கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகவிழி 2013.03

Page 1
விழி 09
பார்வை
இ3
ஆசிரிய
- கதைப் பருவம், பிள்ளைப் பரும் கேளில் மொழி விருத்தி
1 விஞ்ஞானி நோக்கும்
1 மதுவும் மா. அவர்களும்
1 பொது ப
பரீட்சைகவ
மரியநாயகம் மரியராசா - லெனின் ம - எஸ். ஜெபநேசன் . Mr.A.A.Azees 'க. கேதீஸ்வரன் 4 செ. ரூபசிங்கம்
www.viluthu.org

92
மார்ச் - 2013
விடு
த்துவ நோக்கு...
பருவ உருகிய
7 பவ்லாவின் சமூக பங்களிப்பும்
சைகளும் தேசியப்
திவானம் 0 M.M. ஹிர்பஹான்
'சோ. சந்திரசேகரன்
விலை: 100/=

Page 2
இsவீடு
அகவிடு
ஆசிரியத்துவ நோக்கு.
அகவி6
ENE
ஆசிரியத்துவ நோக்கு.
த3வி.
நகுறிப்
2012 ஆம் ஆண்டிற்கான அக
ஆசிரியர்கள் உடனடியாக

அகவிடு
24 சிரித்துவ நோக்கு
- பா.
கவி5
=0: 15-1' கம்
- மார்க்கச் சாவககக் க.
அகவிடு
ப- ஆசிரியத்தின் நோக்கு
பெப்ரவரி -2013
புரவு 21
கல்விச் சுற்றுலாக்கனை எத ஒழுங் 3
- சட்டர்கள்
லிருந்து ..
இது வரவேற்பும்
விழிகளை பெற விரும்பும் தொடர்பு கொள்ளவும்.

Page 3
கோல்
இகவின்
ஆசிரியத்தவ நோக்கு.
தைப் பருவம், பிள்ளைப்படி கிட இளில் மொழி விருத்தி
கொனி பவள் சக கோயம்
மதன்) (11ா.
த தோட
1 பொது
பரீட்சைக்
மரியகயர் 2பரியராசா இ வொர்ன் tதி) வரம்பி NEEM, பிரபா 12 எம் ஜெபநேசன் - பி 4.5. சலகர இன (கே. சாபாசேகாவி பி .க, கேகாகாரன். - * கெ, en45சிங்கம்
விவா); 120/4
Afuww.vlurtthLarg
AHAVILL 3, Torrington Avenue
Colombo 07
Tel.: 011 250 6272 E-mail: ahavili.viluthu@gmail.com
அகவிழியில் இடம்பெறும் கட்டுரைகளுக்கு அதன் ஆசிரியர்களே
பொறுப்பு, கட்டுரைகளில் இடம்பெறும் கருத்துக்கள் “அகவிழி”
யின் கருத்துக்கள் அல்ல.

ISSN 1800-1246
உள்ளே.....
குழந்தைப் பருவம், பிள்ளைப் பருவம் ஆகிய பருவங்களில் மொழி விருத்தி
11
விஞ்ஞானி பவ்லோவின் சமூக நோக்கும் பங்களிப்பும்
16
3. பாடசாலைகளில்
அனர்த்த முகாமைத்துவக் கல்வி
19
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தென்னிந்திய யாழ்ப்பாணக் கல்வி கலாச்சார ஊடாட்டம் -
அமெரிக்க மிஷனின் பங்களிப்பு
மதுவும் மாணவர்களும்
25
5
6
29
பொதுப் பரீட்சைகளும் தேசியப் பரீட்சைகளும்
33
பிரத்தியேக வகுப்புக்களின் எழுச்சியும் பாடசாலை வகுப்புக்களின் வீழ்ச்சியும்
8. பியாஜேயின் சிந்தனைவிருத்திக் கொள்கை 36
9. தொண்டைமானாறு வெளிக்கள நிலையம் 41
ஓர் மீள்பார்வை

Page 4
ISSN 1:
ஆக
ஆசிரிய
மாத
ஆசிரியர்: V.S. இந்திரகுமார்
நிர்வாக
சாந்தி சச் நிறைவேற்றுப் ப
ஆலோக
திரு. து. ராஜேந்திரம்
முன்னாள் முதுநிலை விரிவுரையாளர், இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
பேராசிரியர் சோ. சந்திரசேகரம் முன்னாள் கல்விப் பீடாதிபதி, கொழும்புப் பல்கலைக்கழகம்
கலாநிதி உ. நவரட்ணம் முன்னாள் ஓய்வு நிலைப்பணிப்பாளர், தேசிய கல்வி நிறுவகம்
திரு.தை. தனராஜ்
முதுநிலை விரிவுரையாளர், இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
லெனின் மதிவானம் பிரதி கல்வி வெளியீட்டு ஆணையாளர், கல்வி அமைச்சு கலாநிதி சசிகலா குகமூர்த்தி சிரேஷ்ட விரிவுரையாளர், இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்
ஆசிரியரிடமிருந்து.............
நாற்பது இலட்சம் வரையிலான எமது நாட்டுச் சிறார்களினதும் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்களினதும் பொறுப்புக் கூறலில் முக்கிய பங்கு வகிக்கும் கல்வி அமைச்சு, தேசிய பாடசாலைகள், மற்றும் கனிஷ்ட இடைநிலைநிலைப் பாடசாலைகளுக்கு அதிபர் நியமனங்களை வழங்கும் விடயங்களில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளது. அவற்றுக்குத் தீர்வுகாண முடியாமலிருப்பதை இட்டு கல்விசார் சமூகத்தினரும் பொதுமக்களும் கவலை கொண்டிருக் கின்றனர். தேசிய பாடசாலைகளான யாழ் வேம்படி மகளிர் உயர் கல்லூரி, பண்டாரவளை விசாகா மகளிர் கல்லூரி, மீபாவள அமரசூரிய தேசியப் பாடசாலை, காலி வித்தியா
அகவிழி | மார்ச் 2013

30)- 1246
வி6
ததுவ நோக்கு.
இதழ்
ஆசிரியர்: சிதானந்தம்
ணிப்பாளர் (விழுது)
ஆசிரியர் குழு: க. சண்முகலிங்கம் பத்மா சோமகாந்தன்
சகர் குழு
பேராசிரியர் வ. மகேஸ்வரன் தலைவர் தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம் திரு.க. இரகுபரன்
முதுநிலை விரிவுரையாளர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் பேராசிரியர் துரை மனோகரன் தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம் பேராசிரியர் இரா.வை. கனகரட்னம் தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம் திரு.வீ. தியாகராஜா சிரேஷ்ட ஆலோசகர், சமூக விஞ்ஞானக் கற்கைகள் துறை,
இலங்கை திறந்த பல்கலைக்கழகம் திரு.கே. சாம்பசிவம் தேசிய ஆலோசகர்: கல்வி முகாமைத்துவம் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் திருமதி. அருந்ததி ராஜவிஜயன் ஆசிரிய ஆலோசகர், கொழும்பு கல்வி வலயம் ஜி. போல் அன்ரனி முன்னாள் பிரதி பரீட்சை ஆணையாளர்
லோக வித்தியாலயம் ஆகிய பாடசாலை களுக்கு அதிபர்களை நியமிப்பதில் கல்வி அமைச்சு அண்மைக் காலமாக பாரிய நெருக்கடிகளை எதிர் நோக்கியிருந்தது. அதன் ஒரு பகுதியாகவே காலி வித்தியாலோக வித்தி யாலய நிகழ்வு நடைபெற்று முடிந்தது.
காலி வித்தியாலோக வித்தியாலய நிகழ்வுக்கு துணை நின்றவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படாத நிலையில் தொடரும் அதிபர் நியமனங்கள் பற்றி பல கேள்விகள் எழுகின்றன. காலி வித்தியாலோக வித்தியாலய நிகழ்வுக்கு பின்னணியாக அமையப்பெற்ற விடயங்களை ஆழமாக ஆராய்ந்து இது போன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில்

Page 5
நிகழாதிருக்க வழிவகைகள் மேற்கொள்ள வேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். இதுபோன்ற நிகழ்வுகள் நிகழ்வது இதுதான் முதற் தடவையல்ல. தொடர்ந்த வண்ணம் இருக்கும் நிலைமை ஒன்றுதான். ஆனாலும் இந்நிகழ்வில் வன்முறைகள் உயரளவில் காணப்பட்டதால் இதன் தீவிரம் உணரப்பட்டது. தமிழ்க் கல்விச் சூழலில் இது பெருமளவில் உணரப்பட்டதாகத் தெரியவில்லை.
பாடசாலைக்கு புதிய அதிபர் நியமிக்கப்பட்டு அவர் வருகை தரும் போது பிள்ளைகள், ஆசிரியர்கள், பெற்றோர் மிகவும் அரவணைப்புடனும் கௌரவத்துடனும் வரவேற்ற காலமொன்றிருந்தது. அன்று சில பாடசாலைகளுக்கு வரும்படி கிடைத்த வேண்டுகோளை அடிப்படையாக வைத்தே பதவியைப் பொறுப்பேற்றுச் சென்றனர். பதவிக்குத் தகுதியானவர் தான் என நீதிமன்றம் செல்லவும் அதிகாரத்தின் பேரில் பதவியில் அமர்ந்திருக்கவும் அவசியமிருக்கவில்லை. தகுதியானவர் யார் என அனைவரும் வாதங்களின்றி ஏற்றுக்கொண்டனர். துப்பாக்கி வேட்டுக்களாலோ சுவரொட்டிகளாலோ துண்டுப் பிரசுரங்களாலோ எச்சரிக்கை விடுவிக்கப்படவில்லை. அதிபரின் மனம், குணம், மதியறிந்து வரவேற்றனர். ஆனால் அந்த கௌரவப் பதவிக்கு மிகவும் நிர்க்கதியான நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
இன்று இலங்கையில் உள்ள பாடசாலைகளில் ஆ இல் பதில் அதிபர்களே பதவியில் உள்ளனர். பதில் அதிபர்கள் தரம் வாய்ந்த அதிபர் ஒருவரை நியமிப்பதில் காலதாமதம் ஏற்படும் வேளைகளில் குறிப்பிட்ட காலம் மட்டுமே நியமிக்கப்பட்டனர். தகுதி உள்ள அதிபர் வந்ததும் எவ்வித சிக்கல்களுமின்றிப் பதவியைப் பாரங்கொடுப்பது பகிரங்கமாக நிகழ்ந்தது. ஆனால் இன்று இந்நிலைமை விசேடமாக மோசமடைந்ததற்குக் காரணம் மாகாண சபை உருவாக்கப்பட்டதாகும். பாடசாலையில் அதிபர் இடமாற்றம் அல்லது ஓய்வு பெற்றுச் செல்லும் போது பல அரசியல் செல்வாக்குகளும் வேறு அறிமுகமான தன்மைகளையும் அடிப்படையாகக் கொண்டு பதில் அதிபர் நியமிக்கப்படுகின்றார். 2003ஆம் ஆண்டு பதில் அதிபர் மாருக்கு அதிபர் தரம் வழங்கப்பட்டு பதவி, நிரந்தர நியமனம் செய்யப்பட்டதால் பதில் அதிபர் பதவியைப் பெற பலர் ஆர்வமாய் உள்ளனர். அதனால் இவ்வாறான தொரு சந்தர்ப்பம் தமக்கும் ஏற்படக்கூடும் எனும் எதிர்பார்ப்பில் தமது அரசியல் அறிமுக அதிகாரங்களைப் பயன்படுத்தி பதில் அதிபர் பதவியைப் பெற போட்டி போடுகின்றனர். பரீட்சை எழுதி சித்தியடைவதை விட மாற்று வழிகளைக் கையாளுகின்றனர். பிரதேச அரசியல் பிரமுகர்களின் மூலமாக இவை இடம்பெறுவதால் பிரதேச கல்வி அதிகாரிகளுக்கும் இவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஆற்றலில்லை.

பதில் அதிபர்மார் சேவையில் இருக்கும் பாடசாலை களுக்கு தரம் வாய்ந்த அதிபரை நியமனம் செய்து அனுப்பும் போது பதவியைப் பாரம் கொடுக்காமை, பல்வேறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படல் காரணமாக அவர்களுக்குத் திரும்பிச் செல்ல நேரிடுகிறது. தற் போதைக்கு சில வருடங்களுக்கு முன் திறமை மற்றும் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் அதிபர் தரம் (Grade) வழங்கப்பட்டபோதும் பாடசாலைகளில் பதில் அதிபர் மார் சேவையில் இருந்ததாலும் அவர்களை வெளியேற்ற மனமின்மையாலும் தரம் வழங்கப்பட்டோருக்கு அதிபர் பதவிகள் வழங்கப்படவில்லை. இதனால் தரம்பெற்ற அதிபர்கள் பதிலதிபர்களின் கீழ் உதவி அதிபர்களாக கடமையாற்றும் நிலையில் உள்ளனர். சில பாடசாலைகளில் அதிபர்மார் பெற்றோரின், ஆசிரியர்களின், பிள்ளைகளின் மனங்களை வென்று சிறப்புற நிறைவேற்றிய வண்ணம் உள்ளனர். இதனால் இவர்களை அகற்றி வேறொருவரை நியமிப்பதற்கு யாரும் விரும்புவதில்லை. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் தரம் பெற்றவர்களை விட பாடசாலையைச் சீராக நடத்துபவரே நல்லவராகத் தோன்றுகிறது. பிரச்சினை களைக் கொண்டிருக்கும் பாடசாலைகளில் பதில் அதிபர்மார் பிரச்சினையும் முக்கியமானதாக இருக்கிறது. இதனால் கெளரவமான பதவி நகைப்பிற்கு உட்படுத்தப் படுவதாகவே தெரிகிறது.
அ சிறந்த அதிபரை உடைய பாடசாலை சிறந்த பாடசாலை ஆகும். இதனால் அப்பதவிக்குத் தகுதியானவரை நியமித்தல் வேண்டும். பரீட்சையில் சித்தியடைந்திருப்பதும் தரம் (Grade) பெற்றிருப்பதும் ஒரு பாடசாலையின் நிர்வாகத்திறமைக்கும் அதிபர் பதவிக்கும் போதுமானதல்ல. எழுத்துப் பரீட்சையின் பின் தரம் வழங்கும் போது முறையான நேர்முகப் பரீட்சை நடாத்தப்படல் (Interview) வேண்டும். அவர்களின் ஆற்றல்கள், நடத்தைகள் (Behavior), ஆளுமைகள் (Personality) கருத்தில் எடுக்கப்பட்டு உரிய அதிபர் தரம் வழங்கப்படல் வேண்டும். அவ்வாறு செய்யும் போதுதான் சிறந்ததொரு பாடசாலைக் கட்டமைப்பை உருவாக்க முடியும்.
பாடசாலை அதிபர் ஓய்வில் செல்லும் போது அப்பாடசாலைக்கு அதிபர் ஒருவரை நியமிக்க மாகாண கல்வி அதிகாரிகள், தேசிய பாடசாலை அதிகாரிகள் ஆகியோர் குறிப்பிட்ட காலப்பகுதியில் முறையான செயன்முறை ஒன்றை செயற்படுத்த தவறுவதும் பதில் அதிபர்மாரின் எழுச்சியில் அடித்தளமிடுகின்றது. எனவே அரசியல் ஆணைகளுக்கு அடிபணியாமல் நியாயமான முறையொன்றை செயற்படுத்துவது அதிகாரிகளின் பொறுப்பாகும்.
V. S. இந்திரகுமார்
அகவிழி (மார்ச் 2013

Page 6
குழந்தைப் பருவம், பிள் ஆகிய பருவங்களில் iெ
மரியநாயகம் மரியரா முதல்வர், கிளி/வலைப்பாடு றோ.க.த
ஒரு குழந்தையின் மொழி வளம் ஆனது அது வாழுகின்ற சூழல் காரணிகளால் பெரிதும் ஆதிக்கம் செலுத்தப் படுகின்றது. உளவியலாளர்களின் கருத்துப்படி ஒரு
குழந்தை தாயின் கருவில் இருக்கின்ற 7ஆம் மாதத்தில். இருந்தே தாயின் குரலை நன்றாகக் கேட்கக் கூடிய தன்மையினைப் பெற்று விடுகின்றது எனக் கூறப்படுகின்றது. பேசக் கற்றுக் கொள்கின்ற மொழியானது அவர்களைச் சுற்றி என்ன பேசப்படுகின்றது என்பதில் தங்கியிருக்கின்றது. மொழி வளர்ச்சியானது பெருமளவில் பின்வரும் இரண்டு காரணிகளால் தாக்கப்படுகின்றது. 1. மனிதர்களின் பொதுவான உயிரியல் மரபணுக்
காரணிகள் (Human's general biological inheritance)
அவர்கள் வளருகின்ற சூழலின் தனித்தன்மை (The uniqueness of the environments in which they grow up.)
இவ்வாறான இரு பெரும் காரணிகள் மொழிவிருத்தியில் செல்வாக்குச் செலுத்தினாலும் அவற்றினை மேலும் பல கூறுகளாகப் பகுத்து நோக்க முடியும். அவை வருமாறு,
1. - பெற்றோரின் மொழியைப் போலச் செய்தல்
கலாசாரக் காரணிகள்
3.
5. -
* ம் ம் ம் ம்
சூழல் காரணிகள்
முதிர்ச்சி நிலை நுண்மதி மட்டம்
பௌதிக நிலைமைகள்
குடும்பத்திலுள்ள பிள்ளைகளின் எண்ணிக்கை குடும்பத்தின் சமூகப் பொருளாதாரக் காரணிகள்
8. -
9.
பிள்ளையின் மனவெழுச்சி விருத்தி
10. ஆசிரியரின் மொழித்தேர்ச்சி
இவ்வாறான பல காரணிகள் ஒரு பிள்ளையினிடத்தே செல்வாக்குச் செலுத்தி அவர்களின் வளர்ச்சியோடும் முதிர்ச்சியோடும் "மொழித்திரட்டல்' செம்மைப்படுத்தப் படுகின்றது. மொழிவளத்தினை உள்வாங்கும் செயற்பாடே மொழித்திரட்டல் ஆகின்றது. முறையான கற்றலின் அடிப்படையிலும் முறையற்ற கற்றலின் அடிப்படையிலும்
அகவிழி | மார்ச் 2013

“ளைப் பருவம் மாழி விருத்தி
சா
5.க.பாடசாலை
மொழித்திரட்டல் முன் னெடுக்கப்படுகின்றது. இம் மொழித்திரட்டல் பின்வரும் இரு பரிணாமங்களை உள்ளடக்கியதென உளமொழியியலாளர்கள் சுட்டிக் காட்டுகின்றார்கள். அவையாவன,
1) ஆற்றல் பெறுதல்
2) ஆற்றுகை செய்தல்
ஆற்றல் பெறுதல் என்பது, சொற்களையும் தொடர்புகளையும் தொடர்பாடல் அமைதி தழுவிய வசனங்களையும் விளங்கிக் கொள்ளுதல் ஆகும். இது மூளையிலே நிகழும் ஒரு விதமான செயற்பாடாகும். இது ஒரு முடிவிலியாகிய நிகழ்ச்சி. மொழியைப் பேசுதலும், கேட்டும், வாசித்தும், கிரகித்தலை மேற்கொள்வதும்
ஆற்றுகை செய்தலில் அடங்கும்.
இவ்வாறு மொழி விருத்தி ஏற்படுகின்ற போது எங்களின் அனுபவங்களையும் மற்றவர்களின் அநுபவங் களையும் நாம் சந்தோசத்தில் எங்களது பிரசன்னம் இல்லாமலே பகிர்ந்து கொள்ளக் கூடிய ஒரு நிலையினை ஏற்படுத்துகின்றது. மேலும் உலகின் பல பகுதிகளுக்கும் பிரயாணத்தினை மேற்கொள்ளாமலே அங்கு நடைபெறுகின்ற நிகழ்ச்சிகள் பற்றி தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடிவதோடு ஏனைய முதல் தரமான அறிக்கைகளினையும் செவிமடுக்கக் கூடியதாக இருக்கின்றது. (We Listen to the first hand reports of others and gain information about events happening in other parts of the world without travelling there.) மேலும் மொழி விருத்தியின் காரணமாகவே இறந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் அனுபவங்களையும் அவர்கள் சார்ந்த அறிவுகளினையும் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றன.
எவ்வாறு பிள்ளைகளின் மொழியினை உள்வாங்கிக் கொள்கின்றார்கள்
பொதுவாகப் பிள்ளைகள் தங்களது முன்பள்ளிப் பருவகாலங்களிலேயே (குழந்தைப் பருவம்) சொந்த மொழியினை (Native Language) உள்வாங்கிக் கொள் கின்றார்கள். அது தவறான மொழியாகக் கூட இருக்கலாம். ஆனால் மொழி விருத்தியானது பிள்ளைகளினுடைய முதலாவது சொல்லில் இருந்தே ஆரம்பமாகின்றது

Page 7
என்பதை நினைவில் கொள்ள வேண்டும். குழந்தையானது தெரிந்து கொள்கின்ற அல்லது உணர்ந்து கொள்கின்ற சிறிதளவு ஒலி வேறுபாட்டுடன் சொல்லுகின்றது. அது தமது பெற்றோருடன் சிறந்த தொடர்பு கொள்ளலினை, தனது முதலாவது சொல்லினைச் சொல்வதற்கு முன்னமே மேற்கொள்கின்றது. பெற்றோர் அதற்கு எவ்வாறு சிறப்பாக பதிலளிக்கின்றனர் என்பதும் பிள்ளையின் தொடர்பாடல் தேர்ச்சியின் தொடர்ச்சியான விருத்தியில் தங்கியிருக்கின்றது.
மொழி வளர்ச்சியின் ஆறுபகுதிகள். - Sit Aspects of Progress. எல்லா மொழிகளும் மூன்று அடிப்படை உப முறைகளினால் உருவாக்கப்படுவதாகும்.
1. Phonon Logy (a system of sounds) 2. Syntax (a system of rules for compiling sounds andwords)
3. ---
semantics (a system of meanings that relate language to the rest of the world)
ஒவ் வொரு பிள் ளைகளும் பேசுபவர்களைக் கவனிப்பவர்கள் போல ஒவ்வொரு துணை முறைகளிலும் பாண்டித்தியம் பெற வேண்டும். உதாரணமாக ஒவ்வொரு பிள்ளையும் “நாய்” என்ற சொல்லை தமது வசனங்களில் சரியாகப் பயன்படுத்தத் தெரிந்து கொள்வதும் மற்றவர்கள் அதனைச் சொல்லுகின்ற போது அதன் கருத்தினை விளங்கிக் கொள்ளவும் வேண்டும்.
ஒவ்வொரு துணை முறைகளும் இரண்டு வேறுபட்ட வழிகளில் தேர்ச்சியடையப்பட வேண்டும். அல்லது கற்றுணர்ந்து கொள்ள வேண்டும். இதனைப் பின்வரும் படத்தில் இலகுவாகக் காட்ட முடியும்.
Comprehension of sound
Master of sound system
Production of sound
Recognition of structure in utterance
Language Acquisition
Master of Grammatical system
Productive use of Riles to strcture utterances
comprehension of meanings
Master of meaning
system
Production of meaning to utterance
இந்த ஆறு மொழியின் பகுதிகளினாலும் பொதுவான போக்குகள் பற்றியும் அதன் தன்மை பற்றியும் சிந்திப்பதற்கும் துணை செய்கின்றன. கெலன் உச்சரிப்புத்

திறனில் தெளிவற்றுக் காணப்படுகின்றாள் என்பதற்காக மொழியில் குறைவானவள் என்று அர்த்தமில்லை. அவளுடைய கருத்துக்களை கிரகிக்கும் தன்மை இலக்கண விதிகளை பயன்படுத்தும் தன்மை என்பன மிகச்சிறப்பானதாக இருக்கலாம் எனக் கருதப்படலாம்.
வேறுபட்ட விருத்திப் போக்கானது துணை முறைக்கான (Sub system ofa Language) சாதாரணமாகக் காணப்படுகின்றது. சத்தத்தின் தேர்ச்சித் தன்மை ஆரம்பத்தில் உருவாகி குழந்தைப் பருவத்தில் பூரணமடைகின்றது. வசனங்களினதும் சொற்களினதும் கருத்துக்களினைக் கற்றலானது பின்னரே ஆரம்பமாகின்றது. பல வேளைகளில் மொழி பற்றிய அறிவானது இளம்பராயத்தினூடாகவே வளர்ந்து செல் கின்றது எனக் கூறப்படுகின்றது.
மொழி விருத்தியின் முக்கிய கட்டங்கள் பின்வரும்
அட்டவணையில் காட்டப்படுகின்றது.
வயது -
சத்தம் - Sound
கருத்து -
இலக்கணம் Age
Meaning
- Grammar பிறப்பு 2 Months | Vowel like coos
hears Phoneme
factures
6 Months
Syllable like
babbling 1 Year
repeated Syllables | First word (da-da)
understand
some world
utterance
Produces about | Firs to intelligible to
250 words
two word family
Sentences
3 Year
Most utterance
Produces about
|Adult intelligible to
1000 words
like short strangers
understands
sentences. most of What
is gait
6 Years
Adult like with
Produces about | Adult like minor exceptions 12500 words
in most respects.
2 Year
இவ்வாறு குழந்தைகளின் மொழி விருத்தியானது இடம்பெறுகின்ற போது அதன் மழலைச் சொற்களுக்குரிய மொழிவிருத்தி கட்டங்களாக Stark and Stole - Gammon and Menn என்பவர்கள் பின்வருமாறு வகைப்படுத்திக் காட்டுகின்றார்கள். இதனை பின்வரும் அட்டவணை காட்டுகின்றது.
அகவிழி (மார்ச் 2013

Page 8
கட்டம்
செயற்பாடுகள்
சத்தம்
Stage I
அழுகை, செருமுதல், உயிர் எழுத் Birth to 2 months / மூச்சு உள் வாங்குதல்.
Stage II
2 to 4 months
Stage III
6 months
மகிழ்ச்சியான சத்தம்,
மெய் எழு உறவினருடனான இடைத்
தோன்று தொடர்பு.
களின் 5
ஒத்திருக்கு மழலை சத்தம் செய்தல். நீண்ட உய
எழுத்துச் ச மிகை/மென் சத்தம். ஒரு
கொண்ட சத் உண்மையான மழலைச்
மீண் டும் சத்தம் செய்வார்கள்.
மெய் உயிர்
செய்வார்கள். அடிக்கடி சத்தம் செய்
சத்தத்தில் f வார்கள், குரலில் ஏற்ற
intonation. இறக்கம் காணப்படும். கேற்ப கலந்த
Stage IV
6 months & oldor
Stage V
10 months &older
The second year 12. - சொற்களை உச்சரிக் மாமா போன to 24 months
கும் திறன் பெறுவர்,
களை பேசு சொல்வளம் அதிகரிக்
“என் பந்து கும், இரு சொற்களைக்
குசினி” "அப்பு
கொண்ட வசனங்களை
போன்ற சத்த
கதைப்பார்கள். Pre school year (2
சொற்களின் இணைப்புக்
வினாக்கள் to 5 years)
களில் பாண்டித்தியம் பெறு தொனியிலு வார். சமூகத் தொடர்பு மறை வச களை மேற்கொள்வார்கள். கூறும் தொ நீளமான வசனங்களை சத்தம் இருக் பேசுவார்.
சமூகத் தொடர்புகளை மேற்கொள்வார்கள். நீளமான வசனங்களை பேசுவார். வினாக்கள் கேட்கும் தொனியிலும் எதிர் மறை வசனங்களை கூறும் தொனியிலும் சத்தம் இருக்கும். உறுப்புக்கள் நன்கு வளர்ச்சி கண்டு இருக்கும்.
அகவிழி | மார்ச் 2013

உறுப்புக்களின் நிலை
செயற்பாடுகளின்
தன்மை |- விருத்தி அடையாத,
Reflexive oral cavity.
Vocalization.
து ஓசை
குரல்வளை கழுத்துப் பகுதியில் உயர்ந்து காணப்படுதல்.
நாக்கு அண்ணாக் கினை நிரப்பி இருக்
கும். த்து சத்தம்
(சற்று குரல் வளை Cooing & laughter ம். புறாக் முதிர்ச்சி பெறும். சத்தத்தை
தம்.
விர் மெய் உறுப்புக்கள் வலுப்பெற்று Vocal play
த்தங்கள். இருக்கும். - மையான
மாத்திரை தம். மீண் டும்
True babbaling ச் சத்தம்
hythms & சத்தங் களுக்கு ஏற்ப Jargon தேவைக் கை, கால், கழத்து கண் திருக்கும். என்பன அசையும்.
ர்ற சொற் சத்தத்தோடு செயற்பாடு
வார் கள். காணப்படும். ', “அம் மா பா குத்து" நங்கள்.
கேட்கும் உறுப் புக்கள் நன்கு ம் எதிர் வளர்ச்சி கண்டு இருக் எங் களை கும்.
னியிலும்
கும்.
மொழியின் அடிப்படைப் பண்புகள் BASIC CHARACTERISTICS OF LANGUAGE மொழி விருத்தியில் மூன்று அடிப்படைப் பண்புகள் காணப்படுகின்றன.
1. புத்தாக்கம் (Creativity)

Page 9
2. முறைமை (System) 3. கிரகிப்பு (Comprehension production) - கிரகிப்பும்
மொழி ஆக்கமும்.
புத்தாக்கம் (Creativity)
குழந்தைகள் கேட்கின்ற, சொல்லுகின்ற வசனங்களில் பெரும்பாலானவை தனித்தன்மையானவை. தாங்கள் முன்னரே சொல்லியிராத வசனங்களையே அவர்கள் உருவாக்குகின்றார்கள். அதே போல் அவர்கள் கேட்பதும் புதியவையே. இவ்வாறான செயற்பாடுகளின் மூலமே வசனங்களோடு தொடர்பு கொள்கின்றார்கள். அவர்கள் முன்னரே ஞாபகத்தில் வைத்திருந்து விடையளிப்பதில்லை. அவர்கள் என்ன விடயங்களை ஒவ்வொரு நாளும் கற்றுக் கொள்கின்றார்களோ அதுவே அவர்களுக்கு புது வசந்தத்தைக் கொடுக்கின்றது. நாய்க்குட்டிகள் கட்டளைக்கு கீழ்ப்படிவது போல் அவர்கள் கற்றுக் கொள்வதில்லை. விதிகளினையும் எண்ணக்கருக்களையும் உள்வாங்கி குறியீட்டு ரீதியாகவே செயலாற்றுகின்றார்கள். (Successive performance rests on symbolic learning involving concerts cent roles, not on sensor motor leavening, as when a dog learns to he pond to “sit down”)
முறைமை (System) ஒவ்வொரு இயற்கை மொழியும் துணை முறைகளோடு (sub System) தொடர்புபடுத்தப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள சிக்கலான முறைமையினை (Complex system) உடையதாக இருக்கின்றது. ஆயிரத்திற்கு மேற்பட்ட தனித்தனியான
7

பகுதிகளும் ஆனால் சுருக்கமாக செயற்படக் கூடிய பகுதிகளுக்கான தன்மைகளினை உருவாக்குகின்ற
அமைப்புகளினையும் கொண்டிருக்கின்றது.
மொழியானது முறைமையினைக் கொண்டிருக்காவிடின் மொழி உள்வாங்கலானது வேறுபாடுடையதாக இருக்கும். தொடர்பு அற்ற விடயங்களின் தொகுதியாகவே மாணவர்கள் சொற்களை செவிமடுக்கின்றார்கள். அவற்றினை ஒழுங்கான முறைமைக்கு நாம் ஒழுங்குபடுத்தவில்லையாயின் ஒவ்வொருவரும் வேறுபாடுடனான விளக்கங்களை பெறவேண்டியிருக்கும். இதனாலேயே முறைமையானது இவற்றின் தெளிவினை ஏற்படுத்துகின்ற திறப்பாகக் கருதப்படுகிறது.
கிரகிப்பும் மொழி ஆக்கமும் (Comprehension production) மொழியானது ஏதாவது ஒன்றை அடைவதற்கான முறையாக இருக்கின்றது. மொழியில் பாண்டித்தியம் பெற (அவனின் இயலுமைக்குட்பட்டு) கற்கின்ற போது அவர்கள் தொடர்பாடலின் இரு பக்கங்களையும் எவ்வாறு கையாள்வது எனக் கற்றுக்கொள்கின்றார்கள். மொழி தொடர்பான இணைந்த கட்டுப்பாடுகள் ஆரம்ப நிலையிலும் செயலூக்கம் கட்டுப்பாடுகள் அவற்றைத் தொடரும் வளர்ச்சி நிலையிலும் ஏற்படும். கிரகித்தல் என்பது மொழிக் கட்டமைப்புக் குலைந்து வாங்கும் நிரல் கோடலுடன் இணைந்த செயற்பாடாகும். இந் நிலையில் மொழியை ஆக்குதலும் மொழியைக் கிரகித்தலும்
அகவிழி (மார்ச் 2013

Page 10
ஒன்றையொன்று முந்தும் நிலை கொண்டிருத்தல் குறிப்பிடத்தக்கது. இதனை மேலும் இலகுபடுத்திச் சொல் வதானால் ஒருவர் சொல்வதைப் புரிந்து கொள்வதற்கும் ஒருவருக்கு ஒரு கருத்தை எடுத்துச் சொல்வதற்கும் இடையே ஒன்றை மற்றது முந்திச் செல்லும் நிலைகள் தோன்றலாம்.
மொழிவிருத்தியும் கற்றலும் - The development of Language and learning
பாடசாலைகளின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் மொழியானது ஒரு முக்கிய காரணியாக இருக்கின்ற போதும், மொழி விருத்தி பற்றிய கண்டுபிடிப்புக்களும் மொழி விருத்தியுடன் தொடர்புடைய கடினங்களும் பாடசாலையின் வளர்ச்சி நிலையில் குறுக்கிடுவதாகவே காணப்படுகின்றது. மொழியினைக் கற்பதற்கான மனப்போக்கு ஒரு உயிரில் போலவே மனிதனையும் படம்பிடித்துக் காட்டுகின்றது. ஞாபக முறைமையில் மிக முக்கியமான பகுதியாக Verbal memory தோன்றுகின்றது. புதிய அறிவுகள், புதிய சொல் வளங்கள் எல்லாம் மொழி விருத்திக்கு பங்களிப்புச் செய்வதோடு கற்றலினையும் சிறப்பாக மேற்கொள்ள துணை செய்கின்றது.
பிள்ளையின் தொடர்பாடல் திறனை உயர்த்துதல், அவர்களின் சுய நெறிப்படுத்தலை உயர்த்துதல் என்பன ஆசிரியரால் மேற்கொள்ளப்படக்கூடியன. தொடர்பாடல் திறனை வளர்ப்பதற்கு வினாவுதல் மிக முக்கியமானதாகும். வினாக்களைக் கேட்கும் திறனானது தமக்கு வேண்டிய தகவல்களைப் பிள்ளைகள் பெற்றுக் கொள்வதற்கு உதவுவதுடன் அவர்களின் கற்றலை நெறிப்படுத்தவும் உதவுவதால் வினாக்களைக் கேட்கும் திறனானது அறிகை விருத்தியிடல் முக்கிய பங்கு வகிக்கின்றது. Gotsky என்பவரின் கருத்துப்படி இதுவே முயற்சிக் கவனம், திட்டமிடல், பிரச்சினை விடுவித்தல், ஆகியவற்றினை உள்ளடக்கிய உயர் அறிக்கைத் தொழிற்பாடுகள் யாவற்றிற்கும் அத்திவாரமாக அமைகின்றன. பிள்ளைகள் தமது செயல்களைப் பற்றிச் சிந்திக்கவும் தாம் செய்பவற்றைத் திட்டமிடவும் மொழி அவர்களுக்கு உதவுகின்றது. எனவே பிள்ளைகளிடத்தே சிறந்த விளக்கத்தினை ஏற்படுத்தும் முகமாக மொழிப் பயன்பாடாக பின்வருவனவற்றினை மேற்கொள்ள முடியும்,
சிறிய வசனங்கள்
புதிய பதங்கள் முக வெளிப்பாடுகள், முக பாவனைகளைப் பயன்படுத்துதல் சரியான மொழிப்பயன்பாடு செவிமடுக்கும் செயலை உற்சாகப்படுத்துதல்
அகவிழி ( மார்ச் 2013

தமிழ் சொற்களுக்குரிய ஆங்கிலச் சொற்களை தேவைக்கு ஏற்ப பயன்படுத்துதல்
நாடக படிமங்களைச் சொல்லோடு சேர்த்து பயன்படுத்துதல் மொழி கவர்ச்சியினை ஏற்படுத்தக் கூடியவாறு வினாக்களை வழங்கல்
மாணவர்களிடையே உரையாடல்களைத் தூண்டுதல் இவை போன்ற செயற்பாடுகளினை மேற்கொள்ளுதல் சிறப்பான மொழி விருத்திக்கு வழிவகுக்கும்.
கட்டிளமைப்பருவத்தினரின் பண்புகளும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும், அதற்கான
தீர்வுகளும்
இளையோர் பருவத்தினை 'பருவம்' அடைகின்ற காலம் என்று நினைக்கின்றார்கள் இங்கு பருவம் என்பது தனியனின் (individual) இனப்பெருக்க சக்திகளின் வளர்ச்சியை குறிப்பதாயின் அது உண்மையேயாகும். ஓரு தனியனின் வாழ்வில் இப்பகுதியானது அவனைக் குழந்தை என்றோ முதியோன் என்றோ கருத இயலாத வகையில் உள்ள காலமாகும். இக்காலத்தில், காலத்தைப் பற்றிய உற்றுநோக்கல்கள், பட்டறிவுகள் அவனை ஒரு குறிப்பிட்ட காலத்தில் குழந்தையாக கருத இயலாது எனக் கூறுகின்றன. அவ்வாறு கருதுவதையும் இளையோன் விரும்புவதில்லை. மேலும் அவன் முழுமையான முதிர்ச்சியையும் அடையவில்லையாதலின் அவனை முதியோன் என்றும் அழைக்க முடியாது எனவே தான் குழந்தைப் பருவத்தில் இருந்து முதியோர் பருவத்திற்கு மாறுகின்ற இப்பருவத்தினை இளையோர் பருவம் (The Adolescent Age) என்கின்றோம்.
ஜீ.ஸ்டான்லி ஹால் (G.Stamley Hall) என்பவர் இப்பருவத்தைப்பற்றி குறிப்பிடும் போது 'குமுறல்களும் அழுத்தங்களும்' கொண்ட பருவம் எனக் குறிப்பிடுகின்றார்.
இக்கால கட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் மேற்கத்தய நாகரிகத்தில் இளையோர் பருவம் என்பது குழந்தைப் பருவத்தினின்று முதியோர் பருவத்திற்கு மாறுகின்ற பருவம் என்று கருதப்படுகின்றது. இந்நிலை மாற்றமானது,
1. உடலியல் மாறுதல்கள்
2..
மனவெழுச்சி மாறுதல்கள் 3. சமூக - பால் மாறுதல்கள்
கல்வி அறிவு மாறுதல்கள்

Page 11
ஆகியவற்றினை உள்ளடக்கியுள்ளது. இது நமது மரபு வழியில் குடும்பப் போராட்டங்களும் பரவலாக இருக்கின்ற சமுக மனவெழுச்சி வெடிப்புக்களும் உடன் வருகின்ற உடலியல் நிலையாகும்.
இம்மாறுதல்கள் திடீரென்று தோன்றுபவை எனக் கருத முடியாது. மனவெழுச்சி நிலையிலும் சமூக நிலையிலும் முதிராத தனியன் இவ்விளையோர் வயதுகளில் தான் முதியோர் பருவத்திற்கு ஏற்ற உடல், அறிவு வளர்ச்சிகளை நெருங்குகின்றான்.
இளையோர் பருவத்தின் உடல் அறிகுறிகள் இக் கட்டிளமைப் பருவத்தில் பின்வரும் உடல் அறிகுறி களினை காணக்கூடியதாக இருக்கும்.
பூப்படையும் காலத்திற்கு சற்றுமுன் அவர்களது உயரம் தொடர்ந்து வளர்ச்சியடையும்.
இவ்வளர்ச்சிப் பெருக்கத்துடன் உடல் உறுப்புகளின் விகிதங்களிலும் முக்கியமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. முதலில் கை, கால்கள் விரைவான வளர்ச்சியினைப் பெறுகின்றன. அதனைத் தொடர்ந்து உடற் பகுதியும் விரைவான வளர்ச்சி பெறுகின்றன.
சிறுமியரின் வளர்ச்சியினை அறிவிப்பனவற்றில் வளர்ச்சியும் ஒன்றாகும் 10 வயதுகளின் பின் "மொட்டு நிலை" தோன்றுகின்றது. இதைத்தொடர்ந்து தொடக்க
முலை (Primary breart) வளர்ச்சி ஏற்படுகின்றது.
இக்காலம் பூப்படையும் காலமாக காணப்படுகிறது. இது சிறுமியர்களினைப் பொறுத்தவரை 12-15 வயதிற்கு ஏற்படுகின்றது. சிறுவர்களுக்கு அதன்பின் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் கழித்து ஏற்படுகின்றது. -
மேலும் ஏனைய இளையோரது வளர்ச்சியை பண்புகளாக பின்வருவனவற்றை குறிப்பிட முடியும்.
எதிர்பாற் கவர்ச்சி அதிகமாக இருக்கும்
குரல் தடித்து காணப்படும் இரத்த ஓட்ட வேகம் அதிகரிக்கும் உரோமங்கள், மயிர்களில் மாற்றங்கள் தோன்றுதல் ஒருவருடைய வாழ்க்கைக் காலத்தில் மூன்று வகையான ஒன்றை ஒன்று தொடர்ந்து வருகின்றன. கருப்பைக்குள் உள்ள கடைசி மூன்று மாதங்களில் தோன்றும் 'லனுகோ' என்னும் மயிரும் லனுகோ வைமாற்றி குழந்தைப் பருவத்தில் இருக்கின்ற 'வெல்லஸ்' எனும் மயிரும் பூப்படையும் பொழுது துரித முன்னேற்றம் கொண்டு வளர்கின்ற 'பெர்மினல்' எனும் மயிரும் வளர்கின்றது.
உள்ளக சுரப்பிகள் வளர்ச்சியடைந்து அதிகமாக சுரக்க ஆரம்பிக்கின்றன.

இளையோரின் பண்புகள்
உடல் வளர்ச்சி வேகமாக இருத்தல்.
உடல் நிறை அதிகரித்துச் செல்லும்.
உள்ளுறுப்புக்கள் வளர்ச்சியடைகின்றன.
மூளை வளர்ச்சி பெறுகின்றது. பாலியல் சுரப்பிகளில் இருந்து ஹோர்மோன்கள்
முதல் தடவையாக சுரக்கின்றன.
கூச்சம், சங்கடம் அடைவார்கள்.
உணவு வேட்கை அதிகமாக இருக்கும். பாலுறுப்புக்கள் நன்கு வளர்ச்சியடையும்.
நல்ல ஆளுமை அமைய இலட்சியங்கள் தோன்றும்.
மன எழுச்சி குமரப்பருவத்தினை நிலைகுலையச் செய்யும். அழகுணர் ஆற்றல் அதிகரிக்கின்றது. கழக அக்கறை தோன்றும். பொழுது போக்கில் அக்கறை காணப்படும். சொந்த ஆர்வம் அதிகரிக்கும். கல்வியில் அக்கறை தோன்றும். தொழில் தொடர்பான அக்கறை தோன்றும்.
சமய ஆர்வம் தோன்றும். விளையாட்டில் ஆர்வம் தோன்றும்.
வீர வணக்க ஆர்வம் காணப்படும்.
இளையோர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் கட்டிளமைப் பருவத்தினர் தங்களின் உடல் அங்க மாற்றங்களை தங்களை சமூக, பண்பாட்டு கலாசார சமய நிலைகளோடு பொருத்திக் கொள்வதற்காகவும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியவர்களாக காணப்படுகின்றார்கள்.
குறிப்பாக கட்டிளமைப் பருவத்தில் தோன்றுகின்ற உடலியல் மாற்றங்கள் அதனால் ஏற்படுகின்ற மனவெழுச்சி நிலைகள் அவர்களில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. இக்காலத்தில் முகங்களில் தோன்றும் பருக்கள், மார்பகங்களின் வளர்ச்சி, சமூகத்தில் பெரியவர்களை மதிக்கின்ற தன்மை இவை போன்ற பல காரணங்கள் இக்கட்டிளமைப் பருவத்தில் தங்கள் பெரியவர்கள் என மதிப்பிட்டுக்கொள்ள துணைசெய்வதற்கு சில வேளைகளில் அதிக வெட்கம் கூச்ச சுபாவம் உடையவர்களாக இருப்பதற்கு காரணமாகின்றன.
அகவிழி (மார்ச் 2013

Page 12
மூனி (mocney) என்பவரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் பின்வரும் காரணங்கள் இளையோர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு காரணமாக அமைகின்றன என அறியப்பட்டது.
ஆரோக்கிய வளர்ச்சியும் உடல் வளர்ச்சியும் செல்வம், வாழ்க்கைத்தரம், தொழில் சமூக பொழுது போக்கு செயல்கள்
காதல், பால், திருமணம் சமூக உளவியல் தொடர்புகள் ஒழுக்கங்களும் சமயமும் இல்லமும் குடும்பமும்
எதிர்காலம், தொழிலும் கல்வியும்
பள்ளி வேலைக்குப் பொருந்துதல் பாடத்திட்டமும் போதனையும்
இவைகள் பிரச்சினைகளுக்கு காரணமாக இருத்தலும் கட்டிளமைப்பருவத்தில் மிகவும் முக்கிய பிரச்சினையாக 'பால்' ரீதியான பிரச்சினைகளே முன்வைக்கப்படுகின்றன.
இப்பருவத்தில் பெரியவர்கள் தன்னை மனிதனாக நடாத்த வேண்டும் என விரும்புகிறார்கள். இப்பருவத்தில் மற்றவர்கள் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று காண்கிறார்கள். அவன் பிழை செய்ய நாணிக்கோணுகிறான். அவனை பிறர் கேலி செய்தால் மனம் பொறுக்கவில்லை.
தம் தோற்றம், உடல், தம்மைப்பற்றிய பெற்றோரின் மனப்போக்கு, பள்ளியிலும் சமூகத்திலும் வெற்றி பெற வேண்டும் என்ற அவா ஆகியவை பற்றிய கவலைகள் இப்பருவத்தினரிடம் எழுகின்றன. தம் வயதினை ஒத்தவர்கள் தங்களைப்பற்றி என்ன நினைக்கின்றனர் என்பதை மிகவும் பொருட்படுத்துவர்.
பிள்ளைகளின் மனம் புண்படும் படி பேசுதல், அவர்கள் திறனுக்கு அப்பாற்பட்ட வேலைகளை செய்யும்படி கட்டாயப்படுத்துதல், பாரபட்சமாக நடாத்துதல் போன்றன அவர்களுக்கு மன நெருக்கீட்டினை ஏற்படுத்துகின்றன. இன்றைய இளையோரை தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் போதை மருந்து, குடி, புகைத்தல், பாலுறவு வாய்ப்புக்கள் ஆகியன தற்கால சூழ்நிலையில் முக்கிய பிரச்சினைகளாகும். உடல் மாற்றத்தால் சில வீணான எண்ணங்களும் பழக்கங்களும் வருதலோடு பிறப்புறுப்பை பார்த்தல் போன்ற பழக்கங்கள் வளர்கின்றன. இவை மனத்தையும் உடலையும் கெடுக்கின்றன. உடல் வெறுத்தல், அமைதியின்மை, நுண்ணறிவு மழுங்கல், பயம், கவலை, தன்னைப் பற்றி கணித்தலில் தவறு
ஆகிய பிரச்சினைகளும் தோன்றுகின்றன.
அகவிழி மார்ச் 2013

இப்பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கட்டிளமைப் பருவத்தினர் தங்களினை முன்னிலைப்படுத்தி எதிர்பாலருக்கு காட்ட வேண்டும் என்ற இணைப்புடனேயே பெரும்பாலும் செயற்படுகின்றார்கள். அவர்களது பிரச்சினை களை சரியான முறையில் அணுகி தீர்க்காவிடின் அவர்கள் பிற்கால நடத்தை கொண்டவர்களாக மாறிவிடுவார்கள். எனவே பின்வரும் தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன,
குழந்தை உளவியல், இளையோர் உளவியல், மனநலம் ஆகியவைகளில் பயிற்சி பெற்ற
ஆசிரியர்களை நியமித்தல் படிக்கத் தொடங்கும் ஒவ்வொரு மாணவனையும் அவனது உடலியல் - உளவியல் நோக்கில் ஆய்வு செய்தல்.
குழந்தைகளின் தன்மைகளுடனும் அக்கறை களிடனும், இசைவுடனும் இருக்குமாறும் நன்றாக திட்டமிடப்பட்ட எச்சரிக்கையான உற்றுநோக்கலுக்கு வாய்ப்பு அளிக்குமாறும் ஆரம்ப பள்ளிகளை திருத்தியமைத்தல்.
குழந்தைகளினை, கட்டிளமைப்பருவத்தின் ஏதும் வளர்ச்சியையும் பயிற்சியையும் பற்றி ஆய்கின்ற பல்வேறு நிறுவனங்களின் இகைப்புத் தன்மையை கருதுதல்.
குறையுடையோரையும், குற்றம் செய்வோரையும் பற்றி அக்கறை கொள்கின்ற பள்ளிகளையும் வகுப்புகளையும் விருத்தியடையச் செய்தல். நடத்தைக் குறைகளை கவனிக்காது அதற்கு காரணமாயிருக்கின்ற தவறான பொருத்தப்பாடுகளில் கவனத்தைச் செலுத்துதல்
உசாத்துணை நூல்கள்
1. - Essentials of Learning, Robnt . M w- Travers. (Fitth Edition)
Child Psychology, Gerald R- Levin.
A ல N -
TIWARI, N.M, Child Psychology, Published by SAURABH house.
பேராசிரியர் முனைவர் சபா ஜெயராசா, விருத்தி உளவியல், சண்சயின் கிரபிக்கம், இணுவில் - 2005.
சின்னத்தம்பி க. சுவர்ணராஜா. க, அறிகைத் தொழிற்பாடுகளும்
ஆசிரியரும். குரு வெளியீடு, வவுனியா - 2007. பெனடிக்கற் பாலன் யோ, கல்வி உளவியல்களும் அடிப்படைகளும்.
6.
7.
கலாநிதி ச. முத்துலிங்கம், கல்வியும் உளவியலும் பகுதி II.
இ.பா.வேணுகோபால், கல்வி உளவியல் 2006, சாரதி பதிப்பகம்.
10)

Page 13
விஞ்ஞானி பவ் சமூக நோக்கும் பா
லெனின் மதிவான பிரதி ஆணையாளர்- கல்வி .
உளவியல் என்பது உள்ளத்தை பற்றி விஞ்ஞான ரீதியான அறிதலாகும். உளவியல் பற்றிய சிந்தனைகள், கோட்பாடுகள் காலத்திற்கு காலம் தோற்றம் பெற்று வளர்ச்சியடைந்து வந்துள்ளன.அவற்றினை வளர்த் தெடுப்பதில் உளவியல் அறிஞர்களுக்கு முக்கிய பங்குண்டு. அவ்வறிஞர்கள் காலத்தின் போக்கை பிரதி பலித்ததுடன் காலத்தினை உருவாக்குகின்ற பணியினையும் மேற்கொண்டுள்ளனர். அத்தகைய சிந்தனையாளர்கள் வரிசையில் ரசிய நாட்டு உயிரியல் விஞ்ஞானி ஐ.பி பவ்லோவ் (I. B. Pavlov) அவர்களுக்கு தனியிடம் உண்டு. இவரது மேதா விலாசத்தின் அடிப்படைகளையும் பல விதமான வரம்புகளையும் கடந்து சென்ற அவரது அணுகுமுறைகளையும் தரநிர்ணயம் செய்வதற்கு பொருள் - மனம் - உணர்வு என்பவற்றின் தோற்றம் குறித்தும் அவற்றுக்கிடையிலான உறவு குறித்த தெளிவும் அவசியமானதொன்றாகும்.
ஆத்மா - சிந்தனை - உணர்வு என்பன குறித்து பலரால் பல்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. மனதை விட பொருளின் முதன்மையை ஏற்றுக் கொள்பவனே பொருள் முதல்வாதி. சிந்தனை என்பது பொருளை அடிப்படையாக கொண்டு உருவானதாகும். உதாரணத்திற்கு மாம்பழம் குறித்த சிந்தனை எண்ணம் தோன்றுகின்றது. இங்கு பொருளே சிந்தனைக்கு அடிப்படையாக உள்ளது. எனவே சிந்தனை இன்றி பொருள் இருக்க முடியும் பொருளின்றி சிந்தனை இருக்க முடியாது. இதனடிப்படையில் பொருளை புற நிலையாக கொண்டு தோற்றம் பெற்ற சிந்தனையானது பொருள் முதல்வாத சிந்தனை என அழைக்கப்படுகின்றது. இவ்விடயம் குறித்து லெனின் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
''புற நிலை யதார்த்தத்தை குறிப்பிடுகின்ற தத்துவார்த்த வகையே பொருளாகும். மனிதனுக்கு உணர்வுகளால் தரப்படுகின்றது. பொருளை நம் உணர்வுகளால் நகல் எடுக்கலாம்; புகைப்படம் எடுக்கலாம்; பிரதிபலிக்கலாம். எனினும் இவற்றிற்கு அப்பால் பொருள் சுயேற்சையாக இருக்கிறது.”' பொருள் என்பது இடையறாது மாறிக் கொண்டே இருக்கும். மாற்றங்கள் யாவும்

லாவின் ங்களிப்பும்
அமைச்சு
இயக்கத்தையும் இயக்கங்கள் அனைத்தும் மாற்றத்தையும் உள்ளடக்கி நிற்கும். அவ்வகையில் இயக்கம் என்பது ஒரு வகையில் முரண்பாடாகும். பொருள்களிலே காணப் படும் இயல்பான முரண்பாடுகளின் வெளிப்பாடாக இயக்கமும் மாற்றமும் நிற்கின்றது என்பது யதார்த்த நியதி. பொருள்களில் இயல்பாகவே காணப்படும் எதிர் மறைக்கு இடையிலான முரண்பாடு பற்றிய தேடலானது இயக்கவியல் என அழைக்கப்படும்.
இங்கு இயக்கம் என்பது ஒருவகையில் முரண்பாடாகும். பொருள்களிலே காணப்படும் இயல்பான முரண்பாடுகளின் வெளிப்பாடாகவே இயக்கமும் மாற்றமும் நிகழ்கின்றது. புறநிலையுலகின் அனைத்து இயங்கியல் போக்குகளும், உடனேயோ அல்லது சற்று தாமதமாகவோ மனித அறிவில் எதிரொளியாகக் காணப்படும். சமுதாய நடை முறையில் ஒரு நிகழ்வு தோன்றி, வளர்ந்து, மறைதல் என்பது இடையறாது தொடர்ந்து நடந்து கொண்டே யிருப்பதைப் போலவே, மனித அறிவின் வளர்ச்சியிலும் நிகழ்வுகள் தோன்றி வளர்ந்து மறைந்து கொண்டே இருப்பதைக் காண்கின்றோம். மனிதன் தன் நடைமுறை களினால் சில குறிப்பிட்ட கருத்துக்கள், கோட்பாடுகள், திட்டங்கள் ஆகியவற்றிற்கு இணங்க புறநிலை யாதார்த்தத்தை மாற்றி, அதை மேலும் மேலும் வளர்த்தெடுத்திருக்கின்றான். இவ்வாறு செய்வதன் வாயிலாக புறநிலை யதார்த்தத்தைப் பற்றிய அவனது அறிவு ஆழமாகிக் கொண்டே செல்லும், புறநிலை யதார்த்த உலகை மாற்றுவதற்கான நிகழ்வுகள் தொடர்ந்து இடையறாது நடந்து கொண்டே இருக்கும்; அதைப்போன்றே நடைமுறையின் மூலமாக உண்மையை அறியும் மனிதனின் முயற்சிக்கும் எப்போதும் முடியவில்லை. (மாசேதுங் - தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் 1.306, லெனின் தொகுப்பு நூல்கள் 38.195)?
இந்த நியதியானது பௌதிக பொருள்களில் மட்டுமன்றி மனித சமுதாயத்திற்கும் பொருந்த கூடிய ஒன்றாகும். சமூக அசைவியக்கமும் அதனடியாக எழுகின்ற சிந்தனைகளும் கருத்தோட்டங்களும் இத்தகைய இயக்கம் - மாறுதல் என்ற அடிப்படையான விதிகளுக்கு உட்பட்டே இயங்குகின்றன. இந்த மாற்றத்தின் இயக்கவியலை புரிந்து
அகவிழி (மார்ச் 2013

Page 14
கொள்வதன் மூலமே சமூதாய மாற்றத்திற்கு முழுமையான பங்களிப்பினை வழங்க முடியும். மாறாக இதனை புரிந்து கொள்ள பின் நிற்கின்ற அல்லது புரிந்து கொள்ளாதவர்களின் கையிலிருந்து வரலாறு நழுவிவிடும் என்பதனை கடந்த கால நிகழ்வுகள் எமக்கு எடுத்து காட்டியுள்ளன.
இதற்கு மாறாக பொருள்களின் இயக்கம், மாறுதல்கள் அவற்றுக்கிடையிலான முரண்பாடுகள் யாவும் புல காட்சியில் பெறப்படும் மாயை. இவர்கள் பொருளை விட சிந்தனைக்கும், உடலை விட ஆன்மாவிற்கும், அறிவை விட நம்பிக்கைக்கும் முதலிடம் கொடுக்கின்றார்கள். இவர்கள் கருத்து முதல்வாதிகள் என அழைக்கப்பட்டனர். இதுதொடர்பில் காரல்மார்க்ஸின் பின்வரும் கூற்று கவனத்தில் கொள்ளத்தக்கது.
“தத்துவவாதிகள் இந்த பிரச்சினைக்கு குறித்த விளக்கங்கள் அவர்களை இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கின்றனர். அவற்றிலே இயற்கையை விட ஆத்மாவிற்கு முதலிடம் கொடுப்பவர் உளர். இதன் மூலமாக உலகமானது ஒரு வடிவத்தில் அல்லது இன்னொரு வடிவத்தில் படைக்கப்பட்டது என்ற கருத்தை இறுதியாக ஏற்றவர்களும் உள்ளனர். கிறிஸ்தவ சமயத்தில் சொல்வதைக் காட்டிலும் கூட உலக படைப்பானது சிக்கலானது, சாத்தியமில்லாதது என்று சொல்லும் தத்துவவாதிகளும் உள்ளனர். உதாரணமாக "கலைச் சொல்லலாம். இவர்கள் எல்லாம் கருத்து முதல் வாத பிரிவை சேர்ந்தவர்களாவார்கள். இயற்கையை முதன்மை படுத்துபவர்கள் எல்லாம் பல்வேறு கருத்து குழாமை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.”
அந்த வகையில் பொருள் - சிந்தனை - ஆத்மாவுக்கு இடையிலான உறவு குறித்து கருத்து முதல் வாதிகள் பொருள் முதல் வாதிகளுடன் முரண்பட்ட கருத்தினை கொண்டுள்ள அதே சமயம் இரு எதிர் முகாம்களாக பிரிந்து இதுவரை தத்துவ போராட்டத்தை நடத்தி வருகின்றார்.
இச்சூழலில் பவ்லோவ் அவர்களின் ஆராய்ச்சியானது வயிற்று சுரப்பிகளைப் பற்றியும் உமிழ் நீருக்கும் மூளையின் இயக்கத்திற்கும் உள்ள தொடர்பு பற்றியதாகவுமே அமைந்திருந்தது. மிருகங்களுக்கு (நாய்) உணவு வழங்குவதை அவர் பரிசோதனைக்குட்படுத்தி அதிலிருந்து ஆன்மா பற்றி உடல்களது நியதிகளை விளக்கியுள்ளார். இதற்காக அவர் நாயின் ஆசைகளையும் அதன் எதிர் பார்ப்புகளையும் பற்றி தெரிவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். இந்த விஞ்ஞான ஆய்வில் தம் வாழ் நாள் முழுதையும் செலவிட்டார். அவரது ஆய்வு கட்டங்கள் பின்வருமாறு வகுக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டன.
அகவிழி | மார்ச் 2013

ஆய்வின் முதல் கட்டம் ஒரு நாயின் கன்னத்தினூடாக குழாய் ஒன்றினை பொருத்தி அதனூடாக உமிழ் நீரின் அளவை கணிப்பிடுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டார். நாயின் கவனம் சிதறாத வகையில் அதனை இருட்டறை ஒன்றில் வைத்து தன்னியக்க கருவியினூடாக உணவு (இறைச்சி) வழங்க ஏற்பாடு செய்தார். இந்த செயற்பாடுகளின் போது கிடைக்கும் தகவல்களை மிகவும் கவனமான முறையில் பதிவு செய்து கொண்டார். ஆரம்பத்தில் இறைச்சியைக் கண்டதும் நாயில் உமிழ் சுரக்கப்பட்டதை அவதானித்தார். இச்செயற்பாட்டை பின்வரும் வரைப்படம் விளக்குகின்றது.
இறைச்சி துண்டு (S) ---
------- உமிழ்நீர் (R)
இங்கு இறைச்சித் துண்டை கண்டதும் பசியுள்ள நாயின் வாயில் உமிழ்நீர் சுரந்தது. இங்கு இறைச்சித் துண்டு தூண்டியாகும். (Stimnlus) உமிழ் நீர் சுரத்தல் துலங்கலாகும், (Respunse) இச் செயற்பாடானது நிபந்தனைக்குட்படுத்தபடாத ஒன்றாகும். பரிசோதனையின் இரண்டாவது கட்டம். இங்கு நாய்க்கு இறைச்சி துண்டை வழங்கும் போது மணி ஒலிக்கப்பட்டது. இவ்வாறு மீண்டும் மீண்டும் இறைச்சி துண்டை வழங்கும் போது மணி ஒலிக்கப்பட்டது. பின்னர் இறைச்சி துண்டை வழங்காமலே மணி ஒலிக்கப்பட்ட போது நாயின் வாயில் உமிழ்நீர் சுரந்தது. இதனை பின்வருமாறு வரைப்படத்தின் மூலமாக காட்டலாம்.
இறைச்சித்துண்டு
> உமிழ்சீர் சுரத்தல் (R)
மணி ஒலி (S)
பரிசோதனையின் மூன்றாவது கட்டம் இங்கு இறைச்சி துண்டை வழங்காமலே மணி ஒலிக்கப்பட்டபோது நாயின் வாயில் உமிழ்நீர் சுரந்தது. இங்கு இயற்கையான தூண்டிக்கு (இறைச்சி துண்டு) பதிலாக வேறொரு தூண்டி (மணி ஒலி) நிபந்தனைப் படுத்தப்பட்டது. இங்கு மணி ஒலியை கேட்டவுடன் நாயின் வாயில் உமிழ்நீர் சுரத்தல் இயற்கையானதொன்றல்ல, அது நிபந்தனைப்படுத்தப்பட்ட தூண்டியினால் (Conditiunal Stimnlns - CS) ஏற்படும் நிபந்தனைப்படுத்தப்பட்ட துலங்க லாகும். (Conditiunal Reponse - CR) மணி ஒலிக்கு உமிழ்நீர் சுரக்கும் துலங்கல்களை போல வேறு தூண்டல்களினாலும், பெற்றுக் கொள்ள முடியும் என்பதனை பவ்லோவ் பல்வேறு பரிசோதனைகளின் மூலமாக கண்டறிந்தார்.
மணி ஒலி
உமிழ்நீர் சுரத்தல் (CS)
-- (CR)
12

Page 15
பரிசோதனையின் நான்காவது கட்டம் மணி ஒலித்த பின்னர் இறைச்சித் துண்டை காட்டாது விட்டால் காலப்போக்கில் நாயின் வாயில் உமிழ்நீர் சுரக்கின்ற தன்மை இல்லாது போய்விடும். இவ்வாறு துலங்கல் காட்டாதிருத்தல் துலங்கல் அழிதல் அல்லது தடைப்படல் என்றழைக்கப்படும், இவ்வாறு அழிந்த துலங்கல் சில சந்தர்ப்பங்களில் மீண்டும் தானாகவே ஏற்படும் சந்தர்ப்பங்களும் உண்டு. எடுத்துக்காட்டாக மணி ஒலிக்கு மட்டும் நாயின் உமிழ்நீர் சுரத்தல் தடைப்பட்டு பிறிதொரு சந்தர்ப்பத்தில் மணி ஒலிக்கு உமிழ்நீர் சுரக்கும். இதனை பவ்லோவ் சுயமாக தோன்றும் துலங்கல் என்பார். அவ்வாறே சமமான தூண்டிகளைத் தெரிவு செய்து ஒன்றுக்குப் பதிலாக மற்றொன்றை நிபந்தனைப்படுத்துவதன் மூலமும் துலங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை இவ் எடுத்துக்காட்டாக மணி ஒலிக்குச் சமமான ஒலியை ஏற்படுத்துவதன் மூலம் நாயின் உமிழ்நீர் சுரந்தது. இவ்வாறு ஒரு தூண்டியிலிருந்து மற்றொரு தூண்டிக்கு துலங்களை மாற்றுதல் தூண்டியின் பரவல் என அழைக்கப்படும். பின்வரும் வரைப்படம் இதனை அழகுற எடுத்துக்காட்டுகின்றது.
மணியொலி (CS)
உமிழ் நீர்(CR)
ஒலி(CS)
பயிற்சியின் பின்னர்
ஒலி (CS)-
------உமிழ் நீர் சுரத்தல்(CR) உணவுப் பொருட்கள் உண்மையிலே வாய்க்குள் போடுவதற்கு முன்னோ அல்லது போடாமல் இருக்கும் போதோ உமிழ்நீர் சுரக்கப்படலாம்.
நாம் ஏற்கனவே அறிந்ததைப் போல, உணவைக் கண்ணால் காண் பதாலோ அதன் வாசனையை முகர்வதாலோ கூட, சில நேரங்களில் உமிழ்நீர் சுரந்து விடுவதைப் பார்க்கிறோம், சில காட்சிகளை அல்லது சில வாசனைகளை நாம் சில உணவுப்பொருட்களோடு இணைத்து எண்ணுவதற்குக் கற்றுக்கொண்டுள்ளோம். 'கற்றுக்கொள்ளுதல்' என்றால் என்ன பொருள்? பால்லோவ் ஆராய்ச்சிக்குட்படுத்திய ஒரு நாய், குறிப்பிட்ட நேரத்திற் கொருமுறை உணவருந்தியது; உணவு அருந்துவதற்கு முன்னால் மணியடிக்கப்பட்டது. எனவே மணியடித்தவுடனே வரும் உணவை உட்கொள்ளும் பழக்கத்திற்கு நாய் ஆட்படுத்தப்பட்டது. அதன்பின், மணியோசை கேட்ட அளவிலேயே நாயின் உமிழ்நீர் சுரக்க ஆரம்பித்தது கண்டுபிடிக்கப்பட்டது. சோதனையால் உண்டு பண்ணப்பட்ட
13

நிலைமைகளுக்கு இணங்க, நாயின் உணர்வு, மணி ஓசைக்கேற்ப மாறிக் கொண்டுள்ளது. அடுத்த கட்ட ஆய்வில், மணியடிக்கப்பட்டது ஆனால் நாய்க்கு உணவு ஏதும் தரப்படவில்லை. இச் சோதனையைத் தொடர்ந்து செய்தபோது - மணியடிக்கப்பட்ட பின்னும் உணவு ஏதும் தராதபோது - நாயின் உமிழ்நீர் சுரத்தல், நின்றுபோனது. அது தடுக்கப்பட்டுவிட்டது. அதாவது, மாறிய புதிய நிலைமைகளுக்கு ஏற்ப, தூண்டுதலும் மாறிவிட்டது; இதற்கு முந்தைய நிலைமையில் ஏற்பட்ட செயல்கள் தடை செய்யப்பட்டன. மேலும் பால்லோவ், மூளையின் புறப்பகுதி (Cortex) சரியாக வேலைசெய்யாதபோது, இத்தகைய இச்சைச் செயல்கள், நடைபெறாது எனவும் கண்டுபிடித்தார்.
ஒரு குறிப்பிட்ட விலங்கின் இச்சைச் செயல்கள், அனிச்சைச் செயல்கள் ஆகிய இரண்டும் அகவயக் குறியீடுகளாக உள்ளன. இந்தக் குறியீடுகளின் மூலமாகவே இவை புறவுலகின் மீது செயல்படுகின்றன. இதைத்தான் பாவ்லோவ் முதல் அடையாளக் குறியீட்டு அமைப்பு (First signalling System) என்கிறார். விலங்குகளைப் பொறுத்த மட்டில் உள்ள இந்த அடையாளக் குறியீட்டு அமைப்பு முறையின் வளர்ச்சி, அந்த விலங்குகளின் பரிணாம வளர்ச்சி அளவிற்கு ஏற்றாற்போன்று கூடியும் குறைந்தும் காணப்படும். மனிதனிடத்தில், இந்த அகவயக் குறியீடுகள். முழுமையும் புதிய செயல்களுக்கான அடிப்படையை உண்டுபண்ணும் அளவிற்கு விரிவடைந்து கூட்டுக் கலப்பாக்கிவிடுகின்றன. இதை இரண்டாம் குறியீட்டு அமைப்பு முறை (second signling system) என்பர்."
பவ்லோவின் மாணவர்கள் இது குறித்து பல ஆராய்ச்சிகள் மேற் கொண்டார் கள். அவற்றுள் முக்கியமானதொன்று ஒரு குழந்தையின் விரல் மீது மின்சாரம் பாய்ச்சப்பட்ட செய்யப்பட்ட பரிசோதனையாகும். முதலில் மின்சாரம் பாய்ச்சப்பட்ட போது குழந்தை விரலை இழுத்துக் கொண்டது. பின் மின்சாரம் பாய்ச்சப்பட்ட போது மணி ஒலிக்கப்பட்டது. இச் சந்தர்ப்பத்தில் மணி ஒலிக்கப் பட்டதும் குழந்தை விரலை இழுத்துக் கொள்கின்றது. மணி என்ற சொல்லை உச்சரித்து மின்சாரம் பாய்ச்சப்பட்டு பின் மணி என்ற சொல்லை கேட்டதுமே விரலை இழுத்துக் கொண்டது. இறுதியாக அட்டை ஒன்றில் மணி என எழுதி அதனை காட்டிய போது மின்சாரம் பாய்ச்சப்பட்டது. பின் மணி என்ற சொல்லட்டையைக் கண்டவுடனே கையை இழுத்துக் கொண்டது. இவ்வாறு வெவ்வேறு தூண்டிகளுக்கு இவ் வகையான பரிசோதனைகளின் மூலமாக தூண்டுதலானது புலன் உறுப்புகளின் மீது செயற்படும் புறவுலக இயல்பான தூண்டுதல்கள் மட்டுமல்ல, புலன் உறுப்புக்களின் மீது செயற்படும் அக உணர்வு கொண்ட
அகவிழி (மார்ச் 2013

Page 16
செயற்கையான ஓசை தரும் தூண்டுதல்களாகவும் அமைகின்றது.
இவ்வாறான ஆராய்ச்சியினூடாகவும் பரிசோதனைகளின் மூலமாகவும் பவ்லோவ் வயிற்று சுரப்பிகளுக்கும் மூளைக்கும் இடையிலான தொடர்பு குறித்து ஆராய தலைப்பட்டார். அவரது ஆராய்ச்சிகள் விஞ்ஞானத்தின் துணைக் கொண்டு புறவுலக யதார்த்த்தை உயிரியல் துறையில் விளங்கியமையே பவ்லோவின் முக்கிய பங்களிப்புகளில் ஒன்றாகும்.
தவறான தத்துவத்தால் வழி நடத்தப்படாத அறிவியல் அறிஞர் களையும் பொருள் முதல் வாதிகளையும் பொறுத்தமட்டில் உணர்வு (Sensations) என்பது நம் தன்னறிவிற்கும் (Conscious) புறநிலை உலகிற்கும் இடையிலான நேரடி உறவாகும்; உணர்வு என்பது புறநிலை தூண்டுதல் சக்தி மனிதனின் தன்னறிவிற்கு மாறிச் செல்வதாகும். (லெனின் தொகுப்பு நூல்கள் 14 : 51)
இதனை பவ்லோவின் ஆய்வு முடிவுகள் தர்க்க ரீதியான ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டியுள்ளன. இத்தகைய மகத்தான பங்களிப்பினை மனித குலத்திற்கு வழங்கியமையால் உழைக்கும் மக்களும் அதன் நேச சக்திகளும் அவரை வரவேற்றனர். அவரது ஆராய்ச்சிகள் உழைக்கும் மக்கள் திரளினரின் விடுதலைப் போராட்டத்திற்கான வழிகாட்டல் தத்துவமாக விளங்கின.
இது இவ்வாறிருக்க பவ்லோவின் கோட்பாடும் தத்துவமும் தொடர்பிலும் பல விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக பவ்லோவை மாக்ஸியத்தின் விரோதியாக காட்ட முனைந்த வரட்டு மார்ஸியர் சிலர் பின்வரும் விடயத்தை தமக்கு சாதகமாக தூக்கி பிடித்தனர்.
பாட்டாளி வர்க்கம் பாராள முடியும் என்பதில் பாவ்லோவுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. சிறப்பான எதிர்காலத்தை, அது மனித குலத்திற்கு அளிக்கமுடியும் என்பதில், அவர் நம்பிக்கை கொள்ளவில்லை. ஆராய்ச்சி சாலைக்குள்ளேயே அவர் இருந்தார். தொழிலாளி வர்க்கத்தின் வீரப் போராட்டத்தையோ, அதன் வெற்றியையோ, அதன் நிர்மாண வேலையையோ அவர் பார்க்கவில்லை; பார்க்கவேண்டும் என்ற விருப்பமும் அவருக்கில்லை. சோவியத் சர்க்காரை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இக் கருத்தை அவர் மூடி மறைக்கவும் இல்லை. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் மீது தனக்குள்ள வெறுப்பைக் காட்டுவதற்கான எல்லாவற்றையும் அவர் செய்தார்.
கடவுள் என்ற கருத்தை எதிர்க்கும் மனோபாவமுள்ள பொருள் முதல்வாதியான அவர், மாதா கோவிலுக்குப் போகத்தொடங்கினார். மாதா கோவிலைக் கண்ட
அகவிழி | மார்ச் 2013

6ெ0
மாத்திரத்தில் தன்மீது சிலுவை அடையாளம் செய்து வணங்கினார். வழிபாடு நடக்கும் மாதா கோவிலாக இருந்தாலும் சரி, அல்லது, மாதா கோவிலாக இருந்து பின்னால் தொழிலாளிகளின் "கிளப்' அல்லது காட்சி சாலையாக மாற்றப்பட்டிருப்பினும் சரி , அவர் அஞ்சலி செய்தார். தனது இலக்கிய சிருஷ்டியை அவர் கடவுளுக்குச் சமர்ப்பித்தார். சோவியத் பல்கலைக்கழகங்களில் சொற்பொழிவாற்ற அவர் மறுத்தார். எவையெல்லாம் தொழிலாளிகள் விவசாயிகள் சர்காருக்கு அவமரியாதை என்று கருதினாரோ, அவற்றைச் செய்வதில் முனைந்தார். எனினும் அவர் விஞ்ஞான ஆராய்ச்சியை நிறுத்தவே இல்லை. -- காலப்போக்கில் அவரது விஞ்ஞான ஆய்வுகளின் மூலம் ஏற்பட்ட அனுபவத்தின் ஊடாக விஞ்ஞானம் குறித்து மட்டுமல்ல, சமூகம் பொறுத்தும் அவரது பார்வை தெளிவாக்கியது. இத்தகைய விஞ்ஞான ஆய்வுகள் - ஜெர்மனிய பாஸிஸ்ட்டுகளை ஆத்திரம் கொள்ளச் செய்ததுடன் அதற்கு எதிரான மனித படுகொலைகளையும் செய்தனர். இத்தகைய செயல்கள் குறித்து அவர் "'மனித நாகரீகத்தின் ''6 மீது மனித குரங்குகள் நடாத்தும் படையெடுப்பே பாஸியம் என சரியாகவே வரையறை செய்தார்.
மேலும் விஞ்ஞானம் சமூக வாழ்வில் எத்தகைய முக்கியமான பாத்திரத்தை வகிக்கின்றது என்பது குறித்து, அவரது சொந்த ஊரான நியாசனிலிருந்து வந்திருந்த காட்டுப் பண்ணை விவசாயிகளிடம் அவர் கூறிய கருத்து முக்கியமானதாகும். “விஞ்ஞானம், வாழ்க்கையிலிருந்து விலகி நின்றதுண்டு, மக்களிடமிருந்து தனித்திருந்ததுண்டு. நான் இப்பொழுது காண்பது வேறு; நாட்டு மக்கள் அனைவரும் விஞ்ஞானத்தை மதிக்கிறார்கள் பாராட்டு கிறார்கள். உலகில் இக்காரியத்தைச் செய்துள்ள ஒரே சர்க்காரை - எனது சர்க்காரை நான் வாழ்த்துகிறேன்.” 7
உலகின் படைப்புகள் யாவும் மனித அறிவுக்கு அப்பாற்பட்டது என்ற தத்துவத்தினால் கருத்து முதல் வாதிகள் மனிதனின் சிந்தனையை ஊனப்படுத்தியுள்ளனர். மூளைக்கான வேலையின் அளவை குறைத்ததுடன் சிக்கலான பிரச்சினைக்கான தீர்வை கற்பனையில் முன் வைத்தனர். ஒரு வகையில் கருத்து முதல் வாதமானது மனித குலத்தின் வரலாற்றினை பின்நோக்கி தள்ளியதுடன் அதிகார சார்பானதாக மாறி கோடானகோடி உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கு பயன்பட்டுவந்துள்ளது. இந்த சூழலில் மனிதன் தன்னை தானே தெரிந்து கொள்வதற்கான விஞ்ஞான ஆய்வொன்றினை முன் வைத்ததன் மூலமாக மனித குலத்தின் மகத்தான மருந்தாக திகழ கூடிய பெருமை பவ்லோவுக்கு கிடைத்தது. அவர் விலங்குகளில் செய்யப்பட்ட இந்த ஆராய்ச்சி நியதிகளை
ான்
- 14

Page 17
மனித இனத்திற்கு பொருத்தி பார்த்து கருத்து தெரிவிக்க முற்படுகின்ற சந்தர்ப்பத்தில் மரணம் அடைந்தமை உயிரியல் ஆய்வுலகில் ஏற்பட்ட பேரிழப்பாகும். இந்த பின்னணியில் இவரது கோட்பாடுகள், ஆய்வுகள் கடும் தாக்குதல்களுக்கு உட்பட்டன. மாறாக அறிவியல் உலகம்
அவரது ஆய்வுகளை வரவேற்றன.
அடிக்குறிப்புகள்
1.
தாம்ஸன் ஜார்ஜ் (1990) மனித சமூகசாரம், சென்னை புக்
ஹவுஸ் (பி) லிட். சென்னை, பக். 1, 2 அதே நூல் பக். 83,84
மார்க்ஸ், ஏங்கல்ஸ் தேர்தெடுக்க்பட்ட நூல்கள் 3.346, லெனின் தொகுப்பு நூல்கள்
கல்வி அமைச்சி
தேசிய கல்விக் கொள்கையினை வகுத்தல் மற்று ஆணைக்குழுவுக்கு பரிந்துரைகள் உட்பட மீட்டல் அமைய தேசிய கல்விக் கொள்கையின் பிரயோக ர தேசிய நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கு இணங் மேற்பார்வை, முன்னேற்றங்கள், மீளாய்வுகள் மற்றும் மத் கல்வி அபிவிருத்திக்காக இருதரப்பு மற்றும் பல்தரப்பு ( அமைப்புக்களுடனான ஒத்துழைப்புக்களையும் பேணல். பொதுக் கல்வியின் தரத்தினைத் தீர்மானித்தல் மற்றும் அத் முன்னெடுத்தலும், பாடசாலை மற்றும் ஏனைய கல்வி நிறு பொதுக் கல்வி, ஆசிரிய கல்வி, விசேட கல்வி மற்றும் பிரி மற்றும் மதிப்பீடுகள். கல்வி விருத்திக்காக ஆராய்ச்சித் துறையினை இனங்கண் கல்விச் செயற்பாடுகளுக்காக பயன்மிக்கதாக மாற்றியடை தேசிய மட்டத்திலான சான்றிதழ் பரீட்சை, பாடப் பரீட்சை மதிப்பீட்டு முறைகளை முன்னெடுத்தலும் மீளாய்வுக்கு உ பலம்பொருந்திய கல்விப் பண்புசார் செயற்பாடுகளுக்குத் கல்வி அமைச்சின் கீழுள்ள நிறுவனங்கள் மற்றும் தேசிய பா கல்வி முகாமைத்துவம் மற்றும் வேலைத்திட்டங்களை அமுல் ஆலோசனைகளை வழங்குதல், இணைப்புக்கள் மற்றும் வெளிநாட்டு உதவி பெறும் செயற்றிட்டங்களை அமுல்படு கற்றல் உதவிக் கல்விக் கட்டிடங்கள் மற்றும் உபகரணங்கள் திட்டமிடல் அபிவிருத்திகளும். பாடநூல், சீருடைத் துணிகள் மற்றும் தேசிய மட்டத்தில் வ கல்வி விடயத்துறையின் கீழ் சகல மூலதனச் செலவி நிறுவனங்களின் மீண்டெழும் செலவினங்களையும் மதிப்பு முகாமைத்துவ முறைமையில் அமுல்படுத்தல். கல்வித்துறையின் கீழுள்ள சகல சேவைகளினதும் பிராம மற்றும் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் சிறந்த உ
| 15

--- 4..
தாம்ஸன் ஜார்ஜ் (1990) மனித சமூகசாரம், சென்னை புக்
ஹவுஸ் (பி) லிட். சென்னை, பக். 27. ஜூலியஸ் பூசிக் (1997), வீரநினைவுகள், நியூ செஞ்சரி புக் ஹவுஸ் பிரைவேட் லிட். சென்னை பக். 36. அதே நூல் பக். 38.
7..
அதே நூல் பக். 38.
பயன்பட்ட ஆங்கில நூல்
Ivan P. Pavlov,( 1994), Psychopathology And Psychiatry Transaction, Publishers New Brunswick (U.Sa) And London (Uk).
சின் பொறுப்புக்கள்
ம் நவீன மயப்படுத்துவது தொடர்பாக தேசிய கல்வி களை வழங்கி கல்வியின் விரிவான நோக்கங்களுக்கு ரீதியிலான பயன்பாடுகளை முன்னெடுத்தல்.
க கல்வியின் செயற்பாட்டுத் திட்டமிடல்கள், அமுல்படுத்தல், திப்பீடுகளை மேற்கொள்ளல். வெளிநாட்டு உறவினைப் பேணல், வலய மற்றும் சர்வதேச
தரங்களினைப் பேணுவதற்காகத் தேவையான செயற்பாடுகளை பவனங்களின் ஆக்கத்திறன் செயற்பாடுகளை விருத்திசெய்தல். வெனாக் கல்விக்குரிய பாடவிதான விருத்தியின் அமுல்படுத்தல்
வடு ஆராய்ச்சிகளை நடாத்தல் மற்றும் அதன் பெறுபேறுகளை மத்தல். ச மற்றும் பொது விவேகப் பரீட்சைகளுக்காக பொருத்தமான உட்படுத்தலும்.
தேவையான மனிதவள விருத்தி. டசாலைகளின் முகாமைத்துவமும் செயற்சாதனை மதிப்பீடுகளும். Dபடுத்துவது தொடர்பாக மாகாணக் கல்விப் பொறுப்பாளர்களுக்கு
மீளாய்வுகள். இத்தல் மற்றும் மேற்பார்வைகள். களுக்கான மதிப்பீடுகள் உட்பட தரத்தினை உறுதிப்படுத்தலும்,
ழங்க வேண்டிய சேவைகள் உட்பட பொருட்களை வழங்குதல். னங்களும் கல்வி அமைச்சு மற்றும் அமைச்சின் கீழுள்ள பீட்டுக்கு உட்படுத்தலும், நிதி ஒதுக்கீடுகளை கிரமமாக நிதி
ணக் குறிப்பு நிர்வாகச் செயற்பாடுகளுக்காக கல்வி அமைச்சு ள்ளக நிர்வாகச் செயற்பாடுகளை முன்னெடுத்தல்.
அகவிழி மார்ச் 2013

Page 18
பாடசாலைகளி அனர்த்த முகாமைத்து6
M.M. ஹிர்பஹான் SLPS, B.A., P.G.D.E. (Merit), D.C.Sc. (Merit) ,
இயற்கை எமக்கு வழங்கிய கொடைகளை மனிதர்கள் தங்களின் சுயநலங்களுக்காக அழித்துவருகின்றனர். விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும், மனிதர்களின் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்வதன் காரணமாகவும் பாதுகாக்கப் படவேண்டிய இயற்கை வளங்களான நிலம், நீர், காற்று என்பன மாசுபடுத்தப்படுகின்றன. காடுகள் அழிக்கப் படுகின்றன. இதன்காரணமாக ஓசோன் படலம் தாக்கத்துக் குள்ளாகி பூமி வெப்பமடைவதன் காரணமாக சடுதியான காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டு பூமி மனிதன் வாழ்வதற்கு பொருத்தமற்ற இடமாக மாறிக்கொண்டு வருகின்றது. இதன்காரணமாக எதிர்பாராத விதமாக இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டு பாரிய அழிவுகள் ஏற்படுகின்றன. அது மாத்திரமல்லாமல் மனிதனின் கவனயீனம், அவசரம், பொறுப்பற்ற செயற்பாடுகள், போதை பொருள் பாவனை, போன்றவற்றால் செயற்கை முறையிலும் பல்வேறுபட்ட விபத்துக்களையும், அனர்த்தங்களையும் இன்று மனிதன் சந்திக்கவேண்டியள்ளது. இதனால் உயிரிழப்புக்கள், சொத்துக்கள் அழிதல் போன்றன இடம்பெறுகின்றன. எனவே இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படுகின்றபோது
அதிலிருந்து தம்மை காத்துக் கொள்வதற்காகவும், அதிலிருந்து தன்னை மீளவும் பழைய நிலைக்கு தயார்படுத்திக் கொள்வதன் நோக்காகக்கொண்டும் இன்று அனர்த்த முகாமைத்துவக் கல்வியின் அவசியம் உணரப் பட்டு அது பாடசாலை மட்டத்தில் அமுல் படுத்தப்படுவதன் தேவையையும், முக்கியத்துவத்தையும் உணர்ந்து இன்று பாடசாலை மட்டத்தில் அமுல்படுத்த வலியுறுத்தப்படுகின்றது.
இயற்கையின் பஞ்ச பூதங்களில் ஏற்படும் திடீர் மாற்றங்களின் போது அனர்த்தங்கள் ஏற்படுகின்றன. இடி, மின்னல் தாக்கம் , காற்று , மழை, வெள்ளம், என்பவற்றால் பேரழிவுகள் ஏற்படுகின்றன. மண்சரிவு, சூறாவளி, பூமியதிர்ச்சி, எரிமலை, சுனாமி போன்ற இயற்கை அழிவுகள் எம்மை வந்தடைகின்றன. அதுமாத்திரமல்லாமல் எதிர்பாரத விபத்துக்கள், உயிர் கொல்லி நோய்கள் தீ விபத்துக்கள் என்பனவும் ஏற்படுகின்றன. இவ்வாறான அனர்த்தங்களில் இருந்து பாதுகாப்புப்பெறும் நோக்கிலும், இது தொடர்பான அறிவூட்டும் நோக்கிலும் 2004 ஆம் ஆண்டு சுனாமிக்குப் பின்னர் இலங்கையில் இவ்வாறதொரு
அகவிழி ( மார்ச் 2013

வக் கல்வி
M.Ed.
பாதுகாப்புத்திட்டம் கொண்டு வரப்பட்டிருப்பது மிகவும்
வரவேற்கத்தக்க விடயமாகும்.
சுனாமிக்குப் பின்னராக இலங்கைப் பாதுகாப்பில் அனர்த்தப்பாதுகாப்பு என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகவே காணப்படுகின்றது. ஏனெனில் எமக்கு ஒரு புதிய அனுபவத்தை ஏற்படுத்திய 2004 டிசம்பர் 26 ம் திகதி ஏற்பட்ட அந்த நிகழ்வை எம்மால் மறக்க முடியாது. அவ்வாறான ஒரு சம்பவம் ஏற்படுகின்ற போது எமது பாதுகாப்புக்கு நாமே உத்தரவாதம் ஏற்படுத்திக் கொள் வதற்காக இத்திட்டம் இன்று பரவலாக முக்கியத்துவம் கொடுத்துப் பேசப்படுகின்றது.
எந்த ஒரு விடயத்தையும் இலகுவாக முன்னெடுத்துச் செல்வதற்கும் கற்பிப்பதற்கும், பரப்புவதற்கும் ஏற்ற இடம் பாடசாலையாகும். புதிய மாற்றங்களை, புதிய திட்டங்களை சமூகத்துக்கு துரிதமாகக் கொண்டு செல்லும் ஊடகம் பாடசாலை என்றால் மிகையாகாது. சமூகத்தில் அனர்த்தம் தொடர் பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கு பாடசாலைக் கட்டமைப்பு உதவுகின்றது. அதுமாத்திர மல்லாமல் அனர்த்தங்களினால் அதிகம் பாதிப்புக் குள்ளகின்றவர்கள் மாணவர்கள் என்பதனாலும், பாட சாலைகளில் கற்கின்ற மாணவர்கள் சமூகத்தில் காணப் படும் குடும்பங்களின் அங்கத்தவர்கள் என்பதனாலும் பாடசாலைகளில் இது சம்பந்தமான கருத்துக்களை வலியுறுத்துவதும், மாணவர்களை இவ்வாறான அனர்த்தங் களால் ஏற்படும் சவால்களையும், அழிவுகளையும் எதிர்கொள்ளக் கூடியவர்களாக பயிற்றுவிப்பதும் அவசிய மாகவுள்ளதால் பாடசாலைக் கல்வியோடு அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான கல்வி இணைத்துப் பார்க்கப்படுகின்றது.
அனர்த்தங்கள் இரண்டு வகையில் ஏற்படுகின்றது. இயற்கை அனர்த்தங்கள், மனிதர்களால் ஏற்படுத்தப்படுகின்ற அனர்த்தங்கள் எனப் பிரித்துப் பார்க்கப்படுகின்றது.
இயற்கை அனர்த்தம்
வெள்ளப் பெருக்கு புவி நடுக்கம்
16

Page 19
மண்சரிவு சூறாவளி சுனாமி
வரட்சி
எரிமலை போன்றன
மனிதர்களால்,ஏற்படுத்தப்படுகின்ற அனர்த்தங்கள்
வாகன விபத்துக்கள் இரசாயனப் பொருட்களின் பாவனை உயிரியல் ரீதியானது அணுத் தொழில்நுட்பம் தொடர்பானது தொற்று நோய் கலவரம் தீ விபத்து உயிர் கொல்லி நோய்களின் பாதிப்பு மிருகங்களினால் ஏற்படும் பாதிப்பு போன்றன
அனர்த்தங்கள் ஏற்படும் போது பல்வேறுவகையான பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. அவற்றை பின்வருமாறு வகைப்படுத்தலாம்,
பௌதீகப் பொருட்கள் மீதான பாதிப்பு தொழில் நுட்பரீதியான பாதிப்பு சூழலியல் பாதிப்பு பொருளாதார ரீதியான பாதிப்பு சமூகரீதியான பாதிப்பு
அரசியல்ரீதியான பாதிப்பு
17

கலசாரரீதியான பாதிப்பு கல்விசார் பாதிப்பு மனப்பாங்குரீதியான பாதிப்பு இவ்வாறான அனர்த்தங்களில் இருந்து இளம் சிறார்களைப் பாதுகாத்தல் அல்லது தாக்கங்களைக் குறைத்தல் அல்லது பாதிப்பிலிருந்து விடுவித்தல் என்ற நோக்கத்தினை கொண்டு பிள்ளைகளின் நல்வாழ்வினையும், பாதுகாப்பினையும் உறுதி செய்கின்ற வகையில் சகல பாடசாலைகளிலும் இவற்றைக் கொண்டுவரும் நோக்குடன் 2005 ஆம் ஆண்டில் அனர்த்த முகாமைத்துவச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
நாட்டில் பல்வேறு வகையான அனர்த்தங்கள் ஏற்படுகின்றன. வெள்ளப் பெருக்கு, மண்சரிவு, சூறாவளி, சுனாமி, மின்னல் தாக்கம், தீ விபத்து , வாகன விபத்து, நில நடுக்கம், மிருகங்களின் தாக்கம், உயிர் கொல்லி நோய்களின் பாதிப்பு, ஏற்படுகின்ற வேளைகளிலும், அதன் பின்னரான கால கட்டங்களிலும் இடர்களுக்கு ஈடு கொடுக்கக்கூடியவாறான சமுதாயத்தை கட்டி எழுப்பி அதன் ஊடாக, ஏற்படக்கூடிய சேதங்களைத் தடுப்பதும், தவிர்ப்பதும், அவசியம். அதற்கான சிறந்த வழி அனர்த்தங்கள் தொடர்பான கல்வியை வழங்கி அது தொடர்பான விழிப்புணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்த வேண்டும். அதற்காக கல்வி உலகத்தின் பங்களிப்பினை பெற்றுக்கொள்வது சிறந்த வழியாகக் காணப்படுகின்றது.
எனவேதான் பாடசாலைகளில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இது தொடர்பான கல்வியை வழங்குவது சிறந்த பயனைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. காரணம் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் முதல்தர முகவராக ஆசிரியர்கள் தொழில்படுவதும், பாடசாலைகளில் அறிவுதிறன் மனப்பாங்கு விருத்தியை வளர்த்துக்கொள்ளும் மாணவர்கள் அக்குடும்பத்தின் அங்கத்தவர்களாகக் காணப்படுவதும் சமூகத்தின் நிலையான பாதுகாப்புக்கு வித்திட வழிவகுக்கும். இதற்கு பாடசாலை மட்டத்தில் அமுல்படுத்தப்படும் அனர்த்த முகாமைத்துவக் கல்விச் செயன்முறைச் செயற்றிட்டம் உதவுகின்றது.
இன்று நாடுபூராவுமுள்ள அனேகமான பாடசாலைகளில் அனர்த்தப் பாதுகாப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டு அதற்கு பயிற்சிகளும், விழிப்புணர்வுப் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாறான குழுக்கள் பாடசாலைச் சூழலில் ஏற்படுகின்ற இடையூறுகள், அதிக பாதிப்பினை ஏற்படுத்தும் இடம், போன்றவற்றினை பகுப்பாய்வு செய்து பாதுகாப்பான இடங்கள், மற்றும் அனர்த்தங்களின் போது பாதுகாப்பாக வெளியேறக்கூடிய வழிகளைக் காட்டுகின்ற பாடசாலையினதும், கிராமத்தினதும் வரைபடங்களை காட்சிப்படுத்த வேண்டும்.
அகவிழி (மார்ச் 2013

Page 20
அவசர நிலைகளின்போது சகல சமூகத்தினதும் ஒத்துழைப்புடன் பாடசாலைச் சமூகத்தை எல்வாறு பாதுகப்பாக வைத்திருந்து வெளியேற்றுவது போன்ற பாவனைப் பயிற்சிகளின் ஊடாக மனித உயிர்களைப் பாதுகாப்பதற்கும் இச்செயற்றிடமும், பாடசாலை அனர்த்த முகாமைத்துவக் குழுக்களும் வழிவகை செய்கின்றது.
அதுமாத்திரமல்லாமல் தற்காலத்தில் அனர்த்தங்கள் அவசரகால நிலமைகளின்போது பாதிக்கப்படும் பிரதேச மக்களின் புகலிடமாக பாடசாலைகள் மாறிவருகின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் பாடசாலை மட்டத்திலான அனர்த்த முகாமைக் குழுவினர் அவர்களை பாதுகாப்பதும் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் வசதிகளையும் செய்து கொடுக்கவேண்டிய கடப்பாடுடையவர்களாக மாறுகின்றனர். இச்சந்தர்ப்பத்தில் அப்பாடசாலையின் அதிபர் இந் நிலைமையை எதிர்கொள்வதற்காக பல்வேறு செயற்பாடுகளை செய்யவேண்டியுள்ளது அந்தவகையில்.
அனர்த்த முகாமைத்துவக் காரியாலயமொன்றை அமைத்தல் காரியாலயத்தில் நம்பிக்கைவாய்ந்த தியாக மனப் பான்மையுள்ள ஒருவரை பொறுப்பாக்குதல் பாடசாலையில் உள்ள அனர்த்த முகாமைத்துவக் குழுவினர்க்கு பின் வரும் பொறுப்புக்களை பகிர்ந்தளித்தல் உள்ளீடுகளைப்பதியும் குழு வெளியீடுகளைப்பதியும் குழு
பாதுகாப்புக்குரிய குழு
நீர்வழங்கல் குழு உணவு வழங்கல் குழு
தகவல் பதிதல் ஒழுங்கு படுத்தல் குழு
மருத்துவக் குழு வலது குறைந்தோர் கண்காணிப்புக் குழு
பொதுவான பேச்சாளர் ஒருவர்
மேற்பார்வைக் குழு எனப் பிரித்து வழங்கவேண்யுள்ளது. இதனை சிறப்பாக செய்வதற்கு பாடசாலை மட்டத்திலான செயற்பாட்டுரீதியான அனர்த்த முகாமைத்துவ கற்கையும், அனர்த்த முகாமைத்துவக் குழுவும் மிகவும் இன்றியமையாத ஒன்றாகவுள்ளது.
இன்று அனைத்து மாவட்டங்களிலுமுள்ள பாடசாலை களில் கற்கின்ற அனைத்து மாணவர்களினதும் அனர்த்த ரீதியான பாதுகாப்பினை வழங்கும் வகையில் பாடசாலை அனர்த்தப் பாதுகாப்புக்கான தேசிய வழிகாட்டி எனும் நூலினை கல்வி அமைச்சு சமூக இசைவுக்கான கல்வி
அகவிழி (மார்ச் 2013

நிகழ்ச்சித் திட்டத்தினூடாக வெளியிட்டுள்ளது. அது மாத்திரமல்லாமல் இலங்கை ஜேர்மன் அபிவிருத்தி ஒத்துழைப்பகத்தின் மிஹிணு அனுசரனையுடன் நடைமுறைப் படுத்தப்பட்டு வருவதுடன், தேசிய கல்வி நிறுவகம், அனர்த்த முகாமைத்துவ நிலையம், மற்றும் மனித உரிமைக்கான அமைச்சு, ஆசிய அனர்த்தத் தயார் நிலையம் பாங்கொக் என்பனவும் இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன.
பாடசாலை மாணவர்களின் கற்றலூடாக பாடசாலை அனர்த்தப்பாதுகாப்புத் திட்டத்தினை ஏற்படுத்தி அவசரகால செயற்பாட்டினூடாக அனர்த்தங்களைத் தடுக்கும் வகையிலும், எந்தவிதமான அனர்த்தங்களையும் எதிர் கொள்ளும் வகையிலும் இத்திட்டம் முழுமையான அணுகு முறைகளை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது. குறிப்பாக பாடசாலைகளில் அல்லது பாடசாலைச் சூழலில் ஏற்படக்கூடிய அவசர நிலமைகளை சமாளித்து அதற் கேற்றவாறு துலங்கல்களை மேற்கொண்டு தடுக்கவும், குறைக்கவும் செயற்படுகளை மேற்கொள்ள உதவுகின்றது. இத்திட்டத்தின் முலம் வழங்கப்படும் செய்முறைப் பயிற்சிகள் அனைத்துப் பாடசாலைகளிலும் அமுல்படுத்தப் படும்போது இன்னும் பயன்மிக்கதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இத்திட்டத்தின் முக்கியத்துவம் உணரப்பட்டமையினால் கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து பாடசாலைக் கலைத் திட்டத்தில் அனர்த்தம் தொடர்பான விடயங்களை விஞ்ஞானம், வாழ்கைத் தேர்ச்சியும் குடியுரிமைக் கல்வியும், புவியியல், குடியியலும் மக்களாட்சியும் என்கின்ற பாடங்களினூடாக இதனது செயற்பாடுகளை ஒருங்கிணைத்து இது தொடர்பான பயிற்சிகளும் வழங்கப் பட்டு வருகின்றன. இன்று தேசிய கல்விக் கல்லூரிகளில் அனர்த்த முகாமைத்துவத்திற்கான கற்கைகள் உருவாக்கப் பட்டுள்ள நிலையில் அனர்த்த இடர்முகாமைத்துவம் பற்றிய அடிப்படை அறிவு பற்றிய பாடநெறி 2008 ஆம் ஆண்டிலிருந்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குவைரறு % ல 'தா,
- ஆகவே பாடசாலை மாணவர்களுக்கு செயற்பாட்டு ரீதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் இத்திட்டமானது, எதிர்காலத்தில் எவ்விதமான இடையூறுகளில் இருந்தும் தன்னையும் தனது குடும்பத்தினையும், தனது சமூகத் தினையும் பாதுகாப்பதற்கான திறன்களை பெற்றுக்கொள்ள மாணவர் களுக்கு உதவுவதுடன், தலைமைத்துவக் கட்டுப்பாட்டுக்கமைவாக இயங்கும் ஒரு அனர்த்த முகாமைத்துவ அமைப்பின் உருவாக்கத்திற்கும் வழி வகுக்கின்றது. எனவே இடர், அழிவுகளிலிருந்து எம்மையும் எமது சமூகத்தையும் பாதுகாப்பதற்காக எமது மாணவர் சமூகத்தை தயார்படுத்தி நாம் பாதுகாப்பு பெறவும், மற்றவர்களுக்கு உதவவும் எம்மை அர்ப்பணிப்போம்.
18

Page 21
பத்தொன்பதாம் நூ தென்னிந்திய யாழ்ப்பு கலாச்சார ஊடாட்டம் - அமெரிக்க
எஸ். ஜெபநேசன்
சென்ற இதழின் தொடர்ச்சி....
கிறிஸ்தவ வேதாகம மொழிபெயர்ப்பு
தென்னிந்தியாவிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் கல்விசார் ஊடாட்டங்களுக்குக் காரணமாய் அமைந்த இன்னொரு முக்கியமான விடயமாக இருந்தது கிறிஸ்தவ வேதாகம மொழிபெயர்ப்பாகும். ஒரு காலகட்டத்தில் மொழிபெயர்ப்பு வேலை யாழ்ப்பாண மிஷனரிமாரிடமும், யாழ்ப்பாண அறிஞர்களிடமும் ஒப்படைக்கப்பட்டது. கிறிஸ்தவ வேதாகமமானது வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு நாட்டினராலும் அறிஞர்களினாலும் மொழி பெயர்க்கப்பட்டது. முதன் முதலாக 1715ஆம் ஆண்டு தரங்கம்பாடியில் பணியாற்றிய சீகன்பால்கு என்ற ஜெர்மன் தொண்டர் வேதாகமத்தின் சில பாகங்களை தமிழில் மொழிபெயர்த்து அச்சு வாகனம் ஏற்றினார். புதிய ஏற்பாடு முழுவதையும் முதன் முதலாக மொழிபெயர்த்து அச்சு வாகனமேற்றிய பெருமை இவருக்குரியது. 1728 இல் தரங்கம்பாடியில் பணியாற்றி வந்த சூல்ட்ஸ் என்பவர் பழைய ஏற்பாட்டையும் மொழிபெயர்த்து அச்சுவாகனம் ஏற்றினார். 1759ஆம் ஆண்டில் இலங்கையை ஆண்ட ஒல்லாந்தர் புதிய ஏற்ப்பாட்டினை மொழிபெயர்த்து அச்சுவாகனம் ஏற்றினர். ஒல்லாந்தர் கால மொழி பெயர்ப்புக்குப் பொறுப்பாயிருந்தவர் பிலிப் டீ, மெல்லோ என்ற மத போதகர். இவர் கொழும்புச் செட்டி என்ற சாகித்தியத்தைச் சேர்ந்தவர். இந்த மொழிபெயர்ப்பு நூலில், ஒல்லாந்தருடைய கிறிஸ் தவம் நிலை பெறாததனைப் போலவே மக்கள் மத்தியில் நிலை பெறாமற் போயிற்று. இந்த மொழிபெயர்ப்பிலுள்ள ஒரு குறிப்பு கவனிக்கப்பட வேண்டியதாகும். இந்தப் புதிய ஏற்பாட்டிலே இலங்கை மக்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழ் மொழியை பேசுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளது.
1740 ஆம் ஆண்டு தரங்கம்பாடிக்கு வந்த பெப்ரிசியஸ் (Fabricius) என்பவர் இன்னொரு மொழிபெயர்ப்பைச் செய்து அச்சு வாகனம் ஏற்றினார். 1843இல் ரேனியஸ் என்பவர் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்துள்ளார். இந்த மொழி பெயர்ப்பு 1843இல் மானிப்பாய் அச்சியந்திரசாலையில் பிரசுரிக்கப்பட்டது. இவ்வாறு வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு மொழிபெயர்ப்புக்கள் தோன்றின.
| 19

ற்றாண்டில் பாணக் கல்வி மிஷனின் பங்களிப்பு
19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தென்னிந்தியா விலும் யாழ்ப்பாணத்திலும் பணியாற்றிய முக்கிய மிஷ னரிச் சங்கங்களான மெதடிஸ்த் மிஷன், சேர்ச் மிஷன், அமெரிக்க மிஷன், லண்டன் மிஷனரிச் சங்கம் என்பவை சகல புரட்டஸ்தாந்துக் கிறிஸ்தவர்களும் பயன்படுத்தக்கூடிய ஒரு மொழிபெயர்ப்பின் அவசியத்தை உணர்ந்தார்கள். ஏனெனில் ஒவ்வொரு மொழிபெயர்ப்பும் ஒவ்வொரு குறைபாட்டைக்கொண்டு விளங்கியது. இக்கால கட்டத்தில் இலங்கை வேதாகமச் சங்கத்தின் யாழ்ப்பாணத் துணைச் சங்கம், தென்னிந்திய அறிஞர்களும் யாழ்ப்பாண அறிஞர்களும் இணைந்து ஒரு மொழிப்பெயர்ப்பை உருவாக்க வேண்டும் எனச் சென்னை வேதாகமச் சங்கத்திற்கு விண்ணப்பித்தார்கள். 1845ஆம் ஆண்டு தொடக்கம் பீட்டர் பேர்சிவல் தனது சகல வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டுத் தினசரி ஆறு மணித்தியாலங்கள் வேதாகம மொழிபெயர்ப்பு வேலையில் ஈடுப்பட்டார். அவருக்கு அருந்துணையாக விளங்கியவர் ஆறுமுகநாவலர் ஆவார். பீட்டர் பேர்சிவல் யாழ்ப்பாண மத்திய கல்லூரி அதிபராக இருந்தபோது ஆறுமுகநாவலர் அங்கு உயர் வகுப்புக்குத் தமிழும் கீழ் வகுப்புகளுக்கு ஆங்கிலமும் கற்பித்து வந்தார். 1850ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் திகதி இம்மொழிபெயர்ப்பு வேலை முடிந்து பிரதிகள், தஞ்சாவூர், மதுரை, திருவனந்தபுரம் ஆகிய இடங்களிலுள்ள ஆய்வுக்குழுக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இலக்கண வித்தகர் கால்டு வேல், தமிழ் அறிஞர் சார்ஜன்ட் என்னும் மேனாட்டுத் தமிழ்ப் பண்டிதர்கள் இந்த மொழிபெயர்ப்பைப் பெரிதும் பாராட்டினார்கள். ஆனால் தென்னிந்திய மிஷ னரிமார் பலரும் சுதேச கிறிஸ்தவர்களும் இம்மொழி பெயர்ப்பில் இரண்டு குறைகள் இருப்பதாக கூறிக் கொண்டார்கள். முதலாவதாக இம்மொழிபெயர்ப்பில் சமஸ்கிருத சொற்கள் கூடுதலாக இருந்தன. இரண்டாவதாக மூலத்திலிருந்து இம்மொழிபெயர்ப்பு சில இடங்களில் வேறுபட்டு நிற்கின்றது. இப்பிரச்சினைகளைத் தீர்க்கும் முகமாகச் சென்னை வேதாகமச் சங்கத்தினர் மழவை மகாலிங்க ஜயரிடம் ஆலோசனை கேட்டனர். அவர் இந்த மொழிபெயர்ப்பிலுள்ள நடை மிகவும் செழிப்பாக இருக்கின்றது என்றும் யாழ்ப்பாணத்திலிருந்து இப்படியான சிறந்த தமிழ்நடை வருவது பேருவகையளிக்கின்றது
அகவிழி (மார்ச் 2013

Page 22
என்றும் குறிப்பிட்டார். சென்னை வேதாகமச் சங்கத்தின் வெளியீட்டுச் செயலாளராகவிருந்த அகராதி வித்தகர் மைரன் வின்ஸ்லோ இந்த மொழிபெயர்ப்பு முன்பு வந்த எல்லா மொழிபெயர்ப்புக்களையும் விட மூலத்தோடு ஒத்துப் போகின்றது என்று குறிப்பிட்டார். ஆனால் தென்னிந்திய மிஷனரிமார் அந்நாட்டுப் பேச்சுத் தமிழிலே அதிக பரிச்சயமுடையவர்களாக இருந்தபடியினாலும், சீகன்பால்கு, சூல்ட்ஸ், பெப்ரிசியஸ் ஆகியோருடைய சொற் பிரயோகங்களிலே பழகி வந்தவர்களானபடியினாலும் யாழ்ப்பாண மொழிபெயர்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.”
நாவலரது அல்லது யாழ்ப்பாணத்து மொழிபெயர்ப்புத் தென்னிந்தியாவில் நிலைபெற முடியாது போன போதிலும் யாழ்ப்பாணத்தில் சில காலம் அது பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகின்றது. இன்னும் சில யாழ்ப்பாணத்துக் கிறிஸ்துவ இல்லங்களில், யாழ்ப்பாணத்தின் மொழிபெயர்ப்பு பிரதிகள் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் பிற நாடு சென்ற ஒரு குடும்பத்தின் வீட்டில் ஒரு பிரதியொன்று இருக்கக்கண்டேன். இப்பொழுது இப்பிரதி என் கைவசம் உள்ளது. யாழ்ப்பாணத்தில் சில காலம் இம்மொழிபெயர்ப்புப் பிரபல்யமாகவிருந்தது என்பதற்கு சைவ தூஷணப்பரிகாரம், சுப்பிர தீபம் ஆகிய நூல்களிலே இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கொள் காட்டப்பட்டிருப்பதிலிருந்து தெரிகின்றது.
"சலோமோன் யெகோவாவை நோக்கிச் செய்த விண்ணப்பம், cehsh சா: av-cf |
இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே, உமது தாசனாகிய தாவீதுக்கு நீர் சொல்லிய வாக்கு மெய்ப்படும்படி அருள் செய்யும். தேவன் நிச்சயமாய்ப் பூமண்டத்திலே மனிதருடன் வாசம்பண்ணுவாரா? வானமும் வானங்களுக்கு மேலுள்ள வானமும் உம்மைக் கொள்ளாதே நான் கட்டின வீடு உம்மைக் கொள்வது எப்படி, என் தேவனாகிய யெகோவாவே, உமது அடியான் செய்யும் பிரார்த்தனையின் மேலும் விண்ணப்பத்தின் மேலும் சிந்தை வைத்தருளும், உமது அடியான் உமது சமூகத்தில் இஓடும் ஒலத்தையும் அவன் பிரார்த்தனையையும் கேட்டருளும், எனது நாமம் அதில் நிறுத்தப்படும் என்று நீர் குறித்த இந்த ஸ்தானத்துக்கு நேரே, உமது அடியான் செய்யும் பிரார்த்தனையைக் கேட்கும்படி இரவும் பகலும் இந்த "வீட்டின் மேல் நீர் கண் திறப்பீராக, உமது அடியானும் உமது சனமாகிய இஸ்ரவேலரும் இந்த ஸ்தானத்துக்கு நேராய் செய்யும் விண்ணப்பங்களைக் கேட்பீராக."
ஆறுமுகநாலர் எழுதிய சைவ தூஷண பரிகாரத்துக்கு, சுப்பிரதீபம் என்னும் நிராகரணம் எழுதிய டானியல் கறோல் விசுவநாதப் பிள்ளையும் யாழ்ப்பாண மொழிபெயர்ப்பிலிருந்தே மேற்கோள்களை எடுத்துக்காட்டுகின்றனர்.
அகவிழி ( மார்ச் 2013

“அந்த அறுபத்திரண்டு வாரங்களும் பின்பு மிஷியக் சோதிக்கப்படுவார். தமக்காகவல்ல பின்வரும் அதிபதியின் சனங்கள் நகரத்தையும் பரிசுத்த ஸ்தானத்தையும் நாசப்படுத்துவார்கள், சலப்பிரளயம் போல அதின் முடிவு வரும், முடிவுபரியந்தம் யுத்தமும் நாசமுமுண்டாக நியமிக்கப்பட்டன. அவர் ஒரு வாரமளவும் அனேகரோடே உடன்படிக்கையை உறுதிப்படுத்துவார். அந்த வாரத்தின் மத்தியில் பணியையும் நைவைத்தியத்தையும் ஒழிவிப்பார். தீர்மானிக்கப்பட்ட அறிவு பாழாய்ப்போனவைகள் மேல் சொரியப்படும் வரைக்கும், சங்காரஞ் செய்கிறவன் அரோசியமான சிறகோடே வந்திறங்குவான். தானியேல் f. cr.cy”
தென்னிந்தியாவிலுள்ள மிஷனரி சங்கங்கள் சகலரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய மொழிபெயர்ப்பைச் செய்யும் ஒரு புதிய குழுவை அமைத்தார்கள். இந்தக் குழுவில் 13 அங்கத்தவர்க்ள இருந்தார்கள். இந்தக் குழுவிற்குத் தலைவராக சுவிசேஷ பிரபல்யசங்கத்தைச் சேர்ந்த (S.P.G) ஹேன்றி பவர் அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். இதிலே பணியாற்றுவதற்கு யாழ்ப்பாணத்தில் பணியாற்றிவந்த
லீவை ஸ்போல்டிங் என்பவரும் மைரன் வின்ஸ்லோ அவர்களும் தெரிவு செய்யப்பட்டார். இந்தக் குழு 1858ஆம் ஆண்டு மொழிபெயர்ப்பு வேலையை ஆரம்பித்து 1871ஆம் ஆண்டு நூலை வெளியிட்டது இந்த மொழிபெயர்ப்பு நூ லே இப்பொழுது கிறிஸ்தவர்களினால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சில தமிழ் அறிஞர்கள் ஹென்றி பவர் அவர்கள் செய்த மொழிபெயர்ப்பையே நாவலர் செய்த மொழிபெயர்ப்பு என்று எண்ணிவிடுகின்றனர். மு.வரதராசன் 1955 ஆம் ஆண்டு தாம் எழுதிய “யான் கண்ட இலங்கை” என்ற நூலில் பவரின் மொழிபெயர்ப்பை நாவலர் மொழிபெயர்ப்பு என மயங்கி பின்வருமாறு எழுதியுள்ளார். “பைபிளை முதலில் மொழிபெயர்த்தவர் அவரே என்றே சொல்லப்படுகிறது. ஆனால் பைபிள் தமிழ் நடை தமிழுக்கு நன்மை செய்யவில்லை. தமிழ்ச்சொற்களும் தக்க முறையில் எடுத்தாளப்படவில்லை. வாக்கிய அமைப்பும் பல இடங்களில் பிழைபட அமைந்துள்ளது. தமிழ் நடையில் வெளிவரப்போகின்றன. முன்னைய மொழிபெயர்ப்புத் தமிழின் குறைகளை, தமிழ்ச் சான்றோர் ஆறுமுகநாவலரின் மேல் சாத்துவதற்கு மனம் வரவில்லை”.
1967இல், வி.செல்வநாயகம் அவர்கள் தாம் எழுதிய “தமிழ் உரைநடை வரலாறு” என்னும் நூலில் ஆறுமுகநாவலரின் எளிய நடைக்கு உதாரணமாக மாற்கு சுவிசேஷம் 10ஆம் அதிகாரம் 23-27ஆம் வசனம் வரையுள்ள வசனங்களைத் தருகின்றார். இவை பவர் மொழிபெயர்ப்பின் முந்திய பதிப்பொன்றிலிருந்து எடுக்கப்பட்டவை. இதே
20

Page 23
பகுதி யாழ்ப்பாண அல்லது ஆறுமுக நாவலர் மொழி பெயர்ப்பில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது.
“அப்பொழுது இயேசு தம்முடைய சீஷரை நோக்கி ஜஸ்வரியவான் பரம இராச்சியத்தில் பிரவேசிப்பது அரிதென்று மெய்யாய் உங்களுக்குச் சொல்கின்றேன், ஜசுவரியவான் தேவனுடைய இராட்சியத்திற் பிரவேசிப்பதிலும் ஒரு ஒட்டகம் ஊசியின் காதிலே நுழைவது எளிதென்று உங்களுக்குச் சொல்கிறேன் என்றார்.
அவருடை சீஷர் அதைக் கேட்டு மிகவும் பிரமித்து அப்படியானால் ஆர் இரட்சிக்கப்படுவார்களென்று கேட்க இயேசு அவர்களை நோக்கி மனுஷரால் இது கூடாத காரியம், தேவனோ எந்தக் காரியத்தையும் செய்ய வல்லவர் என்றார்”
இந்த வசனங்களையே அவர் ஆறுமுக நாவலரின் எளிய நடைக்கு உதாரணமாக காட்டியிருத்தல் வேண்டும். ஆனால் செல்வநாயகம் உதாரணமாகக் காட்டிய பவர் மொழிபெயர்ப்பு வசனங்கள் பின்வருமாறு.
“அப்பொழுது யேசு சுற்றிப்பார்த்து தம்முடைய சீஷரை நோக்கி ஐஸ்வரியம் உள்ளவர்கள் தேவனுடைய இராட்சியத்திற் பிரவேசிப்பது மிகவும் அரிதென்றார். சீஷர் அவருடைய வாக்குகளைக் குறித்து அதிகம் பிரமித்தார்கள். பின்னும் யேசு அவர்களைப் பார்த்து பிள்ளைகளே ஐஸ் சுவரியத்தை நம்புகிறவர்கள் தேவனுடைய இராட்சியத்திற் பிரவேசிப்பது அரிது. ஐஸ்சுவரியவான் தேவனுடைய இராட்சியத்திற் பிரவேசிப்திலும் ஒரு ஒட்டகம், ஊசியின் காதில் நுழைவது எளிதென்றார். அவர்கள் மிகவும் பிரமித்து அப்படியானால் யாவர் இரட்சிக்கப்படு வாரென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். யேசு அவர்களை நோக்கி மனுஷரால் இது கூடாததல்ல, தேவன் எந்தக் காரியத்தையுஞ் செய்ய வல்லரென்றார்.
யாழ்ப்பாணத்து மொழிபெயர்ப்பு தென்னிந்தியராலே கைவிடப்பட்டாலும் யாழ்ப்பாணத்தின் கல்வி வளத்தையும் தமிழ்த் திறனையும் அறிந்து கொள்வதற்கு ஓர் ஊடக மாகவே இருந்தது என்பதில் ஐயமில்லை. பீட்டர் பேர்சிவல் யாழ்ப்பாணத்தில் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு சரியானது என்பததை நிறுவுவதற்காக 1850 இல் ஆறுமுகநாவலரையும் சென்னைக்கு அழைத்துச் சென்றார். இதுவே ஆறுமுக நாவலரின் முதலாவது பயணம் என்று தெரிகிறது. இதன்பின்னர் ஆறுமுகநாவலர் தமிழ் நாட்டிலும் யாழ்ப் பாணத்திலும் ஒரு பலம் வாய்ந்த அடித்தளத்தை உருவாக்கிக் கிறிஸ்தவ மதப் பரம்பலுக்கு எதிரான பிரசாரத்தை நடத்தி வெற்றி கண்டார்.
21

கண்டன நூல்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டிலே சமய கண்டன நூல்கள் தமிழ்மொழியில் பெருந்தொகையாக வெளிவந்தன. இந்த முயற்சிகளில் தென்னிந்திய மக்களும் யாழ்ப்பாண மக்களும் சமய அடிப்படையில் வெவ்வேறு அணிகளில் இணைந்து போராடியதைக் காண முடிகின்றது. ஆரம்பத்தில் சைவ சமயத்திற்கு எதிரான 'குருட்டு வழி' 'தற்சமயக் காட்சி' 'திருமூர்த்தி இலட்சணங்கள்' கண்டன நூல்களாகத் தென்னிந்தியாவில் இருந்து வெளிவந்தன. 'குருட்டு வழி' என்னும் நூல் மைரன் வின்ஸ்லோ அவர்கள் தஞ்சாவூர் வேதநாயகம் சாஸ்திரியார் உதவியுடன் எழுதியதாக மயிலை சீனி வேங்கடசாமி கூறுகின்றார். இந்நூல்களுக்கு மறுப்பாக ஆறுமுகநாவலர் சைவதூஷண பரிகாரம் என்னும் நூலை வெளியிட்டார். இந்த நூலின் இரண்டாம் பதிப்பு சென்னைப் பட்டணம் வாணி நிகேதனவச்சுக் கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. இதற்கு மறுப்பாக வட்டுக்கோட்டை செமினரியின் ஆசிரியராக இருந்த டானியல் கறோல் விசுவநாதப் பிள்ளை சுப்பிரதீபம் என்ற நூலை எழுதினார். இந்நூல் 1857 ஆம் ஆண்டு மானிப்பாய் றிப்ளி அன் ஸ்ட்றோங் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. சென்னையில் சீ. டபிள்யூ. தாமோதரம்பிள்ளை 'சைவ மகத்துவம்', 'விவிலிய விரோதம்' என்னும் நூல்களை எழுதி வெளியிட்டார். கிறிஸ்தவராக இருந்த சீ. டபிளயூ. தாமோதரம்பிள்ளை இந்நூல்களை எழுதியதற்குக் காரணம் தென்னிந்திய சைவ மரபின் மூலவேர்களுடன் தொடர்பு கொள்வதற்கே என்று கொள்ளக்கிடக்கின்றது. பதிப்புத் துறையில் ஆவலோடு ஈடுபட்டிருந்த சீ. டபிள்யூ. தாமோதரம் பிள்ளைக்குத் தமது சைவ ஈடுபாட்டைக் காட்டுவது அவசியமாக இருந்தது. தென்னிந்தியாவிலும் யாழ்ப் பாணத்திலும் அச்சு வாகனம் ஏறிய பல நூல்களில் கிறிஸ்தவத்திற்கு எதிரான வாதங்கள் மேனாட்டு நாஸ்திகராலும் ஒருமைக் கொள்கையாளர்களினாலும் (Unitarians) எழுதப்பட்டவையாகும். இக்கண்டன நூல் களில் தனித்துவமான புதுமை வாய்ந்த கருத்துக்களை வழங்கியவர் நீர்வேலி சங்கர் பண்டிதர் என்றே ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். ஏனைய கண்டன நூல்களில் சிறப்பாக சீ. டபிளியூ. தாமோதரம்பிள்ளையின் கண்டன நூல்களில் மேனாட்டு நாஸ்திகர்களினதும் ஒருமைக் கோட்பாட்டுக்காரர்களினதும் கிறிஸ்தவத்தை எள்ளி நகையாடும் கண்டனங்கள் இழையோடியிருக்கின்றன.
அகராதிப் பணி
அகராதிப் பணி மேலைநாடுகளில் வளர்ந்த ஒரு துறையாகும். கிறிஸ்தவ மதப்பிரசாரகருக்கு இது அவசியந் தேவையானதொரு சாதனமாகும். 1606 ஆம் ஆண்டில் மதுரைக்குச் சமயப்பணி செய்ய வந்த தத்துவபோதக
அகவிழி (மார்ச் 2013

Page 24
சுவாமிகள் அகராதியொன்றினைத் தொகுத்தார். ப்ரொயின்சா , வீரமாமுனிவர், ரொட்லர் முதலிய தொண்டர்களும் தமிழ்நாட்டில் அகராதிகளைத் தொகுத்து முடித்தனர். அமெரிக்க மிஷனரிமார் யாழ்ப்பாணத்தில் பணியாற்றத் தொடங்கியது போது அகராதிகள் மட்டுமன்றி சாதாரண தமிழ் நூல்களைக் கூட, பெறுவது மிகவும் கடினமாக இருக்கின்றது எனக் குறிப்பிட்டுள்ளனர். எனவே சென்னையில் இருந்து தமிழ் நூல்களைப் பெறுவதற்குத் தீர்மானம் செய்தனர். 1834 இல் ரொட்லர் தொகுத்த அகராதி தென்னிந்தியாவில் வெளிவந்தபோது அதனைப் பெறுவதற்கு முயன்றனர். யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய மெதடிஸ்த், அங்கிலிக்கன், அமெரிக்கன் மிஷனரிமார் தமிழ் தமிழ் அகராதியையும், தமிழ்-ஆங்கிலம் அகராதியையும், தமிழ்-தமிழ்-ஆங்கிலம் அகராதியையும் உருவாக்க முயன்றனர். ரொட்லரின் அகராதி வெளிவந்த பின்னரும் அவர்கள் ஊக்கங்குன்றாது இப்பணியில் ஈடுபட்டனர். 'ரொட்லரின் அகராதி இந்திய உப கண்டத்தின் தமிழையே கொண்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழைச் சேர்க்கவில்லை' என மைரன் வின்ஸ்லோ தாம் தொகுத்த அகராதியில் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் முதல் முதல் அராதிப் பணியில் ஈடுபட்டவர் நல்லூரிலிருந்து 1812 ஆம் ஆண்டு தொடக்கம் பணியாற்றிய ஜொசப் நைட் என்ற அங்கிலிக்கன் மிஷனரியாகும். இவருக்கு வட்டுக்கோட்டை செமினரியின் தமிழ் ஆசிரியரான காபிரியேல் திசரா, உடுவிலைச் சேர்ந்த சந்திரசேகர பண்டிதர், இருபாலை சேனாதிராஜா முதலியார், மெதடிஸ் மிஷனரி பீற்றர் பேர்சிவல், அமெரிக்க மிஷனரி லீவை ஸ்போல்டிங் ஆகியோர் துணை புரிந்தார்கள். 1838 இல் இங்கிலாந்துக்குச் சென்ற ஜோசப் நைட் அங்கேயே இறந்து போனார். எனவே இந்தப் பணியைத் தொகுத்து முடிக்கும் வேலை, லீவை ஸ்போல்டிங் என்பவரிடமே ஒப்படைக்கப்பட்டது. அவர் இந்த அகராதியை 1842 ஆம் ஆண்டு மானிப்பாயில் இருந்த அமெரிக்கன் மிஷன் அச்சகத்தில் பதிப்பித்தார். இதுவே பிற்காலத்தில் மானிப்பாய் அகராதி என்றும் யாழ்ப்பாண அகராதி என்றும் குறிப்பிடப்பட்டது. இது தமிழ்ச் சொற்களை அகர வரிசைப்படுத்தி எளிய தமிழ்ச் சொற்களில் விளக்கம் கொடுத்தது.
ஆங்கிலம் - தமிழ் அகராதியை 1844 இல் மைரன் வின்ஸ்லோ மானிப்பாய் அமெரிக்கன் மிஷன் அச்சகத்தில் பதிப்பித்தார். இந்த அகராதியின் இரண்டாம் பதிப்பு 1882ஆம் ஆண்டு லீவை ஸ்போல்டிங் அவர்களால் மானிப்பாய் அமெரிக்கன் மிஷன் அச்சக்கத்தில் பதிப் பிக்கப்பட்டது. மூன்றாவது பதிப்பு 1888 இல் சென்னையில் இருந்த ஹிகின்போதம் கம்பனியினால் வெளியிடப்பட்டது. இந்தப் பதிகப்பகத்தார் நூலின் முன்னிலையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
அகவிழி | மார்ச் 2013

“முதல்நூலில் யாழ்ப்பாணத்து மரபுச்சொற்கள் விரவிக் கிடந்தன. தென்னிந்திய மொழிக்கு ஏற்றவாறு அதிலே கூறப்பட்டிருந்த தமிழ்ப் பதங்கள் மாற்றப்பட்டுள்ளன.”
தென் இந்தியாவிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் அதிக கலாச்சாரத் தொடர்புகளை ஏற்படுத்திய அகராதி 1852இல் வெளிவந்த மைரன் வின்ஸ்லோ அகராதியாகும். இது தமிழ்ச்சொற்களுக்கு ஆங்கிலத்திலும், தமிழிலும் விளக்கம் கூறும் மிகச் சிறந்த படைப்பு. இன்று வரை தென்னிந்தியப் புத்தகசாலையில் அதிகளவு விற்பனையாகும் தமிழ் அகராதி வின்ஸ்லோ அகராதி என்றே கருதப்படுகின்றது. இத்தமிழ் - அகராதியின் ஆரம்ப வேலைகளும் யாழ்ப்பாணத்துக் கல்லூரிலே ஜோசப் நைட் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இதன் பொறுப்பை உடுவிலில் பணியாற்றிய மைரன் வின்ஸ்லோ ஏற்றுக்கொண்டார். இவர் பின்னர் சென்னையில் பணியாற்றச் சென்றமையால் தமிழ்நாட்டு அறிஞர்களினது உதவியையும் பெற்றுக் கொண்டார். சென்னை அமெரிக்கன் மிஷன் அச்சகத்தில் இது பதிப்பிக்கப்பட்டது. தமிழ்நாட்டு அறிஞர்களாகிய இராமானுஜக் கவிராயர், விசாகப்பெருமாள் ஐயர், ஆதிமூலம் முதலியார், ஆபிரகாம் அல்லியன், பேராசிரியர் விசுவநாதப்பிள்ளை ஆகியோர் உதவி புரிந்ததாக வின்ஸ்லோ இந்த நூலின் முகவுரையில் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாண அறிஞர்களில் பின்வருவோர் இந்த அகராதி ஆக்கத்திற்குத் துணைபுரிந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஜோசப் நைட், காபிரியேல் திசேரா, பீற்றர் பேர்சிவல், லீவை ஸ்போல்டிங், எஸ். ஹட்கின்ஸ் ஆகியோராவார்.
வட்டுக்கோட்டை செமினரியில் கற்று அரங்கேற்ய வைமன் கதிரவேற்பிள்ளை தமிழ் பதங்களுக்குத் தமிழிலேயே விளக்கம் கொடுக்கும் அகராதியொன்றினை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த அகராதியில் ஒரு பகுதியை அவர் எழுதி முடித்து 1904 ஆம் ஆண்டில் அச்சுவாகனம் ஏற்றினார். இந்த அகராதி முழுவதையும் மதுரைத் தமிழ்ச்சங்கம் தொகுத்து வெளியிட்டமையினால் இது தமிழ்ச்சங்க அகராதி என்று கூறப்படுகின்றது.
1911 ஆம் ஆண்டு சென்னைப் பல்பலைக்கழகப் பேரகராதி Lexucon உருவாக்கும் குழு ஒன்று நியமிக்கப் பட்டது. இக்குழுவில் ஒருவர் இலங்கையில் பணியாற்றும் மிஷன்களின் பிரதிநிதியாக இருக்கவேண்டும் என்று
தீர்மானிக்கப்பட்டது. இது யாழ்ப்பாணத்து மிஷன்கள்.
அகராதிப் பணியில் ஆற்றிய சேவையைச் சென்னைப் பல்கலைக்கழகம் நன்குணர்ந்து கொண்டதென்பதற்குச் சான்றாகும்.
22

Page 25
பத்திரிகைகள்
சென்ற நூற்றாண்டில் தென்னிந்தியாவிலும் யாழ்ப் பாணத்திலும் முக்கியத்துவம் பெற்ற கிறிஸ்தவப் பத்திரிகைகள் இரண்டு. அவை 1841இல் யாழ்ப்பாணத்தில் ஸ்தாபிக்கப்பட்ட உதய தாரகைப் பத்திரிகையும், 1855 இல் சென்னையில் நிறுவப்பட்ட தினவர்த்தமானி பத்திரிகையும் ஆகும்.
சென்ற நூற்றாண்டில் உதயதாரகையில் தென் இலங்கைச் செய்திகளைவிடத் தென்னிந்தியச் செய்திகளே கூடுதலாக இடம்பெற்றதைக் காண முடிகின்றது. 1850 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பருத்தித்துறை, மானிப்பாய், வட்டுக்கோட்டை, நீர் கொழும்பு, கண்டி, திருகோணமலை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு முதலிய இலங்கைப் பட்டணங்களிலும், தென்னிந்தியப் பட்டணங்களாகிய திண்டுக்கல், மதுரை, நாகப்பட்டினம், சென்னை, தரங்கம்பாடி போன்ற இடங்களிலும் இப்பத்திரிகைக்கு முகவர்கள் இருந்ததாகப் பத்திரிகை குறித்துள்ளது. தென்னிந்திய வியாபார ஸ்தலங்களின் விளம்பரங்களைத் தாங்கி வந்துள்ளது.
யாழ்ப்பாண மத்திய கல்லூரி ஸ்தாபகர் பீற்றர் பேர்சிவல், தமது மிஷனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினால் சென்னைக்குச் சென்று ராஜதானிக் கல்லூயில் ஆசிரியப் பணியை ஏற்றுக்கொண்டார். 1855 ஆம் ஆண்டு இவர் சென்னையில் 'தினவர்த்தமானி' என்ற பத்திரிகையை ஆரம்பித்தார். சீ. டபிளியூ. தாமோதரம் பிள்ளையின் ஆற்றலை இவர் அறிந்திருந்தபடியினால் இதன் முதலாவது துணை ஆசிரியராக அவரை நியமித்தார். இரண்டு வருடங்களின் பின்னர் இரட்சண்ணிய யாத்ரிகம் இயற்றிய எச். ஏ. கிருஷ்ணபிள்ளை இதன் துணை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். ஆனால் இந்தப் பத்திரிகை 1875இல் நின்றுவிட்டது எனினும் இப்பத்திரிகையை ஆரம்பித்த பீற்றர் பேர்சிவல் யாழ்ப்பாணத்திலிருந்து சென்னை சென்ற அறிஞர்கள் இந்தியாவில் கால் ஊன்றுவதற்குப் பெருமளவில் உதவிபுரிந்தபோது எழுதி வெளியிட்ட பரதேசியின் மோட்ச பிரயாணம் என்னும் மொழிபெயர்ப்பு நூலே கிருஷ்ணபிள்ளையின் “இராட்சணிய யாத்திரிகத்திற்கு” அடித்தளமாயிற்று.
திருச்சபை இணைப்புக்கள்
தென்னிந்தியாவிலும் யாழ்ப்பாணத்திலும் இருந்த திருச்சபைகள் வெவ்வேறு கால கட்டங்களில் இணைந்து கொண்டமையும் தென்னிந்திய - யாழ்ப்பாணக் கிறிஸ்தவர் கள் மத்தியில் உறவு ஏற்பட வழி சமைத்தது. 1816 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு வந்த அமெரிக்க மிஷ னரிமார் 1833 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மதுரையிலும் சென்னையிலும் ஆற்காட்டிலும் பணியாற்றத் தொடங்கி
23

னார்கள். ஆரம்பத்தில் இவை யாழ்ப்பாண மிஷன் என்றும் சென்னை மிஷன் என்றும் ஆற்காடு மிஷன் என்றும் அழைக்கப்பட்டன. இவற்றை விட அலகபத்நகரைத் தலைநகராகக் கொண்ட ஒரு மராத்தி மிஷனும் சென்ற நூற்றாண்டில் செயற்பட்டு வந்தது. ஆனால் இந் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தென்னிந்தியாவில் இருந்த திருச்சபைகளை இணைக்கும் முயற்சி ஆரம்பமானது. 1905 ஆம் ஆண்டு தென்னிந்தியாவிலும் யாழ்ப்பாணத்திலும் பணியாற்றிய கொங்கிரிகேஷனல் மிஷன்கள் ஒரே அமைப்பிற்குள் வந்தன. இந்தக் கொங்கிரிகே' னல் சபைகளில் சில லண்டன் மிஷனரி சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டவை. 1909 இல் தென்னிந்தியாவில் இருந்த பிறெஸ்ட்டீரிய திருச்சபைகளும் கொங்கிரிகேஷ னல் சபைகளும் ஒருங்கிணைந்து தென்னிந்திய ஐக்கியத் திருச்சபையில் ஏழு சபாசங்கங்கள் இருந்நதன. அவற்றில் ஒன்றே யாழ்ப்பாண சபாசங்கம் ஆகும்.
1947 ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் அங்கிலிக்கன், மெதடிஸ்த், S.I.U.C. திருச்சபைகள் ஒரே அமைப்பின் கீழ் வந்தன. அதுவே தென்னிந்திய திருச்சபை என்ற ஐக்கியம். ஆரம்பத்தில் 9 திருமண்டலங்கள் இருந்தன. S.I.U.C.யின் ஒரு சபாசங்கத்தின் நிர்வாக உத்தியோகத்தராக விருந்த சபாபதி குலேந்திரன், யாழ்ப்பாணத்தின் முதலாவது பேராயரானார். அவருடைய பிரதிஷ்டை ஆராதனை சென்னை புனித ஜோர்ஜ் பேராலயத்தில் நடைற்ெறது. இரண்டாவது பேராயர் அறிவர் உ.ஜே. அம்பலவாணர், வட்டுக் கோட்டையில் பிரதிஷ்டை செய்யப்பட்டார். மூன்றாவது பேராயர் கலாநிதி எஸ்.ஜெபநேசன், சென்னை புனித ஜோர்ஜ் தேவாலயத்திற் பிரதிஷ்டை செய்யப்பட்டார்.
1833 ஆம் ஆண்டு மிஷனரிமார் ஏற்படுத்திய ஊடாட்டம் இன்றுவரை திருச்சபையில் தொடர்கின்றது.
அடிக்குறிப்புகள்
1. Rev.Mr. J.D.Palm இவரை யாழ்ப்பாணத்து மக்கள்
பாலன் பாதிரியார் என்று குறிப்பிட்டதாகத் தெரிகின்றது. இவரே யாழ்ப்பாணத்திற் பணியாற்றிய முதலாவது பிரிட்டிஷ் சமயப்பிரசாரகர். இவர் 1805 தொடக்கம் 1812 வரை தெல்லிப்பளையில் பணியாற்றினார். 1816 இல் தெல்லிப்பளைக்கு வந்த டானியல் பூவர் இவரைப் பற்றிப் பின்வருமாறு எழுதியுள்ளார்.
we, see some of good effects of the Rev Palm's exertions among this people. Though he labored under great disadvantages the prejudices of the people are in some degree removed; some knowledge of Christianity was communicated and here are ten or twelve bous who attended his school now wishing to be instructed by us. Missionary Herald,January 1818, page.38.
அகவிழி (மார்ச் 2013

Page 26
2.
It has been a matter of peculiar satisfaction to me that I have seen under my government Weslyans, Presbyterians and Baptists, uniting with regular clergy of the church of England. Brownriggs, statement - cited by Ruberu Ranjith - Early Vritish Educational Activities. Education in Ceylon - A Cetenary Volume, Part II. 1969, page 369.
5.
Sir Edward Barnes 1820 இல் இலங்கையில் துணைத் தேசாதிபதியாகவும் 1824 தொடக்கம் 1831 வரை இலங்கை தேசாதிபதியாகவும் இருந்தவர். வாட்டர்லூ போர் முனையில் வெலிங்டன் பிரபுவுக்கு ஒரு துணைத் தளபதியாக நின்று போரிட்டவர். அக்கால கட்டத்தில் அமெரிக்கா, பிரான்ஸ்க்கு ஆதரவு காட்டிய காரணத்தால் அமெரிக்கரை நஞ் சென வெறுத்தவர். 1947இல் தென்னிந்தியத் திருச்சபை உருவாக்கிய பொழுது யாழ்ப்பாணம் தனியான ஒரு திருமண்டலமாகக் கூடாது, அது மதுரைத் திருமண்டலத்தின் ஒரு பகுதியாகவே இருக்கவேண்டும் என்று இந்தியக்
கிறிஸ்தவர்கள் சிலர் வாதிட்டனர். முத்துத்தம்பிப் பிள்ளை அ.யாழ்ப்பாணச் சரித்திரம் 1912, பக்கம் 130 வட்டுக்கோட்டைச் செமினரியின் 1846ஆம் ஆண்டு அறிக்கை, அந்த வருடம் 5 மாணவர்கள் தென்னிந்தியாவில் இருந்து வந்து கற்றதாகக்
குறித்துள்ளது. Trienniel Report of the Batticotta Seminary, 1846, American Mission Press, Manipay, 1846.
வட்டக்கோட்டைச் செமினரியின் அதிபராகவிருந்த எச். ஆர். ஹொய்சிங்டன் 03.07.1846 இல் எழுதிய கடிதம் ஒன்றில் செல்லோக் நல்ல பையன், ஆனால் இன்னும் கிறிஸ்தவனாக வரவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேனாட்டுப் பெயர்களைச் சூடிக் கொண்டவர்கள் எல்லாருமே கிறிஸ்தவர்களாயினர் என்று கொள்வது தவறு. செமினரி மாணவர்களுக்கு உதவி செய்த அமெரிக்க நல்லுபகாரிகளின் பெயர்கள் அவர்களுக்கு சூட்டப்பட்டன.
7.
சாமிநாத ஐயர், நினைவு மஞ்சரி, இரண்டாம் பாகம்,
பக்கம் 140. 10. Some of the foremost of South India were his pupils-for
instance when I called on the Rt. Hon.Srinivasasashri in Bangalore He learning that I went from Jaffna expressed the desire to visit Jaffna some day to see his old Guru.
அகவிழி | மார்ச் 2013

On arrival in Jaffna I hastened to Mr. Hensman and related this part of my Interview. He said are you sure that Srinivasan said that?
When I was principal of the Kumbakonam College he served as Lecturer and in selecting a Professor, I passed over him and appointed one with a Masters Degree, So he has no grievance against me? this emminant statesman did come to Jaffna and had a delightful interview with his old teacher.
"The Morning Star” American Ceylon Mission, weekly, 26.04.1946.
11.
இத்தகவல்கள் பேராயர் சபாபதி குலேந்திரன் எழுதிய 'கிறிஸ்தவ தமிழ் வேதாகமத்தின் வரலாறு' (1967)
என்ற நூலிலிருந்து திரட்டப்பட்டவை. 12. ஆறுமுகநாவலர், சைவதூஷண பரிகாரம், துன்மதி
வருடம் சித்திரை மாதம், இரண்டாம் பதிப்பு, சென்னை பட்டணம், வாணி நிகேதன அச்சுக்கூடம், பக்கம் எ.
ஆலயப் பிரகடனம். 13. டானியல் கறோல் விசுவநாதபிள்ளை “சுப்பிரதீபம்”
- 1857 பக்கம் CV. Ripley and Strong Printers.
14. பேராயர் சபாபதி குலேந்திரன் - தமிழ் வேதாகமத்தின்
வரலாறு, 1955, CLS, Madras, பக்கம் 182. 15. வரதராசன், மு. யான் கண்ட இலங்கை, பாரி நிலையம்,
1955 இரண்டாம் பதிப்பு, பக்கம் 112.
16. செல்வநாயகம், வி. தமிழ் உலைநடை வரலாறு, 1957
பக்கம் 98 மத்தேயு 10.23-27. 17. பழைய புதிய உடன்படிக்கைகள் அடங்கிய தேப்புத்தகம்,
1852, சென்னை அமெரிக்கன் மிஷன் அச்சகம். 18. வேங்கடசாமி, மயிலை, சீனி, பத்தொன்பதாம்
நூற்றாண்டில் தமிழ் இலக்கியம், 1962, அழகப்பா
புத்தக நிலையம், பக்கம் 187. 19. Young R.H. andS.Jebanesan, The Bible Trembled, Vienna,
1995, The Hindu Christian Controversies of nineteenth
century, Ceylon, page.157. 20. Ibid. page 154. 21. English and Tamil Dictionary, Third Edition, 1888
Higginbotham & Co.Preface.
22. Winslow, Miron, A Comprehensive Tamil and English
Dictionary High and Low Tamil, 1862, Preface.
02

Page 27
மதுவும் மாணவ
Mr. A.A. Azees Dip. In. Nurssory
”நலம்” ஒர் அறிமுகம்.
மனிதனின் வளர்ச்சிப்பருவங்களை எடுத்து நோக்குவோ மாயின் குழந்தைப்பருவம் (Infancy), பிள்ளைப்பருவம் (Childhood), கட்டிளமைப்பருவம் (Adolescence) முதிர்ந்த பருவம் (Adult) என எளிமையாக வகைப்படுத்தலாம். இவற்றுள் குழந்தைப்பருவம் முழுமையாக தாயின் அன்பிலும் அரவணைப்பிலும் கழிகின்றது. பிள்ளைப் பருவத்தில் பாடசாலை செல்லத் தொடங்குவதுடன் பாடசாலையில் சகபாடிகளுடனும் (Peers) ஆசிரியர்களுடனும் இடைவினைகளை ஏற்படுத்திக் கற்றலில் ஈடுபடுவர். இப்பருவத்தில் பெற்றோர், ஆசிரியர், முதியோர் ஆகியோருக்குப் பெருமளவு கீழ்ப்படிந்து இணங்கி நடப்பதால் பிரச்சினைகள் குறைந்ததாகவே இப்பருவம் கழியும். எனினும் கட்டிளமைப்பருவத்தை அடைந்ததும் ஆண்-பெண் இருபாலாரிலும் பூப்பெய்துதல் நிகழ்வதுடன் பெண்பிள்ளைகளின் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப் படுவதுடன் ஆண்பிள்ளைகள் சிறகு முளைத்தாற் போல் உல்லாசப் பறவைகளாய் உலாவி வர முயற்சிக்கின்றனர். கட்டிளமைப்பருவத்தினரின் பண்புகள், பிரச்சினைகள் என்பவற்றை தெளிவாக ஆராய்வது மது பாவனை பற்றிய போதிய விளக்கத்தைப் பெறுவதில் சிறந்த அடித்தளமாய் அமையும்.
கட்டிளமைப் பருவப் பண்புகள்
உளநெருக்கடிகளும், முரண்பாடுகளும் நிறைந்த பருவம்.
முதியோரின் கட்டுப்பாடிலிருந்து சுதந்திரமடைய எத்தணித்தல், எனினும் முதியோரின் உதவியை நாடி நிற்றல். பாடசாலை நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோருடன் முரண் பாடுகளும் எதிர்ப்பும் கொண்டவர்களாகக் காணப்படுதல்.
முதியோரின் கணிப்பைவிடுத்து தமது சகபாடிகளின் கணிப்புக்குக் கூடுதலான முக்கியத்துவம் கொடுத்தல். பெற்றோர், ஆசிரியர் ஆகியோரின் தொடர்புகளில் மனமுறிவுகள் ஏற்படுதல்.'
|25

பர்களும்.
அடுத்ததாக கட்டிளமைப் பருவத்தினருக்குரிய பிரச்சினைகளை நோக்குவோம்.
பாடத்தெரிவுகள் செய்தல்
எதிர்காலத் தொழில்வாழ்க்கை சார்பான தெரிவுகள் செய்தல்.
பாலியல் சார்பான பிரச்சினைகள். புகைத்தல், மதுபானம், போதைப் பொருள் தொடர்பானவை.
உடல் எடை அதிகரித்தல் தொடர்பானவை.
உளச்சோர்வு, தற்கொலை.
சூழ்நிலைகளாலேற்படும் உளப்பிரச்சினைகள். அரசியல், குழுக்கள், இயக்கங்கள் சார்பான நெருக்கடிகள்.
பெற்றோர் - பிள்ளை முரண்பாடுகள்.
ஆசிரியர் - மாணவர் முரண்பாடுகள் என்பனவாகும்.
இவற்றுள் மதுபானம், புகைத்தல், போதைப்பொருள் பாவனை பற்றிய பிரச்சினைகள் தனித்தனி தலைப்புகளாக ஆராய்வது காலத்திற்கேற்ற அம்சமாகும். இப்பருவத்திலேயே பெரும்பாலான விடயங்களின் முதல் அனுபவங்கள் பெறப்படுகின்றன. இவ்விடயங்கள் பற்றிய அறியாமையும், அறிவதிலுள்ள ஊக்கமும் (பரீட்சித்துப்பார்த்தல்) பிற் காலத்தில் பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்துகின்றன. மதுப்பாவனையாளர்களை பரவலாகக் காணக்கிடைத்தல், ஆர்வமூட்டும் ஊடக விளம்பரங்கள், துணைநிற்கும் சகபாடிகள் ஆகியவை பரீட்சித்துப் பார்க்கும் நிகழ்வை வெற்றிகரமாக்குகின்றன. ஆரம்பத்தில் 3% மதுவைக் கொண்டிருக்கும் பியரில் (Beer) தொடங்கி 60% மதுவைக் கொண்டிருக்கும் உயர்ரகங்களை விரைவில் தேடுவதும் பின்னர் தனது பொருளாதார வசதிகளைப் பொறுத்து இயலாமையில் இன்பங்காண உள்ளூர்க் கசிப்பையும், இலகுவில் இன்பங்காண ஏனைய போதைப்பொருட்களையும் நாடுகின்றனர். முடிவாக மதுவில் தங்கியிருத்தல் (dependence), அடிமைப்படுதல் (Addiction) என மனநோய் வரை மாற்றம் பெறுகின்றனர்.
அகவிழி (மார்ச் 2013

Page 28
மதுவானது மிகச்சிறிதளவில் உணவுப்பெறுமதியைக் கொண்டிருப்பதுடன் பெருமளவில் உறக்கமேற்படுத்தும் (Narcotic) மருந்தாகவும் மயக்கமூட்டியாகவும் (Sedative) தொழிற்படுகின்றது. சில சந்தர்ப்பங்களில் சிறிதளவான பெறுமானம் சமிபாட்டுச் செயன்முறையில் உதவுவதுடன் உறக்கத்தை வரவழைக்கும் ஆரம்பகர்த்தாவாகவும் தொழிற்படுகின்றது. எனினும் அளவில் அதிகரிக்க இழையங்களின் உயிர்ப் பான இயல்பு நிலையை மாற்றியமைப் பதுடன் தீவிர நச்சுப் பொருளாகவும் தொழிற்படும்.
எமது மூளையிலுள்ள அகத்தடை
Frontal மையங்களின் (Inhibitory centre)
lobe தொழிற்பாட்டைக் குறைப்பதன் மூலம் அல்லது செயலிழக்கச் செய்வதன் மூலம் பய உணர்வையிழக்கச் செய்து எமது தொழிற்பாடுகளை அதீதமாக்கு கின்றன. பொருத்தப்பாடற்ற சிந்தனை களையும் (Thought), புலனுணர்வு
Trialamus களையும் (Sensations) ஏற்படுத்துவதன்
Hypothalar மூலம் நல்லுணர்வையும் (Well - being) மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகின்றன.
Hip அயர்ச்சி அல்லது களைப்பையும் (Fatigue) உளச்சோர்வையும் (Mental Unrest) இல்லாதொழிக்கின்றன. எனினும் அளவுகடந்த பாவனை மற்றும் தவறான பாவனை மெதுவாகத் தொழிற்படும் நஞ்சாதலை (Poisoning) ஏற்படுத்தும்.
மதுபாவனையானது தற்போது சமூக எதிரியாக வளர்ந்துள்ளது. சமிபாட்டுத் தொகுதி நோய்கள், இதயத்திலும் ஈரலிலும் கொழுப்புப்படிதல், நாடிகளின் விட்டம் குறைதல், சுற்றயல் நரம்பழற்சி என பல்வேறு உடல்நலக்கேடுகளை விளைவிக்கின்றது. வெவ்வேறு இழையங்களுடாக கடத்தப்படுவதன் மூலம் வெவ்வேறு தொழிற்பாடுகளைக் கொண்டுள்ளது. அதன் வேறுபட்ட தொழிற்பாடுகளாக.
1. -
மைய நரம்புத்தொகுதியில் செயற்பட்டு தூக்கத்தை ஏற்படுத்தும் மருந்தாக (Narcotic) தொழிற்படும். இதுவொரு நன்னிலையுணர்வை (Euphoria) ஏற்படுத்துவதுடன் தொடங்கும். வாழ்க்கையில் இடைஞ்சல் விளைவிக்கும் மற்றும் வெறுப்பான நிகழ்வுகளை மறக்கவைக்கும். படிப்படியாக இயங்கமுடியாதநிலைக்கும் (Stupor) ஆழ் மயக்கம் (coma) என்பனவும் சிலருக்கு மரணத்தையும் (Death) ஏற்படுத்தும். மூளையின் உயர் மையங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அதன் தொழிற்பாடுகளான
அகவிழி (மார்ச் 2013

ஞாபகம், கவனம், சிந் தனை, தீர்மானம், சுயகட்டுப்பாடு, குறிப்பிடளவில் தனது மற்றும் புலனுணர்வுகளும் பாதிக்கப்படும். அவை விளங்கும் தன்மையையும் ஞாபகத்தையும் நலிவடையச் செய்யும். இதன்மூலம் தனக்கும் குடும்பத்தினருக்கும் பிரச்சினைகள் மேலெழும்பும்.
Cerebral cortex
Parietal lobe
Corpus callosum
Occipital
lobe
Cerebellum
MUS
ப்Campal Temporal
egions
lobe
3.
இதயத்திற்கான நரம்பு வினியோகத்தைத் தூண்டு வதன் மூலம் இதயச் சுருக்கங்களை அதிகரிப்பதன் மூலம் இதயத்துடிப்பு வீதத்தை அதிகரிக்கும்.
வெப்பநிலைசீராக்கத்தில் பங்குகொள்ளும். உடலின் மேற்பரப்பிலுள்ள குருதிக்கலன்களை விரிவடையச் செய்தன் மூலம் உடலின் அகவெப்பநிலையை இழக்கச் செய்யும். வெப்ப இழப்பானது குளிர் காலங்களில் நன்றாக போர்த்தப்படாத உடலில் தீவிரமாக நிகழும். புலனங்கங்களிலுள்ள நரம்புகளில் செயற்பட்டு கண், காது மூலமான அவதானிப்பில் வழுக்களையும் தாமதத்தையும் ஏற்படுத்தும். இது வாகனம் அல்லது விமானமோட்டியில் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும். அற்ககோல் உடலிலிருந்து வெளியேறும் வீதம் குறைவாகையால் உட்கொண்டபின் பல மணிநேரம் இந்நிலை காணப்படும். சிறிதளவு பெறுமான சுவாசத்தொழிற்பாட்டில் சற்று அதிகரிப்பை ஏற்படுத்தினும் பெரிய அளவுகளில் குருதியில் காணப்படும் போது மூளையிலுள்ள சுவாசக் கட்டுப்பாட்டு மையத்தை உணர்விழக்கச் செய்யும். மரணமும் சம்பவிக்கலாம்.
Dான்
5..
26

Page 29
சமிபாட்டுச் செயன்முறையில் கடத்துகைக்கான குடலசைவுகள் (Peristathe Action) குறைவடையலாம். அத்துடன் அதிகரித்த உமிழ்நீர் சுரப்பும் உமிழ்நீரில் பெப்சின் நொதியத்தினைக் குறைவாகவும் ஐதரோகளோரிக்கமிலத்தின் (HCL) செறிவு அதிக மாகவும் காணப்படும். குடற்புண் நோயினால் அவதிப்படுவோருக்கு இது ஆபத்தான நிலைமை யாகும். மதுவிற்கடிமையானோரில் உணவிலுள்ள விருப்பு (Appetite) குறையும். அவர்கள் காலையில் குமட்டலினாலும், வாந்தியினாலும் பாதிக்கப்படுவர். இது இரைப்பையின் பாதிப்பை சுட்டிக்காட்டும் அறிகுறிகளாகும். அவர்கள் இரைப்பை அழற்சி சுருக்கப்பிடிப்புகள், நெஞ்செரிவு என்பவற்றினாலும் அவதியுறுவர். அற்ககோல் அகத்துறிஞ்சப்பட்டு, ஈரலினூடாகக் கடத்தப்பட்டு ஈரலைப்பாதிக்கும். ஈரல்கோளாறுகளுக்கும் வழிகோலும். “Little Relief, Lot or Grief” அதாவது சில நிமிட தற்காலிக இன்பமானது பல வருடகாலம் வருந்தும் நிலைக்கு உட்படுத்தும். இது உடல், உள, சமூக, ஆன்மீக (Spiritual) அம்சங்களில் ஏற்படுகின்றது. அடிமைப்படுத்துவதன் மூலம் மனநோய் வைத்தியரை அணுக வைப்பதும், சமூகத்தில் காணப்பட்ட சுய கெளரவம் இழக்கப்பட்டு, உறவுகள் தூரமாகி எதிர்கால திட்டங்கள் பாதிப்படைவதாலும், சுபீட்சம் இழக்கப் படுவதாலும் தனிமையுணர்வு ஏற்படத் தொடங்கும். ஆன்மீக ரீதியிலும் தனது வாழ்க்கைத் தத்துவம், கடவுள் மீதான நம்பிக்கை, தர்மம், தேடல் என்பன சின்னா பின்ன
Stag . மடைந்து சிதறிச் செல்லும். மேலும்,
சறது
பின்வரும் கூற்று பெரிதும் வரவேற்கப் படுமென எதிர்பார்க்கிறேன். மதுவிற்கும்
இக்கூற்றிற்கும் நெருங்கிய தொடர்புண்டு. "Sex: the thing that takes up the least amount or time and causes the most amounts or troubles”
4.5% பாht sted
பாபாட்டம் activity slo
ராயர், pontoா.
muscle twitching
- John Barrymore - உடலின் தொழிற்பாட்டிற்கு போசணைக் கூறுகளே தேவைப்படுகின்றன. மது தேவைப் படுவதில்லை எனினும் பல லட்சம் உலகவாழ் மக்களின் பொழுதுபோக்கு (ஒய்வுநேர) மருந்தாக (Recreational Drug) மது தொழிற் படுகின்றது. உடலிற்கு அவசியமற்ற பதார்த்த மொன்றை உட்கொள்ளும்போது அது குருதியினுள் சென்று உடல் பூராகவும் வினியோகிக்கப்படுவதின் மூலம் பல முக்கிய உறுப்புக்களை செயலிழக்கச் செய்கின்றது. அவற்றுள் ஈரல், சிறுநீரகம் என்பன முக்கியமானவை.
27

அத்துடன் மது அருந்துவதற்கு முன் பின்னுள்ள சூழ் நிலைகள் மேலும் பிரச்சனைகளை விரிவுபடுத்துகின்றன. பொதுவாக உணவு உண்பதற்கு முன்னதாகவே மது அருந்தப்படுவது வழமை. அதனை நாம் ஒரு இரவு வேளையாகக் கொள்வோமாயின் நன்கு போதையேறியதும் உணவின்றி மயக்கத்தில் வீழ்ந்துவிடுவார். இந்த மயக்கநிலை தொடருமே தவிர தொடர்ச்சியான தூக்கம் ஏற்படமாட்டாது அற்கஹோல் மையநரம்புத் தொகுதியை அழுத்ததிற்குட்படுத்துவதால் (Central Nervous System Depressant) உறக்க வட்டங்கள் (Sleep Cycles) தொடர்ச்சியாக இடம் பெறாது காலையில் எழும்பும்போது உணவின்மையால் உடல்பலவீனமுற்று, சரியான தூக்கமின்மையான அயர்ச்சி நிலையிலும், அவலநிலையிலும் தென்படுவார். இவர் அன்றைய இரவை தன்னுணர்வற்ற நிலையில் கழிப்ப தனாலும் தொடர்ச்சியான போதையினால் “ஆண்மை” இழக்கப்படுவதாலும் விவாகரத்தில் சென்று முடிவதுண்டு. இன்றைய மருத்துவமனை அனுமதிகளில் 1/5 வர் மதுசார்பான நோய்களுக்காக அனுமதிக்கப்படுவதுடன் இடம்பெறும் விவாகரத்துக்களில் பெரும்பாலானவை போதையேறி அநீதி இழைக்கப்பட்டதாலும் இடம் பெறுகின்றது.
மேலும் இவ்வாறு போதையேறியவர் ஒர் ஆசிரியர் என வைத்துக்கொள்வோம். மறுநாள் காலை களைப்பு (Farigue) காரணமாக சிலவேளை பாடசாலைக்குச் செல்லமாட்டார். சென்றாலும் உடல் சோர்வுடன், எந்த வித முன்னாயத்தமுமின்றி கற்பிக்கமுடியாது. எனவே
100% Sleep Cycle - மொற 3 |
தெ3
- இமாம் ) கொடியார்க்க.wwwho-NAMWAMWAution
45.55%)
த.6%
012-15%
20.25% Breathing
Itep 98ர
- Vary des)
Rapid eye pattern and
பாரிசி,
மார்,
tvrnett. hoort rato
Brain borins
Rhythmle
பainாரா05 9low, Sitht
to generate
breathloe.
பரதரி பரமரி ராதா in
ப% பிரlty
Limited musclo
dreamint a ராy)
சாந்த.
thrity, Den
0CCuார். thurntபய,
I produces deita Muscles relaz
பார்க்க
ini hert utt .
Incrாக,
மாhils Tார்வார் காமம்
அன்றைய தினம் இவர் நான்கு வகுப்புகளிற்கு கற்பிக்க வேண்டியிருப்பின் ஒரு வகுப்பில் 30 மாணவர்களாயின் (30x4) 120 பாடவேளைகளை விரயமாக்குகின்றார். சமூகத்தை சீர்திருத்த வேண்டியவர் சீர்கெட்டுப்போய் நிற்கிறார்.
அகவிழி (மார்ச் 2013

Page 30
எனவே மதுவானது பொதுவாக மனிதர்களில் பாதகமான விளைவுகளையேற்படுத்துகின்றது. பல வருடங்கள் கடந்துசெல்லும் போது மூளையில் ஞாபக மையங்களில் நிரந்தரமான இழப்பையேற்படுத்துவதால் மறதிநோய் (Amnesia) ஏற்படுவதில் முக்கிய அடிப்படைக் காரணியாகவும் தொழிற்படுகின்றது. மாணவர்கள் மது வருந்தினாலும் ஆசிரியர்கள் மதுவருந்தினாலும் இறுதியில் மேற்கூறிய பாதகமான விளைவுகளே அவர்களுக்குக் கிடைக்கின்றது. மேலும் சற்று விரிவாகக் கூறுவோமாயின் மாணவப்பருவத்தில் மதுபாவனையால் கவனம் (Attention), ஞாபகம் (Memory) கற்றவற்றின் மீள்பயன்பாடு (Reuse), ஊக்கல் (Motivation) என்பன இழக்கப்படுவதன் மூலம் கிடைக்கவேண்டிய கல்வி கிடைக்காமற்போவதால் எதிர்காலம் இருள் சூழ்ந்ததாக ஆவதுண்டு.
ஆசிரியர் (ஊழியர்கள்) மருவருந்தினால் கமூகத்தில் மாதிரிகைகளாக (Models) தொழிற்பட்டு மாணவசமூகத்தை சீர்திருத்த வேண்டியவர்கள் தமது பணியைக்கூட சரியாகக் செய்யாத குற்றத்திற்குள்ளாகின்றனர். இவ்வாறானவர்களை குடும்பமும் சமூகமும் ஒதுக்கிதள்ளுவதன் மூலம் இவர்கள் மேலும் மேலும் மதுவின் துணையையே நாட வேண்டி யேற்படுகின்றது. இவர்களை அரவணைத்து நல்வழிப்படுத்த வேண்டிய சமூகம் ஒதுக்கித்தள்ளுவதும் ஒர் விதத்தில் குற்றமே. எனவே ஒரு குற்றத்தனால் பல குற்றங்கள் விளைகின்றது. போதையற்ற வாழ்க்கை மூலம் மாணவ சமூகத்தையும் போதையிலிருந்து தூரமாக்கும் வித்துவான் களாக ஆசிரியர் செயற்படல் வேண்டும். அதற்காக தற்போது நடைமுறையிலுள்ள விருப்புக்குரிய சுகாதாரமும் உடற்கல்வியும் பாடத்திட்டம் கட்டாய பாடமாக்கப்பட்டு, சுகாதார வைத்திய அதிகாரிகளின் (MOH) கண்காணிப்பின் கீழ் கல்வி-சுகாதார கூட்டுக்குழுவினர் மூலம் கற்பிக்கப் படுமாயின் இப்பிரச்சினைகள் பெருமளவில் குறைவடையும். Primary Prevention என்பது வருமுன்காப்பதாகும். அப்படி யாயின் School Based Alcohol Education செயற்திட்டங்கள் அமுலிலிருக்க வேண்டுமல்லவா? சற்று சிந்திப்போம். கடவுள் துணைபுரிவார்.
மாணவர் மீதான மருத்துவர் நோக்கு சிகிச்சை ரீதியானதாக அமைவதால் போதை தொடர்பான பிரச்சினைகளின் ஆரம்ப கட்டங்களிலேயே கண்டறிந்து சிகிச்சையளிக்க முடிவதுடன் ஆசிரியர்களும் அவரது அறிவுரைகளை ஏற்று நடக்கக் கூடுமாகையால் பின் விளைவுகளும் தவிர்க்கப்படும். அத்துடன் போதையேறிய பொடியன்கள் காதலையும் (Love) காமத்தையும் (Sex) தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் பாடசாலை மாணவிகள் கர்ப்பமடைவதைத் தவிர்க்க அவசியமான சுகாதாரக் கல்வியை (Health Education) வழங்கவும் வைத்தியரின் வருகை பெரும் உபகாரமாய் அமையும்.
அகவிழி (மார்ச் 2013

ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரையில் பாட சாலையில் சீர்மியம்/உளநல ஆலோசனை வழங்கு வதற்கென உளநல ஆலோசனை அதிகாரிகளும் (Consecution) மாணவர் நலமேம்பாடு தொடர்பான செயற்பாடுகளிற்காக School Health Nurse எனும் பதவிகள் அமுலிலுள்ளன. இவர்கள் போதை பற்றிய முன்-பின் நிலவரங்களை நன்கு அறிந்தவர்களாக விருப்பதுடன் தற்போது ஆசிரியர்கள் ஆலோசனை வழங்கும் கோவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பினும் அவர் இரகசியத் தன்மை பேணுபவரா எனும் சந்தேகம் கராணமாக மாணவர்கள் அவர்களிடம் செல்வதும் குறைவு. சென்றாலும் உண்மையான தகவல்கள் முழுமையாக வழங்குவது மில்லை. எனவே பாடசாலையில் School Based Alcohol Education எனும் விடயப்பரப்பு சுகாதார மருத்துவ அதிகாரியின் வழிகாட்டலின் கீழ் சீர்மியர், பாடசாலை நலவியல் தாதியியல் உத்தியோகத்தர்களின் மூலம் இடம் பெறல் வேண்டும். அவற்றைவிட சிறந்த முறைகளேதும் உலகில் அமுலிலில்லை.
பரீசீலனை செய்தவை 1. Core concepts in Health PP 257-280 (www.mhhe.com/insele)
| 2.
St Hettiye (1993) Journal or Agrarian Studies in Alcoholism, poverty and Health in Rural Sri Lanka. Colombo Agrarian Research and Training Institute.
3.
Oxford Handbook of Psuchiatry(PP 460-471).
4.
Daya Amarasekara (2002) Social Problems in Sri Lanka. Warakapola, Ariya Publishers.
5.
Sreewani R (2000) Mental Health - India Jaypee Brothers.
6. )
டாக்டர். அ. பேரின்பநாதன் (2000) போதையின் பிடியில் பேதைகள் கொழும்பு. லங்கா புத்தகசாலை.
7.
A . சிபானி (2009) சமூகப் பிரச்சினைகள் பாகம் - 07 கண்டி. சிந்தனை வட்டம் வெளியீடு.
| 8.
கல்வி வெளியீட்டுத் தினைக்களம் சுகாதாரமும் உடற்கல்வியும் தரம் 9,10,11.
9.
Dr. Godakumbura (2012) Protect your child from inseam (1st Ed) Nugegoda, Sarasavi Publishers.
10.
Lugo.).(1991) Abnormal Adjustment Development and Classification. In living psychology A life spon approach. (4th ed) Redding California
CAT Publishing Company PP490-506
28

Page 31
பொதுப் பரீட்சை தேசியப் பரீட்சை
பேராசிரியர், சோ. சந்திரசே
பாடசாலைக் கல்வியைக் கற்று முடிக்கு முன்னர் பிள்ளைகள் பல்வகையான பரீட்சைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இவ்வகையில் அவர்கள் ஓய்வின்றி பரீட்சைகளுக்கு ஆயத்தம் செய்ய வேண்டியிருப்பதாலும் தமக்குள் போட்டியிட வேண்டியிருப்பதாலும் பரீட்சைகள் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளன. கல்வியின் உயர் தரமான குறிக்கோள்கள் பற்றிச் சிந்திக்காது, பாடசாலைகள் பரீட்சைமையக் கல்வியையே வழங்குகின்றன: இதனால் கல்விச் செயற்பாடு திசை திருப்படுகின்றது என்ற விமர்சனமும் உண்டு. எவ்வாறாயினும் இன்று உலகளாவிய ரீதியில் சகல நாடுகளும் பொதுப் பரீட்சை (உதாரணமாக, 5ஆம் வகுப்புப் புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த. சா/ த, உ/த பரீட்சைகள்) மட்டுமன்றி தேசிய மதிப்பீட்டுப் பரீட்சைகளையும் சர்வதேச மதிப்பீட்டுப் பரீட்சைகளையும் நடாத்தி வருகின்றன.
பொதுப் பரீட்சைகள் பற்றிப் பொதுமக்கள் நன்கு அறிவர்: இப்பரீட்சைகள் சகல பெற்றோர்களுக்கும் மிகப் பரீட்சையமானவை. மாணவர்களின் கல்விச் சித்தியை அளவிடவும் உயர்கல்விக்கு அனுமதி பெறவும் இப்
29

களும் களும்
சகரன்
பொதுப் பரீட்சைகளில் பெறும் தகுதிகள் (உதாரணமாக க.பொ.த. சா/த, உ/த பரீட்சைகள்) உதவும். ஐந்தாம் வகுப்புப் புலமைப் பரிசில் பரீட்சையானது புலமைப்பரிசில் பெறவும் "சிறந்த” பாடசாலைகளில் அனுமதி பெறவும் உதவும்.
இல் அமைந்துள்ள அவர்கள்
தேசிய மதிப்பீட்டுப் பரீட்சைகள் இவை மேற்சொல்லப்பட்ட பொதுப் பரீட்சைகளிலிருந்து வேறுபடும் தேசிய மதிப்பீடுகள் பாட ஏற்பாட்டின் ஒரு குறிப்பிட்ட விடயத்தில் மாணவர் சித்தியை மதிப்பிட நடாத்தப்படுவது: ஒரு குறிப்பிட்ட வயதில் அல்லது தரத்தில் உள்ள மாணவர்கள் மதிப்பீடு செய்யப்பட்டு அதனூடாக பாடசாலைக் கல்வி முறை மதிப்பீடு செய்யப்படுகின்றது. 5ஆம் ஆண்டு மாணவர் அல்லது 13 வயது மாணவர் இம்மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படலாம்.
நாட்டில் உள்ள சகல மாணவர்களோ அல்லது அவர்களின் ஒரு மாதிரியோ (Sample) இப் பரீட்சைக்கு அமர்வர். குறிப்பிட்ட பாடத்துறைக் கான (மொழி, கணிதம், விஞ்ஞானம்) மதிப்பீட்டுப் பரீட்சையாக இது அமையாது ஆசிரியர்கள், பெற்றோர்கள், அதிபர்கள், மாணவர்கள் ஆகியோரிடமிருந்து வினாக் கொத்தினூடாகத் தகவல்கள் சேகரிக்கப்படும்.
இவ்வாறான தகவல்கள் மாணவர்களுடைய சித்தியுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன. மாணவர்களின் வீட்டுச்சூழல், ஆசிரியர் பயிற்சி, பாட ஏற்பாடு பற்றிய ஆசிரியர் உளப்பாங்குகள், கற்பித்தற் சாதனங்களின் கிடைக்கும் தன்மை போன்ற காரணிகள் மாணவர்களின் சித்தியில் செலுத்தும் செல்வாக்கு என்பன இத்தேசிய மதிப்பீட்டில் ஆராயப்படுகின்றன.
உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும்
தேசிய மதிப்பீட்டில் சில பொது அம்சங்கள் உள்ளன. இம்மதிப்பீடுகள் மாணவர்களின் மொழி
அறிவையும் கணிதத்திறன்களையும் பரீட்சிக்கின்றன. சில நாடுகளில் இரண்டாம் மொழி, விஞ்ஞானம், இசை, சமூகக்கல்வி முதலிய பாடத்துறைகளும் பரீட்சிக்கப்
அகவிழி (மார்ச் 2013

Page 32
L6boop60I. Tလ်လ် BITbilb LTububbယံ၏ bဏာလ DIT600Tuf6f Du6 Fuuuuuu၆booip60: uလ 56bmilလံ၊ 5LLTU ဆံ ၆လံ၍ယံ ၆ လတံငါလံ, ® စာLDကလဲ လံ၍ bဏလulလံ ITTT60 ဖိဗu LD If I၄လံ Geuuuu 6၏om601.
၍ITD 60 D၏u66 BITL၆၆(BIT6 am L65IUp6066. ဗီလ BIT65လံ ၅,60065mb 58buu LD၏u 65 660LGumb. ၊ ဗီလ BIT65flလံ ရွဲ့စာ
Iဲbl၄ 56LGum၈ဝါလံ ၈လ. ဗီလ BIT65ဤလံ ရွှစံ DL6bi 5လံ၍ 60D႕ ဗီ60ITလံ Guiuuuu6်om60. 8၊ ဗီလ 565ဤလံ ဗလံ၍ ! ITui႕- B၈လulbibm
UIT 6 က up @ 60 Dဲ ဖြူဂျုံ T Tui႕ “၆ ဤလံ F6LG560iD60. (bl6DBulလဲ @doITDT60 !!ITTubeB66၈သံ ၆၆Tbuu uလံဆံကလဲ6@bယံ ၆လံ၏ Lဗီဗ႕ Belib၆ ဗလံ၍ J Tu႕ , D၏u၆ ၆စာလစံ (NEREC)
Lubuါလံ FGuL၆ (၆၆ooms) Db ၆လ BITGဤလံ LITLBIT စာလst BuL၍Gtu၏d GuiလBu၂ ©ubLD၏uitl၄လံ ၆လb5/bTfNGb.
douTO Lလ LITLBIT6စာလSof ၆လb5/bToiOIT ၏L, LDT600Tu sဤ ဗီဗာ LOu ၆လံbm ဗrflu60Lu
ITuiuu606.
i Fu6၈LD DIT65 5 60L BITလDT၆၆၅၊ ရွှတံဆံu Duc6 (စာက DD6၈uui Luu u6ဗီဗာ
(၆၆odim601. 1990 6 lo6o785 စ လbITTu ff၏uဂါလံ, LလံumBIT65mgb Luu6ou655LLLL5. 1990 ၆ဤလံ ရှူလဗီဗ်od GLDflb DOmb sifluoo BIT66ဤလံ, 5u လံ၍ Bir ၏(655fb56ဏ5 GBuill bTiT, @bDuc၆ (6စာက Uul6d65juLL5.
1990@b 60 I၄60 Jomtien LDBITIBITL၆ခံ ၆လံ၍၊ ly 6L 60 (စံ စံ ၆ 60 Bu လံu ဆံ ၏ul၆. “uJITI(66(5b 5လံ၍” uဤဤu bD5I[BITLGu IT BL60 LDIT 605, “Iquu6၈L႕ ၆လံ၍uITT 605 စ 60 60LDuIT 60 ၆ထဲကလံ, 56 ဤ၈i (Out come) 6f6diLထံ စာအသံ ၆(6ဗီဗOGBTid 6066. LITLET 6၈လလံ ဆံထံ၊ (pl႕(5b DIT600TuT 605 (5Nu ဗbmလံ LD66 5060စဲ ပါဗ်51၆လံ uuu၏လံ6၈လ” 660႕ အmul5.
IT8p 2000 DTub , 60 IQ 6 LT႕ ၆။ (Dakar) GT BL 60(စံ @IT DT 60 ကံ ကုလံ ဤ၈၆((5 (ဖြဲ ၏uu551စံ ၏ဗ်55. NEDuT63 LIILBIT 6စာလ စ if65i, 06blb၏ uဤဤu D၏u၆ိ(Li Li၏လ 5
ဆံ6စံLu ၆ထံအလံ ၏၈၆TIT 60 6ြဲ5ဤလ, 6606000Tဤ4, 5၏uuTNudu ITဗြဲခံစာတံ ဝါဏd5f ummu LDbusb သံဃuဝံJob Gumဗီ G5ITLTbiထဲ60T.
ငါ့ရဲ့ITDIT60 lin855 LDBITIBIT65mlo IT BL60ITBibl, ဗrLDIT60ITBib 6f6duaထဲဤd ဤ၈TIT, စ လ5/bT65 ဗul D၏65mg@ILIT DT600al ဗီဗာဏu m၍ (ဤuLL60.
ယ်နှာ | Dj 2013

பொதுப் பரீட்சைகளுக்கும் தேசிய மதிப்பீட்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு
1. -
குறிக்கோள் 1. மாணவர்களைத் தெரிவு செய்தல், சான்றிதழ் வழங்கல் 1. கொள்கை வகுப்போருக்கு
வழிகாட்டல் வழங்கல்
--- 2.
கால இடைவெளி 2. ஆண்டுதோறும் மீள் பரீட்சை களும் உண்டு 2. கால இடைவெளி நீண்டது உ.
த. நான்காண்டுகட்கு ஒரு முறை 3. பரீட்சைகாலம் 3. பல வாரங்கள் 3. ஒருநாள் அல்லது
இரண்டு நாட்கள் பரீட்சிக்கப்படுபவர்கள் 4. குறிப்பிட்ட வகுப்பில் பரீட்சைக்கு அமரவிரும்பும் சகல மாணவர்களும். 4. வகுப்பு, வயது அடிப்படையில், மாணவர்களிலிருந்து தெரியப்படும் மாதிரி (Sample)
5.
பரீட்சையின் அமைப்பு 5. கட்டுரை வகை, பல் தேர்வு வினாக்கள் 5. பல்தேர்வு வினாக்களும் குறுவிடை வினாக்களும் மாணவர்கள் ஆசிரியர்களுக்கான முக்கியத்துவம் 6. அதிக முக்கியத்துவம் 6. குறைந்த முக்கியத்துவம்
பாட ஏற்பாட்டின் அளவு 7. பிரதான பாடங் கள் அனைத்தும் 7. பொதுவாக ஓரிரு பாடங்கள் மட்டும் (கணிதம், மொழி)
கற்பித்தல் செயற்பாட்டில் தாக்கம் 8. அதிக தாக்குதல், ஆசிரியர் பரீட்சைக்காக, எதிர்ப்பன வற்றைக் கற்பிப்பார் 8. குறைந்த முக்கியத்துவம்
9.-
மாணவர் வேறு போதனையை (Tuition) நாடல் 9.
அதிக அளவில் 9. அதிகம் நாடுவதில்லை 10. மாணவர்களுக்குப் பெறுபேறுகள் கிடைக்குமா?
10. ஆம் 10. இல்லை
11.
மாணவர்களிடமிருந்து வேறுதகவல்கள் திரட்டப்படுமா? 11. இல்லை 11. ஆம் வினாக்கொத்துக்கள் பயன்
படுத்தப்படும். 12. புள்ளியிடல் 12. புள்ளியிடல் திட்டம் தயாரிக்கப்பட்டு
அதன்படி 12. சிக்கலான புள்ளியியல் முறைகள்
13. மாணவர் அடைவில் ஏற்படுத்தும் தாக்கம் 13. மோச
மான பெறுபேறுகள் இடைவிலகளுக்கு இடமளிக்கும் 13. எந்தத் தாக்கமும் இல்லை
14. கால ஓட்டத்தில் மாணவர் அடைவின் போக்குகளை
அறிந்து கொள்ளல் 14. முடியாது, ஒவ்வொரு ஆண்டும் பரீட்சிக்கப்படும் மாணவர்கள் வேறு பட்டவர்கள் 14. இந்நோக்குடன் பரீட்சைகளைத் தயாரிக்கும் போது சாத்தியம்
30

Page 33
இவ்வாறான தேசிய மதிப்பீட்டு முறைமை தோற்ற முறுவதற்கு மற்றொரு காரணமும் இருந்தது. 1970 கள், 1980 களில் முறையின் சிறப்பை மதிப்பிட “உள்ளீடுகள்”
puts) பயன்படுத்தப்பட்டன. உதாரணமாக, பாடசாலைக் கட்டட வசதிகள், ஆய்வுகூட வசதிகள், நூல் நிலையங்கள், தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் - இவை இருப்பின் பாட சாலைகள் தரமானவை எனக் கொள்ளப்பட்டன. ஆனால், 1990 களில், இவ்வாறான "உள்ளீட்டு” அம்சங்களை விடுத்து, மாணவர்களின் அடைவு/சித்தி அல்லது கல்வியின் விளைவுகள் (Output) என்னும் அம்சத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதாவது, பாடசாலைகள் பல்வசதிகளைக் கொண்டிருக்கலாம்: ஆனால், அவை கல்வித்தராதர மேம்பாட்டுக்கு உத்தரவாத மில்லை. எனவே மாணவர்களின் கல்வி அடைவுகள்/சித்திகளைக் கொண்டே கல்விமுறைகள் மதிப்பிடப்படல் வேண்டும் என்ற புதிய கருத்து முன் வைக்கப்பட்டது.
புதிய சிந்தனைகளின்படி, சிறந்த வளங்களைக் கொண்ட பாடசாலையே சிறந்த பாடசாலை என்ற கருத்து வலுவிழந்தது: சிறந்த பெறுபேறுகளைக் கொண்ட பாடசாலையே சிறந்த பாடசாலை என்ற புதிய கருத்து உருவாயிற்று. கல்விமுறைகளின் பெறுபேறுகள் மதிப்பீடு செய்யப்பட்டு அவற்றின் தராதரத்தைக் கணிக்கும் புதிய சிந்தனை கடந்த இரு தசாப்த காலத்தில் உலகளாவிய ரீதியில் பிரசித்தி பெற்றுள்ளது.
முந்திய சிந்தனையின்படி பாடசாலைகள் சிறந்த வளங்களைப் பெற்றிருந்தால் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என நம்பப்பட்டது. இதனால் வளங்களைக் கொண்டு பாடசாலைகளின் சிறப்பு மதிப்பிடப் பட்டது. ஆயினும், 1980 களில் கல்விப் பொருளியல் ஆய்வாளர்கள் செய்த ஆய்வுகளின்படி, அபிவிருத்தியடைந்த நாடுகளின் கல்விமுறைகளின் வளங்கள் காரணமாக உயர்ந்த கல்விச் சித்திகள் ஏற்படவில்லை எனத் தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டது.
வளங்களைக் கூட்டிக்கொண்டே செல்லும்போது, அதன் பெறுபேறுகளும் விளைவுகளும் அதே வீதத்தில் அதிகரித்துச் செல்லாது என்ற பொதுவிதி பொருளாதார நடவடிக்கைகளுக்கு மட்டுமன்றி கல்விக்கும் பொருந்தும் என்பதை இவ்வாய்வுகள் எடுத்துக்காட்டின. இதற்கு ஒரு நல்ல உதாரணம் பாடநூல்கள்: பாடநூல்களின்றி வாசிப்புத்திறனை வளர்க்க முடியாது. ஒரு மாணவனுக்கு ஒரு பாடநூல் வழங்கப்படும்போது வாசிப்புத்திறன் அதிகரிக்க வாய்ப்புண்டு. ஆனால், பாடநூல்களின் தொகை அதிகரித்துச் சென்றால், அவ்வதிகரிப்புக்கு ஏற்பட வாசிப்புத்திறன் அதிகரிக்காது. ஒரு கட்டத்தில் புதிய பாடநூல்களின் பயனை அளக்க முடியாது போய்விடும்.
| 31

மேலும், பாடசாலைகளில் ஏராளமான வளங்கள் இருந்தாலும் அவற்றை முகாமை செய்வதற்கான திறமை பாடசாலையில் இருக்க மாட்டாது. சில பாடசாலைகளில் சிறந்த முகாமை இருந்தாலும் மாணவர்கள் பல்வகைப் பட்டவர்களாக இருப்பர். அவர்களில் பலர் கற்றல் குறைபாடுடையவர்களாக இருப்பர். உடல்நலக் குறைவு, குறைந்த உள்ளார்ந்த ஆற்றல், தாய்மொழி வேறாகவும் பாடசாலை மொழி வேறொன்றாகவும் இருத்தல், கல்வியில் ஊக்கஞ் செலுத்தாத குடும்பத்தில் இருந்து வருதல், பாடசாலையிலும் வீட்டிலும் குறைந்த நேரத்துக்குக் கற்றல் - இவை போன்ற காரணங்களால் பல மாணவர்கள் சரியாகத் தேர்ச்சி அடைவதில்லை. மறுபுறம் சில மாணவர்கள் தனியாரிடம் போதனை பெறல், பெற்றோரின் உதவியைப் பெறல், பல கலாசார செயற்பாடுகளில் பங்கு கொள்ளல் காரணமாக, சிறப்பாகக் கற்பர். இவ்வாறான இருவகை மாணவர்கள் இருக்கும்போது கல்வி வளங்கலும். பாடசாலைகளின் தராதரங்களைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மதிப்பிடும்போது, கல்விக் கொள்கைகளை உருவாக்குவது தொடர்பான ஒரு புதிய அணுகுமுறை உருவாகின்றது. கடந்த காலங்களில் கல்விக் கொள்கைகளை வகுப்போர் தமது சொந்த அறிவு, அனுபவம், பெறுமானங்கள், கருத்துக்கள் என்பவற்றிலேயே தங்கி இருந்தனர். ஆனால், காலப் போக்கில் கல்விக் கொள்கைகள் உண்மை நிலைமைகள் (facts), பாடசாலைகளின் வினைத்திறன் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்பட்டன: மேலும், பெரும் பான்மையினரான மாணவர்களின் கல்வித் தேர்ச்சியை மேம்படுத்தும் நோக்குடையனவாக அவை அமைந்தன. சகல மாணவர்களையும் சமமாகப் பார்த்தல், சம அளவில் உதவுதல் என்பதற்குப் பதிலாக, குறைந்த தேர்ச்சியுடைய மாணவர்களுக்கு விசேட உதவி என்ற முறையில் கல்வி முறையின் செயற்பாடுகள் மாற்றமுற்று வருகின்றன.
தேசிய மதிப்பீடுகளின் தேவை உலகநாடுகளின் கல்வி அமைச்சுக்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் கல்வி முறையின் பலமான அம்சங்கள், பலவீனமான அம்சங்கள் என்பற்றை இனங்காணவும், கால ஓட்டத்தில் கல்வித்துறையில் ஏற்பட்ட மாற்றங்களைக் கணிப்பீடு செய்ய மதிப்பீட்டுப் பரீட்சைகளை நடாத்துகின்றன. ஒரு காலகட்டத்தில் கல்வி முறையின் பலம், பலவீனம் பற்றித் தெரிந்துகொள்ளும் அதேவேளையில், கல்வி அமைச்சுக்கள் பிராந்தியங்களின் (மாகாணங்கள், மாவட்டங்களின்) கல்விநிலை பற்றியும் அறிந்துகொள்ள விரும்புகின்றன. ஒவ்வோரு பிராந்தியத்திலும் எத்தனை சதவீதமான பிள்ளைகள் போதிய அளவு தேர்ச்சியைப் பெறுகின்றனர்? பரீட்சையில் மாணவர்கள் விடும்
அகவிழி |மார்ச் 2013

Page 34
தவறுகள் என்ன? கல்விச் சித்தியில் ஏதேனும் பாலின வேறுபாடு உண்டா? பல்வேறு சமூக - பொருளாதாரக் குழுக்களின் கல்விச்சித்தியில் உள்ள வேறுபாடுகள் எவை? பாடசாலைகள் மற்றும் மாணவர் மத்தியில் கல்விச் சித்தியில் வேறுபாடுகள் காணப்படக் காரணம் என்ன? முதலிய விடயங்களும் இம்மதிப்பீட்டில் ஆராயப்படுகின்றன. இவை யாவும் கல்விக் கொள்கைகளை வகுப்போருக்கு உதவக்கூடிய தரவுகளாகும்.
அரசாங்கங்கள், தமது கல்விமுறையை நவீன மயப்படுத்துவதற்கு நவீன முகாமைத்துவ முறையைப் (Business Management) பயன்படுத்த விரும்புகின்றன. அதாவது, தந்திரோபாய திட்டமிடல் முறைகளைத் தற்போது கையாள விரும்புகின்றன. கல்விமுறையின் செயலாற்றும், அதற்குப் பொறுப்புக் கூறல் (Accountability) முதலிய நவீன முகாமைத்துவ ஏற்பாடுகள் இன்று பெரிதும் விரும்பப்படுகின்றன. இவ்வாறான நோக்கில் தேசிய மதிப்பீடுகள் தேவையான தரவுகளை வழங்கும் என்ற எதிர்பார்ப்பும் உண்டு.
அரசாங்கங்கள் கல்விக் கொள்கைகளை வகுப்பதற்கு மாணவர்களினுடைய சித்தி/அடைவுமட்டம் பற்றிய தரவுகள் ஒரு கட்டாய தேவை. இவை பொதுவாக அரசாங்கங் களுக்குக் கிடைப்பதில்லை. தேசிய மதிப்பீடுகள்
இவ்வாறான அடிப்படைத் தரவுகளைத் தரவல்லன.
1 - வியட்நாம்
வியட்நாம் நாட்டின் பாடசாலைத் தேசிய மதிப்பீடானது, அந்நாட்டின் பாடசாலைகளின் அடிப்படை வளப் பற்றாக்குறையை தீர்க்க உதவியது.
சான்சிபார் நாட்டின் தேசிய மதிப்பீடுகள் 48 சதவீத பாடசாலை மாணவர்களுக்கு இருக்கை வசதிகள் இல்லை என்பதைத் தெரிவிக்கின்றன.
பூட்டான் நாட்டு மாணவர்கள் பல மணிநேரம் பயணம் செய்து பாடசாலைக்குச் செல்ல வேண்டியிருந்ததை இம்மதிப்பீடுகள் தெரிவித்தன.
நமீபியா நாட்டின் தேசிய மதிப்பீடுகளின் படி, ஆசிரியர்கள் கணிதம், ஆங்கிலம் போன்ற பாடங் களில் போதிய தேர்ச்சி பெற்றிருக்கவில்லை.
தொடர்ச்சியாக நடாத்தப்படும் தேசிய மதிப்பீடுகளி னூடாக கல்வித் தராதரங்கில் ஏற்படும்ட முன்னேற்றம் அல்லது சீர்கேடு அல்லது நோக்கம் என்பன பற்றிச் சரியாக விளங்கிக் கொள்ள முடியும். பல வளர்முக நாடுகள் மாணவர் தொகையை அதிகரித்தல், புதிய பாடசாலைகளை நிர்மாணித்தல், ஆசிரியர்களைப் பயிற்றுதல், முதலிய விடயங்களில் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றன. அதே வேளை கல்வித் தராதரங்களை மேம்படுத்தும் கடமையும் அவற்றுக்கு உண்டு. கல்விக்கான நிதி ஒதுக்கீடும் குறைந்து செல்லும் அதேவேளையில்,
அகவிழி ( மார்ச் 2013

மாணவர்களின் கல்விச் சித்தி பற்றிய தரவுகள் அரசாங்கங் களுக்கு கட்டாயம் தேவை.
தேசிய பரீட்சைகள் நீண்டகாலம் பகுதியில் மாணவர் சித்திகளில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய தகவல்களைத் தரும்.
மாலவி, நமீபியா, சாம்பியா ஆகிய ஆபிரிக்க நாடுகளில் நடாத்தப்பட்ட மதிப்பீடுகளின் படி (1995 - 2001) மாணவர்களின் வாசிப்புத்திறன் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
ஐக்கிய அமெரிக்காவின் தேசிய மதிப்பீடுகளின் படி, ஒன்பது வயது கறுப்பு இனத்தவர், ஹிஸ்பானிக் இனத்தவர் களின் வாசிப்புத்திறன் வெள்ளையின மாணவர்களுக்குச் சமமாக வளர்ச்சியடைந்திருந்தது. மூன்று தசாப்த கால மதிப்பீடுகள் இவ்வாறான முடிவுக்கு வந்தன.
நேபாள நாட்டில் நடாத்தப்பட்ட தேசிய மதிப்பீடுகளின் படி (1997 - 2001) வரவு செலவுத் திட்டக்கொள்கைகள் மற்றும் பாட ஏற்பாடு, பாடநூல்கள், ஆசிரியர் விருத்தி தொடர்பான கொள்கைகளின் விளைவுகள் பற்றி அறியக் கூடியதாக இருந்தது.
இன்று உலகநாடுகள் ''அறிவுசார் பொருளாதாரங் களை" உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. (அறிவுப் பொருளாதாரமானது உலகளாவிய ரீதியில் பெருகிவரும் அறிவை உள்வாங்குவது, நாடெங்கும் அதனைப் பரப்புவது, புதிய அறிவை உருவாக்குவது, அதனைச் சேமித்துக் கொள்வது, பொருளுற்பத்திக்கு அதனைப் பயன்படுத்துவது) மாணவர்கள் உழைக்கும் உலகில் பங்குகொள்ள முன்னரை விட அதிக விஞ்ஞான, கணித அறிவைப் பெறவேண்டும். உலக நாடுகள் தமது போட்டித் தன்மையை அதிகரிக்க இவ்வறிவு தேவை. எனவே ஒரு நாட்டின் மாணவர்கள் இவ்வறிவுத் துறைகளில் பிறநாட்டு மாணவர்களுடன் ஒப்பிடும் அளவுக்கான தேர்ச்சியைப் பெற்றிருக்கின்றார்களா என்பதை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. இதற்குத் தேசிய மதிப்பீடுகள் தேவைப்படுகின்றன.
தேசிய மதிப்பீட்டுப் பரீட்சையின் ஆய்வு முடிவுகளின் விளைவாகக் கல்விமுறையின் வள ஒதுக்கீடுகள் பற்றித் தீர்மானங்களை மேற்கொள்ள முடியும். (உதாரணமாக பாட ஏற்பாட்டு மாற்றம், பாடநூல் திருத்தம், ஆசிரியர் விரத்தி) அவுஸ்திரேலியாவில் கணிதம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் பெண்பிள்கைளைப் பங்குகொள்ளச் செய்ய தேசிய மதிப்பீடுகள் உதவின.
உருகுவே நாட்டில் ஆசிரியர் தொழில் விருத்திக்கும் சில்லி நாட்டில் வறிய பாடசாலைகளுக்கு மேலதிக வளங்களை ஒதுக்கவும் இம்மதிப்பீட்டுப் பரீட்சைகள் உதவின.
32

Page 35
பிரத்தியேக வகுப்பு பாடசாலை வகுப்பு
ஆக்கம்: திரு. 2 தமிழாக்கம்: தி
இது மிகப்பெரியதொரு விபரீதமாகும். அருகருகே உருவாகிக் கொண்டுவரும் தனியார் வகுப்புக்களின் முன்னால் திரளும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு செல்வது வழமையாக வந்துவிட்டது. கட்டவிழ்த்து விட்டாற்போல் கட்டுப்பாடின்றி பிரத்தியேக வகுப்புக்களை நோக்கி படையெடுக்கும்போது மாணவர் களுக்கு ஏனைய செயற்பாடுகளுக்கு ஒதுக்க வேண்டிய காலம் சூறையாடப்படுகின்றதென்றால் அது மிகையாது. அதேபோன்று பாடசாலை நேரமும் அதிகளவில் வீணடிக்கப்படுகின்றது. பிரத்தியேக வகுப்பெனும் வணிகத்தினால் பெற்றோர் மட்டுமல்ல மாணவர் களும் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளனர். விரும்பியோ விரும்பாமலோ அதற்கு அடிபணிய வேண்டிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது. பரீட்சையைத் தவிர பட்டறிவென்று (Experience) மாணவர் களுக்கு வேறேதும் கிடையாது. பரீட்சையை நினைவூட்டலைத் தவிர அதற்கப்பால் எந்த
சுதந்திரமும் பிள்ளைகளுக்கில்லை.
ID06
தேசிய கல்வி ஆணைக்குழு கடந்த 2010 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வின்படி பிரத்தியேக வகுப்புக்கள் காரணமாக மாணவர் கள் உடல், உளப் பிரச்சினைகளுக்கு முகங் கொடுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மாணவர் கள் பிரத்தியேக வகுப்புக்களை நாடுவது பற்றிய விபரம், அதற்கான காரணங்கள், காரணிகளைக் கண்டறிதல், பிரத்தியேக வகுப்பு சார்பாக மேலெழும் சமூகப் பிரச்சினைகளை இனங்காணல் என ஆறு குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இவ் ஆய்வின் முடிவுகள் பெருமளவில் சமூகத்தை விழிப்புணர்விற்கு உட்படுத்தியதாகத் தென்படவில்லை.
இவ் ஆய்விற்காக ஏழு மாகாணங்களில் 15 மாவட்டங் களில் பரவலாகக் காணப்படும் எண்பது பாடசாலைகளின் மாணவர்கள் உள்ளடக்கப்பட்டனர். இப்பாடசாலைகளினுள்
முப்பது தேசிய பாடசாலைகளும் அடங்கும்.
|33

பூக்களின் எழுச்சியும் ஏக்களின் வீழ்ச்சியும்
திலந்த மதுராவள் ரு. A. A. அஸீஸ்
10 ஆம் தரத்தைச் சேர்ந்த 2578 மாணவர்களும், 12 ஆம் தரத்தைச் சேர்ந்த 884 மாணவர்களும் ஆய்விற்குட் படுத்தப்பட்டனர். இவற்றைவிட 135 பாடசாலைகளை பிரதிபலிக்கும்பொருட்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்த 310 மாணவர்களும் உட்படுத்தப்பட்டனர். அத்துடன் 10 ஆம் தரம் மற்றும் உயர்தர வகுப்புகளில் கற்பிக்கும் 513 ஆசிரியர்களும், பெற்றோர்கள் 220 பேரும் தெரிவு செய்யப்பட்டனர்.
page 33 ஆய்விற்கமைய பத்தாம் தரத்திற்குரிய பாடங்களிற்கு அதிகளவு பிரத்தியேக வகுப்புக்களை நடாத்தியிருப்பது அரச பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் என்பதுடன் சதவீதமாக 65% எட்டுகின்றது. உயர்தர வகுப்புக்களின் பக்கம் கவனம் செலுத்தும்போது உயர்தரத்திற்கான பிரத்தியேக வகுப்புக்களை நடாத்தும் அரச பாடசாலை ஆசிரியர்கள் 40% என்பதும் தெரிய வந்தது.
தற்போதைக்கு இரு வருடங்களுக்கு முன் நடாத்தப் பட்ட இவ் ஆய்விற்கமைய 10 ஆம் தர மாணவர்கள் ஒரு பாடத்திற்கு 325 ரூபாய்களையும், உயர்தர வணிகப் பிரிவினர் ஒரு பாடத்திற்கு 425 ரூபாய்களையும் செல விடுவது மதிப்பிடப்பட்டது அத்துடன் தனிப்பட்ட (Personal
அகவிழி (மார்ச் 2013

Page 36
Class) வகுப்புக்கள் மற்றும் குழுவகுப்புக்கள் (Group Class) என்பவற்றிற்கு இவற்றைவிட அதிகளவு தொகை செலவிடப்படுவதும் அறியப்பட்டது. அதுமட்டுமல்ல 10ஆம் தரத்தைச் சேர்ந்த மொத்தமான மாணவர்கள் பத்துப் பாடங்களிற்கும் மாதாந்தம் ஆகக்குறைந்தது 225 மில்லியன் ரூபாய்களையும், உயர்தர வணிகப்பிரிவு மாணவர்கள் மாதாந்தம் 74 மில்லியன்களையும், கலைப் பிரிவினர் 98மில்லியன்களையும், உயிரியல் விஞ்ஞானப் பிரிவினர் 98மில்லியன், கணிதப்பிரிவினர் 68 மில்லியன் களையும் மாதாந்த பிரத்தியேக வகுப்புக் கட்டணமாக செலுத்துகின்றனர்.
பிரத்தியேக வகுப்புக்கள் மாணவர்களிலேற்படுத்தும் பிரச்சினைகள் பல பற்றியும் ஆய்வறிக்கை கருத்துக்களை வெளியிட்டிருந்தது.
3.
பிரத்தியேக வருப்புகளிற்குச் செல்வதன் பயனாக 1. அன்பு - உறவுகள் - (Love) வலுப்படல் 2. அநியாயங்கள் நிகழ்தல்
போதைப்பாவனை போன்ற சமூக, பண்பாட்டு
விரோதியான செயல்களுக்கு சந்தர்ப்பம் கிடைப்பதுடன்
4.
கற்பை இழத்தல்/பாலியல் துஷ்பிரயோகம்
5.
மிரட்டல்களுக்குட்படல் (பலவந்தப்படுத்தப்படல்) என்பற்றுடன் உடலியல், உளப்பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுதலும் இவற்றுள் அடங்கும்.
அத்துடன்
உரிய நேரத்திற்கு உணவுண்ணாமை சமநிலையான / நிறையுணவுகளை உட்கொள்ளாமை விரைவுண்களுக்கு (Junk Food/ Fast Food) பழக்கப்படல் என்பவற்றால் உடலியல் நோய்களுக்கு உட்படுவதால்
ஓய்வும், வினோதம், குறைவடைதல்
அதிக களைப்பு மன அழுத்தம் ஆகியவற்றுடன் காலங் கடத்து வதால் மன நோய்களுக்குட்படும் வாய்ப்பு அதிகமாகக் காணப்படுவதுடன் இவற்றிற்கான முழுமையான காரணம் பரீட்சைப் பதகளிப்பும் பிரத்தியேக வகுப்புக்களை நாடுவதும் என தேசிய கல்வி ஆணைக்குழு தெளிவாக எடுத்துரைக்கின்றது. ஆய்வின் பின்னர் ஆணைக்குழு பல விதத் துரைப்புக்களையும் முன்வைத்துள்ளது.
அகவிழி | மார்ச் 2013

முழுமையான கல்வியேற்பாடுகளும் பரீட்சையை மையமாகக் கொண்டு செயற்படினும் பிரத்தியேக வகுப்புகளிற்குச் செல்வதன் மூலம் மாத்திரம் பரீட்சையில் சித்தியடையாமை நீரூபிக்கப்படல்.
தேசிய ஆசிரிய இடமாற்றம் பற்றிய கொள்கை யொன்று அமுலில்லாததால் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை எழுச்சி பெற்றிருத்தல் என்பன அவற்றுள் முதன்மையானவையாகும். அனைத்துப் பாடசாலைகளும் கண்காணிப்பிற்கும், மேற்பார்வைக்கும் உட்படக்கூடிய வகையிலான அதிகார முடைய (பலமான) அமைப்பொன்றை உருவாக்கி கண்காணிப்பை மேற்கொள்ளக்கூடிய செயற்றிட்டமொன்றை வகுக்க வேண்டுமென கல்வி அமைச்சிடம் தேசிய கல்வி ஆணைக்குழு பரிந்துரைப்பது மேற்கூறிய அனைத்து விடயங்களையும் தீர ஆராய்ந்த பின்னராகும். கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு முறையான தலைமைத்துவமொன்றை ஏற்பாடு செய்தல் அதேபோன்று சாதாரண தர (O/L) மாணவர்கள் பெருமளவில் பிரத்தியேக வகுப்புக்களின் வழிகாட்டலை நாடும் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களின் ஓர் விதந்துரைப்பாக முன்வைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் அதேபோன்று கல்விப்பணிப்பாளர்களின் பணி அடைவுகளை மதிப்பிடு வதற்குப் பொருத்தமான நடவடிக்கையெடுத்தலையும் ஒரு விதந்துரைப்பாக கல்வி அமைச்சிடம் முன்வைத்த ஆணைக்குழு பாடசாலைகளில் முறையாக சமநிலை யொன்றை ஏற்படுத்த வேண்டுமெனவும் கூறுகின்றது.
மேலும் பரீட்சையை மையமாகக்கொண்ட கல்விக்கு மாற்று வழியாக தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ள பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீட்டு நடவடிக்கைகளை அமுல்ப்படுத்துவதும் அதன் மற்றுமொரு யோசனையாகும்.
அவற்றைத்தவிர பாடசாலை, பெற்றோர், மாகாணசபை, மாகாணக் கல்வி அமைச்சு, தேசியக் கல்வி நிறுவனம் (NIE) தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, இலங்கை பொலிஸ் (Police) திணைக்களம் மற்றும் பிரத்தியேக வகுப்புக்களை நடாத்தும் போதகர்கள் ஆகியோர் நிறைவேற்றவேண்டிய பொறுப்புகள் வெவ்வேறாக
தரப்பட்டுள்ளன.
2010 ஆம் ஆண்டு ஆய்வு செய்யப்பட்டு 2011 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இவ் அறிக்கையை 2012 ஆம் ஆண்டிலும் நாம் பரிசீலனை செய்யக் காரணம் துரிதமாக அதிகரித்து வரும் பிரத்தியேக வகுப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்பும் தன்முனைப்புச் செயற்பாடுகள் அதிகரித் திருத்தலுமாகும். ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையும் சாதாரண தர, உயர் தர பரீட்சைகளைப்போன்றே போட்டி
- 34

Page 37
மிகுந்தது. சா/த, உ/த பரீட்சைகள் தரம் 6, 7, 8 வரையும். புலமைப் பரீசில் பரீட்சை தரம் 2, 3, 4 வரையும் ஊடுருவிக் காணப்படுகின்றது. ஆரம்ப பிரிவு வகுப்புக்களில் கணிதம், ஆங்கிலம் என்பன சூடுபிடித்திருப்பது புதுமையாய் அமைகிறது.
2013 இல் 6 ஆம் தரத்திற்குச் சேரும் பிள்ளை 2012 டிசம்பர் மாத விடுமுறையிலிருந்து கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் மட்டுமல்ல தாய்மொழிக்கும் தனியார் வகுப்புகளிற்குச் செல்கின்றது. அதேபோன்று தரம் 3 இற்கு சேரவிருக்கும் மாணவர்களுக்கும் கணித-ஆங்கில வகுப்புக்கள் தொடங்கியுள்ளன. பிள்ளையைச் சேர்த்த காரணத்தால் பெற்றோரும் அதன்பின்னே அலையலையாய் அலைகின்றனர். இவ்வாறு வகுப்புகளைத் தொடங்குபவர்கள் பெரும்பாலானோர் அரச பாடசாலை ஆசிரியர்கள். நிலவும் நிலவரங்களிக்கேற்ப பிரத்தியேக வகுப்புக்கனுப்பாத பெற்றோர் ஒருசிலர் மாத்திரமே. அவர்களுக்குப் பல சவால்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும். வரு மானத்திற்காய் செயற்படும் ஆசிரியர்கள் தன்னிடம் வராத பிள்ளை தன்னை அவமதித்ததாய்க் கருதி கட்டணம் செலுத்தாமைக்குப் பரிகாரமாக கண்டனங்களை வெளி யிடுகின்றனர். வகுப்பில் கற்பிக்காத இவர்கள் தமது ஆற்றல் திறமைகளை பிரத்தியேக வகுப்புகளில் சந்தைப் படுத்தி இலாபமீட்டுகின்றனர். இவர்கள் பாடசாலை வகுப்பறையில் நித்திரை மயக்கத்தில் செயற்படுவது பொதுமக்கள் செலுத்தும் வரிப்பணம் மூலமே தான் வேதனம் பெறுகிறேன் என்பதை மறந்த நிலையிலாகும். எவ்வளவு திறமையான பிள்ளையும் தன்னிடம் பிரத்தியேக வகுப்பிற்கு வரவில்லையாயின் வகுப்பறையில் மன வேதனைக்குப் உட்படுத்தப்படுகின்றது. பிள்ளைகளில் உளவிருத்தியை ஏற்படுத்த வேண்டிய ஆசிரியர்கள் உள் அழுத்தத்தை உண்டுபண்ணுவதாக பெற்றோருக்கு நிகழ்ந்த நிர்க்கதிகளிலொன்றாகும். எனவே பாடசாலை ஆசிரியரிடமே கட்டணம் செலுத்தியும் கற்கட்டும் எனும் பெற்றோரின் மனப்பாங்கு (Attitude) பொதுமைப்பாடடைந்து (Generalization) காணப்படுகிண்றது.
புலமைப்பரிசில் பரீட்சைக்காக பல வருடங்கள் பிரத்தியேக வகுப்புக்களில் பிள்ளைகளுக்கு கற்கவிடுவதன் நோக்கம் பிரபல பாடசாலையொன்றில் அனுமதி பெறுவ தாகும். பிரபல பாடசாலைகளில் போதியளவு ஆசிரியர்கள் சேவையிலுள்ளனர். ஆயினும் இரண்டாம் நிலைப் பாடசாலைகளின் (Secondary School) அபிவிருத்தியின் பின் புலமைப்பரிசில் பரீட்சையில் காணப்படும் நெருக்கடிகள் குறையுமென கல்வி அமைச்சு அடிக்கடி கூறிவருகின்றது. எனினும் அவ் அபிவிருத்தியில் நம்பிக்கை கொள்ள முடியாததற்கான காரணம் மஹிந்தோதயம்” விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கு மாத்திரம் அடிக்கல் நாட்டப்பட்டுக்
35

கொண்டு செல்லும் ஆமையின் வேகத்திலான அபிவிருத்தி யாகும்.
அதேபோன்று இரண்டாம், மூன்றாம், நான்காம் தரங்களிற்கு ஆங்கில, கணித வகுப்புகளைத் தொடங்கும் ஆசிரியரின் இலக்கு யாது? அங்கு Business இலக்கே காணப்படுகின்றது. Business மனோநிலையில் பெற்றோரில் ஏற்படுத்தப்படும் ஊக்கல் (Motivation) இறுதியாக பிள்ளை மீது சுமத்தப்படுகிறது. விரும்பியோ விரும்பாமலோ புத்தகத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட எனும் வரையறை பிள்ளை மீது சுமையேற்றப்படுகின்றது. பரீட்சையை மாத்திரம் அவர்களது இளம் மனதில் ஆழமாய்ப் பதியவைக்கும் கவலைக்குரிய இவ்விடயத்தின் முன்னிலையில் அவர்கள் அப்பாவிகளாக அடிபணிகின்றனர். விடுமுறையேதும் அவர்களுக்குக் கிடையாது. ஆடிப்பாடிக் கண்டுகளித்து செலவிடவேண்டிய காலத்தில் வகுப்பில் செலவிட நேரிடுகின்றது. அலையால் அடிபட்டுச் செல்லாது சுயமாக எழுந்து நிற்கும் பெற்றோர்களால் தன்பிள்ளைக்கு புத்தகத்தினால் வேலியிடாது வாழ்க்கைக்கு அத்தியாவசிய வேறு விடயங்களையும் கற்பதற்கு நேரம் ஒதுக்க
முடியுமென்பது நிச்சயம்.
முன்னர் குறிப்பிட்ட பிரத்தியேக வகுப்புகளிற்கான மில்லியன் ரூபாய் செலவு தற்போது (2012) இரட்டிப் படைந்திருப்பதில் சந்தேகமில்லை. ஆணைக்குழுவின் பரிந்துரைப்புக்களை கல்வி அமைச்சு செயற்படுத்தும் வரை பிரத்தியேக வகுப்பெனும் முட்செடியில் பிள்ளைகள் சிக்கித் தவிக்க வேண்டிவரும்.
நிலுவைப்படி, தரவுயர்வு, சம்பள சீர்கேடுகள் என்பன பற்றிய பல வேண்டுகோள்களை முன்வைத்து முன்னைய ஆசிரியர் சங்கங்கள் தற்போது எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. அவர்கள் தொடங்கும் புதிய தவணையில் போராட்டத்தை தீவிரப்படுத்தவும் திட்ட மிட்டுள்ளனர். அவற்றில் எமக்குப் பிரச்சினைகள் ஏதுமில்லை. அவரவர் உரிமைகள் அவரவர்களுக்கு கிடைத்தல் வேண்டும். எனினும் பிரத்தியேக வகுப்பெனும் வியாபாரத்தால் உயர்நிலையில் வாழும் தனது சகாக் களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு அவ் ஆசிரியர் சங்கங்களிடம் காணப்படல் வேண்டும். 220000 ஆசிரியர் களில் பிரத்தியேக வகுப்பு நடத்துவோர் சிறுதொகையின ரென்பதை நாமறிவோம். பொறுப்புக்களை கடமைகளை புறக்கணித்து பணத்தின் மீது வலிந்து செல்லும் இவர் களைக் கட்டுப்படுத்த ஆசிரியர் சங்கங்கள் தயாரா எனும் பிரச்சினை எம்மிடையே நிலவுகின்றது.
பல்கலையும் பயிற்றுவிக்கும் கடலைப்போன்ற ஆசிரியர்கள் இச்சிறு குழுவினரால் மதிப்பு மரியாதை இழப்பிற் கு உட் படக் கூடாதென் பதை மீண் டும் வலியுறுத்துகின்றோம்.
அகவிழி (மார்ச் 2013

Page 38
பியாஜேயின் சிந்தனை
கொள்கை
க. கேதீஸ்வரன் B.Ed (H
பொதுவாகப் பிள்ளைகளின் விருத்தியில் இரு வகையான வளர்ச்சிகள் இடம்பெறுகின்றன. அவை உடல் வளர்ச்சி, உள வளர்ச்சி எனப் பாகுபடுத்தப்படுகின்றன. உளவளர்ச்சியின் போது பிள்ளைக்குப்பிள்ளை அவர்களின் திறன்களின் அளவு வேறுபட்டுக் காணப்படுகின்றன. இத் திறன்களிற் சிந்திக்கும் திறன், எண்ணக்கரு உருவாக்கத்திறன் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன. கருத்தறிந்து சிந்தித்துக் கற்றலே வினைத்திறன் மிக்கதாக அமையும். அவ்வாறே கருத்தை விளங்கிக் கற்றலிலேயே கல்வியின் விருத்தி தங்கியுள்ளது. இவ்வாறாக கல்வியில் முக்கியத்துவம் பெற்று விளங்கும் சிந்தனை என்ற விடயம் தொடர்பான ஆய்வுகளையும் பிள்ளைகளில் மேற்கொண்டு பிள்ளைகளின் சிந்தனை பற்றிய தெளிவையும் விழிப்புணர்வையும்
ஏற்படுத்திய பெருமை ஜீன் பியாஜேயையே சாரும்.
- ஜீன் பியாஜே(Jeen Piaget) சுவிச்சர்லாந்தில் 09.09.1896 இல் பிறந்தார். பியாஜேயின் தந்தை ஒரு பேராசிரியரும், தாய் ஒரு புலனாய்வாளருமாவர். பியாஜே, சிறந்த குழந்தை உளவிய லாளர். ஆரம்பத்தில் உயிரிய
லாளராக இருந்து உளவிய லாளராக மாற்றம் பெற்ற காரணத்தால் இவரது கொள்கைகளில் உயிரியல் சார் கருத்துக்களின் செல் வாக்கு மேலோங்கிக் காணப்படுகின்றன. அறிவாய்வியலிற் சிறப்பு நாட்டம் கொண்ட பியாஜே பிள்ளைகளை உற்றுநோக்கி ஆய்வினை மேற்கொண்டு அவற்றிலிருந்து சிந்தனை பற்றிய கருத்துக்களை முன்வைத்தார்.
பியாஜே ஆரம்பத்திற் தனது ஆய்வினை தன் சொந்தக் குழந்தைகளில் மேற்கொண்டார். பிற்காலத்தில் ஆய்வுக்கென ஆய்வாரள் குழுக்களை அமைத்து ஆய்வினை மேற்கொண்டார். பியாஜேயின் குழுவினர் இரு விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்தார்கள்.
மாணவர்களின் மொழித்திறன், தீர்ப்பளிக்கும் திறன், நியாயங்காணல் ஆகியவற்றின் தொழிற்பாடுகள்
தொடர்பாகவும்.
1.
அகவிழி (மார்ச் 2013

னவிருத்திக்
Dns)
2. எண்கள், நேரம், இடைவெளி, வேகம், பரப்பு,
கனவளவு போன்ற எண்ணக்கருக்கள் எவ்வாறு வளர்ச்சியடைகின்றன. என்ற இரு விடயங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்தார்கள்.
எண் ணக் கருக் களைப் பெற்று அவற்றைத் திரளமைப்புக்களாக வளர்க்கும் திறனையே சிந்தனை வளர்ச்சி என்கின்றார் பியாஜே, இவ்விடத்தில் எண்ணக்கரு, திரளமைப்பு, சிந்தனை ஆகிய விடயங்கள் பற்றி விளக்குதல் அவசியமாகும். பியாஜேயின் கோட்பாட்டின்படி எல்லா உயிரிகளினதும் சிந்தனை இரண்டு அடிப்படையான செயன்முறைகளைக் கொண்டு அமைகின்றன என்கின்றார்.
1. சூழலுக்கேற்பத் தழுவுதல் 2. அனுபவங்களை ஒழுங்கமைத்தல்
இச் செயற்பாடுகள் இரண்டும் புலக்காட்சி, நியாயங் காணல், ஞாபகம் போன்ற உளத் தொழிற்பாடுகள் மூலம் எழுகின்றன.
தாழ் அறிவைக் கொண்ட விலங்கினங்களைப் போலல்லாமல் மனித இனத்தில் ஒரு குழந்தை தனது வளர்ச்சிப்போக்கில் எதிர்ப்படுகின்ற பலவகைச் சூழலுக்கும் பொருந்தி வாழ்வதுடன், அச் சூழலின் சிக்கல் நிறைந்த இயல்புகளுக்கு ஒழுங்கான அமைப்பைக் கொடுத்து விளக்கம் பெறுகின்றான். இவ்வாறு விளக்கம் பெறும் பொழுது குழந்தை, பியாஜே கூறும் எண்ணக்கரு, திரளமைப்பு, சிந்தனை ஆகிய செயற்பாடுகளில் ஈடுபடுகின்றான் என்கின்றார்.
எண்ணக்கரு (Concept)
சில செயற்பாடுகளின் அல்லது சில விடயங்களின் பொதுவான தன்மையைக் குறிக்கும் ஒரு முறையே எண்ணக்கரு எனப்படுகின்றது. இலகுவாகக் கூறின் தரவுகளின் பெதுமையாக்கம் எனலாம். மனிதனாகப் பிறந்தவன் பயன்படுத்தும் ஒவ்வொரு கருத்துள்ள சொற்களும் எண்ணக்கருக்களையே குறிக்கின்றன. எடுத்துக்காட்டாக வா, போ, நீர், நதி, கடல், வானம் போன்ற சொற்கள் அனைத்தும் எண்ணக்கருக்களையே குறிக்கின்றன.
36

Page 39
பிள்ளை பாரஊர்தியை ஏனைய வாகனங்களிலிருந்து பிரித்தறியக் கற்கும் போது, அவை பெரியதோ, சிறியதோ, என்ன வகையானதோ, என்ன நிறமானதோ என்பதைக் கருத்திற் கொள்ளாமல் பார ஊர்திக்கான பொதுவான அம்சங்களைக் கொண்டிருக்கும் வாகனங்களை பார ஊர்தி என வகைப்படுத்துகின்றது. எனவே பிள்ளை பெறும் புலனுணர்ச்சிகளை வகைப்படுத்தி ஒவ்வொரு வகைக்கும் ஒரு பொதுவான குறியீட்டினை, அதாவது பெயரை வழங்கும் செயன்முறையையே எண்ணக்கருவாக்கம் எனலாம். இதற்கு மொழி முக்கியமானதாகக் காணப்படு கின்றது. மொழிவளம் அதிகமாகக் காணப்படும் சமூகங் களில் அதிகமான எண்ணக்கருவாக்கமும், மொழிவளம் குன்றிய சமூகத்தில் எண்ணக்கரு விருத்தி குன்றியும் காணப்படும். இதற்கு நடைமுறை ரீதியான சில உதாரணங் களைக் குறிப்பிடலாம். எமது நாட்டிற் காணப்படும் குறவர் இனத்தவர்களின் மொழிக்கு எழுத்துவடிவம் இல்லை, அத்தோடு புதிதாகக் கண்டு பிடிக்கப்படும் பொருட்களுக்கும் இவர்களின் மொழியில் சொற்கள் இல்லை இதனால் வேற்று மொழியையே நாடவேண்டியுள்ளார்கள். இவ்வாறான நிலையில் அவர்களால் ஒரு பொருள் தொடர்பாகவோ, விடயம் தொடர்பாகவோ எண்ணக்கருவாக்கம் பெறுதல் கடினமாகக் காணப்படுகின்றது. எமது மொழியில் 'மரம்' என்ற சொல் அல்லது எண்ணக்கரு காணப்படுகின்றது. ஆனால் அவுஸ்ரேலியாவிலுள்ள ஒரு பழங்குடியினரது சொற்களில் மரம் என்ற பொதுவான சொல் கிடையாது. மாறாக மா, பலா, தோடை என்று நேரடியாகவே பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களின் சொல்லில் மரம் என்ற சொல் காணப்பட்டால் அவர்களின் மரம் தொடர்பான எண்ணக்கருவாக்கம் எவ்வளவு சுலபமாகிவிடும். எண்ணக்கருவாக்கமானது ஒரு விடயத்தின் அல்லது
பொருளின் பண்புகளைப் பிரித்தறிதல், பொதுமைப்படுத்துதல், ஆகிய இரு செயன்முறைகளைக் கொண்டுள்ளது. திரளமைப்பு: பியாஜேயின் கருத்தின் அடிப்படையில் அனைத்து உயிரிகளும் சிந்திக்கும் போது இரு முக்கிய மான செயன்முறைகளைக் கொண்டுள்ளது. ஒன்று சூழலுக்கேற்ப தழுவுதல் மற்றையது புலக்காட்சி, ஞாபகம், நியாயித்தல் ஆகிய உௗத்தொழிற்பாடுகள் மூலம் பெறும் அனுபவங்களை ஒழுங்கமைத்தல் என்பனவாகும். இச் செயற்பாடுகளில் ஏனைய விலங்குகளை விடவும் மனிதன் அதிகமாக ஈடுபடவேண்டிய கட்டாயப்பாட்டில் உள்ளான்.
பிள்ளைகளில் பியாஜே செய்த அவதானங்களில் அவர்கள் மரபுவழியில் எவ்வித உளத்திறனையும் பெற்றிருக்கவில்லை எனவும், சூழலுக்குத் துலங்குதல் பெறும் சில முறைகளை மாத்திரமே பெற்றிருப்பதாகவும் சூழலுடன் இடைவினையாற்றியே தமக்கென ஒரு நடத்தைக் கோலத்தை அல்லது சிந்தனையில் ஓர் ஒழுங்கு முறையை விருத்தி செய்கின்றனர் என்றும் கண்டறிந்தார். இந்த
37

நடத்தைக் கோலத்தையே திரளமைப்பு என அழைக்கின்றார். இவ்விதமாகப் பல திரளமைப்புகள் வளர்ச்சியடையத் தொடங்கியதும் அவற்றைப் புதிய சந்தர்ப்பங்களில் பிள்ளைகள் பிரயோகிக்கக் கற்றுக் கொள்வர். இதன் விளைவாகவே பிள்ளைகளின் சிந்தனைத் தொழிற்பாடுகள் விருத்தியடைகின்றன என்பது பியாஜேயின் கருத்தாகும். எடுத்துக்காட்டாக குழந்தைகள் பிறந்த சிலநாட்களில் தமது வாயிற் கிடைக்கும் எப்பொருளையும் சுவைத்தல், தமது கையில் அகப்பட்டவற்றை இறுக்கப்பிடித்தல் போன்ற செயற்பாடுகளால் தமது சூழலுக்கு அமைப்புக் கொடுக்கும் திறனை வளர்த்துக் கொள்கின்றனர். சிந்தனையும் திரளமைப்பும்: திரளமைப்பு எனும் பதத்தை உளவியலில் ஹெட் என்பவர் அறிமுகம் செய்தார். இவரின் கருத்தைப் பின்வந்த பியாஜே, பாடலெட், பவ்லோவ் ஆகியோரும் ஏற்றுக்கொண்டனர். திரளமைப்பு என்பதற்கு எல்லோரும் ஏற்றுக்கொள்ளகூடிய பொதுவான வரைவிலக்கணம் ஒன்று இல்லை. திரளமைப்பு என்பது பெரும்பாலும் பழைய அனுபவங்களைக் கொண்ட ஒரு தொகுப்பு, இது எல்லாச் சாதாரண தூண்டற்பேறுகளிலும் உள்ளது. அது எழுந்தவாறு அமையாத கூட்டான தன்மை கொண்ட நடத்தையைக் குறிக்கும்.
சிந்தனைசார் தொழிற்பாடு: தன்மயமாக்கல், தன்னமைவாக்கல் ஆகிய இரு அடிப்படைச் செயற்பாடுகளைக் கொண்டுள்ளது. தன்மயமாக்கல்: குழந்தை சூழலில் ஏதேனும் ஒரு பொருளை எதிர்ப்படும் போது தனது அறிவாற்றலின் தொழிற்பாட்டினால் அதற்கு ஏதேனும் ஓர் அமைப்பைக் கொடுப்பதே தன்மயமாக்கல் ஆகும். அப்போது குழந்தை தான் முன்னர் ஆக்கிய அனுபவத் திரளமைப்பில் அப்புது அனுபவத்தை உள்வாங்குகின்றது. குழந்தை தனது சூழலை ஆராயும் போது சுவைத்தல், இறுக்கிப்பிடித்தல், ஆட்டுதல் போன்ற செயல்கள் மூலம் தன்மயமாக்கல் நிகழ்கின்றது. எடுத்துக்காட்டாக பாலைச் சுவைத்த குழந்தை வேறு உணவுகளைச் சுவைக்கும். தாயின் கைகளைப் பிடித்த பிள்ளை பொம்மையைப் பிடிக்கும். தன்னமைவாக்கல்: சில வேளைகளில் குழந்தையிடம் ஏற்கனவேயுள்ள திரளமைப்பில் பொருந்த முடியாத அனுபவங்கள் எதிர் படக்கூடும் அப்போது தனது திரளமைப்பைத் திருத்தியமைத்து இப் புதிய அனுபவங்களை அதனுள் இயைபுபடுத்த முயற்சிக்கின்றது. இவ்வாறு புதிய அனுபவங்களுக்கேற்ப திரளமைப்பை மாற்றியமைப்பதே தன்னமைவாக்கல் எனப்படுகின்றது. தாய் தன்னை அவதானிக்க வேண்டும் என்று அழுதபிள்ளை தான் சிரித்தாலும் தாய் தன்னை அவதானிக்கின்றாள் என்பதை அறிந்து தாயின் கவனத்தை இரு வழிகளிலும் தன்பக்கம் திருப்பலாம் என திரளமைப்பை மாற்றியமைக்கின்றது.
அகவிழி (மார்ச் 2013

Page 40
தன்மயமாக்கலும் தன்னமைவாக்கலும் ஒன்றை ஒன்று சார்ந்த செயற்பாடுகளாகும். இவை இரண்டும் உயிரியல் சமநிலையையும் சமனற்ற தன்மையையும் மாறி மாறி ஏற்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. பிள்ளையின் அறிவாற்றல் முதிர்வடையும் போது சமநிலைகளே அதிகளவில் இடம்பெறுகின்றன.
சிறு பிள்ளைளுக்குச் சூழல் என்பது செயல்களும் காட்சிகளும் நிறைந்த ஒன்றாகவே தோன்றும். ஆனால் அது வளர்ந்தோருக்கு குறியீடுகள், மொழி, ஞாபகம், கோட்பாடு அகியவற்றைக் கொண்டதாகத் தோன்றும். இவ்வாறு சிந்தனை கருத்துநிலைக்கு மாற்றம் பெறுவதைப் பியாஜே உள்ளமைவாக்கல் என்னளைக்கின்றார். சிந்தனையின் பின்திரும்பும் இயல்பு: ஒரு பிரச்சினையை விடுவிக்கும் போது ஒருவர் சிந்திக்க ஆரம்பித்த நிலைக்குப் பின்னோக்கிச் சென்று சிந்திக்கவேண்டியுள்ளான். ஒரு பாத்திரத்திலுள்ள நீரை இன்னொரு உயரமான பாத்திரத்தினுள் ஊற்றினால் நீரின் உயரம் வேறாகத் தோன்றும். அப்போது அந்த கனவளவு மாறிவிட்டதா எனச் சிந்திக்கும் பிள்ளை தனது சிந்திக்கும் தன்மையைப் பின்திருப்பவேண்டியுள்ளான். சிந்தனையிலே அந்நீரை முந்திய பாத்திரத்தினுள் ஊற்றினால் என்ன நிகழும் என்று அனுமானம் பெறுகின்றான். இதனையே சிந்தனையின் பின்திரும்பும் இயல்பு என்று பியாஜே கருதுகின்றார். உளவளர்ச்சிப் பருவங்கள்: பியாஜே தனது துணை ஆய்வாளர்களுடன் இணைந்து ஏறக்குறைய நாற்பது ஆண்டுகாலமாக உளவளர்ச்சி பற்றி ஆராயும் முகமாகப் பல ஆய்வுகளை நடாத்தினார்கள். இவர்கள் மருத்துவ முறைகளைக் கையாண்டு ஆய்வுகளை நடாத்தியமை விஷேட அம்சமாகும். பிள்ளைகளுடன் அளவளாவுதலே இம்முறையின் சிறப்பம்சமாகும். இம் முறைக்குப் பரவலான எதிர்ப்புக்களும் விமர்சனங்களும் காணப்பட்ட போதிலும் பியாஜேயின் ஆய்வு முடிவுகள் இன்றுவரை உளவியற் துறையில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றமை அதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றது. மேலே குறிப்பிடப்பட்டதைப் போன்று பியாஜே தனது பிள்ளைகளில் ஆய்வினை மேற்கொள்ளும் போது பிள்ளைகள் பிறந்ததி லிருந்து அவர்களை அவதானித்துக் குறிப்பெழுதி முடிவுகளை அனுமானித்தார். இச் செயற்பாடுகள் தனது மூன்று பிள்ளைகளிலும் இடம்பெற்றது. பின்னர் தனது துணை ஆய்வாளர்களுடன் இணைத்து பிள்ளைகளின் எண், நேரம், இடைவெளி, வேகம், பரப்பு, கனவளவு போன்ற எண்ணக்கருக்கள் எவ்வாறு விருத்தியடைகின்றன என்றும், சிந்தனை, தீர்ப்பளித்தல், நியாயம்காணல், காரண-காரிய தொடர்பறிதல் ஆகிய தொழிற்பாடுகளில் என்னென்ன படிகளினூடாகப் பிள்ளைகள் உளவளர்ச்சியடைகின்றார்கள்
அகவிழி | மார்ச் 2013

என்பது தொடர்பாகப் பரவலாக ஆய்வுகளை நடாத்தி
முடிவுகளை வெளியிட்டார்.
பியாஜேயின் கருத்தின் அடிப்படையில் உள வளர்ச்சியானது கட்டிளமைப் பருவம்வரை பல பருவங்களி னூடாக ஒழுங்கான முறையில் தொடர்ச்சியாக ஏறுநிலையில் அமைகின்றது. அத்தோடு ஒவ்வொரு பருவத்திலும் புதுவகையான எண்ணக்கருக்கள் தோன்றுகின்றன என்பதாகும். பியாஜேயும் துணை ஆய்வாளராகிய இல்ஹைடரும் இணைந்து பெருந்தொகையான பரி சோதனைகளையும் அவதானிப்புக்களையும் நடாத்தி இப் படிநிலையமைப்பைப் பல உப்பிரிவுகளை கொண்டமைந்த பிரதான நான்கு பருவங்களை முன்வைத்தார். 1. புலனியக்கப் பருவம்: இப்பருவமானது பிள்ளை பிறந்ததிலிருந்து பதினெட்டு மாதங்கள் அல்லது இரண்டு வருடங்களாக வரையறுக்கப்படுகின்றது.
2. தூலசிந்தனைக்கு முற்பட்ட பருவம்: இது இரண்டு வயதிலிருந்து ஏழு வயதுவரை தொடர்கின்றது. 3. தூலசிந்தனைப் பருவம்: இது ஏழு வயதிலிருந்து பதினொரு வயதுவரை தொடர்கின்றது. இப் பருவம் பருப்பொருட் சிந்தனைப்பருவம் எனவும் அழைக்கப்படுகின்றது.
4. நியசிந்தனைப் பருவம்: இது பதினொரு வயதிலிருந்து பதினைந்து வயதுவரை தொடர்கின்றது.
பியாஜெ முன் வைத்த பிள்ளையின் உள் வளர்ச்சிக் கட்டங்கள்
Piaget's
Congniyive / Development Stages\
புலனியக்கப் தூல சிந்தனைக்கு தூல பருவம்)
முற்பட்ட பருவம் சிந்தனைப்
நியழ சிந்தனைப் பருவம்
பருவம் | Sensorimotor Preoperation Concrete Operational Formal Operational (birth - 2 years old) (2-7 years old)
(7-11 years old)
(adolescence 'adulthood)
ஒவ்வொரு பருவத்தினதும் சிந்தனையில் சில சிறப்பியல்புகளைக் காணலாம். புலனியக்கப்பருவத்தில், பிள்ளையில் சிந்தனையில், பின்திரும்பும் இயல்பு காணப்படும். இதன் மூலம் சிந்திக்க ஆரம்பித்த நிலைக்குப் பின்னோக்கிச் சிந்திக்கும் இயல்பு கிடைக்கின்றது. இரண்டாவது நிலையில் சிந்தனைக் குறியீட்டுத் திரளமைப்பை பெறுகின்றது. மூன்றாவது பருவத்திற் கண் முன்னுள்ள யதார்த்தமான பொருட்கள் தொடர்பான சிந்தனையைக் காணலாம். நான்காம் பருவத்தில்
38)

Page 41
உளச்செயல்கள் சிக்கல் நிறைந்து கருத்து நிலையில் தொகுத்தறிதல், உய்ந்தறிதல் ஆகிய சிறப்பியல்புகளைக் கொண்டிருக்கும்.
புலனியக்கப்பருவம் (0 -2 வயதுவரை): இப் பருவம் தொடர்பாகப் பியாஜே தனது மூன்று பிள்ளைகளையும் அவதானித்து முடிவுகளைப் பெற்றார். குழந்தைகள் பிறந்து 30 நிமிடங்களில் தங்களது விரல்களைச் சூப்பத் தொடங்குகின்றார்கள். பின்னர், தமது புலனுணர்வின் துலங்கல்களினுள் புதியனவற்றையும் தன்மயமாக்கி இயக்கங்களைக் கொண்ட ஒரு திரளமைப்பை ஆக்குவர். இப் பருவத்திற் குழந்தை இயக்கச் செயல்களையே செய்யும், இவை அவனது புலனுணர்ச்சிகளிலேயே தங்கியுள்ளன. இப் பருவத்தில் மொழி, பேச்சு என்பன மிகக்குறைவாகையால் கருத்துநிலை உளத்தொழிற்பாடுகளும் மிகக்குறைவாகவே காணப்படும். பியாஜே இப்பருவத்தினை ஆறு உப பிரிவுகளாகப் பிரிக்கின்றார். 1) பிறந்தது முதல் ஒரு மாதம் வரை: குழந்தை பிறந்து முப்பது நிமிடங்களில் தனது கைகளைச் சுவைக்கின்றது. பின்னர் தனது புலனுணர்வின் தூண்டற்பேறுகளிற் காணப்படும் புதியனவற்றைத் தன்மயமாக்கி இயக்கங்களினாலான ஓர்
அனுபவத்திரளமைப்பை ஆக்குகின்றான். 2) ஒரு மாதம் முதல் மூன்று மாதம் வரை: ஒரு மாதத்தின் பின்னர் குழந்தை தனது வாய், கை, உடல் ஆகியவற்றின் அசைவுகளை இணைத்துத் தான் விரும்பிய வேளைகளில் விரல்களைச் சுவைத்தல் போன்ற செயல்களைச் செய்கின்றான். இவ்வாறே புலன்களை இணைத்துச் செயலாற்றவும் கற்கின்றான். ஆனால் ஒவ்வொரு புலன்களும் பெறும் புலக்காட்சிகள் வெவ்வேறாகவே காணப்படுகின்றன.
3) மூன்று மாதம் முதல் எட்டுமாதம் வரை: இப் பருவத்திற் புலனுறுப்புக்களை இணைத்து பொருட்கள், சில உருவங் களை நிரந்தரமாகக் கொண்டுள்ள தன்மையை
அறிகின்றனர்.
4) எட்டு மாதம் முதல் பன்னிரெண்டு மாதம் வரை: இப் பருவத்தில் இரண்டு அல்லது மூன்று திரளமைப்புக்களை இணைத்து புதிய அனுபவங்களைப் பெறுவர்.
5) பன்னிரெண்டு மாதம் முதல் பதினைந்து மாதம் வரை: இப் பருவத்தில் இடம், காலம், பொருள்கள் பற்றிய எண்ணக்கருக்கள் ஆரம்பமாகின்றன. மறைந்த பொருட்களைத் தேடிக்கண்டுபிடிக்கும் ஆற்றல்கள் என்பன ஆரம்பமாகும். பதினைந்தாம் மாதமளவில் புதிய சூழ்நிலைக்கேற்ப தன்னமைவாக்கம் பெற்றுப் புதிய பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனைப் பெறுவர்.
6) பதினைந்து மாதம் முதல் பதினெட்டு அல்லது இரண்டு வயதுவரை: இப்பருவத்திலே புலனியக்கச் செயல்களுக்கான
39

உளச் செயல்கள் ஆரம்பிக்கின்றன. ஞாபகம், விம்பவாக்கம், குறியீட்டுத் தன்மைகள் போன்றன வளர்ச்சியடைகின்றன.
தூலசிந்தனைக்கு முற்பட்டபருவம் (02 ஓ 07
வயதுவரை)
இப் பருவமானது குழந்தையின் புலனியக்கப் பருவத்தி லிருந்து ஏழு வயது வரை அமைகின்றது. குழந்தை புலனியக்கப் பருவத்தினைத் தொடர்ந்து வளர்ச்சி பெறும் வகையில் குறியீடுகளைப் பயன்படுத்தவும் கருத்துநிலை எண்ணங்களை வெளிப்படுத்தவும் ஆரம்பிக்கின்றார்கள். இப் பருவத்தில் நான்கரை வயது வரையிலான பருவத்தை எண்ணக்கருவுக்கு முற்பட்ட பருவம் எனவும் நான்கரை வயது தொடக்கம் ஏழு வயது வரையிலான பருவத்தை உள்ளுணர்வுப் பருவம் அல்லது அகச்சிந்தனைப் பருவம் என்றும் இரண்டாக வகுத்துள்ளார்.
வான
a. எண்ணக்கருவுக்கு முற்பட்டபருவம் (2-41ஃ2 வயதுவரை): பிள்ளையின் மொழித்திறனானது இப் பருவத்தில் விரை வான வளர்ச்சியைக் கொண்டிருக்கும். சிந்தனை, செயன்முறைகளில் குறியீட்டினைப் பயன்படுத்தும் திறன் விரைவாக வளர்ச்சியடையும். இருப்பினும் அவர்கள் கையாளும் சொற்களுக்கான சரியான எண்ணக்கருக்களைப் பெற்றிருக்கமாட்டார்கள். மொழியின் உதவியால் முக்காலங் களையும் பொருட்கள், செயல்கள் ஆகியவற்றையும் பாகுபடுத்தி விளக்கவும் விரிவாக்கவும் திறன்களைப் பொறுவர். இப் பருவத்திற் பிள்ளைகள் பாவனைசெய்து விளையாடுவர். பாவனையின்போது பிறர் செய்வதை யெல்லாம் தன்னுணர்வின்றி செய்வர். பிறர் செயல்களுக்கும் தன் செயலுக்கும் வேறுபாடுகளை அறியமுடியாத நிலையை தன்-மையநிலை எனப்படுகின்றது. இந்நிலையின் போது தன்மயமாக்கலும் தன்னமைவாக்கலும் துரிதமாகக் காணப்படும். இருப்பினும் இவை இரண்டிற்குமிடையே சமநிலை காணப்படமாட்டாது. புதிய அனுபவமொன்றைப் பெறும்போது சில வேளைகளில் அதனை விளங்கிக் கொள்ளாது ஏற்கனவே கொண்டுள்ள திரளமைப்பில் தன்மயமாகுவர். அல்லது திரளமைப்பைத் திருத்தி யமைப்பதாகப் பாவனை செய்வர்.
இப் பருவத்திற் சிந்தனையின் தர்க்கமுறையோ அல்லது தொகுத்தறி-உய்தறிமுறையோ இருக்காது. உதாரணமாக மரம் அசைவதில்லை ஆகையால் அதற்கு உயிரில்லை என்றும் சூரியன் அசைகின்றது எனவே அதற்கு உயிருண்டு எனவும் கொள்வர் இங்கு அசைவையே உயிருக்கு அடிப்படையாகக் கொள்கின்றனர். இவ்வகையான சிந்தனைகளையே பியாஜே குறுக்குச் சிந்தனை என்றளைக்கின்றார்.
b. ஆக்கசிந்தனைப் பருவம் (41/2 - 7வயதுவரை): இப் பருவத்திற் பிள்ளைகள் தமது செயல்களுக்கும்
அகவிழி |மார்ச் 2013

Page 42
நம்பிக்கைகளுக்கும் காரணங்களைக் கண்டு எண்ணக் கருக்களைப் பெறுவர். எனினும் இப்பருவப் பிள்ளைகளால் சரியான முறையிற் சிந்திக்க முடிவதில்லை. கருத்து நிலையில் நோக்கும் ஆற்றல் இல்லை. எனினும், காட்சி முறையில் ஒரு நேரத்தில் ஒரு தொடர்பை மாத்திரம் ஒப்பிட்டு நோக்குவர். அதற்கு மேற்பட்ட தொடர்புகளை மனதில் நிறுத்திச் சிந்திக்க முடியாதவர்களாகக் காணப்படுவர் ஆகையால் சிந்தனிையில் முன்னேற்றம் காணப்படாது. இப் பருவத்தில் சிந்தனை தன்-மையமாகவே நிகழ்வதால் தமது அனுபவத்துக்கு அமையவே பிற செயல்களையும் விளங்கிக் கொள்வர். இதன் காரணமாக இவர்கள் பொருட்களுக்கு உயிரும் உணர்ச்சியும் உண்டு என்றும் இயற்கை நிகழ்ச்சிகள் மனிதர்களாலேயே ஆக்கப்படுவன என்றும் கருதுவர், இவ்வாறே எளிய தொடர்புகளைக் காணமுடியாதுள்ளனர். இப் பருவத்திற் கற்பனைச் சிந்தனை குறைவாகக் காணப்படும் அத்தோடு உண்மை நிகழ்ச்சிகளை அதிகம் பாவனை செய்வர். ஊதாரணமாகப் பிள்ளைகள் விளையாடும் போது வைத்தியர் போன்று
அல்லது வியாபாரி போன்று பாவனை செய்வது.
எண், கனவளவு, காலம் அகிய எண்ணக்கருக்கள் பிள்ளைகளிடம் எவ்வாறு வளர்ச்சியடைகின்றன என்பதனை அறிவதற்குப் பியாஜே பல பரிசோதனைகளைச் செய்துள்ளார். பிள்ளைகள் இப்பருவத்தில் ஒன்றுக்குமேற்பட்ட நினைவுகளை நினைவில் நிறுதிதி வைத்திருக்கும் ஆற்றலற்ற நிலையில் இருக்கின்றடியால் எண், கனவளவு, காலம் தொப்பான பிரச்சினைகளைத் தீர்க்கமுடியாதுள்ளனர்
அவர்கள் தமது புலக்காட்சியையே ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பளிப்பவராகவும், பிரச்சினைகளிலுள்ள ஒரு விடயத்தில் மாத்திரமே கவனம் செலுத்துபவர்களாகவும் உள்ளனர். உதாரணமாகப் பொருட்களைப் பரவலாக வைத்துவிட்டுப் பின்னர் குவியலாக வைக்கும் பொழுது பொருட்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படுவதாகக் கூறுவர். பியாஜே பிள்ளைகளின் கண் முன்னால் பூச்சாடிகளை நிரலாக வைத்து ஒவ்வொரு பூச்சாடிகளிலும் ஒரு பூ வீதம் வைத்திருந்தார். பின்னர் பூக்களைப் பறித்து குவியலாக வைத்தபோது பூக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் கூறினார்கள். தொடர்ந்து அதே எண்ணிக்கையிலான பூக்களைப் பரவலாக வைத்தபோது பூச்சாடிகளின் எண்ணிக்கைகளிலும் அதிகமான பூக்கள் உள்ளதாகக் கூறினார்கள். இவ்வாறு பூக்களின் எண்ணிக்கையை அவை அமைந்துள்ள அமைப்பை வைத்துத் தீர்மானிப்பவர்களாக இப் பருவத்தினர் காணப்படுவதாக பியாஜே கண்டறிந்தார். இவர்கள் பூக்களின் எண்ணிக்கை தொடர்பாகச் சரியான எண்ணக்கருக்களை ஏற்படுத்த முடியாதவர்களாகக் காணப்படுகின்றனர். இவ்வாறே கனவளவு தொடர்பான எண்ணக்கரு உருவாக்கத்திலும் சிக்கலை இப் பருவத்தினர் பிரச்சினைகளை எதிர் நோக்கினார்கள். ஒடுங்கி நீண்ட
அகவிழி மார்ச் 2013

ஒரு கண்ணாடிச் சாடியினுளுள்ள நீரை அகன்ற ஒரு கண்ணாடிச்சாடியினுள் ஊற்றியபோது நீரின் கனவளவு மாறிவிட்டதெனக் கூறினர். அவ்வாறே இரண்டு சம அளவான களிமண் உருண்டைகளை எடுத்து, ஒன்றைப் பல துண்டுகளாக்கிய போது அவற்றின் நிறை மற்றைய களிமண் துண்டிலும் பார்க்க அதிகமானது எனக் கூறினர். இவ் ஆய்வுகளின் விளைவாக எண்ணிக்கை, பருமன் கனவளவு ஆகியனவற்றின் மாற்றங்கள் தொடர்பான எண்ணக்கரு இப்பருவத்தினரிடையே காணப்படாது எனவும், இவ் எண்ணக்கருவானது 8 வயதிலேயே தெளிவடையும் என்றும் கனவளவின் மாற்றத்தன்மை 10 வயதளவிலேயே புரியும் என்றும் பியாஜே ஆய்வுகளின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு கூறியுள்ளார். எனினும் இம் மாற்றங்களில் சூழலின் தாக்கமும், பரம்பரை, அனுபவம் ஆகியவற்றின் தாக்கம் அதிகமாகக் காணப்படும் எனும் கருத்தைப் பிற்கால உளவியலாளர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
இப்பருவத்திற் பொருட்களை நிரற்படுத்துவதிற் பிள்ளைகளுக்குச் சிரமம் உண்டெனவும் ஒரு நேரத்தில் இரண்டு பொருட்களை மாத்திரமே அவர்களால் ஒப்பிட முடியும் எனவும் பியாஜே கூறுகின்றார். தடிகளை அவற்றின் நீளத்தின் அடிப்படையில் ஒழுங்குபடுத்தும்படி கூறப்பட்ட போது, அவர்கள் ஒவ்வொரு சோடித் தடிகளின் நீளங்களைத் தனித்தனியே ஒப்பிட்டனர். அவர்களால் அதிகளவில் மூன்று தடிகளை நிரற்படுத்த முடிந்தாலும் நான்கிற்கு மேற்பட்ட தடிகளை நிரற்படுத்த முடியவில்லை. இப்பருவத்தினர் பொருட்களின் உயரத்தினை அடிப்படையாகக் கொண்டே அவற்றின் வயது, திறமை போன்றவற்றைக் கருதுகின்றனர். உதாரணமாக உயரமானவர்களை வயதிற் கூடியவர்கள் என்றும் உயரமான மரங்களை வயதிற் கூடிய மரங்கள் எனவும் கருதுகின்றனர். எனினும் இரு பொருட்களிலுள்ள தொடர்புகளை அறியும் திறனிருப்பதனால் அண்மை, பிரிவு, தொடர்ச்சி ஆகியவற்றை விளங்கிக் கொள்வர். மனித உருவத்தைச் சரியான முறையில் வரைவர். தளமான உருவங்களை வளைந்தனவற்றிலிருந்து பிரித்தறிவர். வட்டங்களை நீள்வட்டங்களில் இருந்து பிரித்தறிவர். இவ்வாறே அவர்களில் உளவிம்பங்கள் ஏற்படுவதாகப் பியாஜே கருதுகின்றார். இடைவெளியின் இலகுவான தன்மைகளான பிரிவு, அண்மை போன்றவற்றைப் பிள்ளைகள் விளங்கிக்கொள்ளத் தொடங்கினாலும் நிழல், வெட்டுமுகம் போன்ற புறத்தறி தன்மைகளும், கோணம், சமாந்தரம் ஆகிய கேத்திரகணிதக் கருத்துக்களும் இப்பருவத்தினருக்கு அப்பாற்பட்டவை.
தொடரும்....
40

Page 43
தொண்டைமானாறு வெ
ஓர் மீள்பார்
செ. ரூபசிங்கம்
யாழ்ப்பாண அரசாங்க அதிபரின் வழிகாட்டலுடன் ஆரம்பிக்கப்பட்டு 1963 இல் யாழ் மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்கள பிரதான பொறியியலாளரினால் நடாத்தப்பட்ட நீரியல்வள ஆய்வின் பொருட்டு ஒவ்வொரு மாதமும் முதலாவது திங்கட்கிழமைகளில் குடாநாட்டின் வெவ்வேறு இடங்களிலும் வேளாண்மைச் செயற்பாடுகளின் பொருட்டு நீர்ப்பாசனம் செய்ய முன்னதாக கிணறுகளிலிருந்து நீர்மாதிரிகளை சேகரிக்க வேண்டியிருந்தது.
சேகரித்த நீரில் குளோரைட்டு அயன்களது செறிவு, உவர்த் தன்மை, கடினத் தன்மை, மொத்தத் திண்மப் பொருள்களினளவு, கல்சியம் காபனேற்றினளவு போன்றவை கணிக்கப்பட வேண்டியிருந்தது. குறித்த பகுதிகளிலுள்ள பாடசாலைகளது விஞ்ஞான ஆசிரியர்களால் இப்பகுப் பாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. எவ்வாறாயினும் போதியளவு இரசாயனப் பதார்த்தங்கள் இல்லாமையினால் இத்திட்டம் கைவிடப்பட வேண்டிய நிலையினை அடைந்தது. ஆயினும் வடமாகாண ஆசிரியர் சங்கம் மேற்படி
தொண்டைமான நிலையத்தின்
செயற்பாட்டினை தொண்டைமானாறு, வல்லை, நாகர் கோவில் ஆகிய இடங்களில் பிரதேச நிலையங்களை ஆரம்பித்து தொடரச் செய்தது. இவற்றுள் தொண்டைமானாறு நிலையம் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையம் தவிர மற்றை யவை படிப்படியாக செயலிழந்து சென்றன. மேற்படி
41

ரிக்கள நிலையம் வை
நிலையமே பின்னர் தொண்டைமானாறு வெளிக்கள் நிலையமாகப் பரிணமித்தது.
தொண்டைமானாறு வெளிக்கள நிலையம் ஆய்வுச் செயற்பாடுகளுக்கு இட்டுச் செல்லும் வகையில் களக் கற்கைகளில் மாணவர்கட்கான வாய்ப்புக்களை வழங்கு வதை பிரதான நோக்கமாகக் கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட கல்வியியலாளர்களால் 1968 ஆம் ஆண்டு இலங்கை கல்வி நூற்றாண்டு பூர்த்தியுடன் தாபிக்கப்பட்டது. இந் நிலையம் வதிவிடச் செயலமர்வுகள், கருத்தரங்குகள் போன்றவற்றை நடாத்துவதற்கான சகல வாய்ப்புக்களையும் கொண்டிருந்ததுடன் பூரண ஆய்வுகூட வசதிகளையும் கொண்டதாயிருந்தது. தொண்டைமானாறு ஆற்றினுள் சீமெந்துத் துாண்களின் மீது மேற்குக் கரையோரமாக எழுப்பப்பட்ட இரண்டு மாடிக்கட்டிடம், தங்குமிட வசதிகள் கொண்ட விடுதி, சமையல்கூடம் என்பனவற்றை கொண்ட தாக அமைந்திருந்தது.
1ாறு வெளிக்கள -_ பணகள்பாத்தி
கல்வி அமைச்சில் பாடசாலை செயற்பாடுகளுக்கு வெளியான நிறுவனங்களுள் ஒன்றாகப்பதிவு செய்யப் பட்டதுடன், நிறுவனம் விஞ்ஞானத்தையும் ஆராய்ச்சி களையும் காப்புச் செய்வதற்கான சர்வதேச சங்க அங்கத்தவ நிறுவனங்களுள் ஒன்றாகவும் பாடசாலைச்
அகவிழி (மார்ச் 2013

Page 44
செயற்பாடுகளுக்கு வெளியான சர்வதேச கட்டமைப்புகளுள் ஒன்றாகவும் பதிவு செய்யப்படலாயிற்று. மேற்படி அமையம் புருசெல்ஸ் பெல்ஜியத்தில் தனது தலைமையகத்தினை கொண்டிருந்தது.
வெளிக்கள நிலையத்து இலச்சினை உலகளாவிய சுற்றாடல் நிறுவனங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கூம்புருவான பச்சை வெண்மை நிறப்பாதிகளினுள் அடங்கும் இரண்டு வட்டங்களை கொண்டதாக அமைந் திருந்தது. இச்சின்னம் வடமாகாணத்துக்கு வெளியிலும் பிரபல்யமடைந்திருந்தமை கல்வித்துறை சார்ந்த யாவரும் அறிந்த விடயமாகும். அதேவேளை நிறுவனத்து தொலை நோக்காக கல்வித்தர மேம்பாடும் அதற்கான அடித்தளமாக களநிலைக் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் மாணவரது ஈடுபாடும் பங்குபற்றுகையும் ஆய்வுச் செயற்பாடுகளும் அமைந்திருந்தன. இதன் மூலம் துறைசார்ந்த ஆசிரியர்களது கற்பித்தல் தரத்தையும் மேம்படுத்தக் கூடியதாயிருந்தது. தொடர்ந்து மேற்படி ஆய்வு நோக்கினை அடிப்படையாகக் கொண்ட நிறுவனமானது மாணவர்களுக்கும் ஆசிரியர் களுக்கும் வளவாளர்களைக் கொண்டு குறுகியகால விசேடபயிற்சி நெறிகளை நடாத்தலாயிற்று. பயிற்றுநர் களுக்கு இலவச வதிவிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப் பட்டன. தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் தாவரப் பரம்பல், மண்ணின் தன்மைகள் தொடர்பான கற்கைகள், வதி
விடங்களில் காணப்பட்ட வளர்ப்பு விலங்குகள் போன்றவை பற்றிய படிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மற்றும் மீனவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோருக்கு பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் வதிவிட மற்றும் வதிவிட ரீதியிலற்ற கருத்தரங்குகள் பிரதேச, பிராந்திய, தேசிய சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்படலாயின. தேசிய ரீதியிலான கருத்தரங்குகளுக்கு நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பங்காளர்கள் வருகை தந்ததுடன் சர்வதேசிய ரீதியிலான கருத்தரங்குகளுக்கு ஈராக், இந்தியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலிருந்து பங்குபற்றுனர்கள் வருகை தந்திருந்தனர். கருத்தரங்குகளில் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பான அறிக்கைகள் பங்குபற்றுனர்களுக்கு விநியோகிக்கப்படச் செய்தன.
விஞ்ஞானம் சார்ந்த பாடசாலை பாடவிதான பாடப் பரப்பரப்புகளுள் மாணவர்களது பலவீனமான பகுதிகள் அடையாளப் படுத்தப்பட்டு கருத்தரங்குகள் மாணவர் களுக்கும் அவர்களைப் பயிற்றுவிப்பதற்கான திறன்களை வழங்கும் வகையில் ஆசிரியர்களுக்கும் நடாத்தப்பட்டன. கலை, வணிகம், உயிரியல் கணிதம் ஆகிய துறைரீதியிலான பாடங்கட்கான பரீட்சைகள் சிரேஸ்ட இடைநிலை மாணவர்களுக்கும் கனிஸ்ட இடைநிலையினருக்கு அவர்கள் கற்றுக் கொண்ட பாடங்களிலுமாக தவணைப்
DI
மா
அகவிழி மார்ச் 2013

பரீட்சை வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டன. பரீட்சைகளில் பரீட்சை நியமங்கள் மிக இறுக்கமான முறையில் பேணப்பட்டமையினால் தரம் வாய்ந்தவையாக திகழ்ந்தன.
இத்தகைய நிலை 14 .01. 1984 வரை நீடிக்கச் செய்தது. ஒருசில மணிநேரங்களுள் இராணுவத்தினரிடம் கட்டிடங்கள் கையளிக்கப்பட வேண்டிய நிலைமை உண்டானது. யுத்தகால நடவடிக்கைகளால் முதலில் அச்சுவேலி பின்னர் புத்தூர் 1995 இல் கோப்பாய் என்றவாறு இடம் பெயர்ந்து 2003 இலிருந்து யாழ்ப்பாண வலயக்கல்வித் திணைக்களத்து அறையொன்றினுள் தொண்டைமானாறு வெளிக்களநிலையம் முடங்கலாயிற்று. பரீட்சைச் செயற் பாடுகள் மட்டும் அரையும் குறையுமாக முன்னெடுக்கப் படலாயின சமூகநோக்குடன் இயங்கிய நிறுவனம் படிப்படியாக அவற்றை இழந்து கொள்ளலாயிற்று. தனிநபர்களது தேவைகள் திருப்தியெய்தும் வகையில் விடயங்கள் நிறைவேறலாயின. இதுவிடயம் நிர்வாகக் கட்டமைப்பினரிடமிருந்தே வெளிப்பட்டதாகும். தரமும் தகுதியுமாக தேசிய மட்ட தராதரத்துடன் விளங்கிய மதிப்பீட்டு நியமங்கள் கரைந்து கலைந்து தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஆட்சேர்ப்புச் செய்யும் அடிப்படை களாகின. வடமாகாணத்து கல்வி நிர்வாகக் கட்டமைப்புக் களது பலவீனங்கள் இதற்கு மேலும் வலுச்சேர்க்கச் செய்தது. மூன்று தசாப்த கால யுத்தம் சகாப்தங்கள் கடந்த யாழ்ப்பாணத்து கல்விப் பாரம்பரியங்களையும் தொலைக்கச் செய்யலாயிற்று.
2009 இல் யுத்தம் நிறைவடைந்ததை தொடர்ந்து கொழும்புப் பல்கலைக்கழக களப்பறவையியல் கற்கைக் குழாத்தினால் இயற்கையுடனிணைந்த இனங்களிற் கிடையிலான மீளிணக்கப்பாடு தொடர்பான நிகழ்ச்சித் திட்டம் மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டது. மனித நேயந் தோய்ந்த செயற்பாடாக இது அமையலாயிற்று. நீண்ட காலமாக துருவப்படுத்தப்பட்டிருந்த சமூகங்கள் பொதுக் குறிக்கோள்களின்பால் அணிதிரளவும் பரஸ்பர சந்தேகங்கள் அவநம்பிக்கைகளை களைந்து கொள்ளவும் இயற்கை வலுவான சாதனமாக அமையலாயிற்று. இயற்கையின் வலிமைமிக்க வியாபகப் பாங்கு இலங்கையர் என்ற பொது அடையாளத்துடன் திகழச் செய்யவல்ல காரணி யாகியது. அரசியல் அநாகரிகங்களிற்கு அப்பால் நிர்வாக ரீதியிலான பகட்டுகளைக் கடந்தும் வரட்டு கௌரவங்களைக் களைந்தும் திட்டமிடப்பட்ட 10 பாடசாலைகளுள் 8 பாடசாலைகளில் நிகழ்ச்சித்திட்டம் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டது. உயிர்ப்பல்வகைமை தொடர்பான பல்வேறு பரிமாணங்களிலும் ஆய்வுச் செயற்பாடுகள்
ஆரம்பிப்பதற்கான அடிப்படைகள் இடப்படலாயின.

Page 45
இலங்கையர் என்ற பொது அடையாளத்தை நோக்கி வடக்கும் தெற்கும் இயற்கையினை அடிப்படையாகக் கொண்ட மீளிணக்க நிகழ்ச்சித் திட்டத்தில் இயைபு படுத்தப்படல், இளையதலைமுறையினரது மனங்களிலான தகைப்புக்களை தணித்து நட்புறவுகளை உண்டு பண்ணுதல், இயற்கையினை காப்புச் செய்யும் அர்த்த புஷ்டியான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் போன்றவை ஏனைய குறிக்கோள்களாயின. களப்பறவையியல் கற்கைக் குழாத்தினது பிரசுரங்களை தமிழில் வெளியிடுதல், வடக்கில் உயிர்ப்பல்வகைமைச் செழிப்புத் தானங்களை அடையாளப்படுத்துதல், சுற்றாடல் மற்றும் காப்பு தொடர் பான செயலமர்வுகளை நடாத்துதல் களநிலை அவ தானிப்புக்களை மேற்கொள்ளுதல் மேற்படி செயற்பாடுகளை சுற்றாடலினது பேண்தகு பாதுகாப்பு உறுதிப்படுத்தப் படத்தக்கதாக மேற்கொள்ளுதல் போன்றவை குறிக் கோள்களை எய்தும் நுட்பங்களாயின. இவற்றின் அடிப்படையில் யாழ்மாவட்டத்தில் 60 பாடசாலைகளில் இயற்கையுடன் இணைந்து செயற்படும் மாணவர் கழகங்கள் ஸ்தாபிக்கப்பட்டு நெறிப்படுத்தப்பட்டு வருகின்றன. மேற்படி செயற்பாடுகளில் வடக்குக்கும் தெற்கிற்கும் இடையிலான நிர்வாக ரீதியிலான இணைப்புப் பாலமாக சிறுவர் மகிழ்வக நிறுவனம் திகழ்கின்றது.
இவ்வாறு செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையிலேயே ஆர்வம் கொண்ட துறைசார்ந்த கல்வியியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடமிருந்து தொண்டைமானாறு வெளிக்களநிலையத்தினை மீண்டும் பழைய இடத்தில் பழைய மெருகுடன் ஆரம்பிப்பதற்கான கோரிக்கைகள் எழலாயின. இலங்கை களப்பறவையியல் கறகைக்குழாத்தினது போசகரும் மேற்படி மீளிணக்கப்பாட்டு நிகழ்ச்சித்திட்ட பிரதான செயற்பாட்டாளரும் ஆன பேராசிரியர் சரத் விமலபண்டார கொடகம அவர்களது அயராத முயற்சியுடன் டில்மா நிறுவனம் மேற்படி நிறுவனத்தினை தாபிப்பதற்கான உதவியை வழங்க முன்வந்தது. அதுகாறும் கல்விச் செயற்பாடுகள் எனவும் கருதாது ஆக்கபூர்வமான தமிழ்ச்சமுதாயத்தினது மீளெழுச்சிக்கான செயற்றிட்டங்கள் அனைத்திலுமே அரசியல் சாயம் பூசிவந்த அரச ஆளும் அதிகாரவர்க்கம் தடைகளைத் தளர்த்திக் கொள்ளலாயிற்று. செல்வச்சந்நிதி ஆலய பூசகர்களுள் ஒருவரான அகிலேஸ்வர ஐயர் அவர்கள் தமக்குச் சொந்தமான ஏறத்தாழ 90 இலட்சம் ரூபா பெறுமதியான 6 பரப்புக் காணியினை அன்பளிப்பாக வழங்க 2.8 மில்லியன் ரூபா செலவுடன் 40° X 24' விஸ்தீரணமுள்ள கட்டிடம் நிர்மாணிக்கப்படலாயிற்று.
இக்கட்டிடம் கடந்த 01. 02 - 2013 அன்று திறந்து வைக்கப்பட்டது. வைபவரீதியான ஆடம்பரமான செயற் பாடுகளின் பொருட்டு கட்டிட நிர்மாணிப்பின் பொருட்டு
43

செலவான தொகையிலும் அதிகமானளவு செல வழிந்தமையினை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. மூன்று வாகனங்களில் தென்பகுதியிலிருந்து பிரமுகர்களும் ஊடகவியலாளர்களும் திறப்பு விழாவிற்காக வந்திருந்தனர்.
பேராசிரியர் குகானந்தி அவர்கள் வரவேற்புரையினை நிகழ்த்த திருமதி இராஜா இராம் அவர்கள் நிறுவனத்தினது வரலாற்றினை எடுத்துரைத்தார். வல்வை நகரபிதா கல்வி நடவடிக்கைகளில் நகரசபையினது வகிபாகங்களை எடுத்துரைத்தார். ஆளுநர் பயங்கரவாதம் கழுவியகற்றப்பட்ட காரணத்தினால் வடபகுதிச் சிறார்கள் நிம்மதியாக தமது கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடியதாக உள்ளது என்ற தனது வழமையான அரசியல் உரையை நிகழ்த்தி ஐனாதிபதிக்கு நன்றி தெரிவித்து நின்றார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது பேச்சினில் அரச விசுவாசம் ததும்ப நன்றிப் பெருக்கினை வெளிப்படுத்தினார்.
அறிவுபூர்வமான ஆக்கச் சிந்தனையுடனான முன் மொழிவுகள் பேராசிரியர் சரத் கொடகம், பேராசிரியை சாவித்திரி குணதிலக ஆகிய இரு புத்திஜீவிகளாலும் முன்வைக்கப்பட்டன. பேராசிரியர் சரத் விமலபண்டார கொடகம இனங்களிற்கிடையிலான இணக்கப்பாடான காலப்பகுதிகளை நினைவு கூர்ந்ததுடன் பறவையியல் களக்கற்கை குழாத்தினது நடவடிக்கைளை சுருக்கமாகக் குறிப்பிட்டு இனி வழமையான கடமைகளை ஆரம்பிக்குமாறு வடபகுதிக் கல்விச் சமூகத்திடம் வேண்டி நின்றார்.
பேராசிரியை சாவித்திரி குணதிலக ஆரம்ப காலங்களில் பேராதனைப் பல்கலைக்கழத்திலிருந்து மாணவர் குழாத்துடன் உலர்வலய தாவரங்கள் சூழல் தொகுதிகள் பற்றிய கற்கைகளை மேற்கொள்வதற்காக வந்த அனுபவங்களை நினைவு கூர்ந்தார். டில்மா நிறுவன அதிபர் வடபகுதிச் சமூகத்திற்கான தமது அனுசரணைகளை வெளிப்படுத்தி நின்றார். முன்னைநாள் மாகாணக் கல்விச் செயலாளர் சுந்தரம் டிவகலாலா அவர்கள் விவாகரத்துப் பெற்று மறுமணங்கள் புரிந்து கொண்ட முன்னைநாள் தம்பதியர் தமக்குப் பிறந்த குழந்தைகளைச் சுட்டி எங்கள் பிள்ளைகளுடன் உங்கள் குழந்தைகளும் எனது குழந்தைகளும் விளையாடுகிறார்கள் என்ற கூற்றினை வெளிப்படுத்தி மேற்குலகில் இயல்பாகிவிட்ட இத்தகைய இணக்கப்பாடுதானும் எமது தேசத்தில் எய்தப்பெறுமா என்ற கேள்வியை அனைவர் முன்னிலையிலும் சிந்தகைனக்காகச் சமர்ப்பித்தார். இறுதியாக வெளிக் களநிலைய செயலாளரினால் நன்றி பகரப்பட்டது.
இதற்கிடையில் 15 இற்கும் மேற்பட்ட உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் ஓடிஓடி செய்திசேகரித்த வண்ணமிருந்தமையையும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் அதிபர்கள் கல்வி அதிகாரிகள் ஆகியோரை நேர்முகம் காணவும் செய்தமையையும்
அகவிழி |மார்ச் 2013

Page 46
அவதானிக்கக் கூடியதாக இருந்தது. வடபகுதியினரது அறிவியல் அடையாளங்களுள் ஒன்றான பருத்தித்துறை ஹாட்லிக் கல்லுாரியிலிருந்து வந்த மாணவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களிலிருந்து சமகாலக் கல்விச் செல்நெறிகள் வழிவிட்டும் முறைசாரா ஒழுங்கமைப்புக்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களும் இல்லாத பட்சத்தில் தாம் இத்தகைய ஒருநிறுவனத்திலிருந்து பயன்பெறுவதை யாரும் தடைசெய்ய முடியாதெனக் குறிப்பிட்டமையினை காணக்கூடியதாக இருந்தது. ஊடகவியலாளர்களுள் குறிப்பாக வெளிநாட்டு செய்தி சேகரிப்பாளர்கள் யுத்தத்தினால் ஏற்பட்ட சமூக பொருளாதார இழப்புக்களை மதிப்பிட முயன்றதுடன் மீள்குடியேற்றம் மீளிணக்கப்பாடு போன்றவை இதயசுத்தியுடன் அரசாங்கத்தினால் மேற் கொள்ளப் படுகின்றதா என்பதைனையும் மதிப்பிடச் செய்தமையினை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
சமுத்திரம், கடல், கடற்கரை, கடல்நீரேரி, கடற் புற்படுக்கைகள், பொங்குமுகம், முருகைத் தொடர்கள், மணற்றொடர்கள், உலர்வலய பற்றைக் காடுகள், ஆறுசார்ந்த பற்றைக் காடுகள், உவர் சேற்று நிலங்கள், தரிசு நிலங்கள் முதலான பரந்துபட்ட சூழல்தொகுதிப் பல்வகைமை தொடர்பான களக்கற்கைகளை மேற்கொள் வதற்கு தொண்டைமானாறு வெளிக்கள நிலையம் சிறந்த வாய்ப்பாகும். இந்த வாய்ப்பு இனரீதியான வேறுபாடு களுக்கப்பால் இலங்கைப் பள்ளிச்சிறார்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வாளர்கள் அனை வருக்கும் கிட்டுமாயின் அது வரவேற்கத்தக்கதே. ஆயினும் வடக்கிலும் கிழக்கிலும் மூன்றுதசாப்த கால யுத்தத்தினை
டொக்டர் D.V.). ஹரிச்சந்திர அவர்கள்
அகவிழி | மார்ச் 2013

தொடர்ந்து நில ஆக்கிரமிப்பு, வளங்களது கையகப் படுத்துகைகள் கபளீகரங்கள், தமிழ்பேசும் மக்களது கலாச்சார அடையாளங்களை துடைத்தெறிந்து கொஞ்சம் கொஞ்சமாக மிஞ்சியுள்ள தமிழ்மொழிபேசும் மக்களையும் பேரினம் தன்னுடன் தன் மயமாக்கிக் கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஏனைய யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வு மற்றும் நலன்புரி நடவடிக்கைகள் போன்றவற்றைப் பயன்படுத்துவது போலவே தொண்டை மானாறு வெளிக்கள நிலையமும் அமையுமாயின் மீண்டும் தமிழ்பேசும் மக்கள் கல்வியில் ஆகக்குறைந்த சமவாய்ப்பின் பொருட்டும் ஏமாற்றப்பட்டவர்களாகவே ஆவர். ஏனெனில் 2.8 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்ட கட்டிடம் நாட்டின் வெவ்வேறுபகுதிகளிலுமான 33 களக்கற்கை நிலையங்களிலும் காணப்படும் அடிப்படை வசதிகளைத் தானும் கொண்டிராமை, திட்டமான வரையறுக்கப்பட்ட நிர்வாகப் பொறிமுறைத் தொகுதியை கட்டியெழுப்பிக் கொள்ளாமை, யாழ்ப்பாணத்திலிருந்து நிர்வாக அலகினை தொண்டைமானாற்றுக்கு இடம்மாற்றிக் கொள்வதால் பாதிக்கப்படப்போகும் தனிமனிதர்களது நலன்கள் சம காலத்தில் வடபகுதியிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்திலும் முறைசார் கல்விப் பொறிமுறைகள் திட்டமிட்டு பலவீனப் படுத்தப்படுகின்றமை போன்றவை மேற்படி நிலையத்தினது வினைத்திறனும் விளைதிறனும் கொண்ட ஆரம்பகால நடவடிக்கைளுக்கு இட்டுச்செல்வதற்கான தடைகளாகும். சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரதும் ஒருமித்த செயற்பாடுகள் இத்தடைகளை இலகுவாக எதிர்கொள்வதற்கு வகைசெய்ய வல்லவையாகும்.
இலங்கையின் பிரபல மனநல வைத்திய நிபுணரும் உளவியல் சார் ந்து பல ஆக்கங்களை எழுதி புகழ் பெற்றவருமான டொக்டர் D. V. J. ஹரிச்சந்திர அவர்கள் காலமானார். டொக்டர் ஹரிச்சந்திர அவர்கள் அகவிழி சஞ்சிகைக்கு பல ஆக்கங்களை எழுதியவர். அன்னாரது மறைவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அகவிழி ஆசிரியர் குழு ஆழ் ந் த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அவரது ஆத்ம சாந்திக்காகவும் பிரார்த்திக்கின்றது.

Page 47
சந்தா விண்ணப்பப் படிவம்
பெயர் (முழுப் பெயர்) கற்பிக்கும் பாடசாலை பாடசாலை முகவரி தொலைபேசி/தொலைநகல் இல. :- மின் அஞ்சல் முகவரி கற்பிக்கும் பிரிவு | அகவிழி அனுப்ப வேண்டிய முகவரி:-
இத்துடன் ரூபா
க்கான காசோலை/க இல
இணைத்துள்ளேன்.
கையொப்பம்
-
--
-
- - - - - - - -
- -
சந்தா செலுத்த சில எளிய
வழிமுறைகள் அகவிழி சந்தா செலுத்த விரும்புவோர் மற்றும் அகவிழி வெளியீடுகளை நேரடியாகப் பெறப் பணம் செலுத்த விரும்பு வோருக்கான சில எளிய வழிமுறைகள். அகவிழி, கொமஷல் வங்கி, வெள்ளவத்தை நடைமுறைக் கணக்கு எண் 1100022581 Commercial வங்கியின் எந்த கிளைகளில் லிருந்தும் அகவிழி கணக்கு எண்ணுக்கு சந்தா அல்லது புத்தக விலையை பணமாக வைப்பு செய்து அதன் பற்றுச்சிட்டை. எங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். வங்கி கமிஷன் இல்லை பிற வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் VILUTHU - AHAVILI பெயருக்கு காசோலை எழுதி அகவிழி கணக்கு எண்னைக் குறிப்பிட்டு உள்ளூர் Commercial வங்கியில் வைப்பு செய்யலாம். மேற்படி வழிமுறைகளில் பணம் அனுப்புவர்கள் செலுத்தப் பட்ட தொகை, தேதி, இடம், நாள் மற்றும் தேவைகளைக் குறிப்பிட்டு அகவிழி தலைமை அலுவலக முகவரிக்கு கடிதம் எழுதவேண்டுகிறோம். அல்லது மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். சந்தா விபரம் தனி இதழ்
100/= ஆண்டு சந்தா (தபால் செலவுடன்) : 1200/=

அகவிடு
3, Torrington avenue, Colombo - 07 Tel : 011-2506272, Fax: 011-2585190
Email: ahavili.vilithu@gmail.com
ஆரம்பம்/இடைநிலை/உயர்தரம்
ாசுக் கட்டளையை
திகதி:-
இப்படிவத்தை போட்டோ பிரதி செய்து உபயோகிக்கவும். - - - - - - - - - - - - - -
- - - -X
அகவிழி விளம்பரக் கட்டணம்
பின் அட்டை : 7000/- உள் அட்டை (முன்) : 6000/- உள் அட்டை(பின்) : 5000/- உள் பக்கம்
4000/- நடு இருபக்கங்கள் : 6500/-
தொடர்புகட்கு
Colombo 3, Torrington Avenue, Colombo-07.
Tel: 011-2506272
Jaffna 167, Hospital Road, Jaffna. Tel: 021-2229866
Trincomalee 81 A Rajavarodayam Street, Trincomalee
Tel: 026-2224941
Batticaloa 37, Old Rest Flouse Road,
Tel: 065-2222097

Page 48
இக
கிடைக்கும் பூபாலசிங்கம் புத்தகக்கடை 202, செட்டியார் தெரு, கொழும்பு - 11
தொ.பே.இல.: 011-2422321 பூபாலசிங்கம் புத்தகக்கடை 4A, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்
தொ.பே.இல: 021-2226693 நியூ கேசவன் புக்ஸ்டோல் 52 டன்பார் வீதி, ஹட்டன் தொ.பே.இல: 051-2222504, 051-2222977
அறிவாலயம் புத்தகக்கடை 190 B புகையிரத வீதி, வைரவப்புளியங்குளம், வவுனியா தொ.பே.இல: 024-4920733 அன்பு ஸ்டோர்ஸ் 14 பிரதான வீதி, கல்முனை தொ.பே.இல.: 067-2229540 நூதூர் மொஹமட் நியூஸ் ஏஜண்ட் 132, பிரதான வீதி, கிண்ணியா-03 தொ.பே.இல: 026-2236266 இஸ்லாமிக் புத்தக இல்லம் 77, தெமட்டக்கொட வீதி, கொழும்பு - 09
தொ.பே.இல.: 011-2688102 கவிதா ஸ்ரோஸ் இல:05 பஸ் தரிப்பிடம், வவுனியா தொ.பே.இல: 024 - 2222012 Noori Book Shop No. 143, Main Street, Kathankudi Tel.: 065-2246883
Easwaran Book Depot No. 143, 126/1, Colombo Street, Kandy Tel.: 081-2220820
Print Kumaran Pr 39, 3th Lane
kumbhilk@
Registered in the Denment of Posts

விடி
BRCHEAEEHHHHHHHEsta84பா4NAACHNபாயாசியாசியாபாாாாமரிாொகிகரிகாசம் கொங்காபா
மிடங்கள்
பூபாலசிங்கம் புத்தகக்கடை 309-A 2/3 காலி வீதி, வெள்ளவத்தை, கொழும்பு
தொ.பே.இல.: 4515775, 2504266 அபிஷா புத்தகக்கடை 137, பிரதான வீதி, தலவாக்களை தொ.பே.இல.: 052-2258437 குமரன் புக் சென்டர் 18, டெய்லிபயர் கொம்பிலக்ஸ் நுவரெலியா
தொ.பே.இல.: 052-2223416 பிரியங்கா புத்தகக் கடை பிரதான வீதி, பருத்தித்துறை தொ.பே.இல.: 077-9303246 கொலேஜ் நீட்ஸ் புத்தகக்கடை 120, பிரதான வீதி,
அட்டாளைச்சேனை 14 கை.தொ.இல.: 077-3034469 புக் லாப் 20, 22 சேர் பொன் ராமநாதன் வீதி, பரமேஸ்வரா சந்தி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
தொ.பே.இல: 021-2227290, கை.தொ.இல.: 077-1285749 அல்குரசி புத்தக நிலையம் 28, 1/2, புகையிரத வீதி, மாத்தளை தொ.பே.இல.: 066-3662228 Rajah's Book Centre No. 111, Main Street, Batticaloa Tel.: 065-2222371 S. சச்சிதானந்தகுமார் 19/26, மாரியம்மன் கோவில் வீதி, கல்லடி, மட்டக்களப்பு தொ.பே.இல.: 077-1270458
பிரிப்பாக் போரிராமமாகதிசிப்பிடமாக பொதுமகாரியாங்காகரிகப்பெரிரிரகாசிக்கிய கொம்யாசிப்போனாயியாகிகரிக்க பயங்கரிப்பதாக சிரிமியரிங்சாக்யேகமாமரிப்பொரியாசிசப்பிரியாபகேசரிபாய்ச்சியாரியாரியயரியர் கோதபாயTMMIMEIRMIMITHAIKANMIMINMIMMIMINATMMIMINIMTWAாலப்பரியாயmiWாசரியாகtiாயம1ை1Mாராரிரிரிரிரிரிரிரியகோகார்கியுசிரியர் கார்த்திகாசிராப்பளாரியாகாரியைசொரியாசிரியராகியாகார்பசோரிசாரியாரிசIATHார்//ாப்பரியா போராடிய பரிகாசாங்கோபிசாசாரியாசியாபிகோகாரிக்சோச:WERா
ISSN 1800-1246
20 by 2ss (TA) Ltd. - ConாசU
gnali.com
all771, 800"12பு 005
of Sri Lanka Under 010/News/2013