கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைக்கேசரி 2012.10

Page 1
கலைக்0
ASHIt
CULTURE
- HERITAGE
TRADITION
EVENTS VOLUME : 03 ISSUE : 10. Registered in the Departner
பொலன்னறுவை சைவ,வைணவக் கோயில்கள்
www.kalaikesari.com / OCTOBER 2012
INDIA.............INK 100.00 SRI LANKA.SLR 200.00 SINGAPORE.sG$ 14.00
CANADA..
...... AUSTRALIA...! SWISS...

KALANKESARI
கேசரி
IN
- INTERVIEWS
ENTERTAINMENT -- Lan1 ITI) New5 22
ஐரோப்பியர் கால வெளிச்சவீடுகள்
} {}}. 434
Stil991)
CAN$ 10.00 \US$ 10.00 CHF 10.00
USA.........US$ 10.00 UK............GB£ 6.00 EUROPE..EUE 7.00

Page 2
9

இலங்கையின் அரவணைப்புடன் கூடிய
புன்முறுவலை கண்டறியுங்கள்!
அது பல்லாண்டு காலமாக எண்ணற்ற இதயங்களை அரவணைத்த பெருமைமிக்க ஒரு பாரம்பரியத்தின் பகுதியாகும்.
லங்கையிலுள்ள நாம் ஒவ்வொரு பயணத்தையும் றக்க முடியாத அனுபவமாக மாற்ற நேசத்துடன் கூடிய தனித்துவமான பண்பினை அதி நவீன தொழிநுட்பத்துடன் இணைத்துள்ளோம்.
அழையுங்கள் 1979
Srilankan
www.sianan.com
Airlines You're our world

Page 3
LI?
ர்ட 2 = 1
ட!
'FE5 1 E.
11 ETA)
41.2-
.
கோயம்
டாப் :
ரிய
டியம்
பாடப்
பெருமையாய் பெருமிதமாய் வலம்வர...
ப: 2- 2

Impact Solutions - adimpact@sltne
நூலகம்
1- 2 -ம் 1
எசமாகி விடு Hாரிபs98
பா ;
பி61 31பS Uபெபபப..
இடப் 2 ய 1 2 )
12
442 ஆர் ஏ டீ மெல் மாவத்தை, கொழும்பு 3 தொ.பே. 2 577 451-2 105 செட்டியார்தெரு, கொழும்பு 11 தொ.பே: 2 323 691, 2 431 993
www.lalithajewellers.lk

Page 4
33

அட்டைப்படம்:
மியான்மாரில் உள்ள ஷ்வெஸிகன் ஆலயம்
உள்ளடக்கம்
பொலன்னறுவை
சைவ, வைணவக் கோயில்கள்
14
இந்து ஆலயங்களில் பாரம்பரிய இசை வடிவங்கள்
18
இலங்கையில் பல்கலைக்கழகத்தின் தோற்றமும், வளர்ச்சியும்
பனையும் தமிழர் வாழ்வும்
62
கண்டி இராச்சியத்தின் காவலரண் தெவனகல குன்று

Page 5
PUBLISHER Express Newspapers (Cey) (Pvt) Ltd. 185, Grandpass Road, Colombo 14, Sri Lanka. T.P +94 117767700 www.kalaikesari.com EDITOR Annalaksmy Rajadurai luxmi.rajadurai@yahoo.com SUB EDITOR Bastiampillai Johnsan johnsan50@gmail.com
MEDIA CO-ORDINATOR Pragash Umachandraa CONTRIBUTORS Prof. C. Pathmanathan Prof. S. Siyalingaraja Prof. P. Pushparatnam Prof. Saba Jeyarasa Dr. Manonmani Shanmugadas Mrs. Vasantha Vaithyanathan Mrs. Pathma Somakanthan Mrs. Shamila Ranjithkumar Ms. Subashini Pathmanathan Mrs. Viviyan Sathyaseelan PHOTOS Joy Jeyakumar Dushiyanthini K. Sabita N. L. Athiran Thev J. Sujeewakumar LAYOUT
S. A. Eswaran ICT S. T. Thayalan ADVERTISING A. Praveen marketing@virakesari.lk CIRCULATION K. Dilip Kumar SUBSCRIPTIONS J. K. Nair subscription@kalaikesari.lk PRODUCTION L. A. D. Joseph
ISSN 2012 - 6824
கலைக்கேசரி வாசகர்
நலந்தானே! இலா திரும்பியிருக்கும் இக் இலங்கைப் பல்கலை பல்கலைக்கழகச் சங். நிராகரிக்கப்பட்டவேன. தருமாறு கோரி 6ெ அருணாசலம் அவர்கள்
இப்பெருந்தகையும் அவர்களும் கல்வி பல்கலைக்கழகமாக ! பரமேஸ்வராக் கல்லூ நிறுவி கல்வித்துறை அவர்கள்.
| 'இலங்கைப் பல்க அருணாசலம் அவர்க கணிக்கப்பட்டவர்.
1942 ஆம் ஆண் கல்லூரியின் முதலாக கல்லூரி மாணவர்க பல்கலைக்கழக வேன வகையில் உங்களை கொள்ளத்தக்கது. இவ் இருப்பதும் குறிப்பிட உங்கள் சிந்தனைக்கு எம்முடன் உங்கள் கரு
நன்றி வணக்கம்
அன்புடன்
அனட் te.. இ
October, 2012

ஆசிரியர் பக்கம்
இலங்கை பல்கலைக்கழக இயக்கத்தின் தந்தை'
களுக்கு வணக்கம்.
ங்கை பல்கலைக்கழகங்கள் மீதும் இந்நாட்டு மக்களின் கவனம் காலகட்டத்தில் இற்றைக்கு 106 வருடங்களுக்குமுன் (1906) க்கழகம் ஒன்றை நிறுவக்கோரும் இலட்சியத்துடன் இலங்கை கம் நிறுவப்படுவதற்கும் பின்னர் பல்கலைக்கழகக் கோரிக்கை மள, இலங்கை பல்கலைக்கழகக் கல்லூரி ஒன்றை நிறுவித் வற்றி கண்டவருமான பெருமகனார் சேர். பொன்னம்பலம்
ளை நினைத்துப் பார்ப்பது பொருத்தமானதே. » அவர்தம் உடன் பிறந்த சகோதரர் சேர். பொன் இராமநாதன் க்காற்றிய சேவை நாடறிந்தது. எதிர்காலத்தில் ஒரு மாற வேண்டும் என்னும் தூர சிந்தனையில் திருநெல்வேலி ரியை நிறுவியதுடன், சுன்னாகம் இராமநாதன் கல்லூரியையும் மக்கும் அருந்தொண்டாற்றியவர் சேர்.பொன் இராமநாதன்
லைக்கழக இயக்கத்தின் தந்தை' எனப் பெயர்பெற்ற சேர்.பொன் ள் "சுயபாஷைக் கல்வி' என்ற கோட்பாட்டின் தந்தை எனவும்
டு அப்பெரியார் அமரரானபோது, இலங்கைப் பல்கலைக்கழக வது அதிபரான பேராசிரியர் மார்லப் அவர்கள், பல்கலைக்கழகக் Dள அழைத்து 'உண்மையான அதன் அர்த்தத்தில் இலங்கைப் மலத்திட்டத்தின் தந்தையின் நினைவுக்கு மரியாதை செலுத்தும் நான் அழைத்திருக்கிறேன்' எனக் குறிப்பிட்டதும் நாம் நினைவில் விடயம் தொடர்பாக கலைக்கேசரியில் ஒரு கட்டுரை வெளியாகி த்தக்கது. அத்துடன் அறிஞர்களின் வேறுபல கட்டுரைகளும் த விருந்தாக காத்திருக்கின்றன. வாசித்துப் பயன்பெறுங்கள். கத்துகளைப் பகிர்ந்து கொள்ளலாமே!
238 கேகாழும்பு தமிழச் சங்கம்
நாலசம்

Page 6
ே
கலைக்கேசரி 2 06 வாழ்வியல்
யாழ்ப்பாணப் பண்பாடு:
மறந்தவையும் 11
IIாழ்ப்பாணத்துப் பண்பாட்டில் ஏடு தொடக்கல்
நிகழ்வுக்குப் பின்னர் குறிப்பிடக் கூடிய பிரதான
சடங்காக அமைவது பூப்புநீராட்டற் சடங்கு எனலாம். பொதுவாகப் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அவரவர் குடும்பப் பின்னணிக்கும் வசதிக்கும் ஏற்ற வகையிலே கொண்டாடப்படுவதுண்டு. பிறந்தநாள் கொண்டாட்டத்தினை வாழ்வியல்சார் சடங்கு எனக் கொள்ள முடியாது.
பெண் பிள்ளைகள் பூப்படைதல் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சமூகத்திலே பிரதானமாகக் கருதப்படுகின்றது. பொதுவாகத் தமிழ்மக்கள் மிகப் பழங்காலத்தில் இருந்தே பூப்பு நிகழ்வைச் சடங்காகக் கொண்டாடி வந்துள்ளனர். பெண் பிள்ளையின் முக்கிய வளர்ச்சிக்கட்டமாகப் பூப்படைதலைக் குறிப்பிடலாம். பெண்பிள்ளை தாய்மைப் பேற்றிற்குத் தயாராகியமையை பூப்புப் புலப்படுத்தி நிற்கின்றது.
இன்று பெருவழக்காக வழங்கும் 'பூப்பு' என்ற சொற் பயன்பாடு சிலகாலத்திற்கு முன்னர் 'சாமத்தியம்' என்றே வழங்கி வந்தது. இன்றும் இவ்வழக்கு உண்டு. இத்துடன்

மறைந்தவையும்
ன.
பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா
பூப்படைதலை புத்தியறிதல், பெரியபிள்ளை ஆதல், வயதுக்கு வருதல் என்று குறிப்பிடுவதும் உண்டு. உதாரணம்: (புத்தியறிஞ்சிட்டாள், பெரியபிள்ளையாகி விட்டாள், வயதுக்கு வந்திட்டாள்) இந்த ஒவ்வொரு சொற்களுக்கும் உரிய பொருள் ஒன்றாகவே இருக்கின்றது எனலாம். இவ்வளவு நாளும் சின்னப்பிள்ளையாக இருந்தவள் இப்போது (இனி) பெரியபிள்ளையாகி விட்டாள் எனக் கருதுவதன் வெளிப்பாடாகவே இவற்றைக் கொள்ள வேண்டும்.
பழந்தமிழ் இலக்கியங்களிலும் பெரியபிள்ளை ஆகியமையைக் குறிக்கும் செய்திகளும் உள்ளன. உதாரணமாகப் பேதையல்லை மேதயங்குறுமகள் என்பதைச் சுட்டிக் காட்டலாம். இவை தனியான ஆய்வுக்குரியவை.
பூப்புச் சடங்கு கருவளச் சடங்குடன் தொடர்புடையது என்பர். பொதுவாக பதினொரு வயது தொடக்கம் பதின் மூன்று வயதுக்குள் பெரும்பாலான பிள்ளைகள் பூப்பு அடைந்து விடுவார்கள். (இதற்கு விதிவிலக்கும் உண்டு)
பிள்ளை பூப்படைந்து விட்டது என்பதை பெற்றோர் அறிந்ததும் முதலிலே தாய்மாமன், மாமிக்குச் சொல்லி
அனுப்புவார்கள். தாய்மாமன் சலவைத் தொழிலாளிக்கு இச்செய்தியைச் சொல்லி அனுப்புவார். சலவைத் தொழிலாளி மனைவியுடன் சமூகமளிப்பார்.
பிள்ளைக்கு முதலிலே 'குப்பைத் தண்ணீர் வார்த்தல் நிகழ்வு நடைபெறும். நேரடியாக பிள்ளையைக் கிணற்றடிக்குக் கூட்டிக் கொண்டு போக மாட்டார்கள். வளவுக்குள் குப்பை போட்டிருக்கும் இடத்தில் (குப்பை இல்லாதுவிட்டால் சிறிதளவு குப்பையை கொண்டு வந்து போட்டு அதற்குமேல் நிற்க வைத்து) பிள்ளையை நிற்க வைத்து
பிள்ளையை முழுக வார்ப்பார்கள். குப்பைத் தண்ணீர் வார்த்தல் 'தலைத்தண்ணி வாத்தல்' என அழைக்கும் வழக்காறு சில
இடங்களில் உண்டு.
பெரும்பாலும் மாமியே குப்பைத் தண்ணியை வார்ப்பார். (தாய்மாமனின் மனைவி அல்லது தகப்பனின் சகோதரி) மாமி பிள்ளைக்கு குப்பைத்

Page 7
தண்ணீர் வார்க்கும் பொழுது பூப்படைந்த பிள்ளையை பலவாறாக வாழ்த்தியே தண்ணீரை வார்ப்பார். இன்று இந்தப் பழக்கம் முற்றாக மறைந்து விட்டது. குப்பைத் தண்ணீர் வார்க்கும் இடத்திற்குப் பெரும்பாலும் ஆண்கள் செல்வதில்லை. குப்பைத் தண்ணீர் வார்த்து தலையை உணர்த்தி சலவைத் தொழிலாளி வழங்கிய சிற்றாடையை உடுத்தி வீட்டுக்குள் கூட்டி வருவார்கள். வீட்டுக்குள் ஒதுக்குப்புறமான ஒரு இடத்திலே பாய்போட்டுத் தலை மாட்டுப் பக்கம் இரும்பாலான பொருள் ஒன்றை வைப்பார்கள். இரும்பு இருந்தால் பாதுகாப்பு (அடுத்த ஆவிகளிடமிருந்து) என்ற நம்பிக்கையும் இருந்தது. வேப்பிலையை வைப்பதும், வேப்பிலையை சப்பித் துப்பக் கொடுப்பதும் சில இடங்களில் உண்டு. பிள்ளை பூப்பு அடைந்ததும் உடனடியாக கத்தரிக்காயை இடித்துப் பிளிந்து கொடுப்பார்கள். கத்தரிக்காய்ச் சாற்றினுள் நல்லெண்ணெய் விட்டுக் கொடுப்பதும் உண்டு. குப்பைத் தண்ணீர் வார்த்துக் கொண்டு வந்ததும் சூடான பானத்தையே கொடுப்பார்கள். பெரும்பாலும் கோப்பி (சில இடங்களில் முட்டைக் கோப்பி) கொடுப்பார்கள்.
பூப்படைந்த பிள்ளைக்கு விசேடமான உணவுகள் தயாரித்துக் கொடுப்பார்கள் (ஓரளவுக்குப் பத்திய உணவு போல) பூப்படைந்த பிள்ளைக்கு (தாய் அல்லது தகப்பனின் தாய்) பாட்டிமாரே பத்திய உணவுகளை பக்குவம் பண்ணிக் கொடுப்பார்கள். முதிய பெண்கள் இதிலே கை தேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
பூப்படைந்த பிள்ளைக்கு
உளுத்தம்மாவில் செய்யப்பட்ட களியே முக்கியமானதாகக் கருதப்படும். அத்துடன் நல்லெண்ணைய் பயன்பாடும் அதிகமாக இருக்கும். பெரும்பாலும் காலையில் முட்டைக்கோப்பி கொடுப்பார்கள். மத்தியானம் சரக்கு அரைத்துச் சிறிது மீன்களைப் போட்டுக் கறியாக்கிக் கொடுப்பார்கள். மாமிசம் சாப்பிடாதவர்கள் பிஞ்சுக் கத்தரிக்காய், பிஞ்சு முருக்கங்காய் முதலியவற்றைப் பயன்படுத்துவார்கள். பெரிய பிள்ளையான பிள்ளைக்கு உணவு தயாரிப்பதே யாழ்ப்பாணத்து மூதாட்டிகளுக்கு ஒரு கலையாக இருந்தது. வெளியே தெரியாத (மறைப்புக் கட்டிய) இடத்திலே தான் பிள்ளைக்கு உணவு வழங்குவார்கள். மற்றவர்கள் பார்க்க உணவு கொடுக்க மாட்டார்கள். பச்சைத் தண்ணீர் குடிக்க
அனுமதிக்க மாட்டார்கள்.
பெரிய பிள்ளையானால் பத்திய காலத்திலே தண்ணீர் குடித்தால் உடம்பு ஊதும் (பருக்கும்) வண்டி வைக்கும் பின்னர் பிள்ளை திருமணமாகி குழந்தைப் பேறை அடையும் காலத்திலே சிரமப்படும் போன்ற நம்பிக்கைகள் இற்றைக்குச் சில காலங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணப் பிரதேசத்திலே நிலவியமையும் குறிப்பிடத்தக்கது.
பிள்ளை பெரியபிள்ளை ஆகிய நாள், திதி, நட்சத்திரம் என்பவற்றைக் குறித்துவைத்து பலன் பார்க்கும் வழக்கமும் இருந்தது. பிள்ளை ருதுவான நாள் நட்சத்திரத்தை வைத்து குறிப்பெழுதி வைக்கும் வழக்கமும் சில இடங்களில்

表面面历B5日
、
tius=T;" |

Page 8
கலைக்கேசரி
08
TாLைD
இருந்தது. பிள்ளை பெரியபிள்ளையாகிய மாதம், நாள், நேரம் முதலியவற்றைக் கருத்திலே கொண்டு அவர்களது எதிர்கால வாழ்க்கையைப் பற்றிய பலன்களை யாழ்ப்பாணத்து முதியவர்கள் வாய்மொழியாகக் கூறுவார்கள். அவை எழுத்திலே பதியப்பட்டதாகத் தெரியவில்லை.
பிள்ளை பூப்பு அடைந்த நாளில் இருந்து 9, 11, 15, 19, 21 என ஒற்றைப் பட்ட நாள் வரும் ஒரு நல்ல நாளிலே பூப்பு நீராட்டற் சடங்கு (சாமத்தியச் சடங்கு) நடைபெறும். இப்போது இந்த நடைமுறை கவனிக்கப்படுவதாகத் தெரியவில்லை. பூப்பு நீராட்டலுக்கெனத் தனியாகப் பஞ்சாங்கத்திலும் குறிப்பிடப்படாமை அவதானிக்கத் தக்கது.
பூப்பு நீராட்டற் சடங்கு நடைமுறைகள் இன்று பல மாற்றங்களைக் கண்டுள்ளன. அடிப்படையில் புகைப்படக் கலையோடு மாறத்தொடங்கிய இந்த மரபுமுறையை வீடியோ படப்பிடிப்புடன் பாரிய மாற்றங்களைக் கொண்டுள்ளது. வீட்டிலுள்ள முதியவர்கள், அனுபவசாலிகள், சலவைத்தொழிலாளி முதலானோரின் வழிகாட்டலில் நடைபெற்ற சடங்குகள் இன்று புகைப்பட, வீடியோ கலைஞர்களின் வழிகாட்டலிலே தான் பெரும்பாலும் நடைபெறுகின்றது.
குப்பைத் தண்ணீர் என்னும் பூப்புச் சடங்கு (பூப்புநீராட்டு) இன்று பூப்புனிதநீராட்டு என வழங்குவதும் குறிப்பிடத்தக்கது. பூப்பு நீராட்டு என்ற பதப்பிரயோகமே பொருத்தமானதும் சரியானதும் என்பது நமது கருத்து.
பூப்பு அடைந்த பிள்ளையை காலையிலே வெளியே அழைத்துவந்து (அன்றுதான் பிள்ளை முதன்முதலாக வெளிமுற்றத்திற்கு வரும்) ஒரு பலகையிலே இருத்திப் பாலறுகு வைப்பார்கள். பிள்ளை வரும்போது வெற்றிலையைச் சுறுட்டிக் கொடுத்திருப்பார்கள். முற்றத்தில் அல்லது கிணற்றடியில் உறவினர்கள் சூழ்ந்திருப்பார்கள். குறிப்பாக தாய்மாமன், மாமி, பேரன், பேத்தி முதலான இவர்களுடன் சலவைத்தொழிலாளியின் மனைவியும் பிரசன்னமாயிருப்பார். தட்டத்திலே பாலும் அறுகும் இருக்கும். முதலிலே தாய்மாமன் பின்னர் தாய், தகப்பன் எனத் தொடங்கி பால் அறுகு வைப்பார்கள். பால் அறுகு வைத்திருக்கும் தட்டத்திலே சில்லறைக்காசு போடும் வழக்கமும் சில இடங்களிலே இருந்தது. அதிலே போடப்படும் பணம் சலவைத்தொழிலாளிக்கு உரியதாகும்.
கிணற்றிலே நீரை அள்ளித் தாய்மாமன் மூன்று வாளி (பட்டை) தண்ணீரை ஊற்றுவார். தொடர்ந்து உறவினர்கள் ஊற்றுவார்கள். இன்று இந்த வழக்கம் அருகிவிட்டது. தொட்டியிலே நீரை நிறைத்து அதிலே பிள்ளையை நீராட விட்டு வீடியோ படம் பிடிக்கும் வழக்கமே இன்று அதிகமாகக் காணப்படுகின்றது. நமது பண்பாட்டிலே பல சடங்காசாரங்கள் மறைந்தும் மறந்தும் போனமைக்கு நவீனத்துவத்தின் வருகையும் ஒரு காரணம் என்பதை இந்த
வீடியோ கலாசாரம் இன்று நிறுவிக்கொண்டிருக்கின்றது.

பிள்ளைக்குத் தண்ணீர் வார்த்ததும் வீட்டினுள் (விறாந்தை அல்லது ஹோல்) இருத்திக் குருக்கள் வந்து புண்ணியதானம் செய்து துடக்குக் கழிப்பர். இதன் பின்னர் பெண்ணை அலங்கரித்து பூப்புச் சடங்கு மண்டபத்திற்குத் தாய்மாமன், மாமி, மச்சாள்மார் சகிதம் அழைத்து வருவார்கள். இன்று வீடியோ, சினிமாக் கலாசாரத்தினால் இந்நிகழ்வு மிக ஆடம்பரமாகக் கொண்டாப்படுகிறது.
இந்த முறைமைகள் இற்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன் இருந்ததில்லை. யாழ்ப்பாணத்திலே சினிமா, மேலைபுலச் செல்வாக்கு முதலியவற்றாலே பூப்புச் சடங்கு அடையாளம் காணமுடியாத பல மாற்றங்களைக் கண்டுவிட்டது. சிறுமிகள் மலர்த் தட்டு ஏந்தி வருவதும் யுவதிகள் குத்து விளக்கு ஏந்தி வருவதும் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் முன்னர் இருந்ததில்லை. பூரணகும்பம் (நிறைகுடம்) முக்கியமானதாகக் கருதப்பட்டது.
பூப்பு அடைந்த பெண் பிள்ளையின் கையிலே நிறைநாழி கொடுத்திருப்பார்கள். வீட்டில் பாவனையில் இருந்த

Page 9
ரன்
மரத்தாலான கொத்தினுள் நிறைய நெல்லைப்போட்டு அதன்மேல் சத்தகக் காம்பு (முன்னர் எழுத்தாணியே) ஒன்றை நாட்டி அதிலே வெற்றிலை வைத்துப் பிள்ளை கையிலே வைத்திருக்கும். தாய்மாமனின் கையிலே (சால்வையை கோலிப்பிடித்து) அந்த நிறைநாழியைப் பெற்றுக்கொள்ளுவார் மாமியும் உடனிருப்பார். இதற்கு முன்னர் பலவிதமான ஆராத்திகளைச் சுமங்கலிப் பெண்கள் எடுப்பர். ஆராத்திப் பொருட்களாக முன்னர் புட்டு, களி என்பவையே இருந்தன. பூப்படைந்த பெண் தண்ணீர் வார்ப்பதற்கு முன்னர் சாப்பிட்ட சாப்பாடுகளையே (புட்டு, களியில் பல வகை) ஆராத்தியாக எடுப்பர். இந்த அராத்திப் பொருட்கள் யாவும் சலவைத்தொழிலாளிக்கு உரியதாகும்.
இன்று பல வகையான ஆராத்திகள் புதியதாகப் புகுந்துள்ளன. உதாரணமாகப் பூத்தட்டு, பழவகை, தேங்காய் முதலியவற்றைச் சொல்லலாம்.
ஆராத்தி எடுத்து முடிந்ததும் மூதாட்டி ஒருவர் வேப்பிலை சகிதம் வந்து கண்ணூறு கழிப்பர். தட்டிலே பரவி வைக்கப்பட்ட பலகார வகைகளை முதலிலே பிள்ளையின் தலையைச் சுற்றி நான்கு திசையும் எறிவர். பின்னர் வேப்பிலையாலே கண்ணூறு கழிப்பர் இன்றும் இந்த வழக்கம் இருக்கிறது. பூப்புச் சடங்கு நடைமுறைகள் யாழ்ப்பாணக் குடாநாட்டினுள்ளேயே இடத்திற்கு இடம் வேறுபட்டும் மாறுபட்டும் உள்ளமையைக் கண்டு

, கலைக்கேசரி
09
கொள்ளலாம். சில பொதுவான அம்சங்களையே இங்கு குறிப்பிட்டோம். பூப்புச் சடங்கு அடைதல் கருவளச் சடங்கு என்றே ஆய்வாளர்களால் கூறப்படுகின்றது.
யாழ்ப்பாணக் கிறிஸ்தவர்கள் மத்தியிலும் பூப்புநீராட்டு விழாக்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுவது குறிப்பிடக்கூடிய அம்சமாகும். இந்துக்களின் சடங்கு முறைமைக்கும் கிறிஸ்தவர்களின் சடங்கு முறைமைக்கும் இடையே வேறுபாடுகள் நிறைய உண்டு. அது தனியே ஆராயப்பட வேண்டியது.
இன்று பூப்பு நீராட்டு விழா யாழ்ப்பாணத்தில் புதியதொரு பரிமாணத்தைப் பெற்றுள்ளமையும் குறிப்பிட வேண்டியதே. புலம்பெயர் தேசங்களிலே உள்ளவர்கள் பெரியபிள்ளையாகிய தமது பிள்ளைகளை இங்கு அழைத்து வந்து பெரிய மண்டபங்களிலே அதிக பொருட் செலவிலே பூப்பு நீராட்டு விழாவைக் கொண்டாடுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இது எமது பண்பாட்டின் பலமான அடித்தளத்தையே காட்டிநிற்கின்றது.
சொந்தம், பந்தம், உறவு, நட்பு, அயல் எனப்பலரும் - ஒன்று கூடி மகிழும் கொண்டாட்டங்களிலே பூப்பு நீராட்ட விழா கொண்டாட்டமும் ஒன்றாகும். இன்று புதுமையான பல அம்சங்களை உள்வாங்கி இச்சடங்கு நடைபெறுகின்றது. இதிலே யாழ்ப்பாணத்தின் பலத்தையும் காணலாம். பலவீனத்தையும் தரிசிக்கலாம்.'

Page 10
கலைக்கேசரி தி 10 தொல்லியல்
பொலன் சைவ, வைணம் பொன்
லன்னறுவை சிறப்புற்று விளங்கிய காலத்தில் (கி.பி. 1200 - 1250) அங்கு அமைந்திருந்த பெளத்த நிறுவனங்களும் இந்துக் கோயில்களும் ஒரு பன்முகப்பட்ட,
පොළොන්නරුව ජගත් උරුම නගරය உலகப் பாரம்பரிய நகரம் பொலன்னறுவை WORLD HERITAGE CITY OF POLONNARUVA
3RA ன ம்
හබරනා
இயகம்
toாபைல் ANCAMADELEA
சன் 5 கேர்
3
இல.
(3) துல் ம 230 காதலுக்கா
3ெft
hai Roads dை in அல்
Internal Motor ble Roads දී ම පෙත්
இ-832 கார்
9Val Wayல் 73.வப்
நக்க இக் மார்
Frking 4 වැසිකිළිය
சசி - 6 : ப.
OW WWE கடும் மோதப்பர் இதில்
அதிகம் கவிழ்1norati = கா பவன்
• ප්‍රවේශ පත්‍ර
Ticket 23 ரேம்nேter
Entrance -ல08
11.
- எம்.
- கேம்
මඩකලපුව
மட்டக்களப்பு BATTICALOA
SOMAWATHIYA (பாமாவா, 1ெ91பS
,ஸைல் ல் இரத்த தான) Potgul Veters 2.லைdை ப்ப் பொத்தல் விதரைச் PotguiVehera
லெல்
தலை
Statue ය, රාක්‍රම සමුද්‍රය
* கெட்
ParaRa3 சமுத்திரம்
Samudraya 33%ம்
அரும்பொரு தா.
Museum ஒச 8: ,103)
திப் பதம்
இsand ak 1,3. லை)
பெ රජ මාළිගය
அரசமாளிகை
Royal Palace » කුමාර පොකුණ
தா} -
Kumara Pokuna , චරිත නගරය
லோக்ச.
Outer City
i, 01
சிவன் கோவில் Siva Devate ශිව දේවාලය
No 01 1.9ல்
தலதா முற்றxi Sacred Quadrangle 12. அலை SMS சரும் தாப் Pabalu Vathera 11 17ம் 02
திலக் கோன் Siva Devate ගිව දේවාලය
No 02 1.கலை
மா தாக்கல்
Manik Vehera அப்பப் 15, 2013
ஜகாத்தார் Rankot vehera 032) k, இன், 0ioழ் பிக்குமார்
Monastic Hospital 11 மைல கோபால பபத Gopala Pabbata 10. ன்னை
Saddth:3பேர் 9:33 p:32cd.
1600
Aland .ெ
அ.
3 20. 2)கிழமை தங்காதிலக Lam 2 ஓட கல்லை திரி நகர Kiri) 22.ஏழ்மை தலை காரை Ga! 23.04 அ ஐல தம்புதுnd Dema
Saya க்கை
தரைத்தளம் LA - 3) 2, 3
திதேக சிலை Tvன் පිළිමගෙය
படி
26. 2)
தே.
Naip 3
விகாரை
Nhம் 1. ே3 3:33
முதலாம் சிவாலயம் -

னறுவை வ கோயில்கள்
- தகைசார் பேராசிரியர் சி. பத்மநாதன் பல்லினப் பண்பாட்டு மரபொன்றின் சின்னங்களாக அமைந்திருந்தன. அவை சமூக ஒற்றுமைக்கும் நெருங்கிய பரஸ்பரமான தொடர்புகளுக்கும் ஏதுவாயிருந்தன. சமய மரபுகள், வழிபாட்டு நெறிகள் என்பன சமுதாயம்
பிரிவுகளிடையே பகைமையும் வன்முறைகளும் ஏற்படுவதற்கு ஏதுவாக அமைந்திருக்கவில்லை. வாணிபம், வர்த்தகம், கட்டுமானங்கள் உலோக வார்ப்புமுறை, செதுக்குக் கலை, நிர்வாக இராணுவத் தேவை ஆகியவற்றிலே பௌத்த, சைவ வைணவர் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்தன. இந்த உணர்வின் மூலமே பொலன்னறுவைக் காலத்துப் பண்பாட்டு அம்சங்களை
- நன்கு புரிந்து கொள்ளலாம்.
இரண்டாம் விக்கிரமபாகு (1111 - 1132) இரண்டாம் கஜபாகு (கி.பி. 1132 - 1153) ஆகியோர் சைவசமயச் சார்புடையோர் என்பது மகாவம்சம் மூலமாகவும் சாசன குறிப்புகள் வழியாகவும் விளக்கமாகிறது. அரண்மனையிலே அந்தணரைப் புரோகிதராக நியமிப்பது அக்கால வழமை.
58ச்
eெf |tha
3 atம்
Pond
ika Image
2.
12
ner Palace

Page 11
பொதுவாக வாழ்வியல், தொடர்பான சடங்குகள் வேதாசார முறைப்படியே நடைபெற்றன. சிறப்புகள் நடைபெற்ற காலங்களில் அரசரும் பிரதானிகள் சிலரும் சைவ, வைணவ ஆலயங்களுக்கு சென்று
வழிபாடாற்றியதோடு நன்கொடைகளையும் வழங்கினார்கள். அதுபோலவே சைவ, வைணவ நெறிகளைச் சார்ந்தவர்கள் பௌத்தப் பெரும் பள்ளிகளை அமைப்பதிலும் - அவற்றுக்கு நிவந்தங்களை வழங்குவதிலும் ஈடுபட்டனர். மிகுந்த செல்வமும், செல்வாக்கும் பலமுங்கொண்ட ஐந்நூற்றுவ வணிக கணத்தவர் இவ்வாறான பணிகளில் ஈடுபட்டமைக்குச் சான்றாகப் பல சாசனக் குறிப்புகள் உண்டு.
பொலன்னறுவைக் கோயில்கள் பொலன்னறுவை நகரத்தின் பகுதிகள் பலவற்றிலே சைவக் கோயில்களும் வைணவக் கோயில்களும் அமைந்திருந்தன. ஏனையவை தொகுதிகளாய் இருந்தன. ஐந்து கோயில்கள் நகரில், அரண்களாற் சூழப்பெற்றிருந்த நடுப்பகுதியிற் காணப்பட்டன. தூபாராமம், வட்டதாகே போன்ற பெரும் பௌத்த கோயில்கள் அமைந்துள்ள நீள் சதுர மேடையில் தெற்குப் புறத்தில் முதலாம் சிவாலயம் உள்ளது. நகரத்தின் வடக்கு வாசலுக்குச் சமீபத்தில் மூன்று கோயில்களின் இடிபாடுகள் காணப்பட்டன. சிவாலயம் ஒன்றும் பெருமாள் கோயிலொன்றும் ஒரு பிள்ளையார் கோயிலும் அங்கிருந்தன.
அகழிக்குச் சமீபத்தில் 1885 ஆம் ஆண்டில் நடைபெற்ற அகழ்வுகளின் பயனாகச் செம்மையாக அமைந்த சிறிய கற்றளியாக பெருமாள் கோயிலின் அழிபாடுகள் அடையாளம் காணப்பட்டன. மூல மூர்த்தியான மகா விஷ்ணுவின் வனப்பு மிக்க படிமமும் வேறு பல அழகிய சிற்பங்களும் அவற்றிடையே கிடைத்தன.
வடவாயிற் புறத்தின் வழியே நகருக்கு சமீபமாக வீதியின் வலது புறத்தில் மிகப் பெரிய சைவாலயம் ஒன்றின் இடிபாடுகள் காணப்பட்டன. பிள்ளையாரின் படிம மொன்று அவற்றினிடையே காணப்பட்டதால் அங்குள்ள அழிபாடுகள் பிள்ளையார் கோயிலொன்றின் அழிபாடுகளாதல் வேண்டுமென்று தொல்பொருள் திணைக் களத்தினர் கருதினார்கள். அதற்குத் தெற்கில் 60 அடி தூரத்திலே, சிவாலயமொன்று அமைந்திருக்கிறது. அதனை ஏழாம் சிவாலயமென்று இலக்கமிட்டனர். அதில் அமைந்தி ருந்த இலிங்கத்தின் பீடத்தில் நிசங்கமல்லனது (1186 - 1197) சாசனம் காணப்படுவதால் ஏழாம் சிவாலயம் 13 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமையப் பெற்றது என்று கருதலாம்.
சைவ, வைணவக் கோயில்களிற் பெரும்பாலானவை நகரின் வெளிப்புறப் பகுதியில் இருந்தன. மின்னேரியாவிலிருந்து தொப்பவாவிக்குப் போகும் வீதியில் இரு பக்கங்களிலும் மூன்று கோயில்கள் இருந்தன. அவற்றிலொன்று நான்காம் சிவாலயம்; இன்னொன்று மூன்றாம் விஷ்ணு கோயில்; மூன்றாவது கோயில் அம்மன் அமைந்துள்ளது.

பா: an:19
தேவகோட்டங்களும் அரைத்தூண்களும் "

Page 12
M/

தோப்பவாவியிலிந்து அலுத் - ஓயாவினை நோக்கிச் செல்லும் வீதியில், கிரிவிகாரையின் பக்கமாகப் பிரிந்து செல்லும் மாட்டு வண்டிப் பாதையில், மூன்று கோயில்களின் அழிபாடுகள் இருந்தன. அவற்றுட் கற்றளியான மூன்றாம் சிவாலயம் யோத - எல என்னும் சிற்றாற்றின் வலது பக்கத்தில் சிவாலயம், நான்காம் விஷ்ணு கோயில் என்பன இருந்தன. அவற்றில் இருந்து அரை மைல் தூரத்தில் வடக்கு நோக்கிப் போகும் பாதையில் ஆறாவது சிவாலயத்தின் அழிபாடுகள் காணப்பெற்றன. அதற்குத் தெற்கில் ஐந்தாம் விஷ்ணு கோயில் அமைந்திருந்தது. பொலன்னறுவையில் அமைந்த இந்து கோயில்களிற் பெரும்பாலானவை நகரின் வெளிப்புறங்களைச் சேர்ந்தவை. அவை இரண்டு அல்லது மூன்று கோயில்கள் அடங்கிய தொகுதிகளாக அமைந்திருந்தன. ஒவ்வொரு தலத்திலும் விஷ்ணு கோயிலொன்றும் இருந்தமை
குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
சிவாலயங்களுக்கு மிக சமீபத்தில் பெருமாள் கோயில் அமைந்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். சைவரும் வைணவரும் இவற்றின் சுற்றுப்புறங்களிற் கூடி வாழ்ந்தன ரென்றும் அவர்களிடையே சமய வேற்றுமைகள் அதிகம் பாராட்டப்படவில்லை என்றும் கருதலாம். மேலும் அக்கோயில்கள் சுற்றாடலில் வாழ்ந்த எல்லோரதும் ஆதரவினைப் பெற்றிருத்தல் கூடும்.
- முதலாம் சிவாலயம் நகரின் மத்தியிலே பிரதான பௌத்த கோயில்களுக்குச் சமீபமாக அமைந்திருப்பதனாலும் அதன் கட்டிட வேலைப் பாடுகளின் காரணமாகவும் முதலாம் சிவாலயம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. அதனைப் பற்றி எச். சி. பி. பெல் மேல்வருமாறு வர்ணிக்கின்றார்.
கல்விகாரை நீங்கலாகவுள்ள கட்டிடங்களில் அதுவே பொலன்னறுவையைப் பார்க்கச் செல்வோரின் கூடுதலான கவனத்தைப் பெற்றது. அது முற்றிலும் கற்றளியாக அமைந்த கோயிலாகும். இதுவரை பல வருடங்களாகத் தலதா மாளிகை என்று பிழையாக வர்ணிக்கப்பட்டது. இன்று வரையும் அதனைப் பற்றிப் பொது மக்களிடையே நிலவி வரும் கருத்து அதுவேயாகும்.
அது நாற் கோண வடிவிலமைந்த உயரமான திடலின் தெற்கே, அதற்குச் சமீபமாக அமைந்துள்ளது. இலங்கை, தென்னிந்தியா, காம்போஜம் ஆகியவற்றின் கட்டிடக்கலை அம்சங்களின் கலப்பினை நூதனமாகவும் பொருத்தமான முறையிலும் பிரதிபலிக்கும் பௌத்த கோயில்கள் உள்ளன.
கல்விகாரை அமைந்துள்ள தலத்தில் அகழ்வு வேலைகள் முடிந்தவுடனே இத்தேவாலயத்தின் சுற்றுப் புறங்களை அகழ்வதில் முழுக்கவனமுஞ்
- செலுத்தப்பட்டது. அகழ்வுக்குரிய பருவக்காலம் முடிவதற்கு முன் கோயிலின் வளாகம் முழுவதும் அடியோடு அந்தமாக நிலமட்டம் வரை அகழ்வு செய்யப்பட்டது.
இரண்டாம் சிவாலயத்தைப்போல அதனிலும் சற்றுச் சிறியதும், கூடிய அலங்காரத்தன்மை கொண்டதுமான இக்

Page 13
கோயில் வழமையான மூன்று தனித்தனியான பகுதிகளைக் கொண்டிருந்தது. அவை இணைக்கப்பட்டு ஒரே வரிசையில் அமைக்கப்பட்டுள்ளன. வெளிபுறமாக அமைந்துள்ள மண்டபத்தின் சுவர்கள் உள்ளன. ஆனால் அதன் கூரை சிதைந்து அழிந்து விட்டது. அதற்கு பின்னுள்ள அந்தராளம், கர்ப்பக்கிருகம் ஆகியவற்றின் கூரைகள் கற்பாளங்களினால் அமைந்துள்ளன.
இந்த பாழடைந்த கோயிலின் கட்டிட அமைப்பு திராவிடக் கலை பாணியில் அமைந்த ஒன்றாகும். விமானத்தின் தளங்களும் கல்லினால் அமைந்திருக்கக் கூடியதான அதன் காபோதமும் முற்றாக மறந்து விட்டன. அந்தராளத்தின் மேலமைந்த பகுதி முற்றாகச் சிதைந்து மறைந்து விட்டது. அழிபாடுகளிடையே கற்பாளங்கள் குவிந்து காணப்படுகின்றன. எனினும் அவை அடையாளங் காணப்படவில்லை.
மண்டபத்தின் வாசற்படிகள் இப்போது காணப்படவில்லை. அதன் சுவர்களும் பெரும்பாலும் இடிந்து விழுந்து விட்டன. குழப்பங்கள் ஏற்பட்டிருந்த காலத்திற் கோயில் திறக்கப்பட்டுச் சூறையாடப்பட்ட சமயத்தில் ஓரிரண்டு படிமங்களைத் தவிர மற்றெல்லாம் மறைந்து விட்டன.ஆயினும் பல நூற்றாண்டுகளின் பின்பும் சேதமாக்கப்பட்ட இக்கோயிலின் குறிப்பிடத்தக்களவு பகுதிகள் உன்னமான முறையிலே பாதுகாப்பாக இருந்துள்ளமை வியப்பிற்குரியதாகும்.
அந்தராளம், அர்த்த மண்டபம் ஆகியவற்றின் சுவர்களின் உட்புறங்களும் அந்தராளச் சுவர்களின் வெளிப்புறங்களும் ஒரு பிதுக்கமான கற்படைக் குலைவினைத் தவிர்ந்த இறையகத்தின் சுவர்களும் அவற்றிற்கு இயல்பாகவுள்ள செம்மையான தோற்றத்துடன் காணப்படுகின்றன.

பா.
கலைக்கேசரி
13
இயற்கைச் சக்திகளின் தாக்கத்தினால் சுவர்களின் கற்படைகள் சீர்குலையக் கூடும். ஆயினும் இதற்கு மனிதர்கள் அதிக சேதம் விளைவித்துள்ளனர் என்பதிற் சந்தேகம் எதுவுமில்லை. இந்த கோயில் தென்னிந்திய சிற்ப சாஸ்திர முறைகளுக்கு ஏற்பவுஞ் சைவ சமய வழிபாட்டுத் தேவைகளுக்கு வேண்டிய சில மாற்றங்களுடனும் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் 61 அடி 9 அங்குலம் நீளங்கொண்ட கட்டுமானமாகும். அது 105 அடி நீளமும் 75 அடி அகலமுங் கொண்ட பிரகாரத்தினுள் அமைக்கப் பட்டிருந்தது. அதன் அதிஷ்டானம், உபானம் முதலான ஆறு படைகளைக் கொண்டிருந்தது. கர்ப்பக்கிருகத்தின் வெளிப் புறச் சுவர்களிலே தேவகோட்டங்களும் அரைத்தூண்களும் மிகவும் வனப்பான கோலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. .
(தொடரும்)
முதலாம் சிவாலயத்தில் உள்ள லிங்கம்
முதலாம் சிவாலயத்தின் கருவறையின் வெளி

Page 14
கலைக்கேசரி 2 14 இசைக்கலை
இந்து ஆலயங்களில் பாரம்பரிய
வாத்திய இசை வடிவங்கள்
- சுபாஷிணி பத்மநாதன்

ந்து ஆலயங்களில் பண்டைய காலம் தொடக்கம்
இன்றுவரை பல தேவைகளுக்குப் பலவகைப்பட்ட வடிவமைப்பில் அமைந்த
வாத்தியங்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. நாரிசை வாத்தியங்கள் தவிர, பெரும்பாலும் காற்றிசை வாத்தியங்கள், தோல் இசைத் தாள வாத்தியங்கள், உலோகத்தினால் ஆன கைத்தாளக் கருவிகள் என்பன பெரிதும் ஆலயங்களின் நாளாந்த கிரியைகள், நித்திய நைமித்திய உற்சவங்கள், மற்றும் மகா உற்சவங்கள் ஆகியவற்றில் பல கிரியைகளின் பொருட்டு பயன்படுத்தப்படுகின்றன.
இந்திய சாஸ்திரீக சங்கீதமானது பண்டைய காலத்திலிருந்து ஆலயத்தை ஒட்டி வளர்ந்து வந்துள்ளது என்றால் அது மிகையாகாது. இந்த வகையில் இந்திய சாஸ்திரிக சங்கீதமானது காலக் கிரமத்தில் பல மாற்றங்களை பெற்ற போதிலும் இன்றும் பல பண்டைய பாரம்பரிய சாஸ்திரிக ஆலய வாத்தியங்கள் அதே
வெ)
T
பாரம் பரியத்துடன்
ப ய ன் ப டு த் த ப் ப ட் டு வருகின்றன. தென் இந்திய ஆலய இசைப் பரம்பரிய வரிசையில் நாதஸ்வரம், தவில், சங்கு, சேமக்கலம், குழித்தாளம், தட்டைத்தாளம் என்பன முக்கிய இடம்பெறுகின்றன.
வட இந்திய காற்று வாத்தியமான 'சங்கை' என்னும் ஒரு காற்று வாத்தியத்தை ஒத்ததாக நாதஸ்வரம் விளங்குகின்றது. நாதஸ்வரமானது பன்னிரண்டு துவாரங்களைக் கொண்டதாகக் காண முடிகின்றது. அடிப்படையில் இதில் ஏழு துவாரங்களே பயன்படுத்தப்படுகின்றன. மற்றைய ஐந்து துவாரங்களும் பிரம் சுரங்கள் எனக் குறிப்பிட்டு அழைக்கப்படுகின்றன. இப்பிரம் துவாரங்கள் பெரிதும் மெழுகால் ஆங்காங்கே அடைக்கப்பட்டு சுருதி நிலைப்பாட்டைப் பேண உதவுகின்றன. ஊது குழல் பகுதியானது வாத்தியத்தின் சீவாளி (வாயால் ஊதும் பகுதியானது) உலோகப் பகுதியுடன் இணைக்கப்பட்டு இருக்கும். சீவாளியானது பெரும்பாலும் இந்தியாவின் காவேரி ஆற்றுப்படுக்கைப் பகுதியில் இருந்து பெறப்படுகின்றன. நாதஸ்வரமானது ஒட்டு மொத்தமாக இரண்டு தொடக்கம் இரண்டரை அடி நீளமுள்ளதாக அமைகின்றது. வாயில் வைத்து ஊதும் சீவாளி நாதஸ்வரங்களில் மிகையாகத் தொங்க விடப்பட்டுக் காணப்படும், அவற்றை சுத்தம் செய்யும் யானைத் தந்தக்

Page 15
@ச ஓய்பு தம
சங்கம்
நூலகம்
குச்சிகளும் அவற்றுடன்
சேர்த்துத்
தொங்க விடப்பட்டுள்ளமையையும் காண முடிகின்றது. மங்களகரமானது எனக் கருதப்படுகின்ற இப்பாரிய ஒலிநாதமுள்ள இவ் வாத்தியமானது அடிப்படையில் இரண்டு முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றது. ஒன்று 'பாரி' என்னும் வகையையும், மற்றையது 'திம்பரி' என்னும் வகையையும் சார்ந்ததாகும். எதுஎவ்வாறாயினும் இவ்வரிய பாரிய ஒலி நாதவாத்தியமும் சுருதி வரன்முறைக்கு ஏற்ப ஏனைய கர்நாடக இசை அம்சங்கள் மற்றும் வாத்தியங்கள் போன்று சுருதி வரம்பு நிலைப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டுக் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தப்படும் வாத்தியமாகும். சுருதிப்பெட்டி பெரிதும் சுருதிவரம்பைப் பேணப் பயன்படுத்தப் படுகின்றது.
நாதஸ்வரம் தனித்து வசிக்கும் ஒரு வாத்தியம் அன்று. அது ஒரு கூட்டு வாத்தியமே ஆகும். மேடை நாதஸ்வரக் கச்சேரி, கோயில் உற்சவ ஊர்வலம், கோயில் உற்சவம், மங்கள நிகழ்வுகள் ஆகியவற்றில் மங்கள வாத்தியமாக பயன்படுத்தப்படுவதுடன் நாளாந்தம் ஆலயங்களில் இடம்பெறும் ஆறு காலப் பூசைகளிலும் இக்கூட்டு வாத்தியம் பயன்படுத்தப்படுகின்றது. ஆயினும் நாதஸ்வரம் என்னும் இக்குழல் வாத்திய இசை தாளலய வாத்தியமாகிய தவிலுடன் ஒன்று இணைக்கப்பட்டு நாதஸ்வர இசைக்கு தாளலய காலப்பரிமாணத்திற்கு உயிரூட்டம் அளிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. தாள வாத்தியமாகப் பாரிய ஒலிநாதமிக்க தவில் இன்றியமையாத வாத்தியமாக விளங்குகின்றது. மேலும் இத் தவில் என்னும் தோல் வாத்தியமானது கஞ்சக் கருவியான கைத்தாளக் கருவியுடன் ஒருங்கிணைத்தே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது.
நாதஸ்வரத்துடன் பயன்படுத்தப்படும் தவிலானது மரக்குத்தியினால் செய்யப்படுவதாகும். மரக்குத்தியின் இரு பக்கங்களும் உள்குடையப்பட்டு இரண்டு வெற்றுப் பக்கங்களும் தோலால் கச்சிதமாக இறுக்கப்பட்டு மூடப்பட்டு காணப்படும். வலது புறத் தோல் முகப்பானது வலது கரத்தாலும் வலது கை மணிக்கட்டாலும் விரல்களாலும் வாசிக்கப்பட்டும் அதே சமயம் இடது புறமானது சிறிய கட்டையான தடியினாலும் தட்டிப் பயன்படுத்தப்படுகின்றது. வலதுபுற விரல்களுக்குப் பெரிதும் சீதாள் என்னும் விரல்கவசம் பொருத்தப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றது.
நாதஸ்வரம் மற்றும் தவில் ஆகிய இரண்டும் நின்றும், இருந்தும், நடந்தும், வாசிக்கப்படும் வாத்தியங்களாகும். தவிலானது நின்றும் நடந்தும் வாசிக்கப்படும் இடத்து தோளில் பட்டியால் கட்டி வயிற்றுக்கு எதிராகத் தொங்கவிடப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றது. குறிப்பாக நாதஸ்வரத்தில் ராக ஆலாபனத்தை வாசிக்கும் போது கச்சிதமான வகையில், கட்டுக்கோப்பான முறையில் தாளலய காலப்பரிமாணத்தைக் கையாளுவதற்குப் பெரும் பங்களிப்பினை நல்கும் வாத்தியமாகத் தவில் விளங்குகின்றது.

TAIDD
ALBERTES

Page 16
く。

கைத்தாளக் கருவியாக மிளிரும் தாளங்கள் உலோகத்தால் ஆனவையாகும். தாளங்கள் பல வகைப் பிரிவுகளைக் கொண்டு நடைமுறையில் காணப்பட்டு வருகின்றன. ஆயினும் ஆலயப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் தாளங்கள் அடிப்படையில் இரண்டு வகையாகும். அவை உலோகத் தாளமும், பாக்கு வெட்டித்தாளமும் ஆகும். ஒன்று தட்டையான தாளம். இது நாதஸ்வரம் மற்றும் தவில் ஆகியவற்றுடன் கையாளப்படும் கைத்தாளம். மற்றையது பஜனைகள், தேவாரங்கள், பண்இசை என்பனவற்றுடன் கையாளப்படும் குமிழ் தாளம் ஆகும். உலோகத்தால் ஆன இத் தாளங்கள் கணீரென்ற ஒலிநாதத்தை அள்ளி வழங்குவனவாக மிளிர்கின்றன. சாதாரணமாக கோயில் நாதஸ்வர தவில் தாளங்களின் அமைப்பானது தட்டையானதாகவும், நடுவே துளை இடப்பட்டு, வலது இடது பக்க இரு தாளங்களும் ஒருங்கே நூலால்பிணைக்கப்பட்டும் இருக்கும். பரந்து விரிந்த தாளங்களாக இவை காணப்படும். தாளங்களின் விட்டம், எடை மற்றும் தடிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஒலி நாத அம்சமானது நிர்ணயிக்கப்படுகின்றது. ஆலயக் கூட்டு இசை நிகழ்வின் போது தவில் மற்றும் நாதஸ்வர ஒலி வளம் ஓசை நயத்தை மெருகூட்டி வெளிப்படுத்துவதில் இக்கைத்தாளம் முக்கிய இடம் பெறுகின்றது.
இவை தவிர சங்கு மற்றும் சேமக்கலம் ஆகிய கருவியிசை அம்சங்களும் பெரிதும் ஆலயங்களுக்குள்ளும், வெளியிலும் பயன்படுத்தப்படுகின்றன. ஆலயங்களில் இடம்பெறும் பஜனைகள் மற்றும் தேவார, திருவாசக, திருமுறைப்பராயண நிகழ்ச்சிகளுக்கு பயன்படும் தாளமாகக் குமிழ் தாளங்கள் விளங்குகின்றன. ஆயினும் நடைமுறையில் இன்று இதன் பாவனை அருகி காணப்படுகின்றது.
சில வழிபாட்டு முறைமைக்கு குறிப்பாக அம்மன் வழிபாட்டிற்கு சிறப்பாக பறை மேளம் வாசிக்கப் படுவதினால் பறை மேளமும் ஆங்காங்கே ஆலயங்களில் பயன்படுத்தப்படுகின்றது. பண்டைய காலத்தில் வழக்கில் இருந்த பேரிகை, மற்றும் பஞ்சமுக வாத்தியம் என்பன ஆலயங்களில் வாத்திய வரிசையில் பயன்படுத்தப்பட்டு வந்ததாக அறிய முடிகின்றது. இருப்பினும் இன்று இவை பெரிதும் நடைமுறை வழக்கில் இல்லை. எனவே பல வாத்திய வடிவங்கள் தமிழ் கலாசாரத்தில் பயன்படுத்தப்பட்ட போதும் மிக மட்டுப்படுத்தப்பட்ட வாத்தியங்களே நடைமுறையில் இந்து ஆலயங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.'

Page 17
8 SRI LAn,
TKAIt 1,
10uRIT,
"பு Isay
4LIsaa.
'வெண்கா இணையத்தளத்த
T)B
அனைத்து சிறு விளம்பரங்
யாழ் www.ya
Varl Mann
மேலதிக தகவல்களு

ல' விருது வென்ற யாழ் மண் இற்கு சிறு விளம்பரதாரர்களை
அன்புடன் வரவேற்கிறோம்! மகளும் முற்றிலும் இலவசம்! - மண் rlmann.lk
Connect with Jaffna
க்கு : +94-773-186-987

Page 18
கலைக்கேசரி து 18 நூற்றாண்டு பழைமை
இலங்கை பல்கலைக் இலங்கையில் பல்கலைக்கழ
pL
லங்கை மிக நீண்ட கல்விப் பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு நாடாகும். 1796ஆம் ஆண்டு
இலங்கையில் திருகோணமலையைக் கைப்பற்றிய பிரித்தானியா, படிப்படியாக இலங்கை முழுவதையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்ததுடன், 1815 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையை 'சிலோன்' எனப் பெயரிட்டு ஆட்சி புரிந்தது. இலங்கையில் பல்கலைக்கழகத் தரத்திலான கல்வி ஆரம்பிக்கப்பட்டதன் காரணமாக பலர் சிறந்த கல்வியைப் பெறக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. ஆனாலும் பல்கலைக்கழகத் தரத்திலான கல்வியை இலங்கையில் ஆரம்பிக்கும்போது குறைந்த அளவிலானவர்களே பட்டம் பெற்றவர்களாக இருந்தனர். ஆங்கிலேயர் காலத்தில் இலங்கை மக்கள் அதிகளவான கல்வியறிவைப் பெற்றுக் கொண்டார்கள். அவர்களில் காலத்தில் ஏற்பட்ட கல்வியறிவு காரணமாக 1870 ஆம் ஆண்டு இலங்கை மருத்துவக் கல்லூரியும் (Ceylon Medical College) இலங்கைச் சட்டக் கல்லூரியும் (Ceylon Law Callege) நிறுவப்பட்டன. அக்கல்லூரிகள் இயங்கத் தொடங்கி கிட்டத்தட்ட 50 வருடங்களின் பின்னர் 1921 ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரி (Ceylon
University College) நிறுவப்பட்டது.
இலங்கை பல்கலைக்கழகச் சங்கம் (CUA) 1906 ஆம் ஆண்டு கல்வியறிவு செறிந்த குழுவினரால் சேர். பொன்னம்பலம் இராமநாதன் தலைமையில் உள்நாட்டில் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க
ஆலோசிக்கப்பட்டது.
இலங்கை * பல்கலைக்கழகச் சங்கத்தின் (CUA)
எதிர்பார்ப்புக்களை உணர்ந்த
இலங்கையை ஆட்சி
பு ரி ந் த

கழகக் கல்லூரியும் ஒகத் தரத்திலான கல்வியும் - பிரித்தானிய அரசாங்கம் 1913 ஆம் ஆண்டு பல்கலைக்கழக
கல்லூரி ஒன்றை அமைக்கத் தீர்மானித்தது.
பல்கலைக்கழகத்தின் அமைவிடம், அமைப்பு தொடர்பான வாதங்களாலும், உலகப்
- போரின் காரணத்தாலும் பல்கலைக்கழக உருவாக்க வேலைகள் தாமதமடைந்தன. பின்னர் தனியார் குடியிருப்பு ஒன்றை அரசாங்கம் கொள்வனவு செய்தது. இவ்விடமே 'கொலிஜ் ஹவுஸ்' என்று அழைக்கப்பட்டது. இலங்கைப் பல்கலைக்கழக கல்லூரி, கொழும்பு ரோயல் கல்லூரியின் கட்டிடத்தில் 1921 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இப் பல்கலைக்கழகக் கல்லூரி லண்டன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்ததுடன், இக்கல்லூரி லண்டன் பல்கலைக்கழக வெளிவாரி பட்டப் படிப்பையும் வழங்கி
வந்தது.
இலங்கை மருத்துவக் கல்லூரியானது தொடர்ந்தும் சுதந்திரமான கல்வி நிறுவனமாகச் செயற்பட்டதுடன், 1924 ஆம் ஆண்டு பிரித்தானிய மருத்துவக் கவுன்சிலை (British Medical Council) அடித்தளமாகக் கொண்டு இலங்கையில் புதிதாக

Page 19
உருவாக்கப்பட்ட இலங்கை மருத்துவக் கவுன்சிலின் (Ceylon Medical Council) கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. எது எவ்வாறாக இருந்தாலும், இலங்கையில் 1920 களின் ஆரம்பத்தில் பட்டப்படிப்புக் கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்பட்டன. இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் 1926 ஆம் ஆண்டு கல்விக் குழு அமைக்கப்பட்டது. சேர் வில்லியம் பச்னன் - றிட்டேல் அவர்களைத் தலைவராகக் கொண்டு பல்கலைக்கழக ஆணைக்குழு நிறுவப்பட்டது. அவர் 1929ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பல்கலைக்கழக வரைவுச் சட்ட நகல்
உருவாக்கப்பட்டதுடன்,
அ டு த் த ா ண் டு
பல்கலைக்கழக வ ன ர வு ச்
ச ட் ட
ச ட் ட
9. 6.

அக்காழும்பு தமிழச் சங்.
2, கலைக்கேசரி
எவொெமல்
-- --- 1511
L1:- ப - 5
சங்கம் ---------

Page 20
கலைக்கேசரி 2)
20
- 1 கப்
கவுன்சிலால் (Legislative Council) அங்கீகரிக்கப்பட்டது. 1930 களில் நாடு மந்த நிலையில் உறைந்திருந்ததுடன், தொடர்ச்சியாக எட்டு ஆண்டுகளாக இவ்விடயம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவில்லை. எனினும் 1938 ஆம் ஆண்டு அரசாங்கம் தீர்மானம் ஒன்றை எடுத்ததுடன், பேராதனையில் பல்கலைக்கழகம் ஒன்று உருவாவதற்கு அடித்தள மிடப்பட்டது. மேலும் அதே ஆண்டு பல்மருத்துவக் கல்லூரி (Dental School) இலங்கை மருத்துவக் கல்லூரியுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது.
அடுத்த ஆண்டு இரண்டாம் உலகப் போர் வெடித்த காரணத்தால் முன்மொழியப்பட்ட பல்கலைக்கழகத்தின் நிலைமைகள் தொடர்பில் மாற்றங்கள் உருவாகின. அக்காலத்தில் பல்கலைக்கழகக் கல்லூரியின் அதிபராக இருந்த சேர் ஐவர் ஜெனிங்ன்ஸ் அவர்களால் பல்கலைக்கழக வரைவுச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், அதற்கான அங்கீகாரம் இலங்கைப் பல்கலைக்கழகக் கட்டளை சட்டத்தால் 1942 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதலாம் திகதி வழங்கப்பட்டது. இலங்கை மருத்துவக் கல்லூரி மற்றும் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரி ஆகியவை ஒன்றிணைந்து முதலாம் திகதி ஜூலை மாதம் 1942 ஆம் ஆண்டு உத்தியோகபூர்வமாக பல்கலைக்கழக முதலாவது கற்கைநெறி ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவே இலங்கையின் நவீன பல்கலைக்கழக கல்விக்கான அத்திவாரம் என்றால் அது மிகையாகாது.
இலங்கை பிரித்தானியாவிடம் இருந்து 1948 ஆம் ஆண்டு

1ெ
மாக
சுதந்திரம் அடைந்தபோது இலங்கையில் ஒரே ஒரு பல்கலைக்கழகம் மாத்திரமே இருந்தது. இலங்கைப் பல்கலைக்கழகம் (சிலோன் பல்கலைக்கழகம்) என அழைக்கப்பட்ட அப்பல்கலைக்கழகமானது, 1942 ஆம் ஆண்டு பல்கலைக்கழகக் கல்லூரி மற்றும் 1870 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை மருத்துவக் கல்லூரி ( சிலோன் மருத்துவக் கல்லூரி) ஆகியவற்றின் கூட்டிணைப்பால் உருவாக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழி மூலமான கல்வியும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.
இலங்கைப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பத்தில் கலை, கீழைத்தேயக் கல்வி, விஞ்ஞானம் மற்றும் மருத்துவம் ஆகிய நான்கு பீடங்கள் ஊடாக கல்விச் சேவை வழங்கப்பட்டன. அக்காலங்களில் இலங்கை முழுவதிலும் இருந்து பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் சிலர் மாத்திரமே இருந்தனர். எனவே இலங்கைப் பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களிலும் ஏற்பட்ட கல்வித் தேவை காரணமாக பேராசிரியர்கள் மற்றும் ஏனைய ஆசிரியர்கள் பலர் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களின் கல்விச் சேவை காரணமாக இலங்கையின் கல்வித்தரம் உயர்வு கண்டதுடன், சர்வதேச அங்கீகாரமும் கிடைத்தமை
குறிப்பிடத்தக்கது. - இலங்கைப் பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களிலும் 1942ஆம் ஆண்டு 15 பேராசிரியர்கள், 20 விரிவுரையாளர்கள், 08 உதவி விரிவுரையாளர்கள் மற்றும் ஏனையோர் 12 பேர் அடங்கலாக 55 பேர் கடமையாற்றியுள்ளனர். அக்காலத்தில் கலை மற்றும் கீழைத்தேசக்கல்விப் பீடங்களில் 396 மாணவர்களும், விஞ்ஞான பீடத்தில் 250 மாணவர்களும், மருத்துவ பீடத்தில் 258 மாணவர்களும் அடங்கலாக நான்கு பீடங்களிலும் மொத்தமாக 904 மாணவர்கள் கல்வி கற்றனர். கிட்டத்தட்ட 30, 000 நூல்களைக் கொண்ட ஒரு சிறிய நூலகம் மாணவர்களின் கல்விப் பசிக்குத் தீனி போட்டது. அக்காலத்தில் வருடம் ஒன்றுக்கான பல்கலைக்கழகத்தின் மொத்தச் செலவுத்தொகை 9,30,000 ரூபா ஆகும். 1947 ஆம் ஆண்டு தொடக்கம் தமிழ் மொழி மற்றும் சிங்கள மொழி
மூலமான கற்கைகளுக்கு வழி ஏற்பட்டது.
இலங்கையில் சகல மாகாணங்களிலும் தற்போது 12 தேசிய பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவற்றில் இலங்கைப் பல்கலைக்கழகத்தை மூலமாகக் கொண்ட பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் கொழும்புப் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களும் மிகப் பெரிய பல்கலைக்கழகங்கள் ஆகும். இவ் இரண்டு பல்கலைக்கழகங்களும் 1967ஆம் ஆண்டு தனிப்பட்ட பல்கலைக்கழக அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
1958ஆம் ஆண்டு முற்பகுதியில் பாரம்பரிய பௌத்த கல்வி மையங்களாக வித்தியாலங்கார மற்றும் வித்தியோதய ஆகிய இரண்டும் விளங்கின. பின்னர் அவற்றின் தரம்

Page 21
உயர்த்தப்பட்டு அக்கல்வி மையங்கள் பல்கலைக்கழகத் தரத்தைப் பெற்றதுடன், காலப்போக்கில் நவீன மத சார்பற்ற பல்கலைக்கழகங்களாக உருவாகின. - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், மொரட்டுவப் பல்கலைக்கழகம், றுகுணுப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் திறந்த பல்கலைக்கழகம் ஆகிய ஐந்து பல்கலைக்கழகங்களில் முதல் நான்கு பல்கலைக் கழகங்களும் 1978 ஆம் ஆண்டு உயர் கல்விச் சட்டத்தின் மூலமாக நிறுவப்பட்டன. இலங்கை திறந்த பல்கலைக்கழகமானது பாரம்பரியப் பல்கலைக்கழகங்களில் அனுமதி கிடைக்காத மாணவர்கள் மற்றும் வயது வந்த ஊழியர்கள் ஆகியோருக்கு தொலைக்கல்வி ஊடாகக்
க
- இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னரே அதாவது 1870 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கை மருத்துவக் கல்லூரியும் இலங்கைச் சட்டக் கல்லூரியும் இலங்கையின் பல்கலைக்கழகத் தரத்திலான கல்விக்கு அத்திவாரம் இட்ட கல்வி நிறுவனங்கள் ஆகும். சேர். பொன்னம்பலம் இராமநாதன் தலைமையில் அறிஞர்கள் பல்கலைக்கழகச் சங்கம் ஒன்றை அமைத்து இலங்கையில் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல்கலைக்கழகச் சங்கத்தின் எதிர்பார்ப்புக்களை உணர்ந்த பிரித்தானிய அரசாங்கம் 1913 ஆம் ஆண்டு பல்கலைக்கழக கல்லூரி ஒன்றை அமைக்க சம்மதித்தது.
கல்வியை வழங்கும் பொருட்டு 1980 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ராஜரட்டைப் பல்கலைக்கழகம், சப்ரகமுவப் பல்கலைக்கழகம் மற்றும் தென் கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகிய ஏனைய மூன்று பல்கலைக்கழகங்களும் இலங்கைப் பல்கலைக்கழக வரலாற்றில் புதிதாக இடம் பெற்றவை ஆகும். ராஜரட்டைப் பல்கலைக்கழகம் மற்றும் சப்ரகமுவப் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டும் 1997 ஆம் ஆண்டு அப்போதைய கல்வி அமைச்சரான ரிச்சட் பத்திரண தலைமையிலான அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அம்பாறை மாவட்டத்தில் அமைந்திருந்த அட்டாளைச்சேனைக் கல்லூரி 1994 ஆம் ஆண்டு தரமுயர்த்தப்பட்டு தென் கிழக்குப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
இலங்கையில் தமிழர் வாழும் பிரதேசத்தில் பல்கலைக்கழகம் ஒன்று நிறுவப்பட வேண்டும் என்ற கோரிக்கையும், தேவையும் மிக நீண்ட காலமாகவே இருந்தது. திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இரு வேறு இடங்கள் பல்கலைக்கழகம் நிறுவப்படுவதற்கு பல தரப்பினராலும் முன்மொழியப்பட்டது.

உ, கலைக்கேசரி
21
வட்டுக்கோட்டையில் அமைந்திருந்த யாழ்ப்பாணக் கல்லூரி வளவில் அமைந்திருந்த பட்டதாரி மாணவப் பிரிவையும், 1921 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சேர். பொன்னம்பலம் இராமநாதன் அவர்களால் திருநெல்வேலியில் நிறுவப்பட்ட பரமேசுவராக் கல்லூரியையும் இணைப்பதன் மூலம் 1974 ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் நிறுவப்பட்டது.
அக்காலத்தில் இலங்கையிலிருந்த பல்கலைக்கழகங்கள் அனைத்தும் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வெவ்வேறு வளாகங்களாகவே செயற்பட்டு வந்தன. ஆகவே யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக்கழகமும், இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் என்றே அழைக்கப்பட்டது. 1978 ஆம் ஆண்டு உயர் கல்விச் சட்டத்தின் மூலமாக இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டது. இப்பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தராக பேராசிரியர் சு. வித்தியானந்தன் நியமிக்கப்பட்டார்.
இலங்கை முழுவதும் அமைந்துள்ள பல்கலைக் கழகங்கள் பலவற்றின் ஊடாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயிற்றப்பட்டு, பட்டம் பெறுகிறார்கள். ஆகவே இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னரே அதாவது 1870 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கை மருத்துவக் கல்லூரியும் (Ceylon Medical College) இலங்கைச் சட்டக் கல்லூரியுமே (Ceylon Law Callege) தற்கால இலங்கையின் பல்கலைக்கழகத் தரத்திலான கல்விக்கு அத்திவாரம் இட்ட கல்வி நிறுவனங்கள் ஆகும். அக்கல்லூரிகள் இயங்கத் தொடங்கி கிட்டத்தட்ட 50 வருடங்களின் பின்னரே இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரி (Ceylon University College) நிறுவப்பட்டது. இக்கல்லூரியின் ஆரம்பம் இலங்கையில் பல்கலைக்கழகத் தரத்திலான கல்விக்கு வித்திட்டது என்றால் அது மிகையாகாது.
- உமா பிரகாஷ்

Page 22
கலைக்கேசரி 2 22 ஆளுமை
ஆனந்தத் தேன்
மதுரைப்பண்டிதர் க.சச்சிதானந்தன் BAHons) Lond.M.Phil Lond) Ph.DJafma)
நினைவோடை 04.05.2003
17:4 11:05
கணிதவியலால் தமிழ்
அளந்த பண்டிதர் க. சச்சிதானந்தன்
[ாசா
- பேராசிரியர் சபா ஜெயராசா ளவியல், கணிதவியல், தமிழியல் என்ற முப்பரிமாண நிலைகளில் பண்டிதர் க.சச்சிதானந்தன் அவர்களின்
ஆக்கங்கள்
மேலெழுந்தன.
அவை மூன்றுக்குமிடையே ஊடு இணைப்புகளையும் அவர் கண்டறிந்தார். அவற்றின் காரணமாக அவரது கவிதையாக்கங்களிலே மனவெழுச்சிகளும் தருக்க முறைகளும் செழுங்கலவையாக ஒன்றிணைந்திருந்தன.
பருத்தித்துறையில் உள்ள தும்பளை என்னும் கிராமத்தைச் சேர்ந்த சச்சிதானந்தன் அவர்களின் புலமைப் பின்புலம் தமிழ், ஆங்கிலம், இலத்தீன், வடமொழி ஆகியவற்றுடனும், கணிதம், வானியல், சோதிடம் என்பவற்றுடனும் மேலைப்புலத்து உளவியலுடனும் ஒன்றிணைந்திருந்தது.
அந்நிலையில் அவர் மரபு வழித் தமிழாசிரியர்களைக் காட்டிலும் வேறுபட்ட புலமைப் பரிமாணங்களைக்

க]
கொண்டிருந்தார். அதேவேளை நவீன ஆங்கில
ஆசிரியர்களைக் காட்டிலும் வேறுபட்ட
சிறப்புப் பரிமாணங்களையும் கொண்டிருந்தார். அத்தகைய தனித்துவங்களே சுவாமி விபுலானந்தருக்கும் அவருக்கும் இடையேயுள்ள ஊடாட்டங்களைச் செழுமையுறச் செய்தன. இருவரிடத்தும் காணப்பெற்ற கூர்ந்த கணித அறிவும் ஆழ்ந்த தமிழறிவும் நவீன கல்வியறிவும் புலமை நட்பை மேலோங்கச் செய்தன. சுவாமி விபுலானந்தரின் ஆய்வு எழுத்துகளைப் பண்டிதர் சச்சிதானந்தனே படியெடுத்துக் கொடுத்ததாகச் சொல்லப்படுகின்றது. இருவருக்குமிடையே நிகழ்ந்த உரையாடல்கள் புதிய மலர்ச்சிகளைத் தமிழுக்குத் தந்தன.
அவருடைய குழந்தைக் கவிதைகள் தனித்துவமானவை. ஆங்கில மரபில் வளர்ச்சியுற்று வந்த சிறுவர் இலக்கியத்தில் இருந்த ஈடுபாடும், தமிழில் உள்ள பிள்ளைத் தமிழ் இலக்கியம் தொடர்பாக அவரிடத்துக் காணப்பெற்ற தரிசனமும் வளமான குழந்தை இலக்கியங்களை உருவாக்கும் வரிசைகளாக இருந்தன. அவற்றோடு இன்னொரு செயற்பாட்டையும் இணைத்து நோக்குதல் வேண்டும்.
பண்டிதர் சச்சிதானந்தன் அவர்கள் குழந்தை உளவியலில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். பலாலி ஆசிரிய கலாசாலையில் விரிவுரையாளராக இருந்தவேளை கல்வி உளவியலிலும் குழந்தை உளவியலிலும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். அத்தகைய ஆய்வுகளின் நீட்சியாகவே இலண்டன் பல்கலைக்கழகத்துக்கு அவர் சமர்ப்பித்த முது தத்துவமாணி ஆய்வு அமைந்தது.
- குழந்தை உளவியலில் அவர் பியாசே மேற்கொண்ட ஆய்வுகள் மீது தீவிர ஈடுபாடு காட்டினார். குழந்தைகளின் ஒவ்வொரு வளர்ச்சிப் படிநிலைகளிலும் அவர்களுக்குரிய செயற்பணிகளையும் பிரச்சினைகளையும் கொடுத்து அவற்றிற்கு எவ்வாறு துலங்குகின்றார்கள் என்பதை பியாசே ஆராய்ந்தார். அவற்றை அடியொற்றிய வளர்ச்சிப் படி நிலைகள் பற்றிய கோட்பாட்டை அவர் உருவாக்கினார்.
பியாசேயின் ஆய்வுகள் பண்டிதர் சச்சிதானந்தனிடத்துக் கருத்தூன்றிய கவனத்தை ஏற்படுத்தின. பியாசேயின் ஆய்வு நுட்பங்களும், இவற்றின் வழியாக உருவாக்கப்பட்ட கோட்பாடுகளும் தங்கி நின்ற கருத்தாழங்களிலே ஈடுபாடு கொண்டிருந்த பண்டிதர் சச்சிதானந்தன் அவர்கள் அத்தகைய பரிசோதனைகளை பலாலிக்குச் சூழவுள்ள பாலர் பாடசாலைகளிலே மேற்கொண்டார். அவற்றைச் அடியொற்றிச் சிறாரின் மொழி வீச்சு, அறிகை விருத்தி, மன வெழுச்சி கோலங்கள், சமூக விருத்தி முதலிய தளங்களை அடிப்படையாகக் கொண்டு சிறுவர் இலக்கியங்களைப் படைத்தார். அவ்வாறான பரிசோதனைகளை அடியொற்றி ஒரு சிலரே தமிழில் சிறுவர் இலக்கியங்களைப் படைத்துள்ளனர். சிறுவர்க்குரிய
சொற்களஞ்சியத்தையும்
சமூக விழாவொன்றின் செயற்பாட்டிலே நிகழ்த்தப்படும்
7 1

Page 23
கொழும்பு தமிழ்ச்சங்கள்
செயற்பாடுகளையும் ஒன்றிணைந்து குழந்தைகளின் அறிகை வீச்சில் நின்று அவரால் ஆக்கப்பெற்ற பாடல் ஒன்று வருமாறு:
'சிங்கத்தின் வீட்டில் கொண்டாட்டம் சிறுத்தைகள் எல்லாம் பெருங்கூட்டம் சிலந்தி கட்டும் வெள்ளை ஒட்டகம் கொட்டகையாக்கும் சிவிங்கி சரங்கள் தூக்கும் பன்னீர் தெளிக்கும் யானை சந்தனம் கொடுக்கும் பூனை குயில்கள் பாட்டுப் பாடும் மயில்கள் நாட்டியமாடும் மான்கள் பாயை விரிக்கும் முயல்கள் அழைத்துச் சிரிக்கும்' மேற்கூறிய ஆக்கம் 'திணிப்பற்றபாடல்' வகையைச் சேர்ந்தது. திணிப்பை மேற்கொள்ளாதவை திணிப்பற்ற பாடல் எனப்படும். சிறுவர் பாடல் என்ற நிலையில் அவர்களின் அறிகையமைப்பைக் (Cognitive Structure) கருத்திலே கொள்ளாது, அறக் கருத்துக்களைத் திணித்து விடும் செயற்பாடுகள் நிலவிய சூழலில் 'திணிப்பற்ற பாடல் களைப் பண்டிதர் சச்சிதானந்தன் அவர்கள் முன் வைத்தார்.
உற்று நோக்கலை அடிப்படையாகக் கொண்டு நிழல் காட்சிகளைச் சிறுவரின் அறிகை வெளிக்குள்ளே கொண்டு செல்லும் செயற்பாடுகளையும் பண்டிதர் சச்சிதானந்தன் அவர்கள் முன்னெடுத்துள்ளார். தும்பளைக் கடற்கரைக்கு வந்த சிறுவர்களைப் பார்த்து அவர் பின்வரும் அடிகளைக் கூறியதாகச் சொல்லப்படுகின்றது.
'கடலிற் பொங்கும் திரையைப்பார் காற்றில் சிதறும் நுரையைப்பார் அலைகள் மோதும் கரையைப்பார் அவைகள் தடவும் தரையைப்பார்' அவர் எழுதிய சிறுவர் பாடல்களின் தொகுப்பு நூலாக 'மஞ்சு மலர்க் கொத்து' வெளிவந்துள்ளது. சிறுவர்க்கான பாடல்களை எழுதியதுடன் 'சிறுவர் பற்றிய' பாடல்களை வளர்ந்தோருக்கெனவும் எழுதியுள்ளார். சிறுவரின் விகற்ப மற்ற செயற்பாடுகளும் குறும்புத்தனங்களும் வளர்ந்தோரின் புலக்காட்சியில் நிகழ்த்தும் அனுபவ இங்கிதத்தை அவர் கவிதை வெளிக்குக் கொண்டு வந்துள்ளார். அக்கவிதைகள் கனக செந்திநாதனது சுவைப்பையும் ஈடுபாட்டினையும் பெரிதும் ஈர்த்தமை குறிப்பிடத்தக்கது.
பண்டிதர் சச்சிதானந்தன் சிறுகதை முயற்சியிலும் தடம் பதித்தார். ஆங்கில நவீன இலக்கியத்தில் அவருக்கு ஆழ்ந்த ஈடுபாடிருந்தது. டி.எச். லோரன்சின் சிறுகதைகள் பற்றித் தமது விரிவுரைகளிலே அவ்வப்போது குறிப்பிட்டு
வந்ததாகவும் சொல்லப்படுகின்றது.
இலக்கியத்துக்குரிய சமூகப் பங்களிப்பின் மீது அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் காலத்திலே வளர்ச்சி பெற்றிருந்த தமிழ்த் தேசிய வாதத்தோடு இணைந்த

" கலைக்கேசரி
23
படைப்பாளி ஆகவும் வினைப்பாட்டாளராகவும் விளங்கினார். தமிழ் தேசிய வாதம் பல்வேறு சீர் திருத்த நட வடிக்கைகளையும் முன்னெடுத்து வந்தது. அவற்றுள் முக்கியமாக அமைந்தது சாதிய முறைமைக்கு எதிரான கருத்தாக்கமாகும். அதனை அடியொற்றிய சிறுகதை ஆக்கங்களையும் அவர் மேற் கொண்டார். அந்த வகையில் அவர் எழுதிய 'தண்ணீர் தாகம்' என்ற சிறுகதை இந் நாட்டிலே சாதியத்துக்கு எதிரான முதலாவது ஆக்கம் என்று
குறிப்பிடப்படுகின்றது. - சிறுகதை சொல்லும் முறைமையிலே மரபு வழியான புனை கதை சொல்லும் பாங்கினையும் நவீன மேலைப்புல உபாயங்களையும் ஒன்றிணைக்கும் ஆற்றல் அவரிடத்தே காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்துக் கதை சொல்லும் மரபு, புராணபடன மரபு, சோதிட எதிர்வு கூறும் தருக்கம் முதலியவை அவரது சிறுகதைத் தளத்துக்கு வலுவூட்டின.
அவரிடத்தே ஆழ்ந்து பதிந்திருந்த தமிழ் தேசியம், அவரின் கலையாக்கங்களுடாகக் கிளம்பலுற்ற வண்ணமிருந்தது. அதன் நீட்சியாக அமைந்ததுதான் 'யாழ்ப் பாணக் காவியம்' அதற்கு அவர் 'The Epic of Jaffna' என்ற
ஆங்கில வடிவத்தையும் நூலிலே சூட்டியிருந்தார்.
யாழ்ப்பாண காவியம் யாழ்ப்பாணத்து அரசியல் வரலாற்றின் கி.பி. 1450 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. அந்நூலுக்குப் பாயிரம் வழங்கிய பண்டிதர் சச்சிதானந்தனது ஆசிரியரும் முதுபெரும் தமிழறிஞருமாகிய பண்டிதர் வித்துவான் தும்பளையூர் க.கிருஷ்ணபிள்ளையவர்களின் முதலாவது செய்யுள் வருமாறு:
'எழுத் தொரு பொருளின் சொல்லின் இலக்கணம்
இலக்கியங்கள் விழுப்பமாய் விளங்கக் கற்றோன் பிறர்க்கலை
விரித்தல் செய்வோன் பழுத்த சொற்பொழிவும் ஆற்றிப் பன்மொழிக் கருத்தும்
பார்ப்போன் செழிப்புற யாழ்ப்பாணக்கா வியமிது செய்தான் சச்சி' ஒரு புறம் அவரிடத்தே ஆழ்ந்து பதிந்திருந்த தமிழ் தேசியவாத உறுதியும் மறுபுறம் வன்னி நிலத்திலே ஒரு விவசாயியாக வாழ்ந்து பெற்ற நேர்க் காட்சிகளும் யாழ்ப்பாண காவியத்தைக் படைப்பதற்குரிய விசைகளாக அமைந்தன.
நூலாசிரியர் எழுதிய சிறப்புப் பாயிரத்தின் தொடக்கப் பாட்டிலே தமிழ் தேசியத்துக்குரிய 'பல்லவியாக' அமைந்தது. அது வருமாறு:
'ஆயிரத் தொள்ளாயிரத்தைம் பத்தெட்டில் ஏயின இனக் கல வரத்தின் பின்னர் யாம் தாயெனும் தமிழகம் காத்து நெல்லிட போயினம் ஒளிக்கதிர் புகாத காட்டினுள்' யாழ்ப்பாணத்து நல்லூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட கனசிங்கையாரியரின் வீழ்ச்சியும் பரராசசேகரன்

Page 24
கலைக்கேசரி த்து 24
ما اسهاما , ()
' கும்பல் ? பருத்தித்த
12. 8 2; 9ாஜ.ே மகா டூsa..
5. சர்சநா யா
- பாகமெலக்கடி Aே4. வாக64m
தே இம் சிந் பகா மகி? uorts$ாவ. கலைப்பொக் சிஷ... இதனைப் போலி படிப 4. எங்கள் கடமைபேண்டிட, பால் இந்த படம் என் uார் பபதம்ெ எaarள வா கித் தி யா மலடி. சுசு காலில் வெற்றல் அவற உணர்வு ேகா டு கள் அழிந்து விட்டா. நிலறே. அசிங்கப் பட:வெட்டி
பாடர்ை நாங்கள் எந்தப் சிம் வாந் கா மல் படம் பிடித்துத்தநாகச வ நள், 8க்கான கேட்டால் எடுத்த நவந65 சா ன கா . கண படம் ரோ ெ(புத தக ப் பொய்.டவுன்!
54வு -பதக&:-ரவிபால் பட பிக் கலம்.
இs Wளம்' தங்கள் பல K. * வா!
க சச்சிதா னாதல்
மற்றும் செகராசசேகரன் ஆகியோர் மேற் கொண்ட மீட்பு யுத்தமும் யாழ்ப்பாண அரசு புனரமைக்கப்பட்டு நல்லாட்சி உருவாக்கப்படுதலும் காவியத்தின் கருப் பொருளாகின்றன.
காவியத்துக்கு அழகும் வலுவும் கொடுக்கும் பாத்திரங்களாக பூங்கொடி, கற்பகம், சிலம்பி, கஞ்சுகம், வாசுகி, முதலாம் பெண் பாத்திரங்களையும் அமைத்துள்ளார்.
காவியம் இடம் பெறும் புலங்களாக சின்னமலை, கச்சாய் முத்துச்சலாபம், கூத்தியவத்தை, மயிலிட்டி, மாதகல், புத்தூர், நீர்வேலி, கற்கோவளம், துன்னாலை, தம்ப தேனியா, கோம்பையன் மணல், குடாரிப்பு, பூநகரி
முதலானவை அமைந்துள்ளன.
யாழ்ப்பாண வரலாறு தொடர்பான நூல்களைப் படித்து அவற்றின் வழியாக எழுந்த புலக்காட்சித் துலங்கலை அடியொற்றி காவிய ஆக்கம் இடம் பெற்றுள்ளது. காவிய அழகியலுக்குரிய கற்பனைகளும் கலந்துவிடப்பட்டுள்ளன. - யாழ்ப்பாணக் காவியத்தைத் தொடர்ந்து, 1950 • ஆம் ஆண்டு முதல் 1992 ஆம் ஆண்டு வரையிலான தமிழர் வரலாற்றையும் இளைஞர் செயற்பாடுகளையும் அடியொற்றிய பெரும் காவியம் ஒன்றையும் அவர் எழுதியுள்ளார். நாலாயிரத்து முந்நூறு கவிதைகளைக் கொண்டதாக அக்காவியம் அமைந்துள்ளது. கட்டிளமைப்

மந்தி
* * =ா
பருவம் மற்றும் இளமைப் பருவம் ஆகியவற் றில் நிகழும் அரசியல் நெருக்கடிகள், மற்றும்
போராட்டநெருக்கடிகள் முதலியவற்றை - கற.
உள்ளடக்கிய துயரம் நிறைந்த தமிழ் விடலை 01
களின் வாழ்க்கையை 'பருவப் பாலியர் படும் பாடு' என்ற காவியத்தில் இலக்கியப்படுத்தி யுள்ளார். கையெழுத்து வடிவில் அமைந்துள்ள அந்தக் காவியம் இன்னமும் பிரசுரவடிவை எட்டவில்லை.
பண்டிதர் சச்சிதானந்தன் அவர்கள் இலக் கண ஆய்வுகளிலும் ஆழ்ந்து ஈடுபட்டார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீட தேசி
ஆய்வரங்குகளில் வாசித்த கட்டுரைகளில் அவ ரிடத்துக் காணப்பெற்ற தமிழ் இலக்கண நூல் கள் தொடர்பான ஆழ்ந்த புலக்காட்சியும் மொ ழியியல் நோக்கும் புணர்ச்சிப் பகுபத உறுப்பு
கள், இடைச்சொல் என்பவற்றைப் புதிய நோக் ന
கங்களில் அணுகியமையும் வெளிப்பாடு ச
'கொண்டன. இலக்கண அமைப்புகளை வா
கணிதத் தத்துவங்களின் அடிப்படையில் வா
ஆராய்ந்தார். அதேவேளை மொழி வழக்கு களைப் புள்ளியியற் கண்ணோட்டத்தில் விளக் கினார். சம காலத்தை வழக்குகளை இலக் கணக் கட்டுக் கோப்பினுக்குள்ளே கொண்டு வரும் புலமை முயற்சியினையும் அவர் மேற் கொண்டார்.
பண்டிதர் சச்சிதானந்தனது புலமை ஆளு
மையை வெளிப்படுத்திய பிறிதொரு துறை யாக அவர் மேற்கொண்ட வானியல் ஆய்வுகளும் சோதிடக் கணிப்புகளும் அமைந்தன. கோள்களின் அசைவுகளைக் கணித அடிப்படைகளிலே துல்லியமாக ஆராய்ந்தார். அவற்றை அடியொற்றித் திட்ப நுட்பமான சோதிடக் கணிப் புகளை முன் வைத்தார். கணித ஆதாரமற்ற எதிர்வு கூறலை அவர் நிராகரித்தார்.
தரம் மிக்கதான ஆசிரியர் கல்வி உருவாக்கத்திலும் அவரது பங்களிப்பு பலாலி ஆசிரியர் கலாசாலையை அடியொற்றி எழுகோலம் கொண்டது. ஆசிரியர்களிடத்து வாசிப்பு மற்றும் ஆய்வுச் செயற்பாடுகளைத் தூண்டிவிடும் புலமை வினைப்பாட்டாளராகவும் அவர் இயங்கினார். தரம் மிக்க ஆசிரிய வாண்மையினர் அங்கே உருவாக்கப்பட்டனர்.
அவரது நிறைவுகால வாழ்க்கை தவ வாழ்க்கையாக அமைந்தது. ஒரு தவ முனிவராக அவர் நடமாடினார். - அவரது புலமைச் செயற்பாடுகளை உற்றறிந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதிப் பட்டத்தை வழங்கிச் சான்று படுத்தியது. இலங்கை அரசு வழங்கும் உயர் விருதுகளில் ஒன்றாகிய 'சாகித்திய இரத்தினா' என்பதும் அவருக்கு வழங்கப்பட்டது. அதே வேளை இன்னமும் வெளிவராத அவரது ஆக்கங்கள் கையெழுத்துப் பிரதிகளாக இருத்தலையும் நினைவிற் கொள்ள வேண்டியுள்ளது. .

Page 25

கலைக்கேசரி
பம் வு 25
செல்வன் ஸ்ரீ சியாமளாங்கன் - செல்வி கௌசல்யா சிவபாலன் ஆகியோரது திருமணம் அண்மையில் அவுஸ்திரேலியா, சிட்னி, Sarah Grand Ball Room le Montage இல் சிறப்பாக நடைபெற்றது. மணமகன் கலாசூரி அருந்ததி ஸ்ரீரங்கநாதன், (அமரர்) டாக்டர் பி.ஸ்ரீரங்கநாதன் ஆகியோரின் புதல்வராவார். மணமகள் திரு. எஸ்.சிவபாலன், திருமதி. கௌரி சிவபாலன் ஆகியோரின் புத்திரியாவார். அவர்தம் திருமண வைபவத்தின் போது இடம் பெற்ற சில சம்பிரதாய நிகழ்வுகளை படங்களில் காணலாம்.

Page 26
தலைக்கேசரி *
பனையும் தமி
(சென்ற இதழ் தொடர்ச்சி) னை உருவத்தால் மிருகங்களுக்குள் பெரியது. பனை உருவத்தால் நெடுமையானது. யானையின்
வலிமை பனையையே முறிக்கும் ஆற்றல் கொண்டது. மாமூலனார் என்ற புலவர் புறக்காட்சி நிலையிலே இதனைத் தனது பாடலிலே பதிவு
செய்துள்ளார்.
'வேனில் வெற்பில் கானங்காய
முனையெழுந் தோடிய கெடு நாட்டாரிடைப் பனை வெளிறு அருந்து பைங்கண் யானை (அகம் : 187) வேனிற் காலம் வெப்பத்தினால் காடுகள் அழிகின்றன. அக்காடுகளிலே குடியிருந்த மறவர்கள் எல்லோருமே குடியெழும்பிச் சென்றுவிட்டனர். இடமே பாழ்பட்டுக் கிடக்கிறது. அங்கே யானைகள்தான் வாழுகின்றன. அவற்றிற்கும் உணவில்லை. அருகே வளர்ந்திருக்கும் பனைகள்தான் மிஞ்சியுள்ளன. உண்ணுவதற்குத் தழைகள் கிடையாமல் பசி முற்றிய யானைகள் பனையிலே உணவு காண்கின்றன. ஓங்கி உயர்ந்து வளர்ந்திருக்கும் பனைகளை முறித்துப் போடுகின்றன. வைரமான பனந்துண்டங்களை உடைத்து உள்ளிருக்கும் சோறினை உண்ணுகின்றன. பசியைத் தீர்க்க வலிய பனைமரத்தையே அழிக்கும் யானைகள் வலிமை பெரியது. பனை மரத்தின் உள்ளே இருக்கும் சோறு வெண்மையானது; ஈரலிப்பானது; அதனை யானைகள் உண்டு பசியாறுகின்றன. வரண்ட நிலத்திலே வளர்ந்து நிற்கும் பனைகள் மிருக உணவாகவும் பயன்படுவது புலவர் மனதைத் தொட்டுப் பாடலாயிற்று.

ழர் வாழ்வும்
பனஞ்சோற்றை உண்ட யானைகள் பசியாறித் தூங்கும் காட்சியையும் புலவர் காட்டுகின்றார். யானைகள் துயிலும் போது கையையொடுக்கிக் கொண்டு அசைந்த வண்ணமே துயிலும். அவை விடியற்காலத்திலே கடலில் பரதவர் தங்கியிருக்கின்ற தோணிகளைப் போலத் தோன்றுகின்ற பனைமரம் வளந்தரும் நிலையை சங்கப்பாடல் காட்டும் பண்பு இது.
இரும்பனையன்ன பெருங்கையானையின் செயல்களைப் பனையோடு வேறு நிலையிலும் ஒப்பிடப்பட்டுள்ளது. கூட்டாக நிற்கின்ற யானைகளை நோயுற்ற பனைகளின் தோற்றத்தோடு ஒற்றுமை காண்கிறார் கல்லாடனார் என்னும் புலவர்.
...... கோடையில் குருத்திறுபு உக்க வருத்தம் சொலாது தூம்புடைத் துய்த்தலைக் கூம்பு திரங்கிய வேனில் வெளிற்றுப்பனை போல கையெடுத்து யானைப் பெருநிரை வானம் பயிரும் (அகம் : 333) கோடை காலத்திலே வெப்பத்தின் தாக்கத்தினால் குருத்து இற்றுவிடுதல் பனை மரத்திற்கு ஏற்படுகின்ற ஒரு வருத்தமாகும். அப்போது அவ்வாறு நோயுற்ற பனைகள் துளையையுடைய பஞ்சு பொதிந்த தலையும் சுருங்கி வற்றிய கோலத்துடன் நிற்கும். அநேகமாக காழ்ப்பு முதிராத இளம் பனைகளே இத்தகைய நோய்க்குள்ளாகின்றன. அவற்றினது
பனை
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ''யாழ்ப்பாண வாழ்வியல்''
கண்காட்சியில் இடம்பெற்ற ஆய்வுக் கருத்தரங்கில் ஜப்பான், கக்குசுயின் பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆய்வாளர், கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை.

Page 27
தோற்றம் யானைகள் துதிக்கையை உயர்த்தியவாறு செல்லுவதை ஒத்திருக்கின்றது. இங்கு புலவர் நோயுற்ற பனைகளை ஊன்றிக் கவனித்ததை உணரலாம். வெப்பமான காலங்களிலும் வாடிவிடாமல் வாழக்கூடியது பனைமரம். ஆனால், நோயுற்றால் அதுவும் வற்றி வாடிவிடும் தன்மையுடையது. செல்லும் வழியிலே நிற்கும் பனைகளை மரங்களெனத் தள்ளிவிடலாகாது. அவற்றை மனிதராகவே நோக்க வேண்டும். யானைகளின் கூட்டத்தைக் காணாவிட்டாலும் பனையின் கூட்டத்தை நாம் காணமுடியும். புலவர் பாடல்களில் கற்பனையாக அன்றி உண்மைக் காட்சியாக குருத்தொடிந்த கோலமுடைய பனைகள் நம் கண்ணிலே தெரியும்.
மதுரை மருதனிநாகனார் என்ற புலவர் இன்னொரு காட்சியினைத் தமது பாடலிலே காட்டியுள்ளார். யானையின் சினம் பனையின் காட்சியை அவருக்கு ஞாபகப்படுத்துகின்றது. மாலைநேரத்திலே வழிநடந்து செல்கிறது யானை ஒன்று. அதன் பார்வையிலே வழியிலே வீரத்தின் அறிகுறியாக நட்டுவைத்த நடுகல் படுகிறது. அது வெறும் கல்லாகத் தோன்றவில்லை. உண்மையான மனிதனாகவே தோற்றுகின்றது. யானை கண்டதும் தன் காலால் மனிதனாகவே எண்ணி உதைக்கின்றது. கல்லில் பட்ட காலின் நகம்பெயர்ந்து ஓடிகின்றது. அந்தக் காட்சி பெயர்ந்து விழுகின்ற பெரிய நகம்; கரிய பனை நுங்கினது
தோடு போலத் தோன்றுகிறது. பாவம் யானை தன்
வ லி  ைம யி ன் செருக் கி னால் நகம் இழந்து வருந்துகின்றது.
சழும்பு தமிழ்ச்
நூல்க

- கலைக்கேசரி
27
போர்க்களத்திலே முன்னர் நட்ட நடுகல் வீரத்தின் அறிகுறி என்பது யானை அறியாதது. இரும்பனை நுங்கின் தோடு போல தனது கால் நகம் இலகுவில் கழன்று விடும் என்பதையும் அந்த யானை உணரவில்லை.
'சினவல் போகிய புன்கண் மாலை அத்தம் நடுகல் ஆளென உதைத்த கானயானைக் கதுவாய் வள்ளுகிர் இரும்பனை இதக்கையின் ஒடியும்' (அகம் : 365) பனைநுங்கினது பண்பு ஒடிந்த யானையின் நகத்தை விளக்குகின்றது. கருமை நிறத்தினையுடைய நுங்கு வெளியே தோடுகள் கொண்டது. மாலைக் கருக்கல் யானையை வெருளச் செய்தது. வீரத்தை அது வீணாக்கி விட்டது. - வீரத்தின் சின்னமாகவும் பனை பயன்பட்டுள்ளது. புற நானூற்றிலும் பரிபாடலிலும் பனைகொடிகளிலே பயன்பட்ட செய்தி காணப்படுகின்றது. மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாண்டி வேந்தனாகிய இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை பாடியவர். அம் மன்னனைப் புறநானூற்றுப் பாடலில் புகழ்பெற வைத்துள்ளார். அவனுக்கு உலகங்காக்கும் நால்வராகிய மணிமிடற்று இறைவனும், பலராமனும், திருமாலும்,
முருகவேலும் ஒப்பாக உள்ளான் எனப்பாடியுள்ளார்.
'அடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடியோனும்' எனப் பலராமனது வெற்றிக் கொடியையும் பாடலிலே சுட்டிக்காட்டுகிறார். பனைமரம் எழுதிய கொடி பலராமன் வீரக் கொடியாய் விளங்கியுள்ளது. கலப்பையையும் பனைக்கொடியையும் உடைய பலராமனைப் பாண்டியனும் ஒத்திருந்தான் என்கிறார் நக்கீரனார்.
காவிரிப்பூம் - பட்டினத்து காரிக்கண்ணனார் என்னும் புலவரும் பலராமனது பனைக்கொடியைத் தமது பாடலிலே

Page 28
கலைக்கேசரி து
க
28
10-::-)

னெ
குறிப்பிட்டுள்ளார். புறநானூறு 58 ஆம் பாடலிலே பானிறவுருவிற் பனைகொடியோனும் என்னும் அடிகிதனை உணர்த்துகின்றது. மரநிலையிலேயன்றி உருநிலை எழுதிய
கொடியாகவும் பனை புகழ்பெற்றுள்ளது.
மன்னர் போர்க்களம் செல்லும்போது தத்தம் நாட்டுக்குரிய மாலைகளைச் சூடிச் செல்வர். கோவூர் கிழார் என்னும் புலவர் சேர, சோழ, பாண்டிய மன்னர்க்குரிய பூக்களைத் தமது பாடலிலே எடுத்து விளக்கியுள்ளார்.
'இரும்பனை வெண்டோடு மலைந்தோ னல்லன் கருஞ்சினை வேம்பின் றெரியலோ னல்லன் நின்ன கண்ணியும் ஆர்மிடைந்தன்றே நின்னொடு பொருவோன் கண்ணியு மார்மிடைந் தன்றே ஒருவீர் தோற்பினுந் தோற்பதுங்குடியே' (புறம் : 45), சோழன் நெடுங்கிள்ளியும்
நலங்கிள்ளியும் ஒருவரோடொருவர் போரிட்ட போது கோவூர் கிழார் அவர்களை அறிவுரை கூறி நெறிப்படுத்துகின்றார். உமது குடிக்குரிய மாலைகளையே இருவரும் அணிந்து போர் செய்கின்றீர்கள். உம்மில் யார் தோற்றாலும் உமது குடியே தோற்கும். பனம் பூவைச் சூடியவனும், வேப்பம்பூவைச் சூடியவனும் உம்மோடு போரிடலாம் என்கிறார். போரிடும் போது சூடியிருக்கும் பூவினைக்கொண்டே குடிகளை இனம் காண்பர். பனம்பூ சேரர் குடிக்குரிய பூவாகவிருந்தது.
| சேரநாட்டு வீரர்கள் வெறியாடும் குரவைக் கூத்தின் போது அசைந்த தலையினையுடைய பனந்தோட்டைச் செருகி ஆடுவதையும் சங்கப்பாடல் காட்டுகின்றது. நாட்டின் வளமார்ந்த பனையின் பயன்பாடுகள் சேரர் குடியின் வீரச் சின்னங்களாகவும் விளங்கியுள்ளன. சேரமான் யானைக்காட்சேய் மாந்தரஞ் சேரலிரும் பொறையின் புகழ்பாடும் புலவர் குறுங்கோர் கோழியூர் கிழார் இச்செய்தியைப் பதிவு செய்துள்ளார் சேரமன்னர்களது வெற்றிப் புகழ்பாடும் பதிற்றுப்பத்து பனந்தோட்டாலாகிய மாலை பற்றிய செய்தியினைக் கூறுகின்றது. இரும்பனம்புடையல் சூடிய சேரவீரர்கள் போருக்குச் செல்கிறார்கள். பதிற்றுப்பத்து 70 ஆம் பாடலில் 'தண்பனம் போந்தை' என வரும் தொடர் பனைமாலை பற்றிய விரிவான விளக்கத்தைத் தருகின்றது
'வண்டிசை கடவாத் தண்பனம் போந்தை குவிமுகி ழசி வெண்டோடு கொண்டு தீஞ்சுனை நீர்மலர் மிலைந்து மதஞ் செருங்கி உடைநிலை நல்லமர் கடந்து மறங்கொடுத்துக் கடுஞ்சின வேந்தர் செம்மறெலைத்த வலம்படு வான் கழல் வாயவர் பெரும்'
வீரர் தலைவனை வர்ணிக்கும் மேற்காட்டிய பாடலடிகள் பனம் போந்தை அமையுமாற்றையும் விளக்குகின்றன. வண்டுகள் மொய்த்துப் பாடுதல் இல்லாத தண்ணிய பனையினது குவிந்த அரும்பு போன்ற கூர்மையுடைய வெள்ளிய பனங்குருத்தோடு இனிய சுனையிடத்து மலர்ந்த குவளைப்பூ விரவிய கண்ணியைச் சூடிப் போருக்குச் செல்கிறான் வீரர்
- தலைவன்.
பனங்குருத்திலே
0ான்

Page 29
தேனின்மையால் வண்டுமொய்த்துப் பாடுதலும் இல்லை. அதனால் 'வண்டிசை கடவாத் தண்பனம் போந்தை' எனச் சிறப்பும் பெற்றது.
தோற்றப்பாட்டு நிலையில் கரும்பனையின் சாதாரண தோற்றம் புலவர் மனதைப் பெரிதும் கவர்ந்துள்ளது. அதனைத் தமது பாடல்களிலே உவமையாக்கி நிலைப்படுத்தியுள்ளனர். இயற்கையில் காற்றின் வலிமையால் பனையின் முழுமையான தோற்றம் மறைக்கப்பட்டு விடுவதுமுண்டு.
'பனைத்தலைக் கருக்குடை நெடுமடல் குருத்தொடுமாயக் கடுவெளி தொகுத்த நெடுவெண் குப்பைக் கணக்கொள் சிமைய வணங்குங் காணல்'
- (குறுந்தொகை : 372) விற்றூற்று மூதொயினனார் என்னும் புலவர் தமது பாடலிலே கடிய காற்றின் வலிமையால் பனையின் தோற்றம் மறைவதை விளக்கிக் காட்டுகின்றார். மணற்பாங்கான கடற்கரைப் பிரதேசங்களிலே வளர்ந்துள்ள பனைமரங்கள் காற்றுக் காலத்தில் மண்ணினால்
மூடப்பட்டு விடும்.
பனைமரத்தின் உச்சியிலுள்ள கருக்குப் பொருந்திய நெடியமடல்கள் குருத்தோடே மறைந்து விடும். அவ்விடத்திலே கூட்டான மணற் குவடுகளே தோன்றியிருக்கும். நெடும்பனையும் மணலிலே மறையும் நிலை. இயற்கையின் வலிமையால் நடக்கும் நிகழ்வாகும்.

, கலைக்கேசரி
பரிபாடலில் பனங்குலைகள் உதிர்கின்ற காட்சி போர்க்களத்திலே வீரர் தலையுருள்வதற்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது.
.............................. வேர் தூர் மடல் குருகு பநியா நீளிரும் பனைமிசைப் பல பதினாயிரங் குலைதரை யுதிர்வபோல் நில்லாது ஒருமுறை கொய்பு கூடி ஒருங்குருண்டு பிளந்து நெரிந்துரள்பு சிதறுபு அள்று சொரிபு நிலஞ்சோரச் சேரார் இன்னுயிர் செருக்கும்' (பரிபாடல் : 2) வேரும் தூரும் மடலும் குருந்தும் பறிக்கப்படாத நீண்ட காரிய பனைகளின் உச்சியில் உள்ள பற்பதினாயிரம் குலைகள் அப்பனைகளின் தலைகளின்றும் இற்று நிலத்திலே உதிர்வதை நாம் கண்டிருக்கிறோம். ஒரு பனையிலே பலநூறு காய்கள் காய்ப்பதுண்டு. நீரற்ற வரண்ட நிலமெனினும் வளமான காய்கள் பலநூறு பனைதரும் இயல்புடையது. பனையின் குலைகள் உதிரும் தோற்றம் வீரர் தலைகள் நிலத்திலே உருளும் காட்சிக்கு உவமையாக்கப்பட்டுள்ளது. திருமாலின் வீரச்சிறப்பைப் பனையின் இயற்கையான தோற்றப்பாடு நன்கு விளங்க உதவுகின்றது.
(தொடரும்)
காழும்பு தமிழ்ச் அங்கம்
நூலகம்

Page 30
கலைக்கேசரி இது 30 நடனக்கலை
மட்டக்களப்பின் பாரம்பரிய கொம்பு முறி
சுவாமி 6
(0ன் பாடும் தேன்நாடாம் மட்டக்களப்பில் உள்ள கலைகள் வெறுமனே ஒரு பொழுதுபோக்கு கலைகள்
அல்ல. ஒரு உயர்ந்த கலை நுணுக்கம் கொண்ட பாரம்பரிய கலைகளாகும். அயோத்தியினின்று முற்குகர் இலங்கைக்குப் படையெடுத்து வந்தனர். அவர்கள் இலங்கையின் கீழ்ப் பாகம் வந்த போது ஒரு சதுப்பேரி காணப்பட்டது. அச்சதுப்பேரியினூடே தமது ஓடத்தைச் செலுத்தினர். அப்போது வழியில் மண் செறிந்த ஓர் முனை குறுக்கலாக இருந்தமையால் அதற்கு மண்முனை எனும் பெயரிட்டு அப்பாற் தென்திசைநோக்கிப் புறப்பட்டனர். வாவி எல்லையில் ஒடம் சென்றதும் அப்பாற் செல்ல வழியில்லாமை கண்டு 'இது மட்டும் மட்டடா மட்டக்களப்படா' (இந்தக்களப்பு இது வரையும்தான்) எனப்பகர்ந்த இடத்தில் மட்டக்களப் பென்னும் நாமத்தை சூட்டி ஒரு கிராமத்தை அரணாக்கினர். இவ்வாறே மட்டக்களப்பு எனும் பெயர் தோன்றியதாக மட்டக்களப்பு மான்மியம் கூறுகின்றது.
மட்டக்களப்பில் கண்ணகி வழிபாடு
பாலோடு தேனாறு பாய்ந்தோடும் இக்களப்பில் உள்ள கூத்துக்கலைகள் எல்லாம் பொதுவாக கண்ணகி

க் கலைகளுள் ஒன்றான விளையாட்டு
ஷர்மிளா ரஞ்சித்குமார், விரிவுரையாளர் விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகம்
வழிபாட்டுடன் தொடர்புடையதாகவே காணப்படுகின்றன. சோழ மண்டலத்தில் கண்ணகி என்றும் பாண்டிய மண்டலத்தில் வீரகற்பரசி என்றும் சேர மண்டலத்தில் பத்தினித் தெய்வம் என்றும் ஈழமண்டலத்தில் சிங்களவரிடையே பத்தினித் தெய்யோ என்றும் மட்டக்களப்பில் கண்ணகியம்மன் என்றும் கூறப்படும் கடவுள் சிலம்பு கூறும் கண்ணகியாவாள். சிங்கள மக்களிடை வழங்கும் 'பத்தினித் தெய்யோ' வழிபாடுதான் ஈழத்திலுள்ள மிகப்பழைமையான கண்ணகி வழிபாடு என்று ஆய்வாளர் வி.சீ கந்தையா மட்டக்களப்புத் தமிழகம் என்னும் நூலில் குறிப்பிடுகிறார். மேலும் அவர் கண்ணகி தேவியின் உண்மை வரலாற்றைச் சிங்கள மக்கள் அறியாராயினும் இந்தியாவிலிருந்தே பத்தினித் தெய்வ வழிபாடு கொண்டு வரப்பட்டதென்பதை 'இராசாவளி” என்னும் நூலில் நன்கு அறிவார்கள் எனக் குறிப்பிடுகின்றார். கயபாகு மன்னன் சோழ நாடு நோக்கிப்படையெடுத்து வெற்றியீட்டி மீண்டும் வருகையில் கண்ணகி தேவியின் காற்சிலம்பு ஒன்றினைக் கொண்டு வந்தானென்றும் பின்னர் கண்ணகிக்கு சில இடங்களில் கோயில்கள் கட்டினான் என்றும் 'இராசாவளி' எனும் நூலில் கூறப்பட்டுள்ளது. பின்னரே மட்டக்களப்பிற்கு கண்ணகியம்மன் வழிபாடு வந்ததாக சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் மட்டக்களப்பில் கண்டெடுக்கப்பட்ட தாதன் கல்வெட்டில் தமிழகத்தின் கொங்கு நாட்டைச் சேர்ந்த தாதன் என்பவன் தனது குழுவினருடன் பாரத நாட்டில் கலிங்கம், வங்காளம், மத்தியநாடு, மலையாளம் போன்ற பல இடங்களிலும் மகா பாரதக் கதையை மக்கள் மத்தியில் பரப்பும் நோக்கத்துடன் அதை நாடகமாகக் காண்பித்து, அதன் பின் இலங்கை வந்து அதைக் கிழக்கிலே பரப்பிய வரலாற்றினை முக்கியப் படுத்துவதாகவே அக்கல்வெட்டு காணப்படுகின்றது.
தாதன் திருக்கோவிலைத் தரிசித்த பின்னர், அப்போது கண்டி அரசின் கீழ் பொலநறுவை தொடக்கம் கட்டகாமம் வரையான பிரதேசத்திற்கு ஆட்சி அதிகாரத்திலிருந்த எதிர்மன்னசிங்கனிடம் தமது நோக்கத்தை விபரிப்பதையும் அதனை ஏற்றுக் கொண்ட எதிர்மன்னசிங்கன் பாண்டிருப்பு என்னும் நிழல் நிறைந்த கடலோர நிலப்பரப்பில் பதினெட்டு நாட்கள் திரளான மக்கள் முன்னிலையில் அதனை நிகழ்த்திக் காட்ட ஏற்பாடுகள் செய்து கொடுத்திருந்ததாகவும் அதனைக்காண கண்டி மன்னனும் வந்ததாகவும் அதன் வெளிப்பாடு கூறுகின்றது. இதன் பிரதிபலிப்பாக குறித்த இடத்தில் (பாண்டிருப்பில்) முதன்

Page 31
முதலாக துரோபதையம்மன் கோயில் அமைந்ததோடு கிழக்கின் ஏனைய பகுதிகளிலும் இவ்வழிபாடு பரவியமையை வரலாறு பதிவு செய்துள்ளதாக ஆய்வாளர் கவிக்கோவெல்லவூர் கோபால் கூறுகின்றார்.
இவ்வாறாக கண்ணகி வழிபாடு மட்டக்களப்பினுள் வந்தவுடன் கொம்பு முறிச் சடங்கும் அறிமுகமாகியது. கொம்பு முறிச் சடங்கில் ஒரு நிகழ்வாக தொழிலுடன் இனைந்திருந்த வசந்தன் ஆட்டமும் இனைக்கப் பட்டிருக்கின்றது.
கொம்பு விளையாட்டு| கோவலனைக் கொலைசெய்து, பாண்டிய மன்னனைப் பழிவாங்கி, மதுரையினை எரியூட்டிய பின்னரும் கோபந் தணியாது வந்த கண்ணகியின் கோபத்தை இடையர்குல இளைஞர்கள் காதல் கலந்த விளையாட்டு விழாவாகக் கொம்பு விளையாடலைச் செய்து அவளைக் குளிர்வித்தனர். அதன் தொடர்பினதாக எழுந்ததே இன்று மட்டக்களப்பில் ஆடப்படும் கொம்பு விளையாட்டாகும். விவசாயிகளால் மழை வேண்டி கொம்பு முறிச்சடங்கு நிகழ்த்தப்படுகின்றது. புரட்டாதி மாதம் விதைத்தலுக்கு முன்னர் இடம்பெறுகின்ற இச்சடங்கில் ஊரே பங்கு கொள்கின்றது. கண்ணகியின் சீற்றமே மழைபெய்யாதிருப்பதற்குக் காரணம் என்று கருதி கண்ணகியின் சீற்றத்தைக் குறைப்பதற்காக நடத்துகின்ற ஒரு சிரிப்பூட்டும் நிகழ்ச்சியாகவே இதனை நிகழ்த்துகின்றனர். இவ்விளையாடல் நடந்தால் உடனே நாடு குளிர மழை பொழிந்து துன்பங்கள் எல்லாம் நீங்கப்பெறுதல் வியக்கத்தக்கவொன்றாக இன்னமும் மட்டக்களப்பில் நடப்பதைக் காணலாம்.
கொம்பு விளையாட்டின் ஆட்ட முறை மட்டக்களப்பில் தேற்றாத்தீவு, காரைதீவு, களுதாவளை, மண்டூர் போன்ற பகுதிகளில் இவ்விளையாடல் காணப்படுகின்றது. கொம்பு விளையாட்டு ஒரு கிராமத்திலே தொடங்குவதற்கு முன்னர் இரு பிரிவுகளாக அக்கிராம மக்கள் பிரிவர். இதனை வடசேரி, தென்சேரி என அழைப்பர். வடசேரி கோவலன் கட்சி எனவும் தென்சேரி கண்ணகி கட்சி எனவும் அமையும். இப்போட்டி நிகழ்ச்சியில் கொம்பு முறித்தலுக்காக இரண்டு கட்சியினரும் கொம்புகளைத் தயாரித்துக் கொள்வர். இக்கொம்புகள் வளைந்த தடி மரக்கிளைகளில் இருந்த பெறப்படும். கரையாக்கு எனப்படும் ஒரு வகை மரமே இதற்குரிய மரமாகத் தெரிவு செய்யப்படும். இதில் இருக்கின்ற வளைந்த மரக்கொப்புகள் இதற்காகத் தயார் படுத்தப்படும். இக்கொம்புகள் தயாரிப்பதற்கு விதி முறைகள் உண்டு. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் இக் கொம்புகளைத் தயாரித்துக் கொள்வர். இக்கலை ஆட்டத்தில் போர்த் தேங்காய் உடைத்தல், கொம்பு முறித்தல், கொம்புத்தட்டு எடுத்தல், தேர்க்கல்யாணம், குளுத்திபாடுதல், வசந்தன் கூத்து என்பன அடங்கும்.
வடசேரியாரது கொம்பு பெரும்பாலும் தொண்ணூறு பாகைக்கு
மேற்பட்ட வளைவுடையதாகவும்

இ கலைக்கேசரி

Page 32
கலைக்கேசரி து 32 நினைவுத்திரை
தென்சேரியாரது கொம்பு வடசேரியாரது கொம்பைவிட ஒடுங்கியதாகவும் இருக்கவேண்டியது பொதுவிதியாகும்.
ஊர் கூடித் தீர்மானம் செய்த நாளன்று கொம்பு விளையாடல் ஆரம்பமாகும். முதல் நாள் ஆரம்ப விழாவில் போர்த்தேங்காய் அடிப்பர். இதுவே மட்டக்களப்பு வழக்காகும். எதிர் எதிராக இரு சேரிகளின் பிரதிநிதிகளும் நிற்பர். தம் கையிற் கொண்டுள்ள வலிவுடையதான சிறிய போர்த் தேங்காய் மூலம் முறையே எதிர் சேரியர் உருட்டியனுப்பும் தேங்காய்களை ஒவ்வொன்றாய் உடைப்பர். ஒரு பகுதியால் உடைக்கப்பட்ட தேங்காய்களின் கூடிய எண்ணிக்கை கொண்டு வாரத்தினுடைய வெற்றி தீர்மானிக்கப்படும். அது முடிந்தவுடன் கொம்பு விளையாடல் ஆரம்பமாகும். முதல் நாள் விளையாட்டில் தென்சேரிக்கே (கண்ணகியம்மனின்) வெற்றி கொடுத்தல்
மரபு.
அடுத்தநாள் கொம்பு முறிவிளையாட்டில் இரு சேரிகளினதும் கொம்புகளில் வளைவிலுமுள்ள 'குச்சு' க்கு அண்டிய பாகத்தின் சுற்றளவால் ஒத்த கொம்புகளே போட்டிக்காகத் தெரிந்தெடுக்கப்படுவன. அவை முறுக்கேறிய புரிகளால் வரிந்து கட்டப் பெற்றுப் பனிச்சங்காய்ப் பசையூட்டிக் காயவைக்கப்படும். அவ்வாறான கொம்பினை நடுவில் வைத்துப் பசையூட்டிய புரியாற் சுற்றப்பட்ட இரண்டு கம்புகளை இரு புறமும் அணைத்துக் காட்டுதல் நியதி. கொம்புடன் அணைத்துக் கட்டப்பட்ட இரு கம்புகளும் 'பில்லி' என்றழைக்கப்படும். பில்லி கட்டப்பட்ட கொம்பே விளையாட்டுக்குத் தகுதியான நிறைந்த நிலையை அடைந்ததாகும். ஒரு

மரத்தில் பூட்டிய 'அரிப்பு' (சிறுவடம்) எனப்படுவதான கயிற்றில் தென்சேரியாரின் கொம்பு தொடுக்கப்படும் அக்கொம்பிற் கொளுவிய வடசேரிக் கொம்பிலே இன்னொர் அரிப்பினைப் பிணைத்து அவ்வரிப்பிலே பெரிய வடமொன்றை மாட்டுவர். அவ்வடத்தினைப்பற்றிப் பலர் இழுக்கும் போது இரு சேரிகளையும் சேர்ந்த திறமையாளர் சிலர் தத்தம் கொம்புகளிற் 'பல்வாய்' (கொம்பின் தலைப்பகுதி) 'குச்சு' (கொம்பின் வளைந்த இடத்து நடு ஆணி) முதுகு மரம் (கொம்பின் தலைப்பகுதி) 'பில்லி” (கொம்பின் இருபுறமும் அணைத்துக்கட்டிய தடிகள்) என்னும் உறுப்புகளை எல்லாம் முறைப்படி பிடித்துக் கொள்வர். அரிப்பிற் பிணைந்த பெருவட்டத்தினை இரு சேரிப் பொதுமக்களும் இழுப்பர் அப் பலரது இழுவைப் பொறுப்பினால் இரண்டிலொரு கொம்பு முறியும். உடன் வெற்றி பெற்றவர் தமது சேரியின் பெயரை சொல்லுவர். கொழுகொம்பு, கொம்புத் தட்டுக் கொம்பு, கூடாரக் கொம்பு, ஏடகக் கொம்பு, தண்ணீர்க்கொம்பு என்று கொம்பு வகை ஐந்திலும் முறையே ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு ஆகப் பதினேழு இணைக்கொம்புகள் பூட்டி இழுக்கப்படுதல் கொம்பு விளையாட்டில் ஒரு கணக்காகும்.
கொம்பு முறித்தலுடனான இந்நிகழ்வு முழு இரவும் இடம்பெறும். ஒவ்வொரு நாளும் கொம்பு முறித்த பின்னர் இரு கட்சியினருக்கும் பொதுவான கொம்புத்தட்டில் அம்மன் சிலையை வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். இவ்வாறாக ஊர்வலமாகச் செல்லும் போது வசந்தனாடுதலும் - இடம் பெறுகின்றது. இரு கட்சிகளைச்சார்ந்த இளைஞர்களும் ஊர்ச்சந்திகளில் தேரை

Page 33
நிறுத்தி வசந்தன்டிப்பர். இவ் ஊர்வலத்திலே உடுக்குச் சிந்தும் ஊர்க் காவியமும் படிக்கப்படுகின்றது. இறுதியாக கொம்பு விளையாட்டில் வெற்றி பெற்றவர்கள் நடத்துகின்ற கேளிக்கைகளிலே வசந்தனாடுதலும் முக்கிய நிகழ்வாக இடம் பெறுகின்றது. இக்கொம்பு விளையாட்டிலே முறிக்கப்படுகின்ற கொம்புகளிலே ஏகக் கொம்பு முக்கியமானதாகும். இது மிகவும் பருமனுடையதாகும். இக்கொம்பினை முறிக்கும் கட்சியினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து வெற்றி கொண்டாடுவர். தண்ணீர்க் கொம்பே இறுதியாக முறிக்கப்படும் கொம்பாகும். இதில் தென் சேரிக்கே வெற்றி கொடுத்தல் இயல்பு.
கொம்பு விளையாடல் நடைபெறும் சந்தர்ப்பங்களில் இரு கட்சியினராலும் பாடப்படும் பாடல்கள் மிகவும் இனிமையும் பொருட்சுவையும் வாய்ந்தவையாகும். எடுத்துக்காட்டாக பாடல்லொன்றை நோக்குவோம்.
'வடசேரியான் கொம்பு எங்கேயெங்கே மணமுள்ள தாழையில் மேலே மேலே தென்சேரியான் கொம்பு எங்கேயெங்கே செம்பர பற்றைக்குக் கீழே கீழே
வடசேரியான் கொம்பு எங்கே எங்கே வண்ணாண்ட சாடிக்குள்ளே உள்ளே தென்சேரியான் கொம்பு எங்கேயேங்கே சித்திரத் தேருக்கு மேலே மேலே' சீற்றம் கொண்டிருந்த கண்ணகியின் முன் இளைஞர்களால் நடத்தப்பட்ட இக் கொம்பு விளையாட்டில் கண்ணகிக் கட்சியான தென்சேரிக்கே வெற்றி கொடுத்து விளையாடியதைக் கண்ட கண்ணகிக்கு சிரிப்பு வந்ததாகவும் சீற்றம் தணிந்த - அவர் புன்னகைத்ததாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

2 கலைக்கேசரி
33
தண்ணீர்க் கொம்பு முறிக்கப்பட்டதும் மக்கள் கட்சி பேதம் மறந்து ஆடிப்பாடி மகிழ்வர். விடிய விடிய வசந்தனாடுதல் இடம்பெறும். மழைக்காவியமும் படிக்கப்படும். இவ்வாறு விளையாட்டு முடிவடைந்தவுடன் மழை பெய்வதாகக் கிராம மக்கள் கூறுகின்றனர். இப்போதும் வந்தாறுமூலை போன்ற கிராமங்களில் வாழுகின்ற மக்களிடம் இந்நம்பிக்கை வேரூன்றி உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கொம்பு முறிச் சடங்கில் ஊரே இரண்டு கட்சியாகப் பிரிந்து நின்றமையால் இக்கட்சியினருக்கிடையே உட்பூசல் ஏற்பட்டு கட்சிப்பற்றினால் பல பிரச்சினைகளும் ஏற்பட்டது. ஒரே குடும்பத்திலேயே கட்சிப்பூசல், பிரிவுக்கு வழி கோலியது. இவ்வாறான தீய விளைவுகளால் சில ஊர்களில் கொம்பு முறி விளையாட்டு நிறுத்தப்பட்டது. இவ்வாறு நிறுத்தப்பட்ட கிராமங்கள் சிலவற்றில் வசந்தனாடுதலும் நிறுத்தப்பட்டமையானது மிகக் கவலைக்குரிய விடயமாகும். ஆனாலும் சில கிராமங்களில் வசந்தன் ஆடல் மட்டும் தனி ஒரு நிகழ்வாக ஆடப்பட்டு வருகின்றமையை இன்று அவதானிக்கக் கூடியதாக உள்ளது. வீதி தோறும் மக்கள் நிறைந்திருந்து, இரவெல்லாம் நிறைந்த தெருவிளக்குகளும் கொண்டு ஊரை அணி செய்யும் காலம் இன்று மறைந்து போய் விட்டது. போர், இடப்பறிப்பு, இடப்பெயர்வு, நவீன நாகரிக வளர்ச்சி போன்ற பல காரணங்களால் மட்டக்களப்பில் அழிவுற்ற பாரம்பரிய கலைகள் இன்று படிப்படியாக வளர்ச்சியடைந்து வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதை மகிழ்ச்சிக்குரிய, ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து வரவேற்கப்பட வேண்டிய அம்சமாகும்.'
(படங்கள் தந்துதவியவர்: பேராசிரியர். சி. மௌனகுரு)

Page 34
கலைக்க்ேசரி ) 34 அட்டைப்படக் கட்டுரை
மியன்மாரின் வரலாற்று
பாகன்
மி
யன்மார் அரச வம்சத்தின் தலைநகராக 11 ஆம்
நூற்றாண்டில் இருந்து 13 ஆம் நூற்றாண்டு வரை - விளங்கிய பாகன் (Bagan) ஆசியாவில் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடங்களில் பிரதானமாக விளங் குகின்றது. அத்துடன் இன்றும்கூட தேரவாத பௌத்தத்தின் தனித்துவமான சாதனைகளை பிரதிபலிக்கும் ஒன்றாக
விளங்குகின்றது.
சமபூமியான பாகன் மியன்மாரின் மத்திய பகுதியில் அயியர்வத்தி நதியின் கிழக்கு கரையோரமாக சுமார் 16 சதுர மைல் பிரதேசத்தில் பாகன் அமைந்திருக்கிறது. பாகனில் 19 கிராமங்கள் உள்ளன.
பாகன் இராச்சியத்தை 55 அரசர்கள் தொடர்ச்சியாக ஆண்டார்கள் என மரபு வழியாகக் கூறப்படுகின்றது. 250 ஆண்டு காலவரலாற்றை கொண்டிருந்த பாகன் இராட்சியத்தின் அரச வம்சத்தின் அதிகாரபூர்வ வரலாறு, அனோரஹ்த அரசனின் ஆட்சியுடன் (கி.பி. 1044 -1077) ஆரம்பிப்பதாக சாசனங்கள் ஆதாரத்துடன் உறுதிப் படுத்துகின்றன. 1057 ஆம் ஆண்டு தாற்ரனை
கைப்பற்றிய அனோரஹ்த, பாளி மொழியில் உள்ள தேரவாத வாசகங்களையும் மற்றும் ஏராளமான பௌத்த பிக்குகள், கைவினை கலைஞர்கள் ஆகியோரையும் தனது
இராச்சியத்திற்கு அழைத்து வந்தான்.
- - - -

பமுக்கியத்துவம் பெற்ற
நகரம்
பாகன் மக்கள் மொன் பிக்குகளிடமிருந்து கல்வியையும் சமயத்தையும் வேத நூல்களையும் பெற்றார்கள். (இந்த மொன் (Mon) இன மக்கள் தென்கிழக்காசியாவின் பூர்வீக குடிகள் ஆவார். பெளத்தமதம் இலங்கையிலிருந்து தென் கிழக்கு ஆசியாவிற்கு இவர்களுக்கூடாகவே முதன்முதலாக பரப்பப்பட்டது.) பாகனின் பெரும்பாலான கட்டிடங்கள் 11 ஆம் நூற்றாண்டில் இருந்து 13 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் கட்டப்பட்டவையாகும். நகரத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் பத்தாயிரத்திற்கும் அதிகமான சிறியதும் பெரியதுமான ஆலயங்கள் கட்டப்பட்டன. இவற்றில் 2200 வரையிலான ஆலயங்களே தற்போது எஞ்சிக் காணப்படுகின்றன. இங்கு மக்கள் வழிபாடு செய்கிறார்கள்.
பாகன் அரச பரம்பரை 13ஆம் நூற்றாண்டின் இறுதியில் வீழ்ச்சியடைந்தது. ஆயிரக்கணக்கான ஆலயங்கள் ஆக்கிரமிப்பாளர்களாலும் விஷமிகளாலும் அழிக்கப் பட்டன. ஆலயங்களின் கற்கள் கோட்டைகளைக் கட்ட உபயோகிக்கப்பட்டன. ஆலயங்களின் அழிவுக்கு இன்னொரு காரணம் 1975ஆம் ஆண்டு ஏற்பட்ட
பூகம்பம் ஆகும். இருப்பினும் யுனெஸ்கோவுடனான திட்டங்களின் ஒத் துழைப்பினால் சில - புனர்
நிர்மாணங்களும்
திருத்த

Page 35
கலா
வேலைகளும் இங்கு நடைபெற்று வருகின்றன. பெரும்ப ஆலயங்களின் உட்பகுதி சுவர்கள் மிக கவர்ச்சியான சித்திரங்க அலங்கரிக்கப்பட்டுள்ளன. மொன் செல்வாக்கினை மி. கொண்டிருந்த சற்சதுர ஆலயங்கள் மங்கலான ஒளிய அவற்றின் நடைபாதைகள், உள்ளே காற்று வசதியுடன் சிறப்பு தோன்றுகின்றன. பழைமையான கட்டிடக்கலை வரை சுவர்ச்சித்திரங்கள், கல்வெட்டுக்கள் ஆகியன இங்கு நில காணப்படுகின்றன. அத்துடன் பாகன் நகரம் பொதுவாக
வகைப் பொருட்கள் தயாரிப்பிலும் பெயர்1ெ விளங்குகின்றது. மியன்மார் மக்களின் கலாசார
மையமாகவும் இந்நகரம் விளங்கின்றது. பாகனின் 25 மேற்பட்ட அற்புதமான பௌத்த ஆலய இடங்கள் உள்ளன.
- - ஷ்வெஸிகன் ஆலயம் பாகனில் மிகச் சிறப்பான நினைவுச் சின்னம் ஷ்வெல ஆகும். இவ்வாலயம் பாகனின் எல்லாம் வல்ல இறைவ ஆலயம் எனக் கூறப்படுகிறது. இலங்கையில் கண்டியில் இ புனித தந்தத்தின் நான்கு நகல்களில் ஒன்றை பிரதிஷ் செய்வதற்காக wவெஸிகன் ஆலயம் அமைக்கப்பட்டது. நகரின் வடக்கு எல்லைப் பகுதியைக் குறிப்ப அமைந்துள்ளது. மற்றைய மூன்று தந்த நகல்களும் வேறு மூ ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
இரண்டாவது தந்த நகல் நகரின் தெற்குப் பக்க எல்லை உள்ள சிறிய ஆலயத்திலும் மூன்றாவது அயியர்வதி நதி மேற்கு கரையில் உள்ள ஆலயத்திலும் நான்காவது தந்த ந கிழக்குத் திசையில் 32 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மன ஒன்றின் உச்சியில் அமைந்திருக்கும் கோயிலிலும் பிரதிஷ்ை செய்யப்பட்டுள்ளன. ஒரே நாளில் ஒருவர், இந்த நான் ஆலயங்களுக்கும் சென்று வழிபாடு செய்வாராயின் அவருக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என ஒரு பழைய கல்
கூறப்பட்டு வருகின்றது.
தங்க முலாம் பூசப்பட்ட இவ்வாலயம் மூன்று உயர் தளங்களின் மேல் அமைந்திருக்கிறது. ஆலய கீழ்ப் பகுதியைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள எனாமல் பூசப்பட்ட உலோக பெயர்ப் பலகைகள் புத்தரின் வாழ்வில் இடம் பெற்ற சம்பவங்களைச் 7 சித்திரிப்பவையாகக் காட்சி தருகின்றன. இவை 550
ஜாதகக் கதைகள் எனக்
கூறப்படுகின்றன. ஆலயத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு கல்லில் 10 சென்ரி மீட்டர் அளவிலான பள்ளம் உள்ளது.
இதற்குள் தண்ணீரை நிறைப்பதன் மூலம், அன்றைய மியன்மார் அரசர்கள், ஆலயத்தின் உச்சி பிரதிபலிப்பை பார்த்துள்ளனர். முடிசூடிய தலையைத் திருப்பி அவர்கள் மேலே பார்ப்பதில்லை. பார்வையாளர்கள் தொலைநோக்கி மூலம் உச்சியைப் பார்க்கலாம்.
தற்பின்யு ஆலயம் மற்றுமொரு பிரசித்த ஆலயமாக விளங்கியது தற்பின்யு ஆலயமாகும். 'தற்பின்யு' என்பது புத்த பெருமானின் சர்வ வியாபகத்தினைக் குறிப்பதாம். ஆலோங்சிது (1113 - 1163) என்னும் அரசனால் கட்டப்பட்ட இவ்வாலயம் இரட்டை
பல்

L, கலைக்கோம்.
Tலான களால் கெவும் புள்ள
பாகத்
புகள், ஒறந்து
TTTTTTTITTTTET
- பூச்சு
பற்று மரபு க்கும்
ஸிகன் பனின்
நந்த
டை இது "தாக ன்று
யில் யின் கேல்
மல
- ஒ வ இ
பாகன கடையா

Page 36
கலைக்கேசரி இத
பாகனின் கலைநயம்

மாடி ஆலயங்களில் ஒன்றாகும். நான்கு பக்கங்களிலும் தலைவாயில்கள் அமைந்துள்ளன. ஆனால் கிழக்குத் தலை வாயில் சற்று நீளமாகும். மாடிப்படிகளில் ஏறிச் சென்றால் மேல் தளத்தில், கல் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கின்ற மிகப் பிரமாண்டமான புத்தர் சிலையைக் காணலாம். இவ்வாலய மேல் தளத்தில் நின்று பாகன் நகரின் இயற்கை அழகையும் எண்ணற்ற நினைவுச் சின்னங்கள் மற்றும் அகன்ற அயியர்வதி நதி ஆகியவற்றையும் கண்டு ரசிக்கலாம்.
ஆனந்தா ஆலயம் மியன்மாரின் ஒவ்வொரு பிரஜையும், பாகனுக்கு விஜயம் செய்ய வேண்டும் என்றும், அப்படி விஜயம் செய்கையில்,
அட்டைப்பட விளக்கம்:
பாகனில் மிகச் சிறப்பான தங்க முலாம் பூசப்பட்ட அலங்காரமான நினைவுச் சின்னம் ஷ்வெஸிகன் ஆலயம் ஆகும். இலங்கையில் சோழர்களுக்கு எதிராக படைதந்து உதவுமாறு
இலங்கை மன்னன் முதலாம் விஜயபாகு, பாகன் மன்னன் அனோரஹ்தவிடம் 1069 இல் உதவிகோரினான். அதன்போது பாகன் மன்னனின் படைஉதவிக்கு நன்றியாக கொடுக்கப்பட்ட புனித தந்தத்தின் நான்கு நகல்களில் ஒன்றை பிரதிஷ்டை செய்வதற்காக ஷ்வெஸிகன் ஆலயம் அமைக்கப்பட்டது. இவ்வாலயம் மூன்று உயர்தளங்களின் மேல் அமைந்திருக்கிறது. ஆலயத்தின் கீழ்ப் பகுதியைச் சுற்றி 550 ஜாதகக் கதைகள் சித்திரிக்கப்பட்டுள்ளன.
கர
ஆனத்தா ஆலயத்துக்குச் செல்லாவிடின், அந்த விஜயம் முற்றுப்பெற்றதாக இருக்காது என்ற நம்பிக்கை இன்றும் உண்டு.
பாகன் ஆலயங்களில் மிகப் பெரியதும் மிக நுண்மையானதும் சிறப்பாகப் பராமரிக்கப்படுவதும் இவ்வாலயமேயாகும். 1975 ஆம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தில் இவ்வாலயம் கணிசமான அளவு சேதம் அடைந்தாலும், முழுமையாகத் திருத்தி அமைக்கப் பட்டுள்ளது.
கி.பி. 1105 ஆம் ஆண்டளவில் சியன்சித்தா அரசனால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்த - கோயில், பூரணத்துவமான அளவீடுகளுடன் கட்டப்பட்டதாகப் போற்றப்படுகிறது. 1990 ஆம் ஆண்டில் அதன் தொள்ளாயிரமாம் ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்ட போது, ஆலயத்தின் கோபுர உச்சிக்கு தங்க முலாம் பூசப்பட்டது. எஞ்சிய வெளிப்புறங்கள் காலத்திற்குக் காலம் வெள்ளையடிக்கப்பட்டு வருகிறது.
இங்கே ஒரு புராணக்கதையும் கூறப்படுகிறது. அதாவது ஒருநாள் 8 பிக்குகள் அரசனின் மாளிகைக்கு பிச்சைக்கு வந்தார்கள். அவர்கள் அரசனிடம் அளவளாவும் போது தாம் ஒரு காலத்தில் இமாலய மலையில் உள்ள நந்தமுலா குகைக் கோயிலில் வசித்ததாகக் கூறினார்கள். அவர்களது பேச்சுக்களால் மிகவும் கவரப்பட்ட அரசன், தமது அரச மாளிகைக்கு மீண்டும் வர வேண்டும் என வேண்டிக் கொண்டான். அந்த பிக்குமார் தமது தியான சக்தியினால்

Page 37
தாம் வசித்த இடத்தின் இயற்கை காட்சிகளைக் காட்டினார்கள். இக்காட்சியினால் மிகவும் கவரப்பட்ட அரசன், பாகன் சமவெளியின் நடுப்பகுதியில் குளிர்மையாக இருக்கக் கூடிய ஒரு கோயிலை நிர்மாணிக்க ஆவல் கொண்டான். இவ்வாலயத்தைக் கட்டிப் பூரணமாக்கிய பின், அதன் கட்டிடக் கலை அழகு தனித்துவமாக விளங்க வேண்டும் என்பதற்காக அக் கோயில் கட்டிட
விற்பன்னர்களைச் சிரச்சேதம் செய்தான். - ஆனந்தா ஆலயத்தின் அமைப்பானது சாதாரண ஊடுவழி ஆலய அமைப்பாகவே உள்ளது. மத்திய சதுரப் பகுதி இரு பக்கமும் 53 மீட்டர் நீளம் உள்ளது. நிலத்தில் இருந்து 51 மீட்டர் உயரத்தில் அலங்காரமான செங்குத்தான பாறை உள்ளது. அடிப்பகுதியும் மாடித்தளங்களும் ஜாதக கதைக் காட்சிகளைக் காட்டுவதாக 554 பளப்பளப்பான ஓடுகளால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது. செவ்வகத்தின் மத்தியில் இருந்து வெளியில் பார்த்தபடி 9.5 மீட்டர் உயரமுள்ள நான்கு புத்தர் சிலைகள் உள்ளன. இவை பரிநிர் வாணம் எய்திய நிலையைக் காட்டுவதாக உள்ளன. வடக் கையும் தெற்கையும் நோக்கி நிற்கும் உருவச்சிலைகள் மட்டும் மூல உருவங்களாகும். இரண்டும் தர்மச்சக்கர முத் திரையைப் பிரதிபலிக்கின்றன. மற்றைய இரண்டும் நெருப்பில் உருவச்சிலைகள் எரிபட்டு அழித்த பின்னர் உருவாக்கப்பட்ட சிலைகளாகும். கிழக்கு மற்றும் மேற்குத் திசையில் காணப்படும் புத்தர் சிலைகள் பின்னர் வந்த மண்டலே பாணியில் உருவாக்கப்பட்டவை.
மேற்குச் சந்நிதியில் அமைந்துள்ள நிற்கும் புத்தர் சிலையின் காலடியில் இரண்டு ஆளுயர பூச்சு சிலைகள் உள்ளன. இவை சியன்சித்தா அரசனையும் மொன் பிக்குவான ஷின் அரஹனையும் பிரதிபலிப்பாதாகக் கூறப்படுகிறது. இந்த பிக்குதான் தேரவாத பௌத்தத்தை அரசன் மேற்கொள்ளத் தூண்டியவராவார். மேற்கு முன் மண்டபப் பகுதியின் உள்ளே பீடங்களில் இரண்டு பௌத்த பாதங்களின் சின்னங்கள் உள்ளன. டிசம்பர் மற்றும் ஜனவரிக்கிடையில் வரும் பெளர்ணமி தினத்தில் ஆனந்தா ஆலயத்தில் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றார்கள்.
தம்மயங்யி ஆலயம் பாகன் நகரிலுள்ள மிக பிரமாண்டமான ஆலயம் தம்மயங்யி ஆலயமாகும். இதன் கட்டிடக்கலை அமைப்பு ஆனந்தா ஆலயத்தில் அமைப்பைக் கொண்டதே. இந்த ஆலயம் நரது அரசனால் (1167 - 70) மூன்று வருடத்தில் கட்டப்பட்டதாகும். 'தம்மயங்யி' என்றால் 'புத்தரின் போதனைகளின் ஒளி எங்கும் நிறைந்துள்ளது' என அறிஞர்கள் கூறுகின்றனர். இந்த ஆலயம் நகரச் சுவர்களுக்கு தென்கிழக்காக சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. நரதுதன் சொந்தத் தந்தையையே கொலை செய்து விட்டு பாகன் நகர அரசனாக முடிசூட்டிக்கொண்டான். அதன் காரணமாக, நரது இக் கோயிலைக் கட்டினான்.
மேஸ்திரிகள் இந்த ஆலயத்தைக் கட்டும்போது, நரது

சற்லை
ஆனந்தா ஆலயத்தின் முன்வாசலில் காணப்படும்
காவல் சிங்கம்

Page 38

T
அரசன், நேரடியாகவே நின்று கட்டிடத்தை மேற்பார்வை செய்வானாம். மேஸ்திரிமார்கள் சுவரில் கட்டுவதற்காக அடுக்கும் செங்கற்கள் - சரியான முறையில் வைக்கப்பட்டுள்ளதா என்று சோதிப்பதாக, அக்கற்களின் இடையில் ஒரு ஊசியைத் தள்ளிப் பார்ப்பானாம். அது உள்ளே போகுமானால் வேலை சரியாகச் செய்யப்படவில்லை என அந்த மேஸ்திரிமார்கள் அரசனால் சிரச்சேதம் செய்யப்படுவார்களாம். அவன் இந்தக் கோயிலை பூரணமாகக் கட்டி முடிக்கவில்லை. ஏனெனில், அதற்கு முன் கொலை செய்யப்பட்டுவிட்டான்.
இந்து முறைப்படி ஆலயத்தில் கிரியைகள் செய்யப்படுவதை இந்த அரசன் விரும்பவில்லை. அவ் விதமாக கிரியைகள் செய்துவந்தவர்களில் ஒருத்தி இந்திய இளவரசியாகும். அவள் பதேய்க்கயாவின் புதல்வியாவார். அவள் இக்காரணத்தினால் கொலை செய்யப்பட்டாள். தனது அப்பாவியான மகள் கொல்லப்பட்டதற்கு அரசனைப் பழிவாங்கும் முகமாக அரசன், தனது எட்டு அதிகாரிகளை பிராமணர் வேடத்தில் அனுப்பி இதே இடத்தில் நரது அரசனைக் கொலை செய்வித்தானாம்.
ஆலயத்தின் உள்புற அடித்தளத்தில் இரு நடைபாதைகள் உள்ளன. மேற்குப்பகுதி சந்நிதியில் அருகருகில் கெளதமர் மற்றும் மைத்திரேயாவின் உருவச் சிலைகள் உள்ளன. தம்மயங்யியின் மேல் தளங்களில் உள்ள செங்கல் வேலைகள், பாகன் நகரில் மிகச் சிறப்பானவை எனப் பாராட்டப்படுகின்றன.
| சுலைமனி ஆலயம் 'கூவும் தங்கம்' என அழைக்கப்படுவது சுலைமனி ஆலயமாகும். இது தம்மயங்யி ஆலயத்துக்கு அப்பால் காணப்படுவதாகும். ஹிலோமின்லோ மற்றும் கோடோனலின் ஆலயங்களை விட இந்த ஆலயம் மிகவும் அலங்காரமானதாகும். இரண்டு மாடிகளை உள்ளடக்கிய இவ்வாலயம், பிரமிட் தோற்றத்தைத் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் முழுப்பகுதியிலும் காணப்படும் செங்கல் வேலைகள் மிகச் சிறப்பானவை. அவ்வாலயத்தின் சில பகுதிகள் 1975 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியால் அழிவுற்றுள்ளது. சுலைமனி ஆலயம், பாகனில் மிகச் சிறந்த அணிகலன் போலும் நுட்ப ஆபரண வேலைப்பாடுகளைப் பிரதிபலிப்பதாக

Page 39
உள்ளது. அடிப்பக்கத்தைச் சுற்றியும் மற்றும் தளங்களிலும் பொருத்தப்பட்ட பளப்பளப்பான கல் படிமங்கள் இன்றும் கண்களுக்குத் தெரிகின்றன.
நாகயன் ஆலயம் கியன்சிந்த அரசன் அவனது கோபம் கொண்ட சகோதரனுக்கும் அவனுக்கு முன்பு ஆட்சி செய்த செளலுமின் என்பவனுக்கும் பயந்து தப்பியோடியபோது பாம்பு ஒன்றினால் அவன் பாதுகாக்கப்பட்ட இடம் இதுவெனப் புராணம் கூறுகிறது. ஆகையால் அந்த அரசன் பாகனை ஆட்சி செய்தபோது, இக்கோயிலைக் கட்டுவித் தான் எனவும் 'நாகயன்' எனப் பெயரிட்டான் எனவும் கூறப்படுகின்றது. 'நாகயன்' என்றால் பாம்பினால் பாதுகாக்கப்படுதல் என்று அர்த்தமாகும். இங்கே ஆளுயர புத்தர் சிலை மிகப் பிரமாண்டமான படமெடுக்கும் பாம்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பல புத்தர் சிலைகளும் உள்ளன. |
அத்துடன் பாகனில் மனுஷா ஹிலோமின்லோ, சுலமனி நாகயன் அபயாதன, யதாதர், பஹோரம்யா என்னும் வரலாற்றுச் சிறப்பு மிக்க, கட்டிடகலைச் செழுமையுடைய ஆலயங்களும் லோகனன்த மின்கலர்ஷெடி, தம்மயஸிக்கா, மியஸெடி ஆகிய விகாரைகளும் பாகனின் பண்டைக் காலச் சிறப்பை எடுத்துக் காட்டுபவையாக விளங்குகின்றன.
பாகன் கட்டிடக்கலை பாகன் கட்டிடக்கலையை நான்கு பிரிவுகளாக நோக்கலாம். முதல்வகை, குவிந்த கூரை மண்டப அமைப்பைக் கொண்டதாகவும் இரண்டாவது வகை சரிந்து செல்லும் தளங்களைக் கொண்ட மணிபோன்ற குவிந்த கூரைகள் கொண்டதாகவும் காணப்படுகிறன. மூன்றாவது வகை அடிப்படையில் இரண்டாவது வகை போன்று இருக்கும் அதேவேளை கிண்ண வடிவிலான, வட்டத் தட்டைத் தகடு கொண்ட குவிந்த கூரைகள் காணப்படும். நான்காவது மத்திய கால் சிங்கள விகாரை போன்றதாகும்.
இவையாவும் தவிர வட இந்திய ஆலய கட்டி
டக்கலைப்பாணியில் ஆனந்தா ஆலயம் அமைந்துள்ளது. மத்திய இந்திய

காழும்பு தமழச் சங்கூர்
, கலைக்கேசரி
39
நூலகம்
21.
1,
Bagan
- LA.) MYANMAR
THALAM)
பக்,
ஆலய கட்டிடக் கலைப்பாணியில் மகாபோதி ஆலயம் அமைந்துள்ளது. தென்னிந்தியப் பாணியில் கௌடோபலின், சுலமணி ஆகிய இரண்டு ஆலயங்கள் அமைந்துள்ளன. கியன்ஸிஸத்தா உமின் இந்திய பாணியில் அமைந்த குகைக் கோயில் ஆகும்.
பாகன் நகருக்கு எவ்விதம் செல்வது மியன்மாரின் முன்னாள் தலைநகரான யாங்கூனிலிருந்து சுமார் 431 மைல் தொலைவில் பாகன் அமைந்துள்ளது. பாகனுக்கு வரும் அனைத்து பார்வையாளர்களும் பாகன் அகழ்வாய்வு வலய நுழைவுக் கட்டணமாக 10 அமெரிக்க டொலர்களைச் செலுத்த வேண்டும். பாகனில் உள்ள விமான நிலையம் நியோங் யு விமான நிலையமாகும். (Nyaung u airport) யாங்கூனில் இருந்து பாகனுக்கு தினமும் விமானப் பயண வசதி உள்ளது. யாங்கூனில் இருந்து
பாகனுக்குச் செல்ல எடுக்கும் நேரம் ஒரு மணித்தியாலமும் பத்து நிமிடங்களும் ஆகும். யாங்கனில் இருந்தும் மன்டலேயில் இருந்தும் செல்லும் ரயில்கள் தார்ஸி * புகையிரத நிலையத்தில் தரிக்கும். இங்கிருந்து கார் பயணத்தின் மூலம்
பா க னுக் குச்
செல்லலாம். )
- லஷ்மி
பர்
ஆனந்தா ஆலயம்.

Page 40
கலைக்கேசரி 40 நினைவுத்திரை
அகாழும்பு தய
நூல்
பாடும் நட்சத்திரம் யூ.ஆர்.ஜீவரத்தினம்
- பத்மா சோமகாந்தன் IIIாழ் இசைத்து யாழ் மண்ணைப் பரிசாகப் பெற்ற
வரலாற்றைக் கொண்ட யாழ்ப்பாணத்திலே
1981ஆம் ஆண்டில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றிற்கான விளம்பரம் மூலம் கே.பி. சுந்தரம்பாளின் வாரிசாக இந்தியாவில் புகழ் ஈட்டி வரும் கோகிலகானப் பூங்குயில் என்றொரு அழகிய ஆழமான வருணனையோடு எம் நாட்டிலும் பிரபலப்படுத்தப்பட்ட பெருமைக்குரியவரே பாடும் நட்சத்திரமாக ஒளிவீசும் யூ. ஆர். ஜீவரத்தினம்.
இவர் பத்து வயது சிறுமியாக இருந்தபோதே வெகு அபரிமிதமான இவரது இசைத் திறமையை அறிந்து, சினிமாவில் இவரைப் பாடச் சேர்ப்பதற்கு மொடேர்ன் ஸ்ரூடியோவில் கேட்டபோது அன்றைய பிரபலமான பாடலாயிருந்த 'சிங்கார லஹரி' என்ற பாடலை எட்டுக் கட்டை ஸ்ருதியில் பாடி எல்லோரையும் பிரமிக்க வைத்தார். அந்த இசை மழையில் மனம் குளிர்ந்த ஸ்ரூடியோ அதிபர் டி.ஆர்.சுந்தரம், அளவிற்கரிய பெருமை வாய்ந்த குரல் வளம் மிக்கவர் என வியந்து அச்சிறுமியைப் பாராட்டித் தம் நிறுவனத்தில் இணைத்துக் கொண்டார்.
பூம்பாவையாகப் பாத்திரம் ஏற்றிருந்த இந்த அழகான இசை நட்சத்திரத்தைப் பற்றிக் கல்கி ஆசிரியர், தன் விமர்சனத்தில், 'பூம்பாவையாக நடித்திருக்கும் ஜீவரத்தினம் பிரபலத்திற்கும் அவர் அடைந்திருக்கும் புகழுக்கும் தகுதியானவர் என்றே தோன்றுகிறது. முகத்தில்

=ழச் அகற்றம்
- குறுகுறுப்பும் நடிப்பில் ஜீவனும் இருக்கின்றன. பேச்சும் சுவிச்சென்று இருக்கிறது. ' எனச் சிலாகித்துச் கூறியுள்ளார்.
'எதை விட்டாலும் பாடறதை மாத்திரம் விட்டு விடாதே' என மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் வற்புறுத்தியுள்ளார். ஜீவரத்தினத்திற்கு சிட்டுக்குருவிபோல் தேகம் இருக்கிறது. வானம் பாடிபோல் ஆனந்தமாக உச்சஸ்தாயியை எட்டிப் பிடித்துப் பாடும் ஆற்றல் இருக்கிறது. அவரின் நடிப்புத் திறனும் அபாரம் என 'நாரதர்' இதழ் விமர்சித்துப் பாராட்டியது.
அந்தக் காலத்திலே பி.யூ.சின்னப்பா நடித்த 'கண்ணகி' படத்திலே (ஜீவரத்தினமே பின்னணி இசைத்தவர்) 'உங்கள் இசை ... அப்பப்பா!...... அதிலேயும் ஆர்மோனியத்தின் கடைசிக் கட்டைக்கு மேலே உங்கள் குரல் போகும் போது பல சமயம் என்னையே நான் மறந்திருக்கிறேன். நான் உங்கள் பரம் ரசிகன். உங்களை மாதிரிப் பெரிய பாடகர்களின் பாடல்களைக் கேட்டதால்தான் நான் இவ்வளவு பெரிய பாடகராக வர முடிந்தது.' என மனந் திறந்து இவரது இசைத்திறமையைப் போற்றிப் பாராட்டியவர். இவருடன் இணைந்து சில பாடல்களைப் பாடிய பிரபலமான இசை வல்லாளன் டி.எம். செளந்தரராஜன் அவர்களும் வியந்து போற்றியுள்ளார்கள்.
இப்படிப் பல விற்பன்னர்களாலும் இசை வாணர்களா லும் பாராட்டும் போற்றுதலும் பெற்ற யூ. ஆர். ஜீவரத்தினம் ஈரோட்டிற்கு அருகேயுள்ள ஊஞ்சலூரில் 14.09.1927 ஆம் ஆண்டில் பிறந்தார். கர்ணம் சுப்பிரமணியனுக்கும் குஞ்சம் மாளுக்கும் ஒரேயொரு செல்லக் குழந்தையாகப் பிறந்து வளர்ந்த இவர், காரூரில் தனது கல்வியை மேற்கொண்டார். பாலகியாக ஆரம்பப் பள்ளில் படிக்கும் போதே பாட்டு நடிப்பு என்பனவெல்லாம் இவரை ஆட்கொண்டது. இளமையிலேயே இயற்கையாகக் கிடைத்த அந்த இசை வல்லமையை அறிந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்ட இவர், நாடகக் கம்பனிகளில் சேர்ந்து 'பாலபார்ட்' வேடங்களில் பாடியும் நடித்தும் பெரும் புகழீட்டினார்.
ஒலிபெருக்கி அறிமுகப்படுத்தப்படாத அக்காலத்தில் கணீரென்ற கனத்த உரத்த குரல் வளமுடையோருக்கே மேடை சிறப்பாகவும் பொலிவாகவும் வரவேற்பு மிக்கதாகவும் விளங்கியது. நடிப்பவர் தாமேதான் பாடி நடிக்கும் முறைமையும் கையாளப்பட்டமையால் நல்ல தோற்றம், சிறந்த குரல் வளம் மிக்கோரை நாடகக் கம்பனிகள் வலை போட்டுத் தேடிப்பிடித்துக் கொண்டன. நாடகத்தில் புகழும் திறமையும் மிக்கோரை சினிமா கையைப் பிடித்து இழுத்து வரவேற்கும். இதற்கு பாடகியும் விதிவிலக்காகிவிடவில்லை. இவர் பாடி நடித்த முதல் படம் 'சதி அகல்யா' என்பது. 1937 ஆம் ஆண்டில் வெளியான இப்படத்தில் தேவலோகப் பெண்ணாக இவர் நடித்தார். -பத்மஜோதி, தாயுமானவர், சந்தனத்தேவன், மாணிக்கவாசகர், ராஜயோகம், உத்தமபுத்திரன், சத்திய வாணி, பரசுராமர் என இன்னும் பல படங்களில் பாடி நடித்த இவர் படத் தயாரிப்பாளரும் ஸ்ரூடியோ

Page 41
நிர்வாகஸ்தருமாக விளங்கிய திரு வேங்கடசாமி என்பவரை 1945ஆம் ஆண்டில் திருமணம் செய்தார். இசை போலவே இனிமையான அவர்களது இல்லற வாழ்விலே நான்கு பெண்களும் ஒரு ஆணுமாக ஐந்து குழந்தைகளைப் பெற்றெடுத்தனர்.
இயல்பாகவே உச்சஸ்தாயியுடனான குரல் வளம் கொண்ட சிறப்பு மாத்திரமன்றி, நாடகத்தில் பேசும் போதும் கூட சொற்களை, வசனங்களைத் தெளிவாகவும் சரியான உச் சரிப்போடும் கையாளும் திறமை கொண்டிருந்தார். குரல் வளத்தால், பேச்சுத் திறத்தால் மட்டுமே சினிமாவில் பாடி நடிக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்த இவர், தனது இனிய குரல் வளத்தைப் பெருக்கவும் இசைப் பயிற்சியையும் அறிவையும் மேலும் மேம்படுத்துவதற்குமாகவும் கைலாச பாகவதர், சி.எஸ்.ஜெயராமன், குன்னக்குடி வெங்கடராஜமையர் ஆகியோரிடம் முறையாகவும், ஐயங்களைத் தெளிவாக்கியும் நீண்ட காலம் இசை பயின்று சாஸ்திர ரீதியாகவும் தனது ஆற்றலைப் பெருக்கிக் கொண்டார். இவரது இம் முயற்சி பாராட்டுக்குரியது. அத்துடன் இசையுலகில் இன்றும் நினைவு கூரப்படுவதற்கு இவரது உழைப்பும் காரணமாகின்றது.
ஒரு காலத்திலே ஏகோபித்த படி தமிழகம் முழுவதிலும் சிறுவர் தொடக்கம் முதியோர் வரை ஏழை பணக்காரறென்ற வேறுபாடேயின்றி எல்லோர் வாயினாலும் முணு முணுக்கப்பட்ட 'தெருவில் வாராண்டி, வேலன் தேரில் வாராண்டி' என்ற ஹிந்தி மெட்டைத் தழுவிய இவரது பாடல் மிகப் பிரபலமாக விளங்கியது. இதோடு 'ஐயே! உனதடிமை நான் அன்றோ' என்ற ஹரிகாம்போதிராகப் பாடல், 'வாழ்விலே ஒரு நாள்' படத்திலே இடம்பெற்ற 'தென்றலே வாராயோ இன்ப சுகம் தாராயோ' என்ற பாடல் என்றும் மக்கள் மனதில் நின்று நிலைத்து விட்ட ஏராளமான பாடல்களைக் குறிப்பிடலாம். இசையறிவோ கல்வியறிவோ அற்றவர்கள் கூட ரசித்து, சுவைத்துப் பாடவோ முணு முணுக்கவோ கூடிய வகையில் ஜீவரத்தினம் அவர்களின் பாடல்கள் மக்கள் மனதை ஈர்த்துள்ளன என்றால் மிகையில்லை.
'கேள்வி முறை இல்லாமல் உள்ளே நுழைந்தவர் யாரையா?' பாபநாசன் சிவனின் கேள்வி பதில் முறையாக அமைந்த 'குந்தலவராளி' ராகத்தில் ஜி. ராமநாதனால் இசையமைக்கப்பட்ட இப்பாடலைப் பி.யூ.சின்னப்பாவு டன் 'ஜெகதலப்பிரதாபன்' என்ற படத்தில் காதல் டூயட் டாகப் பாடி நடித்தவர் இந்த இசை நட்சத்திரம். அபிமன்யு படத்திலும் 'புது வசந்தமே வாழ்விலே' என்ற பாடலை திருச்சி லோகநாதனுடன் மாறி மாறிப் பாடியவர் இவரே தான்.
கவுந்தியடிகளாகக் கண்ணகி படத்தில் நடித்துக் கொண்டிருந்த வேளையில் தோற்றத்திலும் வயதிலும் கூட மிக சிறியவராக இருந்த ஜீவரத்தினம் கோவலனாக நடித்த சின்னப்பாவையும் கண்ணகியாக நடித்த கண்ணாம் பாவையும் 'குழந்தைகளே! பிள்ளைகளே' என அழைப்பாராம். இதைக் கேட்டுச்சுற்றியுள்ளவர்கள்

2. கலைக்கேசரி
41
நகைப்பார்களாம். நடிக்கும் போது ஒரு காட்சியில் வைகை ஆற்றைக் கடக்கவேண்டிய வேளை, கவுந்தியடிகள் (ஆக நடித்த ஜீவரத்தினம்) 'வைகையை கடப்பது சுலபம்; ஆனால் வாழ்க்கை வைகை நதியில்லை; வருணிக்க முடியாத ஒரு கோரக் கடல்; கடக்கும்போது மோகம் என்ற அலைகள் மோதவரும்; சினம் என்ற புயற் காற்று சீறும்; காமத் திமிங்கிலங்கள் ஆவென்று திறந்த வாய்களுடன் காத்திருக்கும்; மலைபோன்ற மதப் பாறைகள் மறைந்து கிடக்கும்; இத்தனை ஆபத்துக்களைக் கடந்தால்தான் கரையை அடைய முடியும். மகனே! இது மாயக் கூத்து' என்ற இளங்கோவனின் இனிய வசனங்களைப் பேசி நடித்துள்ளார்.
இப்படியே 'ஸ்ரீ ஆண்டாள்' என்ற படத்திலும் ஆண்டாளாக நடித்த இவர், அதில் வரும் வெண்ணிலாப் பாடலிலே, 'அன்புக் கடலிலே, அமுதக் கலசம் போன்றாய், துன்பக் கடல் கடக்க, தோணியாய் உதவாயோ வெண்ணிலாவே' என்ற பாடலையும் 'பூம்பாவை' என்ற படத்தில் பூம்பாவையாக வேடமிட்டு நடித்த ஜீவரத்தினம் 'மோனத்திலே வரும் ஞானம்' என்ற தத்துவப் பாடலையும் பாடியமையால் தான் தனது சொந்த வாழ்வையும் தன் அருமையான இசையின் நடிப்பில் படம் போட்டுத் தெளிந்து கொண்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
தத்துவப் பாடல்களை கே.பி.சுந்தராம்பாள் அவர்களின் பாடல்களையெல்லாம் கூடச் சிறிதும் பிசறில்லாமல் வெகு அநாயாசமாக ஆறுகட்டை ஸ்ருதியில் பாடிப் பரவசப்படுத்திய இந்த இசை நட்சத்திரத்தின் துணைவர் திரு வேங்கடசாமி, 1971ஆம் ஆண்டில் தனது இவ்வுலக வாழ்வை நீத்தார். தனித்து விடப்பட்ட இவர் மனம் சோராமல் இறை பக்தியுடனும் கடந்த
கால அனுபவங்களையும் மனதில் இருத்தியபடி தன் குழந்தைகளை நல்வழிப்படுத்திக் கல்வி கற்பித்து நல்ல நிலைக்கு ஆளாக்கி வைத்தார்.
அண்ணாவின் பாதையிலே திராவிட இயக்க நிகழ்ச்சிகளிலும் கர்நாடக இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று ஓய்வின்றி உழைத்தார். கண்ணகி படத்தின் பொன்விழாக் கொண்டாட்டங்களின் போது நாட்டின் நாலாபக்கங்களிலும் உள்ள திரையரங்குகளில் தோன்றி அந்த படத்தின் பாடல்களைப் பாடி மக்களை மகிழ்வித்தார். இக் கொண்டாட்டத்தின்போது கினகர் சுவாமிகள் ஜீவரத்தினத்தின் இசைத் திறமையைப் பாராட்டி 'இசைக் குயில்' என்ற பட்டத்தையும் அளித்து கௌரவித்தார்.
இசை, நாடகம், கச்சேரி மேடை, திரைப்படப்பாடல், நடிப்பு எனப் பல துறைகளிலும் தமது சுவடுகளை நீண்ட காலமாகப் பதித்து இசை, நாடக சினிமா உலகிலெல்லாம் சிறப்புடன் வலம் வந்த இந்த இசை நட்சத்திரம் குடும்ப வாழ்விற்கும் ஒளியூட்டியவராவார். இவருடைய காலத்தின் பின்னரே சினிமாவில் கதாபாத்திரங்கள் பாடியும் நடித்தும் புகழ்பெறும் பாங்கு முற்றுப்புள்ளியாகி, ------- பின்னணிப் பாடகராக இசை மெருகூட்டும் வழக்கம் அரங்கேறியது எனத் துணிந்து குறிப்பிடலாம்.

Page 42
71 PEn,
கெசட்டிப்பு :
*காட்டி
பாபாசு.
HTT:: 17/10:
=1ாடசா!'
கலைக்கேசரி தி.
42 பாரம்பரியம்
இது 1

எளிய முறையில் பிணி அகற்றும்
நற்சீரகம்
- டாக்டர் திருமதி. விவியன் சத்தியசீலன்
ா மது வீட்டு சமயலறையிலே சீரகத்திற்கு தனி ற ஆதிக்கமே உண்டு. சீரகம் உணவு வகைகளின் ருசிப்
பெருமை ஒரு பங்கு என்றால் இதன் மருத்துவச் சிறப்பு பல மடங்காகும். சீரகம் என்ற சொல்லை பகுத்துப் பார்க்கும் போது 'சீர்+அகம்' என்ற இரண்டு தனிச் சொற்கள் கிடைக்கின்றன. இதன் முழுப்பொருள் நமது அகமாகிய குடல்பகுதியை ஒழுங்குபடுத்தும் தன்மை சீரகத்திற்குண்டு.
தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே சீரகம் நம் மக்கள் மத்தியில் பழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது மட்டுமன்றி மிகப் பழங் காலத்திலிருந்தே உலகம் முழுவதிலும் அறிந்து உணரப்பட்ட ஒன்றாகவும் இருக்கின்றது. எகிப்து நாட்டு பண்டைய மருந்துவச் செடிகளிலேயே 'சீரகம் இடம் பெற்றிருக்கிறது. சீரகத்தின் தொன்மைச் சிறப்பு எத்தகையதாக இருப்பினும் நமது தேசத்தில் சீரகம் இன்றளவும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் சீரகத்தின் தாயகம் 'பெர்ஷயா' என தாவரவியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.
உணவுக்கு நல்ல மணமூட்டும் சீரகத்தின் சுவை சற்று கசப்பு இயல்பு கொண்டதாக உள்ளது. சீரணசக்திக்கு அத்தியாவசியமானதாக சீரகம் திகழ்வதால் 'போசன குடாரி' எனவும் அழைக்கப்படுகிறது.
பித்தமெனும் மந்திரியைப் பின்னப் படுத்தியவன் சத்துருவை யுந்துறந்து சாதித்து - மத்தனெனும் ராசனையு மீவென்று நண்பனைப் பலப்படுத்தி போசனகு டாரிசெயும் போர். இது பித்தமெனும் தீக்குற்றத்தை தன்னிலைப்படுத்தி, வயிற்றின் மந்தத்தை போக்கி, பசியை உண்டாக்கி உணவை செரிக்கச் செய்யும்.
வாந்தி யருசிகுன்மம் வாய்நோய்பீ விகாமிரைப் பேற்றிருமல் கல்லடைப்பி லஞ்ெசனமுட் - சேர்ந்தகம்மல் ஆசனகு டாரியெனும் அந்தக் கிரகனியும் போசனகு டாரியுண்ணப் போம்.
உ
பெ
வாயுவொடு நாசிநோய் வன்பித்தஞ் சேராது காயம் நெகிழாது கண்குளிருந் - தூயமலரிக் காரளகப் பெண்மயிலே! கைகண்ட தித்தனையுஞ் சீரகத்தை நீதினமுந் தின். சீரகத்தினால் அழல் தீரும், வயிற்றுவலி, வாய்நோய், ஈரல் நோய், இருமல், கல்லடைப்பு, குருதிக்கழிச்சல், ஆஸ்துமா, வாதநோய்கள் தீரும்.
உணவு சைவமாக இருந்தாலும், அசைவமாக இருந்தாலும் சீரகத்தின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.

Page 43
)/Tக
அசைவ உணவில் இறைச்சி போன்றவற்றை சீரணிப்பதற்கு சீரகம் பேருதவி புரிகிறது. மேல் நாடுகளில் சீரகத்தை விட ஓமத்தை சமையலிலும் மருந்து தயாரிப்பிலும் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். ஆனால் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் ஓமம், சீரகம் இரண்டையுமே பயன்படுத்துகின்றோம்.
உடல் வளர்ச்சிக்கும், உடல் நலத்திற்கும் தேவையான எல்லாவிதமான ஊட்டச் சத்துக்களும் தகுந்த அளவில் சீரகத்தில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக புரதச்சத்து, தாது உப்புக்கள், விற்றமின்கள் சீரகத்தில் மிகத் தாராளமான
அளவில் பொதிந்துள்ளன.
100 கிராம் சீரகத்தில் புரதச்சத்து 18.7 சதவிகிதமும், காபோஹைதரேற்று 36.6 சதவிகிதமும், கொழுப்புச்சத்து 15 சதவிகிதமும், நார்ப்பொருள் 15 சதவிகிதமும், நீர் 11.9 சதவிகிதமும் இரும்புச் சத்து 31 சதவிகிதமும் உள்ளன. 100 கிராம் சீரகத்தில் உயிர்ச்சத்து 'இ' 3 மில்லிகிராம் அளவு உள்ளது.
சீரகத்தின் சிறப்பான மருத்துவக்குணம் உடல் செரிமானத்திற்கு அதிகம் உதவுவது தான். தவிர அஜீரணம் காரணமாக ஏற்படுகின்ற எல்லாவிதமான குறைபாடுகளையும் அகற்றுகின்றது.
கர்ப்பகாலத் தொடக்கத்தில் பெண்களுக்கு ஏற்படும் வாந்திக்கு சீரகத்துடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துக் கொடுக்க வாந்தி நிற்கும். கர்ப்பிணிப் பெண்களிற்கு பிரசவ காலத்தில் பிரசவ வலி ஏற்படும் போது சீரகத்தைக் கொண்டு கசாயம் (குடிநீர்) காய்ச்சிக் கொடுக்க வலி குறைவதுடன் விரைவில் சுகப்பிரசவம் அமையும். பிரசவத்திற்குப் பின்பு தாய்க்கு தாய்ப்பால் நன்றாகச் சுரக்க சீரகமும், மிளகும் சேர்த்து பக்குவம் செய்த ரசத்தை அடிக்கடி சேர்த்துக் கொடுக்க வேண்டும்.
| சீரகத்தை கழுவி உலர்த்தி இடித்துப் பொடியாக்கி வைத்துக் கொண்டு 15 - 25 கிராம் வரை காலை, மாலை தேனில் குழைத்துக் கொடுக்க அஜீரணபேதி, குடல்புண் பித்தவாயு தீரும்.
எலுமிச்சம் சாறு, இஞ்சிச்சாறு ஆகியவற்றில் ஒவ்வொன்றிலும் சீரகத்தை பல தடவை ஊறவைத்து எடுத்து உலர்த்தியெடுத்து சூரணமாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டியளவு காலை, மாலை

கலைக்கேசரி
43
பசும்பாலில் கலந்து உட்கொள்ள மூலக்கடுப்பு, பித்தக்கோளாறுகள் கண்ணெரிச்சல், சீதபேதி ஆகியன நீங்கும்.
சீர்கத்தை சுத்தம்பார்த்து 175 கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். இதனை எலுமிச்சம் பழச்சாற்றில் இரண்டு மணி நேரம் ஊற வைத்து எடுத்து உலர்த்திக் கொள்ள வேண்டும். இந்த சூரணத்துடன் ஏலம், திப்பிலி, மலைவேம்பு, நெல்லிவற்றல், நெல்பொரி, வில்வப்பூத் தோல் ஆகியவற்றின் சூரணத்தை ஒவ்வொன்றும் 100 கிராம் சேர்த்து ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். கலக்கப்பட்ட பொடிக்கு சம அளவு சீனிசேர்த்துக் கொள்ள வேண்டும். 50 - 100 கிராம் வரை காலை, மாலை தேனில் கலந்து கொடுக்க வயிற்றுப்புண், நெஞ்செரிவு, உடல்எரிச்சல் முற்றாக குணமாகும்.
சீரகத்தை கரிசலாங்காணிக் கீரைச் சாற்றில் ஊறவைத்து உலர்த்தி பொடித்து 10 - 20 கிராம் அளவு எடுத்து வெள்ளாட்டுப்பாலில் கொடுக்க காமாலை நீங்கும். இளம் பெண்ணிற்கு ஏற்படும் வெள்ளை படுதலிற்கு 25 கிராம் சீரகச் சூரணத்துடன் 25 கிராம் சீனி சேர்த்து ஒரு நாளைக்கு ஒரு தடவையாக 40 நாட்கள் உட்கொள்ள
முழுக்குணம் தெரியும். சீரகத்தை உப்புடன் சேர்த்து ஒன்றாகக் கசக்கி பொட்டு நீக்கி, வாயிலிட்டுச் சுவைத்து திப்பியை துப்பிவிடவும். அஜீரணம் அகலும், நல்ல பசி உண்டாகும். சீரகம் 180 கிராம், உலர்ந்த கற்றாழை 180 கிராம் பனைவெல்லம் 180 கிராம், பால், நெய் தக்க அளவு
சேர்த்து
லேகியமாக
- பக்குவப்படுத்திக் கொள்ளவேண்டும். 5 கிராம் அளவு இரண்டு வேளை உட்கொள்ள ஆசனக்கடுப்பு, சிறுநீர் எரிச்சல், கண் எரிச்சல் ஆகிய கோளாறுகள் நீங்கும். சீரகம் 50 கிராம் எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் நல்லவெல்லம் 20 கிராம் சேர்த்து நன்றாகப் பிசைந்து புதுப்பானையில் அப்பி 3 நாட்கள் வெயிலில் வைத்துக் காயவிட வேண்டும். இதனை எடுத்துப் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு ஒரு தேக்கரண்டி என காலை, மாலை உட்கொண்டுவர
கை, கால்களில் தோன்றும் குடைச்சல் நீங்கும். வாயில் துர்நாற்றம் வீசினால் சீரகத்தை அதிக அளவுக்கு

Page 44

பாத்திரத்திலிட்டு நீர்விட்டு பாதியளவாக சுண்டக் காய்ச்ச வேண்டும். பொறுக்கும் சூட்டில் வாயிலிட்டு நன்றாக கொப்பளித்து உமிழ வேண்டும். இவ்வாறு அதிகாலை நேரத்தில் பலமுறை செய்ய வேண்டும். வாய் துர்நாற்றம் மாறும். சீரகத்தை நீர்விட்டு கொதிக்க வைத்து வடித்து மிதமான வெப்பத்தோடு 100 மில்லிக்கு குறையாமல் இரவில் அருந்த நிம்மதியான தூக்கம் அமையும். எண்ணெய்க் குளியல் பழக்க முள்ளவர்கள் எண்ணெய்க் குளியல் செய்யும் போது நல்லெண்ணெயுடன் சீரகம், மிளகு, ஒரு பல் பூண்டு சேர்த்துக் காய்ச்சி குளிப்பது சிறந்த பலனைத்தரும். உடல்வலி, நரம்புத்தளர்ச்சி, குறிப்பாக கண்ணெரிச்சல் நீங்கி உடலுறுப்புக்கு புத்துணர்ச்சி உண்டாகும். சீரகம், மயில் இறகு இரண்டையும் சம அளவு எடுத்து சாம்பலாக்கி ஒரு கிராம் தூளை தேனில் குழைத்துச் சாப்பிட்டால் விக்கல், வாந்தி தீரும். சீரகத்தை கரும்புச்சாற்றில் ஊறவைத்து காயவைத்து பொடிசெய்து தினமும் அதிகாலையில் 1/2 தேக்கரண்டி அளவிற்கு சாப்பிட்டு வந்தால் இளநரை மறையும்.
• சீரகம், பெருஞ்சீரகம், வாய்விளங்கம், ரோஜாப்பூ அனைத்தையும் ஒவ்வொன்றும் 100 கிராம் எடுத்து பொடிசெய்து கொள்ளவும். இதில் காலை, மாலை இருவேளையும் 5 கிராம் அளவிற்கு சாப்பிட்டு வந்தால் உடல்பருமன் குணமாகும். இருமலுக்கு 10 கிராம் சீரகத்தை லேசாக வறுத்து எடுத்து அம்மியில் வைத்துப் பொடியாக்கி அத்துடன் கற்கண்டுத் தூளையும் கலந்துவைத்துக் கொண்டு காலை, மாலை இருவேளையும் கொஞ்சம் எடுத்து சாப்பிட்டுவிட்டு வெந்நீர் அருந்த வேண்டும். இதனால் இருமல் குணமாகும். உடலில் ஏற்படும் அரிப்பிற்கு காலையில் சிறிதளவு சீரகத்தை எடுத்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மைபோல அரைத்துக் கொண்டு உடல் முழுவதும் பூசிக்கொள்ள வேண்டும். ஒரு மணிநேரம் கழித்து வெந்நீரில் சீயக்காய் தேய்த்துக் குளிக்க வேண்டும். இவ்வாறு 10 நாட்கள் செய்ய தோல் அரிப்பு நீங்கும். சிலருக்கு வாயில் உமிழ்நீர் அதிகளவில் ஊறும். பேசும்போது கூட வாயிலிருந்து எச்சில் தெளிக்கும். தூங்கும் போது வாயிலிருந்து ஏராளமான எச்சில் ஒழுகும். இத்தகைய நிலையில் சீரகம் கைகண்ட மருந்து. கொஞ்சம் சீரகத்தை வாயில் போட்டு நன்றாக மென்றுவிட்டு சிறிது வெந்நீரைச் சாப்பிட்ட பின் படுக்க வேண்டும். இவ்வாறு 10 தினங்களுக்கு தொடர்ந்து செய்தால் உமிழ்நீர் அதிகம் ஊறுவது நிற்கும். வயிற்று வலிக்கு தேவையானளவு சீரகத்தை எடுத்து அம்மியில் வைத்து எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்து வெண்ணெயில் சேர்த்து குழப்பி வெற்றிலைகளின் பின் பகுதியில் குழம்பைத் தடவி ஒவ்வொரு வெற்றிலையாக அடுப்பில் வைக்கப்பட்ட சட்டியில் போட்டு சிவந்தவுடன் 2

Page 45
தம்ளர் தண்ணீர் விட்டு சுண்டக் காய்ச்சி வடிகட்டி காலையும், மாலையும் 15 - 30 மில்லி அருந்த வயிற்றுப் புண்ணால் ஏற்படும் வலி நன்கு தணியும்.
சீரகத்தின் தாவரவியற் பெயர்- Cuminum Cyminum குடும்பம் - Umbelliferae ஆங்கிலப் பெயர் - Cumin சிங்களப் பெயர் - Suduru
ஓராண்டு வாழக்கூடிய செடியாகும். மளமளப்பான் தண்டு 30 செ.மீ. வரை வளக்கூடியது. வாசனையுடைய செடியாகும். சற்று வெளிர்ப்பச்சை நியமுடையது. சில வகைச் சீரகத்தில் மெல்லிய உரோமங்கள் காணப்படுகின்றன. சில இனங்களில் இதனைக் காண முடிவதில்லை. ஒழுங்கான இருபாலான பூக்கள் றோஸ் வண்ணம் அல்லது வெள்ளை நிறமுடைய பூக்கள். குறிப்பு
- 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' நமக்கு ஏற்படும் சகலவிதமான நோய்களையும் குணப்படுத்தும் அரிய மூலிகை மருந்துகள் நம்மைச் சுற்றி ஏராளமாகக் கிடைக்கின்றன. குறைந்த செலவில் எளிதான முறையில் நமக்கு நாமே சிகிச்சை செய்து நோய்களிலிருந்து விடுபடலாம். நமக்கு அருகாமையிலுள்ள மூலிகைகளின் அரிய பயன்களை அறியாமலும், அலட்சியமாகவும் இருக்கிறோம். நோயின் அறிகுறி தென்பட்டதுமே அரிய எளிய மருத்துவ முறைகளை ,
GET கலைக்கேசரி DEL
Please complete the form given below, along with your Chequer (Ceylon) (Pvt) Limited' and send it to our Head Office at No185 Tel:+94-11-7322700/ 7738046 Fax:+94-11-7767700 For more details, please contact : Overseas & Local Subscripti
Online Payment : www.kalaikesari.com/ Subscr
ORDER FORM :
Title
First Nam
ALAIKESARI
கலைக்கேசரி
15-14:14:53:4-12YF*
Manager Subscriptions Kalaikesari No. 185, Grandpass Road, Colombo - 14, Sri Lanka.
Last Nam | Institution DApartmer இStreet / R இTown/City I Country I Amount E
Tel: +94-11-7322783/ +94-11-7767700 Fax :+94-11-7767700
E-mail : subscription@kalaikesari.lk
Mode of
Cheque should be drawin in favour of Express Newspapers (Ceylon) (Pvt) Limited
| Online Pa

| மேற்கொள்ளலாம். இந்த அரிய மருத்துவ முறைகள் காலம்
காலமாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வருபவை.
IVERED TO YOUR HOME
'Money Order written in favour of 'Express Newspapers 1,Grandpass Road, Colombo 14,Sri Lanka.
ons M.Mohan - E-mail : subscription@kalaikesari.lk
Tel: +94 11 7322783 iption
: Mr. Mrs. / Miss D Dr. D Prof. D
(
at/Other Nos :..
Oad
'/State
nclosed
..(12 / 6 Issues) payment : Cheque / J Money Order yment : www.kalaikesari.com / Subscription

Page 46
கலைக5ே. , 46 வட்டமரபு
- 1
பட்டி -
1ா - படம்
- 3) எர)
அதேபர்
வா
- 10

而 1 ,

Page 47
ஆறுபடை திருப்பரங்குன்ற
'மாடமலி மறுகிற் கூடற் குடவயி' என நக்கீரனார் பாடிய திருமுருகாற்றுப்படை (வரி - 71) மதுரை எனப்படும் நான்மாடக்கூடலின் மேற்றிசையிலமைந்த குன்றினையும் அதன்கண் இருந்த கோயிலில் குடிகொண்ட முருகப் பெருமானையும் புகழ்பாடுகின்றது. கோயில் நகரமெனவும், விழா நகரமெனவும் சிறப்புக்களை உடைய மதுரை, தமிழ்நாடு மாநிலத்தில் சென்னைக்கு அடுத்த பெரிய நகரமாக விளங்குகிறது. மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் ஐந்து மைல் (ஏழு கி. மீற்றர்) தொலைவில் திருப்பரங்குன்றம் அமைந்துள்ளது. இது ஆறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாக விளங்குகின்றது.
சோமசுப்பிரமணியர் சைவமும் வைணவமும் கி. பி. 560 முதற்கொண்டு தமிழகத்தில் புத்துயிர்பெற்று மறுநிலை கொண்டமை நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடிய பக்தி இலக்கியத்தின் மூலம் உறுதி செய்ய முடியும். சிவன், பார்வதிக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்தபோது, பார்வதியின் மடியில் இருந்த முருகன் அதனைக் கேட்டுக்கொண்டிருந்தாராம். அம்மந்திரத்தை குருவிடம் இருந்து முறையாக கற்காமல், மறைமுகமாக கேட்டது
தவறு
என எண்ணிய முருகன், திருப்பரம்குன்றத்தில் சிவனை வேண்டி தவம் செய்தார். அவருக்கு ஒரு தைப்
பூ ச த் த ன் று
சிவன்

2. கலைக்
வீடுகளில் த்தின் பெருமை
காட்சி கொடுத்தார். இப்பொழுதும் சுப்பிரமணியர் கோயிலுக்கு எதிரே சிவன் ஆதிசொக்கநாதராக அருளுகிறார். திருப்பரங்குன்றம் செல்பவர்கள் முதலில் இவரை வணங்கிவிட்டு செல்ல வேண்டும் என்பது ஐதீகம். இவரே இங்கு பிரதான மூர்த்தி ஆவார். ஆனால், அறுபடை முருக தலங்களில் இத்தலமும் ஒன்று என்பதால் பிற்காலத்தில் முருகன் பெயராலேயே இக்கோயில் பெயர் பெற்றுள்ளது. விழாக் காலங்களில் சிவனுக்கே கொடியேற்றப்படுகிறது. ஆனால், முருகனே வீதியுலா செல்கிறார். முருகன் சிவனது அம்சமானவர் என்பதால் இவ்வாறு செய்யப் படுகின்றது. எனவே, இங்குள்ள முருகனுக்கு 'சோமசுப்பிரமணியர்' என்ற பெயரும் உள்ளது. சோமன் என்பது சிவனைக் குறிக்கும். கருவறையில் சிவலிங்கத்திற்கு பின்புறம் சிவன், பார்வதி மற்றும்
முருகனுடன் 'சோமாஸ்கந்தராக' இருக்கிறார். இது, விசேஷமான அமைப்பாகும்.
ஆலயத்தின் அமைப்பு கடல் மட்டத்திலிருந்து 1050 அடி உயரத்திலிருக்கும் இவ்வூரில் இருக்கும் மலை சுமார் 300 மீட்டர் உயரம் கொண்டது. மலையடிவாரத்தில் முருகப் பெருமான் திருக் கோயில் உள்ளது. இக்கோயில் வடக்குத்திசை நோக்கி அமைந்திருக்கும் அழகுமிக்க குடைவரைக் கோயிலாகும். கோயில் முகப்பு அழகிய கண்கவர் கலைகள் கொண்ட சிற்பங்களுடன் 48 தூண்களால் அமைக்கப்பட்டிருப்பதுடன் ஆஸ்தான மண்டபம்

Page 48
கலைக்கேசரி *
48
என்னும் பெரிய மண்டபமும் உள்ளது. இந்த மண்டபத்தில் தூண்களில் பத்ரகாளி, துர்க்கை, நர்த்தன விநாயகர், வீரபாகு மற்றும் முருகப் பெருமான் தெய்வானைத் திருமணக் கோலம், மகாவிஷ்ணு, மகாலட்சுமி முதலிய சிற்பங்களும் உள்ளன.
ஆஸ்தான மண்டபத்தைக் கடந்தால் கோபுரவாயில்; இது 150 அடி உயரமுள்ள ஏழுநிலை இராஜகோபுரம் ஆகும். கோபுரத்தின் நடுவே கீழ்த்திசை நோக்கி கோபுரவிநாயகர் முன்னிருந்து அருள் செய்கிறார். இது 1505 இல் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகும்.
கோபுர வாயிலைக் கடந்ததும் மகா மண்டபம் என்னும் அழகிய பெரிய கல்யாண மண்டபத்தை அடையலாம். மகாமண்டபத்தின் முகப்பில் நந்திகேஸ்வரர், அவரது மனைவி காலகண்டியுடன் இருக்கிறார். அருகில் இரட்டை விநாயகர்கள் இருக்கின்றனர். இம்மண்டபத்தின் கீழ்ப்புறம் இலக்குமி தீர்த்தம், வசந்தமண்டபம் ஆகியன அமைந்துள்ளன. மேற்புறம் வல்லப கணபதி சந்நிதியும், மடப்பள்ளியும், சன்னியாசித் தீர்த்தமும் உள்ளன. மேலும் இம்மண்டபத்தின் முன்புறம் ஏறும் படிகளின் இரு பக்கங்களிலும் தேர் இழுக்கும் இரு பரிகள் உள்ளன. இவை ஒரே கல்லில் செய்யப்பட்டு எழிலுடன் விளங்குகின்றன.
அர்த்த மண்டபம் மகாமண்டபத்தை அடுத்துத் தெற்கில் அர்த்தமண்டபம் மூன்று வாயில்களுடன் உள்ளது. இம்மண்டபத்தில் மூலவர் சிவன் 'சத்தியகிரீஸ்வரர் கிழக்கு பார்த்து தனிக் கருவறையில் இருக்கிறார். கற்பக விநாயகர், துர்க்கை, கொற்றவை மற்றும் முருகப்பெருமான் வடக்கு நோக்கியும், பெருமாள் மேற்கு நோக்கியும் எழுந்தருளியிருக்கின்றனர். இந்த ஜந்து

கருவறைகளிலும் உள்ள மூர்த்திகள், சிற்ப சாஸ்திரங்களில் ஒருவகையான கடுசர்க்கரைப் பிரயோகம் என்கின்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளன. சுவாமியைத் தவிர மற்ற மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்வதில்லை. முருகப் பெருமானுக்குப் புனுகும், மற்ற மூர்த்திகளுக்குத் தைலக்காப்பும் சாத்தப்படுகிறது. பொதுவாக சிவனுக்கு நேரே நந்தி இருக்கவேண்டிய இடத்தில் மகாவிஷ்ணு இருக்கிறார். பெருமாள் தன் மைத்துனராகிய சிவனுக்கு சேவை செய்வதற்காக நந்தியின் இடத்தில் இருப்பதாக சொல்கிறார்கள். இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம். எனவே இக்கோயிலை 'மால்விடை கோயில் (மால் திருமால், விடை நந்தி) என்கின்றனர்.
| சிவாலயங்களில் விநாயகர், முருகன், துர்க்கை, பெருமாள் ஆகியோர் பிரகார தெய்வங்களாகவே இருப்பர். ஆனால், திருப்பரங்குன்றத்தில் கற்பகவிநாயகர், சுப்பிரமணியர், துர்க்கையம்மன் என பஞ்ச தெய்வங்களும்
மூலஸ்தானத்தை ஒட்டியே அருளுகின்றனர்.
திருப்பரங்குன்றத்தில் பிரகாரம் கிடையாது. சிவனே மலை வடிவமாக அருளுவதாலும், கோயில் குடவறையாக இருப்பதாலும் பிரகாரம் இல்லை. மலையைச் சுற்றி கிரிவலம் மட்டுமே செல்ல முடியும். கோயில் குடவறையாக அமைந்திருப்பதால் மலையே விமானமாக கருதப்படுகிறது. எனவே, கருவறைக்கு மேலே தனி விமானம் இல்லை.
ஆறுபடை வீடுகளில் முதலாம்படை படை வீடு என்பது பகைவரோடு போர் புரிதற்பொருட்டு ஒருவன் தன் படைகளுடன் தங்கியிருக்கும் இடத்தின் பெயராகும். முருகப் பெருமான் சூரபத்மனோடு போர்
புரியச் செல்லும்முன் தங்கியிந்த
Tமாக
இகாழும்பு தமிழ்ச் சங்கம்
நூலகம்

Page 49
படைவீடுகள் பல உள்ளன. செல்வந்தன் ஒருவன் வறியவன் ஒருவனிடம் இப்படிப்பட்ட பெருமைகளை உடைய இன்னாரிடத்திலே சென்றால் போதும் பொருள் பெறலாம் என்று ஆற்றுப்படுத்துவதை (வழிப்படுத்துவதை) ஆற்றுப்படை என்பர். பொருளைப் பெறுவது போல் அருளைப் பெறவும் நம் முன்னோர் ஆற்றுப்படுத்தினர். நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படை இதற்குச் சான்றாகும். சில தலங்களைக் குறிப்பிட்டு அங்கெல்லாம் எழுந்தருளியுள்ள முருகனிடம் ஆற்றுப் படுத்துவதாகத் திருமுருகாற்றுப்படை அமைந்துள்ளது. 'ஆற்றுப்படை வீடுகள்' என்பதுதான் ஆறுபடை வீடுகள் என்றாயிற்று எனலாம். அவற்றுள் ஆறு தலங்கள் சிறந்தன என்று முன்னோர் கூறினர்.
அறுபடை வீடுகளில் திருப்பரங்குன்றம் முதல் படை வீடாகும். மற்ற ஐந்து தலங்களில் நின்ற கோலத்தில் அருளும் முருகன், இங்கு தெய்வானையை மணம் முடித்த கோலத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறார். இவரது அருகில் நாரதர், இந்திரன், பிரம்மா, நின்றகோலத்தில் வீணையில்லாத சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும், மேலே சூரியன், சந்திரன், கந்தர்வர்களும் இருக்கின்றனர். கருவறையில் கந்தப்பெருமான் காலடியில் காணப்படும் யானை, இந்திரனுடைய ஐராவதம் எனவும், இந்திரனின் புதல்வியான தெய்வானையை பிரிய மனமில்லாது, முருகனுக்கு தொண்டாற்ற வந்தது எனவும் கூறுவர்.
திருப்பரங்குன்றத்தில் முருகனது வேலுக்கே அபிஷேகம் நடக்கும். அறுபடை வீடுகளில் வேலுக்கு அபிஷேகம் நடக்கும் கோயில் இது மட்டுமே. சூரனை ஆட்கொண்டு வெற்றி வேலுடன் முருகன் இங்கு வந்து அமர்ந்ததால், வேலுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
இத்தலத்தில் சிவன், விநாயகர், முருகன் ஆகிய
பாபாசான்

சேகலைககோர்
- 49

Page 50
கலைக்கேசரி தி
50
மூவருக்குமான வாகனங்கள் கொடிமரத்திற்கு அருகில் அமைந்துள்ளன. ஒரு பீடத்தின் நடுவில் நந்தியும், வலதுபுறத்தில் மூஞ்சூறும், இடப்புறம் மயில் வாகனமும் இருக்கிறன. இம்மூன்று வாகனங்களும் தெற்கு நோக்கி இருப்பது மற்றொரு சிறப்பு. மகாவிஷ்ணுவின் வாகனமாக கருடாழ்வார், அவருக்கு எதிரே வணங்கியபடி இருப்பார். ஆனால், இக்கோயிலில் மகாவிஷ்ணுவிற்கு எதிரே சிவன் இருப்பதால், கருடாழ்வார் சன்னதி இல்லை. அதற்குப் பதிலாக கருடாழ்வார், சண்முகர் மண்டபத்திலுள்ள கார்த்திகை முருகனுக்கு அருகில் வடக்கு நோக்கி இருக்கிறார்.
தலவிருட்சம் மிகப் பழைமையான காலத்திலிருந்தே நம் முன்னோர்கள் வனத்தை இருப்பிடமாக கொண்டு வாழ்ந்தனர். பின்னர் காடு கெடுத்து நாடாக்கப்பட்ட பின்பு தெய்வங்களுக்குப் பெருங்கோயில்கள் அமைக்கப்பட்ட போதிலும் ஆதியில் இருந்த மரத்தினை அழிக்காது அதனை இன்றளவும் சுவாமிக்கு அருகில் தலவிருட்சகம் (தலமரம்) என்ற பெயரில் வளர்த்து வருகின்றனர். அவ்வகையில் இத்தலத்தின் ஆதிமரம் கல்லத்தி ஆகும். இந்த மரம் மகாமண்டபத்தின் கீழ்ப்புறம் லெட்சுமி தீர்த்தம் செல்லும் வழியில் அமைந்துள்ளது.
தலப் பெயர்கள் திருப்பரங்குன்றத்தில் சிவன், குன்று வடிவில் லிங்கமாக அருள் செய்வதால் சிவனுக்கு 'பரங்குன்றநாதர்' என்றும், தலம் 'திருப்பரங்குன்றம்' என்றும் பெயர் பெற்றது.
திருப்பரங்குன்றம் என மக்களால் பொதுவாக
அை அழைக்கப்படும் இத்தலம் திருப்பரங்கிரி, சுமந்தவனம்,
சேரி பராசலதலம், குமாரபுரிவிட்டணுதுருவம், கந்தமாதனம்,
தொ கந்தமலை, சத்தியகிரி, தென்பரங்குன்றம், தண்பரங் குன்றம், சுவாமிநாதபுரம், முதற்படைவீடு என்று பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்துள்ளது. இத்
தனை திருத்தலத்திற்கு இலக்கியங்களில் தண்பரங்குன்று,
என தென்பரங்குன்று, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரி,
பற்ற பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்தமலை என
விஜ பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன.
என் ஊரைக் காக்க கோபுரம் மீதேறி உயிர்க்கொடை திருப்பரங்குன்றத்தையும் திருக்கோவிலையும்
வை காப்பதற்காக இருவர் திருப்பரங்குன்றத்து கோபுரம்
செல் மீதேறி விழுந்து உயிர்துறந்த நிகழ்வுகள் பற்றியும் அவர்கள் குடும்பத்தாருக்கு அளிக்கப்பட்ட இரத்த காணிக்கைகள் பற்றியும் திருப்பரங்குன்றத்திலுள்ள
இரண்டு கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
கி. பி. 1793 இல் நவாப் சாகிப் ஆட்சிக் காலமாகக்
குழ. குறிப்பிடப்பெற்ற ஒரு கல்வெட்டுச் சாசனத்தில்,
விழு ஐரோப்பியர் படையினர் திருப்பரங்குன்றம் அருகில் முகாமிட்டுத் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு மிகுந்த
எடு
தென
| மதி
கைல் தட்ட
குழ!
சிறு:

திருப்பரங்குன்றத்தானை நினைத்தால்
- சித்திக்கும் பச்சிலை மருத்துவம் மதுரையிலிருந்து பத்துக் கிலோமீற்றர்கள் தொலைவில் மந்திருக்கின்றது விளாச்சேரி கிராமம். பெயருக்கேற்றபடி க்குடியிருப்பொன்றின் சாயல் நிறைந்திருந்தது. சற்றுத்
லைவில் திருப்பரங்குன்றின்
மலையடிவாரம் எபடுகின்றது. இந்தச் சேரிபுறத்திற்குள் நுளையும்போதே 40 லமுறைகளாக ஒரு வைத்தியப் பாரம்பரியம் தொடர்கின்றதா
ஆச்சரியப்படவைக்கும் ஒருமனநிலை நம்மை ப்பிடிக்கின்றது; இது நேரத்தை போக்கடிக்கும் வீணான பமோ? என மனம் பதட்டப்படுகின்றது. சரி! அப்படி எதான் விஷேசம்?
ஏழைக் கிராமப்புறத்தவர்கள் மட்டுமில்லை தனியார் ந்தியசாலையில் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டிச்
வுசெய்யும் தகுதியானவர்களும் அங்கு நின்றிருந்தார்கள்! ட்டுவாசலின் படிக்கட்டில் இருந்தபடியே ஒரு 65 வயது கத்தக்க வயோதிபமாது ஒரு சிறுவனின் வயிற்றில் ஒயவைத்து இன்னொரு கையால் அழுத்தியும் மெதுவாகத் யும் வயிற்றுக்குள் எதையோ தேடினார். பின்னர் தையின் தாயாரிடம் உனது மகன் இறப்பர் துண்டொன்றை ங்கிவிட்டான் எனக் கூறிக்கொண்டே விபூதியை எடுத்து தையின் வயிற்றில் தடவினார். ஒரு பச்சிலைச் சாற்றை து குழந்தைக்கு பருக்குமாறு தாயிடம் நீட்டினார். இந்தச் பனைப் போலவே இளைஞர்களும் வயதானவர்களும்

Page 51
பாலகர்களும் அந்த மூதாட்டியிடம் பச்சிலை மருத்துவத்திற்க காத்திருந்தனர். ஒவ்வொருவருக்கும் மருத்துவ மூதாட் கண்களை மூடி திருப்பரங்குன்றத்தானை நினைத்து முருகன் உச்சரித்துக் கொண்டே வயிற்றில் கைவைக்கின்றார். அப்போ திருப்பரங்குன்றத்தான் அருளால் வயிற்றில் காணப்படு பிரச்சினை தெரிந்துவிடும் என தீர்க்கமான நம்பிக்கையுட கூறுகின்றார்.
அவர் தனது மருத்துவம் குறித்து இப்படிக் கூறுகின்றா 'திருப்பரங்குன்றில் முளைக்கும் சங்கலை என்ற மரத்தி இலையின் சாறு இவ்வாறு பருகக் கொடுக்கப்படுகின்ற சங்கலை மரம் வேறு இடங்களில் அரிதாகவே கிடைக்கு இங்கே திருப்பரங்குன்றத்து மலையில் ரொம்பக் கிடைக்கு அதை வாரத்திற்கு ஒரு முறை போய் வெட்டி வருவோ இதனுடன் மருந்து எதுவும் கலப்பதில்லை. அரிசி கலா தண்ணீருடன் கடும் கோப்பியை கலந்து சாறு பருகிய சிறி நேரத்தின் பின்னர் குடிக்கக் கொடுத்தால் வாந்தி வந்து விடு அதன் பின்னர் எல்லாம் சரியாகி விடும். வயிற்றைத் தட்டு போது அதன் சத்தத்தை வைத்து குழந்தை என்னத்ல விழுங்கியிருக்கும் என்று கண்டுபிடித்து விடலாம்.
தமிழ் நாட்டில் எல்லாப் பாகத்திலிருந்தும் இங் மருத்துவத்திற்காக வருவார்கள். தமிழ்நாட்டில் நாங்கள்தா இந்த வைத்தியம் செய்கின்றோம். இது 40 ஆவது தலைமுன் என்று சொல்சின்றார்கள். மருமகளுக்குத்தான் இந்த இரகசிய சொல்லிக்கொடுப்போம். மகனின் மனைவிக்கு! இதுதா பாரம்பரியம். மகளுக்கு சொல்லிக் கொடுக்க மாட்டோம். ஏனென்றால் மகளைக்கட்டிக் கொடுத்து விட்டால் அவள் புகுந்த வீடு போய்விடுவாள்.
ஒரு நாளைக்கு 40 முதல் 60 பேர் வரை வருகின்றார்கள். வைத்திய சாலைக்கு போய் அங்கு முடியாமல் கைவிடப்பட்ட நோயாளிகள் கூட என்னிடம் வந்து சுகமாகிச் சென்றிருக்கின்றார்கள். நாங்கள் திருமண பந்தங்களை சொந்தத்தில் உள்ளூரில்த்தான் செய்கின்றோம் தி ருப் ப ர ங் கு ன் ற த் த ா னி ன் தோரோட்டம் மற்றும் திருக் கல்யாணத்தின் போது இரண்டு நாட்கள் அன்னதானம் வழங்கும் பாரம்பரியமும் தொடர்ந்து கடைப் பிடித்து வருகின்றோம். அன்ன தானத்தின் போது 10000 பேருக்கு மேல் பசியாறிச் செல்வார்கள்” என்று கூறும் இவரது பெயர் அங்கம்மா. இவர் தனது மகனின் மனைவியை தனது அடுத்த வாரிசாக தத்தெடுத்து பயிற்சியளித்து வருகின்றார்.

, கலைக்கேசரி
51
க
5 S 6 5)
னெ
. . இ 5 5 3
06
8. 8 2.
அழிவுகளை ஏற்படுத்தியதாகக் கூறுகின்றது. மேலும் அங்கிருந்த சொக்கநாதர் மற்றும் பழனியாண்டவர் கோயில்களை அவர்கள் இடித்ததுடன் நகரத்தினைக் கைப்பற்றி ஆஸ்தான மண்டபத்திற்குள் நுழைந்து மூடப்பட்டிருந்த கோபுர வாயிலைத் தகர்த்து, கல்யாண மண்டபத்திற்குள் நுழைய முற்பட்டபோது கோயில் ஸ்தானீகர்கள் ஒன்று கூடி ஐரோப்பியர் நுழைவுக்கு எதிர்ப்புக் காட்டி, வைராவி முத்துக் கருப்பன் மகன் குட்டி என்பவனை கோபுரம் மீதேறி விழுந்து உயிர்த்தியாகம் செய்ய வேண்டவே, அதன்படி அவன் கோபுரம் மீதேறி விழுந்து உயிர் துறந்தான் என்றும் பிறகே ஐரோப்பியர் படை முன்னேறாது பின்வாங்கினர் என்றும் அக்கல்வெட்டுக் கூறுகின்றது. இவ்வுயிர்த் தியாகத்திற்காக அவனது குடும்பத்தினருக்கு இரத்த காணிக்கை அளிக்கப்பெற்றதையும் அக்கல்வெட்டு விவரிக்கின்றது.
இவ்வுயிர்த்தியாகம் நிகழ்ந்த அதே நாளில் அதே காரணத்திற்காக எல்லப்ப முதலி மகன் ஆண்டாபரண முதலி என்பவரும் அக்கோபுரத்திலிருந்து கீழே விழுந்து உயிர்த்தியாகம் செய்ததற்காக இரத்தக் காணிக்கை அளிக்கப் பெற்றது குறித்து மற்றொரு கல்வெட்டுப் கூறுகின்றது. இந்நிகழ்வுகளால் ஐரோப்பிய படைகளின் தாக்குதலில் இருந்து திருப்பரங்குன்றம் நகரமும் கோவிலும் காக்கப்பெற்றன என்பது அறிய முடிகின்றது.
திருப்பரங்குன்றத்தின் சிறப்புகள். ஆறுபடை வீட்டு முருகப்பெருமான் கோயில்களில் இக்கோயில் அளவில் பெரியதாகும். )
இத்தலத்தில் அன்னதானம் செய்தால் செல்வம் பெருகி வாழ்வில் வளம் சேரும் என்பது நம்பிக்கை. செவ்வாய்க்கிழமைகளில் இல்லத்தில் தூய்மையாகத் தயிர் அன்னம் செய்து இங்கே கொண்டு வந்து ஏழை மக்களுக்கு வழங்குவதைப் பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
முருகப் பெருமானின் அறுபடை வீட்டு கோயில்களில் இக்கோயில் அளவில் பெரியதாகும்.
குன்றின் அடிவாரத்து கிழக்கு திசையில் சரவணப் பொய்கை அமைந்துள்ளது. இதை முருகன் தம் வேலினால் உண்டாக்கினார் எனக் கூறுவர்.
முருகன், தெய்வானையை திருமணம் செய்த தலம் என்பதால், முருகனுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு, சுப்பிரமணிய சுவாமி கோயிலாக மாறிவிட்டது.
சனிபகவானின் தனிஉருவும் அமைந்துள்ளது. ஆனால் இக்கோயிலில் நவகிரகங்கள் இல்லை.
இங்குள்ள தங்க ரதத்தை பக்தர்கள் முன்பதிவு செய்து இழுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கோயிலுக்கென மொத்தம் 11 தீர்த்தங்கள் இருக்கின்றன. தோல் வியாதிகள் உள்ளவர்கள் லட்சுமி தீர்த்தத்தில் உப்பு, மிளகு போட்டு வேண்டிக் கொள்கின்றனர்.
பஸ்தியாம்பிள்ளை ஜோண்சன்

Page 52
லக்கேசரி த சுவடுகள்
எருக்கலம்பிட்டி
மன்னார் விராணை
பொ - 5
பருத்தித்
எருக்கலம்பிட்டி

ஐரோப்பியர் கால வெளிச்ச வீடுகள்
- பேராசிரியர். ப. புஸ்பரட்ணம் டெ இலங்கையில் காணப்படும் ஐரோப்பியர் கால
நினைவுச் சின்னங்களுள் வெளிச்ச வீடுகளும்
ஒன்றாகும். கடற்கரை சார்ந்த இடங்களில் அதிலும் குறிப்பாக துறைமுகங்களை அண்டி இவை அமைக்கப்பட்டதன் நோக்கம் கடல் பயணத்தின் போது கடலில் பயணிக்கும் கப்பல்கள் திசைமாறிச் செல்லாது உரிய இடத்தை வந்தடைவதற்கு திசைகாட்டியாக இருப்பதற்காகும். இவ்வகை வெளிச்சவீடுகள் வட இலங்கையில் நெடுந்தீவு (குவிந்தா, மாவிலங்கதுறை), காரைநகர் (கோவளம்), புங்கிடுதீவு, ஊர்காவற்துறை, காங்கேசன்துறை, பருத்தித்துறை, நாகர்கோவில், வெற்றிலைக்கேணி, பூநகரி (கல்முனை), மன்னார் மாவட்டத்தில் அரிப்பு, தலைமன்னார், கரடியனாறு மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. மேலும் பல இடங்களில் இவை அமைக்கப்பட்டிருந்தும் அவை அழிவடைந்ததினால் அவை பற்றிக் கூறமுடியாதிருக்கிறது. இவ்வெளிச்ச வீடுகளை முதலில் அழியாப் பொருட்களைக் கொண்டு அமைத்தவர்கள் போர்த்துக்கேயர் எனக் கூறப்படுகிறது. ஆயினும் தற்போது வட இலங்கையில் காணப்படும் பெரும்பாலான வெளிச்ச வீடுகள் ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்டவையாகவே உள்ளன. இவை பெரும்பாலும் வெளிச்ச வீடுகள்
துறை
நெடுந்தீவு

Page 53
அமைக்கப்பட்ட
சுற்றாடலில்
காணப்பட்ட கோறல்கற்களைக் கொண்டு கட்டப்பட்டவையாக காணப்படுகின்றன. ஓல்லாந்தரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ஆங்கிலேயர் காலத்தில் இவ்வெளிச்ச வீடுகள் சீமேந்தினால் திருத்தம் செய்யப்பட்டதுடன் அவர்கள் ஆட்சிக் காலத்திலும் காங்கேசன்துறை, பருத்தித்துறை, அரிப்பு முதலான இடங்களில் வெளிச்ச வீடுகள் புதிதாகவும் அமைக்கப்பட்டன. இவ்வெளிச்ச வீடுகளை அமைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள், உயரம், வடிவமைப்பு, கலைமரபு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒல்லாந்தர், ஆங்கிலேயர் கால வெளிச்சவீடுகளை வேறுபடுத்தி அடையாளப்படுத்திக் கொள்ள முடிகிறது. - இவ்வெளிச்ச வீடுகள் ஐரோப்பியர் ஆட்சியில் கட்டப்பட்டாலும் அவர்கள் ஆட்சிக்கு முற்பட்ட சுதேச மக்களின் கடல்சார் வரலாறும் இவ்வெளிச்ச வீடுகள் காணப்படும் இடங்களுடன் தொடர்பு கொண்டிருந்தமைக்கு நம்பகரமான சான்றுகள் காணப்படுகின்றன. பண்டு தொட்டு வட இலங்கையில் உள்ள இயற்கைத் துறைமுகங்கள் வட இந்தியா, தென்னிந்தியா, கிரேக்கம், ரோம், அரேபியா, சீனா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுடன் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தமைக்கு பாளி, சிங்கள, தமிழ் இலக்கியங்களில் பல சான்றுகள் காணப்படுகின்றன. கி.பி. 3 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட பிராமிக் கல்வெட்டுகள் நெடுந்தூரம், குறுந்தூரங்களுக்குப் பயன்படுத்திய கடற்கலங்களின் பெயர்களைக் குறிப்பதோடு அக்கல்வெட்டுக்களில் கடற்கலன்களின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளன.
வெற்றிலைக்கேணி

- கலைக்கேசரி
சகடம் - தப
மன்னார் அரிப்பு
தலைமன்னார்
காரைநகர் கோவளம்

Page 54
வெற்றிலைக்கேணி
கல்லாறு
காங்கேசன்துறை கோவளம்
பருத்தித்துறை
புங்குடுதீவு
ஊர்காவற்துறை கடற்கோட்டை
முல்லைத்தீவு
மன்னார்
புரம் எம்

மேலும் மன்னார், மாதோட்டம், பூநகரி, நெடுந்தீவு நாகர்கோயில், வெற்றிலைக்கேணி ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளில் இவ்விடங்களில் அயல் நாடுகளுடன் வணிக உறவுகளை மேற்கொண்டிருந்தமைக்கான தொல்லியல் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. பாளி இலக்கியங்கள் அநுராதபுர, பொலநறுவை அரசு காலத்தில் மாதோட்டம் முக்கிய துறைமுகமாக இருந்ததைக் குறிப்பிடுகின்றன. நாயன்மார் பாடல்களில் கி.பி 8 - 9 ஆம் நூற்றாண்டில் பல நாட்டுக் கப்பல்கள் வந்துபோகும் இடமாக மாதோட்டத்தைக் குறிப்பிடுகிறது. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழக் கல்வெட்டுகள் வட இலங்கையில் உள்ள முக்கிய துறைமுகங்களாக மாதோட்டம், மன்னார், ஊர்காவத்துறை ஆகிய இடங்களைக் குறிப்பிடுகின்றன. நயினாதீவில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாம் பராக்கிரமபாகுவின் தமிழ்க் கல்வெட்டொன்று இலங்கை தென்னிந்தியா, தென்கிழக்காசிய நாடுகளுடனான வணிகத் தொடர்புகளை ஊர்காவற்துறைமுகம் ஊடாக நடத்தியதாகக் கூறுகிறது.
மேற்கூறப்பட்ட மூன்று இடங்களும் 13 ஆம் நூற்றாண்டில் கலிங்கமாகனின் முக்கிய துறைமுகங்களாக இருந்ததற்கு சூழவம்சத்தில் ஆதாரங்கள் காணப்படுகின்றன. யாழ்ப்பாண அரசு காலத்தில் மேற்கூறப்பட்ட துறைமுகங்களுடன் நெடுந்தீவில் உள்ள மாவிலித்துறை,
காங்கேசன்துறை, பருத்தித்துறை, நாகர்கோவில், கச்சாய் ஆகிய இடங்களில் உள்ள துறைமுகங்களும் அயல்நாட்டு வாணிபத்திற்குப் பயன்பட்டதாக தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. அத்துடன் இத்துறைமுகங்களை அண்டி வணிகர்களிடம் வரி அறவிடும் கடவைகளும் இருந்ததாக இவை மேலும் கூறுகின்றன.
இவ்வரலாற்று ஆதாரங்களை நோக்கும் போது ஐரோப்பிய வருகைக்கு முன்னர் வட இலங்கையின் கடல்சார் வாணிப நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டிருந்த துறைமுகங்கள், வணிக மையங்களிலேயே போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் தமது வெளிச்சவீடுகளை அமைத்தனர் எனக் கூறமுடியும். பண்டு தொட்டு கடல்சார் பயணத்தை மேற்கொண்ட பயணிகள் இலகுவாக தாம் செல்லவேண்டிய கடற்கரைகளைக் கண்டறிவதற்கு பல வகையான வெளிச்ச முறைகளைப் பயன்படுத்தியதற்கு உலக வரலாற்றில் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன. பழந்தமிழ் இலக்கியங்களில் இவை கலங்கரை விளக்கம் தீபஸ்தம்பம், கோரி எனப் பலவாறு அழைக்கப்படுகிறது. இவை இலகுவாக அழியக் கூடிய மரங்கள், மண் மேடுகளில் அமைக்கப்பட்டதால் அவை பற்றிய சான்றாதாரங்கள் தற்போது எமக்கு கிடைக்கவில்லை. ஆனால் இலங்கையில் ஆதிக்கம் செலுத்திய ஐரோப்பியர் முன்பு வட இலங்கையில் கடல்வழித் தொடர்புக்குப் பயன்படுத்திய இடங்களில் கற்களைப் பயன்படுத்தி வெளிச்ச வீடுகளை அமைத்ததால் அவை இன்றும் நிலைத்து நிற்கின்றன.

Page 55
-Tா**:FI:++GETHE HE:FILE)
ப.
எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் 2011ம் ஆண்டிற்கான தப காலை மட்டக்களப்பு வேதநாயகம் மண்டப வணபிதா | பேராசிரியர் சி. மௌனகுரு உயர் தமிழியல் விருது பெறுவை ஷெரிப்தீன், (திருமதி) சுரதா, அல்அஸுமத், அகளங்கன், மு பெறுவதையும் மற்றும் வி.தேவராஜ், பொன். செல்வநாய ஏற்பாட்டாளர் ஓ.கே.குணநாதன், டாக்டர் அருள்நிதி ஆகியோ
ல் விடும்

பகழ்வு 55
விர ட 210)
JEE = -
து 0 2011
மிழியல் விருது வழங்கும் விழா கடந்த 23.09.2012 அன்று நீதரன் சில்வஸ்டர் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. தயும் மற்றும் எழுத்தாளர்களான கலைச்செல்வன், ஜின்னா -.அருள்பிரகாசம், ஹாசிம் உமர், ஆகியோர் விருதுகளைப் கம், கே.விமலநாதன், வவுனியூர் உதயணன், நிகழ்வு ரையும் படங்களில் காணலாம்.

Page 56
கலைக்கேசரி 2 56 கோளியல்
ஞான காரகனே !ே
- கலா
மாதுசேர் நெடுமால் முன்னம் வானவர்க்கு அமுதம் ஈயும் போதுநீ நடுவிருக்கப் புன்சிரம் அற்று வெய்யத் தீதில்சேர் கதிர் விளங்கச் சிவன் கையில் சிரமே பெற்ற கேதுவே! உனைத் துதித்தேன் கீர்த்தியாய் ரட்சிப்பாயே!
இராகுவைப் போலவே கேதுவும் சாயாக் கிரகம். இருவருக்கும் வரலாறு ஒன்றே. பாற்கடலில் கிடைத்த அமுதத்தை, திருமால் மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களைத் தனது அழகினால் மயக்கி தேவர்களுக்கே அமுதத்தை பங்கீடு செய்தார். இதனை அறிந்த இராகுவும், கேதுவும் தேவர் உருவில் மோகினியை ஏமாற்றி சூரிய - சந்திரர்களுக்கிடையே அமர்ந்து அமுதம் உண்டார்கள். - சூரிய - சந்திரர்கள் இதனைக் குறிப்பால் மோகினிக்கு உணர்த்த சட்டுவத்தால் அடித்து சக்கரத்தால் சிரசை அறுத்தாள். அமுதம் உண்டு விட்டதால் அழியாத அவ்விருவரும் தலைப்பாகம் இராகு என்றும், உடல் பாகம் கேது என்றும் பெயர் பெற்றனர்.
தனது தவறை உணர்ந்த கேது திருமாலை நோக்கித் தவம் செய்து கிரகபதவி பெற்றான். இவனது தந்தை விப்தசித்து. தாய் சிம்மிகை. கேது இராகுவின் தம்பி. இராகுவும் கேதுவும் காசியபருக்குப் பேரன்மார். கேதுவும் இராகுவும் தலை வெட்டுண்டு தேவலோகத்திலிருந்து பூமியில் மலையம் என்ற இடத்தில் விழுந்தனர். இராகு கரும் பாம்பாகவும் கேது செம்பாம்பாகவும் ஆகினர். கீழே

கதுவே காப்பாய்!
பூஷணம், வித்துவான் திருமதி வசந்தா வைத்தியநாதன்
விழுந்த கேதுவை 'மினி' என்ற அந்தணன் எடுத்து வளர்த்தான்.
அந்தணனிடம் வளர்ந்ததால் கேது ஆன்மிக உண்மைகளை உணர்ந்தான். ஆத்மாவின் தன்மைகளைப் புரிந்து கொண்டு சிறிது, சிறிதாக உலகாயத சுகங்களிலிருந்து உடலையும் உள்ளத்தையும் விடுவித்துக் கொள்ள வேண்டும்; பரமாத்மிக சொரூபமான இறைவனை உணர வேண்டும்; ஆத்மாவிற்குள் இருக்கும் அவனை தியானத் தால் காண முயற்சி செய்ய வேண்டும்; பற்றுக்களின் பற் றறுத்து பற்றறுத்தானைப் பற்றாகப் பற்ற வேண்டும் என்பது போன்ற உயரிய தத்துவப் பொருட்களையெல்லாம் அந்த ணர் மூலம் உணர்ந்தான் கேது. கேதுவை ஞானகாரகன் என் பர். மோட்சத்தை அருள்பவன் இவன்.
கேதுக்கிரகம் ஒருவர் ஜாதகத்தில் உச்சமாக இருந்தால் நடுத்தர வயதைத் தாண்டியதும் ஆன்மிக உண்மைகளில் பெரிதும் நாட்டம் கொள்வர். உலக இன்பங்களை மாயை என உதறி பேரின்ப நிலையே மெய்யென்ற உணர்வு மிகும்.
'நவக்கிரக ஆராதனை முறை' என்ற நூலில் கேதுவின் நிறம் கருமை என்றும் இரண்டு கரங்களை உடையவன் என்றும் ஒருகரம் அபயஹஸ்தமாகவும் மற்றொரு கரம் கதாயுதத்தைத் தாங்கியிருக்கும் என்றும் கூறப்படுகின்றது. பத்துக் குதிரைகள் பூட்டிய தேரில் உலா வருபவன்; மிகுந்த கோபம் உடையவன்; முக்கோண வடிவம் கொண்ட கொடியைக் கொண்டவன்; முருகனுக்கு வெண்கவரி வீசுபவன்; மேருவை இடமாகச் சுற்றுபவன்; அந்தர்வேதி தேசத்தவன்; விசித்திரமான வண்ணம் உடையவன்; வாயு திசைக்கு உரியவன்; கழுகை வாகனமாகக் கொண்டவன்; எட்டுப் பிள்ளைகளின் தந்தை; மனைவி சித்திரலேகா; பல வண்ண மலர்களிலும் கருஞ்சந்தனத்திலும் விருப்பம் உடையவன் என்று நூல்கள் கூறுகின்றன.
| கேதுவின் அதிதேவதை சித்திரகுப்தன். பிரதியதி தேவதை பிரம்மா. சூரியன், சந்திரர் விரோதிகள். சனி, சுக்கி ரன் நண்பர்கள். நாக படத்துடன் கூடிய மூன்று அல்லது ஐந்து தலைகளைக் கொண்டவன். 'கேதும் க்ருண்வன்' என்ற வேத மந்திரம் கேதுவுக்கு உரியது. அதற்கு ரிஷி மதுச்சந்தர் 'ஓம் க்நீம்' என்ற மந்திரமும் கேதுவிற்கு உரியது தான். இதற்கு ரிஷி ஜயச்சந்தர் என்று சித்தாந்த பஞ்சாங்கம் கூறுகின்றது. தூம்ரகேது, லோககேது, மஹாகேது, சர்வகேது, ரெளத்திரகேது எனப்பல நாமங்களால் கேது அழைக்கப்படுகின்றான். | சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர் தாம் இயற்றிய நவக்கிரக கீர்த்தனைகளில் கேதுவைப் பற்றி சாமா இராகத்தில் பாடியிருக்கிறார். அதில் அசுரர்களுக்குள் பெரியவன் கேது. மனித உடலாகிய பீடத்தில் எழுந்தருளியிருப்பவன். புதிதாக கிரகப் பதவியைப் பெற்ற இராகுவுடன் இணைந்திருப்பவன்.

Page 57
குணம் குறை கடந்த ஞானிகளின் தலைவன். கிரகணம் உண்டாவதற்குக் காரணமானவன். வான வீதியில் அப்பிரதட்சிணமாக பவனி வருபவன் என்று கேது கிரகத்தைப் பாராட்டிப் பாடியுள்ளார்.
அஸ்வினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ஆதியில் கேது திசை மொத்தம் ஏழு ஆண்டுகள்.
கேது பூசித்துப் பேறு பெற்ற தலம் திருக்காளத்தி. பஞ்ச பூதத் தலங்களில் வாயுத் தலம். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தது. தென்கயிலை எனப் புகழப்படுவது. ஒப்பற்ற பக்தியுடைய திண்ணனைக் கண்ணப்பனாக்கிய திருத்தலம். சிலந்தி, பாம்பு, யானை பூசித்துப் பேறு பெற்ற தலம். 'அட்டமாசித்திகள் அனைதரு தலம்' எனப் புகழப்படுவது. முசுகுந்தன், பரத்வாத முனிவர், நக்கீரர், இந்திரன், இராமபிரான் வழிபட்டு முக்திப்பேறு எய்திய தலம். மூவர் பாடல் பெற்ற சிறப்புடையது. நக்கீரர் பாடிய கயிலை பாதி, காளத்தி பாதியந்தாதி பதினோராம் திருமுறையில் அமைந்து அருள் பெருக்குகின்றது.
இத்தலத்தின் பெருமையை கருணைப் பிரகாசர், சிவப்பிரகாசர் சுவாமிகள், வேலப்ப தேசிகர் என்ற அபூர்வ சகோதரர்கள் திருக்காளத்தியின் பெருமையை 'ஸ்ரீ காளத்தி நாதர் புராணத்தில்' பாடியுள்ளனர். வீரை நகர் ஆனந்தக் கூத்தர் பாடிய 'ஸ்ரீ காளத்தி புராணம்' என்ற வேறொரு நூலும் உண்டு.
திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய கோளறு பதிகம் கோள்களின் தாக்கம் அடியார்களை நலிவிக்காது என்னும் பொருள்படப் பாடப்பட்டுள்ளது. அதில்
'ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டும் உடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே' என்று அருளியதில் இராகு, கேதுவைப் 'பாம்பிரண்டு' என்று குறிப்பிடுகிறார்.
மகாவிஷ்ணுவின் ஒவ்வொரு அவதாரமும் ஒவ்வொரு கிரகத்துடன் தொடர்புடையது என்று பராசரசம்ஹிதை கூறுகிறது. குளிகனையும் சேர்த்துப் பத்து கிரகங்கள் பத்து அவதாரங்களில் அடங்குகின்றன.
ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் அமைந்திருப்பது போல கேதுவும் பலன் கொடுத்தாலும் கேதுவைப் பிரீதி செய்தால் கேதுவின் தசா புத்திக் காலங்களில் நன்மைகள் ஏற்படும்.
கேதுவுக்கு உரிய நவரத்தினம் வைடூரியம். கேது ஞானகாரகன். வைடூரியமும் மருத்துவக் குணங்கள் மிக்கது. இவை இலைப்பச்சை, கிளிப்பச்சை, பசும்பொன் என்ற மூவகை வடிவங்களில் கிடைக்கின்றன.
வைடூரியத்தின் நடுவில் இரண்டொரு கோடுகள் இருக்கின்றன. அதனைப் புரட்டும் பொழுது புரளும் இதற்கு 'சூத்திரம்' என்று பெயர். வானவில் போல் தெளிவாக பொன் வண்ணத்தில் இது இருந்தால் சிறந்த பாவனைத்தரும். விலை அதிகம்.
வைடூரியம் இந்தியாவில் பல இடங்களில்

ப கலைக்கேசரி
57
கிடைக்கின்றது.
வைடூரியம் அணிவதால் ஏற்படும் பலன்கள் 1. கண் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும். 2. பாம்பின் விடம் ஏறாது. 3. இரகசிய நோய்களைக் குணப்படுத்தும். 4. படமெடுக்கும் பாம்பின் தலையில் வைடூரியத்தை
வைத்தால் அது படுத்து விடும். 5. மின்னலின் காந்த சக்தி இக்கல்லில் பதிவாகியுள்ளதால்
மிகுந்த சக்தி வாய்ந்ததாக உள்ளது. 6. பிரயாணங்களில் நல்ல பலன் தரும். 7. இக்கல்லை அணிபவர்களைக் கண்டு மற்றவர்கள் ஈர்ப்பு
அடைவார்கள். 8. சுவாசம், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும். 9. சர்வாகர்ஷிணி என்று பெயர் பெற்ற இக்கல்லுக்கு எல்
லோரையும் வசியமாக்கும் சக்தி உண்டு.
கேதுகாயத்திரி கேது கிரகத்தினால் நன்மை பெற கேதுகாயத்திரியை தூய் மையான உடலுடனும் மனதுடனும் உருவேற்ற ஏற்ற நன் மைகள் கிடைக்கும்.
அச்வித் விஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி தந்ந: கேது: ப்ரசோதயாத். கேதுகவசம், கேதுத்தோத்திரம் அஷ்டோத்திரம் இவைகளையும் சிந்திக்க நன்மை கிடைக்கும்.
'வானவர் நடுவில் நின்று வார்கடல் அமுதுண்டு தான் சிரம் அற்றபோதும் தனிச்சிரம் உடைய கேது வான மீன் தன்னில் தனிவளர் அரசு ஆன தேவன் தேன் கமழ் கேது தேவன் திருக்கழல் போற்றி! போற்றி!'
'கேதுத் தேவே! கீர்த்தித் திருவே! பாதம் போற்றி பாவம் தீர்ப்பாய் வாதம், வம்பு, வழக்குகள் இன்றி கேதுத்தேவே! கேண்மையாய் ரக்ஷி!!'
எ------
--- 25

Page 58
கலைக்கேசரி தே. 58 நாவலாளி
8 ல் டெ..
லகில் மிக உயரமான நீர் வீழ்ச்சியாக விளங்குவது வெனிசுலா நாட்டில் உள்ள ஏஞ்ஜெல்ஸ் நீர்
வீழ்ச்சியாகும். இதன் உயரம் 979 மீட்டர் (3212 அடி) இந்த நீர் மிக உயரமான மலையில் இருந்து வீழ்வதால், நிலத்தில் வந்து விழுவதற்கு சுமார் ஒரு மைல் மேலேயே நீர் குறைந்து வெறும் பனிப்புகார் ஆகிவிடுகிறது. இந்த நீர் வீழ்ச்சி ஒளயன் ரெபுய் மலை உச்சிக்கு அண்மையில் செங்குத்தான பாறையிலிருந்து, றியோகௌயா என்று கூறப்படுகின்ற கெறெப் நதியில் வீழ்கின்றது. | 20 ஆம் நூற்றாண்டு வரை இந்நீர்வீழ்ச்சி, ஏஞ்ஜெல் நீர்வீழ்ச்சி என்று தான் அழைக்கப்பட்டது. இதற்குக் காரணம் அமெரிக்க விமானியான ஜிம்மி ஏஞ்ஜெல் என்பவர் தான் இந் நீர்வீழ்ச்சிக்கு மேலாக முதன்முதலில் விமானத்தில் பறந்து சென்றவர். சிலவேளை இந்நீர்வீழ்ச்சி 'சருன் மெரூ' (Churun - meru) என அழைக்கப்படுவதுண்டு. இதன் கருத்து 'இடி முழக்க நீர் வீழ்ச்சி' என்பதாகும். ஆனால் அப்பிரதேசத்தில் உள்ள கனைமா தேசிய பூங்காவில் உள்ள மற்றொரு நீர் வீழ்ச்சிக்கும் உள்ள பெயர் ஏறக்குறைய இதுபோலத்தான் இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஜிம்மி ஏஞ்ஜெலுக்கு முன் சேர் வால்டர் ரலி என்ற ஐரோப்பியர் தான் முதன் முதலில் இந் நீர்வீழ்ச்சியைக் கண்டவர் எனக் கூறப்பட்டது. இவருக்குப் பின் பெர்ணாண்டோ டி பொரியோ என்ற ஸ்பானியரும், 1912 ஆம் ஆண்டில் ஏர்னெஸ்ரோ சான்செஸ்லாகுரூஸ் என்னும் வெனிசுலா நாட்டு ஆய்வாளரும் இந்த நீர்வீழ்ச்சியைக் கண்டுபிடித்தார்கள் எனக் கூறப்பட்டாலும், இவர்களின் கண்டுபிடிப்பு வெளி உலகத்தினுக்கு தெரியப்படுத்தப்படவில்லை.
1933 ஆம் ஆண்டு, ஜிம்மி ஏஞ்ஜெல் என்னும் அமெரிக்க விமானி தமது விமானத்தில், தங்கம் தேடிப்புறப்பட்ட போது, நவம்பர் 16 ஆம் திகதி இந்நீர் வீழ்ச்சிக்கு மேலாக பறந்து சென்றார். அவரது விமானத்தில் அவரது மனைவி உட்பட மூன்று தோழர்கள் பயணம் செய்தார்கள். 1937 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் திகதி திரும்பி வரும்போது, ஏஞ்ஜெல் தமது விமானத்தை ஒளயன் தெபுய் மலை மீது நிறுத்த முயன்றார். ஆனால் விமானத்தின் சில்லுகள் அங்கு சதுப்பு நிலத்தில் அமிழ்த்தி விட்டதால் சேதமாகி விட்டது.

நிபுகாராய் மாறி விடும், Dகின் மிக உயரமான தஜெல்ஸ் நீர்வீழ்ச்சி
வேறு ஒன்றும் செய்ய முடியாத நிலையில் அவர்கள் கீழே பூமிக்கு இறங்கி வந்து சேரப் பதினொரு நாட்கள் பிடித்தன. ஆனால் ஜிம்மி ஏஞ்ஜெல் ஒரு புதிய நீர் வீழ்ச்சியைக் கண்டுபிடித்தார் என்ற செய்தி எங்கும் வேகமாகப் பரவியது. எனவே ஏஞ்ஜெலைக் கெளவிக்கும் வகையில் அந்நீர் வீழ்ச்சிக்கு 'ஏஞ்ஜெல் நீர் வீழ்ச்சி' எனப் பெயரிடப்பட்டது. ஏன்ஜெலின் விமானம் 33 வருடங்கள் அவ்விடத்திலேயே விடப்பட்டு, பின்னர் ஹெலிக்கொப்டரால் மீட்கப்பட்டது. தற்போது அது சியுடாட் பொலிவர் விமான நிலையத்தின் முன் இருக்கிறது.
யுனெஸ்கோ உலக மரபுரிமை இடமாக பிரகடனம் செய்யப்பட்டு பின்னர் இந்நீர்வீழ்ச்சி ஒரு பிரபலமான சுற்றுலா இடமாக மாறிவருகின்றது. இருந்தபோதிலும், அங்கு விஜயம் செய்வது மிகவும் கஷ்டமான ஒன்றாகவே இருக்கிறது. இந்நீர்வீழ்ச்சியின்
அடிப்பாகத்துக்குச் செல்வதானால் முதலில் ஒருவர் கனைமா முகாமுக்கு பறந்து சென்று, பின் அங்கிருந்து நதியில் பயணம் செய்து செல்ல வேண்டும். நதிப் பயணம் ஜூன் மாதத்தில் இருந்து டிசம்பர் வரை தான் செய்ய முடியும். ஏனைய மாதங்களில் நதி வரண்டு, நதியில் நீர் சொற்பமாகவே இருக்கும். விமானத்தின் மூலம் நீர்வீழ்ச்சியைப் பார்க்கச் செல்ல முடியும். என்றாலும் முகில்கள் நீர்வீழ்ச்சியை மறைத்திருக்கும் என்பதினால் தெளிவாகப் பார்க்க
முடியாது.
மேசை போலும் மேற்பரப்புள்ள மலையான ஒளயன்ரெயுய் என்னும் மலையில் இருந்துதான் இந்நீர் வீழ்ச்சி ஊற்றெடுத்து வருகிறது. 'ஒளயன் ரெபுய்' என்பதன் அர்த்தம் உள்ளூர் பெமன் மொழியில் 'தெய்' (Tepui) அழைக்கப்படுகின்றது. தெபுய் ஒளயன் தெபுய் (Auyantepui) எனவும் அழைக்கப்படுகிறது. அதன் அர்த்தம் 'தீய தெய்வத்தின் மலை' அல்லது 'பிசாசின் மலை' என்பதாகும்.
இந்த நீர் வீழ்ச்சியானது பனி, மெதுவாக நகரும் உறைப் பனிப்படலம் உருகுதல், வாவிகள், அல்லது பிரதான நதி போன்றவற்றினால் நீரைப் பெறவில்லை. அதற்குப் பதிலாக சம் ரேகை உஷ்ண முகில்கள் ஒளயன் தெபுய் பீடபூமிக்கு மேல் உருவாகித் திரளும் முகில் கூட்டில் இருந்து பெறப்படும் மழை வீழ்ச்சியினால் பெற்றுக் கொள்ளுகிறது.

Page 59
கொழும்
ஈமான்
“மிக ஆழமான இடத்தில் இருந்து
வரும் நீர் வீழ்ச்சி' எனவும் உள்ளுர் பெமன் மக்கள் கூறுகின்றனர்.
இந்நீர் வீழ்ச்சிக்கு மேலே கூறப் பட்டதுபோல ஒரு மேற்பகுதி உண்டு. அங்கு மெதுவாக, பள்ளங்கள் மலைக் கணவாய்களில் இருந்து நீர் கிளம்பி, 100 அடி கீழே விழுந்து பின்னர் ஒரு குகை அல்லது பிளவுகளுக்குள் சென்று, பின்னர் மீண்டும் எழுந்து மீண்டும் சுமார் 150 அடிகீழே பாய்ந்து, பின்னர் நீண்ட வீழ்ச்சியைக் காண்கிறது. இப் பகுதியில் நடமாடுவது மிகவும்
அபாயகரமானது. ஒரு சிறிய சறுக்கலும் மரணத்தை ஏற்ப டுத்துவதைத் தடுக்க முடியாதது. மிக உயரத்தில் ஏற்படும் நீர் வீழ்ச்சியினால், அதற்கென ஒரு சீதோஷ்ணத்தை உண்டாக்குகிறது. மோசமான சூறைக்காற்றும், நீர் பாறைகளின் மோதி குகைகளுக்குள் உட் புகுவதினால், பாரிய நீர்த் தூறல் அலைகளும் - தோன்றிக் கொண்டிருக்கின்றன. சூறைக்காற்று குகைகளின் கீழேயும் மேலும் மோசமாக ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. உலகின் மிக உயரமான இந்நீர் வீழ்ச்சியில் இதுவோர் அழகிய தனித்துவமான காட்சியாகும்.
தூரத்தில் இருந்து பார்க்கும் போது, ஒரு மாபெரும் நீர் வீழ்ச்சியையே பார்க்க முடியும். ஆனால் மிக அருகில் சென்று பார்க்கும் போது தான் தொடரான மலைக் கணவாய்கள், குகைப்பாதைகள், நீர்வீழ்ச்சி புகுந்து மீண்டும் மீண்டும் எழும் குகைகள் ஆகியவற்றைக் காணலாம். நீர்வீழ்ச்சியின் நடுத்தர உயரத்திலும் மற்றும் உயரத்திலும் எதிர்பாராத சூறைக்காற்று வீசிக் கொண்டிருப்பதால், அப்பகுதிகள் மிகவும் பயங்கரமானவை.
கீழே அடிப்பகுதியில் நீர் வீழ்ச்சியில் பாய்பவர்கள் காற்றினால் அள்ளுப்படாதிருக்கும் பொருட்டு, கீழ் நீரில் தான் பாய்கின்றார்கள். நீர் வீழ்ச்சியில் பாய்வதில் உலகப் புகழ்பெற்ற சிலர், மிகச் சிறந்த சூழ்நிலை நிலவும் போது பாய்ந்தும் அங்கு மரணத்தைத் தழுவிக் கொண்டிருக்கிறார்கள். கனைமா தேசிய பூங்காவுக்கு மேற்குப் புறத்தில் உள்ள ஒளயன் தெபுய் மலை, மிகப் பெரியதும் மிகவும் பிரசித்தி வாய்ந்ததுமான 'தெபுய்' ஆகும். இங்கிருந்து தான் ஏஞ்ஜெல் நீர் வீழ்ச்சி உற்பத்தியாகிறது. இந்நீர் வீழ்ச்சி 979 மீட்டர் தூரத்திற்கு கீழ்நோக்கி வீழ்கின்றது. சுமார் 807 மீட்டர்கள் (2648 அடி) சுயமாகப் பாயும் இந்நீர் வீழ்ச்சி, பள்ளத்தாக்கின் அடிப்பகுதிக்கு வரும் போது, படரும் பனிப்புகை போலத் தோன்றுகிறது. இப்பனிப்புகார் போலத் தோன்றும் நீர், சிறிய வாய்க்கால்களுக்குள் சென்று பின்னர் அது வடக்கு நோக்கிச் செல்லும் சுருன் நதிக்குச் செல்கிறது.'
- கங்கா

பு தமழச கலை
கலைக்கேசரி
பலகம்
53 வது

Page 60
கலைக்க்ேசர் வ 60 புராதனச் சின்னம்
அசோகா
சோகா தூண்கள் என்பது கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் ஆட்சி புரிந்த மெளரிய வம்ச
மன்னனான அசோகனால் எழுப்பப்பட்டு, வாசகங்கள் பொறிக்கப்பட்ட ஸ்தூபிகளின் தொடராகும். இவ்விதம் ஏராளமான தூண்கள் இருந்திருக்கக் கூடுமாயினும், பொறிக்கப்பட்ட வாசகங்களுடன் நிலைத்து நிற்பவை பத்தொன்பது தூண்கள் மட்டுமாகும். பல துண்டு துண்டாக உடைந்து போய் விட்ட நிலையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இத்தூண்கள் சரியாக 40 அடியில் இருந்து 50 அடி வரை உயரம் கொண்டனவாகவும், ஒவ்வொன்றும் சராசரியாக 50 தொன் நிறையுள்ளதாகவும் காணப்படுகின்றன.
செம்.
- 1
| 1*

தூண்கள்
அசோக மன்னனின் பிரகடன வாசகங்களைக் கொண்ட தூண்களில், டெல்லியில் உள்ள தூண்களும், அலஹபாத்தில் உள்ள தூண்களும் அடங்கும். (டெல்கியில் இருந்த தூண்கள், ஹரியானாவில் உள்ள மீறட் மற்றும் டொப்ரா என்னும் இடங்களில் இருந்தவையாகும். இவை 1356ஆம் ஆண்டு பைருஸ் ஷா துக்ளக் என்பவரின் ஆட்சிக் காலத்தில் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டவை. அலஹ பாத்தில் உள்ள தூண்கள் கெளஷாம்பி என்னும் இடத்தில் இருந்தவை.) அத்துடன் லோரியா - அரேராஜ், லோரியா - நந்தன்கார்க், ராம் பூர்வா (உச்சியில் சிங்க உருவம் உள்ளது) சன்கிஸ்ஸா, சாஞ்சி, சாரநாத் ஆகிய இடங்களில் உள்ள தூண்களும் டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டன.
- E.
இதிSெ 192 !திரு,
--> IS Ill , 3)

Page 61
2 TெYT
துாண்க
வா
2 TெIெI
LD600T(h
ெைவ
மது60)
சுOTO
லும்பினியிலும், நிகலிசாகரிலும், கல்வெட்டு வாசகங்கள் கொண்ட தூண்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
வைஷாலியில் (தனி சிங்க உருவ உச்சி கொண்டது) உள்ள தூண்களிலும் ராம்பூர்வாவில் உள்ள தூண்களிலும் (மாடு உருவ உச்சி கொண்டது) மற்றும் கண்டு பிடிக்கப்பட்ட ஏனைய தூண்களிலும் எவ்வித எழுத்துப் பொறிப்புகளும் இல்லை. இரண்டு விதமான மண் கல்லினால் இத்தூண்கள் உருவாக்கப்பட்டிருந்தன. இத் தூண்களின் உச்சியில் செதுக்கப்பட்ட மிருக உருவங்களை அவதானிக்கும்போது அவை ஒரே பிராந்தியத்தைச் சேர்ந்த கைவினையரால் செய்யப்பட்டவை எனக் கருத இடமுண்டு. இவை மதுரை மற்றும் சுனார் ஆகிய இடங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, இத் தூண்கள் காணப்பட்ட இடங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கு கைவினைக் கலைஞர்களால் வெட்டி, செதுக்கப்பட் டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சாரநாத்தில் (உத்தரப்பிரதேசம்) சிங்க உருவ உச்சியுடன் கூடிய தூண், கி.மு. 250 ஆம் ஆண்டில் ஆட்சி புரிந்த அசோக மன்னனால் போற்றப்பட்டதாகும். இது 'அசோகா தூண்' என்றும் கூறப்பட்டது. இதன் உச்சியில் நான்கு சிங்க உருவங்கள் ஒன்றன்பின் ஒன்றாகக் காணப்படுகின்றன. தற் போது இந்த ஸ்தம்பங்கள் அதே இடத்தில் இருக்க, சிங்க உருவ உச்சி பகுதி சாரநாத் அருங்காட்சியகத்தில் உள்ளது.
சாரநாத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற அசோக சிங்க உருவ உச்சி, இந்திய தேசிய சின்னமாக ஏற்கப்பட்டிருக்க, இத்தூணின் அடியில் காணப்படும் சக்கரம், (அசோக சக்கரம்) இந்திய தேசியக் கொடியின் மத் தியில் சேர்க்கப்பட்டுள்ளது.
இத்தூண்களில் உள்ள கல்வெட்டு எழுத்துகளை முதன் முதலில் ஆய்வு செய்தவர் அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம் என்பவராகும். இந்த எழுத்துகள் கிழக்கு, மத்தி மற்றும்
Iங்கள்
கொழும்பு தமிழ்ச்சங்கள்
நூலகம்

" கலைக்கேசரி
கண
நக.
மேற்கு பிராகிருதிகளில் எழுதப்பட்டன எனக் குறிப்பிட்டுள்ளார். அதாவது இவை 'பஞ்சாபி அல்லது வட மேற்கு மொழிவேறுபாடு, உஜ்ஜெயினி அல்லது மத்திய மொழி வேறுபாடு மற்றும் மகாதி அல்லது கிழக்கு மொழி வேறுபாடு' என்பதாகும்.
முதலாவது அசோகா தூண் 16 ஆம் நூற்றாண்டில் தோமஸ் கோர்யட் என்பவரால் பழைய டெல்லியின் அழிவுகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் அத்தூண்கள் பிரகாசித்த விதத்தைப் பார்த்து, அத்தூண் வெண்கலத்தால் செய்யப்பட்டது என எண்ணினார். ஆனால் அதை உன்னிப்பாக ஆராய்ந்தபோது, அது நன்கு மினுக்கிய மண் கல்லால் செய்யப்பட்டது என்பதைக் கண்டு பிடித்தார். அதில் உள்ள செங்குத்தான எழுத்துகள், கிரேக்க எழுத்து போன்றதான ஓர் எழுத்தில் எழுதப் பட்டிருந்ததாகவும் அவதானித்தார்.
கி.மு. 269 ஆம் ஆண்டில் அசோகன் ஆட்சி பீடமேறினார். அவருடைய பாட்டனார் சந்திரகுப்த மெளரியின் ஆட்சியின் வாரிசாக இவர் அரச கட்டிலேறினார். ஆட்சியின் ஆரம்பகால கட்டத்தில், அசோகன் ஒரு சர்வாதிகாரியாகவே விளங்கினார். எட்டு வருட ஆட்சியின் பின் அவர் தனது கொடுங்கோல் ஆட்சி குறித்து வருந்தினார். ஒரு முறை போர் காலத்தில் போரின் பின் பேசும்போது, நூற்று ஐம்பதாயிரம் மக்கள் வேறிடத்துக்கு அகற்றப்பட்டார்கள்.. பல்லாயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டார்கள். அதே அளவு மக்கள்
அழிந்து போனார்கள்... என்றவாறு கூறினார்.
இந்நிகழ்வின் பின் அசோகன், தனது செயல்களுக்கு மிகவும் மனம் வருந்தியவராக, பௌத்த மதத்தைத் தழுவிக் கொண்டார். அப்போது பௌத்த மதம் அரச மதமாக இருக்கவில்லை. ஆனால் அசோகனின் ஆதரவினால் அம்மதம் விரைவாகப் பரவியது. தூண்களில் பொறிக்கப்பட்ட வாசகங்கள், பௌத்த மதக் கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்ட போதனைகளை வைத்து எழுதப்பட்டன. புத்தருடைய வாழ்வில் இடம்பெற்ற சம்பவங்கள் மற்றும் சின்னங்களை நினைவு கூரும் வகையில் அசோகன் 84,000 தூபிகளைக் கட்டினார் எனக் கூறப்படுகிறது. "
லக்ஷ்மி

Page 62
இ
* இ
உ உ உ உ -
6 G .
வா
'தெவனகம் குன்றினை மன்றி த சிறப்பான !
கொழுப் தூரத்திலும் தூரத்திலும் 1089 அடி ஏக்கரில் அ அடிவாரத்தி குடைந்து ! ஏறுவதற்கா போதும் 8 வினோதமா
'குன்றில் ஏறுவதற்கான சிறுபடிகள்

கண்டி இராச்சியத்தின்
காவலரண் தெவனகல குன்று
ங்கையின் வரலாற்றுக் காலம் முழுவதும் முக்கியத்துவம் பற்றதும், ஆனால் அதிகமாக அறியப்படாததுமான ஒரு பௌத்த ணக்கத்தலமாக சப்பிரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த D)' என்ற புராதன விகாரை அமைந்துள்ள தெவனகல் க் குறிப்பிடலாம். இது வெறுமனே ஒரு வணக்கத்தலமாக மட்டு மயாத்திரை செய்வதற்கும் சுற்றுலா மேற்கொள்வதற்குமான
இடமாகவும் காணப்படுகின்றது.
அமைவிடம் bபு - கண்டி நெடுஞ்சாலையில் கேகாலையில் இருந்து 15 கி.மீ மாவனல்லையில் இருந்து ஹெம்மாத்தகமை வீதியில் 8 கி.மீ தெவனகல குன்று அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து உயரத்தில் அமைந்துள்ள இக் கற்பாறைக் குன்று, சுமார் 72 அமைந்துள்ளதுடன் இதன் உயரம் 600 அடிகளாகும். குன்றின் கிலிருந்து விகாரையை நோக்கி ஏறுவதற்கு கற்பாறையைக் சிறு படிகள் அமைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் பிடித்து என இரும்புக் கம்பியிலான பிடிமானங்கள் இல்லாதிருந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இதில் ஏறும் அனுபவம் மிக Tனதாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Page 63
வரலாற்று முக்கியத்துவம் எவரேனும் ஒருவர் இலங்கையின் வரலாற்றை மேலோட்டமாக அவதானித்தால் கூட, இலங்கையின் அரசியல் வரலாறு கடந்த 2600 வருடங்களாக பெளத்த சமய வரலாற்றுடன் சமாந்தரமாகப் பயணிப்பதை அவதானிக்கலாம். இலங்கையில் ஒவ்வொரு வரலாற்றுக் காலத்திலும் அரசாட்சியைக் கைப்பற்றி முடிசூடிக் கொண்ட ஒவ்வொரு மன்னனும் பௌத்த சமயத்தின் காவலனாகவும் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டதன் மூலமே அவர்கள் தமது ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளனர். இந்தப் பாரம்பரியம் இன்றைய நவீன காலம் வரை தொடர்கின்றது..
பெளத்த மன்னர்கள் தாம் பௌத்தத்தின் காவலர்கள் என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் ஊன்றி நிலை நிறுத்துவதற்காகத்தான் அவர்கள் கெளதம புத்தர் பரி நிர்வாணம் அடைந்ததும் அவரது புனித தேசத்தில் இருந்து பெறப்பட்ட புனித தந்த தாதுக்கள், கபில வஸ்த்து போன்றவற்றைப் பெற்று தத்தமது பாதுகாப்பில் வைத்து பாதுகாத்து, அதன் இருப்பிடத்தை வரலாற்றுக் காலம் முழுவதும் மிக இரகசியமாக பேணி வந்துள்ளனர். தெவனகல என்ற மேற்படி ரஜமகா விகாரையைப் பொறுத்த வரையில் ஒரு குறித்த வரலாற்றுக் காலப் பகுதியில் மேற்படி புனித தந்த தாது இவ்விகாரையில் இரகசியமாக வைக்கப்பட்டு பேணப்பட்டு வந்துள்ளமையே இதன் வரலாற்று முக்கியத்துவமாகும்.
இலங்கையில் புனித தந்த தாதுவின் வரலாறு இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட புனித தந்த தாதுவானது, கெளதம புத்தர் பரிநிர்வாணநிலை எய்தியதன் பின்னர் புனித தந்தங்கள் கலிங்க நாட்டு மன்னன் அசோகனால் மிகப் பாதுகாப்பாகப் பேணப்பட்டு வந்ததென்றும் பின்னர் மன்னன் குக் சிவனின் கட்டளையின்

, கலைக்கேசரி
63
உ - ம்
பேரில் இளவரசி ஏம்மாளினி மற்றும் அவரது கணவன் தந்த என்பவனாலும் அதில் ஒன்று இலங்கைக்கு மிக இரகசியமாகக் கடத்தி வரப்பட்டதென்றும் கூறப்படுகிறது. இந்த புனித தந்தம் அப்போது இலங்கையின் பெயராக பிரசித்தம் பெற்றிருந்த 'லங்கா பட்டுன' வுக்குக் கொண்டு வரப்பட்டு அப்போதைய அரசனான கீர்த்திஸ்ரீ மேக வண்ணனிடம் (கி.பி. 301 - 328) ஒப்படைக்கப்பட்டது. இந்த தந்த தாதுவை மேக வண்ண மன்னன் அநுராதபுரத்தின் மேக்கிரி என்ற விகாரையில் (தற்போது இசுருமுனி) பிரதிஷ்டை செய்தான்.
இதன் பின்னரே இந்தத் தந்த தாதுவின் காவலன் நாட்டின் மன்னன் என்ற மரபு உருவானது. இதன் பின்னர் மன்னர்கள் இதனைப் பாதுகாப்பதற்கும் இலகுவில் வழிபடுவதற்கும் என தத்தம் அரண்மனைகளுக்கருகில் புனித தந்த தாதுவுக்கென விசேட விகாரைகளை அமைத்து
அதில் இதனை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர்.
அநுராதபுர வரலாற்றுக் காலத்தைத் தொடர்ந்து பொலன்னறுவை, தம்பதெனியா, யாப்பஹுவ. குருநாகல் போன்ற நகரங்களை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த வரலாற்றுக் காலங்களிலும் இம்மரபு பேணப்பட்டு வரப்பட்டுள்ளது. கம்பளையைத் தலைநகரமாகக் கொண்டு

Page 64
கலைகள்
64
ஆட்சி செ விகாரையில் காலத்தில் ( காவியங்கள் விடு தூது பே மன்னன் தர். புரவில் தெ மறைத்து ( தெவனகல, என்றும் தெர் ஹிரிப்பிட்டி இருந்த ஒப்படைத்து இரண்டு மாப்
எனினும், படையெடுப் இரகசியமாக தும்பரையில் இரண்டு மா இராஜசிங்க அமைக்கப்பட புனித தந்தத இருக்கும் . புதுப்பிக்கப்ப எண்கோண . சுற்றி மதில் விக்கிரமராஜ
தெ
புனித தந்த தாது பாதுகாக்கப்பட்ட கல் உரல்
இவ்விடத் ஆரம்பமாகில் முதல் விகால் மன்னன் கா இவன் பல வி அதில் தெவ பல்வேறு ம கிடைக்கப்டெ
வரலாற்று மன்னன் பெ அரசன் (956 விஜயபாகு 8 அலகக்கோன மன்னன் மற், கண்டியில் கல் காரையின் வ
போது காண்ட விமலதர்ம சூ படையெடுப் வைத்திருக்க சூரியனும்,

யப்பட்ட காலத்தில் புனித தந்த தாது நியங்கம்பிட்டிய வைத்துப் பாதுகாக்கப்பட்டுள்ளது. கோட்டை அரசு உருவான காட்டை ரஜமகா விகாரையில் வைக்கப்பட்டிருந்ததாக தூதுக் ன அன்னம் விடு தூது, கிளி விடு தூது, நாகணவாய் பறவை ான்ற காவியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சீத்தாவாக்கை கபால என்பவனின் காலத்தில் மேற்படி புனித தந்தம் இரட்ண ல்கமுவ விகாரையில் கல்உரல் ஒன்றினுள் இரகசியமாக வெக்கப்பட்டிருந்தது. இக்காலப் பகுதியிலேயே மேற்படி த்னாலங்கார தேரர் அவர்களின் பாதுகாப்பில் இருந்துள்ளார் விக்கப்பட்டுள்ளது. பின்னர் தெவனகல ரத்னாலங்கார தேரரும் ப தியவதனரால் என்பவருமே அப்போதைய கண்டி மன்னனாக முதலாம் விமலதர்ம சூரியனிடம் தந்ததாதுவை ள்ளனர். இவனே முதன் முதல் தந்ததாதுவுக்கென கண்டியில் உக் கட்டிடமொன்றைக் கட்டுவித்தான்.
- 1603 ஆம் ஆண்டு போர்த்துக்கேயரின் கண்டிப் . பைத் தொடர்ந்து தந்ததாது வைக்கப்பட்டிருந்த பேழை க் கொண்டு செல்லப்பட்டு மெதமகா நுவரவில் உள்ள ஒளித்து வைக்கப்பட்டதுடன் கண்டியில் அமைக்கப்பட்டிருந்த டிக் கட்டிடமும் அழிக்கப்பட்டது. பின்னர் மீண்டும் 11 ஆம்
மன்னன் காலத்தில் முன்பு இரண்டு மாடிக்கட்டிடம் ட்டிருந்த அதே இடத்தில் தலதா மாளிகை அமைக்கப்பட்டு ரது பிரதிஷ்டை செய்யப்பட்டது. தற்போதைய வடிவத்தில் தலதா மாளிகை வீரநரேந்திரசிங்க மன்னன் காலத்தில் "ட்டது. மேலும் இதனுடன் கூடிய பத்திருப்பு என்ற கட்டிடத்தையும் முகப்பு மண்டபத்தையும் கண்டி வாவியைச் களையும் கட்டுவித்தவன் கண்டியின் கடைசி அரசன் ஸ்ரீ சிங்க மன்னனாவான்.
வனகல விகாரையின் தோற்றமும் வளர்ச்சியும் தின் வணக்கத்தல வரலாறு இயக்கர், நாகர் காலத்தில் இருந்து எறதென ஐதீகக் கதைகள் காணப்படுகின்றபோதும் முதன் ரையொன்றைக் கட்டுவித்தவன் வலகம்பா அரசனாவான். இம் லத்தில் பௌத்த சமயத்தை நாடெங்கும் பரப்புவதற்கென விகாரைகளைக் கட்ட பல இடங்களையும் தெரிவு செய்தபோது, னகல் குன்றும் இடம்பெற்றது. அதன் பின்னர் படிப்படியாக ன்னர்கள் காலத்தில் இவ்விகாரைக்கு உதவி, உபகாரங்கள் பற்றுள்ளன.
க் காலத்தில் வாஞ்சிபுர பிறந்த மன்னன், கிரிவங்ச சேகர ாலன்னறுவைக் காலத்தைக் சேர்ந்த நிஸ்ஸங்கமல்லன் சேன - 972) பராக்கிரமபாகு 1, (1153 - 1186) மற்றும் முதலாம் நம்பளை காலத்தைச் சேர்ந்த 3ஆம் விக்கிரமபாகு மற்றும் ார்கள், சீதாவாக்க அரச காலத்தில் அருகல் பிறவாதி என்ற றும் முதலாம் விமலதர்ம சூரியன் (1747 - 1748) இறுதியாக டைசி அரசன் கீர்த்தி ஸ்ரீவிக்கிரம ராஜசிங்கன் ஆகியோர் இவ்வி ளர்ச்சிக்கு அவ்வப்போது பங்களிப்புச் செய்து வந்துள்ளனர். தற் ப்படுகின்ற நீர்த்தடாகம், பிரதான மண்டபம் என்பன முதலாம் ரியன் காலத்தில் கட்டிக்கொடுக்கப்பட்டவையாகும். அந்நியப் புகள் காரணமாக புனித தந்ததாதுவை பாதுகாப்பாக இவ்விகாரை பயன்பட்டதற்கு பிரதியுபகாரமாக விமலதர்ம கீர்த்திஸ்ரீ விக்ரம் ராஜசிங்கனும் பல உபகாரங்களையும்

Page 65
அன்பளிப்புகளையும் வழங்கியுள்ளனர். எனினும் காலத்துக்கு காலம் புதையல் திருடர்கள் இவ்விகாரையின் பல்வேறு பகுதிகளை தோண்டியும், விக்கிரகங்களை உடைத்தும் தங்கம், மாணிக்கம், வைரம் முதலானவற்றை தோண்டி பல்வேறு சேதங்களை விளைவித்து உள்ளமையையும் காணக் கூடியதாக உள்ளது.
விகாரையின் அமைப்பும் கலை,
சித்திர வேலைப்பாடுகளும் பிரதான விகாரையைத்தவிர (தாகப்) ஏனைய கட்டிடங்கள் முதலாம் விமலதர்ம சூரியன் மற்றும் கம்பளை, கண்டிக் காலத்தைச் சேர்ந்தவையே. விகாரையைத் தவிர தர்மசாலை, போதிபீடம் அமைக்கப் பட்ட ஆலயம் நீர்த்தடாகம் என்பவை காணப்படுகின்றன. புத்த பீடம் அமைந்துள்ள ஆலயம் விசேட கலை நுணுக்கங்கள் மரவேலைப்பாடுகள், சித்திரக் கலை என்பவற்றைக் கொண்டு காணப்படுகின்றன. ஆலயத்தின் உள், வெளிச் சுவர்களில் இயக்கர், நாகர் காலம் முதல், அநுராதபுரம், பொலன்னறுவை கண்டி மற்றும் பல்வேறு வரலாற்றுக் கால பெளத்த ஐதீகக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட சித்திரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
வரலாற்று ஆவணம் தெவனகல கற்குன்றின் மேற்குப் பாறைச் சரிவில் முதலாம் பராக்கிரமபாகு மன்னன் (கி.பி. 1153 - 1186) காலத்து வரலாற்று ஆவணமான கல்வெட்டு ஒன்று காணப்படுவது இக்குன்றின் சிறப்பம்சமாகும். இதன் பிரகாரம் இக்காலப்பகுதியில் 'பர்மா' என்ற நாட்டின் மீது முதலாம் பராக்கிரமபாகு போர் தொடுத்து, கீர்த்தி நாகாகிரி என்ற சேனாதிபதியின் தலைமையில் படையொன்றை அனுப்பி வைத்தான். அப்படை வெற்றிகரமாக பர்மாவை வெற்றி கொண்டு திரும்பியது. அதற்கு உபகாரமாக மேற்படி சேனாதிபதிக்கு நிலங்களை அன்பளிப்பு செய்தான் என்று மேற்படி தெவனகல கல்வெட்டு கூறுகின்றது.

தீர்த்தத் தடாகம்
இது தொடர்பான வரலாறு பின்வருமாறு:-
பர்மா படையெடுப்பு பர்மாவின் ஆட்சியாளனாக அனுரத்தன் (1044- 1077) விளங்கியபோது இலங்கை வேந்தன் விஜயபாகுவுக்கும் பர்மிய அரசனுக்குமிடையே தூதுக் குழுக்களும் வெகுமதிகளும் பரிமாறப்பட்டு நல்லுறவுகள் நிலவின. சூளவம்ச விபரப்படி, இலங்கையிலிருந்து வெகுமதிகளுடன் செல்லும் கப்பல் ஒவ்வொன்றுக்கும் ஒரு யானையைத் தனது பரிசாக பர்மிய மன்னன் வழங்கிவருவது வழக்கம். ஆனால், 1112 ஆம் ஆண்டில் அலோங்சிது என்ற பர்மிய மன்னன் இவ்வழக்கத்தை நிறுத்தி, மேலும் பல வகைகளில் இலங்கைக்குத் தீங்குகளை இழைத்தான். பிறநாடுகளுக்கு யானைகளை விற்பதை அவன் தடுத்தான். அவற்றின் விலையை மும்மடங்காகக் கூட்டினான். பர்மிய மன்னனுக்கு பொன்தகட்டில் (இலை வடிவில்) பொறிக்கப்பட்ட ஒரு நிருபத்தைக் கொண்டு சென்ற சிங்கள் தூதனை போலிக் காரணங்காட்டி அவமதித்தான். அவர்களிடம் உள்ள யானைகளையும் பணத்தையும் கப்பல்களையும் அபகரித்து அங்குள்ள மலை நாட்டிலுள்ள ஓர் அரணில் அவர்களைச் சிறை வைத்து துன்புறுத்தினான். பின்னர் சிங்களத் தூதுவரை தனது அவைக்கு அழைத்து இலங்கையிலிருந்து இனிமேல் வணிகக் கப்பல்கள் வர அனுமதிக்கப்பட மாட்டா எனவும் தனது தடையை மீறிவரும் கப்பல்களில் வருபவர்களைக் கொல்ல நேர்ந்தால் அதற்குத்தான் பொறுப்பில்லையென்பதற்கு அவர்களை உறுதி தரும்படி பலவந்தப்படுத்தியும் ஒரு பிணைக்குக் கைச்சாத்திட வைத்தான். இதன்பின்னர் பழுதடைந்த கலமொன்றில் அவர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்தான். இவ்வாறு இலங்கை அரசனுக்குப் பெருங்கோபத்தை உண்டாக்கத்தக்க செயல்களைப் பர்மா அரசன் புரிந்ததாக சூளவம்சம் கூறுகின்றது. இவற்றைத் தனது ஆட்கள் சொல்லக்கேட்ட பராக்கிரமபாகு, பர்மா மீது படையெடுப்பதற்கான ஆயத்தங்களைச் செய்தான். தமிழ்
க1

Page 66
கேம்
: எடர்.
ம.
66
முதலாம் பராக்கிரமபாகுவின் பாதம்
எ. கா. உ.
அதிகா வடகிழ துறைய நகரகிரி பர்மாவ
- இல
1 கப் இட் ""
கொன் திரும்ப தூதுவர் இலங்க சலுகை தெரிவி
இல விபரங் குசுமிய உடன் உறுதிப் கொல் பர்மிய படை இல்) இறந்த
- ம:- 5.
-- 2
15-11 Hi படம் "19 ப
பாப் 1
முதலாம் பராக்கிரமபாகுவின் கல்வெட்டு
(தெவனகல கல்வெட்டு)
அந்,
வரை ஆகிய ஆண்டு தலைந படை செங்க பின்வா அந்நிய இந்த ஒல்லா இராச்சி
எனி பாரிய எனவே அடை உபாய்
ஊடாக வட்டம் பலமா
அந்நிய போதெ
அவ் விளங் ஊடாக எல்லா தெவன
புதையல் திருடர்களால் தோண்டப்பட்ட குழி
19:Fபம்

-ரி ஆதித்தன் தலைமையில் இப்படை இலங்கையின் ழக்குக் கரையிலுள்ள பல்லவவங்க அல்லது பல்வக்கி என்ற பிலிருந்து புறப்பட்டன. இன்னொரு படைப்பிரிவு கலங்களல் கீர்த்தி என்பவனது தலைமையில் ஐந்து கப்பல்கள் தெற்குப் பிலுள்ள குசுமிய (பசேன்) என்ற துறையை அடைந்தன. மங்கைப் படைவீரர்கள் கடுஞ்சமரின்பின் பர்மிய மன்னனைக் று, இவ்வெற்றிகளின் பின் இலங்கைப் படைகள் இலங்கை பின. இவர்களுடன் பர்மாவிலிருந்து இலங்கை வந்த ர்கள் பராக்கிரமபாகுடன் உடன்படிக்கை செய்து மீண்டனர். கை வர்த்தகர்களும் தூதுவர்களும் முன்னர் அனுபவித்த ககளையும் உரிமைகளையும் மீண்டும் பெறுவதற்கு இணக்கம் மக்கப்பட்டது. மங்கையின் தெவனகலையில் உள்ள கல்வெட்டு சூளவம்ச "களைப் பெரிதும் உறுதிப்படுத்துவதாக உள்ளது. பத்துறை தாக்கப்பட்டதையும் பர்மிய தூதுவர்கள் படிக்கை செய்ய இலங்கை வந்ததையும் இக்கல்வெட்டு ப்படுத்துகின்றது. இப்படையெடுப்பின்போது பர்மிய அரசன் லப்பட்டான் என்ற சூளவம்சக் கூற்றை அண்மைக் காலப்
ஆராய்ச்சியாளர் ஏற்றுள்ளதாகத் தெரிகின்றது. இலங்கைப் யெடுப்பு பராக்கிரமபாகுவின் 12 ஆவது ஆட்சியாண்டில் (1165 | மேற்கொள்ளப்பட்டமையால் 1165 இல் அலோங்சிது என் எனக் கொள்வது பொருத்தமாகக் காணப்படுகின்றது. நியர் ஆட்சி செய்த காலம் இலங்கையில் 1505 முதல் 1948 அந்நியர்களான போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் மூன்று மேற்கு நாட்டு அந்நிய பேரரசுகளின் ஆட்சி சுமார் 400 கெள் நிலவியது. கம்பளைக்குப் பின் கோட்டையை கராக்கிக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த அந்நிய யெடுப்பு அச்சுறுத்தல் காரணமாக மீண்டும் சீதாவாக்கை,
கல, கண்டி என தம் தலைநகர்களை அமைத்துப் எங்கினர். 1815 ஆம் ஆண்டு வரை கண்டி மன்னர்கள் சர்களின் பிடியில் சிக்கி விடாமல் நின்று பிடித்தனர். எனினும், நான்கு நூற்றாண்டு காலத்தில் போர்த்துக்கேயரும் ந்தரும் ஆங்கிலேயரும் எண்ணற்ற தடவைகள் கண்டி Fயத்தின் மீது படையெடுத்தனர்.
னும், உரிய போக்குவரத்துப் பாதைகள் இல்லாத நிலையில் படை நகர்வுகளை அவர்களால் செய்ய முடியாதிருந்தது. ப பாரிய மலை அரண்கள் சூழ்ந்த கண்டி இராச்சியத்தை வெது இலகுவான காரியமாக இருக்கவில்லை. இதனை ஓர் மாகப் பயன்படுத்தி கண்டி மன்னர்கள் மலையரண்களுக்கு 5 கண்டிக்குள் பிரவேசிக்கக் கூடிய பலன, கண்ணொறுவ , ப்புளுவ போன்ற இடங்களில் தமது பாதுகாப்பு படைகளை க நிறுத்தி வைத்தனர். ஆதலால் ஒவ்வொரு முறையும் "ப் படைகள் இக்காவல் அரண்களைக் கடக்க முற்பட்ட கல்லாம் ஆயிரக்கணக்கான தலைகள் சீவப்பட்டன. பவிதம் கண்டி இராச்சியத்தை பாதுகாக்கும் ஒரு காவலரணாக கியதுதான் பலன - தெவனகல கணவாய். இக்கணவாய்க்கு 5 பல தடவை அந்நியப் படைகள் ஊடுருவ முற்பட்டபோது
ம் அவர்கள் பூண்டுடன் அழிக்கப்பட்டனர் என்ற விதத்திலும் எகல என்ற இடம் முக்கியத்துவம் பெறுகின்றது.
- கோபன்

Page 67
உலகம் முழுவதுமு
பிரத்தியேக த
THIRUM
இருமனம் சேர்ந்
இன்றே உங்கள் அங்கா
வாழ்க்கை துணைன.
www.thir
பச சங்கரி
மமபதம்

ள்ள தமிழர்களுக்கான ருெமணசேவை
TM
ANAM.LK"
தொல் திருமணம்
த்துவத்தைப் பதிவு செய்து மய தெரிவுசெய்யுங்கள்...
umanam.lk

Page 68
NINEWELLS HOSPITAL
ART & EX
Painting, Drawing,
for 2013 calendar Theme: health care
art work must reflect health related to children or maternity
Drop Off: Art work could be posted or di
Ninewells Care Mother & Baby 55/1, Kirimandala Mawatha, N
Ar
LORS =
Date Venue
MwAALAM
Printed and published by Express Newspapers (Ceyl

TƏDLO CONTEST HIBITION
att
Print making Photography and More!
Age Group : Below 12 Year Due Date : 10th of November 2012 Size : 12 X 14
Please indicate the name & contact details of the contestant on the back of the painting.
ropped off at
Hospital (pvt)Ltd arahenpita, Colombo 5.
t Exhibition
: 16th - 18th of November
Ninewells Hospitals, 55/1, Kirimandala Mawatha, Narahenpita, Colombo 05.
on)(Pvt)Ltd, at No.185, Grandpass road, Colombo -14, Sri Lanka.