கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைக்கேசரி 2013.05

Page 1
கலைக்க
CULTURE
HERITAGE TRADITION
-- EVENTS
- FASHION VOLUME :04 ISSUE :05 Registered in the Department of Posts of Sri L
தமிழரின் தனித்துவமும் சோழராட்சியும்
'www.kalaikesari.com / May 2013
INDIA................INR 100.00 'SRI LANKA....SLR 125.00 'SINGAPORE.sG$ 14,00
CANADA......CAN$ AUSTRALIA...AUS$ 'SWISS............CHF

KALAIKESARI
கேசரி
INTERVIEWS
ENTERTAINMENT -anka under No. QD TNews T70 / 2013
சீனாவில் இஸ்லாமிய கட்டிடக்கலை
|IIIாப்பா பாப்பா!
SW}}{1}
10.00 10.00 10.00
'USA........US$ 10.00 'UK..........GBK 6.00 EUROPE.EU€ 7.00

Page 2
நெ ஞ் சை ய ள் ளு ம் அ ழ கு மி க் க
வை ர ங் க (தெ ம் ப த் து க் க (3ெ ம்
பிதாயம்
-14
fine jeweilery Me
442, ஆர்.ஏ.டீ. மெல் மாவத்தை, கொழும்பு 3. தொ: 2577451
www.lal

GH Resources
-21 105, QELQUÁ GIL, QIT(QD4 11. Gl5T: 2323691, 2431993 =thajewellers.lk

Page 3
உயிர்களை காப்பதில் அர்ப்பணிப்புடன் ஈடுபடும் ஆசியாவின் காப்புறுதி முன்னோடி AIA தற்போது உங்களருகில்
கேன்ப

ஓ[ சபருடகாலமாக தொடரும் பாரம்பரிய கடரியையுடன் ஆசிய பசிபிக் பெல்பயத்திரள் பட பில்லியன் டயிர்கடிக்கப் பாதுகாப்பளிக்கும் நடப்கின் மிகப் பெரிய காப்புறுதி நிறுவனங்களில் ஒன்றும், ஆசியாவின் முன்னோடிக் காப்புறுதி நிறுவனமுமான AIA இன்வரண்கள், இப்போது இலங்கையை புதிய கடப்தடன் இணைக்கிறது. வணக்கம், நாம் கடங்காகா அன்புடன் வரவேற்கின்றோம்! மேலதிக விபரங்களுக்கு 0112 310310 ஐ அழைக்கவும் அல்லது உங்களின் ALA வெல்த்பிளானரை நாடவும்.
aialife.com.lk

Page 4
不是奇是善意,代之子。“紫
編集

அட்டைப்படம்:
வெள்ளை-நீல வர்ணத்தில் அமைந்த சீனாவின் பாரம்பரிய மட்பாத்திரம்
உள்ளடக்கம்:
12
மட்டக்களப்பில் மற்றுமோர் பெருங்கற் பண்பாட்டுத் தளம்
18
மரபு வழியூடான நவீனத்துவம்: க.சி.குலரத்தினத்தின் தனித்துவம்
32
இசைத்துறையில் டாக்டர் பட்டம் பெற்ற முதற் கலைஞர் "பாகவதர்”
தெய்வ ஊர்திகள்: வெற்றிகள் தரும் வெள்ளை குதிரை
56
தலைவர்க்குத் தலைவராக்கும் கச்சியேகம்பர்
64
நீண்ட ஆயுள் விருத்திக்கு தினமும் உணவோடு உள்ளி

Page 5
PUBLISHER Express Newspapers (Cey) (Pvt) Ltd. 185, Grandpass Road, Colombo 14, Sri Lanka. T.P. +94 11 7209830 www.kalaikesari.com EDITOR Annalaksmy Rajadurai luxmi.rajadurai@yahoo.com SUB EDITOR Bastiampillai Johnsan johnsan50@gmail.com MEDIA CO-ORDINATOR Pragash Umachandraa CONTRIBUTORS Prof. Saba Jeyarasa
Mrs. Vasantha Vaithyanathan Mrs. Pathma Somakanthan Ms. Subashini Pathmanathan
Ms. Gowri Puniyamorthy Mrs. Shanthini Arulanantham Mr. Moganapriyan Thavaraja Dr. Viviyan Sathyaseelan PHOTOS
N. Joy Jeyakumar S. M. Surendran J.Mirunalan LAYOUT
K. Kulendran ICT
S. T. Thayalan ADVERTISING A. Praveen marketing@virakesari.lk CIRCULATION K. Dilip Kumar SUBSCRIPTIONS J. K. Nair subscription@kalaikesari.lk PRODUCTION L. A. D. Joseph
கலைக்கேசரி வ வழமைபோல் பொக்கிஷங்களுடன
காலங்கள் வே சுகவாழ்வு சித்தித். உண்மையாக இருத் விழுமியங்கள் மனு . காலத்தில் இருந்து, வாழ இவ்வரிய பா அற்புதமாகச் சித்தி நம்மினிய தமிழ் ெ மொழிக்கு வளம் கே. வலுவிழக்கின்றனவ
'அன்னையும் பி தந்தை சொல் மிக்க பேண்' என்று பே. நடத்துவன. ஆயின பத்து மாதம் சுமந்து தெய்வங்களுக்கு 6 சண்யமான நடவடி ஒரு சில கோரச் ச வைக்கின்றன.
நவீன பொழுது நிகழ்ச்சிகள் வெளி. நம்பிக்கை நட்சத்தி திருப்புகின்றனவா சாதனங்கள் நமது . இட்டுச் செல்ல அனு மாகச் சிந்தித்து செ
மீண்டும் சந்திப்ே வணக்கம்.
அடிட
பினட் +es.
ISSN 2012 - 6824

ஆசிரியர் பக்கம்
பெற்றோரைப் பேணுமின்!
ாசகர்களுக்கு வணக்கம்
கலைக்கேசரி தனக்கே உரிய சிறப்பார்ந்த ஆய்வுப் ன் உங்களைச் சந்திக்க வருகிறது! சந்தோஷந்தானே ! -கமாகச் சுழன்று, மனித வாழ்வில் நாகரீகங்கள் ஏற்பட்டு, தாலும், அன்பு, கருணை, பாசம், பெரியோரைப் பணிதல், -தல், தர்ம நியாயங்களைக் கடைப்பிடித்தல் ஆகிய இன்னோரன்ன க் குலத்தின் அடிப்படைத் தத்துவங்களாகும். மனிதன் தோன்றிய அவன் ஒரு கட்டுப்பாடான இலட்சிய வாழ்வினை மேற்கொண்டு ண்புகளே வழிகாட்டி வந்துள்ளன. இம்மேலான விழுமியங்களை ரிக்கும் இலக்கியங்களும், புராண, இதிகாச காப்பியங்களும் "மாழியை இன்றும் வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன. நம் சர்க்கும் இவ்வரிய பண்புக் கருவூலங்கள் இன்று மனித வாழ்வில்
பா?
தாவும் முன்னறி தெய்வம்', 'தாயிற் சிறந்த கோவிலுமில்லை, க மந்திரமில்லை', 'மாதா, பிதா, குரு தெய்வம்', 'தந்தை தாய் எற்றும் உயர் வாசகங்கள், அன்றும், இன்றும், எம்மை வழி றும், இப்பண்பாடு வலுவிழக்கிறது என்பது போல் ஆங்காங்கு, - பெற்று, பாலூட்டிச் சீராட்டி வளர்த்து, ஆளாக்கிய அந்த அன்புத் எதிராக அவர்தம் பிள்ளைகளாலேயே ஒப்பேற்றப்படும் நிர்த்தாட் க்கைகள் ஒருபுறம் இருக்க, அண்மைக் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள், எம்மைத் திகைப்புறச் செய்து ஆழமாகச் சிந்திக்க
போக்குச் சாதனங்கள், குறிப்பாக சில சினிமா, தொலைக்காட்சி ப்படுத்தும் நச்சுக் கருத்துக்களும், காட்சிகளும் நம் எதிர்கால ரங்களான இளைய சந்ததியினரைச் சேர்ந்த பலரையும் திசை என நாம் எண்ண வேண்டியிருக்கிறது. நவீன தொழில்நுட்ப அபிவிருத்திக்கு உதவுவதாய் இருக்க வேண்டுமே தவிர, அழிவுக்கு பமதிக்கக்கூடாது. இந்நிலை குறித்து பெற்றோரும், சமூகமும் ஆழ யலாற்ற வேண்டும். பாமா?
இரா3;
May, 2013

Page 6
கலைக்கேசரி து 06 சுற்றுலா
Liliாங்illaitian mit
உலக பிரசித்தி பெற்ற
"லூர்து' தலம்
உலகப் புகழ்பெற்ற யாத்திரைத் தலமாக விளங்கும் லூர்து திருத்தலம் பற்றி (Lourdes) கேள்விப்படாதவர்கள் ஒரு சிலராகவே இருப்பர். சிறந்த முறையில் மக்களைக் கவர்ந்து வரவேற்கும் இந்நகரம் இலட்சக் கணக்கான கிறிஸ்தவ மக்கள் தமது நம்பிக்கை மறுமலர்ச்சிக்காக கூடுகின்ற ஒரு தனித்துவமான இடமாகும். எனினும் மக்கள் அனைவரும் அமைதியளிக்கும் இத்திருத் தலத்திற்கு சென்று மனச் சாந்தி பெறுகின்றனர். இங்கு நடைபெறும் விழாக்களில் வெவ்வேறு இன மக்களும்
பங்குபற்றுகின்றனர்.
ஒவ்வொரு
பாரியாயமாயமாயாவார்.
பாவ பங்கயக்காபரபரபாகரன்

கண்டமும் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்றது. இங்கு சிலுவைகளைத் தரிசித்து, நீரூற்றுகளில் நீரருந்தி, எரியும் மெழுகுவர்த்தியைக் கைகளில் ஏந்திய வண்ணம், தம் மார்புகளில் தம் கரத்தை வைத்தவாறு, புனித ஜெபமாலையைத் தியானித்த வண்ணம், மகுடமணிந்து, கன்னித் தாயாரின் முன்னால் முழங்காலிட்டு அமர்ந்து வணங்கும் மக்களில் பல நாட்டவரும் வேறுபாடுகள்
காட்டாமல் ஒன்று கலக்கின்றனர்.
ஹோரிஸ் பிறெனீஸ் என்னும் இடத்தில் தென் மேற்குப் பகுதியின் பள்ளத்தாக்கொன்றில் அமைந்துள்ள இந்த அழகிய லூர்து நகரம் புனித யாத்திரைத் தலம் மட்டுமல்ல; இது மிகச் சிறந்த வசதிகள் நிறைந்த சுற்றுலா மையங்களிலும் ஒன்றாகும். ஹோட்டல் வணிகத்தைப் பொறுத்தவரையில் இந்நகரத்தில் இருக்கின்ற பல முகாமிடல் வசதிகளும் சுமார் 400 ஹோட்டல்களும் பிரான்ஸ் நாட்டில் லூர்துவை மூன்றாவது முக்கிய நகரமாக மாற்றியுள்ளது.
சுற்றுலாப் பயணிகளை இந்நகரம் பெரிதும்
- கவர்ந்திழுக்கிறது. இங்கு
முற்றிலும் பாதுகாக்கப்பட்ட மரங்களும், காடுகளும், நிழல் தரும் தோட்டங்களும் சுற்றுலாப் பகுதிகளும் உள்ளன. மேலும் இங்கு திறந்தவெளி நீச்சற் தடாகம், உள்ளக நீச்சல் தடாகம், நகர மண்டபம், 4000 மக்கள்

Page 7
அமரக் கூடிய பன்னோக்கு மண்டபம், சபை மண்டபம், நூதனசாலையுடன் கூடிய கோட்டை ஆகியன உல்லாசப் பயணிகளைக் கவர்கின்றன. அதுமட்டுமன்றி இங்குள்ள நூதனசாலைகளும் சிறப்பானவை. எமது எஜமானியின் நூதனசாலை, ஜெம்மெயில் (கண்ணாடி வேலை) நூதனசாலை, கிரேவின் மெழுகு வேலை நூதனசாலை, 'பெட்டிட் லூர்து' நூதனசாலை, லூர்து நூதனசாலை, இயற்கை நூதனசாலை ஆகியன இங்கு அமைந்துள்ளன. அத்தோடு முஸ்லிம்களின் குகைகள், தொடரூந்து நிலையம், ஏரி படகு வலித்தல், மீன் பிடித்தல், படகோட்டுதல், குழி பந்தாட்டத்திடல் ஆகியவையும் உல்லாசப் பயணிகளைக் கவர்பவையாக உள்ளன.
வழிகாட்டப்பட்ட சுற்றுலா இடங்களின் தொடக்க இடமாகவும் லூர்து நகரம் விளங்குகின்றது. மிகப்பெரும் மலைத் தொடரின் அடிவாரத்தில் பிரனீஸ் தேசிய பூங்காவின் ஓரத்தில் லூர்து நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள இயற்கைக் கவர்ச்சி மிகுந்த இடங்களுக்கான பல சுற்றுலா வசதி வாய்ப்புகளும் உள்ளன. இங்குள்ள உலகப் புகழ்பெற்ற இடங்களில் பெந்தரம் குகைகள், மெடெளஸ் குகைகள், அஸ்பின் கடவைகள், கவுபே ஏரி, ஆர்ட்டவூஸ்ட் ஏரி என்பனவும் அடங்கும்.
களிப்பூட்டும் இயற்கை எழில் நிறைந்த இந்நகரத்தின் ஆன்மீகப் பணி உலகப் பிரசித்தமானது. அதற்கு ஆதார மாக அமைவது ஓர் அற்புதமான கதை. அதைச் சிறிது பார்ப்போமா!
இந்தக் கதைக்கும் லூர்து நகரத்தில் உள்ள பொலிமில் என்னும் இடத்தைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியான பேர்னடெற் சுபிரு (Bernadette Sombrous) என்னும் ஏழைப் பெண்ணுக்கும் நிரம்பவே தொடர்பிருக்கிறது. ஆம்! இது பேர்னடெற்றின் அனுபவந்தான். 1844 ஆம் ஆண்டு தை மாதம் 7 ஆம் திகதி பொலிமில் இவர் பிறந்தார். தந்தை பெயர் பிரன்கொயிர் சுபிரு. தாயார் பெயர் லூயி கெஸ்டரொட். இவர்களது குடும்பம் மிகவும் ஏழ்மையானது.
பேர்னடெற்றுக்கு இரு வயது இளையவள் அவளது சகோதரி டொய்னெற். அதன் பின் இவளது சகோதரன் ஜீன் மேரி 1851 ஆம் ஆண்டிலும் ஜஸ்ட்டின் 1855 ஆம் ஆண்டிலும் பிறந்தனர். வறுமையினால் இக்குடும்பம் பெரிதும் துன்பமடைந்தது. அத்தோடு பேர்னடெற் பிறந்து சில மாதங்களுக்கு பின் அவளது தாயார் எரிகாயத்துக்கு உள்ளானதால் குழந்தையை அரவணைத்து பாலூட்டி வளர்க்க முடியவில்லை.
அவ்வேளை மேரி லூயி என்ற பெண் குழந்தையான பேர்னடெற்றை தானே பொறுப்பெடுத்து பாலூட்டி சீராட்டி வளர்த்தாள். இப்பெண்ணே பேர்னடெற்றின் செவிலித் தாய். இரண்டு வருடங்களின் பின் பாலகியான பேர்னடெற் தன் தாயிடம் வந்து சேர்ந்தாள். ஒரு சிறிய வீட்டில் வாழ்க்கை மிகவும் வசதியீனங்களுக்கு இடையில் நகர்ந்தது.

காரக்பர்.
லூர்து மாதா காட்சிகொடுத்த குகையின் மேல்
கட்டப்பட்டுள்ள பிரமாண்ட ஆலயத்தின் - பின்புறத் தோற்றம்
இஜேசுநாதர் கற்பித்த செபம்
- தமிழில் எழுதப்பட்டு
ஆலய முன்றலில் வைக்கப்பட்டுள்ளது
152ந்தி,
流往三方引至发表关並民主张亲老是亲言显运至要是是第一关关主
ELH 44
பரபரப்பு இருக்க (1) இங்கள் பிதாவே உம்முடைய
Mாபம் அச்பிக்கப்படுவதாக, இபபடய இராச்சிபப் பருக. இம்முடைய சித்தம் பாகம் செய்யப்படுவது பால் பாகத்திலும்
இப் பயப்பதாக, Tங்கர் அறுதிய : இ ணவை எங்களுக்கு இன்று 8, ப
இஅளித்க ருளும், எங்கரு க்கும் இ தீமை செ கயர்கTை (நாங்கள்;
பொறுப் பது போல் எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.(ங்காச்சி
சாதவாயில் விழவிடாகேயும் தீனார் 'யிலிருந்து எங்கள் இரட்சித்
நெந்யார்.

Page 8
கலைக்கேசரி தி 08
பேர்னடெற் தனது பதின்னான்காவது வயதில் ஒரு பலவீனமான பெண்ணாகவே தோன்றினாள். அதேநேரம் 1855 ஆம் ஆண்டில் இச் சிறுமி வாந்திபேதி நோயினாலும் பாதிக்கப்பட்டாள். உடலில் செழிப்புத் தோன்றவில்லை. அத்தோடு இச்சிறுமி நான்கு பிள்ளைகளில் மூத்தவள். எனவே பாடசாலைக்குச் சென்று கல்வி கற்கும் வாய்ப்பும் இல்லாமல் போனது. எனவே இவர் கல்வியறிவற்றவளாக இருந்தாள். சமூகத்துடன் சேர்ந்து பழகும் சந்தர்ப்பமும் அவளுக்கு இல்லாமலே இருந்தது.
1958 ஆம் ஆண்டு மாசி மாதம் 11 ஆம் நாள் பேர்னடெற், அவரது சகோதரி டொய்னெற் மற்றும் அவளது சினேகிதி ஒருத்தி ஆகிய மூவரும் விறகு சேகரிக்கும் பொருட்டு சிறிது தூரத்திலுள்ள குகைப் பக்கம் சென்றார்கள். அங்கு பாய்ந்தோடும் கேவ் ஆற்றின் அருகேயுள்ள கால்வாய் பக்கமாக நடந்து சென்றார்கள். சப்பாத்தைக் கழற்றாமல் அத் தண்ணீரில் செல்ல முடியாது என் பேர்னடெற் உணர்ந்ததால் குகையின் எதிர்ப் புறத்தில் நின்று காலுறைகளில் ஒன்றைக் கழற்றினாள். அப்போது அந்தச் சம்பவம் நடந்தது! இதை அவள் பின் கண்டவாறு விபரித்தாள் :-
''நான் எனது காலுறைகளில் ஒன்றைக் கழற்றியதும் காற்றடிப்பது போன்ற ஒலி என் காதில் விழுந்தது. ஆனால் மரங்கள் செடி - கொடிகள் ஆடவில்லை. இருப்பினும் அந்தக் குகையில் அமைந்திருந்த இயற்கையான மாடத்தில் தோன்றிய காட்டு ரோஜா ஒன்று அசைந்தது. குகைக்கு எதிர் புறமாக இருந்த வயல் வெளியைப் பார்த்தேன். அப்போது நம்ப முடியாத அளவு மணிகள் அங்கிருந்ததை நான் கண்டேன்! எனது சப்பாத்துகளை கழற்றி எடுத்த வண்ணம் அங்கு தொடர்ந்து சென்றேன். மீண்டும் அதே ஒலி காதில் விழுந்தது. நான் நன்கு கண்களை அகல விரித்து குகையின் மாடப் பக்கம் பார்த்தபோது கண்கள் கூசும் படியான
T
லூர்து மாதாவினால் உருவாக்கப்பட்ட நீரூற்றின் ஆரம்ப
இங்கு விசுவாசிகள் மலர் வை

வெளிச்சம் பரவியதோடு அங்கு வெண்ணிற ஆடையில் பெண்மணி ஒருவர் நிற்பதைக் கண்டேன்! அந்தப் பெண்மணி வெண்ணிற ஆடையொன்றையும், வெண்ணிற முந்தானை ஒன்றினையும், நீல நிற இடுப்புத் துணி ஒன்றையும், அதே நிற ஜெபமாலை ஒன்றையும் அணிந்திருந்தாள். நான் சற்றுப் பின்நோக்கி நகர்ந்தேன். என்னால் நம்பமுடியவில்லை. எனது கண்களை துடைத்து விட்டு மீண்டும் நான் பார்த்தேன். அப்போதும் அங்கு அப்பெண்மணியைத்தான் என்னால் காண முடிந்தது. அப்பெண்மணி தன் இடுப்பில் சுற்றியிருந்த ஜெபமாலையை எடுத்து சிலுவையாக ஆக்கிக் காட்டினாள். நானும் அவ்விதம் செய்ய முயன்றேன். என் பயம் நீங்கி விட்டது. நான் தியானித்த வண்ணம் அந்த அழகிய பெண்மணியை வணங்கினேன். என் தியானம் முடிந்த பின்னர் அப்பெண்மணி தன்னிடம் வரும்படி அழைத்தார். ஆனால் அவரிடம் செல்ல எனக்குத் தைரியம் வரவில்லை. பின்னர் அவர் திடீரென மறைந்து விட்டார்.'' இவ்விதம் பேர்னடெற் தனக்கேற்பட்ட ஆச்சரியமான அனுபவத்தை பின்னர் தெரிவித்திருந்தாள்.
விறகுகளை எடுத்துக் கொண்டு வீடு திரும்பும்போது பேர்னடெற்றுக்கு தான் கண்ட அனுபவத்தை தனக்குள் மறைத்து வைத்துக் கொள்ளவும் முடியவில்லை. வெளியில் சொல்லாமலும் இருக்க முடியவில்லை. இறுதியில் மிகவும் கஷ்டப்பட்டு ''நீங்கள் குகைப் பக்கம் ஏதாவது கண்டீர்களா?'' என சிறுமிகளிடம் கேட்டாள். அவர்கள் இல்லை என்றார்கள். "ஏன் நீ ஏதாவது கண்டாயா?'' என அவர்கள் கேட்டபோது மறைக்க முடியாமல் தான் கண்டதை எல்லாம் விபரித்தாள். ஆனால் யாருக்கும் இதைச் சொல்லி விடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டாள். இருப்பினும் வீட்டில் சிறுமிகள் இவ்விடயத்தைச் சொல்லி விட்டார்கள். பேர்னடெற்றின்
ப்புள்ளி தடித்த கண்ணாடியினால் பாதுகாக்கப்பட்டுள்ளது. த்து வணக்கம் செலுத்துவது மரபு.

Page 9
லூர்துமாதா காட்சி கொடுத்த குகை
தாயார் ஆச்சரியப்பட்டார். ஆனால் அவளிடம் ''நீ இனிமேல் அங்கெல்லாம் போகக் கூடாது'' என்று கடுமையான உத்தரவு போட்டார். இவ்விடயம் மெல்ல மெல்ல அப்பகுதியில் பரவியது.
ஆனால் 1858 ஆம் ஆண்டு மாசி மாதம் 14 ஆம் நாள் மீண்டும் அவள் தாயிடம் அனுமதிபெற்று அதே சிறுமிகளுடன் அங்கு சென்றாள். அவ்வேளையும் அவர்களது செபமாலை தியானத்தை அடுத்து அப் பெண்மணி குகை மாடத்தில் தோன்றி புன்னகைத்து சிறிது நேரத்தின் பின் மறைந்தாள். மாசி மாதம் 18 ஆம் நாள் மூன்றாவது முறையாக அந்தப் பெண்மணி பேர்னடெற்றுக்கும் அவர்களுடன் சென்ற சிலருக்கும் காட்சித் தந்தார். அந்தப் பெண்மணி கூறுவதற்கு எதுவுமிருப்பின் எழுதிக்கொள் என்று அவளுடன் வந்தவர்கள் அவளிடம் பேனாவும் கடதாசி ஒன்றும் கொடுத்தனர். " ஏதாவது சொல்ல விரும்பின் சொல்லுங்கள் தாயே!'' என்று பேர்னடெற் தியானத்தின்போது மன்றாடிக் கேட்டாள். அப்போது அப்பெண்மணி புன்னகைத்து, ''கூறுவதற்கு பல விடயங்கள் இருக்கின்றன. என்றாலும் எழுதிக் கொள்வதில் பயனில்லை.'' என்று கூறினார்.
''15 நாட்களுக்கு அவர் என்னைத் தினமும் வரவேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். அதற்கு நான் மகிழ்வுடன் ஒப்புக் கொண்டேன். அப்போது அவர், இந்த உலகத்தில் என்னை அவர் சந்தோஷப்படுத்தாமல், வானுலகில் சந்தோஷப்படுத்துவதாக உறுதியளித்தார். அப்பெண்மணி கூறியதுபோல், 15 நாட்கள் பல தடங்கல்களுக்கு மத்தியில் தவறாது நான் அங்கு சென்றேன். திங்களும் வெள்ளியும் தவிர அவர் ஒவ்வொரு நாளும் என் முன் தோன்றிக் காட்சி தந்தார்'' என பேர்னடெற் கூறியிருக்கிறாள். அவள் போகும் வேளைகளிலெல்லாம் ஆசீர்வதிக்கப்பட்ட

மெழுகுவர்த்தியையும் எடுத்துச் சென்றாள். அவ்விதமே இங்கு அக்காட்சியைக் காண கூடும் பக்தர்கள் தொகையும் அதிகரித்து வந்தது. எல்லோருமே அந்த குகைக்கு முன் மெழுகுவர்த்தி எடுத்து வந்து, தீபம் ஏற்றி வணங்கும் வழக்கமும் ஏற்பட்டது.
இவ்விதமாக 18 முறை, அதாவது 1958 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் திகதி வரை, அப்பெண்மணியின் திவ்ய காட்சி பேர்னடெற்றுக்குக் கிடைத்தது. இக்காலத்தின் போது, அந்த ஏழைச் சிறுமியுடன் அப்பெண்மணி காட்சி தந்தவேளை பேசினாள். தனக்கு அவ்விடத்தில் ஓர் ஆலயம் கட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் என்பதும் பேர்னடெற் மூலமாகத் தெரிய வந்தது.
ஒரு பெண்ணின் காட்சித் தோற்றம் பேர்னடெற் மற்றும் பலர் முன்னிலையில் இடைக்கிடை தோன்றி வருகின்றது என்ற செய்தி லூர்து நகரில் பரவத் தொடங்கியதும் பொலிஸ் அதிகாரிகளும் சட்ட அதிகாரிகளும் மதப் பிரமுகர்களும் பேர்னடெற்றை அழைத்து விசாரிக்கத் தொடங்கினார்கள். கடுமையாக மிரட்டினார்கள். ஆனால் பேர்னடெற் தான் கண்டவற்றை ஒன்று விடாமல் திரும்பத் திரும்பக் கூறினாள். கடுமையாக அச்சுறுத்தியும் கூட அவள் தான் கண்டவற்றையே கூறிக் கொண்டிருந்ததினால் அவள் கூறியவற்றை அவர்களால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அவளது கள்ளங்கபடமற்ற பரிசுத்த நிலை, அவள் கூற்றில் சந்தேகம் தோன்ற விடாமல் தடுத்தது. அத்துடன் அவளுக்கு அந்த அமானுஷ்யப் பெண்ணுடன் பக்தி ரீதியான பவித்திரமான தொடர்பும் இருந்ததைக் கண்டறிந்தனர்.
தியானத்தில் இருக்கும் பேர்னடெற்றுடன் இரகசியமாக சில விடயங்களை அப்பெண்மணி பேசியதோடு அவற்றை எவருக்கும் கூறாமல் காப்பாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தாராம். பேர்னடெற்

Page 10
கலைக்க்ேசரி.
40
3
அவற்றைக் காப்பாற்றியதாகக் கூறியுள்ளார். அத்துடன் பாவிகளுக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்ததோடு தனக்கென ஓர் ஆலயத்தை அங்கு கட்ட வேண்டும் என்றும் அடிக்கடி கூறியிருந்தாராம்.
இதை அவள் வெளிப்படுத்தியிருந்தாள். அப்பெண்மணியின் ஆவலை மறை மாவட்ட பாதிரியார் பெய்ரெமலே என்பவரிடம் அவள் தனது மாமிமாருடன் சென்று பேசிய போது அப்பெண்மணியின் பெயர் என்ன? அதைக் கேட்டு வந்து கூறு என்றாராம். அதை அப் பெண்ணிடம் கேட்க அவள் பல தடவை முயற்சித்த போதும் புன்னகை தான் பதிலாகக் கிடைத்தது. இதைப் பற்றி பாதிரியாரிடம் கூறிய போது ''அப் பெண்மணி உன்னை ஏமாற்றி வருகிறாள். அவளுக்குக் கோவில் கட்டுவதானால் பெயர் தெரிய வேண்டும். அதுமட்டுமல்ல அதற்குப் பணமும் தர வேண்டும். மேலும் குகையின் கீழே இருக்கும் ரோசாச் செடியையும் அழகு படுத்துமாறு கூறு'' என்றாராம்.
நாளுக்கு நாள் அந்த உருவக் காட்சியைக் காண குகையின் முன் ஆயிரக் கணக்கில் மக்கள் குழுமிக் காத்திருந்தனர். எனினும் சில நாட்களில் அங்கு அப்பெண் மணியின் உருவக் காட்சி தோன்றுவதில்லை. அப்போது அங்கு ஜெபமாலைத் தியானத்தில் இருக்கும் பேர்னடெற் அவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டு விட்டதே என்று மனம் வருந்துவாளாம். தோன்றி மறையும் அப்பெண்மணி யாராக இருக்கும்? என அவளும் சிந்தித்துக் கொண்டே இருந்தாள். 1858 ஆம் ஆண்டு பங்குனி 25 ஆம் நாள் தான் பேர்னடெற் அறியத்துடித்த அந்தப் பெயர் அவளுக்குக் கிடைத்தது. "தாயே! உங்கள் பெயரை அறியத் தாருங்கள்” என அவள் பலமுறை மன்றாடிக் கேட்ட போதும் புன்னகைத்த பெண்மணி பின்னர் பரலோக ராஜ்யத்தின் நிமித்தம் மேல் நோக்கி விழித்து பூமியை நோக்கியிருந்த கைகளை ஒன்றாக இணைத்து ''நான் தான் பரிசுத்த ஆவி''

என்றார். இதுதான் அவரிடமிருந்து அவளுக்கு வந்த இறுதி வார்த்தைகள். அப்போது அவரது கண்கள் நீல நிறமாக இருந்தன என்கிறாள் பேர்னடெற். இப்பெயரை அவள் பாதிரி பெய்ரெமலேக்கு அறிவித்தாள். அவளது பணிவும் எளிமையும் அவள் கூறியது உண்மை என்பதை அவரை உணர வைத்தது. அவர் அதைப் பற்றி அறிவிக்குமாறு தர்பெஸ் பேராயருக்கு அறிவிப்புச் செய்தார்.
1858 சித்திரை 7 ஆம் நாள் இடம்பெற்ற அப்பெண்ணின் உருவெளிக் காட்சியின் போது ஆழ்ந்த ஆசீர்வாத நிலையில் இருந்த பேர்னடெற் எரிந்து கொண்டிருந்த மெழுகு வர்த்தியின் நெருப்பை சுமார் கால் மணி நேரம் பற்றிப் பிடித்திருந்த போதும் அவளது கையில் நெருப்பின் சூடு காரணமாக பாதிப்பு ஏதும் ஏற்படாதிருந்ததைக் கண்டு அவளை அங்கு அவதானித்துக் கொண்டிருந்த பெருந்திரளான மக்களும் வைத்தியர் டசவுஸ் என்பவரும் ஆச்சரியமுற்றனர்.
1858 மாசி 25 ஆம் நாள் அந்த உருவெளித்தோற்றக் காட்சியின் போது பேர்னடெற்றுக்கு மற்றுமொரு அதிசய அனுபவம் கிட்டியது. ''நீரூற்றுக்குச் சென்று நீரருந்துமாறு அவர் என்னிடம் கூறினார். நான் நீரூற்றைக் காணாது தேடிய போது அவரே ஓர் இடத்தைக் காட்டினார். அங்கு சேற்று நீரே இருந்தது. அது அழுக்காக இருந்ததால் சேற்றை அப்புறப்படுத்த வேண்டியிருந்தது. சேற்றை அகற்றும் நான்காவது முயற்சியின் பின்னரே நான் சிறிது நீரருந்த முடிந்தது. அதன் பக்கத்தில் இருந்த புல்லைத் தின்னுமாறும் கூறினார். பின்னர் அவ்வுருவம் மறைந்தது. நானும் வீடு திரும்பி விட்டேன்'' என அவள்
கூறியிருக்கிறாள்.
பதினெட்டாவதும் இறுதியுமான உருவெளித்தோற்ற சம்பவம் 1858 ஜூலை 16 ஆம் திகதி நிகழ்ந்துள்ளது. பேர்னடெற் ஜெபமாலைத் தியானத்தில் ஈடுபடத் தொடங்கியதும் அப்பெண்மணி காட்சி தந்து மறைந்தாள்.

Page 11
அவர் எப்போதையும் விட அன்று மிக மிக அழகாக இருந்தார் என பேர்னடெற் கூறியிருந்தாள்.
இவ்விடயம் தொடர்பாக மக்கள் பல்வேறு வினாக்களையும் தொடுத்தனர். எனவே தேவாலயம் இது குறித்து 1858 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி விசாரணைக் கமிஷன் நியமித்தது. இதனையடுத்து 1860 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் திகதி பேர்னடெற் சொபிருக்கு கன்னி மரியாள் காட்சி தந்தார் என உள்ளூர் மேற்றிராணியார் இறுதியாக அறிவித்தல் செய்தார். இவற்றினை அடுத்து லூர்துவில் அன்னை பாத்திமாவுடன் மேரி மாதாவையும் வணங்கித் துதிக்கும் வழக்கம் ஆரம்பித்தது. உலகில் உள்ள மாதா தேவாலயங்களில் மிகப் பிரசித்தமாக விளங்கும் லூர்து மாதா தேவாலயத்துக்கு வருடாந்தம் 10 முதல் 60 லட்சம் வரை யாத்திரீகர்கள் யாத்திரை செல்கின்றார்கள்.
பேர்னடெற்றின் விபரிப்புக்கு அமைவாக கன்னி மரியாளின் உருவச் சிலை அமைக்கும் பணி 1863 ஆம் ஆண்டு ஜோசப் ஹகு பபிஷ் (Joseph Hugues Fabish) என்ற சிற்பிக்கு வழங்கப்பட்டது. அவ்விதமே உருவச் சிலை செய்யப்பட்டு கன்னி மரியாள் தோன்றிய அந்தக் குகையிலே 1864 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் திகதி வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இத்தேவாலயத்துக்கு பின்னாளில் பாப்பரசர்களான சில பிஷப்புகளும் விஜயம் செய்துள்ளார்கள். இரண்டாம் ஜோன் போல் பாப்பரசர் லூர்து புனித தலத்துக்கு மூன்று தடவைகள் விஜயம் மேற் கொண்டுள்ளார். பிரதி வருடமும் பெப்ரவரி 11 ஆம் திகதி பல நாடுகளிலும் லூர்து அன்னையைப் போற்றித் துதிக்கும் வகையில் கத்தோலிக்க தேவாலயம் ஆராதனை நடத்தி வருகின்றது. 1858 ஆம் ஆண்டுதை மாதம் 21 ஆம் நாள் பேர்னடெற் தான் குடும்பத்தாருடன் வாழ்ந்த கச்செட்டுக்கு மீண்டும் திரும்பி வந்தாள். 1860 ஆம் ஆண்டு ஆடி 15 ஆம் திகதி நெவெர்ஸ் சகோதரிகளினால், லூர்து நகரத்தில் நடத்தப்பட்ட வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக
எடுத்துச் செல்லப்பட்டாள்.
அவர்களது , வணக்க தலத்திற்கு புதியதொரு தொண்டராகச் சேருவதற்கு பின்னர் சென்ற பேர்னடெற், 1867 ஆம் ஆண்டு அவர்களது மத அங்கியை அணிந்து கொண்டாள். 12 வருட காலம் கன்னி மடத்தில் தங்கியிருந்த பேர்னடெற் தனது 35 வது வயதில் 1879 ஆம் ஆண்டு ஆஸ்த்மா நோயின் காரணமாக இறைவனடி சேர்ந்தாள். இவருக்காக புனித ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன் குகையில் இருந்து ஆரம்பமாகின்ற நீரூற்றில் ஸ்நானம் செய்வதற்கும் நீர் அருந்துவதற்கும் யாத்திரீகர்கள் குழுமுகின்றனர். ''அங்கே சென்று நீரூற்றில் இருந்து வரும் தண்ணீரை அருந்தி, உங்களை நீங்கள் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்!'' என 1858 ஆம் ஆண்டு மாசி மாதம் 25 ஆம் திகதி தோன்றிய எம்பெருமாட்டியின் திருவுருவம் திருவாய் மலர்ந்து அருளியதற்கு இணங்க மக்கள் இங்கு
வந்து ஸ்னானம் செய்து ஆரோக்கியம் பெறுகின்றனர். .
- கங்கா

கமம்
இரவு ஆராதனையின் போது விசுவாசிகள் மெழுவர்த்தி ஏந்தி
இறைவணக்கத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
ஆலயத்தில் வரையப்பட்டுள்ள இஜேசுநாதரின் திருப்பாடுகளில் இஜேசுவின் வஸ்திரம் களையப்படும் தத்ரூபமான காட்சி.
நேர்த்திக் கடனை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு விசுவாசிகளினால் அளிக்கப்பட்ட செபமாலைக் காணிக்கைகள்

Page 12
கலைக்கேசரி, 12 சாசனவியல்
மட்டக்களப்பில் மற்றுமோர் 6
உலகளாவிய ரீதியில் மனித சமுதாயத்தின் ஆரம்ப காலம் பழைய கற்காலம், குறுணிக் கற்காலம், புதிய கற்காலம் என்று காலக்கிரம் வரிசையில் வகை செய்யப்பட்டு நோக்கப்படுகின்றது. ஆதியான மனிதன் பல்லாயிரம் ஆண்டுகளாக பல யுகங்களாக எதுவித முன்னேற்றமும் இன்றி வாழ்ந்தான். அது பழைய கற்காலம் என்று சொல்லப்படுகின்றது. இலங்கையில் பழைய கற்கால மக்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. அது குறுணிக் கற்காலப் பண்பாடாக ஒரு காலத்தில் மாற்றம் பெற்றது. இலங்கையில் யாழ்ப்பாண தீபகற்பம், அதனை சுற்றியுள்ள தீவுகள் என்பவற்றைத் தவிர ஏனைய பாகங்களில் இப்பண்பாட்டு மக்கள்
வாழ்ந்தமைக்கான சான்றுகள் உண்டு.
அதற்கு அடுத்ததாகவே பெருங்கற்கால பண்பாடு அறிமுகமாகின்றது. பெருங்கற் பண்பாட்டை உருவாக்கிய மக்கள் இறந்தோரை அடக்கம் செய்வதற்கு பெருங் கற்களால் ஆன ஈமச்சின்னங்களை அமைத்தமையினால் இவர்கள் காலப் பண்பாடு 'பெருங்கற்காலப் பண்பாடு' என்ற பெயர் பெறுகின்றது. இவ்வீமச் சின்னங்கள் கற்பதுக்கை (Chirn Circle), ஈமப்பேழை (Sarcophagus), கற்திட்டை (Dolman),
- குத்துக்கல்
(Menhir),
புராதன காலத்தில் ஈழத்துடன் நடைபெற்ற வெளிநாட்டு "
வர்த்தகத்தின் மூலமாக இங்கு வந்தடைந்த மட்பாண்டமே இதுவாகும். முருக்கன் தீவில் கிணறு வெட்டும்போது ஐந்தடி ஆழத்தில் இந்த மட்பாண்டம் கிடைக்கப் பெற்றது.
பrn) ஆ°.ஒம். இறங்கள்
கல்வட்டம் (Stone Circle), முதுமக்கள் தாழி (Urn) ஆகிய பகுதிகளைக் கொண்டதாகக் காணப்படும். இருப்பினும் கற்களால் மட்டுமே இம்மக்கள் ஈமச் சின்னங்கள் அமைக்க வில்லை. தாழிகளிலும் குழிகளிலும் அடக்கம் செய்தனர்.

பருங்கற் பண்பாட்டுத் தளம்
கெளரி புண்ணியமூர்த்தி, தற்காலிக உதவி விரிவுரையாளர்,
வரலாற்றுத்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம்.
பெருங்கற் பண்பாடு இந்திய துணைக் கண்டத்தில் அதன் தென்பகுதியிலே கி.மு 1000 ஆம் ஆண்டிலிருந்து அறிமுகமாகி வளர்ச்சியடைந்தது. காலத்தால் முற்பட்ட அதன் சின்னங்கள் கர்நாடகாவில் காணப்படுகின்றன. அப்பண்பாடு தெற்கு நோக்கி பரவியது. தமிழகம், கேரளம், ஆந்திர தேசம் மேற்கு, தெற்கு பகுதிகளுக்கும் பரவியது. அங்கிருந்து அது இலங்கையை அடைந்தது. தென்னிந்தியாவில் நாகரிக அபிவிருத்திகளுக்கு அதனை அறிமுகம் செய்த மக்கள் காரணமாக இருந்தனர். பெரும் கிராமங்கள், நகரங்கள், பெருமளவிலான விவசாயம், சிறுகைத் தொழில்கள், இரும்பின் உபயோகம், அரசனது தோற்றம் ஆகியன யாவும் இதன் மூலமாகவே தோன்றின. இப்பண்பாட்டின் பிரதான அம்சங்களாக இரும்புப் பொருட்கள், கரும் செம் மட்பாண்டங்கள்,
ஈமக்கல்லறைகள்,
தாழிகள் ஆகியவற்றைக்
குறிப்பிடலாம். மக்கட்
குடியிருப்புகள், ஈமச்சின்னங்கள், வ ய ல் க ள் , குளங்கள்

Page 13
பெருங்கற்படைக்காலப் பண்பாடு
கி. மு. ஏழாம் நூற்றாண்டு காலப் பகுதியில் இலங்கையில்
'- பரவத்தொடங்கியது. பெருங்கற்படைக்காலப் பண்பாட்டின் 'சிறப்பம்சங்களாக கறுப்பு - சிவப்பு
'நிற மட்பாண்டங்கள், சிப்பிகள், 'சங்குகள், நடுகற்கள், தமிழ் பிராமி
- எழுத்துக்கள் போன்றன 'குறிப்பிடத்தக்கவை. இவையாவும் முருக்கன் தீவில் பொதுமக்கள் கிணறு
' வெட்டும்போதும், குழிதோண்டும்போதும் சாதாரணமாக வயல் வேலைகளில் ஈடுபடும்போதும்
'கண்டெடுக்கப்படுகின்றன. இவ்வாறு கண்டெடுக்கப்படும் பொருட்களை ஆய்வு செய்யும்போது 'இப்பகுதி பெருங்கற்படைக்காலப் | பண்பாடு நிலவிய பிரதேசம் என்பதை
துல்லியமாக உணர்த்துகின்றது. இதுவரை அடையாளம் காணப்படாத வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முருக்கன் தீவு பூரணமான ஆய்விற்கு
'உட்படுத்தப்படுவதனூடாக 'மட்டக்களப்பு வரலாறு ஒரு திருப்புமுனையாக 'மீள்எழுச்சி பெறும்.
இவையாவும் | மனித சமுத பயன்படுத்திக்
கி.மு 7 ஆம் தொடங்கியது. இலங்கையின் இப்பண்பாட்டு சூழ்ந்துள்ள முதன்மையான மக்களோடு க கந்தரோடை, ! கதிரவெளி, அ பகுதிகள் ஆய்வாளர்களா
மட்டக்களப்பு பண்பாட்டுச் ! பட்டுள்ளன. ! கழிமுகப் படையெடுத்த இடத்தில் பான அ மை க் க ப்பு க ற் கி ன
அ ட க் க ங் க
சட் :
இட! இத்த கதிரெ பூமியில்

கலைக்கேசரி
ஒருங்கிணைந்ததே இக்கலாசாரமாகும்.1 இரும்பின் உபயோகம் தாயமானது சூழலை கட்டுப்படுத்தவும் வாழ்க்கைக்கு
கொள்ளவும் பெரிதும் உதவியது. நூற்றாண்டளவில் பெருங்கற் பண்பாடு இலங்கையில் பரவத் பல்வேறு காரணங்களின் நிமித்தம் தென்னகத்திலிருந்து வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு, கிழக்கு கரையோரங்களை ) மக்கள் சென்றடைந்தனர். யாழ்குடா நாட்டிலும் அதை தீவுக்கூட்டங்களிலும் குடியேறியவர்களில் அவர்களே எவர்கள். ஏனைய இடங்களில் அவர்கள் குறுணிக் கற்கால் லப்புற்றனர். இலங்கையில் பொம்பரிப்பு, ஆனைக்கோட்டை, மாந்தை, அக்குறுகொட, பின்வேவ, உகந்தை, கரம்பன்குளம், ம்பாந்தோட்டை, அனுராதபுரம், திஸ்ஸமாகாராம் முதலான பல பெருங்கற் பண்பாட்டு மையங்களாக ரல் அடையாளங் காணப்பட்டுள்ளன.2 பில் கதிரவெளி எனுமிடத்தில் பெருங்கற் சின்னங்கள் கண்டுபிடிக்கப் இங்கு மகாவலி ஆற்றின் பகுதியில் 'குரங்கு வேம்பு' எனப்படும் ஊறக்கற்களால் பட்ட
- ட 5 ள்
காணப்படுகின்றன. 1920 களிலிருந்து தொல்லியல் தளத்தின் மு க் கி ய த் த வ ம்
அ றி யப் பட் டி ரு ந் த ா லு ம் இங்கு முழுமையான ஆய்வு நடத்தப்படவில்லை. பெருங்கற் காலத்தில் இப்பகுதியில் முக்கியமான ஒரு குடியிருப்பு இருந்திருக்க வேண்டும் என்பதற்குச் சுற்றாடலில் காணப்படும் வேறு தொல்லியல் சான்றுகள் - மடு கூறுகின்றன. பிராமிக் கல்வெட்டுகள் இங்கிருந்து கிட்டிய தூரத்தில் சேருவில, இலங்கைத்துறை, ஈச்சிலம்பத்தை ஆகிய இடங்களில் உள்ளன. அத்துடன் இலங்கைத்துறையில் கரும் செம் கலவோடுகள் கிடைத்துள்ளன.3
கதிரவெளியின்
கற்கிடை
அடக்கங்கள் வெளிப்படுத்தும் ஆதி இரும்பு பண்பாட்டின் செல்வாக்குத் தென்னிந்தியாவின் தமிழ் நாட்டுப் பகுதியிலிருந்து மட்டுமன்றி ஆந்திரா மற்றும் கேரளம் ஆகிய ங்களிலிருந்தும் வந்திருக்க முடியும். கொச்சிப் பகுதியில் கைய கற்கிடை அடக்கங்கள் காணப்படுகின்றன. அத்துடன் வளியில் கற்களை நீள்சதுர சலாகைகளாக வெட்டியெடுத்து - பதித்து வைத்திருந்தனர். இது யக்க வழிபாட்டுடன்
HF TEF==

Page 14
கலைக்கேசரி )
14
தொடர்புபட்டது என பேராசிரியர் பரணவிதான கூறுகின்றார்.4
தென்னிந்தியாவில்
இத்தகைய கற்சலாகைகள் மூலம் நடுகல் வணக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கதிரவெளியில் நடுகல் வழிபாடும் பேணப்பட்டது என்பது தெளிவாகின்றது.
கிழக்கு கரையோரத்தின் தென்பகுதியிலும் தென் மாகாணத்தின் கிழக்குப் பகுதியிலும் சில இடங்களில் தென்னிந்தியாவிலிருந்து பரவிய பெருங்கற் பண்பாட்டிற் குரிய சின்னங்கள் கிடைத்துள்ளன. ஆற்றுவழியாக இப்பண்பாடு பரவியமையினைக் குறிக்கும் வண்ணமாக ஆறுகளின் கழிமுகப் பகுதிகளிலேயே தொல்பொருட் சான்றுகள் கிடைத்துள்ளன.
அம்பாறையின் தென்னெல்லையான
- குமுக்கன் ஓயாவிற்கு வடக்கே உள்ள பல இடங்களில் பெருங்கற் பண்பாட்டிற்குரிய கரும் செம் கலவோடுகள் கிடைத்துள்ளன. பாணமைப் பகுதிகளிலும் இவ்விதமான தொல்பொருட் சின்னங்கள் காணப்படுகின்றன. அதற்குத் தெற்கில் உகந்தையில் பெருங்கற் பண்பாடுக் கால ஈமக் கற்கிடக்கைகள் இருப்பதை 1920 களில் சிலர் அவதானித்துள்ளனர்.5 - இவ்வாறு ஆய்விற்கு உட்படாது பல இடங்கள் காணப்படுகின்ற அதேநேரம், கிழக்கில் இதுவரை அடையாளங் காணப்படாத பெருங்கற்கால் தளங்களும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. - மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கே கோரளைப்பற்று தெற்குப் பிரதேசத்திற்குட்பட்ட கிராமமே முருக்கன் தீவு. பிரதான வீதியிலிருந்து ஏறத்தாழ 1.5 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கும் கிண்ணையடி எனும் பழம்பெரும் ஊரினூடகச் சென்று, கிண்ணையடி ஆற்றைக் கடந்து சென்றால் முருக்கன் தீவு அமைந்துள்ளது.
பழைமை வாய்ந்த இவ்வூரின் தொல்லியற் தடயங்களைக் கண்டறியும்
ஆய்வு முயற்சியொன்று கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களாகிய அ.சதானந்தன், க.சந்திரமேகன், க.சிவதர்ஷன் ஆகியோரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது. அம்முயற்சியின்
தமிழி எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ள நடுகல்

க.
பயனாக அவ்வூரின் தொன்மையை வெளிப்படுத்தும் வகையிலான சான்றுகள் கிடைத்தமை மகிழ்ச்சிக்குரியது.
முருக்கன் தீவுப் பிரதேசத்தில் ஏறத்தாழ 50 குடும்பங்கள் வசிக்கின்றனர். அவர்கள் சேனைப் பயிர்செய்கை, மாடு மேய்ப்பு, விவசாயம், மீன்பிடி போன்றவற்றை தமது வாழ்வாதாரத் தொழில்களாக மேற்கொள்கின்றனர். இம்மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணலின் படி 1950 ஆம் ஆண்டுக்கு முன்னர் இவ்வூரில் ஐந்தாறு குடும்பங்கள் வாழ்ந்ததாகவும், பின்னர் பல குடும்பங்கள் கிண்ணையடி முதலான ஊர்களிலிருந்து வந்து வாழத் தொடங்கியதாகவும் கூறப்படுகின்றது. இங்கு முருகனாலயம் ஒன்று அமைந்துள்ளது. மக்கள் நீண்ட காலத்திற்கு முன்னரே இவ்விடத்தில் வேல் வைத்து
முருகனை வழிபடத்தொடங்கியுள்ளனர். ஆயினும் கோயிற் கட்டடம் 1986 ஆம் ஆண்டளவிலே தான் கட்டப்பட்டுள்ளது.
இந்த முருகன் கோயிலின் முன்றலில் படிக்கற்களாக இரு நீள்சதுரமான கற்துண்டுகள் போடப்பட்டுள்ளன. ஏறத்தாழ ஆறு அடி நீளமானவையாக இவை காணப்படுகின்றன. செம்மையாக வெட்டப்பட்ட இக்கற்களை தற்செயலாக நோக்கிய போது மேலிருந்த கல்லில் சில எழுத்துக்களை எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே அதனைச் சுத்தம் செய்து பார்த்தபோது, அதில் கி.மு மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி நான்காம் நூற்றாண்டு வரை தென்னாசியத் துணைக்கண்டத்தில் எழுதப்பட்ட ஆவணங்களில் காணப்பட்ட பிராமி எனும் வகைக்குரிய வரிவடிவங்களைக் காணமுடிந்தது. தமிழகத்தில் வழங்கிய இந்த எழுத்து முறையில் தமிழுக்குச் சிறப்பான எழுத்துக்களான ழ, ள,ற,ன ஆகியன அமைந்து இருந்தமையால் அது தமிழ் பிராமி (தமிழி) என்று அழைக்கப்பட்டது.
இலங்கையில் ஏறத்தாழ 2000இற்கு மேலான பிராமிச் சாசனங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் பிராகிருதச் சொற்களுடன், தமிழ் மொழிச் சொற்களும் காணப்படுகின்றன. 'கி.மு முதல் மூன்று நூற்றாண்டுகளில் இலங்கையில் தமிழ் ஒரு பேச்சு மொழியாக
பெருங்கற் காலத்தில் இறந்தோரின் நினைவாக எழுப்பப்பட்ட குத்துக்கல்

Page 15
52 ECE-ET பா= 1
பாகம்
முருக்கன்தீவில் கண்டறியப்பட்ட கற்சலாகையில் எழுதப்பட்ட தமிழ்
விளங்கியமைக்கு ஆதாரமாய் பிராமிச் சாசனங்கள் அமைகின்றன' என பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் தமது 'இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள்' எனும் நூலில் குறிப்பிட்டுள்ளமை இங்கு ஈண்டு குறிப்பிடத்தக்கது. அளவிற் சிறிய இச்சாசனங்கள் பெரும்பாலும் தான சாசனங்களாகவே அமைகின்றன.
முருக்கன் தீவில் கிடைத்த சாசனத்தை வாசிக்க முற்பட்டபோது அதனை முழுவதுமாக எம்மால் வாசிக்க முடியவில்லை. மேல்வருமாறு அவற்றை அடையாளம் காண முடிந்தது.
இவ்வெழுத்துக்களை ஓரளவு தெளிவாக வாசிக்க முடிந்தது. 'மரத' எனும் இச்சொல்லை மற்றைய எழுத்துக்களை விடத் தெளிவாக வாசிக்க முடிந்தது. இச்சொல்லை நாம் மருதம் எனக்கருதுகிறோம். 'மருதம்' என்பது வயலும் வயல் சார்ந்த பிரதேசத்தையும் குறிக்க பழந்தமிழ் இலக்கிய காலம் முதல் பயன்படுத்தப்பட்டு வந்த சொல்லாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு நோக்குகின்ற போது வயல்கள் நிறைந்த பகுதியில் கிடைத்துள்ள இச்சாசனம் வயலுடன் தொடர்புடைய ஏதோவொரு நிகழ்ச்சியை குறிப்பிடுகின்றது என நாம் கொள்ள முடியும். எனினும் சாசனத்தின் ஏனைய எழுத்துக்கள் தெளிவாகத் தெரியாத நிலையில் அந்நிகழ்ச்சி யாதென்பது பற்றிய விவரங்களை அறியமுடியவில்லை. அக்கற்பலகை நீண்ட காலமாக படிக்கற்களாக பயன்படுத்தப்பட்டமையால் வாசகத்தின் பிற்குதி பெருமளவில் சிதைவடைந்துள்ளது.
இக்கற்பாறைகள் சில வருடங்களின் முன்பு கோயிலிற்குப் பின்புறத்தில் ஏறத்தாழ 15 மற்றா தொலைவில் குழிகளை வெட்டியபோது இடைத்தவையாகும். அக்குழிகளை வெட்டிய ஒருவருடன் நாம் தொடர்புகொண்ட போது சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை எம்மால் அறிந்து கொள்ள முடிந்தது. அவ்வூர் மக்கள் சில தேவைகளின் பொருட்டு குழிகளை அவ்விடத்தில் வெட்டியபோது சீராக வெட்டப்பட்ட நீள்சதுர வடிவிலான ஏராளமான கற்சலாக்ைகள் காணப்பட்டுள்ளன. அவற்றில் இரண்டு சலாகைகளே
கோயிலின்
முன்றலில் போடப்பட்டுள்ளவையாகும். ஆயினும் தற்போது
சTச
Tெயை

- கை கோர்
பிராமி சாசனம்
அவ்விடம் மண்ணால் மூடப்பட்டுள்ளது. அவற்றினை ஆராய்வதற்கு எவ்வித அனுமதியும் எமக்கு இல்லையாதலால் அவர்கள் கூறியவற்றை எம்மால் உறுதி செய்ய முடியவில்லை. - எனினும் இதேபோன்று கற்சலாகைகள் பூமியில் பதித்து வைத்திருந்த நிலையில் கதிரவெளியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பற்றி நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். எனவே முருக்கன் தீவிலும் பக்க வழிபாடு காணப்பட்டுள்ளது என்பதை பேராசிரியர் பரணவிதான அவர்களின் கூற்றுக்களின் மூலம் தெளிவாக்கிக் கொள்ள முடிகின்றது.
தென்னிந்தியாவில் இறந்த வீரர்களது நினைவாக வீரக்கற்கள் நிறுவப்பட்டன. பழந்தமிழ் இலக்கியங்களான புறநானூறு (12 பாடல்கள்), அகநானூறு (11 பாடல்கள்), ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, ஐங்குறுநூறு, திருக்குறள், தொல்காப்பியம் ஆகிய இலக்கியங்களில் நடுகல் வழிபாடு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. பெருங்கற் காலத்தில் இறந்தோரின் நினைவாக குத்துக்கல் (Menhir) எனப்படும் நினைவுக் கற்கள் எழுப்பப்பட்டன. இவை முற்றிலும் உருவம் வரையப்படாதவை. கி.மு. 1000 முதல் கி.மு. 500 வரையான காலத்தில் இந்நிலையைக் காணலாம்.” பிற்காலத்தில் அவற்றில் வளர்ச்சி ஏற்பட்டுக் கொண்டது. பொதுவாக ஆணிரை மீட்பின் போது இறந்த வீரர்களின் நினைவாக இவை நட்ப்பட்டன. பின்னர் இவற்றில் எழுதப்பட்டதுடன் உருவங்களும் வரையப்பட்டன. புலிமான்கொம்பை, டாடப்பட் 0. பொற்மணற்கோட்டை முதலான இடங்களில் நடுகற்கள் கிடைத்துள்ளன. நடுகற்கள் வீரர்களுக்காக மட்டுமின்றி வீரத்துடன் போராடி உயிர்துறந்த கோழி, நாய (அரசிலாபுரம்,
எடுத்தனூர்)
என்பவற்றுக்கும் எடுக்கப்பட்டன. - முருக்கன் தீவுப்பகுதிகளில் நடுகல் வழிபாடு நடைபெற்றமைக்கான சான்றுகளும் கிடைத்துள்ளன. இங்கு அமைந்துள்ள முருகன் கோவிலின் பின்புறம் உள்ள காணியில் மூன்று குத்துக் கற்களை எம்மால் அவதானிக்க முடிந்தது. இவை சீராக வெட்டப்பட்டவாறு காணப்படுகின்றது. அத்துடன் முருக்கன் தீவை அடுத்துள்ள ஊரான சாராவெளியில் ஓரிடத்தில் இத்தகைய கற்களை ஏராளமாகக் கண்டோம். இவை யாவும் சீராக
600/
ᏏoᎢᎶ
600}

Page 16
கலைக்கேசரி து 16
வெட்டப்பட்டு ஏதோவோர் ஒழுங்கில் மண்ணில் புதைக்கப்பட்டுள்ளமையினை எம்மால் அவதானிக்க முடிந்தது. தற்போது இவ்விடத்தில் வைரவருக்குரிய பந்தல் அமைக்கப்பட்டு பூசைகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் கருங்காலிப்படிபட்டி எனுமிடத்தில் நடுகல் நடப்பட்ட இடத்தில் தற்போது
வைரவர் வழிபாடு நடத்தப்பட்டு வருகின்றமையை இங்கு சுட்டிக்காட்டல் அவசியமாகும். முருக்கன் தீவில் உள்ள கற்கள் நடுகற்களாகவே இருத்தல் , வேண்டும். அவ்வாறாயின் புராதன காலத்தில் இப்பிரதேசத்தில் நடுகல் வழிபாடு நடைபெற்றுள்ளமை தெளிவாகின்றது.
பிராமிச் சாசனம், நடுகல் என்பனவற்றுடன் மேலும் சில தொல்பொருட் தடயங்கள் எமக்குக் கிடைத்தன. அவ்வூரவர் ஒருவருக்கு கிணறு வெட்டும் போது ஏறத்தாழ 5 அடி ஆழத்தில் சிதைவுறாத நிலையில் மட்குடமொன்று கிடைத்துள்ளது. மிகக்கனமானதாகவும் சிவப்பு நிற மட்பாண்டமாகவும் இது காணப்படுகின்றது. அதில் ஒரே மாதிரியான அலங்கார வேலைப்பாடுகள் வரையப்பட்டுள்ளன. ஆயினும் அதில் எவ்வித எழுத்துக்களோ குறியீடுகளோ காணப்படவில்லை. இது உரோமர்களது மட்பாண்டங்களைப் பின்பற்றி இந்தியாவில் உருவாக்கப்பட்ட ரொலாட்டட் மட்பாண்டமாக இருத்தல் வேண்டும். புராதன காலத்தில் ஈழத்துடன் நடைபெற்ற வெளிநாட்டு வர்த்தகத்தின் மூலமாக இங்கு வந்தடைந்த மட்பாண்டமே இதுவாகும். இலங்கை மற்றும் தமிழகத்திலும் பெருங்கற் கலாசாரத் தளங்களில் இத்தகைய மட்பாண்டங்கள் கிடைத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
முருக்கன் தீவின் பல பகுதிகளிலும் ஏறத்தாழ 8, 9 அடிகள் தோண்டினால் சிவப்பு நிற மட்பாண்ட ஓடுகளை
க/T
முருக்கன் தீவில் காணப்படும் முருகன் கோவில்

LDLL
காண முடியும் என அவ்வூர் மக்கள் தெரிவித்தனர். முருக்கன் தீவில் மட்டுமின்றி அதனை அடுத்துள்ள சாராவெளி முதலான ஊர்களிலும் கிணறு முதலிய தேவைகளுக்காக குழிகளைத் தோண்டிய போது இத்தகைய மட்பாண்டத் துண்டுகள் கிடைத்துள்ளதாக மக்கள் குறிப்பிட்டனர். சாராவெளியில் உள்ள பிள்ளையார் கோவிலிற்கான தீர்த்தக் கிணற்றிற்கான குழி தோண்டிய போது கிடைத்த சில மட்பாண்டத் துண்டுகளை எம்மாற் காணமுடிந்தது. இப்பகுதிகளில் பொதுவாக இரண்டு அடிகளுக்கு மேல் தோண்டினால் கடற் சிப்பிகள் ஏராளமாகக் கிடைக்கின்றன. தாம் பல்வேறு தேவைகளின் நிமித்தம் மடுக்களைத் தோண்டிய போது கிடைத்த சில கடற் சிப்பிகளையும் எமக்குக் காட்டினர். | பெருங்கற்படைக்காலப் பண்பாடும் தமிழ் பிராமிச் சாசனங்களின் மொழி வழக்கும், அது அடையாளப் படுத்தும் பண்பாட்டு மரபுகளும் நெருங்கிய தொடர்புடையவை. அத்துடன் பெருங்கற்படைக்காலப் பண்பாட்டின் சிறப்பம்சங்களுள் கறுப்பு, சிவப்பு நிற மட்பாண்டங்கள் சிப்பிகள், சங்குகள், நடுகற்கள், பிராமிக் கல்வெட்டு போன்றன குறிப்பிடத்தக்கவை. இவையாவும் முருக்கன் தீவில் கிடைத்தமை இப்பகுதி பெருங்கற்படைக்காலப் பண்பாடு நிலவிய பிரதேசம் என்பதை எம்மால் உணர்ந்து கொள்ள முடிகின்றது. ஆயினும் அதனை உறுதிசெய்வதற்கு மேலும் பல ஆதாரங்கள் எமக்குத் தேவைப்படுகின்றன. அதற்கு சட்டரீதியான அனுமதியுடன் கூடிய ஆதரவு தேவை. இப்பகுதியானது முழுமையான தொல்லியல் அகழ்வாய்விற்கு
உட்படுத்தப்பட
வேண்டியது இன்றியமையாததாகும். அவ்வாறு ஆய்வு மேற்கொள்ளப்படுவதனூடாக
மட்டக்களப்பில் அடையாளங் காணப்பட்டுள்ள பெருங்கற் பண்பாட்டுத் தளமான முருக்கன் தீவின் வரலாறும் வெளிக்கொண்டுவரப்படும். இது மட்டக்களப்பு பூர்வ சரித்திரத்தை மட்டுமே நம்பியுள்ள மட்டக்களப்பு பிராந்தியத்தின் வரலாற்றைத் தெளிவாக்கும் என்பதில் எவ்வித கருத்து வேறுபாடுமில்லை. அ.
உசாத்துணை: 1. சிற்றம்பலம்.சி.க, யாழ்ப்பாணம்- தொன்மை வரலாறு,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளியீடு, 1993 2. இந்திரபாலா.கா, இலங்கையில் தமிழர், குமரன் புக் ஹவுஸ்,
2006
3. இந்திரபாலா.கா, இலங்கையில் தமிழர், குமரன் புக் ஹவுஸ்,
2006, பக்-102-103 4. Ceylon Journal of Science, Vol.il-1928 December 1933
February,pp.94-95 5. www.puthinappalakai.com 6. பத்மநாதன்.சி, இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள், இந்து சமய
கலாசார அலுவல்கள் திணைக்களம் - கொழும்பு, 2006 7. கிருஷ்ணமூர்த்தி.ச, நடுகற்கள், மெய்யப்பன் பதிப்பகம், 2004

Page 17
EXPERIENCE ECLECTI
CAS
A DESIGNER BOUTIQUE HOTEL WITH BUSINESS OR LEISURE.IN A GLO
RIGHT IN THE HEA
Boutique
WORLD TRAVEL AWARDS
WINNERV
OTEL AWAS 2012 BEST DESIGN
BOUTIQUE HOTEL IN THE
WORLD
MWorld
-Ho
Awa WINNET
NINNE
2012 Sri Lanka's Leading
Business Hotel
LUXURY BOUT
INDIAN
CASA Colombo
TEL: (+94) (O) 114520130 | RES 231, GALLE ROAD, BAMBALAPITIYA, CO

IC FUSION CUISINE AT
N COLOMBO
12 UNIQUE SUITES TAILOR MADE FOR RIOUS 200 YEAR OLD MANSION, ART OF COLOMBO
OO Y tripadvisor
INTERNATIONAL HOTEL AWARDS ASIA PACIFIC
INTERNATIONAL HOTEL AWARDS ASIA PACIFIC
ихury
sucabon
HSBC
*****
HIGHLY COMMENDED
tel
TRAVELERS' CHOICE
EINSA
essas Cict.
2012-2013
2012-2013
ards R 2012
2012
QUE HOTEL OCEAN
TRENDIEST HOTEL
IN ASIA
BEST HOTEL INTERIOR IN SRI LANKA 2012
HIGHLY COMMENDED SMALL HOTEL IN SRI LANKA 2012
SERVATIONS@CASACOLOMBO.COM "LOMBO 4 | WWW.CASACOLOMBO.COM

Page 18
கலைக்கேசரி 2 18 ஆளுமை
மரபு, நவீனத்துவம் இணைந்த 8 எழுத்தாளருமாகிய அமரர் க.சி.கு
- பேராசிரி மரபு வழியான தமிழ்க் கல்வியும் நவீன ஆங்கிலக் கல்வியும் இணைந்த வகையிலே செழுமைமிக்க பாட நூலாக்கங்களையும் கற்பித்தலையும் மேற் கொண்டவர்களில் க.சி.குலரத்தினம் (1916 - 1993) அவர்கள் தனித்துவமானவர். மாணவர்க்குக் கையளிக்க வேண்டிய கற்றல் உள்ளடக்கங்களை வழுவற்ற தமிழ் நடையிலும் உளவியல் நெறிப்பாட்டுடனும் வழங்கும்
முயற்சிகள் அவரால் மேற்கொள்ளப்பட்டன. - தாய் மொழி வழிக் கல்வி இந்நாட்டில் முன்னேற்றம் பெறத் தொடங்கிய காலகட்டத்தில் தாய் மொழிவாயிலான துணை- நூலாக்கத்தைச் செவ்விய வழியில் முன்னெடுத்தவர் அமரர் க.சி.குலரத்தினம் அவர்கள். எழுத்தறிவுடன் வளர்ந்து வந்த வாசிப்பு மரபைப் கட்டியெழுப்பும் பணியைத் தமது ஆசான் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களின் வழிகாட்டலை அடியொற்றி மேற்கொண்டவர். மரபு வழித் தமிழுக்கும் ஆங்கில வழி உட்புகுந்த நவீனத்துவத்துக்குமிடையே இணக்கம் கண்டவர்.
மரபு வழித் தமிழ் கற்றவர்களுள் ஒரு சாரார் நவீனத்துவத்வத்தின் விறுவிறுப்பான பரிமாணங்களை உள்வாங்கிக் கொள்வதற்குத் தயக்கம் காட்டினர். ஆனால் அமரர் க.சி.குலரத்தினம் அவர்கள் நவீனத்துவத்தின் நல்ல பரிமாணங்களைத் தெரிந்தெடுத்துத் தமிழுக்கு வளஞ்
க. சி. குலரத்தினம்
21ம் 12ம்
நோத் முதல் கோபல்லவா வரை
சேமமடு பதிப்பகம்
மடு ,

ஆசிரியரும் லரத்தினம் பர் சபா ஜெயராசா
செய்தார்.
அந்த வகையில் அவர் ஆறுமுகநாவலரின் வ ழித் தடத் தைத்  ெத ா ட ர் ந் து
மு ன் னெ டுத் தார். ந ா வ ல ர் முன்னெடுத்த நவீன பாட நூலாக்க மரபு, வினா- விடை வழிக் கற்பித்தல் மரபு, மொழியாக்க மரபு, நூற்பதிப்பு மரபு முதலியவற்றைச் செவ்விய தமிழ் மரபை
அடியொற்றித் தொடர்ந்தார்.
தமிழ் மரபின் நீண்டு நிலைத்த அனுபவங்கள் நிரம்பிய கந்தர்மடத்துப் புலமைச் சூழல் அவரது செயற்பாடுகளுக்குப் பின்புலமாக அமைந்தது. கந்தர்மடத்தில் இயங்கிய திண்ணைப் பள்ளிக்கூடச் சூழலும், நாவலர் வழி வந்த புலமை மரபும் அவரின் ஆளுமைக்கு வளமூட்டின.
கந்தர்மடம் சின்னையா - பொன்னம்மா தம்பதிகளின் மகனான குலரத்தினம் அவர்கள் தமது சுய முயற்சியினால் பல மொழிகளைக் கற்றுப் பாண்டித்தியம் பெற்ற புலமையாளர். பன்மொழி அறிவு அவரின் புலமைப்புலக் காட்சியை நீடிக்கச் செய்தது. இந்து சமயச் சூழலிலே ஆங்கிலத்தைக் கற்றுக் கொள்ளக் கூடிய நிலை அவரின் பள்ளிக்கூடக் காலத்திலே மேலெழத் தொடங்கியமை பிறிதொரு வாய்ப்பான கல்வி நிலவரமாக அமைந்தது. அவ்வகையில் அமைந்த திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரியில் அவர் ஆங்கிலம், இலத்தீன், வட மொழி, தமிழ் முதலாம் மொழிகளை வரன்முறையாகக் கற்றார். - பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் பயிற்றுவித்த திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையில் இணைந்து தமிழ் இலக்கண இலக்கியங்களை மேலும் கற்றுக் கொண்டதோடு பண்டிதமணியின் மொழியாட்சி நுட்பங்களையும் பயின்று கொண்டார். அந்த நுட்பங்களைத் தமது எழுத்துக்களில் மட்டுமன்றி உரை
அரங்குகளிலும் பயன்படுத்திக் கொண்டார்.
கந்தர்மடம் சைவப் பிரகாச வித்தியாசாலையிலே தமது ஆசிரியப் பணியை மேற்கொண்ட அவர், பல தரக் கற்பித்தற் செயற்பாட்டுக்கு நிகரான கற்பித்தலை முன்னெடுத்தார். அதாவது அதிக வேறுபாடான ஆற்றல்கள் கொண்ட மாணவர்கள் ஒரே வகுப்பறையில் இருத்தலை அவதானித்து, அனைத்து மாணவரும் பயன் பெறும் வண்ணம் கற்றல் - கற்பித்தற் செயற்பாடுகளை வளமாக்கிச் சென்றமையை அவரிடத்துப் பயின்ற

Page 19
க.ை
கTை
மாணவர் வாயிலாக அறிய முடிகிறது. இந்து சமய அடிப்படைகளை மாணவர் தெளிந்து அறிந்து கொள்ளும் வண்ணம் அவர் மேற்கொண்ட முயற்சிகள் எழுத்தாக்கத் துறையில் ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும்.
அக்காலத்திலே வெளிவந்த இதழ்கள் தொடர் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தவேளை, தமிழியல் மற்றும் இந்து சமயம் தொடர்பான தொடர் கட்டுரைகளை எழுதியமை பிறிதொரு வகையிலே பயனுள்ள நடவடிக்கையாக அமைந்தது. அவ்வாறு எழுதப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கும் முயற்சியும் அவரால் முன்னெடுக்கப்பட்டது. அவ்வகையில் இந்து நாகரிகம் மூன்று பாகங்கள் வெளிவந்தன.
தமிழ்ப் புலவர் வரலாற்றை எழுதும் முயற்சியை இலங்கையிலே பலர் மேற்கொண்டு வந்தனர். அவ்வாறு எழுத முற்பட்டவர்கள் பல்வேறு தவறுகளை அறிந்தோ அறியாமலோ எழுதி வந்தனர். அவ்வகை வழுக்கள் இடம் பெறாமலும் மெச்சத்தக்க தராதரமுள்ளவர்களை வெளிப்படுத்தியும் அவர் "தமிழ்தந்த தாதாக்கள்' என்னும் நூலை எழுதினார். மொத்தம் முப்பத்தாறு புலவர்களைப் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையின் ஆசீர்வாதத்தோடு எழுதினார். தராதரமுள்ள சான்றோரைத் தெரிந்தெடுத்தமை பண்டிதமணிக்கு மகிழ்ச்சியைக் கொடுத்ததாக அறியக் கூடியதாக உள்ளது.
தமிழ் தந்த தாதாக்களில் அவர் இலங்கை மணித்திரு நாட்டைப் பின்வருமாறு அறிமுகம் செய்கின்றார். "நாம் வாழும் இலங்கை தமிழ் மண்டலங்களுள் ஒன்று. சேர மண்டலம், சோழ மண்டலம், பாண்டி மண்டலம், தொண்டை மண்டலம் என்னும் மண்டலப் பிரதேச
வரிசையில் ஈழ மண்டலமும் ஒன்று''.
இலங்கையைப் பிறிதோரிடத்திலே பின்வருமாறு அறிமுகம் செய்துள்ளார். "பொங்கியெழும் வெள்ளித் திரைகளையுடைய இந்து சமுத்திரத்திலே மங்கா புகழுடன் அன்று தொடக்கம் இன்று வரை புலவர் நாவில் பொருந்திய புகழுடன் விளங்குவது எமது தாய்த் திரு நாடாகிய இலங்கை''. இரண்டு அறிமுகங்களையும் ஒப்பு நோக்குகையில் தமிழ் தழுவிய ஒரு மனோரதிய (Romantic)
4417
சபா அ.
தற்க்ெவைற் செர்ரி
51
மில்க்வைற். தொழிலகப் பொன்விழா சிறப்புமலர்
- பாலா
- ஆசிரியர்
க.சிதரைத்தினம் வொயிடுவோர் 5. ராசா, ம.பி. அவர்கள்
23. வாக் 11ப்பா143.
177

ப கலைக்கேசரி
19
எழுத்து முயற்சி அவரிடத்து இடம் பெற்றிருந்தமையைக் காண முடிகிறது. - 'நோர்த் முதல் கோபல்லா வரை' என்ற அவரது நூல் வரலாறும் அரசியலும் இணைந்த ஆக்கமாகவுள்ளது. வரலாறு, அரசியல் என்ற இரு துறைகளுக்குமுரிய பயனுள்ள உசாத்துணை நூலாகவும் பொது வாசிப்புக்குரிய ஆக்க நூலாகவும் அது அமைந்துள்ளளது. "இலங்கையின் இக்கால வரலாற்றை எழுதுதல் இலகுவான பணி அன்று” என்று அந்த நூலில் முகவுரையிலேயே குறிப்பிடும் கலாநிதி ஏ.ஜே.வில்சன் அவர்கள் தொடர்ந்து பின்வருமாறு எழுதுகின்றார்.
''திரு. க.சி.குலரத்தினம் ஈட்டியுள்ள இழையும் பிசகாத வெற்றியும் இதுவே. அறிவொளி வீசும் இவ்வாராய்ச்சி ஏட்டிதழ்களிலே உண்மை நிகழ்ச்சிகளை அவற்றின் சரியான தோற்றங்களிலே வெளிப்படுத்தியுள்ளார். இத்துறையில் ஏனைய வரலாற்றாசிரியர்களும் எழுத்தாளர்களும் சஞ்சரித்துப் பழகிப்போன வழிகளிலே தாமும் செல்ல இவ்வாசிரியர் விழையாதது எமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது”'.
1966 ஆம் ஆண்டிலே அந்நூலுக்குரிய முன்னுரையை ஆங்கில மொழியில் கலாநிதி ஏ.ஜே. வில்சன் அவர்கள் வழங்கியிருந்தார். மிகவும் இறுக்கத்துடன் அமரர் குலரத்தினம் அவர்கள் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அமரர் குலரத்தினம் அவர்கள் சிறந்த மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கினார். ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் புலமை மிக்கவராக இருந்தமையால் அவர் மேற்கொண்ட மொழி பெயர்ப்புகள் மொழி வளத்துடன் உயர் நிலை நம்பகத்தன்மை கொண்டவையாக அமைந்தன.
ஆறுமுக நாவலர் மேற்கொண்ட நூல் வெளியீட்டு முயற்சிகள் இரு தள அணுகுமுறையைக் கொண்டிருந்தன. ஒரு புறம் பெரு நூல்களைப் பிரசுரம் செய்த நாவலர் அவர்கள், இன்னொரு புறம் சிறிய பிரசுரங்களையும் வெளியிட்டார். அந்த மரபை க.சி.குலரத்தினம் அவர்கள் தொடர்ந்து முன்னெடுத்தார். பொது மக்களிடத்து அறிவு சென்றடைவதற்குச் சிறிய நூல்கள் பெருமளவிலே துணை செய்தன. சிற்றிதழ்கள் போன்று சிறிய நூல்களும் தனித்துவமும் பயனும் கொண்ட ஆக்கங்களாக அமைவதை உற்றுணர்ந்து மில்க் வைற் கனகராஜா அவர்களின் தோழமையுடன் பயனுள்ள சிறிய நூல் வெளியீடுகளை மேற்கொண்டார். -
அக்காலத்திலே கலாநிதி கனகராஜா அவர்களின் சவர்க்காரத் தொழில் நிறுவனம் 'மில்க் வைற்' என்ற இதழை வெளியிட்டு வந்தது. அதன் ஆசிரியப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட குலரத்தினம் அவர்கள் தரச்சிறப்பு மிக்க இதழாக அதனை வளர்த்தெடுத்தார். பல்வேறு தகவல்களையும் உள்ளடக்கிய தகவற் களஞ்சியமாகவும் கலை இலக்கிய ஆக்கங்களைப் பொதிந்த கனதியான ஏடாகவும் அது அமைந்தது. தமிழ்க் கிராமங்களின் பட்டி

Page 20
கலைக்கேசரி *
20
கோம் 0ாசம்
போப்
Dான்
தொட்டிகளுக்கெல்லாம் அந்த இதழ் விநியோகம் செய்யப்பட்டது. சவர்க்காரம் ஏற்றிச் சென்ற வான்கள் மில்க் வைற் இதழ்களையும் எடுத்துச் சென்று விநியோகித்தன.
பள்ளி மாணவர்களுக்குரிய பயனுள்ள கட்டுரைகளும் தகவல்களும் அந்த இதழிலே இடம் பெற்றிருந்தன. க.சி. குலரத்தினம் அவர்கள் அரச பாட நூலாக்கக் குழுவிலும் கடமை புரிந்தார். இலக்கண வழுக்கள் எழுத்துப்பிழைகள், எண்ணக்கருப் பிறழ்வுகள் அற்ற செவ்விய தமிழ் நூல்களை ஆக்கித் தந்தவர்களுள் அவரும் ஒருவராக இணைந்து நிறைவான
பள்களைப் புலவர் சு. தமிழ்ப் பணியை மேற்கொண்டார். அதே அனுபவங்களை மில்க் வைற் இதழுக்கு
அ.கா 5 பயன்படுத்தினார். அக்காலத்திலே பள்ளிக்கூட ஆசிரியர்கள் மில்க் வைற் இதழைப் படிக்குமாறு மாணவர்களுக்குப் பரிந்துரை செய்தமை குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும் .
சூழற் பாதுகாப்பு மற்றும் தன்னிறைவுப் பொருளாதாரம் தொடர்பான கட்டுரைகள் பலவற்றையும் அவர் எழுதினார். மாணவர்களும் பொது மக்களும் பயன்படும் வண்ணம் அந்தக் கட்டுரைகள் அமைந்திருந்தன. யாழ்ப்பாணத்தின் பாரம்பரியமான தன்னிறைவுப் பொருண்மிய வாழ்க்கை
- மேலைப்புலத்தவரது வருகையால் சிதைவடைந்து கொண்டிருந்தது. உள்ளூர்ப் பொருட்களை நுகர்ச்சி செய்யாது, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீதான விருப்புத் தூண்டப்பட்டுக் கொண்டிருந்த சமூகச் சூழலிலே உள்ளூர்ப் பொருட்களை நுகர்ச்சி செய்ய வேண்டும் என்ற கருத்தியல் அலை மேலோங்கி நின்றது.
இந்தியாவிலே மேலெழுந்த காந்திய அலையும் யாழ்ப்பாணத்தில் மேலெழுந்த சுதேசப் பொருள் நுகர்வுக் கருத்தியல் அலையும் சமாந்தரமாக மேலெழுந்தன. அவற்றோடு இணைந்த எண்ண உருவாக்கமாகத் 'தேசிய உடை' அமைந்தது. தேசிய உடை அணிதல் ஒரு வகையில் ஏகாதிபத்தியத் திணிப்புக்கு எதிரான செயற்பாடாகவும் அமைந்தது. அந்த மரபினை எழுத்தாக்க வழியாகவும் நடைமுறைகள் வழியாகவும் அவர் முன்னெடுத்தார்.
அவர் எழுதிய 'பனை வளம்' என்ற நூல் தன்னிறைவுப் பொருளாதாரத்தை மீள வலியுறுத்தியது. தன்னிறைவுப் பொருளாதாரத்துக்கும் மனச் சுகத்துக்குமிடையேயுள்ள தொடர்புகள் அவரால் வலியுறுத்தப்பட்டன.
பனை வளம் மற்றும் சூழற் பாதுகாப்புத் தொடர்பான செயல் நடவடிக்கைகளை கலாநிதி கனகராசா அவர்களும் க.சி.குலரத்தினம் அவர்களும் ஒன்றிணைந்து மேற் கொண்டனர். பனம் விதைகளும் மரக்கன்றுகளும் இலவசமாக விநியோகிக்கப்பட்டன. அத்தகைய இலவச

வை
வா ஊடு
விநியோகத்திற்கு அனுசரணையாகவும் செயற்பாடுகளைத் தூண்டக்கூடியதுமான எழுத்தாக்கங்களை அமரர் க.சி. குலரத்தினம் அவர்கள் தொடர்ச்சியாக மேற்கொண்டார்.
நாவலர் மரபில் பேச்சுக் கலையை முன்னெடுத்து வந்தவர்களுள் க.சி. அவர்களும் ஒருவர். தெளிவான பேச்சும், சைவ நெறிக் கருத்துக் கையளிப்பிலே திட்ப நுட்பமும் அவரது பேச்சுக் கலையின் பரிமாணங்களாக அமைந்தன. அவரது எழுத்துக்களிலே காணப்பட்ட தெளிவு பேச்சுக்
கலையிலும்
நீட்சி கொண்டிருந்தது.
அதேவேளை கல்வி சார்ந்த பல்வேறு Mளியீட்டகம்,
அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் ஈடுபாடு கொண்டு உழைத்தார். ஆசிரியப் பணியை
'மூடிய நிலையில் மேற்கொள்ளாது சமூகத்தோடு இணைந்த முறைசாராக் கற்றல் கற்பித்தலை வளப்படுத்துவதற்குரிய திறந்த முயற்சிகளையும் மேற் கொண்டார். ஆறுமுகநாவலர் மேற்கொண்ட பல பரிமாணங்களைக் கொண்ட சமய - சமூகப் பணிகளின் தொடர்ச்சி நிலைகளைக் கண்டறிவதற்கு அமரர் க.சி. குலரத்தினம் அவர்களின் பன்முகப்பட்ட செயற்பாடுகள் நெடு வழியமைக்கின்றன.
யாழ்ப்பாணப் பொது நூலகம் தோன்றுவதற்கு பின்புலமாக அமைந்த கந்தர்மடம் விவேகானந்தாசபாவின் பணிகளைத் தாம் எழுதிய யாழ். நூலகம் பற்றிய நூலிலே குறிப்பிட்டுள்ளார். தமிழியலின் வளர்ச்சியிலே நிறுவனங்களின் பங்கை விதந்து நோக்கிய அவர் இந்து போட் என்ற சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் பணிகளைக் கல்விப் பணி, சமூகப் பணி என்ற நிலைகளில் இருந்து ஆய்வுப் பணிகளை நோக்கித் திருப்பினார்.
தாமே பல ஆய்வுகளை முன்னெடுத்து வெளியிட்டார். அவரிடத்துக் காணப்பெற்ற பன்மொழி அறிவு மரபு வழியான தமிழ்க் கல்வி நியமங்களை மேலும் அக்கல்விக்கும் நடவடிக்கைகளுக்கும் வலுவூட்டியது. - கல்வி வழியாக ஆற்றல்களை ஒன்றிணைத்து அபிவிருத்தியை முன்னெடுக்கும் அவரது நோக்கின் நடைமுறை வெளிப்பாடாகவே கந்தர்மடத்திலே 'தேனீக்கள் அமைப்பு' தோற்றம் பெற்றது. அறிவும் வினைப்பாடுகளும் அந்த அமைப்பில் உட் பொதிந்திருந்தன.
அமரர் க.சி.குலரத்தினம் அவர்களது புலமை வாழ்க்கையையும் சமய சமூக வாழ்க்ககையையும் மீள் நோக்குதல் யாழ்ப்பாணத்திலே தோற்றம் பெற்ற கல்விசார்ந்ததும் சமூகம் சார்ந்ததுமான ஆக்க விரிதல் நிலைகளைக் கண்டு கொள்வதற்கு வழியமைக்கும்.'

Page 21
Srilankan FLYSMiLES
Srilankan
Airlines
It's good when
Introducing the Double Up' SriLankan Airlines Stan the benefits. Your doubled privileges include two com
Oversea
A complimentary A
• Enjoy FlySmiles Silver Tier ben
• Over 50 exo
• Airport yQ Meet & A
Applicable for Primary Credit Cardholders only. Conditions apply.
Standard Chartered Bank is a licensed bank supervised by the Central Bank of Sri Lanka and is rated AAA (kal by Fitch R

Standard Chartered Here for good
Detse
people flying for the price of one
times the FlySmiles
miles earned
credit card that makes it all happen
TBWA\TAL
a card gives you double the benefits
dard Chartered Platinum Card; the only credit card that gives you twice nplimentary air tickets and 2 FlySmiles miles for every LKR 100/- spent s, making your travel experience exciting and full of unrivalled rewards.
Benefits at a glance: A complimentary Air Ticket for your companion with your new card ir Ticket for your companion, on the anniversary of every year OR upon reaching a minimum spend of LKR 350,000 during a 12-month period
• Earn 2 FlySmiles miles for every LKR 100 spent overseas
• Earn 1 FlySmiles mile for every LKR 100 spent locally
• Up to 5000 Bonus FlySmiles miles on balance transfers
• 2000 Bonus FlySmiles miles when you apply online efits, such as lounge access, excess baggage, priority and much more
• Free overseas travel insurance up to USD 250,000
• Free International Concierge Service
• Zero surcharge on Air Tickets through partner travel agents
• Up to 75% off at more than 65,000 hotels worldwide
* Exciting golf, shopping and travel discounts worldwide citing deals at dining, travelling, shopping and other outlets island wide Lssist service to fast track immigration at over 280 International Airports
Sign up for a Credit Card via O www.standardchartered.com.lk
For more information
a 011 2480280
Latings lanka Ltd.

Page 22
கலைக்கேசரி த் 22 கட்டிடக்கலை
சீனாவில் இஸ்லாமிய
இஸ்லாம் மதம் மேற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் இருந்து சீனாவுக்கு பரவியதில் இருந்து, அங்கு பள்ளி வாசல்கள் நிறுவப்படலாயின. உலகின் மிகப் பழைமையான பள்ளி வாசல்களில் ஒன்றென சீனாவில் உள்ள ஹூஷெங் பள்ளி வாசல் (Huaisheng Mosque) கருதப்படுகிறது. இப்பள்ளி வாசலைக் கட்டியவர் பெருமானார் முகம்மது நபி அவர்களின் தாய் மாமனான சய்யித் இபின் அபி வக்காஸ் அவர்கள் எனக்
கூறப்படுகிறது.
ய-H (1)

க் கட்டிடக்கலை
கடந்த 1400 வருடங்களாக சீனாவினால் வாழ்ந்து வரும் சீன முஸ்லிம்கள் சீன சமுதாயத்துடன் இரண்டறக் கலந்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர். சீனாவில் எல்லாப் பிராந்தியத்திலும் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அவர்களது மொத்த சனத்தொகை பலவாறாகவும் கூறப்படுகிறது. சீன மக்கட் தொகையில் ஒன்றில் இருந்து இரண்டு சதவீதமானவர்கள் முஸ்லிம்கள் என சில வரலாறுகள்
குறிப்பிடுகின்றன.
பெரும்பாலும் சீன பள்ளிவாசல்களின் வெளிப்புறம் சீன கட்டிடக் கலை பாணியையும் உட்புறம் அரேபியக் கட்டிடக்கலைப் பாணியையும் கொண்டு விளங்குகிறன.
|-III

Page 23
சீன முஸ்லிம் மரபு ரீதியான புராணக் குறிப்புகளின்படி, செய்யது இபின் அபி வக்காஸ் அவர்கள், சீனாவுக்கு இஸ்லாம் மதத்தைக் கொண்டு வந்தார் எனவும், 7ஆம் நூற்றாண்டில் இருந்து, 10 ஆம் நூற்றாண்டு வரை, வர்த்தக மற்றும் ராஜதந்திர தொடர்புகள் மூலமாக, கரையோரமாகவும் உள்ளூர்ப் பட்டுப்பாதை (Silk route) ஊடாகவும் இஸ்லாம் அங்கு படிப்படியாக
விஸ்தரிக்கப்பட்டது எனவும் கூறப்படுகிறது.
2. 2
8 8 8 8 8 8
3

2. .
வர்க்கா
651 ஆம் ஆண்டு வக்காஸ் அவர்கள் ராஜதந்திரத் தூதுக் குழுவின் தலைவராக சீனாவுக்கு உதுமான் அவர்களால் (3ஆம் காலிப்) அனுப்பி வைக்கப்பட்டார் எனவும், தூதுக் குழுவை கோஸொங் மன்னன் வரவேற்றார் எனவும், பெருமானார் முகம்மது நபி அவர்களது நினைவாக, கன்ரன் நகரில் பள்ளி வாசல் ஒன்றை - நிறுவ உத்தரவிட்டார் எனவும் அதுவே, சீனாவின் முதல் பள்ளி வாசல் எனவும் கூறப்படுகிறது.
இருப்பினும் வக்காஸ் அவர்களது வருகையை நவீன வரலாற்று ஆசிரியர்கள் மறுப்பதுடன், ராஜ தந்திரிகளும்
வர்த்தகர்களுமே சீனாவில் இஸ்லாம் மதம் வேரூன்றக் காரணமாக இருந்திருக்கலாம் என நம்புகின்றனர்.
பல்கலாசாரத்தைப் பின்பற்றும் ராங் அரச வம்சம் (Tang Dynasty) மத்திய ஆசியாவுடன் கொண்டிருந்த தொடர்பும் சீன நகரங்களில் வாழ்ந்த மத்திய மற்றும் மேற்காசிய மக்களுடன் இருந்த தொடர்பும், சீனாவில் இஸ்லாம் பரவ உதவியது எனலாம். சீனாவில் வாழ்ந்த முஸ்லிம்கள் இஸ்லாம் மூலமாக சீன வரலாற்றுப் போக்கில் செல்வாக்குச் செலுத்தியுள்ளனர்
என்பதும் குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் மக்களின் தொழுகை இட மாக விளங்கும் பள்ளிவாசல்கள், அவர்களது மதக் கடமைகளை நிறைவேற்றும் ஓர் இடமாக மட்டுமன்றி, இஸ்லாமிய கட்டிடக் கலையை எடுத்துக் காட்டும் ஒரு நிலையமாகவும் விளங்குகின்றன. கம்பீரமான பள்ளிவாசல் கோபுரங்கள், மற்றும் உயர்ந்த கோபுரங்கள், பிறைச் சின்னங்கள் ஆகியவற்றில் இஸ்லாமிய கலை அழகு நன்கு பிரதிபலிக்கப்படுகிறது. பொதுவாக சீனாவில் உள்ள பள்ளிவாசல்களின் கட்டிடக்கலை பாணியினை இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று அரேபியப் பாணியைக் கொண்டது. மற்றையது பெருமளவில் சீன கட்டிட கலைப் பாணியைக் கொண்டது.
|

Page 24
கலைக்கேசரி ர
24
ஆட் 2012
- A அ க - மத
37 . யூ ஆர் - சீனாவில் இஸ்லாம் வரலாற்றை ஆய்வு செய்வோருக்கு உதவும்
இரண்டு கறுப்பு செங்கல் மயானங்கள்
இஸ்லாமிய நாட்காட்டியைத்
தயாரிப்பதற்கு உதவியாக சந்திரனை அவதானிக்கும் கோபுரம்"

மேற்கு மற்றும் ஆசியாவில் இருந்து சீனாவில் இஸ்லாம் பரவியதில் இருந்து, சீனாவில் இருக்கும் பெரும்பாலான பள்ளி வாசல்கள் அரேபிய பாணியைப் பின்பற்றி மேற் கொள்ளப்பட்டவையாகும். அவற்றின் அமைப்பில் சமச்சீரின்மை காணப்பட்டது.
வாசலைப் பார்த்தவாறு பிரதான மண்டபம் காணப்பட்டது. மிகப் பெரியதான வாசல் இல்லத்தில் இரண்டு பக்கமும் இரண்டு பெரிய கூரைக் கோபுரங்கள் காணப்படும். இக்கோபுரத்தின் உச்சியில் பள்ளிவாசலின் சின்னமாக சந்திரப்பிறை அமைக்கப்பட்டிருக்கும்.
தொழுகை மண்டபத்தினை மரத்திலான தூண்கள் பல தாங்கி இருக்கும். வளைவு மண்டப் கூரைகள், கதவுகள், ஜன்னல்கள் ஆகியன அழகான பூக்கள் வடிவங்களினாலும், கவர்ச்சியான வர்ணந் தீட்டுதலாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இம்மாதிரியான பள்ளி வாசல்கள் பிரதானமாக ஸின்ஜியாங் பகுதியில் காணப்படும். இதற்கு இட் கா பள்ளி வாசல் ஓர் உதாரணமாகும்.
பீஜிங்கில் உள்ள சீன மரபு ரீதியான பள்ளிவாசலான ஒக்ஸ் வீதி பள்ளிவாசல் வித்தியாசமானது. (Ox street mosque) சீனக் கட்டிடக்கலை மரபுடன் மேற்காசிய கட்டிடக்கலைப் பாணியும் கலந்த ஒன்றாக விளங்குகிறது. மத்திய அச்சின் ஓரமாக ஒழுங்காக பிரித்து வைக்கப்பட்ட தொடர் முற்றங்களினால், முழு வடிவமைப்பும் அமைக்கப்பட்டது.
பிரதான மரத்தினாலான நுழைவாயில் கதவுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட வளைவு வழிகள், தடுப்புச் சுவர்கள் அல்லது வேறு இணைக்கப்பட்ட கட்டிடங்கள் அமைந்துள்ளன. தொழுகை மண்டபம் மரத்தாலான ஓர முள்ள வாளி வளைவுடன் உள்ளது. தினமும் ஐந்து நேரத் தொழுகைக்கு அழைக்கும் சிறு கோபுரம் (Minaret) பல தளங்களைக் கொண்ட கூடாரமாகும். அங்கு கட்டிடக் கலை ரீதியான அலங்காரப் பொருட்கள் மற்றும் இஸ்லாமிய பொருட்கள், இஸ்லாமிய உள்ளடக்கத்தை வலியுறுத்துகின்றன. மிக நுட்பமான சிற்பங்கள், பத்திகள் வைத்து தொங்க விடப்படும் அலங்காரக் குவளைகள், கற்கள் மற்றும் நடைபாதைகள் ஆகியவற்றில் சீன உணர்வுகள் பூரணமாகப் புலப்படுத்தப்படுகின்றன.
மரத்தினால் செய்யப்பட்ட தூண்கள் மற்றும் சுவர்களில் அரேபிய குணாம்ச வடிவங்களும் அழகான மலர்களின் வடிவங்களும் வண்ணங்களுடன் தீட்டப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலானவை மிகச் சிறந்த கலைத்துவ வெளிப்பாடுகளாகக் கருதப்படுகின்றன. இங்கு அனைத்து கட்டுமானங்களும் மத ரீதியான ஒரு பற்றுணர்வை வெளிப்படுத்தும் அதே வேளை, ஓர் அமைதியான சூழலையும் தந்து நிற்கின்றன. இம்மாதிரியான பாணியில் அமைந்த பள்ளிவாசல்களில் பீஜிங்கில் உள்ள ஒக்ஸ் வீதி பள்ளிவாசலுடன் வேறு பள்ளிவாசல்களும்
அடங்குகின்றன.
இந்த இரண்டு வகையான இஸ்லாம் பள்ளிவாசல்கள் பல வகைகளில் வேறுபட்டாலும் ஒரு விடயம்

Page 25
பொதுவானதாக விளங்குவதை அவதானிக்கலாம். அதாவது முஸ்லிம் கோட்பாட்டின்படி, பள்ளிவாசல் அலங்காரங்களுக்கு மிருக வடிவங்கள் ஒரு போதும் பாவிக்கப்படுவதில்லை. பள்ளிவாசல் கட்டுமானத்தில் இது ஒரு முக்கியமான கோட்பாடாகும்.
இஸ்லாம் பள்ளிவாசல், சீன தேசிய கலாசாரத்தில் ஒரு பெரும் பொக்கிஷமாக விளங்குவதனால், சந்ததி சந்ததியான முஸ்லிம்களின் புத்தி சாதுரியத்துடன் இணைந்த ஒன்றாக விளங்குகிறது. சீனாவுக்கும் அரேபியாவுக்கும் இடையிலான கலாசாரத் தொடர்பின் வெளிப்பாடாகவும், அவர்களுக்கிடையே நிலவும் நட்புறவின் சாட்சியமாகவும் துலங்குகின்றது.
ஷியானில் (Xian) உள்ள பெரிய பள்ளிவாசல், ஷின்னிங்கில் (Xining) உள்ள டொங்குகன் (Dongguan) பள்ளிவாசல், மற்றும் உறும்ஜியில் (Urumgi) உள்ள தெற்குப் பள்ளி வாசல் உட்பட வேறு பல பிரபல பள்ளி வாசல்களும் உள்ளன.
பீஜிங்கின் மிகப் பழைமையான வரலாற்றுப் பெருமையையும் கம்பீரமான தோற்றத்தையும் கொண்டு விளங்குவது, நகரின் சுவான்வு மாவட்டத்தில் உள்ள ஒக்ஸ் வீதிப் பள்ளிவாசலாகும். 996 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இப்பள்ளிவாசல், ஆயிரம் வருடங்களுக்கு மேலான வரலாற்றைக் கொண்டதாகும். உலகின் பல பாகங்களில்
3இதுவும்
114படி

கலைக்கேசரி
25
இருந்தும்
முஸ்லிம்கள்
இப்பள்ளிவாசலுக்கு வருகின்றனர்.
6000 சதுர மீட்டர் நிலப்பரப்பில் உள்ள இப்பள்ளிவாசல், மரபு ரீதியான சீன மரத்தாலான மாளிகையின் அடிப்படையில் கட்டப்பட்டது. இருப்பினும் அரபுப் பாணி அலங்கார வளைவைக் கொண்டதாக காணப்படுகிறது. அதில் மனித உருவங்களோ அல்லது மிருக உருவங்களோ எதுவுமில்லை. அது இஸ்லாமில் தடை செய்யப்பட்டதொன்றாகும்.
பெளத்த தலங்களைப்போல் அல்லாது மேற்கில் அமைந்துள்ள புனித பூமியான மெக்காவை நோக்கி அது அமைந்துள்ளது. அத்துடன் அதன் வடிவமைப்பு ஒரே அளவில் பகுதி பகுதியாகப் பிரிக்கக் கூடிய மாதிரியாகவும் சீராக ஒன்றிணைக்கப்பட்டதாகவும் விளங்குகின்றது. சுவர்களில் மகிழ்ச்சியையும் அதிர்ஷ்டத்தையும் குறிக்கும் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. வாசல் கதவைக் கடந்து உள்ளே சென்றால் இரண்டு மாடிகளைக் கொண்ட சந்திரனை அவதானிக்கும் கோபுரம் உள்ளது. இங்கிருந்து தான் நோன்பு நோற்பதைத் தீர்மானிப்பதற்காக, சந்திரனின் நிலையை அவதானிப்பார்கள்.
அதனைக் கடந்து தொழுகை மண்டபத்தை அடையலாம். 600 சதுர மீட்டர் இடப் பரப்பைக் கொண்ட இம்மண்டபத்தில் சில ஆயிரக்கணக்கான மக்கள் அமரும்

Page 26
*இலக்கே - 26- 4
7ே2 தே3 1 கருத்திட: 5- அ - அ ப ே1-ம் -
11- F2, பபம் :: 2 :
- == கபர் பே 2:25 ::: : E1:55
-- '- 'ச': பா.5E E E == = = = = = =
பட 7பே
ரம்ழான் நோன்புக் காலப்பகுதியில் கொங்கி” எனும் பானம் தயாரித்துப்
பரிமாறப் பயன்படும் சாடி, 1739 இல் அமைக்கப்பட்டது.
பாரம்பரியமான சீனக் கட்டிடக்கலையில் அரேபிய எழுத்து அலங்காரம்
18) IC: (&
/...
"மகிழ்சி தரும் வளைவு'

வசதியுள்ளது. அம்மண்டபத்தின் வளைவுக் கதவில் திருக்குர் ஆன் வசனங்கள் மற்றும் ஓதும் பாடல் அடிகள் எழுதப்பட்டுள்ளன. இவை சீனாவில் ஏனைய பள்ளி வாசல்களில் காணப்படுவது அரிதாகும். அறைகளாவன பூக்கள், கண்ணாடி மாலைகள் மற்றும் வர்ணக் கண்ணாடி களால் அலங்கரிக்கப்பட்டு, மண்டபத்தின் புனிதத்துக்கு பங்களிப்புச் செய்கின்றன.
தொழுகை மண்டபத்துக்கு வெளியே, இரண்டு பக்கமும் கூடாரங்கள் உள்ளன. மண்டபத்துக்கு தென்கிழக்காக இரண்டு கறுப்பு செங்கல் மயானங்கள் உள்ளன. நூற்றுக்கணக்கான வருடங்கள் சென்று விட்டபோதிலும் அக்கற்களில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் தெளிவாகத் தெரிகின்றன. சீனாவில் இஸ்லாம் வரலாற்றை ஆய்வு செய்வோருக்கு இக்கற்கள் மிக முக்கியமானவையாக உள்ளன.
இங்கு விஜயம் செய்பவர்கள் உண்மையில் தனித்துவமான கட்டிட அழகை ரசிக்க வாய்ப்புள்ளதுடன் இஸ்லாம் பற்றிய அறிவை மேலும் விசாலித்துக் கொள்ளவும் வழி ஏற்படுகின்றது.
மொங்கோல்களின் (Mongol) யுவான் அரசவம்சம் (1271-1368) ஆட்சி செய்தபோது, ஏராளமான முஸ்லிம்கள் சீனாவில் குடியேறினார்கள். இதற்கு முன்னர் சீனாவுடன் தொடர்புகளும் நாடு கைப்பற்றுதல்களும் இடம் பெற்று வந்தபோதும், யுரேஷியாவில் பெரும் பகுதியை 13 ஆம் நூற்றாண்டில் மொங்கோல்கள்
கைப்பற்றினார்கள்.
அதைத் தொடர்ந்து சீன, மத்திய ஆசிய, மேற்காசிய கலாசார மரபுகள், வரலாற்றின் முதல் தடவையாக நிரந்தரமாகக் கொண்டு வரப்பட்டு பரஸ்பரம் நெருக்கமான கலந்துறவாடல்கள் ஏற்பட்டமை இரு மரபுகளின் வளர்ச்சியிலும் நன்கு தெளிவாகத் தெரிகிறது. சீனாவில் இஸ்லாமிய - மதம், தொழில்நுட்பம், விஞ்ஞானம், சித்தாந்தம் மற்றும் கலைகளில் செல்வாக்குச் செலுத்தியது.
பொருள் ரீதியான கலாசாரத்தை நோக்கின் மத்திய ஆசிய இஸ்லாமிய கட்டிடக்கலை மற்றும் எழுத்தணிக் கலையில் இருந்து அலங்கார வடிவங்களையும் வட சீன உணவு தயாரிப்பு முறையில் ஹலால் பாதிப்பினையும் காணலாம்.
சீனக் கட்டிடக் கலையிலிருந்து ஒரு முக்கிய குணாம்சமாக விளங்குவது அதன் ஒழுங்கு முறைகள் வலியுறுத்தப்படுவதாகும். மாளிகைகளில் இருந்து, பள்ளி வாசல்கள் வரை இந்த முறை விஸ்தரித்திருக்கிறது. -
எல்லா பிராந்தியங்களிலும் உள்ளது போல, சீன இஸ்லாமிய கட்டிடக்கலை, அதன் பாணியில், உள்ளூர் கட்டிடக்கலையைப் பிரதிபலிக்கிறது. சீனா அதன் அழகான பள்ளிவாசல்களுக்குப் பெயர்போனது. இது ஆலயங்கள் போல் தோன்றும். வட மேற்கு சீனாவில் உள்ள பள்ளி வாசல்கள் கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளின் பாணிகளில் அமைந்திருக்கக் காணலாம்.

Page 27
பீஜிங்கில் ஒக்ஸ் ஸ்ட்ரீட் வெளிப்புறம் சீன கலாசாரத்தையும், உட்புறம் இஸ்லாமிய கலாசாரத்தையும் வெளிப்படுத்தும் அலங்காரங் களையும் வடிவமைப்புகளையும் கொண்டு விளங்குகிறது.
நுழைவாயிலுக்குப்
பின்பிறமாக கண்காணிப்பு கோபுரம் உள்ளது. இஸ்லாமிய நாட்காட்டியைத் தயாரிப்பதற்குத் தேவையான சோதிடக் கணிப்புகளைச் செய்யும் பொருட்டு அக்கோபுரம் கட்டப்பட்டது. மரத்தாலான இக்கோபுரமும் வெளியே சீன கட்டிடக் கலையினையும் உள்ளே இஸ்லாமியக் கட்டிடக் கலையினையும் பிரதிபலிக்கிறது.
இங்குள்ள, இமாமின் நூலகத்தில் திருக்குர் ஆன் கையெழுத்து ஏடுகளும் பழைய மரத்தாலான அச்சு கட்டைகளும் உள்ளன. இந்த பள்ளிவாசல் அச்சுக் கூடமாகவும் பாவிக்கப்பட்டுள்ளது.
மண்டபத்தின் பக்கப் பகுதிகளில் யாரும் செல்லலாம். ஆனால் பிரதான தொழுகை மண்டபத்துக்கு முஸ்லிம்களைத் தவிர வேறு யாரும் செல்லமுடியாது. இக்கட்டிடத்தின்
பல்கலா. பின்பற் அரச வம். ஆசிய கொன் தொட நகரங்கள் மத்திய
மேற். மக்களும் தொடர்பும்
இஸ்ல உதவியது வாழ்ந்த 0 இஸ்லாம் சீன வர
போ
செல் செலுத்தி
அரேபிய எழுத்துக்களையும் சீன வர்ண அலங்கார முறைமையை
( (699)

" கலைக்கேசரி
27
சாரத்தைப் றிய ராங் சம் மத்திய ாவுடன் எடிருந்த ர்பும் சீன "ல் வாழ்ந்த
மற்றும் காசிய
ன் இருந்த 5, சீனாவில் எம் பரவ 1. சீனாவில் முஸ்லிம்கள் 5 மூலமாக 'லாற்றுப்
க்கில் பாக்குச்
யுள்ளனர்.
கட்டிடக்கலை பாணியும் பல வண்ணங்களின் சேர்க்கையையும் - பார்க்கும் போது ஓர் ஆர்வத்தை ஏற்படுத்துவதாகத் தோன்றும். கூரைகளில் காணப்படும் அரேபிய எழுத்துச் சின்னங்கள் மற்றும் வினோதமான டிராகன் உருவங்கள் வியப்பைத்தரும்.
அங்கு பொருத்தப்பட்டுள்ள வெள்ளை, ஓடுகளும், இணைப்புப் பொருட்களும் முஸ்லிம்களின் பாணியாகத் தோன்றிடினும், அழகான வர்ணங்கள் பூசப்பட்ட கூரைகளும் வடிவ மாதிரிகளும், சீன கட்டிடப் பாணி போலவே காட்சி தரும். சுவர்கள் சிவப்பு நிறத்தில் பூசப்பட்டு காட்சி அளிக்கின்றன. கரும் பச்சையிலான கம்பிகளுக்கு எதிர்மாறாக, தூண்களுக்கு வெண்கல வர்ணத்துடன் சிவப்பு வர்ணம் பூசப்பட்டுள்ளது. சில தூண்களுக்கு மத்தியில் 'மகிழ்ச்சியான கதவுகள் உள்ளன. அது ஒரு வகையான வளைவாகும். அங்கு தோன்றும் எதிர்மாறான வர்ணங்கள் கண்களுக்கு குளிர்ச்சி தரும் வகையிலும் அழகாகத் தோன்றுகின்றன.'
- ஜெனிஷா
யும் சங்கமிக்க வைத்து பிரதான மண்டபம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Page 28
பிருந்தாவனத்தின் க
விருந்தாவன் (Virundavan) எனப்படும் பிருந்தா வனத்தை நினைவில் கொண்டால் நந்தகுமாரனை (பகவான் கிருஷ்ணர்) நினைக்காமல் இருக்க முடியாது. பிருந்தாவனம் (Virundavan) கிருஷ்ண பரமாத்மா (கண்ணன்) வளர்ந்து விளையாடி மகிழ்ந்த புண்ணிய பூமி அல்லவா!
'பிருந்தா வனத்தில் கண்ணன் வளர்ந்தான் அந்த நாளும் வந்திடாதோ! அனைவரும் கூடி அவன் புகழ் பாடி நிர்மல ஜமுனா நதியினில் ஆடி...' என கிருஷ்ண பக்தர்கள் அன்றும் இன்றும் ஆடிப்பாடி மகிழ்வதையும் கூட, நாம் இவ்விடத்தில் நினைவில் கொள்ளலாம்.
இயற்கை வளம் கொழிக்கும் பிருந்தாவனம், கலைச் செல்வம் கொழிக்கும் எழில் பூமியாக மிளிர்கின்றது எனக் குறிப்பிடுவது மிகையாகாது. இந்தக் கலைச் சிறப்பை இன்றும் அழியாமல் பேணுவதில் கலைஞர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி, உலகினரைத் தம்பால் ஈர்க்கின்றார்கள். அதில் ஓவியக் கலைக்கும் முக்கிய பங்குண்டு.
உத்தரப் பிரதேசத்தின், மதுரா மாவட்டத்தில், யமுனா நதிக்கரையில் அமைந்துள்ள அழகிய சிறிய நகரம் பிருந்தாவனமாகும். பிரசித்திபெற்ற யாத்திரீகர் தலமாக விளங்கும் பிருந்தாவனமே, மகாபாரதத்தின் கதாநாயகனான கிருஷ்ணர் வளர்ந்து, யமுனா நதித் தீர்த்தத்தில் கோபிகைகளுடன் திவ்ய லீலைகள் புரிந்து அவர்களுடன் நடனமாடி இடையர்களின் வீட்டுற்குள் புகுந்து பானையில் இருந்து வெண்ணெயை திருடி உண்டு மகிழ்ந்து, தமது பாலப்பராயத்தைக் கழித்தார் எனக்
கூறுவர்.
அது மட்டுமன்றி, தன்னை அழித்து விட மதுரா அரசன் ஏவிவிட்ட அரக்கர்களையும் போரிட்டு அழித்தொழித்தார்.

கலைத்துவச் சிறப்பு
Lமான
இசை மாமேதையான ஞானி ஹரிதாஸ் சுவாமிகள், கிருஷ்ண பரமாத்மா மீது ஏராளமான தித்திக்கும் மெல்லிசைப் பாடல்களைப் பாடி அருளியிருக்கிறார். கோவிந்த தேவருக்கு (கிருஷ்ண பரமாத்மாவுக்கு) இங்கு 16 ஆம் நூற்றாண்டில் மாபெரும் ஆலயம் ஒன்று கட்டப்பட்டது.
வட இந்தியாவின் மிகப் பிரமாண்டமான ஆலயம் எனக் கருதப்படும் இக்கோவில், கிறிஸ்தவ ரீதியான தள திட்டத்தோடும், ஓர் இந்து உயர் கட்டிட அமைப்போடும், நவீன மயமாக்கப்பட்ட (Saracenic) குணாம்சத்துடனும் உள்ள உலகில் மிகக் கவர்ச்சியான கட்டிடம் என
வர்ணிக்கப்படுகிறது.
எல்லா அம்சங்களோடும் பிருந்தாவனத்தின் கலை மரபு மிகப் பிரசித்தமானதாக விளங்குகின்றது. ஆலய கூரைச் சித்திரங்கள் (Frescoes) மற்றும் சுவர்ச் சித்திரங்களுடன், பிருந்தாவனம் பிரதேசத்தில், பழைய முறைப்படியான சில ஓவியங்கள் தற்போதும் காலத்தை வென்று காட்சி தருகின்றன.

Page 29
பிருந்தாவனம் ஓவியங்களின் பிரதான கருப் பொருளாக, கிருஷ்ணரும் (கண்ணன்) அவரது திவ்ய லீலைகளுமே எப்போதும் இடம்பெற்று வந்துள்ளன. இக்கலைத் துறைப் பின்னணியை ஓரளவிற்கேனும் விளங்கிக் கொள்ள பிருந்தாவன நகரம் அமைந்துள்ள மதுரா (Mathura) நாட்டின் வரலாற்றைப் பற்றி, சிறிதேனும் தெரிந்து கொள்வது நல்லதே.
இந்துக்களின் ஏழு புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்குவது மதுரா தேசமாகும். உஜ்ஜெயின், ஹரித்துவார், காஞ்சி, பூரி, துவாரகா முதலியன ஏனைய தேசங்களாகும்.
யமுனை நதிக் கரையோரங்களில் அமைந்துள்ள மதுரா மிக நீண்ட வரலாற்றைக் கொண்டது. கிருஷ்ண பரமாத்மாவின் வாழ்வோடும் ஒரு புனித தலத்தின் தன்மையோடும் கலந்த ஒரு மரபு இம்மாநிலத்துக்கு உரியது.
இம்மாநிலத்தின் ஐயாயிரம் வருட கால வரலாற்றில் மன்னர்களின் நடவடிக்கைகளால் எழுச்சியும் வீழ்ச்சியுமான அனுபவங்களைக் கண்டது.
காப்பிய காலத்தின்போது (கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன்) மதுராவை யாதவர்கள் ஆண்டபோது, சுறுசுறுப்பான நகர ரீதியான குடியிருப்புகளாக விளங்கியது. யது வம்சத்தைச் சேர்ந்த சூர சேனன் அத்தகைய ஓர் அரசனே. போஜ வம்சத்தைச் சேர்ந்த கம்சன், சூரசேனனைக் தோற்கடித்து,
அரசைக் கைப்பற்றினான். கொடுமைக்காரனான கம்சன், கிருஷ்ண பரமாத்மாவின் தாய் மாமன். மகத நாட்டு அரசனான ஜராசந்தன் போன்ற அரசர்களுடன் பலமான உறவுகளை வைத்துக் கொண்டு, யது மக்களைக் கொடுமைப்படுத்தினான். அருகமைந்திருந்த பிருந்தா வனவத்தில் தனது சகோதரன் பலராமனுடன் சேர்ந்து வளர்ந்த கிருஷ்ணர் தெய்வீக ஆரூடப்படி, பின்னர் கம்சனுடன் நடத்திய போரில் அவனைக் கொன்று மக்களை கொடிய ஆட்சியில் இருந்து காப்பாற்றினார்.
ஸ்ரீகிருஷ்ணர் ஒரு மூல வேதாந்த தெய்வமல்ல. பிராஸ் நாட்டின் பிரசித்தமான தெய்வமாக விளங்கிய அவர் வைஷ்ணவத்தின் எழுச்சியுடன் அதில் இணைக்கப்பட்டார். பகவத்கீதையில் இருந்து அவர் பல மதக் கோட்பாடுகளையும்
வேத மக்களுடன் ஒன்றிணைத்ததன் மூலம் அவர் இந்து மதத்திற்கு கணிசமான பங்களிப்பினை வழங்கியுள்ளார் என்பது தெளிவாகிறது. அத்துடன் படிப்பறிவற்ற சாதாரண மக்களுக்கு ஆன்மீக மீட்சியை அளிக்கும் பக்தி மார்க்கத்தைக் காட்டி நின்றார்.
மகாபாரத காலத்தின்போது, மதுரா மாநிலம் பற்றி அதிகம் தெரிய வரவில்லை. இருப்பினும் ஜெயின், பௌத்த மதக் குறிப்புகளில் இருந்த, கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் இந்நகரம் ஒரு பிரசித்தமான கல்வித் தலமாக விளங்கியதென்பதும், கடைசி ஜெயின் தீர்த்தன்காரரான வர்த்தமான மகாவீரர் மற்றும் பெளத்த மத


Page 30
கலைக்கேசரி )
30
ஸ்தாபகரான கெளதம புத்தர் ஆகியோர் இங்கு அடிக்கடி விஜயம் செய்துள்ளனர். தமது கொள்கைகளைப் பரப்ப படித்த அம்மக்கள் பொருத்தமானவர்கள் என அவர்கள் எண்ணினார்கள்.
மெளரியர்களின் ஆட்சிக் காலத்தில், மதுரா ஒரு பிரபலமான வர்த்தக நிலையமாக விளங்கியதாகக் கூறப்படுகிறது.
குஷானர்கள் (Kushanas) என்போரின் ஆட்சியின்போது, மதுரா மிகவும் எழுச்சிபெற்ற பிரதேசமாக விளங்கியது. அவர்கள் உருவாக்கிய வினோதமான கலை வடிவங்கள், மதுரா கலை மரபு. என சமகாலத்தில் அடையாளப் படுத்தப்படுகிறது. குஷானா ஆட்சியாளர்களின் காலத்தில் பல்வேறு பெளத்த நினைவுச் சின்னங்களும் உருவச் சிலை களும் சிற்பங்களும் உருவாக்கப்பட்டன. பல நூற்றாண்டு காலமாக, பௌத்தமும் ஜெயின் மதமும் அங்கு செழித்தோங்கி வளர்ந்தன.
நாகர்கள் மற்றும் குப்தர்கள் போன்ற இந்து மத அரசர்களின் ஆட்சியின்போது மதுரா பிராமணத்துவத்தின் கடும் பிடியில் இருந்த ஹர்ஷவர்த்தன என்ற அரசனின் ஆட்சியின்போது ஹியன ரிசியங் என்ற சீனர் (Hieun Tsiang) இந்தியாவுக்கு விஜயம் செய்த காலத்தில் (கி.பி. 630 - 644) மதுராவில் இந்து மதம் வளர்ச்சி பெற்றிருந்தது எனலாம். அதேவேளை, பெளத்தமும் முக்கிய இடத்தைக் கொண்டிருந்தது. அப்போது மதுராவில் ஐந்து பெரிய இந்து ஆலயங்களையும், இருபது பெளத்த மடாலயங்களையும் சுமார் இரண்டாயிரம் பிக்குகள் மற்றும் பிக்குணிகளையும் மற்றும் பல பெளத்த ஸ்தூபிகளையும் அவர் அவதானித்துள்ளார்.
முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்கள் மதுராவை ஆக்கிரமித்து ஆட்சி செய்ய ஆரம்பித்ததைத் தொடர்ந்து அந்நாட்டுக்கு பெரும் அழிவு ஏற்பட்டது. நாட்டின் செல்வத்தை அழித்ததுடன் உள்ளூர் சமயங்களுக்கும் பேராபத்து ஏற்பட்டது.
முதலில் இந்நகரை கி.பி.1015 ஆம் ஆண்டில், மொகமட் கஸ்னி என்பவன் சூறையாடி செல்வத்தை அபகரித்ததுடன் சில கோவில்களையும் எரித்து, தெய்வச் சிலைகளையும் நாசப்படுத்தினான். புதிய முஸ்லிம் ஆட்சியாளர்கள் தமது ஆட்சியை விஸ்தரிக்க முயன்று கொண்டிருந்தவேளை, உள்ளூர் சமய நடவடிக்கைகளும் மெல்ல இடம் பெற்றுக் கொண்டிருந்தன. கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் மிக மிக உயரமான வெள்ளை ஆலயமொன்று, கிருஷ்ணரின் பிறந்த இடத்தில் பகவான் விஷ்ணுவுக்கு கட்டப்பட்டது. இந்த ஆலயம் முன்னூறு ஆண்டுகளின் பின், டெல்கியின் சிக்கிந்தர் என்ற
அரசனால் நாசப்படுத்தப்பட்டது.
அக்பர் மன்னனின் ஆட்சிக் காலத்தில், சில புனரமைப்பு வேலைகள் நடைபெற்றன. முகலாயர் ஆட்சிக் காலத்தில் ஆகக் குறைந்தது இரு ஐரோப்பியர்கள் அங்குள்ள ராதா கிருஷ்ண ஆலயத்துக்கு விஜயம் செய்தனர். முகலாய


Page 31
வம்சத் தோன்றலான ஒளரங்க சீப் மன்னனும் சில இந்து ஆலயங்களை உடைக்க உத்தரவிட்டு நாச வேலைகளைச் செய்வித்தான். அம்மன்னன் இறந்த பின், ஆட்சிக்கு வந்த ராஜபுத்திர அரசர்கள் அப்பிராந்தியத்தில் அமைதியை நிலை நாட்டினர். ராஜா மான்சிங் ஜமுனை நதிக்கரையில் கம்சா கோட்டையைக் கட்டினான். காலப்போக்கில் மீண்டும் ஆட்சி மாற பிரச்சினைகள் தோன்றின. பிரிட்டிஷ் ஆட்சியின் போது, மதுரா மீண்டும் தனது பழைய பெருமைகளைப் பெற்றதுடன், பிரசித்தி பெற்ற யாத்திரீகர்கள் தலமாயிற்று.
கல்வி கற்ற நடுத்தர வர்க்க இந்துக்கள், நாட்டின் சமூக சமய சீர்திருத்தங்களில் ஆர்வம் காட்டினர். மதுராவிலும் பிருந்தாவனத்திலும் பல புதிய இந்து ஆலயங்கள் கட்டப்பட்டன. ஜெய்ப்பூர் சிற்பிகள் சலவைக் கல்லில் வடித்த தெய்வீக உருவச் சிலைகள் பிருந்தாவன இந்து ஆலயங்களில் முக்கியமாக இடம் பிடித்தன.
பண்டைய இந்தியாவில் தங்க நிறமான மையைப் பாவித்து ஒளி வீசும் ஓவியங்களைப் படைப்பது நீண்ட காலமாக வழக்கத்தில் இருந்ததொன்றாகும். அத்துடன் கையெழுத்துப் பிரதிகளுக்கும் தங்க நிற மையைப் பாவித்து விளக்கப் படங்கள் சேர்க்கப்பட்டன. இவை கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்டவை என அறியப்படுகிறது. அத்துடன் அக்காலப் பகுதியில் செய்யப் பட்டதாகக் கூறப்படும் மெல்லிய தகடுகளினால் அலங்க ரிக்கப்பட்ட ஓவியங்களை புதுடில்லியில் உள்ள அருங் காட்சியகத்தில் காணலாம்.
படிப்படியாக தமது ஓவியங்களை அலங்கரிக்க விலையுயர்ந்த அல்லது சற்று மதிப்புக் குறைந்த மணிக் கற்களைப் பாவிக்கத் தொடங்கினார்கள். முகலாய, ராஜஸ்தானி மற்றும் டெக்கான் பிரதேச ஓவியங்களில் தங்க பாதரசப்பூச்சினை உபயோகித்து பளபளப்பாக்குவது பொதுவான அலங்காரமாக மாறியது. காலப்போக்கில் பல்வேறு வகையில் அவற்றில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் ஓவியங்களில் முத்துக்கள் உபயோகிக்கப்பட்டன. ஆனால் இவை மிகச் சிறியதாகவும் மென்மையானவையாகவும் விளங்கின. பொன் முலாம் பூசுதலும், முத்துக்களை வைத்தலும், படத்தின் உருவத்தை மேடாக்குவதுடன் தொடர்புடையதாகும்.
ஒவியத்தில் உருவங்களை மேடாக்கி, அலங்கரித்து ஒளி வீசச் செய்யும் பாணி (Style) தென்னிந்தியாவில் பரவியதையடுத்து ஓவியர்கள், தமது ஓவியங்களில் முத்துப் பதித்தல், தங்க முலாம் பூசுதல் போன்றவற்றைச் சிறப்பாக மேற்கொண்டனர். பிருந்தாவனத்தில் ஒளி வீசுகின்ற இந்த நாட்டுப்புறக் ஓவியக்கலையை மீள நிலை நிறுத்தும் பணியிலும் அதில் நுட்பங்களைச் சேர்க்கும் பணியிலும் பிருந்தாவனத்தைச் சேர்ந்த சித்ரகார் குடும்பம் ஆர்வமாய் ஈடுபட்டு வருகிறது.
- லஷ்மி

THE-F==十字
|
17)。
可
200

Page 32
கலைக்கேசரி து 32 நினைவுத்திரை
பாமாகமட் ராப
சங்கீத சாம்ராயத்தின் முடிசூடா மன்னனான ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர்
- பத்மா சோமகாந்தன்
பம்)
யுலகின் அனைத்துத் துறைகளிலும் தனது பன்முகத் திறமையால் அருஞ்சாதனை - புரிந்தவரே ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர். கணீரென்ற குரல் வளத்தோடு தலை சிறந்த பாடகராக வாய்ப்பாட்டு இசையில் மட்டுமின்றிப் பல இசைக் கருவிகளையும் இசைக்கத் தெரிந்த வித்துவானாகவும் விளங்கியவர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம், ஹிந்தி, மராட்டி எனப் பல மொழிகளிலும் கவிபாடும் பன்மொழிப் புலமையுடையவர். ஹரிகதா காலாட்சேபம் செய்வதில் விற்பன்னர். இருபத்தைந்து இராகங்களை இசையுலகிற்கு அளித்தவர். சிறந்த வாக்கேயகாரராகவும் வலம் வந்த முத்தையா பாகவதர் அவர்கள். 'சங்கீத கல்பத்ருமம்' என்ற அரிய நூலையும் எழுதி இசையுலகிற்குப் பெருமை சேர்த்தவர். ஸ்வாதித் திருநாள் சங்கீத அக்கடமி உட்பட புகழ் மிக்க பல ஸ்தாபனங்களையும் நிறுவிய பெருமைக்கும் உரியவர். மைசூர், திருவனந்தபுரம் ஆகிய அரசவைகளையும் ஆஸ்தான வித்துவானாக அலங்கரித்த சிறப்புக்குரிய வராவார். பன்முகக் கலைகளிலும் வித்துவம் மிக்க இவரே இந்தியாவில் முதன் முதலில் டாக்டர் பட்டம் பெற்ற இசைக்கலைஞர் ஆவார். - முத்தையா பாகவதர் 1877 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் பதினைந்தாம் நாள் தாமிரபரணி ஆறு பாயும் அரிகேசநல்லூரிலே பிறந்தார். அக்காலக்குல வழக்கப்படி ஏழாவது வயதில் சிறுவனுக்கு உப நயனம் செய்து வைத்தனர் பெற்றோர். அத்தோடு வேதம் படிப்பிக்க வேண்டுமே என்பதற்காகத் திருவையாறில் இருந்த வேத பாடசாலைக்குச் சிறுவனை அனுப்பி வைத்தனர்.
இந்த வேத பாடசாலைக்கு எதிரே சங்கீத மும் மூர்த்திகளுள் ஒருவரான தியாகராஜசுவாமிகளின் சிஷ்ய பரம்பரையினரான சாம்பசிவ ஐயரும் சபேச ஐயரும் இசை வகுப்புகளை நடத்தி வந்தனர். வேதம் படிக்கச் சென்ற சிறு வன் இசை நாதத்தில் மூழ்கினான்; தன்னை மறந்தான். இசையின் இனிமையால் கவரப்பட்டு இசை பயிலத் தொடங்கினான். இசைப் புலமையின் அரும்புகளைச் சிறுவனிடம் அவதானித்த ஆசிரியரும் வெகு கவனிப்போடு பாடங்களை நடாத்தவே வேதம் கற்றாலும் கானத்திலும் தனது முத்திரைகளைப் பதித்தான் சிறுவன். இசை மீது மட்டுமன்றித் தன் ஆசான் மீதும், தியாகராஜ சுவாமிகள் மீதும் அளவு கடந்த பக்தியும் விசுவாசமும் மிக்கவனாக தான் கற்ற இசையைக் ஹரிகதாகாலாட்சேபம் செய்வதற்கும் தியாகராஜசுவாமிகளின் கீர்த்தனைகளைப்

113-15:155 14 ப4'
ப- 4:55
- பாபாச பட E 4:15
Eா 12
மாயாமா:
E : டாபட்பம்
பகா
பாடி இராமாயண சொற்பொழிவு ஆற்றவும் பிற்காலத்தில் பயன்படுத்திக் கொண்டார். சுவாமிகளின் கீர்த்தனை களைக் கொண்டே 'தியாகராஜ ராமாயணம்' என்ற ஹரிக தாகாலாட்சேபம் நிகழ்ச்சியை நடாத்தி கீர்த்தியைத் தேடிய தோடு மக்கள் மனசையும் கவர்ந்து கொண்டார்.
இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த முத்தையா இறை பக்தியிலும் குறைந்தவரல்ல. ஆறுமுகக் கடவுள் மீது அளவற்ற பக்தி பூண்டிருந்தமையால் அரிகேசநல்லூ ரில் உள்ள முருகேசன் கோவிலிலே ஆண்டாண்டு தோறும் கந்த சஷ்டி விழாவை நடத்தி வைப்பார். ஆறுமுகக் கடவுள் மீது பல பாடல்களைப் பாடிய முத்தையா 'வள்ளி நாயகா நீயே கதி' என்றொரு கீர்த்தனையை சண்முகப்பிரியா ராகத்தில் ஆதிதாளக்கட்டோடு பாடினார். இப்பாடலை இசைக்கும் போது இதற்கு முன் இந்த ராகத்தைக் கையாண்ட யாருமே முயற்சிக்காத புதிய உத்திகளையும் நுட்பங்களையும் கையாண்டு இந்த ராகத்திற்கு புதிய பரிமாணங்களைச் சேர்த்துள்ளார். மிகப் பழைமையான இந்த ராகத்திலே புதிய மெருகேற்றினார். அதனை யாவரும் விரும்பி இசைத்தனர். நாதஸ்வர மற்றும் வாத்தியக் கலைஞர்களும் இசை வல்லாளரும் அடிக்கடி இசைத்துப் பிரபலமாக விளங்குவதற்கும் இவர் ஆற்றிய பணி கணிசமானதாகும்.
இவர் ஏராளமான புதிய ராகங்களுக்கு வடிவம் தந்து அவற்றை இசை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்த ராகங்களிலே முதன் முதல் கிருதிகளை உருவாக்கி அதற்கான இலக்கணங்களைப் புரியவைத்த பெருமையும் இவருக்கேயுரியதாகும். அபூர்வ ராகங்களாகச் சில காலங்களில் இருப்பவை காலப்போக்கில் பிரபல ராகங்களாகவும் பரிமளிப்பதுண்டு. மோகன கல்யாணி,
(க6ெ
கை

Page 33
ஹம்ஸாநந்தி போன்ற ராகங்கள் உட்பட 25 புதிய ராகங்களில் பல கீர்த்தனைகளை இயற்றி இசையுலகிற்கே பெரும் சேவையாற்றியுள்ளார். இவருடைய பங்களிப்பாக சுமார் நானூறு கிருதிகள் உள்ளன என்று கூறுவர்.
சுத்த தன்யாசி ராகத்தில் அமைந்த 'ஹிமகிரி தனயே' என்ற இவருடைய பாடலை ஜி.என். பாலசுப்பிரமணியம் தான் மேடையேறும் போதெல்லாம் பெரும் விருப்பத்தோடு பாடி இவருக்கு மரியாதை செய்வார்.
புரட்சிக் கவிஞன் பாரதியோடு தோழமை பூண்டு பழகிய பாகவதர் 'ஜெயமுண்டு பயமில்லை' என்ற பாடலைப் பாரதியார் பாடக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தவர் 'அலைப் பட்ட கடலுக்கு மேலே' என்ற அடியை அவர் பாடி முடித்ததும் பாரதியாரிடம் 'இந்தப்பண் இந்திய வகையைச் சேர்ந்ததாக இல்லையே? அது என்ன சங்கதி?' என்று கேட்டார்.
'அது பிரெஞ்சு இராணுவப்பண்' என்று பதில் கூறினார் பாரதி. ஏனையோர் இதைக் கேட்டுத் திகைத்தனர். முத்தையா பாகவதர் பாரதியைத் தழுவியபடி 'முத்துஸ்சுவாமி தீட்சிதர் போன்ற பேராழமுள்ள அனுபவப் புலமையையல்லவா உன்னிடம் காண்கிறேன்' எனக் கூறி ஆனந்தக் கண்ணீர் சொரிந்தார் என அறிஞர் பி.ஸ்ரீ. அவர்கள் 'நான் அறிந்த தமிழ் மணிகள்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
தென்னிந்தியாவில் 1924 ஆம் ஆண்டு மதுரையில் முதன் முதல் இசைப்பள்ளியை துவக்கி வைத்த பெருமை இவருக்கேயுரியது.
இறை வழிபாட்டில் சகஸ்ரநாம அர்ச்சனை அதாவது இறைவனின் 108 நாமங்களை போற்றி செய்து பூப் போடுதல் ஒரு வழக்கம். அதேபோல முத்தையா பாகவதரும் இறை வழிபாட்டில் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதாவது சிவன் - சக்தி ஆகிய இரு தெய்வங்களின் நாமாவளிக்கும், அதாவது ஒவ்வொரு திரு நாமத்திற்கும் தனித்தனியாக வெவ்வேறு இராகங்களில் கீர்த்தனைகளை இயற்றி பூக்களுக்குப் பதில் பாக்களாய்
அரிச்சனை செய்து வழிபட்டார். - சிருங்கேரி சாரதா பீடாதிபதியாக அன்று விளங்கிய சுவாமிகள் திருமுன்னர் பாகவதர்தான் இயற்றிய சிவ அஷ்டோத்திர கீர்த்தனைகளை பக்தியுடன் பாடிக் காண்பித்தார். அதனைக் கேட்டு மிக்க மகிழ்ச்சி கொண்ட சுவாமிகள் விலை மதிக்க முடியாத ஒரு மரகத லிங்கத்தை பாகவதருக்கு பரிசாக அளித்து அருள் புரிந்தார்.
க

2, கலைக்கேசரி
33
*))))
மைசூர் மகாராஜாவின் ஆஸ்தான வித்வானாக விளங்கியவர் அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர். மைசூருக்குச் சென்ற சில மாதங்களுக்குள்ளேயே கன்னட மொழியில் நன்கு பேசவும் எழுதவும் தேர்ச்சி பெற்றதோடு அம்மொழியிலேயே பாடவும் கற்றுக் கொண்டார். மைசூரில் எழுந்தருளியுள்ள சாமுண்டீஸ்வர அம்மன் மீது தேவி உபாசகரான பாகவதர் நூற்றுக்கும் மேற்பட்ட கீர்த்தனைகளைப் பாடி அன்னையின் அருளுக்கும் இலக்காகினார். இவருடைய திறமைகளைப் பாராட்டிய மைசூர் மகாராஜா இவருக்கு 'காயசிகா மணி' என்ற பட்டத்தைச் சூட்டிக் கெளரவித்தார்.
பாடசாலை சென்று படிக்காமலே பல மொழிகளைக் கற்றுக் கொண்டும் கவிபாடும்
திறமையை
- வளர்த்துக் கொண்டும் பாண்டித்யமடைந்துள்ள பாகவதர் பல மொழிப் புலமை மிக்கவராயினும் தன் தாய் மொழியான தமிழை மறந்தவர் அல்லர். ஹரிகதா காலாட்சேபத்தில் வல்லமை மிக்கவரான இவர் பலரும் இந்நிகழ்வின் போது பிற மொழிப் பாடல்களையே இசைச் சொற்பொழிவில்
உபயோகிப்பதை அவதானித்தார் .
இந்த நிலையை மாற்றியமைக்க வேண்டு. மென்ற உத்வேகத்தில் தானே பல தமிழ்ப் பாடல்களைத் தனது நிகழ்ச்சியில் சேர்த்துக் கொண்டு தமிழிலேயே இவை நிகழ்வதற்கான வழிமுறைகளைக் கொண்டு வழி காட்டினார். காலாட்சேப் நிகழ்ச்சிகளையும் கூட குறுகிய ஒரு சிறு வட்டத்துள் அடைந்து கிடக்க விடாது அருமையான இக்கலை ஊர்தோறும் பரவ வேண்டுமென விழைந்தார். இவருடைய வள்ளி திருமண சொற்பொழிவு செட்டி நாட்டின் சகல பகுதிகளிலும் அடிக்கடி நிகழும் ஒரு அருமையான நிகழ்வாகக் கருதப்பட்டது.
தன் அறிவாலும் ஆற்றலாலும் இசைத் திறமையாலும் ஆன்மீகப் பக்குவத்தாலும் சங்கீத உலகிற்கு பாரிய அளவில் பணி செய்த அரிகேசநல்லூர் முத்தையா பாகவதருக்கு சங்கீத சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னனுக்கு இசையுலகில் என்றென்றும் மகோன்னதமான ஸ்தானம் இருக்குமென்பதில் ஐயமில்லை.'
ண

Page 34
கலைக்கேசரி ] 34 அட்டைப்படக்கட்டுரை
மனித நாகரீகத்தில் சீன பீர வருகையும் அதன் வளர்ச்
-சுபாஷிணி பத்மநாதன்
பண்டைய காலப் பீங்கான் என்னும் பாத்திரப் பயன்பாட்டு அம்சமானது சீனாவைப் பிறப்புப் பூமியைக் கொண்ட உற்பத்திப் பொருளாகும். பொதுவாக பொரசலீன் எனக் குறிப்படப்படும் தனித்துவமான சீன மட்பாண்டமானது சீன வர்க்கத்தினாலேயே அரம்பத்தில் உற்பத்தி செய்யப்பட்டது எனலாம். பொரசலீன் என்று குறிப்பிட்டுக் கையாளப்படும் பெயரானது இத்தாலிய சிற்பிப் பசையில் இருந்து பெறப்பட்டதாக
பொதுப்படையில் அறிகின்றோம்.
இக் குறிப்பிடப்பட்ட பாவனைப் பொருளானது இன்று உலகளாவிய ரீதியில் பாவிக்கப்படும் பாவனைப் பொருளாகும். உணவு பரிமாறும் பாத்திரமாகவும், தேனீர் பானங்கள் அருந்தும் பாத்திரங்களாகவும், உணவுப் பதார்த்தங்களை தயாரிக்கும் பாத்திரங்களாகவும், உணவுப் பதார்த்தங்களைப் பாதுகாக்கும் பாத்திரங்களாகவும், இரசாயன தாக்கங்களில் இருந்து பாதுகாக்கக் கையாளும் சாடிகளாகவும், பெரிதும் இப்பாத்திரங்கள் பயன்படுத்தப் படுகின்றன. மேசை அலங்காரக் குவளைகள், பலதரப்பட்ட மேசை அலங்கார உருவச்சிலைகள்,

கோன் -சியும்
மெழுகு
வ ர் த் தி த ா ங் கி த் த ண் டு க ள் , ம லர் கு வளை கள், நீர் குவளைகள் ஆய்வுக்கூடங்களில் கையாளப்படும் ஆய்வுக்கூட உபகரணங்கள், பலதரப்பட்ட மேசை அலங்காரப் பொருட்கள் என்பன சீனக் களிமட்பாண்டம் எனக்
குறிப்பிடப்படும் பொரசலீன்
என்னும் கூட்டுக் கலவையால் செய்யப்பட்டவையாகும். இத்தகைய பொரசலீன் உற்பத்திகள் பண்டைய காலம் தொடக்கம் மனித நாகரீகத்துடனும் நடைமுறை வாழ்க்கையுடனும் ஒன்றித்து கைக்கொள்ளப்படும் பாவனைப் பயன்பாட்டுக் கலன்கள் எனலாம்.
சீனாவினால் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்ட பொர்சலீன் உற்பத்தியானது அந்நாட்டின் பரம் பரியத் தொழிவாக விளங்கும் காரணத்தால் சீன உற்பத்தி பசையானது இயல்பாகவே சில குறிப்பிடப்பட்ட உயர்ந்த தரத் தன்மைகளைக் கொண்டு இன்றும் மிளிர்கின்றது.
டங் என்னும் சீன வம்சாவழியினரின் இறுதிக் காலகட்டத்திலும், சுங் என்னும் சீன வம்சாவழியினரின் ஆரம்ப காலத்திலும் சீனாவில் பீங்கான் உற்பத்தி ஆரம்பமானது என வரலாற்றுப் பதிவுகள் சாட்சி பகிர்கின்றன. அடிப்படையில் சுங் வம்சாவழிக் குயவர்களால் மட்டும் வடிவமைக்கப்பட்ட சீன மட்பாண்டப் பீங்கான்கள் தனித்துவம் பெற்று விளங்கின. யுவன் வம்ச ஆட்சிக் காலகட்டத்தில் குறிப்பாக கி.பி. 1260 முதல் கி.பி. 1368 வரையான காலப்பகுதியாகும்.

Page 35
இக்காலப் பகுதியிலும் சீனாவின் பீங்கான் உற்பத்தி சிறப்புற்று மிளிர்ந்தது. அவ்வாறே மிங் வம்சாவழியினரின் ஆட்சிக் காலத்திலும் இப்பீங்கான் உற்பத்தி துரித வளர்ச்சியடையத் தொடங்கியது எனலாம். மேலும் பீங்கான் உற்பத்தியானது வெகு சிறப்பாக பதினாறாம் நுாற்றாண்டில் கங்ஹ்சி என்னும் சீன மன்னன் ஆட்சிக் காலத்தில் உன்னத நிலையை அடைந்து இருந்ததாக
அறியமுடிகின்றது.
காலவோட்டத்தில் இப்பீங்கான் உற்பத்தி யானது ஐரோப்பிய நாடுகளுக்குப் பரவியது. இப்பொரசலீன் பயன்பாட்டுப் பாவனைப் பொருட்கள் ஐரோப்பாவுக்கு மார்க்க போலோவினால் அறிமுகம் செய்யப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் மூலம் அறியலாம். சீன சமூக வர்கத்தினர் பீங்கான் உற்பத்தியின் உத்திகளை மிக ரகசியமாக வைத்ததன் காரணத்தால் வேறு இனத்தவர்கள் இப்பீங்கான் உற்பத்தியில் வெற்றி கரமாக ஈடுபட முடிய வில்லை. எதுஎவ்வாறாயினும் சீனாவின் பீங்கான் உற்பத்தி உத்திகளைக் கற்க 17 ஆம் நூற்றாண்டில் துார தென் கிழக்காசிய நாடுகளான கொரியா மற்றும் ஜப்பானிய நாட்டுக் குயவர்கள் சீனாவிற்குச் சென்று பீங்கான் உற்பத்தியின் நுட்ப நுணுக்கங்களைக் செவ்வனே கற்றுத் தேறி கொரிய ஜப்பான் ஆகிய நாடுகளில் பீங்கான் உற்பத்தித் தொழிற் சாலைகளை ஆரம்பித்து உற்பத்திகளை மேற்கொண்டு கணிசமான அளவு உற்பத்தியில் வெற்றியும் ஈட்டினர்.

கலைக்கேசரி
35
இப் புரொசலீன் பாத்திரங்களுக்கு பளிங்கு மெருகூட்டப்படுதல் வழமையாகும். நாளாந்தப் பாத்திரத் தேவை, அலங்காரப் பொருட்கள், நீண்ட காலப் பாதுகாப்புப் பெட்டகம் ஆகிய உற்பத்திப் பொருட்களுக்குப் பொரசலீன் பெரிதும் பயன்படுத்தப்பட்டது. இன்றும் பயன்படுத்தப்படுகின்றது. பொரசலீன் பாத்திர உற்பத்தி காலக்கிரமத்தில்
உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அடிப்படையில் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட சீன உற்பத்திகளுக்கே உலக அரங்கில் அதிக கிராக்கி இருந்ததை இன்றும் நாம் ஆங்காங்கே அவதானிக்க முடிகின்றது. ஐரோப்பாவில் பொரசலீன் பாத்திர உற்பத்தி மேற்கொள்ளப்பட்ட போதிலும், சீனாவின் பொரசலீன் பாத்திரங்கள் அதிக மதிப்பினை உலகளாவிய ரீதியில் பெற்றிருந்தன எனலாம். ஆரம்பத்தில் கயோலின் எனப்படும் சீனக் களிமண்ணும் பெல்ஸ்பர் என்னும் அலுமினோ சிலிக் கேட்டு, மற்றும் படிமக்கல் என்பனவற்றின் கூட்டுக் கலவையே பொரசலீன் என்னும் சீனக் களிமண் கலவையின் அடிப்படை மூலமாக விளங்கியது.
இந்தவகையில் பொரசலீன் உற் பத்திகள் பொதுவாக ஐரோப்பியச் சந்தையில் 'சீனா' எனக் குறிப்பிட்டு அழைக்கப்பட்டன. மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட பொரசலீன் உற்பத்திகள் சீனப் பொரசலீன் உற்பத்திகளுடன் ஒப்பு நோக்குகையில் சிறிய அளவிலான வெற்றியினையே ஈட்டிக்

Page 36
கலைக்கேசரி 36
அட்டைப்படவிளக்கம்:
கலைக்கேசரி
கொடுத்தது எனலாம். 16 ஆம் நுாற்றாண்டில் போத் து க் கே யர் க ள் கயோலின் என்னும் களிமண்ணை எடுத்துச் சென்று பொரசலீன் உ ற் ப த் தி யி  ைன மேற்கொள்ள முனைந்த போதிலும் அதன் உற்பத்தி உத்தியியல் துணுக்குகளை பெரிதும் அறிந்து இராமையினால் அவ் உற்பத்தி முயற்சி எதிர்பார்த்த அளவிலான வெற்றியினை ஈட்டிக் கொடுக்கத் தவறிவிட்டது எனலாம்.
அவ்வாறே வரலாற்று மேற்கோள்களின் பிரகாரம்
தமிழரின் தனித்துவமும் சோழாட்சியம்
எரில் இஸ்லாமிய இம் கதை)
154. 1:4 1341 -
* - * * *
8:5444 41* :* *AR: -:8 (4
நீலம் - வெள்ளை கலந்த மட்பாண்ட அலங்காரம் சீன
மிங் அரச வம்ச ஆட்சிக்காலத்தில் (1368 - 1644) சிறப்புப் பெற்றிருந்தது. 9ஆம் நூற்றாண்டில் மத்திய
- வளைகுடாவிலிருந்து சீனாவுக்கு இத்தகைய கலை நுணுக்கம் பரவியது.
கவர்ச்சியான நீலவர்ணத்திற்காக போல்ட்ஒக்சைட் இரசாயணம் பயன்படுத்தப்படுவதுடன் இந்தவகை சாடிகள் 1000 ஆண்டுகளுக்கு மேலாக அன்பு உணர்வை வெளிப்படுத்தும் நோக்கம் கொண்ட அலங்கார
- சந்தர்ப்பங்களுக்காக உபயோகிக்கப்பட்டுகின்றது.

பிரஞ்சு நாட்டு மதகுரு ஒருவர் சீனாவிற்குச் சென்று பீங்கான் உற்பத்தி முறைமைகளை நன்கு கிரகித்து அறிந்து அதன் உற்பத்தி முறைமைகள் பற்றிய அம்சங்கனை விரிவாக எழுதி ஐரோப்பியச் சந்தைக்கு அனுப்பிவைத்தார். இத்தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பத்தில் ஜேர்மன், இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில்
பொரசலீன்
உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்
அடிப்படையில் பொர்சலீன் பொருட்கள் முதல் முதலில் பொரசலீன் உற்பத்திகள் தொழில்சாலையில் பதப்படுத்தி உற்பத்தி செய்யப் பட்டது. குறிப்பாக கி.பி. 1710 இல் ஜேர்மனியில் பீங்கான் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. இச்சீனக் களிமண் ஊடகம், குறிப்பிடப்பட்ட சூட்டில் சூலையில் இட்டு பதப்படுத்தப்பட்டு பாத்திர உற்பத்திச் சேவைக்குப் பயன் படுத்தப்பட்டது. அயினும் சில வரலாற்றுப் பின்னணியின் பிரகாரம் பொரசலீன் என்னும்

Page 37
சீனக்களிமண் உற்பத்திப் பொருளானது ஐரோப்பாவில் “சீனா' என்றே சிறப்புப் பெயர் சூட்டி பொதுவாக அழைக்கப்பட்டது.
ஐரோப்பிய நாடுகள் கணிசமான அளவு முயற்சிகள் மேற்கொண்டு சீன உற்பத்திக்கு இணையாகப் பயன் படுத்தப்பட்ட போதிலும் தரத்தில் ஐரோப்பிய உற்பத்திகள் சீன உற்பத்திகளுக்கு இணையாக விளங்கவில்லை. ஆயினும் 1710 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சீனா அதன் உற்பத்தி உத்தி ரகசியங்களை வெளி உலகிற்கு வெளிப்படுத்தியதன் காரணத்தால் எனைய நாடுகளும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் எறத்தாழ தரமான பொர்சலீன் உற்பத்திகளை சந்தைக்கு கொண்டு வந்தன. காலக்கிரமத்தில் ஏனைய நாடுகளின் உற்பத்திகளும் சீன உற்பத்திகளுக்கு இணையாக உற்பத்தியில் ஈடுபட்டு உலக அரங்கில் கணிசமான அளவு தரமான உற்பத்திகளை சந்தைக்கு வழங்கின.
எது எவ்வாறாயினும் சீனா நீண்டகாலமாக மேற்கொண்டு வந்த பொரசலீன் உற்பத்திப் அந் நாட்டின் பாரம்பரியத் தொழிலாக இருந்த காரணத்தால் சீன உற்பத்தி பசையானது இயல்பாகவே சில குறிப்பிடப்பட்ட உயர்ந்த தரத் தன்மைகளைக் கொண்டு இன்றும் மிளிர்கின்றது. பொரசலீனில் காணப்படும் சிறப்பு அம்சம் யாதெனில் கணிசமான அளவுப்பலன், கடினத்தன்மை, வெப்பம் குளிர் தாக்கத்தை தாங்கிப்பிடிக்கும் தன்மை, குறைந்த அளவு இரசாயன மற்றும் நுண்ணுயிர்த் தாக்கத்தில் இருந்து உணவுப் பதார்த்தங்களை பாதுகாக்கும் தன்மை என்பன இவற்றுக்கு உரிய உயரிய பயன்பாட்டுத் தன்மைகளாகும். பளிங்கு மெருகூட்டல் அம்சங்களைக் கொண்டதாக விளங்கும் இத்தனித்துவ சீன மட்பாண்டக் கலை
இது )

இ, கலைக்கேசரி
37
இலகுவில் சுத்தம் செய்யக் கூடியதாக விளங்குவது இதில் காணப்படும் மற்றுமொரு சிறப்பு அம்சமாகும்.
அடிப்படையில் பொரசலீன் ஊடகம் குறிப்பாக காகொலின் என்னும் கலவையினால் செய்யப்பட்டது. சூழையில் இட்டு பதப்படுத்தப்படும் போது குரோமியம், நிக்கல், இரும்பு, மக்னீசியம், யுரேனியம், செப்பு ஆகிய கனியுப்புக்கள் மூலம் மெருகூட்டபடுகின்றன. மெருகூட்டலுக்குப் பின்னரே அலங்காரம் செய்யப் படுகின்றது. இதன் பாவனை வெறுமனே சமையல் மற்றும் உணவு சார் பாதுகாப்பு அம்சங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதாக அமையாது. குளியல் அறைத் தொட்டிகள், கழிவறைக்குத் தேவைக்கான பயன்பாட்டு பொருட்களை உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை தவிர சுவரை மெருகூட்டும் ஓடுகள், பலவகைப்பட்ட மின் உபகரணப்
பொருட்கள் என்பனவும்
பெரிதும் பொரசலீனால் உற்பத்தி செய்யப் படுகின்றன. காலக்கிரமத்தில் பிளாஸ்டிக் என்னும் நவீன ஊடகத்தால் ஈடு செய்யப்படுவது நடைமுறையில் காணக்
கூடியதாகவுள்ளது.
933 இத

Page 38
கலைக்க்ேசரி 38 தெய்வ வாகனங்கள்
அமரர்களும் அசுரர்களும் பல தேவ ஆண்டுகள் போரிட்டுப் பலர் மடிந்தனர். அதனால் சாவா மருந்தாகிய அடையப் பாற்கடலை இரு சாராரும் கடைந்தனர். ஆயிரம் கடைந்தனர்.
முதலில் கடலிலிருந்து ஆலகால நஞ்சு தோன்றி சகல புவம் சுட்டெரித்தது. அதனைத் தியாக மூர்த்தியாகிய சிவபெரும் தனது கண்டத்தே நிறுத்தினார்.
பின்பு இரு பிரிவினரும் மீண்டும் கடைய மத்தாகிய மந்தர L தாழ்ந்தது. அதனைத் திருமால் ஆமையாய் உருவெடு தாழாமல் தாங்கினார். பின்பு பாற்கடலில் இருந்து தன்வர் தேவாமுதம், அமுதத்துடன் அறுபது கோடி அரம்பையர், உச்ன சிரவம் என்னும் வெள்ளைக் குதிரை, கௌத்துவமணி, பஞ். தருக்கள், காமதேனு, சந்திரன், ஐராவதம், மூதேவி, சீதேவி, வாருணி முதலியவர்கள் தோன்றினர்.
இவைகளின் மிக உயர்ந்த அசுவ இலக்கணங்களைக் கொண்ட குதிரைகளின் தன்மைகளை 'அச்வ லக்ஷணம்' கூறுகிறது. அதனுடைய மொழி
தெய்வ ஊர்திகள்: 2
உச்சைச் சிரவம்
கலாபூஷணம் அருள்மொழி அரசி - வசந்தா வைத்தி
பெயர்ப்பாகத் திருவிளையாடல் புராண ஆசிரியர் பரஞ்சோதியார் கூறும் அழகு அறிந்து இன்புறத்தக்கது. குதிரைகள் பாடவம், கோடகம், இவுளி, வன்னி, குதிரை பரி, கந்துகம் எனப் பலவகையின.
'பாடவம்' என்பது மாந்தளிர் போன்ற நிறமுடைய நாவினையும் உயர்ந்த குளம்புகளையும், தம்முள் ஒத்த நீண்ட பற்களையும், பாம்பின் படம் போன்ற
மார்பினையும், கழுத்தினையும் கொண்டதாகும்.)
'கோடகம்' - என்பது அகன்ற நெற்றியினையும், குடுமிபோல் ஒரே நிறமுடைய பிடரி மயிரினையும்
ப பிடரி மயிரினையும் முக்கோணமான அழகிய முகத்தினையும் பெற்றதாகும்.
'இவுளி' என்பது போரில் தன் முகத்தை பகைவர் வாளினால் வெட்டினாலும் எதிர்த்துப் போர் புரியும் வன்மையினையும் குரங்கு, புலி, யானை, நரி, சிங்கம், சரபம், முயல், முகில் என்ற இவற்றுள் ஒன்றன் நடையினையும் கொண்டதாகும்.
'வன்னி' என்பது பொருந்திய நீள உயரங்களையும் சங்கும், வெள்ளைச் சர்க்கரையும் போன்ற வெள்ளிய வாய் நுரையினையும் பிங்கலம், கருமை நிறம் ஆகிய இவற்றுள் ஒன்றன் நிறத்தினையும் கொண்டதாகும்.

ஒருவருக்கொருவர் தேவாமிர்தத்தை ஆண்டுகள்
எங்களையும் என் பருகி
கலை ந்துத்
தரி,
சச்
யநாதன்
'குதிரை' என்பது கழுத்தில் வலமாகச் சுழித்திருக்கும் சுழியாகிய தெய்வமணியினையும் முகம், மார்பு, உச்சி, வால், நான்கு கால்கள் என்னும் - இவ்வெட்டு உறுப்புக்களில் வெண்மை கலந்துள்ள அட்டமங்கலம், முகம், நான்கு கால்கள் இவ்வைந்து உறுப்புக்களில் வெண்மை கலந்துள்ள பஞ்ச கல்யாணி ஆகிய இவற்றுள்
ஒன்றனைப் பெற்றிருக்கும்
'பரி' என்பது குங்குமப்பூ, கர்ப்பூரம், அகிற்குழம்பு, கத்தூரி ஆகிய இவற்றுள் ஒன்றன் மணத்தையும் சங்கு, மேகம், சரபம், சிங்கம் ஆகிய இவற்றுள் ஒன்றன் ஒலி போன்ற கனைப்பினையும் கொண்டதாகும்.
'கந்துகம்' என்பது கடைந்தெடுத்தாற் போன்ற நான்கு கால்களையும், சுழலும் பொழுது கொள்ளிவட்டம் போல் திகழும் இயல்பினையும் ஏறிய வீரனுடைய காலினுள் அடங்கும் தன்மையினையும் கொண்டதாக இருக்கும்.
குதிரைகளின் நிறங்கள்: வெள்ளி, முத்து, பால், சந்திரன், சங்கு, வெண்பனி ஆகிய இவற்றில் ஒன்றைப் போன்றது வெண்மைக் குதிரை. மாதுளை மலர், செம்பஞ்சுக்குழம்பு ஆகிய இவற்றில் ஒன்றைப் போன்றது சிவப்புக் குதிரை.

Page 39
கரியமை, - குயில், கருவண்டு, கருமுகில் இவற்றுள் ஒன்றைப் போன்றது கருங்குதிரை. எரிகின்ற நெருப்பு, கோரோசனை இவற்றுள் ஒன்றைப் போன்றது பொன்நிறக் குதிரை. வெண்மை, செம்மை, கருமை, பொன்மை ஆகிய நான்கு நிறங்களும் கலந்த குதிரையை 'மிச்ரம்' என்று அழைப்பர். முகம், மார்பு, உச்சி, வால், நான்கு கால்கள் என்னும் எட்டு உறுப்புக்களிலும் வெண்மை கலந்த குதிரை 'அட்டமங்கலம்' எனப்படும். முகத்திலும், நான்கு கால்களிலும் வெண்மை நிறமுடையது 'பஞ்சை கல்யாணி' ஆகும்.
குதிரைகளின் சுழி: குதிரையின் கழுத்தில் வலமாக சுழி இருந்தால் அதனை 'தெய்வமணி' என்று பெயர் கூறுவர். முகம், தலை, மூக்கு, மார்பு ஆகிய நான்கிடங்களிலும் இரண்டிரண்டு சுழிகளும், நெற்றி நடுவிலும், பின்பக்கத்திலும் ஒவ்வொரு சுழியிருப்பது நல்ல சாதிக் குதிரையாகும். இச் சுழிகள் இல்லாத குதிரைகள் குற்றமுடையவைகள். ஒன்றோடொன்று நெருங்காமல் பிரிந்த மார்பின் கண் ஐந்து சுழியுள்ள குதிரை 'ஸ்ரீவற்சம்' எனப் பெயர் பெறும். நெற்றியிலே இரண்டு அல்லது மூன்று சுழிகள் இருந்தாலும் ஒன்றோடொன்று தொடர்ந்து நான்கு சுழிகள் வலமாகச் சுழித்து இருந்தாலும் முன் கால்களின் அடியில் இரு சுழிகள் இருந்தாலும் நன்மை மிகுவிக்கும்.
கழுத்து நடுவில் இரட்டைச் சுழியுடைய குதிரை தன் தலைவனுக்கு வறுமையினையும், துன்பத்தையும், மரணத்தினையும் உண்டாக்கும். கணைக் கால்களில்
இரட்டைச் சுழி இருந்தால் அச்சத்தையும், துன்பத்தையும், சிறைவாசத்தையும் உண்டாக்கும். மேலுதடு, முன் காலடி, கபோலம்,
முழந்தாள் இந்நான்கிலும்
'பட்பம்

உ.கலைக்கேசரி
39
சுழிகள் இருந்தால் தலைவனைக் கொல்லும். இத்தகைய குற்றமுள்ள சுழிகளோடு கூடிய குதிரைகள் குதிரைப் பந்தி யில் இருக்கினும் குற்றமாகும்.
எந்த நிறத்தின் வகை மிகுந்திருந்தாலும் வெள்ளை நிறம் கலந்திருத்தல் நல்லது. கரிய குதிரைக்கு வயிற்றிலேனும், மார்பிலேனும் செந்நிறமிருந்தால் அக் குதிரை வெற்றியைத் தரும். வெண்ணிறமிருந்தால் அக் குதிரைக்கு 'வாருணம்' என்று பெயர் ; வெற்றியைத் தரும். பிடரி மயிர் வெண்மை நிறமுள்ளது மகப்பேற்றைத் தரும். மார்பில் வெண்மையுள்ள குதிரை மகிழ்ச்சியைத் தரும்.
கழுத்தில் வெண்மையுள்ளது மிக்க செல்வத்தைக் கொடுக்கும். முகத்தில் வெண்மையுள்ளது சிறந்த வெற்றியை அளிக்கும். முகத்தின் பின்புறம் வெண்மை நிறமுடையது இன்பத்தை சேர்க்கும். இடது பாகம் வெண்மை மிகுந்தது புத்திரப்பேற்றை அளிக்கும். வலது பக்கம் வெண்மை அமைந்தது செல்வத்தையும், விளை பொருட்களையும் தரும். முதுகு, வால், முகம் இம் மூன்றிலும் வெண்மைஉள்ள குதிரை வெற்றியைத் தரும். நாபியிலிருந்து முன்புற முழுதும் செந்நிறம் வாய்ந்ததும் பின்புற முழுவதும் நிலவைப் போல் வெண்ணிறமும் கொண்டதுமான குதிரை பகற் போரிலே வெற்றியைத் தரும். முன்புறம் வெண்மையாகி பின்புறம் சிவந்த .
குதிரை இரவுப் போரிலே வெற்றியைத் தரும்.

Page 40
கலைக்கேசரி 2) 40
உத்தமசாதிக் குதிரை: அடி எடுத்து வைத்தால் ஒத்த பந்து போலவும், நின்றால் மலை போலவும், கனைத்தால் சிங்கத்தைப் போலவும், வேகத்தில் காற்றிற்கு நிகராகவும், மிதித்து நடிக்கும் கூத்தினால் கூத்தாடுபவனைப் போலவும், நடையில் சிங்கத்தையும் யானையையும் போலத் தன்மை பெற்றதும், கற்புநிறை மகளிர் போல் கவிழ்ந்த முகத்தையும், கருங்குவளை போன்ற கண்களைக் கொண்டதும், கருமுகில் போன்ற நிறமும், கருநெய்தல் போன்ற மணமும் நிறைந்ததாய், மலர், அகில், சந்தனம், மணிப்பூண் இவற்றால் அழகு செய்தால் மகிழ்வுடன் திகழ்வது உத்தம் சாதிக் குதிரைகள் என்று பரிநூலார் இலக்கணம் வகுப்பர்.
உத்தமக் குதிரைகள் நூறு விரலளவு உயரம் உடையது. மத்திமக் குதிரைகள் எண்பத்துநான்கு விரல்ளவும், அதமக் குதிரைகள் அறுபத்தொன்று
விரலளவும் உயரம் கொண்டதாக விளங்குமென்று கூறுவர்.
குதிரைகளுக்கு வயது முப்பத்திரண்டாம் பருவம் பத்தாம். ஒவ்வொரு பருவமும் மூன்றாண்டும் இரண்டு மாதங்களும் பன்னிரண்டு நாட்களும் கொண்டனவாக இருக்கும்.
போர்க் குதிரைகளின் பொது இலக்கணம்: ஒப்பற்ற வேகமுடைய பரிகள் சமயம் நேரின் மதிலுறுப்பையும் தாண்டிச் செல்ல வல்லன. பலகணி

வாயிலிலும் நுழைந்து செல்லும் வன்மையின. வெளியிடங்கள் அனைத்தையும் வழியாகக் கொண்டு செல்லும். கொடிய பசி வந்துற்றால் தின்னப்படாத
வைக்கோல் முதலியவற்றையும் உண்ணுந் தகையன.
குதிரைகள் மல்லகதி, மயூரகதி, வானரகதி, வல்லியகதி, சரகதி (அல்லது இடபகதி) என்னும் ஐந்து கதிகளைக் கொண்டன.
பாற்கடலில் தோன்றிய உச்சைச் சிரவத்தை தேவேந்திரன் தனதாக்கிக் கொண்டான். முருகப் பெருமான் எழுந்தருளும் குதிரை வாகனத்திற்கு 'அபராஜிதா' என்று பெயர். மேலும் அம்மன் ஆலயங்களிலும் விநாயகர், சிவன் ஆலயங்களிலும் மகோற்சவ காலங்களில் தெய்வங்களை அலங்கரித்த குதிரை வாகனத்தின் மீதும் எழுந்தருளச் செய்து வழிபடுவர்.
சிறப்பாக வேட்டைத் திருவிழாவிலும், நவராத்திரியில் மானம்பூத் திருவிழாவிலும் குதிரை வாகனம் இடம் பெறும். சூரிய தேவனும் பவனி வருவது ஏழு குதிரைகள் பூட்டப்பெற்ற ஒற்றையாழித் தேரிலேதான்.
காயத்ரீ, உஷ்ணிக், அநுஷ்டுப், பிருஹதீ, திருஷ்டுப், ஜகதீ, பங்க்தீ என்னும் ஏழு குதிரைகள் சூரியனின் வாகனமாகும். அதனால் சூரியனே 'சப்தச்வன்' என்று அழைப்பர். | தெய்வ வாகனங்கள் அழகுமிக்கது மட்டுமல்ல. அரும் பொருள்கள் கொண்டதும் கூட.

Page 41
D Vardha
na 01
This Avurudu Season, deposit i your Savings Account and be re great prizes from Vardhana Tha Fixed Deposits with special interest rate From 4th April to 2nd May only
A 011-2663888
* Conditions Apply
DFCC Vardh

ЭFCC
na Bank
E MASA
nto ewarded with agi Litha!
ZDFCC Vardhana Bank
es
. Your Most Caring and Trusted Bank
DFCC Vardhana Bank is rated AA-(Ika) Fitch Ratings Lanka. ana Bank is a licensed commercial bank supervised by the Central Bank of Sri Lanka.

Page 42
கலைக் Iகசரி, 42 டளாகலை
ஆபரணங்கள் வழி மகிை உணர்த்தும் பரதநாட்டியப்
-மோகனப்ரியன் தவராஜா (B.B.A, B.
60196060
1L
ஒ008
அIDகTTL)
இறைவன் படைப்பில் ஒவ்வொன்றும் அழகாய் மிளிர்ந்தாலும் அதற்கென அமைந்த ஆபரணங்களால்
அப்படைப்புகள்
காலம் கடந்தும் ரசிக்கப்படுகின்றது.
வானிற்கு நிலவு தமிழுக்கு காவியம்
மங்கைக்கு மலர்
டார்பர் பன்ர் 1

T.A, M.E.A)
என ஒவ்வொன்றும் தனக்கென ஓர் அழகை
அணி கலனாய் தரித்து உள்ளன.
- அந்த வகையில் ஆடல் நி க ழ் த் து ப வ ரி ன் நாட்டியம் சிறக்க திறமை, இசை, ஆடை,
அரங்கு என எத்தனை இருந்தாலும் பார்வையாளர்களின் பார்வைக்கு விருந்தாய் நடனம் மேலும் அழகுற அணிகலன்களின் பங்களிப்பு இன்றியமையாதது. நடன மணிக்கு அழகு சேர்ப்பதற்காக மட்டும் இவை அமைக்கப் பெறவில்லை.
பரதத்திற்கு இவ்வணிகலன்கள் அணிவது பல மகத்தான
உட்கருத்துக்களையும்
- பயன்களையும் சக்கரங்களையும் மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. நடனத்திற்கு அணியப்படும் அணிகலன்கள்: ஒட்டியாணம், பதக்கமாலை, அட்டிகை, தோடு மாட்டல், ஜிமிக்கி, நத்து மூக்குத்தி, புல்லாக்கு, நெற்றிப் பட்டம், சூரியன், சந்திரன்,
ராக்கொடி. ஒட்டியாணம் ஒட்டியாணம் என்ற சொல் இடுப்பு பகுதியை குறிக்கிறது. ஒட்டியாணம் கட்டப்படும் பகுதியாக விளங்குவது மணிபூரக சக்கரம் ஆகும். அனைத்து சுவாசங்களுக்கும் தொப்புள் கொடியே மூலப்புள்ளியாக திகழ்கிறது. இடுப்பை இழுத்துக் கட்டும் பொழுதே குண்டலினி சக்தி எழுப்பப்படுவதாக யோக சாஸ்திரம் குறிப்பிடுகிறது. ஒட்டியாணம் அணியக்கூடிய இடமான மணிபூரக சக்கரம் ஆயிரத்து எட்டு நரம்பு நாடி சூழ் நாடிக்கெல்லாம் வேராக அமைகிறது. - இந்த அணிகலனை இறுக்கமாக கட்டுவதால் முக்கிய நரம்புகள் அழுத்தம் அடைந்த நிலையில் உடலின் இரத்த ஓட்டத்தை சீரமைத்து புத்துணர்ச்சியையும் உறுதித் தன்மையையும் அளிக்கிறது. ஒரு அடவினை அரை மண்டியில் அமர்ந்து ஆடும் பொழுது கால் அசைவு, முன்பின் அசைவு, பக்க
அசைவுகள் அனைத்திற்கும்
ஒரு பிடிமானத்தைத் தரக்கூடியதாக

Page 43
அமைகிறது. முதுகெலும்பிற்கும், உடலிற்கும் தளர்வு நிலையை கொடுக்காமல் உறுதி தருவதாக ஒட்டியாணம் விளங்குகிறது. ஒட்டியாணத்தின் நடுப்பகுதியானது மற்ற பகுதியை விட பெரிதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அது மணிபூரகச் சக்கரத்தின் குறியீடாக அமைகிறது.
முத்து மாலை பதக்கம் முத்து மாலை பதக்கமானது இருதயப்பகுதியை குறிக்கக்கூடிய நான்காவது சக்கரமான அநாகத சக்கரத்தின் குறியீடாக அமைகிறது. நடனம் ஆடும்பொழுது இருதயத்துடிப்பானது வேகமாக செயல்படத் தொடங்குகிறது. பதக்கம் அணிவதன் மூலம் இருதயத் துடிப்பை சீரமைக்க உதவும் என்று கருதப்படுகின்றது. பொதுவாக நாம் வேகமாக நடந்தாலோ, ஓடினாலோ இருதயத்துடிப்பின் வேகம் அதிகரிக்கின்றது. அப்பொழுது நம் கைகள் தானாகவே இருதயப்பகுதியில் வைக்கிறோம் அல்லவா? அவ்வாறு வைக்கும் பொழுது இருதய துடிப்பானது சமநிலைப் படுத்தப்படுவதாக எண்ணம் தோன்றும். இது ஒரு வகையான நம்பிக்கை என்றும் கூறலாம். இந்த பதக்கத்தில் கிளிகள்
பொறிக்கப் பட்டிருக்கும்.
கிளிகள் மன்மதனுடைய வாகனம் ஆகும். காதல் வழியாக உருவாகும் அனைத்து .
உணர்வுகளுக்கும் நாயகனாக மன்மதன் திகழ்கிறார். ஏனெனில் காதல் போன்ற உணர்வுகள் அனைத்துமே இருதயப் பகுதியில் இருந்து எழுகின்றன என்பதை குறிப்பிடும் விதமாக பதக்கத்தில் கிளிகள் பொறிக்கப்பட்டுள்ளன.

- கலகமேசம்
43
பெ)
பிற 88
நெற்றிச்சுட்டி நெற்றிப்பட்டம் புருவ மத்திய பகுதியை குறிக்கக்கூடிய சக்கரமாக ஆக்ஞேய சக்கரம் விளங்குகின்றது. பொட்டு வைக்கும் இடமானது நரம்புகள் இணையக்கூடிய இடமாகும். இங்கே காந்த சக்தி அலைகள் எழுகின்றன. தீய சக்திகளின் தாக்கங்கள் இல்லாமலிருப்பதற்கு இத்திலகமானது இடப்படுகின்றது என்றும் நம்பிக்கை உண்டு. நெற்றிச்சுட்டியின் வட்டப் பகுதியானது ஆக்ஞேய சக்கரத்தை குறிக்கக் கூடியதாகவும் அவ்வட்டப் பகுதியிலிருந்து சீமந்த ரேகை வழியாக அமைந்திருக்கும் பாகமானது ஆக்ஞேய சக்கரத்திலிருந்து சகஸ்ராரம் வரை செல்லும் மையிற் இழை போன்ற பிரம்ம நாடியானது பிரம்மரந்திரத்தை குறிக்கக்கூடியதாக அமைக்கப் பட்டுள்ளது. நெற்றியிலிருந்து காதுவரை செல்லும்
- பாகங்கள் முத்துக்களால் அலங்கரிக்கப்
பட்டிருக்கும் அதில் சதுர அமைப்பில் - நான்கு முத்துக்களோடு அமைக்கப்
பட்டிருக்கும் பகுதியானது
- இரு பக்கங்களும் நரம்புகளிற்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய செயற்பாட்டை செய்வதனால் நரம்புகள்
புத்துணர்ச்சி
பெற்று சுறுசுறுப்பாக இயங்குகின்றன.
உதாரணமாக
நாம் கோவிலுக்கு
சென்று விநாயகரை வணங்கி தோப்புக்கரணம் இட்டு நெற்றியின்
- இரு பக்கங்களிலும் குட்டிக் கொள்கின்றோம். அதனால் நரம்புகள் புத்துணர்ச்சி பெற்று அன்றைய நாள்
மு ழு வ து ம் சோர் வி ன்றி

Page 44
'FE கா =
கலைக்கேசரி .
44

திற 1
051000
சுறுசுறுப்புடனும் விழிப்புடனும் செயல்படுவதற்கான ஆற்றலை பெறுகிறோம் என்பதனை சமயம் வாயிலாக ஆராய்ந்துள்ளது விஞ்ஞானம்.
சூரியன் சந்திரன் முதுகுத்தண்டின் ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொன்றாக இரண்டு நரம்போட்டங்கள் இருக்கின்றன. இடது பக்கத்தில் உள்ள நரம்போட்டங்களை இடாநாடி எனவும் வலது பக்கத்தில் உள்ள நரம்போட்டங்களை பிங்கல் நாடி எனவும் அறியப்படுகின்றது. சிலர் இவற்றை இடது, வலது அனுசரணை தசை நார்கள் என்றும் எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் இவை பிராணனை எடுத்துச் செல்லும் புரிந்து கொள்ள முடியாத குழாய்கள் ஆகும். சந்திரன் இடா நாடியையும் சூரியன் பிங்கல நாடியையும் குறிக்கின்றது. இப்பிராண செயற்பாடு மூக்கின் துளைகள் வழியாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது மனிதன் உலக காரியங்களில் ஈடுபடுகின்றான். ஆக அவன் உடலில் குளுமை மற்றும் வெப்பம் போன்றன சமநிலையாக பேணப்படுவதனை சுட்டிக்காட்டும் விதமாக இந்த
சூரியன் சந்திரனானது அணியப்படுகின்றது.
அட்டிகை மனித உடலில் மிக முக்கிய பாகமாக விளங்குவது கழுத்து. நம் உடலின் மற்ற உறுப்புகளிலிருந்து மூளைப்பகுதிக்கு எடுத்துச் செல்லக்கூடிய நரம்புகள் எல்லாம் கழுத்து பகுதி ஒரு பாலமாக அமைகிறது. கழுத்தில் அட்டிகை அணிவதனால் நரம்புகளுக்கு நல்ல ஊக்கத்தை தரக்கூடியதாக அமைகின்றது. அட்டிகையின் நடுவிலுள்ள வட்டப்பகுதியானது ஐந்தாவது சக்கரமான விசுத்தி சக்கரத்தைக் குறிக்கக்கூடியதாக அமைந்துள்ளது.
நத்து, மூக்குத்தி, புல்லாக்கு இடா நாடியும் பிங்கலா நாடியும் விளம்பின நாடியில் சேர்க்கப்பட்டனவாக மூக்கின் நுனிவரை செல்கின்றன. மூக்கு துளைகள் வழியாக சுவாசத்தை எடுத்துச் செல்கிறது. நடனம் ஆடும் பொழுது சுவாசமானது படிப்படியாக வேகமாக செயல்படத் தொடங்குகின்றது. இதனால் மூக்கின் அழுத்த மையப்பகுதிகளில் இதை அணிவதால் சீரான சுவாசத்தை சீரமைக்க இவை உதவுகின்றன.
அக்காலங்களில் கோயில்களில் ஆண் குழந்தையாயினும் பெண் குழந்தையாயினும் காது குத்தும் வழக்கம் விழாவாக நடைபெற்று வந்தது. உடலில் துளைகள் இட்டுக்கொள்வது என்பது எல்லாம் வல்லவரான இறைவனுக்கு தன்னை அர்ப்பணிக்கின்றேன் என்ற கருத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த சடங்குகள் நடத்தப்படுகின்றது. அக்காலத்தில் கோயில்களில் தேவதாசிகள் இறைவனை போற்றி நடனம் ஆடும் பொழுது நத்து, மூக்குத்தி, புல்லாக்கு போன்ற அணிகலன்களை அணிந்து ஆடியதால் நடனத்தின் கத
த DIF00
0L)

Page 45
060T
அாக
260) மத.
வாயிலாக தங்களை இறைவனுக்கு அர்ப்பணம் செய்கிறோம் என்ற கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்கள் என்பதை அறியக்கூடியதாக உள்ளது. இதை மையமாகக் கொண்டு இந்த அணிகலன்கள் அணியப்பட்டிருக்கலாம் எனவும் மேலும் உடலில் துளைகள் இட்டுக் கொள்வதால் உடலிலுள்ள நச்சுத்தன்மை
வெளியேற்றப்படுகிறது என்றும் அறியப்படுகின்றது.
தோடு மாட்டல், ஜிமிக்கி ஜிமிக்கியினை தாங்கும் விதமாக மாட்டல் அமைக்கப் பட்டிருக்கின்றது. ஜமிக்கி அணியும் பகுதியானது அழுத்த மையப்பகுதியாக அமைகிறது. ஆடும் பொழுது ப்ரம்மரி போன்ற வேகமான அசைவுகள் செய்யும் போது செவிப்பறையில் காக்கிலியா என்னும் திரவத்தின் நிலைப்பாட்டை சமப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. காக்கிலியா நிலை குலையும் வேளையில் மயக்கம் உண்டாகும். அக்காலத்தில் மாட்டல் அணிவது என்பது செவிக்கு ஒரு வடிகட்டியை போன்று அமைந்துள்ளதாம். ஏனெனில் ஒரு சில விடயங்கள் கேட்கப்பட வேண்டும். சிலவற்றை தவிர்க்க வேண்டும் என்பதை குறிக்கும் விதமாக அமையப் பெற்றதாகவும் குறிப்பிடப்படுகிறது.
000

2. மலைக்கேசரி
45
LB
(6)
க
16060).
ராக்கொடி தலையின் மேல் பகுதியில் கொண்டை போட்டு ராக்கொடி வைத்து பூ சுற்றப்படுகின்றது. இது ஏழாவது சக்கரமான சகஸ்ராரத்தை (ஆயிரம் இதழ் தாமரை) குறிக்கின்றது. ராக்கொடியில் அமைக்கப்பட்டுள்ள அன்னப்பறவை சின்னமானது ஞானத்தின் அடையாளமாக திகழ்கிறது. நடனம் மூலம் ஞானத்தின் வழியாக இறைவனை அடைவதை குறிக்கிறது.
ஜடைப்பின்னல்
கூந்தலை பின்னி ஜடையிடுவதை பார்த்தால் ஒரு நாகம் படம் எடுத்து நிற்பது போன்றிருக்கும். இது எதை குறிக்கிறது என்றால் குண்டலினி சக்தியை குறிக்கின்றது. இதில் காணப்படும் மூன்று பின்னல்கள் இடா நாடி, பிங்கலா நாடி, சுழுமுனை நாடியைக் குறிக்கக்கூடியதாக திகழ்கிறது. இந்த பின்னலை கீழிருந்து அதாவது குஞ்சத்திலிருந்து பார்த்தோமானால் மூலாதாரத்திலிருந்து குண்டலினி சக்தி எழுப்பப்படுவதாகவும் அது நாடிகள் வழியாக ஒவ்வொரு சக்கரங்களை கடந்து சகஸ்ராரம் சென்று அடைவதை குறிக்கும் விதமாக ஜடை இடப்படுகின்றது. இந்த ஜடையில் அணியப்படும் அணிகலன்கள் மற்றும் குஞ்சம் இவை அனைத்தும் உடலிலுள்ள ஏழு சக்கர மையங்களை குறிக்கும் முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஒட்டியாணம்
- மணி பூரகம் பதக்கமாலை
- அநாகதம் அட்டிகை
- விசுத்தி நெற்றிப்பட்டம்
- ஆக்ஞேயம் சூரியன், சந்திரன்
- பிங்கலா, இடாநாடி ராக்கொடி
- சகஸ்ராரம் குஞ்சம், ஜடை பின்னல் - குண்டலினி சக்தியை குறிக்கின்றது.
பரதநாட்டியம் கற்றுக்கொள்வதனால் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பல நன்மைகளை பெற்றுக் கொள்ளலாம் என்பது எம் முன்னோர்கள் கூறியதாகும். அவ்வுண்மைகளை யோக சாஸ்திரமும் மற்றும் விஞ்ஞான ரீதியாகவும் ஆய்வு செய்த பல அறிஞர்களும் இன்றைய நாட்டிய சமூகமும் எம் முன்னோர்கள் வகுத்த அறிவையும் அதன் உண்மையின் வழி வந்த பயனையும் எண்ணி இன்றும் வியந்து நிற்கின்றனர். ஆக உன்னத கலையாக போற்றப்படும் எமது நாட்டியக்கலை மட்டுமல்ல அதற்கு அழகு சேர்க்கும் ஆபரணங்கள் கூட மனிதனது ஆத்மாவையும் ஆத்மாவினுள் பிறப்பிக்கப்படும் சக்தியையும் சீராக பேணுவதுடன் கலையாலும் ஞானத்தை அடைய முடியும் என்ற உறுதியான ந ம் பி க்  ைக  ைய ய ம் எமக்களிக்கின்றது என்று கூறினால் அது என்றுமே மிகையாகாதவொன்றாகும். .
SE15
0 க்
கன்DெIUாக

Page 46
கலைக்கேசரி து
46 தொல்லியல்
இலங்கையில் சோழராட்சி
திருமதி. சாந்
கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் சோழர்களின் செல்வாக்கு இலங்கையில் ஏற்பட்டமை இலங்கையின் வரலாற்றில் புதியதொரு காலப்பகுப்பின் தொடக்கத்தை ஆரம்பித்து வைக்கக் காலாகியது. ஏறக்குறைய 1300 ஆண்டுகளுக்கு மேலாகத் தலைநகராக இருந்த அநுராதபுரமும், அதனை மையமாகக் கொண்டு வளர்ச்சியடைந்த நாகரிகமும் பண்பாடும் இலங்கையின் முதன்மையான வரலாற்று மரபுக்கு அடிப்படையாக விளங்கியதைக் காணலாம். அரசியல், பொருளாதாரம், பண்பாடு, சமூகம் என்பவற்றின் புதிய தொடக்க காலமாகவும், இரும்புக் காலத்தை அடுத்து வந்த வரலாற்றுக் காலத்தின் ஒன்றாம் படிநிலை வளர்ச்சிக் காலமாகவும்
அநுராதபுரக் காலம் வி ள ங் கி ய து . இ த் த  ைக ய  ெப ரு  ைம வ ா ய் ந் த இராசதானி
பொலன்னறுவையிலுள்ள முதலாம் சிவாலயம்

நினி அருளானந்தம், விரிவுரையாளர் - யாழ்.பல்கலைக்கழகம்
1ன்
ம.ை
கைவிடப்படவும், புதியவொரு நகர் இலங்கையின் இரண்டாவது இராசதானியாக மாறவும் இலங்கையில் நடைபெற்ற சோழராட்சி காரணமாகியது. அதுமட்டுமல்லாது இலங்கையின் இடைக்கால வரலாற்றையும் சோழர்களே ஆரம்பித்து வைத்து, அதற்கான சில அடிப்படைகளையும் வழங்கி இருந்தமையை சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன.
இலங்கைக்கு மிகவும் அருகிலிருக்கும் நாடாகிய இந்தியா இலங்கையின் வரலாறு, பண்பாடு, நாகரிகம் என்பவற்றின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்துள்ளமையைச் சான்றுகள் உறுதிபட எடுத்துக் காட்டுகின்றன. அவ்வகையில் தென்னிந்திய நிலப் பரப்பைக் களமாகக் கொண்டு எழுச்சியடைந்த சோழ வம்சம் மத்திய கால இலங்கையில் தனது ஆதிக்க ரீதியான செல்வாக்கை ஏற்படுத்தியமையை காணலாம். பொதுவாக இலங்கையின் வரலாற்றில் தென்னிந்திய வட இந்திய அரச வம்சங்களின் செல்வாக்குகள் படையெடுப்புக்களாகவும், பொருளாதாரம், பண்பாடு போன்ற அம்சங்களினூடாகவும் நிகழ்ந்து வந்துள்ளன. ஆனால் முதன் முதலாக படையெடுப்பின் மூலம் அரசியல் ஆதிக்கத்தை ஏற்படுத்தி, அதன் பின்னணியில் நிர்வாக பொருளாதார, பண்பாட்டுச் அலகுகளை இலங்கைக்கு அறிமுகம் செய்த பெருமை சோழ வம்சத்துக்குரியதாகும். தென்னிந்தியாவில் தஞ்சாவூரை மையப்படுத்திய மேற்படி அம்சங்கள் அயல் அரசுகள், அயல் நாடுகள் என விஸ்தரிக்கப்பட்ட தன்மையை சோழர் பேரரசு காலத்தில் அவதானிக்கலாம்.
பேரரசுச் சோழர்களுக்கு முன்பே சங்க காலச் சோழர்கள் இலங்கையுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தாலும், அவை ஒரு பக்கச் சான்றாதாரங்கள் மூலமே அறியப்படத்தக்கதாய் உள்ளன. ஆனால் பிற்கால அல்லது பேரரசு சோழர்களின் இலங்கை மீதான செல்வாக்கை அறிந்து கொள்ள இரு பக்கமும் சான்றாதாரங்கள் - கிடைக்கப் பெறுகின்றமை சிறப்பான அம்சமாகும். அவ்வகையில் சூளவம்சம் போன்ற இலங்கையின் வரலாற்று இலக்கியங்களும் இலங்கையில் சோழராட்சியின் போது கொண்டு வரப்பட்ட அல்லது புழக்கத்திலிருந்த நாணயங்கள், பொறிக்கப்பட்ட |
மெய்க்கீர்த்திகள், நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் என்பனவும் உறுதியான சான்றுகளாகின்றன. அதேவேளை தென்னிந்தியாவில் சோழர் காலத்தில் எழுந்த
இலக்கியங்களும்,
- மெய்க்கீர்த்திகள், நாணயங்கள், கட்டிட அமைப்புக்கள்
/ை

Page 47
போன்றனவும் இலங்கையில் சோழர் செல்வாக்கைப் புலப்படுத்தும் ஆதாரங்களாகின்றன.
பிற்கால சோழர்களைப் பொறுத்தவரை விஜயாலய சோழன், ஆதித்த சோழன் போன்ற ஆரம்ப கால மன்னர்களின் ஆட்சியில் பேரரசுக்குரிய அத்திவாரம் இடப்பட்டமையைக் காணலாம். 1 ஆம் பராந்தக சோழனின் ஆட்சிக் காலத்திலேயே சோழப் பேரரசு தனது ஆதிக்க விஸ்தரிப்பை அயல் நாடான இலங்கை நோக்கி நீடிப்பதற்குரிய வாய்ப்புக் கிடைத்ததெனலாம். இந்த மன்னனுடைய காலத்தில் சோழப் பேரரசின் அத்திவாரம் ஆட்டம் காண்பதற்குரிய சூழ்நிலைகள் தோன்றின. ஆயினும் அந்நிலையிலிருந்து சோழ அரசு விரைவிலேயே மீட்சி பெற்றது. இதன் விளைவாக இலங்கை மீதும் சோழர் தம்மாதிக்கத்தை நீடிக்க முடிந்ததெனலாம். இலங்கையில் சோழராட்சி ஏற்படுவதற்குரிய சூழல் முதலில் தென்னகத்திலேயே ஆரம்பித்து வைக்கப்பட்டமையைச் சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன. சிறப்பாக இராஷ்டிரகூடர், பாண்டியர், கங்கர் ஆகிய அயலரசுகளோடு ஆரம்பித்த போராட்டம் பின்னர் அயல்நாடான இலங்கையில் நிறைவடைந்தமையின் பின்னணியில் சோழராட்சிக்குரிய அத்திவாரம் இடப்பட்டது. பராந்தகனுக்குப் பின்னர் பதவியேற்ற சோழ மன்னர்களிற் பலர் இலங்கை மீது படையெடுப்புக்களை மேற்கொண்டனர். இறுதியில் கி.பி. 993 அளவில் இலங்கை சோழப் பேரரசின் ஒரு அங்கமாகியதைக் காணலாம். எனவே முதலாம் பராந்தக சோழன் கால நிகழ்வுகளே கடல் கடந்த சோழராதிக்கத்திற்கு அடித்தளம் இட்டன என்பதை மறுப்பதற்கில்லை.
பேரரசு கட்டுமாணம் நிகழ்ந்து கொண்டிருந்த நிலையில் பாண்டிய - சோழப் போர்கள் அதன் உறுதிப்பாட்டை
அடிக்கடி சோதனைக்குள்ளாக்கியது.

* கலைக்கேசரி
47
இவ்வாதிக்கப்
போர்களில்
இலங்கையின் ஆட்சியாளர்கள் பாண்டியருக்கு ஆதரவாக இருந்ததோடு படையுதவி அளித்தும் வந்தனர். இலங்கைக்கும் பாண்டியருக்கும் இடையிலான உறவு, திடீரெனத் தோன்றியவொன்றல்ல. இவ்வுறவு விஜயனுடன் தொடர்புடைய ஐதீகத்துடன் நெருக்கமுடையதாக இருந்ததை இலங்கையின் வரலாற்று இலக்கியமாகக் கருதப்படும் மகாவம்சத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. எனினும் பாண்டியர் நிலையில் சோழர் இருந்திருந்தால், சோழருக்கே அவ் ஆதரவு இருந்திருக்குமெனச் சில அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அதாவது தமிழ் நாட்டில் எழுச்சி பெறும் வம்சங்களுக்கு எதிராக செயற்படும் வம்சங்களுக்கு ஆதரவு காட்டுவதே இலங்கை ஆட்சியாளரின் நோக்கமாக இருந்தது. இதன் மூலம் எழுச்சி பெறும் வம்சங்களின் செல்வாக்கு இலங்கையில் ஏற்படாதிருக்கும் என்பதே இவர்களது கொள்கையின் அடிப்படையாகும். இத்தகைய கொள்கை கி.பி. 6 ஆம் நூற்றாண்டிலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளதாக எடுத்துக் காட்டுவது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்தியாவில் எழுச்சி பெறும் வம்சங்களின் படையெழுச்சிகளை எதிர்கொள்ளும் வல்லமை இலங்கை அரசர்களிடம் இல்லாதிருந்தமை இலங்கை அரசின் கொள்கைக்குப் பிரதான காரணமாக இருந்ததென்பதை கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது. இந்நிலையில் முதலாம் பராந்தகனின் ஆட்சிக் காலத்திலேயே இக்கொள்கை நடைமுறைப் படுத்தப்பட்டதோடு
பின்னைய
இலங்கை ஆட்சியாளரிடமும் இக் கொள்கை
செல்வாக்குப்
பொலன்னறுவையிலுள்ள மூன்றாம் சிவாலயம்

Page 48
கலைக்கேசரி 2
48
பெற்றிருந்ததை அவதானிக்கலாம். கி.பி. 915 இல் இலங்கையின் ஆட்சியாளனான 5 ஆம் காசியப்பன் (913 - 923) இலங்கையிலிருந்து படையொன்றை சோழருக்கு எதிராக பாண்டியருக்கு ஆதரவாக அனுப்பினான். இக்கூட்டுப் படைகள் வெள்ளூர் என்ற இடத்தில் போராடிய போதும் தோல்வியையே எதிர்நோக்கினார். இப்போரினை அடுத்து சோழர் பாண்டியருக்கு எதிராகப் போர்களை நடத்தியதோடு சிங்களவருக்கு எதிராகவும் படை நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில்
செயற்பட்டனர்.
வெள்ளூரில் நடந்த போர் பற்றி அறிய சூளவம்சம், சோழச் சாசனங்கள் என்பன ஆதாரங்களாகின்றன. சிங்களப் படை தோல்வியடைந்ததைச் சூளவம்சம் வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளத் தயங்கிய நிலையில், பாண்டிய மன்னனின் வேண்டுகோளின் பிரகாரம் தென்னிந்தியாவுக்குச் சென்ற படை வீரர்கள் நோயுற்றமையால் சிங்கள மன்னரால் திருப்பி அழைக்கப்பட்டதாகக் குறிப்பிடுவதைக் காணலாம். ஆனால் தென்னிந்திய சாசனங்கள் வேறுபட்ட செய்தியைத் தருகின்றது.
குறிப்பாக உதயேந்திரம் செப்பேட்டின் பிரகாரம் இலங்கைப் படை பாண்டிய மன்னன் இராஜசிம்மனின் படைகளுடன் இணைந்து பராந்தகனின் படைகளைத் தாக்கியதும், வெள்ளூரில் இக்கூட்டுப்படை தோல்வியடைந்ததும் தெரிய வருகின்றது. இத் தோல்விக்குப் பின்னர் நடந்த சம்பவங்களும் இதனை உறுதி செய்கின்றன. இதேவேளை 1 ஆம் பராந்தக சோழனின் 37 ஆம் ஆ.ஆ கல்வெட்டு 'மதுரையும் ஈழமும் கொண்ட' என்ற விருதினைச் சூடியதைப் புலப்படுத்துகின்றது. சோழர் கலை இலக்கியங்களான கலிங்கத்துப் பரணி, மூவருலா என்றவற்றிலும் இச்செய்தி இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 919 இல் மதுரை சோழ மன்னரின் வசமாகியதாக எடுத்துக் காட்டப்படுகின்றது.
55 ர்கர் 1
சோழர் கால கல்வெட்டு
சோழர் கால நடராஜர் படிமம்

மதுரையைக் கைப்பற்றிதோடு சோழர்கள் ஒய்ந்து விடவில்லை. இப்போரில் தோல்வியடைந்த பாண்டிய இராஜசிம்மன் பாண்டிய முடி மற்றும் அரச சொத்துக்களுடன் இலங்கையில் தஞ்சமடைந்தான். இக்காலத்தில் இலங்கையின் ஆட்சியாளன் பாண்டிய மன்னன் எதிர்பார்த்த உதவியை வழங்க முடியாதிருந்தமையால் தனது முடி, அரச சொத்துக்கள் என்பவற்றை இலங்கையில் வைத்து விட்டுத் தனது தாய் நாடாகிய சேர நாட்டுக்குச் சென்றான். பாண்டி நாட்டை வெற்றி கொண்ட பராந்தகனால், பாண்டியரது முடியைப் பெற்று, முடி சூடி அதிகாரத்தை நிலைநாட்ட முடியவில்லை. பாண்டியரால் வைக்கப்பட்ட அரச சொத்துக்களை தன்னிடம் ஒப்படைக்குமாறு சோழ மன்னன் இலங்கைக்குத் தூது அனுப்பிய போதும் இலங்கை ஆட்சியாளன் அதற்கு இணங்காமையால் இலங்கை மீது படையெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆயினும் பராந்தகனது எண்ணம் ஈடேறவில்லை. இத்தகைய சம்பவங்களும், சோழரின் பொருளாதார நலன்களும், சோழராட்சி இலங்கையில் ஏற்படப் பிரதான காரணங்களாக இருந்தன. கி.பி. 993 க்கு முன்னும் பின்னும் பல சோழப் படையெடுப்புக்கள் இலங்கை மீது மேற்கொள்ளப்பட்டாலும் இக் காலத்தில் முதலாம் இராஜராஜ சோழன் மேற்கொண்ட படையெடுப்பு மிகவும் முக்கியத்துவமுடையதாகும். இது வெறும் படையெடுப்பாக மட்டுமன்றி சோழ ஆதிக்கத்தை நிலைநிறுத்தி இலங்கையை, குறிப்பாக வட பகுதியை சோழ மயமாக்குவதாகவும் அமைந்திருந்தமையை அவதானிக்கலாம். இதன் பொருட்டு சோழ நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டு, சோழப் பண்பாடு இலங்கையில் செல்வாக்குச் செலுத்தவும் இதன் பின்னணியில் பல்வேறு விளைவுகள் ஏற்படவும் வழி வகுக்கப்பட்டது. இதனை இலங்கையின் வட கிழக்குப் பகுதிகளில் கிடைக்கப் பெற்ற இந்துக் கோயில்களின் அழிபாடுகள், தமிழ்க் கல்வெட்டுக்கள் என்பன எடுத்துக் காட்டுகின்றன. மேலும் முதன் முதலாக இலங்கை பிறிதொரு நாட்டாரின் ஆதிக்கத்தின் கீழ் வந்தமை இலங்கை வரலாற்றில் பிரதான நிகழ்வெனலாம். சோழராட்சி இங்கு 77 ஆண்டுகள் நீடித்தாலும் அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட பல அம்சங்கள் இரு நூற்றாண்டு காலம் நீடித்தமையைக் காணலாம்.
சோழர் தென்னிந்தியாவின் தஞ்சையைத் தமது தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தது மட்டுமன்றி அத்தலைநகருடன் தாம் கைப்பற்றிய பிரதேசங்களை ஒருங்கிணைத்துச் செம்மையான நிர்வாகத்தை நடைமுறைப்படுத்தினர். சோழர் -அந்நாடுகளை 9 மண்டலங்களாக வகுத்தனர். இலங்கை மும்முடிச் சோழ மண்டலம் எனப் பெயரிடப்பட்டு 9 ஆவது மண்டலமாக நிர்வகிக்கப்பட்டது. அது மட்டுமன்றி தென்னிந்தியாவில் பின்பற்றிய நிர்வாக அலகுகளை இங்கும் அறிமுகம்

Page 49
செய்தனர். இக்காலத்துக்குரிய விசேட அம்சம் யாதெனில் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் தாம் கைப்பற்றிய இடங்களையும், நிர்வாகப் பிரிவுகளையும் கோயில்கள், தெருக்கள் என்பவற்றையும் மன்னர்கள், பட்டத்தரசிகள் ஆகியோர் பெயர்களினால் அழைத்தமை ஆகும். தஞ்சைப் பெருங்கோயில் இராஜாஇராஜனுடைய பெயரால் இராஜராஜ சோழ ஈஸ்வரம் என அழைக்கப்பட்டமையும் இலங்கையிலும் இவ்வாறான பெயர் கொண்ட ஆலயம் அமைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. அருண் மொழித் தேவ வளநாடு போன்ற நிர்வாகப் பிரிவுகளும் இராஜராஜனின் விருதுப் பெயர்களால் குறிப்பிடப் பட்டமையும் இலங்கையில் பௌத்தப் பள்ளியொன்று இராஜராஜப்பள்ளி என அழைக்கப்பட்டதையும் காணலாம். சூளவம்சம் முதலிய இலங்கை வரலாற்றுச் சான்றுகளில் சோழர் படையெடுப்பாளராக, சமய சகிப்பற்றோராக வர்ணிக்கப்பட்ட போதும் அவர்கள் சமயப் பொறையுடன் ஆட்சி செய்தமைக்கு இது உதாரணமாகும்.
இதேவேளை தென் கிழக்காசிய மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க நாகபட்டினத்தில் சூடாமணி விகாரம் அமைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் அதற்கு ஆனைமங்கலம் என்ற கிராமத்தின் வருமானம்
செப்பேட்டின்
மூலமாக வழங்கப்பட்டமையையும் அறிய முடிகின்றது. இந்நடவடிக்கைகள் சோழரின் சமய சகிப்புத் தன்மையை எடுத்துக் காட்டுவனவாகும்.
சோழர் பொலநறுவையில் சிவ தேவாலயங்களையும் அமைத்தனர். சோழ மன்னர் பல கோவில்களை அமைத்த போதிலும் அவற்றை அடையாளம் காண முடியாத நிலை காணப்படுவதும் சுட்டிக் காட்டத்தக்கது. இதற்கு ஜரோப்பியர் ஆட்சியில் இந்துக் கோயில்கள் அழிக்கப்பட்டமையும் பிரதான காரணமாகும். தற்காலத்தில் யாழ்பாணக் கோட்டையில் இந்து கோயில் கட்டிட எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சோழராட்சி இலங்கையில் நடைபெற்ற போது நிர்வாகம், வர்த்தகம், பண்பாடு என்பவற்றைக்காக நிர்வாகிகள், வணிகர்கள், கலைஞர்கள், படையினர், பிராமணர் எனப் பலதரப்பட்டோர் குடியேறினர். இதனால் தமிழரின் எண்ணிக்கை வட கிழக்கில் முன்பு இருந்ததை விட அதிகரித்தது. பல்வேறு தரப்பினர் சோழராட்சியின் போது இங்கு குடியேறியமைக்கும், அவர்கள் இங்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்கும் பொலநறுவை, - கந்தளாய், - மானாந்கேணி, திருகோணமலை, பதவியா, மாதோட்டம், ஊர்காவற்றுறை ஆகிய இடங்களில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் ஆதாரங்களாகின்றன.
பல்லவர் காலத்தை விட சோழர் காலத்தில் வணிக கணங்குகளின் செல்வாக்கு இலங்கை, தென் கிழக்காசிய

க
, கலைக்கேசரி
49
D) 29
இ) ல் இ
சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள்
நாடுகளில் அதிகமாக இருந்ததை அவதானிக்க முடிகிறது. அனுராதபுரம், பொலநறுவை, பதவியா, புளியங்குளம், வாகல்ஹட, விஹாரகின்ன போன்ற பல இடங்களில் இவர்களது கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. இவர்கள் துறைமுகப் பகுதிகளை அண்டி வாழ்ந்தது மட்டுமன்றி நகரங்களின் எழுச்சியிலும் பங்களிப்புச் செய்தனர்.
சோழர் கால படையினரும் இலங்கையில் செல்வாக்குச் செலுத்தியமைக்கும் சான்றுகள் உள்ளன. வேளைக்காரப்படை என்ற படைப் பிரிவினர் பின்வந்த சிங்கள மன்னரின் காலத்தில் அவர்களது படையில் அங்கம் வகித்ததோடு பொலன்நறுவைத் தந்ததாதுக் கோயிலைப் பாதுகாக்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தனர்.
வணிகக் கணங்களைப் போலவே வேளைக்காரப் படையினரும் கல்வெட்டுக்களை வெளியிட்டனர். எனவே அவர்கள் பெருமளவுக்குச் சுகந்திரமாகச் செயற்படக் கூடியதாக இருந்ததெனக் கூறலாம். இவர்கள் பல தரப்பட்ட பண்பாட்டு நடவடிக்கைளில் ஈடுபட்டு இலங்கைத் தமிழரின் பண்பாட்டு வளர்ச்சிக்குத் துணையாயினர்.
சோழர்கள் இலங்கையில் ஆதிக்கம் செலுத்தியபோது தமது நிர்வாக மொழியாகத் தமிழைப் பயன்படுத்தினர். இக்கால இலங்கையில் கிடைக்கப் பெறும் சோழச் சான்றுகள் தமிழ் மொழியிலேயே வெளியிட்டனர். சிங்கள் மன்னர் பொலன்நறுவையில் ஆட்சி செய்த வேளையில் தமிழ் மொழிக் கல்வெட்டுக்களை வெளியிட்டனர்.
இலங்கைத் தமிழரின் வரலாற்றில் இங்கு நடைபெற்ற சோழராட்சி மேற்குறிப்பட்ட அம்சங்களின் அடிப்டையில் தமிழரின் தனித்துவத்தை பேணியமையை அவதானிக்கலாம். சில வரலாற்று ஆசிரியர்களின் கருத்தின் பிரகாரம் பிற்காலத்தில் வட பகுதியை மையமாக் கொண்டு தமிழர்களின் அரசு தோன்றுவதற்கும் சோழராட்சி வித்திட்டதாகக் குறிப்பிடுவர்.
எவ்வாறாயினும் எழுபத்தேழு ஆண்டுகள் இலங்கையில் ஆட்சி செய்த சோழர்கள் இலங்கைத் தமிழரின் வரலாற்று வளர்ச்சியில் குறிப்பிடத்தக்களவு செல்வாக்கைச் செலுத்தியிருந்தனரெனலாம்.

Page 50
கலைக்கேசரி து 50 நாற்றாண்டு பழைமை
Al-EY அரிசி
* Et:05:
44 பக.
கோ "
பசிமுர்
சிங்கப்பூர் இலங்க
= கா ய மாகாண்ட் போன்
கடந்த இதழ் தொடர்ச்சி... சி. அரிகிருஷ்ண நாயுடு அவர்கள் 1918 ஆம் ஆண்டு பினாங்கு எட்வார்ட் பிரஸ் மூலம் 183 பக்கங்களைக் கொண்டு புலோலி க.சுப்பிரமணியம் அவர்கள் எழுதிய 'பாலசுந்தரம்' அல்லது 'சன்மார்க்க ஜெயம்' என்னும் நாவலின் இரண்டாம் பாகத்தை வெளியிட்டார். மலேசியா Krian Licensing Board' அங்கத்தவரான நூல் ஆசிரியர் யாழ்ப்பாணம் - புலோலியைச் சேர்ந்தவர். பின்னர் புலம்பெயர்ந்து மலாயாவுக்குச் சென்றவர். மலேசிய தமிழ் நாவல் இலக்கியங்களில் ஆரம்ப காலங்களிலேயே சமுதாய சீர்திருத்தக் கருத்துக்கள் நிறைந்து காணப்பட்டன என்பதற்கு இந்நாவல் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். ஒழுக்கம், நேர்மை முதலியவற்றால் உண்டாகும் உயர்வு பற்றி இந்நாவலின் (இரண்டாம் பாகம் ) 22 ஆம் அத்தியாயம் தொடக்கம் 36 ஆம் அத்தியாயம் வரையான பகுதி விளக்குகிறது.
இந்நாவலின் கதைக் களமாக 19 ஆம் நூற்றாண்டு பிற்பகுதியில் இருந்த மலாயா நாடு கொள்ளப்பட்டுள்ளது. அந்நாட்டில் பிரித்தானியர் ஆட்சி, கோலாலம்பூர் நகரம்
உருவான விதம், அங்கு கிறிஸ்தவ சமயப் பரம்பல், இலங்கை - இந்தியத் தமிழர்களுக்கு இடையிலான பிணக்குகள் முதலிய பல
வரலாற்றுத் தகவல்கள் கதையில் 'பல இடங்களில் விதைக்கப்பட்டுள்ளன. இந்நாவலின் தொடர்ச்சி 'நீலாக்ஷி அல்லது துன்மார்க்க முடிவு' என்னும் தலைப்பில்
1923 ஆம் ஆண்டு இன்னுமொரு நாவலாக வெளிவந்துள்ளது.
பாபர்
மிகம்

கைத் தமிழ்ச் சங்கம்
மலேசியத் தமிழ் நாவல் இலக்கிய வரிசையில் முக்கிய இடம்பெறும் இந்நாவல் இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையில் தமிழ் இலக்கியப் பாலமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் 19 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்ததாலும், யாழ்ப்பாணத்தவர்கள் கல்வி அறிவைப் பெற்றுக் கொள்வதில் மிகுந்த ஆர்வத்துடன் செயற்பட்டதாலும் அங்கிருந்தவர்கள் கல்வியறிவில் சிறப்புற்றுக் காணப்பட்டார்கள். குறிப்பாக அப்பிரதேசத்தில் ஆங்கிலக் கல்வி மிகவும் முன்னேறிய நிலைமையில் இருந்தது.
அக்காலங்களில் யாழ்ப்பாணக் கல்லூரி, சுழிபுரம் விக்டோறியாக் கல்லூரி, மானிப்பாய் மெமோரியல் கல்லூரி முதலிய கல்லூரிகளில் ஆங்கிலக் கல்வி மிகவும் அபிவிருத்தியடைந்த நிலைமையில் இருந்தது. அக்கல்லூரிகளில் கல்வி கற்றவர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆதரவுடன் மலேசியா - சிங்கப்பூருக்கு (அக்காலத்தில் இரண்டு நாடுகளும் ஒன்றாக இருந்தன.) அரச உத்தியோகங்களைப் பெற்றுச் சென்றார்கள். சிங்கப்பூர் - மலேசியாவின் வரலாற்றிலும் அபிவிருத்தியிலும் உள்நாட்டுக் கட்டமைப்பிலும் எம்மவர்களுக்கு முக்கியமான ஓர் இடம் உண்டு. நாட்டை உருவாக்குவதற்காக ஏற்பட்ட கல்விச் சமூகத்தின்  ேத  ைவ  ைய யாழ்ப்பாணத்தவர்கள் தமக்கு மிகவும்
க ம ம்
- - பட்டாம்பட்டம்

Page 51
சாசகமாகப் பயன்படுத்திக் கொண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதில் அரசுடன் இணைந்து முன்னின்று உழைத்தார்கள். குறிப்பாக அரசின் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட எம்மவர்கள் அதற்கு தம்மாலான உதவிகளைப் புரிந்தார்கள். குறிப்பாக அவர்கள் அந்நாட்டின் புகையிரதக் கட்டமைப்பை உருவாக்குவதில் பெரும்பங்காற்றி உழைத்தார்கள். அங்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம் இலங்கையுடன் ஒப்பிடும்போது மிகவும் அதிகளவில் இருந்து. அவர்கள் 1960 களில் கிட்டத்தட்ட 300 ரூபாவை சம்பளமாகப் பெற்றார்கள். அக்காலத்தில் யாழ்ப்பாணத்தைப் பொறுத்த வரையில் இது மிகவும் அதிகமான வருமானமாகும். யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்தில் சிங்கப்பூர் - மாலாயன் பென்சனியர்கள் மிகவும் தாக்கம் செலுத்தினார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அதற்கு அவர்கள் தமது தாய் மண் மேல் கொண்ட பிரிக்க முடியாத பாசமே முக்கியமான காரணமாகும்.
சிங்கப்பூர் - மலாயன் பென்சனியர்களால் யாழ்ப்பாணத்தின் பொருளாதாரம் மாத்திரமல்லாமல் கலை, கலாசாரம், பண்பாடு முதலிவை மிகவும் வளர்ச்சி
அடைந்தன. யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் அவர்கள் கோயில்களைக் கட்டியெழுப்பினார்கள். பொருளாதார ரீதியாகப் பலம் பொருந்தி பண வசதி கொண்டவர்களாகவும், கலைநயம் மிக்கவர்களாகவும் அவர்கள் இருந்த காரணத்தால் குடாநாட்டின் பல சிறிய கோயில்கள் கலைத்துவம் மிக்க பெருங்கோயில்களாக மாற்றம் பெற்றன. மேலும் இங்குள்ள அறிஞர்கள் பலர் தங்கள் படைப்புக்களை நூலுருவாக்குவதில் பொருளாதார ரீதியாக பல சாவால்களை எதிர்கொண்டனர். அவ்வேளைகளில் அவர்களுக்குக் கைகொடுத்து உதவி அவர்களின் ஆக்கங்களை அச்சிலேற்றி உதவினார்கள். குறிப்பாக குடாநாட்டில் அமைந்துள்ள கோயில்களுக்கான பதிகங்களை இங்குள்ளவர்களைக் கொண்டு உருவாக்கி அவற்றை அங்கு வெளியிட்டார்கள். மேலும் இங்குள்ள சிறந்த அறிஞர்களின் நூல்களை அச்சிட்டு வெளியிடுவதில் சிங்கப்பூர் - மலாயன் பென்சனியர்கள்
முன்னின்று உழைத்தார்கள்.
யாழ்ப்பாணத் தமிழர்கள் ''திரைகடலோடியும் திரவியம் தேடு' என்னும் முதுமொழிக்கிணங்க பொருள் வளத்துக்காகவும் கல்விச் செல்வத்துக்காகவும் தேசத்தைக் கடந்து பல நாடுகளுக்குச் சென்றவர்கள். அவ்வாறு
அவர்கள் பல நாடுகளுக்குப் புலம்பெயர்ந்திருந்தாலும் தாங்கள் வாழும் நாடுகளில் கலை, கலாசாரம், பாரம்பரியம், பண்பாடு முதலிய விடயங்களை மறக்காமல் பின்பற்றுவதோடு தாய்நாட்டிலும் அவற்றை வளர்ப்பதில் முன்னின்று உழைத்தார்கள். அவ்வாறே இங்கிருந்து அங்கு சென்றவர்கள் அங்கு தங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்தாலும் தங்கள் வாழ்வியலின் ஆணி வேரை ஒருபோதும் மறக்கவில்லை. கண்ணுக்குத் தெரியாத ஏதோ
வங்கையாயாயாயாலயம் -KMAAAA

கலைக்கேசரி
51

Page 52
கலைக்கேசரி தேர்
க
க
ே
க்
ம6
ஒரு பந்தம் அவர்களைத் தங்கள் தாய் மண்ணுடன் இறுகப் பின்னிப் பிணைத்துள்ளது என்பதே உண்மை ஆகும்.
யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்ட வீடுகளில் சிங்கப்பூர் - மலாயன் பென்சனியர்கள் அதிக செல்வாக்குச் செலுத்தினார்கள். அவர்களால் இங்கு கட்டப்பட்ட வீடுகள் சிங்கப்பூர் - மலேசிய வீடுகளின் கட்டடப்பாணியில் கட்டப்பட்டன. அவ்வீடுகள் கிராமத்தவர்களால் 'சிங்கப்பூரார் வீடு' எனச் சிறப்பாக அழைக்கப்பட்டன. பெருமளவாக கல் வீடுகள் காணப்படாத அக்காலங்களில் அவர்கள் கல் வீடுகளை மிகுந்த கலையம்சத்துடன் கண்ணைக் கவரும் வகையில் அமைத்தார்கள். யாழ்ப்பாணக் கிராமத்தில் உள்ள வயது முதிர்ந்த ஒருவர் 'சிங்கப்பூரார் வீடு' தொடர்பாக இவ்வாறு கூறுகிறார். "நல்ல வசதியாக இருந்தவர்கள் அவர்கள். அதனால் தாங்கள் கட்டிய வீடுகளை நல்ல பெரிய கல் வீடுகளாகக் கட்டினார்கள்.
- காற்றோட்டத்திற்காக பெறுமதியான முதிரை, தேக்கு முதலிய மரங்களைக் கொண்டு ஜன்னல் - கதவுகளைப் பொருத்தினார்கள். மேல் மாடி வீடுகள் காணப்படாத அக்காலங்களில் சிலர் மேல் மாடி வீடுகள் காணப்பட மேல் மாடி வீடுகளைக் கூடக் கட்டினார்கள். கட்டடத்தின் உறுதிக்காக பொருட் செலவைக் கருத்தில் கொள்ளாமல் கட்டுமானக் கலவையில் சர்க்கரையும் தேனையும் மிகத் தாராளமாகக் கலந்து கட்டினார்கள். பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடுகளுக்காக மிகச் சிறந்த மரத்திலாலான வேலைப்பாடுகளைச் செய்தார்கள். பனை மரங்கள் கொண்டு கட்டுமானங்களைச் செய்யும் சந்தர்ப்பங்களில் அவ்வேலைப்பாடுகள் மிகச் சிறப்பாக இருக்குமாறு கவனித்துக் கொண்டார்கள். அவ்வாறு செய்யப்பட்ட பனை மர வேலைப்பாடுகளை வெள்ளை வேட்டித் துணி கொண்டு கீழ் இருந்து மேலாகவும் மேல் இருந்து கீழாகவும் உரசிப் பார்ப்பார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் மிகவும் கவனமாகச் செய்யப்பட்ட பனைமர வேலைப்பாடுகளின் தரத்தையும் கலையம்சத்தையும் உறுதிப்படுத்தினார்கள்.''
கிராமங்கள் தோறும் கோவில்களைக் கட்டி இந்து சமய வளர்ச்சிக்கும், கட்டடக்கலைச் சிறப்பிற்கும் பெருமை சேர்த்தவர்கள் சிங்கப்பூர் - மலாயன் பென்சனியர்கள்.

அவர்கள் கோயில்களில் அன்னதான மடங்களையும் தண்ணீர்த் தொட்டிகளையும் அமைத்தார்கள். குடாநாட்டில் பழம்பெரும் சிறப்பு மிக்க மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் வருடார்ந்த பங்குனித் திங்கள் உற்சவத்திற்கு கோயிலுக்கு வருகை தந்திருந்த பெண்மணி ஒருவர் இவ்வாறு கூறினார். "நான் பஸ் வண்டிக்காகக் காத்திருக்கிறேன். ஆண்டுதோறும் நான் இக்கோயிலுக்கு வந்து அம்மனை வழிபடுவது வழமை ஆகும். இக்கோவில் வளாகத்தில் உள்ள 'சுன்னாகத்தார் மடம்' எனது பேரனால் கட்டப்பட்டது. அவர் ஒரு சிங்கப்பூர் பென்சனியர்” எனப் பெருமையாகக் கூறினார். அக்காலத்தில் சிங்கப்பூர் - மலாயன் பென்சனியர்களுக்கு இருந்த மதிப்பும் செல்வாக்கும் அவரது குரலில் தெரிந்தது. இன்றும் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள அம்மடம் 'சுன்னாகத்தார் மடம்' என்றே அழைக்கப்படுகிறது.
மேலும் கல்விக்காக முன்னின்று உழைத்த அவர்கள் குடாநாட்டின் பல பாகங்களிலும் உள்ள பாடசாலைகளுக்கு நிதி
உதவிகளை
அள்ளிக்
11 ht

Page 53
கொடுத்தார்கள். குறிப்பாகப் பள்ளிக்கூடங்கள் தோறும் கட்டடங்களையும் மண்டபங்களையும் அமைத்தார்கள். இன்றும் அங்குள்ள பல பாடசாலைகளில் சிங்கப்பூர் - மலாயன் பென்சனியர்கள் பலருடைய பெயர்களில் பல கட்டடங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் யாழ்ப்பாண ஊடக வளங்கள் பயிற்சி நிலையம் செயற்படும் இரண்டு மாடிக் கட்டடத்தையும் காணியையும் சிங்கப்பூர் - மலேசியன் சங்கத்தினரே அன்பளிப்பாக வழங்கியதாகவும் அவ்வாறே அவர்கள் குடாநாட்டின் பல பள்ளிக்கூடங்களுக்கு உதவிகள் பலவற்றைப் புரிந்துள்ளதாகவும் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா கூறினார்.
சிங்கப்பூர் - மலேசியாவில் வாழும் இந்துக்கள் அனைவரும் தங்கள் பண்டிகைகள், விழாக்கள், விரதங்கள் முதலியவற்றை நேர்த்தியாகக் கடைபிடிக்கிறார்கள். தைப்பொங்கல், தமிழ்ப் புதுவருடம், தீபாவளி முதலிய பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள். தைப்பூசம் என்பது உலகம் முழுவதும் உள்ள சைவ மக்களால் அனுஷ்டிக்கப்படுகிறது. மலேசியாவில் அமைந்துள்ள பத்து மலை முருகன் கோவில் தைப்பூசத்திற்குப் புகழ் பெற்ற ஆலயமாகும். இவ்வாலயம் கோலாலம்பூர் நகரில் இருந்து கிட்டத்தட்ட 13 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள ஒரு சுண்ணாம்புப் பாறை மலைக்கோவில் ஆகும். மலை அடிவாரத்தில் சுங்கை பத்து ஆறு பாய்கிறது. இக்கோவில் தைப்பூச விழா உலகச் சிறப்புப் பெற்றது. ஆண்டுதோறும் சிங்கப்பூர், மலேசியா மற்றும் உலக நாடுகள் பலவற்றில் இருந்து லட்சக் கணக்கான பக்தர்கள் இவ்வாலய தைப்பூச விழாவில் கலந்து கொள்கிறார்கள். பக்தர்கள் தைப்பூச தினத்தன்று கோலாலம்பூர் மாரியம்மன் கோயிலில் இருந்து பத்து மலைக்கு அதிகாலை தொடக்கம் நேர்த்திக் கடனுக்காக நடந்தும், காவடி எடுத்தும், அலகு குத்தியும், பாற்குடம் எடுத்தும் செல்கிறார்கள். இதற்கு கிட்டத்தட்ட எட்டு மணித்தியாலங்கள் எடுக்கும். அவ்வாறு வரும் பக்தர்கள் கோயில் அடிவாரத்தில் உள்ள ஆற்றில் நீராடி 272 படிகள் கடந்து மலைக் கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவார்கள்.

கலைக்கேசரி
53
மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் அமைந்துள்ள ஜோர்ஜ் டவுன் தண்ணீர் மலை கோவிலிலும் தைப்பூசம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தமிழர்கள் மாத்திரமல்லாமல் சீனர்களும் தைப்பூசத்தைக் கொண்டாடுகிறார்கள். அதனால் மூன்று நாட்கள் நடைபெறும் தைப்பூசத் திருநாளை பினாங்கு மாநில அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. அவ்வாறே மலேசியாவில் ஈப்போ அருகில் குனோங் சீரோ என்னுமிடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணியன் கோவிலிலும் தைப்பூசம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதேபோன்று சிங்கப்பூரிலும் தைப்பூசம் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிங்கப்பூர் முருகன் கோவிலின் மூலவரான வேலுக்கு பாலாபிஷேகம் இடம்பெறும். தைப்பூசத் தினத்தன்று
முருகன் வெள்ளித் தேரில் லயன் சித்தி விநாயகர் கோவில் வரை ஊர்வலமாக சென்று மாலை மீண்டும் கோவிலை வந்தடைவார். பக்தர்கள் பாற்குடம், காவடி, தூக்குக் காவடி முதலிய நேர்த்திக் கடன்களை நிறைவேற்ற ஏனைய பக்தர்கள் பெருந்திரளாக தேரினை இழுத்துச் செல்வார்கள்.
யாழ்ப்பாணத்தில் இருந்து சிங்கப்பூர் - மலேசியா சென்றவர்கள் 'சிங்கப்பூர் பென்சனியர்', 'மலேசியன் பென்சனியர்' என ஊரில் உள்ளவர்களால் சிறப்பாகவும் பெருமையாகவும் அழைக்கப்பட்டார்கள். அவர்கள் மிகுந்த செல்வச் செழிப்புப் பெற்றவர்களாகத் திகழ்ந்ததுடன் அக்குடும்பங்களுக்கு ஊரில் நல்ல செல்வாக்கும் இருந்தது. அவர்கள் யாழ்ப்பாணக் கலை, கலாசாரம், பண்பாட்டு விடயங்களுக்கு நன்கொடைகளை அள்ளி வழங்கினார்கள். ஊரில் உள்ள அறிஞர்களை முன்னின்று கௌரவித்தார்கள். கோயில்களைக் கட்டியதுடன் கோயில் மடங்களையும் தண்ணீர்ப் பந்தல்களையும் அமைத்தார்கள். கல்வி நிறுவனங்களுக்கு உதவிகள் பலவற்றைப் புரிந்தார்கள். தங்கள் தாய் நிலமான யாழ்ப்பாணத்திற்கு பல வழிகளிலும் தனியாகவும் கூட்டாகவும் உதவிகளைப் புரிந்தார்கள். அவர்கள் மனதில் யாழ்ப்பாணம் 'இனிமையான கலையாத கனவாக' இருக்கிறது.

Page 54
கலைக்கேசரி தி
54
கறுத்தக்கொழும்பான் மாம்பழங்கள் மரத்தில் தொங்கும் காலமா இது? அங்கு மரக்கறிகள் எப்பொழுதும் நிறைந்து இருக்கும். மல்லிகை மலர்ந்து மணம் வீசும். சிறிய பாதைகள், மணல் ஒழுங்கைகள், பனை ஓலை வேலிகள் எங்கும் நிறைந்திருக்கும். - சிங்கப்பூர் அல்லது மலேசியாவில் இருந்து வரும் விருந்தினர்களுக்கு கட்டாயமாக தேங்காய்ப் பாலில் சமைத்த ஆட்டிறைச்சிக் கறி விருந்து இருக்கும். மாதுளம் பழங்களை அணில் கடிக்காமல் இருப்பதற்கு சீலைத் துணி கட்டி இருப்பார்கள். வயோதிபர்கள் கூடி இருந்து அமைதியாகச் சுருட்டுக் குடித்துக் கொண்டிருப்பார்கள். அங்குள்ள பனை மரங்கள் காற்றுக்கு ஆடுவது மிக அழகாக இருக்கும். இவ்வாறு யாழ்ப்பாணத் தமிழர்களின் பண்பாடும் பழக்க வழக்கமும் சிங்கப்பூர் - மலேசியாவில் உள்ள ஒவ்வொரு தமிழர் மனதிலும் அழியாத சுவடாகப் பதிந்திருக்கும். அங்குள்ள ஒவ்வொரு தமிழர் மனங்களும் தம் தாய் வீடான யாழ்ப்பாணம் பற்றிய இனிய கனவுகளையும் நினைவுகளையும் சுமந்திருக்கும். அவர்கள் எங்கு சென்றாலும் அவை அழியாது அவர்களின் அடிமனங்களில் நிறைந்திருக்கும்.
இங்கிருந்து அங்கு சென்ற மக்கள் தமது கலை, கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம் முதலிய விடயங்கள் மாத்திரமல்லாமல் நூல்வெளியீடு, கவிதை, கட்டுரை,
ic, (Caninkkiwi (0ND E U D A
- 1YTL)
11 9ya Rasassistan ,..
sekeurigast verbrede deur
xதுகாக
:47 78 7)
(0YYA RT! (9han:
RK 8N (I
1 # * * *!
2 7யே நாம் *ே 3 /4.07:44
24 .
சேக்களாம்
azpomale coalarz
- -
3 01,.A ட
Mardere vidente
10)
தா?: ல
*தாயம் 4 W X 2 $'
ப: எதிர்" !
NEURE (CALANA
An,ttcham70
* சிரம்தானா?
சத்தியம் காக்கக்கே?
pat 1. 8. w 1),
- சாதாரன  TATTAாப் *
.: சோலரான (arts
ப ார்க்க lேl
(1 ? A. wwland சிம் 9 {{} #8, 2".F4?s,
{atta தகம்
4 hatழக்க வல், கால்ந4:232 |
ஆக்ககரம் நீட்சி
Tenக்ஷ2 க்கான GTF R.A, {12 T. )
: Blix (ச
* {ன்றத்
54 84 2
4rg/கா"
கோடி TNTrty
Pithigal 1 பீரேசலாக 27 - 8
சர்க்க
vg52ல்(3)
நக்கத கா )
) 110x 'T A TL1 )
INDI(M

Page 55
eneens
EXPERIENCE BRIT
Now flying from Colombo to London 3 time Visit ba.com for details.
1. TEA Also English for water. 2. STONEHENGE Was it druids, greeks or aliens? Its historys you to make a royal guard laugh. 4. PHONE BOOTH Once used for phone calls. Now u go somewherel 6. DOUBLE-DECKER BUS Hop on, hop off! You have not seen Londo an antique shop. Only nothing is for sale. 8. ABBEY ROAD Home of UK's most fre 10, FISH & CHIPS Today's catch in yesterday's paper. 11. PIE The best thing to put in an in Monopoly. Now see the real thing. 13. BIG BEN The bell in the grandfather of grandfat 15. WEMBLEY STADIUM A cathedral of football and music. 16. THE TUBE Mind the Ga

BRITISH AIRWAYS
AIN
s a week.
Frouded in mystery makes it so appealing. 3. ROYAL GUARD We dare used for photoshoots. 5. RIVER THAMES Al that London rain has to en till you have been on top. 7. NATURAL HISTORY MUSEUM Like quently stolen street sign. 9. PUB Museums of the neighbourhood. English pie is your teeth. 12. OXFORD STREET You have been there eher clocks. 14, BUCKINGHAM PALACE One prince stil up for grats, p! 17. 30 ST MARY AXE Or the gherkin, as Londoners like to call it.
One ord

Page 56
கலைக்க்ேசர் 56வழிபாட்டு மரபு
கச்சியேகம்பரைத் தை
தலைவர்க்குத்
கி.பி. 150 முதலே காஞ்சி நகரம் புகழ்பெற்றுத் திகழ்கின்றது என்பதற்கான வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன. வடமொழிக் கவிஞர் காளிதாசன் 'நகரெனப்படுவது காஞ்சி நகரே' எனச் சிறப்பித்துக் கூறியுள்ளார். உச்சிக்கு மிஞ்சின நேரமுமில்லை; காஞ்சிக்கு மிஞ்சின பதியுமில்லை என்று காஞ்சியம்பதியைச் சிறப்பிக்கும் பழமொழிக்கிணங்க இந்நகரில் திருக்கோயில் கொண்டு உலகம் உய்ய அருள்பாலிப்பவரே திருவேகம்பப் பெருமான்.
அப்பர் , சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற திருத்தலம் இதுவாகும். கச்சியேகம்பரைத் தலையினால் வணங்கக் கூடியவர்கள் 'தலைவர்க்குத் தலைவர் ஆவார்' என்றும் கையினால் தொழ வல்லவர்கள் 'கடுவனையைக் களைவர்' எனவும் வருந்தி நின்று அடிமை செய்பவர்கள் 'வல்லினையை வாய்ப்பர்' எனப் புராண இலக்கியங்களிலும் இத்தலம் குறித்து ஏராளமாக பாடப்பெற்றுள்ளது. பழங்கால நூல்களில் இந்தக் கோவில் திருக்கச்சி ஏகம்பம் என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கோவிலின் முக்கிய கடவுளான சிவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள்.
இமயத்தை பெயர்த்திட முயற்சித்த இராவணனை பெருமான் தம் திருவடியின் விரலினால் ஊன்றினார். அப்போது இராவணன் வேதனையாற்றாது, தன்னைக் காப்பாற்றுமாறு ''கச்சியேகம்பனே'' என்று அபயக் குரல் எழுப்பினான். இந்த வரலாற்றை அப்பர் பெருமான் கச்சிப்பதிகத் திருக்குறுந்தொகையில் இராவணன் ஏகம்பரை நினைத்தே உய்ந்தனன் என்பதனைஇலங்கை வேந்தன் இராவணன் சென்று தன் விலங்க லைஎடுக் கவ்விர லூன்றலும் கலங்கிக் கச்சியே கம்பவோ வென்றலும் நலங்கொள் செலவளித் தானெங்கள் நாதனே என்று பாடல் வழி எடுத்துரைத்துள்ளார். பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தை இத்தலம் குறிப்பதனால் பிருதிவித் தலம் என்று மாணிக்கவாசகரால் சிவபுராணத்தில் அருளப்படுகின்றது.
சிவபெருமான் கைலையில் வீற்றிருந்தபோது பார்வதி விளையாட்டாகச் சிவபெருமானின் திருக்கண்களைத் தம் கரங்களால் மூடினார். சிவபெருமான் நெற்றிக் கண்ணைத் திறந்து இருளை அகற்றினார். விளையாட்டு வினையானதை எண்ணி தம்மை மன்னித்தருள் வேண்டுமென சிவபெருமானை வேண்டினார். அவரோ “செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்தே ஆக

லயினால் வணங்கினால் தலைவர் ஆவார்
வேண்டும். எனவே சைவ சித்தாந்தத்தின் சிறப்பை பூலோகத்திற்கு எடுத்துச் சொல்லி, தவம் செய்வதுதான் சிறந்த வழி" என்று எடுத்துரைத்தார். அம்பாள் தவம் செய்வதற்கு ஏற்ற இடத்தையும் கூறி அனுப்பினார். காஞ்சிக்கு வந்த அம்பாள் கம்பையாற்றின் அருகில் நின்ற மாமரத்தின் அடியில் மணலால் லிங்கத்தை பிடித்து வைத்து தவம் செய்தாள். அன்னைக்கு அருள்பாலிக்க எண்ணிய சிவபெருமான்,
- அந்த மாமரத்தின் மூலத்திலிருந்து தோன்றினார். பார்வதியின்மேல் மனம் போக்கினார். உமையவளோ தவனிலையிலேயே மூழ்கியிருந்தாள். தவத்தைக்
- கலைக்க எண்ணிய சிவபெருமான், கொட்டிச்சேதம் என்ற திருநடனத்தை ஆடினார். அப்போது அவர்தம் கையில் உடுக்கும் காலில் தண்டையும் ஒலித்தன. எனினும் பார்வதியோ சலனமில்லாமல் தவத்தில் ஆழ்ந்திருந்தாள். அதைக்கண்ட சிவபெருமான் பார்வதியைப் பயமூட்ட எண்ணிச் சடையில் உள்ள கங்கையின் நீரைக் கம்பையாற்றில் வெள்ளமாகப் பெருக்கெடுத்து வரும்படி
செய்தார். பாய்ந்து வரும் வெள்ளம்
கண்டு பார்வதி தன்னால்
பூ சி க் க ப் ப டு ம்
பம்
கே

Page 57
இலிங்கம் தண்ணீரில் அடித்துச் செல்லாதபடி சிவலிங்கத்தைக் கைகளால் அணைத்துக் கொண்டார். அம்பாளின் பக்தியில் மகிழ்ந்த சிவபெருமானார் மாமரத்தின் அடியில் தோன்றி அம்மைக்கு அருள்பாலித்தார். அவளது பாவத்தை மன்னித்தருளினார். திருமால் தன் தங்கை காமாட்சியைத் திருமணம் செய்து கொடுத்தார். அம்பாள் அணைத்த சிவன் என்பதால் சுவாமிக்கு 'தழுவக்குழைந்த நாதர்' என்ற பெயரும் - இருக்கிறது. இந்த வரலாறே திருவேகம்பர் திருக்கோயிலின் சிறப்புமிகு வரலாறாயிற்று.
தலவிருட்சம் உமையாள் தவமிருந்த மாமரமே இந்தக் கோவிலில் தலவிருட்சம் என போற்றப்படுகின்றது. இது சுமார் 3500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மாமரம் > எனத் தாவரவியல் வல்லுநர்களால்
க கணக்கிடப் 1 பட்டுள்ளது.
-காதா ?
தாத்

2. கலைக்கேசரி
57
இம்மாவடி சிறந்த பிரார்த்தனை செய்யும் இடமாகவும் திருமணம் செய்யும் இடமாகவும் விளங்குகிறது. இம்மரத்தின் அடியில் சிவன், அம்பாளுடன் அமர்ந்த கோலத்தில் சோமஸ்கந்த வடிவில் இருக்கிறார். அம்பாள் நாணத்துடன் தலை கவிழ்ந்தபடி சிவனை நோக்கி திரும்பியிருக்கிறாள். இதனை சிவனது 'திருமணகோலம்' என்கிறார்கள். இந்த மாமரத்தில் நான்கு கிளைகள்
உள்ளன. வெவ்வேறு காலங்களில் மரத்தில் உள்ள நான்கு கிளைகளில் நான்கு விதமான மாம்பழங்கள் காய்ப்பது இதன் தனிச்சிறப்பு. நான்கு கிளைகளும் நான்கு வேதங்களை (ரிக், யஜுர், சாம், அதர்வண) உருவகப்படுத்துகின்றன. இத்தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய சுவைகளை கொண்ட கனிகளை தருகிறது. இதனை வேத மாமரம் என்றும் அழைப்பர். மக்கட்பேறு இல்லாதவர்கள் இம்மாமரத்தின் கனியை புசித்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை
பக்தர்களிடம்
தெய்வீக மாமரம்

Page 58
"ம்.
கலைக்கேசரி த்
58
ஆழமாக காணப்படுகின்றது. இத்தல முருகன் மாவடி கந்தர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கின்றார். திருமண வரம், குழந்தை வரம் ஆகியவை இங்கு வரும் பக்தர்களின் முக்கிய பிரார்த்தனையாகும். இது திருமணத் தலம் என்பதால் இங்கு திருமணம் செய்து கொள்ள ஏராளமானோர் வருகின்றனர். சுவாமி அம்பாள் ஆகியோருக்கு வேஷ்டி, சேலை படைத்தல், அன்னதானம் செய்தல், தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகள் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்தி கடன்களாக செய்கின்றனர்.
கருவறையில் சுவாமி மணல் லிங்கமாகவே எழுந்தருளியிருக்கிறார். காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே இதுவாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு. அதனால் மூலவருக்கு அபிஷேகங்கள் நடப்பது கிடையாது. இவருக்கு வாசனைப்பொருட்கள் பூசி வெள்ளிக்கவசம் சாத்தி வழிபடுகின்றனர். அபிஷேகங்கள் ஆவுடையாருக்கே நடக்கிறது.
எல்லாச் சிவன் கோயில்களிலும் சூரியமூர்த்தி எழுந்தருளியிருக்கின்றார். ஆனால் இங்கு சூரிய பகவானும் தன் கதிர்களை இறைவனின் திருமேனியில்

ரதசப்தமி தினத்தன்று படுமாறு செய்கின்றார். அன்று சிறப்பு வழிபடுகள் நடைபெறுகிறது.
கச்சியப்ப சிவாச்சாரியார் இங்குதான் 'கந்த புராணத்தை' இயற்றினார். பின் அருகில் உள்ள குமரகோட்டம் முருகன் கோயிலில் அரங்கேற்றம் செய்தார்.
சிவன் இத்தலத்தில் அம்பாளுக்கு அருள்புரிவதற்காக கங்கையையும் ஆலகால விஷத்தின் உஷ்ணத்தால் கறுப்பு நிறமாக மாறிய மகாவிஷ்ணுவை குணப்படுத்த தலையை அலங்கரிக்கும் பிறைச்சந்திரனையும் பயன்படுத்தி இருக்கிறார். தன் திருமுடியில் இருக்கும் கங்கை, சந்திரன் ஆகிய இருவருக்கும் சிவன் இத்தலத்தில்தான் பணி கொடுத்திருக்கின்றார்.
இத்தகைய புராணம், சரித்திரம், சிற்பம் ஆகிய சிறப்புக்களைக் கொண்ட இத்தலத்திற்குக் கரிகாற்சோழன், இரண்டாம் இராசராசன், மூன்றாம் குலோத்துங்கள், விஜயநகர மன்னர்கள் ஆகியோர் திருப்பணிகள் பல செய்துள்ளனர். அண்மைக்காலத்தில் சன்னிதிகள் மற்றும் விமானங்கள் திருப்பணி செய்யப்பட்டு கடந்த 1-2 -1979 அன்று திருக்குடமுழுக்கு நடைபெற்றது. அதன் பிறகு இராஜகோபுரத் திருப்பணி செய்யப்பட்டு கடந்த 9-2-1992 அன்று இராஜகோபுரத்திற்கு மட்டும் திருக்குடமுழுக்கு

Page 59
செய்யப்பட்டது. அதன் பிறகு பதினான்கு ஆண்டுகள் கழித்து அனைத்து சன்னிதிகள், விமானங்கள் மற்றும் கோபுரங்கள் முழுவதுமாக திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த 31-8-2006 அன்று திருக்குடமுழுக்கு நடைபெற்றது.
23.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள திருவேகம்பநாதர் ஆலயத்தில் ஐந்து பிரகாரங்கள் உள்ளன. மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூன்றும் சிறப்புடன் அமைந்த கோவிலின் உள்ளே சென்றதும் நம்மை வரவேற்பது சரபேஸ்வரர் மண்டபம் என வழங்கப்படும் வாஹன மண்டபம் ஆகும்.
108 தனி லிங்கங்களும் ஒரே சிவலிங்கத்தில் 1008 சிவலிங்கங்கள் புடைப்புச் சிற்பமாக உள்ளதால், இச்சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால் 1008 சிவலிங்க்களுக்கு செய்த பலன் கிட்டும்.
சாக்கியர் புத்தமதத்தை சார்ந்திருந்தும் அன்றாடம் ஈசன் மீது கல்லை எறிந்து வழிபடுவார் சாக்கியர். ஆனால் இறைவனுக்கு எறியும் கல்லைக்கூட உள்ளன்போடு நினைத்து எறிந்ததால் அது இறைவனுக்கு மலராயிற்று. உணவு உண்பதற்கு முன் கல்லெறிந்து வழிபடும் சாக்கியர் ஒருநாள் கல்லெறிவதை மறந்து உண்ணப் புகுந்தார். அப்போது கல்லெறியும் நினைவு வர எழுந்து வந்து சிவலிங்கத்தின் மீது கல்லெறிந்தார். இறைவன் அன்பரின் பக்தியை எண்ணி வானில் காட்சி தந்து அருள் பாலித்தார்.
முதற் பிரகாரம் முதற்பிரகார பிரதான வாயிலைக் கடந்தால், பிரகாரத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள நுழைவாயிலின் அருகில் தென்பக்கம் காஞ்சியில் முத்திபெற்ற திருக்குறிப்புத் தொண்ட நாயனார், சாக்கிய நாயனார், ஐயடிகள், காடவர்கோன் நாயனார் ஆகிய மூவரின் கற்சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அடுத்து பாலசந்திர விநாயகர், ஸ்படிகலிங்க மூர்த்தி, பிரளயங்காத்தநாதர் சிவலிங்கம் வைக்கப்பட்டுள்ளன. பிரகாரத்தின் தெற்குப் பகுதியின் கிழக்கு மேற்கு வரிசையில் முதற்கண் ஒரு விமானத்தில் சமயக்குரவர்கள் நால்வர் காட்சி தருகின்றனர்.
பிரகாரத்தின் வடக்குப் பகுதியில் மேற்கு - கிழக்கு வரிசையில் மார்க்கண்டேசுவரர் சிவலிங்கம், மத்தளமாதவேஸ்வரர் சிவலிங்கம், திருமால் பூசித்த சுயம்பு லிங்கம், கள்ளக்கம்பர். அடுத்துள்ளவை அறுபத்து மூன்று நாயன்மாரின் உற்சவ மூர்த்தங்கள். திருமஞ்சனக் கிணறு, சண்டேசுவரர் சந்நிதி, இப்பகுதியின் மத்தியில் மூலஸ்தானத்திற்கு அருகில் தெற்கு நோக்கி அமைந்துள்ளன.
கோயில் முன்மண்டபத்தில் திவ்யதேசங்களில் ஒன்றான நிலாத்திங்கள் துண்டபெருமாள் சன்னதி இருக்கிறது. திருப்பாற்கடலில் அமிர்தம் கடைந்தெடுக்கும் காலத்தில் மகாவிஷ்ணுவுக்கு ஏற்பட்ட வெப்பம் நீங்குவதற்கு ஈசான பாகத்தில் தியானம் செய்து சிவனுடைய சிரசிலிருந்து சந்திர ஒளி விஷ்ணு மேல் பட்டு வெப்பம் நீங்கி சாந்தி

112iோ E

Page 60
கலைக்கேசரி தி
60
பா பண4-லா.சவா
அடைந்ததால் நிலாத்துண்ட பெருமாள் எனும் பெயர் பெற்றார். பிறைதுண்டவார் சடையாய்இ பெருங்காஞ்சி எம்பிஞ்ஞகனே என்று அப்பர் பாடினார்.
இரண்டாம் பிராகாரம் இப்பிராகாரம் முதற் பிராகாரத்தையும் மாவடியையும் ஒட்டி அமைந்திருப்பது திருக்கோயிலிக்கு அழகான தனித் தன்மையை நல்குகிறது.
இந்த அம்பிகைக்குத் தனியாகக் - கோவில் பவித்திர மண்டபத்திற்கு எதிரில் உள்ளது. இங்குள்ள அம்பிகை உலக ஒடுக்கக் காலத்தும் அழிவு வாராது காக்கும் தெய்வமாதலின் பிரளய கால சக்தி எனப் பெயர் பெற்றாள். பிரளய கால சக்தி ஏழு கைகளில் ஆயதங்களை ஏந்திக்கொண்டு ஒரு கையை இடது தொடைமேல் வைத்துக் கொண்டிருக்கிறாள். சித்திரை மாதக் கோடையின் வெப்பத்தைத் தணிக்கும் பொருட்டு இளநீர் அபிஷேகம் மிகச்சிறந்த முறையில் செய்யப்படுகின்றது.
மூன்றாம் பிரகாரம் இப்பிரகாரத்திலிருந்து இரண்டாம் பிராகரத்திற்குள் புகும் வாயில் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. துவார பாலகர்களுக்கு மேலே சுவரில் தெற்கே கணபதி உருவமும் வடக்கே ஆறுமுகர் உருவமும்
அமைக்கப்பட்டுள்ளன.
மூலவர்க்கு நேர் எதிரில் நந்தி, கொடிமரம், பலிபீடம் அமைக்கப்பட்டுள்ளன. இவைகளுக்கு நேராக மண்டபத்திற்கு வெளியில் மகாநந்தி கம்பீரமாக மூலவரை
நோக்கியிருப்பது அழகாக உள்ளது.
நான்காம் பிரகாரம் இப்பிராகாரத்தில் சரபேசர் மண்டபம், நடராஜர் நந்தவனம், கம்பைத் தீர்த்தம், ஆயிரக்கால் மண்டபம் உள்ளன.
ஆயிரங்கால் மண்டபத்தில் விகடச் சக்கர விநாயகரும் முருகனும் உள்ளனர். விகடசக்கர விநாயகரே தலவிநாயகர்

ப: ANTHE கோடியா
ஆவார். இந்த மண்டபம் மிகத் தூய்மையாகப் பாதுகாக்கப்பட்டு ஆன்மீக நிகழ்ச்சிகள், ஆகம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆயிரம் கால் மண்டபத்துக்குள் இரண்டு மேடைகளும் மண்டபத்துக்கு மேலே ஒரு மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவத்தின் போது காமாட்சியம்மன் கன்னிகாதானம் செய்து வைப்பதற்காக வரும் வரதராஜப் பெருமாளுக்காக ஒரு மேடையும் ஏகாம்பரநாதருக்காக ஒரு மேடையும் என அமைக்கப்பட்டுள்ளது.
ஐந்தாம் பிரகாரம் இப்பிராகரம் கோயிலின் வெளிப்புற மதிற் சுவற்றைச் சுற்றி நாற்புறமும் உள்ள வீதிகளைக் கொண்டது. தெற்கு வாயிலில் காணப்படும் பெரிய இராஜ கோபுரம் விஜயநகர அரசனான கிருஷ்ண தேவராயரால் கி.பி 1509 இல் கட்டப்பட்டது. இராஜ கோபுர நுழைவாயிலுக்கு மேற்குப் பக்கத்தில் கோலவள்ளி தெய்வானையுடன் மயில் மீதமர்ந்த ஆறுமுகம் பெருமானும் கிழக்குப் பக்கத்தில் விநாயகரும் மிகப்பெரிய உருவில் இருந்து அருள் பாலிப்பது வேறு எந்த ஆலயத்திலும் காண முடியாது. ஒன்பது நிலை கொண்ட 192 அடி உயர அழகிய வேலைப்பாடுகளமைந்த இராஜகோபுரத்தின் முதல் தளத்தின் மேலுள்ள வெளியிடத்தில் கிருஷ்ணதேவாராயர் தம் அரசியல் அலுவலர்களுடன் இருப்பது போன்ற உருவங்கள் உள்ளன.
வழிபாட்டுக் காலங்களும் முறைகளும் இக்கோயிலில் நாள்தோறும் ஆறு கால் வழிபாடுகள் நடக்கின்றன. அவை நித்திய பூஜை எனப்படும். இவை பின்வரும் காலமுறைப்படி நடைபெறுகின்றன.
திருக்கோயிலில் நிலாத்துண்டப் பெருமாளுக்கு எதிரில் உள்ள கிணற்று நீரே அபிஷேக நீராகப் பயன்படுகிறது. இத்திருக்கோயிலில் நாள்தோறும் நடக்கும் பூஜைகளோடு நைமித்திய காமிக பூஜைகளும் நடைபெறுகின்றன.

Page 61
விடியற்கால பூஜை (காலை 6-7 மணி), காலசந்தி பூஜை (8 - 8.30 மணி), உச்சிக்கால பூஜை (நண்பகல் 11- 12 மணி), மாலைக்கால பூஜை (பிரதோஷகாலம் 5 - 5.30 மணி), சாயங்கால பூஜை (சாயரட்சை 6 - 7 மணி), இரவு பூஜை (அர்த்த சாம் வழிபாடு - இரவு 8.45 - 9 மணி) இப்பூஜைகளைச் சிறப்புடன் செய்வதற்குரியவர்கள் வெவ்வேறு பெயர்களால் அழைப்பர். | கோயிலில் பூஜைகளைச் செய்பவரை அர்ச்சகர் என்றும், பூஜைக்கு உரியதான மந்திரங்கள், வேதங்கள் ஆகியவற்றைச் சொல்பவரை வாசகர் என்றும், பூஜை காலங்களில் இறைவனுக்குப் புஷ்பங்களாலும் அணிகலங்களாலும் அலங்காரம் செய்பவரை அலங்கிருதர் என்றும் பூஜைக்குரியக் கருவிகளைக் கொடுத்து உதவி செய்பவரைச் சாதகர் என்றும் கூறுவர்.
ஆகமங்களை உணர்ந்து அதன்படி நாளும் தவறாது நைமித்திய கிரியைகளைச் செய்பவர் ஆசாரியர் ஆவார். கோவிலில் உள்ள ஆசாரியர் அர்ச்சகர், அலங்கிருதர், வாசகர், சாதகர் ஆகிய ஐவரையும் பஞ்சாசாரியார் என
அழைப்பர்.
சிறப்பான சிற்பங்கள் திருக்கோயிலின்
நவக்கிரகத்தை
வணங்கி உள்ளவாயிலுக்கு அருகில் இருக்கும் படிகளில் இறங்கும்போது ஒரு தூணில் நரசிம்மம் இரணியனைப் பிளக்கும் சிற்பமும்இ எதிர்த் தூணில் பிட்சாடனர் சிற்பமும் சிறப்பாகக் காணப்படுகின்றன. -
கோவிலில் வாகன மண்டபத்தில் முதல் தூணில் இறைவன் தியான நிலையில் அமர்ந்து இருக்க, அம்பிகை பக்கத்தில் நின்று இறைவனின் வலக்கண்ணைத் தன் இடக்கையால் மூடுகின்ற சிற்பம் செதுகப்பட்டுள்ளது. இதன் கீழ் நந்தி முனிவர்களின் உருவங்கள் உள்ளன..
கோவிலில் உள்திருச்சுற்றில் உலகுக்கு ஒளியைத் தரும் சூரியபகவானின் திருமேனி இங்கு அழகுடன் விளாங்குகிறது. கோவிலில் இராசகோபுரத்திற்கு எதிரில் உள்ள பதினாறுகால் மண்டபத்திலுள்ள தூண்களில் உள்ள
கம்பா தீர்த்தம்

, கலைக்கேசரி
61
இராவணன் பத்துத் தலைகளுடனிருப்பதையும் திருமால் ஆமை அவதாரத்தில் சிவலிங்க பூஜை செய்வதையும் மார்கண்டேயர் தம் இறுதிக் காலத்தில் சிவலிங்கத்தைத் தழுவிக் கொள்ள முயலுதலையும் உமையம்மை சிவலிங்கத்தைத் தழுவிக் கொள்ளுதலையும் கண்ணப்பர் தம் கண்ணைப் பெயர்த்துச் சிவலிங்கத்திற்கு வைக்க இருப்பதையும் காட்டும் சிற்பங்கள் அழகானவை.
இக்கோவிலில் நான்கு கால் மண்டபத்தில் விகட சங்கர விநாயகர் சக்கரத்தோடு இருப்பதையும் சிவபிரான் முயல்களைக் காலால் மிதித்தலையும் முருகன் வள்ளி தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்துள்ள சிற்பங்களையும் காணலாம்.
ஆயிரக்கால் மண்டபத்தில் உள்ள தூண்களில் சிம்மம் கலசம், தாடி, கும்பம், பலகை, பொதிகை முதலிய அமைப்புகளெல்லாம்
உடைய
சிற்பங்கள் காணப்படுகின்றன.
ஓவியக்கலை ஏகாம்பரநாதர் கோவிலில் விசயநகர மன்னர்களின் - ஓவியங்களே ஆங்காங்கு சில இடங்களில் காணப்படுகின்றன.
ஆயிரக்கால் மண்டபத்திலுள்ள விதானத்தில் வண்ண ஓவியங்கள் இன்று அழிந்து காணப்பட்டாலும் அக்காலத்து ஓவியங்களில் கலைத்திறனை எடுத்துக் காட்டுவனவாக உள்ளன. விசயநகர மன்னர்கள் காலத்து ஓவியத்துக்கே உரிய மஞ்சள், காவி, கருமை ஆகிய நிறங்கள் ஓவியங்களில் தீட்டப்பட்டுள்ளன.
இங்கு உள்ள உருவங்களின் விழிகள் நீண்டும் உருவங்கள் பக்கவாட்டிலும் காணப்படுகின்றன.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பஸ் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவிலும் காஞ்சிபுரம் புகைவண்டி நிலையத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
-பஸ்ரியாம்பிள்ளை ஜோண்சன்
அமுயயாடு நமது

Page 62
FIESE EWEREDETE


Page 63
சுவாமி விவேகானந்தரின் சரிதம்
சர்வமத சமரஸஞானியாக விளங்கிய ஆன்மீகச் சிங்கம் சுவாமி விவேகான தரது 150 ஆவது பிறந்த ஆண்டு (1863 - 2013) விழா கொண்டாட்டம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. உரை நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சி, ஊர்வலங்கள் எனப் பல்வேறு விதமாகவும் அன்னாரின் பிறந்த ஆண்டு மக்களால் கொண்டாடப்பட்டு போற்றப்படுகிறது.
சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளும் செயற்பாடுகளும் மனிதனைத் தெய்வமாக்கு தல் என்ற அவருடைய பிரபஞ்சம் முழுவதுக் குமான செய்தியை வெளிப்படுத்துவதாக அமைந்தது. சுவாமிஜியின் வாழ்க்கை வர லாற்றை நாட்டிய நாடகமாக வழங்கும் ஒரு நிகழ்வு, கடந்த 21.04.2013 அன்று மாலை கொழும்பு இராமகிருஷ்ண மண்டபத்தில் நடைபெற்ற சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த ஆண்டு விழாவில் இடம்பெற்றது.
சுவாமி சர்வரூபானந் தஜி மஹராஜ் மற்றும் இந்து சமய கலாசார திணைக்கள பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் ஆகியோரின் உரையைத் தொடர்ந்து அபிநயக்க்ஷேத்ரா நடனப்பள்ளி மாணவிகள் இந்நாட்டிய நாடகத்தினைச் சிறப்பாக வழங்கி சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றையும் அவர்தம் செய்தி யையும் வெளிப்படுத்தினார்கள். அபிநயக் ஷேத்ரா நடனப்பள்ளி இயக்குநர் பரத கலைவித்தகர் செல்வி திவ்யா சிவனேசன் இந்நாட்டிய நாட கத்தைச் சிறப்பாக நெறியாள்கை செய்திருந்தார். இந்தியா - இலங்கை மன்றம் இதற்கான இணை அனுசரணையை வழங்கியிருந்தது.

(நாட்டிய நாடகம்)

Page 64
கலைக்கேசரி தி 64 பாரம்பரியம்
வெள்ளைப் பூண்டு
டாக்டர் திருமதி. விவியன் சத்தியசீலன், சிரேஷ்ட
இது இந்தியாவில் பெரும்பாலும் எல்லாப் பாகங்களிலும் பயிராகும் ஒரு பூண்டு. இதற்கு காரம்
அதிகம். நீலகிரியில் இருந்து வரும் பூண்டுக்கு மருத்துவப் பண்புகள் அதிகம். ஆனாலும் இலங்கையில் உலர்சரக்காக எங்கும் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் பயிரிடப் படுவதில்லை.
சன்னியொடு வாதந் தலைநோவு தாள்வலி மன்னிவரு நீர்க்கோவை வன்சீதம் - அன்னமே உள்ளுள்ளி கண்பாய் உளை மூல ரோகமும் போம் வெள்ளுள்ளி தன்னால் வெருண்டு.
முப்பிணி, வளிநோய்கள், ஐயத்தலைவலி, வாய்நோய், நீரேற்றம், சீதக்கழிச்சல், மூலம் இவைகட்கும்
கொடுக்கலாம்.
பூண்டின் தாயகம் மத்திய ஆசியா ஆகும். இதுஒரு பலபருவ குறுஞ்செடியாகும். இதன் தரைக்கீழ்த் தண்டு குமிழ் வகையினது. ஒரு மீற்றர் உயரமுடையது. தரையாத்தண்டு மூலம் வளர்க்கப்படுகிறது. விதைகள்
அரிதாக உருவாகின்றன.
வெள்நளித் திரிகறி மேற்கையாந்தகரையி லுள்ள லொன் றுந்தின வுப்பச் நோய் கெடும். வெள்ளைப் பூண்டுத்திரி, மிளகு, கையாந்தகரை இம்மூன்றும் ஒரு நிறையாய் சேர்த்து அரைத்து சாப்பிட வயிற்றுப்பிசம் நீங்கும். பிரசவித்த பெண்களுக்குச் 'சரக்கு' அரைத்துக் கொடுக்கும் வழக்கம் உண்டு. இச் சரக்கில் உள்ளியும் சேர்க்கப்படுகிறது. இதனால் கர்ப்பாசயம் வலுப்பெறும். கர்ப்பாசயக் கழிவுகள் வெளியேறும். தாய்ப்பாலை அதிகம் சுரக்கச் செய்யும். இதனால்தான் 'ஏந்திளைக் கீருள்ளி ஏற்ற முலைப்பாலே' என்ற பழமொழியும் உண்டு. உள்ளியின் கந்தகச் சத்து கணிசமான அளவு உள்ளது. உள்ளியில் நாற்றத் திற்கு இதுவே காரணம். கந்த கத்திற்கு விரண
மாற்றிச் செய்கை உள்ளது. எனவே
ப ப ன ப ய-ச------- சா.

- விரிவுரையாளர்
மாதவிடாய், பிரசவம் என்பவற்றை அடுத்து கற்பாசயத்தில்
ஏற்படும் புண்களை ஆற்றுவதில் இது உணவு மருந்தாக அமைகின்றது.
இதன் குமிழில் பூண்டுப்பற்கள் எனும் (Cloves) பகுதிகள் உள்ளன. இவற்றை நசுக்கினால் நெடியான வாசனை வரும் இதுவே இதன் மருத்துவப் பண்புகளின் அடிப்படையாகின்றது.
நுண்ணுயிர் எதிர்ப்பு மருத்துவர் தயாரிப்பிற்கு ஆதிகாலத்தில் பூண்டு அனைத்து வகையான நோய்களுக்கும் மருந்தாக பயன்படுத்தப்பட்டது. பூண்டுரசம் உடல்வலியைப் போக்கும். பூண்டு ஓர் காயகற்ப மூலிகையாகும். நீண்ட ஆயுளைப் பெறவிரும்புவோர் ஏதாவது ஒரு விதத்தில் பூண்டை தங்கள் உணவோடு அன்றாடம் சேர்த்துக் கொள்ள
வேண்டும்.
வெள்ளைப் பூண்டு, மிளகு, பனைவெல்லம் ஒவ்வொன்று 2 கிராம் எடுத்து அரைத்தச் சாப்பிட்டால் வாயுக்கோளாறுகள் தீரும்.
வெள்ளைப்பூண்டு 2 பல்லுடன் சிறிது
வாதநாராயணனி இலையை சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் மூட்டுவாதம் மற்றும் இருதய
நோய்கள் குணமாகும்.
வெள்ளைப்பூண்டு மூன்று பல்லு, கடுகு 4 தேக்கரண்டி இரண்டையும் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி
அதை நெஞ்சுப் பகுதியில் தேய்த்தால் மார்புச் சளி
கரையும்.

Page 65
நல்லெண்ணெயில் சிறிது பூண்டு சேர்த்து காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும். இதில் இரண்டு சொட்டுக்களைக் காதில் விட்டால் காதுவலி, காது மந்தம் காது இரைச்சல் போன்றவை தீரும்.
பூண்டு சிறிது உப்பு இரண்டையும் சூடுபடுத்தி பூண்டை இடித்துச் சாறு எடுத்து அதைச் சுழுக்கு ஏற்பட்ட இடத்தில் தடவினால் சுழுக்கு உடனே குணமாகும்.
பூண்டை நன்றாக அரைத்துக் கட்டிகள் மீது வைத்துக் கட்டினால் அவை உடனே உடைந்து குணமாகும்.
பூண்டு 2 பல், ஓமம் 4 தேக்கரண்டி, மிளகு 3 இவை மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புழு சாகும், கொழுப்புக் கரையும், உடற்பருமன் குறையும்.
பூண்டு, சீரகம், இஞ்சி ஒவ்வொன்றும் 5 கிராம் எடுத்து இடித்து பனைவெல்லம் சேர்த்து கசாயம் காய்ச்சிக் குடித்தால் தலைவலி தலைப் பாரம் மூக்கடைப்பு நீங்கும். பூண்டுப் பற்களை பசுப்பாலில் போட்டு வேகவைத்து பூண்டையும் சாப்பிட்டு பாலையும் பருகிவர
வாயுத்தொல்லை நீங்கும்.
பூண்டு, கற்பூரம், எலுமிச்சப்பழச்சாறு இவை மூன்றையும் சேர்த்து அரைத்து தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் பேன் தொல்லை தீரும்.
பூண்டு, சுண்ணாம்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நகச்சுத்தின் மீது பூசினால் நகச்சுத்து விரைவில் குணமாகும்.
பூண்டு, வெங்காயம் இரண்டையும் சம அளவாக எடுத்து நெய்யில் வதக்கிச் சாப்பிட்ட வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பூண்டை வெள்ளாட்டுப் பாலில் கலந்து வேகவைத்து பூண்டையும் சாப்பிட்டு பாலையும் அருந்திவர நீர்க்கடுப்பு, சீதபேதி நீங்கும்.
குறிப்பு : வெள்ளாட்டு இனமானது நீண்ட செவியுள்ள கறுப்பு இன ஆடாகும். இதனை அவிழ்தது மேய விடுவதால் பல இன பச்சிலைகளை (மூலிகைகளை) உணவாக எடுப்பதால் அதன் பால்தரமானதாகும். ஆகவே தான் சித்த மருத்துவத்தில் வெள்ளாட்டுப் பால் முக்கிய இடம் வகிக்கின்றது.
பூண்டுச்சாறு 10 மில்லி அதில் 5 கிராம் வெல்லம் கலந்து சாப்பிட்டால் சளி, இருமல் குணமாகும்.
பூண்டை அரைத்து முகப்பருக்கள் மீது தடவி வந்தால் அவை விரைவில் மறையும்.
பூண்டுச்சாறு, எலுமிச்சம்பழச்சாறு இரண்டையும் சம அளவு எடுத்து படை, சிரங்கு மீது தடவிவந்தால் அவை விரைவில் குணமாகும்.
பூண்டை உணவில் அதிகமாக சேர்த்துக் கொண்டால் இரத்த அழுத்தம் சீராகும்.
4 கிலோ பூண்டை தோல் நீக்கி சிறுசிறு கீற்றாக வெட்டி 300 மில்லி தூயதேனில் போட்டு 2 கிழமைகள் ஊறவிட்டு பின்பு 1 தேக்கரண்டி வீதம் தினமும் சாப்பிட்டு வர

இ, கலைக்கேசரி
65
பொ 3ெ
உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலில் நோய்கள் அணுகாமல் பாதுகாத்துக் கொள்ளும். 100 கிராம் உலர்ந்த பூண்டில் உள்ள சத்துக்கள் புரதம்
- 6.3 கிராம் கொழுப்பு
- 0.1 கிராம் நார்ப்பொருள்
- 0.8 கிராம் காபோஹைதரேற்று - 28.8 கிராம் கல்சியம்
- 30 மி. கிராம் பொஸ்பரஸ்
- 310 மி.கிராம் இரும்பு
- 1.3 மி.கிராம் தயமின்
- 0.06 மி. கிராம் ரைபோ பிளேவின் - 0.23 மி. கிராம் நியாசின்
- 0.4 மி.கிராம் உயிர்ச்சத்து C - 6 மி. கிராம் சக்தி
- 140 கி.கலோரி பூண்டின் தாவரவியற்பெயர் - Allium Sativum
குடும்பம்
- Liliaceae ஆங்கிலப் பெயர்
- Garlic சிங்களப் பெயர்
- Suthu Lunu பொன்னாங்கண்ணிக் கீரையுடன் 10 பல் பூண்டு ஒரு பிடி பாசிப்பருப்புச் சேர்த்து வேகவைத்து வினாகிரி சாப்பாட்டில் சேர்த்து உண்டு வர மூலநோய் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும்.

Page 66
கலைக்கேசரி பத்து. 66
பிரசவித்த பெண்களுக்கு பூண்டுலேகியம் நல்லமருந்து இதற்கு சுக்கு 25 கிராம், திப்பிலி 5 முறுக்கிதிப்பினி 5 கிராம், ஓமம் 2 தேக்கரண்டி, வாய்விளங்கம் 2 கிராம், கருப்பட்டி வெல்லம் 250 கிராம் ஆகியவை தேவைப்படுகின்றன.
மருந்துச் சரக்குகளை (வெல்லம் தவிர்ந்த) வாணலியில் மென்மையாக வறுத்து இடித்து பட்டுப்போல் அரித்து வைத்துக் கொள்ளவும் தோல் நீக்கிய பூண்டு 10 பற்களை ஒரு டம்ளர் பாலில் நன்கு வேகவைத்து மத்தால் நன்கு கடையவும். இதில் கருப்பட்டியையும் பொடி செய்த மருந்துச் சரக்குகளில் 1 தேக்கரண்டி தேன் கலந்து கிளறி அதிகாலை 5 மணிக்கு பிரசவித்த பெண்களுக்கு வெறும் வயிற்றில் வாரத்திற்கு மூன்று முறை கொடுக்க இடுப்பு பலமடையும். பால் சுரக்கும். கர்ப்பப்பையில் கோளாறு
ஏற்படாது. சாப்பிட்ட பின்பு இரண்டு மணி நேரத்திற்கு தண்ணீர் குடிக்கவோ சாப்பாடு சாப்பிடவோ கூடாது. அப்போதுதான் லேகியம் இலகுவில் அகத்துறிஞ்சப்படும். அதன்பின் பசிதானாகவே எடுக்கும். அப்போது சாப்பிடலாம்.
ஒரு டம்ளர் பசுப்பாலில் 10 பற்கள் உரித்த பூண்டைப் போட்டு நன்கு வேகவைத்து அதில் ஒரு தேக்கரண்டி பனங்கற்கண்டை போட்டு கலக்கி பூண்டை எடுத்து மென்று தின்று பாலைக்குடிக்க இரத்தம் விருத்தியாகும். இரத்த அழுத்தம் குறையும்.
உள்ளியை உப்பில் ஊறவைத்து பதம்செய்யப்பட்ட ஊறுகாயை உணவுடன் சேர்த்து பயன்படுத்தினால் உண்ட உணவை இலகுவில் ஜீரணிக்கச் செய்யும்.
வெள்ளைப் பூண்டு, வசம்பு, புக்கம் பூ, சீரகம், நன்னாரிவேர் ஆகிய 5 சரக்குகளிலும் ஒவ்வொன்றிலும் 30 கிராம் வீதம் எடுத்து பசும்பால் விட்டரைத்து சுத்தமான ஆமணக்கு எண்ணெய் 400 மில்லி எடுத்து அரைத்து வைத்திருக்கும் சரக்கினை அதில் போட்டு கலக்கி அடுப்பிலிட்டு காய்ச்சும்போது இருந்து சரக்குகளின் சடசடப்பு ஓசை அடங்கும். பின்பு சிறிதுநேரம் கழித்து எண்ணெயை இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்தவும். வளர்ந்தோர் வேளைக்கு 1 தேக்கரண்டி எடுக்க மலம் இளகி வெளியேறும் இலேசாக பேதியானால் மருந்து கொடுக்கப்படுவரை நிறுத்தப்படும்.
வெள்ளைப்பூண்டு, ஊமத்தம்வேர், வசம்பு ஆகிய மூன்றையும் எடுத்து 50 கிராம் (சம் அளவு) வீதம் எடுத்து நன்றாக நசுக்கி 500 மில்லி நல்லெண்ணெயில் போட்டு அடுப்பிலிட்டுக் காய்ச்சி எண்ணெய் கொதித்து சிவக்கும் தருணத்தில் இறக்கி ஆறவிட்டு கண்ணாடி புட்டியில் பத்திரப்படுத்தி ஆறாத புண்கள் மீது தொடர்ந்து தடவிவர புண்கள் ஆறும்.
பூண்டை தோல் நீக்கி மைபோல அரைத்து சுத்தமான பருத்தித்துணியில் பூசி திரிபோல திரித்து உருக்கி வரும் எண்ணெயை தேனில் கலந்து வாய்ப்புண்ணிற்கு பூசிவர வாய்ப்புண்கள் ஆறும்.'


Page 67
இனிமையான நேரங்களில் இணைந்திடும்.
11 E கடாபய
G கமே
Since 1976
தொன்
E-mail:

ணஷ் டெக்ஸ்டைல்ஸ்
(பிரைவேட்) லிமிட்டட் 81-83, மெயின் வீதி, கொழும்பு 11. லைபேசி: 2325128, 2343078 பெக்ஸ்: 2458937 info@ganeshtextiles.com www.ganeshtextiles.lk
Six sol

Page 68
Sിനിമാ
1 - 1
Printed and published by Express Newspapers (

இலங்கையின் அரவணைப்புடன் கூடிய
புன்முறுவலை கண்டறியுங்கள்!
அது பல்லாண்டு காலமாக எண்ணற்ற இதயங்களை அரவணைத்த பெருமைமிக்க
ஒரு பாரம்பரியத்தின் பகுதியாகும்.
இலங்கையிலுள்ள நாம் ஒவ்வொரு பயணத்தையும் மறக்க முடியாத அனுபவமாக மாற்ற நேசத்துடன் - கூடிய தனித்துவமான பண்பினை அதி நவீன
தொழிநுட்பத்துடன் இணைத்துள்ளோம்.
அழையுங்கள் 1979
Srilankan
www.Srilankan.com
Airlines Y08/'{ 2 }{{ w9YYY
eylon)(Pvt)Ltd,at No.185, Grandpass road,Colombo -14, Sri Lanka.