் கிளைக் கோசனுமே முக்கியமாக சத்தியைக் கொடுக்கும் அடிப்படைப்பொருள் களாகும், சுவாசித்தலின் பொழுது கொழுப்பமிலங்கள் உண்டாகின் றன. ஒட்சிசன் செறிவு மாற்றம் கொழுப்பமிலங்கள் உண்டாகும் வீதத்தை மாற்றுவதாகத் தெரியவில்லை. உடலின் திண்ம இழையங் களும் ஒட்சிசன் பரவுவதற்கு வசதியளிப்பதாக இல்லை, கழிவுத் தொகுதி :
5 தீனியா சோவியத்தின் கழிவுத்தொகுதி பல சுவாலைக்கலங்களாலும் சிறு குழாய்களாலும் ஆனது. க சுவாலைக்கலங்களால் உடலிலிருந்து நைதரசன் கழிவுப் பொருள்கள் சில குழாய்களினூடாக பிரதான கழிவுக் கால்வாய்களுள் சேர்க்கப்படுகிறது. தீனியா சோவியத்தில்' முன்முனையிலுள்ள விருத்திஉடன் மூட்டுகளில் நான்கு பிரதான கழிவுக் கால்வாய்கள் உண்டு. உடலின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு மேற்புறக் கால்வாயும், ஒரு கீழ்ப்புறக்கால்வாயுமாக காணப்படும். கீடகச்சென்னி யில் நான்கு பக்கக்கால்வாய்களும் ஒரு வட்டக்கால்வாயினால் இணைக்கப் பட்டுள்ளன, பின் முனையிலுள்ள விருத்திஉடன் மூட்டுகளில் ஒவ்வொரு பக்கத்திலுமுள்ள இரு பக்கக்கழிவுக்கால்வாய்களும் ஒன்று சேருவதால் ஒரு பெரிய கழிவுக்கால்வாய் உண்டாகிறது. ஒவ்வொரு விருத்திஉடன் மூட்டின் பின் முனையிலும் உடலின் இருபக்கங்களிலுமாகச் செல்லும் நீளப்பக்கக் கழிவுக்கால்வாய்கள் குறுக்குக் கால்வாய்களால் இணைக்கப் பட்டிருக்கும். ஒரு இளம் தீனியாசோலியத்தில் அதாவது ஒரு விருத்தி உடன் மூட்டும் உடலிலிருந்து அகற்றப்படாதிருக்கும் நிலையில் நீளப்பக்கக் கழிவுக்கால்வாய்களிரண்டும் ஒருமித்து கடைசி விருத்திஉடன்மூட்டுகளி னூடாக வெளித் திறக்கும். ஆனால், விருத்திட்டன் மூட்டுகள் உடலி விருந்து விடுபட ஆரம்பித்தபின் இரு நீளப்பக்கக் கழிவுக்கால்வாய்களும் தனித்தனியே வெளித் திறக்கின்றன.

- 121 -
நரம்புத் தொகுதி 1
தீனியா சோவியத்தின் கீடாகச் சென்னியில் திரட்டுகளைக் கொண்ட ஒரு குறுக்கு நரம்புப் பட்டிகை உண்டு. இதிலிருந்து நுண்ணிய நரம்பு கள் ஒவ்வொரு உறிஞ்சிக்கும் செல்கின்றன. இவற்றைத் தவிர இரு பெரிய நரம்புகள் உடலின் இரு பக்கங்களிலும் பக்கத்திற்கொன்றாக கழிவுக்கால்வாய்க்கு வெளிப்புறமாக கடைசி விருத்திஉடன் மூட்டு வரை செல்கின்றன. இனப்பெருக்கத் தொகுதி :
தீனியாசோலியம் இருபாலான விலங்காகும். ஒவ்வொரு விருத்திஉடன் முட்டிலும் ஆண் பெண் இனப்பெருக்கவங்கங்கள் விருத்தியடைகின்றன. ஆனால், ஆண் இனப்பெருக்கவங்கங்கள் பெண்ணங்கங்களுக்கு முன்னரே முதிர்கின்றன. தீனியாசோவியத்தின் நடுப்பகுதியிலுள்ள விருத்தி உடன் மூட்டுகளில் ஆண், பெண் இனப்பெருக்க அங்கங்கள் இரண்டும் இருக்கக் காணலாம்,
- கருப்பை
- விதை
அப்பாற்செலுத்தி ஆண்குறி உற்பத்திக்கூடம் யோனிமடல் சூலகக்கான்
சூலகம்
ஓட்டுச்சுரப்பி
கருவூண்சுரப்பி
"பக்க நரம்புநாண்
கழிவுக்கால்வாய் படம் 66 - உடன்மூட்டுத்தொடரின் நடுப்பகுதியிலுள்ள
ஒரு விருத்திட்டன்முட்டு

Page 68
- 114 _
0 0
கருப்பை
முட்டைகள்
02 பிப்
-ம உற்பத்திக்கூடம்
1. சோ
விருத்தியுடன் மூட்டு
படம் 67 - முதிர்ந்த விருத்திஉடன் மூட்டு
ஆண் இனப்பெருக்கவங்கமாக ஒரு விதைமட்டுமே உள்ள தென்றாலும் அது சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சூலகத்துடன் ஒப்பிடும்பொழுது விதை மேற்பரப்பிற்கருகே காணப்படும். அவற்றி லிருந்து செல்லும் வெளிக்காவுகான்கள் ஒன்று சேர்வதனால் ஒரு அப்பாற்செலுத்தி உண்டாகிறது. சுருள்களையுடைய அப்பாற்செலுத்தி விருத்தியுடன் மூட்டின் ஒரு பக்கத்திலுள்ள உற்பத்திக்கூடத்தில் ஆண் குறியில் முடிவடைகிறது.
பெண் இனப்பெருக்க அங்கமாக ஒரு சூலகம் தொழில்படுகிறது. இரு சோணைகளைக்கொண்ட சூலகம் விருத்திஉடன்மூட்டின் பிற்பகுதி யிற் காணப்படும். சூலகத்திற்கும் கீழாகவுள்ள கருவண்சுரப்பிகளி விருந்துவரும் கருவூண் சுரப்பிக்கான் சூலகத்திலிருந்து வரும் குறுகிய சூலகக்கானைச் சந்திக்குமிடத்தில் ஒரு கருப்பை உருவாகி குருட்டுப்

- 123 -
பையாக முடிவடைகிறது.
இச்சந்திப்பிலிருந்துண்டாகும் மற்றொரு ஒடுங்கிய குழாய் யோனிமடலாகும். - இது உற்பத்திக்கூடத்தை நோக்கிச் சென்று முடிவடைகிறது. கருப்பையின்டிப்பாகத்தில் ஓட்டுச் சுரப்பி உண்டு. தீனியா சோவியத்தின் பின் முனையிலுள்ள முதிர்ந்த விருத்திஉடன்மூட்டை முட்டைகள் முற்றாக நிரப்பியிருப்பதைக் காணலாம்.
வாழ்க்கை வரநா :
தீனியா சோலியத்தின் உடல் மிக நீளமானதால் அதிக அளவு போசணயை முதன் விருந்துவழங்கியிலிருந்து உறிஞ்சும். ஆகையால் ஒன்றுக்கு மேற்பட்ட முழுவளர்ச்சியடைந்த நாடாப் புழுக்கள் மனிதனின் சிறுகுடலில் இருக்குமென எதிர்பார்க்க முடியாது, எனவே கடந்து கருக் கட்டல் நடைபெறுவதற்குச் சந்தர்ப்பம் கிடையாது. ஒரு புழுவின் விருத்திட்டன் மூட்டிலுண்டாகும் முட்டைகள் அதே புழுவின் வேறு விருத்திஉடன் மூட்டிலுள்ள விந்துகளால் கருக்கட்டப் படுகின்றன.
ஆண்குறியினால் உற்பத்திக்கூடத்துள் கடத்தப்படும் விந்துகள் யோனி மடலினூடாகச் சென்று குலகக்கானின் கீழ்ப்பகுதியில் முட்டை களுடன் சேருவதனால் கருக்கட்டல் நடைபெறுகிறது. கருக்கட்டிய முட்டைகள் கருவண்சுரப்பியிலிருந்துவரும் ஒரு பெரிய கருண் கலத்துடன் சேர்ந்து ஒரு மெல்லிய முட்டையோட்டினால் மூடப்படு கிறது. முட்டை ஓடு உண்டாகும்விதம் ஈரற்றட்டையனில் நடை பெறுவது போன்றதே. ஓட்டுச்சுரப்பிகள் முட்டை ஓடு உண்டாவதில் நேரடியாகத் தொடர்புடையனவல்ல - என்பது குறிப்பிடத்தக்கது. முட்டை கருப்பையினுட் சென்றடைந்தபின் முதற்பிளவு நடைபெற்று ஒரு சிறிய முளையக்கலமும், மாபாத்து (Megamere) எனப்படும் ஒரு பெரிய கலமும் உண்டாகின்றன. மாபாத்து பிரிவடைவதனாலுன் டாகும் கலங்கள் சுருவூண் சுரப்பியிலிருந்து பெறும் கருவூணால் நிரப் பப்பட்டு, முளையக்கவம் பிரிவடைவதனாலுண்டாகும் கலங்களைச் சூழ்ந்து கொள்கின்றன. முளையக்கலம் பிரிவடைவதனால் உட்புறமாகவுண்டா கும் சிறிய கலங்கள் நுண்பாத்துகள் (Micromeles) என்றும் வெளிப் புறமாகவுண்டாகும் பெரிய கலங்கள் நடுப்பாத்துகள் (MODETES) என்றும் அழைக்கப்படும். நுண்பாத்துகள் முளையமாக விருத்தியடைய, நடுப்பாத்துகள் முளையத்தைச் சுற்றி முளையந்தாங்கி (Embryophore) என்னும் கவசத்தைச் சுரக்கின்றன, முளையத்தில் ஆறு கொளுக்கிகள் உண்டாவதால் இக்குடம்பி அறுமுள்ளி முனையம் (HexaCanth embryo) என அழைக்கப்படுவதுண்டு.
முளையம், முளையந் தாங்கி, முட்டை ஓடு

Page 69
முட்டைக்கலம்
. ?
முட்டை
முட்டை ஒடு
ஒடு
கருஆண்
- கருண் கலம்
கம்
sகு இ) 5 .
முகாயந்தாங்கி சுரக்குங்கலங்கள்
முயர்
முளையந் தாங்கி
தாங்கி உண்முகமடிதல்
- இ) 95ா !
அறுமுள்ளிமுளையம்
பாகம்
டேகச்சென்னி
தோற்பைச் சுவர்
முன்கீடகச்சென்னி
படம் 63 - முட்டையிலிருந்து புழு விருத்தியடையும் நிலைகள்

- 12
எல்லாம் ஒருமித்து கொளுக்கிக்கோளம் (Onchosphere) எனப் பெயர் பெறும். தீனியாசோவியத்தின் முட்டை கருப்பையிலேயே விருத்தியடை வதால் அதன் விருத்திக்கு ஒட்சிசன் அவசியமில்லை. நாடாப்புழுவின் பின் முனையிலுள்ள முதிர்ந்த விருத்திஉடன்மூட்டுகள் கொளுக்கிக்கோளங் களைக்கொண்டிருக்கும். முதிர்ந்த விருத்திஉடன் மூட்டுகள் நாடாப்புழு
பட்ட
ப்யா ட்ப பார்க்க
கபடம் )
பாசிபய
இ
படம் 69 - தீனியாசோலியத்தின் வாழ்க்கைச் சக்கரம்

Page 70
- 126 -
விலிருந்து விடுபட்டு, சிறு குடலிலிருந்து பெருங்குடலுக்குச் சென்று, விருந்து வழங்கியின் மலத்துடன் வெளியேறுகின்றன, - விருத்தி உடன் முட்டு இறந்து அழிந்துபோக கொளுக்கிக்கோளம் தொற்று நிலையில் முட்டை ஓட்டினுள் காணப்படும், ஒட்டுண்ணி இந்நிலையில் துணை விருந்து வழங்கியை அடைந்தால் மட்டுமே மேலும் விருத்தி நடைபெறும். தீனியாசோவியத்திற்கு பன்றியே துணைவிருந்து வழங்கியாகும். பன்றி மலத்தை உண்ணும் பொழுது கொளுக்கிக்கோளங்களைக் கொண்ட முட்டைகளும் உட்கொள்ளப்படுகின்றன. பன்றியின் இரைப்பையில் பெச்சின் என்னும் நொதியம் முட்டை ஓட்டைக் கரைப்பதனால் ஒரு மென்சவ்வினால் மூடப்பட்ட அறுமுள்ளிமுளையம் விடுபடுகிறது. சதையச் சுரப்பிலுள்ள இலிப்பேசு, பித்தவுப்புகள் ஆகியவற்றால் மென் சவ்வும் கரைக்கப்பட்டு குடம்பிவிடுபடுகிறது. Fாடகத்தில் ஏற்படும் பிரசாரண அமுக்க மாறுபாட்டினாலும் முட்டையோட்டிலிருந்து குடம்பி விடுபடக்கூடும். மூன்று சோடி கொளுக்கிகளினுதவியால் குடம்பி பன்றியின் குடற்சுவரைத் துளைத்து குருதிச் சுற்றோட்டத்தையடைந்து ஈற்றில் தசைகளையோ, ஈரலையோ அடைகிறது. தசைகளிலே அது தன்னைச் சுற்றிச் சிறைப்பையை உண்டாக்கிக்கொள்கிறது. திரவத்தினால் நிரப்பப் பட்ட சிறைப்பையிலுள்ள குடம்பி பைவாற்பருவப்புழு அல்லது சிஸ்ரி சேர்க்கசு (Cysticereus) என அழைக்கப்படும். சிஸ்ரிசேர்க்கசின் பையில் ஓரிடத்தில் உண்முகமடிதல் ஏற்பட்டு அதனடிப்பாகத்தே ஒரு சிறிய சுடசச்செனனி உருவாகும், இந்நிலையில் அப்பகுதி முன் கிடகச்சென்னி (Pro-Colak) என அழைக்கப்படும். முழுவுடலியின் கீடகச்சென்னி யிலுள்ள பாகங்களெல்லாம் இதிற் காணப்பட்டாலும் அவை எதிர் மாறான நிலையிலிருக்கும். பைவாற்பருவப்புழுக்களையுடைய பன்றி யிறைச்சி புள்ளிகளையுடைய தோற்றத்தைக் கொண்டிருக்கும். பைவாற் பருவப்புழுக்கள் கொல்லப்படாதவகையில் சமைக்கப்பட்ட பன்றி பிறைச்சியை மனிதன் உட்கொள்ளும் பொழுது உணவுக்கால்வாயில் பை சமிபாடடைய, கிடகச்சென்னிவெளித்தள்ளப்பட்டு கொளுக்கி களினுதவியால் குடற்சுவரில் ஒட்டிக்கொள்ள, கழுத்திற்குக் கீழ்ப் புறமாக புதிய விருத்திட்டன் மூட்டுகள் உண்டாகி, புதிய நீண்ட நாடாப்புழுவொன்று உருவாகிறது.
தொகுப்பு : ஈற்றட்டையனின் அமைப்பிலும், வாழ்க்கை வரலாற்றிலும் காணப்படும்
ஒட்டுண்ணி வாழ்க்கைக்கேற்ற சிறப்பியல்புகள் ! 1. உடல் தட்டையாயிருத்தல் அதன் வாழிடத்துக்கு உகந்ததா.
யுள்ளது. 2.
வாயுறிஞ்சியும், கீழ்ப்புற உறிஞ்சியும் பித்தக்கானின் சுவரில் ஒட்டியிருத்தலுக்கு உதவுகின்றன.

- 127 -
, 3. மூடுபடையிலுள்ள முட்கள் ஈரற்றட்டையன் வழுக்சிச் செல்லா
மலிருக்க உதவுகின்றன. மூடுபடை சூழலிலுள்ள இரசாயனப் பொருட்களால் பாதிக்கப்படாவண்ணம் அமைந்துள்ளது. மூடுபடையினூடாவும் போசணைப்பொருள்கள் அகத்துறிஞ்சப் படலாமெனக் கருதப்படுகிறது.
உறிஞ்சற்றொண்டை உணவை உறிஞ்சுவதற்கு வசதியாகவுள் ளது. சமிபாடடைந்த நிலையிலேயே உணவு உள்ளதால் சிக்க லான சமிபாட்டுத் தொகுதி கிடையாது.
5. உறிஞ்சப்பட்ட உணவு குடற்கிளைகளுள் சேகரித்து வைக்கப்
படலாம். குருதிச்சுற்றோட்டத் தொகுதி அவசியமற்றதால் அத்தொகுதி கிடையாது.
ஈரற்றட்டையன் அகவொட்டுண்ணியா யிருப்பதால் விருத்தி யடைந்த நரம்புத்தொகுதியும் புலனங்கங்களும் அவசியமில்லை. எனவே, முழுவுடலியில் அவை சிதைந்து போயுள்ளன. ஆனால் மிராசீடியம் நீரிலே சுயாதீனமாக நீந்தித் திரிந்து இலிம்னியா திரன்கற்றுலாவை அடையவேண்டுமாதலால் அதில் சுண்புள்ளி கள் காணப்படுகின்றன.
வாழிடத்தில் ஒட்சிசன் செறிவு குறைவென்பதாலும், ஈரற்றட் டையன் மந்தமான தொழிற்பாட்டையுடையதாலும், காற் றின்றிய சுவாசித்தலே பெரும்பாலும் நடைபெறுகிறது - இவ்வாறு பெறும் சக்தி அதற்குப் போதுமானதே.
8. விருந்துவழங்கியிலிருந்து உணவைப் பெறுவதால் இடப்
பெயர்ச்சி அவசியமில்லை. ஆகவே இடப்பெயர்ச்சி அங்கங்கள் கிடையா.
இனப்பெருக்கத்தொகுதி மிகச்சிக்கலான அமைப்புடையதா யிருப்பதுடன் நன்கு விருத்தியடைந்துமுள்ளது. இரு பாற் களும் ஒரே ஈரற்றட்டையனிலிருப்பதுவும் குறிப்பிடத்தக்கது. பரம்பலடையும்பொழுது அநேக முட்டைகள் அழிந்துபோகக் கூடுமாதலால் பெருவாரியான முட்டைகள் உண்டாக்கப்படு கின்றன. ஒவ்வொரு முட்டையைச் சுற்றியும் பாதுகாப்பிற் காக ஓடு உண்டாக்கப்படுகிறது, . விருத்தியடையும் முட்டைக் குத் தேவையான உணவு கருவூண்கலங்களிலிருந்து பெறப் படுகிறது.

Page 71
115
10. பிசிர்களையும், கண்களையுமுடைய மிராசீடியக்குடம்பிகள் சுயா.
தீனமாக நீந்தித்திரிவதற்கு ஏற்ற அமைப்பைப் பெற்றுள்ளன, இதனால் குடம்பிகள் எதிரிகளிடமிருந்து தப்பிப் பிழைத்தல் இலகுவாகும், மீராசீடியத்தின் ஊடுருவிச்சுரப்பிகளின் சுரப்பு நத்தையைத் துளைத்து உட்செல்லுவதற்கு உதவிபுரிகிறது. இதில் சுவாலைக்கலங்கள் பிரசாரணச் சீராக்கலைச் செய்சின்றன.
11.
ஒரு முட்டையிலிருந்து பல சந்ததிக்குடம்பிகள் உண்டாகின்றன வாதலால் இது பலமுளையங்கொள்ளுதன்மையையுடையது. இவ்வாறு இலிங்கமில் முறையில்! இனப்பெருக்கம் நடைபெறு வது ஒரு சிறப்பியல்பாகும்.
17,
ஒட்டுண்ணியின் அனுசேபச் செய்முறைகள் நத்தையின் அனு சேபச் செய்முறைகளுடன் மிக ஒத்துள்ளது. - குளிர் பருவ காலத்தே இரேடியார்கள் துண- இரேடியாக்களை உண்டாக்குவ தன் மூலம் நத்தையினுள்ளேயே குளிர்காலத்தைக் கடத்தி சூழல் வெப்பம் உகந்ததாயிருக்கும் காலங்களில் சேர்க்கேரி யாக் குடம்பிகளை உண்டாக்குகின்றன.
15
வாலுள்ள - சேர்த்கேரியாக்குடம்பி நீந்தித் திரிவதற்கேற்ற அமைப்பையுடையது, பரம்பலடை வதற்கு இது ஓர் சிறப் பியல்பாகும். சேர்க்கேரியாக்கள் நத்தையினுடலிலிருந்து வெளிவருவதற்கு அதிகளவு ஈரப்பற்று இருந்தாலும் வெப்ப நிலை 10 - 15 ச.விற்கு மேலாக இருத்தல் அவசியம், துணை விருந்துவழங்கியான இலிம்னியா திரன்கற்றுலா என்னும் நத்தை ஈரூடக வாழ்க்கையை உடையதாயிருப்பதால் சேர்க் கேரியா நீரிலே விடப்படுவதற்கு நல்ல வாய்ப்பு உண்டு. சீதப் புரதங்களையுடைய சுரப்பிகளின் சுரப்பின் உதவிகொண்டு சேர்க்கேரியா ஓரிடமாக ஒட்டி, தன்னைச்சுற்றிச் சிறைப்பையை உண்டாக்கிக் கொள்கிறது எனவே, செம்மறியாடு நீர் அருந்தவரும்போது, சேர்க்கேரியாக்கள் ஓட்டி யுள்ள தாவர இலைகளை உண்பதனால் சேர்க்கேரியாக்கள் செம்மறியாடு களின் உணவுக்கால்வாயை அடையும் வாய்ப்பைப் பெறு கின் றன. சிறைப்பையினுள் சேர்க்கேரியா பல மாதங்கள் வரை உயிர் வாழக்கூடியது. சிறைப்பை தனின் சேர்க்கப்பட்ட புரதங்களாலும் வேறு பொருள்களாலுமானது. இது அகத்தே யுள்ள குடம்பியை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதுடன் அது அது உலர்ந்துவிடாமலிருக்கவும் உதவுகிறது.

- 129 -
தீனியா சோலியத்தினது அமைப்பிலும், வாழ்க்கை வரலாற்றிலும் காணப்
படும் ஒட்டுண்ணி வாழ்க்கைக்கான சிறப்பியல்புகள் : --- 1. தீனியாசோலியத்தின் உடல் 15 அடிவரை நீளமாயிருந்தாலும்
விருந்துவழங்கியின் சிறுகுடலினுள் அதன் தட்டையான நீண்ட உடல் சுருண்ட நிலையிலேயே காணப்படும்.
3..
உறிஞ்சிகளும், கொளுக்கிகளும் குடற்சுவரில் ஓட்டிக்கொள்ளப் பயன்படுகின்றன.
3, சமிபாடடைந்த உணவுள்ள சூழ்நிலையிலேயே நாடாப்புழு வாழ்
வதால்சமிபாட்டுத் தொகுதியின் அவசியமில்லை. எனவே, சமி பாட்டுத் தொகுதி இதற்குக் கிடையாது. உடலின் மேற்பரப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதனால் கூடுதலான உணவு அகத்துறிஞ்சப் படுகிறது. புலனங்கங்கள் தேவையில்லையாதலால் அவை விருத்தி குன்றி யுள்ளன, குருதிச்சுற்றோட்டத் தொகுதி கிடையாது. அதன் தேவையும் இல்லை.
சூழலில் ஒட்சிசன் செறிவு குறைவாதலால் காற்றின்றிய சுவாசித் தலே நடைபெறுகிறது, மந்தமான தொழிற்பாடுடைய நாடாப்புழுவிற்கு இவ்வாறு பெறும் சக்தி போதுமானதாகும். கிடைக்கப்பெறும் சிறிதளவு ஒட்சிசனும் உடலின் மையத்தே கடத்தப்படுவதனால் உடற்சுற்றிலுள்ள பகுதிக்கும் சூழலுக்கு மிடையே ஒரு படித்திறன் ஏற்பட்டு ஒட்சிசன் உட்புறமாகப் பரவுகின்றது. சிறுகுடலில் அகவொட்டுண்ணியாக வாழ்வதால் விருந்து வழங்கியின் நொதியங்களால் சமிபாடடையாமல் பாதுகாத்துக் கொள்வதற்காக நொதியவெதிரிகள் சுரக்கப்படுகின்றன. மூடு படையும் இதற்கு உதவுகின்றது. உணவைத் தேடியோ வேறு காரணங்களுக்காகவோ இடப் பெயர்ச்சி அவசியமில்லை. எனவே, இடப்பெயர்ச்சி அங்கங்கள் கிடையா.
இனம் பெருகுவதற்கு வாய்ப்பாக நாடாப்புழு துண்டுபடும் பொழுது புத்துயிர்ப்பு நடைபெறுகிறது. கிடகச்சென்னியற்ற வெட்டுப்பட்ட துண்டின் முன்முனையிலேயே புதிய டேகச் சென்னி உண்டாகிறது.
Z-- 9

Page 72
- 130 -
இனப்பெருக்கத் தொகுதி சிக்கலான தாயிருப்பதுடன் நன்கு விருத்தியடைந்துள்ளது, இருபாலுறுப்புகளும் ஒரே விருத்தி உடன்மூட்டிலிருந்தாலும் ஆண், பெண் இனப்பெருக்க அங்காங் கள் வெவ்வேறு வேளைகளில் முதிர்வடைவது குறிப்பிடத் தக்கது.
0 0
11.
ஒரு விருந்துவழங்கியில் ஒரு தீனியாசோலியம் மட்டுமேயிருந் தாலும், ஒவ்வொரு விருத்திஉடன் மூட்டிலிருந்தும் ஏராளமான முட்டைகள் உண்டாகக்கூடிய வகையில் அதன் அமைப்பு அமைந்துள்ளது. பரம்பலடையும் பொழுது அநேக முட்டை கள் அழிந்து போகக் கூடுமாதலாலேயே ஏராளமான முட்டை கள் உண்டாக்கப்படுகின்றன.
12.
கருக்கட்டிய முட்டைகளையுடைய விருத்திஉடன் மூட்டுகள் பின்முக்ர யிலிருந்து களையப்படும்பொழுது புதிய விருத்திஉடன் முட்டுகள் கழுத்துப்பகுதியிலிருந்து உண்டாகின்றன.
13.
விருத்தியடையும் முட்டைக்குத் தேவையான உணவுகருண் கலங்களிலிருந்து கிடைக்கப்பெறுகிறது. ஒவ்வொரு முட்டை -- யையும் சுற்றி பாதுகாப்பிற்காக ஓடு உண்டாக்கப்படுகிறது.
பட் 14,
முளையத்தைச் சுற்றியும் பாதுகாப்பிற்காக முளையந்தாங்கி என் னும் கவசம் உண்டாக்கப்படுகிறது.
0 .
15,
கொளுக்கிக்கோள் நிலையே தொற்று நிலையாகும். குடம்பி துணைவிருந்துவழங்கியான பன்றியின் குடற்சுவரைத் "துகாத்து குருதிச்சுற்றோட்டத்தினால் தசைகளை அடைவதற்கு கொளுக்கி கள் உதவுகின்றன.
Id,
தசைகளில் சிறைப்பை உண்டாகிறது. திரவத்தினால் நிரப்பப் பட்ட சிறைப்பையினுள் உள்ள குடம்பி பைவாற்பருவப்புழு (Bladder wGrm) என அழைக்கப்படும். பையிலுள்ள உண்முக மடி.தலில் எதிர்மாறான நிலையில் கிடகச் சென்னியொன்று உண்டு. ஒருவகைத் திரவத்தைக் சொண்ட பை கிடகச் - சென்னிக்கு பாதுகாப்பளிக்கிறது, அபவாற்பருவநிலை மனி தரின் இரைப்பையையடையும்பொழுது அமிலத்தாலும் பெச்சி னலும் நனைக்கப்படுகிறது. ஆனால் கிடகச்சென் னி பாதுகாப் பாகவுள்ளது. பின்பு சிறுகுடலையடையும்பொழுது திரிச்சின், பித்தவுப்பக்கள் ஆகியவற்றைக் கொண்ட கார ஊடகத்தினால் பை நனைக்கப்படுவதால் அது கரைந்து கிடகச்சென்னி வெளி விடப்படுகிறது." அமிலத்தினாலும் காரத்தினாலும் தாக்கப்படுவ தாலேயே பை கரைகிறது.
1ா,
முதன் விருந்துவழங்கியான மனிதன் உணவாகக்கொள்ளும் - பன்றி இறைச்சியில் பைவாற்பருவப்புழுக்கள் இருப்பதால் - முதல் விருந்துவழங்கியையடையும் வாய்ப்பு அவற்றிற்குண்டு. இதனால் பரம்பல் நிச்சயமாக நடைபெறுகிறதெனலாம்,
5 பு).

113
அனலிடா
கணம் - "அனலிடா 4படியார் 1
வகுப்பு - ஒலிகோகீற் 12 15:31 பு, பேட் வகை - பெரத்தீமா கணம் -அனலிடாவின் இயல்புகள் :
இக்கணத்தில் துண்டங்களாகப் பிரிக்கப்பட்ட உடலையுடைய புழுக் கள் அடங்கும். உடல்! அகமும், புறமும் துண்டங்களாகப் பிரிக்கப்பட் டுள்ளது. ஒவ்வொரு துண்டத்திலும் பல்வேறு தொகுதிகளின் பகுதிகள் காணப்படுமென்றாலும் ஒவ்வொரு துண்டமும் தனித்து இயங்கமுடி யாது. அவை ஒருமித்தே தொழில்படுகின்றன. இவ்வாறான துண்டு படலே அனுபாத்துமுறைத் துண்டுபடல் என அழைக்கப்படுகிறது. நன்றாக விருத்தியடைந்த உடற்குழி உண்டு. பொதுவாக இக்குழி கழி நீரகத்தினூடாக வெளியே தொடர்பு கொண்டிருக்கும், கழி நீரகங்கள் கழித்தற்றொழிலைப் புரிகின்றன. உடற்சுவர் சுரப்புமேற்றோற்கலங் களால் மூடப்பட்டி ருக்கும் இவற்றிலிருந்து. சுரக்கப்படும் புறத்தோல் மெல்லியபடையாகவிருக்கும். நரம்புத்தொகுதியில் ஒரு சோடி மூளை யத் திரட்டும், ஒரு சோடி, தொண்டைச்சுற்றுத் தொடுப்பும், வயிற்றுப்புற நரம்புநாணும் காணப்படும். ஒவ்வொரு துண்டத்திலும் நரம்புத் தொட ரில் நரம்புத்திரட்டுகள் உண்டு. முள்ளந்தண்டில்லா விலங்குகளிலே முதன் முதலில் - இக்கணத்திலடங்கும் புழுக்களிலேயே குருதிக்குழாய்கள் தோன்றுகின்றன, வட்டத்தசைகளும், நீளப்பக்கத்தசைகளும் நன்கு விருத்தியடைந்துள்ளன. சிலிர்முட்கள் உண்டு.
வகுப்பு - ஒலிகோகீற்ரு :
இவ்வகுப்பைச் சேர்ந்த புழுக்களில் சிறப்பான தலை கிடையாது. ஆனால், வாய்முன்னங்கம் காணப்படும். பரபாதமுளைகள் கிடை யாது. ஆண், பெண் பாலங்கங்கள் ஒரே புழுவிலுள்ளன. அதாவது ஈரிலிங்கத் திற்குரிய விலங்குகளாகும். சனனிகள் குறிப்பிட்ட துண்டங்களிலேயே

Page 73
- 13)-
காணப்படும். உடலில் கட்டுச் சேணம் உண்டு. இப்பகுதியிலிருந்துண் டாகும் புழுக்கூட்டினகத்தேயே முட்டைகள் இடப்படுகின்றன. உரு மாற்றமோ குடம்பிநிலையோ இல்லாமல் நேரடியாகவே கருக்கட்டிய முட்டையிலிருந்து நிறைவுடலி விருத்தியடைகிறது.
பெரத்திமா பெகுவானா (Pheretima peguana )
வாழிட மும் தோற்றமும் ;
1, முழு வளர்ச்சியடைந்த பொத்திமா பெகுவானா ஐந்து அங்குலம் முதல் எட்டு அங்குலம் வரை நீளமானது. உருளை வடிவான உடலை முன் முளை பின்முனை, வயிற்றுப்புறம், முதுகுப்புறம் என வியத்தப்படுத்தலாம். முதுகுப்புறம் சுபிலநிறமாகவும், வயிற்றுப்புறம் வெளிறிய நிறமாகவும் தோன்றும். பெரத்திமா ஈரலிப்பானமண்ணில் துளை தோண்டி வாழ்வதால் அதற்கேற்ப உடல் வேறுபாடடைந்துள்ளது. மண்புழுவின் நிறம் மண்நிற
IE
11புரி
வாய்முன்னங்கம் வாய் சிலிர்முள்
விந்துறைத்துவாரம் " பெண்உற்பத்தித் துவாரம் கட்டுச் சேணம் உற்பத்திச்சிம்பி அப்பாற் செலுத்தித் துவாரம்
EE
பானபோGaGFER, TE
1141ார்:HHHHHE பாபா EEHHHHHHHH
4114IIg HEார்:ETITETE[EEIHELH:1,
பார்பபாடி::ாணாயப்பபிப்பகம்
FHHHHHH
HFாபா:HEELE 4ாங்கப்பிரிப்பிரபா FE
முதுகுப்புறத்தோற்றம்
வயிற்றுப்புறத்தோற்றம் படம் 70 - பொத்திமா

- 133 -
மாகவே இருப்பதால் எதிரிகளின் கண்ணிற்கு இலகுவிற் தென்படுவ தில்லை. முன்முனையிலுள்ள வாயினூடாக மண்ணை உட்கொண்டு பின் முனையிலுள்ள குதத்தினூடாக வெளியேற்றி நிலத்திலே வளையுண்டாக் கிறது. ஈரலிப்பான மண்பரப்பிலே சிறு மண் குவியல்களை நாம் அவ தானிக்க முடியும். இவை மண்புழுக்கள் நிலத்தினுள் துளை தோண்டிச் செல்லும் பொழுது வெளியேற்றப்பட்டவையேயாகும். மண்புழுக்கள் பகலில் துளைகளில் வாழ்ந்து " இரவிலேயே நிலத்திற்குமேல் வருகின்றன.
* பெரத்திமாவின் உடல் ஒரு தொடரான பல துண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு புழுவில் 100 முதல் 120 வரையில் துண்டங் கள் உண்டு. உடலின் மேற்பரப்பில் மட்டுமல்லாது அகத்தேயும் உடல் பிரிசுவர்களால் பிரிக்கப்பட்டுள்ளது. உடலின் மேற்புறத்தில் ஒரு நடுக் கோடு உண்டு. புழுவின் முன்முனைகூராகவும் பின் முனை மழுங்கியும் காணப் படும் முன்முனையிலிருந்சிறிது துாரத்திற்கப்பால் உடலின் மிகப்பருமனை பகுதி காணப்படும். முதிர்ந்த புழுவின் 14, 15, 16-ம் துண்டங்களில் சுரக்குமிழையம் ஒரு வட்டப்பட்டிகையாகக் காணப்படும். இது கட்டுச்சேணம் எனப்பெயர் பெறும். எனவே உடலை கட்டுச்சேணமுற் பகுதி, கட்டுச்சேனப்பகுதி, கட்டுச்சேணப்பிற்பகுதி என மூன்று பகுதி களாகப் பிரிக்கலாம். உடலின் ஈரலிப்பான மேற்பரப்பிலுள்ள புறத் தோல் மிக மெல்லியதாகவும், வழுவழுப்பாகவுமுள்ளது. எனவே உடற் பரப்பினுாடாக சுவாசிக்கமுடிகிறது. முதல் துண்டத்தையும் கடைசித் துண்டத்தையும் தவிர்த்து ஏனைய துண்டங்களில் ஒவ்வொரு துண்டத்தின் நடுப்பகுதியிலும் ஒரு வளையமாக சிலிர்முட்கள் காணப்படும். ஒவ்வொரு சிலிர்முள்ளும் நீண்ட S - வடிவானது ). அதன் நடுப்பகுதியில் ஒரு சிறுகணு (வீக்கம்) உண்டு. அதன் நீளத்தின் மூன்றிலொரு பகுதி மட்டுமே உடலின் வெளிப்புறமாக நீட்டியிருக்க எஞ்சிய பகுதி சிலிர் முள்ளுறையினால் மூடப்பட்டு உடலினுள் அமிழ்ந்திருக்கும். சிலிர் முட்கள் நிலத்திலோ வளைச்சுவரிலோ பதிந்து இடப்பெயர்ச்சிக்கு உதவுகின்றன. இளம் புழுவில் கட்டுச்சேணப் பகுதியில் சிலிர்முட்கள் காணப்பட்டாலும் புழு முழுவளர்ச்சியடைந்து இனப்பெருக்கம் செய் யும் நிலையையடைந்த பின்னர் கட்டுச்சேணத்துண்டங்களில் சிலிர்முட் கள் காணப்படுவதில்லை.
முதற்றுண்டத்தில் வாயும் கடைசித்துண்டத்தில் குதமும் உண்டு. வாயுள்ள துண்டம் வாயயல் (வாய் + அயல்) எனப்படும். வாய்க்கு மேலாக ஒரு சிறு தசைச் சோணை உண்டு. இது வாய் முன்னங்கம் எனப் பெயர்பெறும். இது வாயயலின் ஒரு பகுதியேயன்றி ஒரு தனித்துண்ட

Page 74
- 134 -
மல்லவென்பது குறிப்பிடற்பாலது. 67, 78, 89 ஆகிய துண்டத்திடைக் குரிய தவானிப்புகளில் வயிற்றுப்புறப் பக்கத்திற்குரிய வகையில் முன்று சோடித்துவாரங்கள் உள்ளன. இவை விந்துறைகளின் துவாரங்களாகும். உடலின் மேற்புறமாக நடுக்கோட்டுப் பகுதியல் 12, 13-ம் துண்டங்க ளினிடையேயுள்ள தவாளிப்பிலிருந்து பின்னாலுள்ள தவானிப்புகளிலெல் லாம் ஒவ்வொரு முதுகுப்புறத் துவாரம் காணப்படும். கடைசித் தவாளிப் பில் இத்துவாரம் கிடையாது. முதுகுப்புறத்துவாரத்தினூடாக வெளி வரும் உடற்குழிப்பாய் பொருளும் உடற் சுவரிலிருந்து சுரக்கப்படும் சீத மும் மண்ணரிலுள்ள பற்றீரியாக்கள் மண்புழுக்களைத்தாக்காமல் இருக்க உதவுவதுடன் சில பற்றீரியாவுக்கு நஞ்சுப் பொருளாகவும் உள்ளன.
14- வது துண்டத்தின் கீழ்ப்புறமாக மையத்தில் பெண் பிறப்பாக்கித் துவாரம் உண்டு. 18வது துண்டத்தில் கீழ்ப்புறமாக ஒரு சோடி. பிறை வடிவான ஆண்பிறப்பாக்கித் துவாரங்கள் (அல்லது விந்துக்கான் துவாரங் கள்) உண்டு. 17, 19ம் துண்டங்களின் கீழ்ப்புறமாக ஆண்பிறப்பாக்கித் துவாரம் உள்ள வரிசையில் உடற்பரப்பிற் சிறிது உயர்ந்த இடத்தில் வட் டச்சிம்பிகள் காணப்படுகின்றன. இவை புணர்ச்சிச் சிம்பிகள் அல்லது உற்பத்திச்சிம்பிகள் எனப் பெயர் பெறும். 3வது துண்டத்திற்குப் பின் னால் உள்ள துண்டங்களின் பரப்பில் கழி நீரக நுண்டுளைகள் உண்டு. மண் புழு நிலத்தில் துளை தோண்டி வாழ்வதால் அதற்குப் புவனங்கங்களின் அவசியமில்லை. ஆகவே மண்புழுவில் புலனங்கங்கள் காணப்படுவதில்லை.
உடற்சுவர் :
உடற்சுவரில் பின்வரும் படைகளுண்டு.
(1) புறத்தோல் (2) மேற்றோல் (3) வட்டத்தசைநார்ப்படைகள் (4) நீளப்பக்கத்தசைநார்ப் படைகள் (5) உடற்குழிமேலணிச்
சுவர்ப் படைகள்,
மேற்ரோலுக்கு வெளியேயுள்ள புறத்தோல் எனப்படும் மெல்லிய கலமற்ற மென்சவ்வு மேற்றேற்கலங்களாலேயே சுரக்கப்படுகிறது. இப் படை வழுவழுப்பாக இருப்பதால் மண்புழு எதிரிகளிடமிருந்து தப்பித் துக்கொள்ள முடிகிறது. அது ஈரலிப்பாயுள்ளதால் உடற்பரப்பினூ டாக சுவாசித்தல் நடைபெறவும் முடிகிறது. மேற்றோலில் நான்கு விதக் கலங்கள் உள்ளன.
- 1 கிம் க iH1 ம். அவையாவன : 1) சுரக்குங்கவங்கள், (ii) தாங்கிக்கலங்கள், (iii) அடிக்கலங்கள் (iv) வாங்கிக்கலங்கள் என்பனவாகும்,

- 135 -
சிலிர்முள்
புறத்தோல்
மேலணி வட்டத்தனச சிலிர்முட்பை
_5 பி.
விரிதசை
மீளவிழுதசை
நீளப்பக்கத்தசை
வட்டத்தசை
உடற்குழி மேலணி
படம் 71- உடற்சுவர் கு. வெ.
வெண்கருக்கலம்
புறத்தோல்
சீதஞ்சுரக்குங்கலம்
தாங்குகலம்
அடிக்கவும்
படம் 72 - நெடுக்கு வெட்டுமுகம் (மேற்ரேலும் புறத்தோலும்)

Page 75
- 136 -
(1) சுரக்குங்கலங்கள் இரு வகைப்படும். (அ) சீதக்கலங்கள் - ஏறத்தாழ நீள்வட்டவுருவானவை. இவற்றின் அடிப்பாகம் ஒடுங்கி கருவைக்கொண்டிருக்க மேற்பாகம் சீதத்தால் நிரப்பப்பட்டிருக்கும். இவற்றின் எண்ணிக்கை ஏனைய கலங்களைவிட அதிகமாகும், (ஆ) கம்பம் போன்ற கருவூண்கலங்கள் அடிப்பாகத்திலேயே கருக்களைக்கொண் டிருக்கும். இவற்றின் எண்ணிக்கை மிகக்குறைவு.
(ii) நீண்டு ஒடுங்கிய உருத்தையுடைய தாங்கிக்கலங்களின் எண் ணிக்கை சுரக்குங்கலங்களின் எண்ணிக்கையைவிட அதிகம். இவற்றில் . கரு கலத்தின் மையத்தே காணப்படும்,
(iii) கூம்புருவான அல்லது கோளவுருவான சிறிய அடிக்கலங்கள் சுரப்பிக்கலங்களுக்கும், தாங்கிக்கலங்களுக்குமிடையே அடிப்பாகத்திற் காணப்படும்.
(iv) வாங்கிக்கலங்கள் : ஒடுங்கி நீண்ட இக்கலங்கள் ஒரு கூட்ட மாகவே காணப்படும். வாங்கிக்கலங்களுக்கிடையே இடைவெளிகள் உண்டு. இவை அதிகளவில் கீழ்ப்புறமே காணப்படும். இக்கலங்கள் புறத்தோலை சிறிது வெளித்தள்ளி தொடுகைக்கு உணர்வுள்ளனவாகக் காணப்படுகின்றன, பெரத்திமாவின் மேற்றோலில் ஒளிவாங்கிக்கலங் களும் உள்ளன. ஒவ்வொரு ஒளிவாங்கிக் கலத்திலும் ஒரு கருவுடன் ஒரு வில்லையும் உண்டு. இக்கலங்கள் நரம்புதார்ப்பின்னலையும் கொண் டுள்ளன.
4பட 11
வாங்கிக்கலம்
நரம்பு நார்கள்
LEA4
அடிக்கலம்
பட ப பட ம் 73 - கேற்றேல்வாங்கி
வட்டத்தசைப்படையிலும் நீளப்பக்கத் தசைப்படை மிகத்தடிப் பான படையாகவுள்ளது. உடற்குழிமேலணிச் சுவர்ப்படையில் ஒரு கலத்தடிப்பிற் கலங்கள் உண்டு. உடற்குழி :
உணவுக்கால்வாயைச் சுற்றியுள்ள பட 6லகப்படை மேலணிக் கலங்களுக்கும் உடற்றோலின் உட்படையான சுவர்ப்படைக்கும் இடையே

- 131 -
யுள்ள குழியே உடற்குழியாகும். மண்புழுவில் உடற்குழி குறுக்குப் . பிரிசுவர்களால் அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதற்பிரிசுவர் 4-ம், 5-ம் துண்டங்களுக்கிடையேயுள்ளது. நாலு முதல் ஒன்பது வரையிலான துண்டங்களைப் பிரிக்கும் பிரிசுவர்களும் 10 - 11-ம் துண்டங்களுக் கிடையேயுள்ள பிரிசுவரும் தேரான குறுக்குச்சுவராக இராமல் கூம்பு வடிவிலுள்ளன. உடற்குழியில் பால் போன்ற பாய்யொருள் உண்டு. இதில் அமீபாப்போலிச் சிறுதுணிக்கைகள் காணப்படும்,
இடப்பெயர்ச்சி ! "
மண்புழுவின் இடப்பெயர்ச்சியில் நீளப்பக்கத் தசைப்படைகளும், வட்டத்தசைப்படைகளும் சிலிர்முட்களும் உடற்குழிப்பாய்பொருளும் பங்குகொள்கின்றன. மண் புழுவின் - உடற்சுவரில் வெளிப்புறமாக வட்டத்தசைகளும். உட்புறமாக நீளப்பக்கத்தசைகளும் உண்டு. - விரி தசைகள் (Protractor muscle), மீளவிழுதசைகள் (Tetractor Huscle) என இருவித தசைக்கூட்டங்கள் சிலிர்முட்படையின் அடிப்பாகத்துடன் இணைந்ள்துளன. விரிதசைகளின் மறுமுன்ன உடற்சுவரின் வட்டத்தசை களுடனும் மீளவிழுதசைகளின் மறுமுனை உடலகப்படை மேலணிக்கலங் களுக்கு உட்புறமாகவுள்ள வட்டத்தசைப்படையுடனும் இணக்கப் பட்டுள்ளன.
இடப்பெயர்சியின் பொழுது முதலில் முன் முனையிலுள்ள துண்டங்களின் வட்டத்தசைகள் சுருங்குவதால் ஒரு சுருங்கல் அலை ஏற்பட்டு உடலின் முன் முனையிலிருந்து பின் முனையை நோக்கிச் செல்கிறது. அப்பொழுது உடல் மெலிந்து நீள்கிறது. உடற்குழிப் பாய்பொருளின் அமுக்கம் அதிகரிப் பதனால் சிலிர்முட்களுடன் இணைக்கப்பட்டுள்ள தசைகள் தொழிற்பட்டு சிலிர்முட்கள் நிலத்தில் நன்றாக ஊன்றிக்கொள்கின்றன. வட்டத்தசை களின் சுருங்கல்- அலை மண்புழுவின் பின் முனையையடையுமுன்னரே முன் முனையில் வட்டத்தசைகள் தளர்ந்து நீளப்பக்கத்தசைகள் சுருங்குகின் றன. அப்பொழுது உடல் குறுகிப் பருமனாவதால் உடலின் பிற்பக்கம் முன்னோக்கி இழுக்கப்படுகின்றது. இவ்வாறு அடுத்தடுத்து வட்டத்தசை களின் சுருங்கலும். நீளப்பக்கத்தசைகளின் சுருங்கலும் ஏற்படுவதனால் மண்புழு முன்னோக்கிச் செல்கிறது.
சமிபாட்டுத்தொகுதி ;
உணவுக்கால்வாய் வாய், வாய்க்குழி, தொண்டை, களம், அரைப்புப்பை, இரைப்பை, குடல், நோக்குடல், குதம் ஆகிய பகுதி களைக் கொண்டுள்ளது. மண்புழுவின் முதல் துண்டத்தின் முனையில் வட்ட வடிவான வாய் உண்டு. வாயைமூடியுள்ள தசைப்பகுதி வாய்முன் சங்கம் என்றும், வாயுள்ள துண்டம் வாயயல் என்றும் பெயர் பெறும்.

Page 76
- 138 --
வாயைத்தொடர்ந்து மூன்றாவது துண்டத்தின் நடுப்பகுதி வரையுள்ள பகுதி வாய்க்குழியாகும். மெல்லிய சுவரைக் கொண்ட மடிப்புகளையுடைய வாய்க்குழி வெளியே தள்ளப்பட்டு உணவு உட்கொள்ளப்படுகிறது. வாய்க்குழியைச் சுற்றி தசைகள் உள்ளன. வாய்க்குழியைத் தொடர்ந்து நான்காவது துண்டம்வரையுள்ள பகுதி பேரிக்காய்வடிவான தொண்டை
வாய்
- தொண்டை
களம்
அரைப்புப்பை
|-பார்T
படபடப்ய \\TTள்
குடற்குருட்டுக்குழல்
26
- 1 கப் - Fifth
15 -
பதட்டம் - படம் 74 - சமிபாட்டுத் தொகுதி Hi டர்பன்

- 139 -
வாய்முன்னங்கம்
வாய்
வாயயல்
வாய்க்குழி
மூளை
தொண்டை 'த்திணிவு
தொண்டை தொண்டைச் சுற்றுப் பிணைப்பு தொண்டைக்கீழ் திரட்டு களம்
புறத்தோல்
மேலணி
வட்டத்தசை
விந்துறை
1 பார்
நிளப்பக்கத்தசை
அனரப்புப்பை
ப
நரம்புநாண்
இரைப்பை
விதை சுக்கிலப்புடகம் சுக்கிலப்புனல்
சூலகம்
குடற்கீழ் குருதிக்கலன்
குடவ்
கட்டுச்சேணம்
குடற்சுவர்
படம் 75 - நெடுக்கு (மத்திய நெடுங்கோட்டு ) வெட்டு முகம்.

Page 77
- 140 =
யாகும். வாய்க்குழியையும் தொண்டையையும் பிரிக்கும் வகையில் மேற் புறத்தே அமைந்துள்ள தவாளிப்பில் மூளையத் திரட்டுகள் உள்ளன. சிறு சோணை கொண்ட கொண்ட தொண்டையின் மேற்பகுதி அதிக அளவில் குருதியைப் பெறுகிறது. தொண்டையின் மேற்பக்கப்பரப்பில் தொண் டைத்திணிவு உள்ளதால் தொண்டையின் மேற்பகுதி கீழ் நோக்கித்தள் ளப்பட்டுள்ளது. தொண்டையின் பக்கச்சுவர்கள் இரு பக்கங்களிலும் சிறு தட்டுக ளாக தொண்டை யின் முற்பகுதியில் அடித்தளத்திற்கு அருகாமை யிலும் பிற்பகுதியில் மேற்புறச்சுவருக் கருகாமையிலும் ஓன்றோடொன்று சேருகின்றன. இதனால் ஒரு நீள்வளையமான அமைப்பு உண்டாகின்றது. தொண்டையிலே தட்டுகளின் மேலுள்ள பகுதி உமிழ்நீர் அறை என்றும், கீழுள்ள பகுதி கடத்தும் அறை என்றும் அழைக்கப்படும், நாலாம் துண்டத்திலிருந்து எட்டாம் துண்டம் வரையிலுள்ள உணவுக்கால்வாய் களம் எனப் பெயர் பெறும், எட்டாவது துண்டத்தில் களம் அரைப்புப் பையாக விரிவடைந்துள்ளது. அரைப்புப்பைச் சுவர் தடித்த வட்டத் தசைகளையும், கம்பமேலணிக் கலங்களையும் கொண்டுள்ளது. மேலணிக் கலங்களின் உட்போர்வையாக உட்புறத்தோல் (Internal Cuticle) காணப் படும், அரைப்புப்பையைத் தொடர்ந்து 9 முதல் 14-வது துண்டங்களி லுள்ள பகுதி சுரப்பிகளையுடையதாயும் அதிகவளவு குருதி பெறும் பகுதி யாகவும் காணப்படுகிறது. பிசிர்களற்ற கம்பமேலணிக் கலங்களையுடைய மேலணிப்படை அநேக மடிப்புகளையுடையது. இப்பகுதியின் இரு முறை
மேலணி
10ாபா
ர:"மாமா
ஏப்பப்
>133020
கே.
பற்பE0
பிரிப்பு
வட்டத்தசை நீளப்பக்கத்தசை முதுகுப்புறக்கலன் தொண்டைத்திணிவு உமிழ்நீர் அறை தட்டு கடத்தும் அறை வயிற்றுப்புறக்கலன் நரம்புநாண்
2.82330
அது, ரா.பா?
H118
ப4ப]பE0
aparanogg
படம் 76 - கு. வெ. தொண்டையினூடாக -

- 141 =
சாபராமரdtாரபரபரப்பா:
முதுகுப்புற குருதிக்கலன்
411FE41
Ff:
Tா சிப்:010ம்
:37:13
9ettacua:
உடற்குழி
-- வட்டத்தசை உள்மேலணிப் போர்வை உட்புறத்தோல் பக்கக்களத்திற்
குரிய கலன்
பேப்பரிப்பு
300:c:Westpptxt -
20: in:
நரம்புநாண் பிரபா€EHL"பாரிய
நரம்பு படம் - 77 கு. வெ. அரைப்புப்பையின்னுாடாக
முதுகுப்புற குருதிக் - கபிலன்
குருட்டுமடி
எளிப்புபHUப்பாறு.
ஃanesty(383
2013
வட்டத்தசை
நீளப்பக்கத்தசை
tாம்
அப்010ாப்ரா
கழிரேகம்
47000...
ஆtatic. ப100
ஃetititatent).
இட
உட்புற மேலணிக் கலங்கள் வயிற்றுப்புறக்கலன் நரம்புநாண் நரம்பின் கீழுள்ள "சுவன்.
இந்த
4ாபாரப்பtlபபப்பு
10ாப்பய பு!YLLA
படம் - 78 கு.வெ., குடலினூடாக !
களிலும் இறுக்குத்தசைகள் காணப்படுவதால் இப்பகுதி இரைப்பை என அழைக்கப்படுவதுண்டு. சுற்றுவிரிப்படைக்கும் வட்டத்தசைநார்ப் படைக்குமிடையேயுள்ள சுரக்குங் கலங்கள் புரதப்பகுப்பு நொதியத்தைச் சுரக்கின்றன. 14-ம் துண்டத்திற்க்குப் பின்னால் உணவுக்கால்வாய் சிறு குடலாகத் தொடரப்படுகிறது.-
சிறுகுடலின் உட்சுவர் மென்மை

Page 78
142 -
யானதாகும். 26-ம் துண்டத்திற்குப் பின்னால் உணவுக் கால்வாய் சிறு குடலாகத்தொடர்கிறது. சிறு குடற்சுவரின் உட்பகுதி மென்மையான தாகும். 26-ம் துண்டத்தில் குருட்டுக்குடல் என அழைக்கப்படும் கூம் புருவான், குறுகிய, முன்னோக்கியுள்ள இரு எறியங்கள் காணப்படும், குருட்டுக்குழலின் உட்புறச் சுவர் அநேக மடிப்புக்களையுடையதாயும் சுரப்புகளை யுண்டாக்கும் கலங்களையும் கொண்டிருப்பதால் சமிபாட்டில் பங்குகொள்ளுகிறதெனக் கருதப்படுகின்றது. மண்புழுவின் உடலில் முதல் 26 துண்டங்களையும் கடைசி 26 துண்டங்களையும் தவிர்த்து இடை யேயுள்ள துண்டங்களின் உணவுக்கால்வாய்ப் பகுதியின் மேற்புறச் சுவரில் குருட்டுமடி காணப்படும், ஆகவே உணவுக்கால்வாயின் இப் பகுதி குருட்டுமடிப்பகுதி என்றும், இதற்கு முன்னாலுள்ள பகுதி முன் குருட்டுமடிப்பகுதி என்றும், இதற்குப்பின்னாலுள்ள பகுதி பின் குருட்டு மடிப்பகுதி என்றும் அழைக்கப்படும். பின் குருட்டுமடிப்பகுதி நேர் குடல்லெனவும் பெயர் பெறும், நேர்குடல் பண்புழுவின் கடைசித் துண்டதில் குதத்தினூடாக வெளித்திருக்கிறது.
# 14 |
உணவுக்கால்வாய்ச் சுவரின் அமைப்பு :
5.
உணவுக்கால்வாய்ச் சுவர் நான்கு படைகளைக் கொண்டது. (1) வெளிப்புறச் சுற்றுவிரிமேலணிக்கலங்கள். (2) நீளப்பக்கத்தசைப்படை. (3) வட்டத்தசைப்படை. (4) உட்புறமேலணிக்கலங்கள்,
கருக்களையுடைய சுற்றுவிரிமேலணிக்கலங்கள் நீண்டு ஒடுங்கிய அமைப்பையுடையன. சிறுகுடற்பகுதியிலும் மஞ்சள்நிற மணிகளையுடைய கலங்கள் காணப்படுவதால் அவை மஞ்சட்கலங்கள் அல்லது குளோரோ கொசென் கலங்கள் என அழைக்கப்படுவதுண்டு. இக்கலங்கள் கழித் தற்றொழிலில் ஈடுபடுகிறதென சில அறிஞர்கள் கருதுகின்றனர். வேறு சிலர் இவை போசணைப் பொருள்களைச் சேமித்து வைக்கிறதெனக் கருதுகின்றனர்,
நீளப்பக்கத்தசைகளும் வட்டத்தசைகளும் உணவுக்கால்வாயின் வெவ்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு நிலைகளில் விருத்தியடைந்துள்ளன. வாய்க்குழிப் பகுதியிலும் தொண்டையைச் சுற்றியும் தசைநார்கள் நன் ருக விருத்தியடைந்துள்ளன, தொண்டைப் பகுதியில் தொண்டைத் திணிவு உள்ளது. களத்திலும் இரைப்பையிலும் தசைநார்கள் சுற்றுச் " சுருங்கலுக்கு உதவிபுரிகின்றன, --அரைப்புப்பை பகுதியில் வட்டத்

- 143 -
தசைகள் மட்டுமே பெருமளவில் விருத்தியடைந்து உணவு அரைபடுவ தற்கு உதவுகின்றன. அரைப்புப்பைக்கு முன்னும் பின்னும் நீள் பக்கத் தசை நன்றாக விருத்தியடைந்துள்ளது. சிறுகுடற் பகுதியில் தன்சகள் நன்றாக , விருத்தியடைந்திருக்கவில்லை. மண்புழுவின் தசைகள் யாவும் கீறில்லாத் தசைகளாகும்.
வாய்க்குழியிலுள்ள உட்புறமேலணிக்கலங்கள் நீண்ட உருளையுரு வான கலங்களாகும். இவற்றில் பிசிர்கள் கிடையா. ஆனால், உட் போர்வையாக உட்புறத்தோல் உண்டு. தொண்டையில் மேற்புறத்தே மட்டும் பிசிர்களையுடைய கலங்களுண்டு. அரைப்புப்பையில் கலங்கள் குறுகியதாயும் தடித்த புறத்தோலையுடையனவா 4ம் இருக்கும். | சிறு குடலில் கலங்கள் உறிஞ்சற்றொழிலிற்காகவும் சுரப்புகளையுண்டாக்குவ தற்காகவும் சிறப்பியல்புகள் பெற்றுள்ளன. உறிஞ்சற்கலங்கள் ஒடுங்க . நீண்டு, அகன்ற சுயாதீனமான முனையில் பிசிர்களையுடையனவாயுமிருக் கும், சுரக்குங்கலங்கள் வெற்றிடங்களைக்கொண்டிருக்கும்.
மண்புழுவில் சமிபாடு நடைபெறும் முறை : *
மண்புழு மண்ணைப் பெருமளவில் உட்கொண்டு அதிலுள்ள உக்கும் விலங்குப் பொருட்களிலிருந்தும், தாவரப்பொருட்களிலிருந்தும் தனக்கு வேண்டிய போசணையைப் பெறுகிறது. உணவுட் கொள்ளப்படும்பொழுது தொண்டை வெளியே தள்ளப்பட்டு உணவுப் பொருட்களும், மண்ணும் உள்ளெடுக்கப்படுகின்றன, உணவும், மண்ணும் தொண்டையையடையும்பொழுது தொண்டைத்திணிவிலுள்ள சுரக்குங் கலங்களிலிருந்து சுரக்கப்படும் உமிழ்நீர்ச் சுரப்பும் இவற்றுடன் சேர் கிறது. மண்புழுவின் உமிழ்நீர்ச்சுரப்பில் சீதமும் புரதப்பகுப்பு நொதியமும் உண்டு.. உணவு அரைப்புப்பையையடையும் பொழுது தசைச்சுருங்கல் ஏற்பட டு உணவு அரைக்கப்படுகிறது. அரைப்புப்பை உணவை பின்னோக்சிச் செல்வதற்கும் உதவுகிறதென சிலர் கருதுகின் றனர். அரைப்புப்பையின் உட்போர்வையாகவுள் ளா தடித்த புறத் தோலும் மண்துணிக்கைகளும் உணவு அரைக்கப்படுவதற்கு உதவி புரிகின்றன. இரைப்பை, குருட்டுக்குழல், சிறுகுடல் ஆகிய பகுதிகளில் சமிபாட்டு நொதியங்கள் சுரக்கப்பட்டு சமிபாடு ந.9:டபெறுகிறது . தயற்றேசு என்னும் நொதியத்தினால் மாப்பொருள் வெல்லமாக்கப்படு கிறது. புரதப்பிரிப்பு கொ தியங்கள் புரதங்களை பெத்தோன்களாகவும் பின்னர் அமினோ அமிலங்களாகவும் மாற்றுகின்றன. 2 இலிப்பேசு கொழுப்புப் பொருட்களை கொழுப்பமிலங்களாக மாற்றுகின்றது. சமிபாடடைந்த உணவு சிறுகுடலின் மேலணிக்கலங்களினூடாக உறிஞ்சப்பட்டு குருதியையடைகிறது.

Page 79
- 144 -
சுவாசித்தல் !
மண்புழு ஈரலிப்பான மண்ணிலேயே வாழ்ந்து தன் உடலின் மேல் பரப்பினூடாகச் சுவாசிக்கிறது. மண்புழுவின் உடற்சுவர் மெல்லியதா யிருப்பதுடன் அதிகளவு குருதியையும் பெறுகிறது. குறுதி மயிர்க் குழாய்கள் உடற்சுவரின் மேற்றோற்கலங்களில் முடிவடைகின்றன. குருதி முதலுருவில் கரைந்துள்ள ஈமோகுளோபின் என்னும் நிறப் பொருள் பரவல் முறையால் ஒட்சிசனைப் பெறுகிறது. இவ்வாறே குருதி யிலுள்ள காபனீரொட்சைட்டும் வெளியேறுகிறது. உடற்குழியிலிருந்து மேற்புறுத்துவாரங்களினூடாக வெளிவரும் உடற்குழிப்பாய்பொருளும் மேற்றேற் சுரக்குங்கலங்களினால் சுரக்கப்படும் சீதமும் உடற்பரப்பை ஈரலிப்பாக வைத்திருப்பதற்கு உதவுகின்றன..
குருதிச் சுற்றேட்டத் தொகுதி :
மண்புழுவில் குருதிக் குழாய்களினூடாகவே குருதி பாய்கிறது. குருதிச் சுற்றோட்டத்தை இலகுவில் விளங்கிக்கொள்ளும் பொருட்டு முதற் பதின்மூன்று துண்டங்களிலுள்ள குருதிக்கான் களை பின்னாலுள்ள வற்றிலிருந்து பிரித்து ஆராய்வோம்.
தொண்டை
முதுகுப்புற குருதிக்கலன்
அரைப்புப்பை
முதுகுப்புற குருதிக்கலன்
"பாயோ HEா AH
பக்கக்களத்திற் குரியகலன்
இதயம்
வயிற்றுப் புறக்கலன்
நரம்பின் கீழ்க்கலன்
படம் 79. குருதிக்கலன்களைக் காட்டும் படம் -

- 145 -
மண்புழுவில் பதின்மூன்றாம் துண்டத்திற்குப் பின்னால் உள்ள பகுதியை எடுத்து ஆராய்ந்தால் (சிறுகுடற் பகுதி) அப்பகுதியில் மூன்று முக்கிய குருதிக்குழாய்களுள்ளதை அவதானிக்கலாம். அவையாவன : (i) முதுகுப்புறக்கலன் : (ii) வயிற்றுப்புறக்கலன் த (iii) நரம்பின் கீழ்க்கலன் , என்பனவாகும், ஏனைய குருதிக்கலன்களைவிடப் பெரியதும் தடித்த தசைகளைக்கொண்டதுமான முதுகுப்புறக்கலன் குடலுக்கு மேலாக நடுக்கோட்டில் உள்ளது. இப்பகுதியில் இக்கலன் குருதியைச் சேகரிக்கும் குழாயாகவே உள்ளது. இது சுருங்கும்பொழுது குருதி முன்னோக்கிச் செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு பிரிசுவருக்கும் முன்னால் முதுகுப்புறக்கலனின் அகத்தேயுள்ள ஒரு சோடி வால்வுகள் குருதி பின்னோக்கி வராமல் தடுக்கின்றன. ஒவ்வொரு துண்டத்திலும் ஒவ்வொரு பக்கத்திலும் சிறு குடலிலிருந்து ஒரு சோடிக்கலன்களும், நரம்பின் கீழ்க்கலனிலிருந்து ஒரு பிணைப்புக்கலனும் முதுகுப்புறக் கலனை வந்தடைகின்றன. பிணைப்புப் கலன் கழிநீரகங்களிலிருந்தும் உடற் சுவரிலிருந்தும் குருதியைப் பெற்றுக்கொன்கின்றது. குடலுக்குக் கீழ்ப் புறமாகவுள்ள வயிற்றுப்புறக்கலனே சிறுகுடற்பகுதியில் முக்கியமான குருதி கொடுக்கும் கலனாக அமைந்துள்ளது. இதில் குருதி பின்னோக்கி ஒடுகின்றது. வால்வுகள் கிடையா. கழிநீரகங்களும் உடற்கவரும் சிறிய குழாய்கள் மூலமாக வயிற்றுப்புறக் கவனிலிருந்து குருதியைப் பெறுகின்றன. நரம்பின் கீழ்க்கலன் நரம்பு நாணிற்குக்கீழாக உடற் சுவரின் உட்பகுதியில் காணப்படும். இது பதினான்காம் துண்டத்தி லிருந்து ஆரம்பமாகி கடைசித்துண்டம்வரை செல்கிறது. இதில் குருதி பின்னோக்கியே பாய்கிறது. உடற்சுவரின் வயிற்றுப்புறப் பகுதி யிலிருந்தும் நரம்பு நாணிலிருந்தும் குருதியைப் பெற்று பிணைப்புக்கலன் சுளினூடாக முதுகுப்புறக்கலனுக்குக் கடத்துகிறது.
முதல் பதின்மூன்று துண்டங்களிலுள்ள முதுகுப்புறக்கலன் குருதியை அங்கங்களுக்கு வினியோகிக்கிறது. 7. 8, 12, 13-ம் துண்டங்களிலுள்ள ஒவ்வொரு சோடி இதயங்களினூடாக முகுகுப்புறக்கவன் வயிற்றுப்புறக் கலனுடன் தொடர்புகொண்டுள்ளது. 14-ம் துண்டத்தில் நரம்பின் கீழ்க் கலன் வலது, இடதுபக்க களத்திற்குரிய கலன்களாகப் பிரிந்து முன்னோக் கிச்செல்கிறது, இக்கலன்கள் முதற்பதினான்கு துண்டங்களிலிருந்து குரு தியைப் பெற்று, 10 முதல் 13-வது துண்டங்கள்வரை உள்ள குடல்மேற் கலனை யடைகிறது. முதல் பதின்மூன்று துண்டங்களிலுமுள்ள வயிற்றுப் புறக்கலன் பகுதி இதயங்களிலிருந்தும் குடல் மேற்கலங்களிலிருந்தும் குருதியைப் பெறுகின்றது.
Z - 10

Page 80
- 146 -
நரம்புத் தொகுதி :
மண்புழுவின் மூன்றாம் துண்டத்தின் முற்பகுதியில் வாய்க்குழி யையும் தொண்டையையும் பிரிக்கும் தவாளிப்பில் மேற்புறமாக ஒரு சோடி மூளையத்திரட்டுகள் உள்ளன. இவை தொண்டைமேல் திரட்டு" கள் எனவும் அழைக்கப்படுவதுண்டு. தொண்டைக்குக்கீழுள்ள சோடித் திரட்டுகள் தொண்டைக்கீழ்த்திரட்டுகள் எனப் பெயர்பெறும். தொண் டைமேல் திரட்டுகளையும், தொண்டைக் கீழ்திரட்டுகளையும் தொடுக்கும், வண்ணம் தொண்டைச்சுற்றுத் தொடுப்பு தொண்டையைச்சுற்றி ஒரு வளையமாக அமைந்துள்ளது. மூளையத்திரட்டிலிருந்து 8-10 சோடி நரம்பு கள் வெளிவந்து பல கிளைகளாகப் பிரிந்து வாய்க்குழிச்சுவருக்கும் வாய் முன்னங்கத்திற்கும் செல்கின்றன. - தொண்டைச்சுற்றுத்தொடுப் பிலிருந்து, இரு சோடி. நரம்புகள் முதற்றுண்டத்து உடற்சுவருக்கும் வேறு நரம்புகள் வாய்க்குழிச் சுவருக்கும் செல்கின்றன. தொண்டைக்கீழ்த் திரட்டிலிருந்து வெளிவரும் நரம்புகள் 2-ம், 3-ம், 4-ம் துண்டங்களுக்குச் செல்கின்றன. தொண்டைக்கீழ்த் திரட்டின் முற்பகுதியிலிருந்து ஒரு சோடி பெரிய நரம்பும் இரண்டாம் துண்டத்திற்குச் செல்கின்றன. தொண்டைக்கீழ்த் திரட்டின் நடுப்பகுதியிலிருந்து வெளிவரும் மூன்று சோடி நரம்புகள் முன்றாம் துண்டத்திற்குச் செல்கின்றன. தொண்டைக் கீழ்த்திரட்டின் பின் பகுதியிலிருந்து வரும் மூன்று சோடி நரம்புகள் நான்காம் துண்டத்திற்குச் செல்கின்றன, தொண்டைக்கீழ்த்திரட்டு முதல் நான்கு திரட்டுகள் ஒன்று சேர்ந்தமையால் ஏற்பட்டதொன்றாகும்.
தொண்டைக்கீழ்த்திரட்டிலிருந்து ஆரம்பிக்கும் - வயிற்றுப்புற நரம்புநாண் உடலின் கடைசித்துண்டம்வரை நீள்கிறது. இரட்டை நரம்புகளாலான இந்நாளில் ஒவ்வொரு துண்டத்திலும் திரட்டுகள் காணப்படும். நரம்புநாண் இரட்டை நரம்புகளாலானதால் இத்திரட்டு களும் ஒரு சோடித் திரட்டுகளைக் கொடுள்ளதெனக் கொள்ளலாம், இத் துண்டங்கள்களிலுள்ள திரட்டுகளைத் தொடுக்கும் நரம்புநாண் பகுதி பிணைப்பு எனப் பெயர் பெறும், ஒவ்வொரு துண்டத்திலுமுள்ள திரட்டு களிலிருந்து முன்று சோடி நரம்புகள் வெளிவருகின்றன. இவற்றுள் ஒரு சோடி முன்னோக்கியும் இருசோடி பின்னோக்கியும் செல்கின்றன. கடை சித்திரட்டிலிருந்து ஆறுசோடி நரம்புகள் வெளிவருகின்றன. நரம்புகளில் உட்காவுநார்களும் வெளிக்காவுநார்களும் உணடு. உட்காவுநார்கள் மேற்றோலிலுள்ள வாங்கிக்கலங்களிலிருந்து புறப்பட்டு வயிற்றுப்புற நரம்புநாணில் நுண்ணிய கிளைகளாக முடிவடைகின்றன. "நாணிலிருந்து புறப்படும் வெளிக்காவு நரம்புநார்கள் (அல்லது இயக்குநரம்புநார்கள்) தசைகளில் முடிவடைகின்றன. தோலிலுள்ள வாங்கிக்கலங்களால் பெறப்படும் தூண்டல் உட்காவுநரம்பு நார்களினூடாக நரம்புநாணை யடைந்து பிணைப்புகளினூடாக வெளிக்காவு நரம்பையடைகின்றன.

-147 -
மூளையத்திரட்டு தொண்டைச்சுற்றுப்
பிணைப்பு
தொண்டைக்கீழ்த்
திரட்டு நரம்பு
படம் 1 நரம்புநாண் = - |
படம் 80 - மண்புழு - நரம்புத்தொகுதி
பாபரபரப
அnை)
மேலணி
பாபிப்பாடி
3riv33)
பப்பு
4303111ப.
400புப்ப
பூர்
பு11:ார்E பற
மூளை முதுகுப்புற
குருதிக்கலன் தொண்டை கழி நீரகம் -- பக்கத்தொண்டைப்
பிணைப்பு வட்டத்தசை
20uouuar.
பபபபரபப0
பலகம்
நீளப்பக்கத்தசை படம் 81 மண்புழு கு. வெ. மூகாபினூடாக

Page 81
148
வெளிக்காவுநார்களில் கணத்தாக்கங்கள் தசைகளுக்குக் கடத்தப்பட்டு தசைகள் தொழில் பாடுகின்றன. நான்கு பாரிய நரம்புநார்கள் காணப் படுகின்றன. இவை கணத்தாக்கங்களை விரைவாக மண்புழுவின் முழு நீளத்திற்கும் கடத்துகின்றன. வாங்கி அங்கங்கள்:
மண்புழு பல்வேறு விதமான வெளித் தூண்டல்களுக்கும் தூண் டற் பேறடைகிறதென அறியப்பட்டுள்ளது. மண்புழுவில் மேற்றோல் வாங்கிகள், வாய்க்குழிவாங்கிகள் ஒளிவாங்கிகள், ஆகியவை உண்டு. (அ) மேற்றோல்வாங்கிகள், உடற்சுவரைப்பற்றி விவரிக்கும் பொழுது இவை ஏற்கனவே விவரிக்கப்பட்டுள்ளது. - (ஆ) வாய்க்குழி வாங்கிகள் - பொதுவான அமைப்பில் மேற்ரோல் வாங்கிகளையே ஒத்திருக்கின்றன. ஆனால் இவை பெருமளவிற் காணப்படுகின்றன. இவ்வரங்கிகள் இரசா யனத் தூண்டலைப் பெறுகின்றனலென ஊகிக்கப்படுகின்றது. இ ஒளி வாங்கிகளும் மேற்றோவிலேயே காணப்படுகின்றன. வயிற்றுப்புறத் தைத் தவிர ஏனைய பகுதிகளில் இவை உண்டு. "முதற்றுண்டத்திலும் வாய்முன்னங்கத்திலும் பெருமளவிலுள்ளன.
தொண்டை தொண்டைக்குரிய
கழிநீரகக்கான்கள் - தொண்டைக்குரிய
கழிநீரகங்கள்
அரைப்புப்னப்
கவசத்திற்குரிய
கழி நீரகங்கள்
பிரிசுவருக்குரிய
கழிநீரகங்கள்
படம் 82 . கழிநீராகத் தொகுதி

- 149 -
கழிவுத்தொகுதி:
= "7 - Fங்க பா: " TIP - 11 (11 மண்புழுவிற் கழிநீரகங்கள் நைதரசன் கழிவுப்பொருள்கள் அகற்று வதற்கு உதவுகின்றன. பெரத்திமா சாதியைச் சேர்ந்த மண்புழுவில் கழிநீரகங்கள் மிகச் சிறியனவாயும் ஒவ்வொரு துண்டத்திலும் அதிக எண்ணிக்கையிலும் காணப்படும். பெரத்திமாவில் முதலிரு துண்டங்களை விட ஏனைய துண்டங்களிலெல்லாம் கழி நீரகங்களுண்டு, அவை யாவன (1) பிரிசுவருக்குரிய கழிநீரகங்கள் - இவை பிரிசுவரிற் காணப்படும். (2) கவசத்திற்க்குரிய கழிநீரகங்கள் - இவை தோலின் மேற்பகுதியிற் காணப்படும். (3) தொண்டைக்குரிய கழிநீரகங்கள் - இவை தொண்டையைச் சுற்றிக்காணப்படும்,
அண்மையான
அவயவும்
சேய்மையான
அவயவம்
நேரானசோணை =
ப- 14)
தி ப் ர் சட்டம்
பு: பா புட்டபாபு (3
11 THAT புனல் பல்
த கார்ட் .. - கே 7 11-11ம் கல்
படம் 83. பிரிசுவருக்குரிய கழிநீரகம்

Page 82
- 150 -
(1) பிரகவருக்குரிய கழிநீரகம் :
15 - வது துண்டத்திற்குப் பின்னாலிருக்கும் பிரிசுவர்களின் முன்புறமும் பின்புறமும் இவை காணப்படும். ஒரு பிரிசுவருக்குரிய கழிநீரகத்தை எடுத் துக்கொண்டால் அதனிற் பின்வருவனவற்றைக் காணலாம். 1) ஒரு புனல் அல்லது கழிநீரகவாயும் அதைத் தொடர்ந்து ஒடுங்கிய குழாய் ஒன்றுமுண்டு, [11) கழி நீரகத்தின் உடல். இதில் ஒரு குறுகிய நேரான சோணையும் நீண்டு சுருளியாகச் சுற்றப்பட்டு ஒன்றோடொன்று பிணைந்த ரிலையில் ஒரு தடமும் உள்ளன. - (ii) முனைக்குரிய கழிநீரகக்கான். இது நீளத்தில் மாறுபடும், இது பிரிசுவருக்குரிய கழிவுக்கால்வாயுட் சென்றடைகின்றது.
புனல் அல்லது கழிநீரகவாயினூடாக கழிநீரகம் உடற்குழியுடன் தொடர்பு கொண்டுள்ளது. ஒரு பெரிய மையக்கலத்தைச் சுற்றி எட்டு அல்லது ஒன்பது பிசிருள்ள விளிம்புக் கலங்கள் உள்ளன. இவை மேல் உதடு எனப்படும். நான்கு அல்லது ஐந்து கலங்கள் கீழுதட்டைச் சேர்ந்தன. கீழுதட்டுக்கலங்கள் மிக நெருக்கமாகக் காணப்படும். மேலுதட்டிற்கும் கீழுதட்டிற்கும் இடையேயுள்ள துவாரம் சீறு நீரக வாயாகும். புனலில் இருந்து புறப்படும் ஒடுங்கிய பிசிர்களையுடைய குழாய் கழி நீரகட்டலினுள் நேரான சோணையிலும் சுருளிபோன்றுமுறுக் கப்பட்ட சோணையிலும்) பல தடங்களாக வளைந்து கழிநீரகக்கால்வாயை அடைகிறது. கழிநீரகத்தின் முறுக்கப்பட்ட தடம் நேரானதடத்திலும் இருமடங்கிலும் பெரியது. தொடக்கம் 11 முறுக்குகள் வரை காணப் படலாம், நேரான சோணயில் நான்கு சமாந்தரக்குழாய்களும், முறுக்கப் பட்ட தடத்தின் கீழ்ப்பகுதியில் மூன்று சமாந்தரக்குழாய்களும், மேற் பகுதியில் இரு சமாந்தரக்குழாய்களும் காணப்படும். பொத்தி மாவில் புனலும் கழிநீரக உடலும் ஒரே துண்டத்திலேயே உள்ளன.
15-வது துண்டத்திற்குப் பின்னாலுள்ள பிரிசுவர்கள் ஒவ்வொன்றி லும் நான்கு வரிசைகளில் பிரிசுவருக்குரிய கழி நீரகங்கள் காணப்படும். இவற்றில் இருவரிசைகள் பிரிசுவரின் முன்பக்கமாகவும் இரு வரிசைகள் பின்பக்கமாகவுமுள்ளன. ஒவ்வொரு பிரிசுவரின் முன் பக்கத்திலும் 40 தொடக்கம் 50 கழிநீரகங்களும் பின்பக்கத்தில் 40 தொடக்கம் 50 கழிநீர கங்களும் காணப்படும். இக்கழிநீரகங்களின் முனைக்கான்கள் ஒரு சோடி பிரிசுவருக்குரிய கழிவுக்கால்வாய்களினுள் திறக்கின்றன. ஒவ்வொரு துண்டத்திலும் காணப்படும் இக்கழிவுக்கால்வாய்கள் மண்புழுவின் மேற் பக்கமாகவுள்ள சிறுகுடலுக்கு மேலான - கழிவுக்கால்வாய்களை வந்தடை கின்றன.
இவ்விரண்டு பெரிய கழிவுக்கால்வாய்களும் உடலின் நடுக் கோட்டில் அருகருகே செல்கின்றன. 1 மேற்பக்கக் குருதிக்கலனுக்குக்

உ 151 -
கீழாகக் காணப்படும் இக்கால்வாய்கள் 15- வது துண்டத்திலிருந்து கடை சித்துண்டம் வரை செல்கின்றன. ஈற்றில் இப்பெரிய கால்வாய்கள் ஒவ்வொரு துண்டத்திலும் உடலினுள் கழிவுப்பொருட்களைச் சேர்க்கின் றன. உணவுக்கால்வாயிலுள்ள இச் சிறு துவாரங்களைச் சுற்றி இறுக்கித் தசைகள் காணப்படும். இத்தசைகள் கழிவுப் பொருட்ாள் உணவுக் குழாயை அடைவதைக் கட்டுப்படுத்துகின்றன.
கவசத்திற்குரிய கழிநீரகம்:
மூன்று வித கழிநீரகங்களிலும் இவையே மிகச் சிறியவை' முதல் இரு துண்டங்களை விட ஏனைய துண்டங்களில் இவை, காணப்படும். ஒவ் வொரு துண்டத்திலும் 200 தொடக்கம் 250 வரை உள்ளன. ஆனால்
கான்
பட்டப்படிப் பு
ரகF1:!'
தடம் தொண்டைக்குரிய
சுவாசத்திற்குரிய | சுழி நீரகம்
கழி நீரகம் படம் 84

Page 83
- 15 -
14, 15, 16 ஆகிய துண்டங்கள் ஒவ்வொன்றிலும் 2000 - க்கு மேற்பட்ட கவசத்திற்குரிய கழிநீரகங்கள் காணப்படுகின்றன. கவசத்திற்குரிய கழிரேகத்தின் அமைப்பு ஏறத்தாழ பிரிசுவருக்குரிய கழிநீரகத்தின் அமைப்பைப் போன்றதே. ஆனால் இவற்றில் புனல் - கிடையாது. அம்முனை மூடப்பட்டியிருக்கும், பிரிசுவருக்குரிய கழிநீரகத்தின் அரை வாசி நீளத்தையுடைய இவை ஒவ்வொன்றும் கழிநீரக நுண்டுளைகளினூ டாக தமது கழிவுப்பொருட்களை உடலுக்கு வெளியே அகற்றுகின்றன.
-- F - 1) தொண்டைக்குரிய கடுநீரகம் :
இவை கொத்துக் கொத்தாக 4, 5, 6 ஆகிய துண்டங்களில் தொண் டைக்கும் களத்திற்கும் இருபக்கங்களிலும் காணப்படும். ஒவ்வொரு கொத்திலும் அநேக கழி நீரகங்களுள்ளன. இக்கழி நீரகங்களில் இருந்து வரும் சிறுகான்கள் ஒன்றாகச் சேர்வதால் 4, 5, 6 ஆகிய துண்டங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சோடிக்கால்வாய்கள் காணப்படும். இக் கால்வாய்கள் கீழ்பக்க நரம்புநாணுக்கு இருபுறமும் முன்னாற் செல்கின் றன, 6- வது துண்டத்திலிருந்து வரும் சோடிக்கால்வாய்கள் 2-வது துண்டத்திலுள்ள வாய்குழியுட் திறக்கின்றன, 4-வது 5-வது துண்டத் திலிருந்துவரும் கால்வாய்கள் தொண்டைக்குட் திறக்கின்றன. இவற் றின் பருமன் பிரிசுவருக்குரிய கழி நீரகங்களை ஒத்திருக்கும். ஆனால் புனல் கிடையாது.
இனப்பெருக்கத் தொகுதி :
மண்புழு இருபாலான விலங்காகும். அதாவது ஒரு புழுவிலேயே ஆண், பெண் இனப்பெருக்க அங்கங்கள் காணப்படும்.
ஆண் இனப்பெரும் அங்கங்கள் :
மண்புழுவின் 10-ம் துண்டத்திலும், 11-ம் துண்டத்திலும் வயிற்றுப் புறமாக ஒவ்வொரு சோடி விதைப்பைகள் உண்டு. ஒவ்வொரு விதைப் பையிலும் முற்புறமாக ஒரு சோடி விதைகளும் அவற்றிற்குப் பின்னால் ஒரு சோடி சுக்கிலப்புனல்களும் சுக்கிலப்புனல்களில் பிசிர்களுண்டு. 11-ம், 12-ம் துண்டங்களிலுள்ள இரு சுக்கிலப்புடகங்கள் முறையே 10-ம், 11-ம் துண்டத்திலும் உள்ள விதைப்பைகளுடன் தொடர்பு கொண்டுள்ளன. ஒவ்வொரு விதையும் விரல்கள் போன்ற அமைப்பை யுடைய சிறிய வெண் உடல்களாகத் தோற்றமளிக்கும், ஒவ்வொரு சுக்கிலப்புனலிலிருந்தும் ஒரு அப்பாற் செலுத்தி கீழ்நோக்கி 18 -ம் துண் டம்வரை செல்கின்றது. அப்பாற் செலுத்திகளின் உட்புறம் முழுநீளத் திற்கும் பிசிர்களையுடையன. ஒரு சோடி முன்னிற்குஞ் சுரப்பிகள் 17-ம்
றேமளித்க்ேசி முழுக்கம்

- 153 -
மூளை கார்
Ahid.சி -
உணவுக்கால்வாய்
தொண்டைக்கீழ்த்திரட்டு
விந்துறை
- விதைகள்
விதைப்பை
சுக்கிலப்புனல்
FI+நர்
BE
சுக்கிலப்புடகங்கள்
சூலகம்
கலகக்கான் |
அப்பாற்செலுத்தி
துணைச்சுரப்பி
பொதுக்கான் (முன்னிற்
குஞ்சுரப்பி விந்துக்கான்)
முன்னிற்குஞ்சுரப்பி துணைச்சுரப்பி
-வயிற்றுப்புற நரம்புநாண்
டி.
படம் 85 - இனப்பெருக்கத் தொகுதி -1, செப்பு 1

Page 84
- 15 -
துண்டத்திலிருந்து 20-ம் துண்டம்வரை நீண்டிருக்கக் காணலாம். ஒவ் வொரு முன்னிற்குஞ்சுரப்பியிலும் ஒரு பெரிய சுரக்கும் பகுதியும், ஒரு சிறிய சுரப்பு நடைபெறாத பகுதியும் உண்டு. முன்னிற்குஞ் சுரப்பிக் கான் சுரப்பியிலிருந்து வெளிவந்து அப்பாற்செலுத்திகளுடனும் சேர்ந்து ஒரு தடிப்பான தசையால் மூடப்படுகிறது. இதனாலுண்டாகும் தடித்த தசைக்கான்கள் குதிரைலாடம் போன்ற அமைப்பையுடையன், இப் பொதுமுன்னிற்கும் விந்துக்கானினுள் உள்ள மூன்று சிறிய குழாய்களும், மண்புழுவின் 18-வது உடற்சுவரிலுள்ள ஆண்பிறப்பாக்கித்துவாரங்களி னூடாக வெளித்திறக்கின்றன.
ராபட் ப் ப..
0ாமா
5}ம்
பு13!
ரிது குப்புற குருதிக்
தவன் குடலுக்கு மேலான
கன் வட்டத்தசை
ஒ7+
11.
வiைn
களம்
பபா
சுக்கிலப்புடகம்
பரபரப்ப
*aaraat)
பக்கக்களத்திற்குரிய
கலன் விதை - அப்பாற் செலுத்தி
வயிற்றுப்புற குருதிக்
கலன் " நரம்புநாண்
பரப்பப்
படம் 36 கு. வெ. விதைப்பையினூடாகவும் சுக்கிலப்புடகங்களினூடாகவும்
விதைகளிலே விந்துத்தாய்க்கவங்கள் உண்டாகி, சுக்கிலப்புடகங்களை யடைகின்றன. அங்கு அவை பிரிவடைந்து முதிர்ச்சியடைந்து விந்து களாகின்றன. முதிர்ந்த விந்துகள் மீண்டும் விதைப்பையையடைந்து. சுக்கிலப்புனலினூடாக அப்பாற் செலுத்தியையடைந்து வெளியேறு கின்றன.
பெண் இனப்பெருக்க அங்கங்கள் :
மண்புழுவின் 13-வது துண்டத்தில் ஒரு சோடி சூலகங்கள் உண்டு. வெண்ணிறப் புள்ளிகளாகத் தோன்றும் சூலகங்கள் 12-ம், 13-ம் துண்

- 155 -
டங்களைப் பிரிக்கும் பிரிசுவரில்," நரம்புநாணுக்கு இருபுறமாக ஒட்டியுள் ளன. சூலகத்தின் அமைப்பு நுணுக்கு காட்டியினூடாகப் பார்க்கும் பொழுது விதையின் அமைப்பையே கொண்டிருப்பதை அவதானிக் கலாம். சூலகங்களுக்குப் பின்னால் வட்டத்தட்டு வடிவில் புனல்களைக் கொண்ட ஒரு சோடி சூலக்க்கான்களுண்டு. குறுகிய இக்கான்கள் வயிற் றுப்புறமாக 14 - வது துண்டத்தின் நடுப்பகுதியில் பெண்பிறப்பாக்கித் துவாரத்தினூடாக வெளித்திறக்கின்றன.
இவற்றைத் தவிர மண்புழுவில் மூன்று சோடி விந்துறை 7, 8, 9-ம் துண்டங்களில் உள்ளன. விந்துறையில் குடுவையுருவான ஒரு கிளைக்குழாய் உண்டு. பெரத்திமாவில் இக்கிளைக்குழாயிலேயே வேறோர் மண்புழுவி லிருந்து பெறப்படும் விந்துகள் சேகரித்து வைக்கப்படுகின்றன. மூன்று சோடி விந்துறைகளும் 67, 78, 8/9 ஆகிய துண்டங்களின் தவாளிப்பு களில் விந்துறைத் துவாரங்களினூடாக வெளித்திறக்கின்றன.
மண்புழுவில் புணர்ச்சியும், புழுக்கூடு உண்டாதலும் :
மண்புழு இருபாலான விலங்காயிருந்தாலும் தற்கருக்கட்டல் நடை பெறுவதில்லை. புணர்ச்சியின்போது இருபுழுக்கள் ஒன்றுக்கொன்று எதிர்த்திசையிலும் வயிற்றுப்புறம் ஒன்றோடொன்று முட்டும் வகையிலும் இணைகின்றன. அப்பொழுது ஒரு புழுவின் 18-வது துண்டம் மறுபுழு வின் 6, 7, 8, 9-ம் துண்டங்களுள்ள பகுதியில் இருக்கும், பெரத்தீமா வில் ஆண்குறி கிடையாததால் ஆண்பிறப்பாக்கித் துவாரத்தைச்
IL((( இது 11 N1)ற்ற
படம் 87 # புணர்ச்சி
சுற்றியுள்ள பகுதி சிம்பிவடிவாக உயர்த்தப்பட்டு விந்துறைத்துவாரங் களுள் செலுத்தப்படுகிறது. அப்பொழுது 18-வது துண்டத்திலுள்ள ஆண்பிறப்பாக்கித்து வாரங்களினூடாக விந்துகள் ஒரு மண்புழுவி லிருந்து மறு மண்புழுவின் விந்துறைகளுள் செலுத்தப்படுகின்றன. புணர்ச்சியின் பின் புழுக்கள் பிரிகின் றன.

Page 85
-15 -
சக்கட்டுச் சேணப்பகுதியின் சுரப்புகளால் மென்சவ்வு போன்ற வளைய முண்டாகி, அது காற்றுடன் தொடர்பு கொள்ளும்பொழுது தடிப்படை கிரது. மண்புழு வளையத்திலிருந்து தன்னுடலை வெளியே இழுக்கும் பொழுது பெண்பிறப்பாக்கித் துவாரத்திலிருந்து முட்டைகள் அதனுட் சேருகின்றன. பின், வளையம் விந்துறைப் பகுதியைக் கடக்கும் பொழுது விந்துகள் வளையத்தையடைகின்றன, வளையம் புழுவினுடலிலிருந்து விடுபட்டவுடன் அதன் முனைகள் மூடிக்கொள்வதால் ஒரு புழுக்கூடு உண்டாகிறது. பெரத்திமாவின் புழுக்கூடுகள் இளம் மஞ்சள் நிறமாகவும் கோளவுருவாகவும் காணப்படும். புழுக்கூட்டினகத்தேயே முட்டை கருக்கட்டி முழு விருத்தியும் நடைபெறுகிறது. பொதுவாக ஒரு புழுக் கூட்டினுள் ஒரு புழுவே முழு விருத்தியடைகிறது.

கணம் - ஆத்திரப்போடா
விலங்குராச்சியத்திலேயே இக்கணம் மிகப் பெரிய கணங்களிலொன் முக விளங்குகிறது. எண்ணிக்கையில் அதிகமாகவிருப்பதுடன் மட்டு மல்லாது நிலம், நீர், வளி போன்ற பல்வேறு விதமான வாழிடங்களி லும் இக்கணத்தைச் சேர்ந்த விலங்குகள் வாழுகின்றன. முள்ளந்தண் டில்லா விலங்குகளுள் பறக்கும் இயல்பைப் பெற்றுள்ளவையான பூச்சி கள் இக்கணத்திலேயே அடங்குவனவாகும், சில ஆத்திரப்பொட்டுகள். தாவரங்களிலும் வேறு விலங்குகளிலும் ஒட்டுண்ணியாக வாழுகின்றன. நண்டு, இறால், சிங்கஇறால், பாணக்கிள், கரப்பான் பூச்சி, வெட்டுக்கிளி, வண்ணாத்திப்பூச்சி, தும்பி, நுளம்பு, ஈ, தேனீ, எறும்பு, கறையான், வண்டு, மூட்டைப்பூச்சி, அட்டை, மட்டத்தேள் போன்றவை இக்கணத் திலடங்குவன. அநேக பூச்சிகள் சமூகமாக வாழ்கின்றன. இவற்றில் தொழிற்பங்கீடுள்ளதை அவதானிக்கலாம், பொருளாதாரத்துறை யிலும் ஆத்திரப்பொட்டுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் காணப் படுகின்றன. நண்டுகள், சிங்க இறால், இறால் போன்றவை மனிதரால் உணவாக்கப்படுகின்றன. சிறிய கிரத்தேசியாக்கள் மீன்களின் முக்கிய உணவாகின்றன. பூச்சிகளும் சிலந்திகளும் அநேக புவிவாழ் முள்ளந் தண்டு விலங்குகளின் இரையாகின்றன. பயிர்களையும் சேமிப்பு உணவு களையும் வீட்டுப்பாவனைப் பொருள்களையும் பழவகைகளையும் துணிகளை யும் நாசஞ் செய்வதனால் பூச்சிகள் மனிதரின் எதிரிகளாகவுள்ளன. உண்ணி, தெள்ளு போன்ற ஆத்திரப்பொட்டுகள் மனிதரிலும் வீட்டு விலங்குகளிலும் நோயை உண்டாக்கிப் பரப்புகின்றன. நுளம்பு போன்ற பூச்சிகள் மவேரியாவையுண்டாக்கும் பிளாஸ்மோடியத்திற்கு காவியாக இருப்பதுடன் மனிதரிலிருந்து குருதியையும் உறிஞ்சுகின்றன, பசயும் நோய்க்கிருமிகள் பரவலடைவதற்கு உதவிசெய்கிறது. மனிதரைக் கொல் லக்கூடிய நஞ்சையுடைய சிலந்தி வகைகளும் கொடுக்கன், மட்டத்தேள் போன்றவையும், பூக்களில் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதற்கு உதவி செய்து மறைமுகமாக மனிதருக்கும் நன்மை செய்கின்றன, தேனீக்கள் தேனைச் சேகரித்து வைக்கின்றன.

Page 86
- 158 --
ஆத்திரப்பொட்டுகளின் உடல் புறத்தே துண்டுபட்டிருப்பதுடன் முட்டுகளையுடைய தூக்கங்களையும் கொண்டுள்ளது. தூக்கங்கள் வெவ் வேறு தொழில்களைப் புரிவதற்காகச் சிறப்பியல்புகள் பெற்றுள்ளன. உடல் கைற்றின் என்னும் பொருளாவான வெளிவன்சட்டைக் கொண்டுள்ளது. நரம்புத்தொகுதிவிருத்தியடைந்திருப்பதுடன் கண்களும் ஏனைய புலனங் கங்களும் பெரிதாகவிருப்பதனால் புறத்தூண்டல்களுக்கு விரைவில் தூண் டற்பேறடைகின்றன. கணம் அனலிடாவிற்கும் ஆத்திரப் போடா விற்கும் ஒத்த ' இயல்புகளிருப்பதால் அன் லிட்டுகளுக்கு ஒப்பான, மென்மையான உடலைக் கொண்ட, புழுக்களைப் போன்ற விலங்குகளி விருந்தே ஆத்திரப்பொட்டுகள் உற்பத்தியாகியிருக்க வேண்டுமெனக் கருதப்படுகிறது.
களம் - ஆத்திரப்போடாவின் இயல்புகள் :
இருபக்கச் சமச்சீரான உடல் அனுபாத்து முறையில் துண்டுபட்டுள் ளது. உடலின் முன்று பகுதிகளான தலை, நெஞ்சறை, வயிறு ஆகிய பகுதிகள் வெவ்வேறு விலங்குகளிலும் வெவ்வேறு விதமாக ஒன்று சேர்ந் துள்ளன. பெரும்பாலானவற்றில் ஒவ்வொரு துண்டத்திலும் முட்டுக் களாலான ஒரு சோடித்தூக்கம் காணப்படும். இவற்றுள் ஒரு சோடி யாவது தாடையாக மாறுபாடடைந்திருக்கும். தலையாகு செயல் (Cephalization) திறம்பட நடைபெற்றிருக்கக் காணலாம், உடலில் பிசிர்கள் காணப்படமாட்டா. ஆனால், மேற்றோற்கலங்களினாற் சுரக்கப் பட்ட கைற்றின் என்னும் பொருளாலான வெளிவன்கூடு உண்டு. இது கழற்றப்பட்டு, விலங்கு விரைவான வளர்ச்சியடைந்து பின்பு புதிய வெளிவன்கூடு உண்டாக்கப்படும். துண்டங்களுக்கிடையேயுள்ள பகுதி யிற் காணப்படும் புறத்தோல் மெல்லியதாகவும் மடியக்கூடியதாகவும் இருப்பதால் உடலசைவுகள் ஏற்படமுடிகிறது. வெளிவன்கூடு பாது காப்பு அளிப்பதுடன் தசைகள் ஒட்டியிருப்பதற்காக அகமுனையங்கள் (Apodemes) எனப்படும் உடற்புற எறியங்களைக் கொண்டுள்ளன. தசை கள் கீற்றுத்தசைகளாக விருப்பதுடன் சிக்கலான அமைப்பைக் கொண்டு திறமையாகத் தொழில்படுகின்றன.
உடற்குழி குருதிக்குழிவானதாகும் (Haernocoel). உண்மையான உடற்குழி சிறிதாக்கப்பட்டு, குருதிக்கலன் தொகுதி விரிவடைந்து உடலங்கங்கள் குருதியைக்கொண்ட குழியினுள் காணப்படுகின்றன. ஆகவே, குருதிச்சுற்ருட்டத் தொகுதி திறந்த தொகுதி அல்லது கலனி டைக்குழித் தொகுதி (LaCULar System) என அழைக்கப்படுவதுண்டு. குருதிக்குழிவான உடற்குழியில் முதுகுப்புறமாகவுள்ள வாயுருவைக் கொண்ட இதயம் (Heart with astium) உண்டு. இது சுருங்குவதனால்

- 159 - நாடிகளினூடாக குருதி பாய்ந்து உடல் அங்கங்களுக்கும் இழையங்கட் கும் செல்கிறது. பின்னர் குருதிக்குழிவிலிருந்து இதயத்தை வந்தடைகிறது',
மையநரம்புத்தொகுதியில் முளைத்திரட்டுகளும் கீழ்ப்புற நரம்பு நாணும் உண்டு, நரம்புநாணில் சோடியாக திரட்டுகளை பிணைப்புகள் (Commissure5) தொடுக்கின்றன. உணர்கொம்புகள், உணர்மயிர்கள், தனிக்கண்கள், கூட்டுக்கண்கள், செவியங்கம் (பூச்சிகளில்), " நிலைச் சிறைப்பை (கிறஸ்ரேசியாக்களில்) ஆகிய புலனங்கங்கள் உண்டு. சுவா சித்தல் பூக்களாலும், வாதனாளிகளினூடாகவும் நுரையீரலேடுகளாலும் உடற்பரப்பினூடாகவும் நடைபெறுகிறது. அரைச்சந்துச் சுரப்பிகள் (Coxal glands) அல்லது பசுஞ்சுரப்பிகள் (Green glands) அல்லது குட லுடன் தொடர்புகொண்டுள்ள மல்பீசியின் சிறுகு ழாய்கள் (MalpighniaII tubules) ஆகியவை கழித்தலங்களாகத் தொழில்படுகின்றன.
-- பொதுவாக ஆண் பெண் பாலங்கங்கள் வெவ்வேறு விலங்களிலேயே காணப்படும். ஆணும் பெண்ணும் பெரும்பா லாக ஒரே மாதிரியிருப்ப தில்லை. அநேகமானவற்றில் உட்கருக்கட்டலே நடைபெறுகிறது. ஒடுகளை யுடைய முட்டைகளுள் கருவூண் காணப்படும்.
மேற்கூறிய இயல்புகளுள் முட்டுக்களைக்கொண்ட தூக்கங்கள், வெளி வன்கூடு, குருதிக்குழிவான உடற்குழி, உடலில் பிசிர்கள் இல்லாமை ஆகிய இயல்புகள் ஆத்திரப்போடாவின் சிறப்பியல்புகளெனவாம்.
அனுபாத்து உருவாகு முறை :
அனுபாத்து உருவாகுமுறை அனெலிட்டுப்புழுக்களிலேயே திறம்படக் காணக்கூடியதாயிருந்த போதிலும் ஆத்திரப்பொட்டுகளிலும் ஓரளவிற் குத் தெளிவாகத் தென்படுகிறதெனலாம். தொடராக ஒன்றன்பின் ஒன்றாகக் காணப்படும் தூக்கங்களே அனுபாத்து உருவாகுமுறையை தெளிவாகக் காட்டுகின்றன. சில அங்கங்களின் எண்ணிக்கையும் பருமனும் குறைக்கப்பட்டுள்ளதனாலும், தலையாகுசெயல். நடைபெற்றுள்ளதனாலும், அனெலிட்டுகளிலும் பார்க்க ஆத்திரப்பொட்டுகளில் அனுபாத்து உரு வாகுமுறை வேறுபாடடைந்துள்ளது. - ஆத்திரப்பொட்டுகளில் உடலி அள்ள அனுபாத்துத் துண்டங்களின் எண்ணிக்கை மாறுபடக்கூடிய தெனினும் முன்முனை யிலுள்ள சில துண்டங்களின் சேர்க்கையினால் வரையறைவான தலையொன்று உருவாகியிருக்கும், படம் வெளிவள் கூடு :
ஒரு படையிலுள்ள மேற்றோற் கலங்களின் சுரப்பினால் ஆத்திரப் பொட்டுகளில் கலங்களற்ற சிக்கலான புறத்தோல் ஒன்று உண்டாகிறது.

Page 87
- 160 -
இதுவே வெளிவன்கூடாகும். தடிப்பான புறத்தோல் உடலை முடிக் கொள்வது மட்டுமல்லாமல் வாய்வழி, குதவழி, சுவாச அமைப்புகள் ஆகியவற்றின் உட்போர்வையாகவும் அமைந்துள்ளது. தூக்கங்களை முடியும் புறத்தோல் காணப்படும், உடல் முற்றாக ஒரே சீராக புறத்தோல் காணப்படமாட்டாது. -வன் கோது (Sclerites /., எனப்படும் தடித்த தகடுகளாகவும், அத்தகடுகளை ஒன்றோடொன்று இணைக்கும் வளையுமியல் பையுடைய மூட்டு மென்சவ்வுகளாகவும் (Articular Imembraries) புறத் | தோல் காணப்படும். எனவே, வன்கோதுகள் அசையக்கூடியனவாயுள் என, உடலின் சில பகுதிகளில் மேற்ரேல் உட்புறமாக மடிந்து அக முளைகள் உண்டாகி தசைகள் ஒட்டியிருப்பதற்கு வசதியளிக்கிறன. வயிற்றுப் பகுதி வளைவதற்கும், த-ை நெஞ்சறைப் பகுதித் தூக்கங்களின் அடிப்பகுதியின் அசைவிற்கும் இத்தசைகள் கி.தவுகின்றன. வாதனாசிக் குழாய்களிலும் "பூக்களிலும் புறத்தோல் மிக மெல்லியபடையாகவும் உட்புகவிடுந்தன்மையுள்ளதாயும் காணப்படுகிறது. புவிவாழ் ஆத்திரப் பொட்டுகளில் வெளிவன் கூடு இழையங்களிலிருந்து நீரும் உடற்பாய் பொருளும் இழக்காமல் இருக்கும் வண்ணம் பாதுகாப்பளிக்கின்றது. அணங்குப்புழுக்களிலும் குடம்பிகளிலும் வெளிவன்கூடு மீள்சக்தியுடைய தாயுமுள்ளது (Elastic). + வெளிவன்கூடு விலங்குகளின் வளர்ச்சியைத் தடைப்படுத்துவதால் அவற்றின் பருமன் ஒரு எல்லைக்குட்பட்டதாயுள் ளது. எனவே, ஆத்திரப்பொட்டுகள் வெளிவன்கூட்டைக் கழற்றி வளர்ச்சியடைந்து பின் புதிய வெளிவன் கூட்டை யுண்டாக்கிக்கொள்கின் றன. பேரும்பாலான ஆத்திரப்பொட்டுகளில் நான்கு முதல் ஏழு முறை வரை தோல் கழற்றப்படுகிறது. தோல் கழற்றப்படுமுன் புதிய மென்மை யான வெளிவன்கூடொன்று அகத்தே உண்டாகும். பழைய வன்கூடு தளர்ந்து முதுகுப்புறமாகத் திறக்க, : விலங்கு அதிலிருந்து மெது வாக வெளிவந்து சாற்றையோ நீரையோ விழுங்கிப் பருக்கிறது. புதிய மென்மையான வெளிவன்கூட்டில் இரசாயன மாற்றங்களேற்பட்டு விரைவில் தடிப்படைகிறது. புறத்தோலிலுள்ள முக்கிய பொருள் கைற்றின் Chitin) ஆகும். இது ஒரு நைதரசன் பல்சக்கரைட்டு - பல்குளுக்கோசமைன் (Cg H,20N) X ஆகும். இவ்விரசாயனப்பொருள் நீர், அற்ககோல், காரம், ஐதான அமிலம், பெரும்பாலான விலங்கு சுளின் சமிபாட்டுச்சாறு ஆகியவற்றில் இலகுவில் கரையமாட்டாது. இக்கைற்றின்படையில் கல்சியங்காபனேற்று உட்புகுத்தப்படலாம் அல் லது உட்புகவிடாத தன்மைவாய்ந்த கைற்றினல்லாத படைகளால் மூடப்பட்டிருக்கலாம். 1 கிரத்தேசியாக்களிலும் பூச்சிகளிலும் புறத் தோல் இரு முக்கிய படைகளைக் கொண்டிருக்கும். மேற்றோலுக்கு அடுத்துள்ள படை புறத்தோலகம் (Endocuticle) எனவும், அதற்குப் புறத்தேயுள்ள படை மேற்புறத்தோல் (Epicuticle) எனவும் பெயர் பெறும், புறத்தோலகம் பல படைகளிற் கைற்றினைக்கொண்டுள்ளது.

- 161 -
இதில் புரதங்கள் சேர்ந்திருக்கும். மேற்புறத்தோளில் தடித்த புரதப் படைக்கு மேலே மெல்லிய இலிப்பிட்டுப்படை காணப்படும். இலிப் பிட்டுப்படையே நீரை உட்புகவிடாது தடுக்கிறது. இதற்குப் பாது காப்பாக ஒரு சிமெந்துப்படை காணப்படலாம்,
கணம் - ஆத்திரப்போடா (Arthropoda)
வகுப்பு : 1,
கிறஸ்ரேசியா Crustacea) 2. ஓனிக்கொபோரா Onychophora)
இன்செக்ற்றா (Insecta) 4. அரக்னிடா (Arachnida) 5. மிரியப்போடா (Myriapoda)
சணம் - ஆத்திரப்போடா (Arthropoda) - Fப்பு! வகுப்பு - கிரத்தே சியா (Crustacea) வகுப்புப்பிரிவு - நலகொஸ்திராக்கா (Malacostraca) வருணம் - டெகபோடா (Decapoda) வருணப்பிரிவு - மக்ராரு (Macruாக) சாதி - பொளயுஸ் (PEnaEus)
(இருங் - Prawn)
வகுப்பு - கிறஸ்ரேசியா ?
நண்டு, இறால், சிங்க இறால், சிறிம்பு, பாணக்கிள்கள், நீர்த்தெள்ளு ஆகியவை கிறஸ்ரேசியா என்னும் வகுப்பிலடங்குவனவாகும். " பெரும் பாலானவை கடலில் வாழ்ந்தாலும் புவிவாழ்வுக்குரியனவும் நன்னீரில் வாழ்வனவும் காணப்படுகின்றன. சுயாதீனமாக வாழும் இனங்களும் ஒரு சில ஒட்டுண்ணிகளும் ஓரட்டிலிலுண்ணுமியல்புள்ளவைகளும் இவ் வகுப்பில் உண்டு, தலைப்பகுதியில் ஐந்துதுண்டங்கள் இணைந்துள்ளன. அத்துண்டங்களில் ஐந்து சோடித்தூக்கங்கள் உள்ளன, அவையாவன : இரு சோடி உணர்கொம்புகள், ஒரு சோடி பக்கச்சி புகங்கள், இருசோடி அனுக்கள், வயிற்றுப் பகுதியில் துண்டங்கள் தெளிவாகத் தென்படும். அதன் பின் முனையில் புச்சம் (Telson) உண்டு. - தலையையும் நெஞ் சறையின் ஒரு பகுதியையும், டி பரிசை மூடி (Carapace) சாதாரண மாகக் காணப்படும். 1 பூக்களே சுவாசித்தல் அங்கங்களாகும். ஒரு சோடி அல்லது இரண்டு சோடி பசுஞ்சுரப்பிகள் கழித்தலங்கங்களாகத் தொழில்புரிகின்றன. மல்வீசியின் குழாய்கள் காணப்பட மாட்டா.
Z - 11

Page 88
- 162 -
வகுப்புப்பிரிவு - மலகொல் திராக்கம் :
உடல் பத்தொன்பது துண்டங்களைக் கொண்டது. தலையில் ஐந்து துண்டங்களும் நெஞ்சறைப்பகுதியில் எட்டுத் துண்டங்களும் வயிற்றுப் பகுதியில் ஆறு துண்டங்களும் உண்டு. தலை நெஞ்சறைத்துண்டங் களுடன் இணைந்திருக்கும். பரிசை மூடி. தலையையும் நெஞ்சறையையும் மூடியிருக்கும். வயிற்றுப்பகுதியில் தூக்கங்கள் உண்டு, காம்புகளை யுடைய கண்களுண்டு. உணர்கொம்பின் வெளிக்கான் மூட்டு செதில் போன்றது. வாற்பாதங்களும் புச்சமும் வால்விசிறியாகத் தொழில் படுகின்றன.
வருணம் - டெபோடா : |
11 Lபடி நா சி = பரிசைமூ டி நெஞ்சறையை முற்றாக மூடியுள்ளது. ஓடத்தாடை (Scaphognathite) எனப்படும் அனுவின் வெளிக்கான்மூட்டு (Exopodite of Maxilia) பெரிதாயிருக்கும். மூன்று சோடி அனுக்காலிகள் (Maxillipedes) உண்டு. நெஞ்சறைப்பகுதித் தூக்கங்கள் ஒரு கிளை கொண்டதாயிருக்கும் (Uniramous).
0 ர
வருணப்பிரிவு - நக்மாறா !
வயிற்றுப்பகுதி பெரிதாயிருக்கும்.
பெனேயுஸ் (பீனியஸ் - Penaeus)
புறவியல்புகள் : 13ாடா
1 பா படி =5
இறால்கள் நன்னீரிலும் கடல் நீரிலும் காணப்படுகின்றன வெனினும் பெனேயுஸ் என்னும் இறல் சாதி கடல் நீரிலேயே காணப்படுகிறது. இறா லின் உடல்கைற்றினென்னும் பொருளாலான வெளிவன்கூட்டினால் மூடப் பட்டுள்ளது. இதில் கல்சியம் உப்புக்கள் சேர்வதனால் மேலும் வன்மை யடைகிறது. இறவின் உடலை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். முன் பகுதி தலை நெஞ்சு என்றும் பின்பகுதி வயிறு என்றும் அழைக்கப்படும். இறளின்உடல் முற்றாகத் துண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள போதிலும் வயிற்றுப்பகுதியிலேயே துண்டங்கள் தெளிவாகத் தெரிகின்றன. முற் பகுதியில் துண்டங்கள் இணைந்துள்ளன. இருவின் தலைநெஞ்சுப்பகுதியில் பதின்மூன்று துண்டங்களும் ஒவயிற்றுப் பகுதியில் ஆறு துண்டங்களும் 'உள்ளன,, |

- 163 -
தலையும் நெஞ்சுப் பகுதியும் இணைந்தே தலைநெஞ்சுப்பகுதி ஏற்பட் டுள்ளது. இப்பகுதியிலுள்ள பதின்மூன்று துண்டங்களில் ஐந்து துண்டங் கள் தலையையும் எட்டுத்துண்டங்கள் நெஞ்சுப்பகுதியையும் சேர்ந்தவை யாகும். வயிற்றுப்பகுதியிலுள்ள ஆறுதுண்டங்களைத் தொடர்ந்து கூம்புரு வான புச்சம் (Telson) உள்ளது. இதை ஒரு துண்டமெனக் கொள்ள
உணர்கொம்பு
சிற்றுணர்கொம்பு
அலகுருளை
படம் 88 - இருல்
தலைநெஞ்சு
நீந்துபாதம்
வயிறு
வாற்பாதம்
ராசி 21 ;

Page 89
- 164 -
முடியாது. ஒவ்வொரு துண்டத்திலும் கீழ்ப்புறமாக ஒரு சோடி தூக்கங் கள் உள்ளன, தூக்சுங்கள் மூட்டுகளைக்கொண்டிருப்பதுடன் கைற்றினா லான சுவசங்களையுங் கொண்டுள்ளன.
தலைநெஞ்சுப்பகுதியை மூடிக் கைற்றினால!ான முதுகுப்பட்டை (Tergum) உண்டு. முதுகுப்புறப்பரிசை (dorsalshield) முன்புறத்தே முட் களுள்ள அலகுருமுளையாக நீட்டப்பட்டுள்ளது. தலைப்பகுதிக்கும் நெஞ் சுப்பகுதிக்குமிடையே முதுகுப்பட்டையிலே ஒரு கழுத்துத் தவாளிப் பைக் - காணலாம். நெஞ்சுப்பகுதியில் முதுகுப்பட்டை இருபக்கங்க ளிலும் உடலுடன் ஒட்டியிருப்பதில்லை. உடலுக்கும் முதுகுப்பட்டைக் குமிடை யேயுள்ள இடைவெளி பூவறை (Gill chamber) எனப்படும்,
முதுகுப்பட்டை
மேற்றொடைத்தட்டு புடைப்பட்டை
முதற்கான் மூட்டு உட்கான் மூட்டு வெளிக்கான்மூட்டு
- மார்புப்பட்டை படம் 39 -- உடலின் கு. வெ. (வ லரபடம்) இதில் இருலின் சுவாச அங்கங்களான பூக்களிருப்பதைக் காணலாம். அல குருமுளையின் அடிப்பாகத்தே காம்புகளையுடைய இரு கூட்டுக்கண்கள் இருக்கக் காணலாம். வயிற்றுப்பகுதியின் மேற்புறமாக முதுகுப்பட்டை யும், கீழ்புறமாக மார்புப்பட்டையும் காணப்படும், பக்கங்களிலே கீழ் நோக்கி வளைந்திருக்கும் முதுகுப்பட்டைப்பகுதி புடைப்பட்டை எனப் படும். ஒவ்வொரு துண்டத்திலும் மார்புப்பட்டையின் பின்பகுதியில்! தூக்கங்கள் காணப்படும். தூக்கத்திற்கும் புடைப்பட்டைக்குமிடையே யுள்ள பகுதி மேற்றொடைத்தட்டு எனப்படும். ஒரு துண்டத்தின் முதுகுப் பட்டையும் புடைப்பட்டையும் - அடுத்துள்ள முதுகுப்பட்டைக்கும் புடைப்பட்டைக்கும் மேலாக ஓரளவு படிந்திருக்கும்.
துக்கங்கள் !
இறாலிற் காணப்படும் பத்தொன்பது சோடித் தூக்கங்களும் ஒரு பொதுவான அமைப்பிலிருந்தே பெறப்பட்டதாகக் கொள்ளலாம்,

- 165 =
"வயிற்றுப் பகுதியிலுள்ள ஒரு தூக்கத்தை பொதுமைப்பாடடைந்த் தூக்கமெனக் கொள்ளலாம், இதில் இரு துண்டங்களாலான முதற்கான் மூட்டு (Protopodite) ஒன்றுள்ளது. உடலுடன் ஓடியுள்ள துண்டம் அரைச்சந்து (Coxa) என்றும், அடுத்துள்ளது அடிச்சந்து (Basis) என் றும் அழைக்கப்படும். அடிச்சந்தில் உட்கான் மூட்டு (Endopodite]. வெ ளிக்கான், ட்டு (Exopodite) என இரு முளைகளுண்டு. உட்கான் மூட்டு நடுக்கோட்டின் பக்கமாகவும், வெளிக்கான்முட்டு வெளிப்புற மாகவும் அமைந்துள்ளன, இவற்றுள் வெளிக்கான்மூட்டு உட்கான் மூட்டைவிடப்பெரியது. இவ்வாறான தூக்கம் இரு கிளைத்தூக்கம் (Biramous appendage) எனப்படும்,
தலை நெஞ்சுப்பகு தித் தூக்கங்கள் ;
தலைநெஞ்சுப்பகுதியிலுள்ள பதின்மூன்று துண்டங்களிலும் துண்டத் திற்கொரு சோடியாக பதின் மூன்று தூக்கங்களுள் ளன. இவற்றுள் ஐந்து சோடிகள் தலைக்குரியவை. ஏய எட்டுச் சோடிகள் நெஞ்சுக்குரியவை.
2
2
1, முதற்கான் மூட்டு
2. சவுக்கு முளை 3. நிலைச்சிறைப்பைத் துவாரம் - 4. உட்கான்மூட்டு - 5. வெளிக்கான் மூட்டு
6. சுழித்தற்கான் துவாரம் , T, சிற்றுணர்கொம்பு
II. உணர்கொம்பு
- III. சிபுகம் 1V, முதலாவது அனு -II - V, இரண்டாவது அனு
படம் 90 - தலைப்பகுதித் தூக்கங்கள் 1

Page 90
- 15 -
திலைக்குரிய தர்க்கங்கள் : ஐந்து தலைக்குரிய தூக்கங்களும், சிற்றுணர் கொம்பு, உணர்கொம்பு, சிபுகம், சிற்றனு, அனு என்பனவாகும். இவற் றுள் முதலிரு சோடிகள் புவன ங்கங்களாகவும், ஏக்க ய மூன்று சோடி கள் வாயங்கங்களாகவும் தொழில் புரிகின்றன, சமநிலைப்படுத்து மங்கமான நிலைச்சிறைப்பை சிற்றுணர் கொம்பிலுள்ளது.
1. சிற்றுணர்கொம்பு (Antennule) :
இது இறலின் முன்முனையில் கண்காம்பிற்கடியில் காணப்படுகிறது. இதன் முதற்கான்முட்டில் மூன்று பாதப்பாத்துகள் காணப்படுகின்றன, அடியிலுள்ள பாதப்பாத்திற் காணப்படும் குழியில் நிலைச்சிறைப்பை யின் துவாரம் உள்ளது. நுனியிலுள்ள பாதப்பாத்தில் பல் மூட்டுகளா லான இரு சவுக்கு முளைகளுள்ளன. இவை உட்கான்முட்டிற்கும் வெளிக்கான் முட்டிற்கும் சமானமானவையாவென்பது சந்தேகத்திற் - கிட்மானதே.ம்
பாடம் 1 2. டணர்கொம்பு (Antenna] :
இதில் முதற்கான்முட்டு இரு பாதப்பாத்துகளைக் கொண்டுள்ளது. அவை அரைச்சந்து, அடிச்சந்து எனப்படும், உட்கான்மூட்டு பல மூட்டுகளைக் கொண்ட நீண்ட இழை போன்றது. வெளிக்கான்முட்டு அகன்ற முக்கோணவடிவமான தட்டுப்போன்றது. அரைச்சந்திற் காணப்படும் சிறிய எறியத்தில் பசுஞ்சுரப்பி யெனப்படும் கழித்தற்கான் திறக்கின்றது.
3, சிபுகம் (Mandible) :
முதற்கான்முட்டு சுண்ணாம்பு சேர்ந்து தடித்துக் காணப்படுகிறது. அதனுட்பகுதி பற்களைப்போன்றது. இரு மூட்டுகளைக் கொண்ட பரிசவு துப் பொன்றுள்ளது. - இதுவே உட்கான்மூட்டாகும், வெளிக்கான் மூட்டு இதிலில்லை. இருபக்கத்துச் சிபுகங்களும் வாயினிருமருங்கிலும் காணப்படும். உணவை மெல்லும்போது இவை பக்கவாட்டில்
அசைகின்றன. 4. சிற்றறு (Maxillule) அல்லது முதலாவது அனு :
இது உருவத்தில் மற்றவையைவிடச் சிறியது. இதன் முதற்கான் முட்டு இரு இலைகள் போன்ற சோணைகளாலானது. - சிலிர்முட்கள் செறிந்த தாடைகளாக இச்சோணைகள் உள்ளே நீட்டப்பட்டிருக்கும், உட்கான்முட்டு இரு மூட்டுகளைக் கொண்டது. வெளிக்கான் மூட்டு கிடையாது.

- 16
5. இரண்டாவது அனு (2-nd Maxilla) :
முதற்கான் மூட்டு நான்கு சோணைகளாகப் பிரிக்கப்பட்டு தாடையடி முனையாகவுள்ளது Gnathobase). உட்கான் மூட்டு சிறிதாயும் மூட்டு களாகப் பிரிக்கப்படாமலும் காணப்படும். வெளிக்கான் மூட்டு அகன்ற தாடையாகத் தொழில்படுவதுடன் சுவாசித்தலிலும் ஈடுபடுகிறது. நெஞ்சுப்பகுதித் தூக்சுங்கள் :
முதன் மூன்றுசோடி நெஞ்சுப்பகுதித்தூக்கங்களும் உணவுட்கொள்ளு தலில் பங்கு கொள்கின்றன. இவை அனுக்காலிகள் (Maxillipeds) அல்லது பாதத்தாடைகள் (Foot jawis ) என அழைக்கப்படும். அடுத்துள்ள இந்து சோடித்து க்கங்களும் நடக்குங்கால்கள் எனப்படும் நெஞ்சுப்பகுதித் தூக் கங்களெல்லாவற்றிலும் அரைச்சந்து, அடிச்சந்து என்னும் இரு மூட்டுக் களாலான முதற்கான் மூட்டும் ஐந்து பாதப்பாத்துகளையுடைய உட்கான் மூட்டும், துண்டுபடாத சிறிய வெளிக்கான்மூட்டும் உண்டு.. உட்கான் மூட்டின் ஐந்து பாதப்பாத்துகளும் நாரியமூட்டு (Ischiurm) தொடைச் சந்துக்கான் மூட்டு ( Merus), மணிக்கட்டுச்சந்துக்கான்மூட்டு (Carpus). முன்கான் மூட்டு (Propodus) எனப் பெயரிடப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர அனுக்காவிசளிலும் முதன் முன்று சோடி நடக்குங் கால்களிலும் அரைச் சந்திலே மேற்கான்மூட்டு முளை (Epipodfte) யொன்றுள்ளது. இது சுவாசித்தலில் பங்குகொள்கிறது. முதலாவது சோடி அனுக்காலிகளின் மேற்கான் மூட்டுமுன் கள் தகடு போன்ற சோணைகளாகவும், ஏ ைய தூக் கங்களின் மேற்கான் மூட்டுமுளைகள் :
வடிவமாகவும் காணப் படுகின்றன.
முதலாம் அனுக்கா லி Ist Maxillipede);
இதன் முதற்கான் மூட்டு மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரிவு முற்றுப் பெறவில்லை. உட்கான் மூட்டு ஐந்து பாதப்பாத் துகளையுடையது.-- வெளிக்கான் மூட்டும் மேற்கான்மூட்டுமுளையும் தட்டையான சோள களாகும்.
இரண்டாம் அதுக்காலி. (2nd Maxillipede ):
முதற்கான் மூட்டு இரு துண்டங்களைக்கொண்டது. உட்கான்மூட்டு கேள்விக்குறிபோல் வளைந்துள்ளது. - மேற்கான்மூட்டுமூளை
- -' வடிவானது. வெளிக்கான்மூட்டு துண்டங்களாக்கப்பட்டுள்ளது. மூன்ரும் அனுக்மாலி (3rd Maxillipede):
இது கால்களின் தோற்றத்தையுடையது. இரு துண்டங்களைக் கொண்ட முதற்கான் மூட்டு, துண்டுபட்ட உட்கான்மூட்டு, வெளிக்

Page 91
- 16தி -
பு1414.
Hil
S)
IzI -
XIII
HIV
Rஈ7 ?
XN
*11
மேற்கான்மூட்டு முளை VI, VII, VIII .
- அனுக்காலிகள் 1X, X, XII
கொடுக்குடைய கால்கள் XII, XIII
கொடுக்கற்ற கால்கள் XIV --> XVIII - நீந்துபாதங்கள் XIX
வாற்பாதம்
படம் 91- நெஞ்சுப்பகுதி, வயிற்றுப்பகுதி தூக்கங்கள்

- 169 -
கான்மூட்டு ஆகியவற்றையும்
- உடையது. வடிவானது.
மேற்கான்முட்டுமுளை
நடக்கும் கால்கள் :
முதல் மூன்று கால்களும் ஏனையவிருகால்களினமைப்பிலிருந்து வேறு படுகின்றன. முதல் மூன்று கால்களில் உட்கான்மூட்டின் நுனித்துண்ட மும், அதற்குக் கீழுள்ள துண்டத்தின் நீள்பகுதியும் ஒரு சாவணத்தின் இரு அலகுகள்போல் தொழில்படுகின்றன, எனவே இம்மூன்று கால் களும் கொடுக்குக் கால்கள் எனப்படும். இவற்றில் மேற்கான்மூட்டு களுண்டு.
Tடுக்குக் காதாழில்படுகின் பகுதியும் ஒரு அத்துண்ட
நான்காம் ஐந்தாம்கால்கள் கொடுக்குகளற்ற கால்களாகும், இவற் றிலே மேற்கான் மூட்டுகள் கிடை யா.
வயிற்றுத் தூக்கங் கள் :
ஆறு வயிற்றுத்துண்டங்களிலும் துண்டத்திற்கொரு சோடியாக ஆறு சோடித்தூக்கங்களுண்டு. இவை நீந்துபாதங்கள் (Swimmcrets) எனப் படும். இறால் நீரிலே முன்னோக்கி நீந்துவதற்கு நீந்துபாதங்கள் முக்கிய மாகத் துணைபுரிகின்றன. ஆரும் துண்டத்திலேயுள்ள தாக்கத்தில் உட் கான்முட்டும் வெளிக்கான்மூட்டும் அகன்று தட்டையாகியுள்ளன. இவை வாற்பாதங்கள் எனப்படும். இவற்றின் முதற்கான் மூட்டில் ஒரு துண்டமே காணப்படுகிறது.
பெண்ணிலும் ஆணிலும் முதற் சோடி நீந்துபாதம் வேறுபாடடைந் துள்ளது. பெண் இறாலிவே முதல் நீந்துபாதத்தின் உட்கான் மூட்டு மிகச் சிறிதாக்கப்பட்டுள்ளது. ஆண் இறாலிலே இருபக்க உட்கான்மூட்டு களும் ஒன்றோடொன்று இணைந்து குழாயுருவாகியுள்ளன. - இது விந்துகளை பெண்ணங்கத்தினுள் செலுத்துதற்கு உதவுகின்றது.
பெண் இறாலிலே கடைசி நெஞ்சுப்பகுதித் துண்டத்தின் மார்புப் பட்டையிலிருந்து ஒரு வெளிவளரி வளர்ந்துள்ளது. இதனாலுண்டாகும் குழியிலேயே ஆண் இறால் விந்துகளைச் சேர்க்கிறது.
இகலிற் காணப்படும் து வாரங்கள் :
1. கீழ்ப் புறமாக இருப்புறச் சிபுகங்களினிடையே வாய் காணப்படு
கிறது. வாய்க்கு மேற்புறமாக மேற்சொண்டும் (முற்சொண்டு) கீழ்ப்புறமாகக் கீழ்ச்சொண்டும் (அனு வாய்) உண்டு.
2.
கீழ்ப்புறமாகப்புச்சத்தினடியில் குதம் காணப்படும்.

Page 92
- 17 -
3. இரண்டு நிலைச்சிறைப்பைத் துவாரங்கள் சிற்றுணர் கொம்பின
டியில் திறக்கின்றன. ஒவ்வொரு சோடி உணர்கொம்பின் அரைச்சந்தினடியிலே கீழ்ப் புறமாகவும், உட்புறமாகவும் ஒரு சோடி கழித்தற்றுவாரங்சள் காணப்படுகின்றன.
ஆண் இறலிலே கடைசிச்சோடி நடக்கும் கால்களின் டியிலே ஒரு சோடி உற்பத்தித்துவாரங்கள் திறக்கின்றன. பெண் இறாலிலே மூன்றாவது சோடிக் கால்களினடியிலே ஒரு சோடி உற்பத்தித் துவாரங்கள் திறக்கின்றன, ஒவ்வொரு உணர்கொம்பின் அரைச்சந்தினடியிலேயும் கீழ்புறமாகவும், உட்புறமாகவும் ஒரு சோடி. கழித்தற்றுவாரங்கள் காணப்
படுகின்றன, உடற்குழி:
இறாலின் உடற் குழி குருதிக்குழிவானதாகும்.
உணவுக்கால்வாய்த் தொகுதி:
உணவுக்கால்வாயில் வாய், வாய்க்குழி, களம், இரைப்பை, நடுஉண வுச் சுவடு, பின்குடல், குதம் ஆகிய பகுதிகளுண்டு, வாய்வழி (வாய்க் குழி, களம், இரைப்பை), குதவழி (பின் குடல்) ஆகிய பகுதிகளின் உட் சுவரில் கைற்றின் உண்டு. களம் மிகச் சிறிய பகுதியாகும். இரைப்பை யில் இருபகுதிகளைக் காணலாம், முற்பகுதியான இதயவிரைப்பை (Cardiac stomach) பிற்பகுதியான குடல்வாயிரைப்பையை (Pyloric stomach) விடப் பெரியது. இதயவிரைப்பையில் உதர திரிகையும்
Gastric mil1) குடல் வாயிரைப்பையில் வடிகட்டும் உபகரணமும் (Filtering apparatus) உண்டு. இரைப்பைக்குக் கீழாக இரு பெரிய சமி பாட்டுச் சுரப்பிகளுள்ளன. - இவை ஒவ்வொன்றிலிருந்தும் ஒவ் வொரு கால்வாய் நடுஉணவுச்சுவட்டையடைகிறது.இதயவிரைப் பைச்சுவரிலுள்ள புறத்தோல் - சில இடங்களிலே தடித்துள்ளது. புன்பற்கள் (Denticles) எனப்படும் இவை உணவை அரைப்பதில் உதர
திரிகையாகத் தொழில் புரிகின்றன,
டவுட் கொள்ளல் :
* இறால் நீரில் காணப்படும் சேதனவுறுப்புக்குரிய பொருட்களை (உயிருள்ள, உயிரற்ற தாவர, விலங்குப்பொருட்களை உணவாக உட் , கொள்கிறதுt., கொடுக்குடைய கால்களின் கொடுக்குகளால் உணவு

உ 1111 -
பிடிக்கப்பட்டு வாயுறுப்புகளுக்குக் கொடுக்கப்படுகிறது. முதலில், முன் புறமாகச் சிபுகங்களினாலும், பின்புறமாக முன்றம் அனுக்காலிகளினாலும் உணவு பிடித்துக் கொள்ளப்படுகிறது. இந்நிலையில் முதலாம், இரண் டாம் அனுக்காலிகள், அனு, எசிற்றனு ஆகியவற்றின் அசைவுகளால் உணவுப்பொருள் சிறிது சிறிதாகப் பிடிக்கப்பட்டு வாயினுள் தள்ளப்படு கிறது', சிற்றனுக்களும், சிபுகங்களும் இதற்கு மிக உதவுகின்றன. சிபுகங்கள் பக்கவாட்டில் அசையக்கூடியன... இதயவிரைப்பையிலுள்ள உணவு இரைப்பையைடைந்தபின் இதயவிரைப்பையிலுள்ள உதரதிரிகை யால் மேலும் அரைக்கப்படுகிறது -
சமிபாடும் அகத்துறிஞ்சலும்; 1 : 1 4
சமிபாட்டுக் கிளைக்குழாய்களிலே (Hepatapanereas) அமிலேசு, புரத் தியேசு, இலிப்பேசு ஆகிய மூன்றுவித நொதியங்களும் சுரக்கப்பட்டு அரைப்புப்பையையடை கின்றன. இவை முறையே காபோவைதரேற்று புரதம், கொழுப்பு ஆகியவற்றைச் சமிபாடடையச் செய்கின்றன. சமிபாடடைந்த உணவு வடி.கட்டியினூடாக நடுக்குடலுக்குச் செல்கிறது உதரதிரிகை தொடர்ந்து தொழிற்படுவதால் பெரிய துணிக்கைகள் சிறி தாக்கப்பட்டு பின்னர் நடுக்குடலையடைகின்றன. அரைப்புப்பையி லிருந்து வரும் உணவள்ள பாய்பொருள் நடுக்குடலையடைந்து பின் சமிபாட்டுக் கிளைக்குழாய்களினுட் செல்கிறது. இங்கே சமிபாடடைந்த உணவு அகத்துறிஞ்சப்படுகின்றது. - சமிபாடடையாத உணவு நடுக் குடலிலிருந்து குதத்தினூடாக வெளியேற்றப்படுகிறது. பாய்பொருள் சமிபாட்டுக் கிளைக்குழாய்களுட் செல்வதும் வெளிவருவதும் அவற்றின் சுவரிலேயுள்ள தசைகளால் சுட்டுப்படுத்தப்படுகிறது.
குருதிச்சுற்தேட்டத் தொகுதி:
முதுகுப்புறமாகவுள்ள ' இதயம் குருதியினால் நிரப்பப்பட்ட ஒரு அறையிலுள்ளது. இதயத்திலிருந்து நாடிகளினூடாகக் குருதி குருதித் குழிவான உடற்குழியறையையடைகிறது. எனவே, உடலங்கங்கள் குருதி யினால் சூழப்பட்டுள்ளன. பின்னர் ஒரு கால்வாயினூடாக குருதி பூக்களையடைந்து அங்கிருந்து - இதயத்தையடைகின்றது. ஈமோசை யனின் என்னும் நிறப்பொருள் உள்ளதால் குருதி இளநீலப்பாய்பொரு ளாக இருக்கக் காணப்படுகிறது. ) சுவாசித்தல் :
இறலிலே பூக்களே (Gills) சுவர்சவங்கங்களாகும். 1 இறாலிலுள்ள பூக்கள் மீன்களிலுள்ள பூக்கரைப் '- போன்று 7 உணவுக்கால்வாயுடன் தொடர்புள்ளனவாயிராமல் நெஞ்சுப்பகுதித் தூக்கங்களில் வெளிவளரி,

Page 93
- 112 -
களாகவுள்ளன. நெஞ்சுப்பகுதியிலுள்ள முதுகுப்புறப் பரிசைக்கும் உடலுக்குமிடையேயுள்ள இடைவெளி சுவாசவறை எனப்படும். ஒவ் வொரு பூவிலும் ஒரு மையத்தண்டும், இரு பக்கங்களிலும் பல இழை களும் காணப்படும். இவ்வாறான பூக்கள் தெந்திரோப் பூக்கள் (Dendro branchia) எனப்படும், இறாலிலே பூக்கள் மூன்று விதமாக உடலில் ஒட்டியிருக்கக்கூடும். தூக்கத்தின் அரைச்சந்துக்கான் மூட்டிலே ஓட்டி யிருந்தால் பாதப்பூ (Podo branchia) என்றும், பூவறையின் உட்சுவரில் ஒட்டியிருந்தால் புடைப்பூ (Pleuro branchia) என்றும், உடலுக்கும் தூக்கத்திற்குமிடையே ஒட்டியிருந்தால் மூட்டுப்பூ (Artbro branchia) என்றும் அழைக்கப்படும், எல்லாத் தூக்கங்களிலும் ஒரே எண்ணிக்கை யில் பூக்களிருப்பதில்லை. மேற்கான்மூட்டுமுறைகளும், சுவாச அங்கங் களாகத் தொழில் புரிகின்றள,
புடைப்பூ
மூட்டுப்பு
பாதப்பூ
படம் 92- புடைப்பூ, மூட்டுப்பு, பாதப்பூ ஆகியவற்றைக்காட்டும் வரைபடம் ,
இருபக்கப் பூவறைகளும் முன்புறத்தேயும் கீழ்ப்புறத்தேயும் திறக் கின்றன. அனுவின் ஓடத்தாடை (Scaphogathite] துடுப்புப்போன்று அடிப்பதால் நீர் பூவறையிலிருந்து முன்புறமாக வெளியேற, புதிய நீர் பின்புறமாக பூவறையினுட் செல்கிறது. எனவே, நீர் பூக்களை நனைக்கும் பொழுது நீரில் கரைந்துள்ள ஒட்சிசன் பூக்களிலுள்ள குருதிக்கலன்களி லுள்ள குருதியினுட் செல்ல குருதியிலிருந்து காபனீரொட்சைட்டு வெளி யேறுகிறது. பூவறையின் வாயிலிலுள்ள சிலிர்முட்கள் நீரிலேயுள்ள பிறபொருட்களை பூவறையினுட் செல்லாமற் தடுக்கின்றன. -

- 173 -
கழித்தல் !
இரு லிலே இரு பசுஞ்சுரப்பிகள் உள. இவை தலைப்பகுதியில் களத் திற்கு முன்னால் இருபக்கங்களிலுங் காணப்படும், குருதியிலிருந்தும், உடற்குழிப்பாய் பொருளிலிருந்தும் இவை நைதரசன் கழிவுப்பொருட் களை அகற்றுகின்றன.
தோற்பை
வெளித்துவாரம்
குழாய்
சிக்கல் வழி
ஈற்றுப்பை
படம் 93 - பசுஞ்சுரப்பி
ஒ வ்வொரு பசுஞ்சுரப்பியிலும் ஒரு ஈற்றுப்பை (end sac) உண்டு. உடற்குழியின் ஒரு பகுதி இதிலடங்கும். ஈற்றுப்பையையடுத்து சிக்கல் வழி (Labyrinth) உள்ளது. இதன் சுவர் மிக மென்மையானது. இதைத் தொடர்ந்துள்ள ஒடுங்கிய குழாய் ஒரு பையில் முடிவடைகிறது, மெல் லிய சுவரைக் கொண்ட இப்பை ஒரு குறுகிய கானினூடாக உணர்கொம் பின் முதற்கான் மூட்டின் அடிப்பாகத்தில் வெளித்திறக்கின்றது. அது வெளித்திருக்கும் துவாரமே பசுஞ்சுரப்பித்துவாரமாகும்.
நரம் புத் தொகுதி :
இறாலின் நரம்புத்தொகுதி - மண்புழுவின் நரம்புத்தொகுதியின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. தலைப்பகுதியிலே மேற்புறமாக ஒரு பெரிய மூளையத்திரட்டு உண்டு. இதிலிருந்து ஒரு சோடிப் பிணைப்பு கள் களத்தைச் சுற்றிச் சென்று களத்திற்குக் கீழாக ஒன்று சேர்வதால்

Page 94
கண்
மூளையத்திரட்டு களச்சுற்றுப்பிணைப்பு
குறுக்குப்பிணைப்பு களத்தின்கீழுள்ள
திரட்டு
மார்பு நாடிக்கான
இடைவெளி
HK** * * * *
- வயிற்றுப்புறத்
திரட்டுகள்
F1 1 - - - - - படம்
1ார் -----!
+ - 12
படம் 4
- நரம்புத்தொகுதி

- 175 --
களத்தின் கீழ்த்திரட்டு உண்டாகிறது. இதிலிருந்து பின்னோக்கி வயிற்றுப் புறமாகச் செல்லும் இரட்டை நரம்புநாணில் ஆறு நெஞ்சுப்பகுதிக்குரிய திரட்டுகளும், ஆறு வயிற்றுப் பகுதிக்குரிய திரட்டுகளும் உள்ளன. களச் சுற்றுப்பிணைப்புகளை ஒரு குறுக்குத்தொடுப்பு இணைக்கிறது. மூளையத் திரட்டிலிருந்து கண்கள், நிலைச்சிறைப்பைகள், சிற்றுணர்கொம்புகள், உணர்கொம்புகள் ஆகிய பகுதிகளுக்கு நரம்புகள் செல்லுகின்றன. களத்தின் கீழுள்ள திரட்டிலிருந்து சிபுகங்கள், சிற்றணுக்கள், அனுக்கள் முதலாம், இரண்டாம் அனுக்காலிகள் ஆகியவற்றிற்கு ஐந்து சோடி நரம்புகள் செல்கின்றன. இத்திரட்டு ஐந்து திரட்டுகள் ஒன்று சேர்வ தனால் ஏற்பட்ட கூட்டுத்திரட்டு எனக்கொள்ளலாம், பதினோராம், பன்னிரண்டாம் துண்டங்களுக்கிடையே இரட்டை நரம்புநாண் சிறிது பிரிந்து நரம்புநாடி செல்வதற்கு இடங்கொடுக்கிறது. முதல் நெஞ்சுப் பகுதித்திரட்டிலிருந்து மூன்றாம் அனுக்காலிகளுக்கும், நடக்கும் கால் களுக்கும் நரம்புகள் செல்கின்றன, ஒவ்வொரு திரட்டிலிருந்தும் தூக் கங்களுக்கும், தசைகளுக்கும் ஏனைய அங்கங்களுக்கும் நரம்புகள் செல்கின்றன,
இ 1)
புலனங்கங்கள் :-
1. இறாலின் உடலின் பெரும்பகுதி தொடுகைக்கு உணர்ச்சியுடைய
தாயுள்ளது. கொடுக்கு, கொடுக்குக்கால், வாயுறுப்புகள், வாயுறுப்புப் பகுதியின் கீழ்ப்பாகம், புச்சத்தின் விளிம்பு ஆகிய பகுதிகளில் அநேக தொட்டுணர் மயிர்கள் உண்டு. இவை புலன் நரம்புகளுடன் தொடர்பு கொண்டுள்ளன. உருசி, மணம் ஆகியவை சிற்றுணர்கொம்புகள், உணர்கொம்பு கள், வாயுறுப்புகள், கொடுக்குகள் ஆகியவற்றிலுள்ள மயிர் களால் உணரப்படுகின்றன. நிலைச்சிறைப்பைகள் ! நிலைச்சிறைப்பைகள் உடலைச் சமநிலைப்படுத்து மங்கங்களாகும். இறாலின் தலைப்பகுதியிலே உள்ள ஒரு சோடி நிலைச்சிறைப்பை கள் நிலைச்சிறைப்பைத் துவாரங்களினூடாகத் திறக்கின்றன. சிற்றுணர்கொம்பின் அரைச்சந்துக்கான் மூட்டிலே ஒரு பை உள்ளது. இதனுட்புறமாக நீட்டிக்கொண்டிருக்கு மயிர்களின் அடிப்பாகம் நரம்புநார்களுடன் தொடர்பு கொண்டுள்ளன. தோல் கழற்றலின்போது வெளிவன்கூட்டுடன் நிலைச்சிறைப் பையிலுள்ள உணர் மயிர்களும், மண் துணிக்கைகளும் இழுக்கப் பட்டு புதிய மண்துணிக்கைகள் உள்ளெடுக்கப்படுகின்றன, இப் பையினுள் மண்துணிக்கைகள் நிலைக்கற்களாகத் தொழிற்படு

Page 95
- 175 =
கின்றன. இறால் அங்குமிங்கும் அசையும் பொழுது மண் துணிக் கைகள் 'உணர்மயிர்களில் முட்டும் பொழுது. நரம்புக்கணத் தாக்கங்கள் உண்டாகி நரம்பு நார்களினால் மூளையத்திரட்டிற்குக் கடத்தப்படுகின்றன, அங்குண்டாகும் தெறிவினையால் இறால் சமநிலையை எய்துகின்றது.
கண்கள் :
அசையக்கூடிய இரு காம்புகளில் ஒரு சோடி கூட்டுக்கண்கள் உண்டு. ஒரு கூட்டுக்கண்ணிலே பல கண் மூலகங்கள் (0mmatidia) உண்டு. கண்மூலகங்களினிடையே கரிய நிறப்பொருள் உண்டு. கூட்டுக்கண்ணின் மேற்பரப்பு ஏறத்தாழ அரைக் கோளவடிவாகவிருக்கும், அதிற் காணப்படும் சதுரவடிவான முகப்புகளொவ்வொன்றும் ஒரு கண் வில்லையைக் குறிக்கும்.
image) இவ்வாறு உண்டா
பிரகாசமான ஒளியிலே புடைப் பொருந்து விம்பம் (Apposition image) அல்லது சித்திரவடிவான விம்பம் உண்டாகிறதெனக் கூறப் படுகிறது. இவ்வாறுண்டாகும் விம்பத்தின் ஒவ்வொரு பகுதியும் வெவ் வேறு கண்மூலகங்களால் உண்டாக்கப்பட்டதாகும். மங்கிய ஒளியிலே மேற்பொருந்திய விம்பம் (Superposition image) உண்டாகிறது.
இனப்பெருக்கம் :
ஆண் இயல் ஒரு பெண் இறாலை குப்புறக்கிடத்தி அதன் நடக்குங் கால்களைத் தன் கொடுக்குகளால் பிடித்துக்கொண்டு புணர்கிறது. புணர்ச்சியின்போது ஆண் இறால் விந்து தாங்கிகளைக்கொண்ட சுக்கிலப் பாயத்தை (Seminal Fluid) பெண் இறாலின் வயிற்றுப்புறத்திலுள்ள உற்பத்தித்துவாரத்திற்கருகே செலுத்துகின்றது. இவ்வாறு செலுத்துவ தற்கு வயிற்றுப்புற முதற் துண்டத்தின் உட்கான்மூட்டுகளாலான குழாய் உதவுகிறது. 4 முட்டைகள் சூலகக்கான் துவாரங்களினூடாக வெளிவந்தவுடன் விந்துகளினால் கருக்கட்டப்படுகின்றன.
கருக்கட்டிய முட்டைகள் நீரிலே விடப்படுகின்றன. முட்டை பொரித்து நௌப்பிளியுசுக்குடம்பி (Nauplius) உண்டாகிறது. நௌப் பிளியுசுவின் உடல் துண்டுபடாத்து. இதில் ஒரு தனிக்கண்ணும் மூன்று சோடித்தூக்கங்களும் (பின்னர் சிற்றுணர்கொம்பு, உணர்கொம்பு, சிபுகம் ஆக விருத்தியடைவன) உண்டு. இரண்டாவது சோடித்தூக்கங் கள் உணர்கொம்புக்குரிய பாதங்களென்றும் ரா மூன்றாவது சோடித் தூக்கங்கள் சிபுகத்திற்குரிய பாதங்களென்றும் அழைக்கப்படும். இவை 4 குடம்பியின் இடப்பெயர்ச்சிக்கு உதவுகின்றன. நெளப்பிளியசுக்குடம்பி

- 177 -
சிற்றுணர்கொம்பு
கண்
3
உணர்கொம்பு
சிபுகம்
ஜாதி:
படம் 95 - நௌபிளியுசு குடம்பி
பலமுறை தோலைக்கழற்றி மெற்றா நௌப்பிளியசு (Metanauplius), புரோற்றோசோவியா (Protozoea), சோவியா நிலை, மைசிசுநிலை ஆகிய வற்றைக் கடந்து நிறைவுடலியாகிறது.
மெற்றாநௌப்பிளியசு நிலையில் சிபுகத்தில் மெல்லுவதற்கான அமைப்புகளுண்டாகின்றன. அதற்குப் பின்புறமாக நான்கு சோடி. அவயவங்கள் விருத்தியடைகின்றன. இவை பின்னர் இரண்டு சோடி. அனுக்களாகவும் முதலிரு அனுக்காலிகளாகவும் விருத்தியடைகின்றன.
புரோற்றோசோவியா நிலையில் ஏழு சோடி. அவயவங்களும் நன்றாக விருத்தியடைந்துள்ளன. சோடிக்கண்கள் உண்டாகின்றன. ஆது நெஞ்சுப்பகுதித் துண்டங்கள் காணப்படும். ஆனால் வயிற்றுப் பகுதி இன்னும் துண்டங்களாக்கப்படவில்லை, புரோற்றோசோவியாவின் பின் விருத்திக் காலத்தே மூன்றாவது சோடி அனுக்காலிகளும் வயிற்றுப்பகுதி யில் ஐந்து துண்டங்களும் விருத்தியாகின்றன.
சோவியா நிலையில் கூட்டுக்கண்கள் அசையக்கூடியனவாகின்றன. முதுகுப்புறப் பரிசையில் அல்குருமுளையுண்டாகி, நெஞ்சுப்பகுதியில் நடக்குங்கால்களும், வயிற்றுப்பகுதியில் முதலாம் சோடித்தாக்கங்களும், புச்சமும் விருத்தியடைகின்றன,
மீசிசு நிலையில் நடக்குங்கால்கள் தொழிற்படத் தொடங்குகின்றன. வயிற்றுப்பகுதி நீண்டு, ஏனைய மாற்றங்களும் நடைபெற்று, நிறைவுடலி யுண்டாகிறது.
Z - 12

Page 96
- 178 -
0 )
(CSSwய
Tாக
* 111ப்பு. சிர் Tா, + + + | 60 /14T
படம் ஓத - புரோற்றொசாவியா நில ; சோவியா நிகல்
படம் 97- மைச்சு நிலை

- 179 -
வகுப்பு - இன்செக்ற்கு (Insecta) அல்லது ஹெக்சாபோடா(Hexapoda) :
இவ்வகுப்பில் பூச்சிகளெல்லாம் அடங்கும், அவற்றினுடல் தலை, நெஞ் சறை, வயிறு என மூன்று பிரிவுகளைக்கொண்டது, ஒரு சோடி உணர்கொம்பு களும் வெட்டுதல், உறிஞ்சுதல் அல்லது நக்கிக்குடித்தலுக்காக சிறப் பியல்பு பெற்ற வாயுறுப்புகளுமுண்டு. நெஞ்சறைப்பகுதியில் கீழ்ப்புற மாக மூன்று சோடி மூட்டுக்கால்களுண்டு. சிறகுகள் இருந்தால் அவை நெஞ்சுப்பகுதியின் இரண்டாம், மூன்றாம் துண்டங்களின் மேற்பகுதியி லிருந்து உற்பத்தியாகும், சாதாரணமாக வயிற்றுப்பகுதியில் தூக்கங் கள் காணப்படமாட்டா, வாதனாளிகளே சுவாசவங்கங்களாகும், பின் குடலில் இணைந்துள்ள மல்பீசியின் குழாய்கள் கழித்தலங்கங்களாகத் தொழில்படுகின்றன. வாழ்க்கைச் சக்கரத்தில் உருமாற்றம் பொது வாகக் காணப்படும்,
வகுப்புப்பிரிவு 1. - ஏதெரிகோற்று (Apterygota) :
இவற்றில் சிறகுகள் கிடையாது. பொதுவாக வாழ்க்கைச் சக்கரத் தில் உருமாற்றம் நடைபெறுவதில்லை. முளைவால்களுடன் வேறு தூக் கங்களும் வயிற்றுப்பகுதியிற் காணப்படும்.
வகுப்புப்பிரிவு II. - தெரிகோற்கு (Pterygota) :
இதிலடங்கும் பூச்சிகளில் சாதாரணமாகச் சிறகுகள் உண்டு. வயிற் றுப்பகுதியில் இடப்பெயர்ச்சிக்கான தர்க்கங்கள் கிடையாது, உருமாற் றம் முழுமையானதாகவோ, முழுமையற்றதாகவோ இருக்கும்.
பிரிவு I. - எக்சோ தெரிகோற்று (Exopterygota) :
இளமைப்பருவம் கூட்டுக்கண்களையுடைய அணங்குப்புழுவாகும். சிறகுஉடலின் வெளிப்புறத்திலிருந்து விருத்தியடைகிறது. பூரண உரு மாற்றமுண்டு,
பிரிவு II. - என்டோதெரிகோற்கு (Endopterygota) :
இளமைப்பருவம் குடம்பி, கூட்டுப்புழு ஆகிய நிலைகளிற் கழிக்கப் கப்படுகிறது. சிறகு உடலின் உட்புறத்திலிருந்து விருத்தியடைகிறது. பூரண உருமாற்றமுண்டு.
கணம் - ஆத்திரப்போடா (Arthropoda) வகுப்பு - இன் செக்ற்ரு (Insecta) வகுப்புப்பிரிவு - தெரிகோற்கு (Pterygota)

Page 97
- 180 -
1 Tiா -
பிரிவு - எக்சோதெரிகோற்கு (Exopterygota) வருணம் - ஒத்தொப்ரெளு (Orthoptera)
ஓத்தொப்ரெருவின் இயல்புகள் :
14 பட்ட இரு சோடி சிறகுகள் உண்டு, மென்சவ்வு போன்ற முன்சோடி பறப்பதற்கு உதவுகின்றன, தடிப்பான முன்சோடிச் சிறகுகள் பறவாத நிலையில் மடித்துவைக்கப்பட்டுள்ள பின்சோடிச் சிறகுகளை மூடிப் பாதுகாக்கின்றன.
பெரிபிளனேற்றா அமெரிக்கானா - காப்பான் பூச்சி
(Periplaneta americana - Cockroach) கரப்பான் பூச்சிகள், சாதாரணமாக பொருள்கள் சேமித்து வைத் திருக்குமிடங்கள், சமையலறை, குழியறை போன்ற இடங்களில் ஓடித் திரிவதைக் காணலாம். பலவிதமான சரப்பான் பூச்சிகள் உண்டென் றாலும் சாதாரணமாக எமது வீடுகளிற் காணப்படும் இனமான பெரிபிள் னேற்ற அமெரிக்கானாவே இங்கு விபரிக்கப்பட்டுள்ளது.
புறவியல்புகள் :
பெரிபிளனேற்றாவின் உடல் மூன்று பெரும் பகுதிகளைக்கொண்டுள் ளது. அவையாவன : தலை, நெஞ்சறை, வயிறு என்பனவாகும். த ையையும் நெஞ்சறையையும் இணைக்கும் ஒடுங்கிய பகுதி கழுத்து என அழைக்கப்படும்.
நெஞ்சறைப்பகுதிக்குச் செங்குத்தாகக் காணப்படும் தலைப்பகுதியில் துண்டங்கள் வெளித்தெரிவதில்லை யென்றாலும், இது ஆறு துண்டங் களின் சேர்க்கையினால் உண்டானது. பேரிக்காய் வடிவமான தலை மேலிருந்து கீழாகத் தட்டையாக்கப்பட்டிருக்கும். தலைமேற் காணப் படும் வன்கூடு தலைவில்லை (Head capsule) என அழைக்கப்படும். இதில் நுதல் (Frons), இழையப்பரிசை (Clyptus), மேல்மண்டையோட்டுத் தகடுகள் இரண்டு (two epicranial plates), இரு கதுப்புகள் (Genae) ஆகியவை உண்டு. தலையிலே ஒருசோடி கூட்டுக்கண்களும், நாலு சோடித் தூக்கங்களைக்கொண்ட வாயுறுப்புகளும் உள்ளன. உணர் கொம்புகள், சிபுகங்கள், அனுக்கள், பிற்செண்டு என்பனவே அத்தரக்சுங் கனாரும்,
1. உணர்கொம்புகள் பல் மூட்டுக்களாலானவை.

Buir
Fi p)
|LIBRIUS)
T LIT Li HIT နံ
(TauHT ၊
ဗီ ဗီဒံ = ALLA
GLIT က amaLLal m A LUA. ussia ၏ A 80 RE: ရ ၆ GHT , -
Lb, W ၏ BrLG ၊ဤL PLAT ရွ၏ IT R 5 / L GATT 10/r

Page 98
ட 182 -
10
13
) +-14
--15
9 - 2
முற்சொண்டு
குல்லா
11. மடியல் சிபுகம்
மடியல்
12. அனுப்பரிசம் 3. சிவுகக்கீழ்
பிற்சொண்டுப்பரிசம்
13. பரிசந்தாங்கி சிவுகம்
பல்பிகர்
14, அனுவபு சிவுகமேல்
10. குல்லா
15, அனுத்தண்டு
படம் 99 - வாயுறுப்புகள் - கரப்பான் பூச்சி
பகுதி அனுப்பரிசம் (Maxillarypalp) எனப்படும், இது பரிசத்தாங்கி (Palpiter) என்னும் விசேட அமைப்பினால் தாங்கப்படுகிறது. அனுப் பரிசத்திற்கு உட்புறமாக இரு சோணைகளுள். அவற்றில் வெளிச்சோணை குல்லா (Galea) என்றும், உட்சோணை மடியல் (Lacinia) என்றும் அழைக்கப்படும். மடியலின்முனை கொடுக்குகள் போன்றிருப்பதுடன் உட்புறமாகத் தடித்த சிலிர்முட்களையும் கொண்டுள்ளது. பெரிபிள னேற்ற அமெரிக்கானாவில் மடியலையும் குல்லாவையும் தொடுப்பதற்குத வும் மென்சவ்வுத்தூக்கம் ஒன்று மடியலில் உண்டு.

உ 183
4, இருபக்கங்களின் இரண்டாம் அனுக்கள் ஒன்றுசேர்ந்து பிற்சொண் டாக (labium) மாறியுள்ளன. இதனடிப்பாகத்திலுள்ள இரு துண்டங் களும் சிவுகக்கீழ் (Sub mentum) சிவகம் (Mentum) என அழைக்கப்படும். சிவுகத்தின் மேலுள்ள பல்பிகர் (Palpiger) என்னும் வன்கோதில் இரு பக்கங்களிலும் மூன்று முட்டுக்களைக்கொண்ட பிற்சொண்டுப் பரிசங்கள் ( Labial palps) இரண்டு உள்ளன. அவற்றிற்கு உட்புறமாகவுள்ள சிவுகமுன்னயல் (Prementum) என்னும் பகுதியின்மேல் இருசோணைகள் உள்ளன, வெளிச்சோலை புடைநாவுரு (Paragl0336) அல்லது குல்லா Galca) என்றும், உட்சோணை நாவுருமுளை (GloSSA) அல்லது மடியல் (Lacinia) என்றும் அழைக்கப்படும், இரு புடைநாவுருக்களும் நாவுரு முளைகளும் சேர்ந்து சிறு நா (Ligula) எனப்படும், மேலே விவரிக்கப்பட்ட தூக்கங்களுடன் முற்சொண்டும் (Labrum) மேற்றொண்டையென்பும் (Epipharynx) வாயுறுப்புகளிலடங்கும். உணவுக்கால்வாயின் ஆரம்பப் பகுதியிலுள்ள சுவரின் உட்புறமே மேற் றெண்டையென்பாகும், உண வுத்துவாரத்தின் பிற்பகுதியின் விளிம்பு தட்டையான உருளைபோன்ற அமைப்பாக நீட்டப்பட்டுள்ளது. இது தொண்டைக்கீழ் (Hypo pharynx or lingu9) என அழைக்கப்படுகிறது. இதில் உணர் மயிர்கள் உண்டு.
அரைச்சந்து
ஓடி
தொடை
கக்ணக்காவ்
கணுக்காற்றுண்டம்
நகம் படம் 100 - கால்
நெஞ்சறைப்பகுதிலுயிள்ள மூன்று துண்டங்களும் முறையே முன் மார்பு இடைமார்பு, அனுமார்பு என அழைக்கப்படும் இவையொவ்வொன்றிலும்

Page 99
- 184 -
மேற்புறமாகவுள்ள வெளிவன்கூடு, முதுகுப்பட்டை (TErgun) என்றும், கீழ்ப்புறமாகவுள்ளது மார்புப்பட்டை யென்றும் (Sternum) அழைக்கப் படும், இரண்டையும் தொடுக்கும் பகுதி புடைப்பட்டை (Pleuron) எனப்படும், முன் மார்பின் முதுகுப்பட்டை பெரியது.இடைமார்பு; அனுமார்பு ஆகியவற்றின் முதுகுப்பட்டையில் இரு சோடி சிறகுகள் உண்டு. இவை வெளிவன் கூட்டுப் புறத்தோலின் விரிந்த பகுதிகளே யன்றி தூக்கங்களல்ல. நரம்பர்கள் (Nervures) எனப்படும் கைற்றின் பொருளாலான வலை போன்ற அமைப்புகளே சிறகுகளுக்கு வலிமை யளிக்கின்றன பெரிபிளனேற்ற அமெரிக்கானாவில் பின் சிறகுகள் மென் மையானதாயும், அகன்று விசிறி போன்றுமுள்ளதால் பறத்தலுக்கு உதவுகின்றன, பறக்காத பொழுது இவை உடலின் மேல் மடிந்த நிலையிற் காணப்படும். ஒடுங்கிய கபில நிறமாக முன் சோடிச் சிறகுகள் பூச்சி பறவாத நிலையிலுள்ள பொருது பின் சோடிச்சிறகுகளை மூடிப்பாது காப்பளிக்கின்றன. இவை பறத்தலுக்கு உதவுவதில்லை. ஒவ்வொரு நெஞ்சறைத்துண்டங்களின் கீழ்ப்புறமும் ஒவ்வொரு சோடி மூட்டுக்கால் கள் உள்ளன. நடப்பதற்கும், ஓடுவதற்கும் உதவும் இவையொவ் வொன்றும் ஐந்து முட்டுக்களாலானவை. இம்மூட்டுகள் அரைச்சந்து (Casa ). ஓடி (Trochanter) தொடை (Femur.) கணைக்கால் Tibia.), கணுக்காற்றுண்டம் (Tarsus) எனப்படும், கணுக்காற்றுண்டத்தில் ஐந்து சிறிய துண்டங்கள் உண்டு. முனைத்துண்டத்தில் இரு நகங்களுள்ளன, பூச்சி எதன் மேலாவது ஏறுவதற்கு இவை உதவுகின்றன. கணைக்காலி லுள்ள சிலிர்முட்கள் உடலைச் சுத்தப்படுத்த உதவுகின்றன.
வயிறுப்பகுதி அகன்று மேலிருந்து கீழாகத் தட்டையாக்கப்பட்டுள் ! ளது. இது பதினொரு துண்டங்களாலானது. ஆனால் பதினோராவது துண்டம் பதாங்கத்திற்குரிய (Vestigial) அமைப்பாகும். இதன் முது குப்பட்டை. பத்தாவது துண்டத்து முதுகுப் பட்டையுடன் இணைந்துள் ளது. பத்தாவது துண்டத்தின் முதுகுப்பட்டை இரு சோணைகளைக் கொண்டது. எட்டாவது. ஒன்பதாவது துண்டங்களின் முதுகுப்பட்டை கள் ஏழாவது துண்டத்துப் பின்பகுதியில் மறைந்துள்ளன,
பூச்சியின் பின் முனையிற் காணப்படும் மூட்டுகளாலான ஒரு சோடி முளைவால்கள் (Cerci) பதினொராம் துண்டத்துத் தூக்கங்களெனக் கருதப் படுகிறது. ஆண் பூச்சியிலே ஒன்பதாம் துண்டத்தில் ஒரு சோடி குதத் தம்பங்கள் (Anal styles.) உண்டு. பெண் பூச்சியிலே ஏழாம் துண்டத்து மார்புப்பட்டை பெரிதாகவும், இரு பாதிகளாகப் பிரிக்கப்பட்டுமுள்ளது. எட்டாம், ஒன்பதாம் துண்டங்களின் மார்புப்பட்டைகள் ஏழாம் துண் டத்துப் பட்டையினுள் செலுத்தப்பட்டுள்ளமையால் ஏற்படும் உற்பத்தி மடி (Genital pouch) யில் முட்டைகள் கருக்கட்டுகின்றன.

- J85 -
உடற்குழி :
கரப்பான் பூச்சியில் உடற் குழி குருதிக்குழிவானதாகும். கொழுப்புப் பொருளால் நிரப்பப்பட்டுள்ளது.
இது
உனாவுக்கால்வாய்த் தொகுதி :
கரப்பான் பூச்சியின் உணவுக்கால்வாயை வாய்வழி, நடுஉணவுச் சுவடு, குதவழி என மூன்று பெரும் பகுதிகளாகப் பிரிக்கலாம், வாய் வழி, குதவழி ஆகிய பகுதிகளின் உட்சுவர் கைற்றின் என்னும் பொரு ளாலான புறத்தோலால் ஆகியது. அகத்தோற்படையாலான . நடு உணவுச்சுவடுப்பகுதியிலேயே சமிபாடும், அகத்துறிஞ்சலும் நடைபெறு கிறது.
உமிழ்நீர்ச் சுரப்பி
களம்
கண்டப்பை
அரைப்புப்பை
* ஈரற்குருட்டுக்
n
எ}2
7 [S
குழல்
நடுஉணவுச் சுவடு
மல்பீசியின்
குழாய்கள் சுருள்குடல்
நேர்குடல்
படம் 101 - உணவுக்கால்வாய்

Page 100
- 186 -
வாயைத் தொடர்ந்துள்ள வாய்க்குழி (BuCEal Cavity) என்னும் பகுதிக்கு முற்புறமாக தொண்டைமேலும் (Epipharynx) - முற் சொண்டும் உள்ளன. பின்புறமாகத் தொண்டைக்கீழ் (Hypo pharyIx) பிற்சொண்டு (Labjum ) ஆகிய பகுதிகளும், இரு பக்கங்களிற் சிபுகங் களும் உள்ளன. தொண்டைக் குழிக்குப் பின்னால் உமிழ்நீர்ச்சுரப்பிச் கான் திறக்கிறது. வாய்க்குழியைக் களத்துடன் தொடுக்கும் மிகக்குறு கிய பகுதி தொண்டை எனப்படும். களம் கழுத்தினூடாக நெஞ்சறைப் பகுதிக்குச் சென்று மெல்லிய சுவரையுடைய சுண்டப்பை (Crop) யாக எக்கமடைகிறது, இதைத் தொடர்ந்து தடித்தசுவரையுடைய அரைப் புப்பை (gizzard) அல்லது புரோதரம் (pro Ventriculus) உள்ளது. இதனுட்சுவரில் ஆறு புறத்தோற் தடிப்புகள் காணப்படும். வாய்க்குரி யிலிருந்து அரைபுப்பைவரையுள்ள உணவுச்சுவடே வாய்வழியாகும். அரைப்புப்பைக்குப் பின்னாலுள்ள குறுகிய பகுதி நடுஉணவுச்சுவடாகும் இது அரைப்புப்பையுடன் சந்திக்குமிடத்தில் விரல்களினமைப்பை யுடைய ஈரற்குருட்டுக்குழல்கள் உண்டு.. - நடுஉண வுச்சுவட்டைத் தொடர்ந்துள்ள குதவழி எனப்படும் பகுதியில் ஒரு குறுகிய குழாயுரு வான சிறுகுடல் Sாall intesting) அல்லது சுருள்குடல் (ileu), 'அகன்ற பெருங்குடல் (Large intestine) அல்லது குடற்குறை (Calon), நேர்குடல் ஆகியவையடங்கும், சிறுகுடலின் முற்பகுதியில் நுண்குழாயுருவான மல் பிசியின் குழாய்கள் உண்டு.பெருங்குடலினுட் பரப்பில் ஆறு நெடுக்கு முகமடிப்புகளுண்டு. நோகுடல் உடலின் பின்பகுதியில் குதத்தினூடாக வெளித்திருக்கின்றது.
உமிழ்நீர்ச் சுரப்பிகள் :
கண்டப்பையின் இருபுறமும் பக்கத்திற்கொரு சோடியாக இரு சோடி உமிழ்நீர்ச்சுரப்பிகள் உள். ஒவ்வொரு சோடியினிடையே ஒரு உமிழ்நீர் வாங்கி (Salivary Tecepracle) உண்டு. இருபக்கத்துச் சுரப்பி களினதும் கான்கள் ஓன்று சேர்ந்து சிறிது முன்னாற் சென்று மறு பக்கத் துக் கானுடன் இணைவதால் ஒரு பொது உமிழ்நீர்க்கான் உண்டாகிறது. உமிழ்நீர் வாங்கிகளின் சான்கள் ஒன்று சேர்வதனால் ஒரு பொது உமிழ் நீர்வாங்கிக்கான் உண்டாகிறது. இவ்விரு பொதுக்கான்களும் ஒன்று சேர்ந்துண்டாகும் வெளிக்காவு உமிழ்நீர்க்கான் வாய்க்குறியினுட் திறக்கின்றது.
"கும் வெம்மது, இவ்வு""தனால் ஒரு
டோசண !
கடதாசி, தாவரப்பொருள்கள், இறைச்சி போன்ற பொருட்களைக் கரப்பான் பூச்சி உணவாக உட்கொள்ளும். சிபுகங்கள் உணவை வெட்டு வதற்கு உதவுகின்றன. உணவைப் பிடித்துக்கொள்வதற்கு முதலனுக்

- 187
-- வாய்க்குழி
உமிழ்நீர்ச்சுரப்பி
ஈபொது உமிழ்நீர்க்கான்
பொது உமிழ்நீர் வாங்கிக்கான்
#11001112
உமிழ் நீர்வாங்கி
படம் 102 - டமிழ்நீர்ச்சுரப்பி
கள் உதவுகின்றன. பின்னர் பிற்சொண்டின் உதவியுடன் உணவு வாய்க்குழியினுட் தள்ளப்படுகிறது. இங்கே - உமிழ் நீர்ச்சுரப்பியி - லிருந்து சுரக்கப்படும் சுரப்பினால் உணவு நனைக்கப்பட்டு, களத்தினூடா கக் கண்டப்பையையடைகிறது. உமிழ்நீர்ச்சுரப்பில் அமைலேசு தொதி யங்கள் உள்ளதனால் உடனேயே சமிபாடு ஆரம்பிக்கிறது. கண்டப்பை யிலிருந்து பகுதிசமிபாடடைந்த உணவு அரைப்புப்பையையடையும் பொழுது அங்கே உணவு அரைக்கப்பட்டு நுண்துணிக்கைகளான உணவு நடுஉணவுச்சுவடை யடைகிறது. ஈரற்குருட்டுக்குழல்களிருந்தும், நடு உணவுச்சுவட்டு மேலணிக்கலங்களிலிருந்தும் சுரக்கப்படும் சுரப்பு களால் புரதமும், கொழுப்பும் சமிபாடடையப்பட்டு, நடு உணவுச்சுவட் டுப்பகுதிலேயே உறுஞ்சப்படுகிறது. - எஞ்சிய உணவு பெருங்குடலினூ டாகச் செல்லும்பொழுது நேர்குடற் பகுதியிலே நீர் உறிஞ்சப்படு கிறது.ப கழிவுப்பொருட்கள் குதத்தினூடாக அகற்றப்படுகின்றன. உறிஞ்சப்பட்ட உணவுப் பொருட்கள் கொழுப்புப் பொருள்களாகச் சேமித்து வைக்கப்படுகிறது.
சுவாசத் தொகுதி:
கரப்பான் பூச்சியில் வாதனாளிகளே சுவாச அங்கங்களாகத் தொழில் புரிகின்றன. உடலெங்கும் பல கிளைகளைக் கொண்ட வாதனாளிகள் நெஞ்சறைப்பகுதியிலும், வயிற்றுப் பகுதியின் இரு பக்கங்களிலும் பத்துச்

Page 101
- 15 -
வளியுள்ள புன்வாதனாளி
வாதனாளி முனைக்கலம்
சாIHப்]H|
L.IIMIL
தன்ச
வாதனாளி
படம் 103 - வாதாளித் தொகுதி
சோடித் துவாரங்களினூடாக வெளித்திருக்கின்றன. முதலிரு சோடி. சுவாசத்துவாரங்களும் முறையே இடைமார்பு, அனுமார்புத் துண்டங்க ளில் முதுகுப்பட்டை மார்புப்பட்டை ஆகியவற்றை இணைக்கும் மென்மை யான புறத்தோலிற் காணப்படும். ஏனைய எட்டுச்சோடிச் சுவாசத் துவாரங்களும் முதல் எட்டு வயிற்றுத் துண்டங்களில் உள்ளன. வாத் னாளிகள் வெளிவன் கூட்டைப் போன்று புறத்தோலால் ஆனவை. அவற் றிலுள்ள சுருளித்தடிப்பு அவற்றிற்கு வலிமையைக் கொடுக்கின்றது. வாதனாளிக்குழாய்ச்சுவரின் மேலணிக்கலங்களிலிருந்தே புறத்தோல் சுரக்கப்படுகிறது.ய சுவாசத்துவாரங்களிலிருந்து உட்செல்லும் சிறு குழாய்கள் இரு பெரிய நீள்பக்கக் குழாய்களையடைகின்றன. இவற்றி விருந்துண்டாகும் வாதளிைகள் புன்வாதாளிகளாகக் கிளைக்கின்றன. புறத்தோற் போர்வையற்ற இப்புன்வாதனாளிகள் கலங்களுட் சென்று முடிவடைகின்றன, புன்வாதனாளிகளின் ஓரு பகுதி ஓட்சிசன் கரையக் கூடிய பாய்பொருளைக் கொண்டுள்ளது. உயிர்க்கலங்கள் புன்வாதனாளி களிலிருந்து ஒட்சிசனைப் பெறுவதால் வெளியேயுள்ள வளியிலிருந்து புன் வாதனாளிவரை ஒரு ஒட்சிசன் படித்திறன் உண்டாகிறது. ஆகையால் கலங்கள் நேரடியாகவே வளியிலிருந்து ஒட்சிசனைப் பெற்று காபனீரொட்
"Cசிசாகிறது."விருந்து

- 189 -
சைட்டை வெளியேற்றுகின்றன. உடல் மேலும், கீழு:பாக அசைவதா லும், தசைகளினசைவாலும் சுவாசத்துவாரங்களினூடாக காற்று உள் ளேயும், வெளியேயும் செல்லமுடிகிறது. உடற்குழி குருதிக் குழிவான தாயிருப்பதால் காபனீரொட்சைட்டு குருதியிலே கரைந்து புறத்தோலின் மென்மையான பகுதிகளினூடகவும் பரவல் முறையால் வெளியேறக் கூடும், தோல் கழற்றலின்போது வாதனாளிகளும் இழக்கப்பட்டு புதிதாக உண்டாக்கப்படுகின்றன, ஆனால் புன்வாதனானிகள் தொடர்ந்து தொழில் படுகின்றன. உடலின் அனுசேபவீதம் அதிகரித்துள்ளபொழுது கலங் களின் பிரசாரணவமுக்கம் அதிகரிப்பதால் புன்வாதனாளிகளிலிருந்து பாய்பொருள் கலங்களினால் உள்ளிளுக்கப்பட்டு ஒட்சிசன் நேரடியாகவே இழையத்தின் பாய்பொருட்களில் கரைகிறது.
குருதிச்சுற்றோட்டத் தொகுதி !
கரப்பான்பூச்சியில் குருதி குருதிக்கலன்களால் கடத்தப்படுவதில்லை. உடல் உள்ளங்கங்களெல்லாம் குருதிக்குழிவான உடற்குழியிலேயே உள் ளன. குருதியில் மோகுளோபின் கிடையாது. எனவே அது நிறமற் திருப்பதுடன் சுவாசித்தலிலும் பங்குகொள்வதில்லை, போசணைப் பொருள்களையும் ஓமோன்களையும் கடத்துவதே அதன் தொழிலாகும்.
நரம்புத் தொகுதி 1
தலையிலே களத்திற்கு மேலே மூளை உண்டு. இது ஒரு சோடி. களத் திற்கு மேலான திரட்டுகளைக் கொண்டுள்ளது, களத்தின் கீழுள்ள திரட்டு மூளையுள்ள இடத்திற்கு நேராகக் கீழ்ப்பகுதியிற் காணப்பபடும். களச்சுற்றுக்குரிய வளையம் மூளையை தளத்தின் கீழுள்ள திரட்டுடன் இன க்கின்றது. இரட்டை நரம்புநாண் களத்தின்கீழுள்ள திரட்டி லிருந்து உடலின் வயிற்றுப்புறமாக பின் முனையை நோக்கிச் செல்கிறது. இரட்டை நரம்புநாணில் நெஞ்சறைப்பகுதியில் மூன்று திரட்டுகளும் வயிற்றுப்பகுதியில் ஆறு திரட்டுகளும் உண்டு. கண்களுக்கும் உணர் கொம்புகளுக்கும் மூளையிலிருந்து சோடியான நரம்புகள் செல்கின்றன. சிபுகங்கள், முதலாவது சோடி அனு, பிற் சொண்டு ஆகிய பகுதிகளுக்கு சுளத்தின் கீழுள்ள திரட்டிலிருந்து நரம்புகள் செல்கின்றன. நெஞ்சறை வயிற்றுப் பகுதியிலுள்ள திரட்டுகளிலிருந்து நரம்புகள் தூக்கங்களுக்கும் ஏக ய அங்கங்களுக்கும் செல்கின்றன. நெஞ்சறைப்பகுதித் திரட்டுகள் வயிற்றுப்பகுதியிலுள்ள திரட்டுகளைவிடப் பெரியவை. கடைசிச்சோடி நரம்புத் திரட்டுகள் ஏனைய வயிற்றுப் பகுதி நரம்புத்திரட்டுகளை விடப் பெரியவை,

Page 102
- 190 -
மூளையத்திரட்டு
களத்தின் கீழுள்ள
திரட்டு
நெஞ்சுப்பகுதி
திரட்டுகள்
வயிற்றுப்பகுதித்
திரட்டுகள் -
படம் 104 - நரம்புத் தொகுதி கழித்தற்றொகுதி !
கரப்பான் பூச்சியில் மல்பிசியின் குழாய்கள் கழித்தலங்கங்களாகத் தொழில் புரிகின்றன. இவை நடுஉண வுச்சுவடு, பின்குடல் ஆகியவற் றின் சந்திப்பில் மெல்லிய நூல் போன்ற அமைப்புகளாகக் காணப்படும். ஒவ்வொரு மல்பீசியின் குழாயிலும் சுரப்பு மேலணிக்கலங்களுள்ளன. கவங்களின் உட்புறமாக துடைப்பம் போன்ற அமைப்புகளுண்டு. அவை குருதியில் தோய்ந்திருப்பதால் நைதரசன் கழிவுப்பொருட்களை அகற்றி சிறுகுடலினுள் சேர்க்கின்றன. - இரு காபனேற்றுகளும், நீரும் நேர் குடலில் உறிஞ்சப்பட்டு, யூரிக்கமிலமாக நைதரசன் கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்படுகின்றன.
வாழ்க்ரைச் சக்கரம் :
புணர்ச்சியின் பொழுது ஆண் பூச்சியிலிருந்து விந்துகள் பெண் பூச்சி யின் உற்பத்தி மடியினுள் செலுத்தப்பட்டு விந்துறைகளுள் சேகரித்து

- 191 -
LTறி
அணங்குப்புழு
முட்டையோடு திறந்தநிலையில் படம் 105
வைக்கப்படுகிறது. முட்டைகள் சூலகக்கான்களினூடாக வெளிவந்த பின் னரே உற்பத்தி மடியில் கருக்கட்டல் நடைபெற்று, புரதத்தாலான முட் டையுறை யொன்றினுள் இரு வரிசைகளில் அடைக்கப்படுகின்றன, சிறிது காலத்திற்கு பூச்சியின் வயிற்றுப்பகுதியில் உற்பத்தி மடியில் வைத் திருக்கப்பட்டு பின்னர் ஒரிடமாக வைக்கப்பட்டு முற்றாக விருத்தியடைந் தவுடன் முட்டையுறை வெடித்து அணங்குப்புழு வெளிவருகிறது. இது நிறைவுடலியை ஒத்திருந்தாலும் உருவத்தில் சிறியதாகவும், சிறகுகளும், இனப்பெருக்கக் கவசங்களும் விருத்தியடையா நிலையிலும் காணப்படும். உருமாற்றம் முழுமையற்றதாகும். அணங்குப்புழு வளரும் பொழுது கைற்றினாலான உடற்றோல் ஏழுமுறை கழற்றப்பட்டு பின்னரே நிறை வுடலி உண்டாகிறது. கடைசிமுறைத் தோல்கழற்றலின் பொழுது உட லின் வெளிப்புறத்திருருந்து சிறகுகள் முளைக்கின்றன. அப்பொழுது இனப்பெருக்க அங்கங்களும் முற்றாக விருத்தியடைந்துவிடும். முதன் மார்புத் துண்டத்திலிருந்து சுரக்கப்படும் ஒரு ஓமோன் தோல் கழற்றலைக் கட்டுப்படுத்துகிறது. கரப்பான் பூச்சியின் வழ்க்கைச் சக்கரம் எட்டு அல்லது ஒன்பது மாதங்களில் முடிவடைகிறது.
கணம் - ஆத்திரப்போடா (Arthropoda) வகுப்பு - இன் செக்ற்ற (Insecta) வகுப்புப் பிரிவு - நெரிகோற்ரு (Pterygota) பிரிவு - எள்டோ தெரிகோற்கு (Endopterygola)
வருணம் - ஒடொளேற்று (0donata) வகை - தும்பி (Dragonfly)

Page 103
--11-2 -
ஒரேமாதிரியான இருசோடிச் சிறகுகள் உண்டு. இவை மென்சவ்வு போன்றவை, உணர்கொம்புகள் மிகக் குறுகியவை. வெட்டும் வாயு றுப்புகளும், பெரிய கூட்டுக்கண்களுமுண்டு. முற்றுப்பெறாத உருமாற்றம் காணப்படும், அணங்குப்புழுக்கள் நீரிலே வாழும். இவற்றில் வாற்
பூக்கள் சுவாச வங்கங்களாகவுள்ளன.
தும்பி :
இளமைப் பருவத்தில் நீரிலே வாழ்வதால் தும்பிகள் பொதுவாக நீருள்ள இடங்களுக்கருகாமையிலேயே காணப்படுகின்றன. பூச்சியி னுடலில் தலை, நெஞ்சறை, வயிறு ஆகிய பகுதிகளைக் காணலாம். தலை யிலே இரு பெரும் கூட்டுக்கண்கள் உள்ளன. - உணர்கொம்புகள் மிகக் குறுகியவை, வாயுறுப்புக்கள் வெட்டுவதற்குரியனவாகும். முதன் மார்பு சிறிதாயும், இடைமார்பும் அனுமார்பும் ஒன்றோடொன்று இணைந்தும் காணப்படும். ஒரே மாதிரியான இரு சோடிச் சிறகுகள் இடை, அனு மார்புகளின் மேற்புறத்தேயுண்டு. மென்சவ்வு போன்ற சிறகுகளில் நரம்பார்கள் மிக நெருக்கமாக அமைந்துள்ளன. சிறகுள்ள மார்புத்துண்டங்களில் திறமையாகத் தொழில்படக்கூடிய தசைகள் உள்ளதால் தும்பிகள் நன்றாகப் பறக்குமியல்புடையன், நெஞ்சறைத் துண்டங்களின் வயிற்றுப்புறமாக மூன்று சோடி பலமற்ற மூட்டுக்கால்
சிறகு " நெஞ்சறை தலை
வயிறு கட்
கா!
படம் 106 - தும்பி
- டா ட ப ட

--191 -
தங்
நெஞ்சறை
கால்
வயிறு
படம் 107 - அணங்குப்புழு
கள் உண்டு, இவை பூச்சிகள் இளைப்பாறும் வேளைகளில் நிற்பதற்குப் பயன்படுகின்றனவேயன்றி நடப்பதற்கல்ல. கால்களெங்கும் தொட்டுணர். மயிர்களுண்டு, தும்பிகள் பெரும்பாலும் பறக்கும் நிலையிலேயே காணப் படும், தும்பிகள் பறக்கும்பொழுதே உயிருள்ள சிறிய பூச்சிகளைக் கால் களாற்பிடித்து உணவாக்கிக் கொள்கின்றன. வயிறு ஒடுங்கி, நீண்டிருக் கும். காற்றிலே பறந்து வாழ்வதால் கவாசத்துவாரங்களினூடாகச் சுவா சிக்கின்றன. உற்பத்தித்துவாரங்கள் வயிற்றுப்பகுதியின் பின் முனைக் கருகே உள்ளன, ஆனால் ஆண் பூச்சியில் புணர்ச்சியங்கங்கள் இரண். டாம், மூன்றாம் வயிற்றுத் துண்டங்களிலுள்ளன. எனவே புணர்ச்சியின் முன்னரே ஆண் பூச்சிகள் உற்பத்தித் துவாரங்களிலிருந்து விந்துகளைப் புணர்ச்சியங்கங்களுள் எடுத்துக் கொள்கின்றன, காதலாடலின் பொழுது (Courtship) ஆண் தும்பி, பெண் தும்பியை இறுகப் பிடித்துக் கொண்ட நிலையில் பறந்து திரிவதைக் காணலாம். பெண் தும்பி வயிற்றுப் பகுதியை மடிப்பதனால் அதன் உற்பத்தித் துவாரங்கள் ஆண்தும்பியின் புணர்ச்சியங்கங்களுள்ள இரண்டாம், மூன்றாம்துண்டங்களுக்குக் கொண்டு வரப்பட்டு விந்துகள் பெண் தும்பியின் துண்டங்களுக்குக் கடத்தப்பட்டு முட்டைகள் கருக்கட்டப்படுகின்றன. புணர்ச்சியின் பின் பூச்சிகள் பிரி கின்றன. ஆனால் சில வேளையில் முட்டைகள் நீரிலே வசதியான இடத் தில் இடும்வரை ஆண் பூச்சி பெண் பூச்சியைத் தழுவிய நிலையிலிருக்கும்.
நன்னீரிலுள்ள தாவரங்களிலே முட்டைகள் இடப்பட்டு அவை பொரித்து அணங்குப் புழுக்கள் வெளிவருகின்றன. அணங்குப்புழுக்கள் நீரிலே மெதுவாக நீந்தித்திரிந்து சிறிய பூச்சிகளைப் பிடித்து உணவாக
Z - 13

Page 104
104 -
அரைச்சத்து
ஒடி
• 0
- தொடை
- கணைக்கால்
கணுக்காற்றுண்டம்
படம் 108 - முகமூடி : தும்பியின் கால் உட்கொள்ளுகின்றன. அணங்குப் புழுவிலும் வெட்டுவதற்குரிய வாயு நுப்புகளேயுள்ளன, பிற் சொண்டு மிக நீண்டு உணவைப் பிடிப்பதற்குச் சிறப்பியல்பு பெற்றுள்ளது. இதை முகமூடி (Mask) என்றும் அழைப்பர். இதன் இரு பக்கங்களிலுள்ள சோகண்களில் முட்களுண்டு. சாதாரண நிலையில் முகமூடி மடிந்து ஏனைய வாயுறுப்புகளை மூடியிருக்கும். அணங்குப்புழுவின் நேர்குடலில் உள்ள பூக்களினால் சுவாசித்தல் நடை பெறுகிறது. இவை நேர்குடற்பூக்கள் (Rectal or Caccal gills] என அழைக் கப்படும். குதத்தினூடாக நீர் உள்ளேயும், வெளியேயும் செல்கிறது. தும்பியில் முற்றுப்பெறாத உருமாற்றமே இடம்பெறுகிறது. பல முறை தோல் சுழற்றப்பட்டு பதினொன்று முதல் பதினைந்து முறைவரை) அணங்குப்புழு நிறைவுடலியாக விருத்தியடைகிறது. வாழ்க்கைச் சக்கரம் ஒன்று முதல் மூன்று வருடங்கள் வரை நீடிக்கலாம்.
கணம் - ஆத்திரப்போடா ' (Arthropoda) வகுப்பு - இன்செக்ற்து (Insecta) வகுப்புப்பிரிவு - தெரிகோற்கு (Pterygota) பிரிவு - என்டோதெரிகொற்ற (Endopterygota) வருணம் - சிலப்பிடொப்ரெகு (Lepidoptera) வகை - வண்ணாத்திப்பூச்சி (Butterfly)
அதாக ?
வருணம் - லெப்பிடொப்ரெறா (Lepidoptera) :
இவ்வருணத்தில் வண்ணாத்திப்பூச்சிகளும், அந்துகளும் (motli3) அடங்கும். இரு சோடி மென்மையான சிறகுகள் உள்ளன. அவற்றில் நரம்பர்கள் குறைந்தளவிலேயே காணப்படும். உடலில் சிறிய செதில் கள் உண்டு. - சிறகிலிருக்கும் செதில்கள் பல நிறங்களாலானவை.

- 105 -
வாயுறுப்புகள் உறுஞ்சுவதற்கு சிறப்பியல்பு பெற்றுள்ளன. முதல் அனுக்கள் உறிஞ்சற்குழாயாக தும்பிக்கை - Proboscis) வேறுபாடடைந் துள்ளன. சிபுகங்கள் காணப்படமாட்டா. " அல்லது மிகச் சிறிதாசு விருக்கும், நீண்ட உணர்கொம்புகளும், கூட்டுக்கண்களும் உண்டு, முழுமையான உருமாற்றம் நடைபெறுகிறது. முட்டையிலிருந்து வெளி வரும் குடம்பிகள் புழுப்போன்றவை. குடம்பியின் நெஞ்சறைத்துண்டங் களில் மூன்று சோடி முட்டுக்கால்களும் வயிற்றுப்பகுதியில் ஐந்து சோடி பொருத்தில் கால்களும் (Prolegs ) உள்ளன. குடம்பியிலிருந்து உண்டா கும் கூட்டுப்புழு பெரும்பாலும் ஒரு கவசத்தினுள்ளிருக்கும். வண்ணாத்திப்பூச்சி : " வண்ணத்திப்பூச்சி என்று நாம் அழைக்கும் பூச்சிகள் பல வர்ணங் களில் காணப்படுவதால் உண்மையில் அவை வண்ணத்துப்பூச்சிகளே. சொல்வழக்கில் திரிபடைந்து வண்ணாத்திப்பூச்சி என அழைக்கப்படுகிறது. இவை பகலிலே வெளியே பறந்து திரிகின்றன, வண்ணாத்திப்பூச்சியின் உடல் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படலாம். அவையாவன தலை, நெஞ்சறை, வயிறு என்பனவாகும். தலையிலே ஒரு சோடி பெரிய கூட்டுக்கண்களும், நீண்ட குண்டாந்தடியுருவான உணர்கொம்புகளும், ஓரு சோடி தனிக்கண்களும் உண்டு. வாயுறுப்புகள் உறிஞ்சுவதற்காகச் சிறப்பியல்பு பெற்றுள்ளன. வண்ணாத்திப்பூச்சிகள் பூக்களிலிருந்து தேனை உறிஞ்சுகின்றன, சிபுகங்கள் மிகச் சிறிதாக்கப்பட்டு, முதலனுக்களின் குல்லாக்கள் நீண்டு ஒன்று சேர்ந்து உறிஞ்சுகுழாயாக மாறுபட்டுள்ளன, தொழிற்படாத வேளையில் உறிஞ்சு குழாய் உள்ளிளுக்கப்பட்டு, சுருண்ட நிலையில் வைக்கப்பட்டிருக்கும். அனுத்தூக்கங்களில் மடியல்கள் காணப் படமாட்டா, ஆனால் அனுப்பரிசங்களுண்டு. பிற் சொண்டு சிறு தகடு போன்றிருக்கும். அதிற் பரிசங்கள் உண்டு. நெஞ்சறைப் பகுதியிலுள்ள முதல், இடை, அனு மார்புத்துண்டங்களின் கீழ்ப்புறமாக மூன்று சோடி துண்டங்களாலான கால்களுண்டு. இவை பலமற்றவையாதலால் நடப் பதற்கன்றி ஓய்வெடுக்கும் பொழுது நிற்பதற்கே உதவுகின்றன. இரு அனு. மார்புத்துண்டங்களின் மேற்புறமாக பல வர்ணங்களாலான இரு சோடிச்சிறகுகள் உள்ளன. இவை மென்மையானவையாயும், குறைந் தளவில் நரம்பர்களைக் கொண்டனவாயும் உள்ளன. ஒவ்வொரு பக்கத் துச் சிறகுகளும் ஒன்றோடொன்று தொடுக்கப்பட்டு பறத்தலின் பொழுது ஒரு மித்துத் தொழில் படுகின்றன. நெஞ்சறைத்துண்டங்களின் பல மான தசைகள் சிறகுகளை இயக்குகின்றன. வண்ணாத்திப்பூச்சி ஓய்வா.க நிற்கும் பொழுது சிறகுகள் செங்குத்தாக மடித்து வைக்கப்பட்டிருக்கும். நெஞ்சறைப்பகுதியில் பக்கங்களிலே இரு சோடி சுவாசத்துவாரங் களுள்ளன, வயிற்றுப்பகுதியில் துண்டங்கள் தெளிவாகத் தெரிகின்றன . இதில் எட்டுச்சோடி சுவாசத்துவாரங்களுள்ளன.

Page 105
- 195 -
நிறைவுடவி
தன் உணர்கொம்பு நெஞ்சறை சிறகு ம்
முட்டை
"TT)
கண் சிறகு கண்
சிற்கு சுவாசத்துவாரம்
பொருத்தில் மெய்க் தலை
கால்கள் * கால்கள் கூட்டுப்புழு
குடம்பி படம் 109 - வண்ணாத்திப்பூச்சியின் வாழ்க்கைச் சக்கரம்
வண்ணாத்திப்பூச்சிகள் வாழ்கைச் சக்கரத்தில் முழு உருமாற்ற மடை கின்றன. ஜெசிபெல் வண்ணாத்திப்பூச்சி குருவிச்சை இலைகளின் கீழ்ப் புறமாக முட்டைகளையிடுகின்றன. ஓரு முறையில் முப்பது முதல் எழுபது முட்டைகள்வரை இடப்பட்டு நெருக்கமான வரிசைகளில் பசைத்தன்மை யுடைய பொருளால் இலையில் ஒட்டப்பட்டிருக்கும், இடப்பட்டவுடன் வெண்ணிறமாகவுள்ள முட்டைகள் மூன்றாம், நாலாம் நாட்களில் இளஞ்

- 1971 --
கூட்டுக்கண்
பிற்சொண்டுப்பரிசம்
உணர்கொம்பு
உறிஞ்சுகுழாய்
படம் 110 - வண்ணாத்திப்பூச்சியின் வாயுறுப்புகள்
சிவப்பு நிறமாக மாறும், முட்டையினுள் விருத்தியடையும் குடம்பியின் - தலை கரியநிறப்பொருளாக வெளியே தெரியும், ஐந்தாம் நாளளவில் முட்டை பொரித்து மயிர் கொட்டி எனப்படும் குடம்பி வெளிவருகிறது. முட்டையிலிருந்து வெளிவந்த குடம்பி முட்டைக்கோதை முதலில் உண வாகக் கொண்டு, பின்னர் குருவிச்சை இலைகளை உணவாகக் கொள்ளு சிறது. மயிர்கொட்டியின் உடல் தலை, மூன்று நெஞ்சறைத்துண்டங் கள், பத்து வயிற்றறைத்துண்டங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. தலையை முடி அகற்றினாலான தடித்த கவசமுண்டு. தலையில் ஏழு சோடி தனிக்கண்களும், ஒரு சோடி உணர்கொம்புகளும் காணப்படும். நிறைவுட லியைப்போன்றல்லாது குடம்பியின் வாயுறுப்புகள் வெட்டுதலுக்காகச் சிறப்பியல்பு பெற்றுள்ளன. பிற்சொண்டிற் கருகாமையிற் திறக்கும் ஒரு சுரப்பியிலிருந்து சுரக்கப்படும் பாய்பொருள் வெளியே வந்தவுடன் பட்டு நூல் போன்று மாறி, குடம்பியைச் சுற்றிக் கூடுண்டாக்குவதற்கு உதவு கிறது. நெஞ்சறைத்துண்டங்களின் கீழ்ப்புறமாக மூன்று சோடி மூட்டுச் கால்களும் வயிற்றுப்பகுதியில் ஐந்து சோடி பொருத்தில் கால்களும் உள்ளன. ஒவ்வொரு முட்டுக்காலிலும் ஐந்து துண்டங்களுண்டு. பொருத்தில் கால்கள் துண்டங்களிலுள்ள தசைப்பகுதிகளாகும். வயிற் அப்பகுதியின் முன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் துண்டங்களிலும், கடைசித்துண்டத்திலும் இவை காணப்படுகின்றன. கடைசித் துண்டத் துப் பொருத்தில் கால்கள் தழுவிகள் Claspers) என அழைக்கப்படும், பொருத்தில் கால்களின் முனையில் அநேக கொளுக்கிகள் காணப்படும். முதல் நெஞ்சறைத்துண்டத்தினதும், முதல் எட்டு வயிற்றுத்துண்டங்க ளினதும் இரு பக்கங்களிலும் சுவாசத்துவாரங்கள் உண்டு. குடம்பி கள் நான்கு முறை தோலைக்கழற்றி வளர்கின்றன.

Page 106
- 198 -
முழு வளர்ச்சியடைந்த மயிர்கொட்டி கூட்டுப்புழு நிலையையடை கிறது. நாற்குஞ்சுரப்பியிலிருந்து பெறப்படும் பசைப்பொருளைக் கொண்டு இலை, கிளை ஆகியவற்றில் தழுவியினால் ஒட்டிக்கொண்டு கடைசி முறையாகத் தோலைக்கழற்றித் தன்னைச்சுற்றி ஒரு புழுக்கூட்டை உண்டாக்கிக் கொள்கிறது. சாதாரணமாக வண்ணத்திப்பூச்சிகளின் புழுக்கூடுகள் கபிலநிறமாகக் காணப்படும். பொன் நிறமாக விருந்தால் பொற்புழு (Chrysalis) என அழைக்கப்படும். நான்கைந்து நாட்களுள் கூட்டுப்புழுவில் நிறைவுட லியின் பாகங்கள் தோன்றக் காணலாம், புழுக்கூட்டிலே சுவாசத்துவாரங்களுண்டு. பத்து நாள் அளவில் கூட்டுப் புழுவிலிருந்து நிறைவுடலி வெளிவருகிறது. சிறகுகள் விரிக்கப்பட்டு பதினைந்து நிமிடங்களுள் பறந்து செல்கிறது.
கூட்டுபலே சுவ"தேடலி
வண்ணாத்திப்பூச்சியின் வாழ்க்கைச் சக்கரத்தில் நான்கு நிலைக ளுள்ளன. அவையாவன முட்டை, குடம்பி, கூட்டுப்புழு, நிறைவுடலி என்பனவாகும்,
1 |
கணம் - ஆத்திரப்போடா (Arthropoda)
வகுப்பு - இன்செக்ற்ரு (Insecta) வகுப்புப்பிரிவு - தெரிகோர்டு (Pterygota) பிரிவு - என்டோதெரிகோற்கு (Endopterygota) வருணம் - டிப்ரெரு (Diptera) வகை - நுளம்பு (Mosquito)
வருணம் - டிப்ரொரு (Dipter2) :
இடை நெஞ்சறைத் துண்டத்தில் மட்டும் ஒரு சோடி மென்சவ்வு போன்ற சிறகுகள் உண்டு. பின் சிறகுகள் சிறிய குண்டாந்தடியுருவான சமநிலைப்படுத்திகளாக மாறுபாடடைந்துள்ளன. வாயுறுப்புகள் குத்தி உறிஞ்சுவதற்காக வேறுபாடடைந்துள்ளன, உருமாற்றம் முழுமை யானது..
நுகம்பு :
நுளம்பினுடல் தலை, நெஞ்சறை, வயிறு ஆகிய பகுதிசகாக்கொண் டுள்ளது. தலையிலே ஒரு சோடி கூட்டுக்கண்களும், ஒரு சோடி உணர் கொம்புகளும், குத்தி உறிஞ்சும் வாயுறுப்புகளும் உண்டு. பெண்ணுளம்பு மனிதர்களைக் குத்தி குருதியை உறிஞ்சுகிறது. ஆனால் ஆண் நுளம்பு தாவரங்களிலிருந்து சாறை உறிஞ்சுகிறதென தெரிகிறது. முற்சொண்டு, மேற் றொண்டையென்பு தொண்டைமேல் - Epipharynx) சிபுகங்கள், அனுக்கள், தொண்டைக்கீழ் (Hypo pharynx) பிற்சொண்டு

ட பு19ம் -
உணர்கொம்பு
முட்டை
காற்று மிதப்பு
HIALI
11 புEENUH)
சுவாச
தலை ஒட்டுகுழாய் தகில் நெஞ்சனற - வயிறு
சுவாசத் துவாரம்
தலைநெஞ்சறை
---- =
வால்மடிப்பு குமார் வயிறு 1
குடம்பி பட ம 111 - நுளம்பின் வாழ்க்கைச் சக்கரம்
ஆகியவை குத்தியுரிஞ்சுகுழாயுண்டாவதில் பங்கெடுக்கின்றன. வாயின் மேற்புறச் சுவரிலுள்ள மேற்றொண்டை வெளிவளரி (Epipharynx) என்னும் பகுதி முற்சொண்டுடன் இணைந்துள்ளது. இவ்வாறுண்டாகும் முற்சொண்டு மேற் றொண்டை (Labrun - epipharynx) என்னும் அமைப்பு நீண்டு, கீழ்ப்புறமாக ஒரு தவாளிப்பைக் கொண்டுள்ளது. "

Page 107
( --
உ ad) -
வாய்த்துவாரத்திற்குக் கீழாக நீண்டுள்ள தொண்டைக்கீழ் என் னும் அமைப்பின் மத்தியில் உமிழ்நீர்க்கான் உண்டு. தொண்டைக்கீழும் முற்சொண்டு மேற்றொண்டையும் ஒன்றன்மேலொன்றாக அமைந்து தொழில்படுகின்றன. வாயின் பக்கங்களிலுள்ள சிபுகங்களும் அனுக் களும் நீண்டு குத்துவதற்கு ஏதுவாக அமைந்துள்ளன. மேற்புறமாகத் தவாளிப்பைக் கொண்ட பிற் சொண்டு உறிஞ்சுகுழாய்மட லாகத் தொழில் படுகிறது. அதன் நுனியில் கூரான ஒரு சோடிச் சோணைகள்
கட்ட
- உணர்கொம்பு - முற்சொண்டு மேற்றொண்டை
சிபுகம் தொண்டைக்கீழ் முதலாவது அனு "பிற்சொண்டு --அனுப்பரிசம்
*கம்
முற்சொண்டு தொண்டைமேல்.
சிபுகம் -- தொண்டைக்கீழ் முதலாவது அனு. "பிற்சொண்டு -
படம் 117- நுளம்பின் வாயுறுப்புகள்
உண்டு. இவை சிற்றுதடுகள் எனப்படும். அதுக்களிலே அனுப் பரிசங்களுண்டு. நுளம்பு மனிதரைக்குத்தும் பொழுது சிபுகங்களும் அனுக்களும் தோலைத்துளைத்து உறிஞ்சுகுழாய் உட்செல்ல உதவுகின்றன. பின்பு தொண்டைக்கீழின் வழியாக உமிழ்நீர் உட்செலுத்தப்பட்டு . தொண்டையின் தசைகள் சுருங்குவதால் குருதி உறிஞ்சப்படுகிறது. ஆண் நுளம்பு தாவரங்களிலிருந்து சாற்றை உறிஞ்சுவதால் உறிஞ்சும் உறுப்புகள் மட்டுமே அவற்றில் விருத்தியடைந்திருக்கின்றன.
நுளம்பில் முன்று கெஞ்சறைத் துண்டங்களும் ஒன்றோடொன்று இணைந்துள்ளன. அவற்றில் மூன்று சோடி பல மற்ற மூட்டுக்கால்களும், ஒருசோடி மென்சவ்வு போன்ற சிறகுகளும் உள்ளன. பின்சோடி இறகு கள் சமநிலைப்படுத்திகள் என்றழைக்கப்படும் குண்டாந்தடியுருவான அமைப்புகளாக மாறுபாடடைந்துள்ளன.
சுவாசத்துவாரங்களி னூடாக ச் சுவாசிக்கின்றன.

- 201 -
நுளம்பில் உருமாற்றம் முழுமையானது. நுளம்பு முட்டைகளை நீரிலேயிடுகின்றன. வீட்டுத்தோட்டத்தில் சிரட்டை, தகரம் போன்ற வற்றிலும், கிடங்குகளிலும் நீர் தேங்கி நின்றால் அவற்றில் நுளம்பு முட் டைகளிருக்கும். குயூலெக்ஸ் (Culex) என்னும் சாதி நுளம்பின் முட்டை கள் ஒரு தெப்பமாகக் காணப்படும், ஆனால் அனோபிலிஸ் (Arnophieles) என்னும் சாதியின் முட்டைகள் தனித்தனியே காணப்படும். இவற்றில் காற்று மிதப்புகளும் உண்டு, இரண்டு, மூன்று நாட்களில் முட்டைகள் பொரித்து வெளிவரும் குடம்பிகள் நீரிலே நெளிந்து நெளிந்து திரிகின் றன. நீந்தும் குடம்பி நீண்ட உடல், தலை, நெஞ்சறை வயிறு ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது. குயூலெக்ஸ் குடம்பியின் பெரிய தலையில் ஒருசோடி கூட்டுக்கண்களும், சிலிர்முட்களைக் கொண்ட இரண்டு துண்டங்களாலான ஒரு சோடி உணர்கொம்புகளும் உண்டு, இவற்றால் " நீரிலுண்டாக்கப்படும் சுளிகளினால் - நண்ணங்கிகள் வாயினுள்ளெடுக்கப்பட்டு குடம்பியின் உணவாகின்றன. சிபுகங்கள், அனுக்கள், பிற்சொண்டு ஆகிய வாயுறுப்புகளுண்டு. நெஞ்சறைத் துண்டங்கள் ஒன்றாக இணைந்து காணப்படும். இப்பகுதியின் இரு பக்கங்களிலும் முன்று சோடி மயிர்க்கற்றைகள் உண்டு. நெஞ்சறையைத் தொடர்ந்து ஒன்பது வயிற்றுத் துண்டங்களுள்ளன. ஒவ்வொரு துண்டத்திலும் கற்றை கற்றையாக சிலிர்முட்களும், மயிர் களும் உண்டு. இதன் முனையில் இரு சுவாசத்துவாரங்களுள்ளன. குடம்பி யினுடலில் நீள்பக்கமாகவுள்ள இரு பிரதான சுவாசக்குழாய்களும் இத் துவாரங்களினூடாக வளியுடன் தொடர்புகொள்கின்றன, அனோபிலிஸ்! நுளம்புக்குடம்பியில் சிலிர்முட்களும், மயிர்களும் கிடையாது. சுவாச ஓட்டுகுழாயுங் கிடையா. எட்டாவது வயிற்றுத்துண்டத்திலேயே சுவாசத்துவாரங்களுள்ளன. குயூலெக்ஸ் நுளம்புக்குடம்பி நீர்பரப்பிற் குச் செங்குத்தாகவோ அல்லது ஓரளவு சாய்ந்த நிலையிலோ காணப் படும், ஆனால் அனோபிலிஸ் நுளம்புக் குடம்பி நீர்ப்பரப்பிற்கு சமாந்தர மாகக் காணப்படும். இதைச் சுற்றி நான்கு செட்டை போன்ற சோணை களுண்டு. இவற்றில், வாதனளிக்குழாய்களிருப்பாதல் இவையும் சுவாசித்தலிற் பங்குகொள்வதாயிருக்கலாம். எனவே, இவை குதப் பூக்களெனவும் அழைக்கப்படும். இவற்றிற்கு முன்னாலுள்ள மயிர்க் கற்றைகள் நீந்துவதற்கு உதவுகின்றன.
ஒரு வாரம் வரை வாழும் குடம்பி கூட்டுப்புழு நிலையையடையுமுன் நான்கு முறை தொலைக்கழற்றுகிறது. - வடிவான கூட்டுப்புழு ஒரு பெரிய உருண்டையான தலைநெஞ்சுப்பகுதியையும், மேலிருந்து கீழாகத் தட்டையாக்கப்பட்ட நீண்ட வயிற்றுப்பகுதியையும் கொண்டுள்ளது. வயிற்றுப்பகுதியின் முனையில் இரு வால்மடிப்புகளுண்டு. நுளம்பின் கூட்டுப்புழு நீரிலே அசைந்து திரியக்கூடியது. தலைநெஞ்சுப்பகுதியின்

Page 108
- 262 -
மேற்புறமாகவுள்ள இரு சுவாசக்குழாய்களினூடாக அது சுவாசிக் கின்றது. இரண்டு, மூன்று நாட்கள் கூட்டுப்புழுவில் மாற்றமேற் பட்டு நிறைவுடலியுண்டாகிறது. ஆண் துளம்பு ஆறேழு நாட்களே உயிர்
வாழ்ந்தாலும் பெண் நுளம்பு ஒரு மாதம்வரை உயிர் வாழ்கிறது.
கணம் - ஆத்திரப்போடா (Arthropoda) வகுப்பு - இன்செக்ர்ரு (Insecta) வகுப்புப்பிரிவு தெரிகோற்ற (Pterygota) பிரிவு" என்டோதெரிகோற்று (Erdopterygota) வருணம் - ஹைமெனோப்ரெர (Hymenoptera) வகை – தேனீ (Horiey bee)
வருணம் - ஹைமெனோப்ரெ : 1 தேனீ , எறும்புகள் ஆகிய பூச்சியினங்களைக் கொண்ட இவ்வருணத் தில் வாயுறுப்புகள் வெட்டுவதற்காகவும், உறிஞ்சுவதற்காகவும் சிறப் பியல்பு பெற்றுள்ளன, இரு சோடிச்சிறகுகளும் மென்சவ்வு போன் றவை. முன்சோடியைவிடப் பின் சோடிச்சிறகுகள் சிறியவை. முன் சிறகுகள் பின் சிறகுகளுடன் கொளுச்சிகளினால் இணைக்கப்பட்டுள்ளன, முதல் வயிற்றுத்துண்டம் அனுநெஞ்சறைத்துண்டத்துடன் இணைக்கப் பட்டிருப்பதுடன் வயிற்றுப்பகுதியில் இரு ஒடுங்கலும் காணப்படும். உருமாற்றம் முழுமையானது'.
தேன் :
தேனீக்கள் ஒரு சமுதாயமாக வாழும் பூச்சிகளாகும். இவை தாமே அமைக்கும் தேன் கூடுகளில் அதேக எண்ணிக்கையில் வாழுகின் றன, ஒரு சமுதாயத்திலே மூன்றுவிதமான தேனீக்களைக் காணலாம். அவையாவன:
உணர்கொம்பு கூட்டுக்கண்
கால்
கொடுக்கு
டபபடட்
1. தொழிலாளித்தேன் - 2. சோம்பி - 3. இராணித்தேனீ
படம் 113 - தேனி

- 1631
இராணித்தேனீ (பெண்), சோம்பி (ஆண்), மலட்டுத் தொழிலாளி என் பனவாகும். இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு தொழில்களைச் செய்வ தற்கேற்ப உருவத்தில் வேறுபாடடைந்துள்ளன. இராணி ஈயே ஒரு சமுதாயத்தின் தாயாகும். ஒரு சமுதாயத்தில் ஒரு இராணி ஈ மட்டுமே யுண்டு, கருக்கட்டுத்தன்மை பெற்ற பெண் ஈ ஆன இராணி ஈயின் தொழில் முட்டையிடுவது மட்டுமேயாகும். சோம்பிகளெனப்படும். ஆண் ஈக்கள் கலவிப்பரப்பின் பொழுது (Nuptial fight) இராணியுடன் புணர்கின்றன, இராணியைப் புணர்ச்சியடையச் செய்வதே அவற்றின் தொழில். தொழிலாளித்தேனீக்களே தேன்கூடு அமைத்தல் மகரந்தமணி, தேன் ஆகியவற்றைச் சேகரித்தல், தேன் கூட்டைச் சுத்தம் செய்தல், புழுக்களுக்கு ஊட்டல் ஆகிய தொழில்களைச் செய்கின்றன. இவை மலட்டுப்பெண் தேனீக்களாகும்.
தேனீயினுடல் தலை, நெஞ்சறை, வயிறு ஆகிய பகுதிகளைக்கொண் டது. முதல் வயிற்றுத்துண்டம் நெஞ்சறைப் பகுதியுடன் இணைந்துள் ளது. வயிற்றுப்பகுதியில் இடுப்பு என அழைக்கப்படும் ஒரு ஒடுக்கம் உண்டு, தாழிலாளி தேன்கூட்டிலிருந்து வெளியே சென்று தேனைச் சேகரிப் பதால் அதனுட லமைப்பு அதற்கேற்ப மாறுபாடடைந்துள்ளது. தலையிலே ஒருசோடி' கூட்டுக்கண்களும், ஒரு சோடி உணர்கொம்புகளும் உள்ளன.
சிவுகக்கீழ் சிவுகம் அனுவடி.
சிபுகம் அனுத்தண்டு மடியல் அனுப்பரிசம் குல்வா
புடைநாவுரு பிற்சொண்டுப்பரிசம்
நாவுருமுளை
சிற்றுதடு
படம் 114- தேனீயின் வாயுறுப்புகள் !

Page 109
- 104 _
உணர்கொம்புகள் மலர்களின் வாசனையை அறியக்கூடியன. தொழி லாளி தேனீயின் வாயுறுப்புகள் வெட்டுவதற்கும் உறிஞ்சுவதற்குமாகச் சிறப்படைந்துள்ளன. சிபுகங்கள் வெட்டுவதற்கு அதிகம் உபயோகப் படுத்தப்படுவதில்லையாதலால் அவை பற்களினமைப்பைக் கொண்டிருக்க வில்லை. அவை மகரந்த மணிகளைச் சீவுவதற்கும், தேன்கூடு அமைத் தலுக்கான மெழுகை வார்ப்பதற்கான உபகரணமாகப் பயன்படுவதற் கும் ஏற்ப மாறுபாடடைந்துள்ளன. முதல் அனுவில் (First Naxilla) குல்லா (calca) நீண்டு ஒடுங்கியிருப்பதுடன் அலகு போன்றுமுள்ளது.
-- அனுவின் குல்லா
நாவுருமுளை
- பிற்சொண்டுப்பரிசம்
படம் 114 - வாயுறுப்புகள்
மடியலும் (Lacinia) பரிசவுறுப்பும் (Palp) பதாங்க அமைப்புகளாக்கப் பட்டுள்ளன (Vestigial structures), பிற்சொண்டில் புடைநாவுரு மிகச் சிறிதாக்கப்பட்டு, இருபக்க நாவுருமுனைகளும் இணைந்து மிக நீண்ட குழா யுருவாகி நுனியில்* *தேன்கரண்டி " அல்லது "சிற்றுதடுகள்" என் னும் அமைப்பைக்கொண்டுள்ளன. இவ்வுறுப்புகளில் மயிர்கள் செறி வாசுவுள்ளன, அனுக்களின் குல்லாக்களும் பிற் சொண்டின் நாவுரு முன்களும் பரிசங்களும் சேர்ந்து ஒரு குழாயுருவாகி மலர்களின் இதழ் களினூடே செலுத்தப்பட்டு அடியிலுள்ள தேனை உறிஞ்ச ஏதுவா கிறது. இவ்வாறு உறிஞ்சப்பட்ட தேன் தேனீயின் உணவுக்கால்வாயின் ஒரு சிறப்பான பகுதியில் சேகரிக்கப்பட்டு, தேன்கூட்டிற்குத் திரும்பிய பின் வெளிக்கொண்டு வரப்பட்டு, தேன் கூட்டில், சேமிப்பு அறைகளில் சேமித்து வைக்கப்படுகிறது.
நெஞ்சறைத் துண்டங்களின் மேற்புறமாகவுள்ள இருசோடிச் சிறகு களும் மென்சவ்வு போன்றவை. பின் சிறகுகள் முன்சிறகுகளுடன் கொழுக்கிகளினால் இணைக்கப்பட்டிருப்பதால் பறக்கும்பொழுது சிறகு கள் ஒருமித்தே தொழில்படுகின்றன.
தேனீயின் மூன்று சோடிக்கால்களும் நடப்பதற்கு மட்டுமல்லாது. வேறு தொழில்களுக்கும் பயன்படுவதால் அதற்கேற்ப மாறுபாடடைந்

- 205 -
வெல்)
படம் 114 முன்சிறகும் பின் சிறகும் கொருக்கிகளினால் இணைக்கப்பட்டுள்ளன
துள்ளன. மகரந்த மணிகளைச் சேர்ப்பதற்காக முன்னங்கால்களில் இறக்கை போன்ற மயிர்கள் அநேகமுண்டு. கணைக்காலிலுள்ள குறுகிய தடிப்பான மயிர்கள் கூட்டுக் கண்களைத் துப்பரவாக்குவதற்கு உதவுகின் றன.முதற்கணுக்காற்றுண்டத்திலுள்ள நீண்ட மயிர்கள் உடலின் முற்பகுதியில் ஓட்டியுள்ள மகரந்த மணிகனைச் சேகரிப்பதற்கு உதவு கின்றன. முதற்சுணுக்காற்றுண்டத்தினடியிலுள்ள அரைக்கோள வடி வான தவாளிப்பில் ஒரு சிப்புப்போன்று சிலிர்முட்களுள்ளன. தவாளிப் பிற்கு மேலாக கணைக்காலிலிருந்து ஒரு தண்டுப்பகுதி (Spur) நீட்டிக் கொண்டுள்ளது. உணர்கொம்பிலொட்டியுள்ள - மகரந்த மணிகளை யகற்றுவதற்கு இவ்வமைப்பு உதவுகிறது. இரண்டாம் சோடிக்கால் களின் கணுக்காற்றுண்டம் (Tarsus) பருத்துத் தட்டையாகி சிலிர்முட் களையுடையதால் உடலிலும், முதற்சோடிக்கால்களிலும் ஒட்டியிருக்கும் மகரந்த மணிகளை அகற்றுவதற்கு உதவுகின்றன. மூன்றாவது சோடிக் கால்களே மிகக் சிறப்பியல்பு பெற்றுள்ளன. இவற்றின் கணைக்கால் (Tibia) தட்டையாகி மயிர்களைக் கொண்டுள்ளது. முதற் கணுக்காற் றுண்டமும் நீண்டு பல வரிசைகளில் மயிர்களைக்கொண்டுள்ளது. இப் பகுதியினுதவியால் வயிற்றுப்புறத்திலுள்ள மகரந்த மணிகள் அகற்றப் பட்டு கணைக்காலுக்கும், கணுக்காற்றுண்டத்திற்குமிடையேயுள்ள குழி யில் (மகரந்தக்கூடை) சேகரிக்கப்பட்டு தேன்கூட்டிற்கு எடுத்துச் செல் லப்படுகிறது. வயிற்றுப்பகுதியின் கீழ்ப்புறமாக மார்புப்பட்டைகளை இனக்கும் பகுதியிலே நான்கு பைகள் போன்ற அமைப்புகளுண்டு. இவற்றிலுள்ள மெழுகுச் சுரப்பியிலிருந்து பெறும் மெழுகு உமிழ்நீருடன் கலக்கப்பட்டு தேன்கூடு கட்டுவதில் பயன்படுகிறது. மகரந்த மணிகளைச் சேகரிப்பதற்கான அமைப்புகளும், மெழுகுசுரக்கும் சுரப்பிகளும் இராணித் தேனீயிலும், ஆண்தேனீக்களிலும் கிடையாது. தொழிலாளித்தேனியில்

Page 110
- 206 -
கண்ணக்
கால் தொடை
மகரந்த மணிக் அரைச்சந்து தொடை கணைக்கால் கூடை
ஓடி
கனுக்காற்றுண்டம்
கணுக்காய் முண்டம்
உணர்கொம்பு துப்பரவாக்கி
படம் 116 - முதற்கால் ; நடுக்கால் - மூன்றாம் கால்
மட்டுமே உடலின்பின் முனையில் கொடுக்கு உள்ளது, பெண் தேனீயின் முட்டையிடும் அங்கமான சூலிடப்படுத்தியே (0vipositor) கொடுக்கு களாகத் தொழில்படுகிறது. தொழிலாளித்தே முட்டையிடுவதில்லையாத லால் அதன் கொடுக்கு பாதுகாப்பு அங்கமாக உபயோகிக்கப்படுகிறது. கொடுக்கில் வீங்கிய பகுதியான குமிழும் பின்நோக்கிக் கூராகச் செல்லும் தண்டும் உள்ளன. தண்டிலே குமிழ்க் குழியுடன் தொடர்புள்ளதும், மேற்பகுதியில் தவாளிப்புடையதுமான மடல் (Sheath) ஓன்றும், பற் களினமைப்புடைய, சிறு வேல் போன்ற இரு எறிபடைகளும் (Darts) உள்ளன. கொடுக்குடன் சேர்ந்து நீண்டு சுருண்ட அமிலச் சுரப்பிகள் ஒரு சோடியும், குமிழுடன் தொடர்புகொண்டுள்ள காரச்சுரப்பி யொன்றும் உள்ளன. அமில, காரச்சுரப்பிகளின் கான்கள் இணைந்து குமிழுள் அமிலக்காரச்சுரப்பைச் சேர்க்கின்றன. குமிழிலே அமிலச்சுரப்பும், காரச் சுரப்பும் கலக்கப்படுவதனால் உண்டா கும் நச்சுப்பொருள் தேனீ ஒருவரைக் குத்தும்பொழுது தண்டினூடாக உட்செலுத்தப்படுகிறது. எறிபடை முன்னும், பின்னும் அசைந்து நஞ்சுப்பொருளை உட்செலுத்த உதவியளிக்கிறது.

- 207
நச்சுப்பை
காரச்சுரப்பி
குமிழ்
தண்டு
எ றிபடை
பட ம் 17 - கொடுக்கு
பட கலவிப்பறப்பின் பொழுது இராணியுடன் அநேக சோம்பிகள் கூட்டைவிட்டுப் பறக்கின்றன. அப்பொழுது சோம்பிகள் விந்துகளை இராணியின் புணர்ச்சிப் பையினுள் கடத்துகின்றன. இராணியின் விந்துறைகளில் விந்துகள் சேமித்து வைத்துக்கொள்ளப்படுகின்றன. புணர்ச்சியின் பின் இராணித்தேனீ மட்டுமே திரும்பவும் கூட்டையடை கிறது. சோம்பிகள் இறந்துவிடுகின்றன. தப்பிவருபவையும் கூட்டினுள் அனுமதிக்கப்படுவதில்லை, மூன்றுவிதமான தேனீக்களும் வளர்ந்து விருத்தியடைவதற்கு வெவ்வேறுவிதமான அறைகள் தேன்கூட்டிலே யுள் ளன. முட்டைகள் இடப்படும்பொழுது கருக்கட்டல் நடைபெறு கிறது. எனவே, சிலவேளைகளில் கருக்கட்டப்படாத மூட்டைகளும் இடப்படுகின்றன. முட்டைகள் இடப்படும்பொழுது கருக்கட்டல் நடை பெறுமா இல்லையாவென்று இராணித்தேனீ உணர்கிறதெனவே கருதக் கூ டி.யதாயிருக்கிறது. ஏனெனில் கருக்கட்டிய முட்டைகள் சிறிய அறை களிலும், கருக்கட்டாத முட்டைகள் பெரிய அறைகளிலும் இடப்படுகின் றன. இராணித்தேனீயாக விருத்தியடைபவற்றிற்கும் பெரிய அறைகளே ஒதுக்கப்பட்டுள்ளன. கருக்கட்டாத முட்டைகளிலிருந்து வெளிவரும் குடம்பிகள் எப்பொழுதும் சோம்பிகளாகவே விருத்தியடைகின்றன. கருக்கட்டிய முட்டையிலிருந்து வெளிவரும் குடம்பிகள் தொழிலாளித் தேனீகளாகவோ இராணியாகவோ விருத்தியடையலாம். குடம்பி

Page 111
- 206 -
களுக்குக் கொடுக்கப்படும் உணவைப் பொறுத்தே எந்தக் குடம்பி இராணியாக வளர்ச்சியடையுமென்பதை நிச்சயிக்கலாம், இராணி யாக வருபவை கூம்புருவான பெரிய அறைகளிலேயே காணப்படுகின்றன. முட்டையிட்டு மூன்று நாட்களில் குடம்பிகள் வெளிவருகின்றன. யெண் ணிறமாகவுள்ளன இவற்றிற்கு கால்கள் கிடையா. - சில நாட்களுக்கு இராசபாகு என்னும் உணவுப் பொருள் தொழிலாளித் தேனீக்களால் எல்லாக் குடம்பிகளுக்கும் ஊட்டப்படுகின்றன. தொழிலாளித்தேனீயில் தொண்டையினுட் திறக்கும் ஒரு சிறப்பான சுரப்பி இராசபாகைச் சுரக் கிறது. இராணியாக விருத்தியடையவிருக்கும் தேனீக்குடம்பிமட்டும் தொடர்ந்து இராசபாகைப்பெற, தொழிலாளித்தேனீக்களாகவும், சோம் களாகவும் விருத்தியடையும் குடம்பிகள் தேனையும், அரைக்கப்பட்ட மகரந்த மணிகளையும் உணவாகப்பெறுகின்றன. குடம்பிக்காலமான ஐந்து நாட்களுக்குப்பின் குடம்பியிலிருந்து கூட்டுப்புழு தோன்றுகின்றது. குடம்பி கூட்டுப்புழுவானவுடன் உணவுட்கொள்ளல் நிறுத்தப்பட்டு தொழிலாளித்தேனீக்களால் அறைகள் மெழுகால் மூடப்படுகின்றன. கூட்டுப்புழுப்பருவம் தொழிலாளித் தேனீக்களில் ஐந்து நாட்கள்வரையும், இராணி, சோம்பி ஆகியவற்றில் ஒன்பது நாட்கள்வரையிலும் நீடிக்கும். கூட்டுப்புழுக் காலத்தின் பின் நிறைவுடலிகள் வெளிவருகின்றன. இராணித்தேனீ மட்டும் திரள்பறத்தலின்பொழுது (Swaring) அறையை விட்டு வெளிவருகிறது, புதிய இராணித்தேனீ வெளிவரும் நேரம் தெருங்க பழைய இராணித்தேனீ அதனறையைப் பிரிப்பதற்கு எத்தனிக் கும். ஆனால் தொழிலாளித்தேனீக்கள் அதற்கு இடமளிப்பதில்லை, பழைய இராணித்தேனீ ஒருசில வேலையாட்தேனீக்களுடனும் சோம்பிகளுடனும்
குடம்பி
கூட்டுப்புழு
படம் 118

- 209 -
பறந்து செல்கிறது. பறத்தலின்பொழுது இராணி புணர்ச்சியடை கிறது. தொழிலாளிகளால் புதிய தேன் கூடு கட்டப்பட்டு இராணியும் தொழிலாளிகளும் அதில் வசிக்கின்றன. சோம்பிகள் புதிய தேன்கூட்டி னுள்ளோ அல்லது பழைய தேன்கூட்டினுள்ளோ அனுமதிக்கப்படுவ தில்லை.
தொழிலாளித்தேனீ வாழ்க்கையின் வெவ்வேறு காலங்களிலும் வெவ்வேறு தொழில்களைச் செய்கிறது. கூட்டுப்புழு நிலையிலிருந்து நிறை வுடவியானவுடன் வளர்ந்த நிலையிலுள்ள குடம்பிகளுக்கு உணவூட்டும் தொழிலைச் செய்கின்றது. மூன்று நாலு நாட்களுக்குப் பின்னர் புதிதாக முட்டையிலிருந்து வெள்வந்த ருடம்பிகளுக்கு இராசபாகை ஊட்டு கின்றது. இக்காலத்திலேயே தொழிலாளித்தேனீயின் இராசபாகைச் சுரக்கும் சுரப்பி நன்கு தொழில்படுகிறது. இவ்வாறு தாதி வேலையைச் சில நாட்களுக்குச் செய்த பின்னர் கூட்டின் வாயிலையடைந்து சிறகுகளை யடிப்பதன் மூலம் கூட்டின் வெப்பநிலையைச் சீராக்குகிறது. இவ் வேளையில் அவை வேறு பூச்சிகளையோ அல்லது வேறு கூட்டிலிருந்து வரும் தேனீக்களையோ உள்ளே விடாமல் காவற்றொழிலையும் புரிகின்றன. மூன்று வாரங்களின் பின்பு நிறைவுடன் கூட்டைவிட்டு வெளிச் சென்று தேன் சேகரிக்கின்றது.
தேன் சேகரிக்கச் செல்லும் தேனிக்கள் ஓரிடத்தில் தேன் கிடைக்கு மெனக் கண்டால் தேன்கூட்டின் வாயிலிற் சென்று ஒருவகையான ' நாட்டியத்தின்" மூலம் தேன் இருக்கும் திசையையும் தூரத்தையும் ஏனைய தேனீக்களுக்குத் தெரிவிக்கின்றன.
கணம் - ஆத்திரப்போடா (Arthropoda)
வகுப்பு - சரக்கிரிடா (Arachnida) வருணம் (1)- அரளேடா
வருணம் (2) - ஸ்கரப்பிரியாளிடியா (Araneida)
(Scorpionideo) வகை - சிலந்தி (Spider)
வகை - கொடுக்கன் (Scorpion) வகுப்பு - அரக்கிநிட:
இவ்வகுப்பில் சிலந்திகள், கொடுக்கன்கள், உண்ணிகள் முதலியன அடங்கும். இவற்றின் உடலை இருபகுதிகளாகப்பிரிக்கலாம், முன்பகுதி தலை நெஞ்சறைப்பகுதி அல்லது முன் மூர்த்தம் (Prosoma) எனவும், பின்பகுதி வயிறு அல்லது மூர்த்தம் (Opistlhosoma) எனவும் அழைக்கப்படும். சில விலங்கினங்களிலே முர்த்தத்தை இடைமூர்த்தம் (Mesosofha), அனு முர்த்தம் (Meta Soma) என இரு பகுதிகளாகப் பிரிக்கலாம், இப்பகுதி களை முறையே வயிற்றுமுன்னயல் (Preabdomen), வயிற்றுப்பின்னயல் P-14

Page 112
- 210 -
(Postabdomen) என்றும் அழைப்பர். முன்மூர்த்தத்தில் காம்புகள் இல்லாத தனிக்கண்களுடன் ஆறுசோடித் தூக்கங்களும் காணப்படும், முதலிரு சோடித்தூக்கங்களும் தலைக்குரியவை. பற்றும் அங்கங்களாகவும் (Prehenisile organs) பொதுவாக கொடுக்குடையனவாகவுமுள்ள இவை முறையே கொடுக்குக் கொம்பு Chelicera) உணரடி. (Pedipalp) என அழைக்கப்படும். இவற்றைத் தொடர்ந்து காணப்படும் நான்கு சோடி நடக்குங்கால்கள் நெஞ்சறைப் பகுதியைச் சேர்ந்தவையாகும். முன் ,
மூர்த்தத்தின் மேற்புறமாக பரிசை மூடி Carapace) உள்ளது. முன்மூர்த்தம் ஏழு, அல்லது எட்டுத்துண்டங்களாலும், மூர்த்தம் பன்னிரண்டு துண்டங் களாலுமானவை. மூர்த்தத்தில் இடப்பெயற்சித்தூக்சுங்கள் கிடையா, வாதனாளிகள், நுரையீரவேடுகள் ஆகியவை சுவாசவங்கங்களாகத் தொழில் புரிகின்றன. நீர்வாழ் அரக்கினிட்டுகள் சிலவற்றில் ஏட்டுப்பூக்களும் : (Book gills) காணப்படுகின்றன, பெரும்பாலான அரக்கினிட்டுகள் திரவ உணவை உட்கொள்ளுவதால் தொண்டை உறிஞ்சும் உறுப்பாகத் தொழில் படுகின்றது. ஆண், பெண் பாலங்கங்கள் வெவ்வேறு விலங்கு களிலே காணப்படுகின்றன, உற்பத்தித்துவாரங்கள் முர்த்தத்தின்
இரண்டாம் துண்டத்தில் வயிற்றுப்புறமாக விருக்கின்றன.
வருணம் - அரனேடா (Araneida )
துண்டங்களாக்கப்படாத முன்மூர்த்தத்தையும் (தலைநெஞ்சுப்பகுதி யையும்) மூர்த்தத்தையும் வயிற்றுப் பகுதியையும்) கொண்ட உட தலுண்டு, இரு பகுதிகளையும் பிரிக்கும் ஒடுங்கியபாகம் இருப்பு எனப்படும். தலையிலே எட்டுக் கண் நள் இரு வரிசைகளிலுள்ளன. இரு துண்டங் களாலான கொடுக்குக்கொம்பும் உணரடியும் உள்னன. கொடுக்குக் கொம்பு நஞ்சுச் சுரப்பியைக் கொண்டுள்ளது. இவற்றில் கொடுக்கு கிடையாது. உன்ணரடி ஆறு துண்டங்களாலானது. ஆண் இனங்களிலே உணரடி ட புணர்ச்சிக்காகப் பரிசவங்கமாக (Palpal organ) வேறு பாடடைந்துள்ளது. நடக்குங்கால்களில் ஏழு துண்டங்களுண்டு, இவ் வருணத்தைச் சேர்ந்தவை முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்றன, ..
சிலந்தி :
சிலந்திகள் பலவிதமான ய சூழ்நிலைகளிலும் காணப்படுகின்றன. சிலந்தியினுடல் முன் மூர்த்தம் (Prosoma) அல்லது தலை நெஞ்சறை என்றும், மூர்த்தம் (opisthosoma) அல்லது வயிறு என்றும், இருபகுதிகளைக் கொண்டது. முன்மூர்த்தத்தின் மேற்புறமாக பரிசைமுடி யொன் றுள்ளது. முன்முர்த்தத்தை மூர்த்தத்துடன் இணைக்கும் ஒடுங்கிய பகுதி இடுப்பு எனப்படும். தலையிலே எட்டுக் கண்கள் இரு வரிசைகளிற் காணப் படும். - முன்மூர்த்தத்தில் ஆறு சோடித்தூக்கங்களுண்டு. அவை

- 211 -
முன்
கொடுக்குக் கொம்பு
உணரடி
மூர்த்தம்
கணுக்காற்றுண்டம்
கணக்காற்றுங்டம் மூட்டுச்சில் தொடை - ஓடி
மூர்த்தம்
அரைச்சந்து
தாடை யடிமுனை
படம் 119 சிலந்தி - உணரடி - கொடுக்குக் கொம்பு
யாவன ஒரு சோடி கொடுக்குக்கொம்புகள், நான்கு சோடி நடக்குங் கால் கள் என்பனவாகும். இரு துண்டங்களாலான கொடுக்குக்கொம்பு கள் நஞ்சுச்சுரப்பிகளைக் கொண்டுள்ளன. முனைத்துண்டத்திலுள்ள துவாரத்தினூடாக நஞ்சுச்சுரப்பி வெளித்திருக்கிறது. உணரடி ஆறு துண்டங்களாலானது. அவையாவன அரைச்சந்து, ஓடி, தொடை, முட்டுச்சில், சுணைக்காற்றுண்டம், கணுக்காற்றுண்டம் என்பனவாகும், ஆண்சிவந்திகளில் கணுக்காற்றுண்டம் வீக்கமடைந்து பரிசவங்கத்தைக் கொண்டுள்ளது. சுக்கிலப்புடகமாகத் தொழில்படும் இதில் விந்துகள் சேகரித்துவைக்கப்பட்டு புணர்ச்சியின் பொழுது பெண் சிலந்தி யின் உற்பத்தித்துவாரங்களினூடாகச் செலுத்தப்படுகிறது. சுக்கிலப் புடகத்திற்கும் ஆண் இனப்பெருக்கத்தொகுதிக்கும் நேரடித் தொடர் பொன்றும் கிடையாது. உணரடியைத் தொடர்ந்துள்ள நடக்குங்கால் களொவ்வொன்றும் ஏழு துண்டங்களாலானது, அவை அரைச் சந்து, ஓடி, தொடை, மூட்டுச்சில், கணைக்காற்றுண்டம், முன்கணுக்காற் றுண்டம், கணுக்காற்றுண்டம் என்பனவாகும், கணுக்காற்றுண்டத்தின்
முனையில் இரண்டு அல்லது மூன்று நகங்கள் காணப்படும்,

Page 113
- 212 -
சில சிலந்தியினங்களிலே நான்காம் சோடிக்கால்களின் முன் கணுக் காற்றுண்டத்தில் சீப்புப் போன்ற அமைப்பொன்று (Alamistrum) உள்ளது. இவ்வமைப்புள்ள சிலந்திகளின் வயிற்றுப் பகுதியில் நூற்குஞ் சுரப்பிகளின் துவாரங்களைக் கொண்ட பகுதியொன்று (Cribeblum) முதற் சோடி நூற்கும் புன்கருவிகளுக்கு முன்னால் காணப்படும். உற்பத்தி மடிப்பு (Genital fold) என்னும் மடிப்பு வயிற்றுப்பகுதியின் முன்பகுதியை (இரைப்பைமுற் சுவருக்குரிய பகுதியை - Epigastric area) பின் பகுதியி லிருந்து பிரிக்கிறது. உற்பத்தித்துவாரங்களும் முன் சுவாசத்துவாரங் களும் இம்மடிப்பிலே காணப்படும். பெண் சிலந்திகளின் உற்பத்தித் துவாரங்களை மூடி ஒரு மடிப்பு (Epigyne) உண்டு. பின்வயிற்றுப்பகுதி யில் மூன்று சோடி நூற்கும் புன்கருவிகள் (Spinnerets) உண்டு. இவற் நிற் காணப்படும் அனேக நுண்டுகளாகளினூடாக வரும் பாய்பொருள் வெளிவந்தவுடன் தடிப்பாகி வலை பின்னுவதற்கு உதவுகிறது. முதற் சோடி நூற்கும் புன் கருவிகளுக்கு முன்புறமாக ஒரு சோடி சுவாசத் துவாரங்கள் உள்ளன.
சிலந்திகள் பூச்சிகளைக் கொன்று அவற்றிலிருந்து திரவவுணவை உறிஞ்சுகின்றன. எனவே அவற்றின் வாயுறுப்புகள் அதற்கேற்ப வேறு பாடடைந்துள்ளன, கொடுக்குக்கொம்புகளும், உணரடிகளும் உண வைப் பிடித்து கொல்லுவதற்கு உதவுகின்றன. கொடுக்குக்கொம்பு களிலுள்ள நஞ்சுப்பொருள் இரையினுட் செலுத்தப்படுவதனால் இரை இறக்கின்றது. கொடுக்குக்கொம்புகளால் ஏற்படுத்தப்பட்ட துவாரங்களினூடாக சிலந்தியின் குடலிலிருந்து சுரக்கப்படும் சமிபாட்டுச் சாறு இரையினுட்சென்று புறச்சமிபாடு நடைபெறுகிறது. உணரடி யின் அரைச்சந்திற் காணப்படும் உமிழ்நீர்ச் சுரப்பிகள் தமது சுரப்பை வாய்க்குழியினுட் செலுத்துகின் றன.. உமிழ் நீர்ச்சுரப்பியிலிருந்து பெறும் சுரப்பும் சமிபாட்டில் உதவிசெய்யக்கூடும். உணரடியின் அரைச்சந்துகள் தடித்து தாடையடிமுனைகளாகத் தொழில்படுகின்றன, அரைச்சந்திலுள்ள மயிர்கள் வடிகட்டிகளாகத் தொழில் புரிகின்றன. தொண்டையிலுள்ள தசைகளின் தொழிற்பாட்டால் சமிபாடடைந்த உணவு திரவநிலையில் உறிஞ்சப்படுகிறது.
ஆண் சிலந்திகள் பெண் சிலந்திகளைவிடச் சிறியவை.
- கடைசித் தோல்கழற்றலின் பின்பே பெண் சிலந்தியில் யோனிமடி ( Vulva) முற் முகத் திறக்கிறது. ஆண் சிலந்தி விந்துகளை முதலில் வலையிலே செலுத்திப் பின்னர் உணரடியின் நுனித்துண்டத்திலுள்ள சுக்கிலம் வாங்கியினுள் ளெடுத்து புணர்ச்சியின் பொழுது பெண் சிலந்தியின் உற்பத்தித் துவாரத் தினுட் கடத்துகிறது. புணர்ச்சியின் பின் பெண் சிலந்தி ஆண் சிலந்தியைக் கொன்று அதன் சாறை உறிஞ்சுகிறது.

- 213 -
பெண் சிலந்திகள் முட்டைகளையிட்டு அவற்றைச் சுற்றி பஞ்சு போன்ற கவசத்தையுண்டாக்குகின்றன. உருமாற்றம் நடைபெறாமலே முட்டை சளிலிருந்து புதிய சிலந்திகள் வெளிவருகின்றன.
வருணம் - ஸ்கோப்பியோனிடியா (Scorpionidea) :
உடல் முன் முர்த்தம், இடைமூர்த்தம், அனுமூர்த்தம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முன்மூர்த்தத்தில் ஒரு சோடி சிறிய கொடுக்குடைய கொடுக்குக்கொம்பும், ஒருசோடி பெரிய கொடுக்குடைய உணரடியும், நான்குசோடி நடக்குங்கால்களும் உண்டு. இடை மூர்த்தத் தின் முதற்றுண்டத்து வயிற்றுப்புற பகுதியில் ஒரு உற்பத்தி முடியுருவும் (Genital operculum) இரண்டாம் துண்டத்தில் ஒரு சோடி சீப்புருக்களும் (Pectines) உண்டு. மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆரும் துண்டங் களிலே நான்கு சோடி நுரையீரலேடுகளுண்டு. அனுமூர்த்தத்தைத் தொடர்ந்து பின் முனையிலே கொடுக்கு உள்ளது.
கொடுக்கன் (Scorpior] : உ-ம் : PalanaEus SWAITHerdami
கொடுக்கன் கள் பகலிலே உக்கும் மரங்கள், கற்கள் ஆகியவற்றினடி யிலோ, பொந்துகளிலோ ஒளிந்திருந்து இரவிலே இரை தேடுவதற்காக வெளிவருகின்றன. கொடுக்கன்களின் நீண்ட உடலை முன்மூர்த்தம், இடை மூர்த்தம், அனுபூர்த்தம் என்னும் மூன்று பிரிவுகளாகப் பிரிக் கலாம். ஒவ்வொரு பகுதியிலும் ஆறு துண்டங்களுள்ளன. அனுமூர்த் தத்தைத் தொடர்ந்து பின் முனையிலே கொடுக்கு உள்ளது. கொடுக் கிலே புடகம் (Venicle) என்னும் ஒரு வீக்கமும், கூரான முள்ளும் உள் ளன. புடகத்தினுள் இரு நஞ்சுச்சுரப்பிகளுண்டு. இவற்றின் கான்கள் முள்ளின் முனையில் வெளித்திறக்கின்றன.
முன்மூர்த்தத்தை முடியிருக்கும் மூடியுருவில் ஒரு சோடி நடுக் கோட்டுக் கண்களும் (Median cy) மூன்று சோடி சிறிய பக்கக்கண் களும் (Lateral eyes) உண்டு. வயிற்றுப்புறமாக ஆறு சோடித் தூக்கங் களுள்ளன. வாயினிருபுறங்களிலுமுள்ள கொடுக்குக்கொம்புகள் மூன்று துண்டங்களாலானவை. அடித்துண்டம் மிகச்சிறியது. ஏனைய இரு துண்டங் களும் கொடுக்காக அமைந்துள்ளன. உணரடி ஆறுதுண்டங்களாலானது. அடித்துண்டமான் அரைச்சந்து உணவை அரைப்பதற்கு உதவுகிறது. கொடுக்கன் - பூச்சிகளையும் சிலந்திகளையும் உணவாகக் கொள்கிறது. சிலந்தியிலுள்ளது போல் இதில் வடிகட்டக்கூடிய மயிர்களில்லை. உணரடி யால் இரைபிடிக்கப்பட்டு, கொடுக்கிலுள்ள நஞ்சுப்பொருளால் உணர்ச்சி யிழக்கப்பட்டு, கொடுக்குக்கொம்புகளால் வெட்டப்படுகின்றன. ஆனால் வாய் மிகச்சிறிதாயிருப்பதால் உணவு திண்ம நிலையில் உட்செல்லாது

Page 114
- 214 --
கொடுக்குக் நடுக்கோட்டுக் பக்கக்கண் கொம்பு
- "கண் .
உணாரடி
முன்மூர்த்தம்
வா
இதரப்
இடைமூர்த்தம்.
அனுமூர்த்தம்
0 0
முள்
புடகம்
படம் 120 - கொடுக்கள்
இரைப்பையிலிருந்து சுரக்கப்படும் சமிபாட்டு நொதியங்களால் உணவு வெளியே பகுதிசமிபாடடைந்து உறிஞ்சப்படுகிறது. உணரடியைத் தொடர்ந்து நான்கு சோடி நடக்குங்கால்களுள்ளன. இவற்றில் ஏழு துண்டங்களுண்டு, முதல், இடைமூர்த்தத்துண்டத்தின் வற்யிறுப்புறமாக ஒரு உற்பத்தி மூடியுருவும், இரண்டாம் துண்டத்தில் ஒரு சோடி சீப்புருக் களும் உள்ளன, மூன்ரும், நான்காம், ஐந்தாம் ஆறாம் துண்டங்களி லுள்ள நான்கு சோடி நுரையீரலேடுகள் அத்துண்டங்களின் மார்புப் பட்டையில் சுவாசத்துவாரங்களினூடாக வெளித்திருக்கின்றன, சுவாசத் துவாரங்கள் காற்றறையினுள் வளியைக்கொண்டு செல்கின்றன. நுரை யீரலேடுகளினகத்தே புத்தகத்திலுள்ள ஏடுகள் போன்று கலன் மடிப்பு சுளுண்டு. இவற்றில் ஒட்சிசன் உள்ளெடுக்கப்பட்டு காபனீரொட் சைட்டு வெளிவிடப்படுகிறது. ஆண், பெண் பாவங்கங்கள் வெவ்வேறு கொடுக்கன்களிலேயுள்ளன, கொடுக்கன்கள் குட்டியீனுகின்றவையாகும். குட்டிகள் பிறந்தபின் சிறிது காலத்திற்கு தாய்க் கொடுக்கன் தனது .

- 215 -
பாடா E ::-பட்ட HE, .
துரையீரலேட்டு
கலன் மடிப்பு 11. ILAT-7-கம்
காற்றறை பகட்ட 151ட் டட் பா- 12:14:51
11 E11 11)
, கட்
சுவாசத்துவாரம் படம் 121 - நுரையீரலேடு
முதுகிலே இவற்றைக் கொண்டு திரிகிறது. குட்டிகள் நிறைவுடலியாக மாறுமுன் பலமுறை தோலைக் கழற்றுகின்றன. கடைசித் தோல் கழற்ற லின்பொழுதே உற்பத்தித் துவாரங்கள் வெளித்தெரிகின்றன.
வகுப்பு - மிரியப்போடா (Myriapoda) வருணம் – கை லொப்போடா (Chilopoda) வகை - மட்டத்தேள் (Centipede) உ-ம் : லித்தோபியல்
(Lithobius ); ஸ்கொலொபென்டி (Scolapendra)
மிரியப்போடாவின் இயல்புகள் :
தலையைத்தொடர்ந்து முண்டம் எனப்படும் அநேக துண்டங்களாலான பகுதி உள்ளது. இதைநெஞ்சறை, வயிறு என வேறுபடுத்தமுடியாது. தலையிலே முட்டுகளைக்கொண்ட ஒரு சோடி உணர்கொம்புகளும், தனிக் கண்களும், இரண்டு அல்லது மூன்று சோடித்தா டைகளும் உள்ளன. உடலில் அநேக கால்களுண்டு.
கைலொப்போடாவின் இயல்புகள் :
உடல் மேலிருந்து கீழாகத் தட்டையானது. ஓவ்வொரு உடற்றுண் டத்திலும் ஒரு சோடித் தூக்கங்களுண்டு. உணர்கொம்பு பல முட்டு சுளாலானது. ஒருசோடி சியுகங்கள், ஒருசோடி முதல் அனுக்கள், பிற் சொண்டு ஆகியவற்றைக்கொண்ட வா யுறுப்பு உண்டு. முதற்துண் டத்துத் தாக்கமான அனுக்காலிகளின் முனையினூடாக நஞ்சுச்சுரப்பி வெளித்திருக்கிறது. அடுத்துள்ள துண்டங்களில் ஒவ்வொரு சோடிக் கால்களுண்டு. இவ்வருணத்திலடங்கும் இனங்கள் ஊணுண்ணிகளாகும், உற்பத்தித்துவாரங்கள் உடலின் பின்பகுதியில் கடைசித் துண்டத்திற்கு முன்னாலுள்ள துண்டத்தின் வயிற்றுப்புறப் பகுதியிற் காணப்படும்.

Page 115
- 215 -
பட்டத்தேள் :
உடல் மேலிருந்து கீழாகத் தட்டையாக்கப்பட்டு நீண்டிருக்கும். தலையைத் தொடர்ந்து பல் துண்டங்களுள்ளன. ஸ்கொலொபென்ட்ரா வில் இருபத்தியொரு துண்டங்களுண்டு. தலையிலே பல முட்டு களாலான ஒரு சோடி உணர்கொம்புகளும், வாயுறுப்புகளும், பவ தனிக் கண்களும் உண்டு. ஒடுங்கிய முற்சொண்டும், பற்களினமைப்பைக் கொண்ட ஒரு சோடி சிபுகங்களும், ஒருசோடி முதலனுக்களும், இரண் டாம் அனுக்கள் இணைவதால் உண்டாகும் பிற்சொண்டும் வாயுறுப்பு
தலை
முண்டம்
கால்
படம் 122 - கட்டத்தேள்

- 211 -
களாகத் தொழில்புரிகின்றன. முதல் அனுவில் ஒரு அடித்துண்டமும், அதன்மேல் இரு சோணைகளும் காணப்படும். வெளிச்சோம்ண இரு துண்டங்களாலானது. இரண்டாம் அனுவிலே இருபக்க அடித்துண்டங் களும் இணைந்துள்ளன. இதில் இருபுறமும் மூன்றுதுண்டங்களாலான பரிசவுறுப்புகள் உண்டு.
சிபுகம்
முதலாவது அனு
இரண்டாவது அனு
2. அனுக்கான்
அனுக்காலி
படம் 113 - வாயுறுப்புகள்
தலையைத் தொடர்ந்துள்ள துண்டங்களெல்லாம் ஓரே மாதிரி யானவை. கடைசித் துண்டத்தைத் தவிர ஏனையவற்றில் ஒவ்வொரு சோடித்தாக்கங்களுண்டு. முதற்றுண்டத்திலுள்ள நான்கு துண்டங்களா லான தூக்கங்கள் அனுக்காலிகளெனப்படும், - இருபக்க அனுக்காலி களின் அடித்துண்டங்கள் ஒன்றோடொன்று இணைந்துள்ளன. இவற்றைத் தவிர ஒவ்வொரு அனுக்காலியிலும் நான்கு துண்டங்களுண்டு. கொளுக்கி போன்று வளைந்து பற்றுமங்கமாகத் தொழில்படும் இவற்றில் நச்சுச் சுரப்பிகள் நுனிதுண்டத்தினூடாக வெளித்திறக்கின்றன. இரையைக் கொல்வதற்கு நஞ்சு பயன்படுகிறது. அடுத்துள்ள உடற்றுண்டங்களி லுள்ள கால்கள் ஏழுதுண்டங்களாலானவை. அவையாவன: அரைச்சந்து. ஓடி தொடை, கணைக்கால், மூன்று துண்டங்களைக் கொண்ட கணுக்கால் என்பனவாகும், காலின் முனையிலே நகமுண்டு. கடைசித்துண்டம் மிகச் சிறிதாகவிருக்கும், குதம் இத்துண்டத்தின் வயிற்றுப்புறமாகக் காணப்படும், மட்டத்தேள்களும் பூச்சிகளைப்போன்று வாதனாளிகள் முலம் சுவாசிக்கின்றன. மல்பீசியன் சிறு குழாய்களே கழித்தலங்கங்களாகும். ஆண், பெண் பாலங்கங்கள் வெவ்வேறு விலங்குகளிலுள்ளன,

Page 116
- 218 -
தொகுப்பு
தொடரமைப்பொப்பு (Serial homology)!
இறாலின் வெளிப்புறத் தோற்றத்தில் தலைநெஞ்சறைப்பகுதியையும் வயிற்றுப்பகுதியையும் தெளிவாகக் காணக்கூடியதாயுள்ளது. அதனுடல் அநேக அனுபாத்துத் துண்டங்களால் ஆனது. ஒவ்வொரு உடற் றுண்டத்திலும் ஒரு சோடித் தூக்கங்களுண்டு. தலைப்பகுதித்துண்டங் களும் நெஞ்சறைப்பகுதித்துண்டங்களும் இணைவதால் ஏற்பட்ட ஓர் அமைப்பே தலைநெஞ்சுப்பகுதியாகும். தலைப்பகுதியில் சிற்றுணர் கொம்பு, உணர்கொம்பு, சிபுகம், முதலாவது அனு, இரண்டாவது அனு ஆகிய ஐந்து சோடித்தூக்கங்களுண்டு, நெஞ்சறைப்பகுதியில் மூன்றுசோடி அனுக்காலிகள், மூன்றுசோடி கொடிக்குடையகால்கள். இரண்டு சோடி கொடுக்கற்றகால்கள் ஆகிய எட்டுச்சோடித் தாக்கங்கள் காணப்படுகின்றன. வயிற்றுப்பகுதியில் ஐந்து சோடி நிந்துபாதங்களும் ஒரு சோடி வாற்பாதங்களும் உண்டு. எனவே இறாலுடலில் 10 சோடித் தூக்கங்கள் உள்ளதை நாம் காண்கிறோம். 1 சோடித்தாக்கங்களிருப்ப தால் 19 உடற்றுண்டங்கள் இருக்கவேண்டுமென இதிலிருந்து தெரிய வருகிறது. நிறைவுடவுயிரில் 19 உடற்றுண்டங்களும் தெளிவாகத் தென்படாவிடினும் விருத்தி நிலைகளில் 19 சோடி நரம்புத்திரட்டுகள் அவதானிக்கப்பட்டுள்ளன, உடற்றுண்டங்களின் எண்ணிக்கை சோடித் தாக்கங்களின் எண்சரரிக்கைக்கு ஒப்பானது என்பது சவிக்கினியின் விதி (Savigny's law) ஆகும்.
தாக்கங்களின் அமைப்பையும் விருத்தியையும் ஆராயும் பொழுது, எல்லாத் துக்கங்களும் ஓரே அடிப்படை அமைப்பையுடையன வென்றும், வெவ்வேறு தொழில்களைப் புரிவதற்காக வேறு பாடடைந்துள்ளன, வென்றும் தெரியவருகிறது. இவ்வாறான தூக்கங்கள் அமைப்பொத்த தூக்கங்கள் என அழைக்கப்படும், ஒரே விலங்கில் வெவ்வேறு பகுதிகளில் அமைப்பொத்த தூக்கங்கள் காணப்பட்டால் அவ்வியல்பு தொடரமைப் பொப்பு எனக்கூறப்படும், இறாலிலே மிக எளிதான அமைப்புடைய தூக்கம் நீந்துபாதம் ஆகும். இந்த இருகிளைத்தூக்கத்தில் அரைச்சந்துக் கான், அடிச்சந்துக்கான் என்னும் இரு துண்டங்களாலான முதற்கான் முட்டு, உடன்கான்மூட்டு, வெளிக்கான்மூட்டு ஆகியவற்றைக் கொண் டுள்ளது. ஏனைய தாக்கங்களும் அடிப்படையில் இப்பகுதிகளைக் கொண டிருந்தாலும் வெவ்வேறு தொழில்களைப் புரிவதால் ஓரளவு வேறுபாட டைந்துள்ளன. ஆகவே இறாலை தொடரமைப்புடைய விலங்கெனலாம்.

- 219 -
பூச்சிகளின் வாயுறுப்புகான் ;
பூச்சிகளின் வாயுறுப்புகள் அவற்றின் உணவுக்கேற்றவாறு வேறு பாடடைந்துள்ளன. கரப்பான் பூச்சி தாவரப்பொருள்களையும், மரம், கடதாசி போன்றவற்றையும் உண்பதனால் அதன் வாயுறுப்புகள் வெட்டு வதற்காக வேறு பாடடைந்துள்ளன. இதில் முற்சொண்டு, சிபுகம், முதலாவது அனு, இரண்டாவது சோடி அனுக்கள் இணைவதனாலேற்படும் பிற்சொண்டு ஆகியவை உண்டு, வண்ணாத்திப்பூச்சி பூக்களிருந்து தேனை உறிஞ்சுவதால் வாயுறுப்புகள் உணவையுறிஞ்சுவதற்காக வேறுபாடடைந் துள்ளன. இதில் சிபுகங்கள் கிடையா. - அனுக்கள் உறிஞ்சுகுழாயாக மாறியுள்ளன. அனுப்பரிசங்கள் கிடையா, பிற் சொண்டு சிறிய தட்டை யான அமைப்பாக்கப்பட்டு வாயின் கீழ்ப்புறமாகக் காணப்படும். வாய்த் தளத்தில் தொண்டைக்கீழ் உண்டு. களத்தின் பக்க வெளிவளரியான ஒரு தசைப்பை உறிஞ்சுவதற்கு உதவியளிக்கிறது. பெண் நுளம்பு மனி தரைக் குத்தி குருதியை உறிஞ்சுவதனாலும் ஆண் துளம்பு தாவரங்களி லிருந்து சாறை உறுஞ்சுவதாலும் நுளம்பில் துளைத்துாஞ்சும் வாயுறுப்பு கள் காணப்படுகின்றன. இதில் பிற்சொண்டின் அடிப்பகுதி நிண்டு அகன்றிருப்பதால் ஏனைய உறுப்புகளை அது உள்ளடக்கிக் கொள்கிறது. பெண் நுளம்பில் சிபுகங்கள் நீண்டு புன்தம்பங்களெனப்படும் துளைக்கு மங்கங்களாக வேறுபாடடைந்துள்ளன, நுளம்பில் முற்சொண்டு - மேற் றொண்டை உண்டு. தொண்டைக்கீழ் நன்றாக விருத்தியடைந்துள்ளது. உமிழ் நீர்க்கானை உள்ளடக்குவதற்காசு டையத்தே துளைக்கப்பட்டுள் ளது. தேனீக்களில் வெட்டுவதற்காகவும் உறிஞ்சுவதற்காகவும் வாயுறுப்புகள் வேறுபாடடைந்துள்ளன. தேனீக்கள் மகரந்தமணிகளையும் தேனையும் உணவாகக் கொள்வதால் இவ்வாறான வேறுபாடு அவசியமாகும். இவற்றில் சிபுகங்கள் நன்கு விருத்தியடைந்துள்ளன, முதலாவது அனு குல்லாக்கள் பெரிய தட்டையான அமைப்புகளாகக் காணப்படும், மடியல்கள் சிறியவையாகளிருக்கும்' அல்லது காணப்படமாட்டா. அனுப்பரிசங்கள் விருத்தி குன்றியுள்ளன, பிற் சொண்டு நீண்டு நாக்குப் போன்று தொழிற்படுகிறது. இருபக்க நாவுருமுளைகளும் இணைவதால் மிக நீண்ட குழாயொன்று உருவாகி நுனியில் "தேள் கரண்டி " என்னும் அமைப்பைக் கொண்டுள்ளன. அணுக்களின் குல்லாக்களும் பிற்சொண் டின் நாவுருமுளைகளும் பரிசங்களும் ஒன்று சேர்வதனால் ஒரு குழாய் உண்டாகிறது. இக்குழாய் மலர்களின் இதழ்களினூடே செலுத்தப்பட்டு தேன் உறிஞ்சப்படுகிறது.
பூச்சிகளின் சிறகுகள் :
அநேகமாக எல்லாப் பூச்சிகளிலும் இரு சோடிச் சிறகுகள் உண்டு. இவை இடைமார்பு, அனுமார்பு ஆகியவற்றின் முதுகுப்புறத்திற் காணப்.

Page 117
தப்
படும். நுளம்பில் முன்சோடி மட்டுமேயுண்டு, பின்சோடிச் சிறகுகள் சமநிலைப்படுத்திகளாக வேறுபாடைந்துள்ளன. பூச்சிகளில் கவசத்தின் மடிப்புகளே சிறகுகளாக விருத்தியடைகின்றன. கவசத்தின் மேற்புற. கீழ்ப்புற மடிப்புகள் சில பகுதிகளில் பிரிக்கப்பட்டு தடிப்படைவதனால் நரம்பர்களெனப்படும் அமைப்புகள் உண்டாகின்றன. நரம்பர்கள் சிறகுகளைத் தாங்கும் ஆதாரச்சட்டங்களாக அமைந்துள்ளன. சிறகு கள் கவசத்தின் வெளிமுகமடிதல்களாக உண்டாகி அவ்வாறே தொடர்ந்திருந்தால் அவற்றையுடைய பூச்சிகள் எக்சோதெரிகோற்று என்னும் பிரிவிலடக்கப்படும், சிறகுகள் கவசத்தின் உண்முகமடிதல் களாக உண்டாகி, பின்பு வெளிவந்தால் அவ்வாறான சிறகுகளையுடைய பூச்சிகள் என்டோதெரிகோற்று என்னும் பிரிவிலடங்கும்,
ரத பூச்சிகளிலே முன்சோடிச் சிறகுகளுக்கும் பின் சோடிச் சிறகுகளுக்கு மிடையே வேறுபாடு காணப்படலாம்.கரப்பான் பூச்சியில் முன்சிறகு கள் தடிப்படைந்து பறக்காத வேளையில் மெல்லிய பின் சிறகுகளை முடிப் பாதுகாப்பதற்கு உதவுகின்றன, தும்பியில் இருசோடிச்சிறகுகளும் மென் சவ்வு போன்றவையே, பறக்காத வேளையில் இவை வயிற்றுப்பகுதியின் மேல் மடித்து வைத்துக்கொள்ளப்பட முடியாது. வண்ணாத்திப்பூச்சி யில் சிறகுகள் பல வண்ணங்களையுடையது. பூச்சி பறக்காத வேளையில் சிறகுகள் செங்குத்தாக மடித்து வைத்துக்கொள்ளப்படுகின்றன, முன் சோடியும் பின்சோ டி.யும் தளர்ச்சியானமுறையில் இணைக்கப்பட்டுள்ளன. தேனீக்களில் இருசோடிச் சிறகுகளும் மென்சவ்வு போன்றவையே. முன் சோடிச்சிறகுகள் பின்சோடிச் சிறகுகளுடன் கொளுக்கிகள் போன்ற அமைப்பினால் இணைக்கப்பட்டுள்ளதனால் பறத்தலின் போது அவை ஒரு மித்தே தொழில்படுகின்றன,
பூச்சிகளின் கால்கள் :
எல்லாப்பூச்சிகளிலும் முதல், இடை, அனுமார்புத்துண்டங்கள் ஒவ் வொன்றிலும் வயிற்றுப்புறத்தே ஒவ்வொரு சோடிக்கால்கள் உண்டு, கரப்பான் பூச்சியிற் காணப்படுவது போன்று ' எல்லாப் பூச்சிகளிலும் அரைச் சந்துக்கான், ஓடி, தொடை, கணைக்கால், கணுக்காற்றுண்டம் ஆகிய ஐந்து துண்டங்கள் காலிலுள்ளன. ஆனால் பூச்சிகளின் கால்கள் புரியும் தொழில்களுக்கேற்ப அவை வேறுபாடடைந்துள்ளன, கரப்பான் பூச்சியில் கால் நடப்பதற்கும் ஓடுவதற்கும் பயன்படுகின்றன. தும்பியில் மூன்றுசோடிக் கால்களும் உணவைப்பிடிப்பதற்கு உதவுகின்றன. வண் ணாத்திப்பூச்சிகளிலும் நுளம்பிலும் ஆறுதல் நிலையில் நிற்பதற்குக் கால் கள் பயன்படுகின்றன. தேனீக்களில் மலட்டுப்பெண்ணியான தொழி லாளித்தேனீ தேன் சேகரிக்கச் செல்வதால் அதன் கால்கள் அதிக வேறு

- 221' -
பாடடைந்துள்ளன, முன்னங்கால்கள் உணர்கொம்பைச் சுத்தம் செய் வதற்காக சிறப்படைந்துள்ளன, பின்னங்கால்கள் மகரந்த மணிகளைச் சேகரிப்பதற்காக வேறுபாடடைந்துள்ளன.
பூச்சிகளின் வாழ்க்கை வரலாறு ;
கரப்பான்பூச்சியின் வாழ்க்கைவரலாற்றில் உருமாற்றம் முற்றுப் பெறுவதில்லை, அணங்குப்புழுவென அழைக்கப்படும் இளமைநிலைக் கரப்பான்பூச்சி சிறகுகள் அற்றிருப்பதாலும் இனப்பெருக்கத் தொகுதி முற்றாக விருத்தியடையாமலிருப்பதாலுமே நிறைவுடலியிலிருந்து வேறு படுகிறது. இதில் நடைபெறும் உருமாற்றம் குறையனுசேப உருமாற்றம் (Hemimetabolic Betamorphosis) - - அல்லது முற்றவுருமாற்றம் (Incomplete metamorphosis எனப்படும். வண்ணாத்திப்பூச்சி, நுளம்பு, தேனி ஆகியவற்றில் உருமாற்றம் முற்றுப்பெறுவதால் அது நிறையனு சேப உருமாற்றம் (Halometabolic IDetamorphosis அல்லது பூரண உரு மாற்றம் (Complete metaniorphosis) என அழைக்கப்படும். இவற்றின் வாழ்க்கை வரலாற்றில் முட்டை, குடம்பி, கூட்டுப்புழு, நிறைவுடலி ஆகிய நான்கு நிலைகள் உண்டு. குடம்பி நிலை உணவுட்கொள்ளும் நிலை யாகும், ஒய்விநிலையான கூட்டுப்புழு நிலையில் உணவுட்கொள்ளப்படு வதில்லை. அந்த நிலையில் நிறைவுடலியிலிருக்கக்கூடிய அங்கங்கள் தோன்று கின்றன. தின்குழியச்செயல் (Phagocytosis) என்னும் முறையால் குடம்பியிழையங்கள் அழிக்கப்பட்டு விம்பவட்டத்தட்டுகள் (Imaginal dises) என்றழைக்கப்படும் கலக்கூட்டங்களிருந்து புதிய இழையங்கள் உருவாகின்றன. உருமாற்றத்தின்போதும் வளர்ச்சியின்போதும் நடை பெறும் மாற்றங்கள், அதாவது தோல் கழற்றல், புதிய புறத்தோ லுண்டாதல், இனப்பெருக்கத்தொகுதி விருத்தியடைதல் ஆகிய நிகழ்ச்சி களுக்கு மூளையிலுள்ள நரம்பு - சுரக்குங் கலங்கன் (neurosecretory cells) முதன் மார்புச்சுரப்பிகள் ஆகியவற்றிலிருந்து சுரக்கப்படும் ஓமோன்களே காரணமாகும்,

Page 118
புத்துயிர்ப்பு; ஒட்டுண்ணியியல்பு
புத்துயிர்ப்பு :
விலங்குகள் உ இழந்தவொரு - - - பகுதியை, - வளர்ச்சியால் மீண்டும் பெறுதலே - - புத்துயிர்ப்பும் எனப்படும் - எல்லா விலங்குகளிலும், புத்துயிர்ப்பு நடைபெறுகிற தென்றாலும் விலங்குகளின் கட்டமைப்பு சிக்கலாக புத்துயிர்ப்பு நடைபெறும் தன்மை குறைகிறது. சிக்கலற்ற - பலகலத்தாலான விலங்குகளில் உடலின் ஒரு சிறிய பகுதியிலிருந்தே முழுவுடலும் புத்துயிர்ப்படையக் கூடுமென்றாலும் இதற்குக் குறிப்பிட்டவொரு தாழ்வு எல்லை உண்டு. உயர் முள்ளந்தண்டு விலங்குகளின் நிறைவுடலிகளில் தோலின் ஓரு பகுதி அல்லது தசையின் ஒருபகுதிபோன்ற உடலின் சிறிய பகுதிகளேபுத்துயிர்ப் படைகின்றன. உடலில் அற்றுப்போன பகுதியின் பருமனைப் பொறுத்தே புத்துயிர்ப்பு நடைபெறும். உடலின் ஒரு சிறிய பகுதி அற்றுப்போகும் பொழுது அப்பகுதியைச் சூழ்ந்துள்ள பகுதியிலிருந்து அற்றுப்போன பகுதி விருத்தியடைந்து விலங்கு முழு உருவமும் பெறுகின்றது. பழு தடைந்த பரப்பில் ஒரளவு வியத்தம் நீக்கல் நடைபெற்று அப்பகுதியி லுள்ள கலங்களிலிருந்தும், உடலினுட்பகுதியில் வியத்தமடையாமலிருக் கும் கலங்களிருந்தும் புத்துயிர்ப்பு இழையம் உண்டாகி, துரிதமான வியத்தவளர்ச்சியினால் அற்றுப்போன அங்கமோ, பகுதியோ உண்டா கிறது. புத்துயிர்ப்பு முற்றுப்பெறும் பொழுது குறிப்பிட்ட விலங்கில் முன்னருள்ள அங்கத்தின் அல்லது பகுதியின் பருமனில் புதிய அங்கம் அல்லது பகுதி உண்டாகிறது. எனவே, ஒரு விலங்கின் உருவத்தைப் பாதுகாக்கும் பொருட்டே கட்டுப்பாடுள்ள வளர்ச்சி நடைபெறுகிறது. சாதாரண உடற்பகுதிகளில் வளர்ச்சி ஒரு கட்டுப்பாட்டிற்குள் இருப்பது போலவே புத்துயிர்ப்பு இழையவளர்ச்சி வீதமும் கட்டுப்படுத்தப்படுகின் றது. உடலின் சிறிய பகுதி அகற்றப்பட்டிருந்தால் புத்துயிர்ப்பு இழைய வளர்ச்சி துரிதமாக நடைபெறும். மண்புழுவின் பின் முனையில் சிறிய

- 223 -
பகுதியை வெட்டும்பொழுது ஏற்படும் புத்துயிர்ப்புவளர்ச்சி வேகத்திலும் பார்க்க பெரிய பகுதியை வெட்டும்பொழுது ஏற்படும் புத்துயிர்ப்பு வளர்ச்சி வேகம் கூடுதலாக இருப்பதை அவதானிக்கலாம், புத்து யிர்ப்பிழையம் வியத்த வளர்ச்சியடையும்பொழுது அது புத்துயிர்ப் படையும் அங்கத்தில் இருக்கவேண்டிய பல்வேறு இழையங்களாகவும் வியத்தமடைகிறது, புத்துயிர்ப்பு இழையம் எந்தவொரு அங்கமாக வளர்ச்சியடையுமென்று முதலிலேயே தீர்மானிக்கப்பட்டிருக்கவில்லை யென்று முள்ளந்தண்டு விலங்குகளிலே செய்த பரிசோதனைகளிலிருந்து அறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் புத்துயிர்ப்பு இழையம் அகற்றப் பட்டு வேறோரிடத்தில் ஒட்டப்பட்டால் அது புதிய இடத்தில் இருக்கக் கூடிய அங்கத்தையே உண்டாக்கும். உதாரணமாக, வெட்டப்பட்ட அவயவமுன்ள இடத்தில் வாலரும்பு ஒன்றை ஓட்டினால் அது ஒரு அவயவ மாகவே வளர்க்கிறது. புத்துயிர்ப்பு நடைபெறும் பொழுது வியத்த மடைய வேண்டிய இழையங்கள் என்னவென்று தீர்மானிக்கப்படுகிறது. ஆகவே, இந்தநிலையில் அரும்பு பிறிதோரிடத்திற்கு மாற்றி ஒட்டப் பட்டால் அது முதலில் எந்த அங்கமாக வியத்தமடைந்திருக்குமோ அந்த
அங்கமே விருத்தியடையும்,
ஒரு பொது விதியாக புத்துயிர்ப்பின் போது ஒரு அங்கத்தை யுண்டாக்கும் இழையம் விலங்கில் அவ்விழையங்களுக்கு ஒப்பாகவுள்ள இழையங்களிலிருந்தே பெரும்பாலும் பெறப்படுகிறது. உதாரணமாக, புறமுதலுருப்படை, அகத்தோற்படை, ஆகியவை முறையே விலங்குட - லின் புறமுதலுருப்படை, அகத்தோற்படை ஆகியவற்றிலிருந்து பெறப் படுகின்றன. ஆனால் எப்பொழுதும் இவ்வாறு நடைபெறவேண்டுமென்று அவசியமில்லை. " ஓலிகோகீற்றுகளில் புத்துயிர்ப்பின் போது இடைத் - தோற்படை புறமுதலுருப்படையிலிருந்தே யுண்டாகிறதென அறியப்
பட்டுள்ளது.
புரோற்றாசோவாக்களில் மிகச்சிறியதாக இல்லாத ஒரு பகுதி. கரு வைக்கொண்டிருந்தால், அப்பகுதி அழிந்து போன பகுதியை உண்டாக் கிக் கொள்கிறது. கருவற்ற பகுதி புத்துயிர்ப்படையமாட்டாது. உயிருள்ள ஒரு ஐதரா இரண்டு அல்லது மூன்று துண்டுகளாக வெட்டப் படும்பொழுது ஒவ்வொரு துண்டும் ஒரு புதிய ஐதராவாக விருத்தியடை பயும், தனித்தனியே , புதிய இதராவாக வரமுடியாத, மிகச் சிறிய துண்டுகள் ஒன்றுசேர்ந்து ஒரு ஐதராவாக வளரும், ஆனால் அப்பொழுது மூலவுயிர்ப்படைகள் ஒன்றுக்கொன்று மாறுபட்டு சேரமாட்டா, 'புறு முதலுருப்படை வெறொருபுறமுதலுருப்படைப் பகுதியுடனும் அகத் தோற்படை வேறொரு அகத்தோற்படைப் பகுதியுடனுமே இணையும், ஒரு ஐதரா அரைவாசித்தாரத்திற்கு வாயினூடாக வெட்டப்பட்டால்

Page 119
- 224 -
இரு " தலைப் பகுதிகளை ''யுடைய ஐதரா உண்டாகும். சில பிளனே ரியப் புழுக்களும் பல துண்டுகளாக வெட்டப்படும் பொழுது ஒவ்வொரு துண்டும் ஒரு புதிய புழுவாக வளர்கின்றது. ஒரு பிளனேரியப்புழு நடுப் பகுதியில் இரு துண்டுகளாக வெட்டப்படும் பொழுது முன்பகுதியின் பின் முனையில் புதிதாக வால் உண்டாக, பின் பகுதியின் முன்முனையில் புதிய தலைப்பகுதி உண்டாகிறது. வெட்டப்பட்ட முன் பகுதித்துண்டு பின் னோக்கி வளர்ந்து, வாலையும் தேவையான ஏனைய உறுப்புகளையும் உண்டாக்கிக் கொள்கிறது. அப்பொழுது அதன் முன்முனையின் பருமன் குறைவதை அவதானிக்கலாம். எனவே, வெட்டப்பட்ட துண்டத்திலி ருந்த முழு இழையத்தின் அளவிலேயே புதிய பிளனேரியன் உண்டாகி றது. வெட்டப்பட்ட பின்பகுதித்துண்டில் முதலில் தலை உண்டாகி, பின்னரே ஏனைய பகுதிகள் விருத்தியடைகின்றன. புத்துயிர்ப்புப் பெற்ற உடலின் முனைவுத்தன்மை அச்சு (Axis of polarity) எப்பொழு தும் நிறைவுடலின் அச்சைப் பொறுத்தேயிருக்கும். உதாரணமாக, பிளனேரியாவில் வெட்டப்பட்ட துண்டில் தலை முன்புறமாகவும் வால் பின்புறமாகவும் - விருத்தியடையும். ஆனால் விதிவிலக்காக ஒரு சில விலங்குகளில் சூழற்காரணிகளைப் பொறுத்து வேறுபட்ட நிலைகளில் புத்துயிர்ப்பு நடைபெறுவதுமுண்டு. பின் முனைக்கருகாமையில் வெட்டப் பட்ட துண்டுகளிலும்பார்க்க முன்முனைக்கருகாமையில் வெட்டப்பட்ட துண்டுகளில் புத்துயிர்ப்பு நடைபெறும் வாய்ப்பு அதிகமாகும். சில புழுக்களிலே முன்பகுதியிலிருந்து வெட்டப்பட்ட துண்டங்களே தலையை உண்டாக்கக் கூடியவையாயுள்ளன. பின்பகுதியிலிருந்து வெட்டப்பட் டவை இத்தன்மையற்றவையாகக் காணப்படுகின்றன. ஒரு பிளனேரி யாவின் தலை ஏனைய பகுதிகளை விட ஆட்சியுடையதாயிருக்கக் காணப் படுகிறது. முக்கியமான செய்முறைகளில் முன் முனையிலிருந்து பின் முனைக்கு ஒரு படித்திறன் (Gradient) இருக்கிறதென அறியப்பட்டுள்ளது. ஐதராவில் வாய்முனையிலிருந்து அடிப்பாகத்திற்கு படித்திறன் குறைந்து செல்கிறது.
ஐதராவையும் பிளனேரியாவையும் போன்று மண்புழுவிலும் புத்து யிர்ப்பு நடைபெறுகிறது. பின் முனையில். சில துண்டங்கள் வெட்டப்பட்டா குதத்தைக் கொண்ட புதிய கடைசித் துண்டமொன்று உண்டாகி, பின்பு அதற்கு முன்புறமாக புதிய துண்டங்கள் உண்டாகின்றன. முன்முனை யில் துண்டங்கள் வெட்டப்பட்டால் புதிய துண்டங்கள் உண்டாகிய போதிலும் பழைய எண்ணிக்கையில் அவை ஏற்படுவதில்லை. மண்புழு நெடுக்குமுகமாக வெட்டப்பட்டால் அது இறந்து விடுகிறது. அப்பொழுது புத்துயிர்ப்பு நடைபெற மாட்டாது.
ஆத்திரப் பொட்டுகளில் உடலை மூடியுள்ள தடிப்பான புறத்தோல் அடுத்த தோல் கழற்றல் நடைபெறும்வரை புத்துயிர்ப்பை முற்றுப்பெற

215
வண்ணம் செய்கிறது. ஒரு கால் ஒடிந்தால் அப்பகுதியிலிருந்து புத்து யிர்ப்பு இழையம் உண்டாகி புதிய கால் வளர்கிறது. ஆனால் விலங்கு ஒரு முறையாவது தோல் கழற்றியபின்போ கால் முழுமையாக விருத்தி யடைகிறது, இது போன்ற புத்துயிர்ப்பு கிரஸ்ரேசியாக்களிலும், பூச்சிகளிலும், மட்டத்தேள், சிலந்தி, கெடுக்கன் போன்றவற்றிலும் நடைபெறுகிறது.
ஓட்டுண்ணியியல்பு :
இரு விலங்குகள் ஒன்றோடொன்று ஈட்டமுடன் வாழும் பொழுது அவற்றிலொன்று மற்றையதிலிருந்து பயனடைய, மற்றையது எந்தவித இலாபமும் பெறாமலிருந்தால் அது ஒட்டுண்ணியியல்பு எனப்படும். பயன்பெறும் விலங்கு ஒட்டுண்ணி என்றும், மற்றையது விருந்துவழங்கி யென்றும் அழைக்கப்படும். ஓட்டுண்ணியியல்பிற்குச் சரியான வொரு வரைவிலக்கணம் கூறவேண்டுமாயின் இதைப் பல்வேறு கோணங்களி லிருந்து ஆராயவேண்டும். ஒட்டுண்ணி விருந்துவழங்கியினுடலிலிருந்து தனதுணவைப் பெற்றுக்கொள்கிறது. அல்லது விருந்துவழங்கியின் உணவையே தானும் பெறுக்கொள்கிறது. எனவே, ஒட்டுண்ணிக்கும் விருந்துவழங்கிக்குமிடையே போசணை அடிப்படையிலே ஒரு தொடர்புள் ளதை நாம் அவதானிக்கலாம். ஒட்டுண்ணிகள் தாம் வாழும் சூழலுக் கேற்ப திறமையான சிறப்பியல்புகள் பெற்றுள்ளன, விருந்துவழங்கியின் உடலுக்கு வெளியே வாழ்ந்து போசணையை விருந்துவழங்கியரிலிருந்து பெறும் ஒட்டுண்ணிகள் புறவொட்டுண்ணிகளென்றும். விருந்துவழங் கியினுடலினகத்தே வாழும் ஓட்டுண்ணிகள் அகவொட்டுண்ணிகளென் றும் அழைக்கப்படும். சில புறவொட்டுண்ணிகள் ஓரிடமாக இருந்து போசனையைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு அவற்றில் விசேட உறுப்பு கள் காணப்படும். " அட்டை, உண்ணி, தெள்ளு, பேன் போன்றவை புறவொட்டுண்ணிகளாகும். புரோற் றோசோவாவைச் சேர்ந்த செலனே சிஸ் றிஸ், என்ரமபா, பிளாத்திஹெல்மித்தெசுவைச் சேர்ந்த ஈரற்றட்டையன், நாடாப்புழு, நிமற்றோட்டுப்புழுக்களான, கொளுக்கிப் புழு, வட்டப்புழு ஆகியவை அகவொட்டுண்ணிகளாகும்,
ஏறத்தாழ எல்லாவிலங்கு வகைகளிலும் ஒட்டுண்ணிகள் காணப் பட்டாலும் புரோற்றேசோவா, பிளாத்தியெல்மிந்தெசு நிமற்றோடா ஆகிய கணங்களைங் சேர்ந்த ஒட்டுண்ணிகளையே ஒட்டுண்ணிவியலறிஞர் கள் பெரும்பாலும் தமது ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்கிறார்கள். ஒட்டுண்ணிகள் வாழ்வதற்கான சூழிடங்கள் முக்கியமாக மூன்று வகைப்படும்.
Z - 15

Page 120
-- 226 -
1. உடற்பரப்பு, மூக்குத்துவாரம், வாய்க்குழி, நுரையீரல், சிறு
நீரகம், சிறுநீரகச்சனனிவழி ஆகியவை. உணவுக்கால்வாயும் அதனுடன் சம்பந்தப்பட்ட அங்கங்களான
ஈரல், பித்தக்கான், குருட்டுக்குழல் போன்ற இடங்கள்.
3. உள்ளிழையங்களான தசை, குருதி, தொடுப்பிழையம், நரம்
பிழையம் ஆகியவை.
உடற்பரப்பில் வாழும் ஒட்டுண்ணிகளுக்கு பேதியளவு ஒட்சிசன் கிடைக்க வழியுண்டு. நீர் விலங்குகளின் மேல் ஓட்டுண்ணியாக வாழ்ந் தால் அவற்றிற்கு நீரும் கிடைக்கிறது. விருந்துவழங்கியின் தோல் பொதுவாக கெரேற்றினேற்றப்பட்டுள்ளதால் ஒட்டுண்ணிகள் இலகுவில் போசணையைப் பெறமுடியாது. எனவே போசணையைப் பொறுத்தள வில் தோல் ஒரு சிறந்த வாழிடமெனக் கொள்ள முடியாது.
உணவுக்கால்வாயில் வாழும் ஒட்டுண்ணிகளுக்கு போதியளவு போசணைப்பொருள்கள் கிடைத்தாலும் வேறுவிதங்களில் இடையூறு களேற்படுகின்றன. உணவுக்கால்வாயின் வெவ்வேறு பகுதிகளில் pH மாறுபடும். வாய்க்குழியில் ஏறத்தாழ நடுநிலையாகவும், திரைப் பையில் அமிலமாகவும், சிறுகுடலில் காரமாகவும் காணப்படும். சுரக் கப்படும் அநேக சமிபாட்டு நொதியங்களும் ஒட்டுண்ணிகளுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடும். வாய்க்குழியைத் தவிர உணவுக்கால்வாயின் ஏனைய பகுதிகளில் ஒட்சிசன் செறிவு குறைவாகும்.
கப்படும் கூடும். வாகவும் குறைவா
pH நடுநிலையமப்பு ஓரளவு மாற இரசாயனப் பொ.
- குடலில் கொழுப்பு, காபோவைதரேற்றுகள், புரதங்கள் விற்றமின் கள், கனியுப்புகள் ஆகியவையுண்டு. சீதமுளி இழையமும், குருதியும் நிணநீரும் வெகு அருகாமையிலிருப்பதாலும் திரவவுணவும் கிடைக்கப் பெறுகிறது. விருந்து வழங்கியில் இரசாயனப் பொறிமுறைகளினால் குருதியின் அமைப்பு ஓரளவு மாறாமலிருக்கிறதெனலாம். பொதுவாக pH நடுநிலையாகவும், பிரசாரணவமுக்கம் மாறிலியாகவும் உள்ளன. அமினோவமிலங்கள், வெல்லம், இலிப்பிட்டுகள், கரையுமியல்புள்ள புரதங்கள், குருதிக்கலங்கள், ஆகியவை குருதித்திரவவிழையத்தி லுள்ளன.
நாடிக்குருதியில் ஒட்சிசன்செறிவு அதிகமாகும். குருதியில் வாழும் ஒட்டுண்ணிகளுக்கு போதிய 'உணவும் ஒட்சிசனும் கிடைத்தாலும் பிற பொருளெதிரிகள் காணப்படுவதால் அவற்றிற்கு தீங்குமுண்டு. - நீர்ப் பாயப் புரதங்கள் விருந்து வழங்கியின் நிர்ப்பீடனத்தில் பங்குகொள் கின்றன. தின்கலக்குழியங்கள் குருதியிலுள்ள பிறபொருளெதிரிகளை அழிக்க வல்வன்.

-- 227
- ஒட்டுண்ணிகளின் உணவு சமிபாடடைந்த நிலையிலேயேயிருப்பதால் சமிபாட்டுத்தொகுதி நன்கு விருத்தியடைந்திருப்பதில்லை. சிலவற்றில் முற்றாகக் காணப்படமாட்டாது. விருந்து வழங்கியிலிருந்து ஒட்டுண்ணி பெறும், உணவுவகைகளும், அப்பொருள்கள் அகத்துறிஞ்சப்படும் விதமும் மாறுபாட்டிற்குரியன, ஒட்டுண்ணி அமீபாவான என்ரமீபா கிஸ்ரொலிரிக்கா மனிதரின் குடற்குறையில் வாழ்ந்து அங்குள்ள பற்றீரி யாவையும் தேவையற்ற பொருள்களையும் உணவாகக் கொள்கிறது. கோலெஸ் தெரோல் (Cholesterol) என்ரமீபா சிஸ்ரொவிரிக்காவின் வளர்ச்சிக்குத் தேவையான ஒரு பொருளெனக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இவ்வொட்டுண்ணியே அமீபா வயிற்றுளவிற்குக் காரணியாக விளங்குகிறது. இவை பாதுகாப்புக் கவசம் உண்டாக்கப்பட்ட நிலையில் மலத்துடன் வெளிவந்து பெறும்பாலும் சேரினால் பரம்பலடைகின்றன். வாயில் பற்களுக்கிடையே வாழும் என்ரமீபா ஜின்ஜிவவிஸ் முரசுகரை தல் நோயை ஏற்படுத்துகிறது. குருதியில் வாழும் திரிப்பனோ சோமா என்னும் ஒட்டுண்ணி குருதியிலிருந்து காபோவைதரேற்றுக்களையும், புரதங்களையும் பரவல்முறையால் பெற்றுக்கொள்கிறது. செங்குருதிக் குழியத்தில் வாழும் மலேரியா ஒட்டுண்ணியான பிளாஸ்மோடியம் செங் குருதிக் குழியத்தின் ஈமோகுளோபிணே சமிபாடடையச் செய்து உள் ளெடுக்கின்றது. அது குருதிமுத லுருவிலிருந்து மெதயோனீன் என்னும் அமினோவமிலத்தையும், விற்றமின் 'C' யையும் பெற்றுக்கொள்கிறது. பித்தத்கானில்வாழும் ஈரற்றட்டையன், பித்தக்கானின் மேலணிக்கலங் களிலிருந்தும் சீதத்திலிருந்தும் போசணையைப் பெறுகின்றது. ஆனால் ஸ்கைசோஸ்ரோசோம்கள் குருதியையே உறிஞ்சுகின்றன. ஈரற்றட்டை யனின் உறிஞ்சிகள் விருந்து வழங்கியின் கலங்களில் ஓட்டியிருப்பதற்கு உதவுகின்றன, உறிஞ்சற்றொண்டையும் வாயுறிஞ்சியும் உணவை உறிஞ்சுவதற்கு சிறப்பியல்பு பெற்றுள்ளன வெனலாம், இலத்திரன் நுணுக்குக்காட்டியை உபயோகித்து அண்மையில் நடைபெற்ற ஆராய்ச்சிகளின் பயனாய் ஈரற்றட்டையனின் மூடுபடை சூழலிலிருந்து பேசணைப்பொருள்களையும் அகத்துறிஞ்சக்கூடுமெனத் தெரியவருகின்றன. தீனியா சோலியம் போன்ற செஸ்ரோடுப் புழுக்களில் உணவுக்கால்வாய் கிடையாது. இவற்றில் போசணை உடற்பரப்பினூடாகவே அகத்துறிஞ் சப்படுகிறது. இவ்வியல்பிற்கு வாய்ப்பாக உடற்பரப்பில் நுண்சடை முளைகள் உண்டு. எவ்வகைப் பொருள்கள் அகத்துறிஞ்சப்படுகிறதென சரிவரத்தெரியவில்லையெனினும் வெல்லங்களும் அமினோவமிலங்களும் அகத்துறிஞ்சப்படுகிறதெனத் தெரியவந்துள்ளது. நாடாப்புழுக்கள் நொதியவெதிரிகளை விருந்து வழங்கியின் குடலினுள் சுரக்கின்றனவென்ற கொள்கைக்கு பரிசோதனைகள் சான்று கூறுவதாகக் காணப்படவில்லை,

Page 121
உ 158 -
நிமற்றோடுப்புழுக்களில் திறம்பட விருத்தியடைந்துள்ள தசைகளாலான தொண்டை, உணவை குடலினுள் செலுத்துவதற்குப் பயன்படுகிறது. அஸ்காரிஸ் விருந்து வழங்கியின் குடலிலுள்ள உணவுப்பெருள்களை உள் ளெடுக்கின்றது. கொளுக்கிப்புழுக்கள் குடற்சீதத்தையும் குருதியையும் உள்ளெடுக்கின்றன. வெவ்வேறு ஒட்டுண்ணிவாழிடங்களிலும் ஒட்சிசன் செறிவு மாறுபடுவதனால் அதற்கேற்ற முறையில் ஒட்டுண்ணிகள் வேறு பாடடைந்துள்ளன, ஒட்டுண்ணி அமீபாக்களும் குடலில் வாழும் சவுக்குமுளையினங்களும் ஏறத்தாழ முற்றாக காற்றின் றிய சுவாசித்தலையே மேற்கொள்கின்றன. திரிப்பனோசோம்களும், பிளாஸ்மோடியமும் காற்றுள்ள அனுசேபத்தையே நடாத்துகின்றன. பிளாஸ்மோடியத்தி னால் தாக்கப்பட்ட செங்குருதிக்குழியங்கள் அதிகளவு ஒட்சிசனை உள்ளெ டுக்கின்றன. இவ் வொட்டுண்ணியில் உள்ள சைற்றொகுரோம்களும், பிளவோபுரதங்களும் காபோவைதரேற்றுகளை காபனீரொட்சைட்டாக வும் நீராகவும் ஒட்சியேற்றுகின்றன என்பதற்குச் சான்றுகள் உள், குளுக்கோசிலிருந்தே பெருமளவு சக்தி பெறப்படுகிறது. ஆனால் இவற் றிக்கமிலம் ஒரு விளைவுப் பொருளாக இருப்பதனால் முழுக்குளுக்கோசும் ஒட்சியேற்றப்படுவதில்லை யென்று தெரியவருகிறது. ஈரற்றட்டையனும் தீனியாசோலியமும் பொரும்பாலாக காற்றின்றிய சுவாசித்தலையே நடத்துகின்றன. குளுக்கோசும் கிளைக்கோசனும் சக்தியைக் கொடுக்கும் முக்கிய பொருள்களாகும். இவ்விலங்குகளின் திண்ம விழையங்கள் ஒட்சிசன் உட்பரவுவதற்கு ஏற்றவையாக இல்லை.
1 நிமற்றோடு ஒட்டுண்ணிகள் பெரும்பாலும் காற்றின்றியே சுவாசிக் கின்றன. கிளைக்கோபகுப்பு முலம் குறுகிய சங்கிலித் தொடர்களை யுடைய கொழுப்பமிலங்களாக மாற்றப்படுகின்றன. சில கொழுப் பமிலங்களை புழு சேமித்துவைத்து ஒட்சிசன் கிடைக்கும் பொழுது ஒட்சி யேற்றுகின்றது. இவற்றில் புரதமும் சக்தியைக் கொடுக்கின்றது. சில இனங்களிலே பெருமளவில் அமோனியா உண்டாகிறது.
ஒட்டுண்ணிப் புரோற்றோசோவாக்களில் சுருங்கத்தக்க புன் வெற் நிடங்கள் காணப்படுவதில்லையாதலால் பிரசாரணவமுக்கத்தைச் சீராக் குவதற்கு ஒரு பொறிமுறையும் கிடையாதெனலாம். பிளாத்தியெல் மெந்தெசுகளில் திறமையாகச் செயல்படும் சுவாலைக்கலங்கள் உண்டு. நீரிலே சுயாதீனமாக நீந்தித்திரியும் மிராசிடியம், சேர்த்கேரியா, போன்ற குடம்பிகளில் சுவாலைக்கலத் தொகுதி பிரசாரணத் தொழிலைச் செய்கின் றன. சேர்க்கேரியாவில் சுருங்கத்தக்க டையின் அடிப்பு வேகம் கடகத் தின் உப்புச் செறிவிற்கு நேர் விகிதமானதாகும். நின்றவுடலி ஈரற் நடையன், நாடாப்புழுக்கள், பைவாற்பருவப்புழு ஆகியவற்றில் பிரசார3னச் சீராக்கற் கலங்கள் கிடையா. ஆகவே சுவாலைக் கலங்களின்

பட 219 -
முக்கிய தொழில் நைதரசன் கழிவுப் பொருள்களை அகற்றல் என்றே தெரிகிறது. ஒட்டுண்ணி பிளாத்தியெல்மிந்தெசுகளில் கிளைக்கோபகுப் பின் விளைபொருள் கொழுப்பமிலங்களாகவும், புரத அனுசேபத்தின் விளை பொருள்கள் அமோனியா, அமினோவமிலங்கள், யூரியா, யூநிக்கமிலம் போன்றவையாகவும் இருக்கின்றன, "சுவாவைக் கலங்களை இலத்திரன் நுணுக்குக்காட்டியினுடாக ஆராய்ந்ததன்டாயனாய் அவை சுரக்குந் தொழிலை அல்லது உறிஞ்சுந் தொழிலையுடையன வென்று கருதப்படுகிறது. எனவே, இவை மூபையூட்டியின் சிறு நீரகத்தின் சிறு குழாய்களை ஒத்திருக்கிறதெனலாம்.
ஒட்டுண்ணிகள் தாம் வாழும் சூழலுக்கேற்ப திறமையான சிறப் பியல்புகளைப் பெற்றுள்ளன, ஒட்டுண்ணி வாழ்க்கைக்குத் தேவை யற்றன வென்ற காரணத்தால் சிறு உறுப்புகள் அழிந்து விடுகின்றன.
ஒட்டுண்ணிகள் வாழுமிடம் பொதுவாக பாதுகாப்பான இடங்களா யிருப்பதால் எதிரிகளிடமிருந்து தப்புவதற்காகவோ. உணவுதேடி அலைவதற்காகவோ, இடப்பெயர்ச்சி அங்கங்களும் புலனங்கங்களும் தேவையில்லை, எனவே அவ்வங்கங்கள் நன்கு விருத்தியடையவில், இடப்பெயர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட தசைத்தொகுதிகளும் விருத்தி குன்றியுள்ளன,
சாதாரணமாக ஒட்டுண்ணிகளின் இனப்பெருக்கத் தொகுதி பிக்க லானதாயும் நன்கு விருத்தியடைந்துமிருக்கும். முட்டைகள்
செய விருந்து வழங்கியை அடைந்து சந்ததி விருத்தியாவதில் அதிக இ களேற்படுமாதலால் பெருவாரியான முட்டைகள் உ . படுகின்றன. என்ரமீபா போன்ற புரோற் றொசோவாக்கள் - நைப் பைகளை யுண்டாக்கி பாதுகாப்பான நிலையில் புதிய விருந்து வழங்கிகளை யடைகின்றன. பிளாத்தியெல்மிந்தெசுகளிலும் முட்டை பாதுகாப்பான ஒடுகளையுடையது. இவற்றில் முட்டையைச் சுற்றி ஒரு தடித்த புரதத்தாலான ஒடு உண்டு, இது கருவூண் கலங்களிலிருந்து சுரக் கப்பட்ட சிறுகோளங்களிலிருந்து பெறப்பட்டதாகும், இவற்றில் புரதத் துடன் பினோ லும், பினோ லேசு என்னும் நொதியமும் இருப்பதாகத் தெரிகிறது. முட்டை ஓடு விருத்தியடையும் முளையத்திற்கு பாதுகாப்புக் கொடுக்க ஓட்டினகத்தேயுள்ள கருவூண் மென்சவ்வு போசணைப்பொருள் கள் பரவுதல் முறையால் இழக்காமல் பாதுகாக்கின்றது. முட்டைகள் விருத்தியடைவதற்கு ஒட்சிசனும், ஈரப்பற்றும் தேவைப்படுகிறது, ஈரற்றட்டையனின் வாழ்க்கைச் சக்கரத்தில் சுயாதீனமான குடம்பிகள் உண்டாக்கப்படுவதால் புதிய விருந்து வழங்கியையடையும் வாய்ப்பு அதிகமாகும். சுயாதீன வாழ்க்கையுடைய குடம்பிகளில் இடப்பெயர்ச்சி அங்கங்களும் (உதாரணமாக மிராசீடியத்தில் பிசிர்களும் சேர்க் கேரியாவில் வாலும் விருத்தியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Page 122
- 230 -
ஒட்டுண்ணிகள் விருந்து வழங்கியிலிருந்து போசனையைப் பெற்றாலும் விருந்து வழங்கியை இறக்கச் செய்வதில்லை. விருந்து வழங்கி இறந்து விட்டால் ஓட்டுண்ணியும் இறக்க நேரிட்டு, அதன் இனம் பெருக வழி யிராது. பெண் நுளம்பு செலனோசிஸ்றிஸ் என்னும் புரோற்றோசோவன் ஓட்டுண்ணியின் வாழ்க்கையில் காலியாக அமைந்திருக்கிறது. அதே வேளையில் அது குருதியை உறிஞ்சி போசணையைப் பெறுவதால் அதையும் ஒரு ஒட்டுண்ணியெனக்கொள்ளலாம்,
ச.த்சிபு
நிம்) கின்றன.
ப ய ! * "

- 131 -
'Names of Animals -- விலங்குகளின் பெயர்கள் (இவற்றின் உச்சரிப்பு)
Euglena viridis
நியூகினினா விரிடி,ஸ் Euglena gracilis
இயூகினியா கிராசிஸ் Amoeba proteus
அமீபா புறோட்டெயுஸ் Entamoeba histolytica
என்மீபா ஹிஸ்ற்றொலிட்டிக்கா Plasmodium vivax
பிராஸ்மோடியும் வைவாக்ஸ் Plasmodium malariac
பிளாஸ்மோடியும் மலேரியே Plasmodium falciparum
பிளாஸ்மோடியும் பல்சியாறும் Zeylanocystis
செலனோசின்ரிஸ் Paramecium
பரமீசியும் Hydra vulgaris
ஹைட்ரா வுல்காரிஸ் Hydra viridis
ஹைட்ரா விரிடிஸ் | Obelia geniculata
ஓபேஸிலியா ஜெனிக்குலாற்ற Fasciola hepatica
பசியோலா ஹெப்பற்றிக்கா Taenia solium
தேனியா சோலியம் Ascaris -
அஸ்காரிஸ் Pheretima peguana
பெரெத்தீமா பெகுவானா Pheretima postbuma
பெரெத்தீமா பொஸ்துமா Penacus
பெனேயுஸ் Periplaneta americana
பெரிபிளனேற்ற அமெரிக்கானா Anopheles
அனேபிலிஸ் Culex
கியூறெக்ஸ் Apis
ஆபிஸ் Lithobius
லித்தோபியுஸ் Scolopendra
ஸ்கெலொபென்டிரு
| | 1 | I |||| | | | |
+ -
Protozoa Coelenterata Platy helminthes Annelida Arthropoda
Mollusca
Name of Phyla
- த.
புரோட்டோசோவா #லென்டெராற்கு பிளாத்திஹெல்மின் தெஸ்
அசெவிடா ஆந்திரபோடா கொல்ஸ்க்கா
| | | |

Page 123
495
USTANTANEAMENTE
JA F F N A CHUNDIKULI GIRLS' COLLEGE


Page 124
ADVANCED I
K. SA NGA
P U B )
VIJAYALUCKSH
248. Galle
COL
Price
Printed at kum

LEVEL ZOOLOGY
By
RA TY ER B.Sc.
LIS II E ES:
IMI BOOK DEPOT
Road, Wella watte, OMBO-6.
: Rs. 6/-
ann PresiColombo-11.