கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைக்கேசரி 2013.04

Page 1
கலைக!
CULTURE
* HERTAGE
TRADITION EVENTS FASHION voLUME : 04 ISSUE :04 Registered in the Department of Posts வ
பொன்னம்பலவாணேஸ்வரத்து சாசனங்கள்
Elus:7ாசILTVR
INDIA..............INR 100.00 SRI LANKA.SLR 125.00 SINGAPORE.sG$ 14.00
CANADA.CAL AUSTRALIA...AU, SWISS.............CF

INTERVIEWS
ENTERTAINMENT Ei Lanka unaD INews 01 2013
சிங்கப்பூர் 'சீமை'யில் தமிழர்கள்
*8*t 11:3!
"013
$ 10.00 $ 10.00 F 10.00
USA...........US$ 10.00 UK..........GB£ 6.00 EUROPE.EU€ 7.00

Page 2
THIRUMANAM.LK
இருமனம் சேர்ந்தால் திருமணம்
www.thirumanam.lk

Register Free & Start Matching..!

Page 3
நெ ஞ் ைெச ய ள் ளு ம் அ ழ கு பி க் க
வை ர ங் க (6) ம் (மு த் து க் க ளு ம்
Lalitha
இ க 183 |
442, ஆர்.ஏ.டீ. மெல் மாவத்தை, கொழும்பு 3, தொ: 2877431
#44. tali

GH Aesources
-2 | 105, GFL iqui Q56, Glan 11. Glgt: 2323691, 2431993 chajewellers.lk

Page 4
1

அட்டைப்படம்:
சித்திரை புத்தாண்டில் விசேட புண்ணிய காலத்தில் பெரியோரிடம் ஆசி பெறுதல் தமிழரின் பன்பாடாகும்.
உள்ளடக்கம்:
12
அஸாமின் மான்ஸ் தேசிய பூங்கா
38
ஆடற்கலை மறுமலர்ச்சி கலைச்செல்வர் சுப்பையா
42
ஆண் - பெண் இருபாலாராலும்
ஆடப்படும் தப்பாட்டம்
நல்லெண்ணெயின் உற்பத்தியும் அதன் மருத்துவ பயன்களும்
64
அருங் கலைஞன் ஹொன்னப்ப பாகவதர்

Page 5
இலட்
GET கலைக்கேசரி DELIVEREI
Please complete the form given below, along with your Cheque/Money Order w (Ceylon) (Pvt) Limited' and send it to our Head Office at No185 Grandpass Ro Tel: +94-11-7322700 / 7738046 Fax: +94-11-7767700 For more details, please contact : Overseas & Local Subscriptions
M.
Online Payment : www.kalaikesari.com/Subscription
ORDER FORM :
| Title
First Name
KALAIKEARL
கலைக்கேசரி
Last Name
414 *-4: +-
இனப்சருக்EE:
** ** * *.
Manager Subscriptions Kalaikesari No. 185, Grandpass Road, Colombo - 14, Sri Lanka.
| Institution இApartment/Other Nos ....
Sireet / Road இTown/City/State
* ** ***
Tel: +94-11-7322783 / +94-11-7767700 Tax :+94-11-776770)
E-mail : subscription@kalaikesari.lk
I Country I Amount Enclosed
Mode of payment
Cheque should be drawin in favour of Express Newspapers (Ceylon) (Pvt) Limited
I Online Payment
: WM
K. Kulendran ICT
S. T. Thayalan ADVERTISING A. Praveen marketing@virakesari.lk CIRCULATION K. Dilip Kumar SUBSCRIPTIONS J. K. Nair subscription@kalaikesari.lk PRODUCTION L. A. D. Joseph
இலக்கியம் வெறும் இலக்கிய அறிவுத் கொள்கைகளை எ மாணவர்கள் இவ்வ ஆசிரியர்களும், பெ. முறைகளைக் காட்டு மீண்டும் சந்திப்.ே நன்றி வணக்கம்
அன்புட
அட்te:
ISSN 2012 - 6824

ஆசிரியர் பக்கம்
சிய வாழ்வுக்கு துணைபுரியும் இலக்கிய அறிவு
O TO YOUR HOME
written in favour of 'Express Newspapers ad, Colombo 14, Sri Lanka.
சளபாக்கியத்தைத்
Mohan, E-mail : Subscription@kalaikesari.lk
Tel :+94 11 7322783
7. L Mrs./ Miss ) Dr. 0 Prof. 0
களது அறிவுக்கும் ள் வழமை போல் றை வாசிப்பதுடன் நங்கள். த்திற் கொள்ளுதல் னவர்கள் மத்தியில் சப்படுகிறது. தமிழ் ற்றுக்கு ஆதாரமாக பொதுவாக மந்த
++++: 1 ?14*121
*++44
4 4 4 4 4 4 4 24 8* 1. I |
++ 44 | ki/16 +: :!++ர்**
* * * * * ** ** 4
*:* -* * 16+1 (411)
+8:F- +++ : 4
..(12/4 Issues)
ரின் ஆக்கிரமிப்பு ரத்தைக் கவர்ந்து நின்றன. எனினும், நிகளும் அவர்களது
] Cheque / J Money Order
w.kalaikesari.com / Subscription
சிறப்பைத் தராது. பொழுதுபோக்கென்று கருதிவிடக்கூடாது. இலக்கியக் கல்வியும், : தேடலும், மனித விழுமியங்களைப் போற்றும் உயர் வரித்து இலட்சியத்தோடு வாழ துணைபுரிகின்றன. எனவே ரிய பண்புகளைப் பெற்று எதிர்கால சமுதாயத்தில் சிறப்படைய ற்றோர்களும், கற்றோரும், சமூக நலன் விரும்பிகளும் தக்க வழி நிதல் வேண்டும்.
பாமா!
88ry
April, 2013

Page 6
இலட்
PUBLISHER Express Newspapers (Cey) (Pvt) Ltd. 185, Grandpass Road, Colombo 14, Sri Lanka. T.P. +94 11 7209830 www.kalaikesari.com EDITOR Annalaksmy Rajadurai luxmi.rajadurai@yahoo.com SUB EDITOR Bastiampillai Johnsan johnsan50@gmail.com MEDIA CO-ORDINATOR Pragash Umachandraa CONTRIBUTORS Prof. S.Pathmanathan Prof. P.Pusparatnam Prof. Saba Jeyarasa
Mrs. Vasantha Vaithyanathan Mrs. Pathma Somakanthan Ms. Subashini Pathmanathan Dr. Viviyan Sathyaseelan
Mrs. Sharmila Ranjithkumar PHOTOS J. Sujeewakumar J. Mirunalan LAYOUT K. Kulendran
ICT
S, T. Thayalan ADVERTISING A. Praveen marketing@virakesari.lk CIRCULATION K. Dilip Kumar SUBSCRIPTIONS J. K. Nair subscription@kalaikesari.lk PRODUCTION L. A. D. Joseph
கலைக்கேசரி வா மலரவிருக்கும் 6 தருவதாகுக!
இந்தச் சித்திரை ( சிந்தனைக்கும் விரு இடம்பெற்று வாசக உங்களது மேலான .
இவ்விடத்தில் நா வேண்டும். அதாவது தமிழ் இலக்கிய செ இலக்கிய ஆர்வமும், விளங்கும் வாசிப்பு நிலையில் இருப்பதா
செல்வாக்கு ம் இளையோரினதும், விடுகின்றன. இவை மாணவர்களது இல். ஆளுமையை வளர்ச்
மேலும் ஆளுமை இலக்கியம் வெறும் இலக்கிய அறிவுத் கொள்கைகளை வ மாணவர்கள் இவ்வ. ஆசிரியர்களும், பெ. முறைகளைக் காட்டு மீண்டும் சந்திப் ே நன்றி வணக்கம்
அச்சட
சட்4 கி.
ISSN 2012 - 6824

ஆசிரியர் பக்கம்
சிய வாழ்வுக்கு துணைபுரியும் இலக்கிய அறிவு
ரசகர்களுக்கு, வணக்கம். நலந்தானே! விஜய தமிழ்ப் புத்தாண்டு அனைவருக்கும் சௌபாக்கியத்தைத்
மாத (ஏப்ரல்) கலைக்கேசரி இதழிலும், அறிஞர்களது அறிவுக்கும் ந்தாகும் முத்தான பல ஆய்வுக் கட்டுரைகள் வழமை போல் ர்களை மகிழ்விக்கக் காத்திருக்கின்றன. அவற்றை வாசிப்பதுடன்
கருத்துக்களையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள். எம் ஒரு முக்கியமான விடயத்தினையும் கருத்திற் கொள்ளுதல் எமது நாட்டின் எதிர்காலப் பிரஜைகளான மாணவர்கள் மத்தியில் சயற்பாட்டு ஆர்வம் குன்றி வருவதாகப் பேசப்படுகிறது. தமிழ் தமிழ் இலக்கிய செயற்பாட்டு நாட்டமும் அவற்றுக்கு ஆதாரமாக நேசமும் தற்காலத்தில் மாணவர்களிடையே பொதுவாக மந்த =கவே கணிக்கப்படுகின்றது. க்ெக நவீன தொடர்பாடல் சாதனங்களின் ஆக்கிரமிப்பு ஏன் பெரியவர்களினதும் பொன்னான நேரத்தைக் கவர்ந்து ப தவிர்க்க முடியாதவையாகவும் தோன்றுகின்றன. எனினும், க்கிய அறிவுத் தேடலும், இலக்கியச் செயற்பாடுகளும் அவர்களது க்கத் தூண்டுகின்றன என்பதை மறக்கலாகாது.
• குன்றிய அறிவுத் தேர்ச்சி முழுமையான சிறப்பைத் தராது. பொழுதுபோக்கென்று கருதிவிடக்கூடாது. இலக்கியக் கல்வியும்,
தேடலும், மனித விழுமியங்களைப் போற்றும் உயர் பரித்து இலட்சியத்தோடு வாழ துணைபுரிகின்றன. எனவே ரிய பண்புகளைப் பெற்று எதிர்கால சமுதாயத்தில் சிறப்படைய ற்றோர்களும், கற்றோரும், சமூக நலன் விரும்பிகளும் தக்க வழி தெல் வேண்டும். பாமா!
இ-88 ;
April, 2013

Page 7
கலைக்கேசரி த 06 தொல்லியல்
வெளிச்சத்திற்கு வராத வடம தொன்மங்கள் - அண்மைக்காலத்
பேராசிரியர் ப.புஸ்பரட்ன
(சென்ற இதழ் தொடர்ச்சி) உடுத்துறையில் கிடைத்த நாகநாடு பற்றிய அரிய நாணயம் தற்போது ஆசிரியர்களாகக் கடமையாற்றிவரும் திரு.கமலநாதன் மற்றும் திரு. பிரகலாதன் ஆகியோருடன் இணைந்து 1994 இல் உடுத்துறை வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் மேலாய்வின்போது பலவகைத் தொல்லியற் சின்னங்களுடன் பிராமி எழுத்துப் பொறித்த நாணயம் ஒன்றையும் கண்டு பிடிக்க முடிந்தது இந்நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ள பெயர்கள் வடமராட்சி - கிழக்கின் வரலாற்றுத் தொன்மையை மட்டுமல்ல யாழ்ப்பாண வரலாற்றிற்கும் புதிய
வெளிச்சத்தை ஊட்டுவதாக உள்ளது. கி.பி. 1ஆம் நூற்றாண்டைச்
 ேச ர் ந் த

மராட்சி கிழக்கின் வரலாற்றுத் 5 தொல்லியற் கண்டுபிடிப்புக்கள்
எம், தலைவர், வரலாற்றுத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
இந்நாணயத்தின் முன்பக்கத்தில் மூன்று பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றை 'நாகபூமி' என வாசிக்க முடிகிறது. இவ்வாசிப்பை தமிழகச் சாசனவியல் அறிஞரான ஐராவதம் பொருத்தமான வாசிப்பாக எடுத்துக் கொண்டாலும், பேராசிரியர் சுப்பராயலு இதை 'நாகவம்சம்' என வாசிப்பது பொருத்தம் எனக் கூறியுள்ளார். வாசிப்பு முறையில் சிறிய வேறுபாடு காணப்பட்டாலும் இரு வாசிப்புக்களுமே இப்பிராந்தியம் நாக நாட்டுடன் அல்லது நாக வம்சத்துடன் தொடர்புடையதென்பதைக் காட்டுகின்றன. இலங்கைப் பிராமிச் சாசனங்கள் சிலவற்றில் 'புமி' (Bumi) என்ற சொல்லும், 'நஹபுமி' என்ற பெயரும் காணப்படுகின்றன. அவற்றில் நஹபுமி (Nagabumi) என்ற வாசகம் பிராகிருத மொழிக்குரிய வடபிராமியில் எழுதப்பட்டிருக்கும் போது உடுத்துறையில் கிடைத்த நாணயம் தமிழ் மொழிக்கே சிறப்பான தமிழ்ப் பிராமி வரிவடிவத்தில் எழுதப்பட்டுள்ளது. நாணயத்தின் பின்பக்கத்தில் பொலம் என்ற சொல் காணப்படுகிறது. இது பொன், செல்வம், உயர்ந்தவன் என்ற பொருளில் அமைந்துள்ளது. இது ஒரு தமிழ்ச் சொல் என்பதற்கு புறநாநூற்றில் வரும் 'பொலம் செய் நற்காசு' என்ற குறிப்பை உதாரணமாகக் காட்டலாம்..
இவ்விடத்தில் நாணயத்தில் வரும் 'நாகபூமி' என்ற பெயர் சிறப்பாக நோக்கத்தக்கது. 15 ஆம் நூற்றாண்டில் முதன் முதலாக யாழ்ப்பாணம் என்ற பெயர் பயன்படுத்தப்படுவதற்கு முன்னர் இப்பிராந்தியம் பாளியில் நாகதீப(ம்) தமிழில் நாகநாடு என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்துள்ளது. அநுராதபுர அரசை முதன்மைப்படுத்திக் கூறும் முதல் வரலாற்று இலக்கியங்களில் ஒன்றான
வடமராட்சி கிழக்கைப் பொறுத்தவரை அது பூர்வீக மக்கள் வாழ்ந்த இடமாகவும், பண்டுதொட்டு அயல் நாடுகளுடன் வாணிப,
கலாசார உறவுகளை ஏற்படுத்திய பிராந்தியமாகவும், தமிழரின் பாரம்பரிய பண்பாட்டைத் தொய்வின்றிப் பேணிய பிராந்தியமாகவும் இருந்துள்ளதை அங்கு இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொல்லியல் ஆதாரங்கள் உறுதிசெய்கின்றன.

Page 8
மஹாவம்ஸம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் புத்தர் இலங்கை வந்த போது நாகதீபத்தில் இரு நாக மன்னர்களிடையே ஏற்பட்ட சிம்மாசனப் போராட்டத்தை தீர்த்து வைத்ததாகக் கூறுகிறது. இதில் மஹாவம்ஸம் கூறும் புத்தர் வருகை ஒரு ஐதீகமாக இருப்பினும் இந்நூல் எழுதப்பட்ட கி.பி. 5 ஆம் நூற்றாண்டில் அநுராதபுரத்தின் வடக்கில் இருந்த பிராந்தியம் நாகதீபம் என்ற பெயரால் அழைக்கப்பட்டதை இவ்வரலாற்றுச் செய்திகள் உறுதிப்படுத்துவதாக எடுத்துக் கொள்ளலாம். ஆதிகாலத்தில் இந்தியாவை அடுத்து இலங்கையுடன் அதிக அளவில் வணிக உறவை ஏற்படுத்திக் கொண்ட வரலாறு கிரேக்க, உரோம் நாட்டு வணிகர்களுக்கு உண்டு.
இவ்வுறவுகள் பெரும்பாலும் வட இலங்கைத் துறைமுகங்களுடாக நடைபெற்றதை மாதோட்டம், கந்தரோடை, பூநகரி, சாட்டி போன்ற இடங்களில் பெறப்பட்ட கிரேக்க, உரோம் நாடுகளுக்குரிய பலவகை மட்பாண்டங்கள், மதுச்சாடிகள், நாணயங்கள் என்பன உறுதி செய்கின்றன. இவ்வணிக உறவுகள் பற்றிக் கூறும் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்நாட்டவரது வரலாற்று நூல்களில் இலங்கையில் இருந்த முக்கிய கரையோரப் பட்டினங்களில் ஒன்றாக 'நாகடிப்' என்ற இடம் கூறப்பட்டிருப்பதுடன், அவ்விடம் அவர்கள் வரைந்த தேசப்படத்தில் இலங்கையின் வட பகுதியில் இருந்ததாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இது பாளி இலக்கியங்களில் குறிப்பிடப்படும் நாகதீபம் என்பது அறிஞர்களின் கருத்தாகும். இக்கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் 1936 இல் வடமராட்சியில் வல்லிபுரம் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பொற்சாசனத்தில் 'நகதிவ' என்ற இடத்தில் கட்டப்பட்ட பெளத்த விகாரை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 'நாகதிவ' என்ற இடப்பெயர்

21---
பாளி இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நாகதீபம் என்பதில் எந்த ஐயமுமில்லை. இச்சாசனத்தில் காணக்கூடிய - சிறப்பம்சம் சாசனத்தில் பிராகிருத மொழியுடன் சில தமிழ்ச் சொற்களின் செல்வாக்கு கலந்திருப்பதுடன் 'நாக' என்ற இடப் பெயரை எழுதுவதற்கு வடமொழிக் 'ஹ' (பய) வுக்குப் பதிலாக தமிழுக்குரிய 'க' (மய) பயன்படுத்தப்பட்டிருப்பதாகும். இந்த வேறுபாடுகள் இச்சாசனத்தை நாகதீபத்தில் வாழ்ந்த தமிழ்ப் பௌத்தர்கள் எழுதியிருக்கலாம் எனக் கருத இடமளிக்கிறது.
சற்றுப் பிற்பட்ட காலத்தில் தமிழகத்தில் தோன்றிய இருபெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை தமிழகத்திற்கு அப்பால் கடல் கடந்து செல்ல வேண்டிய இடங்களில் ஒன்றாக நாகநாட்டைக் குறிக்கின்றது. இதேபோல் வேலூர்ப்பாளையச் செப்பேட்டில் பல்லவ மன்னன் ஒருவன் நாக்குல மகளை மணந்த செய்தி சொல்லப்படுகிறது. இதன் பின்னர் தோன்றிய கலிங்கத்துப்பரணியில் ஜெயங்கொண்டார் இராஜபாரம்பரியம் பற்றிக் கூறும் போது சோழவம்சத்து கிள்ளிவளவன் நாகநாட்டு இளவரசியை மணந்த கதை கூறப்படுகிறது. ஏறத்தாழ இதேகால கட்டத்தில் தென்னிந்திய மன்னன் ஒருவன் நாகதீபத்தின் மீது படையெடுத்ததாகச் சூளவம்சம் கூறுகிறது கி.பி. 13 ஆம் நூற்றாண்டு இலங்கை வந்த தென்னிந்திய மன்னன் யாழ்ப்பாணத்தில் நாக இளவரசனைச் சந்தித்ததாக மட்டக்களப்பு மான்மியம் கூறுகிறது. மேற்கூறப்பட்ட மூலாதாரங்களில் கூறப்படும் நாகநாட்டையும், அதனோடு தொடர்புடைய வரலாற்றுச் சம்பவங்களையும் ஆய்வு செய்த அறிஞர்கள் இவற்றில் சுட்டிக் காட்டப்படும் நாகநாடு ஈழத்துப் பாளி நூல்கள் கூறும் நாகதீபத்தையே

Page 9
E0
குறிப்பதாக கருதுகின்றனர். இந்நிலையில் வடமராட்சி - கிழக்கில் உடுத்துறையில் கிடைத்த நாணயத்தில் வரும் நாகபூமி அல்லது நாகவம்சம் என்ற பெயர் பண்டைய காலத்தில் யாழ்ப்பாணம் நாகவம்சத்தால் ஆளப்பட்ட நாகபூமி என்பதை உறுதி செய்வதாக உள்ளது. அம்மரபு இன்றும் வடமராட்சி கிழக்கில் நிலைத்து நிற்கிறதென்பதற்கு நாகர்கோயிலில் உள்ள வரலாற்றுப் பழமைவாய்ந்த நாகர்கோவில் ஆலயம் சிறந்த எடுத்துக் காட்டாகும்.
யாழ்ப்பாண அரசு காலத்தில் வடமராட்சி கிழக்கு 13 ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரை நல்லூரைத் தலைநகராகக் கொண்டு யாழ்ப்பாண மன்னர்கள் ஆட்சி செய்த காலத்தில் அவ்வரசின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பிராந்தியங்களில் ஒன்றாக வடமராட்சி கிழக்கு - காணப்பட்டது. இவ்வரசு தொடர்பாகத் தோன்றிய தமிழ் இலக்கியங்கள் யாழ்ப்பாண அரசு கால நிர்வாகம் பற்றிக் கூறுகையில் வலிகாமம், 17 தீவுகள், வடமராட்சி, தென்மராட்சி என்பவற்றோடு பச்சிலைப்பள்ளி உள்ளிட்ட தற்கால வடமராட்சி கிழக்குப் பகுதியும் உள்ளடங்கியிருந்ததாகக் கூறுகின்றன. இவ்வரசு காலத்தில் தமிழகத்திலிருந்து யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட குடியேற்றம் பற்றி விரிவாகக் கூறும் கைலாயமாலை தமிழகத்தில் கச்சூர் என்ற இடத்தினைச் சேர்ந்த நீலகண்டனும், அவனது நான்கு தம்பிகளும் பச்சிலைப் பள்ளியில் வந்து குடியேறியதாகக் கூறுகிறது. இவர்களோடு பல தொழில், சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களும் இங்கு வந்து குடியேறினர். இக்குடியேற்றத்திற்கு தலைவனாக இருந்த நீலகண்டன் ஒரு சிவபக்தன் என்பதை கைலாயமாலையில் வரும் 'இந்நிலத்தில் ஆலமுண்ட கண்டன் அடியை மறவாத வள்ளல்' என்ற வர்ணனை உணர்த்துகிறது. இவனே யாழ்ப்பாண அரசு

கால் பச்சிலைப்பள்ளி நிர்வாகத்திற்கு பொறுப்பாக இருந்தான். இவனின் கீழ் முதலியார், தலையாரி, சேவகர் எனப்பட்டோரும் அக்காலத்தில் கடமையாற்றினர். இவ்வரசு காலத்தில் பச்சிலைப்பள்ளியில் 28 கிராமங்கள் இருந்திருக்கலாம்
என்பதை
போர்த்துக்கேய ஆவணங்களில் இருந்து அறிய முடிகிறது.
யாழ்ப்பாண அரசு காலப் பொருளாதாரத்தில் விவசாயம், கைத்தொழில், வர்த்தகம் என்பன பிரதான இடத்தைப் பெற்றிருந்தது. அவற்றுள் அயல்நாட்டு வர்த்தகம் கணிசமான வருவாயை அரசிற்கு தேடிக் கொடுத்தது. 1344 இல் இலங்கை வந்த இபன்பற்றுறா என்ற இஸ்லாமிய அறிஞர் யாழ்ப்பாண மன்னனை பத்தள என்ற இடத்தில் சந்தித்ததாகவும், மரத்தாலான அவனது மாளிகையில் சில நாட்கள் தங்கியிருந்ததாகவும், அந்த மாளிகைக்கு சமீபத்தில் கடலிலிருந்து எடுக்கப்பட்ட முத்துக்கள் குவிக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடுகிறார். மேலும் அரசனின் படைப்பலம் பற்றிக் கூறும் போது அவன் பலம் பொருந்திய கடற்படையைப் பெற்றிருந்தான் என்றும், பாண்டி நாட்டுக் கரைக்குச் சென்ற போது ஒரு நாள் யாழ்ப்பாண அரசின் பல்வேறு அளவுகளில் உள்ள நூற்றுக்கணக்கான கடற்கலன்களை அங்கு தான் கண்டதாகவும், அவை அராபிய நாட்டை நோக்கிச் சென்றதாகவும் கூறுகிறார். இந்த வர்த்தகத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள கச்சாய், பருத்தித்துறை, காங்கேசன்துறை முதலான இடங்களே முக்கிய துறைமுகங்களாகச் செயற்பட்டன என யாழ்ப்பாண அரசு தொடர்பாக பிற்காலத்தில் எழுந்த இலக்கியங்கள் கூறுகின்றன. ஆனால் குடாநாட்டிலுள்ள ஏனைய இயற்கைத் துறைமுகங்களில் குறிப்பாக வடமாரட்சி கிழக்கில் உள்ள நாகர்கோவில், வெற்றிலைக்கேணி முதலான இடங்களில் கிடைத்த யாழ்ப்பாண அரசு காலத்

Page 10
தொல்லியற்
சின்னங்களை
நோக்கும்போது இத்துறைமுகங்களும் அவ்வரசு கால் வர்த்தகத்தில்
முதன்மை பெற்றிருக்கும் எனக் கருத இடமுண்டு.
ஏனெனில் யாழ்ப்பாண அரசு கால் வருவாய் முறையை நோக்கும்போது அதில் வணிகர்களிடம் இருந்து பெறப்பட்ட வரி முக்கிய இடத்தைப் பெற்றிருந்ததைக் காண முடிகிறது. இந்த வரியை அரசனுக்குப் பெற்றுக் கொடுக்க - பண்டாரப்பிள்ளை என்ற அதிகாரிகள் பொறுப்பாக இருந்துள்ளனர். அவ்வாறு யாழ்ப்பாண அரசு காலத்தில் வரி அறவிடப்பட்ட கடவைகள் பெரும்பாலும் துறைமுகங்களை அண்டிய இடங்களில் இருந்துள்ளன. அவற்றுள் இரு கடவைகள் வடமராட்சியிலும், வடமராட்சி கிழக்கிலுள்ள பச்சிலைப்பாலையிலும் (பச்சிலைப்பள்ளி) இருந்ததாகப் பேராசிரியர் பத்மநாதன்
குறிப்பிடுகிறார்.
பச்சிலைப்பாளைக் கடவையில் வரி அறவிடும் அதிகாரியாக நான்கு பண்டாரப்பிள்ளைகள் கடமையாற்றியுள்ளனர். அவர்களின் பரிசோதனையின் பின்னரே அக்கடவைகளின் வழியாக பொருட்களைக் கொண்டு செல்ல முடியும். அக்கால வரி முறையில் வணிகர்கள் ஒரு கச்சை உடைக்கு அரைப் பணத்தையும், 25 அங்க வஸ்திரங்களுக்கு அரைப் பணத்தையும், அபின், மஞ்சள், கராம்பு ஆகிய பொருட்களுக்கு 8 வீதமும், வன்னியில் இருந்து வரும் ஒரு பொதி எருதில் சுமந்து வரும் பருத்திக்கு அரைப் பணமும், ஆறு எருதுகளின் சுமைப்பொதி வரகுக்கு ஒரு பணமும் வரியாகக் கொடுத்துள்ளனர். இந்த வரிகள் பணமாகவும் அறவிடப்பட்டதால் அதில் யாழ்ப்பாண அரசு கால நாணயங்களை வணிகர்கள் பயன்படுத்தி இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. இந்நாணயங்கள் யாழ்ப்பாண அரசின் ஆதிக்கம் நிலவிய வட - கிழக்கு இலங்கையில் மட்டும் புழக்கத்தில் இருக்கவில்லை. மாறாக யாழ்ப்பாண அரசு கால வாணிபம் பிற இடங்களுடனும், நாடுகளுடனும் நடைபெற்றதால் அவற்றின் பயன்பாடு தென்னிலங்கையிலும், தென்னிந்தியாவிலும் இருந்துள்ளமைக்கு உறுதியான ஆதாரங்கள் காணப்படுகின்றன. இதற்கு உதாரணமாக தமிழகத்தின் வரலாற்றுப் பழமைவாய்ந்த வணிக மையங்கள் மற்றும் துறைமுகங்களான கருவூர், காவேரிப்பூம்பட்டினம், மதுரை, திருநெல்வேலி, அழகன்குளம், இராஜபாளையம் முதலான இடங்களில் கிடைத்த நாணயங்களைக் குறிப்பிடலாம்.
கடந்த காலங்களில் யாழ்ப்பாண அரசு கால நாணயங்கள் தொடர்பாக வெளிவந்த ஆய்வுகளை நோக்கின் அவற்றில் யாழ்ப்பாண அரசு கால நாணயங்கள் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களில் ஒன்றாக வடமராட்சி கிழக்கில் உள்ள நாகர்கோவில் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணலாம். இவற்றை வைத்து நோக்கும்போது யாழ்ப்பாண அரசு கால வாணிபத்தில் வடமராட்சி

கலைக்கேசரி
09
கிழக்குடனான கடல் வழிப்பாதை முக்கிய இடத்தைப் பெற்றிருந்ததெனக் கூறலாம்.
உடுத்துறையில் கிடைத்த யாழ்ப்பாண அரசு கால முத்திரை? 1994 இல் உடுத்துறை மகாவித்தியாலயத்தில் உள்ள பனை மரங்கள் வேரோடு அகற்றப்பட்டபோது ஒரு மரவேரின் அடியில் மறைந்திருந்த புராதன கட்டிட அழிபாடுகள் வெளியே தெரிய வந்தது. இது பற்றிய செய்தியைக் கல்லூரி அதிபர் எமக்கு அறியத்தந்ததன் பேரில் அங்கு சென்று ஆய்வு செய்த போது பல வடிவில் அமைந்த மட்பாண்ட ஓடுகள், சங்கு, சிற்பிகள் என்பவற்றுடன் இரு சேது நாணயங்கள், சிறிய நந்தி என்பவற்றையும் கண்டு பிடிக்க முடிந்தது. இந்நந்தி யாழ்ப்பாண அரசு காலச் சேது நாணயங்களுடன் கிடைத்திருப்பதுடன், அதன் வடிவமைப்பு சேது நாணயங்களில் வரும் நந்தி வடிவத்தை ஒத்திருப்பதால் இதன் காலம் யாழ்ப்பாண அரசு காலத்திற்கு உரியதாக இருக்கலாம். மென்மையான மாபிள் கல்லில் மிகச் சிறந்த தொழில்நுட்பத்துடன் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளது. இந்நந்தி 22 அங்குல நீளமும், 12 அங்குல அகலமும், 22 அங்குல உயரமும் கொண்டது. இவ்வளவு சிறிய நந்தி வடிவம் வீடுகளிலோ அல்லது ஆலயங்களிலோ வைத்து வழிபடப்பட்டிருக்கலாம் எனக் கருத முடியாது. மாறாக நந்தியின் பீடம் முத்திரை வடிவில் அமைந்திருப்பதுடன் அதில் தேய்வடைந்த நிலையில் சில குறியீடுகளும் காணப்படுகின்றன. தமிழகத்தில் பல்லவ, பாண்டிய, சோழ மன்னர்கள் தமது ஆட்சிக் காலத்தில் பயன்படுத்திய முத்திரைகளில் தமது அரச இலச்சினையான காளை, மீன், புலி, முதலான சின்னங்களைப் பயன்படுத்தியதற்கு பல ஆதாரங்கள் காணப்படுகின்றன. அவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் உடுத்துறையில் கிடைத்த நந்தி உருவம் பொறித்த சின்னத்தை யாழ்ப்பாண மன்னர்கள் பயன்படுத்திய முத்திரையாகக் கருத இடமுண்டு.
வடமராட்சி கிழக்கிலுள்ள புராதன இந்து ஆலயங்கள் இலங்கையில் இந்து மதத்திற்கு தொன்மையான தொடர்ச்சியான வரலாறு உண்டு. கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் பரவ முன்னர் இம்மதம்

Page 11
கலைக்கேசரி து
10
இருந்ததற்கான சான்றுகள் பெருங்கற்கால அல்லது இரும்புக்காலப் பண்பாட்டில் காணப்படுகிறது. அக்காலத்தில் இப்பண்பாட்டு மக்கள் பயன்படுத்திய சுடுமண்ணாலான ஆண், பெண் உருவங்கள், பலதரப்பட்ட மிருக வடிங்கள், மட்பாண்டங்களில் வரும் இருதலை முத்தலைச் சூலங்கள் அம்மக்களின் சமய நம்பிக்கைகளைப் பிரதிபலிப்பதாகக் கூறப்படுகின்றது. இதன் இன்னொரு கட்ட வளர்ச்சியே பல்லவர் ஆட்சிக்கு முன்னர் தமிழகத்திலும் இலங்கையிலும் தோன்றிய காளி, துர்க்கை, - வீமன், அண்ணமார், வைரவர் முதலான தெய்வங்களுக்குரிய கிராமிய அல்லது நாட்டார் வழிபாட்டு ஆலயங்களாகும். பெரும்பாலும் மர நிழலிலும், ஆற்றங்கரைகளிலும், சிறிய குடிசைகளிலும் தாம் வழிபடும் இத்தெய்வங்களைப் பிரதிபலிக்கும் சின்னங்களையும், குறியீடுகளையும் வைத்து வழிபட்டனர். இவை தமிழர்களின் தொன்மையான தனித்துவமான சமய நம்பிக்கைகளாகும். ஆயினும் இவ்வாலயங்கள் அழியக்கூடிய மரம், மண், சுதை கொண்டு அமைக்கப்பட்டதால் அவை பற்றிய ஆதாரங்கள் பிற்காலத்தில் காணப்படவில்லை. தமிழகத்தில் பக்தி இயக்கத்தின் எழுச்சியைத் தொடர்ந்து இந்து மதம் மறுமலர்ச்சி அடைந்ததால் அங்கு அழியாத பொருட்களைக் கொண்டு ஆகம மரபில் ஆலயங்கள் அமைக்கும் மரபு பல்லவர் ஆட்சிக் காலத்திலிருந்து தோற்றம் பெறத் தொடங்கியது. இந்த எழுச்சி சமகாலத்தில் இலங்கையிலும் - செல்வாக்குச் செலுத்தியதால் இங்கும் ஆகம மரபில் ஆலயங்கள் அமைக்கும் மரபு தோற்றம்பெறத் தொடங்கியது. ஆயினும் இந்த மாற்றத்தால் தொன்மையான கிராமிய அல்லது நாட்டார்வழிபாட்டு மரபு மறைந்து விட்டதெனக் கூறமுடியாது. அவற்றின் எச்சங்கள் தற்காலம் வரை தமிழகத்திலும், இலங்கையிலும் தொடர்ந்து பல ஊர்களில் நிலைத்திருப்பதைக் காணமுடிகிறது. இதற்கு வடமராட்சி கிழக்கில் உள்ள கிராமிய அல்லது சிறுதெய்வங்களுக்குரிய ஆலயங்கள் சிறந்த எடுத்துக்காட்டுக்களாகும்.
வடமராட்சி கிழக்கில் உள்ள ஆலயங்களை இருபிரிவாகப் பார்க்கலாம். ஓன்று ஆகம மரபு சார்ந்த ஆலயங்கள். இன்னொன்று ஆகம் மரபு சாராத கிராமிய அல்லது சிறு தெய்வங்களுக்குரிய ஆலயங்கள். மணற்காடு தொட்டு சுண்டிக்குளம் வரையுள்ள மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் ஆகமமரபுக்குரிய நூற்றுக்கணக்கான ஆலயங்கள் உள்ளன. ஆனால் எமது ஆய்வில் சுனாமி பேரழிவுக்கு உட்பட்ட கடற்கரைசார்ந்த கிராமங்களே ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன. இங்கு 22 ஆலயங்கள் சுனாமிப் பேரலையால் முற்றாக அழிவடைந்துள்ளன. இவ்வாலயங்கள் ஒல்லாந்தரின் பிற்கால ஆட்சியிலிருந்து கட்டப்பட்டவையாக இருக்கலாம். பல ஆலயங்கள் சீமெந்தினால் கட்டப்பட்டவையாக இருப்பதால் அவை பிற்காலத்தில் கட்டப்பட்டவை என்பது தெரிகிறது.

ஆயினும் சில ஆலயங்கள் அப்பிரதேசத்தின் சூழலுக்கு ஏற்ப கடலில் இருந்து எடுக்கப்பட்ட கோறல் கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளன. வேறு சில ஆலயங்கள் முருகைக் கற்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளன. இவ்வகை ஆலயங்கள் ஒல்லாந்தரினால் மத சுதந்திரம் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து கட்டப்பட்டிருந்தாலும் அவற்றில் சிலவற்றிற்கு தொன்மையான வரலாறு இருக்கலாம். இவ்வாலயங்கள் ஆகம மரபுப்படி கட்டப்பட்டிருந்தாலும் அவற்றைப் பிராமணர்கள் மட்டுமன்றி உள்ளூர் பூசாரிகளும் பூசை செய்து வருவது சிறப்பான அம்சமாகும்.
ஆயினும் இப்பிராந்தியத்தில் ஆகம் மரபு சாராத கிராமிய அல்லது நாட்டார் வழிபாட்டுக்குரிய ஆலயங்களே எண்ணிக்கையில் அதிகமாக உள்ளன. அவை சிறிய வட்டாரத்திற்கு அல்லது ஒரு குடும்பத்திற்குரிய கோவிலாகக் காணப்படுகின்றன. அவ்வாலயங்களுக்குரிய தெய்வங்கள் பெரும்பாலும் இயற்கையாகக் கிடைத்த கற்கள் அல்லது மண்ணினால் செய்யப்பட்ட உருவங்களாகக் காணப்படுகின்றன. அவற்றுள் பெரும்பாலானவை வீடுகளில் அல்லது நீர்நிலை சார்ந்த இடங்களில் மரநிழலின் கீழ் வைத்து வணங்கப்படுகின்றன. சில இடங்களில் பாம்பு புற்றுக்கள் கோவிலாகக் கொண்டு வழிபடப்படுகின்றன. சில ஆலயங்களில் தெய்வம் வைப்பதற்கான பீடம் சீமெந்தினால் அமைக்கப்பட்டாலும் வழிபடப்படும் தெய்வங்கள் வெறும் கற்களாகவே உள்ளன. இங்கு வழிபடப்படும் நாச்சிமார், ஐயனார், நாகதம்பிரான், காளி, அண்ணமார், வைரவர், காளகண்டன், முனி, ஊத்தைக்குடியன், காளமுனி முதலான சிறு தெய்வ ஆலயங்களையும், அவற்றிற்கு பூசாரிகள் செய்யும் கிரியை முறைகள், வேள்விகள், சடங்குகள் என்பவற்றையும் நோக்கும் போது பண்டைய தமிழ் இலக்கியங்கள் கூறும் கிராமிய வழிபாட்டு முறை ஞாபகத்திற்கு வருகிறது. இந்த

Page 12
அம்சங்கள் எல்லாம் பாரம்பரிய தமிழரின் சமய மரபு வடமராட்சி கிழக்கில் மறையவில்லை என்பதற்கு சிறந்த அடையாளமாகும்.
ஐரோப்பியர் ஆட்சியில் வடமராட்சி கிழக்கு
1619 இல் யாழ்ப்பாண அரசு போர்த்துக்கேயரால் வெற்றி கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து 1948 இல் இலங்கை சுதந்திரம் அடையும் வரை வட இலங்கை ஐரோப்பியரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தது. ஐரோப்பியரது வருகையின் ஆரம்ப கால நோக்கம் வாணிபமாக இருப்பினும் அதன் பின்னால் சமயமும், அரசியல் மேலாதிக்கமும் காணப்பட்டன. இதன் விளைவால் வட இலங்கை ஏறத்தாழ 329 ஆண்டுகள் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோரின் மேலாதிக்கத்துள் அடங்கியிருந்தது. இவர்களின் ஆட்சியால் வட இலங்கை மக்களின் மதம், மொழி, கலை, கல்வி, வாழ்க்கை முறை, உடை, உணவுப் பழக்கவழக்கம் என்பவற்றில் பல மாற்றங்களை ஏற்பட்டன. இந்த மாற்றங்கள் போத்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சியில் வட இலங்கையின் ஏனைய வட்டாரங்களை விட கடற்கரையோரப் பிரதேசங்களிலேயே பெரிதும் ஏற்பட்டன. இவர்களின் ஆட்சியில் வடமராட்சி கிழக்கு கடற்போக்குவரத்திற்கும், யாழ்ப்பாணத்திற்கும், பெருநிலப்பரப்பிற்கும் இடையிலான முக்கிய தரைவழிப் பாதையாகவும், யாழ்ப்பாணத்தை
பிறரது படையெடுப்புக்களில் இருந்து பாதுகாக்கும் முக்கிய காவல் பிரதேசமாகவும் விளங்கியது. இதை வடமராட்சி கிழக்கிலுள்ள ஒல்லாந்தரின் சிறிய கோட்டைகள், கடற்கரையோரமாகக் காணப்படும் இடிந்த காவல் அரண்கள், நிர்வாகக் கட்டிடங்கள் ஐரோப்பிய நிர்வாகிகள், படைவீரர்களின் கல்லறைகள் என்பன உறுதிசெய்கின்றன.
போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் தமது மதங்களைப் பரப்பும் நோக்கில் சுதேச மதங்களுக்கு எதிரான கலையழிவுக் கொள்கையைக் கடைப்பிடித்தனர். இதனால் இங்கிருந்த பல இந்து ஆலயங்கள் இடித்தழிக்கப்பட்டு அவ்வாலயக் கற்களைக் கொண்டு கோட்டைகள்,

, கலைக்கேசரி
11
கிறிஸ்தவ ஆலயங்கள், நிர்வாகக் கட்டிடங்களை அமைத்தனர். போத்துக்கேயர் இக்கற்களைக் கொண்டு கத்தோலிக்க ஆலயங்களை அமைத்திருந்தாலும் பின்வந்த ஒல்லாந்தரும், ஆங்கிலேயரும் பெரும்பாலான கத்தோலிக்க ஆலயங்களை புரட்டஸ்தாந்து ஆலயங்களாக மாற்றினர். இதற்கு தற்போது மணற்காட்டில் இடியுண்ட நிலையில் காணப்படும் ஒல்லாந்தர் கால ஆலயத்தை உதாரணமாகக் காட்டலாம். ஆயினும் இங்கு கத்தோலிக்க மதமும், புரட்டஸ்தாந்து மதமும் ஐரோப்பியர் ஆட்சியில் முக்கியத்துவம் பெற்றிருந்ததை தற்போது அங்கு காணப்படும் இரு மதங்களுக்கும் உரிய ஆலயங்கள் உறுதி செய்கின்றன. அவற்றுள் கடற்கரை சார்ந்த ஆலயங்கள் பலவும் சுனாமிப் பேரலையால் பெரிதும் அழிவடைந்துவிட்டதை எமது கள ஆய்வின் போது காணமுடிந்தது.
பொதுவாக தொன்மையான வரலாற்றுப் பெருமை கொண்ட இடங்கள் எல்லாம் பிற்காலத்தில் அதேவரலாற்றுப் பெருமையை பெற்றுக்கொள்வதில்லை. அதேபோல்
சிறப்புப்பெற்ற இடங்களுக்கெல்லாம் முற்காலத்தில் தொன்மையான வரலாற்றுப் பழமை இருந்திருக்கும் எனவும் கூறமுடியாது. ஆதியில் இயற்கை வளங்களை மையப்படுத்தி நெருக்கமாக வாழ்ந்த மக்கள் படிப்படியாக தொழில் நுட்பத்துறையில் ஏற்பட்ட வளர்ச்சி காரணமாக பொருளாதார நலன் கருதி பிற இடங்களுக்கு இடம்பெயர்வது உலக வரலாற்றில் பொதுவான வரலாற்று நிகழ்வாக இருந்துள்ளது. இந்த உண்மையை யாழ்ப்பாண வரலாறு பற்றிய ஆய்வில் தெளிவாக உணரமுடிகிறது. வடமராட்சி கிழக்கைப் பொறுத்தவரை அது பூர்வீக மக்கள் வாழ்ந்த இடமாகவும், பண்டுதொட்டு அயல் நாடுகளுடன் வாணிப், கலாசார உறவுகளை ஏற்படுத்திய பிராந்தியமாகவும், தமிழரின் பாரம்பரிய பண்பாட்டைத் தொய்வின்றிப் பேணிய பிராந்தியமாகவும் இருந்துள்ளதை அங்கு இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொல்லியல் ஆதாரங்கள் உறுதிசெய்கின்றன. ஆனால் அத்தகைய வரலாற்றுச் சிறப்பை தற்காலத்திலும் அப்பிராந்தியம் பெற்றிருப்பதாகக் கூறமுடியாது. இதற்கு ஆதியில் கடல்சார் நடவடிக்கைகளில் பெரிதும் பங்கெடுத்த மக்களில் ஒரு பிரிவினர் காலப்போக்கில் விவசாய நடடிக்கைகளுக்காக பிற இடங்களுக்குப் புலம்பெயர்ந்தமை, ஆனையிறவு பாதை புழக்கத்திற்கு வந்ததும் வடமராட்சி கிழக்குடனான கடல், தரைப்போக்குவரத்தின் முக்கியத்துவம் குறைந்தமை, 2004 இல் ஏற்பட்ட சுனாமிப் பேரலை, சமகால யுத்தம் என்பன காரணமாக இருந்ததெனக் கூறலாம். ஆயினும் சமகாலத்தில் அங்கு மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் எதிர்காலத்தில் அப்பிராந்தியம் தனது வரலாற்றுத் தொன்மையையும், பெருமையையும் மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.
வெ

Page 13
அஸாமின் மானஸ் ,ே
இந்தியாவில், அஸாம் மாநிலத்தில் இமயமலை அடி வாரத்தில் அமைந்திருப்பது மானஸ் தேசிய பூங்கா அல்லது மானஸ் வன விலங்குகள் சரணாலயமாகும். யுனெஸ்கோ இயற்கை உலக தொன்மை வாய்ந்த இடங்களில் ஒன்றாக விளங்கும் இச்சரணாலயம். திட்ட புலிகள் ஒதுக்கிடமாகவும் யானை ஒதுக்கிடமாகவும் பிராணிகள் ஒதுக்கிடமாகவும் விளங்குகின்றது.
பூட்டானின் தேசிய மானஸ் பூங்காவுக்கு, சமீபமாக இருக்கும் இப்பூங்கா, அஸாம் கூரையிட்ட ஆமை (Assam Rooted Turtle) Uஸ்பிட் முயல், தங்க நிற நீளவால் குரங்கு (Golden Longer) பிக்மி ஆண் பன்றி (Pigmy Hog) போன்ற அருகிவரும் உயிரினங்கள் மற்றும் மிக அருமையாகக் காணப்படும் வன உயிரினங்களையும் கொண்டதாக விளங்குகின்றது. வன நீர் வாழ் எருமைகளுக்கும் இப் பூங்கா பெயர் பெற்றது.

MROILERTIn)
தசிய பூங்கா
மானஸ் நதியில் இருந்துதான் இப்பூங்காவுக்கு மானஸ் பூங்கா எனப் பெயர் ஏற்பட்டது. மானஸ் எனும் நாக தேவதையின் பெயரே நதிக்கும் பின்னர் பூங்காவுக்கும் வழங்கப்பெற்றது. பிரம்மபுத்திரா நதியின் ஒரு கிளையாக விளங்கும் மானஸ் நதி, இப்பூங்காவின் மையப் பகுதியினூடாகப் பாய்ந்து செல்கின்றது.
1928 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் திகதி 360 கிலோ மீட்டர் பரப்பளவுடன் இருந்த மானஸ் தேசிய பூங்கா ஒரு சரணாலாம் எனப் பிரகடனப்படுத்தப்பட்டது. மானஸ் உயிரின் ஒதுக்கம் 1973 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இப்பூங்கா சரணாலயமாக பிரகடனப்படுத்தப்படுவதற்கு முன் மானஸ் ஒதுக்க காடு எனவும், நேர்க் காம்ரப் ஒதுக்க காடு எனவும் அழைக்கப்பட்டது. அதற்கு முன் கூச் பெஹார் ராஜ் குடும்பம் (Cooch Behar royal family)
கோரிபூர் ராஜாவும் (Raja of Gauvipar) இப்பூங்காவை தமது - வேட்டையாடும் இடமாகப் பாவித்து வந்தனர்.
நான்

Page 14
1951 ஆம் ஆண்டிலும் 1955ஆம் ஆண்டிலும் இப்பூங்கா 391 கிலோ மீட்டர் பிரதேசமாக அதிகரிக்கப்பட்டு 1985 இல் உலக தொன்மை இடம் என யுனேஸ்கோவினால் பிரகடனப்படுத்தப்பட்டது.
இப்பூங்காவின் மையப்பகுதியில் ஒரே ஒரு வன கிராமம் மட்டுமே உள்ளது. அதன் பெயர் அக்ராங் என்பதாகும். இதைவிட, பூங்காவைச் சுற்றி மேலும் 56 கிராமங்கள் உள்ளன. மேலும் சில கிராமங்கள், இப்பூங்காவில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தங்கியிருக்கின்றன.
மூன்று வரிசைகளாக இப்பூங்கா பிரிக்கப் பட்டிருக்கின்றது. மேற்கு வரிசை பன்பாரி என்னும் பகுதியைத் தளமாகவும் மத்திய வரிசை பர்பெடா வீதிக்கு அருகில் உள்ள பானாஸ் பரியையும் கிழக்கு வரிசை பத்சலாவுக்கு அருகில் உள்ள புய்யா பாராவைத் தளமாகவும் கொண்டுள்ளது. இந்த வரிசைகள் நன்கு தொடர்புபடுத்தப்பட்டிருக்கவில்லை. பல பார்வையாளர்கள் பான்ஸ்பரிக்கு வந்து, மானஸ் நதிமேல்

பட கலைக்கேசரி
13
உள்ள பின் மதக்குரியில் உள்ள வனத்தில் சில நேரத்தைக் கழித்துச் செல்கின்றனர்.
கிழக்கு இமாலய மலை அடிவாரத்தில் மானஸ் அமைந்திருக்கிறது. இப்பூங்கா மிக அடர்ந்த காடுகளைக் கொண்டிருக்கிறது. மானஸ் நதி பூங்காவின்மேற்குப் பக்கமாகப் பாய்ந்து சென்று பின் இரண்டு கிளைகளாகப் பிரிகிறது. இந்த நதி இந்தியாவையும் பூட்டானையும் பிரிக்கும் சர்வதேச எல்லையாகவும் விளங்குகின்றது. பூங்காவின் வட பகுதியில் உள்ள புல் வெளிப் பிரதேசத்தின் அடிப்பாறை சுண்ணாம்புக் கற்களையும் மண் கற்களையும் கொண்டுள்ளது. அதே வேளை பூங்காவின் தெற்குப் பகுதியில் காணப்படுகின்ற புல்வெளிப் பிரதேசத்தில் வண்டல் மண் படிந்திருக்கிறது. இங்கு நிலவும் சீதோஷண நிலையும், நில அமைப்பும் பல்வேறு உயிரினங்களும் பல்கிப்பெருகி வாழும் தன்மையை கொண்டுள்ளதுடன் பல நூற்றுக்கணக்கான
மரம், செடி, கொடிவகைகளையும் கொண்டிருக்கிறது.

Page 15

இந்தச் சரணாலயத்தில் 55 வகையான பாலூட்டிகளும், 380 வகையான பறவை இனங்களும் 50 வகையான ஊர்வனவும், 3 வகையான நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினங்களும் உள்ளதாகப் பதிவாகியுள்ளது.
இச்சரணாலயத்தில் வாழும் மிருகங்களில், ஆசிய யானைகள், இந்திய றைனோசர்கள், இந்திய புலிகள், வரிப்புலிகள், ஆசிய தங்க நிறப் பூனைகள், தொப்பியிட்ட குரங்குகள், தங்க நிறக் குரங்குகள், குரைக்கும் மான், கரும் பாம்பு, ஆசிய நீர் எருமைகள் உட்பட ஏராளமான மிருகங்கள் வாழ்கின்றன. உலகில் வேறெங்கும் காணப்படாத மிக அருமையாகக் காணபடும் வனவிலங்குகள் இங்கு வாழ்கின்றன என்பது சிறப்பம்சமாகும்.
அத்துடன் மானஸில் 450 வகையான பறவையினங்களும் வாழ்கின்றன. இடருக்கு உள்ளாகும் வங்காள புளோறிக்கன் பறவைகளும் இங்கு பெருமளவில் உள்ளன. ஹோர்ன்பில், காட்டுக் கோழிகள், புல்புல், வாத்துகள், பெலிக்கன்கள் மீன் பிடிக்கும் பருந்து, பாம்பு பருந்துகள் என்பனவும் ஏனைய பிரதான பறவைகளாகும்.
யானைச்சவாரி, ஜீப் வன சவாரி, மானஸ் இயற்கையில் இழுபட்டுச் செல்லுதல், நதி கட்டுமரச் சவாரி, வகைவகையான பறவைகளைப் பார்த்து இரசித்தல் போன்றவை இங்கு உல்லாசப் பயணிகளைக் கவருகின்றன. இயற்கையின் எழில் நிரம்பிய காட்சிகளும் அருமையான வன விலங்குகளின் நகர்வுகளும் கொண்ட இத்தனித்துவ - உலக தொன்மையான பூங்கா மிகத் தனித்துவமானதும், மிகக் களிப்பூட்டுவதுமான அனுபவங்களை சுற்று
லாப்பயணிகளுக்கு வழங்குகின்றது.
நவம்பருக்கும் மார்ச்சுக்கும் இடைப்பட்ட காலம் இங்கு விஜயம் செய்ய உகந்த காலமாகும். இந்திய பங்கோலியன்கள் (Pangolins) மற்றும் சுமார் இரண்டாயிரம் யானைகளும் இங்கு காணப்படுகின்றன.
ஒருவர் பூங்காவுக்குச் செல்ல ஜீப் ஒன்றை வாடகைக்குப் பிடித்துக் கொள்ளலாம். அஸாம் ராஜ்ய சுற்றுலா இலகா பயணங்கள், யானைச் சவாரிகள் உட்பட சுற்றுலாப் பயணங்களை நடத்துகிறது.
புகழ்பெற்ற வைஷ்ணவ மடாலயம் உட்பட பல்வேறு கவர்ச்சிகர விடயங்களை பர்குபடா கொண்டிருக்கிறது.
-லஷ்மி

Page 16
EXPRESS NEWSPAPERS (CEY) (PVT) L
E)
3
வீரகேசரியின் விறுவிறுப்பால
உடனுக்குடன் உங்கள் கையடக்கத்தெ
அலைகள்கலையாவான்களை கனனனைனாணணணணணணணணணணணணணண கருன.
டயலொக் : reg (space) v
77007 இலக்கத்துக்கு Sn
நிபந்தனைகள்

IMITED
வீ
எ செய்திகள்...
Tலைபேசியில் தெரிந்துகொள்ளுங்கள் irakesari என type செய்து " என்ற ns அனுப்புங்கள்.
ளுக்கு உட்பட்டது. மாதாந்த கட்டணமாக ரூபா. 30/- + வரி அறவிடப்படு

Page 17
க்
கலைக்கேசரி து 16 சாசனவியல்
பொன்னம்பலவாணே
தகைச
(லெ
23ாலாFா-=-=-=-:55:23- 5
இலங்கையில் பதினாறாம் பதினேழாம் நூற்றாண்டுக ளில் பறங்கியர் புராதனமான பெருங்கோயில்களையும் சாதாரணமான ஆலயங்களையும் இடித்து அழித்து விட்டனர். அவர்கள் தங்கள் சமயாபிமானங் காரணமாக இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டனர். பிரித்தானியரின் ஆட்சி ஏற்பட்ட பின் நகரங்களிலும் கிராமங்களிலும் பல நூற்றுக்கணக்கான கோயில்கள் உருவாக்கப்பட்டன. அவற்றுட் பெரும்பாலானவை பழைய தலங்களிற் புனர் நிர்மாணம் செய்யப்பட்டவை. சில இடங்களிற் புதிதாகவும் கோயில்கள் அமைக்கப்பட்டன. அவற்றிலே பொன்னம்பலவாணேஸ்வரம் முதன்மையானது. அதன் தோற்றமும் வளர்ச்சியும் கொழும்பு நகரத்தின் பன்முகப் பட்ட வளர்ச்சியின் ஓரம்சமானது.
கொழும்பு என்னும் பெயர் பற்றிய இலக்கியக்குறிப்புகள் 14 ஆம் நூற்றாண்டு முதலாகவே கிடைக்கின்றன. அதன் பெயர் மலையாளத்துக்கோழம்ப பட்டினம் என்பதோடு தொடர்புடையது போலத்தெரிகின்றது. யாழ்ப்பாணத் தமிழர் இந்திய வம்சாவளித் தமிழர் ஆகிய இரு சாராரும் பெருமளவிலே - கொழும்பிற் குடியேறினார்கள். முதலாவது கட்டத்திலே குடியேறியவர்கள் நகரத்தின் வட

ஸ்வரத்து சாசனங்கள்
சி.பத்மநாதன், சர் பேராசிரியர், வரலாற்றுத்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்.
ன.
பகுதியிலே செறிந்து காணப்பட்டனர். இத்தகைய குடியிருப்புக்கள் கொழும்பு நகரத்தின் மேற்கு, கிழக்குப் பகுதிகளிலும் 20 ஆம் நூற்றாண்டிற் பரவத் தொடங்கின. அவர்களின் வழிபாட்டுத் தேவைகளுக்கு வேண்டிய பல ஆலயங்கள் புதிதாக அமைக்கப்பட்டன. அவற்றுட் பெரும்பாலானவை செட்டியார் சமூகத்தவரால் அமைக்கப்பட்டன.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலங்கைத் தமிழரிடையிலும் இந்திய வம்சாவளித் தமிழரிடையிலும் சமய வழிபாடு வர்த்தக சேவைகள் காரணமாக நெருங்கிய தொடர்புகள் ஏற்பட்டன. கூட்டு முயற்சிகளும் ஒருமைப் பாடும் ஏற்பட்டன. பொன்னம்பல முதலியாரின் நடவடிக்கைகள் அத்தகைய உணர்வுகளையும் உறவுகளை யும் பிரதிபலிக்கின்றது. கொழும்பில் வாழும் சைவர்கள் சமயாசாரப்படி வழிபாடு செய்வதற்குச் சிவாலயமொன்று இல்லாமையால் அத்தகைய கோயிலொன்றை அமைப் பதற்கான பணிகளைத் தொடங்கினார். செட்டியார் சமூகத்தவர் அவருக்குத் துணையாக இருந்தனர். பெருமளவு பணம் சேர்க்கப்பட்டது. அதிலொரு பகுதியைக்கொடுத்து கோயில் கட்டுவதற்கான நிலத்தை

Page 18
1856ஆம் ஆண்டு யூலாய் மாதம் 5 ஆம் திகதி வாங்கினார்கள். அந்நிலம் கடற்கரை வீதியிலிருந்து அது முன்பு கப்பித்தான் ஜோன் ஃபூல்ஸ்ற்ரன் என்பவருக்குச் சொந்தமானது.
தென்னிந்திய
சிற்பாசாரிகளை வரவழைத்துக் கட்டுமாணத் திருப்பணிகளைத் தொடங்கினார்கள். 1857 ஆம் ஆண்டிலே கட்டுமாணப் பணிகளை நிறைவேற்றி விட்டனர். 1857 ஆம் வருடம் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி ஆலய பரிபாலனம் தொடர்பாக ஒரு உடன்படிக்கை உருவாக்கப்பட்டது. ஓர் அறங்காவலர் சபையினையும் கோயிற் பரிபாலகரையும் நியமிப்பதற்கான விதிகள் அதில் வரையறை செய்யப்பட்டன.
அருணாசலம் பொன்னம்பலம், இரகுநாத முதலியார், நன்னித்தம்பி முதலியார், சின்னத்தம்பி பிள்ளை, முருகேச முதலியார், வீரப்பச் செட்டியார், லெட்சுமணன் செட்டியார், அ.வெங்கடாசலம் செட்டியார், அ.கீ.கு. சேவகன் செட்டியார், சுப்பிரமணியம் செட்டியார், இராமன் செட்டியார், அருணாசலம் செட்டியார், மெய்யப்பச் செட்டியார் என்போரே உடன்படிக்கை செய்தவர்கள். புதிதாக அமைக்கப்பட்ட கோயில் பொன்னம்பல வாணேஸ்வரம் என்னும் பெயரால் வழங்கும் என்றும் இந்து சமய சாராப்படி வழிபாடுகள் நடைபெறும் என்றும் ஆலய வழிபாட்டிலே பொது மக்கள் கலந்து கொள்வதற்கு உரிமை வழங்கப்படுமென்றும் உடன்படிக்கையிலே
குறிப்பிடப்பட்டிருந்தது.
அருணாசலம் பொன்னம்பலமும் அவருடைய ஆண் வழிமுறைச் சந்ததியினரும் ஆலய பரிபாலகராக நியமிக்கப்பட வேண்டுமென்ற உடன்படிக்கைக்கும் எல்லோரும் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டுள்ளனர். அந்த விதிமுறையின் படியே இன்று வரை ஆலய பரிபாலனம் நடைபெறுகின்றது. கோயிற் கட்டுமாணப் பணிகள் நிறைவு பெற்ற பின் 1857ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் ஆறாம் திகதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைப் பரிபாலகராகிய பொன்னம்பல முதலியார் முன்னின்று நடத்தினார். இந்த விபரங்கள் கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளன. இரண்டாவது கும்பாபிஷேகத்தையும் 1873ஆம் ஆண்டில் அவரே நடத்தினார் என்பதைச் செப்பேட்டு வாசகத்தின் மூலம் அறிய முடிகின்றது.
பொன்னம்பல முதலியார் கி.பி 1886 இல் இறந்த பின்பு அவரது மூத்த குமாரரான குமாரசுவாமி முதலியார் கோயில் பரிபாலனப் பொறுப்புக்களை உரிமை வழியே பெற்றார். மூன்றாவது கும்பாபிஷேகம் 1882 ஆம் வருடம் நடைபெற்றது. |
குமாரசுவாமி முதலியார் கி.பி 1906 ஆம் ஆண்டில் இறந்து விட்டதால் அவரது இளைய சகோதரரான பொ.இராமநாதன் ஆலய பரிபாலனத்திற்குப் பொறுப்பேற்றார். பொன்னம்பலம் இராமநாதன் இந்து சமய நெறிகளையும் அவை தொடர்பான கலைகளையும் கற்றுத் தெரிந்தவர். அவற்றில் அபிமானங்கொண்டவர்.

உ, கலைக்கேசரி

Page 19
3 4:
கலைக்கேசரி தி
அவர் கோயிலைக் கற்றளியாக மாற்றியமைக்க விரும்பினார். அதற்கெனத் தமிழ் நாட்டிலிருந்து சிற்பாசாரியர்களை அழைத்து வந்தனர். கட்டுமாண திருப்பணிகள் கி.பி 1912 இல் நிறைவடைந்தன. அவ்வாண்டிலே டிசம்பர் மாதத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கற்றளியான பொன்னம்பலவாணேஸ்வரத்தை இராமநாதன் தனது சொந்தச் செலவிலே கட்டி முடித்தார். இலங்கையிலே கட்டப் பெற்ற சாந்தாரக்கோயில் என்னுஞ் சிறப்பு அதற்கு மட்டுமே உண்டு. நவீன காலத்தில் அமைக்கப்பட்ட சைவக் கோயில்களில் இது மட்டுமே முழுமையும் கற்றளியாக அமைந்த கட்டுமாணம் மூலன்தானமும் திருக்காமக்கோட்டமும் விசாலமான பிரகார சுவர்கள் மூலம் ஒரே கட்டுமாணமாக இணைக்கப்பட்டுள்ளமை கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும். கோயிலுக்கும் மிக உயரமான பிரகாரச் சுவர்களுக்கும் இடையிலான வெளிகள் முழுவதும் அலங்கார வேலைப்பாடற்ற நீளமான கற்பாளங்களமைந்த கூரையினால் மூடப்பட்டுள்ளன.
இக்கோயில் 211 நீளமும் 90 அடி அகலமுங்கொண்ட சுற்றளவினை உடையது வழமை போல் மூலதானத்திற்கு முன்பு அர்த்த மண்டபம் மகா மண்டபம் தம்ப மண்டபம் என்பன நீளப்பாட்டில் அமைந்துள்ளன. கர்ப்ப கிருகம் 12' 6'' சதுரமானது அர்த்த மண்டபம் 14' 2'' நீளமானது. அதன் வாசலின் இரு பக்கங்களிலும் 2' உயரமான துவாரபாலகர் உருவங்கள் உள்ளன. அர்த்த மண்டபம் தூண்களற்ற கட்டுமாணம்.
மகா மண்டபம் 25' 7'' நீளங் கொண்டது. அதில் நடராஜர் சந்நிதி, நந்தி, பலிபீடம் ஆகியன அமைந்துள்ளன. அளவிற் பெரிதான நடராஜரின் படிமமும் வேறு பல உலோகப் படிமங்களும் அண்மைக்காலம் வரை வைக்கப்பட்டிருந்தன. திருக்காமக் கோட்டம் அடங்கலான எல்லாக்கட்டுமாணங்களும் ஒரு பொதுவான இரண்டு அடி உயரமான பீடத்தில் அமைந்துள்ளன. அது 139 அடி நீளமும் 60 அடி அகலமுங்கொண்டது. விமானத்தினுடைய தெற்கு தேவகோட்டங்களில் கணபதி தஷிணா மூர்த்தி ஆகியோரின் படிமங்களும் மேற்கிலே லிங்கோற்பவரின் படிமமும் வடக்கிலே பிரமன் துர்க்கை ஆகியோரின் சிற்பங்களும் சிற்ப சாஸ்திர விதிகளுக்கமையத் தாபனம் பண்ணப்பட்டுள்ளன. இக்கோயிலில் மூன்று வகையான தூண்கள் அமைந்துள்ளன. அவை நாயக்கர் காலத்திலே தென்னிந்தியாவில் உருவாக்கப்பட்ட கோயிற்றூண்களைப் போன்றவை. திருச்சுற்றாலையின் இரு பக்கங்களிலும் அமைந்திருக்கும் தூண்கள் கூட்டுத்தூண்களைப் போன்ற வடிவத்திலே அமைக்கப்பட்டுள்ளன.
விஜயநகர, நாயக்கர் காலங்களிலே தென்னிந்தியாவிலுள்ள பெருங்கோயில்களின் திருநடன மாளிகையின் - ஓரங்களிலுள்ள பெருந்தூண்களின்
ன்
ன
730

அம்சங்கள் இவற்றிலே காணப்படுகின்றன. இக்கூட்டு தூண்களில் ஒவ்வொன்றும் தனித்தனியான பண்புகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு தூணிலும் உப பீடம் அதிஷ்டானம் ஓமம் கால்தாடி பத்மபந்தம் பலகை போதிகை என்னும் உறுப்புகள் உள்ளன.
அவற்றிலே அமர்ந்த கோலத்திலுள்ள கோரமான பார்வையுடன் விளங்கும் சிங்க வடிவங்கள் உள்ளன. போதிகையிலிருந்து கீழ் நோக்கி வளைந்து தொங்கும் கோலத்திற்கு பூமுனை தெரிகின்றது. அது வாழைப்பொத்தி போன்ற கோலமானது அம்மன் கோயிலின் மகா மண்டபம் தூண்களிற் சிங்க உருவங்களுக்குப் பதிலாக யானை வடிவங்கள் காணப்படுகின்றன. அவற்றின் மேலே தூணின் தலைப்பாகத்தின் பாரத்தைத் தாங்கி நிற்கும் கணங்களின் வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
மகா மண்டபத்திலும் வசந்த மண்டபத்திலும் அமைந்த தூண்கள் வேறொரு வகையானவை. அவை இரு தூண்கள் கூடிய கலப்புத் தூண்கள் அவற்றிலொன்று மற்றத்தூணிலும் சிறியது. அரைத்தூண் போன்றது. அவற்றின் அடிப்பாகமும் தலைப்பாகமும் சதுரமானவை. நடுப்பகுதி பல்கோண அமைப்புடையது. சிறு தூண்களின் தலைப்பாகத்திலே கோரமான கோலத்தில் வாயினை அகலமாகப் பிளந்த சிங்க வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. ஒரு பெரிய, நாற்சதுர வடிவு கொண்ட கற்பலகையிலிருந்து வெளிப்புறமாக நேராக நீண்டு கீழ் நோக்கிய பூமுனைக்கோலம் போன்ற போதிகை தூணமைப்பின் ஒரு சிறப்பம்சமாகும்.
மூன்றாவது வகையிலுள்ள தூண்கள் மூன்று கம்பங்கள் அமைந்த கலப்புத் தூண்கள் அவை ஆலயத்தில் வெவ்வேறான எட்டு இடங்களிற் காணப்படுகின்றன. அவற்றின் இரண்டு கம்பங்கள் வாயிலே சங்கிலிகளைக் கவ்விக் கொண்டிருக்கும் சிங்க வடிவங்களைத் தாங்கியுள்ளன. | பொன்னம்பலவாணேஸ்வரம் பிந்திய நாயக்கர் காலக்கலைப்பாணியில் அமைக்கப்பட்ட தனிக்கோயில்
வா
145-12
--11பா)
பா2. பொன்னம்பான
பொ - 1 - காதே
பி. சன் 5 25 துவாரகா
:) )
அ.
1ாக,
தல்பம்.
வட - த.
த ல 2ல் தேடு
2 , 12ம் :)

Page 20
அதன் கட்டுமாண முறையும் உலோகப்படிமங்களும் வனப்பு மிக்கவை. சைவாசார முறைப்படி நாள் வழிபாடுகளும் உற்சவங்களும் நடைபெறுகின்ற கோயில் அதன் பரிபாலன முறையும் முன்னுதாரணமானது. அது கோயிற் கட்டுமாண முறையினையும் வெண்கல வார்ப்புச் சிற்பங்களையும் சுற்றுலாப் பயணிகளுக்கும் தரிசிக்க வேண்டிய தலம்.
கல்வெட்டு பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலின் கோபுர வாசலின் அடித்தளத்தில் இடப்பக்கத்திலே இரு சாசனங்கள் பதிக்கப்பட்டுள்ளன. அவற்றிலொன்று கல்வெட்டு மற்றது செப்பேடு இலங்கையிலே கிடைக்கின்றன தமிழ் சாசனங்களில் காலத்தால் மிகவும் பிற்பட்ட நீளமான கோயிற் சாசனங்களில் இவை முதன்மையானவை. அவற்றின் மொழி நடையும் எழுத்தமைதிகளும் நவீன காலத்தவை. சுமார் நூறு வருடங்களுக்கு முன் நிலவிய இலக்கிய நடையில் அவை எழுதப்பட்டுள்ளன. இலங்கையிலே தமிழ் மொழி அடைந்த வளர்ச்சியின் ஒரு காலக்கட்டத்துக்குரிய பண்புகளைப் பிரதிபலிப்பவை என்ற வகையில்
அவற்றுக்கொரு சிறப்புண்டு.
கோயில்களோடு தொடர்புடைய தமிழ் சாசன மரபுகளைத் தெரிந்தவர்களால் தொன்று தொட்டு வந்த வழமைப்படி இவை எழுதி வைக்கப்பட்டுள்ளமை அவற்றின் மற்றுமொரு சிறப்பம்சமாகும். இலங்கையிலே கல்விமான்களிடையிலும் கவிஞர்களிடையிலும் கோயிற் சாசனங்கள் பற்றிய சிந்தனைகளும் உணர்வுகளும் ஏற்பட்டிருக்காத ஒரு காலத்தில் கோயில்கள் தொடர்பான வழமை ஒன்றினைப் பற்றி இக்கல்வெட்டினை எழுதுவித்தவர்கள் அறிந்திருந்தமை குறிப்பிடற்குரியது. தமிழகத்துக் கோயில்களை நேரிலே கண்டு அங்குள்ள கல்வெட்டுகளின் தாரதம்மியங்களைப் புரிந்து கொண்டமையே இதற்கான காரணமாகலாம். பொன்னம்பல முதலியாரும் அவரது புதல்வர்களும்

* பெE-: பார்ப்பார்ப்பார்
பா.
அத்தகைய அனுபவத்தைப் பெறும் வாய்ப்பினைப் பெற்றவர்கள் பொன்னம்பல முதலியாரின் மக்களான குமாரசுவாமி இராமநாதன் அருணாசலம் ஆகிய மூவரும் சென்னையில் உயர் கல்வி பெற்றவர்கள் அங்கிருக்குங்காலத்திலே தற்பாரானந்த சுவாமிகளிடம் சமய ஞானம் பற்றி அறிந்து கொண்டவர்கள் என்பதும்
குறிப்பிடற்குரியது.
இக்கல்வெட்டிற் பொன்னம்பல முதலியாரைப்பற்றியும் அவர் கும்பாபிஷேகம் நடத்தியமை பற்றியும் சொல்லப்படுகின்றது. பொன்னம்பல முதலியாரைப் பற்றிய குறிப்புப் புகழுரையாகவே அமைந்துள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு பற்றிய அம்சங்கள் எதுவுங்காணப்படவில்லை. அவரின் பெற்றோரின் பெயர்களோ அவரின் தொழில் சார் முயற்சிகளோ குறிப்பிடப்படவில்லை. அவர் பிறந்த நாளையும் கல்வெட்டு வாசகத்தை எழுதியவர்கள் குறிப்பிடத்தவறி விட்டனர். பொன்னம்பல முதலியாருக்கும் பொன்னம்பலவாணேஸ்வரத்தின் நிர்மாணத்திற்கும் இடையிலான தொடர்பு மறைமுகமாகவே உணர்த்தப்படுகின்றது. பொன்னம்பல முதலியாரே கோயிலின் நிர்மாணகாரர் என்பதை நேரடியாகக் குறிப்பிடத்தவறி விட்டனர். எனவே பொன்னம்பல முதலியாரின் வாழ்க்கைச் சரிதம் பற்றிய விபரங்களை இதிலே காண முடியவில்லை. கல்வெட்டின் வாசகத்தைச் செய்யுள் வடிவில் அமைத்தவர்கள் சொல்லலங் காரங்களைப் புனைவதிலே தங்கள் திறமையினை வெளிப்படுத்த முற்பட்டவர்களே தவிர வரலாற்று அம்சங்களைப் புறக்கணித்து விட்டனர். தமிழ்ச்சாசன வழக்கிலுள்ள மெய்க்கீர்த்தி வடிவங்களையும் அவர்கள் அறிந்திருப்பதாகத் தெரியவில்லை.
கல்வெட்டு கும்பாபிஷேகம் பற்றிய குறிப்பாகவே அமைகின்றது. முதலாவது கும்பாபிஷேகம் பற்றிய விபரங்கள் பஞ்சாங்க முறைப்படி சொல்லப்படுகின்றன. ஆண்டு, மாதம், திகதி, நட்சத்திரம், இராசி என்பன

Page 21
கலைக்கேசரி
20
செல்
ஓம் நமசிவாய
தெளிவாகச் சொல்லப்படுகின்றன. அது சாலிவாகன வருஷம் 1780 ஆம் ஆண்டாகிய பிங்கள வருஷத்திலே கார்த்திகை மாதம் திருவோண நட்சத்திரத்திலே தனுராசி வேளையில் நடைபெற்றதென்று சொல்லப்படுகின்றது பக்கமும் நாளின் பெயருங் குறிப்பிடவில்லை.
ஆயினும் இந்தக்குறை செப்பேட்டு வாசகத்தின் குறிப்பினால் நிவர்த்தியாகின்றது.
இச்சாசனம் ஒரு கருமை நிறமான, நீள்சதுர வடிமான கற் பலகையில் எழுதப்பட்டுள்ளது. அது கோயில் பற்றிய திருப்பணிகள் முடிவடைந்து, வழிபாடுகளை நடத்து வதற்கு வேண்டிய கும்பாபிஷேகத்தின் நினைவுச் சின்னமாக அமைக்கப்பட்டதெனக் கருதலாம். இச்சசாசன வாசகத்தின்படி கி.பி 1857 க்குச் சமமான சாலிவாகன சகாப்தம் 1880 ஆம் வருடம், கார்த்திகை மாதம் ஆறாந் (6) திகதி நடைபெற்றது. சாசனத்திலுள்ள எழுத்துகள் சிலவற்றிலே புள்ளி அமைந்திருக்கின்றது. இது எழுத்து
முறையில், இலங்கையில் ஆறுமுக நாவலர் காலத்தில் வழமையாகிவிட்டது.
உபயகாரர்
சகாப்தம்
வருடம்
மாதம்
பொன்னம்பல முதலியார்
1780 (கி.பி.1857)/ 1796 (கி.பி.1873)
பிங்கள வருடம்/ ஸ்ரீமுக வருடம்
கார்த்திை
வைகாசி
குமாரசாமி முதலியார்
1804 (கி.பி.1882)
விஷ வருடம்
பங்குனி

ச
பொன்னம்பல முதலியார் அமைத்த கோயில் செங்கல் வேலைப்பாடாகும். அதில் வைக்கப்பட்டிருந்த சாசனம் எழுதிய கற்பலகையினை பழைய கட்டடங்களை இடித்து கற்றளியினை உருவாக்கிய பின், அதன் கோபுர வாசலின் அடித்தளத்திலே அமைத்துள்ளனர் என்று கருதலாம்.
செப்பேடு கல்வெட்டுக் காணப்படும் இடத்தில் சற்றுக் கீழே செப்புத் தகடொன்று பதிக்கப்பட்டுள்ளது. அது நாற் சதுர வடிவமானது. அதன் தலைப்பாகத்தில், ஒன்றன் மேல் ஒன்றாய் அமைந்த இரண்டு நேர்கோடுகள் வெட்டப்பட் டுள்ளன. அவற்றின் மேல், ஓரங்களில், பிறை வடிவான, உள்ணோக்கிய இரட்டைக் கோடுகள் தெரிகின்றன. நடுவில் ஆவுடையாரில் அமைந்த இலிங்கமும் சிவகாமி அம்பாளின் வடிவமும் அமைந்துள்ளன. அம்பாளின் இடப்புறத்திலும் சிவலிங்கத்தின் வலப்புறத்திலும் கொடிகளின் உருவங்கள் காணப்படுகின்றன. அவற்றின் அருகே இரு பக்கங்களிலும் நந்தியின் உருவங்கள் உள்ளன. வழமை போலப் பிள்ளையார் சுழி இடப்பட்டு, அதன் கீழ் சிவாயநமஹ என்ற சொல் சமஸ்கிருத வடிவத்திலும் கிரந்த எழுத்துகளிலும் எழுதப்பட்டுள்ளது.
இச்செப்பேட்டின் தலையங்கம் ஸ்ரீமத் பொன்னம்பல வாணேசுரருக்கும் சிவகாமி அம்பாளுக்கும் கும்பாபிஷேகம் நடத்தின தினங்களின் விபரம் என்று இரு வரிகளில் எழுதப்பட்டுள்ளது.
செப்பேட்டிலே தலையங்கத்தைத் தவிர எல்லாமாகப் பன்னிரண்டு வரிகளிலும் நான்கு வசனங்களிலும் சாசனம் எழுதப்பட்டுள்ளன. மூன்று வசனங்கள் வெவ்வேறு காலங்களில் நடைபெற்ற கும்பாபிஷேக விபரங்களைக் குறிப்பிடுகின்றன. விபரங்கள் அவை நிகழ்ந்த காலங்கள் பற்றியவை, அவை பஞ்சாங்க முறைப்படி சொல்லப் படுகின்றன, முதலிரண்டு கும்பாபிஷேகங்களையும் பொன்னம்பல முதலியாரே நடத்தினார். மூன்றாவது கும்பாஷேகத்தை அவரது மூத்த மகனாகிய குமார சுவாமி முதலியார் நடத்தினார். சாசனத்திலுள்ள இறுதியான வசனம் பொன்னம்பல முதலியார் சிவபதம் அடைந்த காலம் பற்றியது. அது சாலிவாகன சகாப்தம் 1809 (கி.பி 1886) ஆகிய சர்வசித்தி வருடம் ஆவணி மாதம் 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உத்திராட்டாதி நட்சத்திரம் கூடிய
இரண்டாம் நாள் என்று சொல்லப்படுகின்றது.
கும்பாபிஷேக விபரங்களை வாசகர்கள் இலகுவிற் புரிந்து கொள்வதற்காக அவற்றை இங்கு கீழ் வருமாறு நிரல்படுத்தலாம்.
பூர்வபட்சம்
நட்ஷத்திரம்
இலக்கணம்
உத்தரம்
6 ஆம் திகதி திங்கட்கிழமை) 24 ஆம் திகதி புதன்கிழமை
திருவோணம்
தனு
சிங்கம்
17 ஆம் திகதி புதன்கிழமை
பூசம் இடபம்

Page 22
பொன்னம்பல முதலியார் சாலிவாகன சகாப்தம் 1809 (1887) இல் சிவபதப்பிராப்தியாயினார் என்று சொல்லப் படுவதால் இச்செப்பேட்டு வாசகம் அதன் பின்பு எழுதப் பட்டிருத்தல் வேண்டும். அது குமாரசுவாமி முதலியார் ஆலய பரிபாலகராக இருந்த காலத்தில் எழுதப் பட்டிருத்தல் வேண்டும். இராமநாதன் கோயிலைக் கற்றணியாகப் புனரமைத்த பின் நடத்திய கும்பாபிஷேகம் பற்றிய விபரங்கள் இந்த வாசகத்தில் இடம்பெறாதமை குறிப்பிடற்குரியது. ஆயினும், கோயில் பற்றிய முற்காலத்து நிகழ்ச்சிகளைப் பதிவு செய்கின்ற சாசனங்கள் இரண்டையும் புதிய கட்டுமாணத்து கோபுர வாசலிற் பதிப்பதற்கான ஏற்பாடுகளை இராமநாதன் செய்திருக்க வேண்டும்.
கல்வெட்டின் வாசகம் மெய்யாமை நீக்கினன் மேன்மை சால் உருத்திரன் அத்தப் மேர்மணி அணியெனக் கொள்பவன் மன்னர் மதித்து வாழ்த்து நன்மாட்சியன் பொன்னம்பலமெனப் புனைதன் பெயர் கொள் தென்னமுதாகுஞ் சிவகாமிபங்களைப் புறத்தும் போற்றி புகழக் கோயில் நூலுறச் சமைத்து நுண்மதி அந்தணர் தங்கள் சார்பால் இருபான் தவிர்ந்த ஈரொன்பான் நூற்றிச் சாலியவாகன சகாப்தம் பிங்கள் சம்வத்சரம் கார்த்தியை ஓணநாள் காரவில் ஓரையில் -
கும்பாபிஷேகங்குளிர அம்பார் மகிழ ஆற்றியுய்ந்தனனே செப்பேட்டின் வாசகம் 1. ஸ்ரீமத் பொன்னம்பல வாணே சுரருக்கும் சிவகாமி அம்பாளுக்கும்.
2. கும்பாபிஷேகம் நடந்த தினங்கள் விபரம்.

8 கலைக்கேசரி
21
3. சாலிவாகன சகாப்தம் 1780 ஆகிய பிங்கள் வருடம் கார்த்தியை மீ6 திகதி
4. திங்கட்கிழமை பூர்வபட்ச திருவோண நட்ஷத்திரம் தனு இலக்கினத்தில் ஸ்ரீமான் அ.பொன்னம்பல முதலியார்
அவர்களால் முதற் கும்பாபிஷேகம் நடத்தியது.
5. சாலிவாகன சகாப்தம் 1796 ஆகிய ஸ்ரீ முக வருடம் வைகாசி மா(தம்) 24 (ஆம்) தி(கதி)
6. பூர்வ பட்சம் உத்திர நட்ஷத்திரம் சிங்க இலக்கினத்தில் ஸ்ரீமான் பொன்னம் முதலியார் அவர்களால் இரண்டாவது
கும்பாபிஷேகம் நடத்தியது.
7. சாலிவாகன சகாப்தம் 1804 ஆகிய விஷ வருடம் பங்குனி மாதம் 17 ஆம் திகதி புதன்கிழமை.
8. பூர்வபட்சம் பூச நட்சத்திரம் இடம் இலக்கினத்தில் ஸ்ரீமான் பொ.குமார சுவாமி முதலியார் அவர்களால் மூன்றாவது கும்பாபிஷேகம் நடத்தியது.
09. சாலிவாகன சகாப்தம் 1809 ஆகிய சர்வசித்தி வருடம் ஆவணி மாதம்) 20 ஆ(ம்) திகதி ஞாயிற்றுக்கிழமை
11. உத்திராட்டாதி நட்சத்திரம் துதியை திதி ஸ்ரீமான் அ.பொன்னம்பல முதலியார் அவர்கள் சிவபதப் பிராப்தியாயினார். அடிக்குறிப்புகள் 1. பொன்னம்பலவாணேஸ்வரம் பற்றிய ஆய்வுபூர்வமான விரிவான கட்டுரை ஒன்றினை முதன்முதலாக எழுதியவர் பேராதனைப் பல்கழகத்துத் தமிழ்த் துறையிற் சிறப்புக்கலை மாணவராகப் பயின்ற V.மதுராந்தகி அது பொன்னம்பலவாணேசர் ஆலயம் - ஓர் ஆய்வு என்ற தலைப்பில் எழுதப் பட்டது. சிறப்புக்கலை இறுதி வருடப் பரீட்சைக்காகச் சமர்ப்பிக்கப்பட்டது. (1999/2000). அந்தக் கட்டுரையினை ஆதாரமாகக் கொண்டு, சில வேண்டிய மாற்றங்களோடு ஓர் கட்டுரையினை ஆங்கிலத்தில் எழுதி அவரின் பெயரால் நூலொன்றில் வெளியிட்டோம். V.Mathuranthaki Ponnampalavanesvaram Hindu Temple of Srilanka, Kumaran Book House, Colombo, 2006, Ph.374399.

Page 23
கலைக்கேசரி ) 22 நூற்றாண்டு பழைமை
சிங்கப்பூர் இலங்கைத்
தமிழ்ச் சங்கம்
இன்றைய உலகில் பிரசித்தி பெற்ற நகரங்களில் சிங்கப்பூர் மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. அது மாத்திரமல்லாமல் சிங்கப்பூரின் தனிநபர் வருமானம் உலக நாடுகளில் மூன்றாவது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. வணிக மற்றும் சுற்றுலாச் செல்வாக்கு நிறைந்த சிங்கப்பூர் தென்கிழக்காசியாவில் உள்ள நகர மயமாக்கப்பட்ட ஒரு தீவாகும். 1819 ஆம் ஆண்டு பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் சிங்கப்பூரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. ஆனாலும் 1824 ஆம் ஆண்டில் பிரித்தானியாவின் நேரடி ஆட்சியின் கீழ் சிங்கப்பூர் கொண்டு வரப்பட்டதுடன் 1826 ஆம் ஆண்டில் தென்கிழக்காசியாவின் பிரித்தானிய குடியேற்ற நாடாக அது அறிவிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் சில காலம் ஜப்பானியர்களின் ஆக்கிரமிப்பில் இருந்த சிங்கப்பூர் மீண்டும் 1945 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்தது. 1963 ஆம் ஆண்டு ஏனைய பிரித்தானியக் குடியேற்றப் பகுதிகள் மற்றும் மலேசியா ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டதுடன் பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. ஆனால் 1965 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி மலேசியாவில் இருந்து பிரிந்து தனிக் குடியரசு நாடாக உருவானது. ஆரம்ப காலங்களில் சிங்கப்பூருடன் இணைந்திருந்த மலேசியாவானது தற்போது தென்கிழக்கு ஆசியாவில் உள்ள முடியாட்சியும் கூட்டாட்சியும் இடம்பெறும் ஒரு நாடாகும்.
காலனித்துவ காலப் பகுதியான 1800 களில் பிரித்தானிய அரசால் தொழிற்துறை காரணமாக தமிழர்கள் பலர் பிம்நாட்டில் இருந்தும் இலங்கையில் இருந்தும் அங்கு வரவழைக்கப்பட்டார்கள். சிங்கப்பூர் சனத்தொகையில் கணிசமான அளவு பங்கு வகிக்கும் தமிழர்கள்,

அந்நாட்டின் மொத்த சனத்தொகையில் சிறுபான்மை இனமாக இருப்பதால் அங்கு தமிழ் அரசகரும மொழி
அந்தஸ்தைப் பெற்றுள்ளது. அந்நாட்டு சனத்தொகையில் பெரும்பான்மையான மக்கள் சீனர்கள் ஆவார்கள். ஆங்கிலம், சீனம், மலாய் மொழி, தமிழ் மொழி ஆகியன அந்நாட்டின் அரச அங்கீகாரம் பெற்ற மொழிகள் ஆகும். இவ்வாறு சிறப்புப் பெற்ற சிங்கப்பூர் நாட்டில் 'சிங்கப்பூர் இலங்கைத் தமிழ்ச் சங்கம்' நூற்றாண்டைக் கடந்து சிறப்பாக இயங்கிக் கொண்டிருப்பது பெருமையே. வரலாறுகளில் அதன் செயற்பாடு 1900 களில் ஆரம்பமாகிறது. சிங்கப்பூரில் திறமை மிக்க தமிழ் இனத்தின் வரலாறு நூறு ஆண்டுகளைக் கடந்தது என்பது சிறப்பானதாகும். ஆகவே அச்சங்கம் தொடர்பான வரலாற்றுப் பதிவாக இக்கட்டுரை அமைகிறது.
இலங்கைக் தமிழரின் வாழ்வியலுடன் மிகவும் நெருக்கமாக பிணைந்திருக்கும் மரமே பனை மரமாகும். குறிப்பாக யாழ்ப்பாணத்து மக்களுடைய வாழ்வியலுடனும் சமையல் முறையுடனும் பனைக்கு

Page 24
பிரிக்க முடியாத உறவு உண்டு. பனை மரத்தின் அடி முதல் நுனி வரை அதன் அம்சங்கள் மக்கள் வாழ்வியலுக்குப் பயன்படுவதால் அதை 'கற்பகதரு' என அழைக்கிறார்கள். அவ்வாறு சிறப்புப் பெற்ற பனைக்கும் சிங்கப்பூர், மலேசியாவில் உயர்ந்த பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றை வளர்த்த தமிழர்களுக்கும் மிக நெருக்கமான பிணைப்பு உண்டு. நூற்றாண்டு காலமாக அத்தமிழர்கள் அங்கு நிலைநாட்டிய வெற்றிகள், திறமைகள் முதலியவை இன்று ஆதாரங்கள் ஊடாக நிரூபிக்கப்பட்டுள்ளன. இப்பொழுது மிகவும் அபிவிருத்தி அடைந்த நாடாக விளங்கும் சிங்கப்பூர் இலங்கைத் தமிழர்கள் பலருடைய 'தாயகம்' என அழைக்கப்படுகிறது. ஆனால் அது முன்னர் காடாகவே இருந்தது. சிங்கப்பூரில் உள்ள தமிழர்கள் குறைந்த எண்ணிக்கையாக இருந்தாலும் அவர்கள் அந்த தேசத்துக்கு வழங்கிய பங்களிப்பு மிகவும் அபரிமிதமானது. அந்நாட்டின் அபிவிருத்திக்காக அரசியல், வைத்தியம், சட்டம், கல்வி, கட்டமைப்பு முதலிய பிரதான துறைகளின் ஊடாக ஆண்கள், பெண்கள் அடங்கலாக ஆற்றல் மிக்க தமிழர்கள் பலர் தங்கள் பங்களிப்புக்களை வழங்கியுள்ளனர். சிங்கப்பூர் மலேசியாவின் உள்நாட்டுக் கட்டமைப்புக்களில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் மிகச் சிறந்த பங்களிப்புக் கிடைத்தமையை வரலாற்றுப் பதிவுகளில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. அக்குடும்ப அங்கத்தவர்கள் தங்கள் சுயநல் மற்ற சேவையால் தங்கள் இனத்திற்குப் பெருமை சேர்த்துக் கொடுத்தார்கள். சிங்கப்பூரில் தமிழர்கள் ஏன் குடியேறினார்கள்? என்ற கேள்விக்கு 'சிங்கப்பூரின் சிற்பி' என அழைக்கப்படும் Lee Kuan Yew அவர்கள் மற்றும் சிங்கப்பூரில் சிரேஷ்ட அமைச்சர் அந்தஸ்தைப் பெற்றவரான சின்னத்தம்பி இராஜரட்ணம் அவர்கள் ஆகியோருடைய கருத்துக்கள் மிக முக்கியமானவையாகக் கருதப் படுகின்றன.

" கலைக்கேசரி
-கர்.
23
6 Q 2 )
'சிங்கப்பூரின் சிற்பி' என அழைக்கப்படும் Lee Kuan Yew என்பவர் தனது LEE KUAN YEA - The Man and His Ideas - 1999 (பக்கம் 338) என்னும் நூலில் பின்வருமாறு கூறுகிறார். 'நீங்கள் பழைய பிலிப்பைன்ஸைப் பாருங்கள். பழைய இலங்கையைப் பாருங்கள். பழைய கிழக்குப் பாகிஸ்தான் மற்றும் இன்னும் பலவற்றைப் பாருங்கள். நான் அந்நாடுகளுக்கும் அவ்விடங்களுக்கும் சென்றிருக்கிறேன். நான் முதன் முறையாக 1956 இல் கொழும்புக்குச் சென்றபோது, சிங்கப்பூரிலும் பார்க்க கொழும்பு சிறந்த நகரமாக இருந்தது. ஏனெனில் சிங்கப்பூர் 31/2 வருடங்களாக ஜப்பானியர்களின் ஆக்கிரமிப்பில் இருந்தது. ஆனால் கொழும்பு மெளவுண்ட்பேட்டன்ஸ் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அவர்களிடம் பண இருப்பு செழித்து நிறைந்திருந்தது. அவர்களிடம் இரண்டு சர்வகலாசாலைகள் இருந்தன. போருக்கு முன்னரும் கல்விமான்கள் பலர் இருந்தனர். ஒரு மனிதனுக்கு ஒரு வாக்கு என்ற அடிப்படையில் சுறுசுறுப்பும் விவேகமும் நிறைந்த கடின உழைப்பாளிகளான தமிழர்கள் மீது பெரும்பான்மையின சிங்கள மக்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள். ஆங்கிலத்தைப் புறந்ததள்ளி சிங்களத்தைப் புகுத்தினார்கள். அங்கிருந்த இரண்டு சர்வ கலாசாலைகளிலும் தமிழர்களை ஒதுக்கியதுடன் சிங்களவர்களை அனுமதித்தார்கள். மேலும் சிங்களப் பெரும்பான்மையானது திறமை மிக்க யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு இடம் கொடுக்கவில்லை' எனவும் தனது நூலில் குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சராக இருந்த சின்னத்தம்பி இராஜரட்ணம் அவர்கள் 1985 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி இடம்பெற்ற சிங்கப்பூர் இலங்கைத் தமிழ்ச் சங்கத்தின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் இவ்வாறு குறிப்பிட்டார். 'அடுத்த 75 ஆண்டுகளில் எமது எதிர்காலம் என்ன? கடந்த

Page 25
கலைக்க்ேசரி து
24
நூற்றாண்டின் நடுப்பகுதியில் (1850 களில்) சிங்கப்பூருக்கு குடியேறியவர்களான சிங்கப்பூர் இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம் நிச்சயமானதாக இருந்தது. தங்கள் முன்னோர்களின் இடங்களில் வாழ வேண்டும் என நினைத்தவர்களின் வாழ்க்கை துயரம் மிக்கதாகவும் நிச்சயமற்றதாகவும் இருந்தது. சிங்கப்பூரில் உள்ள தமிழர்கள் இலங்கையில் உள்ள பிரச்சினைகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். அங்கு இன, மொழி, பண்பாடு, சமய முரண்பாடுகள் மற்றும் கலவரங்கள் தலைதூக்கியுள்ளன. மேற்கூறப்பட்ட விடயங்கள் சற்று பிந்திய காலத்துடன் தொடர்புபட்டதுடன் சோழர் காலம் தொடக்கம் (கி.பி. 846 1279) மலேசிய மண்ணில் தமிழர் கால் பதிந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
'ஒரே மக்கள், ஒரே நாடு' என்ற குறிக்கோளுடன் இன, மதம், பண்பாடு, பாரம்பரியம் முதலியவற்றால் ஒன்றிணைந்து ஒற்றுமையாக பல இனங்கள் சிங்கப்பூரில் வாழ்கின்றன. உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் சிங்கப்பூர் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கின்றது. அத்தேசத்தின் வரலாற்றில் தமிழர்களுக்கு முக்கியமான ஒரு இடம் உள்ளன. குறைந்த எண்ணிக்கையானவர்களாக இருந்தாலும் அவர்கள் தங்களின் அளவற்ற திறமையால் தனி இடம் பெற்றவர்கள். பல நூற்றாண்டுகளாக அத்தமிழர்கள் மிகவும் சுதந்திரமாக வாழ்ந்த பூமிதான் சிங்கப்பூர். அங்கு அவர்கள் குடியேறியமைக்குப் பல கதைகள் உண்டு. அங்குள்ள தமிழர்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்றும், அவர்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவ அரச நாட்டு மக்கள் என்ற கருத்தும் உள்ளது. 1700 களில் தென்னிந்தியாவின் செட்டிமார் குடும்பங்களைச் சேர்ந்த பலர் அங்கு குடியேறினார்கள் என்பதும் குறிப்பிடப்படும் இன்னுமொரு விடயமாகும்.
இலங்கையில் இருந்து சிங்கப்பூர் மலேசியாவிற்கு 1800 களில் தமிழ்க் குடும்பங்கள் குடியேறத் தொடங்கின. 1786 ஆம் ஆண்டு பினாங்குத் தீவு ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்ட பின்னர் அங்கு தமிழர்களின் பாரிய குடியேற்றங்கள் ஏற்பட்டன. மலேசியக் குடியேற்ற வரலாற்றில் அந்நாட்டை வளப்படுத்தும் பொருட்டு நான்கு கட்டங்களாக அண்டை நாடுகளில் இருந்து மக்கள் குடியேற்றங்கள் தொடர்ச்சியாக
வா

இடம்பெற்றுள்ளதாக
வரலாற்று
ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மலேசியாவின் கரும்புத் தோட்டங்களிலும், பொதுப் பணித் துறைகளிலும் பணியாற்றும் பொருட்டு குடியேற்றப்பட்ட தொழிலாளர்கள் முதலாவது கட்டக் குடியேற்றத்துக்குள் அடங்குகின்றனர். இந்தியாவிலிருந்து தமிழர்கள் இலங்கையின் மலையகத்திற்கு அழைத்து வரப்பட்டது போன்று கங்காணி முறையில் தமிழ் நாட்டுக் கிராமங்களில் இருந்து தொழிலாளர்களைத் திரட்டி அதன் மூலம் வேலைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் இரண்டாம் கட்ட குடியேற்றத்துக்குள் அடங்குகின்றனர். இந்தியாவில் அக்கால கட்டத்தில் நிலவிய ஜமீன் அடக்கு முறை, கொத்தடிமை, சாதிக் கொடுமை முதலியவற்றால் பாதிக்கப்பட்ட இந்திய ஏழைத் தொழிலாளர்களுக்கு இத்தொழில்சார் புலப்பெயர்வு மிகுந்த எதிர்ப்பார்ப்பைக் கொடுத்தது. அதன்பொருட்டே அக்காலத்தில் இந்தியாவின் நாகபட்டினத்துறை மிகவும் பிரபல்யம் பெற்றிருந்தது.
மலேசிய மண் மிகவும் வளம் பெற்றிருந்தது. வர்த்தகம் பெருகிய காலகட்டத்தில் செட்டியார்கள், முஸ்லிம் வணிகர்கள், சீக்கியர்கள், இந்திக்காரர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள் முதலிய பிரிவினரும் பின்னர் ஆங்கிலம் கற்றிருந்த இலங்கைத் தமிழர்களும் அங்கு குடியேறினார்கள். இவ்வாறு தங்கள் தொழில் முயற்சிகளுக்காக மலேசியாவுக்கு வந்தவர்கள் மூன்றாம் கட்ட குடியேற்றத்துக்குள் அடங்குகின்றனர். இலங்கைத் தமிழர்களில் பெரும்பான்மையாக யாழ்ப்பாணத் தமிழர்களே இங்கு ஆங்கிலேயர்களால் குடியேற்றப் பட்டனர். குறிப்பாக வண்ணார் பண்ணை, சுழிபுரம், வயாவிளான், புலோலி, வட்டுக்கோட்டை போன்ற பிரதேசங்களிலிருந்து பெருமளவிலானவர்கள் தபால், கச்சேரி, கல்வி, போக்குவரத்து, மருத்துவம் போன்ற அரசாங்க சேவைகளில் இடைநிலை ஊழியர்களாகப் பணியாற்றும் பொருட்டு குடியேற்றப்பட்டார்கள். அத்துடன் இந்தியத் தொழிலாளர்களுக்கும் ஆங்கிலத் துரைமார்களுக்கும் இடையில் மொழி இணைப்பாளர்களாகவும் இவர்கள் பணியாற்றியதாக வரலாறு உண்டு. மொழியால் தமிழராக இருந்த போதிலும்

Page 26
1
மலேசியாவில் குடியேறிய இந்தியத் தமிழ் தொழிலாளர்கள் மத்தியில் யாழ்ப்பாணத் தமிழர்கள் குட்டி அடக்குமுறையாளர்களாகவும் ஆங்கிலத்துரைகளின் செல்வாக்கைப் பெறும் நோக்கில் அவர்களின் நலன் பேணுபவர்களாகவும் விளங்கினார்கள்.
அண்டை நாட்டு மக்களின் மலேசியக் குடியேற்றங்களில் நான்காவது கட்டமானது 1802 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் தமிழ்நாட்டில் போர்க் கைதிகளாகச் சிறைப் பிடிக்கப்பட்ட தமிழர்கள் பினாங்கு தீவை வளப்படுத்தும் நோக்கத்துடன் நாடு கடத்தப்பட்டபோது ஏற்பட்டது என கர்னல் வெல்சின் 'இராணுவ நினைவுகள்' என்ற நூலினை ஆதாரம் காட்டி மலேசிய எழுத்தாளர் பீர்.முகம்மது அவர்கள் குறிப்பிடுகின்றார். மருதுபாண்டியரின் மகனான துரைசாமி 73 கைதிகளுடன் பினாங்கு தீவுக்கு நாடு கடத்தப்பட்ட விபரங்கள் அதில் காணப்படுவதாக அவர் மேலும் குறிப்பிடுகின்றார். 1921 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின் பிரகாரம் அங்கு குடியேறிய தென்னிந்தியர்களில் 387,509 பேர் தமிழர்கள், 39986 பேர் தெலுங்கர்கள், 17790 பேர் மலையாளிகள் ஆவார்கள். தோட்டப்புறங்களிலும் மற்றும் புகையிரதத் திணைக்களம், மின்சாரம், நீர் விநியோம் முதலிய உட்கட்டமைப்புத்துறைகளிலும் தமிழர்கள் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டார்கள். இங்கு ஆங்கில வழி கல்வி கற்ற யாழ்ப்பாணத் தமிழர்களும், மலையாளிகளும் அதிகாரிகளாகப் பணியாற்றும் நிலை ஏற்பட்டது.
1887 ஆம் ஆண்டு சிங்கப்பூர் ஒரு குடியேற்ற நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. அவ்வேளையில் சிங்கப்பூர் அரசு இலங்கை அரசாங்கத்திடம் ஒரு வேண்டுகோள் விடுத்தது. சிங்கப்பூருக்கு அண்மையில் உள்ள பிரதானமான நாடாக இலங்கை இருப்பதால் எமக்கு அங்கிருந்து அனுபவம் மிக்க உத்தியோகத்தர்களை அனுப்ப வேண்டும் என்பதே அந்த வேண்டுகோள் ஆகும். அவ்வேண்டுகோளுக்கு மதிப்பளித்த இலங்கை அரசு இலங்கையில் இருந்து முதன் முதலாக J.W.W.Birch என்ற

4பல்
25
மூத்த சிவில் அதிகாரியை அங்கு அனுப்பியது. அதனைத் தொடர்ந்து பல திணைக்களத் தலைவர்கள் அங்கு அனுப்பப்பட்டார்கள். அவர்களில் பெரும்பான்மையான தமிழர்கள் அங்கு சென்றடைந்தார்கள். முதல் நிலை அதிகாரிகளைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட அதிகாரிகள் அங்கு அனுப்பப்பட்டார்கள். அதன் மூலம் சிங்கப்பூரில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோரால் சிபார்சு செய்யப்பட்ட பலர் அங்கு சென்றடைந்தார்கள்.
இலங்கைத் தமிழர்கள் மிகுந்த அபாயங்களை எதிர்கொண்டு ஆபத்துக்கள் நிறைந்ததும் கடினமானதுமான பாதையில் கடற்பயணங்களை துணிகரமாக மேற்கொண்டு சிங்கப்பூர், மலேசியா சென்றடைந்தார்கள். ஆரம்ப காலங்களில் நீராவிக் கப்பல்களோ விசைப்படகுகளோ அன்றி இயந்திரப் படகுகளோ இருக்கவில்லை. அவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள வல்வெட்டித்துறை, காங்கேசந்துறை, பருத்தித்துறை முதலிய இடங்களில் இருந்து 'சுருள் கப்பல்' அல்லது 'பாய்க்கப்பல்' ஆகியவற்றில் பல கடல் மைல்கள் பயணம் செய்து இந்தியாவின் வேதாரண்யம், நாகபட்டினம் முதலிய கடற்கரைத்துறைகளில் இறங்கினர். பின்னர் அங்கு பெருந்தொகையான தொழிலாளர்கள் ஒன்று கூடி நீராவிக் கப்பல்கள் மூலம் சிங்கப்பூர் மலேசியாவுக்கு பல நாட்கள் பயணம் மேற்கொண்டு அங்கு சென்றடைந்தார்கள். சிங்கப்பூர், மலேசியாவுக்கு பயணம் மேற் கொண்டவர்களில் சிலர் இந்தியாவின் பாம்பன்தீவுப் பாலம் ஊடாக கொழும்பு சென்று அங்கிருந்து பெனாங் துறையை அடைந்து சிங்கப்பூர் சென்றார்கள். அவர்கள் 5 ரூபாவைக் கட்டணமாகச் செலுத்தி கிட்டத்தட்ட 5 நாட்களுக்கு மேற்பட்ட தினங்களில் சிங்கப்பூரை அடைந்தார்கள். SS Lady Gordon, SS Lady Havelock, SS Ediatchy, SS Athaca முதலியன
அக்காலத்தில் பிரபலமான நீராவிக் கப்பல்கள் ஆகும்.
மேற்கூறப்பட்ட பயண வழித் தடத்தை விட இன்னுமொரு கடற்பயண வழியும் இருந்தது. வல்வெட்டித்துறை, காங்கேசந்துறை, பருத்தித்துறை

Page 27
கலைக்கேசரி து
க
26
முதலிய இடங்களில் இருந்து பாய்மரக் கப்பல்கள் மூலம் இந்தியாவின் சென்னைத்துறையை அடைந்து அங்கிருந்து மலேசியா சென்றடைவதே அப்பயண வழித்தடமாகும். அவ்வாறு பயணம் செய்வதற்கு நாகபட்டினம் சிங்கப்பூருக்கு ரூபா 16 உம் சென்னை சிங்கப்பூருக்கு ரூபா 18 உம் கட்டணமாக அறவிடப்பட்டதுடன் அப்பயணத்திற்கு கிட்டத்தட்ட 9 நாட்கள் தேவைப் பட்டன. பிரயாணங்கள் ஆபத்து நிறைந்தனவாகவும் மிகவும் கடினமாகவும் இருந்த அக்காலங்களில் தங்கள் உயிர்களைப் பணயம் வைத்து தொழிலுக்காக அவர்கள் பயணித்தார்கள். காலநிலை மிகவும் சீராக இருக்கும் வேளைகளில் அவர்கள் சில நாட்களில் தங்கள் பயண இலக்கை அடைந்தார்கள். ஆனால் காலநிலை அவர்களுக்கு கைகொடுக்காத காலங்களில் ஆபத்தான பயணங்களில் அவர்கள் சிக்கித் தவித்தார்கள்.
சிங்கப்பூர் மலேசியாவில் ஆரம்ப காலங்களில் மிகச் சிறிய - தூர அளவிலான
புகையிரதப்பாதையே காணப்பட்டது. அதிகளவான பிரயாணங்களுக்கு வண்டில்களே பயன்பட்டன. 1885 - 1894 காலப்பகுதியில் இரண்டு மின்சார ட்ராம்கள் சேவையில் இருந்தன. இதேவேளை 1891 ஆம் ஆண்டு அங்கு புகையிரதப்பாதை கட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. அவ்வேளையில் சிங்கப்பூர் புகையிரத சேவை 'யாழ்ப்பாண ரெயில்வே' என்றே அழைக்கப்பட்டது. காரணம் என்னவெனில் அங்கிருந்த புகையிரத நிலைய அதிபர்கள் அனைவரும் யாழ்ப்பாணத்தவர்கள் ஆவார்கள். 1896 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் பிரகாரம் புகையிரத சேவையில் கடமையாற்றியவர்களில் 90 வீதமானவர்கள் இலங்கையவர்களாகவும், அதில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்களாகவும் இருந்தனர். சிங்கப்பூர் வரலாற்றில் தமிழர்களுடைய முதல் வரவு 1870 ஆம் ஆண்டு என எழுத்து மூலமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான காரணங்களால் சிங்கப்பூர் 'குட்டி யாழ்ப்பாணம்' எனச் சிறப்பாக அழைக்கப்பட்டது.
சிங்கப்பூர், மலேசியாவின் அபிவிருத்தியிலும் உள்நாட்டுக்
பா. கட்டமைப்பிலும் மிகுந்த செல்வாக்குச் செலுத்திய இனமாக தமிழர் கருதப் படுகிறார்கள். அவர்கள் பல நூற்றாண்டுகளைக் கடந்தும் தமிழர் வாழ்வியல், கலை, கலாசார, பாரம்பரியம், பண்பாடு, பழக்க வழக்கம் முதலியவற்றையே பின் பற்றுகிறார்கள். அவர்கள்
அந்நாட்டின் பல்துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.- மலேசிய மண்ணில் மலர்ந்த கவிஞர்களில் சிரேஷ்ட முதுபெரும்

PHதான் ராசா மாற்றுப்பாயொருவப!
FFEாராஈ 15114பாட்டிப் ப4ா-பப்பர்ய யக்ரமபாகும் எக்கார் -1-11]::ாப்பா பாப்பநாயகமபப4புத்டயபுரம் மகம் 5
-Ta/பாபா
اروادة وعاد لبناء فرع له وماوات وع
ஈn 711-11-11-1!-E-4-2-22:41
மலேசியக் கவிஞர் ந.பழநிவேலு இயற்றிய 'கவிதை மலர்கள்' (1947) என்ற நூலில் 'சித்தப் போக்கு' என்னும் தலைப்பில் வரும் பாடல் அக்காலப் பாடு பொருளின் பட்டியலாகவே விளங்குகின்றது.
அயலான் ஒருவன் என்னை 'அடிமை இந்தியனே' என்று அழைக்கும் பொழுதும் அதே அடிமை இந்தியன் என்னைத் 'தாழ்ந்த குலத்தான்' என்று சாற்றும் பொழுதும் அடிமையின் பயங்கர தளையைக் காணும் பொழுதும் ... என் மனம் துடிக்கிறது! மலேசியாவில் தமிழ் மொழிக் கல்வி 1816 ஆம் ஆண்டில் முதன்முதலாக பினாங்கிலே ஆரம்பிக்கப் பட்டது. மலேசிய மண்ணில் பிறந்த முதலாவது தமிழ் நூல் பட்டியலான 1969 ஆம் ஆண்டு மலாயாப் பல்கலைக் கழகத்தின் நூலக வெளியீடாக இராமசுப்பையா அவர்கள் தொகுத்திருந்த தமிழ் மலேசியானா (Tamil Malaysiana: a checklist of Tamil Books and Periodicals published in Malaysia and Singapore) என்ற நூல் அமைகின்றது. இந்நூலில் 77 பக்கங்களில் 1968 வரை வெளியான 401 தமிழ் நூல்களின்
விபரங்களும் மலேசிய மண்ணில்
முளைவிட்ட 271 தமிழ் சஞ்சிகைகளின் பட்டியலும் காணப்படுகின்றன. மலேசிய நூல் வெளியீட்டு வரலாற்றுடன் சிங்கப்பூரில் வாழ்ந்த தமிழர்களின் பங்கு இரண்டறக் கலந்துள்ளமையை காணக் கூடியதாக உள்ளது. யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் இருந்து சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்த சி.ந.சதாசிவ பண்டிதர் 1887 ஆம் ஆண்டு வண்ணை அந்தாதி, வண்ணை நகர் ஊஞ்சல், சிங்கைநகர் அந்தாதி ஆகிய தலைப்புக்களில் மூன்று சிறு நூல்களை
1 2 ) LTT
- 1

Page 28
{
பையா
வெளியிட்டார். இந்நூல்கள் பற்றிய செய்தியை இராம். சுப்பையா தனது நூல் விபரப்பட்டியலில் பதிவு செய்துள்ளார். மலேசியாவில் வெளிவந்ததாகப் பதிவுபெற்ற முதல் தமிழ் நூல் இது என்று இன்று கருதப்படுகிறது.
இலங்கையிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் புலம் பெயர்ந்த தமிழர்களில் இலக்கிய தாகம் கொண்ட சிலரின் கூட்டு முயற்சியால் மலேசியாவின் முதல் தமிழ் சஞ்சிகையான 'தமிழ்நேசன்' பினாங்கில் இருந்து 1876 இல் வெளியிடப்பட்டுள்ளது (மா.இராமையா மலேசியத் தமிழ் வரலாற்றுக் களஞ்சியம்). மலேசிய மண்ணில் வெளியான மற்றொரு ஆரம்ப கால வெளியீடான யாழ். க.வேலுப்பிள்ளையின் 'சிங்கை முருகேசர் பேரில் பதிகம்' என்ற நூல் அடையாளம் காணப்படுகிறது. சிங்கப்பூரில் 1893 ஆம் ஆண்டில் வெளிவந்த இச்சிறுநூல் 16 பக்கங்களைக் கொண்டது. யாழ்ப்பாணம் வட்டுக் கோட்டை ஸ்ரீ வி.முருகேசபிள்ளை மற்றும் சிங்கப்பூரிலிருக்கும் நாட்டுக்கோட்டை செட்டிமார்கள் சிலரின் வேண்டிகோளின் பிரகாரம் யாழ். வயாவிளான் க.வேலுப்பிள்ளை என்பவரால் இயற்றப்பட்ட 'சிங்கை முருகேசர் பேரில் பதிகம்' நூல் வட்டுக்கோட்டை ச.பொன்னம்பலம் பிள்ளை அவர்களால் சிங்கப்பூரில் தீனோதய வேந்திரசாலையில் ஜனவரி 1893 ஆம் ஆண்டு
அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.
மலேசிய இலக்கிய வரலாற்றுடன் ஈழத்தவர்களின் பங்கும் இறுகப் பின்னிப் பிணைந்துள்ளது. 1910 ஆம் ஆண்டு 1920 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மலேசியா தனது முதலாவது நாவலை வெளியிட்டுள்ளது. குறிப்பிடப்பட்ட இக்காலக் கட்டத்தில் இரு நாவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தின் வெங்கடரத்தினம் அவர்கள் எழுதிய 'கருணாசாகரன்' அல்லது 'காதலின் மாட்சி' என்ற நாவல் 1917 ஆம் ஆண்டும், புலோலியூர் க.சுப்பிரமணியம் என்ற ஈழத்தமிழர் எழுதிய 'பாலசுந்தரம்' அல்லது 'சன்மார்க்க ஜெயம் ' என்ற நாவலின் இரண்டாம்

இ கலைக்கேசரி
தெரசன்
Rெ - TET:11
பாகம் 1918 ஆம் ஆண்டும் வெளியாகின. மலேசிய நாவல் இலக்கியத்தின் முன்னோடியாகக் கருதப்படும் இவ்இரண்டு நூல்களும் இரண்டு
பாகங்களைக் கொண்டமைந்திருந்தன. ஆனால் ஈழத்தவரான புலோலியூர் க.சுப்பிரமணியம் அவர்கள் எழுதிய நாவலின் இரண்டாம் பாகமே 1918 ஆம் ஆண்டு வெளியானது இங்கு குறிப்பிடத்தக்க ஓர் விடயமாகும். அந்நூலின் முதல் பாகம் பற்றிய எவ்விதமான ஆதாரபூர்வமான தகவல்களும் இல்லாத காராணத்தால் 1917 ஆண்டு வெளியிடப்பட்ட வெங்கடரத்தினம் அவர்கள் எழுதிய 'கருணாசாகரன் அல்லது காதலின் மாட்சி' என்னும் நாவல் மலேசிய மண்ணில் வெளிவந்த முதல் நாவலாக இன்றுவரை
வரலாற்றில் பதிவில் உள்ளது.
ஆனாலும் புலோலியூர் க.சுப்பிரமணியம் எழுதிய நாவலின் முதல் பாகம் ஆவணக் காப்பகங்கள் பேணும் எவரிடமாவது இருந்து கிடைக்கப் பெற்றால் மலேசிய நாவல் இலக்கிய வரலாறு மீளவும் திருத்தி எழுதப்பட
வாய்ப்பு உள்ளது.
(அடுத்த இதழிலும் தொடரும்)

Page 29
கார்க்க
28 பாபா
மொசொப்பதேமியா : மேற்கு
பண்டைய கிரேக்க மொழியில் 'மொசொப்பதேமியா (Mesopotamia) என்பதன் அர்த்தம் இரு நதிகளின் நடுவில் உள்ள நிலம் என்பதாகும். சிரிய மொழியில் ரைகிறிஸ்-யூபறட்ரிஸ் நதிப்பிரதேசம் 'நதிகளின் நிலம்' என்ற பெயரைக் கொண்டு விளங்குகின்றது. இந்நிலப்பகுதி இன்றைய ஈராக் தேசத்துடன் தொடர்புபட்டதாயும் சிரியாவின் வட கிழக்குப் பகுதியும் தென் கிழக்குத் துருக்கியின் ஒரு சிறு பகுதியும் மேற்கு ஈரானின் சிறிய பகுதியும் கொண்டு விளங்கியது.
மேற்குலக நாகரீகத்தின் தொட்டில் எனப்பெரிதும் கருதப்படும் வெண்கல கால மொசொப்பதேமியா தேசம் சுமெர் (Sumer), அக்காடியன் (Akkadion), பபிலோனியன் (Babylonion) மற்றும் அசிரியன் (Assyrian) இராச்சியங்களை உள்ளடக்கி இருந்தது. இவை அனைத்தும் நவீன ஈராக் தேசத்துடன் சேர்ந்தவையாகும். இரும்புக் காலத்தில் மொசொப்பதேமியார் நியோ அசிரியன்களின் ஆட்சியினாலும் புதிய (நியோ) பபிலோனியன்களின் ஆட்சியினாலும் கட்டுப்படுத்தப் பட்டிருந்தது.
எழுதப்பட்ட வரலாற்றின் ஆரம்பத்தில் இன்று (கி.மு.3100) கி.மு. 539 இல் பபிலோன் வீழ்ச்சி கண்ட காலம் வரை உள்ளூர் மக்களான சுமேரியர்களும் அக்காடியன்களும் (அசிரியன்கள் மற்றும் பபிலோனியன்கள் உட்பட) மொசொப்பதேமியாவில்
முன்னணியில் திகழ்ந்தார்கள்.
கி.மு. 332 இல் அது மகா அலெக்ஸாண்டரிடம் வீழ்ச்சி கண்டது. அவரது மறைவுக்குப் பின் கிரேக்க செலுசிட் இராச்சியத்தின் ஒரு பகுதியானது.
கி.மு.150 ஆம் ஆண்டளவில் மொசொப்பதேமியா, பாதியன்களின் (Parthions) கட்டுப்பாட்டிற்குக் கீழ் வந்தது. ரோமானியாவுக்கும் பாதியன்களுக்கும் இடையில் போர்க்களமானது - மொசொப்பதேமியா. அத்துடன் மொசொப்பத்தேமியாவின் சில பகுதிகள் ரோமானியர்களின் கட்டுப்பாட்டில் வந்தது. கி.பி. 226 ஆம் ஆண்டில் அது சஸ்ஸநித் பாரசீகர்களின் கைகளில் வீழ்ந்து சஸ்ஸநித் இராச்சியம் 7 ஆம் நூற்றாண்டில் அராபிய
[3ெ)

தலக நாகரீகத்தின் தொட்டில்
இஸ்லாமியர்களினால் கைப்பற்றப்படும்
வரை, பாரசீகர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.
பண்டைய மொசொப்பதேமியாவின் வரலாறு கி.மு (5300) உபெய்ட் (Ubaid) காலத்தின் போது தலையெடுத்த நகர சமுதாயங்களுடன் ஆரம்பமாகியது. பண்டைய மற்றும் அண்மைய கிழக்கு நாடுகளின் வரலாறு போலோலிதிக் காலகட்டத்தில் ஆரம்பமாகி, கி.மு. 6ஆம் நூற்றாண்டின் பின்னைய காலத்தில் அஷேமெனிட் ஆட்சி வருவதுடன் முற்றுப்பெறுகிறது. அல்லது மொசொப்பதேமியாவை அரபு இஸ்லாமியர் கைப்பற்றி கி.பி. 7 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கலிபேற்

Page 30
ஆரம்பிக்கப்படுகின்ற காலக்கட்டத்தில் இப்பகுதி ஈராக் என அழைக்கப்பட்டது. | மொசொப்பதேமியாவில் உலகின் மிகப் பழைமையான உயர் அபிவிருத்தி கண்டதும் சமூக ரீதியில் சிக்கல் கொண்டதுமான ராஜ்யங்கள் உள்ளடங்கி இருந்தன. எகிப் தில் உள்ள நைல் நதிப் பள்ளத்தாக்கு, சிந்துவெளி, சீனாவின் மஞ்சள் நதிப்பள்ளத்தாக்கு ஆகியவற்றுடன் எழுத்து கண்டுபிடிக்கப்பட்ட நான்கு நதிப்பள்ளத்தாக்கு நாகரிகங்களில் இப்பிராந்தியமும் ஒன்றாகும்.
மொசொப்பதேமியாவில் உறுக் (Uruk), நிப்புர் (Nippur), நினெவெ (Nineveh), அஸ்ஸுர் (Assur) மற்றும் பபிலோன் என வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களும் மற்றும் பிரதான பிரதேச ராஜ்யங்களும் அடங்கியிருந்தன.
பண்டைக் காலத்தில் மெசொப்பதேமியாவில் எழுதப் பட்ட மொழி சுமேரியன் மொழியாகும். அக்காடியன் மற்றும் அஸிரியன் இராச்சியங்களின் போது அக்காடியன் மொழி பேசப்பட்டது. இருப்பினும் நிர்வாகம், சமயம், இலக்கியம், விஞ்ஞானம் ஆகிய துறைகளின் நோக்கங்களுக்கு சுமேரிய மொழி உபயோகிக்கப்பட்டது. பிற்பட்ட காலங்களில் பல்வேறு வகையில் அக்காடியன் மொழியும் அராமக் மொழியும் பேசப்பட்டன.
மொசொப்பதேமிய வரலாற்றின் ஆரம்ப காலத்தில் (கி.மு. நான்காம் மில்லேனியத்தின் நடுப்பகுதி அளவில்) எழுத்துமுறை கண்டு பிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
கி.மு. மூன்றாம் மில்லேனியத்தின் (Millennium ஆயிரம் ஆண்டுகள்) போது சுமேரிய, அக்காடிய மக்களுக் இடையில் நெருங்கிய கலாசாரம் தொடர்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இரு மொழிகளும் பரவலாகப் பேசப்படலாயின. எனினும் கி.மு. 2 ஆம், 3 ஆம் மில்லேனியத்தில் சுமேரியன் மொழிக்குப் பதிலாக அக்காடியன் மொழியே பேச்சு மொழியானது. எனினும், சுமேரிய மொழி தொடர்ந்தும் புனிதமான சடங்குகளுக்கு உரியதாக இலக்கியம் மற்றும் விஞ்ஞான மொழியாக பொது சகாப்தத்தின் முதலாம் நூற்றாண்டு வரை விளங்கியது.
பபிலோனியன் ஆட்சியின் போது நகரங்களிலும் கோவில்களிலும் நூலகங்கள் இருந்தன. ஒருவர் தொழில்சார் சமய அறிஞராக விளங்க வேண்டுமாயின் அதிகாலை நித்திரை விட்டெழ வேண்டும் என பண்டைய சுமேரியப் பழமொழி ஒன்று கூறுகின்றது. அக்காலத்தில் ஆண்களும் பெண்களும் எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொண்டார்கள்.
பபிலோனிய இலக்கியத்தின் ஒரு கணிசமான அளவு சுமேரிய மூலப் பிரதிகளில் இருந்து மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டன. அத்துடன் சமயம் மற்றும் சட்ட மொழி தொடர்ந்தும் சுமேரிய மொழியில் தான் இருந்து வந்துள்ளது. மாணவர்களின் உபயோகத்திற்காக சொற்கள், இலக்கணங்கள், வசனங்களுக்கு இடையிலான மொழி

கலைக்கேசரி
29

Page 31
២០
T30
IT

பெயர்ப்புகள் மற்றும் பண்டைய நூல்களின் விளக்கங்கள் ஆகியவையும் சுமேரிய மொழியின் தான் இருந்துள்ளன.
பபிலோனிய இலக்கிய நூல்கள் பல இன்றும் வாதிக்கப்படுகின்றன. இவற்றுள் மிகப்பிரபலமானது கிலாமெஷ் காப்பியம் (Epig of Gilgamesh) என்பதாகும். இது பன்னிரண்டு நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளது. மூல மொழியான சுமேரியனில் இருந்து மொழி பெயர்க்கப் பட்டதாகும். இந்நூல்கள் கிலாமெஷ் என்பவனின் வாழ்வில் இடம்பெற்ற தனித்தனி புத்தனுபவங்களை விபரிக்கின்றன.
கணக்கியல்
மெசொப்பதேமிய கணக்கியல் மற்றும் விஞ்ஞான எண்முறை அறுபதுகளை அடிப்படையாகக் கொண்டது. (Sexagesimal) 60 நிமிடங்களைக் கொண்ட மணித்தியாலம், 24 மணித்தியாலம் கொண்ட நாள், 360 பாகை கொண்ட வட்டம் ஆகியவற்றின் அடிப்படை இது தான்.
சுமேரியன் நாட்காட்டி (Calendar) 7 நாள் வாரத்தின் அடிப்படையைக் கொண்டது.
இந்த வகையான கணக்கியல், ஆரம்ப காலத்தில் வரைபடம் (Map - making) தயாரிப்பதற்கு காரணமாக இருந்தது. அத்துடன் பபிலோனியர்கள் பல்வேறு வடிவங்கள் மற்றும் திண்மங்களின் பரப்பை அளப்பதற்கு குறுங் கணக்கியலையும் (Theorems) கொண்டிருந்தார்கள். வட்டத்தின் சுற்றளவு (Circumference) வட்டத்தின் குறுக்களவின் (Diameter) மூன்று மடங்காக அளவீடு செய்தார்கள். அதன் பரப்பளவை சுற்று வட்டத்தின் சற்சதுரத்தின் பன்னிரெண்டில் ஒன்று என அளந்தனர்.
பபிலோனியன் மைல் என்பதற்கும் பபிலோனியர்கள் பெயர் பெற்றவர்கள். பபிலோனியன் மைல் என்னும் தூர அளவு சுமார் ஏழு நவீன மைல்களுக்கு சமமானதாகும். இந்த தூர அளவின் விளைவாக சூரியனின் பயணத்தை அளக்க உபயோகிக்கப்படும் ஒரு நேர மைலாக மாற்றப்பட்டது. கணிதவியலில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்த பபிலோனிய வானவியலாளர்கள் கிரகணங்கள் மற்றும் சங்கிராந்தி (Solstices) போன்றவற்றை கணிப்பிடக் கூடியவர்களாக இருந்தார்கள். வானவியலைப் பொறுத்த வரை ஒவ்வொன்றுக்கும் ஏதோ ஒரு நோக்கம் உண்டு என நம்பினார்கள். இவற்றில் பெரும்பாலானவை மதம் அல்லது துர்க்குறி (Omen) சம்பந்தப்பட்டவையாகும். மொசொப்பொதேமிய வானவியலாளர்கள் சுற்று வட்டத்தின் அடிப்படையில் 12 மாத நாட்காட்டியை உருவாக்கினார்கள். அவர்கள் வருடத் தைக் கோடை காலம், மாரி காலம் என இரண்டாகப் பிரித்தார்கள். இந்தக் காலத்தில் தான் வானவியல் சோதிடக்கலை என்பன தோற்றம் பெற்றன.
கி.மு. 8ஆம், 7ஆம் நூற்றாண்டுகளின் போது பபிலோனிய வானவியலாளர்கள் வானவியலுக்கு புதிய அணுகுமுறையை உருவாக்கினார்கள்.
முன்னைய
5ாக

Page 32
Tெ
பிரபஞ்சத்தின் கருத்தியலான இயற்கையுடன் அவர்கள் சித்தாந்தத்தைக் கற்கத்தொடங்கி தமக்கு நேர்பவற்றை முன்கூட்டியே அறியும் கிரக முறைகளுக்குள், உள்ளக தருக்கவியலைப் பாவிக்க ஆரம்பித்தனர். இது வானவியலுக்கும் விஞ்ஞான தத்துவத்துக்கும் ஒரு முக்கியமான பங்களிப்பாக விளங்கியது. இப்புதிய அணுகுமுறையை ஒரு முதலாவது விஞ்ஞானப் புரட்சி எனச் சில அறிஞர்கள் குறிப்பிட்டனர். விஞ்ஞானவியலின் இப்புதிய அணுகுமுறை பின்பற்றப்பட்டு கிரேக்கம் மற்றும் ஹெலனிய (Hellenistic) வானவியலில் மேலும் அபிவிருத்தி செய்யப்பட்டன.
செலுசிட் மற்றும் பாதியன் காலத்தில் வானவியல் அறிக்கைகள் யாவும் முற்றுமுழுதாக விஞ்ஞான பூர்வமானவையாகும். கிரகங்களின் நகர்வுகளை முன் கூட்டியே அறிவதற்கான பபிலோனிய முறைகளின் அபிவிருத்தியும் வானவியல் வரலாற்றில் ஒரு பிரதான அத்தியாயமாகக் கருதப்படுகிறது. கிரக நகர்வுகளில் சூரியனை மையமாகக் கொண்ட முறைமையை ஆதரித்ததாகக் கூறப்படும் ஒரே ஒரு கிரேக்க பபிலோனிய வானவியலாளர் செலுசியாவின் செலுகஸ் என்பவர் (கி.மு. 190) எனக்கூறப்படுகிறது. புளுட்டாக்கின் எழுத்துக்களில் இருந்து செலுகஸ் அறியப்படுகிறார்.
பபிலோனிய வானவியலே கிரேக்கம், சாஸ்திரீய, இந்திய, சஸ்ஸானிய பிஸன்ரைன், சிரிய, மத்தியகால இஸ்லாமிய, மத்திய ஆசிய மற்றும் மேற்கு ஐரோப்பிய வானவியலின் பெரும்பகுதிக்கு அடிப்படையாக அமைந்தது.
வைத்தியம் சம்பந்தமான மிகப் பண்டைய பபிலோனிய நூல்கள் கி.மு. 2ஆம் ஆயிரம் ஆண்டுப் (Millennium) பகுதியில் உள்ள பழைய பபிலோனிய காலப்பகுதிக் குரியதாகவுள்ளது. மிக விரிவான பபிலோனிய வைத்திய நூல் அம்மானு என்ற அறிஞரால் எழுதப்பட்ட நோயைக் கண்டறியும் கைநூல் (Diagnostic Handbook) எனக்
கூறப்படுகின்றது.
சமகால வைத்திய முறையோடு பபிலோனியர்கள் நோயைக் கண்டறிதல், நோயின் தன்மையை முன்கூட்டியே உணர்தலிலும் உடற்பரிசோதனை மற்றும் மருந்தை சிபாரிசு செய்தல் என்ற கருத்தினை அறிமுகம் செய்தனர்.

கலைக்கேசரி
31
பர்
நோயாளியின் நோய் அறிகுறிகள், கட்டுப்போடுதல், களிம்புகளைப் பூசுதல், மருந்துக் குளிசைகளை உட்கொள்ளக் கொடுத்தல் ஆகியவற்றின் மூலம் குணமாக்கப்பட்டது. அத்துடன் நோய்களுக்கு பல்வேறு வகையான சிகிச்சை முறைகளைக் கொண்ட நோய்களைக் கண்டுபிடிக்கும் கைநூல் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒரு நோயாளியின் நோயை மருந்துகளின் மூலம் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படின் பபிலோனிய வைத்தியர்கள் நோயாளியிடமிருந்து சாபங்களை விலக்க கெட்ட ஆவியைத் துரத்தும் கைங்கரியத்தினையும் செய்தனர். ஒரு நோயாளியின் உடலைப் பரிசோதித்து அந்நோயின் அறிகுறிகளை ஆராய்வதன் மூலம் சிகிச்சையை மேற்கொள்ள முடியும் என்ற நவீன கால கருத்தினை அவர்கள் அப்போது கொண்டிருந்தனர்.
தொழில்நுட்பம் மொசொப்பதேமிய மக்கள் பல தொழில் நுட்பங்களைக் கண்டுபிடித்தார்கள். செம்பு வேலைகள், கண்ணாடி மற்றும் விளக்குகள் உருவாக்குதல், ஜவுளி தயாரித்தல், வெள்ளத்தைக் கட்டுப்படுத்தல், நீரைச் சேமித்தல், நீர்ப்பாசனம் ஆகியவை இதில் அடங்கும். அத்துடன் அவர்கள் உலகின் முதல் வெண்கல கால மக்களின்

Page 33
E - 10 ::: : : 22
பக்கப் ப ட
கலைக்கேசரி த
பாயாயா'
க : பரா
1-11
32
TET -TETTTTTETE TEET-3 கங்கா -Tா
19ா2யயயயய EMAIIFACE

ஒருவராக இருந்தனர். செம்பு, வெண்கலம் மற்றும் தங்கத்தில் இருந்து இரும்பையும் கண்டு பிடித்தனர். இந்த விலை மதிப்புள்ள உலோகங்களை பெருமளவில் பாவித்து மாளிகைகளை அலங்கரித்தனர்.
ஆயுதங்களை உற்பத்தி செய்ய செம்பு, வெண்கலம், இரும்பு போன்றவற்றைப் பாவித்து வாள்கள், ஈட்டிகள், உடைவாள், குறுந்தடிகள் ஆகியவற்றைச் செய்தனர்.
சமீபத்தைய தற்கோள்களின் படி கி.மு. 7 ஆம் நூற்றாண்டில் அசிரியா அரசனான சென்னாசெரிப்பின் காலத்தில், பபிலோன் மற்றும் நினெவேயில் உள்ள தொங்கு தோட்டத்தில் உள்ள நீர் முறைமைகளுக்கு ஆர்க்கிமிடிஸ் திருகு ஆணி உபயோகித்திருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆனால் அது பிற்காலத்தைய கிரேக்க கண்டுபிடிப்பு என அறிஞர்கள் கருதியிருந்தனர்.
பின்னர் பாதியன் மற்றும் சஸ்ஸானிட் காலப்பகுதியில் உலகின் முதலாவது பட்டரி எனக்கருதப்படும் பக்தாத் பட்டரி, மொசொப்பதேமியாவில் உருவாக்கப் பட்டதாகும்.
மொசொப்பதேமிய மதம் முதலில் பதிவு செய்யப்பட்ட ஒரு மதமாகும். அவர்கள் உலகம் ஆனது மிகப் பிரமாண்டமான துளையுள்ள வெளியினால் அமைக்கப்பட்டது எனவும் மேலே சுவர்க்கத்தை கொண்டுள்ளது எனவும் நம்பினார்கள். அத்துடன் மேலே, கீழே மற்றும் பக்கமெல்லாம் நீர் நிறைந்துள்ளதெனவும், இப்பிரமாண்ட கடலில் இருந்து பிரபஞ்சம் பிறந்ததென வும் நம்பினார்கள். அத்துடன் மொசொப்பதேமியர்கள் பல கடவுள் வணக்க வழமைகளைக் கொண்டவர்கள். இவை பொதுவாகக் கருதப்பட்டாலும் பிராந்தியங்களிலும் கடவுள் நம்பிக்கையில் வேறுபாடுகள் இருந்தன.
பிரபஞ்சத்துக்கு சுமேரிய வார்த்தையாக அன் - கி (an - ki) என்பதை உபயோகித்தனர். 'அன்' என்பது ஆண் கடவுளையும், 'கி' என்பது பெண் கடவுளையும் குறிக்கும். காற்று கடவுளாக விளங்குபவர் அவர்தம் புத்திரனான என்லில் (Enlil) என்பவராகும். என்லில் மிகவும் சக்தி வாய்ந்த கடவுள் என அவர்கள் நம்பினர்.
கொண்டாட்டங்கள் பண்டைய மொசொப்பதேமியர்களுக்கு பிரதி மாதமும் விழாக்கள் இருந்தன. கிரியைகள் மற்றும் கொண்டாட்டங்கள், ஆகக் குறைந்தது ஆறு முக்கிய
விடயங்களினால் தீர்மானிக்கப்பட்டன.
1. சந்திரனின் பூர்வ பட்சம் : அதாவது வளரும் நிலவு என்றால் செழிப்பும் வளர்ச்சியுமாகும். அதேவேளை தேயும் நிலவு எனில், வீழ்ச்சி, தேக்கம் மற்றும் பாதாள உலகத்தின் கொண்டாட்டங்கள் என்பவற்றோடு சம்பந்தப் பட்டதாகும்.
2. வருடாந்த விவசாய சுற்றுவிட்ட பக்கம். 3. சூரியன் சம் ரேகையைக் கடப்பதால் பகலும் இரவும் ஒரே நீண்ட நேரத்தைக் கொண்டிருக்கும் வேளை மற்றும் சங்கிராந்திகள்

Page 34
4. உள்ளூர் புராணங்கள் மற்றும் அதன் தெய்வீக
போஷகர்கள். 5. ஆளும் அரசனின் வெற்றி. 6. குறிப்பிட்ட வரலாற்றுச் சம்பவத்தை நினைவு கூருதல். சங்கீதம் சில பாடல்கள் கடவுளைப் பற்றிப் பாடுவதாக அமைய, பல பாடல்கள் முக்கிய நிகழ்வுகளைக் குறிக்க எழுதப்பட்டன. சங்கீதமும் பாடல்களும் அரசர்களை மகிழ்வித்தன. அதேவேளை மக்களும் தமது வீட்டிலும், சந்தை இடங்களிலும் பாடி ஆடி மகிழ்ந்தனர். எழுத்துமுறை பெரிதும் பரவும் வரை, பாடல்கள், பரம்பரையாக வாய்மொழி மூலமே கடத்தப்பட்டன. அத்துடன் முக்கிய வரலாற்று நிகழ்வுகளை பரம்பரைகளுக்குக் கொண்டு செல்லும் பாடல்கள் பயன்பட்டன.
குடும்ப வாழ்வு | குடும்பவாழ்வைப் பொறுத்தவரை ஆண்களே எதிலும் முதன்மைப் பங்கை வகித்தனர். ஆரம்ப சுமேரிய காலத்தில், மொசொப்பதேமிய சமூகம் முதியோர் சபையினால் ஆளப்பட்டது. அதில் ஆண்களும் பெண்களும்
சம்
அந்தஸ்த்தைப் பெற்றிருந்தார்கள். ஆனால் காலப்போக்கில் ஆண்கள் செல்வாக்கு அதிகரித்தது.
பாடசாலைக் கல்வி அரசர்களின் பிள்ளைகளுக்கும், எழுத்தாளர்கள், வைத்தியர்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள் போன்றோரின் பிள்ளை களுக்கும் மட்டுமே வழங்கப்பட்டன. பெரும்பாலும் சிறுவர்களுக்கு தந்தையின் தொழிலே கற்றுக் கொடுக்கப்பட்டது.
பெண் பிள்ளைகள், தாய்க்கு உதவியாக வீட்டில் இருந்து வீட்டைப் | பராமரித்தல், சமையல், சிறு பிள்ளைகளைக் கவனித்தல் போன்ற
வற்றைச் செய்தனர்.
வழமைக்கு மாறாக வரலாற்றில் அந்தக் காலகட்டத்தில், மொசொப்பதேமிய பெண்களுக்கு உரிமைகள் இருந்தன. அவர்கள் சொந்தமாக சொத்து வைத்து இருந்திருக்கலாம். தகுந்த காரணங்கள் இருந்தால், அவர்கள் விவாகரத்து பெறமுடியும். அரசர்கள் அரசர்களும் மகாராணிகளும் கடவுள் களின் நகரங்களில் இருந்து இறங்கி வருகின்றனர் என மொசொப்பதேமியர் கள் நம்பினர். ஆனால் எகிப்தியர்கள் போல், அவர்கள் உண்மையான

கலைக்கேசரி
33
இது 40
கடவுள்கள் என மொசொப்பதேமியர்கள் நம்பவில்லை. பெரும்பாலான அரசர்கள் தமக்குதாமே 'பிரபஞ்ச அரசன்' அல்லது 'பேரரசன்' எனப் பெயரிட்டுக் கொண்டனர். அவர்களுக்கு மேய்ப்பன் என ஒரு பொதுவான பெயரும் இருந்தது. மக்களை அரசர்கள் வழிநடத்துவார்கள் என்பதினால், அப்பெயர் வழங்கப்பட்டது.
கட்டடக்கலை
பண்டைய மொசொப்பதேமிய கட்டடக்கலை ஆய்வு கட்டடங்களின் படப் பிரதிகள், கட்டட நடவடிக்கைகள் குறித்த நூல்கள் போன்ற, கிடைக்கக் கூடிய கட்டடக்கலை சான்றுகளின் அடிப்படையிலான
ஆய்வில் தங்கியுள்ளது.
உயர் கல்வித்தர இலக்கியங்கள், வழமையான கோயில்கள், மாளிகைகள், நகரச் சுவர்கள் மற்றும் வேறு கட்டடங்களில் தங்கிநிற்க வதிவிடங்களின் கட்டடக்கலையிலும் சிலர் ஆய்வுசெய்கின்றனர்.
செங்கற்கள் உள்ளூரில் சகஜமாக கிடைக்கக் கூடியதாக இருந்தமையால், இவை பிரதான கட்டடப் பொருளாக இருந்துள்ளன. மிகத் துல்லியமாகத் தெரிந்த அமைப்பு சிகுரட் (Ziggurat) ஆகும். நகரங்களில் பெரும்பாலும்
பெரிய வாயில்கள் இருந்தன.
அவற்றுள் நியோ பபிலோனியன், பாபிலோனில் இருந்து வந்த இஷ்தர் (Ishtar) வாயில் கதவு மிருக உருவங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மிகப் பிரபலமான இவை பெரும்பாலும் இப்போது பெர்லினில் உள்ள பெர்கா மொன் அருங்காட்சியகத்தில் உள்ளன.
பண்டைய மொசொப்பதேமியாவின் மிகக் குறிப்பிடத்தக்க கட்டடக்கலை எச்சங்களாக காணப்பட்டவை உறுக் (Uruk) இல் உள்ள
k) இல் உள்ள கோயில் தொகுதிகளாகும்.
- ஜெனிஷா

Page 35
சீர்தரும் சித்திரைப்
புத்தாண்டில் தமிழரின் பண்பாட்டுச் சம்பிரதாயங்கள்
ட்
'' ''5-1:14 : 14

சித்திரைப் புதுவருடப் பிறப்பு ஒரு மங்களகரமான நாளாகும். மக்களின் வாழ்க்கையை நல்வழியில் நெறிப்படுத்துவதுடன் இளைய தலைமுறையினர் தமது முன்னோரின் பாரம்பரியங்களை அறிந்து கொள்ளவும் இறை வழிபாடு, தானதர்மம், நல்லாசி பெறுதல், ஐக்கியம், அன்புப் பரிமாற்றம், குதூகலம், விருந்தோம்பல் போன்ற பண்பாட்டின் உயர்ந்த அம்சங்களை வெளிப்படுத்தும் வகையிலும் புதுவருட விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இயற்கையோடு ஒன்றிணைந்த ஒரு விழாவாக சித்திரைப் புதுவருட கொண்டாட்டம் அமைந்திருக்கிறது. சித்திரை மாதம் இளவேனில் காலத்தின் தொடக்கமாகையால் மாமரங்களில் மாந்தளிர்களும் மலர்களும் வேப்ப மரங்களில் வேப்பம் பூக்களும் பூத்துக் குலுங்கும். மனித வாழ்க்கை இனிப்பும் கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் இயற்கையின் வெளிப்பாடாக இதைக் எடுத்துக்கொள்ளலாம்.
இலங்கையில் பெளத்தம் அறிமுகமாகும் முன்னர் இருந்தே சித்திரைப் புத்தாண்டை தமிழர் கொண்டாடி
வருகின்றனர். வடகிழக்கு மற்றும் மலையகம் உட்பட தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் கலை, கலாசார, சடங்கு, சம்பிரதாயங்களுடன் புதுவருடம் சிறப்பாகக் கொண்டாப்படுகிறது. இடத்துக்கு இடம் அந்தந்தப் பிரதேச கலாசார மரபுகளுக்கு
அமைய
வைபவ நடைமுறைகள் வேறுபட்டிருப்பினும் புத்தாண்டை இனிதாக வரவேற்பதும் செழிப்பான எதிர்காலத்தை இறைவனிடம் வேண்டுவதும்
பொதுவானதாகும்.
கலா.
|TI)

Page 36
அட்ல விள
கலைத்
பொன்னம்பலவாணேஸ்வாத் சாசனங்கள்
- 2HSANORE 863 140)
புத்தாண்டு ஆரம்பிக்கும் முதல் நாள் தொடக்கம் ஒவ்வொரு நிகழ்வுகளும் பஞ்சாங்கங்களில் - (வாக்கிய பஞ்சாங்கம், திருக்கணித பஞ்சாங்கம்) குறிக்கப்படும் நேரங்களின் அடிப்படையிலேயே அமையும்.
சித்திரை கனி காணல் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற மரபிற்கமைய சித்திரை முதல் நாளன்று வீட்டை நன்றாகக் கழுவி, இரவு சாப்பாடு முடிந்தபிறகு பூஜை அறையை தூய்மை செய்து, கோலமிட்டு, சாமிப் படங்களை அலங்காரம் செய்து, படங்களின் முன்பாக அரிசி, காய்கறிகள், பழங்கள், பலகாரங்கள் ஆகியவற்றை வைப்பது வழக்கமாகும். இதில் முக்கியமாக கவனிக்கப்பபட வேண்டியது மூன்று அல்லது ஐந்து வகை பழங்களாகும். சாமிப் படங்களின் எதிர்ப்புறத்தில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை (கண்ணாடியில் பார்க்கும் போது சாமிப்படங்களும் நாம் வைத்த பொருட்களும் தெரியுமாறு) வைக்கலாம். சில்லறைக் காசுகளுடன் தங்கக் காசுகளும், வெள்ளிக் காசுகளும் சேர்த்து வைப்பது சிறப்பாகும். புத்தாண்டில் அணியும் புது உடுப்பு, பொன், வெள்ளி ஆபரணங்கள், பிள்ளைகளின் பாடசாலைப் புத்தகங்கள், வெற்றிலை, பாக்கு, தேங்காய், கற்கண்டு, மலர்கள் முதலிய மங்கலப் பொருள்களை பூஜை அறையில் தெய்வத்திற்கு முன் வைப்பதும் வழக்கம்.
சித்திரை வருடப் பிறப்பன்று அதிகாலையில் எழுந்து பூசை அறையில் உள்ள க ண் ண ா டி யி ல் சாமிப்படங்களினதும் மங்கலப் பொருட்களினதும் விம்பங்களைப் பார்த்தல் சிறப்பு.
முதியவர்க செல்வந்தர் கடாட்சம் நி ஆகியோரிடம்
அவ. கால்கை மனப்பூர்வமா.
புத்தாண் சம்பிரதாயமா மனம்நிறைந்.
எம்மை 8 முழுவதும் ஆபத்துக்க காக்கும் எ6 வலிமையா
காணப்பு
4ெ

நடப்பட க்கம்:
கலைக்கேசரி
35
சிங்கப்பூர் 'சீமை யில் தமிழர்கள்
ள், அறிஞர்கள், கள், இலட்சுமி றைந்தவர்கள் - அனுமதிபெற்று ர்களின்
ளத்தொட்டு க ஆசி பெறுவது டில் முக்கிய கும். அவர்களின் த வாழ்த்துக்கள் அந்த வருடம்
சங்கடங்கள், களில் இருந்து
ன்ற நம்பிக்கை க நம் மத்தியில் படுகின்றது.
பூஜைக்குரிய தெய்வத்தையும், பூஜைக்கு வைத்துள்ள மங்கலப் பொருட்களையும் முதன் முதலாக தரிசிப்பதால் வருடம் முழுவதும் மகிழ்ச்சி பொங்கும் என்பது நம்பிக்கை. இதனை சித்திரை கனி காணல் என்று அழைப்பர்.
நலம் காக்கும் நடைமுறைகள் புது வருடப் பிறப்பன்று வாசலில் கோலமிட்டு - அழகுபடுத்தி, வாயிற்படிகளுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு, மாவிலைத் தோரணங்களை கட்டினால் திருமகள் வாசம் செய்வாள் என்பது நம்பிக்கை. அத்தோடு மாவிலைத்தோரணங்கள்,
மஞ்சள், குங்குமம் - ஆகியவை நோய்க் கிருமிகளையும் துஷ்ட தேவதைகளையும் வாசல்படியை தாண்டி வீட்டுக்குள் வராமல் தடுக்கும் சக்திளாகும். புதுவருட தினத்தில் நமது நலம் காக்கவே
இந்நடைமுறை வழக்கத்துக்கு வந்தது.
புதுவருடம்
பிறப்பதற்கு முன்பதாகவுள்ள நான்கு மணி நேரமும் புதுவருடம் பிறந்த பின்னரான நான்கு மணி நேரமும் விசேட புண்ணியகாலம் அல்லது விஷ புண்ணிய காலம் ஆகும். இந்தப் புண்ணிய காலத்தில் ஒவ்வொருவரும் மருத்து நீர் தேய்த்து ஸ்நானம் செய்தல் வேண்டும். புத்தாண்டுக்கு முதல் நாள் எல்லா கோவில்களிலும் மருத்து நீர்
கொடுப்பார்கள்.
பின்னர் அந்தந்த ஆண்டிற்கு ஏற்ப வர்ண உடைகளை அணிந்து, சுப திசை, சுப நேரம் ஆகியவற்றுக்கு அமைய வருடம் பிறக்கும்போது குலதெய்வத்தை முறைப்படி தூப், தீப, நைவேத்திய, ஆராதனை செய்யலாம்.

Page 37
கலைக்க்ேசரி து 36
நிவேதனமாக பால் சோறு, முக்கனிக் கூட்டு, பாயாசம் வைப்பர். எந்த குறையும் இல்லாமல் இந்த ஆண்டில் சகல வளமும் பெற்று சீரும் சிறப்புமாக எனது குடும்பமும், சுற்றமும், உலகில் உள்ள நல்லவர்கள் அனைவரும் வாழ அருள் புரிய வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கவும். அதன் பின்னர் வயதில் முதியவர்களின் காலில் விழுந்து ஆசி பெறுதல் வேண்டும். பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி பெறுதல் தமிழர்களின் பாரம்பரிய பண்பாகும்.
புத்தாண்டு பஞ்சாங்கம் வாங்கி அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, பூஜையில் வைத்து பூஜிக்க வழக்கமும் உண்டு. பூஜை முடிந்த பின்பு புத்தாண்டில், நிகழவிருக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம். சிறு பிள்ளைகள் கையால் ஆருடச் சக்கரத்தை தொடச் சொல்லி பலன் பார்ப்பர்கள்.
புதுவருடத்திற்காக .
அடுப்பு மூட்டுவதும் ஒரு வழக்கமாகும். பழைய வருடத்தின் முடிவில் அனைத்து அடுப்பு வேலைகளையும் முடிவிற்குக் கொண்டுவரும் வீட்டுத் தலைவி, மீண்டும் சுபமுகூர்த்தத்தில் அடுப்பை பற்ற வைத்து புதுப்பானையில் பொங்குவது வழக்கத்தில் இருந்து வருகின்றது. சூரியனுக்கு பொங்கிப் படைப்பதுடன் இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை கொண்ட உணவுகளை சமைத்து உண்டு, தான தருமங்கள் செய்வார்கள். மதிய உணவில் வேப்பம்பூ வடகம், மாங்காய்ப் பச்சடி, வடை, மோர், பருப்பு, பாயாசம் போன்றன இடம் பெறுதல் அவசியம் . அத்துடன் உணவை விருந்தினருடன் உண்டு மகிழ்ந்தால் அந்த ஆண்டு முழுவதும் குதூகலமாக இருக்கும் என்பது பாரம்பரிய நம்பிக்கையாகும். இதற்காகவே விருந்தினர் வருகையும் விருந்தோம்பலும் நம்பண்பாடாக இருந்து வருகின்றது.
EET வே தடா't - 25

ஒரு குடும்பத்தில் யாரேனும் ஒருவர் இறந்திருந்தால், அந்தவீட்டார் புத்தாண்டு கொண்டாடுவதில்லை. அந்த வீட்டை 'தீட்டு வீடு' என்கின்றனர். அப்பொழுது அயலவர்களும் உறவினர்களும் தீட்டு வீட்டாருக்கு உண்வு மற்றும் தின்பண்டங்களை வழங்குவார்கள்.
சித்திரை முதல் பங்குனி வரை தமிழ் மாதங்கள் சூரிய மாதங்களாகும். அதாவது பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே மாதங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இவ்வகையில் தமிழ் மாதங்கள் சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரெண்டு ஆகும். சூரியன் ஒருமுறை பூமியைச் சுற்ற எடுக்கும் காலம் ஒரு ஆண்டாகும். இந்தச் சுற்றுப்பாதையின் தளம் பூமியை மையமாகக் கொண்டு ஒவ்வொன்றும் 30 பாகை அளவுள்ள 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இப்பிரிவுகள் இராசிகள் எனப்படுகின்றன. எனவே ஒவ்வொரு முழுச் சுற்றின் போதும் சூரியன் மேற்சொன்ன 12 இராசிகள் வழியாகவும் பயணம் செய்கிறது. ஒரு குறிப்பிட்ட இராசிக்குள் புகுந்து அதைவிட்டு வெளியேறும் வரையான காலமே ஒரு மாதம் ஆகும். ஒவ்வொரு இராசியிலும் புகும் நாள் அந்தந்த மாதங்களுக்கு உரிய மாதப் பிறப்பு எனப்படும். அது மேட இராசியினுள் புகும்போது பிறக்கும் சித்திரை மாதமே தமிழ் முறைப்படி ஆண்டின் முதல் மாதம் என்பதால், இந்நிகழ்வே புத்தாண்டுப் பிறப்பும் ஆகும்.
பூமி தன் அச்சில் சுழலுவதை அடிப்படையாகக் கொண்டு நாட்களும், சூரியனைச் சுற்றி வருவதால் மாதங்களும் ஆண்டுகளும் உருவாகின்றன. இவ்விரு இயக்கங்களும் ஒன்றிலொன்று தங்கியிராத இரண்டு வெவ்வேறு விடயங்களாக இருப்பதால் புதிய மாதப் பிறப்பும் புதிய நாள் தொடங்குவதும் ஒரே நேரத்தில்
வருட பிறப்பின் போது பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி பெறுதல்

Page 38
அமைவதில்லை. இந்து முறைப்படி ஒரு நாள் என்பது குறிப்பிட்ட நாளில் சூரிய உதயம் தொடக்கம் அடுத்த நாள் சூரிய உதயம் வரையான காலமாகும். ஆகவே நாளின் தொடக்கம் சூரிய உதயமாகும். சூரியன் இராசி ஒன்றுக்குள் புகும் நேரம் (மாதப் பிறப்பு) ஒரு நாளின் எந்த நேரத்திலும் நிகழக்கூடும். முறைப்படி அந்த நேரத்திலேயே புதிய மாதம் தொடங்கும். மாதப்பிறப்பு சூரியன் மறைந்த பின் அடுத்த சூரிய உதயத்துக்கு முன் நிகழுமாயின் அடுத்த நாளே மாதத்தின் முதல் நாளாகக் கொள்ளப்படும்.
பூமிக்குச் சார்பாகச் சூரியனின் இயக்கம் நீள்வட்டப் பாதையில் அமைந்திருப்பதால் இராசிகளில் சூரியனின் பயணம் ஒரே கால அளவைக் கொண்டிருப்பதில்லை. ஒவ்வொரு இராசியையும் சூரியன் கடப்பதற்கு வெவ்வேறு கால அளவு எடுத்துக் கொள்கிறது. இதனால் மாதங்களும் வெவ்வேறு அளவுள்ளவையாக உள்ளன.
கைவிசேடம் பரிமாறிக் கொள்ளல், குருமார்கள் மற்றும் பெரியோர்களைத் தரிசனம் செய்தல், விருந்துபசாரங்களில் கலந்து கொள்ளல், புதிய வகுப்புகள் மற்றும் கல்வி தொடர்பான கருமங்களை ஆரம்பித்தல் ஆகியவற்றிற்கு சுப நேரம் பார்த்து ஆரம்பிக்கும் வழக்கமும் பின்பற்றப் படுகிறது.
புத்தாண்டில் கைவிசேடம் பரிமாற்றம் சித்திரைப் புதுவருடம் பிறந்தால் கைவிசேடம் பரிமாறிக் கொள்வதும் ஒரு பாரம்பரிய வழக்கமாகும். கைவிசேடத்திற்கு 'நல்லளிப்பு' என்று இன்னொரு பெயரும் உண்டு. ஆரம்ப காலத்தில் வீட்டின் தலைவி உரிய சுப நேரத்தில் சிறிய மூலிகைப் பொட்டணம் ஒன்றினை கிணற்றுக்குள் போட்டுவிட்டு பிறக்கும் புத்தாண்டு நிமித்தம் முதல் முறையாக தண்ணீரை கிணற்றிலிருந்து வெளியில் எடுப்பதையே கை விசேடமாக கருதப்பட்டது. ஆயினும் நாளடவில் கைவிசேடம் என்பது சுபமுகூர்த்தத்தில் பணத்தை கொடுப்பதும் வாங்குவதும் என்ற நிலை ஏற்பட்டது.
புத்தாண்டன்று குறிப்பிட்ட
சுபநேரத்தில் ஒரு குடும்பத்தைச்
சேர்ந்தவர்கள்
தங்கள்
குடும்பத்

கலைக்கேசரி
37
புத்தாண்டில் புது உடுப்பு வழங்கும் மரபு எம் கலாசாரமாகும்
தலைவரிடமிருந்தும், வயதில் மூத்தவர்களிடமிருந்தும், வேலை கொள்வோரிடமிருந்தும் கைவிசேடம் பெற்றுக் கொள்வார்கள். கைவிசேடம் வாங்கும் வரை யாருடனும் பணம் பரிமாறமாட்டார்கள். பெரியவர்கள் செல்வசெழிப்பனவர்கள் கையினாலே முதன் முதலாக பணம் வாங்கினால் வருடம் பூராவும் பணம் புழங்கும்
என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு இது.
கைவிசேடம் கொடுக்கும் போது, மறு இல்லாத வெற்றிலையின் மேல் நெல், மஞ்சள், வெள்ளைப் பூ, தாள்காசுடன் சில்லறைக்காசு, மஞ்சள் என்பவற்றை வைத்து குத்து விளக்கின் முன்னால் நின்று, வெற்றிலையின் நுனி வடக்குப் பக்கம் பார்த்திருக்கத்தக்கவாறு கொடுக்க வேண்டும். கைவிசேடம் கொடுப்பவர் இந்திரன் திசையாகிய கிழக்குப் பார்க்க வேண்டும். வாங்குபவர் குபேரன் திசையாகிய வடக்குப் பார்க்க நின்று வாங்குதல் வேண்டும். வழமையாக தாள் காசுடன் ஒற்றை எண்ணில் வரக்கூடியவாறு சில்லறைக் காசையும் சேர்த்து வழங்குதல் வேண்டும். ஒரு வருடம் கொடுக்கும் கைவிசேட காசை அடுத்த வருட கைவிசேட காசு கிடைக்கிற வரையில் செலவு செய்வதில்லை. பூசையறையில் குபேரனுக்கு முன் வைப்தோ அல்லது பணப்பெட்டியில் வைத்து பத்திரப்படுத்துவதோ மரபாகும்.
குறிப்பு: சித்திரைப் புதுவருட சம்பிரதாயங்களை முறைப்படி விளக்கி, புகைப்படம் பிடிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துதவிய வத்தளை, ஹேக்கித்த சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான பிரதம குருக்கள் சிவஸ்ரீ பாலசுப்பிரமணிய குருக்கள் மற்றும் புத்தாண்டு பிறப்பு பாரம்பரிய சம்பிரதாயங்களை விளக்கி கூறிய வத்திராயன் ஸ்ரீமுருகப்பெருமான் ஆலய பூசகர் வீ. எஸ். ஸ்ரீ கந்தசாமி, புகைப்படங்கள் பிடிப்பதற்கு உதவிய வத்தளை, புவக் வத்தையைச் திரு.திருமதி விஜயானந்தன் கோணேஸ்வரி குடும்பத்திற்கும் மற்றும் திரு. திருமதி எஸ். ஜே. நவரட்ணம் தம்பதியினருக்கும் நன்றிகள். ,
-மாலதி அமலகுமார்

Page 39
கலைக்கேசரி ) 38 ஆளுமை
இலங்கையில் ஆடற்கலை மறும் முன்னோடி கலைச்செல்வர் சுட்
- பேராசிரிய
தமிழகச் சூழலில் ஆடற்கலையின் வரலாறு மக்களின் பண்பாட்டு வரலாற்றின் குறிகாட்டியாகவே அமைந்து
வருதல் குறிப்பிடத்தக்கது.
பூர்வீகக் குலக்குழு வாழ்க்கையில் இடம்பெற்ற வாழ்வாதாரத்தோடும் சடங்குகளோடும், போர்களோடும் இடம்பெற்ற தமிழர்களின் ஆடல் வரலாறு நிலமானியச் சமூக உருவாக்கத்தோடு 'கலை வடிவம்' (ARTFORM) என்ற நீட்சியை அடைந்தது.
அந்த நிலையை அடையும் பொழுது அது வரன் முறையான கற்பித்தலுக்கும் கற்றல் ஒழுங்கு முறைகளுக்கும் உட்படுத்தப்பட்டதோடு ஆற்றுகை செய்வோருக்கும் பார்த்துச் சுவைப்போருக்குமிடையே இடைவெளிகளையும் தோற்றுவித்தது.
இலங்கையின் தமிழ்ச் சூழலிலே கோயில்களிலே இடம்பெற்ற செவ்விய ஆடல் மரபின் தனித்துவமான ஆளுமை கொண்டவராக விளங்கியவர் இணுவையூர் ஏரம் பநாதர் அவர்கள். அவருக்கும் ஆறுமுகநாவலருக்கும்
Eா Etiha 2 ய 1 =

லர்ச்சியின் 1பையா
பர் சபா.ஜெயராசா
பண், பரதம் தொடர் பா ன கருத்துப் பரி மாற்றங்கள் நிகழ்ந் தமைக்குரிய செவி வழிச் செய்திகள் உண்டு.
அத்தகைய ஒரு பின்புலச் செழு மையில் ஏரம்ப நாதருக்கும் தங்க முத்து அம்மையா ருக்கும் மகனாக 1922 ஆம் ஆண்டு தை மாதம் 13 ஆம் திகதி சுப்பையா அவர்கள் பிறந்தார். ஏரம்பநாதருக்கு ஆடற்கலையைக் கற்பித்த ஆசான் சுப்பையா வித்தகரின் நினைவாகத் தமது மகனுக்கு அந்தப் பெயரைச் சூட்டினார்
என்று கூறப்படுகின்றது.
இணுவிற் கிராமத்தின் கலைப் பின்புலமும் தந்தையாரால் புகட்டப்பட்ட ஆற்றுகை நுட்பங்களும் அத்துறையில் ஆழ்ந்து ஈடுபடுவதற்குரிய விசைகளை ஊட்டின. 1940 ஆம் ஆண்டிலே மேற்படிப்புக்கென இந்தியாவுக்கு சென்ற அவர் காரைக்குடியில் உள்ள இராமகான சபாவிலே ஒரு நடிகராகச் சேர்ந்தார். தொடர்ந்தும் திருச் செந்தூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பரத நாட்டியத்தை மேலும் ஆழ்ந்து கற்றார். தமிழகத்துக் கிராமங்களுக்குச் சென்று கிராமிய நடனங்களை விரிவாகக் கற்றுக் கொண்டதுடன் கிராமிய விழாக்களிலே ஆற்றுகையை மேற்கொண்டு விருதுகளையும் பெற்றார்.
1946 ஆம் ஆண்டு சென்னை நகருக்கு வந்த அவர் கலா நிதி கோபிநாத் அவர்களிடம் கேரளத்துச் செவ்வியல் ஆடலாகிய கதகளியினையும் கேரளத்துக் கிராமிய நடனங்களையும் ஆழ்ந்து கற்றுக் கொண்டார்.
அவரது ஆற்றுகைத் திறன்களையும் ஆடல் வளத்தையும் கண்ட ஜெமினி ஸ்ரூடியோ வாசன் அவர்கள் தமது திரைப்பட ஆக்கங்களிலே அவரைப் பயன்படுத்திக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. திரைப்பட ஈடுபாடு காரணமாக அக்காலத்திலே புகழ் பெற்றிருந்த ஸ்ரண்டு சோமுவிடம் மல்யுத்த நுட்பங்கள் வாள் யுத்தம்
முதலியவற்றையும் கற்றுக் கொண்டார்.
ஏற்கனவே இணுவில் கிராமத்திலிருந்த நிலாப் பள்ளியில் அவற்றைக் கற்றுக் கொண்ட அனுபவம் அவரிடத்து இருந்தமையால் சோமு அவர்களின் வித்துவப்

Page 40
பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டனர். இந்திய சுதந்திரப் போராட்டமும் இலங்கையில் இடம்பெற்ற தன்னாட்சிக்கான இயக்கங்களும் கலை இலக்கியத் துறைகளிலே பன்முகமான செல்வாக்குகளை ஏற்படுத்தின.
கிராமிய ஆடல்களையும் செவ்விய ஆடல்களையும் மீள் வலுவூட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. பந்தணை நல்லூர் ஜயலட்சுமி, அபிநயமேதை பால சரஸ் வதி முதலியோரின் ஆற்றுகைகள் இடம் பெறுவதற்குரிய முயற்சிகள் யாழ்ப்பாணத்திலே மேற்கொள்ளப்பட்டன.
இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட நாடகக்கலைஞர் கள் மேடை நாடகங்களை ஆற்றுகை செய்தனர். கவியரசர் இரவீந்திரநாத் தாகூர் அவர்களின் வருகையும் கலாயோகி ஆனந்த குமாரசாமி அவர்களின் எழுத் தாக்கங்களின் அறிவுப் பரவலும் கலை வளர்ச்சியை முன்னெடுப்பதற் குரிய விசைகளாக அமைந்தன. இந் நாட்டில் வளர்ச்சி பெறத் தொடங்கிய வீரகேசரி, ஈழகேசரி, தினகரன் முதலாம் இதழ்கள் கலை வளர்ச்சிக்கு மேலும் உற்சாகம் கொடுத்தன.
அத்தகைய ஓர் எழுபுலத்திற் கலைச் செல்வர் ஏரம்பநாதர் சுப்பையா அவர் களின் வினைத்திறன்மிக்க கலைச் செயற்பாடுகள் இடம்பெறலாயின. ஆடற்கலையை யாழ்ப்பாணத்தில் வளர்ப்பதிலே மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ஆர்வலர் இராஜ் நாயகம் அவர்களால் உருவாக்கப் பட்ட யாழ்ப்பாண நடனக் கல்லூரியில் ஆசிரியராக கலைச் செல்வர் சுப்பையா அவர்கள் வரவழைக்கப்பட்டார். கலைச் செல்வரது ஆற்றுகைத் திறனையும் அறிமுறைப் புலமையையும் வியந்து வட இலங்கைச் சங்கீத சபை உயர் சான்றிதழை வழங்கிச் சிறப்பித்தது.
தமிழர்களின் செவ்விய ஆடலாகிய பரத நடனத்தையும் வளம் மிக்க கிராமிய நடனங்களையும் கற்பிப்ப தற்கு அவர் மேற்கொண்ட தளராத முயற்சிகளும் ஆடல் அரங்குகளும் யாழ்ப்பாணத்தில் ஆடற்கலை மறு மலர்ச்சியைத் தோற்றுவித்தது. சிறப்பாக மத்திய தரவகுப்பினர் ஆடற் கல்வியில் ஈடுபடுவதற்குரிய பின்புலம் உருவாக்கப்பட்டது. - அரச தமிழ்ப் பாடசாலையிலே நடன ஆசிரியர் என்ற பதவிக்கு

, கலைக்கேசரி
39
முதலிலே நியமனம் பெற்ற சிறப்பும் இவருக்கு உண்டு. நெடுந்தீவு மகா வித்தியாலயம், வேம்படி மகளிர் கல்லூரி, இராமநாதன் கல்லூரி, யாழ். இந்து மகளிர் கல்லூரி, பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி முதலியவற்றில் ஆசிரியராகப் பணிபுரிந்ததுடன் தமது ஊராகிய இணுவிலிலும் புகுந்த ஊராகிய கொக்குவிலிலும் ஆடலை வரன் முறையாக பயிற்றுவித்து வந்தார். அர்ப்பணிப்பு மிக்க அவரது கற்பித்தலால் ஆடற்கலை ஏற்றம் பெற்றது. யாழ்ப்பாணத்தில் விஞ்ஞானக் கல்வி மேலெழுந்த கால கட்டத்திலும் அவரிடத்து விருப்புடன் ஆடலைப் பயில பலர் முன் வந்தமை குறிப்பிடத்தக்கது.
அவரது வாழ்க்கைத் துணை வியாராகிய பூரணம்
அவர்களின் இல்லத்திற் கலையழகு மிகுந்த சூழலிலே அவர் கலாபவனம் என்ற ஆடற்கலைக் கூடத்தை நிறுவி ஆரம்ப நிலையிலிருந்தே வரன் முறையாக ஆடலைப் பயிற்று விக்கலானார். பலர் அக்கலைக் கூடத்தில் இணைந்து ஈடுபாட்டுடன் கற்கலாயினர். ஆற்றுகை வளமும் அறிமுறை வளமும் உயர்ந்த ஒழுக்க நெறிகளும் அவரது கற்பித்தலிலே உள்ளடங்கியிருந்தன. அவரால் பயிற்றுவிக்கப்பட்டோர் அனைத்து இலங்கை விருதுகளையும் பெறத் தொடங்கினர்.
மிகுந்த புகழ் பெற்ற நடனக் கலைஞர்களும் ஆசிரியர்களும் இவரால் உருவாக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருமதி திரிபுர சுந்தரி யோகானந்தம், கலைஞர் வேல் அனந்தன், திருமதி கமலா ஜோன் பிள்ளை, பிரமஸ்ரீ வீரமணி ஐயர், செல்வி சாந்தா பொன்னுத்துரை, திருமதி கிருஷாந்தி இரவீந்திரா என்றவாறு ஆற்றல் மிக்க அவரது மாணவர் பரம்பரை நீண்டு கொண்டே செல்லும்.
அவரது மகள் திருமதி சாந்தினி சிவநேசன் ஆடல் ஆற்றுகையிலும் அறிமுறையிலும் உன்னதங்களை நிலை நிறுத்திய ஆடற்புலமையாள ராக விளங்குகின்றார். சாந்தினி சிவநே சனின் மகள் செல்வி தேவந்தி அந்தப் புலமை மரபைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார். ஆடலை ஒரு தவமாக மேற்கொள்ளும் மரபு அவர்களால் மேற்கொள்ளப்பட்டு
ெைல

Page 41
கலைக்கேசரி து 40
ம/
வருகின்றது. பல்கலைக்கழக நிலையிலே அக்கலையை மேலும் வளத்துடன் வளர்த்தெடுப்பதிலும் அவர்களின் பணியும் பங்களிப்பும் மேலும் விதந்து குறிப்பிடத்தக்க பதிவுகளாகின்றன.
கலாபவனம் இந்நாட்டிலே தனித்துவம் வாய்ந்த ஆடற் கலைக் கூடமாக இயங்கி வருகின்றது. ஆடலைத் திட்ட நுட்பமாகவும் செவ்வியல் மரபு பிறழாமலும் கற்பிக்கும் செயற்பாடுகள் அங்கே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அது போன்ற ஒரு கலாலயத்தை இணுவையூரிலும் அமைப்பதற்கு அவர் திட்டமிட்டிருந்தார். அதற்கெனத் தமது மூதாதையரின் நிலத்தையும் தெரிவு செய்திருந்தார்.
அவரால் உருவாக்கப்பட்ட நாட்டிய நாடகங்கள் தனித்துவம் வாய்ந்தவையாக அமைந்திருந்தன. ஆடற் புலத்தில் அவருக்கு இருந்த ஆளுமையும் பல்வேறு நடனத்துறைகளில் அவரிடத்தே காணப்பட்ட ஆழ்ந்த புலமையும் ஆடல் ஆக்கங்களிலே செழுமையை ஏற்படுத்தின. நீண்ட பயிற்சியைத் தொடர்ந்து தமக்குத் திருப்தி ஏற்பட்ட பின்னரே அவர் ஆற்றுகைக்குரிய நாளை நிர்ணயம் செய்தார். அவ்வகையில் அவரால் உருவாக்கப் பட்ட சுகன்யா, சதீ அகல்யா, ஊர்வசி, பாமா விஜயம், திருவெம்பாவை, குறிஞ்சிக் குமரன், காணி நிலம், சூடா மணி, பஸ்மாசுரமோகினி, யேசு பிறந்தார் முதலியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை.
பரத நாட்டியத்தில் ஆழ்ந்த புலமை, நாட்டார் நடனங்கள், கதகளி, நாட்டுக் கூத்துக்கள் முதலியவற்றில் அவர் கொண்டிருந்த திறன்கள் அனைத்தும் அவரின் நடன ஆக்கங்களை வளம்படுத்தின. அத்தகைய பின்புலத்தில் அவர் மேற்கொண்ட நடனப் புத்தாக்கப்புனைவுகள் ஆடல் அழகியலுக்கு வள மூட்டின. தெரிந்தெடுத்த தேவாரங்களுக்கும், ஆழ்வார் பாசுரங்களுக்கும் ஆடல் வடிவம் கொடுத்து அவரால் மேற்கொள்ளப்பட்ட புத்தாக்கப் புனைவுகள் பின்னர் புதுமைகளை மேற்கொள் வோருக்கு வளமான ஆற்றுப்படுத்தல்களாக அமைந்தன.
நடன அமைப்பிலே நிருத்தம், நிருத்தியம், நாடகப்பண்பு அனைத்துக்கும் செவ்விய முக்கியத்துவத்தைக் கொடுத்தார். ஆடல் அசைவுகள் ஒவ்வொன்றும் செப்பமாக அமைய வேண்டும் என்பதில் அதீத கவனம் செலுத்தினார். முத்திரைகள் தவறின்றியும் வழுவின்றியும் செப்பமாக அமைய வேண்டும் என்பதை மாணவர்க்கு தெளிவுபடுத்தினார். ஆடலில் அபிநய முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். மனவெழுச்சிகளை வெளிப்படுத்தாத ஆடல் வெறுமனே உடலசைவாக (Drill) மட்டும் அமைந்து கலைத்துவத்துக்கு ஊறுவிளைவித்து விடும் என்பது அவரின் முக்கியமான முன்மொழிவு.
நாட்டிய ஆக்கத்தில் நாடகப் பண்பு, பாத்திர வார்ப்பு, அரங்க நுட்பங்கள், ஆடை அணிகலன்கள், இசைக் கோலங்கள் என்ற அனைத்தையும் உள்ளடக்கிய அகல் நிறைவு (Comprehensive) கொண்ட முழுமையை வடிவமைத்தார். அதனைக் குறிக்கும் மரபு வழி ஆடற்

சொல்லாடலாக 'நிறைகுடச் செம்மை' நீட்சி கொண்டிருந்தது.
ஆடல் வழியாக கையளிக்கப்படும் செய்தியிலே தீவிர கவனம் செலுத்தினார். வெறும் களிப்புக்கும் பொழுது போக்கு இன்பத்துக்கும் புலன்களின் விருப்புக்குமுரிய கலையாக மட்டும் அவர் ஆடற்கலையைக் கருதவில்லை. மனித மேம்பாட்டுக்குரிய
விழுமியங்களைக் கையளித்தலிலும், ஆன்மிகச் செய்தியை உரைத்தெழுதுவதிலும் ஆடற்கலை ஆற்ற வேண்டிய செய் திக்கையளிப்பில் ஊன்றிய கவனம் செலுத்தினார். மரபு வழிச் செவ்விய ஆடல் தாங்கி நின்ற தெய்வீகச் செய்தியைப் பக்குவமாகக் கையளிப்பதில் மிக்க உறுதி பூண்டிருந்தார். சமகாலத்தை கலைச்சூழலிலே மீள் வாசிப் புக்கு உட்படுத்தும் அவரது மாணாக்கர் அனைவரும் அந்த மரபை வழுவாது பின்பற்றி வருதல் குறிப்பிடத்தக்கது.
கலைச் செல்வர் ஏரம்பநாதர் சுப்பையா அவர்களுக்கு ஏராளமான விருதுகளும், பட்டங்களும், விதந்துரைப்பு மடல்களும் கிடைக்கப் பெற்றன. ஆனால் அவற்றை அவர் பெரிதாக மதிக்கவில்லை. ஆடற்கலையை அவர் ஒரு தவமாகவே மேற்கொண்டு வந்தார். ஆடலும், ஒழுக்கமும் உயர்ந்த விழுமியங்களும் அவரது தரிசனத்தில் ஒன்றிணைந்திருந்தன. ஆடலை வெறும் கலையாக மட்டும் அவர் எதிர்கொள்ளவில்லை உயர்ந்த தரிசனம் மிக்க வாழ்க்கையாகக் கருதினார்.
அவர் தொடக்கிவைத்த ஆடல் மரபு நீண்டு வளர்ந்த வண்ணமுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்திலே பரத நாட்டியம் ஒரு பட்டப்படிப்பு நெறியாக எழுச்சி பெற்ற வேளை அவரின் ஆடற்கலைத் தரிசனமே வழிகாட்டியாக வும் அமைந்திருந்தது. பரத நாட்டியத்தைத் தரச்சிறப்புடன் கற்பிப்பதற்கும் அவரது தரிசனமே நீட்சி கொண்டுள்ளது.
சமகாலத்தைய கலைச் சூழலிலே கலைச் செல்வரது பணிகளை மீள் வாசிப்புக்கு உட்படுத்தும் பொழுது ஆடற் கலையின் வளர்ச்சியில் நிகழ்ந்த புதிய பரிமாண ஏற்பாடு களைக் கண்டுகொள்ள முடிகின்றது. அவற்றிலிருந்து சமூக நிரலமைப்புக்கும் பரத நாட்டியத்துக்குமுள்ள இணைப்புக்களையும் தொடர்புபடுத்தி நோக்க
முடிகின்றது.
தானாக தன்

Page 42
21 ந்ய
பொலன்னறுவையில் போர்க்கருவிகள்

13
இலங்கையில் சோழராட்சி கி.பி. 997 முதல் 1077 வரை ஆகிய காலப்பகுதியில் நீடித்திருந்தது. இக்காலப் பகுதியில் சோழருக்கு எதிரான அரசர்களான பாண்டியர், சேரர் ஆகியோருடன் நட்புறவுகளை ஏற்படுத்திக் கொண்டு இலங்கையில் சோழ ஆட்சிக்கு எதிராக பல தாக்குதல் நடவடிக்கைகளை சிங்கள மன்னர்கள் மேற்கொண்டார்கள். இந்தப் போர் நடவடிக்கைளின்போதும் அதற்குப் பிற்பட்ட காலகட்டங்களின் போதும் பயன்படுத்தப்பட்ட பல போர்க்கருவிகள் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டன. வாள்கள், நிலத்தில் புதைத்து வைக்கும் முட்கருவிகள், சுருள் வாள்கள், சங்கிலிவாள்கள் பண்டைய போர்க் கருவிகளாக உபயோகிக்கப் பட்டுள்ளன. பொலன்னறுவையில் ஆயுதத் தொழிற்சாலைகள் பல இருந்ததற்கான தொல்லியல் சான்றுகளும் கிடைக்கப் பெற்றுள்ள மையும் குறிப்பிடத்தக்கது. இப்பொருட்கள் பொலன்னறுவை தொல்பொருட்காட்சிச்சாலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

Page 43
கலைக்கேசரி தி 42 நடனக்கலை
ஆண்-பெண் இருபாலாராலும்
ஆடப்படும் தப்பாட்டம்
திருமதி. ஷர்மிளா ரஞ்சித்குமார்,
விரிவுரையாளர், சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம்.
உலகம் முழுவதும் மிகப் பழங்காலந் தொட்டே மனித உணர்வுகளின் வெளிப்பாடாக இசையும் நடனமும் அமைந்துள்ளது. மானுட வாழ்வின் இன்பம் துன்பம் இரண்டிலும் இசையும் நடனமும் இரண்டறக் கலந்துள்ளது. நாட்டுப்புற நடனம், இசை என்பன நாட்டுப்புற மக்களால் காலங்காலமாக வளர்க்கப்பட்டு வருகிறது. நாட்டுப்புற மக்களின் வாழ்க்கை வட்டச்

சடங்குகள் முழுவதிலும், நாட்டுப்புற இசை, நடனம் பிரிக்க முடியாதவாறு பின்னிப் பிணைந்திருக்கின்றது. நாட்டுப்புற இசையையும் நடனத்தையும் நாட்டுப்புற இசைக்கருவிகளையும் நாட்டுப்புற மக்கள் அழியாமல் பாதுகாத்துக்கொண்டுவருகின்றார்கள்.
'தப்பு' எனும் இசைக்கருவியினை இசைத்து ஆடப்படும் ஆட்டம் என்பதால் தப்பாட்டம் என்று அழைக்கப் படுகிறது. இக்கலையினைப் 'பறையாட்டம்' என்றும் அழைப்பர். பறையர் எனும் சாதியினரால் நிகழ்த்தப்படும் கலை என்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. 'பறை' என்ற இசைக்கருவியை சிலர் 'தப்பு' என்றும் அழைக்கின்றனர். பறையறிவித்தலுக்குப் பயன்படும் இசைக்கருவியாக அது கருதப்படுகிறது.
'பறை' என்பது மாட்டுத்தோலால் செய்யப்படும் இசைக்கருவியாகும். மரக்கட்டையால் செய்யப்பட்ட வட்ட வடிவச்சட்டகத்தில் பதப்படுத்தப்பட்ட மாட்டுத் தோலை இழுத்து ஒட்டி பறை செய்யப்படும். அவ்வாறு ஒட்டுவதற்கு புளியங்கொட்டையிலிருந்து தயாரிக்கப்படும் பசையினைப் பயன்படுத்துவர். இக் கலையினை நிகழ்த்துபவர்களே பறையினைச் செய்தும் கொள்வர். பறையினை இசைப்பதற்கு ஒன்றேகால் அடி நீளமும், ஒரு செ.மீ. அகலமும் கொண்ட சிம்புக் குச்சு அல்லது சிம்படிக்குச்சு (மூங்கில் குச்சு) எனப்படும் குச்சினைப் பயன்படுத்துவர். அக்குச்சினை தப்படிப்பவர்கள் பெரும்பாலும் இடக்கையில் வைத்திருப்பர். பூவரசுக் கம்பில் செதுக்கப்பட்ட அரையடி நீளமும் மூன்று செ.மீ.சுற்றளவுமுள்ள அடிக் குச்சு எனப்படும் குச்சினை வலக்கையில் வைத்திருப்பர். இரு குச்சுகளையும் பறையில் அடித்து ஓசை எழுப்பப்படும்.
பறையாட்டத்தைச் 'சாவு மேளம்' என்று உயர்சாதியினர் அழைத்து வந்தனர். ஏனெனில் சாவு ஊர்வலத்தில் பறையடித்தல் என்பது பல சாதியினரிடமும்
வழங்கியுள்ளது. அவ்வகையில்
பறையடித்தலை

Page 44
தாழ்த்தப்பட்ட சாதியினரே நிகழ்த்தி வந்தனர். ஆனால் இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் கோவில் நிகழ்ச்சிகளிலும், -- வாழ்க்கை வட்டச் சடங்குகளிலும், அரசியல் பிரச்சாரங்களிலும் தப்பாட்டம் நிகழ்த்தப்படுகிறது.
பொதுவாக காளியம்மன், மாரியம்மன் கோவில்களில் பால்குடம் எடுத்தல் தீக்குளித்தல், தீச்சட்டி எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகளிலும் தேர்த் திருவிழாக்களிலும் பிற தெய்வவழிபாடுகளிலும் செபஸ்தியார் அந்தோனியார் ஆரோக்கியமாதா வியாகுலமாதா போன்ற கத்தோலிக்க கோவில்களில் நடாத்தப்படும் விழாக்களிலும் நிறுவன விளம்பரங்கள் கட்சி ஊர்வலங்கள் போன்றவற்றிலும் தப்பாட்டம் இடம்பெறுகிறது.
ஆட்டத்தின் தன்மைகள் வெவ்வேறு நிகழ்ச்சிகளுக்காகத் தப்படித்தல் நிகழ்த்தப் பட்டாலும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தனித் தனியாக அடிவகைகள் உள்ளன.
சப்பாத்து அடி, டப்பா, அடி, பாடம் அடி சினிமா, அடி, ஜாயிண்டு அடி, மருள் அடி, சாமி சாட்டுதல் அடி, மாரடித்தல் அடி, வாழ்த்து அடி என்பவை அவற்றுள் சில. பொதுவாக ஆண்களே இக்கலையை நிகழ்த்துகின்றனர். நாகர்கோவில் களரி கலைக்குழுவினர் முதல் முறையாக ஆண்களும் பெண்களும் இணைந்து ஆடும் பாணியை கையாண்டு வருகின்றனர். பொதுவாக பறையாட்டம் சபை வணக்கத்துடன் ஆரம்பிக்கப்படும். இரவு பல மணி நேரம் தொடர்ந்து ஆடுவர். பார்வையாளர்களுக்கு சோர்வு ஏற்படாமலிருக்க பல சாகசங்கள், வித்தைகள், பல்சுவை நிகழ்ச்சிகள் போன்றவற்றை இடையிடையே நிகழ்த்துகின்றனர் ஆண்கள் மட்டும் ஆடுகின்ற ஆட்டத்திலே எழுச்சியும் ஆவேசமும் நிறைந்திருக்கும்.
கீழ்க்கண்ட அடையாளங்களை வைத்து தப்பில் தாளங்கள் அடிக்கப்படுகின்றன.
(+) : வலது கை (-) : இடதுகை (+ -) : வலது கையும் இடது கையும் சேர்த்து. முதலில் தாளங்களை தப்பு வைத்து அடிக்காமல் இரண்டு கோல்களை பயன்படுத்தி தரையில் அடித்து பழகுகின்றனர். பயிற்சிக்கு பிறகு தப்பில் அடித்து நிகழ்ச்சிக்கு தயாராகின்றனர்.
அதன் பிறகு நன்றாக தப்பில் தாளங்கள் அடிக்க தெரிந்தாலும், கால் அடவை மெதுவாக போட்டு மெதுவாக தப்பில் ஆடிப் பழகுகின்றனர். அதன் பிறகு தானாகவே அடியும் ஆட்டமும் வரும் என்பது இவர்களின்
மரபு.
வேட்டியைத் தார்பாய்ச்சிக் கட்டிக்கொண்டு தலையில் பட்டையாக துணியினை அணிந்து பறை இசைப்பதுதான் வழக்கம். ஆனால் தொழில் முறையில் மேடையில் நிகழ்த்தப்படும் போது காலில்

உ, கலைக்கேசரி
43
சலங்கை கட்டிக் குழுவினரெல்லாரும் சீருடை அணிந்து தப்பாட்டம் நிகழ்த்துவது தற்போது வழக்கிலுள்ளது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் கல்லுரி மாணவர்களும் இக்கலையினைப் பயின்று நிகழ்த்தி வருகின்றனர். ஆண்களால் மட்டுமே நிகழ்த்தப்பட்ட இக்கலையினைத் தற்போது பெண்களும் பயின்று ஆடுகின்றன. தன்னார்வக்குழுக்கள் இப்பணியினைச் செய்து வருகின்றனர். என ஆய்வாளர் நாட்டார் கலைக்களஞ்சிய ஆசிரியர் அ. கா. பெருமாள் கூறுகிறார்.

Page 45
கலைக்கேசரி தி 44
தப்பிசை தப்பு, தப்பட்டை, பறை என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. வட்ட வடிவமாக அழைக்கப்பட்ட பலகையில் - எருமைத் தோலை புளியங்கொட்டைப் பசையால் ஒட்டி இழுத்துக் கட்டப்பட்ட இசைக்கருவியை இடது தோளில்மாட்டிக் கொண்டு இரண்டு கைகளிலும் குச்சிகளைக் கொண்டு அடிக்கின்றனர். இடது கையில் சிறு குச்சியும் வலக்கையில் அடிக்குச்சியும் (பெரியது) பிடித்து அடிக்கின்றனர். இதன் இசை அடிக்கப்பெறும் இடத்தை வைத்து 'ஜாதி அடி' என்றும் 'சிணுக்கடி' என்றும் சொல்லப்படுகிறது. அடிக்குச்சியால் தப்பின் மையப் பகுதியில் அடிப்பது ஜாதி அடியாகும். தப்பின் மேற்புற வட்ட விளிம்பருகே அடித்து எழுப்பப்பெறும் ஒலி சிணுக்கடியாம். மையப் பகுதியடி 'டன்' என்ற ஓசையுடனும் சிணுக்கடி 'டட்ட', 'டண்ட', 'ணக்க' என்ற ஓசைகள் வருமாறும் அடிக்கப்படுகின்றன. இவை அடிக்கப்பெறும் முறை ஒரு அடிக்கும் அடுத்த அடிக்கும் கொடுக்கும் இடைவெளி, பக்க இசைக் கருவிகளாவன உறுமி, மத்தளம் ஆகியவற்றிக்கு ஏற்ப வேறு தாளங்கள் உருவாக்கப்படுகின்றன. அவை அடியின் கணக்கைக் கொண்டு ஒன்றான அடி. இரண்டான அடி என்று 16ஆம்
அடிவரை அடிக்கின்றனர்.
பொதுவாக, தமிழகத்தில் பறையர் இனத்தவர் எங்கெல்லாம் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் 'தப்பிசை' உண்டு.இது அந்தந்தப் பகுதிக்குரிய சூழலில் தன் உண்மைத் தன்மையை இழக்காமல் ஒலித்துக் கொண்டுள்ளது என்பதை இது பற்றி ஆராய்வோர் முதலில்

ஆர்.
உணரவேண்டும் தவிரவும் மீட்டுருவாக்கம் செய்வது
வரவேற்கத்தக்கதுதான். அதற்காக அதன் போலியை ஏற்கச் சொல்வதுதான் வருத்தத்திற்குரியது. இப்பகுதி மக்களின் அனைத்து வாழ்வியல் சடங்குகளிலும் பறை ஒலிக்கப் படுகிறது. காதுகுத்து, பூப்பு, திருமணம், இறப்பு மற்றும் திருவிழா போன்ற அனைத்துச் சடங்குகளிலும் பறையிசை
முக்கிய இடம் பெறுகின்றது.
மாரியம்மன் திருவிழாக்கள் இப்பகுதியில் 8 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை நடைபெறும். அவ்விழாவில் இவ்விசை இன்றியமையாததாகிறது. இரவு நேரங்களில் உணவிற்குப் பிறகு பறை இசைப்பதும் மக்கள் வரிசையாக நின்று ஆடுவதும் பெருவழக்கம்.
சாதி அடிப்படையில் இக்கலை ஆடப்பட்டாலும் தற்காலத்தில் தன்னார்வத்தொண்டர்களும் கல்லூரி மாணவர்களும் ஆண் பெண் இருபாலாரும் இக்கலையை ஆடி வருகின்றனர்.

Page 46
அதிசய
2 -:21:
காலககோ க
தகவல்

சப்பாத்து?
எகிப்தில் லக்ஷ்சர் என்ற நகரத்திலுள்ள ஆலயம் ஒன்றிலுள்ள சாடியிலிருந்து மூன்று சோடி சப்பாத்துக்கள் மற்றும் தனியாக ஒரு சப்பாத்து
ஆகியவை அண்மையில் அகழ்ந்தெடுக்கப்பட்டன. இவற்றில் இரண்டு சோடி சப்பாத்துக்கள் ஏழு -
அங்குல நீளம் கொண்டவையாக - சிறுவர்கள் - பயன்படுத்தியவையாகக் காணப்படுகின்றன. மற்றைய ஒருசோடி சப்பாத்து ஒன்பது அங்குல நீளம் கொண்டவையாக நடுத்தர உயரமுள்ள மனிதனால் பயன்படுத்தப்பட்டதாக கருதப் படுகின்றது. பாம் மர - நார்ப்பொருளினால் இச்சப்பாத்துக்கள் தாரிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள விசேடம் யாதெனில் இந்தச் சப்பாத்துக்கள் யாவும் 2100 வருடங்களுக்கு முற்பட்டவையாகும். களவு போய்விட்ட இந்தச் சப்பாத்துகள் தற்போது எங்கு? யாரிடம்? உள்ளன என்பது குறித்த எந்தத் தகவல்களும் ஆய்வாளர்களிடம் இல்லை.

Page 47
எவர்கர் 46 பார்
குகை ஓவியங்கள்
சுபாஷிணி பத்மநாதன்
ஆசிய ஓவிய வரலாற்றில் இடம்பிடித்துள்ள ஓவியங்களின் ஒருபகுதி குகை ஓவியங்களாகும். இவ் அரிய ஓவியங்களான அஜந்தா ஓவியங்கள், சிகிரியா ஒவியங்கள், சித்தன்ன வாயில் ஓவியங்கள், மற்றும் பாக் குகை ஓவியங்கள், ஆகியன குகை ஓவிய வரிசையில் அதிமுக்கியமானவையாகத் திகழ்கின்றன. இந்திய குகை ஓவிய வரிசையில் அதிமுக்கிய இடம் பிடிக்கும் அஜந்தா ஓவியங்கள் இந்திய சரித்திர கலை கலாசார வரலாற்றிலும் அதி முக்கிய இடத்தைக் கொண்டுள்ளன.
அஜந்தா குகை ஓவியங்களாவன பெரிதும் 5 ஆம் 6 ஆம் நுாற்றாண்டில் எழுந்தவை என ஆராய்ச்சியாளர்களால் ஊகிக்கப் படுகின்றன. மராட்டிய மாநிலத்தை பிறப்பு பூமியாகக் கொண்ட அஜந்தா குகை ஓவியங்கள் தனித்துவம் மிக்கவையாகும். பெரும்பாலான அஜந்தா குகை ஓவியங்களை இரண்டாவது, பதினாறாவது மற்றும் பதினேழாவது குகைகளில் காணமுடிகின்றது. உயிர்த் துடிப்புள்ள நளினமான அர்த்தபூர்வமான கட்டுக்கதைகள் தத்துவ கதைகள், தத்துவக் கருத்துக்கள் ஆகியன இந்த விவரணம் செறிந்த அழகிய வர்ண ஓவியங்கள் மூலம் வெளிக்கொணரப்பட்டுள்ளன. பௌத்த மத ஜாதகக் கதைகளை, வெஸ்ஸந்தர ஜாதகக் கதைகளை நாலந்த எழில் கொஞ்சும் அடிப்படை
அம்சங்களை எடுத்தியம்புவதாகவே அஜந்தா குகை ஓவியங்கள்
ஊளெககச்
0151T000
சிடிக

விளங்குகின்றன. உதரணத்திற்கு
காசி அரசன் அனுப்பிய வேடன் ஒருவனிடம் ஆறு தந்தங்களைக் கொண்ட யானை தனது தந்தங்களை அளிப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. ஆன்மிக அம்சத்தை எடுத்தியம்பும் வகையில் மலர்களைத் தாங்கிய போதிசத்துவர் உருவ ஓவியமும் அஜந்தா ஓவியகலையமைப்பில் வரையப்பட்டுள்ளமையை அவதானிக்க முடியும். தேவலோக ஆடல் நங்கையரான அப்சராஸ்கள் கைகளில் வாத்தியங்களை தாங்கிய வண்ணம் தேவலோக இளவரசர்களுடன் அவர்கள் ஆகாயத்தை நோக்கிப் பயணிக்கும் சித்திரிப்பு ஓவியங்கள் பிரமிக்கத்தக்கவை. மேலும் பல விவரண விவரிப்புச் சித்திரங்களைக் கொண்டு விளங்கும் இக்குகை ஓவியங்கள் கண்கவர் காட் சிகளாகத் திகழ்கின்றன. இவை மட்டுமன்றி ஓவிய கர்த்தாக்களின் கற்பனை வளத்தை பெரிதும் வெளிப்படுத்துவனவாகவும் விளங்குகின்றன. இவ் ஒவியங்களாவன அரிய வாழ்க்கைத் தத்துவத்தை அர்த்தபூர்வமாக எடுத்தியம்பும் வண்ணமும் விளங்குகின்றன. கண் இழந்த தாய் - தந்தையரின் வாழ்க்கையை பாதுகாத்துப் பராமரிக்கும் மகனின் கடமை உணர்வை உலகிற்கு வெளிப்படுத்தும் ஓவியம் ஒன்றும் இடம்பெறுவதை அதானிக்கமுடிகின்றது. அத்துடன் அன்னப் பறவைகள் ஆகாயத்தைத் தடாகமாகக் கொண்டு நீந்துவதாகவும் சித்திரிக்கப்படும் கற்பனை வளம் செறிந்த ஓவியத்தையும் அங்கே காணமுடிகின்றது. இயற்கையின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் காளை மாடுகள், யானைகள், மான்கள், பறவைகள், கொக்குகள், அழகிய பூக்கள், தாமரைத் தடாகம், தாமரை மலர்கள், இலை குழைகள், ஆகியன செறிந்த பலவகைப்பட்ட கண்கவர் காட்சிகள் நிறைந்தவையாக மேலும் இவ் அரிய ஓவியங்கள் காட்சி தருகின்றன. பண்டைய கால

Page 48
சாதாரண சமூக நிலைப்பாட்டை எடுத்தியம்பக் கூடிய காளைமாட்டுச் சண்டைகளைச் சித்திரிக்கும் காட்சிகளைக் கூட இவ்வரிய ஓவியக்கலையூடாக நாம் காண முடிகின்றது. இவை அக்கால சமூகத்தின் பொழுதுபோக்கு விளையாட்டுகளின் ஒரு பிரதிபலிப்பாக விளங்குவதைக் காணலாம். இவையாவற்றுக்கும் மேலாக மிருகங்களின் தலையுடன் மனித உடலைத் தாங்கிய அஜந்தா குகை ஓவியங்களையும் நாம் காணமுடிகின்றது.
இவ் ஓவிய நிலைப்பாடானது தத்துவ வார்த்தரீதியில் மனிதனானவன் மனித நேயம் கொண்டவனாகவும் அதே சமயம் மிருக இயல்புகளைக் கொண்டவனாகவும் ஓருங்கே விளங்குவதை எடுத்துக் காட்டுவதாக அமைகின்றது எனலாம்.
ஆங்காங்கே - கோட்டு வரி முறை ஓவியங்களைக் கொண்ட வர்ண பூச்சுச் செறிந்த ஓவியங்களைக் கூட உலகப்புகழ் பூத்த அஜந்தா ஓவியங்களில் கண்டு பிரமிக்கக்கூடியதாகவுள்ளது. மேலும் இவற்றில் வரையப்பட்டுள்ள ஆடை அணிகலன்கள், ஆபரணங்கள் என்பனவற்றில் இருந்து அக்கால இந்திய உடை அலங்கார கலை மரபுப் பாங்கினை, ஆடை அணிகலன் பயன்பாட்டு
நிலைப்பாட்டினை
ஊகிக்கக் கூடியதாகவுள்ளது. மேலும் பிரபுக்களின் வாழ்க்கைச் சித்திரிப்பு ஓவியங்கள், அரண்மனைக் காட்சிகள், அக்காலப் பயன்பாட்டில் இருந்த ஆயுதங்கள், வீரர்களின் வீரதீர கா சித்திரிப்புச்
செறிந்த ஓவியங்கள், உருவ
ஓ வி ய ங் க ள் அனைத்ததையும் ஒ ரு ங்  ேக இ க் கு  ைக சித்திரிப்பு

- ::Eார:-: 12.
ஓவியங்களில் இன்றும் காணமுடிகின்றது. - மேலும் அக்கால அரசர்களுடைய மாளிகை
- மரபு நிலைப்பாட்டைக் கூட துல்லியமாக இவ்ஓவியங்கள் வாயிலாக காணமுடிகின்றது. அவ்வாறே அஜந்தா ஓவியங்கள் விஷ்ணு தர்மோதர என்னும் நுாலில் இடம்பெறும் சித்திர சூத்திர விளக்க ஓவியங்கள் பெரிதும் அஜந்தா ஓவியங்கள் மூலம் விளக்கப்படுவதைக் காணமுடிகின்றது.
அஜந்தா குகை ஓவியங்களுக்கு அடுத்தபடியாக மிளிர்வன பாக் குகை ஒவியங்களாகும். மத்திய பிரதேசத்தை மையமாகக் கொண்டு விளங்கும் இக்குகை ஓவியங்களாவன இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம் மற்றும் ஏழாம் குகைகளில் பெரிதும் காணப் படுகின்றன. அரிய தாமரை மலர்கள், இலைகுழைகள், அழகுணர்ச்சி ததும்பும் வகையில் தத்துவார்த்தமாகவும்
1 க

Page 49
பாப்
11 48
001
பெடு00/600)
கெ00
யதார்த்த பூர்வமாக வரையப்பட்டுள்ளன. அழகான அன்னப் பட்சிகளையும் விசித்திரமான அரிய பெரிய மிருகங்களின் உருவங்களையும் -- ஒவியங்களாக கலையுணர்ச்சி ததும்பும் வகையில் சித்திரித்திருப்பதைக் காணமுடிகின்றது. அரசிளங்குமரி தோழிகள் புடைசூழக் காணப்படும் காட்சியானது அரச அந்தப் புரக்காட்சியாக விளங்குகின்றது. தேவேந்திர மன்னானவன் முடியுடன் அரச அவையில் கொலுவீற்றிருப்பதாகவும் மேலும் அரச கம்பீரத்துடன் யானை மீது உலாவருவதாகவும் சித்திரிக்கப்பட்ட காட்சிகளையும் - பாக் குகை வவியங்களில் காணக்கூடியதாகவுள்ளது. தாளங்களை கையில் ஏந்திய வண்ணமுள்ள ஓவியங்களையும், காணமுடிவதனால் இசைத்துறை மிக்க காலகட்டமாக
அக்காலம்
விளங்கியிருக்கலாம்
என்பதினை ஊகிக்கமுடிகின்றது. பௌத்த தர்மத்தை அடிப்படையாக வைத்து எழுந்த இவ் ஓவியங்களாவன 1982 ஆம் ஆண்டளவில் சீரிய வகையில் பெயர்த்து எடுக்கப்பட்டு இன்று கொவல்வார் அகழ்வாராய்ச்சி அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
சித்தன்ன குகை - ஓவியங்களாவன - தமிழகத்தைச் சேர்ந்த புதுக்கோட்டைப் பகுதியில் இடம்பெறும் ஓவியங்களாகும். இவை ஏழாம் நுாற்றாண்டைச் சேர்ந்த பல்லவ கால் ஓவியங்களாகும். பல்லவ மன்னனான மகேந்திர வர்மன் சமண சமயத்தை தழுவி இருந்த கால கட்டத்தில் இக்குகைகள் அமைக்கப்பெற்றன. இக்குகைகளின் உட் புறத்தே அரிய ஓவியங்கள் பல வர்ணம் தீட்டப் பெற்று அலங்கரிப்பு ஒவியங்களாகத் திகழ்கின்றன. சில ஒவியங்கள் வெறுமனே தூண்களை அலங்கரிக்கும் ஓவியங்களாகத் திகழ்கின்றன. பெரும்பாலான ஓவியங்கள் நடனநிலை அம்சங்களை பிரதிபலிப்பனவாக காணப்படுகின்றன. உயர் ஆடல்நிலை அம்சங்களை வெளிப்படுத்தும் ஓவியங்களாக மட்டும் இடம்பெறாது ஆடல் முத்திரைகளை செவ்வனே விவரிக்கும் அற்புத - ஓவியங்களாகவும்
இவை
கம்)
கTெITக

விளங்குகின்றன. நடனத்திற்கே உரித்தான சித்திரிப்பு அலங்காரம் செறிந்த காது அணிகலன்களை தாங்கிய நடன மாதுகளின் தோற்றங்களையும் நடராஜப் பெருமானின் உருவத்தை பிரதிபலிக்கும் உருவங்களையும் ஆங்காங்கே காணமுடிகின்றது. இவை தவிர சமண சமயத்தை வெளிப்படுத்தும் ஓவியங்களையும் ஆங்காங்கே சித்தன்ன வாயில் குகை ஓவியங்களில் காணமுடிகின்றது. ஏனைய ஓவியங்களைப் போன்று ஓவியரின் கலையுணர்வை வெளிப்படுத்தும் வகையில் இவ்வரிய ஓவியங்கள் அமைந்துள்ளன. தாமரைத் தடாகம், தாமரைத் தடாகத்தில் மீன்களும் அன்னப்பட்சிகளும் தாமரை மலர்களும் நிறைந்தும் செறிந்தும் காணப்படுவது அக்கால வாழ்க்கை முறை நீர்வளம் நிலவளம் செறிந்து இயற்கையுடன் ஒன்றி விளங்கியதை சித்திரிப்பதைக் காணமுடிகிறது.
இலங்கையின் சிகிரிய ஓவியங்கள் உலக அரங்கில் இந்தியாவின் அஜந்தா ஓவியங்களுக்கு அடுத்தபடியாக ஆசிய குகை ஓவிய வரிசையில் - முக்கிய இடம்பெறுகின்றன. சிகிரியா குன்றினை இலங்கையின் புராதன தலைநகரமான அநுராதபுரத்திற்கும் பொலன்னறுவைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் காணமுடிகின்றது. சிகிரியா குன்றின் குகைகளில் அதி முக்கிய அம்சமாக விளங்குவது ஐந்தாம் நுாற்றாண்டைச் சேர்ந்த அலங்கரிப்புக் கலையான உயரிய ஓவியங்களாகும். சாதாரண நிலமட்டத்தில் இருந்து ஏறத்தாழ நுாறு மீட்டர் உயரத்தில் காணப்படும் சிகிரியா குன்றுக்கு செல்வதற்கு படிக்கட்டுக்கள் வழியாக ஏறிச் செல்ல வேண்டும். அங்கு நுழைவாயினுடாக உட்சென்று இவ்அரிய ஓவியங்களைப் பார்வையிடக் கூடியதாக உள்ளது.
குகையின் வடகிழக்குமுனையிலேயே பெரிதும் இவ் அரிய ஓவியங்களை அவதானிக்க முடிகின்றது. குகைகளுக்குள் காணப்படும் இவ்வரிய ஓவியங்கள் இடம் பெற்றுள்ள இடத்தின் ஒட்டுமொத்த நீளம் 140 மீட்டராக வும் உயரம் எறத்தாழ 40 மீட்டராகவும் விளங்குகின்றது. குகைக்குள் இவ்வரிய ஓவியங்களாவன
--- ஓர்

Page 50
(மான
ஓவியக்கலைக்கூடமாகவே காட்சி அளிக்கின்றது. கடினமான குகை மேற்பரப்பின் மீது வர்ணப்பூச்சு பூசப்பட்டு அழகுணர்ச்சி ததும்பும் ஓவியங்களாக விளங்குகின்றன.
பண்டைய ஓவிய நிலைப்பாட்டு அம்சங்களையும் தன்னகத்தே கொண்டு என்றும் காலத்தால் அழியாத இலங்கையின் நாகரீகச் சின்னமாக இச் சிகிரிய ஓவியங்கள் திகழ்கின்றன.
உலகளாவிய ரீதியில் மக்களின் கவனத்தை ஈர்த்த இளங் கன்னியரின் ஓவியங்களாவன பாவரசம் ததும்பும் வண்ணம்
வர்ணம்
தீட்டப்பட்டுள்ளன. இதன்நிலைப்பாட்டை கிரகித்து அறிந்தே தம்புள்ள குகை ஓவியங்கள் 18 ஆம் நுாற்றாண்டில் வரையப்பட்டுள்ளன என நம்பப்படுகின்றது. கடினமான குகைமுகப்பில் இவ்வரிய ஓவியங்கள் > எழில் ததும்பும் வகையில் தீட்டப்பட்டுள்ளமையை ஆங்காங்கே அவதானிக்க முடிகின்றது. இவற்றை ஆராய்ந்தவர்களில் முக்கிய இடம் பிடித்தவர்கள் பெல், கலாயோகி அனந்தகுமாரசுவாமி
மற்றும் சேனரத் பரணவிதாரண ஆகியோராவார்.
பேல் என்னும் ஆய்வாளரின் கருத்தின் பிரகாரம் எழில் கொஞ்சும் மாதர்கள் காசியப்ப மன்னன் காலத்தில் பக்திபூர்வமாக பேருதுதால கால மலை கோயிலுக்கு மலர் கொண்டு செல்வதை எடுத்துக்காட்டுவதாக விளங்குகின்றது எனக்கருதி குறிப்பிட்டுள்ளார். அரச அவை பெண்கள் போன்று விளங்கும் இவ்வரிய மாதுகள் அக்கால சமூக சம்பிரதாய மரபுகளை எடுத்தியம்புவதாக பெரிதும் அமையாது சமூகமட்டத்தில் உயரிய இடத்தில் விளங்கும் மாதரின் தரத்தினை வெளிப்படுத்துவதாக அபிப்பிராயப்படுகின்றனர்.
ஆய்வாளரான பரணவிதாரணவின் கருத்தின் பிரகாரம் அரசிளங்குமாரியான விஜய அரசிளங்குமாரியின் தேவலோக ஆடல் மங்கையரின் பங்களிப்புக்களே இவ்வரிய ஓவிய வடிவங்களில் பிரதிபலிப்பதாக கருதுகின்றார். மேலும் ஆய்வாளரான பரணவிதாரணவின் கூற்றுப்படி ஒட்டுமொத்தமாக அக்கால ஆட்சியாளரின் செழிப்பை சமூகசம்பிரதாய காலச்சார அம்சங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாகவே பெரிதும் இவ் ஓவியங்கள் விளங்குகின்றன. - கலாயோகி அனந்தகுமாரசுவாமியின் கருத்தோட்டப்படி சிகிரியா ஓவிய மாதரின் நிலைப்பாடானது தேவலோக வர்ணனை செறிந்ததாகவும் தேவலோக மாதுகள் மலர்கள் ஏந்தும் பாங்கிலும் பாணியிலும் மலர்தட்டுக்கள் ஏந்திச் செல்லும் பாவனையிலும் எங்கும் மலர்கள் பரவுண்டு மலர்கள் நிறைந்திருக்கும்
- காட்சிகள் யாவும் காலக்கிரமத்தில் சிகிரிய ஓவியங்களே இலங்கையின் தம்புள்ள ஓவிய நிலைப்பாட்டிற்கு முன்னேடியாக வழிவகுத்தன எனலாம் என அவர் கருதினார் என எடுத்தியம்புகின்றது. பொதுவாக சிகிரியா ஓவியங்கள் அஜந்தா ஓவியங்களின் தொடர்நிலையாகவே கருதுகின்றன. ம்,
T)
600)

- கலைக கேசரி
49

Page 51
கலைக்கேசரி 2 50 பாரம்பரியம்
யாழ்ப்பாணப் பிரதேசத்தில் நல்லெல் நல்லெண்ணெய்யின் மருத்து
டாக்டர் திருமதி. விவியன் சத்திய
யாழ்ப்பாணத்தின் பண்டைய பாரம்பரிய உணவுப் பழக்கங்களில் நல்லெண்ணெய் முக்கிய இடம் வகிக்கின்றது. அந்தவகையில் நல்லெண்ணெய் தயாரிப்பு தற்காலங்களில் அருகி வருகின்றது. பாரம்பரிய முறைகளின்படி நல்லெண்ணைய்யினைத் தயாரித்து பயன் படுத்துவதே உடலுக்கு உகந்ததாக அமையும். நவீன இயந்திரங்களை பயன்படுத்துவதாலும் மரத்தளபாட இயந்திரங்கள் தவிர உலோகங்களிலான இயந்திரங்களைப் பயன்படுத்துவதாலும் உற்பத்தி செய்யப்படும் நல்லெண்ணைய்யினை தரம் மிக்கதாகவும் மருத்துவப் பயன்கள் நிறைந்ததாகவும் தயாரித்துக் கொள்ள இயலாது. ஆகவே யாழ்ப்பாணத்தில் செக்கு உரல் - புளிய மரத்தினாலும் உலக்கை - முதிரை மரத்தினாலும் துலா - இலுப்பை மரத்தினாலும் கொழுக்கி - பூவரசு மரத்தினாலும் தயாரிக்கப்படும். இவ்வாறு இந்த செக்கு

னணெய் உற்பத்தியும் வப் பயன்களும் பசீலன், சிரேஷ்ட விரிவுரையாளர்
இயந்திரத்தினை மாடுகளின் உதவி மூலம் இழுக்கப்படுவதனால் அங்கு வெப்பம் படிப்படியாக விடுவிக்கப்பட்டு நல்லெண்ணெய் உரிய முறையில் பிரித்தெடுக்கப்படும். இந்த நல்லெண்ணெய்த் தயாரிப்பு பிரான்பற்று, நவாலி, ஆனைக்கோட்டை ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்படுகின்றது (பண்டத்தரிப்பு). இதற்குப் பயன்படுத்தப்படும் எள்ளு வயல் நிலங்களில் விளைவது உகந்தது. ஆனால் தற்போது தோட்ட நிலங்களில் பயிரிடப்படும் எள்ளு பெறப்படுகிறது. இந்த எள்ளில் இரண்டு வகை உண்டு. வெள்ளை எள்ளு, கறுப்பு எள்ளு. இதில் வெள்ளை எள்ளு மருத்துவப் பயன்மிக்கதாகும். இது தற்போது மருந்துக் கடைகளில் அதிகமாகக் கிடைக்கின்றது. ஒரு முறை செக்கிலிருந்து நல்லெண்ணெய் பெற 18 - 21 கிலோ கிராம் வரையான எள்ளு தேவைப்படும். இதன் மூலம் 11 - 13 லீற்றர் நல்லெண்ணெய் பெறப்படும். இந்த நல்லெண்ணெய் இரும்புச் சத்து நிறைந்ததாகவும் விற்றமின்கள் நிறைந்ததாகவும் காணப்படும். நல்லெண்ணெய் தயாரிப்பில் எஞ்சும் பிண்ணாக்கு புரதச்சத்து நிறைந்ததாகவும் காணப்படுகிறது. எனவே இதனை விலங்குத் தீவனங்களுக்கு
பயன்படுத்துவதால் விலங்குகளுக்கும் உரிய புரதச் சத்தும் கிடைக்கப் பெறுவதுடன் விலங்கு உற்பத்திப் பொருட்கள் அதிக சத்து நிறைந்ததாகவும் காணப்படும்.
இவ்வாறு யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய முறைகளின்படி தயாரிக்கப்படும் நல்லெண்ணெய் உற்பத்தி தற்காலங்களில் குறைவடைந்து வருகிறது. ஆகவே மக்களின் மத்தியில் இந்த நல்லெண்ணெய்யின் மருத்துவப் பயன்களை எடுத்துரைத்து இது சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் இக் கைத்தொழிலை ஊக்குவிக்க கைத்தொழில் அமைச்சும் இது சம்பந்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதனால்

Page 52
அருகிவரும் நல்லெண்ணெய் - பிரித்தெடுப்பு குறைவடையாமல் அதிகம் உற்பத்தி செய்து சிறந்த பலன்களை பெற்றுக் கொள்ளலாம்.
நல்லெண்ணெய்யானது நோய் மற்றும் முதுமையைத் தவிர்க்கும். உயிர்ச்சத்து A யும் B யும் கொலஸ்ரோலைக் குறைக்கும் லெசித்தின் என்ற பொருளும் உள்ளதால் உடலிலும் இரத்தக் குழாய்களிலும் கொழுப்புக் கோளாறு, தொப்பை ஏற்படாது. இளமைத் தோற்றத்துடன் ஆரோக்கியமும் ஏற்படும். நல்லெண்ணெய் நோயை
முறிக்கும் முறிவு மருந்தாகும்.
சொசாமின் என்ற பொருள் நல்லெண்ணெய்யில் இருப்பதால் வாதம், இதயநோய் வராமல் முன்கூட்டியே தடுத்து உடல் உறுதியை பேணும். நல்லெண்ணெய்யை நன்கு சூடுபடுத்திப் பயன்படுத்தினால் நோய் எதிர்ப்பு தன்மையைக் கூட்டும். வாழ்க்கையில் வெறுப்பு, கவலை, மனச்சோர்வு ஆகியவற்றைத் தடுக்கும் பைரோரொபினால் என்ற அமிலப் பொருளும் நல்லெண்ணெய்யில் இருக்கிறது. உடல் நலத்தையும் தந்து நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கும் முதல்தர எண்ணெய் நல்லெண்ணெய் தான்.
நல்லெண்ணெய்க் குளியல் மூலம் தோல் மிருதுவாகிறது. மூல வியாதி, பெண்களின் மாதவிலக்குப் பிரச்சினைகள், தோல்வியாதி உள்ளவர்கள் எள்ளு உருண்டையைத் தவறாது சாப்பிட்டு வரவும். நல்லெண்ணெய் சேர்த்தால் குடலில் Ca2+, Po43செரிப்பது இலகுவாகும். ஆயுளும் இளமையும் எளிதில் நீடிக்க இந்த எண்ணெய்யே அருமருந்து.
ஒரு பெண் பருவமடைந்த காலத்தில் சிலர் நல்லெண்ணெய்யை 30 - 60 மி.லீ. அளவில் தினமும் பருகக் கொடுப்பார். சிலர் கத்தரிப்பிஞ்சை சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு வதக்கி உண்ணக் கொடுப்பர். நல்லெண்ணெய் தேகத்திற்கு பலத்தைக் கொடுப்பதுடன் கண் ஒளியையும் (உயிர்ச்சத்து A) கொடுக்கும். மேலும் பல நோய்களை ஏற்படாமல் தடுக்கும். நல்லெண்ணெய்யில் முக்கிய கொழுப்பமிலம் Linoleic Acid உண்டு. இது கருப்பை முதலிய உறுப்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். நல்லெண்ணெய்யின் பயனை நன்கு அறிந்தமையாலேயே எமது மக்கள் தமது அன்றாட வாழ்வில் நல்லெண்ணெய்யை மிகுதியாகப் பயன்படுத்தி வருகின்றார்கள். ஒரு பெண் பருவமடைந்து விட்டாள் என்று கேள்விப்பட்டதும் அவளின் உறவினர்கள் அவளைப் பார்ப்பதற்கு நல்லெண்ணெய்யும் உழுந்தும் கொண்டு செல்வது வழக்கம். ருதுகாலப் பராமரிப்பில் சினையில் பெருக்கத்துக்கு நல்லெண்ணெய்யும்
அச்சினையின் வலிமைக்கு உழுந்தும் அவசியமாகும்.
யாழ்ப்பாணத்து மக்களில் பெரும்பாலானோர் நெய்க்குப் பதிலாக நல்லெண்ணெய் அதிகமாகப் பாவித்து வருகின்றனர். இது குழந்தை வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்பது மக்கள் பலரின் கருத்தாகும்.

66006 B6FT|
51

Page 53
கலைக்கேசரி தி
52
நல்லெண்ணெய் Linoleic Acid எனும் Unsaturated Fatly Acid உள்ளது. இது பொதுவாக Essential Unsaturaed Fatly Acid எனப்படும். இவ்வகை முக்கிய கொழுப்பமிலம் மனித உடலில் - தயாரிக்கப்படுவதில்லை. அவற்றை உணவு மூலமாகத்தான் உள் எடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கத் தவறின் குழந்தையின் வளர்ச்சி குன்றும். மயிர் உதிர்தல், கரப்பான், விரணம் ஏற்பட்டால் ஆறுவது தாமதமாதல், குருதி உறைதல் தாமதப்பட்டால், கண் பார்வை குன்றல் என்பன ஏற்படும்.
குழந்தை கர்ப்ப காலத்தில் இருக்கும் பொழுதும் பிறந்த சில ஆண்டுகள் வரையும் மூளை வளர்ச்சி துரிதமாக நடைபெறுகிறது. இதற்கு Linoleic Acid மிகவும் அவசியம். தாய்ப் பாலிலும் இம் முக்கிய Fatly Acid அதிகளவில் உண்டு. எனவே குழந்தைப் பருவத்திலேயே உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்வதாலேயே இவ் எண்ணெய் நல்லெண்ணெய் என கூறப்படும். கர்ப்பிணிப் பெண்களும் தினமும் 1 - 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் குடிப்பது சிறந்தது. நல்லெண்ணெய்யில் உயிர்ச்சத்து A இருப்பதால் மாலைக் கண்நோய் தாய்க்கும் சேய்க்கும் வராமல் தடுக்கும்.
''இவ் வெண்ணெய்...... காந்தி பித்தமி நைப்பு நேத்திரத்தின் ரோகம் கவ்வை சேர் சிரவலிப்புக் கபால முட்டணஞ் சிரங்கோ டெவ்மோர் கிருமி போக்கு மெழிலும் கண்ணொளியுமுண்டாம் செவ்வாயாம் பொறுமுண்டோ மென்னவே செப்பினாரே'' எல்லா எண்ணெய்களையும் விடவும் சிறந்த எண்ணெய் நல்லெண்ணெய். விரைவில் கெட்டுப் போகாது. உடலுக்கு வலிமை தரும். கபால சூடு, காதுவலி, சொறி, சிரங்கு, புண் முதலியவற்றை ஆற்றும். மேல் நாட்டவர்கள் இதனை Olive எண்ணெய்க்கு பதிலாகப் பாவிப்பார். சித்த வைத்தியத்தில் பெரும்பாலான தைலங்களில் இது பயன்படுகிறது. ஆகவே இவ் வெண்ணெய்யை தேய்த்து முழுகுவதற்கும் உணவுப் பண்டங்களில் சேகரிப்பதற்கும் பலகாரம் முதலியன செய்வதற்கும் பயன்படுத்தலாம்.
கைக்குழந்தைக்கு நல்லெண்ணெய் அல்லது கிரந்தி எண்ணெய் பூசி மெதுவாக அதன் உடலைப் பிடித்துப் பின் இளங்காலை, வெயிலில் அல்லது மாலை வெயிலில் சிறிது நேரம் வைத்திருக்கும் வழக்கமும் எமது மக்களிடையே முன்பு அதிகமாகவும் தற்போது கிராமப் புறங்களில் ஓரளவிற்கும் காணப்படுகிறது. இவ்விதம் வெய்யிலில் வைத்திருப்பதனால் குழந்தைக்கு உயிர்ச்சத்து D கிடைப்பதற்கு வழி ஏற்படுகிறது. எவ்வாறெனின் தோலில் கீழ் உயிர்ச்சத்து D யின் முன்னோடியான 7 Dehydro Cholesterol எனும் பொருள் உள்ளது. சூரிய ஒளிக்கதிர் தோலில் படும்போது மேற்படிப் பொருளானது உயிர்ச்சத்து D ஆக மாற்றப்படுகிறது. உயிர்ச்சத்து D ஆனது என்புகள், பற்கள் மற்றும் பல்வேறு இழையங்களின் வளர்ச்சிக்கு
அவசியமானதொன்றாகும்.

மனித உடலில் மேற்பரப்பில் Staphylo Cocci எனும் பற்றீரியா வகை சாதாரணமாகக் காணப்படுகிறது. இவற்றை கைகிருமி என்பர். இப் பற்றீரியாவானது விதாரணமாக நோயை ஏற்படுத்துவதில்லை. எனினும் உடலின் நோயெதிர்ப்புச் சக்தி குறையும்போது புதிதாக நோய்களை ஏற்படுத்த வல்லது. குழந்தைக்கு நல்லெண்ணெய் அல்லது கிரந்தி எண்ணெய் பூசும் போது
அது மேற்படி பற்றீரியா பரவுவதை ஓரளவு கட்டுப்படுத்துகிறது. எனவே அதனால் ஏற்படக் கூடிய தொற்று நோய்களையும் தவிர்க்கிறது.
கர்ப்பிணித் தாய்மாருக்கான சரக்கு, காயம் என்பன தயாரிக்கும்போது நல்லெண்ணெய்யே பிரதானமாக விட்டரைக்கப்படுகிறது. இதில் Linoelcaid உயிர்ச்சத்து A என்பனவுக்கு அத்துடன் கொத்தமல்லி, சீரகம் என்பவற்றிலுள்ள உயிர்ச்சத்து A அகத்துறிஞ்சப் படுவதிலும் இது உதவுகின்றது.
நல்லெண்ணெய் நல்ல எண்ணெய் தானா? நல்லெண்ணெய் என ஏன் இந்த எள்ளின் எண்ணெய்க்கு
இப் பெயர் வந்தது? தேங்காயின் எண்ணெய்யினை - தேங்காய் எண்ணெய் ஆமணக்கு எண்ணெய்யினை - ஆமணக்கம் எண்ணெய் வேப்பம்வித்தின் எண்ணெய்யினை - வேப்பெண்ணெய் புங்கவித்தின் எண்ணெய்யினை - புங்கமெண்ணெய் என அழைக்கின்றனர். ஆனால் எள்ளின் எண்ணெய்க்கு மட்டும் எள்ளுஎண்ணெய் எனப் பெயரிடாது நல்லெண்ணெய் என பெயரிட்டதன் காரணம் எல்லா எண்ணெய்யிலும் சிறந்த எண்ணெய்யாகவும் மருத்துவப் பயன்கள் நிறைந்ததாகவும் காணப்படுவதாலேயேதான் நல்லெண்ணெய் எனப் பெயர் வந்தது. சாதாரணமாக எண்ணெய் என்றாலே எள் - எண்ணெய். எனவே பகுதி விகுதியாகவே பிரிக்கலாம். அவ்வகையில் எள்ளின் நெய்யினையே நல்லெண்ணெய் எனக் குறிப்பிடலாம்.
இத்தகைய பாரம்பரிய மருத்துவப் பயன்கள் நிறைந்த நல்லெண்ணெய்யினைப் பயன்படுத்தி நாங்களும் நற்பயன்களைப் பெற்றுக் கொள்வோமாக.

Page 54
கலைக்கேசரி 2 33 தக்வல்துளி
ஆதிமனிதன் அறிந்திருந்த 'டெற்ராசைக்ளின்'
(பெ)

நோய்களைத் தடுக்கும் நுண்ணுயிர் எதிரி மருந்து 1928 இல் அலெக்சாண்டர் பிளெமிங்கினால் கண்டுபிடிக்கப்பட்ட பென்சிலின் மருந்தின் மூலம்தான் உலகில்
முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது என நாம் இதுவரை எண்ணியிருந்தோம். ஆனால் அண்மைய அகழ்வாராய்ச்சியொன்று ஆச்சரியம்மிக்க தகவலைத் தருகின்றது. கி.மு. 550 ஆம் ஆண்டுகளில் ஆபிரிக்காவில் வாழ்ந்த மக்கள் நோய்களைத் தடுக்கும் நுண்ணுயிர் மருந்துகளைப் பயன்படுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எகிப்து - சூடானிய எல்லையில் நைல்நதிப் படுக்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆபிரிக்க மம்மி ஒன்றினை அல்ரா வயலட் கதிர் ஊடாக பரிசோதனை செய்தபோது, அதனுடைய நரம்புப் பகுதிகளில் டெற்ராசைக்ளின் என்ற நோய்த்தடுப்பு நுண்ணுயிர் மருந்துப் படிவு அவதானிக்கப்பட்டது. நோய்த் தொற்றுக்குள்ளாகும் பண்டைக்கால மனிதன் எவ்வாறு டெற்ராசைக்ளின் மருந்தை அருந்தினான் என்பது ஆச்சரியம் தரும் விடயமாகும். 2000 வருடங்களுக்கு முன்னரே பண்டைக் கால மனிதன் பக்ரீரியா மற்றும் அதன் தன்மைகள், செயற்பாடுகள் குறித்து முழுமையாக அறிந்துள்ளான். மதுவம் அல்லது ஈஸ்ட் எனப்படும் பொருளினால் டெற்ராசைக்கிளினை உருவாக்க முடியும். அதேபோல் இந்த மதுவம் என்ற பொருளின் மூலம் பியர் எனப்படும் பானத்தைத் தயாரிக்க முடியும். இந்த நுட்பத்தை அறிந்த ஆதிகால மனிதன் பியர் என்னும் ஒருவகை பானத்தைத் தயாரித்து நோய்களிலிருந்து நிவாரணம் பெற்றான். இந்த ஆய்வினை அமெரிக்காவிலுள்ள கொலராடோ
- பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உயிரியல் பேராசிரியர் டென்னிஸ் வன்ஜெர்வன் தனது மாணவர்களுடன் மேற்கொண்டு வருகின்றார்.

Page 55
கலைக்கேசரி து 54 வழிபாட்டு மரபு
சைவ வைணவ ஒரு
திருமெய்யம்
தமிழ் நாட்டின் புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் கம்பீரமாக காட்சித் தருகிறது திருமெய்யம் கோட்டை. திருச்சியிலிருந்து 72 கி.மீ. புதுக்கோட்டையிலிருந்து 22 கி.மீ. மதுரையிலிருந்து 84 கி.மீ. தூரத்தில் மதுரை - புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் திருமயம் உள்ளது. இந்தக் கோட்டைக்குள் சைவ, வைணவ ஒற்றுமையைப் பிரதிபலிப்பது போல் சிவன், பெருமாள் கோவில்கள் அமைந்திருக்கின்றன. இவை குடைவரை கோவில்கள் வகையைச் சேர்ந்தவை. குடைவரை எனும்போது மலை யைக் குடைந்து அமைக்கப்படும் கோவிலாகும். தமிழ் நாட்டில் குடைவரைக் கோவில்கள் பெரும்பாலான வற்றை அமைத்த பெருமை பல்லவர்களையே சேரும். திருச்சி, நாமக்கல், மாமல்லபுரம் போன்ற குடைவரைக் கோவில்கள் பல்லவர்களால் கி.பி. 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டுகளில் உருவாக்கப்பட்டன. இதேபோல் திருமயம் கோவில்களும் கி.பி. 7 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்லவ மன்னன் மகேந்திரனாலும் அவனது மகன் நரசிம்ம பல்லவனாலும் அமைக்கப்பட்டன. பிற்காலத்தில் வந்த சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள், நாட்டுக்கோட்டை நகரத்தார் ஆகியோர் வாழையடி வாழையாக கோவில்கள் இரண்டினதும் வளர்ச் சிக்கு திருப்பணிகள் செய்து, கோபுரங்கள் கட்டி இன்றுள்ள நிலைக்கு மேம்படுத்தினார்கள்.
திருமெய்ய மலையின் தெற்குப் பக்கத்தில் இயற்கையாக அமைந்த குகையே அற்புதமான கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. இந்தக் கோயில் அமைந்துள்ள குன்றைச் சுற்றிலும் உள்ள கோட்டை கி.பி. 1687 ஆம்
பி
எண்கோண வடிவிலமைந்த புஷ்கரிணி தீர்த்தம்

மைப்பாட்டுக்கு சான்று திருத்தலங்கள்
IைI
சைவ
ஆண்டு சேதுபதி விஜயரகுநாத தேவரால் 40 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டதாகும்.
நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே வாயில் வழியாகச் சென்று சிவனையும் விஷ்ணுவையும் தரிசிக்கக் கூடியவாறு சன்னிதிகள் அமைந்திருந்தன. ஆனால் பிற்காலத்தில் சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் ஏற்பட்ட சச்சரவுகள் காரணமாக இரண்டு சன்னிதிகளுக்கும் நடுவில் மதில் கட்டப்பட்டு இரண்டும் தனித்தனிக் கோவில்களாகப் பிரிக்கப்பட்டன. பொலன்ன றுவையில் பல சைவ வைணவ கோவில்கள் அருகருகே அமைக்கப்பட்டிருந்தன. இவை தற்போது பராமரிப்பார் இன்றி பாழடைந்து போய்விட்டாலும் அவற்றின் சிதைவு களைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இலங்கையிலும் இந்தியாவிலும் சைவ வைணவ ஒற்றுமையை மேம் படுத்தும் வகையில் இவ்வாறு கோவில்கள் அமைக்கப் பட்டிருந்தமை கவனிக்கத்தக்கது.
திருமெய்யம் குடைவரைக் கோவில்கள் இரண்டிலும் அற்புதமான சிற்பங்கள் காணப்படுகின்றன. அந்நாளில் கோவிலைக் கட்டிய அரசர்கள், வைணவ - சைவ பேதங்களைப் பார்க்காமல், குன்றில் குடைந்து, சிவன் ஆலயத்தில் ஆவுடையாருடன் கூடிய பெரிய சிவலிங்கத்தையும் நடுவில் நந்தியையும் எதிரில் மிக காத்திரமான அழகிய லிங்கோற்பவரையும் பெருமாள் ஆலயத்தில் ஐந்து தலை கொண்ட அனந்தாழ்வான்மேல் யோக்சயனத்தில் பெருமாள் அருள்பாலித்துக் கொண்டிருப் பதாகவும் இத்திருஉருவம் இந்தியாவிலேயே மிகப் பெரியது என்றும் கருதப்படுகின்றது.
பெருமாள் சன்னிதி திருமயத்தின் விஷ்ணு கோயிலுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. இக்கோவில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலை விட மிகவும் பழைமையானது. இதன்காரணமாக 'ஆதி ரங்கம்' என்றும் அழைக்கப்படுகிறது. இங்கே இசை கல்வெட்டுக்கள் உண்டு. இது ஆழ்வார் பாடல் பெற்ற தலம். பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் திருமெய்யம் 43 ஆம் திருப்பதியாகும். திருமங்கை ஆழ்வார் தனியாக சென்று மங்களாசாசனம் செய்த கோயில்கள் மொத்தம் 46 ஆகும். அவற்றுள் இந்தத் திருமெய்யமும் ஒன்று. இந்தியாவிலேயே பெருமாள் அனந்தசயனத்திலிருக்கும் மிகப்பெரிய குகைக் கோயில் இதுதான். |
பெருமாளின் பங்கையக் கண்கள் அரைக்கண்ணாக மூடியிருக்க, இதழ்களில் மென் நகையுடன் பாம்பணைமேல் பள்ளி கொண்ட நிலையில் வலக்கரம் ஆதிசேசனை அணைத்துக் கொண்டு காட்சி தருகிறார். இக்குடைவரைக் கோவிலின் மூலவர் யோக சயன

Page 56
மூர்த்தியான திருமெய்யர்'. சுற்றிலும் தேவர்கள், ரிஷிகள், பெருமாளின் நாபிக் கமலத்திலிருந்து புறப்படும் தாமரை மலரில் பிரம்மாவும், மார்பில் குடியிருக்கும் மகாலட்சுமி, தேவர்கள், ரிஷிகள் என்று வைகுந்தமே வந்திறங்கியது போல் இருக்கிறது. குடைவரையின் பின்பகுதியில் சல்லிகை, தக்கை, உடுக்கை போன்றவையும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்துமே மலையைக் குடைந்து செதுக்கப்பட்டுள்ளன.
வேலைப்பாடமைந்த கற்றளியான இக்கோவிலுக்கு ஒரே ஒரு சுற்றுச்சுவர் மட்டும் உள்ளது. எனவே இந்த சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலை தனியே திருச்சுற்று சுற்றி வரமுடியாது. காரணம் மூலவர் சந்நிதி குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளதேயாகும்.
இத்தனை சிறப்புகளோடு திகழும் இத்தலத்தில் உள்ள இன்னொரு சிறப்பு எண்கோண குளமாகிய சத்திய

55
புஷ்கரிணி தீர்த்தம் விளங்குகிறது. ஆலமரமே தலவிருட்சம்.
பெருமானின் உண்மையை உணர்த்திய திருமெய்யராக சயனக் கோலத்தில் பெருமான் காட்சிதருவதனால் இந்த ஊருக்கு திருமெய்யம் என பெயர் வழங்கலானது.
இத்தலத்தின் தாயார் உஜ்ஜீவனத்தாயார் எனும் திருநாமம் தாங்கி எழுந்தருளியுள்ளார். இத்தாயாரை வழிபட்டால் குழந்தைப்பேறு நிச்சயம் பல வாழ்க்கை நலன்களும் விளையும். பேய், பிசாசு பிடித்தவர்கள், நரம்புத் தளர்ச்சி நோயில் துன்புறுபவர்கள் நன்மை பெறுவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை. உஜ்ஜீவனத்தாயாருக்கு திருமஞ்சனம், புடவை சாத்துதல், வளையல், பொம்மை ஆகியவற்றை உபயம் அளித்தல் மற்றும் பெருமாளுக்கு வெண்ணெய் பூசுதல், தூய உலர்ந்த ஆடை சாற்றுதல் என்பன முக்கியமாகும்.

Page 57
வைகாசி பெளர்ணமியில் தேரோட்டமாகக் கொண்டு பத்து நாட்கள் திருவிழா நடைபெறும்..
ஆடிப்பூரம் திருவிழா, பத்து நாட்கள் திருவிழா நடைபெறும். கிருஷ்ணஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி
ஆகிய நாட்கள் சிறப்பு உடையது.
சத்தியமூர்த்தி பெருமாள் கோயில் தல வரலாற்றினை கருவறையில் சிற்பங்களாக வடித்திருக்கின்றார்கள். ஒருசமயம் பெருமாள் பாம்பணையில் படுத்து யோக நித்திரையில் ஆழ்ந்திருக்கும் போது ஸ்ரீதேவி, பூதேவி
ஆகியோரை அபகரிக்க மது, கைடபர் ஆகிய அரக்கர்கள் வருகின்றனர். அது கண்டு அஞ்சிய பூதேவி பெருமாளின் திருவடிக்கருகிலும், ஸ்ரீதேவி பெருமாளின் மார்பிலும் ஒளிந்து கொள்கின்றனர். பெருமாளின் நித்திரையை கலைக்க மனமில்லாது ஐந்து தலை நாகமான ஆதிஷேசன் தன் வாயிலிருந்து விஷ சுவாலையைக் கக்கி அரக்கர்களை விரட்டி விடுகிறான். பெருமாளின் அனுமதியின்றி அவ்வாறு செய்ததற்காக பயந்து இருக்கையில், பெருமாள் என் அனுமதியின்றி செய்தாலும் நல்லதே செய்திருக்கிறாய் பாராட்டுக்குரிய செயல் என்று கூறியதாக வரலாறு. இதை மெய்ப்பிக்கும் வகையில் இத்தலத்தில் ஆதிசேஷன் அஞ்சி, தன் தலையைச் சுருக்கியவாறு காட்சி தருவது சிறப்புக்குரியது.
திருமாலின் சார்ங்கம் என்ற வில்லின் அம்சமாக பிறந்தவர் நீலன். மன்னனாகப் பிறந்து பக்தி மார்க்கத்தில் திளைத்தவர். இவரது வீரத்தில் மகிழ்ந்த மன்னன் நீலனை தன் படைத்தளபதி ஆக்கியதுடன் திருவாலி நாட்டின் மன்னனாகவும் ஆக்கினான். அமங்கலை என்ற தேவலோக கன்னி கபில முனிவரின் சாபத்தால் பூமியில் குமுதவல்லி

நாச்சியார் என்ற பெயரில் வளர்ந்து வந்தாள். இவளது புகழையும் அறிவையும் கேள்விப்பட்ட திருமங்கை ஆழ்வார் இவளைத் திருமணம் செய்ய விரும்பினார். விஷ்ணுவின் பக்தையான குமுதவல்லியோ தன்னை திருமணம் செய்ய வேண்டுமானால் தினமும் ஆயிரத்தெட்டு வைணவர்களுக்கு அமுது படைக்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்தாள். நிபந்தனையின் பேரில் அமுது படைத்து, படைத்து அரண்மனையின் நிதி நிலை சரிந்தது. வழக்கமாக சோழமன்னனுக்கு கப்பம் கேட்டு வந்த ஏவலர்களிடம் தன் நிலையை கூறி அனுப்பி விட்டார். கோபமடைந்த மன்னன் அமைச்சர்களுடன் தன் படையை அனுப்பி ஆழ்வாரை பிடித்து வரும்படி கூறினான். ஆனால் அனைவரும் விரட்டியடிக்கப்பட்டனர். எனவே மன்னனே பெரும் படையுடன் சென்றான். ஆனாலும் ஆழ்வார் அவர்களை புறமுதுகிட்டு ஓடச் செய்தார். ஆழ்வாரின் வீரத்தில் மகிழ்ந்த மன்னன் அவரிடம் நேரில் சென்று பேச்சுப்படி கப்பம் கட்டுவதே சிறந்தது. அதுவரை என் கைதியாக கோயிலில் தங்கியிரு என்றார். மன்னன் கூறியபடி ஆழ்வாரும் மூன்று நாட்கள் எதுவும் சாப்பிடாமல் கோயிலில் தங்கியிருந்தார். பசி மயக்கத்தில் தூங்கிய ஆழ்வாரின் கனவில் தோன்றிய காஞ்சிபுரத்து பெருமாள். தன் சேவைக்கு வந்தால் அவரது கடன் தீர்க்கும் வகையில் பொருளுதவி செய்வதாக கூறினார். மன்னனின் அனுமதிபெற்று படையினருடன் காஞ்சிபுரம் சென்ற ஆழ்வார் பெருமாள் கூறிய இடத்தில் தோண்டவும் பெரும் புதையல் இருந்தது. அதை எடுத்து மன்னனுக்குரிய கடனை அடைத்து விட்டு மீதியை அமுது படைக்க வைத்துக்கொண்டார். இதையறிந்த மன்னன்

Page 58
ஆழ்வாரைப் பணிந்து பணத்தை திருப்பிக்கொடுத்து அமுது படைக்கவைத்துக் கொள்ளக் கூறினான்.
இந்தப்பணமும் - தீர்ந்து போகவே ஆழ்வார் தன் அமைச்சர்களுடன் பணக்காரர்களிடம் கொள்ளையடித்து அமுதுபடைத்து வந்தார். ஒரு முறை நாராயணன் லட்சுமி தேவியுடன் மணக்கோலத்தில் வந்தார். ஆழ்வார் தன் படையினருடன் அவர்களை மிரட்டி அவர்களது நகைகளை பெற்றுக்கொண்டார். ஆனால் தன் கால் விரல் மோதிரத்தை மட்டும் நாராயணன் கழற்றவில்லை. ஆழ்வாரும் மோதிரத்தை கழற்றும்படி கூறியதற்கு என்னால் முடியவில்லை முடிந்தால் நீயே கழற்றிக்கொள் என்றார் நாராயணன். அதேபோல் ஆழ்வாரும் குனிந்து தன் பற்களால் விரலைக்கடித்து மோதிரத்தை இழுத்தார். அப்போது நாராயணன் ஆழ்வாரின் காதுகளில் நாராயண மந்திரத்தை உபதேசித்தார். வந்திருப்பது நாராயணன் என்பதை அறிந்த ஆழ்வார். மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார். ஆழ்வார் திருடனாக இருந்தாலும் தன் உணவுக்கு கூட அதை எடுக்காமல் யாசித்து சாப்பிட்டார்.
12 ஆழ்வார்களில் இவர்தான் அதிக பெருமாள் திருத்தலங்களை மங்களா சாசனம் செய்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது வரலாற்றில் ஒரு சிறப்பு என்னவென்றால் இவர் மொத்தம் 82 பெருமாள் கோயில்களை மங்களாசாசனம் செய்திருந்தாலும் தான் பிறந்த சொந்த ஊரான திருக்குறையலூரில் உள்ள பெருமாள் கோயிலை மங்களாசாசனம் செய்யவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
பல நூற்றாண்டுகளைக் கடந்துவிட்ட போதும் தெற்கு நோக்கிய நான்கு நிலைமாட ராஜகோபுரம் செங்கல் சுண்ணாம்பினால் பிற்காலப் பாண்டியர்களினால் கட்டப் பட்டதாகும். பிற்காலத்தில் தொல்பொருட் திணைக்களத் தினரால் கோபுரத்தின் மீது சாந்துடன் வெள்ளைச் சீமெந்து கலந்து பூச்சு செய்யப்பட்டுள்ளது. கோபுரத்தில் சிற்ப அலங்காரங்கள் எல்லை. ஆயினும் விமானங்கள் அனைத்திலும் சிலை அலங்காரம் உண்டு.
ஆசியாவிலேயே மிகப்பெரிய லிங்கோத்பவர்
கோவிலில் உள்ள திருஉருவச் சிலைகள்

, கலைக்கேசரி
57
கோவிலின் முதல் மண்டபத்தில் உள்ள தூண்களில் கவின்மிகு சிற்பங்களைமுழு உருவச் சிலைகளைக் கண்டு களிக்கலாம். 'விஜய நகர அரசர்கள் காலத்தில் தான் சிற்பங்கள் நிறைந்த கற்தூண்களை உடைய மண்டபங்கள் எடுக்கப்பட்டன' என்கிறார், தொல் பொருள் இயல் அறிஞர் டாக்டர். நாகசாமி. எனவே இந்த மண்டபம் விஜய மன்னர்களால் நிர்மாணிக்கப்பட்டிருக்க வேண்டும். நுழைவு வாயிலைத் தொடர்ந்து உள்ள முதல் மண்டபத்தின் இடப்புறத்தில் சக்கரத்தாழ்வார் (இதுதான் அருள்மிகு சத்தியமூர்த்திப் பெருமாள் கோவிலின் முதல் சன்னிதி; கருவறை, அர்த்த மண்டபத்துடன் அமைந்துள்ளது.), ஆண்டாள், கிருஷ்ணர் சன்னிதிகளும் வலப்புறத்தில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா மண்டபமும் அடுத்தாற்போல லஷ்மி நரசிம்மர் மண்டபமும் காணப்படுகின்றன.
சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு நேர் எதிரில் உள்ள தூண் சிறப்பு மிக்க தெய்வீகத் தூணாகும். இந்த ஒரே தூணில் சங்கு, சக்கரம், சடாயு, சடாயுவின் மேல் இராமர், அன்னப் பறவை, அனுமர் முதலான அனைத்தும் அழகு மிளிர வடிக்கப்பட்டுள்ளன. ஆண்டாள் சன்னதிக்கு எதிரில் உள்ள தூண்களில் குறவன், குறத்தி, நாட்டியக் பெண்களின் சிலைகள் தத்ரூப் உடல் அமைப்புடன் வசீகரத் தோற்றத்துடன் உள்ளன. குறத்தியை கடைக்கண் ணால் நோக்கும் முனிவரின் சிற்பம் ஒன்றும் தூண் ஒன்றில் செதுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணர் சிலைக்கு எதிரில் உள்ள தூண்களில் இராமர், இலக்குமணன், சீதை, அனுமன், மன்மதன், கண்ணப்பநாயனார், அவரது தோழன் காடன் ஆகியோரது சிலைகளின் கலை நுணுக்கங்கள் கண்ணுக்கு விருந்தளிக்கின்றன.
பங்குனி உத்தரத்தில் உலகளந்த சத்திய மூர்த்திப் பெருமான் உடன் உறைநாச்சியாருடன் தாயார் சந்நிதிக்கு எழுந்தருளும்போது பக்தர்களுக்கு காட்சிகொடுப்பார். மற்றைய உற்சவங்களின்போது சத்தியமூர்த்திப் பெருமானுடன் செண்பகவல்லியும் மரகதவல்லியும் சூடிக்

Page 59
ຫມໍນີ້ຫມົດ ເອົາ IT
58
ກກກ

கொடுத்த சுடர் கொடியும் ஆகிய மூவரும் உற்ச மூர்த்திகளாக எழுந்தருளுவர். ஆறு கால பூசைகளும் சித்திப்படியாக நடைபெறுகின்றன. இரவில் தாயாருக்கு புட்டுடன் அமுது படைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கும் ஒரேயொரு வைணவத் திருப்பதி திருமெய்யம் மட்டுமே.
தாயார் சந்நிதிக்கு நேர் எதிரிலுள்ள மண்டபத் தூண்களில் தசவதாரக் கோலங்கள் சிற்பங்ங்களாக வடிக்கப்பட் டுள்ளன. இதனால் இம்மண்டபம் தசவதார மண்டபம் எனப்படுகின்றது. தசவதார மண்டபத்தின் மத்தியல் இராஜ
கோபுரத்து நுழைவாயிலுக்கு நேர் எதிரில் தான் பலிப்பீடம் மும் கொடிமரமும் நிறுவப்பட்டுள்ளன.
நூற்றெட்டுத் திருப்பதிகளில், ஏன் இந்தியாவிலேயே எண் கோண வடிவில் எட்டு வாயில்களுடன் - துறைகளு டன், தாமரை மலர் வடிவில் தோற்றமளிக்கும் சிறப்புமிக்க தீர்த்தம் சத்திய தீர்த்தம் ஒன்றுதான்! அது மட்டுமல்ல சாளக் கிராமத்தை பீடத்தில் வைத்து பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. உலகத்தில் உள்ள மற்றத் தீர்த்தங்கள் யாவும் குளிர்ப்பதாலும் சிரசில் தெளித்துக் கொள்வதாலும் மட்டுமே மக்களின் பாவத்தைப் போக்கும். ஆனால் இந்த சத்திய தீர்த்தத்தின் - சத்திய புஷ்கரிணியின் - தீர்த்தத்தைக்
கையினால் தொட்டாலும் பாவங்கள் விலகிவிடும்.
சிவன் கோவில் சத்தியகிரீஸ்வரர் உடனுறை வேணுவனேஸ்வரி அம்பாள் திருக்கோயில் அருள் வாய்ந்தது. இத்தலத்தில் மாதந்தோறும் பெளர்ணமி அன்று கிரிவலத்தின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தொட்டில் செய்து வேணுவனேஸ்வரி அம்பாளை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது. தவிர திருமண பாக்கியம் வேண்டுவோர் இத்தலத்தில் வணங்கினால் நிச்சயம் வேண்டுதல் நிறைவேறும். இங்குள்ள சிவாலயத்தில் இசை தொடர்பான பல அபூர்வ செய்திகளைக் கூறும் கல்வெட்டுகள் உள்ளன. சிவாலயத்தில் உள்ள
லிங்கோற்பவர் மிக உயரமானவர்.
சத்தியகிரீஸ்வரர் ஆலயத்தில் நான்கு நிலைமாட கோபுரம் உள்ளது. முதல் மாடம் வரை கருங்கல்லினால் அமைக்கப்பட்டு அதன் மீது மூன்று நிலைமாடங்கள் செங்கல்லாலும் சுண்ணாம்பினாலும் கட்டப்பட்டுள்ளன. கோபுரத்தில் சிற்ப அலங்காரம் காணப்படுகின்றன. முக்கியமாக புராண சம்பவங்களைச் சித்திரிக்கும் சிற்பங்கள் காணப்படுகின்றன.
- கோபுரத்தின் ஒரு சிலையில் இராவணன் சிவனைச் சுமந்த நிலையில் சாமகாணம் பாடி மகிழ்வது போல் தெரிகிறது. பல்வேறு விதமான நகை, உவகை, காதல், வீரம் உள்ள சிலைகள் அமையப்பெற்றுள்ளன. நான்கு நிலை மாடங்கள் நமக்கு நான்கு வேதங்களைக் குறிப்பது போல் காணப்படுகின்றன. | கோவிலின் தல விருட்சமாக வில்வ மரமும் அரு நெல்லி மரமும் காணப்படுகின்றன. விநாயகர், சோமஸ்கந்தர்

Page 60
06ம்
தெய்வானை முருகன், பெரிய சோமஸ்கந்தர், ஆதி சோமஸ்கந்தர், சுவாமி அம்மாள், திருக்கல்யாண பெரிய அம்மாள், பிரதோஷ சோமஸ்கந்தர், சந்திரசேகர், பொண்ணழகி அம்மன் என சுமார் 27 சிற்ப விக்கிரகங்கள் காணப்படுகின்றன.
தர்மம் தாழ்ந்து அதர்மம் ஓங்கிய காலத்தில் சத்திய தேவதை மான் உருக்கொண்டு இங்கு ஓடி ஒளிந்து கொண்டு பெருமாளை வணங்கி வந்தாளாம். அப்பொழுது இந்த இடம் வேணு வனமாக அதாவது மூங்கில் காடாக இருந்திருக்கிறது. அதனால் இக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் அம்பாள் வேணுவனேஸ்வரி எனும் திருநாமத்துடன் அருள் பாலிக்கிறாள். சத்திய கிரீஸ்வரர்
அழகிய லிங்கரூபமாக காட்சி அளிக்கிறார்.
இது ஒரு புண்ணியத் தலம். காண்பது, கேட்பது, உரைப்பது என எல்லாமே சத்தியத்தோடு பின்னிப் பிணைந்தவையாக உள்ளது. சத்தியமூர்த்தி, மெய்யப்பன், சத்திய கிரீஸ்வரர், சத்திய தீர்த்தம், சத்திய விமானம், சத்தியகிரி என அனைத்தும் சத்தியமே. ஊரும் திருமெய்யம் (சத்தியம்-மெய்) மெய்யான எண்ணத்தோடு உண்மையாகத் திகழ விரும்புபவர்கள் மெய்யப்பனை
வழிபட்டால் அதிக பலனைப் பெறலாம்.
மதுரைக் கோயிலைப் போலவே சுவாமி சன்னதியும், அம்மன் சன்னதியும் கிழக்கு திசை நோக்கியே இருக்கிறது. இந்த சிவாலயத்தை, தனியே சுற்றி வர முடியாது. சிவன், பெருமாள் ஒருசேர மலையைச் சுற்றி வந்தால் மட்டுமே கிரிவலம் செய்தல் முடியும்.
டாக்டர். ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள், 'ஊரும் பேரும்' என்ற தனது நூலில்புதுக்கோட்டை கல் வெட்டினை (340காலம் கி.பி. 1256) மேற்கோள் காட்டி, மெய்யம் என்ற ஊரில் கிடந்த கோலத்தில் காட்சி தரும் திருமாலை, 'திருமெய்யன் என்றே ஊரின் பெயரைத் தாங்கி ஸ்ரீசத்தியமூர்த்தி பெருமான் இருக்கிறார்' என்கிறார்.

கலைக்கேசரி
59
சத்தியத்தின் பிறப்பிடமாக ஒரு காலத்தில் இருந்தது என்பதை நினைவுறுத்தும் வகையில் இவ்வூரில் பிறக்கும் பெரும்பாலான ஆண் குழந்தைகளுக்கு சத்தி, சத்தியமூர்த்தி, சத்திமெய்யர் என பெயர் சூட்டி இவ்வூர் மக்கள் மகிழ்கின்றனர்.
இங்குள்ள கல்வெட்டுக்கள் வட்ட எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளன. இதில் பரதக்கலையின் பண்புகளை விளக்குவதுடன் பரிவாதினி என்ற பண்டைக்கால வீணையையும் இசைக்கலையின் பண்வகைகளையும் விளக்குகின்றன.
-பஸ்ரியாம்பிள்ளை ஜோண்சன்

Page 61
கலைக்கேசரி து 60 தெய்வ வாகனங்கள்
தெய்வ ஊர்திகள்:
அட்ட வாரன
- - - - -
''வேழமுடைத்து மலைநாடு'' என்பது ஒரு தொடர். பாரதப் பெரு நாட்டின் அரிய செல்வம் யானையாகும். வேந்தர்களின் நால் வகைப் படைகளுள் வேழப் படையே முதன்மை வாய்ந்தது. ''யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்” என்ற பொன்மொழி அனைவரும் அறிந்ததே.
இந்து மதத்தில் முழுமுதற் பொருளாக, வினை நீக்கும் நாயகனாக விளங்குபவர் விநாயகப் பெருமான். அவர் யானை முகத்தவனாகக் காணப்படுவதற்கு பல்வேறு கதைகளைக் காரணங்களாகக் காட்டினும் உண்மைப் பொருளை ஒவ்வொரு இந்துவும் உணர வேண்டும்.
யானை விலங்கினங்களும் மிகவும் பெரியது; ஆற்றல் மிக்கது. எத்துணை பாரத்தையும் வருத்தமின்றி சுமப்பது.

னங்களும் அயிராவணமும்
கலாபூஷணம் வித்துவான் திருமதி. வசந்தா வைத்தியநாதன்
பெரிய படைகளையும் எளிதில் வெல்லும் ஆற்றல் படைத்தது. காலம் வருந்துணையும் காத்திருந்து எதிரியை அழிக்கும் பண்புடையது. இதனை புறநாநூறு ''ஒளித்த துப்பு'' என்று கூறும். ஏழு முழம் உயர்ந்தது. மும்மதம் உடையது. வனசரம், கிரிசதம், நதிசரம் என்ற மூன்று பகுப்பு உடையது.
யானைக்கு நினைவுவன்மை, காண்டல், கேட்டல், ஊறு ஒன்றையும் ஒரு காலத்தும் மறவாமை, மிகுந்த வலிமையும், அளப்பெரும் சாந்த குணமும் உடைமை, இதஞ் செய்வாருக்கு வசமாய் உதவுவது, இசையறிவு டைமை இவைகள் முக்கியப் பண்புகள். இப்பண்புகள் அனைத்தும் விநாயகரிடத்தும் உண்டு. ஆதலால் 'கஜானனாகத் திகழ்கின்றார்.
யானைக்குத் தமிழ் மொழியில் பத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் உண்டு. ஆம்பல், கரி, களிறு, தும்பி, வேழம், வாரணம், மாதங்கம், கம்பமா, தந்தி, பகடு, கைம்மா, சிந்துரம், களபம், நால்வாய் முதலியன அவையாகும். செம்மொழியாம் தமிழின் வளமைக்கு இதனினும் சான்று வேண்டுமா?
மேலே கூறிய யானையைக் குறிக்கும் சொற்கள் வெவ்வேறு பொருள்களையும் தந்து இன்பத்தை விளைக்கின்றது. காளமேகப் புலவரின் ஒரு அருந்தமிழ் பாடல் திருவலஞ்சுழி விநாயகரைப் பற்றியது.
''பறவாத தும்பி, கருகாத வெங்கரி, பண்புரண்டே இறுகாத தந்தி, உருகாத மாதங்கம் இந்து நுதல் நிறைவாத சிந்துரம், பூசாரக் களபம், நெடுஞ்சுனையில் பிறவாத ஆம்பல் வலஞ்சுழிக்கே வரப் பெற்றனனே'' இராமன் என்ற வள்ளலைப் பாடி யானையைப் பரிசாகப் பெற்றான் பாணன் ஒருவன். அதனைத் தன் மனைவிக்குக் கூறிய பொழுது அவள் அதனை எப்படி புரிந்து கொண்டாள் என்பதனை நகைச்சுவை இழையோட
அந்தகக் கவி வீரராகவர் என்ற புலவர் தனது புலமைத் திறம் வெளிப்படப் பாடுகிறார். பாடல் இதோ!
''இம்பர்வான் எல்லைஇரா மனையேபாடி என் கொணர்ந்தாய் பாணா நீ என்றாள் பாணி; வம்பமதாம் களபமென்றேன்; பூசு மென்றாள் மாதங்கம் என்றேன்; வாழ்ந்தோ மென்றாள்; பம்புசீர் வேழமென்றென்; தின்னு மென்றாள்; பகடென்றேன்; உழுமென்றாள் பழனந்தன்னை; கம்பமா என்றேன்; நல் கனியாம் என்றாள்; கைம்மா என்றேன்; சும்மா கலங்கினாளே'' யானையின் சிறப்பைப் பார்த்தீர்களா? இதன் சிறப்பை உணர்ந்தே கடவுளர்க்கு யானை சிறந்த வாகனமாக
பா.

Page 62
அமைந்துள்ளது. விண்ணாளும்
தெய்வங்களுக்கு மட்டுமல்லாமல் மண்ணாளும் மக்களுக்கும் யானையின் மீது ஏறி உலா வருவதைப் பெருமையாகக் கருதினார்கள்.
விஷ்ணு சித்தர் என அழைக்கப்படும் பெரியாழ்வார் பாண்டியன் வல்லப தேவனின் மனம் கொள்ளும் படி மகர விஷ்ணுவே பரப் பொருள் என விசிஷ்டாத்வைத தத்துவத்தின் மூலம் நிரூபணம் செய்ய, பந்தயப் பொருளாக மூங்கில் கட்டியிருந்த பொற்கிழி வளைத்து விஷ்ணு சித்தரின் கரங்களை வந்தடைந்தது. கண்டோர் அதிசயிக்க மன்னன் மனம் மகிழ விஷ்ணு சித்தரை யானை இருத்தத்தின் மேல் பொன்னாலாகிய ஆசனப் பலகையின் மேல் அவரை அமரச் செய்து சிறப்புச் செய்தான் பாண்டியன். 'பட்டர் பிரான்' என்று அவரைப் பாராட்டினான். யானையின் கழுத்து மணிகளையே தாளமாகக் கொண்டு அரங்கனுக்குப் பல்லாண்டிசைத்துப் பெரியாழ்வாராகப் போற்றப்பட்டார்.
சைவ திருமுறையாம் பெரிய புராணமும் தில்லையில் அரங்கேறிய பொழுது அநபாயன் சேக்கிழாரை யானை மேல் இருத்தி அவருக்குக் கவரி வீசி பெருமை செய்தான். யானை ஒருவருடைய உயர் அந்தஸ்த்தைக் குறிக்கும் சின்னம். அத்துடன் தெய்வங்களின் வாகனமாகவும் திகழ்கின்றது. முருகப் பெருமான் இவர்ந்து அருளும் யானை 'பிணி முகம்' என்னும் பெயருடையது. இந்திரனது யானை 'ஐராவதம்'. நான்கு கோடுகளை உடையது. சிவ பெருமான் ஏறி அருளும் யானை 'அயிராவணம்'
இரண்டாயிரம் கோடுகளை உடையது.
திருவாரூர் திருத்தாண்டகத்தில் அப்பர் பெருமான்
''அயிராவணம் ஏறாது ஆனேறேறி
அமரர் நாடானாதே ஆரூர் ஆண்ட'' கறை மிடற்றண்ணலின் எளிவந்த தன்மையைப் போற்றுகிறார்.
மேலும் விநாயகர், ஐயனார் முதலியோர்க்கும் யானை வாகனமாக அமைகின்றது. தெய்வங்களுக்கு மட்டுமல்லாமல் எண் திசைகளையும் தாங்கும் யானைகளும் அவைகளின் பிடிகளும் கூட நாம் நினைவிற் கொள்ள வேண்டியவைகள் ஆகும்.
பெயர்
பிடி -
திசை ஐராவதம்
அப்பிரமை
கிழக்கு புண்டரீகம்
கபிலை
தென்கிழக்கு வாமனம்
பிங்கலை
தெற்கு குமுதம்
அனுபமை
தென்மேற்கு அஞ்சனம்
தாமிரகரிணி
மேற்கு புஷ்பதந்தம் சுப்பிரதந்தி வடமேற்கு 7. சார்வபௌமம் அங்கலை வடக்கு 8. சுப்ரதீபம் அஞ்சனாவதி வட கிழக்கு யானைகளிலும் உயர்ந்த இன யானைகள் உண்டு. இதனை 'இராஜ யானை' என்று மரியாதை வெலுத்துவர். இந்த வகை
யானைகளின் இலக்கணங்களைப் பார்ப்போமா?
\ N * * j d N

கரைந்றோர்
IT6
நான்கு காலும், துதிக்கையும், கோசமும், வாலும் ஆகிய ஏழுறுப்பும் நிலத்தில் தோய்ந்திருக்கும். பாலையும் சங்கையும் ஒத்த வெண்ணிறமுடைய கால் நகங்களை உடையது. காலினாலும் வாலினாலும் துதிக்கையினாலும் சரீரத்தாலும் கொம்பினாலும் கொல்ல வல்லது. ஏழு முழம் உயர்ந்து, ஒன்பது முழம் நீண்டு பதின்மூன்று முழம் சுற்றளவு உடையதாய் சிவந்த புள்ளிகளையும் சிறிய கண்களையும் கொண்டு விளங்கும். பத்ரம், மந்திரம், மிருகம் இவை யானையின் சாதி விசேடணங்கள்.
யானைகளின் நான்கு கால்களிலும் சேர்த்து மொத்தம் 24 நகங்கள் இருந்தால் உயர் இனத்தைச் சேர்ந்தது. சுமார் 10 அடி உயரமிருக்கும். துதிக்கை வலப்புறம் திரும்பியிருக்கும். கழுத்தில் 3 மடிப்புக்கள் இருக்கும். வால் தரையைத் தொட்டுக் கொண்டிருக்கும். இவைகள் இராஜ யானையின் இலக்கணங்களாகும்.
அடுத்து 20 முதல் 23 வரையான நகங்கள் இருப்பின் அந்த யானைகள் வீரமுடையதாக இருக்கும். இவைகளைத் தேர்ந்தெடுத்து அரசர்கள் தங்கள் படைகளில் இணைத்துக் கொண்வார்கள். இராஜ பவனிக்கு அவற்றைப் பயன்படுத்துவர்கள்.
கண் திருஷ்டி படாமல் இருப்பதும், பகைவர்கள் வைக்கும் பில்லி சூன்யங்களைப் பங்கப்படுத்துவது

Page 63

போன்ற சக்திகள் யானைகளுக்கு உண்டு. அதனால்தான் பண்டைக் காலங்களில் அரசர்கள் உலா வரும் பொழுது அவர்களுக்கு முன்னால் யானைகள் செல்லும் வழக்கம் இருந்தது.
அரசர்க்குரிய பத்து அங்கங்களில் (தசாங்கம்) மலை, ஆறு, நாடு, ஊர், மாலை, குதிரை, யானை, முரசு, கொடி, செங்கோல் முதலியவற்றுள் யானையும் ஒன்றாகும்.
தம்பிரான் தோழர் என அழைக்கப்படும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருக் கயிலைக்கு எழுந்தள்வதற்காக தனது பட்டத்து யானையாகிய அயிராவணத்தையே திருவஞ்சைக் களத்திற்கு அனுப்பி சுந்தரரை திருக் கயிலைக்கு அழைத்து வந்த சிறப்பை சேக்கிழார் பெருமான் தனது திருத்தொண்டர் புராணத்தில் குறிப்பிடுகிறார். இறைவன் அனுப்பி வைத்த வெள்ளை யானையைக் கண்டு சிவபெருமானின் எளிவந்த கருணைக்கு நெஞ்சுருகி கண்ணீர் சோர...
''தானெனை முன்படைத்தான் அதறிந்து தன் பொன்னழக்கே நானெனை பாடலுந்தோ நாயினேனைப் பொருட்படுத்து வானெனைவந் தெதிர்கொள்ள மத்தயானை அருள்புரிந்து ஊனுயிர் வேறு செய்தான் நொடித் தான்மலை உத்தமனே" இந்திரன், மால், அயன் முதலாய தேவர்கள் வரவேற்ற சிறப்பை நினைந்து திருநொடித்தான் மலை தேவாரத்தை சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவாய் மலர்ந்து அருளுகின்றார். சிவபெருமான் ஆணவம் கொண்டவர்களை அழித்து ஞானத்தை அருளிய எட்டுத் தலங்களில் யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டது 'வழுவூர்' தலமாகும்.
முனிவர்களுக்கும் யோகிகளுக்கும் தீங்கிழைத்த யானை உருக்கொண்ட கயாசுரனைக் கொன்று அவனது தோலை உரியாகப் போர்த்துக் கொண்டார்.
யானைத்தோல் நச்சுத் தன்மை மிக்கது. உடலில் போர்த்துக் கொண்டால் மரணத்தை விளைவிக்க வல்லது. அப்படிப்பட்ட கரியின் தோல் காலகண்டனுக்கு எவ்விதத் தீங்கையும் விளைவிக்கவில்லை. 'கஜசம்ஹார மூர்த்தி' என்ற பெருமையும் பெற்றார்.
யானைக்கு ஏழு வகையான மத நீர் சுரக்கும் என்பதை அறிவோம். அவ்வெழுவகை மத நீர்கள் ஏழு இடங்களில் தோன்றும். இரண்டு கன்னங்கள், இரண்டு கண்கள், இரண்டு தந்தத் துவாரங்கள்,
கோசம் - ஆகியவை அவையாகும்.
அரசனது பட்டத்து யானைகளின் சிறப்பையும் உயர்வையும் முன்னர் பார்த்தோம். கண்ணபிரானது தாய் மாமனாகிய கம்சனின் பட்டத்து யானைக்குக் 'குவலயா பீடம்' என்பது பெயர். பிரச்சோதனனின் பட்டத்து யானை 'நளகிரி'யாகும்.
இவ்வாறு அரசர்களும் தெய்வங்களும் எண் திசைக்குரிய தேவர்களும் உலா வரும் யானை உருவத்தால் மட்டுமல்ல, பெருங் குணங்களாலும் சிறந்து விளங்குவது அறிந்து இன்புறற்குரியது.

Page 64
காக்கேசர் . 63:Ni[100[0611
பாரதிய வித்தயா பவன் அரங்கில்..
ܐ

மார்கழி இசை விழாவுக்குப் பங்களிப்பாக மெல்போனைச் சேர்ந்த திரு. சீனிவாசன்,திருமதி. மங்களம் தம்பதிகளின் பிள்ளை களான செல்வி. இலட்சணியா, செல்வன். வசீசர் ஆகியோரின் பரதநாட்டிய நிகழ்ச்சி சென்னை, மயிலாப்பூரில் பாரதீய வித்தியாப வன் அரங்கில் அண்மையில் சிறப்பாக நடந்தேறியது. நாட்டிய விற்பன்னர்களான வி.பி.தனஞ் செயன், சாந்தா தனஞ்செயன் தம் பதிகளின் மாணவரான திரு. நரேந்திரா, இவர்களது குருவா கும். சிறப்பாக நடந்தேறிய நடன நிகழ்ச்சியை அடுத்து, வைபவத் தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திருமதி சாந்தா தனஞ்செயன் மேடைக்கு வந்து இலட்சணியாவையும் வசீசையும் பாராட்டினார். இவர்களது நாட்டி யத் தோற்றங்கள் சிலவற்றைப் படங்களில் காணலாம்.

Page 65
கலைக்கேசரி 2 64 நினைவுத்திரை
அருங் கலைஞன் ஹொன்னப்ப பாகவதர்
- பத்மா சோமகாந்தன்
வ
LைD
'உனையல்லால் கதியார் உலகமாதா தர்மசம்வர்த்தினி பர்வதவர்த்தினி' என்ற கல்யாணி ராகப் பாடலைத் தம் கம்பீரமான தொனியிலே 'அம்பிகாபதி' படத்தில் குலோத்துங்க சோழனின் இராஜசபையில் பாடும் ஒரு இசைக் கலைஞனாகத் தோன்றியவர் ஹொன்னப்ப பாகவதர். திரைப்படத்தில் முதன் முதலாகப் பாடிய இப் பாடலால் மாத்திரம் பெற முடியாவிட்டாலும் போகப் போக தன் சங்க நாதக்குரலின் பல ராகபாவ சஞ்சாரங்களால் பெரும் புகழ் ஈட்டித் தந்தவர் ஹொன்னப்ப பாகவதர்.
இவர் கன்னடக்காரர். 'ஹ' என்ற கன்னட எழுத்துத் தமிழில் 'ப' வைக் குறிக்கும். இவரது பெயரைத் தமிழில் பொன்னப்பா எனலாம். இசையில் இவர் ஒரு பொன் அப்பாவே தான். ஆயினும் பலர் ஒன்னப்பா; வொன்னப்பா எனப் பல மாதிரியாகவும் அழைத்துள்ளனர்.
ஹொன்னப்பா மைசூருக்கு அருகேயுள்ள செளரங்கி என்ற ஊரில் நெசவுத் தொழிலை மேற்கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். இளமையிலே கணீரென்ற வெண்கலக்குரலில் பாடும் வல்லமை பெற்றிருந்த
இவருக்குப் பெற்றோர் முறையாகவே கர்நாடக இசை பயில உதவினர். சிறுவனாயிருந்தபோதே கர்நாடக இசைக் கச்சேரிகளில் அழுத்தந் திருத்தமான தமிழ் உச்சரிப்போடு அநாயசமாகக் சங்கதிகளையும் இணைத்துக் கச்சிதமாக நிகழ்ச்சிகளை நடத்துவார். மேடை நாடகங்களிலும் பங்கேற்று நடித்துள்ள இவர், அன்று இனிய இசைக் குரல்களைப் பதிவு செய்து பரப்பும் சாதனமாக இருந்த 'கிராமபோன்' இசைத்தட்டுகளிலும் பல பாடல்களைப் பாடினார்.
அழகிய கம்பீரமான தோற்றமும் இனிய குரல் வளத்தோடு இசைப்புலமையும் கொண்ட இக்கலைஞரை அன்றைய திரையிசை உலகம் வரவேற்றது. காரணம் சிறந்த தோற்றப் பொலிவுடன் திரையில் தோன்றி நடிப்போர் நடிக்கும் திறமையை பயிற்சி மூலம் கற்றுக் கொண்டாலும், பாடுவதற்குரிய இசை ஞானம் இயல்பான கொடையாக இருக்க வேண்டியது அவசியம். தொழில் நுட்பம் இன்று போல் ஒருவர் திரை மறைவில் இருந்து பாட, திரையில் முன் நின்று நடிப்பவர் வாயசைத்துப் பாடுவதுபோலப் பாவனை செய்யக்கூடிய சாதனங்கள் அன்று கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே நடிப்பவரே பாடும் முறையைக் கொண்டு 1941களில் 'கிருஷ்ணகுமார்' என்ற படத்தில் கிருஷ்ணனாக நடிக்கும் வாய்ப்பு இவருக்குக் கிட்டியது.

கோகுல்(61)
பெரும் கவிஞனும் கூத்தநூல் என்ற கலை ஏட்டிற்கு உரையெழுதியவருமான
'பாலபாரதி' ச.து.சு. யோகி என்பவரே மேற்படி சினிமாவின் - இயக்குநர். கிருஷ்ணகுமார் படத்திலே சந்திராவதி மீது காதலுற்ற கண்ணன் (ஹொன்னப்பா பாகவதர்.) பாடிய 'ஆசையெல்லாம் அவளே, அறிவெல்லாம் அவளே, ஆகையினாலே அவளே கனவாய் நினைவாய்' என்ற சொற்கள் தவழும் காதல் பாடல் எந்தக்கடும் பாறை நெஞ்சையும் காதல் உணர்வால் நெகிழச் செய்யும். ராகபாவ சாரீர இனிமையால் பாதிக்கப்படாதவர் எவருமில்லை என்றளவிற்கு மக்கள் இவர் பாடலைப் போற்றினார்; ரசித்தனர். அதனை இனிமையான சாரீர சுகத்தைக் கொண்டிருந்த ஹொன்னப்ப பாகவதர் 'சதி சுகன்யா' படத்தில் டி.எஸ். ராஜலட்சுமி என்ற நடிகையுடன் நடித்தார்.
'அருந்ததி' என்ற படத்தில் எம்.ஆர். சந்தானலட்சுமியு டன் சேர்ந்து நடித்தும் அவ்வேளை பல கர்நாடக சங்கீத இசையை அடிநாதமாகக் கொண்ட பாடல்களைப் பாடியும் ரசிகர்களைப் பிரமிக்க வைத்தார். - 1939களில் இறுதியில் உலகப்போர் தொடங்கியமையால் பல நாடுகள் நெருக்கடிக்குள்ளாயின. நேரடியாகப் போரில் பாதிப்பில்லாத நாடுகளும் கூடப் பொருளாதார, நிர்வாக நெருக்கடிக்கெல்லாம் முகம் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அப்போது இந்தியாவும் பெரிதும்

Page 66
பாதிப்புக்குள்ளாகிக் கலை இலக்கியத்துறையில் பல தடங்கல்களுக்கு ஆளாகவேண்டியிருந்தது. அதனால் வருடா வருடம் ஓரிரு படங்களையே வெளிக்கொணரக் கூடிய வகையில் படத் தயாரிப்பு, கச்சாஃபிலிம் கொள்வனவு என்பன முடங்கிக் கொண்டன. இதனால் வருடா வருடம் ஓரிரு படங்களே வெளிவந்தன.
1941 இல் இருந்து 1945 வரை வெளியான கிருஷ்ணகுமார், சதி சுகன்யா, அருந்ததி, தேவகன்யா, பிரபாவதி, ராஜராஜேஸ்வரி, பர்மாராணி போன்ற படங்களிலெல்லாம் தன் இனிய இசையைப் பொழிந்து நடித்தவர் ஹொன்னாப்ப பாகவதர். பாபநாசம் சிவனின் தலைசிறந்த ஆக்கங்களுக்எல்லாம் வடிவங்கொடுத்து தமிழின் இயல் இசை நாடகம் என்ற முக்கூறுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்துத் தன் நடிப்பால் அவற்றின் இயல்புகளுக்கு மெருகூட்டினார். வால்மீகி என்ற இராமாணக் காவியத்தை உச்சத்துக்கு உயர்த்தியவர் ஹொன்னப்ப பாகவதர் என்றால் மிகையில்லை. நாட்டை, நாட்டைக்குறிஞ்சி, மத்மாவதி, மோஹனம், காம்போதி, கேதாரகௌளை, சஹானா, கல்யாணி, சுருட்டி என்ற ஒன்பது இராகங்களின் தனியழகைப் பிழிந்து உள்ளடக்கி, நாரில் பிணையப்பட்ட நறுமலர் மாலை போல, அருமையான நவராகமாளிகையில் பாடிய 'ஸ்ரீ வைகுண்டபதே' என்ற ராமர் கதை கூறும் பாடலொன்றே பாகவதரின் இசை வல்லமைக்கும் குரலின் கம்பீரத்திற்கும் இதம்பதமான அவற்றின் வெளிப்பாட்டிற்கும் சங்கதி, பிருகா ஆகிய ராக மூர்ச்சனைகளுக்கும் முத்திரை பதிக்கப்போதுமானது எனலாம். மற்றைய படங்களில் அவர் சிறப்பாகப் பாடிப் புகழ் பெற்றிருந்தாலும் 'வால்மீகி' படத்தில் இவரது நடிப்பும் இசையும் மிக அற்புதமானது என்பதே இசைப் புலமையாளர்களதும் கலைஞர்களதும் கருத்தாகும்.
4தமாலாவின் அடுத்துதல் அல என அதி ஈ சி ஆர் சி கள், ட அது , அதன் பகத் சி க -
திகாயையா?
ராகி (m
பக்தஜ001
தக தி கார்த்தம் அமலாக்காக 4 4 அகல
3 *
பாசல் மத அடி 4 இல் இன் ஆல் எனக்!
13 4 ல் சக க க ேகாக்கில் தீ கோ க்கன் கந் தெட 4 சுகத கதி!
1 : இ. 15+த இது !
இ த அ -3 அந்த விதக் க தாக்கு!
பாகனி பிலிம்ஸ் 17, 10தாட்டி சார், வாழ, aெ..

கலைக்கேசரி
65
இராமாயணத்தை முதலில் எழுதிய வால்மீகி, சாதாரணமாக ஒரு வேடனாக இருந்து காலகதியில் கொள்ளைக்காரனாக மாறிப் பல பாவகாரியங்களுக்கு எல்லாம் பாத்திரனாக இருந்து பின் நன்கு அறிவு பெற்றுப் பெரும் கவிஞரானார் என்றெல்லாம் பல கதைகளைக்
குறிப்பிடுவர்.
இயல், இசை, நாடகம் என முத்தமிழின் வித்தகங்களை 16 திரைப்படங்களின் மூலம் வெளிப்படுத்தி மக்களின் உள்ளங்களை
ஆகர்ஷித்த அருங்கலைஞன்! இந்த அம்சங்களையெல்லாம் உள்ளடக்கிப் பல உப் கதைகள் பாத்திரங்களோடு வால்மீகி என்ற படத்தை அன்று கர்நாடக இசையுலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய எம்.கே. தியாகராஜபாகவதரே வால்மீகியாக நடிக்கும் ஒழுங்குகளுடன் வால்மீகி என்ற படம் தயாரிக்கப்படவிருந்தது. ஆனால் அப்போது லட்சுமிகாந் தன் கொலை வழக்கில் தியாகராஜபாகவதர் கைது செய்யப்பட்டு சிறை சென்றதன் காரணமாக அவர் ஒப்பந்தம் செய்திருந்த படங்களில் நடிக்கமுடியாமல் போகப் பிற நடிகர்களே அப்பாத்திரங்களை ஏற்று நடித்தனர். அப்படியேதான் வால்மீகி பாத்திரமேற்று நடிக்கும் வாய்ப்பு ஹொன்னப்ப பாகவதருக்குக் கிடைத்த போது, தியாகராஜபாகவதர் நடிக்கவில்லையே என்ற ஏக்கத்தை இடைவெளியை விடுவித்து மிகக் கச்சிதமாகவும் கம்பீரமாகவும் நிறைவேற்றிப் புகழ்வானில் வட்டமடித்தார். இப்படத்திலே வால்மீகி மீது காதல் கொண்டு, காதல் நிறைவேறாமல் போக இளவரசியாகக் காதலுற்ற யூ.ஆர். ஜீவரத்தினம் சாபம் கொடுப்பவளாகவும், கொள்ளைக்கூட்டத் தலைவனின் மகளாக வந்து மணம் புரிந்த மங்கையாக
'சி சகர்
வக்கியம்
LMIKI
பான்னாகத வாகனம் ---------
ஓக 2011 தக் நல்ல * 38311ம்தர் சித்த 4 $க கலா ஆதாக அக் குடிசை இக ஆதரவு இசக்க, இதைத்தான் இ* *
.ெ, போ தும (0யா

Page 67
கலைக்க்ேசர் இது
66
டி.ஆர்.ராஜகுமாரியும் கொள்ளைக்காரக் கொடியோனாக இருந்த வேடனை கவிஞராக மாற்ற வந்த நாரதராக ஆண் வேடத்தில் நடித்த இசைவாணி என்.வசந்தகோகிலமும் என மூன்று புகழ்பெற்ற பெண் நடிகர்களும் சேர்ந்து நடித்துள்ளனர். இப்படமே இவர் நடித்த ஏனைய படங்களை விட அதிகமான புகழையும் பெருமையையும் வரவேற்பையும் இவருக்கு நல்கியிருக்கிறது என்பதே பலரது அபிப்பிராயமாகும்.)
ஹொன்னப்ப பாகவதரின் இயல்பான இசை ஆற்றலும் கர்நாடக இசைப்புயலுமே திரையுலகக் கலைஞராக அவரை முன்னணியில் இருத்தியது. இயல் இசை நாடகம் என்ற முத்தமிழின் வித்தகமும் அவர் அடிவைத்த துறைகளில் துலங்கச் செய்தது.
1946 களில் 'ஸ்ரீமுருகன்' என்ற படத்தில் கபாஸ் இராகத்தில் அமைந்த 'வள்ளியைக் காணேனே' என்ற பாடல், உள்ளம் 'புகுந்த அந்த வள்ளி' என்ற மணிரங்கு ராகப்பாடல், 'எங்கே ஒளிந்ததம்மான்' காம்போதி ராகத்தில் அமைந்த பாடல், எனத் தன் அற்புதமான பாடல்களாலேயே மக்களின் செவிகளை ஆக்கிரமித்துக் கொண்டவர் ஹொன்னப்ப பாகவதர்.
இப்படத்திலே சிவ தாண்டவம் ஆடிச்சிறப்பித்தவர் மக்கள் திலகம் எம். ஜி. ராமச்சந்திரன். இப்படத்திலே பாகவதரின் தந்தையாக அதாவது ஸ்ரீமுருகனின் அப்பா சிவனாக எம்.ஜிஆர் நடித்தமையால், அவரது மகனாக நடிக்கும் வாய்ப்புத் தனக்குக் கிடைத்ததெனப் பெருமகிழ்ச்சியடைவார் பாகவதர்.
புராணக் கதைகள், பக்திக் கதைகள், தெய்வீகக் கதைகள், நீதி, தத்துவக் கதைகள் என்பவற்றை மையமாகக் வைத்தே அன்றைய சினிமாக் கலைத்துவம் ஒளி வீசியது. தயாரிப்பு,

படப்பிடிப்களில் சில வரைமுறைகள் இருந்தன. அழகான சிவந்த கம்பீரமான தோற்றமும் இனிய குரல் வளமும் இசை இயல் நாடகப் பயிற்சியும் கொண்டவர்களுக்கான இடமாகவே திரையுலகம் அன்று விளங்கியது. அந்த வகையில் பக்த ஜனா, கேசுபத்ரா கோகுலதாஸி, தேவமனோகரி, சத்தயசோதனை எனப் பல படங்களில் புதிய புதிய பாத்திரங்களை ஏற்று எல்லோர் மனதையும் கவரும் வகையில் திரைப்படம் நடித்து மகிழ்வித்த பெருமை ஹொன்னப்ப பாகவதருக்குரியது.
ஹொன்னப்பாவும் பண்டரிபாயும் இணைந்து நடித்த படம் 'சத்திய சோதனை'. இப்படம் தமிழ் கன்னடம் ஆகிய இரு மொழிகளிலும் தயாரிக்கப்பட்டது. இதுவே 1953 களில் ஹென்னப்பா இறுதியாக நடித்த தமிழ்ப் படம் எனலாம்.
தன் இனிய முத்தமிழ் வித்தகத்தால் ரசிகர்களைக் கொள்ளை கொண்ட ஹென்னப்பாவுக்கு இரு குழந்தைச் செல்வங்கள். லதா, கலா என்ற மகள்மார் மீதும் அளவிறந்த அன்பைக் கொண்டிருந்த ஹொன்னப்பா 'லதா கலா' என்ற அவர்கள் பெயர்களை இணைத்து ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார்.
படத் தாரிப்புத் துறையிலும் காலூன்ற விரும்பிய பாகவ தர் 1959 களில் 'உழைப்புக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்ற சமூகப் படத்தைத் தயாரித்து வெளியி டும் பணியில் தீவிரமாக இறங்கினார்.
அவ்வேலைகள் வெற்றியும் திருப்தியும் தராது போகவே அவற்றை அப்படியே கைவிட்டு விட்டுச் சென்னை வாசத் திற்கு முற்றுப்புள்ளியிட்டார். பெங்களூர் அவரை வர வேற்று மகிழ்ந்தது.
பதினாறு படங்களில் தன் தேனிசையாலும் இயலாலும் நடிப்பாலும் அக்கால மக்களின் உள்ளங்களை ஆகர்ஷித்த அருங்கலைஞன் ஹொன்னப்ப பாகவதரின் புகழ் என்றென்றும் கர்நாடக இசை உலகில் விளங்குமென்பதில் சந்தேகமில்லை. )
கலெT
YைT
ஒன

Page 68
பாரம்பரிய பெருமைமிக்க எங்கள் ப
உணர்வுகள் இணையத்தில்.

கண்ணின்
ܕ ܬ ܕ
Up D
Varl Mann
Connect with laffna
wwwyarlmann.uk

Page 69
റിമറിക്കാ
Printed and published by Express Newspapers ((

இலங்கையின் அரவணைப்புடன் கூடிய
புன்முறுவலை கண்டறியுங்கள்!
அது பல்லாண்டு காலமாக எண்ணற்ற இதயங்களை அரவணைத்த பெருமைமிக்க
ஒரு பாரம்பரியத்தின் பகுதியாகும்.
இலங்கையிலுள்ள நாம் ஒவ்வொரு பயணத்தையும் மறக்க முடியாத அனுபவமாக மாற்ற நேசத்துடன் கூடிய தனித்துவமான பண்பினை அதி நவீன தொழிநுட்பத்துடன் இணைத்துள்ளோம்.
அழையுங்கள் 1979
Srilankan
www.Srilankan.com
Firlirits - ! You're our world
Leylon)(Pvt)Ltd,at No.185,Grandpass road,Colombo -14, Sri Lanka.