கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சைவ விளக்கு 1970

Page 1
சைவ 6
பலாலி ஆசிரிய ('
- விசாகன்
--5)
காப்பு:
அசைவமா

விளக்கு
கலாசால
{ ..

Page 2
|quaty
©០១០
JA F FN A

PHOTOGRAPHS
A MS
PHONE: 7067

Page 3
சை வ
பு!!
கலை,
பசினார்
சைவ மான பலாலி ஆக்
வசா

R. Kathirgamu
விள க்கு
இமவுறப் பெ
S)
ஆசிரியர் 50
னவர் மன்றம், சிரிய கலாசாலை,
விளான். 1970

Page 4
எங்கள்
இந்து மாமன் றம் என்ற போதிலே க இலங்கை எங்கணும் இருந்து மாண சேர்ந்த மாணவர் ஒருமையாகவே 4 செய்யுங் காரியம் நல்லதோ எனக்
ஆதி நாயகன் சோதியாகவே அடிய : சாதி இன்றியே சண்டையின் றியே புத்தர் யேசுவும் புனிதர் காந்தியும் நித்தம் நாங்களே நிமலர் பாதமே
வீடு செல்லவே வீதிகள்பல வித்திய மதங்கள் யாவுமே ஒருவன் தேவனை பக்திப் பாடலும் பொங்கல் பூசையும் சக்தி பூசையும் வெள்ளி பூசையும் நால்
ஆனி உத்தரம் கீரிமலையிலே அருமை ஞான பண்டிதர் இருந்து நல்வழி க. கந்தசாமியும் எங்கள திபரும் தந்த எந்தை நாவலர் வளர்த்த நம்மதம் .
கலகம் இன் றியே வாழ நல்வழி கா. உலக வாழ்விலே உவகையாகவே உ பெயரும் புகழுமாய்ச் சீரும் சிறப்புமா உயரும் வழியினை உணர்த்தி விடுத

மன்றம்
Fந்தை பேருவகை கொள் ளுதே "வர் பரவலாகவே வந்து சேருவர் காரியம் பல ஆற்றுவர்
கூட்டம் கூடியே ஆய்குவர்.
வர்க்கருள் கூர்ந்தனன் சாதனை பல செய்குவோம்
தோன்றினர் புவி வாழ்கவே அன்புகொண்டு வணங்குவோம்.
பசமாய் இருத்தல் போலவே
7 அடைய நல்வழி காட்டுமே ம் ஓய் தல் இன்றியே செய்குவோம் வர் பூசையும் நன்கு செய்குவோம்.
மயாகவே கொண்டாடுவோம் ரட்டி வளர்க்கும் எம்மன் றமே ஊக்கம் எம்மன் ரமே ரானளாவவே பொங்கி ஓங்குமே.
ட்டிடும் எங்கள் மன்றமே ய்ய நல்வழி காட்டுமே ய் மானிடர் குலம் வாழவே லே உண்மையான நம்நோக்கமே.
சி. சதாசிவம் ஆங்கிலம் இறுதி வருடம்.

Page 5
விநாயகர்
மண் ணுல கத்தினிற் எண்ணிய பொருளெலா கண்ணுத லுடையதே. பண்ணவன் மலரடி ப

* துதி
பிறவி மாசற - மெளி தின் முற்று றக் பார் களிற்று மா முகப்
ணிந்து போற்றுவாம்,

Page 6
Ele
snas Raga R on ar y to a faaie
ܡܪ ܬNoܛܽܠ UR_D _
.isLACE (nu8 18á, free

எகயால்
- @ fion &்க ஒஜண்0 ROYo ெப ெபாணண்? »& படீை இலை 0 G Tou Tைணடை

Page 7
បr79 បាហាម៉ា
5 G OEO)
BORS

:ாக
சித்: த க
7. விசாகப்பெருமாள்

Page 8


Page 9
சைவ மாண
19'
போஷகர் : பண்டிதர் தலைவர்: திரு .வீ. கணேசன் உப தலைவர்: திரு. T. தேவராசா
பொருளாளர்: திரு
செயற்
திரு. மா. புவனேந்திரன் திரு. A. பேரம்பலம் செல்வி கெள. தயாபரம்பிள்ளை

-வர் மன்றம்
1 க. சச்சிதானந்தன்
செயலாளர்: திரு. S. பழனிவடிவேல் உப செயலாளர்: திருமதி. T. கந்தசாமி . P. வீரபத்திரன்
"குழு
- 2 -3
திரு. N. நடராசா திருமதி. M. நடராசா செல்வி கோ. பொன்னம்பலம்

Page 10
சைவ
நிர்வாக ஆசிரியர்: தி. உதவி:,, : தி
ஆசிரிய
ஓவியம்
கட்டுரை, க திரு. P. விசாகப் பெருமாள் திரு. T.. செல்வி R. செல்லையா
திரு. S. திரு. A, A
விள
திரு. மா. புவனேந்திரன் திரு. S. சிவசுப்பிரமணியம்
செல்வி V. |

பு
விளக்கு
ந, க. கனகரத்தினம் ரு. K. நவரத்தினம்
யர் குழு
கவிதை, கதை
அச்சு
தர்மலிங்கம்
திரு. R. மார்க்கண்டன் சதாசிவம்
திரு. A. அமிர்தலிங்கம் 4. ஜெயபாலன்
ம்பரம்
திரு. S. தில்லையம்பலம்
திரு. M. மயில்வாகனம் ருகுப்பிள்ளை

Page 11
**மேன்
விள
பலாலி ஆசிரிய தினர் "சைவ விளக் யிடுவதைப் பாராட்டுச்
அக விருள் போ அகத்திருள் கடியும். உள்ள அஞ்ஞான இ காக இச் சைவ எம்பெருமானை வழுத்
ஸ்ரீமத் ஸ்வா

டெ
ஆசியுரை
நல்லை ஆதீனம்,
நல்லூர், 20-9-1970.
எமைகொள் சைவநீதி நகுக உலகமெல்லாம் ?
கலாசாலை சைவ மாணவ மன்றத் க்கு" என்னும் சமய சஞ்சிகை வெளி நின்றோம்.
க்குவது அறிவு; அறிவு எனும் விளக்கு
அதுபோல், பல இளம் உள்ளங்களில் இருளைப் போக்கும் மெய்ஞ்ஞான விளக் விளக்கு", பிரகாசிக்க எல்லாம் வல்ல தி ஆசீர்வதிக்கின்றோம்.
"மி நாதத் தம்பிரான் ஸ்வாமிகள்

Page 12
ஆ சி யு ரை
பண்டிதமணி சி. கணபதிப்பில்
"ஒன்றோடொன்று மாறுபடுகின்ற இருப்பது நீதியே'' என்ற முடிபை ஒப் கொண்ட அதனாலே அவ்வச்சமயமா அவற்றின் வேறுமாய் இருப்பது மெய்ச் அதன் தனிச்சிறப்பு.
ஆன்மா இந்தச் சரீரமாய் அதே ! வேறுமாயிருக்கின்றது.
கடவுள் ஆன்மாக்களாய் அவற்றின்
றார்.
மெய்ச்சமயம் எல்லாச்சமயமுமாய் ே
'' இப்பரிசாஞ் சமயமுமாய் அ என்பது தாயுமானவர் வாக்கு. (இப்பரிசு-ஒன்றோடொன்று மாறும்
"சைவ விளக்கு"
மேலே குறிப்பிட்டவைகளை வி
மெய்ச்சமயத்தின்
தாய்மையைப்
பிரகாசிப்பதாக... ''மேன்மைகொள் சைவநீதி விளங்குக

7;
ள்ளை அவர்கள்
சமயம் அத்தனையும் புக்கொண்டு, ஒப்புக் ய், அதேசமயத்தில் ச்சமயம். இவ்வியல்பு
சமயத்தில் சரீரத்தின்
- வேறுமாயிருக்கின்
வறுமாயிருக்கின்றது. நல்லவாகி 9
படும் இயல்பு]
எக்கஞ்செய்து
உலகமெல்லாம் "

Page 13
- தி
பீ. (அதிபர். பொம்
பலாலி தங்கள் சமய, னேற்றத்தையு வெளியிடுகிறார்
ஒரு சமய தவர்களாகவும் ஆசிரியர்கள் : வர்கள். ஆகை வுடன் வெளிப் மாற்றி எங்கள் வேண்டும்.
எங்கள் 8 யும், வழிபாடு வேண்டும்.
இம்மலர் ( ஒரு மறுமலர்ச்

vii
ஆசியுரை
ரு. சி. கந்தசாமி அவர்கள் - எஸ், சி. லண்டன்:, டிப்: எட். லண்டன். ன்னம்பலம் இராமநாதன் இளம் பல்கலைக் கழகம்.)
பலாலி, வசாவிளான்.
ஆசிரியர் பயிற்சிக் கழகத்துச் சைவமாணவர்கள்
கலாச்சார விருத்தியையும், சமூகத்தின் முன் ம் நோக்கி இவ்வெழுபதாம் ஆண்டில் ஒரு மலர் கள்.
பத்தினர் ஒரே மனப்பான்மையும், ஒன்று சேர்ந்
வாழ்தல் நன்று. அன்றேல் சமயம் வளராது. சமூகத்துக்கு வழிகாட்டிகளாக இருக்கவேண்டிய யால் இவர்களே தம் மனக்கருத்துக்களைத் துணி பபடுத்தி மாறா மனப்பான்மை உடையினரை
சமூகத்துக்குப் புத்துயிர் அளித்துக் காக்க
சமயத்திலுள்ள அடிப்படையான தத்துவங்களை களை யும் பிள்ளைகள் நன்கறிந்து ஒழுகச்செய்ய
வருடாவருடம் நறுமணமுடையதாய்த் தோன்றி சியை விளைவிக்கவேண்டும்.
சைவம் வாழ்க! தமிழ் வாழ்க!

Page 14
viii
எங்கள் கலாசாலை அதிபர்
உயர்திரு. ஜோ. ந. எட்வேட் அவர்கள்
ஆசியுரை
பலாலி விசேட பயிற்சி ஆசிரியர் கலா மாணவர் மன் றம் அதன் முதலாவது சஞ்சிகை பதற்கு ஏற்பாடுகள் செய்திருக்கிறது என்ப ை
வும் மகிழ்ச்சியடைகின்றேன்.
இக்கலாசாலையில் பயிற்சிபெறும் எல்லாச் வர்களும் தங்கள் சமய ஒழுக்கங்களையும், களை யும் வளர்ப்பதற்குப் பலவித முயற்சிகள் கிறார்கள். இவ்வித சஞ்சிகை ஒன்றைப் பிரச்
முயற்சிகளிலொன்றாகும். இச்சஞ்சிகையில் கட்டுரைகள் கற்பித்தற் திறமையிலும், சமயப் பல ஆசிரியர்கள் முன்னேற்ற மடைவதற்குப் பதில் சந்தேகமில்லை.
சைவ மாணவர் மன்றத்திற்கும் அது பிர சிகைக்கும் எனது மனமுவந்த வாழ்த்துக்கள்.

அளித்த
சாலைச் சைவ கயைப் பிரசுரிப் த அறிந்து மிக
சைவ மாண பாரம்பரியங் எடுத்து வரு எரிப்பதும் அம் - அடங்கியுள் ள பண்பாட்டிலும் பயன்படுமென்
சுரிக்கும் சஞ்

Page 15
எங்க
உயர்திரு ஜோ.

கள் அதிபர்
ந. எட்வேட் அவர்கள்

Page 16


Page 17
விளக்
விஷயம் எங்கள் மன்றம் சைவ மாணவர் மன் ற! சைவ விளக்கு ஆசியுரை ஸ்ரீமத் சுவாம்
பண்டிதமணி
சி. கந்தசாமி ,, ஜோ. ந. எட ஆசிரியர் கூறுகிறார் சைவ மாணவர் மன்றம்
சாதியினும் சமயமே :
உள்ளும் புறமும் உள்ள 3. ஆசிரிய உலகம்
ஆளுடைப்பிள்ளையின்
சைவசமய தத்துவங்கள் காதல் மகாவித்துவான் கணே
8.
சமயவாழ்வின் குறிக்.ே ஓ,-
தேவார மூவரின் திவ்ய 10. அருணகிரி நாதரின் வா 11.
பட்டினத்தடிகளும் பா 12.
ஆடும் பிரான் 13.
தேனும் வண்டும் 14
கிழக்கிலங்கையில் கண் 15. எம்மதத்திற்கும் சம்ம,
16. அன்பும் அம்மையாரும் 17.
மனிதப்பிறவியும் வேன் 18. இசையில் இணைந்த இ 19. சாபம் பலிக்கின்றது 20. பொறியின்றி ஒன்றும் 21.
கடைசியிலே காண்ப ெ 22. கோரிக்கை 23
துணை யாகி நிற்குது தல் 24.
முருக நாமம் ஒலித்திடு. 25, ஆறுபடை வீடுடை மு

5கினிலே
பக்கம்
11
.
iii
மிநாதத் தம்பிரான்
சுவாமிகள் சி. கணபதிப்பிள்ளை
= = 24: 4 4 4 == *
vi vii
வேட்
viii
1x
1970 ம் ஆண்டுக்குரிய
அறிக்கை அதிகம் ஈானை உள்ளு வோம்
அ ம - 3,
திருமுறையில் உள்ள
சித்தாந்தம்
11
14
16 19
சசையரும் அவரது
சைவப்பணியும் கான் ப த மிழமுதம்
ழ்க்கையற்புதங்கள் வையரும்
sே M N te - 2 ( 9
அ) 3 :
ண கிவிழா தமான இரு திருப்
பாடல்கள்
|
எடுவதே றைவன்
4
50
53
புணராத புந்தி தல்லாம்
57 64 65 66 67 68
லே
ருகா

Page 18
க வி
பண்டிதர் க.
தேன்மடுத்து வெடித்
சிதறாது தெய்வ தான் மணக்கும் பலா
தகழியாகச் சை வான்மணக்க உளமா
வழிந்து நறு ரெ மான்மழுவுந் திருநீறு
சைவமணி விள
தொடுத்தஇதழ்த் தா
செங்கரமும் தே எடுத்தஅடி தோறுமி
பொன்னனையார் அடுத்தவடி களிறொ
ஆசிரியர் அகங் எடுத்தஅடித் திருநட
சுடரெறிப்ப வி.

6ெ3) த
சச்சிதானந்தன்
ந்தபலா தன்மணமே
ச் சைவம் லியெனும் பள்ளியதே வ மன்றம் லர்ந்த அன்பூற்றே கய்ய தாக பம் மலர்ந்தொளிரச்
க்கு வைப்பாம்.
மரையும் துவர்வாயும் Tற்றம் ஒன்றாய் "வர் அன்னமெனும் மலர்க்கை ஏற்ற ன்னும் தோள்வலியார்
கை ஏந்த மே எங்கெங்கும் ளக்கு வைப்பாம்.

Page 19
எங்கள் ம
பண்டிதர் க. சச்

அறப் போஷகர்
சிதானந்தன் அவர்கள்.

Page 20


Page 21
ஆசிரியர்
பலாலி ஆசிரிய கலாசாலையின் ஆர மாணவர் மன்றம் இப்பொழுதும் அதற்குரி றது. அது கலாசாலையிலும், வெளியிலும் யப் பணிபுரிந்து வருகின்றது. அப்பணிகள்
எமது மன்றத்தில் கடந்த பல்லாண் நிவிர்த்தி செய்யுமுகமாக இவ்வாண்டு எமது தானந்தன் அவர்களும், ஏனைய எமது ம பணியைச் சிறப்புறச் செய்து முடித்துள்ள
எமது கலாசாலையில் இயங்கிக் கொன் விழாக்களையும், சமய அனுட்டானங்களையும் சாற்றிடும் ஓரிதழாகவும், சைவ சமயத் தத்து கும் ஏடாகவும் எமது சஞ்சிகை வெளிவரு " அன்பர்பணி செய்யவெனை அ
இன்பநிலை தானேவந் தெய்து களின் பாடலைப் பாடுகின்ற போதெல்லாம் விட்டுவிட்டால் வையத்தில் யான்வந்த ப பாடத் தூண்டுகின் றது. ஆகவே இப்பணி கண் எனது அன்பு கலந்த நன்றியைச் செ
எமது சைவ விளக்கு உருவாகுவதற் அடுத்து முடிக்கும் துடுக்குடைய எளிமைய கலாசாலையில் தன் கடமையினாலும், பல்கலை பாலும், அனை வரையும் கவர்ந்த இவ்வெழில் யாக இருக்கின்றது.
அவ்வப்போது திட்டங்களைத் தீட்டி, அ ளக்கு உங்கள் கையில் இருந்து ஒளி வீசச் சாரும். அவருக்கு எமது மன்றத்தின் சார்பில்
எமது சஞ்சிகை வெளியீடு பற்றி எம் அவர் வியப்படைந்து கூறிய வாழ்த்துக்கள் பெற்றுச் சைவவிளக்குப் பிரகாசிக்கின்றது கலாசாலையைவிட்டு வெளியே போகவேண் எமக்கு அனுமதி வழங்கி எமது சஞ்சிகை அணைக்கல்லாக இருந்து உதவி அளித்த யைக் கூறுகின்றேன்.
iii

ix -
- கூறுகிறார்.
ம்பகாலத்தில் ஆரம்பிக்கப்பட்ட எமது சைவ ய தனிச் சிறப்பியல்புகளுடன் இயங்கி வருகின் சைவசமய அனுட்டானங்களை நிலைநாட்டிச் சம ரில் இச்சஞ்சிகை வெளியீடும் ஒன்றாகும்.
ந காலமாக இருந்து வந்த ஒரு கு றை  ைய அ மதிப்புக்குரிய போஷகர் திருவாளர் க. சச்சி ன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து இப் பர்கள்,
எடிருக்கும் சைவமாணவர் மன்றம் சைவசமய - சிறப்பான முறையில் மேற்கொள்ளுவதைச் துவங்களையும், அதன் சிறப்பையும் எடுத்து விளக் கின்றது. ஆளாக்கி விட்டுவிட்டால்
ம் பராபரமே'' என்ற தாயுமானவர் சுவாமி -, " சைவப்பணி செய்ய என்னை ஆளாக்கி யனெய்தும் பராபரமே '' என்றுதான் என்னைப் க்கு என்னை ஆளாக்கிய மன்றத்தினருக்கு முதற் சலுத்துகின்றேன்.
கு மூலகாரணராக இருந்தது, எடுத்த கருமத்தை ான தோற்றம் - எமது போஷகர் - அவர்களே, அப் பாண்டித்தியத்தினாலும்,, அன்பாலும் பண் ல் மிகு தோற்றம் எம் மன்றத்தின் அச்சாணி
ஆலோசனைகளைக் கூறித், தைரியமூட்டி, இவ்வி செய்த பெருமை எமது போஷகர் அவர்களையே ல் உளங்கனிந்த நன்றியைச் செலுத்துகின்றேன்.
மது அதிபர் அவர்களுக்குத் தெரிவித்தபொழுது ளயும், மனமுவந்து அளித்த ஆசியுரையையும் - சஞ்சிகை வெளியீடு சம்பந்தமாக அடிக்கடி டிய நிர்ப்பந்தம் இருந்தது. அதனை உணர்ந்து வெளியீட்டுக்கு ஒரு தடைக் கல்லாக இன்றி அதிபர் அவர்களுக்கு எனது பணிவான நன்றி

Page 22
X
எமது கலாசாலை முன்னைய அதிபர் திரு சஞ்சிகைக்கு ஆசியுரை கேட்டபொழுது மிகமா கொடுக்கும் ஒரு பரிசுப்பொருள் போன்று சிற னார்கள். அவருக்கு எமது மன்றத்தின் சார்பில்
தள்ளாத வயதிலும் "என்கடன் பணி திற்போலும் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை பிள்ளை அவர்கள் மனமுவந்து அளித்த கட்டு
எமது சஞ்சிகை உருப்பெறுவதற்குக் கட் கொடைகள், ஆசியுரைகள், புகைப்படங்கள் :
ஞர்கள், வர்த்தகர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் கூறுகின்றேன்.
எமது சஞ்சிகை மிக அழகுறவேண்டும் எ. வர்களில் திரு. பொ. விசாகப்பெருமாளும் ஒரு சிறப்பு பெருமாளவர்களின் அயரா உழைப்டே துக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும், அல்
விளம்பரஞ் சேகரிப்பதில் விறுவிறுப்பாக நி. S. அமிர்தலிங்கம், K. நவரத்தினம், பொ, வி யம்பலம் ஆகியோருக்கு மன்றம் பெரிதும் கட சார்பில் நன்றி கூறுகின்றேன்,
மன்ற அங்கத்தவர்களில் புகைப்படம் ெ சஞ்சிகையில் இடம்பெறாதது ஒரு குறையாக
கைகளில் இக்குறை காணப்படமாட்டாதென எ
இச் சஞ்சிகை வெளியீட்டுக்கு எவ்வித பி அன்பர்கள் யாவருக்கும், சஞ்சிகையை மிகக்கு குற அச்சிட்டுக் கொடுத்த ஸ்ரீ லங்கா அச்சகத் கூறுகின்றேன்.
எமது கன்னி முயற்சியில் காணப்படும் 8 பொறுப்பீர்களெனநம்புகின்றேன்.
வ ண க்

59JIGTIT ဝါ 56 55T10 15flLb GTLD 5 Bulb 56 5 GBIT/bဝံမ်ား (50r600) 5(
Brb5 6 67 605 G5TG႕ 5 _51
D60T LDTiT65 IDGOT ဤ 6. ဤဗဲ၊ ၆ဝဝါး
Li5I Luu8s” Tm p ©လ၊ = ၂if5, unT L၇.5 GLIT SOT. (5ဥOT ဘT 5(SFံ(5 i5t-ဗီ ID50T . ဗဲ sor Gဏ55T.. 6.5GT, 5155, diTu UT65, 666 2,590 G5IT65 5.5%u GuifuTi5 , 511 T ,ဝါဒIIId6 တံ(5 LDT or BIT Liလံ IT ဤ
BOT GuTIT ၏ ၀လံ ULIIIT 5 ၉၆၀)ဆံခံ ၂JITIT, 5}ဗီ05 us6) ၅ - 6) L u 66
း ၁6 (iso 6005 5 က STD 51 LD50T ကဗ် al(655 STGOT 51 fb50T murfl 555
-5 mတ ဗ၆ITTi5I KLDII55 LOT , GT5LiGU:5DTGT. GLIT, 57 J၆55, S. ၆လံ သ LULT60Lul 5, 5af5 (၆l5 55 LDT ကဝံဝါဒOT
5/655 ဦး ၅hlဘုံဗီut 5(55L L LULIhl5 36 OT D 5 ofGLDရုံ ၆fla(6b $
ILITI ၆sGT ၆ ထ0" .
r ၏uလ/D (65 5 T60T တံဗီ ဗlu ၏ဗီဦး ဘဏb 5 5Tလဗီဝါလ ထbဦး (၂၀၀၈ pul3လ !)
T (6ဲ6D, 5TujလTOT T5(GTEမ်ား(5LD 666 ဤ
ဒါလဲ၊ ၆0 (၆၆၆) m GLIBLDGOT656
- b
ခံ၏ITT ၏ui

Page 23
சைவ மான 1970ஆம் ஆண்டு
மன்றத்தின் வருடாந்த அறிக்கையைச் மகிழ்வும் அடைகிறேன். மன்றத்தின் சகல டனும், மன்றப்போஷகர் பண்டிதர் க. சச் பேரிலும் மன்றத்தின் வருடாந்த கைங்கரியம் துள்ளேன் என பதைப் பெருமையுடன் கூறி
வெள்ளிக்கிழமைப் பூசைகள். நீல் களில் வந்த வெள்ளிக்கிழமைகளில் பூசையும் நடந்தேறின.
நவராத்திரி விழா:- சென்ற வருடத் சபையே ஏற்று நடத்தியது. கும்பம் இருத்தி பூசையும் ஆராதனையும் நடத்தினோம். முதல் சிதம்பரநாதன் அவர்களின் நாதஸ்வரக் கச்ே ணம் திருமதி கமலா பெரியதம்பியின் இன் டன் நடைபெற்றது.
தைப்பொங்கல்:- உழவர் திருநாள் பூசையுடன் வெகு சிறப்பாகக் கொண்டாடி
சிவராத்திரி - சிவராத்திரி விழாவை வரும் நிகழ்ச்சிகளுடனும் கொண்டாடினோம். 1. மன்றப் போஷகர் பண்டிதர் க. சச்சிதா 2. பண்டிதர் எஸ். பொன்னம்பலம் சிறப்புச் 3. கதாப்பிரசங்கம் திரு. பொன், தெய்வேந்திர
விடயம் "மாங்கனி பெற்ற 4. திரைப்படம் (விஞ்ஞான கணித கழகத்தி 5. பஜனை திரு கனகரத்தினம் கோஷ்டியினர் 6. நாடகம் "தியாகச் சின்னம்” திரு. சாந்த
(மே
7. சங்கீதக் கச்சேரி சங்கீத பூஷணம் திரும், 8. பஜனை செல்வி கோணேஸ்வரி பொன்ன
(மே
ஆனி உத்தர விழா:- எமது மன்றத் இவ்விழாவை இம்முறையும் சகல அங்கத்தவர் 4

Ei --
சுவர் மன்றம்
க்குரிய அறிக்கை
சபைக்குச் சமர்ப்பிப்பதையிட்டுப் பெருமையும் அங்கத்தவர்களினது பூரண ஒத்துழைப்பு சிதானந்தன் அவர்களுடைய வழிகாட்டலின் கள் யாவற்றையும் சிறப்புடன் செய்து முடித் க்கொள்கிறேன்,
எட விடுமுறை நாட்கள் தவிர்ந்த ஏனைய நாட் - ஆராதனைகளும் கிரமமாகவும் ஒழுங்காகவும்
கதிற்குரிய நவராத்திரி விழாவை எமது நிர்வாக ஒனபது நாளும் மாலையில் ஒழுங்காக விசேஷ நாள் விசேட நிகழ்ச்சியாக வானொலி புகழ் சரி இடம் பெற்றது. இறுதிநாள் சங்கீத பூஷ னிசைக் கச்சேரி சிறந்த பக்கவாத்தியங்களு
ாம் தைப்பொங்கலைச் சிறப்பான பொங்கற் னோம். விசேட பூசையுடனும் ஆராதனையுடனும் பின்
னந்தன் ஆரம்ப உரைநிகழ்த்தினார்.
சொற்பொழிவு நிகழ்த்தினார்.
என். ) மங்கை''
ன் உபயம்.
'. (மேற்படி மன்ற அங்கத்தவர்கள் )
லிங்கம் குழுவினர், மற்படி மன்ற அங்கத்தவர்கள் ) தி கமலா பெரியதம்பி. ம்பலம் கோஷ்டியினர். மற்படி மன்ற அங்கத்தினர்கள்)
ததினால் வருடாவருடம் கொண்டாடப்பட்டு வரும் களும் கீரிமலைச் சிவன் கோவிலுக்குச் சென்று

Page 24
விஷேச அபிஷேக ஆராதனைகளுடன் வெ மதிய போசனத்தைக் கீரிமலையிலேயே கை
ஆடிப்பிறப்பு:- என்றும் இல்லாத, கற் பூசையுடன் கொண்டாடினோம்.
குருபூசைகள்:- சமய குரவர்களாகிய ரது குருபூசைகளை வெகுசிறப்பாகக் கொண் கள் விடுமுறைகளில் வந்தமையால் கொண்ட பந்தர் குருபூசையன்று கலாசாலைப் பேராசிரி காழிச் செல்வன் என்னும் விடயம் பற்றி ஒ வாசகர் குருபூசையன்று சைவப்புலவர் கதிர்க என்னும் விடயம் பற்றி ஒரு சிறந்த சொற
அன்பளிப்புகள்:- 19-10-69 ம் திக் எவர் சில்வர் தட்டம் அன்பளிப்புச் செய்தா அனைவரும் சேர்ந்து ஒரு பஞ்ச மணி.யை அ டிதர் க. சச்சிதானந்தன் 18 ரூபா 40 சதத்ல
திரு. எஸ். தில்லை செல்வி, ஜே. சே செல்வி - எஸ், முத்
சஞ்சிகை:- எமது மன்றத்தின் புது வெளியிட எண்ணி அதற்காய சகலவேலைக இச்சஞ்சிகை மன்றத்தின் பெருமையை மென் கச் செய்யும் என்பது உறுதி. எனவே இப்பண டும் என்பது எமது பேரவாவாகும்.
நன்றியுரை:- கடந்த வருடம் எமது தாவர விடுதி அமைத்துத் தந்தமைக்காகவும், வொரு நிகழ்ச்சிகளுக்கும் அனுமதியும், இட மன்றம் எமது அதிபர் அவர்கட்கு மிகுந்த சிக்கு வேண்டிய வேண்டிய இடங்களில் | களையும் நல்கியதோடல்லாமல் வேண்டிய உ லாதவராகிய எமது மனறப் போஷகர் பண் தின் சார்பில் எமது உளமார்ந்த நன றி யறித அங்கத்தவராய் இருந்தபோதிலும் கோவில் | களிலும் தோளோடு தோள் நின்று உழைத்தபை சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்ளுகிறேன் பொழிவுகளும் கச்சேரி முதலிய வற்றையும் சார்பில் நன்றி தெரிவிக்துக் கொள்கிறேன், ளிலும் தோளோடு தோள் நின்று உதவி ெ றத்தின் சார்பில் நன்றியறிதலைத் தெரிவித்து தாவர விடுதிச் சமயற்காரர்கட்கும் மன்றத்தி கொள்கிறேன்.
வன

ii -
த விமரிசையாகக் கொண்டாடினோம். அன்று பத்துக்கொண்டோம்.
பாறு இம்முறை ஆடிப்பிறப்பை விசேஷ பொங்
திருஞான சம்பந்தர் மாணிக்கவாசகர் ஆகியோ டாடினோம். ஏனைய குரவர்களது குருபூசை டாட முடியாது போய்விட்டன. திருஞானசம் யர் திரு. என் வீரமணி ஐயர் அவர்கள் சீர் த சிறந்த சொற்பொழிவு ஆற்றினார்கள். மணி ராமநாதன் அவர்கள் திருவாசகத்தின் பெருமை ற்பொழிவு ஆற்றினார்கள்.
தி செல்வி நளினி இராஜசிவகுருநாதன் ஒரு i. அதே தினத்தில் கைப்பணி மாணவர்கள் ன்பளிப்புச் செய்தனர். முன்றப் போஷகர் பண்
த மன்றத்துக்கு அன்பளிப்புச் செய்தார்கள்.
நாதன்.
5-00. அதிராசா.
25-00. துத்தம்பி
3-50
திய முயற்சியாக இவ்வருடம் ஒரு சஞ்சிகை ளும் துரிதமாக நடை பெற்று வருகின்றன, மேலும் குன்றிலிட்ட தீபம் போல் பிரகாசிக் ரியை எதிர்காலத்தில் சிறப்புற நடாத்த வேண்
து மன்றம் கேட்டுக் கொண்டதற் கிணங்க
எமது மன் றத்தினால் நடாத்தப்பட்ட ஒவ் டவசதியும் தந்து உதவியமைக்காகவும் எமது கட்டுப்பாடுடையது. எமது மன்றத்தின் வளர்ச் வேண்டிய வழி காட்டல்களையும், அறிவுரை உதவிகளையும் செய்து எம்நெஞ்சத்தை விட்டக டிதர் க. சச்சிதானந்தன் அவர்கட்கு மன்றத் கலைத் தெரிவித்துக்கொள்கிறேன், மன்றத்தின் பூசைகளை ஒழுங்காக நடாத்திச் சகல விடயங் மக்காக திரு.நா. நடராசா அவர்கட்கு மன்றத்தின் 5. மன்றத்தின் விஷேட தினங்களில் சொற் நல்கிய பெரியார்களுக்கு எமது மன்றத்தின் அத்துடன் மன்றத்தின் சகல கைங்கரியங்க சய்த சகல சகோதர சகோதரிகட்கும் மன் வக்கொள்கிறேன். அடுத்து எமக்கு உதவிசெய்த தின் சார்பில் நன்றியறிதலைத் தெரிவித்துக்
எக்கம்
சு. பழனிவடிவேல்.
செயலாளர்

Page 25
" அன்பின் சங்க
* அன்பின் சங்கமத்தில்'' அண்ணனுக்கு

கமத்தை" ஆக்கிப்படைத்த நடிகர் குழு
முடிசூட்டும் தம்பி

Page 26
செல்வி பொ. கோணேஸ்வரி கோஸ்டியில் சிவராத்திரியின் போது கூட்டுப்பிரார்த்தனை நடாத்துக்
வெள்ளி
திரு. க. கனகரத்தினம் கோஷ்டியினர் சிவராத்திரியின் போது கூட்டுப்பிரார்த்தனை நடாத்துகிற

னர்
றார்கள்
பூசகர் திரு. ந. நடராசா அவர்கள் க்கிழமைகளில் நடாத்தும் தீபாராதனைக் காட்சி
சர்கள்

Page 27
" சாதியினும் சம்!
பண்டிதமணி சி. கணப
த 9 ம் ( 10 ) 21. க ம ம்
"சாதியினுஞ் சமயமே அதிகம். சமயத்தி லுஞ் சாதி அதிகமென்று கொள்வது, சுருதி யுத்தி அனுபவம் மூன்றுக்கும் முழுமையும் : விரோதம்'' என்கின்றார் நாவலர் பெருமான்.
பெரியபுராண வசன முகப்பிலே உண்மை நாயன்மார் மகிமையிலே மேற்குறிப்பிட்ட வச னத்தில் தொடங்குவதொரு பந்தி வருகின் றது. - சிந்தனைச் செல்வரும் தத்துவ விசாரத்தில் மூழ்கியிருப்பவருமான ம க ா ன் ஒருவரை அணுகி, மேற்குறிப்பிட்ட பந்தியைச் சுட்டிக் காட்டி, “சாதியினுஞ் சமயமே அதிகம்' என்ற வாக்கியத்துக்கு விளக்கம் கேட்டபோது, அந்த மகான் தமது சிந்தனையிலிருந்தும் இறங்கி, சிறிது நேரம் மௌனமாயிருந்து, கேட்டவரை ) உற்றுநோக்கி,
- ('கோயில் வீதியிலே சாதி வேற்றுமை (! "யுண்டு; சுவாமி சந்நிதானத்திலே அது இல்லை''
என்று கூறி, மெல்லெனச் சிரித்தார். அந் -- தச் சிரிப்பு, வீதிக்கப்பாலே ஜனநாயகம் என் கின்ற வெளியுலகிலேயும் சாதி வேற்றுமை 6 இல்லை என்று, சுட்டிக் காட்டுவதாயிருந்தது.
(கோயில் வீதியிலே சாதியுண்டு; கோயி லுக்குள்ளேயும் வீதிக்கு அப்பாலே வெளியுல எ கிலும் சாதி இல்லை'' என்பது, அந்தத்தத்து 4
வப் பெரியார் தந்த விளக்கம்.
இந்த விளக்கம், 'சாதியினுஞ் சமயமே அதி கம்' என்ற வசனத்தினும் கடினமாய்க் கலக் கந் தருவதாயிருந்தது.
அந்தத் தத்துவப் பெரியார் தொடர்ந்து தமது விளக்கத்துக்கு விளக்கந்தருவாராயினார். அதுவருமாறு:-
நமது சமயம் வைதிக சைவம், வைதிக மாவது வேதநெறி. அஃதாவது அறிவு நெறி. எ
10 V ல் -
6 )
பி
TED

பமே அதிகம் " திப்பிள்ளை அவர்கள்
கருவிகரணங்களை நெறிப்படுத்தி அறிவைத் தூய்மை செய்யும் நெறி. அதற்குபகாரம் வர்ணாசிரமதர்மம். வைதிகத்தின் தொடக்கம் தர்மம். ஒருவன் செய்யத்தக்கது எது தகா தது எது என்று தர்மவிசாரமுடையனாய், தன்னிலையை உணர்ந்து, நீதிவழுவா நெறி முறையில் தன் வாழ்க்கையை இட்டு வைத் துப் பாதுகாக்கற் பாலன். சாதிக்கட்டுப்பாடு, உலகபந்தங்களைப் பக்ஷபாதமான பற்றுக்களைப் போக்குதற்கு உபகாரமானது. அது வர்ணா சிரமதர்மம் என்று போற்றப்படுவது. ஒரு இனம் மற்றொரு இனத்தை நசுக்க வைத்த 5ன்று அது. வைதிகன் சாதிமான். அவ னுடைய ஒருகை மேலோரைப் பற்றியதாயி நக்கும், மற்றக்கை கீழ்நிலையில் உள்ளாரை டயர்த்த உதவும். வைதிகம் முற்றுப் பெற்ற பன் ஒரு நாளைக்கு உலக பந்தங்களை விடுகிற முறையில் விட்டுச் சிவசம்பந்தியாவன். சிவ சம்பந்தம் சைவம். அஃதாவது அருள்நெறி, அருள் நடத்தநடப்பவன் சைவன். அரு ளத்தேடுபவன் வைதிகன். அவனுக்கிடம் பீதி, வைதிகம் முற்றிச் சைவன் ஆகியவன் ஈவாமி சந்நிதானத்தை அணுகும் பக்குவன்.
நோயாளியை மருத்துவன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான், நோய் நீங்கியபின், அவன் ஆரோக்கியர்களுடன் சேருகிறான். - வீதியில் நிற்கும் வைதிகன் சாதி குலம் பிறப்பாலெய்திய பிணி நீங்கியபின், சுவா பியை அணுகி ஆரோக்கியர்களாகிய சைவர் களுடன் சேர்ந்து கொள்ளுகிறான்.
சுவாமி சந்நிதானத்திலே தில்லைவாழந்தண நம் திருநீலகண்டத்துக்குயவனாரும் ஒரு குலம்; அவர்களுக்குத்தான் ஒருவனே தேவன்.
அருச்சுனன் போர்முனையில் பாசபந்தங்க Tால் தாக்குற்றுத் தயங்கினான். வைதிகம்

Page 28
முற்றுப் பெறவில்லை. கண்ணன் தர்மத்தைக் காட்டி நீதி வழுவா நெறிமுறையில் அவளை நிறுத்தினான்.
அருச்சுனர் அடுத்தபிறப்பில் கண்ணப்பு ராயினார். காளத்தியப்பரைக் கண்டார். கண்ட அளவிலேயே பரிபூரண சிவ சம்பந்தியாயினார். அகன்றார் அகலிடத்தார் ஆசாரத்தை. தாட லைப்பட்டார். அவரது சாதிகுலம் பிறப்டை யாரும் விசாரிக்கவில்லை. அபர சுப்பிரமணிய ரான திருஞான சம்பந்தர் கண்ணப்பரை வணங்கினார்,
இனி, 'சாதியினுஞ் சமயமே அதிகம்' என்ற நாவலர் பெருமான் கூற்று விளக்கம் ஆகலாம். வைதிகத்தில் சாதி பெரிது; சைவத்தில் சமயம் பெரிது என்றவாறாம்.
இப்பொழுதைய பகிரங்க உலகம் அவை திக உலகம்; நீதியைக் குறுக்கி நிதி செய்யும் உலகம்.
அவைதிகருக்குச் சித்தியார் வழங்கும் பெயர் "தொடுத்த பேதைமைக்கே பொருந்தினோர்
''சமயத்தினுஞ் : கொள்வது சுரு மூன்றுக்கும் !

2 -
என்பது. அவர்கள் தாங்கள் பாசபந்தங்களி னுட்பட்ட நோயாளிகள் என்பதை அறியார் கள். பாவம்! இவர்கள் தங்கள் தர்மங்களை மறந்து உயர்வு தாழ்வு பேசுவதில் அர்த்த மில்லை,
அவைதிகர்கள் தர்மத்தை விசாரித்து, நீதி வாழ்க்கையின் நன்மையைச் சிந்தித்து, வைதி கர்களாய்க் கோயில் வீதியில் கால்வைக்கத் தம்மைப் பக்குவப்படுத்தவேண்டும். வைதி கத்தில் கால்தூக்கி வைத்துவிட்டால் அது மெல்ல மெல்லச் சைவத்திற் சேர்த்தே விடும்.
நாவலர், தம்காலத்துத் தில்லைவாழ் தீக்ஷி தர்கள் கையால் விபூதி பெற மறுத்துவிட்டார். தீக்ஷிதர்கள் அவைதிகர்களாய்விட்டார்கள். தர்ம விசாரம் நீதி அவர்களை விலகிவிட்டன. வைதி கத் தொடக்கம் அவர்களுக்கு எட்டாத்தாய், வெகுதூரத்ததாய் விட்டது. அவர்கள் கோயில் வீதியிலேதானும் கால்வைக்கும் தகுதியற்றவர் கள் என்பது நாவலர் பெருமான் கருத்தா யிருந்திருக்கும்.
சாதி அதிகம் என்று நதி யுத்தி அநுபவம் முழுமையும் விரோதம்;"

Page 29
சிவு
உள்ளும் புறமும் உ6
பண்டிதர் பொ. கிரு
தா ெஅவற் பிளந்து ஆன்மம்,
''அவன் எங்குளான்?'' எனக் கடவு ளிருப்பை வினவுவார்க்கு அவன் எங்கு இலான்?'' என்ற வினா அங்கிங் கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்தபூர்த்தியாகிப் பொலிந்திலங்கு மவனியல்பைத் தெற்றென விளக்கும். ஒன்றாய் வேறாய் உடனாய் ஆன் மாவொடு கலந்திலங்குவது போலவே அவன் அகிலமெல்லாங் கலந்திலங்குகிறான். அவனை மோட்சத்திலோ அண்ட முகட்டிலோ இருப்ப தாக மாத்திரம் நினைத்துவிடாது இவ்வுலகி லும் -ஏன் எங்கள் இதயக் குகையிலுமே இருப்பதாக நினைந்து உள்நோக்கிப் பார்த் தலே ஆன்மாக்களுக்கு அளப்பிலின்பம் பயக் கும். அண்டவெளியிலே ஆன்மநாயகனை மாலும் பிரமனும் அளந்து காண முற்பட்டு அம்முயற்சியிற் பின்னடைய அப்பர்பிரானோ தாம் அவனைக் கண்ட இடம் தமது உள்ளம் தானென்று தெளிவாகக் குதூகலத்துடன் 'தேடிக் கண்டுகொண்டேன் - திருமாலொடு
நான்முகனும் தேடித் தேடொணாத் தேவனை என்னுளே,
தேடிக் கண்டுகொண்டேன்'' என்கிறார். மால் மயங்குந் தன்மை உடைய வன்; நான் முகன் புறத்திலே நான் கு திக்கி லும் நான்கு முகமுடையவனாகையால் இவ் விருவரும் புறவெளியிலே பானைத் தேடித் தோற்றுப்போதலியல்பே என்ற நயமான குறிப்பும் அப்பர் பாடலிலே அமைந்துளது. இறைவனே உள்ளும் புறமும் உயிர் மூச்சாக இருத்தலோடு சிறுகணமும் என்னைவிட்டு நீங் காது உடன் கலந்து உறைகின்றானென, ''என்னுளே உயிர்ப்பாய்ப் புறம்போந்துபுக்
கென்னுளே மன் னும் இன்னம்பரீசனே'' என்று அவன் உயிர்க்குயிராய் இருக்குந் தன் மையை நலம்பெற அந்த அப்பர் பெருமானே விளக்கும் தன்மையையும் ஓர்க.
பொதுவாக நாமெல்லாம் அப்பாலுக்கப் பாலாக உள்ளவனாகத்தான் அவனை நினைந்து வழிபாடாற்றுகிறோம், "'துரியமும் கடந்த தூர தூர தூரமே'' என அவனைப் பலருஞ்

3 -
மயம்
பிளானை உள்ளுவோம்
ஷ்ணபிள்ளை அவர்கள்
சுட்ட அப்பர்காலத்துத் திருஞானசம்பந்தர் "என்னை இது செய்த பிரான் இவன்" என்று அண்மையில் வைத்துக் காட்டுகிறார். பூர ணப் பொருள் ஓரிடத்துமாத்திரம் இருப்பின் அது எப்படிப் பூரணமாகும்? தாயுமான சுவா மிகள் பூசைக்கு மலர்கொய்யச் செல்லுகிறார். மலரிடை இறைவன் வீற்றிருக்கிறதைக் காண் கிறார். ஆகவே மலரெடுக்க மனமும் கூசு கிறது. புறத்திலே இருப்பவனாக அவனை நினைந்து கும்பிடக் கைகூப்பினால் அவனே தம் உள்ளத்தும் கோயில்கொண்டிருப்பதைக் காண்கிறார். உள்ளும் புறமும் ஒருசேர இருக்குமவனை ஓரிடத்துமாத்திரம் இருப்பவ னாகக் - கும்பிடும்போது அக்கும் பிடுதலும் அரைக்கும்பிடுதலாகித் தமக்கு நாணந் தரு கிறதாம். இதனை மிக நன்றாக * 'பண்ணே னுனக்கான பூசையொரு வடிவிலே
பாவித்திறைஞ்ச வாங்கே பார்க்கின்ற மலரூடு நீயே யிருத்தியப்
பனிமல ரெடுக்க மனமும் நண்ணே னலாமலிரு கைதான் குவிக்கவெனி
னாணுமென் னுளநிற்றி நீ நான் கும்பிடும்போ தரைக்கும்பிடாதலா
னான் பூசையெய்யன் முறையோ?'' என்று அவ்விறைவனையே கேட்கிறார். ''உ.ள் ளும்புறமும் ஒரு படித்தாய் நின்று சுகங்கொள் ளும் படிக்கிறை நீ கூட்டிடவுங் காண்பேனோ" என்ற அவர் அவா இனிது நிறைவேறியமை யாற்றான் தம் அனுபவத்தை அவர் சர்வசமய சமரசத் தோத்திரமாக மோனஞானப்பொருளை "அங்கிங் கெனாதபடி'' என்று நாமுங் கும் பிட வழிகாட்டுகின்றார்.
புறத்திலே கோயிலின் கண் எம்பெரு மானைக் கண்டு கும்பிடுவதெல்லாம் அகத் திலே அவனைக் காணுவதற்காகத்தான் புறப் பூசை ஆதியனவெல்லாம் அகவழிபாட்டிற்கு உ.தவுவதற்குகந்தனவாக வேண்டும். இன்று. உலகிலே புறநிகழ்ச்சிகளுக்குப் பெரிதும் மகத்துவம் கொடுத்தலால் வழிபாடு வெறும் கேளிக்கையும் ஆடம்பரமும் நிறைந்த அளவில்

Page 30
நின்றுவிடுகிறது. புறச்சோடிப்பும் வர்ணவி ளக்குகளும் வாண வேடிக்கையும் கோவிலையே வியாபாரக் களியாட்ட பூமியாக்குகின்றன.இத னாலேதான் ஒரு மகான் ''என் அப்பன் புனித கோயில் இன்று கள்ளர் குகையாகிவிட்டதே'' என்று பிர லாபித்தார். வீண் ஆடம்பரமற்ற அழ கும் பூசையும் மிக்க அவசியம். ஆயின் அவை அத்துணை யில் நின்றுவிடாது உள்ளத்தும் பதிந்து பக்தியை எழுப்புதல் வேண்டும். சரியையும் கிரியையும் யோகத்திலும் ஞானத் திலும் முற்றுப்பெறுதல் வேண்டும். அரும்பும் மலரும் காயாகியும் கனியாகியுமன்றோ பயன் தருகின்றன!
திரு விசைப் பா வி ல் திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம் என்ற தலத்தின் கீழ்வரும் பாக் களின் பகுதிகளாகிய ''அம்பலத்துள் நின்றா டும் மைந்தனென் மனங் கலந்தானே'' ''அம் பலத்து நின்றாடும் மைந்தனென் மனத்துள் வைத்தனனே' பாதுகை மழலைச் சிலம்பொடு புகுந்தென் பனிமலர்க் கண்ணுள் நின்ற கலான" ''மணியம்பலத்துள் நின்றாடும் மைந் தனே அறியுமென் மனமே" என்பவை புறத் தெய்வத் திருவுருவம் அகத்திற் பதிந்து அங் குக் குடிகொள்ளுதலைச் சிந்திக்க வைக்கின் றன. நடராஜ வடிவம் அழகுக் கலையின் சிக ரம். அது வெறும் பார்வையளவில் நின்று விடுதலில்லை. உள்ளக்கிழியில் உருவாக அமைகிறது. பட்டினத்துப்பிள்ளை யார் தமது கோயில் நான்மணிமாலையில் இறைவன் ஆடுங்கோலத்துடன் உள்ளீடற்ற தம் நெஞ் சத்திடைப் புகுந்து புறத்திற் போலவே
கூத்தாடுகின்றான் என்று
- ததாடுகின்9ே"து, புறத்தில் தம் நெல்
... சச பீடில் நெஞ்சத்து நுழைந்தனை புகுந்து தழைந்த நின் சடையுஞ் செய்ய வாயும் மையமர் கண்டமும் நெற்றியில் திகழ்ந்த ஒற்றை நாட்டமும் எடுத்த பாதமும் தடுத்தசெங் கையும் புள்ளி ஆடையும் ஓள்ளி தின் விளங்க நாடகம் ஆடுதி நம்ப!' எனப் புறக்கூத்தை அகத்தின் கண்ணும் தாம் தரிசித் தவாற்றைத்தெரிவிக்கிறார். அதே நான் மணிமாலை யின் 20ஆம் பாவில் அப்பன் ஆடுங்
கோலத் திருமேனியை, ச 'கண்ணிடைப் பொறித்து மனத்திடை
அழுத்தியாங் குள்மகிழ்ந் துரைக்க உறுதவஞ் செய்தனன்''

எனத்தாம் புறக்கண்ணாற் கண்டமட்டில் விட்டுவிடாது கண்ணினுள்ளும் படமாக எழுதி மனத்திலும் என்றும் நீங்காது அழுத் தியமையால் தம்முள்ளத்தே அருளின்பம் தேங்கிப் புறத்தும் பாட்டாக வெளிப்படும் பெருந்தவம் கிட்டியதெனத் திருவாய் மலர்ந் தருளுகின்றார். உள் ளக்கமலமே உத்தமன் வி ரு ம் பு மிட மா ைக யால் அவனை நாமும் அகத்தே காணும் தியானப் பெரும்பயனைப் பெற்று உய்வோமாக! - மயிலும் அயிலும் பொருந்த ஒயிலாக இலங்கும் முருகப்பிரானைத் தம் கண்ணிலும் மனத்திலும் நித்தமும் எழுதிப்பார்க்கும் அடி யவரே தேவருக்கும் வேதத்திற்கும் அரிபய னுக்குமே எட்டாத முருகனைக் கிட்டிப்பார்க் கும் பெருமையுடையோரெனக் குமரகுருபரர் சந்தச்சிறப்புடன் தந்தருளிய பாடலொன்று எமக்கும் அவனை அண்மையனாகச் செய்தலி னால் அப்பாவைப் பொருளறிந்து நயந்து ஓதுவோமாக! அது வருமாறு:- : 'வடிவி னழகு மெழுத அரிய புயமும் நறிய செச்சையும் மருமம் விரவு குரவு மரையின் மணியு மணிகொள் கச்சையும் கடவு மயிலு மயிலு மொழுகு கருணை வதன பத்மமும் கமல் விழியும் விழியு மனமும் எழுதி எழுதி நித்தலும் அடிக ளெனவு னடிகள் பணியும் அடிய ரலது மற்றும்வே றமரர் குழுவு மகில மறையும் அரியு மயனு முற்று நின் முடியு மடியு முணர வரிய முதல்வ தருக முத்தமே முனிவர் பரவு பரிதி புரியின் முருக தருக முத்தமே''
(முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்
முத்தப்பருவம் 10 ஆம் பா) (செச்சை = வெட்சி; மருமம் விரவு குரவு = மார்பில் பொருந்திய குரவம்பூ; கடவும் மயில் = செலுத்தப்படும் மயில்; அயில் = வேல்; வதனபத்மம் = முகத் தாமரை; வடிவின் அழகுதொடங்கி முரு கன் கமல விழிவரையுமுள்ள அவன் அங் கங்களை அடியவர்கள் தம் விழியிலும் மனத் திலும் நாள்தோறும் பொறித்து அதிலே தம்மைப் பறிகொடுக்கிறார்கள்)

Page 31
ஆசிரிய
(நா. மு அதிபர் கனிஷ்ட மகாவித்
ஆசிரியனே உலகம்; உலகமே ஆசிரியன். முக்காலத்திலும் உலகத்தைச் சிருஷ்டித்த , சிருஷ்டிக்கிற, சிருஷ்டிக்கும் சிற்பி ஆசிரியனே. பிரமதேவர் பூதஉடலைச் சிருஷ்டித்து ஆத் மாவை அதனுள்ளே புகுத்தியதோடு அவரது வேலை பூர்த்தியாகிவிட்டது. ஆனால் ஆசிரிய னுடைய கடமையோ மகத்தான து. உலகத் தோடு சம்பந்தமான உடலையும் பரமாத்மாவோடு சம்பந்தமான ஜீவாத்மாவையும் தெளிவாக்குவ தும் இணைத்துக் கொண்டிருப்பதும் உள்ள மாகும். இந்த உள்ளம் பண்படுகின்ற அளவுக்கு ஒருவன் மேலோன் ஆகின்றான். கீழ்நோக்கிப் போகும் அளவுக்கு மிருகநிலைக்குச் செல்கின்
றான்.
• மனம் போல வாழ்வு'' ''மனம் போன போக்கெல்லாம்
போகவேண்டாம்" ''உள்ளத்தனையது உயர்வு'' * 'உள்ளம் பெருங்கோயில்' > ' 'மன மெனுந் தோணிபற்றி'' * 'மனமெனுமோர் பேய்க் குரங்கு' * 'மனத்துக் கண் மாசிலனாதல் அறம்" பெரியார்களுடைய இவ்வாக்குகள் ஆழ்ந்து சிந்தித்தற்குரியவை, சிந்திக்கச் சிந்திக்கத் தெளிவு பிறக்கும்.
• மனம் என்பது சிருஷ்டியில் ஆபத்தான ஓர்
அம்சம் > >
--தாகூர்
• ' நம்முடைய மனப்பான்மையே துன்பத்தை இன் பலாகவும் இன்பத்தைத் துன்பமாகவும் எடுத் துக் கொள்கிறது.''
-சந்திரபோஸ் 4 (கற்ற நூல்களை விளக்கிக் கற்பவன் ஆசிரியன்: நூல்கள் மூளையில் இருக்கலாம். வாயில் வர லாம். அதனால் வாழ்க்கை திருந்திவிடுமா? மனம் திருந்தாதவரையில் எந்த நூலும் என்ன செய்யமுடியும்''?
மு-வ

5 -
உல கம்
த்தையா) தியாலயம், நாவலப்பிட்டி.
''நெல்லைக் குத்தும்போது அவ்வப்போது குத்து வதை நிறுத்திவிட்டு உமிபோயிற்றா என்று பார்ப்பதுபோல் மனத்தை நன்கு சோதித்துக் கொள்ள வேண்டும்;'' -ஸ்ரீராமகிருஷ்ணர் "உன் உள்ளத்தைப் பயன் படுத்திக்கொள். அதற்காகக் கானகம் செல்லத் தேவையில்லை, உள்ளமாகிய தனி ஆச்சிரமத்தில் அந்த மோனக் குடிசையில் அமர்ந்து அற்ப ஆசைகளுக்கும் அற்ப விஷயங்களுக்கும் இ ட ம ளி க் க ா து உயர்ந்த சிந்தனைசெய்.''
- மார்க்க அரேலியர், இத்தகைய மனத்தைப் பண்படுத்தி உலக அரங்கில் சமாதானத்தையும் சாந்தியையும் நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பு ஆசிரியனைச் சேர்ந்ததாகும். இத்தகைய ஆசிரியப் பெ நமக் கள் முற்காலத்தில் கானகத்தில் ஆச்சிரமங் களில் வசித்தார்கள். நாட்டவர்கள் நகரத்தவர் கள் தங்களுக்கு அமைதியும் சாந்தியும் அறிவு விருத்தியும் தேடி ஆச்சிரமங்களுக்குச் சென் றனர், அங்கு எல்லாவிதக்கல்வியும் கற்று எவ்வாறு வாழ வேண்டும் என்பதனையும் அறிந்து கொண்டு ஆசிரியரிடம் ஆசியும் பெற்று வந்து வாழ்க்கை ஆரம்பித்தனர்.
இத்தகைய ஆசிரியர்களிடம் வி ருப் பு வெறுப்போ அன்றி வியாபார மனப்பான் மையோ அன்றித் தொழிலாளி மனப்பான் மையோ, பொருளுக்காகக் கலையை விற்கும் செயலோ இருக்கவில்லை. ஒரு நல்ல பிரஜையை உருவாக்கிவிடுவதே அவர்களுடைய கல்வியின் குறிக்கோளாக அமைந்திருந்தது. இன் னார் எனது மாணவர் என்று சொல்லிக் கொள் வதில் ஆசிரியரும், இன்னார் எனது ஆசிரியர் என்று சொல்லிக் கொள்வதில் மாணவரும் மகிழ்வு கொண்டனர். அத்தகைய முறையில் ஆசிரியருக்கும் மாணவருக்குமிடையில் இணக் கம் ஒன்றிருந்தது.

Page 32
இன்றைய உலகில் பல்கலைக்கழகங்களிலும் மற்றும் வித்தியாலயங்களிலும் அடிக்கடி சச் சரவுகள் நிகழ்வதைப் பத்திரிகைகள் மூலம் அறிகின்றோம். மாணவர்களுடைய இந்த இழிந்த நிலைக்குக் காரணர் யார்? ஆசிரியர்கள் தான் காரணர் என்பதை நாம் முதலில் ஒளிவு மறைவு இன்றி ஒத்துக்கொள்ள வேண்டும். ஒரு ஆசிரி யனுடைய விருப்பு வெறுப்பும் கொள்கை வேறுபாடும் மாணவருடைய உள்ளத்திலே பலவிதமாறுபாடுகளை ஏற்படுத்துகின்றன.
'குருவிசுவாசம்' என்பது மாணவரிடத்து இல் லை. இதற்குப் பெற்றாரும் ஓரளவு காரணர். பெற்றாருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் இருச்கவேண்டிய இணக்கம் பலகுடும்பங்களில் காண முடிவதில்லை. பருவஉணர்ச்சிக்கு முக் கியத்துவம் கொடுத்து ஒழுக்கத்தைப் பாழ் அடிக்கின்றனர். 'குருவிசுவாசம்' என்ற சொற் றொடரிலே 'குருவி சுவாசம்' என்ற தொடரும் அமைந்துள்ளதைக் காணலாம். கிளிக்குப் பேச்சுக் கற்றுக் கொடுப்போனுடைய சுவாசம் கிளியினுடைய சுவாசத்தோடு கலக்கும்போது தான் கிளிபேசுவதற்கு இலகுவில் கற்றுக் கொள்ளுகின்றது. இத்தகையதோர் இணக்கம் ஆசிரிய மாணவர்களுக்கிடை யில் ஏற்படும் போது தான் உண்மையான கல்வியைப் பெறமுடியும்.
ஒரு மாணவன் கல்வியைக்கற்று வித்தியா லயங்களையோ பல்கலைக் கழகங்களையோ விட்டு வெளி யேறும் வரை அரசியல் போன்ற நாட்டு விவகாரங்களிலும், காதல் போன்ற வாழ்க்கை விவகாரங்களிலும் ஈடுபடக்கூடாது. இது எங் கள் நாட்டில் சட்டபூர்வமாகக் கொண்டுவரப் பட வேண்டும். ஆண்களும் பெண்களும் சலந்து கல்விகற்றலும் கல்வி கற்பித்தலும் தவிர்க்கப்பட வேண்டும். ஆண்களுக்குத் தனிப் பாடசாலைகளும் தனிப்பல்கலைக்கழகங்களும் கல்வி கற்பிப்பதும் அங்ஙனமே - அமைய வேண்டும். மாணவர்கள் பிழையான வழிகளில் செல்வதற்கேற்ற சந்தர்ப்பங்களை அளியாதிருத் தல் பெற்றாரினதும் ஆசிரியரினதும் அரசாங் கத்தினதும் கடமையாகும். மனிதவாழ்க்கையில்

B -
பிழைசெய்யச் சந்தர்ப்பங்கிடைக்காமையினால் தான் நூற்றுக்குத் தொண்ணூறு வீதமானோர் நல்லவர்கள் என்ற பெயரைப் பெறுகிறார்கள். பிழை செய்யச் சந்தர்ப்பம் கிடைத்தால் அவர் கள் பாடும் எப்படியோ? ஆகவே பிழை செய்யச் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தாதிருத்தலே முக்கியமாகும். - ஒரு நல்ல சமுகத்தை உ ரு வ ா க் கு ம் பொறுப்பு ஆசிரியர்களுடையதுதான் என்பதை ஒவ்வொரு ஆசிரியனும் முதலில் உணர வேண் டும். இவ்வுணர்வற்றவர்கள் ஆசிரியர்களாக இருந்தும் பலன் இல்லை. எல்லாரும் ஆசிரி யர்களாகிவிட முடியாது. தொழில் கிடைத்த பின்பாவது தன்னை ஆசிரியனாக்கிக் கொள்ள முடியாதவன் அத்தொழிலை உதறிவிட்டுச் செல்லுதல் சமூகத்திற்குச் செய்த ஒரு தொண் டாகும். இக்காலத்தில் அரசாங்கம் சேட்டுவிக் கெற்றுக்குச் சம்பளம் கொடுக்கிறதே தவிர ஆசிரியருக்குச் சம்பளம் கொடுப்பதில்லை. சேட்டு விக்கெற்றுக்குச் சம்பளம் கொடுக்கும் முறை தவிர்ந்து ஆசிரியருக்குச் சம்பளம் கொடுக்கும் முறை அமுலுக்குவருமானால் ஓரளவு நல்ல ஆசிரியர்களைப் பாடசாலைகளில் காணலாம். ஒருவகுப்புக்குள் ஆசிரியர் நுழையும்போது தனதுமகன் அவ்வகுப்பில் இருக்கின்றான். அவன் தான் வகுப்பில் கடைசி மாணவனாக இருக்கிறான் என்ற பாவனையை வரவழைத்துக் கொள்ளவேண்டும். - ஆசிரியர்கள் எல்லாரும் சம்பளத்திற்காகத் தான் கல்விகற்பிப்பவர்கள் ஆனாலும் தாம் செய்யுந் தொழிலை சேவையாக மாற்றிக் கொள்ள லாம். சேவை மனப்பான்மை உடைய ஒரு ஆசிரியனால் தான் சேவை மனப்பான்மை யுடைய ஒரு சமூகத்தை உருவாக்க முடியும். உடலில் உயிர்போன்றவன் சமூகத்தில் ஆசிரி யன், உயிருக்கே ஆபத்து ஏற்பட்டால் உடலை யார்தான் விரும்புவார்கள்?
கமக்காரன் ஒருவன் தலைத்தரமான விதை களை அடுத்த ஆண்டு விளை வுக்காகத் தெரிவு செய்துவைத்தல் போல் அறிவு ஆற்றல் ஒழுக் கத்திற் சிறந்தவர்களே ஆசிரியர்களாகத் தெரிவு

Page 33
செய்யப் பெறுதல் வேண்டும். அழகிய ஒரு மாளிகையை மண்ணுள் மறைந்து இருக்கும் அத்திபாரக்கற்கள் தாங்குவதுபோல ஒரு நல்ல சமுதாயத்தைத் தாங்கி நிற்பவனும் ஆசிரியனே.
எங்கள் ஆசிரியபரம்பரை முதன்முதல் தட் சணாமூர்த்தியிடமிருந்தே ஆரம்பித்துள்ளது.நால் வருக்குக் கல்லால விருட்ச நீழலின் கண் இருந்து உபதேசத்தை ஆரம்பித்தார், மாண வருடைய உளநிலையை அறிந்து சொல்லாமற் சொல்லி வைத்தார் தட்சணாமூர்த்தி. தட்சணா மூர்த்தி சின் முத்திரையைப் பிடித்த வண்ணம் தாமே யோக நிலையில் இருந்தருளினார். வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை. மாண வர்களும் அதனைப் புரிந்து கொண்டு அவ் வண்ணமே இருந்து தமது சந்தேகங்களைப் போக்கிக்கொண்டனர்.
ஆசிரியன் சொல்லைக் குறைத்துச் செயலைக் கூட்ட வேண்டும். புகைத்தல் தீது என்று மாணவர்களுக்குப் போதித்தலிலும் பார்க்க தானே புகையாதிருத்தல் எத்தனையோ மாண வர்களைத் திருத்த ஏதுவாகும், பிற உயிர்களைக் கொல்லுதல் பாவம் என்பதை உபதேசிப்பதி லும் பார்க்கத் தான் புலால் உண்ணாது விடுதல் ! பலருடைய உள்ளங்களைத் திருத்த ஏதுவாகும். ( மது கொடியது என்று பிள்ளைகளுக்கு உபதேசம் 6
குழந்தைகள் எப்போதும் கண்கள் காதுகளினால்தான் அதிகம் கற்றுக்

செய்யவேண்டியதில்லை; ஆசிரியரே மதுப்பழக் கத்தை ஒழித்து விட்டால் போதும். கோயில் பழக்கம் அவசியமானது என்று வற்புறுத்த வேண்டியதில்லை. ஆசிரியரே கோயில் பழக் கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். இன் றைய சமூகம் செயலையே எதிர்பார்க்கிறது.
சுபாவத்தைவிடப் பழக்கம் ஆயிரம் மடங்கு வலியுடையது என்பது சேர் ஐசாக் நியூட்ட னின் வாக்கு. பழக்கத்தினால் மாணவர்களை நல்ல உரு ஆக்கலாம். அதற்கு ஆசிரியன து நல்ல பழக்கமே ஆதாரமானது.
"ஆசிரியர்களும் மாணாக்கர்களும் சில குணா திசயங்களை உடையவர்களாயிருத்தல் அவசியம். அறிவு வளர்ச்சியில் உண்மையான அவாவும் விடாமுயற்சியும், தூய்மையுமே மாணாக்கனுக் -குரிய இலக்கணங்களில் முக்கியமானவை, ஆசிரியனோ மறைகளின் மெய்ப்பொருளை உணர்ந்தவனாயிருத்தல் அவசியம். எல்லாச் சமயத்தாரும் தத்தம் வேத நூல்களைப் படிக் கிறார்கள். இந்துக்கள் தத்தம் வேதங்களை உணர்ந்து படிப்பதில்லை. வேதத்தின் மெய்ப் பொருளை அறிவது தான் உண்மை ஆசிரியனின் இலக்கணம்" சுவாமி விவேகானந்தருடைய மேற்படி வாக்கியங்கள் ஆசிரியர் ஒவ்வொரு பருக்கும் வழிகாட்டியாக அமைவதாக.
பனால் கற்றுக் கொள்வதை விடக்
கொள்ளுகின்றன.
மகாத்மா காந்தி

Page 34
ஆளுடைப்பிள்ளையின் திரு
பேராசிரியர் திரு
சிவநெறியை வளர்த்த செம்புலச் செல்வம் களுள் சமயகுரவர் என்று அழைக்கப்பெற்ற சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் தலைசிறந்தோர். முற்பிறவித் தொடர்பால் கருவிலே அருள்ஞானம் பெற்று மண்ணிலே வாழ்நாள் முழுதும் சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் பெற்றவர். - ''பண்டை நற்றவத்தால் தோன்றிப் பர மனைப் பக்திபண்ணும் தொண்டர்' முன் வரி சையிலே ஞானசம்பந்தர் வைக்கப்படுவார் மூன்று பராயம் முடிவதற்குள் அம்மை அப் பரின் திருக்கோலம் கண்டு - பாலடி சில் உண்டு சிவஞானம் பெற்றார். அன்றுதொட்டு
அவர் உளப்பாங்கில் மாற்றம் ஏற்பட்டது. 6 'சூரியகாந்திக் கல்லினிடத்தே செய்ய
சுடர்தோன்றி இடச்சோதி தோன்றுமாபோல் ஆரியனாம் ஆசான் வந்தருளால் தோன்ற அடிஞானம் ஆன்மாவில் தோன்றும் தோன்றத் தூரியனாம் சிவம் தோன்றும்...... .'' என் ற அருணந்திசிவாச்சாரியாரின் கருத்துப் பிரதி பிம்பித்தலை நாம் காணலாம்.
முருகப்பெருமானே திருஞானசம்பந்தராய் திருவவதாரஞ் செய்ததனால் அவருடைய அழு கைக் குரலைக் கேட்கமுடியாத அம்மையப்பர் பாலூட்டினார் என்று கருதப்பட்டது.
'புழுகொழுகு காழி கவுணியரில் ஞான
புனிதனென ஏடு தமிழாலே புன லிலெதிர் ஏற சமணர் கழு ஏற
பெருதகவ வீர குருநாதா......" என்று அருணகிரிநாதரும், (ச பூதலமதனில் காழி நன் னகரிற் புண்டரீகன்
- தடத்தொருசார் மாதவம் புரிவோர் முன்னிளங் கதிர்போல்
மதலையாய் வந்தனன் முருகன்'' என்று சீகாழிப் புராணமும் கூறியது நோக் கற்பாலது.
இஃது இவ்வாறு இருக்க உரோமச முனி வர் ஞானசம்பந்தராய்த் திருவவதாரஞ் செய்

8 -
கமுறையில் உள்ள சித்தாந்தம்
5. சிறிஸ்கந்தராசா
" தார் என்று புலவர் புராணம் கூறிகின்றது.
முன்னொருகாலத்தில் பாசபந்தம் நீங்கித் தூய வழிபாட்டால் இறைவனைத் தொழுத மகான் என்பது சேக்கிழார் கருத்து. ''பண்டு திருவடி மறவாப் பான்மையோர்
தமைப் பரமர் மண்டுதவ மறைக்குலத்தோர் வழிபாட்டின்
அளித்தருள ..........' என்று கூறுகின்றது பெரியபுராணம். ஞான சம்பந்தரும் தம் பழம்பிறப்பைத் தாமே கூறி
யுள் ளார். 3 "பண்டு நான் செய்த வினைகள் பறைய
வோர் நெறி அருள் பயப்பார்'' என்றும், வேறுபல சந்தர்ப்பங்களிலும் ஞானசம்பந் தரே விளக்கியுள்ளார். இப்படிக் கூறும் பொழுது ஆகாமிய, பிராரப்துவ, சஞ்சித கன்மங்களுக்குச் சான்றுகூறிச் சித்தாந்த.
நெறியை உறுதிப்படுத்தியுள்ளார். '' இறைசத்தி பாசம் எழில் மாயை ஆவி
உறநிற்கும் ஓங்காரத்துள்''
என்றும்
• அருள் நூலும் ஆரணமும் அல்லாதும் ஐந்தின்
பொருள் நூல் தெரியப் புகும்; என்ற உமாபதிசிவத்தின் வாக்கிற்கிசைய சைவத்தின் முதல் நூலாகிய வேதமும் ஆகம மும் கூறுவது ஓங்காரத்தின் விரிவையே என் பதமையவும் ஞானசம்பந்தரின் வாயில் முதற் றோன்றிய திருமுறை "'தோடுடை ய......... என்பதே.
தேவாரம் தமிழ்வேதம் எனப்படும், வேதம் 'ஓம்' என்ற நாதத்துடன் தொடங்குவது போல் திருமுறைகளும் "தோடு'' என்பதனால் ஓங்காரத்துடன் தொடங்குகின்றன. 'தமிழ்' என்ற பதத்தின் முதல் எழுத்தாகிய தகர மெய்யுடன் ஓங்காரம் சேர்ந்து ''தோடு டைய" என்று ஒலிக்கிறது. சேக்கிழார் பெரு மான் இதை நன்கு தெளிவுறுத்தியுள்ளார்.

Page 35
* எல்லையில்லா மறைமுதல்மெய் உடனெடுத்த
எழுதுமறை மல்லல் நெடுந்தமிழால் இம்மா நிலத்தோர்க்
குரைசிறப்ப .........." முத்தி பெறுவதற்கு நான்கு பாதைகளைச் சைவசித்தாந்தம் காட்டுகின்றது. ஒவ்வொரு வரும் தமது பக்குவத்துக்கேற்ப அதைக் கடைப்பிடிக்கலாம், உள்ளத்தில் தூய்மை தோன்ற இப்பாதங்கள் வழிகாட்டும், அப் பெருநோக்கை நிறைவேற்றச் சரியை, கிரியை, யோக, ஞானம் என்ற நான்கு பாதங்கள் வகுக்கப்பட்டுள்ளன, சரியையைக் கடைப் பிடித்துத் தாசமார்க்கத்தில் நின்று சாலோக முத்தியை அடையலாம் என்பதை ஞானசம் பந்தர் நன்கு விளக்கியுள்ளார், * 'கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப் பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி....''
என்றும் 1 துண்ணனென விரும்பும் சரியைத் தொழிலர்
தோணிபுரமாமே' என்றும் உறுதிகூட றியுள்ளார்,
கிரியையாவது சிவலிங்கத் திருமேனியைப் புறத்தும் அகத்தும் பூசனை புரிந்து வழிபட் டுச் சற்புத்திரமார்க்க வாயிலாகச் சாமீப முத் தியை அடைதலாம், * 'தடங்கொண்ட தோர் தாமரைப் பூமுடி
தன்மேற் குடங்கொண்டடியார் குளிர் நீர்
சுமந்தாட்ட... என கி ரி யா பா த த் தி ன் பெருமையை வெளிப்படுத்துகின்றார்.
யோகம் என்பது அரு உருவத் திருமேனி யைத் தியானஞ் செய்து உள்ளத்தால் ஐக் கியப்படுதலே. யோகபாதத்தைப் பின்பற்றிச் சன்மார்க்கத்தில் நின்று சாரூபமுத்தியைப் பெறலாம் என்பதை வற்புறுத்தியுள்ளார். ''சினமலியறு பகை மிகுபொறி சிதைதரு
வகைவழி நிறுவிய மனனுணர் வொ டு மலர்மிசை எழுதருபொருள்
நியதமும் உணர்பவர் தனதொழிலுறுவது கொடுவடை
தகுபரனுறைவது நகர் மதின் கனமருவிய சிவபுர நினைபவர் கலைமகள்
தர நிகழ்வரே”

மேற்கூறப்பட்ட பதமுத்திகளிலும் மேலான பரமுத்தியடைவதற்கு ஞானபாதத்தில் சன் மார்க்க நெறியில் நிற்கவேண்டும், ''ஊனத்திருள் நீங்கிடல் வேண்டில்
ஞானப் பொருள்கொண்டு அடிபேணும்''
என்பதனாலும் நுண்ணறிவால் வழிபாடு செய்யுங்கால்
உடையான் ”* என்பதனாலும் நன்கு வலியுறுத்தி உள்ளார்;
தடத்தநிலை சொரூபநிலை என இறைவனின் தன்மை இருவகைப்படும். மனத்தால் கற்பனை செய்ய முடியாத நிலை சொரூபநிலை, இதுவே அனாதி முத்த சித்துருவாய் சுயம்பிரகாசமாய் நிற்கும் நிலை. * 'இன்னவுரு இன்ன நிறம் என்றறிவதேல்
அரிது நீதிபலவும் தன்னவுருவாம் என மிகுத்த தவன்''
என்றும் எந்தையார் அவர் எவ்வகையார் கொலோ'> என்றும் இத்தன்மையை விளக்கியுள்ளார்.
இத்தகைய - இறைவன் உயிர்கள்மேற் கொண்ட அன்பினால் பஞ்சகிருத்தியத்தைச் செய்வதற்காகத் தட த்த நிலையை எடுக்கின்றார், ''ஆணும் பெண்ணுமாய் அடியார்க்கு
அருள் நல்கி'' என்றும் * 'மலைமகள் பாகமாக அருள்காரணத்தில்
வருவார்'>
என்றும் பாடுகிறார், தெய்வ வழிபாட்டின் சிறப்பைப் பல இடங் களிலும் வலியுறுத்தியுள்ளார், அன்பை அடிப் படையாகக் கொண்டது சமயம் என்னும் உண்மையை ''ஒருவன் கழல் அல்லது என துள்ளம்
உணராரே” என்பதனாலும் ''என் உள்ளம் கவர் கள்வன்'' என்பதனாலும் நன்கு விளக்கியுள்ளார், ''யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வமாகி
ஆங்கே மாதொரு பாகனார் தாம் வருவார்''
என்ற சித்தியார் கூற்றுக்கமைய ஞானசம்பந்தர்

Page 36
* பெம்மான் இவன் அன்றே'' எனச் சுட்டிக் காட்டியும் “ 'அலையாரும் புனல் துறந்த அமணர் குண்டர்
சாக்கியர் தொலையாதங் கலர் தூற்றத் தோற்றங்காட்டி
ஆட்கொண்டீர்?' எனவுங் கூறுதலினால் இறைவன் ஆன்மாக் களைத் தேடி அமையும் தன்மை தெளிவாயிற்று.
உயிர்களுக்கு இருவினைப்பயனை ஊட்டு பவன் இறைவன் என்பதனை ஆளுடைப்பிள் ளையார் நன் கு விளக்கியுள்ளார். '' இனியன அல்லவற்றை இனிதாக நல்கும் இறைவன்'' என்றார். உள்ளங் கசிந்து வழிபடும் அடியாரை பிராரப்துவ கன்மம் பற்றாது என் பதை
நம்மிடம் பிறர் அன்பு செலு கொண்டும், ஆனால் அதே காலத்தி தாலும் செயலாலும் தீங்கிழைத்துக் வது பிறரை வெறுத்துக் கொண்டு கொண்டும் இருப்போமாயின் நாம் <

• 'வந்தித்து இருக்க அடியார் தங்கள் வருமேல்
வினையோடு பந்தித்திருந்த பாவந்தீர்க்கும் பரமர்?' என நன்கு விளக்கியுள்ளார்,
சைவசித்தாந்தக் கருத்துக்களும், புராண வரலாறுகளும், நீதிநூற் கருத்துக்களும், உல கியல் உண்மைகளும் ஆளுடையபிள்ளையார் என்று அழைக்கப்பட்ட திருஞானசம்பந்தரின் பாடல்களில் மிளிர்கின்றன, அவருடைய பதி கங்களில் ஒரு அமைப்பை அல்லது ஒற்றுமை யைக் காணலாம். முதலாவது பாடல் தொடக் கம் பதினோராம் பாடலாகிய திருக்கடைக் காப்பு வரை பதிகந்தோறும் இவ்வொற்றுமை தோற்றும், ஆகவே திருமுறைகள் பக்திநூல் மாத்திரமல்ல, சைவசித்தாந்த விளக்க நூலாக வும் அமைந்துள என்பது தெளிவு,
சை, தி. இவருக்கம் 5
த்த வேண்டும் என்று எதிர்பார்த்துக் பல் நாம் பிறருக்கு எப்போதும் மனத் கொண்டும் இருப்போமாயின் -அதா ம் பகைத்துக் கொண்டும், சாபமிட்டுக் அழிந்துவிடுவோம் என்பதில் ஐயமில்லை
பாரதியார்

Page 37
- 1
சைவசமய
சைவப்புலவர் வை. ஆசிரியர், யாழ் | வேலணை
சைவம் சிவனுடன் சம்பந்தமாவது என்றும் அன்பே சிவம் என்றும் அருளினார் திருமூ லர், சிவம் என்ற சொல்லுக்கு நன்மை, மங் கலம் என்ற பொருள்கள் உள். எப்பொரு ளினிடத்து அமங்கலம் சிறிதுமின்றி மங்கலம் பூரணமாயுள்ளதோ அதற்குச் சிவன் என்று பெயர், சிவன் என்னும் செம்பொருளோடு பசுவாகிய 2- யி  ைர ச் சம்பந்தப்படுத்தும் நெறியே சைவம்.
உலகத்தில் நெறிகள் பலவாகப் பெருகி யிருப்பதற்குக் காரணம் விரிவான அறிவின் மையும், பொறாமையுமாகும். இதனை "விரி விலா அறிவினார்கள் எரிவினாற் செய்தாரே னும்......." என்ற அப்பர் தேவார அடிகளால் அறியலாம். ''எச்சமயத்தோர் சொல்லும் தீதொழிய நன்மைசெயல்''-என்பது ஔவை யார் வாக்கு. தத்தம் மாற்றங்கள் நிறுவிய சமயிகள் பலரும் தத்தமது சமய நூல்கள் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழிதலுமே அறமென ஒருமுகமாக ஒத்துக்கொள்வர். விதி விலக்குகள் சமயங்கள் தோறும் வேறுபடு கின்றன. ஒரு சமயம், ஊன் பஞ்சமகா பாத கங்களுள் ஒன்றான கொலையின் மூலம் பெற ப்படுவதால் அதை உண்ணாதே என்கின்றது. இன்னொரு சமயம் இவ்வுலகில் படைக்கப்ப ட்ட உயிர்கள் அனைத்தும் உன் பொருட்டா கவே. ஆதலால் ஊன் உண்பது பாவமாகாது என் கின்றது. இவ்வாறு சமயங்கள் மக்கள் அறி வுநிலைகளுக்கேற்பப் பலபடிகளாக அமைந் துள்ளன. நிலம் முதல் நாதம் ஈறாகிய முப்பத் தாறு தத்துவங்களிலும் உலகாயதம் முதல் நிமித்த காரண பரிணாம வா த  ைச வ ம் ஈறாகிய நால்வகைச் சமயங்களின் முத்தித் தானங்கள் நிலைபெறுகின்றன. புறச் சமயங் களிற் சென்று பிறந்த உயிர்கள் அவ்வச் சமயங்கள் விதித்தபடி ஒழுகிய புண்ணிய

1 -
தத்துவங்கள்
இராமகிருஷ்ண ஐயர் சைவப்பிரகாசவித்தியாசாலை
மேலீட்டினால் மேல்நிலையாகிய அகச்சமயங் களை அடைந்து அவற்றிலும் ஈட்டிய புண் ணிய வசத்தால் சைவத் திறத்தடைந்து அதி லும் சரியை, கிரியை, யோகம் ஆகிய நிலை களைக் கடந்து ஞான நிலைபெற்று முப்பத் தாறு தத்துவங்களையும் கடந்த சாயுச்சியப் பேற்றையடைவர் என்று சைவசித்தாந்த நூல் கள் அறுதியிட்டுக் கூறுகின்றன. மற்றைச் சமயங்கள் அவ்வந் நிலைகளில் அமைந்திருப் பதை நீதியாகக், காண்கின்றது எதுவோ அதுவே சமயம், என்ற கருத்தில் சிவஞான சித்தியாரில் அருணந்தி சிவாசாரியார் ''... நீதி யினால் இவையனைத்தும் ஓரிடத்தே காண நின் றது யாதொரு சமயம் அது சமயம்...'' என அருளிய தொடர் ஈண்டு நம் சிந்தனைக் குரியது. இதனால் சைவத்துக்கு 'சமரச சன் மார்க்கம்' என வும் பெயர் உண்டாயிற்று. சோபான முறையில் படிக்கிரமமாக மற்றைச் சமயங்கள் அமைந்திருப்பதை நீ தி யா க ச் சைவம் கண்டமையினால் "...மேன்மை கொள் சைவ நீதி ...'' என்று க ச் சி யப் ப ரு ம் ''... மெளனமோலி அயர்வறச் சென்னியில் வைத்து ராசாங்கத்தில் அமர்ந்தது வைதிக சைவம் அழகிதந்தோ...'' என்று தாயுமான வரும் கூறிச் சைவத்தின் சமரச நெறியைப் பாராட்டி யுள்ளார்.
முதற் பக்தியிற் சைவத்தைப் பற்றியும், இரண்டாம் பந்தியிற் சமயத்தைப் பற்றியும் சுருங்கக் கூறினாம். இனி தத்துவங்களைப் பற்றிக் குறிப்பிடுவாம். தத்-அது, துவம்-நீ தத்துவமசி என்ற வேதாந்த மகா வாக்கியம் அது நீ ஆகிறாய் என்று பொருள்படும். இதன் உண்மைப் பொருளை உணரமாட்டாத மாயா வாதிகள் அல்லது ஏகான்மவாதிகள் பசுவா கிய ஆன்மாவைப் பதியாகிய பிரமமே எனக் கருதுகின்றனர். சைவசித்தாந்தம் சித்தமல
S) LDL

Page 38
மறிந்தால் சீவன் சிவனாகும் என்கின்றது. சீவன் சிவன் ஆனாலும் சிவத்தின் ஐந்தொ ழில்களைச் செய்யாது அதன் இன்பத்துள் அழுந்தி பேரின்பமொன்றனையே அனுபவிக் கும் என்பது சைவ சித்தாந்த நெறி. இதனை ''உம்பர் பிரான் உற்பத்தியாதிகளுக் குரியன் உயிர்தானுஞ் சிவானுபவ மொன்றினுக்கு முரித்தே" என்ற சித்தியார் வரிகளால் அறி யலாம். தத்துவம் என்ற சொல்லுக்கு உண் மையென்ற பொருள் இருப்பதால் அடிப்ப டையான ஓருண்மையைச் சுருக்கமாக விளக் குகின்றாம்.
இறைவன் இவ்வுலகிலும் உலகிலுள்ள இய ங்கியற் பொருள் (சங்கமம்) நிலையியற் பொருள் (தாவரம்) ஆகிய எல்லாப் பொருள் களிலும் கலந்து நிற்கும் முறையை (பொற் பணிபோல் அபேதம்) பொன்னும் ஆபரண மும் போல வெவ்வேறாயிருப்பினும் அவை பொருள் தன்மையால் ஒன்றாதல்போல அபே தம் எனவும், (இருள் வெளிபோற் பேதம்) இருளும் ஒளியும் போல வெவ்வேறான பொரு ள்களாக அமைதலின் பேதம் எனவும், (சொற் பொருள்போற் பேதாபேதம்) சொல் லு ம் பொருளும் என இரண்டாக நிற்கையில் பேத மாகவும் சொல்லாலும் பொருளாலும் குறிக் கப்படுவதொன்றே யாகலின் அபேதமாகவும் இருக்கும் சொற்பொருள் போல (ஒருகால் பேதமாயும் ஒருகால் அபேதமாயும் தோன்றும்) பேதாபேதம் எனவும் மூவகை நிலைகளாக உதாரண முகங்களால் விளக்கிக் கூறுவர்,
இவ்வாறான அபேதக் கொள்கை சங்கரர் வகுத்த அத்வைத நெறியிலும், மாயாவாதம் அல்லது ஏகான்மவாதம், வேதாந்தம் ஆகிய நெறியிலும் பேதக் கொள்கை மாத்துவர் கண்ட பே தாபே த க் கொ ள் கை இராமா நுஜர் காட்டிய விசிட்டாத்வைத நெறியிலும் அமைந்தமை காண ல ாம். - இறைவனது கலப்பு இ ம் மூ ன் று தன்மைகளாகவும்
அமைந்தன அல்ல என்பது சைவ நூல் கள் கண்ட உண்மை. சைவ சித்தாந்த நூல்கள் இப்பிறிவரிய கலப்பை 'அத்துவிதம்' என்றே குறிக்கின்றன, 'அத்துவிதம்' என்ற

12
வடசொல்லின் பொருளை இரண்டறக் கலத் தல் என்று கூறினாலும் பொருள் முழுமை யாக விளங்காது. முழுமையாக விளக்க வேண் டுமாயின் ஒன்றாய், வேறாய், உடனாய் என விரிக்க வேண்டும், பின்வரும் உதாரணங்க ளால் இந்நிலையை ஒருவாறு உணர்த்தலாம். (உடலுயிர்) உடலுயிர் போலக் கலப்பினால் ஒன்றாயும்; (கண்ணருக்கன்) கண்ணொளியும் கதிரொளியும் போல பொருள் தன்மையால் வேறாகியும்; (அறிவொளி) ஆன்ம போதமும் கண்ணொளியும் போல உயிர்க்குயிராதல் தன் மையால் உடனாகியும் அத்துவிதமாகக் கலந் துள்ளான். (குறிப்பு:- இறந்தவனுடைய கண் ணொளி சில வினாடிகளுக்கு அவன் கண்ணை விட்டு நீங்குவதில்லை. ஆன்மபோதமாகிய உயி ரறிவு இன்மையால் காட்சியும் அவனுக்கு புலனாவதில்லை. கண்ணொளி கெடமுன் அக் கண்ணை கண் சத்திர வைத்திய நிபுணர்கள் அகற்றிப் பாதுகாத்து உயிரறிவு உள்ள கண் ணொளியற்ற இன்னொருவனுக்குப் பொருத் திக் காட்சியைப் புலனாக வைக்கின்றனர். இதனாற் கண்ணொளியும் உயிரறிவும் உடனாய் இருக்கும்போதே காட்சி புலனாகின்றமை தெளி வாகப் பெறப்படுகின்றது.)
இவ்வாறு இறைவன் பெத்த நிலையிலும் ஆன்மாக்களுடன் அத்துவிதமாய்க் கலந்து நின்றாலும் உயிர்கள் இதனை உணராமல் பெத்த நிலையில் ஆணவத்தோடு அத்துவித மாயும், முத்தி நிலையில் சிவனோடு அத்துவி தமாயும் கலந்து நிற்கின்றன.
''ஆணவத்தோ டத்துவித மானபடி
மெய்ஞ்ஞானத் தாணுவினோ டத்துவிதஞ் சாருநா
ளெந்நாளோ? என்ற தாயுமானவர் பாடலால் இக்கருத்தை
அறியலாம். தாணு-சிவன்.
''பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம் பொன்னின் மறைந்தது பொன்ன ணி பூடணம்'' என்று சைவத் திருமுறைகளுள் பத்தாந் திரு
முறையாகிய திருமந்திரத்தில் சைவசித்தாந் • தியாகிய உங்கள் திருமூலர் எ ங் க ள்

Page 39
- 1:
* பொற்பணி ' யாகிய அபேதக் கொள்கையை அல்லது அத்வைத நெறியையே விளக்கியுள் ளார் எனச் சிலர் சைவ சித்தாந்த நெறியை மறுக்கு முகமாக ஆதாரங் காட்ட முற்படுகி ன்றனர். அவர்கள் 'பொற்பணி" என்ற சொல் மாத்திரையான மேற்போந்த அடிகளை மாத் திரம் எடுத்துக்காட்ட வருகின்றனர். இது அபேத நிலையை எடுத்துக் காட்ட வந்த உதாரணமன்று. உலகில் இறைவன் கலந்து ள்ள அத்துவிதக் கலப்பை உணர்த்த வந்த உதாரணமே.
* 'மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தின் மறைந்தது மாமத யானை' ''பரத்தை மறைத்தது பார்முதற் பூதம் பரத்தின் மறைந்தது பார்முதற் பூதம்'' என்ற உவமைகளும் அத்துவிதக் கலப்பை விளக்க எடுத்தாளப்பட்டமையை உற்றுநோக்க வேண்டும். "பார்முதற் பூதங்களாகப் பிரபஞ் சத்தை நோக்க பரம்பொருள் மறைந்து விடும். பிரபஞ்சத்தைப் பரம்பொருளாக நோக்க பார்முதற் பூதம் பரம்பொருளில் மறைந்து விடும்' என பரம்பொருள் பார்
கடவுள் ஒருவர் இருக்கிறார் எ அது தேவையுமில்லை, கடவுள் ஒரு டின் அதனால் நமக்குத்தான் ஊறும்

முதற் பூதங்களோடு இரண்டறக் கலந்து நிற் கும் முறையினைத் தெருட்டியமை காண்க. *'பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத் துப் பரந்ததோர் படரொளிப் பரப்பே..'' *'... பிறங்கொளிசேர் விண்ணாகி மண்ணாகி
இத்தனையும் வேறாகி...'' ''லஒன்று நீயல்லை யன்றி யொன் றில்லை யாருன்னை அறியகிற் பாரே'' என்ற திருவாசக அடிகள் இந்த இரண்டற்ற அத்துவித நிலையை நமக்கு நன்கு தெளிவாக்குகின்றன.
அநுட்டானங்கள், பூர்வ அபரக் கிரியை கள், திருக்கோவிலில் நடைபெறும் நித்திய நைமித்தியங்கள், தெய்வத் திருவுருவங்கள் யாவற்றிலுமே சைவ சமய உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன. இவற்றில் எதை எழுதுவது எதைத் தவிர்ப்பது. ''அவையே தானேயாய்'' என்ற சிவஞானபோதச் சொற் றொடர்ப் பொருளை அவையேயாய் ஒன்றாய் எனவும், தானேயாய் - வேறாய் எனவும், அ ைவயே தானேயாய் - உடனாய் என வும் சிற்றறிவுக் கெட்டியவாறு விளக்கியதுடன் விரிவஞ்சி நிறுத்திக் கொள்கின்றேன்.
என்பதை நிரூபித்துக் காட்ட முடியாது, வர் உண்டு என்பதை நாம் உணராவி பாடு.
மகாத்மா காந்தி

Page 40
சின்
முருக
க எ
இக்கட்டுரை பலாலி ஆசிரிய கலாசாலைச் சைவமாணவர் மன்ற ஆண்டுச் சஞ்சிகையில் இடம் பெறுவதாயிருந்தாலும் குறித்த கலா சாலையின் கிறிஸ்த, முஸ்லீம் மாணவர் மன்றங் களும் விரும்பி வரவேற்றொப்புக் கொள்ளு மென்ப தெனது நம்பிக்கை,
ஏனெனில் இனம், மதம், மொழி, நாடு என்கின்ற எவ்வித பாகுபாடு மின்றிப் பூவுலகம் முழு வதிலு முயிர்வாழுகின்ற மக்கட் குலத்தவர் களில் குடும்ப வாழ்க்கை நடத்துகின்ற அனை வரும் பெறவேண்டிய; 8 ' துதிவாணி வீரம் விசயஞ்சந் தானந்
துணிவு தனம் மதிதா னியஞ்சவு பாக்கியம் போகம் வடிவழகு புதிதாம் பெருமை யறங்குலம் நோய்கல்
பூண்வயது'' ஆகிய பதினாறுவகைப் பேறுகளுள்ளே சிறந்த தாகிய மகப்பேற்றைப் புத்திக் குறைவு, பிணி. அற்பாயுள், அங்கவீனம், துராசாரமாகிய குறை பாடுகளற்ற நன்மகப் பேறாயடைவதற்கேற்ற வழிவகைகளை விபரிக்கின்ற "குடும்ப வாழ்வில் அத்துவிதம்" என்னும் நூலின் பன்னிரண்டு அத்தியாயங்களு ளொன்றாகிய காதல் என் கின்ற அருமருந்தன்ன உத்தமப் பண்பைப் பற்றிய தாதலின் எவருமிதனைப் பொதுத்தரும் மாக ஏற்றுக் கொள்வார்களென்கின்ற துணி பாலென்க.
காதலென்பது குடும்ப வாழ்க்கையிலுபயோ கிப்பதற்காகச் சிருட்டி தத்துவத்தாலமைக்கப் பெற்றிருக்கின்ற ஒரு தெய்வீகப்பண்பு.
அது ஆச்சிரமங்கள் நான்கும் முறையாக அனுட்டிக்கப் பெற்றுவந்த காலத்தில் முதற் கண்ண தாகிய பிரமசரிய காலத்தில் எடுத்

14 -
வ மயம் ன் துணை
தல்
தாளப் பெறாமல் கிருகஸ்தாச்சிரம காலத்தில் மாத்திரமே தேவை கருதிக் கையாளப் பெற்று வந்த ஒரு சேமநிதி போன்ற சற்குணமாகும்.
மனம், வாக்கு, காயமாகிய முக்கரணங்களுட் சிறந்த மனத்தினிடமாக நிகழுவது காதல்.
மகிழ்ச்சி, அன்பு, காதலாகிய மூன்று குணங் களும் ஒன்றன்பின் னொன்றாக நிகழ்ந்து பயன் தருவன. தம்பதிகளுக்கு.
காதலினுடைய அருமை, பெருமைகளையும் அது உபயோகமாகும் இடம், காலங்களையும் சிந்தித்துணரக் கூடிய விவேகமில்லாதவர்கள் அக்காதலைத் தகாவிடத் தள்ளிவீசி யவம்புரி வ த ால் அதுகாரணமாகக் காதலினுடைய விலையை அறிஞர்கள் சிலர் குறைத்து மதிப் பதுமுண்டு.
இரும்பு, செம்பு, காரீயம் முதலான கடின லோகங்களைச் சிந்தூரம், பஸ்மம் ஆக்குவதற் குக் கையாளும்படி வைத்திய சாத்திரங்களிற் கூறப்பெற்றுள்ள. செயநீர்போல் மனமாகிய பண்டத்தை உருகச் செய்கின்ற அமுதரசம் காதல்,
மகிழ்ச்சி, அன்பு, காதலாகிய
மூன்றும் அடுத்தடுத்துப் பிரதிபலிப்பவை.
முதலாவது மகிழ்ச்சி உள்ளத்தை நிறையச்
செய்யும் அடுக்க அன்பு உள்ளத்தை இளகச் செய்யும் பின்பு காதல் உள்ளத்தை உருகச் செய்யும் உருகித் திரவத்தன்மை யடைகின்ற இரு உள்ளங்களை ஒன்றாக்குவது மிக இலகு.
அப்படியொன்றாகின்ற நிலைமையைக் குறித் துப் பாவிக்கப் பெற்று வருகின்ற சொல்லுத் தான் "கலவி"

Page 41
பாராயணஞ் செய்பவர்களுக்கு மெய்ஞ் ஞானத்தை யுதிக்கச் செய்து வீடுபேற்றை வழங்கவல்ல திருவாசகங்களைப் பாடியருளிய மாணிக்கவாசக சுவாமிகளை இறைவன் அகப் பொருட்டுறைகளையுடைய கோவைப் பிரபந்தத் தைப் பாடும்படி ஏன் பணித்தருளினாரென் பதைச் சிந்தித்துணருகின்றவர்களுக்கு அகத் துறையின் இன்றியமையாமையினிது புலனா கும்.
• சொற்பா லமுதிவள் யான்சுவை'' எனவும் * 'ஆனந்த வெள்ளத் தழுந்துமொ ராருயிரிருருக்
கொண்டு '' எனவும் கொகத் திருகண்ணிற் கொன்றே மணிகலந் தாங்கிருவ, ராகத்து ளோருயிர்'' எனவும் வரு கின்ற திருச்சிற்றம்பலக் கோவையின் செய் யுட் பாகங்களும்,
''பிணைவிழைச் சூழ்தந் துய்ப்ப'' எனவரு கின்ற கந்தபுராணச் செய்யுட் பாகமுஞ் சுட்டு கின்ற அத்துவித நிலையை யாக்கி வைக்கின்ற கையாயுதந்தான் காதல்
நன்றாகச் சமையற்கலை தெரிந்த ஒருவர் கறி சமைப்பதற்குரிய ஏதேனுமொரு காய்வகையை யும், அந்தக் காயின் அளவுக்குத் தேவையான அளவு பச்சைமிளகாய், வெங்காயம், தேங்காய், காரத்தூள், உப்பு, புளி யாகியவைகளையும் கொடுத்து ஒருவரைக் கறி சமைக்கும்படி
வ ண .

5 -
பணித்தால்; அப்படிப் பணிக்கப் பெற்றவர் தம்மிட மொப்புவித்த பச்சைமிளகாய் முத லான பண்டங்களிற் சிறிது குறைத்துபயோ கித்தாலும். அந்தக்கறி முழுவதும் தள்ளிவிடக்
கூடியதாயிராது. ஆனால்;
உப்பை மாத்திரங் குறைவாக உபயோகித் தால் அந்தக்கறி யுதவாமலேயிருக்கும்.
இந்த உப்பையே நிகர்த்தது காதல். காதலை விலைக்கு வாங்கவோ, கைமாற்றாகப் பெறவோ முடியாது.
பெண்மணிகள் பிள்ளைப் பேற்றுக்குத் தகுதி யாவது முதல். அத்தகுதியற்றுப் போகின்ற நடுக்கட்ட காலத்தில் மாத்திரம் உபயோகப் படக் கூடிய அளவுடைய காதல்தான் சிருட்டி தத்துவத்தாலமைக்கப் பெற்றிருக்கின்றது தம் பதிகளிடம்.
நல்லொழுக்கம், கல்வி, செல்வம், தேகசுகம், பூரணாயுள் ஆகிய இவைகளைத் தங்கள் பிள்ளை கள் எய்தி வாழ வேண்டுமென்று அவாவாத தாய், தந்தையர்கள் இப்பூமியிற் கிடையாது;
அந்த அவா அனுகூலமடையில் காதலைத் துஷ்பிரயோகஞ் செய்யாமல், குடும்பவாழ்க்கை நடத்தித் தங்களுக்கும், சமூகத்துக்கும் நன்மை புரிவார்களாக.
க க ம்
அன்பும், பணிவுமுள்ள சி.சின்னையா புலவர்

Page 42
- 1
மகாவித்துவான் கணேசையர்
பொன்நகராம் நாம் வதியும் யாழ் நகர். அந்நகரின் வடக்கின்கண் எண்மையில் தூரத் தில் புன்னாலைக்கட்டுவன் என்னுமூர் இருக் கின்றது. இயற்கை வளமும் பொருளாதார விருத்தி புரியும் கமத்தொழிலும் அத்தொழில் செழிப்புறுவதற்கு ஏற்ற செம்மண்வளமும், காலநிலையும் உடையதாயும் அருஞ்சுவை நீரும் தமிழ் அறிவும், இந்து மத வளமும் தன்ன கத்தே கொண்டதாக புன்னை நகர் திகழ்கின் றது. இந்நகரில் வதியும்காசிய கோத்திரத்தின் கண் உதித்த சைவப் பிராமண குலத்தில் தோன்றிய சின்னையருக்கும் அவர் வாழ்க் கைத் துணைவி கற்பிற் சிறந்த சின்னம்மாளுக் கும் ஈசுர ஆண்டு பங்குனித் திங்கள் பதினைந் தாம் நாள் (1. 4, 1878) புத்திரனாக கணே சையர் அவதரித்தார். கணேசையருக்கு முதல் நால்வரும் புத்திரிகள். இதனால் மனம் வருந் திய ஐயர் புத்திரப் பேறுக்காக தமது குல் தெய்வமான வினாயகப் பெருமான் மீது தவம் புரிந்தார். அதன் பேறாக (ஐந்தாவது பிள்ளை யாக) அடுத்த பிள்ளை யாக கணேசன் உதித் தான், வினாயகன் அருளால் பிறந்தமையால் ஐயர் அவர்கள் மகனுக்கு கணேசன் என் னும் நாமத்தைச் சூட்டினார்கள்.
ஐயர் அவர்கள் தவப் புதல்வன் கணேச னுக்கு வித்தியாரம்பம் (கற்கத் தொடங்கல்) மயிர் கழித்தல். உபநயனம் (பூனூற் சடங்கு) முதலிய பிள்ளைச் சடங்குகளை அவ்வக் காலத் தில் திறம்படச் செய்து முடித்தார். மகாவித் துவான் சி. கணேசையர் அவர்கள் முதன் முத லாக தமது பெரிய தந்தையாராகிய கதிர் காமஐயர் அவர்களிடம் அரிச்சுவடி தொடக் கம் எட்டாம் தரம் வரையும் நன்கு ஐயம் திரிபறக் கல்வி கற்றார், இக்காலத்திலேயே ஐயர் அவர்கள் (கணேசையர்) சமயம், இலக் கணம் இலக்கியம், வரலாறு, கணிதம் முத லிய பாடங்களில் மற்றவர்களைப் பார்க்கிலும் திறமையாக விளங்கினார். இதன் பின் ஐயர் அவர்கள் தமது இலக்கண அ றி  ைவ ப்

5 -
தம் அவரது சைவப் பணியும்
பெருக்க விரும்பி மகாவித்துவ சிரோன்மணி பொன்னம்பலம்பிள்ளை அவர்களிடம் வண்
ணார்பண்ணைச் சிவன்கோவில் குரு மறைந் திரு பிச்சுவையர் அவர்களின் வீட்டுத் திண் ணையில் இருந்து கல்வி பயின்றார், இவர் இறந்தபின் சுன்னாகம் குமார சுவாமிப் புல வர் அவர்களிடம் சில காலம் கல்வி பயின றார். பின்பு புலவர் அவர்கட்கு ஒரு ஆலோச னைத் துணைவராக இருந்து வந்தார்.
உயர்திரு வேலுப்பிள்ளை அவர்களால் நடத்தப்பட்டு வந்த விவேகானந்தா வித்தி யாசாலையில் மறைந்திரு சி. கணேசையர் தமது இருபத்திரண்டாவது வயதில் முதன் முதலாக தமிழ்ப் பேராசிரியராகக் க ட  ைம புரிந்தார். பின்பு ஐயர் அவர்கள் வயா விளான், வண்ணை புன்னாலைக்கட்டுவன் குரும்பசிட்டி முதலிய ஊர்களில் தமிழ்ப் பேராசிரியராகக் கடமையாற்றினார்கள். இவர் தமது 32 -ம் வயதில் அருந்ததியன்ன அன் னலக்குமியமமையை தமது வாழ்க்கைத் துணை வியாக்கிக் கொண்டார்.
மறைந்திரு கணேசையர் அவர்களின் தமிழ்ப் பெருக்கையும் சமய ஆற்றலையும் அறிந்த தமிழ் அறிஞர்கள் ஐயரவர்கட்கு ''மகாவித்துவான் என்னும் பட்டம் கொடுத் தார்கள். ஐயர் அவர்களின் 60ம் வயதுப் பூர்த்தியில் (8-10-1938) அன்னாருக்கு ஒரு பொற்கிழி விழா வைத்தார்கள் ஆரிய திரா விட பாஷா விருத்திச் சங்கத்தார் 1-12-1952ல் "'வித்துவ சிரோன்மணி'' என்னும் பட்டத்தை அன்னாருக்கு வழங்கினர்.
மகா வித்துவான் இளமையிலிருந்தே கடவுள் பக்தியுள்ளவராக இருந்தார் விசேட தீட்சை பெற்று ஐயரவர்கள் சிவாகம விதிப்படி சிவ பூசை செய்து வந்தார். ஐயரவர்களின் நெற் றியில் எப்போதும் திரிபுண்டலமாகத் தரிக் கப்பட்ட வெண்ணீறும் அதன் நடுவில் நறும் ணம் கமழும் சந்தணப் பொட்டும் ஒளி

Page 43
பொருந்தியதாகக் காணப்படும். தமது வாழ்க் கைத் துணைவியார் இறந்ததும் மறுமணம் புரியாது வினாயக பக்தியில் ஈடுபட்டிருந்தார். இவர் வருத்தலைவிளான் மருதடி வினாயகர் ஆலயத்துக்கு அருகாமையில் ஓர் ஆச்சிர மத்தை ஏற்படுத்தி அங்கே வாழ்ந்து வந்தார்,
ஈழத்தின் க ர வி ய க் கழஞ்சியமாகத் திகழ்ந்த ஐயா அவர்கள் பல சமய நூல் களையும் தமிழ் நூல்களையும் இயற்றி உள் ளார். இவர் தமிழையும் சமயத்தையும் ஒருங்கே வளரச் செய்வதற்கு அரும்பாடுபட்டார். ஈழ நாட்டுப் புலவர் சரிதம் குமாரசாமிப் புலவர் சரிதம். குசேல சரித்திர உரை, இரகுவம்ச உரை, தொல்காப்பிய உரைவிளக்கம் (குறிப் புகள் உட்பட) முதலிய தமிழ் நூல்களை இயற் றியுள்ளார்.
ஐயா அவர்கள் சமயம் வளர பின்வரும் சமய நூல்களை இயற்றியுள்ளார். புன் னாலைக் கட்டுவன் வினாயகர் ஊஞ்சல், வருத்தலை விளான் வினாயகர் அந்தாதி, வருத்தலை விளான் மருதடி வினாயகர் இருபா இருபஃது, கலிவெண்பா, கலிநிறைத்துறை ஊஞ்சல் முதலிய நூல்களேயாம்.
மருதடி வினாயகர் இருபா இருபஃதில் வெண்பாவும் அகவல் பாவுமாக இ ரு ப து பாடலகள் உண்டு. அகவல் பாக்கள் சங்க காலச் செய்யுட்களைப் போன்ற சொற் செறிவும், பொருளாளமும், ஓசைநயமும், தன்மை நவிற்சி அணியும் அமைந்துள்ளன. இந்நூல் வினாயகர் கயமுகன் என்னும் அசு ரனை அழித்தமையும் ஒளவையாருக்கு அருள் புரிந்தமையும், அச்சு முரித்தமையும், விசுவ ரூபம் கொண்டமை பற்றிய சுருக்கங்களும் விநாயகன் வழிபாடும், அவனை வழிபட்டோர் பெறும் திருவருளையும், தைப்பூசச் சிறப்புக் களும் அடங்கியுள்ளன. இருபா இருபஃது என்னும் அகவற்பா ஒன்று வருமாறு:-
கனிந்துள முருகி நின் கழலடி பாவிப் பூசனை புரிந்த மாசிலா வுலத்தின் ஒளவை தனக்கிங் காண்டு பல வாழும்

7 -
நாளுஞ் ஞானமு நல்லுடல் வலியும் புவியா ளரசரும் போற்றும் புலமையும் யாவு மளித்தனை யிமையவர் வேண்டக் கயமுகற் செற்று வயமது பெற்றனை மன்னிய வன்பொரு வழிபட் டேத்தும் பாண்டுதன் புதல்வ ராண்டிட வையம்
வரமது கொடுத்தனை மற்றுஞ் செயல்கள் அளந்திட முடியுமோ வடியேன் றனக்கும் நெஞ்சத் திடத்து நீடுவா சனை கள் போக்கி நின் னடிக்கா ளாக்கி யாளுவை பன்னை கள் சூளும் பருமரு தடியின் நன்னிய மதமா முகவொண் மணியே.
வருத்தலைவிளான் மருதடி வினாயகர் கலி வெண்பாவில் வினாயகப் பெருமானின் திரு வுருவத்தை ஒரு சொல்லோவியமாக வைத் துப் பாடியுள்ளார். வினாயகப் பெருமானுக் குப் பூசைசெய்யக் கிடைப்பது பெரும் பாக் கியம் என்றும், அப்படிப் பூசை செய்வதால் வரும் பயனையும் இக் கலி வெண்பாவில் கூறியுள்ளார். வினாயகர் ஊஞ்சலில் வினாய கருடைய புகழையே பாடியுள்ளார். அடுத்து வினாயகர் அந்தாதி பாடியுள்ளார். இந்நூலில் முகவுரையில் ஐயரவர்கள் பின்வருமாறு எழு தியுள்ளார் "'அப்பெருமான் தன்னை வழிபட்டு வருபவர்களுக்குச் செய்யும் தி ரு வ ரு ளை யானும் சிறிதளவு அனுபவித்துள்ளேன். ஆத லின் அக்கடவுளுடைய திருவருளைப் பூரண மாகப் பெற்று இனிப் பிறந்திருந்து இளையா திருக்க வேண்டுமென்ற சிறந்த கருத்தை உட்கொண்டே இவ்வந்தாதியை அக்கடவுளின் மேற் பாடியுள்ளேன்'' ''கறியாமை நீக்குலும் கல்வி ................ " என்ற தொடக்குடைய அந்தாதிச் செய்யுளால் வினாயகன் அருள் முழுவதையும் பெற்று பிறப்பிறப்பு இல்லாம லிருக்க வேண்டுமென்று மறைந்ததிரு கணே சையர் அவர்கள் கூறியுள்ளார். 8. 10. 1938 ல் அன்னாரின் 60 ஆண்டுப் பூர்த்தி விழாவில் அளிக்கப்பட்ட 2000 பொற்காசுகளையும் வினாயகனுக்குப் பொன் முடியும் பீவும் வாங்கிச் சாத்தினார் வினாயக தொண்டனான ஐயர் அவர்கள் புன் னை

Page 44
ஆயாக்கடவைச் சித்தி வினாயகப் பெருமான் ஆலயத் திருப்பணி செய்து கும்பாபிஷேகமும் செய்தார்.
வருத்தலை விளான் மருதடி வினாயகர் ஆல யத்தின் முதலாம் வீதியின் வடக்கருகில் பெரு மானுக்குத தின மும் அபிஷேகம் செய்வதற் காகத் திருமஞ்சனக் கிணறு ஒன்றை வெட் டுவித்தார். அயலிலுள்ள கிணறுகளிலும் பார்க்க மிகவும் ஆழமாக வெட்டியும் நீர் வரவில்லை. நீர்வராததையிட்டு ஐயரவர்கள் மனத்துயரத்துடன் தனது ஆச்சிரமத்தில் துயில் கொண்டார். அன்றிரவு வினாயகப் பெருமான் சொற்பன த்திலே தோன் றி 'நாளையதினம் நீ ஒரு பாட்டுப் பாடிவிட்டு உனது வேலையாட்களைக் கிணற்றுள் விட்டு ஆயுதத்தால் கொத்து உடனே நீர் வந்து விடும்'' என்று ஐயரவர்களுக்குக் கூறி மறைந்தார். மறுநாட் காலை எழுந்து திரு மஞ்சனக் கிணற்றடியில் நின்று.
6 " ஆட்டாதே யெங்க ளரனார் திருமகனே கோட்டாலே குத்தியிந்தக் கூபமதை
• நாட்டிடுவாய் மாமருதி லிசா மதமா முகத்தோனே காமுறுவேற் குள்ளங் கனிந்து''
தமிழ் வாழ்க! ன.
பிரார்த்தனை என்பது கடவுளிடம் எ6 ஆத்மாவின் ஆவல் தான் பிரார்த்தனை

S -
( என்ற பாடலைப் பாடி முடித்தார். உடனே தமது கிணற்று வேலையாள் ஒருவனைக் கிணற் றுள் இறக்கினார். வே லை ய ா ள் தன து கொந்தாலியாற் கிணற்று அடியில் ஒரு கொத்துக் கொத்தினார். உடனே கிணற்று நீர் பெருகியது. இதிலிருந்து மகாவித்துவான் பிரம்ம ஸ்ரீ. சி. கணேசையர் அவர்களின் வினாயக பக்தியையும், அடியார்க்கெளியானான வினாயகனின் திருவருட் டிறத்தையும் நன் கு அறியலாம்.
தமது ஆச்சிரமத்தில் வாழ்ந்துவரப் பக்தி யும் கூடிக்கொண்டே போயின. அகமும் புறமும் கடவுள் பக்தியாக இருந்தார். இந் நூலில் விளம்பி ஆண்டு ஐப்பசித் திங்கள் 23ம் நாள் காலை 6மணி 30 நிமிடமளவில் (8-11-1958) இவ்வுலகை விட்டு நீங்கி இறை வன் பாதம் சேர்ந்தார்.
வினாயகன் அருளால் பிறந்து ஒழுக்கமும் கல்வியும், சமயமும் ஒருங்கே சிறந்து விளங் கிய பெருமான் மாட்டு பேரன்பு  ைவ த் த கணேசன் நற்குண நற்செயல்களைப் பின் பற்றுவோமாக.
சைவம் வாழ்க!
க. திருச்செல்வவினாயகமூர்த்தி
(வர்த்தகம் முதலாமாண்டு)
தையாவது வேண்டுகிற விஷயமல்ல. T ஆகும்.
- காந்தியடிகள்

Page 45
- 1
சமய வாழ்வின்
[பண்டித வித்துவான், 6
இ. திருநா
மனித்தப் பிறவி வேண்டும் என்கிறார் அப் பர், 'மற்றைய பிறப்புக்கள் வேண்டாம்' என் பது அதன் அருத்தாபத்தி. அருத்தாபத்தி என் பது அருத்தம் + ஆபத்தி எனப்பிரிக்கப்படும். அருத்தம் பொருள்; ஆபத்தி - அதனிற்றோன்று வது. அதாவது ஒரு வாக்கியத்தில் உடன் பாட்டுப் பொருள் ஒன்றும் மறுதலைப் பொருள் இன்னொன்றுமாக இருபொருள் தோன்றுமிடத் துப் பின்னையது அருத்தாபத்தி அளவை நியா யம் எனப்படும்.
காரைக்கால் அம்மையார் 'பிறவாமை வேண் டும்' என்று இறைவனை வேண்ட அப்பர் சுவா மிகள் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே' என்று குறிப்பிடுவதை ஒப்பிட்டு நோக்கின் ஒன்றுக்கொன்று மாறுபாடாகத் தோன்றும். அதனால் சைவசமயக் கோட்பாட் டில் பிறழ்வு அதிகமெனக் குற்றந்தெரிவார் முடிவுக்கு வந்துவிடுவார். உற்று நோக்கில் பிறழ்வின்மை புலனாகும். மனித்தப்பிறவி எதற் காக வேண்டும் என்கின் றாரென்று நோக்கினால் இறைவனது நடிப்புக்கேற்க வளையும் புருவங் களும் கொவ்வைக்கனிபோன்ற சிவந்த வாயி னின்று விகசிக்கும் குமிழ்த்த புன் முறுவலும் கங்கையும் மதியும் சார்வதால் குளிர்ந்த சடா பாரமும் செம்பவள மேனியில் உத்தூளன மாகப் பூசப்பெற்ற பாலொழுக்கனைய திருநீற் றழ கும், பிறவிப்பிணிக்கு மருந்தாகி இனிக்கி ன்ற கருணைபாலிக்கின்ற குஞ்சித பாதமாகிய தூக்கிய திருவடியும் விழித்திருக்கின்ற கண்ணாகிய ஆன்மாவிற்குக் காணக்கூடிய தோர் பாக்கியமும் இம் மானிடச்சட்டை தாங்கி உலகில் வாழக் கிடைத்த நாள் அஸ்த மிக்கு முன் கிடைக்கத்தவம் உண்டா னால் மட்டும் மனிதப்பிறவி வேண்டும் என் பது அப்பர் சுவாமிகள் கருத்து.

9 --
குறிக்கோள்
சைவப்புலவர், பாவலர் வுக்கரசு)
'குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயில்
குமிழ் சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போன் மேனியிற்
பால்வெண் நீறும் இனித்த முடைய எடுத்தபொற் பாதமும்
காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த
மா நிலத்தே''
இது அப்பர் தேவாரம் அப்பர் சுவாமிகளின் கருத்தை அநுவதிப் பதுபோலக் காரைக்கால் அம்மையார் ''மீண் டும் பிறப்பு எனக்குப் பழைய கர்மங்களின் தொடர்ச்சியால் வரநேருமானால் இறைவனே! யான் உன்னை என்றும் மறவாத மானிடப் பிற வியினிடத்து உய்த்து அருள் செய்ய வேண் டும்'' என் கிறார். அவ்வாறு ஆண்டவனை என் றும் மறவாதிருப்பதற்கு மூலமாக அமைந் தது அன்பு - அதாவது பேரன்பு; அதனைக் காரைக்கால் அம்மையார் "இ ற வா த இன்ப அன்பு'' என்கிறார் - அந்தப் பேரன்புதலைப்பட் டால் பிற வா யாக்கை நிச்சயம் - பழவினை யால் பிறப்பு உண்டேல் அதனை விலக்க ஏது இல்லையேல் “இறைவா நின்னை மறக்காதிருக்க அறிவறிந்த மனிதப்பிறவி வேண்டும்'' அப்பி றவிதானும் வினை உடலோடு ஏக - இடையே தோன்றிய சஞ்சித ஆகாமிய வினைகள் நினது திருவருளினால் தகிக்கப்பட இக் காயமழிய அறவடிவான கடவுளே! நின து அநவரத் தாண் டவமாகிய - ஊர்த்துவ தாண்டவத்தினை நாயடி யேன் நின் அடியின் கீழிருந்து தரிசித்து அத னால் வரும் பேரின்ப ஊற்றினை நுகர்ந்து நுக ர்ந்து எனைநானென்பதுணராது - பகல் இரவா வதுமறியாது நிரதிசய இன் பத் தி லி ரு க் க அருள் தருக என்கின்றார் -

Page 46
'இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின்
வேண்டுகின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்
டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்
நான் மகிழ்ந்து பாடி அறவா நீ ஆடும்போதுன் அடியின் கீழ்
இருக்க வென்றார்' சேக்கிழார் பெரியபுராணம் இவ்விரண்டு பாடல்களையும் ஒப்பு நோக் கின் சைவசமய வாழ்வின் குறிக்கோள் இனிது புலனாகின்றது. குறிக்கோளோடு கூடிய மனித வாழ்வு தேவர் வாழ்வினும் மேலானது - தேவர் களே மானிடராகப் பிறக்க ஆசைப்படுகின் றார்கள். ஏனெனில் 'இந்தப் பூமி சிவன் உய் யக் கொள்கின்ற ஆறு' என்கின்றார் மணிவா சகர். குறிக்கோளில்லாத சூத்திரப் பாவை போல இறைவன் தாளை வணங்காத்தல பய னற்றது.
கோளில் பொறியிற் குணமிலவே எண்
குணத்தான் தாளை வணங்காத் தலை.
என்பது வள்ளுவர் வாக்கு. ஆகவே மக்களாகிய நாம் குறிக்கோளோடு வாழவேண்டும்.
'அவன் தன் குறியே குறிக்கொண்டு போமாறமை மின் பொய் நீக்கிப் புயங்கன்
ஆழ்வான் பொன்னடிக்கே'? என வழிகாட்டுகின்றார், மேலும் மணிவா சகர்
“மானிடப் பிறவிதானும் வகுத்தது மன
வாக்காயம் ஆனிடத் தானஞ் சாடும் அரன்பணிக்
காகவன்றோ வானிடத் தவரும் மண்மேல் அரன்றனை
அர்ச்சிப்பர்மற் றூ னெ டுத் துழலும் ஊமர் ஒன்றையும்
உணராரந்தோ'' என்னும் பாடல் இதனை மேலும் வலியுறுத் துகின்றது. உண்டுறங்கி வாழும் விலங்கனைய

10 -
வாழ்வு கொண்ட மக்களை "ஊனெடுத்து உழ லும் ஊமர் ஊமைகள் என்கிறார் - ஊமை யென்பது வாய்விடாச் சாதி என்பது பொருள்.
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கல்லாரோடு ஏனையவர் என்பது வள்ளுவர். இலங்கு நூல் கல்லாதவர் விலங்குக்கு நிகராவார்கள், ஏனைய கற்றோர்குறிக்கோளுடையவர்கள் மக் கள் அ னை யர் என்பது இதன் பொருள் -
கற்றவர் பலர் தாம் எல்லாம் அறிந்தவ ரெ னத் தருக்கித் தலையால் நடப்பர் - இதனை மணிவாசகர் நோக்கி இரங்கித்,
தனித்துணை நீ நிற்க யான் தருக்கித்
தலையால் நடந்த வினைத்துணையேனை விடுதிகண்டாய் '' என நீத்தல் விண்ணப்பத்தில் விண்ணப்பம் செய்கிறார், அப்பர் சுவாமிகளும் இரண் டு வினாக்களுக்கு விடை சொல்ல உலகில் யாருக் குமே தெரியாதென்கிறார்.
அவ்விரண்டு வினாக்களில் ஒன்று *'எமக்கு எப்போது சாவுவரும் என்பது, மற்ற து. 'எமக்குப் பூமியில் வாழக்கிடைத்திருக்கும் நாள் எத்தனை ' என்பது இவ்விரு வினாக்களு க்கும் விடைசொல்ல யாராலும் முடியாது.
• நீ நாளும் நன்னெஞ்சே நினை கண்டாய்
யாரறிவார் சா நாளும் வாழ் நாளும் சாய்க்காட்டெம் பெரு
மாற்கே. பூ நாளும் தலை சுமப்பப் புனை நாமம் செவிகேட்ப நா நாளும் நவின் றேத்தப் பெறலாமே நல்
வினை யே??? -என்பது அப்பர் தேவாரம்
வாழக் கிடைத்த நாளும், சாவு வரக் குறித் திருக்கும் நாளும் யாமெவரேனும் அறிய வல் லோமல்லோம், ஆகவே நல்வினை செய்யுங்கள் - இறைவன் தன்னை வாழ்த்தவாயும் - நினைக்க நல்ல நெஞ்சையும் - வணங்கத் தலையையும் தந்திருக்கின்றான் -

Page 47
- 27
வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனைச் சூழ்த்த மாமலர் சூடித் துதியாதே வீழ்த்த வாவினை யேன் நெடுங் காலமே,
- அப்பர் தேவாரம்
இவ்வாறு மானிடப்பிறவி தந்து - வாய் தந்து" மனந்தந்து வணங்கத்தலை தந்து எம்மை வாழ்
வித்த இறைவனை மறந்து வீணாளாக இத் துணை நாளும் மறந்து இருந்தேனே; என இரங்குகிறார்- இறைவன் கனியினும் நல்லவன். கற்கண்டிலும் நல்லவன் - பருவ நலம் ததும்பும் மங்கையர் இன்பத்திலும் நல்லவன் - முடிசூடி அரசாளும் செல்வத்தினும் நல்லவன் என்கி றார் அப்பர்.
கனியினும் கட்டி பட்ட கரும்பினும் பனி மலர்க் குழற் பாவை நல்லாரினும் தனி முடிகவித் தாளும் அரசினும் இனியன் தன்னடைந் தார்க்கிடை மருதனே
- அப்பர் தேவாரம். ஆகவே மனிதர்களே! உங்களுக்கு மாம்பழ த்திலே தான் ஆசை- மாம்பழத்திலும் இனிய கனி யொன்றுண்டு அக்கனியைத் தருகிறேன். அதனை உண்ண உங்களுக்கு வல்லமை உண்டா? என்கிறார் - அது என்ன கனியெ
மனிதனின் மனத்துக்குள்ளே இரு ஒரு துவந்த யுத்தம் நடந்து கொண்டே பாதுகாப்பை நம்பாதவன் அந்தப் ே
யாகி விடுகின்றான்.

ன்று கேட்க நானுந்தான் ஆசைப்படுகிறேன். திராட்சை, அப்பிள் - தோடை, பலாப்பழம் அல்ல - இறைவனென்னும் கனி அது உண்ட வர்க்கு மிக மிக இனியது நல்லது.
''மனிதர்காள் இங்கு வம் ஒன்று சொல்லு
கேன் கனிதந் தாற்கனி உண்ணவும் வல்லிரே இறைவனென்னும் ஒரு பெருந் தீங்கனி இனிது சாலவும் ஏசற்ற வர்கட்கே
- அப்பர் தேவாரம் - இவர் நெடுக அப்பர் - அப்பர் - என்கிறோம் அவர் யார்? அவர் தான் திருநாவுக்கரசர் - அவர் நானற்ற ஞானசம்பந்தருக்கு அப்பரான திருநாவுக்கரசு நாயனார் - என்பதறிஞரறிவார்.
பாலனாய்க் கழிந்த நாளும்.
பனிமலர்க் குழலார் தங்கள் மேலனாய்க் கழிந்த நாளும்
மெலிவொடு மூப்பு வந்து கோலனாய்க் கழிந்த நாளும்
குறிக் கோளிலாது கெட்டேன். சேலுலாம் பழன மூதூர்த்
திருக் கொண்டீச் சரத்துள் ளானே -
- அப்பர் தேவாரம் - மக்காள்! குறிக்கோளுடன் படியுங்கள் படித் துப் பின்னர் வாழுங்கள் -
ட்டுக்கும் வெளிச்சத்துக்கும் இடையில் : வருகிறது வழிபாடு என்ற உயர்ந்த பாராட்டத்தில் இருட்டுக்கு அடிமை
- காந்தியடிகள்

Page 48
- 22
தேவார மூவரின் தி
சி. கிருஷ்ணபிள்ளை,
பன்னெடுங் காலமாகப் பாராண்ட செந் 2 தமிழ் பல்திசையும் தன் செல்வாக்கைப் பரப் பிய அக்காலத்தில் சைவ சமயப் பனுவல் களை அறிந்த மேனாட்டார் தமிழ்மொழியைப் பக்தியின் மொழி எனக் கூறினர். அந்தக் காலத்திலேயே மொழிகளின் தன்மை அறிந்து, திறன் தெரிந்து, சிறப்புணர்ந்து, சீராக ஆராய்ந்து, ஆங்கிலத்தை வர்த்தகத்தின் மொழி எனவும், லத்தீனைச் சட்டத்தின் மொழி என வும் செப்பிய அறிஞர்கள் தமிழ் மொழி யைப் பக்திக்குரிய மொழி என உரைத் தனர். உள்ளத்தைக் கவர்கின்ற ஆற்றல் மொழிகள் பலவற்றிற்கும் உண்டெனினும், உள்ளத்தை நெகிழவைக்கும் திறன், கல்லி னுங் கடிய உள்ளத்தைக் கனிவித்து எம் பெருமான் ஈ ச னு க் கு இனியவனாக்குகின்ற இயல்பு தமிழ்மொழிக்கேயுண்டு என்பது, 'பக்தியின் மொழி' என்று நந்தமிழ் மொழிக்கு நாமங்கொடுத்தவர்களின் க த த் த ா கு ம். இங்ங60 ம் பக்தியின் மொழி எனப் பாராட் டப்படுவதற்கு ஏற்ற மு றை யிலே தமிழ் மொழிமூலம் பக்திநெறி வளர்த்த அடியார்கள் பலர். அன்னவருள் திருவாசகம் தந்த மணி வாசகரை அடுத்துக் கூறத்தக்க பெருமை ம வாய்ந்தவர்கள் அப்பர், சுந்தரர், அருள்ஞான சம்பந்தரென்ற மூவருமாவர்.
தமிழை அமிழ்தமென்றும் சொல்லலாம்; இதனாலன்றோ தமிழகத்துப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்,
"தமிழுக்கும் அமிழ்தென்று பேர் - அந் தத்
தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்குநேர்" எ ன்று உணர்ச் சி யு றப் பாடி னார். ன இப்படிப்பட்ட களிப்பூட்டும் த மி ழ உ முதம் தந்த தமிழ்மக்கள் பலபேருள்ளும் மூவர் தமிழ் என்று சொல்லத்தக்க பக்தித் தமிழமுதம் தந்தவர்கள் இம்மூவருமேயாவர். இத்தமிழமுதம் உண்ண உண்ணத் தெவிட் டாததாய், உள்ளத்தை உருக்குவதாய், அ
5 அர 5 9 6 Iே 8 9 8 4 25 - 9 65. 3 ) 2. 6
9 (2 2 2 ஓ
eே )

வ்ய தமிழமுதம்
கணிதம் 1-ம் வருடம்
உலகை உருவாக்கிய முழுமுதற் பொருளை அடைவிப்பதாய் விளங்குகின்றது.
தமிழ்நாடு ஒருகாலத்திலே, குறிப்பாகச் ங்ககாலத்திலே சமயப் பூசலின்றி இருந்தது. ஆனால் அதை அடுத்த சங்கமருவிய காலத் பலே தமிழ் நாட்டிலே சமணசமயம் தலை யடுத்தது. அது சிவனை முழுமுதற் கடவு பாகக் கொள்ளும் சைவசமயத்தையும், விஷ் துவே முதற்றெய்வமெனக் கருதும் வைஷ் னவ சமயத்தையும் விழுங்கிவிடக் கூடிய சல்வாக்குப் பெற்றிருந்தது. பாராண்ட மன் பரும் அம்மதத்தைத் தழுவலாயினர். பைக் மிழ்நாடு காத்த பாண்டிய மன்னன் நின்ற ர் நெடுமாறனும் சமணத்தைச் சார்ந்தான். அரசனெவ்வழி குடிகளுமவ்வழி' என்ற ஆன் றார் மூதுரைக்கொப்ப மக்களும் அம்மதத் ல் மயங்கலாயினர். தலை முறை தலைமுறை ாகச் சிவனை வழிபட்டு வந்த அப்பர்கூட புதனைத் தழுவினாரென்றால் அச்சமயம் பெற் ருந்த செல்வாக்கின் நிலைபற்றி இன்னும் விளக்கவேண்டிய அவசியமில்லை.
இத்தனைபேர் மாறியிருந்தும் நின்றசீர் நெடு Tறனின் மாண்புடை மனைவியாம் மங்கை எக்கரசியார், அறிவுடை அமைச்சர் குலச் றையார், அப்பரின் தமக்கையார் திலகவதி ரர் முதலிய சிவனடி மறவாச் சிந்தையர் சய்வதறியாது திகைத்தனர். எம்பெருமானை ண்ணி எண்ணி , இரங்கியிரங்கி, கண்ணீர் சாரிந்து மக்களைச் சமணப்படுகுழியினின்று டுவிக்குமாறு வேண்டினர். எம்பெருமா ம் உளமிரங்கினார். உலகெலாம் கண்டிராத யர்ந்த ஒப்பற்ற கோலமதில் உறைந்திருக் ம் ஆற்றல்களை அடியவர்கள் மூலம் காட்ட ண்ணினார். அதன் விளைவாகவே அறுபத்தி ன்கு நாயன்மாரும் அவனியிலே சமயத் தாண்டாற்றினர். சைவத்தின் நிலைதளர்ந்த ந்த நேரத்திலேதான், அதன் அத்தி

Page 49
23
பாரமே ஆட்டம் கண்ட அந்தச் சமயத்திலே தான் இத்தேவார மூவரும் தோன்றினர்.
- 5 0
இவர்கள், சமணம் மக்களைக் கவர்ந்த காரணம் எதுவெனச் சிந்தித்தனர். அந்தக் காலத்திலே தமிழ் நாட்டிலே அடிக்கடி நிகழ்ந்த . போர்களால் கணவனை இழந்த கைம்பெண் களும், தனயரை இழந்த தாய்தந்தையரும், பற்பல இழப்பினால் மனம் நொந்தோராகிய இவர்களெல்லாம் வாழ்வின் நிலையாமையை உணரக்கூடிய சூழ்நிலை உருவாயிற்று. நிலை யாமைக்கு நிரம்ப விளக்கந்தரும் சமண சம யத்தின் பிரச்சாரங்கள் அவர்களின் கவனத்தை ஈர்த்தன. ஆனால் சமணசமயத்தில் குறை யொன்று இருக்கத்தான் செய்தது. சமணம் அறிவுநெறி. அது அன்பு நெறியைப் பின் பற்றுவதில்லை. மனைவி, மக்கள். உற்றாரோடு வாழும் மாந்தர் அன்பு நெறியைப் புறக்கணிக்க முடியாதவர்கள் உலகியல் வாழ்விற்கு முதற் கண் வேண்டப்படுவது அன்பு. அது ஆண்ட வனிடம் எம்மை இழுத்துச் செல்லக்கூடியது. இதனைப் போற்றாத சமணத்தின் பலவீனத்தை உணர்ந்தனர் சைவநாயன்மார். எனவேதான் அவர்கள் தமிழால் தமிழிசையால் அன்பு நெறியில் மக்களுள்ளத்தை மாற்ற எண்ணி னர். இதற்காக இறைவனை நினைந்து, மனம் கசிந்து உருகினார்கள். இவர்களின் உருக்க கத்தினைக் கண்ட மக்கள் பக்திச் சுவையின் க பான்மை தெரிந்தனர். ஆற்றல் மிக்க அவர் 3 களின் அற்புதச் செயல்களும், தத்துவக் கருத்துக்களும், அவர்கள் சிந்தையில் உறைந் திருந்த அறியாமை இருளைப் போக்கிற்று. இங்ஙனம் மக்கள் மனந்திருந்த, உண்மை யுணரக் காரணமாயிருந்தது இவர்கள் பாடிய தேவாரமெனும் திவ்ய தமிழ்மறையாகும்.
9 ) 8 9 9 ) 5 5
6 9
- 45 9 lெ) 5ெ, 6
'இசைக்குருகார் எவருமிலர்' என்பது எல் லோரும் அறிந்த விடயம். ஆலயந்தோறும் ப சென்ற அம் மூவரும் கல்லுங் கசிந்துருகும் ' வகையிலே செந்தமிழ் இசையிலே சிவபெரு மான் புகழ் பாடினர். மக்களுள்ளத்தைக் கவ ராத சமணம், கண்ணீரை வருவிக்காத சம ணம் போலன்றி அவர்களுள்ளத்தை ஊடுரு

வியது. மனதைக் கரையச் செய்தது. கண் ணீரைச் சொரிவித்தது. இதனால் சிவவழிபா நிம், மற்றும் சிறப்புமிக்க வழிபாடு களும் பெருகலாயின. சிவபெருமானின் அருட் ஓறத்தையெல்லாம் அடியார்கள் கண்ணாரக் கண்டார்கள்.
இம்மூவருள்ளும் ஆண்டில் இளையவராய், பக்தித் தரத்திலே பக்குவம் மிக்கவரென அப்பரால் போற்றப்பெற்றவராய் விளங்கு பவர் சீர்காழியிலுதித்த திருஞானசம்பந்த முர்த்தி நாயனாராவர். இவர் பதினாறுவயது. பரை வாழ்ந்த இளைஞர், குழந்தையுள்ளம்.  ெகாண் டவர், இ ள  ைம ப் ப ரு வ த் தி எராய் இருந் த வ ரா த ல ால் அ வ ர் பாடல்களிலே நிலையாமை பற்றிய உணர்வு ளையும், கவலைகளையும் காணல் அரிதேயா தம். துடிப்பும், களிப்பும், இனிமையும், அழ நம் பொருந்தியன் அவர் திருப்பதிகங்கள். மூன்று வயதினராய் இருக்கும்போதே தோணி பப்பரை நினைந்து பாடிய, ''தோடுடைய செவியன்'' என்ற தேவாரமும், ஈசன் நாமங் கட்க ஆவல் கொண்டு பசுங்கிளியைப் பார்த்துப் பாடிய, ''சிறையாரும் மடக் ளியே'' என்ற திருப்பாடலும் இவற்றிற்குச் நன்றாக விளங்குகின்றன.
பச்சிளம் பாலனெனப் பலராலும் விளிக் ப்பெற்ற சம்பந்தரது பாடல்கள் செய்த பற்புதங்கள் பல. சமணரோடு பொருதிய ாதினிலே புனலிலே திருவேடு எதிரேறிச் சன்றது; புத்தரோடு வாதிட்ட சமயத்திலே த்தர்களின் தலைகளில் இடிவிழச் செய்தது; ருமறைக் காட்டிலே அப்பரால் திறக்கப் பற்ற திருக்கதவினை அடக்கச் செய்தது; நண்பனைகளைப் பெண்பனைகளாகமாறச் செய் து; என்பைப் பெண்ணுருவாக்கியது முத் ான எத்தனையோ அற்புதங்களை தேவாரத்திரு றையால் செய்து எம்பெருமான் இறைவ பின் வல்லமையை மக்கட் குணர்த்தினார்.
சம்பந்தருக்கடுத்ததாய் சிறிது கூடிய யதுவரை வாழ்ந்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். சரமான்றோழர், வன்றொண்டர் என்றெல்லாம் பயர் பெற்ற இவர் மூவாறு ஆண்டுகள்

Page 50
~ 24
வாழ்ந்தவர். சம்பந்தரிலும் வயதிற்கு மூத்தவ ரெனிலும் காலத்தால் மிகவும் பிற்பட்டவர். சிவபக்தியோடு சிவனடியார் பக்தியும் சை வத்தை வளர்க்கும் நெறியாகும் என்பது இவர் வாழ்க்கை காட்டும் உண்மையாகும், இறைவ னோடு தோழமைபூண்டு நண்பரென்ற முறை யிலே ஆண்டவனோடு பழகினார். இவர் தன்னை இறைவன் தடுத்தாட்கொண்டபோது பாடிய, ''பித்தா பிறைசூடி'' என்ற பாடலே இவரது நட்புறவுக்கு ஒரு திறவுகோலாக அமைகிறது. இவர் உலகியலில் ஈடுபட்டாரெனினும் சிவ னடி மறவாச் சிந்தையோடு வாழ்ந்தவர். சிவ னடியார்கள் போன்று செம்மனமுடையவர். இவர் திருத்தொண்டத்தொகை என்னும் திருத்தமிழ் நூ லைச் செய்தமையாலன்றோ. இன்று நாம் சேக்கிழார் சுவாமிகள் தந்த திருத் தொண்டர் புராணத் தேனமுதம் காண்கின் றோம்.
சுந்தரர் தேவாரமும் பல அற்புதங்களைச் செய்தது. முதலையுண்ட பாலகனை மீளச் செய்தது. பரமசிவனைப் பரவையாரிடம் தூது செல்ல வைத்தது. ஆற்றை வழிவிடச் செய் தது. செங்கற்களைப் பொன்கட்டிகளாக மாற் றியது. இப்படி எத்தனையோ அதிசயங்களை மக்களுக்கு கண்கூடாகக் காட்டியது.
தேவாரம் பாடிய மூவருள்ளும் வயதில் முதிர்ந்தவராக, அனுபவம் மிகுந்தவராக, நிலை யாமையை நிரம்ப உணர்ந்தவராக, சமணசமயத் தையும் நன்கு தெரிந்தவராக விளங்குபவர் அப்பரென அழைக்கப்பெறும் திருநாவுக்கரசு சுவாமிகள். இவரது பாடல்கள் கேட்போருள் ளத்தைக் கொள்ளை கொள்ளக்கூடியன், இதனா லன்றோ இவரது ''கூற்றாயினவாறு விலக்க கலீர்" என்றமுதலையுடைய முதற்பாடலைக் கேட்டதுமே இறைவன் மகிழ்வுற்று அசரீரி வாக்காக,

'பாவுற்றலர் செந்தமிழின் சொல்வளர்
பதிகத்தொடை பாடிய பான்மையினால் நாவுக் கரசனென்றுல கேழினு நின் நாமம் நயப்புற மன்னுக?'
என்று கூறினாரென சேக்கிழார் சுவாமி கள் தம் நூலின் வாயிலாகத் தெரிவிக்கின்றார்.
இறைவனுடைய நாமங்களை இனிமை சொட்ட அடுக்கித் தாண்டகம் பாடுவதில் வல்லவர் நாவுக்கரசர், அதனாற்றான் தாண்டக வேந்தன் எனப் போற்றப்படுகின்றார். இவர் ஆண்டவனுக்கு அடிமையுறவில் நின் றொழு கினார். இவரது பாடல்களும் பல அற்புதங் களைச் செய்தன. சமண அரசனூட்டிய நஞ்சு அமுதாகிற்று. தழல் தடாகமாகியது; கொல்ல வந்த யானை குனிந்து வணங்கியது. கருங் கல்லைத் தெப்பமாக மிதக்கச் செய்தது. இன்
னும் எத்தனையோ.
இங்ஙனம் தேவார மூவர் எனத் திருநாமம் பெறும் இம்மூவரும் பாடிய எத்தனையோ திருப்பாடல்களில் செல்லரித்தவைபோக இன்று எம்மிடையே எஞ்சிநிற்பவை சில. இவற்றை இராச இராச சோழன் கட்டளைக்கிணங்க நம்பி யாண்டார் நம்பி திருமுறைகளுள் வகுத்துத் தந்திருக்கின்றார். இத் தேவாரத் திருப்பதிகங் களை முறையாக ஓதிப் பயன் பெற்ற பாக்கிய சாலிகள் பலர். சம்பந்தரின் திருநீற்றுப்பதி கம் பாடி நோய் நீங்கி வாழ்ந்தவர் பலரென்று நூல்கள் நவில்கின்றன. அன்றொருநாள் எட் டுக் கோள்களும் ஒருங்குகூடி ஒருவீட்டில் புகுந்தபோதுகூட, மக்கள் சம்பந்தரின் கோ ளறுபதிகம் பாடி ஆண்டவனை வணங்கிப் பயன் பெற்றதை நாமறிவோம். இத்தகைய உயர்வான - சிறப்பான - ஆற்றல் மிக்க - மகிமை நிறைந்த மூவர் தேவாரங்களையும் நாம் முறையாக ஓதி, சைவச்சீலர்களாக வாழ்ந்து, சமயத்துறையின் கண் சீராக ஒழுகி இறைய ருள் பெற்று இன்புறுவோமாக,

Page 51
அருணகிரிநாதரின் 6
வித்துவான் மு. சட ஆறுமுகப் பெருமானின் அருள் பெற்ற அருந்தவச் செல்வருள் தலை சிறந்தவர் அருணகிரிநாதர். தமிழ் மொழியில் முன் னொருபோது மில்லாத ப ல் புதிய சந்தப்பாக்களை அமைத் துட் பாடிய பெருமை அருணகிரி நாத ருக்குரிய தனிச்சிறப்பாகும். அவரது பதினாயிரக் கணக்கான பாடல்கள் முருகப்பெருமானின் பொருள் சேர் புகழை அள்ளிப்பருக விரும்பும் அடி யார்களுக்கு அமிழ் தாகச் சுரந்து றி உள்ளத்தில் அழியாத இன்பத்தை நிறைவிக்கும். அத்தகைய பெரியா ரின் வாழ்க்கையற்புதங்களை அறிய வேண்டி யது சைவநன் மக்களின் தலை ய இய கடன்கும்.
பதினைந்தாம் நூற்றாண்டில் பிரபுட தேவமன்னர் ஆட்சிக் க ா ல த் தி ல் நினைத்தாலே முத்தியருளும் தலமாக விளங்கிய திருவண்ணாமலையில் உருத் திர கணிகையர் மரபிலே அருணகிரி யார் அவதரித்தார். தாயார் பெயர் மு த்தம் மையார். நாவுக்கரசரை நல் வ ழிப்படுத்தத் திலகவதியார் அக்கா வாக அமைந்தது போல அருணகிரி யாருக்கும் ஆதி என்ற அக்கா இருந் தார். முத்தம்மையார் அருணகிரி யார் மேல் அளவுகடந்த அன்புடை ய வராய், அவருக்கு சிறுவய திலேயே தேவாரம், திருமந்திரம், திருமுரு காற்றுப்படை, திருக்குறள் ஆகி ய நூல்களைக் கற்றுக் கொடுத்தார். இள மைப்பருவத்திலே அருணகிரியாரின் தாயார் நோய்வாய்ப்பட்டு இறக்கும் தறுவாயில் மகளை அருகில் அழை த்து “"ஆதி! அருணகிரிக்கு இனி நீ

5 -
வாழ்க்கை யற்புதங்கள்
ரத்தினம் அவர்கள்
தான் தாய் தந்தை. அவனுக்கு முரு கன் அருள்புரிவான். அவனை நீ மனி தனாக்கு'' என்று கூறியவாறே குமர னடி சேர்ந்தாள்.
ஆதி அக்காவின் அரவணைப்பில் வளர்ந்த அருணகிரியார் வாலிபப்பரா யத்தை அடைந்தார். வாழ்க்கையில் தம்மனம்போன போக்கெல்லாம் நடக் கத்தலைப்பட்டார். தகாதவர் நட்பும், தரங்கெட்ட சேர்க்கையும் உடைய வராய அருணகிரியார், கணிகையர் இல்லமே கதி எனக்கிடந்தார், அத னால் அவர் உடல் இளைத்து, உணர்வு குன்றியநேரத்திலும் ஊரூராக அலைந்து திரிந்தார். இவற்றையெல்லாம் கண்ட தமக்கையாரான ஆதி அம்மையார் ஆறாத் துயருற்றாள். தனது தம்பியின் தரங்கெட்ட செயலைக்கண்டு தணலில் மெழுகென உள்ளமுருகினாள். முருகனை நினைத்து, நினைத்து அல்லும் பகலும் வழிபட்டாள். சேற்றில் சிக்கிய அரு ணகிரிநாதரின் திருமேனி அழுகி நாற் றமெடுக்க தமக்கையாரே தஞ்சமென மீண்டு வந்தார். கண்ணீர் பெருக தன் அன்புக்கரங்களால் தமக்கையார் தம்பியை வரவேற்றுப் படுக்கையில் கிடத்தி பத்தியம் கொடுத்து பாது காத்து வந்தார். "அருணகிரி உன்னை இந்த நிலையிலாடா நான் காணவேண் டும். நமது அம்மா கண்ட கனவெ ன்ன? நீயிருக்கும் நிலையென்ன? தாசி கள் நேசம் தகாதென்று இப்பொழு தாவது உணருகிறாயா தம்பி" என்று அவரை அணைத்துக் கொண்டு கண் ணீர் சிந்தினாள் ஆதியக்கா. அருண

Page 52
-- 26
கிரியாரின் நோய் மேன்மேலும் வளர்ந் தது. அருணகிரியாரின் உடலெல்லாம் அழுகி ந ர ற் ற ம் ெவ கு தூ ர ம் வீசிற்று. யாரும் அவரருகில் செல் லவே அஞ்சினர். அக்காவோ அருவ ருப்படையாமல் தன் அருமைத்தம் பியை அல்லும் பகலும் அன்புடன் கவனித்து வந்தார். இந்த நிலையிலும் அருணகிரியாரின் உள்ளம் பழையநிலை யிலேயே இருப்பதைக்கண்ட அம்மை யார், தம்பி உனக்கு நம் குலதெய்வ மர்கிய முருகப்பெருமானின் அருள் கிடைக்க வேண்டும். இல்லையேல் நீ அழிந்து போகவேண்டும்'' என்று ஆவே சமாகப் பேசினாள். வடிவேலனின் வரம் கிடைத்தால் நின்வாழ்வு மலரும் என்
றாள்.
தமக்கையாரான ஆதி தம்பிக்கு வேண்டிய எவ்வளவோ நல்லுபதே சங்களைச் செய்தும் அருணகிரியார் தம்வாழ்க்கையில் நம்பிக்கை இழந்தார். முருகன் இனிமேல் நமக்கு அருள் புரியமாட்டான். இந்த ஈனவாழ்வு வாழ்ந்து அக்காளுக்கு அல்லல் கொடுக் காமல் அழிந்து போவதே நல்லது. நாம் யாருக்கும் தெரியாமல் இறந்து விடுவதே மேல் என்று உள்ளம் உருக, உணர்ச்சி பெருக தன்னைத்தானே நொந்து கொண்டார் அருணகிரியார். அக்காளின்றித் தனித்திருந்த நேரத்தில் அருணகிரியார் முடிந்த மட்டும் மூச் சுப்பிடித்து எழுந்து, திருவண்ணாமலைத் திருக்கோயிலை நோக்கி ஓடினார். கம்பத்து இளையனார் கோயிலிலுள்ள கோபுரத் ( தின் மேல் விரைந்து ஏறினார். உச்சிக் 1
குச் சென்றதும் தம் உயிரை மாய்த் துக் கொள்ளும் பொருட்டு முருகா 6 என்று கூறிய வண்ணம் கீழே குதித் 1 தார். கருணையே வடிவான கந்தன் 2

கீழே எழுந்தருளி தம் திருக்கரங்களால் அருணகிரியாரைத் தாங்கித் தரையில் விட்டார், கந்தப்பெருமானின் கை பட்டதும் அருணகிரியாரின் அழுகிய உடல் அழகிய உடலாயிற்று. பிணி மாறிப் பணி தொடங்கிற்று. முருகப் பெருமான் அருணகிரியை நோக்கி ' ' நம் திருப்புகழை உலகம் உய்யப் பாடு" என்று திருவாய் மலர்ந்தருளி னார். 'முருகப்பெருமானே! எட்டும் இரண்டும் அறியாத இந்த எளியவன் ஏட்டிலடங்காத தங்கள் திருப்புகழை எப்படிச் சுவாமி பாடுவேன்'' என்று மலைத்து நின்றார், அதுகண்ட ஆண்ட வன் வெற்றிவடிவேலால் அருணகிரியா ரின் நாவில் ஆறெழுத்தாகிய ஓம் சரவ ணபவவை எழுதி அருளினார். 'முத்தித் தரு பத்தித் திருநகை' - ஆறுமுகனே அடி எடுத்துக் கொடுக்க கடல் மடை திறந்தது போல கவின்மிகு தமிழில் எழில்நடை மிக்க இனிய பாடல்களைப் பாட ஆரம்பித்தார் அருணகிரிநாத சுவாமிகள்.
அருணகிரியார் முருகப்பெருமான் மேல் ஆற்றொழுக்குப் போன்ற அரு மையான திருப்புகழைப் பாடினார். இவற்றையெல்லாம் கண்ட ஊரார் மகிழ்ந்தனர். ஆதி அம்மையாருக்கு அளவற்ற மகிழ்ச்சி உண்டானது. பெண் முகத்தையே கண்டவன் சண்
முகத்தைக் கண்டு விட்டான் என்று பெருமைப்பட்டார். பிரபுடதேவ மன் எனும் அருணகிரிநாதரின் புகழைக் கேள்விப்பட்டு சுவாமிகள் மேல் அன் பும் பக்தியும் கொண்டான். ஒருநாள் பிரபுடதேவ மன்னனுக்கு கண்பார்வை தன்றியது. அவன் அருணகிரிநாதரி டம் சென்று ''தாங்கள் முருகன் கரு ணயரல் விண்ணுலகஞ்சென்று பாரிசா

Page 53
தமலர் கொண்டுவந்தால் அடியேனுக்கு மீண்டும் கண்ணொளி கிடைக்கும்' என்று இரந்து வேண்டினான். மன் னன் கருத்துப்படி சுவாமிகள் தம் உடலை கோபுரத் தில் கிடத்திவிட்டு அங்கே இறந்து கிடந்த ஒரு கிளி யின் உடலில் புகுந்து விண்ணுலகன் சென்றார். பிரபுடதேவ மன்னனுக்கு நண்பனாகவும் மந்திரியாகவும் இருந்த சம்பந்தாண்டான் என்பவன் அருண கிரியார் இறந்து விட்டார் என்றுமன்ன னுக்குக் கூறி, கோபுரத்திலிருந்த அரு ண கிரியாரின் உடலை எடுத்துப் புதைப் பித்தான். கிளிவடிவிற் சென்ற அரு ணகிரியார் பாரிசாத மலரோடு வந் தார். அவரது வருகையால் மன்ன னும், ஏனைய கண்ணற்றவர்களும்
மனிதர்களாகிய நாம் மிருக வலிமையு குடி கொண்டுள்ள கடவுளை அறிவதற்காக மனிதனின் விசேஷப் பிறப்பாகும்;

7 -
கண்பெற்றுப் பேரானந்தத்தில் அமி ழ்ந்தினர். மன்னன் அருணகிரிநாதரின் பூதவுடல் புதைக்கப்பட்டமைக்காகப் பெரிதும் வருந்தினான்.
அருணகிரிநாதர் கிளியுருவாய் வந் தமர்ந்த கோபுரத்தை திருவண்ணா மலையில் இன்றும் கிளிக்கோபுரம் என்று கூறுகின்றனர். தமது பூதவுடல் புதை க்கப்பட்டதை அறிந்த அருணகிரியார் ஆனந்தப்பட்டார். பின்னர் அருண கிரி நாதசுவாமிகள் தன்பழையவுருவைக் காட்டி அனைவருக்கும் அருள்புரிந்து ஆனிமாதம் மூல நட்சத்திரத்தில் தே வியின் திருக்கரத்தில் கிளியுருவில் அமர்ந்து முருகப்பெருமானின் திருவ டியை அடைந்தார்.
டன் பிறந்துள்ளோம். ஆனால் இருதயத்தில் மனிதராய்ப் பிறந்திருக்கிறோம். அதுதான்
-காந்தியடிகள்

Page 54
''பட்டினத்தடிகள்
* கடவுளைக் காண முயன்றவர்கள் பக்தர்கள்; கண்டு தெளிந்தவர்கள் சித் தர்கள்'' என்பது தேவாரம் நவிலும் நல்லிலக்கணம், சித்தர்கள் என்போர் உடல்வாடி வ ரு ந் தி, உயர்நெறி சேர்ந்து வீடுபெற்ற மேலவர். *'ஆங் காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட் டறுத்து தூங்காமல் தூங்கிச் சுகங் கண்ட யோகிகள். தன்னை அறிந்து இன்பமுறவும், இறையைக் காணாமற் கண்டு கருத்தோடும், களிப்போடும் இருக்கவும், ஒரு தந்திரம் கண்ட தவவலிமையாளர்.
இச்சித்தர்களில் தமிழ் மக்களால் முதன்மையானவராக பெரிதும் பேசப் படுபவரும் கொண்டாடப்படுபவரும் பட்டினத்தார் ஆவார். இவரது வர லா றும் ஏனைய சித்தர்களது வரலாறு களும் தமிழ் கூறும் நல்லுலகிற்கு இன்றுவரை தெளிவாகக் கிடைக்காத போதும், இவர்கள் செய்தருளிய ஞானப்பாடல்கள் ஆத்ம இருளோட் டும் ஒளிப்பிழம்புகளாக விளங்குகின் றன. பட்டினத்தார் இயற்றியதாகக் கூறப்படும் கோயில் நான்மணிமாலை, திருக்கழுமலமும் மணிக்கோவை, திரு வேகம்பமுடையார் திருவந்தாதி, திரு வொற்றியூர் ஒருபா ஒரு பஃது ஆகிய நூல்கள் சைவத்திருமுறைகள் பன் னி ரண்டினுள் பதினோராம் திருமுறை யிற் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
ஞானச் சுடரொளியான பட்டினத் தார் அருளிச்செய்த ஞானப்பாடல்க ளில் பல்வேறு இடங்களில் பெண் களைப் பற்றிப் பேசப்படுகின்றது. பெண்குலத்தை இழித்தும் கண்டித் துந் தான் பட்டினத்தார் பாடியுள்

8 -
ம் பாவையரும்"
ளாரெனுங் கருத்து பலரிடத்தும் பர வலாக வேரூன்றியுள்ளது. இக்குற் றச்சாட்டில் எத்துணை உண்மை பொ திந்துள்ளதென்பதனைக் காண்போம். -பட்டினத்தார் ஒரு சித்தர். 'ஓடும் பொன்னும் ஒக்க நோக்கும் மெய்ஞ் ஞானி. இவர் அருளிய ஞானப் பாடல்களைத் துருவி ஆராயப்புகின் இவரிடத்தில் காணப்பெற்ற பற்றற்ற தன்மையையே மூலமாகக் கண்டு தெளிய முடிகின்றது. * உடை கோ வண முண்டு; உறங்கப் புறந்திண்ணை யுண்டு; உணவிங்கு அடைகாய் இலை உண்டு; அருந் துணைக்கே விடையே . றும் ஈசர் திருநாமம் உண்டு............' எனக்கொள்ளும் பட்டினத்தார் உல கை ஒருமாயை எனக்கருதினார். இம் மாயையில் கட்டுண்டு மாள் வதற்கு ஆசைகள் தான் காரணமென உணர்ந் தார். எனவே, * 'சூதுற்ற கொங்கையும் மானார்கலவியும்
சூழ்பொருளும் போதுற்ற பூசலுக்கு என் செயலாம்?'
என்றும், “வேதத்தின் உட்பொருள் மண்ணாசை மங்கையை
விட்டுவிடப் போதித்த வன் மொழி கேட்டிலையோ? செய்த
புண்ணியத்தால் ஆதித்தன் சந்திரன் போல வெளிச்சம் தாம்
பொழுது காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே” என்றும் பாடி, மண்ணாசை, பொன் னாசை, பெண்ணாசை ஆகிய மூவர்சைகளை யும் சாடியுள்ளார். இப்பாடல்களிலும் இவைபோன்ற பாடல்களிலும் பிற விக்குக் காரணமான ஆசைகளைக் கண் டிக்க வந்த விடத்து ஆசைகளுள் ஒன்

Page 55
-- 23
றான பெண்ணாசையைப் பற்றியும் கூறி ! யுள்ளாரே அன்றிப் பெண் குலத்தைப் ( பட்டினத்தார் தனியாகக் கடிந்து 8
கூறவில்லை.
இவை போன்ற பாடல்களைத் தவிர்ந்த ஏனைய பாடல்களில் பட்டி னத்தார் எவ்வாறு பெண்களை நோக்கு கின்றார் என்பதைச் சற்று அவதா
னிப்போம்,
* 'காதளவோடிய கலகப் பாதகக்
கன்னியர் * மாயநட்போரையும் மாயமலமெனும் மாதரை
யும் ?
* 'வரிக்கோல வேல்விழியார் அநுராக மயக்கிச்
சென்று' ' * * காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டி
என் கண்ணெதிரே மா தென்று சொல்லி வருமாயை தன்னை
மறலிவிட்ட தூதென்று..... ?
* ' பெண்ணாகி வந்தொருமாயப் பிசாசம்
பிடித்திட் டென்னைக் கண்ணால் வெருட்டி .... * 'பட்டப்பகலில் வெளிமயக்கே செய்யும்
பாவையர்மேல் இட்டத்தை நீ தவிர்ப்பாய்? * ' கண்காட்டும் வேசியர்தம் கண்வலையில்
சிக்கி மிக அங்காடி நாய்போல் அலைந்தனையே
நெஞ்சமே'' -- * 'கைப்பிடி நாயகன் தூங்கையிலே அவன்
கையையெடுத்து 6 அப்புறந்தன்னில் அசையாமல் முன் வைத்து
அயல்வளவில் ஒப்புடன் சென்று துயில் நீத்துப்பின் வந்து
உறங்குவளை எப்படி நான் நம்புவேன்? இறைவா! கச்சி
ஏகம்பனே! இவ்வாறு வெவ்வேறிடங்களில் ஒவ் 6 வோர் விதமாகப் பெண்ணைச்சாடிய |
1, - இ

பாதும் இவற்றுள் உள்ளடங்கித் தொனிக்கும் பொருள் ஒன்றே. கல
த்தை மூட்டுகின்ற கண்களை உடை பவர்களும், மாயாமலம்போல மயக்
த்தை ஊட்டுபவர்களும், கரதென்று கண்ணென்று காட்டி மறலிவிடு தூதென்று வருபவர்களும், மாயப் பிசாசுபோலப் பின்தொடர்ந்து கண் னால் வெருட்டி வலை வீசுபவர்களும், பட்டப்பகலில் வெளிமயக்குச் செய்ப வர்களும், அயல்வீடு சென்று துயில் த்ேதுப் பின் வந்து உறங்குபவர்க ளும் பெண் களெனப் பிறவி எடுத் திருப்பினும் பெண் குலத்துள் பிறி தோர் கூட்டம், அவர்கள் வேசியர் கள்; விலைமாதர்கள்; நடத்தை கெட்
வர்கள். இவர் தம் கண் வலையிற் அக்கினாலே அங்காடி நாய்போல் அலைய நேரிடும். எனவே பட்டினத்தார் :ாடுவது ஒழுக்கக் கேடான மாதர் ளையேயன்றி மாதர்குலம் முழு பதையுமல்ல. பட்டினத்தாரும் ஒரு தாய்க்கு பிள்ளை என்பதை, ஒரு சித் நரான இவரே உணரத்தவறவில்லை. பற்றற்ற பட்டினத்தாரையும், தாய் மையின் பாசம் பற்றிப் பிணைத்த தென்பதற்கு, அவர்தம் தாயாருக்குத் நகனக்கிரியை செய்யுங்கால் பாடிய பாடல்கள் சான்று பகருகின்றன. 'எப்பிறப்பில் காண்பேன் இனி?'' என பும், ' 'விறகிட்டு மெய்யிலே எப்படி சரியத்தழல் மூட்டுவேன்'' எனவும், 'அன்னை இட்டதீ அடிவயிற்றிலே'' அவரைச் சுட்டெரிக்கின்றதெனவும், ரங்கித் துடியாய்த் துடிப்பதன் மூலம், தாயிடத்து அவர் கொண்டிருந்த பற்று புலப்படுகின்றது."ஊரும் சத மல்ல; உற்றார் சதமல்ல; உற்றுப் பெற்ற பேரும் சதமல்ல'' எனக் கருதும் பட்டினத்தார், மாதர் குலத்தை இழி

Page 56
வாகக் கருதுபவராக இருந்தால், தாய ரை ஒரு பொருட்டாகக் கொண்டு இ ங்க வேண்டியதில்லை. பெண்ணாக வந்: மாயப்பிசாசம்'' என ஒதுக்கித் தள்ள யிருக்கலாம். துெ மாத்திரமல்ல இல் னோர் பாடலில் 'ஓயாமல் பொய சொல்வார் நல்லாரை நிந்திப்பால் உற்றுப்பெற்ற தாயாரை வைவர்...... (இவர்) இருந்தென்ன போயென்ன? எனக் கேட்கின்றார். பெண்களை வை வராகப் பட்டினத்தார் வாழ்ந்திரு, தால், தாயாரை வைபவரை இங்கு கண்டித்திருக்க நியாயமில்லை. எனவே பட்டினத்தார் பெண் களைத் தூற்ற வில்லை என்பது வெள்ளிடைமலையா கும். ''பேய்போல் திரிந்து பிணம்போல் கிடந்து
இட்டபிச்சையெல்லாம் நாய்போல் அருந்தி நரிபோல் உழன்று
நன்மங்கையரை, தாய்போல் கருதித் தமர்போல் அனைவர்க்கும்
தாழ்மைசொல்லி சேய்போல் இருப்பர்கண்டீர் உண்மைஞானம்
தெளிந்தவரே!'

30 - - இப்பாடலிலும் பட்டினத்தார் மங் [ கையரைக் குறிப்பிடுகின்றார். இங்கே
நன்மங்கை பற்றிச் சொல்லுகிறார். 7 நன்மங்கையர்களைத் தாய்போல் கரு
தும் அவர்தம் கருத்துப் பெறப்படு ') கின்றது. நன்மங்கையரெல்லோரும்
தாயாவாரென்பதனால் துன்மங்கைய .
ரையே தூற்றியுள்ளார் என்பதும் ' தெட்டத் தெளிவாகின்றது.
எனவே பட்டினத்தார் பெண்குலத் தைத் தூற்றும், இழித்துரைக்கும் ஒரு சித்தரல்லர். ஆன்ம ஈடேற்றத்துக்குத் தடையாக நின்று மரயைச் சேற்றில் மடக்கி வீழ்த்தும் விலைமாதர்க்கே அவர் விரோதி. "வானத்தின் மீனுக்கு வன தூண்டில் இட்ட வகையது போல்”' பட்டினத்தார் பாடல்களைப் படித்த வெளி மயக்கில் பெண்குலத் தைச் சாடுவதற்குப் பட்டினத்துச் சித் தர் செய்த பாவகையில் உதாரணம் காட்டும் அஞ்ஞானம் அழிந்தொழிய வேண்டும். "'நன்மங்கையரைத் தாய் போல் கருதி சேய்போல் இருப்பர் கண்டீர்" அவர் பாடல்களில் மெய்ஞ். > ஞானம் தெளிந்தவரே!
- ன G" -
3.
க. நவரத்தினம் விஞ்ஞானம் - முதல் வருடம்

Page 57
11 ஆடு
''கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பது பழந்தமிழ் வாசகங்களில் ஒன்று. அதுவே தமிழ் மக்களின் ஆணித் தரமான கொள்கைகளில் ஒன்றாகிவிட்டதில் வியப்பில்லை. ஒளவை அருளிய ''ஆலயம் தொழுவது சாலவும் நன்று'' என்னும் அமுத வாக்கை, அறியாப் பருவம் முதலே ஆயிரம் தடவைக்கு மேல் நாத்தழும்பேற நவின்றதின் பயனாக வந்ததோ அந்த அரிய தமிழ்ப்பண்பு! -
ஆலயங்களில் சிறந்தது எது? இதற்கு அப்பர் அருளும் பதில், * காயமே கோயிலாக கடிமனம் அடிமையாக வாய்மையே தூய்மையாக மனமணி லிங்கமாக நேயமே நெய்யும் பாலா நிறைய நீரமைய ஆட்டிப் பூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே!'' ஆம். ஆன்மாவே கோயில், அதுவே இறை வன் வாழும் இல்லம். ஆன்மா அவனிடத்தே ஆணவத்தைப் பலியிட்டு லயிக்கும் இடமே ஆலயம். சைவநெறி தழைத்தோங்கும் இட மெல்லாம் ஆயிரமாயிரம் கோயில்கள் உண்டு. ஆயினும் 'கோயில்' என்னும் தனிச்சிறப் புப் பெயர் பெற்றது, அம்பலவன் ஆடும் ஆனந்தத் தில்லையே! அவ்விடத்தே அரிய நடம் 'ஆடும்பிரானின் அழகு வடிவிலே சிந் தையைப் பறிகொடாத அன் பருண்டா? ஆனால் அவருள் அந்தத் திருவடிவின் தத்துவம் என்ன என்பதை உண்மையாக அறிந்தவர் எத்தனைபேர்?
ஐம்புலன்களின் துணையோடு அறியப் படுவது இவ்வுலகம். இவ்வுலகை எவன உள்ளபடி காண்கிறானோ அவனே கடவுளைக் காண்கிறான். அன்புவழி சென்று 'அன்பே' வடிவாம் சிவத்தைக் கண்டுகொள்கிறான். சிவம் வேறு சக்திவேறு அன்று; சிவம் மெய்ப் பொருள். அதனிடத்து என்றும் பிரியாது
து இவி2, திறனோ அறு ' அ

ம்பிரான்"
நிலைத்த விபூதி சக்தி. பாலில் வெண்மையுண்டு. மணியில் ஒளியுண்டு. ஆனால் பாலில் உள்ள வெண்மையையும், மணியில் உள்ள ஒளியை யும் எவ்வாறு பிரிக்கமுடியாதோ, அவ்வாறே சிவத்திலிருந்து சக்தியைப் பிரிக்க முடியாது. அன்பு வடிவான சிவத்திலிருந்து, ஆக்க சக்தியான வல்லமை உண்டாகிறது. அவ்வற் புத சேர்க்கையினால் அண்டசராசரங்கள் உரு வாயின. அவற்றில் அனந்தகோடி உயிரினங் கள், பிறந்தன! அன்னை ஆடும் திருநடனத் தினால் இயங்கின! மணிவாசகர் அருளியவாறு, ''புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய் பேயாய்க் கணங்களாய் வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும்”
பிறந்து இளைத்தன! பிறவிதோறும் உழன்று புடமிட்ட தங்கமென மலமறுத்து, முத்தி நிலை அடையத் துடித்தன! அந்த உயிர்த் . துடிப்பு அதிகமாக ஆக, அன்னை ஜகத்மாயை பின்னணிக்குச் சென்று விடுகிறாள். அன்பு வடிவாம சிவத்தோடு இரண்டறக் கலந்து விடு. கிறாள். அன்னையின் திருநடனத்தில் ஆரம் பிக்கும் ஆன்மாவின் வாழ்க்கை, அப்பனின் திருநடனத்திலே முத்திநிலை பெற்று முடிவடை கிறது. இயற்கை என்னும் சுடுகாடே சக் திக்கு ஆடும் தலம். 'சித் அம் பரம்' என்னும் அறிவு வெளியாம் சிதம்பரமே ஐயனின் ஆட ரங்கம். ஆகையால் சிதம்பரமேகோயில்! அம் பலவனே அருந்தெய்வம்!
அவனது ஆடரங்கம் என்ன சாமான்யமா ன தா? அகிலாண்டமும் கூடியல்லவா அந்த அரங்காகின்றது. அங்கு ஆடுகின்ற எம் பெரு மான் எவ்வாறு ஆடுகிறார் என்று பார்க்கலாமா?

Page 58
- 3
* * நிர்த்த கணபதி தேவர் நின்றாட நின்ற
யன் மாலுடன் இந்திரனாட முப்பத்து முக்கோடி தேவருடனே முனிவரும்
நின்று ஆட மெய்பக்தி மேவும் பதஞ்சலியாட வியாக்ர
பாதரும் நந்தியுமாட கொப்புற்ற க ா த ா ள் சிவகாமியம்மையும்
கூடவே நின்றாட'' ஆடுகின்றாராம் நம் பெருமான் நடராஜன் என்று உவந்து பாடுகின்றார் முத்துத்தாண்டவர். அந்த அருள் திருவடி வின் தத்துவங்கள் தான் யாவை? அதோ! ஆ டு கி ற ஒ அம்பலவன்! அவன் திருவடிகளிலிருந்து ஆரம்பித்தால் படிப் படியாகப்புரியும் அத்தத்துவங்கள் யாவும்.
அவன் திருவடி யொன் றின் கீழ் அகப்பட் டிருக்கிறவன் 'முக்குணமாயை' ஆகிய முய லகன் என்னும் அரக்கன். 'மனிதனே! மாயைக்கு அடிமையாகாதே. அதனை உதைத்துத்தள்ளி விடு' என்று அழுத்திக்காட்டுகிறது முயலகனை மிதிக்கும் திருவடி. விழிப்பு, க ன வு, உறக்கம் என்னும் முப்பாழைக்' கடந்த நிலை துரியநிலை. அதனை நினைவூட்டுகிறது குஞ் சிதபாதமாகிய தூக்கிய திருவடி. 'அகங்கா ரம், என்னும் கொடிய புலியைக் கொன்று விடு' என்று புத்தி புகட்டுகிறது அவன் திருமேனியில் அணிந்த புலித்தோல், 'துள்ளி யோடும் மானாகிய மனத்தைக் கட்டுப்படுத்திக் கொள்' எனச்சாற்றுகிறது மானைப்பிடித்த கரம். நாதம் என்னும் விந்துவிலிருந்து உலக னைத்தும் உண்டாயிற்றல்லவா! நாதமயமான இசையினால் நாதப்பிரம் மமான நாதனை அடை யலாம், என னும் நல்ல பாடத்தைக் கற்பிக் கிறது நாதம் தரும் உடுக்கை ஏந்திய கரம். நல்லவையோ தீயவையோ, அத்தனையை யும் எரிக்க வல்லது தீ, 'சிவஞானம்' ஆகிய தீ கன்மத்தையும், கன்மத்தில் உருவான

2 -
'உலகையும் அழிக்கவல்லது என்பதைச் சுட் டிக்காட்டுகிறது, சுட்டெரிக்க வல்ல கனல் ஏந்தியகரம். அந்த அமுதமயமான சிவ ஞானஒளியிலே சாந்தத்தின் த ண்  ைம யும் இனிமையும் இரண்டறக் கலந்துள்ளன என்பதை இயம்புகிறது, ஐயன் திருமுடி யில் இலங்கும் பிறைமதி.அபினயம் பிடிக்கும் ஒரு கரம் திருவடியைச் சுட்டிக்காட்டுகிறதே! ஏன் தெரியுமா? '' அன்பர்களே! என் திருவ டியை அடைக்கலமாகக் கொள்ளுங்கள்.'' என்று சொல்வதற்கே. அடுத்த கரமோ வேறொரு அறி வுரையைத் த ரு கி றது. 'என் திருவடியை அடைக்கலமாகக் கொண்டு' சிவாய நம வென்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒரு நாளும் இல்லை. ஆகவே அஞ்சாதீர்! இதோ நான் அபயம்தருவேன்' என்று தைரியமளித்து அங்கை காட்டுகிறது ஐயனின் அபயகரம்.
ஆகா! எவ்வளவு அரிய தத்துவங்கள் வாய்ந் தது தில்லை நடராஜனின் அற்புத வடிவம்! அவ்வடிவோடு அவன் புரியும் நடனமோ படைத்தல் , காத்தல், அழித்தல், அருளல், மறை தல் என்னும் ஐந்தொழில் நடனமாகும். இதையே,
(”ஆக்கி அளித்துலகை நீக்கி மறைத்தருளி ஐந்தொழில் புரிந்திடும் அம்பலவாணனே” ? என உருகிப்பாடுகிறார் ஒரு அன்பர். ஆனால் அன்பருக் கன்பராம் மணிவாசகப் பெருமானே, * 'ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா அன்புனக்
கென் ஊடகத்தே நின் றுருகத் தந்தருள் எம் உடை
யானே'' எனப்பலவாறாக, கல்லும் கனிய, உளம் கனிந்து பாடித் திருவாசகத்தேனை அள்ளித் தருகிறார். அச்செந்தேனில் திளைக்கும் அன் பரே, நடராஜப்பெருமானின் இணையடி நீழலை எய்த வல்லார்.
கமலா பெரியதம்பி ஆங்கிலம் விடுகை வருடம்,

Page 59

பா.
பலாலி ஆசிரிய கழகம் சைவமாணவர் மன்றம் - 1970
சஞ்சிகைக் குழு உறுப்பினர்கள் |

Page 60
- III
பலாலி ஆசிரிய கலாசாலை சைவமாணவர் மன்றம் - 1970
பேராசிரியர்களும், செயற்குழு உறுப்பினரும்

- அசதி சங்க சார் பதில் - த் திரித் . அம்
இ.

Page 61
தேனும்
அன்றொருநாள் மாலைநேரம் நறு மணம் கமழும் மலர்கள் நிறைந்த பூங்கா ஒன்றில், மாணிக்கம் ஒரு மர நிழலில் இருந்தார். அந் தப் பூங்காவிலே அவர் கண்ட காட்சிகள் யாவும் அவருடைய உள்ளத்தைத் தொட்டுத் தொட்டு நின்றன.
அந்தத் தாமரைத் தடாகததின் சுவர்க் கட்டிலே இருந்தபடி காதற்சோடி ஒன்று தண் ணீரை அள்ளி ஒருவருக்கொருவர் எறிந்து விளையாடிக் கொண்டிருந்தது.
அங்கிருந்த முல்லைப் பந்தரின் கீழ் இருந்த ஒரு கூட்டம் அந்த முல்லை மலர்களின் அழ கையும் அவற்றிலிருந்து வீசிக்கொண்டிருந்த நறுமணத்தையும் வியந்து ஏதேதோ எல்லாம் பேசிக்கொண்டிருந்தது.
ஒருவரோடொருவர் முண்டி அடித்துக் கொண்டு நான் முந்தி, நீ முந்தி என்று சறுக் கீசில் ஏறி விளையாடிக்கொண்டிருந்தது சிறு வர் கூட்டம் ஒன்று.
இவர்கள் எவரையும் காணாது தனது கற் பனைச் சிறகு கொண்டு கவிதா உலகில் பறந்துகொண்டிருந்த கவிஞன் ஒருவன் தன கையில் இருந்த கடதாசித்துண்டில் ஏதோ கிறுக்கிக்கொண்டிருந்தான்.
கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்த படியே சிக்....... சிக்...... என்று துடித்துக்கொண்டு பூங்கா வின் வாயில யே பார்த்தபடி இருந்த வாலி பனுக்கு அங்கு தோன்றும் காட்சிகள் யாவும்
ஆத்திரத்தை ஊட்டிக்கொண்டிருந்தன.
- இத்தகைய மக்கள் கூட்டத்தின் நடுவே கெம்பீரமாக ரீங்காரஞ் செய்து கொண்டு வண் டினம் ஆங்காங்கு பறந்து திரிந்தன. அந்த ரீங்காரம், சோம்பலின்றித் தமது தொழில இடையறாது செய்துகொண்டிருக்கும் வண்டி னம இந்த மக்களைப் பார்த்து ஏளனம் செய் வது போலிருந்தது.
மரநிழலில் இருந்த மாணிக்கம் இவற்றை எல்லாம் உற்று நோக்கிக் கொண்டிருந்தார். அவருடைய உள்ளத தடாகத்தில் எழுந்த சிந்

வண்டும்
தனை அலைகளில் இந்த மக்களும் வண்டின மும் மாறி மாறி மிதந்து கொண்டிருந்தன. அந்த வண்டுகளும் மக்களும் ஒரே விஷயத் துக்காக அங்கு காணப்படுவதை உணர்ந்தார், வண்டுகள் சிறிதளவு தேனுக்காகவும் மக்கள் சிறிது நேர இன்பப் பொழுது போக்குக்காக வும் அங்கு தோன்றியிருப்பதைக் கண்ட மாணிக்கத்துக்கு இவர்கள் மீது அனுதாபம் ஏற்பட்ட து. பெரியோர்களாயின் சிறியோர்கள் குற்றங்களைச் செய்யும்போது கோபிக்க மாட் டார்கள். அந்தச் சிறியோருக்கு ஆண்டவன் போதிய அறிவைக் கொடுக்கவில்லையே என்று அனுதாபப்படுகிறார்கள். அவ்வாறே மாணிக் கமும் அனுதாபப்பட்டார். அவர் எம்மைப் போன்று அவ்வளவில் நின்றுவிடவில்லை அந்த வண்டுகளை அழைத்துச் சில வார்த்தை கூறு கின்றார். எப்படி, * 'தினைத்தனை உள்ள ேதார் பூவினில் தேனுண்ணாதே
நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தோ
றும் எப்போதும் அனை த்தெலும் புள்நெக ஆனந்தத் தேன் சொரியும் குனிப்புடை யானுக்கே சென் றூ தாய் கோத்
தும்பி' என்று அவருடைய மணிவாசகம் முடிகின்றது.
வண்டுகள் மீது கொண்ட இரக்கத்தினால் அவற்றை நோக்கித் தினையளவு தேனையுண்டு மகிழ ஆசைப்பட்டு அலைகின்றீர்களே. அதனை உண்ண ஆசைப்படாதீர்கள். நி னை க கு ந தோறும், காணும் தோறும், பேசுந்தோறும், எப்போதுமே எலும்பெல்லாம்  ெந கி ழ் ந் து. விடக்கூடிய அளவு ஆ ன ந் த த் தேனைச் சொரிந்து கொண்டிருக்கும் அந்தக் குனிப்பு டையானிடம் சென்று பாடுங்கள்' என்று கூறி அவற்றுக்கு வழிகாட்டுகின்றார்.
அந்த வண்டுகளைப் போன்ற மக்க (ளு க் கு மணிவாசகப் பெருமான் எடுத்துக். கூறும் பேரின்பம் பெறும் மார்க்கம் மிகச் சிறந்த ஒன்றாகும். அவர் கூறும் அந்த ஆனந் தத்தேன எமக்கு எவ்வாறு இனிமையைக் கொடுக்கின்றது என் பது இ ங் கு சிந்திக்கற் பாலது.

Page 62
நாம் உணவுப் பொருள் ஒன்றை நாவி (னால் சுவைக்க வேண்டுமாயின் அதனை நாம் சிறிது முயற்சி செய்து எ ம து வாய்க்குக் கொடுக்கவேண்டும். ஆனால் மணிவாசகர் கூறும் அந்த ஆனந்தத் தேனைச் சுவைப்ப தற்கு எவ்வித முயற்சியும் வேண்டியதில்லை. சும்மா நினைத்த மாத்திரத்தே அது எமது வாயில் புகுந்து, ஊனுடன் கலந்து, உட ம பெல்லாம் செறிந்து, உள்ளே உள்ள என் பெல்லாம நெகும் வண்ணம் இனிமை அளிக் கக் கூடியது. நினைத்தல் என்பது எமது உடல் உறுப்புக்களின் தீவிர தொழிற்பாடின்றி, மிகக் குறைந்த அளவு சக்தியுடன் செய்யக் கூடிய ஒன்றாம். கதிரையில் இருந்த படியே எமது சிந்தனை சந்திர மண்டலத்துக்கும் சென்று வருவதை நாம் அறிகின்றோம். இவ் வாறு கூறும் பொழுது கேட்பவர்களுக்குச் சிந் தித்தல் என்பது மிக இலகுவாகப் படினும் இங்கு சிந்தித்தல் என்பது இடையறாது நினைத்தல் என்பதைக்குறிக்கின்றது என்று அறிய வேண் டும்.
நினைத்தொறும் இன்பம் என்று கூறிய மணிவாசகனார், காண்தொறும் இன்பம் என் றார். காண்பதற்கு எமது கண்களுக்குச் சக்தி இருக்கவேண்டும். அதாவது மரணப் படுக்கை யிலே புலன்கள் அடங்கிய நிலையிலே இருக் கும் நோயாளி ஒருவன் நினைவிழக்காமல் இருக் கலாம். ஆனால் அவன் பக்கத்திலே உள்ள ஒரு பொருளைக்காண்பதற்கு அப்பொருள் உள்ள பக்கமாகத் தன் தலையைத் திருப்பிக் கண் இமைகளைத் திறந்தால் மட்டுமே காண முடியும். அவ்வளவுக்கு அவனுக்குச் சக்தி இருக்கவேண்டும். ஆகவே நினைத்தலுக்கு வேண்டிய சக்தியிலும் சற்றுக் கூடிய அளவு சக்தி காண்பதற்கு வேண்டும் என்பது புலனா கின்றது.
அடுத்து, பேசுந்தோறும் இன்பம் என்றார். நினைத்தல், காண்டல் ஆகிய இரண்டுக்கும் தேவைப்பட்ட சக்தியிலும் பார்க்க இதற்கு அதிகமான சக்தி வேண்டும். அந்த நோயளி

சிந்திக்கின்றான். காணுகின்றான் ஆனால் அவ னால் பேசமுடியவில்லை. பேசுவதற்கு அவன் வாயைத்திறந்து, உதடுகளைக்கூட்டி, நாவை அசைத்து, வாயினூடே காற்றை வெளிவரச் செய்யும் அளவுக்கு அவனுக்குச் சக்தி வேண் டும். அவ்வளவில் அவனிடம் சக்தியில்லை. ஆகவே இதிலிருந்து காண்டல் பேசுதல் ஆகியவற்றுக்கு வேண்டப்படும் சக்தியிலும் பார்க்க மிகக்குறைந்த அளவு சக்தி நினைத் தலுக்குப் போதுமானது என்பது புலனா கின்றது.
இக்கால மக்கள் சும்மா இருந்து சாப்பிடு வதையே பெரிதும் விரும்பி வாழ்கிறார் கள். உடலைவருத்தி உழைப்பவர்கள் மிகச்சிலரே. மணிவாசகப் பெருமான் இத்தகைய ஒரு சமு தாயம் அமையும் என்பதை அன்றே உணர்ந் தார் போலும், மிகக் குறைந்த அளவு சக்தி யுடன் செய்யக்கூடிய அந்த நினைத்தலுக்கு மக்களை அழைக்கின்றார். எவ்வித மெய் வருத் தமுமின்றி அவனைச் சிந்திக்க மாட்டாத மக் கள் மெய்வருந்தி ஆண்டவனை அடைவார் களா? ஒரு சொற்ப நேர நிலையற்ற இன்பத் துக்காக எமது உடலை வருத்திப் பொரு ளைச் செலவிட்டு அலைகின்றோம். ஆனால் நிலையான பேரின்பத்துக்காக உடல் வருத் தமோ, பொருட் செலவோ இன் றிச் செய்யும் சிந்தித்தலை - சதா இறைவனையே நினைத்தலைச்செய்யமுடியாதவர்களாக இருக்கின்றோம். ஏன்? அதற்கும் அவன் அருள் வேண்டும்.
அந்த வண்டுகளைப் போன்று அலையும் எம்மை அழைக்கும் மணிவாசகப் பெருமா னின் திருவாசகத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் தித்திக்குந் தேனாகும். இதனா லன்றோ "திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்' என்று கூறியுள் ளார்கள். மேலும், * *தொல்லை யிரும்பிறவி சூழும்தளை நீக்கி
அல்லல் அறுத்தானந் தமாக்கியதே-எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசகம் என்னும் தேன்"
என்று, திருவாசகத்தைத் தேன் என்றே கூறிவிட்டார்.

Page 63
தேனை விரும்பாத வண்டில்லை, ஆயினும் சில வேளைகளில் வண்டு மலத்தை விரும்புகின் றது, மலத்தை விரும் பிய வண்டு நிலத்திலே ஊர்ந்து சென்று மிதிபட்டு நெரிபட்டு அழி கின்றது. ஆனால் தேனை விரும்பும் வண்டு அதனை நாடி மேலே மேலே பறந்து ரீங்காரம் செய்து கொண்டு வாழ்கின்றது. இவ்வாறே மலத்தினால் பீடிக்கப்பட்டிருக்கும் மக்களும் உலக இன்பதுன்பங்களில் நசுக்குண்டு மாழ் கிறார்கள். உலக இன்ப துன்பங் களை விடுத்து ஆனந்தத தேன் சொரியும் ஆண்டவனை நாடும் மக்கள் முத்தி இன்பத்தைப் பெற்று அழியா வாழ்வு பெறுகிறார்கள்.
குழந்தைக்கு மருந்து கொடுப்பதாயின் அந்த மருந்தின் கசப்பை நீக்கி இனிப்பை உண் டாக்கி, குழந்தையை விருப்போடு குடிக்கச் செய்வதாயின் அந்த மருந்துடன் தேனைக் கலக்கின்றோம். அதே போல எமது வாழ்க் கையிலேற்படும் கசப்பை நீக்கி இனிமையை, அமைதியை உண்டாக்க இறைவனாகிய தேனை எமது வாழ்க்கையில் கலக்கவேண்டும். தேனை எவ்வளவுக்குக் கலக்கின்றோமோ அவ்வளவுக்கு மருந்தின் கசப்பு நீங்கி இனிப்புண்டாகும். அவ்வாறே இறைவனை எவ்வளவுக்கு எமது வாழ்க்கையில் கலக்கின்றோமோ அவ்வளவுக்கு வாழ்க்கை இனிமை பெறும். தேனை அதிக மாகக் கலந்தால் எவ்வாறு மருந்தின் கசப்பு 8 முற்றாக நீங்கி மருந்து தேனாக மாறிவிடு கின்றதோ அவ்வாறே எமது வாழ்க்கை முழு ! வதிலும் இறைவனுடைய கலப்பு ஏற்படுமா ப
முற்ற

யின் அது தூய்மை பெற்று இந்த உலகமே பேரின்ப வீடாய்விடும். இதனை, ''பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே'' என்றும்
• வழுக்கி வீழினும் உன் திருப்பெயர் மறவேன''
என்றும் = 'நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்
நினைப்பதுன்னை என்றும் வணங்குவது நின் மலர்த்தாள்'' என்றும் * சிவாயநம என்று சிந்தித்து இருப்போர்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லை'' என்றும் "' நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்
என்றும் நினை சிவன் தாள் இணை'' என்றும் * 'பண்ணேறு மொழியடியர் பரவி வாழ்த்தும் பாத
மலரழகினை இப்பாவி பார்க்கில் கண்ணேறுபடு மென்றோ கனவிலேனும் காட்
டென்றால் காட்டுகிலாய் கருணையீதோ'' என்றும் பலவாறாக அடியார்கள் பாடியிருக்கிறார் கள்.
உலகிலே இன, மத, மொழி, நிற வேறுபாடு கள் நிறைந்த பல்கோடி மக்கள் இருக்கிறார் கள். எந்த வேறுபாடுகள் இருப்பினும் மக் கள எல்லோரும் விரும்புவது ஒன்றுண்டு. அது ஆனந்தம். ஆனந்தத்தை விரும்பாத ஓருயிர் எங்குமே இல்லை எனலாம். எனவே எமது வாழ்க்கையைச் சமயவாழ்க்கையாக அமைத்து ஆனந்தத்தேன் சொரியும் ஆண்ட வனை நாயகமாகக் கொண்டு திருவாசகத் தேனால் அவனை அர்ச்சித்து உலக இன்ப துன்பங்களினின்றும் விடுபட்டுப் பேரானந்த மடைய அவனடி வேண்டி நிற்போமாக.
பம்
க, கனகரத்தினம்
வர்த்தகம் 2ஆம் வருடம்

Page 64
-- 3
கிழக்கிலங்கையில்
பழமைக்கும் பண்பாட்டிற்கும் புக லிடமாய் விளங்குவது கிழக்கிலங்கை. சைவநெறியில் வாழும் இந்நாட்டு மக்கள் வைஷ்ணவ வழிபாட்டுடன், கண்ணகி வழிபாட்டையும் பண்டு தொட்டுக் கடைப்பிடித்து வருகின் றனர். இதன் மூலம் இவர்கள் சமய. சமரச உணர்வு நன்கு புலனாகிறது.
வீரபத்தினியாகிய கண்ணகிக்கு விழாவெடுக்கும் வழக்கம் கிழக்கிலங் கையில் பண்டு தொட்டு இன்று வரை நிலவுகின்றது. சோழநாட்டில் பிறந்தாள், பாண்டி நாட்டில் கண வனை இழந்தாள். சேர நாட்டில் தெய்வமானாள். ஈழ நாட்டின் கிழக் குப்பகுதியில் இன்றும் பூசிக்கப்படு கிறாள், கற்புக்கரசியாம் கண்ணகி, சேரமன்னனாகிய செ ங் குட்டு வன் வடவரை வென்று, இமயஞ்சென்று கல்லெடுத்து, கங்கையில் நீர்ப்படை செய்து,கனகவிசயரின் சிரமிசை ஏற்றிக் கொணர்ந்து, வீரபத்தினிக்குச் சிலைவ டித்தாள். அவ்விழாக் காண்பான் கருதி கடல்சூழ் இலங்கைக் கயவாகு மன்னனும் ஆங்குச் சென்றான். அப் போது அவ்வேந்தனாலேயே ஈழநாட் டிற் கண்ணகிவழிபாடு கொண்டு வரப் பட்டதென்பது வரலாறு. இவ்வழி பாடு அன்று தொட்டு இங்கு நிகழ் வதாயிற்று. சிங்கள மக்கள் 'பத்தி னித் தெய்யோ'' எனக்குறிப்பிட்டு வீரபத்தினியைப் பூசிப்பர்,
சரித்திர காலந்தொட்டுக் கிழக்கி லங்கையும், சிங்கள இராச்சியமும் நெருங்கிய தொடர்புடையன. அதி லும் கண்டி நாடு மிக அண்மையில் உள்ளதால் அந்நாட்டுடன் பல்வேறு

) கண்ணகி விழா
வகையிலும் தொடர்புடையதாயி ருந்தது. இதன் காரணமாகப் போ லும் சிங்கள மன்னரால் கைக்கொள் ளப்பட்டு வந்த இவ்வழிபாடு இங்கும் பெருவழக்காகக் கைக்கொள்ளப்பட்டு வருகிறதெனலாம். எது எப்படி இருப் பினும் பிறந்த நாட்டில் இல்லாத இவ் வழிபாடு கிழக்கிலங்கையிலுள்ள பல கிராமங்களில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறதென் பதை எவரும்மறுக்கமுடியாது.
''பிறந்த இடத்தன் றிப் பிறிதொரு தேசத்தே செறிந்த இடத்தன றோ சிறப்பு.'
வைகாசித் திங்களில் நிறைமதி நாளன்று கண்ணகி விழா பூர்த்திய டையும் இதைக் குளுத்தி (ஆடுதல் குளிர்ச்சி) என்பர். இ த ற் கு முந்தி ஐந்து அல்லது ஏழு நாட்களாகப் பூசை கள் நடைபெறும். மட்டக்களப்பில் இவ் விழாக்காலத்தில் படிக்கப்படும் குளுத்திப்பாடலில்
' 'வைகாசித் திங்கள் வருவேனென்று வருகைக் கிசைந்து விடைகொடுத்தார்.”
எனவரும் அடிகள் மூலம் கண் ண கிக்கு விழா எடுக்குங்காலத்தை அறி யலாம். கயவாகு மன்னன் இவ்வி ழாவை ஆடிமாசத்திலேயே கொண் டாடிவந்தான். இதன் மாறுபட்ட தோற்றமே இப்போது நடைபெறும் கண்டிப் பெரஹர!'' பத்தினித்தெய் வத்துக்காக எடுக்கப்பட்ட பெரஹர, இன்று புத்த தந்தப் பவனியாகப் பரிணமித்துள்ளது. கஜபாகு மன்னன் கி, பி. 2ம் நூற்றாண்டிலேயே ஈழத் தின் பல ஊர்களிலும் கண்ணகிக்கு ஆலயம் எழுப்பினான். ஆனால், இப் போது கி ழ க் கி ல ங் கை யி லே யே

Page 65
பல ஆலயங்கள் வி ள ங் கு கி ன் றன. ஏனைய சில இடங்களில் அவை இருப்பினும் வழிபாட்டு முறையில் வேறுபாடுகள் உண்டு. இங்கு நடை பெறும் வழிபாட்டு முறைகள் இந் நாட்டிற்கே உரித்தானவையாம்.
வைகாசித் திங்கள் வந்ததும் கிழக் கிலங்கையே ஒரு புத்துணர்ச்சியுடன் தோற்றமளிக்கும். சிறப்பாக விழா வெடுக்கும் ஊர்களோ மகிழ்ச்சிக்கட லில் பொங்கும், மக்கள் மனதிலே புனிதத்தன்மை காணப்படும். ஆண் கள், பெண்களின் வாயில் விழாப் பேச்சு ஆரம்பித்து விடும். வைகா சித்திங்களின் நிறைமதிக்கு முந்திய ஐந்து, அல்லது ஏழு நாட்களுக்கு முன் கதவு திறத்தல் ஊர்காவல் பண்ணுதல் என்னும் நிகழ்ச்சிகளுடன் விழா ஆரம்பமாகும். இவ்விழாவை இந்நாட்டவர் ''சடங்கு'' எ ன க் குறிப்பிடுவர். இது, ஷட் + சங்கம் என்னும் வடமொழித்திரிபாகும்.
ஊரவர் ய ா வ ரு ம் குடிவழி ய ர க ப் பி ரி ந் து நி ன் று இச் சடங்கினை நடாத்துதல் மரபாகும். இதில் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டு நடாத்தும் வகையில் போட் டிகள் ஏற்படுவதுண்டு. கன்னிக்கால் நாட்டும் விழா முக்கிய ஒரு விழா வாகும், ஊர்களில் இதற்கென வளர்க் கப்பட்ட தடிகளை, பல வாத்தியங் கள் முழங்க. காவியம் ஒலிக்க பக் தர்கள் பவனியாகச் சென்று வெட்டி ஆலயத்துக்குக் கொண்டு செல்வர். பின்னர் அவற்றைக் கோயிலுள் நட்டு வண்ணப்புடைவைகளால் அலங் கரிப்பர். அதன் பின் தேவிக்கு விசேட பூசைகள் நடைபெறும்.
ஏனைய ஆலயங்களில் கைக்கொள் ளப்படாத பூசைமுறைகளே இங்கு
10

நடைபெறும். பிராமணர் அல்லாத சைவக்குருக்களாலோ, அ ன்  ேற ல் சன்மார்க்க சீலரான சிவனடியாரா லோ இது நடைபெறும்.இவர்கள் “கட் டாடியார்'' என அழைக்கப் படுவர். பூசை முடிவில் இதற்கென இந்நாட் டுப் பண்டைய புலவர்களால் இயற் றப்பட்ட "உடுக்குச்சிந்து" ஆகிய கண் ணகி காவியம் பாடப்படும். பகல், இரவு வேளைகளில் ''கண்ணகி வழக் குரை" என்னும் பிரபந்தம் ஏட்டுச் சுவடிகளிலிருந்து பாடப்படும். அப் போது பத்தி - சிரத்தையுடன் அடி யவர்கள்கேட்டுப் பர வ ச மு றுவர். பூசை நேரங்களில் விசேட அம்சமாக விளங்குவது மாதரின் குரவை ஒலி யாகும்.
கண்ணகி ஆய்ச்சியர் பாடியில் தங் கியிருக்கும்போது கோவலன் கொலை யுண்ட துர்நிமித்தம் காரணமாய் ஆய்ச்சியர் குரவைக்கூத்தாடிய செய்தி சிலப்பதிகாரத்தில் காணக்கூடியதா கும். ஆனால் குரவைக்கூத்தின் மாறு பட்ட நிலையே இன்று மட்டக்களப் பில் கண்ணகி கோயில்களில் ஒலிக் கும் குரவை ஒலியாகும். இவ்வொலி ஒலிக்கப்படும் போது கேட்பதற்கு அது இன்னோசையாய் இருக்கும். இக் குரலைஒலி போடும் வழக்கம் இந் நாட்டிலேயே வழங்குங் காரணத் தால் பழமையின் சின்னம் இங்கு உயிர் வாழ்வதை அறியலாம்.
பூசையின் முடிவில் பாடப்படும் ஊர் சுற்றுக்காவியத்தில் இந்நாட்டில் கண்
ணகி கோட்டம் அமைந்துள்ள ஊர் களனைத்தும் இடம்பெற்றுள்ளன. தம்பிலுவில், காரைதீவு, கல்முனை, பாண்டிருப்பு, கல்லாறு, பட்டிமேடு. களுவாஞ்சிக்குடி, எருவில், செட்டி

Page 66
பாளையம் முதலிய தென்கிராமங்கள் தொடக்கம் வந்தாறுமூலை, சிற்றாண் டி முதலிய வடதிசை ஊர்களனைத்தும் பாடப்பட்டுள்ளன, பின்வரும் பாடல் கள் அவற்றுள் சிலவாகும். 1. கார் பெற்ற விரிதிரைக் கடல்மீது பெட்டகம்
கண்டுமா னாகருடன் மாசாத்து வாரும் நேர்பெற்ற பெட்டகம் எனக்கெனவும்
உள்ளான நிதியெனக் கென்ன மா னாகரு முரைக்க பேர்பெற்ற மாசாத்தாரைக் கண்டு நாணிமிகப்
பின்னிடவும் மானாகர் முன்னிட மயங்கி சீர்பெற்ற தம்பிலுவில் நகர்வாழ வருகின்ற
- செல்விகண் ணகையை ஒருநாளு
மறவேனே.
2. மேருவரை யுற்றதன பாரமா தவிதந்த
மெய்யன்பு தீரவொரு கைமுதலில் லாமல் பாரமா நூபுரம் தனைவிற்க வென றே
பன்னு தமிழ் மதுரை மன் பதியதனில்
வந்து மாரவேள் ஒத்தவடி வானகோ வலன்றன்
மதுரைமன் கொன்றபழி வாங்கிவருகின்ற காரைதீ விற்கோயில் கொண்டுவாழ் கின்ற
கண்ணகை கமலபதம் கனவிலுங்
கருதுவனே . 3; எத்திசையும் மெய்க்கவே தேருடன் திருநாள் என்றுமோராண்டினில் நடத்தியா
வரையும் குற்றமற முக்குகர்கள் எல்லாரை யு ம்தினம் குறைவற நடத்துமொரு குணரட்ண
மயிலே கொற்றவனை வாதாடி அன் றுவென் றேஆயர் கோமகளை அஞ்சல்என் றிடும் அன்ன
மின்னே உற்றபுகழ் சேர்கின்ற வெற்றிசெறி
பாண்டிருப் பூர்வாழ வந்தருளும் உலகமாதாவே. 4. காரணி நாரணி காளிகங் காளி
கண்ணன் சகோதரி வண்ணமா மாரி பூரணி முக்கண்ணி வேதநா யகியே
புகழான மானாகர் மகளான திரு வே ஏரணி முக்கண்ணி வேதநா யகியே
ஏழையடி யார்கள் வினை ஈடேற்று வாயே வீரமா காளியே தெட்சணா காளியே
மேவரிய கல்லாறு வாழும் நா யகியே;

}8 -
5. சிந்தைதனி லே அதிக கோபமது கொண்டு
செப்பரிய ஆயர்மனை தனையும் விட் டேகி வந்துமன வேகமுடன் பாண்டிய னிடத்தில்
வாதாடி நின்றுபரி புரமதை எடுத்து பந்திதனில் நிற்கின்ற பாண்டியன் றன்னை யும்
பண்பில்லாத் தட்டானை யும்எரி செய்த கந்தமிகு களுவாஞ்சி நகர்குளக் கட்டில்வாழ்
கண்ணகை என்னவினை காதபோ
டிடுமே. 6. தாயும் நீ தந்தை நீ அல்லாம லெங்களிட
சஞ்சலந் தீர்ப்பதற் கேயொருவருண்டோ நீயல்லால் வேறுதுணை தமியேனுக் குண்டோ
நிச்சயம் தாக அருள் தந்துதவி புரிவாய் ஏயதோர் செல்வமும் செந்நெல்லின்
விளைவும் இன்பமுட னே தந்து எங்கள் துயர்
தீர்ப்பாய் காயாம்பூ மேனியன் தங்கையென வந்த நீ களுவாஞ்சிநகரிலுறை கின்ற கண்ண
கையே. மேற்படி பா ட ல் மட்டுமல்லாது வழக்குரைக் காவியங்கள், கண்ணகி அகவல், குளுத்திப் பாடல் முதலிய பல இலக்கியங்களும் கண்ணகி இலக் கியங்களாக இங்கு விளங்குகின்றன. இவற்றுட் பல அ ச் சு வாகனமேறி வெளிவந்துள்ளன. சி ல இ ன் னு ம் ஏட்டுச் சுவடிகளிலும், பலரது ம ன துள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கின் றன - இவைகளையும் அச்சேற்றி யாவ ரும் பயன்கொள்ளச் செய்யவேண்டி யது அறிஞரின் கடனாகும், இவைய னைத்தும் இந்நாட்டுப் புலவர்களால் காலத்துக்குக் காலம் பாடப்பட்டன வாகும். இவற்றின் தன்  ைம க ளை நோக்கும்போது சமீப காலத்தன வாகவே காணப்படுகின்றன. ஏறத் தாழ பதினைந்தாம் நூற்றாண்டிற்கு உட்பட்டனவென்றே கூ ற ல ா ம். இ ைவ அனைத்தும் இன்னோசையும், பொருட்செறிவும் மிக்கன. போ தி யளவு யாப்பிலக்கண அறிவற்ற கிரா

Page 67
- 39
மியப் புலவர்களாலே பாடப்பட்டி ருக்கலாம் என்பது ஆய்வாளரின் முடிவு.
ஒருமுலை திருகி மதுரையை எரித் துக் கனல் பிறக்கும் ஆவேசத்து டன் வந்த கண்ணகியின் சீற்றந்தணி வித்துச் சாந்தமடையச் செய்தற்கா க ேவ குளுத்தி நடைபெறும். குளுத்திப்பாடலும் இதே பொரு ளில் அமைந்துள்ளன.
*' ஒரு பிழையும் செய்யாத உலகுபுகழ்
கோவலரைப் பெருமழுவாற் கொல்லுவித்த பிழை பிறன்
தனை வதைத்து கருதரிய ஆயர்மனை கனல்மூளச் சாபமிட்டு
இருமுலையுங் குளுந்த கதை........ எனக் குளுத்திப்பாடல் காப்பு கூறு கின்றது. கண்ணகி சடங்கு முடிந்து குளுத்தி பாடிக் கதவடைப்பு நிகழ்ந் த பி ன் மழைவளம் பெற்று, நாடு செழித்துத் துன்பங்கள் அகலும்.
இங்கு கண்ணகி ஆலயங்களில் பாடப்பட்டு வரும் கண்ணகி வழக் குரை என்பது ஒருபண்டைய இலக்கி யச் செல்வமாகும். இதில் கண்ணகியின் பிறப்புத் தொடக்கம் தெய்வமானமை வரை பாடப்பட்டுள்ளது, ஏட்டுருவில் இருந்த இப்பாடல்கள் இந்நாட்டுப் பேரறிஞர் பண்டித வி சீ. கந்தையா அவர்களின் அயரா உழைப்பினால் அச்சாகி வெளிவந்துள்ளது. பழமைச் செல்வம் அழியா வண்ணம் பாது காத்த அன்னாருக்கு நாடு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளது.
கிழக்கிலங்கைத் தமிழ் மக்களுக்குக் கண்ணகிதேவி ஒரு விசுவாசம் மிக்க குலதெய்வமாகும். எந்த ஒரு இன் னல் ஏற்படும் போதும் கண்ணகிக்கு நேர்த்திக்கடன் வைத்துத் துன்பம் அகற்றுதல் இந்நாட்டவரின் பரம்

பரைப்பண்பாகும். கண்ணகியென் றால் யாவர்க்கும் உள்ளூரப்பயம் உண் டாகும். கண்ணகி குற்றம் பொறுக் காத ஒரு தெய்வமென்பது இவர்கள் கருத்து. இதை வலியுறுத்துதற்குப் போலும் எந்த ஊரிலும் கண்ணகி ஆலயம் அமைந்துள்ள இடம் ஊரின் எல்லைப் புறங்களை அடுத்து, மக்கள் வசியாத பகுதிகளாகும். விழாக்கா லம் ஆரம்பித்ததும் அந்த ஊரே. மிக்க தூய்மையாகக் காட்சிதரும். மச்ச மாமிசங்களை உண்ணவோ, விற் கவோ எ வ ரு ம் துணியார். ஆ  ெச ள ச மா ன  ெப ண் க ளு ம் ஆலய எல்லையிலிருந்து வெகு தூரத் து க் க ப் பால் குடிபெயர்ந்து விடுவர். எந்தத் தெய்வத்துக்கும் அஞ் சாத மக்கள் கண்ணகிக்கு அஞ்சு வார்கள். கண்ணகி ஆலயத்தின், சன்னிதானத்தில் எவரும் அகங்கா ரம் கொள்ளமாட்டார்கள். இவ்வாறு இந்நாட்டு மக்கள் மட்டற்ற பயமும், அளவிலாப்பக்தியும் கொண்டு வாழ் வர்.
ஆ ல ய ங் க ளி ல் வழிபாடாற் றுவதோடு அமையாது, வீடுகளிலும் கண்ணகிக்குப் பொங்கல், பூ  ைச கள் செய்து வழிபடுவர். இதைச் 'சர்க் கரை அமுது"' கொடுத்தல் என்று கூறு வர். பத்து வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகள் ஐவர், அல்லது எழுவரைத் தம் சுற்றத்தவரில் தெரிந்தெடுத்து, அவர்களையே சக்திகளாகக் கொண்டு நீராட்டி உடை அணிந்து வேப்பிலை கைப்பிடித்துப் பொங்கல் வீட்டுக்கு வரச்சொல்வர்' அவர்களை மஞ்சள் நீரால் கால் கழுவி; கண்ணுக்கு அஞ் சனந் தீட்டி, நெற்றியில் நீறணிந்து, திலகமிட்டு வீட்டினுள் இருத்திச் சர்க் கரைச்சாதத்தைப்படைத்து அவர்களை

Page 68
உண்ணச்செய்வர். அவர்கள் உண்ணு முன் 'கண்ணகி அம்பாள் உங்கள் யாவரையும் ஒரு துன்பமும் வராது காப்பாள்' என்று நல்வாக்குக் கொடுப் பர். இதைத் தேவியின் வாக்காக ஏற்று அவ்வீட்டில் உள்ளார் மனத்திருப்தி அடை வர். இப்பூசையும் ஆண்டில் ஒருமுறை தவறாது வீடுகளில் நடை பெறும். கண்ணகி வழிபாட்டிற்கு, மஞ்சளும், வேப்பிலையும், அவசியம் வேண்டப்படும் பூசைப்பொருட்களா கும், சின்னமுத்து, பொக்குளிப்பான், கூகைக் கட்டு முதலிய தொற்று  ேந ா ய் க ளி லி ருந் து தம்மைக் காப்பாற்றுதற்காகவே தேவி பூசை நடாத்துவதாகும், மேற்படி பூசைப் பொருட்கள் நோய்க்கிருமிகளைக் கொல்லும் ஆற்றல் உள்ளலை என்பது கவனித்தற்பாலது. சைவசமயச் சம் பிரதாயங்கள் பல இவ்வாறு சுகா தார் சம்பந்தமாக இருப்பது நோக் கற்பாலதாம்,
வேறும் ஒருவகையில் இந்நாட்டில் கண்ணகி வழிபாடு நடந்துவருகிறது. இவ்வழிபாட்டு முறைபல ஆண்டுகளா கக் கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. முற்றாக அழிந்து விடாது நம் பாரம் பரியங்களைக் காத்தல் இந்நாட்டு மக் கள் கடனாம்.
இளவேனில் முதுவேனில் காலங் களில் இந்நாட்டில் வெப்பநிலை மிக அதிகமாகும், இதனால் கண்ணோய், வயிற்றோட்டம், வாந்திபேதி, வைசூரி முதலிய உஷ்ணரோகங்கள் தலைகாட் டுதல் வழக்கம், இவற்றிலிருந்து பாதுகாக்கவும், மழைவளம் பெறவும், விளைவு சிறக்கவும் வேண்டிக் கண்ண கிக்கு விழா எடுப்பர், இது * 'கொம்பு முறித்தல் எனும் விளையாட்டுத் தழுவிய பெருவிழாவாகும்.

10
மக்கள் வடசேரி, தென்சேரி என இரு பிரிவினராக வகுக்கப்பட்டுள்ள னர். தந்தை எப்பிரிவைச் சேர்ந்த வரோ மகனும் அதே பிரிவைச் சேர்ந் தவர். வடசேரியார் கோவலன் கட்சி என்றும், தென்சேரியார் கண்ணகி கட்சி என்றும் கூறப்படுவர். ""கரை யாக்கு" எனும் மரத்திலிருந்து வெட்டப்பட்ட வளைந்த கொம்புக ளைப் 'பில்லி" என்னும் நீண்ட தடி களிற் கட்டி பெரிய மரங்களிற் கட் டப்பட்ட வடத்திற் பூட்டி நூற்றுக் கணக்கான மக்கள் கூடி நின்று ஒரு
மித்து இழுப்பர்.
அப்போது ஏதாவ தொரு கொம்பு முறித்தால் மற்றைய கட்சியார் வெற் றி கொண்டாடுவர். அன்றிரவு அம் பாளை ஊர்வீதிகடோறும் எழுந்தருளச் செய்து ஆங்காங்கு ''வசந்தன்கூத்து'' என்னும் ஆட்டத்தை ஆடுவர். இதில் முப்பத்திரண்டுவகைக் கூத்துக்கள் இட ம்பெறும். தேவியை வழிபட்டு ஆடுவ தோடு அமையாது, மக்களின் தொழில் க ள், பண்பாடுகள் மு த லி ய வற்றை விளக்கும் பல்வேறு பாடல் களையும் கொண்டன இவ்வரட்டங்கள் இவையனைத்தும் 'வசந்தன் கவித் திரட்டு” என நூலுருவில் வெளி வந்துள்ளன என்பதை இலக்கியரசி கர்களுக்காக நினைவூட்டற்குரியதா கும்.
இவ்வாறு ஒருமாதம்வரை கொம்பு முறித்துத் தேர்க்கலியாணம் எனும் நி கழ்ச்சி நடைபெறும். ஒவ் வொரு சேரியாரும் மிக உயரமான தேர்ப்புரை எனப்படும் கொட்டில் களை எதிர்முகமாக அமையுமாறு கட் டுவர். அதனுள் ஒவ்வொரு தேர் கட்டப்படும். அந்நாட்களில்
முறிக்

Page 69
- 41
கப்படும் கொம்பு "ஏடகத்து மரம்' என வழங்கப்படும். அவற்றைத் தேர் களில் வைத்து பூசை நடத்தி வழமை போல் மரங்களில் பூட்டி முறிப்பார் கள். அம்பாளுக்குரிய கொம்பாகிய தென்சேரிக்கொம்புக்கு வெற்றி உண் டாகும் வரை இவ்வாறு கொம்புமுறித் தல் நடைபெறும்.
ஈற்றில் கண்ணகிக்கும் கோவல னுக்கும் கலியாணம் நடைபெறுவ தான தேர்க்கலியாணம் நடந்து குளு
த்தி பாடி ஊர்வலமாக
அம்பாளை எழுந்தருளச் செய்து
விழாவினை முடிப்பர்.
சேர நாட்டு மக்களிடம் காணப்ப டும் பல பழக்கவழக்கங்கள் மட்டக் களப்பு மக்களிடமும் காணப்படுகின் றன என்று பல இந்திய நாட்டு அறி ஞர் கூறுவர். மந்திரம், காலைக் குளிப்பு, தேங்காய் நெய் பூசுதல், தாய்வழிக்குடி என்பன இவற்றுட் சில. ஆகவே, இவர்களுடைய பரம் - பரை பண்டைக் காலத்தில் சேரநாட்டி - டிலிருந்து வந்து குடியேறி இருக்க | லாமோ என எண்ண இடமுண்டு. |

இவர்களது கண்ணகி வழிபாடும் அவ்வாறே அங்கிருந்து அவர்கள் வரும்போது உடன் கொண்டு வந்தி நக்கலாம். மலையாள நாடு என இக் காலம் கூறப்படும் சேர நாட்டில் 'கிரங்கனூர் என்னுமிடத்தில் செங் தட்டுவனாற் கட்டப்பட்ட கண்ணகி கோட்டமும். சிலையும் இப்போதும் இருக்கிறதாகப் பேராசிரியர்கணபதிப் பிள்ளை அவர்கள் குறிப்பிட்டுள்ளார் கள். ஆனால் அவ்வாலயம் இப்போது இராசராசேஸ்வரி அம்பாள் கோயி வாக மாறியுள்ளதாயும், சைவாசார முறைப்படியே நைவேத்தியங்கள் நடைபெறுவதாகவும் கூறியுள்ளார். ஆங்கு சில ஊர்களில் ஒரு முலைச்சி அம்பாள் கோயில் எனச் சிலகோ பில்களும் உளவாம். இவற்றை நோக் தம் போது தாய்நாட்டிலும் அக் காலத்தில் கண்ணகி வழிபாடு பெரு பழக்காக இருந்ததென்றும், காலகதி பில் அவை படிப்படியாய் மாறிவிட் டன என்றும் கிழக்கிலங்கையிலே மாத்திரம் அன்றுபோல் இன்றும் நிலவுகின்றதென்றும் அறியலாம்.
இ. சிங்கநாயகம் வணிகம் விடுகை வருடம்

Page 70
எம் மதத்திற்கும் சம்மதி
வெண்ணீறணிந்து தொண்டர் கூட டம் புடைசூழ திருநாவுக்கரசுப் பொ மானும் திருஞானசம்பந்தப் பெரும! னும் திருப்புகலூரில் இரு எ தி ர் , திசைகளிலுமிருந்து ஒருவரை ஒருவ அன் பொ ழு கச் சந்திக்கின்றனர் அதனை உவமையுடன் விளக்குமிடத்து 'இரண்டு நிலவின் கடல்கள் ஒன்றாக அணைந்தனபோல் இணைந்த அன்றே (திருநாவுக்கரசு நாயனார் புரா ண 1 233) என்று இரு வர் சந்திப்பையும் இரு திருப்பாற்கடல்கள் ஒன் று த 6 போல என்கிறார் சேக்கிழார். சீர்க ழிப் பதியில் இவ்விரு பெருமக்களும் ஒன்றுசேர்ந்து வணங்கப் புகுந்தபோது சேக்கிழார் திருக்கண்களுக்கு அவ்வி வரும் சைவத்திற்கு வாய்த்த வல. கண்ணும் இடக்கண்ணும் - இறைவ திருவருளும் சக்தியின் பேரருளும் போலவே தோற்றுகின்றனர் (திருந வுக்கரசர் புராணம் 185). சைவநெறி தான் பெற்ற பு ண் ணி ய க் கண்ன ரண்டு போன்ற இரு பெருமக்களு அருளுந்த அழகொழுகத் தேவாரம் பாக்கள் பல தந்தனர். அத் தேவ ரங்களின் பெருமையை அவர்களுக்கு பின் வாழ்ந்த சுந்தரர் தமது தேவ ரங்களில் கா ட் டு கி றா ர். இவ்வி பெருமக்களின் அருமைப்பாடல் ஒ வொன்றும் அவர்தம் விரிந்த சமர நன்னோக்கத்திற்கு உ தா ர ண மா அமைந்திருத்தலைப் பார்ப்போம்.

42 -
மான இரு திருப்பாடல்கள்
9 ஆ க
- e p:-
ܝ ܘܡܬܐ
அப்பர் ஈசன் எந்தை இணையடி 5 நீழலுக்கு ஐந்து பொருட்களை உவ 7 மையாகக் காட்டுகிறார். இது உள் 5 ளத்துக்கு மகிழ்வூட்டுகிறது. மாசில் + வீணை, மாலைமதியம், வீசுதென்றல்,
வீங்கிள வேனில், வ ண் டு க ள் பாடி 7 பூவில் விழும் நன்னீர்த்தடாகம் இவ் ஓ  ைவ ந் து ம் ஒருங்கு ஒரேவழிக் கலந்
தாற் போலி ரு க் கி ற து அப்பருக்கு , ஈசன் திருவடி, மாலை வேளையிலே
பூரண மதியக் காலப் பொய்கைக் கரை யில் வண்டுகள் இசைபாட இனிய தென்றல் வீசும் உணர்வு ஈசன் திரு வடிபற்றி நினைக்கும்போது இச்சிவ அன்புச் செல்வருக்கு உண்டாகிறது. சொ ல் ந ய மு ம் பொருளுணர்ச்சியும் பொருந்தவரும் அவர் அருட்பாடல் நாம் பலகாறும் கோவிலயலிற் குழந் தைகள் பாடிக் கேட்ட ஒன்றுதான்.
''மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிளவேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே?' * இப்பாடலினிமை எம்முளத்தோடு ., ஒன்றிவிடுகிறது. தேவாரச் சொற் றொடர்களாலேயே அப்பரனுபவத் தைச் சேக்கிழார் " .........
... வீங்கிள வேனிற்பருவம்
தைவருதண் தென்றல் அணை
தண்கழு நீர்த்தடம்போன்று மெய்யொளி வெண்ணில் வளர்ந்து
முரன்ற யாழ் ஒலியின தாய் ஐயர் திரு அடி நீழல் அருளாகிக் குளிர்ந்ததே (திருநாவுக்கரசர் புராணம் 98) என்கிறார்.
S.
----
ளி
அ 4 2. இ 4 (சு

Page 71
இறைவனை வணங்கி அப்பரிருந் மன நிலையை அருமையாகப் பகர வ லவர் பாவெல்லாம் சிவம் மணக்கு சேக்கிழார் தானே.
'ஆனந்த வெள்ளத்தின் இடை முழ்கி
அம்பலவர் தேனுந்து மலர்ப்பாதத் தமுதுண்டு
தெளிவெய்தி : * ... என்றவாறெல்லாம் அப்ப அருநிலையை பெருமையுறப் பகர வே யாரால் முடியும். தேவாரப் பா லுக்கு சேக்கிழார் அருட்பாடல்கள் வியாக்கியானமாயமைகின்றன. எந். மதத்தவரும் ~ தமிழர் எவரும் எ. மதத்தைச் சார்ந்தவராயினும் பாடி பாடி உள்ளூர மகிழவாய்ப்பு, தரும் விதத்தில் இத் திருப்பாட பொதுவாக அமைந்துள்ளது. சை ருக்கு மாத்திரம் இது சொந்தமான தன்று. ஊர் நடுவிலிருக்கும் நீர் சுனை எவ்வாறு ஊருக்குப் பொது வ னதோ அதுபோன்று இது அ  ைம து ள் ள து. ஈசன் என்ற சொ மோட்ச ஐசுவரியத்தைத் தருகின் வன் என்ற பொருளிலமைந்து பொ; வானதா யமைந்திருத்தல் நோக்க பாலது. அப்பர் எடுத்தாளும் வீனை ஒலி, மதியின் ஒளி, மெல்லிளந்தெ றல், வ ண் டு பர டு ம் குளிர் நீர் பொய்கை, இவை எல்லாம் உலகி எல்லோருக்கும் இன்பந்தரும் பொ. உடைமைப் பொருள்களாயமைந்து ளன. அதே போன்று ஈசன் என் சொல்லும் எல்லா மதத்தவரும் கூச் மின்றி உச்சத் தொனியில் உச்சரிக்க

43 -
கூடிய நாமந்தான் என்பதில் வியப் ல் பில்லை. அதை அடுத்து வரும் (ஈசனா ம் கிய) எந்தை என்ற சொல்லும் எங் கள் பிதா எங்கள் தலைவன் என எல் லோருக்கும் பொ து வ ா ன பதமா யமைந்துள்ளது. கூச்சமின்றி இறை வனாகிய குளிர் நீர்ப் பொய்கையில் எல்
லோரும் நீராட அருமை வழிகாட் ர் டும் அப்பர் எம்மெல்லோருக்கும் அப் பர் எனக் கூறுவோம். அவர் பாடல்
அவர் நாவுக்கரசரே என்பதை எமக் ர் குத் தெட்டத் தெளிவாக எடுத்துக் த கூறுகிறது.
R 2. • C. b• 97 |
2. இ. - 4.
இதேபோல எல்லா மதத்தவருக் கும் பொதுவான உல கிற்கே ஆசி வழங்கும் தன்மையிலுள்ளது கீழ்வரும் பாடல்.
“வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக ஆழ்க தீயதெல்லாம் அனாமமே
சூழ்க வையகமுந் துயர் தீர்கவே'' ல் வையகத்துக்கு வாழ்த்துக் கூறுவது
இத்திருப்பாடல். அந்தணர் பிராமண து ரைக் குறியாது அழகிய தண்ணளி » யினை உடையாரைச் சுட்டும் காரணப் எ பெயர். அத்தண்மை உடையாரே ன் தெய்வத்தன்மை அமைந்த அன் பும் ப் சிவமும் ஒன்றென்ற நிலையிலுள்ளார். ல் அல்லாமலும் தத்தம் மதவேதத்தின் து முடிவைக் கண்டவரையும் அது குறிக் ள் கும். ஒவ் வொரு மதத்தவருக்கும் ற தெய்வத்தன்மை யமைந்த தேவாரங் ச களைப் பற்றிக் கூறுகிறார். ஆனினம் க் நானிலத்தின் பயிர்வளத்திற்கு உர

Page 72
- 44
மூட்டும் பசளையைத் தருவதோடு மக் ( கள் உடல் வளத்திற்கு திவ்விய பூரண 8 உணவாகிய இனிமைமிக்க பாலைவழங் ! குவதால் ஆனினத்தின் வாழ்வு அகில ( உலகிற்கும் வாழ்வு அளிப்பதாகும். ந மழைவீழ்ச்சியும் வேந்தன் உயர்வுடைச் 4 செங்கோலாட்சியும் உலகின் காவலுக் குகந்தன. தீயதெல்லாம் மறைக என் றது மறை பொருளாக நன்மை சிறக்க என வாழ் த் து வ து போலாகிற்று. 1 வையகமும்துயர் தீர்தல் உலகிற்கு ஓர் | ஆசீர்வாதமாகும்.
பொது வாழ்த்துக்குரிய கடவுள் நா ! மத்தையும் மதங்களெல்லாவற்றிற்கும் (
மதங்கள் எல்லாம் ஒரே முடிவை அ நாம் அடையும் இலட்சியம் ஒன்றாய் சென்றால்தான் என்ன?

பொதுவான அரன் என்பதனாற் சுட்டு கிறார் சம்பந்தப்பிள்ளையார். அரன், பாவமாகிய இரும்பைத் தேய்ப்பவ னெனவும் மக்கள் மனத்தைத் தம்பால் ஈர்ப்பவன் எ ன வு ம் பொருள்படும் காரணச் சொல்.
ஆகவே இவ்விரு பெரி யாரு ம் ஏழாம் நூற்றாண்டிலே தந்த அருட் பாடல்கள் எந்நூற்றாண்டிற்கும் மத வேற்றுமையின்றித் தமிழர் என்றிருப் போர் எல்லோருக்கும் பொதுவான அருமைப்பாடல்கள் என அ றி ந் து இறைவனை ந ர ம் அவற்றால் துதிப் போமாக.
K. S. பாஸ்கரதாசன்
வர்த்தகம் முதலாம் வருடம்
டையும் பல பாதைகள்தானே? இருக்கும்வரை. எப்பாதையில்
- காந்தி அடிகள்

Page 73
- 4
அன்பும் 3
வித்துவான் பொன் முத்
அன்பு என்பது ஒரு தெய்வீகப் பண்பு. அது தன்னை உடையவரைத் தெய்வத்தன்மையை உடையவராக்க வல்லது. கல்லைப்பிசைந்து கனியாக் குவது போல நான் என்னும் முனைப் பும் அதனின்றும் பிறக்கும் தன்ன லம் பேண லுமாகிய
தன்மைகளை மெல்ல மெல்ல நீக்கி, தன்னைத்துறத் தலும் பிறர் நலமே பேணுதலுமா கிய அரிய பண்பினை அன்பானது ஒருவரிடத்து ஆக்கிவிடவல்லது.
ஓர் ஆடவனும் ெப ண் ணு ம் மணமாகியதும் கணவன் மனைவி என்னும் பெயரைப் பெறுகின்றனர். அக்கணவனும் மனைவியும் மக்களைப் பெற்றதும் அவர் அம்மக்கட்குத் தாய் தந்தையர் எனக்குறிக்கப் படுகின்ற னர். அங்ஙனம் அவர் அப்பிள்ளைகட் குத் தாயும் தந்தையுமாதலோடு அமையாது முன்னறி தெய்வமும் ஆகின்றனர் என ஒளவையார் அரு ளியுள்ளார். ஆடவன், பெண் என் பன இடுகுறிப் பெயர்கள்; தந்தைதாய் என்பன முறைப் பெயர்கள்; ஆயின். முன்னறி தெய்வம் என்பதோ வெனில் அது காரணம் பற்றிவந்தபெயர்.தமிழ் மக்கள் இறைவனைக் கு றி த் து ம் இல்வாழ்க்கையின் இலட்சியம்குறித் தும் கொண்டிருந்த உயரிய கருத்து அன்னையும் பிதாவும் முன்னறிதெய் வம் என்னும் அரிய மொழியில் அடங் கியுள்ளமை சிந்திக்கத்தக்கது.
இறைவன் தனக்கென ஒரு தொழில் செய்வதில்லை; ஆன்மாக்களின் நன் மைகுறித்தே ஐந்தொழிலியற்றுவன்
12

5 -
ம்மையாரும்
நுக்குமாரன் B.0. L. அவர்கள்
ஆன்மாக்கள் தன்னை வணங்குதல் வணங்காமைகளால் முறையே விருப் போ வெறுப்போ கொள்ளாதவன்; தான் ஆன்மாக்களுக்குச் செய்யும் நன் மை குறித்து: ஆன்மாக்களிடமிருந்து பிரதிபயனாக யாதொன்றினையும் எதிர் பாராதவன்; ஆன்மாக்கள் தன்னை மறந்தோ மறுத்தோ வெறுத்தோ இருப்பினும் தான் அவ்வான்மாக்க ளிடத்திற்கொண்ட அன்பிற்சிறிதும் குறைதலின்றி அவ்வான்மாக்களை ஈடே ற்றிய வண்ணமிருப்பவன்: ஆன்மா க்கள் அடையும் இன்பமே தன்னின் பமாயுள்ளவன். இறைவனது இத்த கைய இனிய குணங்களெல்லாம் ஒருதாயிடத்தில் அவள் தன்பிள்ளை மேல் வைக்கும் அன்பு காரணமாக அமைகின்றன. அதனாலேதான் அவள் அப்பிள்ளைக்குத் தாயா தலோடு தெய் வமும் - முதலில் அறியப்படும் தெய் வமும் ஆகின்றாள். அன்டோவடிவான தாயானவள் நினைப்பதும் சொல்வ தும் செய்வதும் பிள்ளைகளின் நன் மைகுறித்தனவேயாகும். அவள் தனக்கென ஓர் இன்பம் ஓர் வாழ்வு கனவிலும் வேண்டுவதில்லை. ஒருகால் தன்பிள்ளை தன்னை மறக்கினும், வெ றுக்கினும் தான் அவற்றை ஒரு கண மாயினும் செய்தலின்றி அப்பிள்ளை யின் நல்வாழ்வு பற்றி நினைப்பதி லும் செயற்படுவதிலுமே தன் வாழ் வைச் செலவிடுகின்றாள். இவ்வித மான ஒப்பற்ற தாய்தந்தையரது அன்பினை இறைவனிடத்திற் கண்ட சைவசமய குரவர்கள் இறைவனைக் குறிக்கு மிடத்து ''அப்பன் நீ அம்

Page 74
மை நீ" என்றும் 'அம்மையே அப்பா” எனவும் சொல்லித் துதிக்கின்றனர்; காணப்பட்ட பொருளைக் கொண்டு காணப்படாத பொருளைக் காட்டி
விளக்குகின்றனர்.
தமிழ்மக்கள் இல்லறவாழ்வில் அன்பு துணையாக மேன்மையெய்தியது போல வே ஆன்மீக வாழ்விலும் அந்த அன் பினையே முதன்மையான சாதனமாகக் கொண்டு இறைமைத் தன்மையை எய் தினர். அங்ஙனம் அன்பினை - அன் பாகிய ஒன்றினையே அகத்திற் கொண்டு இறைவனை அடைய முற்பட்டவிடத் தும் ஒருபாவனை மாத்திரத்தாலன்றி பல பல பாவனையால் அன்பு செய்து இறைவனை அடையலாம் என்பதனைத் தமது வாழ்வின் மூலமும் அருள் வாக்கின் மூலமும் நமக்குப் புலப்ப டுத்தி யுள்ளனர்.
அன்பே சிவமாய் அமைந்த அடியார் வரலாற்றிலே காரைக்காலம்மையார் காலத்தால் மிகமுற்பட்டவர். தந்தை யாகவும் தலைவனாகவும் தோழனாக வும் இறைவனைப் பாவித்து அன்பு செய்த சமயகுரவர்களுக்கும் முற்பட் டவர் அம்மையார். காரைக்காலம் மையாரது இயற்பெயர் புனிதவதி யார் என்பது. ஆயினும் அப்பெயரால் அவரையாரும் குறிப்பதில்லை. காரைக் காலம்மையார், பேயார் என்னும் பெயர்களாலேயே அவர் குறிக்கப்பட் டுள்ளார். பிள்ளைப்பேறே இல்லாத அவர் அம்மை (அன்னை) எனக்குறிக் கப்பட்டதும், அவ்வாறு போற்றப் பட்டதும் சிந்திக்கத்தக்கதோர் அற்பு தவிஷயம். அவரை அம்மையாரென அழைத்தவர் சிவபெருமானே யாவர். பேய்வடிவில் வருகின்ற அவரைப்பார் த்து இவர்யார் என உமையம்மை வினவ இறைவன் "வருமிவள் நம்மைப்

46 ---
பேணும் அம்மை காண்' என அறி முகப்படுத்தியருள், அது முதல் அவர் அம்மையார் எனப் போற்றப் பட லானார்.
இறைவன் அவரை அறிமுகப்படுத் துமிடத்து ''இவள் நம் புதல்வி'' என வோ, 'இவள் நம்மீது பேரன் பினள்” என்றோ வேறொரு முறையாற் குறிக் காது "நம்மைப் பேணும் அம்மை"? எனத் தாய்மைப் பெயர் சூட்டிப் ப ா ர ா ட் டி ய து சிந்திக்கத்தக்கது. ஏனைய அன்பினர் போலக் காரைக் காலம்மையார் இறைவனைத் தலைவ னாகத் தம்மையடிமையாகவோ, இறை வனைத் தந்தையாகத் தம்மைப்புதல்வி யாகவோ, இறைவனைக் காதலனாகத் தம்மைக் காதலியாகவோ பாவித்த லின்றி தாயானவள் தன் பிள்ளையினி டத்து வைக்கும் அன்பினையே இறை வனிடத்துச் செலுத்தி இறைவனிடத் திலிருந்து யாதொன் றினையும் பிரதி பயனாக எதிர்பார்த்தலின்றி, இறைவ னுக்கு நன்மையானவற்றைச் செய் தல், சொல்லுதல் நினைத்தல் ஆகிய வற்றிலேயே தம் வாழ்வைச் செல விட்டவர்.
" இடர்களையா ரேனும் எமக்கிரங்காரேனும் படரு நெறி பணியாரேனும்-சுடருருவில் என் பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க்கு
அன்பறா து என் நெஞ்சு அவர்க்கு
என்னும் அருமைப் பாடல் அவரது தாயன் பினைத் தெளிவுறக் காட்டுகின்றது. இறைவன் தமக்கு நன்மை செய்யாது விடுதலேயன்றித் தமக்கு வந்ததீமை யை அகற்றாது அலட்சியமாயிருப் பானாயினும் அதனை ஒரு பொருளாக மதியாது இறைவனிடத்துக் கொண்ட அன்பில் எள்ளளவேனும் குறைத லின்றி இருக்கும் அம்மையார், பிள்ளை யானது தன் தாய்க்கு நன்மை செய்

Page 75
- 47
யாது விடுதலேயன்றி தாய்க்கு வந்த துன்பத்தை நீக்கவும் நி னை ய ர து அவளை அலட்சியப் படுத்திய விடத் தும் அப்பிள்ளையிடத்து வைத்த அன் பிற் சிறிதும் குறைவு படாத தாயை ஒத்துள்ளமை காணத்தக்கது.
மே லு ம், அ ம்  ைமயாரிடத்தில் அமைந்த த ா ய ன்பு இறைவனது நலன்களை நினைத்தல் பாடுதல், வளர் த்தல் ஆகியவற்றில் அவரைச் செலுத் தியதோடு அவரது * 'நான்'' ''எனது' என்னும் பற்றுக்களையும் அ ற் று ப் போகச் செய்து விட்டது. ஒரு பெண் ணிடத்தில் தாயன்பு முதிர முதிர அவளிடத்தில் முன்னிருந்த 'தான்' என்னும் நினைவு அகல்வது போல அம்மையாரும் அந்த அன்பு முதிர்ச் சியினாலே தாம் ஒரு மானிடப் பிறப் பினர், பெண் வடிவத்தினர் புனித
உண்மையான அன்பை வெறும் வா காட்டிவிட முடியாது: செயலின் மூ

வதியார் எ ன் னும் பெயரினர் எ ன் னு ம் நி னை ப் பு க் க  ெள ல் லாம் நீங்கப் பெற்றிருந்தனர். அத னாலேயே, உலகத்தாரால் இகழத்தக்க தும் அஞ்சத்தக்கதுமாகிய பேய்வடி வத்தினை இறைவனிடத்து வேண்டிப் பெறுவாராயினர். அத்துடன், 'நான்' என்னும் முனைப்பு அற்றமையாலேயே இறைவன்யாது வேண்டும் என்று வினா வியருளியபோது முத்தியின்பத்தை வேண்டாது அன்பே வேண்டும் என் றார். ஞானத்தாலோ யோகத்தாலோ அடையற் பாலதாகிய பற்றற்ற நிலை"நான்" "'எனது" என்பன அற்றநிலை. அன்பினால் அடையலாம் என்பதும், புனிதவதியார் அன்பினால் அம்மை யாராய் ஈற்றிற் சிவமாந்தன்மையை எய்தினார் என்பதும் நாம் நினைவு
கூரத்தக்கன வாகும்.
எய்ப் புகழ்ச்சியின் மூலம் மட்டும் முலமே அதைக் காட்ட முடியும்.
- காந்தியடிகள்

Page 76
''மனிதப் பிறவி
உலகின் கண் வாழும் உயிர்கள் யாவும் பல பிறவிகள் எடுத்தாலும் மனிதப் பிறவியிலேயே பிறவிகளின லாய பயனை அனுபவிக்கின்றன என் பதை மாணிக்கவாசகரின் பின் வரும் பாடலின் மூலம் அறியலாம். "புவனியிற் போய்ப்பிற வாமையில் நாள் நாம்
போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி சிவனுய் யக் கொள்கின்ற வாறென்று நோக்கித் திருப்பெருந் துறையுறை வாய்திருமாலாம் அவன் விருப்பெய்தவும் மலரவ னாசைப்
பட வுநின் அலர்ந்த மெய்க்கருணையு நீயும் அவனியிற் புகுந்தெமை யாட்கொள்ள வல்லாய்
ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே'' என்பதிலிருந்து தேவ உலக மக்கள் விருப்பமும், ஆசையும் ஒருங்கே உந் தப் பெறவும், மக் க ட் பிறப்பை மதித்து அருள் பாலிப்பவனே! உனது க ரு ணை  ைய என் னென்பது! என வாழ்த்துகின்றார். மானிடராக இப் பூவுலகில் பிறந்து வாழ்ந்து காட்டிய அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஞானசம்பந்தர் முதலிய சமய குர வர்களும் ஏனைய சந்தான குரவர் களும் இறைவன் மனிதப்பிறவியை உய்விக்க எவ்விதம் காட்சி கொடுத்து அருள் பாலித்தார் என்பதை உலகுக் குணர்த்தினரன்றோ?
இறைவன் ஆன்மாக்களது வடிவி லேயே அவர்களுக்கு உய்த்துணரும் நிலையில் நின்று அருள் செய்தார் என்பதை திருப்பெருந்துறையில் குரு வடிவாகக் கு ரு ந்  ைத மர நிழலில் இருந்து மாணிக்க வாசகரை ஆப் கொண்டமை.

48 -
பும் வேண்டுவதே''
''அன்றே எந்தன் ஆவியும் உடலும்
உடைமை எல்லாமும் குன்றே அனையாய் என்னை ஆட்கொண்ட
போதே கொண்டிலையோ? இன்றோர் இடையூறு எனக்குண்டோ
எண்டோள் முக்கண் எம்மா னே நன்றே செய்வாய் பிழை செய்வாய்
நானோ இதற்கு நாயகமே''
என்பதிலிருந்து நாம் அறியக்கிடக் கின்றது. அடியார்களுக்கு எளியவனா கிய இறைவனிடம் நாம் படும் துன் பங்களை எடுத்துக் கூறி அவரது உத வியை நாடித் துன்பத்தைத் துடைக் கலாமென்னும் தளராத நோக்கங் கொண்டு
யாரொடு நோகேன் யார்க்கெடுத்துரைக்கேன்
ஆண்டநீ அருளிலை யானால் வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருக என்று அருள்புரியாயே” என்று இவ்வாறு மாணிக்க வாசகர் பாடி யதிலிருந்து பாரிலுள்ளோர் அறிய லாம்.
மனிதப்பிறவி எடுத்து வந்த திரு ஞான சம்பந்தருக்கு ஞானப்பால் ஊ ட் டி உய்வித்தமை வியக்கற்பா லதே. அதனாலன்றோ
''என் உள்ளங்கவர் கள்வன்" என்று அன்பு கூர ஞானசம்பந்தர் பாடிப் பரவசமடைந்தார். இவ்வாறு தாயினும் நல்ல தலைவனைச் சிவபுரா ணத்தில் ''தாயிற் சிறந்த தயாவான தத்துவனே'' என்று புகழ்ந்து பாடிப் பணிந்துள்ளார், இறைவன் மனிதர்க ளையே உ ய் வி க் க வந்தமையால் அவரை "அப்பன் நீ, அம்மை நீ

Page 77
- 49
அன்புடைய மாமனும்
மாமியும் நீ'' என்று அழகாக அன்பு மேலீட்டால் பாடினார்கள்.
திருநாவுக்கரசர் சிதம்பரத்தில் எம் பெருமானது திருநடனக் காட்சியைக் கண்டு அங்கமங்கமாக இரசித்துப் பாடிப் பரவசமடைந்தமை பின் வரும் பாடலில் இருந்து அறியலாம். * 'குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற்
குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவழம் போல் மேனியிற்
பால்வெண்ணீறும் இனித்தமுடைய எடுத்தபொற்பாதமும்
காணப்பெற்றால் மனித்தப்பிறவியும் வேண்டுவதே இந்த ,
மானிலத்தே' ' இப்பாடலிலே நாவுக்கரசர் நடராச ரின் திருநடனக் காட்சி காண்பதற்கு இந்த மானிடப் பிறவி கிடைத்தது. இப் பி ற வி  ைய மதிக்கிறார்களில்லை என்ற ஆவேசமிகுதியால் ""மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மானி லத்தே” என்று ஆணித்தரமாகக் கூறி யமை காணலாம்.
''கன்மனவீர் கழியுங் கருத்தே சொல்லிக்
காண்பதென்னே?
என்று வேறு குறை கூறி முறைப் பட்டுள்ளார். வீணாக இவ்வுலகத்தில் மாயையின் வலையில் சிக்கிக் காலத் தைப் போக்க வேண்டாம். சிதம்பர தரிசனத்தை மேற் கொண்டு இறை வன் பாதம் அடையுங்கள். அவரு

டன் இரண்டறக் கலந்து விடுங்கள் என்று கூறுகிறார்.
சுந்தரமூர்த்தி நாயனார் இ வ் வு ல க இன்பத்தை விரும்பியமையால் அவ ருக்கு இவ்வுலகப் பிறப்பை அளித் தார். பின் சுந்தரரின் வே ண் டு கோட்படி அ வ ரை அழைத்தார். அப்போ சுந்தரர் இறைவனை 'பித்தா' என்று அன்பினால் பாடிப் பணிந்தமை = 'பித்தாப் பிறை சூடி'' எ ன் னு ம் முதலையுடைய பதிகத்திலிருந்து அறி யலாம், இறைவனை அடையும் பக்தி மார்க்கம் அன்பு வழியே என்பதை உணர்ந்த சமய, சந்தான குரவர்கள் இறைவனைப் பலவாறு எண்ணத்தில் வைத்துப் பூசித்து வந்தமையைக் காண லாம்.
''முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்” எ ன் னு ம் பதிகத்தில் நாவுக்கரசர் இறைவனைக் காதலனா கப் பாடியமை காணலாம்.
மனிதப் பி ற ப்  ைப உய்விக்கும் வழியைக் காட்டி அருளுகின்ற தன்மை பொருந்திய இறைவன் பல வடிவ மெடுத்து அருள் பாலிப்பார். அவர் தம் துணைவியைப் ப ர க ம ா ய் க் கொண்டு இப்பூவுலக வ ா ழ்  ைவ வாழ்ந்து காட்டியவர். எனவே வள் ளுவன் வ கு த் த இல்வாழ்க்கை வாழ்ந்து இறைவனை அன்பு வழியா கப் பணிந்து அவனருள் பெறுவதற்கு இம்மானிடப்பிறவியைவிட வேறொரு வழியில்லை என்பதுறுதி.
செல்வி N. வேலுப்பிள்ளை வர்த்தகம் இரண்டாம் வருடம்

Page 78
இசையில் இணை
4 " பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
பாலிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி'' நாத ஜோதியான இறைவனை இவ் விதம் பாடிப் பரவசமடைந்தார் நால்வரில் ஒருவரான நாவுக்கரசர். இந்தப் பாவில் பதிந்திருக்கும் பக்தி யும், அது எடுத்துக் கூறும் தத்துவ மும்தான் என்னே! பண்ணிசையாகப் பரிணமித்துள்ள இறைவன், அதனைப் பாடுவோரின் பாவங்களையும் அறுத் துத் தனது பதமலரையே நாம் அடையும் பாக்கியமும் தந்து விடுகி றான். இதற்கும் மேலாக நாம் அடைய வேன்டிய பெரும் பேறும் ஒன்று உண்டோ?
மெய்ஞ்ஞானப் பொருளான இறை. வனை அடைவதற்கு பல முறைகள் கையாளப் படுகின்றன. இதிலெல் லாம் இனிமையானது இலகுவானது என்று நாம் நிச்சயமாகக் கூறக் கூடி யது இசையால் இறைவனை அடை யும் முறையாகும். இசையில் இணைந்து நிற்கும் இறைவனை , இ  ைச யு ட ன் பாடும் போது அந்த இசையில் ஒரு லயிப்பு ஏற்படுகின்றது. அதுவே இறை வனிடத்து இர ண் ட றக் க ல க் கு ம் நிலைக்குக் காரணமாகின்றது. இசை யுள் இறைவன் கட்டுண்டு கிடப்பத னால் இசை முறை வழிபாடு எம்மை அறியாமலேயே எமக்கு இறையருளை ஈந்து விடுகின்றது.
பேரின்ப வீடு பெற்ற எமது சமயப் பெருந்தலைவர்கள் நால்வரும், அவர் களைத் தொடர்ந்து மேலும் பல பக் தர்களும் இறைவனுக்கு எண்ணற்ற தேவார திருமுறைப் ப ா க் க ளை ப்

50 - எந்த இறைவன்
பாடியே அவன் திருப்பாதம் அடைந் துள்ளனர் என்பது யாவரும் அறிந்த உண்மை. இதற்கும் மேலாக அப் பக்தர்கள் ''இறைவன் இ  ைச யி ல் இணைந்தவன்' என்பதைப் பல சந்தர் ப்பங்களில் தமது பாடல் மூலமே வெளிப் படுத்தி யுள்ளனர்.
• 'மாதர்ப் பிறைக் கண்ணியானை
மலையான் மகளொடும் பாடி.......'
என்று தொடங்கி ''கண்டேன் அவர் திருப்பா தம் கண்டறியாதன கண்டேன் ' ' என்று பாடுகிறார் அப்பர் சுவாமிகள். இதிலே இறைவனைப் பாமாலை பாடி யதனால், காணக்கிடைக்காத அவன் திருப்பாதத்தைக் கண்டு விட்டதா கப் பாடுகிறார். இசையில் அல்லவா இறைவன் வாசம் செய்கிறான். 'பண்ணும் பதமேழும் பலவோசைத்
தமிழவையும் -...? என்ற தேவாரத்தின் முடிவிலே ''விண்ணும் முழுதானான் இடம் வீழிம் மிழலையே” என்றுபாடிய திருஞானசம்பந்தர், பண் ணாக இருக்கும் இறைவனின் இடம் வீழிம்மிழலை என்று காட்டியிருக்கி றார். 6 பக் தராய்ப் பணிவார்கள் அடியார்க் கும் அடியேன் பரமனை யே பாடுவார் அடியார்க்கும் அடியேன்...'' இப்படியாக சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடுவதன் அர்த்த மென்ன? பரமன் பணி செய்யும் பக்தருக்கு மட்டுமல்ல அவனின் புகழ்பாடும் அடியவர்க்குமே தான் அடிமை என்று காட்டுவதன் மூலம் இறைவனைப் பாடுபவர்களும் அவன் இணையடி பெற்று விடுவார் கள் என்பதைக் காட்டுகின்றார்.

Page 79
-'பண்ணுளிராய்ப் பாட்டு மானீர்
பக்தர் சித்தம் பரவிக் கொண்டீர்...'
என்று சுந்தரர் பாடும்போது பண் ணும் பாட்டுமாக இருக்கும் இறை வன் அந்த நிலையிலேயே பக்தரின் சித்தத்திலும் பரவி விடுகிறான் என்று விளக்குகின்றார். பண் இசை வடிவான இறைவன் அந்த நிலையில் பக்தரின் சித்தம் பரவுவதில் வியப்பேதுமில்லை. திருவாசகத் தேன் அளித்த மணிவாச கர்,
8 "பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால் போக்கிலன் வரவிலன் என நினைப்புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறியோம் உனைக் கண்டறிவாரை .'' என்று பாடும் போது, எதனைக் கூறு கிறார்? கீதங்கள் பாடுவதாலும், அத னுடன் ஆடுவதாலுமே, இசையில் இணைந்துவிட்ட இறைவனையும் கண் டதாக இருக்குமேயல்லாது, வேறு வகையில் இறைவனைக் கண்டவர்களை நாம் கேள்விப்படவில்லை என்று கூறு கிறார். இது இசையில் இறைவன் இருப்பதையும், இசையால் அ வ னை அடை வ  ைத யு ம் காட்டுகின்றதல் லவா.
'' நாடும் பொருட் சுவை சொற்சுவை தோய்தர
நாற்கவியும் பாடும்பணியில் பணித்தருள்வாய்
அம்மா!'?
என்று சகல கலா வல்லி ய ர கி ய சரஸ்வதியிடம் குமரகுருபர சுவாமி கள் மனமுருகிக் கேட்கிறார். நேரே பேரின்ப நிலை கேட்காது, அதற்கு வழிகாட்டுவதான ப ர டு ம் பணி யையே பக்தியாகக் கேட்கிறார். பாட் டினிலே இறைவன் பரவசம் அடைந்து விடுவதை இது விளக்குகின்றது.

5)
''ஆடும் பரிவேல் அணிசேவலெனப்
பாடும் பணியே பணியாயருள்வாய் .." என்று குமரன் முருகனைப் பாடிப் பணிந்த பக்தர் அருணகிரிநாதர் கேட்கிறார். இசையாக நிற்கும் இறை வனை, இசையாலேயே அடைந்து விட் டார் இந்த மெய்யன்பர். " " நாத ஒளியே நற்குண சீலா
நாரியிருவோரைப் புணர் வேலா சோதி சிவஞானக் குமரேசா தோமில் கதிர் காமப் பெருமாளே”! என்றும்,
''நாதவிந்து கலாதி நமோ நம! * என்றும் வரும் திருப்புகழ்களில் எம் மிறைவன் நா த ரூபனாக இருப்பது உணர்த்தப்படுகின்றது.
“பாடுகின்ற பனுவலோர்கள் தேடுகின்ற செல்வமே
நாடுகின்ற ஞானமன்றில் ஆடுகின்ற
அழகனே...!! இப்படி தாயுமான சுவாமிகள் இறை வனை விளிக்கின்றார். பாடுகின்றவர் கள் தேடுகின்ற செல்வம் இறைவன் என்று இவர் குறிப்பிடும் போது இறைவன் பாட்டிலே பொதிந்திருப் பவன் என்பதையும் ப ர ட் டி னா ல் பெறக்கூடியவன் என்பதையும் காட்டி விட்டார்.
* 'அருட்சோதி தெய்வம் எனை ஆண்டுகொண்ட
தெய்வம் 5 என்று அழகாகப் பாடிய இராமலிங்க சுவாமிகள், * தெருப்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும்
தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே
தெய்வம்'' என்று முடிக்கிறார். இதன் விந்தை என்ன? சிற்சபையில் காட்சிதரும் சிவ

Page 80
- 52
பிரான் தனது தெருப்பாடலை விரும்பி யதனால் தன்னையும் சிவமயமாக்கி விடுவாராம் என்று இப்பக்தர் பாடு கிறார். ஆம்! இசையினாலே இறைவ னுடன் இரண்டறக் கலந்து விடுவ தைத்தான் இவர் குறிப்பிட்டு இப்ப டிப் பாடியுள்ளார்.
வீணைக் கொடியுடைய வேந்தன் இராவணன் அரக்கர் கோனாக இருந்த போதும் இசைப்பிரியனாகையினால் அந்த இசையினாலே இசைவடிவான இறை வனையே கொள்ளை கொண்டு பல அருளையும் பெற்றிருப்பது ந ா ம் மறுக்க முடியாத ஓர் உண்மையா கும். இசையாக நிற்கும் இறைவன் அந்த இசையிலே மயங்குவதும் உண்டு.
• நல்லிசை ஞானசம்பந்தனும் நாவினுக்கரசனும் பாடிய நற்றமிழ் மாலை...... 13 என்று பாடிய சுந்தரமூர்த்தி சுவாமி கள். * 'கல்லியல் மனத்தைக் கசிவித்துக்
கழலடி காட்டி என் களைகளை அறுக்கும் வல்லியல் வானவர் வணங்க நின்றானை வலிவலந்தனில் வந்துகண்டேனே'' என்று முடிக்கின்றார். இதிலே இறை வனைக் கண்ட ஆனந்தத்துக்குக் கார
செல்வி

ண மானது ஞானசம்பந்தரும், நாவுக் கரசரும் பாடிய பாமாலைகளே என் றும், அவற்றினால் தனது கல்மனம் கசிந்து களைகளும் அறுபட்டு விட்டன என்றும் பாடுகிறார். என்னே இசை யின் வலிமை! அந்தவலிமை எதனால் வந்தது? அதனுள் இருக்கும் இறை யருளினாலேயே,
நாத சொரூபனான இறைவன் இசை யில் இருப்பவன் என்பதை இப்படி பெல்லாம், அவன் பதம் அடைந்த பக் தர்கள் விட்டுச் சென்ற பாக்களின் மூலமாக அறிகிறோம். பண்ணுடன் பாடும்போது, அதனுடன் இணைந் திருக்கும் இறைவனும் எமது மனதில் பதிந்து விடுகிறான். இசையில் லயித்து விடும் நாம் அதனூடு நிற்கும் இறை வனிலே லயித்து விடுகிறோம். இது தான் பேரானந்த நிலை. ஆன்மா இறைவனுடன் இரண்டறக் கலந்து நிற்கும் பேரின்பநிலை. இசையில் மயங்கி, இசையாகவே தோன்றி இறை வன் எம்மை ஆட்கொள்ளும் இப் பெரும்பேறு இசையினாற்றான் பெறக் கூடியது. எனவே இறைவன் புகழை இசையுடன் பாடி அவனது இசைமய மான இணையடிகளை அடைவோமாக.
கோணேஸ்வரி பொன்னம்பலம் விஞ்ஞானம் 2 -ம் வருடம்

Page 81
சாபம் பலி
'... அரிது அரிது மானிடராகப் பிறத் தல் அரிது...'' 84,00,000 எனும் எண் ணிச்கை யுடையதாகச் சொல்லப்படும் யோனி பேதங்களுக்கு ளெல்லாம் மேலானது மானி டப் பிறவி என்பது. மானிடர்க்கென விஷேட மாகவுள்ள பகுத்தறிவென்னும் ஆ றா வ து அறிவினைக் கொண்டு யாவரும் நன் குணரக் கூடிய ஒன்றாகும். இங்ஙனம் மேலானதாகக் கருதப்படும் மானிட ரின் உளத்திற் தோன் றும் அபிலாசைகளோ அனந்தம். ஆனால் அனுபவிக்கும் அபிலாசைகளோ அற்பம். அதி லும் யாவரும் ஒரே விதமான போகங்களை அனுபவிப்பது மில்லை. ஒரே அளவாக அனுப விப்பதுமில்லை. ஒரே காலத்தில் அனுபவிப்ப துமில்லை. ஏன்? எமது சைவசமய நூல்கள் நன்கு விடை பகருகின் றன.
நாம் இவ்வுலகின்கண் அனுபவிக்கும் இன்ப துன்பங்களும் அவற்றை அனுபவிப்பதற்குத வியாக அமையும் இடம் பொருள் ஏவல்களும் நாம் ஒவ்வொருவரும் பூர்வ ஜென் மங்களிற் செய்து கொண்ட நன்மை தீமைகளின் பய னாகப் பெறப்படுவதே என்பது எமது சைவ சமயத்தின் அடிப்படையான கொள்கையாகும். இக்கொள்கையானது அநேக சம்பவங்களா லும் கதைகளாலும், சமயாசாரியர்கள் வரலாறுக ளாலும் நீதிப்பாக்களாலும் நன்கு உணர்த்தப் பட்டு நிலைநாட்டப்பட்டுள்ளது. குறிப்பாகச் சித்திர புத்திர நாயனார் கதை, அ தி ல் இட ம் பெறும் அமராவதி கதை, சிவராத்திரி புரா ணம், ஏகாதசிப் புராணம், பிள்ளையார் புரா ணம், திருவாதவூரடிகள் புராணம் போன்ற நூல்களில் நன்கு வலியுறுத்தப்பட்டிருப்பதை அவற்றைக் கற்போர் உணராமலிருக்க முடி யாது. இன்னும் 64 நாயன்மார்கள் சரித்திரம், 28 ஆகமம், 18 புராணம், 6 அங்கம், 4 வேதம் ஆகிய பொக்கிசங்கள் நிறைய எடுத்துணர் த்துகின்றன. மேலும், -
''தாம் தாமுன் செய்தவினை தாமே
யனுபவிப்பர்'' ''செய்தீவினையிருக்கத் தெய்வத்தை
நொந்தக்கால் எய்தவருமோ?' ' ' தவமும் தவமுடையாருக்காகும்''
14

க்கின்றது
எனும் சிறு கூற்றுக்கள் அடிக்கடி வாழ் வில் அடிபடுகின்றன.
இவற்றை எல்லாம் ஆராய்ந்தறியும் சிலர் நாம் அனுபவிப்பது மாத்திரமன்றி அன்றாடு செய்யும் வினைகளும் முன் செய்த கன் மங்க ளின் பாற்பட்டதே எனத் தவறாக எண்ணு கின்றனர். மாணிக்கவாசகருக்குச் சிவபெரு மான் குருமுகூர்த்தத்துடன் எழுந்தருளி வந்து திருப்பெருந்துறையில் திருவடி தீட்சை செய்
தபோது உபதேசித்ததாவது. ** களிம்பு தோய்ந்த செம் பென வுனை
மருவுங்கருமை கூர் மலங் கண்டது கலக்கும் பளிங்கு போன்ற துன் தன்மை அம்மலத்தின்
பற்றினாலுடல் பல வெடுத்துழன்றாய் வளங்குலாம் புவனந்தொறும் செய்யுமுன்
வல்வினைப்பயன் வருமுறை நெறியே அளந்து நாம் தர நுகர்ந்தும் மேல் நுகர்வு
மாக்கியே திரிந்தனை மனவழுக்கால்
இதிலிருந்துணருவதாவது செம்புள்ள ஞான்றே அதனோடு களிம் பும் கலந்திருப்பது போன்று எம்முடன் ஆண வம் எ னு ம் ம ல ம் கலந்திருக்கின்றது. அதனால் எமது தன்மையானது கண்டவற்றை நேரே எடுத்துப் பிரதி விம்பிக்கும் கண்ணா டியின் தன்மை போன்றது, அதாவது காணும், கேட்கும், மணக்கும், சுவைக்கும், உணரும் எல்லாவற்றிலும் ஆசை உண்டாகின்றது. - இதனால் நான், எனது எனும் அகங்கார மமகாரங்க ளுண்டாக அதனால் அழுக்காறு, அவா, வெகுழி எனும் முக்குற்றங்கட்கு மு ள் ள ா கின் றோ ம், இதனால் கொலை, களவு, கள், காமம், குருநிந்தையாகிய ஐந்து மாபாதகங்களைச் செய்கின்றோம். இவற்றால் பல பிறவிகள் உண்டாகின்றன. ஒவ்வொரு பிறவியிலும் இவ்வளவும் அனுபவிக்கக்கடவ தென இறைவனால் அளவை செய்து வழங் கப்படுகின்றது. ஆனால் நாமோ அவற்றை நன்கு அனுபவிப்பதோடு நிற்பதில்லை "'மேல்

Page 82
நுகர்வு மாக்கியே திரிகின்றோம்.'' அதாவது மேலும் அனுபவிப்பதற்கான கன்மங்களைச் செய்கின்றோம். ஆகவே நாம் வினைகளை அனுபவிப்பதுடன் விடுவதில்லை. மே லு ம் மேலும் புதிய வினைகளையும் இயற்றுகின்
றோம்.
இது எல்லாம் புராணக் கதை என இவ்விஞ் ஞானவுலகின்கண் நினைக்கலாம். வாதாடலாம், பர வாயில்லை என ஒருபுறம் விட்டுப் பிரத்திய ட்சமாக இவ்வுலக போகங்களை ஆராய்வாம். நாம் ஒன்றை நினைக்க அதன் விளைவு இன் னொன்றாகின்றது. ஒன்றைப்பெறவும் அனுபவிக் கவும் பலமுறை முயல்கின்றோம். இறுதியில் ஏமாற்றமும் கிடைக்கின்றது. இறுதியில் எம்மை அறியாமலே எல்லாம் 'தலைவிதி' 'என் பலன் அப்படியாயிற்று' 'எல்லாம் அவன் செயல்' என எமது நாவே கூறிவிடுகின்றது. இன் னும் எத்தனையோ எதிர் பாராத சம்பவங்கள் நடை பெறுகின்றன. காலையில் சந்தைக்குப் போகின்றவர் வீடு திரும்பமுன் ஆபத்துக் குள்ளாகின்றார். ஏன்? பாலை தீவிற்குப் படகில் போனவர்கள் கட லில் அமிழ்ந்தினார்கள் அல் லவா? இவர்களெல்லாம் என்னென்ன திட்டங் களுடன் சென்றார்கள். எல்லாம் என்னவா யிற்று? இன்னும் ஒருவர் குற்றம் செய்கின் றார். இன் னொருவர் சிறைத்தண்டனை அனு பவிக்கின்றார். இப்படி எவ்வளவோ ஆராயலாம். இவற்றிலிருந்து நாம் முற் பி ற வி க ளி ற் செய்த வினைகளின் பாற்பட்டன வென்பதும், புதிதாக வினைகளைச் செய்கின்றோம் என்பதும் நன்கு புலனாகின்றன.
வினைகளோவெனிற் சடம். அவை அறிய வும் கூடவும் மாட்டா. அப்படியாயின் ஒருவர் செய்யும் வினை எவ்வாறு பின் அனுபவிக்க வேண்டியதாக வருகின்றது?
வினைகளைப் புரிபவர்களோ உய்த்தறியவும் வைத்திருக்கவும் விடவும் கூடியவர்கள். உள் ஆராய்வுகளின் படி ஒருவர் தமது கவனத் திற் கெடுத்துக் கொள்ளும் விடயங்கள் யாவும் இசைத்தட்டில் பாட்டுப் பதிவது போல் மூளை யிற் பதிகின்றன வென்றும்,

4 -
வேண்டும் போது அவற்றைத் திருப்பி எடுக்க முடியும் என்றும் அறிகின்றோம். ஒருவர் தாம் செய்யும் நன்மைகளாற் சந்தோஷப்படு கின்றார். தீமைகளை மேற் கொள்பவர்களும் அவ் வாறு துன்பத்துக் கிடை யாகின்றனர். நன்மைக ளிலும் பார்க்கத் தீமைகள் கூடுதலாகத் தாக்கு கின் றன. இத்தாக்கங்களின் பேறாக அவற்றை அனுபவிப்பதற் கேற்றவாறு. மீளவும் உடல் உண்டாகின்றது. அதுவே) மறுபிறவியாகும். இவ்வுண்மைகளும் விஞ்ஞான ரீதியில் ஏற் றுக்கொள்ளப்படக்கூடிய நாள் அதிகதூரத்தி லில்லை.
நாம் அனுபவிக்கும் வினைகளின் பிரதிப் லிப்பாகிய சுகபோகங்கள் முன் செய்த தீவினை களால் மட்டும் எம்மைச் சார்வதில்லை. நீதியாய் நடத்தல், நன்மை செய்தல், செவ்வனே தன் தன் கடமைகளைச் செய்தல் ஆகிய சிறப்பி யல்புகளை யுடையவர்கள் மற்றவர் களிட மிருந்து பெறும் வாழ்த்துக்களாலும் ஆசீர்வதிப்புக்க ளாலும் வந்து சாருகின்றன. 'எல்லாம் நலமா கட்டும்' 'எல்லாம் வெற்றியா குக' 'சகலபேறுக ளும் உண்டாகுக' 'சீரும் சிறப்பும் பெறுவா யாக' 'நீடுழி வாழ்க' போன்ற இன்னோரன்ன வாழ்த்துக்களும் ஆசிகளும் இன்முகத்துடன் மனம் கனிந்து நல்கப்படுவதால் இவற்றின் சுகபோக அனுபவங்கள் மறுபிறவியின் கண் வந்து சேருகின்றன. நல்ல புத்திரப்பேறு, தொழிற்பேறு, கல்விப்பேறு, உடல் அழ த, இனிய குரல் திடிர் அதிஷ்டம், நல்ல குடும் பம் இன்னோரன்ன - யாவும் முற்பிறப்பில் பெரியோர்களிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஆசிகளினதும், வாழ்த்துக்களினதும் பிரதிப் லிப்பேயாகும்.
வாழ்த்துக்களைப் போலவே ஒருவர் மனம் எரிந்து வருந்திக்கூறும் தீய வார்த்தைகளும் மறுபிறவியில் அனுபவிக்க வேண்டிய வினை சளாகின்றன. தகாதசெயல்களினாலும் அக்கிர மங்களாலும் துன்புறுத்தப்பட்டவர்கள் அத்துன் பத்தைச் செய்தவர்களை விளித்து 'நாசமாய் போ வாய்' 'துலைந்துபோவாய்' 'கண்கெடுவாய்' 'தாலியறுப்பாய்' போன்ற விரும்பத்தகாதவார்த் தைகளினால் திட்டுகின்றார்கள். 'காகம் திட்டி

Page 83
மாடு சாதமா' எனஎண்ணிக் கொண்டும், அத னைப் பொருட்படுத்தாமலும் தீமை யிழைத்த வர்கள் செல்கின்றார்கள், அவர்கள் இறந்த பின் மறு பிறப்பில் முன் பெற்ற திட்டுக்களால் எற்பட்ட சாபங்கள் அனுபவிக்க வேண்டிய வினைகளாக வந்து பிரதிபலிக்கின்றன. இப் பிரதிபலிப்பால் அற்ப ஆயுள், குடும்ப இழப்பு, புத்திர விருத்தியின்மை, விபத்துக்கள், அங்க பங்கம், வறுமை நோய் போன்ற துன்பத்துக் குரிய அனுபவங்களை பெறுகின்றார்கள். இந்தி ரன் உடல் முழுவதும் 1000 யோனிகளைப் பெற்றதும், அகலிகை கல்லானதும், சாபங் களின் பிரதிபலிப்பே. தான் பெற்ற சாபத் துக்குப் பயந்தல்லவா சீதையைத் தீண்டாதிருந் தான் இராவணன், கைலாய மலையைப் பெயர்த் துத் திக்குயானைகளை வென்று பல வரங்களை யும் பெற்ற இராவணன் கூடத் "தலை வெடித் துச் சாவாய்" என ஒரு பெண்ணிட்ட சாபத் துக்குப் பயந்து பின் நின்றானென்றால் சாபங்க ளின் வலிமைதான் என்னே!
மனிதர்கள் மாத்திரம் சாபமிடுவது அல்ல பறவைகள், மிருகங்கள், பிராணிகள் கூடச் சாபமிடும் சக்தி படைத்தன. பறவைகள் விலங் கினங்கள் யாவும் மக்களால் வருத்தப்படும் போதும் - கொலைசெய்யப் படும் போதும் வருந்தித் துயருறுகின்றன. இத்துயர் சாபமாக மாறி அக்கொலை துன்புறுத்தல்களைச் செய்த வர்களைத் தொடர்ந்து. அவர்களின் மறுபிறப் பில் வருத்துகின்றது. இது பற்றியே வள்
ளுவரும் * * கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும் ' ' என்றார் இதிலிருந்து உயிரினங்கள் எல்லாம் எம்மைத் தொழுது வாழ்த்த வேண்டும், அவ்வாழ்த்தி னால் நாம் நன்மையடையலாம் என்பது புல னாகின்றதல்லவா? வாழ்த்துப் பிரதிபலிக்கு மாயின் அவையிடும் சாபங்களும் எம்மேற் பிரதிபலிக்குமென்பது சொல்லாமலேவிளங்கும். மேலும், '' அம்மாவெனவலற ஆருயிரைக் கொன் றருந்தி இம்மானுடரெல்லாம் இன்புற் றிருக்கின்றார்" அம் மா வெனும் சத்தம் கேட்டகன்ற
மானிடர்க்கும் பொய்மா நரகமென றால் புசித்தவர்க்கென்
சொல்வதே''

என அழகாகக் கூறியிருப்தை நாம் உய்த்து ணரின், கொலையினால் ஏற்படும் சாபம் பிரதி பலித்து மறு பிறவியில் வருத்தும் என்பது கனகு புலனாகலாம்.
இனிப் பிராணிகள் துன்புறுத்தப் படுதலை பும் அதனால் எம்மேற் பிரதிபலிக்கும் சாப் வினைகளையும் சிறிது ஆராய்வாம். அங்காங் கம், சரிரக்குறைவு, தொழுநோய் முதலானவற் றையுடைய மானிடர்களிடும் சாபம் எவ்வ ளவு வலியுடையதோ, பெரியோர்களிடும் வாழ்த் துக்களும் ஆசிகளும் எவ்வளவு சக்தியுடை ய னவோ அவற்றிலும் பன்மடங்கு சக்திவாய்ந்த வை ஓரறிவினாற் குறைந்த ஐயறிவுடைய பிராணிகளிடும் சாபங்கள். பின்வரும் உதார ணங்களும் உலக அனுபவங்களும் அதனை எமக்கு நன் குணர்த்த நாம் அறிவோமாக. - நெல்லுண்ண வயலில் வரும் கிளிகளைச் சுட்டு வருத்திக் கொலை செய்கின்றார்கள் சிலர். இறக்கும் தறுவாயிற் துன்புற்று வருந்துகின் றன அக்கிளிகள். இத்துயர் சாபமாகிப் பலிக் கின்றது. இதனால் அந் நிலத்தில் அதன் பின் விளைவுகுன்றுகின்றது. எவ்வளவுமுயற்சித்தும் முன்போல் விளைவு பெறமுடியாமல் இருக்கின் றது. இ வ வு ண்  ைம  ைய க் க ம க் க ா ரர்கள் அறிவார்கள். இதனாலன்றோ கிளிகள் எவ்வள வு நட்டம் விளைத்தபோதும் அவற்றை வருத்தவோ கொல்லவோ அதிகமான கமக்காரர் கள் முற்படுவதில்லை.
கல்லால் எறிவாங்கிய நாய் நோவுற்று வருந்த அது சாபமாகி எறிந்தவரைத் தொ டர்ந்து அவரின் மறு பிறப்பில் அவர் நடந்து போகும் போது எதிர் பாராத விதத்தில் பனம் பழம் விழுதல், தேங்காய் விழுதல், மரம் முறிந்து விழுதல் போன்றன அவர் விட்ட கல்லெறிக் குச் சமானமாகக் கிடைக்க அதனால் நோவுற்று அங்கபங்கமடைந்து வரும் துகின்றார். அவ்வாறே ஆமையை உண்பவர் கள் அதனை பிடித்து உயிருடன் நெருப்பிலிட் டுச் சுடுகிறார்கள், ஆமையிட்ட சாபத்தால் மறுபிறப்பில் தமக்குத்தாமே தீமூட்டுகிறார்கள். முற்பிறவியில் தண்ணீர் குடிக்கவரும் விலங் குகள் பறவைகளைக் கொன்றவர்களை அவ்வி லங்குகள் இட்ட சாபம் தொடரப் பெற்ற தால் இப்பிறவியில் நீர் நிலைகளில் விழுந்து தற்கொலை செய்கின்றார்கள். ஆணும் பெண்

Page 84
றுகிறார் தண். டாக்!
ணுமாக வந்த பிராணிகளைக் கொன்ற சாபம் தொடரப் பட்டவர்கள் இப்பிறவியில் காத லித்து அக்காதல் நிறைவேற முன் தற் கொலை செய்து கொள்கின்றார்கள். தூண்டிலில் அகப்பட்ட மீன்கள் செய்த சாபத்தால் அத னைப்பெற்றவர்கள் மறுபிறவியில் எவருடைய தூண்டுதலுமின்றித் த ா மே செடிற்காவடி, தூக்குக்காவடி, முள்மிதிதடிக் காவடி போன் றவற்றை எடுக்கத் தூண்டப்படுகிறார்கள், மெய் யெல்லாம் வேலாற் குத்துகின்றார்கள். இன் னும் சிலர் உண்ணும் போது உணவு விக்கி இறக்கின்றார்கள். ஆடுமாடுகளைக் கட்டி நேரத் துக்குத் தண்ணீர் கொடாது விட அவை யிடும் சாபத்தால் வைத்திய சாலையில் குடிக்க நீர் கொடுக்கக்கூடாதென டாக்டர் கூ றவும் தாகத்தால் வருந்தி தண்ணீர் கொ ண்டுவா என்று கதறுகிறார்கள், கூட்டிலிட்ட கிளி வீட்டில் வைக்கப்பட்டு உணவூட்டப் பட்டபோதும் வெளியேற முடியாது வருந்திச் சாபமிடுகின்றது. இதனால் கூட்டிலடைத்தவர் மறுபிறப்பில் தவறு செய்யாமலே சிறையில் வைக்கப்படு கின்றார். பட்சிகளின் கூட்டைப் பிரித்தவர்களையும் தேன்கூட்டை உடைத்த வர்களையும் அச்சாபம் தொடர மறுபிறப்பில் குடியிருக்கும் வீடுவாசல்கள் நெருப்பாலும் நீராலும் அழிவுபட குந்தியிருக்கக் குடிசை யின்றித் தவிக்கின்றார்கள். வெட்டியும் குத் தியும் கொலை செய்த சாபங்கள் தொடரப் பெற்றவர்கள் மறு பிறவியில் இயந்திரங்களில் வேலைசெய்யும் போது நசுக்குண்டும் வெட் டப்பட்டும் கால்கை ஒடிந்தும் விபத்துக்களுக் குள்ளாகியும் வருந்தியிறக்கின்றார்கள்.
கொடிய விடத்தையுடைய நாகபாம்புகள் கூடச் சாபமிடுகின் றன. இவை தம்மை அடித்து வருத்துபவர்களையும் கொல்பவர்களை யும் சபிக்கும் ஆற்றலுடையவை, இவைகள் பெரும்பாலும் புத்திரசாபத்தைக் கொடுக்கின் றனவெனச் சோதிட நூல்கள் எடுத்தியம்பு கின்றன. நீண்ட காலம் பிள்ளைப்பேறில்லாத குடும்பங்களில் நாகசாப் சாந்தி செய்யப்பட்ட பின் புத்திரப்பேறு கிடைத்திருப்பதாக நாம் கேள்விப்படுகின்றோம், ஆனால் சில குடும்பங்க ளில் அச்சாந்தி செய்யப்பட்ட பின்னரும் புத்

56 -
திரப் பேறு கிடைப்பதில்லை, காரணம் பிள்ளை யில்லாதவர்கள் யாவரும் நாகசாபத்தால் என எண்ணுகின்றார்கள். இத்தவறினாலேயே நாகசாப் நம்பிக்கையும் சாந்தியின் நம்பிக்கையும் கெடு கின்றது. புத்திரசாபம் பகைவர்களாலும், அன் னையாலும், நாகசாபத்தாலும், இன்னும் பல காரணங்களாலும் ஏற்படலாம், ஆகவே பிள் ளையில்லாதவர்கள் தமக்குள்ள குறையை நன் குணரவேண்டும், நாகசாபமும் பலதரமுடையது. சில சாபங்களுக்குப் பிராயச்சித்தமேயில்லை. இவற்றைச் சோதிட நூல்கள் அவரவர்கள் பிறக் கும் நேரத்தில் கோள்கள் நிற்கும் நிலையைக் கொண்டு அறியக் கூடி யவாறு வகுத்தெடுத்துக் கூறுகின்றன. அவரவர்கள் சாதகத்தில் கம் வீட்டுக் கதிபதியுடன் இராகு அல்லது கேது கூடியிருக்கப்பெறின் அவர்கள் நாகசாபத்தை யுடை யவர்களாகின்றனர், ஆனால் மேற்படி கிர க ங் க ள் 6, 8, 12 ல் இருக்கப் பெற் றும் வேறும் சனி, செவ்வாய், போன்ற கிரகங்க ளின் சேர்க்கை அல்லது பார்வை பெற்றால் அவர்களுக்குடைய நாகசாபம் வலிமை கூடி யது. அதனை எவ்வித சாந்திகளாலும் நீக்க முடியாது. ஏனைய நாக சாபங்களே சாந்தி யாற் பரிகாரம் ஆகக் கூடியவை. இனி 6, 8, 12 ம் இடங்கள் கிரகநிலைச்சக்கரத்தின் படி எடுப்பதும் பொருந்தாது. அவற்றைத் தீர்மா னிக்கச் சோதிடகணிதம் கற்பவர்களுக்கே முடி யும். அது சோதிடத்திற் பாவக கணிதத்தாற் தீர்மானிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இதனை அறியாத காரணத்தினாலும் சாபம் தீர்மானிப் பதில் தவறுகள் உண்டாகின்றன.
இப்பேற்பட்ட சாபங்களும் வாழ்த்துக்களும் வினைகளின் பலன்களும் உடனுக்குடன் தண் டனை கிடைப்பது போல் அவ்வப் பிறவிகளில் ஏன் கிடைக்கக்கூடாது என வினாவலாம். அவ் வப் பிறவிகளில் நாம் அனுபவிக்க வேண்டிய கன்மங்கள் வரையறுக்கப்பட்டனவாயும், அவற் றிற்கேற்ற உடல்நிலையை யுடையவர்களாகவும் பிறவியுண்டாவதால் அவ்வப் பிறவிகளில் உண் டாகும் சாபகன்ம வாழ்த்துக்கள் அனுபவிக்க முடியாதாகின் றன, இப் பேதங்களை யெல்லாம் உய்த்துணர விக்கினேஸ்வரப் பெருமான் அரு
ளுய்ப்பாராக.
மு. காசித்தம்பி கணிதம் விடுகை வருடம்.

Page 85
பொறியின்றி ஒன்று
பண்டிதர் க. சச்சித
"மனிதன் சந்திரனில் காலடி வைத் துவிட்டான். இனி சமயத்தில் நம் பிக்கை வைக்க வேண்டிய தில்லை'' என்று ஒரு அன்பர் கூறினார். அவரு டைய கூற்று புதிதானதன்று. விஞ் ஞானத்தின் சாதனைகள் மனிதனைப் பிரமிப்படையச் செய்யும் போதெல் லாம், இறைவனுடைய நம்பிக்கையின் வலிமை குன்றக்கூடிய மொழிகளை நம் காதுகளில் கேட்கிறோம். இது பொதுவான ஒரு மனப்போக்காக இருந்துவந்த போதிலும், சிறப்பாக, மாணவ உலகத்தை மிகவும் வேகமா கப் பற்றிக் கொள்கின்றது.
கல்வியுலகிலே முன்னென்று மிராத ஒரு மாற்றம் நிகழ்கின்றது. ஒரு காலத்திலே, மொழி, இலக்கியம், தத் துவம், சமயம் என்பனவற்றைக் கற் பதற்குப் போதிய தூண்டுதல்கள் இருந்து வந்தன. ஆனால் இ ன் று அவற்றை விரும்பிக்கற்பதற்கு அவற் றிற்காணும் இன்பமே தூண்டுதலாக இருக்கின்றதேயொழிய வேறு தூண் டுதல்கள் அருகிவிட்டன. இருபது வருடங்களுக்கு முன்னே பாடங்களைக் கெளரவ முதன்மைப்படி ஒழுங்கு செய்தால் உண்டாகும் வரிசைக்கிரமம் வேறு, இன்று அவ்வாறு செய்தால் உண்டாகும் வரிசைக்கிரமம் வேறு. பௌதிகம், இரசாயனம், உயிரியல், கணிதம் என்னும் பாடங்கள் முன் பென்று மிரா தபடி முதன்மையிடத் . தைப் பிடித்துக்கொண்டிருக்கின்றன. 2 அவற்றைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக் கும் ஒரு தனிக் கௌரவம் ஏற்பட்
15
ப

ம் புணராத புந்தி
ானந்தன் அவர்கள்
டிருக்கின்றது. இப்பாடங்களை விசேட. கவனத்துடன் கற்பிக்கும் உயர் நிலைப் பள்ளிகளுக்கும் உயர்ந்த இடம் இருக் கின்றது. அவற்றில் சேர் வ தற் கு மாணவர்கள் மு ண் டி ய டி த் து க். கொண்டு செல்கிறார்கள். இப்படிப் பட்ட ஒரு கௌரவம் விஞ்ஞான பாடங்களுக்கு ஏன் ஏற்பட்டது என்று ஆராய்வது ஒரு விடயம். அப்படி யான ஒரு கெளரவம் இப்பாடங்க ளுக்கு ஏற்பட்டிருக்கின்றது உண்மை தான் என்று ஏற்றுக் கொள்வது இன்னொரு விடயம்.
கல்வி நிலையங்களிலே கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும், பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கும் இந்த நிலை நன் றாக விளங்கும், பலருக்கு இந்த நிலை கசப்பாக இருந்தபோதும் உண்மை நிலையை மறைக்க முடியாது. இலக் கியம், மொழி, சமயம் இ வ ற் றி ல் சிறப்பாற்றல் பெற்று மேதைகளாக விளங்கக் கூடிய மாணவர்கள் கூட, விஞ்ஞானப்படிப்பில் சிறப்பாற்றல் பெறாதிருந்தும் சமூகத்தின் நெருக் கத்தால் விஞ்ஞானத்துறையில் முன் னேற முயன்றுவிரத்தி அடைகிறார்கள்.
உலோகாயதத்தை அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட ""பொது அடைமை'' (Communism) எ ன் ற கோட்பாடு தீவிரமாகப் பரவி வருகி றது. வேலையற்ற நிலை, பொருளாதா ரக் குறைவு, வறுமை என்பன இந்தப் பொதுவுடைமை வளருவதற்கு ஒரு வளமான பண்ணையாகின்றது. கும்

Page 86
ரப் பருவமடைகின்ற மாணவர் கள் இந்தக் கோட்பாட்டுப் புயலில் மிகச் சுலபமாகச் சிக்கிக்கொள்கிறார்கள். இறைவனின் உண்மையைக் கூறும் பிரசங்கங்களைக் காட்டிலும், இறை யில்லை என்று கூறும் வாதங்கள் உண் மையற்றனவாயினும் வாலிப உள்ளங் களை முறுக்கேற்றக் கூடிய உற்சாக முடையனவாய் இருக்கின்றன.
சமயம், இலக்கியம், மொழி இவற் றைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, விஞ்ஞான ஆசிரியர்களுக்கில்லாத சில தடைகள் உள்ளன. ஒரு பொருளோடு இன் னொரு பொருளைச் சேர்த்துச் சூடாக்கினால் அது வெடிக்கும் என்று விஞ்ஞான ஆசிரியர்
- கற்பிக்கிறார். அதனை அவர் பரிசோதனைச் சாலையில் செய் து காட்டுகிறார். மா ண வனும் செய்து பார்க்கின்றான். அது அப்படியே நிகழ்கிறது. அதுபோலவே அமீபாவின் தோற்றத்தை உருப்பெ ருக்கிக் கண்ணாடியின் கீழ் பார்க்கி றான். சூரிய கதிரைப்பிரித்தால் ஏழு நிறங்களாவதைப் பார் க் கி றா ன். ஆகவே பொருள்களைத் தொட்டும், முகர்ந்தும், கேட்டும், கண்டும், சுவைத் தும் அவற்றின் உண்மைகளைச் சரி பார்க்கிறான். இதனால் விஞ்ஞான ஆசி ரியர் கற்பிப்பவையாவும் உண்மை யென்ற மனப்பான்மை உண்டாகிறது. காந்தம், கோணம், திசையெண், விரி வுக்குணகம், முறிவுக்குணகம் என்னும் சொற்குறியீடுகள் கருத்துள்ளனவாக மாணவனுக்குப் படுகின்றன.
வனும் கொ ட்டு 8ாச் சாலையில்
கம்பன் கவியிலே காணும் சொற் களின் உயிர்த்துடிப்பை எந்த உருப் பெருக்கியினாலும் காட்ட முடியாது ஓ என்னும் இடைச்சொல் உண்டாக் கும் கருத்து மாற்றத்தைப் பரிசோத

58 -
னைக் குழாயிலே தொட்டுக்காட்ட முடி யாது. ஆணவம் என்பது எந்த இர சாயனப் பொருளாலும் பிரித் து. வேறு படுத்த முடியாமல் இருக்கின் றது. ஆனபடியால் ஆசிரியர் சொல் லுவதை நம்புவதைத்தவிர வேறு வழியேயில்லை. அன்னமய கோசம், பிராணமய கோசம், அருஉருவத் திரு மேனி என்பன சொற்பிரபஞ்சமாக இருக்கின்றன. அன்றியும் விஞ்ஞானக் கல்வியில் விவேகமும் கருத்தாக்கமும் தொழிற்படுகின்றன. ஆனால் சமயக் கல்வியிலோ உணர்வு தொழிற்படுகின் றது. உணர்வை உண்டாக்குவதென் பது சுலபமான காரியமன்று.
மேற் கூறியவை மாணவ உலகத் துக்கு மாத்திரம் பொருந்தக் கூடி யவையல்ல வயது முதிர்ந்தோருக்கும் இவை பொருந்தும். விஞ்ஞானத்தின் அபூர்வ சாதனைகளின் பிரமிப்பினால் இறைவனிற் கொண்ட இறுகிய நம் பிக்கை தளர்கிறது. மனிதனாற் சாதிக் கக் கூடாதது எதுவுமில்லை என்ற எண்ணத்துக்கு அடிகோலுகிறது. அதாவது தங்களையறியாமலே உல காயதத்துக்கு மெல்ல ஒரு ஆரம்பம் பிறக்கின்றது.
இவை நம்கண்முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கும் உண்மை நிலைகளா கும். இது சைவசமயத்துக்குத்தான் சிறப்பானதென்று நாம் கூறவில்லை. இது எல்லாச் சமயங்களுக்கும் ஏற் பட்டிருக்கும் தாக்குதலாகும். இந் தப்பிடியிலிருந்து மக்களை மீட்பது சம யக்குருமாரின் பெரிய கடமையாகும். சமயத்தின் மீது கொண்ட பேரபி மானத்தினால் இப்படியான உண்மை நிலையை ஏற்கமறுப்பது ஆபத்தான தாகும். சமயத்தின் மீது மக்களுக்கு

Page 87
நம்பிக்கை குறையப்பார்க்கிறது என்ப தைக் கேட்கக் கசப்பாக இருக்கிறது. ஆனால் அந்தக் கசப்பினால் உண்மை நிலையை மறுப்பது ஆபத்தாகும். இந் நிலையில் சமயகுருமார் இவ்விளைவு களால் நேரடியாகப் பாதிக்கப்படா திருக்கலாம். ஆனால் சமய ஆசிரியரி கள் வகுப்பறைகளிலே நேரடியாகத் தாக்கப்படுகிறார்கள், மாணவர் கூட் டத்தினின்று அவர் தப்பிச் செல்வது முடியாத காரியமாகும். அவ்வாசிரி யர்களைப் பயிற்றும் ஆசிரியர்கலாசாலை இந்தப் பொறுப்பிலிருந்து தன்னை விடுவிப்பது முற்றாய் முடியாத காரி யமாகும். இந்தப் பிரச்சனைக்கு முகங் கொடுத்து எதிர்நோக்கித் தீ ர் க் க முயல்வது நம் கடமையாகும்.
விஞ்ஞானத்தைக்கற்கும் மாணவர் களுக்கு ஒரு மனப்போக்கு உருவாகி யுள்ளது. அதை *'விஞ்ஞான மனப் போக்கு” என்று கூறுவர், ஐம்பொறி களினாலும் பெறும் பொறிப்பதிவுகளை ஏதோ ஒரு வகையில் ஒழுங்கு செய் வதே இந்த விஞ்ஞான மனப்போக் கின் அடிப்படையாகும். ஐம்பொறிக ளினால் மூளையில் பெற்ற தாக்கங்க ளுக்கு ஓர் உருவம் கொடுப்பதே விஞ்ஞான உண்மையென்று கூறுவர். பொறிப்பதிவுகளே விஞ்ஞான உண் மையின் மூ ல ப் பொருள் கள். ஒரு பொறிப்பதிவின் தாக்கஒழுங்குக்கு இன்னொரு பொறிப்பதிவின் தாக்க ஒழுங்கு முரணாதிருந்த விடத்து அது உண்மை யென்று கூறப்படும். ஒரு பாலைவனத்திலே நீரிருப்பதாகக் காண் கிறோம், ஆனால் கிட்டச் சென்று அது வெறும் கானல் நீர் என்று அறிகின் றோம். ஆனால் அதே பாலைவனத்தில் தூரத்தே தண்ணீர்போலத் தோன் றிய இன்னொரு பசும்புற்றரை உண்

19 -
மையாகவே நீருள்ள சுனையும் சோலை யுமாகக் காட்சி யளிக்கின்றது. பின் கண்டதை உண்மை யென்றும், முன் கண்டதைப் பொய்யென்றும் கூறு கின்றோம், இரண்டும், தூரத்தே கண் ணின் தோற்றத்துக்கு, நீருள்ள இடங் களாகவே தோன்றின. ஒன்றைப் பொய்யென்றும் மற்றதை மெய்யென் றும் கூறுகின்றோம். கட்பொறியின் பதிவின் ஒழுங்கினால் ஆக்கப்பட்ட காட்சி, தொடுகைப் பொறிப் பதிவி னால் மறுக்கப்படுகிறது. கட்பொறிப் பதிவினால் உண்டாய நீர், சுவைப் பொறியாகிய நாவுக்கு எட்டாததா கின்றது. எனவே, நீர் எ ன் னு ம் பொருளின் உண்மைக்கு கட் பொறிப் பதிப்பு, ஊறு என்னும் தொடுகைப் பொறிப்பதிவு, நாவென்னும் சுவைத் தற் பொறிப்பதிவு, நீர் விழுதலாலெ ழும் ஒலிப்பதிவு, ஆகிய இவை ஏதோ ஒரு வகையில் ஒழுங்கு செய்யப்படு த ல் இன்றியமையாத தாகின்றது. இப்பதிவுகள், அவ்வகையில் ஏற்பட்ட ஒழுங்கில் நிற்காது. முரணி நிற்பதால்  ேவ று ஒழுங் கு உண்டாகுமானால் அதனை 'உண்மையன்று' என்கிறோம். சில கண்ணாடிகளை ஒழுங்கு செய்யும் விதத்தினால், ஒளிபுக விடாது தடித்த சீமெந்துச் சுவருக் கூடாக வெளியே உள்ள பொருளைப் பார்க்கலாம். அப் பொழு து சு வ ர் துவாரமுள்ளது போலத் தோன்றும். தொட்டுப் பார்க் கும் போது அங்கே எவ்வித துவார -மும் காண்பதில்லை. உண்மையென்ற நிலையில் இரு பொறிப் பதிவுகளினால் ஆக்கப்பட்ட ஒரு ஒழுங்கு, இன்னோ ரிடத்தில் முரணி நிற்கும் வேறொரு ஒழுங்கானால் அதனை உண்மையன்று என்கிறோம்.

Page 88
- 6!
ஒரு பொறிப்பதிவே ஒருகால் ஒன் றாகவும் ஒருகால் இன்னொன்றாகவும் தோன்றுமானால் அதனைப் பொய்த் தோற்றம் என்கிறோம். அந்தியிருட் டிற் கிடந்த கயிறு, ஒருகால் பாம்பா கவும், ஒருகால் வைக்கோலாகவும் காணும் பொழுது ஒன்று உண்மை யன்று என்று தெளிகிறோம். ஒரு பொருளைப்பற்றிய பொறித் தாக்கங் களின் ஒழுங்கு எல்லோருக்கும் ஒரே விதமாக அமைவதில்லை, பெரும்பான் மையினருக்குத் தோன்றும் ஒழுங்கே உண்மை எனப்படும். ஒரு வித மன நோயாற் பீடிக்கப்பட்டவர்கள், சில பொருள்களைக் காண்பார்கள், சில ஒலிகளைக் கேட்பார்கள். அவை ஏனை யோர் பொறிகளிற் பதியப்படாமை யால் மனநோயாளர் கண்டதைப் பொய் யென்கிறோம். அதை இன்னொ ருவிதமாகச் சொன்னால், பெரும்பான் மையோர் பொறிப்பதிவுக்குப் பொரு ளாகாத ஒன்றை ஒருவர் கண்டால் பொய் என்கிறோம்.
விஞ்ஞான உண்மைகளைக் கருவிகள் காட்டுகின்றன என்பர் சிலர். எந்தக் கருவியும் இறு தி யில் மனி த னி ன் பொ றி ப் ப தி வு க ளி னா லே யே துணியப்பட வே ண் டு ம். தொலை நோக்கி  ைய உபயோகித்தாலும் கணிக்கும் எந்திரத்தை உபயோகித் தாலும், வ ா னொ லி அ லை க ளை க் கொண்டு அளந்தாலும் ஈற்றில் மனி தப் பொறிகளாலேயே, ஒழுங்கு செய் யப்பட வேண்டும். அவ்வொழுங் கையே உண்மையென்றோ அல் ல வென்றே கூறவேண் டும்.
மனிதனுக்கும், நாய்க்கும் இந்த உலகம் ஒரே மாதிரியாகத் தோற்ற மளிக்குமோ என்னவோ யாரறிவார்.

கண்டு
மனி தன் மூக்கினாலே எள்ளளவேனும் பிரித்தறிய முடியாத ஒரு இரத்தச் சீலையை ஒரு நாய் மோந்து க கொள்கிறது. அன்றியும், பல மைல் தூரத்தில் ஒளித்திருக்கும் அச் சீலையு டையவனைச் சென் று சேர்கிறது. என்னே நாயின் மோப்ப வன்மை, நாயிலும் பேரறிவு படைத்தோ மென்று மார் தட்டும் மனிதனால் இத னைச் செய்ய முடியவில்லையே.
மதியிலே உயிரினம் இல்லையென்று கூறுகிறார்கள். அதை நாம் சரியாகக் கூறவேண்டிய முறை வேறு. "இந்தப் பூமியாகிய கிரகத்திலே உயிர் என்று சொல்வதற்கு என்ன வ ரை வி ல க் கணம் கொடுத்தோமோ அந்த வரை விலக்கணத்தின்படி உயிர்கள் இல்லை" என்று கூறுவதே பொருத்தமாகும். பூமியின் மேற்பரப்பு வாயுமண்ட லத்தினாற் சூழப்பட்டிருக்கிறது. பூமி யின் இழுவையின் வன்மை, ஏனைய கிரகங்களின் வன்மையிலும் வேறா னது. இப்பூமியின் நிலைகளுக்கேற் பட்ட ஒன்றை உயிர் என்று நாம் வரைவிலக்கணம் கொடுத்து விட் டோம். இப்பூமியின் சூழ்நிலைக்கேற்ப மனிதனுக்கேற்பட்ட ஐம்பொறிகளின் தாக்க ஒழுங்கே உண்மை என்கின் றோம். ஒருவேளை வேறுகிரகங்களில் நமது ஐம்பொறிகளால் உணரமுடி யாதவை உயிரினங்களாய் இருக்கின் றனவோ, அவை நமது ஐம்பொறி களின் வேறான நுண்ணிய பொறிகள் உள்ளனவோ யார்கண்டார்? சுவா சிப்பது, பூமியின் நிலைக்கேற்றது. காற்றில்லாவிடத்து வேறுவிதமான தொழில்கள் உள்ளனவோ? - இந்த ஐம்பொறிகளாற் கூட நாம் எத்தனையோ இவ்வுலகின் அதிசயங்

Page 89
களைக் காணாதிருக்கின்றோம், ஒரு மலை யின் சரிவிலே ஒரு யானை நிற்கின் றது. அந்த யானையின் நிறை, மலையின் சர்வு, பூமியின் இழுவை, உராய்வு ஆகிய பல தரவுகளையும் கொ ண்டு யானை விழுந்தால் இந்த இடத்தில் இந்த நேரத்தில் விழுமென் று மிக நுட்பமாகக் கணித்தறியலாம், ஆனால், மலைக்காட்சியைப்பற்றி யானை என்ன நினைக்கின்றது எ ன் ப ைத ப் பற் றி யாரும் சொல்ல முடியாது. அது எவ்வ ளவு பாலுணர்ச்சியினாற் றூண்டப்பட் டிருக்கிறது என்பதையும் யாரும் வரை யறுக்க முடியாது.
மனித உணர்வுகள், சுவைகள், ஆன் மதூண்டுதல்கள் இ வ ற்  ைற அளந்தறிய வழிகள் கண்டுபிடிக்கப் படவில்லை, அளந்தறிவோ மென்று முயன்றாரும், உடம்பின் மாற்றங்கள் நடத்தைகள் இவற்றைக் கொண்டு சில ஒழுங்குகளைச் செய்தார்களே தவிர அவற்றை இ ன் ன த ன்  ைம ய என்று கூறவில்லை. ஐம்பொறிகளினால் அளக்கப்படும் ஒழுங்குக்கு உணர்வுக ளைக் கொண்டு வர முயல்கின்றார்கள்.
ஐம்பொறிகளின் பதிவுகளும் அவற் றின் ஒழுங்குகளுமே நாம் பெற்ற அறிவு. அதனையே உண்மை யென் கின்றோம். இந்த உண்மையைத்தான் விஞ்ஞானம் நமக்குக் காட்டுகின் றது. இந்த அறிவையே பேரறிவு என்று கூறு கின்றோம், அதிலும், விஞ்ஞானம் மனித அனுபவங்கள் எல்லாவற்றை யும் பொறிப்பதிவுகளின் ஒழுங்காக ஆக்க முயலவில்லை, அப்படி ஆக்கு வதும் உண்மையாக மாட்டாது.
இத்தகைய முற்றுப்பெறாத சிற்ற றிவையே நாம் அ றி  ெவ ன் று கொண்டாடுகின்றோம். மிக அழகா
16

''183)
கத்த்திருவருட்பயன் ஆசிரியர் கூறு கின்றார். ''பொறியின் றி யொன் றும் புணராத புந்திக்கு
அறிவென்ற பேர் நன் றற'' பொறியின்றிக் காணாத புத்தியை, அறிவென்று கொண்டாடுகின்றோம், ஆகா மிக நன்றாயிருக்கிறது.
கனவு நிலையிலே கண்டனவற்றை யாரேனும், கனவு காணும் அந்நிலை யிலேயே பொய்யென்று காண்கிறார் களா? கனவிலே காணும் காசின் பெருக்கத்தை இது கனவிலே காணு கின்ற காசு வெறும் பொய்'' என்று அப்பொழுதே யாராவது உணர்ந்த துண்டா? அப்பொழுது அது மிக மிக உன்மையாகும், விழித்தபின்பே, அது வெறும் பொய்த்தோற்றம் என்கி றோம் - கனவு காணும் பொழுதே இதைப் பொய்யென்று அ றி ய ா த இந்த அ றி  ைவ ப் பேரறிவென்று கொண்டாடலாமா? இந்தச் சிற்றறி வின் வயப்பட்டு நின்று காணும் மக் கள் முடிவுகளை, முடிந்த முடிபுகள் என்று கொள்ளலாமா? 1 கண்டவற்றை நாளும் கன விற் கலங்கியிடும்
திண்டிறலுக் கென் னோ செயல்' இது, திருவருட்பயன் தந்த மணி வாக்கு,
விஞ்ஞான சாதனைகளைக் கண்டு பிர மிப்படையும் மாண வர்களுக்கு அதன் இயலாத தன்மைகளையும், அதன் எல் லைகளையும் எடுத்துரைக்க வேண்டும். ஒளியானது ஒரு செக்கனில் ஒரு இலட்சத்து எண்பத்தாறாயிரம் மைல் செல்லும். சூரியனுடைய கதிர்கள் பூமியை வந்தடையக் கிட்டத்தட்ட எட்டரை நிமிடடங்கள் ஆகும், பூமிக்

Page 90
~~ 6
கும், சூரியனுக்கும் இடையேயுள்ள தூரத்தைக் கணித்துப் பார்க்கலாம். நட்சத்திரங்களிலிருந்து வரும் ஒளி களை ஒளிவருடங்களிற்றான் கணக்கிடு கிறார்கள். ஒரு செக்கனில் ஒளிக்கதிர் மேற்கூறியளவு மைல்கள் போகுமா யின் ஒரு வருடத்தைச் செக்கன் க ளாக்கிப் பெருக்கி, ஒளி வ ரு ட த் தூரத்தைக் கற்பனை செய்க. சந்தி ரன் பூமியின் ஒரு உபக்கிரகம். சூரி யனோடு ஒப்பிடும் போது மிக அண் மையில் உள்ளது, அதற்கும் பூமிக் கும் இடையில் உ ள் ள தூரத்தை மைல் கணக்கிலே கூறுகிறார்கள்; ஒளி வருடங்களிலன்று. அண்டத்தின் அளக் கலாகாத் தன்மையைக் கற்பனை செய் தும் காண முடியாது. ''கற்பனை கடந்த சோதி..'' எ ன் ப த ற் கு க் கருத்து வேறென்ன? மேலும்,
பாதாள மேழினுங் கீழ்ச் சொற்கழிவு பாதமலர் போதார் மணிமுடியும் எல்லாப் பொருள்
முடிவே'' எனப்பட்டதேன். சொற்கழிவு என் பதை சொற்கு+அழிவுஎன் றும், சொற் -- கழிவு என்றும் பிரித்துக் கொள்ள லாம், ஒளிவருடங்கள், யுகவருடங்கள், அணுக்கள் , பரமாணுக்கள், மின்னணுக் கள் என்ற விஞ்ஞான பதங்களும்,விளக் கும் சொற்களும் கடந்து நின்ற 'ஆதி யுமந்தமுமில்லா அரும் பெரும்சோதி” யின் அளப்பரும் தன்மையையும், விஞ் ஞானத்தின் பொறியளவையும் ஆசிரி யர்கள் மாணவர்களுக்குப் புகுத்த வேண்டும்.
யாரோ ஒரு அண்டவெளிப் பிர யாணி, அளக்கலாகா அண்டத்தின் பெருமையோடு ஒப்பிடும் போது தூரமென்று கூடச் சொல்ல முடி யாத சிலமையில்கள் சென்று, ''கட வுளை, அங்கே நான் காணவில்லை''
செத சிறு க,

2 -
என்றாராம். ஆ கா ய வெ ளி யி லே, மேகங்களுக்கப்பால் இறைவன் இருக் கிறான் என்று பிழையாக அவருக்குச் சமயங்கற்பித்ததாலேயே எ ழு ந் த து இந்தமடைமை. அவரைப் போலவே ஒருகால் பிரமனும் விட்டுணுவும் எம் பெருமானை அளக்கச் சென்ற கதையை அவருக்கு மொழிபெயர்த்துச் சிந் தனைக் கெடுக்கும்படி கேட்ப து நன்று. தேடிக் கண்டு கொண்டேனே''
... என்ற வரிகளை மணிப்பெட்ட கத்துள் வைத்துப்போற்ற வேண்டும். * 'அருமறையின் அகத்தானை அணுவை'' என்றும், ''கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற பெரியானை'' என்றும் கூறிய தெய்வ வாக்குகளின் கருத்தை எடுத்துரைக்க வேண்டும், இது ஆசி ரியர்களின் கடமை. “' பார்பதம் அண்டம் அனைத்துமாய் மூளைத்துப்
பரந்ததோர் படரொளிப்பரப்பே'
• சென்றுசென் றணுவாய்த் தேய்ந்து தேய்ந்
தொன்றாம் திருப்பெருந் துறையுறை சிவனே ஒன்று நீயல்லை அன்றி யொன் றில்லை
யாருன்னை அறியகிற்பாரே'' என்ற மணிவாக்குக்களுக்குக் கருத் துண்டு. அவைகளைக் = கருத்தோடு பாராயணம் பண்ணினால், மனிதன் சந்திரனில் காலடிவைத்து விட்டான்; இறைவன் முடியைத் தொட்டு விட் டான் என்று பிதற்றுவதற்கு இடமே வராது. ஆங்கிலங் கற்று விஞ்ஞானத் தில்தேறிப்பட்டம் பெற்றசிலரிடையே ஒரு புதுநோய் இருக்கிறது. வெள்ளை யர்கள் கண்டமுடிபுகள் சில வேதத் திலேயிருக்கின்றன, ஆகமத்திலே யிருக் கின்றன. தேவாரத்திலே யிருக்கின்றன என்று பொருத்திக் - காட்டுகின்ற ஒரு பழக்கம் பரவி வருகின்றது. ஐன்ஸ் ரையினுடைய கொள்கை வேதவாக்கி யத்திலே யிருக்கிறது என்று நிரூபிக்க ஒரு பெரியார் முயன்றிருக்கிறார். அது

Page 91
வேண்டியதில்லை. விஞ்ஞான சாதனை யின் பிரமிப்பால் மேலைத்தேசத்தவர் கூறுவன எல்லாவற்றிற்கும் மதிப்புக் கொடுக்கும் பழக்கம் வேரூன்றி விட்டது. நாம் ஒன்றை மாத்திரம் மறக்கலாகாது. விஞ்ஞானிகள் காலத் துக்குக் காலம், கொள்கைகளை மாற் றுவார்கள். அப்பொழுது வேதத்திற் கண்ட முற்கொள்கையை, அவரது
பிற்கொள்கையாக மாற்றவேண்டி வரும். அதை எப்படி மாற்றுவது? ஒரு வேளை சுலோகங்களுக்குச் சொல் லும் உரையினால் மாற்றிவிடலாம் போலும். ஆகவே, வலிந்து சிற்றறி வுடை யோர் கொள்கைகளை, நம் வேதத்திலும் தேவார திருவாசகங் களிலும் காட்டுவது மிகப்பிழையாகும்.
பொதுவாக மாணவர்கள் மனத் திலே விஞ்ஞான மனப்போக்கும், சமய மனப்போக்கும் இன்றைய நிலை யில் முரணி நிற்கின்றது. இந்த முர ண்பாடுகளைத் தீர்த்து வைத்தாலன் றிப் பெரும்பாலோர்களை சமயவழி யிற் செலுத்துவது பிரச்சனையாக விருக்கின்றது. சும்மா பேசாமல் இரடா'' என்று அடக்குவதினாலும், *கேள்விகேட்கப்படாது இரு" என்று மிரட்டுவதினாலும், பிரம்பை உப யோகிப்பதாலும், அடக்கு முறை யாலும், புரட்சியையே ஆக்குவோம். மாணவர்களை அனுதாபத் தோடு நோக்கவேண்டும். அவர்கள் மன திலே இரு வேறு மனப்போக்குகளினாற் பிய்க்கப்படுகிறார்கள் என்பதை ஆசி ரிய உலகம், அறிதல் வேண்டும். கல்விக் கொள்கைகளையும், பாடத் திட்டங் களையும் பிரகடனம் செய்யும் பெரி யார்களும் அறிதல் வேண்டும். பிரதா னமாக, விஞ்ஞான, கணித, சமய ஆசி

3 -
முடியாத" தனயினாலும், விதமான
ரியர்களும் உணர்தல் வேண்டும். இவ்வுணர்வு எல்லாச்சமய ஆசிரியர் களுக்கும் பொதுவாயினும், சிறப் பாகச் சைவாசிரியர்கள் ம ன தி ற் கொள்ள வேண்டும். சைவம் உண் மையைக்கூறுவது. எந்த விதமான விஞ்ஞானசாதனையினாலும், அசைக்க
முடியாதது.
சமயங்கற்பிக்கும் ஆசிரியர்கள் விஞ் ஞானத்தின் கட்டுப்பட்ட அளவை யும், சமயநெறியின் அளப்பரியாத் தன் மையையும் விளக்கவேண்டும், இதற்கு விஞ்ஞான ஆசிரியரும், சமய ஆசிரி யரும், ஒத்துழைக்கவேண்டும். சமய பாடத்திலே ஒருமை காணும் நோக் கமாக இவை இடம் பெறவேண்டும். விஞ்ஞானம் புத்திக்கு விருந்தாகும். சமய ஆசிரியர் சில மனச்சார்புகளை மாணவர்களில் ஆக்கவேண்டும். அது மிகவும் பொறுப்பான தொன்று. அ த னை த் தட்டிக்கழிக்கலாகாது. அ ந் த மனச்சார்பு மாணவர்களி டையே வளர்வதற்கு உபதேசம் மாத் திரம் போதாது. ஆசிரியன் வாழ்ந்து காட்டவேண்டும். ஆசிரியன் வாழ்க் கையிலிருந்து, அவன் கற்பிக்காமலே மாணவன் கற்பான். அவ்வாழ்க்கை யை ஆசிரியர்கள் நடத்தவேண்டும். அது, சைவம் கற்பிக்கும் ஆசிரியனுக்கு மாத்திரம் உரியதன்று. ஒவ்வொரு சைவாசிரியனுக்கும் உரியதாகும். - இங்கே இன்றைய மாணவ உல கிலே உண்டாய மனப்போக்கு முரணு தலை எடுத்துக் கூறியுள் ளோம், இவ ற்றை, நீக்கும் வழிவகைகளை எடுத் துரைக்க இக்கட்டுரை இடம் தந்தி லது. எனினும், சைவாசிரியர்கள் பிரச் சனையை நன்றாக விளங்கிக் கொண் டால், தீர்வுக்கு அதுவே முதற்படி யாகும்

Page 92
- 6.
கடைசியிலே காண்
கவிஞர் வி.
அன்புவர அறிவுவர் ஆண்டவனைத் தொழுமனமே தென் புவரத் தெளிவுவாத் திருவருளில் திளை மனமே
பெரியதெது சிறியதெது பிழைகளெவை சரிகளேவை
அரியதெது அதிகமெது அளந்தவர் யார் அறிந்தவர் யார்
அளந்துவந்தே கூ றிடினும் அதுசரியென் றேற்பவர்யார் உளந்திருந்தி ஏற்றிடினும் உருக்கொடுக்க முயல்பவர்யார்
நான் பெரிதா நீபெரிதா நாடெனக்கா வீடுனக்கா வீணுரைகள் விசர்த்தனங்கள் வில்லங்கங்கள் வேதனைகள்
உயர்ந்தவனார் தாழ்ந்தவனார் உலகத்திலே உணர்ந்தவனூர் பயந்தவனூர் துணிந்தவனார் படித்தவனார் பாமானார்
படித்தவர்கள் பாமரராய் பாமரர்கள் படித்தவராய் நடத்தையினால் பண்புகளால் நாட்டுவரென் றறிந்திருந்தும் -
சொல்லிவிட த் துணிவுமில்லைச் சொல்லிவரும் சுகமுமில்லை எல்லவரும் மடையரென்றே ஏற்றிட வும் முடிவதில்லை

4 -
கவிதை
பதெல்லாம்---
கந்தவனம்
சொந்தத்தினால் பந்தத்தினால் சுதிபிழைக்கப் பாடுகிறார் சந்தர்ப்பத்தாற் கட்சியொன் றிற் சார்ந்ததுவே சிறந்ததென் பார்
கள்வெறியர் போலப்பிற காரணங்கள் கண்டறியாக் கொள்கையினால் மற்றவரைக் குருட ரென் றே குரைத்திடுவார்
குதிகுதித்துப் பதைபதைத்துக் குலமிழுத்துக் குணம் மறைத்து மிதிமிதித்து மற்றவனை விழுத்திவிடத் துடிதுடித்து
தொடுத்துவிட்டு நோண்டிவிட்டு சுயநலத்தைத் தூண்டிவிட்டு அடுத்தவனைக் கட்டையிலே அனுப்புவதில் சுகம்பெறுவார்
மற்றவரைப் பற்றுவைத்து மதிப்பதில்லை மனதுமில்லை பெற்றபணம் உற்றதொழில் பிறந்த குலம் வளர்ந்த இடம்
என்பவற்றில் நின் றல்லவோ எங்கள்மதிப்பாகும் நிதம் அன்பறிவை ஆற்றலினை யார்மதிப்பார் ஆதரிப்பார்
அன் புவர் அறிவுவா ஆண்டவனைத்தொழு மனமே. தென் புவரத் தெளிவுவரத் திருவருளில் திளை மனமே!

Page 93
கோரிக்
கல்வயல் வே. 6
14:TITயை :
நண்ப நீ உனது நங்கை வெம்பி வீழுவது வீண் நி த ம் கண்க லங்குவதும் ஏன்? பண்பு மேவினுயர் அன்பு பந்தம் ஆகுவது காண் ப க் தி ப் பண்டமாம் அறிவுமே,
வாழ்வ தில்லை இனி மா என்று கொன்றெ ழுதின
ம ன ங் கன்றி வெந்துருகி யோய்
தாழ்வ தில்லைஇனி நேரம் தள்ளு வாய் அல்ல வே.
இ  ைத க் கொள்ளு வாய் நல்லதே ''நாத்தி கத்தினில் மூத் நல்ல ஞானி அறிவேன்
மு ன் நட்பி னாலும் உணர்ந்தே ஏத்தி அவ்விறையை என் ஏன் இதை எண்ணினாய் பி  ைழ ஏன் மனத் துன்னினாய்
எங்களுக் கருளி உள்ள ஈய்ந்தவன் இறைவன் அ
இ து . ஓர் சிறைச் சாலையாம் இங்கி ருந்துநாம் தப்பி ஏற்றதல்ல அறிக
அ  ைத இறைவ னேபுரிகன் ஆண்ட வன்உயிரை விடுத அந்த நாள் வரட்டும்
அ க ம் அன்பி னால் உயர்த்தும் பூண்ட உன் பணியை மீக பொய்ம்மை வேர்கல்லு வ பி ற ர் போலியை எள்ளுவாய் காத்தி ருக்குக் கடவுளே விடுதலை தரட்டும் உ யிர் கடவுளின் உரிமையே
சூத்தை என்றிதை விட்டு சோந்தை இல்லை அலலே சு ய ா தீனமும் இல்லை யே.

கை குமாரசாமி
பால் மனது
பு சேரின் அது
ப்ப்பன் என் உயிரை
ஓய்
ம் என் கதையைத்
தவன்'' அல்ல
ன் எணிப் போற்றுவாய்
திந்த உடல்
பூம்
ஓடுதல்
த லைசெயும்
ண்டுமே தொடர் பாய்
வந்து
டு தாம் ஏகச் வா

Page 94
"துணையாகி
- அரியாலையூர் அன்பா லருட்சிவனே ஆ நின்பால் நிறையன்பை நீபு நல்லருளை வைத்துமனம் ந வல்லவனாய் வாழ்ந்திடயான்
மண்ணகந் தன்னிலே
மக்களே மாக் மதியின்றி வாழ்தலை ம
வாழ்விக்க வர எண்ணெழுத் தோடுகல்
இன்னமுது ( ஏற்றறிவு வல்லமை ஈவி
ஈகுவாய் செக் அன்னையின் தந்தையின்
அன்பான குழ ஆசிரிய னாதரவு அதிக
அறிவைவிரிப் என்னையிப் பணிதனக் |
இடரேது மில் எழிலான சேவையில் வ
இணையடிக ே கற்றதன் விளைவினுக் கு
காட்டினா னே கற்றதோர் கைப்பிடி மன்
கருணையாற் 8 பெற்றநற் கல்வியைப் ப
பிழையிலா பெ பேதமொன் றில்லாத பி
பிறையணியும் துர்க்குணச் சூழலுள் சே
துவண்டிடும் 8 சுந்தரப் பணியினால் தூ
துணையாகி நிற் நற்குணச் சமுதாயம் உ6
நமதுபணி நல் நாதனே! வேதனே நண்
நம்பினேன் நட

66 -
- நிற்குமுதலே”
: வே. ஐயாத்துரை -
னந்தத் தாண்டவனே உத்தேன் - என்பாலுன் மாடறியும் நற்பணிக்கோர்
வார் மாய்கையில் சிக்கிகம் -களாக
னுநீதி காட்டியே மீகுவாய்
இனியநெறி யாவையும் போலூட்டவே மிரக் கம்பலம் கதீசனே!
ஆதரவு வீட்டிலே ழந்தைகட்கே மே பள்ளியில் பவனுமவனே காக்குவாயீசனே லாமலே ழுவா திருக்கவே ௗத்துகின்றேன். கற்றதுன் துணையென வள்ளுவன் எணெனும் கல்வியை தடலாக்குவாய் பிறங்கிடச் செய்யவே மாழிபெய்குவாய் ரகாச னேசிவா
எம்பிரானே! பாம்பலுள் ஏழ்மையுள் சுதர்களுக்குச் பவ ராக்கவே ற்குமுதலே!
நவாக நாட்டிலே கவைப்பாய்
ணுவாய் நமதுளம் டராஜனே!

Page 95
முருக நாமம்
- சீனாச்ச
வேல்முனைக்கு நேர் இங்கே 6 முருக பக்தர் வாழ்விலே துன்
பூமியிலே மாரி எல்லாம் வேல உண்பதுவும் உடுப்பதுவும் அ சேமமுற முருகன் எமைக்காப் நன்மை எல்லாம் பெருகும் நல்
ஊருக்கொரு கோவிலாக நிலை பரவசமாய் பக்திப்பாடல் பாட ஊன வாழ்வு மிகச்சிறப்பு அல இரவு பகல் முருகனை நாம் 9
கோவிலிலே பூசையொல்லாம் பக்தரெல்லாம் பரவசமாய் ஆப் நாவினிலே முருக நாமம் ஒலி முக்தி பெறும் வழியிதனைக் க
முருகனை நாம் பாட வேண்டும் ஆசைகளை அடக்க வேண்டும் மப் பக்திக் கண்ணீர் சிந்த வேண் தேசமெல்லாம் செழிக்கும் அரு

ஒலித்திடுக!!
எனா -
துவுமேயில்லை பமேயில்லை
வனாலே - நாம் வனருளாலே - நாடு பதனாலே - இங்கு
ன்றாய் பாருங் கண்ணாலே
க்க வேண்டுமே - நாம் வேண்டுமே - எங்கள் டெய வேண்டுமே - அதற்கு அழைக்க வேண்டுமே
நடக்க வேண்டுமே - அங்கு - வேண்டுமே - எங்கள்
க்க வேண்டுமே - நல்ல
ண்டு கொள்வீரே.
5 மெட்டு மெட்டாக - உலக ட்டு மட்டாக - நாம்
டும் முத்து முத்தாக - எழில் ள் சொத்துச் சொத்தாக

Page 96
அறுபடை வி
அழகான வேலோடு மயி பழமீனும் சோலை முருக அநியாய மாக இதுகாறு அவமாகப் போக்கி அலை ஒருநாளும் விட்டுப் பிரிய தருவாய் வரமொன்று த மலைமீது வள்ளி தெய்வம் நிலையா யமர்ந்த பெருமா
அலைபொங்கு செந்தூர் 8 அழகா யமர்ந்த பெருமா புடைசூழ நின்று அடியா திருவாவி னன்குடி வடி0 ஒருநாளும் விட்டுப் பிரிய தருவாய் வரமொன்று த அருகே பரங்குன்றும் அ கிரிமீதும் காணும் பெரும்
முருகா முருகா முருகா கருதிக் கருதிக் கவலைப் கவலைக் கடலைக் கடியும் முருகா முருகா முருகா

68 -
டுடை முருகா!
ல்மீது விளையாடும் - - என்னே!
ம் வாழ்வை மந்தேன் - உன்னை பாது வாழத்
யவாய் - பழனி -னை யோடு
ளே.
கடலோர மாக ளே - பக்தர் ர்க்கு அருளும் வே - உன்னை பாது வாழத்
யவாய் - மதுரை ழகான திருவேர மாளே.
ன்
என். இளஞ்செல்வன்
படுவார்
வடிவேல்
பாரதியார்

Page 97
பலாலி ஆக்
சைவ மால்
1969
திரு.V.கணே சன் திரு. K. மார்க்கண்டன்
(தலைவர்)
திரு. S. A. சோதிலிங்கம் திரு K. ஸ்ரீகாந்தன்
திரு K. S. பாஸ் வர தாசன் திரு. P. வீரபத்திரன்
(பொருளா ளர்)

சிரியர் கழகம் னவர் மன்றம் - = 1970
திரு. A. பேரம்பலம் திரு.சி.சிவசுப்பிரமணியம்
திரு. S. பழனி வடிவேல் திரு. S. அமிர்தலிங்கம்
(செயலாளர்)
திரு. S.சதாசிவம்
திரு. N, வரதராசா

Page 98
திரு. M. கணேசலிங்கம் திரு .க. முத்துலிங்கம்
திரு. P S. தில்லையம்பலம் திரு. S. ஆனந்தக்க தீநம
இரு. V. கந்தசாமி திரு R. இராமச்சந்திரன்
திரு. வே. திரு நாவுக்கரசு திரு. M. மகாதேவன்

திரு. P. பத்மநாதன்
திரு. V குமாரசாமி
ல திரு. T. நடராசலிங்கம் திரு. T. நமநாதர்
திரு. S. இலங்கைநாயகம் திரு. க. கனகரத்தினம்
(பத்திராதிபர்)
திரு. K. சண்முகலிங்கம் திரு.P. காங்கேசு

Page 99
திரு. பொன். தெய்வேந்திரன் திரு. 5. குலேந்திரசிங்
திரு. S. நாகேந்திரன் திரு. S. சாந்தலிங்கம்
திரு. 1. செல்வராசா திரு P. விசாகப் பெருமா
திரு. ஐ. மெ. ஜெயபாலன் திரு. க, பாலசுப்பிரமணி

கம் திரு. V. பத்மநாதன் திரு. T. தேவராசா.
- திரு. N. நடராசா
திரு. 5. நடேசலிங்கம்
ள் திரு. கா. கனகச்சந்திரன் திரு. கு. சதா சிவம்
யேம் திரு. K. நவரத்தினம் திரு. வி. அருளானந்தம்

Page 100
செல்வி T. நமசிவாலயம் செல்வி J. விசுவலிங்கம்
செல்வி S. வே, பிள்ளை செல்வி. இ. வேலாயுதர் ஓ
திருமதி. S. சற்குணம் செல்வி லீ. நல்லதம்பி செ.
செல்வி R. S. செல்லையா திருமதி. க. பெரியதம்பி கெ

செல்வி. J. செல்லப்பா செல்வி R. சக்திவேல்
சம்
சல்வி T, சின்னத்துரை செல்வி 2. நாகரத்தினம்
R
ல்வி. M. ஈஸ்வரம்பிள்ளை செல்வி S. நவரத்தினம்
கல்வி. T. குமாரவேற்பிள்ளை செல்வி, R. இரத்தினம்

Page 101
திரு P. பேரின்பநாதன் திரு. A. குண சிங் கம்
திரு. S. கனகலிங்கம்
திரு. S. யோக நாதர்
திரு. R. மயில் வாகனம் திரு. C. N. செல்வரா
பிள்ளை
திரு. இ. சிவானந்ததாயகம் - திரு. க. நடராசா

திரு. . ஸ்ரீ விசாகராசா திரு, சி.கிருஷ்ணபிள்ளை
திடு. இம் ஆனந்தராசா
* A. நாகலிங்கம்
சன் திரு. N. கதீர் காம நா தன் திரு. க. திருச்செல் வ
விநாயகமூர்த்தி
திரு. S. சரவணமுத்து திரு. M. செல்வரத்தினம்

Page 102
செல்வி க மா ணி க்கம் செல்வி R. செல்லையா தெ
திருமதி. M. நடராசா செல்வி அ, இராமநாதன்
-- ஏ சயணசாமி செல்வி நீ. வேலுப்பிள்ளை
செல்வி S. முத்துத்தம்பி செல்வி சரோஜாபெனடிற்

ல்வி ந.இராசசிவகுருநாதன் செல்வி T. அம்பலவாணர்
செல்வி T. சிற்றம்பலம் செல்வி தி.நாகலிங்கம்
செல்வி கோ. பொன்னம்பலம் செல்வி P தம்பையா
செல்வி S. செல்லையா செல்வி T. காசித்தம்பி

Page 103
இரு .S சுப்பிரமணியம் திரு. V. நடராசா
திரு. S. செந்தில் நாதன் திரு சி. இரத்தினசபாப
திரு. E. சிங்கநாயகம்
திரு. C. கந்தையா
திரு. S. கணேசன் திரு. மா. புவனேந்திரன்

திரு. இ. செல்லத்துரைதிரு. சூ. மால இந்திரன்
மதி திரு. T. திருஞான சம்பந்தன் திரு S, மகாலிங்கம்
திரு. A. பாலச்சந்திரன் திரு. பொன், நித் தியான நிகன்
திரு. S. தெட்சணாமூர்த்தி திரு. R. -லிங்கம்

Page 104
திரு. S. இரத்தினம்
திரு. . பரராசசேகரம்
ரு. C. ந ல யா
திரு. T.ஜெயபாலன்
12
சேனாதிராசா செல்வி N. இரத்தின சிங் கம்
செல்வி N. செல்லத்துரை திருமதி. R. சுப்பிரமணியம்

திரு. R: லோ க நாதன் திரு. 2. மயில்வாகனம்
திரு. S. கனகரத்தினம் திரு. K. செல்லத்துரை
செல்வி வி. முருகுப்பிள்ளை செல்வி க, சேனாதிராசா
5 திரும் தி. T. கந்தசாமி திருமதி. W. அழகரத்தினம்

Page 105
திரு. M.மகாலிங்கசிவம் திரு.S. சாம்பசிவம்
திரு. கி. நடராஜசுந்தரம் திரு. N. செல்லக்குப்
திரு N. கிருஷ்ணானந்தன் திரு M. காசித்தம்பி
திரு. சி. சரவணபவன் திரு. C சண்முகம்பிள்ளை

திரு. சி. மகேந்திரநாதன் திரு. தீ. தருமலிங்கம்
திரு. A. து ரைராசா
இடது ஓர்
திரு. 2. கந்தப்பு திரு. T.
திரு R. குலசிங்கம்
திரு M. இரா சிங்கம்

Page 106
திருமதி. S.சதாசிவம் திருமதி. N. சிவபாதசுந்தரம்
திருமதி. P. அம்பிகைபாகன் திருமதி. S, பத்மநாதன்
செல்வி R. கந்தையா
செல்வி R. தம்பு
153. திரு. B. இராசையா
164. திரு. M. இரா. 154. , S. செல்வவிநாயகம் 165. ,, A. அரு 155. ,, M. கந்தசாமி
166. ,, N. கிரும் 166.
K. கதிரேசன்
167. த. V. S. தீ 157. , S. நாகரத்தினம்
168. திருமதி R. கு! 158.
N. வல்லிபுரம்
169. செல்வி R. ம 159.
C. பாலராமன்
170. ,, S. சில் K. நாகேந்திரன்
171. திருமதி B. கி 161. ,, V. கைலை தா தன்
172. ,, P. சு 162.
,, V. கணபதிப்பிள்ளை 173. செல்வி 1. கும் 163. , S. சண்முகலிங்கம் 174 திருமதி V. மா
160,

திருமதி. Y. செல்லையா திருமதி. G. மகேசன்
செல்வி J. சபாரத்தினம் திருமதி. K. லோகிதராசா
செல்வி. R, கந்தசாமி செல்வி J. செல்லத்துரை சரத் தினம் 175. செல்வி 1. தில்லையம்பலம் மைநாயகம் !
176.
G. தயாபரம்பிள்ளை டி ணராசா
177.
N, வேலுப்பிள்ளை இல்லையம்பலம் 178,,, R. கந்தையா
மாரு
179. திருமதி S. வேலும்மயிலும் யில்வாகனம் 180, செல்வி P. மகாலிங்கம் எனத்தம்பி
18. ,, T. இராமலிங்கம் வஞானியார்
182. திருமதி, P.திருநாவுக்கரசு ந்தரலிங்கம்
183. செல்வி P. விநாயகமூர்த்தி - மாரசாமி
184. திருமதி. 3 பாலசிங்கம் சிலாமணி
185. திருமதி. R. நடராசா 186. ,, U. சுந்தர தாஸ்

Page 107
With the Best (
Avrva vnyvvennsnavn
ROTARY PRIN
34, Manipay Road,

Compliments of
TING TRADES
JAFFNA.

Page 108
f you do not ha
"RET THE QUAL Made of 65% Teti
100% Nyl 100% Ter
Ali Shirt Ma
125, Messer COLOM
Phone: T’ Grams:

ve
Let it be your next
DRM99
ITY SHIRT
con 35%ICotton
On
ylin
anufacturers
Ager Street
IBO-12
32775
“REFORM"

Page 109
With the Best
KAREE DEALERS IN FORAGI
Poultry Mec
87, Sri Ratnajothi Sara
COLO
Phone:
With the Best (
N. A. MARKA
TRINCOJ

Compliments of
M & CO
E, POULTRY FOODS
dicines Etc.
avanamuttu Mawatha HBO-13.
32208
Compliments of
NDU & BROS
MALEE

Page 110
With the best Compliments
RANJANA
52, Banks COLON
T’ Grams: RANJANAS
With the Best
KANNAN &
182, BANKSH.
COLO
T' Phone 26493
24779

of
A STORES
hall Street, ABO=11.
T' Phone: 25851
Compliments of
- COMPANY ALL STREET
MBO-11.

Page 111
நங்கையர் விரும்பும் நல்
மின் வைரங்.
சிறந்த ள்
கே. என், எம்.
தங்கப்பவுண்
கன்னாதிட்டி ,
போன் :

பநாகரீக நகைகளுக்கும்
னும்
களுக்கும்
மதாபனம்
மீறான் சாஹிப்
நகை மாளிகை
யாழ்ப்பாணம்,
585

Page 112
வைத்திருப்பதில் ஒரு பெருமை,
''டொலர்" அலுமினிய,
டொலர் கே
14-டாம் வீதி
SWARNA
Dealers in Agricul
General
20/5, Star
JAF

- பாவிப்பதில் ஒரு தனி மகிழ்ச்சி
எவர்சில்வர் பாத்திரங்கள்
POLLAR
மரப்பறேசன்
கொழும்பு
- STORES
Itural Implements &
Hardware
aley Road, FNA.

Page 113
உங்களுக்குத் தேவையான
உணவுப் பொருட்கள், குளிர் பானங்கள், செ
விவசாய ரசாயனப் ெ "டேவிட் பிறவுண்” உளவு
சகலவிதமான ஜவுளித் உதிரிப் பாகங்கள் மி "பிறதர்' தையல் மெ
மலிந்த விலையிலும் ஒரேயிட எங்கள் ஸ்தாபனத்திற்கு யாழ்ப்பாண ஐக்கிய
ஆஸ்பத்திரி வீதி,
(6 தயா சேட்டுக்கள் * நன்கு பரிசீலனை செய்யப்பட * எத்தன்மையிலும் வி * கழுவும்பொழு
* முன்மா
கொண்டு ! ஆடவர்களாகிய நாம் அதை அ டனும் அழகுடனும் திகழ்வதாகப் ெ
ஆம் இது சந்தேகம் இருந்தால்
தயா சேட்டுக்க
டாக்டர் சுப்பிர
சுன்ன

சாய்ப்புச் சாமான்கள் இப்பு, சப்பாத்து வகைகள் பாருட்கள்
யந்திரங்கள், உதிரிப்பாகங்கள் தினிசுகள், சைக்கிள் மற்றும் ன்சார உபகரணங்கள் சின்கள் மற்றும் பலவும் டத்திலும் பெற்றுக்கொள்ள -விஜயம் செய்யுங்கள்.
வியாபாரச் சங்கம் யாழ்ப்பாணம்.
T”' (THIA SHIRTS) பட்ட துணி
சேடம் வாய்ந்தது. து சுருங்காது. Tாதிரியான தையல் முறைகளைக் நுட்பமாகத் தயாரிக்கப்பட்டது ணியும்பொழுது ஒரு புது மெருகு பெண்கள் கூறுகிறார்கள்.
உண்மை! அணிந்துபாருங்கள்.
Sள் தயார் செய்யுமிடம்
மணியம் வீதி,
கம்.

Page 114
SELECTION OF
RA JG
Selective Sar
36/1, Gra
JAF
Grams : * Rajgo "
With the Best Compliments
STUDIO PRINCESS
CHUNNAKAM.

SAREE SALON
O PA L S ee Specialists, nd Bazaar, FNA,
Dial : 7168
With the Best Compliments
YARL METAL WORKS, K. K. S. Road,
Jaffna.

Page 115
Space Donated By
sellappah & Co.
Stanley Road,
JAFFNA,
Wiน the beat
S. R, S, 1
216, K. K. S. Road,
Tele: 296, JAFFNA. Grams: ‘ROHINI

pace Donated By
COLOMBO RESTAURANT 77, Kasturiar Road,
JAFFNA.
Compliments
Textiles
JAFFNA.

Page 116

216, K
Tele: 2 Grams:

Page 117
A. K. S.
JAFF
JEWELS & E
Mth the best
S. R. S.
216, K. K. S. Road,
Tele: 296, JAFFNA. Grams: ‘ROHINI

Jewellers ENA
DIAMONDS
Compliments
Textiles
JAFFNA.

Page 118
With the
S. GOPALAPIL
111 MAI
BANDAI
LEADING HOUSE FC
DISTRIBUTORS FOR
T' Grams GOPALS
(G) கோல்
பிரபல உற்பத்தியாளர்
எமது ஸ்தாபன
விலைக்குப் பெ * டி. ஐ * டி. 65
* எலஸ்ரோ
ஒருமுறை விஜ (G) கோல் 45, கஸ்து
யாழ் தலைமைக் காரியாலயம் 103, பிரதான வீதி
காலி

3est Compliments
LAI & CO, LTD. N STREET RAWELA
DR QUALITY TEXTILES
and
LANKA SALU SALA:
Phone: 442
> ஸ்ரோஸ்
ன் தரமான காலணிகளை ரத்தில் சகாயமான
ற்றுக்கொள்ளலாம் எஸ். ஐ * றியேவைற்
* பாட்டா பம் செய்யுங்கள் > ஸ்ரோஸ் பாரியார் வீதி பபாணம்
- - -
10, பிரதான வீதி
காலி

Page 119
21:tl: tl: 5
HIDHAYA
HG
21, Ma BANDA T' Phone 424 Prop: S. H. A. MULAFI
அழகிய செருப்பு ச
நயமிக்க பலதரப்பட்ட ரகங் ஈழத்திருநாட்டின் இணையற்ற பிர
பிரகாஸ் 31, 33, கஸ்தூரியார் றோட்

'est Complainment..
>TEL இ
BAKERY
lin Street RAWELA
'ER
ப்பாத்து வகைகளுக்கு
ப்கள், இனங்கள், நிறங்களுக்கு ரபல்ய பாதரட்சை விற்பனையாளர்.
ஸ்ரோர்ஸ்
யாழ்ப்பாணம்.

Page 120
நியூரோன் எடு
மின்சார ஒப்பந்தகாரம் வடமாகாண பிரதான மின் ெ
எஸ்-லோன், பி. வி. ஸி. றட்ஜ் றோட்மாஸ்ர
வி நீ யே ா க 141, 143, ஸ்ர
யாழ்ப்ப
பலசரக்குவகைகளை
* புதியனவாக
* பழுதற்றன.
* நிதான
பெறவிரும்பு எல்லாவிதமான பலச! எம்மிடம் ஒருமுறை வி
இ. சண்மு
பலசரக்கு வ
ம ார்
சுன்6

லேக்ரிக்கல்ஸ் நம் விற்பனையாளரும் பாருள் விற்பனையாளர்கள்
பைப் உபகரணங்கள் ர் கீறே சைக்கிள்
ஸ் த ர் க ள்
நான்லி வீதி பாணம்
தொலைபேசி 7016
8வயாக
எ விலையில்
கிறீர்களா? சக்கு வகைகளுக்கும் ஜெயம் செய்யுங்கள்.
கைநாதன் வியாபாரம்
க் கட். அகம்

Page 121
பட்டரி றேடியோக்களைப் ப
- இன்றே எம்மிடம் ெ ரான்ஸ்ஸிஸ்டராகவோ (Trans
மாற்றிடும் விற்பனையாளர் - 1 குறைந்த செலவில் ஸ்ரீ கிருஷ்ணா றே புதிய பஸ் நிலையம் முன்பாக
Always visit for the Convert
Sri Krishna Dealers in Radio, Electrical
- Repairers in Rad Dr. Subramaniam Rd.,
சிறந்த முறையில் சேவை யந்திர சாதனங்களை 6 எமது ஸ்தாபனத்தில் 6 திறமை வாய்ந்த
கடமையாற்ற எமது ஸ்தாபனத்தில் கீழ்க்கான
முறையில் கெ * லொறி ஹவுசிங் ெ * லோஞ் சாவ்ட் . * கிங்பின் செய் * கிறஸர் சாவு
பைனல் ரேர்ல
கஸ்தூரியார் றோட்,

ற்றிக் கவலைப்படாதீர்கள்! காண்டு வாருங்கள் ister) மெயினாகவோ (Main) வோம். பழுதுபார்ப்பவர்
- சிறந்த சேவை டியோ வேர்க்ஸ்
சுன்னாகம்
Hon, Repair, of your Radio Radio Works
goods, Cycle spares, etc, do & Electricals.
Chunnakam
செய்வதற்காக நவீன வரவழைத்துள்ளோம் ஏராளமான தொழில் 5 நிபுணர்கள் றுகிறார்கள். அம் வேலைகள் விசேஷமான சய்கிறோம் செய்தல்
சீர்ப்படுத்தல் சதல் பட் செய்தல்
பனிங் வேக்ஸ்
யாழ்ப்பாணம்.

Page 122
MILK WHITE
JAF Phone: No. 7233
நம்நாடு செழித்தோங்க
ஆதர்
மில்க் வைற் கே
யாழ்
தொலைபேசி: 7233
துரை 8
23/3, ஸ்ரான்லி வீதி,
'யூ ஆ சா''
பற்றறி
உங்கள் கார்களில் உல்லாசப் பவனி வ பற்றியை இணைத்துப் பாருங்கள். உங்கள் பலரகப்பட்ட உழவு இயந்திரங் டெக்ற்ரா - பியற் போன்றவைக்கும் மி இலங்கையில் உற்பத்தியாகும் அதிஉன் இப்பொழுது கூடிய கழிவுடன் 1; (ஒல் உத்தரவாதத்துடனும் விற்பனையாகிறது
வடமாகாண ஏக விநியோகஸ்தர்கள்:-
-(022 23/3,sTANLEY ROAD

BOAP WORKS "FNA
நம் நாட்டு கைத்தொழிலை
யுங்கள்.
சாப் தொழிற்சாலை
'பாணம்
அன் கோ
யாழ்ப்பாணம்.
SAvvvvல்
YUASA
BATTERY NAArvNAA பர ஒரு "யூ ஆ சா”
கட்கும் விசேஷமாக பேர்குசன், கக்கூடிய வலிமை சக்தியை வழங்குகின்றன
ன த, மிகச்சிறந்த தயாரிப்பு. ன்றரை ) வருடகால
பிறரை) °றந்த தியாய வழங்..
I தே Co.
- JAFFNA.

Page 123
எங்களிடம் குழந்தை அன்பளிப்
சேட் வ
மற் உள்ளூர் கைத்
திருமண வைபவத் கூறைச்சேலை வகைகளும்,
மொத்தமாகவும்
விலை சகாயமாகப் எஸ்.ரி. நாகலி 101, 102, டாக்டர் சுப்பிரமண
முதலீடு: எஸ். ரி. என் 1
எங்களிடம்
பாக்குச் சீவல்
கோல் அத்தர்
முதலி சாய்ப்புச் சாமான்கள் முதலியன மலிவான விலையில் 8
பெற்றுக்கெ
ச. ம ரு த
பலசரக்கு
52, மார்க்கட்

கண்கவர் புக்கள், பெனியன்கள், 1கைகள்
றும்
தறி சேலைகளும் திற்கு தேவையான
பட்டுவேட்டி சால்வைகளும் சில்லறையாகவும் பற்றுக் கொள்ளலாம்
சிங்கம் அன் கோ.
ரியம் வீதி,
சுன்னாகம். நாகரத்தினமும் சகோதரர்களும்
வில் அபிஷேகத் திரவியம்
பன்னீர்
பனவும்
சில்லறைச் சாமான்கள் சில்லறையாகவும் மொத்தமாகவும்
பள்ளலாம்,
5 லிங் க ம்
வியாபாரம்
சுன்னாகம்.

Page 124
இனம் உங்க
I(GIO(9
பிலிம் சுருள்
வாங் த டெவலப்ட
எம் * போஸ்க
ஒரு பி,
கொழம்பு
யாழ்ப்பாண

எளுக்கு தேவையான
5ஆள எம்மிடம்
குங்கள் சிங்(DEVELOPING)
இனாம்!
பட் அளவில் சகி. இனமா
ஸ்ருடியோ ம், போன்.410.

Page 125
A.
JEWE
JAI
Jewels 8

Visit
K. S. ELLERS
FFNA.
For
z Diamonds

Page 126
ஸ்ரீ லங்கா ெ
மீட்டல் வழிகாட்டி
தூயகணிதம் 1 க. பொ. த. தூயகணிதம் II பரீட்சைக்குரி
எழுதிய 6 - ம்
வகுப்பு கணிதப்பயிற்சி 7-ம்
8-ம் மிக விரைவில் வெளிவரு கின் றன
ஆறாம் வகுப்பு ஆங்கிலம் 3ம்- ப எட்டாம் வகுப்பு ஆங்கிலப்பயிற்சி
ஏழாம் வகுப்பு ஆங்கிலப்பயிற்சி மேற்படி மூன்று பயிற்சிகளும் கல்வி திணை தழுவித் தயாரிக்கப்பட்டவை.)
எழுதி (இத்தொடரில் இரண்டாம் பருவத்திற்குரிய
மாதிரிவிடைகள் உடனலசாத்திர வினா
(க. பொ. த. சாதாரணப் ப ஆக்கியோர்: V. கந்தப்பு K. சு
விலை ரூ. குடியியல் வினா விடை (க. பொ. த சாத
- பௌதிகப் புவியியல் க. பொ. பௌதிகப் புவியியல் குறித்து பத்
வடகீழ் ஐக்சிய அமெரி க. பொ. த. உயர்தரவகுப்பிற் தேசப்படத் தொகுதி (தமிழ் ! ஆறாந்தரப் புவியியல் ஏழாந்தரப் புவியியல் இலங்கையின் புவிச்சரிதவியல் (
ஆக்கியோன.க. குணராசா English Sample Test Papers for G C. E. (O/L) Ekal
ஸ்ரீ லங்கா | 234, காங்கேசன்துறை வீதி
Pripted at Sri Lanka Printing Works

வளியீடுகள் :
(சா) விலை ரூ. 3-50 யது.. ரூ. 3-00 வர் சு. இராஜநாய்கம் B. A. (Lond)
3-ம் பருவம் விலை சதம் 90
சதம் 90 ரூ.1-00
நவம் அ 3-ம் பருவம்
3-ம் பருவம் விலை சதம் 90 க்களக் அணித பாடத்திட்ட வழிகாட்டியைத்
பவர் S. இராஜநாயகம் B. A. (Lond)
கணிதப் பயிற்சிகளும் உள்ளன.) ப்பத்திரங்கள் சுகாதாரவியல் II) பரீட்சை 1962-1968) ந்தரமூர்த்தி B. D. S. (Ceylon)
2=50 சரண வகுப்புக்குரியது) விலை ரூ. 2-50
த. உயர்தரப் பரீட்சைக்குரிய இது வினாவிடை விலை ரூ 2-00
க்காவின் புவியியல் குரியது. விலை ரூ. 1.25 அற்லஸ்)
விலை ரூ. 3.75 - *4. ,, ரூ. 3-90
, ரூ. 3-00 Geology of Ceylon ரூ. 2-75 5 B. A. Hons (Ceylon)
iைnation (New Syllabus) புத்தகசாலை
யாழ்ப்பாணம்.
-234, K. K. S. Road, Jaffna. 1970