கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைக்கேசரி 2013.06

Page 1
க5ை க்க
"காம்
CULTURE
HERITAGE
TRAD VOLUME104 ISSUE: 06 Registere
ENTS
FASHIO tment of Posts of S
பாக்கியங்கள் நிறைந்த பாரம்பரிய உவெஸ்லியின் தனித்துவம்
www.kalaikesari.com / June 2013
INDIA...............INK 100.00 SRI LANKA.SLR 125.00 'SINGAPORE...SG$ 14.00
CANADA.C) AUSTRALIA.A SWISS..............

KALAIKESARI
கேசரி
RVIEWS
ENTERTAINMENT ar No, QD / News / 701 2013
ம்
முற்பிறப்பை உணர்த்திய நயினாதீவு தருமபீடிகை
3181{}t)
AN$ 10.00 US$ 10.00 CHF 10.00
USA...........US$ 10.00 'UK..........GB£ 6.00 'EUROPE..EU€ 7.00

Page 2
EXPERIENCE ECLECTI
S
A DESIGNER BOUTIQUE HOTEL WITH
BUSINESS OR LEISURE.IN A GLO
RIGHT IN THE HEA
WORLD TRAVEL AWARDS
World
-HO
OTEL AWD
WARDS
2012 BEST DESIGN
BOUTIQUE HOTEL IN THE
WORLD
2012 Sri Lanka's Leading
Business Hotel
AWI WINNET
is
LUXURY BOUT
INDIAN
CASA Colombo
TEL: (+94) (O) 114520130 | RES 231, GALLE ROAD, BAMBALAPITIYA, CC

IC FUSION CUISINE AT
COLOMBO
12 UNIQUE SUITES TAILOR MADE FOR RIOUS 200 YEAR OLD MANSION, ART OF COLOMBO
OO tripadvisor
GATEDRAL
IARDS ASIA PACIFIC
AWARDS ASIA PACIFIC
O II
HSBC
Luxury tel– ards
R 2012
HSBC
HIGHLY COMMENDED
CH

Page 3
உயிர்களை காப்பதில் அர்ப்பணிப்புடன் ஈடுபடும் ஆசியாவின் காப்புறுதி முன்னோடி AIA தற்போது உங்களருகில்
313

AIA Insurance Lanka PLC {{a.Na.PQ 18) இனால் வெளியிடப்பட்டது. 34
90 வருடகாலமாக தொடரும் பாரம்பரிய உரிமையுடன் ஆசிய பசிபிக் வலயத்தினுள் பல மில்லியன் உயிர்களுக்குப் பாதுகாப்பளிக்கும் உலகின் மிகப் பெரிய காப்புறுதி நிறுவனங்களில் ஒன்றும், ஆசியாவின் முன்னோடிக் காப்புறுதி நிறுவனமுமான AIA இன்ஷவரன்ஸ், இப்போது இலங்கையை புதிய உலகுடன் இணைக்கிறது. வணக்கம், நாம் உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்! மேலதிக விபரங்களுக்கு 0112 310310 ஐ அழைக்கவும் அல்லது உங்களின் AIA வெல்த்பிளானரை நாடவும்.
aialife.com.tk

Page 4

அட்டைப்படம்:
தெய்வீக பசு எனப்படும் காமதேனு
உள்ளடக்கம்:
மீளவாசிக்கப்படும் தொல்லியல், இலக்கிய சான்றுகள்
18.
வரலாற்றில் முக்கியத்துவம் பெறும் முன்னேஸ்வர கல்வெட்டு
24
நிஜாம் மன்னர்களின் விலை மதிக்கவொணா அணிகலன்கள்
38
அறிஞர் அஸீஸின் பன்மொழி புலமை ஆளுமை
62
நடிப்பிசைப்புலவர் கே. ஆர். ராச்சாமி
நரை, திரை, மூப்பு 64 -
நீக்கும் இஞ்சி
56

Page 5
என்: ச க
PUBLISHER Express Newspapers (Cey) (Pvt) Ltd. 185, Grandpass Road, Colombo 14, Sri Lanka, T.P. +94 11 7209830 www.kalaikesari.com EDITOR Annalaksmy Rajadurai luxmi.rajadurai@yahoo.com SUB EDITOR Bastiampillai Johnsan johnsan50@gmail.com
MEDIA CO-ORDINATOR Pragash Umachandraa CONTRIBUTORS Prof. S.Pathmanathan Prof. P.Pusparatham Prof. Saba Jeyarasa Dr. K. Nageswaran
Mrs. Vasantha Vaithyanathan Mrs. Pathma Somakanthan Dr. Viviyan Sathyaseelan PHOTOS S. M. Surendran J. Mirunalan Poologarajah Sarushan LAYOUT K. Kulendran
கலைக்கேசரி வ. நலந்தானே! கலைக்கேசரியில் மகிழ்ச்சி.
ஒரு நாட்டிற்கு வாழ்வியல் அம்சா பிரதேசங்களைப் பெ சிறப்பியல்புகள் அ தமக்கென ஒரு வி.ே
பொதுவான யா காட்டிய கலைக்கே ஐம்பெரும் காப்பிய இளம் பெண் துறவு வற்றாத அமுதசுரபி பசித்தோருக்கு உ மணிபல்லவம் என்ன விசேடமாக அணி 6
மேலும் மண்ண அருஞ்செல்வங்களி நம் இனத்தின் வரவு அவற்றை வெளிக் ஈடுபட்டிருப்பவர்கள் பொக்கிஷங்களும் !
மற்றும் தரம் இடம்பெறுகின்றன. கருத்துக்களை எம்
மீண்டும் சந்திப்பு
ICT
S. T. Thayalan ADVERTISING A. Praveen marketing@virakesari.lk CIRCULATION K. Dilip Kumar SUBSCRIPTIONS
J. K. Nair subscription@kalaikesari.lk PRODUCTION L. A. D. Joseph
அல்
*ட்fes.
ISSN 2012 - 6824

ஆசிரியர் பக்கம்
விசேட வாழ்வியல் மரபுப் பிரதேசங்கள்
எசகர்களுக்கு வணக்கம்
ன் நாற்பத்து இரண்டாவது இதழில் உங்களைச் சந்திப்பதில்
அல்லது அந்நாட்டின் பிராந்தியங்களுக்கு பொதுவானதாக ங்கள் அமைந்திருக்கின்ற அதேவேளை, அதன் ஒரு சில பாறுத்தவரை அதன் இயற்கைச் சூழல் மற்றும் அதனோடிணைந்த ல்லது தனித்துவமான வரலாற்றுச் சிறப்புகளைப் பொறுத்து சட வாழ்வியல் மரபைக் கொண்டிருக்கின்றன. ழ்ப்பாண வாழ்வியல் அம்சங்களை, சிறப்பாக, விபரமாக எடுத்துக் கசரி, புத்தர் பெருமான் காலடி பதித்த புண்ணிய பூமி எனவும், ங்களில் ஒன்றெனப் போற்றப்படும் சிலப்பதிகாரப் பாத்திரமான பி மணிமேகலை வந்து தங்கி தன் பழைய பிறப்பை உணர்ந்து, " எனும் அள்ள அள்ளக் குறையாத தெய்வீக பாத்திரம் மூலம் ணவளித்த இடம் எனவும், வரலாறு சிறப்பித்துப் பேசும் வம் நயினாதீவு குறித்த தொடர் ஆய்வுக் கட்டுரையை இவ்விதழில் சய்கின்றது. உள் புதைந்து போய்க் கிடக்கும் நம் முன்னோர் அளித்த ன் சிதைவுகள் அவை தோண்டி எடுத்து வெளிக்கொணருமிடத்து மாற்றுச் சிறப்பை உறுதி செய்யும் சான்றுகளாக விளங்குபவை. கொணர்ந்து அறியத்தரும் அரிய பணியில் மிக ஆர்வத்துடன் ஏ நமது வரலாற்று அறிஞர்கள். அவர்களது இரு வரலாற்று ஆய்வு இவ்விதழை அலங்கரிப்பதைக் காண்பீர்கள்.
என விடயதானங்களும் வழமைபோல் இவ்விதழிலும் | வாசித்துப் பயன்பெறுங்கள். அத்துடன் உங்களது மடனும் பகிர்ந்து கொள்ளலாமே! பாம்
இத8)
June, 2013

Page 6
கலைக்கேசரி ) 06 தொல்லியல்
யாழ்ப்புலவர், அஸ்பரட்.
மான
மீள்வாசிப்பிற்கு உட்படுத்தப்படும் தொல்லியல், இலக்கியச் சான்றுகள்
பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்
தலைவர், வரலாற்றுத்துறை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கை மண்ணோடொட்டிய தமிழரின் பாரம்பரிய பண்பாட்டு அடையாளங்கள் எவை என்ற கேள்வி எழும்போது அவற்றிற்குப் பதிலளிப்பதில் அறிஞர்களிடையே மாறுபட்ட கருத்துக்களும், தயக்கமான கருத்து வெளிப்பாடுகளும் இருந்து வருவதைக் காண முடிகிறது.
இதற்கு தமிழருக்குரிய பண்பாட்டு அம்சங்களை தொடர்ச்சியாகப் பேணியிருக்க வேண்டிய வரலாற்று இலக்கிய மரபு தமிழரிடம் தோன்றியிருக்க வில்லை என்ற உண்மையைத் தெரிந்து கொள்வதற்கு அப்பால் இருந்தவற்றைக் கண்டறியவில்லை அல்லது இருப்பவற்றைப் பாதுகாக்கவில்லை என்ற குற்றச் சாட்டுகளும் எழுகின்றன.
இக்குறைபாடுகளும் குற்றங்களும் இந்தியா சுதந்திரம் அடையும் வரை தமிழ் நாட்டு மக்களுக்கும் இருந்து வந்துள்ளது. ஏனெனில் அந்நாட்டு மக்களுக்கும் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ச்சியான வரலாற்று இலக்கிய மரபு இருக்கவில்லை. ஆனால் இப்போது தமிழகமே இந்தியாவின் பல மாநிலங்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகின்றதென்று பெருமைப்படும்
அளவிற்கு
பழைமையைக் கண்டறிவதிலும்,
அவற்றைப்
பாதுகாப்பதிலும் முன்மாதிரியாகச் செயற்பட்டு வருகிறது.

@) လ၊တs LD႕၏ ဖြူ) 0T
ထLUTTTTT5l (5 စ ကံ .ကြံက်လံ ၆၈၂ ITG)မ်ား 5IT/JOOTLDလေလ; LလံTITL
၈၂ mILIT653T –IT/JOTb TT
က်(651 LiLTUTLC6)
၆၈၂ myLUT5၈TT @)လေ5) အ5၆လံ LD၏ BIT55 JOTm BITL55)
U Ti55 T6DOTub ၊ ၊လဲကTh (GT5 LTLITTSITIL /T1985:1-23).
TLDလဲ “လယ် တံတံ b ၂လံတော် BIT5(Bb ́ Torက GUITCb၏သံ ဗီTD) LT. @) TဩL5 T5) L 56) JOUTorm
iu (G55/TT G fulLL၄ (665/Th.
©လ 516စာလ 3000 odor(bl(STGဗ်ဗီ (Up6660i IT D bဗီ
ဗီy TolL Dံဗof Luu 6orLGဗီu TLiu or ဤတံo ဗator uLoTLဗီငါ့u DuT66arL5im ဗdoTLဤLLLLL60. ဗီ(ဤ 66 L၈m bဗီ ဗီur
ဗြ66mmb Drbဗီ(TPဗီဗီ ဗ္ဗLLubb (mus66TTub,
လစာတံ ဝါ ဝါလTSmit LLIsoTL65/b DLuu T65
T60T bloTT5b Hဗီတီဗီဝါယ် (h sor D6.

Page 7
அதில் 2500 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர் வழிபாட்டில் பாரம் பரியமாக இருந்து வந்த இயக்கன் வழிபாடு எவ்வாறு அண்மைக் காலங்களில் வல்லிபுரநாதர் ஆலயமாக மாறியதென்பதை ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டி தனது ஆதங்கத்தை வெளியிட்டிருந்த அவர் ஏன் இலங்கைத் தமிழரது பண்பாட்டு அடையாளங்கள் பூர்வீக மக்களது பண்பாட்டிலிருந்து தொடங்க வேண்டும் என்பதற்கான காரணத்தையும் கோடிட்டுக் காட்டியிருந்தார் (இரகுபதி 2006:1-23).
இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் வாழ்ந்த பெருங்கற்காலத் திராவிட மக்களிடையே தொடர்பு மொழியாகப் பயன்படுத்தப்பட்டு வந்த குறியீடுகள் அவர்கள் பயன்படுத்திய மட் பாண்டங்களில் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் அக்குறியீடுகள் அப்பண்பாட்டுடன் மறைந்து போகாது அவை பிற்காலத்தில் தமிழர் சமூகத்தில் மாடுகளுக்கு இடப்படும் குறியீடுகளாகவும், சலவைத் தொழிலாளர் பயன்படுத்தும் அடையாளச் சின்னங்களாகவும் புழக்கத்திலிருப்பதற்குப் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன (புஸ்பரட்ணம் 1999:62 - 7).
இன்று எமது சமூகத்தில் வழக்கிலுள்ள நாகன், நாகி, நாகதேவன், நாகராசன், நாகம்மாள், நாகவண்ணன், நாகநாதன், நாகமுத்து முதலான தனிநபர் பெயர்களும், அவர்கள் வாழ்விடங்களில் புழக்கத்திலுள்ள நாகர்கோயில், நாகமுனை, நாகபடுவான், நாகதேவன் துறை, நாகமலை, நாகதாழ்வு முதலான இடப்பெயர்களும், கிராமங்கள் தோறும் காணப்படும் நாக வழிபாட்டு ஆலயங்களும் தமிழர் பண்பாட்டில் பிற்காலத்தில் தோன்றியதல்ல. அவற்றிற்கு 2500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பாரம்பரிய வரலாறு உண்டு. இலங்கையில் மனித வரலாறு " தொடங்கிய காலத்தில் இருந்து பின்னோக்கிப் பார்க்கப்பட வேண்டும் என்பதே இந்த ஆய்வின் கருப்பொருளாக அமைகிறது.
தென்னாசியாவில் பல்லினப் பண்பாடு கொண்ட மக்களும், தொடர்ச்சியான வரலாற்று மரபும் கொண்ட

2 கலைக்கேசரி
07
நாடு என்ற சிறப்பு இலங்கைக்கு உண்டு. இந்நாட்டின் பூர்வீக மக்கள் பற்றிக் கூற எழுந்த முதல் பாளி வரலாற்று இலக்கியங்களில் ஒன்றான மஹாவம்ஸம் கி.மு. 6 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வட இந்தியாவிலிருந்து விஜயன் தலைமையில் குடியேறிய மக்களுடன் இலங்கையின் மனித நாகரிக வரலாறு தொடங்குவதாகக் குறிப்பிடுகிறது (Mahavamsa (:vi-vii.51-55).
இவர்களது வருகைக்கு முன்னர் இங்கு வாழ்ந்த மக்களை இயக்கர், நாகர் என இந்நூல் குறிப்பிடுகிறது. ஆயினும் வரலாற்று அறிஞர்கள் இவர்களை மனிதப் பிறவிகளற்ற அமானுஜர்கள் என்றே விளக்கமளித்தனர். (Mendis 1946:8, Paranavitana 1961181-82). இதன் மூலம் விஜயன் வழிவந்த சிங்கள மக்களே இலங்கையின் பூர்வீக மக்கள் என்றும், அவர்களுடன் இலங்கையின் மனித நாகரிக வரலாறு தொடங்குகின்றதென்ற ஆழமான கருத்தும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆயினும் இன உருவாக்கம் பற்றிய அண்மைக் காலத் தொல்லியல், மானிடவியல், சமூகவியல் மற்றும் வரலாற்று, மொழியியல் ஆய்வுகள் விஜயன் யுகத்திற்கு முன்னரே பல்லினப் பண்பாடு கொண்ட நாகரிக சமூகங்கள் இலங்கையில் தோன்றி வளர்ந்ததைச் சுட்டிக் காட்டுகின்றன.
இலங்கையின் மனித வரலாற்றின் தொடக்கத்தை விரிவாக ஆய்வு செய்த தொல்லியல் அறிஞர் செரான் தெரணியகல இற்றைக்கு ஐந்து இலட்சம் வருடமளவில் இங்கு மனித வரலாறு தொடங்கியிருக்கலாம் எனக் குறிப்பிடுகிறார். இக்கருத்தை உறுதிப்படுத்தக் கூடிய உயிரினச் சுவடுகளின் எச்சங்கள் கிழக்கிலங்கையில் புல்மோட்டை கடற்கரை மண் படிவுகளிடையே காணப்படுவதாக அவர் குறிப்பிடுகிறார் (Deraniyagala 1992, 2004:4). - மேலும் வட இலங்கையில் இரணைமடு' படுக்கையிலும், தென்னிலங்கையில் 'பந்துல' என்ற இடத்திலும் கண்டுபிடிக்கப்பட்ட கற்காலக் கருவிகள் இற்றைக்கு 1,25,000 ஆண்டிற்கு முன்னரே கற்கால
பார்ம்.

Page 8
கலைக்க்ேசரி து 08
நாடோடிச் சமூகம் இலங்கையில் வாழ்ந்ததற்கான
ஆதரமாகக் காணப்படுகின்றன (Ibid 2004: 4).
ஆயினும் இக்கற்கால மக்களுக்கும் பிற்காலத்தில் இலங்கையில் வாழ்ந்த மக்களுக்கும் இடையே இருந்திருக்கக் கூடிய தொடர்புகள் அல்லது உறவுகள் பற்றிய ஆதாரங்கள் இதுவரை கிடைக்கப் பெறாததால் இலங்கை இனவுருவாக்கம் பற்றிய ஆய்வில் இம்மக்கள் பற்றி அதிகம் கவனத்தில் கொள்ளப்படவில்லை.
இப்பண்பாட்டு மக்களைத் தொடர்ந்து ஏறத்தாழ கி.மு. 37,000 ஆண்டுகளின் பின்னர் வாழ்ந்த நுண்கற்கால மக்களைப் பற்றிய ஆய்வுகள் இன்று இலங்கையின் இன உருவாக்கம் பற்றிய ஆய்வில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இவர்கள் மலைநாடு தொட்டுத் தாழ்நிலப் பகுதிவரை ஏறத்தாழ 75 க்கு மேற்பட்ட இடங்களில் வாழ்ந்ததற்கான சான்றாதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன (Ibid 2004: 4).
இவர்கள் தொல்லியல், மானிடவியல், மொழியியல் அம்சங்களில் தமிழ்நாடு திருநெல்வேலி தேரி கலாசார மக்களை ஒத்திருப்பதால் அங்கிருந்தே இலங்கைக்குப் புலம்பெயர்ந்ததாக நம்பப்படுகிறது. இம்மக்களும் கி.மு. 1000 ஆண்டளவில் தென்னிந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்து வந்த பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய மக்களும், இலங்கையில் வாழ்ந்திருந்த மக்களது பண்பாடும் இரண்டறக் கலந்தே
இலங்கையரின் இன அடையாளங்களுக்கு உடற் கூற்றியல் வேறுபாடுகள் காரணமல்ல;
பண்பாட்டு வேறுபாடுகளே காரணம் என்பதனால் பண்பாட்டு வேறுபாடுகளை இலங்கையில் மனித நாகரிகம் தொடங்கிய காலத்திலிருந்து ஆராய வேண்டும்.

11 = - 21:21
காலப்போக்கில் மொழி அடிப்படையில் தமிழ், சிங்கள என்ற மொழிவழிப் பண்பாடு தோன்றியதாகத் தொல்லியலாளர்கள் கூறுகின்றனர் (Seneviratne 1984, Sitrampalam 1990: 1-8, Indrapala 2005).
இலங்கை நாகரிக உருவாக்கத்திற்கான அம்சங்கள் நுண்கற்காலப் பண்பாடும், பெருங் கற்காலப் பண்பாடும் கலந்து இலங்கை நாகரிகம் தோன்றியிருந்தாலும் நாகரிக உருவாக்கத்திற்கான பல அம்சங்களை பெருங்கற்கால் மக்களே அறிமுகப்படுத்தியுள்ளனர். இதற்கு இப்பண்பாட்டுடன் உருவாகிய நிலையான குடியிருப்பு, நிரந்தர பொருளாதாரக் கட்டமைப்பு, இரும்பின் பயன்பாடு, சிறுதொழில் நுட்ப வளர்ச்சி, மட்பாண்ட உபயோகம், அயல்நாட்டு வர்த்தகம், நகரமயமாக்கம், அரச உருவாக்கம் என்பன தொடர்பான தொல்லியற் சான்றுகள் உறுதிசெய்கின்றன (Seneviratne 1983 237 -307).
கி.மு. 1000 ஆண்டளவில் தீபகற்ப இந்தியாவில் இருந்து அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவின் தென்பகுதியில்

Page 9
இருந்து வடமேற்கு இலங்கையில் வந்து குடியேறிய இம்மக்களே படிப்படியாக நாட்டின் ஏனைய கரையோரப் பகுதிகளுக்கும், நாட்டின் உட்பகுதிகளுக்கும் சென்று குடியேறியதாகப் பேராசிரியர் சுதர்சன் செனிவிரட்ன குறிப்பிடுகிறார் (Ibid :237-307). இப்பண்பாடே இலங்கையில் பல இனக்குழுமங்கள், பலதரப்பட்ட சமூக, தொழிற் பிரிவுகள் உருவாகக் காரணமாக இருந்தது.
இப்பண்பாட்டின் முதிர்ச்சி நிலையில் ஏறத்தாழ கி.மு. 3 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி அளவில் பௌத்த மதம் இலங்கைக்குப் பரவிய போது அம்மதத்தை பெருங்கற்காலப் பண்பாட்டு வழிவந்த மக்களில் பலர் பின்பற்றினர் என்பதை இரு பண்பாட்டு மையங்களுடனும் தொடர்புடைய பௌத்தமத எச்சங்கள், கல்வெட்டுக்கள், பாளி இலக்கியங்கள் ஆகியவற்றில் வரும் குறிப்புக்கள் தெளிவுபடுத்துகின்றன.
இதனால் பௌத்த மதத்தின் பரவல் இலங்கையின் பண்பாட்டு வளர்ச்சியில் இன்னொரு காலகட்டத்தின் தொடக்கமாகப் பார்க்கப் படுகிறது. மேலும் இம்மதத்துடன் அறிமுகமான பாளி, பிராகிருத மொழிகளும், வடபிராமி எழுத்தும் இலங்கை வரலாற்றை தொடர்ச்சியாக எழுதுவதற்கும் மொழி, பண்பாட்டு அடிப்படையில் பல இனக்குழுக்கள் தோன்றிய வரலாற்றை அடையாளம் காணவும் முக்கிய மூலாதாரமாகக் காணப்படுகின்றன. அவ்வரலாற்று மூலங்களில் சொல்லப்படும் இனக்குழுக்களில் ஒன்றே நாக இனக்குழுவாகும். இவர்கள் எப்படி காலப்போக்கில் தமிழ் இனக்குழுவுடனும், பிராகிருத மொழிப் பேரினக்குழுக்களுடனும் கலந்தன என்பதைக் கண்டறிய உதவும் நம்பகரமான ஆதாரங்களில் பிராமிச் சாசனங்கள்
முக்கிய ஆதாரமாகக் காணப்படுகின்றன.
இலங்கையில் ஏறத்தாழ 1500 இற்கு மேற்பட்ட பிராமிச் சாசனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வளவு எண்ணிக்கையுடைய சாசனங்கள் இலங்கையைத் தவிர தென்னாசியாவில்

- கலைக்கேசரி
09
னான
வேறெந்த நாட்டிலும் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை. தென்னாசியாவில் பௌத்த மதம் பரவிய நாடுகளில் எல்லாம் கி.பி. 4 ஆம் நூற்றாண்டுவரை பிராகிருதம் சாசன மொழியாக இருந்த போது தமிழகத்தில் மட்டும் தமிழ் சாசன மொழியாக இருந்ததுடன் தமிழ் மொழிக்கே சிறப்பான தமிழ்ப் பிராமி எழுத்துக்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சம காலத்தில் இலங்கையில் - பிராகிருதம் சாசன மொழியாக இருந்த போதும் அதில் தமிழ்ப் பிராமி எழுத்தும், தமிழ்ப் பெயர்களும், பிராகிருதமயப்படுத்தப்பட்ட பெயர்களும் சொற்களும் கலந்து காணப்படுகின்றன (Veluppillai 1980:6-19, Sitampalam 2004, Ragupathy 1993, Indrapala 2005, இராஜகோபால் 1988, பூங்குன்றன் 1998).
இந்த ஒற்றுமை தமிழகத்துடனான தொடர்பால் வட இந்தியாவில் இருந்து பௌத்த மதத்துடன் இலங்கைக்கு வடபிராமி எழுத்தும், பிராகிருத மொழியும் அறிமுகமாக முன்னர் தமிழகத்திலும், இலங்கையிலும், தமிழ் மொழியினதும், தமிழ்ப் பிராமியினதும் பயன்பாடு இருந்ததைக் காட்டுகிறது எனலாம். அதில் தமிழ் மொழியின் பயன்பாடு கி.மு. 5 ஆம் நூற்றாண்டளவில் தொடங்கியிருக்கலாம் என பேராசிரியர் இந்திரபாலா. கூறியுள்ள கருத்தை இவ்விடத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும் (Idrapala 2005).
நாகபாம்பை குலமரபுச் சின்னமாகக் கொண்ட 'நாகர்' இச்சாசனங்களில் பௌத்த சங்கத்திற்கு தானமளித்தவர்களின் பெயர், பட்டம், பதவி, சமூக அந்தஸ்து, குடும்ப, சமூக உறவு முறைகள், தொழில், சமய நம்பிக்கை, ஊர்ப்பெயர் என்பவற்றுடன் அக்காலத்தில் வாழ்ந்த இனம், குலம், வம்சம், சமூகம், சார்ந்த பல பெயர்களும் காணப்படுகின்றன. இப்பெயர்களில் பெரும்பாலானவை பிற்காலத்தில் மொழி வழக்காலும், பண்பாட்டு மாற்றத்தாலும் திரிபடைந்து
உள்ளன அல்லது வழக்கொழிந்து விட்டன எனக் கூறலாம். ஆனால் சில பெயர்கள் அதிலும்
குறிப்பாக அக்காலச் சமூகத்தில்

Page 10
கலப்படம் 10
அதி புழல் பிரா
இப்
கான
தனி இந்
இல
இன
வன்
செல்
தெ இரு
அரசி சாத
குறி
த!
ஐதீக் தலை இன
பட் சொ
பி
இப் கூற குல்
என
ம.
வா
இத
என் மவ
நாக ஐதீ.
கி.
கூட
எடு பே
என்
(Par
பெ.
வர (Kal
வா
நுன்
மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர் திராவிடர் பயன்படுத்திய எழுத்துருக்களின் ஒரு வடிவம், இன்று மாடுகளுக்கு வைக்கப்படும் |
குறியாகக் பயன்படுத்தப்படுகிறது.
இ

காரத்தில் இருந்தவர்களின் சில பெயர்கள் தொடர்ந்தும் க்கத்தில் இருந்துள்ளன. அதில் ஒன்றே தமிழில் 'நாக' என்றும், கிருதத்தில் 'நஹ', 'நக' என்றும் அழைக்கப்பட்ட பெயராகும். பெயர் ஏறத்தாழ 200 க்கும் மேற்பட்ட சாசனங்களில் எப்படுகின்றன. இலங்கைப் பிராமிச் சாசனங்களில் வரும் நபர் பெயர்களில் இப்பெயரே எண்ணிக்கையில் அதிகமாகும். த அம்சத்தை சமகால இலங்கை வரலாறு கூறும் பாளி க்கியங்களிலும் காணமுடிகிறது. இப்பெயருக்கு உரியவர்கள் எக்குழுத் தலைவர்கள், குறுநில மன்னர்கள், குருசில்கள், ரிகர்கள், கலைஞர்கள், படைவீரர்கள் என அக்காலத்தில் ல்வாக்குடன் இருந்ததைக் காணமுடிகிறது. ஆயினும் இப்பெயர் இலங்கையில் மட்டுமன்றி சமகாலத்தில் ன்னாசியாவின் பல்வேறு வட்டாரங்களிலும் புழக்கத்தில் ந்துள்ளமைக்கு ஆதாரங்கள் உண்டு. வட இந்தியாவில் . சமைத்த குப்தரும், தென்னிந்தியாவில் ஆட்சி புரிந்த வாகனரும் தம்மை நாக குலத்திலிந்து வந்தவர்கள் எனக் ப்பிடுகின்றனர். மிழ் நாட்டிலுள்ள நாகபட்டினம் நாகர்களின் தலைநகர் என்ற கமும் காணப்படுகிறது. சங்க காலம் தொட்டு குறுநிலத் லவர்கள், புலவர்கள் மற்றும் தனிநபர் பெயருடன் மணந்துள்ள இப்பெயர் தமிழகத்தில் புழக்கத்தில் இருந்த நாடு, டினம், ஊர் ஆகிய இடப்பெயர்களின் முன்னொட்டுச் மல்லாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது (Pillai 1975:37). அவ்வாறு தென்னாசியாவில் பரந்துபட்ட
அளவில் -பெயரைப் பயன்படுத்தியமைக்கு பல காரணங்கள் ப்பட்டாலும் அவற்றுள் மதவழிபாட்டில் நாகபாம்பை "மரபுச் சின்னமாகக் கருதி வாழ்ந்தமையே முக்கிய காரணம்
க் கூறப்படுகிறது. ஹாவம்ஸம் விஜயன் வருகைக்கு முன்னர் இலங்கையில் ழ்ந்த மக்களில் ஒரு பிரிவினரை நாகர் எனக் குறிப்பிடுகிறது. ன் மூலம் இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்னரே நாகர் ற இனக்குழு இலங்கையில் வாழ்ந்ததெனக் கூறலாம். மாவம்ஸம் கூறும் வரலாற்றில் பல ஐதீகங்கள் இருப்பினும் ர் ஒரு இனக்குழுவாக இங்கு வாழ்ந்ததாகக் கூறுவதை கமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஏனெனில் மு. 3 ஆம் நூற்றாண்டிலிருந்து கிடைக்கும் பிராமிச் சாசனங்கள் - நாகர் ஒரு இனக்குழுவாக இலங்கையில் வாழ்ந்ததை த்துக் காட்டுகின்றன. இச்சாசனங்களை ஆய்வு செய்த ராசிரியர் பரணவிதான இவற்றில் குறிப்பிடப்படும் நாக்குலம் பது நாக குடும்பத்தைக் குறிப்பதாக விளக்கம் தருகிறார் anavitana 1970:106). தனால் கலாநிதி கருணாரட்ணா இது இனக் குழுவுக்குரிய பர் என்பதற்கு பிராமிச் சாசனங்களுடன் மகாவம்சத்தில் வரும் லாற்றுக் குறிப்புக்களையும் தொடர்புபடுத்திக் காட்டுகிறார் unaratne 1984:56). தால்லியலாளர் மகாவம்சத்தில் விஜயன் வருகைக்கு முன்னர் ழ்ந்த இனமாக நாகரைக் குறிப்பிடுவதால் இம்மக்கள் எகற்காலப் பண்பாட்டிற்குரிய ஆதி ஒஸ்ரலோயிட் எக்குழுவாக அல்லது பெருங்கற்காலப் பண்பாட்டை
கார்!

Page 11
41 = - | 1 ! * * * *
சலவைத் தொழிலாளர் இன்று பயன்படுத்தும் அடையாளச் சின்னங்க
தோற்றுவித்த திராவிட இனக்குழுவாக இருக்கலாம் எனக் கருதுகின்றனர் (Deraniyagala 1992:735).
மஹாவம்ஸம் கூறும் நாக இனக்குழுவை மனிதப் பிறவிகள் அற்ற அமானுஜர் என விளக்கம் கொடுத்த பேராசிரியர் பரணவிதான கூட பொம்பரிப்பில் பெருங் கற்காலச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னர் தனது முன்னைய கருத்தை மாற்றி இவர்களைத் திராவிட இனமாகக் குறிப்பிடுகிறார்.
பேராசிரியர் இந்திரபாலா நாகர் இலங்கையில் பெருங் கற்காலப் பண்பாடு நிலவிய காலத்தில் (ஆதி இரும்புக் காலத்தில்) நாட்டின் பல்வேறு வட்டாரங்களில் வாழ்ந்த இனக்குழு என்றும், தென்னிந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்து வந்த இவ்வினம் காலப்போக்கில் அநுராதபுரத்திலும், தென்னிலங்கையின் ஏனைய பிராந்தியங்களிலும் உருவாக்கிக் கொண்டிருந்த பிராகிருத மொழி தழுவிய பேரினக் குழுவுடன் கலந்துகொள்ள, ஏனையோர் வடக்கில் தமிழ் இனக் குழுவுடன் கலந்து கொண்டனர் எனக் குறிப்பிடுகிறார் (Indrapala 2005:172-73).
நாகர் ஆதியில் இலங்கையில் பல்வேறு பிராந்தியங்களில் வாழ்ந்திருந்தாலும் அநுராதபுரத்திற்கு வடக்கில் உள்ள பிராந்தியமே நாகதீபம் என் குறிப்பிடப்படுகிறது. இதற்கு இப்பிராந்தியத்தின் பூர்வீக மக்களாக நாகர்கள் இருந்தமையும், அவர்கள் எதிரேயுள்ள தமிழகத்துடன் - கொண்ட தொடர்பால் தமிழ் மொழி பேசும் மக்களாக வாழ்ந்தமையும் முக்கிய காரணமாக இருக்கலாம். ஏனெனில் -- யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வில் ஆதி இரும்புக் காலப் பண்பாட்டுக்கு முந்திய மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை (Ragupathy 1987).
இலங்கையின் ஏனைய பிராந்தியங்களைப் போல் இங்கு நுண்கற்கால மக்களோ அல்லது கற்கால மக்களோ வாழ்ந்திருக்கு கூடிய பெளதீக வளங்களோ, இயற்கை கனிமங்களோ இப்பிராந்தியம் கொண்டிருக்கவில்லை. இதனால் யாழ்ப்பாணத்தின் தொடக்க கால மக்களை பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய நாக இனத்தவராகக் கொள்வதே பொருத்தமாகும்.
கி.மு. 3 ஆம் நுாற்றாண்டில் இருந்து இலங்கைத் தமிழர் மொழியடிப்படையில் ஒரு இனக்குழுவாக வாழத் தொடங்கியதை வவுனியா, அநுராதபுரம், அம்பாறை

- 2. கலைக்கேசரி
11 - /* [ H || | 3 ம ச S .
ள் 3000 வருடங்களுக்கு முன் திராவிடர் பயன்படுத்திய எழுத்துருக்களே!
லான சா
போன்ற இடங்களில் கிடைத்த பிராமிச் சாசனங்கள் உறுதிப்படுத்தின்றன (Indrapala 2005:141-44). இதற்குள் நாக என்ற இனக்குழுவும் கலந்திருக்கலாம் என்பதற்கு இப்பிராமி சாசனங்களிலேயே ஆதாரங்கள் காணப்படுகின்றன. இச்சாசனங்கள் பிராகிருத மொழியில் எழுதப்பட்டதால் அம்மொழிக்கு ஏற்ப இப்பெயர் பெரும்பாலான சாசனங்களில் 'நஹ', 'நஹஸ' 'நஹய நஹலி' என்று எழுதப்பட்டுள்ளது. ஆயினும் சில சாசனங்களில் இதற்கு மாறாக 'நாக' 'நக' 'ணக' 'ணாக' என எழுதியிருப்பது தென்னிலங்கையில் இவ்வினக் குழு வாழந்தமைக்குச் சான்றாகும் (Paranavitana 1970::nos1120, 1998. 1982:nos:126,138,180,267).
இப்பெயரை பிராகித மொழியில் எழுதும் போது அதில் வடபிராமிக்குரிய 'ஹ' (ga) என்ற எழுத்தே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இலங்கையில் இதற்குப்பதிலாக பல சாசனங்களில் தமிழகப் பிராமிக் கல்வெட்டுக்களில் காணப்படும் 'க' (ka) என்ற எழுத்தே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும் இப்பெயரைப் பேராசிரியர் பரணவிதானா 'நக' (Naka) என்றே வாசித்துள்ளார். பிராகிருத மொழி வழக்கில் நெடில் குறிலாவது வழக்கமாக இருப்பதால் இதை 'நாக' (Naka) என வாசிப்பதே பொருத்தமாகும் (பத்மநாதன் 2006:35).
இருப்பினும் சில சாசனங்களில் தமிழகத்தைப் போல் நெடிலுக்குரிய குறியீடு பயன்படத்தப்பட்டு இப்பெயர் நாக (Naka) என்றும் எழுதப்பட்டுள்ளமை இங்கு சிறப்பாக நோக்கத்தக்கது (Paranavithana 1970: nos.1157, 1120. 1982: ). நாக என்பதைச் சில சமயங்களில் 'ணாக' என்று எழுதும் வழக்கம் தமிழகப் பிராமிச் சாசனங்களில் காணப்படுகிறது (Mahadevan1966:no33). இது இரு மொழி வழக்கின் - காரணமாக உச்சரிப்பில் எற்பட்ட தடுமாற்றத்தால் எழுதப்பட்டிருக்க வேண்டும் எனக் கருத இடமுண்டு (பத்மநாதன் 2006:35).
இந்த அம்சம் இலங்கைப் பிராமிச் சாசனங்கள் சிலவற்றிலும் காணப்படுவது (Paranavithana 1970: n0.991, 1982:nos.95,96, 100) நாக என்ற பெயரை எழுதுவதில் தமிழத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒற்றுமையைக் காட்டுகிறது. மேற்கூறப்பட்ட மூன்று அம்சங்களும் தென்னிலங்கையில் வாழ்ந்த நாகர் தமது பெயரைத் தமிழில் எழுத முற்பட்டுள்ளனர் என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. ,
(தொடரும்)

Page 12
கலைக்க்ேசர் து 12 நூற்றாண்டு பழைமை
பாக்கியங்கள் நிறைந்த பாரம்பரி
கொழும்பில் முன்னணிக் கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் உவெஸ்லிக் கல்லூரியானது இனம், மதம், மொழிகளுக்கு அப்பால் அனைவருக்கும் மிகச் சிறந்த கல்வியை தொடர்ச்சியாக 139 ஆண்டுகளைக் கடந்தும் வழங்கி, அளப்பரிய சேவையை ஆற்றிக் கொண்டிருப்பது பெருமை கொடுக்கக் கூடியதே. பல தடைகளைத் தாண்டி இன்றும் கல்விப் பணியாற்றும் உவெஸ்லிக் கல்லூரி 1998 ஆம் ஆண்டு இலங்கையின் ஐந்து சிறந்த பாடசாலைகளில் ஒன்றாக இடம்பிடித்தமையும் குறிப்பிடத்தக்கது.
லண்டன் உவெஸ்லியன் மிஷனரி அமைப்பே (Wesleyan Missionary Association London) உவெஸ்லிக் கல்லூரியை ஆரம்பித்தது. மெதடிஸ்த திருச்சபையை ஸ்தாபித்த ஜோன் உவெஸ்லி (John Wesley) அவர்களைக் கௌரவப்படுத்தும் முகமாக அவருடைய பெயரான 'உவெஸ்லி' என்னும் நாமம் இக்கல்லூரிக்கு சூட்டப்பட்டது. ஒக்ஸ்போட் சர்வகலாசாலை பட்டதாரியான ஜோன் உவெஸ்லி அவர்கள் (1703 - 1791) பலதரப்பட்ட எதிர்ப்புக்களுக்கு மத்தியில் மெதடிஸ்த சபையை ஸ்தாபித்தார். இலங்கையில் 29.06./814 இல் மெதடிஸ்த மிஷனரிமாரின் வரவு மூலம் இங்கு மெதடிஸ்த திருச்சபை ஸ்தாபிக்கப்பட்டது. வண. டானியல் ஹென்றி பெரேரா (Rev. Daniel Henry Pereira) அவர்கள் 02.03./874 இல் புறக்கோட்டை - டாம் வீதியில் உவெஸ்லி கல்லூரியை
ஸ்தாபித்தார். அது மாத்திரமல்லாமல் அவரே அக் - கல்லூரியின் முதலாவது உப அதிபரும் ஆவார்.

யம்; உவெஸ்லியின் தனித்துவம்
அக்காலத்தில் கல்லூரி அதிபராக வண.சாமுவேல் றோஸ் வில்கின் (Rev.Samuel Rowse Wilkin) அவர்கள் கடமையாற்றினார். ஏழு மாணவர்களுடன் உவெஸ்லி பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப காலங்களில் டாம் வீதியில் அமைந்திருந்த கல்லூரிக் கட்டடம் இலங்கையை ஆண்ட ஒல்லாந்த ஆதிக்கத்தின் அடையாள எச்சங்களுடனும் கட்டடப் பாணியுடனும் காணப்பட்டது. அக்காலங்களில் புறக்கோட்டையானது கெளரவமான, அமைதியான வதிவிடச் சூழலுடன் அமைந்திருந்ததுடன் அதன் தெருக்களில் உயர்ந்த மரங்கள் நீண்ட வரிசைகளில் இருந்தன. தற்போதுள்ள மெசெஞ்சர் வீதியை அதிகளவான மெசாங் மரங்கள் (Massang Trees) சூழ்ந்திருந்த காரணத்தால் ஒல்லாந்தர்கள் 'று டி மெசான்ங்' (Rue de Massang) என அழைத்தார்கள். தற்போதும் அவ்வீதியை 'மெசாங் கஸ் வீதிய' (Masang Gas Vidiya) என சிங்கள மொழியில் அழைக்கும் வழக்கம் உண்டு. தற்போதைய டாம் வீதியில் ஆரம்ப காலங்களில் தெருக்களின் இரு பக்கமும் 'தம்ப' (Damba) மரங்கள் வரிசையாக இருந்தன. இதன் காரணத்தால் 'தம்ப தெரு' (Damba Street)
THIS STONE WAS LAID BY
HE ALEXANDER MURRAY ASHMORE ES0 CMG
LNANI GOVERNON
1T19 NOVEMBER 1005

Page 13
என அழைக்கப்பட்டது. இவ்வாறான வரலாற்றுப் பின்னணியில் புறக்கோட்டை, டாம் வீதியில் அமைந்திருந்த பழைமையான மெதடிஸ்த தேவாலயத்தில் தூசி படிந்த விறாந்தைகளில் உவெஸ்லி கல்லூரியின் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.
வண.டானியல் ஹென்றி பெரேரா அவர்களுடன் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஜென் குரூசியர்
(Jan Crozier) மிக நெருக்கமாக இணைந்து கல்விச் செயற்பாடுகளை
முன்னெடுத்தார்.
--- கட.

2 கலைக்கேசரி
உவெஸ்லி கல்லூரி 1907 ஆம் ஆண்டில்...
12-ம் -11;

Page 14
கலைக்க்ேசரி 2 14
புறக்கோட்டையில் உள்ள பல இன, மத வர்த்தகர்கள் தங்கள் குழந்தைகளைக் கல்வி பெற்றுக் கொள்ளும் நோக்கத்துடன் அப்பாடசாலைக்கு அனுப்பி வைத்தார்கள். புறக்கோட்டையில் உள்ள மக்களையும் தனது மாணவர்களையும் டானியல் ஹென்றி பெரேரா அளவற்று உளமார நேசித்தார். அதனாலோ என்னவோ அவ்வாறான தூசி படிந்த, வெப்பமான புறக்கோட்டைப் பகுதியில் நான்கு வருடங்கள் கடுமையாக உழைத்தார்.
1895 ஆம் ஆண்டு உவெஸ்லி கல்லூரி வெற்றிகரமான கல்விப் பணியில் 27 ஆவது வருட நிறைவு விழாவைக் கொண்டாடியதுடன் தொடர்ந்தும் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்தது. அவ்வேளையில் பாடசாலையின் புதிய அதிபராக வண.ஹென்றி ஹைபீல்ட் (Rev Henry Highfield) அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். மெதடிஸ்த மிஷனரியில் மிகப் பிரபலமான ஜோர்ஜ் ஹைபீல்ட் (George Highfield) அவர்களே இவரது தந்தையார் ஆவார். இந்தியாவில் 22.12.7865 இல் பிறந்த இவர் கேம்பிரிட்ஜ்
FIFA--ப-ட்: , பட்டி - டி கே ------
------- ==
ப : பாபா ராம் -- = = =
- பாட்சா" - 5
கொழும்பில் 1910 களில் மிக அழகிய கட்ட

சர்வகலாசாலையில் எம்.ஏ. பட்டதாரி யாக வெளியேறிய சந்தர்ப்பத்தில் இங்கு பாடசாலை அதிபர் பதவியைப் பொறுப்பேற்குமாறு அழைக்கப்பட்டார். அதன்பொருட்டு இலங்கைக்கு வந்து தமது கடமைகளை பொறுப்பேற்ற அவரை, ஆரம்பத்தில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் பெரிதாகக் கவனத்தில் எடுக்கவில்லை. அவருக்கு அக்காலம் சவால்கள் நிறைந்ததும் கடினமானதாகவும் அமைந்திருந்தது.
புறக்கோட்டையில் அமைந்திருந்த பாடசாலைக் கட்டடம் குதிரை லாயத்திலும் பார்க்க மோசமாக உள்ளது எனக் கூறிய அவர், கல்லூரிக்கு புதிய கட்டடம் ஒன்றை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். இதேவேளை அவர் இலங்கைக்கு வந்து தமது பொறுப்புக்களை ஏற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில், புறக்கோட்டைப் பகுதி கைத்தொழிற்துறையில் முன்னேறிக் கொண்டிருந்ததை அவதானித்ததுடன், தமது பாடசாலைக்கு வகுப்பறை விஸ்தரிப்புடன் கூடிய அமைதியான சூழல் தேவை என்பதையும் நன்கு உணர்ந்து கொண்டார்.
புறக்கோட்டை, டாம் வீதியில் அமைந்திருந்த உவெஸ்லி
கல்லூரி நினைவுகள் தொடர்பாக வண. ஹென்றி ஹைபீல்ட் அவர்கள் பின்
வருமாறு குறிப்பிடுகிறார்.
EெET-E பா 1 கப்
11----
உங்களில் ஒன்றாகத் திகழ்ந்த உவெஸ்லியின் கம்பீரமான முகப்புத் தோற்றம்.

Page 15
கொழும்பு, டாம் வீதியில் 1874 முதல் 1906 வரை உ
"/895 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் லண்டனில் இருந்து கிழக்கு நோக்கி பிரித்தானியாவின் ஆட்சியின் கீழ் இருந்த கொல்கத்தாவிற்குப் புறப்பட்ட நான்கு இளம் மிஷனரிமாரில் நானும் ஒருவன். அதில் இருவர் இந்தியாவிற்குச் சென்றார்கள். ஆர்.சி. ஒலிவரும் (R.C.Oliver) நானும் அக்டோபர் மாத நடுப்பகுதியில் அதிகாலை நேரத்தில் கொழும்பு வந்து இறங்கினோம். அங்கு வண. ரி. மொஸ்குறொப் (Rev. T. Moscrop) மற்றும் எஸ்.பஸ்மோர் (Mr. S. Passmore) ஆகியோரைச் சந்தித்தோம். உவெஸ்லிக் கல்லூரி தொடர்பான ஆரம்ப வேலைகளை எஸ். பஸ்மோர் அவர்கள் எனக்கு விளக்கினார். உவெஸ்லிக் கல்லூரியின் முன்னாள் அதிபராகவும், கொழும்பு மாவட்ட தலைவராகவும் இருந்த வண. ரி. மொஸ்குறொப் அவர்களுடன் நான் தங்கினேன். ஆரம்பத்தில் மிகவும் அனுபவம் உள்ள, சிறந்த மனிதர்களின் வழிகாட்டல்கள் எனக்குக் கிடைத்தது. அடுத்த நாள் காலை எஸ். பஸ்மோர் என்னை உவெஸ்லிக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றவேளை, அங்கு கடமையாற்றிய அனுபவம் மிக்க சிறந்த உத்தியோகத்தர்கள் இருவரை நான் உடனடியாக இனங்கண்டு கொண்டேன். கல்லூரி ஆரம்பித்த மறுவருடமான 1876 ஆம் ஆண்டு இணைந்து கொண்டவரும், நான் மீண்டும் 1925 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து திரும்பியவேளை கல்லூரி தலைமை ஆசிரியராகவும் கடமையேற்ற சார்ள்ஸ் பீட்டர் டயஸ் (Charles Peter Dias) அவர்கள் அந்த இருவரில் ஒருவராவார். முதலாமவர் டபிள்யூ. ஈ. மக் (W. E. Mack) ஆவார். இவ்விருவரும் குறிப்பாக டயஸ் அவர்கள் செய்த உதவிகளை மறக்க முடியாது. ஆரம்பத்தில் மட்டுமல்லாமல் தொடர்ச்சியான காலப் பகுதியில் அவர்கள் உதவிகளை வழங்கினார்கள். அவர்கள் வழங்கிய உதவிகளை பாடசாலை என்றும் மறக்காமல் நினைவில் வைத்திருக்கும்.
ஆரம்பத்தில் கல்லூரிக்கு சிறந்த இட வசதியைப் பெற்றுக் கொடுக்க நான் விரும்பினேன். பஸ்மோர் பொறுப்பை ஏற்கும் முன்னர் ஹிலாட் (Mr. Hillard) கல்லூரிக்கு நாளொன்றுக்கு இரண்டு வேளைகளும் ஒன்று கூடக் கூடிய மண்டபத்தை துணிச்சலுடன் முன்வந்து அமைத்துக் கொடுத்திருந்தார். அம்மண்டபத்தில் நான்கு பெரிய வகுப்புக்களை நடத்தக் கூடியதாக இருந்தது. ஹிலாட் செலவளித்த பணத்தை மீளப் பெற முடியவில்லை என்பது உண்மை. ஆனால் அவரது புத்திசாதுரியமான செயலால் உவெஸ்லியின் எதிர்காலம்

கலைக்கேசரி
15
- டாப் 2 :
வெஸ்லி கல்லூரி இக்கட்டடத்தில்தான் இயங்கியது.
உறுதிப்படுத்தப்பட்டது. ஆகவே 1899 ஆம் ஆண்டு உவெஸ்லியன் மெதடிஸ்த தாய் இல்லம் மில்லியன் கினிக்கள் (Million Guineas) பணத்தை மில்லியன் மெதடிஸ்டுகளிடம் சேகரிக்க தீர்மானம் எடுத்துக் கொண்டது. அதன் பிரகாரம் அத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு பாடசாலைக்கு புதிய கட்டடம் அமைப்பது உறுதிப்படுத்தப்பட்டது. ஆனாலும் அந்தப் பணம் கடன்களைக் கழிப்பதில் செலவாகியதுடன், நான் ஒரு பிச்சைக்காரனாக மாறினேன். இது 1899 ஆம் ஆண்டின் இறுதி ஆறு மாத காலப் பகுதியில் நடைபெற்றது. ஆகவே இலங்கையில் சேர்க்கப்படும் ஒரு ரூபாவிற்கு ஐந்து மடங்கு பணத்தைத் தருவதாக தாய் இல்லம் எனக்கு வாக்குறுதி ஒன்றை வழங்கியது. 1904 ஆம் ஆண்டு இலங்கையில் 35,000 ரூபா சேர்க்கப்பட்டதுடன், சேர்க்கப்பட்ட தொகை தொடர்பாக தாய் இல்லம் மிகவும் ஆச்சரியமடைந்தது. தாம் வழங்கிய உறுதிமொழியையும் காப்பாற்றியது. அதனால் பேஸ் லைன் வீதியை முகப்பாகக் கொண்ட புதிய கட்டடம் 1907 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில்
வண. ஹென்றி ஹைபீல்ட் கட்டடம்
1905 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட புதிய கட்டடத்தின் வரைபடம்
----------- ==

Page 16
கலைக்கேசரி . 16
அன்றைய கல்விப் பணிப்பாளரும் முன்னாள் றோயல் கல்லூரி அதிபரும் புதிய கட்டட திறப்பு விழா நிகழ்வின் பிரதம் விருந்தினருமான ஜோன் ஹவாட் (John Harward) தலைமையில் திறக்கப்பட்டது'
கல்வியில் மாத்திரமல்லாமல் விளையாட்டுத்துறையிலும் கல்லூரி முன்னிலை பெற வேண்டும் என்பதே அவருடைய ஒரே குறிக்கோளாக இருந்தது. பாடசாலைக்காகப் புதிய கட்டடம் ஒன்றின் தேவையை நன்கு உணர்ந்த அதிபர் வண. ஹென்றி ஹைபீல்ட், அதற்காக அயராது பாடுபட்டதுடன் பல முயற்சிகளையும் மேற்கொண்டார். அவரின் முயற்சியால் சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை அனைவரிடமும் நிதி சேகரிக்கப்பட்டது. ஆற்றல் மிக்க, சுறுசுறுப்பான, துடிப்பான வண. ஹென்றி ஹை பீல்ட் அவர்களின் அளவற்ற உதவியுடன் 1905 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட புதிய கட்டடத்தின் (Karlshrue) நிர்மாணப் பணிகள் 1906 இல் நிறைவுக்கு வந்து உவெஸ்லி கல்லூரி தனது புதிய இடமான தற்போதைய இடத்திற்கு மாறியது. அக்காலத்தில் அக்கட்டடம் கொழும்பின் அழகான கட்டங்களில் ஒன்றாகவும் கருதப்பட்டது. நூற்றாண்டைக் கடந்த அக்கட்டடம் தலைநிமிர்ந்து நின்று அதன் பெருமையை இன்றும் பறைசாற்றுகிறது.
கல்வியையும் விளையாட்டையும் முக்கிய நோக்காகக் கொண்டு இயங்கிய இக் கல்லூரி ஒரு கிறிஸ்தவ கல்லூரியாக இருந்தாலும் பௌத்த, இந்து, இஸ்லாமிய மாணவர்களையும் பாராபட்சமின்றி உள்வாங்கியமை பெருமைக்குரிய விடயமாகும். தமது கல்லூரி மாணவர்கள் மாத்திரமன்றி அனைத்து மாணவர்களும் பயன்பெற்றுக் கொள்ளும் நோக்கில் 'இலங்கைப் பாடசாலைகளுக்கான இலங்கையின் பூமிசாஸ்திரம்' (The Geography of Ceylon for Ceylon Schools) என்னும் சிறியதும் முக்கியமானதுமான நூலை வண. ஹென்றி ஹைபீல்ட் அவர்கள் வெளியிட்டார். இவர் உவெஸ்லி கல்லூரிக்கு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்ததுடன் நற்பண்பாளராகவும், சிறந்த ஆசிரியராகவும் விளங்கினார். குறிப்பாக மாணவர்களை தாவரவியல் மற்றும் விலங்கியல் கல்வியைக் கற்குமாறு தூண்டினார்.
கே.பா பட்டம் -
வண.ஹென்றி ஹைபீல்ட் 1895 முதல் 1925 வரை அதிபராகப் பதவிவகித்த

வண. ஹென்றி ஹை பீல்ட் 1915 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவத்தின்போது, பிரித்தானியர்கள் பௌத்தர்களைக் கைது செய்தல் சந்தர்ப்பத்தில் அக்கைதுகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தார். அவர் ஒரு சிறந்த கிறிஸ்தவனாக இருந்தபோதும் ஏனையவர்களை ஒருபோதும் அவமதிக்கவில்லை. மக்களோடு மக்களாகப் பழகிய காரணத்தால் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க ஒருவராக திகழ்ந்தார். இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிட வேண்டும். ஒரு சமயம் உவெஸ்லிக் கல்லூரியின் விளையாட்டுப் போட்டி 'ஹம்பல்' மைதானத்தில் நடைபெற்றது. அவ்வேளை கடலை விற்பனை செய்பவர்களுடனும் ஐஸ்கிறீம் விற்பனை செய்பவர்களுடனும் சிறு பிள்ளைகளுடனும் புற்தரையில் அமர்ந்து அவர் விளையாட்டுப் போட்டிகளை இரசித்துப் பார்த்தாராம். இதேவேளை அவர் இறுக்கமான தீர்மானங்களை எடுக்கக் கூடிய ஒருவராகவும் விளங்கினார். சில சந்தர்ப்பங்களில் கோபம் கொள்ளக் கூடியவர். மக்கள் இவரை 'God's Own Man' என அழைத்தார்கள். முதல் மனைவியின் இழப்பு அவரை நிலைகுலைய வைத்துவிட்டது. இருந்தபோதிலும் கடவுளின்
அருளால் அந்த ஈடுசெய்யமுடியாத இழப்பில் இருந்து மீண்டெழுந்த அவர் செல்வி. லெஜரை (Miss. Ledger) இரண்டாம் திருமணம் செய்து
உபாட் ப .
-----------1970--- 3ா : உக்பால்-பார்ராக்கா --------- 25=5- பாகம் - 1 சாக்ரே க35:15
12 பதம்- 4: பா FEE ட்ராம்பா?
நேர் = மாடர்வமாக தங்கம் சோகம்
-- Es:12-12-18ts HE -ம மாநா கே 'N1 1 1'மர்,
பாய்மர பிச-14E TEMEEEாரர் சர்தா =4::பபபபாயாப் A A BE, EEE ட்ரம்
EEE ட்யாமாராட மாட்மடம்யா பாகம் 44 பரிதாபம்:
- - - - 2 கபா கயா - பட்ட காயம் 21:31
ப111 - 11:11:4த44 i=ட
போ பாருTH 155455ாசாகர்
==55 5 5- ப் பா4கே மலை போர்க்க === க ப 4 cாம் 31 E 41E - 18ாது:
40 பட காமக் காரிப் காக்க பல சமப்
:ாக தக14 = Ele பட்ட பகல் கொம் - கார் - 2 E142 21:- பு, பாராட்ட 2e 1 1 கர்ப்ப கால பாயட்டட பாகம்
----- =====ய பாடம் பட டி சகாரா : 31ம் --2015-12-12ாராடபபாக்க சித்தப்பா 41 இந்=E:34 EF=
555-கம்ப்பா': A FEFா = = ====;
ந க பாபா E15 பிப
டேப் A பேக் பராக்
23Eாட்டும் பம்பரப் பய: =டாடும் Et 115 கா.14
28-29- 1படபாச HEIE: 11455 பக்க பாகந்நா115515
2 --- ===-1 பாதிக் E-E25
---E-:22:44EF=21-2-ம் E!: ற -நம்ப ட்யாப்14:21-:52251-2251
2ா ரா க திப்பட்ட 15ERAME LEDடாம் கோபம் 11:35:l Eக்கா
=12:55
E :4வதத்தன் டா E Hat EET மந்த --8கப் Eெ' கா =
-- ப-1225 -:5ப ப-பட்டா -14:44:5: 1-ப-2ா 288-2-24232251
போது பயன்படுத்திய வேதாகமம். 1911 டிசம்பர் எனத் திகதியிடப்பட்டுள்ளது. !

Page 17
கொண்டார். வண. ஹென்றி ஹைபீல்ட் அவர்கள் 1895 ஆம் ஆண்டு தொடக்கம் 1925 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக முப்பது வருடங்கள் கல்லூரிக்காக உன்னத சேவை ஆற்றினார்.
''கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்னர் கொழும்பு தெருக்கள் மிகவும் அமைதியாக இருந்தன. குதிரை மற்றும் மாட்டு வண்டிகள் மாத்திரமே அத்தெருக்களில் பயணங்களை மேற்கொண்டன. அதிலும் இரண்டை மாட்டு வண்டில்களே அதிகம் இடம்பிடித்திருந்தன. அந்தத் தெருக்கள் விளையாடுவதற்கு மிகவும் வசதியாக இருந்தன. பொலிஸாரின் இடையூறுகளோ அன்றி போக்குவரத்து சட்ட திட்டங்களோ இல்லை. அதனைத் தொடர்ந்தே மோட்டார் வாகனங்களும் ட்ராம் வண்டிகளும் போக்குவரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்டன. அக்காலகட்டத்தில் உவெஸ்லிக் கல்லூரியானது சரித்திர முக்கியத்துவம் / "வாய்ந்த புறக்கோட்டையில் அமைந்துள்ள டாம் வீதியில் இருந்தது. றோயல் கல்லூரி பசுமையானதும் மகிழ்ச்சியானதுமான மலையில் அமைந்திருந்தது. இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான தூரம் சில நிமிடங்களில் கடக்கும் காலமாகும். றோயல் கல்லூரியானது வளப் பற்றாக்குறையுடன் சில கஷ்டங்களை எதிர்கொண்ட காலங்களில் உவெஸ்லி கல்லூரியானது சர்வகலாசாலைப் புலமைப் பரிசில்களைப் பெருமளவு தட்டிக் கொண்டது. அக்காலங்களில் அக்கல்லூரி அதிபர் வண. ஹென்றி ஹைபீல்ட் அவர்கள் உவெஸ்லியின் வெற்றிக்குக் காரணமாகத் திகழ்ந்தார். றோயல் மற்றும் உவெஸ்லி ஆகிய கல்லூரிகள் கொழும்பின் முன்னணிப் பாடசாலைகளாகத் திகழ்ந்தன'' என 1925 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உவெஸ்லி கல்லூரி சஞ்சிகையில் அமைந்திருந்த
கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்த கல்லூரியின் நடவடிக்கைகளுக்கு இரண்டாம் உலக யுத்த காலப் பகுதியில் தடங்கல்கள்
நூற்றாண் ஏற்பட்டன. இரண்டாவது உலக
காலமா.
கடமை யுத்தம்
நடைபெற்ற
தவறாது காலப்பகுதியில்
மாணவ 'மணி' கள் வழிப்படுத் முன்னுதார

கலைக்கேசரி
17
நூற்றாண்டுக்கு முன்னைய உவெஸ்லியின் முகப்பு தோற்றம் பாடசாலைக் கட்டடங்களில் பிரித்தானியப் படைகள் நிலை கொண்டிருந்த காரணத்தால் பாடசாலை தற்காலிகமாக வேறு இடத்தில் இயங்கியது. இங்கு இனம், மதம் கருத்தில் கொள்ளாது திறமையானவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதுடன், அந்நடைமுறையே தற்போதும் பேணப்படுகிறது. இங்கு இலங்கையின் முதலாவது மகா தேசாதிபதி சேர். ஒலிவர் குணதிலக்க, சேர். பரன் ஜெயதிலக, இலங்கையில் பௌத்த மாணவர்களின் கல்வி வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு 1925 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் ஆம் திகதி கொழும்பு நாலந்தா மகா வித்தியாலயத்தை ஆரம்பித்த பி.டி.எஸ். குலரத்ன மற்றும் பிரபல்யம் பெற்ற பலர் கல்வி கற்றார்கள்.
வண. ஜேம்ஸ் காட்மன் (Rev. Jams Cartman) அவர்கள் கல்லூரிக்கு அதிபராகப் பொறுப்பேற்ற காலமான 1945 ஆம் ஆண்டு தொடக்கம் 1949 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் அவர் கல்லூரிக்கு வழங்கிய பங்களிப்புக்கள் வரலாற்றில் முக்கிய இடம் பிடிக்கின்றன. 1967
ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள
பாடசாலைகளை அரசு பொறுப்பேற்றவேளை, இப்பாடசாலை அரச உதவி இன்றி தனித்து இயங்கியது. அதன்
காரணமாக கல்லூரியின்
ஒள
நிதி நிலைமை மிகவும் தும்
மோசமடைந்ததுடன் 1983 ஆம் ஆண்டு வரை இந்நிலை தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
(தொடரும்) - உமா பிரகாஷ்
ணம்

Page 18
கலைக்கேசரி 18ாாானவியல்
ஆறாம் பாராக்கிரமபாகுவின் கா
பேராசிரியர் சி. பத்மநாதன், தகை
முன்னேஸ்வரம் கோயிலின் அதிஷ்டானத்தின் வடபக்கத்துக் குமுதப்படையிலும் கண்ட வரியிலும் பதினைந்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் எழுதிய கல்வெட்டுக் காணப்படுகின்றது. அது கணிசமான அளவிற்கு நீளமானது. சாசனம் நான்கு வரிகளில் எழுதப்பட்டுள்ளது. காலப்போக்கில்
அதன் சில பகுதிகள்

லத்து முன்னேஸ்வரம் கல்வெட்டு
சார் பேராசிரியர், வரலாற்றுத்துறை பேராதனை பல்கலைக்கழகம்.
ரா4
சிதைவடைந்துள்ளன. அண்மைக் காலத்திலே சாசனம் எழுதிய சில பகுதிகளை ஒட்டிப் புதிய கட்டுமானங்கள் உருவாகியுள்ளன. அதனால் சாசனத்தை முழுமையாகப் படியெடுக்கவோ மீட்டுக்கொள்ளவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.)
ஒரு வரலாற்று ஆவணமென்ற வகையில் முன்னேஸ்வரம் கல்வெட்டு மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. அது முன்னேஸ்வரம் கோயிலைப் பற்றிய கல்வெட்டுகளில் இது ஒன்றே கிடைத்துள்ளது. கோட்டை இராச்சியத்தின் அரசியல், சமய, சமூக நிலைகளைப் பற்றிய பிரதானமான ஆவணங்களில் இதுவும் ஒன்றாகும். அது ஆறாம் பராக்கிரமபாகுவைப் பற்றிய பல விபரங்களைப் பதிவு செய்கின்றது.
இலங்கைச் சாசன வழக்கிலே திருநாமத்தக்காணி, பூஜைக்காணி என்னும் சொற்கள் இச்சாசனத்திலே முதன் முதலாக வருகின்றமை குறிப்பிடற்குரியது. அதிற் காணப்படும் சொல்வளம், மொழிநடை என்பனவும் சிறப்பானவை. பதினைந்தாம் நூற்றாண்டில் இலங்கையில் அரசாங்க அதிகாரிகளின் மட்டத்தில் வழங்கிய நடையினை அது பிரதிபலிக்கின்றது. இச்சாசனம் ஓர் அரசாங்க ஆவணமாகும். அது
இராசதானியில் உருவாக்கப்பட்ட கட்டளையின் வாசகமாகும். மொழி வழக்கினைப்
பொறுத்தமட்டில் அது பொது வழக்கினையோ

Page 19
இலக்கிய வழக்கினையோ
பிரதிபலிக்கின்றதெனக் கொள்ள முடியாது.
வரிவடிவங்களிலே தமிழ் எழுத்துகளோடு கிரந்தமும் கலந்துள்ளது. தமிழ்ச் சொற்களைத் தமிழ் வரிவடிவங்களிலும் சமஸ்கிருதச் சொற்களைக் கிரந்தமாயும் எழுதியுள்ளனர். சாசனத்தின் தொடக்கப் பகுதியும் முடிவில் அமைந்துள்ள செய்யுளும் சமஸ்கிருத மொழியில் உள்ளன. அரசனைப் பற்றி இந்தச் சாசனத்தில் வரும் அடைமொழிகள் சமகாலச் சிங்களமொழிச் சாசனங்களில் உள்ளனவற்றிலிருந்து - சற்று வேறுபடுகின்றன.
இந்தச் - சாசனத்திற் காணப்படும் சமந்தபத்ர சரணாரவிந்த வந்தித என்னும் மொழித் தொடருக்குப் பதிலாக மகாசம்மத பரம்பராநுஜாத என்னுஞ் சொற்கள் சிங்களமொழிச் சாசனங்களிற் காணப்படுகின்றன. இக்காலத்திலே, அரண்மனையிற் சாசனங்களை எழுதியவர்கள் - மொழிநடை, அரசரைப் பற்றிய வர்ணனைகளைப் பொறுத்தவரையில் இறுக்கமான விதிகளைக் கையாண்டதாகத் தெரியவில்லை.
இச்சாசனம் பற்றிய கட்டுரைகள் இச்சாசனத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பினைச் சில விளக்கக் குறிப்புகளோடு, முடிசார் ஆசியக் கழகத்து இலங்கைக் கிளையின் சஞ்சிகை ஒன்றில் ஜே. எம். பெளலர் 1887 ஆம் ஆண்டு வெளியிட்டார். அதில் அவர் மேல்வருமாறு கூறுவார்:
முன்னேஸ்வரம் கல்வெட்டைப் பல முறைகள் ஆராய்ந்துள்ளேன். அதன் பல பகுதிகளை வாசிக்க முடியவில்லை. பழைய கட்டடமொன்றிலுள்ள சாசனம் எழுதிய கற்களை எடுத்து இப்பொழுதுள்ள கட்டடத்தில் வைத்துக் கட்டியுள்ளனர் என நான் கருதுகின்றேன். கற்கள் பொருந்தும் இடங்களிலுள்ள எழுத்துகள் பல சுண்ணாம்புப் பூச்சினால் மறைந்துள்ளன. கட்டடத்தில்
• அமைந்திருக்கின்ற கற்களில் எழுத்துகள் வெட்டப்பட்டிருந்ததால் நிலைமை இவ்வாறிருக்காது. கபோதம் போன்ற பகுதியில், நான்கு வரிகளில் முப்பது அல்லது நாற்பது அடி நீளத்துக்குச் சாசனத்தைப் பொழிந்துள்ளனர்.
சாசனத்தின் பெரும்பகுதியை வாசிக்கமுடியவில்லை என்பதை பெளலர் மனப்பூர்வமாக ஒப்புக் கொள்கின்றார். ஆயினும், சாசனத்தின் வாசகத்தை ஓரளவு முழுமையாக அவர் மொழிபெயர்த்துள்ளார். இது வியப்புக்குரியது; முரண்பாடானது. சாசனத்தின் பல பகுதிகளைப் படிக்க முடியாவிட்டால் அதன் முழுமையான வாசகத்தை எவ்வாறு மொழிபெயர்க்க முடிந்தது? சாசனத்தின் ஆய்வு தொடர்பான ஒரு பிரதானமான அம்சத்தைப் பெளலர் குறிப்பிடவில்லை என்று கருதலாம். சாசனத்தின் வாசகம் அவருக்கு வேறு விதமாகக் கிடைத்திருக்க வேண்டும். இங்கு , வேறோரிடத்திலே கவனிக்கப்படும் விபரங்களினால் இது உறுதியாகின்றது.

கற்பககோர்
சம்

Page 20
கலைக்கேசரி *
20
சாடி
இச்சாசனத்தின் வாசகம் ஒன்றையும் அதன் ஆங்கில மொழிபெயர்ப்பினையும் சாசனம் பற்றிய விளக்க உரைகளையும் இலங்கைத் தமிழ்ச்சாசனங்கள் என்ற தனது ஆங்கில நூலில் 1971 ஆம் ஆண்டிற் கலாநிதி ஆ.வேலுப்பிள்ளை வெளியிட்டார். இலங்கைத் தொல்பொருளியல் திணைக்களத்தினர் வழங்கிய படியை ஆதாரமாகக் கொண்டு சாசன வாசகத்தை உருவாக்கினார். அவருக்குக் கிடைத்த சாசனப்படியில், ஒவ்வொரு வரியின் முடிவிலும் சில எழுத்துகள் சிதைவுற்றுள்ளன. எனவே சாசனப்படியை வாசிப்பதன் மூலம் சாசனத்தின்
முழுமையான வாசகத்தைப் பெறவியலாது.
முன்னே சொன்ன காரணங்களினால் கலாநிதி ஆ.வேலுப்பிள்ளை படித்து, உருவாக்கி வெளியிட்ட சாசனவாச்கம் முழுமையற்றது. அதில் இடைவெளிகள் உள்ளன. மேலும், அவர் வெளியிட்ட வாசகத்திற் சில தவறுகள் காணப்படுகின்றன. ஸவஸ்தி ஸ்ரீ சமந்தபத்ர சரணாரவிந்தந் ஆதித்யவம்ஸாபிஜாத என அவர் வாசித்துள்ள பகுதியைச் சாசனத்தின் புகைப்படத்தில் அமைந்துள்ள எழுத்துகளின் அடிப்படையில் ஸ்வஸ்தி ஸ்ரீ சமந்தபத்ர சரணாரவிந்த வந்தித தி.நகரவம்ஸாபி ஜாத என்று மாற்றிக்கொள்வதே பொருத்தமானது. புகைப்படத்தில் ஆதித்ய என்ற சொல்லே தெரிகின்றது.
சாசனத்தின் முதலாவது வரியின் முடிவிலே தெரியும் சொற்களைச் சரம் ஸ்வபணம் தாபுரோஹி என வேலுப்பிள்ளை அடையாளங் கண்டுள்ளார். ஆனால் இவற்றை எம்மாற் காணமுடியவில்லை. 'விஜசாமகவ பண்டிதர் புரோஹி...' என்ற சொற்களே தெரிகின்றன. மூன்றாம் வரியிற் சந்த்ராதித்தவரை என்பதைத் தொடர்ந்து சர்வமான்யமாக என்ற சொல் அமைந்திருக்கின்றது. ஆனால் ஆ.வேலுப்பிள்ளை வெளியிட்டுள்ள வாசகத்தில் ஸ்த், ராமாக என்னுஞ் சொல் வருகின்றது. சாசனத்தின் முடிவில் ஒரு சமஸ்கிருதச் செய்யுள் கிரந்த எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளது. அதன் முதலாவது தொடர் ததிதலும் கணநாதஸ்ய ஸைவஞான மஹோத தே ஹ் என்பதாகும். ஆயினும் இதனைத் தததக ழணநாத,ல்ல ஸைவ அரந்' மஹோத யோமொன் என ஆ.வேலுப்பிள்ளை படித்துள்ளார்.
பிரித்தானிய அருங்காட்சியகத்திலுள்ள சாசனத்தின் பிரதி முன்னேஸ்வரம் கோயிற் சாசனத்தின் பிரதியொன்று பிரித்தானிய அருங்காட்சியகத்திலுள்ள நூலகத்துத் தமிழ் நூல்கள், ஏட்டுச் சுவடிகள் என்பவற்றுக்குரிய பிரிவில் உள்ளது. அது கடதாசியில் எழுதப்பட்ட பிரதி. அது யாழ்ப்பாண வைபவமாலையின் கையெழுத்துப் பிரதியோடு இணைக்கப்பட்டுள்ளது. இந்தக் கையெழுத்துப் பிரதியைப் பற்றிய விபரமெதுவும் எந்தவோரிடத்திலேனுங் கிடைக்கவில்லை. சாசனத்தின் முழுமையான வாசகமும் அதில் அடங்கியிருப்பது இந்தக் கையெழுத்துப் பிரதியின் சிறப்பாகும். ஓரிடத்திற் தவிர அதில் இடைவெளிகள் இல்லை. கல்வெட்டிலே சில

பகுதிகள் சிதைந்துவிட்டன. எனவே, இதனைக் கல்வெட்டைப் பார்த்து எழுதிய வாசகமாகவுங் கொள்ளவியலாது.
கல்வெட்டின் வாசகத்தைச் சீரமைத்துக் கொள்வதற்கு இந்தக் கையெழுத்துப் பிரதி மிகவும் பயன்படுகின்றது. அது கிடைத்திருக்காவிடின் கல்வெட்டான வாசகத்திலுள்ள விபரங்களைப் புரிந்து கொள்வது சிரமமாய் இருந்திருக்கும். கையெழுத்துப் பிரதியோடு சாசனவாசகத்தின் பொழிப்புரையும் இணைந்திருந்தமை குறிப்பிடற்குரியது.
சாசனத்தின் கையெழுத்துப் பிரதி முன்னேஸ்வரத்தில் முற்காலங்களில் அமைந்திருந்த சரஸ்வதி பண்டாரத்து ஆவணங்களில் ஒன்றை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டிருத்தல் வேண்டும். ஆதியான ஆவணச் சுவடிகள் போர்த்துக்கேயர் கோயிலை அழித்த காலத்தில் அழிந்து விட்டன. ஆலயத்தைப் புனருத்தாரணம் பண்ணிய பின்பும் கோயில் வரலாறு தொடர்பான பல ஆவணங்கள் சேர்த்து வைக்கப்பட்டன. இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட இனக்கலவரங்களில் அவை பெரும்பாலும் அழிந்து விட்டன. ஏட்டிலோ செப்பேட்டிலோ எழுதப்பட்ட வாசகத்தின் பிரதியொன்றாக முன்னே இங்கு குறிப்பிட்ட ஆவணச்சுவடியைக் கொள்ளலாம். கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொடுத்தோம் என்னும் தொடர் சில சாசனங்களிற் காணப்படுகின்றமை குறிப்பிடற் குரியது.
ஆறாம் பராக்கிரமபாகு: விருதுப் பெயர்களும்
சைவசமயத் தொடர்புகளும் சாசனத்தில் வர்ணிக்கப்படும் நிகழ்ச்சிகள் பராக்கிரமபாகுவின் 38 ஆவது ஆண்டில் நடைபெற்றன என்று சாசனத்திற் கூறப்படுகின்றது. கோட்டை மன்னர்களிற் பராக்கிரமபாகு என்ற பெயருடையோர்: ஆறாம் பராக்கிரமபாகு (1412-1467), ஏழாம் பராக்கிரமபாகு (1477-1489), எட்டாம் பராக்கிரமப தாகு (1483-1573). இவர்களில் ஆறாம் பராக்கிரமபாகு மட்டுமே முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி புரிந்தவர்.
எமது சாசனம், அதிலே வர்ணிக்கப்படும் ஏற்பாடுகளைக் குறித்து ஸ்ரீசங்கபே :ாதி, வத்மரான திரிபுவனச்சக்கரவர்த்தி ஸ்ரீ பராக்கிரமபாகு தேவற்கு யாண்டு 38 ஆவது என்று சொல்வதாற் கோட்டைக்கால அரசனாகிய ஆறாம் பராக்கிரமபாகுவையே சாசனங் குறிப்பிடுகின்றது என்பது உறுதியாகின்றது.
ஆறாம் பராக்கிரமபாகு அரசபதவி பெற்ற காலம் தொடர்பாக மூலாதாரங்களிலே தெளிவின்மை காணப்படுகின்றது. அவனது ஆட்சிக்காலம் 1467 இல் முடிவடைந்தது என்பதில் அவற்றிடையே கருத்து வேறுபாடு காணப்படவில்லை. ஆயினும் அவனது ஆட்சி எப்பொழுது ஆரம்பமாகியது என்பதையிட்டு ஒருமிதமான கருத்தில்லை. சிங்கள வரலாற்று நூலாகிய ராஜாவலிய பராக்கிரமபாகு 52 வருடங்கள் ஆட்சி புரிந்தான் எனக்
சாசா

Page 21
கா : பா
பி - எம்17=!-::::
1 412
குறிப்பிடுகின்றது. அவ்வாறாகில் அவன் 1415 இல் அரசபதவி பெற்றிருக்க வேண்டும். வேறு சில ஆவணங்கள் அவன் 55 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான் என்று கொள்வதால் அவன் 1412 இல் அரசபதவி பெற்றானென்று கொள்வதற்கும் இடமுண்டு. பராக்கிரமபாகு 1412 ஆம் ஆண்டிலே கோட்டையில் ஆட்சியதிகாரம் பெற்றானென்றும், மூன்று வருடங்களுக்குப் பின்பு, 1515 இல் அரசனாக முடி சூடிக்கொண்டான் என்றும் கொள்வோமாயின் வரலாற்று மூலங்களின் மூலம் ஏற்படும் முரண்பாட்டைப் புரிந்து கொள்ளமுடியும்.
முன்னேஸ்வரம் சாசனம் அரசனின் 38 ஆவது ஆண்டைக் குறிப்பிடுவதால் அது 1450இல் அல்லது 1453 இல் எழுதப்பட்டிருக்க வேண்டும். இந்த ஆண்டுகளில் எது பொருத்தமானது என்பது சாசனத்திலே காணப்படும் பக்கம், திதி முதலிய குறிப்புகளை நுட்பமாக ஆராய்வதன் மூலம் ஒருவேளை தெளிவாகலாம். இச்சாசனம் எழுதப்பட்ட காலத்தில் அரசனின் பேரும் புகழும் பலமும் உச்சநிலையில் இருந்தன. சாசனத்தின் ஆரம்பப் பகுதி அரசனை மிகவும் அலங்காரமாக மேல்வருமாறு வர்ணிக்கின்றது.
ஸ்வஸ்தி ஸ்ரீ ஸமந்த பத்ர சரணாரவிந்த வந்தித திநகரவம்ஸாபிஜாத ராஜதிராஜ பரராஜஸேகர ஹஜங்க ஸ்ரீ சங்கபோதி வத்மரான திரிபுவனச் சக்கரவர்த்தி ஸ்ரீ பராக்கிரமபாகு தேவற்கு.
இந்த வாசகத்தில் மங்கள் வசனத்தை அடுத்து வரும் முதலாவது தொடர் - பராக்கிரமபாகுவின் சமயாபிமானத்தைப் புலப்படுத்துவது. இரண்டாவது தொடர் அவன் சூர்யவம்சத்தவன் என்ற கருத்தை வலியுறுத்துவது. இவற்றைத் தொடர்ந்து வரும் தொடர்கள் முறையே அரசனின் பட்டப்பெயர், விருதுப் பெயர்கள் என்பனவாகும். சங்கபே :ாதிவர்மர் என்பது சங்கபோதி, வர்மர் என்ற சொற்களின் கூட்டுமொழியாகும். இலங்கை அரசர்கள் முடி சூடிக்கொள்ளும் பொழுது சிரி சங்கபோ,

- நாகப்பிரம்
Lமகா!
அபசலமேவன் என்னும் மாறிவரும் சிம்மாசனப் பெயர்களில் ஒன்றைச் சூடிக் கொள்வது புராதன கால் வழக்கம். பொலன்னறுவைக் காலம் முடியும்வரை இவ்வழக்கம் நிலவியது. கோட்டை அரசர் காலத்தில் சிரிசங்கபோ என்பது மட்டுமே சிம்மாசனப் பெயராக விளங்கியது. சங்கபோதிவர்மர் என்பது அதன் தமிழ் வடிவம். அதனைச் சில சமயங்களிற் சங்கபோதிவத்மர் என்றும் சங்கபோதிபர்மரென்றும் மாறுபட எழுதினார்கள். ஸ்ரீ சங்கபோதி என்பது பெளத்தசமயந் தொடர்புடையது. அது அரசியற் சிந்தனையில் ஏற்பட்ட மகாயானச் செல்வாக்கினைப் பிரதிபலிக்கின்றது.
ராஜாதிராஜ இந்தியாவிலும் இந்தியப் பண்பாடு பரவியிருந்த ஆசிய நாடுகள் பலவற்றிலும் ராஜாதிராஜ என்ற பட்டப்பெயர் பரவலாக வழங்கியது. ஆவணங்களைப் பொறுத்த வரையில், அது குக்ஷாணர் காலம் முதலாகவே இந்தியாவில் வழமையாகியது. ஆதியரசன், அரசர்க்கரசன் என்ற கருத்தில் அது பயன்படுத்தப்பட்டது. அது ஒரு பட்டப்பெயர் என்ற நிலையிற் சக்கரவர்த்தி என்பதற்கு நிகரானது. எனினும் காலப்போக்கிலே சாதாரணமான அரசர்களையும் சாமந்தர்களையும் ராஜாதிராஜ என்று குறிப்பிட முற்பட்டனர்.
இலங்கையில் ராஜாதிராஜன்) என்பது அரசருக்குரிய பட்டப்பெயராகப் 15 ஆம் நூற்றாண்டு முதலாகச் சாசனங்களில் வருகின்றது. அது கோட்டை மன்னர்களதும் கண்டி மன்னர்களதும் ஆவணங்களிற் காணப்படுகின்றது. பல நூற்றாண்டுகளாக வலு குன்றியிருந்த முடி மன்னரின் ஆதிக்கம் ஆறாம் பராக்கிரமபாகுவின் காலத்தில் மீண்டும் எழுச்சி பெற்றதால் அரசனின் மகிமையினைச் சிறப்பிக்கும் வண்ணமாக அவனை ராஜாதிராஜ எனக் குறிப்பிட்டனர் போலும்.
இலங்கையிலுள்ள பல இராச்சியங்களை வென்று அதியரசன் என்ற நிலையினை அவன் அடைந்து விட்டதால் ராஜாதிராஜன் என்னும் பட்டப்பெயர்

Page 22
கலைக்கேசரி இது
22
அவனுக்குப்
பொருத்தமானதாகும்.
ஆறாம் பராக்கிரமபாகுவை ஒறுவல சன்னஸவில் ராஜாதிராஜ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
திரிபுவனச் சக்கரவர்த்தி
அரசனைத் திரிபுவனச் சக்கரவர்த்தி என்று வர்ணிக்கும் இலங்கைச் சாசனங்களில் முன்னேஸ்வரம் கல்வெட்டே முதன்மையானது. தென்னிந்தியாவிற் பதினோராம் நூற்றாண்டு முதலாக மன்னரின் சிறப்புப் பெயர்களில் ஒன்றாகத் திரிபுவனச் சக்கரவர்த்தி என்பதைப் பயன்படுத்தினார்கள். அது மூன்று புவனங்களுக்கும் நாயகன் என்ற பொருளைக் குறிக்கும். தமிழகத்தில் முதலாம் குலோத்துங்கன் காலம் (1070-1122) முதலாகவே திரிபுவனச் சக்கரவர்த்தி என்பது அரசனுக்குரிய சிறப்புப் பெயராக வழங்கியது. அரசனின் இயல்பினைப் பற்றிய கோட்பாடுகளில் ஏற்பட்ட புதிய சிந்தனைகளின் அடையாளமாக அது கொள்ளப்பட்டது. அரண்மனைப் புலவர்கள், மெய்க்கீர்த்திகளிற் சோழச் சக்கரவர்த்தியைக் கடவுளின் அவதாரமாகப் போற்றிய காலத்தில் இடப்பட்ட பட்டப் பெயர் வழக்கில் வந்தமை குறிப்பிடற்குரியது. குலோத்துங்கன் காலம் முதலாக வந்த சோழ மன்னர் அனைவரும் திருபுவனச் சக்கரவர்த்தி என்னும் பட்டப்பெயரைக் கொண்டிருந்தனர். அரசியல் வழமைப்படி பிற்காலப் பாண்டியருக்கும் அது உரியதாகிவிட்டது.
இலங்கையில் ஆறாம் பராக்கிரமபாகுவின் காலத்திலே தான் முதன்முதலாக அரசனைத் திரிபுவனச் சக்கரவர்த்தி என்று குறிப்பிட்டனர். அரசன் தெய்வீக மயமானவன் என்ற சிந்தனை அவனுடைய காலத்தில் ஏற்பட்டிருக்கலாம். அவனுக்குப் பிந்திய கோட்டை அரசன்
ஒருவனுடைய
சாசனம்
ஆறாம்

பராக்கிரமபாகுவை போதி:சத்வாவதாரம்
என வர்ணிக்கின்றமை இதற்கு ஆதாரமாகின்றது.
பரராஜசேகரபுஜங்க என்னும் விருதுப் பெயர் ஆறாம் பராக்கிரமபாகுவின் பிரதானமான அரசியற் சாதனைகளில் ஒன்றைப் பற்றியதாகும். பரராஜசேகர(ன்) என்பது யாழ்ப்பாணத்து அரசர்களின் மாறிவரும் சிம்மாசனப் பெயர்களில் ஒன்றாகும். அது பராக்கிரமபாகுவின் காலத்தில் யாழ்ப்பாணத்தில் ஆட்சி புரிந்த கனகசூரிய சிங்கையாரியனின் பட்டப்பெயர். பராக்கிரமபாகுவின் சேனாதிபதியான செண்பகப்பெருமாள் படையெடுத்துச் சென்று யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிவிட்டான். கனகசூரிய சிங்கையாரியன் தனது மனைவி மக்களோடு வடதேசஞ் சென்றுவிட்டான்.
யாழ்ப்பாணத்து அரசனை வெற்றி கொண்டமையைக் குறிக்கும் வண்ணமாகக் கோட்டை அரசன் பரராஜசேகரபுஜங்க என்னும் விருதுப் பெயரைச் சூடிக்கொண்டான். முன்னேஸ்வரம் சாசனம் எழுதப்படுவதற்கு முன்பு யாழ்ப்பாணத்தின் மீதான போர் முடிவடைந்துவிட்டது என்பது இதனாற் புலனாகின்றது.
முன்னேஸ்வரம் திருக்கேதீஸ்வரம் என்பதைப் போல் முன்னேஸ்வரம் கோயிலொன்றின் பெயராகவும் அக்கோயில் அமைந்துள்ள இடத்தின் தலப்பெயராகவும் விளங்குகின்றது. இது நெடுங்கால வழக்கு முன்னேஸ்வரம் பற்று என்பது முற்காலங்களில் வழங்கிய நிர்வாகப் பிரிவொன்றின் பெயர் என்பதுங் குறிப்பிடற்குரியது. முன்னேஸ்வரம் சிங்கள மொழியில் முன்னேஸ்வரம் என்று சொல்லப்படும். கோயிலின் பெயரைத் தமிழில் முன்னீஸ்வரம் என்றுஞ் சொல்வர். இச்சாசனத்திற் கோயிலின் பெயரை வழமைக்கு மாறாக மொண்னீஸ்வரம் என்று குறிப்பிட்டுள்ளனர். இராசதானியில் இச்சாசன வாசகத்தை உருவாக்கியவர்கள் கோயிலின் பெயரைத் தவறாக எழுதியிருத்தல் கூடும்.
நிலமானியங்களைப் பொறுத்தவரையிற் பராக்கிரமபாகு சில மாற்றங்களை ஏற்படுத்தினான் என்பது சாசனத்திலுள்ள மேல்வரும் பகுதியாற் புலனாகின்றது.
'மொண்ணீஸ்வரமுடைய தம்பிரானாரை பூஜிக்கிற நம்பிமாரை ஜயவர்த்தனக் கோட்டைக்கு அழைத்து விஜஸாமகவ பண்டிதர் புரோகிதரிடம் தம்பிரானாருடைய க்ஷேத்திரங்களிற் செய்தி கேட்டு முன்பு நம்பிமார்க்கு நின்ற மொண்ணீஸ்வரத்தில் சீமைக்கு உள்பட்ட க்ஷேத்திரந் தம்பிரானாற்குத் திருனாமத்துக் காணியாக கற்பித்து நம்பிமார்க்குப் பூஜைக் காணியாக இலுப்பைதெணியில் வயல் அமணம் இருபத்திரண்டும் கோட்டைப்பிட்டியில் வயல் அமணம் முப்பதும் முதல்மைக்குக் கற்பித்துத் தித்தக்கடையில வயல் அமணம் எட்டும் இதுக்குள்ள குடியிருப்புங் - காடும் ஆகவும் நியமித்து மொண்ணீஸ்வரத்தில் நம்பிமார்க்கு இருக்கக் கற்பித்து மனை உள்ளதும் முன்னாளியரிசியில் அமுது கறியமுது

Page 23
இலையமுது சுகந்தம் முதலானவையும் நம்பிமாற்கு மாதமொன்றுக்குப் பணம் முப்பது முதல்மைக்குடைமைப் பணம் மாசமொன்றுக்கு ஒவ்வொருத்தற்கு பதினொன்றும் இவர்களுக்குப் பாரம்பரியமாக சத்திராதித்யவரை சர்வமான்யமாக நடக்கும் படி ...'
இதிலே சொல்லப்படுவன ஒரு பெருங்கதை. அது முன்னேஸ்வரம் கோயிலின் வரலாறு பற்றிய ஒரு சிறப்பம்சமாகும்.
கோயில் மிகவும் புராதனமானது; அது கோட்டை காலத்துக்கு மிகவும் முற்பட்டது; அது ஆறாம் பராக்கிரமபாகுவின் காலத்திலே பிரசித்தமாகிவிட்டது என்பன சாசன வாசகத்தினாலே தெளிவாகின்றன. சாசனத்தில் மேல்வரும் விடயங்கள் அடங்கியுள்ளன:
1. பராக்கிரமபாகு தனது 38 ஆம் ஆட்சியாண்டிலே முன்னேஸ்வரத்தில் வழிபாடு நடத்தும் பிராமணரை இராசதானியாகிய ஜயவர்த்தனக் கோட்டைக்கு வரவழைத்தான்.
2. விஜஸாமகவ பண்டிதர் என்னும் புரோகிதரிடமிருந்து முன்னேஸ்வரம் பற்றிய விபரங்களைக் கேட்டு அறிந்தான். 3. முன்பு முன்னேஸ்வரம் தலத்திலே பிராமணர் வசமாயிருந்த நிலங்களைக் கோயில் நிலங்களாக மாற்றினான்.
4. பிராமணருக்குப் பூஜைக் காணியாக வேறு நிலங்களை அரசன் வழங்கினான். அவர்களுக்கு இலுப்பைதெணி என்னுமிடத்தில் 22 அமணம் வயல்நிலம் வழங்கப்பட்டது. அவர்களின் தலைவரான முதன்மைக்குக் கோட்டைப்பிட்டியில் 30 அமணம் வயலும் தித்தக்கடையில் 8 அமணம் வயலும் அவற்றைச் சேர்ந்த
குடியிருப்பு நிலங்களும் காடும் வழங்கப்பட்டன.
5. வழங்கப்பட்ட நிலங்களின் பேரால் நாள்தோறும் நிவேதனத்துக்குத் தேவையான 3 நாழி அரிசியில் அமுது, கறியமுது, இலையமுது, நறும்புகை என்பவற்றைக் கோயிலிற் படைப்பதற்கு ஏற்பாடு செய்தான். இதில் ஒவ்வொரு மனையும் பங்குகொள்ள வேண்டும்.
6. நம்பிமார் ஒவ்வொருவருக்கும் மாதமொன்றுக்கு 11 பணமும் முதன்மைக்கு 30 பணமும் வேதனமாக
வழங்குவதற்கு அரசன் ஏற்பாடு செய்தான்.

கலைககேசரி
23
7.
பிராமணருக்கு நிலங்கள்
சர்வமானியமாக வழங்கப்பட்டன. அவற்றின் மீது அரசருக்கு உரித்தான உரிமையெல்லாம் அவர்களுக்கு உரியவை. அவை வரியிலி நிலங்கள்.
திருநாமத்துக்காணி, பூஜைக்காணி என்ற இருவிதமான நிலங்களை முன்னேஸ்வரம் கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது. இவ்விரு வகைகளும் - அரசரால் உருவாக்கப்பட்டவை. கோயில் நிலம் திருநாமத்துக்காணி என்று சொல்லப்படுகின்றது. அது சாசனங்கள் வழமையாகக் குறிப்பிடும் தேவதானம் என்பதற்கு நிகரானது. ஆனால் இங்கே குறிப்பிடப்படும் திருநாமத்துக்காணி முன்பு நம்பிமார்களின் பேரில் அமைந்த நிலமாகும். முன்பு அந்தணர் வசமான நிலங்களை பராக்கிரமபாகு கோயில் நிலங்களாக, திருநாமத்துக் காணியாக மாற்றினான் என்பதை இச்சாசனம் குறிப்பிடுகின்றது. முன்பு பிராமணர் பேரிலிருந்த நிலங்களுக்குப் பதிலாக அவர்களுக்கு வேறு நிலங்களை அரசன் வழங்கினான். அவை பூஜைக்காணி என்று குறிப்பிடப்படுகின்றன. பூஜைக்காணி என்பது ஆலயத்திற் பூசை செய்கின்றவர்களுக்கு வழங்கப்படும் சேவை மானியமாகும். அவ்வாறான மானியத்தைப் பெற்றவர்கள் தலைமுறை தலைமுறையாகச் சேவை புரிவதற்குக் கடப்பாடு உடையவர்களாவர்.
முடிவுரை: முன்னேஸ்வரம் கோயிலின் புராதன காலத்து வரலாற்றம்சங்கள் சில ஆறாம் பராக்கிரமபாகுவின் சாசனத்தின் மூலம் தெளிவாகின்றன. முன்னேஸ்வரம் என்னும் கோயிலின் பெயர் சாசனம் எழுதப்பட்ட காலத்திலே தலப்பெயராகிவிட்டது. எனவே கோயில் நெடுங்காலத்திற்கு முன்பே உருவாகிவிட்டதென்று கருதலாம். விமானம் உருவாக்கப்பட்ட பின்பு அதன் அதிஷ்டானத்திற் சாசனம் நான்கு வரிகளில் வெட்டப்பட்டுள்ளது. அவ்வரிகளிற் சாசனவாசகம் தொடர்ச்சியாக அமைந்திருப்பதால், சாசனம் எழுதிய கற்களை வேறோரிடத்திலிருந்து எடுத்து வந்து அவற்றை இப்பொழுதுள்ள இடத்தில் அமைத்து விட்டனர் என்ற பெளலரின் விளக்கம் பொருத்தமற்றது.

Page 24
கலைக்கேசரி த் 24 அணிகலன்கள்
நிஜாம்களின் விலை மதிக்க6ெ
அணிகலன்கள்
இந்தியாவின் மிகப் மிகப் பெரியதும் மிகச் மிகச் சிறப்பு வாய்ந்தவையாகவும் விளங்கும் ஆபரணங்கள், ஹைதரபாத்தை ஆட்சிபுரிந்த நிஜாம் மன்னர்களின் ஆபரணங்களாகும். அவர்களது ஆட்சியதிகாரங்கள் ஒடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, நிஜாமும் அவர்தம் குடும்பத்தவர்களும் அந்த ஆபரணத் தொகுதியை அகற்றுவதற்கு இந்திய அரசாங்கம் தடைவிதித்தது. அது தேசிய சொத்து எனவும், எனவே அதனை அகற்ற முடியாது எனவும் இந்திய அரசு தெரிவித்தது.
இதனால் பல வருடங்கள் ஏற்பட்டிருந்த இழுபறி நிலையைத் தொடர்ந்து, இறுதியில் நிஜாம் அரச வாரிசுகள் அம்மாபெரும் பொக்கிஷத்தை இந்திய அரசுக்கு மிகக் குறைந்த விலையில் விற்க வற்புறுத்தப்பட்டனர்.
கொலம்பிய மரகதங்கள், கொல்கொன்டா சுரங்கங்களைச் சேர்ந்த வைரங்கள், பர்மாவின் சிவப்புக் கற்கள், பஸ்ரா மற்றும் மன்னார் குடாவைச் சேர்ந்த முத்துக்கள் என விலை மதிக்கவொண்ணா இரத்தினக் கற்களை வைத்து தங்கம் மற்றும் வெள்ளியினால் தயாரிக்கப்பட்ட அணிகலன்கள் இவை. 18ஆம் நூற்றாண்டில் இருந்து 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியான காலத்தைச் சேர்ந்த அணிகலன்கள் இவையாகும்.
இந்த ஆபரணத் தொகுப்பில் 173 அணிகலன்கள் உள்ளன. அதில் 12 ஆயிரம் கரட்டிற்கு மேல் (2.4 கி.கிராம்) நிறையுள்ள 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வைரங்கள் அடங்குகின்றன. இரண்டாயிரம் மரகதக் கற்களும் அதில் உள்ளன. அவற்றில் சில கொலம்பியாவைச் சேர்ந்தவை. இவை 10 ஆயிரம் கரட்டுக்கு (2.0.கி.கி) மேற்பட்ட எடை உள்ளவையாகும். 40 ஆயிரம் _ 'சௌ'வுக்கு மேற்பட்ட முத்துக்களும் அதில் அடங்கியிருக்கின்றன.. -
இந்தப் புகழ்பெற்ற ஆபரணத் தொகுதியில் மணிக்கற்கள், டேர்பன் ஆபரணங்கள், கழுத்தணிகள், பதக்கங்கள், இடுப்புப் பட்டிகள் (Buckles) காதணிகள், கைப்பட்டிகள், காப்புகள், கையணிகள் (Bracelets) காற் சிலம்புகள் (Anklets ) சட்டைப்
பொத்தான்கள் (Buttons) கைக்கடிகாரச் சங்கிலிகள், மோதிரங்கள்,
மெட்டிகள், மூக்குத்திகள்

வாணா
என்பனவும் அடங்கும். அத்துடன் அதில் ஏழு சங்கிலிகள் பொருத்தப்பட்ட பஸ்ரா முத்து நெக்லஸ7ம் உள்ளது.
465 முத்துக்கள் இழைக்கப்பட்ட இந்த நெக்லஸ் சற்லடா " '(Satlada) என அழைக்கப்படும்.
இவ்விடத்தில், நிஜாம்களின் வரலாற்றைக் குறித்து. சற்று | நோக்குவதும் பொருத்தமானது. சமர்கான்டைச் - சுற்றிய பகுதியில் உருவான ஆசவ் ஜஹி வம்சம், 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாரசீக - துருக்கி மொழி பேசும் 'பாமிர்நொற்' (Paamir Knot) என்னும் பகுதியில் இருந்து இந்தியாவுக்கு வந்து
சேர்ந்தனர். இவர்கள் மொகலாய ஆட்சியின் ஊழியர்களாக இருந்தனர். பாரசீக கலாசாரத்தின் காப்பாளர்களாக விளங்கிய முகலாயர்கள், இவர்களுக்கு நல்லாதரவு வழங்கினர்.
தென்னிந்தியாவில் நிஜாம்கள் வெளிநாட்டவர்களே ஆகும். இருப்பினும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் 'அவர்கள் இப்பிராந்தியத்தில் -
பிரவேசிக்க வைத்தது.

Page 25
எனவே, அவர்கள் இப்பிராந்தியத்தை தமது வாழ் . விடமாகக் கொண்டார்கள். சுமார் 225 வருடங்கள் முகலாய அரசியலில் அவர்கள் முன்னிலை வகித்தார்கள். முகலாய அரச வம்சத்தின் கலை கலாசர மரபுகளையே இவர்கள் பின்பற்றினார்கள். இருப்பினும் சில அணிகலன்கள் தென்னிந்திய பாணியை பின்பற்றி அமைந்தன.
முகலாய மன்னர்களின் சார்பாக முதலாவது நிஜாம் ஆட்சிபுரிந்தார். ஒளரங்கசீப் மன்னனின் மறைவைத் தொடர்ந்து நிஜாம்கள் முகலாயர்களிடமிருந்து பிரிந்து சுதந்திர ஆட்சியை "உருவாக்கினர். பிரிட்டிஷார் இந்தியாவின் ஆட்சியைக் கைப்பற்றியபோது, நிஜாம்கள் பிரிட்டிஷாரைச் சார்ந்த அரசர்களாக தமது அரச மாநிலங்களில் தொடர்ந்தும் ஆட்சி செய்ய அவர்கள் அனுமதி வழங்கினர்.
1948 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி புதிய இந்திய யூனியன் ஹைதரபாத்தை இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளும் வரை, அம் மாநிலத்தின் மீதான உள்ளூர் அதிகாரத் தைத் தம்முடனேயே வைத்திருந்தனர்.
அசாப் ஜா வம்சத்தில் ஆக ஏழு அரசர்களே ஆட்சி | புரிந்தார்கள். இருப்பினும் முதலாவது நிஜாமின் ஆட்சியின் பின் 13 வருடங்கள் அவரது புத்திரர்கள் ஆட்சி புரிந்தனர். இருப்பினும் அவர்கள் ஆட்சி யாளர்களாக அங்கீகரிக்கப்படவில்லை.
நிஜாம்களின் ஆட்சிக்காலத்தின் போது, ஹைதரபாத் மாநிலம் மிகச் சிறந்த செல்வ பூமியாக விளங்கியது. டெக்கானில் அவர்களது ஆட்சி 223,000 கி.மீட்டர் நிலப் பரப்பினைக் கொண்டிருந்தது. காலனித்துவ |
'பிரிட்டிஷ் அரசுடன் நிஜாம்கள் ஒத்துழைத்தமையால் அவர்களுக்கு, பிரிட்டிஷ் அரசினால் அதி உயர் மாட்சிமை விருது (His Exalted Highness) வழங்கப்பட்டது. நிஜாம்களின் ஆட்சிக் காலத்தின்போது, ஹைதரபாத் நகரம், கலாசாரம் .. மற்றும் பொருளாதாரத்தில் பெரும் அபிவிருத்தி கண்டது.
நிஜாம்களின் ஆபரணங்கள் அவர்களது ஆட்சிச் செழிப்புக்கு ஓர் உதாரணமாகும். - சர்வதேச உல்லாசப் பயணிகளைக் கவர்ந்த இக்கண்கவர் பெரும் செல்வம், இடைக்கிடை சலார்ஜுங் அருங்காட்சியகத்தில் (Salar Jung museum) காட்சிக்கு வைக்கப்படுவதுண்டு.

கலைக்கேசரி
25
1948 ஆம் ஆண்டு ஹைதராபாத் மாநிலத்தின் மக்கட் தொகை சுமார் 17 மில்லியன் எனவும் அதன் வருடாந்த வருமானம் சுமார் 90 கோடியே 29 ஆயிரம் பவுண் எனவும் மதிப்பிடப்பட்டது. நிஜாம்களில் கடைசியாக ஆட்சி புரிந்தவரான நிஜாம் மிர் ஒஸ்மான் அலிகான் திரட்டி வைத்திருந்த பெரும் செல்வத்தின் காரணமாக 1937 ஆம் ஆண்டில், உலகில் மிகப்பெரும் செல்வந்தர்களில் ஒருவர் என கணிப்புப்பெற வைத்தது. அதேவேளை, அவரது கஞ்சத்தனமும் பெயர்பெற்றது. இவர் சேர்த்து வைத்திருந்த வைரத்தின் - மதிப்பு சுமார் 210.8 மில்லியன் அமெரிக்க டொலர் என (2008 - இல்) அப்போதைய டொலர் பெறுமதியில் மதிப்பிடப்பட்டது.
'அசாங் ஜா வம்சத்தின் ஏழு நிஜாம்களிலும் சேகரிக்கப்பட்டவையே இந்த 173 ஆபரணாதிகளைக் கொண்ட தொகுதியாகும்.. டெக்கானை இந்த _ நிஜாம்கள் ஆட்சி புரிந்தாலும், அவர்கள் | முகலாய மன்னர்களின் வாழ்க்கை முறை, மன்னராட்சி முறை, நிர்வாக நடைமுறை ஆகியவற்றையே பின்பற்றினர். -- அந்த ஆபரணச் செல்வங்கள் முகலாய, டெக்கானி மற்றும் ஐரோப்பிய செல்வாக்கைக் - கொண்டவையாக மிளிர்ந்தன. 'காலத்தால் அழியாத இந்த அரும்பெரும் கண்கவர் பொக்கிஷத்தைக் காப்பாற்றும் கவனம் நிஜாம்களின் கடைசி மன்னராக விளங்கிய மிர் ஒஸ்மான் அலிகானின் காலத்திலேயே மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிஜாம்களின் வரலாற்றுக்காலம் முழுவதும் இந்திய மன்னர்கள் மற்றும் மகாராஜாக்களின் விலை மதிப்பற்ற ஆப ரணாதிகள் அரச சபைக்கு வெளியே கிட்டத்தட்ட தெரியாமலே இருந்தன.
அரச
குடும்பத்தின்
மிக

Page 26
கலைக்கேசரி 2
26
நம்பிக்கையானவர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்தது. அரச மாளிகைகளின் திறைசேரிகளில் _ - கவனமாகப் பாதுகாக்கப்பட்ட இந்த ஒளி வீசும் ஆபரணங்களை அரசரும் குடும்பத்தி னரும், அரச வைபவங்களில் மட்டுமே | அணிந்தனர்.
இம்மாபெரும் சொத்துக்கள், இந்திய அரசுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி 1972 ஆம் ஆண்டு வெளிவந்த போது, நகைகள், உலகில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் வழக்கு, கணக்கு மற்றும் மிகப் பெரும் செலவுகள் என இழுபறிப்பட்டு, 23 வருடங்களின் பின்னரே இறுதியாக அதாவது 1995 ஆம் ஆண்டு இந்திய அரசினால் பெறப்பட்டது.
ஹைதரபாத் இந்திய அரசுடன் இணைக்கப்பட்டதன் பின், இந்திய அரசினால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது நடவடிக்கை, நிஜாம் வம்சத்தின் பெருமையைக்காப்பாற்றும் பொருட்டு உபயோகிக்கப்பட்டதான வருமானத்தை அளித்துக் கொண்டிருந்த மரபு ரீதியான நிலங்களை சுவீகரிக்க முனைந் தமையாகும். இவற்றினால் கிடைத்த வருடாந்த வருமானம் /24 லட்சம் ரூபாவுக்கும் மேலானதாகும். நிஜாமுக்கு இதனால் ஏற்பட்ட இழப்புக்கு ஈடு செய்யும் வகையில், அவருக்கு அரச மான்யமாக ரூபா 50 லட்சம் வழங்கப்பட்டதற்கு மேலாக அவரது ஆயுட் காலம் வரை வருடாந்த கொடுப்பனவாக ரூபா 50 லட்சம் வழங்கப்பட்டது.
அவ்வேளையில் நிஜாம் அரச குடும்பங்களின் நிலை மிகக் கஷ்டமானதாக இருந்தது. மிர் ஒஸ்மான் அலி கான் ஒரு மிகப் பெரிய குடும்பத்தின் தலைவராக இருந்ததுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலையாட்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருந்தார். இந்த நிலைமை முன்னர் போல,

தமக்குச் சாதகமாக இருக்காது என உணர்ந்த ஒஸ்மான் அலிகான் தமது மூதாதையரின் செல்வத்தையும், 7- தமது வாரிசுகள் மற்றும் தன்னில் தங்கி இருப்போரையும் காப்பாற்றும் பொருட்டு சில நடவடிக்கைகளை மேற் கொண்டார்.
இந்த நோக்கை அடையும் பொருட்டு தமது செல்வத்தின் ஒரு 'பகுதியை பல - நிதியங்களில் 'ஒதுக்கீடு செய்தார். இந்த நிதியங்களில் தனித்துவமானது 'அதி மேன்மைக்குரிய - நிஜாம்களின் ஆபரணாதிகள் நிதியம்' ஆகும். 1951 ஆம் " ஆண்டு மார்ச் 29 ஆம் திகதி கூட்டிணைக்கப்
பட்ட இந்நிதியம் ஓர் இந்திய மன்னரால் உருவாக்கப்பட்ட முதல் நிதியமாகும். இந்த நிதியத்தில் ஓஸ்மான் அலி கான் 107 நகைகளைச் சேர்த்திருந்தார். | இவற்றுள் அரசு சார்ந்த நகைகளோடு, அவரது சொந்த ஆபரணங்களும் அடங்கியிருந்தன. தனது பேரப்பிள்ளைகளுக்கு நன்கொடைகள் பலவற்றை வழங்கிய பின்னர், 1952 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி மேலதிக நிதியம் ஒன்றினையும் உருவாக்கினார்.
அரசின் கணக்கின்படி, இவ்விரு நிதியங்களிலும் இருந்து தற்போதைய சேகரிப்பு 173 ஆபரணங்களைக் கொண்டிருக்கிறது. இருப்பினும் உண்மையான எண்ணிக்கை 325 ஆபரணங்களாகும். இதில் 22 சேர்க்கப்படாத மரகதங்களும் மாட்சிமைக்குரிய வைரம் எனப் பெயர் பெற்ற ஜாக்கோப் வைரமும் சேர்க்கப் படவில்லை. இந்த ஜாக் கோப் வைரத்துக்கு ஒரு வரலாறும் உண்டு. இக்கண்கவர் வைரக்கல், பிரசித்தி பெற்ற கோஹினூர் வைரத்தின் அளவை

Page 27
விட இரு மடங்கு கூடியதாகும். இவ்வைரம் நம்பமுடியாத அளவிற்கு அத்தனை சிறப்புக் கொண்டதாகும். இம் பீரியல் வைரம் என முன்னர் அழைக்கப்பட்ட ஜாக்கோப் வைரம் 184.79 கரட் (39.96 கி) எடையுள்ளது. இவ்வைரம் உலகில் மூன்றாவது அல்லது 7ஆவது மிகப் பெரிய வைரம் என மதிக்கப் பட்டிருக்கிறது. ஆபிரிக்கச் சுரங்கங்களில் இது காணப்படுவதாக நம்பப்படுகிறது. இந்த வைரம் மட்டும் 150 மில்லியன் டாலருக்கு மேல் மதிப்புடையது என மதிக்கப்படுகிறது. ஆனால் இந்திய அரசாங்கம் எல்லா 173 அணிகலன்களுக்குமாக கொடுத்ததை விட கூடுதலானது. 1891 ஆம் ஆண்டு ஆறாவது நிஜாமான மிர் மகாபப் அலிபாஷாவி னால் ஏ.கே.ஜாக்கோப் என்ற யூத வர்த்தகர்களிடமிருந்து அந்த வைரக்கல் வாங்கப்பட்டது. 1897 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஜாக்கோப் இந்த வைரக்கல்லை நிஜாமுக்குக் காட்டும் பொருட்டு அவரது மாளிகைக்கு வந்தார் எனக் கூறப்படுகிறது. அந்த வைரக்கல்லை நிஜாம் தமது ஷேர்வானியின் (நீண்ட கோட்டு) பொத்தானாக (Button) உபயோகிக்கும் சாத்தியம்
குறித்து ஆராய்ந்தார். ஆனால் பொருந்தும் படியாக மேலும் ஐந்து வைரக்கல்லைப் பெறுவது கஷ்டமாக இருந்தபடியினால், அதனைக் கடதாசிக்குப் பாரமாக (Paper weight) வைக்கப் பொருத்தமானது எனத் தீர்மானித்தார். - '48 லட்சம் ரூபா அதற்கு விலை பேசப்பட்டது. நிஜாம் 28 லட்சம் ரூபா முற்பணமாகக் கொடுத்தார். இருப்பினும் பேரத்தில் பிசகு ஏற்பட்டது. அதன் விளைவாக வழக்காட நேர்ந்தது. எனவே இதனைத் தொடர்ந்து பிரிட்டிஷ் தலைமைத்துவத்தால் நிறுவப்பட்ட விசாரணை ஆணைக்குழு முன், நிஜாம் சாட்சியமளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இது நிஜாமுக்கு பெரும் அவமான மாகத் தோன்றியது. காரணம் அவரது நீதிமன்றத்தில் அவரே நீதிபதியாகவும் ஜூரியாகவும் இருந்தார். விசாரணைக்
குப்பின் நேராக தமது " மாளிகைக்கு வந்து தமது அறைக்குச் - சென்ற நிஜாம், தமக்கு அவமானத்தை
ஏற்படுத்தக் காரணமாகவிருந்த அந்த வைரக்கல்லை எடுத்து, தமது எழுதும் மேசை லாச்சிக்குள் வெறுப்புடன் - எறிந்தார். அத்துடன் இந்த வைரக்கல்லுடன் தொடர்பான

கலைக்கேசரி
வேறு சில கதைகளும் கூறப்படுகின்றன. - மற்றொரு கதையின் படி ஏழாவது நிஜாம் அந்த வைரக்கல், தனது தந்தைக்கு துரதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்தது எனக் கருதி, இந்த லாச்சியில் இருந்து அதனை எடுத்து தந்தையின் சப்பாத்தினுள் தள்ளிவிட்டார் எனவும் அது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. - |
பதினையாயிரம் கோடி ரூபாவுக்கு மேல் மதிப்புள்ளதாக - கூறப்படும் இந்த நகைகள், 218 கோடி ரூபாவுக்கு இந்திய 'அரசிடம் விற்கப்பட்டது.
முதன் முதலில் 2001 ஆம் ஆண்டு சுமார் இரண்டு மாதங்கள் புதுடில்லி தேசிய அருங்காட்சியகத்திலும் பின்னர் மீண்டும் | ஹைதராபாத்துக்கும் கொண்டுவரப்பட்டு, பிரசித்திபெற்ற சலார்ஜுங் அரும்பொருள் காட்சியகத்தில் பொது மக்கள் 'பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
மிகச் சிறந்த கைவினைக் கலைஞர்களினால், மிகச் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நுணுக்கமாகவும் செதுக்கப்பட்டும்; கோர்க்கப்பட்டும்; இணைக்கப்பட்டும்;
வடிவமைக்கப்பட்டும் ஒளிவீசும் இவ்வரிய
முத்துக்களும் வைரங்களும் கொண்டதாக - நகைத் தொகுதி அவற்றைப் பார்வையிடும் மக்களை உண்மையில் வியப்பில்
ஆழ்த்துகின்றன |
என்றால் மிகையில்லை!
- ஜெனிஷா

Page 28
கலைர் சேர்த். 28 சர்வா
பிஜித் தீவுகள்
தீவுகளை (Fiji Islands) நாம் நினைவில் கொள்ளும்போது, அங்கு ஒரு காலகட்டத்தில் கரும்புத் தோட்டத்துக் கூலிகளாக பெரும் துயரங்களை அனுபவித்த இந்தியர்களது வேதனைகளைக் கேள்வியுற்று மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆக்கிப் புகழ்பெற்ற அந்த சோகப் பாடல் ஞாபகத்துக்கு வராது போகாது.
கரும்புத் தோட்டத்திலே - அவர் கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி வருந்து கின்றனரே! ஹிந்து மாதர்தம் நெஞ்சு கொதித்துக் கொதித்து மெய் சுருங்குகின்றனரே - அவர் துன்பத்தை நீக்க வழியில்லையோ? ஒரு மருந்திதற் கிலையோ? - செக்கு மாடுகள் போலுழைத் தேங்குகின்றார், அந்தக் (கரும்புத்தோட்டத்திலே) பெண்ணென்று சொல்லிடிலோ - ஒரு பேயும் இரங்கும் என்பார் தெய்வமே! - நினது எண்ணம் இரங்காதோ? - அந்த ஏழைகள் அங்கு சொரியுங் கண்ணீர் வெறும் மண்ணிற் கலந்திடுமோ? - தெற்கு
மாகடலுக்கு நடுவினிலே, அங்கோர் கண்ணற்ற தீவினிலே - தனிக் காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றார், அந்தக் (கரும்புத்தோட்டத்திலே) நாட்டை நினைப்பாரோ? - எந்த நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ? - அவர் விம்மி விம்மி விம்மி விம்மியழுங் குரல் கேட்டிருப்பாய் காற்றே!.... என்பதுதான் அந்த சாகாவரம் பெற்ற கவிதை. இது ஒரு புறமிருக்க, தற்காலத்தில் உல்லாசப் பயண இடமாகப் பெயர் பெற்றிருக்கும் பீஜித் தீவுகள் பற்றிச் சிறிது நோக்கலாம். உத்தியோகபூர்வமாக பீஜி குடியரசு என அழைக்கப்படுகிறது. இத்தீவு நியூஸிலாந்தின் வடக்கு தீவுக்கு வடகிழக்காக சுமார் இரண்டாயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால், தென்பசுபிக் சமுத்திரத்தில் மெலனீசியாவில் (Melanesia) அமைந்திருக்கிறது. இந்நாட்டின் மேற்குத் திசையில் வனோதுவும் (Vanuatu) வட மேற்கில் பிரான்சின் நியூகலிடோனியாவும், தென்கிழக்கில் நியூஸிலாந்தின் கேமெடெக்கும் (Kermadec) கிழக்கில் ரொங்கா (Tonga) மற்றும் சமோவாவும் (Samoa) வடக்குத் திசையில் துவலுவும் (Tuvalu) அமைத்துள்ளன.
சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்த எரிமலை வெடிப்புகள் மூலமாக பெரும்பான் மையான பீஜத் தீவுகள் உருவாகின.

கி.மு. சுமார் 3500 - 1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இத்தீவுகளில் மக்கள் குடியேறியுள்ளனர் எனக் கூறப்படுகிறது. 332 க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்டதாக இந்நாடு விளங்குகின்றது. இதில் 110 தீவுகளில் மக்கள் நிரந்தரமாகக் குடியிருக்கின்றனர். இத்துடன் 500 க்கும் மேற்பட்ட குட்டித் தீவுகளும் உள்ளன. இதன் மொத்த நிலப் பரப்பு 18,300 சதுர கிலோ மீட்டராகும். பீஜித் தீவுகளில் மொத்த மக்கட்தொகை சுமார் 8 இலட்சத்து 50 ஆயிரம் பேராகும். இதில் 87 சதவீதமான மக்கள் விற்றி லெவு (Viti Levu) மற்றும் வினோலெவு (Vanua Levu) ஆகிய இரு பிரதான தீவுகளில் வாழ்கின்றனர்.
விற்றி லெவு தீவின் தலை நகரமாக விளங்குவது சுவா (Suva) என்பதாகும். இது மிகப்பெரிய நகரமாகும். பெரும் பாலான பீஜி மக்கள் விற்றி லெவுவின் கரையோரங்களில் அதாவது ஒன்றில் சுவா நகரில் அல்லது சிறிய நகர நிலையங்களில் வாழ்கிறார்கள். அதன் நில அமைப்புக் காரணமாக, உட்பிரதேசங்களில் மக்கள் குடியிருப்புகள் குறைவாகவே உள்ளன.

Page 29
- 17ஆம் மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளில் டச்சு மற்றும் பிரிட்டிஷ்காரர்கள் பீஜி தீவுகளைக் கண்டுபிடித்தார்கள். 1970ஆம் ஆண்டு வரை பிரிட்டிஷார் பீஜியை ஆட்சி செய்தார்கள். அவர்களது ஆட்சி கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலம் நீடித்தது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது, பீஜியர்கள் நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய ராணுவப் பிரிவுகளின் ஊடாக கூட்டுப்படைகளின் முயற்சிக்கு தாமாகவே முன்வந்து உதவி செய்தார்கள். - மிக அதிகமாகவே காட்டு வளமும், கனிப்பொருட்கள் மற்றும் மீன் வளமும் பீஜியில் நிறைந்திருப்பதினால் பசுபிக் சமுத்திரத்திலுள்ள தீவுகளில் மிக அபிவிருத்தி அடைந்த பொருளாதாரத்தைக் கொண்ட ஒன்றாக அது விளங்குகின்றது. ஆனால் இன்று அதன் பிரதான அந்நிய செலாவாணியை ஈட்டித் தரும் வளங்களாக உல்லாசப் பயணத்துறையையும் சீனி ஏற்றுமதியையும் தான் கொண்டிருக்கிறது.
பயம் E-புட்டி
இந்நாட்டின் நாணயம் பீஜியன் டொலராகும். பீஜியின் பிரதான தீவு விற்றி லெவு ஆகும். இப்பெயரில் இருந்துதான் 'பீஜி' என்ற பெயர் உருவானது. இதற்கொரு காரணமான விஷயமும் கூறப்படுகிறது. நாடுகளைத் தேடிக் கண்டு பிடிப்பதில் ஆர்வமாக பயணங்களை மேற்கொண்டிருந்த வரான கப்டன் குக், ரொங்கா தீவில் பீஜியன்கள் சிலரைச் சந்தித்தார். அவரது குழுவில் உள்ளவர்களின் எழுத்துகள் மூலமாக, அவர்கள் தாமாகவே ஐரோப்பியர்களைக் கவர்பவர்களாக இருந்தனர். அவர்கள் மிகச் சிறந்த போர் வீரர்கள் எனவும், மூர்க்கத்தனமாக மனிதர்களைக் கொன்று தின்பவர்கள் என்றும் பசுபிக் சமுத்திரத்தில் மிகச் சிறந்த கப்பல்களைக் கட்டுபவர்களாக விளங்கினார்கள் எனவும், ஆனால் சிறந்த கடலோடிகள் அல்லர் எனவும் வர்ணிக்கப் பட்டிருந்தார்கள்.
ரொங்கா மக்கள் அவர்கள் மீது மரியாதை கலந்த பயம் கொண்டிருந்தார்கள். அவர்களது அனைத்து தயாரிப்புகளும் விசேடமாக அவர்களது மரவுரி ஆடைகள்

கலைககேசரி
29
மற்றும் தடிகள் மிகவும் மதிக்கப்பட்டதுடன், மிகவும் ! நுகர்வுக்குரிய பொருட்களாகவும் விளங்குகின்றன.
பீஜியர்கள் தமது நாட்டை விற்றி என்றார்கள். ஆனால் ரொங்காக்கள் அதனை பிசி (Fisi) என அழைத்தார்கள். கப்டன் ஜேம்ஸ் குக், அதனை 'பிஜி' என உச்சரிக்க, பின்னர் அதுவே அத்தீவுகளின் பெயராக வழங்கப்படத் தொடங்கியது. இந்த ஆங்கில வார்த்தையின் ரொங்கா மக்களின் உச்சரிப்பு 'பீஜி' (Feejee) ஆகும். 19ஆம் நூற்றாண்டின் இறுதிவரை, மிஷனரிமார்களாலும் பீஜிக்கு
விஜயம் செய்யும் பிரயாணிகளாலும் அவ்விதமே - அழைக்கப்பட்டது.
பீஜித் தீவுகளின் குடியேற்றம் கி.மு. 3500 - 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பதை பீஜிநகரங்களில் கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டக் கலைப் பொருட்கள் தெரிவிக்கின்றன. இங்கு முதலில் குடியேறியவர்கள் பொலினீசியர்கள் எனவும், அவர்களின் பின்
மெலனீசியர்கள் குடியேறினர் எனவும் முன்னர் குடியேறிய பொலினீசியர்கள் பிற்காலத்தில் ரொங்கா, சமோவா மற்றும் ஹவாய்க்கும் சென்றிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. பீஜித் தீவுகளில் செய்யப்பட்ட மட்பாண்டங்கள் சமோவா மற்றும் மார்கியூசஸ் தீவுகளிலும் (Marquesas Islands) காணப்பட்டுள்ளன.
கிழக்கு மேற்காக, குறுக்காக சுமார் 1000 கிலோ மீட்டர் தூரம் கொண்டுள்ள பீஜியில் பல மொழிகள் உள்ளன. அந்நாட்டின் வரலாறானது, குடியேற்றங்களையும் அவ்வப்போதான நிரந்தரமற்ற குடியேற்றங்களையும் கொண்டது.
நூற்றாண்டுகள் பல கடந்து செல்ல அங்கு ஒரு தனித்துவமான பீஜி கலாசாரம் உருவானது. இந்த குடியானவக் குழுக்களிடையே நீண்ட காலமாக

Page 30
மாமனாமாவாட்டரப்பாக 1ா யரா-1 ப.5.
நடு பொம்
FLNE: மா ய பா பாப கப ய ந 1
தொடர்ச்சியான போர்கள் இடம்பெற்று வந்ததுடன், அவர்கள் நரமாமிச பட்சணிகளாகவும் இருந்துள்ளனர். 19ஆம் நூற்றாண்டிலே, ரட்ட உட்ரே உட்ரே என்பவன் 872 பேரைக்கொன்று உண்டான் எனவும், தனது சாதனையைக் பதிவு செய்ய கற்களை எண்ணிக்கையாகக் குவித்து
வைத்திருந்தான் எனவும் கூறப்படுகிறது. - டெரிசிக் ஸ்கார் என்பவர் எழுதிய 'பிஜியின் குறுகிய சரித்திரம்' என்னும் நூலில் பின்கண்டவாறு எழுதப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அதாவது, ''வைபவ ரீதியான நிகழ்ச்சிகளின் போது, மனித சடலங்கள் உண்பதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஒரு தலைவனை ஒரு சாதாரண குடிமகன் வரவேற்கின்ற போது என்னை உண்ணுங்கள்!'' என்று கிரியை ரீதியாக வர வேற்பான். குழுத் தலைவரின் இல்லம் அல்லது பூசாரியின் கோவில் கட்டப்படும்போது, அதன் ஸ்தம்பங்களுக்கு அடியில் மனிதரின் அர்ப்பணிக்கப்பட்ட உடல்கள் புதைக்கப்பட்டிருக்கும். அவ்விதம் செய்யப் படுவதன் காரணம், கிரியை ரீதியாக தமது. உடலை அர்ப்பணித்தவர்களின் ஆவி, குறிப்பிட்ட கட்டிடத்தை ஆசீர்வதிக்க உதவுவதற்கு, கடவுளர்களைத் தூண்டும். அத்துடன் அந்த ஸ்தம்பங்கள் மீள நிர்மாணிக்கப்படும் போது, மனிதர்களைக் கொன்று அர்ப்பணிப்புச் செய்வார்கள் எனவும் ஸ்கார் எழுதியுள்ளார் எனவும்

தெரிவிக்கப்படுகிறது. தற்போதுள்ள பீஜி மக்கள் அதனைப் 'பிசாசுகளின் காலம்' எனக்குறிப்பிடுகின்றனர். இந்த நரமாமிச பட்சணிகளின் வாழ்க்கை முறையின் கொடூரம் ஐரோப்பிய கடலோடிகள் பீஜி நாட்டுப்பக்கமே. போகாமல் செய்தது. அத்துடன் பிஜி தீவுகளுக்கு 'நரமாமிச பட்சணிகளின் தீவுகள்' என்ற பெயரும் ஏற்பட்டது. இதனால் இந்நாடு வெளிஉலகிற்கு நீண்ட காலமாக தெரியாமலே இருந்தது. - டச்சு நாட்டின் கண்டுபிடிப்பாளரான அபெல் ரஸ்மன் என்பவர் தெற்கு மாகண்டத்தைக் கண்டுபிடிக்கும் நோக்கில் பயணம் செய்த வேளை, 1643 ஆம் ஆண்டு பீஜிக்கு விஜயம் செய்தார். 19 ஆம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் இருந்து ஐரோப்பியர்கள் நிரந்தரமாக அங்கு குடியேறினார்கள். அங்கு முதலில் குடியேறியவர்கள் மிஷனரிகளும், வர்த்தகர்களும்,
திமிங்கிலத்தை வேட்டையாடுபவர்களுமாகும். - இத்தீவுகளை பிரிட்டிஷார் கைப்பற்றியதுடன் 1874ஆம் ஆண்டில் அதனை ஒரு காலனித்துவ நாடாக்கினார்கள். அக்காலகட்டத்தில் தான் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்கென பிரிட்டிஷார் இந்தியாவில் இருந்து ஒப்பந்த தொழிலாளர்களைக் கொண்டு வந்தார்கள். உள்ளூர் பீஜி மக்களைக் குழப்பாமல் அவர்கள் தமது வாழ்க்கை முறையில் வாழ அனுமதித்த பீஜியின்

Page 31
முதலாவது ஆளுநரான ஆர்தர் சார்ல்ஸ் பூமில்டன் கோர்டன் என்பவர் அம்மக்களை உள்ளூர் வேலைகளில் சேர்த்துக் கொள்ள அனுமதிக்கவில்லை.
1875 - 76ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட அம்மை நோயால் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பீஜி மக்கள் இறந்தார்கள். கரும்புத் தோட்டங்களில் இந்திய மக்கள் மிகவும் மோசமான சூழ்நிலையில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். அத்துடன் அடிக்கடி வன்முறைகளுக்கும் ஆளானார்கள். உயிரைப் பலி கொடுத்தார்கள். இதனைச் செய்திகள்
மூலமாக
கேள்வியுற்றுத்தான்
மகாகவி 'கரும்புத்தோட்டத்திலே' என்ற பாடலைப் பாடினார். பின்னர் காலப்போக்கில் இம்மக்கள் அந்நாட்டுடன் ஒன்றித்து விட்டனர் எனலாம். - பீஜிக்கு ஆங்கிலேயர்கள் சுதந்திரம் வழங்கியதை அடுத்து ஒப்பந்தத்தின் பேரில் கொண்டு வரப்பட்ட அம்மக்களது வழித்தோன்றல்கள் விரும்பின் தாய்நாடு செல்லலாம். அதற்கு வாய்ப்புகள் செய்து தரப்படும் என ஆட்சியாளர்கள் அறிவித்தனர். அந்த அறிவித்தலின்படி ஒரு சிறு தொகையினர் தாய் நாட்டுக்குச் சென்றனர். எனினும் பெரும்பாலானோர் அங்கேயே தங்கி தமது வாழ்க்கையைத் தொடர்ந்தனர். இதற்குக் காரணம் காலப் போக்கில் அவர்கள் விவசாயம், வர்த்தகம் போன்றவற்றில் ஈடுபட்டு செழிப்பான வாழ்க்கையை மேற்கொள்ள முடிந்ததனாலாகும். 1942ஆம் ஆண்டில் பீஜியின் மக்கள் தொகை சுமார் 2 இலட்சத்து 10 ஆயிரமாகும். இதில் 94 ஆயிரம் பேர் இந்தியர்களாகும். 102,000 பேர் உள்ளூர் பீஜியர்கள், 2000 சீனர்கள், மற்றும் 5000 ஐரோப்பியர்கள்.
1970ஆம் ஆண்டு பிரிட்டிஷார் பீஜிக்கு சுதந்திரம் அளித்தனர். அங்கு நிலவிய ஆட்சியில் இரு தடவைகள் ஏற்பட்ட புரட்சிச் சதியால் குழப்ப நிலைகள் தோன்றின. இதற்குக் காரணம் இந்தியர்கள் அங்கு முன்னணியில் இருந்தமையே ஆகும். பீஜி தீவுகளின் குடியரசு 1997இல் தோன்றியது. அங்கிருந்து இந்திய பீஜியர்கள் பெருமளவில் நாட்டை விட்டுப் புலம்பெயரும் அளவிற்கு பெரும் பொருளாதார நெருக்கடிகள் தோன்றின. இருப்பினும் உள்ளூர் பீஜியர்கள் தொகை முன்னணியில் வந்தது. 1996 ஆம் ஆண்டு அங்கு மக்கள் தொகை 775,077 பேராகும். இதில் 51% பீஜியர்கள் 44 சதவீதம் இந்திய பீஜியர்களாகும்.
உள்ளூர் பீஜிய மக்கள் பெரும்பாலும் கிறிஸ்தவர்களாக உள்ளனர். இந்திய பீஜியர்கள் இந்துக்களாக அல்லது முஸ்லிம்களாக உள்ளனர். பல்லின பல் கலாசார நாடாகவிருக்கும் பீஜியில் எல்லா பிரதான சமயங்களும் பின்பற்றப்படுவதால் கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகள், சீக்கிய மற்றும் இந்து ஆலயங்களை எங்கும் காண முடியும். பொதுவானதோர் இன ஒற்றுமையும் அங்கு நிலவுகின்றது.
பிரதான மொழியாக ஆங்கிலம் விளங்க, உள்ளூர் பீஜி மொழிகள் சற்று வித்தியாசமான ஹிந்தி மொழி
கை]ெ
ITUெILTங்க1ெ1

ԿՏՆԵԼ

Page 32

ஆகியனவும் பேசப்படுகின்றன. அத்துடன் இந்தியர்கள் தமது சொந்த மொழிகளையும் பேசுகிறார்கள். 1970ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட
சுதந்திரத்துக்குப்பின் பீஜி, ஹிந்தி, ஆங்கிலம் ஆகியன உத்தியோகபூர்வ மொழிகளாக்கப்பட்டன.
பீஜியர்களும் மிளகாய், மிளகு, பாண், சோறு, காய்கறி வகைகள், கறி வகைகள், இந்திய மக்களிடமிருந்து பெற்ற தேயிலை (தேநீர்) ஆகியவற்றை உண்டனர். கிழங்கு வகைகள் முக்கியமாக மரவள்ளிக்கிழங்கு ஈரப்பலாக்காய், வாழைப்பழம் மற்றும் தானியங்கள் ஆகியற்றுடன் இறைச்சி, மீன் மற்றும் கடல் உணவுகள் ஆகியவை கிடைக்கும் போது உண்டனர். தகரத்தில் அடைக்கப்பட்ட இறைச்சி மற்றும் மீன் மிகப்பிரபலமானது. மரக்கறி வகைகளை பெரும்பாலும் தேங்காய்ப்பாலில் அவித்து உண்பர். இந்திய பீஜியர்களின் உணவு சற்று வித்தியாசமானது ஆகும். ஆண்களும் பெண்களும் வெவ்வேறாகவே உண்பார்கள்.
இந்நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பொருட்கள் சீனி, மீன், தங்கம் மற்றும் தைத்த ஆடைகளாகும். பிரதானமாக நியூஸிலாந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு இவை ஏற்றுமதியாகின்றன. நியூஸிலாந்தில் இருந்து ஆட்டிறைச்சி இறக்குமதியாகிறது. மற்றும் கிழக்காசிய நாடுகளில் இருந்து பல நுகர்வுப்பொருட்கள் இறக்குமதியாகின்றன. பெரும்பாலும் பொதுவாக ஆண்கள் ஆண்களுடனும் பெண்கள் பெண்களுடனும் பழகும் தன்மை உள்ளது. ஆண் பிரதான உழைப்பாளராக இருக்கிறார். வீட்டுக் கருமங்களைப் பெண்கள் கவனிப்பர். எனினும் குடும்ப பொருளாதாரத்துக்கு அவர்களும் பங்களிப்புச் செய்வர். இந்தோ பீஜியர்களை பொறுத்தவரை ஆண்களும் பெண்களும் பெரும்பாலும் வெவ்வேறான வாழ்க்கையைக் கொண்டிருக்கின்றனர்.
பீஜியர்களைப் பொறுத்தவரை திருமணங்கள் பொதுவாகவே பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு ஏற்றவகையில் பேசிச் செய்யும் திருமணங்களாக அமைகின்றன. ஒரு சோடி தம்மிஷ்டப்படி களவுத் திருமணம் செய்து கொள்ளுமாயின் குடும்ப மரியாதையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மாப்பிள்ளையின் பெற்றோர் பெண்ணின் பெற்றோரிடம் நேரில் வந்து பேசி பரிசுகள் வழங்கி சமாதானம் செய்து கொள்கிறார்கள். அப்போது பெண்ணின் பெற்றோர் அவர்களது வேண்டுகோளை ஏற்றுகொள்ள வேண்டும் என்றதொரு கடமைப்பாடு உள்ளது.
மொத்த மக்கட் தொகையில் 53% கிறிஸ்தவர்களாகவும் 38 சதவீதத்தினர் இந்துக்களாகவும் 8 சதவிகிதத்தினர் முஸ்லிம்களாகவும் சிறு தொகையினர் சீக்கியர்களாகவும் மற்றும் மிகச் சிறிய தொகையினர் சமய சார்பற்றும் உள்ளனர். பிரதான சமயங்களின் திருநாட்களுக்கு தேசிய விடுமுறைகளும் வழங்கப்படுகின்றன. கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் இனத்துவ பீஜியர்கள் மிருகங்கள்,

Page 33
படி
பல்வேறு
தெய்வங்கள்
ஆகியவற்றினை வணங்குபவர்களாக இருந்தார்கள். மூதாதையர்களை வணங்கும் வழக்கமும் இருந்தது. மரணத்தின் பின்னான வாழ்விலும் அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர். - 1830களில் மெதடிஸ்த மிஷனரிமாரால் இங்கு கிறிஸ்தவம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து வேறு மதங்களும் அங்கு அறிமுகப் படுத்தப்பட்டன. இந்தோ பீஜிய மக்கள் தமது தாய் நாட்டிலிருந்து கொண்டு வந்த இந்து, இஸ்லாம், மற்றும் சீக்கிய மதங்களைப் பின்பற்றுகின்றனர். இந்து சமூகத்தில் சமய அறிஞர்கள், சமய தலைவர்கள், ஆலய பூசகர்கள் ஆகியோர் சமய நடவடிக்கைகளைப் பின்பற்றுபவர்களில் முக்கியமானவர்கள்.
மரணத்தில் சோக உணர்வு மேலெழுந்து நிற்கும். அத்துடன் பல மரணச்சடங்கு முறைகளும் எல்லா மதத்தவரிடையேயும் மேற்கொள்ளப்படுகின்றது. அந்நாட்டின் கலை கலாசாரங்களைப் பேணும் பொருட்டு பீஜி கலைக்கழகம், பீஜி அருங்காட்சியகம், தேசிய

- கலைக்கேசரி
நம்பிக்கை பொறுப்பாட்சி நிலையம் ஆகியன நிறுவப்பட்டிருக்கின்றன.
'காவா' பான கலயத்தைச் சுற்றியிருந்து கதை சொல்லும் பீஜிய மரபு இன்றும் உள்ளது. அதுபோல இந்து வீடுகளிலும் ஆலயங்களிலும் இராமாயணக்கதை சொல்லும் வழக்கமும் பின்பற்றப்படுகிறது. பீஜிய இலக்கியத்தை பொறுத்தவரை மரபு ரீதியான புராணக் கதைகள், நவீன சமூக ஆய்வுகள் ஆகியன கருப் பொருள்களாக விளங்குகின்றன. அதேவேளை, இந்திய பீஜியர்களின் இலக்கியங்களில் பீஜிய ஒப்பந்த தொழிலாளர் காலத்து கஷ்ட நஷ்டங்கள், கொடுமைகள் ஆகியன முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. - பெரும்பாலும் ஒவ்வொரு பீஜிய இனப்பெண்ணும் வீட்டுக்கும் வைபவங்களுக்குமாக கூடைகள் மற்றும் பாய் பின்னுவதைக் கற்றுக் கொள்கிறாள். மரவுரி ஆடை தயாரிப்பு மற்றொரு முக்கிய மரபு ரீதியான பெண்கள் கலையாக விளங்குகின்றது. தற்போதும் அந்த ஆடை மரபு ரீதியான பீஜிய வைபவங்களில் முக்கிய இடத்தைப் பெறுகிறது. அத்துடன் உல்லாசப் பயணிகளுக்கென சுவர் தொங்கல் (Wall hangiaqs) அலங்கரிப்புப் பொருட்கள், கைப்பைகள் ஆகியன செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறன. முற்றுமுழுதாக உல்லாசப் பயணிகளுக்கென
போர் தடிகள்,
ஈட்டிகள், அலங்கரிக்கப்பட்ட கொழுக்கிகள் போன்றவை ஆண்களால் தயாரிக்கப்படுகின்றன.
மரபு ரீதியான ஆடல், பாடல், பேயாக நடித்தல் போன்றவையும் மேற்கொள்ளப்படுகின்றன. ஒரு பிரதம விருந்தினர் வருகை தரும் போது அல்லது முக்கியமான நிகழ்ச்சியின் போது இவை நிகழ்த்தப்படுகின்றன. அது போன்று இந்திய பீஜியர்களும் தமது கலை கலாசார நிகழ்ச்சிகளை நடத்துவதோடு தத்தம் சமூகத்தினருக்கும் கற்பித்து வருகின்றனர். பக்திப்பாடல்கள் இவர்களிடமும் பிரபலமாக உள்ளது.)
- கங்கா

Page 34
கலைக்க்ேசரி தி 34 அட்டைப்படக் கட்டுரை
தெய்வ வாகனம்
காமதேனு
- கலாபூஷணம் வித்துவான். வசந்தா வைத்தியநாதன்
'இறைவழிபாடு' என்பது மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமில்லை. விலங்குகளும், பறவைகளும் நம்முடன் போட்டியிட்டு வழிபாடு செய்து முக்திப் பேறடைகின்றன. ஆச்சரியமாக இருக்கிறதா! அது தான் உண்மை.
ஆறறிவு படைத்த மனிதன், சிந்திக்கும் திறன் படைத்த மனிதன் எல்லாவற்றையுமே சிந்தித்தே ஏற்றுக் கொள்கின்றான்; இறை வழிபாட்டையும் கூட.

எந்தக் கடவுள் என்ன பலன் அளிப்பார் என்று பட்டியல் இடுகின்றான். அப்படிப் பயன் கிடைக்கவில்லை என்றால் கடவுளை மாற்றிக் கொள்ளவும் அவன் தயங்குவதில்லை. மனிதனுள் பதிந்திருக்கும் பகுத்தறிவே அவனது முக்திப் பேற்றிற்குத் தடைக் கல்லாகின்றது.
விலங்குகள்.... பறவைகள்.. அப்படியில்லை. ஒன்றையே உற்று, ஒன்றையே பற்றி - உயர்கதி அடைகின்றன. சான்று காட்ட வேண்டுமா!... இதோ.
சிவனை வணங்கிய விலங்குகள்:
* யானை - திருக்குற்றாலம்; மதுரை; திருக்கானப்பேர்;
திருக்காளத்தி; திருவானைக்காவல். * சிங்கம் - திருநல்லூர் * பசு - திருக்கொண்டீச்சரம்; திருஆவடுதுறை;
கருவூர்; ஆவூர்; பட்டீச்சரம்; திருஆமத்தூர் - * ஆடு - திருவாடானை * காளை - திருஐயாறு * குரங்கு - குரங்காடுதுறை; குரங்கணி முட்டம்;
குரக்குக்கா; குரக்குத்தளி * பன்றி - திருச்சிவபுரம் * கழுதை - திருக்கரவீரம் * முயல் - திருப் பாதிரிப் புலியூர் * அணில் - குரங்கணி முட்டம்

Page 35
பறவைகள்: * காகம் - குரங்கணி முட்டம் * நாரை - திருநாரையூர்; மதுரை * கரிக்குருவி - திருவலிவலம்; மதுரை * மயில் - திருமயிலாடுதுறை; திருமயிலாப்பூர் * கருடன் - சிறுகுடி * வண்டு - ஸ்ரீசைலம்; திருவெண்டுறை; வாழ்கொளி புத் நீர்வாழ்வன:
* மீன் - திருச்சேலூர் * நண்டு - திருந்து தேவன் குடி; நீடூர் * ஆமை - திருமணஞ்சேரி * தவளை - ஊற்றத்தூர் ஊர்வன:
* ஈ - திருஈங்கோய்மலை; திருச்சிற்றேமம் * எறும்பு - எறும்பீச்சரம்; திருஎறும்பியூர் * பாம்பு - திருக்காளத்தி;
திருப்பாம்புரம்; குடந்தைக் கீழ்க்
கோட்டம்; திருநாகைக் காரோணம்; திருநாகேச்சரம் * சிலந்தி - திருஆனைக்காவல்;
திருக்காளத்தி | தன்னை வழிபட்ட சிற்றுயிர்களையும் உயர்வு பெறச் செய்து தனது வாகனமாக்கிக் கொண்டும் ஆட்கொள்கின்றான் இறைவன்.
விலங்குகளின் வரிசையில் காளை மாடு முன்னிற்கிறது. 'மாடு' என்றாலே செல்வம் என்பது பொருள். அப்பொருளுக்கேற்ப சிவசந்நிதானத்தில் நம்மால் முதலில் வணங்கப் பெறுபவர் நந்தியம் பெருமான். இவரே ஏற்றுயர் கொடியாகவும், ஏறுகின்ற
வாகனமாகவும், திருக்கயிலையில் அகம்படிமை தொழும்பராகவும் விளங்குகின்றார்.
அதேபோல தெய்வ பசுவாக விளங்கும் 'காமதேனு'வு! சிறப்பிடத்தைப் பெறுகின்றது.
காமதேனு காமதேனு என்பதற்கு நாம் விரும்பியதைக் கொடுப்பது என்பது பொருளாகும். இத்தெய்வீகப் பசு திருப்பாற் கடலில் தோன்றியது. வசிட்ட முனிவருக்குச் சொந்தமாகி அவரது ஆச்சிரமத்தில் வளர்ந்து வந்தது. காமதேனுவி பெண் நந்தினி.
கரை க்கேசரிசல்.
அட்டைப்பட விளக்கம் காமதேனு பெண்னின் தலையும் பசுவின் உடலும் மயிலின் தோ இணைந்து தோற்றமளிக்கும் தேவலோ வசிக்கும் பசுவாகும். சிவன், மு விநாயகர், பெருமாள் ஆகியோருக்கு ஊர்தியாக உள்ளது. பெரும் மரத்தினாலான வாகனமாக இருந் வெள்ளி, தங்கத்தினாலும் செய்ய வாகனமாக சில ஆலயங்களில் உள்ளத

தூேர்
த்
)
மார்பும் கையும் எகத்தில் முருகன், தெய்வ பாலும் தாலும் ப்பட்ட

Page 36
கலைக்கேசரி
36
இந்த நந்தினியைக் கவர்ந்து போக எண்ணினார்கள் அட்டவசுக்கள். அதன் காரணமாக வசிட்ட முனிவரிடம் மண்ணுலகில் பிறக்குமாறு சாபம் பெற்றனர். அவற்றுள் ஏழு பேர் முனிவரிடம் சாபவிமோசனம் பெற்று மண்ணுல கில் பிறந்தவுடன் கங்கையில் வீசப்பெற்று மேலுலகம் வந்தடைந்தனர். களவுத் திட்டத்திற்குக் களம் அமைத்துக் கொடுத்த 'பிரபாசன்' என்னும் வசு மட்டும் பூவுலகிலேயே தங்கி 'பீஷ்மர்' என்னும் நாமம் பெற்று மகாபாரதத்தின் கதாநாயகனானார்.
இந்த நந்தினியின் தாயே காமதேனு. ஒரு சமயம் காதி ராஜனின் மகனாகிய கெளசிக மகாராஜா வேட்டையாடத் தன் பரிவாரங்களுடன் கானகம் சென்றான். கானகம் சென்று மீண்ட மன்னன் வசிட்டரது ஆச்சிரமத்தை அடைந்தான். அரசரதும், அவரது பரிவாரத்தினரதும் களைப்பைப் போக்கக் கருதிய முனிவர் தனது பாதுகாப்பிலிருக்கும் காமதேனுவின் உதவியால் ஆயிரமாயிரம் படை வீரர்களுக்கும் அரசனுக்கும் தேவ அமுதத்தையொத்த அறுசுவை விருந்தை வயிறாற அளித்தார். கெளசிக மன்னனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. இந்தச் சின்னஞ்சிறு குடிசையில் வாழும் முனிவரால் எப்படி ஆயிரமாயிரம் பேர்களுக்கு ஒரே சமயத்தில் அறுசுவை உணவு அளிக்க முடிந்தது? வசிட்ட முனிவரிடமே கேட்டான். அவரும் காமதேனு வின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லி - உங்கள் அனைவரது உணவையும் அளித்தவள் காமதேனுவே என்றார்.
காமதேனுவை நன்றியுடன் நினைக்காது அதனை எப்படியாவது தனது உடமையாக்கிக் கொள்ள. வேண்டும் என்று நினைத்தான் கெளசிகன். முதலில் வசிட்டரிடம் க ா ம் தே னு  ைவ த் தன்னிடம் தருமாறு கேட்க அவர் மன்னனது வேண்டுகோளை மறுத்து காமதேனுவைத் தர முடியாது என்றும் கூறினார். ஆணவத்தால் அறிவிழந்த மன்னன் - தனது படையினரை அனுப்பி
அப்பசு
வினை பலாத்காரமாகக்
 ெக ா ண ர ப் ப ணி த் த ா ன் .

R - இ
காமதேனு, வசிட்டர் பெருமகானின் ஆசியுடன் தனது உடலிலிருந்து கணக்கற்ற சேனாவீரர்களை உண்டாக்கி கெளசிகனின் படைவீரர்களை நிர்மூலமாக்கியது. இதனைக் கண்ட மன்னனின் புதல்வர்களுள் சிலர் வசிட்ட முனிவரை வாள் கொண்டு எதிர்த்தனர். தவமுனிவர் தமது கோபக்கினியால் அவர்கள் அனைவரையும் எரித்தார். சினத்தின் எல்லைக்கே சென்ற மன்னவர் முனிவர் மேல் பாணப் பிரயோகம் செய்தார். அனைத்துப் படைக் கலங்களையும் தனது பிரம்ம தண்டத்தால் தடுத்தார் தவசீலர். வியப்பினால் மூச்சடைத்தான் கெளசிகன். தவத்திற்கு இவ்வளவு பெருமையா! தவத்தின் ஆற்றலிற்கு முன் தான் பெற்று வந்த அஸ்திர, சாஸ்திரங்கள், அவற்றை ஏவும் மந்திரவலிமை, தன் புயவலிமை எல்லாம் பொருளற்றதாகி விட்டனவே. இது நாள் வரை தனது அரசு, படைபலம், தனது செல்வம், வலிமை, புகழ் இவ்வளவும் தான் உயர்ந்தது என்று எண்ணியிருந்த எண்ணம் எப்படி மணல் வீடாய் ஒரு கணத்திலே சரிந்து விட்டது. அரச பலத்தைவிட தவத்தின் வன்மையால் ஈட்டிய தபோபலமே சிறந்தது என்று முடிவு செய்தார்.
ஒரு க்ஷத்திரியனுடைய மனோவலி மையை விட, புலனடக்கத்தால் அந்தணன் ஒருவன் பெறுகின்ற மனோபலமே உயர்ந்தது என்று உணர்ந்தார். தானும் பிரம்ம ரிஷியாக வேண்டும் என்று விரும்பினார். அக்கணமே அரச வாழ்வைத் துறந்த கெளசிகன் பல இடர்களையும் வென்று பி ர ம் ம ரி ஷிப் பட்டத்தையும் விசுவம் "அனைத்தையும் நண்பனாக கருதும் 'விஸ்வாமித்திரர்' என்ற நாமத்தையும் பெற்றார்.
இத்துணை ஏற்றமும் காமதேனுவை விரும்பியதால்
கிடைத்தது.
காமதேனு என்ற தெய்வப் பசு இறைவனையும் இறை வியையும்
தன்மீது சுமக்கும் அளப்பரிய பேற்றைப் பெற்றதுடன், பக்தர்கள் விரும்பிய
வற்றை விரும்பியவாறே அளிக்கும் வன்மையையும் பெற்று விளங்குகின்றது. நாமும் வணங்கி பேறுபெறுவோம்.

Page 37
5:
EXPERIENCE BRI
Now flying from Colombo to London 3 ti Visit ba.com for details.
1 TEA Also English for water. 2. STONEHENGE Was it druids, greeks or aliens? its hi you to make a royal guard laugh. 4. PHONE BOOTH Once used for phone calls. go somewhere! 6. DOUBLE-DECKER BUS Hop on, hop off! You have not seen an antique shop. Only nothing is for sale. 8. ABBEY ROAD Home of UK's mo 10. FISH & CHIPS Today's catch in yesterday's paper. 11. PIE The best thing to put in Monopoly. Now see the real thing, 13. BIG BEN The bell in the grandfather of g 15. WEMBLEY STADIUM A cathedral of football and music. 16. THE TUBE Mind i

2 BRITISH AIRWAYS
2007
TAIN
mes a week.
story shrouded in mystery makes it so appealing3. ROYAL GUARD We dare Now used for photoshoots. 5. RIVER THAMES At that London rain has to London till you have been on top. 7NATURAL HISTORY MUSELIM Lke ost frequently stolen street sign. 9. PUB Museums of the neighbourhood. in an English pie is your teeth. 12. OXFORD STREET You have been there grandfather docks. 14. BUCKINGHAM PALACE One prince stil up for grabs. he Gap! 17. 30 ST MARY AXE Or the gherkin, as Londoners like to call it.
Dne. Tra

Page 38
கலைக்கேசரி . 38 ஆளுமை
இலங்கையின் புலமையாளர் வரிசையில் அறிஞர் அஸீஸ் அவர்கள்
- பேராசிரியர் சபா ஜெயராசா
காலனித்துவக் கல்விச் சூழலில் உருவாக்கம் பெற்று மேலெழுந்த எழுகுழாத்தினர் வரிசையில் அறிஞர் எ.எம்.எ.அஸீஸ் (1911 - 1973) தனித்துவமானவர். அவரின் தனித்துவம் பல்வேறு சிந்தனையாளர்களாற் பல்வேறு நிலைகளிலே பதிவு செய்யப்பட்டுள்ளது. ம.மு.உவைஸ், ஏ.ஆர்.எ.நூர்அமீன், ஏ.ம. நஹியா, எஸ்.எச்.எம்.ஜெமீல், எச்.எம்.பி.முஹிதீன், பேராசிரியர்கள் சு.வித்தியானந்தன்,
க.கைலாசபதி, க.சிவத்தம்பி முதலியோரின் பதிவுகள் அவ்வகையிலே குறிப்பிடத்தக்கவை.
அறிஞர் அஸீஸ் அவர்களிடத்துக் காணப்பெற்ற எதிர்க் காலனித்துவ வினைப்பாட்டினை எச்.எம்.பி.முஹிதீன் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
'ஆங்கில மொழி மோகத்தில் ஆழ்ந்து அமிழ்ந்து தமிழில் பேசுவதையே சில முஸ்லிம் பெரிய மனிதர்கள் அவமானமாகக் கருதிய காலத்திலே ஆங்கிலத்தில் முதல் பிரிவில் சிவில் சேவையில் தேறிய அறிஞர் அஸீஸ், தமிழில் பேசினார்; எழுதினார். அத்துடன் தமிழ் மொழியில் பேசுவதை ஒரு கெளரவமாகவும் அவர் கருதினார்.' (அறிஞர் அஸீஸ் சில நினைவுகள் ப. 12)
யாழ்ப்பாணத்து இஸ்லாமியச் சூழலும், அக்காலத்தைய கல்விச்சூழலும் அவரது புலமை எழுச்சிக்குப் பின்புலமாக அமைந்தன. யாழ்ப்பாணத்தில் அமைந்து இருந்த அரசாங்க முஸ்லிம் கலவன் பாடசாலை, வண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றிலே அவருடைய பாடசாலை வாழ்க்கை தொடர்ந்தது. தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் இங்கிதமாக வாழ்ந்த உறவு பின்புலத்தில் அவரது கல்வி வாழ்க்கை மேலெழுந்தது. வைத்தீஸ்வர வித்தியாலயத்திலே கற்றவேளை சாரம் உடுத்து துருக்கித்
LைD
Dாக
தனது மனைவி உம் ' 1944 ஆம் ஆண்டு பி

OD
தொப்பி அணிந்து அவர் கற்கச் சென்றமை தனித்துவமான நிகழ்ச்சி ஆயிற்று. அவரது நியம் உடையை இந்துக்களின் கல்விச் சமூகம் இங்கிதமாக வரவேற்றது.
அவ்வாறே யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சமூகம் அவரை வரவேற்றுக் கொண்டது. அக்கல்லூரியிலே கற்ற முதலாவது முஸ்லிம் மாணவராகவும் அவர் விளங்கினார். அங்கிருந்து அவர் கொழும்பில் இயங்கிய பல்கலைக்கழ கக்கல்லூரிக்கு மேற்படிப்புக்குச் சென்றார். அந்தக் கல்லூரியே பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகமாக உருவாக்கம் பெற்றது.
அறிஞர் அஸீஸ் அவர்களின் புலமை ஆளுமை பன்மொழி ஆற்றல்களுடன் இணைந்ததாக இருந்தது. தமிழ், அரபு, சிங்களம், இலத்தீன், ஆங்கிலம் என்றவாறு பன்மொழி ஆற்றல் அவரிடம் காணப்பெற்றிருந்தது. முஸ்லிம்களின் தமிழ்மொழி வழக்கு அரபுத் தமிழ் என்று பொதுவாக குறிப்பிடப்படும். அரபுச் சொற்களின் வரவு தமிழ் மொழியை மேலும் வளம் மிக்க மொழியாக உயர்த்தியது.
அவர் சிவில் சேவை அதிகாரியாகக் கல்முனையிலும் கண்டியிலும் கடமையாற்றிய காலகட்டங்கள் மிகவும் முக்கியமானவை. கல்முனை அவசர காலக் கச்சேரியில் உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய வேளை சுவாமி விபுலானந்தருடனான தொடர்பு அறிஞர் அஸீஸ் அவர்களுக்கு ஏற்பட்டது. அந்த தொடர்புகள் வாயிலாகப் பின்வரும் ஆக்கங்கள் அறிவு நிலையில் முகிழ்த்தெழுந்தன.
1) அரபு - தமிழ் அகராதியின் தேவை 2) மட்டக்களப்புப் பிரதேசத்தில் உள்ள
முஸ்லிம் நாட்டார் பாடல்கள் மீதான கவனக்குவிப்பு. 3) இலங்கை முஸ்லிம் கல்விச்சகாய
நிதியின் தேவை. மேற்கூறியவை
மட்டுமன்றி பின்னாளில் அறிஞர் அஸீஸ் அவர்கள் கொழும்பு ஸாகிராக் கல்லூரியின் அதிபர் பொறுப்பினை ஏற்றுக் கல்விப் பணியை மேற்கொள்வதற்குரிய
தளமிடலுக்கும் அது வழி வகுத்தது.
முவுடன் அஸீஸ்; பிடிக்கப்பட்ட படம்.

Page 39
க
பயிற்று மொழி, கல்வி மொழி தொடர்பான ஆழ்ந்த உளவியல் நோக்கும், பண்பாட்டு நோக்கும் அறிஞர் அஸீஸ் அவர்களிடத்துக் காணப்பட்டன. அறிவின் பிரவாகம் பல மொழிகளைக் கற்பதுடன் தொடர்பு பட்டிருத்தலை அவர் தெளிவுபடுத்தினார். அதேவேளை தாய் மொழியே பயிற்று மொழியாக இருத்தல் வேண்டும் என்பதை வலியுறுத்தினார். தாய் மொழிக்கு மாற்றீடு இல்லை என்பது அவரது கருத்தாகும். குழந்தை பிறந்த நாள் முதல் கேட்டும் பேசியும் அனுபவித்தும் வரும் மொழி தாய் மொழி. அதனோடு இணைந்த கல்வியே முழு நிறைவான ஆளுமை வளர்ச்சிக்கும் ஆற்றல் வளர்ச்சிக்கும்
இட்டுச் செல்லும் என்பதை வலியுறுத்தினார்.
சிங்களம் மட்டும் மசோதா இலங்கையில் இன உணர்வுகளைச் சுவாலை விட்டெரியச் செய்யும் என்பதைத் தீர்க்க தரிசனமாகக்கூறிய அறிஞர் அஸீஸ் அவர்கள் தமது கருத்தைப் புலமை நிலையிலும், அரச அறிவியல் நிலையிலும் நின்று செனட் சபையில் எதிர்த்து வாதிட்டு, அந்த மசோதாவுக்கு எதிராகவும் வாக்களித்தார். சிறுபான்மை இனங்களுக்கு அதில் எவ்வித இடமும் அளிக்கப்படவில்லை என்பதை தெளிவுபட நிலை நிறுத்தினார். அதேவேளை அந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமென ஐ. தேசியக்கட்சி எடுத்த முடிவைக் கண்டித்து அக்கட்சியிலிருந்து வெளியேறினார்.
தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஒற்றுமையும் பரஸ்பர ஒத்துழைப்பும் வழுவாதும் சிதையாதும் என்றும் நீடித்து நிற்றல் வேண்டும் என்பதைத் தமது உயரிய இலட்சியமாகக் கொண்டிருந்தார். குறுகிய இலாபம் தேடும் முயற்சிகளால் அந்த ஒற்றுமை சிதறடிக்கப்படாமலிருத்தல் எதிர்கால நீள் நோக்கில் அவசியமானது என்பதைத் தெளிவுடன் விளக்கினார்.
அறிஞர் அஸீஸின் குடும்பம்: மரினா, இக்பால், அலி மற்றும் உம்மு

கலைக்கேசரி
39
1966ஆம் ஆண்டிலே நிகழ்ந்த இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் அழியாது நீடித்துச் செல்ல வேண்டிய அந்த ஒற்றுமைக் குரலை எழுப்பினார்.
சுவாமி விபுலானந்தருடன் அறிஞர் அஸீஸ் அவர்களுக்கு இணைந்த நட்பும் தொடர்புகளும் இருந்தமை போன்று புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்களுடனும் நீடித்த தொடர்புகளைக் கொண்டிருந்தார். இருவரிடத்தும் காணப்பெற்ற தமிழ் இலக்கியச்சுவை அந்தத் தொடர்புகளைத் தொடர்ந்து வளர்த்துக் கொண்டிருந்தது. ( இலங்கையின் கல்வி வரலாற்றிலே கொழும்பு ஸாகிராக் கல்லூரியின் பணிகள் தனித்துவமானவை. மார்க்கக்கல்வி, மொழிக்கல்வி, பண்பாட்டுக்கல்வி, அறிவியற்கல்வி, படைப்பாற்றற்கல்வி ஆகிய அனைத்தையும் ஒன்றிணைத்து வினையாற்றலுடன் வழங்கிய கல்விக் கூடமாக அது விளங்கியது. அந்த உன்னதத்திலே பங்கேற்று அதனை முன்னெடுத்து வளர்த்தவர்களுள் ரி.பி.ஜாயா அவர்களும் அறிஞர் அஸீஸ் அவர்களும் முக்கியமானவர்கள்.
பாடசாலை மட்டத்தில் எத்தகைய திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டுமோ அவையனைத்திலும் கவனம் செலுத்திய அகல் விரிபண்பு கொண்டவராக அறிஞர் அஸீஸ் விளங்கினார். இடைநிலைக் கல்வியிலே நிகழ்த்தப்பட வேண்டிய தரச்சிறப்பை இறுகப்பற்றினார்.
இலங்கையின் முன்னணிக் கல்லூரிகளுள் ஒன்றாக ஸாஹிரா மேலோங்கி எழுந்தது. இந்நாட்டின் பல பாகங்களிலிருந்தும் கல்வி பயில்வதற்கு மாணவர் அங்கே சென்றனர். ஒழுக்கமும் கல்வியும் ஒன்றென அங்கு மேலோங்கியிருந்த நிலையில் பெற்றோர் பெரு விருப்புடன் தமது பிள்ளைகளை ஸாஹிராவுக்கு அனுப்பினர்.
ஸாஹிராவின் தளத்திலிருந்து எழுச்சி பெற்ற மாணவர் வரிசையிலே பலரைக் குறிப்பிட முடியும். எஸ். எம்.கமாலுதீன், பேராசிரியர் க.சிவத்தம்பி, ஏ.எம்.சமீம், பேராசிரியர் சோ.செல்வநாயகம், ஆர்.சிவகுருநாதன், நா. சண்முகரத்தினம், ம.மு.உவைஸ், எஸ்.எச்.எம்.ஜெமீல்,
க

Page 40
கலைக்கேசரி 2 40
பேராசிரியர் ஏ.சி.எல்.அமீர் அலி, எம்.எம்.மஃறூப் என்றவாறு பயின்றுயர்ந்த அறிஞர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். - இளைஞர்களை ஊக்குவித்து அவர்களது ஆற்றல்களை வளர்த்தெடுக்கும் ஆளுமைப் புலத்திலும் அறிஞர் அஸீஸ் ஊன்றிய கவனம் செலுத்தினார். அவரின் அந்த ஆக்கச் செயலினை எச்.எம்.பி.முஹிதீன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். 'அந்தச் சம்பவத்தை இன்று நினைத்தால் கூட உடல் புல்லரிக்கின்றது. காரணம் சின்னஞ்சிறு எழுத்தாளனான என்னை இவ்வளவு பெரிது படுத்தி ஒவ்வொரு கட்டுரைக்கும் விருப்பு வெறுப்பின்றி கருத்து வலியுறுத்த இந்தப் பெரியார் பல மணி நேரங்களை அர்ப்பணித்துள்ளாரே என்று எண்ணி எண்ணி நான் சொக்கிப் போய் விட்டேன்'
தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் புலமைச் செறிவு மிக்க கட்டுரைகளை எழுதிக்கட்டுரை இலக்கிய வளர்ச்சியில் அவர் மேற்கொண்ட பங்களிப்புக்கள் குறிப்பிடத்தக்கவை. யாழ்.வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் ஐந்தாம் வகுப்பில் பயின்று கொண்டிருந்த வேளையில் அவர் ஒரு கையெழுத்து சஞ்சிகையை ஆரம்பித்துத் தமது ஆக்கத் திறனை வெளிப்படுத்தத் தொடங்கி விட்டார். அன்று தொடங்கிய அவரது எழுத்தார்வம் நிறைந்து வளர்ந்து கொண்டே சென்றது.
ஆங்கில மொழியிலே தான் அவரது எழுத்தாக்கங்கள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் தமிழ் மொழியில் அவை உரை பெயர்க்கப்பட்டன. உலகக் கல்வி நிலை,
முஸ்லிம்களும் கல்வியும், முஸ்லிம்களின் போதனா மொழி, சமய எழுத்தறிவு, மொழிப்பிரச்சினையும் தீர்வும், உதவி நன்கொடை பெறும் பாடசாலைகளின் எதிர்காலம், இஸ்லாமிய தமிழ்க் கவிஞர்கள் போன்ற தலைப்புக்களிலே புலமைச் செறிவு மிக்க ஆக்கங்களை அவர் வெளியிட்டார்.
அதேவேளை அவர் நூலாக்க முயற்சிகளையும் முன்னெடுத்து வந்தார். 'இலங்கையில் இஸ்லாம்', 'மிஸ்ரின் வசியம்', 'மொழிபெயர்ப்புக்கலை', 'தமிழ் யாத்திரை', 'அறபுத்தமிழ் எங்கள் அன்புத்தமிழ்', 'கிழக்கு ஆபிரிக்கக் காட்சிகள்' முதலிய நூல்ளை அவர் எழுதினார். பாரிநிலையம், கலைவாணி புத்தக நிலையம், இளம்பிறை வெளியீடு முதலியவை அவரது நூல்களைப் பிரசுரித்தன.
தமிழ்
கோர்) - பகள்
அறிஞர் அஸீஸ் அவர்களால் எழுதப்பட்ட நூல்களில் சில..

FE"
பு) இயக்க நவ டAut: A
தேசிய வீரராகக்
இறப்பதற்கு சில மாதங்களுக்கு
முன்னர் 1973 இல் கெளரவிக்கப்பட்டு 1986 மே 22
ஹகதோவிட்டவில் நடைபெற்ற ஆம் திகதி வெளியிடப்பட்ட
வை.எம்.எம்.ஏ மாநாட்டில் ஞாபகார்த்த முத்திரை
உரையாற்றும்போது... உலக இலக்கியப் பரப்பில் நிகழ்ந்த ஒரு முக்கியமான வகைமையாகப் பிரயாண இலக்கியம் அல்லது சுற்றுலா இலக்கியம் விளங்குகின்றது. நாடு காண் முயற்சிகளின் இலக்கிய விளைவாக அந்த வகைமை வளர்ந்தெழத் தொடங்கியது. சிறப்பாகக்கடற் பயணங்களை அடியொற்றியே அதன் எழுச்சி இடம்பெற்றது.
அறிஞர் அஸீஸ் அவர்களின் பிரயாண இலக்கியத்தின் வளத்துக்கும் செழுமைக்கும் பல்வேறு காரணிகள் பின் விசைகளாக இருந்தன. ஆங்கில மொழியில் உள்ள பிரயாண இலக்கியங்களை வாசிப்பதிலே அவர் அதிக ஈடுபாடு கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகின்றது. அதேவேளை பல்வேறு பண்பாட்டு கோலங்களையும் அவற்றின் தனித்துவங்களையும் கூர்ந்து நோக்கும் புலமை யாற்றலும் அவரிடத்துக் காணப்பட்டது. பண்பாடுகளின் பன்மை நிலையை அங்கீகரிக்கும் அவரது உயரிய புலக்காட்சி பிரயாண இலக்கிய ஆர்வத்தைத் தூண்டியது.
கிழக்கு ஆபிரிக்கக் காட்சிகள், மிஸ்றின் வசியம், தமிழ் யாத்திரை, ஆபிரிக்க அனுபவங்கள் என்ற பிரயாண இலக்கிய நூல்கள் அவரால் எழுதப்பெற்றுள்ளன.
பெரும்பாலான இவரது பிரயாண இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு பின்னர் தமிழுக்கு மொழி பெயர்ப்புச் செய்யப்பட்டவையாகும். அவரிடம் பயின்ற மாணவரே அந்தப் பணியினை மேற்கொண்டனர்.
பி.
11111)
அக்கம் பார்
அந்த ப்ரக்ர்

Page 41
சமாதான நீதிவானாக 1943 ஆம் ஆண்டில் நியமனம் பெற்று யாழ்ப்பாணம் | ஆயினும் அவர் ஆங்கில வழியான ஆக்கத்தையும் தமிழ் மொழி பெயர்ப்பையும் ஒப்பு நோக்கி நிறைவு கொண்ட பின்னரே நூலை வெளியிடுவதற்கு அனுமதி வழங்கினார். மொழிபெயர்க்கும் பொழுது மாணவர் ஒவ்வொருவரதும் நடைகளுக்கிடையே வேறுபாடுகள் இருத்தலையும் அவர் கண்டறிந்து கொண்டார்.
புலமை நிலையில் அஸீஸ் அவர்கள் ஒரு வரலாற்றாசிரியராக இருந்தார். அவருடைய எழுத்தாக்கங்கள் அனைத்திலும் வரலாற்று உணர்வு மேலோங்கியிருந்தது. அவரது பிரயாண இலக்கியங்கள் சிறப்புப் பெற்றமைக்கு வரலாற்று ஆளுமையே தளமிட்டது.
தமது வரலாற்றுப் புலமையை அவர் பல நிலைகளிலே மேலும் விரிவுப்படுத்தினார். கல்வி வரலாறு, இலங்கை முஸ்லிம்களின் வரலாறு முதலிய துறைகளிலும் அவரது வரலாற்று நோக்கு நீட்சி கொண்டது.
பாடசாலையிலே பயிலும் நாட்களில் இருந்தே அறிஞர் அஸீஸ் அவர்கள் மொழிபெயர்ப்புத் துறையிலே நாட்டம் கொண்டிருந்தார். கடந்த நூற்றாண்டில் மொழி பெயர்ப்புக் கலை உலகம் முழுவதும் எழுச்சிகொள்ளத் தொடங்கியது. அந்தக் கலை - தொடர்பான கருத்தாடல்களும் வளர்ச்சியடையத் தொடங்கின. மூலமொழி மற்றும்
- புனித ஹஜ் யாத்திரை கடமையை மனைவியுடன் நிறைவேற்றி, வழியில் கராஜ்சியில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டிலும் பங்குபற்றி 1955இல் நாடு திரும்பிய போது.
லண்டன் G நாடுதிரும்பியபே
-அல்

பட்டர்
வந்தபோது யாழ். புகையிரத நிலையத்தில் அளிக்கப்பட்ட வரவேற்புபசாரம்.
இலக்கு மொழி என்ற இரு தளங்களில் நின்று மொழியின் பண்பாட்டுப் பரிமாணங்களைக் கருத்திலே கொண்டு மொழி பெயர்ப்புச் செயற்பாட்டை மேற்கொள்ளலின் முக்கியத்தை அவர் வலியுறுத்தினார்.
அவரின் பரந்துபட்ட புலமைப் பங்களிப்பு உயர் பட்டங்களுக்குரிய ஆய்வுப்பொருளாகியது. முதலில் எஸ்.எச்.எம்.ஜெமீல் அதனை முன்னெடுத்தார்.
அறிஞர் அஸீஸ் அவர்களின் வியத்தகு கல்விப் பணிகளை உற்றறிந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1980ஆம் ஆண்டு நிகழ்ந்த பட்டமளிப்பு விழாவிலே கெளரவ கலாநிதிப் பட்டத்தை வாழ்வின் பின்னரான நீட்சியில் வழங்கிக் கௌரவித்தது.
யாழ்ப்பாணத்துக் கல்வி மரபும் இலங்கையின் உயர் கல்விச் செயல்முறையும் உருவாக்கிய வியத்தகு புலமையாளர் வரிசையிலே அறிஞர் அஸீஸ் அவர்களின் தனித்துவம் நீண்டு நிலைபேறு கொள்கின்றது.
சம காலத்தைய சூழலில் அவரின் கருத்தியல் நோக்கும் இனக்குழுமங்களுக்கிடையிலான அணுகுமுறைகளும் மேலும் முக்கியத்துவம் பெறுகின்றன. இனக் குழுமங்களின் தனித்துவங்களைப் பேணுதலும் அதேவேளை புரிதலுடன் ஐக்கியப்படுதலும் அவர் வழங்கிய செய்திகளாகவுள்ளன. ,
கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவுசெய்து 1934 இல்,
து யாழ்ப்பாண முஸ்லிம் சகோதரர்களால் அளிக்கப்பட்ட வாவேற்பு. (அறிஞர் லஸ் மத்திய வரிசை இருக்கையில் நடுவில் காணப்படுகின்றார் -

Page 42
கற்றக்கோரி 42 hitவட்டுகள்
மணிபல்லவம் எனப்படும் நயி
- கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன்,
1.1. தமிழ் இலக்கியங்களால் அறியப்படும் கருத்துகள் தாழ்விலாச் செல்வர் வாழும் ஊர் மணிபல்லவம் எனப்படும் நயினாதீவு. 'செல்வர் வாழ் தில்லைச் சிற்றம்பலம்' போன்றது நயினையென்பதால் அங்கு வதிவோரும் 'தாழ்விலாச் செல்வர்களே” என்பதும் உயர்வுடைய 'அருட்செல்வம் ' நிறைவாகக் கொண்டவர்கள் என்பதும் கருத்து. 'விரும்பத் தகுந்த பீடமாக' இடமாக விளங்குவது மணிபல்லவமெனும் நயினை தக்கார் வாழுமிடம்; நாடு, கரிகால் வளவன் காலத்தில் காவிரிப்பூம்பட்டினம் சிறந்த நகரமாகத் திகழ்ந்திருந்தது. அங்கே அரசிளைஞரும் வணிக இளைஞரும் தெருவில் யானைகள் மேலும் குதிரைகள் மேலும் ஏறி ஒருங்கு செல்வர் என்னும் குறிப்பு ஒன்றும் வெளிப்படையாகக் காட்டிப் பண்டங்களை விலை கூறி விற்பார்கள் என்னும் உண்மையும் பட்டினப்பாலை என்னும் நூலிலிருந்து தெரிகிறது.

அய..
னாதீவு
முன்னாள் மொழித்துறைத் தலைவர், சப்ரகமுவ பல்கலைக்கழகம்
வணிகம் - வண்மை செய்தல் என்பது அகன் சொற்பொருள். 'வண்மை' வளப்பமெனப்படும். பிறர்க்குந் தமக்கும் வளப்பம் உண்டாவதற்கு ஏதுவான ஒரு நன்முயற்சியே வணிகமானது. நிலவழி வணிகம், கடல் வழி வணிகம் என இரு வகையுண்டு. இவற்றுள் மிகவுஞ் சிறந்தது கடல் வணிகமாகும். ஈழம், காழகம், கடாரம், சீனம், சோனகம், யவனம் முதலிய நாடுகளோடு நம்மவர்கள் முன்பு வாணிபஞ் செய்து வந்தார்களென்பது பழைய தமிழ் நூல்களிலிருந்து தெரிகிறது. -
தமிழ் மக்கள் ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கடல் வாணிபத்திற் > சிறந்திருந்தனர். தொல்காப்பியம் எனும் பெருநூலிலேயே - அதற்கு
முன்னிருந்த மக்கள் கடல்வழியாகப் பிறநாடுகட்குச் சென்று வந்த வழக்கம் 'முந்நீர் வழக்கம்' என்று குறிக்கப்படுகின்றது. தமிழ் நூல்களில் பொறுக்க முடியாத பெரிய துன்ப நிகழ்ச்சிகளுக்கு உவமம் வருகின்ற

Page 43
இடங்களில் ஆரிருள் மழை நாளில் நடுக்கடலிற் கலங் கவிழ்ந்து வருந்தும் வணிக மக்களின் நிலைமையே பெரும்பாலும் எடுத்துக்காட்டப்படுகின்றது. கலங் கவிழ்ந்து தவிப்போர் மணிமேகலையிற் 'கலங்கவிழ் மாக்கள்' என்றே கூறப்படுகின்றனர். 'உடைகலமாக்கள்' என்னும் அதிற் கூறப்படுவர். சிலப்பதிகாரத்தில், ''இடையிருள் யாமத்து எறிதிரைப் பெருங்கடல் உடை கலப்பட்ட எங்கோன்'' என்று இத்துன்ப நிலை அவ்வுணர்வு தோன்ற விளக்கப் பட்டிருக்கிறது. கப்பலுக்குத் தமிழ் மொழியிற் பல பெயர்கள் இருக்கின்றன. ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு வகையான - கப்பலைக் குறிக்கும். பல வகையான கப்பல்கள் அக்காலத்திற் தமிழகத்தில் செயற்பட்டன.
மணிபல்லவம், நாகவம்சம், நாகவழிபாடு, நயினாதீவு என்பன குறித்த ஆய்வுகளுக்கான
வரலாற்றுச் சான்றுகளும், மூலாதாரங்களும்
'கலம் செய் கம்மியர்' என்றே தொழிலாளருள் ஒரு வகையினர் தமிழகத்திலிருந்தனர். புணை, பரிசில், கட்டுமரம், தோணி, திமில், ஓடம், படகு, அம்பி, வங்கம், கப்பல், நாவாய் முதலிய பல பிரிவான கலங்கள் அப்போது செய்யப்பட்டன என்பது தெரிகிறது. ஒவ்வொரு பெரிய கப்பலும் ஒரு மதில் சூழ்ந்த மாளிகைபோலத் தோன்றுமாம். புறநானூற்றிலே இதைப்பற்றிய குறிப்பு வருகிறது. பாடல் எடுத்துக்காட்டு வருமாறு, ''பிணங்கு கதிர்க் கழனி நாப்பண் ஏமுற்று - உணங்கு கலன் ஆழியின் தோன்றும் ஓர் எயில் மன்னன்'' (புறநானூறு) நாலாபக்கமும் நீர் நிரம்பிய கழனிகள் சூழ்ந்திருக்க நடுவில் தனியாக விளங்கும் மதிலோடு கூடிய நீர் அரசனது மருதநிலைக் கோட்டைக்கு விரிந்த கடலின் நடுவில்
2 அ
சிங்கள மக்கள் வழி

, கலைக்கேசரி
43
தனியாகத் தோன்றும் கப்பல் ஒன்று உவமாகக் கூறப்பட்டிருக்கிறது. கப்பலின் உயர்ந்த சுற்றுச் சுவர்கள் கோட்டையின் மதிற் சுவர்கள் போலவும் கப்பலின் உள் அறைகள் அக்கோட்டையின் உள் மாளிகைகள் போலவும் இருந்திருக்குமென்று இவ்வொப்புன்மையால் தெரிகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னும் அயல்நாட்டுக் கப்பல்கள் இந்நாட்டுத் துறைமுகங்களுக்குப் பொன்னோடு வந்து பொருளோடு போகும் என்றும் அதற்கேற்றபடி தமிழகத்தின் மேற்கு மற்றும் கிழக்குக் கடலோரத்திலும் தொண்டி, கொற்கை, காவிரிப்பூம் பட்டினம் முதலிய பல நல்ல துறைமுகங்களும் அப்போது வளமாக விளங்கியிருந்தன என்றும் பழைய நூல்களிலிருந்து புலப்படுகிறது. இவ்வகைகளால் நாடு
அக்காலத்தில் செல்வம் மிக்குச் செழித்திருந்தது. )
வணிகத்தில் உள்நாட்டு வணிகத்தை விட அயல்நாட்டு வணிகத்திலேயே ஊதியம் மிகுதி. அயல்நாட்டு வணிகத்திலும் நிலத்தின் வழியாகச் செய்யும் வணிகத்தை விட நீரின் வழியாகச் செய்யும் வணிகம் மிக்க செழுமையைத் தரும். தமிழ்நாட்டில் இவ்வெல்லா வணிகங்களும் முன்பு செழுமையாகவே இருந்தன. கடல் வாணிபம் மிகவும் சிறந்திருந்தது.
உள்நாட்டு வாணிபத்தில் கூட்டங்கூட்டமாகச் செல்லும் வாணிகச் சாத்துகள் தம் வாணிபப் பண்டங்கள் பொதிந்த மூட்டைகளைச் சுமப்பதற்கு எருது, கழுதை முதலிய விலங்குகளையும் பயன்படுத்திக் கொள்வார்கள். இச்செய்தி 'அணர்செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கும்' என்று பெரும்பாணாற்றுப்படையில் இதைப்பற்றி ஒரு தொடர் வருகிறது. வணிகம் நன்றாக நடைபெறுவதற்கு நல்ல முதலும் நாணயமும் நற்குணமும் இன்றியமையாதன. இவ்வுண்மைகளைப் பழந்தமிழ் மக்கள் செல்வமாக அறிந்திருந்தனர்.
(101) නුයිමෙන් වලකින්න
பாடு செய்கின்றனர்

Page 44
கலைக்கேசரி தி
44
பண்டைக்கால வணிகர்கள் தம் வணிகத் தொழிலோடு மட்டும் இருந்து விடாமல் நாட்டின் பொது நலன்களிலும் கருத்தும் முயற்சியும் உடையவர்களாகத் திகழ்ந்தமை நினைவு கூருதற்குரியது. பலருக்கும் பல துறைகளிலும் பொருள்கள் வழங்கி அவர்கள் நல்ல கொடையாளர்களாக விளங்கினார்கள். இது பற்றிய குறிப்புப் பட்டினப் பாலையில் வருகிறது. அரசனுக்கு உதவியாகத் தூது செல்லுதல் முதலிய காரியங்களையும் அவர்கள் மேற் கொண்டிருந்தார்களென்று தெரிகிறது. வாணிகஞ் செய்யும் போது நயமும் உண்மையும் சுருக்கமும் விளக்கமும் உ ண்டா கு ம் ப டி உலகியலறிவோடு பேசிப் பேசிப் ப ழ கி ன ார் க ள் . எனவே இவர்களிற் பலர் பிறரை வய மாக்கத்தக்க பேச்சுத் திறம் உடையவர்களாக இருந் தி ருக் கக் கூடும். இவர்களிற் பலர் புலவர் களாகவும் விளங்கினர். சீத்தலைச் சாத்தனார், இள வேட்டனார், பொன் வாணிகனார், இளந்தேவன் என்னும் சிறந்த சங்கப் புலவர்கள் வணிக முயற்சியுள்ளவர்களே யாவர். இவர்கள் முறையே கூல வணிகரும், அறுவை வணிகரும், பொன் வணிகரும், பண்ட வணிகருமாவர். இவர்கள் தாமுந் திருத்தமான உயர்ந்த தமிழ்க்கல்வி பயின்று பிறருக்கும் அதனைப் பரவச் செய்து
வந்த பெருந் தகையோருமாவர்.
1.2. தமிழ், பௌத்தக் காப்பியமான மணிமேக லையில் இடம்பெறும் மணிபல்லவம் தொடர்பான செய்திகளும் சம்புத்தீவு நாகதீவு புத்தபீடிகை எனும் கொள்கைகளும்.
சிலப்பதிகாரத்தைச் சேரஇளவல் இளங்கோவடிகள் பாட மது ரைகூல - - வணிகன் சாத்தனார் கேட்டார் என்று சி ல ப் ப தி க ா ர மு ம் மணிமேகலையைக் கூல் வணிகன் சாத்தனார் பாட துறவு பூண்ட சேர இளவரசனான இளங்கோ வடிகள் கேட்டார் என்று சிலம்பும் மேகலையும்
தம் பதிகங்கள்
வா யி ல ா க த் தெரிவிக்கின்றன.

இன்று தீவுப் பகுதிகள் தீவகம் என்று அழைக்கப் படுகின்றது. சம்புத்தீவு என்று நயினாதீவுக்கு பெயருண்டு. சம்புத்தீவு தீவக்சாந்தி என்னும் தொடர்கள் மணிமேகலையிலே இடம்பெற்றுள்ளன. அரசுமணி
என்பார் மேல்வருமாறு தமது நூலிலே எழுதியுள்ளார். | "சம்புத்தீவின் காவல் தெய்வம் இந்நகரிலிருந்து இந்திரனுக்கு விழா எடுத்தது. அதனால் தீவகசாந்தி என்றும் பெயர்...''
''பண்டைக்காலத்தில் நாவல் மரங்கள்
நிறைந்த தீவுபோல்
இருந்ததால் நாவலந் தீவு என்று பெயர் பெற்றது. சம்பு என்றால் நாவல் மரம். அதனால் "நா வ ல ந் தீ வைச் சம்புத்தீவு என்றும் கூறுவர். சம்பாதிவனம் என்னும் பெயரும் மணி மேகலையிலே வருவது சம்பு நாவல் சம்பாதிவனம் நாவல்மரங்கள் நிறைந்த வனம் ஆகலாம். சம்பாதிவனம் சடாயுவின் தம்பி சம்பாதி. சூரியனின் அருகே பறந்து சென்ற போது வெப்பத்தால் சிறகு கள் தீப்பற்றியெரிய இங்கே வீழ்ந்தான்.
சடாயுவும் சம்பாதியும் இறைவனை பூசித்துப் பேறுபெற்ற இடம்தான் இவ்வனம். அச்சந்தரக்கூடியதாகும்.
மணிபல்லவம் பற்றிய செய்திகள் மணிமே கலையில் மேல்வருமாறுள்ளன.
''ம ணி பல் ல வத் தில்
பொழுது புலர்ந்தது!
புள்ளினம் ஆர்த்தது.'
இருள்மூடி இருந்த மணி பல்லவத் தீவைக் கதிரவன் பொன்னிறக் கதிர்களால் ஒ ளி ம ய ம ா க் க த் தொடங்கினான். (மணி பல்லவத்தீவு என எழுதுவது கூர்ந்து நோக்கத் தக்கது) (தீவு - நான்கு பக்கங்களும் கடலாற் சூழப்பட்டுள்ள நிலப் பகுதி) கதிர் ஒளி தன் மேல்பட்டதும் மணி மேகலை துயில் நீத்து

Page 45
எழுந்தாள். தான் மலர் குவியல்கள் மீது கிடப்பது அவளுக்கு வியப்பாய் இருந்தது. மணிமேகலை "நான் எங்கிருக்கிறேன். உவ வனத்திலல்லவா இருந்தேன். அதில் உள்ள வேறு இடமா? இல்லை கனவு காண்கிறேனோ?'' என்று குழம்பினாள். தன் கையை கிள்ளிப் பார்த்துக் கொண்டு கனவல்ல நனவுதான் என்று உணர்ந்தாள். ' மேற்
போந்த செய்திகளால் 'மணிபல்லவம்' என்பது 'தீவு' என்று புரிகிறது. இங்கே தான் இத்தீவு நயினாதீவா? அல்லது யாழ்ப்பாணக் குடாநாடா? என்னும் ஆய்வு பிரதான மாகிறது. ஆயினும் இன்றும் 'தீவு' என்னும் சொல்லுடன் இணைந்து நிற்பது நாற்புறமும் கடலாற் சூழப்பட்டுள்ளதும் என நோக்கும் போது மணிபல்லவம், மணிபல்லவத்தீவு என்ற பதங்கள் நயினாதீவையே
குறித்துள்ளன என்பது போதரும்.
''மணிமேகலை தன்னைச் சுற்றிக் கடல் சூழ்ந்திருப்பதையும் கடலலைகள் விசையாக வீசுவதையும் கண்டாள் அவைகள் பவளத்தையும் சந்தனக் கட்டைகளையும் கரையில் ஒதுக்கும் காட்சிகளைக் கண்டாள்'' மணிமேகலையில் வரும் இச்சம்பவமும் அக்காலத்திலே நயினாதீவைச் சூழ்ந்துள்ள கடலின் வேகத்தையும், பேரலை எறியும் மாட்சியையும் சுட்டுவதுடன் 'கடல் சூழ்ந்திருப்பதைக் கண்டாள் என்னும்போது 'தீவுத்திடல்', 'தீவுத்திட்டு' என்பதால் தனது சொந்த அனுபவத்தினையே சுட்டினாள் என்பதும் தகும். ஆயின் 'கடல் சூழிலங்கைக் கயவாகு' என்னுந் தொடரால் முழு இலங்கையும் குறிக்கப் படுவதும் உணரப்படவேண்டியது. மணிபல்லவத்திற் கடல் சூழ்ந்திருப்பதும் கடலலைகள் விசையாக வீசுவதும் கருத்தினால் இப்பின்னணி நயினாதீவின் மணிபல்லவத்தின் இயற்கைச் சூழலே என்பதைனை உய்த்தறிய அதிக நேரம் வேண்டியதில்லை.
''(மணிமேகலை) எழுந்து அங்குமிங்கும் நடந்துசென்ற
போது மலர் பூத்துக் குலுங்கும் சோலைகளையும், இதழ் விரித்துச் சிரிக்கும் செந்தாமரை மலர்கள் நிறைந்த தடாகத்தையும் கண்டாள். அவள் கண்ணுக்கு அறிந்த மனிதரோ அறியாத மனிதரோ தென்படவில்லை.'' எனக் கூறப்படுவதால் மணிபல்லவம், மணிபல்லவத் தீவு என்பது நீண்ட நிலத் தொடர்ச்சியுடையதொன்றல்ல என்ற கருத்தை உறுதிப்படுத்துவதாயுள்ளது. அத்துடன் 'தடாகம்', 'பொய்கை' தென்பட்டதும் மணிமேகலையில் உண்டு. 'குளம்' ஒன்று 'பொய்கை' என அழைக்கப்பட்ட வரலாறு பலராலும் நயினாதீவு பற்றிய ஆய்வில் குறிக்கப் படுகிறது. எனவே 'மலர்கள் நிறைந்த தடாகம்' இருந்த இடமே 'மணிபல்லவம்' என்பது போதரும். அத்துடன் 'மனித நடமாட்டம் இல்லாத தீவாகவே முன்பு இருந்துள்ளதும்; அதாவது தொடர்பற்ற பிரதேசமாக; தனிமைப்படுத்தப்பட்ட இடமாக; ஆள் அரவமற்ற

கலைக்கேசரி
45
மாப்படர்
நயினாதீவுக்கும் குறிகட்டுவானுக்கும் இடையில் பயணிகள் சேவையில்
ஈடுபடும் படகுகள்.
பிரதேசமாகவும் 'மணிபல்லவம்' இருந்தது என்பதும் உண்மையே.
1.3. புத்த பீடிகை / தருமபீடிகை
அப்போது அவள் முன் திடீரென்று ஒரு தருமபீடிகை தோன்றியது. வட்டமாய் அமைந்த தருமபீடிகை மூன்று முழ உயரமும் ஒன்பது முழ அகலமும் கொண்ட பெரிய பீடிகை. அதன் உச்சியில் புத்தர் அடிச்சுவடுகள் அமைந்திருந்தன. அதை புத்தபகவான் இருக்கை என்று எண்ணி மரங்கள் அதன் மீது மலர்களைச் சொரியுமாம். பறவைகள் அதை பூசிப்பதுபோல் சிறகுகளைத் தம் உடலிலிருந்து சிலிர்த்துச் சொரியுமாம். இவ்வாறு
வர்ணிக்கிறது மணிமேகலை.
புத்தபீடிகை மணிபல்லவத்தில் ஏற்படுத்தப்பட்டது. அதைத் காண்பவர்களுக்கு அவர்களுடைய முற்பிறப்பை உணர்த்தவல்லது. நாக நாட்டை ஆண்ட இரண்டு மன்னர்கள் அப்பீடிகையை அடைய ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொண்டனராம். அதைக் கண்ட புத்தபகவான் ''இந்த இருக்கை உங்கள் இருவருக்குமே உரியது அன்று. எனக்கு உரியது'' என்று கூறி இப்பீடிகை மீது அமர்ந்து அவ்விருவருக்கும் அறிவுரை கூற, அவர்கள் நல்லறிவு பெற்றனர். இச்சான்று இன்று நயினாதீவிலே அனைத்து யாத்திரிகர்களது கண்களும் தரிசிக்கத்தக்க வகையில் உண்டு. அதாவது 'இந்திரன் அமைத்தது' என்ற கருத்தும் மணிமேகலை புத்தபீடிகையை வலம் வந்து வணங்கினாள் என்ற செய்தியும் இன்றைய நயினாதீவே மணிபல்லவம், மணிபல்லவத்தீவு என்பதனை உறுதிப்படுத்துவனவாகும்.
அதாவது பெருமை வாய்ந்த தருமபீடிகையைக் கண்டதும் மணிமேகலை இருகைகளைக் குவித்துத் தலைமீது வைத்துக் கண்கள் மகிழ்ச்சிக் கண்ணீரைப் பொழிய அப்பீடிகையை மும்முறை வலம் வந்தாள். பின் மின்னற்கொடி முகிலோடு நிலத்தில் வீழ்ந்ததைப் போல் அழகிய விரிந்த கூந்தலையுடைய மணிமேகலை தரையில் விழுந்தாள். முன்செய்வினை, பூர்வ புண்ணியத்தால்
பம்

Page 46
கலைக்கேசரி )
46
ஏற்படும் பயன்கள் என்பன மணிமேகலையில் இடம் நோக்கி எடுத்துரைக்கப்பட்டுள்ளன. மதப்பிரசாரம் மேற்கொள்ளும் சீத்தலைச் சாத்தனாரின் போதனைகள் நிறையவே இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன. பீடிகையைத் தொழுத்தும் அவள் (மணிமேகலை) பழம் பிறப்பை உணர்ந்தாள்.
"இந்நாவலந் தீவில் இற்றைக்கு ஏழாம் நாள் உயிரினங்கள் எல்லாம் நடுங்கும்படி ஒரு பெரிய நில நடுக்கம் பூகம்பம் உண்டாகும். அப்போது இந்த நகரம் நாக நாட்டின் நானூறு யோசனை பரப்பளவும் பாதாளத்தில் புகுந்து அழியும். ஆதலால் இந்நகரிலிருந்து சென்று விடு'' என்று கூறினீர். முனிவரே! நீர் கூறியபடியே ஏழாம் நாளில் 'இடவயம்' என்றும் நகரும் நானூறு யோசனை பரப்புள்ள நிலப்பகுதியும் நில நடுக்கத்தால் பாதாளத்தில் வீழ்ந்து அழிந்தது. அச்செய்தியை அறிந்த உயிர் தப்பிப் பிழைத்த மன்னனும் மக்களும் ஒருங்கு திரண்டு வந்து உம் மலரடிகளைத் தொழுது வணங்கினர். நீர் அவர்களுக்கு வீட்டு (மோட்ச) நெறியை விளக்கிக் கொண்டிருந்தீர்.
அப்போது அசோகபுரத்து மன்னன் இரவிவர்மன் பட்டத்தரசியான அமுதபதி என்பவள் வயிற்றில் பிறந்த

நான், இலக்குமி என்ற பெயருடையவளாய் இருந்தேன். அத்திபதி என்னும் மன்னனுக்கு மனைவியாகவும் சித்திபுரத்தை ஆண்ட மன்னனுக்கு மகளாகவும் விளங்கினாள் நீலபதி. அந்த நீலபதி என்னும் நேரிழையாள் மணிவயிற்றில் இளஞாயிறு தோன்றியது போல் பிறந்த இராகுலனுக்கு மனைவியானேன். அப்பிறவியில் இராகுலன் என்ற பெயருடைய என் கணவனும் இலக்குமி என்ற பெயருடைய நானும் உம்மிடம் அறிவுரை கேட்க வந்து வணங்கி நின்றோம்.
அப்போது, தாங்கள் என்னை நோக்கி,
''இற்றைக்கு பதினாறாம் நாளில் உன் கணவனான இராகுலன் திட்டிவிடம்” என்னும் நஞ்சுவிழிப்பாம்பு தீண்டி மாள்வான். அவன் பிரிவைத் தாங்கொணாது நீயும் தீயில் மூழ்கி இறப்பாய். வினைப்பயன் தரும் காலம் உனக்கு இப்பிறவியில் இல்லை. ஆதலால் கவேர முனிவன் மகளாகிய காவேரியின் பெயர் பெற்று விளங்கும் காவிரிப்பூப்பட்டினம் என்னும் பெரு நகரில் சென்று பிறப்பாய். அங்கு உனக்கு ஒரு தீங்கு வரும். அந்நாளில் மணிமேகலா தெய்வம் உன்னை எடுத்துச் சென்று ஒரு தீவில் சேர்க்கும். அங்கு நாக நாட்டரசர்கள்

Page 47
ன்
பகை மறந்து தொழுத புத்தபிடிகையைத் தொழுவாய். அப்போது நீ உன் பழம்பிறப்பை உணர்வாய். அப்போது இங்கு கூறியவை எல்லாம் நினைவு கூர்வாய் என்று திருவாய் மலர்ந்து அருளினீர்கள்''
என் கணவன் இறப்பான் என்ற செய்தி கேட்டு வருந்திய நான் உம்மைத் தொழுது, என் அடுத்த பிறப்பைக்கூறிய தாங்கள் என் கணவனின் அடுத்த பிறப்பைப் பற்றியும் கூறியருள வேண்டும் என்று வேண்டினேன். அதற்கு நீர்.
''உன்னை மணிபல்லவத் தீவில் கொண்டு வந்து வைக்க அத்தெய்வமே உன்முன் தோன்றி இந்தப் பிறவியில் இங்கு தோன்றி இருக்கிறான் என்பதை உனக்குக் கூறும் என்கிறீர்கள். அந்தத் தெய்வம் இங்கு இப்போது வாராதோ? இன்னும் அத்தெய்வம் வரக் காண்கிலேனே! என்று ஏங்கி அழுதாள் மணிமேகலை.
அப்போது, மணிமேகலா தெய்வம், எங்கும் துன்பம் நீங்குக.
- என்று மணிமேகலை செவியில் விழும் படி கூறிப் புத்தபீடிகையை வணங்கியது. மணிமேகலை உடனே அதை வணங்கி, ''தாயே! உன் தண்ணருளால் என் பழம் பிறப்பை உணர்ந்தேன். என் கணவன் எங்கு பிறந்துள்ளான் என்பதைக் தெரிவிக்க வேண்டுகிறேன்'' என்றாள்.
மணிமேகலா தெய்வம் அவன் முற்பிறப்பு நிகழ்ச்சியைக் கூறத் தொடங்கியது. முடிவில், "உவவனத்தில் உன் பலவாறு இகழ்ந்து கூறிய உதயகுமாரன் தான் முற்பிறவியில் உன் கணவனாய் இருந்த இராகுலன். அவன் மீது கொண்ட பற்றை விலக்கி நன்நெறியில் செலுத்தவே உன்னைத் தீவிற்கு எடுத்து வந்தேன்.'' என்று கூறி முடித்தது மணிமேகலா தெய்வம்.-
பாதபங்கய மலைக்குச் சென்று (புத்த பெருமானின் பாதம் பதித்த காரணம் பற்றியே அம்மலை 'பாதபங்கயமலை' என்று பெயர் பெற்றது) வணங்கினாள் மணிமேகலை.
அதன் பயனாக உன் தமக்கையராய் இருந்த தாமரையும் வீரையும் இப்பிறப்பில் மாதவியாகவும் சுதமதியாகவும் பிறந்து உன்னோடு சேர்ந்து வாழ்கின்றனர்.
"மணிமேகலையே நீ விரும்பியபடி வேற்றுருக் கொள்ளும் மந்திரத்தையும் வான் வழிச் செல்லும் மந்திரத்தையும் உனக்கு கூறுகிறேன்.'' என்று கூறிவிட்டு மணிமேகலையின் செவியில் இரண்டு மந்திரங்களை ஓதி, மணிமேகலை “நீ புத்தபகவான் அருளிய அறவழியில் செல்வது உறுதி.'' என்று சுறி விட்டு மணிமேகலா தெய்வம் மெலேழுந்து வானிற் சென்றது என்று கூறும் மணிமேகலைக் காப்பியம், மீண்டும் கீழிறங்கி வந்து ''நான் உனக்குக் கூற மறந்தது ஒன்றுண்டு! சிறந்த தவ ஒழுக்கம் உடையவளே! மக்கள் உடம்பே உணவாகிய தொகுதி!''
"மக்கள் யாக்கை உணவின் பிண்டம் இப்பெருமந்திரம் இரும்பசி அறுக்கும்''
(மணிமேகலை)
TNTாட்

8 கலைக்கேசரி
47
நான் கூறும் மந்திரம் பசியைப் போக்கக் கூடியது என்று கூறி, பசிப்பிணி நீக்கும் மந்திரத்தை அவள் காதில் ஓதி விட்டு வானில் உயர்ந்து மறைந்தது. மூன்று நிலையான மந்திரம்
1. வேற்றுருக் கொள்ளல். 2. வான்வழிச் செல்லல். 3. பசிப்பிணி நீக்கல். 1.4. மணிமேகலை - தீவதிலகை சந்திப்பு - அதிசய
ஐயக்கலம் - அமுதசுரபி | மூன்று மந்திரங்களைப் பெற்றதும் மணிமேகலை பழைய அச்சங்கள் எல்லாம் நீங்கப் பெற்றாள். மணிபல்லவத் தீவில் அச்சமின்றி உலவினாள். ஆனாலும் அவளின் முகத்திலே சோகத்தின் சாயல் மறையவில்லை. புதுப்பொலிவோடு உலவி வருகையில் தீவதிலகை என்பவள் தெய்வ வடிவோடு தோன்றினாள். அவள் அங்குள்ள புத்தபீடிகையைக் காப்பதற்கென்றே இந்திரனால் மணிபல்லவத் தீவிற்கு அனுப்பப்பட்டவள். அதனால் அவள் அத்தீவிலேயே தங்கியிருந்தாள். அத்தீவுக்குத் திலகம் போன்று விளங்கியதால் 'தீவதிலகை' எனும் பெயர் பெற்றாள்.
மணிபல்லவத்தில் மணிமேகலையைக் கண்ட 'தீவதிலகை' இங்கு எவ்வாறு வந்தாய்? எனக் கேட்க, ''நானாக வரவில்லை. மணிமேகலா தெய்வம் என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்தது. பெருமைமிக்க இந்தப் புத்த பீடிகையால் என் பழம் பிறப்புணர்ந்தேன். இங்கு வந்ததால் நான் அடைந்த பெரும் பயன் அது”'
என்றாள் மணிமேகலை. நீ யார் எனக் கூறலாமா? என்றாள் மணிமேகலை. அதற்குத் தீவதிலகை,
''நான் இத்தீவுக்கு அண்மையதான இரத்தினதீபத்தின்
உள்ள சுமந்தகூட மலையுச்சியிலுள்ள புத்தர் திருவடிகளை வணங்கி இங்குவந்தேன். இந்திரன் ஏவலால் இத் தருமபீடிகையைக் காத்து வருகிறேன். என்னைத் 'தீவதிலகை' என்பர். நங்கையே நீ நற்றவம் புரிந்தவள். இப் பீடிகையைக் காண்போர் பழம்பிறப்புணர்வர். ஆனாலும் அத்தன்மையுடையோர் உலகிலேயே சிலர் தான் உளர்'' இக்கருத்துகள் மணிபல்லவம் இன்றைய நயினாதீவே என்னும் கருத்தை மெய்ப்பிப்பனவாயுள்ளன. இந்திரனோடு தொடர்புடைய செய்திகள் 'இத்தீவுக்கு அண்மையதான இரத்தினதீபத்தில் என்று தீவதிலகை, குறிப்பிடும் சிவனொளிபாதமலை - சுமந்த கூட மலையுச்சி வழிபாடு ஆகியன இன்றைய நயினாதீவே மணிபல்லவம், மணிபல்லவத்தீவு என்ற கருத்தை அரண்செய்கின்றன.
'நன்று. இத்தீவில் வேறு ஏதேனும் சிறப்புண்டா? என வினவினாள் மணிமேகலை' ;
(தொடரும்)

Page 48
- நலக்கேசரி - 48 நிகழ்வுகள்
கொழும்பு தமிழ்ச்சங்கம் (ஈழத்து தமிழ்
இலக்கியச் செல்நெறியும் பிரதேச இலக்கியமும்' என்னும் பிரதேச இலக்கிய ஆய்வரங்கை கடந்த மே 18, 19ஆம்
திகதிகளில் கொழும்பு தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடத்தியது.
மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. பேராசிரியர் சி.மௌனகுருவின்
அரங்க ஆய்வுகூடம் வழங்கிய மட்டக்களப்பு கூத்திசைப்பாடல்கள் ஆற்றுகையின் சில நிகழ்ச்சிகளை இங்கு
படங்களில் காணலாம்.

中。

Page 49

- -
கொழும்பு தமிழ்ச்சங்கம் நடாத்திய பிரதேச இலக்கிய ஆய்வரங்கின் போது மாலை வேளை நடைபெற்ற கலை நிகழ்வில்
உடப்பூர் கலைக்குழுவின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியின் சில காட்சிகளைக் காணலாம்.

Page 50
கலைக்க்ேசர் 50 வழிபாட்டு மரபு
பொலிகண்பு
சம007
க.
DITக
கோயில் சீரும் திருவும் பொலியும் ஈழ மணித் திருநாடு தேவாரம் பாடிய சிவதலங்களையும் திருப்புகழ் பாடிய முருகன் கோயில்களையும் கொண்டது.
ஈழத்தில் வடகடல் ஓரத்தில் வல்வெட்டித்துறைக்கு கிழக்கே பொலிகண்டி எனும் சிற்ரூரில் கடற்கரை ஓரமாக சண்முகப்பெருமான் வீற்றிருந்து அருள்பாலிக்கும் பதிதான் பொலிகண்டி கந்தவனப் பதியாகும். இத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முச்சிறப்புக்களையும் கொண்ட மிகவும் புராதனமானதாகும். இவ்வாலயத்தில் சண்முகர் சிலா விக்கிரமாக மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ளார். இதுபோல் உலகில் வேறெங்கிலும் காணமுடியாது. கந்தவனப்பதிக்கேயுரிய தனித்துவமாகும். காரணம் சிலா என்பது கருங்கல்லினாலான விக்கிரகத்தைக் குறிப்பதாகும். சண்முகர் மூலஸ்தானத்தில் கருங்கல்லினால் எழுந்தருளியிருப்பது இலங்கையிலோ இந்தியாவிலோ காணப்படவில்லை. முருகனுடைய ஆலயங்களில் கிரிப்பிராந்தம், வனப்பிராந்தம், சமுத்திரப்பிராந்தம் ஆகியவற்றுள் இரண்டு சிறப்புக்களையும் ஒருங்கே அமையப்பெற்ற இடம் பொலிகண்டிக் கந்தவனக் கடவை என்பதும் இன்னொரு சிறப்பாகும்.
டெயபாங்க பார

2 கந்தவனம்
ன்
பலெ
இக்கோயிலுக்கு கந்தாரண்யம், கந்தவனக்கடவை, முருக வனம், கந்தசுவாமிகானகம், வெள்ளரிக்கொல்லை, அம்பலவாண முருகேச சுவாமி கோவில், பொலிகண்டி கந்தசுவாமி கோவில், கரியான வேலவர் எனப் பல பெயர்களைச் சூட்டி பக்தர்கள் தமது இதயத்தில் இருத்தியுள்ளனர்.
மிகவும் அநாதியான இவ்வாலயம் கர்ண பரம்பரை வரலாற்றைக் கொண்டது. இற்றைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன் ஆலயம் இருக்கின்ற தலம் ஒரு வெள்ளரித் தோட்டமாக இருந்தது என்றும் அத்தோட்டத்திலேயே ஒளிப்பிளம்பாக வேல் தோன்றி, காட்சியளித்தது என்றும் அன்றிலிருந்து அதனை ஊர் மக்கள் வணங்க ஆரம்பித்தனர் என்றும் கூறப்படுகின்றது. அந்த வேல்தான் ஆலயத்தின் வடக்கு வீதியில் உள்ள வேலவர் ஆலயமாக உள்ளது.
இக்கோயிலின் தோற்றம் பற்றி தட்சிண கைலாய மான்மியமும், ஈழத்தின் பழைமை கூறும் ஈழ மண்டல சதகமும் பின்வருமாறு
குறிப்பிடுகின்றன. அதாவது முருகப் பெருமான் திருச் செந்தூரில் சூரனை
கோயம்

Page 51
அழித்து, வள்ளி தெய்வானை ஆகியோரை மணம்முடித்த வேளையில் கதிர்காமம் செல்லும் நோக்கில் வேதாரண்யம் சென்று, அங்கிருந்து மரக்கலத்தில் தேவியர்கள் இருவருடனும் வீரபாகு தேவர் உட்பட முப்பத்து முக்கோடி தேவர்கள் ஆகியோர்களுடன் கடற் பிரயாணம் செய்து இலங்கையில் காங்கேயன்துறையில் இறங்கி கோயில் கொண்டு, பின்னர் மீண்டும் கடல் வழியாக வந்து பொலிகண்டி எனும் ஊரில் வன்னி மரங்கள் நிறைந்த வன்னி வனத்தில் இறங்கி, அங்கு கோயில் கொண்டெழுந்தருள விரும்பி விசுவ கன்மாவினால் ஒரு கோயிலைக் கட்டுவித்து அங்கே முருகப்பெருமான் தேவியர்களுடன் அழகிய மயிலில் எழுந்தருளினார் என்றும் முருகப் பெருமான் கடற்பயணம் செய்த தோஷம் நீங்கும் பொருட்டு பிரம்மா, விஷ்ணு, இந்திரன்

இ கலைக்கேசரி
51
முதலியோர் மகாபிஷேகம் செய்து வழிபட அவர்களுக்கு நல்லருள் பாலித்த தலமாகையால் அன்றிலிருந்து அவ்வன்னிவனம் 'கந்தவனம்' எனும் சிறப்புப் பெயர் பெற்றது என்றும் பின்பு இங்கிருந்து கந்தக் கடவுளும் கூடவந்த பரிவாரங்களும் கடல் வழியாக பயணம் மேற் கொண்டு திருகோணமலை ஊடாக உகந்தை சென்று கதிர் காமம் சென்றதாக இந்நூல்கள் கூறுகின்றன. - கச்சியப்பர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கந்தபுராணத்தை அரங்கேற்றியபோது அவற்றின் பிரதிச்சு வடிகள் இங்கும் கொண்டுவந்து பாடப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இக்கோயிலிற்கு அருணகிரிநாதர் 'உறவு சிங்கிகள்' என்று ஆரம்பிக்கும் திருப்புகழைப் பாடியுள்ளார். அதில் 'கந்தசுவாமி கானகம்' எனும் தல
முத்திரையையும் குறிப்பிட்டுள்ளார். - அருளும், அழகும், அநாதியுமாகிய கந்தவன சுப்பிரமணியர் தேவஸ்தானம் மகோற்சவ ஆலயமாக மூன்று சண்முகமூர்த்திகளையும் விநாயகர், நாகதம்மிரான், மகாவிஷ்ணு, வேல், முத்துக்குமாரசுவாமி, கார்த்திகேயர், நாயன்மார், நவக்கிரக நாயகர், வைரவர், பலிபீடம், தம்பம், தம்பப்பிள்ளையர், சண்டேசுவரர் ஆகிய பரிவார மூர்த்திகளும் கர்ப்பக்கிருகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், தர்சன மண்டபம், தம்ப மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவற்றுடன் வன்னிமரப் பெருமான், திருக்குளம் என்பனவற்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

Page 52
கலைக்கேசரி த்து
52
ஆறுமுகநயினார்
இங்குள்ள விக்கிரகங்கள் அனைத்தும் சிறப்புப் பெற்றவை. இங்கு மூன்று சண்முகர் படிமங்கள் உண்டு. ஒன்று 'பழையவர்' என அழைக்கப்படும் பழைய மூலவர்; இரண்டாவது தற்போதுள்ள மூலவர்; மூன்றாவது ஆறுமுக நயினார் என அழைக்கப்படும் எழுந்தருளி சண்முகர்.
இவற்றில் பழையவர் எனும் விக்கிரகம் சோழர் காலத்தைச் சேர்ந்தது. இவ்விக்கிரகம் சோழப்பேரரசு காலத்தில் தென்னிந்தியாவில் வாழ்ந்த சிற்ப முனிவரால் வடிக்கப்பட்டது. இச்சிற்ப முனிவர் முத்தரச சோழ மன்னனால் கை வெட்டப்பட்டிருந்த வேளையில் தமது கைக்குழைச்சுக்குள் உளி வைத்து செதுக்கியமையினால் இச்சண்முகரை 'கைக்குழைச்சுக்கல்யாண வேலவர்' என்று அழைக்கின்றனர். இச்சிற்பியால் செய்த ஏனைய மூன்று விக்கிரங்கள் தென்னிந்தியாவில் உள்ள சிக்கல், எட்டிக்குடி, எண் கண் ஆகிய தலங்களில் உள்ளன. மேற் குறிப்பிட்ட சண்முகர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள குமாரபுரம் எனும் குக தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர் இக் கோயிலைப் போர்த்துக்கேயர் இடித்தபோது இவ்விக்கிரகம் கடல் மார்க்கமாக வாணிபம் செய்பவர்களின் மரக்கலத்தில் மறைத்துக் கந்தவனம் கொண்டுவரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்டது.
இச்சண்முகர் மூலவராய் இருந்தபோது கோயில் மிகவும் சிறப்படைந்தது. இவ்வேளையில் உடுப்பிட்டியைச் சேர்ந்த சிவசம்புப்புலவர் (இவருக்கு ஆறுமுகநாவலரே 'புலவர்' எனும் பட்டம் வழங்கினார்) தமது இரு கண் பார்வையை இழந்த வேளையில் கந்தவனம் வந்து இங்குள்ள நறுநீர்க்கேணியில் நீராடி இப்பழைய

மூலவராக வழிபடப்படும் சிலா சண்முக விக்கிரகம்
சண்முகரை வழிபட்டு 'நான்மணிமாலை' பாட, இவருக்கு இழந்த கண்பார்வை மீண்டும் கிடைக்கப்பெற்றதாக அவர் பாடிய பதிகத்தில் கூறப்படுகிறது. நவாலியூர் சோமசுந்தரப் புலவரும் கந்தவனம் மீது பேரன்பு கொண்டு பக்தியுடன் நான்மணிமாலை பதிகத்தையும் திருப்பள்ளியெழுச்சி போன்றவற்றையும் பாடியுள்ளார். இவருடைய நான்மணி மாலை அரங்கேற்றப்பட்ட வேளை மயில் வந்து தோகை விரித்து ஆடியது. அவ்வேளையிலேயே யோகர் சுவாமிகள் 'ஆடுமயிலே' என்ற பாடலைக் கந்தவனத்தில் பாடினார்.
கச்சியப்பர் கந்தபுராணத்தை
அரங்கேற்றிய போது ஈழத்திற்கு கொண்டுவந்து பாடப்பட்ட கந்தபுராண பிரதிச்சுவடி. இச்சுவடி
இன்றும் திக்கம் சி.செல்லையாப்பிள்ளையி ன் பரம்பரையினரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

Page 53
அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்த் துறைப் பேராசிரியர் கா.கோ.வெங்கட்ராமன் பொலிகண்டி வந்து கந்தவனக் 'கலம்பகம்' எனும் நூலைப்பாடி வெளியிட்டுள்ளார்.
சுமார் நூறு வருடங்களுக்கு முன் கைக்குழைச்சுக் கல்யாண வேலவர் எனும் இம்மூர்த்திக்கு அபிஷேகம் நடைபெறும் போது, அபிஷேகக் குடம் தவறி வீழ்ந்து சுவாமியின் இடது புற வரத கரம் ஊறடைந்தது. அதனால் இதே அமைப்புடைய இன்னோர் சிலா சண்முக விக்கிரகம் கும்பகோணத்திலிருந்து கொண்டுவரப்பட்டு மூலவராக வழிபடப்படுகிறது.
மூன்றாவதாகக் கூறப்படும் (ஆறுமுகநயினார்) இலங்கைக்குக் கிடைத்த ஓர் அரிய பொக்கிஷமாகும். ஏனெனில் இவ்விக்கிரகம் போல் மிகுந்த அழகுடையதும் மிகவும் பெரியதுமான சண்முகர் வேறெங்கிலுமில்லை. (இந்தியாவில் கூட) இதனழகைக் கண்டு திருமுருக கிருபானந்த வாரியார் வியந்துள்ளார். இதற்கு அடுத்த பெரிய திருவுருவமே இந்தியாவின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியிலுள்ள விக்கிரகம் ஆகும். இது சைவப் பெரியார் திக்கம் சி. செல்லையாபிள்ளையின் வேண்டுதலின் பொருட்டு, 1928 ஆம் ஆண்டு கோயிலில் வைத்து வார்ப்பிக்கப்பட்டது. இதன்போது ஊர் மக்கள் அனேகர் ஏராளமான பொன்னை இவ் விக்கிரகம் வார்க்கத் தயாரான ஐம்பொற் கலவையில் சேர்த்தனர். சிலர் தாமணிந்திருந்த திருமாங்கல்யத்தைக் கூட இதில் சேர்த்தனர். தெய்வீகவருளால் ஆறுமுகங்களும் வேறுபாடின்றி ஒரே மாதிரி அழகாக காட்சியளிக்கிறார். அவரைப் பார்க்கும் அடியார்களைப் பார்த்து புன்முறுவல் செய்வது போல் காட்சி கொடுத்து அடியார்களின் முகத்தில் புன்னகையைத் தோற்றுவித்து அருளாட்சி செய்கின்றார்.)
இச்சண்முகர் தேரிற்கும், சூரசங்கார தினத்தில் இரு தடவையுமாக வருடத்தில் மூன்று தடவையே எழுந்தருளுவார். இங்குள்ள சண்முகர்கள் இந்திர மயிலில் அமர்ந்துள்ளனர். இம்மயில்கள் இடதுபுறம் நோக்கியதாக நிற்கின்றன. அருகில் இருபுறமும் வள்ளியம்மையும், தெய்வானையம்மையும் நின்ற திருக்கோலத்திலேயே காட்சி தருகின்றனர். இதுதவிர இங்கு முத்துக்குமார சுவாமியும் காத்திகேயரும் உற்சவ மூர்த்திகளாவர். இத்துடன் திருவிழாக் காலங்களில் விநாயகரும் வேணுகோபாலரும் பரிவார உற்சவ மூர்த்திகளாக வீதிவலம் வருகின்றனர்.
இக்கோயிலின் அமைவு பற்றி நோக்கும் போது, ஆதிகாலத்தில் மூன்று வீதிகளுடன் காணப்பட்டு பின்னர் போர்த்துக்கேயர் காலத்தில் இரு வீதிகளாக மாற்றமடைந்தன. இக்கோயில் வீதிகள் மிகவும்

தாகை அ
ஆலயத்தில் கந்தபுராணம் ஒதும் கலாசாரம்
கிரமமாக முன்னெடுக்கப்படுகிறது
வன்னிமரப் பெருமான்
நறுநீர்க்கேணியும் அதன் நடுவிலே உள்ள கற்பூரக் கல்லும். ஆதிகாலத்தில்
5 இந்த இடத்தில் கற்பூரம் விளைந்ததாக வரலாறு உண்டு.

Page 54
கலைக்கேசரி 2
54
விசாலமும் அழகும் கொண்டவை. அதனால் 'திருவாரூர் தேரழகு கந்தவனத்தெரு அழகு' எனப் பழமொழியுண்டு.
இங்கு ஆனி மகோற்சவம் ஆனி அமாவாசை தொடக்கம் ஆனி முழுமதி வரை நடைபெறுகின்றது. கந்தசஷ்டி கொடியேற்றப்பட்டு மகோற்சவமாக நடைபெறுகின்றது. இது தவிர மாசிமகம், திருவாதிரை என்பனவற்றிற்கும் தீர்த்தோற்சவம் நடைபெறுகின்றது. ஒவ்வொரு வெள்ளி, மாதக் கார்த்திகை என்பனவற்றிற்கும் சுவாமி உற்சவம் நடைபெறுகிறது. மானம்பூ தினத்தன்று மகிடாசூரன் சம்ஹாரம் நடைபெறுகின்றது.
ஆலயத்தின் தல விருட்சமாக வன்னிமரம் தோன்றியது. இங்கு மூன்று வன்னிமரங்கள் உள்ளன. அதில் இரண்டு வன்னிமரங்கள் இரண்டாயிரம் வருடங்கள் பழைமை வாய்ந்தனவாகக் கூறப்படுகின்றன. அவை இன்றும் ஆலயத்தின் வடக்கு திசையில் கம்பீரமாக அழகூட்டி அருள் பாலித்துக் கொண்டிருக்கின்றன. மிக நீண்ட காலத்தின் பின் தற்போது இரண்டு சிறிய வன்னி மரங்கள் பெரிய மரங்களிற்கு அருகில் முளைவிட்டு வளர ஆரம்பித்துள்ளன.
போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகிய அந்நியரின் படையெடுப்புக் காலங்களில் சைவம் அழித்தொழிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது கந்தவன சுப்பிரமணியர் தேவஸ்தானத்தையும் அழிப்பதற்கு வந்த அந்நியப் படையினர் வன்னிமரம் காணப்படும் வட திசையில் அழகான நறுமணம் கமழும் பூக்களைக் கண்டு அவற்றை முகர்ந்தபோது கண்கள் பார்வையை இழக்க, கோயிலை உடைக்க முடியாது திரும்பிச் சென்றார்கள் என்று ஊர்ப் பெரியவர்கள் இன்றும் கூறுகின்றார்கள்.
வன்னி மர் ஆலயம்

ஆலயத்தின் வடக்கு வீதியிலுள்ள நறுநீர்க்கேணி மிகவும் அற்புதம் வாய்ந்தது. இது வீரபாகு தேவரினால் தண்டத்தினால் இடித்து உண்டாக்கப் பெற்றது என்பது
கர்ண பரம்பரைக் கதை. இந்நறுநீர்க்கேணியின் நடுவிலே உள்ள கல்லில் ஆதிகாலத்தில் கற்பூரம் விளைந்ததாக வரலாறு உண்டு. இக்காரணத்தால் இக்கந்தனை 'கற்பூரக் கந்தன்' என்றும் கூறுவதுண்டு. இந்த 'கற்பூரமலை' கற்பூரமாக இருந்தபோது, போர்த்துக்கேயர் வந்து இக்கேணியின் இறங்கியதிலிருந்து அத்தன்மை அற்றுப் போனதாகவும் கூறப்படுகிறது.
இக்கோயிலின் அற்புதங்கள், சிறப்புக்கள் பற்றி நோக்கும்போது, குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் கிட்டும் அற்புதத் தலமாக கந்தவனம் விளங்குகின்றது. அதற்கு மூலகாரணம் இங்குள்ள 'காஞ்சிமா' என அழைக்கப்படும் மாமரத்திலிருந்து கிடைக்கும் கனியாகும். அதாவது ஏழாம் நூற்றாண்டளவில் காஞ்சி நகரிலிருந்து கொண்டுவரப் பட்ட காஞ்சி மாமரம் ஒன்று இக் கோயிலில் நின்றது. இது ஒவ்வொரு காலப் பூசைக்கும் ஒரு மாம்பழம் வீதம் தந்து கொண்டிருந்ததாம். ஆனால் மரத்தில் மாம்பழம் இருப்பது யாருடைய கண்ணுக்கும் புலப்பட மாட்டாதாம். அதன் கனியை
உண்பவர்களுக்கு குழந்தை வரம் கிடைப்பதனால் மகப்பேற்றை வேண்டி, அடியார்கள் அம்மாங்கனியை பெறுவதற்காக ஆலய தரிசனம் செய்வார்கள்.
இக்காஞ்சி மாமரம் சென்ற நூற்றாண்டில் பட்டுப்போன போதிலும் இதன் கன்று மரம் இன்றும் நின்று பயன் அளிக்கின்றது.
மகப்பேற்றை அளிக்கும்
காஞ்சிமா

Page 55
விமானத்தில் காணப்படு
ஒளவையாரின் தோ
Tெ
காஞ்சிமாங்கனியை புசித்து குழந்தைப் பாக்கியம் பெற்றவர்கள் தமது பிள்ளைகளுக்கு 'கந்தவனம்', "கல்யாணவேலன்', 'ஸ்கந்தாரண்யன்', 'கந்தவனநாதன்', "காஞ்சிமாவடிவேல்' போன்ற இக்கோயிற் பெயர்களை
வைக்கும் மரபும் இன்றும் இருந்து வருகின்றது.
இங்குள்ள தேர் மிகவும் பிரமாண்டமானது. இத்தேரும் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் தேரும் ஒரேயளவு கொண்டவை. மாவிட்டபுரம் தேர் நாகர வடிவுடையது. கந்தவனத்திலுள்ள தேர் சுமார் இருநூறு வருடங்களுக்கு முற்பட்டதுடன் திராவிட வடிவுடையது. இன்றும் இத்தேரே வலம் வருவது சிறப்புடையது. முன்னொரு காலத்தில் உற்சவத்தில் தேர் வடக்கு வீதியை அடைந்தபோது, தேர் நகராது நின்று போனது. வடக்கில் வீற்றிருக்கும் சல்லியம்பதி விநாயகப் பெருமான் ஆலயம் சென்று அவருக்குக் காணிக்கை கொடுத்து வேண்டிய போது தேர் நகரத் தொடங்கியது. அன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் சண்முகர் தேரில் ஆரோகணம் செய்ய முன்னர் சல்லியம்பதி பெருமானுக்கு நைவேத்தியம் செய்து வழிபடும் மரபு இன்றும் உள்ளது.

- களைக்சே
விசாலமான வடக்குப் பிரகாரம்
ம உயிரோட்டம் கொண்ட சிற்பங்கள். ல் சுருக்கங்கள் தத்ரூபமானவை. .
இங்கு பெரியானைக்குட்டி, சிந்தானைக்குட்டி, செல்லப்பா சுவாமிகள், யோகர் சுவாமிகள், அருளம்பல சுவாமிகள், நயினாதீவுச் சுவாமிகள் போன்ற பல சித்தர்கள் . வழிபட்டும் பல அற்புதங்களும் செய்துள்ளனர்.
இக்கோயிற் பூசைகள் கும்பகோணத்திலிருந்து வந்து நவிண்டிலில் வசித்து வந்த நவிண்டிற் பிராமண குலத்தவர்களால் ஆற்றப்படுகின்றன. இங்கு தினமும் ஐந்து காலப் பூசை நடைபெறுகிறது.
சைவப் பெரியார் திக்கம் செல்லையாபிள்ளையின் குடும்பமே பரம்பரையாக ஆதீன கர்த்தாக்களாய் இருந்து கோயிலை பரிபாலித்து வருகின்றனர். செல்லையாபிள்ளை 'துகளறு போதம்' எனும் சைவசித்தாந்த நூலிற்கு உரை செய்தவர். இவரின் சிறப்புக்கருதி திருவாவடுதுறை ஆதீனம் 'ஈசானசிவன்' பட்டம் வழங்கி கெளரவித்தது.
இக்கோயில் வடமராட்சிப் பகுதியில் பருத்தித்துறையில் இருந்து தொண்டைமானாறு செல்லும் வழியில், பொலிகண்டி என்னும் சிற்றூரில் கடற்கரையோரமாக எழிலுடன் அமைந்துள்ளது.,
- பஸ்ரியாம்பிள்ளை ஜோண்சன்

Page 56
*56)
எதிரியின் தலையைக் கொய்
சின்னமெனக் கருதிய
தியாவின் வட கிழக்குப் பகுதிகளிலும், பர்மாவின் வட மேற்குப் பகுதிகளிலும் வாழ்பவர்கள் நாகா எனப்படும் பழங்குடி மக்களாவர். அவர்களிடம் ஒரே மாதிரியான கலாசாரமும் பழக்க வழக்கங்களும் காணப்படுகின்றன. நாகலாந்து, மணிப்பூர், அருணாசலப் பிரதேசம் மற்றும் அஸாம் ஆகிய இந்திய மாநிலங்களில்

பது எடுத்து வருவது வீரத்தின்
நாகா பழங்குடி மக்கள்
அவர்கள் பெரும்பான்மையான இனத்துவக் குழுவாக விளங்குகின்றனர்.
நாகா மக்களுக்கு பொதுவான மொழி இல்லை. ஆனால் சீன, எகிப்திய மொழி குடும்பத்தின், திபெத்திய - பர்மிய மொழிக் குழுவின் கிளைகளைச் சார்ந்த மொழியைப் பேசுகின்றனர். நாகலாந்திலும் மற்றும் அயலில் உள்ள இந்திய மாநிலங்களிலும் நாகாமிய கிரியோல் (Nagamese Creole) எனப்படும் மொழியினைப் பேசுகின்றனர். அஸ்ஸாமிய மற்றும் பழங்குடி மொழிகளில் இருந்து உருவான இந்த மொழிகிராம் பழங்குடிகளிடையே பொது
வானதோர் மொழியாக விளங்குகிறது.
2012 ஆம் ஆண்டு நாகலாந்து மாநில அரசு 17 நாகா பழங்குடிகளை உத்தியோகபூர்மாக அங்கீகரித்திருக்கிறது. பெயர் பெற்ற நாகா பழங்குடி இனங்களாக விளங்குபவை அங்கமி, அஓ, சக்கெசாங், சாங், கியம் நியன்கன், கொன்யக், லோதா, பொச்சுரி, பொம், பொமை, பொங்மெய், நாகா, றெங்மா, சங்ரம், செமா (சுமி) மெள (மெமி) மறம் நாகா, யிம்சுங்கர், ஸிலியங் என்பவையாகும்.
இம்மக்களில் 80 சதவீதமானவர்கள் சிறிய ஏகாந்தமான கிராமங்களில் வாழ்கின்றார்கள். அத்துடன் பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்படும் தமது சொந்த

Page 57
கிரியைகளையும் மரபுகளையும் பின்பற்றுகிறார்கள். இவர்கள் இந்திய - - மங்கோலிய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் எனக் குறிப்பிடப்படுகின்றது. வேதங்கள் தொகுக்கப்படும் ஒரு காலத்தில், கிறிஸ்து பிறப்பதற்கு பத்து நூற்றாண்டுகளுக்கு முன்பதாக இவ்விதமாக ஓர் இனம் வாழ்வதாக அறியப்பட்டது.
நாகலாந்து மாநிலத்தின் உத்தியோகபூர்வ மொழி ஆங்கில மாகும். நகரங்களில் வாழும் பெரும்பான்மையான மக்கள் ஆங்கிலத்தைச் சரளமாகப் பேசுகிறார்கள். ஆனால் கிராம் குடி மக்கள் ஆங்கிலத்தைப் பேசுவது மிகக் குறைவு.
பல்வேறு பழங்கு மாவட்டங்களில் 6 நாகாமிய மொழி உ ப யோ கி க் கப் மணிப்பூரில் பெரும் நாக மக்கள் பெரும் (Meitei) மொழியைப் சிலர் நாகலாந்துடன் மெனக் கோருகின்ற பழங்குடியினருக்கு பழங்குடியினருக்கு இடைக்கிடை ெ மோதல்களும் தோல் நாக மக்களிடம் போர் மரபு உண்டு கிராமங்கள், மலை பகுதிகளில் தான் 19ஆம் நூற்றாண்டி வரை அவர்கள், கீழ்ப்பகுதிகளில் சமவெளிகளில் மக்களுடன் இடை மோதல்களை வந்துள்ளனர்.
பெரும்பாலான 1 ஒரே மாதிரியான . உணவு உண்ணும் | வழக்கங்கள், மர சட்டங்கள் ஆகிய பற்றுபவர்களாக இரு
நாகலாந்தின் போராளிகள் மத்தி மாரில் வாழ்ந் பழங்குடியினர் மத் காலத்தில், மனித வேட்டையாடுவது | இருந்தது. எதிரிகளின் கொய்வதன் மூலம் அதிகாரத்தைக் கைட தற்காலத்தில் பழக்கம் அவர்களின் இன்று மொத்தமாக, இலட்சம் நாகா வாழ்வதாக கூறப்படு ஆண்களின் உை மானது தலையி தலையணி அணிந் அதில் காட்டுக் கர மற்றும் வெள்ளை

- எம் ரா
டியினர் வாழும் தொடர்புகளுக்கு . பொதுவாக
ப டு கி றது . ம்பான்மையான ம்பாலும் மீரிய் பேசுகின்றனர். 7 சேர வேண்டு னர். நாகலாந்து ம், மணிப்புரி ம் இடையில் நெருக்கடிகளும் ன்றுகின்றன.
ஒரு பலமான டு. இவர்களது மகளில் உச்சிப்
காணப்படும். டின் பிற்பகுதி மலையின்
உள்ள
வாழ்ந்த க்கிடை ஆயுத
நடத்தி
பழங்குடியினர், உடை முறை, முறை, பழக்க ரபு ரீதியான வற்றைப் பின் நக்கின்றார்கள்.
பழங்குடி யிலும், மியன் தே நாகா தியிலும் ஒரு த் தலையை
வழக்கமாக ன் தலைகளைக் b, அவர்களது ப்பற்றினார்கள்." இவ்விதமான உம் இல்லை. சுமார் இருபது பழங்குடியினர் மகிறது.
ட தனித்துவ ல் சிவப்பு திருப்பார்கள். டியின் பற்கள் - - கறுப்பு

Page 58
கலைக்கேசரி 2
58
Tக
DUா
ஹோர்ன்பில் பறவையின் இறகுகள் ஆகியவற்றை அலங்காரமாக தொடுத்திருப்பார்கள். ஈட்டி அவர்களது பிரதானமான ஆயுதமாகும். இதனை அலங்கரித்து
வைத்திருப்பார்கள்.
நாகர்கள் நடுத்தரமான உயரம் உள்ளவர்கள். சப்பை மூக்கு, வளைந்த கண்களும், சிவப்பு நிறமும், நேரான முடியையும் கொண்டவர்களாகத் தோன்றுவர். பெண்கள் வழமையாக குள்ளமான தோற்றம் உள்ளவர்கள். ஆண்பெண் இருபாலாரும் ஆபரணங்களை அணிவர். நாகாக்களுடைய மேலங்கிகள் (Shawls) பழங்குடியினர் இடையே மிகப் பிரசித்தமானவையாகும். அத்துடன் உடலில் பச்சை குத்திக் கொள்வதும் வழமையான ஒரு நடவடிக்கையாகும்.
அஸாம் ஆட்சியாளர்கள், அண்டையில் உள்ள அஹோம் மக்களுடன் கலாசாரத் தொடர்பினை வைத்திருப்பதைத் தவிர, நாகாக்கள், இந்தியா உட்பட வெளிநாடுகளுடன் 19ஆம் நூற்றாண்டில் இடம்பெற்ற பிரிட்டிஷ் காலனித்துவ நடவடிக்கை வரை தொடர்புகள் எதனையும் கொண்டிருக்கவில்லை.
1826 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தையடுத்து, 1828 இல் பிரிட்டன் அஸாம் மாநிலத்தை இந்தியாவுடன் இணைத்தது. இருப்பினும் பிரிட்டிஷாருக்கும் நாகாக்களுக்கும் இடையில் அடிக்கடி மோதல்கள் நடைபெற்றன. 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டனில் இருந்து வந்த புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மிஷனரிமார் நாகா பழங்குடியினர் பலரையும் கிறிஸ்தவர்களாக்குவதில் வெற்றி கண்டனர்.

அத்துடன் நாகா மலைப்பிரதேசங்களில், ஆங்கிலக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நாகாக்கள் தமது பழங்குடி மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களை . மெல்ல மெல்ல கைவிடும் நிலை ஏற்பட்டது. 1872ஆம் ஆண்டு ஓர் அஸாமிய கிறிஸ்தவரான கொதுலா என்பவரின் உதவியுடன் முதலாவது பப்ரிஸ்ட் தேவாலயத்தை டெக்ஹா ஹெய்மொங் கிராமத்தில் நிறுவினர். இதனைத் தொடர்ந்து நாகா மக்கள் பெருமளவில் கிறிஸ்தவர்களாக, குறிப்பாகப் பப்ரிஸ்ட்டுகளாக மாறத் தொடங்கினர். இன்று நாகா மக்களில் 95 சத வீதமானவர்கள் கிறிஸ்தவர்களாக உள்ளனர்.
இந்த மக்களது சமூக, கலாசார நடவடிக்கைகளில் பெரும் மாற்றம் தோன்ற கிறிஸ்தவ மதமும் மிஷனரி மாரும் காரண கர்த்தாக்களாக இருந்துள்ளனர். மலைப் பிரதேசங்களில் வாழும் நாகா மக்கள், வெளியுலக கலாசாரத்துக்கு அந்நியமானவர்களாக வாழ்ந்து வந்துள்ளதால், எப்போதும் அந்நிய தலையீடுகளுக்கு எதிர்ப்பைக் காட்டியே வந்துள்ளனர். அவர்தம் மரபுப்படி, ஒவ்வொரு கிராமமும் ஒரு சுதந்திரமான குடியரசேயாம். அவர்கள் எப்போதும் வெளியாரின் தலையீடின்றி வாழவே விருப்பம் கொண்டவர்கள்.
1947 ஆம் ஆண்டு இந்தியா பிரிட்டிஷாரிடம் இருந்து சுதந்திரம் பெற்றபோது, இந்தியாவின் வட கிழக்குப் பகுதியில் இருந்து அந்த புதிய தேசத்துடன் சேரவிரும்பாது
எதிர்ப்புத் தெரிவித்த முதல் இனத்துவக்குழு நாகா மக்களாகும். வழமையாக கிராமங்களில் வாழும் நாகா மக்கள், தமது கிராமங்களுக்கு தெளிவான
எல்லைகளைக் கொண்டிருந்தார்கள்.

Page 59
தமது சொந்த அடையாளங்களை இக்கிராமத்தவர்கள் கொண்டிருந்தாலும், அந்நியப் பட்டவர்களாக வாழவில்லை. அண்டை அயல் கிராமங்களுடன் தொடர்பு உடையவர்களாகவே இருந்தார்கள். பெரும்பாலும் ஒவ்வொரு வீட்டாரும் பன்றிகளை தமது உணவுக்காக வளர்த்தார்கள். நாகா - மலைகளின் - ஒவ்வொரு பிராந்தியத்திலும் பெரும் வர்த்தக நகரங்கள் வேகமாக வருவதால், நவீனத்துவம் மெல்ல மெல்ல ஊடுருவிக் கொண்டிருக்கிறது.
பெண்ணின் பங்களிப்பு பல்வேறு வகைப்பட்டதாக இருக்கிறது. மனைவி, தாய், பிள்ளைகளைப் பெற்று வளர்க்கின்றவள் என்பதுடன் குடும்பத்தை நிர்வகிப்பவள், உணவு தயாரிப்பாளர் என்றவாறு கணிக்கப்படுகிறாள். வண்ண மேலங்கிகளை நெய்து விற்பனை செய்வது அங்கு பெண்களுக்குரிய தொழிலாக விளங்குகிறது.
பெண்கள் சமூகத்தில் பெரிதும் மதிக்கப்படுகின்றார்கள். அவர்களுக்கு பெரிதும் சுதந்திரமும் வழங்கப் பட்டிருக்கிறது. இருப்பினும் குலத்தின் நடவடிக்கை மற்றும் கிராமத்தின் விடயங்கள் போன்றவற்றில் முடிவு எடுக்கும் பொறுப்பு பெண்களுக்கு இல்லை.
நாகா மக்கள் வாழ்க்கையில் மோரங் (Morung) அல்லது இளைஞர் விடுதி நிலையம் முக்கிய பங்கினைக் கொண்டிருக்கிறது. குடும்பத்திற்கு அப்பால், ஒருவர் இந்நிலையத்தில் வாழ்வது கல்விக்கும் மற்றும் கலாசார விடயங்களுக்கும் முக்கியமானதாக இருக்கிறது. இளைஞர் விடுதிகள் பெரிய கட்டிடமாக, கிராமத்தின் நுழைவாசலில், அல்லது நன்கு காவல் செய்யக்கூடிய முக்கிய இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும். பருவம் அடையும் காலத்தில் சிறுவர்களும், சிறுமிகளும் இங்கு அவரவர் விடுதிகளில் அனுமதிக்கப்படுகின்றார்கள்.
லோதா, அஓ, அன்கமி மற்றும் செமா ஆகிய இனக்குழுக்கள் மிகப் பிரபலமானவை. இவை நாகலாந்தில் உள்ள ஏனைய நாகா பழங்குடிகளை விடகூடுதலான
மக்கட்
தொகையைக் கொண்டவையாகும்.
நாகா சமூகத்தில் அடிப்படை அலகாக இருப்பது குடும்பம் தான். வழமையாக திருமண வாழ்வு ஒருவனுக்கு ஒருத்தி என்பதாகவே உள்ளது. வாழ்க்கைத் துணைக்கு விசுவாசமாக இருக்கும் பண்பு போற்றப்படுவதாக உள்ளது. ஒரு கோத்திரத்திற்குள் திருமணம் செய்து கொள்வது, பாலுறவு ரீதியில் ஒவ்வாதது என்பதால், அது தடுக்கப்பட்டுள்ளது. மீறித் திருமணம் செய்பவர்கள் கிராமத்தில் இருந்து ஒதுக்கி விடப்படுகிறார்கள்.
சமூகக் கட்டுபாடுகளுக்கு குடும்பமே மிக முக்கியமான அமைப்பாக விளங்குகிறது. நாகா சமூகத்தில் பெற்றோருக்கும் முதியவர்களுக்கும் மிகுந்த மரியாதை கொடுக்கின்றனர். நிலம், கால்நடை போன்ற தாய்வழிச் சொத்துக்கள், ஆண்வாரிசுகளுக்கு வழங்கப்படுகின்றன. அதிலும் மூத்த மகனுக்கு கூடுதல் பங்கு கிடைக்கின்றது.
மாக

เราก็ไม่มีป"

Page 60
--------
បង ++
EAE
ក៏យការគំ ទី៥ | 60
និងគpaាង ម ង
LIFEME

இந்தியாவில் உள்ள வேறு இன மக்களோடு ஒப்பிட்டு பார்க்கும்போது, குடும்பத்திலும் சமூக விவகாரங்களிலும் நாகா பெண்களுக்கு, மரபு ரீதியான உயர்ந்த சமூக அந்தஸ்து உள்ளது. பலமான போர் வீரர் மரபுள்ள நாகா சமூகத்தில், ஆண் பிள்ளைகளின் பிறப்புக்கு பெரும் வரவேற்பு உண்டு. மரபு வழியாக பெண்களைப் பொறுத்த வரை அவர்கள் கீழ்ப்படிவுள்ளவர்களாகவும் பணிவு நிறைந்தவர்களாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றனர்.
பெரியவர்கள் இப்பிள்ளைகளுக்கு அங்கு சந்ததி சந்ததியாக கடத்தப்பட்டு வரும் நாட்டுப்பாடல் இசை, நடனம், நாட்டுப்புறக் கதைகள், மரபுகள், பழக்க வழக்கங்கள், மரச்சிற்ப வேலை, நெய்தல் வேலை போன்றவற்றை கற்பிக்கின்றனர். கூட்டங்கள் பற்றி அறிவிப்பது, கிராமத்தில் ஒருவர் காலமானதை அறிவித்தல், அபாய அறிவிப்புகளை மேளத்தை அடிப்பதன் மூலம் அறிவிப்பது போன்றவையும் இங்கிருந்து மேற்கொள்ளப்படுகின்றன. நாகாக்கள் நவீன நடைமுறைகளைப் பின்பற்ற ஆரம்பித்ததில் இருந்து, தமது பிள்ளைகளை இந்நிலையங்களுக்கு அனுப்பி நேரத்தை வீணாக்குவதை தவிர்த்துக் கொண்டுள்ளனர்.
மனித தலையை வெட்டி எடுக்கப் போராடும் நாகாக்க ளின் நடவடிக்கையைப் பார்த்து ஐரோப்பியர்கள் அதிர்ச்சிய டைந்திருக்கிறார்கள்.
'நாகா மலைகள், தலைகளை வேட்டையாடுவோரின் சொர்க்கம்' என ஊர்சுலா கிராகம் போவர் என்பவர் வர்ணித்திருக்கின்றார்.
பெரும்பாலான கிராமங்களில் மண்டை ஓடு இருக்கும். கிராமத்தில் ஒவ்வொருவரும், இதற்குப் பங்களிப்புச் செய்ய வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறார்கள். தலையை கொய்வது என்பது ஆண்மையின் சின்னம் எனக் கருதப்படுகிறது. அவ்விதம் செய்ய முடியாத ஆண்கள் பேடி அல்லது பசுமாடு என கேலி செய்யப்படுகிறார்கள். எதிரிகளிடம் சண்டையிட்டு வென்று அவர்களது

Page 61
தலைகளை வீட்டுக்கு எடுத்து வருவதைத்தவிர, பெரு மதிப்பு தரும் விடயம் வேறு எதுவுமில்லை என அவர்கள் நம்புகின்றனர். மனிதர்களைக் கொன்று புசிக்கும் பழக்கம் நாகாக்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. கிறிஸ்தவ மதம் பரவியதைத் தொடர்ந்தும், நவீன கல்விமுறை அறிமுகமானதைத் தொடர்ந்தும், தலையை வெட்டும் கொடூரம் ஒழிக்கப்பட்டுள்ளது.
தொடந்து ஏற்பட்டு வந்த மாற்றங்கள் நாகா சமூகத்தையும் மாற்றியிருக்கிறது. வயது மூத்தோருக்கும் இளையோருக்குமிடையில் மரபு ரீதியான தொடர்புகளும் மாற்றம் கண்டுள்ளன. அது போலவே கலாசார தொடர்புகளும் மாற்றம் கண்டுள்ளன. தற்போது நாகா சமூகம் இந்திய சமூகத்துடன் தொடர்புகளை வைத்துக் கொண்டிருப்பதால், தனித்தனி குடும்ப அமைப்புகளும் பரவலாகத் தோன்றி வந்துள்ளன. குலமும், கிராமங்களும் சமூகக் கட்டுப்பாடுகளைக் கொண்டிருப்பவை என்பதால்
அவையும் ஒழிக்கப்பட்டு வருகின்றன.
நாகா பழங்குடியினர் மிகச் சிறந்த கைவினைக் கலைஞர்களாக விளங்குகின்றனர். ஒவ்வொரு இன நாகாக் களும் தமது குடிசைகளை தமக்குரிய தனித்துவமாகச் சிறப்பாக அமைத்துக் கொள்கின்றனர். எருமைத் தலைகளை வைத்து தமது வசிப்பிடங்களின் முகப்புப் பகுதியை அலங்கரிப்பது இந்தப் பழங்குடியினரிடம் பொதுவான வழக்கமாக உள்ளது.
நாகா மக்கள் நிறங்களில் மிகவும் விருப்பம் உள்ளவர்கள். இதனை பெண்கள் நெய்யும் மேலங்கிகள் மூலமும் தலை அணியின் மூலமும் அறியலாம். ஒவ்வொரு இனத்துக்கும் ஆடை அணிதல் வித்தியாசமாக அமைந்திருக்கும். அவர்கள் பல்வேறு விதமான மணிகள் மற்றும் கண்ணாடி, சிப்பி, கல், பற்கள், யானைத் தந்தம், நகங்கள், உலோகப் பொருட்கள், எலும்பு, மரம், விதைகள், கேசம் மற்றும் தும்பு போன்றவற்றையும் உபயோகிக்கின்றனர். தமக்கு வேண்டிய பொருட்கள் அனைத்தையும், அதாவது துணிவகைகள், தொப்பிகள்,

கலைக்கேசரி
61
மழைக்கோட்டுகள், மருந்து வகைகள், சமையல் பாத்திரங்கள் உட்பட எல்லாவற்றையும் தாமே தயாரித்துக் கொள்கின்றனர். கை வேலைகளில் கூடைகள் பின்னுவது, துணிகளை நெய்வது மரச் சிற்ப வேலை, மட்பாண்ட வேலை, உலோக வேலை, ஆபரணத் தயாரிப்பு, மணிகள் அலங்காரம் போன்றவை அடங்கும்.
மரபு ரீதியான நாகா கலாசாரத்தில் நாட்டுப்புறப். பாடல்களும் நடனங்களும் மிக முக்கியமானவையாக விளங்குகின்றன. கிராமியப்பாடல்கள் காதல் பாடல்களாகவும் அவர்களது முன்னோரின் வரலாற்றைக் கூறுபவையாகவும் அமைந்திருக்கும். பருவ காலங்களுக் குரிய விவசாய பாடல்களும் உள்ளன. நாகா கிறிஸ்தவர் களால் பாடப்படும் கிராமியப் பாடல்களை முன்னைய கிறிஸ்தவ மிஷனரிமார்கள் எதிர்த்தார்கள். காரணம் அவை ஆவி வணக்கம், போர் சிரஞ்சீவத் தன்மை ஆகியவற்றை எடுத்துக் கூறுவதினாலாகும்.
இதன் பயனாக, மேற்கத்தைய பக்திப் பாடல்களின் மொழிபெயர்ப்புப் பாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
நடனத்தைப் பொறுத்தவரை பெரும்பாலும் ஆண்களும் பெண்களும் குழுவாக சேர்ந்தே நடனமாடுகின்றனர். உற்சவங்களின் போதும் சமய விழாக்களின்போதும் வழமையாக நடனம் ஆடப்படுகின்றது. ஆண்களால் போர் நடனங்கள் ஆடப்படுகின்றன. இவற்றிக்கு உள்ளூரில் செய்யப்பட்ட வாத்தியக் கருவிகள் உபயோகிக்கப்படும்.
குகி (Kuki) என்ற இனத்தவர் நாகா பழங்குடியைச் சேர்ந்த வர்கள் அல்ல என்றாலும், அவர்களும் நாகலாந்தில் வாழ்ந்து வருகிறார்கள். கடந்த காலங்களில் இந்த குகி இனத்தவர் நாகாக்களுடன் நல்லுறவுடனேயே வாழ்ந்து வந்தனர். ஆனால் 1990ஆம் - ஆண்டுகளுக்குப்பின் அவர்களுக்கு இடையில் மோதல்கள் ஏற்பட்டு வந்துள்ளன. குறிப்பாக மணிப்பூரில் நாகா தேசிய வாத உணர்வு மேலோங்கியதுடன் குறிப்பிட இடங்களில் இருந்து குகிகளை வெளியேற்றும் முயற்சிகள் இடம் பெற்று வருகின்றன. ),
-லஷ்மி

Page 62
கலைக்கேசரி த 62 நினைவுத்திரை
நடிப்பிசைப்புலவர் கே.ஆர்.ராமசாமி
- பத்மா சோமகாந்தன் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி என நடிப்பில் புகழ்பூத்த பலரை வரிசைப்படுத்தலாம். அதே போல இசையில் புலமை பெற்ற செம்மங்குடி ஸ்ரீநிவாசன், தண்டபாணி தேசிகர், எம்.எஸ்.சுப்புலஷ்மி என ஏராளமான புலமையாளர்களை நாம் நினைவில் மீட்டிப் பார்க்கலாம். ஆனால் நடிப்பிலும் இசையிலும் புலமை பெற்றிருந்த மிகச் சிலருள் நடிப்பிசைப்
புலவர் கே.ஆர்.ராமசாமி என்றும் மறக்க முடியாதவர். அவருடைய குரலிலே மண்ணின் மணமும் பண்ணின் இனிமையும் நடிப்பின் நேர்த்தியும் இயல்பாகவே செறிந்திருப்பதனை ரசித்த அறிஞர் அண்ணா அவர்களே ராமசாமியை 'நடிப்பிசைப் புலவர்' எனப் புகழ்ந்து பாராட்டினார்.
ஏழு வயதிலேயே 'பாய்ஸ் கம்பனி' நாடகக் குழுவின் மூலம் நடிப்புலகில் காலடி பதித்த கே.ஆர்.ராமசாமி அவர்கள் குடந்தையை அடுத்த அம்மா சத்திரம் என்ற ஊரில் ராமபத்திரசெட்டியார் - குப்பம்மாள் என்பவர்களின் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார். நடிப்பிலும் இசையிலும் இளமையிலேயே ஈர்க்கப்பட்டுவிட்ட இச் சிறுவன் நாலாம் வகுப்போடு தன் பள்ளிக் கல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு நாடகக் குழுவினரோடு தனது இளமைக்காலத்தை செலவிடத் துணிந்தான்.
சிறுவன் ராமசாமியின் துறுதுறுவென்ற கண்களும் துடிப்பான போக்கும் இயல்பாக இனிமையாக கள்ளமில்லாத அச்சொட்டான சொற்களை உச்சரித்துப் பாடும் வல்லமையும் எல்லோரையுமே கவர்ந்தன. 'பாய்ஸ் கம்பனியிலே' நாடகத்தில் நடிப்பதற்கான உத்திகளையும் பயிற்சிகளையும் சிறு சிறு அம்சங்களையும் விளக்கிக் கற்பித்தனர். அதேவேளை வாய்ப்பு வரும் போதெல்லாம் சின்னச் சின்ன வேடங்களில் அரங்கில் தோன்றி நடிப்பதற்கும் ராமசாமிக்குச் சந்தர்ப்பங்கள் கொடுத்தனர். பெரும் அலையாக திரண்டு வந்து கரையில் மோதி அதிர்வையும் பிரமிப்பையும் தன் கலைத்துவம் மூலம் நிலை நாட்ட வேண்டுமென்று கனவு கண்டு கொண்டிருந்த ராமசாமிக்குக் கம்பெனியார் கொடுத்த வாய்ப்புகள் திருப்தி தரவில்லை. எனவே இவர்களை விட்டு விலகி, தான் இன்னும் பெரிதாக ஏதாவது சாதிக்க வேண்டுமென்ற கனவில் மிதந்தான். தன் மன ஆசையை எப்படியாவது நிறைவேற்ற வேண்டு மென்ற பிடிவாதத் தோடு தன் மனம் போனபடியே தனியே புறப்பட்டுக் கோவைக்குச் சென்றான்.
பை

கோவையிலே டி.கே.சண்முகம் குழுவினரைச் சென்றடைந்தான். அவர்கள் வேண்டுகோளின்படி இவர் பாடிய முதல் பாடலிலேயே குரலின் கம்பீரமும் இனிமையும் தொனியின் லயமும் அப்படியே மனதைக் கவர டி.கே.எஸ் குழுவினர் யாவரும் ஒன்றிணைந்தே தம்முள் ஒருவராக ராமசாமியையும் இணைத்துக் கொண்டனர்.
இளையவனாக இருந்தும் நடிப்பு, இசை இரண்டிலும் ராமசாமிக்கு இருந்த புலமை, தான் ஏற்றுக் கொண்ட தொழில் மீதிருந்த பக்தி, ஒழுங்கு என்பவற்றால் இக்குழுவில் குறிப்பிடக்கூடிய முக்கியஸ்தராக
ராமசாமி வளர்ந்தார். இவர் பிறந்த ஊரான அம்மா சத்திரத்திலே தொடர்ந்து 35 நாட்கள் சிவலீலா நாடகம் நடைபெற்றது. இந் நாடகத்திலே ராமசாமியின் வேடம் ஹேமநாதர். அப்போது இவருடைய தந்தையார் கடுஞ்சுகவீனமுற்று மரணப் படுக்கையில் இருந்தார். இவர் ஏற்றிருக்கும் பாத்திரம்
மிகக் கலகலப்பாகத் தான் மகிழ்ந்திருப்பதோடு ஏனையோ ரையும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டிய பாத்திரம். பகலெல் லம் தந்தையைப் பக்கத்திலிருந்து பராமரித்து விட்டு இரவு அரிதாரம் பூசி, முகத்தைக் கலகலப்பாக்கி உற்சாகம் ததும்ப நடிக்க வேண்டும். இச்சோதனையில் நடித்து ஓரளவு மீட்சி பெற்ற பின்னர் தந்தையின் மரணமும் சம்பவித்தது. மகன் என்ற பொறுப்புடன் சகல கிரியைகளையும் வெகு ஒழுங் காகச் செய்து முடித்த பின்னர், அன்றே ராமாயண நாடக மொன்றில் ஆஞ்சநேயர் பாத்திரம் தாங்கி நடிக்கும் பணி காத்தபடியே இருந்தது.
அனுமன் பாத்திரத்தை வெகு அற்புதமாக நடிக்கும் இவரை விட வேறு யாரையும் பதிலுக்கு விட முடியாததோடு, என்ன செய்யலாமென நாடகக் குழுவினர் தலையை பிசைந்து தத்தளித்துக் கொண்டிருந்த வேளையிலே, தனது தந்தையாரின் மரணச் சடங்கை முடித்த பின் தான் வந்து தனது பங்கை ஏற்று நடிக்கவுள்ளதான செய்தியை நாடனக் குழுவினருக்கு அறிவித்து விட்டார். சோக இருள் சூழ்ந்து சோர்ந்து போயிருந்த ராமசாமி, தனது கடமையை பொறுப்பு உணர்ச்சியோடு ஆற்றத் தலைப்பட்ட தன்மையை, தொழில் பக்தியை டி.கே.எஸ் குழுவினர் வியந்து பாராட்டி நெகிழ்ந்தனர். குறிப்பிட்டபடி நாடகம் நடந்தது; பெரும் வெற்றி பெற்ற நாடகமாகப் புகழும் பரவியது.
இதே குழுவினர் 1935, 41 ஆம் ஆண்டுகளில் தயாரித்து நடித்து வெளிவந்த மேனகா', 'குமாஸ்தாவின் பெண்' என்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் தன் நடிப்பின் திறமையைப் பதிவு செய்த கே. ஆர். ராமசாமி கிருஷ்ணன்

Page 63
- பஞ்சு இயக்கத்தில் வெளியான 'பூம்பாவை' என்ற படத்தில் ஞானசம்பந்தராகப் பாத்திரம் ஏற்று நடித்தார்.
'பூம்பாவை' படம் கே.ஆர்.ஆருக்குப் பெரும் கீர்த்தியை பெற்றுத் தந்தாலும் படங்களில் வாய்ப்பு அதிகமாகக் கிட்ட வில்லை. காரணம் 1943, 44 ஆம் ஆண்டுகளில் உலக மகாயுத்தம் நாடுகளுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்திருந்தமையால் படம் தயாரிக்கும் பிலிம் சுருள் கிடைப்பது அரிதாகவேயிருந்தது. அதனால் பட கம்பெனிகள் பெரும் தாக்கத்திற்குள்ளானதால் படத் தயாரிப்புகள் வெகு குறைவாகவே இடம்பெற்றன.
என்.எஸ். கிருஷ்ணன் சிறை சென்ற போது என்.எஸ்.கே. நாடக சபாவின் பொறுப்பினை ஏற்ற கே.ஆர். ராமசாமி மனோகரா நாடகத்தில் தானே மனோகரா ஆகவும் தாயாக வி.சி.கணேஷனின் மனைவி பத்மாவதியும் நடித்தனர்.
தியாகராஜ பாகவதரும் லட்சுமிகாந்தன் கொலை வழக்கின் குற்றவாளியாகக் கருதப்பட்டுச் சிறை செல்ல நேர்ந்தது. அதனால் திரை இசையில் தோன்றிய பாடகருக்கான வெற்றிடத்தை நிரப்ப வேண்டிய கட்டாயம் கே.ஆர். ஆருக்கு ஆனது. எனவே தான் 1947ஆம் ஆண்டில் வெளியான தெய்வநீதி, 48 இல் வெளியான கிருஷ்ண பக்தி, பில்ஹணா ஆகிய படங்களில் பாடும்
வாய்ப்புகள் இவருக்கே கிட்டின.
திருவிளையாடல் புராணத்தில் உள்ள கதையொன்றினை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட 'தெய்வ நீதி' என்ற படத்தில் வேடனாய் நடிக்கும் கே.ஆர்.ஆர், 'நிரபராதி நானே - நிஜமிது தானே' என்ற பாபநாசம் சிவனின் பாடலைப் பாடித் தான் நிரபராதி என்பதை அறிவுறுத்துவதான பாடல். ஏற்கனவே மரத்தில் சிக்கி இருந்த அம்பொன்று புயல் காற்றில் பறந்து ஒரு பெண்ணின் உயிரைக் குடித்து விட்டது. கொலை செய்த பழி வேடன் மீது சாட்டப்படுகிறது. இச்சந்தர்ப்பத்தில் பழி செய்யாத வேடனாக நிற்கும் கே. ஆர்.ஆரின் பாடல் எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டது. அத்தனை உணர்வுபூர்வமாக அப்பாடலை உருகிப் பாடிய சிறப்பு
இந்த நடிப்பிசைப்புலவரின் தனி சொத்தேதான்.
'ஏழையின் சிரிப்பிலே தான் இறைவனைக் காண வேண்டும்' என்பது போன்று பல தத்துவ முத்துக்களை உதிர்த்த அறிஞர் அண்ணா, கே.ஆர்.ஆரின் நாடகக் குழுவுக்காகவே வேலைக்காரி, ஓர் இரவு என்ற நாடகங்களை எழுதினார். இந்நாடகங்கள் திரை வடிவம் பெற்ற போது, வேலைக்காரி படத்தில் 'இன்னமும்
இ-Ag

, கலைக்கேசரி
63
பாராமுகம் ஏனம்மா?' என்ற கீர்த்தனை போன்ற பாடலையும் 'எப்படி வாழ்வேன்' என்ற பாடலையும் இவரே பாடினார். இப்படங்களில் இவர் நடிப்பும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. ஆனாலும் பகுத்தறிவுப் பிரச்சாரமும் நாத்திகவாதமும் மேம்பட்டிருந்த நாயகனான கே.ஆர்.ஆரின் நடிப்பை விஜயகுமாரி போன்ற மாயாஜாலப் படங்களில் மக்கள் பெரிதாக வரவேற்க வில்லை என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
அறிஞர் அண்ணாவின் பகுத்தறிவுக் கொள்கையோடு நன்கு ஊறிப்போய் விட்ட கே.ஆர்.ஆர். அண்ணாவின் செல்லப்பிள்ளையாகவே வளர்ந்ததுமல்லாமல் தான் உழைத்துத் தேடிய செல்வம், உடல், பொருள், ஆவி அனைத்தையும் அண்ணா முன்னெடுத்த இயக்கத்திற்கே அர்ப்பணித்தாரென ராமசாமியின் மனைவியார் கல்யாணி ஓர் இடத்தில் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.
ஓர் இரவு படத்தில் கே.ஆர்.ஆர். 'என்ன உலகமடா, இது ஏழைக்கு நரகமடா' என்ற பாடலையும் பாடினார். எழுத்தாளர் லட்சுமியின் காஞ்சனையில் கனவு என்ற நாவல் 'காஞ்சனா' என பெயரிடப்பட்டு வெளிவந்த படத்தில் லலிதாபத்மினியுடன் ஜமீந்தார் வேடத்தை ஏற்று நடித்தவர் இந்த நடிப்பிசைப் புலவரே.
'துளி விஷம்' என்ற படத்தில் சிவாஜி வில்லனாகவும் இவர் கதாநாயகனாகவும் நடித்துள்ளனர். சூலமங்கலம் ராஜலட்சுமியுடன் இவரும் சேர்ந்து இப்படத்தில் 'சம்மதித்தால் என்றும் சந்தோஷமே' என்ற டூயட் பாடலைப் பாடியுள்ளார். - அண்ணா கதை வசனத்தில் 'சொர்க்க வாசல்' படத்தில் கலைஞன் மதிவாணன் வேடத்தில் 'கன்னித் தமிழ்ச் சாலையோரம் கவிதைக்கனிகள்' என்ற பாடல் உச்சமாக ஒலித்து எல்லோர் மனதையும் கவ்வியது. இவர் நடித்த எல்லாப் படங்களும் வெற்றிப் படங்களாக முன்னணியில் இல்லா விட்டாலும் பாடல்கள் பெரும் கீர்த்தியை ஏற்படுத்தின.
நாடோடி, அரசகட்டளை, நம்நாடு ஆகிய படங்களில் எல்லாம் எம்.ஜி.ஆரோடு சில சிறு வேடங்களில் நடித்து மகிழ்ந்த கே.ஆர்.ஆர் 1971 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார். அவருடைய நடிப்பும் இசையும் மக்கள் மனதில் என்றும் நினைவிலேயே இருக்கும். "

Page 64
கலைக்கேசரி து 64 பாரம்பரியம்
ஆயுளைக் கூட்டும் இஞ்சி
டாக்டர் திருமதி. விவியன் சத்தியசீலன்,
சிரேஷ்ட விரிவுரையாளர்.
இலக்கியத்தில் இஞ்சி: மதுரைக்காஞ்சியில் இஞ்சி கல்தரையிடத்தே குவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்படுகின்றது. ''இஞ்சி மஞ்சள் பைங்கறி பிறவும் பல்வேறு தாரமொடு கல்லகத்து ஈண்டி ''
(மதுரைக்காஞ்சி 289-290) பட்டினப்பாலை இஞ்சி கழனியில் விளைவதைக் கூறுகின்றது.
''முதற் சேம்பின் முளை இஞ்சி'' (பட்டினப்பாலை - 19) இஞ்சி ஓராண்டுச் செடி. அகன்ற நீண்ட இலைகளை உடையது. செடிக்கு அடியில் மண்ணில் புதைந்து வளரும் மட்ட நிலத் தண்டைக் கொண்டது. இஞ்சியில் கணுக்கள் இருப்பதால் இஞ்சியைத் தரை மட்டத் தண்டு எனலாம்.
''இஞ்சிக் கிழங்குக் கிருமல்ஐயம் ஓக்காளம் வஞ்சிக் குஞ் சன்னிசுரம் வன்பேதி - விஞ்சுகின்ற சூலையறும் வாதம் போந் தூண்டாத தீவனமாம் வேலையுறுங் கண்ணாய் - விளம்பு''
''இஞ்சியின் குணமே தென்றி யல்புட ணுரைக்கக் கேளீர் அஞ்சிடுஞ் சன்னியெல்லா மகன்றிடும் பித்த தோடம் நெஞ்சினி லிருமற் கோழை நெகிழ்ந்திடும் கபங்கள் தன்னை மிஞ்சினி வருமோ வென்று விளம்பிடும் தேவ நூலே மண்ணிலாக் கோட்டையொன்று மாத்திரமே கற்பமென்று
இஞ்சியை தோல் நீக்கி பக்குவப்படுத்தி தேனில் ஊ தினந்தோறும் கல்ப முறைப்படி உட்கொண்டால் நல இன்றி நீண்ட நாள் வாழ்வதுடன் தேகமும் அழகு பெ மனோபலமும் உண்டாகும்.

தெண்ணிக்கை யாகி யிருக்கு மே - கண்ணுக்கு நன்முறையாஞ் சீதளத்தை நாடாம் லேயடிக்குந் தின்முறை நீயறிந்து தின்” இஞ்சியால் இருமல், ஈளை, வென்னோக்காளம், அழற்குற்றம், வளிசூலை, முக்குற்றநோய்கள்,
- கோழைக்கூட்டம், செரியாக்கழிச்சல் இலைபோம். பசியுண்டாகும்.
இஞ்சி ஒரு கற்பமருந்து. இது கண்களுக்கு நலத்தை பயக்கும். கபக்குற்றத்தைப் போக்கும்.
''இருந்தே லைக்கார மெய்தயின்று மீறி யிருந்தே லைங்கார மெய்தி - இருந்தேன் நீவி ரகசியமா நென்மா வுடன்கலந்து நீவி ரகசியமா நெய்'' தேனில், இஞ்சியைக் கீற்றுக் கீற்றாக கீறியிட்டு அது நன்றாய் ஊதிய பின்பு, அதை மனத்திடத்துடன் கல்ப முறைப்படி உண்ணுதல் நல்லது. அங்ஙனம் உண்டால் நரை, திரை, மூப்புகளற்று வாழலாம்.
இஞ்சியை தோல் நீக்கி பக்குவப்படுத்தி தேனில் ஊறவைத்துத் தினந்தோறும் கல்ப முறைப்படி உட்கொண்டால் நரை, திரை, மூப்பு இன்றி நீண்ட நாள் இருப்பதுடன் தேகமும் அழகு பெறும். மனோபலம் உண்டாகும்.
பத்திய உணவு: நெற் பொரிமாவுடன் பசுவின் நெய் சமன் க ல ந் து ஆகாரத்திற்குப் ப தி ல ர க உ ண் ண வேண்டும்.
றவைத்து -ர, திரை, மூப்பு
றும்;

Page 65
இஞ்சியானது பூக்கும் ஒரு வித்திலைத் தாவரமாகும். பல்லாண்டு வாழும் செடியாயினும் ஓராண்டில் இஞ்சிக் கிழங்கு முற்றி விடுவதால் தரையின் மேல்வரும் தண்டும் இலைகளும் காய்ந்து விடும். ஆகவே இது ஓராண்டுச் செடியாகும்.
இஞ்சியின் மேல் தோலை நீக்கிய பின் கல்சியம் சல்பேற் அல்லது கல்சியம் காபனேற் இடப்பட்டு உலர்ந்த பின் கிடைப்பது 'சுக்கு' அல்லது 'வேர்க்கொம்பு' எனப்படும். இஞ்சி, சுக்கு இரண்டுமே மருத்துவ குணம்மிக்கவை.
இஞ்சியைத் தோல் நீக்கி, சீவி, இடித்து சாறு பிழிந்து 750 மில்லி அளவு எடுத்து 500 கிராம் சீனியை சிறிது நீரில் கலந்து அதில் மேற்கண்ட இஞ்சிச் சாற்றைக் கலந்து
அடுப்பில் வைத்து சர்பத் பதமாகக் காய்ச்சி எடுக்க வேண்டும். அதில் ஒரு தேக்கரண்டியளவு குழந்தைகட்கும் மூன்று தேக்கரண்டி பெரியவர்கட்கும் கொடுக்க சீரணசக்தி, பசி ஏற்பட்டு வாய்வு கலையும்.
* இதேபோல் சீனிக்குப் பதில் பனை வெல்லம் எனும் கருப்பட்டியைச் சேர்த்து அல்வா போல கிண்டி எடுத்து ஆறியதும் வில்லைகளாக நறுக்கி வைத்துக் கொண்டு பயன்படுத்தினாலும் மேற்கூறிய பயன்களைத் தரும்.
* இஞ்சியை தோல் சீவி பசுப்பால் விட்டரைத்து 2 கிராம் அளவு 8 மில்லி பசுவின் பாலில் (காய்ச்சிய) கலந்துண்ண வயிற்றுப்புண், குடல் அழற்சி, வாய்வு குணமாகும்.
* நீரிழிவு நோயாளிகள் தினமும் இஞ்சிச் சாறு 5 மில்லி லீற்றர் அருந்த நாவறட்சி, உடல் களைப்பு நீங்கும்.
* இஞ்சியைத் தோல் நீக்கி வாயில் போட்டு மென்று உமிழ்நீரைத் துப்ப தொண்டைப்புண், குரற்கம்மல் இவைகள் குணமாகும்.
* செரியாக் கழிச்சலுக்கு இஞ்சிச் சாற்றை, தொப்புளைச் சுற்றி தடவலாம்.
* இஞ்சிச் சாறு 10 மில்லி லீற்றர், வெங்காயச் சாறு 10 மில்லி லீற்றர் கலந்துண்ண வாந்தி, ஓங்காளம் நீங்கும். இஞ்சிச் சாறு ஒரு மேசைக்கரண்டி, ஈரவெந்தயச்சாறு ஒரு மேசைக்கரண்டி, எலுமிச்சம்பழச்சாறு ஒரு மேசைக்கரண்டி இம்மூன்றையும் கலந்து காலை, மாலை 3 நாட்கள் அருந்த ஆஸ்துமா குணமாகும்.
தாவரவியற் பெயர் - Zingiber Officinale) - குடும்பம் - Zingiberaceae .

* இஞ்சியின் மேலுள்ள தோலை நீக்கிவிட்டுச் சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி 200 கிராம் இஞ்சியை 300 கிராம் தேனில் ஊற வைக்க வேண்டும். 2 வாரம் ஊறிய பின்பு ஒரு தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட அஜீரணம், பசி மந்தம், மலச்சிக்கல் இவை நீங்கி இரத்தம் சுத்தமாகும். வாய்வுக் கோளாறுகள் நீங்கும். பற்களுக்கும் உறுதியளிக்கும். கண்களின் பார்வை தெளிவுறும்.
* இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உப்புடன் கலந்து ஊறப் போட வேண்டும். நாள்தோறும் குலுக்கி, குலுக்கி வெயிலில் வைத்து எடுக்க வேண்டும். ஒன்றாக ஊறிய பின்பு தினசரி ஊறுகாய் போல் உணவுடன் சில துண்டுகளை சாப்பிடலாம். இதனால் வாத, பித்த, கபநோய்கள் வராமல் பாதுகாக்கலாம்.
இஞ்சித் தேனூறல்: இஞ்சிச்சாறு, தேன் சேர்த்து தேன்போல் பாகு செய்து, குங்குமப்பூ, ஏலம், சாதிக்காய், கராம்பு இவற்றை பொடி செய்து, தூவிக் கிளறி எடுத்து நன்றாக சுத்தம் செய்த பீங்கான் போத்தலில் சேகரித்து ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட வயிற்றுப்பொருமல், வாந்தி, குடல் நோய் ஆகியன நீங்கும்.
* இஞ்சியை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நெய்யில் பொரித்தெடுத்து உலர்த்தி பொடித்து போத்தலில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். சமிபாடின்மை, சுவையின்மை, வயிற்றுப் பொருமல், ஓங்காளம் போன்றவற்றிற்கு 4 கிராம் அளவு வெந்நீரில் எடுக்க நல்ல குணம் கிடைக்கும். சாதாரணமாகவே வீட்டில் நாம் தயாரித்து வைத்து பயன்படுத்தக்கூடிய தொன்றாகும். * ''காலையின் இஞ்சி கடும்பகல் சுக்கு மாலையில் கடுக்காய்'' கொள்ள மனிதர்கள் நூறாண்டு காலம் வாழலாம் என்பது பழமொழி மட்டுமல்ல அனுபவ பூர்வமாக அறிந்து கொள்ளப்பட்ட உண்மை.

Page 66
கலைக்க்ேசரி 66
* ஜீவ சத்துக்கள் சிதைக்கப்படாமல், இரசாயனங்கள் கலக்கப்படாமல் கிடைக்கும் வெல்லத்துடன் ஆயுளைக் கூட்டவும் பித்தத்தை தணிக்கவும் இளநரையை இல்லாமல் செய்யவும் இஞ்சியும் பசுவின் பாலும் கலந்து பருகுதலே சிறப்பு. இது காலை அருந்த வேண்டிய பானமாகும்.)
* இஞ்சியை ஏலக்காயுடன் சேர்த்து அரைத்து விழுதாக்கி 2 கிராம் அளவு தினமும் சாப்பிட்டு வந்தால் பசி எடுக்கும்.
* இஞ்சிச் சாறு, வெங்காயச்சாறு, தேன் மூன்றையும் சம் அளவு கலந்து குடித்தால் இருமல், சளி போன்றவை குணமாகும்.
* இஞ்சிச் சாற்றில் நாவல் விதைப் பருப்புகளை ஊற வைத்து சாறு சுவறி உலர்ந்ததும் பொடித்து 2 கிராம் அளவு சாப்பிட்டுவர நீரிழிவு குணமாகும்.
* புதினாக் கீரையுடன் இஞ்சி சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம், பித்தம் குணமாகும்.
* இஞ்சிச் சாற்றில் வெல்லம் கலந்து குடித்தால் வாதநோய்கள் குணமாகும்.
* இஞ்சியை கொத்தமல்லி சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் வயிறு இரைச்சல் குணமாகும்.
* இஞ்சியை தோல் நீக்கி, தண்ணீரில் போட்டுக் காய்ச்சி அதில் பால் (2 கப்) ஏலக்காய் பொடி, சிறிது குங்குமப்பூ, கற்கண்டு ஆகியவற்றை கலந்து குடித்தால் உடல் வனப்புப் பெறும். இளமையும் திரும்பும்.
இஞ்சி ஊறுகாய்: தோல் நீக்கிய 500 கிராம் இஞ்சியை சேகரித்து சிறு துண்டுகளாக நறுக்கி 500 மில்லி எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு நன்றாக ஊற விட வேண்டும். 100 கிராம் பச்சை மிளகாயை தொடர்பு நீக்காமல் வகிர்ந்து போட்டு 3 தேக்கரண்டி உப்பையும் கலந்து பாத்திரத்தை மெல்லிய சுத்தமான வெள்ளைத் துணியால் மூடி வேடுகட்டி வெயிலில் வைக்க வேண்டும். இவ்வாறே 3 நாட்கள் வெயிலில் வைத்து எடுத்து சிறிது கடுகைத் தாளித்து

இஞ்சிக் கலவையில் கொட்டிக் கிளற வேண்டும். உணவோடு இந்த ஊறுகாயை சேர்த்துக் கொள்ள பசி, மந்தம், அஜீரணம், வயிற்றுப்பொருமல், வாய்வு ஆகியவை முற்றாக நீங்கும்.
இஞ்சி லேகியம்: வயிறு தொடர்பான பிணிகளை குணப்படுத்த இஞ்சி லேகியம் சிறந்தது. இதனை எந்தச் சிரமமும் இல்லாமல் வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம். 2 லீற்றர் அளவு இஞ்சிச் சாறு எடுத்து, பசுவின் பாலில் அவித்து எடுத்த 15 கிராம் வெள்ளைப் பூண்டை நசுக்கி அச் சாற்றில் போடவும். பின்பு மிளகு, சீரகம், ஓமம், வெந்தயம் ஒவ்வொன்றும் 15 கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும். வெந்தயத்தை கழுவிக் காய வைத்து மற்ற மருந்துச் சரக்குகளோடு சேர்த்து இடித்துக் கொள்ள வேண்டும். அதிமதுரம் 15 கிராம், ஏலரிசி 15 கிராம் இடித்து சேர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் 500 கிராம் பனைவெல்லம் சேர்த்து அடுப்பேற்ற வேண்டும். 150 மில்லி லீற்றர் பசுவின் பாலை ஊற்றி இளகியதும் இஞ்சிச் சாற்றை ஊற்றிக் கிளறவும். லேகிய பக்குவத்திற்கு வந்ததும் 150 கிராம் நெய்விட்டு கிளறி எடுத்து பத்திரப்படுத்தவும். 5 கிராம் அளவு காலை, மாலை சாப்பிட வயிறு தொடர்பான எல்லாக் குறைபாடுகளும் துரிதமாகக் குணமாகும்.
மருத்துவ நோக்கிலும் சமையலிலும் இஞ்சிக்கு சிறப்பான இடமுண்டு. இஞ்சி கார்ப்புச் சுவையும், குருத் தன்மையும் வறட்சியும், உஷ்ண வீரியமுள்ளதாகும். உண்டபின் ஐடராக்கினியுடன் (சமிபாட்டுக்கு தேவையான அக்னி) சேர்ந்து பக்குவமடையும் போது இனிப்புச் சுவை கொள்ளும். ஐடராக்கினியை வளர்க்கும், மலத்தை இளக்கும், கபத்தையும் வாதத்தையும் தணிக்கும், இரத்தத்தை சுத்திகரிக்கும். உணவுகளுக்கு வாசனையூட்டுவதற்குக் கூட இஞ்சியை பயன்படுத்தலாம். உணவுடன் சேர்த்தே - இஞ்சியை எடுக்கும்போது எத்தனையோ நோய்களின் தாக்கத்திலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் முடியும்.'

Page 67
Srilankan FLYSMILES
Srilankan
Airlines
It's good when
Introducing the 'Double Up' SriLankan Airlines Standa the benefits. Your doubled privileges include two comp
overseas,
A complimentary Air
Enjoy FlySmiles Silver Tier benef
Over 50 excit
• Airport yQ Meet & As
Applicable for Primary Credit Cardholders only. Conditions apply.
Standard Chartered Bank is a licensed bank supervised by the Central Bank of Sri Lanka and is rated AAA (ika) by Fitch Ratin

Standard Chartered : Here for good
people flying for the price of one
times the FlySmiles
miles earned
credit card that makes it all happen
TBWA\TAL
a card gives you double the benefits
ird Chartered Platinum Card; the only credit card that gives you twice limentary air tickets and 2 FlySmiles miles for every LKR 100/- spent making your travel experience exciting and full of unrivalled rewards.
Benefits at a glance: A complimentary Air Ticket for your companion with your new card Ticket for your companion, on the anniversary of every year OR upon eaching a minimum spend of LKR 350,000 during a 12-month period
• Earn 2 FlySmiles miles for every LKR 100 spent overseas
• Earn 1 FlySmiles mile for every LKR 100 spent locally
• Up to 5000 Bonus FlySmiles miles on balance transfers
• 2000 Bonus FlySmiles miles when you apply online its, such as lounge access, excess baggage, priority and much more
• Free overseas travel insurance up to USD 250,000
• Free International Concierge Service * Zero surcharge on Air Tickets through partner travel agents
• Up to 75% off at more than 65,000 hotels worldwide
• Exciting golf, shopping and travel discounts worldwide ng deals at dining, travelling, shopping and other outlets island wide ist service to fast track immigration at over 280 International Airports
Sign up for a Credit Card via www.standardchartered.com.lk
For more information
A 011 2480280
slanka Lid.

Page 68
Printed and published by Express Newspapers (C

இலங்கையின் அரவணைப்புடன் கூடிய
புன்முறுவலை கண்டறியுங்கள்!
அது பல்லாண்டு காலமாக எண்ணற்ற இதயங்களை அரவணைத்த பெருமைமிக்க
ஒரு பாரம்பரியத்தின் பகுதியாகும்.
இலங்கையிலுள்ள நாம் ஒவ்வொரு பயணத்தையும் மறக்க முடியாத அனுபவமாக மாற்ற நேசத்துடன் - கூடிய தனித்துவமான பண்பினை அதி நவீன
தொழிநுட்பத்துடன் இணைத்துள்ளோம்.
அழையுங்கள் 1979
Srilankan
www.srilankan.com
Airlines You're our world
eylon) (Pvt)Ltd,at No.185,Grandpass road,Colombo -14, Sri Lanka.