கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கல்வத்தின் இரகசியங்கள்

Page 1
கல்வத்தின்
( அஸ்ராரு
மூல நூ ஸுல்தானுல் ஆரிபி முஹிய்யதீன் இப்னு .
ஹிஸ்புல்ல
கொ

இரகசியங்கள்
ல் கல்வத்)
லாசிரியர்: 3ன் செய்குல் அக்பர்
அவர்கள்
சாஹ் சபை
ழும்பு.

Page 2

கல்வத்தின் இரகசியங்கள்
( அஸ்ராருல் கல்வத் )
மூல நூலாசிரியர்: ஸுல்தானுல் ஆரிபீன் செய்குல் அக்பர் முஹிய்யதீன் இப்னு அறபி (றஹ்) அவர்கள்
மொழிபெயர்ப்பாசிரியர்: மெளலானா, மெளலவி, பாஸிஸ், அல்லாமா அல்ஹாஜ் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி (றஹ்)
ஸித்தீகி, காதிர், காஹிரி அவர்கள்
விடிையலாஹ் சபை
ஹிஸ்புல்லாஹ் சபை
கொழும்பு.

Page 3
உரிமைப்பதிவு முதற் பதிப்பு 01-01-1970 (காயல்பட்டணம்)
இரண்டாம் பதிப்பு 25-06-1984 (கொழும்பு)
ஹதியா 5/-
அச்சு ஸபீனா பதிப்பகம் 20, பிரைஸ் பிலேஸ், கொழும்பு-12.
வெளியீடு
ஹிஸ்புல்லாஹ் சபை 19/1, அக்பர் லேன், கொழும்பு-12.

முகவுரை
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் இதனைத் துவங்குகிறேன்.
ஹளரத் கௌதுல் அஃளம் (றலி அவர்களது அருளும், ஆசியும் மிக்க அவர்களது மைந்தர் ஹளரத் முஹ்யித்தீன் இபுனு அரபி (றலி) அவர்கள் எத்தன்மை வாய்ந்த மகான் என்பதை இங்கு விளக்கவேண் டிய தேவையில்லை என்பதை எவரும் அறிவர். ஏன்? அ வ ர் க ள து பெருந்தன்யைபற்றி அறியாதார் இல்லை முஸ்லிம் உலகில். ஹகீ கத்து - அகமியம் பற்றிய அவர்களது பற்பல நூல்களுள் ''அத்தது பீறாதுல் இலாஹிய்யா பில்மம்லகதில் இன்ஸானிய்யா'' என்ற அரபி மொழி நூலை, தமிழில் மொழிபெயர்த்துத் தந்துதவும்படி ''ஹிஸ் புல்லாஹ் சபை' ' யினர் ஆவலோடு என்னை வேண்டிக்கொண்டனர்,
எனவே, மூல நூ லி ன் கருத்துக்கு வேறுபடாமல், ( ) பிறை வடிவுக்குள் தெளிவுரைக் குறிப்புகளை அமைத்து, எளிதில் எ வ ரு ம் புரிந்துணரக்கூடிய தன்மையில் தமிழாக்கி ' 'அஸ்ராருல் கல்வத்' ' என்ற நாமத்தோடு வெளியிட உதவி புரிந்த அல்லாஹ்வுக்கே சர்வ புகழும்!
இந்த தமிழாக்க நூலுக்கு இனியதொரு ' 'தலை உரை”' எழுதிப் போர்த்து இதனை அச்சிட்டு வெளியிட முன்வந்த நமது ' 'ஹிஸ்புல் லாஹ் சபை' ' யினருக்கும், இதற்காக எனக்கு ஊக்கமளித்த அன்பர் களுக்கும், இதனை வாசித்துணரும் நேயர்களுக்கும், உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் எல்லாம்வல்ல ஹக்குதஆலா சகல துறையிலும் நல் லருள் புரிந்து நேர்வழி செல்ல அருள் பாலிப்பானாக! ஆமீன்.
இவ்வண்ணம், முஸ்லிம்களின் ஊழியன் மொழிபெயர்ப்பாசிரியர்.
1-1-70.

Page 4
தலை உரை
ஹளரத் கௌதுல் அஃளம் (றலி) அவர்களது அருளும் ஆசியும் மிக்க ஹளரத் முஹ்யித்தீன் இப்னு அரபு (றலி) அவர்களுக்கு ஹகீ கத்து - அகமியம் சம்பந்தமான நூற்கள் ஏராளமுண்டு. அவற்றுள் அத்தது பீறாதுல் இலாஹிய்யா என்ற அரபிமொழி நூலை, எனர்க்கும் தெ ளி வா க விளங்கவைக்கும் வண்ணம் இனிய தமிழில் மொழி பெயர்த்து 'அஸ்ராருல் கல்வத்' என்ற நாமத்தோடு வெளியிடுகின் றோம். இதே நூல் தமிழ் மொ ழி யி ல் 'அல் அன்வாறு'' என்ற மற்றொரு அன்பரால் வெளியிடப்பட்டிருப்பது பாராட்டத் தக்கதே. எனினும், ( ) பிறை வடிவுள் விரிவுரைக் குறிப்புகளோடு, தெளி வாகவும், மூல நூலுக்கு ஏற்ப கருத்துக்கள் விடுபடாமலும் தமிழில் வெளியிடப்படும் இந்நூல் ஆமீத்கத்துறையில் முன்னேறி மஃரிபாவின் நற்பாக்கியம் பெற்று உயர் பதவி பெறவேண்டுமென்றுள்ள உத்தமர் களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இதைக் கொண்டு அல்லாஹ் உங் களுக்கும் எங்களுக்கும் நல்லருள் பாலிப்பானாக.
எங்கள் வேண்டுகோளை ஏற்று சிறப்பான மு றை யி ல் இதைத் தமிழாக்கம் செய்து தந்த எங்களது மகிமைமிக்க குருநாதர் ஷெய்குனா வமுர்ஷிதுனா, அல்ஹாஜ் ஷெய்கு அப்துல் காதிர் ஆலிம் காதிரீ, நூரீ, ஸித்தீகீ அவர்களுக்கு எங்களது அகங்குளிர்ந்த நன்றி.
வஸ்ஸலாம்.
இப்படிக்கு, ஹிஸ்புல்லாஹ் சபை
ஸூபி மன்ஸில்.
காயல் பட்டணம். 1-1-70.

இந்நூலில் ஹழரத் முஹியித்தீன் இபுனு அறபி (ரலி) அவர்களது திருவுளம் மலர்ந்த அகமிய அறிவுகளைப் பற்றிய ஆழ்ந்த விளக்கம் தரப்பட்டிருக்கிறது. இதில் கூறப்பட்டுள்ள அகமிய அறிவுகளைக் கிரகிக்கும் ஆற்றலையும், அவற்றின்படி செயல்படும் பேரின்பப் பேற்றையும். நமது மஷாயிகுமார்களின் அருள்ஞானப் (பைழ்) பெருக்கையும் - நம் அனைவருக்கும் சர்வவல் லமை பொருந்திய அல்லாஹ் நந்தருள்வானாக.
ஆமீன்.
இந்நூலின் மொழிபெயர்ப்பாசிரியரான
மர்ஹும் செய்யதினா ஷெய்கு அப்துல் காதிர்
ஸுபி ஹழரத் (ரஹ்) அவர்கள் கடந்த ஹிஜ்ரி 1402 ரமழான் பிறை 24-க்குச் சரியாகிய (16-6-1982) வெள்ளிக்கிழமை வபானத்தை முன்னிட்டு,
இரண்டாம் வருட ஞாபகார்த்தமாக இந்நூல் இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

Page 5
பதிப்புரை
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் துவங்குகின்றோம்.
ஞானப் பெருங்கடலும் அவுலியாக்களின் பேரரசருமாகிய ஹழரத் கௌதுல் அஃலம் முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர் களின் அன்பு மைந்தர் ஹழரத் முஹியித்தீன் இபுனு அரபி (ரலி) அவர்களது ' ' ஹகீகத்து'' அகமியம் பற்றிய பலதரப்பட்ட நூல்களுள் பிரசித்தமான நூலாகிய ''அத்தது பிறாதுல் இலாஹிய்யா பிஸ்மம்லக தில் இன்ஸானியா'' எனும் அரபு நூலை தமிழ் நாடு காயல்பட்டணத் தைச் சேர்ந்த எங்களது மகிமைசேர் குருநாதர் - ஞானவேந்தர் ஷெய் குனா வமுர்ஷிதுனா அல்ஹாஜ் மெளலானா மெளலவி பாசில் ஷெய்கு அப்துல் காதிர் சூபி ஆலிம் நூரி முப்தி ஸித்திக்கி காதிரி காஹிரி (றஹ்) அவர்கள் மூலப் பிரதியினின்றும் சற்றும் பொருள் பிசகாது தமிழாக்கஞ் செய்து தேன் தமிழ்ச்சாற்றில் தீன்மறை கருத்துக்களை ''அஸ்ராருள் கல்வத்'' - 'கல்வத்தின் இரகசியங்கள்'' எனும் தலைப்பு கொண்ட நூலாகத் தந்த ஞானப் புதயலை அன்னாரின் ஞானச் சீடர் களும் , ம ற் று ள் ள, இறைநேயர்களும் படித்தின்புறுதல் வேண்டும் என்கிற நன்னோக்கில் அவர்களின் நினைவார்த்தமாக இஃதை மறு பிர சுரஞ்செய்ய விரும்பியதன் விளைவே, இப்போழ்து உங்களது பொற் கரங்களில் தவழும் இந் நூலாகும்.
இந்சிறு நூலை மறு பிரசுஞ்செய்து வெளியிட அனுமதி வழங்கிய கா ய ல் ந கர் ஹஸ்புல்லாஹ் சபையினருக்கும் இந்நூலை வெளியிட அனைத்துத் துறைகளிலும் ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் இதை அச்சிட்டுத் தந்த ஸ்பீனா அச்சகத்திற்கும் அல்லாஹ்வின் நல்லருலும் - நல்லாசியும் கிட்டுவதற்கு துவா செய்வதுடன், எங்களது இன்ய நன்றி யையும் சமர்ப்பிப்பதில் மகிழ்கின்றோம்.
வஸ்ஸலாம், ஹிஸ்புல்லாஹ் சபை"
ஸ்ரீ லங்கா. 19/1, அக்பர் லேன், கொழும்பு- 12. 25-06-1934

• 'பிஸ்மில்லா ஹிர்ற ஹ்மானிர் ரஹீம் ' '
கல்வத்தின் இரகசியங்கள்
(அஸ்ராருல் கல்வத்)
அக்லு என்னும் யுக்தியைப் புதுமையாகப் படைத்து நன்கொடை யாக அளித்தவனும், நக்லு என்னும் சுருதியை ஆதாரமாக நிறுத்தி சன்மார்க்கமாக ஆக்கியவனுமாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்; அவனுக்குரியதே சர்வ உபகாரமும் நன்றியும். சர்வசக்தியும், திரும்பு தலும் அவனைக் கொண்டேயாகும். மகத்துவமிக்க அர்ஷையுடைய அவனையல்லாது வேறு நாயன் இல்லை.
எவர்களைக்கொண்டு நேர்வழியின் விருதுக் கொடிகளை நிலை நாட்டி, 'நூர்' என்னும் ஒளிப் பிரகாசத்தை (குர்-ஆனை)க் கொண்டு அனுப்பிய ருளி, அதைக்கொண்டு தான் நாடியவர்களை வழிகாட்டியும், தான் நாடியவர்களை வழிதவறி நடந்திடவும் செய்தானோ அந்த உத்தமப் புருஷர் நாயகம் பா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களது சங்கைமிக்க கிளைஞர்கள், பரிசுத்தத் தோழர்கள் மீதும், அவர்களை நன்றி விசுவாசத்துடனும் பின்பற்றித் தொடர்ந்து நடப்பவர்கள் அனைவர்மீதும் இறுதித் தீர்ப்பு நாள் வரையிலும் அல்லாஹ் ஸலவாத்தும் (ஸலாமும்) அருள்வானாக.
மதிப்பிற்குரிய நண்பா! இறைவழி நடக்கும் வகை விபரத்தையும், அவனது சமுகம் செல்வது பற்றியும் உமது வினாக்கள் நமக்குச் சந்தோ ஷத்தைக் கொடுத்தன. அவற்றிற்கு நூல்வடிவில் பின்வரும் விடைகளை எழுதியுள்ளேன்.
அறிந்து கொள்ளும்! வுஜூதில் - உள்ளமையில் அல்லாஹ்வையும் அவனது செயல்களையும் தவிர வேறில்லை. எல்லாம் அவனே. யாவும் அவனைக்கொண்டே நிலைத்திருக்கின்றன. அவனளவிலேயே மீளுகின் றன. . கண்ணிமைப் 1 பொழுதாவது - அல்லாஹு தஆலா ஆலத்தை - அகிலத்தைவிட்டும் மறைந்து கொண்டானே யானால் முழு பா உலகமும் ஒரேயடியாக 'டாக இல்லாமலாகிவிடும். ஆகவே, உலகத்தின் நிலை அல்லாஹ்வின் கிருபையைக் கொண்டும், பாதுகாவலைக் கொண்டுமேயல்லாது சாத்தியமில்லை. அல்லாஹ்வினுடை ஒளி - நூர் மிகக் கடுமையாக வெளியான தினால் புலன்களால் எட்டிக் கொள்ள முடியாமலாகவே அதற்கே திரை என்று சொல்கிறார்கள்.
முதலில் இப்பாதையின் நிலைமைகளையும், அதில் நடப்பவர்களுக் குரிய விதிகளையும் விளக்கிவைப்பது அவசியமெனக் கருதுகிறேன். அதன் பின்பு, அல்லாஹ் அளவில் சேருவதையும், அவன் சமுகத்தில்

Page 6
கல்வத்தின் இரகசியங்கள்
அனுஷ்டிக்கவேண்டிய ஒழுங்குகளையும் விபரிக்கின்றேன். அங்கு சேர்ந்த பின்பு அங்கு எவ்விதம் உங்களை அழைக்கப்படும், என்னென்ன வார் த்தைகள் பேசப்படும், அப்பால், நீங்கள் உங்களுடைய புலனுலகுக்கு எப்படி வருவீர்கள் என்பதையும், இன்னும், புலனுலகுக்கு மீண்டுவரா மல் பனாபில்லா ஹ்வில் - நாஸ்தியிலேயே இருப்பதைப் பற்றியும் சொல்வேன்.
சங்கையுள்ள என் சகோதரா! அறிந்து கொள்ளும் ! மேற்கூறிய நோக்கத்தைச் சித்தியாக்கிக்கொள்ளப் பல வழிகள் உள்ளன. ஆனால், வழிகள் பல என்பது அல்ல. வழி நடப்பவர்கள் உடைய நிலைமைகள் விதர்ப்பமாகவும், பலவாகவும் இருப்பதனால் பாதைகளும் பல வாகின்றன.
உதாரணமாக, ஒருவனுடைய சுபாவம் சரிசமமாகவும் நடுநிலைமை யாகவும் இருக்கும். இன்னொருவருக்கு அப்படியில்லாமலிருக்கும். ஒரு வரில் ஆசை அதிகமாகவும், இன்னொருவரில் குறைவாகவும் இருக்கும், ஒருவரில் ஆத்மவலிமை பலமாகவும், இன்னொருவரில் பலவீனமாகவும் இருக்கும் ஆகவே, இந்த நிலைமைகளுக்குத் தக்கவாறே அவர்களில் இபாதத்தின் - வணக்கத்தின் ஆர்வமும், பிரயாசையும் தெண்டிப்பும் தோற்றமாகும். எக்குணம் குறைவாக இருக்கின்றதோ அதைச் செவ் வையாக்க வேண்டும். சிலரில் நற்குணங்களெல்லாம் ஒன்றுபோல் அமைந்திருக்கும். அதனால், அவர்களுக்குப் பாதை மிகவும் எளிதாகி விடுகிறது. சிலரில் கெட்ட குணங்களெல்லாம் ஒன்றுசேர்ந்திருக்கும். அதனால், அவர்கள் இந்தப்பாதை மிகவும் கஷ்டமானது என்று கருது கிறார்கள். இவர்கள் இருசாரார்களுக்கும் மத்தியத்தில் உள்ளவர்களை மத்திபமாகக் கருதவும்.
முதன்முதலாக வதன் - தேசம் என்றால் என்னவென்றும். வதன் என்பதற்கு நாம் என்ன கருத்து வைக்கின்றோம் என்பதையும் நீங்கள் அவசியம் அறியவேண்டும். அதமிலிருந்து - இல்லாமையிலிருந்து வுஜுது - உள்ளமைக்கு வரக்கூடியவர்கள் எங்கெங்கு தங்கித்தங்கி வருகிறார் களோ அந்தத் தங்கு துறைக்குத்தான் 'வதன்' என்று சொல்லப்படும். அவை மொத்தம் ஆறு. இவற்றை நீங்கள் தெரிந்து கொள்வதனால் அவைகளில் உங்களை என்ன நோக்கத்திற்காக அனுப்பப்பட்டது என்பதுவும் உங்களுக்குத் தெரியவரும். அப்பால் அந்த நோக்கம் நிறைவேறுவதற்காக முயற்சி செய்யுங்கள். மறதியாயிருந்துவிடா தீர்கள்.

கல்வத்தின் இரகசியங்கள்
முதல்வதன் :- ''அலஸ்து பிறப்பிகும்'' - நான் உங்கள் நாயன் அல்லவா? என்று உங்களிடம் கேட்கப்பட்ட ஆன்ம உலகம். இந்த வதன் உடைய காலம் களிந்துவிட்டது. ஏனெனில் நாம் இப்போது, இரண்டாவது வதன் ஆகிய துன்யா உலகுக்கு வந்திருக்கின்றோம். மூன்றாவது வதன் பர்ஜக் உடைய ஆலமாகும். அது மரணத்துக்குப் பின்பு கியாமத்து நாள்வரையிலுமுள்ள உலகமாகும். நான்காவது வதன் ஸாபிறா, ஹாபிறா என்ற மஹ்ஷறின் தங்கு துறை. (ஸாபிறா என்றால் விழித்திருப்பது. ஹாபிறா என்றால் வெறும் காலோடிருப்பது என்று பொருள். அதாவது - கியாமத்து நாள் அங்கு எல்லோர்களும் தூக்கமற்று விழித்தவர்களாகவும், வெறும் காலோடும் இருப்பார்கள்.) ஐந்தாவது வதன் சொர்க்கம் அல்லது நரகம். ஆறாவது வதன் கதீபுல் அபுயளு - வெண் மணல் திடல். அதில் அல்லாஹு ஜல்லஷானுஹூ வத ஆலாவினுடைய திவ்ய காட்சி உண்டாகும்:
இந்த ஒவ்வொரு வதனிலும் பற்பல மர்தபா - பதவிகளும், தரஜா க்களும் - படித்தரங்களும் உண்டு அவையனைத்தையும் பூரணமாக விபரிப்பது மனித சக்திக்குப் புறம்பானதாகும். இங்கு, நாம் இந்த துனியாவுடைய வதனைத் தவிர மற்றெந்த வதன்களைப் பற்றியும் விபரிப்பது அவசியமில்லையெனக் கருதுகிறோம்.
அறிந்து கொள்வீராக ! அல்லா ஹத ஆலா நம்மை, 'அதம்' என்ற இல்லாமையிலிருந்து வுஜூது - உள்ளமைக்கு யாத்திரீகர்களா கவே தான் படைத்திருக்கின்றான் நாம் போய்ச் சேர்ந்து தங்கித் தரிபாடாக இருக்குமிடம் சொர்க்கம் அல்லது நரகம். இவ்விரண்டைத் தவிர வேறில்லை. ஒவ்வொரு மனிதர் உடைய சுவர்க்கமும், நரகமும், வெவ்வேறாகவும், பற்பல விதமாகவும் இருக்கும். அதாவது அவரவர் களுடைய அமல் - கிரியை களுக்குத் தக்கபடியேயாம். ஆகவே, இந்த யாத்திரை மிகவும் பயக்கரத்தையும், சங்கடத்தையும், துன்பத்தையும் உடையதாகும் என்பதை ஒவ்வொரு அறிவாளியும் அவசியம் தெரிந்தி ருக்க வேண்டும். கஷ்டமான வாழ்க்கையில் பொறுமை செய்வதைக் கொண்டுதான் இந்த யாத்திரையை முடிக்கவேண்டும்.
இந்த யாத்திரையின் ஒவ்வொரு தங்குமிடமும் விகற்பமான சீதோஷ்ணத்தை உடையதாகும். அதேபோன்று ஒவ்வொரு தங்குமி டத்திலும் இருக்கக் கூடியவர்கள் எல்லோரும் ஒரே சுபாவம் உடை யவர்களாகவும் இல்லை. இப்புதிய யாத்திரைக்காரனோ கொஞ்சநேரம் அங்கு விருந்தாளியாகவே போகிறான். ஆகையால், இந்த யாத்திரை யில் ஒவ்வொரு தங்குமிடத்துக்கும் அவசியமான சாமான்களைத் தயார்செய்து கொள்வதும் தவிர, வழியின் கஷ்ட நஷ்டங்களையும் அவசியம் தெரிந்திருக்கவேண்டும்.

Page 7
கல்வத்தின் இரகசியங்கள்
நம்முடைய இந்தப் பேச்சு துனியா - இம்மை உடைய வேலை யையே செய்துகொண்டும், இவ்வற்ப உலகவாழ்க்கையின் இன்பத்தி லேயே உயிரை மாய்த்துக்கொண்டும் இருக்ககூடியவர்களோடு இல்லை; அவர்கள் இந்தப் பேச்சுக்கு இலாயக்கற்றவர்கள் எனக் கருதுகிறோம்.
நாம் பேசுவதெல்லாம் இவ்வுலக வாழ்விலேயே ஹக்குத ஆலாவின் தீதாறை - காட்சிப் பேற்றை தேடக்கூடியவர்களோடேயாம். இவர்கள் அறிந்துகொள்ளவேண்டியது: இவர்களுடைய இந்த நாட்டம் தேடிய பொருளைச் சித்திக்கக்கூடிய காலத்திற்கு முன்பதாகவே கிடைக்க வேண்டுமெனத் தேடுவதாகும். ஆனால், தேட்டப்பொருள் கிடைப்பதை மறுமையில் தான் வைத்திருக்கிறது. - அவுலியாக்கள் இவ்விதமான தேட்டத்தை (எப்பொருளையும் அது சித்திக்கக்கூடிய காலத்திற்கு முன்னாடியே கிடைக்கவேண்டுமெனத் தேடுவதை ) வெறுப்பாக நோக்கு கிறார்கள். ஏனென்றால் இம்மாதிரியான எண்ணத்தினால் காலத்தை வீனில் போக்குவதைத் தவிர வேறொன்றுமில்லை.
துனியா அரசனின் ஒரு சிறைச்சாலையேயல்லாது, அரசனின் தரி சனையை ஆதரவு வைப்பதற்குரித்தான. அரச மாளிகையல்ல. எவனாகி லும் அதில் (அச்சிறைச்சாலையில்) அரசனைத் தரிசிக்கவேண்டுமென நாடுவானாகில் அது அவனது ஒழுங்கீனம், அவமரியாதைத்தன்மை என்றே கருதப்படும். ஒருக்கால் இவ்வீணான வேலையின் காரணத்தினால் அரச மாளிகையிலுங்கூட அரச தரிசனையை இழக்கும்பேறு கெட்ட வனாகவும் கூடும். எதுவரை இந்தச் சிறைச்சாலையைவிட்டும் பூரண விடுதலையாகவில்லையோ, மவுத்து தப இயை- இயற்கையான மரணத்தை கொண்டு மரணிக்கவில்லையோ அது வரை எப்படி அரச மாளிகையில் பிரவேசிக்க முடியும்! அரசமாளிகையினுள் போகா தவரையில் அரசனை எப்படித் தரிசிக்க முடியும்?
அரசமாளிகையிலும் தரிசனம் எல்லோர்களுக்கும் ஒன்று போல சரிசமமாகவும் இருக்காது. ஒவ்வொருவருக்கும் அவரவரின் பதவிக்குத் தக்கவாறே தரிசனம் கிடைக்கும். கருத்தாவது :- நீங்கள் இந்தத் துனியாவில் ரியாளத்து, முஜாஹதா - ஜப, தபம் செய்து தெண்டித்து அவனின் மஃரிபாவைப் பெற்று (அவனை. அறிந்து) கொள்வீர்களே யானால் அந்த மஃரிபாவுக்குத் தக்கவாறு அவனை மறுமையில் தரிசிப் பீர்கள். அதாவது, நீங்கள் இங்கே அவனை அறிந்திருந்த உங்களு டைய ஞான அறிவு அங்கே முஆயனாவாக் - காட்சியாக ஆகிவிடும். கியாமத்து நாளில் ஆன்மாவுடைய அழகும், வடிவும் அது உலகில் ஹக்காகிய இறைவனை அறிந்த அதன் அறிவுக்குத்தக்கவாறேயாகும். திரேகத்தின் இலட்சணம் அதன் கிரியைகளுக்குத் தக்கபடி தோன்றும்.

கல்வத்தின் இரகசியங்கள்
நீங்கள் எப்போது மவுத்துத் தப இயைக்கொண்டு இந்த ஆலமுத்த கல்லுபுவை - கஷ்ட உலகை விட்டும் விடுதலை யானீர்களோ அப்போது தான் நீங்கள் விதைத்த வேளாண்மையின் வருமானம் பெறக்கூடிய வேளையாகும், உங்கள் கிரியைகளின் பலாபலனை அப்போதுதான் கண்டு கொள்வீர்கள்.
அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் இந்தப் பாதையில் கால் எடுத் துவைக்க நாடினால் உங்கள் மனதில் அவனல்லாதவைகளுக்கு கொஞ்சங்கூட இடமில்லாதிருக்கும்போதுதான் சாத்தியமாகும். இதற் காக நீங்கள் முதன் முதலில் உஸ்லத்து - ஒதுங்கியிருப்பது, கல்வத்துதனித்திருப்பது ஆகிய இவைகளைத் தெரிந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
- (உஸ்லத்து இருவகைப்படும். (1) அன்னியர்கள், அதா வது- இறைவழி நடப்பதற்கு இடையூறு ஆனவர்கள், உடைய சகவாசத் தைவிட்டு ஒதுங்கியிருத்தல். இது முரீதீன்களுக்கு - அப்பியாசிகளுக்கு அவசியமாகும். (2) மனதில் அல்லாலாஹ் அல்லாதவற்றின் ஞாபகம் வருவதைவிட்டும் மனம் ஒதுங்கி இருத்தல். இது முஹக்கிகீன் - தேர்ச்சி யடைந்த பக்குவிகளுக்குடையதாகும். உஸ்லத்திற்கு ஊன் - தீனைக் குறைப்பதுவும், தூக்கம், மறதியை குறைப்பதுவும், பேச்சு வார்த்தை களைக் குறைப்பதுவும் திக்றை - இறைதியானத்தை நேமமாக்கி வரு வதுவும் அவசியமாகும்.)
எந்த அளவுக்கு சிருஷ்டிகளைவிட்டும் தூரப்பட்டிருக்கின்றீர்களோ அந்த அளவுக்கு சிருஷ்டி கர்த்தாவோடு சமீப மாவீர்கள். கல்வத்திற்கு முன்பு உளு, குளிப்பு, தொழுகை, நோன்பு, மற்றும் பறுளான கடமை களையும், இன்னும் அத்தியாவசியமான விதிவிலக்குகளின் சட்டதிட்டங் களையும் நீங்கள் அவசியம் அறிந்திருக்கவேண்டும். இதுதான் அல் லாஹ்வின் பாதையில் நடப்பதற்கு முதல் வாசலாகும். பிற்பாடுதான் அமல் செய்யவேண்டும். அதற்குப்பின் வறஉ - பேணிக்கை ஆகும். (அதாவது ஹறாமைவிட்டும், சந்தேகாஸ்ப்பதமான முஷ்தபஹாத்து களை விட்டும் பேணிக் கொள்கிறது.) அப்பால், ஸுஹ்து - வெறுத் திருத்தல் (அதாவது ஹலாலான வஸ்துக்களிலும் தே வை யா ன அளவே அனு ப வி த் த ல். தேவைக்கு மேற்பட்டதை விட்டுவிடு தல்) அப்பால் தவக்குல் (அதாவது அல்லாஹு தஆலாவின் பேரில் நம்பிக்கையோடு இருப்பது. அவசியமான சமயத்தில் ஸபபுகள் - கார
ணங்கள் இல்லாத போதும் மனம் பதட்ட மற்றிருப்பதுமாகும்).
தவக்குல் உடைய முதலாம் படித்தரத்தில் கால் வைத்ததும் உங்களுக்கு நான்கு கறாமாத்துகள் அபூர்வ காரியங்கள் உண்டாகும்.

Page 8
கல்வத்தின் இரகசியங்கள்
அல்லாஹ் உங்களுக்கு நான்கு சன்மானங்களைக் கொடுப்பான். (1) தண் ணீர் மீது நடத்தல். (2) ஆகாயத்தில் பறக்குதல் (3) பூமியைச்சுருக்கித் தரப்படல். (4) மறைவான புறத்தால் இரணம் கிடைத்தல். எப்பொ ழுது இவ்விஷயங்கள் உண்டாயினவோ அப்பொழுது தவக்குல் உடைய முதலாம் படித்தரத்தை கடந்து விட்டோம் என்று அறிந்து கொள் ளுங்கள். அதன் பின்பு ஒன்றன்பின் ஒன்றாய் அஹ்வால் - நிலைகளிலும், மகாமத்து - அந்தஸ்துகளிலும் ஏற்றம் ஆகிக்கொண்டே போகும்.
கல்வத்தில் அமருவதற்கு முன்னால் உங்கள் குவ்வத்து வஹ்மி - சந்தேக புத்தியின் நிலைமையை முதலாவதாகத் தெரிந்துகொள்வது அவசியம். நீங்கள் சந்தேகப்புத்தியுடையவர்களாய் இருப்பீர்களேயானால் காமி லான செய்கு - குருநாதர் இல்லாமல் கல்வத்தில் இருப்பது ஒருபோதும் சரியில்லை. காமிலான செய்கு இல்லாமல் கல்வத்தில் இருப்பீர்களே யானால் பெரும் நஷ்டமடைவீர்கள். ஏனென்றால், சிலசமயங்களில் கல்வத்தில் பயங்கரமான உருவங்கள் தோன்றி பற்பல விதமாகப் பயம் காட்டும். உங்கள் ஷெய்கு உங்களோடிருந்தால், அவைகள் உங்களைப் பயமுறுத்தவிடாமல் காப்பாற்றிக் கொள்வார். நீங்கள். சந்தேகப்புத்தியுடைய மனிதராக இல்லையானால் இருட்டிலும், வெளிச் சத்திலும், எங்கும் பயமின்றிப்போகவும், மையித்துகளோடு கப்ருஸ் தானில் பயமின்றிப் படுத்துத் தூங்கவும் தயாராக இருப்பீர்களே யானால் அப்பொழுது கல்வத்தில் இருக்கலாம். முழுக் கவனத்தையும் அல்லாஹுதஆலாவின் பக்கம் திருப்பி, உங்களை அவன்பக்கம் இழுக் கும்படியும், இருளான திரைகளையும், ஜோதியான திரைகளையும் அகற்றும்படியும் அவனிடம் துஆக்கேளுங்கள்.
கல்வத்துக்கு முற்பட கொஞ்சம் ரியாளத்து - தவ அப்பியாசம் செய்வதும் அவசியம். இந்த ரியாளத்திற்கு 'குணங்களைச் சீர்படுத்தல்' என்று சொல்வார்கள். இந்தச் சீர்படுத்தும் ரியாளத்தை மேற்கொண்டு துற்குணங்களை அகற்றி நற்குணங்களைப் பெற்றுக் கொள்ளாமல் இருந் தால் கல்வத்தினால் பிரயோசனம் பெறுவது கடினமாகும்.
பெயர் பிரபல்யமாவதையும் உங்கள்பேரில் ஜனங்களுக்குப் பற்று ஏற்படுவதையும் ஆதரவு வைத்து கல்வத்திலிருப்பது வீண்வேலை. ஏனெனில், கல்வத்தைக் கொண்டு ஜனங்களுடன் சகவாசம் வைக்காம லும், அவர்களுடைய உருவங்களைப் பார்க்காமலும் இருப்பது கருத் தல்ல. எங்கிலும், ஜனங்களுடைய சிந்தனை மனதில் வராமலும், வீணானதும், பயனற்றதும் துனியாவினுடைய காரியங்களைப் பற்றிய துமான வார்த்தைகள் காதில் விழாமல் இருப்பதுவுமேயாகும். உண் மையாகக் கேட்பீர்களேயானால், உங்களை விட்டும் கூட நீங்கள்

கல்வத்தின் இரகசியங்கள்
எப்போது தனித்திருப்பீர்களோ, அப்போது தான் கல்வத்தாகும். இதுதான் உண்மையான கல்வத்து. மற்றவைகளெல்லாம் தவறான கல் வத்துகளாகும். நீங்கள் கல்வத்தினுடைய இந்த நிபந்தனைகளையெல் லாம் சரிவர நிறைவேற்றவில்லையேயானால் அதாவது:- பற்பல எண் ணங்கள், நாட்டங்களைவிட்டும், ஜனங்களுடைய சந்திப்பைவிட்டும் உங்கள் வாசலை அடைக்காதிருப்பீர்களேயானால் நீங்கள் மோசம் போய் விட்டீர்கள்; ஹலாக்காவிட்டீர்கள் என்று அறிந்துகொள்ளுங்கள்.
ஆகவே, துணிவோடும், வைராக்கியத்தோடும் எல்லா ஜனங்களை யும் விட்டும் உங்கள் தன்னையுங் கூடவிட்டும் ஒரே மூச்சாக நீங்கி விடுங்கள். அல்லாஹுதஆலாவினுடைய நாமங்களில் நின்றும் விரும் பியதைக்கொண்டு திக்ரில் பராக்காகுங்கள். என்னிடத்தில் எல்லாத்திக்கு களிலும் விஷேஷமானதும். மேலானதும், உயர்வானதுமாகிறது 'அல் லாஹ' என்ற இஸ்முல் அஃளம் ஆக இருக்கும். இதை மனத்தாலும், வாயாலும் சொல்லிக்கொண்டே இருங்கள் இதற்குமேல் ஒரு அட்சரத் தைக்கூட அதிகப்படுத்தாதீர்கள். மனதில் எந்த எண்ணமும் வர விடாதீர்கள். கெட்ட எண்ணங்களினால் உங்கள் திக்கில் வித்தியாசம் ஏற்படாமலும், கல்பு ஹளூர்-மனம் லயித்தல் ஆவது கெடாமலும் இருக்கவேண்டும். (கல்புஹ்ளூர் ஆவதுதான் மிக முக்கியம். மற்றவை யாவும் அதற்கு உதவியேயாகும்.)
எண்ணெய், நெய் பசண்டையுள்ள பதார்த்தங்களைச் சாப்பிடுங் கள். ஆனால், அவை மிருகங்களுடையனவாயிருத்தலாகாது. (அதாவது - வெண்ணெய், பால், தயிர், கொழும்பு வகைகள் கூடாதென்பதாம், எனினும் பாதம் அல்லது வேறு தாவர வஸ்துக்களின் எண்ணெய் களினால் ஆனவையாக இருக்கவேண்டும்) சோம்பல், சடைவு, தூக்கம் வரக்கூடிய அளவுக்கு வயிறு நிரம்பவும் புசிக்கக் கூடாது; பசியினால் நிம்மதியற்ற நிலையுண்டாகும் அளவுக்கு ஒரேயடியாகக் குறைத்தும் உணவு அருந்தவும் கூடாது. எப்போதும் நடுநிலைமையாகவே அமைத் துக்கொள்வது அவசியமாகும்.
எண்ணைப் பசன்டையான உணவை அருந்தவில்லையானால், உஷ்ண மும், வரட்சியும் அதிகரித்து கெட்டசிந்தனைகள் ஏற்பட்டு புத்தியிழந்து உளறக்கூடிய நிலைமை உண்டாகிவிடும். இது மிகவும் இகழப்பட்டது. மெய்ஞ்ஞான வழிக்குத் தங்கடமானதாகவும் இருக்கக் கூடியதாகும். ஆனால், அவ்வாறின்றி, வாரிது இலாஹி - அல்லாஹ்வின் அருளுடன் கூடிய மெய்ஞ்ஞான வாரித் தொடர்பு மூலம் சுபாவத்தில் மாற்றம் காணப்படுமானால் அது மிகவும் ஏற்ற மானதாகும்.

Page 9
கல்வத்தின் இரகசியங்கள்
நீங்கள் வாரிதாத்துகளின் விபரங்களையும் அவசியம் அறிந்திருக்க வேண்டும். ஏனெனில், வாரிதாத்து ஷெய்த் தானியையும் வாரிதாத்து றஹ்மானி என்று கருதி மோசம் போய்விடக்கூடாது. (றஸுலுல்லாஹி (ஸல்) அவர்களுக்கு முதலாவதாக வஹீ வந்தபோது கடுமையான குளிராக இருந்தது. போல்) வாரிதாத்து றஹ்மானிக்கு திரேகத்தில் குளிர்ச்சியும், மனதில் பேரானந்தமும் ஏற்படும். எவ்விதமான துக்கமும் வராது. உருவமோ. முகவடிவமோ பேதலிக்காது. இன்னும், அது வந்துபோகும்போது அறிவை ''ஈந்து விட்டுச் செல்லும். இதற்கு, மாற்றமாக வாரிது ஷைத்தானி வரும்போது உடம்பிலும், உறுப்பிலும், நடுக்கமும் எரிவும் ஒருவகையான கஷ்டமும் உண்டாகும். உருவமும் பேதலிக்கும். புலன்களில் மந்தமும் ஏற்படும். ஆகையால் நீங்கள் இத்தகைய ஷைத்தானியத் தான வாரி தாத்துகளைவிட்டும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.
இம்மாதிரியான வாரிது வந்ததானால் அதன் பக்கம் முகம் நோக்கி கவனத்தை செலுத்தலாகாது. மனமொருமித்து உங்கள் திக்ரிலேயே பராக்காகி இருக்கவேண்டும்.(அதாவதுவாரிதாத்தைப்பற்றிய நினைப்புச் சிந்தனையும் கூட மனதில் வராத அளவுக்கு முழுமூச்சாக திக்ரில் மூழ்கி விடுங்கள்.) ஏனென்றால், அந்த வாரிதாத்து உங்கள்பேரில் அடர்ந்தே றாது மேலாலேயே போவதற்காக.
(''என்னுடைய அடியான் என்னை திக்கிர்செய்யும் போது நான் அவனுடனேயே இருக்கிறேன்'' என்று ஹதீது குத்ஸியில் வந்திருக்கி றது. எவனோடு அல்லாஹ் இருக்கிறானோ அவனிடம் ஷைத்தான் வருவதற்குச் சக்தி பெறமாட்டான். இன்னும் உங்களுடைய மனதில் ஏதாவது மார்க்க விரோதமான செயல்பற்றிய ஊசாட்டம் வருமே யானால், அது வாரிதாத்து ஷைத்தானியென்றும், மார்க்கத்தில் ஆகு மாக்கப்பட்ட கருத்தைப்பற்றிய ஊசாட்டம் வந்தால் அது வாரிதாத்து நப்ஸானி என்றும் உணருங்கள். ஷைத்தானிய்யத் தான வாரிதாத்து பிரகாரம் அமல் செய்யவேகூடாது. நப்ஸானியத்தின் பிரகாரம் அவ சியம் ஏற்பட்டால் மாத்திரம் செய்யுங்கள்.)
வாரிதாத்துகள் வந்தால் அது என்னவென்று கவனிக்கக்கூடாது. (ஏனென்றால், அவ்வாறு அதில் கவனிப்பதானது, அதன்பக்கம் முகம் நோக்குவதாகும். உங்களுக்கு உங்கள் மனம் ஹக்குதஆலாவின் பக்கம் கவனம் செலுத்துவதை தவிர்த்து வேறொன்றின் பக்கமும் கவனம் செலுத்தாதிருப்பது அவசியம்.)

கல்வத்தின் இரகசியங்கள்
ஆகையால் நீங்கள் இரு விஷயங்களின் பேரில் உறுதியாக முடிவு செய்து கொள்ள வேண்டும்.
(1) ஏதாவது வாரித் உங்களிடம் வந்து ''நான் ஆண்டவன்'' என்று சொல்லுமேயானால் அதற்கு மறுமொழியாக, 'ஸுபுஹானல் லாஹ் அல்லாஹ் தூயவன், ஆமந்து மில்லாஹ் - நான் அல்லாஹ்வைக் கொண்டு விசுவாசம் கொண்டுள்ளேன் என்று சொல்லுங்கள்.
(அல்லாஹு தஆலாவின் ஹூவியத்து எல்லாமவ் ஜூதாத்து - சிருஷ்டிகளிலும் ஊடுருவி வியாபித்திருக்கிறது. அவன் எல்லாச் சிருஷ்டி களிலும் ஒரேவிதமாகக் காட்சியளிக்கின்றான். இதைக்கொண்டு அந்த சிருஷ்டியிலிருந்து, நபி மூஸா (அலை) அவர்களுக்கு தூர்லீனா மலையில் மரத்திலிருந்து ''நான் அல்லாஹ்'' என்று சப்தம் கேட்டது போல், 'ஓசை நான் அல்லாஹ்'' என்று கேட்கப்படுகிறது. ' 'எல்லாக் கோலங் களும் அவனுடையதே. அவனே எல்லாக் கோலங்களிலும் தஜல்லி-தோற் றம் ஆகிறான். அவனும், அவனுடைய செயல்களுமேயன்றி வேறில்லை'' என்று நம்புகிறேன் - ஆமந்துபில்லாஹ் ஆனால், அவனைப்போல் ஒரு வஸ்துவுமில்லை. அவனுக்கு உருவமில்லை. எந்த உருவத்திலும் அவன் கட்டுப்பட்டவனுமில்லை. இம்மாதிரி, அம்மாதிரி என்ற கட்டுப்பாட் டிற்கும் அப்பாற்பட்டவன். - ஸுபுஹானல்லாஹ்!)
மேலும், இந்த தஜல்லியில் எந்தத் தோற்றத்தைப் பார்த்தீர்க ளோ அதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். (ஏனெனில், பிற் பாடு சீடர்களைப் பரிபக்குவப்படுத்தி நடத்தாட்டும் தக்மீல் உடைய மகாம் - நிலையில் இதைக்கொண்டு பயன் அடைவீர்கள்.) ஆனாலும், அதோடு பராக்காகிவிடாதீர்கள், அதன் பக்கம் முகம்நோக்கிவிடாதீர் கள். உங்களுடைய திக்ரைச் செய்துகொண்டே இருங்கள்!
(2) இந்த கல்வத்தில் அல்லாஹுதஆலாவிடம் அவனல்லாத எப் பொருளையும் தேடாதீர்கள். எந்தப் பொருளினுடைய ஞாபகத்தையும் மனதில் வைக்காதீர்கள். உங்களிடம் முழு உலகமும் தானாகவேவந்து உதவிசெய்தாலும் அதபுடன் - ஒழுக்கத்தைப் பேணி எடுங்கள். அதன் பக்கம் முகம் நோக்காதீர்கள். அங்கேயே நின்று விடாதீர்கள்,
அல்லாஹுத ஆலாவையே உங்கள் அசல் தேட்டமாக வைத்து முன்செல்லுங்கள். இங்கே உங்களுக்கு ஏதொன்றையும் கொடுக்கப்படு மேயானால் அதைக்கொண்டு உங்களை பரிசோதிக்கவே படுகிறது. நீங் கள் எந்த வஸ்துவுடனே யாகிலும் பராக்காகுவீர்களேயானால் அல்லாஹ் உங்களை விட்டும் தப்பிவிடுவான். அல்லாஹ் உங்களுக்குக் கிடைப்

Page 10
10
கல்வத்தின் இரகசியங்கள்
பானேயானால் உங்களைவிட்டும் ஒருவஸ்துவும் தப்பிப் போகாது. இவ் விடத்தில் உங்களுக்குக் கொடுக்கப்படுவதெல்லாம் உங்களைச் சோதிக்கப் படுவதற்கேதான் என்பதை நீங்கள் தெரிந்து கொண்டபின்னர் அதன் விபரத்தையும் சொல்கிறேன் கேளுங்கள்!
முதன்முதலாக உங்களுக்கு ஆலமுல் மஹ்ஸஸாத்து வெளிப் புலன்களால் கிரகிக்கக்கூடிய உலகம் உடைய திரை அகலும். அதாவது :- வீடு, வாசல், சுவர், மரம், மலை முதலானவை உங்களுக்குத் திரை யாக இருக்கமாட்டா. உங்கள் வீட்டில் இருந்து கொண்டே ஜனங்களை அவரவர்கள் வீடுகளில் என்னென்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்ப்பீர்கள். அவ்வமயம் உங்கள் கடமையாகிறது, நீங்கள் எவருடைய அந்தரங்கத்தையும் வெளிப்படுத்தாது இருப்பதாம். அப்படி வெளிப்படுத்துவீர்களாயின், உங்களை ஷைத்தான் மிகைத்து உங்கள் பேரில் அவன் கைஓங்கி இருக்கிறது என்று உணர்ந்து கொள்ளுங்கள். ஆகவே, அல்லாஹு தஆலாவிடம் நீங்கள் 'தவுபா' ச்செய்து அவனது ஸத்தார் - இரகசியத்தை மறைப்பவன் என்ற ஸிபத்தை - வர்ணிப் பைக் கொண்டு குணமெடுத்துக் கொள்ளுங்கள். இரகசியத்தை வெளிப் படுத்தாதீர்கள். ஆனால், யாருக்காவது உபதேசம் புரியவேண்டுமென் றால் மறைமுகமாகவும், தனிமையாகவும் அவனுடைய இரகசியத்தை நீங்கள் கஸ்பு - ஞான வெளிப்பாடு மூலம் தெரிந்திருப்பதாக. அவனுக்குச் சொல்லாமல் மற்றப்படி உபதேசம் செய்யுங்கள்
இந்தக் கஷ்பு இருவிதப்படும். (1) ஹிஸ்ஸி - புலனைச்சார்ந்தது. (2) கியாலி - கற்பனையைச் சார்ந்தது. இவை யிரண்டுக்கும் வித்தியா சம் தெரிய வழியாவது:- கஷ்பு வரும்போது கண்களை மூடுங்கள். கண் களை மூடியபின் இந்தக் கஷ்பு இல்லையாயின் அது ஸிஸ்ஸியாகும். (அதாவது வெளிப்புலன்களால் கிரகிக்கக்கூடிய உலகின் திரை நீங்கிய தாகும். கஷ்பு கியாலியாகிறது. கியாலியான கண்களினால் உண்டா கிறது. இந்த வெளிரங்கக் கண்களினால் தென்படக் கூடியவை தென் படாது. கண்களை மூடினாலும் அந்தக்காட்சி தடைப்படாது) கண்களை மூடியபின்பும் இருக்குமேயாயின் அது கியாலியாகும். நீங்கள் கஷ்பு ஹிஸ்ஸியின் பக்கம் திரும்பிப்பாராது உங்கள் திக்ரிலேயே பராக்காகி இருப்பீர்களேயானால், சீக்கிரம் கஷ்பு கியாலி உண்டாகும். அந்தக் கஷ்பில் உங்கள் பேரில் அக்கிலிய்யத்தான மஆனி - யுக்தி பிரமாணக் கருத்துக்கள் எல்லாம் இறங்கும். இந்த இடம் மிகவும் கடினமாக இருக் கும் நபிமார்கள், குறிப்பிட்ட அவுலியாக்களைத்தவிர வேறுயாரும் இதன் இரகசியங்களை அறியமாட்டார்கள்.

கல்வத்தின் இரகசியங்கள்
11
(முதன்முதலாக ஸாலிக்கின்பேரில் புலன்களால் கிரகிக்கக்கூடிய ஆலமுல் மஹ்ஸஸாத்து என்ற உலகத்தின் திரை நீங்கும். அப்பால், கியால் உடைய உலகமாகிய ஆலமுல் மிதாலின் திரை நீங்கும்.. பின் னால், அற்வாஹ் உடைய ஆலம் வெளியாகும். பின்னால், ஹக்குத ஆலா வின் ஸிபாத்துடைய ஆலம் வெளியாகும்)
ஆகையால், நீங்கள் கஷ்புகியாலியின் பக்கமும் கவனத்தைச் செலுத்தாது திக்குரு செய்வதிலேயே கருத்தாயிருங்கள். உங்களுக்கு இந் தக் கட்டத்தில் தண்ணீர், தேன் அல்லது கள் கொடுக்கப்பட்டால் கள்ளை ஒருபோதும் குடிக்காதீர்கள். ஆனால் அது மழைத்தண்ணீரோடு சேர்ந்திருப்பது தெரியவந்தாலே ஒழிய (ஏனென்றால் கள்ளைக்கொண்டு இல்முல் அஹ்வால் - நிலைமைகளைப்பற்றிய ஞானம் என்று கருத்தாகும் அது மழைத்தண்ணீரோடு சேர்க்கப்பட்டதாக இருந்தால் இல்முல் வஹ்பி - கடாட்ச ஞானம் என்று கருத்தாகும்) அது, ஊற்றுத்தண்ணீ ரோடு சேர்க்கப்பட்டதாக இருந்தால் ஒருபோதுங் குடிக்காதீர்கள். (ஏனெனில், அது இல்முத்தபf-இயற்கையைபற்றிய ஞானம் என்பதா கும். அது மிகுந்த ஜனங்களை வழிகேட்டிலாக்கிவிட்டது) குளத்துத் தண்ணீரோடு சேர்க்கப்பட்டதாக இரு ந் தா லு ம் குடிக்காதீர்கள். (ஏனெனில், அது இல்முல் பிக்குரு - சிந்தனையைக் கொண்ட அறிவு என்பதாகும்.) ஆனால், சுத்தமான தண்ணீராக இருந்தால் அவசியம் குடியுங்கள். (ஏனெனில், அது இல்முல் முத்லக்கு - பொதுப்படை அறிவு என்பதாகும்).
சுத்தமான பாலாக இருந்தால் அது மிகவும் நல்லது. ஏனெனில் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃறாஜுடைய இரவில் பாலைக் குடித்தார் கள். பால் (கொண்டும்) இல்முல் முத்லக்கு என்று கருத்தாகும். அதற்குப்பின்னாலும், நீங்கள் உங்கள் திக்ரிலேயே பராக்காகிக்கொண் டிருங்கள். கஷ்பு கியாலியாகிய ஆலமுல் மிதாலின் கஷ்பும் போய் ஆலமுல் அற்வாஹ் உடைய கஷ்பும் உண்டாகி ஆலமுல் அக்லியில் போய்ச் சேருவீர்கள். பின்னர் உங்களுடைய சரீரக்குறிப்புகளை விட் டும் நீங்கியதுபோல் உங்கள் நூஹின் குறிப்பை (தன்னுடைய நூஹ் என்ற குறிப்பை) விட்டும் கூட நீங்கிவிடுங்கள். இங்கு உங்களுக்கு தஜல்லியே ஸிபாத்து - ஹக்கு தஆலாவின் ஸி பா த் தி ன் தோற்றம் முஷாஹதா - காட்சி நிலையில் அல்லது தூக்கத்தில் உண்டாகும். (தூக் கத்திலும் முஷாஹதாவிலும் புலனறிவு போய்விடும். நா னெ ன் ற உணர்வும் இருப்பதில்லை. இதனாலேயே தூங்குகிறவனும் தன் கன வில் கண்காட்சியாகப் பார்ப்பதாகவே உணருகிறான்).
இவையிரண்டிற்கும் வித்தியாசமாவது :- மு ஷா ஹ தா வு க் கு ப் பின்பு ஆனந்தம் உண்டாகும். தூக்கத்திற்குப்பின்பு கவலையைத் தவிர

Page 11
12
கல்வத்தின் இரகசியங்கள்
வேறொன்றும் இராது. (ஏனென்றால், தூக்கத்தில் செ ல் ல க் கூ டி ய நேரங்களெல்லாம் மறதியிலே வீணாகப் போகிறது. இதனாலேயே கவ லைப்படுவதும், பிழை பொறுக்கத் தேடுவதும் அவசியம்).
இவ்விடத்தில், நீங்கள் ஹக்குதஆலாவின் சமுகத்தில் ஹாஜராவ தற்குத் தகுதியானவர் தானா அல்லவா என்பதற்காக மேலும் உங்களைச் சோ திக்கப்படும். அதெப்படியென்றால், முதலாவது - உங்களுக்கு ஆல் முல் மஃதனியாத் - உலோகப் பொருட்களின் உலகு உடைய திரை நீங்கும். கற்கரடுகளின் இரகசிய தத்துவ அமைப்பு உங்களுக்குத் தெரியவரும். நீங்கள் அதிலேயே பராக்காகிவிடக்கூடாது. அவ்வாறு பராக்காகுவீர்களேயானால் அல்லாஹ்வின் வாசலை விட்டும் துரத்தப் படுவீர்கள். அத்தோடு, சில காலத்தில் இந்தக் கஷ்பையும் உங்களை விட்டும் உரியப்படும். பின்னர், நீங்கள் ஒரு வேலைக்கும் லாயக்காக மாட்டீர்கள்.
இந்தக் கஷ்பில் கவனத்தைச் செலுத்தாமல் உங்கள் திக்ரையே மென்மேலும் அதிகப்படுத்திக்கொண்டே போவீர்களானால் ஆலமுந் நபாத்தாத்து - தாவரப் பொருள்களின் உலகம் உடைய கஷ்பு உண் டாகத் தொடங்கும். ஓவ்வொரு மரம், செடி, புற்பூண்டுகள் உடைய அந்தரங்க - அகமியமும், அவற்றின் நன்மை தீமைகளும் உங்களுக்குத் தெரியவரும். ஆனால், முந்திய கஷ்புகளோடு நடந்தது போல் இத னுடனும் நடக்கவேண்டும். அதாவது, இதன் பக்கம் திரும்பாது. திக்ரிலேயே பராக்காகி முன்செல்லவேண்டும்.
இந்தக் கஷ்பு வெளியாகும் வேளையில் நீங்கள் குழுமையும், உஷ் ணமும் அல்லாத நடுத்தரமான உணவு அருந்துவது அவசியம். முந் திய கஷ்பின் காலத்தில் உஷ்ணமான உணவை அருந்தவேண்டும். (ஏனென்றால், ஆலமுல் ஜமாதாத்து - நிரசவஸ்துகளின் உலகம் வெளி யாகும்போது மனிதனுடைய மிஸாஜில் - நாடியில் குளுமையும், வரட் சியும் உண்டாகும். ஆகவே, உ ஷ் ண மா ன உணவை உட்கொள்ள வேண்டும்).
இதையும் விட்டு நீங்கள் முன்னால் செல்வீர்களேயானால் ஆலமுல் ஹயவானாத்து - ஜீவவர்க்க உலகம் வெளியாகும். ஒவ்வொரு உயிரி னங்களும் நாகரீகமான பாஷைகளில் உங்களுக்கு ஸலாம் சொல்லும். இன்னும், அவைகளின் நிலைகளையும், தத்துவங்களையும் நீங்கள் அறி வீர்கள். இந்த மூன்று உலகங்களின் கஷ்பு தோற்றங்களிலும் நீங்கள் ஒவ்வொரு வஸ்துவினுடைய தஸ்பீஹ், தஹ்மீது - அல்லாஹ்வைத் துதித் தல், புகழுதல் ஆகியவற்றைக் கேட்பீர்கள். இவ்விடயத்தில் ஒரு விஷ யத்தை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

கல்வத்தின் இரகசியங்கள்
13
அதாவது ஒவ்வொரு வஸ்துவின் தஸ்பீஹையும் உங்கள் பாஷை யில் கேட்பீர்களேயானால் அது கஷ்பு கியாலியாகும். அவைகளின் விகர்ப்பமான பல்வேறு பாஷைகளில் கேட்பீர்களேயானால் அதுதான் சரியானதும், எதார்த்தமானதுமான கஷ்பாகும் என்று உணருங்கள். இந்த மஃறாஜூக்கு - ஏற்றத்திற்கு தஹ்லீல் - கட்டவிழ்கிறது. என்று சொல்லப்படும். அதாவது இந்த ஏற்றத்தில் ஸ்தூல நிலை கட்டவிழ் கிறது. அதுவும் வரிசைக்கிரமமாக நீங்குகிறது. இந்த மூன்று ஆலங் களின் வெளிப்பாட்டிலும் உங்களுக்கு கப்ளூ - கிட்டுமை ஏற்படுகிறது, ஏனெனில், நீங்கள் இங்கே உங்கள் தாத்துக்குள்ளே அழிகிறீர்கள். இது கிட்டுமையை உண்டாக்கக் கூடியதாகும். (ஸாலிகு - இறைவளி நடப் பவன் ஆண்டவன் பக்கம் முகநோக்கிச் செல்லும்போது ஸ்தூல உல கங்களை விட்டும் அலாதியாகின்றான். இதற்கு தஜற்றுது - நீங்குகிறது என்றும் தஹ்லீல் - கட்டவிழ்கிறது என்றும் சொல்வார்கள். இதுவும் வரிசைக்கிரமமாக உண்டாகிறது. முதலாவது மண்னெனும் பூதத்தை விட்டும், அப்பால் தண்ணீர், அதற்கப்பால் காற்று. அதற்கப்பால் நெருப்பைவிட்டும் நீங்குகிறான். இதற்குப் பின்னால் முதல் வானத் திற்குப் போவான் முதல் வானத்திற்குப் போனதும் அங்கு ஆதம் நபி (அலை) அவர்கள் அவனுக்கு அஸ்மாக்களுடைய இல்மின்பைளை - அருளை கொடுக்கிறார்கள். அங்கே தனது இயல்புக்கு தக்கவாறு அந்த பை ளி லி ரு ந் து ஏற்றுக்கொள்சிறான். அல்லாஹுதஆலாவின் கிலா பத்து - பிரதிநிதித்துவ பதவியைப்பற்றியும் அதைக்கொண்டு ஆதம் (அலை) அவர்களுக்கு ஏன் சொந்தமாக்கப்பட்டது என்பதையும் அறி வான். திரேகங்களின் உற்பத்தி வளர்ச்சியின் அந்தரங்கமும் வெளியா கும். இந்த வானத்தில் இன்னும் அனேக சங்கதிகளையும் அறிவான்).
பின்னர் உங்களுக்கு ஸரயானு ஆலமுல்ஹயாத்து - எங்கும் பரந்து வியாபித்திருக்கும் ஜீவ உலகம் வெளியாகும். மேலும் ஒவ்வொரு வஸ்துவும் உயிரோடு இருப்பதற்கான காரணங்களும். ஒவ் வொரு வஸ்துவுக்கும் அதனதன் இயல்புக்குத் தக்கவாறு ஜீவ உலகிலிருந்து எந்தெந்தக் குணபாட்டைக் கொடுக்கப்படுகிறதோ அதுவும் தெரிய வரும். இன்னும் ஜீவன் வணக்கங்களிலும் கூட ஊடுருவிப் பாய்ந் திருப்பதுவும். அதாவது - இபாதத்துகளிலும்கூட ஜீவன் இருப்பதுவும் புலனாகும். (ஸாலிகு இரண்டாவது வானத்தில் யெஹ்யா நபி (அலை), ஈசா நபி (அலை) அவர்களது சந்திப்பைப் பெறுவான். இன் னு ம், ஹயாத்து - சீவன் உடைய இரகசியமும் தெரியவரும். மேலும், ஆன் மாவும் சீவனும் ஒன்றோடொன்று சேர்ந்திருப்பதையும் அறி வா ன். இதே போல் ஹளரது யெஹ்யா (அலை) அ வர் க ளு ம், ஹளரது ஈஸா (அலை) அவர்களும் ஒருவரைவிட்டொருவர் பிரியாமலிருப்பதை யும் அறிவான். இந்த கஷ்பில் இல்முஸீமியா - மறைவான விஷயத்தை

Page 12
14
கல்வத்தின் இரகசியங்கள்
வெளியாக்குகிறது. இல்முரீமிய்யா - கூடுவிட்டுக் கூடுபாய்கிறது. இல் முஹீமியா - மற்றவர் கண்ணுக்குத் தெரியாது மறைந்துகொள்வது. இல்முகீமியா - இரசவாதம் ஆகியன வெளியாகும். மேலும் அநேக காரியங்களைச் செய்யவும், உண்டாக்கவும் சக்தியேற்படும்.) இங்கும் நீங்கள் தரிபடவில்லையானால், 'லவாயிஹு லெள ஹிய்யா' - லெள ஹூல் மஹ்பூளிலிருந்து தோற்றங்கள் உங்கள் முன் வரும். உ ங் க ளோ டு பயங்கரமான வார்த்தைகளைக் கொண்டு உரையாடப்படும்.
மேலும், உங்கள் பேரில் விதவிதமான ஹாலாத்து - நிலைமைகள் வெளியாகும். (மண், தண்ணீர், எவ்விதம் காற்று நெருப்பாகவும், காற்று; நெருப்பு எவ்விதம் மண் தண்ணீராகவும் ஆகிறது என்பது போல்) திண்ணமான பொருள் எப்படி மிருதுவாகவும், மிருதுவானது எப்படி திண்ணமாகவும் ஆகிறது என்ற இரகசியமும் மற்றும் அநேக விஷயங்களும் வெளியாகும். நீங்கள் இங்கும் தரிபடாது முன் செல் வீர்களானால் ஒரு நூதன, ஆச்சரிய, பயங்கரப் பிரகாசம் வெளிப் படும். நீங்கள் பயத்தினால் அதைவிட்டு ஒளிந்து கொள்ள நாடுவீர்கள். அதைப்பற்றிய பயம் வேண்டாம், அந்தப் பிரகாசம் உங்களிலிருந்தே வெளியாகி இருக்கிறது. அதைக் கொஞ்சமும் இலட்சியம் செய்யா தீர்கள். உங்கள் வேலையை அதாவது - உங்கள் திக்ரிலேயே பராக் காகி - செய்து கொண்டே இருங்கள். உங்களுக்கு எவ்விதக் கஷ்டமும் வராது.
இதன் பின்பு தெளஹீதுடைய அன்வார் - அத்துவித ஜோதிப் பிரகாசங்கள். உங்களுக்கு வெளியாகும். இதற்கு 'அன் வா று த் தவாலிஉ' என்று சொல்வார்கள். இங்கும் நீங்கள் தரிபடாமல் முன் னேறுவீர்களாயின், தர்தீபு குல்லியின் தோற்றம் வெளியாகும். (அதா வது - ஹக்கு, ஹக்ருடைய ஸுரத்தில் வெளியாவதாகும். ஏனெனில் மவுஜூதி ஐனி - காணப்பட்ட பொருள்களோ ஹக்கும் கல்கும் சேர்ந் தது வண்றோ இதனாலேயே இந்த கஷ்பு, ' 'கஷ்பு அவ்வாறு தவாலிஉ ' ' உண்டான பிற்பாடு உண்டாகிறது) மேலும், சிறப்பும், வலுப்பமும் உடைய அல்லாஹுதஆலாவின் சமுகத்தில் புகுதுவதுடையவும், அவன் சமுகத்தில் தரிபடுவதுடையவும் ஆதாபு - ஒழுக்கங்கள் தெரியவரும். பின்னர் அங்கிருந்து சிருஷ்டிகளின் பக்கம் வரக்கூடிய வழியையும் தெரிவிக்கப்படும். இன்னும், வெளியரங்கமான, உள்ளரங்கமான பற் பல விதற்பமான விதங்களிலெல்லாம் அவனைச் சதாவும் முஷாஹதா - தரிசனை செய்வதையுல் அறிவீர்கள். மேலும். வேறெவருமே உணர்ந்து கொள்ளா பூரணத்துவத்தையும் அறிவீர்கள். (எந்த மர்தபாவிலானா லும் சரியே அதில் பூரணத்துவத்தில் குறைபாடு ஏற்படாது) ஏனென் றால், வெளிரங்கத்தின் விதங்களில் ஏதும் குறைவு ஏ ற் ப ட் டா ல்

கல்வத்தின் இரகசியங்கள்
15
அந்தரங்கத்தின் விதங்களிலிருந்து அதைப் பூர்த்தி செய்யப்பட்டுவிடும். மேலும் (தாத்தை ஒன்றைக் கவனித்து உள்ளானது என்றும் மற் றொன்றைக் கவனித்து வெளியானது என்றும் வர்ணிக்கப்பட்டிருந்த போ திலும் அந்த) தாத்தில் எவ்விதமான குறைபாடுமில்லை.(எது வெளிரங்கத்தில் அவருக்கு தப்பிப்போகிறதோ அது அவருக்கு அந் தரங்கத்தில் தப்பிப்போவதில்லை. எது அந்தரங்கத்தில் தப்பிப்போகி றதோ அது வெளிரங்கத்தில் இருக்கிறது. கருத்தாவது:- தாத்து எப்போதும் சம்பூரணமாகவே இருக்கிறது, அதில் எவ்விதக் குறை பாடுமில்லை. சந்திரனைப் பாருங்கள்! அது எப்போதும் பூரணச் சந் திரனாகவும் இருக்கிறது : மறைந்ததாகவும் இருக்கிறது. முதல் நாள் பிறையாகவும், இரண்டாம் நாள் பிறையாகவும் இருக்கிறது. அதா வது - இந்த எல்லா நிலைகளும் சந்திரனில் இருப்பதோடு அது எப்படி இருந்ததோ அப்படியேதான் இருக்கிறது. அ த னு டை ய நிலையில் "மாறுதலோ, பேதமோ இல்லை. இந்தப் பேதங்களெல்லாம் அதை நம்மளவில் சேர்த்துப் பார்ப்பது கொண்டேதான் இருக்கிறது. இன்று அது ஒரிடத்தில் பதினான்காம் நாள் முழுப்பிறையாகவும், இன்னோரி டத்தில் இருபத்தெட்டு அமாவாசையாகவும், மற்றோரிடத்தில் முதல் நாள் இளம் பிறையாகவும் இருக்கிறது. இதேபோல் ஹக்குதஆலா வும் பாத்தின் - அந்தரங்கம் ஆக இருப்பதையும் ளாஹிர் - வெளிரங் கம் ஆக இருப்பதையும் கவனிக்கவும். அவனில் எவ்விதமான குறை களுமில்லை).
பின்னர் உங்களுக்கு உலூமுஇலாஹிய்யா - தெய்வீக ஞானம் அரு ளப்படும். (இது கிடைக்கும்போது ஸாலிக்குடைய கவனம் இல்மின் பக்கமும், ஹக்கின் பக்கமும் இருப்பதற்காக அந்த இல்முகளை ஹக் குத ஆலாவின் மள்ஹர் - தோற்றம் என்பதாக உணரவேண்டும்).
இந்த ஞானத்தைக் கொடுக்கப்படக்கூடியவர்களில் இதற்கு அவ ரில் தகுதி உண்டாகிற விதத்தையும் அறிவீர்கள். கப்ளு, பஸ்து - கிட் டுமை, விசாலம் உடைய ஒழுங்குகளையும் அறிவிக்கப்படும். (கப்ளில் அல்லாஹ்வின் ஜமாலிய்யத்தான ஸிபத்தின் பக்கமும், பஸ்தில் ஜலா லிய்யத்தின் பக்கமும் அல்லது மாற்றமாகவும் கவனத்தைச் செலுத்த லாம்). இன்னும், கல்பை - இருதயத்தை, கரிந்து போ கா ம லு ம், மாண்டு போகாமலும் எப்படிக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற அறிவும் உண்டாகும். (பற்பல அஹ்லால்களும் வரும் இடமாகிய கல்பில் அல்லாஹ் உடைய ஷஹது நிலைத்திருப்பதற்காக அதை காரணங்கள், இன்னும் அல்லாஹ் அல்லாத மற்றவை பக்கம் செலுத் தாமல் எப்படிக் காப்பாற்றலாம் என்ற ஒழுக்கங்கள் பற்றியும் அறி விக்கப்படும்). இன்னும், எல்லாப் பாதைகளும் ஒரே வட்டவடிவ

Page 13
16
கல்வத்தின் இரகசியங்கள்
மாகவே தோன்றும். ஒரு பாதையாவது வே று வி த மா க இராது. (இங்கு ஒரு பாதை நேரானதாகவும், ஒரு பாதை கோணலான தாக வும் இல்லாமல் எல்லாமும் நேரானதாகவும் ஆரம்பிக்கப்பட்ட இடத் திற்கே வந்து முடியக்கூடியதாகவும் இருக்கும்). இங்கும் நீங்கள் தரி படாது போவீர்களானால் சுத்தமான உலூமுன்னள் ரிய்யா பிக்ரிய்யா - சிந்தனை ஆராய்ச்சி ஆன மர்தபாக்களில் இருந்து நபி ஈஸா (அலை) அவர்களது எதார்த்தம் உங்களுக்கு வெளியாகும். நீங்கள் சிந்தனை ஆராய்ச்சியாளர்களில், எதார்த்தத்தில் மேலானவர் யார்? தாழ்ந்த வர் யார்? என்பதனை அறிவீர்கள்.மேலும், அவர்களின் விளக்கம் எதனால் பிசகிப் போயிற்று என்ற அந்தரங்கத்தையும், புத் தி க் கு ம் அனுமானத்திற்கும் இடையிலுள்ள வித்தியாசத்தையும் அறிவீர்கள். (இவ்விரண்டிற்கும் இடையே வித்தியாசம் கண்டுபிடிப்பது சில சமை யம் பெரும்பெரும் அறிவாளிகளாலும் முடியாமலாகிவிடும்).
இன்னும், ஆலமுல் அற்வாஹ-க்கும் ஆலமுல் அஜ்யாமுக்கும் - ஆன்ம உலகுக்கும் ஸ்தூல உலகுக்கும் இடையில் உண்டான சிருஷ்டி களை, அதை எப்படி உண்டாக்கப்பட்டது என்ற அந்தரங்கத்தையும் (நபிஈஸா (அலை) அவர்களை ஸ்தூல உலகைச் சேர்ந்த மரியம் (அலை) அவர்களுக்கும், ஆன்ம உலகைச் சேர்ந்த ஜிப்ரீல் (அலை) அவர்களுக் கும் இடையிலும், நப்ஸை ஸ்தூல சடலத்திற்கும், ஆன்மாவுக்குமிடை யிலும் படைத்ததுபோல்) இன் னு ம்; ஆலமுஸ் ஸிபாத்து - லட்சண உலகுக்குள் தாத்தின் இரகசியத்தையும் அறிவீர்கள். (அ தா வ து:- ஆலமுஸ் ஸிபாத்தில் வஹ்தத்து தாத்தியையும் ஆலமுல் அஜ்ஸாமில் வஹ்தத்து அக்லியையும். இன்னும் வஹ்தத்து அர்ஷியையும் - ஆலமுஸ் ஸிபாதில் தாத்து வியாபித்திருப்பதையும், தூல உலகில் ஸிபாதில் தாத்து வியாபித்திருப்பதையும், தூல உலகில் அக்லும் அற்ஷம் வியாபித்திருப்பதையும் அறிவீர்கள்.) இவைகளல்லாமல் இன் னு ம் அநேக விஷயங்களும் தெரியவரும். அவற்றை இங்கு விபரித்தால் நீளும்.
நீங்கள் இங்கும் தரிபடாமல் முன்னேறிச் செல்வீர்களானால் ஆல் முத்தஸ்வீர், ஹஸ்னு ஜமாலு - உருவங்கள் அமைப்பு, அழகுவடிவத் துடைய உலகம் உங்களுக்கு வெளியாகும். (இது மூன்றாவது வானம். இங்கு யூசுபு நபி (அலை) அவர்களின் விருந்தினர் ஆக ஆவீர்கள். உங் களுக்கு அவர்களிலிருந்து பைளு கிடைக்கும்). ஒவ்வொரு வஸ்துவுக் கும் இன்னின்ன உருவமும். நடையும், என்ன காரணத்திற்காக உண் டானது என்பதையும் அறிவீர்கள். இவ்விடத்திலிருந்து தான் புலவர் களுக்கு உதவி கிடைக்கிறது.

கல்வத்தின் இரகசியங்கள்
(ஏனெனில், புலவர்கள் சிந்தனையாளர்களாகவும், உதிப்புடைய வர்களாகவும் ஆவார்கள். அவர்களுக்கு அழகுவடிவத்தோடு நெருங் கிய தொடர்பு உண்டு.)
நீங்கள் இங்கும் தரிபடாமல் முன்னேறுவீர்களாயின் குத்பியத்தின் மகாமுக்கு உயர்த்தப்படுவீர்கள்; இதற்கு முன்பு நீங்கள் பார்த்தவை களெல்லாம் குத்பின் இடது பாகமாகும். (இடது பா க மெ ன் ப து குத்பு எந்தப் ப க் க த் தி லி ரு ந் து அற்வாஹ் உடைய ஆலம்களுக்கு பைளை - அருளைக் கொடுத்து ஆட்சி செய்கிறாரோ அந்தப்பாகமாகும் ) இப்போது வ ந் தி ரு க் கு ம் இடமானது குத்புடைய கல்பு - நடுமத்தி ஆகும். அதாவது, குத்புடைய ஸ்தானமாகும். இதற்கு முன்னாலே குத்புடைய வலப்பக்க உலகம் இருக்கிறது. (அதாவது :- உங்களுக்கு எதனுள் குத்பிய்யத்துடைய மர்த்தபா வெளியானதோ அது கல்பா கும் - நடுமத்தியமாகும். அதாவது நான்காவது வானமாகும். மூன்று வானங்களும், பூதங்களும் இதற்குக்கீழே இருக்கின்றன. அவைகளுக்கு ஆலமுல் யஸார் - இடது உலகம் எனச் சொல்லப்படும். இ ன் னு ம், மூன்று வானங்களும், குர்ஸியும் அர்ஷும் இதற்குமேலே இருக்கிறது. அவைகளுக்கு ஆலமுல் யமீன் - வலது உலகம் எனப்படும். குத்பிய் யத்துடைய மர்த்தபா இதுரீஸ் நபி (அலை) அவர்களுடன் சம்பந்தப் பட்டது . ஸாலிக்கு இங்கு வந்து அவர்களுடைய விருந்தாளியாகிறான். அவர்களிடம் பைளு பெறுவான்.) இந்த குத்புடைய ஆலம் உங்க ளுக்கு வெளியானதும் இண் இகாஸாது - பிரதிபலித்தல் உடைய அந்த ரங்கங்களும் நேமமாக இருக்கிற பொருள் எப்படி நேமமாக இருக் கிறது என்பதும் எல்லாச் சிருஷ்டிகளிலும் உஜூது - உள்ளமை எப்படி ஊடுருவிப் பாய்ந்திருக்கிறது என்பதும் உங்களுக்கு வெ ளி யா கு ம். இன்னும், (ஆலங்களை உண்டாக்குகிறது, அவைகளை நிலைபாடாக்கி வைத்திருப்பது, அவைகளை வரிசைக்கிரமமாக உண்டாக்குவது சம்பந் தமான) அல்லாஹுதஆலாவின் ஹிக்மத்துகளையும், அதைக் காப்பாற் றிக்கொள்ளக்கூடிய சக்தியையும் உங்களுக்கு கொ டு க் க ப் ப டு ம். மேலும், இந்த அ மா னி த த் தை அதற்குத் தகுதியானவர்களிடம் கொடுக்கும்படியாகவும், உங்களிடம் சொல்லப்படும்.இன் னு ம், றம்ஸு - குறிப்பு இஷாரா - சயிக்கினை ஸத்று - மறைகுதல் கஷ்பு - வெளி யாக்கல் உடைய சக்தியும் உங்களுக்கு கிடைக்கும்.
(அதாவது: - றூஹானிய்யத்துடைய இரகசியங்களும், ஒளி, பிர காசம், மின்னல், சுடர் இவைகளெல்லாவற்றினுடைய அ றி வ ம் வெளியாகும். இன்னும், விளங்கிக்கொள்ள முடியாத கஷ்டமான அபூர்வ விஷயங்களும் உங்களுக்கு வெளியாக்கி தரப்படும்.) இங்கும் நீங்கள் தரிபடாமல் முன்னேறுவீர்களானால், அப்பால் ஹமிய்யது -

Page 14
18
கல்வத்தின் இரகசியங்கள்
அபிமானம், சினம், பிடிவாதம், சத்தியம், அசத்தியம், பமைகை, அன்பு முதலியன உலகில் உண்டாக்குவதற்குரிய காரணங்களும் (மிரு கங்களை அறுக்கிறது. அவைகளை குர்பானி கொடுப்பது இவற்றின் இரகசியங்களும்) விளங்கவரும். கஹ்ஹார் - அடக்கியாளுபவன் என்ற இஸ்முடைய தஜல்லியும் உண்டாகும். இன்னும் முன்னேறி மேலே போவீர்களானால் கீறத்து - ரோஷத்துடைய ஆலம் வெளியாகும். அல் லாஹூதஆலா உங்களுக்கு பூரணமாக வெளியாவான். ஆலமுல் அர் வாஹிலிருந்து ஒரு ஆலம் வெகு அழகிய வடிவுடன் உங்கள் முன்னால் வரும். (ஏனென்றால், இது அருட்கொடையான மஃரிபாவாகும். சிந் தனையால் அறியப்பட்டது அல்ல. சிந்தனையால் அ றி ய ப் பட் ட து. மஃரிபாவுக்குப் பின்னமும் குறைவுமாகும். கடாட்சத்தைக்கொண்டு அறியப்பட்டது. மஃரிபாவுக்கு அழகும் அம்சமுமாகும்).
இதுவரை எந்தெந்த ஆலங்களெல்லாம் வெளியாகும் என்பதாக சொல்லப்பட்டு வந்ததோ அவைகளெல்லாம் அளவில்லா மரியாதை யோடும், கனதியோடும், வாஞ்சையோடும் உங்களிடம் வரும், எப்படி யாவது உங்களை மயக்கி அவற்றின் பக்கம் உங்களைத் திருப்ப பிரயத் தனங்கள் செய்யும். நீங்கள் அதன் பக்கம் முகநோக்கிப் பார்க்கவே கூடாது . (ஏனென்றால், இந்த எல்லா வெளிபாடுகளும் உங்களைப் பரீட்சிப்பதற்காகவே அல்லாஹ்விடமிருந்து வந்தவையாகும். அதா வது நீங்கள் அல்லாஹ் அல்லாதவைகளின் பக்கம் கவனத்தைத் திருப் புகிறீர்களா அல்லவா எனப் பரிசோதனை செய்வதற்கே. அவன் அல் லாதவற்றின் பக்கம் கவனத்தைத் திருப்புவீர்களேயானால், நீ ங் க ள் அவனுடைய சமுகத்தில் ஹாஜராவதற்கு தகுதியற்றவர்களாவீர்கள்) ஏனென்றால், நீங்கள் அத்துடன் மேலே முன்னேறுவதற்கு தடையுண் டாகி கீழே இறங்குவது ஆரம்பமாகிவிடும். நீங்கள் இன்னும் மேலே செல்வீர்களேயானால் கண்ணியம், சாந்தி, ஸ்திரம், உபாயம் இவை களுடைய இரகசியங்களும் வெளியாகும். (ஏமாற்று, மோசடி வேலை களுக்குக் காரணங்களையும், அவைகளைவிட்டுத் தப்பிக்கொள்ளும் விப ரங்களும் விளங்கவரும்).
இன்னும் மேலே போவீர்களேயானால், ஜபரூத்துடைய ஆலம் அதாவது அமல்கள் பதிவு செய்யப்படும். ஏடு - தப்தர் ஆகிய ஆலம் வெளியாகும். இதற்கு இல்லிய்வூன் என்றும் சொல்வார்கள். இங்கே சுவர்க்கவாதிகளை பார்ப்பதும் தவிர அவர்களது பதவிகளின் வித்தி யாசமும் தெரியவரும். பின்பு நரகத்தையும் அங்கு வேதனை செய்யப் படும் வகை விபரங்களையும் தெரிவீர்கள், சுவர்க்கம், நரகம் ஆகிய வற்றினுள்ளே போகிறவர்கள், அவர்கள் அங்கு போவதற்குக் காரண மான கிரியைகளின் அந்தரங்கங்கள் முதலியன தெரியவரும்.

கல்வத்தின் இரகசியங்கள்
19
(சுவர்க்கமும், நரகமும் புலன்களால் கிரகிக்கக்கூடிய இர ண் டு ஸ்தானங்களாகும். அவைகளில் ஒன்றில் புலன்களால் கிரகித்து உண ரக்கூடிய உயர்தரமான சுகங்களும், மற்றதில் புலன்களால் கிரகித்து அனுபவிக்கக்கூடிய கொடிய வேதனைகளும் உண்டு. என்ற ஸுன்னத்து வல் ஜமா அத்தாரின் கொள்கையைப் போன்றே ஷைகுல் அக்பர் (குத்திஸ Rற்றுஹு) அவர்களும் சொல்கிறார்கள். ஆனால் ஹ-கமவுல் இஷ்றா கீன்களில் சிலர் இவை இரண்டும் கியாலி - கற்பனையானது. அவைகளிலுண்டான சுகம், வேதனை கற்பனை யானவை என்று சொல் கிறார்கள்.)
இன்னும் மேலே போவீர்களேயானால், ஜபரூத்துடைய ஆலத்தில் ஹக்குதஆலாவின் பேரழகின் தரிசனையிலேயே மூழ்கி மயங்கிக்கிடக் கும் பரிசுத்த ஆன்மாக்கள் தரிசனமாகும். அவர்களது ஆசையையும், ஆனந்தத்தையும் கண்டு நீ ங் க ளு ம் அவர்களைப்போலாக வேண்டு மென்று உங்கள் மனம் ஆசைப்படும். நீங்கள் அதையும்விட்டு மேலே செல்வீர்களானால் வஹ்தத்துடைய ' 'நூர்'' உங்களுக்கு வெளியாகும்.
அதில் உங்களுக்கு உங்களைத்தவிர வேறொன்றும் தென்படாது.
முன் பொருபோதும் ஏற்பட்டிராத அபரிமிதமான ஆனந்தமும், சுகமும் உண்டாகும். இதற்கு முன்பு கண்டவைகள் அத்தனையையும் இதனோடு ஒப்பிட்டுப்பார்க்க அவை அற்பமாகவும், மோஷமாகவும் விளங்கும். மேலும், உங்களை ஆகாயத்தில் அந்தரமாக ஜொலித்துப் பிரகாசிக்கும் தீபம் போலவும் பார்ப்பீர்கள். (இவ்விடம் சறுகக்கூடிய இடமாகும். இங்கு ஸாலிக்கு போனதும் அவனுக்கு வஹ்தத்துடைய மகாம் தோற்றமாகும். அவனுக்கு நாம், அஹதிய்யத்துடைய மகா மில் சேர்ந்துவிட்டோம். தாத்தின் தஜல்லி உண்டாகிவிட்டது என்று சந்தேகம் எழுப்பும். ஆகையால், இங்கும் நீங்கள் மயங்கி தரிபட்டு விடக்கூடாது.) அங்கிருந்து மேலே செல்வீர்களேயானால் மனிதர்களு டைய உருவங்களை குர்ஸிகளில் உட்கார்ந்தவர்களாக பார்ப்பீர்கள் அவர்களைவிட்டும் சில திரைகள் நீங்கப்படவும், ஸத்தார் என்னும் இஸ்மோடு சம்பந்தப்பட்ட சில திரைகளை அவர்கள்மேல் போடப்பட வும் காண்பீர்கள். இன்னும் அந்த உருவங்கள் தஸ்பீஹ் செய்வதை யும் கேட்பீர்கள். அதைக்கேட்டு பயப்படாதீர்கள். அந்த ஸுறத் துக்களோடு உங்கள் ஸுறத்தும் நீங்கள் இப்போது இருக்கிற நிலை மைக்குத் தக்கவாறு இருக்கவும் பார்ப்பீர்கள் (அ தா வ து நீங்கள் பாவம் செய்து அதை விட்டும் தவுபாச் செ யாதிருந்தீர்களேயானால் உங்கள் ஸ்றத்து திரையிடப்பட்டதாகவும், பாவம் செய்யாதிருப் பின் திரையில்லாமலானதாகவும் இருக்கும். அந்த ஆன்மாக்களின் தஸ்பீஹானது : - ஸுபுஹானமன் அள்ஹறல் ஜமீல வஸ தறல் கபீ ஹ ''அழகானதை வெளியாக்கி அவலட்சணமானதை மறைத்திட்டானே
அந்த நாயன் பரிசுத்தமானவன்'' என்பதாகும் .)

Page 15
20
கல்வத்தின் இரகசியங்கள்
இன்னும் மேலே செல்வீர்களேயானால், றஹ்மானிய்யத்துடைய ஆலத்தின் இரகசியங்கள் வெளியாகும். எதைப் பார்த்தாலும் இதற்கு முன் பார்த்தவைகளெல்லாம் இதில் இருக்கவும் காண்பீர்கள். உங்கள் தாத்தின் அந்தஸ்தையும், அதன் மர்த்தபாக்களையும் மற்றவைகளையும் பார்ப்பீர்கள். மேலும் தெய்வீக அஸ்மாக்களிலிருந்து எந்த இஸ்மு டன் உங்களுடைய தொடர்பு இருக்கிறதென்பதையும், விலாயத்தி லும் அல்லாஹ்வின் மஃரிபத்திலும், உங்களுடைய மகாம் எது என் பதையும் அறிவீர்கள்.
இன்னும் மேலே செல்வீர்களானால் அக்லுல் அவ்வல் உடைய ஆலத்தில் சேர்வீர்கள். இது தான் எல்லா வஸ்துக்களுக்கும் 'குரு'வா கும். எல்லா உலகங்களிலும் நீங்கள் இதன் குணபாட்டைத்தான் பார்த்தீர்கள். இதன் தொகுப்புதான் நூன் உடைய ஆலத்தில் நின் றும் லெள ஹல் மஹ்பூனில் வகுப்பாக இருக்கிறது. (அக்லுல் அவ் வலில் எல்லா ஆலங்களும் அவைகளிலுள்ளவைகளும் தொகுப்பாக - பொதுப்படையாக இ ரு ப் ப தை க் கவனித்து அக்லுல் அவ்வலுக்கு - 'நூன்'' என்றும், அது எல்லா வஸ்துக்களையும் லௌஹ-ல் மஹ் பூளில் வகுப்பாக - விவரமாக ஆக்குவதனால் அந்த அக்லுல் அல்ல லுக்கு ' 'கலம்'' என்றும் சொல்கிறார்கள்.)
இன்னும் முன் செல்வீர்களேயானால், ஸிபத்து முஹர்ரிகா - சர்வ லோகங்களையும் ஆட்சி. அசைக்கும் தத்துவம் வெளியாகும். அதற்கு மேலே வஹ்தத்து தாத்தி - எங்கும் வியாபித்திருக்கும் பிரம்மம் வெளி யாகும். நீங்கள் அடியோடு அழிந்து மறைந்துவிடுவீர்கள். பின்னர் நீங்கள் அடியோடு அறியப்படாது மறக்கப்பட்ட வஸ்துவாக்கப்பட்டு விடுவீர்கள். - எதுவரையிலுமானால், எப்பொழுதாகிலும் அழிக்கிறவ னுடைய கு ண பா டு உங்களுக்குள்ளாலே எஞ்சியிருக்குமேயானால் அதோடு நீங்களும் நிலைத்துவிடுவீர்கள். பின்னர், உங்களை முன்னால் கொண்டுவரப்படும். நீங்கள் தரிபாடானவராய் ஆகிவிடுவீர்கள். பின் னர், உ ங் க ளைச் சேர்க்கப்பட்டு விலாயத்துடைய மர்த்தபாக்களில் ஏதாகிலும் ஒன்றில் நியமிக்கப்படுவீர்கள். அதற்குத் தக்கவாறு உங் களுக்குச் சன்மானங்களும், பரிவட்டங்களும் கொடுக்கப்பட்டு உங் களை உங்கள் நாஸ-பத்து - ஸ்தூல உலகுக்கு அனுப்பப்படுவீர்கள்.
நீங்கள் திரும்பி வரும்போது முன்பு ஏற்றத்தில் பார்த்த எல்லாப் பொருட்களையும் வேறு தோற்றங்களில் பார்ப்பீர்கள். ஒருக்கால் நீங் கள் இந்த ஸ்தூல உலகுக்கு வந்து சேருவீர்கள் அல்லது அங்கேயே மறைந்து தங்குவீர்கள். (கூ ற ப் ப ட் ட எல்லா மகாமாத்துக்களும், வெ ளி யா கு ம் தோற்றங்களும் திட சித்த வைராக்கியம் - ஹிம்மத் உடையவர்களுக்குப் பூரணமாகவே வெளியாகும். சிலருக்கு கூடுதல், குறையாகவும் வெளியாகும்.)

கல்வத்தின் இரகசியங்கள்
21
ஒவ்வொரு ஸாலிகும் எந்தெந்த வழியாக நடந்துபோவதைத் தெரிந்து கொள்கிறானோ அந்தந்தப் பாதைக்கு ஏற்றவாறே அவனது முடிவும் ஆகும். (எவனுடைய நாட்டமும், தேட்டமும் உயர்ந்ததா கின்றதோ அவனது மகாமும் உயர்வாகவேயாகும். எவனுடைய நாட் டமும் தேட்டமும் அதற்கு மாற்றமாகுமோ அவனுக்கு இந்தச் சிறப்பு கள் கிடைக்காது).
மேலும், முன் சொன்ன, அதே பாதையிலேயே அவனை அழைக்க வும்படும். எந்த நபியவர்களின் பாஷையில் அவனை அழைக்கப்படுகி றதோ அந்த நபியவர்களின் அனந்தரக்காரன். என்று அவனைச் சொல் லப்படும். அதாவது இவன் மூஸவி, ஈஸவி, மற்றயவன் (மூஸா நபி யவர்களைச் சார்ந்தவன், ஈஸா நபியவர்களைச் சார்ந்தவன், மற்றவர் களைச் சார்ந்தவன்) எனச் சொல்லப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட பாஷைகளால் பேசச்கூடியவர்களும் இருக்கிறார்கள். எல்லாப் பாஷை களிலும் பேசக்கூடியவர்களே முழுப் பரிபூரணம் அடைந்தவர் - காமில் அக்மல் ஆவார்கள். இவரையே முஹம்மதீ -முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அனந்தக்காரர் என்று சொல்லப்படும். நீங்கள் இந்தக் கடைசி மகாமுக்குப் போன பின்னர் உங்கள் அளவில்-ஸ்தூல உலகுக்கு திரும்பிவரவில்லையானால், உங்களுக்கு தங்கிவிட்டவர் -வாகிபு என்று சொல்லப்படும். திரும்பிவராமல் அங்கேயே - தங்கி தரிபட்டு விடுவீர்க ளாயின் வஹ்தத்தின் திளைப்பில் சுயமிழந்தவராக - முஸ்தஹ்லகாக அபு உகைலு மக்ரிபீ (றஹ்), அபூ யஜீதுல் பிஸ்த்தாமீ (றஹ்) இவர் களைப் போன்று ஆவீர்கள்.
(இவர்களுக்கு ஹக்கின் சமுகத்திலிருந்து கிலாபத்தின் பரிவட்டத் தைக் கொடுத்து, ' ' நீங்கள் என்னுடைய அடியார்கள் அளவில் போய் அவர்களை நேர்வழி காட்டுங்கள்'' என்று சொல்லப்பட்டபோது அவர் கள் கீழே விழுந்துவிடவே, ஹக்குதஆலாவின் சமுகத்திலிருந்து மலக்கு களை நோக்கி ' 'என்னடியார்களை என்னிடமே விட்டுவிடுங்கள். அவர் கள் தங்களுடைய தாத்தில் நன்றாய்ச் சம்பூரணம் அடையட்டும்'' என்று சொல்லப்பட்டது) நீங்கள் இதே மகாமில் மரணம் அடைந்து விட்டீர்களானால் இந்த மகாமிலேயே உங்களை எழுப்பப்படும்.
நீங்கள் ஜனங்களை நேர்வழி காட்டுவதற்காக திரும்பிவிடுவீர்களே யானால் பாதையில் நின்றுவிட்டவர்களைப் பார்க்கிலும் இதில் மிகவும் வரிசை இருக்கிறது. ஆனால், ஏற்றத்தில் இருவர்களும் சரிசமமாக இருக்கவேண்டும். பாதையில் தரிபட்டுவிட்ட முஸ்தஹ்லக்கனவர் ஏற் றத்தில் உயர் பதவி உடையவராகவும் திரும்பிவந்தவர், அவரைவிட வும் ஏற்றத்தில், பதவியில் குறைந்தவராகவும் இருந்தால் இவர்

Page 16
22
கல்வத்தின் இரகசியங்கள்
அவரைவிட வரிசையானவராக முடியாது. ஆனால், இவரும் அவரு டைய மகாமிலிருந்தே திரும்பிவந்தவராக இருந்தால் இவர் வரிசை யானவராக ஆவார். மேலும், திரும்பிவருகிறவரை இல்முல் லதுன்னிகடாட்ச ஞானம் கொடுத்து அனுப்பப்படும்.
திரும்பி வருபவர்கள் இருவகுப்பினராவர். ஒரு வகுப்பினர் தங் கள் தனக்காகவே வருகிறார்கள். இன்னமொரு வகுப்பினர் ஜனங் களுக்காகவேண்டி அனுப்பப்படுகிறார்கள். இவர்கள் ஜனங்களுக்கு நேர் பாதையைக்காட்டி சீரான வழியில் நடத்தி அவர்களை அல்லாஹ் அள வில் அழைப்பார்கள். இப்படி அழைக்கக்கூடியவர்களும் பதவிகளில் பலதரப்பட்டிருக்கிறார்கள். ''அந்த றஸல்மார்களில் சிலரைச் சில ரைப்பார்க்கிலும் வரிசையாக்கி வைத்திருக்கின்றோம்'' என்று அல்லாஹ் திருவுளமாயிருக்கிறான். சிலர் மூஸா நபி (அலை) அவர்களது வாரிசுஅனந்தக்காரர்களாகவும், சிலர் ஈஸா நபி (அலை) அவர்களின் வாரிசு களாகவும், சிலர் வேறு நபிமார்களின் வாரிசுகளாகவும் இருக்கிறார் கள். இவர்களுக்குத்தான் ஸபிய்யாக்கள் என்றும், ஹால்களை உடை யவர்கள் என்றும் சொல்லப்படும். சிலர் குறிப்பாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய வாரிசுகளாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு மலாமதிய்யாக்கள் என்றும் தம்கீனை உடையவர்கள் என்றும் சொல் லப்படும்.
அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ தஆலா அளவில் ஜனங்களை அழைக்ககூடியவர்கள் எல்லோரும் ஒரே பாதையின் வழியாகவும் அழைக்கமாட்டார்கள். வெவ்வேறு வழிகளாக இருக்கும். ஒருவர் உபூ திய்யத்தின் ஹகீகத்தில் - அடிமைத்தனத்தின் எதார்த்தத்தில் நாஸ்தி யாகிற வாசல் வழியாக அழைத்துச் செல்லுவார். இதுபற்றித்தான், ' ' நீர் ஒரு வஸ்துவாகவும் இல்லாதிருந்த நிலைமையில் முன்பு உம் மைப் படைத்தோம்'' என்ற திருவசனத்தில் சயிக்கினை செய்யப்பட்டி ருக்கிறது. இன்னும் சிலர் அடிமைத்தனத்தைக் கவனிக்கக் கூடிய வழி யாக, அதாவது, தாழ்மை, வறுமை, தேவை இதுபோன்ற வாசல் களின் வழியாக அழைப்பார்கள். இன்னும் சிலர் (கிருபை, உள்ளன்பு, பொறுத்தல், மன்னித்தல் இவைபோன்ற) அல்லாஹ்வின் றஹ்மத் தின் குணத்தை கவனிக்கிற வழியாகவும், சிலர்,, (அகங்காரம், உரோ ஷம், அடக்கியாளும் தன்மை, பகைவர் மீது சீற்றம் இவைபோன்ற) அல்லாஹ்வின் கஹ்றின் குணத்தின் வழியாகவும் அழைப்பார்கள். ஆனால் இவர்களில் எல்லாம் உயர்த்தியான மகாமை உடையவர்கள், அக்லாகுல் இலாஹிய்யாவின் (அதாவது - ஜலால், ஜமால் - அகங்காரம், சாத்வீகம் ஆகிய இரு குணங்களையும் சேர்ந்த) வழியாக அல்லாஹ் அளவில் அழைக்கின்றவர்களாவர்.

கல்வத்தின் இரகசியங்கள்
23
அறிந்து கொள்ளுங்கள்! நுபுவ்வத்தும், விலாயத்தும் முன்று விஷ யங்களில் கூட்டாகும்.
முதலாவது :- இல்முல்ல துன்னி - கடாள்ச ஞானம் உண்டாகிறது.
இரண்டாவது :- கராமாத்து - அற்புத நிகழ்ச்சிகள் உண்டாகிறது.
மூன்றாவது :- கியாலுடைய உலகத்தை- மறைவான உலகத்தைப் பார்ப்
பது, ஆகியவைகளாம்.
(ஜனங்கள் தூக்கத்தில் பா ர் க் கி ற லோகத்தை நபிமார்களும், அவுலியாக்களும் விழிப்பில் பார்க்கிறார்கள்.
ஆனால், வசனிப்பதில் மாத்திரம் அவையிரண்டும் வித்தியாசப் படும். நபியுடன் எப்படிப் பேசப்படுமோ, அப்படி அவுலியாக்களுடன் பேசப்படமாட்டாது.
(நபிமார்களோடு நேரடியாகவும், முன்னாலேயும் பேசப்படும். அவு லியாக்களுடன் நபிமார்களது வாஸிதா - தொடர்பு கொண்டும், முது குப்புறமாக இருந்தும் பேசப்படும். அறிந்து கொள் - றஸலாக இல் லாத நபியாகிறவர்கள் அவர்கள் தங்கள் வரைக்கும் வணங்குவதற் காக மார்க்க சம்பந்தமான ஒரு கட்டளையைக் கொண்டு வஹீ அனுப் பப்பட்டவராகும். அதைப் பிறரும் செய்யும்படி அனுப்பப்படுமானால் அவர்கள் நஷலாகவுமாவார்கள். நபியிடத்தில் மலக்கு இரண்டு விதமாக வஹீ கொண்டுவருவார். ஒரு சமயம் நபியின் கல்பில் பல விதமாக இறங்கி தான் கொண்டுவந்ததை நபியின் கல்பில் போடு வார்; ஒரு சமயம் சடரூபமெடுத்து வெளியில் வந்து தான் கொண்டு வந்ததை நபியின் காதில் போடுவார்; நபி அதைக் கேள்ப்பார்கள் அல்லது அதை அ வர் க ளி ன் கண்ணில் போ டு வார்; அவர்கள் அதைப் பார்ப்பார்கள், அவர்களுக்கு அதைக் கேள்பதிலுண்டானது போலவே பார்ப்பதிலும் சரியானபடி விளக்கமுண்டாகும்; இதுபோ லவே மற்றப்புலன்களிலும் போ டு வார். இந்த வாசல் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் வபாத்திற்குப்பிறகு அடைக்கப்பட்டுவிட் டது: கியாம நாள் வரையிலும் யாருக்கும் திறக்கப்படமாட்டாது. ஆனால் வலிமார்களுக்கு வஹ்ய இல்ஹாமி இருக்கிறது. அதில் மார்க் கமாக வணங்கக்கூடிய எ ந் த ஒரு விசயத்தைப் பற்றியுமிருக்காது. எங்கிலும் மார்க்கத்தில் ஒரு ஹக்மு பிசகாகி அதற்கு ஆதாரமாக காட்டக்கூடிய ஹதீதைப் பற்றி சில ஜனங்களால் அது ஸஹீஹானது என்று சொல்லப்பட்டதை அது ளஈபானது என்றோ அல்லது ளஈபா னது என்று சொல்லப்பட்டதை அது ஸஹீஹானது என்றோ மறை முகமாக மலக்கின் வாயால் இல்ஹாமாக அறிவிக்கப்படும்.

Page 17
24
கல்வத்தின் இரகசியங்கள்
அவர் மலக்கைக் காண மாட்டார். ஏனென்றால் மலக்கைக் காண்பதும் அவர் வார்த்தையைக் கேட்பதும் இவ்விரண்டும் ஒன்றாக நபிமார்களுக்கே யல்லாது வாய்க்காது. வலியோ சப்தத்தைக் கேட்டால் மலக்கைப் பார்க்க மாட்டார். மலக்கைப் பார்த்தால் அவர் சப்தத்தைக் கேட்க மாட்டார். ஏனென்றால் வலிமார்களுக்கு அறிவிக்கப்படுகிற வஹியால் மார்க்கத்தையுண்டாக்குவது இல்லையே. அவர்களுக்கு அறிவிக்கப்படு வதெல்லாம் அவர்கள் தவறிப் போகாதிருக்கும்பொருட்டு ஷரீஅத்தின்
ஹ-க்முகளைப் பற்றிய எதார்த்தத்தை விளக்கிவைப்பவேயாகும்.
செய்குனா முஹிய்யத்தீன் அப்துல் காதிர் ஜெயிலானி (கு. ஸி.) அவர்கள் 'நபிமார்களுக்கு நுபுவத்தினுடைய இஸ்மை - அசல் பெய ரைக் கொடுக்கப்பட்டிருக்கிறது. எங்களுக்கு அதன் லகபை - இடு பெயரைக் கொடுக்கப்பட்டிருக்கிறது' என்று சொல்லிக்கொண்டிருப் பார்கள். அதாவறு அல்லாஹூதஆலா அவனுடைய வசனங்களில் கருத்துக்களையும் அவனின் றஸ்--லுடைய வார்த்தைகளின் கருத்துக் களையும் எங்களுக்கு எங்கள் இருதயத்தில் அறிவித்துத் த ந் தி ருப் ப தோடு எங்கள் நபியென்று பெயர் சொல்வதை விட்டுத் தடுத்திருக் கிறான் எ ன் ப தா ம். இந்த மகாமுடையவர்களை அவுலியாக்களில் அன்பியாக்கள் என்று சொல்லப்படும். இன்னமும் செய்குனா முஹிய் யத்தீன் அப்துல் காதிர் ஜெயிலானி (கு. ஸி. ) அவர்கள் ''நபிமார் களே! உங்களுக்கு லகபை - இடுபெயரைக் கொடுக்கப்பட்டிருக்கிறது; உங்களுக்கு கொடுக்கப்படாததையெல்லாம் எங்களுக்கு கொடுக்கப் பட்டிருக்கிறது'' என்றும் சொல்லியிருக்கிறார்கள். கரு த் தா கி ற து நபிமார்களுக்கு நாயகம் முகம்மது (ஸல்) அவர்களை பின் துயர்வதின் லகபை - இடுபெயரைத்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. அ வர் க ள் நாயகம் (ஸல்) அவர்களை ஹுக்மில் - மார்க்கத்தின் நோக்கம் - கருத் தில்தான் துயர்ந்தவர்கள் ஆனால் நாயகம் (ஸல்) அவர் களை உள்ளா லுள்ளபடி துயர்ந்தவர்கள். அவர்களின் உம்மத்திலுள்ள அவுலியாக் கள் தான். ஏனென்றால் அவர்கள்தான் நாயகம் (ஸல்) அவர்களுடைய மார்க்கத்தின் கருத்திலும், உருவத்திலும் - அந்தரங்கத்திலும் ஷரீ அத்தின் உருவத்திலும் உள்ளும் புறமும் துயர்ந்திருக்கிறார்கள். அவர் களே தான் நாயகம் (ஸல்) அவர்களை ஹகீகத்தாகவும் மஜாஸாகவும், - எதார்த்தத்திலும், புளக்கத்திலும் பின் துயர்ந்தவர்கள். அவர்களல் லாதவர்களெல்லாம் ஏதோ ஒருவகையில் அல்லது குறிப்பான பல வகைகளில் தான் பின்பற்றியவர்களாவார்கள். எல்லா வகைகளிலும் சம்பூரணமாக நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றியவர்கள் அவர் களின் உம்மத்திலுள்ள சம்பூரணமான வலிமார்களேயாவார்கள் என்பதாம்.)

கல்வத்தின் இரகசியங்கள்
25
அவுலியாக்கள் நபிமார்களைப்போலவே ஏ ற் ற ம டை கி றார் க ள் என்றோ, அ வர் க ளை விட வும் உயர்ந்த மகாமில் ஏறிவிடுகிறார்கள் என்றோ கருத்துக்கொள்ளக்கூடாது. இது ஒருபோதும் நடக்கக்கூடிய கருமமன்று. இவ்விரு வகையினரும் மகாமாத்துக்களின் அ ச லி ல் ஒன்றுபட்டாலும் நபிமார்களுடைய ஏற்றம் அசல் பிரகாசத்தைக் கொண்டதாகும். அவுலியாக்களோ, நபிமார்களின் பிர கா ச த் தி ன் அருளைக் கொண்டேதான் மகாமாத்துக்களில் ஏறுகிறார்கள். அன்பி யாக்களும், அவுலியாக்களும் தவக்குல் - பரட்ஞ்சாட்டுதல் மு த லி ய மற்ற மகாமாத்துக்களின் அசலில் சேர்ந்திருப்பதில் ஒன்றுபட்டபோதி லும், அவைகளின் பலவகையான வகை விபரங்களில் ஒற்றுமை இருக் காது மகாமை ஏற்றிக் கொள்வதனால் மட்டும் வரிசை ஏ ற் ப ட் டு விடாது. மகாம்களின் பலதரப்பட்ட வகைகளை எட்டிக் கொள்வதைக் கொண்டேதான் வரிசையாகும். இந்த வகைகளைக் கொண்டேதான் தவக்குல் உடைய மகாமில் உள்ளவர்களுக்கிடையிலும் 'ப த வி க ள் விதற்பமாக ஏற்றத் தாழ்வாக ஆகிறது.(உதாரணமாக:- றஷ லுல்லாஹி (ஸல்) அவர்களுடைய த வ க் கு ல் மற்ற நபிமார்களுக்கு இல்லை. நபிமார்களுக்கு இருந்தது போன்ற தவக்குல் வலிமார்களுக்கு இல்லை.) இதைப்போலவே மற்றும் மகாம்களையும், ஹால்களையும் கவனித்துக் கொள்ளவும்.
மேலும் அறிந்து கொள்ளுங்கள்!
ஒவ்வொரு வலியும் அவரது நபியின் ரூஹானிய்யத்தைக்கொண்டு - அதாவது அவர்களது ஷரீஅத்தின் வலியிலேயே அல்லா ஹுதஆலா அளவில் உயருகிறார்கள். பூரணமான கமாலியத்தை உடைய அவுலி யாக்கள் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய உதவி எப்படிக் கிடைக்கிறது என்ற விபரத்தை அறிகிறார்கள். சிலர், அது எப்படிக் கிடைக்கிறது என்பதையும் அறியமாட்டார்கள். இவர்கள், தங்களோடு அல்லாஹ் தான் பேசுகிறான் என்பதாக நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில் அவர்களோடு பேசியது அவர்களுடைய நபியவர்களின் ரூஹாக இருக் கும். இன்னும் இங்கு அநேக அபூர்வ அதிசய சங்கதிகள் உள்ளன. அவைகளை விபரிப்பதற்கு இச்சிறு நூலில் இடமில்லை.
உம்மத்து முஹம்மதிய்யாவிலுள்ள அவுலியாக்களில் சிலர் முன் னுண்டான எல்லா நபிமார்களுடைய மகாம்களுக்குமே வாரிசுகளாக வும் இருப்பார்கள். சிலர் ஒன்றிரண்டு அல்லது அதற்கதிகமான நபி மார்களுடைய வாரிசுகளாகவுமிருப்பார்கள். இவர்கள் நபிமார்களின் வாரிசுகளாக இருக்கிறார்கள் என்பதன் கருத்தாவது:- நூறு முஹம் மதிய்யாவிலிருந்து மற்ற நபிமார்களுக்குக் கிடைத்த அதே பைளு -- அருள் இவர்களுக்குக் கிடைக்கிறது என்பதாம். ஏனென்றால், முந்திய

Page 18
26
கல்வத்தின் இரகசியங்கள்
எல்லா நபிமாருடைய ஒளிவுகளும் நூர்முஹம்மதிய்யாவுக் குள்ளே உட்புகுந்திருக்கின்றன. அவைகளையெல்லாம் நூருமுஹ ம் ம தி ய் யா தன்னுள் சேர்த்துக் கொண்டிருக்கிறது. ஆகவே, நூருமுஹம்மதிய் யாவிலிருந்து மூஸா நபி (அலை) அவர்களுக்குக் கிடைத்த நூர் எந்த வலிகுக் கிடைக்குமோ அந்த வலிக்கு இந்தச் சம் ப ந் த த் தை ப் பொறுத்து இவர் நபி மூஸா (அலை) அவர்களின் வாரிசு எனப்படும். நபி மூஸா (அலை) அவர்களுக்கு பைளு கிடைப்பதற்கு நாயகம் (ஸல்) அவர்களோடு என்ன சம்பந்த முண்டோ அதுவே இந்த வலிக்கும் உண்டாகும். ஒருக்கால் இவர் மரணமாகும் வேளையில் இவர் எந்த நபியின் சம்பந்தம் கொண்டிருக்கிறாரோ அந்த நபியுடைய தோற்றம் இவர் முன்னால் தரிசனையாகும். இவர் அந்த நபியை நி னை த் து க் கொண்டு அவர்களைப் பற்றியே பேசிக்கொண்டும் இருப்பார்கள். தெரி யாத ஜனங்கள் இவர் எஹுதி அல்லது நஸாறாவாகிவிட்டார், என் றும் நினைப்பார்கள். ஆனால் குதுபுக்கோ, முஹம்மது (ஸல்) அவர் களுடைய ஸுறத்து காட்சியாகும். இவரது சம்பந்தமும் தொடர் பும் றஸுலுல்லாஹி (ஸல்) அவர்களுடனே இருக்கும்.
(அஹ்லுல்லாக்களாகிய அவுலியாக்கள் வபாத்தாகும்போது அவர் களின் முன்னால் இல்முடைய உருவத் தோற்றம், அமலுடைய உருவத் தோற்றம், கொள்கையுடைய தோற்றம், மகாமுடைய தோற்றம், றஸுலுடைய தோற்றம், மலக்குகளுடைய தோற்றம், தெய்வீக இஸ் முகளில் ஒரு இஸ்முடைய தோற்றம், நஃதுடைய இஸ்முகளில் ஒரு இஸ்முடைய தோற்றம், ''குத்தூஸ்'' - தூய்மையானவன் என் ப து போன்ற தன்ஸீஹிய்யாவான இஸ்முகளில் ஏ தா வ து ஒரு இஸ்மு டைய தோற்றம், 'ஹ' என்னும் இஸ்மைப்போல் தாத்துடைய இஸ்முகளில் ஏதாவது ஒன்றின் தோற்றம் உண்டாகும்.)
நான் முதன்முதலாக நபி ஈஸா (அலை) அவர்களுடைய கல்பின் பேரிலிருக்கிற ஒரு ஷெய்கைச் சந்தித்தேன். பின் மூஸா நபி (அலை), இபுறாஹீம் நபி (அலை) மற்றும் நபிமார்களுடைய கல்புகளோடு சம் பந்தம் வைத்திருந்த அனேக ஷெய்குமார்களையும் சந்தித்தேன். இந்தச் சங்கதிகளை நமது தரீக்கா நண்பர்களைத் தவிர மற்றவர்களால் அறிய முடியாது. மேலும் அறிந்து கொள்ளுங்கள்!
நமது நாயகம் றஸுலுல்லாஹி (ஸல்) அவர்கள் தான் ஆலமுல் அற்வாஹில் எல்லா நபிமார்களுக்கும் அவரவர்களுக்குக் கிடைத்த அறிவுகளையும், ஷரீஅத்துக்களையும், மகாமாத்துக்களையும் அருளினார் கள். கடைசியாக எல்லா ஜனங்களையும் நேர்வழி காட்டுவதற்காகத்

கல்வத்தின் இரகசியங்கள்
2,
தா ங் க ளே வந்தார்கள். நபி கிளுரு (அலை), நபி இல்யாஸ் (அலை) இவர்களைப்போல இப்பொழுது பிரசன்னமாயிருக்கக்கூடியவர்களும், நபி ஈஸா (அலை) அவர்களைப்போல வானிலிருந்து இறங்கிவரக் கூடி யவர்களும், எம்மைப்போல் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களுடைய உம்மத்துகளேயாவார்கள். (எம்மைப்போலவே அ வர் க ளு ம் நமது நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களது ஸரீஅத்தைப் பின்பற்றுவது அவசியமாகும்.)
முன்னுண்டான நபிமார்களின் உம்மத்துக்களிலுள்ள வலிமார்கள் தங்களுடைய பாகத்தைத் தங்களுடைய நபிமார்களிலிருந்து எடுத் தார்கள். அவர்களுடைய நபிமார்கள் நம்முடைய நபி றஸலுல் லாஹி (ஸல்) அவர்களிலிருந்து அருளை எ டு ப் ப தி ல் நாயகம் (ஸல்) அவர்களுடைய உம்மத்திலுள்ள அவுலியாக்கள் முன்னுண்டான நபி மார்கனைப் போலாகிறார்கள். இதனாலேயே ''என்னுடைய உம்மத்தி லுள்ள உலமாக்கள் பனீ இஸ்ராயீல்களுடைய நபிமார்களைப் போலா வார்கள்'' என்று நாயகம் (ஸல்) அவர்கள் திருவுளமானார்கள்.
மேலும் அல்லாஹுதஆலா, ''நீங்கள் ஜனங்களைப்பற்றிச் சாட்சி யம் கூறுகிறவர்களாக இருக்கவும், உங்களைப்பற்றி றஸுல் சாட்சி யம் சொல்லுகிறவர்களாக இருக்கவும்'' என்று திருமறையில் கூறி யுள்ளான்,
ஆகவே, உங்களுக்கு மிகவும் மேலாம்பரமான ஏற்றம் உண்டாவ தற்காக நீங்கள் உ ங் க ள் கல்வத்தில் முஹம்மதிய்யாவான பூரண அனந்தரத்தை எடும்பதன் பக்கமே உங்களுடைய முழு ஊக்கத்தை யும், கவனத்தையும் செலுத்துங்கள்,
அறிந்து கொள்ளுங்கள்! எல்லா அஹ்வால்களையும், மகாமாத் துக்களையும் ஒன்றோடொன்று கலந்து போடாமல் ஒவ்வொரு ஹாலி லும், வக்திலும் அது , அதுக்கு லாயிக்கானபடி பு ழ ங் கு கி ற வ ரே
ஹகீமும், காமில் முஹக்கிகுமாவார் - சம்பூரண அதிவேகப் புருஷரா வார். இவரே மு ஹ ம் ம து (ஸல்) அவர்களுடைய வாரிசுமாவார். ஏனென்றால், மலாமதிய்யாக்களுக்கு சற்குரு எம்பெருமானார் நாயகம் (ஸல்) அவர்களாவார்கள். (அஸ்ஹாபுல் ஹிக்மத்து - சம்பூரண அதி விவேக புருஷர்களாகிய மலாமதிய்யாக்கள் ஒவ்வொரு வேலையையும் இடத்திற்கும், சமயத்திற்கும் தக்கவாறே செய்வார்கள். இவர்கள் தான் தரீக்காக்களின் சற்குருக்களாவார்கள். இவர்களுக்கு ஷத்தா ரிய்யீன், அஹ்லுல் மஹப்பது - ஆஸிகீன்கள் என்றும் சொல்வார்கள். இவர்கள் எல்லோர்களுக்கும் சற்குரு எம்பெருமானார் நாயகம் றஸல் (ஸல்) அவர்களாவார்கள்.)

Page 19
28
கல்வத்தின் இரகசியங்கள்
பா ரு ங் க ள்! நாயகம் (ஸல்) அவர்கள், அல்லாஹ தஆலாவினு டைய சமுகத்தில் காபகவுஸைனி என்ற மகாமுக்கும், அதற்கப்பாலும் சென்றார்கள். ஆனால், அவர்கள் பேரில் (அதன்) எவ்விதமான குண பாடுகளும் வெளியாகவில்லை. இதனாலேயேதான் எதிரிகள் மிஃறாஜை மறுத்தார்கள். நபி மூஸா (அலை) அவர்கள் தூர்லீனா ம லை க் கு ப் போனதும் அதன் குணபாடு அவர்களில் தென்பட்டது. எதிரிகள். மறுதலிக்க முடியாமலிருந்தனர். (ஹளரத் மூசா (அலை) அவர்கள் அங்கு ஹக்குதஆலாவின் தஜல்லியைக் கண்டு வந்ததும் அவர்களது நெற்றியில் எவராலும் கூர்ந்து பார்க்கமுடியாத வி த த் தி ல் அதிக வெளிச்சமான ஒளிப் பிரகாசச் சுடர் வீசியது. அதனால், ஜனங்களி டத்தில் அவர்கள் ஹக்குதஆலாவை தரிசித்து வந்ததைப்பற்றி நம் பிக்கை ஏற்பட்டது.)
முக்கியமாகக் கவனிக்க வேண்டியது: - ஸாலிக்கின் பேரில் பற்பல அஹ்வால்களும், அதன் தன் குணபாடுகளைச் செய்யும்போது ஸாலிக்கு அவைகளை ஏற்றுக்கொள்வான். (அவனில் கறாமது கெளனிய்யா - உல காய அற்புதங்கள் வெளியாகும்) ஆகையால், அவன் அந்நேரம் அதை விட்டுச் சீக்கிரமாகக் கடந்து ஹிக்மது இவாஹிய்யாவினுடைய மகா முக்குப் போய்ச் சேரவேண்டும். அதாவது , வெளிரங்கத்தில் வழக்கமாக நடந்து கொண்டிருக்கும் முறைக்கு ஏற்றதாகவே நடக்கவேண்டும். வழக் கத்திற்கு மாற்றமான கறாமத்து - அற்புதங்களை வெளியாக்குவதைவி டுத்து (கறாமது இலாஹிய்யா - தெய்வீக அற்புதமான அருள் ஞானத்தை வெளியாக்குவதளவில்) தன் கவனத்தைச் செலுத்த வேண்டும். ஒவ் வொரு மூச்சிலும், ' 'றப்பி - ஸித்m - இல்மா'' - ஆண்டவா. எனக்கு ஞானத்தை அதிகப்படுத்து என்று சொல்லவேண்டும், இன்னும் அவ னுடைய வக்த்தே அவனுக்கு சுவாசமாக ஆகுவதற்கு முயற்சி எடுக்க வேண்டும், (அதாவது, அவன் கல்பில் வரக்கூடிய அ ஹ் வா ல் க ள் சுவாசம் போல் எந்நேரமும் வந்து போவதற்குத் தெண்டிக்க வேண் டும்.) நல்பில் வரக்கூடிய வக்தின்பேரில் ஆசை கொள்ளக்கூடாது; என்கிலும் அதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும். ஏனென் பால், அவன் ஷெய்காக ஆகி ஜனங்களை நேர் வழிகாட்டும் மகாமுக்கு வருவானேயானால் முரீதீன்களை அதைலிட்டும் மேலே உயர்த்திச் செல் டெங்கு அவசியப்படும் - சில ஷெய்குமார்கள் மகாமாதுகளைக் கவ சிப்பதை விட்டுவிட்டு ஹக்குத ஆலாவுடன் கலப்பற்ற ஹூளுரையே - ஐக்கியத்தையே அபிவிருத்தி செய்து கொண்டிருந்தார்கள். ஆகவே, சிலருக்கு ஒவ்வொரு நாளிலும், சிலருக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமை டிவம். சிலருக்கு ஒவ்வொரு மாதத்திலும், சிலருக்கு ஒவ்வொரு வரு வருஷத்திலும், இன்னும் சிலருக்கு வயது பூராவிலும் ஒரு விடுத்தமே ஐக்கியம் உண்டாகியிருந்தது. இன்னும் சிலருக்கு ஒரு நே ர மு ம்

கல்வத்தின் இரகசியங்கள்
29
ஐக்கியம் ஏற்படாமலும் இருந்தார்கள். எவர்கள் தங்களின் சுவாசத்தை பேணிக்கொண்டார்களோ அவர்களுடைய வக்தும், ஸாஅத்தும் - நேர மும், காலமும் பாதுகாக்கப்பட்டுவிடும்; எவர்கள் அப்படிக்கல்லையோ அவர்கள் எல்லாவற்றையும் பழுதாக்கியவர்களாவார்கள். மனிதனு டைய உயரிய ஊக்கத்தைக் கொண்டேதான் அவனுடைய வ க் து, மர்தபா - நேரம், பதவி, அறிவு வரிசையை மதிப்பிடப்படும். எவன் ஊக்கமில்லாமல் இறைவழி நடப்பதற்கு அடி எடுத்து வைக்கிறானோ அவனுக்கு உவமானம் முடவன் வேலை செய்வதற்கு நாடுவது போலா கும். எவன் சுவர்க்கத்தை ஆதரவுவைத்து இபாதத்து செய்கிறானோ அவன் ஆபிதும் ஸாஹிபுல் மின்பறும் - வணக்கவாளியும் சுவர்க்கத்தில் பதவியுடையவனுமாவான். அவன், நாம் விபரித்து வந்த வெளிப் பாடுகளை எல்லாம் விட்டும் நிர்ப்பாக்கியசாலியாவான். இதேபோல் எவன் முகஸ்துதிக்காக இபாதத்துச் செய்கிறானோ அவன் சுவர்க்கத்தை விட்டும்; நற்கூலியை விட்டும்கூட பேறு கெட்டவனாவான். எ வ னு டைய மன தில் ஆலமுல் முல்கின் - தூல உலகின் கொளுக்கு அனுவள வாகிலும் எஞ்சியிருக்கிறதோ அவனுக்கு ஆலமுல் மலகூத்தின் - ஆன்ம உலகின் கதவு திறக்கப்படமாட்டாது. எனனுடைய மனதில் ஆன்ம உலகின் கவனம் இருக்கிறதோ அவனுக்கு தெய்வ கடாட்ச ஞானத் தின் வாடைகூட எட்டாது. ஆகவே ஸாலிகின்பேரில் கடமை அவன் அத்துவித சமுத்திரத்தில் போய்ச் சேரும்வரையிலும் பூரண வைராக் கியத்தோடு முகநோக்க வேண்டும். அங்கு போனதும் அவன் ஊக்க மும், வேகமும் ஒடுங்கிப்போகும். அங்கு அவனுடைய சேர் மா ன த் துக்கு முடிவைக் காணமாட்டான். ஏனென்றால் வெளியாகிறவன் - ஹக்குதஆலா ஒ ரு வ னா க வே இருந்தபோதிலும் வெளியாகிற விதங் கள் - வகைகளுக்கு ஒரு முடிவுமேயில்லை. ஆ கை யா ல் வாஸிலாகிய வன் - இறைவன் சன்னிதானத்தில் சேர்ந்தவன் எப்போதும் தாகித்த வனாகவும் அச்சமுடையவனாகவுமே யிருப்பான். (ஒவ்வொரு காட்சியி லும் புதிது புதிதான சுகமும், ஆனந்தமும் கிடைப்பதனால் தாகித்த வனாகவும், எங்கு காட்சி நின்றுபோய் விடுமோவென்று பயந்தவனாக வுமிருப்யான்) அமல் செய்கிறவர்கள் இம்மாதிரியான அமல்களையே செய்யவேண்டும், அவேட்கை வைப்பவர்கள் இவ்விதமான பாக்கியங் களையே அவேட்கை வைக்கவேண்டும். சர்வபுகழும் அகில உலகத்தை யும் வளர்க்கும் நாயனுக்காக இருக்கும்.
இந்த நூலை ஹிஜ்ரி 602-ம் வருடம் யூனான் தேசத்து கூனியா என்னும் ஊரில் நமது சகோதரர் ஒருவருக்காக எழுதினோம் என்று செய்குனா முஹிய்யத்தீன் இப்னு
அறபி (றலி) அவர்கள் சொன்னார்கள்.
ஆமீன்.

Page 20
அல்மதத் - யா அப்துல் காதிர்
யாஷெய்கி - லா தன்ஸானி.
ஹாமீம்
கௌவ்து நாயகத்தின் பேரில் துதியும்,
ஹிஸ்புல்லா சபைத் தலைவர் அஸ்ஷெய்கு காமி லொலி ஸெய்யிதினா ஷெய்கு அப்துல் |
காதிர் R 9பியில் காதிரியி 1 அவர்கள் மீது இயற்சிய சலாம் பைத்துமாகும். 4 இது எஸ். பி. எஸ். முஹம்மது ஸதகதுல்லாஹ் அவர்களால்
1860-ல் வெளியிடப்பட்டது |
துதி 1
வரவேணும் வேணு மெனை த்தேடி
நித்தம் மன திறங்கி தரவேணும் வேணு நல்வெற்றியும் புத்தியும்
ஐந்து வாகரந் தந்துலகில் , இரவேணும் வேணுமிவ் வெளி யோனைக்காக்க
இறங்கி யென்பால் ! மறையோர்கள் போற்றும் பச்சை குயில்வாடை
வள்ளல் யாமுஹியித்தீனே.

பிஸ்மில்லாஹில்காதிர்
ஸ்லாம் பைத்து
யாவலீ ஸலாம் அலைக்கும் யாசித்தீக் ஸலாம் அலைக்கும் யாசூபீ ஸலாம் அலைக்கும் ஷெய்கனா ஸலாம் அலைக்கும்
11. எப்புகழுக்குடையோன் யாஹ
எம்மிறசூலுக்கே ஸலாமும் ஹப்புடன் செல்லி துதிப்போம் ஷெய்கனா ஸலாம் அலைக்கும்
2. வேத வொளி மாறாத காயல்
வேதியர் மிகுந்த வாயில் நாதனொலி ஜொலித்த சாயல் ஷெய்கனா ஸலாம் அலைக்கும்
தென் பாண்டிய நாட்டின் சிகரம் தெய் வருள் பெற்றோரின் நகரம் என் நாதன் ஜெனன மகரம் ஷெய்கனா ஸலாம் அலைக்கும்
கம்பேனி அகுமதின் றவத்தில் காமிலாய் வந்து தித்தீர்: ஜெகத்தில் எம்பிணி யகற்றும் அகத்தில் ஷெய்கனா ஸலாம் அலைக்கும்
5,
எம்மிற சூலுல்லாவின் நேசா எம்குது புல் அக்தாபின்வாசா எம்கல்பிணிகுள் போகும் பாசா ஷெய்கனா ஸலாம் அலைக்கும்
அண்ண லவ்லியாக்கள் மிகுந்த அருமை காயல்பதியி லுதித்த அன்பருக் கத்வைதம் வுரைத்த வெய்கனா ஸலாம் அலைக்கும்

Page 21
பாத நிலந் தோயாத நாதர் பார்வையி லமர்ந்த நீதர் வேதமதி மாறாத காதிர் ஷெய்கனா ஸலாம் அலைக்கும்
தவமெல்லாம் தவ்ஹீதை நாட்டி திசை யெல்லாம் மெய்யறிவைவூட்டி உலகெல்லாம் உய்வழியை காட்டி ஷெய்கனா ஸலாம் அலைக்கும்
கஸ்தூரின் வாசங் கமழும் காரணரின் மகிமை இகலும் துஸ்டரின் குபிரை யெதிரும் ஷெய்கனா ஸலாம் அலைக்கும்
10. காட்சியாம் குருகௌவ்தின் பாதம் கண்டேனும் புயத்தின் மீதாம் சாட்சியாம் சர்தாரின் றூஹாம் ஷெய்கனா ஸலாம் அலைக்கும்
7. கன்மம் நீக்குங் காமி லொலியே
கவலை போக்குங் காதி ரொலியே துன்பம் தீர்க்குந் தூத னொலியே ஷெய்கனா ஸலாம் அலைக்கும்
(3 தரம்)
12. நிலமில்லா நபி நாத ரகத்தில்
நிலை பெற்றீர் குருநாதர் பதத்தில்
அழிவில்லா பெருமானின் தலத்தில் ஷெய்கனா ஸலாம் அலைக்கும்
13. சற்குருவே தவ மெய்க் குருவே
சதக்கினை கண் பாரும் வுருவே விற்குருவே மெய்ஞ்ஞான குருவே ஷெய்கனா ஸலாம் அலைக்கும்.
(ஆமீன். ஆமீன். யாரப்பலாமீன்)
*

தமிழ்நாடு, நெல்லை மாவட்டம், அழகியமணவாழபுரம்,
ஆள்வார்த்திருநகர் வாசியுமாகிய கொழும்பு மாநகர், வாழைத்தோட்டத்தில் வாழ்ந்த புலவர் கோமான், சங்குசக்கரப் புலவர் எனப் புகழ்பெற்ற
அலியார் அவர்களின் மெஞ்ஞானப் பாடலிலிருந்து
விருத்தம்
உண்மையது உறுதி உள்ளார்க்குண்மையாகும்
உறுதியில்லார்க்குண்மையது சற்றுமில்லை உண்மையதும் உறுதியதும் ஒன்றேயாகும் உகந்த வர்க்கு உறுதியது ஹக்கேயாகும் உண்மையதும் உறுதியதும் உயிரும் மெய்யும் ஓகோகோ அறியார்கள் அறியமாட்டார் உண்மையதை உற்றுணர்ந்து பார்த்துப் பார்த்து உலகமதில் அஞ்ஞானம் பொய்யென்றேனே,
பல்லவி
வெறும் பொய் அஞ்ஞான மென்பது (ம்) யான் சொல்வதுண்மை - வெறும் பொய் அஞ்ஞானமென்பதும்
"அனுபல்லவி
அருள் பெற்ற செய்குமார்கள் அணுவென்றும் சொல்லுவார்கள் பொருள் தெரியாத பேர்கள் போபோ அய்ந்து பூதமென்பார்கள்
(வெறும் பொய் அஞ்} ஹாவென்றதோர் கண்னியானவள் ஹ வெண்ற பூவில் அங்கு வந்துறைந்து நின்றதும் ஹி எனவே உட்புகுந்ததும் குள்ளென்றமைந்து குன்பயக்கூனென் றெழுந்ததும் வாபு ஹேயும் ஒன்றாய்க் கூட்டி - வகை

Page 22
யறிந்து பார்க்கும்போது ஹே. யெனும் ஹல்கானதில் ஹக்கானதும் நானாயிருக்க (வெறும் பொய் அஞ்) அலிபுடன்லாம் ஹேயும் மீமையும் அதினுடனே அற்புதமாய்வந்த தாலையும் அலிபுகள் எநிந்து ஐந்தையும் மடக்கிபார்க்க மாடயேடை யான வீட்டையும் தேடன வலம்புரிக்குள் தேடி எங்கும் பார்க்கும் போது தேவனும் நானாயிருக்கக்
(வெறும் பொய் அஞ்) எத்தனையோ கோடி மாந்தர் இறந்து போனார் இத்தகமை கண்டறியார்கள் சூஸ்திரத்தில்
ஹக்கை கண்டவர் மிகபெரியோர் தொல்லுலகில் மெத்தநல்லவர் கத்தனை போல் கொற்றவர்கள் ஹகீகத்து கண்ணாடி யானோர் உத்தமொளி யானலியார் உண்மை சொன்னேன் கண்டறிவீர்.
(வெறும் பொய் அஞ்)

அறிவுரை
அறிந்துகொள்!
திக்ராகிறது ரஹ்மானை பொருத்தமாக்கும். ஷைதானை வருத்தமாக்கும். மேலும் ஷைதானுடைய கோட்டைகளை உடைத்து அவனுடைய ப ட் டா ள ங் க ளை முறியடித்து விரட்டிவிடும்." மனக் கவலையைப் போக்கி சந்தோஷத்தை யும் ஆனந்தத்தையும் கொடுக்கும், உடலையும் - மனதையும் உறுதியாக்கும். அகத்தையும், முகத்தையும் பிரகாசமாக் கும். திக்ரு செய்கிறவனை கண்டவர்கள் அ ஞ் ச ச் கூ டி ய விதத்தில் அவன் முகத்தில் கம்பீர தோ ற்றத்தைக் கொடுக் கும். இரணத்தை அதிகப்படுத்தும். திக்ரு செய்கிறவனோடு மருகுதலாக இருப்பவன் சீதேவியாவான் அவனுடன் இருப் பவனும் மூதேவியாகான், அழுகையோடும், சஞ்சலத்தோ டும் திக்ரு செய்வதாகிறது கியாமத் நாளில் அர்ஷுடைய நிழழில் உட்காரும் பாக்கியத்தை பெற்றுக்கொள்ள காரண மாகும். திக்ராகிறது அதில் ஈடுபட்டவனுக்கு விலாயத்து கிடைக்கும் என்பதற்கு அடையாளமாகும்.
- ஷெய்கு நாயகம்.

Page 23
கிடைக்குமிடங்கள்:
இஸ்லாமிக்
வை. எம். எம். ஏ.
323, ஜம்மா ம
மாளிகா கொழும்பு தொலைபேசி:
சொய்ஸ்
67, மெயில்
கல்மும்
சபீனா 20, பிரைஸ்
கொழும்பு தொலைபேசி:
ஹாதி புத்த
79, தெமடெ
- கொழும்! - தொலைபேசி:
பர்வின் 1 116 - 1/0, கு
புறக்கோ
கொழும்! தொலைபேசி:
Shabeena Press, 20, Price Place,

புக் டிரஸ்ட் தேசிய கவுன்ஸில், ஸ்ஜித் ரோட், பத்தை, 4 - 10, - 92312
பலஸ் ன் வீதி,
பிரஸ் - பிளேஸ்,
பு .12.
28734
க நிலையம் கொட வீதி,
பு - 9. 597768
டிரேடர்ஸ்
மார வீதி, ட்டை, பு - 11,
22 068
Colombo:12 Phone: 28374