கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அல்ஹஸனாத் 2014.03

Page 1
www.alhasanathik
அல்ஹ
மலர்: 40 இத
- ஒரு சொட்டு
4 0
இறைத்தூதில் அதனை ஏற்றவர்க
Is LA M Tc M 0 N T H LY இ

ஸனாத்
الحسنات إسلامية شهرية تصدرها الجماعة الإسلامية السريلانكا
ழ்: 03 மார்ச்: 2014 ஜூ. அல்ஊலா: 1435
இத்தா
a்
ன் சாரம்சமும் ளின் சிறப்பம்சமும்
ஸ்லாமிய இலட்சியக் குரல்
60/-

Page 2
- ---------
உங்கள் தகைமைகளை வளர்த்துக் ெ
SYSTEM |
FIRST TIME
- Sonicwall security - CCNA , - Door access controlling - MCSA - CCTV Camera
- Linux - Networking
- PBX - Hardware
- IT - skill development
- WEB 10 ஆசிரியப் பயிற்சி நெறியில் சர்வதேச
ஆசிரியராகும் உங்கள் கன
Diploma in Training Skills National Certificate in Pre Diploma in Montessori Tr: Diploma in Child Psychol
O/L பரீட்சையை எழுதிய மாணவர்களுக்காக 6 ') Degree Foundation Stud i Information Technology . s Web Designing
Graphic Designing 4 & English
ஒவ்வொரு கற்கை
கற்கை நெறியைப் IBS CAMPUS 67, Kawdana Road, De Tel: 011 2712149, 077 4
BUS
Main.

22.
காள்ள இதோ ஓர் அரிய சந்தர்ப்பம்! ENGINEER IN SRI LANKA
11iji)
21sc0. CNA
Microsoft CERTIFIED Technology Specialist
Microsoft CERTIFIED Linux
c - 87 3133) இகாமாந்த கதை
soxICWALL -
பூரம்ப சம்பளம் 100,000.00 க்கும் மேல் (மத்திய கிழக்கு நாடுகளில்) 50% தொழில் வாய்ப்புக்கான உத்தரவாதம் 5 அங்கீகாரம் பெற்ற சான்றிதழுடன் சவைப் பூர்த்தி செய்யுங்கள்!
28 Guids
EO IN
-School Teaching aining (AMI)
bgy
- வகுப்புக்கள் விஷேடமாக வடிவமைக்கப்பட்ட பாடநெறி lies in Business & IT
Business Management Accounting & Book Keeping Hardware with Networking நெறிக்கும் தனித்தனியான சான்றிதழோடு, பூர்த்தி செய்த சான்றிதழும் வழங்கப்படும். (PRIVATE) LIMITED. hiwala 89, Mulgampola Road, Kandy 27 1384 Tel: 081 223 2282, 077 165 8678
Branch:

Page 3
من الرحيم
அல்குர்ஆன் விளக்கம் 4-6
தலை
அஷ்ஷெய்க் தாஹிர் எம்.
இரகக் கே
அல்ஹதீஸ் விளக்கம்7-9
பொருளாதார
E-:57:51:55 ---- ===-=-=-=-
அஷ்ஷெய்க் எச்.எம். மின்
" தஃவா களம்10-13
இறைத்தூதி
அதனைஏர்
உஸ்தாத் ர
பIங்கள்
14-16
- 17-20 இரு சொட்டுத் தன்
அந்நிஸா
25-27 அமைதியான வீடு..
ஜுவைரிய்யா பின்த் ஹாரித் 24-25 ------ 2425
(ரழியல்லாஹு அன்ஹா)
ஸுரா யூஸுஃப் போதிக்கும்
பாபரிFlusineshாவை
மனித நேயம்
| விலை விபரம்: -
உள்நாடு: தனிப் பிரதி: ரூபா 60.00 | வருட சந்தா: ரூபா வெளிநாடு: இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு, சிங்கப்பூர்,
மத்திய கிழக்கு நாடுகள்: 2600.00|அவுஸ் இங்கிலாந்து, நியூசிலாந்து: 4000.00 | ஐக்கி
அல்ஹஸனாத் மார்ச்: 201

உள்ளடக்கம்
نعم هده الرد
- மேம்பாடும்
“நம்பிக்கை கொண்டவர்களே! லமைத்துவ
அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்.
இன்னும் அல்லாஹ்வின்) ட்டுப்பாடு
தூதருக்கும் கீழ்படியுங்கள். நிஹால் (அஸ்ஹரி)
இன்னும் உங்களில் அதிகாரம்
உடையவர்களுக்கும் உட்டுப் பொறுப்பும்
(கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு
ஏற்படுமானால் மெய்யாகவே
நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி ன்ஹாஜ் (இஸ்லாஹி)
நாளையும் நம்புபவர்களாக
இருப்பின் அதை ன்சாரம்சமும்
அல்லாஹ்விடமும் (அவன்) bறவர்களின் தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள்.
சிறப்பம்சமும்
இதுதான் உங்களுக்கு மிகவும்
சிறப்பான, அழகான முடிவாக ஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
இருக்கும்.” (4:59)
HHHH--------- --------- பாடம் --------------- ------------------------------------- AFFAD THREE RAF AttHHHHHHHHHHHHHHHHHits:Frாபெ 12/14MAH1NEMENTAINERENERALHAAAEHER EL 4:42-4-TEAE
நீர்க்காக்கப்.21
":FEET=0=-=-=-=-=-=-="
மலர்: 40 இதழ்: 03
தேஷ்
2014 மார்ச் 1ு. அல்ஊலா: 1435
ISSN : 1391 - 460X
வெளியீடு: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
தொடர்புகளுக்கு:
அல்ஹஸனாத் 77, தெமடகொட வீதி, கொழும்பு-09, இலங்கை தொலைபேசி :(011) 2689324,
தொலைநகல் :(011) 2686030 மின்னஞ்சல்: alhasanath@gmail.com இணையதளம்: www.alhasanath.lk
ண்ணீர்
ப: 4 பேர் "u{ம்.
ஆன்மிகம் (34) சிந்தனைக்கு 36-37 ஜம்இய்யா 40-41
ஸீரா 47-49
32-33
1050.00 |ஆறு மாதம்: ரூபா 525.00 மலேசியா: 2550.00 | திரேலியா, ஜப்பான், தென் கொரியா: 3300.00|
ய அமெரிக்கா, கனடா: 4700.00 14/ஐ.அல்ஊலா: 1435

Page 4
விளம்பரம்
|DIPLOMA IN
(HI] III]III
iHiHERTON 100% செயல்முறைகளுடன் 01 Month (Full Times - Weekly 05 Days
0716 606 755
STUDY FREE, HOUSE WIRING
பாக) மேலதிக விபரங்களுக்கும்
அறுத்தம்
ப 200diா
PHONE REPAIRING
Durations 10 Days (Full Time/Part Time)
Hardware, Software என்பவற்றுக்கு வெவ்வேறான விரிவுரைகள்
Hardware & Software Solution
2016 AL COMMERCE stream with aat
English Medium
உயர் தரத்தில் Commerce இனை தெரிவு செய்யவிருக்கும் மாணவர்கள் இப்பாடநெறியினை தெரிவு
செய்வதன் மூலம் குறித்த இரு வருடங்களில் AI. தகைமையுடன் மேலதிகமான இன்னும் 15 தகைமைகளை பெற்றுக் கொள்ளும்
வாய்ப்பை பெறுகின்றனர்.
மேலதிக விபரங்களுக்கு
07 222 529 கம், சிரிப்பா யொல் கற்பு பாமா வர்க்கம் |
இப்படி பெரிய பெயமைந்தது எstா யா |
ப இh பெர்க், ச், பிரப் சி பதபா3 கு, சதி: மொரிய கற்றுள் கொள்வதற்காலா எan.குப்புகள் நடாத்தப்படும்.
ஆண், பெண் இருபாலாருக்கும் எ
*14tா TTTTAINT TIMITMEEE -
(AUTO CAD Diploma in
Diploma in Full TimelPart Time
Auto CAD GOLDEN COL 548, Peradeniya Road,Kandy. 0812 205
அல்ஹஸனாத் மார்ச்:

Diploma in Computerized Accounting.... CONTENTS - Introduction to Accounting - Acc Pac 07
Duration: - Sage 50 2010
01-03 Months Quick Book 2010
Weekday/Weekends - MYOB 12 e Tally 9.0
Individual Classes - Peachtree 2010
Also Available - Excel
Free Study Pack with Software CD
E AIRLINE
SPECIAL IN AIR TICKETING
Duration: 01 - 02 Months Individual classes
Full Time/Part Time also available (Weekdays/Weekends)
ENGLISH +IT & SKILLS TRAINING 2 மாத முழுநேர - வதிவிட ! வதிவிட மற்ற
கணனி பயிற்சியுடன் கூடிய ஆங்கில பாடநெறி
னமும் 3 மணித்தியாலத்துக்கு அதிகமான பேச்சுப் பயிற்சி
I MS-OFFICE
WITH GRAMMARHARDWARE
I Reading I Writing 1 | COMP-ACCOUNTING
I Listening 1 Speaking
Weekly 06 Days 9:00 to 4:00 டநெறி முடிவில் சர்வதேச தரம் வாய்ந்த சான்றிதழ் LuL 03 Diploma a GÓI Daiyagi aip ThisULGID வவ்வேறான தங்குமிட வசதி
Diploma in
Diploma in Auto CAD 3D
AutoCAD - MEP
LLEGE
VAVUNIYA CAMPUS
0777 222 527 HATTON CAMPUS
0777 222 528
55 44 0777 91 25 57
2014|ar. Slovorovn: 1435.

Page 5
இந்திய முஸ்லிம்க
க
யுவன் சங்கர் ராஜா இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்ற செய்தி தென்னிந்திய திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிகைகள் எதிரும் புதிருமாக விமர்சனங்களை அள்ளி வீசிக் கொண்டன. இது இந்தியா வில் ஒரு சலசலப்பை ஏற்படுத்திச் சென்றுள்ளது என்றால் மிகையல்ல. இதைப் போன்ற எத்தனையோ முஸ்லிம் பிரபலங்கள் சினிமாத்துறையில் நடிகர்களாகவும் நடிகை களாகவும் இசையமைப்பாளர்களாகவும் உலா வருகின்றனர்.
இந்தியாவை முஸ்லிம்கள் 700 வருடகாலம் ஆட்சி செய்தார்கள் என்பது வரலாறு. அதிலும் பல பிரபலங்கள் ஆட்சியாளராக, அமைச்சர்களாக, நவாப்களாக என பல்துறைகளிலும் பிரபல்யம் பெற்றிருந்தனர். இவர்கள் விட்டுச் சென்ற தாஜ்மஹால், செங்கோட்டை, குதுப் மினார், பாபரி மஸ்ஜித் போன்ற சின்னங்கள் இன்றுவரை முஸ்லிம்களின் ஆட்சியை ஞாபகமூட்டும் நினைவுச் சின்னங்களாக மிளிர்கின்றன.
இவற்றைச் சகிக்க முடியாத ஹிந்துத்துவவாதிகள் முஸ்லிம்களைப் பூண்டோடு அழித்தொழிக்க வேண்டு மென கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார்கள். அவர்கள் அரங்கேற்றிய முதல் நாடகம்தான் பாபரி மஸ்ஜித் தகர்ப்பு நடவடிக்கை. இதில் அவர்களது முயற்சி வீண் போகவில்லை.
- குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டார்கள். இதனால் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொலையுண்டார்கள். அவர்களின் கோடிக் கணக்கான சொத்துக்கள் தீக்கிரையாகின. எனினும் நாடகத்தின் கதாநாயகனாக இருந்த முதலமைச்சர் மோடி தப்பித்துக் கொண்டார். அவர் எதிர்வரும் பிரதமர் தேர்தலில் BJPயின் வேட்பாளராக நிற்கிறார் என்றால்... அவரைப் பிரதமராக்க பிரபல இந்திய ஊடகங்கள் முன் னின்று உழைக்கின்றன என்றால்.... அவர் பிரதமராக வந்தால் இந்தியாவுக்குள் எத்தனை குஜராத்துகள் வெடிக் கும் என இந்திய முஸ்லிம்கள் கவலையுடன் நிலமை களை அவதானித்து வருகிறார்கள். சிதறிக் கிடந்த இந்தி யாவை உபகண்டமாக ஒருங்கிணைத்தவர்கள் அன்றைய முஸ்லிம் ஆட்சியாளர்கள்தான். எனினும், பாகிஸ்தான் என்றும் பின்னர் பங்களாதேஷ் என்றும் முஸ்லிம்கள்
----- அல்ஹஸனாத் மார்ச்: 20
4ாகபட 11TET EET சபாபு, 1 பக்கம்15ாபாபாபாபா-:,ரFேFEE -உன்

குத்து) 3)
ஆசிரியர் கருத்து
களின் எதிர்காலம்
பெரும்பான்மையாக வாழ்ந்த பிரதேசங்கள் தனிநாடுகளாக ஆனபோது இந்திய முஸ்லிம்கள் தம் அரசியல் பலத்தை இழந்தார்கள். இன்று 3 கோடி முஸ்லிம்கள் இருந்தும் ஒரு பேரம் பேசக்கூடிய அரசியல் சக்தியாக அவர்கள் மாற வில்லை.
ஓர் ஆன்மிக அரசியல்வாதியாகத் திகழ்ந்த மௌலானா மௌதூதி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் அகில இந்தி யாவிலும் பிரபலமடைந்திருந்தாலும், பாகிஸ்தான் பிரிவினையின் பின் அங்கு சென்றுவிட்டார். அபுல் கலாம் ஆஸாத் போன்ற தலைவர்கள் நாட்டுக்காக உழைத்தார் களே ஒழிய ஒரு “முஸ்லிம் சக்தியை” உருவாக்கத் தவறி விட்டனர். பாறூக் அப்துல்லாஹ் இந்திய அரசின் கைபொம்மையாக காஷ்மீரின் அரியணையை அலங் கரித்துக் கொண்டிருக்கிறார்.
அண்மைக்கால பிரபல்யமாக திகழும் டாக்டர் ஸாகிர் நாயக் அவர்கள் இஸ்லாத்தை ஏனைய மதங்களு டன் ஒப்பிட்டு, இஸ்லாம் மாத்திரமே உலகின் பிரச்சி னைகளைத் தீர்த்துவைக்கக்கூடிய மார்க்கம் என நிரூபித்து உரையாற்றி வருகிறார். எனினும், முஸ்லிம்களை அந்த நம்பிக்கையின் பால் ஒருங்கிணைத்து ஓர் அரசியல் சக்தியாக உருவாக்கும் பணியை வேறு நபர்களுக்கு விட்டு வைத்துள்ளார்.
இந்திய முஸ்லிம்களின் இந்த நிலைமைக்குக் காரணம் அவர்களில் கணிசமானோர் கல்வியறிவு குறைந்தவர்க ளாக இருப்பதுவும் மார்க்கத்தை சரியாகப் புரிந்து கொள் ளாமல் ஏதோ இஸ்லாத்தில் பிறந்து விட்டோம் என்ப தற்காக முஸ்லிம்களாக வாழ்ந்து கொண்டிருப்பதுவும் தான். மூன்றாவது ஒரு காரணத்தை நபியவர்களின் சொல் மிக அழகாக விளக்குகின்றது.
"(முஸ்லிம்களாகிய) நீங்கள் பிற்காலத்தில் அலைகளால் அடித்துக் செல்லப்படும் சருகுகளாக இருப்பீர்கள். அதற்குக் காரணம் உங்கள் தொகையல்ல. மாறாக, உல காசையும் மரணத்திற்கு அஞ்சுவதுமாகும்.”
இலங்கை முஸ்லிம்களின் நிலமையும் இதற்கு மாறு பட்டதல்ல என்பதை நாம் அறிந்து விளங்கி, எமது எதிர் காலத்தை வடிவமைப்போம்.
0147. அல்ஊலா: 1435 .

Page 6
| 4
அல்குர்ஆன் விளக்கம்
தலைை
கட்டு
அஷ்ஷெய்க் தாஹிர் எம். நிஹால் (அஸ்ஹரி) அதிபர், க
''நம்பிக்கை
முன்சென்ற சமூ கொண்டவர்களே!
உம்மத்தாகிய எம் அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்.
வேறுபாடுகள் உ இன்னும் (அல்லாஹ்வின்)
தலைமைத்துவ அ
கும். முன்னைய 8 தூதருக்கும் கீழ்படியுங்கள்.
மைத்துவத்தை ! இன்னும் உங்களில் அதிகாரம்
வேற்றி வந்தனர். ! உடையவர்களுக்கும் (கீழ்படி
பொறுத்தவரை ந யுங்கள்). உங்களில் ஏதாவது
அலைஹி வஸல் ஒரு விஷயத்தில் பிணக்கு
மறைவின் பின் ஓ ஏற்படுமானால் மெய்யாகவே
அல்லாதவர்கள் நீங்கள் அல்லாஹ்வையும்
பொறுப்புக்கு தே இறுதி நாளையும்
வந்துள்ளனர். இ நம்புபவர்களாக இருப்பின்
ஹதீஸ் மூலமாக 6ெ அதை அல்லாஹ்விடமும்
உள்ளது: (அவன்) தூதரிடமும்
"பனூ இஸ்ரா ஒப்படைத்து விடுங்கள்.
பவர்களாக இறை இதுதான் (உங்களுக்கு) மிகவும்
தனர். இறைத்தூது சிறப்பான, அழகான முடிவாக
கும் போதெல் இருக்கும்.” (4: 59)
இறைத்தூதர் அ வருவார். மேலும், இறைத் தூதரும்
இல்லை. ஆயினு வ்வாறான சந்தர்ப்பங்களில்
பின்) கலீபாக்க தலைமைத்துவத்திற்கு மாறுசெய்
நிறை யப் பேர் வது பெரும் பாவமாகும்.
என்று இறைத்தூ அவ்வாறே கண்மூடித்தனமான
அலைஹி வஸல்6 தலைமைத்துவத்துவக் கட்டுப்பாடு
னார்கள். "அவ அல்குர் ஆனில் புறக்கணிக்கப்
நாங்கள் என்ன பட்டிருப்பதற்கு இவ்வசனம்
மென்று நீங்கள் உ போதுமான சான்றாகும்.
என்று நபித் தோ
அதற்கு “அவர்க வருபவரிடம் உ அல்ஹஸனாத் மார்ச்:2

மெத்துவ ப்பாடு!
தீஜதுல் குப்ரா மகளிர் கல்லூரி, வடதெனிய, வெலம்பொட.
றான்.''
தகங்களுக்கும் இறுதி 5 (செய்ய வேண்டிய உங்கள் கட
க்குமிடையில் பல
-மையை) நிறைவேற்றுங்கள். பிறகு உள்ளன. அவற்றில்
அடுத்து வருபவரிடம் (அந்தக் கட அமைப்பும் ஒன்றா
மையை நிறைவேற்றுங்கள்). அவர்க சமூகங்களின் தலை
ளுக்கு அவர்களின் உரிமையைக் நபிமார்கள் நிறை
கொடுத்து விடுங்கள். ஏனெனில், இறுதி உம்மத்தைப்
அல்லாஹ் அவர்கள் நிர்வகித்தவை பி (ஸல்லல்லாஹு
பற்றி அவர்களிடம் கேட்கவிருக்கி =லம்) அவர்களின்
(அல்புகாரி) இறைத் தூதுவர்கள்
தலைமைத்துவம் குறித்தும் தலை தலைமைத்துவப் ர்ந்தெடுக்கப்பட்டு
மைத்துவ கட்டுப்பாட்டின் அவசி இதனை பின்வரும்
யம் குறித்தும் புனித இஸ்லாம் வலி
யுறுத்தியுள்ளதைப் போன்று வேறு விளங்கக் கூடியதாக
எந்த மதமும் வலியுறுத்தவில்லை.
இஸ்லாமிய உம்மத்தின் அடித்தளம் -யீல்களை நிர்வகிப்
அதன் தலைமைத்துவத்தின் மீது கட்டி மத் தூதர்கள் இருந்
யெழுப்பப்பட்டுள்ளது மாத்திர தர் ஒருவர் மரணிக்
மல்லாமல், அதன் எழுச்சியும் வீழ்ச் மலாம் மற்றோர்
சியும் தலைமைத்துவக் கட்டுப்பாட் வருக்குப் பதிலாக
டில் தங்கியுள்ளது. தலைமைத்துவத் எனக்குப் பின் எந்த
துக்கு கட்டுப்படாது மாறுசெய்வது » (வரப்போவது)
பெரும் பாவம் மாத்திரமல்லாது, ம், இனி (எனக்குப்
இஸ்லாத்தை விட்டும் வெளியேறச் ள் (பிரதிநிதிகள்)
செய்யும் கொடிய பாவச் செயலாகும். தோன்றுவார்கள்”
இது குறித்து நபி (ஸல்லல்லாஹு தர் (ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) அவர்கள் லம்) அவர்கள் கூறி
பின்வருமாறு கூறுகின்றார்கள்: ர்கள் வரும்போது
செய்ய வேண்டு
"தம் தலைவரிடம் (குறை) எதை த்தரவிடுகிறீர்கள்?'' யேனும் கண்டு அதை வெறுப்பவர் ழர்கள் கேட்டனர்.
பொறுமையைக் கடைப்பிடிக்கட் ளில் முதலாவதாக
டும். ஏனெனில், ஒருவர் (இஸ்லாமி றுதிப் பிரமாணம் யக்) கூட்டமைப்பிலிருந்து ஒரு சாண் E014 ஜூ.அல்ஊலா: 1435 .

Page 7
அளவுக்குப் பிரிந்து மரணித்தாலும் அவர் அறியாமைக் கால (ஜாஹிலிய்ய) மரணத்தையே தழுவுகிறார்.”
(அல்புகாரி)
"உலர்ந்த திராட்சை போன்ற (சுருங்கிய) தலையு டைய அபிசீனிய (கறுப்பு நிற) அடிமையொருவர் உங்க ளுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் (அவரின் சொல் லைக்) கேளுங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்.”
(அல்புகாரி) “(இறைவனுக்கு) மாறுசெய்யும்படி கட்டளையிடப் படாதவரை, ஒரு முஸ்லிம் தமக்கு விருப்பமான விஷ யத்திலும் விருப்பமில்லாத விஷயத்திலும் (தலைமை யின் கட்டளையைச்) செவியேற்பதும் (அதற்குக்) கீழ்ப் படிவது கடமையாகும். (இறைவனுக்கு) மாறுசெய்யும் படி கட்டளையிடப்பட்டால் (அதைச்) செவியேற்பதோ (அதற்குக்) கட்டுப்படுவதோ கூடாது.” (அல்புகாரி)
தலைமைத்துவ கட்டுப்பாட்டின் அவசியத்தையும் அதன் வரையறைகளையும் அல்குர்ஆனின் நிழலில் விளங்க முயற்சிப்போம்.
''அல்லாஹ்வுக்கும் இன்னும் அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்” எனும் நேரடிக் கட்டளை அல்குர் ஆனில் ஸுரா ஆலுஇம்ரான்: 32, அந்நிஸா: 59, அல் அன்பால்: 20, அந்நூர்: 54, முஹம்மத்: 33 ஆகிய ஐந்து இடங்களில் இடம்பெற்றுள்ளது. இவ்வசனங்களின் ஆரம்பத்தில் அல்லாஹ்வுக்கும் அடுத்து அல்லாஹ்வின் தூதருக்கும் முழுமையாக கட்டுப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.
இங்கு நாம் விளக்கத்திற்காக எடுத்துக் கொண்டுள்ள வசனத்தில் மாத்திரம் அல்லாஹ்வுக்கும் இன்னும் அவ னது தூதருக்கும் கட்டுப்படுங்கள் எனும் கட்டளை யோடு சேர்த்து பொறுப்பதிகாரிகளுக்கும் கட்டுப்படுங் கள் என அல்லாஹுத் தஆலா கட்டளையிட்டுள்ளான். தலைமைத்துவ கட்டுப்பாட்டின் அவசியம் இவ்வசனம்
மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு முஃமின் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் முழுமையாக கட்டுப்படுவது போன்று தலைமைத்துவத் திற்கு முழுமையாக கட்டுப்படுவது அவசியமா? இல்லை யெனில், தலைமைத்துவ கட்டுப்பாட்டின் வரையறைகள் என்ன என்பதனை விளங்கிக் கொள்வதற்கு தலைமைத் துவ கட்டுப்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தும்
தலைமைத்துவம் தவறுமிடத்து அதனை விமர்சிப்பது, ஆக்கபூர்வமான கருத்துக்கா
அவமதிப்பதாகவோ கட்டுப்பாட்
அல்ஹஸனாத் மார்ச்: 20

அல்குர்ஆன் விளக்கம்
இவ்வசனத்தின் சொற்பிரயோகங்களை முதலில் கூர்ந்து கவனிப்பது அவசியமாகும்.
மூன்று வகையான கட்டுப்பாடுகளை வலியுறுத்தும் இவ்வசனத்தில் இடம்பெற்றுள்ள சொற்பிரயோகங்களுக் கிடையிலான வேறுபாடு பின்வருமாறு அமைந்துள்ளது: டப்,-, அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள் 1,31,, இன்னும் ரஸுலுக்கும் கட்டுப்படுங் கள்- டே-', இன்னும் உங்களில் அதிகாரம் உடையவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள் (கட்டுப்படுங்கள்) என்பதைக் குறிக்கும் - எனும் ஏவல் வினைச் சொல்லை அல்லாஹ்வுக்கும் ரஸுலுக்கும் முன்னால் - குறிப்பிட்டும், - சட-,, (உங்களில் அதிகாரம் உடையவர்கள்) எனும் சொல்லுக்கு முன் குறிப்பிடாமல் விட்டுவிட்டு, இணைப்பு இடைச் சொல்லாகிய -. ட எனும் சொல்லை மாத்திரம் பயன் படுத்தியிருப்பது அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுவதற் கும் தலைமைத்துவத்திற்கு கட்டுப்படுவதற்குமிடையி லான துல்லியமான வேறுபாட்டையே குறிக்கும் என்பது அல்குர்ஆன் விளக்கவுரையாளர்களின் கருத்தாகும். அதாவது, அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் முழு மையாக கட்டுப்படுவது போன்று தலைமைத்துவத்திற்கு முழுமையாக கட்டுப்பட வேண்டும் எனும் கட்டாயம் இல்லை எனும் அதிகாரம் உடையவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனது தூதுவருக்கும் முழுமையாகக் கட்டுப்பட்டு அல்குர்ஆன், ஸுன்னாவுக்கு மாறு செய்யாவிடின் தலை மைத்துவ கட்டுப்பாடு கடமையாகும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் தலைமைத்துவத்திற்கு மாறுசெய்வது பெரும் பாவமாகும். அவ்வாறே கண்மூ டித்தனமான தலைமைத்துவத்துவக் கட்டுப்பாடு அல்குர் ஆனில் புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு இவ்வசனம் போதுமான சான்றாகும்.
தலைமைத்துவ கட்டுப்பாட்டை தெளிவுபடுத்தும்
لا طاقة لمخلوق في معصية الله عز وجل
''அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விடயத்தில் எந்தவோர் உயிரினத்திற்கும் கட்டுப்பாடு கிடையாது (கூடாது)” எனும் ஸஹீஹான ஹதீஸ் திர்மிதி, முஸ்னத் அஹ்மத், அல்முவத்தா போன்ற கிரந்தங்களில் பதிவாகி யுள்ளது. இந்த ஹதீஸின் மூலம் தலைமைத்துவக் கட்டுப் பாட்டிற்கான வரையறை நபி (ஸல்லல்லாஹு அலைஹி
சுட்டிக் காண்பிப்பது, கண்னியமாகO ரை தெரிவிப்பது தலைமைத்துவத்தை டை மீறியதாகவோ ஆகாறு.
-14 .அல்லோ: 1435

Page 8
6
அல்குர்ஆன் விளக்கம்
வஸல்லம்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார் கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் காலத்தில் நடைபெற்ற பின்வரும் சம்பவம் இதனை மேலும் தெளிவுபடுத்துவதாக அமைந்துள்ளது:-
"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு படைப் பிரிவை அனுப்பி, அவர்களுக்கு அன்சார்க ளில் ஒருவரைத் தளபதியாக்கி, அவருக்குக் கட்டுப்பட்டு நடக்கும்படி படை வீரர்களுக்கு உத்தரவிட்டார்கள். அந்த அன்சாரி (ஒரு கட்டத்தில்) படை வீரர்களின் மீது கோபம் கொண்டு, "நீங்கள் எனக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல் லம்) அவர்கள் கட்டளையிடவில்லையா?” என்று கேட் டார். அவர்கள் “ஆம்” என்றனர். அப்போது அவர் விறகைச் சேகரித்து நெருப்பை மூட்டி அதில் புகுந்துவிடுமாறு உங்களுக்கு நான் உத்தரவிடுகிறேன்” என்றார்.
அவ்வாறே அவர்கள் விறகைச் சேகரித்து நெருப்பை மூட்டினர். அதில் நுழைய முயற்சித்தபோது ஒருவரை யொருவர் பார்த்தபடி நின்று கொண்டனர். அவர்களில் ஒருவர் “(நரக) நெருப்பிலிருந்து தப்பிப்பதற்காகவே நாம் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்க ளைப் பின்பற்றினோம். அவ்வாறிருக்க, அதில் நாம் நுழைய வேண்டுமா?” என்று கேட்டார். இதற்கிடையே நெருப்பும் அணைந்தது; அவரது கோபமும் தணிந்தது. பிறகு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர் களிடம் இச்செய்தி தெரிவிக்கப்பட்டது. அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், "அதில் மட்டும் அவர்கள் புகுந்திருந்தால் அதிலிருந்து ஒருபோதும் வெளியேறியிருக்க மாட்டார்கள். கீழ்ப்படிதல் என்பதெல் லாம் நன்மையில்தான்” என்றார்கள். (அல்புகாரி)
தலைமைத்துவம் தவறுமிடத்து அதனை சுட்டிக் காண்பிப்பது, கண்ணியமாக விமர்சிப்பது, ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவிப்பது தலைமைத்துவத்தை அவம் திப்பதாகவோ கட்டுப்பாட்டை மீறியதாகவோ ஆகாது.
இமாம் மாலிக் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மண் ணறைக்கு முன் நின்று “இந்த மண்ணறைக்கு சொந்தக் காரரைத் தவிர ஏனைய அனைவரிடமிருந்தும் நான் ஏற்றுக் கொள்ளப்பட அல்லது மறுக்கப்படக் கூடும்" எனக் கூறியுள்ளதன் அர்த்தம் இந்த உம்மத்தில் நபி (ஸல்லல் லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களைப் போன்று அனைத்துத் தப்புத் தவறுகளிலிருந்தும் பாதுகாப்பட்ட
-ய எவருமில்லை என்பதாகும்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வபாத்தின் பின் இந்த உம்மத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) நாட்டு மக்களுக் காற்றிய உரை அனைத்துத் தலைவர்களின் உள்ளங்க
அல்ஹஸனாத் மார்ச்: 2

ளிலும் ஆழமாக பதியப்பட்டு, பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு, அனைத்துத் தலைமையகங்களிலும் தொங்கவிடப்பட வேண்டிய பெரும் சிறப்புமிக்க உரையா
கும்.
அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரையின் முக்கிய பகுதி பின்வருமாறு: - "மனிதர்களே! நான் உங்களது தலைமைத்துவப் பொ றுப்பை ஏற்றிருக்கின்றேன். நான் உங்களில் சிறந்தவனு மல்ல. நான் சரியானதை செய்தால் எனக்கு உதவுங்கள். நான் தவறு செய்துவிட்டால் என்னைத் திருத்துங்கள். நேர்மை அமானிதமாகும். பொய் நம்பிக்கை துரோக மாகும்... நான் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படும் பட்சத்தில் எனக்கு நீங்கள் கட்டுப்படுங்கள். நான் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்ப டாத பட்சத்தில் எனக்கு நீங்கள் கட்டுப்படக் கூடாது."
இத்தகைய முன்மாதிரிமிக்க தலைமைத்துவத்தையே இன்றைய முஸ்லிம் உம்மத் வேண்டி நிற்கிறது.
திருத்தி வாசிக்கவும் கடந்த அல்ஹஸனாத் இதழில் பெப்ரவரி) வெளியான குர்ஆன் விளக்கத்திற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட ஸுர துல் புர்கானின் 27-29 வரையான வசனங்களில் இடம் பெறும் இன்னவனை என்ற சொல்லுக்குப்பதிலாக இறை வனைஎன இடம்பெற்றுள்ளது. வாசகர்கள் திருத்திவாசிக்க வும்தட்டச்சு செய்வதில் ஏற்பட்டதவறுக்கு வருந்துகிறோம்.
CRESCENT SCHOOL
Unable to look after your son's studies ? Here is the solution !
A46 Year Old kully Residential International School for Boys IGCSE, ALEVEL Cmbidge University)
MATRIC, HGHER SECONDARY (State Boாரி Islamic atmosphere excellent results Swimming, Tennis & All games comfortable hostel affordable fee
BRITISH COUNCIL'S INTERNATIONAL SCHOOL AWARD
Admissions Open
Mandalயா, hமான-48, aminad, Inம்
இம்: 401-4- IIாகம் Website: www.orescentschool.net Email: rsvandaluregmailcom
D14 ஜூ.அல்ஊலா: 1435 .

Page 9
சமூகக் பொருள
ஆன்மிகவாதிகள் அதிகம் வாழும் சூழலில் பசியோடு மனிதர்கள்
**அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி), விரிவுரை படுத்துறங்குகின்
அபூ ஸயீத் அல்குத்ரி (ரழி றார்கள் என்றால்
நபி (ஸல்லல்லாஹு அலை அந்த
னம் வைத்திருப்பவர் வாகனம் ஓ ஆன்மிகத்திற்கு
கட்டுச்சாதம் வைத்திருப்பவர் க
எங்களது மேலதிகமான சொ என்ன
இல்லையோ என நாங்கள் கரு. பெறுமானம்
பற்றியும் நபியவர்கள் இவ்வாறு உண்டு? அது
ஈமான் அறுவைச் சிகிச்சை
முஸ்லிம் சமுதாயத் செய்யப்பட்ட
தின் வளமான பொருளா
தார நிலை சமூகக் கூட்டுப் வரட்டு
பொறுப்பிலும் பரஸ்பர ஆன்மிகமே!
ஒத்துழைப்பிலும் சார்ந்
துள்ளதை நபி (ஸல்லல் லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் இந்த ஹதீஹில் தெளிவுபடுத்துகின்றார்கள். சொத்து, செல்வத்தின் உண் மையான சொந்தக்காரன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே. அதனது தற்காலிக உரிமையாளர்கள் செல்வந்தர்கள். அவர்களிடத்தில் சொத்து, செல்வம் தேங்கிக் கிடக்காது சமுதாய உறுப்பினர்களிடையே சுழற்சி முறையில் பரி மாற்றம் செய்யப்படல் வேண்டும் என்பது இறைவனது கட்டளையாகும்.
"உங்களில் செல்வந்தர்களிடையே (செல்வம்)சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது என்பதற்காக (இவ்வாறு பங்கிடு கின்றான். ''
(ஸுரா அல்ஹஷ்ர்:7)
இத்திரு வசனத்தின் விரிவுரையாகவே மேற்படி ஹதீஸ் அமைந்துள்ளது.
முஸ்லிம்கள் ஓர் உடலைப் போன்றவர்கள். சமுதா யத்தில் ஒரு வகுப்பாருக்கு ஏற்படுகின்ற அனர்த்தம் அடுத்த வகுப்பாருக்கு வலியை ஏற்படுத்த வேண்டும். இது ஈமானின் தவிர்க்க முடியாத விளைவாகும். அவ்வ லியை உணராதவர்களின் ஈமான் தரமானதல்ல. முஸ்லிம் கள் என்போர் ஆன்மிகக் கோலங்களாலும் கிரியைகளி னால் மட்டும் தங்களைத் தனித்துவப்படுத்தி வாழுகின்ற ஓர் இனக் குழுமமல்ல. அவர்கள் அடுத்தவர்களின் விவ காரங்களில் கரிசனை செலுத்தி மனிதநேய உதவிகளை வழங்கி சகவாழ்வை மேற்கொள்கின்ற சமூகத்தார்.
- அல்ஹஸனாத் மார்ச்: 20

ஹதீஸ் விளக்கம்
- கூட்டுப் பொறுப்பும்
தார மேம்பாடும்
-யாளர், இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி, புத்தளம் பல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
-ஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். “மேலதிகமாக வாக இல்லாதவருக்கு அதனைக் கொடுக்கட்டும். மேலதிகமாக -ட்டுச்சாதம் இல்லாதவருக்கு அதனைக் கொடுக்கட்டும்.” பத்தில் எங்களில் ஒருவருக்கு எத்தகைய உரிமையும் துகின்ற அளவுக்கு அனைத்து வகையான சொத்துக்கள் தறிப்பிட்டார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம்)
சமூகக் கூட்டுப் பொறுப்பு மற்றும் கூட்டுறவு முதலான விழுமியங்களைப் பேணாதவர்கள் முஸ்லிம்களல்ல என்பது இறைதூதரின் வாக்காகும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
“முஸ்லிம்களின் விவகாரங்களில் கரிசனையற்றவர் கள் அவர்களைச் சர்ந்வர்களல்ல.” (ஹாகிம், தபரானி)
ஒரு மனிதன் பசியோடும் தாகத்தோடும் இருக்கின் றான் அல்லது நோயுற்று இருக்கின்றான். மேலும், அவன் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றான் என்றால் அவனது பரிதாபகரமான நிலையை அறிந்து வைத்திருப் பவர் அவனை அழிவின் விளிம்பிலிருந்து அவசரமாகக் காப்பாற்றிவிட வேண்டியது அவரது கடமையாகும். அவனை அழிவின் விளிம்பிலிருந்து காப்பாற்றக் கூடிய உணவை யும் குடிப்பையும் மருந்துப் பொருட்களையும் பணத் தையும் மேலதிகமாக வைத்திருப்பவர் அவற்றை அவருக்கு வழங்கி அவரைக் காப்பாற்றுவது மார்க்கக் கடமை யாகும். அவர் அவற்றை வழங்க மறுத்தால் அவரிட மிருந்து அதனை பலவந்தமாகப் பெறுவதற்கும் அவற் றுக்காக அவரோடு போராடுவதற்கும் இவருக்கு உரிமை உண்டு. இப்போராட்டத்தில் உயிராபத்தை நெருங்கி இருந்தவர் கொல்லப்பட்டால் உணவையும் குடிப்பை யும் வழங்க மறுத்தவர் மீது பழிவாங்கல் சட்டம் பிரயோ கிக்கப்படும். மாறாக, உதவிசெய்ய மறுத்தவர் கொல் லப்பட்டால், நிர்ப்பந்தமான நிலையில் கொலை செய்த கொலையாளியின் மீது எவ்வித குற்றமுமில்லை. இது இஸ்லாமிய சட்ட வரையறையாகும். இது அறிஞர் பெருமக்களின் உடன்பாடான கருத்தாகும்.
மேற்படி சட்டத் தீர்ப்பை வலுப்படுத்தும் வகையில்
14 ஜூ.அல்ஊலா: 1435 .

Page 10
ஹதீஸ் விளக்கம்
இமாம் இப்னு ஹஸ்ம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தங்களது கருத்தை இவ்வாறு பதிவு செய்துள்ளார்கள்:
"கடுமையான தாகத்துடன் மரணத்திற்கு அஞ்சுப் வர் எங்கிருந்தாலும் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளு வது பர்ளாகும். அதற்காக போராடுவதும் பர்ளாகும். தனது நண்பனிடம் மேலதிகமாக உணவு இருந்து அதனைப் பெற்றுக் கொள்ள முடியுமாக இருக்கும் போது தானாக செத்ததை அல்லது பன்றி இறைச்சியைச் சாப்பிடுவது நிர்ப்பந்தமான நிலையில் இருக்கின்ற ஒரு முஸ்லிமுக்கு அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில், உணவை வைத் திருப்பவர் பசித்திருப்பவருக்கு உணவளிப்பது பர்ளான கடமையாகும். இவ்வாறான நிலையின்போது ஒருவர் தானாக செத்ததையும் பன்றி இறைச்சியையும் உண்ணு வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டவரல்ல. தனது நண்பனிடம் மேலதிக உணவைப் பெற்றுக் கொள்வதற்காக போராடு கின்ற உரிமை அவருக்கு உண்டு. இதன்போது பசியோடு இருந்
எகிறிப்iே தவர் கொல்லப்பட்டால் அவரது
துவிட்டபொம் உயிருக்கு பிரதியீடாக கொலை
யால் வாழ்க்ை யாளி பழிவாங்கும் சட்டத்திற்கு உட்படுத்தப்படுவார். உணவைக்
ளிக்க முடியாமல் கொடுக்காது தடுத்துக் கொண்
களை வட்டிக் கொ டவர் கொல்லப்பட்டால் அவர்
காப்பதற்கான மு இறை சாபத்தின்பால் சார்ந்தவரா
களை முன்னெடு வார். ஏனெனில், அவர் ஓர் உரி
வந்தர்களினதும் மையை வழங்காது தடுத்துக் கொண்டவராவார். அவர் அத்து
புக்களினதும் மீறி கலகம் விளைவிக்கும் குழு
யாகும். வின் தரத்தில் உள்ளவராவார். ''அவ்விரு குழுவில் ஒன்று அடுத்த குழு எதிராக அத்துமீறினால் அத் துமீறிய குழுவிற்கு அல்லாஹ் வின் கட்டளையின்பால் வரும் வரை அதனுடன் போராடுங்கள்.'' (ஸுரா அல்ஹுஜ்ராத்: 9) “தனது சகோதரனுக்குரிய உரிமையை வழங்காது தடுத் துக் கொண்டவர் அவருக்கு எதிராக அத்துமீறியவரா வார்.” (அல்முஹல்லா)
படை
முஸ்லிம் சமுதாயத்தில் ஏழைகள், நிரந்தர நோயா ளிகள், விதவைகள், வேலையற்றவர்கள், அங்கவீனர்கள், வழிப்போக்கர்கள், அநாதைகள், கடனாளிகள், அடிப் படை வசதிகள் அற்று அன்றாடம் கஷ்டப்படுகின்ற பரம் ஏழைகள் என்ற வகையற்றவர்களின் தொகை அதிகரித் துச் செல்லும்போது செல்வந்தர்கள் தாங்கள் கிழித்துக் கொண்ட கோடுகளுக்குள் சமூகப் பிரக்ஞை இன்றி வாழ் வார்களேயானால் அத்தகைய மனிதர்களுக்கு இமாம் இப்னு ஹஸ்ம் அவர்களது சட்டத் தீர்ப்பு கடுமையான
யான்
- அல்ஹஸனாத் மார்ச்: 2

எச்சரிக்கையை விடுக்கின்றது.
சமூகக் கூட்டுப் பொறுப்பு, சமூகக் கூட்டுறவு முத லானவை ஒழுக்க விழுமியங்களாகும். இறை வழக் கொழிந்து சென்றால் சமூகத்தில் பொருளாதார ஏற்றத் தாழ்வு ஏற்படும். அதனால் வர்க்கப் போராட்டம் ஏற் பட்டு சமூகத்தின் இருப்புக்கு பேராபத்து உருவாகும். அது மட்டுமல்ல, அல்லாஹுத் தஆலா அனுமதிக்காத இவற்றை (ஹராமானவற்றை) ஆகுமாக்கிக் (ஹலா லாக்கி) கொள்கின்ற நிலைமை ஏற்படும். இஸ்லாமிய ஷரீஆவின் பெறுமானங்கள் தலைகீழாக மாறிவிடும். அநியாயம் அரசோச்சும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இவ்வாறு எச்சரிக்கின்றார்கள்:
''அநியாயத்துக்கு அஞ்சி (அதனைத் தவிர்ந்து)
கொள்ளுங்கள். ஏனெனில், அநீ தம் மறுமை நாளில் இருள்களாக காட்சி தரும். குறுகிய மனப்
பான்மை யிலிருந்து தவிர்ந்திருங் பாய் உயர்ந்
கள். ஏனெனில், குறுகிய மனப் நட்களின் விலை
பான்மையானது உங்களுக்கு கச் செலவை சமா
முன்னர் வாழ்ந்தவர்களுக்கு திணறுகின்ற பெண்
மத்தியில் போராட்டத்தைத் இமையிலிருந்து பாது
தோற்றுவித்து ஹராமானவற்றை
ஹலாலாக்கிக் கொள்வதற்குத் ற்காப்பு நடவடிக்கை
தூண்டி அவர்களை அழித்து க்க வேண்டியது தன
விட்டது.” (ஸஹீஹ் முஸ்லிம்) 3 நலன்புரி அமைப்
தார்மிகக் கடமை
ஆரோக்கியமான இஸ்லா மிய சமூக வாழ்வு என்பது, ஆன் மிகக் களிப்பையும் ஆத்மானந் தத்தையும் மட்டும் வைத்து மதிப்பிடப்படுவதில்லை. வயிற்
றுக் கொதிப்பற்ற தனி மனிதர்க ளின் தொகையை வைத்தும் அது கணிப்பிடப்படு கின்றது. ஆன்மிகவாதிகள் அதிகம் வாழும் சூழலில் பசியோடு மனிதர்கள் படுத்துறங்குகின்றார்கள் என்றால் அந்த ஆன்மிகத்திற்கு என்ன பெறுமானம் உண்டு? அது ஈமான் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட வரட்டு ஆன்மிகமே! நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
"தனது அண்டை அயலவன் பசித்திருக்கின்றான் என்று நன்கு உணர்ந்திருந்தும் வயிறு புடைக்க புசித்த நிலையில் இரவைக் கழித்தவன் என்னை ஈமான் கொண்
டவனல்ல.''
(அல்பஸ்ஸார், அத்தபரானி)
தனது வீட்டில் இருக்கின்ற நோயாளியின் அறுவைச் சிகிச்சைக்காக அல்லது மருத்துவ செவினத்திற்காக வீடு வீடாகச் சென்று வசூலிக்கின்ற பிச்சைக்காரத்தனத்தை
2014 ஜூ.அல்ஊலா: 1435 -

Page 11
1ொர்.
இல்லாதொழிக்க முடியாத கூட்டுப் பொறுப்பும் கூட்டு றவும் இல்லாத சமூகச் சூழலை நாம் இன்று அவதானிக் கின்றோம். ஒரு முஸ்லிம் தனக்கென ஒரு வீட்டை நிர்மா ணித்துக் கொள்வதற்கு அல்லது உடைந்த வீட்டைத் திருத்திக் கொள்வதற்கு அல்லது தனது தொழிலை மேம் படுத்திக்கொள்வதற்கு ஒரு வாகனத்தை விலை கொடுத்து வாங்குவதற்கு அலைந்து திரிந்து செல்வந்தர்களும் நிதி நிறுவனங்களும் அமைப்புக்களும் கையை விரிக்கும்போது கையறு நிலையில் வங்கியில் சரணடைந்து விடுகின்றான். அல்லது காப்புறுதி நிறுவனங்களில் சிக்கித் தவிக்கின்றான். இதற்கு மாற்றுப் பரிகாரம் வழங்க முடியாத மார்க்கப் பற்றாளர்கள் “அவன் வட்டிக்குப் பணம் பெற்று பாவியாகி விட்டான்” என்ற பத்வாவைத்தான் வழங்க முடியுமாக உள்ளது. இதுதான் சுத்த கையாலாகாத்தனம்.
நமது சமூகச் சூழலில் இருந்து கூட்டுப் பொறுப்பும் கூட்டுறவும் விடைபெற்றுச் செல்கின்றன என்பதற்கு மற்றுமொரு சான்றாதாரத்தை நாம் இங்கு குறிக்க முடி யும். ஒரு வியாபாரி நஷ்டமடைந்து வங்குரோத்து நிலையை அடைந்து விட்டால் அவனை மறுபடியும் நிமிர்த்தி விடுவதற்கு எமது பஸார்களில் உதவிக் கரங்கள் இல்லை. அவனைக் காட்டமாக சாடுவதற்கு மனிதர்கள் தாராள மாக இருக்கின்றனர். இஸ்லாத்தை அடைமொழியாகக் கொண்ட நிதி நிறுவனங்கள்கூட தனவந்தர்களை குபேரர் களாக மாற்றுவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளன.
சமூகத்தின் அடிமட்ட மக்களும் நடுத்தர வர்க்கத் தினரும் இந்நிறுவனங்களுக்குச் சென்று காரியம் சாதிக்க முடியாத அளவு வர்த்தக, வாணிப சட்ட விதிகள் இறுக்க மாக உள்ளன. இந்நிலையில் இத்தகைய தரப்பினர் மீண் டும் வட்டி அடிப்படையினாலான நிதி நிறுவனங்க ளிடம் அடைக்கலம் தேடுகின்றனர். இவர்களின் பார்வை யில் மேற்படி நிறுவனங்களும் வங்கியியலும் நிதியிய லும் காலத்துக்கு ஒவ்வாதவையாக அமைந்து விடுகின் றன. ஓர் இஸ்லாமிய நிதி நிறுவனம் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்து கூட்டுப் பொறுப்புடன் செயற்படுவதே நபிவழியாகும். இறைத்தூதர் (ஸல்லல் லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் குபேரர்களை உருவாக்க வந்தவர்களல்ல. அடிமட்ட மக்களை தன்னி றைவுள்ள மனிதர்களாக மாற்ற வந்த உன்னத பொருளா தார நிபுணர் என்பதை நாம் மறந்துவிடலாகாது.
பொருளாதார நெருக்கடியின் காரணமாக தங்களது ஆபரணங்களை அடகு பிடிக்கும் நிலையத்திற்கு எடுத் துச் செல்லும் பெண்கள் அதிகரித்துள்ளனர். அவ்வாறே வட்டி அடிப்படையில் கடன் வழங்கும் மாதர் சங்கங்க ளுடன் முஸ்லிம் பெண்கள் தொடர்பை வலுப்படுத்தி வருகின்றனர். எகிறிப்போய் உயர்ந்துவிட்ட பொருட்க ளின் விலையால் வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடி யாமல் திணறுகின்ற பெண்களை வட்டிக் கொடுமை
மாதா ரங்கா
- அல்ஹஸனாத் மார்ச்: 20

நகலகம் 3ம்.
ஹதீஸ் விளக்கம்
யிலிருந்து பாதுகாப்பதற்கான முற்காப்பு நடவடிக்கை களை முன்னெடுக்க வேண்டியது தனவந்தர்களினதும் நலன்புரி அமைப்புக்களினதும் தார்மிகக் கடமையாகும்.
நாம் மேலே விவரித்த சமூக அவலங்கள் அகன்று செல்வதற்கு ஒரே வழி என்ன? அதுதான் தனவந்தர்கள் தமது மேலதிகமான சொத்து செல்வங்களை இறைவழி யில் செலவு செய்வதாகும். அவ்வாறே இஸ்லாமிய நிதி நிறுவனங்கள் தமது இலாபத்தில் குறித்ததொரு பங்கை முஸ்லிம் சமுதாயத்தின் பொருளாதார நெருக்கடியை இல்லாதொழிப்பதற்காக வழங்குவதாகும். இத்தகைய ஈகைக் குணம் இல்லாதவர்கள் தொடர்பில் உமர் (ரழியல் லாஹு அன்ஹு) அவர்களது நிலைப்பாடு மிகவும் கடு
மையானதாகவே அமைந்திருந்தது.
உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களது ஆட் சிக் காலத்தில் ஒரு குழுவினருக்கு கடுமையான தாகம் ஏற்பட்டு அவர்களும் அவர்களது கால்நடைகளும் மரணத்தை நெருங்குகின்ற நிலையை அடைந்து ஒரு நீர்நிலைக்கு அருகில் வந்தனர். அந்த நீர்நிலையின் சொந்தக்காரர்கள் அதில் நீர் அருந்துவதற்கான அனும தியை வழங்க மறுத்து விட்டனர். பின்னர் அக்குழுவினர் உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் வந்து நடந்த விடயத்தை அவர்களிடம் தெரிவித்தனர். அப் போது கலீபா அவர்கள் “நீங்கள் அவர்களுக்கு எதிராக வாளேந்திப் போராடி இருக்கலாமே?” என்று கூறினார்கள். (அல்கராஜ்: இமாம் அபூ யூஸுப் (ரஹிமஹுல்லாஹ்)
தேவைக்கு அதிகமாக உள்ள சொத்து, செல்வம் தொடர்பில் உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களது மற்றுமொரு தீர்க்கமான தீர்ப்பை இங்கு பதிவு செய்வது பொருத்தமாக அமையும்.
"எனது ஆட்சி அதிகாரத்தில் எத்தகைய சவால்களை யும் பின்வாங்காது எதிர்கொண்டு பணக்காரர்களது தேவைக்கு அதிகமான சொத்துக்களை எல்லாம் அவர்க ளிடமிருந்து பெற்று ஏழை மக்களான முஹாஜிர்களுக்கு பகிர்ந்து அளித்து விடுவேன்.''
- இமாம் இப்னு ஹஸ்ம் (ரஹிமஹுல்லாஹ்)
கலீபாக்களினதும் இமாம்களினதும் சட்டத் தீர்ப் புக்கள் கடுமையாக அமைந்தமைக்குக் காரணம், அண் ணலாரின் கூட்டுப் பொறுப்பு பற்றிய கருத்துக்கள் கனதி யாக அமைந்தமையாகும். எனவே, வகையவற்றவர்க ளின் வாழ்க்கையில் பொருளாதார சுபிட்சம் ஏற்பட சமூகக் கூட்டுப் பொறுப்பும் பரஸ்பர ஒத்துழைப்பும் இன்றியமையாதவையாகும். இது தொடர்பில் கவன யீர்ப்பை முன்னெடுப்பது தனவந்தர்கள், நிதி நிறுவனங் களின் பொறுப்புதாரர்கள், உலமாக்கள், சமூகப் பற்றா ளர்கள் உட்பட அனைவரினதும் மார்க்கக் கடமையாகும்.
14 ஜூ.அல்ஊலா: 1435

Page 12
10 தஃவா களம்
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர், இலங்கை ஜமா
இறைத்தூதின் அதனை ஏற்றவர்களி
வானம், பூமி, பிரபஞ்சம் மற்றும் அவற்றிலுள்ள அனைத்தினதும் படைப்பாளன் நானே. படைப்பினங்கள் அனைத்தையும் இல்லாமையிலிருந்து உருவாக்கியவனும் உள்ளமையிலிருந்து இல்லாமல் செய்பவனும் இறந்த வற்றுக்கு உயிர் கொடுப்பவனும் உயிருள்ளவற்றை மர
ணிக்கச் செய்பவனும் நானே.
படைப்பினங்கள் அனைத்திலும் சிரேஷ்டமான படைப்பினமாக மனிதனைப் படைத்து அவனுக்குள் ஆன்மாவை ஊதி அறிவு, ஆசை என்பவற்றையும் அவனுக் குள் வைத்து, அவன் ஓர் உன்னத ஜீவியாக பூமியில் வாழ் வதற்கு வழிகாட்டலை வழங்கியவனும் நானே.
மனிதன் நேரிய வழியில் சீரான வாழ்க்கை வாழ்வதற் கான அந்த வழிகாட்டல்களை உலகிற்கு சுமந்து வந்த நபிமார்களையும் நானே அனுப்பினேன்.
அந்த நபிமார்கள் வரிசையில் இறுதியாக முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வந்தார் கள். அவர்கள் மூலமாக உலகம் உள்ளளவும் மனித சமூகம் பயன்பெறத்தக்க இறுதித் தூதை நான் வழங்கினேன்.
மனிதர்களும் எனக்குச் சொந்தமானவர்கள். அவர்கள் வாழும் பூமியும் அவர்களுக்கு நிழல் கொடுக்கும் வானமும் அந்த வானத்தில் பிரகாசிக்கும் சூரியனும் இரவில் ஒளி தரும் சந்திரனும் மற்றும் பிரபஞ்சமும் எனக்கு சொந்தமா னவையே. மனிதர்கள் இந்த உலகில் வாழ்ந்த பின் என்னி டமே திரும்பி வரவேண்டும். அவர்கள் எனது வானத்தின் கீழ் எனது பூமியின் மடியில் எப்படி வாழ்ந்தார்கள் எனக் கணக்குத் தீர்க்கும் ஒரு நாளையும் நான் ஏற்பாடு செய் துள்ளேன். அன்றைய தினம் அனைவரையும் நான் மீள உயர்ப்பிப்பேன். அவர்களது வாழ்க்கைக்கான இறுதித் தீர்ப்பை அவர்களுடைய கைகளில் கொடுத்து அவர்களே தங்களது உலக வாழ்கையை மீட்டிப் பார்ப்பதற்கும் அந்த நாளில் கிடைக்க இருக்கும் வெகுமதியோ அல்லது
- அல்ஹஸனாத் மார்ச்:2

அத்தே இஸ்லாமி
www.usthazhajjulakbar.org
சாரம்சமும் ன் சிறப்பம்சமும்
தண்டனையோ அநீதியானதல்ல என்பதை அவர்களே உணர்ந்து கொள்வதற்கும் நான் வழி செய்துள்ளேன். அவர்கள் உலகில் செய்த சிறிய, பெரிய அனைத்து செயல் களும் அவர்களது கைகளில் இருக்கும் பதிவேட்டில் தப் பாமல் பதியப்பட்டிருக்கும். அந்நாளில் அவர்களுக்காகப் பரிந்து பேச யாருமிருக்க மாட்டார்கள்.
வானம், பூமியளவு விசாலமான சுவனம் மற்றும் நரகம் என்ற இரண்டு இல்லங்களை அங்கு வருவோருக்காக நான் சித்தப்படுத்தியுள்ளேன். மூன்றாவது ஓர் இல்லம் அங்கு இல்லை. அந்த இரு தங்குமிடங்களில் எதனை ஒருவர் தனது இருப்பிடமாகத் தெரிவுசெய்து கொள்கிறாரோ அவர் அதில் நிரந்தரமாகத் தங்கிவிடுவார். அதன்பின் அவருக்கு மரணமே இருக்காது.
இந்தப் பூமியில் எனது அறிவுக்கு எட்டாத எந்த வொன்றும் நடைபெறுவதில்லை. ஒரு மரத்திலிருந்து விழும் ஓர் இலைகூட எனக்குத் தெரியாமல் விழுவதில்லை. காரிருளில் கரும்பாறையில் ஊர்ந்து செல்லும் ஒரு கறுப்பு எறும்பைக்கூட நான் பார்க்கிறேன். அதன் காலடி ஓசை யுைம் நான் கேட்கிறேன். எனது இந்த வல்லமையை மனிதன் உணர்ந்து வாழ வேண்டும் என்பதற்காகத்தான் விதம் விதமான...அதிசயமான... படைப்புக்களை மனித னுக்கு முன்னால் நான் படைத்து வைத்துள்ளேன்.
தன்னிடம் அதிகாரம் இருந்தது என்பதனால் பலஸ்தீனர்களைக் கொன்றொழித்த ஏரியல் ஷெரோன் எத்தனை வருடங்கள் கோமாவில் கிடந்து தனது பலவீனத்தை உலகுக்கு உணர்த்தி விட்டுப் போனான் என்பது இத்தகையவர்களுக்குப் புரிவதில்லை.
014 ஜூ.அல்ஊலா: 1435

Page 13
அந்தப் படைப்புகள் எதுவும் தாமாக உருவாகவில்லை. அது மட்டுமல்ல, மனிதன் பூமியில் உயிர் வாழ்வதற் கான ஏற்பாடுகள் அனைத்தையும் முற்று முழுதாக நானே செய்து வைத்துள்ளேன். அந்த ஏற்பாடுகளில் மற்றொரு சக்திக்கு .01 வீதத்திலேனும் பங்கில்லை. இத்தனை ஏற் பாடுகளையும் தனது கண்களால் காண்கின்ற மனிதன் உள்ளத்தால் அவற்றை நிராகரித்துவிட்டு வாழ்வானாக இருந்தால் அதுபற்றி அவன் வினவப்படுவான். வினவப்ப டும் அந்நாளில் அவனுக்காகப் பேசவோ, பரிந்துரை செய்யவோ யாரும் முன்வர மாட்டார்கள்.
இவ்வாறானதொரு செய்தியை மனித குலத்துக்கு அதனைப் படைத்தவனைத் தவிர வேறு யாரும் முன்வைத் ததில்லை. இதுதான் காலம் காலமாக இறைத் தூதர்கள் மண்ணுலகிற்கு எடுத்து வந்த இறைத் தூதின் சாரம்சமா கும். மனிதனைப் படைத்தவனைத் தவிர வேறு ஒருவ ரால் எவ்வாறு இத்தகைதொரு செய்தியைச் சொல்ல
முடியும்.
இந்த செய்தியை ஏற்றுக் கொண்டவர்கள், ஏற்றுக் கொள்ளாதவர்கள் என இரு சாரார் உலகில் எப்போதும் இருக்கத்தான் போகிறார்கள். இந்த செய்தியை ஏற்றுக் கொண்டமைக்கான அல்லது நிராகரித்தமைக்கான கார் ணம் ஒவ்வொருவருக்கும் தெரிந்தே இருக்கிறது. அந்தக் காரணத்தை இறைவனுக்கு முன்னால் சமர்ப்பித்து மறு மையின் வெற்றி, தோல்விகளை ஒவ்வொருவரும் ஏற்றுக் கொள்வார்கள். எனினும், இறைத்தூதை ஏற்றுக் கொண்ட மற்றும் ஏற்றுக் கொள்ளாத காரணத்தை மட்டும் அடிப் படையாகக் கொண்டு வெகுமதியோ தண்டனையோ உலகில் வழங்கப்படுவதில்லை. உலகில் குறைந்தபட்சம் இறைதூதை ஏற்றுக் கொண்டவர்களை வெற்றிபெறச் செய்து ஏற்றுக் கொள்ளாதவர்களைத் தோல்வியடையச் செய்வது என்ற ஒரு கட்டாய நியதிகூட படைப்பாளனால் வகுக்கப்படவில்லை. உலகின் வெற்றி, தோல்விகளை இறைவன் வேறு நியதிகளில் வைத்துள்ளான். (அந்த நிய திகளைப் படிப்பதற்கு மற்றுமொரு தலைப்பு தேவைப் படும்) உலக வரலாறு இந்த உண்மையையே பறைசாற் றிக்கொண்டிருக்கின்றது. ஏன், மண்ணுலகிற்குக் இந்த செய்தியைக் கொண்டுவந்த நபிமார்களில்கூட சிலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த செய்தியை ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்திற்காக உலகில் முற்றாக அழிக் கப்பட்ட சமூகங்களின் வரலாறுகளும் உண்டு. இந்த செய்தியை ஏற்றுக் கொண்டவர்கள் உலக வெற்றிக்கான இறை நியதிகளைக் கருத்திற் கொண்டு செயல்பட்டால் அவர்களால் வெற்றிபெற முடியும். இந்தச் செய்தியை ஏற்றுக் கொண்டவர்கள் உலகில் தோல்வியடைவதற் கான நியதிகளைத் தம் பக்கம் வைத்திருந்தால் அவர்கள் தோல்வியடைவார்கள். எனினும், மறுமையில் நிரந்த வெற்றி, செய்தியை ஏற்றுக் கொண்டவர்களுக்கும்
அல்ஹஸனாத் மார்ச்: 20

தஃவா களம்
நிரந்தரத் தோல்வி,
நான் ஏன் பிறந்தேன்? நிராகரித்தவர்களுக்
எங்கிருந்து வந்தேன்? இங்கு குமுண்டு.
நான் என்ன செய்ய
வேண்டும்? ஏன் அவ் வாறாயின்
மரணிக்கிறேன்? எங்கு இந்தச் செய்தியை ஏற்
செல்லப் போகிறேன்? எனது றுக் கொண்டவர்
வாழ்க்கை தற்செயலானதா? களுக்கு உலகில் எது
அல்லது உயர்ந்த நோக்கங் வுமே கிடைக்காதா?
களைக் கொண்டதா? எந்த என்ற வினா எழுகிறது.
அடிப்படையில் ஒரு மனிதன் அச்சப்படுவதற்கில்லை.
தனது நல்ல கெட்ட உலகில் ஓர் உன்னத மான பேறு இந்தச்
நடத்தைகளுக்கான
செய்தியை ஏற்று விசு
வெகுமதிகளை அல்லது வாசித்து அதன்படி
தண்டனைகளைப் பெற்றுக் வாழ்ந்தவர்களுக்குக்
கொள்கிறான்?
கிடைக்கிறது. அவற்றுள் முதன்மையானது. - 01. மனிதனது மூளையைக் குடைந்து கொண்டிருக்கும் வினாக்களுக்கு திருப்திகரமாான பதில்கள் அவனுக்குக் கிடைத்து விடுகின்றன. நான் ஏன் பிறந்தேன்? எங்கிருந்து வந்தேன்? இங்கு நான் என்ன செய்ய வேண்டும்? ஏன் மரணிக்கிறேன்? எங்கு செல்லப் போகிறேன்? எனது வாழ்க்கை தற்செயலானதா? அல்லது உயர்ந்த நோக்கங் களைக் கொண்டதா? எந்த அடிப்படையில் ஒரு மனிதன் தனது நல்ல கெட்ட நடத்தைகளுக்கான வெகுமதிகளை அல்லது தண்டனைகளைப் பெற்றுக் கொள்கிறான்? ஒரு மனிதனுக்கு உலகில் கிடைக்காத நீதி அவனது வாழ்க் கையில் எப்போதுமே கிடைக்க மாட்டாதா? அதன் மூலம் அவன் நிரந்தர நஷ்டவாளி ஆகிவிடுகின்றானா?
இந்த வினாக்களுக்கு திருப்திகரமான பதில்கள் கிடைப்பது இறைதூதை ஏற்றுக் கொண்டவர்களுக்கு மட்டும்தான். அதனால் மனிதனுக்குள் எழுந்து மறையும் வாழ்க்கை பற்றிய சிந்தனைக் குழப்பங்கள், சந்தேகங்கள் அகன்று உள்ளம் தெளிவடைகிறது.
02. இவ்வாறு உள்ளம் தெளிவடைகின்றபோது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஓர் ஆறுதல் அவ னுக்குக் கிடைக்கிறது. அதுதான் நான் என்னைப் படைத்த இரட்சகனின் துணையுடன் வாழ்கிறேன். இந்த மண்ணு லகில் எனக்கு எது நடந்தாலும் அவனது கருணை, அருட் பார்வை, அரவணைப்பு, மறுமையில் அவன் தரும் நிரந் தரமான வெகுமதிகள் அனைத்தும் எனக்குண்டு என்ற உறுதிப்பாடாகும்.
03. இறைத்தூதை ஏற்றுக் கொள்வதனால் ஏற்படும் மற்றுமொரு விளைவு நன்மைகள், தீமைகள் அனைத் தையும் ஒன்றுவிடாமல் துல்லியமாகப் பிரித்துப் பார்க்க | வேண்டிய பாரிய பொறுப்பிலிருந்து நான் விடுவிக்கப் பட்டுள்ளேன். எனது இரட்சகன் அவை அனைத்தையும்
14 ஜூ.அல்ஊலா: 1435

Page 14
12 த்
தஃவா களம்
எனக்காக வகுத்துத் தொகுத்து வழங்கியிருக்கிறான். அவற்றை விளங்கி அவற்றின்படி ஒழுகுவது மாத்திரமே உலகில் எனது வேலை என்ற முடிவுக்கு அவன் வருவ தாகும். இந்த முடிவு மனிதனைக் கதிகலங்க வைப்ப தில்லை. எத்தகைய நெருக்கடியான சூழ்நிலைகள் வந்த போதிலும் நான் இந்த சந்தர்ப்பத்தில் செய்ய வேண்டியது இது. செய்யக் கூடாதது இது என்ற கட் டுப்பாட்டுக்குள் அவனைக் கொண்டுவந்து விடுகிறது.
04. அடுத்து எனது எந்த செயலும் வீணாக மாட் டாது. அனைத்திற்கும் வெகுமதிகள் கிடைக்கக் காத் திருக்கின்றன. உலகில் எனக்கிழைக்கப்படும் அநீதிகள் கொடுமைகள் என்பவற்றுக்கும் கணக்குத் தீர்க்கும் ஒரு நாள் வரவிருக்கிறது. அநீதியிழைக்கப்பட்டவனுக்கு நீதி யும் அநீதியிழைத்தவனுக்குத் தண்டனையும் தப்பாமல் அந்த இறை நீதிமன்றத்தில் வழங்கப்பட்டே தீரும் என்ற ஆறுதல்.
05. உலகில் நன்மைகள் செய்கின்றபோது கெட்ட வர்கள் கோபமடைகிறார்கள். தீமைகள் செய்கின்றபோது அவர்கள் வரவேற்கின்றார்கள். எனவே, கெட்டவர்கள் அதிகமாக வாழுகின்ற ஒரு சூழலில் அவர்களைத் திருப் திப்படுத்துவதற்காக நல்லவர்கள்கூட தீமைகள் செய்யும் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. பின்னர் அந்தத் தீமைகளை எண்ணி அவர்களது உள்ளம் வருந்தவும் செய்கிறது. எனி னும், இறைதூதை ஏற்றுக் கொண்ட மனிதனுக்கு அந்தத் தொல்லை இல்லை. அவன் தனது படைப்பாளனைத் திருப்திப்படுத்துவதில் மட்டும்தான் கண்ணாயிருப்பான். கெட்டவர்களைத் திருப்திப்படுத்துவதற்காகத் தீமைகள் செய்து விட்டு வருந்தும் நிலை அவனுக்கிருக்காது. கெட்டவர்கள் வருந்தாமலே தீமை செய்கிறார்கள். எனி னும், அவர்கள் வருந்தும் நாள் வந்தே தீரும் என்பதில் அவன் உறுதியாக இருப்பான்.
இறைதூதினை ஏற்றுக் கொண்டவர்களுக்கு உலகில் கிடைக்கும் சில பேறுகளும் ஆறுதல்களும் மன நிறை வும்தான் மேலே கூறப்பட்டவை. இனி இறைதூதை நிரா கரித்தவர்கள் உலகில் எதைக் கண்டார்கள் என்பதை அவர்கள் சொல்ல வேண்டும். அவர்கள் ஒன்றை நிச்சயம் சொல்வார்கள்.
நாம் சுதந்திரப் பறவைகள் எமக்கு எந்தக் கட்டுப்பா டுமில்லை; எமக்கு நாமே எஜமானர்கள். நாங்கள் நினைத்ததையெல்லாம் எங்களால் செய்ய முடியும்;
செ ய ல் க ளி ல் அவர்கள் இறைதூதின் சொந்
நன்மை, தீமை தக்காரர்கள் என்று தம்மைக்
என்று எதனை " கூறிக்கொள்ள அருகதை
யும் பிரித்துப் 'யற்றவர்கள். இத்தகையவர்கள்
பார்க்க வேண் இறைதூதை தங்களது வாழ்வில் ஒரு சுமையாகவே கருதுகிறார்கள்.
டிய அவசியம் எமக்கில்லை;
அல்ஹஸனாத் மார்ச்:

வாய்ப்புக் கிடைத்தால் நாம் எதனையும் செய்வோம்; இதுதான் எங்களது சுகம், இன்பம், உல்லாசம் எல்லாமே... மது அருந்துவோம்; ஆண்-பெண் உறவுகளுக்கு எம்மி டம் கண்டிப்பான வரையறைகள் இல்லை; இலஞ்சம், ஊழல் மோசடி போன்றவை தீமைகள் அல்ல; அவை இலாபம் தேடுவதற்கான வாய்ப்புக்கள். கிடைத்தால் இலாபமீட்டுவோம்; கிடைக்கா விட்டால் அந்த வாய்ப் புக்களைத் தேடிப் பெறுவோம்.
முஸ்லிம் பெயர்தாங்கிகளிலும் இப்படிக் கூறுபவர்கள் இருக்கின்றார்கள். அல்லது இந்தக் கூற்றுக்கேற்ப வாழ் பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இறைதூதின் சொந் தக்காரர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்ள அருகதை யற்றவர்கள். இத்தகையவர்கள் இறைதூதை தங்களது வாழ்வில் ஒரு சுமையாகவே கருதுகிறார்கள். தாங்கள் விரும்பியதையெல்லாம் கட்டுப்பாடின்றி உல்லாசமாக செய்து விட்டுப் போவதற்கான வாய்ப்பாகவே அவர்கள் இந்த உலக வாழ்க்கையை பார்க்கிறார்கள்.
அவர்கள் நினைப்பது போல் சகலதும் அவர்களது கட்டுப்பாட்டில் இருக்குமாயின்... அவர்கள் கூறுவது போல் அவர்கள் தான் அவர்களுக்கு எஜமானர்கள் ஆயின்... அவர்களது வாழ்க்கையை அவர்கள் நினைத்த விதமாக அமைத்துக் கொள்வதில் தவறில்லை. எனினும், உண்மை அதுவல்ல. உலகில் இப்படி நினைத்து வாழ்ந்த வர்களுக்கு என்ன நடந்தது என்பதை இவர்கள் கண்டு கொள்வதில்லை.
கலை
மனிதனுக்கு அவன்தான் எஜமான் என்றால் அவன் விரும்பி அவன் பிறந்திருக்க வேண்டும். அவனது உயிரை அவன் தன் கைவசம் வைத்திருக்க வேண்டும். மரணிக்கா மல் தன்னைப் பாதுகாக்கும் வல்லமையை அவன் கைவ ரப் பெற்றிருக்க வேண்டும். நோய்கள், எதிர்பாராத இழப் புக்கள், சோதனைகள் வராது தடுக்க அவனால் முடியு மாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் முதுமையை வர விடாது தடுக்கவும் இளமையோடு வாழ்ந்திருக்கவும் அவ னால் முடிந்திருக்க வேண்டும். இத்தனை எதற்கு? ஒரு கிருமி அவனைத் தாக்கினால் அதன் விஷத்திலிருந்து குறைந்தபட்சம் அவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடிந்திருக்க வேண்டும். இவற்றில் எதுவும் செய்துவிட முடியாத பலவீனத்தில் அவன் வாழ்கிறான் என்பதை மனிதன் உணராமல்தான் நான் ஒரு சுதந்திரப் பறவை என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கிறான்.
தன்னிடம் அதிகாரம் இருந்தது என்பதனால் பலஸ் தீனர்களைக் கொன்றொழித்த ஏரியல் ஷெரோன் எத்தனை வருடங்கள் கோமாவில் கிடந்து தனது பலவீனத்தை உல குக்கு உணர்த்தி விட்டுப் போனான் என்பது இத்தகைய வர்களுக்குப் புரிவதில்லை. முடிசூடா மன்னனாக இருந்து தான் நினைத்ததையெல்லாம் சாதித்து விடலாம் என்று நினைத்த பிரபாகரனின் பலவீனம் இத்தகையவர்களுக்குப் புரிவதில்லை.
014 / ஜூ. அல்ஊலா: 1435

Page 15
உண்மையில் கட்டுப்பாடின்றி உல்லாசமாக வாழ் வதுதான் இந்த உலகில் அவர்கள் பெற்ற பேறு என்று நினைக்கிறார்களே, அத்தகைய ஒவ்வொருவரும் உலக வாழ்வை முடித்துக் கொள்ளும் இறுதித் தறுவாயில் உலகில் நான் ஒன்றையும் சாதிக்கவில்லையே, அனுபவிக் கவில்லையே என்ற ஏக்கத்தோடும் பலநூறு விருப்பங்கள் இன்னும் ஈடேறாத நிலையில் உலகை விட்டும் பிரியப் போகிறேனே என்ற விரக்தியோடும்தான் உலகை விட்டுப் பிரிகிறார்.
இறைதூதினை விசுவாசித்து கட்டுப்பாட்டோடு வாழ்ந்த மனிதன் அவ்வாறல்ல, அவன் கழுவில் ஏற் றப்பட்டாலும் அவன் பெருமகிழ்ச்சியோடு அதனை ஏற் றுக் கொள்கிறான். காரணம், கறைபடியாத, களங்கமற்ற ஒரு வாழ்க்கையை நான் வாழ்த்திருக்கிறேன்; மறுமையின் நிரந்தர உல்லாசத்திற்கு நான் சொந்தக்காரனாகி விட்டேன் என்ற ஆத்ம திருப்தி அவனுக்குள் ஆர்ப்பரிக் கிறது. அவனது உயிரைப் பறித்தாலும் அவனது திருப்தியை எவராலும் பறிக்க முடியாது.
இறைதூதினை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் ஏற்றுக் கொள்ளாதவர்களுக்குமிடையில் உள்ள சில வேறுபாடு கள்தாம் இவை. அவற்றுக்கு மேலால் இந்த இரு சாரா ருக்கும் இடையில் இருக்கும் ஒரு முக்கிய வேறுபாட்டை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. அதுதான் இந்த இரு சாராரும் ஒருவரைப் பற்றி ஒருவர் கொண்டுள்ள அபிப்பிராயமாகும். முதலில் இறைதூதை ஏற்றுக் கொண்டவர்கள் இறைதூதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் பற்றிக் கொண்டுள்ள அபிப்பிராயத்தை நோக்குவோம்.
1. அனைத்திற்கும் முன்பாக இறைத்தூதினை ஏற்றுக் கொண்டவர்கள் மனிதர்கள் அனைவரையும் ஒரே இரட்சகனின் படைப்புகள் என்று பார்க்கிறார்கள். ஒரு தாய் தந்தையின் வழித்தோன்றல் தான் முழு மனித சமூகமும் என்பது இறைதூதிலிருந்து அவர்கள் கற்ற அரிவரிப் பாடமாகும். அது மட்டுமல்ல, இது ஒரு சகோ தரத்துவப் பார்வையுமாகும். அந்த சகோதரத்துவத்தில் 'மனிதம்' என்ற உறவு அவர்களை இணைக்கிறது. 'இறை தூது' எனும் அடிப்படையிலான உறவு அவர்களைப் பிரித்தபோதிலும் சரியே.
2. அடுத்து இறைதூதை ஏற்றுக் கொள்ளாதவர் களுக்கு உலக, மறுமை நலன்கள் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதில் ஆழ்ந்த கரிசனையுள்ளவர்களாக இறைதூதை ஏற்றுக் கொள்பவர்கள் இருக்கிறார்கள். இறைதூதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் மறுமை நலன் களை நிராகரித்து விட்டால் குறைந்தபட்சம் உலக நலன் களையாவது அவர்கள் குறைவின்றிப் பெற்று வாழ வேண்டும் என இறைத்தூதைப் பின்பற்றுபவர்கள் விரும் புகிறார்கள். பின்வரும் சம்பவத்தைப் படியுங்கள்:
நெட் உ .
கே)
அல்ஹஸனாத் மார்ச்: 2

தஃவா களம்
13
ஒரு பெறுமதியான பொருள் களவாடப்பட்டது. உண்மையான திருடன் ஒரு முஸ்லிமாக இருந்தான். எனினும், குற்றச்சாட்டு ஒரு யூதனின் மீது சுமத்தப்பட்டது. அன்று யூதர்கள் முஸ்லிம்களின் எதிரிகளாக இருந்தார் கள். களவு செய்த முஸ்லிமின் குடும்பத்தவர்கள் களவு செய்தவனுக்கு ஆதரவாக நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப் பேச வைக்கும் நோக்கில் வழக்கை சோடித்தார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல் லம்) அவர்களுக்கு நடந்தவை தெரியாது. அதனால், அவர்களும் யூதனை குற்றவாளியாகப் பார்க்கும் ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் நான்காம் அத்தியாயத்தின் ஒன்பது வசனங்களை (105 முதல் 112 வரை) அல்லாஹ் இறக்கி அந்த யூதன் நிரபராதி என்றும் மோசடி செய்யும் முஸ்லிமுக்கு ஆதரவாக நபி வாதிடக் கூடாது என்றும் இத்தகைய மோசடிக்காரர்கள் சமூகத் தில் சீர்கேடுகளை வளர்க்கும் பயங்கரப் பேர்வழிகள் என்றும் அல்லாஹ் கண்டனம் செய்தான்.
இறைத்தூது மனிதனை எங்கனம் வழிநடத்துகிறது என்பதற்கு இது ஒரு சான்று மட்டும்தான். இத்தகைய வழிகாட்டலை ஏற்றுப் பின்பற்றுபவர்கள் அதனை ஏற்காதவர்கள் விடயத்தில் எவ்வாறு நடந்து கொள் வார்கள் என்பதை விளக்க வேறு உதாரணங்கள் வேண்டி யதில்லை. 192ITTE
இந்த ரீதியில்தான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் ஒரு கூற்றை இங்கு நாம் நினை வுகூர வேண்டும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல் லம்) அவர்கள் கூறினார்கள்: "தான் விரும்புவதை தனது சகோதரனுக்கு விரும்பாதவரை ஒரு மனிதன் (இறைதூ தின்) விசுவாசியாகிவிட முடியாது.''
ஒரு முஸ்லிம் உலக, மறுமை நலன்களைத் தனக்கு விரும்புவது போல் அனைவருக்கும் விரும்ப வேண்டும். முடியாது போனால் உலகிலாவது அவர்கள் நன்மைய டைந்து வாழ வேண்டும் என்பதை அவன் ஒருபோதும் மறுக்கக் கூடாது என்பதை மேற்குறித்த நபிமொழி வலி யுறுத்துகின்றது. அது மட்டுமல்ல, இறைத்தூதின் விசு வாசியாக இருப்பதற்குரிய நிபந்தனையாகவும் அந்தப் பண்பை இந்த நபிமொழி குறிப்பிடுகின்றது. எனவே,
இனவெறி முஸ்லிமுடையதல்ல.
பs = : 5 - 3. முஸ்லிமல்லாதவர்கள் முஸ்லிம்களைத் தாக்கினால், தாக்குதல் நடத்துபவர்களுடனன்றி வேறு எவருடனும் பகைக்கவோ அவர்களுக்கு நன்மை செய்யாதிருக்கவோ முஸ்லிம்களுக்கு அனுமதியில்லை. இந்த உண்மையை விளக்கும் (6: 8-9) வசனங்கள் முஸ்லிம், முஸ்லிமல்லா தோர் உறவை விளக்கும் அடிப்படை சட்ட வசனமாகக் கொள்ளப்படுகிறது. அந்த வசனம் வருமாறு:
0 )
இட 3 (35ஆம் பக்கம் பார்க்க)
p14/ஐ. அல்ஊலா: 1435.

Page 16
14 தேசம் கடந்து
நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகளான
சமீபத்திய பங்களா பங்களாதேஷ் தேசியக் கட்சி மற்றும் ஜமாஅத்தே
தேஷ் இரத்தக் கறை படிந்த இஸ்லாமி உட்பட ஏனைய
பல நிகழ்வுகளை சந்தித் 38ற்கும் மேற்பட்ட
துக் கொண்டிருக்கின்றது. கட்சிகள் 2014ஆம்
அவை தற்போதைய ஹn ஆண்டு பாராளுமன்றப்
னாவின் தலைமையிலான பொதுத் தேர்தலை
|அவாமி லீக் அரசுக்கு ஓர் நிராகரித்தன. இதனால், |
அரசாக செயற்படுவது ஒரு தேர்தல் நடவடிக்கைகளை
புறமிருக்க, அரசியல் கட் மேற்பார்வையிடுவதற்காக சியாகக்கூட இருப்பதற் ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்காவைச்
முஹம்மத் ஸகி பவுஸ் நளீமி சேர்ந்த தேர்தல்
விரிவுரையாளர், இஸ்லாஹிய்ய கண்காணிப்பாளர்கள்
Zackymfm@gmail.com
தொடரும்
தொடரும் பங்களாதேஷி
தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்கு
கான தகுதியையும் இல்லா மறுத்து விட்டன.
மல்செய்துவிட்டன. காரணம், இத்தனை புறக்க
ஜனநாயகத்தின் அடிப்ப ணிப்புக்கும் அப்பால்
டைக் கூறான எதிர்க்கட்சி தேர்தலை நடத்தி 100 வீத
அரசியலை அத்திவாரத்து பாராளுமன்ற
டன் துவம்சம் செய்யும் ஆசனங்களை தனதாக்கிக் அரசியல் கலாசாரத்தையே கொண்டு புதிய அரசை |
ஹஸீனா செயற்படுத்தி வரு அமைத்திருக்கிறார்
கிறார். நாடளாவிய தேர் ஹஸீனா.
தல்களில் அவாமி லீக்கிற்
கும் கடும் சவாலாக விளங் கும் பங்களாதேஷ் தேசிய கட்சி மற்றும் ஜமாஅத்தே இஸ்லாமி போன்ற கட்சிகளின் தலைவர்களை நசுக்கி வருகின்றது ஹஸீனா அரசு. கடந்த டிசம்பர் மாதம் பங்களாதேஷ் ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர்க ளுள் ஒருவரான அப்துல் காதர் முல்லா தூக்கிலிடப் பட்டமை அறிந்ததே.: -டடம் பாராளுமன்றத்தேர்தல்கள்:-
கடந்த மாதம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் களில் வெற்றியீட்டிக் கொள்வதற்காக அவாமி லீக் அரசு படுமோசமான ஜனநாயக விரோத செயற்பாடுகளை மேற்கொண்டது. ஏற்கனவே உள்ள யாப்பின்படி, தேர்த லுக்கு முன்னர் அரசு தனது அதிகாரங்களைக் களைய வேண்டும். அரசை கட்சி சாரா உறுப்பினர்கள் பொறுப் பேற்பார்கள். யாப்புச் சீர்திருத்தத்திற்கு இணங்க தேர்தல் காலங்களில் ஒரு கட்சி அரச சொத்துக்களை தங்களது
தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்துவது மற்றும்
அல்ஹஸனாத் மார்ச்: 20

ਪਰ ਕਰ
இ- - - -
25
பா அரபுக்கல்லூரி, மாதம்பை
ன் வங்குரோத்து ஜனநாயகம்!
எதிர்க்கட்சியை திட்டமிட்டு நசுக்குவது போன்ற ஜனநா யக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது தடுக்கப்பட் டுள்ளன. இந்த யாப்புச் சீர்திருத்தமானது ஷேக் ஹஸீனா வின் தேசியவாத அரசை தொடர்ந்தும் அச்சுறுத்தி வந்தது. மேற்சொன்ன ஷரத்தை நீக்காத வரை மீண்டும் தேர்தல் களில் வெற்றி பெற முடியாது என்பதை ஹசீனா நன்கு புரிந்து வைத்திருந்தார்.
இதனால், பாரிய மக்கள் எதிர்ப்புக்கும் மத்தியில் ஹசீனாவின் அரசு யாப்பில் மாற்றத்தை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் வற்புறுத்தியும்கூட, அரசு தனது தீர்மானத்தை மாற்றிக் கொள்ளவில்லை. விளை வாக, நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகளான பங்களாதேஷ் தேசியக் கட்சி மற்றும் ஜமாஅத்தே இஸ்லாமி உட்பட ஏனைய 38ற்கும் மேற்பட்ட கட்சிகள் 2014ஆம் ஆண்டு
214 ஜூ. அல்ஊலா: 1435.

Page 17
பாராளுமன்றப் பொதுத் தேர்தலை நிராகரித்தன. அக்கட்சிகளுள் பங்களாதேஷ் பிரிவினைக்காக போராடிய தேசியவாத கட்சிகளும் உள்ளடங்கியிருந்தமை வெளிச் சத்திற்கு வராத உண்மையாகும். இதனால், தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்காக ஐரோப் பிய யூனியன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல் நடவடிக்கைகளை மேற் பார்வையிடுவதற்கு மறுத்து விட்டன. இத்தனை புறக்க ணிப்புக்கும் அப்பால் தேர்தலை நடத்தி 100 வீத பாரா ளுமன்ற ஆசனங்களை தனதாக்கிக் கொண்டு புதிய அரசை அமைத்திருக்கிறார் ஹஸீனா. ஜனநாயக அளவீ டுகளின் அடிப்படையில் நோக்கினால் பங்களாதேஷில் நடைபெற்ற தேர்தல்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல.
இதனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் நாடளாவிய ரீதியில் மக்கள் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தன. மிகக் கொடூரமான முறையில் அரசு அதனை அடக்கியது. எதிர் கட்சித் தலைவர்கள் பலர் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டுள்ளனர். ஜமாஅத்தே இஸ்லாமி உறுப்பினர்கள் திட்டமிட்டு கொலை செய்யப்படுகின்றனர். மட்டுமல்லா மல், இருட்டறைக்குள் இடம்பெற்ற தேர்தல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் நாட்டின் நலன்களுக்கு எதிரான தீவிரவாதிகளாகவும் பங்காளதேஷின் தேசிய உணர்வுக்கு எதிரானவர்களாவும் அவாமி லீக் அரசு காட் சிப்படுத்தி வருகின்றமை மிகப் பெரிய வேடிக்கையாகும். மெளலானா முதீஉர் ரஹ்மான் நிஸாமிக்கும் தூக்குத் தண்டனை தீர்ப்பு
அப்துல் காதர் முல்லாவைத் தொடர்ந்து பங்களாதேஷ் மீயுயர் நீதிமன்றம் ஜமாஅத்தே இஸ்லாமியின் தற்போ தைய தலைவரான மெளலானா முதீஉர் ரஹ்மான் நிஸா மிக்கும் தூக்குத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. ஹஸீனா அரசின் கொடூர அரசியல் எஜன்டாவின் வெளிப் பாடே இது.
2001-2006ஆம் ஆண்டு காலப் பிரிவில் பங்களா தேஷின் தேசிய கட்சியுடன் இணைந்து ஜமாஅத்தே இஸ்லாமி ஆட்சியமைத்தது. அதில் விவசாயத்துறை மற்றும் தொழிற் துறை அமைச்சராக முதீஉர் ரஹ்மான் நிஸாமி செயற்பட்டார். அவரது காலப் பிரிவில் பங்களா தேஷின் பிரபல்யமான சிட்டகொங் துறைமுகத்தில் வைத்து சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட பாரிய ஆயுதங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. அவற்றை அஸாம் பிரதேச பிரிவினைவாதிகளுக்கு கைமாற்றுவதற் காகவே கடத்தப்பட்டது என பொலிஸ் விசாரணைக்கு குழு சந்தேகம் எழுப்பியது. இன்று, அப்போதைய அமைச்சர் முதீஉர் ரஹ்மான் நிஸாமி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு என்னவென்றால், குறித்த ஆயுதக் கடத்தல் சம்பவம் அவரின் அமைச்சின் கீழ் உள்ள துறைமுக அதிகார சபையுடன் தொடர்புபட்டிருந்தும். அதனை
அல்ஹஸனாத் மார்ச்: 20

தேசம் கடந்து
விசாரணை செய்வதற்கு போதுமான நடவடிக்கைகள் அவர் எடுக்கவில்லை என்பதாகும்.
பங்களாதேஷைப் பொறுத்தவரை துறைமுக அதிகார சபை விவசாயத்துறை, தொழிற்துறை அது அமைச்சரின் கீழுள்ள ஒரு நிறுவனமல்ல. மாற்றமாக, அமைச்சரது செயலாளரின் நேரடிக் கட்டுப்பாட்டில் சுயமாக இயங் கும் சபையாகும். தவிரவும், குறித்த ஆயுதங்கள் அஸாம் பிரதேச பிரிவினைவாதிக்காக கடத்தப்பட்டது என்ற விடயம் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட ஒரு செய்தியுமல்ல. அப்படியிருக்கும்போது குறித்த கருதுகோளை வைத்துக் கொண்டு விசாரணையை முடுக்கி விடுவது சட்டத்திற்குப் புறம்பானது. அவ்வாறு பிரிவினைவாதிகளுக்காக கடத் தப்பட்டது என்று வைத்துக் கொண்டாலும், அது நேரடி யாகதுறைமுக அதிகார சபையின் பொறுப்பின் கீழ் உள்ள விடயமாகும். குறித்த நிகழ்வுக்கு ஒரு தசாப்த காலம் கடந்துள்ள நிலையில் அமைச்சர் விசாரணைக் குழு அமைக்கவில்லை என்ற குற்றச்சாட்டின் பெயரில் முதீஉர் ரஹ்மான் நிஸாமிக்கு மரண தண்டனை தீர்ப்பளிப்பது எவ்வளவு அநீதியானது! ஹஸீனாவின் மதச்சார்பற்ற அரசியல் பழிவாங்கல்களுக்கு இதனை விட வேறு என்ன சான்று வேண்டிக் கிடக்கின்றது!
மௌலா அபுல் கலாம் முஹம்மத் யூசுப் சிறையில் மரணம்
மனித சமூகத்திற்கு எதிரான குற்றமிழைத்தார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் பங்களாதேஷ் அரசால் சிறை வைக்கப்பட்டிருந்த மெளலானா யூசுப் அவர்கள் கடந்த மாதம் சிறையில் உயிர் நீத்தார் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். மூன்று முறை இருதய சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட மெளலான யூஸுப் அவர்கள் சிறையில் இருக்கும் காலப்பகுதியில் கடுமையாக சுகமுனமற்றிருந்தும் அவருக்கு எவ்வித சிகிச்சையும் அளிக்கப்படவில்லை; சிகிச்சை பெற அனுமதியும் வழங் கப்படவில்லை. பங்களாதேஷ் ஜமாஅத்தின் மூத்த உறுப் பினர்களில் ஒருவரான மெளனாயூஸுப் 88 வருட வாழ்வில் தேசத்திற்காகவும் இஸ்லாமியப் பணிக்காவும் ஆழ்ந்த பற்றுடன் செயற்பட்டவர்.
ஹதீஸ்துறையில் தனது பட்டப்படிப்பபை பூர்த்தி செய்த மெளலானா யூஸுப் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள், முழு பங்களாதேஷிலும் முதல் தரத்தில் சித்தியடைந்து "மும்தாஸல் முஹத்திஸின்' என்ற பட்டத்தைப் பெற்றார்.
மெளலான யூசுபின் 8 பிள்ளைகளும் பெரும் கல்வி மான்கள். ஹாவார்ட், டொரன்டோமற்றும் வொஷிங்கடன் முதலான வர்வதேச பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்கள்.
பாகிஸ்தானின் கீழ் பங்களாதேஷ் இருந்த காலப்
14 ஜூ. அல் ஊலா: 1435

Page 18
16
தேசம் கடந்து
பகுதியில் (1956-1958) குலுன என்ற மாவட்ட ஜமாஅத்தே இஸ்லாமியின் அமீராக இருந்தவர். பின்னர், பாகிஸ்தா னின் சர்வதிகாரி ஐயூப் கான் அனைத்து அரசியல் கட்சிக ளையும் தடைசெய்தபோது, சர்வதிகாரத்திற்கு எதிராகவும் ஜனாநயகத்தின் எழுச்சிக்காகவும் நடைபெற்ற பாரிய
ஆர்ப்பாட்டங்களில் பங்கு கொண்டார்.
1962 -1971 காலப்பிரிவில் தேசிய ஜமாஅத்தே இஸ்லாமியின் மஸ்லிஷ் ஷ ராவின் அங்கத்தவராக மூன்று முறை தொடர்ச்சியாக தெரிவு செய்யப்பட்டு பணியாற்றினார். இக்காலப்பிரிவில் ஜமாஅத்தின் அமீராக மெளாலானா மௌதூதி (ரஹிமஹுல்லாஹ்) கடமையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது. பங்களா தேஷின் பிரிவினைக்குப் பின்னர் ஜமாஅத்தின் தேசிய செயலாளராக மூன்று முறை பணியாற்றியுள்ளார்.
1962இல் பாகிஸ்தான் அரசு அரசியல் கட்சி உருவாக் கத்திற்கு சிறிதளவு சுதந்திரத்தை வழங்கியது. அப்போது ஜமாஅத்தின் சார்பில் பாகிஸ்தான் பாராளுமன்றத் தேர்த லில் களமிறங்கிய மௌலானா யூஸுப் அவர்கள் பாரா ளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். பின்னர் கெபினட் அமைச்சாராக பணியாற்றினார். அத்துடன், பாகிஸ்தான் இரண்டு தேசமாக பிளவுபடுவது பங்களா தேஷக்கு ஆபத்தானது என்ற நிலைப்பாட்டில் உறுதி யாக நின்றார். எனவே, பாகிஸ்தான் என்ற ஒருமித்த தேசத்தின் ஒற்றுமைக்காக ஜனநாயக விழுமியங்களைப் பேணி அயராது உழைத்தமையும் அவரது வராற்றுப் பக்கங்களில் முக்கியமான நிகழ்வுகளாகும்.
வாசகர்களுக்கு இ
ரா. அடை
வ்
).
டிபார்டியம்
பெ
மு மாறாடகைள்
ரூபா. 160.00
ரூபா.
ரூபா. 130.00
மனதாக எ..
ரூபா. 140.00
(7800) (585.00) -
31.03.2014ஆம் திகதிக்கு முன் இக் கூப்பனை நிழற்பிரதி எடுத்து (Photo copy) தகவல்களை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம் இப் புத்தகங்களை கழிவு
விலையில் பெற்றுக் கொள்ளலாம். மேலதிக தொடர்புகளுக்கு: 0777412563 77. Dema
-அல்ஹஸனாத் மார்ச்: 2

யா அல்லாஹ் அன்னாருக்கு ஷஹாதத் அந்தஸ்த்தை வழங்கி உயர்ந்த சுவனத்தை வழங்குவாயாக!
பங்களாதேஷ் உள்ளூராட்சி தேர்தலில்
ஆளும் கட்சி தோல்வி ஜமாஅத்தே இஸ்லாமியின் செல்வாக்கு அதிகரிப்பு!
பங்களாதேஷில் பெப்ரவரி 19ஆம் திகதி நடைபெற்ற முதலாம் கட்ட உள்ளூராட்சி தேர்தல்களில் ஆளும் அவாமி லீக் கட்சி தோல் வியைத் தழுவியுள்ளது. அதேவேளை, தொடர்ந்து அடக்குமுறைக்கு உள்ளாகிவரும் பங்களாதேஷ் ஜமாஅத்தே இஸ்லாமி கடந்த காலங்களை விடச் சிறந்த வெற்றிகளைப் பெற்றுள்ளது.
உள்ளூராட்சி தலைவர்களுக்கான Chairman போட்டியில் எதிர்க்கட்சியான காலிதாசியாவின் தலைமையிலான BNP 41 ஆசனங்களையும் ஷேக் ஹஸீனாவின் அவாமி லீக் கட்சி 34 ஆசனங்களையும் ஜமாஅத்தே இஸ்லாமி 13 ஆசனங்களையும் பெற்றுள்ளன.
அவ்வாறே உதவித் தலைவர் (Vice Chairman) பதவிக்கான போட்டியில் BNP 72 ஆசனங்களையும் அவாமி லீக் 63 ஆசனங் களையும் ஜமாஅத்தே இஸ்லாமி 33 ஆசனங்களையும் பெற்றுள் ளன.
குறிப்பாக ஜமாஅத்தே இஸ்லாமியின் மீது தொடர்ந்து மேற் கொள்ளப்படும் அடக்குமுறைகள் அந்தக் கட்சியில் செல்வாக்கை அரசியல் பரப்பில் அதிகரிக்க உதவியுள்ளமையை இத்தேர்தல் எடுத்துக்காட்டுவதாக அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித் துள்ளனர்.
டர் அரிய சந்தர்ப்பம்
அமைப்பா - ஏன்? எப்படி?
புதிய வெளிப்டுகள்
வரலாறு புரண்.
ரூபா. 140.00
வஆவும் ராளனாவும்
ரூபா. 150.00
ரூபா. 250.00
ame:...
"'''''.
ddress: hone No:.
ISLAMIC BOOK HOUSE atagoda Road, Colombo-09 T.P. 011 2684851, Fax: 011 2688102
014) ஜூ. அல்ஊலா: 1435.

Page 19
ஒரு செர
கன்னம்
வருடாந்தம் மார்ச் 22ஆம் திகதி
க ஜெம் சர்வதேச நீர் தினமாக அனுஷ்டிக் கப்படுகிறது. அதனைமுன்னிட்டு
நன்னீர் ஏரிகளும் நதி இக்கட்டுரை பிரசுரமாகிறது.
தரைப் பிரதேசங்களு நீர் உயிரினங்களிதும் வாழ்க் -
நீரை அதிகமாகப் ப கைக்கு அத்தியவசியமானது.
யமாகும். 85 சதவீத நீரின் தேவை அதிகரித்திருப்பத
சதவீத நீர்கைத்தொழி னால் இன்று நீர் போட்டிப் பொரு
வீட்டுப் பாவனைக்கா ளாகவும் வரையறுக்கப்பட்ட -
புள்ளிவிபரங்கள் தெ சந்தைப் பொருளாகவும் மாறி
உலகில் வருடாந்த விட்டது. மட்டுமன்றி நீர் ஓர்
60 வீதம் அதாவது 6 ஆயுதமாகவும் பயன்படுத்தப்
சேர்கின்றது. எஞ்சிய படுகிறது. புகழ்பெற்ற உலக நாக
இலட்சம் கன மீற்றர் ரிகங்கள் எல்லாம் நீர் நிலைகளை
படுத்தக்கூடிய நீராக அடிப்படையாகக் கொண்டே தோன்றியுள்ளன. நைல் நதி, சிந்து
இன்று குடிசனப் நதி, யூப்பிரடிஸ், தைகிறீஸ் போன்
கம் முதலியவற்றின் . றன உலக நாகரிகங்களின் பிறப்பி
ஐ.நா. வின் அண் டங்கள் எனப்படுகின்றன. எனவே,
மக்கள் சுத்தமான நீல் இத்தகைய நாகரிக எழுச்சியின்
70 சதவீதத்தினர் ஆசி மூலம் நீர் என்பது குறிப்பிடத்தக்
வோர் ஆண்டும் நீர் ப கது. நீரின்றி உலகமே இல்லை.
வன்முறைகளால் இ எல்லா வளங்களுக்கும் மூலவளம்
குறிப்பிடப்படுகின்ற நீரே.
தொழிற்சாலைகள் பூகோளத்தில் நான்கில் மூன்று
இரசாயன மாற்றமே பங்கு நீரால் நிரம்பி இருக்கிறது.
பாட்டுக்கு உகந்த நி 70 சதவீத உலக நீரப்பரப்பில் 97.5 சதவீதம்உவர்நீராகவும், 2.5 சதவீதம்
- வருடாந்தம் 6-8 நன்னீராகவும் உள்ளது. நன்னீர்ப்
நோய்களால் மரணிக்
பரப்பிலும் 67 சதவீதம் பனிக்கட்
வசதிகள் இல்லை என டியால் மூடப்பட்ட பிரதேசமாகும்
விவசாயத்தைப் 4 30 சதவீதம் நிலக்கீழ் நீர். 3 சதவீதம்
50 வீதமான தண்ணீ
-அல்ஹஸனாத் மார்ச்: 2

சிறப்புக் கட்டுரை 17
மாற் போல்
இத் த
ஸித் அஸீஸ் -
---சாதி
களும் எஞ்சிய பகுதி ஈரழிப்பு மாகும். உலகளாவிய ரீதியில் பயன்படுத்தும் துறை விவசா நீர் விவசாயத்துக்காகவும் 10 ல்த்துறைக்காகவும் 5 சதவீதம் கவும் பயன்படுத்தப்படுவதாக கரிவிக்கின்றன.
மெலபார்
தம் 108 ஆயிரம் கன கிலோ மீற்றர் மழை பெய்கிறது. இதில் 1 ஆயிரம் கன மீற்றர் ஆவியாகி மீளவும் நீர்மட்டத்துடன் 47 ஆயிரம் கன மீற்றர் நீர் கடலை அடைகிறது. சுமார் ஓர் நீர் மட்டும் ஆறுகள், ஏரிகள் போன்றவற்றின் மூலம் பயன் உள்ளது. பெருக்கம், கைத்தொழில் அபிவிருத்தி, விவசாய விரிவாக் யளர்ச்சி வேகம் நீரின் தேவையை அதிகரிக்கச் செய்துள்ளது. மைய புள்ளிவிபரங்களின்படி உலகளவில் 783 மில்லியன் ரை அனுபவிக்க முடியாத நிலையிலுள்ளனர். அவர்களில் பிய நாடுகளிலேயே உள்ளனர் எனத் தெரிய வருகிறது. ஒவ் மாசடைதலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை போர் மற்றும் றந்தோரின் எண்ணிக்கையை விட அதிகமாகும் என்று து. ள் தமது கழிவுகளை ஆறுகள், குளங்களில் கொட்டுவதால் ற்பட்டு நீரின் தன்மை மாற்றமடைகிறது. இதனால் பயன் லையை நீர் இழக்கின்றது. மில்லியன் மக்கள் அனர்த்தம் மற்றும் நீர் தொடர்பான க்கின்றனர். 2.5 பில்லியன் மக்களுக்கு போதுமான சுகாதார
எ ஐ.நா.வின் அறிக்கை குறிப்பிடுகின்றது. பொறுத்தவரையில் பாரம்பரிய நீர்ப்பாசன முறைகள் மூலம் ர் வீணாகுவதாக விவசாயத் துறை வல்லுனர்கள் குறிப்பிடு
DI
D14 ஜூ. அல்ஊலா: 1435

Page 20
18 சிறப்புக் கட்டுரை
கின்றனர்.
மறுபக்கம் வகை தொகையில்லாமல் நிலத்தடி நீர்வளம் சுரண்டப்படுவதால், சுற்றுச் சுழலில் சேதங்கள் விளை கின்றன என்கிறார் சீன நிலவியம் ஆய்வு நிறுவனத்தின் நீர்நிலவியல் மற்றும் சுற்றுச் சூழல் நிலவியல் துறையின் இயக்குனர் யின் யுபிங்க்.
30-40 வீதமான நீர் குழாய்களில் உள்ள துவாரம், விரி சல் மற்றும் கால்வாய்களில் ஏற்படும் விரிசல், சட்டவி ரோதமாக நீரை எடுத்தல் முதலியவற்றால் வீணடிக்கப்ப டுவதாக ஐ.நா.வின் ஒரு தகவல் குறிப்பிடுகிறது.
1950ஆம் ஆண்டில் 5694 கன மீற்றராக இருந்த தனிந பர் தண்ணீர் இருப்பு 2010ஆம் ஆண்டில் 1074 கன மீற் றராக குறைவடைந்துள்ளது.
குடிநீருக்காக உலக மக்களில் ஒரு பிரிவினர் குடிநீ ரைப் பெற தினமும் அல்லலுறும் நிலையில் மற்றொரு பிரிவினர் வீணடிப்பதையும் அசுத்தப்படுத்துவதையும் நடைமுறையில் காணலாம். நீர் ஓர் ஆயுதம்
உலக வரலாற்றில் தண்ணீர் ஓர் ஆயுதமாக பயன்ப டுத்தப்பட்டிருக்கின்றது. பயங்கரவாதிகளையும் கண்ணி வெடிகளையும் விட நீர் நிலையங்களில் நீர் குறைந்து போவது சர்வதேச பாதுகாப்புக்கு ஓர் அச்சுறுத்தலாக அமையலாம் என அறிஞர்கள் எச்சரிக்கின்றனர். உலகத் தில் நீருக்காக வெடித்த போராட்டங்கள் பல. அவற்றுள் இந்தியா- பாகிஸ்தான் இந்து நதி விவகாரம், இந்தியாபாங்களாதேஷ் கங்கை நீர் விநியோக விவகாரம், ஜோர் தான் ஆற்று நீருக்கான இஸ்ரவேல் - ஜோர்தான் போ ராட்டம், நைல் நதி நீருக்கானஎகிப்து-சூடான்போர், இந்திய மத்திய அரசு தமிழ் நாடு மாநில அரசுக்கிடையேயான காவேரி ஆற்று நீரப் பிரச்சினை என்பன குறிப்பிடத்தக் கவை.
அதனால்தான் சுற்றுச் சூழல் வல்லுனர்கள் மூன்றாம் உலகப் போர் ஒன்று நடந்தால் அது நீருக்கான ஒரு போ ராகவே இருக்குமே அன்றி வேறு எதற்காகவும் அல்ல என எச்சரித்து வருகின்றனர். இலங்கையின் நீர்வளம்
இலங்கை நீர் வளம் நிறைந்த ஒரு விவசாய நாடு. நீர் வீழ்ச்சிகள், ஆறுகள் என நீர்நிலைகள் அதிகம் காணப்படு கின்றன. 103 நதிகளும் ஆயிரக்கணக்கான சிறு குளங்களும் காணப்படுகின்றன. இலங்கைக்கு ஒரு வருடத்திற்கு சராசரியாக 2000 மில்லி மீற்றர் மழை கிடைக்கிறது. 2010 ஆம் ஆண்டு சனத்தொகைப்படி இலங்கையில் ஒரு நபருக்கு ஒரு வருடத்துக்கு கிடைக்கப்பெறும் நீரின் அளவு 2215 கியுபிக் மீற்றராகும். இது 1700 கியுபிக் மீற்றராக குறைவடையும்போதே இலங்கை ஒரு நீர்ப் பற்றாக்குறை
-அல்ஹஸனாத் மார்ச்: 20

நாடாக கருதப்படும். வேறு நாடுகளுடன் ஒப்பிடுகின்ற போது இலங்கையின் நீர்வளம் சிறப்பான நிலையில் உள்ளது.
இருந்த போதிலும் நாட் டின் வடக்கு, கிழக்கு, மலை யகப் பிரதேசங்கள், அம்பாந் தோட்டைமுதலான மற்றும் பல பிரதேசங்களில் குடிநீரைப் பெறுவதில் மக்கள் சிரமங் களை எதிர்கொள்கின்றனர் என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்
எமது நாட்டில் விவசா யம், மின் உற்பத்தி, வீட்டுப்
அதனால்தான் பாவனை, மனிதத் தேவைகள்,
சுற்றுச் சூழல் கைத்தொழில் முயற்சிகள் போன்ற இன்னோரன்ன
வல்லுனர்கள் தேவைகளுக்காக நீர்பரவலாக
மூன்றாம் உலகப் உபயோகிக்கப்படுகிறது. தற்
போர் ஒன்று போது நீரைப் பயன்படுத்து
நடந்தால் அது வதில் இவற்றுக்கு மத்தியில் போட்டி நிலவி வருகிறது.
நீருக்கான ஒரு
போராகவே விவசாயத் துறையினர் நாட்டின் விவசாயம் செழித்
இருக்குமே அன்றி தோங்க வேண்டுமெனில்
வேறு தமக்கே அதிகளவான நீர்
எதற்காகவும் வழங்கப்பட வேண்டும் எனக்
அல்ல என கோரிக்கை விடுக்கின்றனர்.
எச்சரித்து மக்களுக்குசுத்தமான குடிநீரை வழங்குவதற்கு அதிகளவான
வருகின்றனர். நீர் தேவை என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை சொல் கிறது. இல்லை நாட்டின் மின் உற்பத்திக்கு நீர் அவசியம். மின் உற்பத்தியினால் நாட்டுக்கு கணிசமானளவு வருமானம் கிடைக்கிறது. எனவே, நீர் மின் உற்பத்திக்கு அதிகளவான நீர் தேவை என மின்சார உற்பத்தி சபை வேண்டுகிறது.
இவ்வாறு நாட்டில் நீருக்கு போட்டித்தன்மை ஏற் பட்டிருக்கும் நிலையில் நீர் சரியாக முகாமை செய்யப் பட வேண்டும்; சேமிக்கப்பட வேண்டும்; பாதுகாக்கப்பட வேண்டுமல்லவா?
இலங்கையின் மன்னர்களான பராக்கிரமபாகு, தாது சேனன், போன்றோர் உட்பட பலர் தேச மக்களின் நலன் கருதி நீரைச் சேமித்து வைப்பதில் ஆர்வம் காட்டினர். நீரோட்டங்களைத் திசைதிருப்பி தேவையான இடங்களுக்கு நீரைக் கொண்டு செல்வதில் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு வரலாற்றில் தனியிடமுண்டு.
மன்னன் பராக்கிரமபாகு "வானில் இருந்து விழும் ஒரு துளி நீர் தானும் மக்களுக்குப் பயன்படாது வீணே கடலில் சென்று கலக்க விட மாட்டேன்” என்று மொழிந்
=14 ஜூ. அல்ஊலா: 1435.

Page 21
பொன் !
- டாட் 1 %ன
“இந்த நாடு நமக்காக அர்ப்பணிக் ஆறுகளிலும் ஓடும் ஒளிர்விடும் நீர் வெ ரின் இரத்தம். அவை புனிதமானது எ
ததை நினைவுகூரத்தக்கது. சேப்
மற்றும் இலங்கையின் நீர்வள முகாமைத்துவம் உல கில் பிரசித்தி பெற்ற முறையாகவும் பழமைவாய்ந்த ஒரு துறையாகவும் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மறுபக்கம் தண்ணீரின் தரம் பாதுகாக்கப்பட வேண் டும். அது குறித்து நாம் கூடிய கவனம் செலுத்த வேண்டும். முன்னொரு காலத்தில் ஆற்று நீர், குளத்து நீர், வயல் நீர் என்பன குடிநீருக்காக பயன்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது அதனை குடிப்பதற்காக பயன்படுத்த முடியாத நிலை. நீர் மாசடைந்துள்ளமையே அதற்கான காரணம்.
அதிகரித்த விவசாய உரப் பாவனை, அதிகரித்த இர சாயன களை நாசினிகள், பீடை நாசினிகளின் பாவனை, தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் வீட்டுக் கழிவு நீரை ஆறு, குளங்கள், நீரோடைகளுக்கு அனுப்புதல் போன்ற மனித நடவடிக்கைகளால் நீர் மாசடைந்துள்ளது. இதனால் குடிநீர்ப் பிரச்சினை ஏற்படுகிறது.
சமகாலத்தில் சிறுநீர்க நோய் (CDK) ஹெபடைடிஸ், கென்ஸர் முதலான நோய்கள் ஏற்படுவதற்கு தண்ணீரும் ஒரு காரணமாக விளங்குகிறது என துறைசார்ந்த பல தரப்பினரும் குறிப்பிடுகின்றனர்.
"நீர்ப்பாவனை குறித்து இலங்கையர் மிக எச்சரிக்கை யாக இருக்க வேண்டும். நீர்ப்பாவனை பற்றி எம் நாட்ட வரின் பழக்கவழக்கங்களும் பண்பாடுகளும் மாற வேண்டும். அன்றேல் எதிர்காலத்தில் பாரதூரமான விளைவுகளுக் கும் சவால்களுக்கும் முகங்கொடுக்க வேண்டும்” என இலங்கையின் நீர்வளம் பற்றி கலாநிதி சி. ஆர். பான பொக்கை கூறிய கருத்தை நாம் அனைவரும் சிந்தையில் கொள்ள வேண்டும்.
தண்ணீரின் அருமை பற்றி செவ்விந்தியத் தலைவர் சியாட்டல் சொன்ன வார்த்தை வரலாற்றுச்சிறப்புமிக்கது.
"இந்த நாடு நமக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு அருவிகளிலும் ஆறுகளிலும் ஓடும் ஒளிர்விடும் நீர் வெறுமனே நீர் அன்று. இது எமது முன்னோரின் இரத்தம். அவை புனிதமானது என்பதை நாம் நினைவுகூரவேண்டும்”
நீர்ச் சிக்கனம், நீர்த் தூய்மை, நீர்ச் சேமிப்பு குறித்த விழிப்புணர்வும் அக்கறையும் எம்மத்தியில் எந்தளவுக்கு இருக்கிறது என்பதை ஒவ்வொரும் மனச்சாட்சியைத் தொட்டுக் கேட்க வேண்டும்.
- அல்ஹஸனாத் மார்ச்: 20

ஓகள்
சிறப்புக் கட்டுரை 19
கப்பட்டுள்ளது. இங்கு அருவிகளிலும் பறுமனேநீர்அன்று. இதுஎமது முன்னோ என்பதை நாம் நினைவுகூர வேண்டும்”.
இஸ்லாத்தின் பார்வையில்
தண்ணீர் இயற்கையின் அரிய பொக்கிஷம். பூமிக்கு இறைவனால் மட்டுமே வழங்க முடிகின்ற ஓர் உன்னத - அருள். தண்ணீர் நமக்கு எப்படி கிடைக்கிறது என
என்றாவது நாம் சிந்தித்துப் பார்த்திருக்கின்றோமா?
''நீர் எங்கிருந்து கிடைக்கிறது என்பதை மனிதர்கள் சிந்தித்துப் பார்க்க மாட்டார்களா?” என அல்லாஹ் எம்மைப் பார்த்துக் கேட்கிறான்.
அல்லாஹ்வைத் தவிர வேறு யாராலும் நீரின் ஒரு துளியைக் கூடத் தரவோ, உற்பத்தி செய்யவோமுடியாது. நீரின் வளமும் அதன் ஆதாரமும் முழுக்க முழுக்க சர்வ வல்லமை கொண்ட இறைவனின் கட்டுப்பாட்டின் பேரி லேயே இயங்குகிறது. இன்றைய அறிவியலால், தொழி நுட்ப யுகத்தினால் ஒரு சொட்டுத் தண்ணீரையும் உற்பத்தி செய்துவிட முடியாது.
"வரண்ட பூமியின் பக்கம் நிச்சயமாக நாம் தண்ணீரை இழுத்து வந்து, பிறகு அதனைக் கொண்டு (விவசாயப்)பயி ரைநாம் வெளியாக்குகிறோம். அதிலிருந்து அவர்களுடைய கால்நடைகளும் அவர்களும் உண்ணுகின்றனர் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? எனவே அவர்கள் (இதனை மனிதர்கள் சிந்தித்து) பார்க்க மாட்டார்களா?'' (32: 27) என்று கேள்வி எழுப்புகின்றது அல்குர்ஆன்.
மழை தருகின்ற மேகங்களை இறைவனே இழுத்து வந்து, தான் நாடிய இடங்களுக்கு அருளாக மழை பொழியச் செய்கிறான் என்பதே அல்குர்ஆனின் செய்தியாகும்.
''உங்களுடைய தண்ணீர் பூமியில் உறிஞ்சப்பட்டு விட்டால், பிறகு பொங்கும் நீரூற்றை உங்களுக்கு கொண்டு வருபவன் யார்?'' (67: 30) என்பதாக இறைவன் சவால் விட்டுச் சொல்கிறான்.
"உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் நாம் தண்ணீரிலி ருந்து ஆக்கினோம்”
(21: 30)
இதன் மூலம் அல்லாஹ் நீரின்றி அமையாது உலகு என்பதைப் பறைசாற்றுகின்றான்.
ஒரு மனிதர் பாதையில் நடந்து சென்று கொண்டி ருந்தபோது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு கிணற்றிலிருந்து அவர் வெளியே வந்தபோது நாய் ஒன்று
314 ஜூ. அல்ஊலா: 1435

Page 22
2n சிறப்புக் கட்டுரை
தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்க விட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனதிற்குள்) எனக்கு ஏற்பட்டதைப் போன்றே இந்த நாய்க்கும் (கடுமையான தாகம்) ஏற்பட்டிருக்கின்றது போலும் என்று எண்ணிக் கொண்டார். உடனே, (மீண்டும் கிணற்றில் இறங்கி, தண்ணீரைத்) தனது காலுறையில் நிரப்பிக் கொண்டு, அதை வாயால் கவ்விக் கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்கும் புகட்டினார். அல்லாஹ் அவருடைய இந்த நற்செயலை ஏற்று அவரை (அவரது பாவங்களை) மன்னித்தான் என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
இதைச் செவியுற்ற நபித் தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! கால்நடைகளுக்கு உதவும் விஷயத்திலும் எங்க ளுக்குப் பலன் கிடைக்குமா?” என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் "ஆம்! உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும் பட்சத்தில் மறு மையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்" என்று பதிலளித்தார்கள்.
(ஸஹீஹுல் புகாரி) மற்றுமோர் அறிவிப்பில், பாவம் புரியும் பெண்தாகித்த நாய்க்கு நீர் புகட்டிய காரணத்திற்காக சுவனம் சென்றதாக
1 "ஓர் உம்ரா மறு உற்ரா வரையிலுள்ள 1 நபி வழியில் உம்ரா செய்து இபா
* கொழும்பு - ஜித்தா நேரடி விமான (! * இரு ஹரம்களுக்கு அருகாமையில் தங்கு 8 இஸ்லாமியப் புனிதத் தலங்களைத் தரிசிக்
உங்கள் அமல்களை உரிய முறையில்
தகைமை மற்றும் அனுபவமிக்க உலமா இன்ஷா அல்லாஹ் மார்ச் 20ம் திகதி)
| ஏப்ர " எமது குழு பயணமாகும்
இறுதி நேர சிரமங்களிலிருந்து விடுபட 8 தொடர்புகளுக்கு Ash. Sheikh Arshad 07776302
(0LTRIVELS 4 Airline Ticketing Agent E 90, Chatham Street, Colombo 01.
www.tglhajumrah.com
Since 1990
-அல்ஹஸனாத்!மார்ச்: 20

நபியவர்கள் சொன்னார்கள்.
மிருகங்களுக்கு, கால்நலைடகளுக்கு நீர் புகட்டுவதற்கே நன்மைகள் கிடைக்குமென்றிருந்தால் தாகித்த மனிதர் களுக்கு நீர் புகட்டினால் எத்தகைய நன்மை கிடைக்கும்... எதிர்கால சந்ததியினர் நீர் வளத்தை நிறைவாகப் பெற்று வாழ வேண்டும் எனும் உயர் நோக்கத்திற்காக நீரை வீண் விரயம் செய்யாமல் அதனை சிக்கனமாகப் பயன்படுத்தி னால் எத்தகைய கூலி கிடைக்கும் என்று ஒரு கணம் சிந் திப்போமாக!
நீர்வளம் நிறைந்த நாட்டில் வாழ்ந்து வரும் நாம் தண் ணீரைப் பாதுகாப்போம். நீரைப் பாதுகாப்பதன் அவ சியத்தை வலியுறுத்துவோம்.
வீண்விரயம் செய்யப்படும் ஒரு சொட்டுத் தண்ணீர் பற்றியும் நாளை மறுமையில் விசாரிக்கப்படுவோம் என்பதை நம்பியிருக்கும் நாம், மஹ்ஷர் வெளியில் ஹவ் ழுல் கவ்ஸர் எனும் நீர்த்தடாகத் தில் நபியவர்களின் கரங்க ளால் நீரருந்தும் பாக்கியத்தை வேண்டிப் பிரார்த்திக்கும் நாம் பூலோகத்தில் தண்ணீருக்காக போர் நடத்தும் சமூகம் ஒன்று உருவாக காரணமாய் அமையலாமா?
சாவங்களுக்குப் பரிகாரமாகும்” (புகாரி:1773) தத்களை திருப்தியுடன் நிறைவேற்ற
TGL TRAVELS சேவை (சவூதி எயர்லைன் . SV 781, 11.45 A.M) மிடம் 7 இலங்கை முறைப்படி மூன்று வேளை உணவு
கும் வாய்ப்பு செய்யவும் வழிகாட்டவும் உங்களுடன் இணைகின்ற
-ல் மாதம் புறப்படும் திகதி
'_குழந்தைகள், 10" April
சிறுவர்களுக்கு 17" April
விஷேட கட்டணம்... இப்போதே பதிவுகளுக்கு முந்துங்கள்... ..I Al Haj Rizmy 0777801262 DI Hijaz Sanoos 0777800388
TOURS (PVT) LTD. & Hajj - Umrah Operators
Tel: 0115341134 Fax: 0115371410 IATA
E-mail: umrah-ha@tgl.lk
Accredited Agent
0147. அல்ஊலா: 1435.

Page 23
அஷ்ஷெய்க் அப்துல் ஹலீம் (நளீமி) B.A நிறுவனர், குடும்ப வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கான மத்த cfcglanka@gmail.com -
பயங்கரவாதம், பொருளாதார நெருக்கடி, அரசியல் ஸ்திரத்தன்மை யின்மை, பாதையோர சந்தடிகள், ஒலி பெருக்கிகளின் அலறல்... என்ன : ஒரு மாதிரியாகப் பார்க்கின்றீர்கள்?!
இவையும் இதுபோன்று இன்னும் நீண்டு செல்லும் பட்டியலும் நானும் நீங்களும் தினம் தினம் அனுபவிக்கும் அமைதியின்மைகள்தாம். ஒவ்வொரு மனிதனும் தனக்கென்று ஒரு வீடு கட்டிக்கொள்ள யோசிப்பது இந்த ஆரவாரங்களிலிருந்தும் சந்தடிகளிலி ருந்தும் உலகத்தின் இடைவிடாத ஓட்டத்திலிருந்தும் தன்னை விடுவித் துக் கொண்டு அமைதியடைவதற்கா
வாழ்க்கையின் 6 பள்ளங்கள், அன் ஒருவருக்கொரும் ஒத்தாசையாக ! தனது தேவைக அடுத்தவரது 6 பரிதாகக் கட் விட்டுக்கொடு செலவழித்து
கவே. - - - - - -
போன்ற ஆ
விடயங்கன் கற்றுக் கெ பல்கலைச் அவனது
சூழல் தி
1 நிச்சயம் நாங்கள் வீடு கட்டுவதற் குப் பின்னால் எத்தனை ஆயிரம் கார
ணங்கள், நோக்கங்கள் இருந்தாலும் | இந்த நோக்கம் இல்லாத ஒருவர்கூட இருக்க மாட்டார்கள் என்பதை நிச்ச யமாகக் கூற முடியும். .
ஆனால், எங்களது வீடுகள் அமை தியைத் தருகின்ற பூஞ்சோலைகளாக
நடவடிக்
டைகின்
சந்தே
- படம்
பயன்படும்!
அமைதியா அத்திவார
சுவர்
இ உ ன்னலை 2
தி
அமைந்திருக்கின்றனவா? அல்லது ளப்பட வேண்டும் பத்தோடு பதினொன்றாக எமது கின்றேன். - - - அமைதியைக் கெடுக்கின்ற ஓரிடமாக
பல வீடுகளில் இருக்கின்றதா? என்ற கேள்வியை
காரணங்களைக் 4 உங்களுக்கு முன்னால் வைக்கின்றேன்.
கொள்வதன் மூல நிச்சயமாக பல வீடுகளில் அமைதி
எண்ணத்தில்தான் நிலவுகின்றது என்பதில் சந்தேகமில்
FI அமைதியின் லை. ஆனால், அதனை விட அதிக மான வீடுகளில் அமைதிக்குப் பதில்
Tஎன்ன ஆச்சரி வேறு பல விடயங்கள் காணப்படுகின் விடயம் அமைதி றன. இங்கு அமைதி என்பது அதன் வரும் அடுத்தவர்! சகல அர்த்தங்களிலும் புரிந்து கொள் 8 துப் பேசப் பழகி6
-அல்ஹஸனாத் மார்ச்: 20

குடும்பவியல் 21
நிய நிலையம் முன் தலைமாட உக்
-- என்றும் போல்
nடும் -
பு, பாசம்,
வர்
t: 3113:11
இருத்தல், யை விட்" குவையை இதுதல்,
ப
த்தல்,
0 என்பன யிரக்கணக்கான
|ள ஒரு மனிதன்
Sாள்ளும்
கேழகம்தான்
வீடு. அந்த வீட்டுச்
இத்தகைய
தைகளால் அமைதிய றது என்பதில் எவ்வித கமுமில்லை.
115 இ .
|
-எவீட்டின் மும்ஐந்து கம்
அதன்
- குட்காவாப் ம் |ட (ட்டு) இல்  ெவா -
ம் என்பதை ஒரு முறை நினைவுபடுத்திக் கொள்ள விரும்பு
அமைதி நிலவுவது ஏன் என்று தேடிப் பார்த்ததில் சில கண்டுபிடிக்க முடிந்தது. அவற்றை உங்களோடு பகிர்ந்து மம் நீங்களும் அவற்றை முயற்சித்துப் பார்க்கலாமென்ற
இந்தக் கட்டுரை எழுதப்படுகின்றது... முதல் இரகசியம்: மென்மையான குரல் பமாக இருக்கின்றதா?! அமைதியான வீட்டுக்கான முதல் பான வார்த்தைகள்தான். குடும்ப அங்கத்தவர்கள் அனை களுடன் பேசும்போது வார்த்தைகளின் சப்தத்தைக் குறைத் வால் வீட்டின் சந்தடியில் அரைவாசி குறைந்து விடும்.
14/ஐ. அல்ஊலா: 1435

Page 24
90 குடும்பவியல்
நிச்சயமாக உங்களது வீடு பெரிய கோட்டையாக இருக்கப் போவதில்லை. முன் முற்றத்தில் நின்று கொண்டு கொல்லைப் புறத்தில் இருக்கின்ற மனைவியை அல்லது சமையலறையில் இருந்து கொண்டு குளியலறையில் இருக்கின்ற கணவனை வாய்கிழியக் கத்திக் கூப்பிட வேண்டிய அவசியமில்லை. அதிகபட்சமாக ஒரு நிமிட நடைகூட இருக்காது. அருகே போய் அமைதியாக அழைக்கலாமல்லவா?!
குழந்தைகள்கூட சப்தத்தைப் பெரியவர்களிடமிருந் துதான் கற்றுக்கொள்கின்றன. அவர்களுடன் பேசும்போதும் அமைதியான, மென்மையாக வார்த்தைகளை உபயோ கித்தோமென்றால் அவர்களும் நிச்சயம் அதனையே கற்றுக் கொள்வார்கள்.
குழந்தைகளைக் கண்டிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டாலும் முகத்தில் பாயாமல், குரலை உயர்த்தாமல் அமைதியாக அணுகினால் ஒரு தவறை இன்னொரு தவ றால் திருத்த முயற்சிக்கும் தவறு இடம்பெற மாட்டாது.
மனிதர்களின் சப்தமே மிகவும் குறைவாக இருக்கின்ற வீட்டில் வானொலி, தொலைக்காட்சிகளின் சப்தங்களும் மிகவும் குறைவாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேக மேயில்லை.
சாப்
குரலை உயர்த்துவது நாகரிகமடைந்த மனிதர்களின் பண்பல்ல என்பதை அல்குர்ஆன் சூசகமாக இவ்வாறு
சொல்கின்றது: "சப்தங்களில் மிக மோசமானது கழுதை யின் சப்தமாகும்.”
அமைதியின் இரண்டாவது இரகசியம்: கற்றல், கற்பித்தல்
கற்கும் இடத்தில் அமைதி இருக்காது என்பது நாங்கள் விளங்கி வைத்திருக்கின்ற நடைமுறை விளக்கம். பாதை யில் பயணிக்கும்போதே ஓர் ஐநூறு மீற்றருக்கப்பால் ஒரு (முஸ்லிம்) பாடசாலை இருக்கின்றதென்பதை சரியாகச் சொல்லி விட முடியும் என்பதுதான் எமது அனுபவம். ஆனால், கற்றல் நடைபெறும் இடத்தில் அமைதி இருக்கும் என்பதுதான் அடிப்படையாகும். அது தெரியாதவற்றைத் தெரிந்து கொள்கின்றபோது ஏற்ப டும் மன அமைதியாகும்.
இங்கு கற்றல் என்பது புத்தகங்களோடும் எழுதுகோல் களோடும் சம்பந்தப்பட்ட கற்றல் மட்டுமல்ல, அதனை யும் தாண்டி பரந்து விரிந்த அர்த்தங்களைக் கொண்டது. எத்தனை எத்தனை விடயங்களை வீட்டில் கற்பிக்கவும் கற்றுக் கொள்ளவும் முடியும்?!
வாழ்க்கையின் மேடு பள்ளங்கள், அன்பு, பாசம், ஒரு வருக்கொருவர் ஒத்தாசையாக இருத்தல், தனது தேவையை விட அடுத்தவரது தேவையை பெரிதாகக் கருதுதல், விட்டுக்கொடுத்தல், செலவழித்தல் என்பன போன்ற
-அல்ஹஸனாத் மார்ச்: 20

ஆயிரக்கணக்கான விடயங்களை ஒரு மனிதன் கற்றுக் கொள்ளும் பல்கலைக்கழகம்தான் அவனது வீடு. அந்த வீட்டுச் சூழல் இத்தகைய நடவடிக்கைகளால் அமைதிய டைகின்றது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
நீங்கள் உங்களது குழந்தைகளுக்கு கற்பிப்பதாக இருந்தாலும்கூட, ஏதாவது ஒன்றைச் சொல்லிக் கொடுப் பதாக இருந்தாலும்கூட முதலில் அதனை எப்படிச் செய்ய வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுங்கள். அதன் மூலம் என்ன எதிர்பார்க்கின்றீர்கள் என்பதை அவர்களுக் குப் புரிய வையுங்கள். அவர்களுடனே இருந்து அவர்களது வேலையைக் கவனியுங்கள். அவர்கள் தவறு விடுகின்ற போது நேர்பாடாகவே (Positive) அதனைத் திருத்துங்கள். அப்போது கற்றல், கற்பித்தல் நடவடிக்கை வீட்டின் அமைதியைக் குலைக்காது.
அமைதியின்மூன்றாவதுஇரகசியம்: அன்பும் உதவியும்
வீடுகள் அமைதியடைவதற்கான இன்னுமொரு முக்கியமான விடயம்தான் பரஸ்பரம் அன்பு செலுத்து வதும் ஒருவருக்கொருவர் உதவி செய்வதுமாகும். அவர் வர் அவரவரது பாட்டில் இருக்கின்ற வீட்டில் சிலபோது சப்தம் குறைவாக இருக்கலாம். ஆனால், அமைதியின் அடுத்த பகுதிகள் இருக்க மாட்டாது என்பது நிச்சயம்.
அடுத்தவர்களுக்கு உதவுவதால் நாம் அவர்கள் மீதிருக்கின்ற அன்பை வெளிப்படுத்துவது மாத்திரமல்ல, மிகப் பெரும் மன அமைதி கிடைக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். வழமையாகவே வீட்டில் மனைவி செய்கின்ற ஒரு வேலையை ஒரு நாளைக்கு மனைவி செய்ய முன்னரே கணவன் செய்து விட்டால் அல்லது கணவனின் வேலையை மனைவி செய்து விட்டால் அல்லது பெற்றோர் வழமையாக செய்கின்ற வேலையை பிள்ளைகள் செய்து விட்டால் செய்தவருடைய உள்ளத்தில் மகிழ்ச்சி பிரவாகமெடுக்கின்ற அதேவேளை, அடுத்தவருடைய உள்ளத்தில் அன்பு பிரவாகமெடுக்கும். அன்பும் மகிழ்ச்சியும் உள்ளங்களில் கரைபுரண்டோடு கின்ற போது அந்த வீட்டில் அமைதிக்கென்ன குறைச்சல்?!
உதவி கேட்கப்படும்போதும் செய்யலாம்; கேட்கப்ப டாமலும் செய்யலாம். இந்த இரண்டுக்கும் வித்தியாசமிருக் கின்றது. பொதுவாக கேட்கப்படாமலேயே செய்யப்படும் உதவிதான் சிறந்தது என்று சொல்வார்கள். ஆனால், கேட்கப்பட்டால் அவர் உண்மையிலேயே தேவையில் இருக்கின்றார் என்பதே பொருள். எனவே, அத்தகைய உதவிகள் நிச்சயம் இல்லங்களை அமைதிமயமாக்கக் கூடிய சக்தி வாய்ந்தவையாகும்.
உதாரணமாக "எனக்குத் தலைவலியாக இருக்கின்றது. சமையலறையில் பாத்திரங்களைக் கொஞ்சம் கழுவி வைக்க முடியுமா?” என்று மனைவி கணவனிடத்தில் கேட்கிறாள் என்று வைத்துக் கொள்ளுங்கள். மனைவி
114|ஜூ. அல்ஊலா: 1435.

Page 25
தூங்கியெழுந்து பார்க்கும்போது பாத்திரங்கள் மட்டு மல்ல முழு சமையலறையுமே பார்க்கப் பளிச்சென்று இருந்தால் அந்தக் கணவன் அந்த மனைவியின் உள்ளத் தில் எத்தகைய உயரத்துக்கு சென்றுவிடுவான் என்பதை நான் இங்கு சொல்லத் தேவையில்லை. இப்படியான உதவிகள் வீடுகளில் அமைதியைத் தோற்றுவிக்கின்றன.
அமைதியின் நான்காவது இரகசியம்: அந்தந்தப் பொருள் அந்தந்த இடத்தில்
இதன் அர்த்தம் அனைத்தையும் நூலுக்குப் பார்த்துக் கொண்டு அணுவும் பிசகாமல் அடுக்கி வைத்திருப்பதல்ல. மாற்றமாக ஏதாவது தேவைப்படும்போது யாருக்கும் ஏசாமல், பதறாமல், உள்ளுக்குள் பொரிந்து தள்ளாமல் உரிய இடத்திலிருந்து அதனை எடுப்பதற்குரிய நிலையில் வீட்டை ஒழுங்குபடுத்துவதாகும்.
- அணிந்து விட்டு களைகின்ற ஆடைகள், பாடசாலை சென்று வந்து கழற்றும் பாதணிகள் முதல் சமையலறை சாமான்கள் காகிதாதிகள் வரை அனைத்தும் ஓர் ஒழுங்கில் இருந்தால் வீட்டில் அமைதி இருக்கும். ஏனென்றால், பொருட்களுக்காக மனிதர்களைப் பகைத்துக் கொள்ள வேண்டிய நிலை அந்த வீட்டுக்குள் இல்லை. அதனால்
அமைதியான சூழல் அங்கே நிலவும்.---
வீட்டின் ஒவ்வொரு பகுதியை தொடர்ந்தும் அவ்வாறு வைத்திருக்கும் பொறுப்பை ஒவ்வொருவரிடமும் வழங் கலாம். ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி ஒழுங்குபடுத்த லாம். ஒன்றை ஒரு முறை மட்டுமே கையாளுங்கள் என்பதை வீட்டிலுள்ள அனைவருக்கும் பொதுவான ஒரு வாசக மாகப் பயன்படுத்தலாம். அதாவது, எந்தவொன்றையும் இரண்டாவது தடவையாகவும் செய்வதற்கு இடம் வைக்காமல் முதல் முறையிலேயே முழுமையாக முடித்து விடுவதை அது குறிக்கும். ஒரு நேர உணவை ஒரே தட வையில் உண்டு முடிப்பது தொடக்கம் தொடுகின்ற வேலைகளை இரண்டாவது தடவையாகவும் தொடாம் லிருக்கின்ற வகையில் எமது வேலைகளை அமைத்துக் கொள்வது இதற்கு இலகுவாக இருக்கும்.
அமைதியின் ஐந்தாவது இரகசியம்: வருமானத் துக்குள் வாழ்க்கை
இது நிச்சயம் அமைதிக்கான மிக முக்கியமான காரணி என்று நினைக்கின்றேன். எப்போது மனிதன் வருமானம் தாண்டி செலவழிக்க முற்படுகின்றானோ அப்போது
அவன் அதற்கான விலையாகக் கொடுப்பது தனது மன நிம்மதியையும் வீட்டின் மகிழ்ச்சியையும்தான். செலவ ழிப்பதற்கான சமன்பாடு ஆடம்பரத் தேவையுமல்ல, ஆசை யுமல்ல. மாற்றமாக அது அத்தியவசியத் தேவையாகும். எனது வாழ்க்கைச் சக்கரம் எனது சக்திக்குற்பட்ட அள வில்தான் சுழல வேண்டும். பக்கத்து வீட்டு சக்கரம் சுழலும் வேகத்தில் எனது சக்கரம் சுழன்றால் அதோகதிதான்.
அல்ஹஸனாத் மார்ச்: 21

குடும்பவியல்
ஒரு மனிதன் தனது வருமானம் தாண்டி சிந்திக்கத் தொடங்கும்போது கடன் என்ற தொல்லையில் அவன் விழுந்து விடுகின்றான். பலபோது தெரிந்தோ தெரியாம லோ பெண்கள் இதற்குக் காரணமாகி விடுகின்றனர். சகோதரிகளை நீங்கள் பிறந்தவீடுராஜவீடாக இருக்கலாம், ஆனால் நீங்கள் புகுந்த வீட்டின் அமைதி உங்களது கணவனின் வருமானத்துக்குள் உங்களது தேவைகளை மட்டுப்படுத்திக் கொள்வதில்தான் தங்கியிருக்கின்றது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
ரெட் பில் வராத, கடன் தந்தவர்களின் தொலைபேசி அழைப்புக்கள் வராத, வங்கியிலிருந்து கடிதம் வராத வீடு அமைதியானவீடு என்பதில்உங்களுக்கு சந்தேகமிருக்கின்றதா?!
அமைதியின் அத்திவாரம்: மலக்குமார்கள் உங்க ளது வீட்டில் வாழட்டும்
மேலே சொன்ன ஐந்தும் நிலத்தின் மேல் கட்டப்பட வேண்டிய அமைதியான வீட்டின் சுவர்களென்றால், வெளியே இருப்பவர்களது கண்ணுக்குத் தெரியாத அத்திவாரம் ஒன்று இருக்க வேண்டுமல்லவா?! உங்களது வீட்டுக்கு வாரத்தில் ஏழு நாட்களும் 24 மணித்தியாலங் களும் பாதுகாப்பு பலமாக இருக்க வேண்டிய தேவை இருக்கின்றது. அதற்காக நீங்கள் யாரையும் பணம் கொடுத்து நியமிக்க வேண்டாம். இலவசமாகவே அதிஉயர் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் அல்லாஹ்வால் செய்யப் பட்டிருக்கின்றன. ஆனால், அந்தப் பாதுகாப்புக்கு சில வேலைகள் செய்ய வேண்டும். - அல்குர்ஆன், தொழுகை, திக்ர், தஸ்பீஹ், காலை மாலை அவ்றாதுகள், சுத்தம் இவை எப்போதும் மலக்குமார்களை உங்களது வீடு நோக்கி கவர்கின்ற அம்சங்களாகும். எந்த வீட்டால் மலக்குமார்கள் கவரப்படுவார்களோ அங்கிருந்து ஷைத்தானுக்கு விரண்டோடுவதைத் தவிர வேறென்ன வேலை இருக்கின்றது?!
- உள்ளங்களிலும் இல்லங்களிலும் அமைதி நிலவ இவற்றைமுயற்சித்துப்பார்ப்போம், இன்ஷாஅல்லாஹ் எமது வீடுகளிலும் சுவன வாசம் வீசும். |ஒர் அரிய சந்தர்ப்பம்
கண்ணில்வெள்ளை படர்தல் நோய்க்கான
சத்திரசிகிச்சை
ataract Surg கட்டணம்-டிகை ரூபா 9500.00 1 விஷேட வில்லைதேவைப்படின் கட்டணம்---அ ரூபா 15000.00 - குவைத் வைத்தியசாலை புத்தளம்
தொடர்புகளுக்கு: 0322266480, 0777272107. 0718183333 மாதம் இருமுறை கத்னா மார்ச் 16ஆம் திகதிக்கு முன்னர்
செய்யப்படும் 2950.00மட்டுமே
பதிவுகளுக்கு முந்திக்கொள்ளுங்கள்
D14 ஜூ. அல்ஊலா: 1435.

Page 26
24
அந்நிஸா
ஜூவைரிய்யா பின்த் ஹாரித்
| HEஸ் பெப்பர்
நன்பை
அதேநேரம், ஜுவைரிய்யா (ரழியல்லாஹு அன்ஹா)
நபிகளாரை விளித்து முதலாவதாக மொழிந்த க"அல்லாஹ்வுடைய
தூதரே!” என்ற வார்த்தையே அவர்
இஸ்லாத்தின்பால் கவரப்பட்டார் என்பதை
நபிகளாரிடம் எடுத்துக் காட்டுகிறது.
தியாகத் தெரி ஜூவைரிய்யா
போருக்கு வந் (ரழியல்லாஹு அன்ஹா)
பிள்ளைகளை நபிகளாரிடம் ஒரு
னார்கள். நன்மையை நாடியே
இப்னு இ வந்தார். அது தான்
கைதியாகப் பி அவரது விடுதலை!
என்ற பெண்ம
(ஸல்லல்லாஹ ஆனால், அவர்
கைதிகளைப் ப விடுதலையை மட்டும் பெற
இப்னு ஷம்மா வில்லை: முஃமின்களின்
தார். அடிமை தாய் என்ற
கைஸ் (ரழியல் அந்தஸ்தையும் பெற்றார்.
குறிப்பிட்ட 6
ஜூவைரிய்யா > பாத்திமா ஸைனப் பின்த் பவாஸ்
வஸல்லம்) அன ளுக்கும் தனக்கு
கொள்ள உதவி ஹிஜ்ரி 5ஆம் ஆண்டு பனூ முஸ்த
"அல்லாஹ் லக் கோத்திரத்தின் தலைவரான ஹாரித்
ஹாரித் இப்னு இப்னு அபூ திரார் தனது கூட்டத்தினரை யும் மற்றும் பல அரபிகளையும் அழைத்
நிலையில் இரு துக் கொண்டு மதீனாவைத் தாக்க பெரும்
(ரழியல்லாஹ
என்னை அவரி திட்டம் தீட்டுவதாக அவர்களுக்கு செய்தி
எழுதிக் கொள் எட்டியது. இதனை உறுதியாக அறிந்து கொள்ள நபி (ஸல்லல்லாஹு அலைஹி
அட அப்போது வஸல்லம்) புரைதா இப்னு ஹுஸைப்
ஜூவைரியாவி (ரழியல்லாஹு அன்ஹு) என்ற நபித்
என்று கேட்டா தோழரை அனுப்பினார்கள். நபி (ஸல்
ஜூவைரிய்யா. லல்லாஹு அலைஹி வஸல்லம்). அவர்
மைத் திருமண ஹாரித் இப்னு அபூ திராரை வழியில் "ஆம்! நான் அ சந்தித்து விபரமறிந்து திரும்பிவந்து கூறி உடன்பட்
--Aாப் பாடம் எப்படி IT ATEயாக ஈர்பவர்கள் நெடியகம் 11HER மொர ெ MiBinகது ===பி., -=அFiEA MAAS பெங்கர் 19 இட 19HAMம க கா கிராம பாங்-2 Hi Fix4
-அல்ஹஸனாத் மார்ச்: 20

5(ரழியல்லாஹு அன்ஹா)
Dகளின் ஊற்றுக் கண்!
செய்தியைக் கூறினார். செய்தி உண்மைதான் என்பதை உறு ந்து கொண்டதும் நபியவர்கள் தோழர்களுடன் புறப்பட்டு திருந்த பனூ முஸ்தலக் கோத்திரத்தினரின் பெண்களையும் பும் ஆடுகள் மற்றும் ஏனைய கால்நடைகளையும் கைப்பற்றி
ஸ்ஹாக் (ரஹிமஹுல்லாஹ்) குறிப்பிடுகிறார்: “அன்று டிபட்டவர்களில் ஒருவர்தான் ஜுவைரிய்யா பின்த் ஹாரித் அணி.” ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா) கூறுகிறார். நபி
• அலைஹ வஸல்லம்) அவர்கள் பனூ முஸ்தலக் போரின் பகிர்ந்தளித்தபோது ஜுவைரிய்யாவை தாபித் இப்னு கைஸ் எஸ் (ரழியல்லாஹு அன்ஹு) என்ற தோழருக்கு கொடுத் யான ஜுவைரிய்யா தன் எஜமானராகிய தாபித் இப்னு லாஹு அன்ஹு) அவர்களுடன் தன் விடுதலைக்காக ஒரு தாகையைத் தருவதென ஒப்பந்தம் செய்து கொண்டார். (ரழியல்லாஹு அன்ஹா) நபி (ஸல்லல்லாஹு அலைஹி வர்களிடம் வந்து தாபித் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்க நம் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை எழுதிக் 1 கோரினார்.
வின் தூதரே! நான் பனூ முஸ்தலக் கோத்திரத்தின் தலைவர் 1 அபூ திரார் என்பவரின் மகள் ஜுவைரிய்யா. நான் எந்த க்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். தாபித் இப்னு கைஸ் -- அன்ஹு) அவர்களிடம் கைதியாகி உள்ளேன். நான் டம் ஒப்படைக்க ஓர் ஒப்பந்தத்துக்கு வந்துள்ளேன். அதனை Tவதற்கு உங்களிடம் உதவி கோருகிறேன்.”
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் டம் “நீர் அதனை விட சிறந்ததொன்றை விரும்புகிறீரா?” ர்கள். "அது என்ன, அல்லாஹ்வின் தூதரே!” என்று வினவினார் “உமது ஒப்பந்தத்தை நான் பொறுப்பேற்கிறேன். நான் உம் ம் செய்கிறேன்” என்றார் நபிகளார். அதற்கு ஜுவைரிய்யா தை ஏற்றுக் கொள்கிறேன் அல்லாஹ்வின் தூதரே!” என்று -டார். இவ்வாறு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்
114 ஜூ. அல்ஊலா: 1435

Page 27
பொ!
ய!
லம்) ஹாரித் இப்னு அபூ திராரின் மகள் ஜுவைரிய்யா வைத் திருமணம் செய்து கொண்டார் என்ற நற்செய்தி பகிரங்கப்படுத்தப்பட்டதும் “கைதிகள் அனைவரும் நபி யவர்களின் உறவினர்கள்” என்று கூறியவாறு முஸ்லிம்கள் அவர்களை விடுதலை செய்தனர். ஜுவைரிய்யாவுடனான திருமணமானது பனூ முஸ்தலக் கோத்திரத்தின் நூறு கைதிகளுக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுத்தது. ஜூவைரிய்யா தனது மக்களுக்குப் பெற்றுக் கொடுத்த நன்மையைப் போன்று வேறு எந்தப் பெண்ணையும் நான் கண்டதில்லை.” (ஸுரதுந் நபவிய்யா - இப்னு கஸீர்)
ஹிஷாம் இப்னு உர்வா (ரழியல்லாஹு அன்ஹு) தனது தந்தை மூலமாக அறிவிக்கிறார்: ஜுவைரிய்யா (ரழியல்லாஹு அன்ஹா) கூறினார். "நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) வருவதற்கு முன்பு மூன்று இரவுக ளாக சந்திரன் யத்ரிபிலிருந்து நகர்ந்து வந்து எனது மடியில் விழுவதைக் கனவில் கண்டேன். நபியவர்கள் வருவதற்கு முன்பு நான் யாரிடத்திலும் இதுபற்றி கூற விரும்பவில்லை. ஆனால், நாங்கள் கைதிகளாக ஆக்கப்பட்டபோது நான் என் கனவுகளில் நன்மை இருப்பதாகவே உணர்ந்தேன். பின்னர் அல்லாஹ்வின் தூதர் என்னை விடுதலை செய்து மணமுடித்தார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் எனது கோத்திரத்தினருக்காக நபிகளாரிடம் பரிந்து பேசவில்லை. முஸ்லிம்கள்தான் கைதிகளை விடுதலை செய்வதென தங்களுக்குள் பேசிக் கொண்டனர்."
(அல்வாகிதி)
ஜூவைரிய்யா (ரழியல்லாஹு அன்ஹா) தான் கண்ட கனவை தமக்குள் இரகசியமாக வைத்துக் கொண்டதாகக் கூறுகிறார். நல்ல கனவுகளை நாம் நமக்கு மிக நெருக்கத் துக்குரியவர்களிடம் மட்டுமே கூற வேண்டும். அல்குர் ஆன் இதனைத் தெளிவுபடுத்துகிறது. யஃகூப் (அலை ஹிஸ்ஸலாம்) தம் மைந்தர் யூஸுஃப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்குக் கூறினார்.
“என் அருமை மகனே! நீர் கண்டகனவை உம் சகோதரர் களிடம் சொல்லிக்காட்ட வேண்டாம். அவ்வாறு செய்தால் அவர்கள் உமக்கு யாதேனும் தீங்கிழைக்கச் சதி செய்வார் கள். ஏனெனில், நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்கு பகிரங்கமான விரோதியாக இருக்கிறான்.”
(12: 5)
ஹாரித் இப்னு அபூ திரார், தன் மகளை விடுதலை செய்து கொண்டு செல்லும் ஆர்வத்துடன் 100 ஒட்டகங் களுடன் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை சந்திக்க வந்தார். பயணத்தின்போது அவற்றுள் இரண்டு ஒட்டகங்களின்பால் அவரது கவனம் திரும்பியது. அவ்விரு ஒட்டகங்களையும் தனியாக 'அகீக்' எனும் கண வாயில் கட்டி வைத்து விட்டுச் சென்றார். மீதமுள்ள ஒட் டகங்களுடன் அண்ணலாரை அணுகிய ஹாரித், தான் கொண்டுவந்துள்ள ஒட்டகங்களைப் பெற்றுக் கொண்டு புதல்வியை விடுதலை செய்யுமாறு கோரிக்கை
அல்ஹஸனாத் மார்ச்: 2

அந்நிஸா 25
நக 3 4 லகம் 'பட்டானம்.
விடுத்தார். "அகீக் கணவாயில் நீர் கட்டி வைத்துவிட்டு வந்த ஒட்டகங்களின் செய்தி என்ன?'' என்று நபி (ஸல் லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஹாரித்திடம் கேட்டபோது மொழிவதற்கு வார்த்தையின்றி திகைத்து நின்ற ஹாரித், "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் சாட்சி சொல்கிறேன்” என்று கூறி இஸ்லாத்தை ஏற்றார். தன் மக்க ளிடம் திரும்பிச் சென்ற ஹாரித் பனூ முஸ்தலக் கோத்தி ரத்தினர் அனைவரையும் இஸ்லாத்தை ஏற்குமாறு அழைப்பு விடுத்தார்.
(ஸீரத் இப்னு ஹிஷாம்) இமாம் தஹபி (ரஹிமஹுல்லாஹ்) கூறிகிறார்: "நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் திருமணம் செய்தபோது ஜுவைரிய்யாவுக்கு வயது இருபதாகும். அவர் அழகான ஒரு பெண்ணாவார். சிறிது காலத்தின் பின் ஜுவைரிய்யாவின் தந்தையும் கைதிகளாக இருந்து விடுதலை செய்யப்பட்ட அனைவரும் இஸ்லாத்தை ஏற் றனர். இவ்வாறு ஜுவைரிய்யா (ரழியல்லாஹு அன்
ஹா) அந்தஸ்தில் இரு வகையில் உயர்ந்தவர். முதலில், தன் மக்களுக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுக்கிறார். அடுத்து அனைவரையும் இஸ்லாத்தின் வட்டத்துக்குள் கொண்டு வருகிறார்.” - (ஸியர் அஃலாம் அந்நுபலா)
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஜூவைரிய்யாவை திருமணம் புரிந்ததன் தூரநோக்கும் விசாலமான பார்வையும் இப்போது வெளிச்சத்துக் வரு கிறது. இஸ்லாத்தின் எதிரிகள் விமர்சிப்பது போன்று அன்னார் பெண்களின் அழகுக்கு மயங்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் எடுத்து வைத்த ஒவ்வோர் எட்டும் இஸ்லாத்தின் வளர்ச்சிக்காகவும் அதனை மேலோங்கச் செய்யவுமே. ஆகும்.
அதேநேரம், ஜூவைரிய்யா (ரழியல்லாஹு அன்ஹா) நபிகளாரை விளித்து முதலாவதாக மொழிந்த "'அல் லாஹ்வுடைய தூதரே!” என்ற வார்த்தையே அவர் இஸ் லாத்தின்பால் கவரப்பட்டார் என்பதை எடுத்துக் காட்டு கிறது. ஜுவைரிய்யா(ரழியல்லாஹு அன்ஹா) நபிகளா ரிடம் ஒரு நன்மையை நாடியே வந்தார். அது தான் அவரது விடுதலை! ஆனால், அவர் விடுதலையை மட்டும் பெற வில்லை; முஃமின்களின் தாய் என்ற அந்தஸ்தையும் பெற்றார்.
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஜூவைரிய்யாவுக்கு மஹராக 40 பனூ முஸ்தலக் கோத்திரத்தினரை விடுதலை செய்தார்கள்” என்று அல்வாகிதி (ரஹிமஹுல்லாஹ்) குறிப்பிடுகிறார்.
இஸ்லாத்தைக் கற்பதில் பேரார்வத்துடன் இருந்தார் ஜூவைரிய்யா (ரழியல்லாஹு அன்ஹா). அல்லாஹ்வை அஞ்சக்கூடிய, அவனை நேசிக்கக்கூடியவராக இருந்த அவர், இறை வழிபாடுகளில் அதிகமாக ஈடுபட்டார்.
(55ஆம் பக்கம் பார்க்க)
p14/ஐ. அல்ஊலா: 1435,

Page 28
(அத க - -
விளம்பரம்
பலகாரங்கள்
26 தொழில் வழிகாட்ட PLONDON COLL
OF HIGHER STUDIES (PV > சாதாரண தர பரீட்சை ஸழுதிய மாண
குறுகியகால பயிற்சி நெறி > விரைவில் தொழில் வாய்ப்புக்கான ப > சுய தொழில் வாய்ப்புக்கான தகைை
மத்திய கிழக்கு நாடுகளுக்கு கூடிய - தொழில்களை பெற்றுக் கொள்ளும் > Uk, USA, Canada, Australia, Swiss ( - படித்துக்கொண்டே ஹோடல்களில் 6
சர்வதேச தரத்திலான London Hotel School 10 சான்றிதழ்கள் வழங்கப்படும்
- - 5
மேலும் தகைமையைப் பெற்றுக் கொ
- சம்பளம், டிப்ஸ், உணவு 2 -- (0ன் - Ht tet etion, huge 1 - - பங்கா - பர்ம்ப + thish 4 tant
, Writing
ENGLISH & IT Diploma in English Diploma in IT
1கழி
• Speaking
MS Office Reading
* aெphits
• Listening certifiates - aேsit Programming
, Internet & E-mail Diploma in Montessori (AMI)
3 Months Teacher Training Course
- 3. Child Prne Training Method in 3 boாரமலges Excellent Local & Foreign Coreer Prospective
23 Pratial Lt Get self employed with your own Montessori
- 2 Mathoாளி * You can obtain 60 points for your skill Migration Application
Email: info@lchs.edu.Ik Web: www.l!
அல்ஹஸனாத் மார்ச்: 20

ல் பயிற்சி நெறிகள் LEGE 52, Davidson Road,
T) LTD Colombo- 04 பவர்களுக்கான
யிற்சிகள். மகள். சம்பளத்தில் வாய்ப்புகள். போன்ற நாடுககளில்
தாழில் வாய்ப்புக்கு ஏற்ப நடைபெறும்.
071 99 65 000 Kurunegala
071 50 96 000
Hot Line
0711 60 10 40 55*****
நட்சத்திர ஹோட்டல்களில் பயிற்சிகள். ள்வதற்காக 5 நட்சத்திர ஹோட்டல்களில் பயிற்சி, உட்பட சீருடை என்பன வழங்கப்படும்.
eeping - Vegetable & Fruit Cerving Food & Beverage · Pastry & Bakery sokery
சாதாரண தரம் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான
குறுகிய கால பயிற்சி நெறி
வவு !
E ART Internationally Recognised Diploma program - is மகாநாமம் tour ship பாம்-கhoal Teuter nd Pens logy Sensorial Education e Exercises A Language Education y
al Concept a Hand Work
hs.edu.lk
214 |ு. அல் ஊலா: 1435.

Page 29
நீங்களும் ஒரு En
World's top rat
Quantit
City& Civil Eng Guilds · Auto M
Entry requirement: (A/L) two passes in any strean
SIGLOL glaoi 2006...
Insight School of Engineeri
@ Mawanella Campus
Insight Institute of Man
18A, Palmyrah Av For details type "Engineer
Email: insight.
--albamu Gong Lomné: 20

விளம்பரம்
gineer OLDTID...
Trama
ed qualification y Surveying gineering obile Engineering
Chartered Engineer
расте баста
na
aan antara
en part
G.C.E (A/L)
agement and Technology enue, Colombo - 03 ting" & sms to 0773171722 Soe@gmail.com
D14|r. Slib20on: 1435.

Page 30
28 க விதா பவன ம்
கவிதா | கசினோ பணப் பிரியங்களின் பரவசக் கூடம் - அது காமக் கலைஞனின் கருமபீடம் - அது சூது சுள்ளான்களின் சுயம்வரம் - அது பாதாள பரமிகளின் படைத்தளம் - அது
அழிவை அரவணைக்கும் ஆபாச மகுடம் - அது நாட்டைக் காலனித்துவமாக்கும் நாளிகை - அது உடன் பிறந்தவனை ஊனமாக்கும் ஊஞ்சல் - அது பணமுடன் பிணமுன் பரியும் படசம் - அது
விஷமிகளின் வீரதிர வியாக்கியானம் - அது அட்டைப் பணத்தை தட்டை போடும் தவளம் - அது
தனவந்தர்களின் தர்ம சக்கரம் - அது விபரக் கோவையின் விடை விசனம் - அது
நடப்புச் சம்பியன்களின் தொப்புள் உறவு - அது தாயகத்தை தாரை வார்க்கும் தளம் - அது
தலை நகரங்களின் தலை நரகம் - அது விமர்சன வியாபாரியின் விளை நிலம் - அது
இணை வைப்பாளர்களின் இன்னிசை இதயவறை - அது ஆர்முடுகலின் அசதியான அமர்க்களம் - அது
கசினோ! மக்களிடம் காசி நோ!
பி.எம். பைறூஸ் - இஸ்லாஹிய்யா வளாகம்
இறவை உன்னிட்டம்!
சோதைனைகள் வருகின்ற
- உனக்காய் உளம்சேரும் போதெல்லாம்
உறவுகள் கேட்கிறேன்! மனம் தளராது
உனை விடடு - எனை இறை நாட்டம் துணை
தூரமாக்கும் இணைதல்களி பொருந்திக் கொள்ளும்
பிரிதலைக் கேட்கிறேன்! உள்ளம் கேட்கிறேன்!
இருதயத் துடிப்போடு எந்த நேரம்
ஈமானை சுமக்கக் கேட்கிறே உனக்காய் களமிறங்க
என் இதயத்து இடம் அமைகிறதோ
நுணி மீதும் இறையுணர்வு அப்போதெல்லாம்
இனிக்கக் கேட்கிறேன்! தயங்காமல் - உன் பணியில் நான் இயங்க
பாவங்களில் சரிகாணும் துணிச்சல் கேட்கிறேன்!
உளப்பாங்கில் மாற்றம் கேட.
பண்பாட்டில் பணியோங்க என் இதயம்
தினம் நான் உன்னிடம் இடை நடுவே - உன்னை
கேடகிறேன்! மறந்தால் தாமதிக்காத உனதான
கடினங்கள் எனை விட்டு மீளுகை கேட்கிறேன்!
காரிருள் களைதலாய கேட
-அல்ஹஸனாத் மார்ச்: 20

வன ம் க விதா பவ ன ம் க விதா
இப் பாரினிலே இறைவனைத் தினம் தொழுது வருகின்ற மானிடர்க்கு கிடைத்திடும் பிர்தவ்ஸுல் அஃலா!
சுவனத்து இன்பமெல்லாம் சிறப்பளித்து நன்மையடையும் பசியன்றே எமக்கில்லை புசிப்பதற்கு உணவுகளும் சுவைமிகு கனிகளும் வகை வகையாய் நிறைந்திருக்கும் அல்லாஹ்வின் மாளிகையில்!
சுவனத்தில் பாலாறும் தேனாறும் ஓர் உலா!
இனிதே பருக பாலாறும் தேனாறும் போதையற்ற மதுவாகிய- குடிவகையும் விசுவாசம் கொண்டவர்க்கே காத்திருக்கின்றன!
அளவில்லா இன்பங்களும் வர்ணிக்க இயலா கோடி சுகமும் கிடைக்கும் சுவனமதில்!
வாருங்கள் எல்லோரும் நபிவழியில் நடந்து சுவனம் அடைவோம்!
நுஸ்ரத் ஆபிதா - திருகோணமலை
கசப்பாயினும் உண்மை ஏற்கும்
வாய்மை கேட்கிறேன்!
இருளின் நனைதலின் இறை நினைவு கேட்கிறேன்!
இதயம் துடிக்கும் வரை இறை பயணம் கேட்கிறேன்!
ன்
கவலைகள் தாங்க - உன் கருணை கேட்கிறேன்!
இறுதி மூச்சும்
உறுதியாய் - உன் கிறேன்! தீனிலே கேடகிறேன்!
முடிவில் நான் சேர சுவன முகவரி கேடகிறேன்!
ஸபானாசுஹைப் இஸ்லாஹிய்யா வளாகம்
இறேன்!
D14/ஐ. அல்ஊலா: 1435,

Page 31
க விதா ப வ ன ம்
க விதா பவ
உன்னைஉனக்குள்
விதியென்றும் சதியென்றும் வெறும் கதை சொல்லி வாழ்வதை மதி கெட்டு புதைக்கின்ற என் சகோதரனே!
காய்க்காத மரத்திற்கு ஏது கல்லடி! பூக்காத செடிகளில் பூப்பறிக்க யார் வருவார்?
வேரோடு அறுத்தாலும் விடுபட்ட சிறு துரும்பில் துளிர் விடும் விருட்சம் பார்...
விமர்சனங்களும் வேதனைகளும் விடா முயற்சிகளால் விண்ணைத் தொடுபவர்களுக்கே! கயவர்கள் உன்னை காறி உமிழலாம். எட்டி உதைக்கலாம்!
ஐந்தாண்டு காலம் அமைதியாய் தன் அடித்தளத்தை பலமாக்கி ஆறாம் வருடம் ஆடம்பரமாய் உயர்ந்து நிற்கும் உறுதியான மூங்கில்கள் பார்!
மனம் தளர்ந்துவிடாதே முழு மனதோடு மன்றாடு கடைசி வரை போராடு உறுதியான ஈமானோடு!
iெth hi in 41)
உலக ஒழுங்கின் உள்ளகக் கீறல்கள்
பூக்களை விலைபேசும் வண்டுகளின் வணிகம்
மகளை வம்புக்கிளுக்கும் தந்தையின் கொடூரம்
புன்னகை தேசத்தின் மெளன அங்கீகாரத்தில் சயனைட்டாய் வளரும் சாக்கடைச் சருகுகள் |
வேர்விட்டு வளரும் பாலின நோய்கள்
நல்லவனின் சாம்பலில் பொல்லாதவனின் உமிழ்நீர்
சேய்விட்டுப் போகும் தாய் தந்தை உறவுகள்
மருந்துக்கும் இல்லாத
கைகட்டி மெளனித்து மனித மாண்புகள்
கலர் கலர் கனவுகாணும்
நிஜமான மனிதனே! அரசியல் மோதலில் விலைபோகும்
நிசப்த நிஜங்களை தலைமைகள்
விலைபேசும்
நிழல்கள் இவை! கிரீடங்களுக்காய் தவமிருக்கும்
நீளும் உன் மௌனத்தில் வெற்றுத் தரிசுகள்
விழுதுபிடித்து வளரும்
சருகுகள் இவை! கைகளை நிரப்பும் கைம்பணப் பைகள் மீரா எம். அஸ்ஹர் - இறக்காமம்
-அல்ஹஸனாத் மார்ச்: 2

ம ம க வி தா ப வ ன ம்
கவிதா 29
தேடு
உன் வாலிபத்தின் வினாடிகள் உன்னதக் கொள்கையை நிலை நாட்டும் உரமாக அமையட்டும் உறுதியோடு போராடு உன் சாதனைக் காலம் வெகு தொலைவிலில்லை!
தாஹா நகர் பாத்திமா நிஹ்லா யூனானி மருத்துவ பீடம்
நாளை உன் சம்மதத்துடனேயே உன்னையும் சமாதியாக்கலாம்!
உனக்கெதிராக சங்கமிக்கும் மொத்தச் சருகுகளும் உனக்கெதிராகவே சட்டமியற்றலாம்!
தளம்விட்டுப் போகும் நலன் காக்க உன் மௌனத்தைக் கலைத்திடு மெளனத் தீயைக் கொழுத்திடு சருகுடன் சேர்ந்து காம்புகளும் எரியட்டும்!
உலக உடைவுகள்
2014 ஜூ. அல்ஊலா: 1435.

Page 32
விளம்பரம்
CCNA
Rol
200-120 Cisco Certified Network Associate Real Cisco Routers
for Practicals
Ne
Oisoo CERTIFIE
CCII Special ONEDAY
Training CCTV Camera
Hardware Installation & DDNS Configuration
Enginee
Network Cabling & Intercom Connecting
Administ
PABX Intercom Copper & Fiber
Entry Level Train
CCNA & MCI
Network Cabling & Management
Special Discounts on Gre
· Fibe
O DAYS Works
Workshop Hotline -0777-825789
CCT) Residential Workshop · PAB
PAB Food & Accommodation Provided
Acce
Wire
A luult. Microsoft Partner CISCO.
A Microsoft
» LOCAT
We 1 You
alioru PROFESSIONAL MAIGIONE
OMNIOOI ONE PLACE TORIILOHKOOKOMOHOL
建国里,三巨里 na PROFESSIONAL DIN OoooOE OOOOOOD CERTIFICATIONS ONKOKOI
LILILLE மிகச்சிற்ந்த தொழிற்கல்வியினைப் பெற உள்ள ஒரேயோரு நிறுவனம் |
LAB FA
Our You
· LECTUI
Our expe
HARALAMALAWI WAYEYISMI
ROZOIKOTIXEMOKHOTLOOXHOKOKKEKKONEN
LOWES
Our
Milli EHRHEITHRE THILTEREHITEKTID
qual
Y NETWORK
High-Tech Conan pwester Training & Consulting Centre
Address : 14. Schofield Place, Kollupitiya, Colombo-03 Telephone : 011-2589567 011-2589568
Online : www.winsys.lk Infowinsys.lk
Slovanm Gornjonië: 2014

cCNA
Voice
CCNP ute / Switch / T-shoot
Cisco Certified twork Professional
Cisco Certified Network Associate Cisco IP Phones for
Practicals
CCIE E) Voice,
Routing & Switching Voice -
PHP
MySQL
Mr. Harith Kariapper
#8661 (Quadruple CCIE) Winnet (UK & Canada)
For Software / Web
經難藝到了避
MCSA 2012 ring
Server 2012
70-410 70-411 70-412 cration
MCSA Windows 8
70-687 70-688 bup Registration
ng for SA
er & Copper Cabling by 3M Lanka V Camera with DDNS (Remote Access) * Intercom System with Cabling Bless & Security ess Control & Alarm Systems
mware STORAGE +
IONS have a Nation wide branch network.
can join your nearest Branch.
ACILITIES
Labs are fully equipped with real equipment. can get a real environment experience.
RE PANEL lectures are highly qualified and industrial erienced.
ST CHARGES
course fees structures are less but high city training
ES KANDY : 0777-807630
COLOMBO : 0777-259927 BATTICALOA : 0777-832871
JAFFNA : 0777-825789
BRANCHES
-la. Alb2aMon: 1435.

Page 33
Graphic Designing Total Training of Creating Quality Graphics
Using Latest Designing Software
Adobe
Adobe Photoshop Adobe Illustrator Adobe InDesign CorelDRAW
All the softwares & Tutorials will be Provided
AN the subjects will be 100% Practicals » Individual Attention to all the Students » Individual Computers will be provided
CorelDRAW X4 * Course Fees- 9500/=
O AutoCAD 2D & 3D Draf 2D Drafting
3D
* Introduction to AutoCAD
* Cre + 'Toolbars, Menus, and Dashboard
* Moc Understanding the Drafting Tools
* Cre - Drawing 2D Objects = Text Styles
* Plot * Editing with the Modify Panels Tools * Dimensions and Tolerances :
Getting Organized with Layers * Create and Use Blocks * Hatches, Fills and Wipeouts
I Lay
Prania
* Course Fee:- 16500/*
O Office Applications B3Office w S PE E - MS Word - MS Access - MS Excel MS PowerPoint e Internet & E-mail
u Course Fee:- 7500/=
NETWORKS
524, Peradeniya Road, Kandy
-albamW60rng|Lonië: 2014

விளம்பரம்
) Web Designing
Total Training of Creating Attractive websites
Using the Latest Softwares
dobe Photoshop dobe Dreamweaver lash Animations TML & PHP (Basics) omain Registration
ploading Website I After the training you will be able Ito create your own website & Publish
I Course Fee:- 15000/
ting
Drafting
ate 3D Models Hfy 3D Solids and Surfaces ate Sections and 20 Drawings from 3D Models ing out and Printing Your Drawing - Drawing
O Web Development
- HTML
HTML - CSS3 - JavaScript - Jquery - Server-Side Programming - AJAX.
This Training Covers Programming PHP for Web & Software Deverlopers - MySQL
MGA CjQuery AJAX
* Course Fee:- 19900/=
Tel:081-2203786
Mob:07T1-047708 facebook.com/ewin.net twitter.com/ewinnetworks
www.ewin.lk
HOTLINE 0777-807630
|. Albemon: 1435.

Page 34
அழைப்பியல்
இஸட்.ஏ.எம். பவாஸ், சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழ
ஸுரா யூஸு. மனித
ஸ ரா யூஸஃப் பல் சகோதரர்கள் மூலமா வேறு கோணங்களில் ஆராய்ந்து கவே சொல்லொணாத் சிந்தித்து, படிப்பினைகள் துயரங்களுக்கு ஆளாகியும் பெறமுடியுமான ஒரு ஸ்ரா
அவர் எவ்வாறு சகிப்புத் வாகும். நபி (ஸல்லல்லாஹு
தன்மையுடனும் சிறந்த அலைஹி வஸல்லம்) அவர் பண்பாடு க ளுடனும் கள் தமக்கு எல்லா வகையி மிளிர்ந்தார் என்ற அற்புத லும் உறுதுணையாக இருந்த சரிதையை விவரித்து துணைவி கதீஜா (ரழியல் அல்லாஹ் அண்ணலா லாஹூ அன்ஹா) அவர்க ருக்கு ஆறுதல் அளிக்கி ளையும் இறுதி மூச்சுவரை றான். இறுதியில் யூஸுஃப் தம்மைப் பாதுகாத்த அபூ (அலைஹிஸ் ஸலாம்) தாலிபையும் இழந்து, தாயிப் எகிப்தை ஆட்சி செய்தது மக்களின் பலமான எதிர்ப் போல் நீரும் ஒரு நாள் பையும் சந்தித்து மக்காவில் அரபுலகை ஆள இருக் மிகக்கடுமையானதுயரங்களை கிறீர் என்ற நற்செய்தியை தமது குடும்பத்தினர்கள் யும் அல்லாஹ் மறைமு மூலமாகவே எதிர்கொண் கமாக எடுத்தியம்புகிறான். டிருந்த வேளையில் இந்த
ஸுராவின் ஆரம்பத் ஸுரா இறக்கியருளப்பட்
தில போட்டி பொறாமை, டது. இறை தூதர் யூஸுஃப் (அலைஹிஸ்ஸலாம்) அவர் களும் தமது சொந்த
மேலும், அவர் முகங்கொடுத்த சோதனைகளில் மிகக் கொடூரமானது அவுர்சிறுவயதில் கிணற்றில் தூக்கி எறி யப்பட்டதாகும். ஆனால், அவர் அதனை இங்கு நினை ஆடிதம்சகோதரர்களை நோவினைக்குள்ளாக்கவிரும் புவில்லை.
"கும். ஆனால' - Sல் கிரைம்லைன்
bஈ நேலனை இறகிறெ
அல்ஹஸனாத் மார்ச்:

கம் - மலேசியா |
ஃப் போதிக்கும் நேயம்
வெறுப்பு, குரோதம், கொலைவெறி, காமம், கவலை போன்ற பல்வேறு வகையான மனித உணர்ச்சிகள் அலை மோதினாலும் இறுதியில் அன்பு, ஆரத்தழுவல், மன்னிப்பு, அருள், ஒன்றுகூடல், சுபிட்சமான வாழ்வு, அபிவிருத்தி ஆகியவை யஃகூப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் குடும்பத்தில் மட்டுமன்றி, முழுப் பிராந்தியத்திலும் வியாபித்திருப்பதை அவதானிக்கலாம். இந்த சரிதையை குர்ஆன் 'அஹ்ஸனுல் கஸஸ்' என்று வர்ணிக்கிறது. உறவுகளைப் பேணி நடத்தலும் மன்னிக்கும் பெருந் தன்மையும்
யஃகூப் (அலைஹிஸ்ஸலாம்) இரண்டு மனைவிகள் மூலமாகப் பன்னிரெண்டு பிள்ளைகளைப் பெற்றிருந்தார். ஒரு மனைவி மூலம் யூஸுஃப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களையும் அவரது சகோதரர் புன்யாமீனையும் மற்ற மனைவி மூலம் ஏனைய பத்து புதல்வர்களையும் கொண் டிருந்தார். பத்துப் புதல்வர்களும் தந்தையின் நேசம் பற்றி தப்புக் கணக்கு போட்டனர். "நிச்சயமாக யூஸுஃபும் அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட நேசத்துக்குரியவர்களாக இருக்கின்றனர்” (12: 8) என்று கூறியவர்களாக யூஸுஃபைக் கொலைசெய்ய முயற்சித்து பின்னர் ஒரு கிணற்றில் தள்ளி விட்டார்கள். இதன் மூலம் தங்கள் தந்தையின் நேசத்தை எதிர்பார்த்தார்கள்.
"அதன் பின்னர் உங்கள் தந்தையின் கவனம் உங்கள் பக்கம் திரும்பிவிடும்”
(12: 9)
இவர்களது இந்தக் கொடூர மனோபாவத்தை அறிந் திருந்த தந்தை, யஃகூப் (அலைஹிஸ்ஸலாம்) தன்னிடம் யூஸுஃப் கண்ட கனவை விவரிக்கும்போது அதனை சகோதரர்களிடம் வெளியிடாமல் தனக்குள் மட்டும் இரகசியமாக வைத்துக் கொள்ளுமாறு உபதேசிக்கிறார்.
2014 | ஜூ. அல்ஊலா: 1435.

Page 35
எனினும், அவரது சகோதரரிகள் மீது குரோத மனப் பான்மை ஏற்பட வாய்ப்பளிக்காமல் “நிச்சயமாக ஷைத் தான் மனிதனுக்கு பகிரங்கமானவிரோதியாக இருக்கிறான்” (12: 5) என்றே அறிவுறுத்துகிறார். அதேபோன்று, தம் கனவு நனவான பின்னர் யூஸுஃப் (அலைஹிஸ்ஸலாம்) தந்தையிடம் "என் இறைவன் என்னை சிறைச்சாலையிலி ருந்து வெளியாக்கியதுடன் எனக்கும் என் சகோதரர்களுக் குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டுபண்ணி விட்ட பின்னர் அவன் எனக்குப் பேருபகாரம் செய்துள் ளான்” (12: 100) என்று ஷைத்தானின் மீதே தம் அதிருப் தியை வெளியிடுகிறார். - மேலும், அவர் முகங்கொடுத்த சோதனைகளில் மிகக் கொடூரமானது அவர் சிறுவயதில் கிணற்றில் தூக்கி எறி யப்பட்டதாகும். ஆனால், அவர் அதனை இங்கு நினை வூட்டி தம் சகோதரர்களை நோவினைக்குள்ளாக்க விரும் பவில்லை. சிறைச்சாலையிலிருந்து வெளியேறியதையே குறிப்பிடுகிறார். பலவீனமான நிலையிலிருந்து மீண்டு, எகிப்தின் ஆட்சியைப் பெற்று பலசாலியாக மிளிர்ந்த யூஸுஃப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைக் கண்ட சகோதரர்கள் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் உமக்குத் தீங்கிழைத்தவர்களாக இருந்தும் நிச்சயமாக அல்லாஹ் எங்களைவிட உம்மை மேன்மையுடையவராக தெரிவு செய்திருக்கிறான் என்று கூறினார்கள்.” (12: 91) அதற்கு யூஸுஃப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள்
'நான் உங்களை மன்னிக்கிறேன்' என்று கூறி தன் சகோ தரர்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்க விரும்பவில்லை. மாறாக, "இன்று உங்கள் மீது எந்த நிந்தனையும் இல்லை. அல்லாஹ்வும் உங்களை மன்னிப்பானாக. அவன் கிருபை யாளர்களிலெல்லாம் மிக்க கிருபையாளன்” (12: 92)என்று இங்கிதமாகக் கூறினார். மனிதர்களுக்கு நலம் நாடுதலும் அவர்களை கண்ணி யப்படுத்தலும்
சிறையில் புகுந்த இரு வாலிபர்களின் கனவுகளுக்கு விளக்கமளிக்க முற்படும்போது யூஸுஃப் (அலைஹிஸ்ஸ லாம்) தான் பேச வருகின்ற அம்சங்களை துல்லியமாக முன்னுரிமைப்படுத்துகிறார். ஒரு முஸ்லிம் பிற சமூகத்த வர்களுக்கு கொடுக்க முடியுமான அரும்பெரும் பொக் கிஷங்களில் முதன்மையானதை வைத்து உரையாடலை
ஆரம்பிக்கிறார்.
"நான் என் மூதாதையர்களான இப்றாஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன். அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைப்பது எங்களுக்கு தகுமானதல்ல. இது எங்கள் மீதும் இதர மக்கள் மீதும் அல்லாஹ் புரிந்த அருளாகும்... சிறையிலிருக்கும் என்னிரு தோழர்களே! வெவ்வேறான பல தெய்வங்கள் இருப்பது நல்லதா? அல்லது யாவரையும் அடக்கியாள்கின்ற
-அல்ஹஸனாத் மார்ச்: 2

அழைப்பியல் 33
ஒருவனான அல்லாஹ்வா?''
(12: 38-39)
யூஸுஃப் (அலைஹிஸ்ஸலாம்) நிரபராதியாகவும் தூய்மையானவராகவும் சிறையில் தள்ளப்பட அங்குள்ள ஏனைய குற்றவாளிகளான மனிதர்களுடன் உரையாடும் விதத்திலும் அவரது ஞானம் நமக்குப் புலப்படுகிறது. "சிறையிலிருக்கும் என்னிரு தோழர்களே!” என்ற வார்த் தைப் பிரயோகம் அவரது பணிவையும் அடுத்த மனிதர்க ளோடு நெருங்கிப் பழகி அவர்களது உள்ளத்தைக் கவர முயற்சிக்கின்ற அணுகுமுறையையும் பிரதிபலிக்கிறது.
அரசன் சிறைக்கூடத்திலிருந்து வெளியேறி வருமாறு அழைத்தபோது தமது கண்ணியத்தைப் பிரகடனம் செய்து கொள்ள விரும்பிய யூஸுஃப் (அலைஹிஸ்ஸ லாம்), “தம் கைகளை வெட்டிக் கொண்ட பெண்களின் உண்மை நிலை என்ன என்று அவரிடம் கேளும்” (12: 50) என்று அரசரின் தூதுவரிடம் கூறியனுப்பினார். இந்த சந்தர்ப்பத்திலும் தன் மீது வீண்பழி சுமத்தி புரியாத குற்றத்துக்காக சிறையில் தள்ளி அநீதி இழைத்த அமைச் சரின் மனைவியைப் பற்றி ஒரு வார்த்தைகூட அவர் வெளியிடவில்லை. இது தாம் வாழ்ந்த மாளிகையின் எஜமானர் மற்றும் அவரது மனைவிக்கு அவர் கொடுத்த கண்ணியத்தை அழகுற உணர்த்துகிறது. தேசப்பற்றும் தூரநோக்கும்
எகிப்தின் அரசர் கண்ட கனவுக்கு விளக்கமளித்த போது “அவரை என்னிடம் அழைத்து வாருங்கள். நான் எனக்கு மட்டும் நெருங்கிய ஆலோசகராக அவரை அமர்த் திக் கொள்வேன்” (12: 54) என்று அரசர் கூறினார். கன வுக்கு விளக்கமளித்த யூஸுஃப் (அலைஹிஸ்ஸலாம்) அதனுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. ஓர் அழகான, 15 வருட நீண்ட காலப் பொருளியல் திட்டத்தையும் அர சுக்கு சமர்ப்பிக்கிறார். ஏழாண்டுகள் தொடர்ந்து விவசா யம் செய்த பின்னர், “நீங்கள் அறுவடை செய்த விளைச் சலில் உண்பதற்கு வேண்டிய ஒரு சிறிய அளவைத் தவிர, அதனை அதற்குரிய கதிர்களிலேயே விட்டு வையுங்கள். பின் கடினமான பஞ்சத்தையுடைய ஏழாண்டு வரும். அப்போது அந்நேரத்துக்காக நீங்கள் சேகரித்து வைத்த அனைத்தும் உட்கொள்ளப்பட்டு விடும். அவற்றிலிருந்து தனியே நீங்கள் பாதுகாத்து வைத்திருந்ததைத் தவிர” (12: 47-48) எனக் கூறி பிறகு அரசரின் கனவில் தென்படாத ஓர் அம்சத்தையும் குறிப்பிடுகிறார்.
“பின்னர் அதற்கப்பால் ஓராண்டு வரும். அப்பொழுது அருள்மாரி பொழியப்பட்டு மக்கள் துயரங்கள் களையப் படும். அன்று அவர்கள் பழரசங்கள் பிழிந்து செழிப்புடன் வாழ்வார்கள். ''
(12: 49)
அவர்களது மதம், இனம், தேசம், வர்க்கம் போன்ற எதனையும் விசாரிக்கவோ சிந்திக்கவோ இல்லாமல்
(56ஆம் பக்கம் பார்க்க)
D14|ஜூ. அல்ஊலா: 1435

Page 36
34 ஆன்மிகம்
எங்கு 8
ਵਿਚੋਂ ਫੁੱਖ ਪੰਨਵ॥
9_2
இரு பக்கம் du Bਹ ਟ5 ਬੋਰਡ ਰਨ 3 ਨੂੰ
1) A அஷ்ஷெய்க் கியாஸ் முஹம்மத் (நளீமி) M.
பொதுவாக இன்று உலகில் பெரும்பாலானோர் தேடுகின்ற ஒன்றுதான் உள அமைதியும் மனநிம்மதியு மாகும். உலக வசதிகளைப் போதுமானளவு பெற்று அல்லது அந்தஸ்துகளைப் பெற்று மனிதர்கள் இதனை அடைய முயற்சிக்கின்றனர். ஆனால், இது இந்த வழிமு றைகளால் கிடைப்பதில்லை. காரணம், உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் ஆன்மா அல்லாஹ்வின் புறத்திலி ருந்து விஷேடமாக தரப்பட்ட ஒன்றாகும்.
ஆன்மாவை வளப்படுத்தி அதன் மூலம் நிம்மதியை அடைவதற்கான வழிமுறையை அல்லாஹ் உலக சடப் பொருட்களில் ஏற்படுத்தவில்லை. ஈமான், இறை தொ டர்பு, இபாதா, இறைவழிகாட்டலுக்கு ஏற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ளல் என்பவற்றிலேயே உள அமை தியை அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கிறான். திருமறை இவ்வாறு கூறுகின்றது:
"ஈமான் கொண்டவர்களின் உள்ளங்கள் இறை நினை வின் மூலம் நிம்மதி அடைகின்றன. நிச்சயமாக இறை நினை விலேயே உள்ளங்கள் நிம்மதி அடைய முடியும். " (13:28)
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். "செல்வ நிலை, உலகப் பொருட்களை அதி கம் திரட்டுவதன் மூலம் கிடைக்காது. மாறாக, உள்ளத் தில் ஏற்படும் போதுமென்ற மனோநிலையே உண்மை யான செல்வமாகும்.''
- -
எனவேதான் உலக சடப்பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக அதிகரித்து நிம்மதியைத் தேட முயல்பவர்கள் இறுதி வரைக்கும் உள அமைதியை அடைய முடியாமல் தடுமாறுகிறார்கள்.
உலக வாழ்வு கஷ்டங்களும் சோதனைகளும் நிறைந் தது. மனிதர்கள் இவற்றைத் தாண்டி வர வேண்டும் என்பது இறை நியதி. இந்தச் சோதனைகளின்போது நாம் வெளிப்படுத்தும் எதிர் விளைவுகள் தமது உள அமை தியின் மட்டத்தைப் பிரதிபலிப்பதாக அமைகின்றன.
-அல்ஹஸனாத் மார்ச்: 20

கிடைக்கும் .
அதெ3
-டாவி - ம்
005 படிவ பவன்
உதவி A விரிவுரையாளர்- ஜாமிஆ ஆஇஷா ஸித்தீக்கா
- வல்) மறுமை வாழ்வை இலக்காகக் கொண்டு வாழும் மனிதர் களின் உள்ளங்களை உலகக் கஷ்டங்கள் பாதிக்க மாட் டாது. இன்பங்களின்போது அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவார்கள். துன்பங்களின்போது பொறுமை காப்பார்கள். இவ்விரண்டும் அவர்களுக்கு நன்மையா கவே அமையும்.
ஸஹாபாக்கள் எம்மை விடப் பன்மடங்கு இழப்புக ளையும் சோதனைகளையும் சந்தித்தார்கள். ஆனால் அவர்களது உள்ளம் ஆட்டம் காணவில்லை. அவர்களின் ஈமானிய நிலையில் தளம்பல் ஏற்படவில்லை. மாறாக, இவை ஈமானிய அதிகரிப்புக்கே வழியமைத்தன. உஹு துக்களத்திலிருந்து திரும்பிய ஸஹாபாக்களுக்கு மீண்டும் எதிரிகள் தாக்க வருகிறார்கள் எனும் செய்தி கிடைத்த போது அவர்களது ஈமான் அதிகரித்தது எனத் திருமறை கூறுகின்றது. - (பார்க்க - 3: 173)
கொடூரமாகத் துன்புறுத்தப்பட்ட பிலால் (ரழியல் லாஹுஅன்ஹு) அவர்கள் தொடர்ந்தும் “அஹத் அஹத்” எனும் வார்த்தைகளைக் கூறிக் கொண்டிருந்தார்கள் எனில், அதற்குக் காரணம் நிலைகுலையாத உள அமைதி யும் மனநிம்மதியுமாகும். -
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர் கள் தொழுகையில் கண்குளிர்ச்சியைக் கண்டார்கள். அந்தப் பாக்கியத்தை அதிகம் அனுபவிப்பதற்காக கால்கள் வீங்கும் அளவு இராப் பொழுதுகளில் இறை முனாஜாத் தில் ஈடுபட்டார்கள்.
இறை நெருக்கத்தால் உள் அமைதி கண்ட உள்ளங்கள் மலக்குகளின் சகவாசத்தில் அவர்கள் செய்யும் இஸ்திஃ பார் மற்றும் துஆக்களின் பாக்கியங்களைப் பெற்றவர் களாக வாழ்கின்றன. இறை உதவியையும் பாதுகாப்பை யும் நேரடியாகவும் மறைமுகமாகவும் கண்டு வருகிறார் கள். மனிதர்களை விட்டும் தேவையற்றவர்களாக மாறு கிறார்கள். அல் - ( 55ஆம் பக்கம் பார்க்க) 12: _ பி 5 & 2 ட
14 ஜூ. அல்ஊலா: 1435.

Page 37
TNSEயா யா யா யா TAாயக4441944கரகேடு!
இறைத்தூதின் சாரம்சம். (13ஆம் பக்கத் தொடர்)
“மார்க்கத்தைக் காரணமாக வைத்து உங்களுடன் போரிடாத உங்களை உங்களது இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றாதவர்களோடு நல்லுறவு கொள்வதனையும் அவர்களுக்கு நன்மை செய்வதனையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதனையும் அல்லாஹ் தடுக்கவில்லை. நிச்சய மாக அல்லாஹ் நீதி செலுத்துபவர்களை நேசிக்கிறான். நீங்கள் நட்புறவு வைக்கக்கூடாது என்று அல்லாஹ் தடுப் பதெல்லாம் மார்க்கத்தைக்காரணமாக வைத்து உங்களுடன் போரிட்டதோடு உங்களை உங்களது இருப்பிடங்களிலி ருந்து வெளியேற்றியவர்களுடன்தான். அத்தகையவர்கள் அநியாயக்காரர்களாவர். அவர்களுடன் உறவுபூண்டவர் களும் அவ்வாறே...''
விளக்கம் தேவையில்லாதளவு இந்த வசனம் முஸ்லி மல்லாதவருடனான உறவைத் தெளிவுபடுத்தியிருக்கிறது.
இந்த வசனம் முஸ்லிமல்லாதோர் பற்றிக் கூறும் மற்றொரு விடயத்தை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். முஸ்லிமல்லாதவர்களில் அதிகமானோர் முஸ்லிம்களோடு வீணாக முரண்பாடுகளையும் குழப்பங்களையும் ஏற்படுத் திக் கொள்வதில்லை. ஒரு சிலரே அநாவசியமான பிரச்சி னைகளை உருவாக்குவதில் முனைப்பாக இருக்கின்றனர் எனக் குர்ஆன் கூறுகிறது. அந்த ஒரு சிலரை இன்றைய உலகில் அவதானிக்கின்றபோது அவர்கள் ஒன்றில் அதிகார சக்திகளாக இருக்கின்றனர். அல்லது அதிகார சக்திகளுக்கு விலைபோன மதவாத சக்திகளாக இருக்கின்றனர். இத்த கையவர்களை அநியாயக்காரர்கள் என்றே குர்ஆன் குறிப் பிடுகின்றது.
MADEENA LAI DIPLOMA IN SP
AKURANA
One Month Resi இலகம் Admissions are now d
Build up your Confidence
- உணவு தங் - தகுதிவாய்ந்த - பெண்களுக் - நவீன கற்பிதழ் - ஒவ்வொருவ - நியாயமான
2 யாகம் > ஆளும்
Mபு
'Akur
- அல்ஹஸனாத் மார்ச்: 20
Call us 0766 44 3555

அதன் தொடர் 35
இத்தகைய அநியாயக்காரர்கள் தங்களது அதிகார நலன்களைப் பாதுகாத்துக் கொள்வது ஒன்றைத் தவிர. உயர்ந்த நன்நோக்கங்கள் எதனையும் கொண்டிருக்க மாட்டார்கள். அதனால், இறைதூதினை விசுவாசித்த மனிதர்களிடம் இவர்கள் கடுமையாகவே நடந்து கொள் வார்கள். இத்தகையவர்கள் பற்றி அல்குர்ஆனின்10:08ஆம் வசனம் கூறுவதை நோக்குவோம்:
"அவர்கள் (உங்களை வெற்றிகொண்டுவிட்டால்) உங்கள் விடயத்தில் உறவு பந்தங்களையும் அவர்கள் பார்ப்பதில்லை. மேலும், (உங்களோடு செய்துகொண்ட) எந்த ஒப்பந்தத்தையும் அவர்கள் மதிப்பதுமில்லை.''
ஆக, இறைத்தூதினை ஏற்றுக் கொண்டவர்களிடம் காணப்படும் பரந்த மனப்பான்மை, விரிந்த நோக்கு, அனைவரையும் சகோதரர்களாகக் கருதும் பண்பு, அனைவருக்கும் நற்பயன்கள் கிடைக்க வேண்டுமென்ற நன்னோக்கம் எதனையும் இத்தகையவர்களிடம் நீங்கள் காண முடியாது, எதிர்பார்க்கவும் முடியாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் என்றே இந்த வசனம் எடுத்தி
யம்புகின்றது.
இந்த யதார்த்தத்தை படம்பிடித்துக் காட்டுவதாகவே இன்றைய உலகின் நடப்புகள் அனைத்தும் காணப்படு கின்றன. எனினும், இன்றைய உலக நடப்புகளைத் திரிபுபடுத்தி அவற்றில் சம்பந்தப்படுகின்ற நல்லவர்களைக் கெட்டவர்களாகவும் கெட்டவர்களை நல்லவர்களாகவும் சித்திரிக்க முயலுகின்றன கெட்டவர்களின் கைவசமுள்ள மீடியாக்கள். எனினும், ஆய்ந்தறிபவர்களுக்கு உண்மைகள் வெட்ட வெளிச்சமாகவே இருக்கின்றன.
உ
சடு
2ாதம்
DIES COLLEGE OKEN ENGLISH
SRI LANKA
sential Program
ந கல முழு நேர வதிவிட பயிற்சிநெறி தமிட வசதிகள் த விரிவுரையாளர்கள்
52 கான பாதுகாப்பான சூழல் த்தல் நுணுக்கங்கள்
ர் மீதும் தனிப்பட்ட விஷேட கவனம் .. கட்டணம் உணவு, தங்குமிடம், பயிற்நி நெறிக் கட்டணம் ல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் மை விருத்திக்கான உளவியல் வழிகாட்டல் LC - Madeena Ladies College ana, Sri Lanka. E-mail: mlcmadeena@gmail.com 14 ஜூ. அல்ஊலா: 1435.

Page 38
36 சிந்தனைக்கு
சுல்தான் என்னைக் கடலில் எறிந் பெற்றுக் கொள்வேன்; தூக்கிலிட்டால்
> எம்.ஐ.எம். அமீன், முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர், பே
பதிஉஸ் ஸமான் ஸயீத் நூர்ஸி (கி.பி. 1877 - 1960) உலகப் புகழ் பெற்ற இஸ்லாமிய ஊழியன். துருக்கிய
குடிமகன். குர்திஷ் இனத்தவர். ஐரோப்பாவின் முதலா. ளித்துவவாதமும் சோவியத்தின் கம்யூனிச சித்தாந்தமும் துருக்கிய அதிபர் முஸ்தபா கமால் பாச்சாவின் இஸ்லா மிய கலாசார ஒழிப்பு முயற்சியும் துருக்கியில் ஆதிக்கம் செலுத்திய காலப் பகுதியில் வாழ்ந்தவர். துருக்கியின் பழமைவாதப் போக்குடையோரையும் தேசியவாத சிந்த னையால் கவரப்பட்டோரையும் எதிர்கொண்டு இஸ்லா மியப் பணி புரிந்தவர். ---
இஸ்லாமிய நம்பிக்கை (ஈமான்), இஸ்லாமிய கலா சாரம், இஸ்லாமிய விழுமியங்களுக்காக இஸ்லாமிய வாழ்க்கை முறை, இஸ்லாமிய சின்னங்கள் என்பவற்றை அழித்து ஒழித்து துடைத்து எறிய தனது அரசியல் அதி காரம், இராணுவ பலம் என்பவற்றினூடாக முயற்சித்த முஸ்தபா கமாலின் செயற்பாடுகளை ஆயுதம் ஏந்தாம லேயே எதிர்கொண்டு இஸ்லாத்தை வாழவைக்க உழைத் தவர். அதன் விளைவாக, சிறையில் பல்லாண்டுகள் துன் பப்பட்டவர். சிறைக்கூடத்தைக் கலைக்கூடமாக்கி சக சிறைக் கைதிகள் இஸ்லாத்தின் இன்பத்தை நுகர வைத்த வர். தன் மாணவர் உள்ளங்களிலும் பொது மக்கள் உள் ளங்களிலும் ஆழமான மனப்பதிவுகளை ஏற்படுத்திய "ரிஸாலா- ஏ- நூர்” எனும் குர்ஆன் விளக்கத் தொகுப்புக் கட்டுரைகளின் ஆசிரியர்.
சுல்தான் அப்துல் ஹமீதின் ஆட்சிக் காலத்தில் இளம் துருக்கியர் (Young Turks) குழுவினர் அரசியல் சீர்திருத் தத்திற்காக குரல் கொடுத்தபோது அவர் கல்விச் சீர்திருத் தத்திற்காக குரல் கொடுத்தார். அதற்காகவே, தலைநகர் இஸ்தான்பூலுக்கு வந்து சுல்தான் அப்துல் ஹமீதை சந்தித்தார். இச்சந்திப்பின்போது இருவரும் கருத்து
முரண்பட்டார். அச்சம் என்பதைக் கனவிலும் அனுப வித்திராத பதிஉஸ் ஸமான் ஸயீத்நூர்ஸி கை கட்டி, வாய் பொத்தி, தலை சாய்க்கும் அமைச்சர்களையோ அறிஞர்க ளையோ போலல்லாது துணிச்சலாக பதில் கூறியதால், சுல்தான் ஆத்திரமடைந்தார். சுல்தான் துணிச்சலாகப் பேசும் அமைச்சர்களையோ அறிஞர்களையோ இதற்கு
-அல்ஹஸனாத் மார்ச்: 2

வரலாற்றின் ஒளியின் நிழலில் - 26
தால் விசாலமான மண்ணறையைப்
துருக்கியர் உள்ளங்களில் வாழ்வேன்
- பதிஉஸ் ஸமான் ஸயீத் நூர்ஸி
பராதனைப் பல்கலைக்கழகம்
"மாதாந்த
சம்பளத்துக்குப் முன்பு கண்டிராததால் ஸயீத் நூர்ஸியை மனநோயால்
பின்னால் செல்லும் பாதிக்கப்பட்டிருப்பவராகக்
பிச்சைக்காரனல்ல கண்டு 'டொய்டாஸி' நகரி
நான். லுள்ள மனநோயாளர்வைத்
எனக்காக நான் தியசாலைக்கு அனுப்பி
இஸ்தான்பூலுக்கு வைத்தார். மருத்துவர்கள் அவரைப் பரிசோ தித்த
வரவில்லை. னர். நோய்க்காக அல்லாது
துருக்கிய மக்களின் அரசியல் காரணத் துக்கா
நலன் பேணவே கவே அவர் அங்கு அனுப்
இங்கு வந்துள்ளேன். பப்பட்டுள்ளார் என்பதனை
இலஞ்சம் கொடுத்து வைத்தியர்கள் புரிந்து கொண்டனர்.
என்னை விலைக்கு
வாங்க “பதிஉஸ் ஸமான் நூர்
முயற்சிக்கிறீர்களா?” ஸியிடம் எள்ளளவேனும் மனநோய் இருப்பதாகக்
கூறினால் மனநோய் இல்லாத ஒருவரையேனும் உலகில் காண முடியாது போகும்” என்று வைத்தியர்கள் அறி வித்தனர். இதனால், அரசு அவரை விடுவித்து அவரை விலைக்கு வாங்க முயற்சித்தது. பாதுகாப்பு அமைச்சரா கக் கடமையாற்றிய ரபீக் பாச்சாவிடம் அப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.
அவர் ஸயீத் நூர்ஸியை சந்தித்தார். "சுல்தான் உங்க ளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். உங்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவாக ஆயிரம் 'குர்ஸ்' தருவதாக வாக்களித்துள்ளார். இதோ உங்களுக்கு ஆயிரம் “லீரா' நாணயங்களை அன்பளிப்பாக தந்துள்ளார். பெற்றுக் கொள்ளுங்கள்” என்று கனிவாகக் கூறினார். ஹராமான உணவைத் தொட்டும் பார்த்திராத அவர் “மாதாந்த சம் பளத்துக்குப் பின்னால் செல்லும் பிச்சைக்காரனல்ல நான். எனக்காக நான் இஸ்தான்பூலுக்கு வரவில்லை. துருக்கிய மக்களின் நலன் பேணவே இங்கு வந்துள்ளேன். இலஞ்சம் கொடுத்து என்னை விலைக்கு வாங்க முயற்சிக் கிறீர்களா?” என்று சற்று காரசாரமாகவே பதில் கூறினார். "இது அரச கட்டளை. இதனைப் புறக்கணிக்க எந்தக்
E014|ஜூ. அல்ஊலா: 1435,

Page 39
குடிமகனுக்கும் உரிமையில்லை” என்று அறிவுறுத்திய போது “என்னை சுல்தானிடம் நிறுத்துங்கள். நான் பேசிக் கொள்கின்றேன்” என்றார்.
"அதன் விளைவு பயங்கரமாக இருக்கும்” என்றார் அமைச்சர். "சுல்தான் என்னைக் கடலில் எறிந்தால் விசா லமான மண்ணறையைப் பெற்றுக் கொள்வேன்; தூக்கி லிட்டாலோ துருக்கியரின் உள்ளங்களில் வாழ்வேன். எனதுயிரை அன்பளிப்பாக வழங்கி துருக்கியரைப் பாது காக்கும் இலட்சியத்துடனே வந்துள்ளேன்” என்றபோது அமைச்சர் ஆத்திரமடைந்தார். ஸயீத் நூர்ஸியோ அமை தியாக அழகான வார்த்தைகளில் பின்வருமாறு பதிலளித்தார்:
"குர்திஷ்தான் மலைப் புறத்தில் சுதந்திரமாக வாழ்ப வன் நான். கோபப்படுவதனால் எந்தப் பயனும் கிடைப் பதற்கில்லை. பயனற்ற முயற்சியில் ஈடுபட வேண்டாம். என்னை நீங்கள் நாடுகடத்தி விடுங்கள். நான் கவலைப் படப் போவதில்லை” என்று கொஞ்சமேனும் அச்சமோமனக் கலக்கமோ இன்றி அமைதியாகப் பதிலளித்தார்.
மக்கள் நலனுக்காக உழைக்கும் இத்துணிவு நம் நாட்டு முஸ்லிம் தலைமைத்துவத்திற்கும் தேவையாகும். அரசியல் தலைவர்களுக்கு மட்டுமன்றி, குடும்பத்தலைவர்கள், மஸ்ஜித் தலைவர்கள் போன்ற சகலதலைமைத்துவத்துக்கும் பதீஉஸ் ஸமான் ஸயீத் நூர்ஸியின் இம் முன்மாதிரி இன்றைய தேவையாகும்.
நம் நாட்டு முஸ்லிம் சமூகத்தினதும் நாட்டினதும் நலன் கருதி அனைத்துத் தலைவர்களும் பின்பற்றுவார்களா இம்
முன்மாதிரியை?!
MAJESTIC
பட்டாப் A படம் டிராப்
MG3) Asian Campus
MAWANELLA DIPLOMA IN SP
One M 1 Enrolr
Sp
ஒரு மாத கால முழு நேர வதிவிட பயிற்சிநெறி. - உணவு தங்குமிட வசதி! - தகுதிவாய்ந்த விரிவுரையாளர்கள் 2
Know - கற்றலுக்கான ஆரோக்கியமான சூழல் Call - நவீன கற்பித்தல் முறை McBT - Maiestic ( - நியாயமான கட்டணம்
Mawanella, Sri La அல்ஹஸனாத் (மார்ச்: 201

சிந்தனைக்கு 37
(BAFA- UK இன் விருது பெற்ற...
11 பார்ப்பு - - - - - - -
உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் அங்கீகாரம் பெற்ற... டிப்ளோமா பட்டப் படிப்புகளையும் வழங்கி வரும் AOG நிறுவனம்
வழங்கும் பரிசுப் போட்டி பாடநெறி முடிவில் மாணவ மாணவிகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொழில் வாய்ப்பைப் பெற்றுத்தரும் இந்நிறுவனத்தினால் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களை எழுதி அனுப்பும் அதிஷ்டசாலிகளுக்கு
பெறுமதி வாய்ந்த பரிசில்கள் வழங்கப்படும். 'முதல் பரிசு: 2000.00
இரண்டாம் பரிசு: பத்துப் பேருக்கு 75% கழிவுடன் AOG நிறுவனத்தின் பாடநெறிகளைத் தொடர்வதற்கான வாய்ப்பு > மேலும் 30 பேருக்கான புலமைப் பரிசில்கள் |
பதில்களை தெளிவாக எழுதி பெயர், முகவரி, பிறந்த திகதி, தொலைபேசி இல, | - வீட்டிலக்கம் என்பவற்றுடன் No- 239, Velluvarmma Road, Dematagoda, Colombo- 09) என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ, into.aug.sgrmail.corrn என்ற மின்னஞ்சல்
வழியாகவோ 0ா 999 282, தொலைபேசி இலக்கங்களினூடாகவோ
தொடர்பு கொண்டு அல்லது sms செய்து பதில்களை அனுப்ப முடியும். முடிவுத் திகதி: 25.04.2014 C மேலதிக தகவல்களுக்கு: 0777 999 282
வினாக்கள் 01. இலங்கையின் தேயிலை ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது? 1. உலக புற்றுநோய் தினம் எத்தினத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது? 13. ஐ.நா வின் UNICEF எப்போது ஆரம்பிக்கப்பட்டது? 04. நோபிள் பரிசு பெற்ற முதல் பெண்மணி யார்? 05. 2012இல் ஒலிம்பிக் போட்டி எந்த நகரில் நடைபெற்றது?
AOG Campus
A 0 G Azaoyz Arssavella Road Wellambitiyal
COLLEGE
-- படம்
-SRILANKA OKEN ENGLISH Month Residential Program ments Open now....... pken English......
wledge is Power. us: 077 23 83 555
College of Business & Technology
nka. E-mail: mcbtcampus@gmail.com 4) ஜூ. அல்ஊலா: 1435.

Page 40
38
விளம்பரம்
LONDON
Airline Tig மார்ச் மாத பதிவுக முந்திக் கொள்ளுங்
CERTIFICA
Basic Ai Galileo A Airport Imபாa English
Enroll Now!
- பாடம்
Misseti ('all செய்து விபரங்களை அறியவும், S.M.S செய்து Email மூலமாக விளக்கங்களை பெற்றுக் கொள்ளவும் துார பிரதேசத்தினர்
வங்கியில் ரூபா 1000/- செலுத்தி
" பதிவுகளை மேற்கொள்ளவும் | T6 7 841 கூடுதலான சம்பளம் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப் வீட்டிலிருந்தவாறே உலக நாடுகளுக்கு விமானச் சீட் பெற்றுக்கொண்டு கூடிய இலாபம் அடைந்து கொள்ள V முற்றிலும் குளிரூட்டப்பட்ட வகுப்பறையில் நவீன தெ
நடைபெறும். /தூர பிரதேசத்திலிருந்து வருபவர்களுக்கு தங்குமிட 6 உணவும் பெண்களுக்கு விடுதி வசதிகளும் வழங்க PLONDON College
No. 195, 1st Floo1 LONDON - 1f][ICE .
Hotline - 077 ( Nugegoda Dematagoda
| Ka 0711 601060) 0114 3844620711 8
-அல்ஹஸனாத் மார்ச்: 2

GALILEO APPROVED TRAINING CENTER
proper alileo keting School நக்கு கள்hoo
TE IN AIRLINE TICKETING rline Ticketing Operation airline Ticketing
03 MONTHS COURSE Operation tion Technology (Im 05 CERTIFICATES Language
G
silwerna
DIPLOMA IN AIRLINE TICKETING
DIPLOMA IN AIRLINE & TRAVEL
AGENCY OPERATION International Airlines Galileo Airline Ticketing Airport Transport Essentials Customer Service
06 MONTHS COURSE Travel Formalities
Fare Constructions 07 CERTIFICATES பு மடிக்கணணியை பயன்படுத்தி நிக்களை வழங்குவதற்கான தகமையை வும் முடியும். ாழில்நுட்பம் கொண்ட பாடப்பயிற்சிகள்
வசதியுடன் 3 வேளை DUGID. of Higher Studies (Pvt) Ltd -, Galle Road, Colombo-04. 5346913 / 011 4422433
ndy
Dehiwala Bambalapitiya 501050 | 0712 357412 | 0112 552877 2014|r. Hovzrovn: 1435.

Page 41
தீனை நிலைநாட்டுக
குடும்பம், சமூகம், பொருளியல், அரசியல், ஆட்சிய மைப்பு உட்பட வாழ்வின் அனைத்துத் துறைகளும் இஸ்லாமிய வழிகாட்டுதலின்படியே அமைக்கப்பட வேண்டும் என்று சொல்லும்போது மார்க்கம் வேறு; அரசியல் வேறு; இரண்டையும் இணைக்கக் கூடாது என்று கூக்குரல் எழுப்புகின்றவர்கள் பல விந்தையான வினாக்களைத் தொடுக்கின்றனர். எனவே, தீனை நிலை நாட்டுதல் என்றால் என்ன என்பதைக்குறித்த ஒரு தெளிவான பார்வை நமக்குத் தேவை.
அரபு மொழியில் 'தீன்' எனும் சொல் பரந்து விரிந்த, அனைத்தையும் தழுவிய பொருளைத் தருகிறது. இதைப் போலவே 'தீனை நிலைநாட்டுதல்' (இகாமதுத்தீன்) என்ற சொல்லும் மிகவும் பரந்து விரிந்த பொருளைக் கொண்ட தாகும். சுருக்கமாகக் கூறினால், தீனை நிலைநாட்டுதல் என்பதற்கு சத்திய நெறியின் தேட்டங்களை முழுமையாக நிறைவேற்றுதல் எனச் சொல்லலாம். இதனை ஆழ்ந்து கவனித்தால் இது பத்து அம்சங்களைக் கொண்டதாக இருக்கிறது.
1. தீனுல் இஸ்லாத்தின் மீது வாய்மையுடன் நம்பிக்கை கொள்ளுதல்.
2. மன ஓர்மையுடன் இந்த தீனைப் பின்பற்றுதல்.
3. இந்த தீனை முழு வாழ்விலும் - தனிப்பட்ட முறை யிலும்சமூகவாழ்வில் அனைத்துத்துறைகளிலும் பின்பற்றுதல் 4. அகத்திலும் புறத்திலும் இந்த தீனைப் பின்பற்றுதல். 5. இதன் மீது நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் தம் குடும்பத்தாரை, உறவினரை அந்த தீனின் பக்கம் அழைத்தல். அவர்கள் முஸ்லிமாகவே இருந்தால் அவர்க
டிப்ளோமா கற்கைநெறியை பூர்த்தி கெ
(114/IE/04 It:31 M .
மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியில் Diploma in Arabic and Islamic Studies மூன்று வருட பாடநெறியினை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங் கும் நிகழ்வு கடந்த 04.02.2014 ஆம் திகதி கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஐ.எம். மௌஜூத்
-அல்ஹஸனாத் மார்ச்: 201

இகாமதுத் தீன் 39
கல் என்றால் என்ன?
ளின் வாழ்வு முழுவதையும் இஸ்லாத்தின் அச்சில் வார்த் தெடுக்கப் பாடுபடுதல்.
- 6. இறைவனை மறுப்பவர், இணை வைப்பவர், நாத் திகர், மறுமையை மறந்திருப்போர் ஆகிய அனைவருக்கும் சத்திய தீனின் அழைப்பை விடுத்தல். இறைவனுக்கு மாறு செய்வோரை இறைவனுக்குப் பணிந்து வாழச் செய்யப் பாடுபடுதல். -- 7. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட சமுதாயத்தில் முறைகேடுகள் தலைதூக்கி இருந்தால் அவற்றைச் சீர்ப டுத்த அயராது முயற்சி செய்தல். நன்மையை ஏவி தீமையை தடுக்கும் கடமையைச் சரிவர நிறைவேற்றுதல். 15 8. இறைவன் அருளிய இந்த தீனை நடைமுறை வாழ் வில் செயல்படுத்துவதற்கும் மற்ற அமைப்புகளுக்கு- நெறிகளுக்கு முன் இதனை மேலோங்கச் செய்யவும் பாடு படுதல். இப்பூவுலகில் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இறைவனின் மார்க்கம் முழுமையாக நடைமுறைப்படுத் தப்படும் வரை இவ்வழியில் கடுமையாக உழைத்தல். -
9. இணக்கமான, இணக்கமற்ற எந்த சூழ்நிலையிலும் இந்த தீனில் உறுதியாக நிலைத்திருத்தல். தேவைப்பட் டால் இதற்காக உயிர், உடமை, சந்ததிகள், உறவினர்கள், எதிர்கால நலன்கள், தாயகம் ஆகிய அனைத்தையும் சத்தியப் பாதையில் தியாகம் செய்தல்.
10. இப்பணியை ஒன்றுபட்டு கட்டுக்கோப்பாக, அமைப்பு ரீதியாகச் செய்தல்.
தீனை நிலைநாட்டுவதன் பரந்து விரிந்த அனைத்தையும் தழுவிய கருத்து இதுவேயாகும். =ய்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா
அடங்கிக் கப்
அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரபு மற்றும் இஸ்லாமிய நாகரிக கற்கை பிரிவின் தலைவர் கலாநிதி எம். இஸட்.எம். நபீல், சிறப்பு அதிதியாக மேசி லங்கா நிறுவனத்தின் பணிப்பாளரும் குவைத் நாட்டைச் சேர்ந்த வதிவிடப் பிரதிநிதியுமான நசார் ஹசன் அபூ ஜுவைத் ஆகியோரும் கலந்து கொண்டனர். 14 ஜூ. அல்ஊலா: 1435.

Page 42
4n ஜம்இய்யா டு
SMART PRO
பாட்ETTLEாபாபா- - - - - -வச 1-1 -பட-4-புங் 14
YEP- 2013 நிகழ்ச்சியில் பங்குபற்றிய மாணவர்களுக் கென விஷேடமாக வடிவமைக்கப்பட்ட6 நாள் வதிவிட பின்னூட்டல் நிகழ்ச்சியே Self Mangement and Reali stic Transformation ஆகும். இம் 3
- YEPநிகழ்ச்சியை பூர்த்தி செய்த மாணவர்களது ஆன் மிக மற்றும் திறன் விருத்தியை அடிப்படையாகக் கொண்டு இப் பயிற்சி நெறிக்கான பாடவிதானம் அமைக்கப்பட்டிருந்தது. நேர்முகப் பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 38 மாணர்வகள் இப்பயிற்சி நெறி யில் கலந்து கொண்டனர்.
ஜம்இய்யாவின் பயிற்சி மற்றும் அபிவிருத்திப் பணியி
விஷேட ஸனாபில் வகு
ஜம்இய்யா கொழும்பு நகர இளைஞர்களுக்காக வாராந்தம் நடத்தி வரும் ஸனாபில் வகுப்பு, இலங்கையின் 66வது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு கடந்த 05.02. 2014 அன்று விஷேட வகுப்பாக நடைபெற்றது. "தேச நலனில் இளைஞர்களின் பங்களிப்பு” எனும் கருப்பொரு ளில் நீதிக்கும் சமாதானத்துக்குமான முன்னணியின்
அல்ஹஸனாத் மார்ச்: 2

GRAME - 2014
---கரடி -சகன்.
114ாட்E A1 HEாபார்ரட்ணராக
ப படாவ
காப - விமல்
ਵੈਣ ਪGLਬਣਪ ਅਤ ਪੰਨੂੰ னூடாக ஒழுங்கமைக்கப்பட்ட இப்பயிற்சி நெறி AlMaas Resturant, Foxhi Resort, Mirigama Scout Center போன்ற இடங்களில் நடத்தப்பட்டன.
அஷ்ஷெய்க். ஆர். எம். இப்றாஹீம், அஷ்ஷெய்க். றிழ்வான் (இஸ்லாஹி), சகோதரர் முன்ஸிர், சகோதரர் அஸ்மி, அஷ்ஷெய்க் இர்பான் (இஸ்லாஹி), அஷ்ஷெய்க் அப்துல் ஹலீம் (நளீமி) ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர். ஜம்இய்யாவின் மத்திய சபை உறுப்பினர் சகோதரர் ஸாதிக் அப்துல்லாஹ் ஒழுங்க மைப்பாளராக இருந்ததோடு ஜம்இய்யாவின் ருகூன் மற்றும் இணை அங்கத்தவர்களும் பயிற்றுவிப்பாளர் களாக கலந்து கொண்டனர்.
2. க. !
தலைவர் அஷ்ஷெய்க் நஜா முஹம் மத் (இஸ்லாஹி) அவர்கள் அன்று சிறப்புரை ஆற்றினார்.
Love and Romance in the Light of Islam எனும் தலைப்பில் ஸனா பில் வகுப்பு 12.02.2014 அன்று ஸைய்யித்நூராமிதா அவர்களினால் நடத்தப்பட்டது. இவ்வகுப்புக் களில் நூற்றுக்கு மேற்பட்ட மாணர் வர்கள் கலந்து பயன் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ப்புக்கள் குறிப்பிடத்தக்கது.
77, தெமடகொட வீதியில் அமைந்துள்ள தாருல் ஈமான் கேட்போர்கூடத்தில் பிரதி புதன் கிழமை தோறும் இடம்பெறும் இவ்வகுப்புக்களில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 0773573680 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.
014 |ஜூ. அல்லா: 1435.

Page 43
சுதந்திர தின
இலங்கையின் 66ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜம்இய்யதுத் தலபதில் இஸ்லாமிய்யா நாடளாவிய ரீதியில் பல்வேறு வேலைத் திட்டங்களை மேற்கொண்டது. " அவை வருமாறு:
நாங்கல்ல ஜம்இய்யா கிளை, கொழும்பு- குருநாகல் பிரதான வீதியில் பயணித்த வாகனங்களுக்கு தேசியக் கொடிகளைப் பகிர்ந்தளித்தது.
கே பேருவளை ஜம்இய்யா கிளை, நல்லாகெல வைத் தியசாலையில் சிரமதானப் பணியில் ஈடுபட்டதோடு மர நடுகை செயற்திட்டத்தில் ஈடுபட்டது.
ப காலி ஜம்இய்யாகிளை, ஹரும்புரஸுலைமானிய்யா மகா வித்தியாலயத்தில் "தாய்நாடு வேண்டி நிற்கும் இளைஞர்கள்” எனும் தலைப்பில் சிறப்புரை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
25 சிலாபம் ஜம்இய்யா கிளை, இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியுடன் இணைந்து மர நடுகை செயற்திட்டத்தை நடத்தியது.
மாதம்பை ஜம்இய்யா கிளை, " சமாதானத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்புவோம்” எனும் கருப்பொ ருளில் அமைதிப் பேரணி ஒன்றை ஏற்பாடுசெய்திருந்தது. 15 கிலோ மீற்றர் தூரம் கொண்ட இப் பேரணியில் சுமார் 230 சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
ருகூன் ஒன்றுகூடல்
ஜம்இய்யாவின் 2014 நடப்பாண்டிற்கான முதலாவது ருகூன் அங் கத்தவர் ஒன்றுகூடல் கடந்த 15.02.2014 ஆம் திகதி ஜம்இய்யாவின் நாஸிம் அஷ்ஷெய்க் எஸ்.எம். ஸுப்யான் (நளீமி) தலைமையில் ஜமாஅத்தின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் 51 ருகூன் அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர். "இஸ்லாமியப் பணியில் நாங்கள்” எனும் தலைப்பில் ரிழ்வான் (இஸ்லாஹி) அவர்களும் “இயக்க ஊழியர்களின் தனிப்பட்ட மேம்பாடு” எனும் தலைப்பில் ஜமாஅத்தின் மத்திய மஜ்லிஸஸ் ஷரா உறுப்பினர் அப்துர் ரஷீத் அவர்களும் இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் உஸைர் (இஸ்லாஹி) அவர்களின் விஷேட உரை ஒன்றும் இடம்பெற்றது.
Visit: www.al
அல்ஹஸனாத் மார்ச்: 20

ஜம்இய்யா 41
நிகழ்வுகள்
புத்தளம் ஜம்இய்யா கிளை, புத்தளம் தள வைத்திய சாலையில் சிரமதானப் பணிகளை மேற்கொண்டது.
- வட்டதெனிய ஜம்இய்யா கிளை, அல்அக்ஸா பாட சாலை வளாகத்தில் சிரமதானப் பணிகளை மேற்கொண்
டது.
திஹாரிய ஜம்இய்யா கிளை, விழிப்பூட்டல், சிரமதா னம் உட்பட மர நடுகை வேலைத்திட்டத்தை மேற்கொண் டது.
ஓட்டமாவடி மற்றும் மருதமுனை கிளையின் ஏற் பாட்டில் “உதிரம் கொடுப்போம்; மனிதம் காப்போம்” - எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இரக்ககா முகாம்களில் சுமார் 262 பேர் கலந்து கொண்டனர்.
ன்
hasanath.lk
14/ஜூ. அல்ஊலா: 1435.

Page 44
-சிறுவர்
என் இனிய இஸ்லாமிய சகோதரியே!
> பின்த் மன்ஸுர்
01. உனது வாழ்நாளிலே ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்களை மரணத்தையும் மறுமையையும் நினைத்திட ஒதுக்கிடு.
02. தினமும் அல்குர்ஆனை ஓதி விளங்க முயற்சி செய். ஏனெனில், ஓர் ஆயத்தை ஓதுவதும் அதனை விளங் குவதும் இவ்வுலகத்தையும் அதிலுள்ளவற்றையும்விட மிக மேலானதாகும்!
03. உலக வாழ்க்கை அழகானதே. ஆனால், அதில் மிகவும் அழகானது உனது இறை நம்பிக்கையும் உனது அழகிய பண்பாடுகளும் உனது பயபக்தியும்தான் என்பதை மறந்து விடாதே!
04. கண்ணியத்தின் திறவுகோல் அல்லாஹ்வை வழிப்பட்டு நடப்பதாகும்.
05. உள்ளத்துக்கு உயிரூட்டுவது குர்ஆன் ஓதுவதும் தஹஜ்ஜுத் தொழுகையும் பாவங்களை விட்டுவிடுவது
மாகும்.
06. சோம்பேறித்தனம் தோல்வியின் நண்பனாவான்.
- 07. கவலைகள், துன்பங்கள் நேரும்போது நீ “லா இலாஹ இல்லல்லாஹ்” என்று உள்ளத்தால் மொழிந்திடு.
08. அர்ரஹ்மானின் திருப்பொருத்தத்தையும் நிலை யான சுவனத்தையும் அடைந்து கொள்ள ஏழையின் கண்ணீரைத் துடைத்து விடு!
09. உள்ளத்தின் விரிவிற்கும் கவலையை நீக்குவதற் கும் தொழுகை ஓர் உண்னதமான சாதனமாகும்.
10. ஏழைகளின் துஆவையும் அவர்களின் அன்பையும் விலைக்கு வாங்கிவிடு.
11. வார்த்தைகளை வெளியிடமுன் நன்கு சிந்தி. ஏனெனில், சில வார்த்தைகள் கொலைக்கு சமமானவை.
12. புத்தியுள்ள ஒரு பெண் பாலைவனத்தையும் சோலைவனமாக மாற்றிடுவாள் என்பதை மறவாதே!
13. நீ உனது உள்ளத்துக்கு ஒளியூட்டா விட்டால் உனது வாழ்வின் எல்லா இடங்களிலும் நீ இருளையே காண்பாய்.
14. உனது உள்ளத்துடன் நீ போராடு. ஏனெனில், உள்ளமானது பாவம் செய்யவே விளையும்.
15. வீணான ஆசைகளை நினைப்பதில், கோட்டை கட்டுவதில் உனது நேரத்தை வீணாக்கி விடாதே!
-அல்ஹஸனாத் மார்ச்: 20

பூங்காலம்
16. மகிழ்ச்சியை விலை கொடுத்து வாங்க முடியாது என்பதை மறவாதே!
16. உடலின் ஆரோக்கியம் குறைந்த உணவிலும் உள்ளத்தின் ஆரோக்கியம் குறைந்த பாவங்களில் நாவின் ஆரோக்கியம் குறைந்த பேச்சிலும் உள்ளது.
17. உனது கஷ்டங்களைக் கணக்கெடுப்பதை விட்டு விட்டு அல்லாஹ் உன்மீது சொரிந்துள்ள அருட்கொடை களை எண்ணிப் பார்.
18. ஆசியாவிடமிருந்து பொறுமையையும் கதீஜா (ரழியல்லாஹுஅன்ஹு) அவர்களிடமிருந்து வாக்குறு தியையும் ஆயிஷா (ரழியல்லாஹுஅன்ஹு) அவர்களி டமிருந்து உண்மையையும் பாத்திமா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடமிருந்து உறுதியையும் எடுத்துக்கொள்!
19. வாழ்வின் ஒரு நாள் முடித்து விட்டால், உனது ஆயுளில் ஒருநாள் முடிந்து விட்டது என்பதை நினைவில்
வை.
நன்றி: அல்முஜ்தமஃ |
சிறுவர் பூங்கா
' முதல் viசுக்குரியவர்: ஆஇஷா முனாஸ் முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி, கள்-எலிய
ஆறுதல் பரிசைப் பெறுவோர்
1. எம்.ஏ.ரஷாட் 2. ஆமினா முபாரக் 3. எம்.ஏ. அஹமட் அஸ்மல் 4.எம்.ஐ. சித்தி பஸீஹா 5. ஆஇஷா ஆஷிக் 6. மிப்கா முனாப் 7. எஸ். நுஸ்லான் சிதாரா 8. ஏ.ஸீ.ஏ. ஸஜீத் 9.எம்.எப்.எம். அஹ்ஸன் 10. எம்.எப். பர்ஹான் அஹமட்
-திஹாரிய - நாவலப்பிட்டி - ஏறாவூர் -உக்குவளை - கொழும்பு - உலப்பன
- பஹமுன - மருதமுனை - தர்காடவுன் - காத்தான்குடி
குறிப்பு:
விடைகளை தபால் அட்டையில் (Post Card)
மாத்திரம் எழுதி அனுப்பவும்.
314 ஜூ. அல்ஊலா: 1435.

Page 45
சிறுவர்
வினா விடை 1. பஃஸ் என்ற அற்புப் பதத்தின் பொருள் என்ன? -
எழுப்புதல்
2. பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹ வஸல் லம்) அவர்கள் எத்தனை யுத்தங்களில் பங்குபற்றினார் கள்? - 27 யுத்தங்களில்
3. எந்த கலீபாவுடைய ஆட்சிக் காலத்தில் யுத்தக் கப்பல் கட்டப்பட்டது? - உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹு)
4. 'இமாமுல் அஃழம்' என்ற சிறப்புப் பெயருடையவர் யார்? - இமாம் அபூ ஹனீபா(ரஹிமஹுல்லாஹ்)
5. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) "ரைஹான் பூக்கள்” என்று யாரை அழைத்தார்கள்?
- ஹஸன், ஹுஸைன் (ரழியல்லாஹு அன்ஹுமா)
8. ஹுஸைன் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்க ளைக் கொலை செய்தவன் யார்? - ஷிம்ரு
இல்மா நிலாம், நளீம் ஹாஜியார் மகளிர் அ.க, பேருவளை
க - க-டாபர்
இதயத்தில் இதணத்தில் பூத்த - ஸிதாக்கள்
பூத்த கஸீதாக்கள் நூல் வடிவில்
லெறலினே அமலப்.
11 ட்ட'
ஒலிவடிவில் ஏராளமான
1அரபுக் கலீதாக்கள் காணப் பட்டாலும் அரபு கஸீதாக்கள் நூல் வடிவில் மிக அரிதா கவே காணப்படுகின்றன.
இதனை நிறைவுசெய்ய எம்.எம். இப்றாஹீம் முஅல் லிம் அவர்கள் தெரிவு செய்யப்பட்ட 30 அழகிய கஸீதாக் களை நூல்வடிவாக்கியுள்ளதுடன் அதன் ஒலிவடிவத்
தையும் இறுவட்டில் தந்திருக்கிறார்.
இந்தப் புதிய முயற்சிஎமது சிறார்களுக்கு கிட்டிய அரிய பொக்கிஷம் என்றுதான் சொல்ல வேண்டும்.
முஅல்லிம்கள், குர்ஆன் மத்ரஸா, முன்பள்ளி ஆசிரி யர்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் பயனளிக்கும் முயற்சி இது.
விலை: 150.00
கிடைக்குமிடம்: இஸ்லமிக் புக் ஹவுஸ்,
77, தெமடகொட வீதி, கொழும்பு - 09 தொடர்புகளுக்கு:0772992015, 0712280590
-அல்ஹஸனாத் மார்ச்: 20

பூங்காவில் : நபியவர்கள் மீது ஸலவாத் சொல்வோம்
- அ தா¢ ேப்\'
"உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக் கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப் பட்டார்கள். அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப் பட்டது. அந்நாளில் ஸர் ஊதுதல் நிகழும். அந்நாளில் மக்கள் மூர்ச்சையாகுதல் நிகழும். எனவே, அந்நாளில் என் மீது ஸலவாத்தை அதிகமாக்குங்கள். உங்களது ஸலவாத் என்னிடம் எடுத்துக் காட்டப்படுகின்றது” என்று நபி (ஸல் லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். "அல்லாஹ்வின் தூதரே! எங்களது ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்துக் காட்டப்படும்? நீங்கள்தான் அழிந்து விட்டிருப்பீர்களே!” என்று நபித்தோழர்கள் கேட்டபோது, "நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி அரிப்பதை விட்டும் தடுத்து விட்டான்” என்று பதிலளித் தார்கள்.
அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ் (ரழி)
ஆதாரம்: அபூதாவூத்
வினா-விடைப் போட்டி-69
01. சர்வதேச நீர் தினம் எப்போது அனுஷ்டிக் கப்படுகிறது?
02. துருக்கியில் முஸ்தபா கமாலுக்கு எதிராகப் போராடிய மிகப் பெரும் சிந்தனைவாதி? - 03. நபியவர்கள் ஜூவைரியா (ரழியல்லாஹு
அன்ஹா) அவர்களை மணமுடிக்கும் போது ஜூவை ரியா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களுக்கு வயது
எத்தனை?
04. பங்களாதேஷ் அரசால் சிறைவைக்கப்பட்ட பின் கடந்த மாதம் சுகவீனமுற்று சிறையிலேயே மரணித்த தியாகியின் பெயர்?
05. "அழ்ல் வகாரா" கோத்திரத்தினரின் வேண்டு கோளை ஏற்று நபியவர்கள் அனுப்பிய 70 தோழர்க ளில் கெலை செய்யப்படாமல் விட்டுவைக்கப்பட்ட தோழர் யார்?
உங்கள் விடைகளைதபால் அட்டையில் மாத்திரம்
எழுதி மார்ச் 22ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக அனுப்பிவையுங்கள்.
சிறுவர்பூங்கா.
அல்ஹஸனாத் 7, தெமடகொட வீதி, கொழும்பு-09
14 ஜூ. அல்ஊலா: 1435.

Page 46
44 சிந்தனைக்கு
ல்.
மருத்தவ நிபுணத்துவம் மிக்க மருத்துவர் அவர். பல
அவரது விருப்புக்கு பட்டங்களைச் சுமந்தவர். அவர் அளிக்கின்ற ஆலோச
வேட்டுவைத்தது னைகளும் ஒளடதங்களும்
உள்ளூர் மருத்து அல்லாஹ்வின் உதவியால் மக்களின் நோய்களைக் எளி
வர் குழு! தினில் தீர்த்தன. அவருக்கு
இங்கேயும் மக்கள் மத்தியில் நல்லகிராக்கி. அதனால் அன்னார் பிற ஊர்
போட்டி, களுக்குச் சென்று மருத்துவம்
பொறாமை! செய்தார். மக்கள் மனமுவந் தனர். அவர் வருகைதரும்
அந்தப் போட்டியும் நாட்களில் அன்னாரைச் சந்
பொறாமையும் திக்கவும் மருத்துவ ஆலோச னைகள் பெறவும் மருந்து
பூதாகரத் பெறவும் நோய்வாய்ப்பட்
தோற்றமெடுத்தது. டோர் வந்து கூடினர். இந்த நோயாளிகளுக்கு அவரைத்
அந்த வைத்திய தேடிச் சொந்த ஊருக்குப் போக வேண்டிய சிரமமோ
நிபுணரின் செலவோ இருக்கவில்லை.
வருகையைத் ஏழை எளிய மக்கள் மட்
தடுத்தது! டுமல்ல, நோயாளி எவரேயா னாலும் கார் பிடித்து, பஸ் பிடித்து கையிலுள்ளதை அல்லது கடன்
அவராக பட்டுச் செலவிட்டு வந்து அன்னாரைக்
அப்பிரதேச காண வேண்டிய சிரமங்களை அவர்
தான். ஆன கொடுக்கவில்லை. அவர் மருத்துவர் மட்டு
வர் குழு! மல்ல, ஏழை எளியோரின் இடரறிந்த,
பொறாமை இல்லாத்தனமறிந்த மனிதநேயமிக்க மனிதரும்கூட! அதனால்தான் அவர்
இருந்த வாரத்தில் ஓரிரு நாள் எமதூருக்கு வருகை
தியப் பணி தந்தார். சொல்லப்போனால் காலடிக்கே
லாமை, இ வந்து மருத்துவச் சேவை புரிந்தார். அன்
லாத போக் னாரின் உன்னதமான சேவையை, அவரி
கொள்ள ( டமிருந்து அடையும் மருத்துவ நன்மை
மருத்துவச் களை மக்கள் உவந்தனர்.
அதனால் எதிலுமே பணம் பண்ணும் நோக்கு
வைத்தியர் டைய இக்காலத்தில் பணமே பிரதானம்.
உசந்தது! அதை இலக்காகக் கொண்டு அந்த டாக் டர் எமதூருக்கு வரவில்லை. அங்ஙனம்
உள்ளூர் வரவேண்டிய அவசியம் அவருக்கில்லை.
மைதான் -
உரைக்கின் சொந்த ஊரிலேயே இருந்த வண்ணம் நோயாளர்கள் அவரைத் தேடிப் போகும்
அந்த ல அளவுக்கு அன்னார் பெற்றிருந்த மருத்துவப் - அவருக்கு புலமை அவரைப் பிரசித்தஞ் செய்தது.
நலமிழந்து
ரின் வருகை
அல்ஹஸனாத் மார்ச்: 2

வைத்திய நிபுணரின்
வருகை!
- கலாபூஷணம் ஏ.எம்.எம். அலிஎனினும், அந்த வைத்திய நிபுணர் எங்களூருக்கு வாஞ்சையுடன் வருகை தந்தார். நோயுற்றோர் அவரை நாடி வந்தனர். தத்தமது வியாதிக்கு வேண்டிய ஒளடத வகைகளை அருந்திச் சுகமுற்றனர். வல்ல அல்லாஹ்வுக்கும் அந்த வைத்திய நிபுணருக்கும் நன்றி கூறி நிமிர்வுற்றனர்!
அன்னாரின் வருகை திடீரென நின்றது. வியாதி வயப் பட்டோர் வியாகுலம் அடைந்தனர். தமது காலடிக்கு வந்து சிகிச்சை அளித்த, அந்தச் சிறப்பு டாக்டரின் வரு கையை நிறுத்தியது யார்?
கத் தனது வருகையை நிறுத்தவில்லை. எமதூருக்கு வரவும் ச மக்களுக்கு மருத்துவஞ் செய்யவும் அவருக்கு விருப்பம் பால், அவரது விருப்புக்கு வேட்டுவைத்தது உள்ளூர் மருத்து இங்கேயும் போட்டி, பொறாமை! அந்தப் போட்டியும் மயும் பூதாகரத் தோற்றமெடுத்தது. அந்த வைத்திய நிபுண கயைத் தடுத்தது!
இடத்திலேயே இருந்து கொண்டு அவருக்குத் தனது வைத் "யைச் செய்யலாம். கைநிறைய உழைக்கலாம். தமது இல் பலாமை காரணத்தால் தன்னைக் கண்டு சிகிச்சை பெறவிய குவரத்து போன்ற இன்ன பிற செலவு சிரமங்களைத் தாங்கிக் முடியாத ஏழை எளியவர்களைக் குறித்துத்தான் தனது
சேவையை நல்க வேண்டுமென அவர் விரும்பினார். ல் எமதூருக்கு அவர் வருகை தந்தார். அவரது வருகை உள்ளூர் கள் பலருக்கு கசந்தது! அழுக்காறு அவர்தம் உள்ளங்களில்
= மருத்துவர்களின் உள்ளங்களில் புதைந்து கிடந்த பொறா அன்னாரின் வருகைக்குத் தடைபோட்டதென்று ஊரே
றது!
வைத்திய நிபுணர் கிண்ணியாவுக்கு வருகை தராவிட்டால் எந்த நட்டமுமில்லை. நட்டமடைந்து கொண்டவர்கள், கொண்டவர்கள் கிண்ணியா நோயாளிகளே!
2014 ஜூ. அல் ஊலா: 1435.

Page 47
தலைமுடி நரைத்தால் கறு கடமையான குளிப்புக்கு வி இருக்கின்றனவா?
அஷ்ஷெய்க் முஹம்! |விரிவுரையாளர், இஸ்ல
கேள்வி: தலைமுடி நரைத்தால் கறுப்பு நிற சாயம் இட முடியுமா?
பதில்: வயது முதிர்தல் அல்லது நோய் காரணமாக தலை முடி நரைத்தால் அதனை கறுப்பு நிறமல்லாத நிறங்களில் மாற்றிக் கொள்ள முடியுமாக இருக்கின்ற போதிலும் கறுப்பு நிற சாயம் பூசுவது தொடர்பாக இஸ்லாமிய அறிஞர்கள் இரண்டு நிலைப்பாடுகளில் கருத்து ஒற்றுமைப்பட்டுள்ளனர். ஒரு விடயத்தில் கருத்து
முரண்பட்டுள்ளனர். கருத்தொற்றுமைப்படும் இரு நிலைபாடுகளும் வருமாறு:
01. யுத்தங்களின்போது நரைத்த முடிகளுக்கு கறுப்பு நிறசாயம் பூச முடியும். ஏனென்றால், அது முஸ்லிம்க ளின் வீரத்தை வெளிப்படுத்தும் ஒரு சந்தர்ப்பம். எனவே, முஸ்லிம்களின் பலத்தை, வீரத்தை வெளிப்படுத்தக் கூடிய இடங்களில் தலை முடிக்கு தாராளமாக கறுப்பு நிறசா யம் பூச முடியும்.
02. பிறரை ஏமாற்றுவதற்காக நரைத்த முடிகளுக்கு கறுப்பு நிற சாயமிடுவது ஹராமானதாகும். உதாரணமாக திருமணம் பேசுகின்ற ஓர் ஆணின் தலை முடிகள் நரைத் திருக்கும்போது மணமகள் வீட்டாரை ஏமாற்றுவதற்காக அல்லது பெண்ணின் முடிகள் நரைத்திருக்கும்போது மணமகன் வீட்டாரை ஏமாற்றுவதற்காக கறுப்பு நிற சாயம் பூசுவது ஹராமாகும்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: "யார் மோசடி செய்கின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்ல."
(முஸ்லிம்)
மேற்கூகுறிப்பிட்ட இரண்டு சந்தர்ப்பங்கள் தவிர்ந்த ஏனைய சந்தர்ப்பங்களில் கறுப்பு நிற சாயமிடுவதில் இஸ் லாமிய அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து முரண்பாடு நிலவுகின்றது. ஷாபி மத்ஹபைச் சார்ந்த புகஹாக்கள் இதனை ஹராம் என்று கூறுகின்றனர். இதற்கு ஆதார மாக பின்வரும் ஹதீஸை முன்வைக்கின்றனர்.
மண
மக்கா வெற்றியின்போது அபூ குஹாபா என்பவர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம்
-அல்ஹஸனாத் மார்ச்: 20

பதாவா முஆஸிரா
ப்பு நிற சாயம் இட முடியுமா? ஷேடமான முறைகள் ஏதும்
மத் முபீர் (இஸ்லாஹி), (M.A). மாஹிய்யா அரபுக் கல்லூரி, மாதம்பை. mufeer96@gmail.com
அழைத்து வரப்பட்டார். அவருடைய தலை மயிரும் தாடியும் பஞ்சைப் போன்று வெண்மையாக இருந்தது. அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், "இதனை (வெண்மையை) எதனைக் கொண் டாவது மாற்றுங்கள், கறுப்பு நிறத்தைத் தவிர்ந்து கொள்
ளுங்கள்” என்று கூறினார்கள்.
(முஸ்லிம்) ஹன்பலி, மாலிக் மத்ஹபுகளைச் சார்ந்த புகஹாக்களும் ஷாபி, ஹனபி மத்ஹபின் சில புகஹாக்களும் இது மக்ரூ ஹானது என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். இவர்களும் மேற்குறிப்பிட்ட ஹதீஸையே ஆதாரமாக முன்வைத்து கறுப்பு நிறத்தைத் தவிர்ந்து கொள்ளுங்கள், என்பது ஹராத்தைச் சுட்டிக்காட்டாது; மாற்றமாக அது மக்ரூ ஹையே நாடிநிற்கின்றது என்கின்றனர். ஸஹாபாக்கள், தாபிஈன்களில் சிலரும் கறுப்பு நிறத்தால் நரைத்த முடிகளை மாற்றக்கூடியவர்களாக இருந்தார்கள் என இமாம் இப்னுல் கையிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் குறிப் பிடுகின்றார்கள்.
கேள்வி: கடமையான குளிப்புக்கு விஷேடமான
முறைகள் ஏதும் இருக்கின்றனவா?
பதில்: கடமையன குளிப்பை நிறைவேற்றுகின்றபோது இரு நிபந்தனைகள் பேணப்பட வேண்டும். அப்போதுதான்
அந்தக் கடமை நிறைவேறும்.
01. கடமையான குளிப்பை குளிக்கின்றேன் என்ற நிய்யத் (எண்ணம்) இருத்தல்
02. உடல் முழுவதும் நீரினால் கழுவப்படுதல் இருப்பினும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல் லம்) அவர்கள் கடமையான குளிப்பை குளிப்பதற்கு ஒரு விஷேடமான வழிமுறையொன்றையும் காட்டித் தந்துள்ளார்கள்.
01. முதலில் இரு கைகளையும் கழுவுதல் 02. வுழுச் செய்தல்
03. தலை முடியின் அடிப்பாகத்தை நீரினால் நனைத்தல்
(55ஆம் பக்கம் பார்க்க)
14 ஜூ. அல்ஊலா: 1435

Page 48
46
நூல் அறிமுகம்
மெளலவிய
கள்ள கவாயில் காம் இர்பா
- A W}42: AATH 4 kticR4 Ay
படம் பார். அwikhார் கில் NEWEHE:44. தாகங்ககப144. அதர்
01. நவீன முறையில்
நமது நாட்டின் கலைத் திட்டத்தில் க.பொ.த சாதாரண தேர்வுக்கு கணிதம் கட்டாய பாடமாகும். இப் பரீட்சையில் கணித பாடத்தில் சித்தியடைர் தால் மட்டுமே உயர்தர வகுப்
போG படி 1
புக்களில் கல்வியைத் தொடர முடியும். ஆனால், கணித பாடத்தில் நம் மாணவர்களின் சித்தி வீதம் திருப்திகரமான தாக இல்லை. பதினொருவருடங்கள் பாடசாலைக்கல்வியைப் பூர்த்தி செய்த மாணவர்களில் ஏறத்தாள அரைவாசியினர் கணித பாடத்தில் சித்தியடையாமையினால் உயர்தரப் பிரிவில் கல்வி கற்கும் வாய்ப்பை இழக்கின்றனர். இவ்வாறு பெருந்தொகையானோர் க.பொ.த. சாதாரண தரப் பரீட் சையில் கணித பாடத்தில் சித்தியடையாமைக்குப் பிரதான காரணம், அவர்கள் ஆரம்ப வகுப்புக்களில் அடிப்படையான கணித அறிவைப் பெற்றிராமையே என ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.
ஆரம்ப வகுப்புக்களில் மாணவரிடம் அடிப்படைச் கணித அறிவு முறையாக ஏற்படுத்தப்படாமையே இடை நிலைப்பிரிவில் அவர்கள் கணித பாடத்தில் பலவீனர்களாக இருக்கக் காரணம் என கணித மதிப்பீட்டு ஆய்வு சுட்டிச் காட்டுகிறது. இதன் மூலம் கணிதப் பாடத்தில், அடிப்படை அறிவையும் அடிப்படைத் தேர்ச்சிகளையும் மாணவா. பெற்றிருக்க வேண்டும் என்பது உணர்த்தப்பட்டது.
கடந்த இரு தசாப்தங்களாக ஆரம்ப வகுப்புக்கான கணித பாடக் கலைத்திட்டத்தில் பாரிய மாற்றங்கள் ஏற்பு டுத்தப்பட்டுள்ளன. வர்ணமயமான பாடநூல்கள், செயற் பாட்டுக்கான வழிவகைகள், கணித பாடத்துக்கான தனியான வழிகாட்டல்கள் என்பன வெளிப்படையான மாற்றங்களாக உள்ளன. இவற்றை விட ஆரம்ப வகுப்புக்களில் கணிதப் கற்பிக்கும்முறையில்கூடமாற்றங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன
இவற்றுக்கெல்லாம் ஈடுகொடுக்கும் வண்ணம், "நவீன முறையில் கணிதம் கற்போம்” எனும் இந்த வழிகாட்டி நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. சிறுவர் விரும்பிச் செயற்படும் வகையிலான செயற்பாடுகளும் வர்ணத்துடனமைந்து கணிதத்துக்கான உருக்களும் மாணவர்களைக் கவருப் தன்மையில் அமைந்துள்ளன. இது மாணவருக் கும் ஆசிர் யருக்கும் மட்டுமன்றி, பெற்றோருக்கும் மகிழ்ச்சியைத்தருப் எனலாம்.
நவீன முறையில் கணிதம் கற்போம் என்ற செயற்பாட்டு வழிகாட்டி நூலின் ஆசிரியர் மௌலவியா ஹிதாயா!
அல்ஹஸனாத் மார்ச்:

ா ஹிதாயா இப்றாஹீமின்
இருநூல்கள் கணிதம் கற்போம்
இப்றாஹீம் அவர்கள் எட்டு வருடங்களுக்கு மேலாக பாலர் பாடசாலையொன்றை நடத்தி அனுபவம் பெற்றவர். சிறுவர் சிறுமியரின் மனப்போக்குகளையும் எண் ணங்கள், தேவைகளையும் நன்கு உணர்ந்தவர். இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் முன்பள்ளிக் கல்வி நிகழ்ச்சித் திட்டத் தராதரப் பத்திர வகுப்பில் பயிற்சி பெற்றவர். ஆசிரியரின் கணிதம் கற்போம் எனும் இந்நூல் பயன் தரும் ஒன்றாகும். ஆசிரியரின் இந்த முயற்சி பாராட் டத் தக்கது.
அல்ஹாஜ், எம். வை. எம். முஸ்லிம் B.A, PGDE, PGDM, SLEAS 1, ஒய்வுநிலைக் கல்விப் பணிப்பாளர்
02. நவீன முறையில் தமிழ் மொழி கற்போம்
பிள்ளைகள் தம் வீடுகளிலேயே தாய் மொழியில் போதிய தேர்ச்சி பெறுகின்றார்கள். கேட்டலும் பேசுத லுமே மொழியின் ஆரம்பத்திறன்க ளாகும். ஒரு பிள்ளை முன்பள்ளிக் குச் செல்ல முன்னரே இவ்விரண்டி லும் போதிய திறனை வெளிப்படுத்து வர். நூற்கல்வியை எட்டாதவர்கள்
கூடசராசரியாக வாழ்வதற்கு கேட்டல் மற்றும் பேச்சுத் திறன்கள் போதுமானது. ஆரம்பப் பாட சாலை அல்லது முன்பிள்ளைப் பருவவிருத்திநிலையங்கள் செய்வதெல்லாம் பிள்ளைகளிடம் விருத்தி நிலையைத் தூண்டி மொழியறிவுக்கு வடிவம் வழங்குவதாகும்.
மொழி எண்ணக்கருவின் விருத்தி பட வாசிப்பில் இருந்து ஆரம்பமாகிறது. வீட்டுச் சூழலில் உள்வாங்கிய பேச்சு மொழிக்கானவரிவடிவத்தைவகுப்பறைகளில்பெறுகின்றனர். இவ்வாறு வழங்கப்படும் வரி வடிவ அனுபவங்கள் ஆரோக் கியமாக, மகிழ்ச்சிகரமாக, பிள்ளைநேயச் செயற்பாடாக இருப்பது முக்கியம். அந்த வகையில் மௌலவியாஹிதாயா இப்றாஹீம் அவர்கள் ஆரம்ப மொழி எண்ணக்கரு கற்றல், கற்பித்தலுக்கு உதவும் ஒரு நூலைத் தயார் செய்திருப்பது விரும்பத்தக்கதாகும். வீட்டுச் சூழலிலும் பாடசாலைச் சூழலி லும் தொடர்ந்து வழங்கப்படும் பயிற்சிகளே மொழி எண் ணக்கரு விருத்தியின் அடிப்படையாக அமையும். இந்நூ லில் உள்ள பொருத்தமான பயிற்சிகளைப் பிள்ளைகள் செய்து பார்க்க உதவி செய்வதன் மூலம் பெற்றோரும் ஆசிரியரும் இதில் பங்களிப்புச் செய்யலாம்.
எம்.எச்.எம். ஹஸன் (னி.சி) முன்னாள் பிரதம செயற்திட்ட அதிகாரி,
தேசிய கல்வி நிறுவகம்
2014 |. அல்ஊலா: 1435.

Page 49
141. 3itiis ப TH
த்ரிக சாதரன் Sahih Al-Bukhan
(anth கான்
பி
மீரா
பாமர இலை 18
எ
உஹுத் போராட்டம் இராணுவ ரீதியில் தோல்வி யென்று இருந்தாலும் இன்னொரு வகையில் அது மிக மோசமானதொரு தோல்வி என்பதில் ஐயமில்லை.
சத்தியத்தை சுமந்த முஸ்லிம்கள் ஏன் தோற்றார்கள்...? -அவர்கள் அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் செய்த தவறுக்கான பெறுமதியை செலுத்த வேண்டும்.
-அல்லாஹ்வின் உதவி, வெற்றி அற்புதமாகவன்றி காரண காரியங்களுடனும் செயற்பாட்டுடனுமே இணைந்துள்ளது என்பதை அறிய வேண்டும்.)
A ndh 1
“செயற்பாடற்ற துஆவும் வேண்டாம். தவக்குலற்ற செயற்பாடும் வேண்டாம்.”
உஹுத் போராட்டமுடிவில் முஸ்லிம்களில் எழுபது பேர்ஷஹீதாக்கப்பட்டார்கள். நாற்பது பேர் தமது தவறை உணர்ந்து வருந்தினார்கள். முனாபிக்கள் தமக்கு மத்தியில் சந்தோசப் பெருமூச்சுவிட்டு அலைந்து திரிந்தார்கள். இந்த யுத்தத்தின் விளைவு...?
- மதீனாவுக்கு வெளியே குறைஷிகள் பெரும் பலத் துடன் வீற்றிருந்தனர். அபூஸுப்யான்"எமக்கு அவர்களை பூண்டோடு அழிக்க முடியுமாக இருந்தும் ஏன் அப்படிச்
செய்யவில்லை" எனக் கேள்வி எழுப்பினான்.
| 9 )
m)0 II
25 NN இ - 25 ஓது
( -மதீனாவினுள்ளே யூதர்கள் முஸ்லிம்களுடனான உடன்படிக்கைகளை முறித்துக் கொண்டு குறைஷிகளு டன் உடன்படிக்கை செய்து கொண்டு முஸ்லிம்களை பலவீனப்படுத்த முயற்சித்தனர்.
"அல்லாஹ்வின் தூதர் எம்மோடு இருக்க எமக்குத் தோல்வியா?"
“ஷரா செய்யத் தகுதியற்றவர்கள் நீங்கள்..?”
n s is - (0)
ஹிஜ்ரி 4 நிகழ்வுகளும் 6ே.
-2 பட ட (
அல்ஹஸனாத் மார்ச்: 2014

ஸீரதுந் நபி
- அரபு லேம்: அமா .."
அரபு முலம்: அம்ர் காலித் தமிழில்: அஷ்கர் அரூஸ் (நளீமி)
தொடர்- 19
பிகளாரின் ரவிலிருந்து 9%
“மலக்குமார்கள் எங்கே?'
அல்குர்ஆன் இத்தகைய கேள்விகளுக்கு தெளிவான பிளக்கத்தை உடனுக்குடன் இறக்கி முஸ்லிம்களின் நம்பிக்கையை பலப்படுத்தியது. ஷராவும் தவக்குலும் இன்றியமையாதவை; வெற்றியைக் கொண்டு வருபவன் அல்லாஹ்வன்றி மலக்குகளல்ல; வெற்றி, தோல்வி மாறி மாறி வரக்கூடியது; அல்லாஹ்வின் தூதர் இரக்க தயாளம் கொண்டவர்; மன்னிக்கக்கூடியவர்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் கவலைப்பட வேண்டாம்; அதைரியப்பட வேண்டாம். நீங்களே உயர்ந்தவர்கள் என (ஆலு இம்ரான்: 26,139,141,159, நிஸா: 104) அல்குர்ஆன் முஸ்லிம்களை தைரியப்படுத்தியது. ப உடனே நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உஹதில் கலந்து கொண்ட தோழர்களை மாத் திரம் அழைத்துக் கொண்டு மதீனாவுக்கு வெளியே உள்ள குறைஷிப் படையை சந்திக்கப் புறப்பட்டார்கள். அவர்க ளில் காயப்பட்டோரையும் சுமந்து கொண்டு முஸ்லிம்கள் ஓய்வின்றி 'ஹம்ராஉல் அஸத்' எனும் இடத்தைச் சென்ற டைந்தார்கள். அப்போது குறைஷியர்கள் தமது பலத்தை முஹம்மதின் படையினருக்கு அறியப்படுத்தி அவர்களை மானசீகமாக தோல்வியுறச்செய்ய ஒரு வழிமுறையைக் கையாண்டனர். அங்கே அப்துல் கைஸ் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பிரயாணக் கூட்டம் மதீனாவை நோக்கி சென்று கொண்டிருந்தது. அவர்களிடம் அபூஸுபியான் "நான் கூறும் செய்தியை என் சார்பாக நீங்கள் முஹம்ம துக்கு எத்தி வைப்பீர்களானால் நீங்கள் மக்கா வரும்போது உக்காழ்' சந்தையில் ஒட்டகம் சுமக்குமளவு காய்ந்த திராட்சையை நான் உங்களுக்கு அன்பளிப்புச் செய்வேன்” எனக்கூறினான். அதற்கு அவர்கள் “ஆம்” என பதிலளித்தார் கள். அப்போது அபூஸுபியான் "முஹம்மதையும்
ஆம் வருட சாதனைகளும்
|ஜூ. அல்லா: 1435,

Page 50
ஸீரதுந் நபி
அவரது தோழர்களையும் நாம் பூண்டோடழிக்க முழு பலத்தையும் திட்டி வருகின்றோம் என்ற செய்தியை முஹம்மதுக்கு எத்தி வையுங்கள்” எனக் கூறினான். அ. வாறே அக்கூட்டத்தினர் நபியவர்களிடம் வந்து இச்செ தியை எத்தி வைத்தார்கள். அப்போது நபியவர்கள் “அ லாஹ்வே எமக்குப் போதுமானவன்; அவனே சிறந்த பாடி காவலன்” என இப்றாஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் நெருப்பில் வீசப்பட்டபோது கூறிய வார்த்தைகளை மொழிந்தார்கள்.
( (அல்புகாரி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இஸ்லாத்தை ஏற்று மறைத்து வாழ்ந்து வந்த மஃப இப்னு அபீ மஃபத் எனும் தோழரை குறைஷிகளிட! அனுப்பி வைக்கின்றார். அவர் அபூஸுபியானை சந்தித்து “அபூஸுபியானே! முஹம்மத் தனது தோழர்கள் அனை ரையும் அழைத்துக் கொண்டு மதீனாவிலிருந்து உங்களை தேடிப் புறப்பட்டுள்ளார்கள். நான் இதுவரை அத்தகை தொரு இராணுவப் படையைக் கண்டதில்லை. அவர்கள்
உம்மீது கொண்டுள்ள கே பத்தால் நெருப்பாய் எரிய பார்க்கிறார்கள்” எனக் கூறி
னார். இது அபூஸுபியானி “நான் ஹபைபை
உள்ளத்தில் ஓர் அச்சத்தை விட ஒரு சிறந்த
ஏற்படுத்தியது. அபூஸL கைதியை கண்டதே
யானின் படைமுஸ்லிம்கலை இல்லை.
சந்திக்கும் தீர்மானத்தை :ை 'அல்லாஹ்வின் மீது
விட்டுவிட்டு மக்காவுக்கு; 'ஆணையாக ஒரு
திரும்பியது. நாள் அவர் திராட்சைக்
“யுத்தம் என்பது தந்தது குலையொன்றை
ரோபாயம். உளவியல் வெ கையில் வைத்து
றியே அதன் முதல் வெற்ற சாப்பிட்டுக்
யோகும்” கொண்டிருப்பதைக்
மூன்று பெரும் மோசடிகள் கண்டேன். அவரோ
1. மதீனாவுக்கு அண்டை இரும்புச்
யில் வாழ்ந்த ஒரு கோத்திர சங்கிலியால்
தார் நபி (ஸல்லல்லாஹ கட்டப்பட்டிருந்தார்.
அலைஹி வஸல்லம்) அவ மக்காவிலே
களிடம் வந்து தமக்கு இல் திராட்சை
லாத்தைக் கற்றுத் தர முன் வகையேதும்
லிம்களில் படித்த தூதுவ இருக்கவில்லை.
களை அனுப்புமாறு உத நிச்சயமாக அது
வேண்டினார்கள். நபி (ஸல் அல்லாஹ்
லல்லாஹு அலைஹி வஸ6 ஹபைபுக்கு
லம்) அவர்கள் மர்ஸத், அ வழங்கிய
துல்லாஹ் பின் தாரிக், ஸைத் ரிஸ்காகவே இருக்க
ஆஸிம், ஹூபைப் (ரழிய வேண்டும்.
லாஹூ அன்ஹூம்) போன்,
-அல்ஹஸனாத் மார்ச்:

91
19 5. பி. 2.
மு.
ய ள்
அ' !
தலைசிறந்த ஸஹாபாக்கள் ஆறு பேரை அனுப்பி வைத்தார்கள். அக்கோத்திரத்தார் இவர்களைப் பிடித்து குறைஷிகளுக்கு விற்கும் நோக்கிலேயே இத்தகு தந்தி ரோபாய சூழ்ச்சியை மேற்கொண்டனர்.
இவர்களுள் ஹுபைப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் பத்ர் போரில் ஹாரிஸ் பின் ஆமிர் என்பவ ரைக் கொலை செய்திருந்தார். இதனால் இவரை ஹாரி ஸின் குடும்பத்தினர் வாங்கி வீட்டில் அடைத்து வைத் திருந்தனர். ஹாரிஸின் மகள் மாவியா (பின்னர் இப்பெண் இஸ்லாத்தை தழுவியவர்) கூறுகின்றார்:
| "நான் ஹுபைபை விட ஒரு சிறந்த கைதியை கண் டதே இல்லை. அல்லாஹ்வின் மீது ஆணையாக ஒரு நாள் அவர் திராட்சைக் குலையொன்றை கையில் வைத்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டேன். அவரோ இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தார். மக்காவிலே திராட்சை வகையேதும் இருக்கவில்லை. நிச்சயமாக அது அல்லாஹ் ஹுபைபுக்கு வழங்கிய ரிஸ்காகவே இருக்க வேண்டும். அவரைக் கொலை செய்வதற்கான நேரம் நெருங்கியபோது தனது மீசையை கத்தரித்து கமுக்கட்டு முடிகளை நீக்கவும் நகம் வெட்டு வதற்காகவும் ஒரு சவரக் கத்தியை கேட்டுப் பெற்றுக் கொண்டார். எனது சிறிய மகன் ஹுபைபுடன் நெருங் கிப் பழகுபவனாகவும் ஹுபைப் அவனை தனது மடியில் வைத்துக் கொண்டு விளையாடுபவராகவும் இருந்தார். சவரக் கத்தியுடன் இருக்கும் ஹபைபுடன் எனது மகன் இருப்பதை நினைத்து பயந்து கொண்டு ஓடிவந்தேன் “அப்போது ஹபைப் நான் இந்தச் சிறு வனைக் கொலைசெய்து விடுவேன் என அஞ்சுகின் றீரா..! நான் அவனைக் கொலை செய்ய மாட்டேன். நான் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் தோழர். மகனே! நீ உனது தாயிடம் செல்...!" எனக் கூறினார்.
- பழிக்குப் பழி கடமையானவர்களை பழி வாங்க மார்க்கம் அனுமதிக்கிறது. அப்பாவி மக்களை தண்டிக் கக்கூடாது. அவர்கள் என்ன தவறு செய்தார்கள்?! - 2. 'அழ்ல் வகாரா' கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து தமக்கு மார்க்கத்தைப் போதிக்கும் தோழர்களை அனுப்பி வைக்குமாறு வேண்டினார்கள். நபியவர்கள் 70 தோழர்களை அனுப்பி வத்ைதார்கள். இவர்களில் அம்ர் இப்னு உமையா என்பவரைத் தவிர ஏனையோரை அவர்கள் கொலைசெய்து அல்லாஹ்வின் தூதருக்கு மோசடி செய்தார்கள். அல்லாஹ்வின் தூதர் இவர்க ளுக்கு எதிராக ஒரு மாத காலம் துஆ வேண்டினார்கள். அப்போது,
"நபியே நீர் அவர்களுக்கு எதிராக பிரார்த்திக்க, அவர் களுக்கு தண்டனை வழங்க உமக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. அவர்கள் அநியாயக்காரர்கள்” (ஆலு இம்ரான்:
128) எனும் வசனம் இறங்கியதுடன் நபியவர்கள் ற பிரார்த்திப்பதை விட்டுவிட்டார்கள்.
YT
S•
தி
பி
a • P "E" . ெச '- 6
e C'
.18 .
2014 ஜூ. அல்ஊலா: 1435

Page 51
3. முஸ்லிம்களில் தவறுதலாக கொலைசெய்யப்பட்ட இருவருக்காக நஷ்டஈடு கோரி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் யூத பனூ நளீர் கோத்திரத்தாரிடம் சென்றிருந்தவேளை அவர்கள் நபியவர்களின் மீது ஒரு பாறாங் கல்லைப் போட்டு கொலை செய்யத் திட்டம் தீட்டினார்கள். இதனை ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் மூலம் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அறிந்து உடனே அவ்விடத்திலிருந்து வெளி யேறினார்கள். பின்னர், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பனூ நளீர் கோத்திரத்தாருக்கு ஒரு மாத காலம் அவகாசம் கொடுத்து தமது ஒட்டகம் சுமக் குமளவு செல்வத்தையும் சுமந்து கொண்டு மதீனாவிலி ருந்து வெளியேறுமாறு பணிப்புரை விடுத்தார்கள்.
ஆனாலும் நயவஞ்சகன் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸலூலின் தலையீட்டால் யூதர்கள் புறப்படவில் லை. உடனே நபியவர்கள் இவர்களைத் தொடர்ந்து 15 நாட்களாக முற்றுகையிட்ட பின் அவர்கள் மதீனாவை விட்டு வெளியேறுவதாக முடிவுக்கு வந்தனர். இந்நிலை யில்தான் மது ஹராமாக்கப்பட்ட வசனம் அருளப்பட்டது. நபித் தோழர்கள் எவ்வித தாமதமுமின்றி "இதோ எனது இரட்சகனே! நாம் மதுவைதவிர்ந்து கொண்டோம்” எனக் கூறி விலகிக் கொண்டார்கள். மதீனத்து வீதிகளில் மழை பொழிந்ததைப் போல் மது வழிந்து ஓடியது.
பின்னர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் 700 தோழர்களை அழைத்துக் கொண்டு பலவீ னமான சில கோத்திரங்கள் ஒன்றுசேர்ந்து தமக்கு சதிசெய்ய முனைவதைத் தடுக்கப் புறப்பட்டார்கள். இது தாதுர்ரிகா' என அழைக்கப்படுகின்றது. அபூ மூஸா அஷ் அரி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நாங்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் இப்போருக்காகப் புறப்பட்டோம். ஓர் ஒட்டகத்தில் 6 பேர் விகிதம் மாறி மாறி பயணித்தோம். எமது பாதங்கள் வெடித்து விட்டன. எனது பாதங்களும் வெடித்து விட்டன. எமது நகங்கள் விழுந்து விட்டன. நாம் துணிகளைக் கொண்டு எமது கால்களை சுற்றிக் கொண் டோம். இதனாலே இப்போருக்கு 'தாதுர்ரிகா' என பெயர் சூட்டப்பட்டது.
இந்த யுத்தத்தின்போது நபித் தோழர்கள் ஓய்வெடுத்துக் கொள்ள அவகாசம் வழங்கப்பட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மரத்தின் கீழ் இளைப்பாறினர். நபி (ஸல்லல் லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு மரக்கிளையில் தனது வாளை தொங்கவிட்ட நிலையில் இளைப்பாறி னார்கள். அப்போது ஒரு நாட்டுப்புற அரபி நபி (ஸல்லல் லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களின் வாளை எடுத்து உருவி நிலையில் "என்னிடமிருந்து உம்மைக் காப்பாற் றுபவன் யார்?” என வினவினார். அதற்கு “அல்லாஹ்”
அல்ஹஸனாத் மார்ச்: 2011

ஸீரதுந் நபி
என நபியவர்கள் பதிலளித்தார்கள். அவனது கையிலிருந்து வாள்கீழே விழுந்தது. அதனை எடுத்து நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் “இப்பொழுது உன்னை என்னிடமிருந்து காப்பாற்றுபவர் யார்?” என வினவினார்கள். அதற்கு அவன் “வாளை எடுத்தவர்களில் மிகச் சிறந்தவர் நீங்கள்?” எனப் பதிலளித்தான். உடனே நபியவர்கள் ஷஹாதா கலிமாவை மொழியுமாறு வேண்டினார்கள். "இல்லை, இதன்பின் உங்களுடன் போரிடமாட்டேன்; உங்களோடு போரிடுபவர்களுடன் கூட்டுச் சேர மாட்டேன்'' என வாக்களித்தான். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் அவனை விட்டுவிட்டார்கள். அப்போது அந்த அரபி தனது சமூகத்தாரிடம் சென்று "நான் மிகச் சிறந்த மனிதனிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன்” எனக்கூறினான்.
யுத்தம் நிறைவுற்று திரும்பும் பாதையில் நபி (ஸல் லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஜாபிர் (ரழி யல்லாஹு அன்ஹு) அவர்களுடன் உரையாடிக்கொண்டு மீண்டு கொண்டிருந்தார்கள். ஜாபிர் (ரழியல்லாஹு
அன்ஹு) அவர்கள் தனது ஒட்டகத்தின் பலவீன நிலையைக் கூறிக் கொண்டிருந்தார். இதனூடாக அவரது நிலைமையை நபியவர்கள் புரிந்து கொண்டார்கள்.
''ஜாபிர் நீர் திருமணம் முடித்து விட்டீரா?" "ஆம், யா! ரஸுலல்லாஹ்!''
“கன்னியையா....? விதவையையா...?"
“ஒரு விதவையை முடித்துள்ளேன் யாரஸுலல்லாஹ்.”
"நீர் ஒரு கன்னிப் பெண்ணை முடித்திருந்தால் கொஞ்சி விளையாடலாம் அல்லவா?"
"எனக்கு ஒன்பது சகோதரிகளை விட்டு விட்டு எனது தந்தை மரணித்து விட்டார். இவர்களை பராமரிப்பதில் அவள் எனக்கு உதவக் கூடுமல்லவா..!!"
- "தற்போது உனது வருகையை உனது மனைவிக்கு அறிவித்து விட்டீரா? அவள் உனக்காக தலையணைகளை தயார் செய்து வைத்திருப்பாள்.”
"அல்லாஹ்வின் தூதரே எம்மிடம் தலையணையும் இல்லை.''
"ஜாபிர்! உனக்குக் கிடைக்கும்.''
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தனது படையை நிறுத்தி ஜாபிரின் வருகையை அவரது
குடும்பத்துக்கு எத்தி வைக்கச் செய்தார். பின்னர் நபி (ஸல் லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஜாபிரின் சுயகௌரவத்தில் எவ்வித தாக்கமும் ஏற்படாத வகையில்
அவருக்கு உதவ முன்வந்தார்.
"ஜாபிர்! உமது ஒட்டகத்தை விற்கிறீரா?''
"அது விற்கத் தகுந்ததல்ல யா ரஸுலல்லாஹ்”
(54ஆம் பக்கம் பார்க்க)
4 ஜூ. அல்ஊலா: 1435.

Page 52
பரஸ்பரம்
விதி பற்றிய இள்
மலையாள மூலம்: ஷெய்க் முஹம்மத்
இறைவனைப் பற்றிய விடயங்கள்
ஒவ்வொருவ அதிபெளதிகமான வையும் (Superna tural) மனித விவேகத்திற்கும் சிந்த
வழங்கப்பட்ட னைக்கும் அப்பாற்பட்டவையும் ஆகும்.
அமைந்ததாகு இதற்குக் காரணம், மனித அறிவும் சிந் நிறைவேற்றி தனையும் ஐந்து புலன்களுக்குள் மட்டுப்
னுக்குரிய தல பட்டிருப்பதாகும்.
(கடந்த இதழ் தொடர்ச்சி) இஸ்லாத்தின் கண்ணோட்டத்தின்படி மனிதன் முற்று முழுதாக சுதந்திரம் வழங்கப் பட்டவனோ அல்லது முற்று முழுதாக விதியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட வனோ அல்ல. ஆயினும், அவனுக்கு வழங்கப்பட்டுள்ள செயற் சுதந்திரத்தின் மூலமே தனது வழியைத் தெரிவு செய்து கொள்கிறான். அப்படியானால் மனிதனின் தீர்மா னங்களும் செயற்பாடுகளும் இறைவனின் அறிவுக்கும் நாட்டத்திற்கும் உட்படுவதில்லையா? மனிதனின் தெரி வுச் சுதந்திரத்தையும் இறைவனின் நாட்டத்தையும் தொடர்புபடுத்தும் விடயம் எது? அது எவ்வாறு தொடர் புபடுகின்றது? முதலான வினாக்கள் எழ முடியும். ஆனால், மனிதன் தனது இயலாமையின் எல்லைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தப் பிரமாண்டமான பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் ஒரு கிரகமே புவியாகும். பல மில்லியன் கணக்கில் அமைந்த படைப்பினங்களில் ஒருவனே மனிதன். எனவே, தன்னைப் பற்றிய முழு அறிவையும் பெற்றுக் கொள்வது மனிதனுக்கு சாத்தியமே இல்லை. மனித வாழ்வு, விவேகம், ஆத்மா போன்ற இன்ன பிற விடயங்களைக் குறித்த மிகச் சரியான திட்டவட்டமான அறிவைப் பெற்ற எவரும் கிடையாது. கிரகங்கள், பூமி, பிரபஞ்சம் போன்றவை பற்றிய அறிவு மிகவும் வரையறுக்கப்பட்டதாகும். இவை குறித்து மனிதன் பெற்றுள்ள அறிவு பெரிய ஒரு சமுத் திரத்தில் ஒரு துளிக்கும் சமமானதல்ல. எமது அறிவு அந்தளவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஒன்று. எனவே, பிர பஞ்சத்தின் சிருஷ்டிகர்த்தாவான இறைவனைப் பற்றியும் அவனது செயற்பாடு பற்றியும் பூரண அறிவைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவது அர்த்தமற்ற ஒன்றாகும்.
இறைவனைப் பற்றிய விடயங்கள் அதிபௌதிகமான வையும் (Supernatural) மனித விவேகத்திற்கும் சிந்த
-அல்ஹஸனாத் மார்ச்:

லாமியக் கண்ணோட்டம்
காரக்குன்னு > தமிழில்: ஜே. இஸ்ஹாக்
நடையதும் கடமைப்பாடு அவருக்கு இறைவனால் சுதந்திரத்தினதும் ஆற்றலினதும் அடிப்படையில் தம். இந்தக் கடமைப்பாடுகளை ஒருவன் எந்தளவுக்கு புள்ளான் என்பதைப் பொறுத்தே மறுமையில் அவ சுடனையோவெகுமதியோ நிர்ணயிக்கப்படவுள்ளது.
னைக்கும் அப்பாற்பட்டவையும் ஆகும். இதற்குக் காரணம், மனித அறிவும் சிந்தனையும் ஐந்து புலன்களுக் குள் மட்டுப்பட்டிருப்பதாகும். இவ்விடயங்களை இறை வன் தனது தூதர்கள் மூலமாக அறிவித்துக் கொடுத்திருந் தாலே தவிர, வேறு எந்த வகையிலும் யாராலும் அறிந்து கொள்ள முடியாது. இவ்வாறே மனிதர்களின் விதியையும் இறைவனின் நாட்டத்தையும் இறைவழிகாட்டல் மூலம் அறிவித்துக் கொடுக்கப்பட்டிருந்தாலே தவிர, அறிந்து கொள்ள முடியாது. இறைவனால் அனுப்பப்பட்ட வேதங்களின் வழிகாட்டல்கள் மூலம் மனிதன் உட்பட வுள்ள முழு பிரபஞ்சம் குறித்த அறிவை நாங்கள் பெற்றுக் கொள்கின்றோம். அதேவேளை, மனிதர்களுக்கு சொந் தமாக தீர்மானம் மேற்கொள்ளவும் அதற்கேற்ப வாழவும் சுதந்திரம் வழங்கியிருக்கின்றான்.
இந்த சுதந்திரம் எல்லையற்றதோ அல்லது கட்டுப்ப டுத்த முடியாததோ அல்ல. வாழ்க்கையில் வெற்றியும் மறுமையில் ஈடேற்றமும் அல்லாஹ் காட்டிய பாதையில் சரியாக வாழ்க்கையை நடத்தியவர்களுக்கு வழங்கப்படும். அதேபோல் அல்லாஹ்வுக்கு மாற்றமாக நடக்கவும் மனி தனுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாற் றமாக நடப்பவர்கள் வாழ்க்கையில் தோல்வி அடைவார் கள் என்றும் மறுமையில் தண்டனைக்கு உட்படுவார்கள் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
சுருக்கமாகச் சொல்வதாயின், ஒவ்வொருவருடையதும் கடமைப்பாடு அவருக்கு இறைவனால் வழங்கப்பட்ட சுதந்திரத்தினதும் ஆற்றலினதும் அடிப்படையில் அமைந் ததாகும். இந்தக் கடமைப்பாடுகளை ஒருவன் எந்தளவுக்கு நிறைவேற்றியுள்ளான் என்பதைப் பொறுத்தே மறுமை யில் அவனுக்குரிய தண்டனையோ வெகுமதியோ நிர் ணயிக்கப்படவுள்ளது. எனவே, எமது சுவர்க்கத்தையும் நரகத்தையும் நாமே தேடிக் கொள்கின்றோம். ஒருவனது தெரிவிலேயே அவனது சுவர்க்கமும் நரகமும் அமைந் துள்ளது. எனவே, எவருக்கும் அநீதியிழைக்கப் படுவதில்லை!
2014 ஜூ. அல்ஊலா: 1435

Page 53
விதியை நம்புவதனால் சாந்தியடையும் மனித உள்ளங்கள்
செயல்கள் எதிர்பார்த்த பலனை பல சந்தர்ப்பங்களில் தருவதில்லை. வியாபாரி எப்போதும் இலாபத்தையே ஆதரவு வைக்கின்றான். ஆயினும், சிலவேளைகளில் நஷ் டத்தைச் சந்திக்கின்றான். பாடுபட்டு நிலத்தை உழுது பயிர்செய்த விவசாயி பல சந்தர்ப்பங்களில் நல்ல அறுவ டைக்குப் பதிலாக நஷ்டத்தைப் பெற்றுக் கொள்கின்றான். எமது அறிவுக்கும் அனுபவத்துக்கும் உட்பட்ட விதத் தில் எமது ஆற்றல்களையும் வளங்களையும் பயன்படுத்தி நன்கு திட்டமிட்டு கணக்கிட்டு நாம் கருமங்களில் ஈடுப டுகின்றோம். அற்ப நேரத்துக்குள் எமது அனைத்து முயற் சிகளும் வீணாகிப் போவதோடு எமது எதிர்பார்ப்புக்களும் கனவுகளும் கானலாகி மறைந்துவிடும் பல சந்தர்ப்பங்கள் உண்டு. இவ்வாறு தீங்குகள் ஏற்படும் நிலை இருந்தும் கூட நாம் எதுவும் செய்யாது வாளாவிருப்பதில்லை. முயற்சியைக் கைவிட்டு விடுவதில்லை. முடங்கிவிடாது வெற்றி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் கரும் மாற்றுகின்றனர். எல்லா எதிர்பார்ப்புக்களும் நிறைவேறு வதில்லை. ஆயினும், எதிர்பார்ப்புக்களை வைத்துக் கொள்வதில் யாரும் பின்வாங்குவதில்லை. மனிதன், தான் நினைத்ததை எல்லா சந்தர்ப்பங்களிலும் அப்படியே அடைந்து கொள்வதில்லை. ஆயினும், இறைவன் அவனுக்கு விதித்ததையே பெற்றுக் கொள்கின்றான்.
"வானங்களிலும் பூமியிலும் உள்ள கருவூலங்களின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. தான் நாடுகின்ற வர்களுக்குத் தாராளமாக வாழ்வாதாரம் வழங்குகின்றான். நாடுகின்றவர்களுக்கு குறைத்தும் கொடுக்கின்றான். திண்ணமாக அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவன்
ஆவான். "
(42: 12)
''நீங்கள் விதைக்கின்ற இந்த விதையைப் பற்றி எப்போ தாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? இதன் மூலம் பயிர்களை நீங்கள் விளைவிக்கின்றீர்களா? அல்லது நாம் விளைவிக் கின்றோமா? நாம் நாடினால் இவற்றைப் பதர்களாக ஆக்கி விட்டிருப்போம். அப்போது நீங்கள் ஆச்சரியப்படுவோராய் ஆகிவிடுவீர்கள். நிச்சமாக நாங்கள் கடன்பட்டவர்களாகி (தண்டிக்கப்பட்டு விட்டோம். இல்லை, நாங்கள் (பயிரை அடைவதிலிருந்து) தடுக்கப்பட்டு விட்டோம் ' (என்றும் கூறிக்கொண்டிருப்பீர்கள்)'
(56: 63-67)
நாங்கள் முற்றிலும் எமது மரணத்தைக் குறித்து அறி யாதிருக்கின்றோம். அதன் நேரம், நடக்கும் இடம், எந்த முறையில் மரணம் எம்மை வந்தடையப்போகின்றது போன்ற விவகாரங்கள் குறித்து எமக்கு எந்த அறிவும் இல்லை. யாராலும் மரணத்திலிருந்து தப்பிக்கவே முடி யாது. வாழ்க்கையின் நீளம் அதிகமானதாக இருப்பினும் குறைவானதாக இருப்பினும் அது முற்றிலும் இறைவ னாலேயே தீர்மானிக்கப்படுகின்றது.
--அல்ஹஸனாத் மார்ச்: 201.

பரஸ்பரம்
"எந்த மனிதனும் அவன் நாளை எதனை சம்பாதிக்கப் போகின்றான் என்பதை அறிவதில்லை. தான் எந்தப் பூமி யில் மரணமடைவோம் என்பதும் எந்த மனிதனுக்கும் தெரி யாது. திண்ணமாக அல்லாஹ்தான் யாவற்றையும் நன்கு அறிபவனாகவும் தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.” (31:34)
"எந்த உயிரினமும் அல்லாஹ்வுடைய உத்தரவின்றி மரணிக்கமுடியாது. மரண நேரம் விதிக்கப்பட்டுவிட்டது.''
(3: 145)
"உண்மையில் உயிரைக் கொடுப்பவனும் உயிரைப் பறிப் பவனும் அல்லாஹ்வே ஆவான்.''
(3: 156)
[ ''நீங்கள் எங்கிருந்தாலும் மரணம் உங்களை அடைந்தே தீரும். நீங்கள் உறுதிமிக்க கோட்டைகளில் இருந்தாலும் சரியே. ''
(4:78)
மனித வாழ்வில் இடம்பெறுகின்ற நன்மைகளும் தீமைகளும் சத்திய வழியும் அசத்திய வழியும் வெற்றியும் தோல்வியும் எல்லாம் இறைவனின் விதிக்கு உட்பட்டே ஏற்படுகின்றன. எமது உலக வாழ்க்கையின் சகல அம்சங் களும் அவனது விதியின்படியே நடைபெறுகின்றன. ஆயினும், இறைவனின் விதிப்படியே எனக்கு உணவு கிடைக்கட்டும் என அதற்காக முயற்சிக்காமல் யாரும் சும்மா இருப்பதில்லை. எமது மரணம் இறைவன் விதித்தபடி நடைபெறும் என்று கருதி யாரும் நோய்வாய்ப்படும் போது நோய்க்கு மருத்துவம் செய்யாமல் இருப்பதில்லை. இறைவன் நாடினால் எனது நோய் குணமாகிவிடும் என்று கூறி யாரும் மருந்து உட்கொள்ளாமல் இருப்பதில்லை இறைவன் விதித்தபடி நடக்கட்டும் என்று கூறி எந்த உணர்வுள்ள மனிதனும் சோம்பேறியாய் மாறுவதும் இல்லை. மாறாக, மிகப் பாரிய முயற்சியை மேற்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெறவே அனைவரும் முனைகி றார்கள். இறைவன் விதித்த விதியை மனித செயற்பாடு களினூடாக விளங்கிக் கொள்ளுமாறு மார்க்கம் கற்றுத் தருகின்றது. பின்வரும் அல்குர்ஆன் வசனங்கள் இதனை எடுத்துக் காட்டுகின்றன.
"அவரவருடைய செயல்களுக்கு ஏற்பவே அவரவரு டைய நிலைகள் இருக்கும். மேலும் அல்லாஹ் அவர்களு டைய செயல்களுக்குரிய கூலியை அவர்களுக்கு பூர்த்தி யாக்கிக் கொடுப்பான். அவர்கள் மீது ஒருபோதும் அநீதி இழைக்கப்பட மாட்டாது.''
(46: 19)
"நற்செயல்கள் புரியுங்கள். நான் நீங்கள் செய்வதனைத் தையும் பார்த்துக் கொண்டிருக்கின்றேன். " (34: 11)
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
“காலையில் எழுந்து தொழுதுவிட்டு உங்கள் உண வுக்காக உழைக்காமல் மீண்டும் உறங்கி விடாதீர்கள்.''
(தபரானி)
4) ஜூ. அல்ஊலா: 1435,

Page 54
பரஸ்பரம்
"உங்களில் யாரிடமாவது ஓர் ஈத்தம்பழக்கன்று இருந்து அடுத்த நிமிடம்தான் மறுமை வரப்போகின்றது என்றி ருந்தாலும்கூட அதனை அவன் நட்டி விடட்டும். அதற் காகவும் அவன் கூலிகொடுக்கப்படுவான்.” (முஸ்னத் அஹ்மத்)
ஒருமுறை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இருவருக்கிடையே தீர்ப்பு வழங்கினார்கள். தீர்ப்பு சாதகமாக அமையாத மனிதர் சொன்னார்:
"அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவன் எல்லாப் பாதுகாவலர்களை விடவும் மிகவும் சிறந்த பாதுகாவல னாவான்.” இதனைச் செவியுற்ற நபியவர்கள் சொன்னார்கள்:
"இறைவன் பலவீனத்தை விரும்புவதில்லை. எனவே, தன்னம்பிக்கையும் வலிமையும் பெற்றுக் கொள்வாயாக! இந்நிலையிலும் நீ தோல்வியை சந்தித்தால், அப்போது நீ அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவன்தான் பாது காப்போரில் எல்லாம் மிகவும் மேலானவன் என்று கூற முடியும்.”
தனக்கு நேரிடுகின்ற கஷ்டங்களை தன்னால் முடிந் தளவு நீக்குவதற்காக மனிதன் பாடுபடவேண்டியது அவ னுக்குக் கடமையாகும். வாழ்க்கையில் வெற்றி பெறு வதற்கு இது மிகவும் அத்தியவசியமானதாகும் என மார்க்கம் கற்றுத் தருகின்றது. தெளிவான குறிக்கோளு டனும் உறுதியான சிந்தனையுடனும் அர்ப்பணிப்புக் ளுக்குத் தயாரான நிலையிலும் செயற்படுமாறு மார்க்கம் எம்மைத் தூண்டுகின்றது. எமது தோல்விகளையும் தவறு களையும் மறைப்பதற்கு விதியை சாக்குப்போக்காகக் கூறுவதையும் சோம்பேறித்தனமாக முடங்கிக் கிடப் பதையும் பெரும் பாவமாக இஸ்லாம் கருதுகின்றது. அலட்சியப்போக்கும் சோம்பேறித்தனமும் தவிர்க்க முடியாத தோல்விகளையே விளைவாகத் தரும். இந்த நிலைமைகளை விதியின் மேல் போர்த்துவது எந்த விதத் திலும் ஏற்கத்தக்கதல்ல. முயற்சியேதும் இல்லாது பலனை எதிர்பார்ப்பதும் வலியேதுமில்லாது அடைவுகளைத் தேடுவதும் முட்டாள்தனமாகும். இறைவன் செயல்க
ளுக்கே கூலி கொடுக்கின்றான்.
புத்தளத்தில் 1 மூன்றுமாடி கட்டிடத்தில் 12 வ
0B Irani
யாருக்காக?
1,0L, A/L நிறைவு செய்தவர்கள்
Data Ent 2 தொழில் தேடுகின்றவர்கள்
Graphic |
போர் 1 > வெளிநாடு செல்ல இருப்போர்
Ms Offi > மெளலவி, மதரஸா மாணவர்களுக்கு
அயோ தனி வகுப்பு - Group 5
100% Pr மேலதிக விபரங்கக்ரு |
0716 22 8580
Managing Director
MUMM. Riswan
வேறு பெயர்களில் இவைகள் இல்லை
-அல்ஹஸனாத் மார்ச்:

ஒரு மனிதர் நபியவர்களிடம் பின்வருமாறு வினவினார்: "ஒட்டகத்தைக் கட்டிவிட்டு இறைவனிடம் அதனைப் பாதுகாக்குமாறு பிரார்த்தனை புரிவது நல்லதா? அல்லது அதனை அவிழ்த்துவிட்டுப் பாதுகாக்குமாறு இறைவனி டம் பிரார்த்தனை புரிவது நல்லதா?”
“ஒட்டகத்தைக் கட்டிவிட்டு பாதுகாக்குமாறு இறை வனிடம் பிரார்த்திப்பீராக” என நபியவர்கள் மறுமொழி பகர்ந்தார்கள்.
உணவை உட்கொள்ளாமலும் தண்ணீரை அருந்தாம லும் பசியும் தாகமும் நீங்குவதற்கு வழி இல்லை. விதை களை நடாமல் எந்தப் பயிரும் முளைப்பதில்லை. முயற் சிக்காமல் எந்த அடைவும் பெறப்படுவதுமில்லை. பெரிய வெற்றிகளை அடைவதற்கு கணிக்கப்பட்டளவு வேலை செய்ய வேண்டும். இவை மாற்றமுடியாத இறைவனின் விதிகளாகும். ஓர் இறைநம்பிக்கையாளன் இவ்விதிகள் எப்போதும் இயங்கு நிலையிலும் ஈடுபடுத்தப்பட்ட நிலையிலும் இருக்க வேண்டும் என்ற உண்மையை நன்கு உணர்ந்தவனாக செயற்படுவான். இந்த வகையில் விதியை நம்புவது மனிதர்களைச் செயற்படத் தூண்டுமே தவிர, அவனைமுடக்கிச்சோம்பேறியாக்க விடமாட்டாது.
வைத்திய உதவி கோரல் இல: 375, அல்காஸிமி சிற்றி, பாலாவியில் வசிக்கும் ஏ.எம். கமர்தீன் என்பவர் இருதய நோயினால் பாதிக் கப்பட்டுள்ளார். இவரது சத்திர சிகிச்சைக்காக சுமார் 6,45,000 ரூபா செலவாகும் என DURDANS HOSPITAL வைத்திய நிபுணர் ரவிப்பிள்ளை தெரிவித்துள்ளார். - சாதாரண பொருளாதார நிலையைக் கொண்ட இவர் இத்தொகையை செலுத்த முடியாது சிரமப்படு கின்றார். எனவே, தனவந்தர்கள், நல்லுள்ளம் கொண் டோரிடமிருந்து பண உதவியை எதிர்பார்க்கின்றார்.
தொடர்புகளுக்கு: 0718087272
வங்கிக் கணக்கு விபரம்: A. Haja Alavudeen, Peoples Bank, Puttlam
- Branch, ACCNo-009200134494056
நட அனுபவத்துடன் சிறந்த கல்வி Type F(space]LANKAT
Send to 4004
ng Program
ry, Computer Operator, IT Technician,
Graup 1 (MonThu
( 0 am) Designer, IT Teacher, Receptionist
Group 2 vioThu 11.30 am வேலைவாய்ப்புக்களுக்கான பயிற்சி
Group3 Tue\Wed 08.30 am cel Graphics I Hardware I English
Group 4 Tue/Wed
11.30am ng Certificates 2L
Group 5 Mon/wed 04.00 pm ctica கொலை. பாடநெறி
100, Marikitarshreat, Puttalam. 0323292333, ர162880 facebook.com/puttalamglobal
twitter.com/lankatit English I Computing Engineering
Iputtalamglobai@yahoo.com 2014 ஜூ. அல்ஊலா: 1435.
5GoD

Page 55
|
நபிவழியில் வாய்
டாக்டர் அத்ஹரா ஸாதிக், கொழும்பு
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நோயற்ற வாழ்வும் மன அமைதியுமே சிறந்த வழி. இன்று பெரும்பாலான மனிதர்கள் தம் உடலையும் சுற்றுப் புறச்சூழலையும் சுத் தமாக வைத்திராததால் தங்களுக்கும் தங்கள் அயலவர்க ளுக்கும் கேடு விளைவிக்கும் விதத்தில் தமது வாழ்வை அமைத்துக் கொண்டு உடல், உள ரீதியான ஆரோக் கியத்தையே இழந்து விடுகின்றனர்.
இஸ்லாம் சுத்தத்தை வலியுறுத்துவதைப் போல் உலகில் வேறு எந்த மதமும் வலியுறுத்தவில்லை.
"தூய்மை ஈமானின் பாதி” என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். "மனிதர்களில் அதிகமானோர் ஆரோக்கியம், ஓய்வு ஆகிய இரண்டு அருட்செல்வங்களின் விடயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர்.”
(அல்புகாரி)
நோயற்ற வாழ்வே ஒரு மனிதனின் அனைத்து உடல், உள செயற்பாடுகளுக்கான ஓர் உந்துசக்தியாக அமை கின்றது. நோயற்ற வாழ்வில் சுத்தம் முதல் இடத்தை வகிக்கின்றது. இதனாலேயே இஸ்லாம் மனிதனின் அன்றாட நடவடிக்கைகளில் தூய்மையை வலியுறுத்தி ஆரோக்கியமான வாழ்விற்கு வழிகாட்டுகின்றது.
நாளின் துவக்கத்திலேயே இஸ்லாம் சுத்தத்தை வலியு றுத்துகின்றது.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஒரு மனிதன் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் செய்ய வேண்டிய காரியத்தில்கூட உடல், உள சுத்தத்தையே
-அல்ஹஸனாத் மார்ச்: 2014

ஆரோக்கியம் 53
வலியுறுத்துகின்றார்கள். அந்த வகையில் வாய்ச் சுத்தம் பற்றி சுருக்கமாக நோக்குவோம். பற் சுத்தம்
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “எனது சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்ப டும் என்று நான் கருதியிருக்கா விட்டால் (எல்லாத் தொழுகைகளிலும் கட்டாயமாகப்) பல் துலக்குமாறு (மிஸ்வாக் செய்யும்படி) மக்களுக்கு நான் கட்டளையிட் டிருப்பேன்.”
(அல்புகாரி) - மனிதர்களுக்கு சிரமம் ஏற்படும் என்பதால் பல்துலக் குவதை கட்டாயமாக வலியுறுத்தவில்லை என்று சொல் லும் அளவிற்கு வாய், பற் சுகாதாரம் பேணப்படுவதன்
ரச் சுகாதாரம்
அவசியத்தை நபியவர்கள் வலியுறுத்துகின்றார்கள்.
இன்று அநேகமானோர் வாய்ச்சுகாதாரத்தைப் பேணா ததனால், நபியவர்களின் வழிமுறையைப் புறக் கணித்த தன் காரணத்தினால் பல்வேறு நோய்களுக்கு உட்பட்டு
அவதிப்படுகின்றனர். பற்சூத்தை
முறையற்ற உணவுப் பழக்கத்தினாலும் முறையற்ற பல் துலக்கும் முறையினாலும் ஆரோக்கியமான பற்க ளில் வருகின்ற பாதிப்பு பற்சூத்தை எனப்படும். மேலும் முரசிலிருந்து இரத்தம் வருதல், முரசு வீங்குதல், வாயின் உட்தாடை உதட்டுப் பகுதியில் புண் உண்டாதல் இவ் வாறான சில பிரச்சினைகள் வாய்ச் சுகாதாரத்திற்கு கேடு தரலாம்.
பல் மேற்பரப்பு, வாய்க் குழியிலுள்ள நுண்ணங்கிகள், | சீனித் தன்மையான உணவுகளை அதிகம் உட்கொள்ளல், | சீனித் தன்மையான உணவு வாய்க் குழியில் தங்கியிருக் கும் காலம் போன்ற காரணிகள் இரண்டறக் கலக்கும் போதே பற்சூத்தை ஏற்படுகிறது. இவற்றுள் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு காரணிகள் ஏற்படாவிட்டால் பற்சூத்தை உருவாக்குவதை தடுக்கலாம். சீனித் தன்மை யான உணவுகளை அதிகமாக உட்கொள்வதை தவிர்த்து, சீனித் தன்மையான உணவு வாய்க்குழியில் தங்கியிருக் கும் நேரத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் பற்சூத்தை உருவாகுவதை தடுக்கலாம்.
பற் சுகாதாரத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடிய அதிக சீனித் தன்மையான உணவுகளான சொக்லட், ஐஸ்கிரீம், ஒட்டும் தன்மையான சீனி உணவுப் பொருட்கள் (மஸ்கட், கேக், பிஸ்கட்) இவற்றை வயதுக்கேற்ற அளவைவிட அதிகமாக உட்கொள்ளல், உண்ட பின் வாயை கழுவா திருத்தல் என்பவற்றால் Oralhygiene பாதிக்கப்படுகின்றது.
4 ஜூ. அல்ஊலா: 1435.

Page 56
54 ஆரோக்கியம்
காலையில் மாத்திரம் பல் துலக்காமல் உணவு உட் கொண்ட பின்னரும் மாலையிலும் இரவிலும் பல் துலக்க வேண்டும். உணவு உட்கொண்ட பிறகு பற்தூரிகை கிடைக்காவிட்டால்வாயை நன்கு அலம்பிகொப்பளித்து பல் ஈறுகளிலுள்ள உணவுத்துணிக்கைகளை அகற்ற வேண்டும்.
ப்ளோரைட் கொண்ட பற்பசையை தொடர்ந்து பாவிப் பதன் மூலம் பற்சூத்தையைத் தவிர்க்கலாம். வெற்றிலை சப்புதல், புகைத்தல் போன்ற சுகாதாரத்திற்கு தீங்கு விளை விக்கக்கூடிய பணத்தை வீண்விரயம் செய்யக்கூடிய பழக்க வழக்கங்களை நிறுத்துவதன் மூலமும் பற்சுகா தாரத்தைப் பேண முடியும்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னார்கள். "மிஸ்வாக் செய்யுங்கள். நிச்சயமாக மிஸ் வாக் செய்வது வாயை சுத்தப்படுத்துகின்றது.” (முஸ்லிம்)
"பல் துலக்குவது வாயை சுத்தப்படுத்துகின்றது. இறைவனின் மகிழ்ச்சிக்கும் காரணமாகின்றது."
(முஸ்னத் அஹமத்)
வாய்ச் சுத்தம் பேணப்படாவிடின் வாயிலிருந்து வீசும் துர்வாடையினால் மற்றவர்கள் எம்முடன் உரையாடுவதையும் வெறுப்பார்கள்.
நான்கு விடயங்கள் ரஸூல்மார்களின் ஸுன்னத்துக ளாகும். "வெட்கம், நறுமணம் பூசுதல், மிஸ்வாக் செய்தல், திருமணம் முடித்தல்” என்பவையே அவை ஆகும்.
நபியவர்கள் பின்பற்றிய அரக்மரக்குச்சியை பயன்படுத்தி பல்துலக்குவது பெரும் பயன்களைப் பெற்றுத் தருகின்றது என்பது இன்றைய மருத்துவ ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ள உண்மையாகும்.-
01. அக்குச்சி தீய கிருமிகளைக் (பக்றீரியாக்களை) கொல்லும் சக்தி வாய்ந்தது
02. வாயை முழுமையாக சுத்தம் செய்யும் 03. பற்களின் கறைகளை அகற்றும் 04. வாயை நறுமணப்படுத்தும் இஸ்லாம் வாய்ச் சுகாதாரம் பேணுவதை மிகவும் புத்தளத்தில் 1 மூன்றுமாடி கட்டிடத்தில் 112 வ
பாடசாலை மாணவர்களுக்காக EN
ப- ----பிப்ன ப+EATIAHESH E-FERE பா.
ஞாயிறு
A/L ENG 9.00
HHHHHEsh4- HEAMATIWin HirinHHHHHHHE!
Managing Director
MJMM. Riswan
புகார்படாதச்சுட
மேலதிக விபரங்களுக்கு
0716 22 85 80 வா பெயர்களில் கிளைகள் இல்லை
-அல்ஹஸனாத் மார்ச்: 2

44ாராtக்காகா
வலியுறுத்தி அதற்கு ஈருலகிலும் நன்மைகளை வழங்கு கின்றது. எமது குழந்தைகளுக்கு குழந்தைப் பருவத்திலேயே ஸுன்னாவும் நோய் நிவாரணியுமாகிய மிஸ்வாக் செய்வதை முறையாக பழக்கி ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிய மைப்போமாக! ஸீரதுந் நபி... (49ஆம் பக்கத் தொடர்)
“என்றாலும் நான் அதை வாங்க விரும்புகிறேன்.''
“யா ரஸூலல்லாஹ்! அதனை நான் கொடையாகத் தருகிறேன்.''
"இல்லை, அதன் விலை என்ன?...'' “ஒரு திர்ஹம்!!” “போதாது..." "இரண்டு திர்ஹம்” “யா ரஸுலல்லாஹ்! அது உங்களுக்குச் சொந்தம்.'' "இல்லை, நாம் மதீனாவுக்குச் சென்றவுடனே அதன் பெறுமதியை உமக்குத் தந்து அதனை நான் வாங்கிக் கொள்கிறேன்.''
முஸ்லிம்கள் மதீனாவுக்குச் சென்றபோது ஜாபிர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தனது ஒட்டகத்தை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வீட்டு வாசலில் கட்டிவிட்டுச் சென்றுவிட்டார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வீட்டுக்கு வெளியே வந்தபோது ஜாபிரின் ஒட்டகத்தைக் கண்டு பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை அழைத்து ஒட்ட கத்தையும் பணத்தையும் கொடுத்து ஜாபிரிடம் அனுப்பி வைத்தார்கள். "பிலால்! ஜாபிரிடம் சென்று உனது ஒட்டகத்தையும் இந்தப் பணத்தையும் எடுத்துக் கொள்! நான் உனது சாச்சா. நீ எனது சகோதரனின் மகன் என்ற செய் தியையும் எத்திவைப்பாயாக!” என நபி (ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம்) அவர்கள் வேண்டினார்கள்.
பாடங்களும் படிப்பினைகளும் 1. தூதுத்துவப் பணி அர்ப்பணங்களையும் தியாகங் களையும் வேண்டி நிற்கின்றது.
2. மனித வாழ்வில் கலந்தாலோசித்தல் இன்றியமையாதது. 3. மானசீக பலம் யுத்த களத்தில் அத்தியவசியம். 4. குடும்ப வாழ்வில் கணவன்-மனைவி உறவு பாது காக்கப்பட வேண்டும்.
5. குடிமகனின் தேவையை ஆட்சியாளன் நிறைவு செய்துகொடுக்க வேண்டும். நட அனுபவத்துடன் | சிறந்த கல்வி
Send @ 404டி IGLISH, ICT, GIT + Paper Class
ENG for Grade
6,7,8 and 4
A/L GIT
| o/L ENG) o/L ICT 10.30
12.00
1.30
4.00
100, Marikkar street, Puttalam. 0323292885,0715228580 facebook.com/puttalamglobal twitter.com/lankait putalamgloba@yahoo.com
English I Computing / Engineering !014|ஜூ. அல்ஊலா: 1435.

Page 57
ஈEANATHEETHF மாமாயாசமாயEHHH
ஜூவைரிய்யா... (25ஆம் பக்கத் தொடர்)
ஜூவைரிய்யா (ரழியல்லாஹு அன்ஹா) கூறியதாக அபூ அய்யூப் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்:
"நான் வெள்ளிக்கிழமை நோன்பு நோற்றிருந்தபோது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) என்னிடம் வந்தார்கள். “நேற்று நோன்பு நோற்றீரா?” என்று என்னிடம் கேட்டார்கள். நான் “இல்லை” என்றறேன். “நாளை நோன்பு நோற்க விரும்புகிறீரா?” என்று கேட்டார்கள். அதற்கும் “இல்லை” என்றேன். இதைக் கேட்ட நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ''அப்படியானால் நோன்பை முறித்துவிடு" என்றார்கள்.
(அல்புகாரி) இஸ்லாமிய சட்டத்துறை அறிஞர்கள் சட்டங்களை வகுக்கத் துணை செய்யக் கூடிய இதுபோன்ற ஜுவைரிய் யாவின் அறிவிப்புக்கள் பதியப்பட்டிருப்பது அவரால் நமக்குக் கிடைக்கும் நன்மைகளாகும்.
ஒருமுறை ஜுவைரிய்யா (ரழியல்லாஹு அன்ஹா) அதிகாலையில் தொழுதுவிட்டு சில வார்த்தைகளை மொழிந்தவராக இறை தியானத்தில் ஈடுபட்டார். பகல் பொழுதானபோது நபியவர்கள், வீட்டில் நுழைந்ததும் அதே நிலையில் அல்லாஹ்வை துதி செய்வதை அவதானித்த நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) "ஜுவை ரிய்யாவே! நான் உம்மை விட்டுச் சென்ற நிலையிலா இன்னமும் இருக்கிறீர்?” என்று கேட்டார்கள். அதற்கு “ஆம்” என்றதும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) "நான் உம்மை விட்டுச் சென்றதும் நான்கு வார்த்தைகளை மூன்று தடவைகள் கூறினேன். அவற்றை நீர் மொழிந்த வற்றுடன் ஒப்பிட்டால் நான் கூறியவை மிகைத்து நிற்கும்” என்று கூறி பின்வரும் துஆவைக் கற்றுக் கொடுத்தார்கள்.
سبحان الله وبحمده عدد خلقه ورضا
نفسه وزئة عرشه ومداد کلماته
''அல்லாஹ்வுடைய படைப்புக்களின் எண்ணிக்கை அளவுக்கும் அவனது திருப்தியின் அளவுக்கும் அவனது அர்ஷின் எடை அளவுக்கும் அவனது சொற்களின் மை அளவுக்கும் அவனைப் புகழ்ந்து அவனைத் தூய்மை யானவன் எனப் போற்றுகின்றேன்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)
ஒரு கோத்திரத்தின் தலைவரின் மகள் என்ற நிலையில் இருக்கும்போது உலகத்தின் அனைத்து ஆடம்பரங்க ளையும் அனுபவித்து சொகுசு வாழ்வில் மிதந்திருந்த ஜூவைரிய்யா (ரழியல்லாஹு அன்ஹா) இஸ்லாம் எனும் கொள்கையை ஏற்றதும் எண்ணற்ற நன்மைகளை ஈருல கிலும் அடைந்து கொண்டார். இது அல்லாஹ் அவருக்குப் புரிந்த மிகப் பெரும் அருளாகும். தனது 65ஆம் வயதில் ஹிஜ்ரி 50ஆம் ஆண்டு ரபீஉல் அவ்வல் மாதம் அவர் வபாத்தானார்.
அல்ஹஸனாத் மார்ச்: 2011

தொடர் 55
காபமா.
எங்கு கிடைக்கும். (34ஆம் பக்கத் தொடர்)
இவர்களைப் பொறுத்தவரையில் இறை பாதையில் ஆற்றும் பணிகள், தியாகங்கள், இறை அன்பைப் பெற்றுத் தரும் கருமங்கள் அனைத்தும் விருப்பத்துக்குரியதாக மாறுகின்றன. இதனைத்திருமறை இவ்வாறு இயம்புகின்றது:
"அல்லாஹ் உங்களுக்கு ஈமானை விருப்பத்துக்குரிய தாக ஆக்கி, உள்ளங்களில் அழகானதாகவும் ஏற்படுத் தியுள்ளான். அவ்வாறே அவன் நிராகரிப்பாளர்கள் பாவத் தையும் மாறுபாடு செய்வதையும் உங்களுக்கு வெறுப்பான தாகவும் ஆக்கியிருக்கிறான்.”
(49:7)
இந்நிலை எமக்குக் கிடைக்கப் பெறாமல் இருப்பது ஈமா னிய பலவீனம், இறைதண்டனைக்கான காரணி என்பதை ஸுரதுத் தௌபாவின் 24வது வசனம் விளக்குகின்றது.
எனவே, எமது உலக வாழ்வில் ஈமானிய சுவையின் மூலம் கிடைக்கும் உள அமைதியை நோக்கிப் பயணித்து உலகைப் பிரியும்போது இப்பாக்கியத்தைப் பெற்றவர்களாக வானுலக வரவேற்போடு விடை பெற முடியுமாயின், மறுமையின் சுவனப்பாக்கியம்கிட்டும் என்பதில்ஐயமில்லை முத்ம இன்னா எனப்படும் உள அமைதியை அடைந்த ஆன்மாக்களை அல்லாஹ் அன்போடு அழைத்து சுவனப் பாக்கியத்தை அளிக்கும் காட்சியையும் ஸுரா பஜ்ரின் இறுதி ஐந்து வசனங்கள் விளக்குவது நோக்கத்தக்கதாகும்.
11ாபாபாகாயாயாய
பாபா ராமான:E%Asாபரிக்காயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயாயப்படி தயாராவது:HEAE%
ATEHEAnanthainaaMAHMAHAMHAMEAsusathHEEHR4:47:24காகவAHMAHEsaiா
பதாவா... (45ஆம் பக்கத் தொடர்)
04. மூன்று முறை தலைக்கு தண்ணீரை ஊற்றுதல் 05. ஊடல் முழுவதையும் தண்ணீரால் கழுவுதல்
ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக் கின்றார்கள்!
"நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது முதலாவதாக தங்களின் இரண்டு முன் கைகளையும் கழுவுவார்கள். பின்னர் தொழுகைக்கு வுழூச் செய்வது போல் வுழூச் செய் வார்கள். பின்னர் விரல்களைத் தண்ணீரில் மூழ்கச் செய்து அதைக் கொண்டு தலைமுடியின் அடிப்பாகத்தைக் கோது வார்கள். பின்னர் அவர்கள் தலையின் மீது மூன்று முறை கையினால் தண்ணீரை அள்ளி ஊற்றுவார்கள். பின்னர் தங்களின் உடல் முழுவதிலும் தண்ணீரை ஊற்றுவார்கள்.”
(அல்புகாரி)
உங்கள் சந்தாக்களைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
பியப் பயணியில் இலங்கையால் பிரியப்பாயில் பிலிப்பிய பெண்ணியம் எNAllால பியகமைய மலையடி அமாவாளை அமாவவை பலப்படும் பெயரில் பெயர்ப்பில் அலையப்பர் கணினிகளை பயாகலை
4|ஜூ. அல்ஊலா: 1435.

Page 58
56 தொடர்
உRTHHHHHTET,
பார்த்தாயE%AHEESWIHAMIாக சாபாநாயகர் பாக்கர் பாபா ஒEாசாரம்
ஸுரோ யூஸுஃப். (33ஆம் பக்கத் தொடர்)
மனித சமூகத்துக்குப் பயனளிக்கும் ஓர் ஆக்கப் பணிக்குத் தனது ஆற்றல்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள இடமளிக்கிறார் இறைத்தூதர் யூஸுஃப் (அலைஹிஸ்ஸலாம்)
"இந்தப் பூமியின் களஞ்சியங்களுக்கு என்னை அதிகா ரியாய் ஆக்குவீராக! நிச்சயமாக நான் அவற்றைப் பாதுகாக்க நன்கறிந்தவன்.''
(12: 55)
இப்பணியை சிறப்புற நிறைவேற்ற தனது திட்டமிடல், விவேகம், ஞானம், நேர்மை, கண்ணியம் முதலிய பண்பு களை நாடு வேண்டி நிற்கிறது என்று உணர்கிறார். இவ்வாறு நாட்டை அழிவிலிருந்தும் உயிர்ச் சேதங்களிலிருந்தும் பாதுகாப்பதற்காக பொதுவாக மனிதர்கள் சுமக்க மறுத்து, நழுவிச்செல்லக்கூடிய மாபெரும் பொறுப்பைதன் தோள்கள் மீது சுமத்துமாறு கேட்கிறார்.
''ஒருவரின் ஆற்றல்களை மனித சமூகம் வேண்டி நிற்கும்போது அவற்றை அறியப்படாத நிலையில் பகிரங் கப்படுத்துவது அவசியமாகிறது என்றும் யூஸுஃப் (அலைஹிஸ்ஸலாம்) தன்னைத் தானே இங்கு புகழ்ந்து கொண்டது அந்நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது” என்றும் இமாம் இப்னு கஸீர் (ரஹிமஹுல்லாஹ்) மேற்கூ றிய வசனத்துக்கு விளக்கமளித்துள்ளார்.
யூஸுஃப் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் எகிப்து எதிர்கொள்ள இருந்த உணவுப் பஞ்சத்தை முறியடித்தது மட்டுமன்றி, மேலதிக உற்பத்தியின் மூலம் சூழவிருந்த நாடுகளின் உணவுத் தேவைகளையும் பூர்த்தி செய்கின்ற
அளவுக்கு தூரநோக்குடன் செயற்பட்டார்.
"தான் விரும்பிய விதத்தில் காரியங்கள் செய்துவர அந்த நாட்டில் யூஸுஃபுக்கு நாம் இவ்வாறே வாய்ப்பை ஏற்ப டுத்திக் கொடுத்தோம்.''
(12: 56)
இவ்வாறு தீர்மானங்கள் எடுக்கின்ற அளவுக்கு முழு அதிகாரத்துடன் அவர் எகிப்தில் ஆட்சி நடத்தினார்.
அவ்வாறே மக்கா வெற்றி கொள்ளப்பட்டபோது முழு அதிகாரத்தையும் தன் கைவசம் பெற்றிருந்த இறுதித்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அபூஸுஃப்யான் உட்பட இஸ்லாத்தின் எதிரிகள் யாவரும் வந்து மண்டி யிட்டபோது எவ்வாறு நடந்து கொண்டார் என்பதை வரலாற்றாசிரியர்கள் விரிவாகப் பதிவு செய்துள்ளனர்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவ்வே ளையில் குர்ஆனின் 49:13ஆம் வசனத்தை ஓதிக்காண்பித்து “குறைஷிகளே! நான் உங்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்று கேட் டார்கள். அதற்கவர்கள் "நல்ல முறையில் நடந்து கொள் வீர்கள். நீங்கள் எங்களுக்கு சிறந்த சகோதரராகவும் எங்களில் சிறந்த சகோதரன் மகனாகவும் இருக்கிறீர்கள்” என்று பதில
அல்ஹஸனாத் மார்ச்: 2

ளித்தனர். அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல் லம்) “நான் உங்களுக்கு யூஸுஃப் நபிதனது சகோதரர்களுக் குக்கூறியது போன்று கூறுவேன். இன்று உங்கள் மீது எந்த நிந்தனையும் இல்லை...” (12: 92) என்று கருணையுடன் கூறினார்கள்.
அல்குர்ஆனின் இந்த நீண்ட கதையை தாங்கி வந்த ஸுரா எம்மீதும் ஒரு பொறுப்பை சுமத்தி விடுகிறது.
"நபியே! கூறுவீராக! இதுவே என்னுடைய பாதை. நான் அல்லாஹ்வின் பக்கம் தெளிவோடு அழைக்கிறேன். நானும் என்னை யார் யாரெல்லாம் பின்பற்றுகிறார்களோ அவர்க
ளும்...
(12:108)
அகுபன்சர் சிகிச்சை
தீராத நோயினால் அவதியா? காலமெல்லாம் மருந்துகளால் தொந்தரவா? கவலையை விடுங்கள்
உச்சி முதல் உள்ளங்கால் வரை அனைத்து
நோய்களுக்கும் (மூட்டுவாதம், காஸ்ட்ரிக், அல்சர், தோல் நோய்கள், மூலநோய், ஆஸ்துமா, சுகர், ப்ரஷர், பீனிசம், இருதய கல்லீரல் நோய்கள்,
பித்தப்பை கற்கள், குழந்தைப் பேறின்மை ஆண்,
பெண் இரகசிய நோய்கள், கருப்பை, மாதவிடாய் தொந்தரவுகள், ஒற்றை தலையிடி, இளநரை, முடி உதிர்தல்,
மனநோய்கள், கட்டிகள். -மருந்து மாத்திரைகளின்றி > பக்க விளைவுகளின்றி >பத்தியங்களின்றி > பல ஆயிரங்கள் செலவுகளுமின்றி நாடிப் பரிசோதனை செய்து நோயின் மூலகாரணம் அறியப்பட்டு முற்றாக குணமடைய சிகிச்சை
- அளிக்கப்படும்.
* சிபா4. வி.சாது"
ACM: சிசெண்- 43) சட்ட சண் க
Marya Medical Center
Acupuricture, Harmoeopathy, FHijama...etc
BOD, Mahalkundu, Puttalam. Contact: 07110 65 456, Emai: pulsacu@yahoo.com
Clinics: Kurunegala (Vayamba Medical Center), Warakapola, Thihariya (SDC Nursing Home) Colombo, Kalutara (PT Acupuncture Clinic). Kotramulla
HHHHHHHEAT ப்ராபெரி
சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்காக உதவி கோரல் - 210/, அம்பக்க, ஹந்தெஸ்ஸ எனும் முகவரியில் வசிக்கும் 58 வயதுடைய முஹம்மது நிஹார் என்பவரின் இருசிறுநீரகங்களும் செயலிழந்துள்ளதால் அவசரமாக இவருக்கு சிறுநீரக சத்திர சிகிச்சை செய்ய வேண்டுமெனவும் இச்சத்திர சிகிச்சைக்காக 15 இலட்சம் தேவைப்படுவதாகவும் கண்டி பெரிய வைத்தியசாலை சிறுநீரக நிபுணர் முஹம்மத் வஸீர் தெரிவித்துள்ளார்.
சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இவரால் இத்தொகையை திரட்டிக் கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதனால் நல்லுள்ளம் கொண்போரிடமிருந்து உதவிகளை எதிர்பார்க்கின்றனர்.
தொடர்புகளுக்கு: 0728848573
வங்கிக் கணக்கு விபரம்: A.H.M. Nihar, BOC Bank, ACC No- 7420996 014|ஜ. அல்லா: 1435.
ஒபாமா சகாக்காபாபாபாபாறாராமாராயமாயாமாமாமாபைாருளாளாருளாகாககாகானதாகாககாகாபாவைபாபா
காபட் பாவரே பொங்கப்போம்

Page 59
மீண்டும் மீண்டும் வ
கண்டுக்காப்பதுதானந்தகவுடித்ததாககயதுதா ஆதாரமாகத4சதவமாதாராததாக
கடந்த ஜனவரி மாதம் வெளியான ஆக்கத்தை வ அல்ஹஸனாத்தில் ஜமாஅத்தே இஸ் தெளிவாக அ லாமியின் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்
- வேண்டும் என் ஜுல் அக்பர் அவர்களினால் எழுதப்
நிச்சயம் இ பட்ட "மூன்று பாத்திரங்கள்; நிரம்
பிரசுரித்தால் ! பினால் தளம்பாது...''
என்ற
பெப்ரவரி அல்ஹஸனாத் குறித்து
னாள் பிரதமர் முஸ்லிம்களை
'பயங்கரவாதம்' பற்றிய உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களின் கட்டு
ரை சிறப்பாய் அமைந்துள்ளது.
சேர். ராஸிக் பரீத், மாக்கான் மரிக்கார், கலாநிதி ஜாயா, கலாநிதி பதியுத்தீன் ஆகி யோரின் உரையிலிருந்து குறிப்பிட்ட கருத்துக்களைத் தந்திருப்பது சிந்திக்கத் தக்கது.
“எந்த நிபந்தனையும் இல்லாமல் நாட் டின் சுதந்திரத்திறக்கு முழுமையான ஆதரவளித்த சமூகம்தான் இந்நாட்டு முஸ்லிம் சமூகம்” என்ற கருத்தை முன் சாரணாகையூம் ---- ---
“எமது வா அனைத்தும் ( இந்த வகையில் இது முற்றிலும் விதியை மீறழு முன்வைத்துள்
'கேள்வி - ப
பொதுவாக சிந்திக்க- திருர் அல்ஹம்துலில்
| நாகாரமா இராடியாரா ஒT
பேனா முனைச் சந்திப்பு
பேனா முனைச் சந்திப்
அழ. பில் எனும் தொடரில்...
முன்ை இன்று சமூகத்தில் உலா வந்து கொண்டிருக்கும் கடந்த இதழில் எழுதப்
அநேகமான குழப்பங்களுக் குத்திக்காட்டப்படுகின்றனர் கான சரியான காரணம் கணவன்-மனைவி மற்றும் 6 எடுத்துக்காட்டப்பட்டுள் களின் யதார்த்தத்தை அழகா ளது.
உண்மையில் இன்று எவ் இக்கட்டுரையில் கூறப் அவர்கள் வளர்ந்த பின் சமூகத் படும் ''உபதேசியுங்கள் கின்றனர். இவ்வாறான நிலை உபதேசம் பயனளிக்கு கையை சிந்தனைகளையும் வ. மெனின்!” என்ற அல்குர்ஆன் வேண்டும். வசனத்தினூடாக மாபெரும் உண்மையை விளங்க முடி
நபி (ஸல்ல யும்.
பாக்கள் நன் வீணான விவாதங்கள், சண்டை
கும் ஒரே பதி சச்சரவுகள், குழப்பங்கள் அனைத்தும்
இவ்வாறான பொருத்தமற்ற வகையில் உபதேசிப்ப
போது நிச்சயம் தனாலேயே ஏற்படுகின்றன.
அல்ஹஸனாத் மார்ச்: 2011

வாசகர் மடல்
ாசிக்க வேண்டும்!
rசிக் கும்போது சமூகத்தில் நடக்கும் உண்மை களை றியக்கூடியதாகவும் மீண்டும் மீண்டும் வாசிக்க Tற உணர்வையும் என்னில் ஏற்படுத்தியது. வ்வாறான ஆக்கங்கள் தொடர்ந்தும் அல்ஹஸனாத் சிறப்பாக இருக்கும் என நினைக்கின்றேன்.
- ரீ. வினோதினி, வீரமுனை, சம்மமாந்துறை
எஸ்.டப்ளியு. ஆர்.டி. பண்டாடரநாயக்க குறிப்பிட்டிருப்பது
கெளரவப்படுத்தும் நற்சான்றிதழாகும். ழ்க்கைப் பின்னணி, குடும்பம், உடலியல் இயல்புகள் சேர்ந்தே எமது விதியைத் தீர்மானிக்கின்றன. எனவே, ல் எமது விதி திட்ட வட்டமாகத் தீர்மானிக்கப்பட்டு விட்டது. இறைவனின் நாட்டத்தைச் சேர்ந்தது. எவருக்கும் இந்த நடியாது” என்றகழாகத்ர் பற்றிய தெளிவான விளக்கத்தை rளது விதி பற்றிய கண்ணோட்டம்.
தில் பகுதியை விரிவுபடுத்தினால் உதவியாக இருக்கும். அல்ஹஸனாத்தில் பிரசுரமாகும் அனைத்து ஆக்கங்களும் நத ஏற்றாற்போல் அமைந்துள்ளமை வரவேற்கத்தக்கது.
லாஹ். -- -- ----- --- பாலா -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -
பாயா ஒEAs: 3Mாராடி = 154EHகா - TெHEா ---காயரர் - 1ாக இr - காரண காயாக பயன பாதையா ந க கண்ண தான- கம் காைகா-தான்
கிய உபதேசமாக வக்கப்பட்டிருக்கின்றது
பட்டுள்ள "தவறுகள் சுட்டிக்காட்டப்படுகின்றனவா? பா?” என்ற ஆக்கம் வீட்டில் அன்றாடம் நடைபெறும் பெற்றோர்-பிள்ளைகளுக்கிடையிலான கலந்துரையாடல் க சுட்டிக்காட்டுகின்றது. வித இலக்குமின்றி குழந்தைகள் வளர்க்கப்படுவதனால் த்தின் சிலபோது பாதகமாக விளைவுகளை ஏற்படுத்தி விடு பமையிலிருந்து எமது குழந்தைகளைப் பாதுகாக்க இத்த ழிகாட்டல்களையும் தொடர்ந்தும் அல்ஹஸனாத் வழங்க
ரீ. பாத்திமா பஸ்லியா, இறக்காமம் மல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களிடம் ஸஹா மைகள் குறித்து கேட்ட போதெல்லாம் அனைவருக் லை கூறவில்லை. சூழ்நிலைக்கேற்ப பதிலளித்தார்கள். அணுகுமுறைகள் தஃவா களத்தில் பேணப்படுகின்ற மாக ஆரோக்கியமான சூழலைக்க காண முடியும்.
இப்னு யூஸுப், அகுரணை
|ஜூ. அல்ஊலா: 1435

Page 60
சிறு விளம்பரம்
'மணமகன் தேவை
கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த க.பொ.த. உத, Bc Diploma, Diploma in IT, e-Commerce தராதரமுடைய மும்மொழியும் சரளமாகப் பேசக்கூடிய நல்லொழுக்கமும் கெளரவமும் உள்ள ஒரே பிள்ளைக்கு பொது நிறம், வயது 28, உயரம் 5', 2") கெளரவமான நல்லொழுக்கமுள்ள தொழில் புரியும் மணமகனை தாயார் எதிர்பார்க்கின்றார் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்தோர் விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு: 071 8156976
கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த, விஞ்ஞானப் பட்டதாரி யான (B.sC) நல்லொழுக்கமுள்ள மணமகளுக்கு (வயது 26 உயரம் 5', 27) கெளரவமும் நல்லொழுக்கமுமுள்ள படித்த மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு: 078 8247861, nikah1001@gmail.com
வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்ற மார்க்கப் பற்றுள்ள மணமக ளுக்கு (வயது 25, உயரம் 5', 3) மார்க்கப்பற்றுள்ள படித்த அரசு அல்லது தனியார் துறைகளில் தொழில் புரியக்கூடிய மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு 07 3283365, ahmproposals@yahoo.com
மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த, க.பொ.த. சா/த வரை கற்ற, தையல்வேலை மற்றும் வீட்டு வேலைகளில் தேர்ச்சியுள்ள நல்லொழுக்கமும் மார்க்கப்பற்றுமுள்ள மணமகளுக்கு (வயது 34, உயரம் 5', 17) பொருத்தமான மார்க்கப்பற்றுள்ள மணமகனை குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு: 071 4907611
கேகாலை மாவட்டம், மாவனல்லையைச் சேர்ந்தக.பொ.த உயர்தரம் கற்று ஆங்கில ஆசிரிய பயிற்சிநெறியைப் பூர்த்தி செய்து தற்போது சர்வதேச பாடசாலையொன்றில் ஆசிரியை யாகக் கடமையாற்றிக் கொண்டிருக்கும் மார்க்கப்பற்றும் நல்லொழுக்கமும் உள்ள உரிய முறைப்படி விவாகரத்துப் பெற்ற மணமகளுக்கு (வயது 32, உயரம் 5', 1'', இரு பிள்ளைகள் உள்ளனர்) மார்க்கப்பற்றும் நல்லொழுக்கமு
முள்ள மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு: 0777030700, 0770835572
கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த கணவனை இழந்த க.பொ.த. உயர்தரம் வரை கற்ற 36 வயதுடைய மணமக
நிகாஹ் விளம்பரங்களை தகுந்த ஆவணங்களை இரு தரப்பாரும் விளம்பரங்கள் தொடர்பில் உறுதி
- அல்ஹஸனாத் இதழுக்கு சந்தாக்கள் அனுப்ப நாடு6ே தபாலகம் DEMATAGODA எனக் குறிப்பிட்டு அனுப்பவும் AC NO: 1320009182, Commercial Bank, Marada B.0.0, Maradana எனும் வங்கிக் கணக்கில் குறித்த தெ
-அல்ஹஸனாத் மார்ச்:
தாயா கயா பைலாசகர் பிரிய:

ளுக்கு ஒரு மகன் உள்ளார் 45 வயதுக்குட்பட்ட மார்க்கப்பற் றுள்ள மணமகனை அவரது குடும்பத்தினர் எதிர்பார்க்கின்ற னர். மணமகளுக்கு சொந்த வீடு உண்டு. கண்டி அல்லது அதற்கு அண்மித்த பகுதியைச் சேர்ந்தோர் விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு: 0776256955, 0776198276
மேல் மாகாணத்தில் வசிகும் கெளரவமான குடும்பத்தைச் சேர்ந்த அரசாங்க ஆசிரியையாகக் கடமையாற்றும் மார்க் கப்பற்றுள்ள ஒரு மாத காலத்தில் தக்க காரணத்திற்காக விவா கரத்துப் பெற்ற குழந்தைகள் இல்லை மணமகளுக்கு (வயது 34) மார்க்கப்பற்றுள்ள அரச அல்லது தனியார் நிறுவனங்க ளில் தொழில் புரியும் அல்லது சுய தொழில் செய்யும் மணம கனை அவரது பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
தொடர்புகளுக்கு: 077 9908409
மேல் மாகாணத்தைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியையாகக் கடமையாற்றும் மார்க்கப்பற்றும் நல்லொழுக்கமும் உள்ள மணமகளுக்கு வயது 30, உயரம் 5', 27) மார்க்கப்பற்றுள்ள பொருத்தமான மணமகனைகுடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
தொடர்புகளுக்கு: 077 6774446
கிழக்குமாகாணத்தைச்சேர்ந்த பேராதனை பல்கலைக்கழ கத்தில் விலங்கியல் மருத்துவப் பிரிவில் கற்று தற்பொழுது அரசாங்க மருத்துவமனை ஒன்றில் பயிற்சியில் (intern ship) இருக்கும் மார்க்கப்பற்றுள்ள படித்த, குடும்பத்தின் கடை சிப் புதல்வியான மணமகளுக்கு (வயது 25, உயரம் 537) ஒழுக்கமான குடும்பத்தைச் சேர்ந்த, மார்க்கப்பற்றுள்ள, நன்கு படித்த, தொழில்புரியும் பொருத்தமானமணமகன்தேவை. தொடர்புகளுக்கு: 071 4926666, Nikah.lsmalebbe@gmail.com
Muslim parents from a respectable family seek a religious and educated partner for their daughter. she is 29 years, 5'3", wears jilbaband niqab. was educated till London A/L (Science stream) in a leading girls' Islamic international school in colombo. He should follow the Quran and Sunnah in all aspects of life: Have a beard, observe isbal (wearing lower garment above anki), uphold values of Mahram, not listen to music etc. He should have a quest for Islamic knowledge and a keen interest in follwoing the true Deen. Reply with full details.
E-mail: muslimnikkah13@gmail.com,
077308711)
ராம்
கார்பா
நீர்
லேகா
1 பெற்று சேவை நோக்கிலேயே பிரசுரம் செய்கின்றோம். ப்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறோம். (ஆசிரியர்)
பார் ALHASANATH என்ற பெயருக்கு Money Order எடுத்து வங்கியில் வைப்பிலிட நாடுவோர் Srilanka Jamath - E-Islami na அல்லது Srilanka Jamath - E-Islami AC NO: 372132, 1கைப் பணத்தை வைப்பிலிட்டு பற்றுச்சீட்டை அனுப்பவும். 2014 ஜூ. அல்ஊலா: 1435,
எபs-EEாEேEE Eாளாகாகாகாககா ERHitாபா-யாககாக

Page 61
(Advanced Enginee
LEARN & GI Middle - Eas - CAD & BS
with Building Cons e AutoCAD - MEP Draft e MEP QS P -3D Studio
Primavera - Computer
with Manual Drafting
the acADDem
College of Architectural Engineering Technold
Web: www.acaddemy.lk Registered under:
TERTIARY AND VOCATIONAL
Ministry of Youth Affairs ar
IGUMOV GOTnglonië: 201

aflamasi 59
விளம்பரம்
ET JOBS in t Countries
ring Draughtsmanship struction Technology) 2D & 3D | Practice
ing
Register Now
for New Batches
Practice
Max
| Project Management
Applications
340/1,D.S.Senanayake Road, Kandy
0773 66 58 38 22, Kaburady Road, Kattankudy-01
0776 32 34 34
34, Main Street, Sainthamaruthu-05 -gy
0778 444 110 Email: theacaddemy@gmail.com EDUCATION COMMISSION ad Skills Development
4. Nov 2007: 1435

Page 62
விளம்பரம்
The Only Award Winning Cou
bce The
The Chartered Institute for IT
Mr. Mohome
World Prize & "I finished BC. experience on practitioner in t
Ms. Dushani Dunu PROMS-G Top Project Manager
World Prize W "I utilized my spare time after AL effect by starting BCS . Now I am a state univ. student almost completed my first de from BCS with world recognition"
CSOFT
METRO CAMPU KANDY
Shaping Lives, Creating Frares.
-albam Gongonië: 2

arse Provider in the Hill Capital
ATURDA
SATU
Batch.
1 BATCH
Commencement C New 22nd of
March
a Nushri E Candidate
Sri Lankan Prize Winner
in just 2 years gaining wider how to become a Chartered IT he industry
kara ment Enner
Eагес
Accredited Course Provider
Call : 081 76 940 94
JS
447, Peradeniya Road, Kandy.
2014|. alb2OMADN: 1435

Page 63
YEARS
of Trust & Excellence in Higher Education
Course fee :
A 350,000/=
RS. JUU. ALL INCLUSIVE
ALL INCLUSIVE
BA (Hons) Top-Up in
Business Managen
* Conducted by expert British leo * Highly reputed and affordab » Flexible payment scheme
Entry
Criteria
BTEC HND I CIM | CIMA | IBS
BCAS 0773 E C A M P U Slo777 I
R I S H ( 0 \\ E 6 E O F 在印邵星1E 5于21三三
32, Dharmarama Road, Colombo 6. 1

UNIVERSITY OF
WOLVERHAMPTON
INTAKE Now on
March 2014
nent
turers I UGC recognized le 9 Weekend Classes
www.MacroAdz.com
n Business Management
| PQHRM | NIBM | ACCA etc. API
395 318 Hotline 110 833 077 3114105
Fel: 011 255 9255 | www.bcas.lk

Page 64
Registered as a News Paper in GPO/QD/12/NEWS/2014
komandosono nowiki awit
CERTIFIE
ஹாட்வெயார் IT துறையில் அதிகூடிய ஊதியம் பெறக் Great offer for CISCO & Microsoft exa takers at TURNKEY Test Center Do You Want to be an Internationally Recognized Network Engineer!!
DACHNP
Diploma in Advanced Certified Hardware
& Network Professional Six Recognized Certifications
cCAA 200 - 120 la Cisco Certified
Nes syszer
· Network Associate
cisco,
ссMA
*CA 70. 41
Microsoft Certified O Solution Associate
Diploma in Linux Network Administration with Security
Serier 2012
DWNA Iploma in Windows Un Diploma in Windows
Network Administration
DHEN
Diploma in Hardware Engineering with Networking
IS
COLOMBO 562/158, Lower Bagathale Roa
(Road adjoining Premadasa Jev TURNKEY
Tel: 2581581,2595336, 0773 IT TRAINING
KANDY Dedicated for Professional Coaching 504/1, Peradeniya Road. Kandy
2 581581
Email: info@turnkey.lk An Institution registered with Tertiary and Vocation Education Con

Printed by AJ Prints (Pvt) Ltd, 44, Station Road, Dehiwela.
TURNKEY IT CAMPUS
இலங்கையின் மிகப்பெரிய நெட்வர்க் பயிற்சி நிலையம் கூடிய NETWORK துறையில் இன்றே இணையுங்கள்.
m
PEARSON
PROMETRIC
VUE - Authorised Test Centre
MCSA
Windows 8
MCSA.
Sever 2012
MCSE
TURNKEY ஏன் தெரிவு செய்ய வேண்டும்?
• இலங்கையில் Hardware & Network துறையில் அதிகமான வல்லுனர்களை உருவாக்கிய முதன்மை நிறுவனம்.
• Authorized Test Centre for CISCO & Microsoft Examinations
• வெளிநாட்டு தூதரகங்களிலும் தொழில் வாய்ப்பு வழங்குனர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேச சான்றிதழ்.
• CISCO, Microsoft & Network பாடநெறிகளுக்கு உயர்தரமிக்க பரிசோதனைக் கூடம்.
• மறைமுகக் கட்டணங்கள்
இல்லை.
Sever 2012
CONA
Voice, Security
CCNP
P Routing, IP Switch
IP Tshoot
CCIE
Our Accreditations
Routing & Swithing
written Exam
350 - 001
Microsoft இல்
Partner
pooCompIA.
A+ N+
- IS) 9001: 2008 CERTIFIED COMPANY
CE H
SPECIAL DISCOUNT on any Microsoft Online Exams for TURNKEY students
vellers-Sea side) Colombo 03. 2286988
/ Tel: 081 2205678, 0775077456
HOTLINE 0772 286 988
Now register for any course online @ www.turnkey.lk
Immission of Sri Lanka, Reg No. Po1/200