கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகவிழி 2012.10

Page 1
- , விழி 08
பார்வை
அக
ஆசிரிய
Prof. Daya Rohana Athukorala வைத்திய நிபுணர் D.V.J. ஹரிச்சந்திர
தை. தனராஜ்
- கலாநிதி சசிகலா 6 கலாநிதி கோணாமலை கோணேசர் !
/www.eluthu.org.

1, 1'
பா.
IE -2 #: :
ளாம் ர் ர் ப் ப -
" - 5 21:14
பெ
பாபர் 11-11 - 224 -
கேக் - - பயன்பாட்டம்
க - - - -
இது 5 பேர்
- 1721 பெப் 1!" : 0 1
பய க ப ட ப ட
1. பட் ய பம்.
பாபப். 1 1 0 5
பாக்சர் - h: பார்ப்போம் !
பாபரி சான் பகரம்
ஒக்டோபர் - 2012
விலை: 100/=
"2ப2TTE -'
-- 41 பய 5 5 14-ம்
- 19 F4 112 பார்
எ ர் 11 - 5: 15
பட் பாய ==
தய
ATE ELE
2 aேlEMENEMI M N " க பு12:5ாட்டம்
t: 1 31 - 5:55:51
கக் கட் ப் டயர் 23ம் - 21912 22, 2012 - 2
எம் ைய ட இ = 1 212)
- 44 : EL 1
விடி
0 S.M.Ariyarathna de Alwis - பேராசிரியர் சோ. சந்திரசேகரம் M.ஹிர்பஹான் (SLPS)
A. சர்வேஸ்வரன் - A.A அஜீஷ் தகமூர்த்தி
எம் F2 *
பாகம் 1 , 2 2 கம்ப வாங்க 1 க பக
ட்ரா ற்ப ப ண் -1ாராயோ - 1 கப் 1ெ4:2கா
"படம்
-- E -:21:31-ம்
- 3 - 91 ::.-EE -
- 12 E -- 11:ார்பாக ..
த்துவ நோக்கு...

Page 2
அகவிடு
ஆசிரியத்துவ நோக்கு...
*: -2 கப, 53 ர் அ 2 E9-5-பேர்
: த E உக: " - கடுக்க பரியகதிதம் தோகா 5ே மம்
உப்பார்ப்பான் 2:55:ண் போகாது.
மகர ர க க க - எது, 33 டி..
காதல் 5ே கதல அரலோ 6
13-3--- E5:ாக:
பர்24
= 53 நவ சகிது சீரகதா கே 91 - வங்கா: படம்
கல:-கன், கன்: துர்கா
இகல்
31ம் தாமதமாகத்தில் 17: இத்தகம் + அம்3.45கம்
எம்.
* :ாதோ: தவி:-
7 I. 1.!
அகவி6
ஆசிரியத்துவ நோக்கு..,
15:1, 5, 6

அகவிழி
ஆசிரியத்துவ நோக்கு.
டி
அகவிடு
ஆசியத்துள் ளகம்
T
அகவிடி
சரியத்துவம் நோக்கு...
போர் 1

Page 3
ISSN 1800-1246
இகவிடு
AHAVILI 3, Torrington Avenue, Tel.: 011 250 6272 E-mail: ahavili.viluthu
| ஆசிரியத்துவ நோக்கு... -
உள்G
1. சகலருக்கும் கல்வியை உறுதிப்படுத்துவதி
2.
அறிவுப் பொருளாதாரத்தில் கல்வி
இலங்கையின் கல்விமுறையில் தமிழ்வழிக்
கல்வித்துறையில் காணப்படும் நெருக்கடிக
+ ம் 6
பரீட்சைக்கு முகங்கொடுக்க உளவியலின்
கலைச் சொல்லாக்கமும் சில சிக்கல்களும்
7. தரமான கல்வி மேம்பாட்டுக்காக பிள்ளை
பியாஜேயின் அறிகை நோக்கும் கற்றல் ெ
கல்வியும் தொலைக்காட்சியும்
10..
சென்ற நூற்றாண்டுக் கடைசிப் பகுதியிலும் இலங்கையில் வெளிவந்த சில தமிழ் வெ அவைதொடர்பான சரியான தகவல்களும்
11.
சிறுவர் வேலைக்கமர்த்தலை இல்லாதொழி மற்றும் இலங்கை சட்ட தராதரங்கள்
12.
வாழ்வாதாரமும் தொழிலை உருவாக்குதல்
அகவிழியில் இடம்பெறும் கட்டுரைகளுக்கு ச
இடம்பெறும் கருத்துக்கள் “அக

இ5வி5
- Colombo 07
a@gmail.com
* *:
ளே.......
பில் எழுத்தறிவின் முக்கியத்துவம்
1
கல்வி
10
>ள்
13
உற்றதுணை
- 17
20
நேயப்பாடசாலைகள்
23
|
தொழிற்பாடும்
27
5 இந்த நூற்றாண்டு முற்பகுதியிலும் ளியீடுகளில் காணப்பட்ட வழுக்களும்
34
பித்தல் பற்றிய சர்வதேச தராதரங்கள்
38
லும்
41
அதன் ஆசிரியர்களே பொறுப்பு, கட்டுரைகளில் கவிழி”யின் கருத்துக்கள் அல்ல.

Page 4
ISSN 1800-1246
அகவி6
ஆசிரியத்துவ நோக்கு,
மாத இதழ்
ஆசிரியர்: V.S. இந்திரகுமார்
நிர்வாக ஆசிரியர்: சாந்தி சச்சிதானந்தம்
ஆசிரியர் குழு: க. சண்முகலிங்கம் திருமதி பத்மா சோமகாந்தன்
ஆலோசகர் குழு: திரு.து. ராஜேந்திரம்
முன்னாள் முதுநிலை விரிவுரையாளர், இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
கலாநிதி உ. நவரட்ணம் முன்னாள் ஓய்வு நிலைப்பணிப்பாளர், தேசிய கல்வி நிறுவகம்
பேராசிரியர் சோ. சந்திரசேகரம் முன்னாள் கல்விப் பீடாதிபதி, கொழும்புப் பல்கலைக்கழகம்
பேராசிரியர் வ. மகேஸ்வரன் தலைவர் தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்
பேராசிரியர் இரா.வை. கனகரட்ணம் தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்
திரு.தை. தனராஜ்
முதுநிலை விரிவுரையாளர், இலங்கைத்திறந்தபல்கலைக்கழகம்
திரு.க. இரகுபரன்
முதுநிலை விரிவுரையாளர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
கலாநிதி சசிகலா குகமூர்த்தி சிரேஷ்ட விரிவுரையாளர், இலங்கைத் திறந்தபல்கலைக்கழகம்
திரு.வீ. தியாகராஜா சிரேஷ்ட ஆலோசகர், சமூக விஞ்ஞானக் கற்கைகள் துறை, இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்
லெனின் மதிவானம் பிரதி கல்வி வெளியீட்டு ஆணையாளர், கல்வி அமைச்சு
திரு.கே. சாம்பசிவம்
தேசிய ஆலோசகர்: கல்வி முகாமைத்துவம்
திருமதி. அருந்ததி ராஜவிஜயன் ஆசிரிய ஆலோசகர், கொழும்பு கல்வி வலயம்
T. போல் அன்ரனி முன்னாள் பிரதி பரீட்சை ஆணையாளர்
21 அகவிழி - ஒக்டொபர் 2012

ஆசிரியரிடமிருந்து...........
எந்த ஒரு மனித சமூகத்திலும் சமாதானத்திற்கான எச்சரிக்கை அச்சமூகத்திலிருந்து தோன்றும் வன்முறையாலேயே விடுவிக்கப்படுகின்றது. அடுத்தவரில் இம்சையை விளைவிக்கும் எண்ணத்தோடு செயற்படல் வன்முறை என சாதாரணமாகக் கூறிக்கொள்ளலாம். உளவியல் அகராதியின் விளக்கப்படி வன்முறை எனப்படுவது நபர்களுக்கு அல்லது சொத்துக்களுக்கு எதிராக உடலளவிலான பலாத்காரத்தைப் பிரயோகித்தல் வாயிலாக பகைமையை அல்லது ஆத்திரத்தை வெளிப்படுத்துதலே ஆகும். அங்கு கோபத்தை வெளிப்படுத்த ஆக்கபூர்வமானதும் மனிதாபிமானதுமான முறைகள் இருப்பினும் அவற்றிற்குப் பதிலாக எத்தகைய பரிகாரமும் நியாயமும் இல்லாத விதமாக வன் முறையை கொடூரமாகச் செயற்படுத்த முனைவதைக் காணலாம். இவற்றிற்கு உதாரணமாக இழிவுபடுத்தல், நடத்தையைப் பழித்தல், சொத்துக்களை எரித்தல், தாக்குதல், காயப்படுத்தல், கொலைபுரிதல், கற்பழித்தல், களவுசெய்தல், குண்டுகளை எறிதல் அல்லது வைத்தல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவற்றை நபர்களுக்கு எதிராக அல்லது முழுச் சமூகத்திற்கும் எதிராக நிகழ்த்தப்படும் குற்றங்களாகக் கருதலாம்.
நல்வாழ்க்கை தொடர்பில் மனிதன் தனக்கும் தான் சார்ந்துள்ள மனித வர்க்கத்திற்கும் நன்மையைச் செய்ய ஆற்றல் பெற்றிருந்த போதிலும் மனிதன் தான் ஏற்படுத்திக் கொண்ட கொள்கைகள், சிந்தனைகள் காரணமாகவும் உற்பத்தி செய்துள்ள பல்வேறு பொருட்கள் காரணமாகவும் அதனால் உண்டான் உலகமயமாக்கம் நுகர்வு நோக்கை அடிப்படையாகக் கொண்ட சூழலினுள் வாழநேரிட்டமையாலும் போட்டிமிக்க உலகமானது மனிதனுக்கு பயனுள்ள போட்டியையும் பயனற்ற போட்டியையும் தேர்ந்தெடுத்து வேறாக்கிக் கொள்ள முடியாத அளவிற்கு சிக்கலாகும் சந்தர்ப்பங்களை வழங்கிவிட்டதனாலும் வன் முறைகள் சாதாரண நிகழ்வுகளாகிவிட்டது.
பிறக்கும் போதே நற்சிந்தனையுடனும் மனச்சாட்சியுடன் செயற்படும் மனிதனுக்கு இந்நிலைமை மிகப்பெரிய சவாலாக அமையும். இருதலைக் கொள்ளியாகும். இதற்கான காரணமெனில் அது அவனிடமுள்ள மனிதநேயமாகும். சில சமயம் போட்டியானது, மனிதநேயத்தை கோழைத்தனமான பயந்தாக் கொள்ளித்தனமென நோக்கப்படுவதையும் காணலாம். இவ்வாறான இடங்களில் மனிதர்கள் மனித நேயத்தை மறந்துவிடுகின்றனர். மிருகத்தன்மையை வெளிக்காட்ட விளைகின்றனர். கருத்தற்ற போட்டிகளில் எவ்வாறேனும் வெற்றிபெற்றுவிட கண்மூடித்தனமாக

Page 5
முயற்சிக்கின்றனர். நல் வாழ்க்கை சிதைவது இதனாலேயாகும். இது மனிதனைத் தனிப்பட்ட நிலையிலும் கூட்டாகவும் வேதனைப்படச் செய்கிறது.
நபர் கள் யாவரும் சமனானவர் கள் அல்ல. அவர்களிடையே வேறுபாடுகள் உள. விருப்புக்கள் வேறுபட்டவை, இந்நிலை இயல்பானது. இதனால் அவரவர் வாழ்க்கைக் கோலம் வேறுபடுகின்றது. குறுகிய நோக்கங்களின் அடிப்படையில் வேண்டுமென்றே ஏற்படுத்துகின்ற போட்டி காரணமாக இயற்கையான பல்வகைமையை தாங்க முடியாத அளவு சிக்கலாவதும் வேகமடைவதையும் பல சந்தர்ப்பங்களில் காணமுடிகிறது. அது மனிதனுள் சமாதானத்திற்கும் மனிதர்களிடையே சமாதானத்திற்கும் தடையாக அமையும். அதாவது தம்முடனும் ஏனையோருடனும் நல்லிணக்கமாக வாழுதல் எனும் நல்வாழ்க்கை முறைக்கு தீங்காய் அமையும். எனவே உடனடியாக தலையிடவேண்டியது ஒத்துமொட்ட சமூகத்தின் பணியாகும். ஆசிரிய வகிபாகமும் இதுவேயாகும். எனினும் இது ஓரிரவில் நடைபெறக்கூடியதல்ல. ஆகையால் மனித நேயம் வற்றிப் போகும் இடங்கள் நிரப்பப்படல் வேண்டும்.
நல் வாழ்க்கையானது தனிநபர் வாழ்க்கை, சமூக வாழ்க்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாகையால் சிறுபராயம் முதலே நல்வாழ்க்கைப் பண்புகள் வளர்க்கப்படல் வேண்டும். நபரின் உடல், உள, சமூக, ஆத்மீக அபிவிருத்திக்குக் காரணமாக அமையும் நல்வாழ்க்கைப் பண்புகள் பிற்காலத்தில் பழக்கமாகவோ உள்ளார்ந்த தூண்டலுடன் கூடிய தேர்ச்சியாகவோ மாறுவது அதனாலாகும். நல்ல மனிதர் ஒருவர், நல்ல குடும்பம், நல்ல சமூகம் பற்றி நம்பிக்கைவைக்க முடிவது அதனாலேயாகும். இந்நிலைமை நீண்ட கால பரந்த அளவிலான தேசிய அபிவிருத்திக்கு அடித்தளமாக அமைகிறது. தம்மைப் பற்றி, தாம் சார்ந்த குடும்பம் பற்றி, தாம் சார்ந்த நிறுவனம் தொடர்பாக, ஏனைய பிரஜைகள் தொடர்பாகவும் நமது நாடு தொடர்பாக, நமது மனித இனம் தொடர்பாக பொறுப்புள்ள மனிதர்களை உருவாக்கவும் முடியும். மனித இனத்தின் மீது அக்கறை கொண்ட மனித இனத்தை உருவாக்கவும் பாதுகாக்கவும்
இது உதவும்.
வெறுமனே வாசிப்பதன் மூலமோ கேட்பதன் மூலமோ மாத்திரம் நல்வாழ்க்கையைப் பயிலவோ வலியுறுத்தவோ முடியாது. அத்துடன் அவற்றைப் பயிலும் நிபுணத்துவம் அடைய பிரயோகச் சந்தர்ப்பங்களை உருவாக்குதல் வேண்டும். ஆசிரியருடன் சேவையாற்றும் காலம் மிகக் குறைவானபடியால் ஆகக்கூடிய அளவு அதில் ஈடுபட

முயலுதல் மிகவும் பயனுள்ளது. கருத்துள்ளது போலச் செய்யும் நடத்தைகளினால் பிள்ளையை மீட்டு பேரறிவையும், பண்பு அறிவுப் பலத்தையும் அடிப்படையாகக் கொண்ட நல்வாழ்க்கை பற்றிய உயர்வுணர்வுகளை ஏற்படுத்த ஆசிரியர் முயற்சிக்க வேண்டும். சரியானவற்றைச் சரியாகச் செய்யக் கூடியவாறான தன்னம்பிக்கையை அவர்களிடம் உருவாக்க வேண்டும்.
அது மாத்திரமல்லாது நற்பிரஜைகளை நாட்டுக்கு அளிக்கவும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் உதவும். இவற்றின் மூலம் பிள்ளைகள் வன்முறையற்ற தமது மனச்சாட்சிக்கு ஏற்றவாறான வழிகளில் தேர்ச்சிகளை விருத்தி செய்து கொண்டு அவற்றின் மூலம் முன்மாதிரியான எண்ணங்களை நோக்கிச் செல்வதற்கு ஆசிரியர்கள் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். இதனால் அவர்கள் மனிதாபிமானமுடைய மனிதர் என்ற ரீதியில் தாங்கள் செல்ல வேண்டிய உயர்ந்த இடத்தை நோக்கி அச்சமின்றிச் செல்வதற்கு அவர்களுக்கு வழிசமைக்கும். அவர்கள் யாவற்றையும் நேராகவும் பக்கச்சார்பின்றியும் தர்க்க ரீதியாகவும் ஆக்கபூர்வமாகவும் செயற்படுவதற்கு வன்முறை தவிர்ந்த பண்பாட்டுக் கல்வி மிக அவசியமாக இருக்கும். ஓரிரு விடயங்கள் மீது தங்கியிராது பக்கச்சார்பின்றியும் நடுநிலையாகவும் முழுமையாகவும் செயற்படுவதற்கு இது அவசியமானது.
தற்போது பாடசாலைகள் மட்டத்தில் அதிகளவிலான வன்முறைச் சம்பவங்கள் இடம் பெற்றுவருவதைக் காணலாம். மாணவர் குழுக்களுக்கிடையிலான மோதல்கள், வெற்றி தோல்விகளை சமமாக மதிக்கத்தெரியாத மனப்பாங்குகள், ஆசிரியர்கள் மீதான தாக்குதல்கள், பாடசாலைச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் என வன்முறைச் சம்பவங்கள் நீண்டு செல்கிறது. இன்று கல்விச்சூழலில் அதிகமாக பேசப்படுவது வடபகுதி பாடசாலை மாணவர்கள் அதிகளவில் போதைவஸ்த்துக்கும், மதுபானத்திற்கும் அடிமையாகி வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள் என்பதாகும். கல்வி அதிகாரிகள் இது தொடர்பில் அதிக கவனமெடுத்தாலும் இவ்விடயம் தொடர்பில் வெளிநிலைச்சக்திகள் தாக்கம் செலுத்துவதாக கூறுகிறார்கள். எது எவ்வாறிருப்பினும் இவ்விடயம் முழுச்சமூகத்தையும் பாதிக்கும் என்பது மட்டும் உண்மை. எனவே கல்விச் சமூகத்தினர் வன்முறைகளற்ற மாணவ சமூகத்தினரை கட்டியெழுப்ப முழு அளவில் செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
V.S. இந்திரகுமார்
அகவிழி - ஒக்டோபர் 2012 / 3

Page 6
சகலருக்கும் கல்
எழுத்தறி
முதுநிலை
இலங்
அறிமுகம்
செப்ரெம்பர் 8ம் திகதியை சர்வதேச எழுத்தறிவு தினமாக ஐ.நா சபை பிரகடனப் படுத் தியுள் ளது. 1966 முதல் யுனஸ்கோவின் அனுமதியுடன் உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படும் இத்தினம் இவ்வாண்டு "எழுத்தறிவும் சமாதானமும்” என்னும் தொனிப்பொருளில் கொண்டாடப்பட்டது. தகவல் தொடர்பாடல் தொழிநுட்பவியல் (ICT) போக்குவரத்து மற்றும் விஞ்ஞானத்துறையில் ஏற்பட்ட அபரிமிதமான வளர்ச்சி உலகைப் பூகோள கிராமமாக சிறுப்பித்து விட்ட நிலையில் மனித குலம் முன்னெப்போதுமில்லாத அறிவுப்பிரவாகத்தின் (Knowledge Explosion) செ ல் வாக கு க கு உட்பட்டுள்ளதால் இந்நூற்றாண்டு அறிவு நூற்றாண்டாக உருவெடுத்துள்ளது. ஆனால் இதே உலகத்தில் சுமார் 775 மில்லியன் மக்கள் அதாவது உலக மக்களின் ஐந்து பேரில் ஒருவர் எழுத வாசிக்க தெரியாத நிலையில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளைச் சேர்ந்தவர்களாக உள்ள நிலையில் எழுத்தறிவற்றவர்களில் 2/3 பங்கினர் பெண்களாவர். சுமார் 60.7 மில்லியன் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்வதில்லை. பாடசாலையை விட்டு இடைவிலகியோர் மற்றும் கிரமமாக செல்லாதவர்கள் எனப் பார்த்தால் அது பாடசாலைக்கு செல்லாத பிள்ளைகளை விட இன்னும் அதிகமாக இருக்கக்கூடும். 1990 ஆம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற ஜொம்ரியன் மாநாடு 2000ஆம் ஆண்டுக்கு முன்னர் உலகின் சகல பிள்ளைகளுக்கும் ஆரம்பக்கல்வியை பெற்றுக்கொடுக்க வேண்டுமென பிரகடனப்படுத்திய போதும் அது சாத்தியப்படாமைக்கு மேற்படி எழுத்தறிவின்மையே பாரிய தடைக்கல்லாக உள்ளது . எனவே இக்கட்டுரையானது
47 அகவிழி - ஒக்டொபர் 2012

வியை உறுதிப்படுத்துவதில் வின் முக்கியத்துவம்
5 தை. தனராஜ்
> விரிவுரையாளர், கல்விப் பீடம் "கை திறந்த பல்கலைக்கழகம்
எழுத்தறிவு என்றால் என்ன அதன் முக்கியத்துவம், எழுத்தறிவு மேம்பாட்டில் யுனஸ்கோவின் பங்களிப்பு, இலங்கையில் எழுத்தறிவு நிலைமை முதலிய விடயங்கள் பற்றி விளக்க முற்படுகிறது.
எழுத்தறிவு என்றால் என்ன? ஏதாவது ஒரு மொழியில் எழுத வாசிக்க இயலுமாக இருத்தல் என்பதே எழுத்தறிவு பற்றிய பொதுவான வரைவிலக்கணமாகும். எனினும் இன்று நாம் எழுத்தறிவு பற்றி பரந்த பொருள் கொள்ள முற்பட்டுள்ளோம்.1965க்கு பின்னர் தொழிற்படு எழுத்தறிவு (Functionai Literacy) என்னும் எண்ணக்கரு பிரபல்யப்படுத்தப்பட்டது. சிக்கல் நிறைந்த சமூகத்தில் ஒருவர் ஓரளவு வெற்றிகரமாக தொழிற்படுவதற்கு அவசியமான மொழி அறிவையே தொழிற்படு எழுத்தறிவு குறித்து நிற்கிறது.எழுத்தறிவு என்பது வெறுமனே எழுதும் வாசிக்கும் நுட்பங்களைப் பெற்றுக்கொள்வதல்ல.தான் வாசிப்பதையும் எழுதுவதையும் ஒருவர் விளங்கிக்கொள்ள

Page 7
வேண்டும்.தொடர்பாடல் கொள்ளவும் உருவாக்கவும் தன்னை உருமாற்றிக் கொள்ளவும் இந்த எழுத்தறிவு வழிப்படுத்த வேண்டும் என்றுபிரெய்ரி(Paulo Freire,1974)குறிப் பிட்டுள்ளார். எனவே இன்று எழுத்தறிவு என்பது பல்வேறு பரிமாணங்களைப் பெற்றுள்ளது. கணினி எழுத்தறிவு, பல்லூடக எழுத்தறிவு, ICT எழுத்தறிவு, புள்ளிவிபர எழுத்தறிவு என்னும் பலவிதமான துறைசார்ந்த எழுத்தறிவு கருத்துக்கள் நடைமுறையில் உள்ளன.
எழுத்தறிவின் முக்கியத்துவம்
மனித வாழ்வில் எழுத்தறிவு மிகவும் முக்கியமானது. எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும் என்பது தமிழ் மரபு. சங்ககாலத்தில் கற்றோர் சான்றோர் எனப் புகழ்ந்தேற்றப்பட்டனர். “கண்ணுடையார் என்போர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையார் கல்லாதவர்” என வள்ளுவர் கூறுவார். எல்லாவிதமான அபிவிருத்திகளுக்கும் கல்வி அடிப்படையானது. எழுத்தறிவின் முக்கியத்துவம் பற்றி யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் ஜரீனா பொக்கோவா (Irina Bokova) பின்வருமாறு கூறியுள்ளார்.
'சகல அபிவிருத்தி இலக்குகளின் நிலைபேண் தன்மைக்கு அடிப்படையாக அமைவது கல்வியாகும். சகலவிதமான கற்றல்களுக்கும் அடிப்படையாக அமைவது எழுத்தறிவாகும். உலகை விளங்கிக் கொள்ளவும் அதனை வடிவமைக்கவும், ஜனநாயக செயன்முறையில் பங்கேற்கவும், தமது குரலை எழுப்பவும் தமது கலாசார அடையாளத்தை வலுப்படுத்திக் கொள்ளவும் தேவையான திறன்களை எழுத்தறிவும் அதன் வழிவரும் கல்வியும் தனிநபர்களுக்கு
வழங்குகின்றன."
எழுத்தறிவு பல்வேறு காரணங்களால் மனித குலத்திற்கு முக்கியமானது. அடிப்படையில் எழுத்தறிவு மனித உரிமையாகும். சமூகத்தில் அது ஒரு வறுமை நீக்கியாக, தொழிற்படுவதோடு தனிநபர்களை வலுவூட்டும் (Empowering) கருவியாகவும் மானிட, சமூக விருத்திக்கான திறவுகோலாகவும் விளங்குகிறது. எழுத்தறிவு மிக்க சமூகங்களில் சிசு மரணவீதம் குறைவாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளதோடு பால்நிலை சமத்துவம் பேணப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே அபிவிருத்தி, ஜனநாயகம் மற்றும் சமாதானத்தை உறுதிப்படுத்துவதற்கு எழுத்தறிவே அடிப்படையாக அமைகிறது.
எழுத்தறிவின்மையின் தாக்கங்கள்
மனித அபிவிருத்திக்கு எழுத்தறிவின்மை தடையாக அமைகிறது என்பதற்கு ஆதாரங்களைத் தேட வேண்டிய அவசியமில்லை. எனினும் அமெரிக்காவில் சிறைச்சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வு எழுத்தறிவின்மையின்

தீயவிளைவுகளைச் சான்றுகளுடன் வெளிப்படுத்தியுள்ளது. (National Centre for Educational Statistics in the US)
ஐக்கிய அமெரிக்க சிறைச் சாலைகளில் உள்ளவர்களில் 60 வீதத்தினர் 4ஆம் தரத்துக்கு குறைவான வாசிப்புத் திறனை மட் டுமே கொண்டவர்கள்.
இளம்பராய குற்றவாளிகளில் 85 வீதமானோர் தொழிற்பாட்டு எழுத்தறிவு அற்றவர்கள். சிறைச்சாலைகளில் வழங்கப்படும் எழுத்தறிவு வகுப்புகளில் பங்குபற்றி பயன்பெறத் தவறுபவர்களில் 70 வீதத்தினர் திரும்பவும் சிறைச்சாலைக்கு வருகின்றனர். வகுப்புகளில் பங்குபற்றுபவர்களில் 16 வீதத்தினர் மட்டுமே திரும்பவும் சிறைக்கு வரும் நிலை காணப்படுகிறது. - உயர் எழுத்தறிவு கொண்டவர்களில் 4 வீதத்தினர் மட்டுமே வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கும் போது எழுத்தறிவு குறைந்தவர்களில் 43 வீதத்தினர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளனர். 4ஆம் தர மட்டத்தில் வாசிக்க முடியாத மாணவர்களில் 2/3 பங்கினர் சிறைச்சாலை அல்லது சிறுவர் நல நிலையங்களைச் சென்றடைகின்றனர். உணவு முத்திரை பெறுவோரில் 4 பேரில் மூவர்
வாசிக்க முடியாதவர்கள். எழுத்தறிவு குறைந்த 16-19 வயதுக்குட்பட்ட பெண்கள் திருமணத்திற்கு அப்பால் கருத்தரிப்பது அதே வயதுப்பிரிவில் எழுத்தறிவு கூடிய பெண்களை விட ஆறு மடங்கு அதிகமாகும்.
சர்வதேச எழுத்தறிவு நிலை உலகில் கியூபா முழுமையான எழுத்தறிவு (99.9%) கொண்ட நாடாக விளங்குகிறது. யுனெஸ்கோவின் அளவீட்டின் படி 46 நாடுகள் 99 வீதத்திற்கு மேலும் 60 நாடுகள் 90 வீதத்திற்கு மேலும் 25 நாடுகள் 80 வீதத்திற்கு மேலும் 20 நாடுகள் 70 வீதத்திற்கு மேலும் 35 நாடுகள் 25 வீதத்திற்கு மேலும் எழுத்தறிவு கொண்டுள்ளன. ஆபிரிக்க நாடுகள் சில பர்க்கினா பஸா, மாலி, நைகர் ஆகியவை முறையே 18.8, 19.4, 14.4 வீத எழுத்தறிவை கொண்டுள்ளன. எழுத்தறிவற்றவர்களில் பெரும்பான்மையினர் அபிவிருத்தி குறைந்த நாடுகளிலேயே காணப்படுகின்றனர். யுனெஸ்கோ உட்பட பல சர்வதேச நிறுவனங்கள் எழுத்தறிவை மேம்படுத்த பல தசாப்தங்களாக உழைத்து வருகின்றன. இதன் காரணமாக 1970 இல் 40 வீதமாக இருந்த சர்வதேச எழுத்தறிவின்மை 2010 இல் 18 வீதமாகக் குறைவடைந்துள்ளது.
அகவிழி - ஒக்டோபர் 2012 / 5

Page 8
இலங்கையில் எழுத்தறிவு நிலை சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் பின்பற்றிய கல்விக் கொள்கைகள். காரணமாக இலங்கை எழுத்தறிவு மட்டத்தில் ஒப்பீட்டளவில் உயர்ந்த மட்டத்தில் உள்ளது. 15-24 வயதுப்பிரிவுக்குட்பட் டவர்களில் 98.0 வீதமானவர்கள் (ஆண் 92.2, பெண் 89.1) எழுத்தறிவுள்ளவர்கள். 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் எழுத்தறிவு வீதம் 90.6 (ஆண் 92.2, பெண் 89.1) ஆகும். இலங்கையைப் போன்ற குறைவருமான மட்டத்தையும் சமூக பொருளாதார விருத்தியையும் கொண்ட நாடுகளோடு ஒப்பிடும் போது இலங்கையானது பாராட்டக் கூடிய எழுத்தறிவு மட்டத்தைக் கொண்டுள்ளது.
ன
எனினும் சில பிரதேசங்களில் எழுத்தறிவு குறைந்த மட்டத்திலேயே காணப்படுகிறது. மலையகத்தின் எழுத்தறிவு 70-76 வீதமாக இருக்கலாம். மலையகத்தின் எழுத்தறிவு நிலை குறித்து ஒரு முழுமையான அளவீடு இருப்பதாகத் தெரியவில்லை. எவ்வாறெனினும் மலையகத்தின் எழுத்தறிவு தேசிய எழுத்தறிவு மட்டத்தை விட ஏற்கமுடியாத அளவுக்கு குறைவாக உள்ளதென்பதில் எவ்வித ஐயமுமில்லை. போருக்குப் பின்னரான வன்னி மாவட்டங்களின் எழுத்தறிவு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
சர்வதேச எழுத்தறிவு மேம்பாட்டில் ஐ.நா.நிறுவனத்தின் பங்கு
இரண்டாம் உலக யுத்தத்தை தொடர்ந்து ஐ.நா.சபையும் அதன் முக்கிய முகவருமான யுனெஸ்கோவும் சர்வதேச எழுத்தறிவை மேம்படுத்த காத்திரமான செயற்பாடுகளை மேற் கொண்டு வருகின்றன. அவ்வாறான முக்கிய செயற்பாடுகள் கீழே பட்டியல் படுத்தப்படுகின்றன. 1946 - அடிப்படைக் கல்விக்கான குழு
1948 - சர்வதேச மனித உரிமைப் பிரகடனம் (UDHR)
நூற்றாண்டின் மத்திய பகுதியில் உலக எழுத்தறிவின்மை பற்றிய அறிக்கை.
1958 - எழுத்தறிவு மீதான யுனெஸ்கோ கூரியர் (UNESCO
COURIER) சஞ்சிகை வெளியீடு. 1965 - எழுத்தறிவின்மையை ஒழிப்பதற்கான கல்வி
அமைச்சர்களின் உலக மாநாட்டில்
“தொழிற்படு எழுத்தறிவு” என்னும் எண்ணக்கரு ஏற்கப்பட்டது.
1975 -
பெர் சோபொலிஸ் பிரகடனம் (Persopolis Declaration)- “மனித விடுதலை மற்றும் அவனது
67 அகவிழி - ஒக்டோபர் 2012

பூரண விருத்திக்கு எழுத்தறிவு பங்களிப்புச்
செய்கிறது” 1990 - ஜொம்ரியன் மாநாடு
சர்வதேச எழுத்தறிவு ஆண்டு சகலருக்கும் கல்வி (EFA)க்கான உலக பிரகடனம் மற்றும் அடிப்படைக் கற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான செயற்பாட்டு சட்டகம்.
2000 - சகலருக்கும் கல்வி, டாக்கர் (Dhakar) செயற்பாட்டு
- சட்டகம்.
2003 - ஐ.நா. எழுத்தறிவு தசாப்தம் (2003-212)
முடிவுரை மனித குலத்தின் ஒரு பகுதியினர் விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பவியலின் நன்மைகளைப் பூரணமாக அனுபவித்து சமூக, பொருளாதார அபிவிருத்தியின் உச்சத்தை அடைய முற்படுகையில் இன்னுமொரு பகுதியினர் எழுத வாசிக்கத் தெரியாதவர்களாக இருப்பது ஏற்கத்தக்கதல்ல. எனினும் எழுத்தறிவின்மையை நீக்குவதற்கு மேற்கொள்ளப்படும் தேசிய, சர்வதேச முயற்சிகள் வறுமை, இயற்கை அழிவுகள், யுத்தம், இடப்பெயர்வு முதலிய காரணிகளால் பின்தள்ளப்படுகின்றன. இலங்கையின் எழுத்தறிவு நிலை பாராட்டப்படக்கூடியதெனினும் 1939இல் கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்திய இந்த நாட்டில் இன்னும் எழுத்தறிவின்மை முற்றாக ஒழிக்கப்படாமை கவலைக்குரியதாகும்.
மலையகத்தின் எழுத்தறிவு நிலையை மேம்படுத்தாமல் தேசிய ரீதியாக எழுத்தறிவின்மையை ஒழிப்பது முடியாத காரியமாகும். இன்றைய நிலையில் மலையகத்தின் எழுத்தறிவு நிலை குறித்த விழிப்புணர்வு சகலமட்டங்களிலும் முன்னெடுக்கப்பட வேண்டியது முக்கியமானது. அரசியல் தலைமைகள், கல்வியாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் நிறுவனங்கள் இவ்விடயத்தில் ஒன்றிணைந்து ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முடியுமாயின் மலையகத்தில் எழுத்தறிவின்மையை ஒழித்துக்கட்டுவது சாத்தியமான விடயமே ஆகும்.
அதே நேரத்தில் வன்னிப் பிரதேச எழுத்தறிவு நிலை பற்றிய பூரணமானதொரு ஆய்வு கட்டாயமாகத் தேவைப்படுவதோடு அத்தகைய ஆய்வின் அடிப்படையில் பொருத்தமான செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

Page 9
அறிவுப் பொ
கலாநி
கல்விப்பீடம்,
அறிமுகம் ஒரு சமூகத்தின் தேவையைக் கருத்திற் கொண்டு காலத்திற்குக் காலம் கல்வியின் முக்கியத்துவம் அதன் கடமைகள் பற்றி பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இக்கருத்துக்கள் யாவும் குறித்த ஒரு காலப்பகுதியில் நிலவிய சமூக, பொருளாதார, அரசியற் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையிலேயே பொதுவாக அமைந்தன. இந்தவகையிலே கல்வியின் பிரதான கடமைகளென மனிதனை வையகத்துள் வாழ்வாங்கு வாழச்செய்தல், சமூகத்துடன் பொருத்தப்பாடடையச் செய்தல், நாட்டிற்குத் தேவையான தலைவர்களை உருவாக்குதல், நாட்டிற்குத் தேவையான நற்பிரசைகளை உருவாக்குதல் போன்ற பல்வேறு கடமைகள் கல்விக்கு உரியதாக எடுத்துக்காட்டப்பட்டன. காலங்காலமாகக் குறித்துக்காட்டப்பட்ட இத்தகைய கடமைகளோடு இன்று 21 ஆம் நூற்றாண்டில் அறிவுமையச் சமூகத்திற்கும் அறிவுப் பொருளாதாரத்திற்கும் பொருந்தும் வகையில் பல புதிய கடமைகளை ஆற்ற வேண்டிய தேவை கல்விக்கு ஏற்பட்டுள்ளது. நவீன சமூகம் எதிர்நோக்கும் புதிய சவால்களை எதிர்கொள்ளும் உயர் ஆற்றலுள்ள பிரசைகளாக மாணவர் களை உருவாக்குவது கல்விக்குரிய முக்கிய கடமை எனக் கல்வியியலாளர்களும் பொருளியலாளர்களும் அடிக்கடி சுட்டிக்காட்டுவதினை நாம் கவனத்தில் எடுத்தல் வேண்டும்.
அறிவுப் பொருளாதாரத்தின் வளங்கள்
விஞ்ஞான தொழில்நுட்பத்தின் வியத்தகு விருத்தியானது இன்று உலகினை ஒரு கிராமமாக மாற்றியுள்ளது. தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் வேகமாக வெளிவருகின்ற புதிய அறிவுத் தொகுதிகள் சமூக பொருளாதாரக் கட்டமைப்புகளில் பலமாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன இதனால் இன்றைய சமூகம் அறிவுமையச் சமூகமாகவும் பொருளாதாரம் அறிவுப் பொருளாதாரமாவும் மாறியுள்ளது.
அறிவுப் பொருளாதாரத்தின் இன்றியமையாத தேவையாக இருப்பது புத்தறிவைப் படைப்பதற்கும் பகிர்ந்து கொள்வதற்கும் அதனை நல்ல முறையில்

சருளாதாரத்தில் கல்வி
அதி சசிகலா குகமூர்த்தி ஒரேஷ்ட விரிவுரையாளர்
இலங்கைத்திறந்த பல்கலைக்கழகம்
பயன் படுத்துவதற் குமான கல் வியும் பயிற்சியும் பெற்ற ஆற்றலுள்ள சனத்தொகை ஆகும். அறிவுப் பொருளாதாரத்தின் விருத்தியில் தலைமைதாங்கும் பிரதான சமூகக் குழுக்களாக பல்வேறு அறிவுசார் ஊழியர்களே (Knowledge Workers) காணப்படுவர். இவர்கள் அறிவு நிர்வாகிகளாக (Knowledge Managers) - அறிவினை விளைதிறன்மிக்க முறையில் முகாமை செய்பவர்களாகக் காணப்படுவர். இந்த அறிவு நிர்வாகிகள் அறிவை ஒரு வளமாகப் பயன்படுத்தி பொருளுற்பத்தியை எவ்வாறு அதிகரிக்கலாம் என்பதில் மிகவும் கவனமாக இருப்பர். ஒரு முதலாளித்துவ சமூகத்தில் முதலாளிகள் எவ்வாறு மூலதனத்தை முறையாக ஒதுக்கீடு செய்து உற்பத்தியைப் பெருக்குவதற்கு முயற்சிப்பார்களோ அதேபோன்று அறிவுமையச் சமூகத்திலே அறிவுசார் நிர்வாகிகள் அறிவை ஒதுக்கீடு செய்து அறிவுசார் ஊழியர்களின் மூலம் உச்சப்பயனைப் பெறுவதற்கு முயற்சிப்பார்கள். அறிவுசார் ஊழியர்கள் அறிவின் உடைமையாளர்கள் என்பதை அறிவு நிர்வாகிகள் நன்கு உணர்ந்து அவர்களை நிபுணர்களாகவும் ஆலோசகர்களாகவும் பயன்படுத்த வேண்டுமென அறிவுப் பொருளாதாரம் எதிர்பார்க்கின்றது.
உடல் உழைப்பாளிகள் தமது கைகளைப் பயன்படுத்தி பொருட்களை உற்பத்தி செய்ய அறிவுசார் தொழிலாளிகள் தமது மூளையினால் தொழிற்பட்டு எண்ணக்கருக்கள் மற்றும் அறிவுசார்ந்த தகவல்களை உற்பத்தி செய்வார்கள். அறிவுப் பொருளாதாரத்தில் அறிவே முக்கிய வளமாகக் கருதப்படுவதாக பொருளாதார ஒத்துழைப்பிற்கும் அபிவிருத்திக்குமான ஜரோப்பிய ஆணைக்குழு (OECD) குறிப்பிடுகின்றது. ஒரு அறிவுப் பொருளாதாரக் கட்டமைப்பிலே ஒரு நாட்டின் அபிவிருத்தி அந்த நாட்டின் அறிவு வளத்திலேயே தங்கியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் Paul Romer (2009) நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு அறிவுத்திரட்சி அடிப்படையானது எனக் குறிப்பிட்டு, பொருள் உற்பத்திக்குத் தேவைப்படுகின்ற மூலதனம், வளங்கள், ஊழியம் போன்று கல்வியும் ஒரு உற்பத்திக் காரணியென்று அங்கீகரிக்கின்றார்.
கல்வி ஒரு முக்கிய உற்பத்திக் காரணியாக கருதப்படுவதால் மாணவர்களின் அறிவாற்றல்களை பேரறிகை (Meta Cognition) என்ற ஒர் உயரிய நிலையில்
அகவிழி - ஒக்டோபர் 2012 / 7

Page 10
வளர்த்தெடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. பேரறிகை என்பது ஒருவர் தனது செயற்றிறன் சார்ந்த அறிவை குறிப்பிட்டதொரு சூழ்நிலைக்குப் பொருந்தும் வகையில் சரியான முறையில் முடிவெடுத்து செயல் ஊக்கத்துடன் விரைவாகச் செயலாற்றும் ஓர் உயர் ஆற்றல் எனக் குறிப்பிடலாம். இதனையே பொருளாதார அபிவிருத்திக்கான குழு (Committee for Economic Development,2006) மாணவர்கள் தனித்து புத்தக அறிவினைக் கொண்டவர்களாக அல்லாது சர்வதேசம் எதிர்பார்த்து நிற்கும் தொழில்சார் திறன்களை உடையவர் களாக உருவாக்கப்படல் வேண்டுமெனக் குறிப்பிடுகின்றது.
பல்தேசியக் கம்பனிகளும் சிறு வியாபார நிலையங்களும் தனித்து கோட்பாட்டு ரீதியான அறிவினை மட்டும் பெற்றிருக்கின்ற தொழிலாளர்களை எதிர்பார்க்கவில்லை. பல்தேசியக் கம்பனிகள் , தொழில்சார் திறன்களைக் கொண்ட வேலையாட்களையே எதிர்பார்க்கின்றன. பொருளாதார அபிவிருத்திக்கான குழு தனது அறிக்கையில் பல்தேசியக் கம்பனிகளும் சிறு வியாபார நிறுவனங்களும் தொழிலாளர்கள் சர்வதேச மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் உலகம் முழுவதிலும் பரந்திருக்கின்ற வாடிக்கையாளர்களுக்கு உற்பத்திப் பொருட்களை வினைத்திறன்மிக்க முறையில் விற்பனை செய்யும் வகையில் தாமே முன்வந்து முனைகின்ற கலாசாரப் பண்புகளைக் கொண்டவர்களாகவும் இருத்தல் வேண்டும் எனக் குறிப்பிடுகின்றது. - இதனால் தொடர்ச்சியான கற்றலும் பல்வேறு பயிற்சிகளின் மூலமாகப் பெறப்படும் பல்வகைசார்ந்த நுண்மதித் திறன்களும் அமையப்பெற்ற அறிவுசார் ஊழியர்கள் அறிவுப் பொருளாதாரத்தின் இயக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் அவசியமான வளவாளர்கள் என்பதைக் கல்விச் சமூகம் கவனத்தில் எடுத்து கடமையாற்ற வேண்டும்.
அறிவுப் பொருளாதாரத்தில் கல்வியின் வகிபங்கு
அறிவுப் பொருளாதாரக் கட்டமைப்பிலே தொழில் புரிவதற்கான நேர அளவினை புதிய தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து உள்ளது. இது அறிவுசார் ஊழியர்களுக்கு சாதகமான முறையில் தொழில் வாய்ப்பினை மிகவும் அதிகரித்து உள்ளது. திறமை உள்ளவர்கள் எங்கேயும் எந்த நேரமும் வேலை செய்யலாம் என்ற தொழிற் தத்துவம் முக்கியம் பெறும் வகையில் சர்வதேச நாடுகள் தொழிலுக்கான சந்தர்ப்பங்களை எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் வழங்கக் கூடிய வகையில் தமது வியாபாரத் தொடர்புகளை தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் விரிவுபடுத்தி உள்ளன. மேலும் தொழினுட்ப வளர்ச்சி காரணமாக பல புதிய கண்டுபிடிப்புகளும் அவை தொடர்பான புத்தாக்கங்களும் வெளிவந்தவண்ணம் உள்ளன. புத்தாக்கச் செயற்பாடுகளுக்காக சர்வதேச ரீதியில் நிபுணத்துவம் பெற்ற குழுக்களை நியமித்துச்
87 அகவிழி - ஒக்டொபர் 2012

செயற்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது. கல்வியின் இன்றைய கடமைகளுள் சர்வதேசத்து நிபுணத்துவச் செயற்பாடுகளிலும் புத்தாக்க நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடிய பேரறிகைசார்ந்த ஆற்றலுள்ள மாணவர் சமூகத்தை உருவாக்க வேண்டியது முக்கிய இடத்தினைப் பெறுகின்றது.
பேரறிகைசார்ந்த ஆற்றல்களை அதிகரிப்பதற்காகக் கல்விச் செயற்பாடுகள் அறிவின் மூன்று நிலைமைகளில் கவனம் செலுத்துதல் வேண்டும்.
1. வெளிப்படுத்தும் அறிவு 2. நடைமுறைப்படுத்தும் அறிவு 3. நிபந்தனைக்கு உட்பட்ட அறிவு
வெளிப்படுத்தும் அறிவு என்பது ஒருவர் தனக்குத் தெரிந்த உண்மையான தகவல்களைத் தெரிவிக்கும் வகையில் பேசுவதற்கும் எழுதுவதற்குமான ஆற்றல் ஆகும். இது எமது கல்வி நடவடிக்கைகளில் காணப்படுகின்ற மனனம் செய்து ஒப்புவித்தல் என்ற செயற்பாட்டோடு தொடர்பு கொண்டதாகும். நடைமுறைப்படுத்தும் அறிவானது திட்டச்செயல்முறை ஒன்றில் உள்ள தொடர் செயல்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதோடு தொடர்புபட்டது. நிபந்தனைக்கு உட்பட்ட அறிவு என்பது ஒரு செயல்முறையை எப்பொழுது பயன்படுத்த வேண்டும், எப்பொழுது பயன்படுத்தக் கூடாது, ஒரு செயல்முறை என், எதற்காக, என்ன சூழ்நிலையில், எவ்நிபந்தனைகளின் கீழ், மற்றைய செயல்முறைகளைவிட எவ்வாறு சிறந்ததாக உள்ளது போன்ற ஆய்ந்து அறிதலுடன் தொடர்புபட்டதாகும். இந்த ஆய்ந்து அறிகின்ற திறனையே அறிவுப் பொருளாதாரம் வேண்டி நிற்கின்றது.
அறிவுப் பொருளாதாரக் கட்டமைப்பிலே மாணவர்கள் பல்வேறு ஆற்றல்களைக் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும். சர்வதேசத்தைப் புரிந்து கொள்வதற்கான நிலையம் (Center for International Understanding, 2005) மாணவர்கள் பின்வரும் தகுதிகளைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டுகின்றது.
• உலகிற்கு விற்கக் கூடியவர்களாக இருத்தல்
உலகில் இருந்து வாங்கக் கூடியவர் களாக
இருத்தல் பல்தேசியக் கம்பனிகளில் வேலை செய்யக்கூடிய
ஆற்றல் பிறநாட்டினர் மற்றும் வேறுபட்ட கலாசாரங்களைப் பின்பற்றுகின்ற தொழிலாளர்களுடன் இணைந்து செயற்படல் ஒரு கூரையின் கீழ் உலகின் பலபாகங்களிலும் வாழ்கின்ற மக்கள் ஒன்றிணைகின்ற பொழுது அவர்களுடன் ஒன்றிணைந்து நடத்தல்

Page 11
உலகின் ஏனைய பகுதிகளில் வேலை செய்கின்றவர்களுடன் தொழில் மற்றும் சந்தைச் செயற்பாடுகளில் தன்னம்பிக்கையுடன் போட்டிபோடக்
கூடிய வல்லமை சர்வதேச பிரச்சினைகளான எயிட்ஸ், பறவைக் காய்ச்சல், சூழல் மாசடைதல் போன்ற அனர்த்தங்களை முகாமை செய்து சமாளிப்பதற்கான ஆற்றல் சர்வதேசத்தைப் புரிந்து கொள்வதற்கான நிலையம் சுட்டிக்காட்டிய மேற்கூறிய தகுதிகளைப் பெற்று அறிவுப் பொருளாதாரத்தின் சூழலுக்குப் பொருந்தும் வகையில் மாணவர்களை வளர்த்தெடுப்பதற்காகப் பின்வரும் திறன் விருத்திகளில் கல்விச் செயற்பாடுகள் கவனம் செலுத்துதல் வேண்டும்.
எழுதும் திறன் எண்ணும் திறன் வெளிப்படுத்தும் திறன் பகுப்பாய்வுச் சிந்தனைத் திறன் தொடர்பாடல் திறன் பிரச்சினை விடுவிக்கும் திறன் குழுவாகத் தொழில்புரியும் திறன் தகவல் தொழினுட்பத் திறன் விழிப்புணர்வு அர்ப்பணிப்பு நேரம் பேணுதல் வாடிக்கையாளர் பாதுகாப்பு உயர் தொழிற் திறன்கள் நிபுணத்துவம் அறிவுப் பொருளாதாரத்தின் விருத்தியில் கல்வி ஆய்வுகளின் முக்கியத்துவம், அதன் தேவை பற்றி சர்வதேசம் நன்கு உணர்ந்துள்ளது. அறிவுப் பொருளாதாரக் கட்டமைப்பிலே வளர்ந்து வருகின்ற உலகளாவிய அறிவுத்தேடல்களை நாட்டின் உள்ளூர்த் தேவைகளுக்குப் பொருந்தும் வகையில் உள்வாங்கி, அவற்றைச் சூழலுக்கு ஏற்றவகையில் மாற்றியமைத்தல் வேண்டும். இதற்காக ஆராய்ச்சி நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் இணைந்து, புத்தாக்கங்களுக்காக செயலாற்றக்கூடிய ஒரு முறைமை தோற்றுவிக்கப்பட்டு கல்விசார் ஆய்வுகளுக்கு முக்கிய இடம் வழங்கப்படுதல் வேண்டும்.
கல்விசார் ஆய்வுகள் சமகாலத்தில் காணப்படுகின்ற பிரச்சிலைகளுக்கான தீர்வுகளை முன்வைக்கின்றன. கல்விப்புலத்தில் மட்டுமல்ல நாட்டின் சமூக, பொருளாதார், அரசியல் சார்ந்த சிக்கல் நிறைந்த நிலைமைகளுக்குக் காரணமாக அமைகின்ற செயன்முறைகளை இனங்காணவும் அபிவிருத்திக்குத் தேவையான அறிவார்ந்த தகவல்களை ஆய்வு முடிபுகளாத் தரவும் ஆய்வுகள் உதவுகின்றன.

அறிவுப் பொருளாதாரக் கட்டமைப்பில் ஒவ்வொரு துறையினதும் விருத்திக்குத் தேவையான கொள்கைகளை உருவாக்கும் வகையில் நாட்டின் சகல துறைகளோடும் இணைந்தவகையில் ஆய்வுகளை மேற்கொள்வது கல்வியியலாளர்களின் பிரதான கடமையாக உள்ளது.
உடை
Dயாக
முடிவுரை நூல்களை மையமாகக் கொண்டமைகின்ற தொடர் கற்றலினால் மட்டும் உயர் அறிகைசார்ந்த திறன்களை அடைந்துவிட முடியாது. துரிதமாற்றங்களுக்கு உட்படுகின்ற உலகிலே கலைத்திட்டம், இணைப்பாடவிதானச் செயற் பாடுகள் மற்றும் பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் என்பன வேலை உலகு வேண்டி நிற்கும் தொழில்சார் திறன்களை வளர்ப்பதற்கு தேவையான வகையில் இடம்பெறுதல் வேண்டும். விமர்சன ரீதியாகப் பகுத்தாராய்ந்து சிந்திக்கும் ஆற்றல், முடிவெடுக்கும் ஆற்றல், படைப்பாற்றல் போன்ற உயர் அறிகைசார் திறன்களை வளர்த்தெடுப்பதற்காக நூற்கல்விக்கு அப்பாற்பட்ட வகையில் திறன் விருத்திசார்ந்த கற்றல் செயற்பாடுகள் பல முன்னெடுக்கப்படுதல் வேண்டும். பாடசாலைகள் பொதுக்கலைத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட வகையில் திறன்விருத்திசார் கற்றல் செயற்பாடுகளில் கவனம் செலுத்துதல் காலத்தின் தேவை என்பதை உணர்ந்து செயற்படல் வேண்டும். உயர் அறிகைசார்
திறன்கள் வளர்கின்ற பொழுதே தங்களால் சர்வதேச அரங்கில் நிலவுகின்ற போட்டி நிலைமைகளோடு ஒன்றிணைந்து செல்லக்கூடியதாக அமையும் என்பதை மாணவர்களும் உணர்தல் வேண்டும். இதற்காகப் புதிய அறிவுத்தேடல்களைத் தாமே சுயமாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் சுயநெறிப்படுத்தப்பட்ட கற்றல் செயற்பாடுகளில் (Self Regulated Learning Practices) ஈடுபடுதல் வேண்டும். பெற்றோருக்கும் இவை தொடர்பான விழிப்புணர்வுகள் வழங்கப்படல் வேண்டும். சர்வதேசம் எதிர்பார்க்கும் உயர் ஆற்றல்களை எமது பிள்ளைகளும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதைக் கொள்கை வகுப்போரும் நன்கு உணர்ந்து இவற்றிற்கு தேவையான நிதியினை
ஒதுக்குவதற்கு முன்வருதல் வேண்டும்.
உசாத்துணைகள் Committee for Economic Development, (2006), Education
for global leadership: The importance of international studies and foreign language education for U.S. economic
and national security. Washington. Center for International Understanding, (2005), North
Carolina in the world: A plan to increase student
knowledge and skills about the world, Raleigh. Paul Romer (2009) Paul Romer (2009), from www.stanford.
edu/~chadj/Kaldor200.pdf
அகவிழி - ஒக்டோபர் 2012 / 9

Page 12
இலங்கை
தமி
பேராசி முன்னாள் கல்வி
ஆரம்பக் கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்பன உள்ளடங்கிய இலங்கை நாட்டின் முறைசார்ந்த கல்வி முறையில் தமிழ் மொழிவழிக்கல்விக்குரிய இடம் பற்றி விளக்குவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
குடியேற்ற ஆட்சிச்காலம்: ஆங்கிலேயரின் குடியேற்ற ஆட்சிக்காலத்தில் வசதி படைத்த, கல்விக் கட்டணங்களச் செலுத்தக் கூடிய உயர் வகுப்பினருக்கு ஆங்கில மொழியில் தராதரமான இடை நிலைக்கல்வியும் உயர்கல்வியும் வழங்கப்பட்டன, வசதியற்ற பாமரர்களின் பிள்ளைகளுக்குச் சுயமொழிகளில் (சிங்ககளம், தமிழ்) பெரும்பாலும் ஆரம்பநிலைக்கல்வியே வழங்கப்பட்டது. இதுவே குடியேற்ற ஆட்சியாளர் அக்காலத்தில் பின்பற்றிய முக்கிய கல்விக் கொள்கையாகும். ஆங்கில மொழியில் இடைநிலைக்கல்வியையும் உயர் கல்வியையும் பெற்றவர்களுக்கு அரசாங்க மற்றும் தனியார் துறைகளில் தொழில்களும் உயர் பதவிகளும் கிட்டின. ஆங்கிலம் ஆட்சிமொழியாகவும் வர்த்தகத்துறை மொழியாகவும் பயன்படுத்தப்பட்டமையால், அம்மொழியில் பயின்ற வசதி படைத்தோர் தமது வாழ்க்கை அந்தஸ்தையும் சமூக நிலைமைகளையும் மேலும் உயர்த்திக் கொள்ள முடிந்தது. சாதாரண மக்கள் ஆங்கிலப்பாடசாலைகளில் சேர்ந்து பயில முடியாது ஆரம்பக்கல்வியுடன் திருப்தியடைய நேரிட்டது. இத்தகைய கல்வி ஏற்பாடானது, ஆளுவோருக்கும் ஆளப்படுவோருக்குமிடையே பாலமாக விளங்கக்கூடிய, சுவையிலும், கருத்திலும், அறிவிலும், பழக்கவழக்கங்களிலும், ஆங்கிலேயர்களாக விளங்கக் கூடிய சுதேசிகளை உருவாக்கும் மக்காலேயின் (Macaulay) கருத்தைப் (H. Sharb, sd,1965 பக்.116) பிரதிபலிக்கும் வகையில் அமைந்தது. ஆங்கிலத்தில் உயர்தரமான கல்வியும் சுய மொழிகளில் ஆரம்பக்கல்வியும் வழங்கப்பட்ட குடியேற்ற ஆட்சியாளரின் கல்விக் கொள்கையானது, சமூகரீதியாகப் பல கேடுகளையும் பாரபட்சங்களையும் உருவாக்கவே உதவியது. கல்விமொழியடிப்படையில் பாடசாலைக்கல்வி வேறுபடுத்தப்பட்டமை, கல்வித்துறையில் இரட்டைத்தன்மை யொன்று தோன்றவும் வழி வகுத்தது. இதன்காரணமாக, கிராமப்புற மக்களும் நகர்ப்புற ஏழைகளும் தரமான ஆங்கிலக் கல்வியைப் பெறும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டன.(). E. Jayasuriya, 1981, பக்.85) குடியேற்ற காலத்தில்
107 அகவிழி - ஒக்டொபர் 2012

பின் கல்விமுறையில்
ழ்வழிக்கல்வி
வியர் சோ. சந்திரசேகரம்
ப் பீடாதிபதி, கொழும்பு பல்கலைக்கழகம்
ஆங்கிலக்கல்விக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தின் விளைவுகளைத் தொகுத்துக் கூறமுடியும்:
ஆங் க ல மே புலமை சார் மொழியாகக கல்விநிறுவனங்களிலும் கற்றோர் மத்தியிலும் வளர்ச் சியடைய உள்ளுர் மொழிகளுடனும் கலாசாரத்துடனும் தொடர்பற்ற முறையில் நாட்டின் பிரதான கல்வி நிலையங்கள் இயங்கின. ஆங்கிலம் கற்றோர் சுதேச பண்பாடு, மொழி என்பவற்றுடன் ஒன்றிணைக்கபடாது அவற்றின் வளர்ச்சிக்கு எதுவித ஒத்துழைப்பும் வழங்க வில்லை. ஏற்கனவே இனம், சாதி, சமயம், என்னும் காரணிகளின் காரணமாகப் பிரிவுபடுத்தப்பட்டிருந்த இலங்கை சமூகத்தில் ஆங்கிலம் கற்றவர்கள், சுயமொழி கற்றவர்கள் என்ற புதிய பாகுபாடொன்று தோன்றியது. உயர்கல்வி அமைப்பானது முற்றாகவே ஆங்கில மயப் படுத்தப் பட்டு, கற்றல் - கற்பித்தல், பாடநூல்கள், ஆராய்ச்சி, வெளிநாட்டறிஞருடனான தொடர்புகள் அனைத்திலும் ஆங்கில மொழியே பயன்படுத்தப்பட்டது.
குடியேற்ற ஆட்சிக்காலத்தில் இலங்கை, இந்தியா, மலாயா ஆகிய நாடுகளில் ஆங்கிலமும் வியட்னாமில் பிரஞ்சு மொழியும் பிலிப்பைன்சில் ஸ்பானிய மொழியும் இந்தோனேசியாவில் டச்சு மொழியும் பயன்படுத்தப்பட்டன, இதனால் இவ்வெல்லா நாடுகளிலுமே சுயமொழிகள் பின்னடைய நேரிட்டது. (P.G. Altback, 1989 பக்.7). அந்நிய மொழிகளில் பயிலும் போது நாட்டின் ஒரு சிலர் மட்டுமே உயர்தரக்கல்வி வாய்ப்புகளைப் பெறுகின்ற நிலைமை ஏற்படுவதால், கல்வியை மக்கள் மத்தியில் சனநாயகப்படுத்தி விரிவு செய்யும் முறைமை தடைப்படுகின்றது. அந்நிய மொழிகளைச் சகலருக்குமுரிய போதனா மொழியாக்குவது என்பது சாத்தியமற்றதாகவும் காணப்பட்டது. அந்நிய மொழியில் சகலபாடசாலை மாணவர்களுக்கும் கல்வி வழங்கும் நோக்கம் குடியேற்ற ஆட்சியாளருக்கும் இருக்கவில்லை. இந்நிலையில் அந்நியராட்சிக்குட்பட்ட தென்னாசிய, தென்கிழக்காசிய நாடுகள் சுதந்திரம் பெற்றபின்னர் கல்விமுறையில் சுயமொழிக்காரருக்கு இடமளிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

Page 13
அந்நியராட்சிக்குட்படாத ஜப்பான், தாய்லாந்து முதலியநாடுகள் போதனாமொழி விடயத்தில் மிகமுன்னதாகவே சுயமொழிகளுக்கு இடமளித்தன. 1880களில் ஐரோப்பிய விஞ்ஞானம், தொழில்நுட்பம் என்பவற்றைக் கற்பிக்கத் தொடங்கிய ஜப்பானியப் பல்கலைக்கழகங்கள் ஆரம்பத்தில் ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு ஆகிய மொழிகளைப் பயன்படுத்தினாலும் வினாவில் உயர் கல்வியில் ஜப்பானிய மொழியே பயன்படுத்தப்பட்டது. தென்கிழக்காசியாவில் ஹொங்கொங், சிங்கப்பூர் தவிர்ந்த ஏனைய நாடுகள் சுயமொழிகளையே போதனாமொழிகளாக்கின. பர்மா, மலேசியா முதலிய நாடுகள் ஆங்கிலத்தையும் இந்தோனேசியா டச்சு மொழியையும் வியட்னாம் பிரஞ்சு மொழியையும் கைவிட்டன. ஐக்கிய அமெரிக்காவின் கீழிருந்த பிலிபைன்ஸ் நாடு ஆங்கில மொழியைத் தொடர்ந்து பயன்படுத்தியது.
தென்னாசியப் பிராந்தியத்தில் உயர்கல்வி நிலையிலும் அரசாங்க நிர்வாகத்திலும் முக்கிய மொழியாக விளங்கிய ஆங்கிலம், உள்ளூர் சமூகத்திலிருந்து உருவாகிய கற்றோர் குழாத்தின் கருத்துப் பரிமாற்ற மொழியாகவும் உயர் சமூக அந்தஸ்தின் சின்னமாகவும் உருவாயிற்று. ஆங்கிலப்பாடசாலைகளில் பயின்று உயர்கல்வித்தகுதிகளைப் பெற்றவர்கள், மேலும் தமது சமூக அந்தஸ்தை உயர்த்தக் கூடிய பதவிகளில் அமர்ந்தனர். நாட்டில் ஆங்கிலக்கல்வி தந்த வாய்ப்புகள் காரணமாக சமூகத்திலும் ஆங்கிலக் கல்விக்கும் ஆங்கிலப்பாடசாலைகளுக்கும் விசேட மதிப்பு உருவாயிற்று. சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளைப் பேசிய சுதேசிகள் அந்நிய மொழிகளைக் கற்க நேர்ந்தமைக்காகத் தமது தாய்மொழியை அலட்சியம் செய்ய நேர்ந்தது பற்றி எவ்வித மனக்குறையையும் அடையவில்லை (Ceylon Serrional Paber, X ,1956 p.6). பொருளாதார நன்மைகள், பணவருவாய், உத்தியோக அந்தஸ்து முதலியவற்றைப் பெறுவதற்கான போராட்டத்தில் இந்நாட்டு மக்கள் தமது தேசிய தனித்துவத்தையும் சுயகௌரவத்தையும் பல காலமாகப் போற்றப்பட்டு வந்த பாரம்பரியத்தையும் தியாகம் செய்ய ஆயத்தமாக இருந்தனர்(Ibid 10.7). சுயமொழிகளில் எதுவித அறிவுமற்றவர்கள் உயர்பதவிகளையும் செல்வத்தையும் பெறக் கூடியதாக இருந்தது. அத்துடன் விரிவான முறையில் சுயமொழிகளைக் கற்றுத்தேர்ந்தவர்களுக்கு எத்துறையிலும் தொழில் பெற முடியாத நிலமையும் காணப்பட்டது (Ceylon serrional paber,XXII, 1946 p 11). ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் முழுவதும் இலங்கையில் கிறித்தவ சமயமும் ஆங்கில மொழிக்கல்வியுமே, உயர் அந்தஸ்த்துக்கும் சமூக நகர்வுக்குமான (Social Mobility) முக்கிய காரணிகளாக விளங்கின.
நாட்டின் முக்கியமான அரசாங்கப் பாடசாலைகளும் கிறித்தவ மிஷனரிமாரின் பாடசாலைகளும் ஆங்கிலக்கல்வியை வழங்கிவந்த நிலையில் உள்ளூர் மக்கள் மத்தியில் எழுந்த பௌத்த, இந்து சமய மறுமலர்ச்சி இயக்கங்களும் கல்வித்துறையில் கவனம் செலுத்தியபோது அவையும்

தமது நிர்வாகத்துக்குட்பட்ட ஆங்கிலப்பாடசாலைகளையே தொடங்க வேண்டியதாயிற்று. இங்கிலாந்திலிருந்த செல்வந்தர் பாடசாலைகளை (Public School) முன் மாதிரியாகக் கொண்டு இலங்கையில் ஆங்கில மொழிப்பாடசாலைகள் இயங்கிவந்தன. றோயல் கல்லூரி என்ற அரசாங்கப்பாடசாலை தவிர்ந்த ஏனைய புகழ்பெற்ற ஆங்கிலப்பாடசாலைகள் யாவும் கிறிஸ்த்தவ மிஷனரிமாரினால் தொடங்கப்பட்டவையாகும். இப்பிரித்தானிய ஆங்கிலப் பாடசாலை முறையானது, 19ஆம் நூற்றாண்டில் ஏனைய பாடசாலைகளுக்கான ஒரு சிறந்த முன்மாதிரியை (Model) வழங்கியமையால் பௌத்த இந்து இயக்கங்களும் இது போன்று ஆங்கிலப் பாடசாலைகளையும் நிறுவ வேண்டியதாயிற்று. ஆங்கிலக் கல்வியின் மீது கிறிஸ்த்தவ மிஷனரிமார் கொண்டிருந்த ஏகபோக உரிமையை உடைத்தெறிய பெளத்த, இந்து இயக்கங்கள் சுதேச மத்திய வகுப்பினர் விரும்பிய ஆங்கிலக்கல்வியை வழங்க வேண்டியிருந்தது.
சுருங்கக்கூறின், குடியேற்ற ஆட்சிக்காலத்தில் சுயமொழிவழிக்கல்வியானது (தமிழ், சிங்களம்) பெருமளவுக்கு ஆரம்பக்கல்வியுடனேயே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அம் மொழிகளில் பாடசாலைக் கல்வி பயின்றோர் ஆங்கிலவழிக் கல்வி பெற்றோரின் அந்தஸ்தையோ வேலை வாய்ப்புகளையோ பெறவில்லை. சுயமொழிக்கல்வி ஏற்பாடுகள் தொகைரீதியாக அதிகமானவர்களுக்குக் கல்வியை வழங்கினாலும் ஆங்கில மொழிக்கல்வியே எல்லா வகையிலும் முதன்மைத்தானத்தைப் பெற்றது.
ஆங்கில, சுயமொழிப்பாடசாலை மாணவர் தொகை
(1930-1946)
ஆங்கிலப்
மாணவர்
சுயமொழிப்
மாணவர் ஆண்டு
பாடசாலைகள் தொகை
| பாடசாலைகள்
தொகை
1930
280
61,397
3535)
4,69200
1933
330
76,915
3638
6,04130
1944
354
1,01029
4146
6,67032 1946
365
1,16885
4441
7,52282
ஆதாரம்: Ceylon Administrative Reports (1930-1946)
நாடு சுதந்திரம் பெறும் தறுவாயில் சுயமொழி வழிக்கல்வி 1930 - 1947 காலப் பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட டொனமூர் அரசியல் திட்டம் கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் உள்ளூர் மக்களுக்குப் பொறுப்புகளையும் அதிகாரங்களையும் வழங் கியதன் காரணமாக சுயமொழிவழிக்கல்வியில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டன 1943 ஆம் ஆண்டின் விசேட கல்விக்கு நாட்டின் கல்வி முறையில் குறைபாடுகளை ஆராய்ந்து பல புதிய பரிந்துரைகளைச் செய்தது. இவ்விசேட குழுவானது நாட்டிலிருந்த கல்விமுறையானது போதனா மொழிகளினடிப்படையில் இருவகையாகப்
அகவிழி - ஒக்டோபர் 2012 / 11

Page 14
பிரிக்கப்பட்டிருந்தமையைப், பிரதான குறைபாடாக எடுத்துக்கூறியது, இத்தகைய கல்வி முறையானது, சிங்களம் அல்லது தமிழ் மொழியே சிங்களவர்களினதும் தமிழர்களினதும் இயற்கையான போதனாமொழி, ஆங்கிலப் பாடசாலைகள் வசதிமிக்கோருக்கு மட்டும் உயர்தரமான கல்வியை வழங்குவதால், கல்வி முறையில் சமவாய்ப்புகள் இருக்கவில்லை என்பது இக்குழுவின் கருத்தாக இருந்தது (Serrional Paber-24 1943).
இக்குழு வழங்கிய முக்கிய பரிந்துரைகள் சகல கல்வி நிலைகளிலும் தாய் மொழியே போதனா மொழியாக இருத்தல் வேண்டும் என்பதும் இத்தகைய போதனா மொழி மாற்றம், கட்டங்கட்டமாக நடைபெற வேண்டும் என்பதுமாகும். இப்பரிந்துரையினடிப்படையில் சகல பாடசாலைகளிலும் ஆரம்பக்கல்வி நிலையில் போதனா மொழியாக சுயமொழிகளே பயன்படுத்தப்படல் வேண்டும் என்று அரசாங்கம் முடிவெடுத்தது. ஆயினும் இடைநிலைக்கல்வி தொடர்ந்து ஆங்கிலத்தில் வழங்கப்பட அனுமதி வழங்கப்பட்டது. எவ்வாறாயினும் கடந்த 130 ஆண்டுகளாகக் கல்விமுறையில் காணப்பட்ட ஒரு முக்கிய குறைபாடு நீக்கப்பட்டு 369 ஆங்கிலப்பாடசாலைகளும் ஏனைய சிங்கள, தமிழ்ப் பாடசாலைகள் (5436) போன்று சுயமொழிகளில் ஆரம்பிக்கல்வியை வழங்கத் தொடங்கின. நாடு சுதந்திரமடையும் தறுவாயில் (1948) தேசிய மொழிகளுக்கும் தேசிய நிறுவனங்களுக்கும் புத்துயிர் அளிக்கப்படல் வேண்டும் என்ற மக்கள் கோரிக்கை வலுப்பெற்றது. ஓர் சுதந்திரமடைந்த சனநாயக நாடு அந்நிய மொழியைக் கல்வித்துறையில் பயன்படுத்துவது மக்கள் பெற்றுள்ள புதிய சுதந்திர அந்தஸ்துக்கு முரண்பட்டதாக இருந்தது. இந்தியா, பர்மா, இந்தோனேசியா முதலிய நாடுகள் அந்நியராட்சியிலிருந்து விடுபட்டதும் சுயமொழிகளுக்கு உரிய அந்தஸ்தும் வீழ்ச்சியடையத் தொடங்கியது.
சுதந்திரத்தின் பின்னர் படிப்படியாக இடைநிலைக் கல்வி நிலையிலும் தாய்மொழி போதனாமொழியாகப் பயன்படுத்தப்படல் வேண்டும் என்ற முறையில் அரசாங்க ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. 1951 ஆம் ஆண்டு கல்வி அமைச்சர் விடுத்த ஆணையின்படி 5 ஆம் வகுப்புத் தொடக்கம் 10 ஆம் வகுப்புவரை ஆங்கில மொழிகளில் கற்பித்த நகர்ப்புற ஆங்கிலப்பாடசாலைகள் தாய் மொழிகளுக்கு இடமளிக்க வேண்டியதாயிற்று.
இலங்கையிற் போதனாமொழிமாற்றமானது, முக்கியமாக நாட்டிலிருந்த 10 சதவீதத்துக்கும் குறைவான ஆங்கிலப் பாடசாலைகளுக்கும் அங்கு பயின்ற வசதிபடைத்த சமூக வகுப்புகளுக்கும் எதிரான ஒரு போராட்ட மாகவும், குறைபாடுகள் நிறைந்த இருவகைப் பாடசாலை முறையினால் (ஆங்கிலப்பாடசாலை, சுயமொழிப் பாடசாலை) கல்வித்துறையிலும் சமூக இயக்கமாகவும் விளங்கியது.
12 | அகவிழி - ஒக்டொபர் 2012

நாட்டில் சலுகை பெற்றோராக வாழ்ந்த சிறு தொகையான மத்திய வகுப்பினர் ஆங்கிலக் கல்வியின் மூலம் தமது சமூக, பொருளாதார அந்தஸ்தை உயர்த்திக் கொள்ளவும் உயர்கல்வி பெறவும் இருந்த வாய்ப்புகள், சுயமொழிகற்றவர்களுக்குக் கிடைக்கப் பெறாமையால் ஏற்பட்ட குறைபாடுகளைப் போக்கும் ஒரு முக்கிய கல்விச் சீர்திருத்தமாகவும் போதனா மொழி மாற்றம் விளங்கியது.
ஆரம்பநிலைக் கல்வியிலும் இடைநிலைக்கல்வியிலும் ஏற்பட்ட போதனாமொழி மாற்றங்களைத் மொழிகளைப் போதனா மொழிகளாக்கும் அவசியம் ஏற்பட்டது. 1945 ஆம் ஆண்டில் பாடசாலைக் கல்வியும் பல்கலைக்கழகக் கல்வியும் இலவசமாக்கப்பட்டதைத் தொடர்ந்து (Free Education Scheme of 1945) சாதாரண, பின்தங்கிய பிரிவுகளைக் சேர்ந்தவர்களும் சுயமொழிகளில் உயர்கல்வியைத் தொடரும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
சுதந்திரத்தின் பின் சுயமொழிக்கல்வி பாடசாலைக் கல்வி நிலையில் ஆங்கிலம் போதனாமொழியாக இருந்த நிலைமை கட்டங்கட்டமாகவும் உறுதியாகவும் அகற்றப்பட்ட பின்னர், இலங்கையிலிருந்த பாடசாலைகள் யாவும் இறுதி வகுப்புவரை (13 ஆம் வகுப்பு) சிங்களம் அல்லது தமிழ் மொழிகளிலேயே நடாத்தப்படலாயின. சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளைப் பேசும் இரு மொழிக்குழுவினரும் சேர்ந்து பயின்ற ஆங்கிலப் பாடசாலைகள் பல சிங்களம், தமிழ் மொழிகளைப் பயன்படுத்தின. கல்விப் பொதுத்தராதார உயர்நிலை வகுப்புகள் (+2 வகுப்புகளுக்கு சமமானவை) 1958 ஆம் ஆண்டளவில் சுயமொழிகளைப் பயன்படுத்தத் தொடங்கின. முக்கியமாக புவியியல், வரலாறு, அரசியல் ஆகிய கலைத்துறைப்பாட போதனை சுயமொழிகளில் ஆரம்பிக்கப்பட்டன. 1970களில் இந்நிலையில் ஆங்கில மொழி மூலம் நடாத்தப்பட்ட விஞ்ஞானப் பயிற்சி நெறிகள் (கணிதம், இரசாயனம், உயிரியல், பௌதீகம்) யாவும் சுயமொழிகள் மூலம் நடாத்தப்படலாயின. சுருங்கக் கூறின், இம்மாற்றங்களின் விளைவாகத் தற்போது ஆண்டு தோறும் பல்கலைக்கழகங்களின் பல் வேறு போதனாபீடங்களுக்கும் (மருத்துவம், பொறியியல், விஞ்ஞானம், சட்டம், சமூக அறிவியல், வர்த்தகவியல், நிர்வாகவியல்) அனுமதி பெறும் சகலமாணவர்களும் (9500 பேர்) சிங்களம் அல்லது தமிழ் மொழிகளில் முழுப் பாடசாலைக் கல்வியையும் பயின்றவர்களாகக் காணப்படுகின்றனர், இன்று கம்பெனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு இயங்கும் சர்வதேசப்பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அரசாங்க, தனியார் பாடசாலைகள் அனைத்தும் சிங்களம் அல்லது தமிழ் மொழியைப் போதனா மொழிகளாகக் கொண்டு இயங்குகின்றன. பாடசாலைகளில் பயிலும் 41,91971 மாணவர்களில் 25 சதவீதமானவர்கள் தமிழ் மொழியிலேயே பயிலுகின்றனர்.
தொடரும்........

Page 15
நேர்காணல்
கல்வித்
சிங்களத்தில்:
நேர்காண்டவர்:
பான்
1. இன்று எமது நாட்டில் காணப்படும் பரீட்சை முறைகள்
பற்றி உங்கள் கருத்து எத்தகையது? உயர்தரப் பரீட்சையை நோக்கும் போது முழுமையான துறையினதும் புலத்தினதும் தனித்தனியான நிலைமைகள் அதன் மூலம் தென்படுகின்றன. கழிவுப்பொருட்கள் வழிந்தோடும் பரீட்சை முறைமை எம்மிடமிருப்பதாகவும் கடந்த 60 வருடங்களாக நாம் அதனை தோளில் சுமந்து வந்திருக்கின்றோம் எனவும் முன்னாள் பரீட்சை ஆணையாளர் குறிப்பிட்ட, சுமத்திய குற்றச்சாட்டுக்களே இதற்கு சிறந்த உதாரணம். எமது பரீட்சைக்கோலம் கேள்விக்காய் செய்யும் சோதனையாகவே கருதப்படுகின்றது. உலகில் பரீட்சையை நடாத்தும் குறிக்கோளையும் செயன்முறையையும் (Methodology) நாம் மறந்திருக்கின்றோம். பொதுவான கல்வி மதிப்பீட்டு முறைகளின் இலக்குகளாயமையவேண்டியது குறிப்பிட்ட காலகட்டத்திற்குரிய அடைவுகளை அளவிடு தலாகும். சந்தர்ப்பங்களின் குறைபாடுகள் காரணமாக பரீட்சைகள் மூலம் நாட்டில் பல நெருக்கடி நிலைமைகள் உருவாக்கப்பட்டுள்ளன. உதாரணமாக மருத்துவபீடம், பொறியியல்/எந்திரவியல் பீடம், சட்ட பீடம் என்பவற்றிற்கான நுழைவு வாய்ப்புகள் குறைவாகையால் உக்கிரமான போட்டியாக உருவெடுத்துள்ளது. மறுபுறத்தில் வசதி வாய்ப்புகளுடன் கூடிய பாடசாலைகளின் பற்றாக்குறையினால் நடுத்தரவகுப்பு மற்றும் தாழ்வகுப்பு(Lower Class) மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சை மூலம் அவர்களின் வயதிற்கும் பொருந்தாத மிகையழுத்தத்துற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
நடுநிலையாய் நோக்குமிடத்து க.பொ.த சாதாரணதரப் பரீட்சை மாத்திரமே எமக்கு சித்தியடையும் குறிக்கோள் கைகூடும் ஒரே பரீட்சையாகக் காணப்படுகிறது. ஏனையவை சார்பாக உக்கிரமான நெருக்கடியையோ அழுத்தங்களையோ மாணவர்கள் மீது பிரயோகிக்காதுள்ளது. உயர்தரப் பரீட்சையை தகுதியாகக் கொண்டு மூன்றாம் நிலை (Tertiary) மற்றும் உயர் கல்வியை வழங்கும் ஏறத்தாழ 45 நிறுவனங்கள் நம் நாட்டிலுண்டு. இவை அரச நிறுவனங்கள், தனியார் துறையில் இவற்றை விட அதிகமாகவுள்ளன. அவர்கள் எதிர்பார்ப்பது உயர்தரம் சித்தியடைதல் தவிர Z-Score அல்லது புள்ளி மட்டமல்ல.

துறையில் காணப்படும்
நெருக்கடிகள்
S.M. Ariyarathna de Alwis Assistant Secretary, National Education commission
Mr. A.A. Azees
நேர்மையான நெருகடியேற்படுவது இங்குதான். நாம் பிள்ளைகளுக்கு உயர்கல்விக்கான வாய்ப்புகளை அதிகரித்தல் வேண்டும். எமது நாட்டில் சமவாய்ப்புகளைக் காண்பதற்கில்லை. சமனான வசதிகளுமில்லை. சில பிள்ளைகளுக்கு அரச சலுகைகள் அவசியமேயில்லை. அவர்கள் கேட்டுநிற்பது வாய்ப்பை மாத்திரமே, உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்கனுப்புவது சிறந்ததாகத் தோன்றவுமில்லை.
எமது நாட்டுக்கல்வியின் இலக்கு 10% மாணவர்களை பல்கலைகழகத்திற்கு அனுமதிப்பதாகும். எஞ்சிய 90% பற்றி யாரும் கதைப்பதில்லை. இன்று சுயாதீனக்கல்வி என எவ்விதத்திலும் கருத்துப்பெறுவதில்லை. அது இலவசக்கல்வியாக யாரேனும் கருதுவார்களாயின் அதுவும் எமது பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை. உதாரணமாக 2001இல் முதலாம் தரத்திற்கு 440000 பிள்ளைகள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். அவர்களுள் 350000 பிள்ளைகளே 2011இல் சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றியுள்ளனர். எஞ்சிய 90000 பிள்ளைகளுக்கும் நடந்தது என்ன? ஆரம்பநிலை வகுப்புகளிவிருந்து பிரத்தியேக வகுப்புகளிற்கு (Tution) அனுப்ப வசதிகளற்ற பெற்றோர் முதல் 11 வருடங் களினுள் ஏதோவொரு காரணத்தினால் இப்பிள்ளைகளை பாடசாலையிலிருந்து விலக்கிச் சென்றுள்ளனர்.
சாதாரண தரப்பரீட்சையிலிருந்து உயர்தரப்பரீட்சைக்கு தேர்ந்தெடுக்கும்போது மேலும் பலர் பாடசாலையிலிருந்து இடைவிலகிக் செல்கின்றனர். உயர்தரப்பரீட்சைக்குத்
அகவிழி - ஒக்டோபர் 2012 / 13

Page 16
11 அர். SAVE ST
அரச கல6
Dா60
தோற்றும் மாணவர்களில் பெரும்பாலும் பல்கலைக்கழக அனுமதி பெறுவது 20000 அல்லது 22000 மாணவர்கள் மாத்திரமே, இவ்வாறு நோக்கும்போது 418000 மாணவர்கள் பல்கலைக்கழக மட்டத்திற்கு வரும்போது பாடசாலையினால் கைவிடப்பட்டுள்ளனர். எமது நாட்டின் சிங்கள, தமிழ் தாய்தந்தையருக்குப் பிறந்த பிள்ளைகள் தாய்மொழியில் முன்பள்ளி (Pre School) சென்று 11 வருடங்கள் தாய்மொழியிலே கல்வியைத்தொடர்ந்து 23% மானோர் தாய்மொழியில் சித்தியடையத் தவறுகின்றனர். சாதாரண தரப்பரீட்சையில் 50% ஆனோர் பின்னடைவைத் தழுவுகின்றனர். இப்பிள்ளைகளின் எதிர்காலம் எத்தகைய தென்பது பற்றி உறுதியற்ற நிலைமை காணப்படுகிறது.
தேசிய கல்வி ஆணைக்குழு 2011இல் மேற்கொண்ட ஆய்வொன்றில் எமது நாட்டின் ஒவ்வொரு பெற்றோரும் தமது வருமானத்தின் பெரும்பகுதியை பிள்ளைகளின் கல்விக்காக செலவிடுவதாக அறியப்படுள்ளது. இந்நாட்டில் முழுமையான இலவசக்கல்வியொன்றில்லையென்பது இதன்முலம் தெளிவாகின்றது. அத்துடன் மருத்துவபீடம் செல்லும் பிள்ளையொன்றிற்காக பெற்றோரினால் பொறுப்பேற்கவேண்டிய செலவு வருடாந்தம் 150000-200000 வரையான உயர் பெறுமானமாகும்
2. உயர்தரப்பரீட்சை தொடர்பாக கடந்தகாலங்களில்
ஏற்பட்ட முறுகல் நிலை தொடர்பாக நீங்கள் கொண்டுள்ள அபிப்பிராயம் யாது? முழுமையான உயர்தரப்பரீட்சைப் பிரச்சினையென்பது எமது கல்வியின் தற்கால நெருக்கடியின் ஒரு பக்கம் மாத்திரமே. தேர்ந்தெடுக்கும் பரீட்சையாக உயர்தரப்பரீட்சை நடாத்தப்படுவதால் ஒரு புள்ளிக்காக அல்லது Z
147 அகவிழி - ஒக்டோபர் 2012

මහනඟ රැකගනිමු ATE EDUCATION வியைக் காப்போம்
Score இன் ஆயிரத்திலொன்றிற்காக மாணவர்களும் பெற்றோரும் போராட்டம் நிகழ்த்துவது அதிசயிக்கத் தக்க விடயங்களல்ல. 2003 இல் பிள்ளைகளின் வெளிச் செயற்பாடுகளிலும் (இணைப்பாடவிதானச் செயற்பாடுகள்) மதிப்பீடொன்றை செய்யவேண்டுமென கல்வியியலாளர்கள் யோசனைகளை முன்வைத்தனர். அவ்வாறு நிகழ்ந்திருப்பின் பிள்ளைகள் பரீட்சைப் புள்ளிகளில் மாத்திரம் தங்கியிருக்க வேண்டியதில்லை. விஷேட நிபுணத்துவத் தோன்றலாகிய கல்வியின் கீழ் வகுப்பறைச் செயற்பாடுகளில் பிள்ளைகளின் பூரணவிருத்தி உள்வாங்கப்பட்டு தயார் செய்யப்பட்டிருப்பினும் மதிப்பீடு இன்னும் 60ம் தசாப்தத்தில் காணப்பட்ட முறையிலேயே காணப்படுகின்றது.
- உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றுச் சீர்கேடுகள் மனிதனால் நிகழ்ந்ததா அல்லது கணினிகளினால் நிகழ்ந்த சீர்கேடா என்பது நானறியாத விடயம். இவையனைத்தினதும் மூலாரம்பம் ஒரு (One) பரீட்சைப் புள்ளியின் மீது வாழ்க்கையைத் தீர்மானிக்கும் இடத்திற்கு கல்விக்களத்தினால் பிள்ளை தள்ளப்படுதலாகும். பிள்ளையின் ஏனைய ஆற்றல் களுக்கும் அங்கீகாரமளிக்கும் முழுப்புள்ளியில் அவற்றிற்கும் இடமளிக்கும் சுமுகமான நிலைமையொன்று காணப்படுமாயின் இவ்வாறான நெருக்கடி நிலைமைகள் ஏற்படப் போவதில்லை. உதாரணமாக ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 2011 இல் சித்திபெறுவதற்கான வெட்டுப்புள்ளி 156 ஆகும். இதற்கேற்ப பரீட்சையெழுதும் ஒரு பிள்ளை ஓர் வினாத்தாளில் 78 புள்ளிகளைப் பெற்றிருப்பின் கூட வசதிவாய்ப்புகள் நிறைந்த பாடசாலையொன்றைத் தேர்ந்தெடுக்க விண்ணப்பிக்க முடியாது. உலகில் எப்பரீட்சை 78 புள்ளிகளைப் பெற்றும் பின்னடைவாகக் கருதப்படுகிறது? உயர்தரப்பரீட்சையும் இதற்கு சமனானது. அதாவது உண்மையிலேயே எமது நாட்டுப் பிள்ளைகள் திறமையானவர்கள். எம்மால்

Page 17
செ
மா ன
முடியாதிருப்பது இப்பிள்ளைகளின் எதிர்காலத்தை திறமையான முறையில் முகாமைத்துவம் (Management) செய்து கொடுக்க முடியாமையாகும்.
13வருடங்களாகப் பெற்றுக்கொண்ட பாட அறிவை கடதாசியில் கொட்டிவிடும் முறையை தற்போதாவது நாட்டிலிருந்து விரட்டியடித்தல் ஏற்றாகவேண்டும். இந்த நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர இரு முறைகளே உள்ளன. ஒன்று, பிள்ளைகளுக்கு ஐம்புலன்களிருப்பதை கல்வியியலாளர்கள் ஏற்றுக்கொள்ளல் வேண்டும். அரசியல் வாதிகள் அனைவருக்கும் வாய்ப்புக்களை வழங்குவது நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட நீதி, சட்டம், என்பன ஏற்றாக வேண்டும். இத்தீர்வுகளிரண்டும் ஒன்றிணையும் வரை உயர்தரம் மட்டுமல்ல இந்நாட்டிலுள்ள எந்தவொரு பரீட்சை பிரச்சினைகளையும் தீர்ப்பது கடினமான விடயம். 3. Z-score முறையினால் மாணவர் சமூகத்திற்கு
யாதேனும் அநீதியிழைப்புகள் இடம்பெறுகிறதா? அம்முறை மூலம் எதிர்பார்த்த இலக்கு வெற்றிகரமாக
அடையப்படுவதாக நீங்கள் நினைக்கின்றீர்களா? Z-Score என்பது சமனான சந்தர்ப்பங்களின்மையால் ஏற்படும் நெருக்கடிக்கான தற்காலிகத் தீர்வாகும். பல்கலைக்கழக வசதிகள் குறைவாயிருப்பதாலும் மாணவ மணிகள் தொடர்ச்சியாக அதிக புள்ளிகளைப் பெறுவதாலும் சந்தர்ப்பங்களை, வழங்குவது நியாயமாக இடம் பெற வேண்டியமையினால் z-Score உருவாக்கப்பட்டது. சிக்கலான விடையங்களை, திருத்திய பாடத்திட்டம் என்பவற்றில் ஒரே பரீட்சையை நிகழ்த்தியதால் பாடப் புள்ளிகளைத் தரமிடும் நெருக்கடி நிலைக்கு உயரதிகாரிகள் உள்ளாகினர். ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு பாடசாலையிலும் சமனான வசதிகளும் கற்றல்வாய்ப்புகளும் இருக்குமாயின், அடிப்படைத் தகுதிகளைப் பெறும் அனைத்து மாணவர் களையும் உயர்கல்விக்கு இணைத்துக் கொள்ளும் வாய்ப்பு தேசிய கல்வித் திட்டத்தில் காணப்படுமாயின் சிக்கலான முறைகளில், பிள்ளைகளைத் தேர்ந்தெடுப்பதற்கு அவசிய மில்லை. கலைப்பிரிவில் இது பிரபல பிரச்சினையாக உருவெடுக்காததன் காரணம் உயர்கல்வியை கலைப்பிரிவில் பயிலும் வாய்ப்பு நாட்டின் அனைத்துப்பகுதிகளிலும் சார்புரீதியாக ஒரே சமனான அளவில் காணப்படுவதாகும். பிரச்சினையிருப்பது கணித-விஞ்ஞான, வணிகப் பிரிவு களிலாகும். எவ்வாறிருப்பினும் உயர்தரத்தில் சித்திபெறும் அனைவருக்கும் உயர்கல்வியை வழங்க முடியுமாயின் இது தானாகவே வலுவிழந்து செல்லும். இங்கு பயங்கரமான நிலைமை யாதெனில் ஒருபுள்ளியின் 1/1000 இனால் பிள்ளையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடிதலாகும். முழுப்புள்ளிகளுக்கும் 2-Score க்குமிடையே நெருங்கிய உறவிருத்தல் அல்லது தொடர்பை வைத்திருத்தல் பிள்ளைகளுக்கு பாதகமானது.

பல்கலைக்கழகம் நுழையும் மாணவமணிகளுக்கு உண்மையாகவே இலவசக்கல்வி கிடைக்கின்றதா?
கலை, வர்த்தகப் பிரிவில் கற்கும் மாணவர்களுக்கு விடுதி, உணவு போன்ற சில அடிப்படைப் பிரச்சினைகள் மாத்திரமேயுண் டு. கணித - விஞ் ஞானப் பிரிவு மாணவர்களின் பிரச்சினைகள் அவற்றைவிட வேறுபட்டது. சில பல்கலைக்கழகங்களில் முதல், இரண்டாம் வருட மாணவர்களுக்கு விடுதிகள் வழங்கப்படுவதில்லை. கொழும்பு, களனி, ராகமை, ஆகிய பல்கலைக்கழக மாணவர்கள் தங்குமிடம் பெறுவது தனியாருக்குரிய விடுதிகளிலென்பதை நாம் அறிவோம். அவற்றிற்கு அதிகமான கட்டணங்களும் செலுத்தப்படுதல் வேண்டும். உணவு - பானங்களின் விலையும் அதேபோன்றது, ஆரம்பநிலை புலமைப்பரிசில் பரீட்சை காரணமாக பலவீனமடைந்த உடல், உயர்தரப் பரீட்சையில் மேலும் செழிப்பிழந்து பல்கலைக்கழகம் சென்றதும் குறளாதல் (குறளடைந்து) (stunting) புலப்படாத நிலையில் காணப்படுவர். போசனைமிகு ஆகாரம் அறிவாற்றல் மிகு இளைஞர்களை உருவாக்க அத்தியாவசியமான காரணியாகும். விடுதிகளில் நெருக்கடி, உணவு நெருக்கடி, உடல்பலவீனமடைதல் என்பன வன்செயலுடைய பிள்ளைகள் உருவாவதில் பின்ணனியை வழங்குகின்றது. அதன் மூலம் பயனடைவது யாரென்பதை நாம் நன்கு அறிவோம். நாம் பதிலளிக்க வேண்டியது விளைவிற்கல்ல காரணத்திற்காகும். உதாரணமாக ராகமை மருத்துவபீடத்தில் முதல் இருவருடங்களுக்கும் விடுதி வசதிகள் கிடைப்பதில்லை. தனியார் விடுதிகளுக்கு அதிக கட்டணம் செலுத்தி கற்கவேண்டிய சூழ்நிலை மாணவர்களுக்கு எற்படுகின்றது. சில தனியார் விடுதிகளில் அறைக்குரிய (Room) கட்டண மின்றி உணவிற்கும் படுக்கைக்கும் (Bed) மாத்திரம் 6000 அறவிடப்படுவதாக அறியக்கிடைக்கின்றது. ஆயிரமாயிரம் இன்னல்களுக்கு மத்தியில் கிராமத்திலிருந்து நகருக்கு வரும் பிள்ளையை பல்கலைகழகத்தில் அனுமதித்ததும் பெற்றோருக்கு நிகழ்வது மரத்தால் வீழ்ந்தவனை மாடு ஏறி மிதித்தது போன்ற நிகழ்வாகும்.
பல்கலைக்கழகத்தில் முதல்வருடம் தொடக்கம் ஒரு தவணைக்கு 50,000 பெறுமதியான பாடநூல்களும் ஏனைய பயில் உபகரணங்களும் வாங்கவேண்டியுள்ளன. பல்கலைக் கழகத்திற்கு வெளியிலிருக்கும் மாணவர்கள் அல்லது பெற்றோர் இந்நிலைமையை அறிந்திருப்பதில்லை. அவர்கள் நினைப்பது பிள்ளையொன்றை பல்கலைக்கழகம் அனுப்பியதும் ஐந்து வருடங்களில் அவர் வைத்தியராக வேண்டுமென்பதாகும்.
5.
பாடசாலைகளில் சிறந்த கற்பித்தல் இடம் பெறுவதில்லையென சிலர் குற்றம் சுமத்துகின்றனர். இதற்கமைய பாடசாலைக்கல்வி பற்றி உங்கள் கருத்து எத்தகையது?
அகவிழி - ஒக்டோபர் 2012 / 15

Page 18
புள்ளிகளை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை யென்பதால் தற்போது புள்ளியெடுக்க முயற்சிக்கின்றனர். தேர்ச்சியும் திறமையுமல்ல, பாடசாலை வகுப்பறை உருவாக்கப்பட்டிருப்பது பிள்ளையின் அறிவு, திறன், மனப்பாங்கு மற்றும் பரீச்சயம் என்பவற்றைப் பட்டைதீட்டி மேம்படுத்தவதற்காகும். பரீட்சை முறை தயாராகவிருப்பது மூன்று மணிநேர ஞாபகத்தை பரீட்சித்துப் பார்ப்பதற்காகும். இவை இரண்டுக்குமிடையே தீவிர மோதல் காணப்படுகிறது. புள்ளியைத்தேடும் பிள்ளை பாடசாலை வழங்குபவற்றில் கவனமெடுப்பதில்லை. இம் முரண்பாடு காரணமாக காலவோட்டத்தில் பிள்ளைகளும் பெற்றோரும் பாடசாலை யைப் புறக்கணிப்பதுடன் தனியார் பிரத்தியேக வகுப்புக்கள் மிகமுக்கிய காரணியாக உருவெடுக்கும். புள்ளிகளை அதிகரித்துகொள்ளும் நுட்பங்களை வழங்குபவர் தனியார் கல்விநிறுவன ஆசிரியர் என்பதும் பிள்ளைகள் 80% வரவு காணப்படுகிறதா என்பன ஆராய்ந்து பிள்ளையை பாடசாலையில் தங்கவைத்துக்கொள்ள பாடசாலை முயற்சிப்பதாகவும் பொதுவான கருத்து நிலவுகின்றது. எதிர்காலத்தில் சமுகத்தினால் பாடசாலை ஒதுக்கபடும் அபாயம் உருவாகியவண்ணமுள்ளது. அதற்கமைய இலவச, சுயாதீனக்கல்வி காலவோட்டத்தில் குறைந்து செயலிழந்து செல்லும். அதுவும் ஒரு நெருக்கடியாகும். காலங்கடந்து செல்ல பாடசாலை தேய்வடைந்து பிரத்தியேக வகுப்புக் களும், பரீட்சைத் திணைக்களமும் மாத்திரம் எஞ்சும் முறை யொன்று உருவாகுமாயின் அது அதிசயக்கத்தக்க விடயமுமல்ல. 6. கல்விக்காக அரசு ஒதுக்கும் நிதி ஒதுக்கீடு
போதியதென்று நீங்கள் நினைக்கின்றீர்களா?
உண்மையாகவே போதியதல்ல அரசு பாதீட்டில் (Buddget) கல்விக்காக நிதியின் 92% கல்வி ஊழியர்களின் வேதனத்திற்காக செலவிடப்படுகின்றது. பாடசாலைக் கட்டிடங்கள், ஆய்வுகூடம், நூலகம், நூல்கள், சீருடை உட்பட கல்விக்களத்தின் ஏனைய அனைத்து அபிவிருத்திகளுக்கும் எஞ்சியிருப்பது 8% ஆன சிறு தொகையாகும். கல்விக்களத்தின் அபிவிருத்திக்கு அரசு செலவிடும் தொகை எத்தகையதென்பது இதிலிருந்து தெளிவாகின்றது. நான் நினைப்பது செலவிடுவதில் உகந்த முறைகளில்லையெனவாகும். உதாரணமாக எமது பிள்ளைகளின் பெரும்பாலானோருக்கு சீருடை, புத்தகங்கள் இலவசமாக வழங்கவேண்டிய அவசியமில்லை. எனினும் அனேகமானோருக்கு வழங்கப் படுதல் வேண்டும். பகலுணவும் அதேபோன்றது. தேவையை உடைய பிள்ளைகளுக்கு மாத்திரம் கொடுப்பனவுகளை வழங்குவதாயின் சிறந்ததரத்திலும் அதிக அளவிலும் வழங்க முடியும். மறுபுறமாக எமது கவனத்தை ஆரம்பநிலைப் பாடசாலைகளின் பால் திருப்புதல் வேண்டும். ஆரம்பநிலைக் கல்விக்கும் செலவிடும் ஒவ்வொரு சதமும் விளைதிறன்மிக முதலீடாகவே கல்வியியலாளர்கள்
167 அகவிழி - ஒக்டோபர் 2012

கருதுகின்றனர். துரதிஸ்ட வசமாக எமது நாட்டில் நிகழ்வது அதுவல்ல. 1000 பாடசாலைகளை அபிவிருத்திசெய்யும் நிதியில் (ஒரு பாடசாலை 4.5 கோடிருபாய்) 5000 ஆரம்பநிலைப்பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய முடியும். அதன்மூலம் ஆரம்பநிலைப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தலாம். வாழ்க்கையில் முதன்முதலில் பாடசாலைக்கு வரும் பிள்ளைக்கு வனப்புமிகு (எழில்மிகு) வகுப்பறை, தூயகுடி நீர், தகுதிவாய்ந்த ஆசிரியர், பாதுகாப்பான சுற்றுச்சூழல் என்பவற்றை வழங்க அதிகளவில் செலவிடவேண்டியது அவசியமாகிறது. 7. பல்கலைக்கழகத்திலேற்பட்டிருக்கும் தற்கால
நெருக்கடியை நீங்கள் எவ்விதம் நோக்குகிறீர்கள். பல்கலைகழகத்தில் காணப் படுவது புதுமையான நெருக்கடிகளெதுவுமல்ல. தொடர்ந்துவரும் காரணங்களாகும். முழுமையான நிறுவனத் தொகுதி வீழ்ச்சியடைந்திருப்பது, இளைஞர்களின் மனநிலை தாழ் நிலையடைதல், பல்கலைக்கழக சுற்றயலில் ஒன்றுகுவிந்திருக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள், எதிர்காலம் பற்றிய திடநம்பிக்கையின்மை என் பன நெருக்கடிக்கான காரணங்களாகும். அதற்கு சமாந்தரமாக பொறுப்பதிகாரிகள் காலத்திற்குக்காலம் நடாத்தும் ஆய்வுகளை ஆதாரமாகக் கொள்ளாத போலியான குற்றச் சாட்டுக்கள் இவ் இளைஞர்களின் உளக்கிளர்வுகளுக்குக் காரணமாயுள்ளன. தனியார் பல்கலைக்கழகம் பற்றிய பிரச்சினை இதற்கு சிறந்த உதாரணமாகும். நாமறிந்த அளவில் தனியே அரச பல்கலைக் கழகங்களால் மாத்திரம் முழு நாட்டினதும் மாணவர்களுக்கு உயர் கல்வியை வழங்கும் நாடுகள் உலகிலெதுவுமில்லை. இலங்கையிலும் கட்டண அறவீட்டு அடிப்படையில் கல்வியை வழங்கும் நிறுவனங்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக காணப்படுகிறது. உதாரணமாக தாய்லாந்தின் ARTZ, இந்தியாவின் “மீபா” இவ்வாறான நிறுவனங்களாகும். இந்நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கான அந்நியச் செலாவணி கிடைக்கின்றது. நாமும் அவற்றையிட்டு பணம் செலுத்துகின்றோம். இப்போது இலங்கையில் ஏழு நாடுகளின் கல்விவல்லுனர்கள் சேர்ந்து உருவாக்கும் "மீபா” நிறுவனம் எதிர்வரும் சில வருடங்களினுள் திறக்கப்படும். தேசியகல்வி நிறுவகம் பல்கலைகழகப் பட்டம் வழங்க பதிவுசெய்யப்பட்ட நிறுவனமாகும். எனினும் அதன் மூலம் பட்டம் வழங்கப்படுவதில்லை. உள்நாட்டு அரசு பட்டப்படிப்பு நிறுவனங்கள் முடியுமானதை மேலும் வலிமையூட்டி மேலும் சந்தர்ப்பம் வழங்குமாயின் அரசு மேற்பார்வையின் கீழ் சர்வதேச அளவிளான பல்கலைக்கழகங்களை ஏற்படுத்துவதில் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தப் போவதில்லை. நெருக்கடியை தடியாலும் அடியாலும் தீர்க்க நடவடிக்கையெடுக்காமல் கருத்துப்பரிமாற்றம் தரப்டுமாயின் பிள்ளைகளின் வாழ்க்கையும் அவர்களது எதிர்காலமும் ஓரளவேனும் பாதுகாக்கப்படும்.

Page 19
பரீட்சை உளவிய
1. கடந்தகால வினாத்தாள்கள் சில பாடசாலைகளில் கடந்த பல வருட கால வினாத்தாள்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான வினாவங்கிகள் (Question Bank) மிகவும் பிரயோசனமானவை. குறிப்பிட்ட விடயத்தில் வினவப்படும் வினாக்களின் எண்ணிக்கை, விடையளிக்க வேண்டிய நேரம், அதிகவனத்தையீர்க்க வேண்டிய பிரிவுகள் மற்றும் புள்ளிகள் கிடைக்கும் விதம் என்பன கடந்த கால வினாத்தாள்களைப் பயில்வதன் மூலம் கற்றுக்கொள்ளலாம். தனியே அல்லது குழுவாக வினாக்களுக்கு விடையளித்தல் ஒத்திகையாகவும் (Rehearsal), ஐயமகற்றலாகவும் (Desensirization) தொழிற்படும்.
2. ஒரு மாதத்திற்கு முன்னர்
1 மீட்டல்
மேற்கூறப்பட்ட விடயங்களில் கண்ணுங்கருத்துமாயிருந்து தேர்வினைப்பற்றிய தெளிவுடனும் நோக்குடனும்
களைப்பும், பகுத்தறிவற்ற பயமுமின்றி நேரத்தை உகந்தமுறையில் உபயோகப்படுத்தி போதியளவு உறக்க ஒய்வைப் பெற்று தேர்வு நாட்குறிப்பில் குறிப்பெழுதி அஞ்சலட்டைமுறையை அமுல்படுத்தி மீட்டல் செய்துகொண்டு பாடத்திட்டதைக் கற்று கடந்தகால வினாத்தாள்கள் பலவற்றை வாசித்து விடையளித்து வருடம் பூராகவும் தேர்விற்காய் தயாராகிய தேர்வுநாடிக்கு இறுதிமாதத்திற்குள் பிரவேசிக்கும்போது கஷ்டநிலைகள் உருவாவது அரிது. மனதிலேற்படுவது எதிர்பார்ப்புடன்கூடிய தெளிவான தன்மையாகும்
வருடம் பூராகவும் பாடங்களைக் கைவிட்டு "முயலும் ஆமையும்” கதையில் முயலைப்போன்று அவசரத்தில் விழித்தெழும்பும் தேற்வுநாடிக்கே, வெறுப்பு - பதகளிப்பு போன்ற மனவெழுச்சிகள் (Emotions) இறுதி மாதத்தில்

க்கு முகங்கொடுக்க லின் உற்றதுணை
பூக்கம்: Dr. D.V.J. Harishchandra (உளப்பிணி வைத்திய நிபுணர்) தமிழாக்கம்: Mr. A./A. Azees
சென்ற இதழின் தொடர்ச்சி
ஏற் படும். வரையறுக்கப் பட்ட இடப் பரப்பளவிற்கு வரையறையுடைய பொருட்தொகையொன்றை விசையால் அமுக்கி நிரப்புதலுக்கு பிரயோகிக்கும் Crammian எனும் புராதன ஆங்கிலச் சொல்லிருந்து பிரிந்து வந்த Cram எனும் பதத்தை உபயோகிக்க வேண்டியது இறுதி மாதத்தில் அவசரத்தில் விழித்தெழுந்து ஒராண்டுப் பாடத்தை ஒரு மாதத்தினுள் உட்செலுத்தும் தேர்வுநாடியின் தொழிற் பாட்டிற்காகும். அறிவார்ந்த முறையில் தேர்விற்கு ஒராண்டுக்கு முன் கற்றலை "Cram” என குறிப்பிடுவதாக ஒருசிலர் பிழையாக விளங்கியுள்ளனர். இறுதிமாதத்தில் முடியுமாயின் மீட்டலை மாத்திரமே தேர்வுநாடி செய்தல் வேண்டும். முழுப்பாடத்திட்டத்தையும் இறுதிமாதத்தில் ஒரு முறையேனும் மீட்டல் செய்தல் வேண்டும். பாடத்தை முதன்முறையாக வாசிக்கும்போது செலவிடவேண்டிய காலத்தின் 1/5 அல்லது 1/10 பங்காவது மீட்டலில் செலவாகாது.
5 குறிப்புகள் வகுப்பறையில் புத்தியுடன் குறிப்பெழுதி, வீட்டில் கற்கும்போது புத்தகத்தின் வரிகளின் கீழ் கோடிட்டு, Highlight வர்ணமிட்டு சாராம்சத்தை புத்தகப் பக்கங்களிலேயே தயார்செய்து கொண்ட, அஞ்சலட்டை முறைக்கேற்ப செயற்பட்ட தேர்வுநாடிக்கு கடுகதியில் மீட்டல் செய்ய முடியும்.
விஷேடமாக இறுதிமாதத்தில் வேலைப்பளுவிற்கு மத்தியில் இருந்தால் குறிப்புகளை பஸ்வண்டியில், வகுப்பில் விட்டுவிட்டு மறந்து செல்ல நேரிடலாம். இதனால் குறிப்புகளை கவனமாக பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
நண்பர்களுக்கு தனது குறிப்புகளை வழங்குவது மிக முக்கியமாயின் வழங்கவேண்டியது அவற்றின் நிழற்பகுதிகளை (Photocopy) மாத்திரமே. அது தவிர தான் எழுதிப் பாதுகாத்த குறிப்புகளையல்ல. இதனால் மனக்கஷ்டங்களையும் தவிர்த்துகொள்ளலாம்.
- பரீட்சை மண்டபம் பரீட்சார்த்திகளுக்கு பெரும்பாலும் அவர்களுடைய பாடசாலையே பரீட்சை நிலையமாக அமையும்.
அகவிழி - ஒக்டோபர் 2012 / 17

Page 20
அவ்வாறின்றியதாக இருப்பின் தனது பரீட்சை நிலையம் எதுவென்பதை திருத்தமாக அறிந்துவைத்திருத்தல் வேண்டும். முடியுமாயின் ஒருமுறை அந்நிலையத்திற்கு சென்று வருவதன் மூலம் பழக்கப்பட்டாத சூழலிற்கு முதன்முறையாக உட்பிரவேசிக்கும் ஒருவருக்கு ஏற்படக்கூடிய பதகளிப்பு (Anxiety) தவிர்த்துக்கொள்ளலாம். தனது
வீட்டிலிருந்து அவ்விடத்திற்குச் செல்ல எந்த பஸ்வண்டியில் ஏற வேண்டும்? பயணத்திற்கு எவ்வளவு காலமெடுக்கும், எந்தத் தரிப்பிடத்தில் இறங்கவேண்டும் என்பவற்றை ஒரு மாதத்திற்கு முன்னரே தீர்த்துக்கொள்ளல் வேண்டும்.
“ஐக்கிய இராச்சியம் போன்ற வெளிநாடொன்றிற்கு பட்டப்பின் படிப்புப் பரீட்சைகளுக்குத் தோற்றவிருக்கும் தேர்வு நாடிகளுக்கு இப் போதனைகள் பெரிதும் கைகொடுக்கும்.”
பரீட்சை நேர அட்டவணை இறுதிமாதத்தின் நடுப்பகுதியில் பரீட்சையில் தான் தோற்ற விருக்கும் பாடங்களையுடைய நேர அட்டவணையைப் பெற்றுக் கொள்வது சிறந்தது. இது தனக்குக் கிடைத்தவுடன், இன்றேல் இணையத்தில் பெற்றுக்கொண்டபின் அதனை கவனமாக வாசிப்பது இன்றியமயாதது. கவலையீனமாய் வரிகளை மாற்றி வாசிப்பதன் மூலம் பரீட்சைக்குக் செல்லாது வீட்டில் தங்கியிருக்கும் தேர்வுநாடிகளும் உள்ளனர்.
பரீட்சை நாட்குறிப்பில் அல்லது வேறு புத்தகமொன்றில் அந்த பொது கால அட்டவணையில் தனது பாடங்களுக்குரிய தினம், நேரங்களை அறிந்து எழுதி, தாய் - தந்தையிடம் அல்லது நண்பரிடம் காட்டி உறுதிப்படுத்திக் கொள்ளல் புத்திசாதுரியமானது.
- இலக்கை ஏற்படுத்திக் கொள்ளல் நெடுங்காலம் பாடத்திற்கு முன்னுரிமை கொடுத்து தேர்விற்கு தயாராகும் தேர்வுநாடிக்கு அடிக்கடி அதில் கசப்புணர்வு அல்லது அர்த்தமற்ற தன்மையேதும் உணரப்படுமாயின், செய்யவேண்டியது பரீட்சையில் ஏன் சித்தியடைய வேண்டும் என்பதை நினைத்து குறிக்கோளை மீண்டும் திடப்படுத்திக் கொள்ளலாகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பகற்கனவு காணலின் (Day dreaming) மூலம் பிரயோசனம் கிடைக்கும்.
3. ஒரு வாரத்திற்கு முன்
நலம் (Health) உணவையும் உறக்கத்தையும் கவனித்துக்கொள்வது சிறந்தது. சில தேர்வுநாடிகள் தேர்வு நடைபெறும் நாட்களில் உடல்நலம் குன்றிவிடுமா எனும் காரணமின்றிய
187 அகவிழி - ஒக்டோபர் 2012

பயத்துடன் காணப்படுவர். புள்ளிவிபரவியல் தரவுகளுக் கமைய, 10,000 இல் ஒருவருக்கே சரியாக பரீட்சை நாளில் சமிபாட்டுக்கோளாறுகள், வாந்தியேற்பட இடமுண்டு. அவ்வாறு ஏற்படினும் பரீட்சைக்குத் தோற்ற முடியும். அவ்வாறான நலக்குறைவுகளுடன் பரீட்சைக்குத் தோற்றி உயர் பெறுபேறுகளைப் பெற்றவர்கள் பலர். தேர்வு நாடிகளுக்கு தேர்வுநாளில் ஏற்படக்கூடிய மாதவிடாய்ப் போக்கை மருத்துவ ஆலோசனை பெறுவதன் மூலம் பிற்படுத்த முடியும்.
= சுற்றுலாக்கள் இறுதிவாரத்தில் இவ்வாறான தூரப்பிரயாணங்களை மேற் கொள்வது உகந்ததன்று. இவ்வளவுகாலமாக பேணிவந்த கால அட்டவணை மாற்றமடைவதால் பிரச்சினைகள் தோன்றலாம். எதிர்பாராத பிரச்சினைகளும் ஏற்படலாம். செய்ய வேண்டியது முன்னர் போன்று மீட்டலைத் தொடர்தலாகும்.
4. ஒரு நாளைக்கு முன்
- மீட்டல்
பரீட்சைக்கு முந்திய நாளைக் கழிக்கும் முறை பற்றி பல கருத்து வேறுபாடுகளுண்டு. ஒருசிலர் கற்றலில் ஈடுபட வேண்டுமென அறிவுரை வழங்குகின்றனர். எனினும் செய்யவேண்டியது அன்றைய தினத்தையும் ஏனைய நாட்களைப்போன்று பழக்கமான இடத்திலிருந்தவாறு மீட்டல் செய்வதாகும். அதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும், பழக்கப்பட்ட இடத்திலிருப்பதாலும் வழக்கமான நடத்தையிலிருப்பதாலும் பதகளிப்பு தவிர்க்கப்படும். படிக்கும்போது உறவினர்களின் - நண்பர்களின் கதைகளுடன் ஒன்றிணையாமல் இருக்க முடியும். பேச்சு வழக்குகளினால் மனவெழுச்சி(Emotion) ஏற்படமுடியும். மனவெழுச்சியென்பது
ஞாபகத்தை அழிக்கும் அழிறப்பர் போன்றது.
Tன
5 பிரயாணங்கள் களியாட்டங்கள், திரைப்படங்கள், விழாக்கள் என்பவற்றிற்கு இத்தினத்தில் சமுகமளிப்பது மடமையாகும். களைப்பும், மற்றையவர்களின் (Nicotine) புகையினால் நுறையீரல் நிரம்பி ஏற்படும் தலைவலியும் இத்தினத்தில் உருவாகலாகாது.
= பரீட்சை உபகரணங்களை தயார்படுத்தி வைத்தல் பரீட்சைக்கு முந்திய தினம் பகலிலேயே தேர்விற்கு அவசியமானவற்றை தயார்படுத்திகொள்ளல் சிறந்தது. செல்லும்போது அணிபவற்றை உதாரணமாக, சீருடை ஆயத்தமாய் வைத்துக்கொள்வதன் மூலம் பரீட்சை தினம் காலையில் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய காலம் ஒதுக்க வேண்டியதில்லை. எழுத அவசியப்படும்

Page 21
பேனை, பென்சில்,கைக்கடிகாரம்,அழிறப்பர்,அளவுச்சட்டம் போன்றவற்றையும் தயார்படுத்திக் கொள்ளவேண்டும். பரீட்சை மண்டபத்தில் தன்னிடமிருக்கவேண்டிய அடையாள அட்டை, கால அட்டவணை, பதிவுப்பத்திரம் என்பவற்றையும் எடுத்துக்கொண்டு இவையனைத்தையும் தேடி பரீட்சை நாளில் வீட்டில் சஞ்சரித்தல் நேரவிரயமாக்கும் செயல். போட்டியை உருவாக்கும் செயல்.
மதவழிபாடு வணக்க வழிபாடுகள், நேர்த்திவைத்தல் என்பவற்றின் மூலம் பரீட்சையில் புள்ளிகளைப் பெற உதவி கிடைக்க மாட்டாது எனினும் பரீட்சைக்கு முந்தைய தினம் மனதை ஒருமுகப்படுத்த எம் மதவழிபாடுகள் துணைபுரியும். அப்படியாயின் சில நிமிடங்களை அவற்றில் செலவிடுவதால் தவறில்லை.
- மூடநம்பிக்கைகள் மனதைப் புண்படுத்தும் சில மூடநம்பிக்கைகளைக் கொண்டிருப்பது பொருத்தமற்றது. பெரும்பாலானோர் பரீட்சைக்குத் தடையாக பல்வேறு காரணங்களைக் கருதுகின்றனர். தடங்கலேற்படுத்துவது கொள்கைகளல்ல. அதைப்பற்றிய நம்பிக்கையே. பரீட்சை இலக்கங்களைக் கூட்டும்போது தொகை 13 ஆயின் அதனை தடையாகக் கருதுவது அறிவுபூர்வமானதல்ல. இந்த நோய் அறிகுறியை உளவியலில் TRISKADEKAPHOBIA எனக் குறிப்பிடப்படும். 13ஐ கூட்டுத்தொகையாக வழங்கும் சுட்டெண்களைக் கொண்ட பல லட்சம் பரீட்சார்த்திகள் பரீட்சையில் சித்தியடைகின்றனர்.
- நித்திரைக்குச் செல்லல் இத்தினத்திலும் ஏனைய நாட்களைப்போன்றே தூக்கத்திற்குச் செல்ல வேண்டும். படிப்பின் பின் படுக்கைக்குச் செல்லும் முன் முன்னைய நாட்களில் நிறைவேற்றிய மதச்சடங்குகளை நிறைவேற்றி வழக்கமான நேரத்தில் படுக்கைக்குச் செல்லல் சிறந்தது. மற்றைய நாட்களில் படுக்கைக்குச் செல்லும் நேரத்தை விட தாமதமாகி அன்றைய தினம் படுக்கைக்குச் செல்லும் போது தூக்கத்திற்கு தடையேற்படலாம். மற்றைய நாட்களில் நேரத்துக்கு முன் செல்லினும், வழக்கமான நேரம் வரும்வரையில் மூளை தனது தூக்கத்தை ஏற்படுத்தாது அவ்வேளை படுக்கையில் புரண்டு தூக்கம் வராததைப் பற்றிய பயத்தினில் ஏற்படும் அசௌகரியத்தினால் மேலும் தூக்கதிற்கு தடங்கல் விளையும்.
5. ஒரு மணிநேரத்திற்கு முன் - பரீட்சை மண்டபத்திற்குச் செல்லல் வேறு நாட்களைவிட 15-20 நிமிடங்களுக்கு முன் தூக்கம்

களைந்து எழும்புதல் அறிவுபூர்வமானது. தாமதம் பற்றிய பயம் இதனால் அகற்றப்படும். பரீட்சை மண்டபத்தில் நுழைய வேண்டிய நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன் அவ்விடத்தை அடையுமாறு வீட்டிலிருந்து புறப்படல் வேண்டும். பஸ்வண்டி மாறுவதனால் அல்லது வாகன நெருக்கடி காரணமாக தாமதமேற்படலாம். அவ்வாறு நிகழுமிடத்து தாமதம் பற்றிய ஐயத்தினால் இதயத்துடிப்பு அதிகரிக்கும் வியர்வை கொட்டும். அப்பயம், பரீட்சைக்குரிய பயமாக பரீட்சார்த்திக்கு தவறாகப் புரியப்படலாம்.
- பரீட்சை மண்டப அருகில் பரீட்சை மண்டபத்தை அடையும்வரை மீட்டல் செய்வதில் தவறில்லையெனினும், உள்நுழைய கால் மணிநேரத்திற்கு முன் படிப்பதை நிறுத்தி ஓய்வாயிருத்தல் மனதிற்கு சிறந்தது. அத்துடன் பரீட்சை மண்டபத்தினுள் நுழையவேண்டியது நிரம்பி வழியும் சிறு நீர்ப்பையுடனல்ல. கடைசித்தறுவாயில் ஏனைய தேர்நாடிகளுடன் அன்றுவரை அறியாத விடயங்களைக் கலந்துரையாடல் மூலம் கனவுகளும், நெருக்கீடும் (Stress) ஏற்பட முடியும்.
6. ஒரு நிமிடத்திற்கு முன் மண் டபத் தினுள் நுழையு முன் தேவையற்ற காகிதாதிகள், குறிப்பெழுதிய தாள்கள், தொலைபேசி என்பவற்றை வெளியே வைத்தல் வேண்டும். தவறாக அவற்றிலேதும் சட்டைப்பையிலிருக்குமாயின் விளைவு அபாயகரமானது.
உள் நுழைந்து தனது சுட்டெண்ணைத் தாங்கியிருக்கும் கதிரையில் (மேசையில்) அமர்ந்து விடையளிக்க வழங்கப்படும் பத்திரங்களில் கவனம் செலுத்துக. தனது சுட்டெண்ணை தேவையான இடங்களில் சரியான முறையில் குறிப்பிடுக.
தனது கடிகாரத்தின் நேரமும் பரீட்சை மண்டப் மணிக்கூட்டின் நேரமும் சரியானதா என்பதை சரிபார்த்துக் கொள்ளல் சிறந்தது.
தற் போது வினாத் தாள் களை வழங் குவது தொடர்பாகும்.
பரீட்சைக்கு வருடத்திற்கு முன், மாதத்திற்கு முன், வாரத்திற்கு முன், தினத்துற்கு முன், மணிக்கு முன், நிமிடத்துற்கு முன் என நாம் இதுவரை விபரித்த போதனை களுக்கமைய தயாராகியிருப்பின், பரீட்சையில் உயர் பெறுபேறு கிடைக்கும். அது அவ்வாறே நடக்கட்டும் !!!
(இவ் ஆக்கத்தின் ஒருசில கருத்துக்கள் டெனிஸ் ஜெக்சன் எழுதிய The exam secret மற்றும் க்லிபட அலன் எழுதிய Passing Examination நூல்களிலிருந்து பெறப்பட்டவை)
அகவிழி - ஒக்டோபர் 2012 / 19

Page 22
கலைச் சொல்ல
சிக்கல்
மா. ஆண்
மு. சில
முன்னுரை முனைவர் மு. ஆனந்த கிறிஷ்ணன் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு அரசு அமைத்த, தகவல் தொழில்நுட்பக் கலைச் சொல்லாக்கக் குழுவில் உறுப்பினர்களாயிருந்து, ஏறத்தாழ எட்டாயிரம் சொற்களைத் தொகுத்தபோது, எங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்கள் சிலவற்றை, சென்ற ஆண்டு தமிழ் இணைய மாநாட்டில் (த.இ.2002அமெரிக்கா) முன்வைக்கப்பட்ட கட்டுரையில் பட்டியல் இட்டிருந்தோம். கலைச்சொல்லாக்கப் பயணத்தில் எங்கள் பணி தொடர்கிறது. செய்தித் தாள்களில், வார மாத இதழ்களில், கணினி, தொடர்பான நூல்களில், தமிழ் மென் பொருள்களில், பயிற்சிக் குறுவட்டுகளில், வானொலியில், தொலைக்காட்சியில், தகவல் தொழில்நுட்பம் தொடர்பான தகவல்கள், செய்திகள், தமிழ் மொழியில் வெளியிடப், படுவதை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். நாங்கள் ஏற்கனவே பட்டியலிட்ட சிக்கல்கள் பலவற்றுக்கும் ஏற்புடைய தீர்வு கிடைக்காத அதே வேளையில் சில புதிய சிக்கல் களையும் எதிர்கொண்டுள்ளோம். அவற்றை அறிஞர் பெருமக்களிடையே பகிர்ந்துகொள்ள விழைகிறோம்.
தீர்க்கப்படாத சிக்கல்கள்: முந்தைய கட்டுரையில் முன்வைக்கப்பட்ட சிக்கல்களை இங்கே தொகுத்தளிப்பது பொருத்தமுடையதாக இருக்கும். (அ) ஒருபொருட் பன்மொழி
ஒரு பொருளில் வழங்கப்படும் பல்வேறு சொற்களை ஒரே கலைச்சொல்லால் குறிப்பிடுவது. Drive. Driver,Operator ஆகிய சொற்களை 'இயக்கி' எனல். Block,Batch,Set ஆகிய சொற்களை 'தொகுதி' எனல், Editor,Compiler, Assembler போன்ற சொற்களை 'தொகுப்பான்' அல்லது 'தொகுப்பி' எனல். ஆங்கிலத்தில் வெவ்வேறு சொற்களாய் வழங்கி வருவனவற்றை
தமிழில் ஒரே சொல்லில் குறிப்பிடுவது சரியாகுமா? (ஆ) நேரடி மொழிபெயர்ப்பு
ஆங்கிலத்தில் அறியப்படும் ஒரு பொருளை, அதன் நேரடியான தமிழ்ச் சொல்லால் குறிப்பிடுவது பொருத்தமாகவே இருக்கும் Keyboard-I 'சாவிப்பலகை' என்று சொன்னாலும் Primary Key, public key, Private Key, Secret Key, Key Words, Key field, Sorting Key,
207 அகவிழி - ஒக்டொபர் 2012

மாக்கமும் சில களும்
டோ பீட்டர் வலிங்கம்
Search Key, Encription Key ஆகிய தொடர்களிலுள்ள Key என்ற சொல்லை 'சாவி' என மொழிபெயர்த்தல் சரியாகுமா? Hard என்பதை 'வன்' எனவும் 'soft என்பதை 'மென்' எனவும் மொழிபெயர்த்தல் எல்லா இடங்களிலும் பொருத்தமாக அமையுமா? ஒலிபெயர்ப்பு: kbps என்பதை கேபிபிஎஸ் என்றும் DTP என்பதை டிடிபி என்றும் எழுதுகிறார்கள். B.P. மற்றும் D.T. ஆகியவற்றுக்கிடையே வேறுபாடு
உணர்த்துமாறு தமிழில் எழுதவேண்டாமா? (ஈ) சுருக்கச் சொற்களும் கூட்டுச் சொற்களும்:
CD,PC,RAM,ROM ஆகியவற்றையும், Modem, Codec போன்ற சொற்களை அப்படியே ஒலிபெயர்த்து எழுதவேண்டுமா? அல்லது பொருத்தமான தமிழ்ச்
சொற்களில் குறிப்பிடலாமா? (உ) பால்சார்ந்த விகுதி: Calculator - கணிப்பான் Editor
தொகுப்பான் Connecter - இணைப்பான் என ஆண் பால் விகுதி சேர்த்து கலைச் சொற்களை உருவாக்குவது சரியாகுமா? கணிப்பி, தொகுப்பி, இணைப்பி என 'இ' விகுதி சேர்த்து எழுதுவது பொருத்தமாக
இருக்குமா? (ஊ) முன்னொட்டு: Antivirus,Antiglare, Antistatic, Non
volatile,Non-numeric, Non-procedural எனவரும் ஆங்கில முன்னொட்டுச் சொற்களுக்கு தமிழிலும் முன்னொட்டுக் கலைச் சொற்களை உருவாக்க முடியுமா? இந்த சிக்கல்களின் தொடர்ச்சியாக இன்னும் சிக்கல்களை முன்வைக்க விரும்புகிறோம்.
(1). தமிழ் இலக்கண மரபு தமிழில் கலைச் சொற்களை உருவாக்கும்போது அச்சொல் தமிழ் இலக்கண மரபுப்படி அமைந்த சொல்லாக இருக்கவேண்டும் என்பது அறிஞர்களின் கருத்து, என்றாலும் Ram என்பதை 'இரோம்' என்றும், Rom என்பதை 'உரோம்' என்றும் கூறுவது பொருத்தமுடையதாக இல்லை என்பதை தஇ-2002 மாநாட்டில் திரு. ம.வெ. இராமச்சந்திரா (மலேசியா) தம்முடைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தது நினைவு கூரத்தக்கது. ஆங்கிலச் சொற்களை அப்படியே பெயர்த்து எழுதும்போதும், தமிழ் இலக்கண மரபைப் பின்பற்ற வேண்டாமா?

Page 23
'இன்டர்நெட்', 'இண்டர்நெட்' இவற்றுள் எது சரி என்று சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்க் கணினி இதழில் ஒரு விவாதம் நடைபெற்றது. 'இணையம்' என்ற சொல் இருந்த போதிலும், Internet Explorer, Internet Information Sever என்பது போன்ற மென்பொருள்களின் பெயர்களை அப்படியே ஒலிபெயர்த்துதான் எழுதவேண்டும். ண, ட் ஆகியவை இனவெழுத்துக்கள். எனவே, தமிழ் இலக்கண மரபுப்படி டகரத்தின் முன்பு ணகர மெய்யே இடம்பெறவேண்டும் என்பது ஒரு சாராரின் கருத்து. அப்படியே பார்த்தாலும் 'இண்டர்நெட்' என்பது தமிழ் மரபுப்படி அமைந்த சொல் அன்று. டகர மெய் மொழியீற்றாய் அமைய முடியாது. எனவே 'இண்டர்நெட்' என்றுதான் எழுதவேண்டும் என்பது அவர்களின் வாதம் '.nt' என வரும் சொற்களை '..னட்' எனவும், '.nd' என வரும் சொற்களை 'ண்ட்' எனவும் எழுதலாம் என்பது இன்னொரு சாரார் கருத்து. Internetஇண்டர்நெட். Intel-ன்டெல், Pentium - பென்டியம், Mandrake - மாண்ட்ரேக், Windows - விண்டோஸ், Norton Antivirus 2002 - நார்ட்டன் ஆன்டிவைரஸ் 2002 என்று எழுதுவதே பொருத்தமுடையது என்பது அவர்கள் கருத்து. 'ஆண்டிவைரஸ்' எனத் தமிழ் மரபுபடி எழுதினால் பொருளே மாறிப் போகலாம். ஆங்கிலச் சொற்களை ஒலிபெயர்த்து எழுதும்போது ஒலிக் குறிப்பே முக்கியம். எனவே தமிழ் இலக்கண மரபு மீறப்படுவதில் தவறில்லை என்பது அவர்கள் கருத்து. internet என்பதை 'இணையம்' என்பதைப் போல் web என்பதை 'வலையம்' எனக் கூறலாம் என்ற கருத்தை முன்வைத்தபோது, 'வலை' சொல்லோடு 'அம்' விகுதி சேர்ப்பது தமிழ் மரபன்று எனத் தமிழறிஞர்கள் வாதிட்டனர். user என்பதை 'பயனர்' அல்லது 'பயனி' எனக் கூறலாம் என்று சொன்ன போதும் தமிழறிஞர்கள் ஏற்கவில்லை. ஒலி பெயர்ப்பு சொற்களுக்குச் சொன்னது போலவே பிற சொற்களுக்கும் பொருத்தமான தமிழ் வேர்ச் சொற்களுடன் அம், இ, அர், அன் விகுதிகள் சேர்த்துத் தமிழுக்கு புதிய கலைச் சொற்களை உருவாக்கலாம் என்கிற கேள்விக்கு விடை காணவேண்டும்.
(2) கிரந்த எழுத்துகள் ஒலிபெயர்த்து எழுதும்போது தவிர்க்க முடியாமல் கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. Linux என்பதை 'லினக்ஸ்' என்று எழுதுகின்றனர். 'லினச்சு' எனத் தூய தமிழில் எழுதுவதே சரியென்பது சிலரின் கருத்து. Windos என்பதை 'விண்டோசு' என எழுதவேண்டுமல்லவா? Visuval Basic என்பது செல்வாக்குப் பெற்ற மொழியாகும். இதனைத் தமிழில் எழுதுவது எப்படி? விசுவல், விஸ்வல், விஷுவல் - இவற்றுள் எது சரி? பேசிக், பேஸிக் - இவற்றுள் எது சரி? Bill Gates. தமிழில் 'பில் கேட்சு' எனக் கூறல் சரியா? Stroustrup என்பதைத் தமிழில் எப்படி எழுதப் போகிறோம்? ஒலிபெயர்ப்புச் சொற்களில் கிரந்த எழுத்துக்கள் தவிர்க்க

முடியாதவை அல்லவா?
(3) ஒரே ஒலியுடன் பல சொற்கள் Kbps, DTP போன்ற சொற்களை ஒலிபெயர்த்து எழுதுவதில் உள்ள குறைபாட்டை ஏற்கனவே சுட்டிக் காட்டியுள்ளோம். CAD, CAM போன்ற சுருக்கச் சொற்களை அப்படியே ஒலிபெயர்த்தே எழுதவேண்டும் அல்லவா? கேட், கேம் என்றுதானே எழுதவேண்டும். அப்படியெனில் GATE EXAM,CAT EXAM ஆகியவற்றை எப்படிச் சொல்வது? CAD,GATE, CAT ஆகிய அனைத்துச் சொற்களையுமே 'கேட்' என எழுதுதல் தகுமா? - LAN,MAN,WAN ஆகிய சொற்களை லேன், மேன், வேன் என எழுதி வருகின்றோம். புதிதாக Value Added Network வந்தது. அதனை VAN எனச் சுருக்கமாக அழைத்தனர். நாம் தமிழில் எப்படி அழைப்பது? 'வேன்' எனலாமா? ஏற்கெனவே WAN, VAN - இரண்டுமே வேன் தானா? வேன், வான் எனக் கூறலாமா?
ஆங்கிலத்தில் KB என்பது கிலோபைட்டையும், kb என்பது கிலோபிட்டையும் குறிக்கின்றன. தமிழில் எழுதும்போது இரண்டையுமே 'கேபி' என்றுதான் எழுதவேண்டியுள்ளது. இந்தச் சிக்கலை முந்தைய கட்டுரையிலேயே குறிப்பிட்டுள்ளோம். கணினிப் பிணையங்கள் (Computer Networks) பற்றிய நூல்களில், Internet, internet என்று இருவேறு சொற்கள் வெவ்வேறு பொருளில் பயன்படுத்தப்படுகின்றன. பல்வேறு பிணையங்கள் ஒன்றிணைக்கப்பட்ட, பிணையங்களின் பிணையம் (Network of Network), internetwork எனப்படுகிறது. சுருக்கமாக internet என எழுதப்படுகிறது. Internet என்பதையும் 'இணையம்' எனல் சரியாகுமா? internet என்பது பொதுப்பொருளில் வழங்கப்படும் பொதுச்சொல். Internet என்பது சிறப்புச் சொல், இரண்டையும் தமிழில் எப்படி வேறுபடுத்தப் போகிறோம்? Internet-ஐ 'இணைப் பிணையம் ' எனலாமா? Internet, extranet ஆகியவற்றை எப்படி அழைப்பது? 'அக இணையம்' , 'புற இனையம்' என்று அழைக்கலாமா?
(4) நிறுவனப் பெயர்கள் நிறுவனப் பெயர்கள் பலவற்றை தலைப்பெழுத்துச் சுருக்கமாக அழைக்கிறோம். American National Standards Institute என்பது ANSI என அழைக்கப்படுகிறது. International Business Machines, IBM ஆகிற்று. தமிழில், 'அனசி', 'ஐபிஎம்' என எழுதுகிறோம். முழுப் பெயரையும் தமிழில் எப்படி எழுதுவது? 'அமெரிக்கன் நேஷனல் ஸ்டாண்டர்ட்ஸ் இன்ஸ்டிடியூட், "இன்டர்நேஷனல் பிஸினஸ் மெஷின்ஸ்' என எழுதுவதா? 'அமெரிக்க தேசிய தரக் கட்டுப்பாட்டு நிறுவனம்', 'சர்வதேச வணிக எந்திரங்கள்' என எழுதப் போகிறோமா? நபர்களின் யெர்கள், வணிகப் பொருள்களின்
அகவிழி - ஒக்டோபர் 2012 / 21.

Page 24
பெயர்கள், அளவிட்டுப் பெயர்கள், நிறுவனப் பெயர்களை அப்படியே ஒலிபெயர்த்தே எழுதவேண்டும் என்பதுதான் அறிஞர்பெருமக்களின் ஒருமித்த கருத்து. Microsft Windows 98 என்பதை 'நுண்மென் சாளரம் 98' என எழுதுவது சரியாகுமா?
United Nations Council என்பதை 'ஐக்கிய நாடுகள் மன்றம்' என்கிறோம். UN - Council - ஐ யுஎன் மன்றம் எனச் சொல்லாமல் 'ஐநா மன்றம்' என்றே கூறுகிறோம் Indian National Congress என்பதை 'இந்திய தேசிய காங்கிரஸ்' என்றும் சுருக்கமாக 'இதேகா' என்று குறிப்பிடுகிறோம். எனவே ஐபிஎன் என்பதை rtv நிறுவனம்' எனக் கூறல் தகுமா Frequently Asked Questions சுருக்கமாக FAQ ஆனது தமிழில் எஃப் ஏ கியூ எனலாமா? 'அகேகே' அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் எனச் சொல்லலாமா? INFITT என்பதை 'இன்ஃபிட்' என எழுதலாமா? 'உத்தமம்' என்னும் கலைச் சொல்லைப் பயன்படுத்தலாமா? இதே பாணியில் எம்பெக், ஜெபெக் போன்ற சொற்களுக்கும் தமிழ்க் கலைச் சொற்களை உருவாக்கலாமா?
(5) இடம் - பொருள் - ஏவல் ஒருவருக்கு அளிக்கப்படும் சிறப்பான வரவேற்பை ஆங்கிலத்தில் Warm Welcome என்கின்றனர். குளிரான நாட்டில் Warm Welcome ஆயிற்று. இந்தியா போன்ற சூடான நாட்டில் Warm Welcome - ஐ 'சூடான வரவேற்பு' என மொழி பெயர்க்கலாமா? இதயங்குளிர்ந்த வரவேற்பு என்றுதானே கூறவேண்டும்? ரயில் நிலையத்தில் Platform 'நடை மேடை' ஆயிற்று. Windows Platform. Linux Platform ஆகியவற்றை விண்டோஸ் நடைமேடை, லினக்ஸ் நடைமேடை எனல் தகுமா? இங்கே Platform 'பணித்தளம்' அல்லது 'பணிச்சூழல்' ஆகும். Bus என்பதைப் 'பேரூந்து' என்கிறோம் ஆனால். Address Bus என்பதை 'முகவரிப் பேரூந்து' எனல் தகுமா? துறைக்கு ஏற்ப சொற்களின் பொருள் மாறுபடுகின்றது. இடம் பொருள் ஏவல் அறிந்தே கலைச் சொற்களை உருவாக்கவேண்டியுள்ளது.
சி++, சி+, ஜாவா மொழிகளில் Exception Hadling என்னும் கருத்துரு பேசப்படுகிறது. Exception என்பது விதிவிலக்குத்தானே? எனவே, Exception Hadling என்பதை விதிவிலக்குகளைக் கையாளுதல் என்று மொழிபெயர்த்தல் சரியா? இங்கே ஒரு நிரலின் இயக்க நேரத்தில் (run time) ஏற்படும் பிழையே Exception எனப்படுகிறது. எனவே, 'இயக்கநேரப் பிழைகளை எதிர்கொள்ளல்' என மொழிபெயர்ப்பதுதானே சரியாக இருக்க முடியும்? என்றாலும் Exception என்பதற்குப் பொருத்தமான கலைச்சொல் காணப்படவேண்டும். இதே போல் layout, structure, architecture, construction, topology போன்ற சொற்களுக்கும் பொருத்தமான கலைச்சொற்கள் உருவாக்கப்படவேண்டும்.
22 / அகவிழி - ஒக்டோபர் 2012

வாழ்க்கைத் தேர்ச்சிக்காக
ஆங்கிலம்
ஜனாதிபதி அலுவலகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள்
அச்சம், கூச்சமின்றி ஆங்கில மொழியைப் பேசுவதற்காக மாணவர்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டமாக பேச்சு ஆங்கில கற்கை வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எதிர்கால நலனுக்காக ஆங்கில மொழியினை விருத்தி செய்யத் தேவையான வசதிகள் வழங்கப் பட்டுள்ளன. வாழ்க்கைத் தேர்ச்சிக்கு ஆங்கிலக் கல்வி என்ற தொணிப்பொருளின் கீழ் இவ்வேலைத் திட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றன. இதற்கென மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டற்கள்:
- 10 நாள் ஆசிரிய பயிற்சி வேலைத்திட்டம்
மாகாண வேலைத்திட்டத்தின் பிரிவுகளைத் தாபித்தல். இறுவெட்டுக்களை வெளியிடல் வெற்றிகரமான செயற்பாடுகளுடன் கற்பித்தல் தொகுதிகளை ஆக்குதல்.
அதிபர்கள் மற்றும் பிரதி அதிபர்களுக்கான 100 மணித்தியால இலகு ஆங்கில சான்றிதழ் பத்திர பாடநெறியை நடாத்துதல்
கல் விக் கோட்டத்துக் குள் ஆங் கில செயற்பாட்டு அறையினை வலுப்படுத்தல்
ஆங்கிலம் கற்பிப்பதற்காக அதிசிறந்த மத்திய நிலையங்களைத் தாபித்தல்.
5.
பரீட்சை மற்றும் மதிப்பீட்டு ஆலோசனைக் கோவைகளை மீள அச்சிடல்.
எ திர் காலத் தில் பாடசாலை யை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீடுகள் ஊடாக மாணவர்களின் ஆங்கில கிரகித்தல் மற்றும் பேச்சு மதிப்பீடுகளுக் கான வேலைத்திட்டங்களை அமுல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Page 25
தரமான கல் பிள்ளை (
B.A., PG.]
பாடசாலைக்கு வரும் பிள்ளைகள் தமது கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு பாடசாலை; பிள்ளைகளின் விருப்புக்குரிய இடமாக இருக்கவேண்டும். அப்போதுதான் மகிழ்ச்சிகரமான கற்றல் இடம் பெற வழிவகுக்கும். இதன் மூலமே மாணவர்களின் அறிவு, திறன், மனப்பாங்கு விருத்தி செய்யப்பட்டு எதிர்காலத்தில் அவர்கள் ஆளுமை மிக்கவர்களாக சமூகத்தில் செயற்பட வழிவகுக்கும்.
இதற்காக இலங்கையில் சிறுவர் நேயப் பாடசாலைகள் நாட்டின் பல பாகங்களிலும் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. பாடசாலை ஒன்று சிறுவர்கள் விரும்பக்கூடியதாக சிறுவர் நேயத் தன்மை கொண்டதாக விருத்தி செய்யப்படுவதற்கான செயற்பாடுகள் தொடர்ச்சியானதாக மேற் கொள்ளப்படவேண்டும். அப்போதுதான் அதன் உண்மையான இலக்கை எட்டமுடியும்.
வரைவலக்கணம்
பிள்ளை நேயப்பாடசாலை என்பது சர்வதேச சிறுவர் உரிமைகள் பிரகடனத்தின்படி சகல பிள்ளைகளினதும் சகல உரிமைகளையும் செயல்ரீதியில் நிறைவேற்றும் பாடசாலையாகும். இதற்காக ஆறு பரிமாணங்கள் கொண்ட ஒரு மாதிரி பயன்படுத்தப்படுகின்றது. அவையாவன
உரிமைகளை அடிப் படையாகக் கொண் ட செயல்ரீதியான உட்படுத்தல்.
ஆண் - பெண் சமூக நிலைப்பாட்டுக்கு துலங்கல் காட்டுதல். தரமான கற்றற் பேறுகளை விருத்தி செய்வதற்கு தேவையான அறிவு திறன் மனப் பாங் கை
வழங்குதல். பிள்ளைகளின் சுகாதாரம், பாதுகாப்பு தற்காப்பு என்பவற்றை உறுதிப்படுத்தல். பிள்ளைகள் குடுப்பத்துடனும், சமூகத்துடனும்

கவி மேம்பாட்டுக்காக நேயப்பாடசாலைகள்
M.M. ஹிர்பஹான் D.E. (Merit), D.C.Sc. (Merit), M.Ed.
நெருக்கமாக இணைந்திருப்பதற்காக பங்களிப்புச் செய்தல்.
பிள்ளை நேய முறைமை , கொள்கைகள் பயிற்சிகள் பிரமாணங்களுக்கூடாக உதவுதல்.
இலங்கையில் இன்று ஆரம்பப் பாடசாலைகளில் செயல் வழிகளினூடாக இந்த ஆறு பிரமாணங்களும் பல்வேறு நிலைகளில் உட்படுத்தப்பட்டுள்ளதை காணமுடிகின்றது. சிறுவர் நேயப் பாடசாலைகளின் நோக்கம் ஒவ்வொரு பாடசாலைகளினதும் தற்போதைய நிலைமைகளை இனங்கண்டு மேற்படி பிரமாணங்களினூடாக பிள்ளைகள் விரும்பக்கூடிய பிள்ளைகளுக்கு பாதுகாப்பான பாடசாலைகளை விருத்திசெய்வதாகும்.
சிறுவர் நேயப் பாடசாலை முன்னோடி வேலைத்திட்டம் 2002 ம் ஆண்டு வடமேல் மாகாணத்தில் 124 பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இவ் வேலைத் திட்டமானது யுனிசெப் அனுசரனையுடன், கல்வி அமைச்சுடன், வடமேல் மாகாணக் கல்வித் திணைக்களமும் இணைந்து செயற்படுத்தியது.
இந்த முன்னோடி வேலைத்திட்டம் காரணமாக பல்வேறு வெற்றிகரமான பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றன. உதாரணமாக மாணவர் களின் நாளாந்த வரவு அதிகரித்தமை, மகிழ்ச்சிகரமான ஆரோக்கியமான கற்றல்சூழல் காணப்பட்டமை, பாடசாலைகளுக்கு சமுதாயப் பங்களிப்புக் கிடைத்தமை, பாடசாலைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சவால்கள் என்பன இனங்காணப்பட்டமை, அதனை எதிர்கொள்வதற்காக ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சமுதாயம் இணைந்து செயற் பட் டமை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
இந்த வெற்றியின் காரணமாக சிறுவர் நேயப்பாடசாலை வேலைத் திட்டத்தை 2004 ல் யுனிசெப் நிறுவன உதவியுடன் மேலும் பிரபல்யப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற்காக யுனிசெப் உதவி பெறும் 30 வீதமான
அகவிழி - ஒக்டோபர் 2012 / 23

Page 26
பாடசாலைகள் இவ் வேலைத் திட் டத் துக் குள் உட்படுத்தப்பட்டது. அந்தவகையில் இன்று சுமார் 1400 பாடசாலைகளில் இவ்வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டுவருவது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.
பிள்ளைகளுக்கு சிறப்பான பல அடிப்படைத்தேவைகள் உள்ளன. அதனை நிறைவு செய்யும் வகையில் பொருத்தமான சூழலை உருவாக்குவது சமூகத்தின் பொறுப்பாகும். இருந்தாலும் இதுதொடர்பாக குறைவான கவனம் செலுத்தப்படுவதன் காரணமாக பிள்ளைகளின் அடிப்படைத் தேவைகள் கூட கிடைக்காமல்போகும் சந்தர்ப்பங்களைக் காணமுடிகின்றது. இதனால் சிறுவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்காக 1989 ல் ஐக்கிய நாடுகள் சபையில் சிறுவர் உரிமை தொடர்பான பிரகடனம் தயாரிக்கப்பட்டது. 1991 ல் இலங்கையும் இதனை ஏற்றுக்கொண்டது.
அதற்கமைய கல்வி பெறுவது ஒவ் வொரு பிள்ளையினதும் உரிமையாகும் இதனைக் கருத்திற்கொண்டு செயற்படுவது சமூகத்தின் பொறுப்பாகும். உடல் உள நிலைமைகள், சமூகப் பெருளாதார வேறுபாடுகள், பண்பாட்டு வேறுபாடுகள் என்பவற்றை கருதாது சகல பிள்ளைகளையும் கல்வியில் உட்படுத்துவது சிறுவர் நேயப்பாடசாலையின் முதலாவது பிரமாணத்தின் முக்கிய எதிர்பார்ப்பாகும்.
சிறுவர் உரிைைமகள் சிறுவர் உரிமைகள் சாசனத்தில் 42 உறுப்புரைகளில் சிறுவர் உரிமைகள் காட்டப்பட்டுள்ளன. இந்த உரிமைகளை நான்கு பிரதான பிரிவுகளின் கீழ் உட்படுத்தமுடியும்.
1. வாழ்வதற்கான உரிமைகள் 2. பாதுகாப்பதற்கான உரிமைகள் 3. அபிவிருத்திக்கான உரிமைகள்
4. பங்கு பற்றலுக்கான உரிமைகள்
கற்றல் கற்பித்தல் செயன் முறையின்போது எந்தவொரு பிள்ளையும் ஒதுக்கப்படுவதற்கோ, வேறுபடுத்திக் கருதுவதற்கோ, அச்சுறுத்துவதற்கோ எந்தவித சட்டபூர்வமான அடிப்படையும் கிடையாது. பிள்ளைகள் செயல்ரீதியிலும், கூட்டாகவும் பங்குபற்றிக் கற்றல் நடவடிக்கைளில் ஈடுபடுவதன்மூலம் விளைதிறனுள்ள கல்வியை அடைவர். சகல பிள்ளைகளும் பாடசாலைகளில் சேர்ந்து கல்வி பெறுவதற்கும், வேறுபாடுகளை கருத்தில் கொள் ளாது சகலருக்கும் சமமான கல்வியை வழங்கவேண்டியது சிறுவர் நேயப்பாடசாலைகளின் பொறுப்பாகும்.
24/ அகவிழி - ஒக்டொபர் 2012

அதற்காக உட்படுத்தல் கல்வி பாடசாலையிலிருந்து இடைவிலகலைத் தடுப்பதற்கான பயன்மிகு செயற்பாடுகள் பாடசாலையில் நடைபெறும் எல்லா நிகழ்வுகளிலும் எல்லாப் பிள்ளைகளும் சமமாகக் கலந்து கொள்வதற்கும், வளங்களை சமமாகப் பயன்படுத்துவதற்குமான திட்டங்களை நடைமுறைப்படுத்தல் உடல், உள தண்டனைகள் அவதூறுகளை தவிர்த்து பிள்ளையை துலங்கச்செய்தல் பாடசாலை சமூகத்திற்கு சிறுவர் உரிமை தொடர்பாக பூரண அறிவு வழங்கி அதனை விளங்கி பாடசாலைச் சமூகம் செயற்பட வழி செய்வதன் மூலமாக பிள்ளைகளின் சுயமதிப்பு சுய ஊக்கல் என்பவற்றை விருத்தியடையச் செய்து சுய கற்றலின்பால் வழிப்படுத்தி கழிப்பூட்டும் கற்றல் சூழலை உருவாக்குவது பிள்ளை நேயப்பாடசாலைகளின் எதிர்பர்ப்பாகும்.
இன்றைய காலகட்டத்தில் பிள்ளையை அணுகி பிள்ளைக்கு அன்பு , கருணை காட்டுகின்ற , உதவி புரிகின்ற நம்பகமாக செவி மடுக்கின்ற ஆசிரியர்களை பிள்ளைகள் நேசிக்கின்றனர். அவர்கள் கற்பிக்கின்றபோதும், அவர்கள் ஆலோசனை வழங்குகின்றபோதும் நன்கு செவிமடுத்துச் செயற்படுகின்றனர். இதன்காரணமாக அவர்களிடம் நல்ல நடத்தைகள் உருவாக்கப்படுகின்றன. இதற்கு மாற்றமாக ஆசிரியர் மாணவர்களின் உறவில் விரிசல் காணப்படும்போது மாணவர்களிடத்தில் பிறள்வான நடத்தைகோலங்கள் உருவாக வாய்பை உண்டு பண்ணுகின்றது.
ஆண் பெண் சமத்துவத்தை எல்லா செயற்பாடுகளிலும் பேணப் படுவதை உறுதிப் படுத் துவது சிறுவர் நேயப்பாடசாலையின் இரண்டாவது பரிணாமமாகும். இலங்கையில் ஆண் பெண் பேதமின்றி கல்விக்கான சமவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முதலாம் வகுப்பில் சேர்க்கப்படும் பெண், ஆண் மாணவர்களின் எண்ணிக்கை பெரும்பாலும் சமமாகக்காணப்படுவதாக கல்வி அமைச்சின் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றது. அதே போன்று ஆரம்பக் கல்விப் பருவத்தில் பாடசாலையில் கற்போரின் எண்ணிக்கையும் இருபாலாரும் அநேகமாக சமமாகக் காணப்படுகின்றது. அதுமாத்திரமல்லாமல் கற்றல் கற்பித்தல் செயன்முறையின்போது சகல பிள்ளைகளும் உயிரோட்டமாக பங்கு கொள்வதில் வேறுபாட்டை காட்டக்கூடிய காரணிகள் எதுவும் காணப்படவில்லை. சிறுவர் நேயப்பாடசாலைகளில் இந்நிலைமை தெளிவாகக் காட்டப்படுகின்றது. ஆண் பெண் இருபாலாருக்கும் பொருத்தமான அடிப்படை வசதிகளை வழங் குவதில் முக்கிய கவனம்

Page 27
செலுத்தப்படுகின்றது. இதனை பின்வரும் நியமங்களு டாக நிறைவு செய்யப்படுகின்றது.
சிறுவன், சிறுமி எல்லோருக்கும் ஆரம்பக்கல்வியை நிறைவு செய்வதற்கும் இரண்டாம் நிலைக்கல்விக்கு மாறுவதற்கும் சம சந்தர்ப்பம் வழங்கப்படுவதை உறுதி செய்தல். இலங்கை பாடசாலை தொடர்பாக தேசிய மட்டத் தரவுகளுக்கேற்ப இவ்வாறான நிலைமை காணப் படுகின்றது. இருப்பினும் ஆரம்பக் கல்வியை பூரணப்படுத்தும் பிள்ளைகள் இடை நிலைக் கல்வியைத் தொடர்வதற்கு வேறு பாடசாலைக்கு போகும்போது தூரம், பயண வசதிகள், பாதுகாப்பு, பேன்ற பல்வேறு காரணிகள் கவனஞ் செலுத்தப்பட்டு பெண் பிள்ளை என்பதால் இடை நிலைப் பாடசாலைக்கு அனுப்புதல் சிரமானது என்ற தீர்மானமெடுக்கப்பட்டு கல்வியை இடைநிறுத்துவதற்கு வாய்ப்புள்ளது. அதேபோன்று சமநிலையற்ற பொருளாதார நிலைமை காரணமாக ஆண் பிள்ளை ஒன்றுக்கு குறைந்த வயதிலேயே குடும்பத்தின் பொருளாதார நிலைமைக்கு தோள் கொடுப்பதற்காக பாடசாலைக் கல்வியை இடை நிறுத்த வேண்டி ஏற்படலாம். இவ்வாறான நிலைமைகளுக்கு உட்படக்கூடிய பிள்ளைகளை இனங்காண்பதும், அந்த ஆபத்தான நிலைமையிலிருந்து தவிர்த்துக்கொள்வதற்கு வழங்கக் கூடிய உச்ச அளவிலான உதவியைப் பெற்றுக்கொடுப்பதும் சிறுவர் நேயப் பாடசாலையின் பொறுப்பாகக் கொள்ளப்படுகின்றது. - ஆண், பெண் இருபாலாரும் பாடசாலையில் எல்லா செயற் பாடுகளிலும் சமமாக பங்கு கொள் ளச் செய்யப்படுவதை சிறுவர் நேயப்பாடசாலைகள் உறுதி செய்துகொள்ளவேண்டும். அதாவது பாடவிதான, இணைப் பாடவிதான செயற்பாடுகளில் பெண் ஆண் பிள்ளைகளுக்கு தத்தமது உள்ளார்ந்த ஆற்றல்களை உச்ச அளவில் விருத்தி செய்து கொள்வதற்கான தேவையான செயற்பாடுகளை ஒழுங்கமைத்து செயற்படுத்துவன் மூலம் சிறுவர்நேயப்பாடசாலைகள் இதனை நடைமுறைப் படுத்துகின்றது.
பாடசாலைகளில் பௌதிகவள வசதிகளை வழங் கும் போது இருபாலருக் கும் பொருத்தமாக அமைக்கப்படல் வேண்டும். பாடசாலை ஒன்றில் அடிப்படை வசதிகளை வழங்கும் போது அவ் வசதிகள் பெண், ஆண், இருபாலாருக்கும் பொருத்தமானதாக அமைதல் வேண்டும். சுகாதாரம், காப்பு வசதிகள் பெண் ஆண் பிள்ளைகளுக்கு வெவ்வேறாக வழங்கப்படுதல் வேண்டும். அதே போன்று விளையாட்டுப் பொருட்கள், அழகியற் செயற்பாடுகளுக்கு தேவையான உபகரணங்கள் போன்றவை இருபாலருக்கும் பொருத்தமாக வழங்கப் படுவதை சிறுவர் நேயப் பாடசாலைகள் உறுதிப்படுத்திக்

கொள்ளவேண்டும். அதனை பெற்றுக்கொடுப்பதற்கான
முயற்சிகள் மேற்கொள்ளபடவேண்டும்.
சிறுவர் நேயப்பாடசாலையின் மூன்றாவது பரிமாணம் பிள்கைளுக்கு தேவையான திறன்களை கற்றல் விளைவுகளினூடாக உயர்த்துதல். சகல பிள்ளைகளும் தத்தமது உள்ளாந்த திறன்களை விருத்தி செய்து கொள்வதற்கும், அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகளை அடைவதற்கும் தேவையான சகல வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுப்பது ஆசிரியர்களின் கடமையாகும். இதற்கு மாணவர்களின் பல்வகைமையை இனங்கண்டு, அவர்களின் விருப்பு வெறுப்புக்களை அறிந்து அவர்கள் கற்கும் விதத்தினைப்புரிந்து ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் செயன் முறையில் பிரவேசிப்பது கல்வித் தர விருத்தியை ஏற்படுத்தும்.
கல்வியின் பெறுபேறுகள் அதன் உள்ளடக்கத்திலும், செயல்வழியிலுமே தங்கியிருக்கின்றது. அந்தவகையில் கல்வியின் உள்ளடக்கமும், செயல்வழியும் பின்வரும் ஐந்து பகுதிகளாக பிரிக்கப்படுகின்றது. 1 கற்றல் சூழல் :- கற்றலுக்கு மாணவர்களிடம்
காணப்படும் உடல் உளத் தயார்
நிலை, சுற்றாடல், ஆரோக்கியமும் போசனை நிலையும்
கற்றல் உள்ளடக்கம்:- மாணவனிடம் காணப்படும் அனுபவங்கள், வீட்டுச் சூழல்,
பாடசாலைச் சூழல்.
கற்றல் செயல்வழி:- தேர்ச்சி பெற்ற ஆசிரியர், மாணவர் மையக் கற்றல்
கற்பித்தல் முறை.
கற்றல் தேர்ச்சிகள்:-அடைவு மட்டம், அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகள், எதிர்பார்க்கும் தேர்ச்சிகள், முறையான கணிப்பீடு. சிறுவர் நேயப்பாடசாலையில் எல்லாமாணவர்களும் அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சியில் பாண்டித்தியம் அடைவதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். மாணவர்கள் பாண்டித்தியம் அடைந்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக பொருத்தமான கணிப்பீடுகளை மேற் கொள் வது ஆசிரியர்களின்
பொறுப்பாகக் கொள்ளப்படுகின்றது.
சிறுவர் நேயப்பாடசாலையின் நான்காவது பரிமாணம் பிள்ளைகளின் சுகாதாரம், பாதுகாப்பு தற்காப்பு என்பவற்றை உறுதிப்படுத்தல். சுகாதாரம் என்பது நோய்நொடிகளும் பலவீனங்களும் இல்லாதிருப்பது மாத்திரமல்லாமல் ஒருவர் பொருளாதார ரீதியிலும் பயனுறுதியுள்ளவாறு வாழத்
அகவிழி - ஒக்டோபர் 2012 / 25

Page 28
தேவையான உடல் உள்ள சமூக மற்றும் ஆன்மீகரீதியில் சீரான நிலையைப் பேணுவதைக்குறிக்கும். சிறுவர் நேயப்பாடசாலையானது அதன் பௌதீகச் சூழல் மூலமும், உள் மற்றும் சமூகரீதியாகவும் பிள்ளைக்கு பாதுகாப்பான இடமாகத் தொழிற்படுகின்றது. இதற்காக 1 பாடசாலை மட்டத்தில் சுகாதார, பாதுகாப்பு
நடைமுறைகளை நடைமுறைப்படுத்தல் பாடசாலைச் சூழலைச் சுத்தமாகவும், கவர்ச்சியாகவும்
வைத்திருத்தல்
சுத்தமான நீர், சுகாதார வசதிகளைச் சிறப்பாகப் பேணுதல் பொருத்தமான விளையாட்டு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு அது பாவனையிலும் நல்ல பராமரிப்பிலும் இருத்தல். தேர்ச்சி அடிப்படையிலான சுகாதாரக் கல்வியை வினைத்திறன் உள்ளதாக மாணவர்களுக்கு வழங்குதல். வினைத்திறனுள்ள உள சமூக ஆதரவும், ஆலோசனை சேவையையும் நடைமுறைப்படுத்தல். பிள் ளைகளை விபத் துக்களில் இருந்தும், துஷ்பிரயோகத்தில் இருந்தும் பாதுகாத்தல்
அவசர காலத்திற்கான ஆயத்த நிலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தல். போன்ற செயற்பாடுகளின் மூலம் சிறுவர் நேயப்பாடசாலைகள் இந்த நான்காவது பரிமாணத்தை உறுதிசெய்து கொள்கின்றன. பிள்ளைகள் குடுப்பத்துடனும், சமூகத்துடனும் நெருக்கமாக இணைந்திருப்பதற்கான பங்களிப்புச் செய்தல் பிள்ளை நேயப்பாடசாலைகளின் ஐந்தாவது பரிமாணமாகும்
இதனை அடைந்து கொள்வதற்காக
பாடசாலை அபிவிருத்தித் திட்டமிடலில் மாணவர்கள், குடும்பம், சமூகம் என்பன இணைந்து செயற்பட்டு பாடசாலை சுயமதிபீட்டை மேற்கொள்ளல்.
பாடசாலை அபிவிருத்திச் செயற்பாடானது அதிபர், ஆசிரியர், மாணவர்கள், பெற்றோர்கள், சமூகத்தின் பங்களிப்பு என்பவற்றைப் பெற்று செயற்படுத்தல். பாடசாலையில் திட்ட அமுலாக் கங் களை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து கண்காணிப்பிலும், மதிப்பீட்டிலும் ஈடுபடல்
சிறுவர் நேய சூழலை வளப்படுத்த இவர்களின் உதவியைப் பெற்றுக்ககொள்ளல். போன்ற செயற்பாடுகள் மூலம் மேற்படி பரிமாணத்தை சிறுவர் நேயப்பாடசாலைகள் அடைய முற்படுகின்றன.
267 அகவிழி - ஒக்டோபர் 2012

பிள்ளை நேய முறைமை , கொள்கைகள் பயிற்சிகள் பிரமாணங்களுக்கூடாக உதவுதல். இத்திட்டத்தின் ஆறாவது பரிமாணமாகும். பாடசாலை என்பது ஒரு தனிப்பட்ட நிறுவனமல்ல. பாடசாலையானது கல்வியுடன் நேரடியாகத் தொடர்புடைய நிறுவனங்களுடனும், அதற்கு வெளியில் உள்ள நிறுவனங்களுடனும் தொடர்புகைளப் பேணுகின்றது. பாடசாலையின் செயற் பாட்டில் இவற்றினுடைய கொள்கைகளும், அணுகு முறைகளும், விதிகளும் செல்வாக்குச் செலுத்தும். அது மாத்திரமன்றி சர்வதேச ரீதியில் நிலவும் கொள்கைகளும், சாசனங்களும் இச் செயற்பாட்டின்மீது செல்வாக்குச் செலுத்தும். எனவே, சிறுவர் நேய நடைமுறையில் கல்விப் புலமும், நாட்டில் காணப் படும் ஏனை கொள் கைகளும் தாக்கம் செலுத்துகின்றது. இதனை நடைமுறைப்படுத்த
அரசாங்க கொள்கைகளும், சட்டதிட்டங்களும் இவற்றை நடைமுறைப்படுத்தலும் சிறுவர் நேயப் பாடசாலையின் அபிவிருத்திக்கு உதவுவதாக அமைதல் வேண்டும். குறித்த சகல அரச நிறுவனங்களுக்கிடையேயும் சகல நிலைகளிலும் வினைத்திறனான இணைப்பு காணப்படுதல் வேண்டும்
நிதிவளங்கள் பல்வேறு மட்டத்திலும் பொருத்தமாகப் பயன்படுத்தப்படுதல்
தரமான தொழில் நுட்ப உதவிகளை சகல மட்டங்களிலும் வழங்குதல்.
கலைத் திட்டத்திலும் , பாட நூல்களிலும், அறிவுரைப்பு வழிகாட்டிகளிலும் சிறுவர் நேயக் கோட்பாடுகள் அடங்கியிருத்தல் போன்ற நியமங்களைப் பயன்படுத்தி ஆறாவது பரிமானம் சிறுவர் நேயப் பாடசாலைகளில் அமுல் படுத்தப்படுகின்றது.
இவ்வாறான செயற்பாடுகள் மூலமாக பிள்ளைகள் கற்பதற்கும், உரிய பாதுகாப்பைப் பெறுவதற்கும், தமது கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கும் வழியமைத்து பிள்ளைகளின் ஆற்றலை உயர் மட்டத்துக்கு அபிவிருத்தி செய்வதற்குரிய சூழ்நிலையை உருவாக்கி சுய கற்றலை மேம்படுத்துவதும், கற்றவற்றை மகிழ்சியுடன் பகிர்ந்து கொள்வதும், வாழ்க்கைத் திறன்களை விருத்தி செய்து எதிர்காலத்தை சுபீட்சமாக அமைத்துக்கொள்வதற்கான சிறந்த அனுபவங்களைப் பெற்றுக்கொடுப்பதும். இதன் மூலமாக தனக்கும், குடும்பத்துக்கும், சமூகத்துக்கும், நாட்டுக்கும் நன்மை பயக்கக்கூடிய அறிவு,திறன் மனப்பாங்கு விருத்தியடைந்த ஆளுமைமிக்க எதிர்கால சந்ததியினரை கட்டி எழுப்பி கல்வியில் பண்புத்தர விருத் தியை ஏற் படுத் துவது இத் திட் டத் தின் எதிர்பார்ப்பாகும்.

Page 29
பியாஜேயின் அறிவு
தொழிற
சிங்களத்தில் - Prof. D:
University o தமிழில்
- Mr. A.A
பரிசோதனை விளைவுகளைப் பெறும்போது பல விடயங்களை ஒன்று திரட்டி, கவனத்திலெடுத்து, முறையே படிப்படியாக ஆய்விற்குட்படுத்தி முடிவை எட்ட மாணவரினால் முடியும். தூல சிந்தனைப் பருவத்தில், காரணிகள் பலவற்றை ஒன்று திரட்டி பொருத்தப்பாடு பெற்று முடிவைப் பெறும் சக்தி காணப்படமாட்டாது. அப்பருவத்தில் விடயங்கள் வேறு வேறாகவே கவனத்திலெடுக்கப்படும்.
பின்வரும் பரிசோதனையை நிகழ்த்தும் முறையை கூர்ந்து நோக்குவதன் மூலம் இப்பருவத்திற்கான சிந்தனைத் தொழிற்பாட்டை விளங்க முடியும்.
(1) சல்பூரிக் அமிலம் (2) நீர்
(3) அமிலமிடப்பட்ட நீர் (4) தயோசல்பேற்று
(5) பொற்றாசியம் அயனைட்டு
எனும் இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி இலக்கங்களை அல்லது பதார்த்தத்தை காண்பிக்காதவாறு மஞ்சல் நிற திரவம் தயாரிக்கப்பட்டு பிள்ளைகளுக்குக் காட்டப்பட்டது.
அவர்கள் முதலில்
1+2, 2+9, 3+9, 4+9 என கலக்கப்பட்டது.
பின்னர்
1+2+9, 1+3+9, 1+4+9 என கலக்கப்பட்டது.
அவற்றில்
1+3+9 ஐ கலந்தபோது மஞ்சள் நிறம் தோன்றியது. அவர்கள் அத்துடன் நிறுத்தாமல் 1+4+9 என இன்னும் பல கட்டங்களாக பரிசோதனை செய்து
முடிவை எய்தினர்.

>க நோக்கும் கற்றல் bபாடும்
iya Rohana Athukorala f Colombo .Azees
சென்ற இதழின் தொடர்ச்சி
இப்பருவத்தில் பின்திரும்பும் இயல்பு நன்கு வளர்ந்து காணப்படும். சிந்தனைகள் ஒரு திசைக்கோ நகர்வது போல், அச்சிந்தனைகள் ஆரம்ப நிலை வரை பின் திரும்பவும் முடியும். விஞ்ஞானப் பிரச்சினைகளை தீர்ப்பதில் மாத்திரம் இவ் அறிகைத் திறன்கள் வரையறை பெறாது கருத்து நிலை மற்றும் கொள்கை ரீதியானவற்றையும் தொடர்புபடுத்த அவர்களுக்கு ஆற்றலுண்டு. ஆழமான அரசியல் கோட்பாடுகளை உருவாக்கவும், சிக்கலான, மெய்யியல் ரீதியான, நெறி ஆய்வுகளுக்கும் அவர்களிடம் ஆற்றலுண்டு.
சமூகத்தை முழுமையாக மீள் ஒழுங்கு செய்வதற்கான திட்டங்களைக் கூட அவர்களால் வகுக்க முடியும். நிஜமாகவே நிகழுபவற்றை விடவும் எதிர்காலத்தில் நிகழக்கூடியவற்றையும் இப்பருவத்திலுள்ளவர்களால் சிந்திக்க முடியும். பொதுமைப்படுத்துவதற்கும், குறியீடுகளை உருவாக்குவதற்கும், புறச் சூழலில் மாதிரிகள் (samples) இன்றி சிக்கலான எண்ணக்கருக்களைக் கூட தெளிவாக்கும் ஆற்றல் ஏற்படும். எண்களிடையேயான பல்வேறு தொடர்புகள் (கணிதம்), விகிதம், சமன்பாடுகள் அதே போல் மாதிரிகள் வரைபுகள் என்பவற்றையும் விளங்க முடியும்.
சிறு பருவத்தில் தாயுடன் அன்பு செலுத்தும், சமவயதுடையோருடன் எதிர்த்து நிற்கும் பிள்ளை, இப்பருவத்தில் அதிகமாக ஆதரிப்பது சுதந்திர உணர்வையாகும். எதிர்த்து நிற்பது மக்களை சூறையாடும் தொழிற்பாடுகளையாகும். புதிய கட்டிளைஞர் புதிய பாணியிலான வாழ்க்கை முறையை இக்காலத்தில் ஏற்படுத்திக் கொள்வர். இப்பருவத்தில் இளைஞருக்கு பிரச்சினையேதும் ஏற்படுமிடத்து அதற்கு ஒரே தடவையில் பதிலளிக்காது பல கற்பனைகளை உருவாக்கிக் கொள்வர். கற்பனைகளை பரீட்சித்தும் பார்ப்பர். பரிசோதனைகளின் விளைவுகளை அவதானித்து முடிவுகளை எட்டுவர். முடிவுகளைப் பற்றிய தருக்கத்தில் ஈடுபடுவதுடன், புதிய வரைவிலக்கணங்களையும் முன் வைப்பர்.
அகவிழி - ஒக்டோபர் 2012 / 27

Page 30
பிள்ளைகள் கட்டிளமைப் பருவத்தை அடையும் அதே நேரம் நியம சிந்தனைப் பருவத்தை அடைவதும் இடம்பெறும். முறையாக பரிசோதனைகளில் ஈடுபடுவதற்கும், பரிசோதனைகளை திட்டமிட்டு செயற்படுத்துவதற்கும், மாறிகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தரவுகளின் அடிப்படையில் முடிவுகளை எய்தவும் இப்பருவத்தின் திறன்கள் கிடைக்கப் பெறும்.
கட்டிளைஞர் தன்மயமாதல் (Adoloscent Egocentrism) இப்பருவத்தில் ஏற்படும் குண இயல்பாகும். அவர்கள் த ன க கு ள் ளிருக் கு ம் ந ம் பிக் கை க ளை யும் , மனப்பாங்குகளையும் பகுப்பாய்வு செய்வர். ஏனையோர் தன்னைப் பற்றி நோட்டமிடுவதாக சிந்தனை செய்து கொள்வர். ஏனையோர் தனது நடத்தை, குணப் பண்புகள் ஆகியனவற்றை தெளிவாய் நோக்குவதாய் நினைப்பர். "எனது மறுமொழியை மூடத்தன்மையானதாக வகுப்பு நினைத்தது" "நான் ஒரே ஆடையை தொடர்ச்சியாக மூன்று நாட்கள் அணிவதாக நினைப்பர்”
நியம சிந்தனைப் பருவத்தை அனைவராலும் அடைய முடிவதில்லை எனும் கருத்தும் உண்டு. ஒரு சிலருக்கு சில விஷேடமான துறைகளில் மாத்திரம் இப்பருவத்தை எய்த முடியுமென பியாஜே தெரிவிக்கிறார். இது தொடர்பாக பிற்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி பல்கலைக்கழக மாணவர்கள் கூட தான் கற்றலில் ஈடுபடும் துறைகளில் மாத்திரம் இப்பருவத்தை அடைந்திருப்பதாகவும், ஏனைய துறைகளைப் பொறுத்த வரையில் தூல சிந்தனைப் பருவத்தில் செயற்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.
இதனால் இரண்டாம் நிலைக் கல்வியைப் பெறும் அனைவரும் நியம சிந்தனைப் பருவத்தை அடைந்திருப்பதாக கருதுவது தவறு. சாதாரண தர (O/L) மற்றும் உயர்தர (A/L) வகுப்பு மாணவர் கள் கணித, விஞ்ஞான
28 / அகவிழி - ஒக்டோபர் 2012

கலைத்திட்டத்தில் வழங்கப்படும். கருத்து நிலைச் சிந்தனை, ஆய்வு நிகழ்வுகள், குறியீடுகள், கொள்கைகள் என்பவற்றை அவர்களால் தருக்க ரீதியாக விளங்க முடியாது போதல் புதுமைதருவதொன்றல்ல. தனக்கு தரப்படும் விடயங்களை மீறி சிந்தித்து, ஆய்வு செய்து, தருக்கம் புரிந்து கற்க முடியாதவர்கள் பரிதவிப்பர். இதனால் இவ்வாறான அறிகை மட்டமற்ற மாணவர்கள் குறியீடுகள், குறிப்புகளை மனனம் செய்து பரீட்சைக்குத் தோற்றி ஒரு சில சந்தர்ப்பங்களில் சித்தியடைவதுண்டு. பரீட்சையை சித்தியெய்தினாலும், சீரிய கற்றல் மற்றும் அறிகைத் திறன் வளர்வது ஞாபகத்தை மீறி முன்னேற முடியுமாகும்போது மாத்திரமே.
இதனால் பாடசாலைக் கல்வியில் தூல சிந்தனைப் பருவத்திற்குரிய, நியம சிந்தனைப் பருவத்திற்குரிய அறிகைத் திறன்கள் வெளிப்படுத்தப்படும் வகையிலான கற்றல் - கற்பித்தல் செயன்முறையை ஒழுங்கமைக்க வேண்டியுள்ளது.
நிய ம சிந் தனைப் பரு வ மாணவர்களுக்குக் கற்பித்தல்
இரண்டாம் நிலை கனிஷ் ட, இரண்டாம் நிலை - சிரேஷ்ட பிரிவுகளில் கற் கும் மாணவர் களுக்கு நியம் சிந்தனைப் பருவத்திற்குமுரிய முறையில் கற் பித் தல் செயன் முறை யை மேற்கொள்ளல் வேண்டும். இப்பருவ பிள்ளைகளுக்கு கற்பிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய நுட்ப முறைகள் சில வருமாறு.
(1)
- தூல சிந்தனைப் பருவத்தில் உபயோகித்த நுட்பங்களை மேலும் கடைப்பிடிக்குக.
கட்புல சாதனங்களைப் பயன்படுத்தி விடயங்களைத் தெளிவுபடுத்துக. வரைபுகள், அட்டவணைகள், உருப்படங்கள், வகைப்படுத்தல் அட்டவணைகள், விளக்கப் படங்களை உபயோகிக்குக. புதுக் கதைகளிலும், சிறு கதைகளிலும் வரும் கதா பாத்திரங்களை கலந்துரையாடுக. அவற்றை தனது வகிபங்குடன் ஒப்பிடுக.
(2) கருதுகோள்களை அமைத்து, பரிசோதனைக்கு
உட் படுத்தக் கூடிய ஆய்வு செய்யக் கூடிய சந்தர்ப்பங்களை வழங்குக.
தற்கால அரசியல், சமூக, பொருண்மிய, மற்றும் சமயத் துறைகளில் ஒரு சில தலைப்புகள்

Page 31
பற் றியதாக தருக்க நிலை விவாத எழுத்தாக்கங்களை எழுதி அவற்றை எதிர் தரப்பினருடன் பரிமாறி, அவற்றைப் பற்றிய விவாதங்களை நடாத்துக. மனக் கோட் டத் திலுள் ள (Fantasy) நிகழ்வொன்றைப் பற்றி எழுத்தாக்கங்களை வெளியிட சந்தர்ப்பம் வழங்குக. உதாரணமாக செவ்வாய்க் கிரகம் மக்கள் வதிவிடமாகும்போது
(3)
சமுத்திரத்தின் அடியில் வாழிடமமைத்தல்
போன்றன. பிரச்சினை விடுவிப்பதிலும், விஞ்ஞான முறையை உபயோகிப்பதற்கும் மாணவர்களுக்கு சந்தர்ப்பம்
வழங்குக.
விஷேடமான பிரச்சினை நிலைமைகளை உருவாக்கி அவற்றைத் தீர்ப்பதற்கு அவசியமான நடைமுறைத் திட்டங்கள், செயற்பாடுகளை திட்டமிடுவதற்கு, ஆய்வுகளை திட்டமிடுவதற்கு, மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குக. பிரச்சினைகளுக்கு முன்வைக்கப்பட்டுள்ள வேறு தீர்வுகளைக் கலந்துரையாடி அவற்றின் அனுகூலமான, பிரதிகூலமான இயல்புகளை அறிந்திட சந்தர்ப்பம் வழங்குக.
வெவ்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கு அல்லது வேறு வகையான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தாங்கள் முன் வைக்கும் தீர்வுகளையும் யோசனைகளையும் வகுப்பில் முன் வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குக. குழுவாக அல்லது சோடியாக ஒன்றிணைந்து இவ் வாறு கருத்துக்களைத் தெரிவிக்கலாம். தருக்க நிலைச் சிந்தனை அவசியப்படும் திறந்த வினாக்கள் அல்லது நாளாந்த, வாராந்த வினாத்தாள்களில் ஒன்றிணைக்குக. பிரச்சினையுடன் கூடிய, கருத்து வேறுபாடு கொண்ட சமூகப் பிரச்சினைகள் தொடர்பாக தருக்கம் புரிவதற்கு, தருக்க ரீதியாக தீர்வை
அடைவதற்கு சந்தர்ப்பம் வழங்குக.
உதாரணமாக: மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்பதற்கு ஆதரவாக தருக்க நிலைக்
கருத்துக்கள் இரண்டு முன்வைக்குக. (4) முடியுமான எல்லாச் சந்தர்ப்பங்களிலும் மாணவனின்
வாழ்க்கைக்கு அவசியமான கருத்துக்கள் மற்றும் பிரச்சினைகளை ஆதாரமாகக் கொண்டு வெறுமனே

விடயங்களை அல்லாமல் பரந்த எண்ணக்கருக்களைக் கற்பிக்க.
விடுதலைப் போராட்டம் (சுதந்திரம் பெறல்) பற்றி கற் பிக் கும் போது இலங்கையின் சுதந்திரத்திற்காக மேற்கொள்ளப்பட்ட விடுதலைப் போராட்டத்தையும் கலந்துரையாடலில் சேர்த்துக் கொள்வர்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவற்றை பற்றிக் கலந்துரையாடி இலங்கையில் தொலைக்காட்சி நிறைவேற்றியிருக் கும் பணிகளை
விமர்சனத்திற்குள்ளாக்குக. இசை ஒலி நாடாக்கள், ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடல்கள் மூலம் பண்பாட்டிற்கு ஏற்படும் சேவை யையும் , அனர் த தத் தையும்
விபரிக்குக. (5) மாணவர்களை கற்றலில் ஈடுபடுத்துக. அவர்களுக்குரிய
வழிகாட்டலை மேற்கொள்க.
வெறுமனே அனுமதிப் பத்திரத்தை நிரப்புவதற்காக செய்யப்படும் பெரும் அப்பியாசங்களை நிறுத்தி மாணவர்களின் நியம் சிந்தனைச் சக்தியை விரிவடையச் செய்யக்கூடிய கற்பித்தல் முறைகளை பயன்படுத்துக. மூளைக்கிளறல், வாத விவாதங்கள், தருக்கம் மற்றும் கலந்துரையாடல் மூலம் விடயத் துணுக்குகளை வெளிப்படுத்தி நுண்ணறிவுப்
போட்டிகளில் மாணவர்களை வழியனுப்புக. வகுப்பறையிலும், அதே போல் வகுப்பறைக்கு வெளியிலும் கலந்துரையாடல் மற்றும் வாத வி வா தங் க ளு க் கு ம ா ண வர் க ளை
ஈடுபடுத்துக. பியாஜேயின் கற்பித்தலை, கல்விச் செயன் முறையுடன்
- தொடர் புபடுத்தல் (அறிகை மேம் பாட்டை துரிதப்படுத்தல்)
பியாஜே மற்றும் அவரின் கொள்கைகளை கல்வியுடன் தொடர்புபடுத்த முனைந்த உளவியலாளர்கள், அறிகை மேம்பாட்டை துரிதப்படுத்தல் அல்லது ஏழு பருவத்திலிருந்து இன்னொரு பருவத்திற்கு பிள்ளையை உயர்நிலைப்படுத்தல் செய்ய வேண்டியதில்லை என கருத்துத் தெரிவிக்கின்றனர். "ஆசிரியரின் பணியாக அமைய வேண்டியது அப்பருவங்களிலுள்ள பிள்ளைகளின் திறமைகளை நன்கு ஒன்று திரட்டுவதுடன் பூரணமாக விருத்தி பெறுவதை உறுதிப்படுத்தலாகும்”
அகவிழி - ஒக்டோபர் 2012 / 29

Page 32
அறிகை மேம்பாட்டின் அடித்தளமாக அமைவதும், செயற்படுவதும் மாணவரின் சிந்தனை மற்றும் தானாகவே ஈடுபடும் செயற்பாடுகளைச் செய்வதன் மூலமாகும். அது தவிர ஆசிரியரின் தொழிற்பாடுகளின் மூலமல்ல. மாணவன் இன்னும் கற்பதற்கு தயார் நிலையிலில்லாத விடயமொன்றை கற்பிப்பதற்கு நீர் முயற்சியெடுப்பின் மாணவன் சரியான பதிலளிக்கக் கற்றுக் கொள்வான். அது நியம் கற்றல் அல்ல, போலியான கற்றலாகும். இக்கற்றல் மாணவரின் பிரச்சினை விடுவிப்பதால் ஆதாரமாய் அமையாது அப்பிரச்சினையை அல்லது அவ்விதமான வேறு பிரச்சினையொன்றைக் கற்பதற்கு அப்போலிக் கற்றல் உபயோகப்படாது. இவ்வாறு நோக்கும்போது கற்பித்தலை துரிதமாக்கல் அர்த்தமற்றது அதே போல் தீங்கானது என பியாஜே கருதுகிறார்.
விரைவான கற்பித்தல் மற்றும் முந்திய கற்பித்தல் என்பன பயனற்றவையாக (சாதகமற்றவையாக) பியாஜே தெரிவிக்கிறார். ஒரு பருவத்தில் யாதேனுமொன்றை கற்பித்தலுக்கு பெரு முயற்சியெடுப்பதன் விளக்கம் என்ன? அம்மாணவன் அடுத்த பருவத்தில் தானாகவே, மிக விரைவாக, நன்றாகவும், இலகுவாகவும் அவ் எண்ணக்கருவை கற்றுக் கொள்வான்.
இதனால் மாணவன் தானாகவே கற்கும் எண்ணக்கரு மற்றும் தீர்வுகளை முன்கூட்டியே கற்பித்தல் காலத்தையும், சிரமத்தையும் வீணாக்குதல் மாத்திரமே.
இதனால் பியாஜேயின் கற்பித்தல்களை ஆசிரியர் தனது கற்பித்தல் செயன்முறையை மீண்டும் திரும்பிப் பார்ப்பதற்கும், தனது கற்பித்தல் செயன்முறையை திட்டமிட்டுக் கொள்வதற்கும் ஆதாரமாய்க் கொள்ள முடியும். நாம் வகுப்பறையில் மேற்கொள்வது நியம் கற்றல் தானா என்பதை இதன் மூலம் தேர்ந்தெடுக்க முடியும். மாணவன் அடைந்திருக்கும் அறிகை விருத்திப் பருவத்தினுள், அவன் சிந்திக்கும் பாங்கு, வாத விவாதங்கள், புரியும் விதம் என்பவற்றை மேலும் வலிமையூட்டுவதற்கு எம்மால் முடிந்த்தா, என்பதை சிந்திக்க வேண்டும். போலிக் கற்றல் அதிகமாக பழக்கம் மூலம் நிகழும் பொறிமுறைத் திறனாகும், அவ்வாறான பொறிமுறைத் திறன்கள் பிள்ளைகளிடம் காணப்படினும் நியம கற்றலைப் போன்ற தெளிவு அவர்களிடம் இராது. போலியான கற்றலில் வெறுமனே சில விடயங்கள் மாத்திரம் தாங்கியிருத்தலைக் காணலாம்.
பிள்ளைகள் அடைந்திருக்கும் அறிகைப் பருவத்தை தெளிவாக விளங்கி அவர்களுக்கு கணித, விஞ்ஞான வினாக்கள் மற்றும் தருக்க நிலை, கருத்து நிலைப் பிரச்சினைகளை முன் வைத்தல் வேண்டும். இலங்கையில் முன்பள்ளிகளிலும் வகுப்பறைகளிலும் அனேகமாக இவ்வாறான போலியான கற்றல் இடம்பெறுவதை உம்மால்
307 அகவிழி - ஒக்டோபர் 2012

அவதானிக்க முடியும். விடயங்களை கற்பிப்பதன் மூலம் அனுமதிப் பத்திரங்களை நிரப்புவதற்கு ஆசிரியர்கள் முயற்சியெடுப்பதுடன் நிர்வாக அதிகாரிகளும் அதனையே எதிர்பார்ப்பதாக அவர்களின் செயற்திட்டங்கள் மூலம் தெளிவாகின்றது.
இக்கற்றல் அறிகைத் திரளமைப்புகளை ஆழமாக்கு வதிலும், விரிவாக்குவதிலும் எந்தளவு காரணமாக அமையும்? வெறுமனே மனனம் செய்தல் மற்றும் விடயங்களைக் குவித்தல் மூலம் கிடைக்கும் கற்றல் மாணவரின் நுண் மதியை மொட்டையாக் குதல் மாத்திரமே.
இதனால் ஒவ்வொரு ஆசிரியரும் தனது மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் அறிகை விருத்திப் பருவத்தை இனங்கண்டு, அறிகைத் தொழிற்பாடு விருத்தி பெறும் விதத்தில் கற்பித்தல் பின்னணியை ஒழுங்கமைத்தல் வேண்டும். தனது கற்பித்தலில் குறிப்பிட்ட பாட அலகுகளில் அடங்கியுள்ள அடிப்படை எண்ணக்கருக்களை தருக்க ரீதியாக விளக்கி, அவ் எண்ணக்கருக்களை முன்வைக்க வேண்டிய ஒழுங்கையும் அவற்றை தெளிவுபடுத்தக்கூடிய விதத்தையும் விளக்கி திட்டமிடல் வேண்டும். அறிகைச் செயன்முறையில் ஒழுங்கமைத்தல் மற்றும் தழுவல் செயற்பாடுகளுக்கு பிரதான இடம் கிடைக்கும். ஆசிரியர் தனது கற்பித்தலை கிரகித்தலுக்கும், பின்னூட்டலுக்கும் உரியவாறு திட்டமிடல் வேண்டும். வெறுமனே கிரகித்தலுக்கு மாத்திரம் காரணமாகும் வகையில் கற்பிப்போமாயின் அறிகை உளத் திரளமைப்புகள், மாற்றம் பெறுவதற்கும், விரிவடைவதற்கும் இடம் கிடைக்காது போகலாம். பிள்ளையின் திரளமைப்பு களுக்கு பொருந்தும் அளவை விட மிகவும் இலகுவான கற்பித்தலும் பயனற்ற காரியமாகும். இலகுவாக பின்னூட்டல் பெற முடியாது, விளங்குவதால் கஷ்டம் கொண்ட கற்பித்தல் மூலமும் செயற்படும் பாடங்கள் மூலமும் பிள்ளைகளின் அறிகை மேம்பாடு நிகழாது. இதனால் அறிகை விருத்திப் பருவத்திற்குரிய விடயங்கள் மற்றும் போதிய அறை கூவல்களைக் கொண்ட கற்றல் நிகழ்வுகளை திட்டமிடல் வேண்டும்.
நியம சிந்தனைப் பருவத்தில் அடியெடுத்து வைக்கும் மாணவர் களுக்கு தமது அறிகைத் திறன் களை உபயோகிக்கக்கூடிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்த வேண்டும். தருக்கம், வாத விவாதங்கள், உரையாடல்கள் மூலம் விமர்சிக்கும் ஆற்றலை மேம்படுத்தல் வேண்டும். இவ்வாறு அறிகை வளர்ச்சி ஒழுங்கிற்கேற்ப செயற் படல் வெற்றிகரமான கற்பித்தல் பணியில் ஈடுபடுவதற்கு ஆசிரியருக்குத் தேவையான வழிகாட்டல், சக்தி மற்றும் நம்பிக்கையைத் தரும்.

Page 33
கல்வ தொலைக்
Author:
Prof. Daya
Faculty of E Sinhala into Tamil: Mr. A. A. A
சென்ற இதழ் தொடர்ச்சி.....
தொலைக் காட்சியினால் எமது இளைய தலைமுறைகளுக்கேற்படும் தாக்கங்களை ஆசிரியர்களும் பெற்றோராகிய நாமும் உன்னிப்பாக அறிந்திருத்தல் வேண்டும். தொலைக் காட்சியினால் இன்று பெருப்பித்துக் காண்பிக்கப்படும் வினோத நிகழ்ச்சிகள் காரணமாக இரசிகர்கள் செயற்பாடற்ற கனவுலகத்திற்கு அனுப்பவதாக ஒரு சிலர் சுட்டிக்காட்டுகின் றனர். தொலைக்காட்சியின் அனுகூலங்களைப் பற்றி அறிந்திருப்பது போல் ஆபத்துக்களையும் அறிந்திருத்தல் அவசியம்.
- குழந்தை நூலாசிரியராகப் பிரசித்தி பெற்ற Mariewinn வெளியிட்ட The Plug in Drug எனும் நூலில் தொலைக்காட்சிக்கும் போதைப்பொருளுக்கும் அவர் ஒரு ஒற்றுமையைக் காண்கிறார். அவர் "மூளையின் அரைப்பங்கை தொலைக்காட்சி செயலிழக்கச் செய்வதாகக் குறிப்பிடுகின்றார்." அதேபோல் அனேகமாக தொலைக்காட்சி இரசிகர்களிடையே தனது சகோதர மக்களைப் பற்றி குறைநம்பிக்கை நிலவுவதாகக் குறிப்பிட்ட அவர் யதார்த்தமான உலகினில் அச்சத்துடன் காணப்படுவதாகவும் குறிப்பிடுகின்றார். அதே போல்
ஜப்பானிய சமூகத் தலைவியாகிய Kimico Takisawa கூறியிருப்பது "தொலைக்காட்சியானது ஜப்பானியருக்கு போதைப் பொருளாகும். அதே போல் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினையாகவும் மாறியவண்ணமுள்ளது'' இவ்வாறு சென்சீபார் போன்ற வறிய நாடுகளிலும் தொலைக்காட்சியானது மிகவும் பலமான முறையில் சமூகத்தை செயலிழக்கச் செய்ய தொழிற்பாடற்றதாக்குவதில் காரணமாக அமைவதாக பேராசிரியர் ட்ரென் வேன்டீன் சுட்டிக்காட்டுகிறார்.
- அவர் கூறும் பிரகாரம் தொலைக்காட்சியின் தன்மையைப் பொறுத்து அதன் மூலம் அறிவியலின்மை, கீழ்ப்படிதல் மற்றும் அழுத்தங்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றவைக்கும் மூடக்கதைகள், மாயச்செயல்கள்
மாக

பியும்
காட்சியும்
Rohana Athukorale, Education, University of Colombo.
Zees.
ELEVISION
என்பவற்றுடன் வழக்கமானதன்மையுமாகும். இவ்வாறான நிலைக்கு மனிதனை ஆளாக்கும் தொலைக்காட்சி மனிதன் கல்வி மூலம் எதிர்பார்க்கும் மனித நேயத்தை குலைத்து விடுகின்றது. பேராசிரியர் ட்ரென் வென்டீன் தெளிவாய் எடுத்துரைப்பது “சுயநலப் பேராசையை மேலும் பெருக்கும், சிந்தனைகளைப் பகிர்ந்தளிக்கும், மனதை ஒருமுகப்படுத்தும் கட்டுப்பாடான நிலையை எடுத்தெறியும் தொலைக்காட்சி அடிப்படையில் பௌத்ததர்மத்திற்கு புறம்பானது. அது மனிதனின் அறிவாற்றல் உயர்வடைவதற்கு தடங்கலானது." நூலாசிரியர் பௌத்த மதத்தை மாத்திரம் குறிப்பிட்டிருப்பினும் அது பொதுவாக அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட விடயமாகும். இந்நிலைமை கல்வியின் அடிப்படைக் கொள்கைகளிலிருந்து விலகிச் செல்லும் நிலையை காண்பிப்பதால் தொலைக்காட்சியானது எந்தளவு தூரம்
அகவிழி - ஒக்டோபர் 2012 / 31

Page 34
தனியாள் மேம்பாட்டிற்கு துணைபுரியும்? இறுதிவிளைவாக கல்வி கிடைக்குமா? எனும் வினாக்களையும் எழுப்ப
முடியும்.
வினாக்களைப் பற்றி நோக்கும் போது தொலைக்காட்சி மூலம் வன்முறை, நெறிபிறழ் தொழிற்பாடுகளுக்கு இளைஞர் சமூகத்தை முற்செலுத்தும் வல்லமை காணப்படுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் நிகழும் அடிக்கடி கேட்கக் கிடைக்கும் இளந் தலைமுறையின் வன்செயல்களில் அனேகமானவை தொலைக்காட்சியின் விளைவாக ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. அதேபோல் அறநெறி, சமூக கருமங்களில் மனிதனை மாசுபட்ட நடத்தையை உருவாக்கக் கூடிய ஆற்றலும் தொலைக்காட்சியில் காணப்படுவதாக மேலுமொரு குற்றச் சுமத்தல் எழுப்படுகிறது. கொடூர, கடுஞ்சினமுடைய, வன்செயல் கொண்ட காட்சிகளை உள்ளடக்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பிள்ளைகளுக்குத் தாக்கம் விளைவிப்பதாக ரொபர்ட் எம். லுபாடி, ரொபர்ட். எஸ். புரொன் (1972) செய்த ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. 136 பிள்ளைகளுடன் அவர் இவ்வாய்வை நிகழ்த்தினார். இப்பிள்ளைகளில் ஒரு பகுதியினர் 5 - 6 வயதிற்கிடைப் பட்டவர்களாவதோடு மற்றைய பகுதியினர் 8 - 9 வயதெல்லையுடையோராவார்.
இப்பிள்ளைகளை சமனான இரு பகுதிகளாகப் பிரித்து ஒரு தொகைக்கு பிரபலமான தொலைக்காட்சிக் காட்சிகள் காண்பிக்கப்பட்டன. அக்காட்சியில் கையினால் சண்டையிடும் இரு காட்சிகள், துப்பாக்கி வேட்டுக் காட்சிகள் இரண்டு மற்றும் கத்தியால் குத்தும் காட்சியொன்றும் அடங்கியிருந்தது. மற்றைய குழுவினருக்கு பெரும்பாலும் உயிர்ப்பான விளையாட்டுக் காட்சிகள் காண்பிக்கப்பட்டன. அதன் பின்னர் இவ்விரு குழுக்களிடையே பிள்ளைகளுக்கு "நோவினை செய்க" "உதவி செய்க" எனப் பெயரிடப்பட்ட பொத்தானை (Button) அழுத்தும் படி வேண்டப்பட்டது. வன்செயல் காட்சிகளைப் பார்வையிட்ட பிள்ளைகளில் பெரும்பாலும் "நோவினைச் செய்க" எனும் பொத்தானை அழுத்தியிருப்பது தெரியவந்தது. அதன் பின்னர் விளையாட்டுப் பொருட்களையுடைய அறையொன்றினுள் விளையாட அனுமதித்த போது வன்செயல் காட்சிகளைக் கிரகித்த பிள்ளைகள் மிகவும் வன்முறையுடன் விளையாடியதைக் காணக்கிடைத்தது.
Bandura & Ross A.D. (1963) இல் செய் த ஆய்வொன்றிற்கேற்ப 10 நிமிட நேர கொடூரமான வன்முறைசார் திரைப்படத்தின் மூலமேனும் 6 மாதத்தின் பின்னரும் அதன் விளைவுத் தாக்கம் நிகழ்வதாக
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Eron.L.D (1963) இல் செய்த ஆய்வின் படி வகுப்புத்தோழர்கள் வன்முறையுடையவர்களாய்க் கருதும் மாணவர்கள் அதிகமாக முரண்பாடு, மோதல் நிகழும்,
327 அகவிழி - ஒக்டோபர் 2012

குழப்பங்கள் நிறைந்த தொலைக்காட்சிக் நிகழ்ச்சிகளைப் பார்த்து இரசிப்பவர்களென்பது தெளிவாகின்றது.
சுயீகோ கோடோ அவர்களால் "பொதுசன பல்லூடகம்" பற்றி எழுதப்பட்டுள்ள ஆக்கமொன்றில் தொலைக்காட்சி தன் னாலேயே அனுபவப் படவேண் டிய, பல் வேறு அனுபவங்களைப் பெறுவதற்காக பிள்ளைகளுக்கிருக்க வேண்டிய காலத்தை கழிப்பதாகக் கூறுகிறார். இதனால் மாணவர்களுக்கு முதல்தர அனுபவங்கள் இல்லாமல் போகும். அதனை நெடுங்கால நோக்கில் நோக்குமிடத்து கல்விக்குப் பாதகமான நிலை தெளிவாகியுள்ளது.
வளர்ந்தோருக்காய் உருவாக்கப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை சிறார் பார்த்து இரசித்தல் இன்னுமொரு பிரச்சினையாய் உருவெடுத்துள்ளது. இதனால் வளர்ந் தோருக்கும் பிள்ளைகளுக்குமிடையேயான துணைப் பண்பாடுகளின் வரையறை இல்லாதொழிக்கப்பட்டது. இந்நிலைமையினால் பிள்ளைகள் சமூகம் மற்றும் அதில் வளர்ந்தோரின் பணிப்பொறுப்பு பற்றி தனது மனதுகளில் பதித்துக் கொள்வது தொலைக்காட்சித் திரையில் காண்பிக்கப்படும் செயற்கையான வர்ணனைக் காட்சிகளாகும். இந்நிலைமை பிள்ளையை செயற்கையான வண்ணம் கொண்ட கனவுலகிற்கு அழைத்துச் செல்லும்.
பெற்றோர்களின் வெளிப்பாடுகள் (துலங்கல்கள்) மற்றும் தன்னைத் தூக்கி வளர்க்கும் மூத் த பிள்ளைகளும் மூத்தோருடனும் நிகழும் இடைவினை பிள்ளைகளுக்கு உலகினுள் உட்புகுவதற்கு சமூகத்துடன் தொடர்புறுவதற்கு உபகாரம் புரியும். வேலைப்பளு மிகு பெற்றோர் பிள்ளைகளின் மனதைச் செலுத்தி அவர்களை அமைதியாக்கும் கவனிப்பாளர் ஒருவராக தொலைக்காட்சியை உபயோகிப்பதால் பிள்ளைகளின் அறிவுபூர்வ (Intellectual) மற்றும் சமூக மேம்பாட்டிற்கு அவசியமான முக்கிய காரணி பிள்ளைகளுக்கு கிடைக்காமல் போகும். இவ்வனைத்து பலவீனங்களும் பிள்ளையின் கல்வியை தளர்வடையச் செய்வதற்கு மறைமுகமாகச் செல்வாக்குச் செலுத்த இடமுண்டு.
கொடூரக் காட்சிகளைக் கொண்ட வன்செயல் நிறந்ைத சில தொலைக்காட்சித் திரைப்படங்கள் காண்பிக்கப்படும் நாட்களில் பிள்ளைகள் பாடசாலைக்கு சமூகமளிப்பதில்லை என அமெரிக்காவில் செய்யப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இவ்வாறு பாடசாலை வாழ்க்கைக்கு பழக்கப்பட்ட பிள்ளைகளை பாடசாலையிலிருந்து அப்புறப்படுத்தும் இயக்குவிசையாகவும் தொலைக்காட்சி தொழிற்படும். The Osaka Metropolitan Science Education Centre மூலம் 1977 இல் செய்யப்பட்ட ஆய்வொன்றில் "கருத்தற்ற நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கும் பெரும்பாலான பிள்ளைகளை கல்லூரியிலிருந்து புறத்தேயீர்க்கும் ஈர்ப்புவிசையாக தொலைக்காட்சி தொழிற்படுவதாக"

Page 35
சொல்லப்படுகின்றது.
ஜப்பானிய தொலைக்காட்சிச் சேவைகள் மூலம் பிள்ளைகளிடையே மட்டுமல்ல வளர்ந்தோரிடையேயும் குடும்ப அங்கத்தவர்கள் ஒன்றாய் அமர்ந்து உறவாடும் காலம் குறைந்திருப்பதும் உறக்கத்திற்கு செல்லும் நேரங்கூட பிற்படுத்தப்படுவதாகவும் ஆய்வுகளில் உறுதிசெய்யப் பட்டுள்ளது. இந்நிலை பிள்ளைகளின் உளமேம்பாட்டிற்கு பாதகமான விளைவுகளை உண்டுபண்ணக்கூடும்.
தொலைக்காட்சி உலகிற்கு புதிதாய் வெளிப்பட்டிருக்கும் காணொளி (CD) மூலம் உருவாக்கப்பட்டுள்ள விண்வெளிச் சண்டைகள், வேற்றுக்கோள்களில் மோதல்கள் உள்ளடங்கிய விளையாட்டு மற்றும் சூதாட்டம் காரணமாக இளைஞர்கள் ஏனைய அனைத்துச் செயற்பாடுகளையும் நிறுத்தி சூதாட்டங்களில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது. இதனை உடனே கவனத்தில் எடுத்தல் வேண்டுமென Time (1981) சஞ்சிகை தெரிவிக்கிறது. இவ்வுண்மைகளிலிருந்து பிள்ளைகளை பாடசாலைகளிலிருந்து அப்புறப்படுத்துவது தொலைக்காட்சி ஊடகம் மூலம் நடந்தேறுவது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி எந்தளவு கல்விப் பெறுமதியுடையன வாயிருப்பினும் அதன் பின் விளைவு பற்றி நடாத்தப்பட்ட ஆய்வுகளில் இளந்தலைமுறை மட்டுமல்ல வளர்ந்தோர் கூட பெரும்பாலும் அதன்மூலம் கல்விப் பயன்பாட்டை

அடையத்தவறிவிடுவதாக உறுதிசெய்யப்படுகிறது. எனினும் தொடர்பாடல் கொள்கைகள் தெளிவாகப் பிரசுரிக்கப்பட்ட நெருங்கிய தொடர்புடைய சோவியற் ரஸ்யாவில் தொலைக்காட்சி, வளர்ந்தோர் கல்வியில் அளப்பரிய சேவையை ஆற்றுவதாகவும் கல்லூரிக் கல்வியைப் பெற்ற அல்லது பெறாத அல்லது பெருந்தொகையானோர் கல்வியைப் பெறுவதற்கு தொலைக்காட்சியைப் பார்ப்பதாக பீடர் ரொஸ்ஸி சுட்டிக்காட்டுகின்றார்.
இவ்வாறு முழுமையான உருவை நோக்கும் போது கல்விமைய சமூகமொன்றில், தொடருறு கல்வியில் ஈடுபடுபவருக்கு கல்வியை வழங்க மிகவும் பிரபலமான ஊடகமாக தொலைக்காட்சியை உபயோகிக்க முடியும் என்பது தெளிவாகின்றது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை சமூகத்தின் முன்னேற்றத்திற்கும் ஒற்றுமைக்கும் உபகாரமாய் அமையும் வகையில் திட்டமிட்டு முன்வைக்காமல் வெறுமனே வணிக மற்றும் வினோதம் வழங்கும் ஊடகமாக பாவிக்கப்படின் அதன் மூலம் சமூகத்திற்கு பாதகமான விளைவுகள் ஏற்பட முடியுமென்பதை ஆய்வுகள் உறுதிசெய்கின்றன. இதனால் கூறப்படுவது முறையாகவும் ஒழுங்காகவும் உபயோகிக்கப்படின் இதுவரை சரியான முறையில் அகழ்ந்தெடுக்கப்படாத பெரும் கல்விப் புதையலாக அமைய வேண்டிய தொலைக்காட்சி முறையின்றி உபயோகிக்கப்படின் தற்கால தலைமுறையினருக்கு பெரும் சாபமாய் அமையக் கூடும்.
அகவிழி - ஒக்டோபர் 2012 / 33

Page 36
சென்ற நூற்றாண் நூற்றாண்டு முற்பகு சில தமிழ் வெளியி
அவைதொட
கலாநிதி
B.ED.
பான்
சென்ற நூற்றாண்டுக் கடைசிப்பகுதியிலும் இந்த நூற்றாண்டு முற்பகுதியிலும், இலங்கையில் பல தமிழ் வெளியீடுகள் வெளிவந்துள்ளன. இது வரவேற்கத்தக்க நிகழ்வாகும். ஆனால் சில வெளியீடுகளில் பல வகையான வழுக்கள் காணப்படுகின்றன. எழுத்துப்பிழைகள், இலக்கணப் பிழைகள், கருத்துப்பிழைகள் தகவல் பிழைகள் ஆகியவற்றுக்களோடு இலக்கிய திருட்டும் காணப்படுகிறது. இவைகளை ஆராய்ந்து ஏற்புடைய திருத்தங்களை ஆதாரங்களுடன் முன்வைத்து இன்றைய சமுதாயத்துக்கும் வருங்கால சமூதாயத்துக்கும் சரியான தகவல்களைப் பெறுவதற்கு வழிவகுத்தலே இந்த ஆய்வு முயற்சியின் நோக்கமாகும்.
வாழையடி வாழை என்னும், சொற் தொடர் பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து பிரகாசித்துக் கொண்டிருக்கும். அறிவு, திறமை, திறன் ஆகியவற்றைக் குறிக்கும். இது தொடர்பாக பேராசிரியர் எஸ். சிவலங்கராஜா அவர்கள், பேராசிரியர் க. சின்னத்தம்பி பொன்விழா மலரில் (2010) இவ்வாறு குறிப்பிடுகிறார்.
பரம்பரை பரம்பரையாக தமிழ் படித்த குடும்பங்களைச் சேரந்தவர்களைக் குறிப்பிடும் பொழுது தமிழ் தமிழ்க்கல்வியிற் பரம்பரை அல்லது குடும்பச் செல்வாக்கு நிலவியவற்றையும் சதாசிவம் பிள்ளை குறிப்பிடத் தவறவில்லை. சண்முகச் சட்டம் பியாரின் வரலாற்றைக் குறிப்பிடும் போது சதாசிவம்பிள்ளை இவ்வாறு குறிப்பிடுகின்றார்:
இவர் “வாயைடிவாழையாகப், பிதா, பாட்டன் அப்பாட்டன், என்று மூன்று, நான்கு தலைமுறைகளாக வித்துவான்களின் வம்சத்தில் சேர்ந்தவர். (பாவலர் சரித்திரதீபம்) சிவலிங்கராஜா (ப.50).
"ஆனால் வாழையடி வாழை" என்னும் தலைப்பில் 1962இல் ஒரு நூல் வெளிவந்தது. இதில் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களின் வரலாறும் புலவர்மணி ஏ. பெரியதம்ப்பிள்ளை அவர்களின் வரலாறும் தரப்பட்டுள்ளன.
34 / அகவிழி - ஒக்டொபர் 2012

டுக் கடைசிப் பகுதியிலும் இந்த தியிலும் இலங்கையில் வெளிவந்த டுகளில் காணப்பட்ட வழுக்களும் ர்பான சரியான தகவல்களும்
கோணாமலை கோணேசர் Hons): M.A.M.Sc:, Ed.D:,Ph.D
இந் நூலாசிரியர் தனது உரையில் "ஈழத் தமிழகத்தோர் ஏத்தும் இருமணியாய் வாழும் வழியறிந்து வண்கலைகள் - வாழையடி
வாழை யென வளர்க்கும் வல்லோர்” என்று கூறியுள்ளார்.
ஆனால் இவர்கள் இருவரும் பரம்பரை பரம்பரையாக வந்த அறிஞர்கள் அல்ல, எனவே வாழையடி வாழை என்னும் சொற்தொடர் கொண்டுள்ள ஆழ்ந்த பொருளுக்கும் நூலின் தலைப்புக்கும் பொருத்தமில்லை.
மேலும் இதே நூலில் தரப்பட்டுள்ள இரு கூற்றுக்களை நோக்குவோம்:
யாழ்ப்பாணத்திலே மாணவராயிருந்த காலத்திலே இவர் தனது கன்னி முயற்சியாக மண்டூர்ப் பதிகத்தைப் பாடியுள்ளார். இப்பதிகமானது பண்டிதர் மயில்வாகனனார் அவர்களது பாராட்டுதலைப் பெற்றதோடு அவரது சாற்று கவியையும் கொண்டதாயிருக்கிறது. மண்டூர்ப் பதிகம் ஏ.பெ. பிள்ளையின் இளமைப் பிராயத்தில் பாடப்பட்ட போதிலும் அஃது அருமையான படைப்பாகவே அமைந்துள்ளது. அச்செய்யுள்களில் காணப்படும் சொல்லாட்சிக்கும், பொருள் வைப்புமுறைக்கும் பின்வரும் உதாரணத்தைக் காட்டலாம். (ப.70)
விபுலாநந்த அடிகளாரில் இயல்பாக ஈடுபாடுகொண்ட குரு சீட அடிப்படையில் பிணைக்கப்பட்டவரான ஏ.பெ. பிள்ளையவர்கள் அடிகளாரின் அடிச்சுவட்டைப் பின்பற்றுவதில் விருப்புடையவராவர். பெரியதம்பிப்பிள்ளையவர்கள் தமது கன்னிப்படைப்பான மண்டூர்ப் பதிகத்தைப் பாடி முடித்து அடிகளாரிடம் கொடுத்து அபிப்பிராயம் கேட்டார். ஏ.பெ. பிள்ளையவர்களை வெகுவாகப் பாராட்டினார்கள். பாராட்டியதோடு அமையாது மண்டூர்ப் பதிகத்துக்குத் தாமாகவே ஒரு சாற்று கவியையும் பாடிக் கொடுத்தார்கள். அடிகளார் அளித்த அச்சாற்று கவியானது பெரியதம்பிப்பிள்ளையவர்களது ஆற்றலைப்பாராட்டிய பாட்டாகவே அமைந்திருக்கிறது. அப்பாடல் பின்வருமாறு:

Page 37
“பண்டூரும் முகிற்குலங்கள் எமதிறைவர்
முருகர் திருப்பதியீ தென்ன விண்டூர மழைபொழியும் சிறப்பதனால் வளமலிந்து மிகுந்து தோன்றும் மண்டூர் லுறைமுருகன் மலரடிக்கோர் திருப்பதிகம் மரபிற சொற்றான் கண்டூரு மினியமொழிப் பெரியதம்பிப் பிள்ளையெனும் கலைவ லோனே.” (ப.91)
முதலாவது கூற்றில் இளமையில் பாடப்பட்டது என்று நூலாசிரியர் கூறுவதாகவும் அடுத்த கூற்றில் அடிகளார் பெரியதம்பிப்பிள்ளையின் பாடல்களில் முதிர்ந்த அனுபவத்தைக் காண்பதாகவும் தரப்பட்டுள்ளன. இவை இரண்டும் முரண்பட்ட கூற்றுக்களாகும். முதலாவது கூற்றில் பண்டிதர் மயில்வாகனனாரின் பாராட்டுதலைப்பெற்றது என்றும் அடுத்த கூற்றில் அடிகளாரிடம் கொடுத்து அபிப்பிராயம் கேட்டார் என்றும் கூறுவதும் முரண்பாடே. மண்டூர் பதிகத்துக்கு சாற்றுக்கவி கொடுக்கும் போது மயில்வாகனனாராகவே இருந்தார். விபுலாநந்த அடிகளாக நாமம் பெறவில்லை. மேலும் இந்த இரு கூற்றுக்களுக்கும் எந்த ஆதாரமும் இல்லை. இந்த நிகழ்வு நூலாசிரியரின் முன் நிகழவும் இல்லை. ஏனெனில் இவர் பண்டிதர் மயில்வாகனனாரை ஒருபோதும் சந்தித்தில்லை. இவை நூலாசிரியரின் கற்பனையே.
அடிகளார் அளித்த அச் சாற்று கவியானது பெரியதம்பிப்பிள்ளையவர்களது ஆற்றலைப் பாராட்டிய பாட்டாகவே அமைந்திருக்கிறது என்று வாழையடி வாழை ஆசிரியர் கூறுகிறார். ஆனால் பண்டிதர் வி.சீ கந்தையா அவர்கள் மட்டக்களப்பு சைவக் கோயில்கள் 1(1983) என்னும் நூலில் மண்டூர்ப் பதியின் வளம் அனைத்தையும் தொகுத்தளிக்கும் இக் கவிதை விபுலாநந்த அடிகளாராற் பாடப்பெற்றது. மண்டூர்க் கவிஞர் பெருமானாகிய புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்கள் 1922 ம் ஆண்டில் வெளியீடு செய்த மண்டூர்ப் பதிகம் என்னும் கவிதை நூலுக்கு அடிகளார் அளித்த சிறப்புப் பாயிரமாக இக்கவிதை அமைந்து நூலை அணி செய்வது. (ப.65) என்று கூறுகிறார்.
நூல் ஆசிரியர்கள் இருவரும் கவிதையின் ஒவ்வொரு அம்சத்தையே காண் கிறார்களே அல்லாது இரு அம்சங்களையும் காணவில்லை. இந்த இரு அம்சங்களும் அமைந்துள்ளமைதான் இக் கவிதையின் சிறப்பாகும்.
வாழையடி வாழை ஆசிரியர் “பாராட்டியதோடு அமையாது மண்டூர்ப் பதிகத்துக்குத் தாமாகவே ஒரு சாற்று கவியையும் பாடிக் கொடுத்தார்கள்” என்று கூறுகிறார். ஆனால் புலவர்மணியின் மண்டூர்ப் பதிகம் தொடர்பாக பண்டிதர்,
சைவப்புலபர் க.நல்லரத்தினம் இவ்வாறு கூறுகிறார்.

அந்தக்காலத்தில் புலவர்மணி அவர்கள் மண்டூர் முருகப்பெருமான் பேரில் ஒரு திருப்பதிகம் பாடினார். அந்தப் பதிகத்திற்கு ஒரு சிறப்புப் பாயிரம் தருமாறு தமது குருவாகிய விபுலாநந்த அடிகளாரைப் புலவர்மணி வேண்டிக்கொண்டார். அவ்வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட அடிகள் அப்பதிகத்திற்குச் சிறப்புப் பாயிரமாக ஒரு பாடலை யாத்து உதவினார். (சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா நினைவு மலர், ப.60-61)
இந்த இரண்டு கூற்றுகளும் முரண்பட்டவை. இந்தக் கூற்றுக்கள் எதற்கும் சான்று இருப்பதாகத் தெரியவில்லை. ஒவ்வொருவரும் தமது கற்பனையில் எழுந்த கூற்றுக்களைத் திணிக்க முயல்கிறார்கள்.
மண் டூர் பதிகத்தைப் பாடிய புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை தனது உள்ளதும் நல்லதும் என்னும் நூலில் கூறுவதை நோக்குவோம்.
மண்டூர் முருகன் திருமுன்னே ஒரு தனி வெண்பாவாக அரும்பிய எனது கவிப்புலமை நாளடைவில் ஒரு சிறுபிரபந்தமாக மலர்ச்சியடைந்தது. அதுதான் முதல் நான் இயற்றிய மண்டூர்ப் பதிகம். மயில்வாகனனாரின் சிறப்புப் பாயிரத்தால் அது மக்களிடையே ஒரு மதிப்பைப் பெற்றது. (உள்ளதும் நல்லதும் ப.45) இங்கு தாமாக பாயிரம் கொடுத்தார் என்றோ அல்லது வேண்டிக்கொண்டதுக்கேற்ப பாயிரம் பாடினார் என்றோ குறிப்பிடப்பெறவில்லை.
பரம்பரை பற்றிய ஆய்வு இலக்கண இலக்கிய அறிவு, வைத்தியம், இசை, சோதிடம் போன்ற சிறப்பான திறன்கள் பரம்பரையாக வந்துள்ள தன்மையை வாழையடி வாழை என்னும் சொற் தொடர் குறிக்கிறது. வாழை ஒரு சிறப்பான தாவரமாகும். சந்ததி சந்ததியாக குறுகிய காலத்தில் பயன் கொடுக்கும் தாவரமாகும். எனவே வாழையடி வாழை ஆழ்ந்த பொருளைக் கொடுத்துநிற்கும் சொற் தொடராகும்.
பரம்பரை பரம்பரையாக அறிஞர்கள் தோன்றுகிறார்களா என்பதை இங்கிலாந்தைச் சேர்ந்த பிரான்சிஸ் கோல்டன் (Francis Galton) என்ற அறிஞர் 1865 தொடக்கம் ஆராய்ந்து தனது ஆராயச்சி முடிபுகளை 1869ஆம் ஆண்டு ஹெடிரிற்றறி ஜீனியஸ்” (Hereditary Genius) என்னும் நூலாக வெளியிட்டார். இந்த நூலில் பரம்பரையாக தொடர்ந்து பிரகாசித்த அறிஞர்களை பற்றியும் அவர்களின் பங்களிப்புப் பற்றியும் தொகுத்துக் கூறியுள்ளார். புள்ளிவிபர அடிப்படையில் ஆய்வுகளைச் செய்வதற்கு இவர்தான் முன்னோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொழும்புத் தமிழிச்சங்கம் 1998இல் வெளியிட்ட தமிழ் தந்த புலவர்மணி என்ற நூலில் "வாழையடி வாழை”
அகவிழி - ஒக்டோபர் 2012 / 35

Page 38
என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை இடம்பெற்றுள்ளது. ஆசிரியரே இக்கட்டுரையை எழுதியுள்ளர்.
கவிதை புனையும் ஆற்றலிலும் கணபதிப்பிள்ளை அவர்களும் பெரியதம்பிப்பிள்ளை அவர்களும் சிறந்த புலவர்களாய் விளங்குகின்றார்கள்.
கட்டுரை இவ்வாறு முடிகிறது.
உரைநடை இலக்கியத்தில் அதிகமாக ஈடுபட்டு கணபதிப்பிள்ளை அவர்கள் தமிழ்ப் பணியாற்றி வருகின்றாரோ அவ்வாறான பணிகளை செய்யுள் இலக்கியத்தின் மூலம் பெரியதம்பிப்பிள்ளை அவர்கள் செய்து வருகிறார்.
அதாவது இருவரும் கவிதை புனையும் புலவர்களாக ஆரம்பித்து ஒருவர் உரைநடை இலக்கியத்துக்கும் மற்றையவர் செய்யுள் இலக்கியத்துக்கும் பணியாற்றுகின்றனர். இங்கே வாழையடி வாழையாக இப் பணிகள் தொடர்ந்துள்ளதாகத் தெரியவில்லை.
இதே கட்டுரையிலும் ஏற்கனவே குறிபிடப்பட்டுள்ள முரண்பாடான இரு கூற்றுக்களும் இடம் பெறுகின்றன. ஆனால் “பிள்ளை யெனும் கலை வல்லோனே” என்பது “பிள்ளை யெனும் கவி வல்லோனே” என்று தரப்பட்டுள்ளது.
இதே நூலாசிரியர் 2010 இல் உள்ளக்கமலம் என்னும் தலைப்பில் வெளியிட்ட நூலில் “வாழையடி வாழை” என்னும் தலைப்பில் ஒரு கட்டுரையும் எழுதியுள்ளார். இக்கட்டுரை இவ்வாறு ஆரம்பிக்கிறது.
ஈழத்து தமிழ் இலக்கிய வரலாற்றிலே ஆழமான பதிவுகளை ஏற்படுத்திச் சென்ற சான்றோர்களுள் ஆறுமுக நாவலர் அவர்களும் விபுலாநந்த வித்தகர் அவர்களும் குறிப்பிடப்படவேண்டிய தனியிடம் பெறுகின்றார்கள். நாவலர் அவர்கள் 1822இல் அவதரித்து 57 ஆண்டுகள் வாழ்ந்து 1879இல் இறைவனடி சேர்ந்தவர். வித்தகர் அவர்கள் 1892இல் அவதரித்து 55 ஆண்டுகள் வாழ்ந்து 1947இல் இறைவனடி சேர்ந்தவர். இவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இலக்கியப்பணி வாழையடி வாழைகளான சான்றோர்களால் முன்னெடுத்துச் செல்வதைக் காண்கின்றோம். இவ்வாறான வாழையடி வாழைகள் இருவரைப்பற்றிப் பார்ப்போம். ஒருவர் நாவலர் அவர்களின் வாழையடி வாழையான பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள். மற்றவர் வித்தகர் அவர்களின் வாழையடி வாழையான புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை அவர்கள்(ப.4).
இங்கேயும் வாழையடி வாழை எனும் சொற் தொடர் பொருத்தமாகக் கையாளப்பெறவில்லை.
மேலும் இந்த நூலில் இவ்வாறு கூறப்படுகிறது:
"திருகோணமலை இந்து கல்லூரியில் விபுலாநந்த அடிகளாருடன் பணியாற்றிவந்த புலவர்மணி அடிகளார்
எ
36/அகவிழி - ஒக்டொபர் 2012

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்துக் கல்லூரியில் இருந்து விலகி மட்டக்களப்பு தூய அகஸ்தினார் ஆசிரியர் பயிற்சித் கல்லூரியில் விரிவுரையாளராக இணைந்து கொண்டார்.(ப.10)
ஆனால் வாழையடி வாழை (1962) என்னும் நூலில்
விபுலானந்த அடிகளாரால் இராம்கிருஷ்ண சங்கத்தின் சார்பில் பொறுப்பேற்கப்பட்ட திருகோணமலை இந்துக் கல் லூரியின் தமிழாசான் பதவியை, பெரியதம்பிப்பிள்ளையவர்கள் 1926ஆம் ஆண்டில் ஏற்றுக் கொண்டனர். இதன் பின்னர் மட்டக்களப்பு அர்ச் அகஸ்த் தீன் ஆசிரிய கலாசாலையில் தமிழ்ப் பேராசிரியராய்க் கடமையாற்றவேண்டிய சந்தர்ப்பம் இவருக்கேற்பட்டது.(ப.4041) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புலவர்மணியோ, திருகோணமலை இந்துக் கல்லூரியை விட்டு மட்டக்களப்புக்குச் சென்ற நிகழ்வை தான் இவ்வாறு கூறுகிறார்.
"1930ஆம் ஆண்டு திருகோணமலையை விட்டு மட்டக்களப்புக்கு வந்துவிட்டேன். வரும்போது என் குருவின் ஆசியைப் பெறவில்லை. அவரது ஆணையையும் மீறி வந்துவிட்டேன். சில அன்பர்களின் தூண்டுதலும் எனது விருப்பமுமே இதற்குக்காரணம்” (உள்ளதும் நல்லதும் ப.131)
எனவே நூலாசிரியர் ஆதாரங்கள் ஏதும் இன்றி தனது சொந்தக் கருத்தை திணிக்க முற்படுகிறார். இவ்வாறான செயல்கள் சந்ததி சந்ததியாக பிழையான தகவல்கள் பரவுவதற்கு வாய்ப்பளிக்கும்.
புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள தகவல் சிலவற்றை நோக்குவோம்.
புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை பிறந்த திகதி.
புலவர்மணியின் பிறந்த திகதியை சிலர் வெவ்வேறு விதமாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.
மட்டக்களப்பு தமிழகம் என்னும் நூலில் (1964)
(புலவர்மணி) ஏகாம்பரபிள்ளை என்பாரின் மூத்த மகனாய் விளம்பி வருடம் மார்கழி மாதம் இருபத்தைந்தாம் தேதி (18.12.1899) பிறந்து, செல்வமாக வளர்ந்து இளமையிலே குருகுல முறைப்படி தமிழ் இலக்கியம், இலக்கணம், நிகண்டு என்பவற்றைக் கற்றுக்கொண்டார். என்று தரப்பட்டுள்ளது. (ப.260)
போரதீவுப்பற்று கலாச்சாரப் பேரவை வெளியிட்ட மருதம் (1998) என்னும் சஞ்சிகையில் வெளிவந்த கட்டுரையில்.
"ஏகாம்பரபிள்ளை அவர்களுக்கும் சின்னத்தங்கம் அவர்களுக்கும் தலை மகனாக 1899ஆம் ஆண்டு தைத்திங்கள்

Page 39
எட்டாம் திகதி பிறந்தார்.” என்று தரப்பட்டுள்ளது. .....
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய் வு ஏட் டின் - நுால் வடிவமான "புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை - ஓர் ஆய்வு” என்னும் நூலில் (புலவர்மணி) புதல்வராய் 1889ஆம் ஆண்டு தை மாதம் எட்டாத் திகதி பிறந்தார் (ப.54) என்று தரப்பட்டுள்ளது.
கார்த்திகை 2008இல் வெளிவந்த செங்கதிர் என்னும் சஞ்சிகையில் புலவர்மணியின் வாழ்க்கை 0801-1889 - 02-11-1978 என்று புலவர்மணியின் படத்தோடு வெளியிடப்பட்டுள்ளது. இதே சஞ்சிகையில் 'புலவர்மணியின் தமிழ்த் தொண்டு' என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள முதலாம் பரிசு பெற்ற கட்டுரையில் "புலவர்மணி அவர்கள் ஈழத்தில் மண்டூர் என்னும் கிராமத்தில் 1889ஆண்டு பிறந்தார்” என்று குறிப்பிடப்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு வாழ்வியல் தடங்களில் ஆசிரியர் சிரோமணி தம்பிப்பிளை செல்வநாயகம்(2010) என்னும் நூலில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்கள் மட்டக்களப்பில் பழம் பெரும் பதிகளில் ஒன்றான மண்டூரில் 08.01.1889 ஆம் ஆண்டு ஏகாம்பரப்பிள்ளை என்பவருக்கும் சின்னத்தங்கம் அம்மையாருக்கும் மகனாய் பிறந்தவர் (ப.116) இதே நூலில் இவ்வாறும் கூறப்பட்டுள்ளது.
தமிழ் கடவுள் முருகன். அம்முருகனின் தொண்டனாக தருமகர்த்தாவாக வண்ணகராக விளங்கிய சோமநாதர் வண்ணகரின் மகன் ஏகாம்பரம்பிள்ளை அவர்களுக்கும் சிதம்பரப்பிள்ளை வண்ணக்கரின் மகள் சின்னத்தங்கம் அம்மையாருக்கும் சென்ற நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் சீர்சிறப்புடன் வாழ்ந்த இலட்சியத் தம்பதிகள் வாழ்வில் முகிழ்ந்த மூத்த புதல்வனே பெரியதம்பி. இது நிகழ்ந்தது 1899குச் சரியான விளம்பிவருடம் தைமாதம் 8ம் திகதியாகும்.(ப.174)
புலவர்மணியோ தனது பிறப்பை இவ்வாறு கூறுகிறார். நான் அங்கிருந்து 1899ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதியன்று... வந்துள்ளேன். (உள்ளதும் நல்லதும் ப.3)
அதாவது புலவர்மணி 1899ஆம் ஆண்டு ஜனவரி மாதம் - எட்டாம் திகதி பிறந்தார் என்றோ அல்லது 08.01.1899ஆம் திகதி பிறந்தார் என்றோ எழுதுவதுதான் தெளிவான சரியான கூற்றாகும்.
"புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை ஓர் ஆய்வு” என்னும் நூலில் வாழையடிவாழை (1962) தமிழ் தந்த புலவர்மணி

(1998) ஆகியவற்றில் இடம்பெற்ற முரண்பாடான இரு கூற்றுக்களும் இடம் பெறுகின்றன. ஏற்கனவே வெளிவந்த கூற்றை வேறொருவர் தமது கூற்றுப்போலவே தந்தால் அது இலக்கியத்திருட்டாக கருதப்படுகிறது.
புலவர்மணி முதற் பாடிய பதிகம் மண்டூர் பதிகமாகும். இவர் யாழ்ப்பாணத்திலே மாணவராயிருந்த காலத்திலே இவர் தனது கன்னி முயற்சியாக மண்டூர்ப் பதிகத்தைப் பாடியுள்ளார். இப்பதிகம் புலவர்மணியின் இளமைப் பிராயத்தில் பாடப்பட்ட போதிலும் அது சிறப்பான படைப்பாகவே அமைந்துள்ளது. அது சிறந்த சொல்லாட்சியையும் சிறந்த பொருள் வைப்புமுறையையும் கொண்டது.(.186)
விபுலாநந்த அடிகளாரில் இயல்பாக ஈடுபாடுகொண்ட குரு சீட அடிப்படையில் பிணைக்கப்பட்டவரான ஏ.பெ. பிள்ளையவர்கள் அடிகளாரின் அடிச்சுவட்டைப் பின்பற்றுவதில் விருப்புடையவராவர். பெரியதம்பிப்பிள்ளையவர்கள் தமது கன்னிப்படைப்பான மண்டூர்ப் பதிகத்தைப் பாடி முடித்து அடிகளாரிடம் கொடுத்து அபிப்பிராயம் கேட்டார். ஏ.பெ. பிள்ளையவர்களின் பாடல்களில் காணப்பட்ட முதிர்ந்த அனுபவத்தினையும் சிறந்த சொல்லாட்சியினையும் பார்த்த அடிகளார் பெரிதும் மகிழ்ந்தார்கள். ஏ.பெ. பிள்ளையவர்களை வெகுவாகப் பாராட்டினார்கள். பாராட்டியதோடு அமையாது மண்டூர்ப் பதிகத்துக்குத் தாமாகவே ஒரு சாற்று கவியையும் பாடிக் கொடுத்தார்கள். அடிகளார் அளித்த அச்சாற்று கவியானது பெரியதம்பிப்பிள்ளையவர்களது ஆற்றலைப் பாராட்டிய பாட்டாகவே அமைந்திருக்கிறது.
“மண்டூரும் முகிற்குலங்கள் எமதிறைவர்
முருகர் திருப்பதியீ தென்ன விண்டூர் மழைபொழியும் சிறப்பதனால்
வனம் மலிந்து மிகுந்து தோன்றும் மண்டூர் லுறைமுருகன் மலரடிக்கோர்
திருப்பதிகம் மரபிற் சொற்றான் கண்டூரு மியமொழிப் பெரியதம்பிப்
பிள்ளையெனும் கவிவல் லோனே. (ப.189)
இங்கே பண்டூரும் என்பதை மண்டூரும் என்றும் வளம் மிகுந்து தொன்றும் என்பதை வனம் மிகுந்து தோன்றும் என்றும் கலைவல் லோனே என்பதை கவி வல்லோனே என்றும் பிழையாகத் தரப்பட்டுள்ளன.
அகவிழி - ஒக்டோபர் 2012 / 37

Page 40
சிறுவர் வேலைக்கமர்த்த பற்றிய சர்வதேச தராதர
சட்ட தர
A. சர்வே LL.B (Hons), M.A (UN - UPEACE) (Costa
| Senior Lecturer, Faculty of ]
அறிமுகம்
PA( சிறுவர்களை வேலைக்கமர்த்தல் என்பது எமது பிராந்தியத்திலுள்ள நாடுகளிலுள்ள முக்கியமானதொரு சிறுவர் உரிமை மீறலாக உள்ளது. ஆயினும், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் சிறுவர் வேலைக்கமர்த்தல் குறைவாக உள்ளபோதிலும், கரிசனைக்குரிய சிறுவர் உரிமை மீறலொன்றாக சிறுவர் வேலைக்கமர்த்தல் என்பது இலங்கையில் இன்னமும் இருந்து வருகின்றது. சிறுவர் வேலைக்கமர்த்தல் என் பது இலங் கையில் அதிகமாக முறைசாரா தொழில்துறைகளிலேயே காணப்படுகின்றது. சிறுவர் வேலைக்கமர்த்தலை இயலச் செய்கின்ற முக்கிய
காரணிகளாக வறுமை, அறியாமை, பெற்றோர் மது. மற்றும் போதைப்பொருட்களுக்கு அடிமையாகவிருத்தல், பெற்றோர்களின் சோம்பேறித்தனம், குடும்ப வன்முறை, பெற்றோர் பிள்ளைகளைப் புறக்கணித்தல், கவர்ச்சியற்ற கல்விச் சூழல், சிறுவர் தமது கல்வியில் அக்கறையின்மை மற்றும் சிறுவர் தவறான பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகவிருத் தல் போன்றவை உள் ளன. சிறுவர்களை வேலைக்கமர்த்துபவர்கள் பேரம்பேசும் சக்தியற்ற சிறுவர்களை மிகக் குறைந்த சம்பளத்தில் தொழில் தராதரங்களைப் புறக்கணித்து வேலைக்கமர்த்தி சுரண்டுவதுடன் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அச்சிறுவர்களை உடல் மற்றும் உள ரீதியான சித்திரவதைகளுக்கும் உள்ளாக்குகின்றார்கள்.
சிறுவர் வேலைக்கமர்த்தல் சிறுவர்களின் உடல், உள் மற்றும் ஆளுமை வளர்ச்சியையும் அவர்களுடைய அறவொழுக்கத்தையும் பாதிக்கின்றது. இப் பாதிப்புகள் அச் சிறுவர்களின் எதிர்காலத்தை மட்டுமல்லாது அவர்களுடைய குடும்பத்தினதும் சமூகத்தினதும் எதிர்காலத்தையும் பாதிக்கின்றது. சிறுவர் வேலைக்கமர்த்தல் என்பது சமூகத்திற் கெதிரான முக்கியமானதொரு குற்றச் செயலாகவும், சிறுவர்களின் எதிர் காலத்தைச் சீரழிக்கின்ற அறவொழுக்க கேடான செயலொன்றாகாவும் உள்ளது. சிறுவர் வேலைக்கமர்த்தலை இல்லாதொழிப்பதற்காக சர்வதேச சமவாயங்கள் பல ஆக்கப்பட்டுள்ளதுடன் தேசிய மட்டத்திலும் பல சட்டங்கள் ஆக்கப்பட்டுள்ளன.
38 / அகவிழி - ஒக்டொபர் 2012

லை இல்லாதொழித்தல் ங்கள் மற்றும் இலங்கை
தரங்கள்
ஸ்வரன் Rica), M.Phil (Colombo), Attorney-at-Law Law, University of Colombo
சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயம் GE 38
சிறுவர் உரிமைகள் பற்றிய முக்கியமான சர்வதேச சாசனம் சிறுவர் உரிமைகள் பற்றிய சமவாயமாகும். இச் சமவாயமானது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் 1989 இல் ஏற்கப்பட்டு 1990 இல் நடைமுறைக்கு வந்தது. இச் சமவாயத்தை இலங்கை 1991 இல் ஏற்று அங்கீகரித்துள்ளது. இச் சமவாயத்திலுள்ள ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டிய கடப்பாட்டை இலங்கை அரசு கொண்டுள்ளது. இச் சமவாயமானது சிறுவர் என்பது 18 வயதிற்குக் கீழ்ப்பட்டவராகும் என வரையறை செய்கின்றது. இச் சமவாயத்தின் உறுப்புரை 32 ஆனது பொருளாதார ரீதியான சுரண்டலிலிருந்தும் ஆபத்தான, கல்வியைப் பாதிக்கக் கூடிய மற்றும் ஆரோக்கியம், உடல், உளம் மற்றும் அறவொழுக்கம் என்பவைகளைப் பாதிக்கக் கூடிய வேலைகளிலிருந்தும் பாதுகாப்பைப் பெறும் உரிமை சிறுவருக்கு உள்ளது என்கின்றது. உறுப்புரை 34 ஆனது விபச்சாரம் மற்றும் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தல் என்பவைகளிலிருந்து பாதுகாப்பைப் பெறும் உரிமை சிறுவருக்கு உள்ளது. என்கின்றது.
சர்வதேச தொழில் தாபனத்தின் (ILO) சமவாயங்கள்
சர்வதேச தொழில் தாபனத்தின் சமவாயங்கள், தொழில் தொடர்பான ஆகக் குறைந்த சர்வதேச தராதரங்களை விதந்துரைக்கின்றன. சிறுவர் வேலைக்கமர்த்தலை இல்லாதாக்குவதற்காக ஆக்கப்பட்ட முக்கியமான சமவாயங்களாக 1973 ஆம் ஆண்டின் 138 ஆம் இலக்க ஆகக் குறைந்த வயது பற்றிய சமவாயம் மற்றும் 1999 ஆம் ஆண்டின் 182 ஆம் இலக்க சிறுவர் வேலைக்கமர்த்தலின் மிக மோசமான வகைகள் பற்றிய சமவாயம் ஆகியவைகள் உள்ளன. இலங்கை ஆகக் குறைந்த வயது பற்றிய சமவாயத்தை 2000 ஆம் ஆண்டிலும் சிறுவர் வேலைக்கமர்த்தலின் மிக மோசமான வகைகள் பற்றிய சமவாயத்தை 2001 இலும் ஏற்றங்கீகரித்துள்ளது. எனவே இச் சமவாயங்களிலுள்ள கோட்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டிய கடப்பாட்டினை இலங்கை கொண்டுள்ளது.

Page 41
ஆகக் குறைந்த வயது பற்றிய சமவாயம் இச் சமவாயமானது, சிறுவர் வேலைக்கமர்த்தலைப் பயனுள்ள வகையில் இல்லாதொழிப்பது மற்றும் இள வயதினர்களுடைய முழுமையான உடல் மற்றும் |ா வளர்ச்சியை இயலச் செய்வதற்கான மட்டத்திற்கு வேலைக்கு அனுமதிப்பதற்கான ஆகக் குறைந்த வயதைப் படிப்படியாக அதிகரிப்பது ஆகியவைகளை உறுதிப்படுத்தும் வகையில் தேசியக் கொள்கையொன்றை முன்னெடுப்பதைத் தேவைப்படுத்துகின்றது. அவ் ஆகக் குறைந்த வயதானது கட்டாயக் கல்வியைப் பூர்த்தி செய்வதற்கான வயதை விடக் குறைந்ததாகவிருத்தலாகாதெனவும், எவ்வாறாயினும் 15 வயதினை விடக் குறைந்ததாகவிருத்தலாகாதென வும் விதிக்கின்றது. ஆயினும், பொருளாதார மற்றும் கல்வி வசதிகள் குறைவாக விருத்தியடைந்த நாடொன்று ஆரம்பத்தில் 14 வயதினை ஆகக் குறைந்த வயதாக விதிக்கலாமென்கின்றது. வேலையின் தன்மை அல்லது சூழ்நிலைகளின் காரணமாக இளவயதினருடைய சுகாதாரம், பாதுகாப்பு அல்லது அறவொழுக்கத்தைப் பாதிக்கக் கூடிய எவ் வகை வேலைக்கும் அனுமதிப்பதற்கான ஆகக் குறைந்த வயது 18 ஆகவிருத்தல் வேண்டுமென விதிக்கின்றது..
சிறுவர் வேலைக்கமர்த்தலின் மிக மோசமான வகைகள் பற்றிய சமவாயம்
இச் சமவாயம் அதனை ஏற்றங்கீகரித்துள்ள ஒவ்வொரு அங்கத்தவரையும் அவசரத் தேவையொன்றாக, சிறுவர் வேலைக்கமர்த்தலின் மிக மோசமான வகைகளைத் தடுப்பதற்காக உடனடியானதும் பயனுள்ளதுமான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேவைப்படுத்துகின்றது. இச் சமவாயம் “சிறுவர்” என்பது 18 வயதுக்குக் குறைந்த எல்லோரையும் உள்ளடக்குமென்கின்றது. இச் சமவாயத்தின் நோக்கத்திற்காக, "சிறுவர் வேலைக்கமர்த்தலின் மிக மோசமான வகைகள்” என்பது எல்லா வகையான அடிமை முறைமைகள், கட்டாய வேலையில் ஈடுபடுத்துவது, விபச்சாரத்திலீடுபடுத்துவது, ஆபாச தயாரிப்புகளுக்கு அல்லது ஆபாச நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்துவது, சட்ட முரணான செயல்களுக்கு குறிப்பாகப் போதைப் பொருள் தயாரிப்பு மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்துவது, பிள்ளைகளின் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் ஒழுக்கம் என்பவைகளுக்குத் தீங்கான வேலைகளில் ஈடுபடுத்துவது என்பவைகளை உள்ளடக்குகின்றது.
இலங்கை சட்டங்கள் | சர்வதேச சமவாயங்கள் தொடர்பாக இலங்கை பின்பற்றி வருகின்ற இருமைக் கோட்பாட்டின் காரணமாக சர்வதேச சமவாயங்களிலுள்ள ஏற்பாடுகள் இலங்கையின் உண்ணாட்டுச் சட்டத்தின் பாகமாக தன்னளவிலேயே அமைவதில்லை. எனவே, இலங்கை பாராளுமன்றமானது இச் சமவாயங்களிலுள்ள ஏற்பாடுகளை உண்ணாட்டில் நடைமுறைப் படுத்தும் வகையில் சட் டங் களை ஆக்கவேண்டியதாக உள்ளது. இவ் வகையில் சிறுவர்

வேலைக்கமர்த்தலை இல்லாதாக்குவதற்காகப் பல சட்டங்கள் ஆக்கப்பட்டு உள்ளன.
கடை காரியால ஊழியர் சட்டமானது 14 வயதிற்குக் கீழ்ப்பட்ட பிள்ளைகளை கடைகள் மற்றும் காரியாலயங்களில் வேலைக்கமர்த்துவதைத் தடை செய்கின்றது. இச் சட்டமானது 18 வயதிற்குக் கீழ்ப்பட்ட சிறுவரொருவரை இரவில் வேலைக்கமர்த்த முடியாது என்கின்றது. ஆயினும் 16 வயதினையடைந்த ஆணொருவரை இரவு 10 மணி வரை உல்லாச விடுதி, உணவகம் மற்றும் பொழுது போக்கிடமொன்றில் வேலைக்கமர்த்தலாம் என்கின்றது.
தொழிற் சாலைகள் கட்டளைச் சட்டமானது தொழிற்சாலைகளில் 16 வயதிற்குட்பட்டவர்களின் வேலை நேரம் காலை 6 மணிக்கு முந்தியதாகவோ அல்லது மாலை 6 மணிக்குப் பிந்தியதாகவோ அமைதல் ஆகாதென்கின்றது என்பதுடன் 18 வயதிற்குக் கீழ்ப்பட்டவர்களின் வேலை நேரம் இரவு 8 மணிக்குப் பிந்தியதாக அமைதல் ஆகாதென்கின்றது. 2002 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்கத் திருத்தச் சட்டமானது தொழிற்சாலைகளில் 16-18 வயது இளம் ஆட்களுடைய மிகைநேர வேலை மாதமொன்றுக்கு 50 மணித்தியாலங்களை விஞ்சுதலாகாதென்கின்றது.
பெண்கள், இளம் ஆட்கள் மற்றும் பிள்ளைகளை வேலைக்கமர்த்தல் சட்டமானது - சிறுவர்களை வேலைக்கமர்த்தல் தொடர்பான சட்ட ஏற்பாடுகளைக் கொண்டுள்ள முக்கியமான சட்டமாகும். பிள்ளைகள் மற்றும் இளம் ஆட்கள் ஆகியோரின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் இச் சட்டமானது 2003 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தால் திருத்தப்பட்டது. இச் சட்டமானது பிள்ளை என்பது 14 வயதிற்குக் கீழ்ப்பட்டவர்களாகும் என்கின்றது. இச் சட்டத்தின்படி 14 வயதிற்குக் கீழ்ப்பட்ட பிள்ளைகளை எவ் வேலையிலும் வேலைக்கமர்த்த முடியாது. இச் சட்ட ஏற்பாடுகளை மீறி பிள்ளையொன்றை வேலைக்கமர்த்துபவர் பத்தாயிரம் ரூபாவுக்கு மேற்படாத தண்டப்பணம் அல்லது பன்னிரண்டு மாதங்களுக்கு மேற்படாத மறியற் தண்டனை அல்லது இவையிரண்டுக்கும் மற்றும் இவைகளுடன் அப் பிள்ளைக்கு இழப்பீடு செலுத்துவதற்கும் பொறுப்புடையவராவார். இச் சட்டத்தின் ஏற்பாடுகளின்படி 15 வயதிற்குக் கீழ்ப்பட்டவர்களைக் கப்பலிலும், 18 வயதிற்குக் கீழ்ப்பட்டவர்களை உயிருக்கு மற்றும் உடலுக்கு ஊறு விளைவிக்கும் செயல்களிலும் மற்றும் 18 வயதிற்குக் கீழ்ப்பட்டவர்களை இரவு வேலைகளிலும் வேலைக்கமர்த்தமுடியாது. 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஆபத்தான நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகப் பயிற்சியளிக்க முடியாது. இச் சட்டமானது குடும்பத்தவரால் கொண்டு நடாத்தப்படுகின்ற இலகு விவசாய வேலைகளில் பாடசாலை நேரத்திற்கு முன்னரும் பாடசாலை நேரத்திற்குப் பின்னரும் பிள்ளைகளை அவர்களுடைய பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஈடுபடுத்தலாம் என்கின்றது. இச் சட்டமானது பிள்ளையொன்று பாடசாலைக்குச் செல்வதனைத் தடுக்கும் வகையில் வேலைக்கமர்த்தப்படுதல் ஆகாதென்கின்றது.
தன் *பிலு".டி பில்'\'த ?ே) t?
அகவிழி - ஒக்டோபர் 2012 / 39

Page 42
இச் சட்டத்திற்கு 2006 இல் கொண்டுவரப்பட்ட 24 ஆம் இலக்க திருத்தச் சட்டமானது, 18 வயதிற்குக் கீழ்ப்பட்ட சிறுவர்களை அவர்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் அறவொழுக்கம் என்பவைகளைப் பாதிக்கக் கூடிய ஆபத்தான வேலைகளில் வேலைக்கமர்த்துவதைத் தடை செய்கின்றது. இச் சட்டத்தின் நோக்கங்களுக்காக ஆபத்தான வேலைகளாக 49 வகைப்பட்ட வேலைகள் அடையாளங் காணப்பட்டு 20-08-2010 ஆம் தேதிய 1667/41 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இவ் வேலைகள் மிருகங்களை இறைச்சிக்காக வெட்டுதல், மதுபான உற்பத்தி, மதுபான வகைகளை கொண்டு செல்லுதல் மற்றும் விற்பனை, புகையிலை அறுவடை, புகையிலைப் பொருட்களின் உற்பத்தி, கொண்டு செல்லுதல் மற்றும் விற்பனை, ஆழமான நீர்ப்பரப்புகளில் மீன் பிடித்தல், சுரங்கங்களிலான வேலை, பயணிகள் போக்குவரத்து அல்லது பாரமான பொருட்களின் காவுகை, உலோகங்களை உருக்குதலுடன் சம்பந்தப்பட்ட வேலைகள், ஆபத்தான இரசாயனப் பொருட்கள் சம்பந்தப்பட்ட வேலைகள், பாதுகாப்பற்ற சூழ்நிலையில் 1.5 மீற்றர்களுக்கு மேற்பட்ட உயரத்திலான வேலைகள், கழிவகற்றல், தோல் பதனிடுகை, காடுகளில் மரம் வெட்டுதல், மரங்களை வெட்டி வீழ்த்துதல், கனியவள் அகழ்வு, மரங்களில் ஏறுதல், வெடிபொருட்களை உற்பத்தி செய்தல், மதுபானங்களை பரிமாறுதல், கல்லுடைத்தல், மண் அகழ்வு, உல்லாச பயணிகளுக்கு வழிகாட்டுதல், சுண்ணாம்பு சூளைகளிலான வேலைகள், கட்டடங்களுக்கு வர்ணந்தீட்டுதல், ஓடு மற்றும் செங்கட்டி சூளைகளிலான வேலைகள், உப்பு உற்பத்தி வேலைகள், இரவு 8.00 மணிக்கும் காலை 6.00 மணிக்கும் இடையிலான ஏதேனும் வேலை, உண்ணாட்டு மற்றும் கடல் நீர்ப்பரப்புகளில் கப்பல்களிலான வேலைகள், ஆயுத முரண்பாடு சம்பந்தப்பட்ட ஏதேனும் வேலைகள் என்பவைகளை உள்ளடக்குகின்றன.
தண்டனைச் சட்டக் கோவையானது மிக மோசமான வகை வேலைகளில் 18 வயதிற்குக் கீழ்ப்பட்ட சிறுவர்கள் அமர்த்தப்படுவதனைத் தடுக்கும் வகையில் 1995 இலும் 1998 இலும் திருத்தப்பட்டது. தண்டனைச் சட்டக் கோவையானது சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுத்தல், ஆபாச மற்றும் ஒழுக்கக் கேடான காட்சிகளில் ஈடுபடுத்தல் அல்லது அத்தகைய பிரசுரங்களுக்காகப் பயன்படுத்துதல், பிச்சையெடுக்க வைத்தல், தடை செய் யப் பட்ட பொருட்களை கொண்டு செல்வதில் ஈடுபடுத்துதல் மற்றும் ஆயுதப் போரில் ஈடுபடுத்துதல் ஆகியவைகள் தண்டனைக்குரிய குற்றச் செயல்களாகும் என்கின்றது. இச் சட்டமானது இழிவான பாலியல் செயல்கள் தண்டனைக்குரிய குற்றங்களாகுமென்பதுடன், அவை 18 வயதிற்கு மேற்பட்ட ஒருவரால் 16 வயதிற்குக் கீழ்ப்பட்ட ஒருவர் மீது புரியப்படுமாயின் அதற்குரிய தண்டனை அதிகமானதாகும் என்கின்றது. தண்டனைச் சட்டக் கோவையானது கட்டாய வேலை மற்றும் அடிமையாக வைத்திருத்தல் என்பவைகளையும் தடை செய்கின்றது.
407 அகவிழி - ஒக்டொபர் 2012

இச் சட்டமானது கட்டாய வேலை, அடிமையாக வைத்திருத்தல், விபச்சாரம் மற்றும் ஏனைய வகையான பாலியல் சுரண்டல்கள் என்பவைகளுக்காக சிறுவரை ஆட்சேர்ப்பது, கொண்டுசெல்வது மற்றும் வைத்திருப்பது தண்டனைக்குரிய வஞ்சக்கடத்தல் குற்றத்தவறாகும் என்கின்றது. 2005 ஆம் ஆண்டில் ஆக்கப்பட்ட 30 ஆம் இலக்க வஞ்சக் கடத்தல் சமவாயச் சட்டமானது சிறுவரை ஏமாற்றி விபச்சாரத்திற்காக வஞ்சக் கடத்தல் செய்வதனைக் குற்றத் தவறு என்கின்றது.
மேலே விளக்கப்பட்ட சட்டங்களிலுள்ள ஏற்பாடுகளை மீறி சிறுவர்களை வேலைக்கமர்த்துவது அல்லது மோசமான செயல்களில் ஈடுபடுத்துவது தண்டனைக்குரிய குற்றத் தவறுகளாகும். சிறுவர்கள் சட்ட முரணான வகையில் வேலைக்கு அமர்த்தப்பட்டால் அது பற்றிய முறைப்பாடுகளை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, தொழில் திணைக்களம், சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் நலன் சேவைகள் திணைக்களம் மற்றும் பொலிஸ் நிலையங்களிலுள்ள பெண்கள் மற்றும் சிறுவர் பணியகம் என்பவைகளுக்கு செய்யலாம்.
கல்விக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்ட 1997 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாடசாலைகளுக்கான கட்டாய வருகை ஒழுங்கு விதியால் (25- 11- 1997 ஆம் தேதிய 1003/05 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது) ஐந்து வயதிலிருந்து பதினான்கு வயது வரை கட்டாயக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமையும், அக் கல்வியானது இலவசமாக வழங்கப்படுகின்றமையும் சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படுவதைக் கட்டுப்படுத்து
வதற்குப் பங்களிக்கின்றது எனலாம்.
முடிவுரை இலங் கையில் சிறுவர் வேலைக்கமர்த் தலை இல்லாதாக்குவதற்கான திருப்திகரமான சட்டக் கட்டமைப்பு உள்ளது. ஆயினும் இச் சட்டங்களை வினைத்திறனான வகையில் நடைமுறைப்படுத்துவது சவாலான ஒன்றாக உள்ளது. இதற்கான காரணங்களில் முக்கியமானவைகளாக நிதிப் பற்றாக்குறை, ஆளணிப் பற்றாக்குறை மற்றும் விழிப்புணர்வின்மை என்பன உள்ளன. சிறந்த சமூக பாதுகாப்பு திட்டங்களை அறிமுகப்படுத்துவது. வறுமை காரணமான சிறுவர் வேலைக்கமர்த்தலை இல்லாதொழிப்பதில் முக்கியமானதாக அமையலாம். சிறுவர் வேலைக்கமர்த்தலை இல்லாதொழிப்பது அரச அதிகாரிகளின் கடமை மட்டும் என கருதாது, விழிப்புணர்வை ஏற்படுத்தல், ஆலோசனை வழங்கல் மற்றும் நிதிவளம் உள்ளவர்கள் நிதியுதவி அளித்தல் என்பவை மூலமாக சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படுதலைக் கட்டுப்படுத்தி ஆங்கோர் ஏழையைக் கல்வியைத் தொடரவைத்து அன்ன சத்திரங்கள் அமைத்த புண்ணியத்தை தேடிக் கொள்ளலாம்.

Page 43
வாழ்வாதாரமு.
உருவாக்
தொழில் முன்னிலை, பயில்திறன்-பயிற்சி
பயில்திறன் பயிற்சி என்றால் என்ன? தமது தொழில் திறனை அதிகரிக் கு முகமாக, தனிப்பட்டவர்கள் தொழில்நுட்ப மற்றும் தொழிற்றுறை உரிமைப் பயில்திறன்களை விருத்தி செய்வதற்கு உதவி செய்வதை தொழில் முன்னிலை, பயில்திறன்-பயிற்சி சம்பந்தப்படுத்துகிறது. பயில்திறன்-பயற்சி தொழிலை உருவாக்குவதில்லை. ஆனால் வாழ்வாதாரமொன்றை ஈட்டுவதற்கும், அவர்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்தி, நிலைத்திருக்க வைப்பதற்கும், தொழில் சந்தையில் அவர்களின் வளைந்து கொடுத்தலை முன்னேற்றுவதற்கும் தனிப்பட்டவர்களுக்கு உதவியளிக்கின்றது. சமூக பயில் திறன்களையும் பயில்திறன்-பயிற்சி விருத்தி செய்யும்.
பயில் திறன் - பயிற் சியை ஏன் அமுல் படுத்த வேண்டும்?
தொழில் வாய்ப்புக்களை திடுப்பெனக் குறைத்தும், வாழ்வாதாரமொன்றைத் தோற்றுவிப்பதற்காக அவசியமான பயில்திறன்களை வழங்குவதில் வழமையாகச் சம்பந்தப்பட்டுள்ள நிறுவனங்களைச் சேதமாக்கியும் தேசிய சமூக பொருளாதார வரைத் திட் ட மொன்றின் மீது சேதத் திலான தாக்கமொன்றை, நெருக்கடி நிலைகள் கொண்டிருக்கும். ஆகவே, மீள்நிருமாணத்திலும் பொருளாதாரப் புனரமைப் பிலும் பயில் திறன் - பயிற் சி
முக்கியமானதாகும். புதிய சமூக பொருளாதாரச் சூழ்நிலைகளுக்கு ஒ ழு ங் கு ப டு த து வ  ைத இ ட ப பெ யர் வு சம்பந்தப்படுத்துகின்றது. புதிய பயில்திறன்களைக் கற் பதற்கும், விருந்தோம்பும் மாவட்டங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களிப்பதற்கும்
வாய்ப்பொன்றை அதனால் வழங்க முடியும். சந்தை வாய்ப்புக்களை கவனத்திற்கெடுப்பதற்கு பயில்திறன் பயிற்சி கவனமாக இலக்குப்படுத்தப்பட்டால் தொழில் சந்தையில் பிரவேசிக்கும் உத்தேசமான தொழிற் றுறை உரிமையாளர் களும் வேறு தனிப்பட்டவர்களும் வெற்றியின் அதிகரித்த சந்தர்ப்பங்களைக் கொண்டிருப்பார்கள். மோதலினால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் பெரிதுமே இடையூறிலான கல்வியைக் கொண்டிருக்கிறார்கள். சந்தைக் கிராக்கிக்கு ஒழுங்குபடுத்தப்பட்டால் (அல்லது பதிலிறுத்தால்) பின்வருவனவற்றிற்கு இளைஞர்களுக்கு

ம் தொழிலை
குதலும்
உதவியளிக்கக் கூடிய பயில்திறன்களைக் கற்பதற்கு அவர்களுக்கு பயில்திறன் பயிற்சி அனுமதிக்கும். வருமானததைத் தோற்றுவித்தல், சோம்பியிருத்தலையும் ஏமாற்றத்தையும் தவிர்த்தல், மற்றும் இராணுவ அல்லது குற்றவியல் நடவடிக்கைகளில் அவர்கள் சேர்வதன் அபாயத்தைத் தவிர்த்தல் மோதலினால் பெண் களின் வகிபங் குகளும் பாதிப்படைகின்றன. மோதல் பெரிதுமே பாரிய தொகையிலான குடித்தன பெண் தலைவர்களை உருவாக்குகின்றது. இத்தகைய பெண்கள் முதல் தடவையாக கொடுப்பனவிலான அல்லது சுயதொழிலில் ஈடுபடுவார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட பயில்திறன்களைக் கொண்டிருக்க மாட்டார்கள். கிட்டுகின்ற பயில்திறன்களின் விரிவெல்லையான அனுசரிக்கப்படுகின்ற நடைமுறையிலான சந்தைத் தேவைகளை விஸ்தரித்து, தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்கும் போது தெளிவான முன்னேற்ற அனுகூலங்களைப் பயில்திறன் பயிற்சி கொண்டிருக்கும். மிகவும் ஊறுபடத்தக்கதும் மிகவும் வறுமைப்பட்டதுமான கு ழுக் களு க் கு ம் இச் சேவைகளையும் பயில்திறன்களையும் கிட்டச் செய்யும். பயில் திறன் பயிற் சியை எப் பொழுது அமுல்படுத்துவது?
தொழில் திறனை உயர்த்துவதிலும் தொழில் வாய்ப்புக்களை தோற்றுவிப்பதிலும் அக்கறை ஏற்படும் போது (பல் வாறான இலக் குப் படுத் தப்பட்ட பயில்திறன்களுடனான விண்ணப்பதாரி தொகுதியைப் பன்னிலைப்படுத்துமுகமாக) தரமுயர்த்தப்பட்ட அல்லது புதிய பயில்திறன்கள் சந்தைக்கு அவசியப் படும் போது அல்லது நடைமுறையிலான பயில்திறன் பயிற்சி கட்டமைப்புக்கள் தொடர்ந்துமே தொழிற்படாத போது உதாரணம்: மனித மூலவளங்களின் இழப்பினையும் தொழிற்றுறை உரிமைத்துவம் மற்றும் தொடர்பான பயில் திறன் கள் ஆகியவற்றின் இழப் பினையும் சம்பந்தப்படுத்துகின்ற நெருக்கடி நிலையின் பின்னர்
இடப்பெயர்வாகவோ அல்லது (மீள்) ஒன்றிணைப்பு சூழ்நிலையாகவோ இருந்தாலும் அவசரகால நிலை ஒன்றின் பின் சாத்தியமான அளவில் முன்கூட்டியே பயிற்சி ஆரம்பிக்கப்பட வேண்டும். கற்கப்பட்ட பயில்திறன்கள் தஞ்சம் கோருகின்றதாகவும் மீளத்
அகவிழி - ஒக்டொபர் 2012 / 41

Page 44
திரும்பும் சூழ்நிலைகளில் பிரயோகிக்கத்தக்கதாகவும் இருக்க வேண்டும். பயில்திறன் பயிற்சியினதும் வ.தோ.செ.களினதும் வெற்றியையும் தாக்கத்தையும் கணிசமான அளவு அதிகரிக்கும் என்பதனால் வருமானம் தோற்றுவிக்கும் செயற்பாடுகளுடன் (வ.தோ.செ.) அதை இணைக்க முடிகின்ற போது.
தொகுதியையும், தொழில் உறிஞ்சல் ஆற்றலளவையும் (உதாரணம் நுண் நிதி, வியாபார முன்னேற்றச் சேவைகள், தொழில் அடிப்படையிலான பணிகள்) அதிகரிப்பதற்கு வேறு கருத்திட்டங் களுடன் தொடர்புபடுத்தப்படும் போது பயில்திறன் - பயிற்சியை எப்பொழுது அமுல்படுத்தக் கூடாது?
பின்வருவனவற்றின் போது பொறுப்பேற்கப்படாவிட்டால் நல்லது:
0 உள்ளுர் கலாசார சம்பந்தத்திற்கு பயில்திறன் - பயிற்சி செயற்பாடுகள் அனுசரிக்கப்படாக போது. முன்னைய பாரம்பரியம் அத்துடன் அல்லது ஒத்த தாபனங்கள் அல்லது குழுக்கள் இல்லாவிடத்து பகுதியொன்றை சுய-தொழில், நுண்-வியாபார முயற்சி அல்லது கூட்டுறவுச் சங்கங்கள் போன்ற செயற்பாடுகள் ஊக்கமளிக்கப்படுகின்றன. "
குறிப்பிட்ட பயில்திறன்களில் பயிற்றுவிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை நடைமுறையிலான அல்லது அனேகமான சந்தை வாய்ப்பினை ஆற்றலளவை மீறுகின்ற போது. ஏதாவது ஒரு குறிப்பான கைவினை யில் - பாரிய தொகை யான தனிப்பட்டவர்களுடன் சந்தை மிகைநிரப்புவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
பிரச்சினைகள் / சவால்கள் பயிற்சியை முடித்துக் கொண்ட பின்னர் தொழிலொன்றைக் கண்டறிவது கஷ்டமாக விளங்கினால் பயிற்சியானது உயர் எதிர்ப்புக்களையும், தவறான எண்ணத்தை நீக்குதலையும், பயிற்சியாளர்களுக்கும் சமுதாயங்களுக்கும் மற்றும் பயிற்றுனர்களுக்கும்/முகவராண்மைகளுக்கும் இடையில் உறவுகளை அதிகரிக்கும். தொழில்கள் அற்பமாகவுள்ள நெருக்கடி நிலையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இது
குறிப்பிடத்தக்களவில் முக்கியமானதாகும்.
0
வறுமை, மோதல் மற்றும் குறைந்த கொள்வனவுச் சக்தி ஆகியனவற்றின் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட கிராக்கியானது வேறு வருமான மூலங்களை அடைவதற்கு பயிற்சியாளர்களைக் கட்டாயப்படுத்தும். சந்தைக் கிராக்கிக்கு பயிற்சியை பரஸபர தொடர்புபடுத்துவது முக்கியமானதாகும். மோதலினால் பாதிக்கப்பட்ட சூழல்களில் முக்கியமான தொழில்சந்தை நடைமுறைகளும், நிறுவனங்களும்
42 / அகவிழி - ஒக்டொபர் 2012

பயிதக்கும், பாதிப்பில்
(தகவல், மற்றும் சேவைகள், அத்துடன் வியாபார ஆதரவு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியன உட்பட பெரிதுமே செயற் றிறனற் றவை அல் லது சேதமடைகின்றன. பயில்திறன்களின் மோசமான பன்னிலையாக்கமானது சந்தையை மிகைநிரம்பல் செய்யும் என்பதுடன், இப்பயில்திறன்களிலிருந்து ஏற்கனவே சீவியத்தில் கொண்டுள்ள கைவினைஞர்கள் மீது பாதிப்பிலான தாக்கமொன்றைக் கொண்டிருக்கும். நடமாடு மற்றும் ஆக்கத்திரனிலான பயிற்சி சில சாத்தியமான தீர்வுகளாகும் (உதாரணம்: புதிய பயில்திறன்களை அறிமுகப்படுத்தல் சுய-தொழில் விருப்புக்கள், கூட்டுறவுச் சங்கங்கள் போன்ற). அகதிகளைப் பொறுத் தள வில் வேலை உத்தரவுப்பத்திரங்களுக்கான அவசியம், வரிகளின் கொடுப்பனவு மற்றும் சந்தைகளையும் தொழிலையும் அடைவதற்கு இடப்பெயர்வின் சுதந்திரம் மீதான மட்டுப்படுத்தல்கள் ஆகியன உட்பட சட்டபூர்வ கஷ்டங்ள் இருக்கக்கூடும். பயில்திறன்களை உடனடியாக செயற்பாட்டினுள் இடுவது அவசியமாகும். பயில் திறன்களை ஈட்டுவதற்கும் அவற்றைச் செயற்பாட்டினுள் இடுவதற்கும் இடையிலான நேர தவறுகை நீளும் போது, அவை தொலைகின்ற அல்லது வழக்ககொளிந்ததாக வருகின்ற அபாயம் அதிகரிக்கின்றது (தொழில் முன்னிலைப் பயிற்சியின் பயில் திறன் 3 இலிருந்து 6 மாதங்களினுள் செயற்பாட்டுக்குள் இடப்படுவது சாலப்பொருந்தும். பலதரப்பட்ட வகையிலான பயில்திறன்களுக்கு 'பாரம்பரிய வகிபங்குகள்' மீதான ஆழமான கருத்துக்கள் பெண்களை அடைதலை மட்டுப்படுத்த முடியும் 'பாரம்பரிய பணிகளில்' (உதாரணம் பின்னுதல் மட்டும் பெண்களைப் பயிற்றுவித்தல்
இந்நம்பிக்கைகளை மேலும் மீள் வலியுறுத்தும். துரித அமுலாக்கம் சாத்தியப்படமாட்டாது. பயிற்சி செலவினதாக விளங்கும். கிராமியப் பகுதிகள், பதப் படு த் தப் படாத பொருட் க ளை யும் , மூலவளங்களையும் அடைவதற்கு கஷ்டமாக இருக்கும் என்பதுடன், பயிற்சியை வேண்டுகின்ற மக்களின் எண்ணிக்கை பாரியதாக விளங்கி, மூலவளங் கள் மட்டுப்பட்டதாக இருந் தால் பிரச்சினைகளை முன்வைப்பதுடன், பயிற்சியிலிருந்து சிலரே அனுகூலமடையலாம். நிலையற்ற சூழல் ஒன்றில் ஒத்துழைப்பும் சமூக ஒட்டும் தன்மையும் மிகவும் அவசியப் படுகின்ற போது, இது மனக்கசப்புக்கும், புறந்தள்ளலுக்கும் இட்டுச் செல்ல
முடியும். இலக்கு நன்மை பயப்பாளர்கள் வேறுபடலாம். சில அண்மையில் மட்டுமே பாடசாலையிலிருந்து
பு

Page 45
வெளியேறி இருக்கலாம். (அல்லது பாடசாலை அனுபவம் மட்டும் இருக்கலாம்). ஏனையோருக்கு முன்னைய வேலை அனுபவம் இருக்கலாம். சிலருக்கு வேறு பொறுப்புகள் இருக்கலாம், அல்லது மன அதிர்ச் சியிலிருந்தும், இயங்கும் தன் மைப் பிரச்சினைகளிலிருந் து பாதிக்கப் படலாம். உள்ளடக்கத்திற் கும், விநியோகத்திற் கும் பயிற்சியானது அனுசரிக்கப்பட வேண்டும் (பார்க்க 'எவ்வாறு' என்பதில் வேறுபட்ட விநியோக
மூலோபாயங்கள்). பயிற்சிக்கான, குறிப்பாக மிகவும் ஊறுபடத்தகக்வர் களுக்கான அடைதல் விசேடமாக ஏதாவது ஆகக்குறைந்த கல்வித் தேவைபாட்டினைப் பிலதிபலிக்கும்: பயிற்சி நேரத்திட்டமிடுதல் (இது வழமையான வேலை நேரங்களில் இடம்பெறும்), வசதிகளின் அமைவிடம் (இவை மிகத் தூரத்திற்கு அப்பால் விளங்கலாம்), அல்லது பயிற்சியின் காலம் (இது நீண்ட நேரம் நீடிப்பதுடன், அதிகளவு நேரத்தையும் எடுக்கும்). பயிற்சி மூலோபாயமொன்றை வடிவமைக்கும் போது வளைந்து கொடுத்தல் அவசியமானதாகும்).
களத்தில் உள்ள அ.சா.தாபனங்களினதும், உள்ளூர் நிறுவனங்களினதும், பங்காளிகளினதும் ஆற்றலளவு அத்துடன்/அல்லது நிபுணத்துவம் எப்பொழுதுமே போதுமானதல்ல. பயிற்றுனர்களை கண்டறிவது கஷ்டம், அவர்கள் செயல் நோக்கமற்றவர்களாக விளங்குவார்கள், அல்லது தோதானவர்களாக விளங்கமாட்டார்கள். அத்துடன் பயிற்சியாளர்களுக்கு உதவியளிப்பதற்கு போதிய நிபுணத்துவத்தை அ த து ட ன / அ ல ல து ஆ ற ற ல ள  ைவ க கொண்டிருக்கமாட்டார்கள். சமுதாய இயக்கத்தினாலானதை விட முகவராண்மையாக பயிற்சி விளங்கலாம். முழு நடைமுறையை நிருவகிப்பதற்கும், செய்திட்டத்தின் இறுதியான முடிவுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட ஆற்றலளவையே சமுதாயங்கள் கொண்டிருக்கலாம்.
பங்காளிகள் / இலக்குகள் இலக்குகள் தொழிலற்றவர்களிலிருந்து, தமது வாழ்வாதாரத்தில் மாற்றத்தை அல்லது முன்னேற்றத்தை வேண்டிநிற்கின்ற பலதரப்பட்ட தனிப்பட்டவர்களுக்கு பயில்திறன்-பயிற்சி அவசியமாகும். பெண்கள், இளைஞர்கள், முன்னாள் போராளிகள், விசேட தேவைகளுடனான வேறு குழுவினர் ஆகியோருக்கு குறிப்பிட்ட கவனத்தைச் செலுத்துங்கள்.
பங்காளிகள் ச.தொ.தா.,ஐ.நா. முகவராண்மைகள், அ.சா.தாபனங்கள், நன்கொடையாளர்கள், அரசாங்க மற்றும் தனியார் துறை (உதாரணம்: பயிற்றுனருக்கு).

பயில்திறன் பயிற்சியை எவ்வாறு அமுல்படுத்தலாம்
தொழிற்பயிறசி
முறைசாராப் பயிற்சி
பயிற்சி நிலையம்
பாடசாலைச்
சூழல்
பயில்திறன் முன்னேற்றம்
நிறுவனரீதியான
ஆற்றலளவு
நடமாடும் பயிற்சி
புலமைப்பரிசில்
மிகவும் பொதுவானதும், செயன் முறையிலான முறையிலானதுமான பயிற்சியானது நாளாந்த வாழ்க்கைத் தேவைகளுக்கு நேரடியான தொடர்பைக் கொண்டுள்ளது (உதாரணம்: வயது வந்தோர் படிப்பறிவு, உணவு தயாரிப்பு, விவசாய தொழில்நுட்பம், அடிப்படைச் சுகாதாரம், சமாதானக் கல்வி, தொழிலின் போதிலான பயிற்சி, செயலமர்வுகள், கூருணர்வுப்படுத்தல், ஒன்று திரட்டுதல்) படிப்பறிவற்ற ரசிகர்களுக்காக ஓடியோ, வீடியோ மற்றும் தொடர்பாடல் உதவிக் கருவிகளை அனுசரிப்பதற்கு கவனம் எடுக்கப்பட வேண்டும்.
பாடசாலையில் பயில்திறன் முன்னேற்றம் மத்தியிலான/மேலதிகமான பாடவிதானச் செயற்பாடுகள் மூலம் பாடசாலையில் பிள்ளைகளுக்கான செயன் முறை மற்றும் வாழ்க்கை-பயில்திறன் பயிற்சியின் விநியோகம். தொழில் முன்னிலைப் பயிற்சி அங் கீகரிக்கப் பட்ட தேசிய நிலையங் களுடன் செயற்பாடுகளில் வழமையான பயிற்சி நிலையங்களில் பயிற்சி (உதாரணம்: கற்பித்தல், விவசாயத்தில், செவிலிய சேவையில், மின்னியலில் மற்றும் பொறிமுறையியலில்)
முறைமையான பயிற்சி நிலையம் இம் மூலோபாயம் முறைமையான கல் வியை வழங்குகின்றது. ஆனால், இது பெரிதுமே செயற்றிறனற்றதும் செலவினமானதுமென நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கருத்திட்ட முகவராண்மை மீது தங்கியிருத்தலை உருவாக்க முடியும். சமாந்தரமான பயிற்சி நிலையங்களை மாற்றீடு நிருமாணிக்கும் போது மட்டுமே செய்யப்பட வேன்டும்.
தொழிற் பயிற்சிகள் பொருட்களையும், சேவைகளையும் உருவாக்கும் பயில்திறனிலான மக்கள் உள்ள சமுதாயங்களில் பொருத்தமானவையாகும். பயிலுனர்களைப் பயிற்றுவிப்பதற்கு கைமாறாக கைவினைஞர்களுக்கு பணமாக அல்லது அன்பளிப்பாக அனுகூலங்கள் வழங்கப்படும். வேலை அனுபவத்தை தொழிற்பயிற்சிகள் உச்சப்படுத்தி மக்களிடம் பயிற்சியை கொண்டு செல்கின்றன.
அகவிழி - ஒக்டோபர் 2012 / 43

Page 46
தொழிற்பயிற்சிகளினதும், பயிற்சி நிலையங்களினதும் இணைப்பு தமது பயிற்சியின் போது அல்லது இறுதியில் வேலை அனுபவத்திலிருந்து பயிற் சியாளர்கள் அனுகூலமடைகின்றார்கள்.
நடமாடும் பயிற்சி நிலையங்கள் தமது சொந்தச் சமுதாயங்களில் பயிற்சியாளர்களைக் கற்பிப்பதற்கு போதனாசிரியர்கள் நகர்கின்றார்கள் குறிப்பாக ஓரங்கட்டப்பட்ட அல்லது அனுகூலமற்ற மக்களை அடைவதற்கு இவை பயிற்சியாளர்களுக்கு இலகுவானதாகும். பங்கெடுப்பாளர்களின் வீடுகள் வகுப்பறைத் தொகுதிகள், வணக்க ஸ்தலங்கள் போன்ற வசதிகள் மீது நிலையங்கள் நம்பியுள்ளன.
புலமைப்பரிசில்கள் தொழில் முன்னிலைப் பயிற்சிக் கல்லூரிகளுக்கு அல்லது பல்கலைக்கழகங்களுக்கு (நீண்ட காலம்) புலமைப்பரிசில்கள் பயன்படுத்தப்பட முடியும். சமுதாயத் தேவைகளின் பிரகாரம் வழங்கப்படுகின்ற பயில்திறன்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். திட்டமானது பெரிதுமே செலவினமானது என் பதுடன், அதன் தாக்கம் உடனடியானது அல்ல என்பதனால் அது சிறியதாக இருக்க வேண்டும்.
நிறுவனரீதியிலான ஆற்றலளவைக் கட்டியெழுப்புதல் தேசிய முன்னிலை பயிற்சி நிறுவனங்களுக்கு அல்லது
இரண்டாம் நிலைப் பாடசாலைகளுக்கு ஆற்றலளவைக் கட்டியெழுப்புதலை (உதாரணம் உட்கட்டமைப்பும், சாதனங்களும்) வழங்குதல், அத்துடன் செயன்முறைப் பயில்திறன்களை வழங்குதல்.
கரிசனைகள் உள்ளுர் தேவைகளுக்கும் (உதாரணம்: கிராமியப் பகுதிகளில் விவசாயம் ), நடைமுறையிலான சமுதாய மூலவளங்களுக்கும், ஆற்றலளவுகளுக்கும் (உள்ளூர்வாசிகளினதும், இடம்பெயர்ந்த மக்களினதும்) மற்றும் சந்தைக் கிராக்கிக்கும் ஏற்ப வழங்கப்படவுள்ள பயில்திறன்களை அடையாளம் காணுங்கள். புதிய பயில்திறன்களை அறிமுகப்படுத்துங்கள். ஆனால், இவை வெற்றிகரமாக சந்தைப்படுத்துவதை உறுதிப்படுத்துங்கள். (உதாரணம்: நகரப் பகுதிகளில் சப்பாத்தை மினுக்குதல்) அகதிகளைப் பொறுத்தளவில், முன்னைய பயில்திறன்களை (அதாவது அகதிகளாக வருவதற்கு முன்னர் தனிப்பட்டவர்களின் தொழில்) மீள்வலியுறுத்துவதை அல்லது புனரமைப்பதை கரிசனைக்கு எடுங்கள். தொழில்திறனை பல்வாறான பயில்திறன்கள் மேம்படுத்த முடியும்) உதாரணம்: படிப்பறிவு, முகாமைத்துவம், கணினிப் பயில்திறன்கள், கணக்கீடு) தீர்மானமெடுப்பதில் சமுதாயங்களுக்கு ஊரலொன்றை வழங்குங்கள்.
44 / அகவிழி - ஒக்டொபர் 2012

சமுதாய முகாமைத்துவம் நிலைத்திருக்கும் தன்மையை
முன்னேற்றும்.
மீளிணக்கம், சமாதானம், நெருக்கடிநிலையைத் தடுத்தல் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் ஆகியன மீதான முன்னேற்றத்தின் மூலம் சமூக ஒருங்கிணைப்பையும், சமூக ஒட்டும் தன்மையையும் விருத்தி செய்வதற்கான
வழிவகைகளாக பயிற்சி விளங்க வேண்டும்.
பால்நிலைப் 'பூதக் கண்ணாடிகளை' பயிற்சி கொண்டிருக்க வேண்டும். பால்நிலை வகிபங்குகள் எவ்வாறு மாற்றமடைந்துள்ளன என்பதை அங்கீகரிக்குமுகமாகவும் (உதாரணம் குடித்தனங்களின் அதிக பெண் தலைவர்களுடன்) மூலோபாயரீதியில் பெண்களை இலக்குப்படுத்தவும், உள்ளடக்குவதற்கும் நெருக்கடிநிலையின் பின்னர் இது குறிப்பிடத்தக்களவில் முக்கியமானதாகும். உதாரணமாக, வளைந்து கொடுக்கத்தக்க நேர அட்டவணைகளுடன் வேறு குடித்தனப் பொறுப்புக்களுக்கு அனுமதிக்கப்படக்கூடிய பயிற்சிப் பொதிகளை (அதாவது, உணவைத் தயாரித்தல், காலையில் நீரைக் கொண்டுவருதல், பிள்ளைகளைப் பராமரித்தல்) விருத்தி செய்யுங்கள். இதையொத்த வழியில் இளைஞர்களும், விசேட தேவைகளுடனான வேறு குழுக்களும் கரிசனைக்கு எடுக்கப்பட வேண்டும்.
எனினும், சமூக ஒற்றுமையை உறுதிப்படுத்துமுகமாக, விசேட கு ழுக் களை உள் ளடக் கு வ தற் கு ம் , இலக்குப்படுத்துவதற்கும் இடையில் சமநிலையொன்றை தாபிப்பது அவசியமானதாகும். சனத்தொகை பெரிதுமே வறுமையாக உள்ள பகுதிகளிலும், இலக்குக் குழு மறுதலையாக உணரப்பட்ட போதும் (உதாரணம்: முன்னாள் போராளிகள்) உள்ளடக்குதல் குறிப்பிடத்தக்களவில் முக்கியமானதாகும். இந்த வாய்ப்புக்களில் இருந்து விசேட தேவைகளுடனான குழுக்கள் அனுகூலமடைவதை உறுதிப்படுத்துவதற்கு இலக்குப்படுத்தலின் மட்டமொன்று அவசியமாக இருக்கின்ற போதிலும், சமூக ஒன்றிணைப்பை கலப்பிலான குழுக்கள் முன்னேற்ற முடியும். செயற்றிறனான உச்சப்படுத்தல், பொறுப்புக்களை பங்கிடுதல், ஆகுசெலவுசெயற்றிறனை அதிகரித்தல், நிலைத்திருத்தலுக்கும், உள்ளூ ர் உரித்துரிமைக்கும் வழியை சமைத்தல் ஆகியனவற்றினால் ஒன்றை ஒன்று குறை நிரப்புவதற்கு செய்திட்டங்களை அனுமதிக்கின்ற அதேவேளை பங்காண்மைகளும், ஒருங்கிணைப்பும் நகல்படுத்தப்படுதலை தவிர்ப்பதற்கு உதவுகின்றன.
இறுதியாக, சுய-நம்பியிருத்தலுக்கு தமது வழி மீது அவர்களுக்கு உதவுவதற்காக சந்தையுடன் பயிற்சியாளர்களைத் தொடர்புபடுத்துதல் (உதாரணம்: நுண் நிதிச் செய்திட்டங்களுக்கு அவர்களை அறிமுகப்படுத்தவதன்
மூலம்).
கற்கப்பட்ட பாடங்களிலிருந்து நீங்கள் இலாபத்தைப் பெறுவதற்கு கண்காணித்தலும், மதிப்பாய்தலும் உதவி செய்யும்.
நன்றி:ILO

Page 47
UNIN
АСАГ College of Hi
Since
Degree Undergraduate & Postgraduate progra Medical - MBBS, BDS, Bio-Medical Engineering - Civil, Mech., IT, AERO, A Business & Arts IT & Visual Communications English Medium Classes Local & International Syllabus
Grade 1- O/L & A/L ICT • SCIENCE • MATHS • Business Stds.
IT & Designing > Multimedia & 3D Animation
Audio & Video Editing Graphic & Web Designing Hardware & Networking Office Automation Accounting English
183, New Chetty Sti Tel: 0114 346222 Er
www.ed The . Irt of
LEVEG. ILS

-OUE
beMY
gher Studies - 1998
Courses
ms from leading Universities from India
தமிழ் மொழி மூல வகுப்புகள் Auto
GAQ & BA க.பொ.த (உயர்தர) கலை, வர்த்தக வகுப்புகள் க.பொ.த (சாதாரணதர) கணித, விஞ்ஞான, வர்த்தக வகுப்புகள்
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வகுப்புகள் Vocational Training IT Instructor JOB Training Career Development
Art of
CC
ALPHA
M i N d • B 0 dy - 5 0 Physical & METNAL HEA
reet, Colombo- 13. nail:unique@edume.lk lume.lk
Learning
=5

Page 48
இக
கிடைக்கு பூபாலசிங்கம் புத்தகக்கடை 202, செட்டியார் தெரு, கொழும்பு - 11
தொ.பே.இல.: 011-2422321
பூபாலசிங்கம் புத்தகக்கடை 4A, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்
தொ.பே.இல: 021-2226693 நியூ கேசவன் புக்ஸ்டோல் 52 டன்பார் வீதி, ஹட்டன்' தொ.பே.இல.: 051-2222504, 051-2222977
1 -1ாட பய - 1
1 2 , 2. பள் -:50:55
=117151- 2 :
ப க - பார்
அறிவாலயம் புத்தகக்கடை 190 B புகையிரத வீதி,
வைரவப்புளியங்குளம், வவுனியா தொ.பே.இல: 024-4920733 அன்பு ஸ்டோர்ஸ் 14 பிரதான வீதி, கல்முனை தொ.பே.இல.: 067-2229540 புக் லாப் 20, 22 சேர் பொன் ராமனாதன் வீதி, பரமேஸ்வரா சந்தி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம் தொ.பே.இல: 021-2227290, கை.தொ.இல.: 077-1285749 இஸ்லாமிக் புத்தக இல்லம் 77, தெமட்டக்கொட வீதி, கொழும்பு - 09
தொ.பே.இல: 011-2688102 கவிதா ஸ்ரோஸ் இல:05 பஸ் தரிப்பிடம், வவுனியா தொ.பே.இல: 024 - 2222012 Noori Book Shop No. 143, Main Street, Kathankudi Tel.: 065-2246883
- 24 1
E -1 - 11:"மEெ58ம் EII
Kumaran 39, 36th L - kumbh
பாடி 2 மொ... கம்
Registered in the Department of Pos

வி5
தமிடங்கள்
பூபாலசிங்கம் புத்தகக்கடை 309-A 2/3 காலி வீதி, வெள்ளவத்தை, கொழும்பு
தொ.பே.இல.: 4515775, 2504266 அபிஷா புத்தகக்கடை 137, பிரதான வீதி, தலவாக்களை
தொ.பே.இல: 052-2258437 நூர் மொஹமட் நியூஸ் ஏஜண்ட் 132, பிரதான வீதி, கிண்ணியா-03
தொ.பே.இல.: 026-2236266 குமரன் புக் சென்டர் 18, டெய்லிபயர் கொம்பிலக்ஸ் நுவரெலியா
தொ.பே.இல.: 052-2223416 பிரியங்கா புத்தகக் கடை
பிரதான வீதி, பருத்தித்துறை
தொ.பே.இல.: 077-9303246 கொலேஜ் நீட்ஸ் புத்தகக்கடை 120, பிரதான வீதி,
அட்டாளைச்சேனை 14 கை.தொ.இல.: 077-3034469 அல்குரசி புத்தக நிலையம் 28, 1/2, புகையிரத வீதி, மாத்தளை தொ.பே.இல.: 066-3662228 Rajah's Book Centre No. 111, Main Street, Batticaloa Tel.: 065-2222371 S. சச்சிதானந்தகுமார் 19/26, மாரியம்மன் கோவில் வீதி, கல்லடி, மட்டக்களப்பு
தொ.பே.இல.: 077-1270458
ISSN 1800-1246
Finted by - Press (Pvt) Ltd. ane, Colombo 06
k@gmail.com
all7718001124 005
=ts of Sri Lanka under No OD/96NEWS/2012