கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நங்கூரம் 2012.09-10

Page 1
-,நங்d
சமூக அறி
நீல் ஆம்ஸ்டர் நிலவிருக் நினைவிரு
1 புரட்டாதி - ஐப்பசி 2012
விலை ரூபா 60.00

காம்
வியல் ஏடு
38" இ "
0 கும்வரை க்கும்,
- ==-=-=-TE

Page 2
ப: -::-மக்காச்சேடிகம்-245:5=4ாசட:
=' - போட்டி : க் )' 5,5சரத்பு==== ----ம் 1. பர லக்க: E==44 ;ப,: ப-15:
**.** **131=31-ப-ப
நவீன அச்சுக் க
கரிக Harikana
ஒலeேrs @
#424, K.K.S. ROAD Phone : 0094-21-22227177: www.harikanan.com

யாழ்ப்பாண வைபவமாலை, மன்னர் ஆட்சிக்காலம் முதல் ஒல்லாந்தர் ஆட்சி வரையான யாழ்ப்பாணத்தின் வரலாற்றைக் கூறுகின்ற அரிய நூலாகும். மாதகலைச் சேர்ந்த மயில் வாகனப்புலவர் - 1736ஆம் ஆண்டு, அக்காலப்பகுதியில் இருந்த ஒல்லாந்த ஆளுநரின் வேண்டுதலின் பேரில் இந்நூலை எழுதியுள்ளார். இந்நூல், யாழ்ப் பாணத்தின் சரித்திரம் பற்றிக் கூறுகின்ற கைலாய மாலை, வையா பாடல், பரராஜசேகரன் உலா, இராச முறை ஆகிய நூல் களை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.
லையின் முன்னோடி
ணன் 1 (Pvt) Ltd. * hேe North
JAFFNA, SRI LANKA. |-7397530, Fax :0094-21-2222891
e-mail: print@harikanan.com

Page 3
இங்ணம்
சத்,
சமூக அறிவியல் ஏடு
கடல் : 4 அலை: 9-10
கள்
ளா
யில்
பக்கங்களின் எண்ணிக்கை : 48+iv
குற் எல் உ
யல்
6
இருமாத சஞ்சிகை 05-09-2012
உ6
ஒரு
விலை : ரூபா 60.00
குழி அதி
உ.
ஓவியம் -- யோகி
அவ
(Chi
அச்சுப்பதிப்பு : கரிகணன்
கள் ஞா
555 5 5 5 5 5558 5 5 5 558 58
லோ
ஆசிரியர் பொ.ஐங்கரநேசன்
குழ இரு குழ. தை வாம் அறி
அலுவலக முகவரி பதிவுகாரர் ஒழுங்கை, திருநெல்வேலி கிழக்கு, யாழ்ப்பாணம்.
குழா
இரு!
தொலைபேசி 021 222 5084 0777 969 644 மின்னஞ்சல் முகவரி nankkoorum@yahoo.com ISSN: 2279-1426
சிகிச் உன் டறிய களே படும் உள் களு. தொட கள் 8

புதிய கண்டுபிடிப்புகள்
கப்பிரசவக் குழந்தைகளிலும் பார்க்க, திர சிகிச்சை மூலம் பிறக்கின்ற குழந்தை
அதிக உடற்பருமனைக் கொண்டவர்க க வளரும் ஆபத்து இருப்பதாக அண்மை கெண்டறியப்பட்டுள்ளது.
மருத்துவக்காரணங்களுக்காகவும், த்த நேரத்தில் பிறக்க வைக்க வேண்டும் ற சோதிட நம்பிக்கை காரணமாகவும், யே காரணங்கள் இன்றியும்கூட சிசேரி T (Caesarian) எனப்படும் சத்திர சிகிச்சை மம் குழந்தை பெற்றுக்கொள்ளும் போக்கு Dக அளவில் அதிகரித்திருக்கிறது. .
அமெரிக்காவில் மூன்று தாய்மார்களில் தவர் சத்திரசிகிச்சையின் மூலமே ந்தை பெற்றுக் கொள்கிறார். அங்குதான் க எண்ணிக்கையான குழந்தைகள். ற்பருமனைக் கொண்டவர்களாகவும் பதிப்படுகின்றனர்.
அமெரிக்கக் குழந்தைகளின் குண்டாதல் ld obesity) குறித்து பொஸ்ரன் குழந்தை "மருத்துவ மனையைச் சேர்ந்த விஞ் னிகள் குழு மேற்கொண்ட ஆய்வொன்றி யே சத்திரசிகிச்சை மூலம் பிறக்கின்ற ந்தைகள் அதிக எடை கொண்டவர்களாக ப்பது தெரியவந்துள்ளது. சாதாரண ந்தைகளைவிட சத்திரசிகிச்சைக் குழந் கள் அதிக பருமனுடன் வளர்வதற்கான பப்பு இரட்டிப்பு மடங்காக இருப்பது யப்பட்டுள்ளது.) சுகப்பிரசவக் குழந்தைகளின் உணவுக் ரயில் காணப்படுகின்ற பக்ரீறியங்களில் ந்து வேறுபட்ட பக்ரீறிய இனங்கள் சத்திர சை மூலம் பிறக்கும் குழந்தைகளின் எவுக்குழாயில் காணப்படுவதும் கண் பப்பட்டுள்ளது. இந்த வகைப் பக்ரீறியாங் (Firmicutes) உடற்பருமனால் அல்லற் | வயது வந்தவர்களிலும் அதிகமாக ளது. இதனால், இவ்வகைப் பக்ரீறியங் க்கும் உடற்பருமனுக்கும் இடையிலான. டர்புகளைக் கண்டறிவதற்கான ஆய்வு இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
** > > *கம்

Page 4
வினையாகும்
இந்த விளையாட்டுப் பெ அவற்றின் மேல் வர்ணப்பூச்சுகள் வர்ணப்பூச்சுகளில் அநேகமானவை விரைந்து உலர்ந்து போகவும், நி பளபளப்புடன் மிளிர்வதற்காகவுடே கலக்கப்படுகின்றது.
ஈயம் உடல் நலத்துக்கும் சுற்று நஞ்சு. இதனால், வர்ணப்பூச்சுகளில் 0.06கிராம் வரை மாத்திரமே ஈய நிர்ணயித்திருக்கிறார்கள், ஆன் தயாரிக்கப்படும் மரம், பிளாஸ்ரி யாட்டுப் பொருட்களில் அனுமதிக் அதிகமாக ஈயம் இருப்பது பல இதையடுத்து ஐரோப்பிய, அமெரி விளையாட்டுப் பொருட்கள் மீளப் சந்தைகளையும் ஆக்கிரமித்திரு விளையாட்டுப் பொருட்கள் என் எமக்கும் அவசியமாகும்.
குழந்தைகள் இப்பொருட்களை இலேசான இனிப்புச் சுவை காரன் வாயின் மூலம் நுழையும் ஈயம் ! செறியத் தொடங்குகிறது. இவ்வா மூளை வளர்ச்சி குன்றுவதோடு உறுப்புகளினது செயற்பாடுகளும் எச்சரித்திருக்கிறார்கள்.
குழந்தைகளை இவற்றில் இருந் குழந்தைகளை இவற்றை வாயில் ன பழக்கினால், விளையாட்டு வினைய

) விளையாட்டு
எருட்களை வண்ணமயமாக்குவதற்காக (paints) தீட்டப்படுகின்றன. இந்த ஈயத்தை ஒரு கூறாகக் கொண்டுள்ளன. றம் மங்கிப் போகாமல் இருக்கவும், வர்ணப் பூச்சுகளில் ஈயம் ஒரு கூறாகக்
: சூழலுக்கும் ஆபத்தான ஒரு உலோக அவற்றின் 100 கிராம் உலர் எடையில் ம் இருக்கலாம் என்று ஒரு அளவை ரால், சீனா மற்றும் இந்தியாவில் க்கினால் ஆன பெரும்பாலான விளை கப்பட்ட அளவை விடவும் பன்மடங்கு தடவைகள் கண்டறியப்பட்டுள்ளது. க்கச் சந்தைகளில் இருந்து இத்தகைய 'பெறப்பட்டும் உள்ளன. இன்று எமது ப்பவை சீன, இந்தியத் தயாரிப்பு சபதனால், இது பற்றிய விழிப்புணர்வு
ள விளையாடும்போது, ஈயப்பூச்சின் னமாக வாயில் வைக்க நேரிடுகின்றது. சிறுகச் சிறுகக் குழந்தையின் உடலில் Tறு சேரும் ஈயத்தினால் குழந்தையின்
சிறுநீரகம் மற்றும் இனப்பெருக்க > பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள்
து விலத்தி வைப்பது கடினம். ஆனால் வக்காதவாறு எச்சரிக்கையாக இருக்கப் பாகுவதைத் தவிர்க்கலாம். .
- மகேசன் கஜேந்திரன் |
நங்கூரம்

Page 5
கடல்:4
ஊருக்கு நல்லது சொல் குண்மை தெரிந்தது ;ெ
இரத்தப்
நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள | வேண்டிய அளவில் கையிருப்பில் இருக்க, u இரத்தத்தை யாசித்துப் பெறவேண்டியிருக்கிறது
மருத்துவமனையின் இரத்தவங்கியின் பற்றாக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், தன்னி இரத்ததானம் செய்ய முன்வருமாறும் பகிரங்க
யாழ். போதனா மருத்துவமனைக்கு ம தேவைப்படுவதாகவும் ஏற்பட்டுள்ள பற்றாக்கு இரத்தம் தருவிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்
போராட்ட காலத்தில் அவசர சிகிச்சை போதெல்லாம் உறிஞ்சியெடு என்று மக்கள் கொண்ட மருத்துவமனையில்தான் இன்று இர
யாழ். போதனா மருத்துவமனையில் இரு மருத்துவமனைகளுக்கும், பருத்தித்துறை அ அனுப்பி வைக்கப்படுவதால், யாழ் மருத்துவ வடக்கின் பெரும்பகுதி நோயாளர்கள் பாதிக்கப்
உயிருக்காய் மன்றாடும் உறவுகளுக்காக செய்யக்கூடிய இரத்த தானத்தை வா செய்யலாமல்லவா? .
போருடன் சேர்ந்து மானுட நேயமும் மடி நமது இரத்தத்தில் சிறிதளவைச் சாட்சியம் ஆக்
நங்கூரம்

அலை :அ-10
ஒவேன் - எனக்
காலவேள இபாகிப!11
பஞ்சம்
மருத்துவமனைகளிலெல்லாம் இரத்தம் பாழ். போதனா மருத்துவமனை மட்டும்
பொறுப்பதிகாரி வங்கியில் இரத்தப் "றைவு காண்பதற்குப் பொது மக்களை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tதாந்தம் ஆயிரம் பைந்துகள் இரத்தம் றையை ஈடுகட்ட கொழும்பில் இருந்து படுகிறது.
'களுக்காக இரத்தம் தேவைப் பட்ட
கூட்டம் முண்டியடித்த வரலாற்றைக் த்தப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
ந்தே கிளிநொச்சி, முல்லைத்தீவு பொது உதார மருத்துவ மனைக்கும் இரத்தம் மனையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடால் டும் அச்சநிலை தோன்றியுள்ளது.
, மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை ழ்நாளில் ஒருமுறையேனும் நாம்
து போகவில்லை என்று நிரூபிப்பதற்கு, வோம்!!
03

Page 6
நீல் ஆம்
KS நீல் ஆம். சங்லவிருச்சி * நினைவு
நாம் நிலாவைப் பெண் களின் அழகு வதனத்துக்கு உவமித் தும், நிலாவைக் காட்டிக் குழந்தை களுக்கு அமுதூட்டியும், நிலாவின் நிலத்தோற்ற அமைப்பை அப்பம் சுடும் பாட்டியென்றும் ஒளவைப் பிராட்டியென்றும் கதை சொல்லி யும் கொண்டிருந்தபோது, 1969 ஆம் ஆண்டு நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலவில் தன் காலடியைப் பதித்து முழு உலகையுமே அண்ணாந்து பார்த்துப் பிரமிக்க வைத்தார். மனிதன் இதுவரை நிகழ்த்திய சாதனைகளில் ஆம்ஸ்ட்ரோங் நிலாவில் உலாவியது அதியுச்ச சாதனையாக இன்றுவரை போற்றப் படுகிறது. அந்தச் சாதனை நாயகன் சமீபத்தில், தனது 82ஆவது வயதில் சாகாப்புகழோடு சாவினைத் தழுவி யுள்ளார்.
நீல் ஆம்ஸ்ட்ரோங் (Neil Armstrong) 1930, ஒகஸ்ட் 5ஆம் திகதி அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத் தில் ஸ்ரீபன் கோனிக் ஆம்ஸ்ட் ரோங்-வயோலா லூயிஸ் ஏஞ்சல் தம்பதியினருக்கு மகனாகப் பிறந் தார். ஒரு கணக்காளரான தந்தை யார் வான் பறப்பிலும் அக்கறை கொண்டவர். அப்போது அமெரிக்
04

ஸ்ட்ரோங் நிகும்வரை” இருக்கும்.
இ. சர்வேஸ்வரா காவில் பிரபல மாகியிருந்த கிளீவ் லாண்ட் எயர் றேசஸ் (Cleveland Air Races) என்னும் வானூர்திப் பந்தய நிகழ்ச்சிகளில் பார்வையாளனாக வும் வானோடியாகவும் கலந்து கொள்ளும் ஸ்ரீபன், தன்னோடு ஆம்ஸ்ட்ரோங்கையும் அழைத்துச் செல்வது வழமை. இரண்டு வயது தொடக்கம் வானூர்திப் போட்டி களைப் பார்த்து ரசித்து வந்த ஆம் ஸ்ட்ரோங்குக்கு ஆறாவது வயதில் தந்தையாரோடு சேர்ந்து வானூர் தியில் பறக்கும் வாய்ப்புக் கிட்டி யது. அந்த முதல் பறப்பு அனுபவம் அவரது வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. தந்தையின் ஆதரவு பக்கபலமாக அமைய, தன்னை ஒரு வானோடியாக உரு வாக்கிக்கொள்ளும் முயற்சிகளில் ஆம்ஸ்ட்ரோங் ஆர்வம் காட்டத் தொடங்கினார்.
ஆம்ஸ்ட்ரோங் தனது 15ஆவது வயதில் - பாடசாலையில் கற்றுக் கொண்டிருந்தபோதே - அவரது பகுதியில் இருந்த விமான நிலையத்தில் விமானம் செலுத்து வது தொடர்பான அடிப்படைக் கல்வியைப் பயின்று மாணவ விமானி என்று விமானம் ஓட்டும் ) உரிமத்தைப் பெற்றுக் கொண்டார்.
நங்கூரம்

Page 7
அப்போது, அவர் வாகனச் சாரதி அனுமதிப் பத்திரம்கூடப் பெற்றி ருக்கவில்லை. அறிவும், ஆற்றலும் கொண்ட வானோடியாகத் திகழ வேண்டும் என்ற கனவைச் சுமந்தி
ருந்த ஆம்ஸ்ட்ரோங் 1947ஆம் ஆண்டு பேர்டியூ பல்கலைக்கழ கத்தில் இணைந்து வான் பொறியி யல் பயின்று, 1955ஆம் ஆண்டு அத்துறையில் இளவிஞ்ஞானமாணி பட்டத்தைப் பெற்றார். இடையில் மூன்று வருட காலம் அவர் அமெ ரிக்கக் கடற்படையின் விமானப் பிரிவில் இணைந்து பணியாற்றி யதாலேயே பல்கலைக்கழகக் கல்வி யைப் பூர்த்திசெய்ய எட்டு வருடங் கள் தேவைப்பட்டன. இவர் கடற் படையில் இணைந்திருந்த காலப் பகுதியிலேயே அமெரிக்க-கொரிய யுத்தம் நிகழ்ந்தது. இந்த யுத்தத்தில் விமான ஓட்டியாக அவர் பெற்றுக் கொண்ட பறப்பு அனுபவங்களும் வெளிக்காட்டிய திறமைகளுமே அவருக்கு, அவரது 3 2 ஆவது வயதில் நாசா நிறுவனத்தின் வாசற் கதவுகளைத் திறந்துவிட்டன.
நீல் ஆம்ஸ்ட்ரோங் நாசாவில் (NASA-National Aeronautics and space Administration) இணைந்த காலப் பகுதியில் விண்வெளி ஆய்வில் அ மெரிக்காவுக்கும் அன்றைய சோவியத் யூனியனுக்கும் இடை யில் நீயா - நானா? என்ற கடும் போட்டி நிலவி வந்தது. விண் வெளிக்கு முதன் முதலில் செயற் கைக் கோள் அனுப்பியது. (ஸ்புட் னிக்-1), விண்வெளிக்கு முதன் : மு த லி ல் உ யி ரி னத்தை அனுப்பியது (லைக்கா
கம்-பாய:
நங்கூரம்

என்னும் நாய்), விண் வெளிக்கு - மு த ன் மு த லி ல் ம னி த  ைன
அனுப்பியது (யூரி ககாரின்), விண் = வெளியில் முதன் முதலில் மனிதன் - இறங்கி நடந்தது (அலெக்ஸி - ஏ - - லியனே) என்று விண்வெளிப் பந்தயத்தில் சோவியத்யூனியன் - அமெரிக்காவைவிடச் சிலபடிகள்
முன்னுக்கே நின்றது. இதனால், - நிலாவில் சோவியத் காலூன்று - வதற்கு முன்பாக அந்தப் பெருமை
யைத் தனதாக்கும் முயற்சிகளில் - அமெரிக்கா வேகம் காட்டியது. - அமெரிக்க அதிபராக ஜோன் எவ். - கெனடி பதவி வகித்த போது, - மனிதன் நிலவுக்குச் சென்று பத்திர மாகத் திரும்பும் அப்பலோ திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. 1961 இல் ஆரம்பித்து 1972 வரை நடைமுறைப்படுத்தப்பட்ட இத் திட்டம் தான் அமெரிக்காவின் வரலாற்றில் மாத்திரம் அல்ல; ஆம்ஸ்ட்ரோங்கின் வாழ்க்கையி லும் அழிக்க முடியாத வரிகளை எழுதிச் சென்றது.
எEபம் ==
பாப் பாடம்
4As11பொதுசன நாம்
பட#17. 1.4 ட4ாணம்
நீல் ஆம்ஸ்ட்ரோங்

Page 8
நி ல வு க் கு ம னி தர் க ளை அனுப்புகின்ற திட்டத்துக்கு முன்னோடியாக, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் மேர்க்கூரி (Mercury), ஜெமினி (Gemini) என்னும் இரண்டு திட்டங்களில் அமெரிக்கா ஈடு பட் டிருந்தது. இவற்றில், ஜெமினி - 8 இன் விண்வெளிப் பயணத்தில் ஆம்ஸ்ட்ரோங் கே தலைமைப் பொறுப்பை வகித்தார். ஆனால், ஜெமினி-8 திட்டமிட் டவாறு விண்வெளியில் அதன் பணிகளை முடிக்க இயலவில்லை. தொழில்நுட்பக் கோளாறு காரண் மாக முன்கூட்டியே திரும்ப நேரிட் டது. அப்போது, எதிர்பாராத விதமாக ஜெமினி -8 விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து தாறுமா றாகப் பயணிக்கத் தொடங்கியது. தொடர்புகள் துண்டிக்கப்பட, நாசாவின் தரைக்கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகள் தங்கள் சகாக்களுக்காகப் பிரார்த் திக்கத் தொடங்கிவிட்டனர். எனி னும், ஆம்ஸ்ட்ரோங் சாதுரியமாகச் செயற்பட்டுப் பசுபிக் சமுத்திரத்தில் விண்கலத்தைப் பத்திரமாக வீழ்த் தித் தன்னையும் சக வீரர்களையும் காப்பாற்றிக் கொண்டார். இந்த அபாரமான துணிச்சலும் தன்னம் பிக் கை யு ம் த ா ன் அ வ ரு க் கு அப்பலோ திட்டத்தில் இணைந்து நிலாவில் காலடி வைக்கும் வாய்ப்
பைப் பெற்றுக் கொடுத்தது.
அப்பலோ-11 விண்கலம் 1969 ஜூலை 16ஆம் திகதி அமெரிக்க நேரப்படி காலை 9.32க்கு புளோரி டாவில் அமைந்துள்ள கெனடி
06

விண்வெளி நிலையத்தில் இருந்து ஏவப்பட்டது. இந்தச் சாதனைப் ப ய ண த் தி ன் த  ைல  ைம ப் பொறுப்பை ஆம்ஸ்ட்ரோங் ஏற்றி ருந்தார். அவருடன் எட்வின் அல்ட் றின், மைக்கல் கொலின்ஸ் ஆகி யோரும் பயணித்தனர், அப்பலோ - 11 விண்கலம் கட்டளை அறை யாகவும், பயணிகளைக் காவவும் கொலம்பியா (Columbia-Command and service module) என்றும், நிலாவில் நிலை கொள்ளுவதற்கு கழுகு (EagleLunar module) என்றும் ஒன்றில் இருந்து ஒன்று தனியாகப் பிரியக் கூடிய இரண்டு பகுதிகளைக் கொண்டிருந்தது. நான்காவது நாள், 1969ஜூலை 20ஆம் திகதி கழுகு கொலம்பியாவில் இருந்து பிரிந்து ஆம்ஸ்ட்ரோங்குடனும் அல்ட்றி னுடனும் அமெரிக்க நேரப்படி மாலை 4.17க்கு வெற்றிகரமாக நிலாவில் இறங்கியது. மறுபகுதி யான கொலம்பியா ஓடம் கொலின் சுடன் நிலவை வலம் வந்தது. ஏறத்தாழ ஆறு மணித்தியாலங்கள் கழித்து ஆம்ஸ்ட்ரோங் கழுகில் இருந்து இறங்கி வந்து மனுக் குலத்தின் மகத்தான சாதனையாக நிலவில் தன் முதல் காலடியை எடுத்து வைத்தார். அப்போது அவர் மமதை கொள்ளவில்லை. தன்ன டக்கத்தோடு, "இது மனிதன் தடம் பதித்த சிறிய காலடி ; ஆனால், மனுக்குலத்துக்கு இராட்சதப் பாய்ச்சல்" என்ற வார்த்தைகளை உதிர்த்தார். இந்தக் கிடைத்தற் குரிய, செயற்கரிய அதிசய நிகழ்வை உலகம் பூராவும் வானொலிகளும் தொலைக்காட்சிகளும் நேரடி
நங்கூரம்

Page 9
அஞ்சல் செய்தன. இதைக் கேட்டும் பார்த்தும் கொண்டிருந்த மில்லியன் கணக்கானோர் தாங்கள் நிலாவில் நிற்பதைப் போலவே பூரித்து நின்றனர்.
ஆம்ஸ்ட்ரோங் சற்றுத் தா ம த ம ா க இற ங் கி வ ந்து இணைந்து கொண்ட அல்ட்றினு டன் சேர்ந்து நிலாவில் அமெரிக்கக் கொடியை ஏற்றி வைத்தார். வெள்ளை மாளிகையில் இருந்த அதிபர் றிச்சார்ட் நிக்சனோடு வானொலித் தொலைபேசியினூ டாக உரையாடினார். நிலவில் நிலநடுக்கங்கள் ஏற்படுகிறதா என் பதைக் கண்டறியவும், நிலவுக்கும் பூமிக்கும் இடையிலான துல்லிய மான தூரத்தைப் பூமியில் இருந்து கணக்கிடவும் வல்ல கருவிகளை நிலத்தில் பதித்தார். ஏராளமான புகைப்படங்களைப் பிடித்துக் கொண்டார். மேலும், பகுப்பாய் வுக்காக நிலாவின் பாறைகளினதும் மண்ணினதும் மாதிரிகளைச் சேகரித்துக் கொண்டு கழுகுக்குத் திரும்பினார். இவ்வளவு பணி களையும் நிலாவில் உலாவுவதற் கென ஒதுக்கப்பட்ட சுமார் இரண் டரை மணி நேர இடைவெளிக் நங்கூரம்

குள்ளேயே செய்துமுடிக்க வேண்டி யிருந்தது. நிலாவின் ஈர்ப்புக் குறை வால் தாவுவதுபோல் நடக்க நிர்ப் பந்திக்கப்பட்டிருந்த ஆம்ஸ்ட் ரோங் இந்த நேரக் கெடுவால் இன்னும் வேகவேகமாகச் செயற் பட நேர்ந்தது. இதனால், உடலின் அனுசேபத்தொழிற்பாடுகள் - இத யத்துடிப்பு நிமிடத்துக்கு 110 என்ற அளவில் - அதிகரிக்க, கட்டளைப் பீடத்தில் இருந்து அவரது இயக் கத்தைக் குறைக்குமாறு பல தடவை கள் எச்சரிக்கப்பட்டார் என்பது
குறிப்பிடத்தக்கது.
- ஆம்ஸ்ட்ரோங்கும் அல்ட் றினும் தாய்ப்பூமிக்குத் திரும்பும் பயணத்துக்குத் தமது உடலைத் தயார் செய் யும் பொருட்டுக் கழுகின் உள்ளே சிலமணி நேரங்கள் தூங்கினர். பின்னர், ஜூலை 21, பி.ப1.54 மணிக்குக் கழுகு நிலவில் இருந்து பறந்து, நிலவை வலம் வந்து கொண்டிருந்த கொலம்பியாவுடன் மோதி இணைந்து கொண்டது, கழுகில் இருந்து இருவரும் கொலம் பியாவுக்குள் இடம்மாறியதும், கழுகை உதறித் தள்ளி விட்டு கொலம்பியா ஓடம் பூமியை நோக்கிப் பயணித்தது. நிலாவின்
07

Page 10
படப்ட்டிட வ க டனை
சுற்றுவட்டப் பாதையில் அநாதர வாக அலைந்து கொண்டிருந்த கழுகு, சில வருடங்களின் பின்னர் நாசாவின் கண்ணில் தென்பட வில்லை. நிலவின் எங்கோ ஒரு மூலையில் விழுந்து சிதறியிருக்கக் கூடும். கொலம்பியா மட்டும் ஆம்ஸ்ட்ரோங் குழுவினரை சுமந்து கொண்டு, 1969 ஜூலை 24 அமெரிக்க நேரப்படி பி.ப 12.50க்கு பசுபிக் சமுத்திரத்தில் பத்திரமாக இறங்கியது.
08

பூமி க் கு த் தி ரு ம் பி ய ஆம்ஸ்ட்ரோங்கை உலகமே வியந்து பேசியது. அவர் தனது சொந்த ஊருக்குச் சென்றபோது அவரைப் பார்ப்பதற்காக அரை இலட்சம் பேர் வரையில் திரண்டிருந்தனர். அவரது ஊரின் மொத்த சனத் தொகையே 9 ஆயிரம் பேர்தான். அந்த அளவுக்கு அவர் கொண் டாடப்பட்டார். அமெரிக்காவின் உயர் விருதுகளான சுதந்திரத் துக்கான ஜனாதிபதி விருது, காங்கி ரஸ் விண்வெளி விருது, காங்கிரஸ் தங்கவிருது உட்பட ஏராளமான விருதுகள் தேடி வந்தன. நாசா அவரைத் தனது தலைமை அலுவ லகத்தில் உதவி மேலதிகாரியாக நியமித்துக் கெளரவம் செய்தது. ஆனால், உட்கார்ந்தவாறே உழைப் பதை விரும்பாத ஆம்ஸ்ட்ரோங் நாசாவில் இருந்து விலகித் தனது சொந்த மாநிலமான ஓஹியோவிக் குத் திரும்பினார். அங்கு, சின் சினாட்டி பல்கலைக்கழகத்தில் விண்வெளிப் பொறியியல் துறை யில் பேராசிரியராகப் பணியாற்றி யதோடு, ஒரு பண்ணை நிலத்தை யும் வாங்கி சோளப் பயிர்ச்செய்கை யிலும் ஈடுபட்டு வந்தார். பிற் காலத்தை சின்சினாட்டியில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வாகக் கழித்துக் கொண்டிருந்தபோதே, மரணம் அவரை ஆட் கொண் டுள்ளது. இதய அறுவைச் சிகிச்சை யைத் தொடர்ந்து ஏற்பட்ட உடல் நலக்கோளாறு காரணமாக, கடந்த ஓகஸ்ட் 25ஆம் திகதி மரணம் அடைந்துள்ளார்.
நங்கூரம்

Page 11
ஆம் ஸ்ட் ரோங் கி ன் மரணம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவிக்கையில், "ஆம்ஸ்ட்ரோங் அமெரிக்காவின் நாயகர்களிடையே யாவரையும் விடப் பெரியவர். அவரது காலத் தில் மாத்திரம் அல்ல; எல்லாக் காலத்திலும்தான்" என்று குறிப்பிட் டுள்ளார். இது மிகையான நீத்தார் நயப்புரை அல்ல. இதுவரை நிலவில் 12 விண்வெளி வீரர்கள் இறங்கி நடந்துள்ள போதும் ஆம்ஸ்ட்ரோங் அளவுக்குப் புகழ் பெற்றவர் எவ ருமே இல்லை. நிலவு நாயகன் என்ற அடைமொழி அவருக்கு மட்டுமே உரித்தாக இருந்தது. ஆம்ஸ்ட் ரோங்கின் இந்த இறவாப் புகழுக்கு அவர் நிலாவில் முதன் முதலில் கால் பதித்ததை முதலாவது காரணம் எனில், அவர் காட்டிய அசாதாரண மான எளிமையை இரண்டாவது காரணம் எனலாம்.
- ஆம்ஸ்ட்ரோங் புகழின் உச்சாணி யில் இருந்த போதும் புகழின் போதை தலைக்கேற ஒரு போதும் அனுமதித்ததில்லை. ஊடக வெளிச்சம் தரும் விளம்பரங் களில் இருந்து ஒதுங்கி, ஒரு சாதாரண அமெரிக்கப் பொதுமகன் போலவே கடைசி வரைக்கும் வாழ்ந்தார். இதனால், இவர் இறந்த செய்தி வெளியானபோது இவர் இதுவரை உயிருடனா இருந்தார் என ஆச்சரியப்பட்ட அமெரிக்கர் கள் உள்ளடங்கிய உலகத்தவர்கள் ஏராளம். தனது புகழைத் தவறான காரியங்களுக்குப் பயன்படுத்த விரும்பாத ஆம்ஸ்ட்ரோங் அத
நங்கூரம்

னைப் பிறர் தவறாகப் பயன்படுத்து வதற்கும் அனுமதிக்கவில்லை. நினைவுக் கையொப்பஏடுகளில் (Autographs) அவர் இட்ட கையெ ழுத்துகள் ஆயிரம் டொலர்கள் வரை விலைபோகின்றன என்பது அவர் கவனத்துக்குத் தெரியவந்த போது நினைவுக் கையேடுகளில் ஒப்பமிடுவதை அறவே தவிர்த்துவி ட்டார். ஆம்ஸ்ட்ரோங்கின் சிகைய லங்கரிப்பாளர் ஆம்ஸ்ட்ரோங்கின் தலைமுடியிற் சிறிதளவைப் பெருந் தொகைப் பணத்துக்கு அரும் பொருட் சேகரிப்பாளர் ஒருவரிடம் விற்றுள்ளார். இது தெரிய நேரிட்ட போது, ஆம்ஸ்ட்ரோங் நீதிமன்றப் படியேறி அந்தப் பணத்தைப் பொதுச் சேவை நிதியம் ஒன்றில் வைப்பில் இடவைத்தார். இத்த கை ய அ ரு ங் கு ண ங் க ள் தான் ஆம்ஸ்ட்ரோங்கைப் புகழின் ஏணி யில் நிரந்தரமாகவே குடிவைத்தது.
ஆம் ஸ்ட் ரோங் நேர் காணல் ஒன்றில், சந்திரனில் பாது காப்பாகத் தரையிறங்குவதற்கான வாய்ப்பு 50க்கு 50வீதமே இருந்தது என்றும் சந்திரனில் தரையிறங்கி மீண்டும் பூமிக்கு உயிரோடு திரும்பு வதற்கான வாய்ப்பு வெறும் 10 வீதமே இருந்தது என்றும் குறிப்பிட் டுள்ளார். உயிரைப் பணயம் வைத்து ஒட்டு மொத்த மனுக்குலத்தின் சாதனையாக நிலவுக்குச் சென்று திரும்பிய ஆம்ஸ்ட்ரோங் இப் போது உயிருடன் இல்லை. ஆனால், நிலவு இருக்கும் வரை அ வர் நி னை வி ல் இருந்து கொண்டே இருப்பார்..

Page 12
தொண்டை
யாழ்ப்பாணக் குடாநாடு இந்த வருடம் என்றும் இல்லாத வாறு கடும் வரட்சியைச் சந்தித்தி ருக்கிறது. வற்றாவே வற்றாது என்றி ருந்த பல கிணறுகளில் தண்ணீர் பட்டைக் கிடங்குகளில் மட்டுமே மிஞ்சிக் கிடக்கிறது. சதுப்பு நிலங் கள் வரண்டு பாளங்களாக வெடித் துப் போய் உள்ளன. குளங்களில் தண்ணீர் இருந்த சுவடே தெரியவில் லை. புழுதி பறந்து கொண்டிருக்கி றது. தாகத்தால் தவித்தலைந்த கால் நடைகள் கடைசியில் கடல் நீரேரி களில் ஒதுங்கி உப்பு நீரைக் குடிக்க வும் முடியாமல் துப்பவும் முடியா மல் பரிதாபமாக இறந்து போன சம்பவங்களும் பதிவாகியுள்ளன. சுட்டெரித்த கோடையும் பொய்த் துப்போன மழையும் யாழ்ப்பாணத் தின் நீர் நிலைகளைக் காயச் செய்த காட்சிகள், வருங்காலத்தில் யாழ்ப் பாணம் எதிர்கொள்ளவுள்ள பெரும் நீரியல் அவலங்களுக்கான முன் னோட்டமோ எனப் பலரையும் அச்சப்பட வைத்துள்ளது.
மனித குல வரலாற்றில், அவனது நாகரிகம் வேர் கொண்டு விழுதெறிந்த பிரதேசங்களாக நீர் நிலைகளை அண்டிய பிரதேசங் களே விளங்கியுள்ளன. ஆனால்,

நனைக்குமா
யாழ்ப்பாணத்தில் பேராறுகளோ பெருங்குளங்களோ இல்லை. பெய்து கொட்டுகின்ற அடை மழையும் குறைவு. அப்படி இருந் தும் இங்கு தொன்றுதொட்டுத் தமிழ் வாழ் வு இருந்திருக்கிற தெனில், அதற்குக் காரணம் நிலத்தடி நீர்தான். அந்த நிலத்தடிச் செல்வம் ஏற்கனவே உவரேறியும் வேளாண் இரசாயனங்களால் நஞ் சேறியும் தரம் தாழ்ந்து கொண்டி ருக்கையில், இப்போது பற்றாக் குறைவால் அளவிலும் தாழ்ந்து கொண்டிருக்கிறது.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் அடித்தளம் சுண்ணாம்புக் கற் பாறைகளைக் கொண்டது. இந்தி யத் தமிழகத்தின் நீட்சியாக இருந்த நிலப்பரப்பின் தாழ்வான பகுதி யைக் கடல் கபளீரகம் செய்ததா லேயே இலங்கை தனித் தீவாக உரு வானது. அப்போது, யாழ்ப்பாணக் குடாநாடு நெடுங்காலம் ஆழமற்ற கடற்பரப்பால் மூடுண்டு இருந்தது. இந்தக் கடலில் வாழ்ந்து இறந்த பெருந்தொகையான உயிரினங் களின் வன்கூடுகளே இறுகிக் குடா நாட்டின் அடித்தளம் தோற்றம் பெற்றது. இதற்கான ஆதாரமாக, கிணறுகள் தோண்டும் போது
நங்கூரம்

Page 13
CTILாறாயா
"தொண்டைம்
பாறைகளில் சிப்பிகள், சங்குகள் போன்றவற்றின் சுவடுகள் பதிந்தி ருப்பதை இப்போதும் காணலாம். கல்சியம் காபனேற்றால் ஆன அந்தப் பாறைகளையே சுண்ணாம் புப் பாறைகள் எனவும், அவை தோற்றம் பெற்ற காலப்பகுதி புவிச் சரித வரலாற்றின் மயோசின் (Miocene) காலம் என்பதால் மயோ சின் பாறைகள் எனவும் அழைக்கப் படுகின்றன.
மயோசின் பாறைகள் இயல் பாகவே மூட்டுகளையும் உடை வுகளையும் கொண்டிருப்பதால் மழை நீரை உட்புகவிடக் கூடி யவை. இவ்வாறு புகுந்து, பாறை களின் உள்ளேயுள்ள வெடிப்பு களிலும் பள்ளங்களிலும் தேங்கு கின்ற நீரையே நிலத்தடி நீர் என்கி றோம். இந் நிலக்கீழ் நீர் அதற்குக் கீழே, குடாநாட்டைச் சூழவுள்ள கடலில் இருந்து ஊடுருவியிருக்கும் உவர் நீரின் மேல் ஒரு வில்லை போல மிதந்து கொண்டிருக்கிறது. மழை காலத்தில் தரைக்குக் கீழே சேமிக்கப்படும் மழை நீரின் அள வுக்கு ஏற்ப இந்த நன்னீர் வில்லை கள் விரிவடைந்தும் கோடை காலத்தில் சுருங்கியும் கொள்கிறது. இவ்வில்லைகளிலுள்ள நீரே, நாம்
2 E=F ப= ==-
நங்கூரம்
E :: கக 13 H =5 =E E === பா
- பாதுகாக்க காக அது 9 கார்

Tன் இறு?
கிணறுகளைத் தோண்டும்போது பாறைகளினூடாக ஊறிவந்து கிணற்றில் சேருகிறது.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் சனத்தொகை குறைவாக இருந்த வரைக்கும் கடுங்கோடையிலும் நிலத்தடி நீருக்கு ஒருபோதும் பஞ் சம் ஏற்பட்டதில்லை. ஆனால், குடாநாடு இப்போது தாங்கும் மக்கள் சுமை அதிகம். 1995 ஆம் ஆண்டு இடப்பெயர்வுக்கு முன்னர் எட்டு இலட்சம் பேர் வரையில் செறிந்து வாழ்ந்த யாழ்ப்பாணத் தில், இப்போதும் ஆறு இலட்சம் பேர்வரையில் குழுமியுள்ளனர். இவர்களது அன்றாடத் தேவை களுக்கெனவும் செறிவு வேளாண் மைக்கெனவும் அனுதினமும் சுமார் 80,000 கிணறுகளும், 15,000 குழாய்க் கிணறுகளும் தண்ணீரை வெளியே இறைத்துக்கொண்டிருக் கின்றன. ஆனால், வெளியேறிய நீரைச் சமன் செய்யுமளவுக்கு நிலக் கீழ் நீர் மீளவும் சேமிக்கப்படுவ தில்லை.
நம் முன்னோர் குளங்களை வெறுமனே தமது நீர்ப்பாசனத் தேவைகள் கருதி மாத்திரம் அமைத் துச் செல்லவில்லை. நிலமடந்
மா.மோகனகிருஷ்ணன்
1)
எக: EEE E: எம் கார் |

Page 14
|
SE=======காம் கயப்படி படம் மாய படமா - கோத: - EE E:-:=ாக்டா காட்டும்
கோல்கட்டா
தைக்கு மழை நீரைப் பருகக் கொடுக்கும் வாய்களுமாகவே அவற்றைக் கருதிப் பராமரித்தார் கள். ஆனால், நாம் தயவுதாட்சணி யமின்றி ஏராளமான குளவாய்களை மூடி அடைத்து விட் டோம். ஸ்ரான்லி வீதியும் கஸ்தூரியார் வீதியும் சந்திக்கும் இடத்தில் சில வருடங்களுக்கு முன்புவரை இருந்த வண்ணான்குளம் இப் போது இல்லை. அந்தக் குளத்தை இன்று கட்டிடத் தொகுதிகளால் நிரப்பி வைத்திருக்கிறோம். நம் கண்ணெ திரிலேயே காணாமற்போன குளங் களுக்கு இது ஒரு உதாரணம்தான். அத்தோடு, போதிய மழை வீழ்ச்சி யும் கிடைக்கப் பெறாததால் நன் னீர் வில்லைகள் சுருங்கிக் கிணறு களில் நீர்மட்டம் கீழிறங்கத் தொட ங்கியுள்ளது. நன்னீர் வில்லை இருந்த இடத்தில் கடல்நீர் புக, சில கிணறுகளில் உப்புக்கரிக்கவும் தொடங்கியிருக்கிறது.
": M ன்
யாழ்ப்பாணக் குடாநாட்டின் தாகத்தைத் தணிவிப்பதற்கு, கிளி நொச்சி மாவட்டத்தின் இரணை மடுக் குளத்தில் இருந்து தண்ணீரை எடுத்து வரும் திட்டமொன்றின் பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன. ஆனால், கடந்து சென்ற கோடை இரணைமடுக் குளத்தையும் விட்டுவைக்கவில்லை. கிளிநொச்சியின் மிகப்பெரும் குள மான அதனையே குட்டை போலச் சுருங்க வைத்துவிட்டது. இருந்த நம்பிக்கைகள் தளர்ந்துவிட்ட நிலை யில், யாழ்ப்பாண வாசிகள் தொண் டைமான் ஆறு தன்னும் தொண்

டை நனைக்காதா என்று அங்க லாய்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் உள்ளே உப்பாறு என்றும், தொண் டைமான் ஆறு என்றும் இரண்டு கடல் நீரேரிகள் உள்ளன. மாரி காலங்களில் மழைநீரைச் சுமந்து கொண்டு கடலுக்கு விரையும் இவை, கடற்பெருக்கின்போது கடல் நீரைக் குடித்து உப்பேறுகின் றன. இதனாலேயே இவற்றுக்குக் கடல் நீரேரிகள் அல்லது உவர் நீரேரிகள் (Salt water lagoons) என்று பெயர். மாரியில் சலசலத்தாலும் கோடையில், குடல் வற்றிய பாம்பு கள் போலவே இந்தக் கடல் நீரேரி கள் அசைவற்றுப் படுத்திருக்கின் றன. இவற்றில் உப்பாறு ஏரி
கப்பூதுவில் ஆரம்பித்து அரியாலை யில். கடல் நீருடன் இணைகிறது. தொண்டைமான் ஆறு பச்சிலைப் பள்ளியில் இருந்து ஆரம்பித்து தென்மராட்சியினதும், வட மராட்சியினதும் பல ஊர்களைக் கடந்து வந்து, கடைசியில் தொண் டைமானாறு கிராமத்தின் வழியாக வங்கக் கடலில் சங்கமிக்கிறது.
தொண்டைமான் ஆற்றுக்கு அந்தப் பெயர் நிலைக்க, தமிழ கத்தை ஆண்ட முதலாம் குலோத் துங்க சோழனின் படைத்தளபதி யாக விளங்கிய கருணாகரத் தொண் டைமான் என்பவரே காரணம் ஆவார். சோழ மன்னன் கட்டளை யேற்று, கருணாகரத் தொண்டை மான் யாழ்ப்பாணம் மீது படை யெடுத்துத் தொண்டைமான் ஆற்றின் அருகே படைத் தளங்களை
நங்கூரம்

Page 15
அமைத்ததாகவும், ஆற்றை அண்டி விளைந்த உப்பை மரக்கலங்களில் ஏற்றித் தமிழகத்துக்கு அனுப்பி வைத்ததாகவும், போக்குவரத்துக்கு வசதியாக ஆற்றை ஆழப்படுத்திய தாகவும் வரலாறு பகர்கிறது. தொண்டைமான் படையெடுத்த காலப்பகுதியில் ஆறு உவராக மாறி விட்டிருந்தாலும், கனகராயன் ஆற்று வடிநிலத்தினூடாக வடிந்து வரும் மழை நீரைத் தேக்கி முன்னர் நன்னீரேரியாக விளங்கியதாகவும் அறியமுடிகிறது. இதற்கு, தொண் டைமான் ஆற்றை அண்டி நன்னீர்ச் சூழலில் மட்டுமே வளரக்கூடிய மருது மரங்கள் சில இப்போதும் இருப்பதை ஆதாரமாகக் காட்டு கிறார்கள்.
குடாநாட்டின் இரண்டு கடல் > நீரேரிகளில் தொண்டைமான்
ஆறே பெரியது. ஏறத்தாழ 43 கிலோ மீற்றர்களுக்கு மேலாக நீண்டு செல்லும் தொண்டைமான் ஆறு 77 சதுரகிலோ மீற்றர்கள் பரப்பளவைக் கொண்டிருக்கிறது. உப்பாற்றின் பரப்பளவு 26 ச.கி.மீ. இரண்டு கடல் நீரேரிகளும் சேர்ந்து குடாநாட்டின் 10 விழுக்காடு பரப் பளவில் வியாபித்திருக்கின்றன. இதனால், குடாநாட்டில் பெய் கின்ற குறைந்த பட்ச மழைநீரை யேனும் கடல் நீரேரிகளில் சேமிப் பதன் மூலம் குடாநாட்டின் நீர் வளத்தைக் கணிசமான அளவு மீட்புச் செய்துவிடமுடியும் என்று நீரியலாளர்கள் நம்பிக்கை கொண் டுள்ளனர்.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் கடல் நீரேரிகளை மழை நீரால்
நங்கூரம்

அலசி நன்னீர் ஏரிகளாக மாற்றுவது பற்றிக் காலனித்துவ காலத்திலேயே சிந்திக்கப்பட்டது. 1879ஆம் ஆண் டில், அப்போது யாழ்ப்பாண மாகாணத்தின் ஆளுநராக இருந்த ருவைனம் (Twyneham) உவர்த் தடுப்பணைகள் அமைப்பது தொடர்பாகத் திட்டமிட்டார். ஆனால், அக்காலப் பகுதியில் இந் தோனேசியாவில் ஏற்பட்ட பாரிய கடற்கோளின் தாக்கம் காரணமாக யாழ்ப்பாணம் கடும் சூறாவளி யையும் வெள்ளப் பெருக்கையும் சந்திக்க நேர்ந்தது. தடுப்பு அணை . களைக் கட்டியிருந்தால், மழை வெள்ளம் கடலுக்குள் பாய முடியா மல் குடாநாட்டையே மூழ்கடித்து விட்டிருக்கும் என்று அஞ்சிய ஆளு நர் அதன் பின்னர் அதனைச் செயற் படுத்த முன்வரவில்லை.
வெள்ளப் பெருக்குக் காலத்தில் திறந்து மூடக் கூடிய மடைக்கதவு களைக் கொண்ட தடுப்பணைகள் அமைக்கும் திட்டத்தை 1947இல் பிராந்திய நீர்ப்பாசனப் பொறியிய லாளராக இருந்த வெப் (webb) என்பவர் வடிவமைத்தார். இதன் படி, தொண்டைமான் ஆறு வங்கக் கடலுக்குள் பிரவேசிக்கும் இடத் துக்குக் குறுக்காக அணை கட்டும் பணி 1949 இல் ஆரம்பமாகி, 1953இல் நிறைவடைந்தது. செயற் பாட்டுக்கு வந்து ஒரு தசாப்தத் துக்குள்ளாகவே பயனை உணர முடிந்தது. தொண்டைமான் ஆறு படிப்படியாக உவரை இழந்த தோடு, ஆற்றை ஒட்டிய உவர் தரை களில் சில விளைநிலங்களாகவும். மாற்றம் கண்டன. தொண்டை

Page 16
மானாறு வெளிக்கள நிலையம் யாழ் மத்திய கல்லூரி மாணவர்களைப் பயன்படுத்தி மேற்கொண்ட கள் ஆய்வில் இது தெரியவந்திருக்கிறது. ஆனால், தொடர்ச்சியாக அணைக் கதவுகளைப் பழுது பார்த்துப் பரா மரிக்கும் பணிகளை மேற்கொள் ளுவதற்குப் போதிய நிதி ஒதுக்கப் படாமையினாலும், உள்ளூர்வா சிகள் மீன் பிடிப்பதற்கு வசதியாக மடைக் கதவுகளை விருப்பத்திற் கேற்பத் திறந்து மூடிய மை யினாலும் 1977 ஆம் ஆண்டுடன் அணை அடியோடு செயலிழந்தது.
முப்பதாண்டுகள் கால இடை வெளியின் பின்னர் இப்போது தடுப் பணை புனரமைக்கப்பட்டு மீண் டும் கடலை மறித்தவாறு கம்பீர மாகக் காட்சி தருகிறது. இருந்தும், அப்போது போலவே சில சவால் களையும் எதிர்கொள்ள வேண்
பாடல்
பிரா===

டித்தான் உள்ளது. அச்சுவேலி, ஆவரங்கால் பகுதிகளில் தாழ்வான குடியிருப்புகள் மாரியில் வெள்ளக் காடாகும் போது, உரிய காலத் துக்கு முன்பாகவே மடைக்கதவு களைத் திறக்குமாறு வற்புறுத்துகின் றார்கள். ஆற்றில் அணையை அண்டி மீன்பிடி முற்றாகவே தடை செய் யப்பட்டிருந்த போதும், மடைக்கதவுகளுக்கு அருகிலேயே கற்களைப் பிரட்டி மீன்களைத் தேடுவது மும்முரமாக இடம்பெற் றவாறுதான் உள்ளது. மீன் பிடியா ளர்கள் உவர் நீர் நன்னீராக மாறி னால் மீன்கள் அருகிப் போகும் என்று அதிருப்தி கொள்ள, சூழலிய லாளர்களோ கண்டற் காடுகளும் பறவைகளும் காணாமல் போய்விடு மோ எனக் கவலை கொள்கின்றனர்.
இவ்வளவு சவால்களையும் தாண்டித் தொண்டைமான் ஆறு குடாநாட்டின் தொண்டையை நனைக்குமா என்பதற்குக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால், அது வரை காத்திராமல் வரப்போகும் மாரியில் மழை நீரைத் தெருவுக்குள் விரட்டிவிடாது நமது வீட்டு வளவுகளில் தேங்க அனு மதித்தாலே கிணறுகள் தானாகத் தண்ணீர் குடிக்கத் தொடங்கி - விடும்.
கங்கா

Page 17
15: கிரிப்பர் பற்SEHE '''
நீ', * இ, 4 நபர், 4.1
"மாணவர்கள் வாசிப்புச் சுட மழுங்கடித்து6.
"வாசிப்பின் போது நூலில் உறைந்திருக்கும் நூலாசிரியனின் . கொண்டு அவனைச் சிந்திக்கத்தூள் மாத்திரமே வாய்த்த பெரும்பேறு". தேர்ந்த வாசகர்களிடையே நன் என்னும் நூல் விற்பனை மையத்தின்
வ 1 -"Fா,171-5 -ம்?: = "415 டு பக்கவாதம் கே
- "அபபபா.
இரானா:பாயடாயபாடப்படும்;
சென்ற ஏப்ர: முபா- lெ கர்: 'த's 4 பூமி, ரிம் -
படிப்பா பார்
- '1 1'!''/1111 - 11124 - * 4- Fார் 1' *i 147* *''
நகரம்
*="11:2- பா =4:ா:ாNEா 21:1, 1ா '3' : ச571 திகாரி ராகம்
- 1 பல் WiNபப்பட்டயம்
மா: = 1.ர+2: -1' - பர்- "41""
"சிபார்)
படம் 1 2
mm Wாப்கான் ஆயர் காண்பதேயாம் (AM 1 :* கேபயம் பப்பு )
=" - செ கட்பார்ம் ர்ட் 2
Filா, கட்
18கரி லாதி 4 சி + F1 கார்

நேர்காணல்
இவணை பிட்டோம்
ரெ. படம்
பா படு ப்ர் : 4:
சா:.!
மாரிகா பத்ரா
ஓ இடம்பெற்றுள்ள சொற்களில் அனுபவம் வாசகனைத் தொற்றிக் ன்டுகிறது. இது மனித குலத்துக்கு - என்று சொல்லும் தெ.ரவீந்திரன் கு அறிமுகமான, புத்தகக்கூடம் -உரிமையாளர்.
சந்திப்பு : து.தமிழ்ச்செல்வன்
காமான்
15

Page 18
இலங்கையில் ஒக்டோபர் மாதம் தேசிய வாசிப்பு மாதமாகக் கொண்டாடப்படும் நிலையில், வாசிப்பை முன்னிறுத்தி அவருடன் மேற்கொண்ட நேர்காணலில் இருந்து சில பகுதிகள்:
• சிறுவயதில் வாசிப்பில் ஈடுபாடு இருந்ததா? சிறுபிராயத்தில் அதிக தேட லோடு வாசிக்கவில்லையானாலும், வாசிப்பின் மீதும் நூல்களின் மீதும் அப்போதே ஒருவித ஈர்ப்பு ஏற் பட்டு விட்டது என்றுதான் சொல் லுவேன். நான் குழந்தையாக இருந் தபோதே அப்பா இறந்துவிட்டபடி யால் பெரியப்பா கா.செ. நடராசா அவர்களோடு அதிகம் பழக நேர்ந் தது. அவர் ஒரு தமிழ்ப் பண்டிதர். கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியில் ஆசிரியராக இருந்தார். அவர் வீட் டுக்கு நான் போகும் போதெல்லாம் அவருக்குக் கை கால்களை அமுக்கி விடுவது எனது கடமையாக இருந் தது. அந்நேரங்களில் அவர் திருக் குறள், நாலடியார் தொடங்கி நீதி நூல்கள் வரை சொற்களின் ஏற்ற இறக்கங்களோடு சொல்லிக் காட்டு வார். நாளடைவில் அவை எல்லாம் எனக்கு மனப்பாடமாகிப் பொருள் விளங்கத் தொடங்கியதும், 'அட... தமிழில் இப்படி நூல்களா' என்ற ஆச்சரியம் ஏற்பட்டது. பின் நாட்களில் நூல்களின் மீது என் பார்வை திரும்புவதற்கு இதுதான் தொடக்கமாக அமைந்தது.
• தேர்ந்த, தரமான நூல்களை
விற்பனை செய்யவேண்டும் என்ற எண்ணம் எதனால் ஏற்பட்டது?
16

1995இல் ஏற்பட்ட யாழ்ப்பாண இடப்பெயர்வின்போது நான் கொழும்பு சென்று தங்க நேர்ந்தது. அப்போது 'சரிநிகர்' குழுவினருடன் அறிமுகமாகி, அந்தப் பத்திரிகையி லும் சிறிது காலம் பணியாற்றவும் வாய்ப்புக் கிட்டியது. இக்காலப் பகுதியில் படைப்பாளிகள் பலரின் அறிமுகம் கிடைத்தது. அங்கிருந்து நான் யாழ்ப்பாணம் வந்து போக ஆரம்பித்தபோது இங்கிருக்கக் கூடிய தீவிர வாசிப்புடைய நண் பர்கள் தங்களுக்குத் தேவையான புத்தகங்களின் பெயர்களைக் குறிப் பிட்டு அவற்றை வாங்கி வருமாறு கேட்பார்கள். அப்போது கண்டி வீதி மூடப்பட்டிருந்தமையினால் நல்ல நூல்களின் வரத்து எதுவும் இல்லாமல் இருந்தது. இதனால் நான் விற்பனையாளனாக அன்றி, ஒரு விநியோகஸ்தனாக நூல்களை எடுத்து வந்து இங்கு கொடுக்க ஆரம்பித்தேன். இதன் தொடர்ச்சி தான் எனது புத்தகக்கூடம்.
நூல்கள் பற்றிய உங்களின் பார்வை என்ன? கலிலியோவை நாட்டை விட்டு வெளியேற்றியபோது அவர் தான் எழுதிய விஞ்ஞானக் குறிப்புகள் அடங்கிய நூலை மிகவும் இரகசிய மாக எடுத்துக் கொண்டு சென்றார். சோதனைச் சாவடியில் சோதனை இட்டபோது, பிரார்த்தனை செய் வது போல நடித்துத் தனது நூலைப் பாதுகாத்தார். அந்தப் புத்தகம் வெளியான பிறகுதான் பூமி சூரி யனைச் சுற்றி வருகிறது என்ற பிர பஞ்ச உண்மை வெளியானது. இப்படிப் புதிது புதிதாகக் கற்கவும்,
நங்கூரம்

Page 19
தாள்களைக் கவனமா > தாவரங்களை அழிவில்ல
டிஜிற்றல் தொழில் போட்டோப் பிரதி, வண்ணப் பிரதி, கணினித்
ஆவணங்களுக்குப் பொலித் மலிவு விலையில் உயர்ந்.
பற்றுக்
பிரக PIRAKANTH PHO
இல.56B, பலாலிவ
யாழ்ப் தொபேசி:02122231840

ரகப் பாவிப்பதன் மூலம் மிருந்து பாதுகாப்போம்!
நுட்பத்துடன் கூடிய தட்டச்சு, ஆய்வுப் புத்தகங்கள் கட்டுதல் மற்றும் தீன் உறையிடும் சேவைகளை. த தரத்தில் துரித கதியில் காள்ள
முகாரும்.
பந்த்சன நாலகம் OTO COPY CENTRE
வீதி, திருநெல்வேலி, பாணம்.
22224075,077 5935294

Page 20
பசுமை அமைதி
சூழல் பாது 9
பரீட்சைத்திகதி
தரம் 9, 10 பயிலும் மாண தரம் 11, 12, 13 பயிலும் மா
தோற்ற அனும தங்கப்பதக்கம் உட்படப் பெ
பசுமைச் சான்றிதழ்க இதுவரை விண்ணப்பிக்காதவர்
தமது விண்ண நேரடியாக எமது அலுவல
'பரீட்சைக்கான பாட விதானமாக இரு ! 'நூல்களில் இடம்பெற்றுள்ள சூழல் அலகுகளுட 'ஏழாவது ஊழி நூலும், சமூக அறிவியல் -
| பரிந்துரைக்க
* நங்கூரம் சஞ்சிகையின் இதழ்களையும், கட பரீட்சையின் விடைகளுடன் கூடிய இலவம் இராமநாதன் வீதி, திருநெல்வேலி, பரமேஸ் (Book Lab) நிறுவனத்தில் பெற்றுக்கொள்ள இயற்கை, பண்பாட்டு மரபு
பதிவுகாரர் !
திருநெல்வேலி கிழ தொ.பேசி : 021222 5084
இலை 0777969644
மின்ல

விருதுகள் - 2012 றிவுப் பரீட்சை
நி: 23.11.2012
வர்கள் கீழ்ப்பிரிவிலும், ணவர்கள் மேற்பிரிவிலும் திக்கப்படுவர். றுமதியான பரிசுகளுடன்
ளும் வழங்கப்படும். -கள் 31.10.2012 க்கு முன்பாக எப்பங்களை -கத்தில் சமர்ப்பிக்கலாம்.
பிரிவுகளுக்குமுரிய வகுப்புகளின் பாட
ன், சுற்றுச்சூழல் கட்டுரைகளின் தொகுப்பான | ஏடான நங்கூரம் இருமாத சஞ்சிகையும் -ப்படுகிறது.
ந்த ஆண்டு நடைபெற்ற சூழல் பொது அறிவுப் + வினாத்தாளையும் இல.20. சேர். பொன் வராச் சந்தியில் அமைந்துள்ள புத்தகக்கூடம் லாம். வளப் பாதுகாப்பு மையம் ஒழுங்கை,
க்கு, யாழ்ப்பாணம். எயம் : www.imainet.org எஞ்சல் : saveheritage@yahoo.com

Page 21
55;
EF 144 144- 4
அறிவை விரிவு செய்யவும், இருக்கின்ற அறிவில், புரிதலில் காணப்படக் கூடிய பிழைகளைக் களை யவும் நூல்களை விட்டால் வேறு வழி இல்லை.
'வாசிப்பதால் மனிதன் பூரணம் அடைகிறான்' என்ற பிரபல வாக்கியம்
கு றி த் து உ ங் க ளு  ைட ய அபிப்பிராயம் என்ன?
வாசிப்பு அறிவு பெறக் கற்றல்' என்பதற்கும் அப்பால் பல உடல் - உளம் சார்ந்த நலன்களைக் கொண் டது.வாசிப்பு கண்களுக்கான பயிற்சி என்றால் குழந்தைகள் வாய் விட்டு வாசிக்கும்போது நாவுக் கான பயிற்சியாகி மொழியைத் தெளிவான உச்சரிப்போடும் தொனி பாவத்தோடும் கையாள உதவுகிறது. வாசிப்பில் அப்படியே ஒன்றிப் போகிற போது மனம் அடையும் நிலையைத் தியானத் துக்கு ஈடானது என்கிறார்கள் உள்வி யலாளர்கள். இந்தப் பயிற்சியின் மூலம் கிடைக்கும் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் எந்த ஒரு செயலையும் லயிப்போடு செய்யத் துணைபோகிறது. ஒரு நூலை முழுவதுமாகப் படித்து முடிப்பது என்பது எந்த ஒன்றையும் தொடங்கி அதனை இடை நடுவில் விட்டுவி டாமல் முழுமையாகச் செய்து முடிக்கும் ஆளுமையையும் வளர்க் கிறது. இவற்றுக்கெல்லாம் மேலாக, வாசிப்புத் தரும் கற்பனை வளமும் இன்றியமையாதது. வாசிப்பின் போது இசை - உருவம் - காட்சி. யமைப்பு போன்றவையெல்லாம்
நங்கூரம்

11ாFF11ாடா-1:1ா பால்
வாசகனின் கற்பனைத் தெரிவுக்கே விடப்படுகி றது. இதனால், வாசிக்கும் போது இவற்றைத் தானா கக் கற்பனை செய்து கொள் ளும் ஆற்றலும், அதனூ டாகச் சுய படைப்பாக்கத் திறனும் வளர்த்தெடுக் கப்படுகின்றன. வாசிப்
பின் இந்தப் பல்பரிமாண நன்மைகளையும் கருத்தில்கொண்டு தான், வாசிப்பதால் மனிதன் பூரணம் அடைகின்றான் என்ற வாக்கியம் உருவாகியிருக்க முடி யும். மற்றபடி புத்தகத்தைப் படிப் பதால் கிடைக்கும் அறிவுமட்டும் ஒருவனைப் பூரணமாக்கிவிடும் என்று பொருள் கொள்ள வேண் டியதில்லை.
உயர் கல்விச் சமூகத்தின், குறிப்பாகப் பல்கலைக்கழகச் சமூகத்தின் வாசிப்பின் தேடல் எப்படி இருக்கிறது? பல்கலைக்கழகத்துக்கு அரு காமையில் எனது புத்தகக்கூடம் இருப்பதால் இதனைக் கேட் கிறீர்கள் என நினைக்கின்றேன். புத்தகக்கூடம் அமைக்க வேண்டும் என்று நான் தீர்மானித்தபோது, அதற்குரிய இடமாகத் திருநெல் வேலியைத் தேர்வு செய்தது பல்கலைக்கழகத்தைக் கருத்திற் கொண்டுதான். ஆனால், எனது எதிர்பார்ப்பு பொய்யாகி விட்டது. பல்கலைக்கழகத்தில் இருந்து நல்ல நூல் பற்றிய தேடலோடு வந்து செல்லுகின்ற பேராசிரியர்களையும் மாணவர்களையும் விரல்விட்டு எண்ணி விடலாம். அண்மையில்,

Page 22
1890 ஆம் ஆண்டு வன்னி மாவட்டங்களில் உதவி அரசாங்க அதிபராக இருந்த ஜே.பி.லூயிஸ் எழுதிய 'Manual of Vanni Districts' என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப் பைக் காலத்தின் அவசியம் கருதி சேமமடு பதிப்பகம் வெளியிட்டது. ஈழத்தமிழ் மக்களின் அரசியல், சமூக வாழ்க்கை பற்றிய பதிவு களைக் கொண்ட அருமையான அந்த நூலில் பத்துப் பிரதிகள் வரையில் எடுத்து வந்திருந்தேன். பல்கலைக் கழகத்தில் இருந்து ஒருவரேனும் அதை வாங்கியிருக்க வில்லை. நாங்கள் படிக்கின் றோமோ இல்லையோ, எமது சந்ததிகளேனும் படிக்கவேண்டும் என்ற நோக்கில் நல்ல நூல்களை வாங்கி வீட்டில் வைத்திருந்த காலம் போய்விட்டது. ஆசிரியர்களும், மாணவர்களும் தங்களுக்குத் தேவையான பாடநூல்களை, அது வும் குறித்த பக்கங்களை மட்டும் 'போட்டோ' பிரதி எடுத்துச் செல் வதில் மாத்திரமே கருத்தாக இருக்கி றார்கள். பல்கலைக்கழகத்தில் மாத்திரம் அல்ல; பாலர் வகுப்பில் இருந்தே இதே நிலைதான்.
வாசிப்புப் பழக்கம் இந்த அளவுக்கு வீழ்ச்சியடைந்திருப் பதற்குக்காரணம் என்ன?
பாடசாலைகளில் வாசிப்புத் தினம் கொண்டாடப்பட்ட போதும் யதார்த்தம் வாசிப்பை ஊக்குவிப்பதாக இல்லை. பரீட் சைகளும் மதிப்பெண்களும் தர அளவுகோல்களாகக் கருதப்பட்டு, பொது வாசிப்பு என்பது அனாவசி

யம் என்ற முடிவுக்கு மாணவர் களைத் தள்ளிவிட்டது. நல்ல நூல்களைத் தேடிப் படிக்கின்ற தேவையையும் கால அவகாசத்தை யும் மறுதலிக்கின்ற நமது கல்விக் கலாசாரம் மாணவர்களின் வாசிப் புச் சுவையை மழுங்கடித்து விட் டது. பாடநூல்களையும் பயிற்சி வினாத்தாள்களையும் தவிர்த்து வேறு ஒன்றையும் படிப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை. படிப்பிப்பதற்கும் யாரும் தயாராக இல்லை. இப்படி, தேர்வுக்கு நேரடி யாகத் தொடர்பில்லாத எந்த ஒரு வாசிப்பும் பயனற்றது என்ற முடி வுக்கு மாணவர்களை மூளைச் சலவை செய்ததில் ஆசிரியர் களுக்கும் பெற்றோர்களுக்கும்
பெரும் பங்குண்டு.
அதிகரித்துள்ள இணையப் பயன்பாடும் வாசிப்பைப் பாதித்து வருவதாகச் சொல்லப்படுவதை எந்தளவுக்கு ஏற்றுக்கொள்ள
லாம்? தொலைக்காட்சி அறிமுகமான நாளிலிருந்து இலத்திரனியல் ஊட கங்கள் வாசிப்புப் பழக்கத்தைப் பாழ்படுத்துவதாகக் குற்றச்சாட்டு உண்டு. இவற்றுக்கு முன்னால் கட்டுண்டு கிடப்பவர்களைப் பார்க் கும்போது இந்தக் குற்றச்சாட்டை மறுப்பதற்கு இல்லை. தாய்மார் குழந்தைகளுக்குக் கதை சொல்லி வந்த போது குழந்தைகளின் வாசிப் புப் பழக்கம் மறைமுகமாக ஊக்கு விக்கப்பட்டது. கதை கேட்பதன் மூலம் கற்பனை வளமும் சிந்தனைத் திறனும் அதிகரிக்கின்றன. இவை தான் குழந்தை வளர்ந்தவுடன்
நங்கூரம்

Page 23
படலையை
வாசிப்புக்கான அருட்டு ணர்வை ஏற்படுத்துகின் றன. ஆனால், தொலைக் காட்சித் தொடர்களுக்கு ? முன்னால் அம்மாமார் தவம் கிடக்கத் தொடங்கி யதன் பின்னர் குழந்தை களின் வாசிப்புக்கு வீட் டில் கிடைத்து வந்த கடைசி ஊக்கியும் இல்லா மல் போய்விட்டது.
தொழில்நுட்பத்தின் புதுவர வான இணையத்தில் புதிய புதிய விடயங்களை உடனுக்குடன் வாசிக்கவும், அவற்றை இன்னொரு வருடன் பரிமாறவும் முடியுமென் றும் சொல்லப்பட்டாலும் இணை யத்தளம் கட்டமைத்து வரும் வாசிப்பு மரபார்ந்த நூல் வாசிப்பி லிருந்து வேறுபட்டது. இணை யத்தின் வெட்டி ஒட்டும் கலாச் சாரம் - Cut and Paste Culture - வாசிப்பின் பல முனைகளையும் மழுங்கடித்து, சிந்தனைத் திறனில் லாத ஒரு தகவற் தொகுப்பான உயிரியாகவே மனிதனை மாற்றி அமைத்து வருகிறது.
வாசிப்பைப் பரவலாக்கும் எத்தகைய முயற்சிகளில் நீங்கள் ஈடுபட்டு வருகின்றீர்கள்?
வாசகன் நூல்களைத் தேடிவர ஆர்வம் காட்டாத நிலையில் அவ னைத் தேடியே நூல் விற்பனை யாளர்களும் படைப்பாளிகளும் செல்ல வேண்டி இருக்கிறது. இது துரதிர்ஷ்டவசமான ஒன்று. இருந் தும், புத்தக விற்பனைக்கும் அப்பால் வாசிப்பை இயக்கமாக்க
நங்கூரம்

வேண்டிய சமூகக் கடப் பாடு எனக்கும் இருப் பதால் நான் பல்வேறு வான இடங்களுக்கும் சென்று புத்தகக் கண் காட்சிகளை நடாத்தி வருகின்றேன். நானோ அல்லது என்னைப் போன்ற ஒருசிலராலோ பெரிதாக எதையும் செய்து
விடமுடியாது. பொருளா தாரம், ஆளணி என்றும் பல பற்றாக்குறைகள் இருக்கின்றன.
வேறு ஏதாவது கூற விரும்பு கிறீர்களா? வாசிப்பை வீடுகளிலிருந்துதான் ஆரம்பிக்கவேண்டும். முன்மாதிரி யாக, பெற்றோர்கள் முதலில் புத்தகங்களைக் கையிலெடுத்தால், குறைந்தபட்சம் பத்திரிகையை யேனும் வாசிக்கத் தொடங்கினால் நாளை பிள்ளைகளும் வாசிக்கத் தொடங்குவார்கள். பிள்ளைக ளைத் தவறான பாதையில் இழுத் துச் செல்லுவதற்கு இங்கு ஏராள மான சாத்தான்கள் காத்திருக்கும் போது, அவர்களின் வழிகாட்டிகள் புத்தகங்களாகத்தான் இருக்கமுடி யும். நல்ல நூலொன்றை வாசிக்கத் தவறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தி லும், வாழ்நாள் பூராவும் துணைக்கு வரக்கூடிய ஒரு நல்ல நண்பனை அவர்கள் இழந்து வருகிறார்கள் என்பதைக்கருத்தில் கொள்ளுங்கள்
தொடர்புகளுக்கு
தெ.ரவீந்திரன், புத்தகக்கூடம் - Book Lab 20, சேர். பொன். இராமநாதன் வீதி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம். தொலைபேசி : 0771285749

Page 24
பறவைகளினால் உணவு
முடியுமா?
- ஸ்ரீ.யுவேதா,யா/லே
பறவைகளுக்குச் சு காலத்தில் நம்பப்பட்டது. களின் நாக்கில் சுவையை சுவையரும்பர்கள் (taste bu எண்ணிக்கை அதிகமாக பல்வேறு வகைச் சுவைகள் ஆனால், பறவைகளில் சுவையரும்பர்களே உண்டு. எண்ணிக்கை 50 தொடங்கி
கேள்விகளினூடாக ஓர் அறிவியற் பயணம்!
சுவையரும்பர்களில் தால் பறவைகளில் சுவையும் உள்ளது. பறவைகளின் நா தசைப்பிடிப்பானது அல்ல மான அமைப்பு ஆகும். பர்கள் நாக்கில் இல்லா மிருதுவான இழையங்களி சுவையரும்பர்களைக் கெ எடுக்கும் சொற்ப நேரத்த அறிந்துவிடுகின்றன.

பின் சுவையை அறிந்து கொள்ள
பம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை. வையுணர்வு இல்லை என்றுதான் ஒரு ஆனால், அது தவறானது. மனிதர் உணரத்தக்க 9000க்கும் அதிகமான ids) உள்ளன. சுவையரும்பர்களின்
இருப்பதால், மனிதர்களினால் ளையும் வேறு பிரித்தறிய முடிகிறது. 1 குறைந்த எண்ணிக்கையான
பறவை இனங்களுக்கு ஏற்ப இந்த 100 வரையில் வேறுபடுகிறது.
ன் எண்ணிக்கை குறைவாக இருப்ப னர்வு மட்டுப்படுத்தப்பட்டதாகவே க்கு மனிதர்களின் நாக்கைப் போன்று ; எலும்புகளைக் கொண்ட கடின இதனால், பறவைகளில் சுவையரும் மல் வாயின் உட்பக்கச் சுவரின் லேயே காணப்படுகின்றன. இந்தச் காண்டு, உணவை விழுங்குவதற்கு புக்குள்ளாகப் பறவைகள் சுவையை
'பொ. ஐங்கரநேசன்.
தெல்ல
நங்கூரம்

Page 25
மன நமது வீட்டுநாய்களினதும் ஓநாய்க
'டிங்கோ' என்றொருநாய் இனம் அ -இ.சுபாங்கி, கொழும்பு சைவ இந்து ம.
ஆசிய ஓநாய்களில் இருந்துதான் ஆய்வாளர்களின் கருத்து. அந்த ஓநாய்களுக்கும் வீட்டு நாய்களுக்கு டிங்கோக்கள் (dingos) . ஓநாய்க நிமிர்ந்தவை. ஓநாய்களைப் போலே எடுத்து வளர்த்தாலே மனிதருடன் நெல் தனியாகவும் கூட்டமாகவும் வாழும் க
'டிங்கோ' என்பது அவுஸ்திரே ஜின்களின் மொழிகளில் ஒன்றான எனினும், இவற்றின் பூர்வீகம் அவுஸ் நாடுகளில் இருந்து சுமார் 3000 ஆ யாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டி இப்போதும் தென்கிழக்காசிய நாடுக இவை எஞ்சியிருக்கின்றன.
ஓநாய் - அவுஸ்திரேலியாவில் இந்த இவை ஆடுகளைக் கௌவிக்கொன் களைக்கூட விட்டுவைப்பதில்லை. இ எதிர்ப்பையும் மீறி அவுஸ்திரேலிய வி வருகின்றார்கள். அவுஸ்திரேலியா பகுதிக்குள் டிங்கோக்கள் புகுந்து நியூசவுத்வேல்ஸ் பகுதிகளைத் தொட்டு நீளத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது என
நங்கூரம்

ளினதும் குணாம்சங்களைக் கொண்ட புஸ்திரேலியாவில் வாழுகின்றதாமே? களிர் கல்லூரி.
வீட்டு நாய்கள் தோன்றின என்பது ப் பரிணாம வளர்ச்சியில், ஆசிய தம் இடைப்பட்ட எச்சங்கள்தான் களைப்போலவே இதன் காதுகள் வ ஊளையிடுகின்றன. குட்டிகளை நக்கமாகப் பழகக்கூடியன. மற்றபடி, கட்டுநாய் இது.
லியப் பழங்குடிகளான அபொறி அயோரா (Eora) மொழிச்சொல். திரேலியா அல்ல. தென்கிழக்காசிய ண்டுகளுக்கு முன்னர் அவுஸ்திரேலி ருக்கலாம் என நம்பப்படுகிறது. கள் சிலவற்றின் காட்டுப்பகுதிகளில்
டிங்கோ
வீட்டு நாய் (பொக்சர்) நாயை வெறுப்பவர்களே அதிகம். னடு போய்விடுகின்றன. " கங்காரு தெனால், சுற்றுச் சூழலியலாளர்களின் "வசாயிகள் இவற்றை வேட்டையாடி பின் மிகவும் வளமான தென்கிழக்குப் விடாமல் தடுக்க குயின்ஸ்லாந்து, நிச் செல்லும்வேலி 5320 கிலோமீற்றர் ன்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
21
பெ77:Fன நாலகம்
யா? : 4 . 311 ணம்,

Page 26
அந்துருண்டைகளில் அடங்கி யுள்ள இரசாயனம் என்ன? - செ.திவ்வியா,
யா/ அத்தியார் இந்துக்கல்லூரி. அந்து உருண்டைகளின் இன்னு மொரு பெயர் : நப்தலீன் உருண் டைகள். இதில் இருந்து அந்து உருண்டைகளில் அடங்கியுள்ள வேதிப்பொருள் நப்தலீன் (Naphtha lene) என்று புரிந்து கொள்ளலாம். நப்தலின் வெள்ளை நிறமான திண்மம். அறை வெப்ப நிலையில், திண்ம நிலையில் இருந்து திரவ நிலையைக் கடக்காமல் நேரடியா கவே ஆவி நிலைக்கு மாறவல்லது. இதனை நிலக்கரித்தாரில் இருந்து தயாரிக்கிறார்கள். நப்தலீன் வாயு வின் மணம் பூச்சிகளுக்குப் பிடிக்கா ததால் சிறந்த பூச்சி விரட்டியாகப் பயன்பட்டு வருகிறது. திண்ம நிலையில் இருந்து நேரடியாகவே ஆவிநிலையை அடைவதால், துணி களை ஈரப்படுத்தாமல் பூச்சிகளை விரட்டுகிறது. நப்தலீன் ஆவி இலகு வில் தீப்பற்றக் கூடியது என்பதால், நப்தலீனுக்கு மாற்றாக அந்துருண் டைகளில் பரா இரு குளோரோ பென்சீன் (Para dichloro benzene) என்னும் வேதிப்பொருளைப் பயன் படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இருந்த போதும் இன்னமும் ஆட்சி யில் இருப்பது நப்தலீன்தான்.

ஆண்டுதோறும் செப்டெம்பர் 16ஆம் திகதி, சர்வதேச ஓசோன் ப ா து க ா ப் பு த் தி ன ம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் முக்கியத்து வத்தைச் சற்று விளக்குவீர்களா? -ர.சுரேக்கா,
யா/வட.இந்து மகளிர் கல்லூரி. பூமியில் உள்ள உயிரினங்களைச் சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதுதான் ஓசோன்படை. இது தரையில் இருந்து 15 தொடங்கி 50 கிலோமீற்றர் வரையான உயரத் தில், வளிமண்டலத்தின் படை மண்டலத்தில் (Stratosphere) பூமி யைச் சூழ ஒரு குடைபோன்று விரிந்து காணப்படுகிறது. ஆனால், நாம் வளிமண்டலத்துள் கழிக்கின்ற குளோரோ ஃபுளோரோ காபன்கள், மெ தை யில் புரோமைட் டூ , புரோமோ குளோரோ மெதேன் என்று 90க்கு மேற்பட்ட வேதிகள் ஒன்று சேர்ந்து ஓசோன்படையைத் தாக்கி வருகின்றன. இதனால் ஓசோன் படையில் துளைகள் தோன் றியுள்ளன.
ஓசோன்படையின் தடிப்பை, வளியில் ஓசோனைப் பற்றி ஆய்வு செய்த டொப்சன் என்னும் விஞ் ஞானியின் நினைவாக டொப்சன் (dobson) அலகுகளில் அளவிடுகி றார்கள். 100 டொப்சன் அலகுகள் ஒரு மில்லிமீற்றர் தடிப்புக்குச் சமம் னாகும். ஓசோன்படையின் தடிப்பு 220 டொப்சன் அலகுகளுக்கும் கீழாகக் குறையும் போது, அப் பகுதியை ஓசோன் துளை என்கி றார்கள்.
நங்கூரம்

Page 27
ஓசோன் துளைகளினூடாக ஒழுகும் புற ஊதாக்கதிர்களினால் பூமியின் உயிர்ச்சூழல் பெரும் பாதிப்புக்கு ஆளாகிறது. புற ஊதாக்கதிர்ளின் 'பி' வகை கதிர்வீசலால் (UV-B radiation) மனிதர்களில் தோலில் புற்று நோயும், கண்களில் குருடும் புரை யும் ஏற்படுகிறது. பயிர்களின் விளைச்சல் குறைவதோடு நோய்களும் தூண்டப் படுகிறது. இப்படித் தரையில் மட்டு மல்ல தண்ணீரி லும் கோளா றுகள் ஏற்படு கி ன் ற து . கடல் அல் காக்களின் உணவுற்பத்தி தடைப்படுவ தோடு மீன், இறால், நண்டு போன்ற கடல் உயி ரிகளின் இனப் பெருக்கல் நட மொத்த ஓசோனின் அளவு வடிக்கைகளும்
0 100 200 300 மோசமாக ப் அன்டார்ட்டிக் துருவ ஓசோன் பாதிக்கப்படுகி றது. இதனால் ஐக்கியநாடுகள் சபை 1987, செப்டெம்பர் 16ஆம் திகதி கனடாவின் மொன்றியல் நகரில் கூடி, ஓசோன் விரோத இரசாயனங் களைத் தடைசெய்யும் ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கியது. இது மொன்றியல் வரை வேடு (montreal protocol) எனப்படுகிறது. ஒப்பந்தம் கைச் சாத்தான திகதியே, ஓசோன் பாதுகாப்புப் பற்றிய விழிப்புணர்
பா;
நங்கூரம்

வை ஊட்டும் நோக்கில் ஆண்டு தோறும் சர்வதேச ஓசோன் பாது காப்புத் தினமாக அனுட்டிக்கப் பட்டு வருகிறது.
சர்வதேச ஒப்பந்தங்களில் இன் றைய திகதியில் அதிகம் வெற்றி பெற்றிருப்பது மொன்றியல் உடன்படிக்கைதான். தோல் புற்று நோய்க்குப் பயந்து இது வரையில்
197 நாடுகள் இவ்வொப் பந்தத்தை ஏற்றுக்
 ெக ா ண் டு
ஓசோன் பகை இரசாயனங்க ளைப் பயன் பாட் டி ல் இ ரு ந் து விலக்க ஆரம் பித்துள்ளன. எனினும் , அன்டார்ட் டிக்கா வான் பரப்பில் 19 மில்
லியன் சதுர - டொப்சன் அலகுகளில்
கிலோ மீற்றர்
பரப்பளவுக்கு 400 500 600 700 இப்போதும் படையின் தற்போதைய நிலவரம் ஓட்டைகள் இருப்பது பதிவு செய்யப்பட்டுள் ளது.
ஏற்கனவே வளியில் நாம் குவித்து வைத்திருக்கும் குளோரோ ஃபுளோரோ காபன்கள் இன்னும் ஐம்பது நூறு வருடங்களுக்கு உருக்குலையாமல் இருக்கும் என்ப தால், ஓசோன் குடையின் பொத் தல்கள் சரியாவதற்கு அதிக காலம் தேவைப்படும்.1

Page 28
நகல்கள்
ஆசிய நாடுகளிலிருந்து கு. மருத்துவர்களாகப் பணிபுரியும் பலர் 'போலி மருத்துவர்கள்' என ஐரே வருகின்றன.
இந்தக் குற்றச்சாட்டை ஊர்ஜிதம் -குறிப்பாகத் தமிழ் நாட்டில் - பெறுபேற்றுச் சான்றிதழ்களை நகல் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்
அசலை விட, நகலைப் பயன்படு வேலைவாய்ப்பு அடைந்தவர்களின்
இதனைத் தொடர்ந்து உயர்கல். களிலும் தகுதிச் சான்றிதழ்களைச் . விடப்பட்டுள்ளது.
ஏனைய துறைகளிலுள்ள சீர் ஆவணங்களினால் மருத்துவத்தி பன்மடங்காகும்.
தவறான ஆங்கில மருத்துவச் சிகி கொண்ட சம்பவங்கள்மருத்துவவரம்
எமது பகுதியிலும் போலி மருத்து நிலவும் ஊர்ஜிதப்படுத்தப்படாத
வைத்திய அதிகாரிகளினால் முன்வை
மருத்துவரின் சுயவிபரத் தரவுகள் படும் சிகிச்சை நிலையங்கள் இச்சந்
வைத்தியர்களின் சிபார்சுக்கு மாத்திரமே தொழிலாகக் கொள்ள பலரும் ஏற்கனவே இங்கு மருத்துவர்

டிபெயர்ந்து, தமது நாடுகளில் தகுதிச் சான்றிதழ்கள் எதுவுமற்ற ரப்பிய நாடுகள் பல குரலெழுப்பி
ம் செய்யும் வகையில் இந்தியாவில்
பல்வேறு பரீட்சைகளினதும் ல் செய்யும் அச்சு நிலையங்கள் பல ளன.
த்தி உயர் கல்வி பெற்றவர்களின், எண்ணிக்கை அதிகம்.
வி மையங்களிலும் தொழிற் கூடங் சரி பார்க்கும் பணி அங்கு முடுக்கி
கேடுகளை விட இந்தப் போலி துறையில் ஏற்படும் பாதிப்புப்
ஒச்சை முறை பலரது உயிரைப் பலி பாற்றில் அதிகம்.
வர்களின் நடமாட்டம் இருப்பதாக குற்றச்சாட்டு பல தகுதியான பக்கப்படுகிறது.
ள் எட்டாத இடங்களில் திறக்கப் தேகத்தை வலுவூட்டுகின்றன.
இணங்க மருந்து கொடுப்பதை வேண்டிய ஒளடதவியலாளர்கள் களாகியுள்ளனர்.
நங்கூரம்

Page 29
கைப்புண்ணுக்கு மருந்து கட்டு தருமளவிற்கு மருத்துவத்துறை இன்
இங்கு நிலவும் வைத்தியர்கள் சூழலில் போலி மருத்துவர்களை நட
குடாநாட்டின் பெரும் மருத் வைத்தியசாலை தொடங்கி அலை போதிய மருத்துவர்கள் இல்லை.
இந்தத் தேசத்து மக்களின் உடல் படுத்திப் பட்டம் பெற்ற மருத்து மண்ணை விட்டு வெளியேறி விட்ட
இங்கு நிலவும் நெருக்கடிகளை கருதும் மருத்துவ மாணவர்கள் வெளியேறியதும் சிங்களக் கிராம் பெற்று வருகின்றனர்.
"யாழ். பல்கலைக்கழகத்தில் பட் கள் அங்கு பணிபுரிய முன்வரும்
அரசினர் வைத்தியசாலைகளில் | குறை நீடிக்கவே செய்யும்" என பு பணிப்பாளர் நாயகம் டாக்டர் றெ; எம்மாணவர்களின் சுதேசிய உணர்
இந்நிலை மாற்றியமைக்கப்ப சமூகத்தைத் தாங்கி நிற்குமளவுக்கு படல் வேண்டும்.
வறுமையையும் பிணியையும் சூழலை நச்சாக்கி வரும் போலி ( எமது மருத்துவ பீட மாணவர்க ஊன்றச் செய்தலும் சீரமைப்பில்
மீள்பிரசுரம் நங்கூரம் 05-06-1994
நங்கூரம்

பவர்கள் குடற்புண்ணுக்கு மருந்து
று சிதிலமடைந்துள்ளது.
ரின் பற்றாக்குறையே, மருத்துவச்
மாடவைத்துள்ளது.
துவமனையான யாழ். போதனா ரத்து அரச வைத்தியசாலைகளிலும்
லெப் பரிசோதனைக் களமாகப் பயன் ரவர்கள் பலர் பணத்துக்காக இம்
னர்.
எப் பெரும் செளகரியக் குறைவாகக்
பலர் பல்கலைக்கழகத்திலிருந்து மங்களுக்கு நியமனத்தைக் கேட்டுப்
டம் பெற்று வெளியேறும் மருத்துவர் வரை யாழ். மாவட்டத்தில் உள்ள மருத்துவர்களுக்கு நிலவும் பற்றாக் ரீலங்கா அரசின் சுகாதார சேவைப் ஜி பெரேரா சுட்டிக் காட்டுமளவிற்கு வ மழுங்கிப்போய் விட்டது.
டல் வேண்டும். ஆரோக்கியமான எமது சுகாதாரச் சூழல் புனரமைக்கப்
சாதகமாகப் பயன்படுத்தி மருத்துவச் மருத்துவர்கள் களையப்படுவதுடன், ளைப் புதிய நாற்றுகளாக இங்கு தவிர்க்க இயலாதவை..
பாகூரும்

Page 30
களஞ்சியம்
சமையலில் பயன்படுத்தப்படும் மஞ்சள் தூளின் மஞ்சள் நிறத் துக்குக் காரணம் அதில் அடங்கியி ருக்கும் கேர்க்குமின் (Curcumin) என்ற வேதிப்பொருள்தான். கேர்க் குமின் அற்புதமான ஒரு நுண்ணு யிர் கொல்லி. கூடவே, பித்தப் பையைச் செயற்படத் தூண்டி ஈரலில் நஞ்சேறுவதையும் தடை செய்கிறது. இவற்றுக்கெல்லாம் மேலாக சமீபத்தில் எலிகளில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் அவற்றின் புற்றுநோயை மஞ்சள் தூள் குணப்படுத்துவதும் கண்
டறியப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை ஆண்டு தோறும் ஒக்டோபர் மாதத்தின் முதலாவது திங்கட்கிழமையை உலக வாழிட தினமாகக் (World Habitat day) கடைப்பிடித்து வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான உலக வாழிட தினம் ஒக்டோபர் முதலாம் திகதி ஆகும். உலகம் பூராவும் வாழுகின்ற மக்களுக்கு நல்ல வசிப்பிடங்களின் அவசியத்தை வலியுறுத்தும் விதமா க வே இந்தத் தினம் கொண் டாப்படுகின்றது.
கொக்கோ கோலா, பெப்சி போன்ற மென்பானங்கள், குடிநீர் ஆகியன அடைத்துவரும் பிளாஸ்ரிக் போத்
26

தல்கள் பெற் (PET) போத்தல்கள் எனப்படுகின்றன. இந்தப் பாரமற்ற பிளாஸ்ரிக் போத்தல்களை பொலி எதிலின் ரெட்றா தலேற் (Poly Ethylene Tetdra Thalate) என்னும் வேதிப்பொருளைக் கொண்டே உரு வாக்குகிறார்கள். இந்த வேதியின் சுருக்கப் பெயர்தான் 'PET' ஆகும்.
கடற்குதிரைகளில் ஆண்தான் தாய்மை அடைகிறது. சோடி சேர்வதற்கு மூன்று நான்கு நாட் களுக்கு முன்னால் ஆண் கடற் குதிரைகளின் வயிற்றுப் புறத்தில் கங்காருவினுடையதைப் போன்ற தொரு பை உருவாகும். பெண் இதனுள்ளே ஆயிரக்கணக்கான முட்டைகளை இட்டுவிட, ஆண் அவற்றின் மேல் விந்துகளைப் பெய்து கருத்தரிக்க வைக்கும்: பை, ஒரு தாயின் கருப்பையைப் போலவே, உட்பக்கத்தில் பஞ்சு போன்று மெது மெதுப்பாகிப் போசணைகளைச் சுரந்து விருத்தி யடையும் குட்டிகளைப் பராமரிக் கிறது.
பண்டைத் தமிழர்கள் ஒரு வருட காலத்தைச் சூழல் நிலைமைகளுக்கு ஏற்ப ஆறு பருவங்களாகப் பிரித்து வைத்துள்ளனர். இளவேனில் (சித்திரை - வைகாசி), முதுவேனில் (ஆனி - ஆடி ), கார் (ஆவணி - புரட்டாதி), கூதிர் (ஐப்பசி - கார்த்திகை), முன்பனி (மார்கழி - தை), பின்பனி (மாசி - பங்குனி) என்ற இந்த ஆறு பருவங்கள் பற்றியும் சங்க இலக்கியங்களில் பதிவுகள் உள்ளன.
உலக சுகாதார நிறுவனம் அண்மை யில் வெளியிட்டுள்ள புள்ளி விபரங் களின்படி, கடந்த 2011 ஆம் ஆண்டு
நங்கூரம்

Page 31
உலகில் ஐந்து வயதுக் குட்பட்ட 6.9 மில்லியன் குழந்தைகள் இறந் துள்ளனர். அதாவது, ஒவ்வொரு மணித்தியாலத்துக் கும் 800 குழந்தைகள் போசணைக்குறை பாடு மற்றும் பல்வேறு நோய்கள் காரணமாகப் பரிதாபமாகப் பலி யாகியுள்ளனர். அரைவாசிக்கும் மேற்பட்ட மரணங்கள் இந்தியா, நைஜீரியா, கொங்கோங், பாகிஸ் தான், சீனா ஆகிய ஐந்து நாடுகளி லேயே இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தரையில் வாழும் விலங் கு களில் மிகவும் வேக மாக ஓடக்கூடிய விலங்கு சிவிங்கிப் புலிதான். சிவிங்கிப்புலி (Cheetah) இரையைத் துரத்திச் செல்லும் போது மணித்தியாலத்துக்கு 100 கிலோமீற்றர் என்னும் உச்சவேகம் எடுக்க வல்லது. ஆனால், இந்த வேகத்தில் இவற்றினால் பொது வாக 20 செக் கன்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடிவதில்லை. அதன்பின்னர் இழந்த சக்தியை ஈடுகட்ட குறைந்த பட்சம் அரை மணி நேரமாவது இதற்கு ஓய்வு
தேவைப்படுகின்றது.
பூமியைச் சூடாக்கிவரும் பச்சை வீட்டு வாயுக்களில் காபன் ஈரொக் சைட்டு வாயுவுக்கு அடுத்தபடியாக மெதேன் வாயு உள்ளது. ஆடு, மாடு, எருமை போன்ற இரை மீட்கும் கால்நடைகளின் உணவுக் குழாயில் சமிபாட்டுக்கு உதவும் பக்ரீறியங்கள் பெருவாரியாகக் குடித்தனம் செய்கின்றன. இவற் றின் நொதித்தல் செயற்பாடுகளின் போது அதிகளவில் உருவாகும் மெதேன் வாயு, விலங்குகளின்
நங்கூரம்

ஆசன வாயுவாக வெளியேறிப் பூமியைச் சூடுபோட்டுவருகிறது. இதனால், பாற்பண்ணைத் தொழி லில் அதிகம் ஈடுபடுகின்ற நியூ சிலாந்து, விலங்குகளின் சமிபாட் டைப் பாதிக்காத வகையில் பக்ரீறி யங்களின் செயற்பாடுகளைத் தடை செய்யும் தடுப்பூசி மருந்தொன் றைச் சமீபத்தில் கண்டுபிடித்தி ருக்கிறது.
சமீபத்தில் இலண்டனில் நடை பெற்ற முப்பதாவது ஒலிம்பிக்
போட்டியில் மொத்தமாக
302 த ங் கப் பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. 46 தங்கப்பதக்கங்களைப் பெற்று ஆகக் கூடுதலான தங்கப்பதக்கங் களைப் பெற்ற நாடு என்ற பெரு மையை அமெரிக்கா தட்டிச் சென் றுள்ளது. சீனா 38 பதக்கங் களையும், பிரித்தானியா 29 பதக்கங் க ளை யும்
வென் றுள்ளன. இப்பதக்
கங்கள் முற் றி ம்
தங்கத் தினால் ஆனவை
அல்ல. 400 கிராம்
எடையு டைய தங்கப்
ப த க் க ம் ஒ ன் றி ல்
தங்கத்தின் அளவு வெறும்
6 கிராம் மாத்திரமே.
பெரும்பங்கு வெள்ளியும்
செப்பு மே ஆகும்.
ஓட்டப் பந்தய வீரன் =dவிங்கிப் புலி
21

Page 32
இலங்கையின் பிரபலமான பழங் களில் றம்புட்டானும் ஒன்று. ஆனால், இது இலங்கை மண்ணுக்கு உரித்தான சுதேசியத் தாவரம் அல்ல; மலேசியாவே இதன் தாயகம் ஆகும். அங்கிருந்து இலங்கைக்கான முதல் விதை போர்த்துக்கீசர்களால் எடுத்துவரப் பட்டிருக்கலாம் என நம்பப்ப டுகிறது. மலாய் மொழியில் 'றம் புட்டான்' என்றால் 'உரோமம் அடர்ந்த' என்று பொருள். றம்புட் டான் பழத்தின் கோதில் இருந்து உரோமம் போன்று அடர்த்தியாக நீண்டிருக்கும் வெளிவளர்ச்சிகள் காரணமாக இந்தப் பெயர் ஏற்பட் டுள்ளது.
கிழக்கு இலங்கையின் புல்மோட் டைக் கடற்கரையில் உள்ள மணற் படிவுகள் மிகப் பெருமளவுக்கு இல்மனைற் (llmenite) என்னும் கனியவளத்தைக் கொண்டுள்ளது. இல்மனைற்றை ஏற்றுமதி செய்வ தன் மூலம் இலங்கை ஆண்டொன் றுக்கு 8 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் சம்பாதித்து வருகி றது. இக்கனியவளத்தில் இருந்தே பெறுமதி மிக்க ரைற்றேனியம் (Titanium) உலோகம் பிரித் தெடுக்கப்படுகிறது.
மலர்க் கடிகாரம் நாலுமணிச் செடி

15: 1811
றொபேர்ட் நொக்ஸ் (Robert Knox) ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனி யின் கப்பல் தலைவனாகப் பணி யாற்றிய ஒருவர். கண்டி இராச்சி யத்தில் 19 ஆண்டுகள் சிறைவைக் கப்பட்டிருந்த இவர், அங்கிருந்து இலண்டனுக்குத் தப்பிச்சென்று தனது இலங்கை அனுபவங்களை ஒரு நூலாக எழுதி 1681 ஆம் ஆண்டு வெளியிட்டார். அந்நூலில், அப் போது இலங்கையில் மணற்கடி காரங்கள் பாவனையில் இருக்க வில்லை என்றும், மக்கள் நாலு மணிச் செடிகள் (4O Clock Plant) மாலைநேரத்தில் மலரும் நேரத்தை அடிப்படையாக வைத்தே நேரத் தைக் கணிப்பிட்டார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
உலக சுகாதார நிறுவனம் ஒருவரின் அமைதியான ஆழ்ந்த தூக்கத்துக்கு உச்ச பட்சமாக 35 டெசிபெல்கள் (35 Decibels) ஒலிச்செறிவுடைய சூழலைப் பரிந்துரை செய்தி ருக்கிறது. ஒரு சுவர்க்கடிகாரத்தின் டிக் டிக் ஒலி, ஒரு சிட்டுக் குருவி யின் கானம், காற்றில் இலைகள் சலசலக்கும் ஓசை எல்லாம் இந்த அளவுக்கு உட்பட்ட ஒலிகள்தான்.
நமது இரத்தத்தில் சயனோ கோபாலமைன் (Cyanocobalamine) என்னும் விற்றமின் B12 உள்ளது. ஒருவர் இறந்தவுடன் இந்த சயனோ கோபாலமைன் சிதைவடைந்து சயனோஜன் (Cyanogen) என்ற வெளிர் மஞ்சள் நிறமுடைய நச்சு வாயு உருவாகிறது. உடற்தோலின் நுண்துளைகளினூடாக வெளி யேறும் இந்த வாயுதான் இறந்த வர்களினுடைய உடலிலிருந்து வீசும் பிணவாடைக்கான காரணம் ஆகும்.
நங்கூரம்

Page 33
நங்கூரம்

சிறுகதை
கள்"
ப : அபு:
அவனுள் பொங் கிக் கொண்டிருந்த கோபம் இப்போது எண் க ளின் மடை திறந்து கண்ணீராய்க் கொட்டியது. அவனது அழுகையை நிறுத்திவிட பழி தெரியாது தடு மாறி ற்ெகின்றேன்.
அவனிடத்தில் பொங்கிய கோபத்தினால் அடிவாங்கிய மாணவன் அவனிடம் மன்னிப்புக் கேட்டு, அவனது அழுகையை ஆற்ற முனைந்தும் தோற்றுப் போகின்றான்.
- இ.இராஜேஸ்கண்ணன் |
அ க
பொசம்
சாக
ஈதுசன நூலகம் .
மூழ்11புரம்,

Page 34
"அதி... இந்தா... உன்ரை ரோல் போட்டன். இனி ஒரு நாளும் | அழாதை..."
அந்த மாணவன் அவன் முன்னி நீட்டிக் கொண்டு நிற்கின்றான்.
இவனுடைய முகத்தில் திடீெ ரோஜாப் பூவை வாஞ்சையோடு வ வைத்துக் கொள்கின்றான்.
என்னுள் ஆயிரம் வினாக்கள்...
அதிரதனுக்கு வகுப்பாசிரியர் வகுப்புகளிலிருந்து அறிந்தவன். நான் ஒருபோதும் இப்படி அவன் நடந்து கெ அவனிடத்தில் உறைந்திருந்த பெரிய மாற்றத்தினால் வந்துவிட்ட ஒன்று என்
இப்போது என்னுள் ஒருவித = மூன்று மாதகாலமாகக் கவிந்திருந்த த எனது முதன்மைக் கடமையாக உணர்க
ஒவ்வொரு பிள்ளையின் பின் செய்கின்றது. வாழ்வின் கனதியைச் சு அவர்கள்.
வாழ்வு நந்திக்கடலில் கொட் தரத்தில் படித்துக் கொண்டிருந்தான். உதிர்ந்துவிடாத துளிர்களின் பிரதிநிதி விட்டதுளிர்களின் பிரதிநிதியும் அவன்
அதிரதனுக்கு இப்போது பத்து பாடசாலையில் கண்ட பின்னர் இப்பே அவனிடம் இருந்த துருதுருவென்ற க செய்ய நினைக்கும் பரபரப்பு; தனது டனும் கொண்ட சினேகப் பிணிப்பு ருந்தன.
உருக்குலைக்கப்பட்ட உலோக வாழ்வு காட்சிப் பொருளாக்கப் பாடசாலையும் மெல்ல மெல்ல உயிர்
மாணவர்கள் மீளப் பாடசாலை ஒவ்வொரு பூச்செடி கொண்டு வந்து கட்டளையைப் பிறப்பித்திருந்தது நான்
30

ஜாப் பூ நான் ஆசையிலை பிடுங்கிப் டுெங்கமாட்டன். அழாதையடா...
லையில் தான் பறித்த ரோஜாப் பூவை
ரன ஒரு மாற்றம். அவன் நீட்டிய Tங்கித் தனது சட்டைப் பையினுள்
நான்தான். அவனை ஆரம்பநிலை அறிந்தவரை இவ்வளவு காலத்திலும் காண்டதில்லை. கடந்த சில காலமாக மனுஷ அமைதி அவனது வயதின் று எண்ணியிருந்தேன். ஆராய்வூக்கம். அவனிடத்தில் கடந்த னிமையின் இரகசியத்தை ஆராய்வது கிறேன். "னாலும் ஒரு கதை இருக்கத்தான் ! மக்க முடியாத வயதில் சுமந்தவர்கள்
டப்பட்டபோது, அவன் மூன்றாம் வேரோடு பிடுங்கப்பட்ட வாழ்வில் F) அவன்; சிலசமயங்களில் உதிர்ந்து
தான். | வயது. ஏழு வயதில் அவனைப் பாதுதான் பார்க்கிறேன். அப்போது ண்கள்; எப்போதும் ஏதோ ஒன்றைச் ந தோழர்களுடனும் ஆசிரியர்களு
எல்லாம் இப்போது தொலைந்தி
க்குவியல்களின் நடுவே தேடப்படும் பட்ட தருணத்தில்தான் எங்கள்
புப் பெறத் தொடங்கியது. லக்கு வந்தபோது ஒவ்வொருவரும் நாட்டி வளர்க்க வேண்டும் என்ற தான்.
நங்கூரம்

Page 35
மீளக் குடியேறி வந்த சில நாட். முகங்களைத்தேடின. தொலைந்த மு. இருந்த முகங்கள்தான் இன்னும் வியப்
அப்போதுதான் அதிரதனுடை!
"சேர்... நாங்கள் அதிரதன்ரை : வரமாட்டன் எண்டு முரண்டு பிடி தெரியேல்லை. காரணம் கேட்டாலும் இருந்து யோசிக்கிறான். முதல் ஒரு மாட்டன் எண்டு சொல்லுறான். எண்டுதான் உங்களிட்டைச் சொல்லும்
அவர்கள் சொன்ன வார்த் கலந்திருந்தன.
நான் அறிந்தவரை இன்றுதான் கிறேன். அதுவும் ஒரு கர்ணகடூர கோம்
எப்போதும் எல்லா ஆசிரியர். பேரெடுத்த அதிரதனா இப்படி நடந்து
விசாரணை செய்யத் தூண்டி மறுத்தது என் இதயமா? அன்றி மூளை
அதிரதனைத் தனித்து அழை காட்டக்கூடிய அளவுக்குப் பரிவு இந்தத் தருணத்தை விட்டுவிட்டா பொதிந்துள்ள விடயங்களைக் விடும் என்பதை உணர்ந்து ) பேச்கின்றேன்.
"அப்பன்... அதி... நீங்கள் கெட்டிக்காரப் பிள்ளை. பள்ளிக் கூடத் திலை எல்லாருக்கும் உங் களை நல்லாப் பிடிக் கும். நல்ல 'மாக்ஸ்' எடுக்கிறனீங்கள். பேச்சு, பாட்டு, கவிதை எல்லாம் நல்லாச் செய்யி ற னீ ங் க ள் .
நங்கூரம்

களில் இந்தப் பிரதேசம் மனிதர்களின் கங்கள் ஒன்றும் வியப்பானவையல்ல. பானவை.
ப பெற்றோரைக் கண்டேன். அம்மா அப்பா. அவன் பள்ளிக்கூடம் க்கிறான். என்ன செய்யிறதெண்டு ம் சொல்லுறானில்லை. தனியத்தனிய 5 ஏழெட்டு நாள் வந்தவன். பிறகு
நீங்கள் ஒருக்கால் கவனிப்பியள் மம். பாத்துக் கொள்ளுங்கோவன்" தைகள் இன்னும் என் காதுகளில்
எ அதிரதன் அழுததைப் பார்த்திருக் பத்துடன். களாலும் 'பண்பான பிள்ளை' என்று
கொள்கிறான்? யது பொதுப்புத்தி இல்லையென யா...?. புரியவில்லை. ழத்துச் செல்கின்றேன். என்னால் காட்டி அவனுடன் பேசுகின்றேன். ல் அந்தச் சிறுவனின் மனதடியில் கேட்டறிய முடியாது போய்
பவ் வி ய மாகப்

Page 36
இந்தச் சரஸ்வதி பூசையிலும் உங்கள் விரும்புறன். நீங்கள் ஒருநாளும் ஒரு ஏசினதை நான் காணேல்லை. ஏன . அவன் உங்களுக்கு ஏதும் செய்தவனே .
இவ்வளவு வார்த்தைகளின் இருந்தான்.
"அதிரதன்... அப்பன் ... சிந் சொல்லுங்கோ. அவனை அதிபரிட் சொல்லியனுப்புவம்".
என் வார்த்தைகள் முடிய அடிக்கேல்லை. அவன் பாவம். போட்டன்". கலக்கத்துடன் வந்த விய
"நீங்கள் ஒருதருக்கும் அடிக்கிற இருப்பியள். பின்னை ஏன் சிந்துஜன இல்லையா?"....
"சேர்... அவன் என்ரைஃபிரண்
"என்னப்பு.... என்ன செய்தவ செய்தால் நிச்சயம் நானே அவனைதல்ல
"சேர்... பாவம் சிந்துஜன். அ கிரியன் எண்டு அவனுக்குத் தெரிய அவனும் என்ரைகிரியன் போலத்தான்
ஓவென்றகதறி அழத்தொடங்கி
"அதி..... அழாதையுங்கோ அ மாட்டன். அழாதையுங்கோ"
அதிரதனின் அழுகை ஓய்ந்து கண்ணில் 'கிரியன்'. .
கிரிதரன். அதிரதனின் பாலர் குறைவில்லாதவன். பாலர் விளையாட அதிரதனுடன் கைகோர்த்தபடி நடப்பு
ஒருமுறை பாடசாலை விளைய விழுந்து காலில் ஒரு உரோஞ்சல் காய துடிப்பை நேரிலேகண்டிருந்தேன்.
இப்போது ஓரளவு எனக்கு விவ

ளை ஒரு பாட்டுப்பாட வைக்க நான் கத்தரோடையும் சண்டை பிடிச்சதை, ப்பன் சிந்துஜனுக்கு அடிச்சனீங்கள்...
T?"
பின்னும் அவன் மெளனியாகவே
துஜன் உங்களுக்கு அடிச்சிருந்தால் டை அனுப்பி அப்பா அம்மாவுக்குச்
முன்பே "இல்லை சேர்... அவன் . நான்தான் அவனுக்கு அடிச்சுப் ழந்தன வார்த்தைகள்.
தில்லை. எல்லாரோடையும் நட்பா பக்கு?... அவன் உங்கடை ஃபிரண்ட்
ட் தான். ஆனாலும்....."
ன் சொல்லுங்கோ. அவன் குற்றம் னடிக்கிறன். சொல்லுங்கோ?" வனுக்குத் தெரியாது.... அது என்ரை காது . பாவம் சேர் அவன் சிந்துஜன்.
னே...'' கினான் அதிரதன்.
ப்பன். சேர் ஆரையும் தண்டிக்க
பரும் அந்த நிமிடங்களில் என் மனக்
வகுப்பு நண்பன். சுட்டித்தனத்துக்குக் சாட்டுகளில் விண்ணன். எப்போதும் பான்.
பாட்டுப் போட்டியில் கிரிதரன் தடுக்கி பம் ஏற்பட்ட போது அதிரதன் துடித்த
ரம் புரியத் தொடங்குகின்றது.
நங்கூரம்

Page 37
ஒவ்வொரு மனிதனும் இயற்கையிடமிருந்து
தனக்குத் தேவையானதை
1 மட்டுமே
எடுத்துக் கொள்வதன் மூலம் இயற்கையின் வளங்களை - மனித குலத்துக்குத்
தொடர்ந்து கிடைக்கச்
செய்யலாம்"
- மகாத்மாகாந்தி
ராம்கோ சீமெந்து ISO 9001 உலகத் தரச் சான்றிதழ் பெற்ற சீமெந்துகளின் அரசன்

குறுக்கெழுத்துப் போட்டி கடல்: 4
அலை: 9-10
இடமிருந்து வலம் 1. ஆலய உள்வீதி 3.ஒரு சிற்றிலக்கியம் - குழம்பியுள்ளது 4. இது தவறாமை முக்கியம் - தலைகீழாயுள்ளது 7. தூக்கம் - குழம்பியுள்ளது 8. குறைபாடு 11. கண்ணாடியில் தெரிவது - தலைகீழாயுள்ளது 12. இது குளிரும் - தலைகீழாயுள்ளது மேலிருந்து கீழ் 1. அண்டம் 2. இடைக்கால அரசு 5. அன்பு 6. அருந்தக்கூடிய இதில் கடைசி எழுத்து
விடுபட்டுள்ளது. 9. சம்மதம் 10. கிரகங்களில் ஒன்று
பெயர் : ................
வதிவிட முகவரி :
மாணவராயின் பயிலும் ஆண்டு...
பாடசாலை :.
தொலைபேசி :
கையொப்பம் :

Page 38
அறிவியற் புகைப்படப்
புதிர்ப் போட்டி |
படத்தை என்னவென்று அடையாளம் கண்டு, அதுபற்றிக் குறைந்தது 5
வரிகளாவது எழுதி அனுப்புங்கள்.
பெயர்:
வதிவிட முகவரி :
மாணவராயின் பயிலும் ஆண்டு:.
பாடசாலை :
தொலைபேசி :
கையொப்பம் :

கடல்: 4
அலை: 7-8 குறுக்கெழுத்துப் போட்டி
சரியான விடைகள் இடமிருந்து வலம் 1. அகங்காரம் 4. பிரபஞ்சம் 7. சோனகர்
8. ஆதபன் 9. திடுதிடுப்பு மேலிருந்து கீழ் 1. அபிவிருத்தி 2. கரடு முரடு 3. காஞ்சோன்றி 5. சர்ப்பம் 6. புராதனம்
பரிசு பெற்றவர்கள் அ. ஆர்த்திகன்
*சி.குயின்சா யா/ சண்டிலிப்பாய் இ.க. யா/ புனித தெரேசா ம.க.
ந. பிரியங்கன்
ம.மதுரன் யா/யாழ் இந்துக் கல்லூரி யா/ யாழ்.இந்துக் கல்லூரி
ஸ்ரீ . விஷ்ணுவரதன் சி.அருள்ராஜ் யா/ யாழ்.இந்துக் கல்லூரி யா/யாழ்.இந்துக் கல்லூரி
அ. ஹரிசாந்த் க. பார்க்கவசர்மா யா/ யாழ். இந்துக் கல்லூரி யா/ யாழ்.இந்துக் கல்லூரி
அறிவியற் புகைப்படப் புதிர்ப் போட்டி
சரியான விடை காற்றில் காணப்படுகின்ற, பல்வேறு தாவரங்களினது மகரந்த மணிகள்
(பரிசு பெற்றவர்கள்
த. வனஜா யா/ மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி
ஜெ. சங்கீதன் யா/ யாழ்.இந்துக் கல்லூரி
போட்டிகளுக்கான விடைகளைப்
பூர்த்தி செய்து அனுப்பவேண்டிய கடைசித் திகதி
31.10.2012
அனுப்பவேண்டிய முகவரி
ஆசிரியர் நங்கூரம்
பதிவுகாரர் ஒழுங்கை, திருநெல்வேலி கிழக்கு, யாழ்ப்பாணம்.

Page 39
"உங்கடை கிரியனா..? ஆரது மனதை இறுக்கிக்கொண்டு கேட்கின்
"என்ரை கிரியன்... இதுதான் பிடுங்கினால் எனக்குப் பிடிக்காது சோ
தனது சட்டைப்பையிலிருந்த , எனக்குக் காண்பிக்கின்றான். கண்கள்
"அழாதையுங்கோ... அப்பன். கிரியன் எண்டு சொல்லுறீங்கள்?... ரோஜாவோ... சொல்லுங்கோ?"
"இல்லை சேர்... இதுதான் க கிரியன். நான் அவனைத் தண்ணி பிடிங்கிப்போட்டான். அதுதான் அம்
தேம்பித் தேம்பி அழுது கொண் கலங்குகின்றது. அவனுடன் நானு இருக்கிறது.
"இஞ்சை... அப்பன் அதி... எங்கையும் வெளிமாவட்டத்திலை ( கவலைப் படக்கூடாது. அவர் வந்து : என்னப்பன்...''
கிரிதரனுக்கு நடந்தது தெரி காகச் சொன்னேன்.
"இல்லை சேர்... என்ரை கிர என்னோடைதான் பள்ளிக்கூடம் வ இருப்பான். சாப்பிடேக்கை எனக் அவன் என்னை விட்டிட்டு போட்டா
அந்த ரோஜாப் பூவை மீண்டு கொள்கிறான். பின்னர் சட்டைப் கொள்கின்றான்.
எனக்கு இதயத்துச் சுவர்களில்
இறுதி நாட்களில், கிரிதரனும் பெற்றோருடன் இருந்த பதுங்குகுழி வெடித்ததாகக் கேள்விப்பட்டிருந்தே
என்னுள் அதிரதனை இழ. மிஞ்சுகின்றது.
நங்கூரம்

அப்பன்?" எதுவும் தெரியாதது போல றேன். ... இது பூத்த மரந்தான்... அதைப்
N,
வாளிப்பான ரோஜாப் பூவை எடுத்து
கொட்டின. ... அதி... ஏன் இந்த ரோஜாவைக் இது கிரியன் உங்களுக்குத் தந்த
ரியன். இந்த ரோஜாச் செடிதான் ஊத்தி வளர்க்கிறன். அதை சிந்து டச்சனான்".
டே சொல்கின்றான். எனக்கு உள்ளம் ம் சேர்ந்து அழுதுவிடுவேன் போல
கிரியன் இடம் பெயர்ந்து போய் இருப்பார்... வருவார் தானே. நீங்கள் உங்களோடை வகுப்பிலை படிப்பார்.
ந்திருந்தும் அதிரதனைத் தேற்றுவதற்
சியன் செத்துப் போனான். அவன் ருவான். எனக்குப் பக்கத்திலைதான் குத் தன்ரை சாப்பாட்டில் தருவான்.
ன்"
ம் கையில் எடுத்துப் பார்த்து அழுது பையில் அதனைப் பத்திரப்படுத்திக்
ஈட்டிகள் பாய்வது போன்ற வலி. ம் அவனது இரண்டு சகோதரிகளும் ஜி மீது ஒரு குண்டு நேரே வீழ்ந்து
ன். ந்துவிடக்கூடாது என்ற பரபரப்பு

Page 40
ՏՆH ::
-Ինույթիռցանց Ա#5, «Քre
ՍՊԸ ԱՄԻՐԽոհար Պը :
Ի ու Բարինview=aքատի
ԲԳԻs,Դիա..տի-ԱՆԳՆ
Օ © ® ©թ
հոնուս
-Kւր)
'"23 •••••••2-- ոյֆ:Իմ
«Ա“- -°րա...Իրակա / Ր Քia b՝ «L 44Ք" է
Կար-նոk"ՔԻՆ Փ,

"அதி... அப்பன்... நாங்கள் கிரியனுக்குத் தண்ணீர் விடுவமா? உங்களுக்கு சிந்துஜனும் உதவி செய்வான்.... மற்றவையும் உதவி செய்வினம்.. வாறியளா?
"ஓம் சேர்... ஓம்" அவனது முகத்தில் ஒரு ஒளி பட்டென வெட்டியது.
என்னுள் அவனின் அழு கையை ஊடறுத்து விட்டேன் என்ற மகிழ்ச்சி.
"சிந்துஜன்... வாங்கோ..... மற்றப் பிள்ளையளையும் கூட்டி வாங்கோ. நாங்கள் அதிரதன்ரை ரோஜ ர வு க் கு த் த ண் ணி வார்ப்பம்... அதிலை வாற பூவை இனி ஒருதரும் பிடுங்கக்கூடாது. சரஸ்வதி பூசையிலை கடவுளுக்கு வைக்கமட்டும் பிடுங்கலாம்.... என்னப்பன் அதி..."
"ஓம் சேர்...' அவனிடம் ஒருவித மகிழ்ச்சி.
நீரூற்றுவதற்காக எடுத்து வந்த பூவாளியை சிந்துஜனின் கைகளில் நோக்கம் கருதித் திணிக்கின்றேன்.
அந்த இடத்தை விட்டு மெல்ல விலகி நடந்து செல்கி றேன். எட்ட நின்று பார்க்கிறேன். சிந்து ஜ னும் அ தி ர த னும் கைகோர்த்தபடி தண்ணீர் எடுத்து வரப் போகின்றார்கள். 'கிரிய னைச் சுற்றி மற்றப் பிள்ளைகள் வட்டமாக நிற்கிறார்கள்.
என் கண்ணில் மெல்லிய நீர்த்திரை ஒன்று வந்து மறைகிறது
கர்பரி யர் கழகப் போரில்
24/MEN5:25
நங்கூரம்
* th=84, பிப III TE

Page 41
கோல்
பரிசுகளில்
ஒவ்வொரு வருட மும் ஒக்டோபர் மாதத் தின் முதல் இரண்டு வாரங் களையும் உலகம் மிகவும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கும். ஏனெ னில் இந்த நாட்களில் தான் கெளரவம்மிக்க நோபல் பரிசு பற் றி ய அ றி விப்புகள் வெளி யாகி ன்றன. பரிசுக்குரிய வர் க  ைள த் தேர்வு செய்வ தில் கண்ணியம் தவறாமை மட் டுமல்ல; காலம் த வ ற ா ன ம யு ம் இந்தப் பரிசுக்குரிய சி ற ப் பு க ளி ல் ஒன்று . ஒக்டோபரில் அந்த ஆண்டுக்கான பரிசு பெற்றவர்களின் விபரங்களை அறிவித்த உடனேயே அடுத்த ஆண்டுக்கான பரிசுப்பட்டியலைத் தயார் செய்யும் முன்முயற்சிகளில் இறங்கிவிடுகிறது நோபல் நிறு வனம்.
சுவீடன் தேசத்தின் சிறந்த இரசாயன ஆய்வாளரும் வியாபார விற்பன்னருமான அல்பிரட் நோபல் உடைய பெயரால் இந்தப் பரிசு
நங்கூரம்

விருது எ அரசன்
வழங் கப் ப டு கி றது. ஒக்டோபர் 21, 1833 இல் ஸ்டாக்கோமில் பிறந்த அல்பிரட் நோபல், தனது ஒன்பதாவது வயதில் வெடி மருந்து தயாரிப்பாளரான தந்தை யின் தொழில் நிமித்தமாக லெனின் கிராட் பெயர வேண்டியிருந்தது. ரஷ்யாவில் இவ ருக்கு இரசாயனக் கல்வியில் ஏற் பட்ட பிடிப்பு பி ர ா ன் ஸ் - அ மெரி க் க ா என்று இரசாயன வியலைப் பயில வைத்து, சொந்த ஊ ர ா ன சு வீ ட னுக்குத் திரும்பியதும் வெடிமருந்து ஆய்வில் ஈடுபட வைத்தது. நைத்ரோகிளிசறீன் (Nitro glycerine) தயாரிப்பில் ஈடுபட்ட சமயம் ஏற்பட்ட வெடிவிபத்து நோபலின் சகோதரர் ஒருவரின் உயிரைப் பலிவாங்கி விட்டது. மகனைப் பறிகொடுத்த ஏக்கம் நோபலின் தந்தையையும் முட மாக்கி நிரந்தரமாகவே படுக்கையில் தள்ளிவிட்டது. கோரமும் கவலை யும் தோய்ந்த இந்த விபத்துத்தான் நோபலை பாதுகாப்பாக எடுத்துச்
'- ஈ.ஆர்.திருச்செல்வம்
35
3 11' (T: 5லகம்

Page 42
செல்லத் தக்க வெடிபொருட் களைப் பற்றிச் சிந்திக்க வைத்தது.
நைத் ரோ கிளிசறீன் திரவ நிலையில் இருக்கும் நிறமில்லாத வெடிபொருள். எளிதில் ஆவியா கக் கூ டி ய தால், க வ ன மாகக் கையாளாவிடின் வெடித்து விடக் கூடிய அபாயத்தைக் கொண்டது. நோபல் - 1866இல் - நைத்ரோ கிளிசறீனை 'கீசல்கர்' எனப்படும் சிலிக்காவுடன் கலந்து பாதுகாப் பாக எடுத்துச் செல்லத்தக்க டைன மைற்றை (Dynamite) உருவாக்கி னார். அறிமுகப்படுத்திய ஒரு வருடத்துக்குள் 'நோபலின் பாது காப்பான வெடிமருந்து' என்று அதற்குக் காப்புரிமையும் பெற்று விட்டார். ஆழப்படுத்துவதற்காக ஆறுகளுக்குக் கீழேயுள்ள பாறை களைத் தகர்க்கவும், புகையிர தப்பாதைகளை உருவாக்குவதற் காக மலைகளைக் குடையவும் பெரு மளவில் வெடி பொருள் தேவைப்பட்ட காலம் அது. இவரது அயராத முயற்சியும் கண்டு பிடிப்புகளும் இவரைப் பெரும் செல்வந்தராக்கியது. இறக்கும் போது உலகின் பல நாடுகளிலும் இவருக்குச் சொந்தமாக இருந்த வெடிமருந்துத் தொழிற்சாலை களின் எண்ணிக்கை 90க்கும்
அதிகம்.
1896இல், டிசம்பர் 10ஆம் நாளின் பின்னிரவில், பிரான்சில் இவர் மரணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தழுவிக்கொண்டி ருந்தபோது இவர் வார்த்தைகளைப்
36

புரிந்து கொள்ளத் தெரியாத சில இத்தாலியப் பணியாளர்களைத் தவிர எவரும் இவர் அருகே இருக்க வில்லை. இதனால், இவரது வார்த்தைகள் பதிவு செய்யப்படா மலே போய்விட்டன. ஆனால், முன் எச்சரிக்கையுடன், அதுவும் தன் கைப்படவே இவர் எழுதி வைத்த உயில் இறந்த பின்பும் இவரை வாழவைத்துக் கொண்டி ருக்கிறது.
மனிதகுல மேம்பாட்டை மனதில் கொண்டு நடைபெறும் ஆக்கப்பணிகளில் பெளதிகம், இரசாயனம், உடற்றொழிலியல் அல்லது மருத்துவம், இலக்கியம், உலக சமாதானம் ஆகிய ஐந்து துறைகளில் தனது மூலதனத்தின் வட்டியைப் பகிர்ந்தளிக்குமாறு இறப்பதற்கு ஒரு வருடத்துக்கு முன்பாகவே உயில் எழுதிவைத்து விட்டார். அப்போது அவரது மூலதனத்தின் மதிப்பீடு 9,000,000 டொலர்கள். ஒரு கண்டுபிடிப்பா ளராகத் தனது வெடிபொருட்கள் ஆக்கப்பணிகளுக்கு மட்டுமே பயன்படவேண்டுமென நோபல் விரும்பியபோதும், அவை இராணு வத் தேவைகளுக்குப் பயன்படு வதை ஒரு வர்த்தகராக அவரால் தவிர்க்க இயலவில்லை. இந்த மன உளைச்சல்தான் பின்நாளில் அவரை இப்படி ஒரு உயிலை எழுத
வைத்தது.
உலக சமாதானத்துக்கான பரிசை நோபல் ஒதுக்கியதில் இவரிடம் பணியாற்றிய பேர்த்தா என்னும் பெண்மணியின் செல்
நங்கூரம்

Page 43
மான்யர்
வாக்கும் இருந்ததாகச் சொல்லப் படுகிறது. 43 ஆவது வயதில் முதுமை தொற்றத் தொடங்கி விட்டதாக உணர்ந்த நோபல், வீட்டு வேலைகளை மேற்பார்வை யிடவும் அந்தரங்கச் செயலாளரா கவும் பெண் ஒருவர் தேவை எனப் பத்திரிகைகளில் விளம்பரப்படுத் தினார். ஆனால், ஆஸ்திரியாவில் இருந்து தேர்வான பேர்த்தா கின்ஸ்கியினால் (Bertha Kinsky) இரண்டு மாதங்களுக்கு மேல் பணி யில் நீடிக்கமுடியவில்லை. ஆஸ்திரி யாவுக்குத் திரும்பித் திருமணம் செய்து கொண்டார். இருந்தும், பேர்த்தாவுக்கும் நோபலுக்கும் இடையிலான ஆழமான நட்பு - கடிதத் தொடர்புகள் நோபலின் கடைசிக் காலம் வரை நீடித்தது. 'ஆயுதங்களைக் கீழே வை' (Laydown Arms) என்னும் நூலை எழுதி ஐரோப்பிய அமைதி இயக்கங்களில் பிரசித்திபெற்ற ஒருவரான பேர்த்தா அவ்வப்போது அமைதிச் செயற் பாடுகளுக்கென நோபலிடம் பண உதவியும் பெற்றுவந்தார். இந்நிலை யில், பேர்த்தாவின் போர் எதிர்ப்பு ஆளுமை நோபலின் மீது கவிய நேர்ந்ததை மறுப்பதற்கில்லை. பிற் காலத்தில் - 1905இல் - சமர் தானத்துக்கான நோபல் பரிசு பேர்த்தாவுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
திரு ம ண உற வு க் கு ள் சிக்காததால் வாரிசுகள் இல்லாமற் போன நோபலின் அனைத்துச் சொத்து க ளை யும் தமதாக்க முனைந்த உறவினர்கள் அவரது கடைசி விருப்பத்தை நிறை நங்கூரம்

அல்பிரட் நோபல்
: வேற்றுவதில் தயக்கம் காண்பித் தனர். இறுதியில், சுவீடன் அரசு தலையிட்டு இதனை நிர்வகிக்க வென நோபல் நிறுவனத்தை (Nobel foundation) 1900இல் அமைத்துக் - கொடுத்தது. நோபல் நிறுவனம் தாமதம் எதுவுமின்றி உயிலை ஒட்டிச் சில விதிகளை உருவாக்கிக் கொண்டு 1901 ஆம் ஆண்டிலேயே - பரிசுகளை வழங்கவும் ஆரம்பித்து - விட்டது. பௌதிகம், இரசாயனம், மருத்துவம், இலக்கியம், உலக - சமாதானம் என்ற இந்த ஐந்து
துறைகளுடன் கூடவே நோபல் குறிப்பிடாத பொருளாதாரத்துக் கும் தற்போது பரிசு வழங்கப்பட்டு வருகின்றது. சுவீடனின் தேசிய வங்கி நோபல் ஞாபகார்த்தமாகப் பொருளாதார மேதைகளுக்குப் பரிசுகளை வழங்கத் தானாக முன் வந்தபோது நீண்ட யோசனைக்குப் பின்னரேயே நோபல் நிறுவனம் அதனை ஏற்றுக் கொண்டது.

Page 44
1969இல் இருந்து ஐந்துடன் ஆறா வதாக இந்தப் பரிசு வழங்கப் படினும் இது நோபல் பரிசு அல்ல; அல்பிரட் நோபல் ஞாபகார்த்தப் பரிசு என்றே அழைக்கப்படுகிறது. இருந்தபோதும் நோபல் பரிசுக் குரிய அனைத்து வரன்முறைகளும் இதற்குப் பின்பற்றப்படுகின்றன.
பரிசுக்குரி ய வர்க ளைத் தேர்வு செய்வதில் நோபல் நிறு வனம் நேரடியாகப் பங்கேற்ப தில்லை. ஒவ்வொரு துறையிலும் பரிசுக்குரியவர்களைப் பரிசீலிக்க வெனத் தனித்தனியாக 'நோபல் குழுக்கள்' உள்ளன. இந்தக் குழுக் களை அமைப்பதில் சுவீடனின் பல கல்வி அமைப்புகள் பங்கேற்கின் றன. பெளதிகம், இரசாயனம், பொருளியல் ஆகிய துறைகளுக் குரிய குழுக்களை றோயல் சுவீடிஷ் அக்கடமியும் (Royal Swedish Academy of Science), உடற்றொழிலியல் அல்லது மருத்து வத்துக்கான குழுவை கரோலின்ஸ்கா இன்ஸ்ரி ரியூட்டும் (Karolinska Institute) இலக்கி யத்துக்கான குழு வை சுவீடிஷ் அக்கடமியும் (Swedish Academy) நியமனம் செய்கின்றன. ஆனால், உலக சமாதானத்துக்குரிய வரைச் சிபார்சு செய்யும் பொறுப்பு மட்டும் சுவீடனுக்கு இல்லாமல் நோர்வே பாராளுமன்றத்திடம் விடப்பட்டிருக்கிறது. எவரிடம் என்ன துறையை ஒப்படைக்க வேண்டும் என்ற இவைபோன்ற விபரங்களையெல்லாம் நோபல் தன் உயிலில் தெளிவாகவே குறிப் பிட்டிருக்கிறார். 38

பரிசு பெறுவதற்கு எவ ருமே நேரடியாக விண்ணப்பிக்க முடியாது. பெயர்களைப் பரிந்து ரைப்பதற்கே தனியானதொரு தகுதி தேவைப்படுகிறது. உலகம் பூராவும் இருந்து நோபல் பரிசை ஏற்கனவே பெற்றவர்கள், துறைசார்ந்த வல்லு நர்கள் என்று ஆயிரத்துக்கும் அதிகமானவர்களிடம் பெயர் களைப் பரிந்துரை செய்யுமாறு அழைப்பு விடப்படுகிறது. இவர் களுடைய பெயர் விபரங்கள், இவர் கள் சிபார்சு செய்பவர்களின் விபரங்கள் எல்லாவற்றிலும் இரகசி யம் பேணப்படுகிறது. வருடந் தோறும் பெப்ரவரி முதலாம் திகதிக் குள் இந்தப் பெயர் விபரங்கள் எல்லாம் சம்பந்தப்பட்ட நோபல் குழுக்களிடம் வந்து சேர்ந்துவிடு கிறது. அந்த நாளில் இருந்து செப்டெம்பர் கடைசிவரை ஒவ் வொரு குழுவும் பலமுறை கூடுகி றது. தேவையேற்படும்போது வெளியே இருந்தும் துறைசார்ந்த வர்களை அழைத்து விவாதிக்கிறது. கடைசியில் தாம் பரிந்துரை செய்ப வர்களின் பட்டியலை மிகவும் இரகசியமாக தம்மை நியமித்த அமைப்புகளிடம் நோபல் குழுக்கள் ஒப்படைத்துவிடுகின்றன. இறு திப்பட்டியலைத் தயார்செய்யும் அதிகாரம் றோயல் சுவீடிஷ் அக் கடமி, கரோலின்ஸ்கா இன்ஸ்ரி ரியூட், சுவீடிஷ் அக்கடமி, நோர்வே பாராளுமன்றம் ஆகிய அமைப்பு களின் கைகளிலேயே இருக்கிறது. நோபல் பரிசு பெற்றவர்களின் பெயர்கள், அவர்களுடைய சாத னைகளையெல்லாம் பட்டியலிட்டு இந்த அமைப்புகள் ஒக்டோபர்
நங்கூரம்

Page 45
முதல் இரண்டு வாரத்தினுள் ஒவ் வொன்றாக வெளி யிட்டு விடுகின்றன.
ஆண்டுதோறும் டிசெம்பர் 10இல் - அன்றுதான் நோபல் மறைந்த தினம் - தேர்வு செய்யப் பட் ட வ ர் க  ைள  ெய ல் ல ா ம் அழைத்து நோபல் நிறுவனம் விருது வழங்கிக் கௌரவிக்கும். சமா தானத்துக்கான விருது வழங்கும் வைபவம் மட்டும் நோர்வேயின் ஒஸ்லோவில் நடக்க, மற்றவை சுவீடனில் நடைபெறுகின்றன. ஒவ் வொரு விருதும் பெருந் தொகைப் பணத்தையும், ஒரு தங்கப் பதக்கத்யுைம் சான்றிதழ்ச் சுருளை யும் (Scroll) கொண்டிருக்கும். வழங்கப்படும் பணத்தின் அளவு அந்த ஆண்டில் சேரும் வட்டியின் அளவைப் பொறுத்து மாறுபடு கிறது. கடந்த 2011ஆம் ஆண்டில் ஒவ்வொரு துறைக்கும் வழங்கப் பட்ட தொகை 10 இலட்சம் டொலர்கள். ஒரு துறையில் ஒருவருக்குமேல் தெரிவு செய்யப் படின் - அதிகபட்சம் மூன்று பேர் - பரிசுத்தொகை பகிரப்படுகிறது.
ஏராளமான நோபல் பரிசு களை ஐரோப்பாதான் பெற்று
வந்தது. அதன் பின்னர், அதிகமான நோபல் பரிசுகளை இப்போது அமெரிக்காவே பெற்றுவருகிறது. 2011ஆம் ஆண்டுக்கான தெரிவில் 13 பேரில் 6 பேர் அமெரிக்கர்களே. இரண்டாம் உலகப்போரின் போது இத்தாலியின் முசோலினியிடம் இருந்தும், ஜேர்மனியின் ஹிட்லரி
நங்கூரம்

* :**f =='f =+: =்' *
க. டாச1 741 ------
* '41: 151, -=-==-
kuly 11ti 11111111)
- டம் இருந்தும் ஏராளமான விஞ் ஞானிகள் அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றமைதான் இதற்கான காரணமாகச் சுட்டப்படுகிறது. ஜேர்மனியில் பிறந்த ஐன்ஸ்டீன் - இப்படி அமெரிக்காவுக்குத் தப்பிச் - சென்று அங்கிருக்கும் போதே - நோபல் பரிசுக்குத் தெரிவு செய்யப்
பட்டார்.
நோபல் பரிசு சிலசமயங் களில் கடுமையான கண்டனங் களுக்கும் ஆளாகிவிடுகிறது. வியட் நாமிய அமைதி ஒப்பந்தத்துக்காக 1973 இல் சமாதானத்துக்கான நோபல் பரிசு வியட்நாமியத் தலை - வர் லி டியூக் தோவுக்கும் அமெரிக் - கத் தரப்பில் ஹென்றி கீஸிங்க
ருக்கும் அறிவிக்கப்பட்ட போது கடும் எதிர்ப்புக் கிளம்பியது. அமெரிக்கக் குண்டுகளால் வியட் நாமில் கொப்பளித்த இரத்தத்தின்
39

Page 46
வாடை அகல்வதற்கு முன்னரே அ மெ ரிக்கா வு டன் பரிசைப் பகிர்ந்து கொள்வதை ஆட்சேபித்து லிடியூக் தோ விருதை நிராகரித்தார். இஸ்ரேல் பிரதமர் பெகினுக்கு வழங்கப்பட்ட சமாதானத்துக்கான நோபல் பரிசும், பாலஸ்தீன மக் களுக்கெதிரான பெகினின் நட வடிக்கைகளால் கேள்விக்கு ஆளா னது. ஆப்கான் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை வழிவிட்டு ஒதுங்கிய நிலையில் ஐக்கிய நாடுகள் சபைக்கும் அதன் செயலாளர் நாயகமாகப் பதவி வகித்த கோபி அன்னனுக்கும் வழங்கப்பட்ட சமாதானத்துக்கான நோபல் பரிசும் விமர்சனங்களை எதிர்கொண்டது. அமெரிக்க அதிபராக 2009ஆம் ஆண்டு பதவி யேற்ற பராக் ஒபாமாவுக்கு அதே ஆண்டிலேயே சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட போது, அவ ரே இதை எதிர் பார்த்திருக்கமாட்டார். இது, பிற் காலத்தில் அவர் நிகழ்த்தவிருக்கும் சாதனைகளுக்காக முன்கூட்டியே வழங்கப்பட்ட விரு தோ என்ற கேள்விகள் எழுந்தன.
பரிசைத் தெரிவு செய்யும் முறையினைப் பகிரங்கப்படுத்து மாறு கோரியும் பல சர்வதேச ஊடகங்கள் குரலெழுப்பி வருகின் றன. இரகசியத்தை வெளியிடும் போது பரிசீலிக்கப்பட்ட பல்லா யிரக்கணக்கானோரின் பெயர்களை யும் பகிரங்கப்படுத்த நேரும். இதனால் நோபல் பரிசுக்குரிய சர்வதேசக் கனம் குறைந்து, ஈற்றில்
10

ஒலிம்பிக்போட்டி போல் நோபல் தேர்வும் விஞ்ஞானிகளை வைத்து நாடுகள் நடாத்தும் ஒரு சர்வதேசப் போட்டிபோல் ஆகிவிடும். அல் பிரட் நோபல் எதிர்பார்த்த மனித குல மேன்மை இந்தப் போட் டியின் முன்னால் அடிபட்டுப் போய்விடும் என்று காரணங்களைக் காட்டி நோபல் நிறுவனம் பரிசீலிப்பைப் பகிரங்கப்படுத்துவதற்கு மறுத்து வருகிறது.
நோபல் பரிசு கிடைத்த வர்களைத் தவிர வேறு தகுதியான வர்கள் இருக்கமுடியாதா? என்ற கேள்வியும் எழும்பத் தொடங்கி யுள்ளது. நோபல் வாழ்ந்த காலம் வேறு, ஒரு நூற்றாண்டு க்கு ம் மேலான வளர்ச்சியைக் கண்டு விட்ட நிகழ்காலம் வேறு. முன் னை ய கண்டு பிடிப்புகள் ஒவ் வொன்றும் தனி ஒருவராலேயே நிகழ்த்தப்பட்டன. ஆனால், தற்போதைய ஆய்வுகள் பெரும்பா லும் பலர் பங்கேற்கும் கூட்டு முயற் சிகளாகவே இருக்கின்றன. அத்து டன், நோபல் குறிப்பிடாத பல புதிய துறைகள் இப்போது உருவாகி
அவற்றிலும் ஆரோக்கியமான தேடல்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால், நோபல் நிறுவனம் இவற்றையெல்லாம் கண்டுகொள்ள முடியாத நிலையி லேயே இருக்கின்றது. வரும் காலங் களிலும் அவ்வாறுதான் இருக்கமுடி யும். நோபல் எழுதி வைத்துச் சென்றிருக்கும் உயிலில் மாற்றங் களை ஏற்படுத்த அவரால் உயிர்த் தெழுந்து வரமுடியுமா என்ன?
நங்கூரம்

Page 47
சுற்றுச் சூழலுக்கும் தேக ஆ ஒரேயொரு பசுமைப் ே
துவிச்சக்கர வண்டி
பெ
சகல வகையா
இவற்றின் உதிரி மொத்தமாகவும் சில்லறை
இ.ச.பே. நாகரத்தி E.S.P.NAGAR
52, 54, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம். தொ.பேசி : 021 222 3096 தொ.நகல் : 021 222 4394

நரோக்கியத்துக்கும் உகந்த பாக்குவரத்துச் சாதனம் கள் மாத்திரம்தான்!
ச்சக்கர வண்டிகளையும்
ப்பாகங்களையும் பாகவும் பெற்றுக் கொள்ள மனம் சக நிறுவனம் ATNAM & C0
A9 வீதி, கரடிப்போக்கு, கிளிநொச்சி.
தொ.பேசி : 021 228 0014 தொ.நகல் : 021 228 0015

Page 48
நுளம்புகளை அழிப்பதற்கு என்று மோர்ட்டீன் பூச்சி கொல்லித் தி ர வ ம் எ ங் க ள் வீட் டு க் கு அறிமுகமான ஆரம்ப நாட்கள் அவை. மோர்ட்டீனில் உள்ள அலெத்திரின் (Allethrin) வேதி நஞ்சைச் சுவாசித்ததில் தினமும் இரவில் நூற்றுக் கணக்கான நுளம்புகள் பாதி மயக்கத்தில் தரையில் புரண்டு கொண்டிருக்கும். காலையில் எழுந்து பார்க்கும்போது வழித்துத்துடைத்து விட்ட மாதிரி எல்லா நு ளம்புகளும் பறந்து விட்டிருக்கும். அப்படித்தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.
மோர்ட்டீன் மருந்தின் தரத்தை நான் சபித்தபோது, விழிகளில் ஏளனம் வழிய மகள் சொன்னாள், சுவரில் தொங்கும் சாமிப் படத்துக் குப் பின்னால் மறைந்திருக்கின்ற பல்லி இறங்கி வந்து நுளம்புகளை யெல்லாம் பொறுக்கித் தின்றதைத் தன் இரண்டு கண்களாலும் பார்த் ததாக. அறப்படித்த பல்லி கூழ்ப் பானைக்குள் விழுந்த கதையாக என் மூளைக்கு உறைக்காமற்போன இந்த உண்மையைப் பிறகு பல்லி யும் உரைத்தது. நஞ்சேறிய நுளம்பு களை உண்டதால் நஞ்சு முட்டி நான்கே நாளில் பல்லி சுவாமிப் படத்துக்குக் கீழே மல்லாக்க விழுந்து கிடந்தது. இது எங்கள்

இ சுமக்கும்
பொ.ஐங்கரநேசன்
வீட்டுக் கதை மட்டுமல்ல; எல்லா வீட்டுப் பல்லிகளுக்கும் இன்று இதே கதிதான்.
- எமது வீடுகளில் ஒண்டிக் குடித் தனம் செய்து வருகின்ற பல்லிகள், எமது பண்பாட்டின் ஒரு அங்க மாகவும் ஒட்டிக் கொண்டிருக் கின்றன. உச்சந்தலைக்கு மேலே நின்று சொன்னால் பண வரவு, தலையில் விழுந்தால் துன்பம்... என்று பல்லிகள் எழுப்பும் சத்தம் - - சத்தம் வரும் திக்கு - தவறி எமது உடலில் அவை விழும் இடம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு குறி சொல்லும் 'கெளளி சாத்திரம்' எம்மிடையே தொன்று தொட்டு நிலவிவருகிறது. தங் களைப் பாதிக்கவல்ல துர்ச்சகுனங் களை அகற்றுமாறு தமிழகத்தின் பழமை வாய்ந்த காஞ்சிபுரம் கோவிலில் உள்ள கற்சிலைப் பல்லியை மக்கள் இன்றளவிலும் மன்றாடி வருகின்றனர். 'நனை சுவர்க்கூரை கனைகுரல் பல்லி' நல்ல செய்தி ஏதாவது சொல்லுமா என்று காத்திருந்த தன் மனைவியைப் பற்றி சத்தி முற்றப் புலவர் நாரைவிடு தூதில் பாடி யிருக்கிறார். கூரை மற்றும் ஓட்டு வீடுகள்போய் இப் போது அடுக்கு மாடிக் குடியிருப்பு கள் வந்த பின்னரும் பல்லிகள் எம்மைவிட்டுப் பிரிவதாக இல்லை.
நங்கூரம்

Page 49
பல்லிகள்!
ஆனால், பல்லாயிரம் ஆண்டு களாக எம்முடனேயே வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தப் பல்லிகள் மீது, இது வரையில் இல்லாத அளவுக்குச் சமீப காலமாகக் கொலைப்பழி விழ ஆரம்பித்தி ருக்கிறது. தமிழகத்தில் மதிய உணவு பரிமாறப்படும் பள்ளிக்கூடங்களில் சுகாதாரம் இல்லாத பாத்திரங்களில் சமைப்பதாலும், நாட் பட்ட முட்டைகளைப் பயன்படுத்துவதா லும், ஊசிப்போன பதார்த்தங் களைப் பரிமாறுவதாலும் உணவு நஞ் சாகி நூற்று க் க ணக் கான குழந்தைகள் உயிருக்குப் போரா டுவது வாடிக்கையாகிவிட்டது. சாம் பாரில் பல்லி விழுந்து விட்டதாலேயே இப்பரிதாபம் நேர்ந்தது என்று இதற்குக் காரணம் சொல்லப்பட, பத்திரிகைகளும் அதனை அப்படியே அச்சேற்றி விடுகின்றன.
- பாண்டிச்சேரி யில் திட்ட மிட்டுத் தன் மனைவியைக் கொலை செய்த ஒருவர் மனைவி பால் குடித்த குவளையில் பல்லி கிடந்தது என்று காவல் துறையில் வாக்குமூலம் கொடுத்ததாகச் செய்திகள் வெளி யாகின. ஆனால் கணவனே பாலில் சயனைட் கலந்த உண்மை பின்னர் தெரியவந்துள்ளது. அண்மையில் சென்னையைச் சேர்ந்த ஒருவர் கொக்கோ கோலா குளிர்பானத்தை அருந்திய பின், அந்தப் போத்தலி னுள்ளே பல்லி இருப்பதைக் கண்டு
நங்கூரம்

மருத்துவமனைக்கு விரைந்துள் ளார். அவசர சிகிச்சையில் அவ ருக்கு மாத்திரைகள் கொடுக் கப்பட்டு, வயிறு கழுவப்பட்ட தாகப் பத்திரிகைகள் படங்களுடன் பிரசுரித்துள்ளன. அச்சில் வரு வதைத்தான் எதுவித கேள்வி விசா ரணையுமின்றி அப்படியே ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் இருக்கி றதே!. அது, 'ஒதுக்குப் புறமாகத் தானே இருந்து விட்டுப் போகட் டும்!' என்று வீடுகளில் பல்லியை அனுமதித்தவர்களையும் இப்போது பல்லிகளை விரட்ட வைத்திருக் கிறது.
பல்லிகள் மீது நாம் சுமத்திவரும் இந்தப் பழி விஷமத்தனமானது. உண்மையில் பல்லிகள் விஷம் அற்றவை. அவை உணவில் விழுந் தாலும் பாதகமான விளைவுகள் எது வும் இருக்காது. எமது உதடுகளின் ஓரங்களில் சிறுகூட்ட மாக வரும் கொப்பளங்களை பல்லிகள் எச்சமிடுவதால் ஏற்படு பவை என்றுதான் நம்மில் பலரும் நம்பிக்கொண்டிருக்கின் றோம். உண்மையில் இதற்கும் பல்லி
பாம்
தன்னுறுப்பு முறிவு

Page 50
எச்சத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது இது வைரஸ் கிருமியி னால் (HSV- Herpes Simplex Virus) ஏற்படும் ஒரு தொற்றுநோயாகும்.
பல்லி (Gecko) என்று நம்மால் சுட்டப்படும் இந்தச் சிற்றினங்கள் பாம்பு - பச்சோந்தி - உடும்பு ஆமை போன்றவை அடங்கும் நகருயிர்களின் (Reptiles) கூட்டத் தைச் சேர்ந்தவை. எமது வீடுகளில் பொது வாக இருக்கக் கூ டி ய பல்லிகளை விஞ்ஞான மொழியில் ஹெமிடக்ரிலஸ் ஃபிறினேற்றஸ் (Hemidactylus frenatus) என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். இவை பகலில் மறைந்திருந்து இரவில் சஞ்சரிப்பவை. மனிதர் களால் நிறங்களை வேறுபிரித்தறிய முடியாத இருட்டில்கூட இவற்றி னால் நிறங்களை அறிந்துகொள்ள முடியும். அந்த அளவுக்கு இவற்றுக் குப்பார்வைத்திறன் அதிகம்.
கர ப்பான் பூச் சி கள், விட்டில்கள், நுளம்புகள் போன் வற்றை வேட்டையாடும். அவை தாமும் வேறு இரை கெளவி
க ளு க் கு த் தீனி யாவ து ண் டு , ச ம ய ங் களில் தம் வாலி
னால் அவற் று க் கு த்
ஸ்ர்சைப்பல்லி

தண்ணியும் காட்டி விடுகின்றன. பல்லியைப் பிடிக்கப் பாய்ந்த பூனை கடைசியில் வாலுடன் 'மெனக் கெடு'வதைப் பார்த்திருப்பீர்கள். பல்லி யின் வாலைப் பிடிக்க நேரிடும்போது ஒரு தற்காப்பு வியூக மாகப் பல்லியின் வால் தானாகவே அறுந்து விடுகிறது. இதைத் தன்னு றுப்பு முறிவு (Autotomy) என்கி றார்கள். து ண் டிக் கப் பட் டு த் துடித்துக் கொண்டிருக்கும் வால் எதிராளியை ஏமாற்றிக் கொண்டி ருக்க அதற்குள்ளாகவே பல்லி தப்பித்துப் போய் விட்டிருக்கும். அறுந்து போன இடத்திலுள்ள இரத்தக் குழாய்கள் தாமாகவே மூடிக் கொள்ள, நாளடைவில் பல்லிக்குப் புதிய வால் அதிசயிக் கும்படி முளைத்துவிடும்.
பல்லியின் மிருதுவான தோல் இலகுவில் காயப்பட்டாலும் மிக விரைவிலேயே ஆறிவிடுவதால் பல்லிகள் எப்போதும் ஆரோக்கி யமாகவே தோன்றும். பல்லிகள் அவ் வப் போது பாம்புகளைப் போல வே தமது தோல்களை முழுமையாக உரித்துவிடுகின்றன. ஆனால், உட னேயே அதனை ஆகாரமாக்கி விடுவதால் பாம்புச் செட்  ைட க  ைள ப் பார்ப்பது - போன்று பல்லிகள் கழற்றும் சட் டைகளை எங்களால் காணமுடி "யாமற் போய் விடுகிறது.
பல்லிகள் சுவரில் செங்குத்தாக - ஊர்வதும், கூரையில் தலைகீழாக நகர்வதும் இன்னொரு ஆச்சரியம். இதை அவதானித்த உயிரியலா
நங்கூரம்

Page 51
ளர்கள் ஆரம்பத்தில் பல்லி கள் த மது பாதங் களை அழுத்தி வெற்றிடத்தை உரு" வாக்குவதாலேயே இந்தச் சாக்சம் சாத்தியமாகிறது என்றனர். நான் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஆரம்ப விஞ்ஞானம் படித்தபோது எனது ஆசான் சி.சு புண்ணியலிங்கம் அவர்கள் கூறியது இதுதான். இரண்டு தசாப்தங்களாக நான் ஆசிரியப்பணி யாற்றிய போதும் இதையேதான் போதித்து வந்தேன். ஆனால் இன்று அறிவியல் அறிஞர்களின் அறிதல் வேறாக இருக்கிறது.
பல்லிகளின் கால் விரல்களில் இலட்சக்கணக்கான மயிர்போன்ற இழைகள் காணப்படுகின்றன. மனிதத் தலை முடி யொன்றின் பத்தில் ஒருபங்கு தடிப்பை மாத்தி ரமே கொண்ட இந்த நுண்ணி ழைகள் அவற்றின் முனையில் மேலும் சில நூறு கிளைகளாகப் பிரிந்திருக்கின்றன. இந்த நுண்ணி ழைகளைத் தாம் இருக்கும் இடத் தில் அழுத்துவதன்மூலம் ஏற்படும் ஒட்டற்பண்பு விசை ஒரு பசை போல் ஒட்டிக்கொள்வதால்தான் பல்லிகள் நகருகின்றன என்று கண்டறிந்திருக்கிறார்கள். கைக் கெட்டிய தூரத்தில் இருந்தும் இதன் காற்பாதங்கள் இப்போது தான் எமது மூளைக்குப் பிடிபட்டுள்ளன.
பல் லி க ள் தமது உடலின் வெப்பநிலையைக் குறித்த அளவில் ஒரு சீராகப் பேணமுடியாத மாறும் வெப்பநிலையுள்ள பிராணிகள் ஆகும். சூழலின் வெப்பநிலைக்கு
நங்கூரம்

- சிறுத்தைப் பல்லி
அவ் வப்போது இ த ன் உடம் பின் வெப்ப , நி  ைல யு ம் . கூடிக் குறையும். இதனால் இரவில் விறைத்துப் போகும் அளவுக்குக் குளிருள்ள பிரதேசங்களில் பல்லி களால் பிழைக்கமுடியாது. மற்ற படி அயன - உபஅயனப் பிரதேசங் களில் வீடுகளில் மாத்திரமல்லாமல் பூச்சிகள் பெருவாரியாகக் காணப் படக்கூடிய காடுகள், மலைகள், பாலை நிலங்கள் என்று எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக் கின்றன. ஆப்கானிஸ் தான் - பாகிஸ்தானின் வரண்ட பகுதிகளில் உள்ள சிறுத்தைப் பல்லிகள், போர் னியோவின் மழைக் காடுகளில் பறக்கும் பல்லிகள், மடகஸ்கார் காடுகளில் இலை வாற் பல்லிகள், நியூசிலாந்தில் பச்சைப் பல்லிகள், இலங்கையில் தங்கப் பல்லிகள் என்று ஏறத்தாழ 1500 பல்லி இனங்களை நகருயிர் ஆய்வாளர்கள் (Herpetologists) பெயரிட்டுள்ளார் - கள். இவற்றில் வீட்டுப் பல்லிகளாக இதுவரை 90 இனங்கள் அடை யாளம் காணப்பட்டுள்ளன.
பல்லிகளில் மிகப்பெரிய பல்லி அவுஸ்திரேலியாவுக்கு அருகா மையிலுள்ள புதிய கலிடோனி யாத்தீவில் காணப்படுகிறது. கலி டோனியாப் பல்லி (Rhocodactylus Teachianus) எனப்படும் இது

Page 52
ஒரு அடிக்கும் மேலாக வளரக் கூடியது. இரண்டாவது பெரிய பல்லி இந்தியாவில் மழைக்காடு களில் காணப்படும் டுக்டூ (Tokay Gecko - Gekko gecko) பல்லிகளா கும். ஒரு அடி வரையில் வளரக் கூடிய இவற்றைக் காடுகளை அண் டிய மனிதக் குடியிருப்புகளிலும் காண முடியும். பேசா மடந்தைகளான பெண் பல்லிகளை அழைக்க ஆண் பல்லிகள் எழுப்பும் டுக்...டூ ஒலி வெகுதூரம் வரை கேட்கும். வலி மையான தாடைகளைக் கொண் டிருப்பதால் சுண்டெலிகள், சிறு பற வைகள் போன்றவற்றையும் கூட இலாவகமாக இரையாக்கி விடுகின் றன.
இந்தப் பல்லிகளைப் பற்றிப் படிப்பவர்களும், இவற்றைப் பாது காக்க முயல்பவர்களும் நியூயோர்க் கில் ஒரு பன்னாட்டு அமைப்பை (Global Gecko Association) உருவாக்கியிருக்கிறார்கள். பல்லி களை எங்கே வாங்குவது, எம்மைக் கண்டவுடன் வெட்கப்பட்டு ஓடி மறையும் இவற்றை எப்படிக் கையா ளுவது, உணவூட்டல் முறை என்
டுக்டு பல்லியின் வாயில் பாம்பு

றெல்லாம் பல்லிகளைச் செல்லப் பிராணிகளாக வளர்க்க விரும்பு பவர்களுக்குக்கூட இவர்கள் பயிற்சி வழங்குகிறார்கள். என்ன... பல்லி கள் செல்லப் பிராணிகளா? என்று எமக்கு முகத்தைச் சுழிக்க வே தோன்றும். வெப்ப மண்டல நாடு களை விட உயிர்ப்பல்வகைமையில் குறைந்த குளிர்வலயத்தின் மக்களுக் குப் பொதுவில் பிராணிகள் மீது மோகம் கொஞ்சம் அதிகம்தான். மஞ்சள்நிற உடலில் வரிகளைக் கொண்டிருக்கும், பல்லிகளிலேயே அழகான சிறுத்தைப் பல்லிகளை இவர்கள் விரும்பி வளர்க்கிறார்கள். பழக்கினால் எமது வீட்டுப் பல்லி - களும் வளைய வரக்கூடியவையே.
அந்த எல்லைக்கு நாங்கள் போக வேண் டி ய தி ல்லை. இயற்கை - எங்கள் வீடுகளுக்குள் அனுப்பி வைத்த அற்புதமான இந்தப் பூச்சிக் கொல்லிப் பல்லிகளை அவற்றின் எல்லைக்குள் அனுமதித்தாலே போதும், பல்லிகள் மட்டுமல்ல, தினமும் பூச்சி கொல்லி நஞ்சுகளால் நுரையீரற் பைகளை நிரப்பிக் - கொண்டிருக்கும் நாமும் நலம்
பெறலாம்.
** உன் 4:1' ச * !

Page 53
லிங்கன்)
4. ஐவல்
ஒவ்வொன்றில் அத்தனையிலு
ரா-1:51
LINGAN CRI 'லிங்கன் கிர
இல.119, கஸ்தூரியார் வீதி, 'யாழ்ப்பாணம். 'தொ.பேசி: 021 222 7327

2.3 கிம் ரேர்களின் கண்டுபிடிப்பு அவைon 2.5 கிம் Sரிகளின் அலரிப்பு றும் பல வகை
ம் தனிச்சுவை
EAM HOUSE றீம் ஹவுஸ்
இல.526, பருத்தித்துறை வீதி,
'நல்லுார், யாழ்ப்பாணம். தொ.பேசி: 021 222 4945

Page 54
ஒன்றும் நt ஒத்துக் கொ
உங்களில் சிலபேர் உயர்த்திய கருப்புக் கொடிகளை கீழே போட்டுவிடுங்கள்.
உங்களில் சிலபேர் அரசுக்கும் ஆட்சிக்கும் எதிராக பேசிவருவதை வாபஸ் பெறுங்கள்.
கவலை உங்களுக்குப் புதிதில்லையே பிறகேன் கவலைப்படுகிறீர்கள்.
அணுக்கசிவினால் எங்கெங்கு அழிவு ஏற்பட்டதென பட்டியல் வாசிக்காதீர்கள். நீங்கள் காட்டிவரும் எதிர்ப்பினால் நாடும் நாங்களும் இருண்டுவிடும் எல்
அபாயமிருக்கிறது.
எய்
போ கோஷமிடுவதைத் தவிர்த்துவிட்டு எங்கள் மோசடியை வாழ்த்திப்பேச வல் கூட்டம் போடுங்கள்.
உங் மன
- யுகபாரதி
மரு
நோ
ஒன்
ஒத்.
அடு
கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக அல எல்லா விதமாகவும் பேச போராடிக் கொண்டி ருக்கின்ற இடிந்தகரை மக்களுக்கு.
ஏற் அத
அதி
48

*துடாது. *ரூஸ்கள்!
லோரும் ஒருநாள் தப்போவது இயற்கை என்பதால் ராடுவதை விட்டுவிடுங்கள்.
லரசுகளின் வாஞ்சையினால் களுக்கு நேரப்போகும் உபாதைகளை முவந்து ஏற்றுக் கொள்ளுங்கள்.
ந்தை இலவசமாகத் தருகையில்
யை வாங்கிக் கொள்ளத் தயங்குவதா றும் நடந்துவிடாது துக் கொள்ளுங்கள்.
ப்புலைக்கே வழியற்ற நீங்கள் றுஉலையைப் பற்றி ஏன் க் கொண்டிருக்கிறீர்கள்?
கபட்சம் உங்களுக்கு
டப்போவது மரணம் மட்டுமே வகுப்போய் அச்சப்படலாமா?
நங்கூரம்

Page 55
2 சப் -2 -1=EE EL
பாதாட மறுகா 2வது
பட 14 - =" 15
5 : : : எம் சு
சீமெந்து உற்பத்தியில் உ வகிக்கிறது. கடந்த ஆண் மெற்றிக்தொன்கள் அளவு உற்பத்தி செய்யப்பட்டுள்ள உற்பத்தியில் 54 விழுக்கா
இரண்டாவது இடத்திலிரு கடந்த ஆண்டில் 200 தொன்கள் சீமெந்து உற்பு தென்னிந்தியாவின் முன் நிறுவனம் மெட்ராஸ் ஆகும். இதுவே பிர. சீமெந்தை கடந்த அ மேலாக உற்பத்தி செய்து
ராம்கோ? ISO 9001 உலகத்தார் - சீமந்துகள்

1ா சோர்ட் " === E:
====Eாபா E:
அகஇ அங்கு பயற்சி தாய் மகன்
அ பா
2EE B= == * காம 2 மா ப யாகபs.
லட்30 ம் ப அபாபா பங்E அ ம் ம் இதயம்
-F Fாம் FEEா
3ம் 14ம்
25 கா பா E A
Fா?
அட டா ம்
உலகில் சீனா முதலிடம் டில் 2000 மில்லியன் வுக்கு இங்கு சீமெந்து து. இது உலக சீமெந்து நடு ஆகும்.
MEXl 1 #== படம்
ஈகம் Mள்
தப்பது இந்தியா. இங்கு - மில்லியன் மெற்றிக் பத்தி செய்யப்பட்டுள்ளது. னணி சீமெந்து உற்பத்தி சீமென்ற்ஸ் லிமிற்ரெட் சித்திபெற்ற ராம்கோ ரை நூற்றாண்டுக்கும் வருகின்றது.
== 4
AEN)
சிமெந்து ச்சான்றிதழ் வற்ற பின் அரசன்

Page 56
NANKKOORUM (ANC
|||
Harikanan (Pv

HOR), SEP - OCT 2012
உவர்நீர்த் தடுப்பணை, தொண்டைமானாறு - ம.சசிகரன்
- நன்னீரை உவராக்கினால் கண்ணீரே மிச்சமாகும்
) Ltd., Jaffna.