கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வணிக நாதம் 1992

Page 1
எபாட் VANIKA
1992
வர்த்தக மா யா / ஸ்கந்தவ
சுன்

பாகம் 2 NHRTHHM.
இரண்டாவது ம்லர்
தயக் கல்..
- உயர்ST)
ணவர் மன்றம் ரோதயக் கல்லூரி
னாகம்

Page 2
عبيعي يسمعي يدعم مع مبيعي
* நி யூ ல ங்
கே. கே. எஸ். வீ எம்மிடத்தில் பல இன
பூங்கன்றுகளும் விற் ஒட்டு மாங்கன்று ஒட்டுத் தோடை ஓட்டுத் தேசி ஈரப்பலா POT LIME கமுகு தென்னம்பிள்ளை
இல்லத்தை . POT PLANTS கலர் குறோட்டன்ஸ் கேன் பாம், குயின்பாம் றோஸ்
கலர் செவ்வரத்தை (ஒட்டு) போன்ற பல இனக் கன்றுக
இவள் ஆடை
வீAAAAAAAAAA
விக்னா கல்வி 52, ஸ்ரான்லி றோட், (கலை, வர்த்தக வகுப்புக்கள்
ஒரே நிறு A/L கலை, வர்த் SAT. SUN 8.00=2,00)
ஆசிரிய *பொருளியல்: திரு. கலாகரன் வர்த்தகம்: திரு . தேவா | கணக்கியல்: திரு. வன்னியசிங்கம் - அளவையியல்: திரு. விக்கி தமிழ்:
திரு. குழந்தை இந்து நாகரீகம் இந்துசமயம்: திரு. காரை.
சுந்தரம்பிள்ளை
ஆண்டு 10, 9, ;
நடைபெறு

يعي يعيعقيعيعقيعيعيه عينيه
1கா பா
தி, இணுவில்.
பயன் தரு கன்றுகளும் பனைக்கு உண்டு.
* 1 Kg. கொய்யா
மலைமேம்பு * ஒரு கிலோ தேசி
(6மாதத்தில் பயன் தரக்கூடியது) விளாத்தி தோடை லாவுழு பலா
நெல்லி அலங்கரிக்கும்
* INDO PLANTS டான் பாம் லாச் பாம் முசண்டாஸ்
ஐந்தூரியம் -ளும் விற்பனைக்கு உண்டு.
உரிமையாளர்: S. K, துரைசிங்கம் J. P. - S. K. செல்வராசா
மயானது
பி நிறுவனம்
யாழ்ப்பாணம். ளுக்கு தனித்துவம் வாய்ந்த வனம்.) தக துரித மீட்டல். DAY CLASSES 8.00-2.00
ர் குழு புவியியல்:
திரு. குணராசா பரலாறு:
திரு . சிறிதரன் அரசியல் : திரு. ஜெயகார் தன் பொருளியல்: திரு. கலாகரன் கணக்கியல்: திரு. S. K. பிரபாகரன் அளவையியல்: திரு. A. பிரபாகரன் பர்த்தகம்: திரு. இரகுநாதன் B, 7, 6, வகுப்புக்கள் அகின்றன.

Page 3
வணிக VANKA
ܬ
யே,
இரண்டாம்
இதழாசிரி செல்வன் சு. செல்வி - செ
வர்த்தக மான
யா\ ஸ்கந்தவரே
சுன்ன

நாதம் NAATHAM
92 -
பங்க?
Jஉயர்தி
வது மலர்
யர்கள் :
சாந்தகுமார் =. செல்வராணி
எவர் மன்றம் இதயக் கல்லூரி ரகம்

Page 4
கல்லூரிக் கீதம் * * * * * * * * * * *
போற்றிசெய் வோமெ! பொலிவுடன் மாண வர்
ஸ்கந்தவரோதய எர் சந்ததமும் புகழ் கொ இந்த வுலகினில் நன் ஸ்கந்த அருள் புரி நல்
ஆங்கில ஞானமும் 3 அவைதரு ஞான மும் ஓங்குவிஞ் ஞான மும் உண்மையில் வளர்தா
එළළළළළළළළළළළළළදපළළළු කෙළපතපපපපපපපපපපපපපපපත
பிறவிகள் தோறுமே ( பேற்றினை ஈந்தனை உறவென்றும் நீயே 2 உழைத்திடு வோமென்
எந்தை யென த்தகு க சிந்தையி லெழுந்த க செந்தண்மை மருத்துவ சேவையில் உயர்ந்த
சேவையில் உ சேவையில் உ சேவையில் உ
வாழிய வாழிய எங்கள் வளமலிந் தோங்கியே வாழ்க ! வாழ்க ! வா வளரிள மதியெனவே வாழிய எங்கள் கல்லு

ங்கள் கல்லூரித் தாயைப்
கூடி..
(போற்றி)
(போற்றி)
ங்கள் கல்லூரி
ண்டே த வளர்ந்திட ஏறே. அருந்தமிழ் ஆரியம்
நன்றே உயர் தரு கலைகளும் 5 மிங்கே
(போற்றி)
தொடருநற் கல்விப்
அன்னாய் உண்மையொ டுனக்காய்
றும் நாமே .
(போற்றி)
ந்தைய வள்ளலின் ல்லூரி பன் சுப்பிர மணியனின்
கல்லூரி!
யர்ந்த கல்லூரி! யர்ந்த கல்லூரி! யர்ந்த கல்லூரி!
ள் கல்லூரி *என்றும்
ழ்க!
சரி,

Page 5
நாதத்தின் இனிமை 0000000000000000000000009999ee9ee
போற்றி செய்வோம் எங். கூடி''... என்ற பூரிப்புடன் எமது இரவு சிறப்புப்பாயிரத்தை எமது ஸ்கந்தா அ டிற் கால் கொள்ளும் இவ்வேளையி கொண்டு அன்னையை மேலும் சிறப்பி கொள்ளுகின்றோம்.
கல்வி உலகிற்கு கல்விச் செல்வம், பெயருடன் தொடர்ந்தும் பல இன்ன இயற்றுவதை கல்வி உலகம் கண்டு ஆ தின் உள்ளே பல தேன் துளிகள் உவ கழக விரிவுரையாளர்கள், எதிர்காலச் ஆக்கங்கள் பொதிந்த அறிவுசால் கட்(
நாதத்தின் இனிமையிலே உங்கம் துணையாகவும், வழிகாட்டிகளாகவும் திரு. ப. விக்னேஸ்வரன் அவர்கட்கும் வரன் அவர்கட்கும் மற்றும் பொறுப்ப வித்துக் கொள்கின்றோம். அதேவேன கட்டுரைகள் வழங்கிய கலைப் பொக்கி பெருமக்கள், நிதியுதவி செய்த பை ஏனைய ஆதரவாளர்களிற்கும் எமது . எமக்கு உறுதுணையாய் நின்று எல்ல எமது வர்த்தக மாணவர் மன்ற உறுப் தெரிவித்துக்கொள்ளும் இவ்வேளையில் பொங்க அணி செய்து எமது முயற்சிய தாசன் அச்சகத்தினருக்கும் எமது நன்
ஆண்டு தோறும் எமது சஞ்சிை திகழ அனைவரினதும் அன்பையும், ஆ

யிலே உங்களுடன்
එළවළපපපපපපපපපපපපපප පපපපපපනම්
கள் கல்லூரித் தாயைப் பொலிவுடன் மாணவர் ண்டாவது வெளியீடான ''வணிகநாதம் ' ' எனும் ன்னை தனது கல்விச் சேவையின் நூற்றாண் லே, பல கல்வித் துளிகளைத் தன்னகத்தே க்க உங்கள் , கைகளில் அளிப்பதில் பேருவகை
த்தை அளிக்க ''வணிகநாதம்' எனும் இனிய ல்கள் மத்தியில் தனது ஓசையை இசைபட னந்தம் அடையும் என நம்புகின்றோம். நா தத் பப்பானவையாய் அமைந்துள்ளன. பல்கலைக் சிற்பிகளான மாணவ மணிகள் ஆகியோரது திரைகள் இடம்பெறுகின்றன.
ரூடன் நாமும் கலந்து திளைக்க எமக்கு பெரும் ம் விளங்கும் எமது மதிப்புக்குரிய அதிபர் மன்றப் பொறுப்பாசிரியர் திரு. ச. சிவனேஸ் ாசிரியர்களுக்கும் எமது நன்றியறிதலை தெரி ள ஆசிச்செய்திகள் வழங்கிய பெரியார்கள், சங்கள், விளம்பரங்கள் தந்துதவிய வர்த்தகப் ழய மாணவர் சங்கம், அன்பளிப்புச் செய்த நன்றியறிதலைப் பணிவுடன் அளிக்கின்றோம். எவகைபிலும் ஊக்கமும், ஆக்கமும் அளித்த பினர்கள் யாவருக்கும் உளமார்ந்த நன்றியைத் - இம்மலரினை புதுமணம் கமழ பொலிவு பினை முழுமை பெறச் செய்த யாழ்ப்பாணம் றிகள் பல உரித்தாகுக!
க வளர்பிறையென வளர்ந்து முழுமதியெனத்
தரவினையும் வேண்டுகின்றோம்.
இதழாசிரியர்கள்: சு. சாந்தகுமார் செ. செல்வராணி

Page 6
அதிபர் ஆசியுரை
பஸ்டிய
சைவம் வளர்த்த சான் களும் செறிந்து வாழ்ந்து வரு களுள் ஒன்றாகிய அன்னை ஸ் - யெல்லாம் எமது இதயங்களில் நூற்றாண்டு விழா நிகழ்வுகளை யில் ஸ்கந்தவரோதயாவின் வர் தும் பாராட்டுவதற்குரியது.
**Trust in God and d திகழும் இக் கல்லூரியின் வரம் கின் பல்வேறு பகுதிகளிலும், உ தேசங்களிலும் பழைய மாணவ அன்னை ஸ்கந் தாவின் புகழ் அ மாகிய கல்வியின் உயர் அலைக் வருபவள் அன்னை ஸ்கந்தா. ஏனையோரும் தத்தமது ஆற்ற பழைய மாணவர்கள், மற்றும் ந செய்தல் வேண்டும் என்பதே 6 மகிழ்வுடனும், நல்லிதயத்துடனு வணிக நாதம் மேலும் எழிலுட கள், மாணவர்கள் அனை வரைபு வளர்ந்திட ஸ்கந்தன் அருள் ெ

"றோர்களும் செந்தமிழ் வளர்த்த செம்மல் ம் ஈழத்தின் பிரபல்யம் வாய்ந்த கல்லூரி கந்தா தரும் வணிக நாதத்தின் ஓசை ஒலி
மீண்டும் இனி  ைம தருகின்றது. தனது ரக் கண்டு களிகூர இருக்கும் இவ்வேளை த்தக மாணவர் மன்றத்தின் முயற்சி பெரி
0 the right * > என்ற உயர்ந்த நோக்குடன் மாறு தொன்மையும் சிறப்பும் மிக்கது. உல தாரணமாக இங்கிலாந்து, கனடா போன்ற ர்கள் ஒன்றுகூடிப் பெ ரு  ைம பேசுகின்ற அடைக்குந் தாழ் அற்றது. அழியாச் செல்வ கள் அனைத்தையும் எம்மவர்க்கு அளித்து
வர்த்தக மன்றத்தினரின் சேவைபோன்று கல்களையும் வெளிக்கொணர்ந்து பெற்றோர், லன்விரும்பிகள் இதயங்களை நிறைவு பெறச் எனது விருப்பம். இம்மலர் மணம் பெற மன ம் மாணவருக்குகந்த ஆக்கங்களைத் தந்து டன் திகழ உதவிய கல்விமான்கள், ஆசிரியர் ம் வாழ்த்தி, ஸ் கந்தா இந்தவுலகினில் நன்கு பற வேண்டுகின்றேன்.
P. விக்னேஸ்வரன்
(அதிபர்)

Page 7
எங்கள்
திரு. P. விக்னே.
Dip-in-Ed, S. |

T அதிபர்
ஸ்வரன் 13. 3. (3tans.) -- E. A. S., Class III.

Page 8
aa) ob a media

ಗಾವಿಎia #
1

Page 9
பிரதிக் கல்விப்பணிப்பாளர் அவ
ஆசிச்செய்தி 60o000000000000000000000000000000
ஸ்கந்தவரே றம் ''வணிகநாதம்”> சஞ்சி கிறேன். வர்த்தகத்துறைக் க காலகட்டத்தில் வணிகநாத சந்தேகம் இல்லை.
எமது மாணவர்களின் ரித்து வருவதை நாம் அறி! யில் மாணவர்களின் கல்வ கல்வித்துறை சார்ந்த அல் வேனும் பூர்த்தி செய்யும் வ தக்கது. வணிகத்துறை சார் கள் இச்சஞ்சிகையில் இடம் யத்துவம் கொடுக்கப்பட்டு வளம்படுத்த இவ்வகைச் களிக்க வேண்டும்.
இன்றைய மிகவும் க அபிவிருத்தியைக் கருத்தில் வந்த ஸ்கந்தவரோதயக் : அவர்களுக்கு உறுதுணையா களும் பாராட்டப்பட வேன்
வணிகநாதம் தொட வளம்படுத்த வேண்டும் என
கோட்டக்கல்வி அலுவலகம், மருதனார்மடம்.

பர்களின்
eeeee9000000000000000000000000000
ாதயக் கல் லூரியின் வர்த்தக மாணவர் மன் கையை வெளியிடுவதையிட்டு மகிழ்ச்சியடை ல்வி பிரபல்யம் அடைந்து வரும் இன்றைய -த்திற்கு நல்ல வரவேற்பு இருக்குமென்பதில்
- நாட்டம் வணிகத்துறைக் கல்வியில் அதிக வோம். காலத்தின் தேவைகளுக்கு ஏற்ற முறை பித் தேவைகளை வழங்கவேண்டிய பொறுப்பு ஒனவர்க்கும் உண்டு, இத்தேவையினை ஓரள பகையில் வணிகநாதம் வெளிவருவது விரும்பத் ந்த கல்விமான்களின் சில தரமான கட்டுரை பெற்றுள்ளன. மாணவர் ஆக்கங்களுக்கும் முக்கி ள் ளது. வணிகத்துறைக் கல்வியை வளர்த்து சஞ்சிகைகள் ஆக்கபூர்வமான முறையில் பங்
ஷ்டமான சூழ்நிலையிலும் மாணவர்களின் கல்வி கொண்டு வணிகநா தத்தினை வெளியிட முன் கல் லூரி வர்த்தக மாணவர் மன்றத்தினரும் க நின்று செயற்பட்ட அதிபரும், சக ஆசிரியர் எடியவர்கள்.
ர்ந்தும் வெளிவந்து வணிகக் கல்வித்துறையை
• வாழ்த்துகிறேன்.
சிவானந்தன் பிரதிக் கல்விப் பணிப்பாளர்

Page 10
பிரதிக் கல்
பப) சுன்னாகம்
டாவது வணிகமலராக ம செய்தி வழங்குவதில் மட்
மிகக்குறுகிய காலத் னுறுதிமிக்க விடயங்கள் 1 யர்கள், மாணவர்கள் ஆகி பாராட்டுக்குரியதாகும். னெடுத்துச் செல்வதற்கும் வதற்கும் கைகொடுக்கும்
|
இம்முயற்சியில் அல் மாணவர்கள் ஆகி யோரை வணிக நாதத்தின் ஒலி இறைவனை வேண்டுகின்
கல்வித் திணைக்களம், யாழ்ப்பாணம்.

விப் பணிப்பாளர் (வர்த்தகம்)
அவர்களின் ஆசிச்செய்தி
5 ஸ்கந்தவரோதயக் கல்லூரியினால் இரண் லரும் 'வணிக நாதம்' சஞ்சிகைக்கு ஆசிச் டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன் .
த்தில் நாதம் வண்ணக் கலவையில் பல பய பல்கலைக் கழக விரிவுரையாளர்கள், ஆசிரி யோரின் ஆக் க ங் க ளு ட ன் வெளிவருவது இந்த ஆக்கங்கள் வணிகக் கல்வியை முன் , மாண வர்களின் சிந்தனையை விரிவுபடுத்து
என்பதில் சந்தேகமில்லை.
தம்பாடுபட்டு உழைத்த அதிபர், ஆசிரியர்கள், ப பாராட்டுவதில் பெருமிதமடைகின்றேன். வணிக உலகமெங்கும் பரவ வேண்டுமென றேன்,
சி: சிவராசா பிரதிக் கல்விப்பணிப்பாளர் (வர்த்தகம்)

Page 11
எமது
முன்
1)கந்தவரோதயாக் வேண்டுகோளுக்கு இணங்க ரான வணிகநாதம் என் பெருமகிழ்ச்சியடைகின்றேன் பாராட்டுகின்றேன். இக்கல் முன்னர் அமைந்திருந்தாலு சிகைகளை ஆரம்பிக்கவில்லை ஆசிரியர்களையும், மாணவ சல்லூரியின் வர்த்தக மன் விஞ்ஞான அறிவியல் துறை வைப் பெறவேண்டும் என்ற சஞ்சிகை.
எனக்கு இக்கல்லூரிய மாணவாைய், 41 வருடங்க இங்கே சேவை புரிந்தேன். களில் சிறிது தளர்ச்சியைக் பாறும் போது இக்கல்லூரி, பெறுபேறுகள், விளையாட் சகல துறைகளிலும் நல்ல ( ரும் அறிவர். இலங்கையிலே களில் ஒன்றாக மதிக்கப்பட மங்கியிருந்தாலும் ஒளிமயம் அறிய மகிழ்ச்சியடைகின்றே எES இச்சஞ்சிகையில் கான் யர்களாலும் மாணவர்களா எழுதப்பட்டன. இவைகள் என நம்புகிறேன், வர்த்தக - நிலைபெற வேண்டுமென்று
வி. சிவ
மு

து கல்லூரியின் 1னாள் அதிபர்
அவர்களின் ஆசிச் செய்தி
கல்லூரியின் வர்த்தக மாணவர் மன்றத்தின் மன்ற வெளியீடான, இரண்டாமாண்டு மல னும் சஞ்சிகைக்கு இவ்வாசியுரையை வழங்கப் -. மன்றத் திரிைன் இப்பெரு முயற்சியைப் லூரியின் சரித்திரத்தில் சில மன்றங்கள் இங்கே ம் அம்மன்றங்கள் வணிக நாதம் போன்ற சஞ் லை. ஆகவே, இதனை ஆரம்பித்த அதிபர், பர்களையும் மீண்டும் பாராட்டுகின்றேன். இக் றத்தினரின் அயராத உழைப்பினாலும், நவீன 5 வளர்ச்சியடைந்திருக்கும் இக்காலத்தில், அறி ற அவர்களின் பேரவாவினாலும் எழுந்ததே இச்
பில் நீண்டகாலத் தொடர்புண்டு. 5 வருடங்கள் கள் ஆசிரியராய், உப- அதிபராய், அதிபராய் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ந்தேன். சில காலங் கண்டு கவலையுற்றேன். எனினும் யான் இளைப் - கல்வி நிர்வாகம், கல்வி விருத்தி, பரீட்சைப் ட்டுக்கள், பாடத்துணை முயற்சிகள் போன்ற முன்னேற்றம் அடைந்திருந்தது என்பதை யாவ ல பெயர்பெற்று முன்ன ணியிலிருந்த கல் லூரி ட்டது. எனினும் அண்மைக் காலத்தில் சற்று மானகாலம் ஒன்று தென்படுகின்றது என்பதை ஊன. - ட் ட இ இ க இ ேட , , , ணப்படும் கட்டுரைகள் திறமை வாய்ந்த ஆசிரி லும் அவர்களின் பேரவா காரணமாக ஆராய்ந்து, - மாணவ உலகத்துக்குப் பெரிதும் பயன்படும் க மாணவ மன்றத்தினரின் இம் முயற்சி தளராது
இறைவனை வேண்டுகின்றேன்.
சுப்பிரமணியம் B.A., B., Sc.(Lond.) P.G.T ன்னாள் அதிபர், ஸ்கந்தவரோதயாக் கல்லூரி

Page 12
எமது பார
த)
செல்வன் இ: விஜயகுமார் ----
11 A.IL. வர்த்தகப் பிரிவு
செல்வி லோ.
(O/L மான
1992ஆம் ஆண்டில் நடைபெற்ற பரீட்சைகள் அதியுயர் பெறுபேறுகளைப் பெற்ற மூன் கின் றோம்.

ாட்டுக்கள்
செல்வன் கு, ஜெயகோபன்
A/L கணிதப் பிரிவு
- ம தனி எவி)
ரில் மருதனார்மடக் கோட்டத்திலேயே று மாணவ மணிகளையும் பாராட்டு
பழைய மாணவர் சங்கம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி,
சுன்னாகம்,

Page 13
மன்
ன்னல்கள் நிறைற் வாழ்ந்து கொண்டிருக்கும் ! தாகிய கல்விச் செல்வத்தின மாணவர் மன்றம் ஆற்றி 6 யும், வாய்ப்புக்களையும் வழ றல் உள்ளவர்கள் என்பதை வங்களைப் பாராட்டு கின் தொடர்ந்து வெளிவரவும் . அதிபர் ப. விக்னேஸ் வரன் - தாகுக, அத்தோடு எம் மல் கள் வழங்கிய பெரியார்களு விளம்பர உதவிகளாகவும் வா நன்றிகள் உரித்தாகுக.
இவ்விதழ் தொடர்ந் மானை வேண்டி, இந் நாத கொண்டிருக்க வேண்டுமென
(1) 0
22)
1992-12-14

றப் பொறுப்பாசிரியரின்
ஆசிச்செய்தி
ந்த இக்கட்டான சூழ் நி லை யி ல் எம்மினம் இவ்வேளையிலும் எம்மினத்தின் பெரும் சொத் பன பேணிக் காப்பதில் ஸ் கந்தாவின் வர்த்தக வரும் பணி போற்றத்தக்கதாகும். வசதிகளை ஓங்கினால் சாதனைகளைப் படைக்கும் ஆற் 5 மீண்டும் நிரூ பித்திருக்கும் எம் மாணவச் செல் றேன். வணி 5 நாதம் தோற்றம் பெறவும், ஆக்கமும் ஊக்கமும் அளிக்து வரும் எங்கள் அவர்கட்கு எமது கல் லூரியின் நன்றி பல உரித் மரின் ஆக்கத்திற்கு ஆசிச் செய்திகள், கட்டுரை க்கும், கல்விப்பணிக்கு அன்பளிப்புக்களாகவும், ரி வழங்கிய வர்த்தகப் பெருமக்களுக்கும் எனது
து வெளிவர எல்லாம் வல்ல ஸ்கந்தப் பெரு கமான து திக் கெட்டும் தொடர்ந்து ஒலித்துக் எ உளமார வாழ்த்துகின்றேன்.
சிவநேஸ்வரன் B. Com, (Hons.) A. A. T,

Page 14
வர்த்தக மாணவர்
இEREERREEESSESSESS
19
காப்பாளர்:
பொறுப்பாசிரியர்:
உப பொறுப்பாசிரியர்கள்:
தலைவர்
உப தலைவர்:
செயலாளர்:
உப செயலாளர்:
பொருளாளர்:
இதழாசிரியர்கள்:
கணக்காய்வாளர்:
விளம்பரப் பொறுப்பாளர்கள்:
உதவி நிர்வாக உறுப்பினர்கள்:

மன்றச் செயற்குழு SEESER 32 33:கல்லலESS
32
திரு. P. விக்னேஸ்வரன் (அதிபர்)
திரு. S. சிவனேஸ்வரன்
திருமதி M. G. ஜெயரட்ணம் திருமதி V. நடரா ஜா செல்வி T. மாலினி
செல்வன் T. ஸ்ரீகரன்
செல்வி C. விமலா
செல்வன் K. ஈஸ்வரன்
செல்வி S. வாசுகி
செல்வன் T. கௌரிகரன்
செல்வன் S. சாந்தகுமார் செல்வி S. செல்வராணி
செல்வன் K. துரியோதனன்
செல்வன் K. சசிதரன் செல்வி - N. பாலகெளரி
ப .
செல்வன் A.
சுபாகரன் செல்வன் K, சிவகுமார் செல்வி
ஐஸ்வரியா செல்வி
கலைமதி செல்வி
கவிதா

Page 15
בכ- סר דידסה

இருப்பவர்கள் : (இடமி ருந் து வலமாக) செல்வி T. மாலினி. திரு. A. தற்பரானந்தன் (உப அதிபர்), செல்வன்
T. ஸ்ரீகரன், (தலைவர்), திரு. P. விக்னேஸ்வரன் (அதிபர்), திரு. S. சிவனேஸ்வரன் (மன்றப் பொறுப்பாசிரியர்), திரு.4.புவனேந்திரநாதன் (உப அதிபர்), திருமதி N. நடராஜா, திருமதி
M, G, ஜெயரட்ணம். - நிற்பவர்கள் : [ கம் வரிசை (இ - வ) செல்வி P. கவிதா. செல்வி K. கலைமதி, செல்வி ஐஸ்வரியா, செல்வி
A. அனுஷா, செல்வி N. பாலகெளரி, செல்வி S. செல்வராணி, செல்வி S. வாசுகி, செல்வி S.விமலா. நிற்பவர் கள்: 2-ம் வரிசை ( இ = வ) செல்வன் K. சசிதரன், செல்வன் T. கெளரிகரன் (பொருளாளர்), செல்வன்
K, ஈஸ்வரன் (செயலாளர்), செல்வன் K. துரியோதனன், செல்வன் S. சாந்தகுமார்.

Page 16
ਵਰ ਦੀ ਕਾਰ ( 1 ) 0 1 2 ਦੀ ਜ


Page 17
நீங்காத நினைவில்
9775%$$ %3%302:33:27
மலர்வு : 29
( 1 )
22:8 22:S கAை$ %8%8ல் 22a8
10
1972 SMA$2
8 S2:55
அமரர் பேரின்பநாயக
அ
(முன் னாள்
வர்த்தக மன்றம் வளமுற கர்த்தர் மைந்தன் கட்டிள் இத்தரை மீதில் இதயங் எம்மவர் உள்ளம் ஏற்றி தம்மாலியன்ற சேவை ( தரணி போற்றிட வாழ்ந்த வாச மலராய் வளர்மதி பாசமலர் ஜோர்ஜ் பண் பெ பாங்கினை எண்ணிக் கல ஏங்கித் தவிக்கும் எண்ணி தூ ங் கா' துழைக்கும் வர்த்த தாங்காக் கண்ணீர் அஞ்ச
வ.

"7:33???SE%%3
47:$%$%$%9
உதிர்வு :
25 $587.7%$%$%$%$%
1992 * aSASAS
=shA%82%AA
கம் ஜோர்ஜ் சுரேஷ்குமார்
வர்கள்
இதழாசிரியர்)
உழைத்த ங் காளை
- - - - குளிர S நண்பன் --- ' - செய்து தனன் நன்கு யெனத்தகு ஈடு பழகிய
ங்கு மிதயங்கள் லா வுள்ளங்கள் நக மன்றம் சலி மலரிது.
ஸ்கந்தவரோதயக் கல்லூரி ர்த்தக மாணவர் மன்றம்

Page 18
நாத அலைகளில்...!
விடயம்
1. மத்திய வங்கியின் நாணயக் கொள் கையில்
-- திரு, மா.
2. இலங்கையில் மறுகாப்புறுதி
செல்வி ந
3. கைமாற்றத்தக்க சாதனமாகிய காசோ ை
- செல்வன்
4. சந்தைப்படுத்தலின் எண்ணக்கருக்கள்
- செல்வன்
5. வெளிநாட்டுக் கடன் பழுவும் மீளளிப்பு :
- திரு. இ.
6. பாதீட்டில் பற்றாக்குறையும் நிதியளிப்பு
செல்வன்
7. விலைச்சுட்டெண்
செல்வி ெ
8. நிறை போட்டிச் சந்தையும் தனியுரிமைச்
செல்வன்
9. பெறுமானத் தேய்வு:- சில எண்ணக்கருக்
செல்வி ச
10, பங்குடமையைக் கலைத்தல்
செல்வன்
11. பயன்தரு பொருளியல் ஆயுளும் நிலையா
- செல்வன்
12. இந்து நாகரீகச் சிறப்பிற்கு உபநிடதம் -
செல்வி 6
செல்வி க ம் - செல்வி சு iarhau i unum non

ਹੋਰ ਵਹ ਹਰ ਵਾਰਮਰੀ ਤ
பக்கம்
5 புதிய எண்ணக்கருக்கள்
நடராசசுந்தரம்
6
1. பாலகெளரி
ல:
த. கௌரிகரன்
10
செ. விஜயகுமார்
18
உபாயங் களும்
நந்தகுமாரன்
20
ம் :- ஒரு நோக்கு
சு. சாந்தகுமார்
32
ச. செல்வராணி
38
சந்தையும் :-ஓர் அறிமுகம், த. பிரியதர்சன்
45
கேள். =ா. சிவசிவா --- 19
கெ. துரியோதனன் - 56
என சொத்துக்களும்
- - - 89 த. ஸ்ரீகரன்
லோ. குலமகள் -. வாசுகி
74

Page 19
மத்திய வங்கியின் ந புதிய எண்ணக் கரு New Concepts in the Ce
1. அறிமுகம்:-
ஒரு நாட்டின் நிதியமைப்பில் மத்திய வங்கி பிரதான நிதி நிறுவனமாக செயற் படுகிறது. நாட்டின் பொருளாதார அபிவி ருத்தியில் பல வகையில் ஈடுபட்டு கட்டுக் கோப்பான அமைப்பை உருவாக்க முனைகி றது. இலங்கையில் மத்தியவங்கி பொருளா தார உறுதியையும் அதே நேரத்தில் அபிவி ருத்தியையும் கருத்திற் கொண்டு இயங்கி வருகின்றது. பெருமளவுக்கு உறுதியைவிட்டு பொருளாதார வளர்ச்சியில் அதிகம் கவனம் செலுத்துகின்றது எனலாம். இதன் காரண மாக இன்று அது தன் முக்கிய மரபு ரீதியான கடமைகளிலிருந்து விலகிச் சென்று கொண் டிருப்பதை நாம் அவதானிக்க முடிகின்றது. அபிவிருத்தி வங்கியியல் தொழிற்பாடுகள் இன்று மத்திய வங்கியுடன் இணைந்த ஒரு தொழிற்பாடாக மாறி வருவதனைக் காணலாம். இவ்வா றான புதிய முயற்சி களில் ஈடுபட்டுவரும் மத்திய வங்கி இன்று நாணயக் கொள்கையை நடைமுறைப்படுத் தும் பொழுதும் புதிய முறையில் அணுகுவ தனை நாம் அவதானிக்கலாம். மரபுரீதி யாக இருந்து வந்த தொகைக் கட்டுப்பாடு களில் பல வருடங்களாக வங்கி வீதம், ஒதுக்குவீதங்கள் என்பன முக்கிய இடத்தை வகித்தன. இதனுடன் சேர்ந்த பகிரங்க சந்தை நடவடிக்கை அதிகளவுக்கு முக்கிய இடத்தைப் பெறவில்லை. ஆனால் இன்று சந்தையை அடிப்படையாகக் கொண்ட நாணயக் கொள்கை என்ற நோக்கில் பகிரங்க சந்தை நடவடிக்கை முக்கியத் துவம் அடைந்து வருவதனைக் காணலாம். இதனால் இத்தகைய நாணயக் கொள்கை யில் முக்கியத்துவம் வகிக்கும் சில எண்ணக் கருக்களை ஆராய்வது சிறப்புடையதாகும்.
வணிகநாதம்-1992

நாணயக் கொள்கையில்
க்கள் entral Bank Monetary Policy
மா. நடராசசுந்தரம், சிரேஷ்ட விரிவுரையாளர், வணிக முகாமைத்துறை, யாழ்.பல்கலைக் கழகம்
2. ஒதுக்குப் பணம்:- (Reserve Money)
பொருளாதார அமைப்பில் நாணய பரிவர்த்தனையில் பணக் கொள்கையை ஒழுங்குபடுத்துவதில் ஒதுக்குப்பணம் முக்கிய இடம் பெறுகின்றது. ஒதுக்குப்பணம் இன் னோர் கருத்தில் அடிப்படைப் பணம் (Base Money), நாணய தளம் (Monetary Base ), உயர்வலுப் பணம் (High Powered Money) என்றும் கூறப்படுகின்றது. மத்திய வங்கியின் ஐந்தொகையில் காணப்படுகின்ற தெரியும் பொறுப்புக்கள் (Sight Liabilities) யாவும் ஒதுக்குப் பணத்தால் உள்ளடக்கப்படுகின் றன. சுருக்கமாகக் கூறின் இவை மத்திய வங்கியின் பொறுப்புப் பகுதியில் மூன்று பெரும் பிரிவுகளாக இருக்கின்றன. அவை யாவன:
1. வணிக வங்கிகளும் மக்களும் வைத்தி
ருக்கின்ற நாணயங்கள். மத்திய வங்கியிடம் வைப்புச் செய்யப் பட்டிருக்கும் வணிக வங்கிகளின் வைப்புக்கள். மத்திய வங்கியிடம் இருக்கும் ஏனைய நிறுவனங்களின் வைப்புக்கள்.
ஒதுக்குப் பணத்தில் ஏற்படுகின்ற ஒவ் வொரு மாற்றமும் நாட்டின் மொத்த பண நிரம்பலை பாதிக்கின்றன. எந்தளவுக்கு பண நிரம்பல் அதிகரிக்கும் என்பது பணப் பெருக்கியின் (Money Multiplier) அளவைக் கொண்டு தீர்மானிக்கப்படும்.மொத்த ரீதியாக மத்திய வங்கியின் ஐந்தொகை யினை எடுத்து நோக்கினால், ஒதுக்குப் பணத்தை நிர்ணயிக்கக் கூடிய காரணிகளை இலகுவில் அறிந்து கொள்ளலாம். பின்வரும்

Page 20
மா. நடராசசுந்தரம்
02
மாறிகள் தந்தால் தோல் எதிர் மேற்
மாறிகள் மாறுகின்ற திசை நேர்க்கணிய மாக இருந்தால் நேர்க்கணியமாகவும், எதிர்க்கணியமாக இருந்தால் எதிர்க்கணிய மாகவும் ஒதுக்குப்பணத்தில் மாற்றமேற் படும். இங்கு நான்கு முக்கிய மாறிகளை இனங்கண்டு கொள்ளலாம்.
1. மத்திய வங்கியால் வணிக வங்கி களுக்கு
வழங்கப்படும் முற்பணம்.
9 9 ஏ 9 © 65 6 7 6 © 6 '- 6 7 8 9 ] ]
2. மத்திய வங்கியினால் அரசாங்கத்திற்கு
வழங்கப்படும் தேறிய கடன் அளவு (அரசாங்க வைப்புகளுக்கும் கடன்
களுக்கும் உள்ள வித்தியாசம்) 3. மத்திய வங்கியின் தேறிய வெளிநாட்டு
ஒதுக்கு.
4. மத்திய வங்கியின் ஏனைய சொத்துக்கள்
மத்திய வங்கி மேற்கூறப்பட்ட நான்கு
வ
மொத்தபண
நிரம்பல்
-
பணப்பு
இக்கட்டத்தில் பணப்பெருக்கி என்றால் வேண்டும்.
3. பணப்பெருக்கி: Money Multiplier.
நாட்டின் மொத்த பண நிரம்பலை ஒதுக் பெருக்கியாகும்.
உதாரணம் :-
பணப் பெருக்கி
GT எம் +
//
மேற்காட்டிய உதாரணத்தில் பணப்பெருக்கி அதிகரிக்கும் போது, நாட்டின் மொத்த பண நிர ஆல் அதிகரிக்கவேண்டும். இதன் காரணமாகவே அழைக்கின் றனர். பண நிரம்பல் அதிகரிக்க இது ஒ ரூபாவால் ஏற்படும் அதிகரிப்பு இறுதியில் பணநி டையச் செய்கின்றது. அதன் தாக்கசக்தியினால் த எனவும் அழைக்கின்றனர். பணப்பெருக்கியைக் வாய்பாடு பயன்படுத்தப்படுகின்றது:
வணிகநாதம் - 1992

சறிகளிலும் மாற்றங்களை உண்டுபண்ணும் பாழுது வணிக வங்கிகளின் கடன் நட டிக்கையால் உடனடியாக நாட்டின் பண சம்பல் அதிகரிக்கும். ஒதுக்குப்பணத்திற் ம் பண நிரம்பலுக்கும் இடையில் நெருங் ய தொடர்பு இருப்பதனைக் கண்டு கொள் லாம். ஒரு நாட்டின் மொத்த பண நிரம் ல் மக்கள் வைத்திருக்கும் பண அளவு, ணிக வங்கிகளில் காணப்படும் மக்களின் கள்வி வைப்புக்கள், வணிக வங்கிகளில் வப்புச் செய்யப்பட்டிருக்கும் கால, சேமி பு வைப்புக்கள் என்பவற்றை உள்ளடக் பதாக இருக்கும். இதற்கும் ஒதுக்குப் ணத்திற்கும் இடையில் இருக்கும் தாடர்பை கணித ரீதியாக கணித்துக் காள்ளலாம். சுருங்கக் கூறின் மொத்த ண நிரம்பல் எப்பொழுதும் ஒதுக்குப் ணத்தை பணப்பெருக்கியினால் பெருக்கி ரும் தொகைக்கு சமமாக இருக்கும்.
பெருக்கி X ஒதுக்குப்பணம்
என்ன என்பதனைப்பற்றி ஆராய்தல்
தப் பணத்தால் பிரிக்க வருவதே பணப்
மாத்தபண நிரம்பல் ஒதுக்குப்பணம்
10,000 M
1000 M.
4 ஆகும். ஒதுக்குப்பணம் ரூபா 1/- ஆல் ம்பல், பெருக்கியின் விளைவாக ரூபா 4/- ஒதுக்குப்பணத்தை நாணயதளம் எனவும் 5 தளமாக பயன்படுத்தப்படுகின்றது. ஒரு சம்பலை நான்கு ரூபாவினால் உயர்வ ன், ஒதுக்குப்பணத்தை உயர்வலுப்பணம் கணிப்பதற்கு கணி தரீதியாக பின்வரும்

Page 21
பணப்பெருக்கி =
(1+CP/D) (CT /TD + CKI
TD
=
மொத்த வைப்புக்கள்
CP
மொத்த வைப்புக்களில் மக்க
CKB!
மொத்த வைப்புக்களில் வணி
/TD
CA/rn = சட்ட ரீதியான ஒதுக்கு வீதம்
DOI/ Prn = மொத்த வைப்புக்களில் ஏலை
மத்திய வங்கியின் நாணய கட்டுப்பாட்டு கட்டுப்பாடுகள், ஒன் றில் நாணயத்தளத்தை நேரடியாக முதல் விளைவாக தாக்குகின்றன அடிப்படையாகக் கொண்ட நாணய கட்டுப்பா Control) நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்
4. நாணயக்கொள்கை - Monetary Pd
நாட்டின் பண நிரம்பலைக் கட்டுப்பாடு பாதையில் வளர்த்துச் செல்வதற்கு மத்திய படுகிறது. பொருளாதாரத்தில் நாணயக்கெ
வணிகநாதம் - 1992

மத்திய வங்கியின் நாணயக் கொள்கையில்...
"TD + RR /TD + DOT 'TD)
ர் வைத்திருக்கும் நர்ணய அளவு வீதம்
க வங்கிகளின் நாணய அளவு வீதம்
ரய நிறுவனங்களின் வைப்பு வீதம்.
| முறைகளில் குறிப்பாக தொகை ரீதியான (ஒதுக்குப்பணம்) அல்லது பணப்பெருக்கியை இந்தவகையில்தான் தற் காலத்தில் சந்தையை ட்டு முறை (Market Based System of monetary ரது.
icy
த்த பொருளாதாரத்தை ஒழுங்கு ரீதியான வங்கியின் நாணயக் கொள்கை பயன்படுத்தப் ள்கையின் தாக்கம் பின்வருமாறு அமையும்:

Page 22
மா.நடராசசுந்தரம்
04
நாணயக் கொள்கை!
மறைமுக நாணய சாதனங்கள் வீதம், பகிரங்க சந்தை நட
தாக்கம்
வங்கி ஒதுக்குக பணச்சந்தை வீ
செல்வாக்
கிடைக்கும் தன்மை கடன் செலவு
அமுக்க வில
தனியார் நுகர்வு, ப முதல்பாய்ச்சல் நான
செல்வா
வெளியீடு விை சென்மதி நிலு
வணிகநாதம் - 1992

பின் தாக்கம்:-
ச (வங்கிவீதம், ஒதுக்கு வடிக்கை)
தங்கள்
க்கு
வைப்பு வீதம் பண நிரம்பல்
ளவு
தலீடு, Tயமாற்று
க்கு
1கள்
வெ

Page 23
05
நாணயக் கொள்கையால், குறிப்பாக மறைமுக நாணய சாதனங்கள் பயன்படுத் தப்படும்பொழுது அதன் முதற்கண் தாக்க மாக வங்கி ஒதுக்குகளும், பணச்சந்தை வீதங் களும் ஏற்படுகின்றன. இவற்றின் செல் வாக்கு கடன் கிடைக்கும் தன்மை, கடன் செலவு, வைப்புவீதம், பணநிரம்பல் ஆகிய வற்றில் ஏற்படுகின்றன. இதனால் ஏற்படும் அமுக்க விளைவுகள் பொருளாதாரத்தில் தனியார் நுகர்வு, முதலீடு, முதல்பாய்ச்சல், நாணயமாற்று என்பனவற்றைப் பாதிக்கின் றன. இவ்வாறு ஏற்படும் பாதிப்புக்கள் வெளியீடு, விலைகள், சென்மதி நிலுவை என் பவற்றில் செல்வாக்கு செலுத்துகின்றன. முடிவில் மறைமுகமாக வெளியீடு, விலைகள் சென்மதி நிலுவை என்பன கடன் கிடைக்கும் தன்மை, கடன் செலவு, வைப்புவீதம், பண நிரம்பல் ஆகியவற்றில் தாக்கத்தை / செல் வாக்கை செலுத்துகின்றன. மேலும் கட னுக்கும் பண நிரம்பலுக்குமிடையில் தொடர் புகள் இருப்பதனையும் நாம் அவதானிக்க
லாம்.
இந்தமுறையில் நாணயக் கொள்கை தாக்கம், செல்வாக்கு, அமூக்க விளைவுகள் என்பவற்றைக் கொண்டிருப்பதனைக் காண லாம். நாடுகளுக்கிடையில் நாணயக் கொள் கை களை நடைமுறைப்படுத்துவதில் அவை உபயோகிக்கும் சாதனங்களைக் கொண்டு நோக்கங்கள், இலக்குகள் சற்று வேறுபடு கின்றன. இலங்கையில் அண்மைக் கால நாணயக் கொள்கையின் நோக்கில் அவை இடை இலக்குகள், இறுதி இலக்குகள் என்ற முறையில் அணுகப்படுவதனை நாம் காணக் கூடியதாக இருக்கின்றது. இடைநிலை இலக் குகள், இறுதி இலக்குகள் என்ன என்பதனை நன்கு புரிந்து கொள்ளல் வேண்டும். பொரு ளாதாரத்தில் சில நோக்கங்களை முடிவு களை அடைவதற்கு நாணயக் கொள்கை ஒரு சாதனமாக பயன்படுகின்றதே தவிர அதுதான் முழுமையாக ஒரு முடிவினைக்
உசாத்துணை நூல்கள் 1. H. N. S. Karunathilake - Banking and Fin 2, Central Bank Staff Studies - 1987 Vol. I 3. World Bank Annual Reports - 1991, 90, 4. Finance and Development - 1992 Vol. 2.
வணிக நாதம் - 1992

மத்திய வங்கியின் நாணயக் கொள்கையில்...
கொண்டுவரும் என்பதற்கில்லை. ஆகவே நாணயக் கொள்கையில் உடனடியான இலக்குகள் இறுதியாக அடையவேண்டிய இலக்குகளுக்காக (Final Targets) பொருளா தாரத்தில் சில பிரத்தியேக நிலைமைகளை (Certain conditions) முதலில் உருவாக்க வேண்டும்.அந்தவகையில் உருவாக்கப்படும், உடனடியான இலக்குகளே நடுத்தர இலக் குகள் (Intermediate targets) என அழைக் கப்படுகின்றன. குறிப்பாக நாட்டின் பொரு ளா தாரத்தில் தேவையான அளவு பணம்/ கடன் மட்டத்தை உருவாக்குவதே இந்த நடுத்தர இலக்கின் நோக்கமாகும். இதனை அடைவதற்கு நாணயக் கொள்கையின் நேரடிக் கட்டுப்பாடுகளையும் (Direct controls) அறிவுறுத்தலையும்(Moral Suasion) பயன்படுத்தலாம் ஆனால், ஏனைய நேரில் முறைகளான வங்கிவீதம், பகிரங்க சந்தை நடவடிக்கை, ஒதுக்குவீதம் என்பவற்றைப் பயன்படுத்தும்பொழுது அவை முதலில் சில குறிகாட்டி இலக்கு மாறிகளை (Target Vari2ble indicater) தாக்குகின்றன. உதாரண மாக பகிரங்க சந்தை நடவடிக்கையும் வங்கி வீதமும் நாணயத் தளத்தை (Monetary Base) உடனடியாக பாதிக்கின்றது. அதே போல் ஒதுக்குவீதம், பண கடன் பெருக் கியை தாக்குகின்றது. அதன் பின்பு நாண யத் தளமும் பண கடன் பெருக்கியும் இடை திலை இலக்கான பணம் /கடன் மட்டத்தை தாக்குகின்றன.
பொருளாதாரத்தில் இப்பொழுது மாற் றமடைந்து இருக்கும் இடைநிலை இலக் கான பணம் /கடன் மட்டங்கள் பின்பு இறுதி இலக்குகளான விலைமட்டம் (Price level) நாணய மாற்றுவீதமும் சென்மதி நிலுவை பும் (Balance of Payment and Exchange ate) வெளியீட்டுவளர்ச்சி, வேலைப்படை Output Growth,Employment) என்ப வற்றை பாதிக்கின்றன.
2ncial Institutions in Sri Lanka 1984. - Page 43.
39.

Page 24
இலங்கையில் மறுகாய் Re-Insurance in Sri Lanka
அறிமுகம்:-
ஒரு காப்புறுதிக் கம்பனி தான் ஏற்றுக் கொண்ட காப்புறுதி ஒப்பந்தமொன்று தொடர்பாக இன்னொரு ஒப்பந்தத்தை வேறொரு காப்புறுதிக் கம்பனியில் மேற் கொள்ள முன் வருமாயின் அது மறுகாப்புறுதி எனப்படும். மக்கள் எதிர்நோக்கக்கூடிய அபாயங்களை பொறுப்பேற்பதில் ஈடுபாடு கொண்டுள்ள காப்புறுதி நிறுவனங்கள் தமது நட்டங்களை நிவர்த்திப்பதற்காக மறுகாப்புறுதியில் ஈடுபாடு கொ ள் ள வேண்டிய நிலையில் காணப்படுகின்றன. தவணைக் கட்டண மூலமும் பண முதலீடு களின் மூலமும் பெறும் இலாபமானது காப் புறுதிக் கம்பனிகளின் உரிமைக் கோரிக்கை இறுப்பனவுகளுக்கும் நிர்வாகச் செலவு களுக்கும் போதுமானதாக இல்லாதவிடத்து அந் நிறுவனமானது தொழிலில் நிலைத்து நிற்க முடியாமல் போய்விடும். இந்நிலையை தவிர்க்கவும் பணரீதியாக பாதுகாப்புப் பெறும் பொருட்டுமே தாம் நட்ட ஈடு செலுத்த வேண்டி வரும் என்கின்ற அபாயம் தொடர்பாக மறு காப்புறுதி செய்யப்பட வேண்டிய நிலையில் காணப்படுகின்றன.
இலங்கையில் காப்புறு திதி தொழில் 1961 ஆம் ஆண்டில் தேசியமயமாக்கப்பட்ட திலிருந்து இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத் தாபனம் மட்டுமே தொழிற்பட்டு வந்தது. இதனால் அது மறு காப்புறுதிக்கு இலங்கை யில் வேறு நிறுவனங்களை பெற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் 1980-ல் தேசிய காப்புறுதிக் கூட்டுத்தாபனமும் 1987-ல் தனியார் நிறுவனங்கள் பலவும் காப்புறுதிக்கென உருவாக்கப்பட்டதிலிருந்து மறு காப்புறுதி செய்யும் சாத்தியம் உரு வாக்கப்பட்டது. இலங்கையானது பூகம்பம் போன்ற இயற்கை அழிவுகளுக்கு உள்ளா காத போதும் வெள்ளப் பெருக்கு, சூறாவளி
வணிகநாதம் - 1992

புறுதி
நா. பாலகெளரி ஆண்டு -13 வர்த்தகப் பிரிவு.
போன்ற இயற்கையின் பாதிப்புக்குள்ளாகி யுள்ளது. அத்துடன் இனக் கலவரம் போன்றவற்றால் பெருமளவு சேதங்கள் உருவாக்கியுள்ளன. குறிப்பாக 1983 யூலை யில் ஏற்பட்ட இனக்கலவரமானது காப் புறுதி செய்யப்பட்ட 1300 மில்லியன்
ரூபாவுக்கு மேற்பட்ட
சொத்துகளுக்கு நாசம் விளைவித்தது. இவற்றை எல்லாம் தனியொரு காப்புறுதியால் தாங்கிக் கொள்ள முடியாதென்பதால் மறு காப் புறுதி இங்கு முக்கியம் பெறுகின்றது.
மறு காப்புறுதி நடவடிக்கைகளின்படி சொத்தின் உடைமையாளர் முதலாவது கம் பனி மறுகாப்புறுதி செய்யப்பட்ட இரண்டா வது கம்பனிக்கு காப்புறுதிக் கட்டணங் களை செலுத்துதல் வேண்டும். இதே நேரம் நட்ட மேற்படுமாயின் சொத்தின் உடமை யாளருக்கு முதல் காப்புறுதிக் கம்பனியே நட்டத்தை ஈடுசெய்த பின்னர் அதன் ஒரு பகுதியை மறு காப்புறுதிக் கம்பனியிட மிருந்து பெற்றுக் கொள்ளும். இதனால் பெருந்தொகையில் நட்டமேற்பட்டு காப் புறுதிக் கம்பனிகள் முறிவடைவதனைத் தவிர்க்கவே மறு காப்புறுதி அறிமுகப்படுத் தப்பட்டிருப்பதாகக் கூறலாம்.
மறு காப்புறுதியின் தேவை.
காப்புறுதியின் தேவையிலேயே ஒரு நாட்டுக்கான மறு காப்புறுதியின் தேவை தங்கியுள்ளது. நாடொன்றில் காப்புறுதிக் கான தேவையானது. அந் நாட்டின் பொரு ளாதார, சமூக, அரசியல் சட்ட, தொழில் நுட்பரீதியான நிலைமைகளில் பெரிதும் தங்கியுள்ளது. மக்களிடையே பெறுமதி வாய்ந்த பொருள்களின் பயன்பாடும் உற் பத்தி முதலீடு ஆகியவற்றின் அதிகரிப்பும் தோன்றும் பொழுது காப்புறுதிக்கான தேவை அதிகரிப்பதனைக் காணலாம்.

Page 25
குடும்பப்பிளவுகள், நகரமயமாக்கம், குற்றச் செயல்கள் போன்ற சமூகப் பிரச்சினைகளின் அதிகரிப்பும் காப்புறுதிக்கான தேவையை அதிகரிக்கச் செய்யும்.
ஒரு நாட்டின் அரசாங்கத்தினது ஆர் வமும் காப்புறுதியின் தேவையை அதிகரிக் கச் செய்யும். குறிப்பாக அரசினது சமூக நலன் பேணும் திட்டங்களும் காப்புறுதிக் கான தேவையை அதிகரிக்கச் செய்வதனைக் காணலாம். தொழிலாளர் காப்புறுதி மூன் றாம் நபர்க் காப்புறுதி தொடர்பான நீதி மன்றங்களின் நடவடிக்கைகள் என்பன காப் புறுதித் தேவையை அதிகரித்துள்ளன. அத் துடன் பெருமளவான இயந்திரங்களைப் பொருத்துதல் தொழிற்ச r  ைல க் க ர ன பாரிய கட்டடங்கள், பெருமளவான போக்கு வரத்துச் சாதனங்கள் என்பனவும் காப்புறுதி யின் தேவையை மக்கள் பால் அதிகரித்துள் ளன.
காப்புறுதிக்கான தேவை மக்கள் பால் அதிகரிக்கப்பட்டிருந்தாலும் அது தொடர் பான நிதிவளம் காப்புறுதி அமைப்புகளிடம் காணப்படுவதில்லை. இத்தகைய குறைபாடு பெருமளவில் குறைவிருத்தி நாடுகளிலேயே காணப்படுகின்றது. இத்தகைய நிலையே இலங்கையின் காப்புறுதி அமைப்புகளிடம் இருப்பதால் இலங்கையில் மறுகாப்புறுதி அவசியமாகின்றது . இத்தகைய மறுகாப் புறுதி தேசிய ரீதியான தேவைப்பாடுகளைக் கருத்தில் கொண் டே தீர்மானிக்கப்பட வேண்டி யுள்ளது. இதனால் காப்புறுதியின் தேவை அதிகரிக்கப்படும் பொழுதே மறு காப்புறுதியின் தேவையும் உ ய ர் வ டை வதாகக் கூறிக் கொள்ள முடியும். மறு காப்புறுதி முறைகள்
மறு காப்புறுதி முறைகளில் முதலில் கருதப்பட வேண்டியதென்பது ஏற்படக் கூடிய நட்டத்தின் அளவு என்பதாகும். அதாவது தீயினால் பெறுமதி, வாய்ந்த கட் டடங்களும், வாகனங்களும், இயந்திரங் களும் அழிவடையலாம் . வங்கிக் கொள்ளை விமான விபத்து போன்றவற்றால் பெருந் . தொகையான சேதம் ஏற்படலாம். இத்த கைய நட்டங்களைக் கொண்ட காப்புறுதித் தொழிலில் ஒருநிறுவனம் ஈடுபட்டிருப்பதால்
வணிகநாதம் - 1992

இலங்கையில் மறுகாப்புறுதி
அவற்றினால் வரக்கூடிய மொத்த நட்டங் களை ஈடுசெய்ய மறுகாப்புறுதி முறை யொன்று வேண்டப்படும்.
மறு காப்புறுதி முறையில் இரண்டாவ தான சந்தர்ப்பமே சிற்றளவு மூலதனத்தைக் கொண்டிருத்தல் என்பதாகும். புதிதாக காப் புறுதி நிறுவனங்கள் ஆர ம் பிக் க ப் ப டு ம் போது அவற்றிடம் போதுமான பணபலம் இருக்க மாட்டாது என்பதாகும். இதனால் குறைந்தளவான பணவலிமையை கொண்ட நிறுவனமாக இருக்கும் போது மறு காப் புறுதி வேண்டப்படுவதாகும். பின்னர் அவை வளர்ச்சியடையும் போது வேண்டப்பட மாட்டாதென்றும் கொள்ளப்படும். இலங் கையில் தனியார் காப்புறுதி அமைப்புக்க ளான, C.T. C ஈகிள் இன்சூரன்ஸ் லிமிட்டட், யூனியன் அஷ்யூரன்ஸ் லிமிட்டட், சிலிங்கோ அஷ்யூரன்ஸ் லிமிட்டட் போன்றவை மறு காப் புறுதியை கட்டாயமாக மேற்கொள்ள வேண் டிய நிலையிலிருக்கின்றன. இவை இன்னமும் போதுமான பண வலிமையைக் கொண் டிருக்காத காரணத்தினாலேயே மறு காப் புறுதி வேண்டப்படுவதாகக் கூறலாம். இந் நிறுவனங்கள் மறு காப்புறுதி மூலம் பாது காப்பை பெறமுடியும். மறு காப்புறுதியின் நோக்கங்கள்
தற்காலத்தில் எல்லாக் காப்புறுதி நிறு வனங்களும் மறு காப்புறுதியை மேற் கொள்ள விருப்பம் கொண்டுள்ளன. இதற்கு காரணம் மறு காப்புறுதியின் மூலம் பல நோக்கங்கள் அடைந்து கொள்ளப்பட முடியு மென்றிருப்பதனாலாகும். குறிப்பாக,
I) காப்புறுதி நிறுவனங்களின் தாங்கும் சக் தியை அதிகரித்துக் கொள்ள முடியுமென் பதாகும். அதாவது திரட்டப்பட்ட வரு மானங்களை விட காப்புறுதிக்கான கொடுப் பனவு அ தி க ம ா க க் காணப்பட்டாலும் அதனை இறுக்கும் ஆற்றல் காப்புறுதி அமைப்புகளுக்கு ஏற்பட மறு காப்புறுதித் கூட்டுத் தாபனத்தின் தீயபாயக் காப்புறுதி திணைக்களமானது 1987 ல் வருமானமான 387 கோடி ரூபாவை பெற்றுக் கொண்டி ருந்தது. ஆனால் இத் திணைக்களம் தீயபா

Page 26
நா. பாலகெளரி
யக் கொடுப்பனவாக 400 கோடி ரூபாவுக்கு மேலதிகமாக கொடுக்க வேண்டிய நிலை இடம்பெற்றது. இத்தகைய மேலதிகத் தொகை கொடுப்பனவுக்கு வழிவகுத்தது இலங்கைக்காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் மறு காப்புறுதியாகும். II) காப்புறுதி வழங்கிய நிறுவனங்களின் உறுதித்தன்மையை பாதுகாக்க மறுகாப்பு றுதி உதவி செய்யும். காப்புறுதி செய்த ஒருவருக்கு நட்டம் ஏற்படக்கூடிய சந்தர்ப் பம் நட்டத்தின் அளவு என்பன எப்படி முன்கூட்டியே தெரியாதிருக்கின்றதோ அதே போல் காப்புறுதி அமைப்புகளுக்கும் அவை தெரியமாட்டாது. காப்புறுதி அமைப் புகள் தமது சொந்த அனுபவத்தின் மூல மும் திரட்டிக் கொண்ட புள்ளி விபரங்கள் மூலமும் தாம் செலுத்த வேண்டியிருக்கும் நட்ட ஈட்டுத் தொகையை மதிப்பிடலாம். என்றாலும் எதிர்பாராமல் ஏற்படக்கூடிய நட்டங்களை அவை சமாளிக்க முடியாமல் போகலாம். இதனால் மறுகாப்புறுதி இத் தகைய நட்டத்தை பரவலாக்கி கொள்ள வகை செய்வதன் மூலம் காப்புறுதி அமைப் புகளின் முறிவைத் தடுத்து அவற்றை நிலைத்து இயங்க வைக்கின்றது.
II) காப்புறுதி அமைப்புகளிடையே நம்பிக் கைத் தன்மையொன்றை வளர்க்க மறுகாப் புறுதி உதவுகின்றது. காப்புறுதி பொது மக் களுக்கு முதலீட்டு உத்தரவாதத்தை வழங் குவது போல் காப்புறுதி அமைப்புகளுக்கு தொழிலை விருத்தி செய்வதற்கான உணர் வினையும் ஊக்கத்தினையும் மறுகாப்புறுதி வழங்குகின்றது. இதனால் புதிய காப்புறுதி அமைப்புகள் பயமின்றி தொழிலில் ஈடுபட மறுகாப்புறுதி உதவுகின்றது. TV) காப்புறுதி தொடர்பான நிபுணத்துவ சேவை பெறப்பட மறுகாப்புறுதி வகை செய்கின்றது. மறு காப்புறுதி நிறுவனங் கள் பல சர்வதேச ரீதியான அபாயங் களிலும், நட்டங்களிலும் அனுபவங்களைப் பெற்றுக் கொண்டவையாகும். இதனால் காப்புறுதியில் ஈடுபட்டுள்ள பாரிய நிறுவ னங்களிடம் உதவியைப் பெற்றுக் கொள்ள முடியும். எமது நாட்டின் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பாலைஒரு சர்வதேச விமான நிலை யம் சில மின் சக்தி திட்டங்கள் என்பன
வணிகநாதம் - 1992

08
காணப்படுகின்றன. இத்தகைய நிறுவனங்க ளில் ஆபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் ஆலோசனையை வழங்கும் மறுகாப்புறுதி யாளரும் எமது நாட்டில் உள்ளனர். இத னால் ஏனைய காப்புறுதியாளருக்கும் இவற் றின் ஆலோசனை பெறப்பட முடிகின்றன.
V) காப்புறுதியில் ஏற்படும் நட்டங்களை உலகளாவப் பரவலாக்க மறு காப்புறுதி உதவுகின்றது மறுகாப்புறுதிக்கென சர்வ தேச நிறு வனங்கள் பல இருப்பதனால் நட் டங்களை பெருமளவில் பரவலாக்குவது மறுகாப்புறுதியின் நோக்கமாகும்.
முடிவுரை
இலங்கை போன்ற குறை விருத்தி நாடு களில் மறுகாப்புறுதி பிரதானமாக வலியுறுத் தப்படும். விசேடமாக வெளி நாட்டு உதவி களில் தங்கியிருக்கும் உலக நாடுகள் பலவற் றில் ஏற்படும் பெருமளவு நட்டங்கள் மறு காப்புறுதி மூலமாகவும் நிவர்த்திக்கப் படுகின்றன. இதனூடாக அந்நாடுகளின் பொருளாதாரச் சீர்குலைவுகளும் சீராக்கப் படுகின்றன. எடுத்துக்காட்டாக கௌத மாலாவில் 1976ல் பெறப்பட்ட காப்புறு திக் கட்டணம் 180 இலட்சம் அமெரிக்க டாலர் இருந்த பொழுது பூகம்பத்தினால் 750 இலட்சம் அமெரிக்க டாலர் பெறுமதி யான காப்புறுதி செய்யப்பட்ட சொத்து களுக்கு நட்டமேற்பட்டது. இதனை மறு காப்புறுதியின் மூலம் நிர்வகிக்க முடிந்தது . இதே போன்றே நிக்கரகுவாவில் பூகம்பத்தி னாலும் இலங்கை இனக்கலவரத்தினாலும் பெருந்தொகை நட்டங்கள் ஏற்பட்ட பொழுது அதனை மறுகாப்புறுதி ஈடு செய்ய முன்வந்தது.
இலங்கையில் 1964-ம் ஆண்டு முதல் இலங்கை காப்புறுதிக் கூட்டுத் தாபனமே மறுகாப்புறுதியில் ஈடுபட்டு வந்தது. தேசிய காப்புறுதிக் கூட்டுத்தாபனம் உருவாக்கப் பட்டதன் பின்னரும் இலங்கைக் காப்பு றுதிக் கூட்டுத்தாபனத்திடம் மறு காப்புறுதி செய்யவே அதுவும் முன் வந்துள்ளது. அந் நியச் செலாவணி வெளியேற்றததைத் தடுப் பதும் இலங்கைக் காப்புறுதி கூட்டுத் தாப னம் மறுகாப்புறுதியில் ஈடுபடக் காரணமா கும். இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாப

Page 27
னத்தால் பின்பற்றப்பட்டுவரும் மறுகாப்பு றுதிக் கொள்கைக்கும் அங்ராட் (UNCTAD) நிறுவனத் தின் விதப்புரைக்கும் ஒத்துப் போவதாக அமைந்துள்ளது. இதற்கு வசதி யாகவே அங்ராட்டி னால் உருவாக்கப்பட்ட ''ஆசிய மறுகாப்புறுதிக் கூட்டுத்தாபனம்?' என் பதில் இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத் தாபனமும் அங்கம் வகிக்கின்றது. இதனால்
உசாத்துணை நூல் காப்புறுதிக் கூட்டுத்தாபன
2 தேசிய காப்புறுதிக் கூட்டுத்தாபனம்
திக் கூட்டுத்தாபனத்தில் வைத்துள்ள. சுவிட்சர்லாந்தின் ஸ்விஸ் ரீ இன் சூரன்
ள து .
ஆயுள் காப்புறுதிப் பத்திரத்தை வங்கி மாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நிதி பெறும்போது நேரடிப் பிணையாகமே காப்புறுதிப் பத்திரம் ஏற்றுக்கொள்ள
& ஆயுள் காப்புறுதி ஒப்பந்த தொகை ரூ
திய பரிசோதனைத் தேவை ரத்து செ
ஓ ஆயுள் நிதியமொன்றின் செயற்பாட்டி
இது வரை செலுத்தப்பட்ட கட்டணம் பங்கீடு = உரிமை கோரல்கள் + அறி
இ தற்போது காப்புறுதி செய்பவரின் ஆ
வொரு ரூபா 1000 க்கும் ரூபா 77 இ
இ விபத்துக் காப்புறுதி செய்யப்பட்ட
சிறு மேலதிக தொகையை (கட்டணத்த யுத்த்தால் ஏற்படுகின்ற உடமை இழல் வகுக்கப்பட்டுள்ள து .
ஓ கட்டணம் செலுத்து வதற்கான தயவு
உயர்த்தப்பட்டுள்ள து.
வணிகநாதம் - 1992

09
இலங்கையில் மறுகாப்புறுதி
இலங்கையில் தொழில்பட்டு வரும் அர சாங்க காப்புறுதி அமைப்புகளும் தனியார் காப்புறுதி அமைப்புகளும் இலங்கை காப்பு றுதிக் கூட்டுத் தாபனத்தில் மறுகாப்புறுதி செய்து கொள்ளமுடியும். ஆதலால் இலங்கை யின்காப்புறுதித் தொழில் மறு காப்புறுதிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருப்பதனைக் காணலாம்.
சத்தின் ஆண்டறிக்கைகள்
அதன் மறுகாப்புறுதியை இலங்கைக் காப்புறு து. இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் சஸ் கம்பனியில் மறுகாப்புறுதியை வைத்துள்
த் தொழி லில் ஓர் கைமாறத்தக்க உபகரண 5 நிறுவனமொன்றிலிருந்து கடனொன்றைப் வா அல்லது கூட்டுப்பிணை யாகவோ ஆயுள் ப்படுகின்றது.
ரூபா 500000 ற்கு உட்பட்டிருக்குமாயின் வைத் சய்யப்பட்டுள்ளது.
உன் போது
+ கட்டணம் உழைக்கப்பட்டுள்ள இலாபப் விக்கப்பட்ட போனஸ் + மிகை இலாபங்கள்.
யுள் காப்புறுதி முதலீட்டுத்தொகையான ஒவ் லாப பங்காக (Bonus) செலுத்தப்படுகின்றது.
உடமைகளுக்கான கட்டணத்தொகையைவிட தின் 5%) மேலதிகமாக செலுத்து வதன் மூலம் ப்புக் களையும் ஈடுசெய்வதற்கு தற்போது வழி
நாட்கள் (Grace period) 6 மாதங்களாக
தொகுப்பு: க.சசிதரன்
ஆண்டு - 13
வர்த்தக பிரிவு

Page 28
கைமாற்றத்தக்க சாத Negotiable Instrument a C
அறிமுகம்:-
கணனி மயமாகி வரும் இவ் உலகில் மக்கள் தமது பொருட்கள், சேவைகளின் பரிமாற்றத்திற்கும் வர்த்தகத்தின் தொழிற் பாட்டிற்கும் பணத்திற்கு பதிலாக கை மாற்றத்தக்க சாதனங்களாகிய காசோலை, மாற்றுண்டியல், வாக்குறுதிச் சீட்டு போன்ற வற்றை பயன்படுத்துகின்றனர்.அதிலும் சிறப்பாக அண்மைக் காலத்தில் காசோலை யின் பயன்பாடே அதிகரித்து வந்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் தமது நாளாந்த பரிமாற்றத்திற்கு காசோ லையையே பயன்படுத்துகின்றன அமெரிக்கா வில் 90% பணக் கொடுக்கல் வாங்கலிலும், இங்கிலாந்தில் 75% பணக் கொடுக்கல் வாங் கல்களிலும் காசோலையையே பயன்படுத்து கின்றனர் இலங்கையைப் பொறுத்த மட்டில் 1982 இல் 51 வீதமாகக் காணப்பட்டது. 1991 இல் 47 வீதமாகக் குறைவடைந் துள்ளது. ஏனெனில் இலங்கையில் நிலவும் உள் நாட்டுக் கலவரத்தினால் மக்களுக்கு வங்கியில் ஏற்பட்ட நம்பிக்கையின்மை, சில வங்கிகள் செயலிழந்தமை, சிலவங்கி களின் செயற்பாடு குறுகியமை காரண மாகும். ஆனாலும் உலகின் அனைத்து நாட்டிலும் காசோலையின் தொழிற்பாடு
இலங்கை வங்கி BANK OF CEYLON
சுன் னா CHUNN
0 0044 -
ரூபாய் Rupees.
""135857"'700.
வணிகநாதம் - 1992

னமாகிய காசோலை neque
த. கௌரிகரன் ஆண்டு-13 வர்த்தகப் பிரிவு
அதிகரித்தே வருகிறது. இதற்கு காரணம் அதன் பாதுகாப்பும் இலகுத் தன்மையுமே யாகும். எனவே காசோலையினைப் பற்றி அறிந்திருப்பது மிகவும் பொருத்த முடைய தாக இருக்கும்.
வரைவிலக்கணம்:-
இங்கிலாந்தின் 188 2ம் ஆண்டின் மாற்று முறை ஆவணச் சட்டத்தின் படியே இலங் சையில் காசோலைகள் பற்றி வரையறுக்கப் படுகின்றது. இதன்படி பணக் கொடுக்கல் வாங்கல்களுக்கு பயன்படும் காசோலை என் பது எழுத்தில் உள்ள தும், நிபந்தனையற்ற தும் வங்கிக்கு எது வித முன்னறிவித்தல் இன்றி வங்கி வாடிக்கையாளரின ல் கை யொப்பமிடப்பட்டு அனுப்பப்படுவதுமான ஒரு கைமாற்றத் தக்க கட்டளையாகும். அதாவது வங்கியில் நடைமுறைக் கணக்கு Current Account) வைத்திருக்கும் ஒருவர் நமது பணத்திலிருந்து தமக்கோ அல்லது வேறொரு வருக்கோ குறிப்பிட்ட தொகைப் பணத்தை கொடுக்குமாறு வங்கிக்கு இடும் கட்டளையே காசோலை (Cheque) ஆகும். மேலும் வங்கி மேலதிகப்பற்று (Bank over raft) என்ற குறுங்கால கடனை எடுப் பதற்கும் காசோலை பயன்படுத்தப்படு பின்றது
கம்
3 7010-053 AKAM
19.
இ 5045 நட 5045
அல்லது வருபவரிடம் or Bearer
Rs.
செலுத்துக.
- 053...5045."

Page 29
காசோலையினை ஒருவர் பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் நடைமுறைக் கணக்கு ஒன்றை உருவாக்க வேண்டும். இதற்கு தனக்கு அருகில் உள்ள வர்த்தக வங்கியினை நாடி அதற்குரிய படிவங்களை நிரப்பிக் கொடுத்து ஆகக் குறைந்த வைப்புத் தொகையையும் செலுத்துதல் வேண்டும். இக் கணக்குக்கு வங்கி எதுவித வட்டியும் கொடுப்பதில்லை. ஆனால் ஆகக் குறைந்த வைப்புத் தொகை கணக்கில் பேணாவிடின் சேவைக் கட்டணம் அறவிடப்படும். நடை முறைக் கணக்கு ஆரம்பித்த அன்று வங்கி கணக்கிலக்கத்தை வழங்கு வதுடன் காசோ லைப் புத்தகம் ஒன் றினையும் வழங்கும். இக் காசோலைப் புத்தகமானது 25/50/100 எண் ணிக்கையைக் கொண்ட அச்சிட்ட இதழ் களை உடையது வங்கியானது காசோலை இதழ் ஒன்றிற்கு தனிப்பட்ட கணக்காயின் ஒரு ரூபா (1/=) என்ற அடிப்படையில் வரு மான வரிக் கட்டணமாக அறவிட்டு அரசாங் கத்திற்கு வழங்குவதுடன் அச்சிடல் கூலி யாக இரண்டு ரூபாவும் (:/=) அறவிடு கின்றது அரசாங்க காசோலையாயின் வரு மானவரி கட்டணமும் அச்சிடல் கூலி அற விடப்படுவதில்லை எனினும் இலாப நோக் கம் கொண்ட அரசசார்புள்ள நிறுவனத் திற்கு வருமான வரிக் கட்டணமாக மட்டும் ஒரு ரூபா (1/=) அறவிடப்படும்.
இலங்கை வங்கி BANK OF CEYLON சுன்னாகம்
CHUNNAKAM புதிய கா
New Che
வருபவரிடம் செலுத்துகவெனக் குறித்துள்
எனது/எங் காசோலைப் புத்தகத்தை
பதிவுத் deliver my/our order PLEASE
- 2 Cheque Bo send by registered post
பற்று
ரூ -
சதம் .....
Debit
Rs
வணிகநாதம் - 1992

காசோலை
காசோலை இதழானது அண்மையில் காந்தமை பொறிக்கப்பட்டதாக காணப்படு கின் றது. இதனை MICR காசோலை என அழைப்பர். இக் காசோலையை விரைவாக தவறுகள் இன்றிய தீர்வைக்கு உதவும் முக மாக இலங்கை மத்திய வங்கியானது 1988 ஆம் ஆண்டு தன்னியக்க தீர்ப்பனவு நிலை யம் (3LACH - சிலக்) என்ற ஒன்றை அறி முகப்படுத்தியுள்ளது. இது கணனியைப் பயன்படுத்தி வங்கிகளுக்கிடையேயான கொடுக்கல் வாங்கல்களை தீர்த்து வைக்க உதவுகின்றது. இது ஒரு நிமிடத்திற்கு 1400 காசோலைகளை தீர்க்கின்றது. இந் நிலையம் ஒரு நாளைக்கு இரண்டு தடவை கூடுகின்றது. இக் காசோலையே தற்போது நடைமுறை யில் உள்ள காசோலை ஆகும். இதனை மடிக்கவோ, காந்தமை பகுதிக்குள் கை யெழுத்து இடவோ, அச்சு எழுத்துக்கள் அழிக்கப்படவோ கூடாது. இவ்வாறு நிகழ்ந் தால் அதனை சிதைவுற்ற காசோலை என்பர்.
காசோலைப் புத்தகம் முடிந்ததும் புதிய காசோலைப் புத்தகத்தை பெறுவதற்கு பழைய காசோலைப் புத்தகத்தில் இதற் கென இருக்கின்ற விண்ணப்பப்படிவத்தினை நிரப்பி கையொப்பமிட்டு வங்கிக்கு கொடுத் தால் வங்கி புதுக் காசோலைப் புத்தக மொன்றினை வழங்கும். இதற்கும் வங்கி தனது கட்டணங்களை அறவிடும்.
7010 - 053
சாலை புத்தகம் இல்............ந்து ............. வரை que Book No from
5045
... காசோலைகள் கொண்ட, களது உத்தரவின் மேல் வழங்குக
தபாலில் அனுப்பி வைக்குக


Page 30
த. கெளரிகரன்
காசோலையினை இடைக்காலத்தில் இந்தியன் ஓவசியஸ் வங்கியும், சம்பத்வங்கி யும் சேமிப்பு வைப்பில் உள்ள பணத்தை எடுப்பதற்கு அறிமுகப்படுத்தியது. ஆனால் மத்திய வங்கி அதை நிறுத்தும்படி பணித்தி ருப்பதனால் தொடர்ந்தும் காசோலையா னது நடைமுறைக் கணக்குடனேயே சம்பந் தப்படுகின்றது.
காசோலையின் உள்ளடக்கம்:- காசோலை யொன்றில் முறையே காசோலை இலக்கம், வங்கி இலக்கம், கிளையின் இலக்கம், கணக் கிலக்கம் போன்றவை காந்தமை பகுதியி லும், கையொப்பம், தொகை, திகதி போன்ற விடயங்களையும் அவதானிக்கலாம். இதில் காசோலை இலக்கம் என்பது காசோலைக் குரிய இலக்கத்தைக் குறிக்கும். இது காந் தமை பகுதியினுள் காணப்படும், வங்கி இலக்கம் என்பது எந்த வர்த்தகவங்கியின் காசோலை என்பதைக் குறிக்கும். இதுவும் காந்தமை பகுதியினுள் காணப்படும், கிளை யின் இலக்கம் என்பது குறித்த வர்த்தக வங்கியின் எந்தக் கிளைக்குரிய காசோலை என்பதைக் குறிக்கும். இதுவும் காந்தமை பகுதியில் காணப்படும், கணக்கிலக் கம் என் பது நடைமுறைக் கணக்கு ஆரம்பித்த அன்று வர்த்தக வங்கியினால் வழங்கப்படும் இலக் கம் ஆகும். இதுவும் காந்தமை பகுதியினுள் பொறிக்கப்பட்டிருக்கும் இக் கணக்கிலக்கம் எவ்வகையை சேர்ந்தது என்பதை குறிப்பு தற்கு பின்வரும் ஆங்கில எழுத்துக்கள் இணைக்கப்பட்டிருக்கும். அவை ? (தனிப் பட்டவர் க/கு Private Account), T (வியா பாரக் க/கு Trading Account), C (ஒன் றி ணைந்த நிறுவனக்க/கு- Corporate Account) SA (வங்கி ஊழியர் க/கு Staff Account) என்பவையாகும்.
கையொப்பம் என்பது காசோலை பிறப்பித்தவரினால் இடப்படும் கையொப் பத்தைக் குறிக்கும் , இது காசோலையின் கீழ்ப்பாகத்தில் அதற்குரிய இடத்தில் கையொப்பம் பிறப்பித்த வரினால் இடப் படும். இவர் தான் வங்கிக்கு கொடுத்த மாதி ரிக் கையொப்பத்தினையே எப்பொழுதும் இடுதல் வேண்டும். கையொப்பம் இல்லாத or கள்ள கையொப்பம் இடப்பட்ட காசோ லைக்கு வங்கி பணம் வழங்கப்படமாட்டாது.
வணிகந ரதம் -- 1992

காசோலை ஒன்று எவ் வளவு தொகைக் கும் வரையப்படலாம். இத்தொகையானது எழுத்திலும், இலக்கத்திலும் ஒன்றாக தெளி வாக எழுதப்படல்வேண்டும், இவை இரண் டும் அருகாமையில் அமைந்திருக்கின்றது. இவ் இடங்களுக்கு முன்போ, பின்போ வெற் றிடம் இருத்தல் கூடாது. அவ்வாறு இருப் பின் சிலர் காசோலைக்குரிய தொகையினை மாற்ற முயற்சிக்கலாம். காசோலையில் குறிப்பிட்ட தொகையினை பிறப்பித்தவரி னால் மாற்றம் செய்யலாம். மாற்றும் போது முழுக்கையொப்பத்தையும் இட வேண்டும். இல்லாவிடின் வங்கிச் சட்டத் தின் பிரகாரம் அக் காசோலை செல்லுபடி யற்றதாகும். தொகை எ ழு த ா து ம் காசோலை வரையப்படலாம். இது வெற்றுக் காசோலை எனப்படும். இத்தொகையை பின் பணம் பெறுபவர் இடுவர்.
போது இல்லாக்காடு
திகதியானது காசோலையின் மேல் வலது பக்கத்தில் தெளிவாக இடப்படல்வேண் டும் முற்திகதியிட்ட காசோலையையோ (Ant date Cheques) or பிற் திகதியிட்ட காசோலையையோ (P3st date Cheques) எழு தத் தடையில்லை, ஆனால் காசோலைக்கு திகதியிடப்படாமல் அக் காசோலைக்கு வங்கி பணம் கொடுக்காது. மாற்றுமுறை ஆவணச் சட்டத்தில் கருவுலத்திருத்தங்கள் என்ற இடத்தில் திகதியில் மாற்றம் செய்து ஒரு கருவுலத்திருத்தம் எனவும் திகதியிடப் படாத காசோலையை வைத்திருப்பவர் Or பெறுபவர் திகதியிடலாம் என்றும் கூறுகின் றது.
காசோலை ஒன்று ச ா த ா ர ண ம ர க 6 மாத காலத்திற்கு செல்லுபடியாகும். ஆனால் பெரும்பாலான அரசாங்க நிறுவ னங்களின் காசோலை கள் 30 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் முறையில் வரையப்படுகின்றன. காசே உலையின் செல் லுபடியாகும் காலம் முடிந்தால் பிறப்பித்த வருக்கு அனுப்பி செல்லுபடியாகும் காலத் தினை நீடிக்கல் ரம் rே புதிய காசோலை ஒன்றினைப் பெற்றுக்கொள்ளலாம்.
காசோலை ஒன்றுடன் பொதுவாக பிறப்பிப்பவர் or வரைபவர் பணம் பெறும் வர், பணம் இறுப்பவர் ஆகியோர் சம்பந் தப்படுகின்றனர். இதில் பிறப்பிப்பவர் எனப்

Page 31
படுவோர் தன து நடைமுறைக் கணக்கிலி ருந்து குறிப்பிட்ட தொகையை தனக்கு Or வேறொருவருக்கு கட்டளைப் பிரகாரம் செலுத்துமாறு வங்கிமேல் நிபந்தனையற்ற ஆணையைப் பிறப்பிப்பவர் ஆவர். பணம் பெறுபவர் எனக் கூறப்படுவோர் யாருக்கு பணத்தைச் செலுத்து மாறு காசோலையைப் பிறப்பிப்பவர் கட்டளை இடுகின்றாரோ அவரே பணத்தை பெறுபவர் ஆகும். பணம் இறுப்பவர் எனும்போது எந்த வர்த்தக வங்கி யிள் எந்தக் கிளைமீது கட்டளை பிறப்பிக் கப்படுகின்றதோ அந்த வங்கியே பணம் இறுப்பவர் ஆவர்.
காசோலையின் வகை:-
காசோலையானது இருவகையாக எழு தப்படலாம்.
1) காவியின் காசோலை (Bearer Cheque)
இது குறிப்பிட்ட நபருக்கு or கொண்டு வருபவருக்கு பணத்தைக் கொடுக்கவும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். காசோலை யினை வங்கியில் சமர்ப்பிப்பவருக்கு வங்கி பணத்தினைக் கொடுக்கும். இக் காசோ லையை ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு மாற்றலாம் நடைமுறையில் நமது நாட்டு வர்த்தக வங்கிகள் கைமாற்றும் வரை சாட் டுதல் செய்யுமாறு கோருகின்றன.
2) கட்டளைக் காசோலை:- Order Cheques):-
இது குறிப்பிட்ட நபருக்கு or அவர் கட்டளைப்படி குறித்த தொகையினை செலுத்தும்படி என எழுதப்பட்ட காசோ லையை குறிக்கின்றது. காசோலையினைக் கைமாற்றும்போது காசோலையின் பின் புறத்தில் சர்ட்டுதல் செய்தல் வேண்டும். காவியின் காசோலை ஒன்றில் காவி என்ற பதம் வெட்டும் போது கட்டளைக் காசோ
லையாக மாறுகின்றது.
சாட்டுதல்:-
காசோலைக்குரித்தான ஒருவர் அதனை கைமாற்றம் செய்யும்போது அதன் பின் புறத்தில் கைமாற்றம் செய்பவர் தனது பெயரை எழுதி மற்றொருவருக்கு கொடுத் தாராயின்' க து பெற்றவரின் உரிமையாகின் றது. இவ்வாறு செய்தல் சாட்டுதல் செய் தல் எனப்படுகின்றது. இதை மாற்று முறை
வணிகநாதம் - 1992

காசோலை
ஆவணச்சட்டத்திலும் (1802) வலியுறுத்தப் பட்டுள்ளது. இவ்வாறு சாட்டுதல் செய்யும் போது கீழ்காணும் விதிமுறையினை கவ
னிக்க வேண்டும். 01) காசோலையில் உள்ள பெயர் கொண் டிருக்கும் அதே எழுத்துக்களை சாட்டுத லின் கையொப்பம் அமைதல் வேண்டும். 02) சாட்டுதலுக்கான கையொப்பம் தெளி வான எழுத்தைக் கொண்டிருத்தல் வேண் டும். 03) ஆங்கிலத்தில் பெயர் எழுதப்படின் எழுத்துக்கள் தொடர்ச்சியானதாக எழுதப் படல் வேண்டும். 04) ஆங்கிலத்தில் காசோலைக்குரியவரின் பெயர் இருந்தாலும் சாட்டுதல் செய்யும் போது தமிழில் பெயர் எழுதிச் சாட்டுதல் செய்யலாம். ஆனால் முதல் எழுத்து உட் பட பெயர் முழுதும் தமிழில் எழுதப்படல் வேண்டும். 05) கையொப்பம் வைக்கத் தெரியாத ஒரு வர் தனது இடதுகைப் பெருவிரல் அடை யாளத்தை இடுவதன் மூலம் சாட்டுதல் செய்யலாம். ஆனால் இதனை வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் or சமா தான நீதிபதியினால் உறுதிப்படுத்துதல் வேண்டும். 06) பெண்களைப் பொறுத்தவரை சாட் டுதலை மேற்கொள்ளும் போது தமது பெயரை முதலாகவும் தந்தை or கணவனின் பெயரை பின்னாகவும் கொண்டு சாட்டுதல் மேற்கொள்ள வேண்டும்.
07) திரு, திருமதி, வணக்கத்துக்குரிய போன்ற மரியாதைச் சொற்கள் சேர்க்கப் படாமல் முதல் எழுத்துக்களுடன் மட்டும் பெயர் எழுதப்படல் வேண்டும். 08) இறந்த ஒருவரின் காசோலையினைச் சட்டரீதியான அவரது வாரிசு சாட்டுதல் செய்யலாம். 09) நிறுவனத்தின் பெயரில் வரையப்பட்ட காசோலையாயின் பின் புறத்தில் தனது - கையொப்பத்தை இட்டு பதவிப் பெயரை யும் காட்டி விடுதல் வேண்டும்.

Page 32
த. கெளரிகரன்
14
10) காசோலையில் இடப்படும் கையொப் பமானது காந்தமை பகுதிக்குள் வருதல் கூடாது.
மேற்கூறிய நிபந்தனையின் கீழ்க்காட் டப்படும் சாட்டுதல். 1) பொதுமுறைச் சாட்டுதல் 2) சிறப்பான சாட்டுதல்
வரையறையுடன் சாட்டுதல் நிபந்தனையுடன் சாட்டுதல்
4)
எனும் நான்கு வழியில் இடம் பெற முடியும். இவற்றுள் முதல் இருமுறையும் நடைமுறைக்கு பொருந்துவனவாக உள்ளன. பொதுமுறைச் சாட்டுதல் என்பது காசோ லைக் குரியவர் தனது கையொப்பத்தை மட்டும் இடுவதாகும்.
த. ரூபன்
சிறப்பான சாட்டுதல் என்பது சாட்டப் படுவோரது பெயரும் or உத்தரவுக்கு என்ற பதமும் சாட்டப்படும் இத்தகைய சாட்டுதலிலேயே மீண்டும் மீண்டும் கையொப்பம் இடவேண்டிய அவசியம் வரும். இதன் காரணமாக காசோலையின் பின்புறம் நிறைந்தால் ஒட்டும் துண்டு ஒட்டப்பட்டு கையொப்பமிடப்படும்.
காந்தனுக்கு OR உத்தரவிற்கு
த. ரூபன்
நிபந்தனையுடன் சாட்டுதல் என்பது சாட்டுதலின் போது நிபந்தனை விதித்து அதன் பின் கையொப்பமிடும் முறையாகும். இந்நிபந்தனை நிறைவேற்றப்பட்டதற்கான போதிய ஆதாரம் காட்டப்பட்டாலே வங்கி பணம் வழங்கும்.
தொழில் தொடங்கிய பின் பணம்
கொடுக்கவும்.
த. ரூபன்
வரையறையுடன் சாட்டுதல் என்பது சாட்டுதலின் போது பெறுபவரின் பெயர் குறிப்பிட்டு அவருக்கு மட்டும் என வரை யறுத்து கையொப்பம் இடுவதனையே இது
வணிசநாதம் ~ 1992

குறிக்கின்றது. இக் காசோலை :யை பெறுபவர் இன் னொருவருக்கு சாட்டுதல் செய்ய முடியாது.
த. குமாருக்கு மட்டும்.
த. ரூபன்
இன்று இங்கிலாந்தில் புறக்குறிப்பு இல்லாத விடத்தும் (சாட்டுதல் ) காசோ லைக்கு பணம் வழங்கலாம் என்ற கருத்து 1957ம் ஆண்டு காசேலைகள் சட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படு கின்றது. ஆனாலும் இன்றும் இலங்கை யில் சாட்டுதல் or பு றக் குறிப்பு பரிசீலனை நடைமுறையில் உள்ளது. குறுக்குக் கோடிடல்:- (CROSSING)
காசோலையின் பாதுகாப்புக்கருதி காசோலையின் முகப்பில் இரு சமாந்தரக் கோடுகளை வரைதல் குறுக்குக் கோடிடல் எனப்படும். காசோலையினைப் பிறப்பிப்பவ நக்கும் காசோலையினை பெறுபவருக்கும் குறுக்குக்கோடிடும் அதிகாரம் உண்டு. காசோலை பிறப்பிப்பவர் பொது முறைக் குறுக்குக்கோடிட்டால் பெறுபவர் சிறப்பு முறைக் குறுக்குக்கோடிடலாக மாற்றலாம் . இக்குறுக்குக் கோடுகள் மையினால் இடுவ பதனால் ஒரு வகை திரவம் கொண்டு அழிக்கலாம் என்பதனால் வங்கியிடம் அச் சட்ட - குறுக்குக் கோட்டை உடைய காசோலைப் புத்தகத்தினைப் பெறமுடியும். இதனை முதன் முதல் இலங்கை வங்கியே வெளியிட்டது. குறுக்குக் கோடிடலின் நோக்கங்கள் ஆவன.
1) காசோலை களவாடப்பட்டால் அதற் தரிய பணத்தை யார் பெற்றார்கள் என் அதனை அறியலாம்.
2) சாட்டுதல் செய்த பின் தவறின் அதனை வேறொருவர் எடுத்து மாற்றும் மோசடி தவிர்க்கப்படும்.
3) இக்காசோலையை அஞ்சலில் பய பின்றி அனுப்பலாம்.
4) காசோலையைப் பிறப்பிப்பவர் தான் விரும்பிய வங்கி மூலம், தான் விரும்பிய பாடிக்கையாளன் கணக்கில் பணத்தை இடு பதற்கு இம்முறை உதவும்.

Page 33
குறுக்குக் கோடிட்ட காசோலை ஒன் றினை பெறுபவருக்கு வங்கியில் நடைமுறைக் கணக்கு இருப்பின் அக்கணக்கில் வைப்புச் செய்து மாற்றலாம். கணக்கு இல்லாவிடின் தனக்கு தெரிந்த வங்கியில் கணக்கு வைத்தி ருக்கும் ஒருவர் மூலமாக மாற்றிக் கொள் ளலாம். இக் குறுக்குக் கோடிடலானது இரு வகைப்படும்.
(i) பொது முறைக்குறுக்குக் கோடிடல்
(GENERAL CROSSING) (ii) சிறப்பு முறைக் குறுக்கு கோடிடல்
(SPECIAL CROSSING) :-
1 பொது முறைக் குறுக்கு கோடிடல்:-
காசோலையின் முன் புறத்தில் இரு சமாந்தரக் கோடுகளை வரைதல் அல்லது இக் கோடுகளுள் சில பதத்தை எழுதுவதாக அமையும். இது பெரும்பாலான காசோலை களில் இடம் பெறும் முறையாகும். இது பின் வரும் 4 முறையில் மேற் கொள்ளப்பட முடியும்.
IV
III
அன் கோ
கைமாற்றத்தகாதது
பெறுவோன் க/கு மட்டும் (கொடுனி க/கு மட்டும்)
இதில் 1ம், 2ம் இலக்கமிடப்பட்ட குறுக் குக் கோடிட்ட காசோலையினை ஒருவர் நேரடியாக வங்கியில் கொடுத்து மாற்ற முடியாது. அவருக்கு வங்கிக் கணக்கு இருப் பின் அவரது கணக்கில் இட்டு மாற்றலாம். அல்லது வங்கியில் கணக்கு உள்ள ஒருவருக்கு சாட்டுதல் செய்து மாற்றலாம். 3ம இலக்கம் இடப்பட்ட குறுக்குக் கோட்டினை உடையன் காசோலையினை வங்கிக் க/கு மூலம் மாற்ற முடிவதுடன் அக் காசோலையினை வேறொருவர் மாற்றும் போது மாற்றுகின் றவர் சட்ட ரீதியாக அக் காசோலைக்கு உரித்துடையவரா என்பது கவனிக்கப்படல் வேண்டும். எனவே அக் காசோலையின்
வணிகநாதம் - 1992

காசோலை
உரிமையற்றவரிடம் பெறப்படின் அக்கை மாற்றம் செல்லுபடியற்றதாகும். 4ஆம் இலக்கம் இடப்பட்ட குறுக்குக் கோட்டை உடைய காசோலையினை வேறொருவருக்கு சாட்டுதல் மூலம் கைமாற்ற முடியாது. அவ ரது வங்கிக் கணக்கில் வைப்புச் செய்தே மாற்றலாம். கணக்கு இல்லாவிடின் புதிய கணக்குத் திறந்தே மாற்றவேண்டும். எனவே இவ்வாறான குறுக்குக் கோட்டினை வரை யும் போது வரையப்படுகின் றவருக்கு வங் கியில் நடைமுறைக் கணக்கு இருக்குதா என் பதை அறிந்து கொள்ளுதல் வேண் டும். எனவே இது உச்சபாதுகாப்புடையது.
II சிறப்பு முறைக்குறுக்குக் கோடிடல்:-
வர்த்தக வங்கியின் பெயர், குறுக்குக் கோட்டிற் கிடையே காட்டப்படுவதனை சிறப்பு முறைக் குறுக்குக் கோடிடல் எனப் படும். இது காசோலை வைப்புச் செய்ய வேண்டிய வங்கியாகக் காணப்படும். இந்த வங்கியைத் தவிர வேறு வங்கியில் வைப்புச் செய்யவோ, பணம் பெற வோ முடியாது என்பதனால் இக் குறுக்குக் கோடிடல் முழு வதுமே உச்ச பாதுகாப்பான குறுக்குக் கோடிடலாகக் கொள்ளப்படுகின்றன. இங்கு வங்கியின் பெயர் மட்டுமன்றி சில பதங்களும் சேர்க்கப்படும் இது பின்வரும் மூன்று முறை யில் இடம் பெறும்.
|
மக்கள் வங்கி.
சுன்னாகம்.
கைமாற்றத்தகாதது ஹற்றன் நஷனல் வங்கி, - யாழ்ப்பாணம்.
பெறுவோன் கணக்கு மட்டும்
இலங்கை வங்கி, மானிப்பாய்.
மேற் காட்டியவற்றில் 1ம் இலக்கமிடப் ) பட்ட குறுக்குக் கோட் டி  ைன யு டைய காசோலை மக்கள் வங்கியின் சுன்னாகம் கிளையில் கணக்கில் வைப்புச் செய்து மாற்ற முடியும். 2ம் இலக்கமிடப்பட்ட குறுக்குக் க கோட்டை உடைய காசோலையை ஹற்றன்
1. (01-12

Page 34
த. கெளரிகரன்
நஷனல் வங்கியின் யாழ்ப்பாணக் கிளையின் கணக்கில் ம ா ற் ற மு டி வ து டன் அக் காசோலை கைமாற்றும் போது சட்டப்படி உரித்துடையவரா என்பது கவனத்தில் கொள் ளப்படுதல் வேண்டும். 3ஆம் இலக்கமிடப் பட்ட கு று க் கு க் கோட்டினையுடைய காசோலையானது மானிப்பாயிலுள்ள இலங்கை வங்கியில் காசோலை வரையப் பட்டவரின் பெயரிலேயே வைப்புச் செய்யப் படலாம். இதனால் இது அதிஉச்ச பாதுகாப் பானது எனக் கூறப்படுகின்றது. இதனால் வங்கியினால் அச்சிடப் பட்ட குறுக்குக் கோட்டிற்கிடையே இப்பதம் பொறிக்கப்படு கின் றது.
இம்மு  ைற க ளி ல் கு று க் கு க் கோடிட்ட காசோலைக்கு உடனடியாக பணம் பெற விரும்பின் அக் காசோலையில் "குறுக்குக் கோடிடல் ரத்துச் செய்யப்பட் டுள்ளது. தயவு செய்து பணம் கொடுக்கவும்" என அச்சிட்ட எழுத்தில் குறித்து பிறப்பித் தவரின் முழுக்கையொப்பம் பெறப்படல் வேண்டும்.
காசோலை மறுக்கப்படுதல்:-
காசோலைகள் பல காரணங்களுக்காக வங்கியினால் மறுக்கப்படுகின்றது. இதனை மறுக்கப்பட்ட காசோலை என்பர். அவ்வாறு மறுக்கப்படும் காசோலையின் முன் புறத்தில் காரணத்தை எழுதி அதற்குரிய பத்திரத்தில் மற்றும் விபரங்களையும், தபாற் செலவினை யும் குறிப்பிட்டு அனுப்பப்படும். இவ்வாறு மறுக்கப்படுவதற்கான காரணம்:- 01) பணம் பெறுபவர் ஒப்பம் முறையற்றது. 02) பணம் பெறுபவர் ஒப்பம் வேண்டும். ப3) பணம் பெறுபவர் ஒப்பம் தெளி
வின்மை. 04) வரைந்த வரை நாடுக. (நடைமுறைக்
கணக்கில் போதிய பணம் இல்லாவிடின்
இவ்வாறு குறிப்பிடப்படும்) 05) வரவுகள் ஒத்துப் பார்க்கவில்லை. 06) வைப்பில் இடப்பட்டவை தீர்வையாக
வில்லை. மறுபடியும் வைப்பில் இடுக. 07) காலம் கடந்த காசோலை OR பழமை
யுற்ற காசோலை.
வணிக நாதம் -, 1992

08) கணக்கு மூடப்பட்டது.
09) புறக் குறிப்பை மீண்டும் உறுதிப்படுத்
துக.
10) வரைந்தோரால் கொடுப்பனவு நிறுத்
தப் பட்டுள்ளது. 11) தொகை எண்ணிலும், எழுத்திலும்
வேறுபடுகின்றது.
12) சிதைவுற்ற காசோலையாகவுள்ளது. 13) வரைவேர்ரின் ஒப்பம் எ ங் க ளு ட ன்
இருக்கும் மாதிரியுடன் வேறுபடுகின்
றது . 14) திருத்தத்திற்கு வரைபவரும், முழு ஓப்
பமும் தேவைப்படுகின்றது. 15) பூர்த்தியற்ற காசோலை. (காசோலை
நிறைவு பெறாவிடின்) 16) வரைவோரின் புறக்குறிப்பு வேண்டும். 17) காசோலை முறைப்படி வரையப்பட
வில்லை. 18) வரைந்தவர் இறந்து விட்டார். 19) திகதி இன்றி உள்ளது OR பிற்திகதி
யிட்டுள்ளது. 20) நீதி மன்றம் வங்கிக்கு தடை உத்தரவு
பிறப்பித்துள்ளது,
மேற்கூறிய காரணத்திற்கு காசோலை யின் முன்புறத்தில் மேற்கூறியவாறு எழுதி அதற்குரிய பத்திரத்துடன் திருப்பி அனுப் பப்படும். இதில 4ஆவது, 10 ஆவது முறை யில் காசோலை திருப்பி அனுப்பப்பட்டால் வங்கி தரகுக் கூலியை அறவிடுகின்றது. ஏனெனில் வாடிக்கையாளரினால் வங்கிக் கு ஏற்படும் தேவையற்ற சிரமத்தை நீக்குவதற் காகும், வங்கியின் துரித சேவைகள்
காசோலைகளின் விரைவான தீர்ப்பன வுக்காக இலங்கையிலே கொழும்பு போன்ற நகரவங்கிகளில் கணனிகளைப் பயன்படுத்தி விரைவான முறையில் காசோலைத் தீர்ப்ப னவை மேற்கொள்கின்றனர். இக் கணனி ஏனைய இடங்களில் உள்ள வங்கிகளில் படிப்படியாக அ றி மு க ப் ப டு த்தப்படும்,

Page 35
மேலும் நம்பிக்கையான, விரைவான தொழிற்பாட்டிற்காக அறிமுகப்படுத்தியதே காசோலைக் கொள் வனவு செய்தல் முறை, வங்கி அட்டை முறை, காசோலை உத்தர வாத அட்டை போன்றன அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது. இதில் காசோலை கொள் வனவு செய்தல் என்பது 3 ஆம் நபரிடம் இருந்து பெற்ற காசோலையை வங்கியில் இட்டு பல நாள் காத்திராமல் அக்கணத்தி லேயே தனது காசோலையை எழுதி பண மாக்க முடியும் முறையாகும். இந்நோக்கத் திற்கு அரசாங்க, கூட்டுத்தாபன, வெளி நாட்டு வங்கியின், வெளிநாட்டு நிறுவன காசோலைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின் றன. வங்கி அட்டை என்பது காசோலையினை வேறு இடங்களில் மாற்றுவதற்கு உதவுவ தாகும். இதற்கு ஒவ்வொரு வங்கியும், ஒவ் வொரு பெயரை கொடுத்துள்ளன. குறிப் பாக சம்பத்வங்கி, சம்பத் அட்டை என்றும், ஹற்றன் நஷனல் வங்கியில் காசோலையை பணமாக்க உதவும் அட்டை (5000/-வுக்கு உட்பட்டது) நீல வண்ண அட்டை (2000க்கு உட்பட்டது) என்றும் இலங்கை வங்கி சிபாங் அட்டை என்றும் மக்கள் வங்கி மக்களட்டை என்றும் காணப்படுகின்றன. காசோலைக்குரிய பணமிருப்பதை உறு திப்படுத்தும் பத்திரமே காசோலை உத்தர வாத அட்டையாகும். இதுவே நடைமுறை யில் பொதுவாகக் காணப்படுவதுடன் அடையாளமிட்ட காசோலைக்கு பதிலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உசாத்துணை நூல்கள் விருட்சம்
பணமும் வங்கியும் நவீன வணிகவியலும் நிதியியலும் வர்த்தக உலகம் பொருளியல் நோக்கு கணக்கு பதிவியல் நடைமுறை வணிகம் மத்தியவங்கி ஆண்டறிக்கைகள்
வணிகநாதம் - 1992

17
காசோலை
முடிவுரை:-
மேற்கூறிய நடவடிக்கைகளை எடுத்து நோக்கும்  ோது காசோலையை ஒருவர் பாவிப்பாரேயானால் அவர் பெருந் தொகை யான பணத்தை பாதுகாப்பாகவும், இலகு வாகவும் எடுத்துச் செல்ல முடிவதுடன் அஞ் சல் மூலமும் தனது கொடுப்பனவை மேற் கொள்ள முடியும். மேலும் பணக்கொடுக் கல் வாங்கல்களுக்கு காட்சியாகவும் அமை யும் பணமில்லாத காலத்தில் பிற்திகதியிட்ட காசோலை மூலம் கொடுப்பனவை மேற் கொண்டு நன்மதிப்பைப் பாதுகாக்க
முடியும்.
கிராமப்புறங்களை எடுத்து நோக்கும் போது அவர் கள் காசோலை மூலமாக கொடுக்கல் வாங்கல்களை, மேற்கொள்ள வேண்டுமாயின் நகரங்களை நாடி அங்குள்ள வர்த்தக வங்கிகள் மூலமே தொழிற்பட முடிகிறது. இதனால் சிரமங்களுக்குள்ளா கின்றனர்.மேலும் வடக்கு, கிழக்கை நோக்கும்போது இங்கு நிலவும் கலவரங்கள் காரணமாக போக்குவரத்து, த பா ல் தொடர்பு சீரின்மையினால் காசோலையின் தீர்ப்பனவுக்கு காலதாமதத்தை ஏற்படுத்து கின்றது. எனினும் காசோலை மூலமான அனுகூலத்தை சகல துறையினரும் அடையக் கூடிய விதத்தில் கைமாற்றத்தக்க சாதனங் களில் காசோலை திகழ்வதால் காசோலை யையே தற்போதைய கணனி உலகம் வேண்டி நிற்கின்றது என்பதனால் காசோலை பற்றிய பூரண விபரத்தையும் இக் கட்டுரையில் ஆராய்ந்துள்ளேன்.
1988
| I |
இ. இரட்ணம் அ. ஸ்ரீஸ்கந்தராசா சித்திரை 1990 ஜூலை-ஆகஸ்ட் 1983
ந. தேவநாயகம் ந. ஞானேந்திரன்

Page 36
சந்தைப் படுத்தலின் எ Concepts in Marketing
வணிகத்தின் பிரதான தொழிற்பாடு களில் சந்தைப்படுத்தல் முக்கிய இடத்தைப் பெறுகின்றது. நிறுவனங்கள் சந்தைப்படுத் தல் கருமத்தை மேற்கொள்ளும் போது எக் குறிக்கோளை மையமாக கொள்ள வேண்டும் என்பது பிரதான பிரச்சினை யாகும். எனவே நிறுவனங்களின் சந்தைப் படுத்தல் எவ்வாறு அமையவேண்டும் என்ப தனை விளக்குவதாகவே இவ் எண்ணக்கருக் களின் அபிவிருத்தி காணப்படுகிறது . காலத் திற்குக் காலம் சந்தைப்படுத்தல் முகாமை அறிஞர்களால் முன்வைக்கப்பட்ட எண்ணக் கருக்கள் பிரதானமாக ஐந்து வகையான தாகும். இவை ஓர் படிமுறை வளர்ச்சி யாகவே காணப்படுகின்றது. இவ் எண்ணக் கருக்கள் வருமாறு:
I உற்பத்தி எண்ணக் கரு
Production Concept
இவ் எண்ணக்கரு குறிப்பிடுவது யாதெ னில் பொருட்களை குறைந்த செலவில் உற் பத்தி செய்து குறைந்தவிலைக்கு விநியோகிப் பதன் மூலம் நிறுவனங்கள் முழு அளவில் பொருட்களை விற்பனை செய்யலாம் என்ப தனையும் அதன் மூலம் நுகர்வோரை திருப் திப்படுத்தலாம் என்பதாகும். அதாவது உற்பத்தி நோக்கிய சந்தைப்படுத்தலை வலி யுறுத்துவதாகவே உள்ளது. உற்பத்தியாளர் நலன் கருத்தில் கொண்டு எப்பொருள் குறைந்த செலவுடையதோ அதனை உற் பத்திசெய்து இலாபம் உழைப்பதை குறிப் பிடுகின்றது. இவ் எண்ணக்கரு தற்காலத் திற்கு பொருத்தமானதாகவே 4 FTணப்படு கின்றது எனினும், இது பழமையான எண்
ணக்கருவா கும்.
வணிகநாதம் -- 1992

எண்ணக் கருக்கள்
செ. விஜயகுமார், ஆண்டு - 13 வர்த்தகப்பிரிவு.
இவ் எண்ணக்கரு பின்வரும் சந்தர்ப் பங்களில் பொருத்தமானதாகவும் நடை முறையில் சாத்தியமானதாகவும் அமையும்.
குறிப்பிட்ட பொருளுக்குரிய கேள்வி நிரம்பலை விட அதிகமானதாக காணப்படுதல். ஒரு பொருளின் விலை அதிகரித்துக் காணப்படுதல்.
*
பொருள் எண்ணக்கரு Product Concept இவ் எண்ணக் கருவின் படி ஒரு நிறுவ னம் பொருட்களை தரமாக உற்பத்தி செய்து நியாயமான விலைக்கு விற்பதன் மூலம் விற்பனையை அதிகரித்து நிறுவனத் தின் நோக்கத்தை அடைந்து கொள்ள முடி யும் என கூறப்படுகின்றது. இவ் எண்ணக் கருவை பின்பற்றும் நிறுவனம் பொருளின் தரத்தில் கூடிய கவனம் செலுத்துதல் வேண்டும். Iா விற்பனை எண்ணக் கரு
Selling Concept இவ் எண்ணக்கருவானது 19 20 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்வைக்கப்பட் டது . இக் காலப்பகுதியில் நிறுவனங்களிற்கு இடையே போட்டி ஏற்பட்டமையினால் தரமான பொருட்களை நியாயமான விலை யில் முழு அளவில் விற்பனை செய்ய முடியாதிருந்தது தனியே உற்பத்தி பொரு ளின் தரத்தில் மட்டும் கவனம் செலுத்து வதன் மூலம் முழு அளவில் அப்பொருட் களை நு ர்வோர் வாங்கிக் கொள்ளமாட் டார்கள் என வும் அதிகளவு விற்பனை நட வடிக்கை மூலம் நுகர்வோரை முழு அளவில்

Page 37
பொருட்களை வாங்க வைக்க முடியும் என எடுத்துக்கூறப்படுகிறது. இவ் எண்ணக்கரு வின்படி நிறு வனங்கள் விற்பனை நடவடிக் கைகளான நேரடி விற்பனை, விளம்பரம், மேம்படுத்தல் ஆகியவற்றில் கூடிய கவனம் செலுத்தல் வேண்டும் எனக் கூறப்படுகின் றது.
IV சந்தைப்படுத்தல் எண்ணக்கரு
| Marketing Concept
இவ் எண்ணக் கருவானது 1950 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்வைக்கப்பட் டது.இவ் எண்ணக்கருவின்படி நுகர்வோரின் விருப்பம், தேவைகள் அறிந்து அவற்றை முழு அளவில் பூர்த்தி செய்யக் கூடிய வகையில் பொருட்களை உற்பத்தி செய்து வழங்குவ தன் மூலமே நிறுவனம் தனது நோக்கத்தை அடையமுடியும் என்பதை குறிப்பிடுகிறது. நுகர்வோரின் தேவைகள் விரைவாக மாற்ற மடைந்து கொண்டு செல் கின்ற காரணத்தி னால் அவற்றை அறிந்து அதற்கு ஏற்பவே நிறுவனங்கள் தமது உற்பத்தி சந்தைப்படுத் தலை மேற்கொள்ள வேண்டும் என்பதே இவ்எண்ணக்கருவின் வெளிப்பாடு ஆகும்.
சந்தைப்படுத்தல்
எண்ணக்கருவின் கருத்து நிறுவனங்களின் நுகர்வோர் நோக் கிய சந்தைப்படுத்தலை வலியுறுத்துவ தாகும். நிறுவனங்களின் வெற்றியும் நுகர் வோரின் திருப்தியும் நுகர்வோன் நோக்கிய சந்தைப்படுத்தலிலேயே தங்கியுள்ளது. நிறு வனங்கள் தமது இலாப நோக்கத்தை முதன் மைப்படுத்தாது நுகர்வோர் நலனுக்கு முன் னுரிமை வழங்கி உற்பத்தி சந்தைப்படுத் தலை மேற்கொள்வதன் மூலம் நிறுவனங்கள் நுகர்வோரை திருப்திப்படுத்தலாம். அதே வேளை ஏனைய நிறுவனங்களுடன் போட்டி யிடலாம், நிறுவனங்கள் யாவும் நு கர் வோரது தேவைகள், விருப்பம், தெரிவு என்பவற்றை சந்தை ஆராய்ச்சி மூலம் அறிந்து அதற்கு ஏற்ப பொருள்கள் சேவை கள் உற்பத்தி செய்வதனையே குறிப்பிடுக தா க இவ் எண்ணக்கரு அமைகிறது. அது
உசாத்துணை நூல் (1) திரு. தே. ஜெயராமன் (2) Philip Kottlor - Marke1
வணிகநாதம் 1992

19
சந்தைப் படுத்தலின்...
மட்டுமன்றி சந்தைப்படுத்தலின் உச்ச திருப்தி நுகர்வோரையே மையமாகக் கொண்டுள்ளது. தற்காலத்து நிறுவன ன் களிற்கு எல்லாம் பொருந்தக்கூடிய எண்
ணக் கருவாகவும் இது அமைகிறது.
எனவே இவ் எண்ணக்கரு சந்தைப்படுத் தல் கருமம் நுகர்வோரை மையமாக வைத்து திட்டமிடப்படல் வேண்டும் என் பதனை குறிப்பிடுகின்றது. நிறுவனங்கள் விற்பனை செய்யக்கூடியவற்றையே உற் பத்தி செய்யவேண்டும். பதிலாக உற்பத்தி செய்தவற்றை விற்பனை செய்ய முயலக் கூடாது என்பது பொது வான கருத்தாகும்.
சமுதாய சந்தைப்படுத்தல் எண்ணக் கரு:- Social Marketing Concept:-
இவ் எண்ணக்கரு 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. தனிப்பட்ட நுகர்வோர் தேவைக்கு முன் னுரிமை கொடுக்கும், அதே வேளை சமு தாய நன்மைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதனையே இவ் எண்ணக்கரு குறிப்பிடுகின்றது. நுகர்வோர் தேவைகளை பூர்த்தி செய்யப்படும்போது அது சமுதாயத் திற்கு எதிரான விளைவுகளை வழங்கலாம். அல்லது சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத் தலாம். எனவே நிறுவனங்கள் நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்யும்போது அதனை மட்டும் கருத்தில் கொள்ளாது சமுதாயத் தின் நன்மையையும் கருத்தில் கொண்டு உற்பத்தியை மேற்கொள்ளப்படுதல் வேண் டும் என கூறப்படுகின்றது.
இறுதியாக நோக்குமிடத்து தற்காலத்து . நிறுவனங்கள் எல்லாம் சந்தைப்படுத்தல் எண்ணக் கருவைப் பின்பற்றுகின்ற அதே வேளை சமுதாய சந்தைப்படுத்தல் எண்ணக் கருவிற்கு முக்கியம் கொடுக்கவேண்டும். அப்போது ஏனைய நிறுவனங்களுடன் போட்டியிடவும் நுகர்வோரை திருப்திப் படுத்தவும் முடியும்.
5ள் :-
வர்த்தகமும் நிதியும் I g Management

Page 38
வெளிநாட்டுக் கடன் ப
மீளளிப்பு உபாயங்கள் External Debt Burden and
1.0 அறிமுகம்
1980 களின் நடுப்பகுதியில் உலகப் பொரு ளாதாரத்தில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் செலுத்தவேண்டியிருந்த வெளி நாட்டுக் கடன் தொகை பெரும் நெருக்கடி நிலையைத் தோற்றுவித்து விடலாம் என்று அஞ்சப்பட்டது. 19 8-ம் ஆண்டு அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் மொத்தக்கட னாக மதிப்பிடப்பட்ட 1200 பில்லியனில் 37 சதவீதமான தொகை மூன்றாம் உலக நாடுகளின் சனத்தொகையில் 10 சதவீதத் தினைக்கொண்ட இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்குரியதாக காணப்பட்டது. இத னால் சில அறிஞர்கள் கடன் பிரச்சி னையை அபிவிருத்தியடைந்துவரும் நாடுக ளுக்குரிய பொதுப் பிரச்சினை என்று கொள் ளாமல் இலத்தீன் அமெரிக்க நாடுகளினதும் வளர்ச்சியடைந்த நாடுகளின் ஒரு சில வங் கிகளினது பிரச்சினையாகவே கொள்ள வேண்டும் என்று கருத்து வெளியிட்டனர். இன்றைய பொருளாதார ஒழுங்கில் நாடு கள் ஒன்றில் ஒன்று தங்கியிருக்கும் நிலைமை அதிகமாகக் காணப்படுவதனால் ஒரு சில நாடுசளின் பிரச் சினையே உலகப் பிரச்சினை யாக உருவாகிவிடும் என்பதில் ஐ பமில்லை. ஆகவேதான் இந்தக் கட்டுரைகடனின் வகைகளையும் கடனின் பொருளாதாரம் பற்றியும் ஆராய முற்படுகின்றது. இதனை அடிப்படையாகக்கொண்டு இலங்கையின் வெளிநாட்டுக்கடன் அமைப்பு, சுமை என் பவையும் ஆராயப்பட வேண்டியதொன்றா கும். எனினும் கட்டுரையின் நீளத்தினை கருத்தில்கொண்டு இதனை தவிர்த்துக் கொ
ண்டேன். ஆர்வமுள்ள மாணவர்கள் இம் முயற்சியில் ஈடுபடலாம்.
வணிகநாதம்-1992

பழுவும், தம்
Repayment Strategies
இ. நந்தகுமாரன் B.A. (Hons), M. A, M.Sc.(Surrey) முதுநிலை விரிவுரையாளர், பொருளியல் துறை, யாழ் பல்கலைக் கழகம்.
நிதியை அல்லது பொருட்கள் சேவைக ளுக்கான் பெறுமதியை தனிப்பட்ட ஒரு வரோ அல்லது ஒரு அரசாங்கமோ பிற்போ டப்பட்ட ஒரு காலத்தில் திருப்பிச் செலுத் தும் நோக்கில் பெற்றுக் கொள் ளும்போது ஏற்படுகின்ற பொறுப்பே கடனாகும். நிதி அல்லது பொருட்கள் சேவைகள் கைமாறும் போது கொடுப்பவரும் பெறுபவரும் செய்து கொள்ளும் ஒப்பந்தத்தில் சடனை திருப் பிச் செலுத்தும் நிபந்தனைகள் (காலம், வட்டிவீதம், நாணயம்) குறிப்பிடப்பட்டிருக் கும். இதற்கமைய பெற்ற கடனை வருட இறுதியில் அல்லது அரையாண்டு இறுதி பில் முதலின் ஒரு பகுதியுடன் வட்டியும் சேர்த்து அல்லது வட்டியை மட்டும் செலு த்தி முதலை குறிப்பிட்ட காலத்தின் பின் னர் செலுத்தக்கூடியதாக இருக்கும். எந்த மூலாதாரத்தில் இருந்து பெறப்படுகின்றது, என்ன நோக்கத்திற்காக வழங்கப்படுகின் றது, யார் பெற்றுக் கொள்ளுகின்றார்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு கடன்களை வகைப்படுத்தலாம்.
2. 0 கடன் வகைகள்
கடன்களை ஒரு நாட்டின் எல்லைக்குள் திரட்டினால் உள் நாட்டுக் கடன்கள் என வும் குறித்தவொரு நாட்டின் எல்லைக்கு அப்பால் ஏனைய நாடுகளிடமிருந்தோ, நிதி நிறுவனங்களிடமிருந்தோ பெ ற ப் ப டு ம் போது வெளிநாட்டுக் கடன் எனவும் குறிப் பிடுவர். உள் நாட்டிலோ அல்லது வெளி நாட்டிலோ நிதிச் சந்தைகளிலே போட்டி பிட்டு கடன் களைப் பெற்றுக் கொள்ளும் போது இவை சந்தைக் கடன்கள் எனவும் சந்தையல்லாத மூலாதாரங்களில் இருந்து

Page 39
21
பெறும் போது சந்தையல்லாக் கடன் என வும் வகைப்படுத்துவர். இதே போன்று சந்தை அல்லது சந்தையல்லாக் கடன்களை வங்கித்துறையில் இருந்தும் வங்கியல்லாத் துறையில் இருந்தும் பெற்றுக்கொள்ளும் போது அதற்கேற்ப வகைப்படுத்துவதையும் காணலாம். உதாரணமாக இல ங் கை யி ல் வணிக வங்கிகள், மத்திய வங்கி என்பவற் றில் இருந்து பெறும் கடன்கள் வங்கித்துறை சந்தைக் கடன் கள் எனவும், காப்பு று தி தொழிலாளர் சேமநலநிதி போன்றவற்றி லிருந்து பெறும் கடன்கள் சந்தையல்லா வங் கிக் கடன்கள் எனவும் நிர்வாகக் கடன்கள் சந்தையல்லா வங்கியல்லாக் கடன்களாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதேபோன்று ஒரு அரசாங்கம் பிறி தொரு நாட்டு அரசாங்கத்திடமிருந்து நேரடி யாக கடன்களைப் பெறும் போது இரு பக்கக் கடன் எனவும் சர்வதேச நிதி நிறுவனங்கள் அல்லது பல நாடுகளின் கூட்டுக்களில் இருந்து பெறப்படும் போது பல்பக்க கடன்கள் என வும் அழைக்கப்படுகின்றது. கடன் களைப் பெற்றுக்கொள்கின்ற நோக்கத்தினை அடிப் படையாகக் கொண்டு கடன்கள் பண்டக் கடன்கள் திட்டக்கடன்கள் எனவும் பிரிக்கப் பட்டுள்ளது. கடன் பொருட்கள், சேவைகள் வடிவில் அமையுமானால் பண்டக்கடன்கள் எனவும், (Commodity loans) குறித்த வொரு செயற்றிட்டத்தினை மேற்கொள்வதற்காக நிதியாகவோ அல்லது செயற்றிட்டத்திற் கான பொருட்களாகவோ வழங்கப்படும் போது செயற்றிட்டக்கடன் (Project loan) எனப்படும், குறித்தவொரு நாட்டிற்கு பொருட்கள், சேவைகளை ஏற்றுமதி செய் பவர்கள், இறக்குமதி செய்கின்ற நாட்டிற்கு தனது பொருளுக்குத் தேவையான நிதியை தானே ஏற்பாடு செய்வாரானால் அதனை நிரம்பலர் கடன் (Supplier's Credit) என்பர்.
கடனுக்கான நிபந்தனைகள், ய ா ர் கடன் பெறுகின் றார்கள் என்பதைப் பொறுத் தும் கடன் பாகுபடுத்தப்பட்டுள்ளது. கட னுக்கான நிபந்தனைகள் இறுக்கமானவை யாக காணப்படும் போது வன்மையான. கடன்கள் (Hard loans) எனவும் இந் நிபந்
வணிகநாதம் 1992

வெளி நாட்டுக் கடன் பழுவும்...
தனைகள் கடன் பெறும் பொருளாதாரத் தில் ஏற்படுத்தும் தாக்கம் மிகக் குறைவாக இருக்கும் போது மென்மையான கடன் கள் (Soft loans) எனவும் அழைப்பர். அரசாங் கம், அரச கூட்டுத்தாபனங்கள், உள்ளூ ராட்சி மன்றங்கள் போன்ற பொதுத்துறை சார்ந்த நிறுவன அ  ைம ப் பு க் ஆ ள் கடன் பெறும் போது பொதுக் கடன் எனவும் தனிப் பட்ட நிறுவனங்கள் அல்லது நபர்கள் பெற்றுக் கொண்ட கடன்கள் த னி யார் கடன் எனவும் அழைக்கப்படும்.
கடன் பற்றிய மேற் கூறிய பாகுபாட் டுடன் உதவி (Aid) என்பதும் நிதியாக அல்லது பொருளாக வழங்கப்பட்டு திருப்பிச் செலுத்த வேண்டியதாக இருந்தால் அதுவும் கடனாகவே கருதப்படுகின்றது. எனினும் திருப்பிச்செலுத்த வேண் டிய அவசியமில் லாத நன் கொடைகள் (Grant) ஒரு நாட்டி னது மனித வளத்தின் தரத்தினை உயர்த் தக் கூடிய வகையில் அந் நாட்டிற்கு வழங்கு கின்ற உயர் கல்வி வாய்ப்புக்கள், பயிற்சி கள், பிற நாட்டு அறிஞர்களது சேவைகள், இவற்றிற்கு வழங்கப்படும் தொழில் நுட்ப உதவி (Technical Assistance) என்பவை நாட் டின் கடனில் உள்ளடக்கப்படமாட்டா. கடன்களைக் குறிக்கின்ற ஆங்கிலப் பதங் களான Loan, Credit, Aid என்பவற்றுக் கிடையிலே சிறு சிறு வேறுபாடுகள் இருந் தாலும் ஒரு நாட்டினது கடன் அமைப் பினுள் இவையாவும் அடக்கப்படும். பொது வாக ஒரு நாட்டினது கடன்பழு அல்லது கடன் சுமை பற்றிப் பேசும் போது பொதுத் துறையினது கடன் பற்றியே கருத்திற் கொள் வது வழக்கமாகும். அதுவும் பொதுத்துறை யின் உள் நாட்டுக் கடன்களை விட வெளி நாட்டுக் கடனின் சுமையே அந் நாட்டின் கடன் பெறுத கதி, வெளிநாட்டுச் சொத்து ஒதுக்கம் வெளிநாட்டு நாணய உழைப்பு என்பவற்றில் அழுத்தத்தினை செலுத்தக் கூடியதாக இருப்பதனால் இக்கட்டுரையும் வெளிநாட்டுக்கடனிலேயே கவனம் செலுத்து கின்றது. 3.0 கடனின் பொருளாதாரம் (Economics of Debt)
ஒருநாட்டின் உள்நாட்டுச் சேமிப்பிற்

Page 40
இ. நந்தகுமாரன்
22
கும் முதலீட்டிற்கும் இடையிலான இடை வெளியை நிரப்பவும், இறக்குமதிச் செலவி னத்திற்கும் ஏற்றுமதி வருமானத்திற்கும் இடையிலான இடைவெளியை போக்கவும் வெளிநாட்டில் இருந்து கடன் பெறவேண் டிய தேவைஏற்படுகின்றது. கடனைப் பெற்று முதலீடு செய்வதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தலாம். பெற்றுக் கொண்டகடனினால் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய சாதக நிலைமைகளும் அது நீடிக்கக்கூடிய காலமும் பெறப்பட்ட மேல திக வளம் எவ்வாறு பயன்படுத்தப்படுகின் றது, முதலின் எல்லை விளைதிறன் என்ப வற்றைப் பொறுத்து அமையும். பெறப்பட்ட கடன் உள் நாட்டில் நுகர்விலேயே செலவி டப்படுகின்றது என்று எடுத்துக் கொண்டா லும் அதுவும் குறுங்கால நன்மையைக் கொண்டுள்ளது என்றே கருதவேண்டும். ஏனெனில் நுகர்வினால் கடன் பெற்ற நாட் டின் மக்களது வாழ்க்கைத்தரம் உயர்ந்து செல்லும்.
ஒரு நாடு பெற்றுக்கொள்கின்ற நிதி உட்பாய்ச்சல் நன்கொடையாக இருந்தால் திருப்பிச் செலுத்த வேண்டிய தேவை யில்லை. எதுவித பிரச்சினையையும் தோற்று விக்காது. அதேபோல நேரடி முதலீடுகளாக இருந்தாலும் பிரச்சினை குறைவு. ஆனால் அதிகளவிலான சர்வதேச நிதி உட்பாய்ச்சல் கள் கடன்களாகவே காணப்படுகின் றன. இக் கடன்களை அதற்கான வட்டியுடன் திருப் பிச் செலுத்த வேண்டும். கடன் பெறும் நாடுகள் எதிர்கால் நுகர்வு முதலீடு என்ப வற்றை நிகழ்கால நுகர்விற்காக விட்டுக் கொடுக்கின் றன. ஏற்கனவே குறிப்பிட்ட சேமிப்பு இடைவெளி, அந்நியச் செலாவணி இடைவெளி என்பவற்றின் அடிப்படையில் நோக்கினால் வெளி நாட்டுக் கடனானது ஆரம்பத்தில் சேமிப்பினைவிட முதலீட் டினை அதிகரிக்கவும் ஏற்றுமதியைவிட இறக்குமதியை அதிகரிக்கவும் வழிகோலும். கடன் பிரச்சினை தோற்றம் பெறாமல் கடனை மீளளிக்க வேண்டுமானால் மேற் கூறிய சமமின்மைகள் போக்கப்பட்டு சேமிப்பு முதலீட்டை விட அதிகமாகவும், ஏற்றுமதி வருவாய் இறக்குமதி செலவி
வணிக நாதம் 1992

னத்தைவிட உயர்வாகவும் மாற்றப்படல் வேண்டும். இந்நிலையை கடன் பெற்ற நாடு கடனில் குறிக்கப்பட்ட கால நிபந்த. னைக்கு உட்பட்டதாக அமைய வேண்டும். கடன் பிரச்சினையை தவிர்ப்பதற்கு கடன் பெறும் நாடு சேமிப்பு மூலதன இடை வெளியை மூடி மிகையான சேமிப்பினை ஏற்படுத்த வேண்டும். வெளிநாட்டுக் கடன் அந்நியச் செலாவணியில் செலுத்தவேண்டி யிருப்பதால் உள் நாட்டு மேலதிக சேமிப் பானது அந்நியச் செலாவணியாக மாற்றப் படல் வேண்டும். எனவே ஏற்றுமதி வரு. மானம் இறக்குமதி செலவினத்தைவிட உயரவேண்டும்.
ஒரு எளிய சேமிப்புத் தொழிற்பாட் டினை நோக்கினால் சேமிப்பானது சராசரி சேமிப்பு நாட்டத்திலும் தேசியவருமானத் திலும் தங்கியுள்ளது என்பதை அறியலாம், எனவே தேசியவருமானம் உயரும்போதும் சேமிப்பு விகி தம் உயரும்போதும் சேமிப்பு அதிகரிக்கும். எல்லைச் சேமிப்பு நாட்ட மானது சராசரிச் சேமிப்பு நாட்டத்தினை விட உயர்வாகவும், கடன் தேசிய வருமான அதிகரிப்புக்கும் வழிகோலுமானால் ஒரே சமயத்தில் சேமிப்பு விகிதம் உயரவும் தேசிய வருமான அதிகரிப்பு ஏற்படவும் முடியும். எனவே சேமிப்பு இடைவெளியை போக்க சேமிப்பு விகிதம் உயர்த்தப்படுவதுடன் , பெறப்படுகின்ற கடனும் தேசிய வருமானத் தினை உயர்த்தக்கூடிய வகையில் முதலிடப் படல் வேண்டும்.
நாட்டல் சேமிப்பு தொழிந.
அந்நியச் செலாவணி வருவாயை அதி கரிக்க ஏற்றுமதி விரிவாக்கப்படல் வேண்டும். அல்லது அந்நியச் செலாவணி சேமிப்பை ஏற்படுத்த இறக்குமதி பிரதியிடப்படல் வேண்டும். எனவே உள்நாட்டு வளங்கள் வர்த்தகத்தில் ஈடுபடுத்தக்கூடிய துறைக களுக்கு மாற்றப்படல் வேண்டும், அந்நியச் செலாவணி சாதக நிலைமையை தோற்று விப்பது கேள்வி, நிரம்பல் பக்கக்காரணி களில் தங்கியுள்ளது. கடன் பெறுபவர் இந்தக் காரணிகளில் பின்வருமாறு செல் வாக்குச்செலுத்தலாம். (1) விலை அமைப் பில் நாணய மாற்று வீதத்தினூடாகவோ

Page 41
அல்லது மானியம் வரிகள் ஊடாகவோ மாற்றத்தினை ஏற்படுத்தி ஏற்றுமதியை அதிகரிக்க முடியுமா என்பதில் (2) பிரதான ஏற்றுமதிச் சந்தைகளில் கேள்வியின் வரு மான நெகிழ்ச்சியினால் ஏற்றுமதியில் ஏற் படும் தடைகளை போக்கமுடியுமா என்ப தில் (3) வருமான வளர்ச்சியில் செல்வாக்குச் செலுத்தமுடியுமா என்பதில் (4) வருமான வளர்ச்சியுடன் தனது இறக்குமதியைகுறைக்க வாய்ப்பு உண்டா என்பதில் (5) நாணய மாற்றுவீதம் வரிமானியம் போன்ற நாணய இறைக் கொள்கைகளினூடாக இறக்குமதி பிரதியீட்டினை தூண்டமுடியுமா என்பதில் தங்கியிருக்கும். இத்தகைய பல்வேறு கார் ணிகளுக்கிடையிலான இ னட யு ற வு க ளே கடனை சிக்கலான பிரச்சினையாக மாற்று கின்றன. பொதுவாக உயர்ந்து செல்லும் சேமிப்பு விகிதத்தினையும், சிறியதும் வீழ்ச்சியடைந்து செல்வதுமான முதல் வெளி யீட்டு விகிதத்தினையும் ஏற்றுமதி வளர்ச் சிக்கு வாய்ப்பும் வளமும் கொண்டதும் குறைந்த வட்டி செலுத்தி வருகின்றதுமான கடன்பெற்ற நாட்டினது பிரச்சினைகள் மேற் கூறியவற்றிற்கு நேர்மாறான நிலைமை களைக் கொண்டு கடன் பெற்ற நாட்டினது பிரச்சினைகளைவிட குறைவாகவே இருக் கும்.
கடன் பெற்ற நாட்டில் கடனின் எல்லை உற்பத்தித்திறன் கடனுக்கான வட்டிவீதத் தினைவிட உயர்வாக இருந்தாலும் அந்நி யச் செலாவணி பற்றாக்குறையினால் தற் காலிகமாக திரவத்தன்மை பிரச்சினையை எதிர்நோக்கலாம். இதுவே பின்னர் கடன் பிரச்சினையாக உருவெடுக்கலாம். கடன் வழங்கியவர்களின் எதிர்பார்க்கையில் ஏற் படும் மாற்றத்தினால் போதிய கடன் கிடைக்காமல் அல்லது வட்டிவீதம் உயர்த் தப்படுவதனால் சிக்கல்கள் தோன்றலாம், இதேபோன்று ஏற்றுமதி உழைப்பு ஒரு நாட்டு நாணயத்திலும் கடன் செலுத்து து கை மற்றொரு நாட்டு நாணயத்திலும் இருக்கும் சனா லும் பிரச்சினை தோற்றம் பெறலாம். மேலும் கடனை திருப்பிச் செலுத் தும் கால இடைவெளி, நிபந்தனைகள் என்பவற்றாலும் பிரச்சினைக்குள்ளாகலாம்.
வணிகநாதம்- 992

வெளிநாட்டுக் கடன் பழுவும்.
மேலே எடுத்தியம்பியவற்றில் இருந்து ஒரு நாட்டினது கடன் பிரச்சினைக்கு பல் வேறு காரணங்கள் இருக்கலாம் என்பது தெளிவாகின்றது. இவை கடன்பெறும் நாட்டின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட வையாவும் (உதாரணமாக உலக பொரு ளாதார பின்னடைவினால் ஏற்றுமதிக்கான கேள்வியில் வீழ்ச்சி, உலக மெய்வட்டி வீதத் தில் அதிகரிப்பு, மூன்றாவது நாட்டினுட னான நாணயப் பெறுமதியில் ஏற்படுகின்ற பாதகமற்ற தன்மைகள் ) கடன் பெறும் நாட்டின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவை யாகவும் காணப்படுகின்றன. இவை பெற்ற கடனை சரியான முறையில் முகாமை செய்யாமையினால் தோற்றம் பெறலாம். (உதாரணமாக திருப்பிச் செலுத்தும் தகு திக்கு மேலாக கடன் பெறல், சரியான மூலதாரங்களில் இருந்து கடன் பெறாமை, குறுகியகால வர்த்தக கடன்களை அதிகள் வில் கொண்டிருத்தல், கடன் நிலைமைகள் பற்றிய தகவல்களை பெறர்து கடன்பெறல்) அல்லது கடனை முகாமை செய்வதில் மட் மல்ல முழுப்பொருளாதாரத்தையுமே தவ றாக முகாமை செய்வதனால் (உ.ம் சேமிப்பு வீதத்தினை உயர்ந்த உரிய நடவடிக்கை எடுக்கத் தவறல், நாணய மாற்றுவீதத்தில் தேவையான சீராக்கங்களைச் செய்யத் தவ றல்) தோற்றம் பெறலாம்.பொதுவாக ஒரு நாட்டின் கடன் பிரச்சினைகள் மேற் கூறிய ஒன்றுக்கு மேற்பட்ட காரணிகளது சேர்க்கையினாலே தோற்றம் பெறுகின்றது .
4. 0 கடன் சுட்டிகள் (Debt Indicator)
ஒரு நாடு கடன் பிரச்சினையினுள் சிக்கியுள்ளதா அல்லது நாட்டின் வெளிநாட் டுக் கடன் நிலைமை எவ்வாறு அமைந்துள் ளது என்பதை அளவிட பல்வேறு சுட்டிகளை பயன்படுத்து கின் றார்கள். இவையே கடன் சுட்டிகள் எனப்படுகின்றன. 4 . 1 வெளி நிற்கின்ற வெளிநாட்டுக்
கடன் (Out Standing External Debt) நீண்டகாலக் கடன் கள்,
அரசாங்க நிரம்பலர் கடன்கள், சர்வதேச நாணய

Page 42
இ நந்தகுமாரன்
24
நிதியத்திடமிருந்து பெற்றுக் கொண்ட கடன்கள் பிறநாடுகளில் இருந்து மத் தியவங்கி பெற்ற கடன்கள், அரசினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் வங்கித் துறையிலிருந்து பெற்ற வெளிநாட்டுக் கடன் கள், தனியார் வெளி நாட்டுக் கடன்கள், வர்த்தகக் கடன்கள் ஆகியவற்றின் மொத் தத் தொகையில் குறித்த ஒரு நேரத்தில் செலுத்த வேண்டியுள்ள மிகு தித்தொகையை அளவிடும் சுட்டியே வெளிநிற்கின்ற வெளி நாட்டுக் கடன் சுட்டியாகும், இது நாட்டின் கடன் நிலையை சுட்டிக்காட்டக்கூடிய சிறந் தவொரு சுட்டியல்ல. ஏனெனில் (1) கடன் கள் பெயரளவிலா அல்லது மெய்யளவிலா அளவிடப்படுகின் றது என்பது குறித்த தெளி வின் மை (2) நாட்டினுடைய கடன் திருப்பிச் செலுத்தக்கூடிய இயலளவு என்ன என்பதை எடுத்துக்காட்டவும் தவறியுள்ளது. செலுத்த வேண்டிய அல்லது வெளிநிற்கின்ற வெளி நாட்டுக்கடன் அதிகமாகக் காணப்பட்டா லும் அந்நாடு செலுத்தக்கூடிய இயலளவு டையதாகக் காணப்பட்டால் அது பிரச்சி னையாக இருக்க முடியாது. அத்துடன் வெளி நிற்கின்ற கடனின் அமைப்பு பற்றியும் எது வும் காட்டவில்லை, செலுத்தவேண்டிய கடனில் நீண்ட காலக் கடன்கள் அதிகளவு கொண்டுள்ள நாடு குறுகிய காலக் கடன் களை அதிகளவில் கொண்ட நாட்டினை விட குறைந்த பிரச்சினைகளையே எதிர் நோக்கும், எனவே வெளி நிற்கின்ற கடனின் மொத்த அளவு அதன் அமைப்பு பற்றி எது வுமே எடுத்துச் சொல்லவில்லை என்பதனால் அதிகம் பயனுடையதாக கொள்ள முடி யாது.
4. 2 கடன் சேவை விகிதம்
(Debt Service Ratio) ஆண்டொன்றில் ஒரு நாடு திருப் பிச் செலுத்த வேண்டிய கடனின் அளவை அந்நாடு பொருட்கள் சேவைகளின் ஏற்று மதி மூலம் பெறப்படும் அந்நியச் செலாவ ணியின் விகிதமாக எடுத்துரைப்பதே கடன் சேவை விகிதமாகும். கொடுக்கப்பட்ட குறித்தவொரு வீதத்திற்கு குறைவாக இருந் தால் கடன் பிரச்சினை இல்லை எனவும்
வணிகநாதம் 1992

அவ்வீதத்திற்கு மேலாக காணப்படின் அங்கு. கடன் பிரச்சினை உண்டு எனவும் சொல்லப் படுகிறது. உலக வங்கியின் கருத்துப்படி இக்குறித்த வீதம் 30 ஆகும். சில நாடுகளில் கடன் சேவை வீதம் 30 இனை விட உயர் வாக இருந்தாலும் பிரச்சினை இன்றி கடனை சேவை செய்யக்கூடியதாக இருக் கும். இச்சுட்டியும் கடன் பிரச்சினையை மி ஈ வும் குறுகிய நோக்கிலேயே அளவிட முற்படுகின்றது. ஒரு நாட்டின் சென்மதி நிலுவையில் உள்ள நெகிழ்வற்ற தன்மை யையும், ஏற்றுமதி வருமானத்தில் ஏற்ப டும் வீழ்ச்சியினால் ஏற்படும் தாக்கத்தினை யும், கடன் செலுத்தும் தகுதியை தீர்மா னிக்கும் பிரதான மூலமாக அந்நியச் செலா வணியையும் தொடர்புபடுத்தி அளவிடுகி றது. ஆனால் கடனின் அமைப்பு, நீண்ட காலத்தில் கடனைச் செலுத்தக்கூடிய தகுதி, ஏற்றுமதியின் தன்மை, ஏற்றுமதி விரிவாக் கத்திற்கான வாய்ப்பு, ஏற்றுமதி வருவா யின் உறுதியற்ற தன்மை, இறக்குமதிப் பிரதியீட்டிற்கான சாத்தியக்கூறு, வெளி நாட்டுச் சொத்தொதுக்கம் போன்ற கடன் பிரச்சினையை குறைக்கக்கூடிய பல்வேறு அம்சங்களை கருத்தில் கொள்ளவில்லை என்று குறைகூறப்படுகின்றது.
4. 3 வட்டி செலுத்துகை விகிதம்
(Interest Payment Ratio) பெற்ற கடனுக்காக வருடந்தோறும் செலுத்த வேண்டிய வட்டியினை வெளி நாட்டு பொருள்கள் சேவைகளின் ஏற்றுமதி வருவாயுடன் தனியார் மாற்றங்களையும் சேர்த்த ஏற்றுமதி உழைப்பின் விகிதமாக குறிப்பிடுவதே வட்டி செலுத்துகை விகித மாகும். கடன் சேவை விகிதமும், இந்தச் சுட்டியும் குறித்தவொரு நாட்டின் கடனை யும் அதற்கான வட்டியையும் அந்நியச் செலாவணியில் செலுத்தக் கூடிய இயல. ளவை பிரதிபலிக்கின்ற சுட்டிகளா கக். கொள்ளலாம். அத்துடன் வட்டி செலுத் துகை விகிதம் கடன் பிரச்சினையின் திர வத் தன்மையை ஓரளவு சரியாகக் காட்டக்கூயதொரு அளவீடாகும். எனினும் இச்சுட்டியையும் மிகவும் அவதானமாகக்

Page 43
கையாள வேண்டும். உதாரணமாக வட்டி யைச் செலுத்த மேலும் கடன் பெறக்கூடி யதாக இருந்தால் நிகழ்காலத்தில் இருந்து கடன் பிரச்சினையை எதிர்காலத்திற்கு தள்ளிப்போடுகின்றோம் என்பது பொரு ளாகும். கடந்த கால கடன் பிரச்சினையின் பிரதான அம்சம் மிதக்கவிடப்பட்ட வட்டி யினை கடன்களில் அறவிட்டதாகும். மிதக்க விடப்பட்ட வட்டியினை அறவிடுவதன் மூலம் கடன் கொடுத்தோர் மெய்வட்டி வீதம் வீழ்ச்சியடையாமல் பாதுகாக்க கூடி யதாக இருந்தது. ஆனால் கடன் பெற்ற வர்களது ஏற்றுமதி வருவாய் உலக பண வீக்கத்திற்கு ஏற்ப அதிகரிக்காதபோது கடன் பிரச்சினைக்குள் மூழ்கிவிடுகின் றன. ஏற்றுமதிப் பொருள்களின் விலைகள் ஒவ் வொரு பொருளுக்கும் வெவ்வேறு வீதத்தில் அதிகரிக்கலாம். சில சமயங்களில் வீழ்ச்சியும் டையலாம். அவ்வாறு விலை வீழ்ச்சி அடை கின்ற பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் மிதக்கவிடப்பட்ட வட்டி வீதத்தி லான கடன்களைக் கொண்டிருந்தால் பெய ரளவு வட்டிவீதம் உலக பணவீக்கத்திற் கேற்ப உயரும்போது கடன் செலுத்துகை பிரச்சினைக்குள்ளாகலாம். உலக பணவீக்க நிலைமைகளுக்கேற்ப சீராக்கம் செய்யக் கூடிய மிதக்கவிடப்பட்ட வட்டி வீதம் நிலவுமிடத்து வட்டிச் செலுத்துகை விகிதம் கடனின் சுமையை அளவிட சிறந்தவொரு குறிகாட்டியாக அமையமாட்டாது.
4.4 கடன் சேவை, வட்டி செலுத்துகை
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அல்லது மொத்தத் தேசிய உற்பத் தியின் வீதமாக கணித்தல் (Debt Service Interest Payment as Ratio of GNP or GDP)
செலுத்துகின்ற கடன், அதற்கான வட் டிச் செலுத்துகை இவையிரண்டையும் தனித் தனியாக மொத்த உள் நாட்டு உற் பத்தியின் அல்லது தேசிய வருமானத்தின் விகிதமாக கணிப்பிடும் சுட்டியே இதுவாகும். இவை இரண்டும் திரண்ட கடனின் பொரு ளாதாரச் சுமையை அளவிடுகின்றன.
வணிக நாதம்-1992

வெளிநாட்டுக் கடன் பழுவும்.......
மொத்த உள் நாட்டு உற்பத்தியின் விகித மாக கடன் சேவை வட்டிச் செலுத்துகை என்பவற்றை அளவிடும் போது கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு தேவையான மெய் வளங்களை உருவாக்குவதில் நாட்டின் இயலளவு என்ன என்பதை அளவிடக் கூடியதாகவுள்ளது. எனினும் கடனும் கட னுக்கான வட்டியும் வெளிநாட்டு நாணயங் களிலேயே திருப்பிச் செலுத்தப்பட வேண்டி யவை என்பதனால் இவ்விரு குறிகாட்டிக ளும் அவ்வளவு பயன் தரக்கூடியதாக வில்லை. கொடுக்கப்பட்ட ஒரு வீதத்தினை விட குறைவாக இருந்தால் கடன் சுமை குறைவு எனவும் அதனை விட உயர்வாக உள்ளபோது கடன் பிரச்சினைக்கு உட்பட்டி ருக்கிறது என்றும் கருதுகின்றனர். இது எல்லா நாட்டிற்கும் பொருந்தாது. ஏனெ னில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி குறைவாக இருந்தாலும் ஏற்று மதிக்கான அல்லது இறக்குமதி பிரதியீட்டிற் கான பொருள் உற்பத்தியில் அதிகளவு வளர்ச்சி காணப்படுமிடத்து குறித்த நாடு கடனையும் வட்டி யையும் செலுத்தக்கூடிய, இயலளவு அதிகரிக்கும். எனவே பிரச்சினை, குறைவாக இருக்கும். 4. 5 கடன் சேவை செலுத்துகை புதி
தாக பெற்றுக்கொண்ட கடன் களின் விகிதமாக. (Debt Service Payment as a Ratio of New Disbursement)
இந்த அளவீடு கடன் கொடுப்பவரை விட கடன் பெற்றவருக்கு மிகவும் உதவும். இதன் மூலம் ஒரு நாட்டிற்கு மெய் வளங்' களின் பாய்ச்சல் எந்தத் திசையில் இருக்கின் றது என்பதை அறிந்து கொள்ளலாம். புதி தாக உள் வருகின்ற கடன்களைவிட செலுத் துகை உயர்வாக இருந்தால் வளங்களின் தேறிய மாற்றமென்பது எதிர்கணியமாகும். இச்சுட்டி ஒன் றிலும் பெரிதாக அமையும் அல்லது 100 சதவீதத்திலும் உயர்வாக காணப்படும். இந்நிலை காணப்படுமானால் வெளிநாட்டு வள இடைவெளி அதிகரிக்கும். இதனால் பொருளாதார அபிவிருத்தி

Page 44
இ. நந்தகுமாரன்
26
தடைப்படும். இச்சுட்டி ஒன்றிலும் குறைவாக நாட்டு இடைவெளி சுருங்கும். வளங்களின் தே வெளிநாடுகளில் இருந்து தொடர்ந்து கடன் ெ
4. 6 கடனின் நன்கொடைக்கூறு (Grant
கடன் பெறும்போது கடனுக்கான நிபந்தை டப்படும் என்று முன்னர் குறிப்பிட்டேன். இந். தில் ஏற்படும் மாற்றம், திருப்பிச் செலுத்த 6 பல விடயங்களை உள்ளடக்கியதாக அமையும். நீ கடன் களை சலுகையான கடன்கள், சலுகையற் தேவையில்லாத நன்கொடைகள் 100 சதவீத கடன்பழுவும் பூச்சியமாகும். ஏனைய கடன்களின் குறிப்பாக வட்டிவீதம் தயை காலம், கடன் அடிப்படையாகக் கொண்டு கடனினதும், வட்டி பெறுமதியை கண்டு பெற்ற கடனுக்கும் செலுத்த மதிக்குமிடையிலான வேறுபாட்டினை பெற்ற க கூறு எனப்படும்.
கடன் - (கடன் + வ நன்கொடைக்கூறு=
நன்கொடைக்கூறு உயர்வாகக் காணப்பட்ட ஆகவே கடன் சுமை குறைந்தவை. இதனைத் த சுலபமாகும்.
4. 7 வெளிநாட்டு கடன் இலகுத் தன்மை
(External Dept Softness Index) முன்னர் குறிப்பிட்டது தனித்தனி கடனுக் மொத்தக் கடனுக்கும் பயன்படுத்தக்கூடிய தெ வட்டி வீதம், சராசரி முதிர்வு காலம், சராசரி த. வணிக வங்கிகளின் விகிதம் என்னும் நான்கிற்கு டெண்ணே வெளி நாட்டுக் கடன் இலகுத்தன்ன கொள்ளக்கூடிய அதியுயர்ந்த இலகுத்தன்மை சு படும். 100 இற்கு அண்மையாக இந்தச் சுட்டெ நிபந்தனைகள் கூடிய நெகிழ்வுடையவை. இதன பது பொருளா கும்.
4. 8 மெய் ரீதியான வெளிநாட்டு கடன் சுப்
(Real External Debt Indicator RE ஒரு நாடு செலுத்தவேண்டிய கடனை உள்! உத்தியோக பூர்வ நாணய மாற்று வீதத்தினை யங்களில் குறிப்பதோ பொருத்தமற்றதாகும். 8 டத்தில் ஏற்பட்ட மாற்றத்தினையும் உள்ளடக்கி பாட்டினை நீக்குவதற்கு சிறப்பு எடுப்பளவு உரிபை
வணிகநாதம் - 1992

பும் வீழ்ச்சியடைந்தும் வருமானால் வெளி சிறிய மாற்றம் எதிர்கணியமாக இருந்தால் பறுவது சிக்கல்களைத் தோற்றுவிக்கும்.
Element) னகளும் ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பி த நிபந்தனைகள், வட்டிவீதம், வட்டி வீதத் வண்டிய ஒழுங்கு, காலம், தயைகாலம் எனப் பந்தனைகளை அடிப்படையாகக் கொண்டே ) கடன்கள் என்பர். திருப்பிச் செலுத்தத் நன்கொடைக் கூறினைக் கொண்டிருக்கும். நிபந்தனைகளை அடிப்படையாகக் கொண்டு செலுத்த வேண்டிய காலம் என்பவற்றை யினதும் தவணை கட்டணத்தின் நிகழ்காலப் தவேண்டிய தொகையின் நிகழ்காலப் பெறு டனின் வீதமாக காண்பதே நன்கொடைக்
ட்டியின் நிகழ்காலப் பெறுமதி)
X 100
கடன்
டால் கடன்கள் கூடிய சலுகையுடையவை. னித்தனிக் கடன் குறித்தே பயன்படுத்துவது
சுட்டெண்
த பயன்படுத்தக் கூடியதாக இருக்க இது என்றாகும். வெளிநாட்டுக் கடனின் சராசரி யை காலம், மொத்த வெளிநாட்டுக் கடனில் ம் சம் நிறையூட்டி கணிக்கப்பட்ட ஒரு சுட் -ம சுட்டெண்ணாகும். ஒரு நாடு பெற்றுக் ட்டென் 100 இனால் வரையறை செய்யப் ண்ணைக் கொண்ட நாடுகள் கடன்களின் பல் குறைந்த சுமையைக் கொண்டவை என்
டி
D1) காட்டு நாணயத்தில் குறிப்பதோ அல்லது
ப் பயன்படுத்தி ஏனைய நாடுகளின் நாண எவ்வாறு செய்யும் போது பொது விலை மட் யதாகவே அது காணப்படும். விலைவேறு பில் செலுத்தவேண்டிய கடனை அளவிடுவது

Page 45
பொருத்தமானதாகும். ஆயினும் இந்த அளவீடும் ஒரு நாடு கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு விட்டுக்கொடுக்க வேண் டிய மெய்வளங்களை பிரதிபலிக்கவில்லை. எனவே மெய்ரீதியில் வெளிநாட்டுக் கடனின் பெறுமதியை அளவிடக்கூடிய சுட்டியே மெய் ரீதியான வெளிநாட்டுக் கடன் சுட்டியாகும். இதனைக் கணிப்பதற்கு சிறப்பு எடுப்பளவு உரிமை (SDR) யில் அளவிடப்பட்ட கடனை ஏற்றுமதி விலைச் சுட்டெண்ணால் சுருக்கி கடனை செலுத்துவதற்காக தியாகம் செய்ய வேண்டிய ஏற்றுமதி அலகுகள் கணிக்கப் பட்டது. இதேபோன்று கடனில்(SDR) பெறு மதியை இறக்குமதி விலைச் சுட்டெண் ணால் சுருக்கி கடனை செலுத்துவதற்காக விட்டுக்கொடுக்கவேண்டிய இறக்குமதி அல குகள் கணிக்கப்பட்டது. இவ்வாறு கணிக் கப்பட்ட ஏற்றுமதி அலகுகளை இறக்குமதி அலகுகளால் பிரிக்க வருவதே மெய்ரீதியான வெளி நாட்டுக் கடன் சுட்டியாகும். இது மெய் வளங்களை பிரதிபலிப்பதனால் பெய ரளவிலான அளவீடுகளைவிட சிறந்ததாகக் கொள்ளலாம்.
மேற்கூறிய பல்வேறு கடன் சுட்டெண் களையும் நோக்கும் போது ஒவ்வொன்றும் கடன்பற்றி ஒவ்வொரு விளக்கத்தை கொடுக்கக்கூடியதாக இருப்பதனால் கட னின் சுமையை அளவிட ஒன்றிற்கு மேற் பட்ட பல சுட்டிகளை பயன்படுத்துவது அவசியமாகும். உலக வங்கியானது நான்கு அளவீடுகளை பயன்படுத்தியே நாடுகளை அவற்றின் கடன் சுமை அடிப்படையில் பாகுபடுத்தியுள்ளது. மொத்தக் கடன்
--X 100 > 50 மொ. தே. வருமானம் மொத்தக் கடன்
X 100 > 275 ஏற்றுமதி வருமானம் 3. வெளிநிற்கின்ற கடன் சேவை
-X 100 > 30 ஏற்றுமதி வருவாய் 4. செலுத்தவேண்டிய வட்டி
- X 100 > 20 ஏற்றுமதி வருவாய்
வணிகநாதம்-1992

வெளிநாட்டுக் கடன் பழுவும்.
என்னும் தகுதி விதிகளை பயன்படுத்தி பாகு படுத்தி நடுத்தர வருமானம் பெறும் நாடு களில் 19 நாடுகளை மிக மோசமாக கடன் பட்டுள்ள நாடுகள் Severely Indebted Middle Income Countries - SIMICஎன பகுப் பாய்வு செய்துள்ளது.
இக்கட்டுரையில் குறிக்கப்பட்டுள்ள அளவீடுகளை விட வெளிநாட்டுக் கடனின் சேர்க்கை, மெய் வட்டிவீதம் போன்ற வற் றின் அடிப்படையிலும் கடனின் சுமை அள விடப்படுகின்றது. எனவே ஒரு நாட்டினது கடன் சுமை பற்றி கருத்து வெளியிடும் போது மிகவும் அவதானமாக இருத்தல் வேண்டும். கடன் சேவை வீதம் போன்ற மரபார்ந்த சுட்டிகளை பயன்படுத்தி கடன் சுமையை கொண்ட நாடு என பாகுபடுத் தப்பட்ட ஒரு நாடு மற்றொரு சுட்டியின் அடிப்படையில் பார்க்கும் போது கடன் பழு குறைந்த நாடாக அமையலாம்.
1980 களின் நடுப்பகுதியில் சர்வதேச கடன் பிரச்சினை உலக பொருளாதாரத்தி னையே நெருக்கடிக்குள் ளாக்கி விடுமோ என்று சகலரும் அஞ்சிய போது சர்வதேச நிதி நிறுவனங்களும், நாடுகளின் மத்திய வங்கிகளும், வங்கித் தொழில் வல்லுனர்க ளும் நாடுகளின் கடன் பிரச்சினையை தீர்க்க பல புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத் தியதின் வாயிலாக உலகப் பொருளா தாரத் தினை நெருக்கடியில் இருந்து மீட்டுள்ளார் கள். அடுத்த பகுதியில் கடன் மீளளிக்கும் மூலோபாயங்களைப் பற்றி நோக்கலாம்.
5. 0 கடன் பழுவைக் குறைப்பதற்காக
முன்வைக்கப்பட்ட திட்டங்கள். (Debt plans) கடன்பட்ட நாடுகளின் சுமையை குறை ப்பதற்கான பிரதான திட்டங்கள் (Majorplans) அமெரிக்க திறைசேரியின் செயலா ளர் பிறேடி, யப்பானின் நிதிமந்திரி மியா சாவா, பிரான்சின் ஜனாதிபதி மிட்ரடோன் ஆகியோரால் முன்வைக்கப்பட்டது. பிறே டியின் திட்டத்தில் கடன்பட்டோர் தமது நாடுகளில் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரசீராக்கல் திட்டத்

Page 46
இ. நந்தகுமாரன்
28
* : சார்க் - 44 அவர்.
தினை நடைமுறைப்படுத்த வேண்டும் என வும் அத்தகைய நாடுகளுக்கு மேலதிக நிதியை சர்வதேச நிதி நிறுவனங்கள் வழங்க வேண்டும்மெனவும் இந்நாடு கள் கடனை திருப்பிச் செலுத்துவதற்கு பின் வசதிகளை செய்யவேண்டுமெனவும் குறிப்பிட்டார். அவையாவன: (1) கடனை திருப்பி வாங்குதல்(Debt Buy Back) (2) புதிய ஆவணங்களுக்கு பழைய கடன் களை கழிவுடன் கைமாற்றல் (3) முகப் பெறுமதியில் பழைய கடன்களுக்கு புதிய ஆவணங்களை குறைந்த வட்டியுடன் கைமா ற்றல். மேலும் வணிக வங்கிகள் புதிய பணத்தை வழங்கியதும் பழைய கடன் கள் மீதான நிபந்தனைகளைத் தளர்த்தியும் உதவ வேண்டும் எனவும், கடன் கொடுத்த நாடுகள் பரீஸ் கிளப்பினூடாக தமது கடன் களை தொடர்ந்தும் மீள் அட்டவணைப் படுத்தியும் மறுசீரமைத்தும் வரல்வேண்டு மெனவும், பொருளா தாரத்தில் சீராக்கல் நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுக ளுக்கு ஏற்றுமதி கடன்கள் வழங்க வேண்டு மென வும் வற்புறுத்தினார்.
யப்பானில் நிதி அமைச்சரது திட்டத் தில் கடன்பட்ட நாடுகள் முதலில் தமது கடனில் ஒரு பகுதியை பாதுகாப்பான தாக்க வேண்டும். கடனின் முதல் திருப் பிச் செலுத்தப்படும் என்பதை உறுதிப் படுத்த வேண்டும். இரண்டாவதாக மிகு திக் கடன்கள் தயை காலத்துடன் மீள் அட் டவணைப்படுத்தப்படல் வேண்டும். தயை காலத்தில் கொடுப்பனவு குறைக்கப்பட்டோ அல் லது நிறுத்தி வைக்கப்பட்டோ அல்லது முற்றாக தவிர்க்கப்பட்டோ இருக்கலாம். இவ்விரண்டு வழிமுறைகளையும் பின்பற்றிய நாடுகளுக்கு பல்பக்க இருபக்க உதவிகளை அதிகரிக்க வேண்டும் என்றார்.
மிட்டரோன் அவர்களின் திட்டத்திலே நடுத்தர வருமானமுடைய கடன் பழு வி னால் கஷ்டப்படும் நாடுகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தில் பிரத்தியேகமாக ஒரு நிதியம் உருவாக்கப்படல் வேண்டும் என வும் இந்நிதியத்திற்கு அபிவிருத்தியடைந் த நாடுகள் தமக்கு புதிதாக வழங்கப்படும்
வணிக நாதம்-1992

சிறப்பு எடுப்பளவு உரிமை அனுமதிப் பங் கில் ஒரு பகுதியை ஒதுக்க வேண்டு மெனவும் குறிப்பிட்டார். இந்நிதியம் வங்கிக் கடன் களுக்கான வட்டி செலுத்துவதை உறுதிப் படுத்த சில ஆவணங்களை மாற்றீடாக வழங்கு மெனவும் கடன்பட்ட நாடுகளினால் செலுத்த வேண்டியுள்ள நிதிக் கொடுப்ப னவுகளை செய்ய நிதியம் உதவ வேண்டு மெனவும் கருத்து வெளியிட்டார். சில கடன்களை முற்றாக பதிவழிக்க வேண்டு மெனவும் குறிப்பிட்டார். இவ்வாறு பலரும் தெரிவித்த பல்வேறு திட்டங்களை அடிப் படையாகக் கொண்டு சகல தரப்பினரும் ஒன்றுகூடி கடன் சுமையை குறைப்பதற்கும் உலக பொருளாதாரத்தை நெருக்கடியிலி ருந்து மீட்டெடுக்கவும் பல புதிய கருவி களை அறிமுகம் செய்து வெற்றியும் கண் டுள்ளனர். இக்கருவிகளில் அதிகளவு பயன் படுத்தப்படும் ஒரு சில கரு வி களை பற்றி சற்று விரிவாக நோக்கலாம்.
6.0 கடன்செலுத்த கையாளும் மூலோ
பாயங்கள் (Debt strategies)
கடனை திருப்பிச் செலுத்த அல்லல் படும் நாடுகள் அவற்றை தமது தகுதிக்கு ஏற்ற வகையில் இலகுவாக திருப்பிச் செலுத்துவதற்கு - வழி செய்யும் வகையி லேயே கடன் செலுத்தும் தந்திரோபாய ங்கள் அறிமுகமானது. இத்தந்திரோபாயங் களில் ஒரு சில கடன் பெற்றோர், கடன் கொடுத்தோர் இரு பாலாருக்கும் கவர்ச்சி யாக இருப்பதனால் விருப்பமுடன் செயல் படுத்தப்பட்டு வருகின்றது. 6.1 கடனை மீள் அட்டவணைப்படுத்
தல் (Rescheduling of Loan)
கடன் பெற்றுக்கொண்டபோது கடனை திருப்பிச் செலுத்தும் வழிமுறை கள் கடன் ஒப்பந்தத்தில் குறிப் பிடப்பட்டிருக்கும். இத் தகைய கடன் மீளளிக்கும் அட்டவணை ஒன்று தயாரிக்கப்பட்டிருக்கும். இவ்வட்ட வணை ஒவ் வொரு கடன் தொடர்பாகவும் வருடாவருடம் செலுத்தவேண்டிய முதல், வட்டி என்பவற்றைக் காட்டும். கடன் பழுவால் நிகழ்கால செலுத்துகையை

Page 47
செய்ய முடியாமல் அவதியுறும் நாடுகள் கடன் கொடுத்தவர்களுடன் கலந்துபேசி நிபந்தனைகளை தளர்த்தி மிகுதியாகச் செலுத்த வேண்டியுள்ள கடன்களை மீள் அட்டவணை செய்வதனையே இது குறிக் கும். இந்த வழிமுறையினால் கடன் பழு குறைக்கப்படவும், நிகழ் கால சுமை எதிர் காலத்திற்கு பிற்போடவும் வழி ஏற்பட் டுள்ளது. 6. 2 கடன் உரிமையாண்மை மாற்றம்
(Debt Equity Swap) இது தற்போது பல நாடுகளினாலும் விரும்பி மேற்கொள்கின்ற ஒரு கடன் குறைப்பு நடவடிக்கையாகும். இந்த மாற் றங்கள் என்ன நோக்கத்துடன் மேற்கொள் ளப்படுகின்றனவோ அதற்கமைய நிபந்த னைகளும் காணப்படும். பின்வரும் ஒழுங்கு முறையில் இந்நடவடிக்கை இடம் பெறும். முதலாவதாக கடன் கொடுத்த வங்கி பொதுத்துறைக்கு வழங்கிய கடனில் வெளி நிற்கின்ற மிகுதியை கழிவு செய்து கடன் பட்டநாட்டிற்கு விற்கும். இரண்டா வதாக இந்த நாட்டில் முதலிட விரும்பும் பல் தேசிய கம்பனியொன்று கடன் பத்திரங் களை கழிவுசெய்யப்பட்ட விலையில் வாங்கி கடன்பட்ட நாட்டின் மத்திய வங்கிக்கு வழங்கும், மத்தியவங்கி கடனை அதன்முகப் பெறுமதியிலோ அல்லது ஒரு சிறியகழிவு வீதத்துடனோ உள் நாட்டு நாணயத்தில் நடைமுறை நாணயமாற்று வீதத்தில் மீட் கும். மூன்றாவதாக முதலீட்டாளன் தான் பெற்றுக் கொண்ட உள் நாட்டு நாணயத் தைக்கொண்டு முதல் சொத்துக்களைக் அந் நாட்டில் வாங்குவார். இவ்வாறு முதலீட் டாளர் பெற்றுக்கொண்ட உள் நாட்டு நாண யம் நேரடியாக அந்நாட்டில் முதலிடுவதற்கு உத்தியோகபூர்வ நாணயமாற்று வீதத்தில் பெறுகின்ற உள் நாட்டு நாணயத்தினைவிட சாதகமானதாக அமைகின்றது. இந்நடை முறையில் கடன் கொடுத்த வங்கிகள், கடன் பெற்ற நாடுகள், முதலீட்டாளர்கள் ஆகிய மூன்று பிரிவினரும் நன்மையடைகின்றனர்.
கடன் கொடுத்த வங்கிகள் தமது கடன் பத்திரத்தை விற்பதன் மூலம் பிரச்சினைக்
வீமதியிலேயே வந்து மத்தி
--வணிகநாதம் 1992

வெளிநாட்டுக் கடன்பழுவும்.......
குரிய கடன்களை கைகழுவி விடக்கூடிய தாய் இருக்கும். இவ்வாறு செய்வதன் மூலம் வங்கி கள் தமது நிதி நிலைமைகளை சீர்செய்து கொள்ளவும் சொத்து கட்டமைப்பினை மாற்றி அமைக்சவும் வழியேற்படுன்றது. கடனை வைத்திருந்து அறவிடமுடியாமல் கஷ்டப்படுவதை விட சழிவுடன் விற்றுவிடு வது வங்கிக்கு இலாபமானதாக அமையும். கடன்பட்ட நாடுசளில் முதலிட விரும்பும் முதலீட்டாளர்க ளுக்கும் இந்த நடவடிக்கை சாதகமான முறையில் உள் நாட்டு நாண யத்தை பெற்றுக் கொடுக்கின்றது. கடன் கொடுத்த வங்கிகள் உயர்ந்த கழிவு வீகக் தில் கடன் பத்திரங்களை விற்பனை செய் யும் போது அதனை வாங்கி மக்கியவங்கி முகப்பெறுமதியிலோ அல்லது சிறிய கழிவு வீதத்திலோ மீட்கும்போது முகலீட்டாளர் களுக்கு கூடிய உள் நாட்டு நாணயம் கிடைப் பதனால் கவர்ச்சியானதாக இருக்கின்றது . கடன்பட்ட நாடுகளைப் பொறுத்தும் இந் நடவடிக்கை கடனைக் குறைக்து கடன் பெறுதகுதியை உயர்த்த வழிகோலும். அத் துடன் புதிதாக வரும் முதலீடுகள் பொரு ளாதாரத்திற்கு ஒரு உந்து சக்தியாக விளங் கும் எனவும் நம்பப்படுகிறது. முற்று மழு தாக பிரச்சினையற்றது என்று எண்ணி விடக்கூடாது. பொருளா தாரம் முழு இய லளவில் இயங்கும்போது இந்த நடவடிக்கை உள்நாட்டு பண நிரம்பலை உயர்த்தி விலை ஏற்றம், வர்த்தக மாற்றுவீத தேய்வு. சென் மதி நிலுவைப்பிரச்சினை போன்றவற்றை ஏற்படுத்தலாம். அல்லது உயர் வட்டி வீதத் தின் மூலம் முதலீடுகள் பாதிக்கப்படலாம்.
3. உரிமை கைமாற்றல்
(Exchange of claims)
கடனை முதலீட்டுக்கு மாற்றியது போல கடனை ஏனைய கடன்கருவிகளுக்கு கழிவுடன் கைமாற்று வதை இது குறிக்கும். உதாரணமாக ஆவணங்களாக மாற்றுவது. இங்கு கடனைவிட புதிய கருவி கடனின் முதலை அல்லது வட்டியை அல்லது இரண் டையும் திருப்பிச் செலுத்துவதை உறுதிப் படுத்து வதாக இருக்கும். அதாவது புதிய கருவி கடனைவிட பாதுகாப்பானது என்பதா

Page 48
இ. நந்தகுமாரன்
30
கும். இந்த உறுதிப்பாட்டினை வழங்குவதற்கு அந்நியச் செலாவணி மிகைஒதுக்கு இருத்தல் வேண்டும். அல்லது இத்தகைய வளங்களை ஏனைய மூலாதாரங்களில் இருந்து பெற வேண்டும். 4. மீண்டும் வாங்குதல் (Buy Back)
இந்நடைமுறை ஒரு நாடு தனதுகடன் களை கழிவில் மீண்டும் காசிற்கு வாங் குவதைக்குறிக்கும். பொலிவியாவும், சிலியும் இவ்வாறு தமது கடன்களை மீண்டும் வாங் கியுள்ளன. பொலிவியா தனது வணிக கடன்களில் 40 சதவீதமான 335 மில். டொலரை 1988 தைமாதத்தில் சராசரி 89 சத வீத கழிவுடன் (அதாவது முகப் பெறு மதியில் 11 சதவீதத்திற்கு ) உடன் பணத் திற்கு வாங்கியது. கடன் சுமையினால் அவ தியுறும் நாடுகளுக்கு இந்நடவடிக்கைக்குத் தேவையான உடன் பணம் கிடைப்பது அரி தாகும். எனவே உதவி வழங்கும் நாடுகளி னாலே நிதிப்படுத்தப்படல் வேண்டும். (5) கடன் சேவையைக் குறைத்தல்
(Reduced Debt Servicing) குறிப்பிடத்தக்க அளவில் நடைமுறைக்கு, கொண்டுவரப்படவில்லை. ஆர்ஜென்ரீனா பிறேசில் என்பவற்றால் வழங்கப்பட்ட வெளி யேறு ஆவணங்கள் (Exit Bond) இந்த வகையில் அடங்கும். புதிய பணத்தினை வழங்க பின் நிற்கும் வங்கிகள் தமது உரித் துக்களை இந்த ஆவணத்திற்கு குறைந்த வட்டிவீதத்தில் மாற்றிக்கொள்ளலாம். இவை எதிர்கால கடன் நிவாரணத்தினுள் அடங்கமாட்டாது. வட்டி வீதம் குறைக்கப் படுவது கடன்பட்ட நாட்டினது நிதி ஓட் டத்தில் பெரும் சாதகத் தன்மையை ஏற் படுத்தும். ஒவ் வொரு கடனாக வட்டிவீதம் பேரம் பேசப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டமைப்பு சீராக்கல் நடவடிக்கைக்குள் கொண்டுவரும் பட்சத்தில் கடன் சேவை சுமை வெகுவாகக் குறையும். வணிகவங்கி
References:
Dreter Bender, The Role of financial inno Economics Vol. 39, German Institute f(
வணிகநாதம் - 1992

களுக்கும் அவற்றின் கணக்கு வைக்கும் விதி முறைகள் மாற்றப்படும் பட்சத்தில் ஊக்கு விப்பாக அமையும்.
முடிவுரை
மேற்கூறிய நடைமுறைகளை
கடன் வழங்கிய வங்கிகள், கடன்பட்ட நாடுகள் புதிய முதலீட்டாளர்கள் என்பவர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஏதோ ஒரு விதத்தி தில் நன்மை பயப்பது மட்டுமல்லாமல் உலக பொருளாதாரத்தினையும் நெருக்கடியில் இருந்து மீட்டெடுத்து மீண்டும் வளர்ச்சிப் பாதையில் அதன் கடந்தகால செல் நெறி யினை தொடர வளி வகுத்தது. இல்லை யெனில் ஆர்ஜென்ரீனா கடனை திருப்பிச் செலுத்த முடியாது என்று பிரகடனப்படுத் தியவுடன் தென் அமெரிக்காவின் ஏனைய கடன் சுமை நாடுகளும் இதனைப் பின்பற்ற லாம். இதனால் அதிகளவு கடன் வழங்கிய மேற்கு நாடுகளின் வங்கிகள் பெருமளவு நட்டத்தினை அனுபவிக்க நேருவதுடன் மேற் குலக நிதி அமைப்பே சரிந்து முறிந்துவிடும் என்றும், மேற்குலக நிதி முறைமையினை அச்சாணியாக கொண்டு இயங்கும் உலக பொருளாதாரம் நெருக்கடியைச் சந்திக்கும் என்ற எதிர்பார்க்கைகள் கைகூடியிருக்கும். எனவே புதிய அணுகுமுறைகளினால் நெருக் கடியை தவிர்க்க வழிகோலிய அனைத்து சாராரும் பாராட்டிற்குரியவர்களாவர்.
சுருக்கமாக இந்தக்கட்டுரை வெளிநாட் டுக் கடன் வகைகளையும், நாடுகள் கடன் பெறவேண்டிய தேவை ஏன் ஏற்படுகிறது என்பதை இரட்டை அணுகுமுறையாலும் கடன் பெறுவதனால் ஏற்படும் சிக்கல்களை யும், கடன் பழுவை அளவிடுவதற்கான பல் வேறு அளவுகள், அவற்றின் வரையறைகள் பற்றியும், கடன் மீளளிக்கும் புதிய வழி முறைகள் குறித்தும் விளக்க எத்தனித் துள்ளது.
ration in solving International debt problems, pr scientific co-operation 1988

Page 49
2. Graham Bird, World finance and ad
The Mac Millan Press 1985.
3. Hettiarachchi W, The Rationale of Fore
1973, Central Bank of Sri Lanka.
Isbrat Husain, Recent Experience with vol. 26 No 3 September 1989, IMF
Marshal Fernando M, Foreign debt Upanathi vol 1 No. 2, July 1986. T] Economists.
ćMichael Blackwell and Simon Nocera
Finance and Development vol. 25 No 7. Wijewardena W, A., External Debt M;
Staff studies vol. 16, No. 182 April -
Environment - சூழல் - பொருள்
சூரியன்
Inputs
Prodi
உள்ளீடுகள்
உற்ப
Nature இயற்கை
Residuals
Recy மீள்க
கழிவுகள்
Nocurrent Economie Value
Residuals
கழிவுகள்
-': ர்-:374 - உ--.,
Services
சேவைகள்
இயற்கை உற்பத்திக்கான உள்ளீடுகளை வ பலவேறு வசதிகள் சேவைகளை அளிக்கின்றது யேற்றும் கழிவுகளை உறிஞ்சுகின்றது. இயற். கும் சகல செளகரியங்களையும் மனித குலம் இது! மட்டத்தில் பயன்படுத்தி நாமும் வாழ்ந்து ந
வணிகநாதம்-1992

வெளிநாட்டுக் கடன் பழுவும்...
justment an agenda for reform, Chapter 8,
eign Aid, staff studies Vol 3, No. 28 September
the Debt strategy, Finance and Development, publication. pf Sri Lanka and its implications 1970 - 1985, he Journal of the Sri Lankan Association of
, The Impact of Debt to Equity Conversion, .. 2, June 1988 IMF publication.
anagement Strategies – The case of Sri Lanka, September 1986, Central Bank ot Sri Lanka
Economy Interaction சாதார இடைத் தாக்கம்
Labour
action த்தி
ஊழியம்
Consumer goods
House hold வீட்டுத்துறை
cling உற்பத்தி
நு கர்வுப் பொருட்கள்
Residuals
கழிவுகள்
Some house bold Live in Nature
ல வீட்டுத்துறையினர் யற்கையில் வாழ்கின்றனர். ழங்குகின்றது. மனி த வாழ்க்கைக்கு தேவையான . உற்பத்தி நு கர்வு நடவடிக்கைகளினால் வெளி கையை மித மிஞ்சிப் பயன்படுதினால், அது வழங் ஐந்து விடும்.எனவே இயற்கை வளங்களை உத்தம > வருங்கால சந்ததியும் வாழ வழி வகுப்போம்.

Page 50
பாதீட்டில் பற்றாக்குன ஒரு நோக்கு Deficit and Financing in B
அரசாங்க வரவு செலவுத் திட்டம் என் பது எதிர்வரும் ஓர் ஆண் டுக்கான அரசாங்கத் தின வருமானங்கள், செலவினங்கள் என்பன தொடர்பான ஒரு நிதித்திட்டமாகும். வரவு செலவுத் திட்டத்தில் மிகை ஏற்படின் அதை எவ்வாறு உள் நாட்டு, வெளிநாட்டுச் சொத் துக்களில் முதலிடப்படும் என்பதையும், பற்றாக்குறை ஏற்படின் அது எத்தகைய உள் நாட்டு, வெளி நாட்டு மூலங்களில் இருந்து நிதிபெற்று நிதிப்படுத்தப்படும் என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது. இத்தகைய அர சாங்க வரவு செலவுத் திட்டத்தில் வளங்கள் எந்தளவிற்கு திரட்டப்படுகின்றன அல்லது திரட்டப்படலாம் என்பதைப் பொறுத்தே அரசாங்க செலவிற்கு எவ்வளவு வளம் கிடைக்கும் என்பது தங்கியுள்ளது. எவ் வா
றாயினும் ஒரு பக்கத்தில் பற்றாக்குறை யான வளமும், மறுபக்கத்தில் அதிகளவிலான அரசாங்க முதலீடும் பற்றாக்குறை நிதி யளிப்பின் மூலம் வ ள ங் க ளை திரட்ட வேண்டிய தேவையை ஏற்படுத்துகின்றன. இன் று எ ல லா நாடுகளிலும் இந்நிலை காணப்படுகின்றது. பெரும்பாலும் தவிர்க்க முடியாததாக அமையும் வ ர வு செலவுத் திட்டப் பற்றாக்குறை பற்றியும், அதற்கான நிதியளிப்புப் பற்றியும் எடுத்துக் காட்டு வதாக இக் கட்டுரை அமைகின்றது. பற்றாக்குறைகள் (DEFICITS)
அரசாங்க வரவு செலவுத் திட்டத்தில் அரச வருமானத்திற்கும், செலவினங்களுக் கும் இடையிலான தொகை தொடர்பாக பின்வரும் பற்றாக்குறைகளின் தன்மையினை நோக்க முடியும். (1) வரவு செலவுத்திட்ட நடைமுறை பற்றாக்
குறை
வணிகநாதம் - 1992

றயும் நிதியளிப்பும்:-
udget:- A Review
சு. சாந்தகுமார் ஆண்டு-13 வர்த்தகப் பிரிவு
(2) வரவு செலவுத்திட்ட சமூல பற்றாக்குறை (3) வரவு செலவுத்திட்ட தேறிய பற்றாக்குறை
மொத்த வருமானத்தில் இருந்து (வரி வருவாயும், வரியல்லா வருவாயும்) நடை முறைச் செலவினங்களையும், முற்பண கணக்கு மீதிகளையும் கழிக்க வருவது நடை முறைக் கணக்கு மீதியாகும், இம் மீதி நேர்க் கணியமாக இருப்பின் நடைமுறைக் கணக்கு மிகை எனவும், மீ தி எதிர்க்கணியமாக இருப்பின் நடைமுறைக் கணக்கு பற்றாக் குறை எனவும் அழைக்கப்படும். நடை முறைக் கணக்கில் மிகை காணப்படின் அது நடைமுறைக் கொடுப்பனவுகளுக்கு மேலாக காணப்படுகின்ற அரசாங்கத்தின் வருமானதி தைக் குறிக்கின்றது. எனவே நடைமுறைக் கணக்கு மிகையானது அரசாங்க சேமிப் பைக் குறிக்கின் றது. நடைமுறைக் கணக் கில் மிகை ஏற்படும்போது அரசாங்கம் தனது வருமானத்தைக் கொண்டு நடை முறைக் கொடுப்பனவுகள் முழுவதையும் மேற்கொள்ளக்கூடியதாக உள்ளது என லாம். எனவே அரசாங்கம் தனதுவருமானத் திற்கேற்ப செலவிடுகின்றதா என்பதனைக் காட்டும் குறிகாட்டியாகவும் இது அமை யும். அதுமட்டுமன்றி நடைமுறைக்கணக்கு மிகைதேசிய சேமிப்பின் ஒருபகுதியாக அமை வதால் தேசியசேமிப்பு அதிகரிக்க உதவுகின் றது. இத்தகைய சேமிப்பினைக் கொண்டு முதலீட்டினை மேற்கொள்ள முடியும். மூல தனச் செலவினத்தின் ஒருபகுதியை அது ஈடு செய்கின்றது. இதனால் மூலதனச் செல வின் பற்றாக்குறைக்கு கடன் பெற வேண் டிய அளவைக் குறைத்து கடன் பழுவைக் குறைக்க முடியும்.

Page 51
நடைமுறைக் கணக்கில் பற்றாக்குறை ஏற்படுமாயின் அது அரசாங்க வருமானத் தைக் காட்டிலும் நடைமுறைக்' கொடுப் பனவுகள் கூடுதலாகக் காணப்படுவதைக் குறிக்கும் நடைமுறைக்கணக்கில் பற்றாக் குறை ஏற்படும்போது அரசாங்கம் தனது நடைமுறைச் செலவுகளை மேற்கொள்வ தற்குக்கூட கடன் பெறவேண்டிய நிலை ஏற்படும். இதனால் அரசாங்க வரவு செல வுத்திட்ட தேவைகளுக்குப் பெறுகின்ற கட னின் அளவு அதிகரிப்பதன் மூலம் கடன் பழு வினை அதிகரிக்கச் செய்கின்றது.
குறிப்பிட்ட ஓர் ஆண்டுக்கான அரசாங் கத்தின் வருமானத்திலும் பார்க்க மொத்த செலவினங்கள் நடைமுறைச் செலவு-மூல தனச் செலவு) கூடுதலாக காணப்படுமேயா னால் அதனை வரவு செலவுத் திட்டத்தின் சமூல பற்றாக்குறை எனலாம். அதாவது அரசாங்க சேமிப்பினைக் கொண்டு மூலத னச் செலவினை ஈடு செய்த பின்னர் எஞ்சி யுள்ள தொகையே வரவு செலவுத்திட்ட சமூல பற்றாக்குறையாகும். எனவே அர சாங்க சேமிப்பினை உயர்த்துவதன் மூலம் வரவு செலவுத்திட்ட > சமூல பற்றாக் குறையை குறைக்க முடியும், நடைமுறைக் கணக்கு மிகையினை உயர்த்துவதற்கு ஒன் றில் மொத்த வருமானத்தினை உயர்த்த லாம், அல்லது நடை முறைச் செலவினங் களை குறைக்கலாம், அல்லது இரண்டினை யும் ஒரே சமயத்தில் பின்பற்றுதல் வேண்டும்.
வளர்முக நாடுகளில் வரிவருமானமே முக்கிய வருமான மூலமாக இருக்கின்றது. இலங்கையைப் பொறுத்தவரை சொத்துக் கள், வருமானங்கள் மீதான வரிகளின் பங்கு குறைவானதாக இருக்கும். அதே வேளை பண்டங்களின் மீதான வரிகளின் பங்கே வரிவருமான மூலங்களில் முக்கியமா னதாக உள்ளது. எனினும் பண்டங்கள் மீதான வரிகளின் விளைவுகள் தேய்வா னவை ஆகும். ஏனெனில் அரசாங்கம் பொருட்கள் சேவைகள் மீது வரியினை விதிக்கும் போது அவற்றின் விலைகள் அதி கரிக்கின்றன. இதனால் பண்ட வரிகள்
வணிக நாதம்-1992

33
பாதீட்டில் பற்றாக்குறையும்...
பொருளாதாரத்தில் பணவீக்க விளைவினை தோற்றுவிக்கின்றன. மேலும் பண்டவரிகள் காரணமாக விலையுயரும் போது செல்வந் தர்களும், வறியவர்களும் ஒரு மாதிரியாக தாக்கப்படுகின் றனர். அதாவது இரு வகை யினரும் ஒரே அளவான வரியினையே செலுத்துகின்றனர். ஆனால் அவர்கள் செலுத்துகின்ற வரியினை அவர்களது வரு மானத்துடன் ஒப்பிடும் போது செல்வந்தர் கள் குறைந்த சதவீதத்தையும், வறியவர் கள் உயர்ந்த சதவீதத்தையும் செலுத்துகின்ற நிலை காணப்படுகின்றது. எனவே வரி வரு மானம் சிக்கலான அமைப்பைக் கொண்டி ருப்பதால் அரசாங்கம் வருமானத்தை உயர்த்துவது கடினமாக உள்ளது. ஆகவே நடைமுறைச் செலவினங்களை திட்டமிடும் போது பாதுகாப்பு செலவினங்கள் போன்ற வற்றை குறைத்து சிறந்த முறையில் நிதியை முகாமை செய்து சேமிப்பினை உயர்த்து வ த ன் மூலமே பற்றாக் கு  ைற யி  ைன குறைத்துக் கொள்வது சிறப்பானதாகும்.
வரவு செலவுத் திட்ட தேறிய பற்றாக் குறை என்பது வரவு செலவுத் திட்ட சமூல பற்றாக் குறையில் இருந்து திருப்பி செலுத்த வேண்டிய உள் நாட்டு, வெளிநாட்டு கடன் களை கழிக்க வருவதாகும்.
அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் பற்றாக்குறை வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதன் மூலமாக பற்றாக்குறையை நிவர்த்திக்க ஏற்படுத்தப்படும் வளங்கள் முத லீட்டுப் பற்றாக் குறையை நீக்க அல்லது முதலீட்டினை அதிகரிக்கச் செய்வதுடன், இது வரையில் சேவையில் ஈடுபடுத்தாத உற் பத்தி காரணிகளை சேவையில் ஈடுபடுத்தி
அதனூடாக நாட்டின் உற்பத்தி, வேலை வாய்ப்பு என்பவற்றை அதிகரித்து பொரு ளாதார வளர்ச்சியினை ஏற்படுத்த உதவு வதாக அமைகின்றது. ஆனால் பற்றாக் குறை வரவு செலவுத்திட்டம் ஒரு தொடர்ச்சி யான நிலையாயின் அது போன பொருளி யல் மாறிகளில் தாக்கத்தை ஏற்படுத்தி விடும்.

Page 52
சு. சாந்தகுமார்
கீழேயுள்
மேற்குறிப்பிட்ட
கருத்துக்களை விளக்குகின்றது.
விபரம்
அரசிறை நடைமுறைச் செலவு
38816.0 முற்பண கணக்கு மீதி
1180.0 நடைமுறைக் கணக்கு மிகை) குறை (-) மூலதனச் செலவு வரவு செலவுத் திட்ட சமூல பற்றாக்குறை கடன் தீர்ப்பனவுக் கொடுப்புகள் தேறிய பற்றாக்குறை
நிதியீட்டம் (Financing)
வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறையை (. அரசாங்கம் பல்வேறு மூலாதாரங்களிடமிருந்து ே யும், சில மூலங்களிடமிருந்து பெறப்படும் கடன்க ஏற்படுத்தக் கூடியதாக இருப்பதனால் இயன்றவ மூலாதாரங்களிடமிருந்து கடன் பெறவே அரசா குறை முழுவதையும் நிதிப்படுத்த அத்தகைய மூ பட்சத்தில் விரிவுத்தாக்கத்தினை ஏற்படுத்தக்கூட தவிர்க்க முடியாததாகும். பொதுவாக பின்வரும் யளிக்கப்படலாம்.
1) உள்நாட்டுக் கடன்கள் 2) வெளி நாட்டுநிதி 3) காசு நிலுவையின் பா
உள் நாட்டுக் கடன் என்பது வரவுசெலவுத் திட பெற்றுக்கொள்ளும் கடன்களாகும். இத்தைகய
உள் நாட்டுச் சந்தைக் கடன்
உள்நாட்டு சந்தையல்லாக் கடன் எ6 உள் நாட்டு சந்தைக்கடன் என்பதன் கருத்து பிணைகள், மத்திய வங்கி முற்பணம், வரி ஒதுக்க றிதழ், தேசிய பாதுகாப்பு முறிகள், போன்ற 2 றுக்கொள்ளும் கடன்களாகும். உள் நாட்டு சந் வங்கித்துறை மூலங்கள், வங்கித்துறை அல்லாத முடியும்.
வங்கித்துறை மூலங்களிடமிருந்து பெற்றுக் ! மிருந்தும், வர்த்தக வங்கியிடம் இரு ந் து ம் பெற்றுக்கொள்ளப்படும் கடன்களாகும்.
வணிக நாதம் - 1992

'ள அட்டவணை
எண் கணித ரீதியாக
1987ல்
1990ல் (மில்லியன் ரூபாய்களில்) 44900•0
70849.0
72379•0 39996•0
1694 0
74073 • 0 4904•0
(-) 312410 40836•0
246060 35932 • 0
37730-0 5592•0
(12210 0) 30340 • 0
25520 0
துண்டு விழும் தொகையை) ஈடுசெய்வதற்கு வண்டிய தொகையை பெற்றுக்கொள்ள முடி ள் பொருளாதாரத்தில் விரிவுத் தாக்கத்தை ரவு விரிவுத் தாக்கத்தினை ஏற்படுத்தா த சங்கம் விரும்புகின்றது. எனினும் பற்றாக் லாதாரங்களிடமிருந்து கடன் பெறமுடியாத டிய மூலாதாரங்களிலிருந்து கடன் பெறுவது ம் வழிகளின் மூலம் பற்றாக்குறைக்கு நிதி
பன்பாடு
ட்டப் பற்றாக்குறைக்கு உள் நாட்டில் இருந்து
கடன்களை
ன இருவகைப்படுத்தலாம்.
அரசாங்கம் திறைசேரியுண்டியல், ரூபாய்ப் கச்சான்றிதழ், திறைசேரியின் வைப்புச் சான் உண்டியல் கள் ஆவணங்களை வழங்கி பெற் தைக் கடன்களை வழங்கும் மூலங்களை மூலங்கள் என இரு வகைப்படுத்திக் கொள்ள
கொள்ளப்படும் கடன்கள் மத்திய வங்கியிட
உண்டி யல், ஆ வ ண ங் க  ைள வழங்கி வங்கித்து றை சார்ந்த நிறுவனங்களிட

Page 53
மிருந்து பெற்றுக் கொள்ளப்படும் கடன்கள் பொருளாதாரத்தில் பண வீக்க விளைவு களை ஏற்படுத்துகின்றது. ஏனெனில் வணிக வங்கிகள் கடன்களை வழங்குகின்ற போது கடனாக்கம் செய்வதனூடாக பண நிரம் பலை உயர்வடையச் செய்து பண வீக்கத் தினை ஏற்படுத்துகின்றது. மேலும் வர்த்தக வங்கிகளின் திரண்ட சேமிப்பினை அரசாங் கம் கடனாக பெற்றுக் கொள்ளும் போது தனியாரது முதலீட்டுத் தேவைகளுக்கு பெற்றுக் கொள்ளக் கூடிய நிதி அருமையாகி விடுவதால் தனியார் முதலீடு பாதிப்ப தனூடாக மொத்த முதலீடு பாதிக்கப்படு கின்றது. மத்திய வங்கியிடமிருந்து அரசாங் கம் கடன்களை பெற்றுக் கொள்ளும் போது நேரடியாக சட்டமுறைப் பண நிரம்பல்கூடி பண வீக்க விளைவுகள் ஏற்பட்டு விடும். இச்சட்ட முறைப் பண நிரம்பலானது வர்த்தக வங்கிகளுக்கு வைப்பாகச் செல்ல வர்த்தக வங்கிகளின் கடனாக்கத்திற்கு துணை போவதால் இரண்டாவது தட வையும் பண வீக்கத்தினை ஏற்படுத்திவிடும். எனவே உள் நாட்டுச் சந்தையில் வங்கித் துறை மூலங்கள் விரிவுத் தாக்கத்தினை ஏற்படுத்தும் மூலங்கள் எனக் கருதப்படு கின்றது.
உள் நாட்டுச் சந்தையில் வங்கித் துறை அல்லாத மூலங்களான தேசிய சேமிப்பு வங்கி, தேசிய வீடமைப்பு ஆழ்நிதியம், ஒய்வூதியத் திணைக்களம், ஊழியர் சேம் லாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம், காப்புறுதிக் கூட்டுத்தாபனம், நிதிக் கம்பனி கள் ஆகியவற்றில் இருந்து உண்டியல், ஆவ | ணங்கள் மூலம் பெறப்படும் கடனே வங்கித் துறை சாராத கடனாகும். மேற் கூறிய ஸ்தாபனங்கள் தம்முடைய சேமிப்பினை அரசாங்க ஆவணங்கள் உண்டியல்களில் மட்டு மல்லாமல் முதலீட்டுச் சந்தையில் காணப் படும், ஏனைய தனியார் கூட்டுத்தாபனங் களது சொத்துக்களிலும் முதலிடலாம். அரசாங்கம் ஏனைய முதலீட்டுக் கேள்வி யுடன் போட்டியிட்டு பற்றாக்குறையை நிதிப்படுத்த நிதி தேட வேண்டி இருப்பத னாலேயே இதனை சந்தை அடிப்படையி லான வங்கி சாராக் கடன் என குறிப்பிடு
வணிக நாதம் - 1992

பாதீட்டில் பற்றாக்குறையும்.
வர். வங்கித்துறை சாராத நிறுவனங்களிடம் கடன்களைப் பெற்றுக் கொள்ளும் போது அவை பண வீக்க விளைவுகளை ஏற்படுத்து வதில்லை. ஆனால் தனியார் முதலீட்டை பாதிப்பதாக இருக்கும். இச் சேமிப்பு நிறு வனங்கள் தம்மிடம் ஏற்கனவேயுள் ள சேமிப் புக்களில் இருந்தே கடன்களை வழங்குகின் றன. அதுமட்டுமன்றி மத்திய வங்கியினைப் போல் நாணயங்களை வெ ளி யி ட வோ, வர்த்தக வங்கியினைப் போல் கடனாக்கம் செய்யவோ இயலாததினாலேயே பொருளா தாரத்தில் பண வீக்க விளைவுகள் ஏற்படு வதில்லை.
சந்தையல்லாக் கடன் மூலங்கள் அர சாங்கத்திற்கு மட்டும் பிரத்தியேகமாக நிதி பெறக்கூடிய வசதியினை வழங்குகின்றது . அரசாங்கத்திற்கு உள்ளேயுள்ள மிகை நிதி களை திறைசேரியின் பொது வைப்பாக மாற்றி அத்தகைய வைப்புத் தொகையில் இருந்து அரசாங்கம் பெற்றுக் கொள்ளும் கடன்கள் இவையாகும். குறிப்பாக திறை சேரியின் பொது வைப்புக்கள், அநாதைகள் விதவைகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகைகள், சுங்கத் திணைக்களத்தின் பயன்பாட்டிற் கெனஒதுக்கப்பட்ட நிதிகள், கூட்டுத்தாபனங் களால் செலவு செய்யப்படாத தொகைகள் போன்றவற்றிலிருந்து பெறப்படும் க ட ன் களாகும். இவற்றிற்கு அரசாங்கம் வட்டி செலுத்த வேண்டிய அவசியமில்லை. விரி வுத்தாக்கத்தினையோ அல்லது தனியாருக்கு கிடைக்கக் கூ டி ய மூலதனக் கடன்களில்
வீழ்ச்சியினையோ ஏற்படுத்தாது.
உள் நாட்டில் எவ்வாறு ஒரு அரசாங்கம் பல்வேறு மூலாதனங்களில் இருந்து தேவை யான நிதியைப் பெற்றுக் கொள்கிறதோ அதே போன்று வெளிநாட்டில் இருந்து பல் வேறு மூலாதாரங்களில் இருந்து தேவையான நிதியைப் பெற்றுக் கொள்கிறது இலங்கை அரசாங்கத்தின் வ ர வு செலவுத் திட்டப் பற்றாக் குறைக்கு வெளிநாட்டில் இருந்து திரட்டுகின்ற நிதியளிப்பே அரைவாசிக்கு மேற்பட்ட பங்கினை வழங்குகின்றது. இவ் வெளிநாட்டு நிதியானது சர்வதேச நிறு வனங்கள், அரசாங்கங்கள், வெளிநாட்டு

Page 54
சு. சாந்தகுமார்
வர்த்தக வ ங் கி க ள் என்பனவற்றிலிருந்து பெற்றுக் கொள்ளப்படுகின்றது. வெளிநாட்டு மூலங்களிடமிருந்து பெறப்படும் நிதியானது நன்கொடையாகவும், கடனாகவும் கிடைக் கின்றது. கடன்களானது திட்டக் கடன் களாகவும், பண்டக் கடன்களாகவும் இரதக் கடன்களாகவும் கிடைக்கின்றது. நன்கொடைகள் மீளச் செலுத்த தேவை யற்ற உதவிக்கொடை களாகும். பதிவழிக் கப்பட்ட நிலுவைகளையும் நன்கொடை யாகவே சேர்த்துக் கொள்ளலாம். இவற் றிற்கு வட்டிக் கொடுப்பனவுகள் செய்யத் தேவையில்லை. எனவே இவை கடன் சேவைக் கொடுப்பனவுகளை அதிகரிக்காமல் நிதியீட்டம் செய்ய உதவுவதால் இலங்கை போன்ற வறிய ந டுகளுக்கு சிறப்பானவை யாகும். மேலும் நன் கொடைகள் Lாண்ட மாகவோ, செலாவணியாகவோ பெறப் படலாம். செலாவணி வடிவில் பெற்றுக் கொள்ளப்படுமானால் நாட்டின் வெளி நாட்டுச் சொத்துக்களை அதிகரிக்கச் செய் வதனூடாக உள் நாட்டில் பண நிரம்பல் உயர்ந்து பணவீக்க விளைவுகள் ஏற்படுவதற் கான சாத்திய முண்டு. எனவே வெளிநாட்டு செலாவணி நன்கொடைகளை இறக்குமதி களுக்கு பயன் படுத்துவதனுடாக பண வீக்க விளைவுகள் தவிர்க்க முடியும். அர சாங்கம் ஒழுங்கு முறையாக தயாரித்த செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவ தற்கென பெறக்கூடிய கடன்கள் செயற்திட் டக் கடன்களாகும். இவற்றை தீர்மானிக் கப்பட்ட செயற்திட்ட நடைமுறைக்கு மாத் திரம் பயன்படுத்த முடியும். செயற்திட்டக் கடன்சள் பண்டவடிவிலும், செலாவணி வடிவிலும் பெற்றுக் கொள்ளமுடியும். வெளி நாட்டில் இருந்து பண்ட வடிவில் பெற்றுக் கொள் ளப்படுகின்ற கடன்களே பண்டக் கடன்கள் ஆகும். இவை பண்ட வடிவில் நாட்டிற்குள் வருவதனால் பணவீக்க விளை வுகளை ஏற்படுத்துவதில்லை. ஏனைய கடன் களானது பற்ற க்குறையை நிரப்புவதற்கு உதவும் செயற் திட்டமல்லாத மூலங் களாக அமைகின்றது இவை வர்த்தக கடன்களை யும், யூரோ நாணய கடன்களை யும் (Euro currency) உள்ளடக்கியுள்ளன. இவ்வாறு
வணிகநாதம் --- 1992

பல்வேறு வடிவங்களில் பெறப்படுகின்ற வெளிநாட்டு நிதியளிப்பில் நன்கொடைக ளும் சலுகை அடிப்படையிலான கடன் களும் 30 சத வீதத்திற்கு உள்ளா கவே காணப்படுகின்றது. ஆதலால் அதிகளவில் வெளிநாட்டு கடன்களை பெற்று பற்றாக் குறையை நிதிப்படுத்தும் போது அவற்றை சிறந்த முறையில் அந்நியச் செலாவணியை உழைக்க அல்லது சேமிக்கக் கூடிய திட்டங்க களுக்கு வழிப்படுத்தாவிட்டால் பெற்றுக் கொண்ட கடன்களை திருப்பிச் செலுத்து வதற்கு மீண்டும் கடன் பெறவேண்டிய துர்ப்பாக்கிய நிலை தோன்றும். இத்தகைய ஒரு சூழ்நிலை ஏற்படுமானால் நாட்டினது கடன் பெறு தகுதி (Credit worthiness) வெகு வாகப் பாதிக்கப்படலாம்.
பா!
வரவு செலவுத் திட்டப் பற்றாக் குறையை நிதிப்படுத்த அரசாங்கம் தனது பெயரில் மத்திய வங்கியில் ஏற்படுத்தியுள்ள ஒதுக்குத் தொகையின்ை பயன்படுத்துவது னையே காசு நிலுவையின் பயன்பாடு என லாம். காசு நிலுவையினைப் பயன்படுத்தப் படுமாயின் நேரடியாக சட்ட முறைப்பண நிரம்பல் அதிகரித்து பணவீக்க விளைவுகள் தோன்றும். வரவு செலவுத் திட்டத்தில் மிகை ஏற்படுத்தல் அல்லது வரவு செலவுத் திட்டப் பற்றாக் குறையைக் காட்டிலும் உள் நாட்டுக் கடன்கள், வெளிநாட்டு நிதி மூலம் திரட்டப்பட்ட தொகையானது உயர் வாக இருந்தால் பெற்றுக் கொள்ளப்பட்ட மேலதிகத் தொகை மத்திய வங்கியில் ஒதுக் கில் இடப்படும். இதனால் காசு நிலுவைகள் அதிகரித்து பண நிரம்பல் குறைவடைந்து பணச் சுருக்கம் ஏற்படலாம்.
வ ர வு செலவுத்திட்டப் பற்றாக் தறைக்கு மேற்கூறிய வழிகள் மூலம் முழு மையாக நிதி பெறப்படாது விடப்படுமா பின் அத் தொகை பாலம் இடப்படாத இடைவெளி அல்லது நிதி இடப்படாத இடைவெளி என அழைக்கப்படும் இத் ககைய நிதியிடப்படாத இடைவெளிக்கு எதிர்காலத்தில் பல் வேறு து றை களிலிருந்து

Page 55
கடன் பெறுவதன் மூலம் நிதி பெறப்படும் அல்லது செலவின ஒதுக்கீடுகள் வெட்டப் படும்.
தனியார் துறை வளர்ச்சி குன்றிக் காணப்படும் வளர்முக நாடுகளில் பலதுறை களிலும் அரசினது தலையீடு தவிர்க்க முடி யர்து இருப்பதனால் செலவினங்கள் வரு மானத்தை விட உயர்வாகவே காணப்படு கின்றது. வருமானத்தை தேவைக்கேற்ப உயர்த்துவதும் கடினமாக .
காணப்படுகின்
உசாவியவை:
1) பொருளியல் நேர் 2) பொருளியலாளன் 3. மத்தியவங்கி அற்
வணிக நாதம் மெல
எமது நா தலைமையகம்
ஜெமினி
பலசரக்கு
ஆலடி, O நம்பிக்கை
0 உத்தர
கிளை: ஜெமினி ஸ்ரோர்ஸ், பலசரக்கு மாளிகை, இல. 100, காங்கேசன்துறை வீதி, சுன்னாகம்.
வணிகநாதம்- 992

பாதீட்டில் பற்றாக்குறையும்.
றது. ஆதலால் பற்றாக்குறை வரவு செலவுத் திட்டம் எல்லா நாடுகளிலும் தவிர்க்க முடி யாதவையாகவே இருக்கின்றது. ஒரு நாட் டின் பொருளாதார வெற்றியானது வரு மானம், செலவினங்கள், பற்றாக்குறையை நிதிப்படுத்தும் வழி முறைகள் இவற்றுக் கிடையே ஒரு சமநிலையை அடைவதன் பொருட்டு பொது நிதியை முகாமை செய் வதிலேயே பெரிதும் தங்கியுள்ளது.
க்கு 1988 பூன்
* 1988 ,,
க்ெகை 1991
ன்மேலும் வளர்ச்சியுற
ல்லாசிகள்!
ஸ்ரோர்ஸ்
மாளிகை
காரை நகர்.
0 நாணயம் (வாதம்
கிளை: ஸ்ரீ மீனாட்சி ஸ்ரோர்ஸ், பலசரக்கு மாளிகை, இல, 96, காங்கேசன் துறை வீதி, சுன்னாகம்.

Page 56
விலைச் சுட்டெண் Pri
விலைச் சுட்டெண் என்பது பொது விலை மட்டத்தில் ஏற்படும் மாற்றங்களை அளவிடும் ஒரு குறிகாட்டியாகும். ஒரு நாட்டில் விற்பனை செய்யப்படும் பல்வேறு வகையான பொருள்களின து விலைகளும் ஒரே திசையில் மாற்றமடைவதில்லை. சில சந்தர்ப்பங்களில் எல்லாப் பொருள்களின் விலை களும் ஒரே திசையில் மாற்றமடைந் தாலும் மாற்றமடையும் வீதங்கள் வேறு படுகின்றன. இவ்வாறான போக்கில் ஒரு மைத் தன்மையை கொண்டு வருவதற்காக பொது விலை மட்டம் என்ற கருத்து பயன் படுத்தப்படுகிறது. அதாவது பொருள்கள் சேவைகளின் சராசரி விலைகளின் மாற்றங் கள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. இது சுட்டெண்கள் மூலம் கணிக்கப்படுகின்றது. எனவே விலைச் சுட்டெண் என்பதனை பின் வருமாறு வரையறுக்கலாம் : "குறிப்பிட்ட காலப் பகுதியில் பொருள்கள் சேவைகளின் விலைகளில் ஏற்படும் மாற்றங்களை காட்டும் ஒரு புள்ளிவிபர சராசரியே வி  ைல ச் சுட் டெண்'' ஆகும். இது தெரிவு செய்யப்பட்ட சில பொருள்களின் அடிப்படையில் அவற் றின் முக்கியத்துவத்திற் கேற்ப நிறையளிக் கப்பட்டு ஒரு அடிப்படை ஆ ண் டை க் கொண்டு அவ்வாண்டுக்குரிய விலைகளின் சதவீதமாக மதிப்பிடப்படும். ஆண்டுக்குரிய விலைகள் மாற்றப்பட்டு பின்னர் சராசரி காணப்படுகிறது.
விலைச் சுட்டெண்ணை
தயாரிக்கும் போது பின்வரும் விடயங்கள் கவனத்தில் சுொள்ளப்பட வேண்டும்.
1. அடிப்படை ஆண்டு:-
வி  ைல ச் சுட்டெண்ணை கணிப்பிடும் போது முதலில் அடிப்படை ஆண்டினை தெரிவுசெய்தல் வேண்டும். அவ்வாறு தெரிவு
வணிகநாதம் - 1992

_ce Index
செல்வி செ. செல்வராணி ஆண்டு-13 வர்த்தகப் பிரிவு.
செய்யப்படும் ஆண் டு சாதாரண ஆண்டாக இருத்தல் வேண்டும். அதாவது வி  ைல த் தளம்பல் அற்ற ஆண்டாக இருத்தல் வேண் டும்.
2. பொருள்களை தெரிவு செய்தல்:-
விலைச் சுட்டெண் பயன்படுத்தப்படும் நோக்கத்திற் கேற்ப பொருள்களை தெரிவு செய்தல் வேண்டும். உதாரணமாக வாழ்க் கைச் செலவு சுட்டெண்னை க ணி ப் பிட வேண்டுமாயின் அதரேனடு தொடர்புடைய பல்வேறு பொருட்களின் விலைகளை சில் லறை வியாபார மட்டத்தில் தெரிந்தெடுத் தல் வேண்டும்.
3. நிறையளித்தல்:-
கணிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப் பட்ட பொருள்கள் சேவைகளின் முக்கியத் துவத்தின் அடிப்படையில் சிறந்த முறையில் நிறையளித்தல் வேண்டும். எனவே விலைச் சுட்டெண் பயன்படுத்தும் நோக்கத்திற்கும், கு றிப் பிட்ட பொருளுக்கு மிடையிலான தொடர்பின் அடிப்படையில் ஒவ் வொரு பொருளுக்கும் வெவ்வேறு பட்ட நிறை யளித்தல் வேண்டும்.
4பரப்பு
சுட்டெண்ணை தயாரிக்கும்போது அப் பிரதேசம் பற்றிய குறிகாட்டி தயாரிக்கப் படுகின்றது என்பதனை கவனத்தில்கொள்ள வேண்டும். அதாவது தெரிவு செய்யப் பட்ட பிரதேசம் முழுவதையும் அடக்கிய வகையில் மக்களின் வாழ்க்கைச் செலவில் இடம்பெறும் பொருட்களுக்கு நிலவும் விலைகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Page 57
சுட்டெண் கணிப்பிடும் முறை
அடிப்படை ஆண்டு 1985
பொருட் தொகுதி
விலைச் விலை
நிறை சார்பு
சா
20
100
- ' பாகம் 4 - ச வ ய
< 0 0
40
100
25
100
50
100 |
மேற்காட்டப்பட்ட அட்டவணையில் ரீதியான முக்கியத்துவத்தின் அடிப்படையில் ! அவற்றிற்குரிய விலை சார்பளவுகளால் பெரு.
100 விலைச் சார்பளவு = ----
அடிப்படை ஆண்டி பின்னர் ஒவ்வோர் ஆண்டிற்குமுரிய ெ கையால் பிரித்தல் வேண்டும். அவ்வாறு பிரிட் -ளலாம். ஆண்டு 1985 இனையும் ஆண்டு 19 சரியினை கணிப்பிடும்போது விலைமட்டத்தில் 2
ஆண்டு 1989க்குரிய விலைச் சார்பள னால் பெருக்கும்போது பெறப்படும் மொத்த 3 பெருக்கும் போது - நிறையிடப்பட்ட விலைக் கிறது. இதுவே நுகர்வோர் விலைச் சுட்டெ இலங்கையின் பொது விலை மட்ட த்தில் அறிந்து கொள்வதற்கான சுட்டெண்கள்.
இலங்கையின் பொது விலை மட்டத்தி. வதற்காக பின்வரும் சுட்டெண்கள் தயாரிக்க.
1. கொழும்பு நுகர்வோர் விலை 2. மொத்த விற்பனை விலைச் 3. தேசிய உற்பத்திச் சுருக்கி. 4. மத்திய வங்கியின் வாழ்க்கை 5. விசேட நுகர்வோர் விலைச்
வணிகநாதம்-1992

39
விலைச் சுட்டெண்
நடைமுறை ஆண்டு 1989
வுச்
| விலைச் விலை
சார்பு
நிறை
செலவுச் சார்பு
ர்பு
30
150
900
50
125
875
20 |
80 |
160
50 |
100
500
2435
20
121.75
5 குறிப்பிட்ட பொருட்களுக்கு ஒப்பீட்டு நிறைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிறைகளை
க்கு தல் வேண்டும்.
~ X நடைமுறை ஆண்டின் விலை ன் விலை மாத்த தொகையினை நிறைகளின் எண்ணிக் பதன் மூலம் சராசரியினைப் பெற்றுக்கொள் 39 இனையும் எடுத்து நிறைகொடுத்த சரா உண்டாகும் மாற்றம் பின்வருமாறு இருக்கும்: வுகளை அவ் வப் பொருட்களுக்குரிய நிறைகளி ளவு 2435 ஆகும் அதனை மொத்த நிறையால் சுட்டெண்ணின் அளவு 121 75 ஆக அமை எ என அழைக்கப்படுகிறது.
உண்டாகும் மாற்றங்களை
உண்டாகும் மாற்றங்களை அறிந்து கொள் 'படுகின்றன:
ச் சுட்டெண். சுட்டெண்.
* செலவு சுட்டெண். சுட்டெண்.

Page 58
செ. செல்வராணி
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்
இலங்கையின் சில்லறை விலைகளில் ஏற் படுகின்ற மாற்றங்களை அளவிடுவதற்காக 1952 ம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு இலங்கை குடிசன மதிப்பு புள்ளி விபர திணைக்களத்தினால் கொழும்பு நுகர் வோர் விலைச் சுட்டெண் கணிப்பிடப் படு கின்றது. கொழும்பு நகரில் வாழும் நடுத்தர தொழிலாளர் குடும்பங்களின் நுகர்வை மாதிரியாகக் கொண்டு இச் சுட்டெண் தயா ரிக்கப்படுவதனால் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் என அழைக்கப்படுகின் றது. இச் சுட்டெண்ணை கணிப்பதற்கான தகவல்கள் சில்லறை வியாபாரிகள், குறிப் பிட்ட பொருட்களுடன் தொடர்புடைய நிறுவனங்களது விலைப் பட்டியல் என்பவற் றிலிருந்து நேரடியாகவோ / ம  ைற மு க மாகவோ பெற்றுக் கொள்ளப்படுகின்றன.
கொழும்பு நுகர்வோர் வி  ைல ச் சுட் டெண்ணை தயாரிப்பதற்காகத் தெரிவு செய்யப்பட்ட ப ண் ட த் தொகுதிக்குள் உணவு, உடை, வாடகை, எரிபொருளும் வெளிச்சமும், பல்வகை எனும் ஐந்து விட யங்கள் உள்ளடக்கப் பட்டுள்ளன. இவற்றிற் குரிய நிறைகள் 1949 / 50 ம் ஆண்டு காலப் பகுதியில் மேற் கொள்ளப்பட்ட நுகர்வோர் நிதி அளவீட்டை அடிப்படையாகக் கொண்டு பெறப்பட்ட தரவுகளில் இருந்து வழங்கப் பட்டுள்ளன.
பின்வரும் அட்டவணை குறிப்பிட்ட பண்டவகைகளுக்கு வழங்கப்பட்ட நிறை
களை காட்டுகின்றது.
நிறை 61.9
9.4
பண்டவகை உணவு உடை
எரிபொருளும் வெளிச்சமும் வாடகை பல் வகை
4.3
5,7
18.7
வணிகநாதம் - 1992

மேற்குறிப்பிட்ட பண்ட வகையை பின் வருமாறு துறை வகையாகவும் வகுக்கலாம்.
1) உள் நாட்டுத் தொகுதி
ii) இறக்குமதித் தொகுதி
iii) ஏற்றுமதித் தொகுதி
அண்மை ஆண்டுகளில் கொழும்பு நுகர் வோர் விலைச் சுட்டெண் அதிகரித்து வரு கின்றது. இதனை பின்வரும் அட்டவணை காட்டுகின்றது:
அட்டவணை: 1
கொழும்பு நுகர்வோர் - விலைச்சுட் டெண் 1952 = 100
ஆண்டு விலைச் ஆண்டு
விலைச் சுட்டெண்
சுட்டெண்
1952
1967
1977
100.0 1987 114.8
1988 203. 2
1989 318 2
1990
561.2
1991
652,8
744, 1 830, 2 1008. 6 1131.5
1980 1985
- மூலம்:- இலங்கை மத்தியவங்கி அறிக்கை
கொழும்பு நுகர்வோர் விலைச்சுட் டெண் 1990ல் 21.5 சதவீத ஆண்டு சரா சரி அதிகரிப்பினையும் 1991ம் ஆண்டு 12.2 சதவீத அதிகரிப்பினையும் கொண்டுள்ளது. 90 ம் ஆண்டின் சராசரி அதிகரிப்புடன் ஒப் பிடும் போது 91ல் அதிகரிப்பு குறைவாக இருந்த போதிலும் விலை களில் ஏற்பட்ட முழுமையான அதிகரிப்பு தொடர்ந்தும் உயர்வாகவே காணப்படுகின்றது. மொத்த அதிகரிப்பில் 71.8 சதவீதத்திற்கு உயர்வான உணவு விலைகள் காரணமாயிருந்தன , மிகுதி உடை 5,6 சதவீதம், எரிபொரு ளும் வெளிச்சமும் 4.6 சதவீதம் பல்வகை 16.6 சத வீதமாகவும் விளங்கின,
மதி.

Page 59
அட்டவணை : 2
கொழும்பு நுகர்வோர் விலைச்க
1990
எல்லா விடயங்களும்
1008.
பண்ட வகைகளின்படி
உணவு
1000
உடை
610
எரிபொருளும் வெளிச்சமும்
1934
வாடகை
109
பல்வகை
1021
மூலம் - இலங்கை ம. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெ
• 0 0
கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டி யாக கொண்டு தயாரிக்கப்படு கிறது ஆ என கூறப்படுகின்றது. ஏனெனில் இக்கா ம.7னியம் வழங்கப்பட்டமையினால் உன் விலைகளையே புலப்படுத்துகின்றது. இ வகையிலும் சாதாரண ஆண்டாக இரு! செய்தல் வேண்டும்.
இச் சுட்டெண்ணானது கொழும்பு நுகர்வமைப்பை புலப்படுத்துமே தவிர புலப்படுத்துவதில்லை. எனவே இலங்கை புலப்படுத்தக்கூடிய வகையில் தரவுகள் சே டும்
1949/50 காலப்பகுதியில் நடாத்தப் படையாக கொண்டே இச்சுட்டெண் த
ஆனால் 1949/50 காலப்பகுதியில் உள்ள மக்களின் நுகர்வமைப்புக்கும் இடையில் பாட்டை நீக்குவதற்கு அண்மைக்கால திறைகள் அளிக்கப்படவேண்டும்.
வணிகநாதம் - 1992

விலைச் சுட்டெ
சுட்டெண் (1952 = 100)
சராசரி
வருடாந்த சராசரி சதவீத மாற்றம்
1991
1990
1991
61131 51
21 5
122
- 9 1220 3
23•3
13
678.4
24-5
112
2252.5
12.5
16S
109•8
--
011146*)
18.7
12 2
த்திய வங்கி அறிக்கை:-
ண்ணின் குறைபாடுசுளும் தீர்வுகளும் டெண்ணானது 1952 ம் ஆண்டை அடிப்படை னால் இவ் ஆண்டு ஒரு சாதாரண ஆண்டல்ல சலப்பகுதியில் பெருமளவான பொருட்களுக்கு எமையான விலையிலும் பார்க்க குறைவான க்கு றை பாட்டை நீக்கவேண்டுமாயின் எல்லா க்கத்தக்க ஓர் அடிப்படை ஆண்டினை தெரிவு
வாழ் நடுத்தர தொழிலாளர் குடும்பங்களின் நாட்டின் சகல பிரிவினரதும் நு கர்வமைப்பை 5 வாழ்மக்கள் அனைவரினதும் நு கர்வமைப்பை சகரிக்கப்பட்டு சுட்டெண் தயாரிக்கப்பட வேண்.
பட்ட நுகர்வோர் நிதி அளவீட்டினை அடிப் தயாரிப்பதற்கான நிறைகள் வழங்கப்பட்டன. - மக்களின் நு கர்வமைப்புக்கும், தற்போதைய ) வேறுபாடு காணப்படுகின்றது. இக் குறை நுகர்வோர் நிதி அளவீட்டில் இருந்து புதிய

Page 60
செ. செல்வராணி.
42
4. இச் சுட்டெண்ணை தயாரிப்பதற்காக
தெரிவு செய்யப்பட்ட பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலைகள் நிலவுமானால் அவ்விலைகளே கவனத்தில் கொள்ளப் படுகின்றன. கட்டுப்பாட்டு விலை நில வும் போது சரியான பங்கீட்டுத்திட்டம் இல்லாவிடின் கறுப்புச் சந்தை விலை களும் இடம் பெறலாம் கறுப்புச் சந் தையில் மக்கள் பொருட்களை வாங்கும் போது செலவு கூடுதலாக இருக்கும். இதனை இச் சுட்டெண் தெளிவாகப் புலப்படுத்துவதில்லை. எனவே அவ் விலைகளையும் கவனத்தில் கொள்ளக் கூடிய வகையில் தரவுகளை பெற்று சுட் டெண் ணை தயாரித்தல் வேண்டும்.
மொத்த விற்பனை விலைச்சுட்டெண்
மொத்த விற்பனை விலைகளில் ஏற் படும் மாற்றங்களை அளவிடும் குறிகாட் டியே மொத்த விற்பனை விலைச் சுட்டெண் ஆகும். இச் சுட்டெண் அமைப்பதற்கு முன் னர் இலங்கையின் பொது விலை மட்டங் களில் ஏ ற் ப டு ம் மாற்றங்களை அளவிடு வதற்கு கொழும்பு நுகர்வோர் விலைச் சுட் டெண்ணே பயன்படுத்தப்பட்டது. இது சில் . லறை விலைச் சுட்டெண் ணாக இருந்தமை யால் மொத்த விற்பனை விலைச் சுட்டெண் கணிபதற்கான அவசியம் இருந்தது எனவே இத்தேவையை நி றை வு செய்வதற்காக 1974ம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு இலங்கை மத்திய வங்கி மொத்த விற்பனை விலைச் சுட்டெண்ணை கணிப் பிட்டு வருகின்றது. இச் சுட்டெண்ணானது லாஸ்பியர் வாய் பா ட் டு அடிப்படையில் கணிப்பிடப்படுகின்றது.
மொத்த விற்பனை விலைச் சுட்டெண் சந்தைப் படுத்தலின் ஆரம்ப மட்டத்தில் கணிப்பு செய்யப்படுகின்றது. அதாவது சந் தைப்படுத்தலின் ஆரம்ப நிலையிலுள்ள விலைகளையே இச்சுட்டெண் கவனத்தில் கொள்ளுகின்றது எனவே மொத்த விற் பனை விலைகள் என்பது உள்நாட்டில் உற் பத்தி செய்யப்படும் பொருளாயின் உற்பத்தி யாளரது விலைகளும் இறக்குமதி செய்யப்
வ ணிக நாதம்-1992

படும் பொருளாயின் இறக்குமதி விலைக ளும் என கருதப்படும். மொத்த விற்பனை விலைகள் உற்பத்தியாளர்கள் அல்லது அவர் களின் பிரதிநிதிகளிடமிருந்து பெறப்படுகின் றன. இச்சுட்டெண்ணைக் கணிப்பிடும்போது இலங்கையில் விற்பனையாகின்ற 13 பிர தான பொருட்களின் விலைகள் பயன்படுத் தப்படுகின்றன. சுட்டெண் கணிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பொருட்களும் அவற்றுக்கு வழங்கப்பட்ட நிறைகளும் வருமாறு.
நிதை 67.80
2. 86
4,02 1,37
5. 16
பண்ட வகை 1. உணவு 2. வெறிக்குடிவகை 3 புடவை, காலணிகள் 4. தாள் உற்பத்தி 5. இரசாயன உற்பத்திகள் 6. பெற்றோலிய உற்பத்திகள் 7. உலோகமல்லா உற்பத்தி கள் 8. உலோக உற்பத்திகள் 9. போக்குவரத்து கருவிகள் 10 மின்கருவிகளும் வழங்கல்களும் 11. பொறிகள் 12. எரிபொருளும் வெளிச்சமும்
6 42
1.72 0.93
0.80
0.96
1.33
17ா
13. பல் வகை
4.78
மேற் குறிப்பிட்ட பண்டத் தொகுதி யினை பின்வரும் துறைகளாகவும் வகைப் படுத்தலாம்.
துறை வகை 1 1
0 • 3
1. உள் நாட்டு வகை ii. இறக்குமதி வகை ii. ஏற்றுமதி வகை
50.31 27 17 22 52
துறை வகை 2 1. நுகர்வுப் பொருட்கள் 75. 30 ii, இடைநிலை ,
20 52 முதலீட்டு
4. 18

Page 61
அண்மைக் காலத்தில் மொத்த இன்ற்து . இதனை அட்டவணை 1 காட்டு
அட்டவணை: 1 மொத்த விற்பலை
ஆண்டு 1974 1980
விலைச் சுட்டென
100 0 229 5 377 • 1 414 9
* - 1985
- 1987
மூலம்;- இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஃ! மொத்த விற்பனை விலைச் சுட்டெண் வுள்ளது. சேவைகளை உள்ளடக்கவில்லை கொண்டு இச் சுட்டெண் கணிக்கப்படுகின்றது விற்பனை விலைகள் குறைவாகவே இரு. போதிலும் கூடுதலான பொருட்களை கவன பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் கல் போது அவற்றையும் கவனத்தில் கொள் விலைச் சுட்டெண் ணை விட முன்னேற்றமா
தேசிய உற்பத்தி சுருக்கி,
- மொத்த தேசிய உற்பத்திக்குள் அடங் நிங்களை அளவிடும் குறிகாட்டியே தேசிய 2 களிலான மொத்த தேசிய உற்பத்தியை நி புத்தியாக மாற்றுவதற்கு பயன்படுத்தப்படும் நடைமுறைவிலை தேசிய உற்பத்தியினை வீதமாக கூறுவதே மொத்த தேசிய உற்பத், 1982 ஆகும். இச் சுட்டெண்ணை இலங்:ை
நடைமுறை தேசிய உற்பத்தி சுருக்கி -
மா சுட்ண்ெணைக் கணிப்பிடும் போது ஏற்ப
- ஒரு சுட்டெண்ணை சிறப்பாக கணிப்ப டும் .. வழமையில் உண்டா.கும் வழுக்கள் மூ
சூத்திர வழு II மாதிரி எடுப்பு
-- III ஏகவின தன்.ை - சூத்திர வழு என்பது பொருத்தமற்ற
மாதிரி எடுப்பு வழு என்பது சிறப்பான வ தாகும்.
வணிகநாதம் 1992

விலைச்சுட்டெண்
விற்பனை விலைச் சுட்டெண் அதிகரித்து வரு கின்றது.
எ விலைச் சுட்டெண் 1974 = 100
ஆண்டு 1988
1989 Lj 1990
1991
விலைச் சுட்டெண்
488 7 532•9 651 1 710 • 8 உம்
ணானது, பொருட்களை மட்டுமே உள்ளடக்கி 5. அத்துடன் மொத்த விற்பனை விலைகளைக் 3. எனவே சந்தையில் ஒப்பீட்டு ரீதியில் மொத்த க்கும். இத்தகைய குறைபாடுகள் இருக்கின்ற சத்தில் கொள்ளுதல், இலங்கை முழுவதிலிருந்தும் ணித்தல், புதிய பொருட்கள் சந்தைக்கு வரும் ளுதல் என்ற வகையில் கொழும்பு நுகர்வோர் னதாக காணப்படுகின்றது.
தம் பொருட்கள் சேவைகளில் ஏற்படும் மாற் உற்பத்தி சுருக்கி ஆகும். இது நடைமுறை வில்ை லையான விலைகளிலான மொத்த தேசிய உற் நின்ற ஒரு விலைச் சுட்டெண் ஆகும். எனவே நிலையான விலைத் தேசிய உற்பத்தியின் நூற்று தி சுருக்கி எனப்படும் இதன் அடிப்படை ஆண்டு 5 மத்திய வங்கி கணிப்பிட்டு வருகின்றது.
ஹவிலை மொத்த தேசிய உற்பத்தி
--- X 100 மாவிலை தேசியஉற்பத்தி டும் வழுக்கள் தற்கு பொதுவான வழுக்கள் நீக்கப்பட வேண்ட
ன்று வகைப்படும்.
வழு ம வழு
சூத்திரங்களை பயன்படுத்துவதாகும்.
மாதிரியை தெரிவு செய்யாமையினால் ஏற்படு

Page 62
செ, செல்வராணி
44
ஏகவின தன்மை வழு என்பது கருத்தில் கொள்ளப்படும் பொருள்வகை பற்றிய விபரங் சளின் அடிப்படை ஆண்டிலும் நடை முறைகளிலும் மாற்றமின்றி இருத்தல் வேண்டும். இல்லாவிடில் இவ் வழு ஏற்படும். விலைச் சுட்டெண்ணின் பயன்பாடுகள் 1. விலைச் சுட்டெண்ணில் இருந்து மக்
களின் வாழ்க்கைத்தரத்தை மதிப்பிட லாம். அதாவது வாழ்க்கைச் செலவுச் சுட்டெண்ணின் போக்கினைக் கொண்டு வெவ் வேறு காலப்பகுதிகளில் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படும் மாற் றங்களை அறிந்து கொள்ளலாம். பல்வேறுபட்ட தொழிலாளர்களுக்கான சம்பள அ ள  ைவ நிர்ணயிப்பதற்கு விலைச் சுட்டெண் பயன்படுகின்றது. அதாவது விலை மட்ட அதிகரிப்புக் கேற்ப கூலியும் உயர்த்தப்படும். அத் துடன் அரசாங்க ஊழியரின் ச ம் ப ள அளவை நிர்ணயிப்பதற்கும் உதவுகின் றது.
வர்த்தக மாற்று விகிதத்தினை கணிப் பிடுவதற்கு ஏற்றுமதி, இ ற க் கு ம தி விலைச் சுட்டெண் கள் பயன்படுத்தப் படுகின்றன. பணத்தின் கொள்வனவு சக்தியில் ஏற் படும் மாற்றத்தினை அறிந்து கொள்
உசாவிய பொருளியலாளன் பூ இலங்கை மத்தியவங்
ஐ கேள்வி விற்பனை முறைமூலம் விற்பம் தற்போது "முற்கூட்டியே விலை தீர்ப செய்யப்படுகின்றது.
இலங்கையில் முதன்முறையாக பணமா பட்டு இலங்கை நாணயத்திற்கு எதிரா களுக்கு எதிராக வெளிநாட்டு நாணய. றவும் அவர்களுக்கு அதிகாரம் அளிக்.
வெ ணிகநாதம் - 1992

5.
ளலாம். இதனடிப்படையில் பணவீக் கத்தை கட்டுப் படுத்தக் கூடிய வகை. யில் நிதிசார்ந்த, நாணய நடை முறை களை கடைப்பிடிக்கலாம். பணக்கூலி. மெய்க்கூலி என்பவற்றை கணிப்பிட உதவுகின்றது. பொருட்கள் சேவைகளின் உற்பத்திக்கு ஊழியம் தனது காரணிச் சேவையினை வழங்கி யதற்காக பண வடிவில்  ெப ற் று க் கொள்ளப்படும் வருமானமே பணக்கூலி ஆகும். மாறாக மெய்க்கூலி என்பது பணக் கூலியின் கொள்வனவு சக்தி யாகும். அதாவது ப ண க் கூலியைக் கொண்டு எவ்வளவு பொ ரு ட் கள் சேவைகளை கொள்வனவு செய்ய லாமோ அதுவே மெய்க்கூலி ஆகும்.
நிறைவுரை:-
மேற்கூறியவற்றில் இருந்து விலைச்சுட் டெண்ணின் முக்கியத்துவம் விளங்குகின் றது. விலைச் சுட்டெண் ணில் ஏற்படும் மாற்றங்களின் மூலம் சராசரி விலை மட் டத்தின் போக்கினை அறிந்து, அதற்கேற்ற. வகையில் நடைமுறைக் கொள்கைகளை கடைப்பிடித்து, நாட்டில் பொருளாதார உறுதி, பொருளாதார அபிவிருத்தி, பொரு ளாதார வளர்ச்சி போன்றவற்றை ஏற் படுத்தமுடிகின்றது.
வை:-
ன் 1988 மகி அறிக்கைகள்
னை செய்யப்பட்ட திறைசேரி உண்டியல்கள் மானிக்கப்பட்ட முறை'' மூலம் விற்பனை
சற்றுநர்கள் 1991 ஆம் ஆண்டில் நியமிக்கப் சக அல்லது ஏனைய வெளிநாட்டு நாணயங் த் தாள்களை கொள்வனவு செய்யவும் மாற் கப்பட்டுள்ளது
தொகுப்பு:- க. சசிதரன்

Page 63
நிறைபோட்டிச் சந்தை தனியுரிமைச் சந்தை Competitive and Monopo
1. அறிமுகம்:-
கொள்வனவு ஆற்றலை உடைய நுகர் வோர்களின் தேவைகளை நிறைவு செய்யக் கூடிய ஓர் இடமே சந்தை ஆகும். அதாவது முரண்பட்ட இருவேறுபட்ட சக்திகளான நுகர்வோரும் வழங்குனரும் சந்திக்கும் நிலையிலேயே சந்தை அமைகின்றது. இத் தகைய சந்தை அமைப்பை வரையறையற்ற நுகர்வோர்கள் நாடித் தமது தேவைகளை நிறைவு செய்ய முனைகின்ற போது அங்கு வழங்குனர்கள் த ம து செல்வாக்கினை செலுத்துகின்றனர். இத்தகைய வழங்கு னர்களின் செல்வாக்கினை அடிப்படையா கக் கொண்டு தனியுரிமைச் சந்தை, சிலர் உரிமைச் சந்தை, நிறைபோட்டிச்சந்தை போன்ற வகைகளாக சந்தை அமைப்பை பிரிக்கலாம். எனினும் பொருளியல் உலகில் தனியுரிமைச் சந்தை, நிறைபோட்டிச்சந்தை அமைப்புக்களே பெரிதும் விமர்சிக்கப்படுகின் றன. ஆ த ல ா ல் இத்தனியுரிமையையும், நிறைபோட்டிச் சந்தையையும் இக்கட்டுரை யில் சுருக்கமாக ஆராய்வோம். 2. நிறைபோட்டிச் சந்தை
எந்தவொரு சந்தை வரையறையற்ற நுகர்வோர்கள் மத்தியில் வரையறையற்ற வழங்குனர்களை நிறைவாக உள்ளடக்கி காணப்படுகின்றதோ அச் சந்தையே நிறை போட்டிச் சந்தை ஆகும். எனினும் வரை யறையற்ற வழங்குனர்களை உள்ளடக்கி காணப்படுவது நடைமுறையில் அரிது என் பதனால் தூய நிறைபோட்டிச் சந்தையை காண்பது அரிதாகவேயுள்ளது .
இச்சந்தையின் பண்புகளை பின்வருமாறு குறிப்பிடலாம்
வணிக நாதம் 1992

நயும் யும்:- ஓர் அறிமுகம் ly market: an Introduction
த பிரியதர்சன்ஆண்டு 13 வர்த்தகப் பிரிவு.
எண்ணற்ற நிறுவனங்கள் காணப்படும் இச்சந்தையில் வழங்குனர்களாகவுள்ள ஒரேவகையான நிறுவனங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்த தே தொழில் அல்லது கைத்தொழி லாக அ மை கி ன் ற து. எனவே இங்கு நிறுவனம் என்பது தொழிலின் ஓர் அலகாக அமைகின் றது எனவே இத்தகையசந்தையில் ஓர் நிறுவனத்தின் வெளியீடுகள் சந்தை யின் மொத்த வெளியீட்டில் மிகச் சிறிய பகுதியாகவே காணப்படும். எந்த வொரு நிறுவனமும் விலையை உரு வாக்குவதில் செல்வாக்கு செலுத்த முடியாது. ஏனெனில் ஒவ்வொரு நிறு வனங்களும் நிறைபோட்டிச் சந்தை யில் தீர்மானிக்கப்படுகின்ற விலையி னை ஏற்பவையாக (Price Takers) காணப்படுகின்றன. எனவே குறிப் பிட்ட விலையில் எவ்வளவு பொருட் களையும் நுகர்வோர் நு கரக்கூடிய தாக இருக்கும். இதனால் ஒவ்வொரு நிறுவனங்களில் கேள்விக் கோடானது கிடையச்சுக்கு சமாந்தரமாக அமையும்.
நிறுவனத்தில்
P/AR/MR
- DARaMRaP
--> 0 கேள்வித் தொகை

Page 64
த. பிரியதர்சன்
A6
P என்பது விலை
AR என்பது சராசரி வருமானம்
MR என்பது எல்லை வருமானம்
D என்பது கேள்வி -
இவ் வரை படமானது நிறைபோட்டிச் சந்தையின் ஒரு நிறுவனத்தின் பொருளுக் கான கேள்விக் கோடாகும். இதனால் ஒவ் வொரு நிறுவனத்தின் கேள்விக் கோடு நிறை வான நெகிழ்ச்சியாக (முடிவிலி நெகிழ்ச்சி யாக) இருக்கும்.
II ஓர் இனத் தன்மை வாய்ந்த பொருள் - (Homoginous Product).
ஒரு சந்தை நிறை போட்டியாக இருப் பதற்கு தேவையான இன்னுமொரு பண்பு யாதெனில் அத் தொழிலில் உ ள் ள நிறு வனங்கள் யாவும் உ ற் ப த் தி செய் யு ம் பொ ரு ட் க ள் ஓரினத்தன்மை வாய்ந்த வையாக இருக்க வேண்டும். நிறை போட்டி யில் இயங்கும் நிறுவனம் ஒன்று உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு இன்னொரு நிறு வனம் உற்பத்தி செய்யும் பொருட்கள் அனைத்தும் பூரண பிரதியீடுகளாக இருக் கும். தரத்திலோ அல்லது நிறத்திலோ அல் லது மணத்திலோ அல்லது பொதி செய்யும் அளவிலோ வேறுபாடுகள் இருக்க மாட் 'டாது. இதுவும் நிறுவனங்கள் சந்தையின் விலையில் செல்வாக்கு செலுத்த முடியா மைக்கு ஒரு காரண மாகவும் அமைகின்றது.
III எண்ணற்ற நுகர்வோர் இருத்தல்
நிறை போட்டிச் சந்தையில் பெருமள விலான நுகர்வோர்கள் இருப்பார்கள், தனிப்பட்ட நுகர்வோனின் கேள்வி சந்தை யின் மொத்தக் கேள்வியில் மிகச் சிறிய பகுதி யாக இருக்கும். இதன் காரணமாக தனிப் பட்ட நுகர்வோன் ஒருவன் தனது கேள்வி யினை அதிகரிப்பதன் மூலமோ அல்லது குறைப்பதன் மூலமோ சந்தையின் விலை யில் செல்வாக்கு செலுத்த முடியாது.
வணிக நாதம்-1992

IV பிரவேச சுதந்திரம்
நிறை போட்டிச் சந்தை அமைப்பில் நிறுவனங்கள் உட்புகுவதற்கும், வெளியேறு வதற்கும் பூரண சுதந்திரம் உண்டு. தொழி லில் இயங்கும் நிறுவனங்கள் நீண்ட காலத் தில் குறிப்பிட்ட தொழிலை விட்டு வெளி யேறவோ அல்லது புதிய நிறுவனங்கள் உட் புகவோ முடியும். காரணம் நீண்ட காலத்தில் தான் நிறுவனங்கள் தனது பொறித்தொகுதி யினை மாற்றக்கூடியதாக இருக்கும் என்ப தாகும்.
V பகுத்தறிவுடைய நுகர்வோன்
நிறை போட்டிச் சந்தையில் இருக்கும். நுகர்வோர் யாவரும் பகுத்தறிவுடையவ ராவர். அவர்கட்கு சந்தையின் - நிலமை பற்றி பூரணமாக தெரிய வரும், சந்தையில் பொருட்களின் விலை, பொருட்களின் தரம் என்பனபற்றி நன்கு அறிந்து தமது வரை யறுக்கப்பட்ட வருமானத்தினைக் கொண்டு உச்ச பயனை பெற முயல்வர்.
3. தனி உரிமைச் சந்தை - 2
தனியுரிமைச் சந்தையானது
நிறை போட்டிச் சந்தைக்கு எதிரான, ஓர் சந்தை ஆகும். ஒரு சந்தையில் வழங்கல் செயற் பாட்டின் ஏகபோக உரிமை ஒரே ஒரு நிறு வனத்தை சார்ந்ததாக இருந்தால் அதனை தனியுரிமைச் சந்தை என அழைப்பர். இத் தகைய தனியுரிமை நிறுவனம் எண்ணற்ற நுகர்வோர் மத்தியில் விலையை நிர்ணயிக் கும் அதிகாரத்தை பெரும்பான்மையாக கொண்டிருப்பதனால் அந்நிறுவனத்தை விலையை உருவாக்குபவன் (Price maker) என அழைப்பர். நடைமுறையில் ஒரு தூய தனியுரிமை நிறுவனத்தை காண்பதரிது.
தனியுரிமை நிறுவனம் விலையை உரு வாக்குபவர் என்பதனால் விலையை பேதப் படுத்தலாம். நிறுவனம் விற்பனை அலகை கூட்ட விலையைக் குறைத்தல் வேண்டும். எனவே கேள்விக் கோடு பல்வேறு விலையில் மேலிருந்து கீழாக செல்லும்.

Page 65
47
தனியுரிமை நிறுவன கேள்வி நிலமை P/AR/MR
-- -- - - -
MR
\ D= AR=
ஓர் தனியுரிமைச் சந்தையின் பண்புகள் 1 ஓரே ஒரு நிறுவனம் மட்டும் உற்பத்தி
யில் ஈடுபடும்
11 ஒரே ஒரு நிறுவனம் மட்டும் உற்பத்தி
யில் ஈடுபடுவதால் அந்நிறுவனத்தின் 3 உற்பத்திக்கு பூரண பதிலீட்டுப் பொருள்,
இல்லை
II தனியுரிமைச் சந்தையில் பிரவேச சுதந்
திரம் இருக்கமாட்டாது அதாவது புதி தாக ஒரு நிறுவனம் உட்புகுவதை ஏற் கனவே உள்ள தனியுரிமை நிறுவனம் விரும்பாது
0 )"
ஒரு நிறுவனம் தனியு ரிமை பாராட்டு வதால் தனது உற்பத்தியின் அலகுகளை வேறுபட்ட விலையில் வழங்கும் விலை பேதப்படுத்தல் இடம் பெறும், இது நுகர்வோர் மிகையை உற்பத்தியாளர் வருமானமாக மாற்றவல்லது.
மேற்கூறப்பட்ட தனியுரிமை பண்பு கொண்ட சந்தையை நடைமுறையில் காண இயலாது. ஆ ன ா ல் ஏனைய அமைப்பை விளக்குவதற்கு தனியுரிமைச் சந்தை என்ற அமைப்பு உண்டு எனக் கருதிக் கொண்டாலே சிலர் உரிமை, நிறை போட்டி எனச் சந்தை
வணிகநாதம்-1992

நிறைபோட்டிச் சந்தையும்...
அமைப்புக்களை விளக்கக் கூடியதாக உள்ளது. ஒரு தனியுரிமைச் சந்தை பின்வரும்சூழ்நிலைகளில் தோன்ற முடி
யும். அவையாவன. " > |
ஆக்சவுரிமையின் காரணமாக தனியுரிமைச் சந்தை தோன்ற' லாம். அதாவது ஒருபொருளை உற்பத்தி செய்வதற்கு ஒர் நிறு வனம் கண்டுபிடித்திருக்கு மாயின், அவ்வுற்பத்தியை கு றி ப் பி ட்ட! காலம் வரை உற்பத்தி செய் வதற்கு அந்நிறுவனத்திடம் ஒப் படைக்கப்படுவதால் தனியுரி மைச் சந்தை தோன்றுகின்றது.
P
1I அரசாங்க சட்டத்தின் மூலம் ஒரு
11 பொருளை உற்பத்திசெய்வதற்கு ஒரு நிறுவனத்திற்கே அரசு அனுமதி வழங்கினால் தனியுரிமைச் சந்தை தோன்றும்.
III ஒரு நிறுவனம் பெருமளவு அளவுத்திட்ட
சிக்கனங்களை கைக்கொள்வதன் மூல மும் தனியுரிமைச் சந்தை தோன்றலாம். அதாவது இச் சிக்கனத்தன்மையை புதிய நிறுவனம் பின்பற்றுவது கடினம். இதனால் ஏற்கனவே உள்ள நிறுவனம் தனியுரிமை ஆகின்றது.
ஓர் நிறுவனம் ஓர் பொருளின் உற்பத்தி யில் வேரூன்றி இருக்குமானால் தனது பலத்தை பயன்படுத்தி பு தி ய நிறுவ னத்தை உட்புகவிடாது தடுத்து ஏக போக உரிமையை தனதாக்கலாம்.
V சில உற்பத்திகளைப் பொறுத்தவரை
யில் பெருமளவு உற்பத்திகளை மேற் கொள்ளுகின்ற போது சராசரிச் செலவு குறையும். இந்நிலையில் பல நிறுவனங் களிடம் உற்பத்தியை ஒப்படைப்பதால் செலவுக் கட்டுப்பாடு ஏற்படும் எனும் நிலை உரு வாகும் போதும். போன்ற வகையான நிலமைகளில் தனி யுரிமைச் சந்தை தோன்றும்.

Page 66
த. பிரியதர்சன்
48
4. வழங்குனர்களுக்கும் நுகர்வோர் களுக்குமிடையே நிலவும் உறவு
நிறை போட்டிச்சந்தையை பொறுத்தள் வில் வழங்குனர்களுக்கும் நுகர்வோர்களிற் கும் இடையில் நெருங்கிய தொடர்பு இல் லாத நிலை தோன்றின், பேரம் பேசி விலை கள் தீர்மானிக்கப்படும் சந்தர்ப்பம் தவிர்க் கப்படுவது மட்டுமன்றி, இருபகுதியினருக்கும் சந்தையில் வெவ்வேறு பகுதிகளில் ஏற்படும் கேள்வி, நிரம்பல் மாற்றங்கள் சம்பந்தமான அறிவு இல்லாது போகும் நிலை ஏற்பட்டு நிறை கொண்ட தன்மையை இச் சந்தை இழந்து விடும்.
ஆனால் தனியுரிமைச் சந்தையை எடுத்து நோக்குகின்ற போது இங்கு பேரம் பேசி விலையைத் தீர்மானித்து தமது தேவை களை நிறைவு செய்யும் சுதந்திரமான சந் தர்ப்பத்தை குறைவாகவே நுகர்வோன் பெற்றுக் கொள்ளமுடியும். ஏனெனில் இங்கு
வணிகநா த
வாழ்த்துகி
தமிழ் ஈழத்தி பிஸ்கற் உற்ப
லீ ல ா பே
சந்தை சதுக்க
கிளை: சீரணி, க
வணிகநாதம்-1992

வழங்குனர்கள் தமது ஏகபோக உரிமை  ைய க் கொண்டு விலையினை த ா 6 ன தீர்மானிப்பவனாக காணப்படுகின்றான். எ ன வே நுகர்வோன் வழங்குனர்சளுடன் நெருக்கமான உறவை வைத்திருக்க வேண்டு மென்ற அவசியமில்லை. 5. முடிவுரை
நுகர்வோர்களது தேவைகளை நிறைவு செய்வதற்கான சந்தர்ப்பத்தை அளிக்க வல்லவையாக நிறைபோட்டிச் சந்தையும் தனியுரிமைச் சந்தையும் காணப்படுகின்றது. எனினும் நுகர்வோர்களது தேவைகளை சுதந்திரமா.வும் திருப்திகரமாகவும் அளிக்க வல்லதாக நிறைபோட்டிச் சந்தை அமைப்பு காணப்படும் அவ்வேளையில் தனியுரிமைச் சந்தை அமைப்பானது நுகர்வோரது தேவை யை நிறைவு செய்தல் என்பது வழங்குனரது வழங்கத்தயாரான அளவு பொருட்களின் தன்மைகளில் தங்கியுள்ளது எனலாம்.
ம் சிறப்புற ன்றோம்
- 1 - 2 பட 4 ='' --
என் தரமான
த்தியாளர்கள்
0 - 0
க் ஹ வு ஸ்
ம சங்கானை
சண்டிலிப்பாய்.

Page 67
பெறுமானத் தேய்வு
Depreciation - Some Concep
பெறுமானத் தேய்வு என்பது நிலை யான சொத்துக்களின் பெறுமதியில் ஏற் படும் நிரந்தர குறைவைக் குறிக்கும். இங்கு சொத்தின் பெறுமதியில் ஏற்படும் இந்த இழப் பானது பாவனை, தொழில் நுட்பமாற்றம், சந்தை மாற்றம், காலக்கழிவு போன்றவை காரணமாக ஏற்படலாம்.
சந்தை, பாவனை, எ ஏற்படும் இ இங்கு
இலங்கை கணக்கியல் நியமம் 8ன்படி பின் வரும் சொத்துகள் பெறுமானத் தேய்வுக் குரிய சொத்துக்களாக வரைய 50) ற செய் யப்பட்டுள்ளன. அவையாவன:- 1. நிறுவனம் ஒன்றினால் உற்பத்திக்காக
அல்லது பொருட்கள் சேவைகளை விநி யோகிப்பதற்காக அல்லது மற்றவர் களுக்கு வாடகைக்கு விடுவதற்காக அல்லது நிர்வாகத் தேவைக்காக வைத் திருக்கப்படும் சொத்து கள், இவ் வாறான சொத்துகள் பராமரிப்பிற் காகவும், திருத்தத்திற்காகவும் வைத் திருக்கப்படும் சொத்துக்களையும் உள் ளடக்கும்.
இ..
0 0 “
நிறுவனம் ஒன்றில் மீள் விற்பனை செய்வதற்கோ அல்லது நுகர் விற்கோ அன்றி பெரும்பாலும் நிரந் தர தேவைக்கு வைத்திருக்கப்படும் சொத்துக்கள். ஒரு நிதியாண்டுக்கு மேல் பயன்படுத் தப்படும் நோக்கத்துடன் கொள்வனவு செய்யப்பட்டிருக்கும் அல்லது நிர் மாணிக்கப்பட்டிருக்கும் சொத்துக்கள்.
வரையறுக்கப்பட்ட பயன்தரு ஆயுட் காலத்தை கொண்டுள்ள சொத்துக்கள்.
வணிக நாதம் - 1 992

சில எண்ணக்கருக்கள்
ots
செல்வி. சா சிவசிவா, உதவி விரிவுரையாளர் வணிகமுகாமைத்து வதுறை,
யாழ். பல்கலைக்கழகம் பின்வரும் சொத்துக்கள் பெறுமானத் தேய்விற்கு விலக்களிக்கப்பட்டுள்ளன.
1. காடுகளும் அதே போன்று மீண்டும்
புத்துயிர் பெறக்கூடிய இயற்கை வளங் களும்.
கனிப்பொருள் உரிமைக்கான செலவு களும், கனிப்பொருள், இயற்கைவாயு, எண்ணெய் போன்ற மீண்டும் புதுப் பிக்க முடியாத வளங்களைக் கண்டு பிடிப்பதற்கும் எடுப்பதற்குமான செலவு.
3.
காணி அபிவிருத்திக்கும் முதலீட்டுச் '
சொத்துக்களுக்குமான செலவுகள்,
நன்மதிப்பும் ஏனைய அருவச் சொத் துக்களும்.
5. ஆராய்ச்சி அபிவிருத்திக்கான செலவு.
நிலையான சொத்து ஒன்றின் பெறு மானத் தேய்வைக் கணிப்பதில் அச் சொத் தின் கிரயமும் அல்லது மதிப்பிடப்பட்ட பெறுமதியும், அதன் பயன் தரு பொருளியல் ஆயுட்காலமும், இறுதிப் பெறுமதியும் பிர தானமானவையாகும்.
இறுதிப் பெறுமதி என்பது ஒரு சொத்து பயன் தரக்கூடியது என மதிப்பிடப்பட்ட அதன் பொருளியல் ஆயுட்கால முடிவில் அச் சொத்தால் கைத்தேறும் பெறுமதியைக் குறிக்கும். இதனை இன்னொரு வகையில் கூறுவோமாயின் நிலையான சொத்தொன் றினை அதன் பயன் தரு பொருளியல் ஆயுட் கால முடிவில் விற்பதாகக் கொண்டால் அந்நேரத்தில் அச்சொத்தின் விற்பனையால் கிடைக்கக்கூடிய தொகையாகும்.

Page 68
சா. சிவசிவா
30
பயன் தரு பொருளியல் ஆயுட்காலம் என்ப ஒன்றினால் எவ்வளவு காலத்திற்குப் பயன்படுத் அல்லது எவ்வளவு தொகையான உற்பத்தியை . யும் என எதிர்பார்க்கப்படுகின்றதோ அதுவே அ காலமாகும். இவ்வாறான பயன் தரு பொருளியல்
உ+ம் 1
சானர்லிமிட்டெட்டிலுள்ள நிலையான விபரங்கள் பெறப்பட்டுள்ளன:
சொத்து
ம
ஆகக்கூடி
(1)
இயந்திரம்
10,00,01
(2)
மோட்டார் வாகனம்
இங்கு இயந்திரத்தைப் பொறுத்தவரையில் கூடிய வகையில் புதிய சேர்க்கைகள் ஏதாவது ே யில் இயங்குமாயின் அதன் பயன் தரு ஆயுட்காலம் துடன் முடிவடைந்துவிடும். இதன்படி தொடர்ந். படுத்துவது குறிப்பிடப்பட்ட நிறுவனத்திற்குச் சிக் மோட்டார் வாகனத்தின் பயன்தரு ஆயுட் காலம் 10 வருடங்களின் பின்னர் பயன்படுத்துவது நிறுவன
ஒரு சொத்திலிருந்து பாவனை மூலம் எதிர் முறையில், மிகவும் பொருத்தமான பெறுமானத் கடமை நிறுவனம் ஒன்றின் முகாமைக் குரியதாகு சொத்துக்களுக்கு வெவ்வேறுபட்ட பெறுமானத் ஆனால் ஒரே வகையான சொத்துக்களுக்கு ஒரே
நிறுவனங்களால் பின்பற்றப்படும் பெறுமா மைக்கு ஏற்பவும். நிறுவனத்தில் அச் சொத்தின் தாக அமையவேண்டும் என்பதுடன் நியாயமான தேய்வு முறையானது மாற்றத்திற்கு உட்படக்கூ முறையானது முடிவுகளையும், நிதி நிலைமையின் மாயின் ஏற்கனவே பின்பற்றப்படும் பெறுமான புதிய முறைமூலம் பெறுமானத் தேய்வைக் கணிப் தர்கும். இவ்வாறான ஒரு நிலையில் பெறுமான கிரயமானது மாற்றம் செய்யப்படும் காலத்திலிரு தரக்கூடிய பொருளியல் ஆயுட்காலத்தில் பதிவ றம் கணக்கியல் கொள்கையில் ஏற்பட்ட மாற்ற கொள்ளப்படவும் வேண்டும்.
வணிகநாதம் --1992

து நிலையான சொத்து ஒன்று நிறுவனம் த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறதோ அச் சொத் திலிருந்து உற்பத்தி செய்யமுடி ச் சொத்தின் பயன் தரு பொருளியல் ஆயுட் ல் ஆயுட்கா லம் மீளாய்வு செய்யப்படலாம்.
சொத்துக்கள் தொடர்பாக பின்வரும்
திப்பிடப்பட்ட ஆயுட் காலம்
ய உற்பத்தி அலகு
வருடங்கள்
10 அலகுகள்
10
> அதன் உற்பத்தி இயலளவை அதிகரிக்கக் சர்க்கப்படாமல் தொடர்ந்து இதே நிலை
10 இலட்சம் அலகுகளை உற்பத்தி செய்து' து இவ் இயந்திரத்தை உற்பத்திக்கு பயன் கனமாக அமையமாட்டாது இதே போன்று ம் 10 வருடங்களாக அமையும் இதனையும் எத்திற்குச் சிக்கனமாக அமையமாட்டாது. பார்க்கப்படும் பயனிற்கு ஏற்ப நியாயமான
தேய்வு முறையைத் தெரிவு செய்யும் ம் வெவ்வேறுபட்ட வகையான நிலையான
தேய்வு முறைகள் பின்பற்றட் படலாம். - முறையே பின்பற்றப்படுதல் வேண்டும்.
. : 0
னத் தேய்வு முறையானது சொத்தின் தன் பயன்பாட்டிற்கு ஏற்பவும் பொருத்தமான ஒரு சந்தர்ப்பத்திலன்றி இப்பெறுமானத் டாது புதிதாக அறிமுகப்படுத்தப்படும் னயும் சரியான முறையில் சமர்ப்பிக்க உதவு த் தேய்வுக் கணிப்பீட்டு முறையிலிருந்து பீடு செய் வது ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய -த் தேய் வாகப் பதிவழிக்கப்படாதிருக்கும் தந்து மிகுதியாகவுள்ள அச் சொத்தின் பயன் ழிக்கப்படல் வேண்டும். இவ்வாறான மாற் மாகக் கருதப்படுவதுடன் அவ்வாறே கைக்

Page 69
உ+ம் 2
சொத்து மோட்டார் வாகனங்கள்
கொள்வ 1 - 1
கொள்வனவு செய்யப்பட்ட திகதி யானது ஒடுங்குபாக முறையைப் பின்பற்றி பெறுமானத் தேய்வு வருடாந்தம் 20%.
1.1.91இலிருந்து இச்சொத்து தொடர் விடுவது பொருத்தமானது எனத் தீர்மானிக்க
31. 12. 92ல் காண்பிக்கப்பட வேண்டிய கணிப்பிடப்படும். 1.1.1988 - 31.12.1992 வரையிலான க
1988
25,000 X
10
1989
20,000 X
10
1990
16,000 X
1.1.91ல் புத்தகப் பெறுமதி : - 2
1991க்கான பெறுமான,
20 12800 X - -
100
1992க்கான பெறுமானது
, 0 0
இதன்படி 31- 12- 1992 ல் இலாப மானத் தேய்வுத் தொகை ரூபா 2560/-
திரண்ட பெறுமானத் தேய்வாக 2 வேண்டிய தொகை.
12,200 + 2,560 + 2560
வணிகநாதம் - 1992

பெறுமானத் தேய்வு.
னவுத்திகதி - 1988
1 கிரயம் ரூபா 25,000/-
யிலிருந்து 31-12 - 1990 வரையும் கம்பனி
இச்சொத்துக்கு பெறுமானத்தேய்விடுகிறது ,
பாக நேர்கோட்டுமுறையில் பெறுமானத் தேய், க்கப்பட்டது. பெறுமானத்தேய்வு ஏற்பாடானது பின்வருமாறு
காலப்பகுதிகளுக்கான கணிப்பீடு:-
= 5,000/-
3,200/-
12, 200/- 5000 - 12, 200 = 12800/- 5 த்தேய்வு ஏற்பாடு
= 2560/-
த்தேய்வு ஏற்பாடு
20
100
நட்டக் கணக்கில் காட்டப்படவேண்டிய பெறு
ஐந்தொகையில் சொத்திலிருந்து கழித்துக் காட்ட
ரூ 17,320/- ஆகும்.

Page 70
சா. சிவசிவா |
ஒதுக், நேரடியானத் ?..
மேலும் பெறுமானத் தேய்வு ஒதுக்க மானது நேரடியாக எந்த ஒரு வருமான ஒதுக்கத்திலிருந்தும் ஈடு செய் ய ப் ப ட க கூடாது என்பதுடன் குறிப்பிட்ட நிதியாண் டுக்கான பெறுமானத் தேய்வுத் தொகை முழுமையாக இலாப நட்டக் கணக்கில் காட்டப்படுதல் வேண்டும். இலாப நட்டக் கணக்கிற்குக் கொண்டு வரப்படும் பெறு மானத் தேய்வான து ஐந்தொகையில் குறிப் பிட்ட அச் சொத்தின் வரலாற்றுக் கிரயத் தில் அல்லது மீள மதிப்பிடப்பட்ட தொகை யில் இவை இரண்டில் எவ்வாறு காட்டப் படுகின்றதோ அதற்கேற்பவே கணிப்பிடப் படல் வேண்டும்.
அத்துடன் நிலையான சொத்துக்களின் பயன் தரக் கூடிய பொருளியல் ஆயுட் கால மானது ஒழுங் ாக மீளாய்வு செய்யப்படல் வேண்டும். ஒரு சொத்தின் பயன் தரக் கூடிய ஆயுட் காலத்தின் பெறுமதி அனுபவத்தின் காரணமாகவோ அல்லது மாற்றமடைந்து சந்தர்ப்பத்தின் விளைவாக மாற்றம் செய் யப்படல் வேண்டும் எனக் கருதப்பட்டால் அச் சொத்தின் பெறுமதி மீ ள க் கு றி ப் பிடப்பட்டு, மாற்றம் செய்யப்பட்ட அ ச் சொத்தின் பொருளி பல் ஆயுட் காலத்தில் பதிவழிக்கப்படல் வேண்டும். ஆனால் இந்த நடவடிக்கை காரணமாக வரும் வேறுபாடு மீண்டும் இலாப நட்டக் கணக்கில் பதியப் - படக் கூடாது.
உ+ம் 3
1 - ' - 1985ல் ரூபா 26, 000/- பெறுமதி யான இயந்திரம் ஒன்று ' 'சீபா'' நிறுவனத் தால் கொள்வனவு செய்யப்பட்டது. இதன் பொருளியல் பயன் தரு ஆயுட் காலம் 20 வருடங்களாகும். 1 1 - 1991ல் மேலும் புதிதாக ரூபா 10, 000 /- பெறுமதியான உதிரிப்பாகம் பொருத்தப்பட்டதனால் இவ் இயந்திரத்தை மேலும் 4 வருடங்களுக் குப் பயன்படுத்த முடியும் என மதிப்பீடு செய் யப்பட்டது. இம் மாற்றத்தின் பின் இவ் இயந்திரம் ரூபா 40, 000/- ஆக மறுமதிப் பீடு செய்யப்பட்டிருந்தது. நிறுவனம் இயந் திரத்திற்கு நேர்கோட்டு மூ றையில் பெறு --
வ ணிக நாதம்-1992

மானத்தேய்வை மேற்கொள்வது வழக்கம். இச் சொத்திற்கு இறுதிப்பெறுமதி எதுவு. மில்லை. இதன்படி மேலதிக மதிப்பீட்டுத் தொகை:- 1) ஒரு வருடத் தேய்வு 26, 000
-- = 1, 300
2) 1. 1 - 1985 - 31- 12 - 1990 வரை
யிலான 6 வருடங்களுக்கான திரண்ட பெறுமானத் தேய்வு ரூபா 7, 800 /-
ஆகும். 3) 1 - 1 - 1991 ல் இச் சொத்தின் புத்தகப்
பெறுமதி ரூபா 18, 200 /- 4) மறுமதிப்பீட்டு தொகை ரூபா 40, 000
(-) உதிரிப்பாக பெறுமதி 10, 000
30, 000
5) கே.
மேலதிக மறுமதிப்பீட்டுத்  ெத ர  ைக 30, 000 - 18, 200 = ரூபா 11, 800 /- ஆகும்.
இந்த அடிப்படையில் ரூபா 11, 800/- ஐ இலாபநட்ட கணக்கில் காட்டக் கூடாது. இத் தொகை ஐந்தொகையில் சொத்தின் புத்தகப் பெறுமதியுடன் கூட்டப்படும் அதே நேரம் ஒதுக்கமாக ரூபா 11, 800 /- காட் டப்படும்.
6) 31 - 12 - 1991 ல் இலாபநட்டக் கணக் கிலும், ஐந்தொகையிலும் காட்டப் படும் பெறுமானத் தேய்வுத் தொகை பின்வருமாறு கணிப்பிடப்படும்.
சொத்தின் மிகுதியாக உள்ள வாழ்க் கைக் காலம் ட
24 - 6 = 18 வருடங்கள் 1
1991க்கான பெறுமானத்  ேத ய் வு த் தொகை:-

Page 71
- - -30, 000
ரூபா 1
18 இலாப நட்டக் கணக்கில் 1667 ரூபாவும் ? முன்னைய வருடங்களுக்கான ஏற்பாடு 7, இவ்வருட பெறுமானத் தேய்வு ., - 1,
ரூபா 94.
லா?எடு"'ல ஆ
அடுத்து சொத்தின் பெறுமதியில் நி மாயின், அத்துடன் புத்தகப் பெறுமதி மீள வாறான தொகைக்கு வரக்கூடியவாறு சொ. வேண்டும். என்பதுடன் அத்தொகையானது பொருளியல் ஆயுட் காலத்தில் பதி வழிக்கப்பட பட்ட பின்னர் அது தேவையில்லாது போகு யற்றதாகக் கருதப்படுகிறதோ அத்தொகை
உ + ம் 4
பின்வரும் தகவல்கள் ஒரு இயந்திர 1. 1, 1985ல் - கிரயத்தில் - ரூப்
பயன் தரு பொருளியல் வாழ்க்கைக் பெறுமானத் தேய்வு நேர்கோட்டு முறையில் 31, 12. 90ல் இவ் இயந்திரம் ரூபா 60,000/- இதில் ஏற்படும் பெறுமதிக் குறைவு மீளப் ெ இயந்திரம் ரூபா 40,000/- ஆக மீண்டும் மர பெறுமானத்தேய்வு ஏற்பாடு தொடர்பாக
(1) 1985 - 1990 வரையிலான பெறுமான 31.12.90 ல் புத்தகப்பெறுமதி 200,
மறுமதிப்பீட்டு தெ
> 0 0
மீளப்பெறமுடியாத இயந்திரத்தின் எஞ்சிய பயன் தரு அ
10-6 = 4 வருடங்கள் எனவே 31.12 90 ல் உள்ள நிலைக பெறுமானத்தேய்வு ஒதுக்கத் தொகை
60,000
= ரூ 15,000/- 4
2) 31. 12. 92 ல் உள்ள நிலையின் படி
1. 1. 85 - 31. 12. 92 வரையிலான
வணிக நாதம்-1992

பெறுமானத் தேய்வு
, 667 /- ஆகும்.
ஐந்தொகையில் திரண்ட பெறுமானத் தேய்வாக
300
167
57/- காட்டப்படும்.
ரந்தரக்குறைவு எச்சந்தர்ப்பத்திலாவது ஏற்படும் ப் பெறமுடியாது எனக் கருதப்படுமாயின் அவ் த்தின் பெறுமதியானது குறைத்து எழுதப்படல் சொத்தின் மிகுதியாகவுள்ள பயன் தரக்கூடிய டல் வேண்டும். இவ்வாறான ஏற்பாடு செய்யப் மாயின் அந்த ஏற்பாடு எந்தளவிற்கு தேவை பால் திரும்பப்பதியபப்டுதல் வேண்டும்.
சாதனம் தொடர்பானவை - க - T 200,000/-
காலம் - 10 வருடங்கள் 5) மேற்கொள்ளப்படுகிறது. -ஆக மறுமதிப்பீடு செய்யப்பட்டிருந்ததுடன் பெறப்பட முடியாதிருந்தது. 31. 12, 92ல் இவ் வமதிப்பீடு செய்யப்பட்டது.
ன கணிப்பீடுகள் பின்ருமாறு அமையும்:-
த்தேய்வு ஒதுக்கம் ரூ 120,000/- 000-120,000 = 80,000/- நாகை
60,000/-
தொகை
20,000/-
யுட்காலம்
ளின்படி எஞ்சிய வாழ்க்கைக் காலத்திற்கான
கும்
- ஏற்பாடு ரூபா 170,000/-

Page 72
சா. சிவசிவா 1
54;
31, 12.92 ல் புத்தகப் பெறுமதி 200,
மறுமதிப்பீட்டு தொ
தேவையற்ற ஏற்பா மிகுதியாக உள்ள பயன்தரு ஆயுட்கா டாந்தம்,
40,000
- = ரூபர் 20,000/- ஆகும்.
நிலையான சொத்துக்கள் தொடர்பா சொத்துக்களில் சிலவற்றை அல்லது எல்லா செ தொகைகளிலேயே நிதிக்கூற்றுக்களில் உள்ளடக் சொத்துக்களுக்கான பெறுமானத் தேய்வு தேறி தியாக உள்ள பயன் தரு ஆயுட்காலம் என்பவற் மறுமதிப்பீடு செய்யப்படுவதற்கு முன்னர் சாட் தேய்வு இலாப நட்டக் கணக்கில் திரும்பப் பதிய குறைவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு பின்னர் தொகையை இலாபநட்டக்கணக்கில் திரும்பவும்
உ + ம் 5
“ 'ரீனா லிமிட்டெட்டின்'? 31-12-90கப்பட்ட விபரம் பின்வருமாறு:-
சொத்து
கொள்விலை
195)
இயந்திரம் ரூபா 60,000/-
இந்த இயந்திரம் 1-1-87ல் கொள்வன
நேர்கோட்டு முறையில் 5%தில் பெறும் தச் சந்தர்ப்பத்திலாவது மறுமதிப்பீடு செய்யப்ப நிதிக் கூற்றுக்களில் தொடர்ந்து இயந்திரத்தை கையாகும். இவ் இயந்திரத்தின் பயன் தரு பெ 1-1- 91ல் இச் சொத்து ரூபா 81,000/- ஆக ப பெறுமதி ரூபா 1,000/- ஆக இருக்கும்.
31-12 - 91க்கான பெறுமானத் தேய்வுக்
மறுமதிப்பீட்டு பெறுமதி - இறுதி மிகுதியாக உள்ள பயன் தரு பொருளிய
81,000 - 1,000
ரூபா 5,0
16
வணிக நாதம் - 1992

000 - 170,000 = ரூ 30,000/- இக
= ரூ 40,000/-
10,000/- கலம் 2 வருடங்களுக்குமான ஏற்பாடு வரு
சக நிறுவனம் ஒன்றின் கொள்கை இந்த சாத்துக்களையும் மறுமதிப்பீடு செய்யப்பட்ட க்க வேண்டும் என இருந்தால் இத்தகைய ய மறுமதிப்பீடு செய்யப்பட்ட விலை மிகு மறின் அடிப்படையில் அமைதல் வேண்டும்.
டுதல் செய்யப்பட்ட ஏதாவது பெறுமானத், ப்படக்கூடாது. ஆனால் நிரந்தர பெறுமதிக் அதில் தேவையற்றது எனக் கருதப்படும் 5 பதியலாம்.
ல் இருந்தவாறான ஐந்தொகையின் சுருக்,
தேறிய தொகை
ரெண்ட பெறுமான தேய்வு ஒதுக்கம்
ரூ. 12000/-
ரூ. 48,000/-
வு செய்யப்பட்டதாகும்.
மானத்தேய்வு செய்வதுடன் இயந்திரம் எந் டுமாயின் மறுமதிப்பீட்டுப் பெறுமதியிலேயே க் காட்டுவது என்பது நிறுவனத்தின் கொள் ஈருளியல் ஆயுட்காலம் 20 வருடங்களாகும். மதிப்பீடு செய்யப்பட்டது. இதன் இறுதிப்
5. !
= கணிப்பீடு.
ப்ெ பெறுமதி பல் ஆயுட்காலம்.
D00/-

Page 73
55
சொத்தின் முழு பயன்தரு பொருள் 4 வருடங்கள் சொத்துப் பயன்படுத்தப்பட்ட செய்யப்படுகிறது. எனவே மிகுதியாக உள்
20 -4 = 16 வருடங்களாகும். இ ஐந்தொகையில் காண்பிக்கப்படும்.
சொத்து
மதிப்பீட்டு பெறுமதி
இயந்திரம் - 81,000
இலாப நட்டக் கணக்கில் தாக்கல் தொகை ரூ. 5,000/- ஆகும்.
இறையில் காணி தொடர்பாக: இ தில்லை. ஆனால் ஒழிந்து போதலுக்கு அல் மதி உட்படுத்தப்பட்டிருந்தால் இறையில் செய்யப்படல் வேண்டும். இவ்வாறான ஒரு யானது குறைத்துக் காட்டப்படுதல் வேண்டு
இவை தவிர பெறுமானத்தேய்வு செ பட்டு ஒவ்வொரு தலையங்கங்கள் தொடர் வெளிப்படுத்தப்படல் வேண்டும்.
(1) பயன்படுத்தப்பட்ட பெறுமானத் தே (2) பயன் தரு பொருளியல் ஆயுட்காலம் அ (3) காலப்பகுதிக்கு சாட்டுதல் செய்யப்ப (4) திரண்ட பெறுமானத் தேய்வில் ஏற்ப
பயன்படுத்தப்பட்ட பெறுமானத் ரே ஆயுளில் மாற்றம் ஏற்பட்டிருக்குமாயின் அம் தாக இருப்பின் அது அம்மாற்றம் ஏற்பட்ட அத்துடன் சொத்துக்கள் மீள மதிப்பீடு செய் மதிப்பீட்டின் விளைவு கணிசமான தாக இரு டில் வெளிப்படுத்தப்படல் வேண்டும்.
Reference : 1) Sri Lanka Accounting Standard 2) Frank Wood - Business Account 3) Spicer and Peglers - Book-Kee
வணிக நாதம் -- 1992

பெறுமானத் தேய்வு
சியல் ஆயுட்காலம் 20 வருடங்களாகும். இதில் - பின்னர் பயன் தரு ஆயுட்காலம் மறுமதிப்பீடு எ பயன்தரு பொருளியல் ஆயுட்காலம்.. தே அடிப்படையில் இச் சொத்து பின்வருமாறு
தேறியமீதி
திரண்ட பெறுமான
தேய்வு 17,000
64,000
செய்யப்படவேண்டிய பெறுமானத் தேய்வுத்
தெற்குப் பெறுமானத்தேய்வு செய்யவேண்டிய லது பாதகமான பாதிப்பிற்கு காணியின் பெறு காணிக்கு பெறுமானத்தேய்வு ஏற்பாடானது சந்தர்ப்பத்தில் இறையில் காணியின் பெறுமதி
சய்யப்படக்கூடிய சொத்துக்கள் வகைப்படுத்தப் சபாகவும் நிதிக் கூற்றுக்களில் 4 பின்வருமாறு
ய்வுமுறை.
ல்லது பயன்படுத்தப்பட்ட பெறுமானத் தேய்வு.
ட்ட பெறுமானத்தேய்வு.
ட்ட அசைவு. . -
நய்வு முறையில் அல்லது பயன்தரு பொருளியல்
மாற்றம் காரணமான விளைவு கணிசமான . ஆண்டில் வெளிப்படுத்தப்படல் வேண்டும், யப்பட்டு சாட்டுதல் செய்யப்படும் பெறுமான ப்பின் அது மறுமதிப்பீடு செய்யப்பட்ட ஆண்
ing - 1- Fifth Edition. ping and Accounting - 21st Edition.

Page 74
பங்குடமையை கலை. Dissolution of Partnership பானா -லா - 1 - நடிக ட கட கடிகா
அறிமுகம்
பங்குடமை என்பது தனியார் துறை யிலே தனி வணிகத்துக்கு அடுத்ததாக தோற்றுவிக்கப்பட்டதான ஒரு தொழில மைப்பாகும். இது தனி வணிகத்தின் குறை பாடுகளை நீக்கி அதன் நன்மைகளை பெற்று அதனிலும் பார்க்க சிறந்த அமைப்பாக செயற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. பங்குடமைக்கான வரைவிலக்கணத்தை பங் குடமைச் சட்டத்திற்கமைய பின்வருமாறு குறிப்பிடமுடியும். இலாபத்தை அடிப் படை நோக்கமாக கொண்டு உருவாக்கப்படும் ஒரு தொழிலமைப்பில் உள்ள நபர்களுக்கி டையே நிலவுகின் றதான ஒரு வகைப்பட்ட உறவே பங்குடமையாகும், 22 பங்குடமையின் அங்கத்தவர்கள் பங்காளர்கள் என அழைக் கப்படுவர். பங்குடமைகள் பொதுவாக வியாபார பெயர்ப்பதிவு அதிகாரச் சட்டத் திற்கமைய பதிவு செய்யப்படுகின்றது. பங் குடமையில் உள்ள அங்கத்தவர்களின் எண் ணிக்கையை கம்பனிச் சட்டம் 2 தொடக்கம் 20 ஆக வரையறுத்துள்ளது. பங்குடமைகள் எப்பொழுதும் சட்ட ஆளுமையற்ற அமைப் பாகவே இருக்கும்.
இயங்கிக் கொண்டு வந்த பங்குடமை ஒன்று இல்லாது போதல் பங்குடமைக் கலைப்பு எனப்படும், அதாவது பங்குடமை ஒன்று தனது வழமையான செயற்பாட்டை நிறுத்திக் கொள்ளுதல் என்பதாக பொருள் படும், பங்குடமை யொன்றின் கலைப்பின் போது பங்காளர்கள் ஒப்பந்தம் செய்திருப் பின் ஒப்பந்தப்படியும் ஒப்பந்தம் இல்லாதி ருப்பின் பங்குடமைச் சட்டம் கூறியவாறும் செயற்படுதல் அவசியமாகும். (1890ம் ஆண்டு பங்குடமைக் கட்டளைச் சட்டத் தின் 44ம் பிரிவு பங்குடமைக் கலைப்பு பற்றி
வணிகநாதம்-1992

ந்தல்
கெ. துரியோதனன் ஆண்டு - 13 வர்த்தகப் பிரிவு
கூறுகின்றது.) பங்குடமை ஒன்றினைக். கலைக்கும் போது அதனுடன் பல கணக்கு கள் சம்பந்தப்படும்.
தொகுப்பு (i) பங்குடமை ஒன்றினைக் கலைக்கும்
போது, (a) நீதி மன்றத்தின் கட்டாயத்தின்
பேரில் கலைக்கலாம். (b) பங்காளர் தம் விருப்பத் தின் பேரில்
கலைக்கலாம். (ii) பங்குடமை ஒன்றை இருவகைகளில்
கலைக்கலாம். (a) முழுமையான கலைப்பு
(b) பகுதி பகுதியான கலைப்பு (ii) பங்குடமை ஒன் றினைக் கலைக்கும்
போது நன்மதிப்பு ஒரு சில சந்தர்ப்பத்
தில் எழும். (iv) பங்குடமை ஒன்றினைக் கலைக்கும்
போது பல கணக்குகள் சம்பந்தப்
படும். (v) பங்குடமை ஒன்றினைக் கலைக்கும்
போது கடன் தீர்ப்பனவு சட்டத்தின் படி நிகழுதல் வேண்டும்.
மேற் கூறப்பட்ட விடயங்களை கவ னத்தில் கொண்டு பங்குடமையை கலைத் தல் வேண்டும். (i) கலைப்பு நிகழ்வதற்கான சந்தர்ப்பம். (8) நீதிமன்றத்தின் கட்டாயத்தின் பேரில்
கலைத்தல். நீதிமன்றக் கட்டாயத்துக்கிணங்க பங் குடமை ஒன்றை கலைக்கும்போது
• 0

Page 75
பங்குடன் நீதிபதி க் கலை:
மாவட்ட
நீதிமன்றம் உத்தரவிட்டு பங்குடமை ஒன்றைக் கலைத்து விடும். மாவட்ட நீதிபதி பல சந்தர்ப்பத்தில் பங்குடமை ஒன்றைக் கலைத்துவிடும் படி உத்தரவிட முடியும்.
பங்காளியொருவர் சம நி  ைல  ைய இழந்தபோது பிற பங்காளிகளோ அல் லது அவரின் உறவினர்களோ நிறு வனத்தை கலைக்குமாறு நீதிமன்றத் திடம் வழக்குத் தொடர்ந்திருப்பின்,
(2) தன் கடமைகளை
இனி என்றுமே செய்யமுடியாத நிலை ஒரு பங்காளிக்கு ஏற்படும்போது பிற பங்காளி கள் நிறு
வனத்தைக் கலைக்கக் கோரியிருப்பின், (3) தொழிலை பாதிக்குமளவில் பங்காளி
யொருவர் நடந்து கொண்டிருப்பின் அதன் காரணமாய்ப் பிற பங்காளிகள் கலைக்கக் கோரியிருப்பின் பங்காளி யின் தவறான நடத்தை நிறுவனத்தின் தொழில் பற்றியிருக்கவேண்டுமென்ப தில்லை)
(4) பங்குடமையின் ஒப்பந்தத்தை ஒரு பங்
காளி அடிக்கடி மீறுகின்ற காரணத் தால் பிற பங்காளிகள் அவருடன் தங் கள் கடமைகளைச் செய்ய இயலாது போயின்,
5) நிறுவனத்தில் உள்ள தன் பங்கு முழு
வதையும் வேறொரு வரைப் பங்காளி யாக ஆக்கும் நோக்கத்துடன் மாற்
றிக் கொடுத்திருப்பின், (6) இனி தொழிலை நட்டத்திலன்றி ஆதா
யத்தில் நடத்த இயலாதென்றால்,
0 0 *
(7) வேறு தகுந்த காரணங்கட்காகவும்
நீதிமன்றம் பங்குடமையை கலைக்க ஆணையிடலாம்.
மேற்கூறிய நிலைகளில் பங்குடமை ஒன் றினை கலைத்துவிடும்படி நீதிமன்றம் உத் தரவிடும். (b) பங்காளர் தம் விருப்பத்தின் பேரில்
பங்குடமையை கலைத்தல்: - வங்காளர்
வணிகநாதம் 1992

57
பங்குடமையை கலைத்தல்
தம்விருப்பத்தின் பேரில் பங்குடமையை க லை ப் ப தா யி ன் பொதுப்பங்கா ளர் விரும்பி பங்குடமையை கலைக்குமாறு கோரவேண்டும். இது பல சந்தர்ப்பத் தில் நிகழும்.
(1) பங்குடமை குறிப்பிட்ட காலத்திற்
கென்று அமைக்கப்பட்டிருப்பின் அக்
காலக்கெடு முடிந்ததும்,
(2) குறிப்பிட்ட செயலுக்காக அவ்வமைப்பு
தொடங்கப்பெற்றிருப்பின் அச்செயல்
முடிவு பெற்றதும்,
(3) பங்காளி யொருவர் இறந்தவுடன்,
(4) பங்காளியொருவரை நொடிப்பு நிலை
யடைந்தவர் (திவாலா - Insolvent) என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து விட் டால்,
(5) பங்காளியொருவர் விலகும்போது
மேற்கூறிய சந்தர்ப்பத்தில் பங்குடமை ஒன்றைப் பங்காளர் விரும்பி கலைத்து விட வேண்டும். இல்லையேல் அப்பங் குடமை பிற்பங்காளிகளால் தொடர்ந் தும் நடத்தப்படலாம். அவ் வ ா று தொடர்ந்து நடத்தப் பங்காளிகள் ஒப்ப வில்லையெனில் பங்குடமையே கலைந்து விட்டதாக பொருள்படும். கீழே தரப் படும் சந்தர்ப்பத்தில் பங்குடமை உறவு மட்டுமன்றி பங்குடமையே கலைந்து விட்டதாக பொருள்படும்.
(1) அனைத்து பங்காளிகளும் பங்குக
மையை கலைத்து விட உடன்பட்டால், (2) ஒருவரை தவிர ஏனைய பிற பங்கா
ளிகள் அனைவரும் வக்கற்றவர்களாகி
விடின், (3) பங்குடமை நடத்தி வரும் தொழிற்
சட்டத்திற்கு புறம்பானதாகி விட்
டால், (4) விரும்பிய பங்குடமையில் (Partnership
at wil) பங்குடமையை கலைத்து விட தன் விருப்பத்தை பங்காளியொருவர் அறிவித்துவிடின்,

Page 76
செ. துரியோதனன்
58
(5) நீதிமன்றம் பங்குடமையை கலைத்து
விட கட்டளை பிறப்பித்தால்,
(ii) பங் சுடமை ஒன்றை எந்தவழியில் கலைப்பு
செய்தல்
(4) பங்குடமை ஒன் றினை முழுமையான
கலைப்பு செய்தல் இயங்கிக்கொண்டு வந்த பங்குடமை ஒன் றினை கலைக் கும்போது அதனை முற்றாகவே இல் லாது செய்வதனை குறிக்கும். இங்கு உபங்குடமையினை மு ழு  ைம ய ா க பொறுப்பேற்று (எல்லாச் சொத்துக்க ளையும், பொறுப்புக்களையும்) அல்லது அதில் பெரும்பகுதியை எடுத்து வி யா பாரத்தை தொடர்ந்து நடத்தக்கூடிய (செயற்படு அமைப்பு) ஒரு வாங்குப் வரை நிறுவனம் கண்டுபிடிப்பதில் வெற்றி பெறலாம். இவ் விற்பனை முழுமையான விற்பனை எனப்படும்.
(b) பங்குடமை ஒன்றினை பகுதிபகுதியாக
கலைப்பு செய் தல். இயங்கிக்கொண்டு வந்த பங்குடமை ஒன்றினை இல்லாது செய்யும் போது பங்குடமையின் சொத் துக்களை ஒருவருக்கன்றி ஒவ்வொரு வருக்கும் தனித்தனியாக விற்பனை செய்வ தனை குறிக்கும். இதனையே பகுதி பகுதியான விற்பனை என்பர். இவ் வாறான சந்தர்ப்பத்தில் பங்குடமையின் நன் மதிப்பை (Good Will) விற்க முடி யாது.ஏனெனில் தொடர்ந்து நடாத்தும் நோக்கத்துக்கு எடுக்காவிடில் நன்மதிப் புக்கு பெறுமதி இல்லை என்பதனா லாகும்.
(ii) பங்குடமை ஒன்றினை கலைக்கும் போது நன்மதிப்பு எழும் சந்தர்ப்பம். பங்குட மை ஒன்றினைக் கலைக்கும் போது நன் மதிப்பு முழுமையான விற்பனையிலேயே இடம்பெறும். ஏனெனில் நிறுவனம் வகித்து வந்த நன் மதிப்பு தொடர்ந்தும் நுகர்வோர் மத்தியில் காணப்படும். எனவே இந்நன்மதிப்பும் உள்ளடக் கியே முழுமையான விற்பனை இடம் பெறும். ஆனால் பகுதி பகுதியான
வணிகநாதம் -1992

கலைப்பின் போது நன்மதிப்பை சேர்த்து விற்கமுடியாது. ஏனெ னில் இங்கு நிறு வனத்தின் சொத்துக்கள் தனித்தனியே விற்கப்படுவதனால் அதன் பெறுமதி மட்டுமே உள்ளடக்கப்படும். எனவே இங்கு நன் மதிப்பு எழுவதற்கு சந்தர்ப் 8ம் ஏற்படாது. (iv) பங் குடமை ஒன்றினைக் கலைக்கும்போது
தொடர்புறும் கணக்குகள். (a) தேறிய பணக்கணக்கும் தேறிய இலாப
நட்டக்கணக்கும். சாதாரணமாக நிலையான சொத்துக் களின் விற்பனையை பொருத் ஈமான விற்பனைக் கணக்கில் காட்டுவது போல் பங்குடமைக் கலைப்பின் போது சொத் துக்கள் விற்பனையாலும் பொறுப்புக் கள் தீர்ப்பன வாலும் ஏற்படும் இலாப நட்டத்தைக் கணிப்பதற்குத் தயாரிக் கப்படும் கணக்கே தேறிய பணக்கணக்கு எனப்படும். ஏனெனில் இது எல்லா சொத்துக்களும் காசுக்குமாறும் (தேறும்) முறையை காட்டுகின்றது. தேறிய பணக் கணக்கு இச்சந்தர்ப்பங்களில் கலைப்பு கணக்கு எனப்படும். இது நிலையான சொத்துக்களது விற்பனைக் கணக்கை போன்றதாகும். இதில் சொத்துக்களது பதிவழிக்கப்படாத கிரயமீதியுடன் விற் பனையால் கிடைத்த பெறுமதியை ஒப் பிட்டு விற்பனையினால் ஏற்பட்ட இலாப நட்டத்தைக் கண்டுபிடிக்க உதவு கின் றது.
0 ) .
ஒவ்வொரு சொத்துக்களது விற்ப னையும் பொறுப்புக்களின் செலுத்தல் களும் தனித்தனி கணக்கில் பதிவு செய் யப்பட்டு குறித்த நடவடிக்கைகளின். இலாப நட்டங்கள் பின்பு ஒரு பொது வான கணக்குக்கு மாற்றப்பட்டு எல்லா நடவடிக்கைகளிலும் ஒன்று சேர்ந்த பெறுபேறுகள் கணிக்கப்படுகின் றன . இப்பொதுக் கணக்கு தேறிய இலாப நட்டக்கணக்கு எனப்படும். இம் முறை அதிகமாகப் பகுதிபகுதியான விற்பனை முறையில் கையாளப்படுகிறது. இதில்

Page 77
ஒவ்வொரு சொத்துக்களினதும் அல்லது ஒரு தொகுதியான சொத்துக்களது விற் பனை தனியாக வைக்கப்பட்டு அவற் றின் இலாப நட்டங்கள் தனித்தனி யாகக் கணிக்கப்படுகின்றது.
(b) சொத்துக்கள் தொடர்பான கணக்குகள்.
பங்குடமைச் சொத்துக்களை வெளியா ளருக்கு விற்கலாம் அல்லது ஒன்று அல் லது ட ல சொத்துக்களை ஒரு பங்காளர் எடுத்துக் கொள்ளலாம். விற்பனை யானது முழுமையான அல்லது பகுதி பகுதியான விற்பனை யாக இருக்கலாம். தேறிய இலாப நட்டக் கணக்கு கேட்கப் படாத சந்தர்ப்பத்தில் வழக்கமாக எல் லாச் சொத்துக்களும் பங் கா ளர் எடுத்த சொத்துக்கள் உட்படத் தேறிய பணக் கணக்குக்கு மாற்றப்படும். இக்கணக்கில் சொத்துக்கள் விற்பனையால் வசூலித்த பணம் செலவு வைக்கப் படும். இதன் வரவுப்பதிவான து வ ா ங் கு ப வ ர து கணக்கு, பங்காளர் கணக்கு, காசுக் க ணக்கு என்பவற்றில் பொருத்தமான கணக்கில் பதியப்படும், முழுமையான விற்பனையில் விற்பனைத் திகதியில் உள்ள காசும் ஏனைய சொத்துக்களுடன் சேர்த்து விற்கப்படும்.
(c) பொறுப்புக்கள் தொடர்பான கணக்குகள்.
, 0 0
(i) பங்குடமையின் பொறுப்புக்கள் வாங்கு
பவரால் அல்லது பங்காளரால் பொறுப் பேற்கப்பட வேண்டும். இல்லையேல் நிறு
வனம் கொடுத்துத் தீர்க்க வேண்டும். (ii) வாங்குபவரது கணக்கில் ஏற் கனவே
சொத்துக்களது விற்பனை விலை வரவு வைக்கப்பட்டிருக்கும். எனவே பொறுப் புக்களை வாங்குபவர் ஏற்கும் போது இது வாங்குபவரது கணக்கில் செலவு வைக்கப்படும். இதனால் வாங்குபவர் கொள்வனவுக் கைமாறுக்கு ஒரு வருமதி யாளர் போல் காட்டப்படுவார்.
ஒரு மாற்று முறையாக வாங்குபவரால் எடுக்கப்பட்ட பொறுப்புக்கள் தேறிய பணக்கணக்குக்கு செலவாக மாற்றப்
வணிகநாதம் 1992

பங்குடமையை கலைத்தல்
படலாம். அப்படியான சந்தர்ப்பத்தில் தேறிய பணக் கணக்கில் விற்பனை விலைக்குப் பதிலாகக் கொள்வனவு கை மாற்றைச் செலவு வைத்து அதனை வாங்குபவரது கணக்கில் வரவு வைக்க வேண்டும். தேறிய பணக் கணக்கில் செலவில் பதியப்பட்ட வாங்குபவரால் பொறுப்பேற்கப்பட்ட பொறுப்புக்கள் தும், கொள்வனவு கைமாற்றினதும் கூட் டுத்தொகை மொத்த விற் ப  ைன விலையை குறிக்கும். இதனுடன் சொத் துக்களின் கொள் விலை (பதிவழிக்கப் படாத பகுதி} ஒப்பிடப்படும் வாங்கு பவர் கொள்வனவு கைமாறு தொகைக்கு வரும்தியாளராகக் காட்டப்படுவார்.
(ii) பங்காளரால் பொறுப்பேற்கப்பட்ட
பொறுப்புக்களது பெ று ம தி அப்பங் காளர்களது மூலதனக் கணக்கு செல் வுக்கு மாற்றப்படும், பொறுப்புக்கள் வாங்குபவரால் கொடுத்துத் தீர்க்கப் படும் போது காசுக் கொடுப்பனவுகள்
பதிவு செய்யப்பட வேண் டும். (iv) பொறுப்புக்கள் புத்தக பெறும் மதியிலும்
வித்தியாசமாக எடுக்கப்பட்டால் அல் லது தீர்க்கப்பட்டால் இதனால் ஏற் படும் இலாப நட்டம் தேறிய பணக் கணக்குக்கு மாற்றப்படும்.
(d) எ
ஏற்பாடுகள் (1) சொத்துக்களது பெறுமதியைக் குறைப்பம்
தற்கான ஏற்பாடுகள் கட்டாயமாக அக் குறித்த சொத்து வரவு வைக்கப்பட்டி ருக்கும். தேறிய பணக்கணக்கில் அல்லது சொத்து விற்பனைக் கணக்கில் செலவு
வைக்க வேண்டும். (i) ஏற்பாடுகள் பொறுப்புக்களாயின் எல்
லாப் பொறுப்புக்களும் எடுக்கப்பட்டது அல்லது தீர்க்கப்பட்டதாகக் கருதப்பட வேண்டும். கலைப்புச் செலவுகள் எல்லாக் கலைப்பு செலவுகளும் தேறிய பணக் க ண க் கு க் கு பதிவழிக்கப்பட
வேண்டும்.

Page 78
கெ. துரியோதனன்
(f) வெளிப்படையாக நிகழக் கூடிய பொறுப்
புக்கள்.
"நிகழக் கூடிய பொறுப்புக்கள்" எனும் சொல் நன்றாக விளங்கிக் கொள்ளப் பட வேண்டும். மூ ன் ற ா ம் ஆள் ஒரு வரது நன் மைக்காக நிறுவனத்தால் உத் தரவாதம் அளிக்கப்பட்ட ஒரு கடன், மூன்றாம் ஆள் திருப்பிச் செலுத்தாத காரணத்தால் பங்குடமையின் உண்மை யான பொறுப்பாகலாம். வழமையான பதிவுகளான நட்டத்தை இலாப நட்டக் கணக்குக்கு பதிவழித்தலாகும் - பங்கு டமையானது கலைக்கப்படும் ஒரு சந் தர்ப்பத்தில் வருமானக் கணக்கு இல் லாத காரணத்தால் இந்நட்டம் தேறிய பணக் கணக்கில பதிவழிக்கப்படும்.
(g) சேறிய பணத்தின் இலாபம் அல்லது
நட்டம்.
தேறிய பணத்தின் இலாபம் அல்லது நட்டம் தேறிய பணக் கணக்கு அடிப் படையில் கணிக்கப்படுகின்றது. இ து ஒரு மூலதன வகையைச் சார்ந்ததில் பங்காளர் மூ ல த ன க் கணக்குக்கு கொண்டு செல்லப்படும்.
(1) பங்காளர் கடன் சணக்கு
பங்குடமையின் வெளியாரின் கடன்க ளெல்லாம் கொடுத்துத் தீர்த்த பின்பு தான் பங்காளர்களது கடன் கணக்கு கள் தீர்க்கப்படும். பங்காளர் கடன்கள் அவர்களது மூலதன நடப்புக் கணக்கு கள் தீர்க்குமுன் செலுத்த வேண்டும். ஆனாலும் பங்காளரது மூ ல த ன க் கணக்கின் அல்லது நடப்புக் கணக்கின் வரவு மீதிகள் அவர்களது கடன் கணக்கு களுக்கு எதிரீடு செய்யப்படும்.
(1) கொள்வனவுக் கைமாற்றத்தை தீர்த்தல்
பகுதி பகுதியான விற்பனை முறையில் கொள்வனவுக் கைமாறு வழக்கமாக காசாக செலுத்தப்படும். முழுமையான விற்பனையில் பங்குடமையை வாங்கு வது வரையறுத்த கம்பனியானால் கொள்வனவுக் கைமாற்றில் ஒரு பகுதி
வணிகநரதம்-1992

யானது அதன் சொந்தப்பங்குகளை அல்லது தொகுதிக் கடன்களை வழங் குவது மூ லம் தீர்க்கப்படும். இ  ைவ களைப் பெற்றுக் கொண்டதும் சொத் துக் கணக்குகளை மு றை யே வரவு வைத்து (உதாரணமாக காசுக் கணக் குக்கு அல்லது முதலீட்டுக்கணக்குக்கு ) வாங்குபவரது கணக்கில் செலவு வைக் கப்படும்.
(3)
கொள்வனவுக் கைமாற்றை பங் காளரிடையில் பகிர்தல்
1)
கொள்வனவுக் கைமாற்றைத் தீர்ப் பதற்காகப் பெறப்பட்ட சொத்துக்கள் (வாங்குபவரது கம்பனிப்பங்குகள், தொகு திக்கடன்கள் ) ப ங் க ா ள ர் க் கிடையே அவர்களது மூலதன விகிதப் ப டி பகிரப்படும். ஏனெனில் இ ந் த விகி தத்திலேயே அவர்கள் எல்லாச் சொத்துக்களிலும் உரிமையுடையவர் களாவார்கள். மாற்று முறையாக இவை பங்காளரது இலாப நட்டம் பகிரும் விகிதத்தில் பகிரப்படலாம். இதனால் பங்காளர் வருமானம் சம்பந்தமான ஒரு தொடர்ச்சியான உறவு முறையை அனு பவிக்கலாம். ஏ  ென னி ல் கம்பனி ள் பங்கு இலாபத்தை வைத்திருக்கும் பங்கு
களின் பெறுமதிக்கு அளிப்பதாகும். (ii) ஒவ்வொரு தனிப்பட்ட விற்பனையாலும்
தேறும் பணமானது எல்லாச் சொத் துக்களும் தேறப்பட்டு எல்லாப் பொறுப் புக்களும் தீர்க்கப்படும் வரை பொது வாகப் பங்காளிகளிடையே பகிரப்பட மாட்டா; இதற்கு விதி விலக்காக பங் காளர் சொத்தன து ஒவ் வொரு முறை யும் விற்கப்படும் பொழுது அதாவது இறுதி வரை பொறுத்திராது துண்டுப் பகிர்வின் மூ ல ம் த ம து பங்கினைப் பெறுவதற்கு விரும்பினால் அ ந் த த் தொகையைக் கணிப்பதற்கும் என்ன முறையில் அவை பகிரப்பட வேண்டும் என்பதை அறிவதற்குமாக சில விசேட பாதுகாப்பினை ஏற்படுத்த வேண்டும். இவை பகுதி பகுதியான விற்பனையில்
0 ) .

Page 79
சொத்துக்களானவை பகுதி பகுதியாக விற்கப்படும் பொழு து பங்காளருக் கிடையேயான இறுதிப் பகிர்வில் தாம் தம் ஏற்படக் கூடும். ஆகவே இவர்கள் சொத்துக்கள் விற்கப்பட்டு  ேத று ம் பொழுது முன்னுரிமைக்கடன் செல்மதி யாளர், வேறு வெளியேயுள்ள கடன் செல் மதியாளருக்கு கொடுக்க வேண்டி யதைத் தீர்த்த பின்பு அல்லது ஒதுக் கத்தினை செய்த பின்பு தமக்குரியவை செலுத்தப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றனர். ஆகவே எந்த ஒரு ப ங் க ா ள ரு ம் த ம க் கு ரி த் த ா ன தொகையை விட அதிகமாக இறுதியில் பெறவில்லை என்பதைக் கவனித்தல் வேண்டும் பங்காளர்க்கிடையே ச ரி யான பங்கீடு செய்யப்படுகின்றது என் பதை நிச்சயிப்பதற்கு இரண்டு வித ம ா ன நுட்பங்களை கைக்கொள்ள வேண்டும்.
(அ) மிகையான மூலதன முறை
இந்தமுறையில் ஒரு அலகு இலாபத்தை பெறுவதற்கு ஒரு பங்காளர் எவ்வளவு ஆகக்குறைந்த மூலதன வீதத்தை வைத் திருக்க வேண்டுமென்பதை அடிப்படை யாக கொண்டு மிகையான மூலதனத் தொகையையும் அதற்குரிய பங்காளரை யும் அடையாளம் காணல் வேண்டும். மிகையான மூலதனத்தைக் கொண் டுள்ள பங்காளருக்கு முதலாகப்பணம் செலுத்தப்படவேண்டும்.
(ஆ) ஊகிக்கப்பட்ட நட்டமுறை
வங்கிரோத்து ஏற்படுமெனச் சந்தேகிக் கப்படுமிடத்து அல்லது ஏற்படவிருக் கும் பாரிய கலைப்பு நட்டம் காரண மாக கவனம் செலுத்துமிடத்து அல் லது பங்கா ளர் மீதிகளி ன குறைபாடு ஏற்படும் சந்தர்ப்பங்களில் இந்த முறை யானது பிரயோகிக்கப்படுகின்றது. இம் முறையின் கீழ் ஒவ்வொரு தேறுகை யின் போதும் மீதியான தேறா சொத் துக்கள் பெறுமானமற்றதாக ஊகிக்கப் பட்டு அவற்றை நட்டமாக்கருதி அவை பங்காளரின் இலாப நட்டப்பகிர்வு
வணிகநாதம் 1992

பங்குடமையை கலைத்தல்
விகிதத்தில் அவர்களுக்கு வரவு வைக்கப் படுவதால் அவர்களின் இறுதி மூலதன மீதிகளைத் தீர்மானிப்பதற்கான கூற்றி னைத் தயாரிக்கலாம். ஒன்று அல்லது அதற்குமேற்பட்ட பங் 8ாளரின் கணக்கு களில் குறை ஏற்படுமானால் ''காணர் எதிர்மறே விதி'' பிரயோகிக்கப்படல் வேண்டும். இந்தச் செய்முறையானது ஒவ்வொரு தேறுகையின்போதும் திரும் பத்திரும்பப் பிரயோகிக்கப்பட வேண் டும்.
(ii) ஒவ் வொரு அம்சங்களும் பூர்த்தியாக்
கப்பட்டபின்பு பங்காளருக்கு இன்னும் கொடுக்கப்பட வே ண் டி யி ருக் கு ம் தொ கையினைத் தீர்ப்பதற்குக் கையி லிருக்கும் காசு பாவிக்கப்படும்.
(k) (i) எந்த ஒரு பங்காளராலும் மூலத
னக்கணக்கில் வரவுமீதி இருக்கும்போது சில காரணங்களுக்காக ( அதாவது தேறிய பணக்கணக்கு நட்டத்தை பகி ரும் போது அல்லது மீதி க்கு மேற்பட்ட பெறுமானத்துக்குச் சொத்துகள் எடுக் கப்படும்போது) பங்காளரின் மூலதனக் கணக்கானது வரவுமீதியை கொண்டி ருக்கும். ஆகவே அந்தப் பங்காளர் அந் தக் குறைவினை நல் ல தாக நிவர்த்தி செய்வதற்கு அந்தளவு தொகைப்பணத் தினை வியாபாரத்துக்குக் கொண்டு
வரும்படி வற்புறுத்தப்படும். (ii) வரவு மீதியை நல்லதாக நிவர்த்தி
செய்வதற்குப் பங்காளரால் முடியாத பட்சத்தில் அதாவது முறிந்தவராக வருமிடத்து “'காணர் எதிர் மறே விதி ''த் தீர்மானம் பின் பற்றப்பட வேண்டும். இந்தச் சட்டத் தீர்மானமானது ஏற் பட்ட வரவு மீதியினை நிரப்புவதற்கு மற்றைய பங்காளரை அவர்களின் இறுதியாக இணங்கிக் கொள்ளப்பட்ட மூலதன விகிதப்படி தாங்கிக் கொள் ளும்படி கேட்டுக் கொள்கிறது. இதில் இலாப நட்டப்பகிர்வு விகிதத்தினைப் பிரயோகிக்கக் கூடாது. அதாவது இத் தீர்மானமானது இலாப நட்டப்பகிர்வு

Page 80
கெ. துரியோதனன்
விகிதம் வியாபாரத்தில் ஏற்படும் இலா பாவிக்கப் படலாம். அதேவேளை மூலதல் ருக்கே உரித்தானதாக கருதப்படுவதால் திற்கேற்ப அவர்களால் ஏற்கப்பட வேண் கப்பட்ட மூலதன விகிதம் எனக் கூறும் மீதிகளை எப்படி வைத்திருக்க வேண்டும் கத்திற்காக நடை முறைக் கணக்கு மீதிக் மீதிகளில் தேறிய பணக் கணக்கில் இலா
எடுக்க வேண்டியதில்லை. (ii) கலைப்பின் போது பங்காளர் மூலதனக்
பதிவு (அ) வரவு மீதி ஏற்பட்ட பங்காளன் முறியா அவர் காசாககொண்டு வரலாம். அப்பே
காசுக் கணக்கு வரவு
வரவு மீதி ஏற்பட்ட பங்க (ஆ) வரவு மீதி ஏற்பட்ட பங்காளன் முறிந்து
யாத மற்றைய பங்காளர் பொறுப்பேற்க
முறியாத பங்காளர் கணக்கு 6
முறிந்த பங்காளர் மூல குறிப்பு:-
காணர் எதிர்மறே வழக்கின் தீர்ப்பு இத்தீர்ப்பு பயன்படுத்தப்படாத இட லாத போது ஒப்பந்தப்படியும் மூல பேற்பர். உதாரணமாக காணர் எதிர்மறே வ
கணக்கை பார்க்கலாம். x, y, z ஆகிய மூவரும் இலாப நட்டங்கை 31/12/ 199 1லே இவர்களின் ஐந்தொகை
பரிப்பு
தொகை தொகை
மூலதனம் -X
150000
100000 | 25000
குறுங்கால கடன்
x இடம் கடன்
50000
கடன் கொடுத்தோர்
10000
60000
310000
வணிக நாதம்-1992

ப நட்டங்களைப் பகிர்வதற்கு மாத்திரம் க் குறைவானது மீதியாக இருக்கும் பங்காள அவை அப்பங்காளரின் சொத்துரிமை விகிதத் டுமென கருதப்படுகிறது. இறுதியாக இணங் போது அதாவது பங்காளர் தமது மூல தன மன இறுதியாக இணங்கியதாகும், இந் நோக் ள், கடன் கணக்கு மீதிகள், மூலதனக் கணக்கு நட்டத்தாக்கம் என்பனவற்றைக் கணக்கில்
கணக்கில் வரவு மீதி ஏற்படும்போது கணக்குப்
தவராக இருந்தால் அந்த மூல தனக்குறைவை ாது கணக்குப்பதிவு.
சாளர் மூலதனக்கணக்கு செலவு
விட்டால் அவரது மூலதனக் குறைவை முறி
வேண்டும் அதன் போது கணக்குப்பதிவு. வரவு தனக் கணக்கு செலவு
பின்பற்றுமிடத்து மூலதன விகிதப்படியும் பத்து இலாபநட்ட விகிதத்திலும் இவை இல் தனக் குறைவை முறியாத பங்காளர் பொறுப்
ழக்கின் தீர்ப்பு பின்பற்றுமிடத்து பின் வரும்
ள 5; 3; 2 எனும் விகிதத்தில் பகிர்வர். ச் சுருக்கம் வருமாறு:-
சொத்துக்கள்
தொகை தொகை
150000
நிலையான சொத்து 0 நன்மதிப்பு
40000
190000
9 3 .
நடப்பு சொத்து
தொக்குகள்
50000
கடன் பட்டோர்
40000
வங்கி
10000
Z மூலதனம்
20000
120000 310000

Page 81
63
01 - 01. 1992 லே பங்குடமை ஒடுக்கப்ப (i)
சொத்துக்களை விற்பதனால் பின் வரு
சொத்து ரூபா 10000 இலாபம், தொ. (i) கடன்பட்டோர் பணம் திரட்டிய போது (iii) கடன் கொடுத்தோர் 5% கழிவுக்கு உ (iv) x இன் கடன் ஏடுகளில் பதிவுறாத அட்
கப்பட்டது. (v) ஒடுக்கற்செலவு ரூபா 3000 ஏற்பட்டு ப (vi) Z முறிந்துவிட்டார். அவரிடம் தனிப்பட்
காட்டுக (அ) தேறியபணக்கணக்கு (ஆ)
தேறிய பணக்
விபரம்
தொகை
நிலையான சொத்து
150000
50000
தொக்கு
கடன்பட்டோர்
40000
ஒடுக்கற் செலவு
2000
வட்டி
5000
நன்மதிப்பு
40000
287000
(ஆ)
வங்கிக் க
விபரம்
தொகை
மீ/வ
10000
கைக்கிட்டும் கணக்கால்
நிலையான சொத்து
160000
தொக்கு
45000
கடன்பட்டோர்
36000
251000
வணிகநாதம்-1992

பங்குடமையை கலைத்தல்
ட்டது. இதன்போது பின்வருவன நிகழ்ந்தது. ம் இலாப நட்டம் ஏற் பட்டது. நிலையான க்கு ரூபா 500 நட்டம்
ரூபா 4000 நட்டக்கடனாக மீதி பெறப்பட்டது. ட்பட தீர்க்கப்பட்டனர்.
டுரு வட்டியான ரூபா 5000த்துடன் அடைக்
பணம் கொடுக்கப்பட்டது
டசொத்து எதுவும் இல்லை. பங்காளர் மூலதனகணக்கு (இ) வங்கிக்கணக்கு
கணக்கு
விபரம்
தொகை
வங்கிக் கணக்கால்
நிலையான சொத்து
160000
தொக்கு
45000
கடன்பட்டோர்
36000
கடன் கொடுத்தோர் கழிவு
500
நட்டம் - x - 22750
-y - 13650
- Z - 9100
45500
த த த 3 4 4 4 4 4 4 4 |
287000
ணக்கு
விபரம்
தொகை
கடன் கொடுத்தோர்
9500
கடன் வட்டியுடன்
55000
ஒடுக்கற் செலவு
2000
X மூலதனம்
109790
Y மூலதனம்
74710
251000

Page 82
கெ. துரியோதனன்
(இ)
பங்காளர் மூலத
விபரம்
மீ / வ
20000
22750
13650
9100
நட்டம்
Z மூலதனம்
17460
11640
வங்கி
109700
74710
150000 | 100000 (29100
செய்கை:-
கடன் கொடுத்ே
9500
வங்கி கழிவு
500
10000
(7) பங்குடமையில் கடன் தீர்ப்பனவு செய்யும் ஓ
பங்குடமையானது கடன்களை தீர்ப்பனவு கூறிய ஒழுங்கு விதியில் கடன்களை தீர்பு
(1) கலைப்பு செலவுகள் (உதாரணம்:- கலை
(2) அரசாங்கக் கடன் (உதாரனம்:- வங்கி க!
(3) வெளி நபர் கடன் (உதாரணம்:- கடன் ெ (4) பங்காளரிடம் இருந்து பெற்ற முற்பணக்
(5) பங்காளர் மூலதனம் (6) இறுதியாக ஏதேனும் எஞ்சியிருப்பின் இ
கொள் ளப்படும்.
வணிகநாதம்-1992

னக் கணக்கு
விபரம்
மீ / வ
150000 - 100000
x மூதனம்
17460
y மூ.தனம்
11640
150000 100000 | 29100 உ
தார் கணக்கு
மீ/வ
10000
10000
ழுங்கு முறை
|செய்யும்போது பங்குடமைக்கான சட்டம் ப்பனவு செய்யவேண்டும், அவ் ஒழுங்கு
ப்பாளர் சம்பளம்)
உன், வங்கிமேலதிகப்பற்று)
0 ) 0
காடுத்தோர், சென்மதி உண்டியல்)
கடன்
மாபநட்ட விகிதத்தில் பங்காளரால் எடுத்துக்

Page 83
65
பங்குடமைக் கலைப்பில் சாதாரணமீதி ஏ,
(i) கைக்கிட்டும் கணக்குக்கு காசு, வங்கிமீ
வேண்டும்.
கைக்கிட்டும் கணக்கு
உரிய சொத்துக் (ii) தேய்மான ஏற்பாடு, ஐயக்கடன் ஏற்பாடு வேண்டும். அதற்கு கணக்கு பதிவு
உரிய ஏற்பாட்டு கண
கைக்கிட்டும் க/கு (iii) காசு, வங்கிக் கணக்கில் காசு, வங்கிமீதி
(iv) பங்காளர் மூலதனக்கணக்கின் மூலதனம்
வற்றை மாற்றிக்கொள்ளவேண்டும். (V) சொத்துக்கள் விற்றதனால் பெற்ற தெ.
காசு க/த வரவு
கைக்கிட்டும் கண ) சொத்துக்களை பங்காளர் கையேற்றால்
உரியபங்காளர் மூலத
கைக்கிட்டும் கண
(vii)பரிப்புக்களுக்கு பணம் கொடுக்கும் பொறு
கணக்கு பதிவு
உரியபரிப்பு க/கு வர
உரியபங்காளர் u (viii) பரிப்புக்களுக்கு பணம் கொடுத்துத்தீர்த்
உரியபரிப்புக்கணக்கு |
காசுக்கணக்கு ெ (ix) கடன் கொடுத்தோரை தீர்க்கும்போது !
03 *
கடன்கொடுத்தோர் க
கைக்கிட்டும் க/கு (x) கலைப்பு செலவுக்கு பணம் கொடுத்தால்
கைக்கிட்டும் கணக்கு
காசுக் க/கு செ (xi) கைக்கிட்டும் கணக்கு சமப்படுத்த வரும்
(a) இலாபமானால்
கைக்கிட்டும் க
வணிகநாதம்-1992

பங்குடமையை கலைத்தல்
ற்படும்போது கணக்கு பதிவுகள்
இ தவிர்ந்த மற்றைய சொத்துக்களை மாற்ற
வரவு கணக்கு செலவு
போன்றவற்றை கைக்கிட்டும்கணக்குக்கு மாற்ற
க்கு வரவு - செலவு
யை குறித்துக் கொள்ள வேண்டும்.
தி, நடப்புக்கணக்குமீதி, பொதுஒதுக்கீடு என்ப
"கைக்கு கணக்கு பதிவு .
-க்கு செலவு - அதற்கு கணக்கு பதிவு
னக் க/கு வரவு -க்கு செலவு
ப்பை பங்காளர் ஏற்றுக் கொண்டால் அதற்கு
மூலதனக்கணக்கு செலவு ந்தால் அதற்கு கணக்கு பதிவு
வரவு சலவு கழிவுகிடைத்தால் அதற்கு கணக்கு பதிவு
/கு வரவு
வரவு 5 அதற்கு கணக்குபதிவு
வரவு
லவு
மீதி
ணக்கு வரவு

Page 84
கெ. துரியோதனன்
பங்காளர் மூல
(b) நட்டமானால்
பங்காளர் மூ
கைக்கிட்டும் (xii) இறுதியாக பங்காளர் மூலதனக் கல்
பங்காளர் மூல்
காசுக்
உதாரணம் (Ex) :- 8, 13, A = 5 : 3 : 2 : எனும் விகிதத்தில் பகிரும் பங் இவர்களது ஐந்தொகைச் சுருக்கம் வருமா
பரிப்பு
தொகை தொகை
மூலதனம்- 4
300000 200000 100000 600000
- A
நடப்புக் கணக்கு «
- B - A
40000 10000) 15000பு
45000
« விடம் கடன் 10% கடன் கொடுத்தோர்
5000 10000
" கும்பல், .
705000
பங்காளர் இத் திகதியில் பங்குட தனர். இதன்போது பின்வருவன நிகழ்ந்த (1) காணி 20% கூட்டியும், கட்டிடங்கள்
(ii) வாகனத்தில் 20000/- தேறிய குத்த
எடுத்துக்கொள்ள எஞ்சிய வாகனங்கள்
(ii) தளபாடம் 49000!-விற்கு தேறியது.
வணிக நாதம்-1992

46
தனக் க/கு செலவு 11.
- - - தனக் க/கு வரவு கணக்குச் செலவு ாக்கு மீதியை கொடுத்து தீர்க்கும்போது தனக் க/கு வரவு இது 5 /கு செலவு
ஆகிய மூவரும் இலாப நட்டங்களை முறையே தடமை ஒன்றின் பங்காளர் ஆவர். 31/03/1992ல்
று:-
சொத்துக்கள்
கிரயம் தி.பே.தே மீதி
ஈக.
நிலையான சொத்து
காணி கட்டிடம் வாகனம் தளபாடம்
டே பா ம க
200000
200000) 150000
(30000) 120000 140000
(40000)
100000 60000 (15000) 45000
550000 (85000)
465000)
மாகாண பாம் 9
40000 5000) 80000
நன்மதிப்பு பங்குகளில் முதலீடு தொக்குகள் கடன்பட்டோர்
60000 (கழி) ஐயக்கடன் ஏற்பாடு (3000) வங்கி
57000 13000
TR 2
705000
மையை ஒதுக்கிவிட (கலைத்துவிட) தீர்மானித்
து.
5000/- நடத்துடனும் பணமாக்கப்பட்டது. மக பெறுமதி உள்ளதை 25000/- வில் ஆவினால் - 90000விற்கு பணமாக்கப்பட்டது.

Page 85
iv) தொக்குகள் ஏலத்தில் விற்பனை வின (v) நன்மதிப்பு மூலதனக் க/கு பதிவளிக் (vi) கடன் கொடுத்தோர் 5% கழிவுக்கு 2 (vii) 3வின் கடனுக்கு 3 வருடங்களுக்கா
றது. 3 - ஒரு வருட வட்டியை விட்ட (viii) கடன்பட்டோரில் 55000/- மட்டுமே (ix) பங்குகளில் முதலீடு என்பது சாந்தி 8
5000 பங்குகளைக் குறிக்கும். இப் ப
என்ற விகிதத்தில் பங்கொன்று 12/- (x) ஒடுக்கும் செலவு 3000/- ஏற்பட்டு 1
செய்யவேண்டியது (2) கைக்கிட்டும் க
கைக்கிட்
விபரம்
தொகை
காணி
200000
கட்டிடம்
150000
வாகனம்
140000
தளபாடம்
60000
தொக்கு
80000
கடன்பட்டோர்
60000
50000
10000
முதலீடு 3 (வட்டி) ஒடுக்கற் செலவு இலாபம் - 38 49750
3000
( ?
- 6 29850
- A 19900
99500
852500
வணிகநாதம் 1992

67
பங்குடமையை கலைத்தல்
லயில் 20% இலாபத்துடன் விற்கப்பட்டது. வேண்டும்,
ட்பட தீர்க்கப்பட்டது. ன வட்டி ஏடுகளில் பதிவுறாமல் அட்டுற்று நின் டுவிட இணங்கினார். வசூலிக்கப்பட்டது. கம்பெனியில் உள்ள ஒவ்வொன்றும் 10/- வான ங்குகளை மூன்று பங்காளரும் முறையே 2 : 2 : 1 பில் எடுத்துக்கொண்டனர். பணம் கொடுக்கப்பட்டது.
ணக்கு (b) மூலதன க/கு (c) வங்கி கணக்கு -டும் கணக்கு
விபரம்
தொகை
கட்டிடம்
30000
வாகனம்
40000
தளபாடம்
15000
ஐயக்கடன் ஏற்பாடு
3000
காசுக் கணக்கு
காணி
240000
கட்டிடம்
145000
3 மூலதனக் கணக்கு
25000
வாகனம்
90000
தளபாடம்
49000
100000
55000
தொக்கு கடன்பட்டோர் கடன் கொடுத்தோர் கழிவு
முதலீடு - 3
500
24000
24000
- A .
12000
852500

Page 86
கெ. துரியோதனன்
வங்கிக் க
FFIRE
இங்கேயே கலகலப்பாகிடார்
விபரம்
தொகை
மீதி/வந்
13000
கை கிட்டும் கணக்கு
காணி
240000
கட்டிடம்
145000
வாகனம்
90000
தளபாடம்
49000
தொக்கு
100000
கடன்பட்டோர்
55000
692000
பங்காளர் மூல
விபரம்
*
ctாக |-- 44 - 1, பசு புகட்டியது =P,
10000
நடப்பு கணக்கு
நன்மதிப்பு
20000
12000
8000
வாகனம்
25000
முதலீடு
24000
24000
12000
பரி--- - மியாட் * யாக கMTMாசராச யோவாவடி க.
காசு
330750183850 ) 114960
399750 229850 134900
உசாத்துணை நூல்
உயர் கணக்கியல் (இரண்டாம் பகுதி
வணிக நாதம்-1992

ணக்கு
விபரம்
தொகை
4ெ பாடகியாக உககி:21
9500
கடன் கொடுத்தோர் ஒடுக்கும் செலவு
3000
& விடம் கடன்
50000
மூலதன க/கு - 2
330750
183850
- A
114900
692000
தனக் கணக்கு
விபரம்
- BA
மீ/வ
300000 |
200000100000 40000
15000
நடப்பு க/கு
வட்டி
10000
இலாபம்
49750
29850
19900
0 0 3
399750
229850
134900
5 - இரண்டாம் புத்தகம்)

Page 87
வணிகத்துறை வளர வணிகநாதமே வருக! வருக!
தனலக்குமி புத்தகசாலை
சுன்னாகம்
கல்வி உலகின் வழிகாட்டி:-
BITSAANS கல்வி நிறுவனம்
மானிப்பாய்.
A/L கலை, வர்த்தகம், விஞ்ஞானம் ஆண்டு முதல் 11வரை சகல படங்களும் |
திறமைமிக்க ஆசிரியர்களால்
கற்பிக்கும் நிறுவனம்
0 0 *
''BIT ANா'' கல்வி நிறுவனம்
மானிப்பாய்.
என்னை லை: லாயம்

* தரமான' பாடசாலை உபகர
ணங்கள் புகழ்பெற்ற புதினப்பத்திரிகை கள் பல வர்ண வாழ்த்து மடல் கள் * உயர்தர றபர் சீல்கள்
மலிவாக இவைகளை வழங்குவதால் மக்கள் மனதில் நிலைத்து விட்ட பெயர்,
துர்க்கா ஸ்ரே ஷனேர்ஸ் (புகழ் பெற்ற புத்தக வியாபாரிகள்) பஸ் நிலையம், சுன்னாகம்.
வணிகநாதம் எல்லாத் திசைகளிலும் செழிப்புடன் ஒலிபரப்ப எமது நல்வாழ்த்துக்கள்! நிரோ கல்வி நிறுவனம்
சுன்னாகம். ஆண்டு 6 - 11 வரை சகல பாடங்களும் திறமையும் அனுபவமும் மிக்க
ஆசிரியர்களினால் கற்பிக்கப்படுகின்றது. 5ம் ஆண்டு புலமைப் பரிசில் வகுப்பும்
நடைபெறுகின்றது.
NIRO INSTITUTE

Page 88
"நடை பா லக்கி .
கல்வி நிலையம் கட்டுடை, மானிப்பாய். கிளை: தொட்டிலடி
3ம், 4ம், 5ம், 6ம் ஆண்டுகள் தொடக் கம் 11-ம் வரை சகல பாடங்களும் அனுபவமும் திறமையும் வாய்ந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படுகின் றன.
5-ம் ஆண்டு புலமைப்பரிசில் வகுப்பு) களுக்கு ஒவ் வொரு மாதமும் பரீட்சை வைத்து திருத்திக் கொடுக்கப்படும்.
வணிகநாதத்திற்கு எமது நல்லாசிகள்
விநாயகர் மில் பிரதான வீதி, சங்கானை.

வணிக நா தம் வாழ்கவென்று. : வாழ்த்துகிறோம்!!
* கறுப்பு - வெள்ளை
கலர்ப் படம் பிடித்தல் * அவசர தேவைக்கும்
சிறந்த முறையில் படம் பிடிக்க சிறந்த படப்பிடிப்பாளர்
0 1 0
பிறின்ஸ் கே ஐத் ஸ் ரூடியோ கே கே. எஸ். வீதி,
சுன்னாகம்.
விவேகானந்தா கல்வி நிலையம்
கந்தரோடை.
ஆண்டு 5 முதல் A/L வரை வகுப்புக்கள் நடைபெறுகின்றன
17 0
பொருளியல்- திரு. உதயன் கணக்கியல் - A. K. பிரதீப் அளவையியல் - V. ராஜ் வர்த்தகம் - திரு. குகன் தமிழ் - திரு. சக்தி புவியியல் - திரு. குமார்

Page 89
மக்களின் தேவைக்கேற்ப, நியாய விலையில் தரமான
பொருட்களை வழங்குவது, ''சுன்னாகம் பல.நோ கூ. சங்கம்”
1வளர்ந்து வரும் மக்களின் தேவைகளைப்
புரிந்துணர்வின் மூலம், தளராத கூட்டுற |வுக் கொள்கைகளின் உறுதிப்பாட்டுடன் சேவை புரியும் சுன்னாகம் பல நோ• கூ. சங்கத்தின் நி  ைற ந் த பயனை இன்றே பெற்றுக் கொள்ளுங்கள்.
சுன்னாகம் ப. நோ. கூ.சங்கம்
[வரை வுள்ள து] சுன்னாகம்.
பதிவு இல. ஜே/1557 - 12-3- 1971
தொ.பே. இல. 303, சுன்னாகம்.
கயல்விழி நகைப் பூங்கா
தங்கப் பவுண் நகைவியாபாரம், 224/B, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
18 கரட் 20 கரட் நகை உடன்
செய்து கொடுக்கப்படும். 22 கரட் ஓடருக்குச் செய்து கொடுக் கப்படும். வெள்ளிக் க ா ல் கொலிசு உடன் செய்து கொடுக்கப்படும்.

வணிகநாதம் என்றும் ஒலித்திட எமது நல்லாசிகள்,
69eeeeeee90a029
K.M.P, மில்
ஸ்ரேசன் றோட், சுன்னாகம்.
தரமான கலப்படமற்ற
எரிபொருள் களுக்கு நாட வேண்டியதோர் ஸ்தாபனம்.
கீதா எரிபொருள் விற்பனை
நிலையம். காங்கேசன்துறை வீதி,
சுன்னாகம்.

Page 90
அலைத் தொகுதி
இரண்டாவது
மலர வாழ்த்
மகத்தான சேவையை மாண்புறும் ஈசனை
லயன்ஸ்
சுன்
நிரு ரியூசன்
ஸ்ரேசன்றோட்,
ஆண்டு 4 முதல் சகல வகுப்புக்களும் உயர்தர 93, 94 கன
வகுப்புக்களும் ந
தூய பிரயோக கணித பொருளியல்: உதயன் வர்த்தகமும் நிதியும்:தேவா தமிழ்: குழந்தை இந்துநாகரிகம்: சோதி
வரலாறு:

யை காவிவரும் வணிகநாதம்'
துகின்றோம்
- மக்களுக் காற்றிட புவர்களில் காணலாம்
கழகம்
னாகம்
ஏ சென்ரர்
கோண்டாவில்.
ஆண்டு 11 வரை
நடைபெறுகின்றன. ல, வர்த்தக, கணித டைபெறுகின்றன. ம்: திரு. கமலசிங்கம் கணக்கியல்: -ஸ்ரீ
அளவையியல்: S.S.மனோகரன் புவியியல்: வேலா அரசியல்: நவம் பிள்ளை
18 - .

Page 91
யா / ஸ்கந்தவரே வர்த்தக மாணவர் மா
"வணிக நாதம்' ம. மனம் நிறைந்து
படட
#######
பனை, தென்னை சார்வளம் டெ இம் மக்களின் நலம் பெருகவும், விழைகின்றோம்.
வடமாகாண தெ
கூட்டுறவுச் சங்க
499, காங்கேசன்துறை
இரண்டாவது 'வ
சிறப்புற எமது
, அற்S 4
நாகம்ஸ்
சுன்
போரம்
அக்கா

ாதயக் கல்லூரியின், நறம் 1992இல் வெளியிடும் லர் சிறப்புற அமைய
வாழ்த்துகின்றோம்.
பருகவும், இவற்றோடி ணைய வாழும் அனைத்து மக்களும் நல்லாதரவு நல்க
ங்கு பனம் பொருள் உங்களின் சமாசம்.
வீதி,
யாழ்ப்பாணம்.
ணிக நாதம்' மலர்
நல்வாழ்த்துக்கள்.
3லே? இ2
k.
) பாட்டா
னாகம்.

Page 92
கடி
இரண்டாவது வணிக
எமது உளம் கனிந் உள்ளூர் உற்பத்திக எமது வளங்களை முழுமை
'கற்பக் 'கற்பகக் க
உள்ளூர் உற்பத்திப் பொருட்.
விற்பனவு கொள்வன
தாவ டிச்சந்தி, 3 கே. கே. எஸ். வீதி, > தாவ டிச் சந்தி.
அபிவிரு,
பEEPER) பTTELEELETEDELHDELEIRANTHEMESFEEE.
தரமான மலிவான சுவைமிகு
உணவுக்கு நாடுங்கன்
பி
NERENEMEx:WEd.w.N:
உழைப்போர் உணவகம்
McKESS eTERSYSREESEEESS
சங்கானை ப.நோ.கூ.சங்கம்
சங்கானை.
444444444

ஆவ* சசி
கநாதம் சிறப்புற
த வாழ்த்துக்கள்.
ளை ஊக்குவிக்க மயாக உபயோகிப்போம்,
தரு' களஞ்சியம்'
ஆஆஆ
கள் சில்லறை, மொத்த "வு நிலையங்கள், காண்டாவில்.
பனை, தென்னை வ ள த்திக் கூட்டுறவுச் சங்கம்,
கோண்டாவில்.
பEBEREEEDHTMMEXEEEாகாது.
உEETLE CEாமமோ ேகானொம்
83 இல் 33 28000கலை09.
383 - 83
اسلامی است. اساسا سماعی همه اشاره کرد
0) :
RNA NAMS 3T0000 JAFFNA
44ாய தயகபடிவு

Page 93
*சரி
உட் வரணி கல்வி நிலையம் கே. கே. எஸ். வீதி, சுன்னாகம்.
'' - 11:14
- A/L. கலை, வர்த்தக, விஞ்ஞான வகுப்புகள்
1 3 )
ஆண்டு 11ம், 10ம், 9ம் வகுப்புகள்
ஆண்டு 5 புலமைப்பரி சில் வகுப்புக்கள் நடைபெறுகின்றன
- நிர்வாகி
வணிகநாதம் வாழ்க வளர்க
சாயி கல்
இராசேஸ்வரி பல்பொருள் களஞ்சியம் ஸ்ரேசன் றோட், சுன்னாகம்.
0 (
அலுமினிய பொருள்கள், பாடசாலை உபகரணங்கள்
பரிசுப் பொருள்கள், அழகுசாதனப் பொருள் கள். பிளாஸ்ரிக் பொருள்கள் யாவும் பெற்றுக் கொள்ள சிறந்த இடம்

marmurmurrmann
வணிகநாதத்துக்கு எமது நல்லாசிகள்
நீதினி 12
சுன்னாகம்
[றோணியோ * போட்டோ ஸ்ரற் ரைப்பிங் * த மிழ், ஆங்கிலம் மொழிபெயர்ப்பு * கடிதங்கள்
(DRAFTING) நூலக சேவை * படிவங்கள்
* புத்தகம் கட்டுதல் * தலைச்சோடனை
வணிகநாதம் வளருற வாழ்க!
நாவலர் கல்வி நிலையம் பிரதான வீதி, சித்தன்கேணி.
இணையதளம் தனகனவையாவுமணு மகனை
* 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில்
வகுப்புகள் * 6, 7, 8, 9, 10, 11 ஆம் ஆண்டு
களுக்கான வகுப்புகள்
க. பொ. த. உயர்ரர கலை விஞ் ஞான வர்த்தக வகுப்புக்கள்
தரமான போதனை - திறமான பெறுபேறு
" "மாணவர் உலகின் கலங்கரை விளக்கம்'

Page 94
எனவே
வணிக நாதம் சிறப்புற எமது வாழ்த்துக்கள்
At-28
జోజోజో
ஐ. பேரம்பலம் அன் சன்ஸ்
மருந்துக்கடை
சுன்னாகம்.
வணிக நாதம் எங்கும் ஒலிக்க சப்றா வாழ்த்துகிறது
4
முன்னணி ஆசிரியர்களின் ஒருங்கிணைந்த போதணை யில்
க
SUBRA INSTITUTE
SITHANKERNY -
ਖਾਣਾ"mark"ਮਾਂ"

ஆசிரியர் லீவு விண்ணப்பப்
படிவம்
முைமுழமுமுக
பாடசாலை உபகரணங்கள், 100ரசௗறி ! =ாமான்கள், மாத, வார சஞ்சிகைகள், புதி அப் பத்திரிகைகள், எழுது கருவிகள் , கா கி தாதிகள். இலங்கை, இந்திய நூல்கள், கட் இரை, கதைப் புத்தகங்கள், சிறுவர் புத்த கங்கள், மற்றும் தெளிவான 'போட்டோ
ஸ்ரட்' பி ர தி க  ைள குறித்த நேரத்தில் 3
பெற்றுக் கொள்ளவும்.
*1) * *
மக்மிலன் புத்தகசாலை 3, பஸ் நிலையம், யாழ்ப்பாணம்.
ஸ்ரீ காந் புத்தகசாலை
நல் லூர்.
வணிகநாதம் வாழ்க வளர்க!
பட AAAAN
!!!
இப்படோம்
9 ( .
சவரிநாதன் மில்
ஸ்ரேசன் றோட்
சுன்னாகம் -
AMAHAாக ஈwww

Page 95
பயன் தரு பொருளி நிலையான சொத்து
Useful Economic Life ai
- 1. அறிமுகம்:-
4 kg )
வியாபார அமைப்புக்கள் தமது தொழிற் பாடுகளுக்காக உரிமை கொள்ளப்படும் நிலையான சொத்துக்களின் வினைத் திறனை தமது உன்னத - நோக்கத்தை நோக்கி நகர்த்திச் செல்லுகின்றன. இவ் வகையில் நிலையான சொத்தை தொழிற் பாட்டிற்குட்படுத்தும்போது அவற்றின் வினைத்திறன் குறைவடைந்து செல்வது தவிர்க்கமுடியாத ஒரு நிகழ்வாகும். இத் தகையதோர் நிரந்தர இழப்பான பெறு மானத் தேய்வை அதிகரித்துச் செல்ல விடாது தடுக்கும்பொருட்டு அச் சொத் துக்கள் மீது பல்வேறுபட்ட மூலதனச் செலவு கள் வருமானச் செலவுகள் மேற்கொள்ளப் படுவது வழக்கம். எனினும் நிலையான சொத்துக்கள் அதன் உறுதியான ஆயுளின் இறுதியில் தமது வினைத்திறனை இழந்து கழிவு மதிப்பு நிலையை அடைந்துவிட அவற்றினை தொழிற்பாட்டிலிருந்து விலக்கி விடவேண்டிய நிர்ப்பந்தம் வியாபார அமைப்புக்களுக்கு ஏற்பட்டுவிடுகின்றது. எனினும் சில வியாபார அமைப்புக்கள் இந் நிலைமை வரைகாத்திராது நிலையான சொத் துக்களை இடைக்காலத்திலேயே வழங்கல் (கையளிப்பு) செய்துவிடுகின்றன. 2. பயன்தரக்கூடிய பொருளியல் ஆயுள்
(Useful Economic Life) ஒரு சொத்தின் பயன் தரக்கூடிய பொரு ளியல் ஆயுள் என்பது “'நிறுவனத்தால் பயன்படுத்தப்பட எதிர்பார்க்கப்படும் காலத் தினைக் குறிக்கும் அல்லது உற்பத்தியின் எண்ணிக்கையினைக் குறிக்கும் அல்லது
வணிகநாதம் 1992

பல் ஆயுளும் க்களும் ad Fixed Assets
த. ஸ்ரீகரன் ஆண்டு -13 வர்த்தகப் பிரிவு
சொத்திலிருந்து உற்பத்தியில் பெறப்பட எதிர்பார்க்கப்படும் மொத்த அலகுகளைக்'' குறிக்கும் எனினும் (அ) ஒரு குத்தகையில் உள்ளதுபோல்
சட்டத்தால் முன்கூட்டியே முடிவு செய்
யப்பட்ட தடைகள்; (ஆ) பிரித்தெடுக்கப்படுவதால்
அல் லது நுகர்வால் நேரடியாகச் சம்பந் தப்பட்டவை;
(இ) காலக்கழிவால் வரும் பௌதீக குறை
வடைதலில் தங்கியுள்ளது. பௌதீக குறைவடைதலானது செயற்பாட்டுக் காரணிகளில் அதாவது சொத்துப் பயன்படுத்தப்படவுள்ள மாற்று வேலை களின் (Shift) அளவு, நிறுவனத்தின் திருத்த பராமரிப்பு நிகழ்ச்சித்திட் டங்கள் என்பவற்றில் தங்கியுள்ளது. காலக்கழிவின் விளைவான துருப்பிடித் தல் (Corrosion); அ ரி க் க ப் ப டு த ல் (Erosion); தேய்ந்து போதல் (Abras
ion); என்பவற்றில் தங்கியுள்ளது. (ஈ) பொருளியல் அல்லது தொழில் நுட்ப
ரீதியாக வழக்கொழிந்து போதல் என் பது உற்பத்தி மாற்றங்களினால் அல் லது முன்னேற்றங்களினால் (Improve ments) ஏற்படலாம். உற்பத்திப் பொரு ளுக்கு அல்லது சேவைக்கு சந்தை கேள்வியில் ஏற்படும் ஒருமாற்றமும், சொத்தின் வெளியீடும் கூட சொத் தின் பயன் தரக்கூடிய பொருளியல் ஆயுளில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
இவ்வாறான தாக்கத்தாலேயே பெறு மானத்தேய்வு செய்யக்கூடிய சொத்தின்

Page 96
த. ஸ்ரீகரன்
பயன் தரக்கூடிய பொருளியல் ஆயுளானது அச்சொத்தின் பௌதீக ஆயுளைவிட குறை வானதாக அமைகின்றது. இத்தகைய குறிப் பிட்ட சொத்தின் பயன் தரக்கூடிய பொருளி யல் ஆயுட்காலத்தின் மதிப்பீடானது அதே வகையான சொத்துக்களின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கட் பட வேண்டியதாகும். எனவே இடைக்கா லத்தில் நிலையான சொத்தின் பயன் தரச் கூடிய பொருளியல்
து ஆயுட்காலமானது மீளாய்வு செய்யப்படுகிறது, எனினும் இப் மீளாய்வு செயற்பாட்டு முடிவுகளையும் நிதி நிலைமையினையும் நியாயமானமுறை யில் காட்டுமாக இருந்தாலேயே சாத்தியமா
னது . 3. நிலையான சொத்துக்கள்
(Fixed Assets)
வியாபார அமைப்புக்கள் தமது நோக் கத்தை அடைவதற்காக நீண்டகால உபு யோகத் தேவையை மையமாகக் கொண்டு உரிமை கொள்ளப்படும் கட்புலனாகக்கூடிய 'நிலையான வளங்களே' 'நிலையான சொத்துக்கள் எனப்படும். வியாபார அமைப் புக்களின் இலாபம் அல்லது சேவை நோக்கி கத்திற்கு ஆதாரமாக நிலையான சொத்துக் கள் அமைகின்றன. இத்தகைய நிலையான சொத்துக்கள்; பெறுமதி அடிக்கடி மாற்ற மடையாதிருக்கும், மீள் விற்பனைக்கோ அல்லது நுகர்விற்கோ அன்றி நீண்டகால தொழிற்பாட்டிற்காக பெற்றுக்கொள்ள பட்ட வளங்கள், திரவத்தன்மை குறைந்த வையாக இருத்தல் இதனால் இதில் செல் விடப்பட்ட பணம் நிலையான மூலதனட எனப்படும். இத்தகைய பண்புகளை கொண்டு காணப்படுகின்றன.
4.0 பெறுமானத் தேய்வு
(Depreciation) பெறுமானத் தேய்வென்பது உருவமுள்ள நிலையான சொத்துக்சளின் - கிரயத்தில் (Cost) அல்லது மதிப்பிடப்பட்ட பெறுமதி யிலிருந்து (Valuation) அதன் இறுதியில் தேறுகின்ற பெறுமதி (Salvage Value) ஏத வது இருப்பின், அதனைக்கழித்துவரும்
வணிகநாதம்-1992

70
U
தொகையினை சொத்தின் மதிப்பிடப்பட்ட பயன் தரக்கூடிய பொருளியல் ஆயுள்காலம் முழுவதும் நியாயமான முறையில் பகிர்ந் தளிப்பதென வரையறுக்கப்படும், அதாவது நிலையான சொத்துக்கள் தொழில்பாட்டில் ஈடுபட்டு இறுதியில் ஒய்வு பெறும் போது மீளப்பெற முடியாமல் போகும் கிரயத்தின் ஒரு பகுதி பினையே பெறுமானத் தேய் வென் பர். எனினும் எல்லா வகையான சொத்துக் களும் பெறுமானத் தேய்வடையும் என்று
கூறமுடியாது. இதனடிப்படையிலேயே (1) பெறுமானத் தேய்வு செய்யக்கூடிய
நிலையான சொத்து (ii) பெறுமானத் தேய்வு செய்யப்பட
முடியாத நிலையான சொத்து என இரு பிரிவாக நிலையான சொத் துக்களை பிரித்து கூறுவர். பெறுமானத் தேய்விற்குட்படுகின்ற நிலையான சொத் துக்களையே பெறுமானத் தேய்வு செய்யக் கூடிய நிலையான சொத்துக்கள் என்பர். இவற்றுள் நிறுவனத்தினால் உற்பத்திக்காக அல்லது பொருட்கள் சேவைகளை விநியோ கிப்பதற்காக அல்லது மற்ற வர்களுக்கு வாட கைக்கு விடுவதற்காக அல்லது நிர்வாகத் தேவைகளுக்காகவும், நிலையான சொத்துக் களின் பராமரிப்பிற்காகவும் வைத்திக்கப் படும் நிலையான சொத்துக்கள் ஆகும். அதாவது மீள்விற்பனை செய்வதற்கோ அல்லது நுகர்விற்கோ அன்றிப் பெரும் பாலும் நிரந்தர தேவைக்காக கொள்வனவு செய்யப்பட்டு அல்லது கட்டப்பட்டிருப்பது டன் வரையறுக்கப்பட்ட பயன் தரக்கூடிய பொருளியல் ஆயுட்காலத்தினைக் கொண்ட நிலையான சொத்துக்களை அடக்குவர்.
எனினும் காடுகள் அதேபோன்று மீண்டும் புதுப்பிக்கக்கூடிய இயற்கை வளங் கள், காணிகள் என்பன பெமானத் தேய் விற்குட்படுகின்றன என திட்டவட்டமாக வலியுறுத்திக் கூறமுடியாதுள்ளதனாலும் பயன் தரக்கூடிய பொருளியல் ஆயுட்காலத் தினை வரையறுக்க முடியாதுள்ளதனாலும் இவற்றை பெறுமானத் தேய்வு செய்யப்பட முடியாதுள்ள நிலையான சொத்துக்களில் அடக்குவர்.

Page 97
- (பகம் -
4. 1 நிலையான சொத்துக்கள்
பெறுமானத் தேய்வடைவதர் கான காரணங்கள்:-
(அ) வியாபார அமைப்புக்கள் தமது நிலை
யான சொத்துக்களை தொடர்ந்து தொழிற்பாட்டிற்குட்படுத்தும் போது தேய்வி (wear and tear) ற்குட்படுவ
னால் அவை பெறுமானத் தேய்வடை கின்றன.
(ஆ) நிலையான சொத்துக்களை தொழி
பாட்டிற்குட்படுத்தாது விடுகின்ற ச தர்ப்பத்திலும் காலக்கழிவால்(Effluxio of Time) அவை பெறுமானத் தே. வடைகின்றன. உ+ம் குத்தகை அடி! படையில் பெறும் நிலையான சொ
துக்கள்.
(இ) உற்பத்தி மாற்றங்களினால் அல்லது
முன்னேற்றங்களினால் (Improvements ஏற்படும் வழக்கிழப்பு (Obsolecence ஏற்பட்டு நிலையான சொத்துக்கள்
பெறுமானத் தேய்வடைகின்றன. (ஈ) சு ர ங் க த் தி  ைன எடுத்து நோக்கு
வோமானால் கனியவளத்தினை உ யோகப்படுத்தும் போது தீர்ந்து போகும் (Exhaustion) நிலை ஏற்பட்டு சுரங்கம் தின் மதிப்பு குறைவடையும்.
(உ) நிலையான சொத்திற்கான திருத்
பராமரிப்பு நிகழ்ச்சித் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளிலும் பெறு மானத் தேய்வு ஏற்படும்.
சு.
4.2 பெறுமானத் தேய் வு தாக்கல்
செய்ய வேண்டியதன் அவசியம் ஒவ்வொரு நிலையான சொத்திலும் ஏ. படும் பெறுமானத் தேய்வினை நேரடியா. அறியமுடியாது. எனவே நிலையான சொத்து வியாபாரத்தில் பயன்படுத்தப்படும் தேவை! கும், சொத்தின் வகைக்கும் ஏற்ப மிக பொருத்தமான பெறுமானத் தேய்வு முறை யினை தெரிவு செய்து சொத்தின் பயல் எதிர்பார்க்கப்படும் காலங்களுக்கு முடிந்த
வணிகநாதம்-1992

71
நிலையான சொத்துக்கள்
த
வரை நியாயமான முறையில் பெறுமானத் தேய்வினை பகிர்ந்து ஒதுக்குவது முகாமை - யின் கடமையாகும். இத்தகைய பெறுமா னத் தேய்வினை தாக்கல் செய்ய வேண் டுமா? என கேள்வி எழுப்புவோமாக இருந் தால். (அ) பெறுமானத் தேய்வானது உற்பத்திக்
காக ஏற்படும் ஓர் மறைமுக செல் வாகும். இத்தகைய மறைமுகமான செலவினையும் உட்படுத்தி கணிக்கப் பட்ட இலாபமே உண்மையாக ஈட்டிய
இலாபமாக கொள்ளப்படும். (ஆ) கம்பனிச் சட்டப்படி பெறுமானத்
தேய்வு செய்யப்பட்ட பின்னரே பங்கு இலாபம் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்படுவதனால் பெறுமானத் தேய்வுதாக்கல் செய்யவேண்டியுள்ளது .
அ.
(இ) ஒரு சொத்து பெறுமானத் தேய்விற்குட்
படுவதனால் ஆயுளின் இறுதியில் புதிய சொத்தினை பிரதியீடு செய்வதன் கடப் பாடு முகாமைத்துவத்தினை சார்ந்த தாகும். எனவே ஒவ்வொரு நிதியாண் டில் ஏற்படும் பெறுமானத் தேய்வினை அக்காலப்பகுதியின் இலாபத்திற்கு எதி ராக சாட்டுதல் செய்யப்பட்டு நிதியங் களைத் தோற்றுவிப்பதன் மூலமாகவே தான் சொத்துப் பிரதியீடு செய் வதனை இலகுபடுத்தலாம். இந்தவகையில் ஒவ் வொரு வியாபார அமைப்புக்களும் தமது நிறு வனத்தில் ''திரண்ட தேய் மானம்" எனும் ஓர் நிதியத்தினை பேணி வருவதனால் பயன் தரு பொருளியல் ஆயுளின் இறுதியில் சொத்தினை பிரதி யீடு செய்வது இலகுவானதாக அமை கின்றது.
எத்தி", அதியவராரு
அ. அ அ 9.
இதனை விட நிறுவனத்திற்கு வெளி யில் இரண்டு நிதியங்கள் தோற்றுவிக்கப் படுகின் றன. அதில் ஒன்றாகவே ' 'ஆழ் நிதி
முதலீடு '' அமைகின்றது. ஒவ்வோராண் ஐ டின் தேய்மானம் தனிக் கணக்கில் ஒதுக்
கப்பட்டு அத்தொகை உடனே விற்கக் கூடிய கடன் பத்திரங்களில் பெரும்பாலும்

Page 98
த. ஸ்ரீகரன் (1)
அரசினர் கடன்பத்திரங்களில் முதலீடு செய் பப்படுகின்றது. இவ்வாறு ஒவ்வொரு ஆண் டும் தேய்மானமாக ஒதுக்கப்படும் தொகைக் கும் மீதியாகவுள்ள ஆழ்நிதி முதலீட்டுத் தொகை அளவுக்கான வட்டியும் சேர்த்து ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியிலும் புதிய கடன் பத்திரங்கள் வாங்கப்படும். இந் நிலையான சொத்தின் பயன் தரு பொருளி யல் ஆயுள் இறுதியில் ஆழ்நிதி முதலீட்டை விற்று புதிய சொத்தை பிரதியீடு செய்ய லாம்.
நிறுவனங்கள் காப்புறுதிக் கம்பனியிடம் ஓர் காப்புறுதித் திட்டத்தை (Insurance Policy) எடுத்துக் கொள்வதன் மூலம் மற்று மோர் நிதியத்தினை தோற்றுவிக்கின்றன. இங்கு ஒவ்வொரு ஆண்டின் தேய்மான அளவிற்கு சமமான காப்புறுதி கட்டணத் தொகையாக (Insurance Premium) ஒவ் வொரு நிதியாண்டு தொடக்கத்திலும் செலுத்த வேண்டி இருக்கும். இது ஆழ் நிதி யைப் போன்று முதலீடு செய்தல், வட்டி வசூலிக்கும் தொல்லைகளும், இறுதியில் முதலீட்டின் மதிப்பு குறைவடையுமோ என்ற அச்சமும் தவிர்க்கப்படுவது ஓர் தனிச்சிறப்பம்சமாகும். 5. செலவுகள் (Expenditure)
வியாபார அமைப்புக்கள் நிலையான சொத்தின் பெறுமானத் தேய்வினை அதி கரித்து செல்லவிடாது தடுக்கும்பொருட்டு அச்சொத்தின் பயன் தரக்கூடிய பொரு ளியல் ஆயுளில் இரு வகைச் செலவினங்கள் மேற்கொள்ளுகின்றன.
ஒரு நிலையான சொத்தின் பயன் தரக் கூடிய பொருளியல் ஆயுட்காலத்தில் சொத் தின் வினைத்திறனை அதிகரிப்பதற்கு அச் சொத்தின்மீது மூலதனச் செலவு (Capital Expenditure) மேற்கொள்ளப்படுகின்றது. இச் செலவானது நிலையான சொத்தின் கிரயத்தினை அதிகரிக்கச் செய்துவிடும். இதற்கு எடுத்துக்காட்டாக பொறிகளின் வலுக்கூட்டல், கட்டட விரிவுபடுத்தல்
வணிகநாதம்-1992

72
47ல்
போன்ற வகையில் அமையும் வியாபார அமைப்புக்கள் மூலதனச் செலவு தொடர் பாக ஏற்படுத்துகின்றதோர் பொறுப் பொதுக்கமே திருத்தங்கள், புதுப்பித்தலுக் கான பொறுப் பொதுக்கமாகும். அதாவது பல வருட காலத்திற்குள் பதிவழிக்கப்படும் செலவைச் சமப்படுத்துவதற்காகப் பாவிக் கப்படும் பொறுப்பொதுக்கமே திருத்தங் கள், புதுப்பித்தலுக்கான பொறுப்பொதுக்க மாகும். இதனது முக்கிய நோக்கம் ஒவ் வொரு கணக்கீட்டாண்டும் ஒதுக்கும் தொகையைக் கொண்டு ஒருவகை கழிவு நிதி (Sinking Fund)யை ஏற்படுத்தி இறுதி யில் நிலையான சொத்தை திருத்துதல், புதுப்பித்தலுக்கு பயன்படுத்தப்படும்.
ஒரு நிலையான சொத்தின் பயன் தரக் கூடிய பொருளியல் ஆயுட்காலத்தில் அச் சொத்தினை புறக்காரணிகளிலிருந்து பாது காப்பதற்காக அதாவது பராமரிப்பிற்காக வருமானச் செலவினை (Revenue Expe0diture) மேற்கொள்ளுகின்றது முகாமைத்து வம். அதாவது நிலையான சொத்திற்காக பல தடவைகள் மேற்கொள்ளப்படும் செல வாக அமையும் நிலையான சொத்துக் களால் ஏற்படுகின்ற வருமானச் செலவுகள் அதிகளவு தொகையாகவும் அதனால் ஏற் படுகின்ற பயன் பல கணக்கீட்டாண்டு களுக்கான இலாபத்திற்கு எதிராக தாக்கல் செய்யவேண்டியதாகவும் இருந்தால் இந் நிலையில் அதனை பிற்போட்ட வருமானச் செலவு (Deferred Revenue Expenditure) ஆக கருதலாம். இவ்வகையில் ஏற்படும் பெரியளவிலான பராமரித்தல் செலவுகளை குறிப்பிடலாம். பிற்போட்ட வருமானச் செலவு மீதி ஐந்தொகையில் மூலதனத் திலிருந்து கழித்து காட்டப்படும்.
ர)
நிதியளிக்கப்பட்டது. பங்கு மூலதனம் ஒதுக்கம்
X X X X
X XX XX XX
X X X
கழிக்குக: - பிற்போடப்பட்ட வருமான
செலவு
(XXX) XXXX

Page 99
6. இறுதியில் தேறுகின்ற பெறுமதி
(Salvage Value)
* பெறுமானத் தேய்விற்குட்பட்ட நிலை யான சொத்தின் பயன் தரக்கூடிய பொருளி யல் ஆயுள்கால முடிவில் தேறுகின்ற பெறு மதியே '' இறுதியில் தேறுகின்ற பெறுமதி” என்பர். மேலும் எப்பொழுதாவது பயன் படுத்த முடியாது என்ற நிலையில் உள்ள நிலையான சொத்தின் பெறுமதியையே இது கருதும் என்பதனால் ''கழிவு மதிப்பு '' என்றும் அழைப்பர். சொத்தின் கிரயத்தை பொறுத்தவரை இத்தொகை மிகச்சிறியதாக இருப்பின் இத்தொகை புறக்கணிக்கப்பட லாம். குத்தகை அடிப்படையில் பெற்ற சொத்துக்களுக்கு இம் மதிப்பு இல்லை.
- 7. நிலையான சொத்துக்களின் வழங்
கல் (கையளிப்பு) (Disposal of Fixed Assets)
வியாபார அமைப்புக்கள் தமது நிலை யான சொத்துக்களை பயன் தரு பொருளி யல் ஆயுளின் இடைக்காலத்தில் அல்லது இறுதியில் கையளிப்பு (வழங்கல்) செய்கின் றன. ஏனெனில் புதிய உற்பத்தி முறை களைத் தீர்மானிக்கின்றபோது பழைய நிலை யான சொத்துக்களை கையளிப்பு செய்ய வேண்டிய நிலை ஏற்படுகின்றது. அத்து
உசாத்துணை நூல்கள்
(1)
உயர் கணக்கியல் (இரண்ட (2)
Accounting Policies and A Sri Lanka Accounting Star
10
'' இரண்டாவது வணிகநாதமே கல்வியுலகிற்கு பயன் பல த
டயமன்ட
சுன்
-வணிகநாதம் --1992

73
நிலையான சொத்துக்கள் ...
டன் நிலையான சொத்துக்கள் தமது வினைத்திறனை இழக்கலாமென எதிர் பார்த்தும் நிலையான சொத்து கையளிப்பு இடம் பெறலாம். அதாவது
நிலையான சொத்து
விற்பனை சுழற்சி விகிதம் =
- நிலையான சொத்து
ஒவ்வொரு நிலையான சொத்தினையும் அல்லது தொகுதியினையும் நி  ைல ய ா ன சொத்து சுழற்சி விகிதத்தில் தொடர்பு படுத்துவதன் மூலம் வினைத்திறனை அறி தல் இலகுபடுத்தப்படும். இவை மட்டுமல்ல நிறு வனம் நிதி நெருக்கடியை எதிர் நோக்கி னால் அல்லது நவீன வகையான சொத்தை கொள்வனவு செய்வதற்காக நிலையான சொத்து கையளிப்பு இடம்பெறும்.
நிலையான சொத்து காசுக்கு கையளிக் கப்பட்டிருப்பின் அதன் புத்த கப் பெறுமதி (கிரயத்திலிருந்து கடந்தகால பெறுமானத் தேய்வுத் தொகைகளை கழித்த பின்னுள்ள கிரயம்) விற்பனைப் பெறுவனவிற்கு (Sale - Proceed) எதிராக ஒப்பிடப் பட்டு விற்பனை - யால்ஏற்பட்ட இலாபம் அல்லது நட்டம் இ நிச்சயிக்கப்படும். இதனால் பெறப்படுவது இலாபமானால் அதனை மூலதனவருமானம் என்பர்.
எம் பகுதி -, இரண்டாம் புத்தகம்) ccounting Standards
dard-8
2 வருக
தருக''
- ரேடர்ஸ்
னாகம்

Page 100
இந்து நாகரிகச் சிறப்
இந்து சமயங்கள் அனைத்துக்கும் அடிப் படையான பிரஸ் தானத்திரயத்தில் உபநிட தம் ஒன்றாகும், மற்றைய இரண்டும் பிரம்ம சூத்திரமும், பகவத்கீதையுமாகும். பிரதான மாக மூ ன் று என்பதை உ ண ர் த் து ம் பொருட்டே பிரஸ்தானத்திரயம் எ ன் ற சொற்பிரயோகம் ஏற்பட்டதெனலாம். இத் தகைய பிரஸ் தானத்திரயத்தில் இந்து நாக ரீகச் சிறப்பிற்கு உபநிடதம் அடிப்படையாக அமைகின்றது.
உபநிடதம் என்றால் உப + நி + ஷத் என்னும் மூ ன் று சொற் க ள் சேர்ந்து உபநிஷத் என்று அமைந்தது. உப என் றால் அருகில் என்பது கருத்து. அதாவது குருவின் அருகில் இருந்து சி ர த்  ைத யு ட ன் கற்க வேண்டிய விடயங்களை உள்ளடக்கி விளங் கிக்கொள்வது எனலாம். மெய்ஞ்ஞான உண்மைகளைக் கேட்கத்தக்க ப க் கு வ முடையவர்களுக்கு உபதேசிக்க வேண்டியது முறையாகும். தம்மை நாடி வந்து பணி வோருக்கும் மெய்ஞ்ஞான வேட்கையோடு பணிவிடை செய்து கொடுப்பவருக்கும் குரு மெய்ஞ்ஞான இரகசியங்களை போதிப்பார். உண்மை நாடுவோன் சிரத்தையுடன் கேட்க வேண்டும். தத்துவத் திறவுகோலான உப் நிடதத்திற்கு இந்தக் கருத்துக்களையெல் லாம் உள்ளடக்கி உபநிஷத் என்ற பெயர் அமையலாயிற்று ஆசிரியர் சீட னு க் கு க் கதைகள் கூறுவது போலவும் உபதேசிப்பது போலவும் சம்பாசனை உருவத்திலும் பல வற்றை உள்ளடக்கியது உபநிடதம். இது வேதத்தின் சாரம் வேதத்தைப் பொதுவாக மறை என்று கூறிலும் அது உ ப நி ட த த் திற்கே மிகப் பொருத்தமானது.
உபநிடதங்களின் அமைப்பு முறையை நோக்குமிடத்து வேதங்களிலே முப்பொருள் பற்றிய விளக்கங்கள் தெளிவற்றுக் காணப்
வணிகநாதம்-1992

யிற்கு உபநிடதம்
லோ. குலமகள், சு. வாசுகி ஆண்டு - 13 கலைப் பிரிவு.
படுகின்றன. இவற்றை உபநிடதம் தெளி வாக்கி வேதத்தின் முடிவான தொன்றாக வேறுபட்டு நிற்கிறது. வேதத்தில் சமயக் கொள்கை முதலில் இயற்கை வழிபாட்டு டன் இருந்தது. அ டு த் து இயற்கையைத் தெய்வமாக வணங் கு தலைக் கொண்டிருந் தது. இவ்வாறு பல தெய்வங்களை வணங் கும் போது ஒரு தெய்வக்  ெக ா ள்  ைக மேலோங்கி நிற்பதைக்காணலாம். பல தெய் வங்களை வணங்கியமையால் அமைதியடை யாது எது மேலான தெய்வமென்று பல முறை சிந்தித்து பிரஜாபதியே மேலானது என்றும் அவருக்கே அவிகளைச் சொரிதலை யுங் காண்கிறோம். இவ்வாறு ஒரு க ட வுளைக் கண்ட போதிலும் அவர் எப்படிப் பட்டவர் என்பதைக் கூறமுடியாது வேத கால மக்கள் இருந்தனர். பிரஜாபதி பற்றி யார் கூறுவார்கள் என ஏ ங் கி ன ா ர் க ள். பிரஜாபதி என்ற கருத்து உபநிடதத்தில் பிரம்மம் எ ன் று திரிந்திருக்கலாம். இது அல்ல என்று விளங்குவதன் மூலமே அது அல்லாத எதுவோ அதுவே கடவுள் என விளக்கப்படுகிறது. அதவாது ''தத்துவ மசி?' என்ற சொற்றொடரில் ஜீவான்மா, பர மான்மா என்ற கருத்துக்கள் உபயோகிக்கப் படுகின்றன. பிரம்மத்தைப் பரமான்மா என்றும் ஆத்மாவை ஜீவாத்மா எ ன் று ம் உபநிடதங்கள் வகுக்கும்.
உபநிடதங்களுள் பேசப்படும் விடயங் களை இரண்டு பிரிவுகளுள் அடக்கலாம். ஒன்று நம்முள் நின்று நம்மை இயக்கும் சக்தி. மற்றது வெளியே நம்புலன்களுக்கு விஷய மாயிருக்கும் புறவுலகாகும். ஒவ்வொருவருக் கும் உள் நின்று நம்மை இயக்கும் சக்தி ஆத்மா எனப்படும். இப்பிரபஞ்சம் அனைத் துக்கும் மூலகாரணமான பொருள் பிரம்மம் எனப்படும். மே லே குறிப்பிடப்பட்ட ஆத்மா, பிரம்மம் அவை இரண்டுக்குமுள்ள

Page 101
தொடர்பு என்பவை பற்றியே உபநிடதங் கள் முழுவதும் பேசப்படும் விடயமாகும். இவற்றையே உபநிடதங்களில் காணப்படு கின்ற சிறுகதைகளும் வலியுறுத்துகின்றன.
ஆத்மா
ஆத்மா என்றால் என்ன? உடலில் உள்ளே இருக்கும் சக்தியே ஆத்மா என் கிறது உபநிடதம். அது எமது உடலிற்கும் உடலின் உறுப்புக்களுக்கும் வேறுபட்ட ஒன்று என்பர். பிரஜாபதி, இந்திரன், சுவேத கேது, நசிகேசன் ஆகியோரது உரையாடல் களில் ஆன்மா பற்றிக்கூறப்படுகிறது. பிர ஜாபதி கூறுவதாவது வண்டியில் கட்டிய குதிரை போல ஆத்மா சரீரத்தில் கட்டப் பட்டிருக்கிறது. காண்பது கண்ணல்ல கண் ணை கருவியாகக் கொண்டு காண்பது ஆத் மா. உடலில் இருந்தும் இந்திரியங்களில் இருந்தும் வேறுபட்டது ஆத்மா. அதுதானே பரமானந்தமடையும் சரீரம் வேறு ஆத்மா வேறு என்பதை உணர்தல் முக்கியம். ஆத் மா அணுவைக்காட்டிலும் நுட்பமான பொருள். எனவே இதனைக் கண்ணால் காண முடியாது ஏனைய பொருட்களைக் கூறி இதுவல்ல என்று கூறுவதன் மூலமே ஆத் மாவை விளக்கமுடி யும். கடோப உபநிடதம் இரண்டாம் அத்தியாயத்தில் 8 ஆம், 12 ஆம் பாடல்களில் எங்கும் ஊடுருவி நிற்கும். இதயத்துள் வீற்றிருக்கும் இப்புனிதப்பொரு ளை தியானத்தால் கண்டவனே சுகமும் துக் கமும் கடந்த தாசனாவான் என்கிறது. காண்பது கடினம் அதனைக்காண்பது விடுத வைக்கு வழி. ஈசாவாசிய உபநிடதம் 4 ஆம் பாடல் ஆத்மா அசைவற்றது. மனதைக் காட்டிலும் வேக மானது. அனைத்திற்கும் உள்ளே இருப்பது. எனினும் சமீபத்தில் அது உள்ளது என்று கூறும் அதே உபநிடதத்தில் 7 ஆம், 8ஆம் பாடல்கள் ஆத்மாவின் பண் புகளை பின்வருமாறு கூறுகிறது. எவன் பொருள்கள் அனைத்திலும் ஆத்மாவைக் காண்கின்றானோ அவன் எதனையும் வெறுக்கத்தேவையில்லை எப்பொழுது இருப் பது அனைத்தும் ஆத்மாவாகி விட்டதோ அப்பொழுது ஒற்றுமையை கண்ட அவனிற்கு துக்கமேது, வெறுப்பேது, மயக்கமேது என்கி றது.
வணிகநாதம் - 1992

உபநிடதம்
பிரம்மம்
பிரம்மம் பற்றி விளக்கும் போது உப நிட தங் கள் அது விளக்குவதற்கரியது, அறிய இயலாதது, சார்பற்றது, தளையற்றது, துன்புறாதது, பொய்யாகாதது, எல்லாம் வல்லது. எங்கும் நிறைந்தது, அறிவுமய மானது என வர்ணிக்கிறது. இதே வர்ண னைகளே ஆத்மாவிற்கும் சொல்லப்படுகி றது. இதிலிருந்து ஆத்மா பிரம்ம ஒற்று மையை நாம் அறிய முடிகிறது. நம்முள் நின்று நம்மை இயக்கும் சக்தியை ஆத்மா என்றும், பிரபஞ்சம் முழுவதையும் இயக் கும் சக்தியை பிரம்மம் என்றும் உபநிடதம் கூறும். இவ் இரண்டு மூலப்பொருட்களை உ யும் தொடர்புபடுத்துவதன் மூலமே ஒவ் வொன்றின் தன்மையையும் அறிய முடிகி றது. உபநிடதங்கள் பிரமத்தைப் பற்றியே அதிகமாக விளக்கிச் சொல்லுகின்றன. இவற்றில் ஒன்று:- சொல்லால் பிரமத்தை விளக்கமுடியாது. அதில் நின்றுதான் உணர வேண்டும் மனதைக் கொண்டு நினைப்பது பிரம்மம் அல்ல. எந்தச் சக்தியால் மனம் நினைக்கிறதோ அதுவே பிரம்மம். இந்தப் பிரம்மமானது மிகவும் நுட்பமானது. ஒரு பொருள் இந்த நுட்பமான பொருளில் இருந்து எவ்வாறு பல பொருட்கள் உருவா கக்கூடும் என்ற வினா எழலாம் அதற்குத் தக்க உதாரணம் மூலம் உபநிடதம் விளக் கம் கூறும். சிறிய ஆலம் வித்திலிருந்து இலைகள், கிளைகள், விழுதுகள் கொண்ட பெரிய ஆலமரம் உருவாவது போலவும், அதன் தன்மை பழத்தில் புலப்படாதது போலவும் இருப்பதைக் காணலாம். இதே போல் நீரிலே கரைத்த உப்பின் உருவம் கண்ணுக்குப் புலப்படாதது போலவும் அதன் இயல்பு தண்ணீர் முழுவதும் செறிந் திருப்பது போலவும் இவ்வுலகெங்கும் பிரம்மம் மறைந்து காணப்படுகிறது. படுக்கையில் கிடக்கும் நமது உடலை எழுந்து உட்காரச் செய்வதும், உட்கார்ந் திருக்கும் உடலை எழுந்து நடக்கச் செய் வதும் உடலில் உள்ள ஒரு சக்தியாகும். இதனை ஆத்மா என வைத்துக் கொண் டால் உடலைப் போலவே உலகமும் இயங் குகிறது. உடலை இயக்குவதற்குச் சக்தி

Page 102
லோ குலமகள், சு. வாசுகி
உண்டு என் றால் இந்தப் பிரபஞ்சம் முழுவ தையும் நின்று இயக்குவதற்கும் ஒரு சக்தி வேண்டும். அச் சக்திதான் பிரம்மம் எனவே தான் உடலை இயக்கும் சக்தியை ஆத்மா அல்லது ஜீவாத்மா என்றும் உலகத்தை இயக்கும் சக்தியை பிரம்மம் அல்லது பர மாத்மா என்றும் உபநிடதங்கள் விளக்கு கின்றன. உபநிடதங்கள் பிரமத்தை இரண்டு நிலைகளில் வைத்து விளக்குகின் றன.
1. சப்பிரபஞ்சநிலை- அதாவது உலகத் தோடு கூடி உலகம் எங்கும் வியாபித்து இருக்கும் நிலை. இந்நிலை பிரபஞ்சத்தோடு கூடியது. இந்நிலையைச் சாந்தோக்கிய உபநிடதம் நன்கு விபரிக்கும். இந்த உலகம் எதிலிருந்து தோன்றிப் பின்னர் எதனால் நிலை பெற்று எதனுள் முடிகின்றதோ அதுவே பிரம்மம்.
விட* -ஞ்சகம்
2. நிஸ்பிரபஞ்சநிலை:- பிரபஞ்சமற் றது என்பது இதன் கருத்து அன்று அதற் கும் அப்பாற்பட்டது என்பது கருத்து. இதனைப் பிரஹதாரண்ய உப நிடதம் நன்கு விளக்கம். இந்த உலகம் பிரமத் துள் அடங்குமே தவிர பிரம்மம் உலகத் திற்குள் அடங்காது. சைவசித்தாந்தம் உலகத்திற்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பை மூன்று விதமாக கருதுகிறது. ஒன் றாய், உடனாய், வேறாய் என விளக் கும். சப்பிரபஞ்ச நிலை முதலிரண்டையும் நிஸ்பிர பஞ்ச நிலை வேறாய் என்பதையும் விளக்கும்.
உபநிடதங்கள் காட்டுகின்ற ஆத்மாக் - கள் இறைவனைப் (பிரம்மம்) போலவே
சூக்குமம் பொருந்தியவை. அவை தூல சரீரத்தில் வாழ்கின்றன. உடலை ஆத்மா இயக்குவதுபோல ஆத்மாவைப் பிரம்மம் இயக்குகிறது. பிரமத்தை யாரும் இயக்குவ தில்லை. ஆத்மாக்கள் தாமாகவே எதை யும் செய்யும் ஆற்றல் இல்லை. ஐம்பொறி களும் படைத்தாலன்றி சக்தியினால் இயக் கப்பட்டு அல்லாமல் அவை உணரமாட்டா, இந்த ஆத்மாக்கள் வாழும் வாழ்க்கை நிலையற்ற வாழ்க்கை, ஆத்மாக்கள் இயங்கு
வணிகநாதம் - 1992

வ தும் இன்பதுன்பங்களை அனுபவிப்பதும் பிரம்மத்தினாலேயாகும். ஆத்மாவின் தோற்றம், இயக்கம், ஒடுக்கம் அனைத் துமே பிரம்மத்தில் அடங்குவ ன. பிரம்மத் தினின்றும் நீங்கி ஆத்மா செயற்பட முடி யாது. பிரம்மம் விறகில் மறைந்திருக்கும் நெருப்புப் போலவும் நீரில் மறைந்திருக் கும் உப்புப் போலவும் மறைந்து காணப் படுகிறான். அதே போல ஆத்மாக்களும் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தி நக் கிறது. ஆத்மா பிரமத்தைப் பற்றிய அறிவு பெறுவதற்கு ஞான நூல் நன் கு அறியப் படுகின்றது. பிரமத்தைப் பற்றிய ஞானம் கைவரப்பெற்ற ஆத்மாக்களுக்கு வீடு பேறு இலகுவாகின்றது.
முத்தி (விடுதலை)
துன்பத்திலிருந்து நீங்கிய நிலையே முத்தி எனப்படும். இருவித முத்திகள் உப் நிடதத்தில் பேசப்படும் ஒன்று விவேக முத்தி அதாவது தேகம் நீங்கிய பிற்பாடு ஏற்படுவது மற்றது சீவன் முத்தி. அது இந்த உடலோடு இருக்கும்போதே பக்குவ மடைந்தவர்களால் பெறக்கூடி யது.
முத்தியடைவதற்கு ரிய வழிகளை உப நிடதங்கள் கூறுகின்றன. அவற்றுள் வைராக் கியமும், ஞானமும் முக்கியமானது. வைராக் கியம் என்பது பற்றறுத்தல். அது அகங் காரத்தை நீக்குவதன் மூலமே கை கூடும். அகங்காரமே எல்லாக் கேடுகளுக்கும் காரண மாகும். பிரமச்சரியம் முதலான வாழ்க் கைப் படிகளை முறையாகக் கடப்பதன் மூலமே அகங்காரத்தை நீக்கி பற்றற்ற நிலையை அ  ைட ய ல ாம். ஞானத்திற்கு மூன்று வழிகள் கூறப்படுகின்றன. அவை சிரவணம், மனனம், நிதித்தியாசனம். சிரவ ணம் என்பது தக்ககுருவின் மூலம் உபநிட தத்தைக் கற்றல். மனனம் என்பது கற்ற வற்றைச் சிந்தித்தல் நித்தியாசனம் என்பது அவற்றைத் தியா னித்தல். இதுவே மிக முக்கி யமானது. இது இலகுவில் கைவரக் கூடிய தல்ல, அதனாலே தான் பல வித உபாசனை கள் உபநிடதங்களில் இதனைப் பெறுவதற் காகக் கூறப்படுகின்றன.

Page 103
உபநிடதகாலச் சமுதாய வாழ்வையும், ஒழுக்கத்தையும் நோக்குமிடத்து உபநிடத ஞானிகள் ஒழுக்கத்தையும், உயர் குறிக் கோள்களையும் தம்வாழ்விலும் தம் சீடர் களுடைய வாழ்விலும் வி ள ங் கு ம் படி வாழ்ந்தனர். எனவே இவர்கள் சிறந்த நாகரிகத்தினர். சத்தியம் ஒன்றே வெற்றி தரும். (சத்தியமேவஜஜதே) என்பது உப நிடதவாழ்வின் இலட்சியமாகும். த ா ய் தெய்வம், தந்தை தெய்வம், குரு தெய்வம் (மாதுர் தேவோபவ, பி திர் தேவோபவ, ஆச்சார்ய தேவோபவ) என வற்புறுத்து கிறது. குருவைப் பிரம்மா, விஷ்ணு என்றும் குருவே கண்கண்ட பரமேஸ்வரன் என்ற இலட்சியமும் பேணப்பட்டது. உணவைப் போற்றி வாழுமாறு அறிவுரை கூறப்பட் டுள்ளது. அன்னம் தெய்வத்திற்குச் சமம் என்ற கோட்பாடு உபநிடத நாகரிகத்தின் சிறப்பைக் காட்டுகிறது. ஆன்மீக சிந்தனை
கிலை
விவம்
எல்.
2 mயs :
சர்வதேச ரீதி உள்ளூர் ரீதி
LKWHITE
இ
வா
எa
சீருடையாயினும் வேறு புத்தாடைபோல் சலவை (
''மில்க்வைற் மில்க்வைற்
இவை ஓர் உள்
மில்க்வைற் சவர்க்கார மில்க்வைற் சலவைத் ;
இ 25 மில்க்வைற் மேலுறைகள் ) சலா
அல்லது அப்பியாசக் கொப்பி ஒன்
பா.
வணிகநாதம் 1992

உபநிடதம்
தொடக்கம் நாளாந்த வாழ்வுவரையுள்ள எல்லா விடயங்களும் உபநிடத சிந்தனை களில் உருக் கொண்டுள்ளன எனலாம். சாக்கிரம் (யாக்கிரதை, விழிப்புடன் இருத் தல்) சொப்பனம் (கனவு நிலை) சுழுத்தி (நித்திரை நேரம்) துரியம் (பேருறக்கம்) துரியாதீதம் (அதீத நிலை - வீடு பேறடையும் நிலை) என்ற ஐந்து நிலை கள் மூலம் உப நிடத ஞானிகளின் உளவியல் அறிவு நன்கு புலப்படுகிறது. ஞானமார்க்கம் மட்டுமன்றி பக்தி மார்க்கமும் உபநிடதத்தின் வாயி லாகப் புலப்படுகிறது. இவற்றையெல்லாம் நோக்கும் போது இந்து நாகரிகச் சிறப்பிற்கு இவை மிகப் பெ ரு ம் ப ங் கி  ைன அளித் துள்ளமை புலனாகும். இதனாலே தான் சுப்பிரமணியபாரதியாரும் "பன்னிரு முப நிடத நூலெங்கள் நூலே பார் மி  ைச ஏதொரு நூலிது போலே "' என்று கூறியுள்ளார்.
யில் சிந்திப்போம் யில் செயற்படுவோம்
டயாயினும் செய்ய
- சோப்,
சலவைத் தூள்''
டு மளூர் உற்பத்தி கள்
ம் கட்டி • ரூபா 7/- தூள் 50 கிறாம் பக்கற் ரூபா 6
வத்தூள் பக்கற்றுகள் அனுப்பி நீதி நூல் றை அன்பளிப்பாகப் பெறுங்கள்.
-''மில்க்வைற் '' -

Page 104
ப09:AHMEE%EERI20028ELEEPEHSALEHER1.94 கோ* 上面的四思和國西部的國國目前由前对当回到球面的面前首相在国际国的动机后面团關证明和四国的国国的盟国国al SuG,
இRITIRTITITINTEPTAMILாகன்
|
லிங்கம் கூல்பார்
- L - 6 G 9
(.
LINGAM COOL BAR
51, வெலிங்டன் சந்தி,
யாழ்ப்பாணம்.
வர்த்தக மாணவர் மன்றம் வாழ்க.
இ ப |
13 LLD ISLTTLUEETLEபயED)
ட்) கெளரி தொழிலகம் 538, ஆஸ்பத்திரி வீதி
யாழ்ப்பாணம். ism
தையல் இயந்திரங்கள் உதிரிப்பாகங்கள் விற்பனையாளர்,
திருத்துபவர்கள்.

EUIT ஏFI
ELADIE பா மகன்.
ரமான பிஸ்கற், கேக் வகைகள். றந்தநாள் திருமண வைபவங் நக்கு ஏற்ற கேக் வகைகளையும் மாத்தமாகவும் சில்லறையாகவும் பற்றுக்கொள்ள,
|
அமலா ,
சகிலா பேக் ஹவுஸ் ||
|ாEேE
இல: 141 கே. கே. எஸ். வீதி,
சுன்னாகம்.
* புகைப்படப் பிடிப்பாளர்கள் * வீடியோ படப்பிடிப்பாளர்கள்.
ப 13 !
கதிர்
இது > ம.
விமலா ஸ்ரூடியோ
கே. கே. எஸ். வீதி,
சுன்னாகம்.

Page 105
91800000000008e0a0e06e08e9e9008e0
வட்டுத் 6 தெங்கு பனம் 1ெ விற்பனவுக் கூl
- ரங்கா
மேற்படி சங்கத்தின் பனம் பெ சங்கத்தாரால் உற்பத்தி
வெல்லம் மற்றும் பனம் பொருள் உல
விலையில் பெற்று
00000000000eeeeeeeeeeeeea00ாமகமலைமகுலஇேஇடுமை.oee 89-குழeoாமமா?சோனம் சோதனை: அஅைகேலாலுறைகணைee
அகஇ இயகம் 03பதுக்கல்
இடி தாக்கு
ஸ்கந்தவரோதை வணிக நாதம் 1
வளர்ச்சியுற பல கட்சி
ਨੂੰ ਸਰ ਕਰਨ ਲਈ ਕੀ ਕਰ ਸਕਦਰ ਨ ਕਤ ਆ
பொருளியல்
யாழ். பிரபல கல்வ வகுப்புக்கள் நன
ஒ66666666e08eea00eeeeeeeeதுமதகுருகுது

190009:609080900e00000000090eae9e3
தொகுதி பாருள் உற்பத்தி டடுறவுச் சங்கம்
னை |
- - ாருள் விற்பனவு நிலையத்தில், 2
செய்யப்பட்ட தரமான , சீனி, எவு வகைகள் நியாயமான க் கொள்ளலாம்.
- யா
aca60o0oooooooooeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee3ப3பே3ப3பே33333333
யர் கல்லூரியின் பல்லாண்டு காலம் வாழ்த்துக்கள்
பொள்" : ਚ¢ ਇਕ ਬੇਵਦ ਕਰ ... ਨਵਾਂ ਸਹੂ ਤੇ ਨਗਰ
திரு. உதயன்
பி நிலையங்களில் ஊடபெறுகின்றது.
se0ae608 0000000000000000000

Page 106
தரமான சத்துள்ள விரும்பிய அளவு பைக்கம்
*(.
*2
ஜீ வா
இது வளர்ந்து வரு பாலூட்டும் தாய்மார்களுக்கும்,
ஏனையோருக்கும் ஏற்ற
க
#
உங்கள் 6 தொகையாகவும், சில்லறைய
அண்ணா (
இணா
00000000000000000000
வணிக நாதம் ,ெ
எமது வா நமது பாரம்பரிய சுவைமிகு உணவுவகை இனிப்பு சிற்றுண்டி வகை வீட்டுப்பாவனைப் பொருள்
கால்நடைகளின் உணவு ஆகிய உற்பத்திகளை பனை அபிவி யங்களில் மொத்தமாகவும் சில்லை
கற்.
தொடர்பு: சந்ை
- பனை அபி
53, கன்
யாழ்ப் 444

சிறந்த உப உணவு றுகளில் எங்கும் கிடைப்பது
காரம்
ம் குழந்தைகளுக்கும், போஷாக்கு குறைந்தவர்களுக்கும்,
ஓர் உப உணவாகும்.
தவைக்கேற்ப ாகவும் பெற்றுக் கொள்ளலாம். தொழிலகம் ரவில்
WWW -
ఇeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeం
தாடர்ந்து வெளிவர
ழ்த்துக்கள்!
வளத்திலிருந்து கள் - * மென்பான வகைகள் கள் * அலங்காரப் பொருள்கள் ள்கள் * பனந்தும்பு தூரிகைகள் புகள் பருத்திச் சபையின் விற்பனை நிலை
றயாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
பகம்
தப்படுத்தல் பகுதி விருத்திச்சபை
எடிவீதி,
பாணம்.
மேகம்

Page 107
පළපෙළඑළවළුඑළුපෙළ
Our Compliments
0000000000000கே.செலலைேேேேேே00:02aaoceased
சTY MEDICALS 487, Hospital Road
Jaffna.
தேரமான பிஸ்கற், கேக் வகைகள் 8மொத்தமாகவும் சில்லறையாகவும்
பெற்றுக்கொள்ளலாம்.
8 பிறந்தநாள் திருமணவைபவங்களுக்கு
ஏற்ற கேக் வகைகள் 8 ஓடருக்குச் செய்து கொடுக்கப்படும்.
aெaaaeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeea00e0
சுதன் (B) பேக் ஹவுஸ் டாக்டர் சுப்பிரமணியம் வீதி,
சுன்னாகம். eேeeee9eea0e08eea0c0e9eea004

eea0aeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee!
ஆண்கள் பெண்களுக்கான
ஆடைகள்
நவீன முறையில் தைப்பதற்கு
சிறந்த ஸ்தாபனம்
எழிலியல் தையலகம்
காங்கேசன்துறை வீதி,
தாவடி.
வணிக நாத ஒலி எங்கும் பரவ, எமது நல்லாசிகள்0
உங்களுக்கு வேண்டிய ஒட்டு மா, பலா, தோடை, எலுமிச்சை, மாதுளை
- மற்றும் றோசா, செவ்வரத்தை, பாம்ஸ், ?
குறோட்டன் வகைகளுக்கும் -- நாடவேண்டிய இடம்
கட் அவா - 3
9ee9e9eeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee
ஸ்ரீகாந்த தோட்டம்;
கே. கே. எஸ். வீதி, 4 வது மைல், இணுவில்.
ஒeeeeeeeeeeeeeeee0000000000000000e:

Page 108
-- ( 2 - டி." "உ---------
1"வணிக நா தத்திற்கு எமது
வாழ்த்துக்கள் ''
நாம் எதை கை 2
என் மைமட 2 2 ஆ
சுப்பிரமணியம்
அன்கோ. 8, கே. கே. எஸ். வீதி,
சுன்னாகம்.
-- வணிக நாத ஒலி ஆண்டு தோறும் ஒலிக்க எமது நல்லாசிகள்
படி' புகைகு விருது-கும் புதியது 4.15-ம் தேதி தேடித்த 21 ஆக பது - 2 24 25 2 ( 3 ) ( } இ த ஆடி 7 8 9 (3- 543 ) தேவி - 1
1992 ஆம் ஆண்டு பரீட்சைகளில்
மருதனார்மடக் கோட்டத்தில் அதியுயர் பெறுபேறுகளை பெற்ற
செல்வன் கு விஜயகோபன் A/L செல்வன் இ. விஜயகுமார் A/L செல்வி ஆலோ, மதனி - Tா O/L
மற்றும் சிறந்த பெறு பேறுகளைப் பெற்ற ஏனைய மாணவ மணிகளையும் பாராட்டு கின்றோம்.
11 ஸ்கந்தா ஐக்கிய : 1 விளையாட்டுக் கழகம் .காம் சுன்னாகம்.

தொடர்ந்து ஆண்டு தோறும் மலர்ந்து கொண்டிருக்கும் வணிக நாதத்தை வாழ்த்துகின்றோம்,
வெயப்ளாக்கப்பல்
ஜெயா காமென்ஸ்
பருத்திக் கலட்டி,
சுன்னாகம்.
- விவேகானந்தா
கல்வி நிலையம் 1 மார்பா கந்தரோடை.. - - -
ம் ஆண்டு 5 முதல் A/L வரை
வகுப்புகள் நடைபெறுகின்றன.
ஆண்டு 5 முதல் 11 வரையான
ஆசிரியர் குழு கணிதம் - மதி தமிழ் - சக்தி, மீரா, லோகினி விஞ்ஞானம் - பிரபல ஆசிரியர் ஆங்கிலம், -
சிவா சமூகக்கல்வி - நிகே, குமார் வர்த்தகம் - "நாகேந்திரன் சங்கீதம் ட் - R. மலர்

Page 109
YYYY
For all your opt
just s
S. M. FER
Specialists in Han
Technology in
AAAAAAAAAAAAAAAM
S'MFER
EYES SKILFULLY TESTED
FOR THE RIGHT
S. M. FER
580, Hospi (Near Bank
JAFI
AAAAAYAV

AYAMAYAYAMA VYAMAS
tical requirements tep into
BNANDO
dling the Latest
Optical work
RNANDO
AND THE RIGHT LENS
VISION CHOSEN
RNANDO
AAAAAAAAAAAAAAAAAAAAAA
ital Road, of Ceylon)
FNA.
AAAAAAAAAY

Page 110
வணிக நாதம் சிறப்புற எமது நல்வாழ்த்.
"ఆత్మక గిలక
தாச ன் அச்சகம்
ம (
பாப
சிபபடபபடடககபப்பர்
-பிப 2 - 2
பட உயர் A.12

துக்கள்
படிபE_பேசி
196)
சிசசசசசசசசசசசWr\AWAMWCMAAAAAAAxwwட்சAAAAாபகாங் படகங்கரிய
தாசன் அச்சகம்
மகேந்திரா வீதி, யாழ்ப்பாணம்.
*AAAAAAAAAAAAAாகாககாகா - யாழ்ப்பாணம்.