கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கூர்மதி 2011

Page 1
KOORMATHIY
II
- பு: த தி
|
தேசிய மொழிகள் மற் தமிழ் மொழி அலகு,

 ി ി ആയി മി ന യ
bறும் மானுடவியல் பிரிவு, 5ഖിധതD - 2011

Page 2


Page 3
க
கல்வி . தமிழ்மொழிக் கல்
மல்
2-CM 013788

மதி
அமைச்சின் விச் சஞ்சிகை - 2011
மர் - 5

Page 4
CM 013788 - 4,000 (2011/ 12) இலங்கை அரசாங்க அச்ச
- ii -

வா
கத் திணைக்களம்

Page 5
பதிப்
சஞ்சிகை ஆசிரியர்
போஷகர்கள்
வழிகாட்டலும் ஆலோசனையும் :
| ! ! |
நிதி ஒழுங்கமைப்பு
செவ்வியாக்கம் மற்றும் அலுவலக உதவி
கணனி எழுத்தாக்கம்
பக்க வடிவமைப்பு
முன் அட்டை வடிவமைப்பு பதிப்பு
அச்சுப்பதிப்பு

பு விபரம்
திருமதி. கிறேஸ் சடகோபன் தமிழ் மொழிப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் கெளரவ பந்துல குணவர்த்தன அவர்கள் கல்வி அமைச்சர் கெளரவ காமினி விஜித விஜயமுனி சொய்சா பிரதிக் கல்வி அமைச்சர் திரு.எச்.எம். குணசேகர கல்வி அமைச்சின் செயலாளர்
திரு.எச்.யூ. ஹேமந்த பிரேமதிலக மேலதிக செயலாளர் கல்வித் தர அபிவிருத்தி. திரு.எஸ்.யூ. விஜயரட்ன மேலதிக செயலாளர் . திட்டமிடல் மற்றும் செயலாற்றுகைப் பிரிவு ஜனாப். க. முகமட் தம்பி மேலதிக செயலாளர் கல்விச் சேவைகள், தாபனப்பிரிவு. திரு. என்.எச்.எம். சித்ரானந்த மேலதிக செயலாளர் நிர்வாகம் மற்றும் நிதிப்பிரிவு திரு. அனுரதிசாநாயக்க மேலதிக செயலாளர் பாடசாலை வழங்கள் திரு.பி.ஏ.கே. ஜயசிங்க பிரதம கணக்காளர்
திருமதி. ஜி.எச். ரூபசிங்ஹ கணக்காளர் - நிதி
பாலிசாகி,
திருமதி எஸ்.டீ.என். சமரசிங்க கணக்காளர் - கொடுப்பனவு
திருமதி டி.பி.ஆர். தமயந்தி கணக்காளர் - வழங்கல்
திருமதி வாசுகி அத்தனாயக்க திரு.டி.ஸ்ரீசங்கர் திருமதி கெளசல்யாதயாளன் ஜனாப். எஸ்.ஏ. ஜெசீம் மொழிபெயர்ப்புப் பிரிவு, கல்வி அமைச்சு திரு.எஸ்.அனுர்ஜன், டிசைன் லேப் கல்வி அமைச்சு
அரசாங்க அச்சகத் திணைக்களம் கொழும்பு - iii -

Page 6
நூல் வி
நூலின் பெயர்
நூலின் அளவு
தாள்
அச்சு எழுத்தளவு
பக்கங்கள்
பிரதிகள்
அட்டை
வெளியீடு
- iv -

பெரம்
கூர்மதி
24cm x 18cm
- 70 gsm
10.5
1- XV +255
4500
220 gsm
தமிழ் மொழி அலகு கல்வி அமைச்சு,
இசுறுபாய, பத்தரமுல்ல.

Page 7
தமிழ்மொ
வாழ்க நிரந்தரம்
வாழிய வான மளந்த த
வண்மொ
கோத்.
ஏழ்கடல் வைப்பு
இசைகொம்
எங்கள் தமிழ்மொ
என்றென்று
சூழ்கலி நீங்கத்
துலங்கும்
தொல்லை வினை
சுடர்க
வாழ்க தமிழ்மொ
வாழ்க த
வானம் அறிந்த
வளர்மொ

ழி வாழ்த்து
> வாழ்க தமிழ்மொழி
வாழியவே! னைத்தும் அளந்திடும் ழி வாழியவே!
பினும் தன்மணம் வீசி
ண்டு வாழியவே!
ழி எங்கள் தமிழ்மொழி அம் வாழியவே!
தமிழ்மொழி ஓங்கத் 5 வையகமே!
தரு தொல்லை யகன்று
தமிழ்நாடே!
ழி வாழ்க தமிழ்மொழி தமிழ்மொழியே!
தனைத்தும் அறிந்து ழி வாழியவே!
- V -

Page 8


Page 9
பொரு
ஆசிச் செய்தி
கௌரவ கல்வி அமைச்சர் பந்துல குண
ஆசிச் செய்தி
கௌரவ பிரதி கல்வி அமைச்சர் காமில
ஆசிச் செய்தி
திரு. எச்.எம். குணசேகர - செயலாளர்,
ஆசிச் செய்தி
திரு. ஹேமந்த பிரேமதிலக, மேலதிக ெ
ஆசிச் செய்தி
திரு முஹமட் தம்பி, மேலதிக செயலாக
ஆசிச் செய்தி
திரு எஸ்.எல்.எம்.டி.பியசேன, தேசிய மெ
பதிப்பாசிரியர் உரை
திரு.கிறேஸ் சடகோபன், உதவிக் கல்வ
செம்மொழி வரையறைகளும் தமிழும்
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
புதிய அறிவுப் பிரவாகமும் வாசிப்புப் பண்பா
பேராசிரியர் சோ.சந்திரசேகரன்
சமகாலத்து ஆக்க மலர்ச்சி ஆய்வுகளும் மு
பேராசிரியர் சபா ஜெயராசா
கற்பித்தலுலகமும் பட்டெறிகைக் கலாசாரமு
திரு சு.முரளிதரன்

நளடக்கம்
- பக்கம்
பக்கம்
பவர்த்தன
-- xi
1 விஜித் விஜயமுனி சொய்சா
----- xiii
xili
கல்வி அமைச்சு
xiy *
செயலாளர், கல்வி அமைச்சு
XV
ளர், கல்வி அமைச்சு
------------- XVi
Xvi
மாழிகள் பணிப்பாளர்
Xvi
ப் பணிப்பாளர்
டும்
றுமதிப்பீடும்
- --- 12
- vii -

Page 10
கவிஞர் சி .வி யின் இலக்கிய நோக்கு - காலமும்
திரு லெனின் மதிவானம்
கண்ணிவெடி அனர்த்தம் பற்றிய அறிவு அனைவரு
திரு இஸட் தாஜுதீன்
தேசவழமைச் சட்டத்தின் ஏற்புடமை
எஸ்.சந்திரராஜா
இசையின் முப்பரிமாணம்: ஒரு சமுதாய நோக்கு
திரு தம்பு சிவசுப்பிரமணியம்
அன்னைத் தமிழ்
திரு ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
வரால் மீன்கள்
திரு எம்.எஸ்.அமானுல்லா
இயங்கியல் பொருள் முதல் வாதம்
கலாநிதி.ந.இரவீந்திரன்
உயிர்க்குறியின் உயிர்ப்பு
திரு ந.பார்த்திபன்
கல்வியின் சமூகப் பயன்
பேராசிரியர் சி. சிவசேகரம்
முன்பள்ளிகளின் மகிழ்நிலைக்கற்றலுக்குதவும் இய
திரு எம்.மூவேந்தன்
நாயன்மார் பாடல்களில் முற்போக்கு சிந்தனைகள்
திருமதி அ. வைத்திலிங்கம்
இலங்கையில் வேலையில்லாப் பிரச்சினைகள் பற்ற
மோ.ஜெனிதா
வகுப்பறையின் அமைப்பும் இயங்கியல்த் தன்மையு
தி சரவணமுத்து கணேசமூர்த்தி
நவீல கத்தில் எழுத்தறிவுக் திறனுக்கப்பால் வலி தொழில்நுட்பக் கலாசாரம்
செல்வி சிவசித்ரா பழனி
எயிட்ஸ் என்னும் ஆட்கொல்லி நோய்
செல்வி ஜெயபிரபா ஜெகதீஸ்வரன்
- V111 -

கருத்தும்
22
க்கும் அவசியம்
32
41
45
46
66
77
82
ற்கைவாதச் சிந்தனைகள்
86
91
றிய சமூகவியல் பார்வை
96
100
யுறுத்தப்படும் தகவல்
105
110

Page 11
மனம் எனும் மாயசக்தி
பருத்தியூர் பாலவைரவநாதன்
இலங்கையில் கவிதை பற்றிய ஒரு நோக்கு
ஏ.எஸ்.எம்.பீலிக்ஸ்
ஊவாவில் இலக்கியம் வளர்த்த பாமுதலோன்
பூனாகலை நித்தியஜோதி
கலாநிதி ம.மு.உவைஸ் அவர்களின் இஸ்லா
எம்.எம்.முஹம்மது சப்ரி விளம்பரமின்றேல் விற்பனையில்லை
வயலற் சந்திரசேகரம்
பாரதியின் குயிற்பாட்டு ஒரு நோக்கு
திரு ந.தேவராசா
கல்வியின் மூன்று படிநிலைகளும் பிள்ளையி
சரவணமுத்து நவேந்திரன்
இந்த நாகரிக மரபில் சிற்பக்கலை
திருமதி இராஜினிதேவி சிவலிங்கம்
தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்ககாலம்
செல்வி சுதேஷணா சோதிலிங்கம்
இறைவாக்குப் பெற்ற அருள்வாக்கி
பாவலர் சாந்தி முஹியித்தின் ஜே.பி.
ஆசிரிய வாண்மையில் ஆசிரியர் தேர்ச்சியின்
குணசிங்கம் பிரதீபன்
குழந்தைகள் தொடர்பாக பத்து முதுமொழிகள்
ஷ.அமனஷ்வீலி
சமத்துவமாய் வாழ வழிகாண வேண்டும்
கி.குலசேகரன்
தெற்காசிய நாடுகளின் கல்வி நிலை
திருமதி சுதாகரி மணிவண்ணன்
ஒன்றிணைவோம் ஒருகையாய். ஒன்றித்து நிற்
திருமதி க. பாலகெளரி
பாரதியார் பற்றி சில குறிப்புக்கள்
இலக்கியம் நயத்தல்
செல்வி எம்.ஏ.எப்.சுமையா

- 116
119
தமிழோவியன்
122
மியத் தமிழ் இலக்கியப் பணி
125
130
136
ன் கல்வி நிலைகளும்
141
147
152
155
பங்களிப்பு
162
167
169
172
போம்
175
177
179
-- ix -

Page 12
பாடசாலைகளில் மாணவர்களுக்கு தலைமைத்துவ முக்கியத்துவமும் நிருவாகப் பங்களிப்பின் அவசிப்
திரு எஸ்.எல்.மன்சூர் முனையூரான் சிந்தனை வரிகள்
மூளையை வடிவமைத்து வளர்த்தெடுப்பது சாத்தி
இரா.சடகோபன் கல்வியும் மாணவர் இடைவிலகலும் - ஓர் பொது
திருமதி நிலந்தி ரவிச்சந்திரன்
2011 அகில இலங்கை தமிழ்மொழித்தினப் போட்ட மாணவர்களது ஆக்கங்கள்
தற்கொலை பிரச்சினைக்கு தீர்வாகி விடுமா?
செல்வி எம்.எச்.எவ். ஹுஸ்னியா
காலம் ஒருநாள் மாறும்
செல்வி ஆர்.மைதிலி
சங்க இலக்கியங்களில் அகத்தினை ஒழுக்கம்
செல்வி ஏ.எல். பாத்திமா றிஸ்னா
திறனாய்வு
செல்வி ரி. நஜ்பா
முயற்சி திருவினையாக்கும்
செல்வி எம்.ஏ.எவ்.அஷ்ரபா
நவீன தொலைபேசிகளும் நாமும்
செல்வி ஆர்.உமையாளினி
கற்றாங்கு ஒழுகுவோம்
செல்வன் எஸ்.அனந்ததர்வின்
இன்பத் தமிழே
செல்வி என்.சதுஜா
விஞ்ஞானமும் இன்றைய உலகமும் செல்வி எம்.என்.சஸ்னா பர்வின்
அகில இலங்கைத் தமிழ் மொழித்தின தேசிய நின
இறுதிப் பெறுபேறு - 2010
அகில இலங்கைத் தமிழ் மொழித்தின தேசிய நின
இறுதிப் பெறுபேறு - 2011
நன்றி

ப பயிற்சி வழங்கப்படுவதன்
பமும்
181
185
பமா?
186
நோக்கு
190
ஒயில் முதலாமிடம் பெற்ற
- 194
195
200
207
213
218
221
223
225
231
லப் போட்டிகளின்
236
லப் போட்டிகளின்
245
255

Page 13
Me
Hon. Bandula
Minister
"Language
Being the Minister of Education, I tion of the issue of "Koormathy" Tamil Language Day" organized b of Education. Language links nations. Being a m
major role to share knowledge an has to improve language skills, n nation's languages as well. By imp other person to Listen, Read, Writ they can be transformed as excelle
To touch global level, explore and ternational society we must give edge and necessary motivation for procedures of teaching, we must creativity and sensitivity in our sti
The Tamil language Unit deserves have done it in a colorful manner. ment of the abilities in students.
I have the pleasure of appreciating lating performance of our children
Bandula Gunawardane (N.
Minister of Education

:ssage rom [ Gunawardane of Education
links nations"
am delighted to wish for the publica
marking the "Inter School All Island y Tamil language Unit of the Ministry
ain communicator, "language" plays a d ideas. Because of this, every person ot only mother tongue but also other roving the skills of our students or any ce and Speak from their primary level, ent language users.
lead our students to compete with ininnovative new technological knowlour children. Along the processes and feed necessary knowledge to increase adents’mind.
commendation in this respect as they It will contribute towards the improve
this attempt of highlighting the scintil- and I wish them a great future.
- xi

Page 14
Mess:
Fro Hon. Gamini Wijith
Deputy Minister It is both a pleasure and honour to publication of the "KOORMATHY" 1 what it say on the introduction. The both Tamil and English language an readers with an exemplar from which expertise and discourse required for su the many changes faced when readir curriculum. This magazine would be
whom Tamil first language.
As everyone knows Education is a pi knowledge, developing the power of re oneself for a nature of life where the r
A teacher is one who illuminates stud while enlightening others.
In this changing world today's knowl and in such a scenario reading regard during youth to serve an entire lifetim
The deliberations of in this magazine tradition and nourish and nurture the
Gamini Wijith Wijayamuni z Deputy Education Minister
Ministry of Education Isurupaya Battaramulla.
- xii -

age
Wijayamuni Zoyza - of Education
provide a preface for Tamil Unit Magazine. This study does exactly editors and writers command of d Narrative theory provide their students can cultivate the technical abjects analysis. Editors respond to ng and writing complex works of especially supportive to those for
'ocess of imparting and acquiring easoning, judgment and preparing ole of a teacher comes in.
lents darkness and ignorance and
edge becomes absolute tomorrow, ed as something that one acquires
will further strengthen the healthy lofty ideas of teacher.
loysa (M.P)

Page 15
M.
The Secretary, M
"Isui
With a great pleasure I convey glorious moment of the fifth Publ Language Magazine of various s guage Unit of the Ministry of E
It has been convinced that this comprising of variety articles co nitely it boosts the moral values other.
I would like to express my since tremendous effort of the entiret of this magazine.
H.M.Gunasekara Secretary
Ministry of Education "Isurupaya" Battaramulla

essage 'rom inistry of Education rupaya”
· this message of felicitation in this ication of the “Koormathy" the Tamil subjects published by the Tamil Landucation.
magazine proves a new dimension vering many aspects of society. Defis towards the understanding of each
re gratitude and appreciation for the eam who involved in the publication
- xiii -

Page 16
Messi
Froi The Addition:
Ministry of ] (Education Qualit
It is a great pleasure that I issue this "Koormathy" magazine, which is Language Unit of the Ministry of Ec
I greatly appreciate the collective ef Language Unit for their dedication success.
This publication will be an immense their knowledge in various fields as
I wish this magazine will be conti satisfy the needs of the reader.
Hemantha Premathilake Additional Secretary (Education Qi "Isurupaya" Battaramulla.
- Xiv -

age
m
al Secretary Education y Development)
message for the fifth issue of the annually published by Tamil ducation.
forts of the officers of the Tamil to make this publication a great
: help for the readers to enhance it consist of valuable articles.
nuously published in future to
tality Development) met

Page 17
மேலதிக ெ
ஆசிச்
இவ்வருடம் வெளிவரும் "கூர்மதி” வழங்குவதையிட்டு மகிழ்ச்சியடைகி வாசகர்களை கவரும் அமைப்பில் - வெளிவருதல் பாராட்டுக்குரியதாகும். கல்வியாளர்கள், இலக்கியவாதிகள், இச்சஞ்சிகை தொடர்ச்சியாக வெளியி வரும் தமிழ்ப்பிரிவின் கல்விப்பணிப்பாள சேர்ந்து இவ்வருடம் இச்சஞ்சிகை வெ அனைவருக்கும் நன்றியினை தெரிவித்து எமது பாடசாலை ஆசிரியர்கள், மா அனைவரும் பயன் பெறும் வகையில் நல்குமாறும், கூர்மதியின் மூலம் 3 நம்பிக்கையுடன் நூலகக் குழுவினரு கொள்கின்றேன்.
க. முஹமட் தம்பி மேலதிகச் செயலாளர் கல்வித் தாபனப்பிரிவு கல்வி அமைச்சு.

சயலாளரின் செய்தி
சஞ்சிகைக்கு எனது ஆசிச்செய்தியை ன்றேன். கூர்மதி சகல மட்டத்திலான பெறுமதியான ஆக்கங்களை கொண்டு கூர்மதியின் ஆக்கங்களை வழங்கிய ஆசிரியர்கள் பாராட்டுக்குரியவர்களே. ட்டு வைப்பதில் கூடிய கவனம் செலுத்தி ரின் பணி பாராட்டுக்குரியதாகும். இவருடன் எளியிடுவதில் சகல வழியிலும் உதவிய துக் கொள்கின்றேன். கூர்மதியின் பயணம் ணவர்கள், மற்றும் கல்வியியலாளர்கள் D தொடர் சகலரும் பூரண ஒத்துழைப்பு அனைவரும் பயன் பெறுவோம் என்ற க்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக்
Xy -

Page 18
தேசிய மொழி மா பணிப்பாளரின்
தமிழ் மொழிப் பிரிவினால் வெளியி படைப்பாளர்களின் ஆக்கங்களை வெளிக் ஒரு சஞ்சிகை ஆகும். இந்நூல் த இணைத்து மாணவர்களின் அறிவை வழங்குகிறது.
கல்வி மட்டுமன்றி பல துறைகளில் கல் சஞ்சிகை வெளியிடப்படுகின்றமை மகி வெளியிடுவதற்கு உதவிய அனைவரும் உரித்தாகட்டும்.
எஸ்.எல்.எம்.டி. பியசேன கல்விப் பணிப்பாளர் தேசிய மொழிகள் மற்றும் மானுடம் கல்வி அமைச்சு.
-XV1

னிடவியல் பிரிவு ஆசிச்செய்தி
டப்படும் "கூர்மதி” சஞ்சிகை புதுப் கொண்டு வருவதற்கு வாய்ப்பு வழங்கும் தமிழ் மொழியுடன் இலக்கியத்தையும் - மேம்படுத்த பெரும் பங்களிப்பை
மவிமான்களின் படைப்புக்களுடன் இச் ழ்ச்சிக்குரியது. "கூர்மதி” சஞ்சிகை நக்கும் பாராட்டும் வாழ்த்துக்களும்
பியல் பிரிவு

Page 19
பதிப்பாசி
"கூர்மதி” எனும் வருடாந்த கல்விக் மானுடவியல் பிரிவு, தமிழ் மொழி ஆக்கச் செயற்பாடாகும்.
மாணவர்களின் மேம்பாட்டை நோக்க
அகில இலங்கைத் தமிழ் மொழித் மாணவர்களின் தரமான உயர்ந்த
ஆலோசகர்கள், அதிபர்கள், பணிப்பா தரமான படைப்புக்களைக் கொ வெளிவருகின்றது என்பது மகிழ்ச்சிக் 2010 ஆம் ஆண்டுகளில் சில தன் வெளிவரவில்லை என்பது கவலைக்
கல்வித்துறையில் ஈடுபட்டவர்களது சிற மாணவர்களது சிறந்த படைப்புக் எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக சமூ கூடிய வகையிலான ஆக்கங்களையும் கல்விப் பிரச்சினை, அவற்றுக்கான தீ கூர்மதி கல்விச் சஞ்சிகையை வெளியி வழங்கிய அதி மேதகு ஜனாதிபதி - பிரதிக் கல்வி அமைச்சர், கல்வி | பணியாளர்கள் மற்றும் அனைவரு
உரித்தாகட்டும்.
கிறேஸ் சடகோபன் தமிழ் மொழிப் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் இசுறுபாய பத்தரமுல்ல
3-CM 013788

ரியர் உரை
F சஞ்சிகை தேசிய மொழிகள் மற்றும்
அலகினால் வெளியிடப்படும் உயர்ந்த
Tகக் கொண்டு வருடாந்தம் நடாத்தப்படும் 5 தினப் போட்டிகளில் வெற்றி பெற்ற - ஆக்கங்கள், ஆசிரியர்கள் ஆசிரிய Tளர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகளின் Tண்டு இம் முறையும் புது மெருகுடன் குரிய விடயமாகும். கடந்த 2009, மற்றும் டைகள் காரணமாக கூர்மதி சஞ்சிகை
குரிய விடயமாகும்.
மந்த பயன்தரும் ஆய்வு ஆக்கங்களையும், களையும் இதில் பதிப்பித்துள்ளேன். மகத்தின் சவால்களுக்கு முகம் கொடுக்கக்
ஆய்வுக் கட்டுரைகளையும், நடைமுறைக் ரவுகளையும் வழங்க தயாராக உள்ளேன்.
- ஊக்கமும் ஆக்கமும் தந்து ஒத்துழைப்பு அவர்கட்கும் கெளரவ கல்வி அமைச்சர், செயலாளர், மேலதிகச் செயலாளர்கள், நக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்
xvii -

Page 20


Page 21
தமிழ் கூறும் நல்லுலகின்! உச்சாணிக் கொம்பாக விளங்கி தமிழ் ஒளிபரப்பிய பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் மறைவையொட்டி இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகின்றது.
செம் மொழி என்ற சொல் இன்று மொழிபெயர்ப்பாகக் கொள்ளப்படுகிறது. இப் சட்டத்தில் Classical language எனச் சமற் பற்றிக் குறிப்பிடும்பொழுது பயன்படுத்த கலைஞர் மு. கருணாநிதி அவர்களது நிலையிலும் தமிழ் Classical language
இப்பொழுது உலகின் Classical languag குறிப்பிடப்படுகின்றது. -
இங்குக் கிளம்பும் மிகப் பிரதானமான language ஐக் கருதுமா என்பதே. செம்
மொழியென்றதன் குறுக்க வடிவமாகும் ( சொல் Classical language என்பதனைக் லெக்சிகனில் அக்கருத்துத் தரப்படவில் பின்வருமாறு:
செம்மொழி என்பது நல்வார்த்தை, ெ ஆனால் இப்பொழுது செம்மொழி எனும் | மொழி பெயர்ப்பாக கொள்ளப்படுகின்றது. 2 நிலைப்படுததிக் கூறவிரும்புகின்றேன். மு என்னும் எண்ணக் கருத்துப் பற்றிய சிற்றா ஈபுறு மொழிகளைக் குறிப்பிடுவது போ பற்றியதுமாகும். தமிழ் லெக்சிகனில் செ கருத்துகளுள் இக்கருத்துக்கள் வரவில்ை
இன்று செம்மொழியென்னும் தொடர் பயன்படுத்தப்படுகின்றது. இடுகுறிப் பெயர் நாம் சில கலைச்சொற்களைப் பயன்படுத்தி தமிழின் இந்திய நிலை அந்தஸ்தையும் பயன் படுத்தப்படுகின்ற சொற்றொடரி
அத்தியாவசியமாகும். இப்பின்புலத்திலே நோக்குவோம்.
கூர்மதி -

செம்மொழி வரையறைகளும்
தமிழும்
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி
1 Classical language என்பதற்கான Dமொழிபெயர்ப்பு இந்திய ஆட்சி அமைப்புச் கிருதம், அரபு, உருது போன்ற மொழிகள் ப்பட்ட சொல்லாகும். தமிழக முதல்வர் முயற்சியின் காரணமாக மத்திய அரசு ஆக (செம்மொழியாக) ஆக்கப்பெற்றது. geகளுள் ஒன்று என்ற கருத்தில் தமிழ்
பிரச்சினை செம்மொழி என்பது Classical மாழியென்ற சொற்றொடர் செம்மையான செந்தமிழ்). இன்று செம்மொழியென்னும் க் கருதப் பயன்படுத்தப்பட்டாலும் தமிழ் மலை. அங்கு தரப்படும் கருத்துக்கள்
பதாகையில்லாத ஒரு மொழி என்பதாகும். பதம் Classical language என்பதற்கான உங்கள் வினாவிற்கான விடையை இரண்டு ஊதலில் செம்மொழி Classical language ய்வாகவும், அடுத்தது கிரேக்க, இலத்தீன், ல தமிழையும் குறிப்பிடலாமாவென்பது ம்மொழியெனும் தொடருக்குத் தரப்பட்ட லயென்பதும் முக்கியமாகும்.
Classical language என்ற கருத்துப்படப் சக அன்றேல் காரண இடுகுறிப் பெயராக 1 வருகிறோம் என்பது உண்மையெனினும் உலகநிலை அந்தஸ்தையும் குறிப்பிடப் ல் கருத்து மயக்கமில் லாதிருப்பது D குறிப்பிடப்பெறும் மொழிகள் பற்றி
0

Page 22
முதலில் இத்தொடர் உண்மையில் C Classical Civilization என்று சொல்வது நாகரிகங்களையே மேல்நாட்டு மரபில் Classi
மேல்நாட்டு நாகரிகம் இவ்விரண்டு மொழி உருவாகிற்று. ஆனால், இப்பொழுது Classical படுத்தப்பட்ட கருத்தினையுடையதாகக் காண உலகின் Classical language ஆகக் கிரேக் சீனம், சமற்கிருதம் ஆகிய மொழிகளையும் !
இந்திய மரபில் சமற்கிருத மேலாண் கொண்டாலும் உலகநிலையில் அறிஞர்கள் ச வருவனவற்றை Classical language எனக் பேசப்படுவனவாக, வழக்கிலுள்ள மொழிகளாக தொடர்கிறது. இவற்றிடையே கால வேறுபாடு உ மொழிப் பயன்பாட்டுநிலையில் நிச்சயமானதெ சீனத்திற்கும் அத்தகையதொரு தொடர்ச்சி நி
இக்கட்டத்திலே Classical language விளக்கத்தையும் அடுத்து அதற்குப் பொருத்தமா Hebrew இஸ்ரேலின் உத்தியோகபூர்வ பெ Classical language என்பதற்கு மூன்று முக்க கொள்ளலாம்.
(அ) தொன்மை (ஆ) தொடர்ச்சி (இ) செழுமை வளம்
மேலே குறிப்பிட்ட சமற்கிருதம் தவிர்த்த வகையில் பேசப்படுகின்றன. சமற்கிருத செய்யப்பட்டுள்ளதென்பதாகும். இது உண்மைய படுவதில்லை. வடமொழியாளர் சாதாரணமாகப் | என்பர். சமற்கிருதம் இந்து சமயச் சடங்குகளில் பேச்சு மொழியாகக் கொண்ட எவரும் இலர். உயர்நிலையிலுள்ள பாத்திரங்கள் சமற்கிருத பிராக்கிருத மொழிகளிற் பேசுவர்.
இந்திய ஆட்சியமைப்பு நிலையில் சமற்கி பட்டமைக்குக் காரணம் இந்திய வைதீக | சமற்கிருத வளர்ச்சியிலும் இரு நிலைகளைக்
(அ) Vedic Sanskrit (ஆ) Classical Sanskrit
இந்த Classical language மொழி நன. புலவர்கள் எழுதியுள்ளனர். தமிழ் இலக்கணத்

lassical language என்பதிலும் பார்க்க மரபு. உண்மையில் கிரேக்க, உரோம al Civilization என்று கொள்ளுவர்.
இலக்கியம், கலைகள், பண்பாடு ஊடாகவே language என்னும் தொடர் சற்று அகலப் ப்படுகின்றது. இவ்வழி நோக்கும்பொழுது கம், இலத்தீனுக்கு அப்பாலே Hebrew, சேர்த்துச் சொல்லுதல் மரபாகிவிட்டது.
Dமவாதிகள் சமற்கிருதத்தைச் சேர்த்துக் கிரேக்கம், இலத்தீன், Hebrew, சீனம் என
கொள்வர். காரணம் இவை இன்றும் உள்ளன. கிரேக்கம் - நவீன கிரேக்கமாகத் ண்டெனினும் மொழித் தொடர்ச்சியமைப்பில், ாரு தொடர்ச்சி நிலையயைக் காணலாம்.
லை உண்டு.
என்னும் தொடருக்கான மேலுமொரு ன தமிழ்ச் சொற்றொடரையும் நோக்குவோம். மாழியாகும். இவ்வாறு நோக்கும்பொழுது கியப் பண்புகள் இருக்க வேண்டுமென்று
- நாலு மொழிகளும் இன்றும் ஏதோவொரு மெனும் சொல்லின் கருத்து நன்கு பில் பேச்சு வழக்கு நிலையில் பயன்படுத்தப் பேசும் மொழிகளைப் பிராக்கிருத மொழிகள் D இடம் பெறும் மொழியெனினும் அதனைப் ஆனால், சமற்கிருத நாடகங்களில் சமூக மொழியில் பேச மற்றைய பாத்திரங்கள்
ருதம் Classical language ஆகக் கொள்ளப் நாகரிகத்தின் ஊற்றாக இருப்பதாலாகும். - குறிப்பிடுவர்.
டயிலேதான் காளிதாசன் போன்ற பெரும் தில் சமற்கிருதம் என்று குறிப்பிடப்படாமல்
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 23
வடமொழியென்ற பதமே பயன்படுத்த சமற்கிருதம், பாலி ஆகிய இரண்டு மொ பொதுவானதாகும்.
மற்றைய Classical languageFhpa இல்லை. இனித் தமிழை எடுத்துக் கொ சார்ந்தது. இன்றைய மொழியறிவு நிலையி (South Dravidian language) முதன்மை மொழிகளுள் கன்னடம், துளு, மலைய திராவிட மொழி (Central Dravidian lan; தமிழின் முதன்மையை நோக்குவோம். அ மொழிகளுள் தமிழே தொன்மையும் தெ
மிகளும் (U நோக்
தமிழின் எழுத்து வழக்குப்பற்றிப் ே பிராமிய சாசனங்களை உதாரணம் காட் பேச்சு வழக்கிலிருந்திருத்தல் வேண்டும்.
இந்தியாவின் பெருங்கடற்படைப் ப 700-1000 ஆண்டுகள் என்பர். அப்பண்பாடு சிலர் கூறுவர். இன்னுமொரு முக்கியத் பேராசிரியர் தொமஸ்பரோ வேத ச காணப்படுவதாகவும் அடுத்து வ ரும் 4 குறைவதாகவும் எடுத்துக் கூறியுள்ளார். மொழிகளின் எச்ச சொச்சமாக Brahui
இலக்கியங்களைப் பொறுத்தவரை 1000-1800 ஆண்டுகளுக்குரியதாகக் கொ நிலைப்பட்ட தமிழ் இலக்கியச் சான் இப்பொழுதுள்ள தமிழ் இலக்கியச் சான்று கி.மு. 250 - கி.பி. 100 என்ற காலத்து
ஆனால், இந்தக் காலத்துக்குரிய மிகவும் செம்மையான செழுமையான இல் தோன்றியுள்ளனவென்பது தெரியவரும்.. ! தீர் மானிக்கப்பட்டதென்பது திணைக் இப்பாடல்களினூடே இலியட், ஒடிசி காணப்படவில்லை. ஆனால், அவ்வாறு இரு
கைலாசபதி வாதிடுவார்.
இந்திய நிலையில் தமிழின் மிக தொன்மையான இலக்கியங்களைக் கொ வழக்கு மொழியாக வுள்ளமையாகும். அனைத்துலகப் பரிமாணமும் வந்துவிட் ரெயூனியோன் போன்ற நாடுகளில் தமி வேண்டும். சிங்கப்பூர், மலேசியா ஆகி தமிழிலக்கியம் இல்லை.
கூர்மதி -

பபடுவதைக் காணலாம். இதற்குக் காரணம் ழிகளையும் குறிக்க வடமொழி என்னும் சொல்
தொன்மையும் தொடர்ச்சியும் சமற்கிருதத்திற்கு எவோம். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தைச் ன்படி தமிழைத் தென்திராவிட மொழிகளுக்கான உதாரணமாகக் கொள்வர். இத்தென் திராவிட பாளம் போன்றவை வரும். தெலுங்கு மத்திய guage) என்று கொள்ளப்படுகின்றது. இவற்றுள் புனைத்திந்திய மட்டத்தில் இன்று பேசப் பெறும் ாடர்ச்சியுமுள்ள மொழியாகும்.
பசும் பொழுது கி.மு. 3 ஆம் நூற்றாண்டுக்குரிய டுவர். ஆனால், தமிழ் மொழியோ நீண்டகாலம்
ண்பாடு (Negalithic Culture) ஏறத்தாழ கி.மு. 5 உள்ள இடங்களில் தமிழ் காணப்படுவதாகச் தகவல் திராவிடத்தின் பழமையை ஆராய்ந்த மற்கிருதத்தில் திராவிடச் சொற்கள் பல சமற்கிருத வளர்ச்சியில் அவை படிப்படியாகக் இவ்வாறு வடபகுதியில் பேசப்பட்ட திராவிட என்னும் மொழியைக் காணலாம்.
பில் இருக்கு வேதம் ஏறத்தாழ குறைந்தபட்சம் பள்ளப்படல் வேண்டும். அத்தகைய தொன்மை று இருப்பதாகத் தெரியவில்லை. எம்மிடம் 1 சங்ககாலம் எனக் குறிப்பிடப் பெறும் ஏறத்தாழ
க்குரியதென்பர்.
இலக்கியங்களைப் பார்க்கும்பொழுது அவை லக்கியப் பாரம்பரியம் ஒன்றின் அடிப்படையிலே புராதனத் தமிழ்க் கவிதை இயற்கைச் சூழலால் - கோட்பாட்டின் மூலம் தெரியவருகிறது. போன்ற கதைப் பாடல் போன்ற எதுவும் நந்திருப்பதற்கான சாத்தியப்பாடு உள்ளனவென்று
5 முக்கியமான சிறப்புக்கள் யாவையெனின் ாண்டுள்ளமை மாத்திரமல்லாமல் அது இன்றும் - இதற்கு மேலாகத் தமிழுக்கு இன்று ஓர் டது. சிங்கப்பூர், மலேசியா தென்னாபிரிக்கா, ழுக்கோர் அந்தஸ்து உண்டென்று குறிப்பிடல் ய நாடுகளைத் தவிர்த்த நாடுகளில் வளரும்

Page 24
இப்பொழுது தங்கள் வினாவிற்கு வருே உள்ள மொழியொன்றினை உலகின் செம்மையா தொல்சீர் மொழியாகவும் கொள்வதில் தவறே ! செம்மொழிகள் என்பதிலும் பார்க்க, 'தொல்சீர் ! துரதிஷ்டவசமாக உலக நிலைப்பட்ட மொழியி முதன்மைப்படுத்தப்படவில்லை. ஒன்றில் தமிை மிகைப் பட மதிப்பிடுவார்கள். மேலே
வரலாற்றடிப்படைகளிலே தமிழின் இடம் நன்கு வேண்டும்.
நிறைவாக Tamil As a Classical langua ஒன்றாகத் தமிழ் என்றே மொழி பெயர்த்தல் வே பார்க்க தொல்சீர் மொழியென்பதே பொருத்தம்
க:7 (
கலை இலக்கியங்களே ஒரு ஆளுமையுள்ள, படைப்பாற்றல்
உள்ளடக்கியவனாக வளர்க்கும்
ககள்

வாம். இத்தகைய தகுதியினைப் பெற்று ன மொழிகளுள் ஒன்றாக மாத்திரமல்லாமல் இல்லை. Classical language என்பதற்குச் மொழிகள் ' என்பதே பொருத்தமானதாகும். ல் இலக்கிய ஆய்வு நிலைகளில் இவை ழக் குறைத்து மதிப்பிடுவார்கள். அல்லது கூறப் பட்ட வாறு மொழி இலக்கிய 5 கணிக்கப்படல் வேண்டும் பேணப்படல்
ge என்பதனைச் தொல்சீர் மொழிகளுள் பண்டும். அதாவது செம்மொழி என்பதிலும்
ானதாகும்.
NAா
மனிதனைப் பண்புள்ள, கொண்ட, பல திறமைகளை அடிப்படை மூல வேர்கள். 50
வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 25
புதிய அறிவு
வாசிப்பும்
வரலாற்று ரீதியாக 21 ஆம் நூற்றாண்டு நூற்றாண்டிலும் இல்லாதவாறு இந்தப் புதிய விரிவு பெற்று வருகின்றது. வரலாற்றில் மன உந்து சக்தியாக இருந்திருந்தாலும், எல்லைகளைக் கடந்துள்ளது.
அறிவு மைய நூற்றாண்டு
இதன் காரணமாக இந்நூற்றாண்டு மைய நூற்றாண்டு என்றும் அழைக்கப்படுக உலகளாவிய அறிவை உள்வாங்குதல், பு உற்பத்திக்கு அவ்வறிவைப் பயன்படுத்து
முறையின் பணிகளாகிவிட்டன. இதனா பொருளாதாரம்' என அழைக்கப்படுகின்றது நாடுகளும் அறிவுசார் பொருளாதாரமாக
முன்வைக்கப்படுகின்றது. அவ்வாறே வர்த ஸ்தாபனங்களாகவும் அறிவுசார் பொருள ஊழியர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர் மட்டுமன்றி முழுச் சமூகமும் ஸ்தாபனங்
அடிப்படையாகக் கொண்டு இயங்குவன நூற்றாண்டின் நியதியாகி வருகின்றது.
அறிவுப் பெருக்கம்
புதிய நூற்றாண்டின் அறிவுப் பெருக்க எவ்வாறு அறிவுப் பெருக்கம் ஏற்பட்டது? புத் என்பது பற்றி பின்வருமாறு கூறுகின்றனர். ஆண்டு வரை உலகளாவிய அறிவுத்தெ 1900 வரை உள்ள 150 ஆண்டுகளில் அ 1900 - 1950 வரை உள்ள 50 ஆண்டுகளி ஒவ்வொரு ஐந்து வருட காலப்பகுதியிலு இந்தக் கூற்று இந்நூற்றாண்டை அறிவுரை என வலியுறுத்துகின்றது.
அறிவுப்பெருக்கத்துக்கான மற்றொ வழங்குகின்றனர்.
'இன்றைய காலகட்டத்தில் 20000 | தயாரித்து வருகின்றன. ஆண்டுதோறும் 50
கூர்மதி.

ப் பிரவாகமும் பண்பாடும்
பேராசிரியர் சோ.சந்திரசேகரன்
க்கு ஒரு தனித்துவம் உண்டு. முன்னைய எந்த 1 நூற்றாண்டில் பெரிய அளவில் அறிவுத்தொகுதி ரித குலத்தின் மேம்பாட்டுக்கு அறிவு எப்போதுமே தற்போது புதிய அறிவின் உருவாக்கம் பல
அறிவு மைய நூற்றாண்டு அல்லது தகவல் ன்ெறது. இந்நூற்றாண்டில் அறிவின் உருவாக்கம், நழுச்சமூகத்திலும் அதனைப் பரப்புதல், உள்ளுர் தல் ஆகிய பணிகள் இன்றைய பொருளாதார Tல் இன்றைய பொருளாதாரம் 'அறிவார்ந்த பி. சகல வளர்முக நாடுகளும் வளர்ச்சியடைந்த
முயன்றிட வேண்டும் என்னும் குறிக்கோளும் த்தக கைத்தொழில் ஸ்தாபனங்கள் அறிவுசார் எதார முறையின் உழைப்பினர்கள் அறிவார்ந்த - முறைசார் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் களும் அறிவுச் செறிவுடையவனவாக, அறிவை வாகவும் மாறுதல் வேண்டும் என்பது புதிய
கம் பற்றி ஆராய்கின்றவர்கள், மனித வரலாற்றில் திய நூற்றாண்டில் எவ்வாறு ஏற்பட்டு வருகின்றது - கி.பி. முதலாம் நூற்றாண்டிலிருந்து 1750 ஆம் ாகுதியானது ஒரு முறை இரட்டித்தது, 1750 - றிவுத்தொகுதி மேலும் ஒரு முறை இரட்டித்தது.
ல் மீண்டும் ஒரு முறை இரட்டித்தது, தற்போது வும் அறிவானது இரட்டித்து வருகின்றது என்ற மய நூற்றாண்டு என அழைப்பதில் தவறில்லை
ந குறிகாட்டியை பின்வருமாறு ஆய்வாளர்கள்
பிரசுர நிலையங்கள் 15 இலட்சம் நூல்களைத் 1000 நூல்கள் வெளியிடப்படுகின்றன, மனிதனின்

Page 26
வாசிப்பு ஆற்றல்களுக்கு அப்பால் அறிவு வெ மனிதன் 365 நாட்களில், ஒவ்வொரு நாளும் 24 ப இன்று வெளியிடப்படும் நூல்களை முழுவாழ ஏனெனில் மனித வரலாற்றில் 5000 ஆண் அறிவுத்தொகுதிக்குச் சம அளவிலான அறி உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிவுத்தொகுதி குறுகிய காலத் சேகரிக்கப்படும் ஆய்வுக்கான தரவுகளைத் ; உருவாக்கப்பட்டுள்ள கணினிப் பொதி (Pacl உழைப்பினால் பகுப்பாய்வு செய்யப்பட்டு வந் ஆராயப்பட்டு கணநேரத்தில் முடிவுகளைப் பெ
அறிவு மைய நூற்றாண்டின் மற்றொரு புதிய அறிவு அதே துரித கதியில் உலகளாவி
மூலமாகப் பரப்பப்படுவதாகும். இன்று ஆய்வு சஞ்ச் அறிஞர்களிற்கிடையே பரிமாற்றம் செய்யப்படும்
நவீன தகவல் தொழில் நுட்பமானது ! கொள்ளும் முறையை மாற்றியுள்ளது. மாணல் கற்பிக்கும் முறையையும் மாற்றியமைத்துள் முறைகளும் இன்று மாற்றமடைந்துள்ளன. அவை பயன்படுத்தாது, கணினியைப் பயன்படுத்தி சகல நூல்நிலையங்களை நாடியவர்கள் இன்று இளை பணத்தைக் கொண்டு செல்லாது பிளாஸ்டிக் வங் இணைய தளத்தினூடாக பொருட் கொள்வன கொண்ட பல்கலைக்கழகங்கள் இருக்கத்தக் பல்கலைக்கழகங்கள் உருவாகி வருகின்றன.
கல்வி முறையின் புதிய நோக்கு
கல்வி முறையைப் பொறுத்தவரையில், 6 அதே வேளையில், மாணவர்கள் சுயமாகக் கற்ப வழங்க வேண்டுமென்பதாகும். அதனால் 'கற் குறிக்கோள் முக்கியத்துவம் பெற்றுவிட்டது. கற்பிப்பதோடு, மாணவர்களை அறிவைத் தே மாற்றுதல், சுயகற்றலிலும் வாழ்க்கை நீடித்த கல் என அவர்தம் பணிகள் மாற்றமடைந்து வருகின் உருவாக்கி தம்மை 'தேவையற்றவராக்குபவர்' 6 காரணமாக அறிவில் தொடர்ந்து மாற்றங்கள் ஏ உள்வாங்கும் அவசியம் அனைவருக்கும் உண் பெற்றுக் கொள்ளாவிடில் அவர்கள் பெற்றுக்கெ உண்டு. எனவே அனைத்து நாடுகளின் கல்6 கல்வி ஏற்பாடுகளுக்கு முக்கியத்துவம் தரவே
அறிவுப் பெருக்கமானது புதிய நூற்றாண் விரிவு படுத்தியுள்ளது என்பது மற்றொரு பிர

தளம் பிரவாகம் எடுத்து ஓடுகின்றது. ஒரு மணிநேரம் வாசிப்புப் பணியில் ஈடுபட்டாலும் 2 நாளில் வாசித்து முடிக்க முடியாது. எடு காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட வுத்தொகுதி கடந்த 35 ஆண்டுகளில்
தில் இரட்டிப்பானதற்குப் பிரதான காரணம், துரிதமாக பகுப்பாய்வு செய்வதற்கென்று tage) களாகும். பல மாதங்கள் மனித த தரவுகள் இன்று குறுகிய காலத்தில் றக்கூடியதாக உள்ளது.
பண்பு துரித கதியில் உருவாக்கப்படும் ய ரீதியில் இணையத்தளம், மின் அஞ்சல் சிகைகளும் ஆய்வறிக்கைகளும் இலகுவாக கின்றன.
மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு பர்கள் கற்கும் முறைகளையும் ஆசிரியர் ாது, தொழில் நிலையங்கள் இயங்கும் கோப்புகளையும் காகித ஆவணங்களையும் தகவல்களையும் சேமித்து வைக்கின்றனர். னயத் தளங்களைப் பயன்படுத்துகின்றனர். கி அட்டைகளைக் கொண்டு செல்கின்றனர். -வும் நடைபெறுகின்றது. கட்டிடங்களைக் கதாக சுவர்கள் அற்ற இணையத்தள
விடயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கின்ற வர்களாக மாற, சுயகற்றல் திறன்களையும் பதற்கு கற்றல்' என்னும் புதிய கல்விக் - ஆசிரியர்களின் பாட விடயத்தைக் -டும் நாட்டமும் விருப்பமுடையவர்களாக பவியிலும் பெருவிருப்புடையவர்களாக்குதல் றன. ஆசிரியரானவர் சுயமாகக் கற்போரை என்ற கருத்தும் உண்டு. அறிவுப் பெருக்கம் பற்படுகின்றன. இதனால் புதிய அறிவினை டு. அதற்கான ஆயத்தத்தை மாணவர்கள் ாண்ட 'அறிவு காலாவதியாகும்' அபாயம் விக் கொள்கைகளும் வாழ்க்கை நீடித்த
ண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
டில் எழுத்தறிவின் வரையறையை மேலும் தான மாற்றமாகும். புதிய நூற்றாண்டில்
ல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 27
எழுதப் படிக்கத் தெரியாதவன் எழுத்தறி கற்றவற்றைக் கைவிடத் தெரியாதவன் (u என்போரே. எழுத்தறிவற்றவராவர் என்பது காலத்தில் எழுத்தறிவுடையோர் என்பவர்கள் அதில் உள்ள குறைபாடுகளையும் இன கற்க விரும்புபவர்கள், மீள் பயிற்சி பெ எண்ணக்கரு விரிவடைந்து செல்கின்றது.
கல்வி முன்னேற்றங்கள்
10 ஆம் நூற்றாண்டின் கல்வி, எழுத்தறிவு ( பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.
+ விசேடமாக வளர்முக நாடுகளில் அடி
தொடர்பான) ஒழித்துக்கட்டல் அல்ல பிள்ளைகளின் பாடசாலைக் கல்விக்கா (குறைந்தபட்சம் 9 ஆண்டு அடிப்பை கல்வி என்பது ஒரு சிலருக்கு மட்டு நாடும் கல்வியானது ஒரு அடிப்படை செய்தல்.
வாசிப்பையும் ஏனைய தகவல் படிப்பறிந்த படுத்துமுகமாக நூல்நிலையங்களை வலு
செல்வந்த நாடுகள் மட்டுமன்றி வளர்முக வழங்கி, ஏராளமான வளங்களை ஒதுக் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பின்வரும் எத
+ வாசிப்பில் ஏராளமானவர்கள் உயர்
+ தகவல்களைக் கண்டறிந்து, மதிப்பீடு ( + தமது அறிவை முகாமை செய்யும் ;
சற்று உயர்மட்ட எதிர்பார்ப்பில் இலத்திரன் ஒழுங்கு படுத்தல், மதிப்பிடல், பயன்படுத் அடிப்படைக் கல்வி பெற்றவர்களாக மக்க ஆயினும் பல உலகநாடுகளில் சாதாரண உள்ளது. பின்வருவன அவற்றின் பிரதான
+ வளர்முக நாடுகளில் தற்போதைய 6 + 11 கோடிப் பிள்ளைகளுக்கு ஆரம்பம்
உலகிலேயே தலைசிறந்த ஏராளமான
வல்லரசான ஐக்கிய அமெரிக்காவில் வா ஆங்கில வசனங்களைச் சரியாக வா எழுத்தறிவற்றவர்கள், 4.5 கோடி மக்கள்
கூர்மதி

பற்றவன் என்பதை விட கற்கத் தெரியாதவன், ilearn), மீண்டும் கற்க முடியாதவன் (releam) ஒரு அறிஞர் கூற்று (Alvin Toffler). நவீன தமது சொந்த அறிவை மதிப்பிடக்கூடியவர்கள். டவெளிகளையும் இனங்கானக் கூடியவர்கள். ற விரும்புபவர்கள் என எழுத்தறிவு பற்றிய
தொடர்பான 20 ஆம் நூற்றாண்டு முயற்சிகளைப்
ப்படை எழுத்தறிவின்மையை (வாசிப்பு, எழுத்து
து கணிசமான அளவு குறைத்தல்.
லத்தையும் கல்வித்தராதரத்தையும் அதிகரித்தல் பக்கல்வி) மே என்ற நிலைமையை அகற்றி, ஒவ்வொரு - மனித உரிமை என்பதை ஏற்றுக்கொள்ளச்
(information literacy) திறன்களை சனநாயகப் ப்படுத்தல்
5 நாடுகளும் கல்விக்குப் பெருமுக்கியத்துவம் கி வந்துள்ளன. இதன் காரணமாக 21 ஆம் திர்பார்ப்புகள் இருந்தன.
தராதரங்களை அடைந்திருப்பர் செய்து பயன்படுத்தும் திறன்களைப் பெற்றிருப்பர் திறன்களைப் பெற்றிருப்பர்
எ வழிமுயிைனூடகத் தகவல்களைப் பெறுதல், தல் என்னும் துறைகளில் பயிற்சி பெறக்கூடிய கள் வளர்ச்சி பெற்றிருப்பர் எனக்கருதப்பட்டது. எழுத்தறிவே இன்னும் பெரிய பிரச்சினையாக T பிரச்சினைகள்:
எழுத்தறிவற்ற மக்கள் தொகை 90 கோடி 5கல்வி வசதிகள் இல்லை
பல்கலைக்கழகங்களைக் கொண்ட அதிஉயர் ழம் 25 கோடி மக்களில் 3 கோடிப்பேர் எளிய சிக்க முடியாதவர்கள், 70 இலட்சம் பேர் எழுத்தறிவை நடைமுறையில் பயன்படுத்த
-(7)

Page 28
முடியாதவர்கள், வாக்களிக்கத் தெரியாதவர்க விளங்க முடியாதவர்கள் எனப் பல வகையில் பயிலும் மாணவர்களில் சரியாக வாசிக்க | செய்வோரில் 40% ஒரு கோடிப்பேர் வாசிக்க முடி தெரிவிக்கின்றனர்.
முந்திய உதாரணத்தை எடுத்துக் கொண்டால் ! பெண்களில் எழுத்தறிவற்றவர்களின் சதவீதப் பெறும் மாணவர்களில் 50 சதவீதம் ஆரம்பக்கல் விட்டு விலகி விடுகின்றனர். உயர் கல்வியிலும் , பெற்றுள்ள இந்தியா எதிர்நோக்கும் ஒரு பிரத குறைந்திருப்பதாகும்.
எழுத்தறிவின்மையானது மனித குலத்தை அர தடுத்துவிடும். இதன் காரணமாக செல்வந்த ந வாசிப்பு தொடர்பான உளப்பாங்குகளை ஆராப் சகலருக்கும் வழங்குவது வாசிப்புக்கான அத்தி உடையவர்களை எவ்வாறு வாசிக்கத் தூண்டல் எழுத்தறிவு இல்லாதிருப்பது பெரிய குற்றமா இருப்பது பெரிய குற்றம் என ஒரு அறிஞர்
36 நாடுகளில் வாசிப்புத்திறன்கள் தொடர்பாக Economic Corporation Development) (2001)
+ சிறிய பந்தியின் பொருளைக் கிரகித்த
பிரச்சினைகளைத் தீர்க்கத் தகவல்களைப் உருவாக்குதல் என்பன தொடர்பான எ
இளைஞர்கள் மத்தியில் போதுமான அளவு + 36 நாடுகளில் செய்யப்பட்ட இவ்வாய்வில்
இவ்வாய்வு பாடசாலைக் கல்வியைக் க
இந்ந ஆய்வில் உயர்ந்த புள்ளிகளைப் (5 கனடா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, ஐ சுவீடன், ஒஸ்திரியா, பெல்ஜியம், அயர்லா
சாதாரண தரத்தைப் (494-506 புள்ளிகள் ஐக்கிய அமெரிக்கா, டென்மார்க், சுவிட்.
குறைந்த புள்ளிகளைப் (396-493 வரை) செக்குடியரசு, ஜெர்மனி, ஹங்கேரி, பே மெக்சிக்கோ, பிரேசில் என்பன.
இந்த ஆய்வின்படி பெண்கள் ஆண்கை ை கிரகிக்கின்றனர். 36 நாடுகளில் 12 நாடுகள் (Information Society) வாழ்வதற்கான முறையா இவ்வாய்வின் முடிவு. வாசிப்புத்திறன் பற்றிய இல் காட்டி வரும் அக்கறையைக் காட்டுகின்றது.

ள், மருத்துவ வழிகாட்டல்களை வாசித்து னர் அந்நாட்டில் உள்ளனர். உயர்கல்வி முடியாதவர்கள் உள்ளனர். சிறு தொழில் யாதவர்கள் என்று அமெரிக்க ஆய்வாளர்கள்
இன்னும் 35% மக்கள் எழுத்தறிவற்றவர்கள், ம் அதிகம். ஆரம்ப பள்ளியில் அனுமதி
வி நிலை முடிவுறு முன்னர் பாடசாலைகளை தகவல் தொழில் நுட்பத்திலும் பெருவளர்ச்சி என பிரச்சினை சார்பளவிலான எழுத்தறிவு
றிவுப் பெருக்கத்தின் பயனைப் பெறாதபடி காடுகள் தற்போது வாசிக்க கூடியவர்களின் ப முற்பட்டுள்ளன. ஒரு புறம் எழுத்தறிவை
வாரம், மறுபுறம் எழுத்தறிவுத் திறன்களை மாம் என்ற மற்றொரு பிரச்சினையும் உண்டு. ல்ல, எழுத்தறிவு இருந்தும் வாசிக்காமல் -- கூறினார்.
ச் செய்யப்பட்ட OECD (Organization for - ஆய்வுகளின் விபரங்கள் பின்வருமாறு
தல், தகவலை இனங்காணுதல், எளிய பயன்படுத்துதல், சிறிய கருதுகோள்களை பழுத்தறிவுத் திறன்கள் செல்வந்தநாட்டு வு இல்லை என இவ்வாய்வு கண்டறிந்தது.
எபடியே இவ்வாறான முடிவு பெறப்பட்டது.
ற்று முடித்தவர்கள் பற்றியது.
07-546 வரை) பெற்ற நாடுகள் பின்லாந்து, ஸ்லாந்து, கொரியா, பிரித்தானியா, ஜப்பான், இந்து என்பன. T) பெற்ற நாடுகள் நோர்வே, பிரான்ஸ், ஸர்லாந்து. . பெற்ற நாடுகள் ஸ்பெய்ன், இத்தாலி, பாலந்து, கிரீஸ், போர்த்துக்கல், ரஷ்யா,
ள விடச் சிறப்பாக வாசித்தவற்றைக் பின் இளைஞர்களே தகவல் சமூகத்தில் ரன ஆயத்தத்தைப் பெற்றுள்ளனர் என்பதே வாய்வு செல்வந்த நாடுகள் இவ்விடயத்தில்
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 29
தகவல் படிப்பறிவும் தகவல் சமூகம்
உலக நாடுகள் பல இன்று தம்மைத் த என்று கூறிவருகின்றன. தாம் பெற்றுள்ள இவ்வாறு உரிமை பாராட்டுகின்றன. (வரு கொண்டு வளர்ச்சியடைந்த நாடுகள் எனப் மைய நூற்றாண்டில் நாடுகள் ஒன்றில் 'அ பீடிக்கப்பட்ட நாடுகள்' என புதிய அற வகைப்படுத்தும் அளவுகோள்களும் மாறி
டைந்., டுகின்ற பள்.
அறிவார்ந்த நாடுகள் தமது மக்கள் வாசி தகவல்களும் தெரிந்தவர்கள் (well inform கூடியவர்கள், பல்வேறு ஊடகங்களிலிருந்து உரிமை பாராட்டுகின்றன.
சாதாரண எழுத்தறிவுக்கப்பால் தகவல் படி சர்வதேச நூலக சங்கங்களின் சம்மேளத் 'தகவல்களைத் திரட்டவும் சுதந்திர திறன்களைப் பெற்றுக் கொள்ளவும் அபிவிருத்திக்கும் உதவும் ஒவ்வொருவ திறமையுடனும் பயன்படுத்தக் கூடியத
Interna
இக்கூற்றானது வாசிப்புத் திறனூடாக6ே மற்றவர்களுக்குத் தகவல் வழங்குதல், த சாத்தியமாகும் என்பதை வலியுறுத்துகி சமூகங்களும் சாதாரண எழுத்தறிவுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் இன் சமூகமானது 'யாவரும் தகவல்' பெறும் .,
புதிய நூற்றாண்டில் வளர்ச்சியடைந்த நாடு பொருளாதார, அரசியல், சமூக ஏற்றதா! பெற்றதாகக் கூறமுடியாது. 'தகவல் படிப்ப முடியும் என்ற எதிர்பார்ப்புண்டு. வளர்மு தற்போது மேலைநாட்டில் பெருகியுள்ள தமது அபிவிருத்திக்கும் பயன்படுத்த முடி விஞ்ஞான, தொழில்நுட்ப அறிவு எவ்வா கொரியா, மலேசியா, தாய்வான், ஹெ கொள்கையைக் கடைப்பிடித்து வருகின்ற
எவ்வாறாயினும் தகவல் தொழில்நுட்பமும் ரீதியில் புதிய இடைவெளிகளைக் 6 நாடுகளுக்கிடையேயும் ஏற்படுத்தி வருகி6
1. -
கையெழுத்து (Hand written) பண்பாடு பண்பாடுகள் மறுபுறம்.
கூர்மதி

கத்தின் பண்புகள்
கவல் சமூகம் அல்லது அறிவார்ந்த சமூகம் கல்வி அறிவை அளவு கோளாகக் கொண்டே மான, பொருளாதார வளர்ச்சி மட்டங்களைக் பெயர் பெற்ற நாடுகள் இவை). புதிய அறிவு றிவார்ந்த நாடுகள்' அல்லது 'அறியாமையால் நிர்வுப் பெருக்கத்தின் காரணமாக நாடுகளை விட்டன.
க்கும் திறன்களைக் கொண்டவர்கள், எல்லாத் ed) தகவல்களை விவேகத்துடன் பயன்படுத்தக் து தகவல்களைத் திரட்டத் தெரிந்தவர்கள் என
ப்பறிவு இன்று பெற்றுவரும் முக்கியத்துவத்தை தின் பின்வரும் கூற்று எடுத்துக்காட்டுகிறது.
மாகத் தீர்மானங்களை மேற்கொள்ளும் கலாசார வளர்ச்சிக்கும் பொருளாதார ரும் நூல்நிலையங்களைச் சுதந்திரமாகவும் நாக இருத்தல் வேண்டும்.'
tional Federation of Library Associations
வ மனித அனுபவங்களை ஆவணப்படுத்தி, நானும் தகவல்கள் தெரிந்தவனாகுதல் என்பன ன்றது. இதன்காரணமாக இன்று நாடுகளும் 5 அப்பால் சிந்திக்க வேண்டிய அவசியம் று யுனெஸ்கோ அமைப்பானது புதிய தகவல் ஆற்றலைப் பெறுவதை வலியுறுத்துகின்றது.
களுக்கும் வளர்முக நாடுகளுக்குமிடையிலான ழ்வுகளை அகற்றும் முயற்சிகள் பெருவெற்றி றிவானது' இவ்விடயத்தில் முக்கிய பணியாற்ற க நாடுகள் புதிய அறிவைப் படைப்பதோடு, அறிவையும் தகவல்களையும் உள்வாங்கித் யும். ஜப்பானிய அபிவிருத்திக்கு மேலைநாட்டு று உதவியது என்பது வரலாறு. சிங்கப்பூர், Tங்கொங் (சீனப்பிரதேசம்) இத்தகைய ஒரு
ன்.
ம் இணையத்தளப் பயன்பாடும் உலகளாவிய குடும்பங்களுக்குள்ளும் நாடுகளுக்குள்ளும் ன்றன.
டுகள் ஒருபுறம் தகவல் தொழில்நுட்பப் (digital)
(9)

Page 30
2. நவீன தகவல், தொடர்பாடல் தொழில் நு
புறம், பயன்படுத்தத் தெரியாதவர்கள் ம
3. பழமைப் போக்குடைய வாய்மொழி மர
மக்கள் ஒரு புறம், மறுபுறம் சிறந்த கல்
இன்னும் சில காலத்தில் குறைந்தபட்ச தக நாடுகளும் மக்களும் தகவல்களையும் 9 முடியாதவர்களும் பயன்படுத்தத் தெரியாத பொருளாதார ரீதியாக முன்னேற் றங் . வளர்ச்சியடையாதவர்கள் என்று வகை எச்சரிக்கப்படுகின்றது.
இவ்வாறான இடைவெளி உலக நாடுகளுக் இன்று யுனெஸ்கோ பல புதிய குறிக்கோள்க நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வரு
+ தகவல் சமூகத்தின் சட்டம் மற்றும் சமூக,
கலந்துரையாடலுக்கு ஒழுங்கு செய்தல். + பொது மக்கள் தகவல்களைப் பெற்றுக்கொ
+ தகவல் துறையில் பயிற்சி, தொடர்கல்
ஒழுங்கு செய்தலும் உதவி வழங்கலும்.
+ தேசிய, பிராந்திய, சர்வதேச அளவில் வை
வளர்முக நாடுகள், வளர்ச்சியடைந்த நாடுகள் உருவாக்குதல், மற்றும் அறிவைத் திறமையுடன் இளைஞர்களுக்குப் பயிற்சி வழங்க வலியுறுத் உந்தப்பட்ட கலாசார சூழுலுக்கேற்ப வாழ் இன்று ஏற்பட்டுள்ளது.
புதிய தகவல் தொழில் நுட்பங்களும் இன்றைய விளைவாக, 'தகவல் கலாசாரம்' என்ற புத் மனிதர்கள் தமக்குள் தொடர்புகொள்ளும் மர தகவல்களைப் பெறும் முறையும் மற்றவர்க மாறியுள்ளது. அவர்கள் தமது தொழிலகங்கள், - பணியாற்றும் முறைகளும், இப்புதிய தகவல்
நவீன தகவல் கலாசாரத்தின் இறுதியான இ அறிவையும் அனுபவத்தையும் விரிவுபடுத்துவது எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் தகவல் எதிர்பார்க்கப்படுகின்றது.
சுருங்கக் கூறின் நவீனயுகம் சாதாரண படிப்பறிவையும் தகவல் கலாசாரத்தைப் பற்றாக்குறை உலகளாவிய ரீதியில் பரந்து
( 10 )

ட்பத்தைப் பயன்படுத்த தெரிந்தவர்கள் ஒரு
றுபுறம்
பையும் கையெழுத்து மரபையும் கொண்ட
விபெற்ற நாகரிகமடைந்த மக்கள்.
வல் படிப்பறிவுத்திறன்களைப் பெறமுடியாத வைசார்ந்த தொழில்நுட்பத்தையும் பெற வர்களும் சமூகரீதியாகப் புராதனமக்கள், காணாதவர்கள், அரசியல் ரீதியாக ப்படுத்தப்படும் அபாயம் உண்டு என
கிடையில் ஏற்படுவதைத் தடுக்குமுகமாக, ளை வகுத்து 'யாவருக்கும் தகவல்' என்ற 5கின்றது. அவ்வாறான குறிக்கோள்களாவன.
கலாசார சவால்கள் தொடர்பான சர்வதேசக்
ள்ளத் தேவையான ஒழுங்குகளைச் செய்தல்
பி, வாழ்க்கை நீடித்த கல்வி என்பவற்றை
லத்தொகுதிகளை (networking) ஏற்படுத்தல்
பின் கல்வி முறைகள் தொடர்பான அறிவை எ பயன்படுத்துதல் தொடர்பான விடயங்களில் 5தப்படுகின்றன. அதாவது புதிய தகவலால் வதற்கு மக்கள் பழகிக்கொள்ளும் நிலை
புதிய யுகத்துக்கும் ஏற்ற உளப்பாங்குகளின் கிய எண்ணக்கரு ஒன்று தோன்றியுள்ளது. பு வழிமுறைகளும் மாறியுள்ளன. அவர்கள் ளுக்கு தகவல்களை வழங்கும் முறையும் அலுவலகங்கள், ஆய்வுகூடங்கள் என்பவற்றில் - கலாசாரத்தால் பாதிக்கப்படுகின்றன.
இலக்கு யாவரும் பகிர்ந்து கொள்ளக்கூடிய தாகும், அத்துடன் தனியாட்களும் சமூகமும் கலாசாரம் தீர்த்துவைக்க வேண்டும் என
எழுத்றிவுத்திறனுக்கு அப்பால் தகவல் பும் வலியுறுத்துகின்றது. எழுத்தறிவுப் - காணப்பட்ட போதிலும் புதிய யுகத்தின்
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 31
சவால்களை எதிர்கொள்ள சாதாரண எழு தகவல் படிப்பறிவைப் பெற அடிப்படையா சார்பான திறன்களும் உளப்பாங்குகளும் உருவாக்கி விடமுடியாது. சுய அறிவை பே சமூக பொருளாதாரம் ஏற் படமுடியும்! நாடுகளுக்குள்ளேயான ஏற்றத்தாழ்வுகளை
க* கற்பிக்கும் விஞ்ஞானக் கலை ம உயர்த்துவதற்கு முன்பாக அ சர்வாம்சமான ஞானத்தைப் பெ
RC)
கூர்மதி

த்தறிவு மட்டும் போதாது. எனினும் உயர்ந்த எது எழுத்தறிவுத் திறன்களாகும். வாசிப்புக்குச் வளர்க்கப்படாமல் ஒரு தகவல் கலாசாரத்தை ம்படுத்த உதவும் தகவல் படிப்பறிவினூடாகவே ) என்பதோடு நாடுகளுக்கிடையேயான, யும் அதுவே போக்க வல்லது.
கடு* * சிதனைக் கண்ணியம் மிகுந்தவனாக | து முதலில் மனிதனைப் பற்றிய பற்றிருக்க வேண்டும்.
கே. யுஜீன்ஸ்கி,
ரஷ்ய கல்வியியலாளர் உலக
(11)

Page 32
சமகாலத்து ஆக்க மலர்
((
ஆக்கமலர்ச்சி நுண்மதி” என்ற எண்ண ஆய்வுகளிலே விதந்து பேசப்படும் பொருளா மட்டுமன்றி அறிவியல் ஆக்கங்களுக்கும் கன் (CREATIVE INTELLIGENCE) ! வலியுறுத்தப்படுகின்றது. நுண்மதியை முற் சிறில்பேட் என்பாரின் ஆய்வு முடிவுகள் த லெஸ்வி கியேர்ன்சோ போன்ற பின்வந்த (PALMER. Ed. 2004) நுண்மதியை காரல் படுத்துதலும் பிறப்புடனும் மரபுவழிப்படுத்தலு நோக்கைப் புலப்படுத்தும். அத்தகைய ( மனவெழுச்சி நுண்மதி, பல்துறை நுண்மதி தோற்றம் பெற்றன.
கற்பனை மற்றும் பகற்கனவு காணல் எ கொண்ட வடிவமாக ஆக்கமலர்ச்சி அமைக்க கலைப்படைப்புக்கள், அறிவியற் கண்டுபிடிப் வடிவங்கள் முதலியவை தோற்றம் பெறுகில
முன்னர் அறிந்திராத ஒன்றை உ நகர்ச்சியாகவும், புதிய இணைப்புக்களின் உ மேலெழுச்சியாகவும், தனித்துவத்தின் பாய்ச்சல் அது கட்டற்ற சிந்தனை அல்லது திறந்த தொழிற்பாடுகளோடு இணைந்ததாகக் குறிப்
சிந்தனையின் தொழிற்பாடுகளோடு அணுகுமுறைகளை உளவியலாளர்கள் மே முயற்சிகளை மேற்கொண்டோர் வரிசையில் விரிசிந்தனையுடன் தொடர்புபடுத்தி ஆக்க குவிசிந்தனை மற்றும் விரிசிந்தனைகள் விளக்கப்பட்டன. குவிசிந்தனை நெடுங்கோட்டு சரியான விடையை மட்டும் நோக்கி நகர்ந்து ( விரிசிந்தனை பல பரிமாணங்களைக் கொண்டது முன்னோடியாக இருக்கும் பண்புகளைக் அடியொற்றி எட்வேட் டி போனோ நெடுந் (LATERAL) சிந்தனை என்ற அணுகுமுறைக சிந்தித்து ஊடுருவிச் செல்லல் நெடுங்கோட்டுச் சிந்தனையை இயக்கிச் செல்லும் பல்வேறு 6 சிந்தனையுடன் தொடர்புடையது.
(12)

ஆய்வுகளும் மறுமதிப்பீடும்
பேராசிரியர் சபா.ஜெயராசா
க்கரு அண்மைக்காலத்தையக் கல்வியியல் கவுள்ளது. கலை இலக்கிய ஆக்கங்களுக்கு எடுபிடிப்புகளுக்கும் ஆக்கமலர்ச்சி நுண்மதியே அறிகைத் தளமாக இருத்தலுக் கும் 8றிலும் ஒற்றைப் பரிமாணத்தில் நோக்கிய வறானவை என்றும் அபத்தமானவை என்றும் ஆய்வாளர்களினால் அம்பலமாக்கப்பட்டன. ணம் காணும் கணித அறிவுடன் தொடர்பு டன் தொடர்புபடுத்துதலும் ஒற்றைப் பரிமாண நோக்கினுக்குரிய எதிர் எழுச்சிகளாகவே, தி, ஆக்க மலர்ச்சி நுண்மதி முலானவை
ன்பவற்றிலும் மேம்பட்ட அல்லது மேலெழுச்சி கின்றது. அதன் நடைமுறை விளைவுகளாக புக்கள், புதிய ஆக்க வடிவங்கள், அறிக்கை ன்றன.
ருவாக்குதலும் பிறிதொன்றை நோக்கிய உருவாக்கலாகவும், புதிய புலக்காட்சிகளின் ல்களாகவும் ஆக்கமலர்ச்சி வெளிப்படுகின்றது. ந சிந்தனை அல்லது விரிசிந்தனைகளின் பிடப்படுகின்றது. (MANGAL,S.k 2007)
ஆக்கமலர்ச்சியை இணைத்து நோக்கும் ற்கொண்டு வருகின்றனர். அதன் முன்னோடி ) கில்போட் குறிப்பிடத்தக்கவர். கில்போட் மலர்ச்சியை விளக்கினார். அந்நிலையில் ஆகியவற்றுக்கிடையேயான வேறுபாடுகள் } நிலைப்பட்டது. தர்க்கபூர்வமானது, ஒரேஒரு செல்வது, புலமை அறிவோடு தொடர்புபட்டது. வ, விநோதமானது, ஆக்குபவரே அத்துறையில் கொண்டது. கில்போட்டின் கருத்துக்களை கோட்டுச் சிந்தனை மற்றும் பக்கவாட்டுச் ளை முன்வைத்தார். ஒரே பொருளில் ஆழ்ந்து சிந்தனையாகின்றது. வெவ்வேறு வழிகளிலே விடைகளை நோக்கி நகர்தலும் பக்கவாட்டுச்
- கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 33
பெரும்பாலான உளவியல் ஆய்வா கூறாகவே கருதினர். ஆனால் றொபேட் ஜே வேறுபட்டதாகக் கருதினார். (ALDER, H 20 மேலெழுகின்றது.
மரபுகளுக்கு மாறுபட்ட வகை இடம்பெறுதல் அழகியற் சுவையோடு இணைந்தி அதிக நெகிழ்ச்சிப்பாங்கைக் கொ தெளிவின்மையைப் (AMBIG சகித்துக்கொள்ளல் மேலாதிக்க அறிக்கைத்தடங்களை
சிந்திக்கும் பொழுதும் கற்பனை செய்ய பொழுதும் மூளையின் சிக்கலான அணு (NEURONAL) இணைப்புக்கள் அதில் ஆக்கவளர்ச்சி வல மூளையுடன் தொட எளிமையாக்கப்பட்ட முடிவாகும். வலமூ ஆற்றுகையை மேற்கொள்கின்றது.
மனித மூளையை கணனி மூளைய விடுகின்றது. கணனியின் செயற்பாடுகள் நி நிறுத்தி வைக்கப்படமுடியாதது. நித்திரையி அது தொடர்ந்து தன்னை உருவாக்கிய இருப்பிலிருந்து அதன் உருவாக்கம் நிகழ்ந் வேண்டியுள்ளது.
வலமூளை இடமூளையுடன் இ ை ஒவ்வொன்றுக்குமுரிய தனித்துவங்கள் தொழிற்பாடுகளாகவும் வலமூளைக்குரிய சுட்டிக்காட்டப்படுகின்றன. (ADLER, H 20 இடமூளை
சொல்சார்ந்தது. பகுத்தறியும் பண்பு கருத்துக்களை ஒழுங்கு முறை தருக்கப்பண்பு
வரன்முறையானதும் ஒழுங்கன. குறியீட்டுப்பண்பு உறு நேர்வுகளுடன் தொடர்பு
அருவநிலைப்பண்பு முறையியல் தழுவிநிற்றல் செயற்பாங்குடமை காரணகாரிய பண்புடைமையும் வலப்பக்க உடற் செயற்பாட்6
கூர்மதி

ரர் ஆக்கத்திறனை நுண்மதியுடன் இணைந்த } இஸ்ரேனபோர்க் அதனை நுண்மதியிலிருந்து 06) பின்வரும் பரிமாணங்களில் அந்த வேறுபாடு
யில் சிந்தனைகளும் வினைப்பாடுகளும்
ருத்தல் Tண்டிருத்தல்
UITY) பொறுத்துக்கொள்ளல் அல்லது
ா வினாவுக்கு உள்ளாக்குதல்
பும் பொழுதும் ஆக்கமலர்ச்சியை முன்னெடுக்கும் நிலை வலைப்பின்னலூடே புதிய நியுறொனல் பிரைவுடன் தொழிற்படத் தொடங்குகின்றன. ர்புடைய செயற்பாடு என்று கூறுதல் அதீத வளை, இடமூளையுடன் இணைந்தே தனது
|டன் ஒப்பிடுதலும் அதீத எளிமையாக்கலாகி றுத்தி வைக்கப்படலாம். ஆனால் மனித மூளை ன் போதும் அது இயங்கிய வண்ணம் இருக்கும். வண்ணம் இருக்கும். இந்நிலையில் சமூக து கொண்டிருத்தலை முக்கியமாகக் குறிப்பிட
ணந்து தொழிற்படுகின்றதாயினும் அவை நம் காணப்படுகின்றன. இடமூளைக்குரிய தொழிற்பாடுகளாகவும் பின்வருவன முறையே
06)
றயாகத் தொகுக்கும் திறன்
மந்ததுமான திறன்
பட்டிருத்தல்
- நியாயித்தலும் டெக் கட்டுப்படுத்துதல்

Page 34
இடமூளை
சொல்சாராதது முழுமைநிலையாக்கும் தொகுத் மனவெழுச்சி, உணர்ச்சி மற்றும் வரன்முறைசாரா நெகிழ்ச்சிப்பல் உருவநிலைப்பாங்கு கலை இலக்கியங்களுக்கு மன கோட்பாடுகளிலும் எண்ணங்கள் பார்த்தல், கேட்டல் என்ற வழிக் இசை, பாடல், கவிதை, உரு உணர்ச்சி கொள்ளல்
காலக்கட்டுப்பாட்டினை மீறும் இடப்பக்க உடலியக்கச் செய் யாக்கத்தில் வலமூளையின் | இருக்கும். ஆனால் முழுமூ முன்னெடுக்கும்.
ஆக்கமலர்ச்சியானது மனவெழுச்சி அடியொற்றியே இந்திய மரபில் "இரசம்” பெற்றது. தமிழ் மரபில் மனவெழுச்சிகள் " மனவெழுச்சிகள் நேர்ப்பண்பு கொண்டும் அை இலக்கிய படைப்புக்களை உருவாக்கும் ஆ கதிர் வீச்சுடன் இணைந்தது என்பர். அந்நிலை (AWARE OF BEING AWARE) என்று குறி
ஆக்கமலர்ச்சி என்பது அனைவருக்கு மாத்திரம் கட்டுப்பட்டதன்று. நாளாந்த வாழ்க் பிரயோகிப்பவர்களது திறன் வெளிவரு நடத்தைகளைத் தொகுத்து ஆராயும் ஆ (HISTORIOMETRY) உருவாக்கப்பட்டது ஆக்கமலர்ச்சி மிகையாகக் காணப்படுவோரி குறிப்பிடப்பட்டுள்ளன. (கொக்ஸ் என்பாரின்
யாதாயின் ஓர் ஆட்சி (DOMAIN) 4 ஈடுபாட்டை அவர்கள் வாழ்க்கை செயற்பாடு சிக்கல் நிரம்பியதாகவு ஆக்கவிளைவு அல்லது ஒரு படை ஆக்கமலர்ச்சிமிக்கோரின் ஒற்றைப்பு உறவுகளைப் பாதிக்கும்.
முரண்பாடுகளையும் தியாகங்கள் தொழிற்பாடுகள் அமைந்திருக்கும்.
ஆக்கமலர்ச்சி தொடர்ச்சியான செயற் எழுச்சியுடன் (AROUSAL) ஆரம்பிக் அறைகூவல்களைச் சந்திக்கும் பொழுது அ
( 14 )

கதறியும் திறன்
ம் உள்ளுணர்வுத் திறன் ன்பு
வெழுச்சியுடன் துலங்குதல் ரிலும் விருப்புடைமை களில் மனவெழுச்சி பூர்வமாகக் கற்றல் வாக்கங்கள் தொன்மங்கள் முதலியவற்றுக்கு
விடுதலையும் தொடர்ச்சியும் பற்பாடுகளை கட்டுப்படுத்துதல் புனைகதை செயற்பாடுகளே ஒப்பீட்டளவில் மிகையாக ளையும் இணைந்தே ஆக்கமலர்ச்சியை
களோடு இணைந்தது. மனவெழுச்சிகளை பற்றிய அழகியற் கோட்பாடு உருவாக்கம் மெய்பாடுகள்” என்று குறித்துரைக்கப்பட்டன. மயலாம் எதிர்ப்பண்பு கொண்டும் அமையலாம். க்கமலர்ச்சித் தொழிற்பாடு மூளையின் அல்பா ல "விழிப்புணர்ச்சியாயிருத்தின் விழிப்புணர்ச்சி” ஒப்பிடப்படும்.
தமுரிய ஒரு திறன். தனித்து ஒருசிலருக்கு கையிலும் தொழில்களிலும் ஆக்கமலர்ச்சியை தல் இல்லை. ஆக்கமலர்ச்சிமிக்கோரின் ய்வுப்புலமாக "வரலாற்றியல் உறுகணிப்பு” ப. அவ்வாறான ஆய்வுகளைத் தொடர்ந்து
டத்து அமைந்துள்ள சில சிறப்புப் பண்புகள்
ஆய்வு)
அவர்களிடத்து மேலோங்கியிருக்கும் அதற்குரிய நீட்சி முழுவதும் காட்டுவர்.
ம் நீடித்துச் செல்வதாகவும் அமையும். டப்பு திடீரெனத் தோற்றம் பெறுதல் இல்லை. பரிமாண நோக்கானது குடும்பம் நட்பு முதலாம்
ளையும் உள்ளடக்கியதாக ஆக்கத்திறன்
பாடுகளுடன் இணைந்தது. அது உந்துநிலை கின்றது. சமூக இருப்பிலிருந்து எழும் அந்த எழுச்சி தொழிற்படத் தொடங்குகின்றது.
- கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 35
அறைகூவலுக்குரிய பல்வேறு தீர்வுகளை பெறும் நிலையில் ஆக்கமலர்ச்சி எழுச்சி இயல்புக்கு ஏற்றவாறு பாய்ச்சலின் பண்பு வே மற்றும் விஞ்ஞானப்படைப்புக்களை உரு சுவைப்போருக்கும் ஏற்படும். எடுத்துக்காட் புனைகதைகளைப் படைக்க வேண்டுமென தோற்றம் பெறும் பாய்ச்சலின் வெளிப்பாடுத அகிலப்பண்பு (UNIVERSAL) கொண்டது
ஆக்கமலர்ச்சியின் விளைவுகள், ச புத்தாக்கங்களாக வெளிவரும் பொழுது பின்
எண்ணளவு பெருக்கம் - தரச்சிறப் புத்தாக்கமும் - பயன்பாடும் விளைவுகளும் - சமூகஇலக்குக பெறுமானமும் - புகழும்
குறைந்தளவு உள்ளீட்டுடன் கூடியள் பிறிதொரு பரிமாணமாகும். சமூகம் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. சமூகம் சிக்கல் பெற்றுக் கொள்வதில் ஒருவித தெரிவு தெரிந்தெடுத்தவற்றை புதிய வழிகளில் நோக் பெறுகின்றது. அவற்றைத் தளங்களாக்கி பெறுகின்றன. விளைவுகளைக் கொண் செய்யப்படுகின்றது.
ஆக்கமலர்ச்சியின் விளைவுகள் வர் வகையாகப் பாகுபடுத்தலாம். அவை
சுரண்டல் அல்லது பறிப்புக்குத் ; ITY) சுரண்டலுக்கு உள்ளாவோரை 6 (A.E.CREATIVITY) இது எதிர்ப்
ஆக்கமலர்ச்சி தனிமனிதத் தீவில் உரு இருந்தே மேலெழுகின்றது. சமூக இயல்புக் செயல்முறை பின்வரும் உறுபண்புகளை (1) ஆளுமையிலேயே மலர்ச்சி கொள்ளச் செ
தன்மலர்ச்சியடைதல் (ORIGINA கட்டுப்பாடற்ற தன்னிலை ஓங்கல் உசாவல் விருப்பு (CURIOSITY)
ஆபத்தைத்தாங்கும் திறன் ஆக்கவலு புதுமையும் சிக்கலும் நோக்கிய கலையுணர்வு திறந்த நோக்கு
கூர்மதி உCM 013788

நோக்கிய சிந்தனைத் தொழிற்பாடுகள் இடம் 7 கொள்ள ஆரம்பிக்கின்றது. அறைகூவலின் பறுபட்டுச் செல்லும். பாய்ச்சல் கலை இலக்கியம் தபாக்குபவர்களுக்கு மட்டுமல்ல அவற்றைச் டாக புனைகதைகளை வாசிப்போர் தாமும் எண்ணுதலும் தொழிற்படலும் அவர்களிடத்தே தான். அந்நிலையில் ஆக்கமலர்ச்சிப் பாய்ச்சல் - என்பது தெளிவாகின்றது.
கலை இலக்கியங்களாக, கண்டுபிடிப்புகளாக, "வரும் இணைநிலைகள் தோற்றம் பெறுகின்றன.
பப்பு
நம்
வு வெளியீட்டைத் தருதல் ஆக்க மலர்ச்சியின் - என்ற தளத்திலிருந் து உள் ளீடுகள் D பொருந்தியதாக இருப்பதனால் தகவல்களைப் வு முறைமை மேற் கொள்ளப்படுகின்றது. குதலும் இணைத்தலும் அடுத்து முக்கியத்துவம் - ஆக்கமலர்ச்சியின் விளைவுகள் தோற்றம் டே ஆக்கமலர்ச்சியின் திறன் கணிப்பீடு
க்க முரண்பாடுகளை அடியொற்றி இரண்டு
துணைபோகும் ஆக்கமலர்ச்சி (E-CREATIV
எழுச்சி கொள்ளச் செய்யும் ஆக்கமலர்ச்சி
பறிப்பு ஆக்கமலர்ச்சி என்றும் குறிப்பிடப்படும்.
நவாக்கப்படுதல் இல்லை. அது சமூக இருப்பில் கள் அதனை நெறிப்படுத்துகின்றன. சமூகச் CRITS) ஆக்கமலர்ச்சி கொண்ட தனிமனிதரின் ய்கின்றது.
LITY)
கவர்ச்சி

Page 36
* தமது படைப்பு மலர்ச்சிபற்றிய உணர்வு
மரபுவழி உளவியலாளர் ஆக்கமலர்ச்சி விளக்கினர். அதாவது பிறப்புடன் கூடியதென் விளக்க முற்பட்டனர். உளப்பகுப்பு உளவியலா அதனைத் தொடர்புபடுத்தினர். கூட்டு நனவி TYPES) ஆகியவை ஆக்கமலர்ச்சியை தூண்டு! (JUNG, C.G 1993) விளக்கினார். இவ் 6 நிரூபிக்கப்படாதவையாக அமைந்தன.
ஆக்கச் செயல்முறையை விளக்க வந் படிநிலைகளைக் கொண்டதாக அது முகிழ்த் 1926) தயாரித்தல் நிலை, அடைகாப்பு நிச் வெளியிடும் நிலை என்ற படிநிலையும் ஒழுங்க
ஆக்கமலர்ச்சியை ஏறுநிறைமட்டங்களா. LOR, 1.A 1975) அவை வருமாறு.
1.
2.
வெளியீட்டு ஆக்கமலர்ச்சி
விளைவு நிலை ஆக்கமலர்ச்சி 3. புதியன கண்டறியும் ஆக்கமலர்ச்சி 4. புத்தாக்க ஆக்கமலர்ச்சி 5. முகிழ்த்தெழும் வகை (EMERGENT
வெளியீட்டு வகை ஆரம்பநிலையாக உன்னதகங்களைக் கொண்டதாகவும் அமைப்
ஆக்கமலர்ச்சி தொடர்பான ஒரு மாற்றுவ (ARITI, 1976) அதாவது நடப்பியலை நிலை செயற்பாட்டுக்கும் மனநோய் மயப்பட்டவர் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இரவு ஆக்கமலர்ச்சி கொண்டவர்கள் அந்த நிலைம் தன்னியல் நிறைவின் பொருட்டும் பயன்படுத்துகி அதனைத் தமது தனிப்பட்ட அகவய உலகின் ஆக்கச் செயற்பாட்டை ஒருவித மாயச்செயற்பு என அவர் மேலும் விளக்கினார்.
ஆக்கமலர்ச்சி நனவிலி மனத்தின் 6 நிலைச்செயல் முறை மற்றும் நனவு மனத்தின் நிலைச் செயல்முறை ஆகியவற்றின் மாயச்செயர் உலகத்தருக்கத்துக்கு ஒவ்வாதது. மற்றது உ மாயவித்தையாக ஒன்றிணைப்பை மேற்கொள்
ஆக்கமலர்ச்சி பற்றி ஆராய்ந்த மேலைப்பு ஆராயத்தவறிவிடுகின்றனர். கலை இலக்கியம் ஆராயும்பொழுது சமூக இருப்புக்கும் ஆக்கம் புலப்படும். இந்நிலையில் ஆக்கமலர்ச்சி என்
( 16 )

யை முற்றிலும் ஊகங்களின் அடிப்படையாக றும், முன்னோரால் அருளப்பட்டது என்றும் ராளர் நனவிலி மனத்தின் தொழிற்பாடுகளுடன் லி மற்றும் தொல்வடிவங்கள் (ARCHEவதற்குரிய தொழிற்பாடுகளாய் இருத்தலையுங் வாறான கருத்துக்கள் திட்டவட்டமாக
த வலெஸ் அவர்களின் கோட்பாடு நான்கு தெழுவதாகக் குறிப்பிட்டது. (WALLAS, G கழும் நிலை, ஒளிரும் நிலை, சரிபார்த்து
மைப்பும் ஊகங்கள் தழுவியதாவே எழுந்தது.
க ரையிலர் விளக்கிக் கூறலானார். (TAY
IVE) ஆக்கமலர்ச்சி
வும் முகிழ்த்தெழும் வகை அருவநிலை பும்.
கையான கருத்தை அறிற்றி முன்வைத்தார் மாற்றம் செயல்முறையில் ஆக்கமலர்ச்சிச் களின் சிந்தனைக்குமிடையே ஒப்புமை ன்டினுக்குமுள்ள வேறுபாடு என்னவென்றால் மாற்றத்தினை சமூகநோக்கின் பொருட்டும் ன்றனர். ஆனால் மனநோய்வாய்ப்பட்டவர்கள் பொருட்டுப் பயன்படுத்திக் கொள்கின்றனர். பாட்டுத் தொகுப்பு (MAGIC SYNTHESIS)
சயற்பாடுகளை உள்ளடக்கிய முதலாம் செயற்பாடுகளை உள்ளடக்கிய இரண்டாம் தபாடு என்பது அவரது விளக்கம். முதலாவது பகத் தரத்துக்கு இணைந்தது இரண்டையும் ளல் ஆக்கமலர்ச்சியில் இடம்பெறுகின்றது.
) உளவியலாளர் அதன் சமூகத் தளங்களை பகள் சமூகத்திலே தோற்றம் பெறுமாற்றை லர்ச்சிக்குமுள்ள தொடர்புகள் தெளிவாகப் பது சமூக இருப்பின் மலர்ச்சியாகின்றது.
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011 .

Page 37
நிலமானிய சமூக அமைப்பிலே தோற்றம் ( அமைப்பிலே தோற்றம் பெற்ற இலக்கியங்கள் வேறுபாடுகள் சமூக இருப்பின் வழியாக நீட் அமைகின்றன. சமூக ஆக்கமலர்ச்சி ஆய்வுப்புலமாக முன்மொழிதலை முன்னெ
*63
நம்மை உயர்த்துவது .
நாம் எதைச் செய் ஜூலை
கூர்மதி.

பெற்ற இலக்கியங்களையும் கைத்தொழிற்சமூக களையும் ஒப்பு நோக்கும் பொழுது காணப்படும் சி கொண்ட ஆக்கமலர்ச்சியின் வேறுபாடுகளாக யை (SOCIO-CREATIVITY) ஒரு புதிய எடுக்க வேண்டியுள்ளது.
காடு நாம் பேசும் பேச்சு அல்ல கிறோம் என்பதுதான்
ஒSe

Page 38
கற்பித்தலுலகமும்
0ா I IIா(All) கா
தமிழ் பாடச
ண்மைத்துவ (Professional) சூழலில் ெ கற்றுக்கொண்ட விடயங்களை அடிப்படை! எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு படைப்பாற்ற காண்பவராக இருப்பார். அவ்வாறான வாண்மை முக்கியத்துவம் பெறும் ஆசிரிய ஆளணியினரி ஒரு சமூக அபிலாசையாகும்.
வாண்மைத்துவ நிலைநோக்கில் கற்பித்த எவ்வளவு அனுபவம் பெற்றுள்ளான் என்ப ை பின்னணியில் தாம் வரித்துக்கொண்டுள்ள அகச்
ஒரு பட்டெறியாளனாக (Reflective Practitioner) வேண்டப்படுகின்றது. எனவே தான் இன்று ஆ பயில்நிலை ஆசிரியர்களுக்கு பட்டெறிகை ே முனைப்பாக முன்னெடுக்கப்பட வழிவகைகள்
பட்டெறிகையென்பது முழுமையான சுப் அதற்காக ஆசிரியர்களும் முகில்நிலை ஆசிரிய அறிவியல் பூர்வமாக தம்மை நிலைப்படுத்திக் தமது நம்பிக்கைகள், யூகங்கள் மற்றும் எதிர்வினைகளின் பயன்பாட்டம்சங்களுக்கேற்ப பட்டெறிகை சார்ந்த ஆசிரிய வாண்மைத்துவப்
கற் பித் தலின் விளை பேறுகள் எதிர்வுகூறமுடியாதென்பதையும் கல்வியியற் பிரச் கிடையாதென்பதையும் இன்று நம்முன்னே வைச் கல்வி உளவியற் கோட்பாடுகள் மற்றும் கற் மேலும் ஆசிரியர்கள் முகங்கொள்ளும் அனை ஆசிரியர் கல்வித்திட்டத்தை நடைமுறைப்படுத் எனவே தான் தாம் செயற்படும் களத்தில் சந்திக்கு பிரேரித்து அவற்றில் ஒன்றை தீர்வாக தற்துணி இருக்கவேண்டும். அத்தீர்வு சாதகமானதாகவே எனவே ஆசிரியர்கள் தொடர்த்தேர்ச்சியாக உட்படுத்தக்கூடியவர்களாக இருக்கவேண்டும். இது இந்த பரிணாமமே ஆசிரியர்களை சிறந்த வலுவூட்டுகின்றது.
(18)
- கபி

பட்1ெ
கைக்
சு. முரளிதரன்
பணிப்பாளர் Tலைகள் அபிவிருத்திப் பிரிவு, கல்வி அமைச்சு
சயற்படும் ஒருவர் தான் பயிற்சி வழியாக பாகக் கொண்டு களநிலையில் தாம் நலோடு கூடிய சிலாக்கியமான தீர்வுகளை த்துவ வெளிப்பாடு கல்வி பணியாளர்களில் டம் நிறைந்து காணப்படவேண்டுமென்பது
தலை அணுகும் போது அங்கு ஆசிரியன் தவிட அந்த அனுபவ சேர்க்கைகளின் சான்றுகளை மையமாக கொண்டு எவ்வாறு | பரிணமித்துள்ளான் என்பதே பிரதானமாக
சிரிய கல்வி வழங்கும் செயற்பாடுகளில் தர்ச்சியை வழங்குவதற்கான அம்சங்கள்
தேடப்படுகின்றன.
பாதீனத்துவம் வாய்ந்த செயற்பாடாகும். பர்களும் (Prospective Teachers) தம்மை கொள்ள வேண்டும். தமது கற்பித்தலில் பக்கச்சார்புகள் (biases) தொடர்பான ப இசைவாக்கமுறும் ஒரு இரசாயனமே Dாகும்.
குறித்து நிச் சய நிலையை =சினைகளுக்கு நிலைபேறுடைத்த தீர்வுகள் க்கப்பட்டிருக்கும் பெரும் எண்ணிக்கையான பித்தற் கோட்பாடுகள் சுட்டி நிற்கின்றன. பத்து பிரச்சினைகளுக்கும் விடை தேடும் மதுவதென்பதும் சாத்தியமானதொன்றல்ல. தம் சவால்களுக்கு மாற்று நிவாரணங்களை போடு முன்வைக்கும் ஆற்றல் ஆசிரியரிடம் வா பாதகமானதாகவோ அமையக்கூடும்.
தம் தீர்ப்புகளை மறுபரிசீலனைக்கு 1 பட்டெறிகையால் நிகழும் ஒரு பரிணாமம். - தீர்மானமெடுப்பவர்களாக விளங்க
கவி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 39
பட்டெறிகை என்பதை வரைவ ஆய்வாளர்களும் மேற்கொள்ளும் முயற் காரணம் வரைவிலக்கணம் செய்வதற்கா தொடர்பாக நிலைமைகளுக்கு நிலை வேறுபாடுகள் நிலவுதலாகும். இது6ே உதாரணமாகும்.
ஆசிரியர் கல்வியில் பட்டெறிகை கருத்துநிலையொட்டி பெரும்பாலும் பி பட்டெறிகையானது யாதுமோர் நம்பிக் கொள்ளும் அக்கறையானது அதனை ஏற்படும் இறுதிவிளைவுகள் தொடர்பாகவு அதன்படி பட்டெறிகை சிந்தனையானது (process) எனுமிரு தெளிவான பற்று வலியுறுத்தப்படுகின்றது. இவையிரண்டும் ஏககாலத்தில் கவனத்தில் கொள்ளப்பட
பட்டெறிகையானது ஓர் இயற்கை மற்றும் நிகழ்கால அனுபவ கருவூலங்கை செயற்பாடுகளுக்கு அடித்தளமிடும் 6 பெரும்பாலும் ஒருமித்த உடன்பாடு உ6
கல்வி புகட்டும் செயற்பாட்டின் போது மற்றும் ஒழுக்க விழுமிய சூழமைவுகை வகுப்பறை மற்றும் ஆசிரியர்களின் பா பரீட்சித்து புதுப்பிக்கும் அல்லது செம்பை பட்டெறிகை எனச்சொல்ல முடியும்.
பட்டெறிகை சிந்தனையின் செயல் தீர்மானமெடுக்க வேண்டுமென்பதை வலிய கோட்பாடு சார்ந்த அம்சம் சிந்தனைக்கு
அக்கறை செலுத்துவதாக அமையும். 2 தாம் பட்டெறிகைச் சிந்தனையில் ஈடுபடு வேண்டும் என்பதே உள்ளடக்க அம்சத்
உள்ளடக்கத்தில் பிரதானமாக மான விடயங்களை விளங்கிக்கொள்வது எவ்வ ஆசிரியர்கள் பொருத்தமான கற்பித் வாண்மைத்துவசார் பரஸ்பர ஒத்துழைப்பு ஈட்டிக்கொள்வதும் பற்றி தெரிந்து கொள்வ செல்வாக்கு பற்றியும் அறிந்திருக்க வேன பரந்த தேடல் அறிவும் மதிப்பீட்டு நு நிகழும் தொடர்பிடைவினைகள் பற்றிய தான் சார்ந்திருக்கும் துறை தொடர்பில்
பட்டெறிகையை அல்லது உசா மையமாகக் கொண்ட ஆசிரியர் கல்வி
கூர்மதி

பிலக்கணம் செய்வதற்கு கல்வியாளர்களும் -சிகள் முற்றுப்பெறுவதாக இல்லை. இதற்கு ஒரு க நிர்ணயம் செய்து கொள்ளும் அளவுகோல்கள் மமை ஆளுக்கு ஆள் என்ற அடிப்படையில் வ பட்டெறிகை செய்தல் என்பதற்கு நல்ல
தொடர்பான வியாக்கியானங்கள் டுயீ (1933) ரஸ்தாபிக்கப்படுகின்றன. டுயீயின் எண்ணப்படி கை அல்லது செயற்படிமம் தொடர்பாக ஒருவர் - ஆதரிப்பதாக மட்டும் அமையாமல் அதனால் ம் அணுகப்பட வேண்டும் என்பதாக அமைகிறது. - உள்ளடக்கம் (content) மற்றும் செயன்முறை கோல்களை கொண்டிருக்கவேண்டும் என்பது D சமபலம் கொண்ட அம்சங்கள் மட்டுமல்லாது - வேண்டியவனவாகவும் அமைகின்றன.
யான செயற்பாடு என்பதும் அது கடந்த கால ள அடிப்படையாகக்கொண்டு எதிர்கால மேம்பாட்டு பொறிமுறை என்பதில் ஆய்வாளர்களிடையே மன்டு.
து பிரத்தியேக (personal) கற்பித்தல், சமுகவியல் மள (contexts) கவனத்திற்கொண்டு பாடசாலை, ன்முக செயற்பாடு என்பவற்றை விமர்சனரீதியாக Dபடுத்தும் தொடர்த்தேர்ச்சியான செயன்முறையே
எமுறை சார்ந்த அம்சம் ஆசிரியர்கள் எவ்வாறு புறுத்துவதாக இருக்கின்றது. உள்ளடக்க அல்லது ஆதாரமான விடயங்களை தெரிதல் தொடர்பாக ஆசிரியர்கள் அல்லது முகில்நிலை ஆசிரியர்கள் ம் போது எவ்வகையான அறிவை கொண்டிருக்க தில் பார்க்கப்படுகின்றது.
அவர்களின் பல்வேறு விருத்திநிலைகளில் எவ்வாறு பாறு என்பது சுட்டிக்காட்டப்படுகின்றது. அதன்போது தல் முறைகள்பற்றி உரத்து சிந்திப்பதும் களை பரிமாறிக்கொள்வதும் அனுசரணைகளை பதோடு சமூகமானது பாடசாலைகளில் செலுத்தும் எடும். மேலும் கல்வி சூழலமைவுகள் தொடர்பான ட்பங்கள் தொடர்பான தேர்ச்சியும் மனிதரிடை உசாவலும் பிள்ளைகள், பெற்றோர்கள் மற்றும்
அர்ப்பணிப்பும் அவசியப்படுகின்றன.
வல் திசைமுகங் கொண்ட அணுகுமுறையை பின் வெற்றி ஆனது அது தேடல் தொடர்பாக
( 19 )

Page 40
அது கொண்டிருக்கும் தரத்தின் வலிமையிலே மூன்று படிநிலைகளை இனங்கண்டுள்ளார்க
1. தொழிநுட்ப (Technical) நிலை
2. வாண்மைத்துவ (Professional)
3. விமர்சன பகுப்பாய்வு (Critical)
இறுதி நிலையான பகுப்பாய்வு நிலை ஆசிரிய கல்வியிலாளர்கள் இதனை எட்டுவன் அந்நிலையை எட்டுவதென்பது ஆசிரிய கல் இருக்கவேண்டும்.
முகில்நிலையிலுள்ள ஆசிரியர்களைக் சூழலில் கற்பித்தல் தொடர்பான முழுமையா எவ்வாறு ஏற்படுத்த முடியும் என்பது விவாத உலகளாவிய நிலையில் பல்வேறு நாடுகள் நாட்டைப் பொறுத்தவகையில் கல்வியியற் சேவை முன் ஆசிரியர் கல்வியின் (Pre-Servic கட்டுறுபயில்வு (Internship) காலம் இந்த கலாசாரத்தை ஏற்படுத்த மிக உகந்ததாகும். பயிற்சி காலமானது மட்டுப்படுத்தப்பட்ட கற் அங்கும் ஆசிரிய கல்வியியலாளர்கள் நெரு ஆரோக்கியமான அடித்தளத்தை இதன் பெ
வாண்மை முன் மட்டத்தில் (Pre-pr ஆசிரியர்கள் தொடர்பில் அவர்கள் கற்பித்தல் செயற்படுவதற்கு மூன்று கட்டங்களை இன
1. செயற்பாட்டுக்காக (For-action
2. செயற்பாட்டிடை (In-action) L
3.
செயற்பாட்டுக்கான (On-action
முதலாவது கட்டத்தில் கற்பிப்பதற்கு ( மாணவர்களின் தேவைகள் தொடர்பாகவும் தொடர்பாகவும் பட்டெறிகை செய்து பாடதி
இரண்டாவது கட்டத்தில் கற்பிக்கும் - சார்ந்த அறிவை உடனுக்குடன் பகுப்பாய்வு ! விளைபேறை அதிகரிக்க உகந்த தந்திரோபா எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறு பட்டெறி இருந்தாலும் பின்னர் ஒரு கலையாக பின்ப
மூன்றாம் கட்டத்தில் கற்பித்தல் நில முழுமையாக பகுப்பாய்வை மேற்கொள்வத
(20)

லயே தங்கியுள்ளது. பட்டெறிகை தொடர்பில்
ள். அவையாவன:
நிலை
நிலை
மயை அடைவதற்கு சிரமமாக இருந்தாலும் தெ இலக்காகக் கொண்டு செயற்படவேண்டும். வியியலாளர் நியாயக்கோவையின் ஓரம்சமாக
5 கொண்ட சேவைமுன் ஆசிரிய பயிற்சி ன பட்டெறிகை தொடர்பான அனுபவங்களை | நிலையில் உள்ள ஒரு விடயமாகும். இது ரில் முன்வைக்கப்பட்டாலும் ஆனால் நமது (கல்லூரிகளில் வழங்கப்படும் மூன்றாண்டு e) இறுதி வருடத்தில் பூரணமான வழங்கப்படும் பட்டெறிவு சார்ந்த வாண்மைவிருத்திக்கான நிறுவனசார் முதலிரண்டு வருடகால வதிவிட பித்தல் அனுபவத்தை ஈட்டிக்கொடுத்தாலும் ங்கிய மேற்பார்வை வழிநடத்துதலூடாக ஓர் ாருட்டு ஏற்படுத்த முடியும்.
rofessional Level) இருக்கும் முகில்நிலை செயற்பாடுகளின் போது பட்டெறிவாளர்களாக ங்கண்டுள்ளார்கள். அவையாவன:
2) பட்டெறிகை
பட்டெறிகை 1) பட்டெறிகை
முன்னால் திட்டமிடற் செயற்பாடுகளின் போது D தான் கடைப்பிடிக்கும் கல்வித் தத்துவம்
ட்டமிடற் குறிப்பை ஆக்கலாம்.
போது தான் பெற்றுக்கொள்ளும் அனுபவம் செய்து கொண்டு அதே நேரத்தில் கற்பித்தல் ய நகர்தல்களை மேற்கொள்ளல் இதன்போது கை மேற்கொள்ளல் ஆரம்பத்தில் சிரமமாக ற்றக்கூடியதாக இருக்கும்.
றைவேறிய பின்னர் அது தொடர்பான ஒரு Tகும். மாணவர்கள் கற்பித்தல் வேளையில்
- கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 41
மகிழ்வுடன் ஈடுபட்டு கற்றல் இலக்குகளை ஒரு கலந்துரையாடலை மேற்கொள்வதா கூறும் அபிப்பிராயங்களை சிரத்தையாக கே நிகழும் கட்டமாக இது அமையும்.
வாண்மை முன் பருவத்தை கடந்து வா எட்டிய பின்னர் மேற்கூறிய மூன்று கட்டங் ஆய்வாளனாக கருதிக்கொண்டு செயற்ப pert Level) எட்டியதும் இந்த மூன்று கட்டா ஆய்வுகளோடு தமது அனுபவங்களை ஒ நிறைநிலை மட்டத்தில் (Accomplished Le வெளிப்படுத்தும் பக்குவம் பெறுவதோடு ஆளுமையும் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கு நிறுவன வதிவிட பயிற்சி காலத்தில் கல்வியிலாளர்கள் அறிமுகம் செய்யும் பட்! அவர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தா அவர்களை திறந்த மனதுடையவர்களா ஈடுபடவேண்டும். பட்டெறிகை செய்வதற்கு (Soft Skills) விருத்தி செய்ய வேண்டும். சுய செய்வதாக நாட்குறிப்புகளை எழுத தூற
சுய வாழ்க்கைக்கும் தொழில் வாழ்க் வகுப்பவர்கள் இருப்பார்கள். ஆனால் ஆ சிக்கலானது. எனவே நாட்குறிப்பாகவே பா ஏற்படுத்திவிட்டால் கட்டுறுபயில்வு காலத் அமையாது. பொதுவாக மேலைநாடுகளில் nal Writing) கலை பரிச்சயமாக்கப்ப கைவிடாவகையில் முதுமைப் பருவத்திலும்
எனவே பட்டெறிகையூடாக சுயவிமர்சனம் ெ ஆசிரிய ஆளுமைகளை ஆசிரிய கல்வியூ திறன்மிக்கவர்களைக் கொண்டவர்களை (
முடியும்.
கூர்மதி

ன எட்டிவிட்டார்களா என்பதை மனசாட்சியோடு க இது அமையலாம். மேற்பார்வையாளர்கள் கட்டு கிரகித்து விருத்திசார்ந்த எதிர்வினையாற்றல்
உண்மைத்துவ மட்டத்தை (Proessional Level) களையும் ஓர் ஆசிரியன் தன்னை செயல்மைய டுத்த வேண்டும். நிபுணத்துவ மட்டத்தை (Exங்களும் ஏனைய ஆய்வாளர்களால் மேற்கொண்ட ப்பிட்டு பட்டெறியும் ஆற்றல் இருக்கவேண்டும். vel) தமது அனுபவங்களை பனுவல் வடிவத்தில் 6 இது தொடர்பில் ஏனையவரை பயிற்றும் நம்.
முகில்நிலை ஆசிரியர்களிடையே ஆசிரிய டெறிகையொட்டிய கற்றுக்கொள்ளும் கலாசாரம் த வகையில் கட்டியெழுப்பப்பட வேண்டும். ரக மாற்றுவதற்கு கட்டுடைக்கும் செயலில் 5 முன்னதாக அவர்களிடம் மென் திறன்களை 1 வாழ்வின் நாளாந்த அம்சங்களை சுயவிமர்சனம்
ன்டவேண்டும்.
கைக்கும் தெளிவான எல்லைக்கோடுகளை சிரிய வாண்மையில் இந்த எல்லை பிரித்தல் ட்டெறிகை அனுபவத்தை பதியும் வழக்கத்தை இதில் பட்டெறிகை செய்வது ஒரு சுமையாக - சிறுவயதிலிருந்தே ஜேர்னல் ரைட்டிங் (Jourட்டதால் பெரியவர்கள் ஆனாலும் அதை D அதனை தொடர்பவர்களை அவதானிக்கலாம்.
சய்து கொண்டு சுயவிருத்தி செய்து கொள்கின்ற டாக உருவாக்க முடியுமானால் வாண்மைத்துவ கொண்டு நமது கல்வித் தொகுதி சிறப்படைய
(21)

Page 42
கவிஞர் சி.வி. யி நோக்கு காலமு கருத்தும்
மனுக்குலத்தின் வரலாறு என்பது பல்வேறு மாற்றங்களுக்கும் மத்தியில் சென்று கொ காலகட்டத்தில் அம்முரண்பாடுகளையும் மாற அவ்வாறு எதிர்கொள்வதை மூன்று நிலைக
1.
முதலாவது வகையினர் சூழலில் காணப் கண்டு இவ்வாறு தான் நடக்கும் என
மரபு, தர்மம், முன்னோர்வழி என்பவற்று பெரும்பாலாக பொதுமக்களை இந்நிலை
2. இரண்டாவது வகையினர் சூழலில் காணட்
லிருந்து விடுபட்டு சமூகத்தை துறந்து செய்யும் ஞானியர், யோகிகள் முதலில்
மூன்றாவது வகையினர் சமூகத்தின் பிர அவற்றினை எதிர்கொள்வதுடன் அவற் தன் காலகட்டத்தில் காணப்படும் முற்ே ஏதாவது ஒன்றினை பிரதிநிதித்துவப்பு இந்நிலைப்பாட்டில் அரசியல்வாதி, இ கலைஞர்கள் முதலானோரைக் காணல
ஒருவருடைய வாழ்க்கை அவரது குடும் யாதேனும் ஒன்றின் மட்டத்தில் நிலைக்க அம்மனிதனின் வாழ்க்கை ஏதோ ஒரு வ மிக்கதாகின்றது. அவர்களின் சிந்தனையில் கெ கொள்ள முயற்சிக்கின்றார்கள். இதனால் அ நிகழ்வாகின்றது. கவிஞர் சி.வி. வேல் நிகழ்வாகிவிடுகின்றார்.
இறந்த மனிதரின் வாழ்வும், நிை இயையுடையதாகின்ற போது அவர்கள் பற்ற முக்கியத்துவம் உடையதாகின்றது. - பொறுத்தவரையில் ஆசிரியர், பத்திரிகையா பல்துறை சார்ந்த ஆளுமைகளை உடை தனித்தனியாக ஆய்வுக்குட்படுத்துவதன் வெளிக்கொணர முடியும் என்ற போதும் ! சி.வி என்ற மனிதரின் சிந்தனைகள் வெ
22

ன் இலக்கிய
லெனின் மதிவானம்
பிரதிக் கல்வி ஆணையாளர், கல்வி வெளியீட்டுத் திணைக்களம்.
--- ம்
ட்ட போராட்டங்களுக்கும், முரண்பாடுகளுக்கும் சண்டிருக்கின்றது. மனிதர்கள் தாம் வாழும் ற்றங்களையும் எதிர்கொள்கின்றனர். அவர்கள்
ளில் அவதானிக்கலாம்.
படும் பிரச்சினைகளையும், முரண்பாடுகளையும்
அடங்கிப்போதல். இங்கு ஊழ்வினை, விதி, அக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
லயில் காணலாம்.
பபடும் பிரச்சினைகள், முரண்பாடுகள் என்பவற்றி - போகிறவர்கள். சமூகத்தை துறந்து தவம் யோரை இந்நிலைப்பாட்டில் காணலாம்.
ச்சினைகளையும் முரண்பாடுகளையும் கண்டு கறுக்கான தீர்வினையும் முன்வைக்கின்றனர். போக்கு அல்லது பிற்போக்கு இயக்கங்களில் படுத்தி சமூகமாற்றத்திற்காக செயற்படுவர். லக்கியகர்த்தாக்கள், பத்திரிகையாளர்கள், பாம்.
DD மட்டத்திற்கு மேலாக, சமூகவாழ்க்கையின் ப்படுகின்ற தேவை ஏற்பட்டுவிட்டதென்றால் பகையிலும் அளவிலும் சமூகப் பயன்பாடு காள்ளவேண்டியவற்றை தம் தேவைகளுக்கேற்ப த்தகையோரின் வாழ்வும், பணியும் இன்றைய லுப்பிள்ளை இவ்வாறு தான் இன்றைய
கனவுகளும் இன்றைய பிரச்சினைகளோடு நிய தேடல், ஆய்வுகள், மதிப்பீடுகள் என்பன அவ்வடிப்படையில் கவிஞர் சி.வியைப் பளர், அரசியல்வாதி, இலக்கியகர்த்தா என யவர். இவ்வாளுமைகள் ஒவ்வொன்றையும் மூலம் காத்திரமான சில தகவல்களை இவை அனைத்தும் ஒருங்கிணைந்ததாகவே ளிப்பட்டுள்ளது எனலாம். அந்த வகையில்
- கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 43
சி.வியின் இலக்கிய நோக்கிலும் போக்கில் அளவிலும் தாக்கம் செலுத்தியுள்ளன.
சமூகம் பற்றிய அவரது கணிப்பு அக்க அவரது சிந்தனைகள் என்பன அவ வெளிப்பட்டதென்பது இக்கட்டுரையில் அ
மலையக சமூக உருவாக்கம்
மலையக கலை இலக்கியம் குறித்து களமாகவும், தளமாகவும் உள்ள மல் அவசியமானதொன்றாகின்றது.
இலங்கையில் அந்நிய முதலாளித்து உடன் விளைவாக பெருந்தோட்ட பயிர் செய் பயிர் செய்கையை செய்வதற்காக ெ
தொழிலாளர்களும், அவர்களுடன் இனை என்று அழைக்கப்படுகின்றனர்.
தென்னிந்திய தமிழ் கிராம பின்னணி கிடந்த இம்மக்கள் விவசாயிகளாகவு கொண்டவர்களாகவும் காணப்பட்டனர். அ முதலாளித்துவ சமூக அமைப்பின் கீழ் தொழிலாள வர்க்கமாக மாற்றப்பட்டனர். அர் கொண்டவர்களாக மாற்றப்பட்டனர். ம முறையானது உழைப்புடன் அல்லது உற்ட போது அதன் விளைப்பொருளாக பீறிடும் வாழ்க்கையை பிரதிபலித்து நிற்கும் என இலங்கை தமிழ் இலக்கியத்தின் மிக பிரத
சி.வி.யின் காலத்தில் மலையகத்த (1934 - 1984)
சுமார் 50 ஆண்டு காலமாக (1934 இலக்கிய நோக்கினை துணிபதற்கு அக்க இலக்கிய நிகழ்வுகள் குறித்த தெளிவு :
1939களில் மலையகத் தமிழர்கள் உணரப்பட்டு அதற்கான செயற்பாடுகள் காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இது பெ இருந்தமையினால் ஓர் பலம் வாய்ந்த ஸ்த மக்களை ஸ்தாபனப்படுத்தும் முயற்சிகம் அதற்கு எதிரான பல போராட்டங்கள் உயிர்தியாகங்களின் மீது கட்டியெழுப்பப் 1940இல் சம்பள உயர்வுகள் கோரிய போ அந்தவகையில் முல்லோயா தோட்டப் டே கோவிந்தன் என்ற தொழிலாளி பலியான
கர்மதி

பம் இவ்வாளுமைகள் ஏதோ ஒரு வகையிலும்
Tல சூழலினை அவர் எதிர்கொண்ட விதம், ரது இலக்கிய படைப்புகளில் எவ்வாறு
ய்வுக்குட்படுத்தப்படுகின்றது.
| ஆய்வினை மேற்கொள்கின்ற போது அதற்கு மலயக சமூகவுருவாக்கம் பற்றிய தெளிவு
வவம் நிலைகொள்ளத் தொடங்கியதும் அதன் கை அறிமுகம் செய்யப்பட்டது. இப்பெருந்தோட்ட தன்னிந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட எந்து வந்த வர்க்கமுமே மலையகத் தமிழர்
யில் ஒர் நிலவுடமை சமூகவமைப்பில் கட்டுண்டு ம் விவசாய வர்க்கத்திற்குரிய சிந்தனை புவர்கள் இங்கு கொண்டு வரப்பட்ட பின் ஓர் (பெருந்தோட்ட பயிர்செய்கையில்) பரந்துபட்ட ந்த வகையில் ஓர் கூட்டு வாழ்க்கை முறையினை லையகத்தில் நிலவும் இக்கூட்டு வாழ்க்கை பத்தியுடன் தம்மை சம்பந்தப்படுத்திக் கொள்ளும் ) கலை இலக்கிய உணர்வுகளும் அக்கூட்டு ன்பது சமூக நியதி. அந்த வகையில் தான் ான கூறாக மலையக இலக்கியம் திகழ்கின்றது.
தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்
- 1984) எழுத்துலகில் பணியாற்றிய சி.வியின் காலத்தில் இடம்பெற்ற சமூக, அரசியல், கலை, அவசியமாகின்றது.
இடையே ஸ்தாபனபடவேண்டியதன் அவசியம் இடம்பெற்றது. 1939 இல் இலங்கை இந்திய ரும்பான்மை, தொழிலாளர்களை கொண்டதாக Tபனமாக காணப்பட்டது. இவ்வமைப்பு மலையக ள் மேற்கொள்ளப்பட்ட போது மலையகத்தில் ர் இடம்பெற்றன. பல தொழிலாளர்களின் பட்ட ஓர் அமைப்பாகவே இது காணப்பட்டது. ராட்ட முனைப்பு மலையகத்தில் வலுப்பெற்றது. பாராட்டம் குறிப்பிடத்தக்கது. இப்போராட்டத்தில்
1.
( 23 )

Page 44
மலையகத் தமிழர் வளர்ந்து வரும் சமூகவுருவாக்கத்தை கொண்டிருப்பதனாலும் இணைந்து உழைக்கும் மக்களின் நல்வாழ்வு அச்சத்தாலும் பேரினவாதிகள் இம் மக்க பிரித்துவைக்கும் நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட்டனர். அதன் வெளிப்பாடகவே இம்ம பறிப்பு சட்டம் கொண்டுவரப் பட்டது பிரதிநிதித்துவப்படுத்திய அமைப்பாகக் காணப் எதிர்த்து பரந்துபட்ட, போராட்டத்தை நடத்த போர்க்குணத்தை கொண்டிருந்தமை அதன் ! சி.வியும் முக்கியமான உறுப்பினர்களில் ஒரு
குறைந்த தொழிலாளர்களை கொண்டு இம்மக்களின் சமூகவுருவாக்கத்தை சிதை ஒப்பந்தமாக சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் (1965) மனிதாபிமானமற்ற செயலால் மலையக சமூகம் சிதைக்கப்பட்டன. கணவனைப் பிரிந்து மல் காதலனை பிரிந்த காதலி என்ற வகையில் இவர்களின் அழுகை குமுறல்களை புை நினைவூட்டுகின்றன. இவர்களை ஏற்றிச் சென்
அழைக்கப்பட்டது.
இக்காலப் பகுதியில் மலையகத்தில் திரு முன்னேற்றக் கழகமும் தோன்றி வளர்ந்திருந்தது தி.மு.க. கருத்துக்கள் பரவி ஜனரஞ்சம் அை பின்னாட்களில் இடதுசாரி இயக்கங்களில ! அம்சமாக காணப்பட்டது. இது போன்றே 60களில் மக்கள் இயக்கமானது புதியதோர் பரிணாமத் மக்களிடையே வேர் கொண்டு கிளைபரப்பி புத்திஜீவிகள், ஆசிரியர்கள் என பல ஆளும் இதன் விளைவாக மலையக மக்கள் அரசிய உரிமைகளுக்காக போராடத் தலைப்பட்டனர். இ பதுளை கீனாகலை ஆகிய தோட்டங்களில் இ
மலையகத் தமிழர் ஓர் சமூகமாக 8 குடியேற்றவாத திட்டங்கள் அவ்வப்போது மேற்கெ மஸ்கெலியா தொகுதியில் 7000 ஏக்கர் கா நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இத இப்போராட்டத்தில் டெவன் தோட்டத்தைச் சேர் மலையகத்தில் கல்வி கற்ற பாடசாலை மால இப்போராட்டத்திற்கான பலமாகும்.
மலையகத்தில் 1970, 1980 காலப்பகுதி கேவலமான ஓர் அரசியல் பின்னணியில் மே விளைவாக காட்டுமிராண்டித் தனமாக கட்டவிழ்த்துவிடப்பட்டன.
24

ஓர் தேசிய சிறுபான்னை இனத்திற்குரிய - இவர்கள் சிங்கள தொழிலாளர்களுடன் க்கான போராட்டத்தை தொடரக்கூடும் என்ற ளை சிங்கள தொழிலாளர்களிலிருந்து களை நாடற்றவர்களாக்கும் முயற்சிகளிலும் க்களுக்கு எதிராக 1948இல் குடியுரிமைப்
அப் போது மலையக மக்களினை பட்ட இலங்கை இந்திய காங்கிரஸ்- இதனை கவில்லை என்ற போதும் இதற்கு எதிரான முற்போக்கான அம்சமாகும். இவ்வமைப்பில்
வராக காணப்பட்டார்.
கூடிய லாபத்தை பெறும் நோக்குடனும், க்கும் நோக்குடனும் கொண்டு வரப்பட்ட காணப்படுகின்றது. இந்த ஜீவ காருணியமற்ற, மேலும் சிதைவடைந்ததுடன் பல குடும்பங்கள் மனவி, நண்பர்களைப் பிரிந்த நண்பர்கள்,
இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கயிரத நிலையங்கள் இன்றும் எமக்கு ற புகையிரதம் "அழுகை கோச்சி” என்றே
5. இளஞ்செழியன் தலைமையிலான திராவிட 1. இதன் காரணமாக மலையக மக்களிடையே டந்திருந்தது. இதில் அங்கம் வகித்த பலர் இணைந்தனர். இது இதன் முற்போக்கான 5 திரு.என். சண்முகதாசன் தலைமையிலான தை எட்டியது. இவ்வியக்கமானது மலையக ப போது தொழிலாளர்கள், மாணவர்கள், மைகளை தன்நோக்கி ஆகர்ஷித்திருந்தது. ல் அரங்கில் புத்வேகம் பெற்றதுடன் தமது இதற்கு உதாரணமாக மேம்பீல்ட், மடக்கும்பர், டம்பெற்ற போராட்டங்களைக் குறிப்பிடலாம்.
கூடிவாழ்வதை சிதைக்கும் முகமாக பல ாள்ளப்பட்டது. 1977ஆம் ஆண்டு நுவரெலியாணியை சுவீகரித்து தமது குடியேற்றவாத நகு எதிரான போராட்டம் கிளர்ந்ததுடன் த இளைஞர் பலியானார். இதனை எதிர்த்து இவர்களும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டமை
யில் இனக்குரோதம், இனவாதம் என்பன எசமானதோர் நிலையை எட்டியது. இதன் இனவன் முறைகள் இம் மக்கள் மீது
ல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 45
சி.வி. யின் எழுத்துக்கள்
சி.வியை நாம் புரிந்து கொள்வதற்கும் அவரது எழுத்துக்கள் தான். அவர் ஆர குறிப்புக்கள், அவரது கட்டுரைகள், ஆக்க என்பன முறையாகக் கிடைப்பின் அவர் குறி முடியும். மேற்குறித்த சில விடயங்கள் அ எனினும் கிடைக்கப்பெற்ற சில ஆதாரங்க பற்றிய ஆய்வினை மேற்கொள்வோம். அவ் தவிர முடிந்த முடிவல்ல என்பதையும் கூ எழுத்துக்களை பின்வருமாறு வகைப்படுத்
1. நாட்டார் பாடல்கள் சேகரிப்பு 2. கவிதை 3. நாவல் 4. பிற முயற்சிகள்
நாட்டார் பாடல்கள் சேகரிப்பு
சி.வி பெரியாங்கங்காணியான தனது பாடல்களை ரசிக்கவும் அவற்றினை சேகரி தொழிலாளர்கள் விசேட தினங்களில் பெ பாடல்களை பாடி பரிசு பெற்ற நிலைய நாட்டார் பாடல்கள் தொடர்பான சேகரிப்பு, தீவுகளாகவும் இடம்பெற்ற போதிலும் அல் வேலுப்பிள்ளை அவர்கள் மலையக நாட்டா மக்கள் பாடல்கள்'' என்ற தலைப்பில் 6 சாதனையாக அமைந்து காணப்படுகின்றது
உழைக்கும் மக்களின் நல்வாழ்வுக்காக நம்பிக்கைகள், விருப்புகள், வெறுப்புகள் உறுதிப்பாடு என்பவற்றை பிரதிபலிக்கும் ஆய்வு என்பன முக்கியத்துவம் உடைய இலக்கியம் யாவும் மக்களிடம் காணப்படு! வளமிக்க மொழியில் பட்டைதீட்டப்பட்டே 2 தான் பாரதியின், கோர்க்கியின் படைப்புக்
சமூகவுணர்வுடனும் நாட்டார் பாடல் இம்முயற்சியினை மேற்கொண்டுள்ளார். இ சேகரிப்பில் ஓர் நீண்ட இடைவெளி கான
இத்தொகுப்பில் அடங்கிய பாடல்கள் பேசும் போதும் சாதாரண உரையாடல் மேற்கோள்காட்டியே பேசுவார். அவர் வெளிப்பாடாகவே இந்நாட்டார் பாடல்கை ஜெயராமன்)
கர்மதி

ஆராய்ச்சிக்குட்படுத்தவும் எம் முன்னுள்ளவை றிய சொற்பொழிவுகள், அவரது கடிதங்கள், ப் படைப்புக்கள், வரைந்த கேலிச்சித்திரங்கள் தே பூரணத்துவமான ஆய்வினை வெளிக்கொணர ர் பற்றிய ஆய்வுகளுக்கு தடையாக உள்ளன. களை ஒழுங்குபடுத்தி அவரது சமூக நோக்கு வகையில் இக்கட்டுரை ஓர் ஆரம்ப முயற்சியே றவிழைகின்றேன். ஆய்வு வசதிக்காக அவரது திக் கொள்வது சிறப்பான ஒன்றாகும். .
| தாத்தாவின் வீட்டில் வசித்ததனால் நாட்டார் ப்பதற்குமான சூழ்நிலை கிடைத்தது. தோட்டத் ரிய கங்காணியின் வீட்டிற்கு சென்று நாட்டார் ம் மலையகத்தில் காணப்பட்டது. மலையக ஆய்வு என்பன ஆங்காங்கே திட்டுக்களாகவும் வை முழுமை அடையவில்லை எனலாம். சி.வி. ர் பாடல்கள் சிலவற்றை சேகரித்து "மலைநாட்டு வெளியிட்டமை இத்துறையில் குறிப்பிடத்தக்க
ன போரட்டத்தை முன்னெடுப்பதற்கு இம்மக்களின் - மகிழ்ச்சி, துன்பம், போராட்டம் அவர் தம்
நாட்டார் பாடல்கள் தொடர்பான சேகரிப்பு, பனவாகின்றன. அத்துடன் இன்றைய மக்கள் ம் நாட்டார் வழக்காறுகளும் உரையாடல்களும் உருவாக்கமடைகின்றன. இத்தகைய பின்னணியில் க்கள் உருவாக்கமடைந்தன.
கள் குறித்த சரியான பார்வையுடனும் சி.வி வருக்கு பின்னர் மலையக நாட்டார் பாடல்கள் எப்படுகின்றது.
அனைத்தும் அவருக்கு மனப்பாடம். மேடைகளில் மகளின் போதும் இந்நாட்டார் பாடல்களை உழைக்கும் மக்களை நேசித்தவர். அதன் ளயும் நேசித்தார். (தகவல் திருமதி தவமணி
25

Page 46
கவிதை
கவிஞரின் ஆளுமையை மதிப்பிடுவதற்
முக்கியமானவையாகும். கவிதைத் து 'கணிப்புக்குரியவராக்கியது. இவரது கவித்த
வேஃவேயர் (Warfarer), வழிப்போக்கன் மதிப்பிடலாம். எனினும் அவரது கவித்து அமைந்தது In Ceylon Tea Garden என்ற யாவும் இத்தொகுப்பிற்கான படிக்கற்கள் எ6 முதலில் ரசிய மொழியிலும், பின்னர் தமிழ் கடைசிவரை தமிழில் கவிதை எழுதவில்லை ஈடுபாடும் புலமைத்துவமும் இதற்கு ஓர் இத்தொகுப்பினை மொழிபெயர்ப்புப் பற்றி ( பயன்மிக்க ஒன்றாகும்.
சி.வியால் எழுதப்பட்ட கவிதை
"To the tom
The dawn ! Trembiling i The last dew before the mo
on this ma where suffer decay and de in the breath
சக்தி பாலையாவின் மொழிபெயர்ப்பு இவ்வ
"பேரிகை | பேரொலித் புலர்த லு புரளுமாம்
பாரிலே ! பன்நடப் 1 பசுந்தளிர் பள்ளி கெ
எஞ்சிய எழில்மிளர் எழுலான்
இதலார்ப்
பஞ்சலம்,
சாதல், சகலமும் சாந்தல் வே
(இலங்6
(26)

த அவரது கவிதைப் படைப்புகள் மிக வறையே இவரை இலக்கிய உலகில் பவ ஆளுமையை விஸ்மாஜினி (Vismajini) ஆகிய கவிதை நாடகங்களின் மூலமாக வ ஆளுமையின் உன்னத அறுவடையாக தொகுப்பாகும். ஏனைய கவிப்படைப்புக்கள் அக்கூறின் அது மிகையாகாது. இத்தொகுப்பு மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டது. சி.வி ல. அவர் ஆங்கில கல்வியில் கொண்டிருந்த - காரணம் ஆக இருக்கலாம். முதலில் நோக்கி பின்னர் கவிதை பற்றி நோக்குதல்
-toms throb Cies startled upon the tea
bead is fresh prning treads ating hour ing and pain eath are one
ing of men”
(Page 1 In the Ceylon Tea Garden)
Tறு அமைந்துக் காணப்படுகிறது. கொட்டெழு
துடிப்பும் உணர்த்தப்
வைகறை கதிரொலி பயிலுமுன்
தேயிலை ாள் தூய
முத்தாம் பனித்துளி இறைக்கும் பணமுற
வேதனை
அழிவு ஒன்றென ளைக்கண;'' கை தேயிலைத் தோட்டத்திலே பக்கம் 01)
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 47
சி.வி. யின் கவிதைகளில் காணப்படும் இ பாலையாவின் மொழிபெயர்ப்பில் சிதைவை To the tom-toms throb என்பதை "பேரிகை தப்பு அல்லது பிரட்டுத் தப்பு என மொழி பெ கூடியதாக இருந்திருக்கும். கவிஞர் சி.வி மறுவடிவம் என்றும் கூறலாம். அந்தளவிற் கவிதைகளில் இழையோடிக் காணப்படுகின் புறக்கணித்து விடுவதன் காரணமாக கவிதைய
நந்தலாலா சஞ்சிகை குழுவினர் இதனைப்
"பிரட்டின் விடியலே அது
தேயி ை சரிந்து விடியல் ஆக்கிரமிப்பு இறுதியாய் கெ
பனித்து
பொருந்து பொழுதின் க
துயரும் நசிவும் இம்மக்களி இவ் வாழ்க்கை
அம்சம் ஆகிப்
இம்மொழிபெயர்ப்பு உள்ளடக்கத்திலு நிலையில் இருக்கின்றது. To the tom-tom: மொழிபெயர்த்துள்ளமை சிறப்பானது. இது வேண்டியதொன்றாகும்.
இத்தொகுப்பில் அடங்கியுள்ள கவிதை போது மலையக கலாசார தளத்தையும் மக். காதலிக்கின்ற பண்பினை நாம் சி.வியில் க
நாவல்கள்
சி.வி எழுதிய நாவல்களில் எல்லைப் சித்திரம், வீடற்றவன், இனிப்பாடமாட்டேன் காணப்படுகின்றன. பார்வதி, காதல் சித்திர நாவல்கள் நேரடியாக தமிழில் எழுதியவை சுவாமியால் தமிழில் மொழி பெயர்ப்பு செப்
கூர்மதி.

யல்பான சொற்கள், வடிவம் என்பன சக்தி உந்து நிற்பதைக் காணலாம். உதாரணமாக கொட்டெழு'' என மொழி பெயர்த்துள்ளார். பர்த்திருப்பின் அது மலையக வாழ்வியலுடன் பின் கவிதைகளை நாட்டார் பாடல்களின் கு நாட்டார் இலக்கியத் தாக்கம் அவரது நது. நாட்டார் பண்புகளை மொழிபெயர்ப்பில் பின் ஆற்றலும் அழகும் சிதைந்து விடுகின்றது.
பின்வருமாறு மொழி பெயர்த்துள்ளனர்.
அதிர்வில் திர்ந்து போய்
ல மீது கிடந்தது. பொழுதின் என் முன்னர் சாட்டும் - இப் ரி புதிது
ம் இந்த ணத்தில் தான்
நோவும் இறப்பும் ன் மூச்சில் பின் முகிழ்ப்பின்
என்றென போயின.
(நந்தலாலா - 1, பக்-29)
ம் உருவாக்கத்திலும் சிதைவு அடையாத s throb என்பதை பிரட்டின் அதிர்வில் என த்தொகுப்பு முழுமையாக மொழிபெயர்க்க
நகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் களின் உணர்வுகளையும் ஒன்றாக இணைத்து காணலாம்.
பபுறம், பார்வதி, வாழ்வற்ற வாழ்வு, காதல் ஆகிய நாவல்கள் முக்கியமானவையாகக் ம், வீடற்றவன் இனிப்பாடமாட்டேன் ஆகிய வ ஏனையவை யாவும் பொன் கிருஸ்ணன் பயப்பட்டவை.
27

Page 48
இவற்றில் காதல் சித்திரம், வீடற்றவன் ஆகிய நாவல்கள் நூலுரு பெற்றுவிட்டன. இன்றியமையாத ஒன்றாகும். இவரது நாவல்களில் வாழ்வு ஆகிய நாவல்கள் எனது பார்வைக் அவரது உலக நோக்கு எவ்வாறு வெளிப்படுக
வீடற்றவன் இவரது மிக முக்கிய நாவல் தொழிற்சங்க அமைப்பை உருவாக்குதல், ஏற்படுகின்ற இடர்பாடுகள் என்பனவற்றை சித்தரிக் நாவல் தோற்றம் பெற்ற காலத்தில் (1960 கொண்டெழுந்த எழுச்சிகள், போராட்டங்கள் தவறிவிடுகின்றது. மாறாக கோர்ட், வழக்கு ! விடுதலை வாங்கி கொடுக்கலாம் என்ற பா அக்காலத்தில் மித வாத இயக்கம் மேற்கொ அந்தவகையில் ஒரு போக்கினை சுட்டிக்காட்டு சுட்டிக் காட்டத் தவறி விடுகின்றார். நாவலி பலாங்கொடை காட்டில் "கடவுளே எனக்கு டே கையை வைத்து புலம்புவது இந்நாவலின் சோ
"இனிப்பாடமாட்டேன்” இவரது இறுதி இந்நாவலையும் சி.வியின் வாழ்க்கையையும் சுயசரிதையாக அமைந்த நாவல் என்பது புரி மணம் முடித்து வாழுகின்ற போது ஏற்படுகின்ற மகனுக்கு சமூகத்தில் ஏற்படுகின்ற முரணை இக்காலகட்டத்தில் மலையகத்தில் தமிழர் மீது . சிறப்பாக சித்தரிக்கின்றது எனக் கூறமுடியாது என்றும் உன் நினைவாக” என்ற சிறுகதை மிக
சி. வியின் படைப்புக்கள் அனைத்திலு மலையக மண்ணின் மணம் கமழும் பேச்சு 6 சிறப்பாக கையாண்டமையாகும். இவர் நாவ தேசிய இலக்கிய கோட்பாடு, தேசிய இயக்கம் முன்வைக்கப்பட்டன. இச்சந்தர்ப்பத்தில் மொழ மொழி இலக்கியத்தில் கையாளப்பட்டது. இத்தல் போக்கினை ஆதரித்திருந்தமை இவரது எழுத் பேச்சு மொழியினை கையாண்ட சி.வி. அை சமூக உறவுகள் என்பவற்றுக்கமைய சிறப்பாக மேலும் அழகுபடுத்தியுள்ளது எனலாம்.
சி.வி. யின் பிற முயற்சிகள்
மேற்குறிப்பிட்டவை தவிர சி.வியின் இலக்கி என்ற கட்டுரை தொகுப்பு, பத்திரிகைகள், அ சித்திரங்கள் என்பன முக்கியமானவைகளாகுப்
முதற்படி என்ற நூல் இந்திய தமிழ தொகுதியாகும். இந்திய தமிழர்களிடையே இ பற்றியும் அது இம் மக்கள் குறித்து மேற்
28

1, இனிப்பாடமாட்டேன், வாழ்வற்ற வாழ்வு
ஏனையவை யாவும் நூலுருப் பெறல் ல் வீடற்றவன், இனிப்பாடமாட்டேன், வாழ்வற்ற -கு கிட்டியதால் இவ்விரு நாவல்களிலும் கின்றது என்பதை ஆராய முற்படுகின்றேன்.
களில் ஒன்றாகும். மலையக மக்களிடையே அவற்றினை ஸ்தானப்படுத்தலின் போது க்கும் நாவலாக அமைந்து காணப்படுகின்றது. களில்) மலையக மக்களிடையே வீறு போன்றவற்றை இந்நாவல் உள்வாங்க முதலியவற்றின் மூலமாக இம்மக்களுக்கு ர்வையை முன்வைக்கின்றது. இப்போக்கு கண்டிருந்த நடவடிக்கையாக காணப்பட்டது. கின்ற நாவலாசிரியர் அதன் மறுபக்கத்தை ன் இறுதியில் கதாநாயகன் இராமலிங்கம் பாகும் வழி தெரியவில்லையே” தலையில் ரவு வாதத்திற்கு தக்க எடுத்துக்காட்டாகும். - நாவலாகும். 1984 இல் வெளிவந்தது. உற்று நோக்குகின்றவர்களுக்கு இது ஓர் யும். தமிழர் ஒருவர் சிங்கள பெண்ணை 3 முரணையும், அவ்விருவருக்கும் பிறக்கும் யும் சித்தரிப்பதாக உள்ளது இந்நாவல். கட்டவிழ்த்து விடப்பட்ட இனவன்முறைகளை 1. இதனை ஆனந்த ராகவனின் 'நண்பனே க நேர்த்தியுடன் சித்தரிக்கின்றது எனலாம்.
பம் சிலாகித்துப் பேசப்படுகின்ற விடயம் வழக்கு முறையை தனது படைப்புக்களில் ல் எழுதத் தொடங்கிய காலகட்டத்தில் என்பன தத்துவார்த்தப் போராட்டங்களாக ழி தூய்மை வாதத்திற்கு எதிராக பேச்சு கைய காலப் பின்புலத்தில் சி.வி. இத்தகைய துக்களின் தனிச் சிறப்பாகும். இத்தகைய வ காலம், இடம், சமூகம், தனிமனிதன், - கையாண்டமை அவரது படைப்புக்களை
யெ நோக்கினை மதிப்பிடுவதற்கு "முதற்படி" வ்வப்போது வரைந்து வெளியிட்ட கேலிச்
ர் பற்றிக் கூறுகின்ற சிறிய கட்டுரைத் லங்கை இந்திய காங்கிரஸ் உருவாகியது Bகொள்கின்ற நடவடிக்கைகள் பற்றியும்
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 49
குறிப்பிடுகின்றது. இனக் குரோதமின்றி சி என்ற உணர்வை வெளிப்படுத்துகின்ற 8 காணப்படுகின்றார் என்பதை பின்வரும் வர்
"ஆரிய திராவிடர்களாகிய நம் சிங்களச் சே
அறிவு புலர்ந்தது."
"நாமிருக்கும் நாடு நம்
நமக்கே யுரிமையா
என்ற நாதத்தின் எதிரொலி இங்கு பி அறிவைக் கொலை செய்வது வழக்கம். இ சிங்களவர்களுக்கு வாழ்க்கைப் போராட்டத் மட்டுமா? மூலதனமும் வியாபாரமும் இந்தி தேயிலை தோட்டங்களில் வெள்ளையர் கை சுரண்டல் கைங்காரியத்திற்கு ஆயுதமாக இ தான் இவரின் அபிப்பிராயம். மற்றொரு தெரியாத் திறமையால் கோட்டை பிடிப்பது ( வந்ததிலிருந்து சிங்களவர்கள் மனம் 6ெ நாமிருந்திருந்தால் எப்படி நடந்து கொண்டிரு இருந்தால் உடன் பதில் சொல்வார்கள் (பு
இதன் மூலம் சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்தி ஐக்கியப்பட வேண்டியதன் - போராட வேண்டியதன் அவசியத்தையும் இ சி.வி.
சி.வி. வழிப்போக்கன் என்ற புனைப்ெ என்ற தொடர் நடைச் சித்திரத்தில் தான் பயன்படுத்தப்படுகின்றது. சி.வி அதனை ெ அதன் உள்ளார்ந்த அர்த்தத்தையும் புரிந்தே பின்வரும் உதாரணம் மூலமாகவும் அறிய
"கூனியடி கோப்பிக் கன்று அண்ணனைத்
அந்தா
என்ற மலையக நாட்டார் பாடலுக்கு
"காடுகளை அழித்து புதிய மலைகள் சகஜமானது. மலையகத்தின் ஒவ்வொரு ம செலுத்த தக்க யாரோ ஒரு தங்கையின் அல மலையகத்தின் மலைகள் மீது உங்களுக் காலடிகளை கவனமாக எடுத்து வையுங்க மலைகள்” (மலைநாட்டு மக்கள் பாடல்க
கூர்மதி.

ங்கள மக்களுடனும் ஐக்கியப்பட வேண்டும் 1.வி. காலனித்துவ எதிர்ப்பு கொண்டவராய்
கள் எடுத்துக் காட்டுகின்றன.
காதரர்கட்கு ஆங்கில மோகம் தணியலாயிற்று.
தென்ப தறிந்தோம் - இது
மென்ப தறிர்தோம்."
றந்தது. என்றாலும் ஆங்கில மோகம் நம் சுய திலிருந்து சுகமடைவது சற்று கஷ்டமாவதால் இதில் அயர்வும் ஏமாற்றமும் ஏற்பட்டது. இது ய வர்த்தகர்களிடம், பொன் விளையும் ரப்பர்கயில் அந்நியர் இலங்கையில் நடாத்திவரும் நப்பவர்கள் இந்தியத் தொழிலாளர்கள் என்பது புறத்தில் யாழ்ப்பாணத் தமிழர்கள் அயர்வு போல எல்லா உத்தியோகங்களையும் கவர்ந்து பதும்பி இருக்க வேண்டும். இந் நிலையில் நப்போம் என்பதற்கு சிங்களவர்கள் இந்தியராக முதற்படி - பக் 10) 5 இம்மக்களின் நிலைமைகளை எடுத்துத் அவசியத்தையும் காலனித்துவத்திற்கு எதிராக இரத்தின சுருக்கமாக எடுத்துக் காட்டுகின்றார்
பயரில் எழுதிய "தேயிலைத் தோட்டத்திலே” "மலைநாடு” என்ற சொல் முதன் முதலாக வறும் புவியியல் அர்த்தத்தில் மாத்திரமன்று அச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். இதனை லாம்.
ச்ச மலை 3 போட்ட மலை தோத்த மலை தெரியுதடி”
கவிஞர் இவ்வாறு விளக்கம் தருகின்றார்.
ளை உருவாக்கும் போது சாவு என்பது சர்வ லைகளும் நிச்சயம் சிரம் தாழ்த்தி மரியாதை ன்ணனைத் தோத்த மலைகளாகத்தானிருக்கும். கு ஏறிடும் சந்தர்ப்பம் கிடைத்தால் உங்கள் ள். ஏனெனில் அவை அண்ணனைத் தோத்த ள் பக்-96) இம்மக்கள் எங்கிருந்தோ வந்து
29 )

Page 50
தயாராக இருந்த பொருளாதாரத்தை சூரை உதிரத்தையும் உயிரையும் தாரை வார்த்து அற் மலையக பொருளாதாரம். ஒரு புறமான சமூகவுரு இம்மக்கள் வளர்ந்து வரும் ஓர் தேசிய சிறுபான் இந்த அர்த்தத்தில் தான் மலையகம் மலை இந்த அர்த்தத்தை சிறப்பாக உணர்ந்த சி.வி. மன என்பதில் இருநிலைப்பட்ட கருத்துக்களுக்கு !
சி.வியின் மிக முக்கியமான பிறிதொரு தொகுப்பாகும். இதனை மாவெலி பத்திரில மொழிபெயர்த்து தொடராக வெளியிட்டார். குழந்6 அவர்களிடையே காணப்பட்ட கலை கலாசார உறவின் தன்மை என்பன சிறப்பாக சித்தரிக்க மண்வாசனை மிக்க நடையை சி.வி. கையாண்டு இலக்கியமயமாக்கினார் என்பதற்கு இவரது இந் மனித உணர்வுகளையும் ஒன்றாக காதலிக்கி அந்தவகையில் In Ceylon's Tea Garden என்ற முக்கியத்துவமும் சிறப்பும் உடையதாகும். வரலாற்றினை எடுத்துக்கூறும் இவரின் பிறிதொ
சி.வி. யின் இலக்கிய நோக்கு அவரது இலக்கிய நோக்கு அவரது காலத் நோக்குவதற்கு அவரது காலத்தில் தோற்றம் (
"தண்டுக்கலா தோட்ட
முண்டு கணக்க துண்டு துண்டா
யாரோ த கண்ட துண்டமாக
கழுத்து மு கைலாசம் சேர்ந்
"கூலிக்காரன் வாயி
போடவுமே அஞ் கச்சைக் கட்டி ! அச்சமுடன் தான்
60 களில் மலையகத்தில் மக்கள் இய அது அம்மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக முதல் வெளிப்பாடாக தோட்டத் தொ கணக்குபிள்ளைமார்கள் கங்காணிகள், கண்டக் எதிர்த்து போராடினார். தொழிலாளர்களுக்கு எத (குறிப்பாக கணக்குப்பிள்ளைமார்கள்) பலரின் கொல்லப்பட்டனர். இது அக்காலகட்டத்தில் ஏ எழுச்சியையும் காட்டுகின்றது.

ரயாடியவர்கள் அல்லர் மாறாக தனது தே அத்திவாரத்தில் கட்டியெழுப்பப்பட்டதே வாக்கமும் மறுபுறமான ஒடுக்குமுறைகளும் மை இனம் என்ற உணர்வை ஏற்படுத்தியது. காடு என்ற பதங்கள் பிரஞ்சை பெற்றன. மலநாடு என்ற பதத்தை பயன்படுத்தியுள்ளார்
இடமில்லை.
நூல் Bom to Labour என்ற விவரணத் கெயில் திரு.பி.ஏ.செபஸ்டியன் தமிழில் தை பிறப்பு முதல் இம்மக்களின் வாழ்க்கை, நிகழ்வுகள், உறவு கொண்ட மனிதர்கள், கப்படுகின்றது. ஆங்கிலத்திலும் மலையக ள்ளார். மலையக மக்களின் வாழ்க்கையை நூல் சிறந்த சான்றாகும். இயற்கையையும், ன்ற போக்கினை இந்நூலில் காணலாம். கவிதை தொகுப்பினை போல இந்நூலும் மலையக மக்களின் துன்பம் தோய்ந்த மாரு நூல் "நாடற்றவர் கதை” ஆகும்.
தில் எவ்வாறு வெளிப்பட்டது என்பதை பெற்ற கவிதை ஒன்றினை நோக்குவோம்.
உத்திலே திண்டு கப்பிள்ளை வெட்டியாச்சு ாங்க - போச்சிங்க
ண்டம் திருச்சிங்க"
ல் மண்ணைப் சமாட்டான் துரைமார்க்கு நடப்பான்”
(ஜில். சுல்தான் பாடியது)
க்கம் புதிய பரிமாணத்தை எட்டியதுடன் போராட்டத்தை முன்னெடுத்தது. அதன் ழிலாளர் களுக்கு எதிராக இருந் த கையாக்கள் ஆகியோரின் கொடுமைகளை ரொக நின்ற தோட்ட உத்தியோகத்தர்கள் கைகள் வெட்டப்பட்டன. பலர் வெட்டிக் ற்பட்டிருந்த அரசியல் கொந்தளிப்பையும்
ல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 51
இத்தகைய போராட்டங்கள், எழு. இடம்பெறாதிருப்பது அவரது உலக நோ எனும் பெண்மணி எழுதிய நகரத்துப் பென் ஏங்கல்ஸ் எழுதிய குறிப்பு இவ்வாறு அை
"விமர்சனம் என்று நான் கூறவேண் யதார்த்தபூர்வமானதாகக இல்லை என் யதார்த்தவாதம் (Realism) என்று உண்ன. வகை மாதிரியான கதாபாத்திரங்கள் கதாபாத்திரங்களாக மறுசிருஷ்டி செய்வது போதியளவிற்கு வகை மாதிரியானவையாக அவர்களை இயக்குகின்ற சூழல்கள் அமையவில்லை. "நகரத்து பெண்ணில்” உதவி செய்ய இயலாத அப்படி செய்யக்க ஒரு கூட்டமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. தாங்க கை தூக்கிவிடும் முயற்சிகள் எல்லாம் அந்த அவர்கட்கு மத்தியிலிருந்து வரவில்லை. 6 அந்த 1800 அல்லது 1810இல் கதை நடப்பு இல் தீவிரமான பாட்டாளி வர்க்க போராம் காலமாக பங்கு கொண்ட ஒருவருக்கு இது ! சூழ்ந்ததுள்ள ஒடுக்குமுறை யந்திரத்திற்கு முழங்குவதும் தாங்களும் மனிதப்பிறவிகள் கொந்தளித்து கிளம் பி அரைகுறை உணர்வுபூர்வமாகவோ முயல்வதும் வரலாற்ற உலகில் (Domain of Realism) நாங்கள் இ உரிமை உண்டு (மார்க்சிய அழகியல் பக் மேற்குறிப்பிட்ட ஏங்கல்சின் இரத்தின சு கொண்டு நோக்கும் போது மலையக மக்க வியின் எழுத்துக்கள் அன்றைய காலப்பின்புல பல்வேறுபட்ட எழுச்சிகளையும் இயக்கங் கொள்ளவில்லை. எனவே தான் தான் எடுத் சித்தரிக்கவும் அந்த சூழலில் இயங்கக்கூடி காட்டவும் அவரது எழுத்துக்கள் தவறிவிடு
முடிவுரை
சுமார் 50 ஆண்டு காலமாக எழுத்த வாழ்வியலைப் படைப்பாக்கி தந்தார் என் இடமில்லை. எனினும் அவரது காலத்தில் எழுச்சிகளையும் இலக்கியமாக்க தவறிவிடு பலவீனமாகும். இவ்வாறாக சி.வியின் எழுத்து கண்டு குமுறுகின்ற ஒரு மனிதாபிமானியின் பிரச்சினைகளுக்கு தீர்வை முன்வைக்கும் தெரிகின்றது. முடிவாக சி.வி பற்றிய ஆய்வுக போது அவரது வெற்றிகள் மட்டுமல்ல ரே ஆதர்சனமாக அமையும். சி.வி பற்றி இவ் காலத்தின் தேவையாகும்.
கூர்மதி 5-CM 013788

ச்சிகள் என்பன சி.வியின் படைப்புகளில் க்கின் துரதிஷ்டவசமே ஆகும். ஹார்க்னெஸ் ன் (City Girl) என்ற நாவலை வாசித்து விட்டு
மந்திருந்தது.
டியது எதுவென்றால் கதை போதியளவிற்கு பது தான். என்னைப் பொறுத்தவரையில் Dமயான விபரங்களை தருவது மட்டுமல்லாது ளை போதியளவிற் கு வகைமாதிரியான தாகும். நீங்கள் படைத்துள்ள பாத்திரங்கள் உள்ளன. ஆனால், அவர்களை சூழ்ந்துள்ள, அந்தளவிற்கு வகைமாதிரியானவையாக தொழிலாளர் வர்க்கமானது தனக்கு தானே கூட முயற்சிக்காத கையறு நிலையில் உள்ள வொண்ணாத அத்துன்பத்திலிருந்து அவர்களை மக்களுக்கு மேலிருந்து வருகின்றனவேயொழிய செயின்ட் சைமனும் ரொபட் ஓவனும் வாழ்ந்த பதாக இருந்தால் அது சரிதான். ஆனால் 1887 படங்கள் பலவற்றையும் கடந்து 50 ஆண்டு யதார்த்தமானதாக இருக்கமுடியாது. தங்களை 5 எதிராக தொழிலாள வர்க்கம் கண்டனம் ர் தாம் எனும் நிலையினை மீட்டுக்கொள்ள உணர் வுபூர்வமாகவோ அல்லது முழு நில் அங்கங்களாக உள்ளன. எனவே யதார்த்த இடம்பெற வேண்டும் எனக் கேட்க அவற்றிற்கு
46 அருணன்) நக்கமான இக்கருத்தினை அடிப்படையாகக் களின் வாழ்வியலை படைப்பாக்கித் தந்த சி. த்தில் ஒடுக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் களையும் பொருளாகவும் பின்னணியாகவும் துக்கொண்ட காலகட்டத்தினை யதார்த்தமாக டய உண்மையான மாந்தர்களை சித்தரித்துக் கின்றது.
பலகில் திகழந்த சி.வி மலையக மக்களின் -பதில் இரு நிலைப்பட்ட கருத்துக்களுக்கு நிகழ்ந்த முனைப்புற்ற போராட்டங்களையும் இகின்றார். இது அவரது இலக்கிய நோக்கின் மக்களை நோக்குகின்ற போது கொடுமைகளை நெஞ்சம் தெரிகின்றது. ஆனால் இம்மக்களின் - தத்துவார்த்த பார்வை இல்லை என்பதும் ளை சமூகவியல் பார்வைக்கு உட்படுத்துகின்ற தால்விகளும் அடுத்த தலைமுறையினருக்கு வகையான ஆய்வுகள் வெளிவரவேண்டியது
(31)

Page 52
கண்ணிவெடி
அனர்த்தம் பற்றிய அறிவு அனைவரும்
செயற்றிட்டப் பணிப்பாளர், கண்ணிவெடி
கல்விப் பணிப்பாள
யுத்தத்தினாலும் வன்முறைகளினாலும் பல்வே யுத் தம், வன் முறை இடம் பெற்ற நாடுக உபயோகப்படுத்தப்பட்ட, உபயோகப்படுத்தப்படு கோணங்களில் மக்கள் பாதிப்படைந்துள்ளதோ மூன்று தசாப்தங்களாக நமது நாட்டில் ஏற்ப ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்தும், அந் ரீதியாகப் பாதிக்கப்பட்டும் உள்ளமை நாம் 8
நமது நாட்டைப் பொறுத்தவகையில் - அனர்த்தங்களில் கண்ணி வெடியினால் ஏற்பட் முக்கியமானதொன்றாகக் கருதப்படவேண்டியு இலங்கையின் கல்வி, சமூக, பொருளாதார, துறைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன யுத்தம் நடைபெற்ற வடக்கு, கிழக்கு மற்று கண்ணிவெடி, வெடிக்கும் நிலையிலுள்ள வெடி பொருட்கள் பற்றி மாணவர்கள் மாத்திரமன்றி, அன இவை தொடர்பான கல்வியறிவு வழங்கப்படுவ
அவற்றின் விளைவுகள், அவற்றிலிருந்து களையும் சமூகத்தையும் விழிப்பூட்டுவது கால் இவற்றை நோக்காகக் கொண்டு மாணவர்கள் விழிப்பூட்டுவதற்காகவும் பாதுகாப்பதற்காகவும் எனும் மேலதிக பாட அலகு பாடசாலைக் அனுரசணையுடன் கல்வி அமைச்சினால் காட்டத்தக்கதொன்றாகும்.
யுத்தம் நடைபெற்றதால் இடம்பெயர் இச்சூழ்நிலையில் அப்பிரதேசங்களில் பாடம் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன ஆரம்பித்துள்ளன. இலங்கையின் ஏனைய இப்பிரதேசங்களுக்கு வருகை தருகின்றனர். இ பாதுகாப்புக் கல்வி என்ற இந்த மேலதிக |
குறித்த விழிப்புணர்வை மாணவர்களினூடாக அவ கொண்டு செல்லும் என்று நம்பப்படுகின்றது.

க்கும் அவசியம்
இஸட். தாஜுதீன் அனர்த்தம் மற்றும் பாதுகாப்புக் கல்விப்பிரிவு ர், முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்தி கிளை
பறுவகையான இழப்புக்கள் ஏற்படுகின்றன. -ளில், இடம் பெறுகின்ற நாடுகளில் இகின்ற யுத்த ஆயுதங்களினால் பல்வேறு டு பாதிப்படைந்தும் வருகின்றனர். கடந்த ட்ட உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக பகவீனமாக்கப்பட்டும், காயப்பட்டும் உள அறிந்தவொன்றாகும்.
யுத்த ஆயுதங்களால் ஏற்படுத்தப்பட்ட டட இப்போதும் ஏற்படும் அனர்த்தமானது ள்ளது. கண்ணி வெடி அனர்த்தமானது தொழில், கலை கலாசார மற்றும் இதர மை வேதனையளிக்கின்றது. இவ்வகையில், ம் அவற்றை அண்டிய பிரதேசங்களில் 2பொருட்கள் மற்றும் கைவிடப்பட்ட வெடி மனவரும் அறிந்திருப்பது அவசியமானதாகும்.
தும் இன்றியமையாததாகும்.
பாதுகாப்புப் பெறல் தொடர்பாக மாணவர் லத்தின் தேவையாகக் கருதப்படுகின்றது. டாக பெற்றோர்களையும், சமூகத்தையும் 'கண்ணிவெடி அபாயப் பாதுகாப்பு கல்வி' கலைத்துறையில் யுனிசெப் அமைப்பின் சேர்க்கப்பட்டுள்ளமை இங்கு சுட்டிக்
ந்த மக்கள் மீள்குடியேறி வருகின்ற சாலைகள் மீளத்திறக்கப்பட்டுக் கல்வி 5. அரச நிறுவனங்கள் மீள இயங்க ப பிரதேசங்களில் இருந்து மக்கள் வ்வாறான சூழலில் கண்ணிவெடி அபாயப் பாட அலகானது, கண்ணிவெடி அபாயம் வர்களின் பெற்றோர்களுக்கும் சமூகத்திற்கும்
ல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 53
கண்ணிவெடி என்பது வெடி மருந்து பதார்த்தங்களுடன் கூடியதான உலே மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், வாகன பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு வெடிபொருள்
எதிரிகளுக்கு விளைவுகளை ஏற்படுத் தங்களது நிலைகளை எதிரிகள் நெரு மிதிவெடிகள், கண்ணிவெடிகள் பொதுவாக பல்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன
உலகம் முழுவதும் 600 க்கு பயன்படுத்தப்படுவதாக ஆய்வுகள் தெரிவி எதிராகப் பயன்படுத்தக்கூடியதாகவும் ஏக எதிராகப் பயன்படுத்தக் கூடியனவாகவும் மிதிவெடிகள் பொதுவாக கண்களுக்கு மேற்பரப்பிலோ, புதையுண்டோ உருப் வெடிபொருட்களானவை யுத்தத்தில் ஏவப்பட் இவை எந்நேரமும் வெடிக்கக்கூடியவை, பல்வேறு இடங்களில் காணப்படலாம்.
கைவிடப்பட்ட அல்லது பாழடைந்த வீ காவலரண், இராணுவ பயன்பாட்டுக்குட்பட்ட பயன்படுத்தப்படாத பாதைகள், யுத்தம் நை கட்டடங்கள், யுத்த பிரதேசத்தில் பயன் சூழலில் உள்ள நீர்நிலைகள் போன்ற மிதிவெடிகள், வெடிக்காத நிலையிலுள்ள 6 என் பன காணப்படலாம். இதனால் இன்றியமையாதொன்றாகும். இவ்விடங்களை பாதுகாப்புப் பெற உதவும்.
கண்ணிவெடி, வெடிக்கும் நிலையிலு சமூக பொருளாதாரப் பாதிப்புக்களை ஏற்ப பிரதேசங்களில் கண்ணி வெடிகள், வெடிக் கைவிடப்பட்ட வெடிபொருட்கள் காணப்பு அறியப்படாத பிரதேசங்கள், அவை அ மக்கள் இவ் வெடிபொருட்கள் குறித்து எதிர்நோக்குகின்றனர். இலங்கையில் இவ்வ பாவிக்கப்பட்ட கண்ணிவெடிகள், மிதிவெடிகள் என்பவற்றின் பாதிப்புக்கள் இந்நாட்டில் ! மற்றும் ஏனைய சமூகங்களினதும் | தோற்றுவித்துள்ளன. குறிப்பாக வடக்கு மற்று அதிகமாக உள்ளதை அவதானிக்க முடி
நிலக்கண்ணிவெடிகளினால் நூற்றுக் அதேபோன்று அங்கவீனமடைந்திருக்கிறார் சமூகம் இந்த கண்ணிவெடி அனர்த்தத்தினா உடல், உள ரீதியான பாதிப்புக்களுக்கும் கண்ணிவெடியினால் பாதிக்கப்பட்டு அங்க
கூர்மதி

கள் அல்லது தீங்கு விளைவிக்கும் இரசாயனப் மாகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட, ங்களுக்கும் மற்றும் ஏனைய உடைமைகளுக்கும் ாகும்.
தி அவர்களின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்கும் ங்காது இருப்பதற்கும், பாதுகாப்பதற்குமாக ப் பயன்படுத்தப்படுகின்றன. இக்கண்ணிவெடிகள்
ம் அதிகமான கண்ணிவெடி வகைகள் க்கின்றன. இக்கண்ணிவெடிகள் மனிதர்களுக்கு னைய தாங்கிகள் போன்ற வாகனங்களுக்கு வகைப்படுத்தப்பட்டுள்ளன. கண்ணிவெடிகள், > இலகுவாகப் புலப்படாதவை. நிலத்தின் மறைப்பு செய்யப்பட் டோ காணப்படலாம். டு வெடிக்காமலோ, கைவிட்பட்டோ இருக்கலாம். பாரிய ஆபத்தைத் தரக் கூடியவை. இவை
டுகள், இராணுவ மண் அணைகள், கைவிடப்பட்ட - அழிவடைந்த பாலங்கள், பாதையோரங்கள், டபெற்ற இடங்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட படுத்தப்படாத முட்கம்பிச் சுருள்கள் போர்ச் ஆபத்தான பிரதேசங்களில் கண்ணிவெடிகள், வெடிபொருட்கள், கைவிடப்பட்ட வெடிபொருட்கள் இப் பிரதேசங்கள், குறித்த அவதானம் ள அறிந்திருப்பது கண்ணிவெடி ஆபத்திலிருந்து
அள்ள வெடிபொருட்கள் என்பன இலங்கையில் படுத்தியுள்ளன. உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற க்கும் நிலையிலுள்ள வெடிபொருட்கள் மற்றும் படுமென அறியப்பட்ட பிரதேசங்கள் மற்றும் ன்டிய பிரதேசங்கள் என்பவற்றில் வாழுகின்ற து அறியாத நிலையில் பாதிப்புக்களை ளவு காலமும் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் ள், பொறிவெடிகள் மற்றும் இதர வெடிபொருட்கள் வாழுகின்ற சகல சிங்கள, தமிழ், முஸ்லிம் பல் வேறு நிலைகளிலும் பாதிப்புக்களை ஓம் கிழக்கு மாகாணங்களில் இதன் விளைவுகள்
யும்.
க்கணக்கானோர் உயிர் இழந்திருக்கிறார்கள் கள், இந்நாட்டில் அங்கவீனமாக்கப்பட்டதொரு ல் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் பல்வேறு சமூக உறுப்பினர்கள் ஆளாகியிருக்கிறார்கள். வீனமாக்கப்படும் ஒருவர் அவரின் குடும்பத்திற்கு
33

Page 54
உதவ முடியாத நிலைக்கு உள்ளாகுகிறார். என நிறைவுசெய்ய முடியவில்லையே என்ற மன அ
இவ்வாறு ஒரு குடும்ப அங்கத்தவர் கன அவரின் முழுக்குடும்ப அங்கத்தவர்களும் அப்பா மறைமுகமாகவும் எதிர்கொள்கின்றனர். இத நடவடிக்கைகளையும் பாதிக்கின்றது. கண்ணிவெ பல்வேறு துறைகளில் பாதிப்புக்கள் ஏற்படுத்த வெடிக்கும் நிலையிலுள்ள ஏனைய வெடிபொருட்கள் குறித்து மாணவர்களையும், சமூகத்தையும் காப்பா அதற்கான கல்வி அறிவூட்டலும் அவசியமாகிறது
ஒரு நாட்டின் பொருளாதாரத்தைப் பாத கருதப்படுகிறது. இலங்கையில் கடந்த காலங்க போது புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளினால் பொருளாதாரம் பெரிதும் பாதிப்படைந்தது. அது பொருளாதார துறைகளாகக் கருதப்படுகின்ற ை என்பன கண்ணிவெடி அபாயத்தால் மிகவும் பாத புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள் மற்றும் வெடி (UXO) என்பவற்றின் காரணமாக பயிர்ச்செய்கை கால்நடை வளர்ப்பு என்பன பாதிப்படைந்துள்ள
நீர்நிலைகளில் இவ்வெடிபொருட்கள் காணப்பு மற்றும் கடல்மீன்பிடித் தொழில் என்பன பாதிப்படை இழந்தோருக்கு நிவாரணம் வழங்க வேண் செலவழிக்கப்பட்டதனால் இப்பணத்தைக் கொண் பணிகள் தாமதமாகியுள்ளன. கண்ணிவெடி அபாய சிறுகைத்தொழில், பெரும் கைத்தொழில் மற்றும் என்பன பாதிப்படைந்ததனால் இந்நாட்டின் வ உற்பத்தி பாதிப்படைந்ததனால் ஏற்றுமதி பாதி பாதிக்கப்பட்டது.
உயிர் இழந்தவர்களுக்கு நஷ்டஈடு வழ சுகாதார மருத்துவ வசதிகள் செய்து கொடுத்த இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குதல் பயன்படுத்தப்பட்டதனால் அபிவிருத்தியில் பி கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக பெரும் தெ
இப்பணத்தை மாற்று பொருளாதார அபிவிருத், உருவாகியுள்ளது.
கண்ணிவெடி அபாயத்தினால் ஏற்பட்ட மொத்த வருமானத்தை நலிவடையச் செய்தத ரீதியில் பெரும் பின்னடைவினை எதிர்கொண்டு விளைவுகளைத் தவிர்ப்பதன் மூலம் அதற்காகச் பொருளாதாரக் கட்டியெழுப்ப முடியும்.
கற்காலம் முதல் நவீன யுகம் வரையில் ம வெற்றிகொள்ள வேண்டுமென நினைத்து அதற்கான உபகரணங்களைக் கண்டுபிடித்ததனால் அக்கரு கொடுத்துள்ளன. இலங்கையில் கடந்த பல வருடந்
(34)
34
கல்

எது தேவைகளை என்னால் முழுமையாக
ழுத்தத்திற்கும் ஆளாகுகிறார். ன்ணிவெடியினால் பாதிக்கப்படும் போது திப்புக்களின் தாக்கத்தை நேரடியாகவும் உன் விளைவு மாணவர்களின் கல்வி படியானது சமூக, பொருளாதாரம் மற்றும் தியிருப்பதனால் இக்கண்ணி வெடிகள், ள், மற்றும் கைவிடப்பட்ட வெடிபொருட்கள் ற்ற வேண்டிய பொறுப்பு அவசியமானதால்
3, விவ° அவசாய உபாருட்க
கிக்கும் முக்கிய காரணியாக யுத்தம் ளில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் அப்பிரதேசங்களில் வாழ்ந்த மக்களின் து மாத்திரமின்றி இந்நாட்டின் முக்கிய கத்தொழில், விவசாயம், மீன்பிடித்துறை திப்படைந்துள்ளன. விவசாய நிலங்களில் க்கும் நிலையிலுள்ள வெடிபொருட்கள் -கள், பழச் செய்கைகள், தேனீ வளர்ப்பு,
ன. படும் என்பதனால் நன்னீர் மீன்பிடித்தொழில் உந்துள்ளன. இதனால் தொழில் வாய்ப்பை டிய தேவைக்காக பெரும் தொகை டு மேற்கொள்ளப்படவிருந்த அபிவிருத்திப் பம் காரணமாக கிராமியக் கைத்தொழில், உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாத்துறை ருமானம் பாதிப்படைந்தது. உள்நாட்டு ப்படைந்து இந்நாட்டுக்கான வருமானம்
ங்குதல், அங்கவீனமடைந்தவர்களுக்கு நல், கண்ணிவெடி அபாயம் காரணமாக 5 போன்றவற்றிற்கு அதிகளவிலான நிதி ன்னடைவு ஏற்பட்டது. புதைக்கப்பட்ட நாகைப் பணம் பயன்படுத்தப்படுவதனால் திக்காக பயன்படுத்த முடியாத நிலை
பொருளாதார இழப்புக்கள் இந்நாட்டின் ன் காரணமாக இந்நாடு பொருளாதார ள்ளது. கண்ணிவெடிகளினால் ஏற்படும் செலவிடப்படும் பணத்தை மீதப்படுத்தி
மனிதனை மனிதன் ஏதோ ஒரு வகையில்
வழிகளைத் தேடி அதற்கு உதவக்கூடிய விகள் அழிவுகளையே விளைவுகளாகக் பகளாக நடைபெற்ற உள்ளூர் யுத்தமானது
வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 55
வடக்கு, கிழக்குப் பிரதேசங்கள் மாத்திரமி அழிவை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இப் மிதிவெடிகள் போன்றவற்றால் பலர் உயிர்க உள்ளனர். கடந்த கால யுத்த சூழ்நிலை யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநெ மட்டக்களப்பு மற்றம் அம்பாறை ஆகிய ம என இனங்காணப்பட்ட மற்றும் இனா அபாயகரமான வெடி பொருட்களிலிருந்து மாணவ சமூகத்தினூடாக பெற்றோருக்கு
அவசியமானதாகும்.
தற்போது யுத்தம் நடைபெற்ற பி வருகின்றது. பாடசாலைகள் மீண்டும் திற வருகின்றன. இருந்த போதிலும் இப்பாடச சந்தேகத்திற்கிடமான பொருட்களைக் க தொட முனையாது இருத்தல் வேண்டும். பொருளாக இருந்தாலும் அது ஆபத்தை இருக்கலாம். அதனால் நீங்கள் சந்தேகத் ஆசிரியர், பெற்றோர், கிராம சேவையாளர், க மாவட்ட மிதிவெடி அலுவலகம் அல்லது தெரியப்படுத்துங்கள்.
கொடூர அனர்த்தத்தை உண்டாக் வெடிபொருட்கள் மற்றும் கைவிடப்பட்ட அவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறல், இவ் நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு உதவுத தனி மனிதனதும் பொறுப்பாகும்.
மீள் குடியமரும்போது உங்களினது உறுதி செய்யுங்கள். அத்துடன் கிராம பாதையினை அவதானமாகப் பயன்படுத் அறிவைப் பெற்றுக்கொள்வதன் மூலம் எ பாதுகாப்போம்.
கண்ணிவெடிகள், வெடிக்கும் நிை கைவிடப்பட்ட வெடிபொருட்கள் பற்றி அற விளைவுகள் பற்றிய அறியாமையையும் வெ அங்கவீனங்கள் மற்றும் காயங்கள், சொத்து, காரணமாக விளங்குகின்றன. இந்த அ தாக்கங்கள் தொடர்பாக அறிவூட்டுவதன் எம்மை நாம் பாதுகாப்பதுடன் மற்றவ மிதிவெடிகள் என்பவை அபாயகரமாக மாணவர்கள் ஊடாக மக்களிடம் கொண்
கண்ணிவெடி அபாயத்தில் அகப்பட் வேண்டுமெனவும் கண்ணிவெடியினால் பாத செய்ய முடியுமென்பதையும் இங்கு
கூர்மதி.

பன்றி ஏனைய அதை அண்டிய பிரதேசங்களிலும் பிரதேசங்களில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகள், ளை இழந்தும், அங்கவீனப்பட்டும், காயமடைந்தும் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணத்திலுள்ள ச்சி, மன்னார், வவுனியா, திருகோணமலை, ாவட்டங்களில் இவ்வெடி பொருட்கள் காணப்படும் ங்காணப்படாத பிரதேசங்களில் காணப்படும்
தற்காப்பு செய்துகொள்தற்கான தகவல்களை ம், ஏனையவருக்கும் கொண்டு செல்லப்படுதல்
பரதேசங்களில் மீள் குடியேற்றம் நடைபெற்று 8க்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் இடம்பெற்று Tாலை மற்றும் அண்டிய பிரதேசங்களில் நீங்கள் ண்டால் அவ்விடத்திற்குச் செல்லாது அதைத் ஏனெனில், இது ஒரு அழகான விளையாட்டுப் த ஏற்படுத்தக் கூடிய வெடிபொருளாகக் கூட திற்கிடமான பொருட்களைக் கண்டால் உடனே காவல் துறையினர், கண்ணிவெடி அகற்றுபவர்கள், கண்ணிவெடி அபாயக்கல்வி நிறுவனங்களுக்கு
தம் கண்ணிவெடி, வெடிக்காத நிலையிலுள்ள வெடிபொருட்கள் குறித்தும் அதன் விளைவு, ப ஆபத்து மிக்க வெடிபொருட்களை அழிக்கும் நல் போன்றவை ஒரு சமூகத்திலுள்ள ஒவ்வொரு
தும், உங்கள் குடும்பத்தினதும் பாதுகாப்பினை மக்களினால் வழமையாகப் பயன்படுத்தப்படும் -துங்கள். இத்தகைய மிதிவெடி விழிப்புணர்வு ம்மை நாமே பாதுகாப்பதோடு மற்றவர்களையும்
லயிலுள்ள வெடிபொருட்கள் (UXO) மற்றும் றிவின்மையும், அவற்றின் ஆபத்தினால் ஏற்படும் வடி பொருட்களினால் ஏற்படும் உயிர் இழப்புக்கள், உடமை இழப்புக்கள் போன்ற அனர்த்தங்களுக்கு பாயகரமான வெடிபொருட்களின் விளைவுகள், மூலம் அவற்றின் கொடுர விளைவுகளிலிருந்து Tகளையும் பாதுகாப்போம். கண்ணிவெடிகள், இருப்பதனால் அவை பற்றிய விழிப்புணர்வை டு செல்வது அவசியமானதாகும்.
டுக் கொள்ளும் போது எவ்வாறு நடந்துகொள்ள நிக்கப்பட்ட ஒருவருக்கு எவ்வாறான உதவிகளை கவனிப்போம். நாட்டில் சமாதான சூழல்
35

Page 56
காணப்படுவதனால் மீள் குடியேற்ற நடவடிக்கை நடைபெற்று வருகின்றன. இத்துடன் இப்பிரதேச பாகங்களிலிருந்தும் மக்கள் வருகிறார்க மேற்கொள்கிறார்கள். இவ்வாறான ஒரு சந்தர்ப்பத் புதைக்கப்பட்ட இடங்களில் சிக்கிக் கொண்டால் கொண்டு கூக்குரலிட்டு அயலவர்களின் அவசர
அபாய அறிவிப்புக்களைக் கண்டால் அப்பகுதியினுள் நுழைவதைத் தவிர்த்துக்கொள் செய்து அதில் நில்லுங்கள். அபாயக் குறியீடுகை இடங்களில் நிற்கும்போது அதன் அருகே சந்தே அதிலிருந்து விலகுங்கள், மற்றவர்களையும் நிறுத்துங்கள், அவசரமாக உங்கள் பகுதி அறிவியுங்கள்.
நண்பர் ஒருவர் அபாயப் பகுதியில் நிர நடமாட வேண்டாமென ஆலோசனை வழங் எடுக்கும்வரை அவ்விடத்தில் நிற்குமாறு பெ தைரியப்படுத்துங்கள், உரியவர்களுக்கு அறிவித்து வழிகளைச் செய்யுங்கள்.
உங்களது நண்பர் ஒருவர் சந்தேகத்துக்கிட அல்லது விளையாடுவதைக் கண்டால் அவருக் அருகே வருவதையும் தவிருங்கள். அவர் செ அவருக்கு கூறுங்கள். அவர் செய்வது ஆபத் கூறுங்கள். அவர் வைத்திருக்கும் பொருளை | கூறுங்கள். உரியவர்களுக்கு உடன் அறிவியும் ஒருவர் உடல், உள ரீதியான பாதிப்புக்கு உ உதவி செய்யுங்கள்.
மனித உயிர்களை அழிப்பதற்காக மனித உயிர்களைப் பலியெடுத்தது மாத்திரமன்றி, ம வர்க்கத்தையும் உருவாக்கியுள்ளது. எமது தாப் மக்களைக் காப்பது அவசியமாகும். க மாணவர்களினூடாக சமூகத்தில் ஏற்படுத்தி நம்மை
36

5கள் யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் ங்களைப் பாதுகாப்பதற்காக நாட்டின் பல ள். மாணவர்களும் சுற்றுலாக்களை தில் எதிர்பாராத விதமாக கண்ணிவெடிகள் ) அவ்விடத்திலிருந்து அசையாமல் நின்று
உதவியை நாட வேண்டும்.
அப்பகுதி அபாயம் என எண்ணுங்கள், Tளுங்கள், பாதுகாப்பான இடத்தை தெரிவு ள அகற்ற முனையவேண்டாம். அபாயமற்ற கத்துக்கிடமான பொருட்களைக் கண்டால் அதன் பக்கத்தில் செல்லாது தடுத்து பிலுள்ள பொறுப்பு வாய்ந்தவர்களுக்கு
ற்பதைக்கண்டால் அவரை அப்பகுதியில் குங்கள், தேவையான நடவடிக்கைகள் சால்லுங்கள், பதற்றப்படாது நிற்குமாறு வ அவரை அப்பகுதியிலிருந்து மீட்பதற்குரிய
டமான பொருள் ஒன்றினை வைத்திருந்தால் கே அருகே செல்வதையும் அவர் உங்கள் ப்வது ஆபத்தானது என தூரத்திலிருந்து தோனது என தூரத்திலிருந்து அவருக்கு மிக அவதானத்துடன் கீழே வைக்குமாறு ங்கள் கண்ணிவெடியினால் பாதிக்கப்பட்ட உள்ளாகியிருப்பர். அத்தகையவர்களுக்கு
தன் கண்டுபிடித்த கண்ணிவெடிகள் மனித னித சமூகத்தில் அங்கவீனர் என்றதொரு ப்நாட்டில் கண்ணிவெடி அபாயத்திலிருந்து ண்ணிவெடி குறித்த விழிப்புணர்வை மயும் நமது சமூகத்தையும் காப்பாற்றுவோம்!
ல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 57
தேசவழமைச் சட்
பிரதிக் கல்விப் பணிப்பாளர், முகாரை
இக் கட்டுரையானது தேசவழமைச் சட்ட பற்றி அல்லாது, அதன் ஏற்புடமை பற்றி சட்டத்தினால் ஆளப்படுபவர்கள் யார்? அ என்பது தொடர்பான விளக்கமாக இக்கட்
இலங்கையில் நிலவும் சட்டங்களை பகுதிக்குள் அடக்கலாம். இலங்கைத் தீவி விசேட சட்டங்கள் ஏற்பாடு செய்யாத வி பிரயோகிக்கப்படுகின்றது. ஏதேனும் குறிப் குறிப்பிட்ட சிலருக்கு அல்லது இடத்து. சட்டமே விசேட சட்டம். இலங்கையில் முஸ்லிம் சட்டம் என்பன விசேட சட்டங்க சட்டம் ஆள்சார்ந்த, இடம் சார்ந்த மு விளங்குகின்றது.
தேசவழமைச் சட்டம், 'யாழ்ப்பாண | வாசிகளுக்குரிய சட்டமாகும். எனவே தே தமிழர்களுக்கும் ஏற்புடைய சட்டம் அல் தேசவழமைச் கோவையின் ஒழுங்கு விதி சட்டக் கோவையின் 3 ஆம் ஒழுங்குவிதியில் கொண்டுள்ள மலபார்களுக்கிடையிலான ஒருவர் எதிர்வாதியாக விளங்குகின்றபே வழக்காறுகளுக்கிணங்க தீர்க்கப்பட வே
'யாழ்பாண மாகாணத்தை வதிவிட
தேசவழமைச் சட்டத்தின் ஆதிக் மாகாணத்தை வதிவிடமாகக் கொண்டிருக் சொற்றொடர் வடக்கு மாகாணத்தைக் செய்யப்பட்டுள்ளது.
1. Marisal Vs Saveri (1 sec 9) வழக்கி!
தமிழர்களுக்கும் ஏற்புடையதெனத் த
i. Velupillai Vs Sittampalam (1872
மட்டக்களப்பு, திருகோணமலை மாவ பிரயோகிக்கப்பட முடியாதெனத் தீர்.
கூர்மதி

டத்தின் ஏற்புடமை
எஸ். சந்திரராஜா மத்துவம் மற்றும் தர உறுதிப்பாட்டுப் பிரிவு, கல்வி
அமைச்சு
த்தின் உள்ளடக்கம் அல்லது பொருளடக்கம் யே எடுத்துக் கொள்ளுகின்றது. தேசவழமைச் 5லது இச்சட்டம் யாருக்கு ஏற்புடையதாகின்றது டுரை அமைகின்றது.
Tப் பொதுச்சட்டம், விசேட சட்டம் என இரு ல் வாழ்ந்து வரும் அனைவருக்கும் அவர்களது டயங்களைப் பொறுத்தவரை பொதுச்சட்டமே பபான அம்சம் அல்லது தனிமை காரணமாக க்கென மாத்திரம் ஏற்புடையதாக அமையும் தேச வழமைச் சட்டம், கண்டியச் சட்டம், களாக நிலவுகின்றன. இவற்றில் தேசவழமைச் கவர்கள் இரண்டையும் கொண்ட சட்டமாக
மாகாணத்தை வதிவிடமாகக் கொண்ட மலபார்' தசவழமை இலங்கையில் வாழும் அனைத்து லை. 1806 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க கள் இதனை உறுதிப்படுத்துகின்றது. மேற்படி ன்படி, யாழ்ப்பாண மாகாணத்தின் வதிவிடத்தைக் சகல பிரச்சினைகளும், அல்லது அத்தகைய பாது எழும் பிரச்சினைகளும் தேச வழமை
ண்டுமெனக் குறிப்பிடுகின்றது.
டமாகக் கொண்ட மலபார்' என்பது :
கத்துக்குள் வருவதற்கு ஒருவர் யாழ்ப்பாண க்க வேண்டும். 'யாழ்ப்பாண மாகாணம்' என்ற குறிப்பதாகவே நீதிமுறை வியாக்கியானம்
ல் தேசவழமை மன்னார் மாவட்டத்தில் வாழும் தீர்க்கப்பட்டது.
Ramanathan Law Report 114) வழக்கில் ட்டங்களைச் சேர்ந்தவர்களுக்குத் தேசவழமை க்கப்பட்டது.
37

Page 58
எனவே இன்று வடக்கு மாகாணத் மாத்திரம் தேசவழமையால் ஆளப்படுவதற்கு அதாவது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னா நிரந்தர வதிவிட உரிமையும் எண்ணமும் யாழ்ப்பாணத்தில் தங்கி வாழுகின்ற தம் மாகாணங்களில் வசிக்கும் தமிழ்பேசும் ஏனைய விடயத்தில் ஏற்புடையதல்ல.
அடுத்து 'மலபார்' எனும் பதம் ஆரம்ப, பிற்காலத்தின் நீதிமுறை வியாக்கியானங்கள் கருத்துப்படி 'மலபார்' என்ற பதம் தமி குடாநாட்டுக்குத் தென்னிந்தியாவின் மலபார் பு 'மலபார் வாசிகள் 'என அழைக்கப்பட்டனர். பொதுவாக 'மலபார் வாசிகள்' என்றே குறிப என்ற வழக்கில் 'மலபார்' என்ற பதம் 'தப் ஏற்கப்பட்டது.
Chetty Vs Chetty வழக்கில் வன்னியர் ச யாழ் ப்பாணத்தைத் தமது நிரந்த யாழ்ப்பாணத்திலுள்ள மற்றையோர் பின்பற் வந்தனர். இவர்கள் தேசவழமைக்குட்பட்
Tharmalingam Chetty Vs Arunasalam தென்னிந்தியாவிலுள்ள இராமநாதபுர பெற்றோரையுடைய ஒருவர் யாழ்ப்பாணத் யாழ்ப்பாணத்திலேயே நிரந்தரமாக வா ஆளப்படுவர் என நீதிமன்றம் தீர்த்தது.
வதிவிடத்தன்மை
ஒருவர் தேசவழமையால் ஆளப்பட ே வடமாகாணத்தின் வதிவிடத்தன்மையையும் தவறுபவர் தேசவழமைச் சட்டத்தின் பயன்பட Sivagamipillai (13 NLR74) என்ற வழக்கில் விளக்கத்தைக் கூறினார். 'வதிவிடம் என்பது மாகாணத்தில் தனது நிரந்தர இருப்பிடத்தைக் செய்தார்.
King Vs Perumal (14 NLR 494) எ மாகாணங்களில் வசிக்கும் ஒரு தென்னிந்தியவ அவர் வட மாகாண வாழுமை உடையவரல் இல்லம்' என்பது வாழுமைக்கு வழிகாட்டும் :
Spencer Vs Rajaratnam (16 NLR 32 ஆளப்பட விரும்பும் நபர் முக்கியமாக வட நாட்ட வேண்டுமென ஏற்கப்பட்டது.

தை வதிவிடமாகக் கொண்டுள்ள தமிழர் தரியவர் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. ரர், முல்லைத்தீவு, வவுனியா ஆகியவற்றில் உரியவராக இருக்க வேண்டும். எனவே ழெர்கள் மற்றும் இலங்கையின் ஏனைய ப இனத்தவர்களுக்கும் தேசவழமை ஆள்சார்
த்தில் சர்ச்சைக்குரியதாக இருந்தபோதிலும் T மூலம் இது தீர்க்கப்பட்டுள்ளது. இன்றைய ழர் என்று பொருள்படும். யாழ்ப்பாணக் பிரதேசத்திலிருந்து வந்து குடியேறியவர்கள் - டச்சுக்காரர்கள் யாழ்ப்பாண வாசிகளைப் ப்பிட்டனர். Chetty Vs Chetty (3 NLR 253) நிழர்' என்ற பதத்துக்கு ஒத்த சொல் என
முகத்தைச் சேர்ந்த தமிழர் மூன்று சந்ததியாக ர இருப்பிட மாகக் கொண் டிருந் தார் றிய முக்கிய வழமைகளைக் கடைப்பிடித்தும்
டவர்கள் எனத் தீர்மானிக்கப்பட்டது.
Chetty (45 NLR 414) என்ற வழக்கில் - மாவட்டத்தின் குடிகளான தமிழ்ப் த்தில் பிறந்திருந்தார். அவரது பெற்றோரும் ழ்ந்து வந்தனர். மகன் தேசவழமையால்
வண்டுமாயின் தமிழராக விளங்கும் அவர் எண்மிக்க வேண்டும். அதனை நிரூபிக்கத் பாட்டினைப் பெறமுடியாது. Veluppillai Vs நீதியரசர் மிடில்டன் 'வதிவிடம்' தொடர்பான நிரந்தரமாக வதிபவர் அதாவது யாழ்ப்பாண 5 கொண்டுள்ள ஒருவர் என வியாக்கியானம்
னும் வழக்கில், இலங்கையின் மத்திய மாசி தேசவழமைக்குட்பட மாட்டார். ஏனெனில் ல எனக் கூறியது. எனவே இங்கு 'நிரந்தர அடிப்படையாக எடுத்துக்காட்டப்படுகின்றது."
1) என்ற வழக்கிலும் தேசவழமையினால் டக்கு மாகாணத்தின் ஆளுமையை நிலை
- கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 59
Soundaranayagam Vs Soundaran யாழ்ப்பாணத்தில் வாழ் ந்த கொழு சட்டத்துக்குட்பட்டவனாகக் கருதப்படவில்
நீதிமன்றத்தின் பல்வேறு வழக்குகளி இல்லம் வடக்கு மாகாணத்தில் இருந்தது கருத்தொற்றுமை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, தேசவழமைச் சட்டமான சட்டமாகவும் உள்ளது. 'யாழ்ப்பாண மா ஆட்களுக்கும் ஏற்புடையது என்ற வகை மாகாணத்தில் அமைந்துள்ள எல்லாக் கா மலபார் வாசிகளுக்குச் சொந்தமாயினும் ச ஐந்து மாவட்டங்களிலும் உள்ள அசையா இருப்பினும் தேசவழமைச் சட்டத்தாலேயே சிங்களவர் ஒருவரோ எவராக இருப்பினு சொந்தமாக இருப்பின் அவர்கள் தேசவழ
Seeladchy Vs Visvanathan Chetty நபரொருவர் கொழும்பில் சொத்துக்கை வழியுரிமையும் திருமணத் துணைகளில் தேசவழமைக்குட்பட்ட வகையில் நிச்சயிக்க சட்டமானது, தேசவழமைச் சட்டத்தால் - பெண்களுக்கும், அத் திருமணம் நிலைத்தி
(1) தேசவழமைச் சட்டத்தின் ஆளுகைக்
சட்டத்தின் ஆளுகைக்குட்படுகின்ற 3 அத்திருமணம் நிலைத்திருக்கும் உட்பட்டவளாவள்.
(11)
தேசவழமைச் சட்டத்தின் ஆளுகைக் சட்டத்தின் ஆளுகைக்குட்படாத ஆ அத்திருமணம் நிலைத்திருக்கும் க உட்பட்டவள் ஆகமாட்டாள்.
என யாழ்ப்பாணத் திருமண உரிமைகள் பிரிவு 3 கூறுகின்றது.
ஆதனங்கள் தொடர்பிலும் வடக்கு அனைத்துக்கும் அதன் உரிமையாளர் / ெ சட்டம் ஏற்புடையதாகும். அவ்வாறே தேசம் ஆதனங்கள் இலங்கையின் எப்பகுதியில் சொத்துரிமை தொடர்பில் தேசவழமைச்
மேலும் தேசவழமையால் ஆளப்படும் குரித்தானவராக இருந்து வெளிநாட்டில் இ ஆகும். எனவே சில சந்தர்ப்பங்களில் 6 வெளியேயுள்ள அசையா ஆதனங்களைப்
கூர்மதி

ayagam ( 37 BLR 253) என்ற வழக்கில் ம் புச் செட்டியின் மகன் தேசவழமைச்
லை.
லும் வாழுமை பற்றிய ஆய்வின் மூலம், நிரந்தர | என்பது வாழுமைக்கான சான்று என்பதில்
து ஆள்சார்ந்த சட்டமாகவும், இடம்சார்ந்த காணத்தின் மலபார் வாசிகள் ' என்ற எல்லா நயில் ஆள் சார் சட்டமாகவும், யாழ்ப்பாண ணிகளுக்கும் அவை யாழ்பாண மாகாணத்தின் f ஏற்புடையதாகும். வடக்கு மாகாணத்திலுள்ள
ஆதனங்கள், அவை எவருக்குச் சொந்தமாக ப ஆளப்படும். தமிழரோ, முஸ்லிம் ஒருவரோ, ம் வடமாகாணத்திலுள்ள காணி ஒன்றுக்குச் பமைச் சட்டத்தாலேயே நிர்வகிக்கப்படுவர்.
(23NLR 97) வழக்கில் தேசவழமைக்குட்பட்ட ளக் கொண்டிருப்பின் இச் சொத்துக்களின் ன் திருமணச் சொத்துக்களின் உரிமையும் கப்பட வேண்டுமெனக் கூறப்பட்டது. தேசவழமை ஆளப்படும் ஆண்களைத் திருமணம் செய்யும் ருக்கும் காலம் வரை ஏற்புடையதாக இருக்கும்.
க்கு உட்படாத பெண் ஒருவர், தேசவழமைச் ஆண் ஒருவரைத் திருமணம் செய்தால் அவள் காலத்திற்குத் தேசவழமைச் சட்டத்துக்கு
க்கு உட்பட்ட பெண் ஒருவர், தேசவழமைச் ண் ஒருவரைத் திருமணம் செய்தால் அவள் காலத்தின்போது தேசவழமைச் சட்டத்துக்கு
நம் வழியுரிமைகளும் கட்டளைச் சட்டத்தின்
மாகாணத்திலுள்ள அசைவற்ற ஆதனங்கள் சாந்தக்காரர் எவராக இருப்பினும் தேசவழமைச் ழமையால் ஆளப்படும் ஆளுக்குச் சொந்தமான ல் அமைந்திருப்பினும் கணவன் - மனைவி சட்டம் ஏற்புடையதாகும்.
ஒருவர் இலங்கையில் அசையா ஆதனமொன்றுக் ஹப்பினும் பின்னுரிமைச் சட்டம் தேசவழமையே தசவழமைச் சட்டம் வடக்கு மாகாணத்துக்கு பும் கட்டுப்படுத்தும் வலிமை கொண்டுள்ளது.
39
பும் கட்டும் சட்டம் வ டம் தேசவான்றுக்

Page 60
தேசவழமைச் சட்டத்தின் பொருளட ஆள்சார்உறவுகள், உரிமைகள் தொடர்பான | ஏற்பாடுகளையும் கொண்டுள்ளதைக் காணலாம். தேசவழமையால் ஆளப்படும் ஒருவர் ந கொண்டிருப்பினும் அவை தொடர்பாகத் தேக்
மேற்கூறப்பட்ட ஆய்விலிருந்து இலா வதிவிடமாகக் கொண்டுள்ள தமிழர் தேச வழ தேசவழமைச் சட்டம் ஒருவருக்கு ஏற்புடையது தேசவழமையின் ஏற்புடைமையை உருவாக்கும் தெளிவாகின்றது.
Se
தனியுடமை கொடுமைகள் தீர தொன தானாய் எல்லாம் மாறும் என்பது ப
- பட்டுக்
பயம்தான் நம்மையெல்லாம் அழித்து நம்மை அதிகாரம் பண்ணி ஆளுகிறா அவர்கள் நமது பயத்தை வைத்து தா
இன
( 40 )

க்கத்தினைப் பரிசீலிக்கும்போது, அது ஏற்பாடுகளையும், ஆதனங்கள் தொடர்பான இதன் ஆள்சார் சட்டத்தன்மை காரணமாகத் ட்டின் எவ்விடத்தில் ஆதனங்களைக் சவழமைச் சட்டமே ஏற்புடையதாகும்.
ங்கைத் தீவின் வடக்கு மாகாணத்தை ஊமைச் சட்டத்தால் ஆளப்படுவர் என்பதும், காகின்றது என்பதை, அவ்வாறு கூறுபவரே நிகழ்வுகளை நிறுவுதல் வேண்டும் என்பதும்
இஃஃ
ன்டு செய்யடா பழைய பொய்யடா 5கோட்டை கல்யாண சுந்தரம் -
விடுகின்றது பர்களே
ன் காரியம் சாதிக்கிறார்கள்
மார்க்ஸிம் கோர்க்கி
ல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 61
இசை என்பது ஒரு சமூகப் படிமம். . இருபதாம் நூற்றாண்டில் எழுச்சிபெறத் ெ இசை இரசனை நோக்கில் முக்கியது பங்குகொள்பவர்களையும், இலகு பாங்க பரிமாணங்களாகும். இராகங்கள் எளிமைய இருக்கும் இலகுவான தொழில் நுட்பப்பா நாட்டார் பாடல்கள், பண்ணிசைப்பாடல்கள் என்ற பாடல்வகையைச் சார்ந்த அனைத்தும்
தமிழகத்திலும், உலகின் ஏனைய கோலங்கள் இசையின்பால் நேரடியான ( வெகுசனப்படுத்துவதற்குரிய முறைகளை வ சிக்கலான இசை வடிவங்கள் எளிமை கொள் செவ்வியல் இசை, நெகிழ்ச்சிப் போக்குக சமூக அமைப்பிலே வர்க்கபேதம் காட்டப்பட் வகுப்பினருக்கு, நாட்டார் இசை சமூக * பெற்று வந்தமையை அவதானிக்க முடிகிர
வாழ்க்கையின் புதிய அனுபவங்கள் ! இசை வளர்ச்சியில் எழுந்த புதிய எண்ன ஒத்திசைவு உருப்படிகளை வளர்ச்சிபெற மேலும் வலுவூட்டின. சமூகச் செயற்பாடு பொதுவியல் இசையில் புதிய பரிமான நுழைவுச்சீட்டுக்களைப் பெற்று இசைநிகழ்ச்சி ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சென்னை பின்பற்றலாயின. பிற்காலத்தில் சபாக்கள் ( வழங்க மறுபுறத்தில் பணம்திரட்டும் பொட்
ஐரோப்பாவில் தோற்றம் பெற்ற இ வளர்ச்சி பெறுவதற்கு இசை நாடகங்கனை தமிழர் கலை வரலாற்றிலும் காணலாம். என்பன தமிழகத்திலும் வளர்ச்சியடையத்
மனதுக்கு இனிமைதரும் இசையைக் என்று மருத்துவ ஆய்வாளர்கள் ஆரே இங்கிலாந்திலுள்ள மேரிலாண்ட் பல்கை
கூர்மதி

ஈர
தம்பு. சிவசுப்பிரமணியம்
புது சமூக இருப்பிலிருந்து மேலெழுகின்றது. தாடங்கிய இசை வடிவங்களுள் பொதுவியல் 5துவம் பெறுகின்றது. இரசிகர்களையும், கயும் கொண்டிருப்பது அதன் முன்னேற்றப் ாகவும், இலகுவில் பாடக்கூடியனவையாகவும் ன்பு அதன் உயர்ச்சிக்கு அடிகோலுகின்றன. T, திரைப்படப்பாடல்கள், எழுச்சிப் பாடல்கள் பொதுவியல் இசையாகவே கொள்ளப்படுகின்றது.
பகுதிகளிலும் ஏற்பட்ட வியாபார நுகர்ச்சிக் செல்வாக்குகளை ஏற்படுத்தின. இசைவடிவம், ணிகப் பொருளாதார வளர்ச்சி கொடுக்கலாயிற்று. ள்ளத் தொடங்கியது. அதனால் பாரம்பரியமான டய பொதுவியல் இசை இரண்டுக்குமிடையே டது. செவ்வியல் இசை மேலெழுகை கொண்ட அடித்தளத்து மக்களுக்குமுரியதாக வளர்ச்சி றது.
தழுவியும், பேச்சு மொழி தழுவியும் ஐரோப்பிய எக்கருக்கள், மிக்க நெகிழ்ச்சிப்பாங்கான மீள் ச் செய்தன. அவை பொதுவியல் இசைக்கு களின் முன்னேற்றம் காரணமாக ஐரோப்பிய ரங்கள் முன்னெழுந்தன. பணம் கொடுத்து சிகளை பார்வையிடும் முறைமை உருவாகியது. னயிலிருந்த சபாக்களும் இம்முைைறயைப் ஒருபுறம் செவ்வியல் இசைக்கு முக்கியத்துவம் 1 இசை நிகழ்ச்சிகளும் வளரத்தொடங்கின.
சை நாடக இல்லங்கள் பொதுவியல் இசை ா உருவாக்கி அளித்தன. இசை நாடகங்கள் இசை நாடகங்கள், இசைச் சொற்பொழிவுகள்
தொடங்கின.
கேட்பதன் மூலம் இதயத்தைப் பலப்படுத்தலாம் க்கியமான கருத்தை முன்வைக்கிறார்கள் லக்கழக மருத்துவ நிபுணர்கள் இசைக்கும்
41)

Page 62
இதயத்திற்கும் உள்ள தொடர்பு குறித்த 8 "சந்தோஷமாக சிரித்து மகிழும் போது உ
ஓட்டம் சீராகிறது. இது இதயத்துக்கு நன்பை கண்டுபிடித்திருக்கிறோம்” என்று தலைமை வி
இசை என்பது ஒரு புரிதல் முறைமை. வ மனவெழுச்சி வெளிகளையும் இசை வழியான கொள்வோரின் விளக்கத்துக்குரிய தளமாக பெ ஒரு சிறப்பார்ந்த பரிமாணம் அதன் தொழிற்ப தேவைகள், மனவெழுச்சித் தேவைகள், உள் முதலியவற்றினை நிறைவேற்றும் தொழிற்பாட்டி வெளித்துலங்கும் தொழிற்பாட்டைக் கொண்ட நிலைகளும், தாளங்களும் மட்டும் குறியீட்பு குறியீட்டில் வலிமையும் சிறப்பும் எய்தி நிற்
மனித நாகரிக வரலாற்றிலே கலைக் வந்துள்ளன. இவை மனித உள்ளங்களைப் பு இசையும் நடனமும் இரட்டைக் கலைகள் தாளம், அலங்காரம் முதலியன முரண்களின்றி கலையாகவே நடனம் விளங்குகின்றது. இ தூய இசை மட்டுமே உலக மொழியாகும் வாய்ந்ததோ அத்துணை முக்கியத்துவமும் ( இசை. இசையும் மொழியும் சமூகத் தொடர்பா
தாய்மொழி நாளாந்த வாழ்க்கையே மொழியாகையால், தாய்மொழி அல்லாத ே தமிழகத்து இசை நுகர்ச்சியில் அந்நிய இயக்கத்திற்கு புலமை வடிவம் கொடுக்கும் செ திவ்வியப்பிரபந்தம், சித்தர்பாடல்கள், நாட்டார் தேடுமுயற்சிகளை முன்னெடுத்தன. ஓதுவார் பண்களை ஆராயும் முயற்சிகளும் மேற்கொ
தமிழிசையின் பரிமாணங்களைக் கண்டறி ஆபிரகாம் பண்டிதர் "கருணமிர்த சாகரம்” யாழ்நூலையும் வெளியிட்டனர். தமிழிசையின் நூல்களாக அவை அமைந்தன. "சிலப்பதிகா "பழந்தமிழ் இலக்கியத்தில் இசைவம்" ஆய்வு வெளிப்படுத்தின.
"எடுத்தல் முதலாய் இரு நான்குப் ப6 என்ற அடிகள் பஞ்ச வெண்பாவில் இடம் பெற்று பற்றிய தேடலும் நோக்கும் தமிழர் அறிகை தனித்த ஓர் எண்ணக்கரு சார்ந்த ஒன்றைப் 1 பண்பாட்டு மலர்ச்சியின் குறியீடாகவும் அபை பொழுது அதன் கனதியும், தரமும் பளிச்சிடு
இலக்கிய வழக்கில் சுருதி நெகிழெ 'ஓசைக்கட்டு' எனப்படும். அதாவது நியமப்

ஆய்வுகள் நடத்தினார்கள். இந்த ஆய்வில் டலில் ஏற்படும் மாற்றங்கள் மூலம் இரத்த D தருவதாக அமைகிறது என்பதை நாங்கள் ஞ்ஞானி மைக்கேல் மில்லர் கூறியிருக்கிறார்.
ாழ்வின் இருப்பையும் அதிலிருந்து மீண்டெழும் 1 புரிதல் முன்னெடுக்கின்றது. இசை நுகர்ச்சி மாழி முக்கியத்துவம் பெறுகின்றது. இசையின் ாட்டுப் பண்பாகும். சுவைப்போரின் அறிகைத் கவியல் தேவைகள், பண்பாட்டுத் தேவைகள் னை அது மேற்கொள்ளுகின்றது. இசையானது -து. அது ஒரு குறியீட்டு முறையாகும். சுர ஓல் உள்ளடங்குவதில்லை. மொழி கலைக்
கின்றது.
கள் முக்கியமான ஓர் இடத்தை வகித்து பண்படுத்தி சீராக்கவல்லன. இக்கலைகளிலே எனக்கூறப்படும். இசை, அபிநயம், நடிப்பு, a ஒன்றிணைந்த ஒரு சிறந்த கூட்டு அழகியல் சை உலகமொழி என விளக்கப்பட்டாலும் - தூய இசை எத்துணை முக்கியத்துவம் பொருண்மையும் வாய்ந்தது மொழி தழுவிய உல் என்ற அடிப்படையில் ஒன்றிணைகின்றன.
பாடும், மனவெழுச்சிகளோடும் இணைந்த வறு மொழிகளில் அமைந்த உருப்படிகள் மயப்பாட்டினை ஏற்படுத்தின. தமிழிசை யல் சங்கப்பாடல்கள், தேவாரம், திருவாசகம், பாடல்கள் வழியாக இசை நுணுக்கங்களைத் மரபு வழியாகப் பாதுகாக்கப்பட்டு வந்த ள்ளப்பட்டன.
யும் இலக்கண நூல்கள் ஆக்கம் பெறலாயின. என்ற நூலையும், விபுலானந்த அடிகளார் பரிமாணங்களைக் கண்டறியும் கனதியான ரத்து இசைத்தமிழ்” என்னும் ஆய்வுநூலும், ம் தமிழிசைப் பரிமாணங்களின் இயல்புகளை
ன்ணிப் படுத்தமையால் பண்ணென்று பார்” பள்ளன. இவ்வாறான இசையின் உருவாக்கம் மரபிலே காணப்பட்டன. தமிழிசை இயக்கம் பரிமாணம் கொண்டதன்று. மக்கள் தழுவிய மந்தது. தமிழிசையின் வேர்கள் அறியப்படும் | கொள்ளும்.
எலி எனப்படும். நாட்டார் வழக்கில் இது படுத்தப்பட்ட மேல் ஒலிப்பு மற்றும் தாழ்
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 63
ஒலிப்பு என்ற எல்லைகளுக்குள் கட்டுப்பு பரிமாணமாகின்றது. நாட்டார் இசையின் பிறிெ நிற்றலாகும். செவ்வியல் இசை அல்லது சா தொழில் செய்வதிலிருந்தும் இசையை 6 வெட்டுப்பாடலில் இசைப்பாங்கு, மொழ பரிமாணங்களினதும் சீரான ஒருங்கிணைப் இணைந்து பாடும் பாடல் வகைகளுள் | முறைகளின் படிப்படியான வளர்ச்சியோடின இசைவடிவமாக தெம்மாங்கு தோற்றம் பெ சந்தங்கள் தெம்மாங்கில் இடம்பெறும்.
நாட்டார் மரபில் உடல் உழைப்பை மிக் 'கும்முதல்' என்று அழைக்கப்படும். கும்முத்து ஆயிற்று. பெண்களின் கூட்டான உழைப்பின் சமூகத்தின் மிகவும் அடித்தளத்து மக்களிட அமைந்தது. இத்தகைய தளத்திலிருந்தே ஒ தமிழரின் செவ்வியல் இசை மரபு 'இன் வளர்ச்சியுற்றது.
இசை என்பது அதற்குரிய மொழியை விதிகளை அடியொற்றி மொழி விளையாட்டு ஒவ்வொரு மொழி விளையாட்டுச் சார்புடை ஆடலையும், பாடலையும் ஒன்றிணைக்கும் நடவடிக்கையாயிற்று. இவ்வாறான ஒட்டிணை வடிவமாயிற்று.
இசை உள்ளிட்ட கதைகூறும் மரபின் 6 வில்லுப்பாட்டு என்பது வில்லடிப்பாட்டு அழைக்கப்படும்படி 'அடி' என்பது தாளம் மற் அதன் நோக்கம் கதை வழியாக மேற்கொள்ள அடித்தளத்து மக்களுக்குரிய ஊன்றிய கலை உள்ளடக்கிய இசைக்கதைச் செறிவு கதைப்போக்கையும் பாத்திர இயல்புகளைய பயன்படுத்தப்படுகின்றன. நொண்டிச்சிந்து இ வேறுபாடுகளைப் பயன்படுத்தக்கூடிய கட்டல் நொண்டிச்சிந்து, காவடிச்சிந்து என்பன வில்
சிந்து வடிவம் இசைவளர்ச்சியில் கருதப்படுகின்றது. கீர்த்தனை, இசைகீதம், பெற்றும் பெறுவதற்குரிய முன்னோடி வடிவ
கீர்த்தனை என்ற வடிவம் தமிழ்க் க ஒன்றித்துப் படி மலர்ச்சி கொண்டது. வெண்பா, இசைப்பாடல்கள் ஆற்றுகை செய்வதற்குரிய . ஆறுமுக நாவலர், விபுலானந்த அடிகளார், க சண்முகரத்தினம், சங்கீத வித்துவான் கண வீரமணி என்றவாறு இந்நாட்டிலே கீர்த்தனை செல்கிறது. இந்தியத் தமிழக மரபில் முத்துத் கிருஷ்ண பாரதியார், வேங்கட சுப்பையர்,
கூர்மதி

பட்டு நிற்றல் இசையின் ஒரு சிறப்பார்ந்த தாரு பண்பு இசையும் அசைவும் ஒன்றிணைந்து
ஸ்திரிய இசை உடலின் தொழிற் இருந்தும், வறுபிரித்தது. நாட்டார் இசையில், அருவி சிப்பாங்கு, உடற்பாங்கு ஆகிய மூன்று பைக் காணலாம். உடற்செயற்பாடுகளுடன் தெம்மாங்கும் குறிப்பிடத்தக்கது. தொழில் மணந்த சிக்கலான அமைப்புகளின் நாட்டார் ற்றது. பலவகை அமைப்புகளைக் கொண்ட
க வலிமையோடும் செறிவோடும் பயன்படுத்தல் தலின் இசை தழுவிய ஆடல் வடிவம் கும்மி
வெளிப்பாடாகக் குரவை தோற்றம் பெற்றது. த்து எழுந்த உழைப்பின் ஓலமாக 'குரவை' த்திசை, பலநிலை இசை தோற்றம் பெற்றது. னிசை' என்ற அமைப்பை அடியொற்றியே
அடிப்படையாகக் கொண்டது. இசைக்குரிய ஆடப்படுகின்றது. ஒவ்வொரு கலைவடிவமும் டயவை. கலைகளைப் பொறுத்த வரையில் செயற்பாடு மிகத்தொன்மையான அழகியல் ப்பின் வடிவமே இசையும் கதையும் இணைந்த
வளர்ச்சியை வில்லுப்பாட்டிலே காண முடியும்.
வில்லடிக்கதை என்ற தொடர்களாலும் றும் இசை என்பவற்றைக் குறித்து நிற்கின்றது. எப்படும் கருத்துக் கையளிப்பாகும். சமூகத்தின் வடிவமாகிய வில்லுப்பாட்டு நாடகப்பண்புகளை டன் இயங்குகின்றது. வில்லுப்பாட்டின் பும் செறிவு படுத்துவதற்குச் சிந்துப்பாடல்கள் சையாட்சியிலும், கதை சொல்லலிலும் நடை மெப்பைக் கொண்டுள்ளது. சிந்து வகைகளில் அலுப்பாட்டில் இடம்பெறும்.
ஒரு முக்கிய படிமலர்ச்சி அலகாகக் வர்ணம், தில்லானா முதலியவை தோற்றம் மாகச் சிந்து அமைந்துள்ளது.
விதை மரபிலிருந்தும் இசை மரபிலிருந்தும் - கலிப்பா, வஞ்சிப்பா, ஆசிரியப்பா முதலியவை கட்டமைப்பைக் கொண்டிருந்தன. இலங்கையில் கிருஷ்ணாழ்வார், வீரமணி ஐயர், இசைப்புலவர் பதிப்பிள்ளை, நடிகமணி வைரமுத்து, லடீஸ் - இலக்கியம் படைத்தோரின் பட்டியல் நீண்டு தொண்டவர், அருணாசலக் கவிராஜர், கோபால்
இராமலிங்க வள்ளலார், தண்டாயுதபாணி
43

Page 64
தேசிகர், சங்கரதாஸ் சுவாமிகள், பாரதியார், குறிப்பிடத் தக்கவர்கள். தெலுங்கு மரபில் பெரு இயற்றப்பட்டன.
தமிழ் மரபில் மிகக்கூடுதலான கீர்த்தனை வீரமணி ஐயர் முதலிடம் பெறுகின்றார். வர கல்வி, தமிழ் இலக்கண இலக்கியக் கல் மேலாக கீர்த்தனைகள் எழுதியவர் வீரமணி ஐ. அவரால் இயற்றப்பட்டன. தமிழில் நூற்றி ஐப் அவரால் எழுதப்பெற்றன. நாட்டிய நாடகங்களில்
நாயக-நாயகி பாவத்தை அடிப்படைய 'சிருங்கார சங்கீர்த்தனமுலு' எனத் தொடங்கு பதமாகக் கொள்ளப்படுகின்றது. பதங்கள் கர் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு அ மொழியான வடமொழியிலும் இயற்றப்பட்டுள் இசையிலும் பரதநாட்டியத்திலும் பயன்படுகி
பழமையும் புதுமையும் வாய்ந்த தம் பரிமாணங்களைக் கொண்டதாக முகிழ்ந்து நி தெரிகிறது. தமிழிசை இயக்கம் தமிழகத்தி விடுதலை இயக்கத்தின் பண்பாடு முனைப்பு த திராவிட இயக்கம், அறிவுத்தளத்தைக் கா இயக்கத்தை வலியுறுத்தியது. கவிஞர் தமிழ்மும் அமைந்த ஒரு கீர்த்தனையின் எடுப்பு பின்வ
''ஐயா பாடக மணி உம் அன்னை மொழியி
தமிழ்க் கீர்த்தனைகளைப் பாடவேண்டும் என் அமைக்கப்பட்டுள்ளமையை இங்கே அவதான விபுலானந்தர் முதலியோர் அறிகைத்தளத்தில் நி தமிழுணர்வைக் குவியப்படுத்திய கவிஞர்கள் அணுகினர்.
"தமிழ் தமிழ் என்று ந
உணர்வெல்ல
என்று பாரதிதாசன் தமது கருத்தேற்றத்தை பொறுத்தளவில் தமிழிசை வளர்ச்சிக்கு பல்கலைக்கழகமும் தத்தமது பங்களிப்பை
44

பாபநாசம் சிவன், பாரதிதாசன் ஆகியோர் ந்தொகையான கீர்த்தனைகள் தியாகராஜரால்
களை உருவாக்கியவர் வரிசையில் இணுவில் ன்முறையான இசைக்கல்வி, பரதநாட்டியக் பி என்பவற்றுடன் அறுபது ஆண்டுகளுக்கு பர். பத்தாயிரத்துக்கு மேற்பட்ட கீர்த்தனைகள் Dபதுக்கும் மேற்பட்ட நாட்டிய நாடகங்களும் றும் கீர்த்தனை வடிவங்கள் எடுத்தாளப்பட்டன.
பாகக் கொண்டு அன்னமாச்சாரியாருடைய தம் பதமே காலத்தால் முந்திய சிறப்பான நாடக இசைக்குரிய திராவிட மொழிகளான கியவற்றிலும் இந்தியப் பண்பாட்டுப் பொது ளன. இவை தேவைக்கேற்றவாறு கர்நாடக ன்றன.
இழிசையின் வளர்ச்சி இன்று பல்வகைப் ற்கின்றது. அதன் எதிர்காலம் பிரகாசமாகத் ன் தற்செயலான நிகழ்ச்சியன்று. இந்திய தமிழிசை மரபின் வேர்களைத் தேடலாயிற்று
ட்டிலும் உணர்ச்சி நிலையில் தமிழிசை ஒ கல்யாணி இராகத்திலும் ஆதி தாளத்திலும்
ருமாறு தொடங்குகிறது.
7யோ - முதலில்
ல் பாடுதல் பணியே”
(பது நேரடித்தெறிப்பாகவும் பிரசாரமாகவும் ரிக்க முடியும். ஏபிரகாம் பண்டிதர், சுவாமி ன்று தமிழிசையின் ஆழ்ந்த வேர்களைத்தேட, கருத்தேற்ற மிகைப்படுத்தலுடன் இசையை
' ஆடு - பட்டறிவின் ாம் பாடு”
நக் கூர்மைப்படுத்தினார். இலங்கையைப் | யாழ் பல்கலைக்கழகமும், கிழக்குப் வழங்கிவருகின்றன.
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 65
அன்னை
அன்னையும் பிதா
அழகிய தமிழ் கண்போல் காத்திட
கருத்தினில்
உயிரும் மெய்யும்
உள்ளதை நீ : உயிராம் மொழிச்
உயர்ந்திட
ஆயிரம் ஆயிரம்
அறிந்தரு நீ ஆயிரம் ஆண்டுகள்
ஆய்ந்தறி
பற்பல மொழிகள்
பலமொழிப் பு பாரோர் போற்றப்
படிமுதல் த
ஆயிரம் மொழிகள் அன்னை தமிழ்
ஈடாய் ஆகா ! இனிமை 2
எங்குநீ சென்றிடு
இழந்திடத் 4 அங்குந் தமிழை .
அன்புத்
பரம்பரை யாய்நாட
படிப்பதும் அ. இருந்திட வேண்டும்
இருத்திடு
கூர்மதி

எத் தமிழ்
ஜின்னாஹ் ஷரிபுத்தீன்
வும் போலாம் எங்கள் மாழியே - அதைக் - வேண்டும் அறிவாய் கொள்மனனே
உயிர்மெய் என்றும் அறிவாய் - அவை
கு ஒழுங்குறக் கற்று நீமுயல்வாய்
இலக்கியம் உண்டு தமிழில் - பல [ பழைமை வாய்ந்தது 1 கற்றுணரு
7 கற்றிட வேண்டும் பண்டிதனாய் - நீ
புகழ்பெற வேண்டும் ாய்மொழியை
ள் அறிந்திருந் தாலும் மொழிக்கு - அவை
இன்பத் தமிழின் புவைக்கில்லை
போதும் தமிழை துணியாதே - நீ
அறிந்திடச் செய்வாய் திருமகனே
ம் பேசும் மொழிதமிழ் துவாக - என்றும்
ம் என்பதை நெஞ்சில் தமிழ்மகனே.
( 45 )
45

Page 66
~*~*~*"
தாவூது மாஸ்டருக்கு உடனடியாகச் செ கிடைத்தபோது விக்கித்துப் போனார். அந்தக் அந்நியப்பட்டுப்போன மாதிரியான உணர்வு....
சிறியதொரு காகிதத்துண்டினால் தனக்கு உறவை, நட்பைப் பிரித்துவிட முடியுமா? தான் கற்று வந்த பாடசாலை..... தனது மகனும் இங்கு
இடமாற்றக் கடிதம் கிடைத்தபோது காலை பாடசாலை எது என்று அறிய கடிதத்தை ப காபன் பதிவு. அல்லிக்காடு.... இங்கிருந்து எட்டு பெரும்பாலும் ஓர் ஆசிரியர் பாடசாலையாக
தாவூது மாஸ்டரை வசதிக்கட்டண ஐயா இருபது வருஷ உழைப்பு. வசதிக்கட்டண 6 கணக்குகள், ரிசீட்டுக்கள், வவுச்சர்கள்.... அங்கீ ஒரு சதக் கணக்கும் பிசகாமல், ஒவ்வொரு சுத்தமாகக் கையாண்டு.....
அது போதாது என்று பாடசாலை அனு அதற்கு வசதியாக இந்த இருபது வருசமாக | மாணவர்கள் வகுப்பேறிச் சென்று விடுவார்கள் இடதுகை உடைந்த அதே கதிரையில்... வரப்போகிறார்கள்?
எட்டு, எட்டு பதினாறு மைல்.... தனது அ பார்த்தார். தன்னை தினசரி பதினாறு மைல்க இனி அதுதான். தாங்குமா? தனது திருமா மருமகனுக்கென்று அன்பளிப்புச் செய்த சைக்க கொண்ட சைக்கிள்.... இன்னுமொரு பெண்சாத்து
ஆசிரியர்கள் சூழ்ந்து கொண்டார்கள்.
"தாவூது மாஸ்டர் உங்களுக்கா டிரான்ஸ்ப நாங்கள் பிரித்துப் பார்த்ததில்லை. இதை உ உழைப்பாளிக்கு உரிய கௌரவம் கொடுக்கப்பட இல்லை'' அன்வர், அவரது மாணவன். இங்கு உள்ளூர் அரசியலிலும் கொஞ்சம் ஈடுபாடு. அடுத எண்ணமும் உண்டு.
(46)

எம்.எஸ். அமானுல்லா
=யற்படும்படியாக இடமாற்ற உத்தரவு கணமே தான் அந்தப் பாடசாலையிலிருந்து
ம் அந்தப் பாடசாலைக்கும் இடையிலிருந்த னும், தனது பெற்றாரும் தொடர்ந்து கல்வி 5தான் கல்வி கற்க வேண்டி இருக்கின்றது...
ல பத்து மணி. இடமாற்றம் செய்யப்பட்டுள்ள மீண்டும் திருப்பிப் பார்த்தார். கலங்கலான மைல் இருக்குமா?.... இருக்கும். அல்லிக்காடு இருக்கும்.
என்றுதான் மாணவர்கள் அழைப்பார்கள். வரவு-செலவு, பரீட்சைக் கட்டண அறவீடு, காரம், பேரேடு என்று எத்தனை கச்சிதமாக, சதத்தையும் நெருப்பின் நெருக்கத்தோடு
மதி வேலைகளையும் அவரே செய்வார். முதலாம் ஆண்டிலேயே நிரந்தர ஆசிரியர். ஆனால், அவர் மட்டும் அதே வகுப்பில், அந்த சிம்மாசனத்திற்கு இனி யார்
தரப் பழசான சைக்கிளை, வாஞ்சையோடு ள் கொண்டு செல்ல வேண்டிய நண்பன் னத்தினத்தன்று பெண்சாதியின் வாப்பா ள். நிகாஹ் முடிந்த கையோடு இணைந்து 5 போல்....
[? உங்களையும் இந்தப் பாடசாலையையும் டனடியாகக் கேன்சல் செய்ய வேண்டும். மாவிட்டால், கல்வியில் எந்த முன்னேற்றமும் புதிய ஆசிரியர். பொரிந்து தள்ளுகிறார். த பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும்
ல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 67
"சேர், நீங்கள் அதிபரைக் கேளுங். தினமும் போய்வர முடியுமா? நான் கல்
அதிபரின் அபிப்பிராயத்தை கேளுங்கோ' தாவூது மாஸ்டருக்கு மெல்லிய சலனம்.... என்ன காரணம் சொல்லிக் கேக்கிறது.....?
அதிபரின் காரியாலயம். தனியாக கண்டு கொள்ளவே இல்லை. எதேச்சைய
"என்ன தாவூது இடமாற்றக் கடிதம் கண்டு. இங்கதானே இருபது வருசமா இ போனா, பின்னேரம் வந்துடலாம்”
தாவூது மாஸ்டருக்குத் திக்கென்றது. ( கட்டணம் என்று மிகப் புனிதமாக சதக் முதல் வகுப்பு மாணவரின் கல்வியையும் மே வந்து (இந்த இருபது வருட சேவையில் 6 குடும்பம் ஒன்று இருப்பதை மறந்து, பொ தெரியாமல்....... அதிபரின் வார்த்தையில் த போய்விட்டதாக தாவூது உணர்ந்தார்.
"இண்டைக்கு கையெழுத்துப் போ போட்டிருக்கு. என்றாலும் இன்றைக்கு நீங்க அதைக் கேக்கவா வந்தீங்க?”
"அதுக்காக நான் வரவில்ல சேர். கொடுக்க வேணும். அதைப் பொறுப்பெடு
"இண்டைக்கு செவ்வாய். பத்தொன் பாரம் எடுத்திடுங்கோ. சனிக்கிழமை நான் போதும்"
தாவூது விடைபெற்றுக் கொள்வது நடக்கத் தொடங்கினார்.
"மிஸ்டர் தாவூது. நாளைக்குச் சம் மறக்காம டீ போம் கொடுத்திட்டுப் போங்
''நன்றி சேர்” - அதிபருக்கு நன்றி செ நடையில் சின்ன தளர்ச்சி ஏற்பட்டது......
இந்த இடமாற்றத்தால் தனக்கும் தன ஏற்படும்? - முதல் முறையாக தனது ெ சிந்தித்தார்.
சிறிய வீடொன்றையும் மகளையும் த போனார் மாமனார். இந்த வீட்டில் இரண்டு 6 என்னவோ அவருக்குப் பதினேழு வருடங்க
கூர்மதி 6-CM 013788

க. வயதுபோன காலத்தில இவ்வளவு தூரம் வி அதிகாரியைக் கேக்கிறன். நீங்க முதல்ல ' முஸ்தபா ஆசிரியர் முறுகிக் கொண்டார். இடமாற்றத்தை ரத்துச் செய்யவும் முடியுமோ?
வே இருந்தார். தாவூது மாஸ்டர் வந்ததைக் Tகத் திரும்புபவர் போல சிலாகித்தார்.
D. நான் நினைக்கல்ல. உங்களை எடுப்பாங் இருக்கீங்க. பக்கத்து ஊர்தானே காலையிலே
வசதிக் கட்டணம், மாணவர் அனுமதி, பரீட்சைக் கணக்குகளையும் சரியாகப் பேணி, கூடவே ம்படுத்தி, லீவு பெறாமல், தினசரி பாடசாலைக்கு மொத்தமாக பத்து நாள் லீவு எடுத்திருப்பாரா?) ருளாதார அபிவிருத்தி என்பதே என்னவென்று னது இருபது வருட ஆசிரியப்பணி அர்த்தமற்றுப்
ட்டுட்டீங்க. இடமாற்றம் உடனடியாக என்று போகத் தேவையில்ல. நாளைக்குப் போகலாம்.
இந்த வசதிக்கட்டண கணக்கெல்லாம் பாரம் த்திட்டீங்கண்டா...''
பது. ம்...... நாளைக்குப் பள்ளிக்கூடம் போய் இங்க இருப்பன். அப்ப வந்து பாரம் தந்தாற்
போல் மென்மையாகப் புன்னகைத்து திரும்பி
பள நாள். நீங்க இங்க இருக்க மாட்டீங்க.
3 ),
பான்னாரா, பாடசாலைக்கு நன்றி சொன்னாரா...?
து குடும்பத்திற்கும் அதிகபட்சம் என்ன நட்டம் தாழிலோடு தனது குடும்பத்தை இணைத்துச்
தாவூதுக்குக் கொடுத்த கையோடு காலமாகிப் பேருக்குமேல் இருக்க இடமில்லை என்பதாலோ களாகக் குழந்தை பிறக்கவில்லை.
47 )

Page 68
நண்பர்களின் கேலிப் பேச்சையும், மலை வகையில் பிறந்த ஆண் குழந்தைக்கு மூன்று மூன்று வயது. குழந்தை பெற்றுக் கொண்டதாக என்ற நினைப்பு வரும் போதெல்லாம் இந்தக் ( வருந்திய நாட்களும் உண்டு......
வெப்பம், குளிர், புழுதி கூடும் நாட்களி போல இருமிக் கொண்டு கிழிந்த நாராய் பாயி வைத்துக் குளிப்பாட்டி உணவு தயாரித்து, மக கடமைகளில் அவர் குறைவிட்டது கிடையாது
இனி, பகல் பொழுது முழுவதும் அல்லிக்க இடையில் தொய்வு நோய் வந்துவிட்டால் ய என்று மனச் சுமையைக் குறைத்து, புன்முறுவ வந்தார்.
முன் சில்லில் காற்று இறங்கிப் போயி ரியூப்பும் வாங்கி முன் சில்லைப் புதுப்பிக்க
"சேர், காற்றுப் போயிட்டுதா? இருங்க ே காற்று அடிச்சு தாரன்”' மாணவன் பாறூக் ெ காத்திராமல் பம்ப் எடுத்துவர ஓடினான்.
மாணவரின் வசதிக்கட்டண நிதியிலிருந் அது. இந்தப் பாடசாலையிலிருந்து இடமாற்ற பாவித்துக் காற்று அடித்துக் கொள்ள தனக்கு
"இல்ல பாறூக். வீடு பக்கத்திலதான இ கொள்றன். பம்ப் வேண்டாம்" என்று கூறி கொண்டுபோகும் தாவூது மாஸ்டரை பாறூக்
பாடசாலையோடு சம்பந்தப்பட்ட நிதி, தள் தாவூது மாஸ்டர் அப்படியொரு கண்ணியத்தோடு பாறூக் அறிந்தே வைத்திருந்தான்.
தாவூது மாஸ்டர். மனைவி கதீஜாவிடம் த அவள் அதிர்ந்து போனாள்.
"என்னங்க இது? யார் செய்த வேலை தூரம் இடமாத்துறது? இது ஆண்டவனுக்கு ச ஒரு ஒழுங்கான வீடில்ல. சம்பளம் பிந்தினா - ஊமையாட்டம் வாங்கிட்டு வந்திட்டீங்களே. த
மனைவியோடு சண்டை பிடித்துப் பழக அவள் என்னவாவது பேசித் தீர்க்கட்டும் என்று
"இப்படித்தான் சும்மா இருங்க. அவங்க வ. போவாங்க. நீங்க ஒன்டையும் கேக்காதீங்க. ப

னவியின் மலட்டுப்பட்டத்தையும் போக்கும் வயது. மனைவியின் தொய்வு நோய்க்கும் ல் தான் மனைவிக்கு இந்த நோய் வந்ததா தழந்தை பிறந்திருக்க வேண்டாமோ என்று
லெல்லாம் மனைவி, தகரத்தில் அடிப்பது ல் சுருண்டு விடுவாள். அவளுக்குச் சுடுநீர் னையும் பராமரித்து என்றாலும் பாடசாலைக்
ாட்டிலேயே கழியப் போகிறது. பெண்சாதிக்கு பார் கவனிப்பது? ஆண்டவன் விட்ட வழி லோடு சைக்கிள் வைத்துள்ள இடத்திற்கு
ருந்தது. இம்மாதச் சம்பளத்தில் டயரும் வேண்டும் என நினைத்துக் கொண்டார்.
சர், கெண்டீன் அறையிலே பம்ப் இருக்கு. சொன்ன கையோடு தாவூத்தின் பதிலுக்கு
மது வாங்கி வைத்துள்ள சைக்கிள் பம்ப் 3ம் பெற்றுவிட்ட பிறகு, அந்தப் பம்பைப் த உரிமை இருக்கின்றதா?.....
ருக்கு. நான் அங்கேயே காற்று அடித்துக் - விடுவிடுவென சைக்கிளைத் தள்ளிக்
வியப்போடு பார்க்கிறான்.
பாடம், புத்தகங்கள் என்று எல்லாவற்றிலும் தான் நடந்து வந்திருக்கின்றார் என்பதையும்
எனது இடமாற்ற விபரங்களைக் கூறியபோது
இது? நிண்டது நிக்க எப்படி அவ்வளவு அடுக்குமா? எனக்குச் சுகமில்லை. இருக்க அரிசிக்குக் காசில்ல. கடிதம் வந்தவுடனே தட்டிக் கேக்கப்படாதா?'
காதவர். இரைந்து பேசிப் பழக்கமில்லை. 3 மெளனமாகவே இருந்தார்.
சதிக்கேத்த மாதிரி எதையாவது செஞ்சிட்டுப் ள்ளிக்கூடம், பள்ளிக்கூடம் எண்டு இரவாப்
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 69
பகலா செத்தீங்க. அதுக்கு இதுதான் ! பள்ளிக்கூட வேல பார்த்ததில் குறைவா...
"அதிபர் என்ன சொல்றது கதீஜா. இ அவர் என்ன செய்வார். நானும் இருபது ! இருக்கப் போறன் என்று விடாப்பிடியாகக்
"பெரிய நியாயத்தெக் கண்டிட்டீங்க. 8 சரி. இப்ப வயசுபோன நேரத்தில எட்டு 6
தாவூது மாஸ்டர் ஒன்றும் பேசவில்
"இப்பவே போங்க, நேரா ஒப்பிசுக்கு போன இந்த நேரத்தில இப்படியொரு இட என்ன.... போறீங்களா?'
"இன்டைக்கு செவ்வாய்க்கிழமை. இ நாளைக்குப் புதன்கிழமை போறன்”
என்றாலும் கதீஜாவிற்கு நம்பிக்கை ஒன்றுக்காக யாரிடமும் உதவி கோரி கண தெரிந்தே இருந்தது.
அடுத்த நாள் சுபஹுத் தொழுகைக் உறக்கத்திலிருந்து எழுந்து விட்டார். சுறுசுறு சுடுநீர் கலந்து வைத்தார். பேக்கரியில் வாங் ஒரு சொதியும் வைத்தார். போற இடத்தி துண்டுகளைச் சுருட்டி பார்சலாக்கிக் கொ முன் சில்லுக்கு காற்றடித்துக் கொண்டார். ப வைத்துக் கொண்டார்.
அவருடைய பன் பை கொஞ்சம் பி கைக்கு எப்போது வந்து சேர்ந்தது என்பது . வாய்ந்தது. ஆனால், ஞாயிற்றுக் கிழமைக வாரத்திற்குத் தேவையான அரிசி, கருவா சாமான்களையும் அதற்குள் அடக்கிக் கொ அல்லிக்காட்டுக்குப் புறப்படப் போகின்றது
முன் சில்லில் காற்று இருக்கிறதா பார்த்தார். குறைந்திருந்தது. வழியில் இன்று இந்த மாதத்தில் ஒரு டயர், ரியூப் வாங்கி
"கதீஜா நான் போய் வாரன்”
''எங்கேயப்பா, கல்விக் காரியாலயத்திற்கா?'
"இல்ல கதீஜா, உடனடியாக பாரம் எடுக்காட்டி ஏதும் நடவடிக்கை எடுத்துப் அடுத்த கிழமை வந்து பாக்குறன். மேசயில எடுத்திடு. மகன் எழும்பிட்டானா?'
கூர்மதி.

பரிசா? நீங்க கடமை செஞ்சதில குறைவா? -.? அதிபர் ஒன்னும் சொல்லலையா?'
இது காரியாலயத்தில இருந்து வந்த உத்தரவு. வருசமா இருந்திட்டன். திருப்பியும் அங்கதான் - கேக்கிறதில நியாயம் உண்டா?'
சின்ன வயசில உங்கமாதிரி இருந்தா மாத்துனது மைல் சைக்கிளோட உங்களுக்கு ஏலுமா?'
லை.
தப் போங்க. அதிகாரிகிட்ட கேளுங்க. வயசு டமாற்றத்தை செஞ்சது நீதியான்னு கேளுங்க.
இன்டைக்கு யாரும் ஓபீசுக்குப் போகமுடியாது.
5 இல்லை. தன்னுடைய சொந்தத் தேவை வருக்குப் பழக்கம் இல்லை என்பது அவளுக்கு
த 'அதான்' கேட்குமுன்னரே தாவூது மாஸ்டர் துப்பாகக் காரியங்களை முடித்தார். கதீஜாவுக்கு பகிய பாணுக்கு இதமாக உருளைக் கிழங்கிட்டு பல் சாப்பாடு கிடைக்குமோ...? இரண்டு பாண் காண்டார். காற்று இறங்கி இருந்த சைக்கிள் ம்பையும் பத்திரமாகத் தன்னுடைய பன்பையில்
ரெக்யாதி பெற்றது. அந்தப் பை அவருடைய அவருக்கே ஞாபகமில்லை. அந்தளவு பழைமை ளில் சந்தைக்கு கொண்டுவந்தாரானால், அந்த சடு, தேங்காய், சீனி, பருப்பு என்று எல்லாச் Tண்டு வருவார். இன்று அந்தப் பை அவருடன்
- என்பதை மீண்டும் ஒரு முறை நசித்துப் அம் ஒரு தரம் காற்றடிக்க வேண்டும். எப்படியும் டெ வேண்டும்.
எடுக்கும்படி தான் கடிதம் வந்திருக்கு. பாரம் போடுவாங்க. நான் பாரம் எடுத்திட்டப் புறம் டீ போம் வச்சிருக்கிறன். மறக்காம சம்பளத்தெ
(49 )
49

Page 70
"இன்னும் ஊர் ஒரு பக்கத்தால் விடிந்து இந்த நேரத்தில பச்சப்புள்ள எழும்புமா? சரி,
இந்த மனுஷனுக்கு என்ன சொன்னாலும் இவரோட வாதிச்சும் எந்தப் புண்ணியமுமில்ல கொடுத்து அனுப்பினாள் கதீஜா.
அதைப் பற்றிச் சிந்திக்க தாவூதிற்கு நேர இருந்து சைக்கிள் மிதிச்சாத்தான் பள்ளிக்கூட முடியும். படலையைச் சாத்திவிட்டு வீதிக்கு இ
இரண்டு மைல் சைக்கிள் மிதிப்பதற்கில நிறுத்தி, முன் சில்லில் காற்று இருக்கிறதா எ ஓடத் தொடங்கினார். காலைக் காற்று முற்றி பக்கம் அலையாகப் புகுந்து செல்வதில் ஒரு வட்டமாக அமைந்த குளக்கட்டுக்கு அண்மைய
சீதக்காதியை நோக்கி முத்தாமணக்கு கை இப்போதுதான் முகையவிழ்ந்து அவரை வரவேற் தொடர்பில்லை என்று கூறுவது போல கானாங்
தாவூது வாத்தியாருக்கு தனது பழைய பாட திறந்திருப்பார்களா? நான்தானே முதல் ஆசிரியர் அறை வாசலைக் கூட்டித் துப்பரவு செய்து, முதல ஒழுங்கு செய்து, பானை நிறையத் தண்ணீர் அள் பாடங்களை எழுதி வைத்து.... இன்றைக்கு முதல் பின் வரிசையில் அமர்ந்திருக்கும் மாணவர்கள் இ மற்றவன் பென்சிலால் குத்த இலேசாக இரத்தம் காயம் இன்றைக்கு ஆறியிருக்குமா...?
தாவூது மாஸ்டர் திடீரென்று சைக்கிளை கதிர்களை மாட்டு வண்டி நிறைய ஏற்றி, நிறைய அடைத்துக் கொண்டு நிற்க, இடுப்பளவு உயர, மொத்தமாக விலைபேசிக் கொண்டிருப்பவர்கள் செல்வது இயலாத காரியம்.
வரால் மீன்கள் மலிவாக இருக்குமோ? நாம் சமைக்க முடியுமா? பாடசாலை நேரத்தைச் சமை
தாவூது மாஸ்டர் தனது ஆசைக்கு ஆப் இறங்கி ஓரமாக, பிரதான பாதைக்கு வந்து பிர
தாவூது மாஸ்டர் பாடசாலையை நெருங்க கூடி நின்று விளையாடிக் கொண்டிருந்தார்கள். கட்டிடம். அதற்குள்ளேயே அதிபர் காரியாலயமோ ஓர் அறை. சுற்றிவர ஒழுங்கற்ற வேலிகள், மாடு மேய்ந்து கொண்டிருந்தன. பாடசாலையின் பின் மாமரங்கள், மஞ்சள் நிறத்தைப் பூசிவிட்டது
( 50 )
கல்

முடியல. அதற்குள்ள வெளிக்கிட்டீங்க. சரி, பத்திரமாய் போயிட்டு வாங்க"
கேக்காது. இவரோட பேசிப் பயனில்லை. D என்ற வெறுப்பையும் சேர்த்து விடை
ரமில்லை. எட்டு மைல் பிரயாணம். இப்ப ம் தொடங்குவதற்கு முன் போய்ச் சேர இறங்கினார்.
டையில் மூச்சு வாங்கியது. சைக்கிளை ன்பதைச் சரிபார்த்துக் கொண்டு மீண்டும் ய நெற்கதிர்களில் மோதிவிட்டு, புடரிப் - சுகம் இருக்கத்தான் செய்கிறது. நீள் Tக சைக்கிள் சவாரிக்கத் தொடங்கியது.
விரித்ததுபோல, அடக்கமாகத் தாமரைகள் Bறன. எனக்கும் இந்த இடமாற்றத்திற்கும் - கோழிகள் நீருக்குள் பாய்ந்து ஓடின.
டசாலை ஞாபகத்திற்கு வந்தது. இந்நேரம் ாகப் பாடசாலைக்கு வருவேன். அதிபரின் எம் வகுப்பு மாணவர்களின் தளபாடங்களை ளிவைத்து. கரும்பலகையில் முன்கூட்டியே லாம் ஆண்டிற்கு யார் பாடம் எடுப்பார்கள்? ரண்டு பேர் சண்டை போட்டு, ஒருவனுக்கு கசிந்து, கட்டுப் போட்டு அனுப்பினேனே,
1 பிரேக் போட்டு நிறுத்தினார். கட்டுக் மாதக் கர்ப்பிணிபோல அது நடு வீதியை த்திற்கு தொங்குகின்ற வரால் மீன்களை ளைத் தாண்டி சைக்கிளைக் கொண்டு
மும் ஒன்றை வாங்குவோமா? வாங்கினால் யலுக்கென்று பாவிப்பது முறையாகுமா...?
பு வைத்துவிட்டு, சைக்கிளில் இருந்து ரயாணத்தைத் தொடர்ந்தார்.
கியபோது மாணவர்கள் இங்குமங்குமாக பெரிய பாடசாலை இல்லை. ஒரேயொரு T, அதிபர் விடுதியோ - தெரிக்கப்பட்டுள்ள கெளும் சுதந்திரமாக உள்ளே நுழைந்து (புறமாக ஐந்து கறுத்தக் கொழும்பான் போல ஏகமாகப் பூத்து இலைகளின்
வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 71
பச்சை நிறம் மறைந்து, மெல்லிய மண, சிலிர்த்துக் கொண்டு நின்றன.
அதிபர் இன்னும் வந்து சேரவில்லை
மாணவர்கள் தாவூது வாத்தியாரி பார்த்துவிட்டு சந்தேகத்தோடு விலகத் ெ
தாவூது சைக்கிளைப் பூட்டி வைப்பது உணர்ந்து கொண்ட மாணவன் ஒருவன்
ஓரமாகத் தள்ளி வைத்தான்.
"உன் பேரென்னப்பா?' "சுலைமான்”
“எத்தனையாம் ஆண்டு”
"நாலு சேர்”
"அதிபர் எத்தனை மணிக்கு வருவார் படிப்பிக்கிறாங்களா?'
"அதிபர் வார நேரந்தான். அவர் ம
அதிபர் வரும்வரைக்கும் என்ன செ வந்தார். மாம்பூக்களில் இருந்த எழுந்த க மூச்சை நீளமாக உள்ளெடுத்து அதனை மண்டிக் கிடந்தது. கட்டிடம் ஒட்டறை அ இரண்டு ஏக்கர் இருக்குமா? இருக்கும். சுற் மாணவர்களுக்கு வீட்டுத் தோட்டப் பயிற்
திடீரென்று தலைக்குமேல் 'சோ' eெ வென்று சிறகுகளை அடித்துக் கொண் கொக்குகள், பாடசாலை வளவுக்கு அப்பால "கீச்மூச்” சென்று கத்திக் கொண்டு. விழுங்குகின்றன. ஊமை இரைச்சலோடு எ பறந்து பிரிகின்றன. கலர் கலரான சிறகுக கருநீலப் புள்ளிகள், இந்த வகைக் கெ அவர் கண்டதில்லை. ஊருக்குப் புதிதாக
எவ்வளவு ரம்மியமான காட்சி, ஒரு வந்து காட்ட வேண்டும். கதீஜா வருவாளா முன்பாரில் ஏற்றிக் கொண்டு..... வேண்டா
- சுலைமான் நெருங்கி வருகிறான். கச்சான் காற்று தொடங்குமுந்தி வரும். காற்று தொடங்க எங்காவது கூடிப் பறந்
ககூர்மதி.

த்தோடு சூல் கொண்ட சினைப்பசுவைப் போல
ன் பழைய சைக்கிளையும் பன் பேக்கையும் தாடங்கினார்கள்.
கற்காக ஒரு இடம் பார்த்தார். தாவூதின் குறிப்பை - சைக்கிளைத் தானே வாங்கிக் கட்டிடத்தின்
-. வேறெயும் ஆசிரியர்கள் இந்தப் பாடசாலையில
ட்டுந்தான்''
ய்வது? பாடசாலை வளவை ஒரு சுற்றுச் சுற்றி சுகந்த மணம் நாசியைத் துளைத்துச் சென்றது.
அனுபவித்தார். வளவு பூராகப் புல்லும் பூண்டும் புடிக்கப்படாமல் தூசு விரவிக் கிடந்தது. வளவு கறிவர நல்ல வேலி இருந்தால் பயிர்கள் செய்து, நசி வழங்கலாம்.
வன்று சப்தம். மேகம் திரண்டது போல. 'சடசட' டு நூற்றுக்கும் மேற்பட்ட கொக்குகள் நிறக் அள்ள அல்லிக் குளத்தினுள் தரை இறங்குகின்றன. சிறிய மீன்களை வேக வேகமாகப் பிடித்து எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து திசைமாறி உயர்ந்து, ள், கால்களில் அசாத்திய நீளம், அலகுகளிடை காக்குகளை இந்தப் பிராந்தியத்தில் இதுவரை 5 இருக்குமோ? தன்னைப்போல....
5 நாளைக்கு கஜீதாவையும் கூட்டிக் கொண்டு ? எப்படிக் கூட்டிக் கொண்டு வருவது? சைக்கிள் ம் ஊர்ப்பொடியன்கள் சிரிப்பான்கள்.
"இந்தக் கொக்குகள் எப்பவும் வராது சேர். - கொஞ்ச நாளைக்கு இந்தப் பக்கம் திரியும்.
து போயிடும்”
(51)

Page 72
"சுலைமானுக்கு என்ன வயசு”
"பன்னென்டு”
"பணிரெண்டு வயசுக்கு ஏழாம் ஆண்டர்
"பிந்திதான் சேர் பள்ளியில சேர்ந்தது”
"வாப்பா என்ன செய்கிறார்''
"கூலி வேல. மீன் பிடிப்பாங்க. விளைவ் வேற ஊருக்குப் போயி வேளாமை வெட்டுறத
"'நீங்களும் போறதா?'
"நானும் தான். வேளாம் வெட்ட, சூடு தண்ணி வார நேரம் வரால் மீன் பிடிக்கப் பே
"பள்ளிக்கூட நாளெலுமா?'
"ஆமா சேர். இங்க மிச்சம்பேர் அப்படித்
தாவூதுக்கு நெஞ்சில் துணுக்கென்றது சுமையையும் தாங்க வேண்டிய நிலையில் எண்ணியபோது, இதனைத் தீர்த்து வைக்க யா என்ற நினைப்புத்தான் மேலோங்கி நின்றது.
பாடசாலை மணி கிணுகிணுவென்று வகுப்பறைக்குள் புகுந்தார்கள். கதிரைகள் அ அமைதியானது. ஓ! அதிபர் வந்து விட்டாரா?
"வாங்க மிஸ்டர் தாவூது. இடமாற்றக் கம் வெளியூர். உங்களெச் சந்திச்ச ஞாபகம் இல்ல
தாவூது ஒன்றும் பேசவில்லை. வெறுமனே கலந்த புன்னகையோடு ஆராய்ந்தார். நாற்பது பயம் கொள்ளச் செய்யும் ஆஜானுபகுவான சாயமூட்டப்பட்ட மூக்குக்கண்ணாடி...
அது சரி இந்தளவு நீளத்தில் பிரம்பு எத்
"சுலைமான் இங்கே வா. வீட்ட போய் ரெண் எண்டு வாங்கிட்டு வா”
தாவூது சுலைமானை நிமிர்ந்து பார்த்தார். 1 சொந்தக் காரியத்திற்காக வெளியே அனுப்ப
(52)

லைவா படிக்கணும்?'
ச நேரம் வயல் காவல். சில நாளையில பண்டு”
மிதிக்க என்டு போவன். வாய்க்கால்ல ாவன்”
தொன்”
1. படிக்கின்ற காலத்திலேயே குடும்பச் - பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதை ராவது முன் வந்தால் நன்றாக இருக்குமே
ஒலித்தது. மாணவர்கள் சிதறி ஓடி அரக்கும் ஒலி சத்தம் அடங்கி மண்டபம்
உதத்திலே உங்கட பேரெப் பாத்தன். நான் எப்படி காலெயிலா புறப்பட்டு வந்தீங்க?'
[ தலையை ஆட்டினார். அதிபரை நாணம் வயதிருக்குமா? நல்ல உயரம். யாரையும் தோற்றம். கையில் பிரம்பு, நீல நிறச்
தற்கு...?
டு சேருக்கும் தேத்தண்ணி வெச்சித்தரட்டாம்
ாடசாலை நேரத்தில் மாணவன் ஒருவனைச் பாமா...?
ல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 73
"உங்களெப் பத்திக் கேள்விப்பட்டி நினைத்து வாழ்ந்தவராம். தொழில்ல நே பொறுப்பெல்லாம் நீங்கதானென்டும் கேள்
மாணவர்கள் பக்கமிருந்து மழை ஓ
"யார் அங்க சத்தம் போடுறது?'' 6
தாவூதுக்கு வீட்டு ஞாபகம் வந்தது. சைக்கிள் சீற்றில் வைத்து ஒரு சுற்றுச் 4 கதீஜாவைப் பாடு படுத்துவானோ...?
அதிபர் திரும்பி வந்தார்
"எல்லாம் ஐம்பத்திரண்டு பிள்ளைகள் இருக்கும். இன்னொரு ஆசிரியர் கேட்டிரு இருக்கிறான்கள் - பிரச்சினை இல்லாத பிள்ளைகள், அழகான ஊர். எனக்கு இங் தேவையொண்டு வந்திட்டுது. நானே பேசி இல்ல. சைக்கிளில் வந்த களைப்போ?”
"எனக்கு அதிகம் பேசிப் பழக்கப் என்று யோசித்துக் கொண்டிருக்கையில்
ஒன்றுக்கொன்று அளவில் வேறுபா பெரிய கிளாஸைத் தாவூதிடம் தந்துவிட்
தாவூது தேனீரை உறிஞ்சுமுன் யோ வீட்டுக் கணக்கா? அல்லது அதிபரின் அவருக்குக் கடமைப்பட்டுப் போக மாட்டு
தாவூது தாமதிக்க விரும்பவில்லை ஆண்டிற்குச் சென்று விட்டார். இருபது கண்களுடன் தாவூது வாத்தியாரை மிரட் சிதறி அமர்ந்தனர்.
வரவு பதிந்து முடித்தார். இன்றைய மாணவர்களின் பெயர்களைக் கேட்டறி மாணவர்களுக்கு எண்களைக் கற்பித்தார்
கட்டிடத்திலுள்ள எல்லா வகுப்புக்கள் புதிய ஆசிரியர் என்பதாலோ என்னவோ, ம கேட்டார்கள், வாசித்தார்கள், பயிற்சிகை
அதிபர் தனது அறையில் வேலைய
தாவூது இன்றையப் பொழுதைத் அடித்து முடிக்க வேண்டும். இயலுமா கூர்மதி.

நக்கன். பள்ளிக்கூடத்தையே உங்கட வீடுபோல ர்மை, கடமை தவறாமை....... பள்ளிக்கூட நிதிப் விப்பட்டனான்"' அதிபர்.
இரைச்சலாகச் சத்தம் தொடங்கியது.
என்று பிரம்பை உயர்த்திக் கொண்டு அதிபர்....
மகன் எழுந்திருப்பானோ? காலையில் அவனைச் சுற்றவேண்டும். ஏக்கப்பட்டுக்கொண்டிருப்பானோ?
ர். நான் மட்டும்தான். நாலாம் ஆண்டு வரைக்கும் தக்கிறன். ஜனவரிக்குத் தாறன் என்டு சொல்லி பள்ளிக்கூடம் - நல்ல சனங்கள், பணிவான கு இருந்திடத்தான் விருப்பம். ஆனா வீட்ல ஒரு பிக் கொண்டிருக்கிறன். நீங்க ஒன்டுமே சொல்ல
மில்லை என்று இவரிடம் எப்படிக் கூறுவது?'
சுலைமான் தேனீரோடு வந்து சேர்ந்தான்.
ட்ட இரண்டு கிளாஸ்களில் தேநீரை ஊற்றி, -டு மற்றதை அதிபர் கையில் எடுத்தார்.
ரசித்தார். இது யாருடைய தேனீர்? சுலைமானின்
உபயமா? அதிபரின் உபயமென்றால், நான் டேனா?....
ல. தேனீரை அருந்தி முடிந்தவுடன் முதலாம் பிள்ளைகள். குவளை மலர்போல ஒளிவீசும் சியுடன் பார்த்து, அங்கு மிங்குமாக தரையில்
ப நாளையும் அவர் வீணாக்க விரும்பவில்லை. ந்தார். தன்னுடைய கைவிரல்களை மடக்கி
தக்கும் தானே மாறிமாறிப் பாடங்களை நடத்தினார். மாணவர்கள் மிகுந்த பயபக்தியுடன் பாடங்களைக் ,
ளச் செய்தார்கள்.
பாக இருந்தார்.
திட்டமிட்டார். இன்று மாலைக்குள் ஒட்டறை னால் பெற்றாரின் உதவியுடன் கட்டிடத்திற்கு
( 53 )

Page 74
சுண்ணாம்பு வெள்ளை அடிக்க வேண்டும். கதவு சுற்றி உள்ள புல்பூண்டுகளை அகற்ற வேண்டு
இன்றைக்கு வீடு செல்ல முடியாது. இனி வெ சென்றுவிட்டார்கள். சுலைமான் வந்தான். அதி அறை மேசையில் உணவு பரிமாறப்பட்டிருந்தது உட்கொள்ள முடியும்? தேனீர் கணக்கே மனதி "நான் சாப்பாடு கொண்டு வந்திருக்கிறன். நீங் மறுத்துவிட்டு, அதிபர் பதில் கூறமுன்னர் அரை தன்னுடைய பாண் பார்சலைப் பிரித்தார். கிழ போயிருந்தது. ஒரு வேலையைச் செய்து முடி முடித்தபோது, அதிபர் வாய் நிறைய வெற்றிலை கொஞ்சம் பாக்குக் கொண்டுவந்தார்.
"பழக்கமில்லை” என்ற ஒரே சொல்லோடு தால்,
'கமகம' வென்று கறுத்தக் கொழும்பான் மாம்பு சிறிய தேனீக்கள் பூக்களை மொய்த்துக் கொ சொரிந்து விடுமோ என்ற கவலையில் மாவி ை மாஸ்டரும் அதிபரும் மர நிழலில் கதிரைகளை
"மாஸ்டர். 'இன்வென்ரறி' எல்லாம் சரி பார்த் விட்டேன். அவ்வளவு சாமான் இல்லை. லெ நீங்கள் கையெழுத்துப் போட்டு எடுத்துக் ( சரியாகத்தான் இருக்கு. நான் இன்றைக்கு இரவு ஏதும் இருந்தால் கேட்டுக் கொள்ளுங்கோ."
தாவூதுக்கு அதிபராக இருந்து பழக்கமில்லை. பே புரியவில்லை.
"மாஸ்டர் டெய்லி வந்து போற யோசனையா மாதிரி ஏற்பாடா?
"ஒண்டும் முடிவு பண்ணல்ல. ஆனா, இங்க தங்
முடிவு எடுக்கணும்”
"இங்கு தங்குறது என்டாலும் நல்லதுதான். ெ
சைக்கிள் ஓடுறது கஷ்டம். அதக்காட்டி இங்கே நல்ல சனங்கள். பிள்ளைகளோ நல்ல உதவிக அரிசி, விறகு, மரக்கறியெல்லாம் அவங்ககே மட்டுந்தானே....? நீங்களே சமைச்சுக் கொள்ளல்
"கறிக்கும் பஞ்சமில்லை, வேண்டிய மீன் எடு விலையும் மலிவு. நான் இங்கு வந்தால் வரா பத்து கிலோ கருவாடு கொண்டு போவன். | விரும்பினா இங்கேயே இரண்டு மூன்று ஏக்கர் வ நல்லா விளையுற வயல்...”
(54

களைத் திருத்த வேண்டும். கட்டிடத்தைச்
ம்.....
ள்ளிக்கிழமைதான். மதியம் மாணவர்கள் பர் அழைப்பதாகக் கூறினான். அதிபரின் . அதிபரின் தயவில் தான் எப்படி உணவு ல் உறுத்திக் கொண்டு இருக்கின்றது..... கள் சாப்பிடுங்கள்” என்று மென்மையாக இயைவிட்டு வெளியே வந்தார். மேசையில் ங்குச் சொதியில் ஊறி, பாண் கனத்துப் உக்கும் வேகத்தோடு பாணைச் சாப்பிட்டு மயை அடக்கிக் கொண்டு தாவூதுக்குமாக
ஆது மறுத்துவிட்டார்.
பூக்கள் மெல்லிய வாசனை வீச, அளவில் ள்ள, பலமாக அசைந்தால் மாம்பூக்கள் லகள் மெல்லிதாக சாமரம் வீச தாவூது ளப் போட்டு அமர்ந்தனர்.
து மூன்று பிரதிகளில் கொப்பி பண்ணி எக் புத்தகத்திலும் குறிப்பு எழுதிட்டன். கொண்டால் சரி. சாமான்கள் எல்லாம் D இங்கதான் தங்குவன். வேறு விபரங்கள்
மலதிகமாக என்ன விபரம் கேட்பதென்பதும்
? அல்லது இங்கேயே தங்கி இருக்கிற
கி இருக்கிறது நல்லமென்டு தான் படுது.
டய்லி பத்து மைல் பதினைந்து மைல் 5யே தங்கிக் கொள்ளலாம். நல்ல ஊர். ள் செய்யும். தேவை எண்டு சொன்னால் 1 கொண்டு வருவாங்க. உங்களுக்கு மாம்.''
க்கலாம். இங்கே வரால் மீன் பிரபலம்.
• மீன்தான் கறி, வீட்ட போகும் போது பிள்ளைகள் விரும்பிச் சாப்பிடும், நீங்க பல் செய்யலாம். ஆயமெல்லாம் குறைவு.
வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 75
என்று அதிபர் அடுக்கிக் கொண்டே எழுந்து சென்று விடலாமா என்றுகூட நிம் கல்வி நலன் இதுபற்றி ஒன்றுமே பேசமாட்
"என்ன மாஸ்டர் மெளனமாகிவிட்டீங்க கொண்டுபோறதென்டால் இப்பவே சுலைமா வரால் மீன் படு விஷேசம். வரால் மீன் ! கொண்டது. எல்லா இரைகளையும் அது சாப் சாப்பிடும். செத்த மீனையோ, செத்த இ உணவே கிடைக்காமல் சாக வேண்டிய நி மாறவே மாறாது. அப்படியொரு பிடிவாதம் கொண்டவர்கள் சிலர் இருக்கிறாங்கள்' அ
தாவூதுக்கு மனதில் வேறு சிந்தனை மீனின் பிடிவாதத்துடன் ஆசிரியர்கள் ெ முன்னேறிவிடுமே. ஆனாலும் தாவூது மாஸ் மகனும் என்ன செய்து கொண்டிருப்பார்கள்? ! வீட்டில் பணம் இருக்கவில்லையே... சன தோள் குறுகுறுத்தது. பாடசாலை விட்டு குனிந்து மூக்கில் விரலைச் செலுத்தி கிசு
தாவூது திரும்பிப் பார்த்தார். அதிபர் கொண்டிருந்தார். தாவூதுக்கு இப்படியான நேர திறந்து பிஜாமா சாரனை எடுத்து உடுத்துக் சாரனை சண்டிக் கட்டுக் கட்டிக்கொண்டு
தும்புத்தடியுடன் நீளமான தடியொன கட்டிட உள்புறம், வெளிப்புறமெல்லாம் முளைத்திருந்த குளவிக் கூடுகளை எல்6 புறமாக சிவலைக் குருவியொன்று கூடு க பெட்டியொன்றை எடுத்துக் குருவிக் கூட்டை கட்டிடத்தினுள் சேர்ந்த ஒட்டறைக் கழிவுக சேர்த்துத் திரட்டிக் குழி ஒன்றை வெட்டி குழியில் வாழைக் கன்றொன்ற நட வேண்டு
அதிபர் அறையில் கிடந்த துண்டுக் க தயாரித்தார். பாடசாலைக் கட்டிடத்தைச் செவ்வகம் ஒன்று அமைத்தார். அதற்குள் மண்வெட்டியால் செதுக்கி எடுத்துத் துப்பரவ கட்டமமைத்து, பாடசாலையின் பெயர் எ எழுத்தும் புரியவில்லை. வாளியில் நீர் : ஊத்தை அகற்றினார். இப்போது அந்த இ பெயர் தெளிவாகத் தெரிந்தது. அல்லிக்கா வெள்ளையும் அடித்து முடித்தால் நன்றாக 8
இதையெல்லாம் செய்து முடிக்கவும் சரியாக இருந்தது. அதிபர் அப்பொழுது நடைபெற்றிருந்த மாற்றங்களைக் கண்டு |
கூர்மதி.

போனார். தாவூதுக்கு அருவருப்பாக இருந்தது. மனத்தார். பாடசாலை அபிவிருத்தி மாணவர்
டாரா...?
? உண்ட களைப்பா? வரால் கருவாடு ஊருக்கு னுக்கிட்டச் சொல்லி வையுங்கோ. இங்கத்தய மற்ற மீன் மாதிரி இல்ல. மிக வைராக்கியம் பிடாது. உயிர் மீன், உயிர் இறால் இப்படித்தான் றாலையோ கடைசி வரைக்கும் சாப்பிடாது. லை வந்தாலும் சரிதான். வரால் மீனின் குணம் 1. மனிதர்களிலும் அப்படிப் பிடிவாத குணம்
திபர் நீட்டிக் கொண்டே போனார்.
தடம் புரண்டது. கொண்ட கடமையில் வரால் தாழிற்பட்டால் மாணவ சமூகம் இலகுவாக டர் ஒன்றும் பேசவில்லை. வீட்டில் கதீஜாவும் சம்பளம் எடுத்திருப்பாளோ...? நான் வரும்போதும் கமயல் என்ன செய்திருப்பாள்? தாவூதுக்குத்
வந்ததும் மகன் தோள்மீது ஏறிக்கொண்டு கிசு மூட்டி....
[ இலேசான குறட்டை ஒலியுடன் உறங்கிக் ங்களில் உறங்கிப் பழக்கமில்லை. பன்பையைத் கொண்டார். சட்டையைக் கழற்றி வைத்துவிட்டு
புறப்பட்டார்.
ன்றை இணைத்துக் கட்டினார். பாடசாலைக் ஒட்டறை அடித்து முடித்தார் ஆங்காங்கே லாம் தட்டி விட்டார். கட்டிடத்திற்கு வெளிப் ட்டி முட்டை இட்டிருந்தது. பழைய அட்டைப் - மறைத்து ஆதரவாக இணைத்துக் கட்டினார். களையும் மற்றும் கஞ்சல்களையும் ஒன்றாகச் உப் புதைத்தார். இன்னொரு நாளில் இந்தக் ம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.
யிறுகளை ஒன்றாக முடிந்து நீளக்கயிறொன்று சுற்றி பத்து அடிக்கு வெளியே கயிறினால் அகப்பட்ட புல், பூண்டு முதலிய சகலதையும் பு செய்தார். கட்டிடச் சுவரின் வெளிப்பக்கத்தில் ழுதப்பட்டிருந்த இடத்தை நோக்கினார். எந்த அள்ளி சிறிய கயிற்றுத் துண்டால் தேய்த்து உம் பளிச் என்று துப்பரவாக, பாடசாலையின் டு அ.மு.க.பாடசாலை, கொஞ்சம் சுண்ணாம்பு இருக்கும் என்று தாவூது நினைத்துக் கொண்டார்.
மாலைச் சூரியன் செந்நிறம் பெற்றுச் சரியவும் நான் நித்திரைவிட்டு எழுந்திருந்தார். அங்கு புருவங்களை உயர்த்திப் பார்த்தார்.

Page 76
"நல்ல வேலைகள் நடந்திருக்கு போல்
"அப்படியொண்டும் பெரிசா இல்ல. சும்ம எக்சசைஸ். அவ்வளவுதான்”
சுலைமான் தேனீரோடு வந்தான். இப்பே இரண்டு கிளாஸ்களில் தேனீரை நிரப்பி, சில பெரிய கிளாஸ் தேனீர் அதிபருக்கு.
"சுலைமான், இனி தேனீர், சாப்பாட்டுக் க குறிச்சி வைச்சிக்கோ. கிழமை முடிஞ்சி என் தாவூது சுலைமானுக்கு மட்டும் கேட்கும்படி
''என்ன சொல்றீங்க சுலைமானுக்கு?'
"ஒன்றுமில்லை.......ராச்சாப்பாடு பற்றி'
இரவுச் சாப்பாட்டை சுலைமான் கொண் வாங்கிப் பரிமாறினார். அளவுக்கதிகமாக . சோளம் பிட்டு. வரால் மீன் குழம்பு. கூடவே, ( இனிமேல் இது கிடைக்குமோ என்ற கவன பார்த்தார். அல்லிக் காட்டு வரால் மீனை பார்த்தார். ருசிதான். அலாதிச் சுவை. வரால் ம் அப்படியொரு பிடிவாதத்தையும் ஆண்டவன்
சாப்பாடு முடிந்த கையோடு அதிபர் தயாரித்தார். பாக்கை வாயில் போட்டுக் கொல பாடசாலை வளவை ஒரு முறை சுற்றி வந்த
"என்ன மாஸ்டர் பள்ளிக்கூடம் பிடிச்சி
"ஆமாம், ஆனால் இங்க கனக்க வேலை பாடுபட்டா இந்தப் பாடசாலையை நல்லா கெட்டித்தனம் கொண்ட பிள்ளைகளாகத்தான்
"ஒரு நாள் அனுபவத்தோடேயே பிள் இங்க இன்னொரு ஆசிரியர் வேண்டும். அப்பத் எனக்குக் கூட இந்தப் பள்ளிக்கூடத்த விட் வீடொன்று கட்ட வேண்டி இருக்கு. திருத்தம் 6 இங்கால செலவாகிப் போகும். அதக்காட்டி என்டு பாக்கிறன். ஊரோட இருந்தாத்தான் அ
கொம்பன்சேஷன் என்றதும் தொண்ணூறு ஞாபகத்திற்கு வந்தது. ஒரு பக்கம் கூரை பழுதடைந்து திருத்துவதற்கு காசில்லாமல்
முடங்கிக் கிடந்து அல்லல் பட்டது ஞாட பதினைந்தாயிரம் வரை செலவாகும் என மதி
(56)
56

9)
ா இருந்த நேரத்தில் உடம்புக்குக் கொஞ்சம்
எது தாவூது மாஸ்டரே வாங்கிக் கொண்டார். என கிளாசைத் தான் எடுத்துக் கொண்டார்.
கணக்கெல்லாம் என்னோடது சரியா? எல்லாம் கிட்டக் காசு வாங்கிக்கோ. என்ன சரியா?
கூறினார்.
எடு வந்த "இட்டு அவித மீன் பொரியல்
Tடு வந்தபோது தாவூது மாஸ்டரே அதனை தேங்காய்ப்பூ இட்டு அவித்த மஞ்சள் நிற செம்பொன் நிறத்தில் வரால் மீன் பொரியல். மலயில் அதிபர் மீன் குழம்பை ஒரு கை
தாவூது முதன் முறையாகச் சுவைத்துப் மீனுக்கு இப்படியொரு ருசியையும் கொடுத்து,
தந்துள்ளானே?
பாலர் மேசைகளை அடுக்கி படுக்கை ன்டார். தாவூதுக்கு நித்திரை வர நேரமாகும். ] மாமரத்தின் கீழ் நின்றார்.
நக்கோ?
கள் செய்ய வேண்டி இருக்கு. முழுமையாகப் உருப்படுத்தி எடுக்கலாம். பிள்ளைகளும் ( படுது''
ளைகளைப் புரிஞ்சு கொண்டீங்க போல. தான் படிப்பித்தல் முறையாகச் செய்யலாம். டுப் போக விருப்பமில்ல. ஆனா, ஊரில காம்பன்சேஷன் எடுத்தனான். காசு அங்கால பழுதான வீட்டைத் திருத்திப் போடுவம் துக்கெல்லாம் வசதி'
கலவரங்களில் தனது வீடும் சேதமடைந்தது இடிந்து வீழ்ந்து சுவரின் காரை பெயர்ந்து விறாந்தைக்குள் மட்டும் கொஞ்சக் காலம் கத்திற்கு வந்தது. கூரையைத் திருத்த ப்பிட்டார். அதனைக் கொம்பன்சேஷனாகப்
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 77
பெற்று திருத்தம் செய்ய நினைத்து ஆவணங்களைச் சேகரிப்பதற்காக ஏற்பட்ட ஆறுமாத சம்பள முற்பணம் பெற்று கூ சம்பள முற்பணத்திற்காக தவணைப்பணம் வெட்டப்பட்டு வருவதையும் நினைவுபடுத்த
"தாவூது மாஸ்டர், ஏன் நீங்கள் கொம் ஏதும்.....?
"வீட்டுக் கூரையொன்று சேதம். இருந்தவங்களெல்லாம் முப்பதுக்குப் போடு எனக்கு விருப்பம் இல்ல. என்னத்துக்கு பெ வேற.....விட்டுட்டன்"
"நேர்மைதான். பிடிவாதம்தான். வரால் எண்டு சொல்லுங்க" என்று கூறி வேடிக்
தாவூது புன்முறுவலோடு நிறுத்திக்
பாலர் வாங்கில் நித்திரைக்காகப் புர மாஸ்டர் கேட்டார்.
"பாடசாலையெச் சுற்றி நல்ல : வேலிக்கட்டை இரண்டு அந்தர் கம்பி, வேலியொண்டு போட்டுடலாம். மாடு வராது வழங்கலாம். காய்கறி பயிர் செய்யலாம்.
கொட்டாவி விட்டுக் கொண்டே அதி "ஒரு மூவாயிரம் ரூபா தேவைப்படும்.
"எப்படியும் வேலி போட வேணும்”
"பணத்துக்கு என்ன செய்யப் போறீ
"அதுக்கு ஒரு திட்டம் வெச்சிருக்கிற
அதிபர் நிமிர்ந்து பார்த்தார். தாவூது நிற சேலையுடுத்தி, முக்காடிட்டு, நாணம் கறுத்தக் கொழும்பான் மாமரங்களைப் ப
"கறுத்தக் கொழும்பான் மாம்பழங் பெற்றுக்கொள்ள முடியாதா?'
"பாதுகாத்து எடுக்க முடியுமானால்
"சிரமம் தான், நான் அதனையே சவ வெளியே பேசவில்லை. மனதுக்குள் பிடிவா தாவூது மாஸ்டரை வினோதமாகப் பார்த்த மணமும் தந்த மயக்கத்தில் அப்படியே ?
கூர்மதி

விண்ணப்பிக்க புறப்பட்டார். தேவைப்பட்ட - அலைச்சலில் அதனைக் கைவிட்டு பின்னர் ரையைத் திருத்திக் கொண்டார். ஆறுமாதச் > இப்போதும் வட்டியுடன் தனது சம்பளத்தில் திக் கொண்டார்.
பன்சேஷனுக்குப் போடவில்லையா? சேதங்கள்
பதினைந்தாயிரம் மட்டில் எஸ்டிமேட் கூட , நாப்பதுக்கு போடு என்டு வற்புறுத்தினாங்க. பாய் சொல்லிக் காசு எடுக்கணும், அலைச்சல்
| மீன்ட பிடிவாதம் உங்களுக்கிட்டயும் இருக்கு
கயாகச் சிரித்தார்.
கொண்டார்.
ண்டு கொண்டிருந்த அதிபரை நோக்கி தாவூது
வலியொண்டு போட்டா நல்லதில்லையா? அள்ளு இவ்வளவும் இருந்தால் அழகான ப. மாணவர்களுக்கு வீட்டுத் தோட்டப் பயிற்சி
வேலி போட எவ்வளவு கோஸ்ட் ஆகும்? பர் கூறினார்.
ஓபீஸ்ல கேட்டுக் கேட்டு அலுத்துப் போனன்”
ங்க''
றன்”
| மாஸ்டர், கட்டிடத்திற்கு வெளியே மஞ்சள் கலந்த பெண்களைப்போல குனிந்து நிற்கும் பர்த்தார்.
களை விற்றெடுத்தால் அந்தப் பணத்தைப்.
பெறலாம் மாஸ்டர்”
Tலாக ஏற்றுக் கொள்கிறேன்” தாவூது மாஸ்டர் தத்துடன் திட்டமொன்றைத் தீட்டினார். அதிபர், பார். வரால் மீனின் பொரியல் ஏப்பமும் பாக்கு உறங்கிப் போனார்.
57

Page 78
வெள்ளிக்கிழமை மாலை தாவூது மாள கண்டிருந்தது. கதீஜாவும் இருமிக் கொண்டி
"டீ பொம் கொடுத்து சம்பளம் எடுத்த
"இல்ல, டீ போம்ல ரெண்டு கையெழு கையெழுத்துத்தான் போட்டிருக்கீங்க, பணத் மாதச் சம்பளத்துடன் எடுக்கலாமாம்” கதீஜா
"அப்ப காசுக்கு என்ன செய்யுரது?'
"இதோ” கதீஜா வலது கைக்குள் பொ நீட்டினாள். கல்யாண மோதிரம். கதீஜா கல்யாணத்தன்று தான் வாங்கிப் போட்டது.
"ஈடு வைக்க வேணாம். காசு காணாத
கதீஜாவின் குரலில் தொனித்தது விரக் புரிந்து கொள்ள முடியவில்லை. வேறு வழிய
வாசலில் சத்தம் கேட்டது. அன்வர் அ
"நாளை சனிக்கிழமை காலை பத்து பிரியாவிடை ஒழுங்கு செய்திருக்கிறோம். ம சினேகிதன் சமீம் தொர ஊருக்கு வந்திருக்கிற சொல்லி உங்கட டிரான்ஸ்பரை கேன்சல் ெ
"பார்க்கலாம் அன்வர். சமீம் என்ர இள 6 என்னமும் செய்வான்” சமீமும் தானும் சினேகிதத்தையும் ஒருவருக்கொருவர் அன்பு காலத்தையும் தாவூது நினைத்துக் கொண்ட
அடுத்த நாள் காலையில் பிரியாவிடைக் சேவைகளைப் பாராட்டிப் பேசினார்கள். பிரிய பெட்டியில் ஆறு கிளாஸ்களை அடுக்கி பாடசாலையில் செய்த சேவைக்கான அங்க பெற்றுக் கொண்டார்.
வீட்டுக்குச் சென்றதும் அட்டைப் பெட்டி சந்தோசத்துடன் காட்டினார். அவள் முகத் ை ஆறு கிளாஸ்களையும் பூரிப்புடன் திருப்பி பாவனைக்கு வைத்துக் கொள்ளலாம் என் கொண்டார்.
"கிளாஸ் கொண்டு வந்ததெல்லாம் சரி, மோதிரம் வித்தாச்சா?'
அப்போதுதான் தாவூது மாஸ்டருக்கு நன ஞாபகத்திற்கு வந்தது. அரைப்பவுண் மோ,
58

Dடர் வீடு திரும்பினார். மகனுக்குக் காய்ச்சல்
நந்தாள்.
தா?”
ழத்து வேணுமாம். நீங்க அவசரத்தில் ஒரு தை பேங்குக்குத் திரும்பிட்டாங்க. அடுத்த வின் எரிச்சலை தாவூது புரிந்து கொண்டார்.
த்திய வண்ணம் தாவூதுக்கு முன் எதையோ விடமுள்ள இரண்டு நகைகளுள் ஒன்று.
வ. விற்றுப்போடுங்கோ”
க்தியா, வேதனையா என்பதைத் தாவூதால் புமில்லை.
ஆசிரியர். - மணிக்கு உங்களுக்குப் பாடசாலையில மறக்காம வாங்க சேர். அத்தோட உங்கட பர். நல்ல செல்வாக்கான மனுசன். அவர்கிட்ட
சய்யுங்கோ சேர்”' -
வயதுச் சினேகிதன். எனக்கென்று சொன்னால் பிஞ்சு வயசில் இருந்து கொண்டிருந்த டனும் வாஞ்சையுடனும் வாழ்ந்த அந்தக் ார்.
கூட்டம். அதிபரும் ஆசிரியர்களும் தாவூதின் பாவிடை அன்பளிப்பாக அழகான அட்டைப் அன்புடன் வழங்கினார்கள். தான் அந்தப் கோரமாக நினைத்து அதனை மகிழ்வுடன்
யைப் பிரித்து, கதீஜாவுக்கு கிளாஸ்களைச் தத் திரும்பிக் கொண்டு சென்று விட்டாள். அடுக்கி, அல்லிக்காட்டுப் பாடசாலையில் று நினைத்து பன் பையினுள் அடுக்கிக்
மத்தியானச் சோறுக்கு அரிசி இல்லையே,
கக் கடைக்குச் செல்ல தான் மறந்துவிட்டது திரத்தை இரண்டாயிரத்திற்கு விற்கலாமா?
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 79
இரண்டாயிரத்தில் இம்மாதத்தைக் கட்டுப் டயர், ரியூப் வாங்க நினைத்தோமே...பணப்
டயர், ரியூப் வாங்குவதை அடுத்த அரிசி, கருவாடு, மரக்கறி எல்லாம் வாங் வாசலிலேயே நின்று புன்முறுவலோடு வரே
"என்னங்க சமீம் தொர ஆள் விட்டிருந்த இடமாற்றத்தை கேள்விப்பட்டாரோ என்னவோ என்ன?” இப்போதே அல்லிக்காட்டுக்கா மகிழ்ச்சியோடு கதீஜா காணப்பட்டாள்.
"சரி பின்னேரம் பார்க்கலாம்”
கதீஜா மறக்கவில்லை. மாலையில் த நீண்ட நாட்களுக்குப் பிறகு சமீமைச் சந்திக் சைக்கிளையும் தள்ளிக் கொண்டு புறப்பட்
கணவர் திரும்பும்வரை மகனையும் முற்றத்திலேயே நிற்கின்றாள்.
"என்ன கதீஜா வாசலிலேயே நிற்கிற
சைக்கிளை வேலியோரம் சாய்த்துக்
"மத்தியானம் குறைஞ்சிருந்தது. இப்பு வாங்கணும். அதுசரி, அவரக் கண்டீங்களா
''பழைய கதை, புதிய கதை எல்லா வந்ததும், அவருக்குத் தெரியும். அது விச
"இடமாற்றத்தை மாற்றித் தாரனென்ட
"அதெப்பத்திப் பேசல்ல?'
''அப்ப, எதெப்பத்திங்க பேசினாரு?'
"அடுத்த வாரம் வெளிநாட்டிலிருந்து : அல்லிக்காட்டிலிருந்து கொஞ்சம் வரால் மீ கேட்டாரு” கணவரின் வார்த்தைகளில் சூ இறுக அணைத்துக் கொண்டாள். தன் இத சேர்ந்து தன்னைப் பொசுக்கி விடுமோ என்ற
தாவூது ஆவேசமானார். இனி என்ன அ எஞ்சியுள்ள வருஷங்களை அல்லிக்காட்டி எடுத்துக்கொண்ட தீர்க்கமான முடிவை, த போவதில்லை....மூக்கு நுனியில் முத்தாக
கர்மதி.

பாட்டோடு கடத்தி விடலாமா? சைக்கிளுக்கு ) போதுமா...?
மாதத்திற்கு ஒத்திப் போட்டார். சந்தையில் கிக் கொண்டு வீடு திரும்பியபோது, கதீஜா வற்றார்.
தார். உங்கள் பின்னேரம் வீட்டில் சந்திக்கட்டாம். அவரிட்ட கொஞ்சம் பேசி ஒழுங்கு பண்ணுங்க எ இடமாற்றம் ரத்துச் செய்யப்பட்டுவிட்ட
தாவூதை வெளிக்கிடுத்தி அனுப்பி வைத்தாள். கும் ஆர்வத்தோடு முன்சில்லில் காற்றிறங்கிய டார்.
5) இடுப்பில் வைத்துக் கொண்டு கதீஜா
'ங்க...? மகன்ட காய்ச்சல் எப்படி?'
கொண்டே தாவூது கேட்டார்.
ப கொஞ்சம் கூடிவிட்டுது. ராத்திரிக்கு மருந்து -? என்னங்க கேட்டாரு?”
மே கேட்டாரு. அல்லிக்காட்டுக்கு இடமாற்றம் யமாகத்தான் கூப்பிட்டாரு”
டாரா?'
அவர்ர மகன் வாரானாம். ஒரு வாரம் நிப்பானம். ன் கருவாடு கொண்டு வந்து தரமுடியுமான்னு டேறுவதை கதீஜா அவதானித்தாள். மகனை பயத்திலுள்ள தீயும், மகனின் காய்ச்சல் சூடும் பயத்தில் கதீஜா உள்ளே சென்று விட்டாள்.
பூனாலும் சரி தன்னுடைய சேவைக் காலத்தில் ன் கல்வி வளர்ச்சிக்காகவே செலவிட தான் என் இனி, யாருக்காகவும் மாற்றிக் கொள்ளப்
வியர்க்கத் தொடங்கியது.
(59)

Page 80
அடுத்த வாரமே அல்லிக்காட்டுப் பெற்றா சுருக்கமாக அறிமுகம் செய்து கொண்டா ஏற்படுத்தினார். தான் இந்தப் பாடசாலையி பணிகளைப் பெற்றாருக்கு விளக்கினார்.
தான் பாடசாலை நேரத்தில் மட்டுமல்ல. பாடம் நடத்த உத்தேசித்திருப்பதைக் கூறினார். படிப்பதைக் கவனிக்க வேண்டும் என்று கேட்
பாடசாலைக் காலங்களில் மாணவர்களை கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்.... ஒரு புதியவரிட ஆர்வத்துடன் பெற்றார் அவரது பேச்சில் ஐக்
பாடசாலைக் கட்டிடத்திற்குச் சுண்ணாம்பு சிலர் பணம் தர முன்வந்தார்கள். சிலர் உடல் அடுத்த வாரமே பாடசாலைக் கட்டிடம் வென
ஒரு நாள் வெள்ளிக்கிழமை மாலை, கணக்குகளை சரிபார்த்துக் காசு கொடுத்துக்
"சேர், இன்டைக்கு கொஞ்சம் வரால் மீன் எண்டு வாப்பா கேட்டாங்க''
முதன்முதலாக தாவூதின் மனதில் சல கருவாடு வாங்கிப் போனால் என்ன? கதீஜா போது அவவுக்கு கறிப் பிரச்சினையும் இருக்க
"வேண்டாம் சுலைமான்”
"ஏன் சேர்”
"எங்க வீட்ல யாரும் சாப்பிடதில்லை''
அல்லிக்காட்டு வரால்மீன் கருவாட்டை இருக்கிறார்களா என நினைத்துக் கொண்ட பார்த்தான்.
பாடசாலை அபிவிருத்திச் சபை நிருவாகக் தான் இந்தக் கூட்டத்தை விஷேடமாகக் கூட்டுவது எல்லாரும் உதவி செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
"இந்தப் பாடசாலையில் இப்போது முக்க ஒன்று தளபாடப் பிரச்சினை. அதுபற்றி நான் சம் கடிதங்களை உத்தியோகபூர்வமாக எழுதி இரு. சுற்றி முள் கம்பி வேலி அமைத்தல், ஆடு வளவை அச்சறுக்கை பண்ண வேண்டும். அப்பு
(60)

ரைப் பாடசாலைக்கு அழைத்தார். தன்னைச் 1. பாடசாலை அபிவிருத்திச் சபையை ல் செய்ய நினைத்துள்ள அபிவிருத்திப்
மாலை நேரத்திலும் மாணவர்களுக்காகப் இரவில் பெற்றாரும் கொஞ்சம் பிள்ளைகள் டுக்கொண்டார்.
எத் தொழிலில் ஈடுபடுத்த வேண்டாம் எனக் டமிருந்து புதிய விஷயங்களைக் கேட்கும் கியப்பட்டு போனார்கள்.
| வெள்ளை அடிப்பதைப் பற்றிக் கூறினார்.
உழைப்பைத் தர உறுதி அளித்தார்கள். Tணிறச் சீருடைக்கு மாறி விட்டது.
சுலைமானைக் கூப்பிட்டு, சாப்பாட்டுக் கொண்டிருந்தார்.
கருவாடு வீட்டுக்கு கொண்டு போறீங்களா
னம் ஏற்பட்டது. இன்றைக்குக் கொஞ்சம் விரும்பிச் சாப்பிடுவாள். நான் இல்லாத காது..... காசைப் பிறகு கொடுக்கலாம்....
ச் சாப்பிட விருப்பம் இல்லாதவர்களும் சுலைமான் மாஸ்டரை வினோதமாகப்
குழுவை ஒரு நாள் மாலையில் கூட்டினார். ாகவும், தனது நோக்கத்தில் வெற்றியடைய வும் ஆரம்பத்திலேயே வினயமாகக்
யமாக இரண்டு குறைகள் இருக்கின்றன. பந்தப்பட்ட அதிகாரிகளுக்குக் கோரிக்கைக் 5கிறேன். அடுத்தது, பாடசாலை வளவைச் மாடுகள் வருவதைத் தடுக்க வேண்டும். பாது தான் இங்கு கொஞ்சம் பயிர்பச்சை
ல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 81
வளர்க்கலாம். மாணவர்களுக்கு வீட்டுத் 6 அமைப்பதற்கு காரியாலயத்தை எதிர்பார்க என்று யோசிக்கிறேன். அதற்கான திட்டமும் மாஸ்டர் பேசிபோது, கூட்டத்தினர் ஆர்வமா
பாடசாலை மண்டபத்திற்குப் பக்கமா கொழும்பான் மாமரங்களின் பக்கம் கையை
வழக்கமாக என்ன நடக்கிறது?''
"பிஞ்சிலே கொஞ்சத்த அடிச்சுப் பே பிடுங்கிறது. மிச்சப்படுறத யாரும் பழமாகக் ெ இருந்த தம்பி லெப்பை என்பவர் 'யாரும்' எ கொடுத்துக் கூறியபோது தாவூதிற்கும் ஆத்
"இம்முறை அப்படி நடக்காது''
"அப்போ?' கேள்விக் குறியோடு ஒரு
"நான் இப்போ ஒரு திட்டம் சொல்லப் தரணும். இது சம்பந்தமான எழுத்துமூல பெறுவன்”
கூட்டத்தில் சலசலப்பு......
"கொஞ்சம் எல்லாரும் அமைதியாக சுலைமானின் வாப்பா சகலரையும் கையமர்த் கொடுத்தார்.
"இந்த மாமரங்கள் யாரால் வைக்க பாடசாலைக்குச் சொந்தம். பாடசாலைச் . பாடசாலைக்கும், மாணவர்களுக்கும் கிடைக் பக்குவமாகப் பாதுகாத்து எடுக்கணும். ஒரு விற்று இந்தப் பாடசாலையைச் சுற்றிவர காவல் வேலைய முக்கியமாகச் செய்ய மு போகின்ற நாளையில மட்டும் நீங்க யாரால்
மாஸ்டரின் திட்டத்தை எல்லோருமே 8 நாட்களைச் சொன்னால் தாங்கள் அந்த நாட் வாக்களித்தனர். பெற்றார்களின் பெயர்களை நாட்களைக் குறித்துக் கொண்டிருந்தபோது கேட்டது.
"எல்லாம் கதைக்கிறது தான், ஆனா, ! மாஸ்டரின் வீட்டுக்குப் போயிடும்” தனக்கு
அந்தக் கதை எப்படியோ தாவூதின் காதுக
"பாடசாலைச் சொத்தை எனது வீட்டு வீட்டுக்குக் கொண்டு போக மாட்டன். இது
மதி

தாட்டப் பயிற்சி வழங்கலாம். சுற்று வேலி 5கலாம். நாமே செய்து முடித்தால் என்ன ஒன்று வைத்திருக்கின்றேன்” என்று தாவூது கக் கேட்கத் தொடங்கினார்.
க அணிவகுத்து நிற்கும் ஐந்து கறுத்தக் ப நீட்டிக்கேட்டார். "இந்த மாம்பழங்களுக்கு
ாடுவான்கள். சனி, ஞாயிறிலே வெளியாரும் கொண்டு போய்ச் சேர்ப்பாங்க” பின் வரிசையில் ன்ற சொல்லுக்கு ஒரு அலாதியான அழுத்தம் திரம் வந்தது.
வர் எழுந்து நின்றார்.
போறன். நீங்க எல்லாரும் இதுக்கு அனுமதி அனுமதியை நான் காரியாலயத்திலிருந்து
இருங்க. மாஸ்டர் சொல்லி முடிக்கட்டும்”, மதி மாஸ்டர் பேசுவதற்கு அமைதி ஏற்படுத்திக்
கப்பட்டதோ தெரியாது. ஆனா, இப்ப அது சொத்து. இதனுடைய பூரணமான பயனும் கணும். இந்த முறை எல்லாப் பழங்களையும் பழம் கூட வீணாகக் கூடாது. முழுவதையும் வேலி போடணும். காவல் தேவை. நானே முடிவு எடுத்திருக்கன். ஆனா, நான் ஊருக்குப் வது இதப் பாதுகாத்துத் தரணும்.”
ஆமோதித்தனர். மாஸ்டர் ஊருக்குப் போகின்ற களில் மாமரங்களைப் பாதுகாத்துத் தருவதாக | எழுதி, அவர்கள் காவல் செய்ய வேண்டிய ப தம்பி லெப்பை முணுமுணுக்கும் சத்தம்
மாம்பழம் பழுக்கக்குள்ள மட்டும் பழமெல்லாம் மட்டும் கேட்கும் படிதான் அவர் கூறினாலும், களிலும் விழுந்து விட்டது.
ச் சொத்துப்போல பாதுகாப்பேனெனயொழிய, என்ட அடிநாளயப் பழக்கம். இதில் யாரும்
61 )

Page 82
சந்தேகப்படத் தேவையில்லை. இன்டைக்கு தாரன். இந்த வருஷம் என்டில்ல. இனி எந்த ஒரு சதத் துண்டுகூட என்ட வாயிலோ, 6 சத்தியம். இது சத்தியம்.''
மாஸ்டர் இவ்வளவு ஆத்திரமாகப் பேசி சிவந்து விட்டது. கண்கள் பனிக்க ஆரம்பித்
சுலைமானின் வாப்பா எழுந்துவிட்டார்.
"மாஸ்டர் கொஞ்சம் பொறுத்துக் கொ சொன்னார். நீங்க கோபப்படப்படாது. உங்கள்
"நான் கோபப்படல. ஆனா, நான் இந்த கொள்ளப் போறன் நீங்க பொறுத்திருந்து பா
அத்துடன் கூட்டம் முடிந்தது. மாஸ் அடிப்பகுதிக்கு யாரும் மேலே ஏறா வண்ண தகர டின்களைச் சேர்த்தெடுத்து அவற்றிற்கு மரத்தின் மேல் தொங்கவிட்டு மணி தயாரித் கணகணவென்று மணி ஒலி கிளம்பும். அதனா இரவில் கயிறு நுனியைப் படுக்கைக்குப் பக்
மாம்பிஞ்சுகள் சரம் சரமாகத் தொங்கிக் கூடவா, பிஞ்சுகளின் எண்ணிக்கை கூடவா தொகையாகக் காய்த்திருந்தது. இவ்வளவைப் பழங்கள் தேறுமா? அதற்குக் கூடவே பார்க்க
தாவூதின் மனக்குதிரை சிறகடித்தது. தடையை உடைத்தெறிந்து கொண்டு ஆகா காய்கள் பறிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மரத்த முற்றித் திரண்ட மாங்காய்கள்.... ஏலக்காரர் போகிறார்கள்.... ஐயாயிரம்... ஏழாயிரம்... பத்தா முன் பக்கப் படலைக் கதவு அகற்றப்பட்டு சீ கதவுகள் போடப்பட்டு, அதன்மேல் பாடசாலை பொறிக்கப்பட்டு...கற்பனைக் கயிறு சட்டெனத் முழுக்க மாடுகள் ஏறி இருந்தன. அவற்றைக் 8 வந்தார்.
மகனுக்குக் காய்ச்சல் உரத்திருப்பதாக அன்றிரவு சுலைமானின் வாப்பாவை பாடசா தாவூது ஊருக்குப் புறப்பட்டார்.
மகனின் காய்ச்சல் தணியவில்லை. எ சந்தேகப்பட்டார். டவுனிலுள்ள பெரியாஸ்பத்தி அபிப்பிராயப்பட்டாள். தாவூது மாஸ்டர் மகனை

நான் உங்களுக்கு ஒரு சத்தியம் செய்து - வருஷமானாலும் சரி இந்த மாம்பழத்தில் என்ட குடும்பத்திட வாயிலோபடாது. இது
யதை யாரும் கண்டதில்லை. மூக்கு நுனி து விட்டன.
பள்ளணும். அவர் ஏதோ பகிடியாகத்தான் Tா எங்களுக்கு நல்லாத் தெரியும்”
5 விஷயத்தில எவ்வளவு சுத்தமா நடந்து
ருங்க”
டர் தாமதிக்காமல், அன்றே மாமரத்தின் ம் முள் கம்பிகளைச் சுற்றினார். பழைய -- கம்பி நாக்கு வைத்து நீண்ட கயிற்றில் தார். கயிறைக் கீழே இருந்து இழுத்தால், ல் வெளவால்கள், பறவைகள் பறந்துவிடும். கத்தில் வைத்துக் கொண்டார்.
கொண்டிருந்தன. இலைகளின் எண்ணிக்கை என பிரமிக்கும் அளவுக்கு இவ்வருஷம் பும் பாதுகாத்து எடுத்தால் ஒரு மூவாயிரம் 5லாம்.
இரட்டைக் கடிவாளம் போட்ட புரவிகள் எயப் பாய்ச்சல் காட்டின. மளமளவென்று நின் கீழும் மலை மாதிரி சாம்பல் நிறத்தில் கள் விலைகளை உயர்த்திக் கொண்டே யிரம்.... பாடசாலை வேலி கட்டப்படுகின்றது. மெந்துத் தூண்கள் எழுப்பப்பட்டு, இரும்புக் லயின் பெயர் பொன்னிற எழுத்துக்களில் தடம்புரண்டு அறுந்து போகின்றது. வளவு கலைப்பதற்காக தாவூது மாஸ்டர் வெளியே
அல்லிக்காட்டுக்குச் செய்தி வந்திருந்தது. லை வளவுக்குக் காவல் வைத்துவிட்டு,
மடபோயிட்டாக இருக்குமோ என டாக்டர் திரியில் காட்டினால் நல்லது என கதீஜா த் தூக்கிக் கொண்டு டவுனுக்குச் சென்றார்.
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 83
டாக்டர் சந்தேகித்தது சரிதான். வாட் மகன். பெயர் சொல்ல ஏக வாரிசு பக்கத்
காய்ச்சல் தணிந்து வீட்டுக்கு வ அல்லிக்காட்டுக்குப் புறப்பட்டு விட்டார்.
"ரெண்டு நாள் இருந்து காய்ச்சலை
"இல்ல கதீஜா, நிண்டது நிக்க வந்த ஆசிரியரும் இல்ல. லீவும் போடமுடியாது.
அடிக்கடி காற்றிறங்கும் முன் சில்லை , போட்டுக் கொண்டு சைக்கிளை மிதிக்கும்
இந்த ஒரு வாரமும் சுலைமானின் வாட் அறிந்து தாவூது மாஸ்டர் அதிர்ந்து போன
"பகலில் மகன் பார்த்துக் கொண்டால் வேறு யாரும் வரல்ல. நம்பி விட்டுப்போட்டு போக முடியாமல் போயிட்டுது"
தாவூதுக்கு பெரிய கவலையாகிவிட்ட பார்த்திருக்கிறாரா? மனதுக்குள் படம் ஒன்று ! ஒன்றாக எடுத்ததில் முன்சில்லுக்கு ரயர், இருநூறு ரூபாயையும் இவருக்கு கொடுத்த
இரண்டு நூறு ரூபாய்த் தாள்களை சிக வைத்து அழுத்திவிட்டு. "பரவாயில்லை, இத
"எதுக்கு மாஸ்டர் பணம் எனக்கு?''
"பரவாயில்லை வைத்துக் கொள்ளும்
சைக்கிளுக்கு ரயர், ரியூப் வாங்கு போட்டார். மாம்பிஞ்சுகள் முற்றி இருந்த பேசத் தொடங்கின. ஈச்சங்குலையில் காப் காய்களாகவே தொங்கின..
எல்லாம் மூவாயிரம் காய்கள் தேறும் இரண்டு வாரத்தில் முற்றி விடுமா? மரத்தை காய்களில் சாம்பல் நிறம் ஏறி இருந்தது.
அதற்குள் முதலாந் தவணைப் பரீட். விடுமுறை இன்னும் இரண்டு வாரத்தில் வர ! அடிக்கடி ஊருக்குச் சென்றார். ஒன்றிர வரும்போது வினாத்தாள்களையும் வாங்கி வ பெரிய மனக்கவலை. தொடர்ந்தாற்போல ஒரு கவனிக்கிறாரில்லையே என்று மனம் வெதும்
கூர்மதி7-CM 013788

டில் ஒரு வாரம் இருக்கும்படி நேர்ந்தது. ஒரே திலேயே இருந்து கவனித்துக்கொண்டார்.
ந்த அன்றைய தினம், மாலையே தாவூது
ப் பாத்துப் போகப்படாதா?”
திட்டன். அங்க என்ன பாடோ தெரியாது. வேற
போயிட்டு ரெண்டு நாளில் வந்திடுறன்.''
நசித்துப் பார்த்துக்கொண்டு பம்பைப் பன்பையில் கணவனை கதீஜா ஏக்கத்தோடு பார்த்தாள்.
பாவே பாடசாலைக் காவல் பார்த்த செய்தியை பார்.
ன். பின்னேரமும் இரவிலும் நான்தான் காவல். இப் போகவும் ஏலாது. சரியாக தொழிலுக்கும்
து. சொந்தத் தொழிலையும் இழந்து காவல் விரிந்தது. இரண்டு மாதச் சம்பளப் பணத்தையும் ரியூப் வாங்க என ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள கால் என்ன?
ரெட்டைப்போல சுருட்டி, அவரின் கைகளுக்குள் - செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கள்” என்றார்.
ங்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாம்”
வதை மேலும் ஒரு மாதத்திற்குத் தள்ளிப் ன. அவை, தாவூது மாஸ்டரோடு கதைகள் ப்கள் கனத்திருப்பது போல மாமர மெங்கும்
ா? - அதற்கும் கூடவே பார்க்கலாம். இன்னும் - அண்ணாந்து பார்த்தார். இப்பவே ஒன்றிரண்டு
சைகள் நடத்த வேண்டி இருந்தது. தவணை இருக்கிறது. மகனின் காய்ச்சல் விட்டபாடில்லை. ன்டு நாளில் திரும்பி வந்தார். ஊரிலிருந்து பந்து பரீட்சைகளையும் செய்தார். கதீஜாவிற்குப் 5 வாரம் தங்கி நின்று மகனின் வைத்தியத்தைக் ம்பினாள். சைக்கிளுக்கு ரயர் மாற்றவில்லையா
(63)

Page 84
எனக் கேட்டபோது மௌனம் சாதித்தார்.
தவணை விடுமுறைக்கு ஒரு வாரம் சபையைக் கூட்டினார். ஏற முற்றிச் சாம்பல் பேசி நிற்கும் கறுத்தக் கொழும்பான் காய்க தாவூது மாஸ்டர் எதையும் சாதிக்கக் கூடிய காலையில் மாங்காய்களைப் பறிப்பதென முடி அழைத்து ஏலத்தில் மாங்காய்கள் அனைத் ை
முதல் கூட்டத்தின்போது கிண்டல் பேசி கைகளைப் பிடித்துக் கொண்டு "மாஸ்டர், நீங்கள் மன்னிச்சுக் கொள்ள வேணும்” என்
"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. அ இல்ல வளவுக்கு வேலி கட்டும்போது நீங்க
செவ்வாய்க்கிழமை பாடசாலை விட் பறிப்பதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கத் ( இடத்தைத் துப்பரவு செய்தார். காய்களைக் சேகரித்துக் கொண்டார்.
நாளை அறுவடைக்காகக் காத்திருக்கும் பார்த்தபோது அருகில் சுலைமான் நின்று ெ
"நீங்கள் அண்டைக்கு கொடுத்த இரு தரட்டுமா என்டு வாப்பா கேட்டு வரச் சொன்
"இல்லை, வேணாம். இந்த மாங்காய் சேரோட பிரசன்டாம் என்டு போய்ச் சொல்லு மறுபடியும் மாமரங்களை வாஞ்சையோடு பா
மூன்றாவது மரத்தில் இருந்து பொது விழுந்தன. சுலைமான் ஓடிச் சென்று கைகெ பிடித்த காய்களாக இருக்கும். அதுதான் பழங்களையும் நாளைய ஏலத்தில் சேர்த்து
"சுலைமான் அதைக் கொண்டுபோய் உ திரும்பியபோது, பாடசாலை வாசலில் ஆள்
"மாஸ்டர், பெண்சாதிக்குச் சுகமில்லை
தாவூது சுலைமானை அழைத்தார். இன் இருந்து எல்லா வேலைகளையும் பார்த்துக்கொ சொருகிக் கொண்டு ஊர் நோக்கிப் புறப்பட்ட நெஞ்சில் கரகரவென இழுப்பு, மூச்சுவிடக் முதுகுத்தண்டில் தலையணையை வைத்து, த தாவூது தாமதிக்கவில்லை. பன்பையை இற கொண்டு டாக்டரை அழைத்துவர ஓடினார்.
டாக்டருக்குச் சேதி சொல்லிவிட்டு வீட்டு
(64)

இருக்கும் போது பாடசாலை அபிவிருத்திச் - நிறம் திரண்டு குலை குலையாகக் கதை ளைப் பெற்றார் ஆச்சரியத்துடன் பார்த்தனர். பவர் எனப் பேசிக்கொண்டனர். புதன்கிழமை உவாயிற்று. அன்றைய தினமே வியாபாரிகளை தயும் விற்று விடுவதெனத் தீர்மானித்தார்கள்.
ய தம்பி லெப்பை அருகில் வந்து மாஸ்டரின் நான் பகிடியாக ஏதோ சொல்லிட்டேன். றார்.
தெல்லாம் நான் மனிதில வைக்கிற ஆள் ளெல்லாம் வந்து உதவி செய்ய வேணும்.''
டதுமே, அடுத்த நாள் மாங்காய்களைப் தொடங்கி விட்டார். மாமரத்தைச் சூழவுள்ள 5 குவிப்பதற்கு வசதியாக சாக்குகளையும்
ம் மாமரங்களை வாஞ்சையுடன் அண்ணாந்து காண்டிருந்தான்.
நநூறு ரூபாய்க்கும் வரால் மீன் கருவாடு "னாங்க”
களைப் பாதுகாத்துத் தந்ததுக்காக அது பு'' என்று மகிழ்ச்சியோடு சொன்ன தாவூது, சர்த்தார்.
த்து பொத்தென்று இரண்டு மாம்பழங்கள் காள்ளாமல் அள்ளி வந்தான். முதற் பூவில் - வேளைக்கே பழுத்து விட்டன. இந்தப் விடலாம்.
உள்ளே வை” என்று கட்டளையிட்டு விட்டுத்
அரவம் கேட்டது.
யாம், உங்களை அவசரமாக வரட்டாம்”
றைக்கும் நாளைக்கும் வாப்பாவையே காவல் கள்ளச் சொன்னார். பன் பையைச் சைக்கிளில் டார். மனைவிக்குத் தொய்வு கூடி இருந்தது. - கஷ்டப்பட்டாள். பாயில் படுத்தவண்ணம் கலையைத் தாழ்த்தி மூச்சுக்காக ஏங்கினாள். க்கி வைத்துவிட்டு, சைக்கிளைத் தள்ளிக்
க்குத் திரும்பி, சைக்கிளை வேலியோரத்தில்
- கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 85
உள்ளே நுழைந்தவரை மகன் மாம்பழக் 6 சாறாக மாம்பழத் துண்டுகள், இவனுக் பார்த்தவருக்கு நிலைமை புரிந்தது. அங் தாவூதுக்கு நெஞ்சில் பொறி தட்டியது.
''உள்ளே வை” என்று சுலைமான் கொண்டு மாம்பழத்தைப் பன் பையினுள்
என்ன அநீதி இது?
"கதீஜா'' என்று நாலு வீடுகளுக்குக் கத்தினார் தாவூது.
கணவரின் கடூரமான அழைப்பைக் 6 பார்த்தாள் கதீஜா.
மகனின் வாய்க்குள் விரலைவிட் கையிலிருந்த மாம்பழத்தையும் பறித்துத்
தான் கொடுத்த சத்தியம் மீறப்பட்டு தம்பி லெப்பையும் இன்னும் சிலரும் தன் பேசுவதாகக் காதுகளுக்குள் இரைச்சல்
அல்லிக்காட்டு மக்களுக்கும் பாடச் விட்டதாக உணர்ந்தார் அவர்.
நெற்றிப் பொட்டில் பொறி கலங்க, 6 மெதுவாகத் தடுமாற, நெஞ்சுக் கூட்டுக்கு வியாபித்தது.
அல்லிக்காட்டுக்குச் செய்தி கிடைக்
கல்வி அமைச்சினால் ஆசிரியர்க
சிறுகதைப் போட்டியில் இர
சூர்மதி -

கையோடு வரவேற்றான். வாய்க்குள்ளும் மஞ்சள் கு மாம்பழம்? சந்தேகத்தோடு பன் பையைப் கேயும் ஒரு கறுத்தக் கொழும்பான் மாம்பழம்.
னிடம் சொன்னதை அவன் தவறாகப் புரிந்து
வைத்து விட்டானா?
கேட்கும்படியாக தன்னையறியாமல் ஆவேசமாகக்
கட்டு அதிர்ச்சியடைந்தவளாகத் தலை நிமிர்ந்து
டு மாம்பழச் சதையைத் தோண்டி எடுத்து,
தூர வீசி எறிந்தார் அவர்.
இப் போனதாகக் கேவலப்பட்டுப் போனார் அவர். 'னைச் சுற்றிப் பம்பரம் ஆடிக் கொண்டே கேலி
கேட்டது.
:ாலைக்கும் தான் மாபெரும் துரோகம் செய்து
கையைத் தலைக்கு முட்டுக்கொடுத்த வண்ணம் தள் புது வலி ஒன்று தோன்றி உடல் பூராக
க்க நேரமாகலாம்.
"ளுக்கென நடத்தப்பட்ட தேசிய மட்டச் ரண்டாம் பரிசு பெற்றது. (1997)
( 65 )
65

Page 86
இயங்கியல் பொருள் முதல்
ஒருவரது சிந்திக்கும் முறைமையைத் தீர்மா ஒவ்வொருவருக்கும் இயல்பாகவே அமைந்துள் உரியதன்று. தத்துவம் குறித்து ஆய்வுசெய்து தத்துவவாதிகளாகக் கருதப்படுகின்றார்கள். தமது ஏனையவர்கள் தமக்கான ஒரு தத்துவ தரிசனத் பழகிக்கொண்டுவிடுவர். ஏற்கனவே இயங்குகின்ற மீது ஆளுமை செலுத்தும்.
இத்தகைய தத்துவச் செல்நெறிகள் 2 பல்வகையினவாகத் தோன்றி வளர்ந்து அழ கொண்டிருப்பவற்றில் அவற்றின் தாக்கம் வெ இவ்வாறு பல்வகைப்பட்டிருப்பினும் அடிப்படையி அவற்றைப் பொருத்திப் பார்க்க வாய்ப்புள்ளது. மனித சமூகம் ஆகியன ஒரு பரம்பொருளின் காலந்தொட்டுப் பண்பு ரீதியில் மாற்றங்களை முதல் வாதம் எனப்படும். மற்றையது இதற்கு வாதம் எனப்படும். அது, இப்பிரபஞ்சம், உலக அமைப்பு முறைகள் என்பவை தோற்றம் பெ புதியன பிறந்து வளர்ந்து மறையும் என்கின நியதியாயுள்ளது என்று கூறும். இப்பொருள் சார், (கருத்து) தோற்றம் பெறுகிறது எனக்காட்டும்.
நிலையியல் - கருத்து முதல்வாதச் சிந் புழக்கத்தில் உள்ளது. பத்துவயதில் செ பிள்ளையொன்று இத்தனை வசதியான தொட இயங்கியிராது என்றுதான் கருதும். தொடர்ந்த செயற்பாட்டினூடாகவும் மட்டுமே இயங்கியல் வரிக்கவும் வளர்த்துச் செல்லவும் கூடுமாக இரு மார்க்சியம் உள்ளது. எமது பாடப்பரப்பு மார் முதல்வாதம் குறித்தும் இன்று அக்கறை கொண் இயங்கியல் - பொருள் முதல் வாதத்தை இல அறிமுகக் குறிப்பு அமையும்.
I. மார்க்சிய உலக நோக்கு
பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பா படைக்கும் அடிப்படை மாற்றங்களைக் கண்டுெ
(66)

வாதம்
கலாநிதி ந.இரவீந்திரன் தர்காநகர் தேசியகல்வியியல் கல்லூரி
னிக்கும் அவருக்கேயான தத்துவப்பார்வை Tளது. அது தத்துவவாதிகளுக்கு மட்டுமே
விளக்குகிறார்கள் என்பதனால் அவர்கள் - தத்துவ நிலைப்பாடு குறித்த புரிதலின்றியே 5தோடு உலகைப் பார்க்கவும் செயற்படவும் 3 தத்துவப் போக்குகள் அவர்களது நோக்கு
உலகம் பூராவிலும், காலங்கள் தோறும் ழிந்து போயுள்ளன. இன்னும் இயங்கிக் பவ்வேறு அளவுகளில் தொடரவும் கூடும். ல் இருவகைத் தத்துவப் பார்வைகளுக்குள் இந்தப் பிரபஞ்சம், உலகம், உயிரினங்கள், சிந்தனை வெளிப்பாடு. அவை தோன்றிய எப் பெறாதன. இது நிலையியல்-கருத்து நேர்மாறானது. இயங்கியல்-பொருள் முதல் ம், இயற்கை, உயிரினங்கள், மனித சமூக ற்று மாற்றங்களுக்கு உள்ளாகி அழிந்து ன்ற வகையில் எப்போதும் மாற்றங்களே ந்த புறவுலகின் பிரதிபலிப்பாகவே சிந்தனை
தனைமுறை இன்றைய உலகில் பெரிதும் ல்லிடத் தொலைபேசியுடன் நடமாடும் டர்பாடல் இல்லாமல் உலகம் ஒருபோதும் ஈடுபாட்டுடனான கற்றலின் வாயிலாகவும் - பொருள் முதல் வாதப் பார்வையை க்கும். இதனை முன்வைத்து இயங்குவதாக க்சியம் பற்றியும் இயங்கியல் - பொருள் டிருக்கிறது. அந்த வரையறைக்கு உட்பட்டு குவாகப் புரிந்து கொள்ள ஏற்றதாக இந்த
வீறார்ந்த போர்க் குணத்துடன் புதுமை காண்டிருந்தது. மூன்று நூற்றாண்டுகளுக்கு
ல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 87
மேலாகப் புதிய பிரதேசங்களை நாடிச்சென்று சுரண்டி வளர்த்த மூலதனத்துடன் ஐரோப்பிய அதன் பேறான புதிய சிந்தனை வீச்சுக் மூலதனத் திரட்டலில் முதல்நிலை வகித்த அறிவியல் பூர்வமாக விருத்தி செய்து கொ தேசிய அரசுருவாக்கத்தில் காத்திரமான பங் புரட்சிகள் வெடித்தெழுந்தன. அதன் இலக்க பிரான்சில் வலுத்தது. ஜெர்மன் தேசம் தத்
இந்திய - சீனத் தத்துவங்களை இங் ஜெர்மனியர்கள். குறிப்பாக பௌத்தம் வளர்த் ஐரோப்பிய மண்ணுக்குப் பெரும் உந்துதல் பெற்ற சங்கர அத்வைதத்தின் மாயாவா இயங்கியலைத் தத்துவசிந்தனை வயப்ப இயங்கியலைச் செழுமைப்படுத்திய போதிலு ஒரு மூலச் சிந்தனையின் பிரதிபலிப்பாக மாற்றங்களைப் பெறுவதாக விளக்கினார்.
அன்றைய தத்துவத் தேடலில் இது ! மாணவர்களாகி அந்த இயங்கியலை ஆர் வேட்கை கொண்ட இளம் கார்ல் மார்க்ச கால் மார்க்ஸ் முன்னேறிக் கொண்டிருந் பாக்கினால் முன்வைக்கப்பட்டது. மூலச்சி நிராகரிக்கும் ஃபாயர் பாக்கின் சிந்தனை மார்க்கையும் ஈர்த்தது. இந்தப் புதிய சிந் பாக்கினால் விருத்தி செய்ய முடியவில்லை இருந்ததால் பொருள் முதல்வாதம் என்ற 1
இந்தச் சிந்தனை முறையை இயங். மாற்றிப்புனைந்து இயங்கியல் பொருள் மு கார்ல் மார்க்ஸ். அத்தகைய புதிய பார்வை | அணுகித் தீர்க்கதரிசனத்துடன் தன் கருத் வரித்துக்கொண்ட ஏங்கெல்ஸ் அவரது நெ ஏங்கெல்ஸ் என்ற இக்கூட்டணி தொடர்ந் மாற்றிப் புனைந்த வரலாற்றை உலகு க
அதன் தொடக்கமாக 1848 இல் தொ! மூல நூலான “கம்யூனிஸ்ட் அறிக்கை" 6 பிரெடரிக் ஏங்கெல்ஸ் என்ற இந்தக் கூட்டம் தனது இன்னுமொரு ஈகோ ஏங்கெல்ஸ்
அதியுயர் நட்புணர்வுக்கு மார்க்ஸ் ஏங்கெல் ஆழ்ந்த காதல் நேசிப்புக்கு மார்க்ஸ் - பங்களிப்புக்குத் தோன்றாத் துணையாக அ
மார்க்சின் தத்துவ வீச்சு மேலும் செ நாடு கடத்தப்பட்டதால் அவர் பிரான்சில்
முடியாமால் இறுதியாக மரணிக்கும் வரை
கூர்மதி

று பல நாடுகளைக் குடியேற்றப் பகுதிகளாக்கிச் முதலாளித்துவம் புதிய சமூக முறைமையையும் ககளையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. பிரித்தானியா பொருளாதாரச் சிந்தனைகளை ண்டிருந்தது. மகத்தான பிரெஞ்சுப் புரட்சியூடாக கைச் செலுத்திய பிரான்சில் தொழிலாளிவர்க்கப் ாகச் சோஷலிசஸம் பற்றிய ஆய்வுத் தேடல்கள் ந்துவத் தேடலின் மையமாகத் திகழ்ந்தது.
கே வந்து தேடிக்கற்றுத் தமக்குரியனவாக்கினர் த இயங்கியல் சிந்தனை மாறிக் கொண்டிருக்கும் அளித்தது. பௌத்தத் தாக்கத்துடன் விருத்தி (தமும் இணைந்து கொண்டது. இத்தகைய ட்டதாக விருத்தி செய்தவர் ஹெகல். இவர் லும் ஒரு கருத்து முதல்வாதியாகவே இருந்தார். வே பிரபஞ்சம் தோற்றம் பெற்று இயங்கியல்
புதிய வீச்சாக அமைந்தது. பலரும் ஹெகலின் வத்துடன் கற்றனர். தத்துவத் தேடலில் தீராத ம் ஹெகலின் மாணவரானார். அத்திசையில் தபோது வேறொரு சிந்தனைமுறை ஃபாயர் ந்தனை முதன்மையானது எனும் ஹெகலை -பல இளைஞர்களைக் கவர்ந்ததைப் போல தனையைப் பொருள் முதல்வாதமாக ஃபாயர் F. அப்போது வெறும் இயந்திர வகைப்பட்டதாக சொல் மீதே ஃபாயர் பாக் வெறுப்புற்றிருந்தார்.
கியல் பார்வையோடு புதிய வகைக்குரியதாக தல்வாத உலகநோக்காக வளர்த்து எடுத்தார் வீச்சுடன் தொழிலாளி வர்க்கப் போராட்டங்களை மதுக்களை முன்வைத்தார். இதே பார்வையை மருங்கிய சகா ஆனார். இறுதிவரை மார்க்ஸ் - து பல புதிய கண்டுபிடிப்புகளால் உலகை ன்டது.
ழிலாளர் உலகு தனதான சிந்தனை முறையின் என்பதை எழுதும் பணியை கார்ல் மார்க்ஸ் - ணியிடம் வழங்கியது. மார்க்சிய சிந்தனையில் என மார்க்ஸ் வலியுறுத்தியுள்ளார். உலகின் மஸ் உறவு முதன்மை உதாரணம் (அவ்வாறே ஜென்னி உறவு அமைந்திருந்தது. மார்க்சின் புமைந்தவர் அவரது காதல் மனைவி ஜென்னி)
ழுமைப்படும் வகையில் ஜெர்மனியில் இருந்து | வாழ நேர்ந்தது. அங்கும் நீடித்து இருக்க பிரித்தானியாவில் வாழ்ந்ததும் அமைந்தமை

Page 88
அவதானிப்புக்குரியது. தான் வரித்த தத்துவத்ன ஆய்வுக்கும் உரிய நாடுகளிலேயே பிரயோகி மார்க்சியத்தை வழங்க மார்க்சிற்கு இயலுமாயிற் அந்தப் புதிய சிந்தனை வெளிப்படக் காரண
சிந்தனை இந்தப் பொருள் சார்ந் உருவாக்கவில்லை. புற உலகும் பொருளுற்ப, மூளையெனும் பொருளில் வடிவம் பெற்று வெள முந்தியதல்ல - பொருளின் வெளிப்பாடே க எழுத்துக்கள் பூராவிலும் மார்க்ஸ் வெளிப்படுத் நூல் எதையும் எழுதவில்லை. உலகை மாற்றுவ அவரது இயங்கியல் - பொருள் முதல்வாத 6
இயங்கியல் செல் நெறி செயற் படு இயந்திரவகைப்பட்ட வரட்டுப் பொருள் முதல்வ சரியாகப் புரிந்து கொள்ளும் வகையிலான டெ முடியும். அந்தவகையில் இயங்கியலை வி இல்லையெனில் சிந்தனை அல்லது கருத்து பெ வாழ்முறைமீது தாக்கம் செலுத்தும் வகையில் கொள்ளாதவர்களாவோம். மார்க்சியம் என்ற க எமது பொருளுற்பத்தி முறையை மாற்றியமை மக்களால் கையேற்கப்படும் போது அதுவே ஒரு பொருளுற் பத் தி முறையை மாற்றியை உதாரணமாகியுள்ளன.
இத்தகைய இயங்கியலில் கருத்து ( மோதுகைக்கு உள்ளாகி உருவாகும் கூடுக்க மறுக்கப்படுவதாக அமையும் மாற்றப் போக் திரும்புவதில்லை, எதிர்க்கருத்து ஏற்படுத்திய த சுழல் ஏணியில் மேல்தளம் ஒன்றை அடைந்த மாற்றம் முதலில் அளவு மாற்றங்களாக : பரிணமிக்கும். முரண்பட்ட எதிரானவை ஓரிடத் இந்த இயங்கியலின் அடிப்படை விதியாகும். முடியும்.
II. கருத்து x எதிர்க்கருத்து = கூட்டுக்க
இன்றைய எமது பாடப்பரப்பு மற்றும் கல் தேசியம், கல்விக்கோட்பாட்டு மாற்றங்கள் எ இயங்கியல் விதிகளை விளங்கிக்கொள்ள முயற் முறையின் வெளிப்பாடு தேசியம். முன்னதாக வந்தடைந்தபோது அங்கு தேசியம் வடிவம் போப்பாண்டவருக்கு உட்பட்ட ஐரோப்பா ஒருமு பொருளுற்பத்தியை வரித்தபோது இழந்து பிரி ருஷ்யா எனத் தனித்தனித் தேசங்களாக பிளவு விடுவிக்கப்பட்டன. அதுவரை மதம் அல் முடிவாக்கப்பட்டுத் தனிமனித மனச்சாட்சி சா
(68
68

த சோஷலிஸத் தேடலுக்கும், பொருளாதார த்து முழுமைப்பட்ட சிந்தனை வடிவமாக 31. இல்லையெனில் வெவ்வேறு வடிவங்களில் மாயிருக்கும்.
த உலகையோ வாழ் முறையையோ த்தி சார்ந்த வாழ்முறையும் மனித உடலின் ப்படுவதே சிந்தனை. கருத்துப் பொருளுக்கு கருத்து என்னும் உலக நோக்கைத் தன் தினார். தனியே அவர் இத்தத்துவம் பற்றிய தற்கான அவரது படைப்புக்களின் வாயிலாக நோக்கு வடித்தெடுக்கப்படுவது வழக்கம்.
மாறினை விளக்குவதன் வாயிலாக ாதமாக அல்லாது நிகழ்வுப் போக்குகளைச் பாருள் முதல்வாதத்தை எம்மால் கண்டறிய எங்கிக் கொள்ளுதல் அவசியமாகின்றது. பாருளின் மீது அல்லது சமூக பொருளாதார
முதன்மை பெறும் இடங்களை விளங்கிக் கருத்து வாழ்முறை மீது தாக்கம் செலுத்தி மக்கும். இத்தகையை புரட்சிகரக் கருத்து 5 பொருளியற் சக்தியாகி வீறுடன் இயங்கிப் மக் கும் என் பதற் குப் பல நாடுகள்
ஒன்றுக்கு மாறாக எழும் எதிர்க்கருத்து கருத்து முந்தியதை எதிர் மறுத்தது எதிர் ககைக் காட்டுவது. பழையது அப்படியே 5ாக்குறவு உள்வாங்கப்பட்ட புதிய வளர்ச்சி 5 வளர்ச்சியை பெற்றிருக்கும். இத்தகைய அமைந்து இறுதியில் பண்பு மாற்றமாகப் து ஐக்கியமாய் அமைந்து பெறும் மாற்றம் - இவை குறித்து இனி விரிவாக அலச
கருத்து
வியியலாளர் கற்கைப்புலம் சார்ந்தனவான ன்பவற்றை உதாரணங்களாகக் கொண்டு 3சிப்போம். முதலாளித்துவப் பொருளுற்பத்தி 5 ஐரோப்பா முதலாளித்துவ மாற்றத்தை பெற்றது. கிறிஸ்தவ உலகு என்பதாகப் மகப்பட்டிருந்த தன்மையை முதலாளித்துவ ரித்தானியா, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, -ண்டது. மதப்பிடியிலிருந்து அரசும் கல்வியும் னைத்திலும் ஆளுகை செலுத்தியமை
ர்ந்த விவகாரமாக்கப்பட்டது.
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 89
பிரித்தானியா முதலாளித்துவ மாற்றத்து ஜனநாயகத்தை வந்தடைந்த பின்னரே பிர மாற்றத்துக்கான சிந்தனை வடிவம் ரூே வெளிப்பட்டது. தேசிய வடிவம் பெற்ற ஜனந வெளிப்படுத்திய ரூஷோ மதக் கல்வி பெறு கவனிப்புக்குரியது.
மதமே அனைத்தும் என்பது முன்னர் அரசையும் கல்வியையும் விடுவிப்ப முன்வைக்கப்படுகின்றது. இந்த மோதலின் மடிகிறது. மதசார்பற்ற தேசிய அரசுக்க முதன்மைப்படுவதான மத நிறுவன கல்வி உலகு சார்ந்த தேசத்தைக் கட்டியெழுப் கொண்டதாக அமைந்தது.
இவ்வாறு மதத்தை எதிர் நிலைப்பு முக்கியத்துவம் அனைத்தையும் மொழிக்கு நிலவுடமையாளரைப் பிரதிநிதித்துவப்படுத்த கருதப்பட்டார். பூவுலகைப் படைத்துக் காத் பொறுத்தவரை எல்லாம் என்று ஆக முடிவது தொடர்புடையது.
நிலம் முதன்மையிழந்து தொழிற்க மூலதனத்தைப் பெறத்தக்க முதலாளித்து கடவுளைவிட பணமே எல்லாமுமாக ஆகி. அவசியப்பட்டபோது சந்தைத் தொடர்பாட ஒரே பொதுமொழியைக் கொண்டுள்ள தெ வடிவமைக்க அவசியமேற்பட்ட போது தேசிய
இதன்போது மதச் சிந்தனை அதன் முற்றாக அற்றுப் போய்விடவில்லை. ரூஷே மதக்கல்வியை வலியுறுத்துவதிலிருந்து இ வெளிப்படுமாறினைக் கல்விச் சிந்தனை வ
தேசியம் என்ற கருத்து மதத்துக்கு 6 பொறுத்தவரை மதமும் தேசியமும் இலை நிலவிவந்தது. குடியேற்றவாதத்தை தகர்த்து வேண்டியிருந்த எமது தேசிய எழுச்சியில் எதிராக எமது பண்பாட்டைப் பாதுகாப்பது இருந்தது. அந்தவகையில் அரசியல் தேக் தேசிய எழுச்சி இங்கு முதன்மை பெற்றிருந்த தர்மபாலா, தயானந்த சரஸ்வதி, ராஜா ரா இவ்வகையில் தொடர்புபடுத்திக் காணலாம். பாகிஸ்தான் பிறக்கவேண்டியிருந்தது. என் மகுடம் சூட்டினாலும் அதனிடமுள்ள இந்த வெளிப்படையாகவே பௌத்த தேசமாக
இருக்கவில்லை.
கூர்மதி.

க்கு ஏற்றதாக மத சுதந்திரத்துடன் பாராளுமன்ற பன்சில் 1789 இன் புரட்சி வெடித்தது. இந்த ஷா உட்பட பல சிந்தனையாளர்களிடம் (யகப் பண்புமிக்க புதிய கல்விச்சிந்தனையை ) இடம் குறித்துக் கொண்டிருந்த நிலைப்பாடு
நிலவியிருந்த கருத்து. அதன் பிடியிலிருந்து தாக தேசியம் எனும் எதிர்க்கருத் து பழைய உலகு தகர்ந்து நொருங்கி வீழ்ந்து கான தேசியக் கல்வி ஆன்ம ஈடேற்றம் 1 முறைக்கு முற்றிலும் மாறாக லௌதிக புவதற்கு ஏற்ற கல்விக் கோட்பாடுகளைக்
படுத்திய தேசியம் முன்னர் மதம் பெற்ற 5 வழங்கியது. நிலப்பிரபுத்துவ சமூகத்தில் திய அரசர் கடவுளின் பூவுலக வடிவமாகக் து அழிக்கும் கடவுள் நிலப்பிரபுத்துவத்தைப் நிலம் பிரதான உற்பத்தி சாதனம் என்பதோடு
Fாலைகளை உருவாக்க ஆற்றல் பெற்ற வப் பொருளுற்பத்தி சாத்தியமாகும் போது க் கொண்டது. பணம் திரட்ட ஏற்ற சந்தை லுக்கு உரியதாக மொழி அவசியப்பட்டது. தாடர்ச்சியான நிலப்பரப்பை ஒரு தேசமாக பம் புதிய கருத்து வடிவமாக மேற்கிளம்பியது.
பழைய வல்லாதிக்கத்தை இழந்ததேயன்றி T தனது கல்விக் கோட்பாட்டில் எமிலிக்கான ந்தக் கூட்டுக்கருத்து அவரிடம் முளைவிட்டு ரலாறு காட்டியிருந்தது.
எதிர்க்கருத்தாக எம்மிடம் இல்லை. எம்மைப் னந்த கூட்டுக்கருத்தாகவே ஆரம்பம் முதல் துச் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுக்க ஏகாதிபத்தியப் பண்பாட்டு ஆக்கிரமிப்புக்கு | தேசிய எழுச்சியின் அவசியப் பணியாக சிய எழுச்சிக்கு முந்தியதாகப் பண்பாட்டுத் து. ஆறுமுகநாவலர், சித்திலெப்பை, அநாகரிக ம்மோகன்ராய், விவேகானந்தர் போன்றோரை அரசியல் தேசியத்திலும் முஸ்லீம் தேசமாகப் னதான் மதச்சார்பற்ற நாடு என இந்தியா பத் தேசியம் இரகசியமானதல்ல. இலங்கை ப் பிரகடனப்படுத்துவதற்கும் தயக்கங்கள்
69

Page 90
III. எதிர் மறுப்பின் எதிர்மறுப்பு
இவ்வகையில் ஒரு கருத்து அல்லது எதிர்மறுத்து அது வந்திருக்குமோ, அந்த மு அதுவும் எதிர்மறுக்கப்படும் என்பதையே இங் ஆகிய தேசியம் எதிர் மறுக்கப்படும் வகையில்
இதனை இலங்கைத் தேசியம், அதன் எ எதிர்மறுப்பை எதிர்மறுத்து அமையத்தக்க புதி கூடிய இனங்களின் சுயநிர்ணயம் என்பதில் !
பிரித்தானியராட்சிக் காலத்தில் இல எழுப்பப்பட்டபோது இனத்தேசிய உணர்வுக குரல்களோ எழுந்ததில்லை. வேறொரு காரண சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்ததுண்டு தந்திரப்படி சட்டசபையில் விகிதாசாரத்துக்கும் ஏற்படுத்தியிருந்தது. அதேவேளை நிர்வாக கையளிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் இலங்கை முழுமையிலும் தமது நலன் ப இனத்தேசியம் சார்ந்த குரல்கள் எழவில்லை. இலங்கைத் தேசிய உணர்வே மேலோங்கிய பெரியதம்பிப்பிள்ளை போன்றோரது பாடல்களில் வளப்பெருமைகளை வெளிப்படுத்தும் கவிதை
சுதந்திர இலங்கையில் சிங்கள ம கண்டுகொள்ளாமல் சிங்கள இனத்தேசியம் மு உரிமைகளும் தமிழர் நலனும் பாதிப்புக்குள்ளா வரலாயிற்று. முஸ்லிம் மக்கள் சிங்கள - த இவ்வாறு இலங்கைத் தேசியத்துக்கு மாறாக என்பவற்றிற்குரித்தான இனத்தேசியங்கள் 6 வாழ்வாதாரங்களையும் பண்பாட்டையும் ஆத் இனத்தேசியங்களை எதிர் மறுத்துப் புதிய வடி கட்டியெழுப்பப்பட வேண்டும் என்ற உணர்வு மே இனத்தேசியங்களுக்குமான நியாயங்களும் தே ஒவ்வொன்றும் ஏனையவை மீது பாதகம் வின் இப்பகை நீங்க ஏற்ற பகைமறப்புக் காலத்து வாயிலாகப் புதிய ஐக்கிய உணர்வை வள மத்தியில் எழுச்சி பெற்று வருவதனைக் கான
இவ்வாறான எதிர்மறுப்பை எதிர்மறுக்குப் உரிமை அடிப்படையில் ஒவ்வொருவரது நல இலங்கைத் தேசியம் மட்டுமே இந்த எதிர்பார்ப்ல ஒற்றையாட்சி முறையுடையதான பழைய இ பெற்ற வளர்ச்சி நிலையாக அது அமையும்.
ஒரு ஐரோப்பாவைத் தகர்த்து உருள் எதிர்மறுக்கப்பட்டு மீண்டும் ஐரோப்பியர் தே
(70)

நிலை எதிர் மறுக்கப்படும்போது எதனை ந்திய நிலை திரும்ப வரத்தக்க வகையில் பகு காண்கின்றோம். மதத்தின் எதிர்மறுப்பு மதக்கூறுகள் புதிய வடிவில் வரமுடிகின்றது.
திர்மறுப்பாக எழுச்சிபெறும் இனத்தேசியம், ய இலங்கைத் தேசியத்தினுள் வந்தமையக் இருந்தும் புரிந்து கொள்ள முடியும்.
ங்கையின் சுதந்திரம் பற்றிய குரல்கள் ளோ அதற்கு ஏற்றதான சமஷ்டி பற்றிய த்தால் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா B. பிரித்தானியராட்சி தனது பிரித்தாளும் மேற்பட்டதாக சிங்களப் பிரதிநிதித்துவத்தை அதிகாரத்தை யாழ்ப்பாணத் தமிழரிடம் கல்விச் சாலைகளைப் பெருகியிருந்தது. பரவியிருந்த மையினால் தமிழரிடமிருந்து
எமது கலை இலக்கிய வெளிப்பாடுகளில் விருந்தது. சோமசுந்தரப்புலவர், புலவர்மணி ல் வெளிப்படும் இலங்கை மணித்திருநாட்டின் 5களில் இவற்றைக் காணமுடியும்.
மக்களிடம் இலங்கைத் தேசியத்தைக் மனைப்பாகி மலையக மக்களது அடிப்படை கியபோது, தமிழினத் தேசியம் முன்னணிக்கு தமிழ் இனவாதங்களால் பாதிப்படைந்தனர். சிங்கள - தமிழ் - முஸ்லிம் - மலையகம் திர்மறுப்பாகச் செயற்படுவதானது எமது ம பலத்தையும் அழிப்பது கண்டு இன்று வில் புத்தூக்கமுள்ள இலங்கைத் தேசியம் மலோங்கி வருவதைக் காணலாம். ஒவ்வொரு வைப்பாடுகளும் உணரப்படும் அதேவேளை, ௗத்ததான பகையுணர்வும் வளர்ந்துள்ளது. து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது பார்க்கும் தேவை இன்று கல்வியியலாளர் னமுடிகின்றது.
ம் புதிய சூழலில் இனங்களின் சுயநிர்ணய னும் பேணப்படும் வாய்ப்பு உள்ள புதிய பெ நிறைவு செய்ய முடியும். அந்தவகையில் லங்கைத் தேசியமல்ல, புதிய தளமாற்றம்
வாகிய பல தேசங்கள் என்பது இன்று ச எல்லைகள் கடந்து ஒன்றிணைவதைக்
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 91
கண்டுவருகின்றோம். ஒரே நாணயம், விசா இ ஐரோப்பிய நாடுகள் பிராந்திய ஒருமைப்பாட நாடுகளும் இதேபோல விசா அற்ற நிலை என்ற குரல் ஏற்கனவே சார்க் நாடுகள் | தேசியம் கடந்த பிராந்திய ஒருமைப்பாடே ச இனத்தேசியங்கள் கடந்து இலங்கையர் அவநம்பிக்கைக்கு அவசியம் என்ன?
IV. சுழல் ஏணி ஏற்றம்
பிராந்திய ஒருமைப்பாடு ஐரோப்பிய நிலவியிருந்தது. பாளி, சமஸ்கிருதம் ே பிராந்தியங்களைத் தொடர்புபடுத்தி வை, மொழியாலும் அரேபிய நாடுகள் அரபு மொ! ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டபோதிலும் ம. பிளவின்றி எங்கும் சென்றுவர முடிந்தது. இயலுமாயிருந்தது.
தேசியம் பிளவை ஏற்படுத்தியபோது 2 வேண்டும். தேசம் தனது குடிமக்களுக்கு வழ பிராந்தியப் பரப்பில் இருக்கவில்லை. இந்த பிராந்திய இணைவே அடுத்த வளர்ச்சி நில்
ஆக எதிர்மறுப்பு எதிர் மறுக்கப்பட் முந்தியதைவிட உயர்தளத்தில் மேலான | அந்தவகையில் இயக்கம் சுழல் ஏணிமுறை
எமது உடைநாகரிக வளர்ச்சியில் எ ஏற்றம் சாத்தியப்படுவதனை அவதானிக்கல் தொழதொழாக் காற்சட்டை இருந்தது. அது ( முழுதாய் இறுக்கிப் பிடிக்கும் நாகரிகம் முழங்காலின் கீழே தொழதொழாவும் மே பின்னும் உள்ள மாற்றங்கள் எதிர் மறுப்பின்
கல்விக்கோட்பாட்டில் ஏற்பட்ட மாற்ற காணலாம். மூன்று தசாப்தங்களுக்கு முன் சான்று வழங்கும் அமைப்பாக இருந்தது. அ நிபுணர்களை வழங்கும் தொழில்சார் கல் விழுமியங்களிலும் அறிவிலும் வீழ்ச்சியைத் தூண்கள் பற்றி ஐ.நா.சபையின் கல்வியாய்வு
எதிர்மறுத்துப் புதிய தளவிரிவாக்கத்துப் பேசப்பட்டிருப்பதைக் காண்கிறோம்.
ஆபிரிக்க பிராந்தியமொன்றின் தாயொ உலகெங்கும் பரவி இன்று பல்வேறு பிள ஒருதாய் மக்கள் என்பதை எதிர் மறுத்து பேசியும், வர்க்கம்-இனம்-நிறம்-தேசம்-மெ
கூர்மதி -

ன்றி பிரவேசிக்க அனுமதி என்கின்ற வகையில் நடைப் பெற்று வருகின்றன. எமது தெற்காசிய யையும் ஒரே நாணயத்தையும் பெறவேண்டும் மத்தியில் தோன்றிவிட்டது. அந்த வகையில் சத்தியமாகும். காலம் கனிந்துவர முடியுமாயின் எனும் பொது உணர்வு சிந்திக்காது என்ற
[ வருகைக்கு முன் வேறொரு வடிவத்தில் பான்ற மொழிகள் அப்போது தெற்காசியப் த்திருந்தன. கிழக்கு ஆசிய நாடுகள் சீன ழியாலும் தொடர்புபட்டிருந்தன. மன்னர்களிடம் க்கள் இன்றைய தேசிய உணர்வு சார்ந்த குறிப்பாக வணிகம் இவ்வகையில் நீடிக்க
புது ஒரு வளர்ச்சி நிலை என்பது கவனிக்கப்பட ங்கும் குடியுரிமை முந்திய தேசிய எல்லையற்ற வளர்ச்சியான அம்சங்கள் இணைந்தபடியான லையாயும் அமைய இயலும். -டு புதிய நிலை வந்தடையப்படும் போது புதிய வளர்ச்சி ஏற்பட்டிருப்பதைக் காணலாம். Bயில் வளர்ந்து செல்வதாய் அமைகிறது.
எதிர் மறுப்பின் எதிர் மறுப்போடு சுழல் ஏணி மாம். நாற்பது வருடங்களின் முன் முழுதாகத் எதிர்மறுக்கப்பட்டு புட்டு குழல் காற்சட்டையாய் வந்தது. அந்த எதிர்மறுப்பு மறுக்கப்பட்டு லே இறுக்கமுமாக பெல்பொட்டம் வந்தது. எதிர்மறுப்பை உணர்த்துவதாயே அமைந்தன.
சங்களிலும் இந்தச் சுழல் ஏணி ஏற்றத்தைக் கல்வியானது அறிவை வழங்கி மதிப்பிட்டுச் புதை எதிர் மறுத்தபோது தொழில் உலகுக்கு மவிக் கோட்பாடு முன்வைக்கப்பட்டது. அது 5 தருவதாக உணரப்பட்டு கல்வியின் நான்கு முன்மொழிவை வெளியிட்டபோது எதிர்மறுப்பை உன் முழுமைப் பரிமாணக் கல்வி பற்றிப்
நத்தியின் அடியொற்றி வந்த மனிதக் கூட்டமே எவுகளுடன் மோதியபடியுள்ளது. எல்லோரும் இன்று ஆணென்றும் பெண்ணென்றும், சாதி மாழி என்ற பேதங்களோடு முட்டி மோதி

Page 92
அழிவாயுதங்கள் வளர்த்துப் பூவுலகை நாசம் செ எதிர் மறுக்கப்பட்டுச் சகோதரர் என்பதாவோம். பேணுவதற்காக இதுவரை வளர்த்த பண்பாடும் உயிர்வாழத்தகுதியற்றதாகிவிடும். அத்தகைய பிரிவான மனிதரிடம் நல்ல வேளையாக மனித இயற்கையைப் பேணுதலும் ஆகிய சிந்தனைச்
இரண்டாயிரம் ஆண்டுகளின் முன்னே பேதங்களைத் தகர்த்துத் தமிழ் அரசுகள் தோற் கேளிர்” என்ற முழக்கம் எழுந்தது. மிகச் சிறி
முடங்கிவிடாமல், அனைத்து இனக்குழுக்கள் ஆகவேண்டுமென்ற விருப்பம் அது. ஒரு இன ( பந்த சகோதரத்துவத்தை எதிர் மறுத்து அடுத்த தூண்டும் சிந்தனை இது. யதார்த்தத்திலோ அது மேற்பட்ட நூற்றாண்டுகளாக வெவ்வேறு வடிவக் ஆக்கிரமிப்புத் தொடர்கிறது. உலகு ஒரு உணர் போது ஆக்கிரமிப்போடு இணைந்திருந்ததாகிய எதிர் மறுப்பு மறுக்கப்பட்டு முழு மனித குலத்துச் இனக்குழுவுக்குள் முடங்கியிருந்த இரத்த பந்தம் பிரபஞ்சமளவிய சகல சீவராசிகளையும் - இயற சகோதரத்துவமாய் அது அமையும். "காக்கைக்
V. அளவு மாற்றமும் பண்பு மாற்றமும்
இன்னமும் ஆக்கிரமிப்புணர்வு கொண்டதா இனத்தேசியங்களைக் கடந்த ஐக்கியம் சாத்தி உண்டு. நான்கு தசாப்தங்களுக்கு முன்னே சி
மக்கள் பொதுப் பிரச்சினைகளுக்காக ஐக்கிய அன்யோன்யமாக வாழ்ந்தார்கள் என்பதைப் பலர் உள்ளனர். சுபைர் இளங்கீரன் என்ற யாழ்ப்பா ஓரிடத்தில் வாழ்ந்த சிங்கள - தமிழ் - முஸ் ஒன்றுபட்ட வாழ்வுப் போராட்டத்தை எழுத வெளிப்பாடாகவே அது அமைந்தது. இனவாத பிரச்சினைகளுக்காக ஐக்கியப்பட்டுப் போராடிப் போராடவேண்டும் என்றார்கள் பிரிவினை உ வளர்ந்தபோது, ஒன்றித்த வாழ்வனுபவம் மறந் படைப்பில் காட்டப்பட்ட ஒற்றுமையே கற்பனை
அதுவொன்றும் கற்பனையல்ல, இத்தனை காட்டிய உதாரணங்கள் ஏராளமாய் வெளிப்பட் குரோதங்களால் பேதப்பட்ட பொதுவுணர்வு இனிச் 8 எழச் சாத்தியமுண்டு. இன்று சிறுகச் சிறுக பலவீனமாக உள்ளது. இது பேரலையாக எழுச்சிப் ஒவ்வோர் இனத்தவரும் சுதந்திரமும் சமத்துவ எக்காளமும் சாத்தியமா?
அளவு மாற்றம் பண்பு மாற்றமாகப் பரிண சாத்தியம் எனக் காட்டுகிறது. இன்று ஈன சு
(72)
* கர்

ய்து கொண்டிருக்கிறோம். இந்த எதிர்மறுப்பு இல்லையேல் மனிதர் என்பதும் மனிதம்
• நாசமாவது மட்டுமன்றிப் பூமிப்பந்தே நிலைக்கு வளர்ந்துள்ள ஒரு விலங்கினப் த இனம் முழுதாய் ஓர் குலம் என்பதும் களும் விருத்தியாகியுள்ளன.
பிளவுபட்டிருந்த பல்வேறு இனக்குழுப் றம் பெற்றபோது “யாதும் ஊரே, யாவரும் ய நிலப்பகுதிக்குள் தனி இனக்குழுவாக -ம் ஓரெல்லைக்குள் இரத்த பந்தங்கள் தழுவுக்குள் இருந்த இறுக்கமான இரத்த அடுத்த இனக்குழுக்களை உறவுகொள்ளத் வ ஆக்கிரமிப்பாக இருந்தது. இருபதுக்கும் - குறுகிய நலனுக்குள் உறவு கொள்ளும் வு நிலைக்கு (மனிதத்துவத்துக்கு) மாறும் பிணைப்பாக்கும் யாவரும் கேளிர் எனும் க்குள்ளும் சகோதரத்துவம் சாத்தியமாகும். மல்ல, சுழல் ஏணி ஏற்றத்தில் வந்தடைந்த ற்கையம்சங்கள் அனைத்தையும் தழுவிய 5 குருவி எங்கள் ஜாதி”
க ஒற்றைத் தேசியம் பேசப்படும் சூழலில் பமாக முடியுமா என்ற சந்தேகம் பலரிடம் ங்கள - தமிழ் - முஸ்லிம் - மலையக பப்பட்டு போராடினார்கள். ஒரேயிடத்தில் நினைவு மீட்டிப் பார்க்க முடியாதவர்களாய் Tண முஸ்லீம் படைப்பாளி கொழும்பில் லிம் மக்களது இரத்தமும் சதையுமான முடிந்தபோது உள்ள யதார்த்தத்தின் தங்கள் மேலோங்கியபோது பொதுவான பயனில்லைத் தனித்தனி இனத்துக்காகப் ணர்வுகள் இரத்தம் சிந்தும் கட்டமாய் து போகும் காரணகாரணியாய் அந்தப்
என்றார்கள்.
| பேதங்களுக்குள்ளேயும் ஒற்றுமையைக் உன. இதனை ஏற்கிறவரிடமும் அரசியல் சாத்தியமில்லை என்ற அவநம்பிக்கைவாதம் எழும் ஒற்றுமை உணர்வுக்கான குரல் புற்று ஒரே இலங்கையர் எனும் ஐக்கியமும் நம் சகோதரத்துவமும் பெறுவோம் என்ற
மிக்கும் என்ற இயங்கியல் விதி இதைச் ரத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 93
எழும் ஒற்றுமைக்குரல் முழு நம்பிக்கையுடன் முழக்கமாக ஓங்கி ஒலிக்கும். இனபேதப் பி போல் தோன்றினும் ஒன்றுபடும் மக்கள் தெ வீழ்ந்து சருகாகி மடிந்து போகும். அடிக்கும்
இவ்வாறு சிறுதுளிகளாய் தொடங்குவன சிறுதுளிகள் ஒவ்வொன்றும் சக்தியற்றன. பெ அடியந்தமாக மாற்றியமைக்கும்படி ஓங்காரமா. பெருகும் அளவு மாற்றம் வெள்ளம் எனும் நி மாற்றத்தை எட்டிவிடுகின்றது. வெறும் அளவு ! வாதி, அளவு மாற்றம் முற்றிலும் மாறும் சாத்தியமாக்கும் எனக் காணவல்லவரே இய
நீர் நூறு பாகை சதம் அளவுவரை அதிகரித்துப் பெற்றுக்கொண்டு இருக்கும் பெ நீராகத் திரவநிலையிலேயே தொடர்ந்து இ அளவு மாற்றமாய் தொடரலாம். நூறுபாகையில் நீடிக்காமல், அளவு மாற்றம் பண்பு மாற்றம எனும் புதிய வடிவமாற்றம் சாத்தியமாகிவிடும் சக்தி கொண்டது. நூற்றாண்டுகளின் முன்னே நீராவி இயந்திரங்கள் கண்டறியப்பட்டு அன்ன குதிரைப் பாய்ச்சலில் எகிறிப்பாய்ந்ததைக்
இப்போது இனவாதப் பாசிஸங்கள் அனைத்துவகைப் பேதங்களுக்கும் எதிராக விடுதலைக்காக எத்தனிக்கும்போது அந்த ப அடக்குமுறைகள் அனைத்தையும் தகர்த்து பயங்களை உடையவர்கள் "மக்கள்” அச்ச
தனிமனிதர்கள் ஒன்று சேர்ந்ததுதா அப்படியெனில் பயங்களோடுள்ளவர்கள் பொத்துக்கொண்டு வந்துவிட முடியும் என்ற கே சேர்க்கை அளவுமாற்றம் எனில், மக்கள் சக் இங்கே புரிந்துகொள்ளப்படல் அவசியம். 6ெ திரண்டு, குறிக்கோளற்ற வகையில் அளவு மா நகரிலோ காணப்படும் மனிதர்கள் சிறு அதிர்வு மாறாகக் குறித்த இலட்சியத்தோடு ஒன்று த வல்லாதிக்க சக்திகளைத் துவம்சம் செய்து வரலாற்றில் கண்டிருக்கின்றோம்.
தனி மனிதர்கள் என்ற அளவு அதிகரி எட்டுவதற்கு எடுத்துக்காட்டாக காடு கவனம் காடாகும். தனிமரம் தோப்பாகாது என்ற சொல் காட்டின் பிரதிநிதியாகக் கருதத்தக்கதல்ல. தனி மரங்களது குறித்த அளவுப் பெ கொண்டிருக்கத்தக்க வியப்பூட்டும் அதிக சாத்தியமற்றது.
கூர்மதி

[ தொடரப்படும்போது பலர் இணைந்த பெரு ளவாக்கும் பாஸிஸம் இன்று சக்தியுள்ளது ாடர்ந்து மோதித் தகர்க்கும் போது சரிந்து மல் அடியடித்தால் அம்மியும் நகரும்.
வே பெருவெள்ளமாகப் பிரவாகமெடுக்கின்றன. வெள்ளமோ அனைத்தையும் புரட்டியெடுத்து கச் சீறிப் பொங்கி எழவல்லது. சிறுதுளியாகப் லையை எட்டும்போது வேறுபட்ட ஒரு பண்பு மாற்றங்களை மட்டுமே காண்பவர் நிலையியல் ட்ட பரிமாணமாகிய பண்பு மாற்றத்தைச் க்கியல்வாதியாவார்.
(100°C வரை) வெப்பத்தை படிப்படியாக பாது வெப்பநிலை உயர்ந்து வந்தபோதிலும் பருக்கும். வெப்பநிலை அதிகரிப்பு அங்கே வெப்பமேற்றப்படும்போது வெப்பநிலையேற்றம் எகி, நீர் எனும் திரவநிலை இழந்து நீராவி 1. இந்தப் புதிய வடிவிலான நீராவி வலுவான ( அந்த சக்தி பற்றிய புரிதல் ஏற்பட்டபோது நடைபோட்டு முன்னேறிவந்த மனித வரலாறு கண்டிருக்கிறோம்.
பால் பயமுற்றிருக்கும் தனிமனிதர்கள் கிளர்ந்தெழும் வெகுஜன எழுச்சியில் தமது மக்கள் சக்தி அச்சமற்றவகையில் தீரமுடன் | எறியும். தனி மனிதர்கள் பல வகைப்
மற்றவர்கள்.
னே மக்கள் என ஒருங்குதிரள்கின்றனர். ஒன்றுபடும்போது மட்டும் எப்படி வீரம் ள்வி எழுவது இயல்பானதே. தனிமனிதர்களது கதியென ஆவது பண்புமாற்றப்பேறு என்பது வறும் தனிமனிதர்கள் என்ற சேர்க்கையாகத் ற்ற அதிகரிப்போடுள்ள ஒரு தொடரூர்தியிலோ, க்கும் அச்சமுற்றுச் சிதறியோடக் காணலாம். ரெளும் பண்பு மாற்றம் பெற்ற மக்கள் சக்தி மகத்தான புரட்சிகளை வென்றெடுத்ததையும்
ப்பு மக்கள் சக்தி என்ற பண்பு மாற்றத்தை பெறத்தக்கது. தனிமரங்களது சேர்க்கையே லடை நினைவுகூரத்தக்கது. எந்தத் தனிமரமும் பெரும் வனமொன்றின் பன்மைப் பரிமாணம் நக்கத்திலிந்து வேறுபட்டதாகும். காடு =யங்கள் சில மரங்களது சேர்க்கைக்கு

Page 94
அந்தவகையில், தனித்து எழும் இன ஒற் தெரியினும் இவை அளவு மாற்றத்தை எட் பண்பு மாற்றம் பெற்று இலங்கைக்கான புதிய வடிவப் பரிணமிப்புக்குரிய பண்பு மாற்றம் குறி குறித்த அச்சமுமின்றிச் செயற்படமுடிவுது இய செயலாற்றுவதனாலேயே ஆகும்.
VI. முரண்பாடு: இயக்கவியலின் அடிப்
முரண்பாடு பற்றிய விதியை இறுதியாக குறைத்து மதித்துவிடல் ஆகாது. முரண்பாட் முந்திய விடயங்களிலும் விளக்கம் பெற்று குறித்த தெளிவு ஊடாக இதனை வந்தடையும் வாய்ப்புண்டு.
முரண்பாடு பற்றிய விதியே இயங்கிய மார்க்சியத்தின் நடைமுறைச் சாத்தியத்தை 2 தலைவராகத் திகழ்ந்த லெனின் மார்க்சியத் லெனினிசத்தை உலகுக்கு வழங்கியவர். பல் லெனின் இவ்வகையில் தத்துவத்தளத்திலும் ( சோவியத் ருஷ்யச் சிந்தனையாளர்கள் மு முக்கியத்துவத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி
விவசாயப் புரட்சிக்கு மார்க்சிஸ லெனி தலைவர் மாஓ சேதுங்கே முரண்பாடு செழுமைப்படுத்தினார். "முரண்பாடு பற்றி" விதந்துரைக்கத்தக்கது. "நடைமுறை பற்றி”, "1 வருகின்றன'', "மக்கள் மத்தியிலான முரண்பா என்பவை இயங்கியல் குறித்த மேலும் ஆழமான உதவும்.
முரண்பாடு என்பதால் எதிரான இரு அம் ஒன்று மற்றதாக மாறும் வண்ணம் தமக்குள் ே அந்த வகையில் முரண்பாடு பற்றிய விதி எ பற்றிய விதி எனவும் கூறப்படும். எந்தவொரு 6 கொண்டிருக்கும். நேரும் எதிரும், இலத்திரன என்ற முரண்பட்ட அம்சங்கள் ஒன்றாக ஐக் மற்றதாக மாறிவிட முடியும். (ஆளும் நிலைக் மாற்றம் பெறும் என்றவாறு)
இந்த மாற்றம் முன்னர் பார்த்த பண்பு தோற்றுவிப்பதாக அமையும். ஒரு போக்கில் இ செலுத்துவதாயும் மற்றது எதிர்நிலையில் போர எதிர்நிலை ஆளும் நிலைக்கு மாறும்போது பல இரு அம்சங்கள் ஒன்றாக இருப்பதும், போராடுவது அளவு மாற்ற வளர்ச்சியும் என்ற புதிய போக
(74)
74

றுமைக்கான குரல்கள் இன்று பலவீனப்பட்டுத் ஒவரும் பரிணமிப்புக்குரிய ஒரு நிலையில் ப வரலாறு வெல்லப்படுவதாகிவிடும். வேறு பித்த தெளிவுடைய இயலக்கியல்வாதி எது
க்கப் போக்கு விதியை விளங்கிக் கொண்டு
படைவிதி
க் கூறும்போது அதன் முக்கியத்துவத்தைக் டைக் குறித்து விளக்குவதன் மூலமாகவே விட முடியும். ஆயினும் அந்த விதிகள் போது மேலும் ஆழமான புரிதல் சாத்தியமாக
லின் அடிப்படை விதி என்பார் லெனின். உலகுக்கு உணர்த்திய ருஷ்யப் புரட்சியின் கதின் இன்னொரு வளர்ச்சி நிலைக்குரிய வேறு வழிகளில் மார்க்சியத்தை வளர்த்த வளர்ச்சியைச் சாத்தியமாக்கினர். ஆயினும் மரண்பாடு பற்றிய விதியின் விஷேடித்த
வளர்த்தெடுக்கத் தவறினர்.
னிசத்தைப் பிரயோகித்த சீனப் புரட்சியின் பற்றிய விதியை மேலும் ஆழமாகச் ' எனும் அவரது நூல் இவ்வகையில் மக்களின் சரியான கருத்துக்கள் எங்கிருந்து 'டுகளைச் சரியாகக் கையாள்வது பற்றி" [ புரிதலுக்கு மாஓ சேதுங்கின் படைப்புக்கள்
சங்கள் ஒன்றுபட்டு இருக்க முடிவதையும், பாராடுவதனையும் புரிந்து கொள்கின்றோம். திரானவற்றின் ஒற்றுமையும் போராட்டமும் விடயமும் முரண்பட்ட இரு அம்சங்களைக் பம் புரோத்தனும், உயிர்ப்பும் மரணிப்பும் யெமுற்று இருந்து போராடியவாறு ஒன்று தரியதாக இருந்தது ஆளப்படும் நிலைக்கு
மாற்றத்துக்குரிய புதிய குணாம்சத்தைத் தக்கும் இரு அம்சங்களில் ஒன்று ஆளுகை "டுவதாயும் இருக்கும். அளவு மாற்றத்தால் ரபு மாற்றம் ஏற்பட்டுவிடும். இனி வேறுபட்ட ம், அவற்றிலான சமநிலை மாற்றத்துக்கான கு ஏற்பட்டுவிடும். எந்த இரு அம்சங்கள்
ல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 95
ஐக்கியமும் போராட்டமும் என்பனவாயுள்ள போக்கின் குணாம்சத்தைத் தீர்மானிக்கின்ற
நிலப்பிரபுத்துவ அமைப்பில் நிலப்பிரட அம்சமாக முதலாளி வர்க்கமும் ஒரு போக் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் வரை ! மாற்றத்தில் முதலாளித்துவ வர்க்கம் தீர்மா எட்டும்போது முந்திய ஆளும் அம்சம் எது முதலாளித்துவத்தின் எதிர் அம்சமாக பாட்டா எடுக்கும். இப்போராட்ட வளர்ச்சியில் எதி நிலைபெறுகையில் சோஷலிஸம் எனும் பு
இவ்வாறு, ஒரு செல்நெறியின் மாற்ற ஏற்படும் ஐக்கியமும் போராட்டமும் எனும் ( என்பது மிகுந்த கவனிப்புக்குரியது. அதாவ சார்ந்ததாகும். புறநிலை அந்தக் குணா முடியுமேயன்றிப் புறச்சக்தி அடிப்படையான வெளிப்படும் உயிர்ப்புக்கான போராட்டம் போராட்டமாக அமையும். அதற்கு குறித்த அமைந்து குஞ்சு வீரியத்துடன் வளர்ந்து இங்கு முட்டையின் அகநிலை பிரதானமானது புறநிலை மட்டுமே. அத்தகைய வெப்பு கோழிக்குஞ்சைப் பெற்றுவிட முடியாது.
ஆக, இப்பிரபஞ்சம் எங்கும் கால போக்குகளிடையேயும் வேறுபாடு நிலவக் முரண்பாட்டுக்கான இரு அம்சங்கள் எவை எ ஒரே தடவையில் பல முரண்பாடுகள் இருக் இரு அம்சங்களும் அதன் தீர்மானிக்கும் அப் நிர்ணயிப்பதாக அமையும். அதேவேளை எ மட்டும் பெற்றில்லாது புறநிலைகளால் த காணப்படுவதனையும் காணலாம். (குஞ்சு பெ பொருளும் போக்கும் புறநிலைத் தாக்கத்தால் என்பது அவதானிப்புக்குரியது.)
இந்தப் புரிதலுடன் தொடக்கம் முதல் விதியே இயங்கியலின் அடிப்படை விதி 6 எதிர்க்கருத்தும் முரண்பாட்டுக்குரிய இரு அப் சக்தியாக கருத்து நிலவும். அப்போது அப் நிலவும், அளவுமாற்றம் அதிகரித்துவந்து ப
தீர்மானிக்கும் சக்தியாகிவிடும்.
இனி அதன் குணாம்சம் எதிர்க்கருத்து முன்னர் கருத்து எதை மறுத்து ஆதிக்க வ எதிர்நிலையொன்று இப்போது எதிர்க்கருத்தை எதிர் அம்சமாகிப் புதிய முரண்பாட்டுச் செ சுழல் ஏணிக்குரிய வளர்ச்சித் தளமாகவும்
கூர்மதி

ன - அது ஆளும் அம்சம் என்பதே அந்தப் }ன.
த்துவ வர்க்கமும் புதிதாகத் தோற்றம் பெறும் நகை உருவாக்கும். நிலப்பிரபுத்துவ வர்க்கம் நிலப்பிரபுத்துவ சமூக நெறி நீடிக்கும். அளவு னிக்கத்தக்க ஆளும் நிலைக்கான மாற்றத்தை நிர்நிலையடைந்து இல்லாதொழியும். பின்னர் ளிவர்க்கம் மாற்றத்துக்குரிய புதிய வடிவத்தை T நிலையிலுள்ள பாட்டாளிவர்க்கம் ஆளும் தியபோக்குத் தோற்றம் பெறும்.
சிக்க2யடைந்து கரிய புதிய ஆளும்
ங்கள் தனக்குள் உள்ள இரு அம்சங்களில் முரண்பாட்டினாலேயே நிர்ணயிக்கப்படுகின்றது து மாற்றங்கள் அகத்தில் நிலவும் குணாம்சம் ம்ச மாற்றத்துக்கு உந்துதலாக அமைய தல்ல. கோழி முட்டைக்குள் குஞ்சு பொரித்து உள்ளே உயிர்ப்புக்கும் மரணத்துக்குமான வெப்பநிலை என்ற புறநிலை உந்துதலாய் கூடுடைத்து வெளியேவர உதவ முடியும். 1. குறித்த வெப்பநிலை என்பது உதவிகரமான பநிலையைக் கல்லுக்கு வழங்குவதனால்
னப்படும் பல்வேறு பொருட்களிடையேயும் - காரணமாய் அவற்றிடையே காணப்படும் ன்பதே அமைகின்றதெனலாம். சில இடங்களில் 5க முடிந்தாலும், பிரதான முரண்பாட்டுக்கான ம்சம் எது என்பதும் அதற்கான குணாம்சத்தை எந்தவொன்றும் தனக்குள்ளான செல்நெறியை தாக்குறவு கொள்ளத்தக்க சார்பு நிலையும் பாரிப்பதில் ஏற்ற வெப்பநிலை போல, ஒவ்வொரு
• தூண்டலோ உந்துதலோ பெற வாய்ப்புள்ளன
- மீட்டுப் பார்க்கும் போது முரண்பாடு பற்றிய என்ற தெளிவினை எட்ட முடியும். கருத்தும் Dசங்களாயுள்ள போது, முதலில் தீர்மானிக்கும் பபோக்கின் குணாம்சம் கருத்து சார்பானதாக ண்பு மாற்றம் ஏற்படும் போது எதிர்க்கருத்துத்
க்குரிய பண்புகளையே அதிகம் பெற்றிருக்கும். டிவம் பெற்றதோ, அதன் அம்சம் வெளிப்படும் த ஆதிக்க நிலைக்கான கூட்டுக்கருத்துக்குரிய ல்நெறி ஒன்று தொடக்கம் பெற்றுவிடும். இது
அமையும்.
(75 )

Page 96
VII. கருத்து முதன்மை
பொருள் முதல்வாதம் எப்போதுமே க முதன்மையிடத்தைப் பெற இயலாது எனக் 8 புரிந்து கொண்டவர்களாயுள்ளோம். பொருளை ( கருத்து, இயங்கியல் காரணமாக முதல் நி தாக்கும் முதன்மைச் சக்தியாக முடியும். ! பண்பாடு கட்டமைக்கப்படுகின்றது. குறித்த சூழ் பண்பாடு முதன்மைபெற்றுப் பொருளாதார முன் தோன்றக் காரணமாகும். பின்னர் அப்புதிய பண்பாட்டுக் கோலங்களைத் தோற்றுவிக்கும்
RS2
நீங்கள் பிறருக்குக் கற்,
நீங்களும் கற்று
2G
(76)

கருத்து (அது சார்ந்து பண்பாடு போன்றன) கூற முற்படுவதில்லை என்பதனை இப்போது வாழ்முறையைச் சார்ந்து தோற்றம் பெறத்தக்க லை எய்தி பொருள் மீது (வாழ்முறை மீது) பொருளாதார முறையின் வெளிப்பாடாகவே மநிலையில் இயங்கியல் வளர்ச்சி காரணமாய்ப் றையை மாற்றிப் புனைந்து, புதிய வாழ்முறை வாழ்முறை தனக்கு அமைவான வேறுபட்ட
- - -
R* 1 றுக்கொடுக்கும் போது க்கொள்கிறீர்கள்.
நிக்கொலாய் கோகல்,
ரஷ்ய எழுத்தாளர் 04
--------
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 97
டா00)
தமிழ் மொழி மிகப் பண்பட்டது. இலக்க காலம் முதல் ஆங்கில அரசாங்கம் அமை நாடுகளில் ஆட்சி மொழியாக விளங்கி வ
முறையும் தெளிவான சொற்றொடர் அமை மொழி என்பது மக்கள் படைத்துக் காக் அறிவை வளர்த்து உயர்த்தும் அரிய கரு தன் குழந்தையின் பேச்சைக் கேட் மொழியியலாளர்கள் குறிப்பிடுவர். எனவே கு வருவது மொழி வளர்ச்சியே ஆகும். மனம் அமைந்தது. மனத்தின் வளர்ச்சிக்கேற்ப பே மக்கள் அனைவரும் மொழிக்கு ஆசிரியர் வளர்ப்பவரும் மொழியால் வளர்பவரும் ம இனமாய் பழகி வாழ்வதற்கு துணையாக வாழ்விற்கு அறிகுறியாக உள்ள மொழியே உள்ளது. ஆக, சமுதாயத்தால் வளர்ந்து எனலாம்.
இன்று மொழிக்குள்ள சிறப்புக்கெ வடிவமே ஆகும். எழுத்து வடிவில் உள்ள பிணைத்து வாழ வைக்கும் ஆற்றல் உடை தோற்றத்தைப் பார்ப்போமாயின் தன் கருத் மனிதன் தன் முயற்சியால் கல்லிலும் எழுதிவைக்கத் தலைப்பட்டான். முதலில் எ சொற்களையோ எழுதவில்லை. கருத்துக் இவற்றை ஓவிய எழுத்துக்கள் என்று கூறல் 'ஓவியம்' என்ற பொருள் இருந்ததை பின்
"காணப்பட்ட
மாறக்காட்டும் வழுவில் ஓவியம்
எழுதப்படுவது
எனக் குறிப்பிடுகின்றது. இதனையே எழுந்த ஒரு கலையே பின்னர் எழுத்த புலப்படுத்துகிறார். இதற்கு ஓவிய எழுத்துக் எனலாம். ஓவிய எழுத்து குறிப்பிட்ட ஒ பயன்படுமே தவிர, பொருளின் பலனாக |
கூர்மதி

உயிர்ப்பு
ந. பார்த்திபன் 'ஆசிரிய கல்வியியலாளர் வ. தேசிய கல்வியியல் கல்லூரி
வவுனியா
யெ வளம் உடையது. வரலாற்றுக்கு எட்டாத ந்த காலம் வரை இலங்கை, இந்தியா போன்ற ந்தது. அதனால் மிகநுட்பமான சொற்பொருள் ப்பும் உடையதாக வளர்ச்சி பெற்றது. மேலும் தம் அரியதொரு கலை. மொழியே மக்களின் வியாகவும் உள்ளது. தாயின் முதல் வேட்கை பதுடன், குழந்தையுடன் பேசுதலும் என குழந்தையின் மனவளர்ச்சியோடு ஒத்து வளர்ந்து ம் என்பது பெரும்பாலும் மொழியால் வளர்ந்து பசுவோரின் மொழியும் வளர்ச்சி பெற்று நிற்கும். எகவும் மாணவராகவும் உள்ளனர். மொழியை க்களே. பலர் சேர்ந்து ஒரு சமுதாயமாய் ஓர் உள்ள சிறந்த கருவி மொழியே. சமுதாய | அந்தச் சமுதாய வளர்ச்சிக்கும் காரணமாக து சமுதாயத்தை வளர்த்து வருவது மொழி
மலாம் காரணம் அதற்கு அமைந்த எழுத்து 1 மொழி மக்களினத்தை பல நூற்றாண்டுகள் டயது. இவ்வாறான சிறப்புக்கு உரிய எழுத்தின் கதைத் தெரிவிக்க வேண்டும் என்று விரும்பிய - களிமண்ணிலும் ஓலையிலும் செம்பிலும் எழுதத் தொடங்கிய மக்கள் எழுத்துக்களையோ களை ஓவியங்களாகக் கீறிப் புலப்படுத்தினர். மாம். தமிழிலக்கியத்திலே 'எழுத்து' என்பதற்கு பவரும் பழைய நூற்பா ஒன்று
உருவம் எல்லாம்
வகையை நாடி ன் கைவினை போல உருவெழுத்தாகும்”
யெஸ்பர்ஸன் என்பவர் “முதலில் ஓவியமாக காக வளர்ந்து உள்ளது” என்ற கருத்தைப் களில் காணப்பட்ட பல குறைபாடுகள் காரணம் ந பொருளையோ கருத்தையோ உணர்த்தப் வேறுபாடுகளையோ கருத்து நுட்பங்களையோ

Page 98
உணர்த்தப் பயன்படாது. மேலும் ஓவியங்கள் திரிந்து போயின. நுண்கருத்துக்களை 2 மற்றவர்களுக்கு விளங்காததாகிவிட்டது ஓவி
- ஆனால், பொருள்களையும் கருத்துக்கை நிற்பதில்லை. திணை, பால், எண், இடம் ஆகிய உணர்த்தும் அளவிற்கு மனிதனின் மூளை வள துணையைப் புரிவதில்லை. நாகரிக வளர்ச்சி பயன் விளையாதது கண்டு அதைக்கைவிட்டு கையாளத் தொடங்கினர். ஆயின் ஒன்றைவிட் இதைக் கருதலாகாது. பல தலைமுறைகளாக மாறிய மாறுதல் எனக்கருதுதல் வேண்டும். L அடையாள எழுத்துகளாக மாறின. இதனை
"செவ்வணி அணிந்து அவ்வணி உழையர்கண்டு
வெள்ளணி அணிந்து ! மலைவேல் அன்பால் வா
வரிவடிவங்களாக எழுத்து மொழி அடையாளங்களினூடாக காட்டும் பண்பு காண பல குறைபாடுகள் காணப்பட்ட நிலையில் இன்றுள்ள வரிவடிவ எழுத்துக்களாக பயன்ப
மேற்கூறிய எழுத்தின் பரிணாம வள கஷ்டங்களையும் நினைத்துப் பார்த்தாற்ற எழுத்துக்களையும் அவற்றை நாம் ஏன் மு உணர்வும் பிறக்கும். அச்சியந்திர வருகையும் நிலைமையும் இன்றுள்ள எழுத்துக்களின் 6 குறிப்பிடும் எழுத்துக்களைப் பார்ப்போமாயின் அ தொல்காப்பியத்தில் விளக்கப்படும் எழுத்து (
1. மெய்யெழுத்துக்கள் புள்ளி பெறல் 2. எகர ஒகர குறில் புள்ளி பெறல் (எ, ஒ) 3. ம என்பது ப் என்ற வடிவாக பகரத்தில்
நிகழ்கால மாற்றங்களை எடுத்துப்பார்ப்பி
1. எ கர ஒகர புள்ளி பெறாமை 2. ஏ, ஓ என்பவை காலும் சுழியும் பெறல் 3. ப் என எழுதாமல் புள்ளியை உள்ளே வ
இந்நிலையில் எமது எழுத்துக்களைத் நாம் பயன்படுத்துதல் வேண்டும். மரத்திற்கு ( கரை, கப்பலுக்கு நங்கூரம் இவை எவ்வளவு பு இலக்கணம். இலக்கணம் இல்லையேல் மொ இன்று பலரும் கூறுவது போல் 'தமிங்கிலம்'
அபாயம் உண்டு. எனவே இலக்கணவியலால்
(78)

படிப்படியாக மாறி விளங்காத அளவிற்குத் உணர்த்துவதற்கு பயன்படத் தொடங்கி
ய எழுத்து.
ளயும் மட்டும் உணர்த்தும் அளவில் மனிதன் ப பாகுபாடுகளையும் கால வேறுபாடுகளையும் ர்ச்சி பெறும்போது ஓவிய எழுத்து அதற்குரிய பெற்ற மக்கள் ஓவிய எழுத்தால் போதிய இன்று வழங்கும் ஓலியெழுத்து முறையைக் டு ஒன்றைப் பற்றும் எளிய முயற்சி என்று - ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு படிப்படியாக பின்னர் இவை ஓவிய எழுத்துக்களிலிருந்து
நம்பியகப்பொருள் பின்வருமாறு கூறுகிறது.
சேடியை விருப்புழி அழுங்கிக் கூறலும்.. விடுத்துழிப் புள்ளணி யில் வேண்டலும்............”
இல்லாதிருந்த மிகப்பழங்காலத்தில் ப்பட்டுள்ளது. அடையாள எழுத்துக்களிலும் ஒலிகளுக்கே ஒலி எழுத்துக்கள் தோன்றி டுத்தப்படுகின்றன.
பர்ச்சியும் அதற்கு முன் மனிதன் பட்ட நான் இன்றுள்ள சீர்த்தன்மை கொண்ட மறையாகப் பயன்படுத்த வேண்டும் என்ற ம் அமைப்பில் ஒரு சீர்த்தன்மை கொண்ட படிவத்திற்கு வித்திட்டன. தொல்காப்பியம் வை பின்வருமாறு காணப்பட்டன. இவற்றைத் வடிவங்கள் எனக் குறிப்பிடலாம்.
முள் புள்ளியிட்டு எழுதுதல் இந்நிலையில்
ன்
(வீரமாமுனிவர் உபயம்) பளைத்து ம என எழுதுதல்
தெளிவாக எழுதி அதன் ஒலிகளுக்கேற்ப 'வர், கட்டிடத்திற்கு அடித்தளம், ஆற்றிற்கு மக்கியமோ அவ்வளவு முக்கியம் மொழிக்கு ழி திரிந்து வேறு மொழியாக மாறிவிடும். என்றோ 'தங்கிலிஷ்' என்றோ மாறிவிடும் சர்கள் குறிப்பிட்ட முறையில் மொழியைப்
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 99
பயன்படுத்த வேண்டும். தமிழ் மொழி கொண்டிருக்கும் நிலையில் தமிழுக்கு உ வேண்டும். இந்நிலையில் அடிப்படை மொ அடிப்படை மொழித்திறன்கள் செவிமடுத்தல், பிரிக்கப்படும். இவற்றுள் கருத்துக்களை பேசுதல், எழுதுதல் ஆகியவற்றைக் குறிப்பி ஆகியவை இரண்டும் செம்மையாக
1. திசைமுகம் : ஓர் எழுத்து உரிய
முடிவடைதலாகும் அளவு : எழுத்தின் பருமன் உறுப்பு : எழுத்தின் இலட்சணம் இடைவெளி : எழுத்துக்களிடையே
சொற்களுக்கிடையே இடைவெளி 5. உயிர்க்குறி : உயிர் மெய் ஒலிகள் தோ 6. வரி தொடக்கம் : வரி ஒவ்வொன்றையும்
தனியெழுத்துக்கள், உயிரெழுத்து, ஐ (கை, மை, வை, தை...) வராதபடி வ -பந்தி ஆரம்பம் : ஒரு கோட்டிலிருந்து 8. நிறுத்தக்குறிகள் : (ஆறுமுக நாவலரி
1) முற்றுப்புள்ளி (.) வாக்கியத்தின் இ
இடையிலும், முகவரிகளின் இறுதியிலு 2) வினாக்குறி (?) வினா வாக்கியத்தின்
காற்புள்ளி (.) பொருளை எண்ணி, பிரித்துக்காட்டவும், பொருள் மயக்கம் ஏற்படுத்துவதற்கும் ஒருவரை வி அழைப்புச்சொற்களை (ஆகவே) அடு; மெய்ப்பாட்டுக்குறி (!) விருப்பம், மக் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் சொ தற்போது பெயர்களை, விளிப்புச் 6 முடியும் எனக் குறிப்பிடப்படுகிறது. உ+
மெய்ப்பாட்டுக்குறி அவசியமில்லை.
5)
மேற்கோள் குறி ("'...'') ஒருவரின் கூற்ன இக்குறி பிரயோகிக்கப்படும்.
*
இந்நிலையில் உயிர்க்குறிகளின் அ பார்ப்போம். உயிர்க்குறிகள் உயிர்மெய் என முன்னர் குறிப்பிட்டோம். உயிர்மெய் 6 எழுதுவதற்கு இவ்வுயிர்க்குறிகள் பயன்படு
1. ா - அரவு / கால் உ+ ம் : கா, | 2. 1 - விசிறி உ + ம் : சி, மி, வி
- விசிறியும் சுழியும் - உ + ம் : 4.  ெ- ஒற்றைக்கொம்பு - உ + ம் : 6 5.  ே- இரட்டைக்கொம்பு - உ + ம் :
கூர்மதி 8-CM 013788

க்காக உயிர்கொடுக்கும் நிலை வளர்ந்து பிர் கொடுக்கும் நிலையை வளர்த்துக்கொள்ள ழித்திறன்களில் கவனம் செலுத்த வேண்டும். பேசுதல், வாசித்தல், எழுதுதல் என நான்காகப் வெளிப்படுத்த உதவும் மொழித்திறன்களாக டலாம். எனவே வெளிப்படுத்த, பேச்சு, எழுத்து
இடத்திலிருந்து தொடங்கி உரிய இடத்தில்
இடைவெளி (ஓரெழுத்தை எழுத முடியாத) (ஓரெழுத்து எழுதக் கூடிய இடைவெளி) ன்றுவதற்கான அடையாளங்கள் (ா,,ெ,ே,ைறு,z) முறையாகத் தொடங்குதல் (குற்றெழுத்துக்கள், யினால் உருவாகும் உயிர் மெய் எழுத்துக்கள் பரிகளைத் தொடங்குதல்)
சிறிது இடைவெளி விட்டு எழுதுதல் ன் உபயம்)
றுதியிலும் சொற்சுருக்கத்தின் இறுதியிலும், ம், திகதியின் இறுதியிலும் பிரயோகிக்கப்படும்.
இறுதியில் பிரயோகம் -- வேறுபடுத்தி, சொற்களை தனித்தனியாக - உண்டாகாதவாறு வாக்கியத்திலே தெளிவு ளித்துக்கூறும் விளிப்பெயரை அடுத்தும், த்தும் இது பிரயோகிக்கலாம். கிழ்ச்சி, நோ, உற்சாகம், வெறுப்பு போன்ற பற்களை அடுத்து இக்குறி பிரயோகிக்கப்படும் சாற்களை அடுத்து காற்புள்ளி பயன்படுத்த ம் மகனே, கண்ணா, ராணி, அப்பனே இவற்றுக்கு
மற அவ்வாறே அல்லது மேற்கோள் காட்டுவதற்கு
மைப்புக்களையும் அவற்றின் பெயர்களையும் ஒலிகள் தோன்றுவதற்கான அடையாளங்கள் எழுத்துக்களின் வடிவங்களை (வரிவடிவத்தை)
த்தப்படுகின்றன.
பா.
கீ, டீ பெ, வெ
சே, லே
(79)

Page 100
6.  ை- சங்கிலிக்கொம்பு/இணைகொம்பு - 2 7. ள - வெள்ளிக்கால் - உ+ ம் : கெள், 8. T - கீழ்க்கால் - உ + ம் : பு, சு, யு, { 9. , - கீழ்க்காலும் சுழியும் - உ+ ம் : பூ 10.- மடக்கேறு உ + ம் : து, நு, று, லு 11. பா - மடக்கேறும் அரவும் தூ, நூ, ஊ, ஓ 12. ( - கீழ் விலங்கு - உ + ம் : டு, ரு, ( 13. ( - கீழ் விலங்கும் சுழியும் உ + ம் :
* கீழ் விலங்கும் சுழியும் குறியில் கூ எழுத்து கால் (ர), ஒற்றைக்கொம்பு (6), இரட்டைக்கொம்பு (ள) என்ற ஐந்தும் துணை எழுத்துக்கள் என்று முன்னொட்டாகவோ பின்னொட்டாகவோ வழமையாகிவிட்டது.
துணை எழுத்துக்கள் ஐந்தையும் வேறு என்றும் சிலர் குறிப்பிட்ட நிலையால் இவற்று உயிர்க்குறிகள் பதின்மூன்றில் துணை எழுத்துக் ஆரம்ப வகுப்புக்களில் துணை எழுத்துக்கை காணப்பட்டது. தமிழில் உள்ள துணை எழுத்து நிலையில் வாசித்தலையும் எழுதுதலையும் இ திறன் வளர்ச்சிப் படிநிலைக்கேற்ப தொடக்க வ கொடுப்பதைத் தவிர்த்து வந்துள்ளனர். இதனால் ஒரு பிரிவான துணைக்குறிகள் பலருக்கு தெரி
மேலும் துணைக்குறிகளான விசிறி, விக்க சுழியும், மடக்கேறு, மடக்கேறும் அரவும், கீழ் உயிர்க்குறிகள் எழுதும் போது பிரயோகிக் குறிப்பிடுவது இல்லை. இதனாலேயே உயிர்க்கு துணைக்குறிகளின் பெயர்கள் பற்றியோ சிந் எழுத்துக்கள் மட்டும் தான் உயிர்க்குறிகள் 6 அடுத்து துணை எழுத்துக்களை ஒரு சிலர் குறிப்பிடப்படுவதும் சங்கிலிக்கொம்பு (வ) இ வெள்ளிக்கால் (ள) எழுத்துக்களை எழுத்து தெரியாமலிருக்கிறது. இன்னும் (ள) என்ற எழு குறிப்பிடப்படுவதற்கு பதிலாக 'ள' என்ற 6 பார்க்கிறோம். இந்த எழுத்துத்துணையானது உ என்ற எழுத்துக்களின் பின்னொட்டாக ஒரு குறியீட
தமிழ் எழுத்துக்களை (வரி வடிவத்தை கவனஞ்செலுத்துவதில்லை. இதன் காரணமாக பலி சொல்லும் போது ஒலி வேறுபாடுகளைக் கவ போது இதன் தாக்கம் அதிகமாகின்றது. உத எழுதச்சொல்லும் போது மாணவர்கள் நிற்கின்ற கேட்கும் நிலை தோன்றிவிட்டது. ஒலி பற்றிப் ஒளி பற்றி பாடக்குறிப்பு எழுதும் நிலை உயிர்க்குறிகளையும் அதன் பெயர்களையும் தெ
(30)

உ + ம் : தை, மை
பௌ, சௌ வு, நு ., சூ, வூ, யூ ஆ 1, னு, ணு, ந
லூ, ஞ, ண, ஞ மு, ளு, ழு, கு 6, ரூ, மூ, ளு, மூ
து வித்தியாசம். இங்கு உயிர்க்குறிகளில் ()ே, இணைக்கொம்பு ()ை, எழுத்துத்துணை றும் ஒற்று நீங்கிய மெய்யெழுத்துக்களின் எழுதப்படுவன என்றும் கூறப்படுவது
1படுத்தி ஏனையவற்றை துணைக்குறிகள் ள் வேறுபாடு ஏற்பட்டுவிட்டது. மேற்கூறிய க்கள், துணைக்குறிகள் என்று வேறுபடுத்தி ள மட்டும் சொல்லிக்கொடுக்கும் நிலை புக்களும் துணைக்குறியீடுகளும் தொடக்க உர்படுத்துவதால் அவற்றை வகைப்படுத்தி தப்புக்களில் துணைக்குறிகளை சொல்லிக் ம் வளர்ந்த நிலையிலும் உயிர்க்குறிகளில்
யாமல் போய்விட்டது.
சிறியும் சுழியும், கீழ்க்கால், கீழ்க்காலும் 2விலங்கு, கீழ்விலங்கும் சுழியும் ஆகிய கப்பட்டாலும் அவற்றின் பெயர்களைக் தறிகள் என்ற எண்ணக்கருவோ, குறிப்பாக தனையோ எழவில்லை மேலும் துணை என்ற மயக்கமும் பலருக்கு ஏற்படுகிறது. குறிப்பிட்டாலும் அரவு (T) கால் என்று ணைக்கொம்பு என்று குறிப்பிடப்படுவதும் ந்துத்துணை என்று குறிப்பிடப்படுவதும் ஒத்துத் துணையை வெள்ளிக்கால் என்று எழுத்தெனவே பலரும் குறிப்பிடுவதைப் எ, ஒள ஆகிய எழுத்துக்களிலும் உ, ஒ டாகப் பயன்படுகின்றதும் பலர் அறியாததே.
5) எழுதும் வேளைகளில் உச்சரிப்பில் bவேறு கருத்து மயக்கங்கள் ஏற்படுகின்றன. னத்தில் கொள்ளாத நிலையில் எழுதும் ரணமாக ஆசிரியர் மலைக்காட்சி பற்றி 3 மலையா? பெய்கின்ற மழையா? என்று படிப்பித்து பாடக்குறிப்பு சொல்லும்போது ) காணப்படுகின்றது. இந்நிலையில் ரிந்து பயன்படுத்தும் அவசியத்தை யாரும்
ல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 101
உணர்வதில்லை. இதனை ஒரு பெரும் த இல்லை என்ற நிலையில் மாணவர்களின் ந தமிழில் எழுத்துப்பிழைகள் மலிந்துவிட்ட
மொழி பற்றிய அக்கறை கொண்டு செம்மையாக எழுத உதவும் உயிர்க்குறி உயிர்க்குறிகளை மீண்டும் உயிர்ப்பிக்க வே புரிந்து கொண்டு ஆசிரியர்களும் மாண வேண்டும். எனவே மீண்டும் மீண்டும் நிலை உயிர் கொடுக்க முடியாவிடினும் தமிழுக்கு
3ெ% குழந்தைகளைப் பேணி வளர்ப்பது ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க ( ஊட்டாமல் ஒருவரை உங்கள எந்தவிதமான அறிவாற்றலும் 6 உதவுகிறது.
SAS
ககூர்மதி

வறாக உணரும் நிலையில் ஆசிரியர்களுக்கு லை சொல்லவேண்டுமா? இதன் காரணமாகவே 5. இவை பெரிதுபடுத்தப்படுவதும் இல்லை.
டார், குறிப்பாக தமிழ் மொழி வல்லுனர்கள் கள் பற்றி அதிகம் அக்கறை கொள்கின்றனர். ன்டுமென அவாக்கொள்கின்றனர். இந்நிலையைப் பர்களும் உயிர்க்குறிகளில் கவனஞ்செலுத்த எவுபடுத்திக் கொள்ளவேண்டியது தமிழுக்காக உயிர்கொடுங்கள் அதுவே இன்றைய தேவை.
RSS
ம் அவர்களுக்குக் கல்வி கற்பிப்பதும் முடியாதவையாகும். அறிவொளியை ால் வளர்த்து ஆளாக்க முடியாது. ஒருவரை வளர்த்து ஆளாக்குவதில்
லெவி டால்ஸ்டாய், ரஷ்ய எழுத்தாளர்
கடுகு
(81)

Page 102
சனநாயகத்தின் முக்கியமான அடையா வாய்ப்புக்கள் எனலாம். ஒரு நாட்டில் பொறுப்பு குடிமக்கள் சமூகப்பொறுப்பானவர்களாக இருக் பொறுப்பானவர்களைத் தெரிவு செய்கிற பொறுப்பேற்றங்கள் தமது பணியைச் 8 கண்காணிப்பதற்கான நேரடி அதிகாரம் அவர் செம்மையாக இயங்குகிற ஒரு நாட்டில் : அமைப்புக்கள் இருக்கின்றன. அவற்றின் மூலம் என்பதைக் கண்காணிக்கவும் இயங்காதபோது
இவற்றை இயலுமாக்க மக்கள் தாம் வா விதம் பற்றியும் அறிவுடையோராக இருக்க ே ஒரு விதமாகச் செயற்படுவதில்லை. அதன் ப நடைமுறைகள் உள்ளன. அவை வேறு சமூகப்பிரிவினரும் உடன்பாடான முறையில் ; முன்னேற்ற இயலும். சமூகம் எதுவுமே எல்லாக் க எல்லாமே மாறக்கூடியன. எல்லாமும் மாறிக்கொள் சமூகங்கள் தங்களை நிலைநிறுத்திக் கெ உள்ளவர்கட்குத் தங்கள் சமூகம் என்கிற மு தேவை. அதன் வெவ்வேறு கூறுகள் எப்படி இய பல்வேறு பிரிவினரது தனித்துவமான தன்மைகள் நிலைமைகளிலிருந்து விருத்திபெற்று மாறித் தன் என்ற அறிவு தேவை.
மேற்குறிப்பிட்ட விதமான அறிவில் ஒரு 1 மாணவர்கட்கு வழங்க இயலும். மிகுதியை செயற்பாடுகள் மூலமே உணரவும் கற்கவும் போது நமது சமூகத்தின் விருத்தியையும் ெ பங்கை நாம் இழந்தவர்களாகி விடுகிறோம்.
அரசாங்கம் என்பது நாட்டின் ஆட்சி நிரு செயற்பாடு அதற்குக் கீழ்ப்பட்ட அமைப்புக்களா நிருவாகம் என்பது தெரிவு செய்யப்பட்ட பு திணைக்களத்தின் பொறுப்பதிகாரிகளின் க. மட்டும் இல்லை. அது அனைத்துக் குடிமக்களில் சனநாயக ஆட்சியில் மக்கள் முழுமையான அதி அலுவலர்களும் அமைச்சர்களும்கூட அவர்கட்குப்
பாடசாலைக் கல்வி மாணவர்களின் எதிர்கா வழங்க இயலாது. அது மிக அடிப்படையிலான
(82)
82

முகப் பயன்
பேராசிரியர் சி. சிவசேகரம்
ளங்களில் ஒன்று எல்லாருக்குமான கல்வி பான ஆட்சி இருக்கவேண்டுமாயின் அதன் கெ வேண்டும். நாட்டின் அரசாங்கத்திற்குப்
அதிகாரம் அவர்களிடம் உள்ளது. சரிவரச் செய்கிறார்களா என்பதைக் களிடம் இல்லை. என்றாலும் சனநாயகம் அவ்வாறான கண்காணிப்புக்கான சமூக மக்கள் அரசாங்கம் சரிவர இயங்குகிறதா - அதைத் திருத்தவும் இடம் உண்டு.
ழும் சமூகம் பற்றியும் அது செயற்படுகிற வண்டும். ஒரு நாட்டின் முழுச் சமூகமும் ல்வேறு பிரிவினரிடையே வேறுபட்ட சமூக பட்டவையாக இருந்தாலும் பல்வேறு தமது சமூக முழுமையைச் சீராகப்பேணி காலங்களிலும் ஒரே விதமாக இருந்ததில்லை. ன்டே உள்ளன. இந்த மாற்றங்களினூடாகச் ாள்கின்றன. எனவே ஒரு சமூகத்தில் ழமை எப்படி இயங்குகிறது என்ற அறிவு பங்குகின்றன என்ற அறிவு தேவை. அதன் பற்றிய அறிவு தேவை. சமூகம் எப்படிப்பட்ட னுடைய இன்றைய நிலையை அடைந்தது
பகுதியை மட்டுமே பாடத்திட்டங்களினூடு நாம் ஒவ்வொருவரும் நமது அன்றாடச் இயலும். அவ்வாறு செய்யத் தவறுகிற சயற்பாட்டையும் வழிநடத்துவதில் நமது
வாகத்தைக் குறித்தாலும் அதன் சரியான ல் மட்டுமே முடிவாவதில்லை. ஒழுங்கான பிரதிநிதிகளின் கைகளிலும் ஒவ்வொரு ககளிலும் அலுவலர்களது கைகளிலும் எதும் கைகளிலும் உள்ளது. நல்லதொரு காரம் உடையவர்களாகவும் அதிகாரிகளும் பணியாற்றுவோராகவே இருக்க வேண்டும்.
ல வாழ்வுக்கு வேண்டிய எல்லாவற்றையும் விடயங்களை வழங்குகிறது. எழுத்தறிவும்
்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 103
எண்ணறிவும் எல்லாக் காலங்களிலும் ஏற்பட்டு அவற்றுக்கு மேலாகச் சமூகக் கல்வி, வ உலகைப்பற்றி அத்தியாவசியமாக நாம் 9 விஞ்ஞானம், பொருளியல் போன்ற பாட உற்பத்தியுடன் தொடர்புடைய தொழில்க வழங்குகின்றன. மதம் ஒரு பாடமாகக் கர் சிந்தனையை வளர்க்கும் அளவுக்குச் சமூ
ஒரு பாடசாலை வழங்குகிற அறி முழுமையானதாக அமைய முடியும். ஏெ எவராலும் மற்றக் கல்வித் துறைகளில் 8 தொடர்ச்சியான வாசித்தலும் கேட்டலும் உ6 போனால் மொழியறிவே தேக்கமடைகிறது. ெ புதிய அறிவைப்பெறுகிற ஆற்றல் தேக்கமடை மிக்க சமூகச் செயற்பாடும் தடைப்படுகிற
பாடசாலைகள் மாணவர்களை ஆயத்தப்படுத்துகிற பட்டறைகள் என்று செ ஆற்றல்கள் கூர்மைப்படுத்தப்பட வேண்டும் குறைபாடு யாதெனில் இவ்வாறான அடிப்பன வளர்த்தெடுக்க இல்லாமல் உள்ளமையா பிற பாடங்களிலாயினும் அடிப்படையான அ அத்திவாரம் இட இயலாதுள்ளது. கல்வி மனதிற் பதியவைப்பதும் அவற்றை மீட்டெ அதற்கும் மேலாகப் பயிற்றப்பட்ட விதங்க வழங்கப்படுகிறது. இதற்காகப் பாடசாலைகள் மாணவர்களையுங் குறைகூற இயலாது.
நமது கல்வி முறை என்பது ஒருவ அதிக புள்ளிகளைப் பெற்று முன்னால் வ வாய்ப்பைப் பெறுவதை விட வேறு இலக் சிதைந்துவிட்டது. கல்வி என்பது இப்படிப் சிறுபான்மையினருக்கானதாக இருக்குமான முறையாகவே இருக்கும். இன்றைய கல்வி எளிதாகத் தீர்க்க முடியாது. நமது சமூகம் எனினும் கல்வியின் நோக்கத்தைச் சமூகப்ப பெற்றோராலும் பலவற்றைச் செய்ய இயலு
பரீட்சைப் பெறுபேறுகட்கு நேரடியாக என்ற எண்ணம் மாணவர்களிடையிலும் பெற் விரும்பினாலும் இவ்வாறான எண்ணங்களை உருவாகிவிட்டது. பரீட்சைப் பெறுபேறுகளி
புறக்கணித்துத் தனியார் போதனை ! ஊக்குவிக்கின்றது. இதன் விளைவாக அம் பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் பெறும் சமூக அறிவுகள் என்பனவற்றுக்கும் கெடு உடனடியாக இயலுமானதல்ல ஆனாலும்
கூர்மதி

B வந்துள்ள அடிப்படைக்கல்விக்குள் அடங்குவன. வரலாறு, புவியியல் போன்றவை நாம் வாழும் அறிய வேண்டிய விடயங்களைக் கற்பிக்கின்றன. உங்கள் எதிர்காலத்தில் ஒருவர் சமூகத்தின் களைச் செய்வதற்கான அடிப்படை அறிவை 3பிக்கப்படுகிறது. அது ஒருவரது அறஞ்சார்ந்த முகப்பயனுடையது.
வில் மொழியறிவே மற்ற அனைத்தினிலும் னனில் போதிய மொழிப் புலமை இல்லாமல் சிறப்பாகக் கற்றுத்தேற இயலாது. அதிற்கூடத் ரைத்தலும் உரையாடலும் எழுதுதலும் இல்லாது மொழியறிவு தேக்கமடைகிற போது மேற்கொண்டு உகிறது. அது மட்டுமன்றி மாணவரின் விளைபயன்
து.
அவர்கள் வாழப் போகும் சமூகத்திற்கு =ால்லலாம். அங்கு அவர்களின் அடிப்படையான -. இன்றைய கல்வி முறையில் உள்ள பெரிய Dட ஆற்றல்களை நமது கல்வி நிறுவனங்களால் கும். மொழியிலாயினும் கணிதத்திலாயினும் பழமான அறிவை உறுதிப்படுத்தி ஒரு வலுவான என்பது ஏராளமான தகவல்களைச் சேகரித்து டுப்பதுமாகவே பெரும்பாலும் அமைந்துள்ளது. களிற் சில காரியங்களைச் செய்கிற ஆற்றல் Dளயோ ஆசிரியர்களையோ குறைகூற இயலாது.
கையான போட்டிப் பந்தயமாக மாறிவிட்டது. பந்து விரும்பிய ஒரு உயர்கல்வித் துறையில் கே இல்லாத விதமாகக் கல்வியின் நோக்கம் பட்ட வாய்ப்புக்களை வெல்லும் ஒரு அற்பச் ால், அது சமூகப்பயன் இல்லாத ஒரு கல்வி
முறையில் உள்ள குறைபாடுகளை எல்லாம் D திருந்தாமல் நமது கல்விமுறை திருந்தாது. யனுள்ளதாக்கும் விதமாகப் பாடசாலைகளாலும்
அம்.
5 உதவாத எதையும் கற்பது தேவையற்றது
றோரிடையிலும் வேரூன்றியுள்ளது. ஆசிரியர்கள் ள மீறிச் செயற்பட இயலாத ஒரு நிலைமை ன் மீதான அழுத்தம் பாடசாலைக் கல்வியைப் நிலையங்களை நாடுமாறு மாணவர்களை ஒப்படையான கல்வியறிவுக்கு மட்டுமில்லாமல் ம் கட்டுப்பாடு நன்னடத்தை, ஒழுக்கம், சீரான தல் ஏற்படுகிறது. இவற்றிலிருந்து விடுபடுவது
இயலுமானவை பலவும் உள்ளன.

Page 104
பாடசாலைகளில் மாணவர்களின் ஆ முன்னெடுக்க இயலும். இவற்றில் இன்று அதி ( மாணவர்கள் முழுமையாக வாசிப்பதில்லை எ வாசிப்பு பாடப் புத்தகங்கட்கு வெளியே பழக்கமாக்குகிறவிதமான வாசிப்பு ஊக்கு
அறிவுசார்ந்த நூல்கள் என்பன பொழுது போக்க கல்வி புகட்டலுக்கு நடுவே மாணவர்கட்கு அ தொலைக்காட்சியின் முன் விரயமாகும் நேர உதவ இயலும். அதைவிட, வானொலியிற் செ கேட்டவற்றை ஒப்புநோக்கவும் பழகுவது பிற ஆற்றலை மேம்படுத்த உதவும். இவை சமூக அ அடிப்படைப் பணிகளாகும்.
தமது வகுப்பினருக்கு முன்னால் மாண கதை சொல்லவும் பாடசாலைகளில் நேரம் பற்றுமாறு ஊக்குவிக்கப்படவேண்டும். ப பத்திரிகைகளைக் கூட நடத்த இயலும். பாடக போலன்றி வகுப்பு மாணவர்களே விடயங்களைத் அமைக்கப்பட இயலும். இவ்வாறு மாணவர்கள் போன்ற ஆற்றல்களும் விடயங்களைக் கேட்( கேள்விக்குட்படுத்தும் ஆற்றலும் வளர்த்தெடுக்க சஞ்சிகைகளையும் வாங்கித் தமக்கிடையே பக்க நட்பையும் சமூகப்பாங்கான நடத்தையையும்
இவை அனைத்திலும் முக்கியமானது சு விளையாட்டு அணிகளில் இடம்பெற்று விளை போட்டியை வளர்க்கிற ஒரு போக்காகிவிட கூடிச்செயற்படுகிற மனப்பாங்கையும் வளர்க் முதலில் போட்டி பின்பு'' என்கிற சிந்தனையை செய்ய இயலும்.
மேலே குறிப்பிட்டவை இன்றைய பாட செய்யக் கூடியவை. இவை எல்லாமே இய ஒவ்வொரு பாடசாலைச் சூழலுக்கும் ஏற்றவாறு
எந்தெந்த நடவடிக்கைகளும் செயற்பாடு தம்மை அடையாளங்காண உதவுமோ அவற்ற செய்ய இயலும். ஆசிரியர்களும் பெற்றோரும் ப
பெரிய பாடசாலைகளை விடவுஞ் சிறப்பு முயற்சிகள் எளிதாக நடைமுறைப்படுத்தக் கூட பயிற்றுவித்தலும் வழங்க இயலாதன பல உள்ள தேடலில் அக்கறையும் உள்ள தனி மனிதர்க பிறர்மீது அக்கறையும் பரிவும் உள்ள சமூக மா பாடங்களின் மூலம் அவர்கள் கற்கிற ஒவ்வெ பெரும் பயனளிப்பதாக அமையும்.
84

ளுமை விருத்திக்கான பல பணிகளை முக்கியமானது வாசிப்பு. பாட நூல்களையே என்று அறிகிறேன். அதைவிட முக்கியமான - உள்ளது. வாசிப்பை ஒரு வாழ்நாட் விக்கப்பட வேண்டும். கதைகள், பொது காக வாசிக்க உகந்தன. இவை இறுக்கமான வசியமான இடைவெளியை வழங்குகின்றன. த்தை இதற்குப் பயன்படுத்தப் பெற்றோர் ய்தி கேட்கவும் பத்திரிகைகளில் பார்த்துக் ற்காலத்தில் விடயங்களை விசாரித்தறியும் அக்கறையுள்ள இளைஞர்களை உருவாக்கும்
வர்கள் பாடியும் நடித்தும் உரையாற்றியும் ஒதுக்கப்பட்டு அதில் ஆசிரியர்கள் பங்கு மாணவர்கள் தமக்கான கையெழுத்துப் சாலைகட்கு இடையிலான விவாதங்களைப் த் தம்மிடையே விவாதிப்பதற்கான களங்கள் ளிடம் பொதிந்துள்ள பேச்சு, நடிப்பு, இசை நி அப்படியே ஏற்காமல் எல்லாவற்றையும் கப்பட இயலும். மாணவர்கள் நூல்களையும் கிருவது வாசிப்புப் பழக்கத்திற்கும் மேலாக
ஊக்குவிக்கும்.
கூடி விளையாடுதல், இது பாடசாலைகளில் "யாட்டு வீரர்களாகிறது பற்றியதல்ல. அது ட்டது. நான் கூற முற்படுவது நட்பையும் கிற விதமான விளையாட்டுக்கள் "நட்பு பச் சிறுவயதிலேயே மாணவர்கள் விருத்தி
சாலைச் சூழலின் வரையறைக்குட்பட்டே லுமானவகையாகப் போகலாம். ஆனாலும் 1 செய்யக்கூடியன வேறு யாவும் உள்ளன.
களும் மாணவர்களைச் சமூகப்பிறவிகளை நில் இயலுமானவற்றைப் பாடசாலைகளால் மனம் வைத்தால் இயலாதது எதுவுமில்லை.
பாகச் சிறிய பாடசாலைகளில் இவ்வாறான ஒயவை. எந்தப் பாடத்திட்டமும் பாடநூலும் ரன. மாணவர்கள் சுயாதீனமான சிந்தனையும் களாகவும் பிறருடன் சேர்ந்து செயற்பட்டுப் னிதர்களாகவும் விருத்தி பெறுபவர்களாயின் எரு விடயமும் அவர்களும் சமூகத்திற்கும்
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 105
நான் இங்கு குறிப்பிட்டதில் எதுவும் மு ஓரிரு பாடசாலைகளிலேனும் அவ்வாறான மு அதன் நற்பயன்கள் பிற பாடசாலைகளின்
மக்களிடையே எளிதாகப் பரவுவன நற்பண்புகளும் சமூகப்பயனுள்ள செல்வங் தாம். அதற்காக நாங்கள் எங்கள் மனங்கதை இயலாதது எதுவும் இல்லை.
க2% நுண்கலைகளான ஓவியம், சி
நாட்டியம் இன்ன பிறகலைகள் ( என்ற நற்குணத்தைக் கற்றுத் இக்கலைகளை கற்க வேண்டி பொறுமைசாலிகளாக இருக்க வே முன்னோர்கள் அவர்களுக்கு நா ஆகியவற்றைக் கற்கச் சொன்ன வகையிலும் பொறுமை காப்போர வாழ்வை வெற்றி பெறச்செய்யல
ஓஸ்
கூர்மதி

ன்னர் நடவாததுமல்ல, நடத்த இயலாததுமல்ல. Dயற்சிகள் ஊக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டால் லும் நல்ல தாக்கங்களை ஏற்படுத்தும்.
நோய்களும் தீய வழக்கங்களும் மட்டுமல்ல. பகளுக்கூடத் தொற்றிக் கொள்ளக் கூடியவை ளப் பண்படுத்திக் கொள்ள முன்வருவோமாயின்
2க்கி
ற்பக்கலை, சங்கீதம், நடனம், என்பன மனிதனுக்குப் பொறுமை தருகின்றன. ஆகவே தான் நாம் பவர்களா கின்றோம். பெண்கள் பண்டுமென்பதற்காகத் தான் நம் ட்டியம், சங்கீதம், தையற்கலை எார்கள். நாம் நம்மை எல்லா மகப் பார்த்துக் கொண்டால் எமது
ம்.
Sece
85

Page 106
முன்பள்ளிகளின் மகிழ்நில இயற்கைவாதச் 8
ஆசிரியர்,
முன்பள்ளி நிலையங்களின் கல்வி ஏற்பாடுக முழுமையான வளர்ச்சிக்கும், வாழ்க்கை நீடித் இடுவதில் பெறும் செல்வாக்கு செலுத்துகின்ற வளமாக்குவதில் மிகமுக்கிய பங்கு வகிக்கின்றது பிற்காலத்தில் சரிசெய்யப்பட முடியாதவை. 2 பாடசாலை செல்ல ஆயத்தமாதல் உள்ளட பொருத்தமான வாய்ப்புக்களையும், அனுபவங்க நோக்கு என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டி
இயற்கை வாதம் முற்றுமுழுதாக இயற் கல்வியில் எதுவுமில்லை. இயற்கை தனக்கு | இது நீதிநெறி விழுமியங்களுக்கு அப்பாற்ப வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது மனி, சமுதாயத்தின் ஒரு பகுதியல்ல என்பது இ சமூகப்பிராணி எனும் கூற்று இங்கு புறக்க "எமிலி” எனும் நூலும் விரிந்து வலியுறுத்து
முன்பள்ளி கல்விச் செயற்பாடுகள் | உள்ளடக்கியவை. குழந்தைகளின் முழு முக்கியத்துவமளிக்கும் வயிைல் முன்பா அமையவேண்டும். முழுமையான கற்றல் வ இங்கு செயன்முறைகள் வகுக்கப்பட வே முழுமையாக அடைய முன்பள்ளி கல்வி வழி கூறுவதைப்போல குழந்தைகள் பெரும்பா அனைத்தையும் கற்கக்கூடிய இயல்பைப் ( ஆர்வமுடையவர்களாகிய இவர்கள் பிறரது தன்மையும் கொண்டவர்கள். இவ்வகையில் , விமர்சனங்களுக்குட்படுகின்ற நிலையிலும் பின் தனித்துவத்தன்மைகளை வழங்குவதில் : முன்வைக்கப் படும், கல்விக் கோட்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படுவதுடன், இதன் மூலம் முன்பள்ளிக்கல்வியில் அறிமுகமாகின்றது எ
கற்பனைத்திறன் அதிகமாயுள்ள குழ கல்வியின் செயன்முறைகள் அமையவேண்டு வாழ்க்கை அனுபவங்களே அவர்களுக்கு கல்வி
(86)

மலக் கற்றலுக்குதவும் =ந்தனைகள்
எம்.மூவேந்தன் - மமா/அவ/சென் ஜோசப் த.ம.வி. மஸ்கெலியா.
கள் பிள்ளைகளின் உள்ளார்ந்த ஆற்றலின் த கல்விக்கும் தேவையான அத்திவாரத்தை ன. இப்பருவ வளர்ச்சியானது எதிர்காலத்தை 5. முன்பள்ளிகளில் விடப்படும் இடைவெளிகள் உடல், உள், சமூக, மனவெழுச்சி விருத்தி, ங்கிய ஒட்டுமொத்த பிள்ளை விருத்திக்கு, களையும் வழங்குவது முன்பள்ளிக் கல்வியின் ஒயதாகின்றது.
கையைத் தழுவியது. இயற்கைக்கு அப்பால் முன்னும் பின்னும் எதனையும் கொண்டதல்ல. ட்டது. மனிதன் இயற்கை நிலைக்குப்போக தன் இயற்கையின் ஓர் உருவ வாரிசேயன்றி இங்கு உணர்த்தப்படுவதுடன், மனிதன் ஓர் ணிக்கப்படுகின்றது. இதனையே ரூசோவின் கின்றது.
பல நோக்கங்களையும், அர்த்தங்களையும் மையான ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு எளிக் கல்வியின் இலக்கும், நோக்கும் ளங்களையும் அவர்கள் பெறும் வகையில் ண்டும். எல்லா வளர்ச்சி நிலைகளையும் செய்கின்றது. இவ்வகையில் இயற்கைவாதம் லும் தம்மைச் சுற்றியுள்ள சூழலிருந்தே பெற்றவர்கள் எதனையும் புதிதாக கற்கும் நடத்தையை அப்படியே பின்பற்றக்கூடிய இயற்கைக் கோட்பாடு பல்வேறு வகையில் வரும் தன்மைகளால் முன்பள்ளிக் கல்விக்கு அடிப்படையாயமைகின்றது. ரூசோவினால் இன்றும் முற்போக்குக் கல்வியாளர்களால் Tக பல புதிய கற்பித்தல் முறைகளும்
ன்பது சான்றுபடுத்தப்பட்டுள்ளது.
ந்தைகளின் இயல்புக்கேற்ப முன்பள்ளிக் மென, இயற்கைவாதம் வலியுறுத்துகின்றது. யாக அமைகின்றன. இங்கு பாடபோதனையே
- கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 107
பிரதானம் எனும் கருத்துநிலை மாறி, ஆ செய்தல் போன்றவைகளுக்கான சூழ்நிலை ஏற்படும் அனுபவங்கள் குழந்தைகளுக் உணர்த்துகின்றது. ஒரு குழந்தைக்கு முத அவளைச் சார்ந்த குடும்பமும் அமைகின்ற
குழந்தைகள் எதனையும், இயற்கை இருப்பதனால், அனைத்து வளர்ச்சிப் படிக செல்ல தூண்டுதல் தேவைப்படுகின்றது. முன்பள்ளிகள் இட்டுச் செல்வதாக இயற்ல
சூழல், வயது, கட்டுப்பாடுகள் இன்று பொருந்தியமைதல் வேண்டும் என இயற்கை மையங்களில் ஆடல், பாடல் விளையாட் சிறப்பாக உணர்த்தப்படுகின்றது. இங்கு இ ஈடுபடும்போது பிள்ளை வளர்ச்சியின் ஒவ்6ெ ஒரு செயற்பாட்டின் வாயிலாக பலதரப்பா ஏற்படுத்த முடிவதாக இயற்கைவாதம் கூறு. முக்கிய கொள்கைகளினடிப்படையில் அல
3 ) 4
குழந்தைகளின் அடிப்பை விரும்பத்தகுந்த மனோபா நல்ல நடத்தைகளையும் குழந்தையை அடுத்த நி
குழந்தைக்கு கல்வி புகட்டத்தொடங்கு (ChildNature) பற்றிய அறிவினை ஆசிரியர் ரூசோவின் பின் பெஸ்டலாஜி கூறும் உடல் வேண்டும் எனும் கருத்து இவரது இயற்6 (Psychologising Education) என்பது இயற் கூறப்படுகின்ற குழந்தை மையக்கல்வியின் 6 யாவும் இயற்கைவாதம் எமக்கு உவந்தளி
குழந்தைக் கல்விக்கு சுதந்திரம் அகல்விரிவே பிற்கால கருத்து போன்றோரது கருத்துக்களுக்கு
அறிவு வளர்ச்சிக்கு அடிப்படை இயற்கைவாதம் முன்வைக்கி நேரடியாகத் தனது புலன்களில் அனுபவங்களைப் பெறுவதன் வலியுறுத்தி நிற்கின்றது சீர்திருத்தங்களிலும் புதிய முன் கருத்தாக இயல்புவாதப் பரி
தானே முயன்று கற்றல் உணர்த்தப்படுகின்றது. பிறரது
கூர்மதி

ராய்தல் கவனித்தல், சோதித்தல், பார்த்துச் பகளையும் ஏற்படுத்தும் போது, அவற்றால் கு கற்றலாகிவிடுவதாக இயற்கைவாதம் லில் கல்வி வழங்கும் அமையமாக தாயும்
ன.
யாகவே கற்கும் திறன் படைத்தவர்களாக ளையும் சீராகவும் செம்மையாகவும் கடந்து அத்தகைய தூண்டுதல் செயற்பாடுகளுக்கு கவாதம் அமைகின்றது.
தியமைவான முறைகளில் முன்பள்ளிக்கல்வி வாதம் செப்புகிறது. இவ்வகையில் முன்பள்ளி டுக்கள் மூலம் குழந்தைக்கல்வி அமைவது இயல்பூக்கங்களை அடிப்படையாகக் கொண்டு பாரு படியிலும் முன்னேற்றம் ஏற்படும். குறித்த ட்ட வளர்ச்சி நிலைகளை குழந்தைகளிடம் நின்றது. முன்பள்ளி கல்வி நடவடிக்கைகள் 4 மெந்தது.
டத் தேவைகளைப் பூர்த்தி செய்தல்
வங்களை வளர்த்தல் தேகாரோக்கியத்தையும் வளர்த்தல் லைக்கு தயார்செய்தல்.
தமுன் அதன் தேவைகள் இயல்புகள் என்பன பெறவேண்டும் என்பது வலியுறுத்தப்படுகின்றது. தியலின் அடிப்படையில் கல்வி அமைக்கப்பட கைவாதத்தில் இருந்தே எழுந்தது எனலாம். கைவாதத்திலிருந்தே முகிழ்ந்ததாகும். இன்று மையப்பொருளாகக் கொள்ளப்படும் இயல்புகள் த்ததென்றால் மிகையாகாது.
அடிப்படை எனும் கருத்தும் இயற்கைவாத்தின் தியலாளர்களான மொண்டிசோரி, ஜோன்டுயி 5 இயற்கைவாதமே அடிப்படையாகின்றது.
புலப்பயிற்சி (Sense Training) எனும் கருத்தை Tறது. உண்மைப் பொருட்களுடன் குழந்தை ன் வழியாகத் தொடர்பு கொண்டு பல கல்வி 1 அவசியத்தையும் இவ் இயற்கைவாதம் இன்றைய கல்வி முறைகளிலும் நவீன னப்புகளிலும், திட்டமிடல்களிலும், உண்மைக் எாமம் சிறப்பார்ந்த இடத்தைப் பெறுகின்றது.
எனும் கோட்பாடு இயற்கைவாதத்தால் - குறுக்கீடுகளின்றி தானே செயற்படுதலின்
87

Page 108
வழியேதான் சிறந்த கற்றல் எழபு ஒப்படைப்புகள், கண்டறி முறை முறைகள் கற்றலுக்கான பொறு குழந்தையிடம் விட்டுவிடுவது இ
செய்து கற்றல் (Learming by | வாதத்தால் வலியுறுத்தப்படுகின் கற்பித்தல் அனுபவங்கள் யாவும் வழியேதான் அவர் களுக்கு உணர்த்தப்படுகின்றது.
கல்விப்பருவத்தில் குழந்தைகள் இயற்கைவாதத்தால் உணர்த்தப் உடலுழைப்பு என்பவற்றின் இன்
குழந்தைகளது நடத்தையை இயற்கைவாதம் (Natural Conseq வலியுறுத்தப்பட்டது. இங்கு கு! வழியாக நசுக்க முற்படுவது த6
இங்கு விளையாட்டு நடவடிக்கைகள் த வலியுறுத்தப்படுகின்றது. அடிப்படைச்சுகா, குழந்தையுடன் இசைவாக்கமடைய உத சமூகமயமடையும் பிள்ளை முன்பள்ளி நிலைய வருகின்ற பிள்ளைகளுடன் சமூகமயமாகின்ற தனக்குரிய கடமை, பொறுப்பு, தான் பெறக்கூடி உதவுகின்றன.
குழந்தைகள் தம் முதிர்ச்சி நிலைக்க பழக வேண்டும். இக்கல்வி முறைகள் குழந் தூண்டிவிடுகின்றது. புத்திக் கூர்மையுடனும்,
இங்கு வளர்க்கப்படல் வேண்டும். கல்வியில் | வலுவூட்டுகின்றன. இக்கல்வி முறைகள் பிள்ளை வளர்ச்சிக்கும் வித்திடும் நிலையங்களாயுள்ள
குழந்தைகள் தம் கலைகள், பண்பா எண்ணங்களையும், மொழிமூலமாக சரியாகவும் இப்பருவத்தில் முன்பள்ளி நிலையங்கள் வ சமூக விழுமியங்கள் தொடர்பான அடிப்ப சிந்தனைகளையும், வளர்ப்பதாக இவை அடை செயற்பட்டுள்ளது. ஒரு சிறந்த முன்பள்ளி நிற "சூழலை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். ஒரு துன்ப உணர்வுடன் பிறக்கவில்லையோ, அதேடே நிலை அதற்கேற்படாதவகையில் முன்பள்ளிக் | அவசியம் உணர்த்தப்படுகின்றது. சிறந்த பாது வழங்கப்படும் போது குழந்தைகள் சிறந்த கு கற்பிக்கின்றது.
88

Dடியும் என்பது தெளிவு மேற்பார்வைப்படிப்பு, போன்ற இன்றைய புதிய கற்றல், கற்பித்தல் பபில் பெருமளவினைக் க ற' கு ம '
யற்கை வாதத்தின் சிறப்பாகும்.
loing) எனும் கல்விக்கருத்தும் இயற்கை ற ஒன்றாகும். சிறார்களுக்கான கற்றல்'. , சொற்களின் வழியேயன்றிச் செயல்களின் அளிக்கப்பட வேண் டும் என் பதும்
ஓர் கைத்தொழிலைக் கற்பதன் அவசியமும் படுகின்றது. இங்கு கல்வியில் கைப்பணி, றியமையாமையும் வலியுறுத்தப்படுகின்றது.
- நல் வழிப்படுத்தலில் ரூஸோ கூறும் uences) ஸ்பென்சர் போன்றோராலும் மீளவும் ழந்தைகளது இயல்பூக்கங்கள் தண்டனை வறு என உணர்த்தப்படுகின்றது.
சைகளின் இசைவுக்கும் பெரிதும் உதவுவது தாரம், அடிப்படை தேவைகள் என்பன வுகின்றது. வீட்டில் தன் குடும்பத்துடன் பத்தில் பலதரப்பட்ட சமூக நிலைகளிலிருந்து -து. இங்கு தனக்கென ஓர் சிறுவர் கழகம், ய சலுகைகளையும் அறிய முன்பள்ளிகள்
மைய தம் உணர்வுகளைச் கட்டுப்படுத்த தைகள் மத்தியில் இரசனை மனப்பாங்கை சுறுசுறுப்புடனும் வளர்ச்சிக்கான ஆற்றல் புதிய ஆராய்வூக்கத்துக்கும், முன்பள்ளிகள் ரயின் புதியனவற்றைப் படைக்கும் ஆற்றலின்
ன.
டுகள் மூலமாக தம் உணர்வுகளையும், ) தெளிவாகவும் வெளியிடும் ஆற்றலையும் கர்த்தல் வேண்டும். குழந்தைகளுக்கு தம் டையறிவையும், மனப்பக்குவங்களையும், 1வதற்கு இயற்கைவாதம் உந்து சக்தியாக வனம் குழந்தைகளுக்கு வீடுபோன்றதொரு குழந்தை பிறக்கும் போது எவ்வாறு ஒரு Tலத் தான் வாழும் காலத்திலும் அத்தகைய கல்விநிலையங்கள் செயற்பட வேண்டியதன் காப்பும், சிறந்த சுதந்திரமும் அடிப்படையில் டிமக்களாக வாழ்வர் என இயற்கைவாதம்
ல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 109
ஒரு ஆரோக்கியமான குழுந்தைக்கு அவசியம். இதனை மையமாகக் கொண்டே யாவும் விளையாட்டு முறைகளில் கற்பத வளர்ச்சியையும் அதிகமாக கவனத்திற் கொள் எதனையும் தெரிய முனைகின்றது. சுற்றுப் கொள்ளத் தொடங்கும் குழந்தை உற்றுநே ஆராயவும், கேள்விகள் கேட்கவும் முனை அறிவு வளர்ச்சிக்கும் இவ் ஆராய்ச்சி மனப்பா படைப்பாற்றலும் சேர்ந்து செயற்படுகின்றது. சாதிக்கலாம் என குழந்தைகள் செயற் குழந்தைக்கல்வி செயன்முறைகளை நன்கு நலன் அடிப்படையிலானதுமாக அமைய6ே நிற்கின்றது.
இயற்கைவாதம் முன்பள்ளி நிலையா முறைகளுக்கும், விளையாட்டு சிறந்த கற் விளையாட்டு சிறந்த கற்பித்தல் முறைய குழந்தைகளிடம் இயல்பாக காணப்படும் ஒ தொழிற்பாடே விளையாட்டாகவே காணப்படு வெளிப்படுகின்றன. வெளித்தூண்டலோ பிறரத்து செயல்களிலீடுபடுவதே விளையாட்டின் சிறப் இயற்கைவாத சிந்தனைகளில் மிகவும் முக்க குழந்தைகளின் உடல், உள, மன இவ்விளையாட்டுக்கள் சிறப்பு இடத்தைப் ெ முன்பள்ளிக் கல்வித்துறையில் "குழந் "குழந்தைகளுக்கான விளையாட்டுக்களில்"
+ +
இயல்பான உடல், உள எழுச் துள்ளுதல், திரிதல், கற்பனை பாவனை விளையாட்டுக்கள் (பி நாடகப்பாங்கான விளையாட்டுக் நட்பை உண்டாக்குவதற்கான விளையாட்டுக்களாகவும் குறிப் தனிமை நாட்ட விளையாட்டுக் கருத்திற்கொள்ளாத சுய விலை பங்குபற்றாத விளையாட்டுக்கள் அவற்றில் பங்குபற்றாது L விளையாட்டுக்கள்) இடைவினை பெறாத விளை விளையாட்டுக்கள்) கூட்டுறவுப்பாங்கான விளையாட்டு உதவி செய்தும் விளையாடுப6 நடிபங்கும் ஏற்கும் நாடகப்பா நடித்தல், பிறருடன் இணைந்து
4)
கூர்மதி

அதிக விளையாட்டும், அதில் ஆர்வமும், (indergarten, Montessori போன்ற முறைகள் Tக அமைந்திருப்பதுடன் அவர்களது உள் Tளப்படுகின்றன. இவ்வகையில் சிறிய குழந்தை புறத்தில் நடக்கும் விடயங்களைத் தெரிந்து க்கும் திறனை பெறுகின்றது. காண்பவற்றை நின்றது. அவர்களுடைய புத்தி கூர்மைக்கும் ன்மை பெரிதும் உதவுகின்றது. நுண்ணறிவுடன் கோபம், பிடிவாதம் போன்றவற்றால் எதனையும் படுவதனையும் காணலாம். இவ்வகையில் திட்டமிட்டு வழங்க வேண்டியதையும் எதிர்கால பண்டியதையும் இயற்கைவாதம் வலியுறுத்தி
ங்களின் சிறந்த செயற்பாடுகளுக்கும் கல்வி பித்தல் முறையாக முன்மொழியப்படுகின்றது. ாக முன்மொழியப்படுகின்றது. விளையாட்டு ரு செயலாகும். குழந்தைகளின் வாழ்க்கைத் இகின்றது. இங்கு குழு இயல்புகள் தெளிவாக து கட்டாயங்களோ இன்றி தாமாக மகிழ்வூட்டும் பாகும். விளையாட்டு முறைக் கற்பித்தலானது கியமாக வெளிப்படுத்தப்பட்ட ஓர் விடயமாகும். வழுச்சி மற்றும் சமூக வளர்ச்சிகளில் பறுகின்றன. இதன் காரணமாகவே இன்றைய தைகளின் விளையாட்டுக்கள்" அல்லது விரிவான கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
சி இயக்கங்களோடு இணைந்தவை (ஆடுதல், செய்தல்) பிறர் நடத்தையை போலச் செய்தல்) கேள் (தமக்கு பிடித்தவற்றை, மீள நடித்தல்) | விளையாட்டுக்கள் (இவை தொடர்பாடல் பிடப்படுகின்றன.) கள் (குழந்தைகள் ஏனைய குழந்தைகளை ளயாட்டுக்கள்) - (ஏனைய குழந்தைகள் விளையாடும் போது பார்வையாளராக இருந்து அனுபவிக்கும்
பாட்டுக்கள் (இயங்காத பொருட்களுடனான
மக்கள் (பிறருடன் சேர்ந்தும், விட்டுக்கொடுத்தும்,
வை) ங்கான விளையாட்டுக்கள் (தாமே தனித்து
நடித்தல் போன்றவை).
(89)

Page 110
எனவே இன்றைய சிறுவர்களே எதிர்கா சிறந்த மனப்பாங்குகளையும் விழுமியங்களைப் முன்பள்ளிகளின் பங்கு இன்றியமையாதாகும். போன்ற உயர் விழுமியங்களை பிள்ளைக்கு நிலையங்களின் பங்கு பல்வேறு வழிவகை குழந்தைகளின் ஆளுமைக்கு வித்திடவும் முன்பள்ளிகளின் பாரிய பங்காகக் கருதப்ப கல்வியானது அவர்களுக்கு மிகுந்த பயனைக் முன்பள்ளி நிலையங்களுக்காக வகுக்கப்பட கடமையாக இன்று உணரப்பட்டுள்ளதுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும்
காணக்கூடியதாயுள்ளது. "யாவருக்கும் ஆரம்பக் கல்வியில் பால்நிலை சமத்துவத்ல இன்றியமையாததாகக் கருதப்படுகின்றது.
எனவே, இயற்கைவாதம் இயற்கையை இயற்கையோடிணைந்த முறையில் வழங்கு அமைகின்றது. இயற்கையோடிணைந்த கல்வ இங்கு தானே முயன்று கற்றல், கண்டறிமுறை என்பன மிகப்பிரதான வளமாகக் காணப்பு வாழ்விலிருந்தும் சமூகத்திலிருந்தும் பெறும் டே வேலையுலகில் முன்பள்ளி நிலையங்களில் மகிழ்ச்சிகரமான கற்றலுக்கு முன்பள்ளிகளில் சிறப்பிடம் பெறுகின்றதெனலாம்.
(90)

லத்தின் பூரண மனிதர்கள் என்ற நிலையில் பும் இளமைப் பருவம் தொட்டே, வளர்ப்பதில் அன்பு, அறம், கருணை, இரக்கம், பண்பாடு வழங்குவதிலும், வளர்ப்பதிலும் முன்பள்ளி களிலும் சான்றுபடுத்தப்படுகின்றது. இங்கு அவர்களைச் செம்மையாக வளர்த்தலும் டுகின்றது. குழந்தைகளுக்கு வழங்கப்படும் காடுக்க கூடியதாக ஓர் சிறந்த கலைத்திட்டம் டல் வேண்டும். இது அரசின் தலையாய - அது தொடர்பாக தீவிர ஏற்பாடுகளும்
கல்வி' என்ற அபிவிருத்தி இலக்கையும் ஒதயும் அடைய முன்பள்ளி நிலை இன்று
மையமாகக் கொண்டு வழங்கப்படும் கல்வி -கின்ற போது மனித வாழ்வு சிறப்பாய் பி எதிர்காலச் சிறப்பிற்கு வித்திடுகின்றது. ற, பிரச்சினை தீர்த்தலுக்கான கல்விமுறை படுகின்றது. அனுபவங்களை அவர்களது பாது, பெற வழிகாட்ட வேண்டியது இன்றைய ன் பிரதானமான கடமையாய் அமையும். ல் ரூஸோவின் இயற்கைவாதத்தின் பங்கு
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 111
நாயன்மார் பாட
முற்போக்
திருமதி அ. 6
"உள்ளம் அள்ளும் உணர்வுகள், ஆழ்மனத் இனிய நினைவுகளை, சிக்கல்கள், போராட் உன்னதமான குறிக்கோள்கள் என்பன மொ பெயரைப் பெறுகின்றன'' என அறிஞர்கள் கு. மனிதனாக வாழ்வதற்குரிய இலக்குகளை உண்மைகளை எடுத்துக்காட்டி மனித மனங் இலக்கியங்கள் காலத்திற்கு காலம் தோல் தமிழ் மொழியும் தமிழ் மக்களும் என்றும் தன் தமிழர்கள் அகமும் புறமும் தம் வாழ்வியல் சங்ககாலத்திலும் புலவர்கள் மானுடத்தை
"யாதும் ஊரே ! "உண்டாலம்ம இ அமிழ்தம் இயைவதா தமியர் உண்டலும்
துஞ்சலும் இலர் பி புகழ் எனின் உயிர் கெ
உலகொடு வரினு
எனப் பாடத் தவறவில்லை. ஆரியக் கலப் தாக்கங்களும் ஏற்பட்ட பொது அறநெறியின மற்றெல்லாம் புறத்தே” என்பதை மிக களப்பிரர் ஆட்சியினால் இருண்டு கிடந்த ஒளிக்கீற்றினை பாய்ச்சும் பொற்கிரகணங்கள் ஆழ்வார்களும் பக்தி இயக்கத்தைத் தோற்றுவி
நாயன்மார்களால் தோற்றுவிக்கப்பட்ட பக்தி பல்லாயிரக்கணக்கில் தோற்றம் பெற்றன. இப்பு பெரும் புரட்சியினை ஏற்படுத்தின. இதனால் பதிகங்கள் இசையோடு பாடப்பட்டதனால் மத்தியில் மட்டும் நடமாடிய தமிழ் கல்லார் ெ தமிழ் மொழி மக்கள் மொழியாக மாறியது. ! நிலைநாட்டப்பட்டது.
பக்தி இலக்கியங்களைத் தோற்றுவித்த நாயகி வேதியர்கள் இருந்தனர், சாலியர், சான்றோர் வேடர் என பல்வேறு சாதியினர் பாடல்கை பெரிதும் மதிக்கப்பட்டதோடு இவர்களது
கூர்மதி

ல்களில்) த சிந்தனைகள்
வைத்திலிங்கம்
பில் கிளர்ந்தெழும் ஏற்றம்மிகு வண்ணங்கள், டங்கள், உயர்ந்த வாழ்விற்கு வழிகாட்டும் ழிவடிவம் பெறும்போது இலக்கியம் என்னும் றிப்பிடுகின்றனர். இவ்விலக்கியங்கள் மனிதன் இப் பகுத்துத் தருகின்றன. உன்னதமான களைப் பக்குவப்படுத்துகின்றன. அத்தகைய ன்றி மானுடத்தை வலியுறுத்தியதால் தான் த்துவம் மிக்கவர்களாக இனங்காணப்பட்டனர். நெறிகள் எனப்போற்றி தூய்மையாக வாழ்ந்த மதித்து
பாவரும் கேளிர்” வ்வுலகம் இந்திரர் யினும் இனிது எனத்
இலரே முனிவிலர் றர் அஞ்சுவ தஞ்சி காடுக்குமவர், பழியெனின் வம் கொள்ளலர்”
பினால் அரசியல் மாற்றங்களும் பிறசமயத் ன போதித்து "அறத்தால் வருவதே இன்பம் ஆழமாக நீதிப்பாடல்களில் வலியுறுத்தினர். தமிழ்மக்களின் வாழ்வில் பக்தி என்னும் ளாக பல்லவர் காலத்தில் நாயன்மார்களும் த்து பல புரட்சிக் கருத்துக்களை விதைத்தனர்.
தி இயக்கத்தினால் பக்தி இலக்கியங்கள் பாடல்கள் யாவும் தமிழ் இலக்கிய வரலாற்றில் ல் தமிழ் மொழி புத்துயிர் பெற்றது. தமிழ்
எங்கும் இசைமணம் பரவியது. கற்றோர் நஞ்சிலும் தாண்டவமாடத் தொடங்கியதனால் இதனால் தமிழகமெங்கும் உலகப் பொதுமை
பன்மார்கள் அறுபத்து மூவராவர். இவர்களில் 1 இருந்தனர், பஞ்சமர், பரதவர், வண்ணார், ளப் பாடியுள்ளார். இவர்கள் சமுதாயத்தில் பாடல்கள் இறைவனுக்குரிய பாமாலைப்
91

Page 112
பாடல்களாகப் போற்றப்பட்டன. இதனால் வர்க் தாழ்வு காணும் குறுகிய மனப்பான்மை என்ப இடமில்லை.
''ஆவுரித்துத் தின்றுழலும் புலை கங்கைவார் சடைக்கரந்தார்க்கு . அவர்கண்டீர் நாம் வணங்கும் க
ஆன்ம நேய ஒருமைப்பாடு இக்காலத் அமைகிறது. இவ்வான்ம நேயமானது தமிழ்மொ மாற்றியது. சொல்வளத்தால், இனிமையால், உ இசைவெள்ளத்தால், எளிமையால் தமிழ்ெ பக்தியுணர்ச்சி ததும்பி வழியும் இப்பாடல்களில் பொதிந்திருப்பதைக் காணக்கூடியதாய் இருந்
ஒரு காலகட்டத்தில் கலையுலக பிரமாக்க சென்று மாளிகையில் துயிலும் மன்னனை 6 ஆனால் நாயன்மார்கள் இறைவனுக்காக பள்ளி புரட்சியினை ஏற்படுத்தினார். மாளிகை வாழ் இறைவன் குடிகொண்டிருக்கும் ஆலயத்திற்கு துயிலெழுப்பும் முறையினைத் தோற்றுவித்தன இறைவனுக்கு முன் மன்னனும் மக்களும் சமம் உலக உயிர்கள் அனைத்திற்கும் இறை பாடிப்பரவுவதற்கே தமிழ் பயன்பட வேண்டும் பாடல்கள் தோற்றுவித்தன. கோ+இல் என்பது - அரண்மனைகள் கோயில்களாகக் கருதப்பட்டன செய்த புரட்சியினால் இறைவன் வாழும் இல்ல இடம்பெற்ற விழாக்கள் ஆலயங்களில் திருவிழா. மிகவும் உயர்ந்த இடமாக மதிக்கப்பட்ட ம உயர்ந்த கட்டிடங்களாக அமைக்கப்பட்டன.
இதுபோலவே மார்கழி மாதத்தில் ப மக்களுக்கு உயரிய சுகவாழ்விற்கான உன் எழுந்து குளிர்ச்சியான நீரில் நீராடி விடியலில் உடற்சுகாதாரத்திற்கு உகந்த மருத்துவம் ( அடியவர்கள் தம் பாக்கள் மூலமாக எமக்கு 2 பெண்கள் அதிகாலையில் ஊரிலுள்ள கன்னி செல்லுமாறு பாடல் மூலமாக அழைப்பு மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடல் எ
"போதார் அமளியின் மே கண்ணைத் துயின்று அவமே
விண்ணுக்கொரு மருந்தை
கண்ணுக்கினியானை ட
ஆலேலோர் எ
பக்திநெறியில் தம்மை ஈடுபடுத்திக் கொ ஆகையினால் கருவறையில் வைத்து வழிபா
92

தகவேறுபாடு சாதி வேறுபாட்டினால் உயர்வு ன சமுதாயத்தில் இடம் பெற்றதாகக் கருத
யரேனும்
அன்பராகில் டவுளாரே”
மதில் பேணப்பட்டமைக்கு இது சான்றாக ழியை ஓர் உயர்ந்த பக்திமார்க்க மொழியாக உணர்ச்சிப்பெருக்கால், கருத்துக் குவியலால், மாழி செழுமைப் பெற்று விளங்கியது. 5 அதையும் விஞ்சி முற்போக்கு செய்திகள்
தது.
ளாக வர்ணிக்கப்படும் புலவர்கள் மக்களுடன் எழுப்புவதற்காகப் பள்ளியெழுச்சி பாடினர். யெழுச்சி பாடி தமிழ் இலக்கிய வரலாற்றில் - மன்னவனையும் மக்களோடு மக்களாக சென்று பள்ளியெழுச்சி பாடி இறைவனை 1. இதனால் இப்பள்ளியெழுச்சிப் பாடல்கள் என்ற சமரசக் கொள்கையை வலியுறுத்தின. இவன் ஒருவனே தலைவன், அவனைப் -என்ற சிந்தனையினை நாயன்மார்களின் அரசன் வாழும் இல்லம் என்னும் பொருளில் எ. ஆனால் நாயன்மார்களின் பக்திப்பாக்கள் பங்கள் கோயில்களாகின. அரண்மனையில் க்களாகின. அதுவரையில் மக்கள் மத்தியில் மாளிகைக்குப் பதிலாக கோயில்கள் மிக
Tடப்படும் திருவெம்பாவை பாடல்களும் ன்மையினை போதித்தன. அதிகாலையில் D வீசும் காற்றினை சுவாசிப்பதைப் போல வேறில்லை என்பதை அக்காலத்திலேயே உணர்த்தியுள்ளனர். எனவே அக்காலத்தில் ப் பெண்களையெல்லாம் எழுப்பி நீராடச் விடுக்கின்றனர். இச்செய்தியினையே மக்குணர்த்துகிறது.
ல் நின்றும் கிடந்தும்
காலத்தைப் போக்காதே வேத விழிப்பொருளை பாடிக் கசிந்துள்ளம்
ம்பாவாய்"
ண்ட மக்கள் இறைவன் மிக உயர்ந்தவன் படு செய்வதே உயர் வழிபாடு. அருகில்
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 113
சென்று தொட்டு வணங்குவது தகாத செ ஒவ்வொருவரும் இறைவனுடன் மிக நெருக்க ஆகையால் அவ்வுறவு முறை இக்கருத்த இறைவனைத் தாய் தந்தையராகக் கொண் தன்னை அடியவனாகக் கொண்டு தொண்டு பு கொண்டு சகமார்க்கத்திலும், மாணிக்க சன்மார்க்கத்திலும் இறைவனை அணுக எடுத்துக்காட்டினர். மாணிக்கவாசகர் வ இறைவனுடனான உறவில் நெருக்கத்தை இன்பமானது. ஆண்பெண் கூடி வாழ்வதே ! உலக இன்பங்களை நுகர்ந்து கொண்டே இ சிறந்தது என இறைவனுக்கும் இறையடியா இறைவனையே காதலானாக வரித்து காதல் வலியுறுத்தின.
நாயன்மார்கள் நாடு முழுவதும் சுற்றித் பக்தி நெறி யாது என்பதை உணர்த்தும் தோத்திரப்பாடல்களைப் பாடினார். அன்பு ரெ நெறியென்பதை உரைத்தனர். தூய்மையா இறைவனை பாடிப்பரவி வழிபடும் போது எப் நாயன்மார்களின் தோத்திர நெறி எமக்கு எடு மல்கி, மெய்தான் அரும்பி விதிர்வித்து, உ6 கை காந்தலாக வழிபடும் போது அவன் எ அவனை நாம் தேடி அலைய வேண்டியதில்
சைவசமயத்தின் அடிப்படை நெறி '. உண்மையை இவர்களது பதிகங்கள் எமது உமிழ்ந்து வந்த நீரினால் இறைவனை 8 பூவினால் அலங்காரம் செய்து, தான் சுவைத் நைவேத்தியம் செய்து அன்போடு இறுக இறைவனுக்கு உகந்தளித்த கண்ணப்பளை என்னும் உயரிய கருத்தினை சேக்கிழார் 2
''முளைத்தெழு முதலைக் கண் வளைத்த பொற் செருப்பால் மார் விளைத்த அன்புமழ்வார் போல -'தலைமிசைச் சுமந்த பள்ளி
மலைமிசை தம்பிரானார் | கொழுவிய தசைகள் எல்லாங் -
அழலுறு பதத்திற் காய்ச்சிப் பழகிய இனிமை பார்த்து |
அழகிது நாயனாரே அமு
இவ்வாறு எத்தனை எத்தனை நாய கடைபிடிக்கும் மூடநம்பிக்கைகளை க குவியல்களைக் கொண்டிருக்கின்றன அவற்
ககூர்மதி

யல் எனக்கருதினர். ஆனால் நாயன்மார்கள் கமான உறவு முறைகளைக் கொண்டிருந்தனர். கினை மாற்றியமைத்தது. திருஞானசம்பந்தர் டு சற்புத்திர மார்க்கத்திலும், திருநாவுக்கரசர் புரிந்து தாசமார்க்கத்திலும், சுந்தரர் தோழனாகக் வாசகர் இறைவனைக் குருவாகக்கொண்டு -லாம் என்னும் உயரிய தத்துவத்தினை தத்த நாயகன் நாயகி பாவம் மேலும் . எடுத்துக் காட்டியது. உலக வாழ்க்கை இன்பவாழ்க்கை. இதுவே இறைவன் ஆணை. இறைவன் பால் பக்தி பூண்டு வாழ்வதே சாலச் Tாருக்குமான உறவை மிக நெருக்கமாகியது. பிலும் ஒப்பற்ற உண்மையினை இப்பாடல்கள்
ந் திரிந்து மக்களிடம் சென்று உண்மையான பொருட்டு கல்லும் கசிந்துருகும் வகையில் நறியே ஆண்டவனை அடைவதற்கான முக்தி என அன்புடனும் மன ஒருமைப்பாட்டுடனும் D காரியங்கள் யாவும் சித்தியாகும் என்பதை த்துக்காட்டுகிறது. காதலாகி கசிந்து கண்ணீர் தளம் வெள்ளை நிற மல்லிகையாக, கூப்பிய ம்மை மிக நெருங்கி வந்து அருட்செய்வான் மலை.
அன்பு'', ''அன்பே சிவம்" என்னும் உயரிய க்குணர்த்துகின்றன. உள்ளன்போடு, வாயில் சுத்தம் செய்து, தன் சிகையில் சூடிவந்த து சுவையானதென தீர்மானித்த இறைச்சியை
அணைத்துக்கொண்டு தன் கண்ணையே » பாடி எமக்கு உண்மையான பக்தி எது உணர்த்தவில்லையா?
டு முடிமிசை மலரைக் காலில் Bற வாயின் மஞ்சன நீர் தன்னை
விமலனார் முடிமேல் விட்டார்” த் தாமத்தைத் தடங்காளத்தி முடிமிசை வணங்கிச் சாத்தி கோலினில் தெரிந்து கோத்தங்கு
பல்லினால் அதுக்கி நாவில் படைத்த இவ்விறைச்சி சால து செய்தருளும் என்றார்''
பன்மார்களின் வரலாற்று செய்திகள் நாம் ளைந்தெறியும் வகையிலான கருத்துக் றை விளக்குவதற்கு ஏடுகள் போதாது.
(33)

Page 114
சிவனை முழுமுதற் கடவுளாகக் கொ நாள், நட்சத்திரம், சகுனம் பார்த்தல் என்பவற்றி இருந்தனர். இவை எந்த சாஸ்திரங்களிலும் நாயன்மார்கள் இதனை தம் பதிகங்களில் ெ பக்தியும் நம்பிக்கையும் கொண்டவர்களுக் சுகத்தினை செய் பவையாகவே அன மூடநம்பிக்கைகளாகவே அமைகின்றன. இை கடினமாகையினால் திருஞானசம்பந்தர் அருள் கொண்டு அக்கருத்துக்களை நோக்குவோம்.
தன் தமிழ் பாக்களால் பல்வேறு அ ஒருவர் திருஞானசம்பந்தர் தன் மூன்றாவது வ உண்டு. தேவாரம் பாடும் ஞானம் பெற்ற கோளும் நல்லதையே செய்யும் என்று
கூறத்தேவையில்லை. இவரது ஞானத்தைக் மன்னனுக்கு ஏற்பட்ட வெப்புநோயினை போ நாடுகின்றார். அதற்கு உடன்பட்டு சம்பந்தர் போது அவரது சமகாலத்தவரான திருநாவுக்கர சமணர்களால் சம்பந்தருக்கு தீங்கு ஏற்படக்கூ அதற்கு ஞானதீட்சிதரான சம்பந்தர் இறைய செய்யும் என்பதை வலியுறுத்தி கோளறு பத உண்மைகள் பொதிந்திருப்பதைக் காணலாம்
"வேயறு தோளி பங்கன்
மிக நல்ல வ மாசறு திங்கள் கங்கை
உளமே புகுந் ஞாயிறு திங்கள் செவ்வாய்
சனி பாம்பு இ ஆசறு நல்ல நல்ல
அடியார் அவர்
என்னும் தொடக்கத்தினை உடைய இறையடியவர்களுக்கு எந்த கெடுதலையும் செ செவ்வாய் தோஷமான நாள், வியாழன் படை விளைவிப்பது என்னும் கருத்தினை மாற்றி உயிர்களுக்கு அவனால் உருவாக்கப்பட்ட | என்பதை ஆசறு நல்ல நல்ல அவை ந என்ற அடிகள் மூலமாக விளக்கி கூறியிரு பின்பற்றிவாழும் இவ்வுண்மையினை உணராத
நாட்கள் மட்டுமல்ல சில நட்சத்திரங்க வழிநடைக்கும் ஆகாது என்று ஒதுக்கப்பட்டுள் மகம், விசாகம், பரணி, கார்த்திகை, பூரம், சி திருவாதிரை, ஆகிய நட்சத்திரங்கள் இறை
(94)
94

ண்டு வழிபாடு செய்யும் சைவசமயத்தினர் 5 முழுமையான நம்பிக்கை கொண்டவர்களாக | வேதங்களிலும் வலியுறுத்தப்படவில்லை. தளிவாக விளக்கியுள்ளனர். இறைவன் மீது கு எல்லா நாட்களும், நட்சத்திரங்களும் மயும். ஆகவே இந் நம் பிக்கைகள் வயனைத்தையும் இங்கு விளக்கிக் கூறுவது ரிய கோளறு பதிகத்தை அடிப்படையாகக்
ற்புதங்களை நிகழ்த்திய நாயன்மார்களில் பயதிலேயே உமையம்மையிடம் ஞானப்பால் வர். பிறப்பால் அந்தணர். இவரே நாளும்
கூறும்போது மற்றவர்களைப் பற்றிக் 5 கேள்வியுற்ற பாண்டிமாதேவி பாண்டிய க்குவதற்காக ஞானசம்பந்தரின் உதவியை பாண்டிய நாட்டிற்கு செல்ல ஆயத்தமான சர் இன்று நாளும் கோளும் சரியில்லாததால் டும் என அவரை போகவிடாது தடுக்கின்றார். படியார்களுக்கு நாளெல்லாம் நல்லதையே திகத்தைப் பாடுகின்றார். அதில் மிகச்சிறந்த
ன் விடமுண்ட கண்டன் வீணை தடவி
முடிமேல் அணிந்தென் த அதனால்
புதன் வியாழன் வெள்ளி ரண்டு முடனே
அவை நல்ல நல்ல க்கு மிகவே”
| கோளறு பதிகத்தில் நாளும் கோளும் சய்வதில்லை அவை நன்மையையே செய்யும் க, ஞாயிறு கேடு, இராகு காலம் தீமையை - இப்பதிகம் இறைவனால் படைக்கப்பட்ட நாட்கள் யாவும் நன்மையையே கொடுக்கும் நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே க்கும் போது இவர்களது பக்தி நெறியை கிருப்பது வியத்தகு விடயமாகவே உள்ளது.
ளும் நல்ல காரியங்களைச் செய்வதற்கும் ௗன அவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ள ஆயில்யம், சித்திரை, சுவாதி, மூலம், பூராடம், கேட்டை, யடியார்களுக்கு கேடு விளைவிப்பதில்லை.
- கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 115
இதனை அடிப்படையாகக் கொண்டே தமி போலும் இவை கெடுதலை விளைவிக்கும் பழமொழிகள் வழக்கில் இடம்பெற்றிருக்கா
"நலிந்தவர்க்கு நாள் "கேட்டையில் பிறந்தான் (
"பரணியில் பிறந்த
இவ்வாறு அன்பு, சாந்தம், அமைதி, தியாக மனப்பாங்கு, ஏழைகளுக்கு இரங்கு அவர்கள் கஷ்டத்திற்காக பிரார்த்தித்தல், கருத்துக் குவியல்களை வாரி வழங்கின வழிகாட்டும் வண்ணம் சுயநலத்தைக் குறை பாடல்கள் பாடப்பட்டன.
மனிதன் மண்ணில் நல்ல வண்ணம் 6 இறைவனைக் காணுதல் வேண்டும். இதனை சிவனடியார்களை சிவனாகக் காணும் கொள் அதை இன்றே செய்ய வேண்டும், தனிம மகத்தான சேவை என பலவழிகளிலும் உ பூரணத்துவத்தை நாயன்மார்கள் தோற்றுவி
'என்கடன் பணி
'ஒன்றே குலம் 'மக்கள் சேவைபே 'அறிவினான் ஆகுவது
தன்நோய்போல்
கூர்மதி 9-CM 013788

ழ் பழமொழிகள் சில வழக்கில் உருவாயின நட்சத்திரங்களாக இருந்திருப்பின் இத்தகைய
து.
5ம் கோளும் இல்லை” கோட்டைக் கட்டி வாழ்வான்” வன் தரணியாள்வான்”
இனிமை, என்னும் மனிதநேயப் பண்புகளோடு தல், பிறரில் நிறைகாணுதல், பிறரை நேசித்து என எச்சமயத்திற்கும் பொருந்தும் வகையில் .. எல்லோரும் இன்புற்று வாழும் வகைக்கு மத்து பொது நலத்தை வளர்க்கும் நோக்குடன்
வாழவேண்டுமாயின் மக்கள் ஒவ்வொருவரிலும் ன எடுத்துக் காட்டும் வகையில் அமைந்ததே பகை நல்லனவற்றை நன்றே செய்ய வேண்டும், மனிதன் மேன்மையடைய மானிட சேவையே உலகம் தழுவிய அன்பு நெறியினை, வாழ்வின் பித்த பக்தி நெறி எடுத்துக்காட்டியது.
செய்து கிடப்பதே' ஒருவனே தேவன்' ய மகேசன் சேவை' பண்டோ பிறிதின் நோய் - போற்றாக் கடை'
95

Page 116
இலங்கையில் 6ே பிரச்சினைகள் பரி சமூகவியல் பார்
(சு
இன்றைய நவீன யுகத்தில் சமூகத்தில் பல்வேறு பிரச்சினை ஒரு மூல காரணம் எனலாம். அத ஒரு நாட்டின் மொத்த ஊழியப் படையில் 6ே தகுதியும், ஆர்வமும் கொண்டிருந்த போதில் முடியாதிருக்கும் மக்களின் பங்கு அதிகரிப்பு எனப்படுவது சனத்தொகையில் 15-64 வயதுக் நிரந்தர நோயாளிகள், வேலை செய்ய விரும்பா பெறப்படும் தொகையாகும். இந்த வேலையில்லா அடைந்து வரும் நாடுகளில் ஒரு பொதுப்பிரச் பல்வேறு அரசியல், சமூக, பொருளாதார, கல உச்சத்தில் தற்கொலைச் செயல் அதிகரிப்பு நிலையில் பின்னடைவுக்கு உள்ளாவதும் க
வேலையில்லாப் பிரச்சினை என்ற கருத்து வேலையின்மை (Seasonal unemployemnt), ம ployment) என்பனவும் அடங்குகிறது. கீழ் உழை உரிய வேலை கிடைக்காது, தன் தரத்திற் உதாரணத்திற்கு பட்டதாரி ஒருவர் கூலித்தொ என்பது குறித்த காலத்தில் மட்டும் வேலை தொழிலின்றி இருப்பதாகும். மறைமுக வேலை தொழிலுக்காக அமர்த்தப்பட்ட போதிலும் கடமை இவ்வாறான தொழில் பிரச்சினைகளால் ஒருவர் பல தாக்கங்களை பெறுவர். இதனால் ஒருவ
அன்னியமாக வாய்ப்புண்டு.
எந்தவொரு பொருளாதாரத்தினதும் இறுதி முழு வேலை வாய்ப்பு என்பதாகவே இருக்கிறது கருத்துப்படி எந்தவொரு நாட்டிலும் நிறை தொ! நேரடி வேலையின்மை, மறைமுக வேலையில் உழைப்பு முதலான வேலை வாய்ப்பு பிர காணப்படுகின்றது. ஆயினும் இலங்கை முதலா இது ஒரு பாரிய சமூக, பொருளாதார, அரசியல் இதன் பாதிப்புக்கள் எல்லை கடந்தனவாக கா வெளியேறுகின்ற நிலையும் காணப்படுகின்றது
இலங்கையில் வேலையில்லாப் பிரச்சினை இருக்கிறது. வேலையற்றோர் வீதம் 1996ஆம்
96)

வலையில்லாப் bறிய
வை
மோ. ஜெனிதா
உதவி விரிவுரையாளர் மூகவியல் பிரிவு), கிழக்குப் பல்கலைக்கழகம்
1 சீர்கேடுகள் ஏற்படுவதற்கு வேலையில்லாப் 7வது வேலையில்லாப் பிரச்சினை என்பது வலை வாய்ப்புப் பெறுவதற்கு முயற்சியும், லும் தகுந்த வேலை வாய்ப்பினை பெற கதைக் குறிக்கும். இங்கு ஊழியப் படை க்கு இடைப்பட்டவர்களில் அங்கவீனர்கள், ரதவர்கள், முதலானவர்களினைக் கழித்துப் ப் பிரச்சினை இலங்கை போன்ற அபிவிருத்தி சினையாகக் காணப்படுகின்றது. இதனால் Tசார சீர்கேடுகள் நிகழ்வதும், விருத்தியின் பதும், நாடு அபிவிருத்தியடைய முடியாத
ன்கூடாகும்.
கைக்கு உள்ளே கீழ் உழைப்பு, பருவகால மறைமுக வேலையின்மை (indirect unemறப்பு என்பது ஒருவரின் கல்வி தராதரத்திற்கு குக் குறைவான வேலை செய்வதாகும். ழில் செய்தல். பருவகால வேலையின்மை வாய்ப்பு கிடைக்க, ஏனைய காலங்களில் யின்மை என்பது ஒரு பணிக்காக அல்லது D அல்லது அதிகாரம் அற்றவராக இருத்தல், - சமூக, பொருளாதார, உளவியல் ரீதியில் ர் சமுதாய ரீதியாகவும், தன்னிலிருந்தும்
நோக்கம் நிறை தொழில் மட்டம் அல்லது து. ஆனாலும் அடம் சிமித் முதலானோரின் ழில் மட்டம் காணப்படுவதில்லை. அதாவது ன்மை, பருவ கால வேலையின்மை, கீழ் ச்சினைகள் உலகளாவிய ஒன்றாகவே என அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் பிரச்சினையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. Tணப்படுகின்றது. அதாவது கல்விமான்கள்
து.
வளர்ந்து கொண்டு செல்லும் சிக்கலாகவே 2 ஆண்டு 9.2 ஆகவும், 1997 இல் 10.4
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 117
ஆகவும் இருந்து, 1998 ஆம் ஆண்டில் 10.8 12 ஆகவும், 2000 ஆம் ஆண்டில் 8.2 ஆக ஆம் ஆண்டில் 8.6 ஆகவும், 2003 ஆம் ஆ ஆகவும் (கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட் 7.2 ஆகவும், 2006ஆம் ஆண்டில் 6.5 ஆக வங்கி ஆண்டறிக்கை). தொகைமதிப்பு மர் தொழில் வாய்ப்பின்மை வீதம் 2005 இல் 2006 இல் 6.5 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைர் சதவீதத்திலிருந்து 2006 இன் 4 ஆம் காலாண் இவ்வீழ்ச்சி 2006 காலப்பகுதியில் - பொரு ஏற்பட்ட செழிப்பான வளர்ச்சியுடன் ! உருவாக்கத்திற்கான பல வகையான நிகழ் சந்தை தகவலின் பரம்பல் மற்றும் பத தொழில்வாய்ப்பின்மை வீதத்தைக் குறைப்பு
இளவயதினர் மற்றும் பெண்களுக்கி சார்பு ரீதியில் உயர்ந்து காணப்படுகிறது. கொண்ட வயதுத் தொகுதிகளிடையேயான குறிப்பிடத்தக்களவில் வீழ்ச்சியடைந்துள்ள மதிப்பீடுகளின் படி, இளவயதுத் தொகுதிய இல் 33.2 சதவீதத்திலிருந்து 2006 இல் இருப்பினும் 20-29 வயதுத் தொகுதியினரி தொடர்ந்து மாறாதிருந்தது. மேலும் க.பொ மற்றும் உயர் தகமைகளை கொண்டோரின் 10.6 சதவீதம் மற்றும் 12.2 சதவீதத்திலிருந் வீழ்ச்சியடைந்திருந்தன. எனினும், இம்மதிப்பீடு 2006 இன் காலாண்டு தொழிற்படை அளவீடு இம்மாகாணங்கள் உள்ளடக்கப்படவில்லை
வேலைவாய்ப்பின்மை காரணமாக பெண் பிரயாணங்கள் மூலம் வேலை தேடுகின்றன ஏற்படுவதுடன், பாதகமான பல நோய்க் இவ்வாய்வினூடாகப் பார்க்கும் போது வேை வீதத்தில் பாரியளவு வித்தியாசம் (குறைவு) மேலும் சில மாவட்டங்கள் நீக்கப்படலாகத் ஆம் ஆண்டுகளிற்குப் பின்னர் வேலை வ சுனாமியைத் தொடர்ந்து நிவாரணப் ப நிறுவனங்களின் வேலைத் திட்டங்களைச் பாதுகாப்பின்மை காரணமாகவும், வேலைத் தமது சொந்த நாடுகளுக்கு போகின்ற நிலை ஆண்டில் வேலைவாய்ப்பற்றோர் வீதம் அதி
இலங்கையின் வேலையில்லாப் பிரச். நாட்டில் யுத்தத்திற்காக பெருமளவு செல்வம் பேட்டைகளை உருவாக்க பயன்படுமாயின் பா நாடும் அபிவிருத்தி கண்டிருக்கும். தொழில் அ சுயதொழில் முயற்சிகளில் ஆர்வம் காட்டா
கூர்மதி

ஆக அதிகரித்தது. இது 1999 ஆம் ஆண்டில் வும், 2001 ஆம் ஆண்டில் 8.2 ஆகவும், 2002 ண்டில் 8.4 ஆகவும், 2004 ஆம் ஆண்டில் 8.4 டம் நீக்கப்பட்ட ஆய்வு), 2005 ஆம் ஆண்டில் கவும் காணப்படுகின்றது. (இலங்கை மத்திய Bறும் புள்ளி விபரத் திணைக்களத்தின் படி பதிவு செய்யப்பட்ட 7.2 சதவீதத்திலிருந்து 5துள்ளது. எனினும் 3 ஆம் காலாண்டில் 6.4 டில் 6.3 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்திருந்தது. நளாதாரத்தின் சகல மூன்று துறைகளிலும் இணைந்து காணப்படுகின்றது. தொழில் ச்சித் திட்டங்களின் அமுலாக்கம் தொழில் வி வழிகாட்டல் நிகழ்ச்சித் திட்டங்களும் பதற்கு பங்களிப்புச் செய்தன.
டையேயான தொழில் வாய்ப்பின்மை வீதம் எனினும், குறிப்பாக 15-19 வருடங்களைக் 7 இளைஞர்களின் தொழில் வாய்ப்பின்மை து. காலாண்டு தொழிற் படை அளவீட்டு பிலான தொழில் வாய்ப்பின்மை வீதம் 2005 23.1 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. டையேயான தொழில் வாய்ப்பின்மை வீதம் T.த (சா.தரம்) மற்றும் க.பொ.த (உ.தரம்) தொழில் வாய்ப்பின்மை வீதங்கள் முறையே -து 4.9 சதவீதம் மற்றும் 11.3 சதவீதத்திற்கு கேள் வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடத்தப்படாததால் இரண்டு ஆண்டுகளுக்கும்
D. -
கள் மத்திய கிழக்கு நாடு போன்ற வெளிநாட்டு னர். இதனால் குடும்ப கலாசார சீர்கேடுகள் நக்குள்ளாகின்ற நிலையும் எற்படுகின்றது. லவாய்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும், வழங்கிய 5 காணப்படவில்லை என்பது புலனாகின்றது. தான் இவ்வாய்வு இடம்பெற்றுள்ளது. 2004 பாய்ப்புக்கள் வழங்கப்பட்டமைக்கு காரணம் ணிகளுக்காக இலங்கை வந்த தனியார் 5 கூறலாம். இன்றைய காலகட்டங்களில் - திட்டங்கள் முடிவடைந்த நிலையினாலும் லயைக் காணமுடிகின்றது. எனவே 2007ஆம் கரிக்கலாம்.
சினைக்குப் பிரதான காரணமாக இருப்பது, வீணடிக்கப்படுவதாகும். இச்செல்வம் தொழில் பருக்கு வேலைவாய்ப்பை வழங்க முடிவதுடன், அடிப்படையிலான கல்வி வேலைவாய்ப்பின்மை, மை முதலான காரணங்கள் வேலையில்லாப்
97 )

Page 118
பிரச்சினைக்குரிய அடிப்படைக் காரணங். தேர்ச்சியில்லாத பட்டதாரிகளை உருவாக்குவ வேலை வழங்குவதில் ஆர்வம் காட்டவில்லை சில வேலைவாய்ப்பினை வழங்கியது உ சொந்த நாடுகளுக்கு திரும்பிய வண்ணமே தொழில் வாய்ப்புக் கிடைக்காமல் அல்லது கீ நிலையில் இளைஞர்களும், யுவதிகளும் உழைப்பு பயன்படுத்தப்படாதிருப்பதுடன் மல் இளைஞர்கள் தொழில்வாய்ப்பின்றி காணப்பு வளர்வதற்கு ஊக்கமளிப்பதுடன், போதை வள முதலான நடவடிக்கைகளையும் செய்யத் பிரச்சினையை உடன் தீர்க்க வேண்டிய சமூ உரியதாகும்.
இலங்கையின் வேலையில்லாப் பிரச்சினை தீர்க்க முயற்சிக்கலாம். அவையாவன சுய கல்வியினை வழங்குதல், மற்றும் அரச, அ வாய்ப்புக்களை வழங்குதல், தேசிய ரீதியி வழங்களை மதிப்பீடு செய்து அவற்றுக்கு ஏற்ற போன்றன மூலம் தீர்க்கலாம். மேலும் மா சந்தைவாய்ப்பு ஆகியவற்றை வழங்குவதன் மூ புதிய சுயதொழிலாயின் நவீன ரகமான உத் அவசியமாகும். சுனாமியின் பின்னர் தொ! அதிகமானோரை சென்றடையவில்லை என்பதே வழங்கப்படும் கல்வி முறையானது நடைமு வேண்டும். கல்வி வெறும் சான்றிதழ்களை தொழில் நுட்பப் பயிற்சிக்குப் பின்னர் அ சந்தர்ப்பங்களுக்கு வழிமுறைகள் ஏற்படுத்தி குளிரூட்டல் பயிற்சிகள், நீர்க்குழாய் இணைப் நீர்க்குழாய் இணைப்பு, கணனி பயிற்சிகள் நடைமுறைப்படுத்தப்படுவதனை இங்கு குறி
அடுத்து அரச மற்றும் தனியார் நிறுவல் இங்கு புதிய வெற்றிடங்கள் உருவாக்கப்படுவது விரிவாக்கமும் செயற்படுத்தல் அவசியமாகும் ஓய்வு பெறுவோரை ஊக்குவித்தல், வினைத்திற சேவைக்குரிய நேரத்தை விரிவாக்கம் செப் basis) அனேகமானோரை வேலைக்கு உ மேற்கொள்ளுதல் வேண்டும்.
வேலையில்லாப் பிரச்சினை உடனடி சமூகப் பிரச்சினையாகும். இளைஞர் வளம் பல அரசியல் சமூகச் சீரழிவுகளுக்கும் ! இளைஞர்கள் நிலை கொள்ளல் இன்றி த அழுத்தத்துடன் வாழ்வதற்கும் முக்கியமான இனங்காணப்பட்டுள்ளது. அரசியல், கல்வி, ஏற்படுத்தப்படும் பாரிய சீர்திருத்தமே தொழில்
98

களாகும். பல்கலைக்கழகங்கள் தொழில் தால் தனியார் நிறுவனங்கள் பட்டதாரிகளுக்கு ல. பின்வந்த தனியார் நிறுவனங்கள் பலவும் ண்மை. ஆனால் யுத்தம் காரணமாக தம் உள்ளன. உயர் கல்வி கற்ற நிலையிலும், ழ் உழைப்பு வேலைகளில் விரக்தி அடைந்த காணப்படுகின்றனர். இதனால் அவர்களின் ரித வளமும் சீரழிக்கப்படுகின்றது. இவ்வாறு படுதல் சமூக அரசியல் விரோதமான நிலை மதுப்பாவனை, கடத்தல், கொலை, கொள்ளை தூண்டுகின்றது. எனவே வேலையில்லாப் Dகப்பொறுப்பு நன் நோக்குள்ள சகலருக்கும்
னயை பின்வரும் மூன்று வழிமுறைகளினூடாக தொழில் வாய்ப்பு, தொழில்நுட்ப பயிற்சிக் ரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக வேலை ல் பிரதேசத்திற்குப் பிரதேசம் காணப்படும் தாக சுயதொழில் முயற்சிகளை ஊக்குவித்தல் னியம் வழங்குதல், வங்கிக் கடன், உரிய மூலமும் சுயதொழில் வெற்றியைக் காணலாம். திகள் பயிற்சிகளை வழங்குதல் என்பனவும் ழில் வாய்ப்பு பரவலாக்கப்பட்டாலும் அது த உண்மை. தொழில் நுட்ப பயிற்சி மூலமாக முறையில் பிரயோகிக்க கூடியதாக இருக்க
வழங்கும் விடயமாக அமைதல் கூடாது. தனை பயன்படுத்தி தொழில் புரியக்கூடிய தப்படுவது அவசியமாகும். இலத்திரனியல், பு, கணனி பயிற்சிகள் முதலான பயிற்சிகள், [ முதலான பயிற்சிகள் பயன்மிக்கனவாக
ப்பிடலாம்.
எங்களின் வேலை வாய்ப்பு பற்றி கருதினால் டென் தொழிலாளர் தேவைப்படும் வகையிலான 5. புதிய செயற்திட்டங்களை உருவாக்குதல், றன் மிக்க இளம் வேலையாட்களை சேர்த்தல், ப்து மாற்றொழுங்கு அடிப்படையில் (shift உட்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை
பாக தீர்த்து வைக்கப்பட வேண்டிய ஒரு விரக்தி நிலைக்கு உள்ளாக்கப்படுவதுடன் இது அடிகோலும் என்பது திண்ணமாகும். திரிவதற்கும், அதிருப்தி மனோ நிலையில் I காரணியாக வேலையில்லாப் பிரச்சினை - தொழில் நிலையங்கள் முதலானவற்றில் பின்மையை நீக்க உதவக் கூடியது. எனவே
- கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 119
பல்வேறு வேலைத்திட்டங்கள் வழங்க அர. சுனாமி போன்ற இயற்கை அனர்த்தம் வந்தால் பலர் உள்ளனர். ஆகவே அபிவிருத்தி அடையவேண்டுமாயின் சுயதொழில் உற்ப பயன்படுத்தவும், நாட்டினை அபிவிருத்திப் ப பிரச்சினை தீர்வுக்கு உள்ளாக்கப்படுவது (
S). உங்களுடைய கல்வியறிவைப் ஒவ்வொரு நாளும் வீணாகிவ நாளென்பதை நீங்கள் உணர
Ne:
கூர்மதி

சு, தனியார் நிறுவனங்கள் முன்வரவேண்டும். தான் வேலை கிடைக்கும் என்ற மனநிலையில் 7 அடைந்துவரும் நாடுகள் அபிவிருத்தி த்தியை அதிகரிக்கவும், உச்ச வளத்தினை பாதைக்கு இட்டுச் செல்லவும் வேலையில்லாப்
முக்கியமாகும்.
GG - பிறருடன் பகிர்ந்துகொள்ளாத ட்ட, தீரும்பவும் பெறமுடியாத - வேண்டும்.
கான்ஸ்தாந்தின் ஸதானிஸ்லாவ்ஸ்கி
சோவியத் திரைப்பட இயக்குநர் நடிகர், கல்வியியலாளர்,தத்துவஞானி >ாகரன்
(99)
09

Page 120
வகுப்பறையின் இயங்கியல் தன்மையும் -
திரு அத
கருவறையிலே தொடங்கப்படும் பிள்ளையின் க பெறுகின்றது. அந்த வகையிலே கருவறைய முக்கியமான மையங்களாக விளங்குகின்றன.
வீட்டுச் சூழலில் இருந்து பாடசாலைச் சூழ சூழலும், அதன் அமைப்பும், இயங்கியல்த் ; வகுப்பறை முகாமைத்துவம் தொடர்பில் ஆக வேண்டும்? ஆசிரியர்களின் வகுப்பறை முகான எவ்வாறு கைகொடுத்து உதவ வேண்டும்? என்ப ஆசிரியர்களால் அறியப்பட வேண்டியதுமான .
ஒரு வகுப்பறையின் அமைப்பினைப் ெ முடியும்.
01. 02. 03.
பௌதீக அமைப்பு பண்பாட்டு அமைப்பு
இயங்கியல் அமைப்பு என்ப
"பௌதீக அமைப்பு” என்பது பாடசாலை புறச்சூழல், பாடசாலையின் உள்ளகச் சுற்று கொண்டு இது அமைவதனைக் குறிக்கின்றது.
"பண்பாட்டு அமைப்பு" என்பது எம்மால் அதாவது குறிப்பாக இது ஆசிரியரின் வகு என்பனவற்றைக் குறித்து நிற்கின்றது. அதனால்
"இயங்கியல் அமைப்பு" என்பது அதிபர்-ஆ சார்ந்தது. தொடர்ச்சியான இயக்கப்பாட்டோடு இவற்றிற்கு அமைய உருவாக்கம் பெற்று நெறியா சிறந்த வகுப்பறையாகவே இயங்கிக் கொண்டி
இத்தகைய வகுப்பறைகள் தான் சிற இதைத்தான் இன்றைய கல்வி உலகம் பெரித
ஒரு பாடசாலையின் உயர்வோ, தாழ்6ே தான் கூடுதலாகத் தங்கியிருக்கின்றது. மாணவர் ஆளுமை விருத்தி, கல்வித்தரமேம்பாடு, அனைத் அமைகின்றன.
100

- அமைப்பும்
-- சரவணமுத்து கணேசமூர்த்தி
திபர், மட்/மண்டுர் இல.39, அ.த.க.பாடசாலை,
நவகிரிநகர், பட்டிருப்புக் கல்வி வலயம்
கல்வியானது வகுப்பறையிலே விரிவாக்கம் பும், வகுப்பறையும் கல்வியியலில் இரு
pலுக்கு வருகின்ற பிள்ளைக்கு வகுப்பறைச் தன்மையும் எவ்வாறு இருக்க வேண்டும்? சிரியர்கள் எத்தகைய பணிகளை ஆற்ற Dமத்துவத்திற்கு அதிபரும் மாணவர்களும் வை அனைத்தும் ஆராயப்பட வேண்டியதும், அவசியத்திற்கு உரியதாகின்றன.
பாதுவாக பின்வருமாறு பிரித்து நோக்க
பவையே அவையாகும்.
க் கட்டடமொன்று உருவாக்கப்படும் போது ப் புறச் சூழல் என்பவற்றைக் கருத்திற் அதனால் இது "உருவாக்கம்" சார்ந்தது.
- ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் சார்ந்தது. தப்பறை முகாமைத்துவம், செயற்பங்கு
ல் இது "ஒழுங்கமைப்பு” சார்ந்தது.
சிரியர்-மாணவர்கள் என இது எல்லோரையும் ம், ஒழுங்கமைப்போடும் தொடர்பானது. ளப்படும் ஒரு வகுப்பறையானது தொடர்ந்தும் ருக்கும்.
ந்த கல்விச் சமூகத்தை உருவாக்கும். வம் எதிர்பார்த்து நிற்கின்றது.
வா, அப்பாடசாலையின் வகுப்பறைகளில் Tகளின் அடைவு விருத்தி, சமூக விருத்தி, இதுக்குமே வகுப்பறைகளே அடிப்படையாக
ல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 121
ஒழுங்கானதும் உயிர்த்துடிப்பு மிக்கது பாடசாலைக் கோலத்தையும், சமூகக் கே பாடசாலை'' என்ற பெயர் சிறந்த வகுப்பம்
காலமும், காலத்திற்கேற்ப ஞாலமும் கொண்டே வருகின்றன. இந்த மாற்றங்க இன்றியமையாததாக இருக்கின்றது. கல்வியில் வகுப்பறைகள் புதுப்புது மாற்றங்களையும், வகுப்பறை வடிவங்களிலும், கற்பித்தல் திருத்தங்களை புதிய கோலங்களை ஆசி
வகுப்பறைகள் ஒவ்வொன்றிலும் கற்றல் இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் தொடர் முன்கொண்டு செல்லப்படுகின்றதோ அந்த முன்னேறிக் கொண்டே செல்லும்.
இந்த நிலையில் வகுப்பறைகள் வினைத்திறனூடாக விளைதிறனும் மிக்கத இதற்கு வினைதிறனும், விளைதிறனும், விழி தேவையானதாக இருக்கின்றது. "தரமான என்ற சிந்தனையும் இங்கு முனைப்புப் டெ
ஆக, தரமான கல்வியினை வளர்க்கின்ற வகுப்பறைகள் இருக்க வேண்டியது கால் மாணவ சமூகத்தின் நிமிர்வு தான் உண்மை! எனவே மாணவ சமூகத்தை நிமிரச் செய்கின் பற்றுறுதியோடும் சரியாகவும் மேற்கொள்ள
ஜோன்டுயியும், யுனிசெப்பும் கூறுவதற் கற்பித்தல் செயற்பாடுகளிலும் மாற்றங்கள் 1 மாணவர்களின் மத்தியிலே அறிவு, திறன் முதலான அனைத்தையும் வளர்ப்பதற்கும், . வகுப்பறைகள் திகழ வேண்டும். எனவே உ ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் கருமத் தொட வேண்டியுள்ளது.
மிகச் சிறந்த தத்துவவியலாளரும், ம அவர்களின் வகுப்பறை பற்றிய எண்ண தெ வகுப்பறை என்பது வெறும் அறையாக ! இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும் எ
"பண்டைய செவிமடுப்போர் மேசைகள் படுதல் வேண்டும். வேலைக்களங்களையும் ம கொண்டு வருதல் வேண்டும். ஆரம்பக் கல் போன்ற புத்தகக் கல்வி குறைந்தளவிற்கு பொருட்களுடனும், சுற்றாடலுடனும் அதிகம்
கூர்மதி

வமான வகுப்பறைகள் மூலமே ஒழுங்கானதோர் ாலத்தையும் கட்டியெழுப்ப முடியும். "சிறந்த றைகளிலேயே தங்கியிருக்கின்றது.
ம் தினந்தோறும் மாற்றங்களை உள்வாங்கிக் ள் கல்விப் புலத்திலும் ஏற்பட வேண்டியது ல் சாதகமான மாற்றங்கள் ஏற்பட வேண்டுமாயின் புதுமைகளையும் காணவேண்டி இருக்கின்றது. வழிமுறைகளிலும் கூட பல மாற்றங்களை, ரியர்கள் கொண்டு வர வேண்டியிருக்கின்றது.
- கற்பித்தல், மதிப்பீடு, கணிப்பீடு தொடர்பாகவும், பாகவும் "அபிவிருத்தி”ப் பணிகள் எந்தளவிற்கு ளவிற்கு அப் பாடசாலையானது தொடர்ந்தும்
ஒவ்வொன்றும் வினைத்திறனும் அந்த காக விளங்க வேண்டியது அவசியமாகின்றது. பப்புணர்வும் உடைய ஆசிரியர் குழாம் என்றுமே கல்விக்குத் தரமான ஆசிரியர்கள் தேவை” பறுகின்றது.
D இடமாகவும், அதற்கு வலுவூட்டும் களமாகவும் மத்தின் கட்டாய தேவையாக இருக்கின்றது. பிலேயே ஒரு நாட்டின் நிமிர்வாகவும் இருக்கும். ற பணியினை வகுப்பறைகளிலே ஆசிரியர்கள் வேண்டியுள்ளது.
கேற்ப வகுப்பறை அமைப்புக்களிலும் கற்றல்பலவற்றைக் கொண்டுவரவேண்டியிருக்கின்றது. , மனப்பாங்கு, ஆளுமை, சமூகத்திறன்கள் அவற்றை வளப்படுத்துவதற்கும் உரிய இடமாக உரிய செயற்பாட்டுத் தொடர்களை குறிப்பாக ரின் நிமித்தமாக வகுப்பறைகளில் செயற்படுத்த
கெவுயர்ந்த கல்வியியலாளருமான ஜோன்டுயி வளிப்பாடு இங்கே சிந்திக்கத் தக்கது. அவர் அல்லாமல் செயற்பாட்டறையாக எப்போதும் ன்பதனைத் தெளிவுபடுத்துகின்றார்.
ர் வகுப்பறைகளில் இருந்து அப்புறப்படுத்தப் ணலையும் செங்கற்களையும் வகுப்பறைக்குள் பியின் போது வாசித்தல், எழுதுதல், கணிதம்
வலியுறுத்தப்படுதல் வேண்டும். இயற்கைப் ரவு தொடர்பை ஏற்படுத்தல் வேண்டும்.
- 101

Page 122
பிள்ளை மணல், மரப்பலகை, சுத்தியல் கட்டாயமாகத் தொடர்புறல் வேண்டும். அவன் அன்றி உயிர்ப்பாக ஈடுபடுபவனாகவே உயிர்ப்பான அனுபவங்களுடன் கைகோர்த்து. பயன்பாட்டோடு கூடிய செயற்பாட்டறையாக வகு அவர்கள் கூறுவதற்கேற்ப வகுப்பறையை ஒழுங் செல்வதிலும் ஆசிரியர்கள் அனைவரும் கூடிய
இதே போன்று ஐக்கிய நாடுகள் சபையில் எப்படி அமைக்கப்படல் வேண்டும் என்பதற்குக் அனைவரதும் கவனத்தையும் ஈர்த்திருக்கின்றது
"வகுப்பறைச் சுவர் கள் வெறும் சுவர் களாகவும், உணர் வு பூர் வமாகவு அமைக்கப்படல் வேண்டும்”.
இவ்வாறு அந் நிறுவனமானது ஆணித்தர கவர்ச்சிகரமானதாக்கி மகிழ்ச்சிகரமான முறை ஆசிரியர்கள் முன் கொண்டு செல்லல் வேண்
வகுப்பறைகள் வதைக்கூடங்களாக சிறைக் சிந்தனைப் போக்கை மாணவர் மத்தியிலே வள பிரச்சினைகளை அனுபவித்த நிலையில் பாடசா வகுப்பறைச் சூழல் என்பது வரவேற்கத் தக்க
இதற்கு மாறாக "படிபடி'' என்று பிள ஆக்கினைப்படுத்துவதோ, அறிவுடைமையானது சிந்தனை மலையேறிவிட்டது. ஆசிரியர் மைப் கல்வியாக மாற்றம் பெற்று மலர்ந்திருக்கின்றது வெறுப்புக்கள், வெளிப்பாடுகள், திறமைகள், சி முன்னுரிமை கொடுக்கும் நிலையில் தான் வ முன் கொண்டு செல்ல வேண்டும்.
அனைத்து மாணவர்களையும் முன்வரச் ( செயற் பாடுகள் அரங் கேறும் களமாகவ வகுப்பறைகள் வளர்ச்சி நிலையை அடை முறையில் இயங்கச் செய்யக் கூடிய "'இயங்க அனைத்து ஆசிரியர்களும் உருவாக்கிக்
மாணவர்களைச் சுயமாகச் சிந்திப்பதற்கும், அவர்களின் முன் அனுபவங்களை விருத்தி ெ படிமுறை ஒழுங்கில் வளர்த்துச் செல்வதற் எண்ணப்பாடும், ஜனநாயக சிந்தையும், சமாதான சமூகமயமாக்கல் பண்புகளும்” வலுப்பெறுவது வேண்டும்.
மாணவரும், ஆசிரியரும் ஒருமித்துச் அன்னியோன்னிய உறவினையும் ஊக்குவிக்
( 102

ல், ஆணி, வர்ணங்கள் போன்றவற்றுடன் தனியே செயற்படாது பார்த்திருப்பவனாக இருத்தல் வேண்டும். கல்வியானது ச் செல்லல் வேண்டும்'' என உபகரணப் தப்பறை மிளிர வேண்டும் என்று ஜோன்டுயி கமைப்பதிலும், செயற்பாடுகளை வளர்த்துச் 1 கவனம் செலுத்த வேண்டும்.
ன் யுனிசெப் நிறுவனமானது வகுப்பறைகள் கூறும் விளக்கம் தற்போது கல்வியியலில்
- சுவர் களாக இருக்காமல் பேசும் ம், உயிர்த்துடிப்பு மிக்கதாகவும்
மாகக் கூறுவதற்கேற்ப வகுப்பறையினைக் யில் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டினை
இம்.
5 கூடங்களாக இருக்கக்கூடாது. இத்தகைய வர்க்கக் கூடாது. வீட்டுச் சூழலில் பல்வேறு லைச் சூழலுக்கு வருகின்ற பிள்ளைகளுக்கு தாக இருக்க வேண்டும்.
எளையை அடித்துத் துன்புறுத்துவதோ, தல்ல. "அடியாதமாடு படியாது” எனும் பமாக இருந்த கல்வி மாணவர் மையக் -. இந்த நிலையில் மாணவர்களின் விருப்பு ந்தனைச் செயற்பாடுகள், ஆகியவற்றிற்கு குப்பறைச் செயற்பாடுகளை ஆசிரியர்கள்
செய்ய வேண்டும். எல்லா மாணவர்களதும் வும், "கவினுறும் அரங்கமாகவும் ” ய வேண்டும். மாணவர்களைச் சிறந்த கியல்ச் சூழலை”' வகுப்பறைச் சூழலிலே
கொள்ள வேண்டும்.
தாமாகவே முன் வந்து செயற்படுவதற்கும் சய்து கொள்வதற்கும், செயற்பாடுகளைப் தம், "தாராள மனப்பாங்கும், கூட்டுறவு உணர்வுகளும், தொடர்பாடல் திறன்களும், - தற்கும் வகுப்பறைகள் இடம் கொடுக்க
செயற்படும் ஒருமுகப்பாட்டினையும், கும் வகையிலும், மாணவர்களுக்கான
ஸ்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 123
ஆசிரியரின் அன்பு, காப்பு, கணிப்பு.... மு வகுப்பறையின் இயக்கப்பாடானது அமைய
எதையும் ஆசிரியர் அன்பு வழியில் உற்றுக்கேட்டல், ஒத்துணர்வு வழங்குதல் பக்கத் துணையாக இருந்து உதவ வே இரண்டிலும் திறமையுடையவர்களாகவும் ஆசிரியர்கள் வகுப்பறைகளிலே இயங்க (
ஒவ்வொரு மாணவரைப்பற்றியும் சரி ஆளுமைப் பண்புகளை அனுசரித்தும் வகு வடிவமைக்க வேண்டும். பாடத்திட்டம், வே சிறந்த கற்பித்தல் வளங்கள், ஆசிரியர் : ஆசிரியர் கற்பித்தற் செயற்பாட்டை நெறிய
ஆசிரியர் மாணவர்களோடு அன்பாகப் வேண்டும். பாடப்பிரவேசமும் முன்னூட்டலும் | படிமுறை ஒழுங்கில் பாடம் வளர்த்துச் செ வலியுறுத்தல், பின்னூட்டல், மதிப்பீடு அல வேண்டும். தற்போதைய 5E முறையில செயற்பாடுகளுக்கும் வகுப்பறைகள் உரிய
வகுப்பறையின் வனப்பும், அத பிள்ளையின் மனப்பாங்கிலும் மனப்பா கொண்டுவரும்.
வகுப்பறைகளின் கூரைகளும், தரைகல் ஒட்டையும் உடைசலுமாக இவை இருக்க திருத்தித் தரும்படி ஆசிரியர்கள் அதிபருக்கு; சிரமேற்கொண்டு செப்பனிடுவதற்குரிய நட
மேலும் வகுப்பறைகளானது போதிய ஓ போதிய ஒளியையும், தேவையான அளவு த கரும்பலகை என்பது பொருத்தமான இடத்தி உரிய முறையிலே ஆசிரியரால் கையாளப்
"ப” வடிவிலோ அரைவட்ட வடிவில் விரும்பத்தக்கது. ஏனெனில் இது மாண6 நிலையில் நோக்கப்படுகின்றோம்” என்னு! கற்றல் கற்பித்தல்ச் செயற்பாட்டில் சாதகப்
மாணவர்களுக்குப் பல்வேறு தேவைகள் வகுப்பறைகள் ஒவ்வொன்றிலும் "நீர் மூலை "வாசிப்பு மூலை”' ஆகியவற்றை அந்தந்த வடு கொள்ள வேண்டும்.
மாணவர்கள் ஆடவும், பாடவும், க வகுப்பறைகள் போதிய அவகாசம் கொ பண்போடும் மட்டுமன்றி வாய்மை, தூய்மை, சுபாவம், நேர்மை, நீதி, தன்னடக்கம், தாரா
ககூர்மதி.

தலானவற்றை விருத்தி செய்யும் விதத்திலும்
வேண்டும்.
நின்றே அணுகவேண்டும். "'உடன் இருத்தல், 5" மூலமாக ஆசிரியர் மாணவர்களுக்குப் ண்டும். மாணவரின் உடலியல், உளவியல் உளவளத்துணை ஆலோசகர்கள் போலவும்
வண்டும்.
யான பின்புலத்தைத் தெரிந்து கொண்டும், ப்பறைக் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை லைத்திட்டம், பாடக்குறிப்பு, "மனத்திட்டம்”, அறிவுரைப்பு வழிகாட்டிகள் என்பவற்றுக்கேற்ப பாள்கை செய்ய வேண்டும்.
பேசி, பண்பாகப் பழகி பாடத்தைத் தொடங்க மாணவர்களின் உள்ளங்களைக் கவர வேண்டும். சல்லப்படல் வேண்டும். பாடச் சுருக்கம், மீள மனத்தும் பொருத்தப்பாடு மிக்கதாய் இருக்க ான குழுச் செயற்பாடுகளுக்கும், கல்விச்
இடமாக இருக்க வேண்டும்.
ன் ஒழுங்கமைப்பும், நிச்சயமாக ஒரு ங்கிற்கூடாகக் கல்வியிலும் மாற்றத்தைக்
ளும், சுவர்களும், ஒழுங்காக இருக்கவேண்டும். கக் கூடாது. அப்படி இருந்தால் அவற்றைத் த் தெரிவித்தல் வேண்டும். அதிபரோ அதனைச் வடிக்கையை எடுக்க வேண்டும்.
இடவசதிகளையும், போதிய இடவசதிகளையும், ளபாட வசதிகளையும் கொண்டிருக்க வேண்டும். லே நேர்த்தியான முறையிலே அமைக்கப்பட்டு படுதல் வேண்டும். லா "U" வகுப்பறைகளை ஒழுங்கமைப்பது வர் மனங்களிலே "நாம் எல்லோரும் ஒரே ம் நல்லுணர்வினை உருவாக்கும். இதனால் Dான மாற்றங்கள் உருவாகும்.
ள் இருக்கின்றது. இதனைக் கருத்திற் கொண்டு D”, "மணல் மூலை”, “விளையாட்டு மூலை'', தப்பிற்குப் பொறுப்பான ஆசிரியர்கள் ஏற்படுத்திக்
தை கூறவும், நகைச்சுவைகளைப் பகிரவும், டுக்க வேண்டும். ஆசிரியர்கள் அன்போடும், பொறுமை, நிதானம், எதனையும் மன்னிக்கும் ள சிந்தனை, சமத்துவ நோக்கு, சீரிய கூரிய
103)

Page 124
புத்தி முதலான பல்வேறு விதமான ஆளுமை! முகாமைத்துவத்தைப் பேண வேண்டும்.
தவிர, ஆசிரியர்கள், பிள்ளையின் த நகைச்சுவை யுடையவராகக், குரல் மாறிக் கதை ஆலோசகராக, அறிஞராக, சிறந்த போதமை "ஒளிகாட்டியாக" பல பாத்திரங்களை நடிபங்கு நடத்திச் செல்வதன் மூலம் வினைதிறனும், விை கருமத் தொடரினை நகர்த்திச் செல்ல முடியு
இத்தகைய பின்னணியில் தற்போதைய க வகையில் வகுப்பறைகள் பல இன்று அமைப்பின் அணுகு முறையிலும் சாதகமான மாற்றங்கள் தருகின்றது.
இருந்தும் சில வகுப்பறைகள் தொடர்ந்து மாற்றங்களைக் காணாமல் இருந்து வருவது இவ்வாறான வகுப்பறைகள் இனியாவது வெ காணவேண்டியது இன்றியமையாததாகும்.
இவ்வாறாக எல்லாவற்றையும் தொகுத்து பலமும், வளப்பமும் தான் அதிலே உருவாக்கம் வாழ்நாட் பலமுமாக இருக்கின்றதென்றால் அ
ஒருவர் சமூக சேவகனாகவோ, மெ பல் துறைவிற் பனராகவோ, உருவாக்க வகுப்பறைகளில் இருந்தே என்பதை எவரு அத்தகைய வகுப்பறைகளைத்தான் ஆசிரியர்க உருவாக்க வேண்டும். அவை சிறந்த இயங்கிய
அற்பணிப்போடு உழைக்க வேண்டும்.
ஆம்
வகுப்பறைகளை வாழவைப்போம் 3. அதிலே நம் மாணவச் செல்வங்க 4. வளர்த்தெடுப்போம்.
(104)

5 கூறுகளையும் உடையவராக வகுப்பறை
யாகத், தந்தையாக, உற்ற நண்பராக, 5ப்பவராக, நடுநிலையாளராக, நீதியாளராக, னயாளராக, தலைசிறந்த வழிகாட்டியாக, களை ஏற்று வகுப்பறைச் செயற்பாடுகளை ளதிறனும் உடையதாகக் கற்றல் கற்பித்தல் ம்.
ல்விச் சிந்தனைகளைக் கருத்திற் கொண்ட றும், இயங்கியல் நிலையிலும், ஆசிரியத்துவ Dளக் கண்டு வருவது மனமகிழ்ச்சியைத்
வம் பழமையைப் பேணும் இடங்களாகவே
பெரும் மனவேதனையைத் தருகின்றது. வகு விரைவிலே உரிய மாற்றங்களைக்
து நோக்கும் போது ஒரு வகுப்பறையின் பெறும் பிள்ளையின் பல்துறை வளர்ச்சியும், து மிகையாகாது.
ஞ்ஞானியாகவோ, விஞ்ஞானியாகவோ, -ம் பெறுவது உயிர்த் துடிப் புள் ள
ம் மறுக்கவோ, மறக்கவோ முடியாது. ளும், பாடசாலை நிர்வாகமும் இணைந்து பல்த் தன்மையைப் பெறுவதற்கு அயராது
களை
வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 125
நவீன யுகத்தில் எழு திறனுக்கப்பால் அ தகவல் தொழில்நுட்
ஆசிரியர்,
உலக நாடுகள் அபிவிருத்தியடைந்த ந பாகுபடுத்தப்படுகின்றது. இப்பாகுபாட்டிற்கு வருகின்றது. பெளதிக வாழ்க்கைப் பண்புச் இரு குறிகாட்டிகள் மூலம் நாடுகளின் சமூக இவ் இரு குறிகாட்டிகளிலும் எழுத்தறிவு ச அளிக்கப்படுவதுடன் எழுத்தறிவு சார்ந்த திற தவிர்ந்த ஏனைய நாடுகள் அபிவிருத்தியமை தாய் மொழியில் எழுத வாசிக்கத் தெரிந்தவர்க கருதப்பட்டனர். ஆனால் இன்றைய தகவ மேலதிகமாக தகவல் தொழில்நுட்பக் கலா
நவீன உலகில் வெற்றிகரமாக வாழ்வது கையாளுகின்ற திறன்கள் தேவைப்படுகின்றன நாம் பயன்படுத்தும் தகவல்களும் எமது. காணப்படுகின்றது. நாம் இன்று தகவல்கள் அ அல்லது தகவல்களால் ஆளப்படுகின்ற ஒர் சூழ்நிலையில் சிரமப்பட்டுப் பெற்றுக்கொள்6 காலப்பகுதியினுள் செயலற்று அல்லது பொரு எனவே பெறுகின்ற அறிவுத் தொகுதியானது ம ஏற்ற வகையில் ஈடுகொடுக்கக் கூடியதாக
பிரித்தானியாவில் 18ஆம் நூற்றாண் புரட்சியானது கைத்தொழில், வர்த்தகம் என்ப மாற்றங்களையும் ஏற்படுத்தியது. மனித பயன்படுத்தப்பட்டன. விவசாய சமூகம் கைத் வழங்கியது. இவ்வாறு வளர்ச்சி அடைந்து ஏற்பட்ட கணனித் தொழில்நுட்பத்தின் கன அமைந்தது. இரண்டாம் உலகப் போரின் ே உதவும் நோக்கத்திற்காகவே ஆரம்பத்தில் பின் கணனிகள் வர்த்தக அடிப்படையில் | மேற்கொள்ளப்பட்டன. இவ்வகையில் 1950-1 கொண்ட கருவிகளாக இருந்ததுடன் அரச அவற்றைக் கொள்வனவு செய்யக்கூடிய நிலை கணனிகள் அபிவிருத்தியுடன் மேற்கூறப்பட்ட
கூர்மதி

ந்தறிவந் ஓரறுந்தர்ரபடும் பரர், காரசாரம்
செல்வி சிவசித்ரா பழனி யா/யாழ் இந்து மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம்
எடுகள், அடைந்து வரும் நாடுகள் எனப் பல்வேறு குறிகாட்டிகள் பயன்படுத்தப்பட்டு சுட்டெண், மனித அபிவிருத்திச் சுட்டி ஆகிய 5 கலாசார மட்டங்கள் அளவிடப்படுகின்றன. சர்ந்த திறன்களுக்கு அதிக முக்கியத்துவம் ன்கள் உயர்ந்தளவில் காணப்படும் இலங்கை டந்த நாடுகளாகக் கருதப்படுகின்றன. தனது கள் பெரும்பாலும் எழுத்தறிவுடையவர்களாகக் ல் யுகத்தில் எழுத்தறிவுத் திறன்களுக்கு சாரம் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
தற்குப் பல்வேறு வகைப்பட்ட தகவல்களைக் - தினமும் எமக்குக் கிடைக்கும் தகவல்களும் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானதாகக் திகளவில் பெருகிச் செல்லும் ஒரு சமூகத்தில் | சமூகத்தில் வாழ்ந்து வருகின்றோம். இச் நம் அறிவுத் தொகுதியானது மிகக் குறுகிய உத்தப்பாடற்றதாக மாற்றமடைந்து விடுகின்றது. மாற்றமடைந்து வருகின்ற உலகின் வளர்ச்சிக்கு
அமைய வேண்டும்.
டின் பிற்பகுதியில் ஏற்பட்ட கைத்தொழில் வற்றிற்குப் புத்துயிரூட்டியதுடன் தொழில்நுட்ப உழைப்பிற்குப் பதிலாக இயந்திரங்கள் தொழில் சமூகத்திற்கு முக்கியத்துவத்தினை
வந்த தொழில் மாற்றத்தில் 1940 களில் எடுபிடிப்பு முக்கியமான ஓர் மைல்கல்லாக பாது நேசநாடுகளின் போர் முயற்சிகளுக்கு
கணனிகள் பயன்படுத்தப்பட்டன. போரின் பயன்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சிகள் 970 களில் கணனிகள் உயர் விலைகளைக் பங்கங்களும் பாரிய கம்பனிகளும் மட்டுமே யில் இருந்தன. 1980 களில் தனிநபர்களுக்கான - விடயங்களில் மாற்றங்கள் ஏற்பட்டது. இம்
105

Page 126
மாற்றத்தினை தகவல் புரட்சியின் ஆரம்பம் எ6 படிப்படியான முன்னேற்றம் முழு மனித குலத்ை புதிய சகாப்தத்திற்குள் உள்வாங்கிக் கொண் தகவல் தொழில்நுட்பம், கணனித் தொழில்நு
நாட்டின் முன்னேற்றத்திற்கும், நடை விழுமியங்களைக் கொண்ட முடிவுகளை மேற்ெ அல்லது அர்த்தமுள்ள வகையிலான தரவு பயனுள்ள புள்ளிவிபரங்களே தகவல் : இயந்திரத்திற்குமிடையிலான செயல்முறையை
இன்றைய நவீன யுகத்தில் தகவல் தெ அடைந்துள்ளது. இந்த நவீன முன்னேற்றங்கள் படங்களையும் ஒலியையும் ஒரு வினாடிக்கும் செய்து கொள்ளக் கூடிய காலகட்டத்தில் நாம் கணனித் தொழில்நுட்பம் என்பவற்றின் ஒருங் அதிநவீன அமைப்பான இணையம் (internet) ! தகவல் மையமாகவும் இருந்து வருகின்றது. இ சமுதாயம் ஒன்றை நோக்கிய பயணத்தினை பெருக்கத்தால் தகவல் வெடிப்பு (informatio உலகம் தகவல்களால் இயக்கப்படுகின்றது மிகையில்லை.
தகவல் தொழில்நுட்பம் என்பது இன்ன வருகின்றது. உலகின் நவீன போக்குகள் : ஆதிக்கத்தைக் கொண்டுள்ளன. தொடர்பாடல் செயற்பாடாக இருந்து வருகின்றது என்பதில் வரலாற்றின் ஆரம்பகாலத் தொடர்பியல் வழி வந்துள்ளது. மனிதர்கள் பல்வேறு புதிய அ தொடர்பியலுக்கு வாய்மூலமான மொழி மட்டு பின்னணியில் தொடர்பாடலின் அடுத்த கட்ட எழுத்துத் தொடர்பான சிந்தனைகள் மொழியி ஏற்படுத்தின. தொடர்பியல் முறை என்ற 6 விருத்தியடைந்தன. இதன் தொடர்ச்சியாக 2! தொழில் நுட்பம் பாரிய வளர்ச்சியடைந்தது. ெ முன்னேற்றங்கள் ஏற்பட்டன. அதாவது கணனி, மாற்றங்களை எடுத்து வந்துள்ளது எனலாம். அடிப்படையிலானதாக இருந்து வருகின்றது.
தகவல் தொழில் நுட்பம் முக்கியம் செயற்பாடுகளிலும் அதன் ஆதிக்கம் விஸ்வரூப் மரபுவழிக் கற்பித்தல் முறைகளுக்கு வழங்கப் வளங்களை அடிப்படையாகக் கொண்டு மாண தோற்றம் பெற்ற வருகின்றது. எனவே, இதற்குப் ( வழங்கும் நூல்களையும், நூல் நிலையங்க திறன்களையும் மாணவர்களிடையே வளர்த்தெ திறன்களைப் பெற்றுக்கொள்வதற்குரிய புதிய
(106)

எக்குறிப்பிடலாம். இத்துறையில் இடம்பெற்ற தயும் "தகவல் யுகம்” என்று அழைக்கப்படும் டது. இன்றைய உலகின் தாரக மந்திரமாக ட்பம் என்பன இருந்து வருகின்றது.
முறைத் தொழிற்பாட்டிற்கும் அவசியமான பகாள்வதற்கு உதவும் வகையில் கருத்துள்ள ச் செயல்முறையைக் கையாள்வதற்குரிய கள் எனப்படுகின்றது. மனிதனுக்கும் நாம் தொழில்நுட்பம் எனக்குறிப்பிட முடியும்.
பாடர்பு முறை பன்முகப் பரிமாணம் ஒன்றை எழுத்துக்களையும், படங்களையும், சலனப் » குறைந்த காலப் பிரிவுக்குள் பரிமாற்றம் > வாழ்ந்து வருகின்றோம். தகவல் தொடர்பு, கிணைப்பின் விளைவாக உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய நூல் நிலையமாகவும், ன்றைய தகவல்யுகம் உலகளாவிய தகவல் - மேற்கொண்டு வருகின்றது. தகவல்களின் on Exploration) ஏற்பட்டுள்ளது. இன்றைய து அல்லது ஆளப்படுகின்றது என்றால்
மறய உலகின் தாரக மந்திரமாக இருந்து
அனைத்துமே தகவல் தொழில்நுட்பத்தின் ) ஒவ்வொரு உயிரினதும் அடிப்படையான எவ்விதமான சந்தேகமும் இல்லை. மனித முறைகளாக மொழி வடிவங்களே இருந்து அறிவுத்துறையைக் கண்டுபிடித்த பொழுது ம் போதமானதாக இருக்கவில்லை. இதன் மான எழுத்துமுறை வளர்ச்சியடைந்தது. ன் உபயோகத்தில் ஓர் அபிவிருத்தியினை பகையில் பல்வேறு எழுத்து நுட்பங்கள் 1ம் நூற்றாண்டின் பிற்காலத்தில் கணனித் தாடர்பாடல் தொழில்நுட்பத்தில் வியத்தகு த் தொழில் நுட்பத்தின் சங்கமம் வியத்தகு இன்று தொடர்பாடல் முழுவதும் பல்லூடக
பெறுகின்ற இக்காலகட்டத்தில் கல்விச் ம் எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. பட்டுவரும் முக்கியத்துவத்திற்குப் பதிலாக வர்கள் கற்க வேண்டும் என்ற சிந்தனைகள் பாருத்தப்பாடுடைய வகையில் தகவல்களை களையும், கணனிகளைப் பயன்படுத்தும் கடுக்க வேண்டியது அவசியமாகும். கற்றல் | அணுகு முறையானது நூலகத்தினைப்
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 127
பயன்படுத்தி சுயமாகக் கற்கும் ஆற்றலை 6 பல சாதனங்களைப் பயன்படுத்தும் திறன்கள் தவிர எதிர்கால வாழ்க்கைத் தராதரங்களின் வாழ்க்கைத் திறனைப், பெற்றுக் கொள்வத புரிவதற்கும், பிறருடன் தொடர்பு கொள்வ முக்கியத்துவம் பெறுகின்றது.
கல்வியறிவு வளர்ச்சியடைந்த நாடுக முறையில் பெற்றுக்கொள்வார்கள் எனக் க பயன் படுத்தும் ஆற்றல் இருப்பவர்க பெற்றுக்கொள்வார்கள் எனக் குறிப்பிடமுடிய கொள்ளவும் வேண்டும். தகவல்களை இனம் ! செயன்முறைப் பயிற்சிகளும் வழங்கப்பட வளர்ச்சியினால் காகிதம் அற்ற கல்விச் சமூ பாடசாலைகளுக்கும் மிக விரைவில் ஏற்படுபெ எழுது கருவிகளுக்குப் பதிலாக கணனிகளு சமூகமளிப்பதும் அல்லது ஒன்றிணைக்கப்பட்ட நிலையும் சகல பிரதேசங்களுக்கும் துரித இவ்வாறு மாற்றமடைந்து வருகின்ற யுகத்த தேவை உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள் உள்வாங்குவதில் அலட்சியமாக இருக்கு தகவல்மைய சமூகத்தில் வாழ்வதற்கு பொரு பொருத்தமான விதத்தில் தகவல் தொழில்
அவசியமாகின்றது.
மக்களிடம் காணப்படும் சாதாரண எ தொழில்நுட்பம் இன்று முக்கியம் பெற் "தகவல்களைத் திரட்டவும் சுதந்திரமான த பெற்றுக் கொள்ளவும் கலாசார வளர்ச்சிக்கு ஒவ்வொருவரும் நூல் நிலையங்களைச் சுத கூடியதாக இருத்தல் வேண்டும்” என Inte வலியுறுத்துகின்றது. இக் கூற்று வாசிப் ஆவணப்படுத்தி மற்றவர்களுக்குத் தகவல்க பெற்றுக் கொள்ளும் முறையை முக்கிய சமூகங்களும் அடிப்படை எழுத்தறிவிற்கு அடைந்துள்ளது. இதற்கேற்ற வகையிலே கணிப்புக்களும் அமைந்துள்ளது. அதாவது தகவல் தொழில்நுட்பம் பெறும் ஆற்றவை நாடுகளுக்கிடையே நிலவி வரும் சமூக | நீக்குவதில் தகவல் தொழில் நுட்பம் எதிர்பார்க்கப்படுகின்றது. வளர்ச்சி அடைந்து வருகின்றன. (உதாரணம் இந்தியா, சீனா) பெருகியுள்ள அறிவுத் தகவல்களை உள்வா பயன்படுத்துகின்றன. உதாரணமாக இந்தி அறிவினைப் பெற்று விண்வெளித் தொழில் பெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
ககூர்மதி

பளர்த்தெடுப்பதுடன் சுய கற்றலுக்கான வேறு ளயும் வலியுறுத்தி வருகின்றது. இம்முறைகள் மேம்பாட்டிற்கு ஏற்ற வகையில் மாணவர்கள் ற்கும் வெற்றிகரமாக வாழ்வதற்கும், தொழில் தற்கும் தகவல்களைக் கையாளும் திறனே
ளில் கூட மக்கள் தகவல்களைச் சரியான றமுடியாது. வாசிக்கும் திறனும் நூல்களைப் ளும் கூடச் சரியான தகவல் களைப் ாது. தகவல் திறன்களை எல்லோரும் கற்றுக் கண்டு, அவற்றை ஒழுங்குபடுத்தத் தேவையான வேண்டும். தகவல் தொடர்பு சாதனங்களின் கம் ஒன்று உருவாகி வருகின்றது. இந்நிலமை ன எதிர்பார்க்கலாம். மாணவர்கள் புத்தகங்கள், டன் (Laptop computer) பாடசாலைகளுக்குச் இணையத் தளங்களுடாகக் கற்றுக்கொள்ளும் தகதியில் ஏற்பட்டுவிடும் எனக் கூறமுடியும். ற்கு ஏற்றவகையில் மாற்றமடைய வேண்டிய ளது. தகவல் தொழில்நுட்பத்திறன்களை ம் நாடுகள், நிறுவனங்கள் நவீன உலகின் த்தமற்றதாகிவிடும். எனவே இந்நூற்றாண்டிற்குப் ல் நுட்பக் கல்வி வழங்கப்பட வேண்டியது
எழுத்தறிவுக்கு அப்பால் தகவல் தொடர்பான று வருகின்றது என்றால் மிகையில்லை. தீர்மானங்களை மேற்கொள்ளும் திறன்களைப் தம் பொருளாதார அபிவிருத்திக்கு உதவவும் தந்திரமாகவும் திறமையாகவும் பயன்படுத்தக் ernational federation of Library Association பபுத் திறனூடாக மனித அனுபவங்களை களை வழங்குவதுடன், தானும் தகவல்களைப் ப்படுத்துகின்றது. இதன் மூலம் நாடுகளும், - அப்பால் சிந்திக்க வேண்டிய நிலையை யே யுனெஸ்கோ அமைப்பினது கருத்துக் 5 புதிய தகவல் சமூகமானது யாவருக்கும் D ஆணித்தரமாக வலியுறுத்தி வருகின்றது. பொருளாதார அரசியல் ஏற்றத் தாழ்வுகளை பிரதான இடம் வகிக்க முடியும் என வரும் நாடுகள் புதிய அறிவினைப் பிரவாகித்து இந் நாடுகள் வளர்ச்சியடைந்த நாடுகளில் ங்கி தமது அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பா பல நாடுகளின் விஞ்ஞான தொழில்நுட்ப நுட்பத்தில் தனக்கென ஒரு தனியிடத்தினைப்
(107)

Page 128
வளர்ச்சியடைந்திருக்கும் தகவல் தெ ரீதியில் இணையத்தளப் பயன்பாடுகள் அதி ஏற்படுத்தி யிருக்கின்றது. எனினும் நாடுக இடைவெளியையும் ஏற்படுத்தியிருப்பதாகக் கா கல்வி வளர்ச்சி நிலை பாகுபடுத்தப்படுவது அபிவிருத்தி மட்டத்தினை அளவிடும் போ வீதம் கணிக்கப்பட்டு அதன் அடிப்படையில் அபிவிருத்தி மட்டம் மதிப்பிடப்படலாம். 8 காணப்படலாம். அதாவது கையெழுத்துப் பூ தொடர்பாடல் தொழில் நுட்பத்தைப் பயன்படு சிறந்த கல்வி வசதி பெற்றவர்களும் பெற
அத்துடன் நாகரிக வளர்ச்சியடைந்த மக்கள் கருதுகின்ற சமூகங்கள் தகவல் படிப்பறிவுத் த விட்டால் அவர்கள் சமூக ரீதியாக வளர்ச்சி! சூழ்நிலையும் உருவாகலாம். நாடுகளிடையே ஏற்படாதிருப்பதற்காக யுனெஸ்கோ "யாவருக்கு நடைமுறைப்படுத்தி வருகின்றது. இந்நிகழ்ச்சி உருவாக்கப்பட்ட கலாசாரச் சூழலுக்கு ஏற்பு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
நவீன யுகத்திற்கேற்ப புதிய தகவல் தெ ''தகவல் கலாசாரம்” என்ற புதிய எண்ணக் தமக்குள் தொடர்புகளை ஏற்படுத்தி வந்த மர அதிக மக்களிடம் கடிதம் எழுதும், வாழ்த்து வருகின்றது. அவர்கள் தகவல்களைப் பெறும் ( வழங்கும் முறைகளும் மாற்றமடைந்துள்ளன. குறுந்தகவல் முறைகளும் கையடக்கத் தொ வருகின்றன. தொழிலகங்கள், அலுவலகங்கள், மாற்றமடைந்துள்ளன. அத்துடன் தகவல் யுக பயன்பாட்டின் விளைவாக பல புதிய நோய்க தகவல் கலாசாரம் அனைவருக்கும் அறிவி வருகின்றது. அத்துடன் தனியாட்களும் சமூ தகவல் கலாசாரம் தீர்த்து வைக்க வேண்டும்
இன்று உலக நாடுகள் ஒன்றுடன் ஒன்று தங்கியிருப்பதாகவும் மாறி வருகின்றன. இதனா நாட்டுக்கு நாடு தொழிலுக்குத் தொழில் 6 செயன்முறையின் போது மக்கள் புதிய சூழ தொழில்நுட்பத் தேவைகளுக்கும் ஏற்ற வித வேண்டியிருப்பதால் தினமும் புதுப்புது விடய
மேற்கூறப்பட்டவற்றைத் தொகுத்து நோ திறனுக்கப்பால் தற்கால வாழ்க்கை முறைக்கு இத்தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்குரி வளர்த்தெடுக்க வேண்டும். இந் நவீன தகவல் ெ ஆரம்ப எழுத்தறிவு அவசியம் வேண்டப்படுகின்ற உளப்பாங்கும் விருத்தியடைய வேண்டும். த
(108)

எழில்நுட்பத்தின் விளைவாக உலகளாவிய கரித்து நாடுகளிடையே ஒருமைப்பாட்டினை ளிடையேயும் குடும்பங்களிடையேயும் ஓர் தப்படுகின்றது. எழுத்தறிவு ரீதியில் நாடுகளின் போன்று இனிவருங்காலத்தில் நாடுகளின் து இணையத் தளப்பாவனையுடையோரின் நாடுகளின் கல்வி வளர்ச்சி நிலை அல்லது அத்துடன் சமூகத்திற்குள்ளேயும் வேறுபாடு பயன்பாடு உடையவர்களும், நவீன தகவல் த்தத் தெரிந்தவர்களும், தெரியாதவர்களும் தேவர்களும் என்ற நிலையும் காணப்படும். - கூட்டத்தினரென தம்மைப் பெருமையாகக் கிறன்களைப் பெற்று பயன்படுத்தத் தெரியாது படையாத நாடுகள் எனப் பாகுபடுத்தப்படும் பும் சமூகங்களிடையேயும் இவ் வேறுபாடுகள் நம் தகவல்” என்னும் நிகழ்ச்சித் திட்டத்தினை இத் திட்டத்தின் மூலம் புதிய தகவல்களால் ப வாழ்வதற்குப் பழகிக் கொள்ளும் நிலை
தாழில் நுட்பங்களும் புதிய மனப்பாங்குகளும் கருவைத் தோற்றுவித்துள்ளது. மனிதர்கள் புவழியான முறைகள் மாற்றமடைந்துள்ளன. 1 அட்டைகள் அனுப்பும் பழக்கமும் அருகி முறைகளும், மற்றவர்களுக்குத் தகவல்களை - இணையத்தளப் பயன்பாடும் மின்னஞ்சல், லைபேசிகளின் பாவனைகளும் அதிகரித்து ஆய்வுகூடங்களின் செயற்பாட்டு முறைகளும் த்தில் தகவல் தொடர்பாடல் சாதனங்களின் ளும் ஏற்பட்டு வருகின்றது. நவீன யுகத்தில் னையும் அனுபவத்தினையும் விரிவுபடுத்தி கமும் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் மனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
3 பிணைக்கப்பட்டதாகவும், ஒன்றில் ஒன்று ல் அறிவுத்துறை சார்ந்த புதிய தொழில்கள் என மாறிக் கொண்டேயிருக்கின்றது. இச் நிலைகளுக்கு மட்டுமன்றி புதிய தகவல் த்தில் மாறிச் செல்லப் பழகிக் கொள்ள ங்களைக் கற்றறிய முயற்சிக்க வேண்டும்.
க்கும் போது நவீன யுகத்தில் எழுத்தறிவுத் பெருமளவு தகவல்கள் தேவைப்படுகின்றன. ப திறன்களை நாடுகளும் சமூகங்களும் தாடர்புத் திறன்களைப் பெற்றுக்கொள்வதற்கு து. இதில் வாசிப்புத் தொடர்பான திறன்களும், 5வல் தொழில் நுட்பம் தொடர்பான துறை
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 129
தொடர்ந்து ஆய்விற்குட்பட்டு வருவதல் வெளிவந்தவாறுள்ளது. இன்றைய கண்டும் நாளை பழைய செய்தியாகிவிடும். ஒரு கால் செய்தியாக மக்களால் பரபரப்பாகப்
முக்கியத்துவத்தினை வலுவிழக்கச் செய்யும் அமைத்து ஆராய்ச்சி நடவடிக்கைகள் பே மனிதன் சென்றது இன்று பழைய செய்தியா தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அது ஓர் மறுப்பதற்கில்லை. அதேபோல் இன்று தகவல் என்று கூறினாலும் அதற்கு அடிப்படை எழுத் நாம் வளர்த்தெடுக்காது நவீன தகவல் யுகத்
முடியாது. இவ் எழுத்தறிவு சார்ந்த திறன். வாசிப்பு உறுதுணைபுரிகின்றது. வாசிப்பதனா நாம் வாசிப்பாற்றலை வளர்த்தெடுக்க வேண எழுத்தாற்றல் திறன் இருக்குமென்பது யா சிறந்த வழிகாட்டியாகவும் நண்பனாகவும் வாழ்வில் உயர்ச்சியடைய வேண்டும். தகவல் சார்ந்த திறன்கள் அமைந்துள்ளன. இவ் - தகவல் கலாசார யுகத்தினை எம்மால் உ
தி ஒவ்வொரு மனிதனிலும் ஏ பொதிந்திருக்கும். அதனைச் சரிய
வாழ்வின் உச்சத்து வா
ககூர்மதி.

Tால் புதுப்புதுக் கருத்துக்கள் தினமும் பிடிப்பும் ஆராய்ச்சியும் புதிய தகவல்களும் மத்தில் சந்திரனுக்கு மனிதன் சென்றது புதிய | பேசப்பட்டது. ஆனால் இன்று இதன் > வகையில் விண்வெளியிலேயே ஆய்வுகூடம் மற்கொள்ளப்பட்டு வருகின்றது. சந்திரனுக்கு கிவிட்டது. என்றாலும் இன்றைய விண்வெளித் அடிப்படையாக அமைந்தது என்பதனை யுகம், தகவல்களால் உலகம் ஆளப்படுகின்றது தறிவு சார்ந்த திறன்களாகும். இத்திறன்களை திற்குப் பொருத்தப்பாடுடையவர்களாக இருக்க களை நாம் விருத்தி செய்து கொள்வதற்கு ல் மனிதன் பூரணமடைகின்றான் என்பதற்கேற்ப படும். வாசிப்புப் பழக்கம் இருப்பவரிடம் நல்ல வரும் அறிந்ததாகும். நூல்கள் ஒருவருக்கு இருக்கின்றன. அவற்றினைப் பயன்படுத்தி தொழில்நுட்ப யுகத்தின் சாவியாக எழுத்தறிவு அடிப்படைத் திறன்கள் வளர்ச்சியடையாமல் நவாக்கி விடமுடியாது.
> *க
தோ ஒரு அசகாய திறமை பாக இனங்கண்டு கொள்பவர்களே
க்குப் போகிறவர்கள்
*ேSC
(109)

Page 130
“எயிட்ஸ் என்னு
நோய் 7/\/\/-
இன்று நாம் 21ம் நூற்றாண்டில் வாழ்ந்து ெ விஞ்ஞானம் மருத்துவம் கைத்தொழில் ( துறைகளிலும் அபரிமிதமான வளர்ச்சியை எ விளைவாக உலகம் ஒரு கிராமமாகச் சுரு சாதனைகளை நிகழ்த்தி விட்டோம். உலகை கூனிக் குறுகச் செய்துள்ளது "எயிட்ஸ் எ மிகையில்லை. இருபதாம் நூற்றாண்டில் மா பெருமை எயிட்ஸ் நோய்க்கு உண்டு. க நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்து சிறுநீர் உறுப்புக்களைப் பொருத்தி வெற்றி அடைர் அல்ல எனச் சிந்திக்க வைத்தது எயிட்ஸ். ? அதிகம். சிறுவர் முதல் முதியோர் வரை பால் அனைவரையும் இந் நோய் தாக்கி வருகின் திருத்திக் கொள்ள அவகாசம் வழங்காத சர் இந்நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக் உட்பட்டவர்கள் மீட்சி இல்லாது இறக்க ே
ஆட்கொல்லி நோய் எனக் குறிப்பிடலாம்.
எயிட்ஸ் என்னும் ஆட்கொல்லி நோய் ஆபிரிக்கப் பகுதிகளில் வாழ்ந்த மக்களிடை கூறப்படுகின்றது. ஆயினும் நோர்வே ந இனம்காணப்பட்ட போதும் அதன் தீவிரம் நியுயோர்க், லொஸ்ஏஞ்சல் பகுதியில் இந்நே எயிட்ஸைப் பரப்பும் வைரஸ் 1983 ஆம்
வைரஸ் முதன் முதலாக பிரான்சிலுள்ள பால் Pasteur) பரிசோதிக்கப்பட்டதுடன் அக்கால denopathy Associated Virus) என்று அழைக உள்ள தேசிய புற்றுநோய் நிறுவனம் இக் கிரு என்பதனை உறுதிப்படுத்தியதுடன் அதற்கு பெயரிட்டது. இவ் வைரஸ் சில சந்தர்ப்பா அழைக்கப்பட்டது. 1986ம் ஆண்டில் தான் இ Immunodeficiey Virus) என்ற பெயர் உலக
எயிட்ஸ் என்னும் நோய், வைரஸ் 6 எயிட்ஸ் (Acquired Immuno Deficiency Syn நோய்த்தொகுதி” எனக் குறிப்பிடப்படுகின்றது.
(110)

பம்ஆமிகால்லி
செல்வி ஜெயபிரபா ஜெகதீஸ்வரன்
மாணவி, யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம்
காண்டிருக்கின்றோம். நவீன கண்டுபிடிப்புகள் போக்குவரத்து பயிர்ச்செய்கை என சகல ட்டியுள்ளது. தகவல் தொழில்நுட்ப புரட்சியின் ங்கிவிட்டது. எமது கண்டுபிடிப்புக்களால் பல வென்றுவிட்டோம் என்று மார்தட்டிய மனிதனை ன்னும் ஆட்கொல்லி நோய்” என்றால் அது தத்துவத் துறையையே கதிகலங்க வைத்த Tலத்திற்குக் காலம் ஏற்படுகின்ற பல்வேறு ரகம், இதயம் என எல்லாவற்றிற்கும் மாற்று நத மனிதனை அவ்வெற்றி தனித்துவமானது உலக நாடுகள் பலவற்றிலும் இதன் தாக்கம் 2, வயது வேறுபாடின்றி சமூக அங்கத்தவர்கள் எறது. தவறு செய்யும் மனித இயல்பினைத் வாதிகாரியாக எயிட்ஸ் நோய் இருக்கின்றது. கப்படவில்லை. இந் நோயின் தாக்கத்திற்கு நரிடுகின்றது. இதனால் இந் நோயினை ஓர்
ப் 1950 களில் மத்திய ஆபிரிக்க, கிழக்கு டயே ஏற்பட்ட தகாத உறவால் பரவியதாகக் நாட்டு மாலுமியிடம் இந்நோய் முதலில் பற்றி உணரப்படவில்லை. 1981ம் ஆண்டு ரய் கண்டறியப்பட்டதெனக் கூறப்பட்டபோதும் ஆண்டிலேயே இனம் காணப்பட்டது. இவ் ஸ்டர் விஞ்ஞான ஆய்வு கூடத்தில் (Institute கட்டத்தில் இது LAV வைரஸ் (Lympha க்கப்பட்டது. 1984ம் ஆண்டு அமெரிக்காவில் மி தான் எயிட்ஸ் நோயை உண்டாக்குகின்றது Human Tiyphotrophic Virus type III எனப் ங்களில் AIDS Related Virus (ARV) என இப்பொழுது பயன்படுத்தப்படும் HIV (Human களாவிய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
என்னும் நுண்ணங்கியினால் ஏற்படுகின்றது. drome) “தேடிப்பெற்ற நிர்பீடணக் குறைபாட்டு HIV என்பது AIDS சைப் பரப்பும் வைரசைக்
- கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 131
குறிக்கின்றது. இது மானிட நிர்பீடணக் ( ciency Virus) என அழைக்கப்படுகின்றது. உடலில் தொற்றியோரை HIV தொற்றுடை எனக் குறிப்பிடலாம். இவர்களிடம் இருந்து ஆண்டு காலத்துக்குள் இவர்கள் இந்நோய்க்கு
எயிட்ஸ் வைரஸ் உடலினுள் புகுந்த அனுப்புகின்ற T, அதாவது CD, கலங்கா நோய்க்கிருமிகள் உடலினுள் புகுந்ததும் T B கலங்கள் ஆற்றும் நிர்பீடணமாக்கற் செ கலங்களும் அதிகளவில் காணப்படமாட்
அழிவடைகின்றது.
HIV வைரஸானது, HIV தொற்றியுள் மூலமும், HIV தொற்றியுள்ள குருதியை ( பெண் கர்ப்பமுற்றால் அவருக்குப் பிறக்கும் ஒரு பாலியல் நோயாகும். பெரும்பாலும் மற்றவருக்குத் தொற்றுகின்றது. பெண்ணிலிரு தொற்றலாம். அத்தடன் இயற்கைக்கு ஒவ்வ course) எயிட்ஸ் நோயினைப் பரப்புவதில்
HIV தொற்றியுள்ள ஒருவரின் குருதி 8 அவருக்கு HIV பரவக்கூடும். சத்திர சிகி பயன்படுத்தப்படும் ஊசி, கத்தி, கத்திரிக்ே மூலமும் HIV பரவுகின்றது. போதைப்பெ பரவக்காரணமாகும். தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டிருந்தால் அப் பெண்ணின் சிசு பிறக்கும் போதோ HIV தொற்றலாம். 10 -25% தாய்மாருக்குப் பிறந்துள்ளனர் எனக் கண்ட
எயிட்ஸ் நோயைப்பரப்புகின்ற வைர வகையைச் சேர்ந்ததாக இருக்கின்றது. அ (Retro Virus) ஆகும். பெரியம்மை நோை (Genetic Code) DNA எனப்படும் டியாக்க nucleic acid-DNA) உடற்கூறுகளைக் மருந்துவகைகள் கண்டறியப்பட்டன. ஆனால் லீயிக் அமிலத்தின் உட்கூறுகளைக் கொண் இவ் வைரஸ் ஒருவரின் உட்புகுந்து விட்ட வாக மாற்றப்படுகின்றது. இம்மாற்றத்தினை ] (enzyme) என அழைக்கின்றனர். இந்த வைர உயிரணுக்களின் DNA யுடன் இணைந்து கண்டுபிடிக்கப்பட்ட மருந்துவகைகள் யாவு சமூகம் HIV வைரசிற்கு எதிரான மருந்தி மேற்கொண்டவாறே இருக்கின்றது.
HIV வளி, நீர், நோயாளி பயன்படுத்திய மீதி, உடைகள், மலசலகூட ஆசனத்தைப் பு
ககூர்மதி. 10-CM 013788

தறைபாட்டு வைரஸ் (Human Immunodefi- மானிட நிர்ப்பீடணக் குறைபாட்டு வைரஸ் டயோர் அல்லது HIV நேர் தொற்றுடையோர் ப சுகதேகிகளுக்கு நோய் பரவக்கூடும். 2-12 த உள்ளாக முடியும் எனக் கண்டறிந்துள்ளனர்.
5தும் ஏனைய கலங்களுக்கு கட்டளைகளை Dளத் தாக்கி அழித்து விடுகின்றது. இதனால்
கலங்கள் ஆற்றுகின்ற பாதுகாப்புச் செயலும் பலை மேற்கொள்ளுமாறு கட்டளையிடும் CD டாது. இதனால் இத்தொகுதி படிப்படியாக
ள ஒருவருடன் பாலியல் தொடர்பு கொள்வதன் ஏற்றுவதன் மூலமும், HIV தொற்றுள்ள ஒரு D பிள்ளைகளுக்கும் இது பரவமுடியும். இது
உடலுறவின் போதே ஒருவரிடம் இருந்து கந்து ஆணுக்கோ ஆணிலிருந்து பெண்ணிற்கோ பாத தன்னினப் பாலுறவு (Homosexual Interபெரும் பங்கு வகிப்பதாகக் கூறப்படுகின்றது.
எகதேகியான ஒருவரின் உடலில் ஏற்படுமாயின் சசை அல்லது மருத்துவத் தேவைகளுக்குப் கால் போன்றவற்றின் மூலமும், சவர அலகு எருளை ஊசி மூலம் ஏற்றுவதும் இந்நோய் ள்ள பெண்ணின் குருதி HIV யினால் விற்கு கர்ப்பத்தில் இருக்கும் போதோ அல்லது = வீதமான பிள்ளைகள் HIV தொற்றுக்குள்ளான உறியப்பட்டுள்ளது.
ஸ் ஏனைய வைரஸ் போலன்றி மாறுபட்ட அதாவது HIV என்பது ஒரு எதிர் வைரஸ் யப் பரப்பி வந்த வைரசின் மரபுக் குறியீடு ஸிரையே நியூக்லீயிக் அமில (Deoxymboகொண்டது. இதனால் இந்நோய்க்குரிய - HIV வைரஸ் RNA எனப்படும் ரைபோநியூக் டுள்ளது. (Ribonucleic acid-RNA) அதாவது டால் அது மனிதக்கூறு போன்றதொரு DNA Reverse Transcriptase எனப்படும் என்சைம்ஸ் ல் சார்ந்த DNA எயிட்ஸ் நோய் தொற்றியவரின் விடுவதால் தான் HIV வைரசிற்கு இதுவரை பும் செயலிழந்து விட்டன. எனினும் மனித னைக் கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகளை
ப பாத்திரங்கள், அவர் உட்கொண்ட உணவின் பயன்படுத்தல், நோயாளி உறங்கிய இடத்தில்
(111)

Page 132
உறங்குதல், நீர்த்தடாகத்தில் குளித்தல், நோ தழுவிக்கொள்ளுதல் மூலம் பரவமாட்டாதென அ ஏனெனில் HIV வைரஸ் உடலுக்கு வெளியே தொற்றியோர் சுகதேகி போன்று சமூகத்தில் காரணம் இந்நோய் வெளித் தெரிவதற்கு நீ ஏனைய நோய்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு எயிட்ஸ் நோயாளி சமூகத்தை வெறுக்க முற் காரணமாகின்றது.
HIV வைரஸ் தொற்றியதால் ஏற்படும் நிலைகளாகப் பிரித்து நோக்கப்படுகின்றது. . நோயாளியில் வெளித்தெரியும் என்றோ ஒரே கூறமுடியாது. எயிட்ஸ் நோயின் ஆரம்ப அறி பசியின்மை, தலையிடி, தொண்டைநோ, த வயிற்றோட்டம், காய்ச்சல், இரவு வியர்வை, இ மருந்து இல்லாவிட்டாலும் கூட இவ் அறிகுறி எயிட்ஸ் நோயின் அறிகுறிகளின் இரண்டாம் tency Phase) குறிப்பிடப்படுகின்றது. இக்காலக சுகதேகிபோல் இருப்பார். இந்நிலை சில வாரங்க நெறிகள் (Persistant Generalised Lymphaden அறிகுறிகளாகும். இக்காலகட்டத்தில் நெறிகள் ( அக்குள், அரைப்பகுதி (Inguinal region) போ மீற்றருக்கு பெரிதான இரண்டு அல்லது மேற்பு மூன்று மாதத்திற்கும் மேலும் மறையாமல் இ தொற்றியிருப்பதாக உறுதிப்படுத்திக் கொள்ள அறிகுறிகளாக நாம் பின்வருவனவற்றைக் குறி நீடிக்கும் வயிற்றோட்டம் காய்ச்சல் தனது என அறிகுறிகள் தென்படலாம். அத்துடன் வாயில் சொறிவு பசியின்மை சோர்வு வயிற்று உபாதை அறிகுறிகளில் பல ஒருவருக்கு இருந்தால் ( விட்டதாகக் கருதமுடியும். எயிட்ஸ் நோயின் மனிதர்களில் ஒரு போதும் ஏற்படாத ஒருவகை (Kaposi's Sarcoms) தடிப்புக்களாக ஆரம்பத்தில் நிறக்கட்டிகளாக வளரும் செறிவை ஏற்படுத்த தொண்டை போன்ற இடங்களிலும் ஏற்படலாம் இது தாக்கலாம். இப் புற்றுநோய் எதிர்ப்புச் கடுமையான தொற்று நோய்களும் ஏற்படலா கடுமையான வயிற்றோட்டம் போன்றனவும் வரல் அறிகுறிகளுடன் ஒருவகை அரிதான நியூமோ ஏற்படலாம். எயிட்ஸ் நோயாளிகளில் பெரும்பான் (AIDS dementia) தாக்கலாம். வைரஸ் தெ மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
எயிட்ஸ் நோயைத் தீவிரமாகப் பரப்பிவரு செலுத்தி வருகின்றன. குறிப்பாக நாடுகளிடையே காரணமாக ஏற்பட்டு வரும் இடப்பெயர்வுகளும் எயிட்ஸ் நோயினைத் தீவிரப்படுத்தியுள்ளன.
(112)

யாளியுடன் கைகுலுக்குதல், முத்தமிடுதல் ஆராய்ச்சி மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. உயிர் வாழ முடியாதது. ஆனால் எயிட்ஸ் வாழ்ந்தவாறு நோயைப் பரப்ப முடியும். ண்ட காலம் எடுக்கின்றமையாகும். இது பாகும். சமூகத்தினால் புறக்கணிக்கப்படும் படுகின்றான். நோய் பரவுவதற்கு இதுவும்
நோய் அறிகுறிகளை ஐந்து முக்கிய ஆனால் இந்த நிலைகள் யாவுமே ஒரே - ஒழுங்கு முறையில் ஏற்படும் என்றோ குறிகளாக (Acute Phase) உடலுளைவு, சைகளில் உழைவு, மூட்டுக்களில் நோ, இருமல் போன்றவற்றைக் குறிப்பிடமுடியும். கள் 2-3 வாரங்களுக்குள் மறைந்துவிடும். நிலையாக அறிகுறிகளற்ற காலம் (Laட்டத்தில் நோயாளி அறிகுறிகள் மறைந்து கள் வரை நீடிக்கக்கூடும். தொடர்ந்திருக்கும் ppathy) எயிட்ஸ் நோயின் மூன்றாம் கட்ட தொடர்ந்து இருக்கும். இந்நெறிகள் கழுத்து, ன்ற இடங்களில் ஏற்படலாம். ஒரு சென்றி பட்ட இடங்களில் இந்நெறிகள் உருவாகி
ருந்தால் அந்நோயாளிக்கு HIV வைரஸ் லாம். எயிட்ஸ் நோயின் நான்காம் நிலை பப்பிட முடியும். ஒரு மாதத்திற்கு மேலாக டையில் 10% இழத்தல் போன்ற முக்கிய ல் பங்கசு தொற்று நோய்கள் நெறிகள் 5 போன்ற அறிகுறிகளும் தோன்றும். இவ் எயிட்ஸ் நோய் ஒருவருக்கு ஆரம்பமாகி ஐந்தாம் கட்ட அறிகுறிகளாக சாதாரண கப் புற்றுநோய் கப்போஸிஸ் சாப்க்கோமா 5 தோன்றினாலும் பின் மெல்லிய கத்தரிப்பூ தாது. இது தோலில் மாத்திரமன்றி வாய் 5. சில வேளைகளில் சுவாசப்பையையும் சக்தி குறைவதால் இக்காலத்தில் பல ம். ஒருவகை நியூமோனியா சயரோகம் ன்ட இருமல் இளைப்பு நெஞ்சுநோ ஆகிய னியா (Pneumocystis Carini Pncumonia) மையினரை ஒருவகையான புத்திசுவாதீனம் பற்றியிருப்பதனை இரத்தப் பரிசோதனை
வதில் பல்வேறு காரணிகள் செல்வாக்குச் நிலவிவரும் உள்நாட்டு யுத்த சூழ்நிலைகள் ம் அகதிமுகாம் வாழ்க்கை முறைகளும் உள்நாட்டுப் போர்ச்சூழல் காரணமாக
ல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 133
ஆண்களும் இளம் குடும்பஸ்தர்களும் த பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் விட்டு பிரிந்த சூழல், வேலைவாய்ப்பின்மை ஏற்பட்ட விரக்தி காரணமாக மனஉளைச்க சில தவறான நடவடிக்கைகளில் ஈடுபட முன் நோய் தொற்ற அதிக வாய்ப்பினை ஏற்படுத்த பிரதான காரணியாக வறுமை இருக்கின்றது போரினால் பல குடும்பங்கள் ஆண்களை இ பெண்கள் தலைமைதாங்க வேண்டிய சூழ்நி உடனடி வேலைவாய்ப்பு அவர்களுக்கு கிடை புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு தமது அத்துடன் நாடுகளிடையே காணப்படும் : பாவனை எயிட்ஸ் நோயைத் தீவிரமாகப் வருகின்றன.
இன்று உலகை ஆட்டிப்படைப்பதே கேள்விக்குறியோடு பார்க்க வைத்துள்ள பல்வேறு வழிமுறைகள் பின்பற்றலாம். பாடசா ஏற்றவகையில் பாடத்திட்டத்தினைத் தயா ஊடாக எயிட்ஸ் விழிப்புணர்வு விளம்பர மக்களிடையே இலகுவில் சென்றடையக்கூட மூலம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தல், டிசம்பர் எயிட்ஸ் தொடர்பான சிறுசெய்திகளை மம் இந் நோய் தொடர்பான விழிப்புணர்வை | தொலைபேசிகள் இன்று பரவலாக சகல அதனூடாகக் குறுந்தகவல்களை மக்களுக் நடைமுறையில் இருப்பது போன்ற 24 மணி கொடுத்தல், சுவரொட்டிகள், குறும்படங்கள் நாட்டின் சகல பகுதிகளிலும் ஏற்படுத்துதல் செயற்பட்டு வரவேண்டும். அதாவது சத்த போதும், ஊசி மருந்து ஏற்றும் போதும் அலை என்பது தொடர்பாக அவதானமாக இருத்த உபகரணங்களைப் பயன்படுத்துதல் போன்ற6 குறைக்க முடியும். இந்நோயின் தாக்கத்தி வயதுப்பிரிவினர் அதிகளவில் உள்ளாகின்ற தொடர்பாகவும் பாதுகாப்பு நடவடிக்கைகள் | பிணைப்புக்களினால் கணவனிடமிருந்தே F அண்மையில் அதிகரித்துள்ளது. "இதுவ இருபாலருக்கும் பொதுவாக இருந்த நிலை சிறப்பு எயிட்ஸ் விழிப்புணர்வுத் தகவல்கள் உள்ளோம்” என உலக சுகாதார நிறுவன
1980 களில் ஓரிருவருக்கே காணப்பட் மக்களிடம் பரவியுள்ளது. இந்நோயின் அதி த உபசகாரா வலயம் உள்ளது. எதிர்வரும். எயிட்ஸ் நோயாளிகள் உருவாவதற்கான 6 Prevention Workig Group என்னும் எய்ட்
கூர்மதி.

மது சொந்த நாடுவிட்டு வெளிநாடுகளுக்குப் ரில் சிலர் வெளிநாடுகளில் தனிமை, குடும்பத்தை ம, முகாம் வாழ்க்கை போன்ற நிலைகளினால் சலுக்கு உள்ளாகின்றனர் இதனால் இவர்கள் னைகின்றனர். இத் தவறான நடத்தை எயிட்ஸ் வகின்றது. மேலும், இந்நோயைத் தூண்டக்கூடிய 5. பல நாடுகளில் ஏற்பட்டுவரும் உள்நாட்டுப் இழந்துள்ளனர். இதனால் பல குடும்பங்களைப் ைெல ஏற்பட்டுள்ளது. இதற்கு ஏற்ற வகையில் டப்பதில்லை. இதனால் அவர்கள் சட்டத்திற்குப் 1 குடும்பத்தினரைப் பாதுகாத்து வருகின்றனர். அதிகரித்த கசிப்பு போன்ற குடிபானங்களின்
பரப்புவதில் பிரதான இடத்தினை வகித்து
படு விஞ்ஞான மருத்துவ ஆராய்ச்சிகளைக் எயிட்ஸ் நோயைப் பரவாமல் தடுப்பதற்கு லை மாணவர்களிடையே அவர்களின் வயதிற்கு சரித்து நடைமுறைப்படுத்துதல், ஊடகங்கள் ங்கள், செய்திகளைப் பிரசுரித்தல், கிராம ஒய வகையான தெருநாடகங்கள், கூத்துக்கள் 1 1ம் திகதி மட்டுமன்றி ஏனைய காலங்களிலும் க்களுக்குச் சென்றடையச் செய்தல் என்பன மக்கள் மத்தியில் ஏற்படுத்தும். கையடக்கத் - மக்களிடமும் காணப்படுகின்றது. எனவே க்கு வழங்கி வருதல் குறிப்பாக இந்தியாவில் நேரத் தொலைபேசி வசதிகளை ஏற்படுத்திக் டொக எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வினை போன்றவற்றுடன் மக்களும் விழிப்புணர்வுடன் ரெசிகிச்சை, குருதிமாற்ற நடவடிக்கைகளின் வ பரிசோதிக்கப்பட்டதா? தொற்றுநீக்கப்பட்டதா? ல் வேண்டும். இவ்வாறு கிருமி அழிக்கப்பட்ட வற்றின் மூலம் இந்நோய் பரவும் தீவிரத்தினைக் ற்கு இளவயதுப் பிரிவினர் குறிப்பாக 15-24 னர். இவர்களுக்கு இந்நோயின் தீவிரத்தன்மை ற்றியும் விளக்கமளித்தல் வேண்டும். திருமணப் HIV கிருமிகள் மனைவிக்குப் பரவும் நிலை ரை எயிட்ஸ் விழிப்புணர்வு ஆண் பெண் யை மாற்றி பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் ளை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம்
ம் குறிப்பிடுகின்றது.
- எயிட்ஸ் இன்று 20 - 25 மில்லியனளவான தாக்கத்திற்குட்பட்ட பிரதேசமாக ஆபிரிக்காவின்
எட்டு ஆண்டுகளில் 45 மில்லியன் புதிய வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகின்றது. HIV
ஸ் தடுக்கும் குழு வெளியிட்டுள்ள Lancet
113

Page 134
என்னும் சஞ்சிகை 2020 இல் 68 மில்லி எனக்குறிப்பிட்டுள்ளது இந்தியா தாய்லாந்து அதிகம். இலங்கையில் 1987ம் ஆண்டில் முதல் இது 1997ம் ஆண்டுவரையான 10 ஆண்டு இன்று ஏறத்தாழ 8000 ற்கு மேற்பட்டோ கண்டறியப்பட்டுள்ளது. எனவே, மக்கள் வி இந்நோயின் பரவல் அதிகரிக்கும் என எதிர்
எயிட்ஸ் என்னும் ஆட்கொல்லி நோய் ச செயற்பாடுகளும் காரணமாக அமைகின்றது. விபச்சாரத்தில் ஈடுபடுவோர் அதிகரித்து வ பெண்கள், சிறுவர்கள் வேலைவாய்ப்புப் பெற் இவர்களில் 99% வீத்தினர் விலைமாதர்களா வருகைதரும் உல்லாசப் பயணிகள் சிலரா மீதான துஷ்பிரயோகமும் இந்நோய் பரவுவதற் வருடம் ஒன்றிற்கு ஆட்கொல்லி நோயாக பாதிக்கப்படுவதோடு 30 லட்சம் பேர் இறக்க
தீவிரமாகப் பரவிவருகின்ற எயிட்ஸ் 6 பல நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றன. | பல அரசசார்பற்ற நிறுவனங்களும் செயற்பட் மருந்து வகைகளைக் கண்டறிவதற்கான ஆரா கனடா எச்.ஐ.வி டிப்ஸ்டிக் என்னும் மருத் இதன் மூலம் 20 நிமிடங்களில் எயிட்ஸ் தொட உலகில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் | தடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை உலா செயற்பட்டு வருகின்றன. எயிட்ஸ் நோயால் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். அவர்க எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் ப அரவணைத்து ஆதரவு வழங்க வேண்டியது ! அத்துடன் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவ ரீதியாகவோ ஒன்றிணைந்து செயற்பட முடியும் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாமக்கல் ! Women Net Work என்ற அமைப்பினை ஆரம்! பாதிக்கப்பட்ட பெண்களுக்கான சுய உத படிக்க நிதியுதவி, எயிட்ஸ் நோய்க்கு எ ஈடுபட்டுவருகின்றனர். இது ஓர் முன்மாதிரியான ஊடாக அவர்களும் சமூகத்தின் ஓர் அங்கத் அவர்களின் தாழ்வுச் சிக்கலையும் உளத்தாக்க மேற்கொள்ளப்பட வேண்டும்.
எனவே, நவீன உலகில் மனித ஆரோக் எயிட்ஸ் உலகில் சகல நாடுகளிலும் வியாபி நாடுகளில் இதன் தாக்கம் அதிகம். இந்த வேலைத்திட்டங்கள் ஏற்றுமதி ஊக்குவிப்பு வல் பரவும் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வ புரியாகக் காணப்படும் தாய்லாந்தின் தலை

பன் எயிட்ஸ் நோயாளிகள் இறந்துவிடுவர்
போன்ற நாடுகளில் எயிட்ஸின் தாக்கம் [வது எயிட்ஸ் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். களில் 76 பேராக இருந்துள்ளது. ஆனால் i HIV தொற்றிற்கு உள்ளாகியிருப்பது ழிப்படையாது விடில் வரும் காலங்களில் பார்க்கப்படுகின்றது.
தந்திரமாக உலவுவதற்கு உலக நாடுகளின் இந்தியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் நகின்றனர். உலகில் ஏறத்தாழ 20 கோடி றுத்தருவதாகக் கூறிக் கடத்தப்படுகின்றனர். க்கப்படுகின்றனர். அத்துடன் இந்நாடுகளிற்கு ல் மேற்கொள்ளப்படும் சிறுவர், பெண்கள் குரிய காரணிகளில் ஒன்றாக அமைகின்றது. எ எயிட்ஸினால் ஏறத்தாழ 10000 பேர் கின்றனர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
என்னும் ஆட்கொல்லி நோயைத்தடுப்பதற்கு இந்தியாவில் A.P.A.C என்னும் நிறுவனமும் ட்டு வருகின்றன. அத்துடன் இந்நோய்க்கான ய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதுவ உபகரணத்தைக் கண்டறிந்துள்ளது. Tபான பரிசோதனையைச் செய்ய முடிகின்றது. இவ் ஆட்கொல்லி நோயாகிய எயிட்ஸைத் க சுகாதார அமைப்பு என்பன தீவிரமாகச் ல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூகரீதியான ளைச் சமூகம் வெறுத்து ஒதுக்கக்கூடாது. ரிதாபத்திற்குரியவர்கள். அவர்களை அன்புடன் உலக நாடுகளின் தலையாய கடமையாகும். ர்கள் நாடுகள் ரீதியாகவோ அல்லது பிரதேச ம். உதாரணமாக இந்தியாவில் தமிழ்நாட்டில் நகரத்துப் பெண்கள் சிலர் சேர்ந்து Possitive பித்து செயற்பட்டு வருகின்றார்கள். அதாவது விக் குழுக்கள் இவர்களின் குழந்தைகள் திரான விழிப்புணர்வுப் பிரச்சாரங்களிலும் செயற்பாடாகும் இவை போன்ற செயற்பாடுகள் 5தவர்கள் என்னும் உணர்வினை ஏற்படுத்தி த்தினையும் குறைப்பதற்கான நடவடிக்கைகள்
கியத்தைப் பாதிக்கும் ஆட்கொல்லி நோயான த்துள்ளது. ஒப்பீட்டு ரீதியில் ஆசிய ஆபிரிக்க ாடுகளில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி -யங்கள் போன்றவற்றின் காரணமாக இந்நோய் ருகின்றது. உலக தனவந்தர்களின் சொர்க்க நகர் பாங்கொக்கில் விபச்சாரம் சாதாரண
- கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 135
தொழில் போல் விருத்தியடைந்துள்ளது. வங்கியாக இந்தியா இருக்கும் என பல அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இருந்த துரதிஷ்டமாகும். இந்நோய்க்கு மருந்து இ ஆட்கொல்லி நோய் என அழைக்கப்படுகின் ஒதுக்கும் பண்பு காணப்படுகின்றது. இதில் ஏதும் அறியாத பச்சிளம் பாலகர்கள் இர் சமூகம் புறக்கணிப்பதுமாகும். இவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்ற உ வேல்ஸ் இளவரசி டயானா எயிட்ஸ் நோய் ஆதரவு எமக்கு ஓர் முன்மாதிரியாக அன சந்திரனில் கால்பதித்து செவ்வாயில் ந ை வைரசினைக் கட்டுப்படுத்த முடியாது த உலகை ஆட்டிப்படைத்த பெரியம்மை, த மருந்து கண்டறிந்து அதனை இல்ல இல்லாதொழிப்பதற்குரிய மருந்தினை எமது என எதிர்பார்க்கலாம். அதுவரை ஆட்கொல் பரவலைக் கட்டுப்படுத்துவது ஒவ்வொருவரி ஒழுக்கமுடன் ஒருவனுக்கு ஒருத்தி என்ற வளர்ச்சிக்கு உதவுவதற்கு அனைவரது | நடைமுறைகளைப் பின்பற்றினால் ஆண்டி தினமாக கொண்டாட எமது எதிர்கால நம்பலாம். 2010 ற்குள்
எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட அல் செய்வோம் என்ற உலகத் தலைவர்கள் வெகுதூரத்திலில்லை. எமது எதிர்கால சந்த வாழ்வதற்கு அடித்தளமிட வேண்டியது இள “மலரட்டும் எயிட்ஸ் இல்லாத புதிய சமுத்
- - - - ITYGR S D
”Prevent is B
கூர்மதி.

வரும் நூற்றாண்டுகளில் எயிட்ஸ் நோயின் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 1987 வரை 5 எயிட்ஸ் இன்று எமது கதவைத் தட்டுவது இன்றுவரை கண்டுபிடிக்கப்படாமையால் இது நது. இந்நோய் பாதித்தவரை சமூகம் வெறுத்து ல் வேதனைக்குரிய விடயம் என்னவென்றால் 5நோய்க்கு உட்பட்டு வருவதும் அவர்களைச் 1 புறக்கணிக்கப்படாது அன்பு செலுத்திப் ணர்வு சகலருக்கும் ஏற்பட வேண்டும். மறைந்த பால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு வழங்கிய மைய வேண்டும். இன்று விஞ்ஞான உலகம் டபயில முனைகின்ற வேளையிலே இச்சிறிய வித்து வருகின்றது. கடந்த நூற்றாண்டுகளில் தட்டம்மை, மலேரியா போன்ற நோய்களுக்கு -ாதொழித்தது போல் எயிட்ஸ் நோயை து விஞ்ஞான மருத்துவ உலகம் கண்டறியும் ல்லி நோயாக உலாவிவரும் எயிட்ஸ் நோயின் னதும் கடமையாகும். மனதைக் கட்டுப்படுத்தி தத்துவத்தைப் பின்பற்றி வாழ்ந்து சமுதாய பங்களிப்பும் அவசியமானதாகும். இவ்வாறான ன் டிசம்பர் 1ம் திகதி எயிட்ஸ் விழிப்பணர்வு சந்ததியினருக்கு சந்தர்ப்பம் கிடைக்காதென
னைவருக்கும் மருத்துவ உதவிகள் கிடைக்கச் ளின் குறிக்கோள் வெற்றியடையும் காலம் தியினர் எயிட்ஸ் இல்லாத புதிய சமுதாயத்தில் ம் சமுதாயத்தினரின் தலையாய கடமையாகும். தாயம்”.
2tter than Cure”
(115)

Page 136
மனம் எனும்
பருத்தியூர் பால மனம்” ஒருமாயக் கருவி போல் செயல் இல்லை. மனம், மனிதனை முன்னிலையில் உ யந்திரம் தான். இது எண்ணங்களின் தொகுப்பு
மனதை, ஆட்கொள்ளத் தெரியாமல், பு நிலையாகப் போகுமன்றோ. திண்ணிய மனது இதில் எவ்வித சந்தேகமும் எமக்கு வேண்ட
மனசின் வேகம் சொல்லி அடங்குமோ? | திரட்டி, எமது இயக்கத்தை ஆரம்பித்தால், எம எடுப்பதைக் கண்டு கொள்வோம். ஊடல் பலம் வாடாமல் பார்த்துக் கொள்வது எமது கடல் பேசுவதால் எமது ஆன்ம சக்தி வலு குன்றுப் வல்லமையினை நாம் பெற்றேயாக வேண்டு இணைதல் வேண்டும்.
மன வலிமையுள்ளவர்களுக்கு இது நல்லவைகளைக் களைந்து, பொல்லாதவைகை செயலூக்கத்தை எவ்விதம் பெறமுடியும் ஐய பரிணாமம் விசாலமானதுதான். எனினும் ஒரு விட்டு எல்லாமே எனக்கு வெற்றியாக அமை பலன் வந்துவிடப் போகின்றது. மேலும் என நோக்குவோம்.
ஓட்டப்பந்தயம் ஒன்றில் வீரர்கள் ஓடுவதர் ஆவலாகவும் எதற்கும் தயார் என்கின்ற ஆரம்பமாகின்றது. இந்தக் கணத்தில் ஒரு திற தன் மனதை ஏதோ ஒரு திசையில் செல்ல தடைப்படுகின்றது. முடிவு என்ன? அதனை 2
மனித மூளை சிலவேளை தீடீர் என செயல்கள் களவாடப்படுகின்றன. இந்த நி இந்நிலையை நாம் தவிர்த்துக்கொள்ள முடி
சிந்தனையில் தெளிவினை உண்டாக்கின் "நான் எவ்விதத்திலும் சலனப்படமாட்டேன்” என் கடுகளவு எம்புலன்களில் ஏற்படும் வீணான சல
மேலும், பய உணர்வுகள், பதட்டம்
எதனையும் எம்மால் செய்ய முடியுமா
தீர எதனையும் ஆராயாது செயற்படல்
116)

மாயசக்தி
வைரவநாதன் படுகின்றது என்பதில் உண்மையில்லாமல் டயர்த்தும், வலுமிக்க, புலனுக்குப் புதிரான அல்லது குவியல்கள் என்றும் சொல்லலாம்.
லன்வழி புகுந்தால் வாழ்வு என்பதே தாழ்வு இருந்தால் எண்ணிய கருமம் நிறைவேறும் வே வேண்டாம்.
மனதை ஓரிடத்தில் நிறுத்தி எம் சக்தியைத் து அசுர பலம் அப்போது தான் விஸ்வரூபம் குள்றினாலும் மனவளம் குன்றும் தேகத்தை மை. தொடர்ந்து தேவையின்றி, கண்டபடி 9. வேண்டத்தகாத, எண்ணங்களை நீக்கும் ம். சாதனை படைக்க "மனம்"' எம்முடன்
கைவந்த கலையாக இருக்கின்றது. ள இதயத்துள் செலுத்தினால், உருப்படியான பா! மனித மூளையின் செயல், கிரகித்தல், குடம் பாலுக்கு ஓர் துளி விசத்தை ஏற்றி யவில்லையே எனப் பிரலாபித்தால் என்ன ன்ணங்களில் ஏற்படும் திரிபு பற்றிச் சற்று
Bகு ஆயத்தமாகின்றனர். எல்லோரும் மிகுந்த நிலையில் உள்ளனர். ஓட்டப் போட்டி 3மையான வீரர், ஏதோ ஒரு காரணத்தினால் விட, அவன் புறப்படும் நேரம், ஓட்டவேகம் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை.
எதையோ நினைக்க புலன்களின் வேகம் லை மிகவும் பரிதாபகரமானது. ஆனால்
யும்.
பால் புலன்களும் விழிப்படைந்து வலுவையும் று, எமக்கு நாமே உறுதிமொழி எடுப்போமாக. னங்கள், சஞ்சலங்களையே ஏற்படுத்திவிடும்.
எனச் சந்தேகப்படல்
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 137
பிறருக்கே, தன்னைவிட அதிக வலி எனச் சொல்லி சொல்லியே மாய்ந்து போ,
தனக்கே அதிக திறமையுண்டு. எனப்பொய்மையான மாய நினைவுக்குள்
தாழ்வு மனப்பான்மை
நல்லனவைகளைப் போற்றாத தன்ன
மேற்சொல்லப்படுகின்ற சில காரண கொள்ளாமலும் அதனை வளர்த்து, ந நல்விடயங்களைச் செய்யுமாறு உங்களுக்
இறைவன் படைப்பில் எல்லோருமே ச பின்னர் ஏதாவது தமது முன்னேற்றத்தில் இ செய்துவிட்டதாகப் பிரலாபிப்பதில் என்ன வலிமையை பெற விழையுங் கள்
அறுக்கவிரும்புவதில்லை உங்கள் முன்னே முதலில் உணருங்கள்.
யாரோ ஒருவர் படித்துவிட்டால் அது 6 பார்த்திருப்பீர்கள். ஏன் முடியாது என்று அ6ெ வெற்றிபெற்றவர்களில் நீங்களும் ஒருவராக
எல்லோருக்கும் படிப்பு, பட்டம், பத கொள்ளமுடியும்.. மிகவும் பின்தங்கிய தலைவர்களாக் கல்விமான்களாகச் செல் இடர்கண்டு முடங்கி நின்று பயணங்களை ந மனவலிமை மிகுந்தவன் வருந்தி அழுவதி
வீணான நகைப்பூட்டும் சமாதானங்க
பொய்மையான கற்பனைகள்
சோம்பல், ஆற்றாமையுணர்வு
மேற்படி காரணங்களை தீவிரமாகக் நெரித்துக் கொள்ளுகிறார்கள். அவன் விதி நம்மால் முடியாது அப்பா! எவ்வளவு இடை கற்பனைகள். சரி நாளைக்குப் பார்ப்போ தமது மூளையினுள், புதைத்துவைத்தால்
யார்யாரோ, எப்படி எப்படியெல்லாம் வா நாம் எமது கடமைகளைத் தொடரல் லே வருத்தி மனச் சோர்வடைதல் மிகவும் தவ
கடவுள் அடுத்தவனுக்கு ஒரு நீதி உங் சோம்பல் படுபவனைக் கடவுளுக்குப் பிடி அணைத்துக் கொள்ளும். கடவுள் நம்பிக்
ககூர்மதி.

மையுண்டு. தனக்கு அந்த வலிமை இல்லை தல் அதாவது அலுத்துக் கொள்ளுதல்.
பிறருக்கு எந்தவித திறமையும் இல்லை ஆட்படுதல்.
மகள்
எங்கள் எங்கள் மனதின் பலத்தை புரிந்து நிலை நிறுத்தாமலும் செய்துவிடுகின்றது.
க்கு நீங்களே கட்டளையிடுவீர்களாக.!
மன் என்று, வாயளவில் நாம் கூறிக் கொண்டு, டையூறு ஏற்பட்டால் கடவுள் எமக்கு அநியாயம் உண்மையுண்டு? உங்கள் எண்ணங்களால், அறிவை வழங் கிய இறைவன் அதை எற்றத்திற்கு நீங்களே உரித்தாளர்கள். அதை
என்னால் முடியாது என்று கூறுகின்றவர்களைப் வர்கள் தங்களைப் பார்த்துக் கேட்க வேண்டும். 5 ஏன் இருக்கக்கூடாது.
பி பொதுவானதே. எவரும் எதனையும் தேடிக் நிலையில் உள்ளவர்கள் காலப்போக்கில் மவந்தர்களாக மாறுவதில்லையா? எதிர்படும் நிறுத்திடக் கூடாது "உறுதி'' உயர வைக்கும்.
ல்லை.
ள்
கடைப்பிடிக்கும் பிரகிருதிகள் தம்மையே அப்படி, நன்றாக வளர்ந்து விட்டான். ஐயோ யூறு தொல்லைகள் வரும் தெரியுமா என்கின்ற ம் என்கின்ற சோம்பல் புத்தி அவைகளை சித்தம் எப்படி சுத்தமாகும் ஐயா?
பழுகின்றார்கள் என எண்ணி மனம் புளுங்காமல் வண்டும். அதைவிடுத்து எங்களையே நாம்
மறுதலான போக்கு அல்லவா?
களுக்கு ஒரு நீதி எனச் சட்டம் வகுத்ததில்லை. ப்பதில்லை. முயற்சியுள்ளவனைத் தெய்வம் கை மன உறுதியை உண்டுபண்ணுகின்றது.
117

Page 138
நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு படி மனம் எடுத்து வைக்கத் துணை நிற்கும்.
உங்களை முன் சென்று உயர்த்த இய எனவே பயணத்திற்காகப் புறப்படும் நீங்க பிரச்சனைகள் பற்றியோ தெரிந்து, தெரிந்து கொள்வீர்களாக!
எதையும் தெரியாது செயலில் புகுவது மு அல்ல. மன உளைச்சலுக்கான வழி என்பத
எந்தவித ஆரம்ப முயற்சி இல்லாமல் கப் தங்கள் மனதினை முடமாக்கும் அறிவிலி இவர்களுக்குச் செய்யும் உதவிகள் கூட அர்த் காப்பாற்ற முடியாதவர்கள். அடுத்தவன் உழை உழைப்பின் பெருமையை உணர்ந்தவர்களுக்கே சோரவைத்து தன் கடமையை நழுவவிட்டவன், கடனைத்திருப்பிக் கொடுக்கமாட்டான் எனத் முன்வரப்போகின்றான்? மலரணைய வாழ்விற் மனதினைத் திடமாகக் கொண்டு தெளிவுடன், எங்கள் செயல்கள் அனைத்துமே காரியசித்தியா சரியான கட்டளைகள் எங்களை வளப்படுத் வாழ்ந்து பார்ப்போம் எனக் கருதல் வேண்ட எம்மை மட்டுமன்றி அனைத்து உயிர்களுக்குமே பிறந்ததன் நற்பயனைப் பெரும்பேற்றினைப் 6
Gள்?
கல்வியானது வளவாழ்வையும் மகத்து கொணருவதில்லை. ஒப்பற்ற ஆன்மி கற்றறிந்த ஒவ்வொரு நபரும் இன வாழ்க்கை துன்பம் நிறைந்ததாக இ எடுத்துக்காட்டாக இருக்கிறார்.
ܠܐ
ரஷ்ய 8
23
(118)

களுக்கும் மேலாகப் பல படிகளை உங்கள்
பற்கையான வலிமை தயாராகவேயுள்ளது. ள் அடுத்துவரும் சவால்கள் பற்றியோ, Dகம் கொடுக்கும் துணிச்சலை ஏற்படுத்திக்
பட்டாள் தனமானது. இதன் பெயர் துணிச்சல் னைத் தெரிந்து கொள்க!
டவுள் பார்த்துக் கொள்வான் எனச் சொல்லி கள் எளிதில் திருந்திவிட இயலுமோ? தமற்றது. ஏன் எனில் கொடுத்த பொருளைக் ப்பின் பெருமையை எப்படி உணர்வார்கள்? | உதவுதல் என்பது உசிதமானது. மனதைச் ஈற்றில் ஒரு சமூகச் சுமையாகிவிடுகின்றான். த்தெரிந்தால் எவன்தான் கடன் கொடுக்க த உரம் கொண்ட நெஞ்சுறுதி வேண்டும். சிந்தனையைச் செதுக்குவோம். இதனால் "கும். எங்களுக்கு நாமே இடும் வலிமையான துவனவாக அமைந்துவிடுகின்றன. சும்மா பாம் ஆக்கபூர்வமாகச் சிந்திப்போம். அது ), விழிப்பூட்டுவதாக இருந்தால், மானுடராகப் பெற்றவராக ஆகிவிடுவோம் அல்லவா?
GRG
வத்தையும் மட்டுமே மக்களுக்குக் க இன்பத்தையும்கூட தருகிறது மத உணர்கிறார். கல்வியில்லாத இருக்கும் என்பதற்கு எப்போதும்
திக் கொலாய் செர்னிஷேவ்ஸ்கி சிந்தனையாளர், அரசியல்வாதி
RS
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 139
இலங்
- ன் பற்றிய
மனிதனின் பேச்சொலிக்கு அட்சரங்கள் ப எழுத்து முறைக்கு வந்துவிட்டன. ஓலை கற்குகைகளில் என்ற பல்வேறு பொருட்கள் கருத்திறுக்கமாக எழுத வேண்டிய கட்டா எழுத ஆரம்பிக்கும் போது கட்டிறுக்கமான
இலங்கையின் தமிழ் இலக்கியம் ஈழத்த இவரது ஏழு செய்யுள்கள் சங்க இலக்கி ஆனாலும் கிறீஸ்துவுக்கு முன், பின்னால் ஆதரிக்கும் அரசு நிலைபெற்றிருக்காத கா இந்தியா சென்று வாழ்ந்திருக்கலாம் என்ற விடப்பட்டிருக்கலாம் என்றும் நம்புவோரும்
கி.பி 1310 ஆம் ஆண்டளவில் 28 பராக்கிரமபாகு) சரசோதிமலை என்கின (தேனுவரைப்பெருமாள்) அரங்கேற்றினார். இலங்கையின் முதல் நூல் என விதந்துன் தான்.
1215இல் கலிங்க மாகனின் படையெடு கூறப்பட்ட போதும் அவை எதுவும் கை காரணிகளால் அழிவுபட்டது இன்னொரு க
கி.பி 1284இல் யாழ்ப்பாணத்தில் முதல் தலைவனொருவன் ஆரியச்சக்கரவர்த்தி என கி.பி 1621 வரை நீடித்த இவ்வரசு கி.பி. தளரத்தொடங்கி முடிவுற்றது.
அக்காலத்தில் சோதிடம், வைத்தியம் கவிதை வடிவிலேயே எழுந்தன. அழகியல் நிறைவுதான் அதிகம் காணப்பட்டன. யாழ்ப்பு பரராசசேகரன் உலா, வியாக்கிரபாத புரா6 பாடல்கள், கைலாயமாலை, இராச முறை யாவும் கவிதை வடிவிலேயே காணப்பட்ட
எனவே இவர்களாலும் கவிதைகள் ஒரு மரபு ஒன்று பேணப்பட்டு வந்தது. அதற்கு பருமனும் ஒரு காரணம் என்பர்.
கூர்மதி.

கையில் கவிதை ஒரு நோக்கு
A.S.M. Felix St.Antony s College, Kandy
பன்படுத்தப்பட்ட காலம் தொட்டு கவிதைகள் லகளில், புற்களில், களிமண்தட்டுக்களில், ல் எழுத ஆரம்பித்த போது மிகச்சுருக்கமாக யம் இருந்தது. அந்த வகையில் எதையும்
சொற்கள் அழகியலாகியது.
ப் பூதந்தேவனார் தொடக்கம் ஆரம்பமாகின்றது. யத்தின் தொகுப்புகளில் இடம்பெறுகின்றது. [ காலகட்டங்களில் இலங்கையில் தமிழை ரணங்களால் ஈழத்து வேறும் பல புலவர்கள் பும் அவர்களின் வரலாறும் கணிக்கப்படாமல்
உள்ளனர்.
ஆம் பண்டித பராக்கிரம காலத்தில் (4ஆம் எற சோதிட நூலை போசராச பண்டிதர்
விருத்தப்பாவால் அமைந்த இந்நூல்தான் ரெக்கப்பட்டுள்ளது. இதுவும் கவிதை வடிவம்
இப்பின் பின்னர் தமிழ் நூல்கள் தோன்றியதாக க்கெட்டவில்லை. ஓலைச்சுவடிகள் பல்வேறு ாரணமாகக் கொள்ளலாம்.
நில் தனியரசை ஏற்படுத்திய பாண்டிய சேனைத் தனக்கு பெயர் பூண்டு ஆளத்தொடங்கினான். 1619இல் போர்த்துக்கேயரின் கெடுபிடிகளால்
-, கட்டிடக்கலை, தொடர்பான தமிழ் நூல்கள் குறைபாடுகள் காணப்பட்டபோதும் அறிவியல் பாணத்தை மையமாகக் கொண்டு இரகுவம்சம், னம் முதலிய இலக்கிய நூல்களும், வையா 3 முதலான வரலாற்று நூல்கள் போன்றன
குறித்த கட்டுப்பாடுகளுக்கமைய எழுதவேண்டிய 5 எழுதப் பயன்படுத்திய ஓலைச்சுவடிகளின்
(119)

Page 140
ஐரோப்பியர் வருகையின் பின்னர் இரு நிலவுடைமைச் சமுதாய உடைவும் மற்றும் நிலவுடமையாளர்களால் ஒதுக்கப்பட்ட மக்க தேட முற்பட்டது. மற்றுமொன்று அச்சியந்திர உரைநடை முக்கியத்துவம் அடைந்து பாமர |
இதனால் பொதுமக்கள் சார்ந்த பள் கதிரைமலைப்பள்ளு, ஞானப்பள்ளு, பறாளைவு சிந்து, விருத்தம், தரு என்ற மரபுக்கவிதைக
போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் காலத்தில் தமிழைக்கற்று அதன் இடர்பாடுகளைக் க குறிப்பாக உரைநடை இலக்கிய வடிவங்களி பரமார்த்த குருவும் சீடரும் என்ற கதையை 6 வெற்றி கண்டார். சதுரகராதியைத் தொகுத் கருத்து விளக்கமளிக்க முற்பட்டார். ஆனால் எழுத்துக்களில் மரபுக்கவிதை வடிவங்களைப் பின்பற்றி வந்தனர். விருத்தம், அகவல், கல் யாப்பு வடிவங்களை தேவைக்கேற்ப பயன்படு இஸ்லாம் என்ற மதங்களை தாண்டி அ6 போக்கினையே கடைப்பிடித்தனர்.
இலக்கியம் மக்களை நோக்கி நகர முக்கியத்துவம் பெற்றது. குறிப்பாக ஆறுமுக தமிழருக்கு வழிகாட்டியது. ஆனாலும் அவரது உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர் சுவாமி 6 கணபதிப்பிள்ளை வரையான அனைத்து இ
மரபுப்பாணியையே பின்பற்றி வந்திருக்கிறார்கள்
இக்காலத்தே வசனநடையை கவிதைகள் பாரதியாவார். இவரே மரபுக் கவிதைகளின் புதிய முறையிலான கவிதைகளைப் படைத்து தந்தையாவார்.
இலங்கையில் பாரதி வழிவந்த நவீன . இலங்கையில் அவ்வாறான போக்கினை அண்ப போன்ற சிலர் இலங்கையில் சமூக சீர்தி எழுதியுள்ளனர்.
என்றாலும் நாற்பதுகளில் எழுதிவந்த முக்கிய இடம் பிடிக்கிறார். அவரைத் தொடர் நுஃமான், சில்லையூர் செல்வராசா, கவிமண வரிசைப்படுத்த முடியும்.
செப்படுத்தலையூர் செல்ல அவரைத் கேந்த
நவீன கவிதைகளிலிருந்து தோற்றம் வசனத்தன்மை அதிகம் கொண்டவை. மரபுப் கவிதைகள் என விளக்கம் கூறப்படுகின்றது.
( 120

முக்கிய விடயங்கள் இடம்பெற்றன. ஒன்று சமய ஆட்சேர்ப்புக்கு அடிமட்டத்தினர் என ள் கூட்டத்தினர் பலிக்கடாவாகி விமோசனம் வருகையும் அதனால் இலக்கிய வடிவத்தில் மக்களை நோக்கி நகர்ந்ததும் என்பனவாகும்.
ளு இலக்கியங்கள் தோன்றிப் பெருகின. நாயகர்பள்ளு என்பன அவற்றுள் சிலவாகும். ளாக அவை காணப்பட்டன.
- மக்களை வயப்படுத்தவென பாதிரிமார்கள் ளைவதில் பெருமுயற்சி மேற்கொண்டனர். ல் அதிக நாட்டம் காட்டினர். உதாரணமாக வீரமாமுனிவர் வசனவடிவில் எழுத முற்பட்டு து திரிசொல் வடசொல் என்பவற்றிற்கான லும் அக்காலத்து தமிழ்ப்புலவர்கள் தமது 1 பின்பற்றுவதையே பெருமையாக எண்ணிப் ப்ெபா, தாழிசை, சிந்து, கண்ணி முதலான த்தி வந்தனர். இதில் கத்தோலிக்க, இந்து, னைத்து கவிஞர்களும் ஒரே மாதிரியான
ஆரம்பிக்கையில் உரைநடை வளர்ச்சி - நாவலரின் புதிய எழுத்து முறை உலகத் 1 கவிதைகள் மரபுப்பணியாகவே இருந்தன. பிபுலானந்தர் தொடக்கம் தமிழ்ப்பேராசிரியர் டைக்கால கவித்துவப்பெருமக்களும் அந்த கள்.
எக்கி வெற்றி கண்டவர் மகாகவி சுப்பிரமணிய
வரையறைகளை மீறி உடைத்தெறிந்து உலகுக்கு வெளியிட்ட நவீன கவிதையின்
கவிதை கவரத்தொடங்கிய காலகட்டத்தில் பித்தவர்களுள் பாவலர் துரையப்பா பிள்ளை நத்த நோக்குடன் எளிய கவிதைகளை
கவிஞர்களுள் மஹாகவி உருத்திரமூர்த்தி ந்து முருகையன், நீலாவணன், பேராசிரியர் 1 எம்.சுபைர், அ.பாலையா, என பலரை
பெற்ற புதுக்கவிதைகள் ஏறக்குறைய பாணியிலிருந்து முற்றாக விடுதலைபெற்ற
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 141
புதுக்கவிதைகளின் வளர்ச்சி இந்த யாழ்ப்பாணத்தில் மறுமலர்ச்சிக்குழு ஆர மறுமலர்ச்சிக்குழு சார்ந்த வரதர் எழுதிய இலங்கையின் முதற்புதுக்கவிதை என்பர்.
இலக்கியத்தின் முதல் நிலையிலுள் மைத்ரேயி, சங்கரி, மசூறா ஏ.மஜீட், சுல்பி தமிழ்க்கவிதைக்கு வளம் சேர்த்துள்ளனர்.
அத்தோடு தங்கத்தாத்தா, அம்பி, . கவிதைகளில் சிறுவர் பாடலுக்கு முன்னுரி ஆவார்கள். இவர்களுள் நவாலியூர் சோமசு
இதே போல பிறமொழிக் கவிதைகளில் குறிப்பாக சுவாமி விபுலாநந்தர், அப்துல்கா சண்முகம் சிவலிங்கம் போன்ற பலரைக் குறிப்
அவர்களின் வாழ்வை மையமாகக் கொண்டு ஓவியன், ஏ.வி.பி.கோமஸ், பாலையா, உஸ் நவீன, புதுக்கவிதைகளை தமக்கு வா வந்துள்ளார்கள்.
இலங்கைத் தமிழ்க்கவிதைகளுக்கென தரமான கவிஞர்கள் சமூக நோக்கும் | படைத்துள்ளனர். தற் காலத்தில் ப ை யாப்புக்களைத்தழுவிய கவிதைகளும், வே வடிவக் கவிதைகள்) என்று கவிதைகள் மண்ணின் வரலாறு, சமூகக்குறைபாடுகள், ே
அவலங்கள் பற்றி கவிதாரசனை குறையா
எனினும் புதுக்கவிதை படைப்பதாக உணர்வுகளில் ஒட்டாத எவற்றையோ எழு தமது வசனங்களுக்கு தமக்குத் தெரிந்த வ இதுதான்! என மதிமயங்கி மகிழும் ஒரு குறைவாகக் காணப்படுகின்றது என்பது டெ
உண்மையில் தமிழ் வசனம் பேச முற் எப்படி இலக்கணத்தோடு பேசுகிறார்களோ நவீன கவிதைகளை நன்கு அறிந்தவர். தம் கவிதைகளாக காணப்படுகின்றன எனக் சு காலகட்டத்தில் தமிழ் நாட்டுடன் ஒப்பிடும் கவிதை, புதுக்கவிதை இலங்கையில் உயிரே இலங்கையின் கவிதை வளர்ச்சி இன்னும்
கூர்மதி

யாவில் பிச்சமூர்த்தியின் வழிகாட்டலில் ம்பிக்கப்பட்ட காலத்தில் தொடங்குகிறது. 1 'ஓர் இரவினிலே' எனும் புதுக்கவிதை
- கவிதை வளர்ச்சிக்கு ஊர்வசி, ஒளவை, கா போன்ற பல்வேறு பெண் கவிஞர்களும்
யாழ்ப்பாணன், வேந்தனார் போன்ற பலர் ம கொடுத்துப் பாடியுள்ள பெருங்கவிஞர்கள் ந்தரப் புலவர் விதந்துரைக்கப்படக்கூடியவர்.
1 மொழிபெயர்ப்பும் நடைபெற்று வந்துள்ளன. தர் லெவ்வை, கே.கணேஸ், எம்.ஏ.நுஃமான், பிடலாம். மலையகத்தை பொறுத்த வரைக்கும் 5 குறிஞ்சி தென்னவன், சு.முரளீதரன். தமிழ் மான்மரிக்கார் போன்ற பல்வேறு கவிஞர்கள் ய்ப்பான ஊடகங்கள் வாயிலாக எழுதி
| சில குறிப்பிடத்தக்க அம்சங்கள் உள்ளன. கலைத்துவமும் உள்ள கவிதைகளைப் ழய யாப்புக் கமையும் கவிதைகளும், பறும் புதுவடிவக் கவிதைகளும் (ஹைக்கூ படைக்கப்பட்டு வருகின்றன. இவை எமது மம்பாடுகள், விடுதலை வேட்கைகள், மானிட மல் படைக்கப்பட்டு வருகின்றன.
எண்ணி எம் சமூகத்தவரின் உள்ளங்களில், மதிவிட்டு, புதிர் போன்று முறித்து எழுதிய விடையினை தலைப்பாக இட்டு புதுக்கவிதை
சாரார் இந்தியாவை விட இலங்கையில் பருமைப்படக்கூடியதே.
படுகின்ற சிறுவர்கள் இலக்கணம் கற்காமலே
அப்படியே மரபுக் கவிதைகள் பாரதியின் மை அறியாமலே எழுதும் கவிதைகளே புதுக் ஒறுவோரும் உள்ளனர். எனினும் இன்றைய
போது பாரதி, பாரதிதாசனின் பின் நவீன ராட்டத்துடன் விளங்குகின்றன. அவ்வகையில்
எதிர்பார்ப்புடன் நோக்கப்படுகின்றது.
(121)

Page 142
ஊவாவில் இலச்
பாமுதலோன் !
பூனாகலை நித்த
"தோன்றின் புகழோடு தோன்றுக அஃது இல பொய்யா மொழியை மெய்யாக்க 1938.8.039 தமிழோவியன் அவர்கட்கு பெற்றார் கதிர்கா 'ஆறுமுகம்” என பெயர் சூட்டினர். ஆனால் சேர்ந்தபின் பெரியார், பாரதிதாசன் போன்றோ ஏற்று 'தமிழோவியன்' என்ற புனைபெயரும் கழகத்தின் தலைவர் இளஞ்செழியனுடன் யாழ்ப்பாணம் என தமிழ் பிரதேசங்களில் திராவ அக்காலத்தில் தேன் நாட்டின் 'சொல்லின் செ வன்னியசிங்கம் ஆகியோருடன் தொடர்புகளை மாணவர்கள் பலர் கிழக்கிலும், வடக்கிலும் அவ்வாறு வடக்கில் சாவகச்சேரியில் பது கல்லூரியில் ஹட்டன் பாலசுந்தரம் அவர்கள் மலையகம் வந்தமையும், அதிபர்களாகவு கடமையாற்றி ஓய்வு பெற்றமையும் மலையக
தமிழோவியன் அவர்களின் இலக்கியப் 'சித்தாண்டி சிங்கம்' எஸ்.டி.சிவநாயகம் அவர் தமிழோவியனின் கவிதைகள் பத்திரிகைகளில் எழுத்தாளர்களுக்கும் பதுளை மாவட்ட மை களமமைத்துக்கொடுத்த டி.எஸ்.டி. அவர்கள் பெருமை தமிழோவியனுக்குரியது. "ஏணியாக தனித்திறமை” என வாய்கிழிய பேசக்கூடிய எண்ணிக் கணக்கெடுத்த தமிழோவியன் நின்
எழுத்தாளன் இலக்கிய உலகில் நின் தேவைப்படும். அதற்கு உறுதுணையாக 'வீர சிறுகதைக்கும் 'சுதந்திரன்' தேசிய இதழி என்ற சிறுகதைக்கும் தமிழோவியன் பரிசுக எழுத்தாளர் என்ற சிறப்பினை அறுபதுகளி ஆண்டுகள் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரை அத்தனை பக்கங்களையும் தொட்டுப்பார்த்த பெ சிறுகதைகளுக்கு பரிசில்கள், பல கவியரா நெதர்லாந்திலிருந்து முத்தையா நித்தியானந் தொண்ணூறுகளில் வெளிவந்த போதும்
( 122

கிேயம் வளர்த்த தமிழோவியன்
தியஜோதி
மார் தோன்றலின் தோன்றாமை நன்று” என்ற பூம் திகதி பதுளை தெளிவத்தையில் பிறந்த ம முருகப்பெருமானின் பெருமை உணர்த்த ல் இளைஞரானதும் திராவிட இயக்கத்தில் ரின் சீர்திருத்த, பகுத்தறிவு கொள்கைகளை க்குள் ஐக்கியமானார். இலங்கை திராவிட
இணைந்து மலையகம், கிழக்கிலங்கை, பிட கழகத்தின் கொள்கைகளை பரப்பலானார். =ல்வர்' செ.இராசதுரை 'கோப்பாய் கோமான்' ஏற்படுத்தினார். அதன் விளைவாக மலையக சென்று கல்விகற்கும் நிலை உருவாகியது. பளை ரெங்கன் அவர்களும், யாழ் மத்திய ம் உயர்கல்வியை முடித்து பட்டதாரிகளாக ம், உதவி கல்விப்பணிப்பாளர்களாகவும் கம் மறந்துவிட முடியா நிகழ்வுகளாகும்.
பணி 1957 ஆம் அண்டில் ஆரம்பமானது. கள் தினபதி ஆசிரியராக இருந்த காலத்தில் ) பிரசுரமாகின. கல்முனை பிரதேச முஸ்லிம் லயக எழுத்தாளர்களின் ஆக்கங்களுக்கும் கள் இறுதிவரை நினைவில் கொண்டிருந்த இருந்தவரை எட்டி உதைத்துவிட்டு எல்லாம் வேடதாரிகள் சூழ்ந்த சமூகத்தில் ஏணியை மறு புகழ் பூத்த மரமாகினார்.
மறு நிலைக்க அவனுக்கோர் அடையாளம் கேசரி” தோட்ட மஞ்சரியில் 'வெறி' என்ற ன் சிறுகதைப் போட்டியில் 'வைராக்கியம்' ளை பெற்றமையால் 'பதுளையின் பரிசு' ல் பெற்றுக்கொண்டார். அதனால் ஐம்பது "கள், நாடகங்கள் என இலக்கிய பயணத்தின் பருமை அவருக்கு கிடைத்தது. அறுபதுகளில் பகுகளை தலைமை ஏற்று நடாத்தியமை, தன் பதிப்பித்த தமிழோவியன் கவிதைகள் 2000 ஆம் ஆண்டில் தமிழோவியனுக்கு
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 143
நாடகத்துறைக்கென கலாபூஷணம் விருது சிறுகதைக்கோ கவிதைக்கோ அவ்விருது வழ அப்போது நிலவின. ஆனால் தெளிவத்தை வ தயாரித்து அரங்கேற்றிய விடயங்கள் பதுை ஆதலினால் ஏனைய பிரதேசத்தினர் அவர் அவர்கள் சொந்தமாக எழுதிய முற்போக்கு அச்சில் வெளிவராத காரணத்தால் வாசகர் 4 'இலக்கிய காவலர்கள் யாராவது தமிழோ வெளியிட முன்வந்தால் அக்குறை நிவர்த்தி அது மலையகத்திற்கு திராட்சை புளித்ததா
ஊவா மாகாணத்தில் தமிழ் கல்வி வளர்ப்பு உண்டு. முதலாவது மூன்றாம் கட்டை 'பார், தோட்ட மாணவர் கல்விக்கென உருவாக் நிருவாகங்கள் பட்டிகளாக பாடசாலைகளை ஓர் ஆசிரியர் என்றும் நடாத்தி வருவதால் உண்மை உணரப்பட்டதாலும் பிறப்புச் சான்ற பாடசாலைகளில் சேர்க்க முடியாத நிலை சித்தார்த்த போன்ற சிங்கள பாடசாலைகளு என்ற ஆவலும் ஆர்வமுமாக இருந்தது. 8 ஆரம்பிக்கப்பட்ட 'உடுவர மகிந்தா கல்லூ கட்டணம் செலுத்தி படிக்கவேண்டும் அறு அவ்வாறு கல்வி கற்றனர். அவர்கள் தோட்டத் வாய்ப்புக்களை பெற்றுக்கொண்டனர். கணிதம் மிக சிறப்பாக அக்கல்லூரிகளில் புகட்டப்பு அப்பாடசாலைகளுக்கு பொது மக்களிடம் | வை.தேவராஜ், எஸ்.முத்துக்கருப்பன் எஸ்.ந பாரதி கல்லூரி ஆசிரியர்களாக கடபை முத்துக்கருப்பன். நடனசபாபதி மூவரும் பிரபல இரண்டாவது மாகாண சபையில் தமிழ் கல்வ அதிகாரிகளாக கடமை புரிந்தனர். திரு.தமி காரணமாக ஆசிரியர் தொழிலை விட்டு வி கம்பனி ஒன்றுக்கு சென்றுவிட்டார். கால ஓட் அமைச்சரின் ஊடகச் செயலாளராக கடல் அவரின் தனித்திறமை அவரின் செயல்களி என்றால் மிகை ஆகா.
'இதனை இதனால் இவன் முடிக்கும் ! என்ற பொய்யா மொழிக்கேற்ப கெளரவ 6 அவர்களை ஊடகத்துறை செயலாளராக நிய பூஞ்சோலையை கண்டது. ஊவா இலக்கிய தொடராக பண்டாரவளை, அப்புத்தலை, ப தமிழ் சாகித்திய விழாக்கள் ஒவ்வொரு இ இளையோர் கவியரங்குகள், கவிதை நூல் ( மேடை, அறிஞர்களின் ஆய்வுரை, இசை : போட்டி, கலைஞர் கௌரவம், நாடக பட்ட6 மாணவர் கெளரவிப்பு, ஆசிரியர் கௌரவிப்பு, வி
கூர்மதி

கிடைத்தது. பல ஆண்டுகளுக்கு முன்னரே பங்கப்பட்டிருக்க வேண்டுமென்ற கருத்துக்கள் ள்ளுவர் மன்றத்தினூடாக பல நாடகங்களை ள பிரதேசத்தினர் மட்டும் கண்டுகளித்தவை பிறை அறிந்திருக்கவில்லை. தமிழோவியன் 5 நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. அவை கண்களுக்கு காணக்கிடைக்காமல் போயின. வியன் அவர்களின் நாடகங்களை நூலாக யாகும்' எதற்கும் பெரிய மனது வேண்டும். க பேசப்படுவதால் கிடைக்காமல் போனது.
பதில் முத்திரை பதித்த இரு கல்லூரிகள் தி கல்லூரி' திரு.இராமசாமி என்ற பெரியார் கிய தனியார் கல்வி நிறுவனம் தோட்ட நடாத்துவதும் முன்னூறு மாணவர்களுக்கு | முறையான கல்வி பெறமுடியாது என்ற இதழ் இன்மையால் மலையக மாணவர்களை க்கு ஒரு தீர்வாகவும், நடைமுறையிலுள்ள க்கு இணையாக ஒரு பாடசாலை வேண்டும் இரண்டாவது பாடசாலை புத்தபிக்குவினால் ரி' இவ்விரண்டு கல்லூரிகளிலும் மாணவர் |பதுகளில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் த்துறை, தனியார்துறை என்பவற்றில் வேலை ), ஆங்கிலம், விளையாட்டு ஆகிய துறைகள் பட்டதால் அரசாங்க பாடசாலைகளை விட மதிப்பு அதிகமாக காணப்பட்டது. அதனால் 5டனசபாபதி, திரு.தமிழோவியன் ஆகியோர் மயாற்றினர். பின்னாளில் வை.தேவராஜ், பாடசாலைகளின் அதிபர்களாக இருந்ததுடன் வி அமைச்சின் திட்டமிடல் மற்றும் இணைப்பு ழோவியன் தனக்கிருந்த ஆங்கில அறிவின் விலகி களஞ்சிய பொறுப்பாளராக ஆங்கில டத்தில் அவர் மாகாண கல்விச் சேவைகள் Dமயாற்றினார் என்பதை குறிப்பிடும் போது
ல் தனி முத்திரை பதிவுகளாக விளங்கின
என்று ஆய்ந்து அதனை அவன் கண்விடல்' ரம்.சச்சிதானந்தன் அவர்கள் தமிழோவியன் பமித்தார். ஊவா மாகாணம் பாலையில் ஒரு ம் ஒரு பொற்காலத்தை தொட்டுச் சென்றது. சறை, கந்தகெதர, ஹாலிஎல நகரங்களில் உத்திலும் ஒவ்வொரு புதிய அம்சங்களோடு வெளியீடு, சிறுகதை தொகுப்பு நூல், விவாத அரங்கு சிறப்பு மலர் வெளியீடு, இலக்கிய றை, சமூக பணியாளர் கெளரவிப்பு, சிறந்த விளையாட்டு வீரர் கெளரவிப்பு, ஊடகவியலாளர்
123)

Page 144
கெளரவிப்பு இவ்வாறு வருடா வருடம் புதிய வி தமிழோவியன் நடாத்தினார். ஊவா மாகான கண்டு சிங்கள கலைஞர்களுக்கும் இடமளிக்க கவனிக்கும் காலத்தில் தமிழோவியன் அறு செயல்வீரராக அவரின் பணிகள் விளங்கின. தி கதம்பம், பதுளை சொல்லும் கதைகள் நூல்க கலைஞர்களின் திறமைக்கு ஏற்ப இடமொ வகித்தார். அனைத்து பணிகளும் முடிந்த மகிழ்ச்சியில் பிரதிபயன் பாராது செல்வது த
ஊவாமாகாணத்தில் இளைஞர் சேவை இலங்கை தமிழ்தின போட்டி வலயம், மாகா பெரும்பங்களிப்பு செய்தவர் தமிழோவியன் உற தமது தீர்ப்பை உரிய முறையில் வழங்கி அலை அவர். அவர் குடும்பச்சுமையை ஒரு புறமும் சந்திக்க நேர்ந்தது. ஆனால் இலக்கிய விழா, காணும் ஒருவராக அவர் இருந்தார். அவரி பற்றியதாக இருந்தது.
திரு.தமிழோவியன் ஊவா மாகாண எ அமைப்பு மூலம் ஒன்றிணைக்க செயற்பட்ட நிறுவி வருடாந்த பரிசளிப்பு விழாவை நடாத்தி அமைச்சர்களையும் அரசியல் தலைவர்களையும் கலை இலக்கிய வட்டத்தின் முதலாவது பெ.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. ஆயிரம் ரூபாவை வழங்கி இருந்தார். இரண்ட கெளரவ செளமிய மூர்த்தி தொண்டமான் த நிதியிலிருந்து ஒரு தொகை நிதியை . உதவியளித்தார். தமிழோவியனுக்கு பிறகு இல பொற்கிழியோ வழங்கிட எந்த அமைப்பும் ( தமிழோவியன் தனிமரமாக இருந்தாலும் அ நன்றாக உணரமுடிகிறது.
(124)

டயங்களுடன் ஐந்து சாகித்திய விழாக்களை 1 சபை தமிழர் கலாசார ஊர்வலத்தைக் - கேட்டுக்கொண்டது. மேற்படி விடயங்களை பது வயதை தாண்டி இருந்தார். ஆனால் ரு.செ.பாலசுப்பிரமணியம் தொகுத்த குறிஞ்சி ளை ஒவ்வொரு பக்கமாய் வடிவமைப்பதிலும் துக்குவதிலும் தமிழோவியன் பெரும்பங்கு பின் தமிழன்னைக்கு சமர்ப்பித்து விட்ட தமிழோவியனின் தனிச்சிறப்பாகும்.
மன்றம், இந்து இளைஞர் மன்றம், அகில ணம் ஆகியவற்றுக்கு நடுவராக பணியாற்றி வுகளும் நண்பர்களும் நெருங்கி இருந்தாலும் நவரது ஒத்துழைப்பையும் பெற்றுக்கொண்டவர் ம் தனது உடல் வியாதியை மறுபுறமும் நூல் வெளியீடு என்ற விடயங்களில் முதல் ன் பேச்சு, மூச்சு ஊவாவின் இலக்கியம்
ழுத்தாளர்களையும், கவிஞர்களையும் ஒரு ார். ஊவா கலை இலக்கிய வட்டத்தை னார். இதற்காக வர்த்தக பிரமுகர்களையும் ம் சந்தித்து உதவிகளை கேட்டுக்கொண்டார். பரிசளிப்பு விழா கௌரவ அமைச்சர் அமைச்சர் தமது நிதியிலிருந்து பதினைந்து டாவது பரிசளிப்பு விழா மலையக தந்தை தலைமையில் நடைபெற்றது. அவர் தமது பழங்கி திரு.தமிழோவியனின் பணிக்கு மக்கியம் படைப்போருக்கு தங்கப்பதக்கமோ, முன்வரவில்லை என்பதை காணும் போது பவர் ஒரு அரச மரம் என்பதை இப்போது
ல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 145
கலாநிதி ம.மு.உை இஸ்லாமியத் தமிழ்
பற்றிய கண்
இரண்டாம் வருட மாணவன், கலைப்பு
ஈழத்துத் இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் அமைந்துள்ளது. எத்தனையோ அறிஞர்கள் இலக்கியத்திற்கு சேவை செய்தாலும் உ எடுத்துக்காட்டாகவும் முன்மாதிரியாகவும் விள அவர்கள். உவைஸ் மேற்கு மாகாணத்தில் ஹேனமுல்லை என்ற ஊரில் 1922 ஆம் ஆல் இவர் தன்னுடைய சிறு வயதில் தந்தையிட பயின்றார். 1927ஆம் ஆண்டு ஹேனமுல்லை கல்வியைக் கற்றார். ஆங்கிலக் கல்வி வித்தியாலயத்திலும் உயர்தரப் படிப்பை ப கற்றார்.
உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த வேண்டும் என்ற ஆசையில் அன்று பல்கலைச் கற்று பரீட்சையில் சித்தியடைந்து 1946 ஆம் கொண்டார். பல்கலைக்கழக புதுமுகத்தேர் தேறிய மாணவன் என்ற பெருமையை உ6 பரீட்சைக்காக தமிழை சிறப்புப் பாடமாகவும் இவரது முதல் இஸ்லாமியத் தமிழ்பணி "முள் ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்து 1951ஆம் பரீட்சையில் சித்தியடைந்து பட்டம் பெற்றா
"இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய கூறுவீராக?”' என சுவாமி விபுலானந்தர் கேட்ட பதில் கூற முடியவில்லை. - "சீறாப் புரா கேள்வியை கேட்டார் சுவாமி விபுலானந்தர் சீறாப் புராணத்தைப்பற்றி உவைஸ் அறிந் காப்பியம் என்பதை தெளிவாக அறிந்திருக்க இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் புறக்க காணப்பட்டது. இவையெல்லாம் உவைஸின் ஏற்படுத்தியது எனலாம். அதுவே இஸ்லாமி வேண்டியதன் இன்றியமையாத் தன்மையை
இதுபற்றி பேராசிரியர் சு.வித்தியானந்தன் சிறப்புப் பாடமாகப் படித்துத் தமிழ் சிறப்புக்
கூர்மதி -

வஸ் அவர்களின் ) இலக்கியப் பணி ணோட்டம்
எம்.எம். முஹம்மது சப்ரி ரிவு, தென்கிழக்கு பல்கலைக்கழகம், ஒலுவில்.
பரப்பு நீண்ட வரலாற்றினைக் கொண்டு ஈழத்தில் தோன்றி இஸ்லாமியத் தமிழ் அவர்கள் யாவரையும் விட மிகச்சிறந்த ங்குபவர் பேராசிரியர் கலாநிதி. ம.மு.உவைஸ் அமைந்துள்ள பாணந்துறை நகரில் உள்ள ன்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி பிறந்தார். டம் குர்ஆன் ஓதவும், அறபு எழுதுவதற்கும் அரசாங்கத் தமிழ் பாடசாலையில் ஆரம்பக் யை சரிக்கமுல்லையிலிருந்த தக்ஸலா Tணந்துறை சென் ஜோன்ஸ் கல்லூரியிலும்
த பின்பு பல்கலைக்கழகத்திற்குச் செல்ல க்கழக புகுமுகத் தேர்வில் விடாமுயற்சியுடன் ம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் இணைந்து வில் தமிழ், சிங்களம் ஆகிய பாடங்களில் டையவர். பல்கலைக்கழகத்தில் கலைமானி ம் சிங்களத்தை உப பாடமாகவும் கற்றார். ஸ்லிம்கள் தமிழுக்காற்றிய தொண்டு" என்னும் ஆண்டில் நடாத்தப்பட்ட முதுகலைமாணிப்
ப செந்தமிழ்க் காப்பியம் ஒன்றின் பெயரைக் டவுடன் உவைஸால் அதற்கு உடனடியாகப் ணத்தைப் படித்திருக்கிறீரா?'' என அடுத்த - அதற்கு "ஆம்" என பதில் கூறப்பட்டது. திருந்த போதிலும் அது சிறந்த தமிழ்க் கவில்லை. ஈழத்தில் 1951ஆம் ஆண்டுவரை ணித்து ஒதுக்கப்பட்ட ஒரு பகுதியாகவே உள்ளத்திலே நிரந்தரமான ஒரு தாக்கத்தை யத் தமிழ் இலக்கிய ஆராய்ச்சியில் ஈடுபட
ஏற்படுத்தியது.
"இலங்கையிலும் தென்னகத்திலும் தமிழைச் 5 கலைமாணித்தேர்வில் முதல் முதலாகத்

Page 146
தேர்ச்சியடைந்த முஸ்லிம் என்ற பெருமை கல முஸ்லிம்களின் தமிழ் இலக்கியத் தொண் முதுமாணித் தேர்விலே முதன்முதலாக வ கூறுகின்றார். இஸ்லாமியத் தமிழ் இலக்கி தகவல்களைத் திரட்டும் பணியை மேற்கொள்வ அங்கு கீழக்கரையில் சீதக்காதி பள்ளிவாசல் அறிஞரைச் சந்தித்து அவரிடமிருந்து இஸ்லா பட்டியலை பெற்றுக் கொண்டு அங்கிருந்து பெ பெற்றுக் கொண்டார்.
முஸ்லிம்கள் தமிழ் மொழிக்காற்றிய தெ முனைந்தபோது இருநூறுக்கும் அதிகமான 8 நூல்களை ஒன்று சேர்ப்பதில் வெற்றி பெற் ஒன்றாக அமைந்துள்ள சீறாப்புராணம் பற்றி ம ஆண்டு கொழும்பு ஸாஹிறாக் கல்லூரியில் அங்கிருந்து விலகி 1957ஆம் ஆண்டு பரீட் பதவியேற்றார். அத்தோடு பாடநூல் குழுவில் வகித்தார். மேலும் வினாத்தாள்களைத் . வினாக்களுக்கான விடைகளைத் திருத்துதல் ஆண்டு இலங்கை வணிகர் மன்றத்தின் மொ புரிந்தார். இலங்கை வித்யோதப் பல்கலை தலைவராகக் கடமை புரிந்தார். 1959இல் இ நியமிக்கப்பட்டார். கல்வி வெளியீட்டு ஆலே வருடம் பணியாற்றிய உவைஸ் ஐக்கிய ஸ்தாபனத்தின் தேசியப் பிரிவிலும் அங்கம்
சில காலம் இலங்கை ஒலிபரப்புக் கூட வகித்தார். இலங்கைப் பல்கலைக்கழக செ வெளிவாரி விரிவுரையாளராக 1974இல் பல்கலைக்கழகத்தில் இஸ்லாம் மார்க்க செ கடமையாற்றினார். மேலும் இலங்கையில் முத ஒலிபரப்புச் சேவையை 1953இல் ஆரம்பித்து சேரும். முஸ்லிம்களின் தமிழ் இலக்கியத்தி காமராஜ் பல்கலைக்கழகம் பேராசிரியர் ப தமிழ் இலக்கியத் துறையை ஆரம்பித்து 197 கடமையாற்றிய பெருமை அவரையே சாரும்
* முஸ்லிம்கள் தமிழுக்காற்றிய தொண் இடம்பெறாமல் போன பல காப்பியங்களை நூல்களையும் பெறுவதில் ஆர்வத்தைச் சொல் என்னும் தலைப்பில் ஆராய்ச்சி செய்து அந்த அதன் வெளிப்பாடாக 1975ஆம் ஆண்டு 2 வழங்கப்பட்டது. இலங்கைப் பல்கலைக்கழக கலாநிதி ஆ.வேலுப்பிள்ளை "உவைஸ் அ சமர்ப்பித்த 'தமிழ் இலக்கியத்தில் முஸ்லிம் இன்றைய முஸ்லிம் அறிஞர்களும் தமிழ்க் கூறத்தக்க தமிழ் இலக்கியத்தின் ஒரு கொள்ளப்பட்டுள்ளது” என கூறினார்.
( 126

"நிதி முகம்மது உவைஸ் அவர்களுக்குரியது. டு பற்றி ஆய்வுக்கட்டுரை எழுதித் தமிழ் Iாகை சூடிய முஸ்லிமும் அவரே” எனக் யத் துறையில் ஆராய்ச்சி செய்வதற்காக பதற்காக தமிழ்நாட்டிற்குச் சென்றார் உவைஸ். பில் தங்கியிருந்த செய்யிது முகம்மது என்ற மியத் தமிழ் இலக்கிய நூல்களின் பெயர்ப் சன்னை சென்று அங்கும் பல தகவல்களைப்
தாண்டு என்னம் ஆராய்ச்சி நூலைத் தயாரிக்க இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய தமிழ் }றார். இந்நூலில் காப்பிய இலக்கணங்கள் ட்டுமே ஆய்வு செய்யப்பட்டிருந்தது. 1953ஆம் ) ஆசிரியராகக் கடமையாற்றினார். பின்னர் சைத் திணைக்கள மொழிபெயர்ப்பாளராக சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாக அங்கம் தயாரித்தல், அவற்றை முறைப்படுத்தல், போன்றவற்றிலும் ஈடுபட்டு வந்தார். 1959ஆம் எழிபெயர்ப்புப் பிரிவு தலைவராகவும் கடமை மக்கழகத்தில் நீண்டகாலம் தமிழ்த்துறைத் லங்கை சாகித்திய மண்டல அங்கத்தவராக பாசனை சபையின் அங்கத்தவராகவும் பல நாடுகளின் கல்வி, விஞ்ஞான கலாசார வகித்தார்.
ட்டுத்தாபன இயக்குனர் சபையிலும் அங்கம் காழும்பு வளாகத்தின் கலாசாரப் பாடநெறி நியமிக்கப்பட்ட இவர் வித்யாலங்காரப் வளிவாரி விரிவுரையாளராகவும் சில காலம் ன்முறையாக முஸ்லிம்களுக்கான வானொலி நடத்திய பெருமை உவைஸ் அவர்களையே ற்கு புத்துயிரளித்த உவைஸுக்கு மதுரை தவியை வழங்கியது. அங்கு இஸ்லாமிய "9ஆம் ஆண்டு முதன்முதல் பேராசிரியராகக்
டு என்ற நூலை வெளியிட்ட பின் அதில் யும், வசன நூல்களையும், அறபுத் தமிழ் லுத்தினார். "'முஸ்லிம் தமிழ் காப்பியங்கள்” நூலை பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்தார். உவைஸ் அவர்களுக்கு கலாநிதிப் பட்டம் பேராதனை வளாக சிரேஷ்ட விரிவுரையாளர் வர்கள் கலாநிதிப் பட்டம் பெறுவதற்காகச் » காப்பியங்கள்' எனும் ஆராய்ச்சி நூலில் கல்விமான்களும் அறிந்திராத துறை என்று முக்கிய பகுதி ஆராய்ச்சிக்கு எடுத்துக்
- கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 147
அத்தோடு இடையிடையே இஸ்லாமிய கட்டுரைகளை எழுதியுள்ளார். இஸ்லாமியத் த கொண்டு நடைபெற்ற மகாநாடுகளிலும் உ தன்னுடைய திறமையை நிரூபிக்கத் தவறவில் நூல்களை நோக்குமிடத்து முதலில் "தமிழ் தொண்டு” இதனைத் தொடர்ந்து "Muslim நூலை எழுதினார். இந்நூலில் இஸ்லாமிய ஒ தமிழில் இயற்றப்பட்டுள்ள காப்பியங்களின் விளக்கப்பட்டுள்ளது. இதில் இறைகாப்பு, இய பற்றிய விபரங்கள் பரந்த நோக்கின் அடிப்பு
- இஸ்லாமிய அடிப்படையில் தோன்றிய என கூறப்படும் சிலவற்றைப் பற்றிய கருத்து தமிழும்” என்ற நூலை எழுதினார். திருக்கு அவை பற்றிய கட்டுரைகளைக் கொண்ட "கு அவர்கள் மெளலவி எம்.அப்துல் வஹ்ஹாப் என்னும் நூலின் சிங்கள மொழி பெயர்ப்பாக
இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளி மொழி, பண்புகள், கலாசாரம் ஆகிய அலை பணிகளைப் பற்றி ஆராய்ந்து கூறுகின் காணப்படுகின்றது. அவரது முதல் தமிழ் நூல் என்ற நூலைப் பதிப்பித்தார். இந்நூலானது ! என்பதை விரிவாக விளக்கும் நூலாக அமைந் ஜெமாலுத்தீன் புலவர் எழுதிய "சுஅபுல் ஈமா கொண்டது. இது ஆயிரத்துக்கு மேற்பட்ட படலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
செய்கப்துல் காதர் நெயினாலெப்பை ஆ மேற்பட்ட செய்யுட்களைக் கொண்ட "புதுகுவ வைத்து எழுதப்பட்ட வசனநூல் முஹம்மதுப் பு சித்தீக்கிய்யா, பாறூக்கிய்யா என முப்பெருங் முஹம்மதிய்யாவில் உள்ள படலங்களை திருத்தங்களைச் செய்து வெளியிட்டதுதான் சாஹிபுப் பாடல்களைப் பற்றி ஆராய்ச்சிக் க திரட்டு "ஞானச்செல்வர் குணங்குடியார்” என்
1976ஆம் ஆண்டு மீலாத் நபி விழா | பெருவாழ்வு" தமிழ் இலக்கியத்தில் பெரும் கட்டுரையுடன் ஏனையவர்களின் பத்துக் ! பெருமானார் அவர்களின் வாழ்வு இக்கட்டுரைக
நாகூர் மகாவித்துவான் வா.குலாம் கா நூற்றாண்டின் இறுதியில் இயற்றப்பட்டது "
மரபுகளைக் கொண்டு பழங்கால ஆற்றுப்பு அமைய இயற்றப்பட்டுள்ள இச்சிறந்த நூலை ஆண்டு வெளியிட்டார். "நபிநாயக சரிதய வாழ்க்கையை விபரமாகக் கூறுகின்றது. இதனை
கூர்மதி - 11-CM 013788

பத் தமிழ் இலக்கியத் துறையில் பல்வேறு மிழ் இலக்கிய வளர்ச்சியைக் குறிக்கோளாகக் உவைஸ் கலந்து கொண்டுள்ளார். அங்கும் லை. ம.மு.உவைஸ் அவர்களால் எழுதப்பட்ட ழ் இலக்கியத்திற்கு முஸ்லிம்கள் ஆற்றிய Epics in Tamil Literature” என்ற ஆங்கில ழுக்க நெறிகளை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு அம்சங்கள் பற்றி மிக விரிவாக ற்கை வர்ணனை, காப்பியத்தின் உட்பொருள் படையில் ஆராயப்பட்டுள்ளன.
தமிழ் இலக்கியங்களில் சிற்றிலக்கியங்கள் புக்களைத் தொகுத்து "இஸ்லாமும் இன்பத் Tஆனில் காணப்படும் விடயங்களைக் கற்று ர்ஆன் அமா பிந்து” என்ற நூலை உவைஸ்
தமிழில் எழுதிய "தித்திக்கும் திருமறை" க எழுதினார்.
பல் முஸ்லிம் மக்கள் குடியேறி அவர்கள் எத்தும் ஒழுங்குமுறையில் சீர்பெறச் செய்த சற நூலாக "இஸ்லாமியத் தென்றல்'' D இதுவாகும். 1962ஆம் ஆண்டு "நம்பிக்கை" இஸ்லாம் சமயத்தில் ஈமான் என்றால் என்ன து காணப்படுகின்றது. தென்னிந்தியாவிலுள்ள ன்” என்ற கவிதை நூலை அடிப்படையாகக் - பாடல்களைக் கொண்டு எழுபத்தெழு
லிம் புலவர் அவர்கள் எழுதிய ஆயிரத்துக்கும் ஓஷாம்” என்ற காப்பியத்தை அடிப்படையாக லவரால் ஆக்கப்பட்டது. இது முஹம்மதிய்யா, காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்து. காண்டம் ா உவைஸ் பரிசோதித்து அதில் சில T "புதுகுஷ்ஷாம்" என்ற நூல். மஸ்தான் கண்ணோட்டத்தோடு எழுதிய கட்டுரைகளின் Tற நூலாகும்.
பிரசுரமாக வெளியிடப்பட்டதே "பெருமானார் மானார் என்ற ம.மு.உவைஸ் அவர்களின் கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பாகும். ளில் பல கோணங்களில் ஆராயப்படுகின்றது.
திறு நாவலர் அவர்களால் பத்தொன்பதாம் புலவராற்றுப்படை'' சங்ககாலத் தமிழ்க்கவி படைகளின் சொல் நயம், பொருள் நயம் 0 கலாநிதி உவைஸ் பதிப்பித்து 1968ஆம் '' என்ற நூல் பெருமானார் அவர்களின் ன எம்.அப்துல் றஹீம் என்பவரால் எழுதப்பட்ட
127

Page 148
"'நபிகள் நாயகம்" என்ற நூலை அடிப்ப எழுதப்பட்டுள்ளது.
1973ஆம் ஆண்டு திருச்சி ஜமால் மு தமிழ் இலக்கியக் கருத்தரங்கில் வாசிக்கப் ஆனும் முஸ்லிம் மக்களின் தமிழ்ப் பேச்சு வ வெளிவந்தது. அதே கருத்தரங்கில் வாசிக் அடிப்படையில் தோன்றிய தமிழ்க் காப்பியங்.
"இஸ்லாமிய இலக்கியத்தின் திருச்சித் முடிந்து நாடு திரும்பிய பின் அம்மகாநாடு ப கட்டுரைகளைத் தொகுத்து சுயசரிதை அை Spoken Dialect of the Muslims of Sri Lank பேச்சு வழக்குத் தமிழ் பற்றிய கட்டுரையாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சர்வதேச தமிழ
1976ஆம் ஆண்டு சென்னை புதுக்கல்லூரி இஸ்லாமியத் தமிழிலக்கிய ஆராய்ச்சிக் க கொண்ட நூல் "ஈழத்து முஸ்லிம்களின் பேச் சொற்கள்”' இஸ்லாமிய வரலாற்றில் அமைந் விடயத்தையும் பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகள் சி என்ற நூலை எழுதினார்.
ஹஜ் கடமையை நிறைவேற்றும் மு கட்டுரைகளைக்கொண்ட நூல் "மக்காப் பய கொண்டு எழுதப்பட்டது. "நெஞ்சில் நிலைத்த தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டின்போது நி பயணக்கட்டுரைகளைக் கொண்ட நூல். உசை தேவராஜன் என்பவரின் வர்த்தக எண்கணித பெயர்ப்பு "வாணிஜ அங்க கணிதய" என்ற
கலாநிதி ஐ.டீ.எஸ்.வீரவர்தன எழுதிய 8 பொருளாதாரத் திட்டம்” கலாநிதி எப்.ஆர்.2 மொழி பெயர்ப்பு “பொருளியற் பாகுபாடு”. அத் மார்டின் விக்ரமசிங்ஹ எழுதிய சிறந்த சிங்கள ''கிராமப்பிறழ்வு” என்ற பெயரில் வெளியிடப்பு பற்றி கலாநிதி ஐ.டீ.எஸ்.வீரவர்தன எழுதிய உவைஸால் மொழி பெயர்க்கப்பட்டது.
"கதா முது” என்ற நூல் முதலாம், நிகழ்ச்சிகளின் சிங்கள மொழி பெயர்ப்பு. 4 தரப் பரீட்சைக்காக குதுபுநாயகத்தின் பாடல் என்ற நூலை எழுதினார். சுலைமான் ந இக்காப்பியத்திலுள்ள இரண்டு படலங்களுக்க உயர்தர மாணவர்களின் நலன்கருதி வெளி
என்ற நூலைப் பதிப்பித்தார். மேலும் உனை பத்திரிகையில் பிரதம ஆசிரியராகப் பணிபுரி
(128

டையாகக் கொண்டு சிங்கள மொழியில்
ஹம்மத் கல்லூரியில் நடந்த இஸ்லாமியத் பட்ட கட்டுரையைத் தொகுத்து "திருக்குர் ழக்கும் இலக்கிய வழக்கும்” என்ற நூலாக கப்பட்ட மற்றொரு கட்டுரை “இஸ்லாமிய கள்” என்ற பெயரில் நூலாக வெளிவந்தது.
5 திருப்பம்” என்ற நூல் திருச்சி மகாநாடு ற்றி அவர் வீரகேசரி வார இதழில் எழுதிய -மப்பில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. "The Ea” என்ற நூல் இலங்கை முஸ்லிம்களின் 5 அமைந்துள்ளது. இது 1974ஆம் ஆண்டு ழ் ஆராய்ச்சி மகாநாட்டில் வாசிக்கப்பட்டது.
யில் நடைபெற்ற இரண்டாவது அனைத்துலக கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரையை சு வழக்கில் பயன்படுத்தப்படும் செந்தமிழ்ச் து காணப்படுகின்ற நீதியையும் நியாயமான லவற்றைத் தொகுத்து "நீதியும் நியாயமும்”
மறை பற்றி விரிவாக விளக்கும் பயண ணம்” இது நான்கு மத்ஹப்களை கருத்திற் த சுற்றுலா”' 1968இல் சென்னையில் நடந்த கழ்ந்த தமிழ்நாட்டுச் சுற்றுலா பற்றிய வஸ் அவர்களது மொழிபெயர்ப்பு நூல்களாக தம் என்ற தமிழ் நூலின் சிங்கள மொழி
நூல்.
சிங்கள நூலின் தமிழாக்கம் “இலங்கையின் ஜயசூரிய எழுதிய சிங்கள் நூலின் தமிழ் தோடு இலங்கையின் புகழ்பெற்ற நாவலாகிய 1 நாவலான "கம்பெரலிய" வின் தமிழாக்கம் பட்டது. மேலும் பிரித்தானியாவின் அரசியல் சிங்கள் நூல் "பிரித்தானிய யாப்பு”' என
இரண்டாம் பகுதி இஸ்லாமிய வரலாற்று கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண மகளுக்கான உரைநூலாக “குதுபுநாயகம்” பியவர்களின் வாழ்க்கையை விபரிக்கும் கான உரை “இராஜநாயகம்" என்ற பெயரில் யிடப்பட்டது. அத்தோடு "ஆசாரக்கோவை” வஸ் அவர்கள் "லஸந்த” என்ற சிங்களப் இந்தார்.
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 149
இவ்வாறு கலாநிதி ம.மு.உவைஸ் இலக்கியங்களை அறிமுகம் செய்து வை உவைஸ் அவர்களின் சிறந்த முன்மாதிரி இல் சந்ததிகளுக்கும் பின்பற்றிப் பயனடையக்கூடிய சந்தேகமில்லை. கலாநிதி ம.மு.உவைஸ் இலக்கியப் பணி வளர்ச்சியடைந் திருந்தாலும்
SG கற்பனையும், இலக்கியமும், க உதவுமா? என்று அண்மைக்கால கேள்வி. இதே கேள்வியை ஒரு . பிரியரான டாக்ஸி டிரைவரிடம் டிரைவர் சொன்ன பதில் அர்த்தமு என் மனைவியின் முகத்தைப் தெரியும். ஆனால் பல இலக்கியச் ( இப்போதெல்லாம் என் மனைவி தெரிகிறது என்றார். இலக்கியம் ஒரு அருமருந்து.
வா
கூர்மதி.

அவர்கள் மிகச்சிறந்த இஸ்லாமியத் தமிழ் பத்து நல்ல முன்மாதிரியாகத் திகழ்ந்தவர். ன்றைய மாணவர்களுக்கும் வருகின்ற எதிர்கால பவனாய் அமைந்துள்ளது என்பதில் துளியளவும் |அவர்களுக்குப் பின் இஸ்லாமியத் தமிழ் ம் அது உவைஸின் காலத்தைப் போன்றதல்ல.
*
லையும் சாதாரண மனிதனுக்கு மாக உலகில் கேட்கப்பட்டு வரும் இலக்கியக்காரர் ஒரு இலக்கியப் கேட்டார். அதற்கு அந்த டாக்ஸி மள்ளதாக இருந்தது. முன்பெல்லாம் பார்த்தல் எனக்கு அசிங்கமாகத் சொற்பொழிவுகளைக் கேட்ட பின்னர் யின் முகம் எனக்கு அழகாகத் மனித மனத்தைப் பண்படுத்தும்
Re
(129)
129

Page 150
|விளம்பரமின்றேல்
'வ
வயலற் சந்
விளம்பரம் (Advertisement) என்ற சொல்; விதமாக இலக்கணம் வகுத்துள்ளார்கள்.
(The American Marketing Association) அபெ இலக்கணம் வகுத்துள்ளது.
"விளம்பரம் என்பது விளம்பரதாரரைத் பணம் செலுத்தி, தன்னுடைய பொருள், பணி, பெருக்குவதற்காகச் செய்யப்படுவதைக் குறிக்
இதிலிருந்து விளம்பரத்தின் முக்கிய ச
3,
1. விளம்பரம் என்பது பணம் செலுத்தி விள 2. விளம்பரமானது ஒரு பொருள்பற்றியோ, .
கருத்தைப் பற்றியோ இருக்கலாம். விளம்பரமென்பது அதிகப்படியான நுகர்வே
விளம்பரம் செய்பவர் யார் என்பதைத் ெ 5. நுகர்வோரை நேரடியாக அணுகாது மன
ஒருகலை.
Advertising என்ற ஆங்கிலச் சொல்லை வரையறை செய்துள்ளார்கள். Advertising 6 என்ற சொல்லிற் கிடையாது. Advertising என் இரண்டு இலத்தீன் மொழிச்சொற்கள் சேர்ந்த wards” என்று ஆங்கிலத்தில் பொருளாகும். இவ்விரண்டையும் இணைத்து பார்க்கும் பெ கவனத்தை கவர்ந்து இழுப்பது என்ற பொருள்
வில்லியம் ஜே.ஸ்டாண்டன் என்பவர் வ இலக்கணம் கூறுகிறார். "வாய்மொழியாக . வெளிப்படையாக, ஒரு பொருள் அல்ல நோக்க அல்லது பொது மக்களுக்குப் பிரஸ்தாபிக்கு செய்திகளைப் பலரும் அறியச் செய்ய யுக்திகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். செய்திகளை அளிப்பவரே பொறுப்பேற்க வே
"நல்ல பொருளுக்கு விளம்பரம் தேவை செய்து கொள்ளும்” என்பார்கள், ஆனாலும் போ
(130)
130.

விற்பனையில்லை
திரசேகரம்
லுக்கு பல்வேறு வல்லுநர்கள் வெவ்வேறு
மரிக்க சந்தையிடு கழகம் கீழ்க்கண்டவாறு
தெரியப்படுத்தி விளம்பர சாதனங்களுக்கு கருத்துக்கள் ஆகியவற்றின் விற்பனையைப் க்கும்.''
பாராம்சங்கள் என்னவென்று அறியலாம்.
கம்பர சாதனங்கள் மூலம் மேற்கொள்வது. அல்லது பணியைப்பற்றியோ, அல்லது ஒரு
வாருடன் தொடர்பு கொள்வதற்கான சாதனம்.
தரிவிக்க வேண்டும். றைமுகமாக அணுகி சாதனை படைக்கும்
-யே தமிழில் விளம்பரம் என்று எல்லோரும் என்ற சொல்லிலுள்ள பொருள் விளம்பரம் என்ற ஆங்கிலச் சொல் "Ad'', "Vetro'' என்ற சொல்லாகும். Ad என்ற சொல்லுக்கு "ToVetro என்பதற்கு I tum என்று பொருள். ாழுது Advertising என்பது ஒருவருடைய ள் தருவதாகும்.
விளம்பரம் என்ற சொல்லுக்கு பின்வருமாறு
அல்லது பார்வையிடக் கூடிய நிலையில் ம் அல்லது சேவைபற்றி ஒரு குழுவினருக்கு தம் செய்தியே விளம்பரமாகும்” இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களையும், இதற்கான செலவுகளை விளம்பரம் மூலம்
ண்டும்.
யில்லை. அது தன்னைத்தானே விற்பனை ட்டியும், நவீன தொழில் நுட்ப சாதனங்களும்,
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 151
நவீன தொடர்பாடற் சாதனங்களும் துரித வல் இன்றேல் விற்பனையில்லை” என்பது தெப்
சந்தையில் புதிய பொருள் ஒன்றை பிறபோட்டிப் பொருட்களுடன் ஒப்பிட்டுக்கா பயன்படுத்தும் விதத்தை விளக்க விளம்பர நுகர்வோர் மனதில் பதியவைக்க விளம் பொருட்கள் சந்தையில் நிலைத்து நிற்கின்
விளம்பரத்தினால், உற்பத்தியாளர் உற்பத்தி நிறுவன முதலீட்டாளர்கள், ஊழிய முகவர் நிலையங்களும் முழு சமூகமும் பொருட்களுக்கும் வாழ்க்கைப் பருவங்கள் 2 இருந்து இறப்புவரை, சந்தைச்செயற்பாடுகள் ஆறு பருவங்களைக் கடந்து செல்கின்றன அதிகூடிய விளம்பரம் தேவை எப்பருவத்தி எவ்வாறான விளம்பரம் தேவை என்பதை பொருட்களின் ஆறு பருவங்களும் வருமாறு
அறிமுகப் பருவம்
(Introducto1 வளர்ச்சிப் பருவம்
(Growth or முதிர்ச்சிப் பருவம்
(Maturity S நிறைவுப் பருவம்
(Saturation சரிவுப் பருவம்
(Declining 6. புறக்கணிக்கும் பருவம் (Abandonm
1. -
5.
இதை ஒரு படத்தின் மூலம் மிக இலகுவ
விற்பனை இலாபம் (ரூ. இலட்சத்தில்)
1 அறிமுகம் வளர்ச்சி முதிர்ச்சி நி
கூர்மதி.

மார்ச்சியடைந்த இக்கால கட்டத்தில், "விளம்பரம் ட்டத் தெளிவாகின்றது.
அறிமுகப்படுத்த விளம்பரம் கட்டாயந்தேவை. பட்ட விளம்பரம் தேவை. புதிய பொருளைப் ம் தேவை. வணிகப்பெயரை, வணிகக்குறியை பரம் தேவை. விளம்பரத்தினாலேயே அதிக Tறது.
மட்டுமல்ல, விற்பனையாளரும் நுகர்வோரும் Tகள் என்போரும் விளம்பரத்தை மேற்கொள்ளும் நன்மை அடைகின்றன. மனிதரைப் போன்று உண்டு. ஒவ்வொரு பொருளும் அதன் பிறப்பில் ளில் பல்வேறு போட்டிச் சூழ்நிலைகளிற்கேற்ப -. இந்த ஆறு பருவங்களிலும் எப்பருவத்தில் பில் தேவையில்லை. ஒவ்வொரு பருவத்திலும் முக்கியமாகக் கருத்திற் கொள்ளவேண்டும்.
ry Stage)
consumers Accetance Stage) tage)
Stage) Stage)
ent Stage)
Tக நோக்கலாம்.
விற்பனைக்கோடு
இலாபக்கோடு
றைவு சரிவு
புறக்கணிப்பு (பொருள் நீக்கம்)
(131)

Page 152
இங்கு அறிமுக காலத்தில் விளம்பரம் அ செலவுகள் அதிகம் வளர்ச்சிக் காலத்தில் நுகர் கேட்டு வாங்குவார்கள். பின்பு பல்வேறு சர் வீழ்ச்சியடையும் காலகட்டத்தில் தொழில் நுட்பம் பல மாற்றங்களுடன் வெளிவரும். அப்போது நிச்சயந்தேவை. சரிவேற்பட்ட பின்பு விளம்பர நீக்கி விட்டு புதிய பொருள் உற்பத்தியில் இ
இவ்வாறு வீழ்ச்சிகள் வியாபாரத்தில் ஏ நிறுவனம் பல்வேறு பொருட்களை உற்பத்தி செu ஏனைய பொருட்கள் இலாபத்தை ஈட்டிக் கெ
விளம்பரத்தின் நோக்கங்களைச் சீர்தூக்
1. பொருட்களுக்கான அடிப்படைத் தேவை 2. விலை மாற்றம் பற்றி அறிவித்தல் 3. பொருள் சந்தையில் விற்பனைக்குத் தயா 4. வணிகப் பெயர் (Brand name) பற்றி
நிலைத்திருக்கச் செய்தல். உ-ம்: சிங்கர், 5. புதிய பொருளின் தன்மைகள் - விலை | 6. சில்லறை விற்பனையாளர்கட்கு சிரமத்தை 7. கம்பனிக்கு நற்பெயரை ஏற்படுத்தல் 8. சந்தையில் நிறுவனத்தின் பங்கை உயர்த்த 9. பொருட்களின் புதியமாற்றம், புதிய பயன் 10. புதிய சந்தைகளுள் நுழைதல் 11. வெளிநாட்டு வாணிபத்தைப் பெருக்கல் 12. தற்போதைய சந்தைப் பங்கைத் தக்க ன 13. போட்டியாளரின் விற்பனைத் திட்டங்களை 14. பொருட்களை அடிக்கடி பயன்படுத்த தூள் 15. தரமான பொருட்களை நுகர்வோர் பெறச் 16. பேரளவு உற்பத்திக்கு வித்திடல்
"விளம்பரம் இன்றி விற்பனை இல்லை” எ எந்த விளம்பர சாதனங்களைத் தேர்ந்தெடுப்பது யாருக்காக விளம்பரம். சிறுவர்களுக்கா? பெ கருத்திற்கொள்ள வேண்டும். செலவையும் கரு
பல்வேறுபட்ட விளம்பர சாதனங்கள் க தேர்ந்தெடுக்கமுன், நுகர்வோரின் தன்மை, போன்றவற்றைக் கருத்திற்கொள்ள வேண்டும்.
AIDA அடிப்படையாக ஆங்கிலத்தில் வி
A - Attention என்பது, கவனத்தை ஈர்த்தல் 1- Interest என்பது, ஆவலைத் தூண்டுதல் D - Desire என்பது, வாங்கும் எண்ணத்தை உ A - Action என்பது, வாங்க எடுக்கும் நடவடிக்
(132)

பதிகம் தேவை. எனவே இக்கால கட்டத்தில் வோர் பொருளைத் தேடி வணிகப்பெயரைக் த்தைப் போட்டிகள் காரணமாக பொருள் மாற்றங்களுக்கேற்ப பொருள் மீளமைக்கப்பட்டு 5 மாற்றங்களை வலியுறுத்த விளம்பரம் ம் செய்து பிரயோசனமில்லை. பொருளை இறங்குவதே சிறந்தது.
ற்படும் என்பதைக் கருத்திற்கொண்டு ஒரு பவதால் ஒரு பொருள் வீழ்ச்சி அடைந்தாலும், எடுத்து ஈடுசெய்துவிடும்.
கிப் பார்ப்போம்
யை உருவாக்குதல்
ார் என்ற நிலையை அறிவித்தல்
அறிவித்தல். வணிகப் பெயரை மனதில் - பிலிப், போட்கார், S.Rபற்பசை பற்றி அறிவித்தல் நக் குறைத்து விற்பனையைத் தூண்டுதல்.
த்தல் பாடுகளை வலியுறுத்தல்
Dவத்தல் - முறியடித்தல்
ன்டுதல் செய்தல்
ன்பது எவ்வளவு தூரம் உண்மை. இருந்தும் து? விளம்பரங்களை எவ்வாறு தயாரிப்பது, ண்களுக்கா? ஆண்களுக்கா? என்பதைக் த்திற்கொள்ள வேண்டும்.
Tணப்படுகின்றன. குறிப்பிட்ட சாதனத்தை விளம்பரச் செலவு, சந்தையின் அளவு
ளம்பர நகலின் நோக்கங்கள் சுருக்கமாக
உருவாக்கல்
கைகள்
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 153
விளம்பரம் செய்யும்போது எச்சாதனத்தி கருத்திற் கொள்ளவேண்டும். எனவே, விளம்
வ ம் + ம்
விளம்பர சாதனங்கள்
பத்திரிகை விளம்பரம் வானொலி விளம்பரம் திரைப்பட விளம்பரம் தொலைக்காட்சி விளம்பரம் புறவிளம்பர சாதனங்கள்
1. சுவரொட்டிகள் 2. பதாதைகள் (பனர்) 3. மின்விளக்குகள் 4. சுவர்களில் எழுதப்படும் 5. வாகனங்களில் வரைய 6. சாலைகளில் பெரிதாக 7. பரசூட், பலூன் விளம்ப 8. துண்டுப் பிரசுரம் 9. சஞ்சிகை விளம்பரம்
5.
பொருள் வாங்கும் இடங்களில் செ உற்பத்திப் பொருட்களின் பொதிக
அ. பொருளை கவர்ச்சிகர
ஆ. கவர்ச்சிகரமாக பொது காட்சி அறைகள் - அலங்காரப் ெ 9. -
உற்பத்திப் பொருட் கண்காட்சிகள்
செய்து காட்டல் 10. - இன்னிசைக் கச்சேரிகள், நடத்தல்
விளம்பரத்தின் உச்சப்பயனை அடைய ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும். பெ விற்பனை மீதான விளம்பரத்தின் தாக்கத்தை குறிக்கோளாகும். விளம்பரத்தின் செயற்திற
விளம்பரங்களின் பலன் விற்பனை மற் விற்பனை அதிகரிப்பிற்கு விளம்பரம் மட்டுமே ! தரம், விற்பனை, நிறுவனத்தின் நற்பெயர், விற்பனைத்திறன் மிக்க விற்பனையாளர்கள் இவைகளில் இருந்து பிரித்து விற்பனை வி
ஆராய்ச்சியின் நோக்கமாகும்.
நிறுவனங்கள் தங்கள் எதிர்கால செல செலவு விற்பனை, இலாபம் இவற்றிற்கிடையே வேண்டும். விளம்பரத் திட்டத்தை உருவாக்கு வேண்டும். (1.) குறிக்கோள்களை நிர்ணயம் செய்தல் (iii.) ஊடகங்களை தேர்ந்தெடுத்தல் எதிர்பார்க்கப்படும் விளைவுகளை அறியவே
கூர்மதி.

ன் ஊடாக விளம்பரம் செய்யவேண்டுமென்பதை ம்பர சாதனங்களை நோக்குவோம்
5 விளம்பரம் ப்படும் விளம்பரம் ப் போடப்படும் போட்
பரம்
ய்யப்படும் விளம்பரம் ளின் மேல் செய்யப்படும் விளம்பரம்
மாகப் பொதியிடல் பிகளை அடுக்கிவைத்தல் பாம்மைகள் அமைத்தல் 1 அமைத்து அதில் சோல்கள் அமைத்து
வேண்டுமானால் முதலில் விளம்பரப்படுத்தல் மாத்தத்தில் பொருட்கள் மற்றும் பணிகளின் 5 அளவிடும் செயலே விளம்பர ஆராய்ச்சியில் னை அளவிடுதல் இதன் முக்கியபணியாகும். Bறும், இலாபம் அதிகரிப்பதாகும். ஆனாலும், முழுக்காரணம் எனக்கூற முடியாது, பொருளின்
பொதியிடல், பணியாளர்களின் நற்சேவை, 1, எனப்பல காரணங்கள் உள்ளன. எனவே ளம்பரத்தின் பங்களிப்பை அறிவதே விளம்பர
வு திட்டத்தை முடிவு செய்ய வேண்டுமெனில் யான தொடர்பினை துல்லியமாக அறிந்திருக்க வதற்கு மூன்று முக்கிய முடிவுகளை எடுத்தாக - செய்தல், (ii.) செய்தி (message) தெரிவு - இதனூடாக விற்பனை, இலாபம் என்பவற்றில் பண்டும்.
(133)

Page 154
நோக்கங்களை முடிவு செய்த பின்னர், 6 என்ன செய்தி? அதனை எவ்வாறு வெளிப்பு (advertisement copy) பயன்படுத்துவது? த (situation) இவையனைத்தையும் முடிவு செ
பின்பு ஊடகங்களைத் தெரிவு செய்ய வாரத்தில் எந்தெந்த கிழமைகள் என்பவற்றை ( எப்படிப்பட்டவர்கள், எவ்வளவு பரப்பு போன் அறிந்து கொள்ள வேண்டும். விளம்பரப்படுத்தல் ஆராயலாம்
அ.
ஆ.
பொருள் முறையீடு ஆராய் (Product Appeal Research விளம்பரச் செய்தி ஆராய்ச்சி (Advertisement message i ஊடக தேர்வு ஆராய்ச்சி (Media selection research) விளம்பரமிடுதலின் திறம்பற் (Advertising effectiveness
இ.
ஈ.)
பொருள் முறையீடு ஆராய்ச்சி என்று (awareness) பொருள் மீதான மாறிவரும் மல் முன்கூட்டியே தீர்மானிப்பவை, ஒருவரது மனோபாவத்தை இது அலசி ஆராய்கிறது.
விளம்பர செய்தி ஆராய்ச்சி என்பது வி. முறையீடு (appeal) அளவு (size) வண்ண திரைப்படம், நிகழ்வு வீதம் (frequency) பருவ மூலமாக பொருள் பற்றிய தகவல் எந்தளவு இது கவனம் செலுத்துகிறது எனலாம்.
ஊடகத்தேர்வு செய்யும் ஆராய்ச்சி எல் முக்கிய குறிக்கோள் யாதெனில் பல்வேறு வன தெரிவு செய்தலாகும். அடுத்து விளம்பரமிடுதல் ஊடகங்களை ஆய்வு செய்வது. வணிகக் ஏற்படும் அதிகரிப்பு, நிறுவனம் பற்றிய விழிப்பு விளம்பர சாதனத்தைத் தேர்ந்தெடுக்கும் பே பொருளின் இயல்பு, போட்டியின் கடுமை, விளப் செலவினங்கள், வாங்குவதற்கு முடிவு செப் கருத்திற்கொள்ள வேண்டும்.
இறுதியாக விளம்பரத்தின் நன்மைகளை இருந்தும் ஆராய்வது பயனுடையதாகும். வி நன்மைகள் விளம்பரமானது பொருட்களுக்காக பெருக்குகிறது. இதனால் உற்பத்தியாளர்கள் த இதனால் பேரளவு உற்பத்தி ஏற்பட பொருட்களில் சந்தையில் அறிமுகப்படுத்த விளம்பரமே உ
134

விளம்பரச் செய்தியை முடிவு செய்யவேண்டும். படுத்துவது? எவ்வகையான விளம்பர நகல் லைப்பு, படங்கள், குறியீடுகள், சூழ்நிலை சய்ய வேண்டும்.
பவேண்டும். பின்பு எவ்வகையான நிகழ்ச்சி, முடிவு செய்வதற்கு, சந்தையில் எவ்வளவுபேர், சற விபரங்களை சந்தை ஆராய்ச்சி மூலம் - ஆராய்ச்சிகளை அதன் வகை அடிப்படையில்
ச்சி
ச்சி
research)
Bறிய ஆராய்ச்சி
research)
1 கூறும்போது நுகர்வோரின் விழிப்புணர்வு எப்பாங்கு (attitute) மனித நடவடிக்கையை மனோபாவமாகும். எனவே மனிதனுடைய
ளம்பர நகல் சோதனையிடலாகும். அதாவது ம் (colour) எடுத்துக்காட்டு (illustration) ம் (seasonality) மற்றும் பல விளம்பரத்தின் - நுகர்வோரைச் சென்றடைகிறது என்பதில்
ன்றுகூறும் போது விளம்பரதாரரின் அடுத்த கையான ஊடகங்களிலிருந்து சிறந்தவற்றைத் லின் திறன்பற்றிய ஆராய்ச்சி. இது பல்வேறு
குறியுடைய பொருட்களின் விற்பனையில் புணர்வு ஆகியவற்றை ஆராய்கிறது. அடுத்து பாது வாடிக்கையாளரின் வகைக்கேற்பவும் Dபர்சாதனத்தைப் பயன்படுத்துவதில் ஏற்படும் பயும் நேரமும் இடமும் போன்றவற்றைக்
ள ஒவ்வொரு சாராரின் கண்ணோட்டத்தில் ளம்பரத்தினால் உற்பத்தியாளர் அடையும் ன தேவைகளை உருவாக்கி விற்பனையைப் தயக்கமின்றி உற்பத்தியில் ஈடுபட முடிகிறது. ன் விலைகள் குறைகிறது. புதிய பொருட்களை தவுகின்றது.
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 155
விளம்பரம் உற்பத்தியாளருக்கு நற்பெ சந்தையில் உற்பத்தியாளரின் நன்மதிப்பை அதிக இலாபம் ஈட்டுவார். உற்பத்தியாளர் தேவையில்லை. மொத்த விற்பனையாள விலைகுறைப்பு, சிறப்புத் தள்ளுபடிகளை அறியப்படுத்தலாம். இதனால் உற்பத்தியாள சந்தையில் நிலைத்து நிற்பார்கள்.
இனி விற்பனையாளர்களுக்கு ஏற்படும் மூலமே விற் பனையாளர் கள் , உற் பத்தி உற்பத்தியாளர்களையும் இனங்கண்டு ெ விற்பனையாளர்கள் விளம்பரத்தின் மூலமே 6
நுகர்வோர் அடையும் நன்மைகளை ரே உற்பத்தி ஏற்பட பொருட்களின் விலைகு அடைவார்கள். பொருட்களில் சில்லறை வி நுகர்வோரை சில்லறை விற்பனையாளர்கள் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு சந்தைக்கு புதிய புதிய பயன்பாடுகளும் கண்டுபிடிக்கப்ட நுகர்வோர் சுலபமாக கண்டுகொள்ள முடிகிறது பாதுகாக்கும் முறை பற்றியும் விளம்பரத்தில் விளம்பரம் உற்பத்தியாளர்க்கும் நுகர்வே உண்டாக்கிறது. இவ்வாறு விளம்பரத்தின் நியாயமான விலையிற் கொள்வனவு செய்ய
சமுதாயம் அடையும் நன்மைகளை நே அச்சகங்கள் போன்றவை வருமானம் ஈட்டுகின் இதனால் பேரளவு வேலைவாய்ப்பு என்பன அதிகரிக்கும். இதனால் அவர்களது வாழ்க் விற்பனைக்கு வழிகோலும், இதனால் பேர் மூலம் வேலை வாய்ப்புக்கள் கிட்டும் இதன் கம்பனிகளில் முதலீடு செய்தவர்களுக்கு அதி ஊக்குவிப்புத் தொகை கிடைக்கும். இதனால் உயரும். சேமிப்பும் உயரும், இவ்வாறான உருவாகி மீண்டும் வேலைவாய்ப்புக்கள் உ சனத்தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப உற்பு
எனவே, ஒட்டுமொத்தமாக நோக்கினால் என்ற உண்மையை உணரலாம். நுகர்வோர் விற்பனையைத் தூண்டுவது விளம்பரமாகும்
கூர்மதி

யரையும், நன்மதிப்பையும் தேடித்தருகின்றது. உயர்த்துகிறது. இதனால் உற்பத்தியாளர் கள் விற்பனையாளர்களைச் சார்ந்திருக்கத் ர்கள் இல்லாமலே செயற்பட முடிகிறது. ா விளம்பரத்தின் மூலம் நுகர்வோருக்கு ர்கள் மேலும் மேலும் நன்மை அடைவார்கள்.
நன்மைகளை நோக்குவோம். விளம்பரத்தின் ந்தி செய்யப் படும் பொருட் களையும் , காள்வனவு செய்ய முடிகின்றது. மேலும் பெருவாரியான நுகர்வோரை அணுக முடிகிறது. தாக்கினால், விளம்பரத்தின் பயனாக பேரளவு தறைகிறது. இதனால் நுகர்வோர் நன்மை ற்பனை விலை விளம்பரப்படுத்தப்படுவதால் | ஏமாற்ற முடியாது. தினமும் புதிய புதிய
வருகின்றன. ஒவ்வொரு பொருட்களுக்கும் டுகின்றன. இதுபற்றிய விபரங்களையெல்லாம் து. பண்டங்களைக் கையாளும் முறைபற்றியும் ன் மூலமாக நுகர்வோர் அறிய முடிகிறது. வார்க்கும் இடையில் நேரடித் தொடர்பை
மூலம் நுகர்வோர் தரமான பொருட்களை 1 முடிகிறது. நாக்குவோம். செய்தித்தாள்கள், சஞ்சிகைகள், ன்றன. பேரளவு விற்பனை, பேரளவு உற்பத்தி,
ஏற்பட்டு மக்களின் கொள்வனவு சக்தியும் கைத் தரமும் உயரும். விளம்பரம் பேரளவு எவு உற்பத்தி ஏற்படும், பேரளவு உற்பத்தி பால் வாழ்க்கைத் தரம் உயரும். உற்பத்திக் க இலாபப் பங்கு கிடைக்கும். ஊழியர்களுக்கு ம் வருமானம் அதிகரிக்க வாழ்க்கைத் தரமும் - சேமிப்புகள் திரள்வதால் மீள்முதலீடுகள் டயரும். இதனால் பொருளாதார வளர்ச்சியும், பத்தியும் அதிகரிக்கும்.
ல் "விளம்பரம் இன்றேல் விற்பனை இல்லை” து தேவைகளை நிறைவேற்றுவது விற்பனை,
135

Page 156
IIரதியீன் கும் ஒரு நோக்கு
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற புதுமை மக்களின் கையில் தவழவிட்டு மகாகவி என்ற
''எளிய பதம், எளிய நடை, எளிதில் ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடை தருவோன் நமது தாய்மொழிக்குப் புதிய 2 நூற்பழக்கமுள்ள தமிழ் மக்கள் எல்லோருக்கும் காவியத்திற்குள்ள நயங்கள் குறைவுபடாமலு பாஞ்சாலிசபத முன்னுரையில் பாரதி கூறுவது
புதுக்கவிதையின் தந்தையான பாரதி அர அவரது குயிற்பாட்டு அவரை ஒரு சமுதாய க சமுதாயக் கொள்கைக் கவிதை தருபவன் எ கருதுகின்றார்.
பாரதியின் புனை பெயர்களில் ஒன்று ெ பெருங்கவிஞன். ஷெல்லியும் பாரதி போலவே ம6 சிட்டுக்குருவி போல் சிறந்திட கனவு கண்ட வானம்பாடியாக உருவெடுத்தது. அம்மகாகவிஞன் கவிக்கனவு குயிலாய் மலர்ந்தது.
குயிற்பாட்டை பாரதி 1912ஆம் ஆண்டு பா 712 அடிகளைக் கொண்டுள்ளது. இதேவேளை 8
அது
"காதல் காத காதல் போயிற் க
சாதல் சாதல் என்றவாறாக தொடர்ந்து செல்கின்றமை ( பெரும் தலையங்கங்கள் இடப்பட்டு பாரதியாரா இயற்கை வர்ணனை புதுவையின் மேற்கே உள்
"காலை யிளம்பரிதி 6 நீலக் கடலோர் நெருப்பெத -பட்டப் பகலிலே பாவலர் நெட்டைக் கனவின் நிகழ்ச்சி
கன்னிக் குயிலொன்று காவி என தொடர்ந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்க
136

பற்பாட்டு
காக
27 திரு. ந.தேவராசா
ஆசிரியர், யா/ஞானாசாரியார் கல்லூரி, கரவெட்டி
மக்கவிஞன் பாரதி, கவிதையை சாதாரண ற பெருமையையும் பெற்றார்.
அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொது டய காவியமொன்று தற்காலத்தில் செய்து உயிர் தருவோன் ஆகின்றான். ஓரிரண்டு நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன் பம் நடத்துதல் வேண்டும்'' எனத் தனது
| இங்கு கவனிக்கத்தக்கது.
ரசியல் ஆத்மீக கவிஞனாக மிளிர்ந்ததோடு -விஞனாகக் காட்டி நிற்கின்றது. பாரதியை ரன்றே பேராசிரியர் கைலாசபதி அவர்கள்
ஷெல்லிதாசன். பாரதியின் உள்ளங்கவர்ந்த னித இனம் யாவும் விடுபட்டு விடுதலையாகிச் - கவிஞன் ஷெல்லியின் நெட்டைக்கனவு னின் அடிச்சுவட்டில் நடை பயின்ற பாரதியின்
டியுள்ளார். இது வெண்கலிப்பா அமைப்பில் இசைப்பாடல் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
ல் காதல் காதல் போயிற் - சாதல்''
தறிப்பிடத்தக்கது. இக்குயிற்பாட்டு ஒன்பது ல் படைக்கப்பட்டது. இதன் தொடக்கமாக பள சோலையில் இயற்கை காட்டப்பட்டது.
வீசுங் கதிர்களிலே ேெர சேர்மணிபோல்...... க்குத் தோன்றுவதாம்
யிலே கண்டேன் யான் டத்தே, பாடியதோர்.....'' கது.
ல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 157
இத்தகைய குயிற்பாட்டுப்பற்றி பல்வே பாரதியின் சுயவாழ்வில் ஏற்பட்ட அனு
பாரதி கவிதை மீது கொண்ட காதல் எ ஆன்மா ஆகிய குயில் அரசனாகிய இை மாடும் குரங்கும் எனக்கூறி வேதாந்த . எனவும் நோக்கலாம். இதனைக் குயிற்பாட் கற்பனையேயானாலும் வேதாந்தமாக இடமிருந்தாற் கூறீரோ” என்று கூறுவதி பாரதி இங்கு மறுபிறப்பு பற்றியும் 6 செல்வாக்கும் இழையோடி உள்ளதாக பாரதி அந்நிய ஏகாதிபத்தியத்தின் கட ஒரு தன்மையினை குயிற்பாட்டில் கொ
குயிற் பாட்டில் குயிலோ குயிலியாக ஏற்பட்ட தடைகளினாலே துவண்டது. ம நம்பிக்கையோடு காத்துக்கிடந்தது. அவரை உணர்த்திகூடீக்களித்தது.
"முத்தமிட்டு முத்தமிட்டு
சித்தம் மயங்கி 8
தன் காதலனைக் களிப்புறுமாறு செய்துவி தானும் தான் வீற்றிருந்த புதுச்சேரி மாந்தே
குயிற்பாட்டின் நுவல்பொருள் புதுவையின் மேற்கே உள்ள பெரிய மாஞ்சே கிளைமீது அமர்ந்து பாடுகின்றது. இக்குயி நீங்கி குயிலுருவம் வராதோ என ஏங்கி இ
"காதல் கா காதல் போயிற்
சாதல் சாத
கூடல் கூட கூடிப்பின்னே கு வாடல் வாட6
குயில் காதல் பாடல் பாடி முடித்து சோக போது கவிஞன் அதனருகே சென்று "ே ஏழுலகுமின்பத்தீ யேற்ந் திறனுடையாய் பி வேண்டக் குயிலும் "காதலை வேண்டிக் தவிக்கின்றேன்” என்றது.
உடனே கவிஞர் உனக்கு காதலர் வாய்
அறிவும் வடிவும் குறுகிய பறவை இனத்தின் மொழியையும் கேட்கும் திறன் பெற்றுள்ளே காதலை வேண்டிக் கரைகின்றேன் என்றது. மீண்டும் சோலை நோக்கி திரும்பின. இதனை
கூர்மதி

று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 1வம்.
ன்பதனால் கவிதை பற்றிய கவிதை என்றும் றவனோடு சேரவிடாமல் தடுக்கும் ஆசைகளே அடிப்படையிலும் பொருள் கொள்ளப்படலாம் டின் கடைசியிலே அவரே. "ஆன்ற தமிழ்புலவீர் விரிந்து பொருளுரைக்க யாதானுஞ் சற்று லிருந்து அறியலாம்.
டுத்துக் காட்டுவதனால் இங்கு ஆன்மீகச் நோக்கலாம்.
மைகளாலும், கொடுமைகளாலும் விடுபடும் ண்டாரோ எனவும் எண்ண முடிகிறது.
5 மலர்ந்தது. காதல் புரிந்தது. காதலுக்கு றுபிறப்பிலாவது காதல் கைகூடும் என்ற ன மானிட வடிவில் கண்டு உண்மையை
மோகப் பெருமயக்கில் சில போழ்திருந்து”
ட்டு பொய்யாய், கனவாய், பழங்கதையாய் ாப்போடு மாயமாக மறைந்துவிடுகிறது.
பாலையில் காலைப் பொழுதில் பெண் குயில் ல் ஓசையை கவிஞர் கேட்டு மனித உரு நந்தார். பெண் குயில் பாடிய பாடலானது.
"தல் காதல்
காதல் போயிற் ல் சாதல்.... டல் கூடல் 5மரன் போயின் ல் வாடல்.....''
முற்று தலை குனிந்து வாடி அமர்ந்திருந்த படே திரவியமே பேரின்பப் பாட்டுடையாய் பிழை உனக்கு எய்தியதேன் பேசாய்” என கரைகின்றேன் இல்லை சாதலை வேண்டி
க்காததற்கு காரணம் யாதென வினவினார். D பிறந்தாலும் இறையருளால் அனைவரதும் ன். பாட்டில் நெஞ்சைப் பறிகொடுத்த நான் இவ்வேளை வெளியே சென்ற பறவைகள் க் கண்ட குயில் இவ்வின்பத்திற்கு இடையூறு
137

Page 158
மூண்டதுவே எனக் கூறி கலங்கி நான்கா கொண்டது. கவிஞரும் பிரிந்து சென்றார்.
குயிலும் குரங்கும் கவிஞரும் ஆவல் மேலீட்டால் ஒரு நாள் முந்திய நாள் கண்ட மரத்தில் குயில் : ஒன்றுடன் பேசிய வண்ணம் இருந்தது. தன் குயிலையும் குரங்கையும் வெட்ட வாளினை சொற்களைக் கேட்டு கவிஞர் மயங்கி புகழ்ந்துரைத்தது.
மகிழ்ச்சிக்கு மயங்கிய குரங்கு
"தாவிக் குதிப்பதுவும்
ஆவியுருகுதடி ஆவ கண்ணை சிமிட்டுவதும் மண்ணைப் பிராண்டிபெ
குயிலும் மாடும் கவிஞர் மூன்றாம் நாளும் சோலைக்குச் சொல்ல காளை மாடொன்று ஆவலுடன் போலவே வாளினை வீச நினைத்தும் இப் கொல்லுதலே நன்றென மறைந்து நின்றார்.
66
பெண்டிர் மனதைப் பி
காமனே மாடாகக் கா பூமியில் மாடு போற் பெ
என்று புகழ்ந்தது. குயில் மேலும் உன் அழ உரைப்பதில்லை எனினும் யானே முதலில் 2 எனவும் கூறி காதல் எனும் பாட்டை மீண்டு இரண்டும் தப்பின.
நான்காம் நாள் குயிலும் கவிஞரும் குயில் நான்காம் நாள் தன்னுருக் காட்டி குயிலிடம் கவிஞர்,
"நீசக் குயிலே நிலை ஆசைக் குரங்கினையும்
எண்ணி நீ பாடும் இ. நண்ணியிங்கு கேட்க நடத்
தன் ஆற்றாமையை மொழிந்தார். குயிலும் தம்
இவ்விடத்திலே பெண்கள் முதலில் காதல் திருக்குறள் போன்றன கூறும் கருத்துக்கள்
(138)

ம் நாள் வருக எனக் கவிஞரைக் கேட்டுக்
[ விட்டு மறுநாள் சோலைக்குச் சென்றார். அமராமல் வேறொரு மரத்தில் ஆண்குரங்கு னை வஞ்சித்து விட்டதாக உணர்ந்த கவிஞர் எடுக்க முற்பட்டார். ஆனாலும் குயிலிசைக்கும் நின்றார். குயில் குரங்கினை பலவாறாக
தாளங்கள் போடுவதும் ஹா ஹா என்பதுவும் - காலாலும் கையாலும் பங்கு வாரியிறைத்தது.''
கவிஞர் வெட்ட முயன்றார் இரண்டும் தப்பின.
சென்றார். மரத்தின் மேல் அமர்ந்து கதை கதை கேட்டது. கவிஞர் வெகுண்டு முன் பறவை சொல்லும் மொழி கேட்டதன் பின்
குயில் மாட்டை நோக்கி
நந்தியே டித்திழுக்கும் காந்தமே ட்சி தரும் மூர்த்தியே பாற்புடைய சாதியுண்டோ”
ழகில் மயங்கினேன் எனவும் மாதர் காதலை உன்மேல் கொண்ட காதலை உரைக்கின்றேன் நம் பாடியது. கவிஞர் முன்போல வாள் வீச
கவிஞரை சோலைக்கு அழைத்து வந்தது.
-யறியாப் பொய்மையே
அன்பான ரெருதினையும் ழிந்த புலைப் பாட்டை ந்தி வந்தாய் போலுமென”
ன் பழமை வாழ்க்கையை கூறத்தொடங்கியது.
லைக் கூறுவதில்லையென தொல்காப்பியம்,
நோக்கப்படக் கூடியன.
- கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 159
"தன்னூறு வேட்கை 4 எண்ணுங் காலை 8 பிறநீர் மாக்களின் பொய்நீர் போலும்
இங்கு பாரதியார் புதுச்சேரிக்கு வரமும் எண்ணினார் போலும் எனவும் கொள்ள இட என்ற வேடனின் மகளாக மிகுந்த அழகுடன் தன் பழம் பிறப்பின் ஊடாக உணர்த்திய இரக்கமாக மாறியதும் குரங்கனுக்கு மனையா குயிலி இளவரசனைக் கண்டு காதல் கொல தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டன.
சின்னக்குயிலி இளவரசனுடன் தன்னை குரங்கன் நெருங்கி வந்து பார்த்து விட்டான்.
"பட்டப்பகலிலே பாவி ம
கண்ணாலங் கூட இன்னும் மண்ணாக்கி விட்டாள் என் மானம்
இச்செய்தியை கேள்வியுற்ற மாடன் அங்கு 6
"நீரோடும் மேனி நெரு
வருகின்றான் கண்ட கொண்டதோ பெரும்
- காதலர் நெஞ்சம் தேவ சுகம் கண்டு வி ஆவிக்கலப்பின் அ
மேவிக்கிட
இவ்வாறு தேக சுகத்தில் மூடிய விழிகள் நா பறந்த விழிகள் நான்கு இத்தகையதொரு இ
"ஆன்ற தமிழ்ப்புலவீர்
வேதாந்தமாக விரித்து யாதானுஞ் சற்றே இட
என்ற கூற்றிற்கு விடை கொடுப்பது போல இ மாடு குரங்கு ஆகிய இச்சைகள் தடுப்பது ே
கூற்று மூலம்
"இன்னமும் பிறவி உண்( நின்னுடனே வாழ்வினி
என்ற அடி மறுபிறப்புக் கோட்பாட்டை வலியுற
கூர்மதி.

கழிவன் முற்கிழத்தல் நிழர்த்திக்கில்லைப் அறிய ஆயிடைப் முணர்விற் றென்ப”
- தொல், பொருள், களவு 118
ன்பு தன் வாழ்வில் நிகழ்ந்த செய்திகளை -முண்டு. குயில் முற்பிறப்பில் வீரமுருகன் சின்னக் குயிலியாக தோன்றிய செய்தியை து. குயிலி மாடனுடன் கொண்ட காதல் ட்டியாக வருவதற்கான ஏற்பாடுகள் நடந்ததும் ன்டதும் அதன்பின் நிகழ்ந்தவையும் இங்கு
மறந்து இவ்வுலகை மறந்து நின்ற வேளை
லகள் செய்தியைப் பார்
ங் கட்டி முடியவில்லை தொலைத்து விட்டாள்....
எனக் கூறுகின்றான்.
வருகின்றான்.
ப்போடும் கண்ணுடன் பதும் ஒரு காட்சி 5 சீற்றம் ஆனால் > சுகம் கண்டு. ழியே திறக்கவில்லை முத சுகத்தினிலே ர்ந்தனர்”
நன்கு வெங்கொடும் சீற்ற நெருப்பில் பொறி இடம் பாரதியார் இறுதியில் கூறியது போல
கற்பனையேயானாலும் - பொருள் உரைக்க டமிருந்தாற் கூறீரோ”
ளவரசன் ஆகிய பிரமத்தை அடையவிடாது. பாலவும் அதே வேளை இளவரசன் கூறும்
B மாதரசே இன்பமுண்டு
நேரும் பிறப்பினிலே”
அத்துவது போலவும் அமைந்து விடுகின்றது.

Page 160
குயிற்பாட்டு பாரதியாரின் கனவாகவே தே விடலாகாது. இதே வேளை தமிழர் பண்பாட் இங்கு குறிப்பிடக்கூடியது.
"பத்தினியாய் வாழ்வதல்லால் நந்தி விலை மகளாய் நா பொன்னடியைப் போற்றுக
என்று உரைப்பதும் ஆனால், அவன் மீது எழு என உள்ளம் வருந்துவதும் அரசன் மகளே வேத முறையில் விவாகம் செய்வேன் என் பளிச்சென்று முத்தம் கொடுத்து விட்டான்.
இவ்வாறு அமையும் குயிற்பாட்டின் இறுதி போவதையும் வெளிக்காட்டி இதனை நிறை
தேடுக:
"..........கற்றவர்க்கு சொல்வே சாற்றினிலே பண்கூத்தெனு
ஏற்றி அதனோடே இன்ன காதல் வெயிலிலே காய
மாத வளி மேனி வகுத் பெண்ணவளைக் கண்டு டெ
நண்ணித் தழுவி நறு முத்தமிட்டு முத்தமிட்டு,
சித்தம் மயங்கி சில! பக்கத்திருந்த மணிப் பாவை ஒக்க மறைந்திடலும் ஓஹோ
பிறகு விழி திறந்து சூழ்ந்திருக்கும் பண்டை பத்திரிகைக் கூட்டம் பழம் ஒத்திருக்க நாம் வீட்டில் உ சோலைக்குயில் காதல் செ
மாலை அழகின் மயக் தோன்றியதோர் கற்பனையில் சூழ்ச்
இவ்வாறு பாரதியாருடைய பல்வேறுபட்ட பாடல் கவிஞன் ஒருவனின் ஆழ்ந்த கற்பனை அலு வெளிப்படுத்தி நிற்கின்றது என்பது வெளிப்ப
(140)

Tற்றம் பெற்றது என்பதனை நாம் மறந்து உடையும் நுணுக்கமாக எடுத்து இயம்புவதும்
- பாவேந்தர் தாம் எனினும்
ங்கள் குடி போவதில்லை கின்றேன் போய்வருவீர்”
அந்த காதலினால், என்னை விட்டு போயினீரே ரா அவளே மனையாட்டி என வாக்களித்து Tறுரைத்து கண்களில் கண்டு கன்னத்தில்
யில் பாரதியார் தனது கனவு குலைந்து வு செய்கின்றார்.
பன் கவிதை கனி பிழிந்த ம் இவற்றில் சாரமெலாம் னமுதை தான் கலந்து 1 வைத்த கட்டியினால் தான் பிரமன் என்பேன் பருங்களி கொண்டாங்ஙனே ங்கண் ளிதழினையே
மோகப் பெருமயக்கால் மோழ் திருந்தபின்பே
வயுடன் சோலையெல்லாம் ! எனக் கதறி வீழ்ந்தேன். வ பார்க்கையிலே க் சுவடி எழுதுகோல் பாய் - வரிசையெல்லாம் ள்ளோம் என உணர்ந்தேன் என்ன கதை அத்தனையும் கத்தால் உள்ளத்தே
சி என்றே கண்டு கொண்டேன்."
ப்களில் குறிப்பாக குயிற்பாட்டும் உண்மைக் வபவம் எவ்வாறு வெளிப்படும் என்பதனை
டை.
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 161
கல்வியின் மூன்று பிள்ளையின் க
ஆசிரியர், மட்/மாங்கேணி றே
காலத்தால், காலத்தின் கோலத்தால், கய அழிக்கமுடியாத அரும்பெரும் செல்வமாக
இக்கல்வியானது மானிடவியல் வரல தொடர்வதாக நம்பப்படுகின்றது. அதுமாத்தி அதனைத்தொடர்ந்து வருகின்ற ஏழு பிற உதவுவதாகவும் கூறப்படுகின்றது.
எனவேதான் "கற்கை நன்றே க நன்றே'' எனச் சொல்லப்படுகின்றது.
முகத்திரண்டு புண்ணுடையார் கல்லாதவர் 'வள்ளுவம்' விளக்கம் சொல்லி நிற்பதும்
ஆதலால் தான் கல்வியியலில் 'கற்றம் பெறுகின்றது. அந்த வகையில் கற்றலும், க கணிப்பீட்டு மதிப்பீட்டுச் செயற்பாடுகளும் பிள்ளையின் கல்வி உன்னத நிலையை - இன்றைய கல்வி உலகினதும் அசைக்க முடி
உலகமானது ஒவ்வொரு கணமும் கண்டு வருகின்ற இன்றைய நிலையில் க உள்வாங்க வேண்டி இருக்கின்றது. அவ்வாறா ஏற்படவேண்டும் என்பதற்காக நம்மை நாம் பண்புகள், சமூகத்திறன்கள் ரீதியாக மா மூலமாகத்தான் மாணவர்களின் அத்தியாவசிய இலக்குகளையும், கல்வித்தர மேம்பாட்டினைப் முடியும்.
இந்தக்கட்டுரையினது பிரதான நோ ஆராய்வதோ, முன்னோர் மொழிந்த கல்வ அல்ல. மாறாக புதிய சிந்தனைப்புலத்தில் படிநிலைகளை வகைப்படுத்தலாம்' என, சொல்வதும், பிள்ளையின் கல்வியில் செல் அந்த ஆராய்வின் மூலமாக பிள்ளையின் இக்கட்டுரையினது முக்கிய நோக்கங்களாக
கூர்மதி

று படிநிலைகளும் ல்வி நிலைகளும்
திரு. சரவணமுத்து நவேந்திரன் ராமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை
திருமலை வீதி, மாங்கேணி, வாகரை
பவர்களின் கோபத்தால்...... என எவற்றாலுமே விளங்குவது கல்விச் செல்வம் ஒன்றேயாகும்.
பாற்றிலே கருவறை முதல் கல்லறை வரை ரமன்றி ஒருவர் கற்ற கல்வியானது அவருக்கு விகளிலும் உற்ற நண்பன் போல் இருந்து
ற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை "கண்ணுடையோர் என்போர் கற்றோர் ”' என்று கற்றோருக்கும் கல்லாதோருக்கும்
இங்கே நோக்கத்தக்கதாகும்.
ல்', 'கற்பித்தல்' ஆகிய இரண்டும் முதன்மை ற்பித்தலும் அவற்றோடு இணைந்த வகையில் செவ்வனே சிறப்புற அமையும் போதுதான் அடையும் என்பது கல்வியியலாளர்களினதும் யாத நம்பிக்கையாக வலுப்பெற்று வருகின்றது.
பல்வேறு விதமான புதுப்புது மாற்றங்களை கல்வி உலகமும் அத்தகைய மாற்றங்களை ான சாதகமான மாற்றங்கள் கல்விப் புலத்திலே மே அறிவு, திறன், மனப்பாங்கு, ஆளுமைப் ற்றியமைக்க வேண்டியிருக்கின்றது. இதன் பக் கற்றல் தேர்ச்சிகளையும், தேசிய கல்வியின் பும் பயனுறுதி மிக்கவைகளாக மாற்றியமைக்க
பக்கம் கல்வியினது முக்கியத்துவத்தினை பியின் படிநிலைகளைப் பற்றி ஆராய்வதோ ல நின்று கொண்டு 'இப்படியும் கல்வியின் சுயசிந்தனையின் அடிப்படையில் விளக்கம் மவாக்குச் செலுத்துவோர் பற்றி ஆராய்வதும், 1 கல்வி விருத்திக்கு வித்திடுவதும் தான் கின்றன.
(141) 141

Page 162
அந்த வகையில் ஒருவர் அல்லது ஒரு பி மூன்று படிநிலைகளாக எடுத்துக் கூறமுடியும்
1. கருக் கல்வி 2. குருக் கல்வி
3. சுய கல்வி என்பவையே அலை இதே போன்று கற்றல் கற்பித்தலும் கருமத் ெ கொள்ள முடியும்.
1. பெற்றோர்கள்
ஆசிரியர்கள் 3. பிள்ளைகள்
2. ஆசிரி..
ஆகியோரே அந்தப் பங்காளர்கள் ஆவார்கள்
இனி ஒவ்வொரு தலைப்பாக ஆராய வேண்டி
1. கருக்கல்வி
கட்டிடம் ஒன்றுக்கு அத்திவாரம் எவ் அதே போன்று ஒரு பிள்ளையின் வாழ் இன்றியமையாததாகவும் அமைகின்ற கல்வி
கட்டாயமானதும், கண்ணியமான வேண்டியதுமான கல்வியாக இது கருதப்படு உருவானதிலிருந்து கல்வியைப் பெற்றுக் ( பெறவேண்டிய கல்வியாதலால் இதுக் கருக்க
இத்தகைய கருக்கல்வியிலே குருமார்கள் ஒரு பிள்ளை கருவாக உருவாகத் தொடங் அன்பிலும், பண்பிலும், அறிவிலும் போற்றத்த மேலானவளாக விளங்கவேண்டும். போசாக்கு வேண்டும்.
மேலும் பயனுள்ளதும் அறிவை அள்ளி பத்திரிகை, சஞ்சிகைகளையும் சுவாரஷ்யம் போதெல்லாம் வாசிக்க வேண்டும். மகிழ்ச்சிகர பேசவேண்டும். கலந்துரையாடல்களிலே ஈடுப் பொழுதைக் கழிப்பதைத் தவிர்த்துக் கொள்
அத்தாய் நல்லதைப் பார்க்க வேண்டும். கேட்க வேண்டும். பாட்டும் கதையும் படிக்க 6ே செவிசாய்க்க வேண்டும். சிந்தனைத் திறன்க
தாயானவள் எப்போதும் குடும்பப்பா உயர்ந்தவளாகவும், குடும்பத்தில் உள்ள பிள்ளைகளுடன் சண்டை சச்சரவுகளில் ஈடுப இருந்தால் அவற்றைத் தவிர்த்து நடந்து (
142

பளை பெற வேண்டிய கல்வியை பின்வருமாறு
களாகும். தாடரில் பங்காளர்களாகப் பின்வருவோரைக்
யது அவசியமாகின்றது
வளவு அவசியமானதாக அமைகின்றதோ, நாட் கல்விக்கு அடிப்படையானதாகவும்,
இக்கருக்கல்வி ஆகும்.
முறையில் பிள்ளைக்குப் புகட்டப்பட கின்றது. அதாவது ஒரு பிள்ளை கருவாக கொள்வதாகக் கூறப்படுகின்றது. கருவிலே கல்வியாகின்றது.
ாகத் தாயும் தந்தையும் விளங்கக் காணலாம். கியதிலிருந்து அத்தாய் முன்னரிலும் விட கு நல்ல உயரிய குணநெறி முறைகளிலும் நிறைந்த உணவு வகைகளை உட்கொள்ள
வழங்கக்கூடியதுமான பற்பல நூல்களையும், ான விடயங்களையும் நேரம் கிடைக்கும் மான முறையில் மற்றவர்களுடன் கதைத்துப் உவேண்டும். தேவையற்ற முறையில் வீணே
ள வேண்டும்.
நல்லதைக் கதைக்க வேண்டும். நல்லதைக் பண்டும். பற்பல புதுமைக் கருத்துக்களுக்குச்
ளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
பகு நிறைந்தவளாகவும், குணநெறிகளில் - மற்றவர்களுடன் குறிப்பாக கணவன், டாதவளாகவும் இருக்க வேண்டும். அவ்வாறு கொள்ள வேண்டும். சமயோசித புத்தியும்,
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 163
சமநிலை ஆளுமைப் பண்புகளும், அன் சந்தர்ப்பங்களிலும் முன்மாதிரியாக நடந்து 6 மிகமுக்கியமான குருவாகக் கருவைச் சும
இதே போன்று பிள்ளைகளுக்குத் தந்ல மற்றையவர்களுடன் அமைதியாகவும், அன்பா மனைவியோடு எப்போதும் மலர்ந்த முகத்து அகத்திலோ முகத்திலோ அகோரங்களும், அ வேண்டும். சிந்தித்தே எல்லா விதத்திலும் ( வேண்டும்.
பிரச்சினைகள் குடும்பங்களில் தலை அன்பாகவும், பண்பாகவும் அணுகி நடு நிை அப்பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதில் 6 பூதாகரமாய் உருவெடுப்பதற்கோ, அவை மனைவியோ உடந்தையாக இருக்கக் க
அவள் கண்கலங்கிக் கதறி அழாமலும் கண வயிற்றிலே வளரும் கருவை அது பெரிது அரவணைத்து அறிவுரைகளும், ஆலோசன. கணவனானவர் பெற வேண்டும்.
உறங்கச் செல்கையில் கருவுற்ற ப வீணையின் நரம்புகளாய் விரல்களை ஆக் பாடல்களைப் படிக்க வேண்டும். இதமான, இ வேண்டும். அறிஞர்களின் அறிவுச்சிந்தன ஆகியவற்றை மனைவியோடு பகிர்ந்து செ அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் கட்டியெழு
சுருங்கச் சொன்னால் கணவனானவர் : அறிவுரைகள் கூறுபவராகவும், ஆலே திட்டமிடலாளராகவும், வழிகாட்டியாகவும் எல்லாவற்றுக்கும் மேலாக உயர்ந்ததெ இன்றியமையாததாகும்.
இவ்விதமாக அவர்கள் இருவரும் பா கொள்கின்ற நல்ல நல்ல விடயங்கள் அை பெரிதும் பாடமாகப் பதிந்து விட வாய்ப்பு தான் அதன் முதலாவது வகுப்பறையாகிவி
இத்தகைய கருக்கல்வி சரியான முல் வாழ்நாள் முழுவதுமான கல்வி பிரச்சினை வாழ் நாட் கல்வி முழுமை பெறுவதற்கும், பெறுவதற்கும், சவால்களைச் சந்தித் இன்றியமையாததாகவும் அடிப்படையானதா
உறுதியான அத்திவாரம் இடப்படாத < போகும். இதே போன்றுதான் கருக்க
கூர்மதி 12-CM 013788

பு, பண்புப் பாரம்பரியங்களிலும், எல்லாச் கொள்ள வேண்டும். ஏனெனில் கருக்கல்வியிலே
க்கும் தாய் கருதப்படுகின்றாள்.
மதயாகப் போகின்றவர் தனது மனைவியோடும், கவும், பண்பாகவும் நடந்து கொள்ள வேண்டும். துடனேயே வாழ்க்கையை நடத்த வேண்டும். பூவேசங்களும் தோன்றாமல் பார்த்துக் கொள்ள செயற்பட வேண்டும். சீறிப்பாய்வதை நிறுத்த
லயெடுக்கும் தருணங்களில் மனைவியோடு லத்தன்மையில் நின்று சுமுகமான முறையில் வெற்றி காண வேண்டும். வீட்டுப் பிரச்சினைகள் | வேலிதாண்டிச் செல்வதற்கோ கணவனோ டாது. மனைவியின் மனம் புண்படாமலும், எவன் செயற்பட வேண்டும். இல்லையென்றால் ம் பாதிக்கும். அன்பு காட்டிப் பண்பு காட்டி னகளும் கூறுகின்ற பக்குவ நிலையினைக்
மனைவியின் வயிற்றினை மெது மெதுவாக கித் தடவிய படி இனிமையான பயனுள்ள இன்சுவை பயக்கத்தக்க கதைகளைச் சொல்ல Dனகள், பொன்மொழிகள், நீதிக்கதைகள் காள்ள வேண்டும். அன்பையும், பண்பையும்
ப்ப வேண்டும்.
அன்பானவராகவும், பண்பானவராகவும் இருந்து ாசனைகள் வழங்குபவராகவும் சிறந்த ம், வாழ்க்கைக்கு மிகவும் ஏற்றவராகவும் மாரு குருவாகவும் செயற்பட வேண்டியது
டிக்கின்ற, கேட்கின்ற, பார்க்கின்ற, பகிர்ந்து னத்தும் கருவிலே இருக்கின்ற பிள்ளைக்குப் ஏற்படுகின்றது. பிள்ளை வளரும் கருவறை டுகின்றது.
ஒறயில் அமையாமல் போனால் பிள்ளையின் க்கு உரியதாகவே அமைந்து விடும். ஆக - பிள்ளை ஆளுமைப் பண்புகளில் உயர்வு து வெற்றி காண்பதற்கும் கருக்கல்வி கவும் அமைகின்றது.
கட்டிடமானது நாளடைவிலே உருக்குலைந்து ல்வி சிறந்த முறையில் அமையாமல்
143

Page 164
பிரச்சினைகளுக்குரியதாக அமைந்தால் இதன. குருக்கல்வியும், சுய கல்வியும்... மொத்தத்தில் பி விடும்.
ஆகவேதான் கருவிலே கல்வி தொடங்கப் கொண்டு கவனத்தில் எடுத்து கருமமாற்ற வேண் மிகவும் இன்றியமையாததாக இருக்கின்றது.
2. குருக்கல்வி
கருக்கல்விக்கு அடுத்ததாக 'குருக்கல்வி' இதனைக் குழந்தை பிறந்து வீட்டு மையச் பல்கலைக்கழகம் வரை பெறுகின்ற கல்வியா பாடசாலைக் கல்வியினை கருக்கல்வியின் முக்
'பிள்ளை பாடசாலைக்குச் செல்லும் 6 இருக்கின்றார்கள். கருக் கல்வியிலே இவர்கள் பாங்குகளையும், நடைமுறை ஒழுகலாறுகளைப் பாட்டும் கதையும், பயனுள்ள அம்சங்களும், அம்சங்களும் பிள்ளையைச் சென்றடைவதற்கு ! வேண்டும். பிள்ளையின் பிரச்சினைகளை : காணவேண்டும். அன்பு, காப்பு, கணிப்பு.... பிள்ளைக்கு வழங்கவேண்டும். அறிவுரைகளும், பிள்ளைக்குத் தினமும் போதிக்கப்பட வே
அனைத்தையும் பெற்றோர் விரிவு படுத்திக் கெ
பாலர் பாடசாலைக்குச் சென்று பாலர் க பின்னர் அப்பிள்ளை புதுக்கோலமொன்றைக் காண காண்கின்றது. அன்பையும், பண்பையும்,
ஆசிரியர்களிடமிருந்து பிள்ளை எதிர்பார்க்கின்றது. பிஞ்சு மனங்கள் புண்படா வண்ணம் நிறைவே ஆசிரியர்களின் பிரதான கடமையாகின்றது. - அவ்வாசிரியர்கள் பிள்ளையின் தாய் போல் சந்தர்ப்பங்களிலும் செயற்படவேண்டி இருக்கின்றது ஊட்டுகின்ற குருமாரும் பெற்றோரைப் போலவே கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. பால்
அதனைத் தொடர்ந்து வருகின்ற கல்வி பிள்ளை
பாடசாலை என்பது பண்பாட்டு பொக்கிசம் அவசியமோ அதே போன்று வித்தியாலயமும் கோயில் இல்லாத ஊர் குடியிருக்க உதவாதத எனும் உயரிய நிறுவனம் இல்லாத ஊரும் பாழ என்பது வித்தைகளுக்கு அதிபதியான 'சர வழங்குகின்ற நிலையமாக இருக்கின்றது.
எனவே இங்கே கல்வித் தெய்வத்தின் ப கல்வியைப் போதிக்கின்ற ஆசிரியர்கள் ஆசிரியர் பணியாகவும் கொண்டு அர்ப்பணிப்போடு செயற்
14
கன

மன அடுத்துப் பிள்ளை பெற வேண்டிய பிள்ளையின் முழுக்கல்வியும் பாதிக்கப்பட்டு
ப்பட்டு விடுவதனை பெற்றோர் கருத்திலே எடியது இன்றைய கல்வியியல் உலகுக்கு
அமைந்து முக்கியத்துவம் பெறுகின்றது. - சூழலிலே பெறுகின்ற கல்வி முதல் கக் கொள்ளமுடியும். இந்த வகையில் கியமானதோர் கூறாகக் குறிப்பிடமுடியும்.
வரை இங்கும் பெற்றோரே குருமாராக - கடைப்பிடித்த சீரிய கூரிய சிந்தனைப் பும் விரிவுபடுத்த வேண்டி ஏற்படுகின்றது. அன்பும் பண்பும் உள்ளிட்ட ஆளுமை தாயும், தந்தையும் பேருதவியாக அமைய அறிந்து அதற்கேற்ற பரிகாரங்களைக்
முதலானவற்றை சரியான முறையில் . ஆலோசனைகளும், நெறிமுறைகளும், ண்டும். பிள்ளை வளர வளர இவை பாண்டே செல்ல வேண்டும்.
ல்வியினைப் பிள்ளை பெறத்தொடங்கிய த்தொடங்குகின்றது. பல புது முகங்களைக் - அரவணைப்பையும் பாலர் கல்வி அதனால் அத்தகைய எதிர்பார்ப்புக்களை ற்றி வைக்க வேண்டியது பாலர் கல்வி அவற்றை நிறைவேற்றி வைப்பதற்காக மவும், தந்தை போலவும் அனைத்துச் து. சுருங்கக் கூறினால் பாலர் கல்வியினை கவனமாகவும், கண்ணியமாகவும் நடந்து மர் கல்வி சிறப்பாக அமைந்தால் தான் எக்கு அருமையானதாக அமையும்.
மாகும். ஒரு ஊருக்கு ஆலயம் எவ்வளவு - அவசியமானதாகக் கருதப்படுகின்றது. மாக ஆகிவிடும். அது போல் பாடசாலை ாய்ப் போய்விடும். மேலும் வித்தியாலயம் ஸ்வதி தேவி' வீற்றிருந்து கல்வியை
பார்வை வீச்சின் மத்தியிலே பிள்ளைக்கு ப பணியை அறப்பணியாகவும் தெய்வீகப்
பட வேண்டியிருக்கின்றது.
வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 165
முதலாம் தரம் தொடக்கம் க.பொ.த. பிள்ளை பெறுகின்ற பாடசாலைக் கல்வியான இதனால் கல்வியைப் போதிக்கின்ற குருமார் வேண்டிய தேவை இன்று எழுந்திருக்கின்றது
ஆசிரியர் மையக்கல்வி புறக்கணிக்கப் நிலையில் பள்ளிக் கூடத்தினைச் சிறைக் கூடமாய்ப் பிள்ளை நோக்கத்தக்க வகையி செயற்பாடுகளுடன் கூடியதாக வினைத்திறன் செல்வதாக ஆசிரியர்கள் முன்கொண்டு செ6
"பிள்ளை தனியே செயற்படாது ! ஈடுபடுபவனாக இருத்தல் வேண்டும். கல்6 கைகோர்த்துச் செல்ல வேண்டும்.'' என்று "வகுப்பறைச் சுவர்கள் வெறும் சுவ சுவர் களாகவும், உணர்வு பூர்வமான அமைக் கப்படல் வேண் டும் ” என்று அறிவுறுத்துவதற்கமையவும் வகுப்பறைச் செய முறையில் மகிழ்ச்சியையும், பங்கு பற்றுதலை செல்ல வேண்டியது இன்றைய ஆசிரியர்களி
இவ்விதமாக பாடசாலைக் கல்வி முன் கல்வியியற் கல்லூரிக் கல்வியையோ, பல்க அனுமதியைப் பெறும். மாணவர்கள் கல்ல அவர்களுக்கான 'குருமார்களே' போதனாசிரிய பட்டுச் செல்வதனைக் காணமுடியும். இவ் என்பது அர்ப்பணிப்புடன் அயராது அறப்பணியா பெற்று விடுகின்றது.
3. சுயகல்வி ஒரு பிள்ளை பல்கலைக்கழகக் கல்வி முதலா சுயகல்வி அமைகின்றது. கருக்கல்வியும், குரும் விட்டால் ஒரு பிள்ளைக்குச் "சுயகல்வி'' எ6 தேடலும் அத்தேடல் மூலமான "மேன்மே அதிகரித்துச் செல்வதனை அவதானிக்க மும்
"சீன தேசம் சென்றேனும் சீர் கல்வியை நல்வாக்கும் சுயகல்விக்கே மிகவும் பொருத் மேற்சொன்ன மூன்றுவிதமான கல்வியும் பிள்
அடுத்ததாக குருக்கல்வியிலே முதன்மையும் கல்வியிலே பெற்றோர், ஆசிரியர்கள், பிள் செலுத்துவதனைக் காணமுடியும்.
"தனிமரம் தோப்பாகாது" என்பதற்கேற்ப உயிர்த்துடிப்பான செயற்பாடுகளின் மூலமே பி முடியும். அதாவது பெற்றோரும், ஆசிரியர்க
கூர்மதி

சாதாரண தரம், க.பொ.த. உயர் தரம் வரை து அதன் வாழ் நாட் கல்வியின் மையமாகும். மகள் மைய விசைச்சக்கரமாகத் தொழிற்பட
பட்டு மாணவர் மையக் கல்வி புகுத்தப்பட்ட
கூடமாய் அல்லாமல் சிறப்பான கல்விக் ல் குறிப்பாக வகுப்பறைச் செயற்பாடுகளை மிக்கதாக்கி விளைதிறனை நோக்கி இட்டுச் ல்லல் வேண்டும்.
பார்த்திருப்பவனாக அன்றி உயிர்ப்பாக வியானது உயிர்ப்பான அனுபவங்களுடன் - அன்று "ஜோன்டுயி” கூறியதற்கேற்பவும் ர் களாய் அல்லாமல் அவை பேசும் தாகவும், உயிர்த்துடிப்புள்ளதாகவும்
இன் று "யுனிசெப்”' நிறுவனமானது. ற்பாடுகளை, 5E முறைகளை கவர்ச்சிகரமான யும் தூண்டக்கூடிய விதத்தில் முன்கொண்டு ன் உன்னதமான பணியாகின்றது.
கொண்டு செல்லப்படும் போது தான் பிள்ளை லைக்கழகக் கல்வியையோ பெறுவதற்கான வியில் படி உயரும். இந்த நிலைகளில் ர்களாகவும், விரிவுரையாளர்களாகவும் விரிவு வகையில் பொதுவாக "ஆசிரியத்துவம்” க மேற்கொள்ளப்பட வேண்டிய மகிமையைப்
னவற்றினையடுத்துப் பெறுகின்ற கல்வியாகச் க்கல்வியும் சிறப்பான முறையிலே அமைந்து எபது சுயமாகவே வந்துவிடும். இங்கே சுய லும் கற்க வேண்டும்" எனும் துடிப்பும் வயும்.
ப் பெறுக” என்ற நபிகள் நாயகத்தின் தமானதாக அமைந்து விடுகின்றது. ஆக, ளைக்கு இன்றியமையாததாகும்.
, முக்கியத்துவமும் பெறும் பாடசாலைக் மள என முத்திறத்தாருமே செல்வாக்குச்
இந்த முத்திறத்தாரின் கூட்டொருமித்த, ள்ளையின் கல்வியை மேலோங்கச் செய்ய நம் பிள்ளையின் கல்வி தொடர்பில் கூடிய
145

Page 166
கவனத்தோடும், கரிசனையோடும் கண்ணிய எல்லாவற்றையும் உணர்ந்து கற்க வே பங்காற்றும்போது தான் முழுமையான கல் குற்றம் குற்றமாகவே இருக்கும். "மூவரிடத்
இவ்வாறாக பிள்ளையானது கருக்கல்வியைய பெற்று சுயகல்வியையும் திறம்படப் பெறு கொள்கைகள் அமைய வேண்டும். பாடசாலை பிள்ளையும் ஒருமித்துச் செயற்பட வேண்டும் கல்விக்கு வழிவகுக்கும்.
A G852
கீழே விழாமலேயே இரு ஆனால் விழுந்த போதெல்ல
அது தான் கா.
(146)

பமாகச் செயற்பட வேண்டும். பிள்ளையும் ண்டும். முத்திறத்தாரும் முழுமையாகப் வியைப் பெற முடியும். இல்லையென்றால் திலும் அது இருக்கும்.
பும், குருக்கல்வியையும் சரியான முறையிலே 3வதற்கு தயார் படுத்துவதாகக் கல்விக் லக் கல்வியிலே பெற்றாரும், ஆசிரியர்களும், D. முழுமையான பங்களிப்பே முழுமையான
கடுகு ப்பதில் பெருமையில்லை மாம் எழுந்து நிற்கின்றோமே
பெருமை.
கே?
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 167
இந்துபாப்
சிற்பம்
திருமதி. இர
ஆசிரின
ஒரு நாட்டில் வாழும் மக்களது பண்பாடு ! அம்சங்களில் கலை, சமயம் ஆகிய இர உருவம் கொடுக்க முனைந்த போது கலை கலையால் சமயம் உயர்ந்தது. மேலைத்தேச வளர்ந்து வந்துள்ளன எனலாம். ஆலயங்கள் கட்டிடம், சிற்பம், ஓவியம், இசை, நடனம்
மனித இனம் ஆன்மீக ஈடேற்றத்தை கலைகளுள் தலையாயதும் அற்புதமாகிய க கலை. இது காண்பவரின் உள்ளத்தில்
ஆகிய இவை நான்கினையும் வெளிப்படுத்த இக்கலை வளர்ந்து வருகின்றது. நிலைய ய சமைக்கப்பட்ட சிற்பங்கள் பன்நெடுங்கால் மகோன்னத நாகரிகச் சின்னமாக, கலைக் வருவதைக் காண்கிறோம். கற்பனைத்திறத் சிற்பிகள் வகுத்துத் தந்த நெறி முறைக் உருவாக்கி அழியாக் கருவூலங்களாகப் நல்லுலகின் தனிச்சிறப்பாகும்.
தமிழகமே சிற்பக் கலைக்கூடம். நாடெ கட்டடங்களையும், எண்ணற்ற சிற்பங்களை சமுதாயத்தின் உயர்ந்த இலட்சிய வாழ்க் நுட்பங்களை புலனாக்குகின்றன. ஒவ்வொ காட்டு. திருக்கோயில்களில் காணும் சிற் உலோகம், மரம் ஆகியவற்றால் செய்யப்பட்ட வருகின்றோம். இவை நமது முன்னோர்களி அவர்களின் வாழ்க்கை வளத்தைச் சித்தரி
சிற்பக் கலைபற்றிக் கூறும் நூல்கள்
சிற்பக்கலை பற்றி எடுத்தியம்பும் நூல்கள் விசுவகர்மீயம், விஸ்வகாரம், காசியம், மா சித்ரகர்ணம், ஸ்ரீதத்துவ நிதி என்பன கூறப்
சிற்பிகளுக்குரிய இலக்கணம்
சிற்பிகளை கற்கவி என்றும் பெயர் சூ சிற்பிகளுக்கு அவர்கள் கடைப்பிடிக்க 6ே
கூர்மதி

எளின் மரபில் ஏகலை
ராஜினிதேவி சிவலிங்கம் B.A.Dip.in.Edu யை யா/கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி, கோப்பாய்
நாகரிகத்தை வெளிப்படுத்தி நிற்கும் பல்வேறு ண்டும் முதன்மை பெறுகின்றன. கடவுளுக்கு - தோன்றியது. சமயத்தால் கலை வளர்ந்தது. சத்துக் கலைகள் யாவும் ஆன்மீகம் சார்ந்ததாக ளை மையமாகக் கொண்டே நுண்கலைகளான
ஆகியன வளர்ச்சி பெற்றன.
5 அடிப்படையாகக் கொண்டு தோற்றுவித்த லை சிற்பக் கலையாகும். இது ஒரு தெய்வீகக் அமைதி, மகிழ்ச்சி, வியப்பு, ஆன்மதிருப்தி த்துவதாக அமைகின்றது. தொன்று தொட்டு பாக்கை கொண்ட சிற்பிகளின் கைத்திறத்தால் மமாக நிலைத்து மானிட இனம் போற்றும் 5 கருவூலமாக எல்லோராலும் போற்றப்பட்டு தின் வடிவாக்கமாக முனிவர்கள், தெய்வீகச் நக்குட்பட்டுப் பல கவின் மிகு சிற்பங்களை பாதுகாத்து வந்த பெருமை தமிழ் கூறும்
டங்கும் பல்லாயிரக் கணக்கான திருக்கோயில் யும் இன்றும் காணலாம். அவை நமது தமிழ் கையை, பண்பாட்டுச் சிறப்புக்களை, கலை ரு கலைச் சின்னமும் ஒவ்வோர் எடுத்துக் பங்கள் யாவும் காலத்தால் அழியாத கல், உவையாகும். இவற்றை இன்றும் நாம் வழிபட்டு ன் நிலையைப் போற்றும் சின்னங்களாகவும், ப்பவையாகவும் அமைந்துள்ளன.
ாக மயமதம், சில்பரத்தினம், சகலாதிகாரம், னசாரம், சரஸ்வதீயம், சித்ரகர்ணம், பிராமிய படுகின்றன.
ட்டி அழைத்தனர். சிற்பங்களை உருவாக்கும் வண்டிய நெறிமுறைகள், வாழும் வகைகள்
-147

Page 168
குறித்து ஒரு தெளிவான இலக்கணமே ? இலக்கணமாகும் என்று தெளிவாக்கப்பட்டுள்ள ஆன்மத் தூய்மையுடையவராகவும், கைதே பெற்றவராகவும், அளவிலக்கணம் அறிந்த ஓவியராகவும், பல்வேறு கலை மரபுகளை உ6 கற்றவராகவும், தார்மிகராகவும், தயையுள்6 உண்மையே பேசுகின்றவராகவும் இருத்தல் : பகர்கின்றன. (மயமதம் 23 முதல் பாகம்) சி வேண்டிய பொருளின் வடிவத்துடன் ஒன்றிய
வழிபாட்டிற்குரிய தெய்வத் திருவருவர் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அவையாவன
"கல்லும் உலோகமும்
மண்ணும் சுதையும் த கண்ட சருக்கரையும் பத்தே சிற்பத் தொழி
பிங்கலந்தை
இதே மூலப் பொருள்கள் ஏனைய சிற்பம் என்பதைப் பண்டைய ஏடுகள் மூலம் அறிகி சிற்பங்கள் என்றும் உலோகத்தால் செய்யட் கொண்டு செய்யப்பட்டவை படிமத் திருவுருவ குறிப்பாக ஆலய மூலவர்களாகவும், உற் வருகின்றன.
சிற்பங்களின் வடிவமைப்பைப் பல வகை அமைக்கப்படும் சிற்பம் முழுவடிவச் சிற்பம் என புடைப்புச் சிற்பங்கள் என்றும் பிரித்துக் க தெய்வத் திருமேனிகளும், உற்சவ மூர்த்திகளு கோஷ்டங்களிலும் கோயில்களின் சுவர்களி சிற்பங்களாக அமைக்கப்படும். இத்தகைய சிற்பங்கள், தாழ் புடைப்புச் சிற்பங்கள் என் செதுக்கப்படும் பொருளின் மேற்பரப்பிலும் வடிவம் அதனிலும் தாழ்ந்து இருக்கும் படி அழைக்கப்படும்.
விக்கிரகக் கலையின் வளர்ச்சி
இதுவரை காலமும் இந்திய நாகரீகத்த முயன்றவர்களுக்குப் பிரமிக்கும் வகையில் சிந் அந்த வகையில் மொஹெஞ்சதாரோவில் கின கல்லிலாகிய ஆணின் உடற்குறை என்பவற் புகழ்ந்து கூறியுள்ளார். இங்கு கிடைத்த 6 உருவம் சிந்துவெளி மக்களின் சிற்ப அறிலை சிலைகள் நடனஞ் செய்வதற்கு ஏற்றவாறு இச்சிலைகள் சிவபிரானினது நடனக் கோள் றோலண்ட் என்ற அறிஞர் குறிப்பிடுகின்றார்.
(148)

உருவாக்கப்பட்டு அவை சிற்பிகளுக்குரிய ன. சிற்பி என்பவர் அறிவுணர்வு மிக்கவராகவும் சர்ந்த கைவினைஞராகவும், கணித அறிவு வராகவும், கலை வளம் தெரிந்தவராகவும், ணர்ந்தவராகவும், வரலாற்று இலக்கியங்களை எவராகவும், பொறாமை இல்லாதவராகவும், வேண்டும் எனப் பல்வேறு பண்டைய நூல்கள் ற்பக் கலைக்கு இன்றியமையாதது படைக்க
சலனமற்ற மனமே எனலாம்.
பகள் அமைப்பதற்கு 10 மூலப் பொருள்கள்
- செங்கல்லும் மரமும் தந்தமும் வண்ணமும் மெழுகும் என்றிவை லுக்(கு) உறுப்பாகும்”
பகளை வடிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன ன்றோம். கல்லினால் செய்யப்பட்டவை கற் பபட்டவற்றுள் குறிப்பாக ஐம்பொன் கலவை ங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை சேவ மூர்த்திகளாகவும் பயன்படுத்தப்பட்டு
5களாகப் பிரிக்கலாம் முன் பின் வடிவழகோடு ன்றும், முன்புறம் மட்டும் காட்டும் சிற்பங்களை கூறலாம். திருக்கோயில்களில் முதன்மைத் ம், முழுவடிவச் சிற்பங்களாக அமைக்கப்படும். லும் அமைக்கப்படும் சிற்பங்கள் புடைப்புச் புடைப்புச் சிற்பங்களை உயர் புடைப்புச் றும் கூறுவர். புடைப்புச் சிற்பத்தின் வடிவம் பிதுங்கி நிற்கும். மேற்பரப்பைக் கடைந்து
அமைக்கும் சிற்பம் குடைவுச் சிற்பம் என
நின் ரிஷிமூலத்தை வேற்று நாடுகளில் தேட மது வெளி ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகின. Dடத்த தாடியுடைய மனிதனின் சுண்ணாம்புக் றைப் பார்த்த சேர் ஜோன் மார்சல் அதுபற்றி வெண்கலத்தால் செய்யப்பட்ட நடனமாதின் வப் புலப்படுத்துகின்றது. வேறு சில உருவச் 3 நிற்கும் கோலத்தில் அமைந்துள்ளன. பத்தின் முன்னோடியாக அமையலாம் என
- கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 169
இருக்கும் வேதப் பாடல்களில் சிற்பம் மேலும் இக் காலத்தில் குறிப்பிடப்படும் விள தொடர்புடைய பெயராகக் கருதப்படுகின்ற பாடல்கள் விஸ்வகர்மன் என்ற தெய்வத்தி
ஆகமங்கள் இறைவனின் திருவுருவா எடுத்துரைக் கின்றன. காரணாகமம், காமி விதிமுறைகள் உண்டு. திருவுருவங்களில் த கூறுகின்றது. காமிகத்தில் அறுபத்தைந்தாம் திருவுருவங்கள் அவற்றுடன் கூடிய சிற்ப இதிகாசங்களிலே ஒன்றான மகாபாரதத்தில் காணப்படுகின்றன.
புராணங்களைப் பொறுத்த வரையில் அங்கு வைத்துப் பேணப்படும் சிற்பங்கள் சித்தரிக்கின்றன.
மெளரியசாம்ராச்சியத்தின் புகழ்பூத்த ம காணப்படும் போதிகைகளே இந்து நதிப் பள் மிகப்பழைய முதன்மை வாய்ந்த சிற்பங்க விலங்குருச் சிற்பங்கள், புத்தபகவானையும், ! ஆழிகள், பூக்களையும், இலைகளையும் செல்வாக்கை உணர்த்தும் காட்டுருக்களாக
குப்தர்காலக் கலைமரபுகளில் தனித்து சிற்பங்கள் அமைதியும், உறுதியும் வாய்ந்த கம்பீரமானது உதயகிரிக் குகைகளின் வ வராகம் எனலாம். பெரும்புரைக் கடலிலிருந்த தோற்றமானது குழப்பமே அழிவென்னுந் கனன்றெடுத்த ஒரு மாபெரும் சக்தியை எப் இக்காலத்திற்குரியதென கருதத்தக்க அண தேவகணத்தவரிருவர் புடைசூழ புத்தபிரான் பெ உடலுடையராய் எளிமை தோன்ற அமர்ந்த 6 அவர் தம் நெறியைப் போதிக்கின்றனர் முத்திரையைக் காட்டுவனவாய் அமைந்துள் வடிகப்பெற்ற வாயிதழ்களுடன் ஓர் இளைடு
தமிழ் இலக்கிய வரலாற்றுக் காலப்ப விழுப்புண் ஏற்பட்டு இறந்தோருக்கு நினை வழக்கம் இந்நடு கல்லில் இறந்த வீரனது பொறித்து நெய் விளக்கேற்றி வழிபடும் வ சுடுமட்பாவைகள் பற்றியும் கூறுகின்றன. வளர்ச்சிக்கான சான்றுகள் எனலாம்.
சங்கமருவிய காலத்தில் பூம்புகாரி அகன்ற வாயிலில் மடித்த செவ்விதழ்க சூலத்தையும், பாசத்தையும் கொண்ட 8
ககூர்மதி.

க் கலைஞன் திறன் பற்றிக் கூறப்பட்டுள்ளது. ல்வகர்மன் என்ற பெயர் சிற்பவியற்றுறையோடு து. இருக்கு வேதத்தின் பத்தாம் மண்டலப் ன் மீது பாடப்பட்டவையாகும்.
ங்களை உருவாக்கும் சிற்ப நுணுக்கங்களை கொகமம் ஆகியவற்றில் இவை தொடர்பான தீர்மானங்களைப்பற்றி உத்தர காரணாகாகமம் > படலத்தில் பிரதிமாலட்சணம் என்ற பிரிவில் அமைப்பு முறை பற்றி விளக்கப்பட்டுள்ளது. ல் விஸ்வகர்மன், மயன் பற்றிய குறிப்புகள்
தென்னாட்டு திருக்கோயில் வழிபாட்டிற்கும் புராணங்கள் கூறும் தெய்வீகக் கதைகளைச்
மன்னனான அசோகனது காலத்துத் தூண்களில் ளத்தாக்குச் சிற்பங்களை அடுத்துத் தோன்றிய களாகும். இயங்குவது போல் அமைந்துள்ள மௌரியப் பேரரசன் அசோகனையும், குறிக்கும் கொண்ட சித்திர வேலைகள் மேனாட்டுச் பொதிகை வரிச்சுக்களில் இடம் பெற்றுள்ளன.
துவமானது சிற்பக்கலை மரபாகும். இக்காலச் நவை. குப்தர் காலச் சிற்பங்கள் யாவற்றிலும் பாயிலிற் புடைப்புச் சிற்பமாய் அமைந்துள்ள 1 புவியை மீட்கப் பன்றியுரு எடுத்த திருமாலின் தீயசக்திகளுக்கு எதிராய் அறத்தைக்காக்க Dக்கு உணர்த்துவதாய் அமைந்திருக்கின்றது. பிசெய்யப்பட்ட பரிவட்டமொன்று சுற்றியிருப்பு, பருமிதத் தோற்றத்துடன் மெல்லிய உருட்சியான காலத்தில் உள்ளார். அவர் தம் மென்விரல்கள் | என்பதைக் குறிக்குமுகமாகத் தர்மசக்கர ளன. வழக்கம் போல் அவர் முகம் மெத்தென ஞனின் முகம் போன்றுள்ளது.
குதியில், சங்ககாலத்தில் போருக்குச் சென்று வுச் சின்னங்களாக நடுகற்களை எழுப்புவது - உருவத்தைச் சிற்பமாகச் செதுக்கி பெயர் பழக்கம் இருந்தது. இக்கால இலக்கியங்கள் இவை யாவும் இக்காலச் சிற்பக்கலை
எ புறத்தேயுள்ள சுடுகாட்டுக் கோட்டத்தின் ளையும் கடுத்த நோக்கினையும், கையில் எதையால் செய்யப்பட்ட இயமன் உருவம்
149

Page 170
காணப்பட்டதாக மணிமேகலை கூறுகின்றது.
குறிப்பிடத்தக்க காலமாக வரலாற்றாய்வாளர் சிற்ப அமைவுகள் எல்லாம் குகைக் கோயில் பாறைத்தொடர்களிலும் சிறப்பாக அமைக்கப் குகைக்கோயிலிலும் மூன்று கர்ப்பக்கிரக ஆகியோருடைய வடிவங்கள் காணப்படுகின் மகிடாசுர மண்டபக் குகைக் கோயிலின் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சோழர் காலச்சிற்பக் கலை வரலாற்றைப் கருதப்படுகின்றது. தெய்வப் படிமங்கள் நாயன் என்பவற்றைத் தனிக் கற்சிலைகளாக வடிப்பதி காலப்போக்கில் அவற்றை உலோகப்படிமங்கள் வேலைப்பாடுகள் கொண்ட மண்டபங்களை இக்காலத்தில் கற்களினாலே அதிக சிற்ப கொடும்பாளூர் திருக்கட்டளை ஆகிய 2 வீணாதரதட்சணா மூர்த்தியின் சிற்பங்கள் உ திருமேனிகளிலும் கருணையையும் மென்மைத் லோகத்தினாலான அளவில் பெரியனவும் இக்காலத்திற்குரியன.
விஜய நகர காலத்தில் சிற்பக்கலை கூறப்படுகின்றது. காஞ்சி வரதராசப் பெருமான் ஒற்றைக் கல்லாலான தூண்கள் காணப்படும் வண்ணம் வீரர்களைத் தாங்கி நிற்கும் குதிரைக இவற்றின் மீதுள்ள வீரர்கள் படைக்கலங்க கோலத்தில் உள்ளனர். இவர்கள் அணிந்துள் என்பனவும் அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ள கண்ணனது பலவகை லீலைகளும் திருமாலின்
அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறாக இந்து நாகரிக மரபில் சிற ஆன்மாக்களின் இலட்சியமான வீடுபேற்றை ஆலய வழிபாட்டிற்குரிய சாதனமாகவும் விள
(150)

பல்லவர் காலம் சிற்பக்கலை வளர்ச்சியின் களால் கருதப்படும் காலமாகும். இக்கால களிலும், ரதங்கள், கற்றளிகள் இவற்றோடு பட்டன. மாமல்லபுரத்திலுள்ள மூம்மூர்த்தி ங்களிலும் சிவன், விஷ்ணு, முருகன் றன. நரசிம்மவர்மனால் உருவாக்கப்பட்ட பாறைகள் மீது புராணக் கதைகள்
உங்கள் நரசிம்பு மீது )
பொறுத்தவரையில் உன்னதமான காலமாகக் மார், ஆழ்வார்கள், அரசர்களின் படிமங்கள் லேயே சிற்பிகள் அதிகம் ஆர்வம் காட்டினர். எக்குவதிலும் அவற்றுக்கு மேலாக அலங்கார உருவாக்குவதிலேயும் ஆர்வம் காட்டினர். ங்கள் செய்யப்பட்டன. அதற்கேற்றவாறு ஊர்களிலே சுவரிடையே மாடங்களிலே ர்ளன. இக்கால சிற்பங்களிலும் உலோகத்
தன்மையையும் காண முடிகின்றது. பஞ்ச பிரமாண்டமானவையுமான சிற்பங்கள்
பூரணத்துவம் பெற்று விளங்கியதாகக் ர் கோயிலிலுள்ள கல்யாண மண்டபத்தில் கின்றன. முன்னங் கால்களைத் தூக்கிய -ளும், யாளிகளும் அழகான சிற்பங்களாகும். ளைத் தாங்கிய வண்ணம் போர் புரியும் ள ஆடைகள், அணிகலன்கள், கவசங்கள் ன.,விஷ்ணுவின் தசாவதாரக் காட்சிகளும் நின்ற கோலமும் இராமாயணக் காட்சிகளும்
ற்பக்கலையானது சிறப்பிடம் பெறுவதுடன் அடைவதற்கான வழியைக் காட்டிநிற்கும் ங்குகிறது எனலாம்.
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 171
இந்த தித்திம்ரஜா
ஆர்
ஓடிஒரு மனிதனை 2
அடிப்படைக்
இப் 10 ட ட ளட
உனக்குள் நீ பிறந்த ந நீ நடந்த பாதை அதி
நீ குடித்த பானம் உ. நீ உண்ணும் உணவு உன்லை
நீ ஏறிச் செல்லும் வாகனம் நீ பிள்ளையாக இருந்தபோது வி
உன் மனதில் உறம் உன் பாட்டன், பாட்டி சொல்லிய
நீ கேட்டிருந்த வம்புக் கதை.
நீ கற்ற பாடசாலை உ
உன் பாடசாலை மைதானம்
நீ பாடிய கவிதைகளே . நீ நினைத்த, நினைக்காத தெய்
ஆந்
கூர்மதி

ருவாக்குகின்ய :
இ-வ லா ைட -
காரணிகள்
7டு வாழ்ந்திருக்கும். ல் பதிந்திருக்கும்.
எனில் இருக்கும்.
எக் காட்டிக் கொடுக்கும்.
உன்னை இனங்காணும்.
இளையாடிய விளையாட்டுக்கள்
ங்கிக் கிடக்கும்.
" கதைகள் நினைவிருக்கும்.
களும் உன்னைச் சீண்டும்.
உன்னைச் சீராக்கும்.
உனக்கு படியமைக்கும்.
உனக்குத் தாலாட்டும்.
வங்கள் உன்னை வாழ்விக்கும்.
சமர் செட் மோகம் என்ற ! "கில எழுத்தாளரின் கவிதை வரிகள்
- | • • • . . . . )
9- K|
151)

Page 172
தமிழ்
இலக்கிய வு
தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்ககால் வகிக்கின்றது. இது கி.மு 5000 நூற்றான சிலர். இருப்பினும் கி.மு முதலாம் நூற்றா? வரையான 300 ஆண்டுகளைக் கொண்ட கால நம்பப்படும் ஒன்று. தமிழ் இலக்கிய வரல மன்னராட்சியே நிலவியது. விளங்கக்கூறின் ப வளர்த்தனர். அவ்வகையில் முதற்சங்கம், ! முறையே தென்மதுரை, கபாடபுரம், மதுரை அரும்பணி ஆற்றிவந்தன. இச்சிறப்பான பன் பல தேர்ச்சியும் புலமையும் பெற்ற புலவர்க உலகிற்கு உவந்துள்ளனர்.
சங்ககால சமுதாயமானது இயற்கைே அமைந்திருந்தது. சங்ககாலத்தில் நிலமானது மலையும் மலை சார்ந்த இடமுமான குறிஞ் வயலும் வயல் நீர்வளமும் நிறைந்த பிரதே இடைப்பட்ட வரண்ட பிரதேசமான பாலை ம நெய்தல் என்பவையே அவையாகும். இப்பி முறையானது அவ்அவ் பிரதேசங்களின் தன் பிரதேசத்தில் வாழ்ந்த குறிஞ்சி நில ம வேட்டையாடுதலும் முல்லை நில மக்களுக் நல்ல மண்வளமும் நீர்வளமும் காணப்பட்டவை வாழ்ந்த நெய்தல் நில மக்களுக்கு உப்பு 6 நிலத்து மக்கள் அவ்வழி போகும் பிற மக்கள் ஜீவனோபாயமாகக் கொண்டு தம் வாழ்வினை மக்கள் வாழ்ந்த நிலத்தின் தன்மை அவர் மக்கள் வாழ்வியல் முறையை நிர்ணயித்த இயற்கையும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைர்
அடுத்து சங்ககால இலக்கியங்களை இருப்பதனைக் காணலாம். இவ்விரண்டு இடம்பெற்றவையாக காணப்பட்டன. அதில இடம்பெற்றது. எனவேதான் களவியல் அதா. இடையே நிகழும் சந்திப்பு, மற்றும் கற்பு நிகழ்வுகள் என வகுக்கப்பட்டு பல்வேறு ஒ
சங்ககால மக்களிடம் போற்றப்படும் மே பிரதான பாடு பொருளாக அமைந்தன. இவற் என சித்தரிக்கும். அகம் என்பது காதல் தொடர்பான செயல்களைச் சித்தரிப்பது இல் காதல் தவிர்ந்த ஏனைய புற ஒழுக்கங்களைப்
(152)

7லாற்றில் சங்ககாலம்
செல்வி சுதேஷணா சோதிலிங்கம்
இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி
மானது மிக முக்கியமானதோர் இடத்தை எடுகளுக்கு முன்னரே தொடங்கியது என்பர் ன்டு தொடக்கம் கி.மு மூன்றாம் நூற்றாண்டு ப்பகுதியே சங்ககாலம் என்பது காலங்காலமாக சற்றின் முற்பகுதியாம் இச் சங்க காலத்தில் Tண்டிய மன்னர்கள் சங்கம் வைத்து தமிழினை இடைச்சங்கம் மற்றும் கடைச்சங்கம் என்பன ஆகிய இடங்களில் நிலவி தமிழ் வளர்க்கும் சியில் கபிலர், பரணர், நக்கீரர் என இன்னும் கள் அங்கம் வகித்து இலக்கியங்கள் ஆக்கி
யாடு ஒன்றிய வாழ்க்கையை பின்பற்றுவதாக ஐம்பெரும் பிரிவுகளாக வகுக்கப்பட்டிருந்தது. சி, காடும் காடுசார் பிரதேசமுமான முல்லை, சமான மருதம், குறிஞ்சிக்கும் முல்லைக்கும் ற்றும் கடலும் கடல் சார்ந்துள்ள இடமுமான ரதேசங்களில் வாழ்ந்த மக்களது வாழ்க்கை மையைப் பொறுத்து அமைந்திருந்தது. மலைப் க்களுக்கு தினை விளைவித்தல் மற்றும் கு மந்தை வளர்ப்பும், மருதநில மக்களுக்கு மயால் உழவு தொழிலும், கடல் பிரதேசத்தில் பிளைவித்தல் மற்றும் மீன்பிடித்தலும், பாலை து உடமைகளை சூறையாடுதல் என்பவற்றை நடாத்தி வந்தனர். ஆகவே சங்க காலத்தில் தம் தொழிலை நிர்ணயிக்க, தொழில் அவ் து. எனவேதான் சங்கமக்கள் வாழ்க்கையும் தவையாக விளங்கின என்பது புலனாகின்றது. | நோக்கின் காதலும், வீரமும் இழையோடி மேதான் சங்ககாலத்தில் பிரதானமாக ம் காதல் இவர்களது வாழ்வில் முக்கிய து திருமணத்திற்கு முன் தலைவன் தலைவி யல் எனப்படும் திருமணத்திற்கு பிற்பட்ட ழக்கங்களாக பிரிக்கப்பட்டன. ற்கூறிய காதலும் வீரமுமே இலக்கியங்களில் றை இலக்கியங்கள் அகத்தினை, புறத்தினை எனவே அகத்தினை எனப்படுவது காதல் வ பெயர் சுட்டாது பாடப்படும். புறத்தினை பற்றிப் பாடுவன. இப் புறத்தினை வகையுள்
. கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 173
பெயர் சுட்டப்பட்ட காதல் பாக்களும் உள் எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்ற நூல்கள்
எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு கலித்தொகை, ஐங்குறுநூறு என்பன அகத்தி பரிபாடல் என்ற மூன்றாம் புறத்தினையும் அ காணலாம். எட்டுத்தொகை நூல்களைப் டே சுட்டுவனவாக திருமுருகாற்றுப்படை, பொரு பாணாற்றுப்படை, நெடுநல்வாடை, மலைபடும் 'பாட்டு, முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை எ
உள்ளதைக் காணக்கிடக்கிறது. இவற்றை இரங்கல், ஊடல் என்ற ஐந்து அக ஒழுக்க
அன்பின் ஐந்திணை எனப்படும் கைக்கிளைபெருந்திணை என்ற இரு ஒய காணப்படுகின்றன. இவ்வாறே புறத்திணையி இரண்டு புற ஒழுக்கங்களும் சங்ககால ஒழு சற்று ஆழமாக ஆராய்வோம். கைக்கிளை என்பது பொருந்தாக் காதல். இங்கு ஓர் சிறப் அடைதல் பொருட்டு மடல்மா ஏறுவர். இது ஆ இதனையே வள்ளுவப் பெருந்தகையும்
"கடலன்ன காம் |
பெண்ணின் ெ என்ற தனது ஒரு குறளில் கூறியுள்ள
போரொழுக்க வகையுள் சேரும் காஞ்சி இளமை முதலிய நெறியாலும் நிலையாத ஆண்பாற்காஞ்சி, பெண்பாற்காஞ்சி என்பதை
ஆண்பாற்காஞ்சி எனப்படுவது கூறுவத அப்புண்காயத்துடன் வாழ விருப்பமில்லாமல் தீண்டாமல் எஞ்சிய வீரர்கள் காவல் புரிதல் பெண்பாற்காஞ்சி, இறந்த வீரனொருவன் | வீரமரணம் எய்திய கணவனது உடலைத் போன்ற செய்கைகளை விபரிப்பது இவ்6 காணப்பட்டபோதும் அவை ஏனையவை போ6 என அகநானூறு, புறநானூறு, நற்றிணை 6
இது இப்படியாக இருக்க சங்ககால் பண்புகளை தம்மகத்தே கொண்டு காணப் இலக்கியங்கள் இயற்கையோடு ஒட்டி அ6 உள்ளதை உள்ளவாறு கூறுதலும் இக்காலத்
ஓர் பண்பாகும்.
இயற்கையான உவமைகளையும், வர்ல எண்ணிய கருத்தினை விளக்குவது ஓர் சிற கீழ்வரும் குறுந்தொகை செய்யுளை அவத
"யாயும் நாயு! எந்தையும் நுந்தைய
நீயும் நானும்
செம்புலப் பெ
அன்புடை நெஞ்சம் கூர்மதி.

ாடங்கும். இவற்றை சித்தரிப்பனவையாகவே
விளங்குகின்றன. 1, நற்றிணைநானூறு, குறுந்தொகை நானூறு, னை கூறுவனவாயும் புறநானூறு பதிற்றுப்பத்து, டங்குவதாயும் அமையப் பெற்றிருப்பதனைக் என்றே பத்துப்பாட்டு நூல்களில் புறப்பொருள் நராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும் 5டாம், மதுரைக்காஞ்சி என்பனவும் குறிஞ்சிப் ன்ற மூன்றும் அகப்பொருள் சுட்டுவனவாயும் ப் போன்றே புணர்தல், பிரிதல், இருத்தல், ங்களும் ஐவகை நிலங்களும் உரியதாகின. இவ் ஐவகை ஒழுக்கங்கள் தவிர்ந்த ழக்கங்களும் சங்ககால இலக்கியங்களில் லும் காஞ்சித்திணை, பாடாண்திணை என்ற க்கங்களில் காணப்பட்டன. இவை தொடர்பில் [ என்பது ஒருதலைக்காமம். பெருந்திணை பம்சம் என்னவெனின் தலைவன் தலைவியை ண்களுக்கு மட்டும் உரித்தாகக் காணப்பட்டது.
முழத்து மடலோறாப் பருந்தக்கதில்"
ர்.
சித்திணை எனப்படுவது "யாக்கை, செல்வம், - உலகியற்கையாம்” இது இருவகைப்படும். வயே அவையாகும். காவது போர் செய்து புண்பட்ட வீரனொருவன் 0 இறத்தல், இறந்த ஒரு வீரனை நாய், நரி 5 போன்ற வீரச் செயல்களை விளக்குகிறது. மனைவி அவனுடன் உடன்கட்டை ஏறுதல், தழுவி கதறி அழுதல், உடனுயிர் நீத்தல் விரு வகை ஒழுக்கங்கள் சங்ககாலத்தில் 0 பிரபல்யம் பெறாது அருகியே காணப்பட்டன என்பவற்றில் கூறப்பட்டுள்ளன. த்தில் எழுந்த இலக்கியங்கள் சில சிறப்பு படுகின்றன. அவற்றை நோக்கின் சங்ககால மைதலை ஒரு பண்பாகக் கொண்டிருந்தன. இதில் எழுந்த இலக்கியங்களுள் காணக்கூடிய
னனைகளையும் பயன்படுத்தி தாம் புலப்படுத்த 3ப்பான பண்பே. இதனை விளங்கிக்கொள்ள பனிப்போம்
5 யாராகியரோ
ம் எம்முறை கேளீர் எவ்வழியறிதும் பல் நீர் போல்
தான் கலந்ததுவே''
(153)

Page 174
மேற்கூறிய செய்யுளில் முன்பு அறிமுக கொள்ளும்போது அவர்கள் இருவருடைய உ உள்ளங்களும் ஒன்றாகக் கலந்துவிட்ட த பெய்த மழைநீர் அந்நிலத்தின் செந்நிறத்தோ அமையப்பெற்றுள்ளது.
இயற்கை வர்ணணைகள் கொண்டும் சந் அவசியத்தினை தலைவனுக்கு விளக்கவந்த வர்ணிக்கிறாள். இப்படி கூறுவதோடு திருமண என்பதனை நாசுக்காக எடுத்துரைக்கின்றான்
சங்ககால இலக்கியங்களில் காண உவமங்களையும், இறைச்சி பொருளையு உடனடியாக திருமணத்திற்கு ஏற்பாடு செய் தன் தலைவியின் நிலையை பின்வருமாறு
"சிறிய காம்பில் பெரி போல தலைவியின் உட
பெரிய காதலில்
என்கிறாள். இங்கு திருமணத்துக்க உணர்த்தப்பட்டுள்ளதைக் காணலாம்.
இன்னுமொரு சிறப்பு யாதெனில் அ சொற்களை கொண்டு பொருளை விளக்குதல் மன்னன் தனக்கு குழந்தை பிறந்த செய்தியை . வரும் காட்சியை
"கையது வேலே 8 மெய்யது வியரே மி
அதாவது கையிலே வேல்தாங்கி, கோ எனக் கூறுகிறார். இப்படியாக எளிய சிறி ஆழமான பொருள்செறிவு கொண்ட சிறப்பில் பெருமை.
மேலும் கூறுவதாயின் தொகைகள் அ செய்யுள் அமைத்தலும் குறிப்பிடப்பட வே வர்ணணைகளை தவிர்த்து, தாம் கூறவந்த இப்படியிருக்க இரு துறையை ஒரு செய் இலக்கியங்களிற்கு உரித்தானதொன்றாயிற்ற
சங்கப் புலவர்கள் அகவல், வஞ்சி போல் அமைத்தனர். மேலும் அவர் தம் செய்யுளில் இடம்பெற்று விளங்கலாயின. அக்கால ெ செய்யுட்களிலும் சிறந்தனவாகக் காணப்படு ஒரு காரணமாகக் கூறலாம்.
அவ்வாறு பல சிறப்புக்கள் கொண்ட ச பொற்காலம் எனப் போற்றப்படுவதில் ஐயமில்
( 154

மில்லாத தலைவனும், தலைவியும் சந்தித்து ள்ளங்களிலும் தூய அன்பு உருவாகி இருவர் ன்மையை செம்மண் கொண்ட நிலத்தினில் நி கலந்து விட்டது என தலைவன் கூறுவதாக
க செய்யுள் ஆக்கப்பட்டுள்ளது. திருமணத்தின் - தோழி அங்கு அவனது நாட்டு வளத்தினை த்தை மறந்த நிலையில் தலைவன் உள்ளான்
ரப்படும் மற்றுமொரு சிறப்பு உள்ளுறை ம் கொண்டமைந்திருத்தல், தலைவனுக்கு பய வேண்டுமென வலியுறுத்த வந்த தோழி
கூறுகிறாள்.
யே பழம் தொங்குவது பிர் உன்மேல் கொண்ட | தங்கியுள்ளது."
ான அவசியம் சிறப்பாக மறைமுகமாக
னைவருக்கும் விளங்கக்கூடிய எளிய சிறிய ல் ஆகும். ஒளவைநாயகி, அதிகமான் என்ற அறிந்து போர்க்களத்திலிருந்து அரண்மனைக்கு
கனலது புனைகழல்
டற்றது பசும்புண்...''
பத்தினால் சிவந்த கண்களுடன் இருந்தான் ய சொற்களால் அமையப்பெற்ற போதும், மக்கியங்கள் சங்ககாலத்தில் எழுந்திருப்பது
டைமொழிகள் சேர்த்து சுருங்கிய வடிவில் ன்டிய ஒன்று. அதுமட்டுமன்றி தேவையற்ற |பொருளை ஒரு செய்யுளில் கூறலாயின. யுளில் கூறுதல் என்கின்ற பண்பு சங்க
Tற பாவகைகளினை கையாண்டு பாடல்களை
முதல், கரு, உரி என்ற மூன்றும் முக்கிய சய்யுள்கள் பிற்காலப் பகுதிகளில் எழுந்த வதற்கு அக்கால மொழி நிலையினையும்
ங்ககாலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு ல்லை.
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 175
இதை வாக்குப் பெ
"இலக்கியம் பாவலர் சாந்தி முவ
யாழ்பாடிப்பெற்ற யாழ்ப்பாணத்தில் அன்று கலந்து கொள்வதற்காக அறிஞர்களும், கவிஞ நிகழ்வு கவிதையரங்கு. இவ்வரங்கிற்குத் த கவிஞர் வித்துவ சிரோன்மணி அம்பலவாணக்
தமது புலமையை நிரூபிக்கக்கூடிய புல எனப்பலதரப்பட்டவர்கள் மேடையில் அமர்கிறார் ஓர் இஸ்லாமிய இளைஞனும் மேடைக்கு வ
வயதிலும், அனுபவத்திலும், வித்தகத்த அந்த இளைஞனைக் கூர்ந்து பார்க்கின்றார்க என்ற கேள்வி நிறைந்த பார்வையது. யார் இந்த கேள்வி. நானும் கவிதை பாட வந்திருக்கி பலரிடமிருந்து ஒரு ஏளனச் சிரிப்பு. அப்படியா கூறி இருக்கையைக் காட்டுகிறார் இன்னொரு
சிலேடையைப் புரிந்து கொண்ட இளைகு துருத்தி யூதும். என்று கூறிப் பக்கத்திலுள்ள ஆக பதிலைக் கேட்ட பல புலவர்கள் வியந்து
அவரோ இவனை இரும்படிக்கவா என ஏளனஞ் நீர் தூரஇருந்து துருத்தியை ஊதும் என்று பைய இவன் கலைக்குடும்பத்தைச் சேர்ந்தவனோ? அலி என்று பேசிக்கொண்டனர்.
மேடையில் பலரும் பல கேள்விகளை எடைபோட்டுக் கொண்டார்கள். தூரத்தில் இருர் என்னகாணும் தெரியுமென்றார். அவ்வளவுதான் இளைஞனால் முடியவில்லை. என்ன? என்ன
"அட்டகிரி எட்டையும்
அம்பலம் முன்னி அதனை வான்மீதிலே
வானத்தை வில்ல அதில் மழை பொழ ஏழுகடலைப் பால
வீசி விளைய இப்படி மடைதிறந்த வெள்ளமென பாடத் ஆழத்தை இனங்கண்ட அறிஞர்கள், ஈற்ற
கூர்மதி -

ந்ந அருள்வாக்கி
F சுடர்” நியித்தின் ஜே.பி.
ஓர் இலக்கிய விழா, அந்த விழாவில் Tகளும் வந்திருந்தனர். இவ்விழாவின் இறுதி லைமை கொள்ள தமிழ் நாட்டின் பிரபல கவிராயர் அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்.
வர்கள், பண்டிதர்கள், வித்துவான்கள் "கள். இவர்களோடு 15 வயது மதிக்கத்தக்க நகின்றான்.
திலும் உயர்ந்த பாவலர்கள் அனைவரும் ள். இவன் தவறுதலாக வந்துவிட்டானோ ச் சிறுவன்? இடையில் இருந்து இப்படியொரு ன்றேன். இது அந்த இளைஞன் பதில். ! வாருமிரும்படியும் என்று சிலேடையாகக் வர்.
தன் துடுக்காகத் திரும்பி, நீர் தூர விருந்தே சனத்தில் அமர்ந்து கொள்கிறார். இளைஞனது
விட்டார்கள். பையனைப் பார்த்தீர்களா? செய்ய, நான் இரும்படிக்க வேண்டுமானால் பனும் சிலேடையிலேயே பதிலளித்துவிட்டான். ல்லது கலைமகளோடு தொடர்புடையவனோ?
T சந்தேகம் போல் கேட்டு இளைஞனை இது ஒருவர் இளைஞனைப் பார்த்து உமக்கு ன் அதற்கு மேலும் அமைதிகாக்க அந்த தெரியுமாவா? புலவரே கூறுகின்றேன்.
பந்தாகவே யுருட்டி ல் வைப்பேன்
பற்றி யெறிவேன் க வளைப்பேன் யெவும் வைப்பேன் னைக் கொண்டு பாடுவேன்.''
தொடங்கிவிட்டார். இளைஞனின் இலக்கிய ல் அவனைப் பாராட்டிக் கௌரவித்து
155

Page 176
"அருள்வாக்கி" என்ற சிறப்புப் பட்டம் வழங் பதினாறு. இவர்தான் பத்தொன்பதாம் நூற் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த இலங்ன. விளங்கிய அருள்வாக்கி அப்துல் காதர் புல
அப்துல் காதர் அவர்கள் கண்டி போப்பு தந்தையின் தந்தை (மூத்தவாப்பா) ஆதாம்பிள்6 திருப்பத்தூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மூலம் இலங்கை வந்தார் என்பது வரலாறு. (4 அவர்கள் திருப்பத்தூரைப் பிறப்பிடமாகக் ( இது ஆராயப்படவேண்டியது)
தனது ஆரம்பக் கல்வியை உள்ளுர் கல்விகளை கண்டி - டுவின்ஸ் அக்கடமிய தொடர்ந்தாலும், தாய் மொழியான தமிழ் பெ தணியாத காதல் இருந்து வந்தது. தனது ! அருகாமையிலுள்ள "குன்று மலைப்பூங்காவுக் ஏற்பட்டதாகவும் அந்த மயக்க நிலையில் தா அதுமுதல் தனது நாவிலிருந்து கவிதையூற்று ெ தனது நண்பர்களிடம் குறிப்பிட்டுள்ளார். புலவரது தமிழ் பற்றையும், கவிதை ஆற்றவை தகப்பனார் ஆ.பி.அல்லாப்பிச்சை அவர்க6 தமிழகத்திற்கு அனுப்பி வைத்தார். அங்கு ம பெற்றதுடன், அக்கலாசாலையின் பிரதம ஆசிரி மஹ்மூதுமுத்து வாப்பா புலவரிடம் தமிழ் ஓ நூல்களையும் வழுவறக் கற்றுத் தேறினார். ே தமிழறிஞர்களிடமெல்லாம் இலக்கியத் தொட அக்காலத்தில் இறையருளுக்குள் ஆட்பட்ட த வழக்கமாகும். இது அவர்களுடைய ம அகத்தெளிவையும் புலப்படுத்தும். இக்கலை விளங்கினார். இந்தியத் திருநாட்டில் இந்து முள் அவதானங்களைச் செய்து காட்டி அட்டவதா காலத்தைப் பொன்னெனக் கருதிய புலவர் அவ பழந்தமிழ் இஸ்லாமிய மார்க்க ஞானங்களையும் சீறாப்புராணம், ராஜநாயகம், புதுகுஷ்ஷாம் ஞானக்கோவை ஆகியவைகளையும் ஆராய் அதற்கான தெளிவுரைகளை சுவைபட நெறிப்படு கொண்டார்.
ஈழத்து இலக்கிய வரலாற்றில் அருள்வாக்கி அவரது எழுத்துருவிலான படைப்புக்கள் 40 இருப்பினும் இவைகளில் 30 நூல்கள் அடையா அனைத்தும் நூலுருப் பெறவில்லை என்பது 8
அப்துல் காதர் அவர்களுடைய ஆக்கங்கள் அ வரலாற்றையும், இறையருள் நேசர்களுடை படைக்கப்பட்டவையாகும். அன்னாருடைய எந்த தலைப்புக்கும் அதிகமான விடயதானங்களைத் பதம், முனாஜாத்து, ஆனந்தக் களிப்பு, இன் (156)

கினர். அப்பொழுது இளைஞனுக்கு வயது றாண்டின் இறுதிப்பகுதியிலும் இருபதாம் க வாழ் முஸ்லிம் புலவர்களின் நடுநாயகமாக வர் அவர்கள். பிட்டியில் 30.06.1866 இல் பிறந்தார். இவரது Dள ராவுத்தர் அவர்கள் இந்தியத் திருநாட்டின் - இவர் சிறு கோப்பித் தோட்டச் செய்கை ஆனால் அருள்வாக்கி அப்துல் காதர் புலவர் கொண்டவர் என்றும் பலர் எழுதியுள்ளனர்.
மதரஸாவிலும், ஏனைய தமிழ் ஆங்கிலக் பிலும் (தற்போது அரச்போல்ஸ் கல்லூரி) மாழி மீது அன்னாருக்கு எப்பொழுதும் ஒரு பதினோராவது வயதில் கண்டி மாநகருக்கு குள் உலவிவரும் போது திடீரென மயக்கம் ம் வியத்தகு காட்சிகளைக் கண்டதாகவும் பெருக்கெடுத்து ஓடுவதாகவும்” புலவரவர்களே
லயும் தெளிவாகப் புரிந்துகொண்ட அவரது ள் இவரைத் தொடர்ந்து படிக்கவைக்க துரை ஜில்லா திருப்பத்தூரில் உயர்கல்வி யர் மதுரகவி நாவலர், வித்துவசிரோன்மணி, இலக்கண இலக்கியம் சார்ந்த அனைத்து மலும் தமிழ் நாட்டில் வாழ்ந்த தலைசிறந்த ர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். லைசிறந்த புலவர்கள் அவதானம் செய்வது னவலிமையையும், நினைவாற்றலையும், யில் நமது புலவர் அவர்களும் சிறந்து பிலிம் நல்லறிஞர்கள் வியக்கின்ற அளவுக்கு
னி' என்ற பெயர் பெற்றார். Tகள் இஸ்லாமிய மார்க்க ஞானங்களையும், ), பழந்தமிழ் இஸ்லாமிய இலக்கியங்களான
மஸ்தான் சாகிபு பாடல், திருப்புகழ் ந்து பாராயணங்களில் கலந்து கொண்டு த்தி தனக்கானதோர் இடத்தை உருவாக்கிக்
அவர்களுக்கு தனியானதோர் இடமுண்டு.
க்கு மேல் என்று எண்ணப்படுகின்றது. ளம் காணப்பட்டுள்ளன. ஆனால் அவைகள் வலைக்குரியது.
னைத்தும் இஸ்லாமிய அடிப்படையையும், ய சிறப்பையும் மையமாக வைத்துப் நூலை எடுத்துக்கொண்டாலும் குறிப்பிட்ட தந்திருப்பது சிறப்புக்குரியது. அவைகள் ரிசை என்று விரியும்.
ல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 177
புலவர் அவர்களது வெளிவந்த நூல்களுக்கு உயர்வாகக் கருதப்படுவதும் சந்தத்திருப்புகழ் , பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்ட பிரார்த்தனையாகவும் அமைந்துள்ளதுடன், மக்க சிறப்பாக வருணிக்கப் படுகின்றன. இதனை ஒ காசீம் புலவர் அவர்களுடைய திருப்புகழை சந்தத் திருப்புகழ் உள்ளது. இதனைப் படித்து நல்லறிஞர்கள் இதற்கு சிறப்புப்பாயிரம் எழுதிய அவர்கள் சந்தத் திருப்புகழுக்கு ஈடு இணையில்
சந்தத் திருப்புகழொ பெரும்புவிப் புலவர் வி
பாடினனதற்கோ
கீழைக் கரையைச் சேர்ந்த ஆசாரக் கோவை அருள்வாக்கியைப் பற்றிக் குறிப்பிடும்போது,
நித்திய மெனக்கோ நாடிக்குட் கவிபல மு செஞ்செழிப் போங்கிய ெ
என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக யாழ்ப்பாணம் தனது சான்றுக் கவியில்,
நூறு முகம்மதுவே நூறுவ பேறுபெற்றான் தன்மைதனைப்
கம்பீர வாக்கியத்துல் கா
சம்பிரதா யப்புல
என அருள்வாக்கியை எமது சம்பிரதாயப் ப என்பது செய்யுள் வண்ணம் என்பர். இது பலவ பாடப்படுவது. திருப்புகழ் பாடல் என்றாலே - எடுத்தோதும் சந்தத்தால் உயர்வு பெறுவது காரணத்தினால், அருள்வாக்கி அவர்கள் இந்த வைத்தார்கள் போலும்.
நூறு வண்ணங்களில் அமைந்துள்ள சந்தத் திருட் பண்புகளில் அமைந்துள்ளது. இத்திருப்புகழை கேட்பவர்களும் அடையும் பயனை புலவர் க காட்டுகிறார். அது அன்னார் நபி பெருமானார் இலக்கண மரபறிந்த திறமைக்கும் ஒரு உரை
திருவளர் ஞான மேவும் செழு குருபர னருளைப் பூட்டுங் கே கருவளர் முகம்ம தென்கோன் 8 தெருளமைந் துயர்ந்த சந்தத் த
இந்நூலைப் பிரார்த்தனைப் பேழை என்று கூடக்
கூர்மதி

ள்ளே மிகவும் சிறப்பாகப் பேசப்படுவதும் ஆகும். நபி பெருமானர் (ஸல்) அவர்களை - பாடல்கள் ஒவ்வொன்றும் துதியாகவும், கா, மதீனாவாகிய புனிதத் தலங்கள் இதில் ப்பு நோக்குகின்ற பொழுது திருப்புகழரசர் - அப்படியே அணைத்துக் கொண்டதாக - இன்புற்ற பேரறிவுப் பெட்டகங்களான 34 புள்ளனர். மதுரை குலாம் காதிறு நாவலர் லை என்பதனை இப்படிக் குறிப்பிடுகின்றார்.
ன்று மற்றிந்தப் ரும்பினர் விரும்பப்
ரீடில்லை
தந்த அப்துல் மஜீதுப் புலவர் அவர்கள்
ருத்தம் நண்பன் டிக்கும் சமர்த்தன் பசந்தருப் போல்வான்.
- சு.மு. அசனார் லெப்பை புலவர் அவர்கள்
எண்ணப் பாப்புனைந்து
பேசுங்கால் - வீறுபெற்ற திறெனப் பேர்வாய்ந்த வென் றான்.
புலவர் என்று நெஞ்சுயர்த்துவார். சந்தம் கைப்பட்ட ஓசைநயமுடையது. இசையுடன் அது ஓசை நயத்தின் உச்ச நிலையை 5. சந்தம் எந்தப்பாட்டிலும் மயங்காத நூலுக்கு சந்தத் திருப்புகழ் என்று பெயர்
புகழின் ஒவ்வொரு வண்ணமும் வெவ்வேறு இசையோடு படிப்பவர்களும், அதனைக் அவர்கள் ஒரு விருத்தத்தில் அமைத்துக் மீது வைத்திருக்கும் பற்றுக்கும், தமிழ் கல்லாகும்.
ஐம்பர கதியிற் சேர்க்குங் காதிலா நிதியுண்டாக்கும் கருணையுண் டாமென்நாளும் ருெப்புகழ் படிப்போர்க்கன்றே.
கூறலாம். ஏனெனில் ஒவ்வொரு பாடலிலும்

Page 178
பிரார்த்தனைச் சீர்கள் இடம் பெற்றுள்ளன. உ எனது இனத்தவர்களான கவிஞர்களை - அணுகாமலும் இறைவா நீ காப்பாற்று என்
சுரமேக வாதபித்த |
றொடுதோஷ மூலர் துயர்மேவு சூலைகுஸ்ட
சொறிகாச நீரடை கரவாக நீளவலித்தல் தெ
களமாலை பேதிமர் கவிபாடு தாதனுக்கு | கவிவாணர் யாவருக்கு
இப்பாடலில், சுரம் மேகம், வாதம், பித்தம் குறிப்பிட்டு மன்றாடுகின்றார். மேலும் உறுப்புக் கூறி அவைகளோடு குருவை மறக்காமல் 4 தான் பேசுகின்ற மொழியாகிய தமிழ் மீது ஏது பொறுத்தருள வேண்டுமென்று பிரார்த்திக்கி
இருகணுறும்பிழை
யிருதயவெம்பிழை இனிது நடந்துசெய் மிடறு பெரும்பிழை வருபொய் மறம்பகர்.
மயலுருகும்பிழை மனமுழையும்படி
மதிபகரும்பெரு குருவுமதின்சற கதி
குழகமுறுந்துணை கொடிதுபகர்ந்தடு பி
குடிலனிவன்பகர் சுரகி வரும் பிழை துணையருளொன்றி
புலவர் அவர்களின் அடைக்கலமாலை பிரபந் வல்ல அல்லாஹ்விடம் அடைக்கலம் தேடி அவனுடைய அஸ்மாஉல் ஹுஸ்னா எனப்ப கவிதையின் ஈற்றடியாக்கி அல்லாஹ் உன்ப. அடைக்கலமே, மஜீதுன்பக்கம் அடைக்கலபே ஆண்டு அச்சிடப்பட்டது)
அரபு பைத்துக்களில் வரும் சந்தங்களைக் கல் அமைத்திருப்பது புலவரது மற்றொரு சிறப்ப
லாயிலாஹ இல்லல்லாஹு லாயிலாஹ இல்லல்லாஹு
158

உடல் உறு நோய்கள் என்னை அணுகாமலும், அணுகாமலும் ஏன் தீன் குலத்தவர்களை பதனை இப்படிக் கூறுகிறார்.
மதிசார மேலிளைத்த
த்த - மலமாறாத்
முதிர்சோகை நாவரட்சி ப்பு - வதிதாகம்! Tடைவாளை வாய்வுவிக்கல்
ற - வடநோய்கள் முயர்வான் தீனினத்தார்! 5ம் - அணுகாமல்.......
போன்ற 26 வகையான நோய்களை புலவர் ககளால் செய்த பிழைகளை ஒவ்வொன்றாகக் சறஹின் வழிநின்று புரளாமல் இருப்பதோடு பம் பிழைகள் ஏற்பட்டிருப்பின் அவைகளையும்
ன்ற பாடல் மிகவும் அற்புதமானது.
• அற்புதம் அவைக-பதோடு
யிருகைகளின் பிழை P - யிருகாலால் 1 பிழைகளருந்தவ > - யுடன்வாயால்
பிழைபிற மங்கையர்
- யனைதாதை வசைபகரும்பிழை
- மையரான நனைவிடும் பிழை 1 - யவர்பாலே ழைகள் மறந்துசெய் [ - தமிழ்மீது ழ யறவினிதம்பக ட - வருள்வீரே.
த புஞ்சத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இதில் நிற்கின்றார் புலவர். இறைவனைப் புகழ்ந்து டும் திருநாமங்கள் ஒவ்வொன்றையும் தனது க்கம் அடைக்கலமே, றஹ்மான் உன்பக்கம் D என்று முடித்திருக்கிறார். (இது 1901 ஆம்
டைப்பிடித்து அதேபோல் தமிழ்ப் பாடல்களை Tகும். உதாரணமாக,
லாயிலாஹ இல்லால்லாஹு முஹம்மதுர்ர சூலுல்லாஹி
- கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 179
இவ்வறபுச் சந்தத்தை தமிழில்,
ஆதிநாதன் வேத வாய்6 சாதி மாமணியெனத் தகும் சுலைப்
பாடுகின்
கும்மிப்பாட்டு: இது நம் அனைவருக்கும் தெரி சாஹிபு அவர்கள் மேல் பாடிய கும்மிப்பாட பாடலாகும். அதனுடைய காப்புப் பாடலிது.
கற்பக மாகிய கா கண்மணி மேற்கும்
கஞ்சப் பத ெ மஞ்சற் சுவை ராம் ஹாமீத் முஹம்மது
இப்படி ஆன்மீக அருள் சுரக்கும் தேன்சுவை அமைந்துள்ளன.
இதற்கு அப்பால் புலவர் அவர்களுடை பேருரைகளும், பாடல்களும் நாளுக்கு நாள் இலங்கையின் பல பாகங்களுக்கும் அவர் இலக்
அடிக்கடி செல்ல வேண்டடியதாயிற்று. புலவர் விருது, பொற்கிழி, பட்டங்கள் வழங்கப்பட்டன
அருள்வாக்கி அவர்களுடைய புலபை அபிமானிகள் அன்னாரை அணுகி கண்டியில் ஒ கேட்டனர். அதற்கு புலவர் அவர்களோ அட்டால் வேலை. நான் உங்களுக்கு தீபசித்தி செய்து க தீபசித்தி என்றால் என்ன என்பதையும் தெரிவு
தீபசித்தி: இதற்கு நீங்கள் ஒரு பரந்த சற்று உயரமான மேடை அமைத்து, ஒரு பெரிய
அதன் ஏழு மூக்குக்கும் திரிபோட்டு எண்னை செய்பவர் அந்த மேடைக்கு வந்து தூர இருந்து எரியவைப்பார். அப்படி எரியவிட்ட பின் சை கேள்விகளைக் கேட்கலாம். அதற்கு அவர் பு இன்னுமொரு பாடலைப்பாடி அத்திரிகளை அன புலவர்.
இதனைக் கேட்டவர்கள் அப்படியே அ விளக்கு எரிப்பதா? பார்த்து விடலாம். இந்த அற நடக்கக் கூடிய காரியமா என்று சிலர் எண்ணி இச்செய்தி நாடளாவிய ரீதியில் விளம்பரப்படுத் யாழ்ப்பாணம், புத்தளம், மன்னார் என்று தமிழ்
கோலாகலமான அந்த மேடை மக்கள் ெ ஊற்றி திரிபோடப்பட்ட குத்துவிளக்கு எல்லாருக்கு
கூர்மதி 13-CM 013788

மை யோது நவநீதரே மா னல்வலி (லாயிலாஹ) என்று
Tறார்.
ந்தது. ஆனால் புலவர் அவர்கள் காட்டுவா ல் சந்தம் செறிந்திலங்கும் ஓர் அற்புதப்
ட்டுவா சாகிபெங் அப் பாட்டுரைக்க!
நஞ்சற் றகு ஞ்சித் தொளிர் துங் காப்பாமே!
ப் பாடலாக அருள்வாக்கியின் பாடல்கள்
ப பாராயணப் பணியும், புராண இதிகாசப்
வளர்ந்து கொண்டே வந்தன. இதனால் கியப் பயணம் செய்ததுடன், தமிழகத்திற்கும் T சென்ற இடங்களிலெல்லாம் கெளரவம்,
Dயும் தகுதியையும் தெரிந்து கொண்ட ருமுறை அட்டாவதானம் செய்து காட்டுமாறு பதானம் என்பது ஒரு சிறுபிள்ளைத்தனமான காட்டுகிறேன், என்று ஏற்றுக் கொண்டதுடன் பிக்கலானார்.
இடத்தை தெரிவு செய்து அதன் நடுவில் குத்துவிளக்கை அதன் மேல் வைத்துவிட்டு னயும் ஊற்றி வைக்கவேண்டும். தீபசித்தி கொண்டு ஒரு பாடல் மூலம் அத்திரிகளை பயில் இருப்பவர்கள் ஏதும் சந்தேகமான பதிலளிப்பார். அதன்பின் யாவரும் பார்க்க ணத்துவிடுவார். இதுதான் தீபசித்தி என்றார்
அதிசயித்துப் போயினர். என்ன பாடலால் Bபுதத்தை என்று பலர் துள்ளிக் குதித்தனர். னர். யாரும் பார்த்தும், கேட்டும் அறியாத தப்பட்டது. குறிப்பிட்ட நாளன்று கொழும்பு, P அறிஞர்கள் கண்டியில் வந்து கூடினர்.
வள்ளத்தால் நிரம்பி வழிந்தது. எண்ணெய் நம் தெரியக்கூடியதாக இருந்தது. மேடைக்கு
159

Page 180
முன்னால் நமது பெரும் புலவர், அவர்களது மெய்ஞ்ஞான நாயகா இறசூலே! என்று மெள் அமைதி, மக்கள் அத்தனை பேருடைய விளக்கையும் மாறி மாறிப் பார்க்க, திடீரென
எரிவாய் விரிந்தெழுந்து எண்ணெய் காட்ட - அரியணையில் தூண்டா விளக்கே எரி.
என்ன அதிசயம். பாடல் எரி என்று எரியத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஏனைய திரிகளும் எரிந்தன. அதிசயத்தை சங்கரப் பிள்ளை எழுந்து சிவம் பெரிதா தொடுத்தார். அதற்குப் புலவரோ உமது ( என்பது போன்றிருக்கின்றது. ஆனாலும் சில போன்றது என்றார்.
ஒருவர் எனது கைக்குள் என்ன இரு தங்கப் பவுண் உள்ளது. இன்னுமொருவர் த தொல்காப்பியத்தில் இருந்து ஒரு விளக்க ஆணையிற் கிளந்த மறை மொழி தானே மர் வந்த கமலவல்லி என்ற பெண் எழுந்து திரு மூன்று பெரியவைகள் என்ன? என வினவ,
காலத்தினாற் செய்த
ஞானத்தில் ம
பயன்தூக்கார் செய்த !
நன்மை கட
நிலையிற் திரியா த
மலையினும் ம
போதுமா? எனக் கூற இல்லை இவை மூன்ற
அதுவா உலகம் (ஞாலம்) பெரிது. அது எட்
ஓ! கடல் பெரிது, மலை பெரிது, ஆயினும் இன. உலகம் பெரிது.
இப்படிப் பல பல கேள்விகள் அவை அத்தன விளக்கை அணைத்துக் காட்ட வேண்டும் எ வாயிலிருந்து ஒரு வெண்பா.
தூண்டா மணிவிளக்கே துக
காண்டற் கரிதோர் 8 எரியவுனை வைத்ததுபே
அரியணையில்
(160)

வாய்மட்டும் மெய்ஞ்ஞான நாயகா இறசூலே! Tள முணுமுணுத்துக்கொண்டிருந்தது. மயான கண்களும் புலவரையும், எரியவிருக்கும் ன புலவர் வாயிலிருந்து ஒரு வெண்பா.
மல் தோய்ந்து கரிவாய் இருள் போக்கிக் 5 சுடர்விட்டு நீயென்முன் ஈண்டிங் கெழுந்து
முடிய விளக்கில் இருந்த திரிகளில் ஒன்று புலவர் எரி, எரி என்று கூறக் கூற விளக்கின் தப் பார்த்துக் கொண்டிருந்த யாழ்ப்பாணம் - சக்தி பெரிதா? என்று கேள்விக் கணை கேள்வி வித்து முந்தியா? மரம் முந்தியா? பம் எண்ணெய் போன்றது. சக்தி ஒளியைப்
க்கிறது? உமது பொத்திய கைக்குள் ஒரு திருக்குறளில் 28 ஆம் பாடலுக்கு ஒத்ததாக ம் தேவை? அதுவா, நிறைமொழி மாந்தர் நதிரம் என்ப, இது புலவர். கொழும்பிலிருந்து இக்குறளில் கூறப்படும் உவமை நயங்களான
ஓ கூறுகிறேன்.
5 நன்றி சிறிதேனும் மானப் பெரிது.
உதவி நயன் தூக்கில்
லிற் பெரிது
டங்கியான் தோற்றம் மானப் பெரிது.
றிலும் எது பெரிது என வினவினார்.
ப்படிப் பெரிது?
வயிரண்டும் உலகினில் அடங்கி விடுவதனால்
மனக்கும் உடனுக்குடன் பதில் ஈற்றில் இந்த ன்று சபையோர் கேட்டனர். உடனே புலவர்
கள்போக்குத் தூயொளியே! காட்சியே - வேண்டி பால் எல்லோரும் பார்க்க
நீநின் றணை.
- கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 181
அணை என்று வெண்பா முடிய திரி என்று புலவர் கூறக்கூற ஏனைய ஆறு திரிக் ஆச்சரியத்தால் அசந்து போனார்கள். வா கலந்து கொண்ட ஒவ்வொரு நல்லறிஞர்க பொன்னம்பலக் கவிராயர் வாழ்த்திய வெண்
எல்லா அதிசயத்தும் வல்லான் மெய்ஞ்ஞானியப் பாட்டால் விளக்கெரித்து |
காட்டிவிட்ட இ
இலக்கிய உலகில் அருள்வாக்கி அப்து சித்து இதுவரை யாராலும் செய்து காட்டப்படம் இலக்கிய உலகில் இருந்து மாற்றுச் சமூ மெய்ஞ்ஞானி அருள்வாக்கி அப்துல் காதர் கண்டி மஹிய்யாவையில் நல்லடக்கம் செ இறக்கும் போது வயது 52.
RS3% கல்வி எனும் விதைகளைக் கா வரையில் அது ஆன்மாவில் எ விதைகளாகவே இருந்துவரும்.
புரோட்டகோரஸ் ப கூ
கூர்மதி.

அணைகிறது. அதன் பின் அணை அணை, நம் அணைகின்றன. அன்று கூடிய அறிஞர்கள் ழ்த்தொலிகள் வானைப் பிழக்க நிகழ்வில் ளும் புலவரை வாழ்த்தினார்கள். அவற்றுள் எபா இது.
- ஈதுமிகப் பெரிதாம்
துல்காதிர் - பல்லார் முன் பாட்டதனா லேயணைத்துக் க்காட்சி காண்!
பல் காதர் புலவர் அவர்கள் செய்த இலக்கியச் வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாமிய . மகத்தார் முன்பு மார்தட்டி நின்ற மாபெரும் புலவர் அவர்கள் 23.09.1918 இல் இறந்தபின் ய்யப்பட்டார். (இன்னாலில்லாஹி..) அவர்கள்
5G SK ணிசமான ஆழத்தில் விதைக்காத ந்நாளும் முளைவிடாத வெறும்
ண்டைய கிரேக்க தத்துவஞானி,
அரசியல் அறிஞர் கடுகு
(161)
161

Page 182
ஆசிரிய வாண்மையில் ஆசிரியர் தேர்ச்சி
ஆசிரியர், யாழ்/உடுப்பிட்டி அெ
அறிமுகம்
ஆரம்ப கால ஆசிரியத் தொழிலானது மாண நோக்காகக் கொண்ட ஆசிரியர் மையக் கற்பித் அமைந்திருந்தது. எனினும் கால ஓட்டத்தி முறைமைகளிற்கேற்பவும், உலக கல்வியியல் ஒ காரணமாகவும் ஆசிரியர்களின் வகிபங்குகள் பெ மாற்றத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றன
1.
ஆசிரியர்மையக் கற்பித்தல் முறையானது மாற்றமடைந்தது. குறிக்கோள் மையக் கல்விமுறைமை, மாற்றமடைந்தது. செயற்பாட்டு அடிப்படையிலான கற்றல் ( இவற்றின் காரணமாக ஆசிரியர் வகிபங்கு கொடுக்கல் வாங்கல் வகிபங்கினூடா மாற்றமடைந்துள்ளது.
3. 2ா
எனவே இன்றைய கல்வி முறைமையில் ஊட்டுதலுடன் மட்டும் நின்றுவிடாது, மாணவர்க
ஆக்கத்திறன்கள், புத்தாக்கச் சிந்தனைகள் என்ட செயற்பட்டு பிள்ளைகளின் தனியாள் வேறும் பிள்ளையும் எதிர்பார்க்கப்படும் குறித்த தேர். திசையில் வழிப்படுத்துபவராகவும், அனுசரலை உள்ளார்.
இதனை வினைத்திறனுள்ள வகையில் ) விடய அறிவை மட்டுமன்றி கல்வி, கற்பித் தேர்ச்சிகளையும் உடையவராய் இருத்தல் அ கல்வி ஆணைக்குழு அறிக்கை ஆசிரியர் தேர்ச்சி குறிப்பிடுகிறது.
"கல்வியின் தரத்திலும் அதன் தேசிய செல்வாக்குச் செலுத்துகின்ற அனைத்து விதம் தேர்ச்சி, பண்பு என்பன சந்தேகத்திற்கிடமின்றி மின் விளங்குகின்றன''
அத்துடன் ஆசிரியத்துமானது ஆசிரியத் ஆசிரிய வாண்மை என்ற தளத்தினுள் பிர (162)

288888888888888)
பியின் பங்களிப்பு
திரு. குணசிங்கம் பிரதீபன் மரிக்கன் மிஷன் கல்லூரி, வல்வெட்டித்துறை
வர்களிற்கு அறிவை வழங்குதலை மட்டும் கதல் முறையை அடிப்படையாகக் கொண்டு ல் நவீன உலக இயங்கியல் ஒழுங்கு பழுங்கு முறைமைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் பருமளவில் மாற்றத்திற்குள்ளாகின. இன்றும்
எ. அந்தவகையில்,
- குழந்தைமையக் கற்பித்தல் முறையாக
தேர்ச்சி மையக் கல்வி முறைமையாக
முறை வலியுறுத்தப்படுகிறது. த ஆரம்பகால கடத்தல் வகிபங்கிலிருந்து
க இன்று நிலைமாற்று வகிபங்கிற்கு
ஆசிரியரானவர் மாணவர்களிற்கு அறிவை களிடம் தாமே சுயமாகக் கற்கும் திறன்கள், பவற்றை விருத்தி செய்வதோடு வளவாளராக மாடுகளைக் கருத்தில் எடுத்து ஒவ்வொரு ச்சி மட்டத்தை அடைவதற்காக சரியான ணயாளராகவும் செயற்பட வேண்டியவராக
திறைவேற்றுவதற்கு ஆசிரியர்கள் உயர்ந்த 5தல் தொடர்பான பல்வேறு வகையான வசியமாகின்றது. இந்தியாவின் அண்மைய சியின் முக்கியத்துவம் குறித்து பின்வருமாறு
அபிவிருத்தியின் மீதான பங்களிப்பிலும். மான காரணிகளிலும் ஆசிரியர்களின் தரம், கவும் முக்கியத்துவம் வாய்ந்த காரணிகளாக
- தொழில் என்கின்ற தளத்தில் இருந்து, வேசிக்க முயற்சிக்கின்ற எமது நாட்டில்
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 183
ஆசிரிய வாண்மையில் ஆசிரியர் தேர்ச்சி அவசியமாகின்றது. ஏனெனில் வாண்மைத்
தேர்ச்சிசார் சோதனைகள் * அத் தொழில் சார் தேர்ச்சிகளை வெளியேற்றுவதற்கான பிரத்தில் அனுமதி பெற்று தொழில் நடாத்துதல் கோட்பாடு அறிவு அடிப்படையிலான ; அமைப்புசார் பயிற்சிகள்
என்பவற்றை மையப் படுத்தியதாக அமை.
தேர்ச்சி - ஆசிரியர் தேர்ச்சி
தேர்ச்சி என்றால் என்ன? இதற்குப் ப காலம் முன்வைக்கப்படுகின்றன. சர்வதேச என்பது அறிவு, மனப்பாங்கு, ஆற்றுகைத்தி செயற்பாடுகளை குறித்து நிற்பதாகக் கூறு குறித்த செயற்பாட்டை விளைதிறன் மிக்க அறிவு மட்டத்தை வழிப்படுத்துவதற்கான
ஆசிரியர் தேர்ச்சிகளை வரையறும் பொதுவான உடன்பாடு காணப்படவில்லை தன்மை காரணமாக "'சிறந்த கற்பித்தல் எ எது?' என்பவை வரைவிலக்கணப் படுத்த Good, Lanior என்போர் கூறுகின்றனர்.
இக் குழப்பநிலையை தெளிவுபடுத்து எண்ணக்கருக்களை முன்வைத்தார். 1. தேர்ச்சி என்பது குறித்த ஒரு செயற்பாட்
நோக்கத்திலோ தங்கியிராது செய்வத தேர்ச்சி என்பது ஒரு செயலைத் ( பொருத்தமானது என்பதை தெரிதல்,
திறன் என்பவற்றை கையாளுதல் ஆகு 3. தேர்ச்சியை "ஏதோவொரு புத்திசா
எல்லோருக்கும் தெரிந்த பொதுவான தனது செயல்களின் ஆற்றல்மட்டம் 6 அதேசமயம் அச்செயலின் பெறுமதி பற்ற அதனையே போதிய குறிகாட்டியாகக் தேர்ச்சி என்பது ஒருவருடைய பா தொடர்புடையது என்பதுடன் ஒருவரின் நிறைவுமட்டம், நோக்கம், மனப்பா உள்ளடக்கியதான ஒருவரின் பொருத்தம்
Short இன் நான்காவது வரைவிலக்கன பொருந்தி வரும் என்பதனையும் அவை என்பதனையும் கூறுவதாக அமைகிறது. இ
கூர்மதி.

யின் பங்களிப்பு தொடர்பான விழிப்புணர்வு தொழிலொன்று
ரக் கொண் டிருக்காத உறுப்பினர் களை யேக சட்ட உரிமை
திறன்கள்
கிறது.- கிறது.
லராலும் பல்வேறு கருத்துக்கள் காலத்திற்குக் F கல்விக் கலைக்களஞ்சியமானது, தேர்ச்சி றன்கள் என்கின்ற மூன்று தரத்திலான மனித துகின்றது. பொதுவாக "தேர்ச்சி என்பது ஒரு - வகையில் ஆற்றுவதற்கான அல்லது விசேட
ஆற்றல்” என வரையறுக்கப்படலாம்.
ப்பது தொடர்பில் கல்வியலாளர்களிடையே -. ஏனெனில் ஆசிரிய வாண்மையின் சிக்கல் து?'' "ஆசிரியர் விளைதிறனை கட்டமைப்பது பவதற்கு கடினமானவையாகும் என Brophy,
ம் வகையில் Edmond Short என்பவர் நான்கு
டினை அச் செயற்பாட்டிற்கான காரணத்திலோ ற்கான நடத்தை அல்லது ஆற்றுகை ஆகும். தெரிவு செய்யும் போது அத் தெரிவு ஏன் அறிதல் என்பவற்றை உள்ளடக்கிய அறிவு, தம்.
லித்தனமான, சாதுரியமான அதே சமயம் கருத்தின் படி (பொது நடைமுறைகளின்படி) போதாதா எனப் பார்க்கும் நிலையுள்ளதாயும், நிய கருத்து மாறுபாடுடையதாகவும் இருத்தலால்
காணலாம்" எனக் கூறினார். ண்பு, தன்மை, சுபாவம் போன்றவற்றுடன் ன் செயற்றிறன், திறன்கள், செயற்பாடுகளின் ங்கு, குறித்த பண்பாடுகள் என்பவற்றை மான செயற்பாடுகள் என வரையறுக்கப்படலாம்.
எமானது ஆசிரியர் தேர்ச்சி என்பது பலவகையில்
அத்தனையும் நியாயப்படுத்தக் கூடியவை வற்றிற்கு மேலதிகமாக கற்பித்தல் தொடர்பான
163)

Page 184
பல்வேறு எண்ணக்கருக்கள், விருத்திசார், சூழல் தேர்ச்சியை வரையறுப்பதில் பங்கு வகிக்கின் என்பது பலகாரணிகளில் தங்கியுள்ளதென கூற்றுப்படி “தேர்ச்சியானது நியம சோதனைகளில் இருந்து மாணவனின் சமூகத்திறன் விருத்தி தங்கியிருக்கும்.''
இவற்றிற்கு மேலதிகமாக ஆசிரியர் தேர் ஆசிரியர் வகிபங்கு பற்றிய எண்ணக்கருக்க பாடசாலையின் இயல்புகள், பாடசாலையின் பு சூழமைவு என்பவற்றில் தங்கியுள்ளது. என என்பது தனியாள் நடத்தையில் இருந்து ஒ தேர்ச்சி மட்டங்களில் தங்கியிருக்கும். எனின "விளைதிறன் மிக்க கற்றல் கற்பித்தல் செ நிகழ்த்துவதற்காக ஆசிரியர்கள் கொண்டிருக் பண்பு'' என வரையறுக்கப்படலாம்.
தரமான ஆசிரியர் - ஆசிரியர் தேர்ச்சி
- ஒரு தொழிலிற்குத் தேவையான தே முக்கியத்துவமானது தொழிற் தெரிவிற்க நிரூபிக்கப்படுகின்றது. இக் கொள்கையின் 4 மனிதனுடைய வெற்றியில் 3 காரணிகள் பங்
1.
அவனுடைய பண்புகள் : இது உளச்சார் வளங்கள், வரையறைகள் என்பவற்றை ?
2. அத் தொழிலிற்குத் தேவையான தேர்ச்சி
3. இவை இரண்டிற்குமிடையிலான நெருக்க
அமெரிக்காவில் 2002 இல் முன்வைக்கப்பட்ட ஆசிரியர்களிற்கான மூன்று நியதிகளை முன்
1. முழுமையான தராதரம் பெறல்
2. இளமானிப் பட்டப்படிப்பு
3. விடய அறிவு, கற்பித்தல் தொடர்பான ே
மேற்கூறிய கருத்துக்களிலிருந்து ஆசிரிய தரமான ஆசிரியராக தன்னை நிலைநிறுத் தேர்ச்சிகளை உடையவராக இருக்க வே நிரூபணமாகிறது.
ஆசிரியர் தேர்ச்சியை நிர்ணயித்தலும்
பல்வேறு நாடுகளிலும் குறிப்பாக அபிவி தேசிய அரசுகளாலும் மாநில அரசுகளாலும் பி ஆசிரியர் கொண்டிருக்க வேண்டிய தேர்ச்சிகள் நிர்ணயிக்கப்பட்ட ஆசிரியர் தேர்ச்சிகளை 8
( 1643

மவுசார் வேறுபாடுகள் ஆகியனவும் ஆசிரியர் றன. ஆசிரியர் தேர்ச்சியை வரையறுத்தல் Ashburn என்பவர் கூறுகின்றார். அவரின் ல் பெறப்பட்ட அதிகரித்த சராசரிப்புள்ளிகளில் வரையிலான கற்பித்தல் விளைவுகளில்
ச்சியினை வரைவிலக்கணப்படுத்தல் என்பது ளை ஆசிரியருக்கு கற்பித்த கால அளவு, ரவி இட அமைவு போன்ற கற்பித்தலுக்கான வே Short இன் கூற்றுக்கிணங்க தேர்ச்சி ந மனிதனின் தரம் என்பது வரையிலான வம் பொதுவாக ஆசிரியர் தேர்ச்சி என்பது
யற்பாட்டை வினைத்திறனுள்ள வகையில் -க வேண்டிய அறிவு, திறன், மனப்பாங்கு,
தர்ச்சிகளை விளங்கிக் கொள்ளுதலின் ான பண்புக்காரணிக் கொள்கையினால் அடிப்படையில் ஒரு தொழிற்துறையில் ஒரு களிப்புச் செய்கின்றன.
பு, திறன்கள், ஆர்வங்கள், இலட்சியங்கள், உள்ளடக்கியதாக அமைகிறது.
கள் அல்லது காரணிகள் பற்றிய அறிவு
மான இணைப்பு
- No child left behind act ஆனது தரமான
வைத்திருக்கிறது.
தர்ச்சி
த் தொழிலில் ஒருவர் வெற்றி பெறுவதற்கும், துவதற்கும் அவர் பல்வேறு வகையான பண்டும் என்பது சந்தேகத்திற்கிடமின்றி
D மதிப்பிடலும் நத்தியடைந்த நாடுகளில் அந்த நாடுகளின் பிரிவுகள் சார்பாகவும் பாடங்கள் சார்பாகவும் ர் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு ஆசிரியர் கொண்டிருக்கிறார்களா என்பதை
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 185
மதிப்பிடும் பொருட்டு அந்நாடுகளில் ஆசிரியர் பாவனையில் உள்ளன.
ஆசிரியர் தேர்ச்சியை விருத்தி செய்
Susana de Souza, Marcos F.Elia a
• தேர்ச்சிகள், பாடசாலை, சமூகம், சேவை முன் திட்டங்கள் என்பவற்றிற்கிடையிலான வலி மாதிரியொன்றை முன்வைத்துள்ளார்.
(மாதரி மறுபக்கம்)
இதிலிருந்து ஆசிரியர் தேர்ச்சியிலும் ஆ முக்கிய செல்வாக்குச் செலுத்தும் காரணி சேவைக்காலப் பயிற்சித்திட்டங்கள், பாடசா
சமூகம் (Society)
சேவை முன்பயிற்சித்திட்டங்கள் (Pre Service Training Programmes)
சேவைக்காலப் பயிற்சித் திட்டங்கள் (In Service Training
Programmes)
பெரும்பாலான நாடுகளில் இத்தகைய அந்நாடுகளின் பல்கலைக்கழகங்களும், நடாத்துகின்றன. இப்பயிற்சி நெறிகளில் கலர தேர்ச்சிகளை விருத்தி செய்து கொள்ளமுடியு செய்வதில் பாடசாலையின் வளங்கள், அ ை
சூழல் என்பனவும் செல்வாக்குச் செலுத்துகி
Reynolds என்பவர் "தேர்ச்சிமிக்க பே முடியும்” என்கின்றார். எனவே ஆசிரியர்கள் த தமது தேர்ச்சிகளை விருத்தி செய்துகொள்
ஆசிரியர் தேர்ச்சியும் இலங்கையும் இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆசி பொறுப்பு வாய்ந்தவர்களாலும் காலத்திற்கு கால்
ககூர்மதி

கேளிற்கான நியம தேர்ச்சிசார் சோதனைகள்
தல்
கியோர் ஆசிரியர் மனப்பாங்கு, ஆசிரியர் எபயிற்சித்திட்டங்கள், சேவைக்காலப்பயிற்சித் ைெமயான இடைத்தொடர்புகளை காட்டும்
சிரியர் தேர்ச்சியின் விருத்தியிலும் நேரடியாக களாக சேவை முன்பயிற்சித் திட்டங்கள், லைகள் என்பவை இனங்காணப்படுகின்றன.
பாடசாலை (School)
ஆசிரியர் தேர்ச்சிகள் (Teacher Competencies)
ஆசிரியர் மனப்பாங்குகள்
(Teacher attitudes)
ஆசிரியர் கல்விப் பயிற்சித் திட்டங்களை ஆசிரியர் கல்விசார் அமைப்புக்களும் ந்து கொள்வதன் மூலம் ஆசிரியர்கள் தமது ம். அத்துடன் ஆசிரியர் தேர்ச்சியை விருத்தி மவிடம், பாடசாலை அமைந்துள்ள சமூகச் ன்றன.
பாதனையை அனுபவத்தினூடாக நிகழ்த்த நமது சுய அனுபவப் பகுப்பாய்வின் மூலமும்
1 முடியும்.
ரியர் தேர்ச்சி தொடர்பாக எமது நாட்டின் லம் பல்வேறு கருத்துக்கள் கொள்கையளவில்

Page 186
முன்வைக்கப்படுகின்ற போதிலும் நடைமு குறைபாடாக உள்ளது.
இதற்கு மிக முக்கிய காரணமாக அல் ஆசிரியர் தொழிற்துறையானது ஒரு தொழில் அரசியல் காரணங்களிற்காகவும், அப்போ காலத்திற்கு காலம் ஆசிரியர் தேர்ச்சி தெ பெரும் எண்ணிக்கையானோர் ஆசிரிய சே உதாரணமாக 1990 களின் முற்பகுதியிலு எண்ணிக்கையானோர் தொழிலின்மைப் பிரச் நியமிக்கப்பட்டமையை குறிப்பிடலாம்.
சவால்களை வெற்றி கொள்ளல்
ஆசிரியர் ஆட்சேர்ப்பு நிலமைகளின்போது ஆசிரியர்களிற்கான நியம தேர்ச்சிப் பரீட்சை ஆசிரிய சேவை தொடர்பான நிரந்தரமானதும் ே தாபனக் கோவை ஒன்றை உருவாக்கி ந தேர்ச்சி தொடர்பான சவால்களை வெற்றிகெ போன்று இலங்கையிலும் ஆசிரிய சேவை வாண்மை என்னும் தளத்திற்கு இட்டுச் செல்
முடிவுரை
ஆசிரியர் தேர்ச்சி தொடர்பில் அதிக க விழிப்புணர்வை ஆசிரியர்களிடம் ஏற்படுத்துவ ஆசிரியர்களாகவும், ஆசிரிய வாண்மையாளர்க தரம், அதன் தேசிய அபிவிருத்தியின் மீதான | வெற்றிகொள்ள முடியும்.
கு? உயிர்களில் ஏதாவது ஒன்றுக்க முடியுமானால் வாழ்க்கையின் இள
பொ குக
(166)

றைப்படுத்தப்படுவதில்லை என்பது பெரும்
மைவது, இலங்கையைப் பொறுத்தவரையில் 5 வழங்கும் துறையாக கருதப்படுவதுதான். தைய சந்தர்ப்ப சூழ்நிலைகளிற்கேற்பவும் தாடர்பில் எவ்வித கவனமும் செலுத்தாது வைக்கு உள்வாங்கப்படுகின்றனர். இதற்கு ம் 2005 களின் பிற்பகுதிகளிலும் பெரும், சினையை தீர்க்குமுகமாக ஆசிரியர்களாக
வம், குறித்த கால இடைவெளிகளிலும் களை உருவாக்கி நடாத்துவதன் மூலமும், தர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கின்றதுமான டைமுறைப்படுத்துவதன் மூலமும் ஆசிரியர் காண்டு அபிவிருத்தி அடைந்த நாடுகளைப் யை தொழில் என்னும் தளத்தில் இருந்து Dல முடியும்.
வனம் செலுத்தப்பட்டு, அது தொடர்பான பதனூடாக அவர்களை விளைதிறன் மிக்க ளாகவும் திகழச் செய்வதனூடாக கல்வியின் பங்களிப்பு என்பவற்றின் மீதான சவால்களை
SGRG மவது மகிழ்ச்சியைக் கொடுக்க லட்சியம் நிறைவேறிவிட்டது என்று நள், தை 2
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 187
குழந்தைகள் தொடர் பத்து முதுமொழிகள்
மனோதத்துவவியலாளர், ஜோர்ஜிய ஆ
மனிதாபிமான உணர்வு மிக்க சழு வளர்ப்புப் பணியும் நடக்க முடியும் இந்த நிகழ்ச்சிப் போக்கில் ஈடுபடு தானாக நம் உதவியாளனாகும்படி
கலந்து பழகுவது என்பது மனித 6 முக்கிய முறை, அக்குழந்தையுட விஷயங்களைத் தெரிந்து கொள்க ஆகியவற்றின் மூலம் மகிழ்ச்சியை
அன்றாட வாழ்க்கை, பெரியவர்கள் எதிர்கால மனிதனின் மனநிலை உ நமது பரஸ்பர உறவுகள், எந்த ஒரு முயலுகிறோமோ அதற்கு இயன்ற அ மிக முக்கியமாகும். 80ஆம் ஆ மனிதர்களை நினைவிலிருத்த வே
மனிதர்களின் மீதான நம்பிக்கையும், மனிதர்கள் ஒருவருடன் ஒருவர் மு மேன்மையாக்கவும் அடிப்படையாகு மீதான நம்பிக்கையை, தன் சக | தன் மீதான சுய நம்பிக்கையை கு
சோஷலிச சமுதாயம் என்பது சமப் காட்டும் மனிதர்களின் சமுதாயமும் குழந்தையின் மனநிலையின் மீதான உறவினர்கள், பொதுவாக மனிதர்கள் வேண்டும்.
6.
எந்த ஒரு சமுதாயத்தில் மனிதன் தேவை என்று உணருகிறானோ, எ தாழ்த்தாமலும் இருக்கின்றார்களே முழுவதையும் அவனால் வெளிப்படுத் குழந்தை இப்படிப்பட்ட உணர்வுக6
குழந்தை உணர்ச்சிகரமான ஒரு ஜீ கடினம். ஆசிரியர்களும் பெற்றோ கொண்டு அக்குழந்தையின் மனநின.
கூர்மதி.

யாக உ
3. எல்.
- ஷ. அமனஷ்வீலி சிரியர் விஞ்ஞான ஆய்வுக் கல்லூரியின் இயக்குனர்
தாயத்தில் மனிதாபிமான அடிப்படையில்தான் 1. இதன் முக்கியக் கோட்பாடு - குழந்தையை த்த வேண்டும். இந்த வளர்ப்பில் குழந்தையே செய்ய வேண்டும்.
வாழ்க்கையின் சாரம், மனிதாபிமான வளர்ப்பின் ன் கலந்து பழகும் மகிழ்ச்சியை, கூட்டாக ளுதல், கூட்டு உழைப்பு, விளையாட்டு ஓய்வு
குழந்தைக்கு தருவதாகும்.
ரின் உறவுகளின் தன்மை, இச்சூழலில் தான் ருவாகிறது. எனவே, நமது அன்றாட வாழ்க்கை, | இலட்சியத்தை குழந்தையின் மனதில் புகுத்த ளவு ஏற்றதாக இருக்கும்படி பார்த்துக் கொள்வது ன்டுகளின் ஆசிரியர்கள் 21ஆம் நூற்றாண்டு ண்டும்.
சொந்த கருத்துக்களின் மீதான நம்பிக்கையும் ழுமையாக கலந்து பழகுவதற்கும், தனிநபரை ம். எனவே, நம் மீதான தன் ஆசிரியர்களின் நண்பர்கள், மனிதர்கள் மீதான நம்பிக்கையை,
5ழந்தைகளிடம் ஊட்டி வளர்க்க வேண்டும்.
மான, பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் அக்கறை Dாகும். நாம் வளர்க்கும் முறையில் ஒவ்வொரு - மதிப்பு ஊடுருவி நிற்க வேண்டும். நண்பர்கள், ளைப் பற்றிய அக்கறையை அவர்களிடம் ஊட்ட
ன் தான் சக சமுதாய உறுப்பினர்களுக்குத் ங்கே இவனை செயற்கையாக உயர்த்தாமலும் ரா அங்குதான் தன் திறமைகள், சக்திகள் தி வளர்க்க முடியும். தான் வாழும் சமுதாயத்தில் ளைத் தான் கொண்டிருக்க வேண்டும்.
வன், நம்மைப் புரிந்து கொள்வதே அவனுக்குக் Tகளுமாகிய நாம்தான் குழந்தையை புரிந்து "லக்கேற்ப நம் திட்டங்களைத் தீட்ட வேண்டும்.
(167)

Page 188
வளர்ப்புப் பணி என்பது ஒரு மறைவு எல்லாத் திட்டவட்டமான வளர்ப்புக் கட6 கூர்மை, தொடர்ச்சி, பொறுமை ஆகிய
கூருணர்வுத் திறம், இரக்கம், அன்பு, பா உதவத் தயாராக இருப்பது, உணர். குணநலன்களை நாம் கொண்டிருக்க குழந்தைகளின் பாலும் கண்டிப்போடு தலைமுறையின் முன் பொறுப்புணர்வோ எதிர்காலத்தின் மீது அக்கறை காட்ட
10. தான்தோற்றித்தனம், அதிகாரம் செய்வ
புண்படுத்துவது, கிண்டல் செய்வது, | நிர்ப்பந்திப்பது போன்றவற்றைக் கண்டி
இவை மனிதாபிமான வளர்ப்பிற்கு | நடைமுறையில் நிறைவேற்றத் தயாரான மு
எனவே, நாம் ஆக்கபூர்வமாக இவற்றை குழுந்தைகளை வளர்க்கும் வழிகளை இடை
ஒவ்வொரு குழந்தையின் மீதுமான நம் 2 வேண்டும். நாம் கூட்டமாக செயல்பட்டு சிறிது கழித்து மீண்டும் சந்தித்து நம் குழந்தைகளி
752) கவிஞனுடைய கடமை எல்லாவர் வீடுவதில்லை. தீரத்தையும் பெரு எதையும் எதிர் நோக்க வல்ல ஆக்குவதே கவிஞனின் கடமை
23

பான, நீண்ட நிகழ்ச்சிப் போக்கு, எனவே மெகளின் நிறைவேற்றத்திலும் நாம். அறிவுக் வற்றை வெளிப்படுத்த வேண்டும்.
சம், மென்மை, திறந்த மனது, எப்போதும் வுகளைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகிய வேண்டும். இவற்றோடு கூட நம் பாலும் - நடந்து கொள்ள வேண்டும். வளரும் நி நடந்து கொள்ள வேண்டும். தாயகத்தின் வேண்டும்.
து, கத்துவது, திட்டுவது, தன்மானத்தைப் முரட்டுத்தனமாக நடப்பது, அச்சுறுத்துவது, ப்பாக நாம் கைவிடவேண்டும்.
முரணானவை இந்த "முதுமொழிகளை” Dற எதுவும் நம்மிடமில்லை.
3 அணுகி மனிதாபிமான அடிப்படைகளில்
யறாது தேடவேண்டும்.
உயர்வான அக்கறை இதில்தான் வெளிப்பட து அனுபவம் கிடைத்த பின் ஓரிரு மாதம்
ன் வளர்ப்பைப் பற்றிப்பேசலாம்....
கொ ற்றையும் பாடுவதோடு முடிந்து ந்தன்மையையும் நினைவூட்டி சக்தி மிக்கவனாக மனிதனை மட்டுமன்றி உரிமையும் ஆகும்
PSSee
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 189
) சமத்து வாழ வழிகால்
மண்ணுலகில் மான
மாதவமே செய்திட்ே பண்ணுகின்ற பஞ்சமா !
பாழாக்கிப் பண்புகை எண்ணுவதும், செய்வது
ஏற்றமுற வழிவகைக உண்மையிலும் இவர் வாழ்வி
உருப்படியாய் எதனை
அறிவியலில் உயர்ந்து
ஆர்ப்பரிப்போர் பலபே அறிவிலே அழிவு ெ அனைவரும் கொண்டி
அறவழியை மறந்தல் அனுமதி நிலை இம்மண்ணி,
துறவறமே பாண்டவரு! துண்ட நிலையன்றோ ;ெ
எங்கெங்கு வாழ்ந்த எல்லோரும் மனித இங்கெண்ண மறக்கிற
இவ்வுலகில் சிலக. பங்கமுற்றுப் பகை வ
பரிதவித்து மடிகின் தங்களைப்போல் பிறரை தன்னலங் கொண்டோர்! இ
கூர்மதி

வமாய்
ன வேண்டும் !
கீழ்தரவை கி. குலசேகரன்
சிரேஷ்ட முகாமையாளர்
(கிளைகள் பரிசோதனை பகுதி) லங்கை வங்கி, மாகாண அலுவலகம், பதுளை
டராய்ப் பிறந்தாலே டாம் என்றார்! இங்கு பாதகங்களால் வாழ்வைப்
ள இழந்தே நின்றார்! ம் தீதேயன்றி வாழ்வில் கள் வகுத்தாரில்லை!
ல் அர்த்தம் இல்லை! இங்கு யுமே செய்தாரில்லை!
விட்டோம் என்றே கூறி பர்கள் உண்டு! பெற்ற சய்து உலகை ஆள்
ங்கு அலைவோருண்டு! லையும் இவர்களாலே பில் எங்கு தோன்றும்? இங்கு
ம் மமதை கொண்டால் தாடர் கதையாய் ஆகும்?
பிட்டபோதும் மக்கள்
இனத்தாரே என்று 3ார் இதயம் இல்லார்! பலம் வாழும்மட்டும்
ளர்த்துப் போர் புரிந்து றார் வீணே! ஏனோ எண்ண நினைத்தாரில்லை!
வரால் பெருகும் தொல்லை!
(169)
169

Page 190
உள்ளத்தால் நாமெல்லாம் உண்மையினை உணர்ந்துவி
கள்ளமிலா அன்போ காலமெலாம் பகைமறிந்த
வெள்ளமெனப் பெருகி வேற்றுமையைக் களைந்திடு வள்ளுவனார் உலகப் ( வழிகளிலே வாழ்ந்துவ
இனத்தாலும் மதத்தா இங்கு வேறு வேறாய்
மனத்தாலே நாமெல். மனுக்குலத்தார் என்பதி தினந்தினம் இனமத, 1ெ
திக்கெட்டும் போர் புரி கனவினிலும் பகைமை கெ கருணை உண்மை கொண்ட
போர் என்னும் கொடுமை
புலம் பெயர்ந்து செ பார் எங்கும் அகதிகள் வேர் அறுந்த மரமாக விரக்தியுற்றுத் தவிக்கி சீர்சிறப்பாய் இவ்விடத்
செய்வதறியாதிங்கு
தள்ளாத வயதினரு தமது மதப்பேற்றை உள்ளத்தில் பெருங்கவல் உயிர்காக்க எங்கவர். வள்ளலென வாழ்ந்து வறுமையிலே வாடுகின நள்ளிரவு வேளையில் நடைப்பிணமாய் அலை
தினமு மிங்கு மரண ப
திசைகளெலாம் ஒலிப்பு மனமுடைந்த நிலையில் மக்கள்படும் அல்லல்க இனங்களுக்குள் தொட
(170)

> ஒருதாய் மக்கள்! எனும்
டில் உறவுக்கேன் தடைகள்? டு பழகிடலாம் வாரீர்! து களித்திடலாம் கேளீர்!
வரும் துயரம் போக்க டுவீர் ஐக்கியத்தைக் காக்க! பொதுமறையில் சொன்ன கை கொள்வோம் வாரீர்!
லும், மொழியினாலும் நாம் வாழ்ந்திட்டாலும் லாம் ஒரு குலத்தார்! லும் மாற்றம் உண்டோ? மாழியின் பேரால் வீணே தல் மடமை அன்றோ? பாள்ளா நிலைமை காண்பீர்! டவராய் உயர்ந்தே வாழ்வீர்!
மயினால் மக்களெல்லாம் ல்கின்ற காட்சி பாரீர்!
ளாய் எண்ணிப் பாரீர்! 5 அவர்கள் வாழ்வில்
ன்ற நிலையைப் பாரீர்! தில் வாழ்ந்த மக்கள்
திகைத்தல் பாரீர்!
ம், நோயுற்றோரும், எதிர்பார்ப்போர்தாமும் pல கொண்டே வாழ்வார்! கள் ஓடிச் செல்வார்? துவரும் போரினாலே எறார்? ஏது செய்வார்? லும் தூக்கம் இன்றி >கின்றார்! அதையின்றி
1வரும் சென"ழ்வரர்,
யம்! மக்கள் செல்லும் பதுவோ மரண ஓலம்! ரிலே அங்கும் இங்கும் ளோ பெருகுதெங்கும்! ருகின்ற யுத்தத்தாலே
- கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 191
இன்னலுறும் மக்களது
கனவினிலும் பிறரை | கருணையுள்ளம் கொண்ட
பொட்டிழந்து பூவிழந்து புலம்பி நிதும் வாழுகின்ற
இட்டமொடு தமைக்காத் இழந்து பல குழந்தைகளும்
கட்டி வைத்த மாடிம். கண்முன்னே மண்மேடாய
பட்டமரமாய்ப் போன பசுமை நிலை வந்திடகை
தன்னைப்போல் பிறரை எண்ணும்
தன்னலமும் பகைமையது இன்னலுறும் மனிதரிடம் இனிய எங்கள் காந்தி பு: நன்னெறியைப் பின்பற்றி நமக்குள்ளே ஒற்றுமையை
என்னாளும் சாந்தி, சமத்துவமாய் வாழ வழி
கூர்மதி.

நிலையைப் பாரீர்! இங்கு இம்சிக்காது வராய் வாழ்ந்துபோவீர்!
மகளிர் பல்வோர் நிலைமை கண்டோம்! த பெற்றோர்தம்மை ) தவிக்கக் கண்டோம்!
னை கோபுரங்கள் | ஆகக் கண்போம்!
மனித வாழ்வில் ) என்று காண்போம்?
5 தன்மை வேண்டும்! இங்கு வம் நீங்க வேண்டும்! இரங்கல் வேண்டும்! த்தன், யேசு சொன்ன
ஒழுகல் வேண்டும்! வளர்த்தல் வேண்டும் சமாதானத்தோடு
காணல் வேண்டும்!
(171)

Page 192
தெற்காசிய நாடுக
திருமதி. சுதாகரி மட்/செங்கலடி மத்திய
உலகில் எந்தவொரு நாட்டிலும் கல்வி நிலை நிலை குறிகாட்டியாக உள்ளது. ஒரு நாட்டின் பிள்ளைகள் எழுதவும் வாசிக்கவும் உதவும் செய்வது அவசியமானதாகும். அந்தவகையில் வேண்டியது எமது கல்விசார் சமூகத்தின் தே
பெரும்பாலாக தென்னாசியாவில் 80 பாடசாலையில் சேர்கிறார்கள். பூட்டான் - கிடைக்கப்பெறவில்லை. நேபாளில் 70 வீத சேர்கின்றனர். ஆனால் தரம் 5 வரை படிப்புத் பூட்டான் ஆகிய நாடுகள் சீனாவுக்கு நி தொடருகின்றனர். நேபாளில் 75 வீதத்துக் வீதமானோரும் கல்வியை தொடர்ச்சியாக தெ வீதமானோராகக் காணப்படுகின்றனர்.
பங்களாதேஷ் நாடு 90களில் தென்ன இலங்கை பூட்டான் நாடுகளுக்கு அடுத்தபடி வளர்ச்சி கூடியிருந்தாலும் பங்களாதேஷ் கல்வி உள்ளது.
கல்வி வளர்ச்சிப் போக்கிற்கும் நாடுகள் ஒதுக்கும் தொகைக்கும் தொடர்பு உண்டு. அந்த திட்டத்தில் 2.3வீதத்திற்கு அதிகமாகவும் பூட் 3வீதமும், இலங்கை 1.3வீதமும், பாகி
ஒதுக்குகின்றமையை அறிய முடிகின்றது. கல் உரிமை என இந்தியாவில் சட்டசீர்திருத்தம் ெ 0.5 வீதமாகவே உள்ளது.
மற்றநாடுகளுடன் சமமான வருமான விருத்திகுறைவாக உள்ளதாக OXFARM இந்தியாவும் பாகிஸ்தானும் ஆரம்பக்கல்விச் யுத்த ஆயுதங்களுக்காகச் செலவிடுவதாக ( பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் தொகையில் 90வீதமானது ஆசிரியர்களுக்கு செலவுகளுக்குமாகவே செலவிடப்படுவதாக ே
தென்னாசிய நாடுகள் ஆரம்பக்கல்வியில் செலுத்த வேண்டும். இந்தியாவை உதாரணமா நிதி உயர்கல்விக்கு ஒதுக்கப்படுகின்றது. ஒரு செலவில் 40 பிள்ளைகள் பாடசாலை
( 172

ளின் கல்விநிலை
மணிவண்ணன் கல்லூரி, செங்கலடி
லயை அளவிடுவதற்கு ஆரம்பக் கல்வியின் உள்கட்டுமானம் (infrastructure) அங்குள்ள அடிப்படையைக் கொடுக்கிறதா என ஆய்வு தென்னாசியாவின் கல்வி நிலைபற்றி நோக்க நவையாகும்.
வீத அதிக பிள்ளைகள் ஏதாவதொரு பாக்கிஸ்தான் பற்றிய புள்ளிவிபரங்கள் கத்துக்கும் அதிகமானோர் பாடசாலையில் தொடரும் மாணவர்கள் குறைவு. இலங்கை கராக 90 வீதமானவர்கள் கல்வியைத் கு அதிகமானோரும் பங்களாதேசில் 65 காடர் இந்தியாவில் கல்வி தொடருவோர் 60
Tசியாவில் பின்தங்கி இருந்தாலும் இன்று யாக உள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவைவிட முன்னணியில்
தமது வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கு வகையில் பங்களாதேஷ் தமது வரவுசெலவுத் டான் 5வீதத்துக்கு அதிகமாகவும் நேபாள் ஸ்தான் 1வீதமும் கல்விக்காக நிதி வி ஒவ்வொரு பிள்ளைக்குமான அடிப்படை சய்யப்பட்ட போதும் கல்விக்கான ஒதுக்கீடு
ம் இருந்தபோதிலும் ஆசிய நாடுகள் அறிக்கை தெரிவிக்கின்றது. அத்துடன் செலவைவிட 3 மடங்கிற்கும் அதிகமாக Dxfam report தெரிவிக்கின்றது. இந்தியா ம் ஆரம்பக் கல்விக்காகச் செலவிடப்படும் 5 சம்பளம் வழங்குவதற்கும், நிருவாகச் மலும் தெரிய வருகின்றது.
அதிகம் செலவிடுவதுடன் மேலும் அக்கறை கக் கொள்வோமானால் அங்கு 54வீதமான பிள்ளையை பல்கலைக்கழகம் அனுப்பும் க்குப் போகமுடியும் என்பது இங்கு
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 193
குறிப்பிடப்படவேண்டிய அம்சமாகும். தென்ன இன்று ஒட்டுமொத்தத்தில் குறைவாக உ6 கல்லூரிகளில் (secondary) சேருவோர் தெ
தென்னாசியாவில் வறுமையை ஒழிக்க பொருளாதார வளர்ச்சியைக் கூட்டவும் அ
அத்தியாவசியமானதாகும். தென்னாசியாவில் ஆரம்பக் கல்வி வயதில் பாடசாலை செல் 26 மில்லியனாகக் குறைந்தது வரவேற்க ஆரம்பக் கல்வி வயதில் பாடசாலை செல் மில்லியனாலும் ஆப்கானிஸ்தானில் 3 மில் பங்களாதேசில் 1 மில்லியனாலும் குறைந்து ஆரம்பக் கல்வியில் ஆண் பெண் சமத்துவம் இந்தியா ஆகிய நாடுகளில் அடையப்பட்டுள் ஆகிய நாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டு மாலைதீவு ஆகிய நாடுகளில் உயர்
அடையப்பட்டுள்ளது.
தென்னாசிய நாடுகளில் கல்விக்கு எ உதவி பற்றி இனி நோக்குவோம். உண்மை! தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயற் முடியும். அந்தவகையில் நேபாளத்தில் 204 நிருவாகத்துக்கு அரசாங்கம் மாற்றியுள்ளது. உயர்கல்விப் பாடசாலைகளுக்கு அரசு நி. ஆரம்பக் கல்விப் பாடசாலைகளும் 40வீத ! உதவி பெறுகின்றன.
தென்னாசிய நாடுகளில் அரசாங்கங்கள் கற்பதற்கான ஊக்குவிப்புக்களை வழங்குகி கல்விப் பாடசாலைகளில் நிபந்தனைக் குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானிலும் தெரிவு 6 கற்பதற்காக நிதியுதவி வழங்கப்படுகின்றது
தென்னாசிய நாடுகளில் கல்வியில் எ வறிய பின்தங்கிய நிலையில் 26 மில்லியன் உள்ளனர். 10 வீதமானோர் ஊனமுற்றோர்.
பெண் பிள்ளைகள் பாடசாலைகள் ஆப்கானிஸ்தானில் 34வீதமும் பாகிஸ்தான் தென்பகுதி மாகாணங்களில் பெண்பிள்ளை சேர்க்கப்படுகின்றனர். ஆரம்பக் கல்விநிலையி அதனை உயர்கல்வியிலும் அடையும் சவா
பெருமளவிலான பிள்ளைகள் ஆரம் மொழி கணிதத் திறனற்று உள்ளமையுப் பெருஞ் சவாலாக உள்ளது. இந்தியாவில்
கூர்மதி

Tசிய நாடுகளில் உயர்கல்வி கற்போர் தொகை ர்ளபோதும் ஐந்தாம் தரத்திற்கு மேலாகவும் நாகை 10வீதத்தால் அதிகரித்துள்ளது.
வும் ஏற்றத்தாழ்வற்ற நிலையை உருவாக்கவும் டிப்படைக்கல்வியான ஆரம்பக்கல்வி மிகவும் | 2002 தொடக்கம் 2005 வரையான காலத்தில் லாத சிறுவர் தொகை 43 மில்லியனிலிருந்து த்தக்க விடயம். 2002-2005 காலகட்டத்தில் லாத சிறுவர்கள் தொகை இந்தியாவில் 11.5 லியனாலும் பாகிஸ்தானில் 2 மில்லியனாலும் ள்ளமை குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாகும். மாலைதீவு, இலங்கை, பூட்டான், பங்களாதேஷ், Tளது. ஆப்கானிஸ்தான், நேபால், பாகிஸ்தான் Tளன. அத்துடன் பங்களாதேஷ், இலங்கை, கல்வியிலும் ஆண் பெண் சமத்துவம்
பழங்கப்படும் அரச சார்பற்ற நிறுவனங்களின் யில் அரச சார்பற்ற நிறுவனங்கள் சமூகங்கள் ற்படுவது கல்வி விருத்தியை மேலும் ஏற்படுத்த 50 பாடசாலைகளை உள்ளூர் சமூகங்களின்
பங்களாதேசில் தனியார் நிருவாகத்திலுள்ள தியுதவி வழங்குகின்றது. இந்தியாவில் 7வீத இடைநிலைக் கல்விப் பாடசாலைகளும் அரச
ள் வறியவர்களும் பெண்பிள்ளைகளும் கல்வி ன்றன. பங்களாதேஷில் ஆரம்ப இடைநிலைக் தட்பட்ட நிதியுதவி வழங்கப்படுகின்றமை செய்யப்பட்ட மாவட்டங்களில் பெண்பிள்ளைகள்
திர்நோக்கப்படும் சவால்களை நோக்குவோம். ன் சிறுவர்கள் இன்றும் பாடசாலை செல்லாது
ரில் சேர் வது பற்றி நோக்கும் போது னில் 41வீதமும் ஆகும். ஆப்கானிஸ்தானின் எகள் 15வீதத்தினர் மட்டுமே பாடசாலையில் ல் ஆண்பெண் சமத்துவத்தை எட்டிய நாடுகள்
லை எதிர்கொள்ள வேண்டும்.
பக் கல்வியை முடிக்கும்போது அடிப்படை D தென்னாசிய நாடுகளில் காணப்படுகின்ற - 2-5 வகுப்புப் பிள்ளைகள் ஒரு பந்தியை
173

Page 194
வாசிக்க முடியாதுள்ளனர். 62 வீதமானோர் ஒரு க
தென்னாசியாவில் ஆரம்பக் கல்வியை விட் இருப்பது என்பது மிக அதிக வீதமாகும். ஆ பிள்ளைகளில் பத்துப் பிள்ளைகளுக்குக் கு
முடிக்கின்றனர்.
கடந்த நான்கு வருடங்களில் புதியதோர் கல்வியில் அக்கறை செலுத்துவதைக் காணல் பூட்டான் இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடு 2007 வரையான காலப்பகுதியில் உலக வா டொலர்களை தென்னாசியக் கல்விக்காக ஒதுக்க அம்சமாகும். இந்நிதியின் மூலம் தென்னாசியாவிலு உயர்த்தி, கல்வியில் நல்லதொரு பெறுபேற்ை
மிகக் குறைந்த மனிதவள அபிவிருத்திை கல்விக்கான வளங்களில் அதிதீவிரமான கவனம் ஆசிரியர்களும், அதிபர்களும், கல்விசார் அ சான்றோரும் நிகரில்லாச் சேவைபுரிய வேண்டும்.
குரு)
சிரிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள் சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள் விளையாட நேரம் ஒதுக்குங்கள்
படிக்க நேரம் ஒதுக்குங்கள் நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள் உழைக்க நேரம் ஒதுக்குங்கள்
கலை
174

சிறிய கதையை வாசிக்க முடியாதுள்ளனர். ட்டு வெளியேறுவது திரும்ப ஒரே வகுப்பில் ரம்பக் கல்விக்கு வரும் ஒவ்வொரு 100 றைவானோரே இடைநிலைக் கல்வியை
- உத்வேகத்துடன் தென்னாசிய நாடுகள் முடிகின்றது. உதாரணமாக பங்களாதேஸ் இகளைக் குறிப்பிடலாம். 2003 தொடக்கம் ங்கியானது 2470 மில்லியன் அமெரிக்க கியுள்ளமை இங்கு குறிப்பிடப்படவேண்டிய வள்ள ஏழைச் சிறார்களின் கல்வித்தரத்தை ற ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
யக் கொண்டுள்ள தென்னாசியா அதனது மடுக்க வேண்டும். இதற்காக பெற்றோரும், திகாரிகளும், கல்வியில் ஆர்வமுடைய இல்லாவிட்டால் எதிர்காலச் சந்ததியினர்
SGRG
- அது இதயத்தின் ஓசை
அது சக்தியின் பிறப்பிடம் அது இளமையின் ரகசியம்
அது அறிவின் ஊற்று - அது மகிழ்ச்சிக்கு வழி - அது வெற்றியின் விலை
Se
ல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 195
$வ ஒன்றினை ஒருகையாய் ஒல்
திருமதி. க யா/ தம்பசிட்டி மெதடிஸ்த ப எண்ணின்றி எழுத்தின் எண்திக்கும் எவ்விடமு! கண்ணுற்று கவலைநின் கரம்நீட்டி அழைக்கின்றே
பொன்னில்லை பொருளில் பொங்கும் உலைதன்னில் நித்தமும் நோய் வருத் வேறுவழி தெரியாது
மார்பகபடமியம்
செல்வமெனச் சொல்வ மக்களெனும் செல்வத்த
தம்மக்கள் தலைநிமி பத்தோடு பதினொன்றா
ஊணின்றி பசியது 2 உடல்தோறும் சொறிசிரங் தோன்று பசி ஆற்றிடம் உறுநோயின் உபத்தி
தோய்த்துலர்ந்த உடைய
தொடும் போது உரை
நெய்யதன் பிசுக்கற் தன்னிறம் விட்டு |
இதுகாறும் சொன்ன இத்தனையும் பதின்மடங்கா ஏழ்மையெனும் மூன்றெழு
ஏதிலிகள் கல்வி
இரக்கின்ற கையே பறக்கின்ற மனிதர் இரக்கமின்றி வீசு சு இருக்கின்ற இவர்கள்
கூர்மதி14-CM 013788

ணவோம் !) R எறித்து நிற்போம் !
-. பாலகெளரி மிசன் தமிழ்க்கலவன் பாடசாலை எறிப் புண்ணுற்றுப் போகும் ம் நிறைந்திருக்கும் சிறுவர் மற மனமுடையோர் தம்மை
ன் ஒன்றிணைவோம் வாரீர் !
லை கையெல்லாம் வெறுமை தினம் பூத்திருக்கும் வறுமை கத விழிபிதுக்கும் தந்தை து ஓலமிடும் அன்னை
தற்கு எதுவுமற்ற போதும் தால் மனைநிரம்பி வழியும் சர்ந்து நடக்கின்ற போது
ய் இன்னொன்று நெளியும்
உயிர்கொண்டு போகும்
கு உயிர் உருக்கி வாட்டும் வே கைவரண்டு போயின் ரவம் எது ஆற்றக்கூடும்
டுத்தி தொகை நாட்களாகி டயது கோந்தாக மாறும்
று மயிர்கூட வரண்டு மண்ணிறம் காட்டும்
வகள் முழுதல்ல சற்றே ல் பெருக்கி விட்டதைப் போல் த்து மூண்டெழுந்து வந்தால் பற எப்பாடுபடுவர்!
'டு இருவிழியும் ஏங்கி டை பின்னாலே ஓடி சொல்லாலே கலங்கி 1 கற்பதுதான் எப்போ?
(175)

Page 196
| ச
வருந்துன்பம் அத்தனையு வறுமையிருள் அகற்றவென
பகலன்றி அல்கூட படை பஞ்சைகள் படும்துன்பம்
சிறுகைகள் பெரும் சுமை துடிதுடித்து நலிவுற்றுச் ே
சுமையாக அழுத்துகின்ற சிறியவர்கள் படும்துன்பம்
எண்ணென்றால் கண்ணென்
எழுத்தின்றி வாழ்வில்ை பொன் போன்ற வாழ்வென்
ஏற்றமிகு வாழ்வதுவு
வறுக்கின்ற வறுமைதனை வழிசமைத்து அவர்களுக்
வேறுவழி தெரியாது என விதிமாற்றி மதிகொண்டே
கருணையென்போம் காருண்ய
கடுகளவும் பிறர்க்குதவி இந்நிலையை மாற்றிடவே புற்றீசல் போல் வாரும் பு
ஒன்றிணைவோம் ! ஒருகை ஒதுக்கி ஒரு நிதியதனை இல் பாலியர்கள் தொழில் புரியும்
புறக்கணித்து போராடி |
தெருவோரம் யாசிக்கும் ! அருகழைத்து அரவணைத்து அவர்தம்மை வாட்டுகின்ற
அனைவருமே ஒன்றினை
புனல் சூழ்ந்து அனல் சூழ்
தளராத துன்பத்தால் ; உயிர் துடிக்க உடல் த நிசி தோறும் கண்மூடாது
கைவரண்டு மனைவரண்டு
துயர் மேகம் முற்றாக 6 உறவிழப்போம் உடலிழப்பே கல்வியெனும் பெரும் செல்வம்
(176)

ம் தலை மேலே தாங்கி 1 உயிர் வருத்தி தினமும் தபத்ைது உழைக்கும்
புறக்கணிக்கலாமோ?
மயை சுமக்கின்ற போது சார்வதனை அறிவோம் ம ஏழ்மைதனை தாங்க
ஏன் அறிய மாட்டோம்?
று இவர்களுக்குத் தெரியும் ல என்பதுவும் தெரியும் சறு பெரியோர்கள் புகழும்
ம் கிட்டாது போகும்
விரட்டுகின்ற வகையை த புகட்டி நிற்போமாயின் விழிகலங்கும் சிறுவர் டார் ஆக்கிவிட இயலும்
பம்தனைப் புகழ்ந்து நிற்போம்
செய்திடவே மாட்டோம் வ எல்லோரும் ஒன்றாய் றப்படுவோம் இன்றே !
பாய் ஒன்றித்து நிற்போம் ! வர்களுக்குக் கொடுப்போம் ! பணிஸ்தலங்கள் தோறும் புரிந்துணரவைப்போம் !
இளையவர்கள் தம்மை து அறிவு பெறவைப்போம்! வறுமைதனைப் போக்க ணந்து பாடுபட வாரீர் !
த்து துயர் சூழ்ந்த போதும் தலைபோன போதும் களர பசிவந்த போதும் துயிர் சோர்ந்த போதும்
 ெஉலைவரண்ட போதும் எமை சூழ்ந்த போதும் பாம் உயிர் கூட இழப்போம் 5 தனையிழக்க மாட்டோம் !
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 197
பாரதியார் பற்றி சில
கர்நாடக சங்கீதம் பற்றி... பார்
"நானும் பிறந்தது முதல் இன்று வரை கச்சேரி தொடங்குகிறது. வித்துவான் "வா
'ராமநீ ஸமான மெவரு' மரியா
ஐயையோ, ஐயையோ !
"எந்த ஜில்லாவுக்குப் போ, எந்த கிராமத்தி கதைதான். தமிழ்நாட்டு ஜனங்களுக்கு இரு திரும்ப ஏழெட்டுப் பாட்டுக்களை வருடக் தோற்காது உள்ள தேசங்களில் இதைப்
"இப்போது உலக முழுவதிலுமே ராஜா பழகும்காலம் போய்விட்டது. பொது கலைகளுக்கெல்லாம் போஷனையும் ஆத அவர்களுக்கு உண்மையான அபிருசி உ கடமை"
பாரதிக்குப் புலமையில்லை
அப்போது புதுச்சேரியில் வாழ்ந்து வந்த தம் கொள்ளவில்லை. இவருக்கு தமிழிலக்கி என்பது அவர்களுடைய முடிவாகும். அவரு ஆராய்ச்சியும் உண்டு என்பதை நான் வற் நம்பிக்கை கொண்டவர்களில் யானும் ஒரு
பாரதியாருடைய தொடர்பு என்னுடைய பா அவர் கண்ணெதிரில் காணப்படும் மக்களி மனத்தை கவர்ந்தது. பிறகே என்னுடைய | துறைகளில் உள்ள குறை நிறைகளை இவ்வகையில் பாரதியாருக்கு யான் மிகவு
கூர்மதி

குறிப்புக்கள் ,
SெIாம்
ரதி
ஐத/
பார்த்துக் கொண்டே வருகிறேன். பாட்டுக் தாபி கணபதிம்'' என்று ஆரம்பம் செய்கிறார்.
த காதுரா' 'வர மு லொஸகி... ஒரே கத்தல், ஒரே கதை.''
திற்குப் போ எந்த வித்வான் வந்தாலும் இதே நம்புக் காதாக இருப்பதால் திரும்பத்திரும்பத் கணக்காகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.''
க்களையும் பிரபுக்களையும் நம்பி வித்தை ஜனங்களை நம்ப வேண்டும். இனிமேல் ரவும் பொது ஜனங்களிடமிருந்து கிடைக்கும். உண்டாக்கிக் கொடுப்பது வித்வான்களுடைய
பாட்டும் பாரதியும் - பெ.தூரனின் நூலிலிருந்து
ழெறிஞர்கள் பாரதியாரைக் கவிஞரென ஒத்துக் ப இலக்கணங்களில் தக்க புலமையில்லை க்கு எழுத்து, சொல், யாப்பு பற்றிய அறிவும், புறுத்துவேன். அந் நாளில் அவர் புலமையில்
வன்..
நெறியில் ஒரு புதிய போக்கை ஏற்படுத்தியது. ன் தேவைகளைப் பாடினார். அது என்னுடைய பாக்கள் அரசியல், சமுதாயம், மொழி ஆகிய உருவாக எடுத்துக் காட்டத் தலைப்பட்டன.
ம் கடமைப்பட்டவன்.
-பாரதிதாசன்(பாரதிதாசன் பேசுகிறார் என்ற நூலிலிருந்து)

Page 198
கவிதை பற்றி... பாரதி
மேற்கு நாடுகளின் கவிதையில் வீண் சொற்க கருதி வெற்றுச் சுமைகளைக் கவிதை தாங்கி ஜப்பானியப் புலவர் கூறிய விளக்கத்தையும்
கூடை கூடையாக எழுத வேண்டும் என்ற வெ வைக்கும் எண்ணமே இருப்பதாகவும் அவர் 8 சொல்லி விளங்க வைத்தல் தமிழிலும் உ கடலைப் புகட்டி குறுகத்தறித்த குறள் அதற்
ஆனாலும் ஒரேயடியாகக் கவிதை சுருங்கியே கூட எல்லாக் கவிதையும் ஹொகூ பாட்டன்று என்றுகூட கொள்ளலாம்.)
எல்
22 ஆரோக்கியமான சிந்தனை கொண அக்கறை கொள்ள வேண்டும். அ Acceptance), வாழ்வின் இலட்சி சுற்றாடலை நன்கு புரிந்து கொ6 mastery), தனிப்பட்ட வளர் ஏனையவர்களுடன் நல்லுறவு (1 others), சுயமான இயக்கம் (A1
க.
(178)

கள் மிகுதியாயிருப்பதாகவும் ஓசை நயம் யிருப்பதாகவும் உயோநே நோகுச்சி என்ற
பாரதி நமக்கு விவரிக்கிறார்.
றி இல்லாமல் சுருங்கச் சொல்லி விளங்க கூறுவதைப் பாரதியும் ஏற்கிறார். சுருங்கச் ண்டென்பதையும் கடுகைத் துளைத்தேழ் க்கு உதாரணம் என்றும் விளக்குகிறார்.
போய்விட்டால் நல்ல தன்று. ஜப்பானிலே 3 (ஹொகூ என்பது இன்றைய ஹைக்கூ
- பாரதியின் சர்வதேசச் சிந்தனைகள் ன்ற ஆ. செகன்னாதன் கட்டுரையிலிருந்து
நன்றி 'தாமரை'
நெல்லை
L மனிதன் ஆறு விடயங்களில் அவை சுய அங்கீகாரம் (Self பம் (Purpose of life), சூழல் ன்டிருத்தல் (Environmental 'ச்சீ (Personal growth), Positive Relationship with utonomy) என்பவையாகும். தனது
ல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 199
இலக்கிய
கண்டி/தெ/பாத்திமா மகளிர் |
இன்று தமிழ் இலக்கிய வடிவங்களுள் கால பண் தொட்டு இன்றுவரை பல மாற்றங்க இவற்றிலும் புதுக்கவிதைகள் மக்கள் மனதை மரபுக்கவிதை, புதுக்கவிதை, பாரதியாரை த மூன்று பிரிவுகள் காணப்படுகின்றன. இ ஈர்க்கக்கூடியவை. மேலும் இவை காலக் !
என்றவகையில், புதுக்கவிதைகளில் ஒன்றா என்ற கவிதை இன்குலாபின் விசித்திரமான பலவழிகளில் நயக்கலாம்.
மையக்கருத்து: கவிதை ஒன்றினை மக்கள் விரும்புவது : கவிதைகளின் அறிகுறி மையக்கருத்தாகும். இருப்பார் கள் என்ற இக்கதையில் , சித்திரிக்கப்பட்டுள்ளது. பொருள் செல்வம் இ வாழ்க்கை, இன்பம் களவுபோனால் யாராலு
அவ்வாறு களவாடப்பட்ட இன்பங்களும், ம கொண்டுள்ளது. அப்பா! கொள்ளைக்காரர்கள் கேள்விக்கு அப்பாவின் சரியான விடைகள் காணலாம்.
என்னோடு சேர்ந்த எல்லா மதத்திலும் கள் என்ற கவிவரிகள் அவ் உண்மையைக் ! அடுக்கான கேள்விகள் கவிதையோட்டத்தை
கையாண்டுள்ள உத்தி:
உத்திகளுள் பல வகையான உத்திகள் க நேர்முக உத்தி, வினாவிடை உத்தி, வசனம் இக் கவிதையில் காண முடிகின்றது.
மேலும், எளிமையான மொழிநடையும் இக் க மட்டுமின்றி பாமரர்களுக்கு படித்து சுவைக் கவிஞர் ஏற்படுத்தியிருப்பது நயமானது. என் ம சரிந்து போகின்றன என்பதை சிறந்த எடுத்துக்
ககூர்மதி

ம் நயத்தல்
செல்வி எம்.ஏ.எப். சுமையா
மத்திய மாகாணம் முஸ்லிம் கல்லூரிய, முருதகஹமுல்ல, கலி ஓயா
மத்தால் மூத்தது கவிதையாகும். கவிதையானது களும், வளர்ச்சியும் அடைந்து வருகின்றது. த வென்ற கவிதைகளாகவே வெளிவருகின்றன. கழுவி வந்த நவீன கவிதை என கவிதைகளில் வற்றில் புதுக்கவிதைகள் வாசகர் மனதை கண்ணாடிகளாக காட்சி தருகின்றன.
என கொள்கைக்காரர்கள் எப்படி இருப்பார்கள் ன படைப்பொன்றெனலாம். இக்கவிதையினை
அதன் கருத்திலேயே அடங்கியுள்ளது. சிறந்த
அந்த வகையில் கொள்கைக்காரர்கள் எப்படி வாழ்க்கை களவாடப்பட் டதன் துன்பம் ஒன்று இருக்கும் நிலையை சொல்லும். ஆனால் அம் திரும்பவும் பெறுவது மிகக் கடினம்.
னவேதனையுமே இக்கவிதை கருப்பொருளும் எப்படி இருப்பார்கள் என்ற பிஞ்சு உள்ளத்தின் ர் வாசகர் மனதைக் கொள்ளையடிப்பதைக்
ாவாடப்பட்ட வாழ்க்கையே எழுதப்பட்டுள்ளது காட்டுகின்றது. மேலும், பிஞ்சு உள்ளத்தின் தக் கொண்டு செல்கின்றன.
Tணப்படுகின்றன. அவற்றில் குறியீட்டு உத்தி, தடை உத்தி ஒருங்கே கையாளப்பட்டிருப்பதை
விஞனின் உத்தியாகும். எனவே படித்தோருக்கு 5க கூடிய எண்ணக்கருவை இக்கவிதையில் கனின் கேள்விகளில் நான் அறிந்து வைத்தவை கோட்டாக கொள்ளலாம். மட்டுமின்றி இதுவரை
179

Page 200
நீங்கள் எதையும் களவு கொடுத்ததில்லைய புலனாகிறது. அப்படியும் இருக்கலாம். ஆயினு
என்ற இக்கவி அடிகளில் இருந்து குறியீட்டு ( இருக்கின்றது. இடையிடையே கையாண்டுள்ள ( எனலாம். புன் முறுவல் ...... வசந்தகாலக் கு கொள்ளலாம்.
அணிகள்:
அணிகள் இரண்டு வகைப்படும் சொல்லல எழுந்த உணர்ச்சிகளை அவ்வாறே வாசகர்
கையாளுகின்றார். அழகுணர்ச்சியோடும், கர் வெளியிடுகையில் தானாகவே அணிகள் உரு பொருளணி கையாண்டிருப்பதை காணலாம். உ6 அறியாததை விளக்குவதாகும். இக்கவிதையிே உவமைகளை அப்பா கூறுவது கவிஞனின் தி
ரகசியமாய் கொறித்து பார்வைக்குத் தப்பு சிறந்த எடுத்துக்காட்டாகும். வடையை பறித்துப் கோழிக்குஞ்சைக் கொத்திச் சென்ற பருந்து சிந்தனைக்கு விருந்தளிக்கும் புதுமையான வசனா செய்கின்றன. இவ்வுவமைகளால் களவின் பா இவ்வுவமைகளே கவர்ச்சி ஊட்டுகின்றன.
நயத்த பகுதியும் காரணமும்:
ஒவ்வொரு வாசகனும் நயக்கும் திற உள்ளத்தைத் தொட்ட பகுதி “அனுபவத்தால்
எங்களைப்போல் நீ ஏமாந்து விடாதே” இது6ெ இக்கதைக்கு இவ்வரிகளே அர்த்தம் கொடுச் இவ்வமைப்பு கொடுக்கின்றது. இது மட்டுமல்6 ஏமாற்றத்தையும் நான் கொடுத்த ஆறுதலும் 8
இன்றைய சமூக நிலையில் நாம் எவ் என்பதையும் ஞாபகமூட்டுகிறது. களவு செல்வ இன்பங்கள் ஏராளமானவை என்பதை உணர் அதனை அறிந்து செயல்பட வேண்டும் என்ற
"பிறர் சொன்னவற்றை சோலை, கடல், மீ
தென்றலினை | மீந்திருக்கும் இன் ஏழ்மை உயர்வு
பாருங்கள்...''
என்ற கவித் தத்துவத்தின் கீழ் இக்கவிதையும் மகிழ்ச்சியைத் தருகின்றது. ( 180

ா? என்பதிலிருந்து வினாவிடை உத்தி ம் மகளே!
நேர்முக உத்திகளை அறியக் கூடியதாக சாற்தொடர் கவிதையை வலுவூட்டுகின்றது யில்... என்பவற்றை உதாரணங்களாகக்
ரி, பொருளணி. கவிஞர் தன் உள்ளத்தில் உள்ளத்திலும் பதிக்கவே அணிகளை பனை வளத்தோடும் தன் சொற்களை வாகின்றன. அவ்வாறே இக்கவிதையிலும் பமை அணி என்பது அறிந்ததைக் கொண்டு ல பிஞ்சி மனதுக்கு புரியும்படியாக சிறந்த றமையே!
ம் சுண்டெலி போலவா? என்ற இவ்வுவமை போன காகம் போலல்லவா சிறகு வளராத புபோலல்லவா? என்ற இவ்வுவமைகளை ங்களால் அழகியற்கலை நயப்பை ஆழமுறச் ரிதாபம் புலனாகின்றது. இக்கவிதைக்கும்
ன் வேறுபட்டது என்ற வகையில் என் அவர்களை நீ அடையாளம் காண்கையில் வன்றே கொள்ளலாம். காரணங்களோ பல 5கின்றன. தலைப்பிற்கும் ஏற்ற பதிலை லாமல் என் நண்பியின் வாழ்வில் நடந்த இவ்வடியில் புலனாகின்றது.
வாறு முன்னுணர்வுடன் வாழ வேண்டும் து பொருட்கள் மட்டுமல்ல வாழக்கையின் த்துவதோடு அனுபவத்தால் நாம் தான் தத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றது.
நீர் சொல்லாதீர் ன்னல், முகில் மறவுங்கள் எல் உழைப்பு என்பவற்றைப் (மகாகவி)
அமையப் பெற்றுள்ளது மனதிற்கு பெரு
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 201
பாடசாலைகளில் மாணவர் தலைமைத்துவ பயிற்சி வ முக்கியத்துவமும் நிருவாகப்
பாடசாலை என்பது பல்வேறுபட்ட பணிகம் மத்தியில் முறைசார்ந்த தொடர்பினை
முகாமைப்படுத்தவும் அதனை அலகுகளாக ஒழுங்கமைப்பாகும். அதாவது பாடசாலை விழுமியங்களையும் கலாசாரப் பண்பாட்டு அடுத்துவரும் தலைமுறையினர்களுக்கு வழ இது ஒரு நாட்டில் காணப்படும் பல்வேறுபட்ட ஒன்றுபட்டது எனலாம். ஸ்தாபனமென்பது பல் பலவற்றை உள்ளடக்கிக் காணப்படும் ஒரு
இங்கு நடைபெறும் செயற்பாடுகள் நிறுவனத் உட்படுத்துவதற்கும் அந்நிறுவனத்தில் க இலக்கினை நோக்கிச் செல்லவும் மிகமிக
கல்வியின் நோக்குகளுள் முக்கியம் நற்பிரஜைகளை உருவாக்குதல் என்பதாகும் விருத்திக்கு உதவுதல் எனப்படுதலாகும். நிறுவனமாக பாடசாலைக்ை குறிப்பிடலாம். : மாத்திரம் வழங்கும் ஒரு நிலையமாக இல்லா மனப்பாங்கின் விருத்திக்கும் உதவுவதோ நிலையமாக இருத்தல் வேண்டும்.
நாட்டிற்குத்தேவையான எதிர்கால நற் நாம் காணும் பாடசாலைகளாலே உருவா முழுமையான பயிற்சியும் வழிகாட்டுதல்களும் வேண்டும். எனவேதான் குழுவாக செயற்படும் என்பவற்றைப் பாகுபடுத்தி, மிகச் சரியான வ செல்ல தலைமைத்துவம் எனும் நல்வழிகாட்
அதிபர், ஆசிரியரது பங்களிப்புக்கள்
பாடசாலை முகாமைத்துவத்தில் அதிப விசேடமாக அவர் கற்றல் - கற்பித்தல் செய துறைகளிலும் தரவிருத்தியை மேம்படுத்துப தனது நிருவாகத்தை ஆசிரியர், மாணவர் மற் சீரான முறையில் ஒழுங்குபடுத்தி அதனை பரம் ஒவ்வொரு பிரிவு மட்டத்திலும் விரிவடைந் நிர்வாகத்தை திறம்பட நடாத்துவதற்கு :
கூர்மதி.

களுக்கு ழங்கப்படுவதன் | பங்களிப்பின் அவசியமும் எஸ்.எல்.மன்சூர், ஆசிரியர் (B.Ed) அக்/அல் - அஷ்ஹர் வித்தியாலயம்
ஒலுவில் ள் ஒப்பபடைக்கப்பட்டுள்ளதும், மக்களுக்கு உருவாக்கவும், சிக்கலான ஓர் பணியை 5 ஒழுங்குபடுத்தவும் உருவாக்கப்பட்ட ஒரு யானது சமூகத்தில் காணப்படும் பல்வேறு ரீதியான பாரம்பரியங்களையும் பாதுகாத்து ங்கும் ஒரு நிருவாக ரீதியான ஸ்தாபனமாகும். - தாபனங்களைப் போன்று அமைப்புரீதியாக லவாறான செயற்பாட்டு ரீதியான தொகுதிகள் நிறுவனம்சார்ந்த ஏற்பாட்டுத் தொகுதியாகும். ந்தின் இலக்கை நோக்கிய நெறியாள்கைக்கு ாணப்படுகின்ற சகல பிரிவினரும் குறித்த
அவசியமாகும்.
மாக நாட்டுக்கும், சமூகத்திற்கும் உதவும் D. இது தனியாளின் முழுமையான ஆளுமை எனவே, கல்வியை வழங்கும் ஒரு சிறந்த ஆதலால் வெறுமனே புத்தகரீதியான அறிவை து மாணவர்களது திறன் மற்றும் உளரீதியான டு அதற்கான பயிற்சிகளையும் வழங்கும்
பிரஜைகள், மற்றும் தலைவர்கள் போன்றோர் க்கப்படுகின்றன, என்பதோடு அவைபற்றிய ம் பாடசாலைகளில் மாணவர்கட்குக் கிடைக்க கின்றபோது எது சரியானது, எது பிழையானது
ழியில் தமது உறுப்பினர்களை வழிநடாத்திச் டல் ஒன்றின் அவசியம் தேவைப்படுகின்றது.
ரின் தலைமைத்துவம் இன்றியமையாததாகும். பன்முறைகளில் மட்டுமல்லாது ஏனைய சகல வராக கருதப்படுகின்றார். எனவேதான் அதிபர் Bறும் பாடசாலையின் உள்ளக அமைப்பினை வலாக்கிச் செயற்படும் போது தலைமைத்துவம் து செல்கின்றது. வகுப்பறை மட்டத்தில் ஆசிரியருக்கு பண்புமிக்க தலைமைத்துவப்
181

Page 202
பயிற்சியின் தேவை மிக அவசியமாகின்றது. 8
அதாவது வகுப்பறை முகாமையாளராக மதிச் வகுப்பறைமட்டத்தில் மாணவர்கள் மத்தியில் நிருவாகக் கட்டமைப்புக்கு உதவும் விதத்தி பண்புகளை வளர்ப்பதற்கான பல்வேறுபட்ட அவற்றுக்கான செயற்திட்டங்களை பாடசாலை செயற்படுத்தப்படவேண்டிய பாரிய சமூகப்பொ
நாட்டினது எதிர்கால தலைவிதியை ]
ஒரு நாட்டின் தலைவிதியை நிர்ணயிப்பதில் முக். பாடசாலைகள் வகிக்கின்றன. மேலும் நாட்டி கொள்வதற்காக இன்றைய இளம்பரம்பரையின் வழங்கப்பட்டுள்ள முக்கிய பொறுப்பாகும். இளந் சமூகத்தின் தேசிய தலைவர்களாகப் பரி இப்பாடசாலை மாணவர்கள் காணப்படுகின்றன மறைந்து காணப்படும் இத்தலைமைத்துவ மெருகூட்டப்படல் வேண்டும். குறித்த சில மாணவரினதும் திறமைக்கும் நன்னடத்தைக்கு வேண்டும். "சிறந்த தலைவர்களைக் கொண் முன்னேறியதில்லை. அழிந்துவிடும் அல்லது சி வாக்கு. தலைமைத்துவம் என்பது மனிதன் ெ செயற்படுகின்றபோது தனிநபர் மற்றய உறுப் வகையில் அவர்கள் மீது செலுத்தப்படுகின்ற எனவேதான் தலைமைத்துவம் என்பது மற்றவர் செல்ல வழிநடாத்துவதாகும். எனவேதான் சிறந் உருவாக்கப்படுவதில்லை. என்று ஒருகாலத்தில் ச விஞ்ஞான யுகத்தில் இவ்வாறு கூறப்படுக ஏற்கமுடியாதுள்ளது. காரணம் மனிதன் ஏதோ இவ்வுலகில் பிறக்கின்றான். அவனது திறமைகளை பல்வேறு பயிற்சியும் வழிகாட்டுதலும் கொண்ட மற்றும் வழிகாட்டிகளாக இருக்கின்றவர்கள் ! நாம் எதிர்பார்க்கின்ற சமூக நலன்கொண்ட நம்பப்படுகிறது. எனவே, இவ்வாறான தலை உருவாக்கப்படல் வேண்டும். அதற்கான களம் . அவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படல் தலைவர்களைச் சிருஷ்டிப்பதும் ஒரு முக்கிய
மாணவரது தலைமைத்துவம் பற்றிய
தொண்டுதொட்டு மரபு வழிவந்த மான மாணவர்களுக்கு சுயமாகக்கற்கின்ற அல்லது விளக்கத்தை முதன் முதலில் முன்வைத்து ரூசோ (1712 - 1778) என்பவரே. இவ்வறி பெஸ்டலொஸி, புரோபெல், மொண்டிசோரி போ பற்றிய கருத்துக்களை விதந்துரைத்தனர். குழ பாடசாலைச் செயற்பாடுகள், அங்குவழங்கப்படு வளர்கின்றனர் என இவர்களை எடுத்துரைத் (182)

இங்கு ஆசிரியரும் ஓர் முகாமையாளனாக க்கப்படுகின்றார். இதேபோல் ஆசிரியர்கள் நிருவாகத்தை பரவலாக்கி, பாடசாலை ல் மாணவர்களிடமும் தலைமைத்துவப் - பயிற்சிகளை அளித்தல் வேண்டும். 5 மட்டத்திலும் வகுப்பறை மட்டத்திலும் றுப்பு பாடசாலைகளுக்கு உள்ளன.
நிர்ணயிப்பதில் மாணவரின் பங்கு
கிய வகிபங்கினை அந்நாட்டில் காணப்படும் ன் எதிர்காலப் பொறுப்புக்களை ஏற்றுக் மரைத் தயார் செய்வதே பாடசாலைகட்கு தலை முறையின், நாளைய குடும்பத்தின், ணமிக்கக்கூடிய திறமைமிக்கவர்களாக எர். இம் மாணவர்களிடம் இயற்கையாக ப் பண்பு சரியாக இனங்காணப்பட்டு மாணவர்களிடம் மாத்திரமன்றி சகல ம் மதிப்பும் கௌரவமும் அளிக்கப்படல் டிராத நாடும் சமூகமும் ஒரு போதும் சின்னாபின்னமாகிவிடும்'' என்பது மூத்தோர் பாது இலக்கை முன்வைத்து குழுவாகச் பினர்கள் தாம்விரும்பி ஏற்றுக்கொள்ளும் தாக்கம் அல்லது செல்வாக்கு எனலாம். ரகளுக்குச் சரியான பாதையை நோக்கிச் தே தலைவர்கள் பிறக்கிறார்கள் அவர்கள் கூறப்பட்டதாக இருந்தாலும் நவீன இன்றைய கின்ற இக்கருத்தை நாம் ஒருகாலும் ஒரு திறமையை உள்ளடக்கியவனாகவே T இனங்கண்டு அதனை மேலும் வளப்படுத்தி கல்வியை பாடசாலைகளில் ஆசிரியர்கள் சிறப்பான முறையில் வழங்குகின்றபோது
தலைவர்களை உருவாக்க முடியுமென வர்கள் பாடசாலை வாழ்க்கையிலேயே அமைக்கப்பட்டு பாடசாலை நிருவாகத்தில் | வேண்டும். பாடசாலையின் பணிகளில் மான பணியாகும்.
8ல் *
அறிஞர்களது கூற்றுக்கள்
அவ கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து சிந்திக்கின்ற மாணவச்சுதந்திரம் பற்றிய குரல் எழுப்பியவர் கல்வியியலாளரான நரைத் தொடர்ந்து கல்வியறிஞர்களான ன்றோரும் மாணவர்களுக்கான சுதந்திரம் ஐந்தையின் சுயஒழுக்கம், சுயகட்டுப்பாடு, ம் வேலைகள் போன்றனவற்றின் மூலமே தேனர். கல்வியின் மூலம் மனிதனிடம் ல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 203
இயற்கையாகக் குடிகொண்டுள்ள மிருக உ ஆசைகளை அழித்துவிடாது அதை ெ வேண்டுமென்றனர். மேலும் "கல்வியின் 8 கல்வியினூடாக வாழ்வின் கடமைகளையும் வாழ்க்கையோடு தொடர்புடைய பிரச்சினைக திறனையும் பெற்றுக் கொடுக்க வேண்டுமென் எனவேதான் எதிர்காலத் தலைமைத்துவத்த மற்றும் அதன் முகாமை செய்வோரான மாணவர்களுக்கு பயிற்சியளிக்கவேண்டும்.
பாடசாலையில் மாணவருக்கு ஜனநாயக நோக்கம், பாடத்திட்டம், கற்பித்தல் முறை வகுக்கப்படுகின்றன. மாணவர்கள் பாடசாை செயல் திட்டங்களைத் தாமே திட்டமிட்டு, அவர்களிடம் தொடங்காற்றல் திறன் சுயமா அதிகரிக்கும், குழுமுயற்சி, கூட்டுப்பொறுப்பு மற்றவருக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பா மனிதப்பண்புகள் வளரும். இதற்காகவே உண்மையான தலைவனை உருவாக்கிக் கெ
பெற்றுக்கொடுக்க வேண்டுமென்கிறார்.
இன்று பாடசாலைகளில் மாணவர் மன்ற மாணவர் பாராளுமன்றம், மாணவஅரசு, மாண தலைமைதாங்கும் இணைப்பாட விதான ( என்பன இதன் அடிப்படையிலேயே பாடசா பாடசாலைகளில் மாணவர்கள் நிருவாகத்தில் விடயமாகும். எனவே "பிளேட்டோவின் என தெரிவு செய்யப்பட்ட மாணவர்களாலேயே : லைசெம்” (LYCEUM) மாணவர் சுயாட்சியை இந்தியா போன்ற நாடுகளின் கல்வி வரலாற்றில் முதல் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்க நூற்றாண்டிலேயே இது வளர்ச்சி அடைந்து . பகுதியில் நடாத்திய ஒரு ஆய்வின் மூலம் வரையிலான பாடசாலைகளில் ஏதாவது ஒ செயற்பட்டு வந்துள்ளமையைக் காணலாம். " கோட்பாடானது தற்போது "மாணவர் பாடச எனப் பரிணாம வளர்ச்சி பெற்றுக் காணப்ப
தலைமைத்துவமும் சமூக இணக்க
பாடசாலை வாழ்க்கையானது சமூக 6 மாணவரை எதிர்கால சமூக நல்வாழ்க் தயார்படுத்தும் கல்வித்தாபனமே பாடசாலை நிருவாகத்திற்கும் ஆசிரியருக்கும் இடையே காணப்பட்டது. அதேபோல ஆசிரியருக்கு இடைவெளியும் நீண்டு காணப்பட்டது. மாணவு பங்களிப்புச் செய்யும் வாய்ப்புக்கள்
கூர்மதி

உந்துதல்களை நீக்குவதுடன் குழுந்தையின் மருகூட்டி ஆக்கபூர்வமானதாக வளர்க்க இலக்குகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு
உரிமைகளையும் விளக்கவேண்டுமென்றும் களுக்கும் சவால்களுக்கும் முகங்கொடுக்கும் றும்” அறிஞர் "ஜோன்டுயி” குறிப்பிட்டுள்ளார். திற்கான அடித்தளத்தை கட்டும் பாடசாலை [ அதிபர், ஆசிரியர்கள் இப்பருவத்தில்
கப் பயற்சி வழங்கப்படல் வேண்டும். கல்வியின் கள் என்பன இதனை மையமாக கொண்டே ல செயற்பாடுகளில் பங்குபெறுவதுடன் சில , செயற்படுத்தி மதிப்பீடு செய்யும் போது கவே வளரும். சமூக உணர்வும் பொறுப்பும் , பிறரது உணர்வுகளை மதிக்கும் தன்மை, ங்கு, சகிப்புடன் வாழும்தன்மை போன்ற ண்டியே தத்துவஞானியான "பிளேட்டோ” காள்வதற்காகச் சிறுவயதிலிருந்தே கல்வியை
ங்கள், மாணவர் நலன்பேணும் அமைப்புக்கள், வர்களுக்கான சிரேஷ்ட தலைவர்கள், ஏனைய செயற்பாடுகளில் மாணவர்கள் பங்குபற்றல் லைகளில் செயற்படத்தொடங்கின எனலாம். ல் பங்கு கொள்வதென்பது ஒரு பழமையான டெமி" எனும் நிறுவனமானது பெரும்பாலும் அது நிருவகிக்கப்பட்டது. "அரிஷ்டோட்டிலின் பறைசாற்றி நிற்கிறது. ஜெர்மனி, இங்கிலாந்து, லும் இது போன்ற அமைப்புக்கள் ஆரம்பகாலம் தோர் அம்சமாகும். அமெரிக்காவில் 19ஆம் காணப்பட்டது. இங்கு 1940ஆம் ஆண்டுகாலப் - பெறப்பட்ட முடிவுகளின்படி 80 முதல் 90 ரு முறையில் இது போன்ற செயற்பாடுகள் மாணவரின் சுய அரசாங்கம்” என்ற முன்னைய காலை நிருவாகத்தில் பங்களிப்பு செய்தல்”
டுகின்றமையைக் கூறலாம்.
ப்பாடும்
வாழ்க்கையில் நின்றும் வேறுபட்ட ஒன்றல்ல. கைக்குத் தேவையான தகைமைகளோடு யாகும். அன்று கல்வி நிருவாக அமைப்பில் யான இடைவெளி நீண்ட இடைவெளியாகக் ம் மாணவருக்கும் இடையே காணப்பட்ட பர்கள் அன்று பாடசாலை முகாமைத்துவத்தில் அதிகமாக வழங்கப்படவில்லை. இது
183)

Page 204
ஜனநாயகமுறைக்கு ஒவ்வாததாகும். புதிய க காலகட்டத்தில் சிறந்த பயிற்சியின் ( "சமூகவாழ்க்கைக்குத் தயார்படுத்தல் வேண் சமூக நோக்கும் இதையே வலியுறுத்தி நிற்
பிறருடன் ஒத்து வாழுதல், பிறரது கருத்து சகிப்புத் தன்மை, ஒழுகலாறு, மனித குணம் பாடசாலை வாழ்க்கையில் மாணவர் பெறுகி6 ஒவ்வாத நடத்தைகளைத் தடுத்து நிறுத்தி வாழ்வின் பல்வேறு அம்சங்களினூடாக ( மாற்றியமைத்தல் போன்ற நல்வழிப்பண்பு: பாடசாலையில் பொறுப்புக்களைத் தாங்குவத உறவுகள், சமூக உணர்ச்சிகளை வளர்த்தல் அடைதல், பொதுக்காரியங்களைப் பொறுப்புடன் போன்ற பண்புகள் இவற்றினூடாக வளர்கின்ற
அறிஞர் "வொஸ்டன் ஏஸ்டன்” (1945) சு விழுமியங்கள் அவர்கள் வளரும் சூழலிலே வ முன்வைக்கும் ஆலோசனைகள் மாணவருக்கு தனியாள் மையமுடையதாகவும், ஒவ்வொரு இனங்காண்பதற்கு உதவுவது கல்வியாகும். பாடசாலையின் சகல பிரிவுகளிலும் பாடங்கள் மதிப்பீடு சரியான முறையில் அமையவேண் விடயங்களை நிறைவேற்றுதல் வேண்டும். ச இசைவு, கெளரவித்தல் போன்றவையாகும்.
பாடசாலைகளில் மாணவத்தலைவர், வகு குறைபாடுகள் உள்ளன என சிலர் அ தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவருக்கு மாத்திரமே தவிரவும் பாடசாலையின் பெரும்பான்மைய விரும்பப்படுவதில்லை. ஜனநாயக பண்புள்ள கல்வி இலக்கினூடாக இவற்றினை ஜனநாயக உண்மையான தலைமைத்துவ எழுச்சி, தலை எதிர்கால சமூதாயத்திற்கான தலைவர் பாடசாலைகளில் முகாமைத்துவத்திறனுள்ள இவற் றுக் கு உறு துணையாக இரு! வெளிக்கொணரவைத்தல் வேண்டும். இல்ை முன்னின்று தலைமைதாங்கும் திறானி சமூதாயத்தையும், அதன் தலைவர்களையு இருக்கும்.
(184)

ல்விச் சீர்திருத்தங்களின் பின்னரான இன்றைய மூலமாக மாணவர்களை பாடசாலைகள் டும்” எனவலியுறுத்தி நிற்பதோடு, கல்வியின் கின்றது.
துக்களை மதித்து நடத்தல், ஒத்துழைப்பு, ப்பண்பு, நல்லறிவு போன்ற விழுமியங்களை ன்றனர். இவற்றினூடாக சமூக நல்வாழ்வுக்கு - அவற்றினைக் களைந்தெடுத்து அல்லது தறைத்து தேவையானபோது அவற்றினை கள் பலவற்றை இதில் உள்ளடக்கலாம். ன் மூலம் மாணவர்களிடையே சமூகரீதியான - சமூகசேவையில் திருப்தியும் மகிழ்ச்சியும் I கையாளுதல், பொது நிதியைப் பாதுகாத்தல் றன அல்லது வளர்க்கப்படுகின்றன எனலாம்.
கூறுகையில் "பிள்ளைகளுக்கு கொடுக்கும் ளர்ந்தோரால் கொடுக்கப்படுகின்றது. அவர்கள் விழுமியத்தை வழங்குதலாகும். கல்வியானது தவரும் முகங்கொடுக்கும் விழுமியங்களை
இது வினைத்திறன் உடையதாக இருக்க ர் மூலமும் அதற்கு வெளியிலும் நம்பிக்கை டும்” என்கிறார். பாடசாலையில் பின்வரும் உதாரணத்தன்மை, கீழ்ப்படிவு, சூழலுக்கேற்ற
ப்பு மாணவத் தலைவர் முறையில் பல பிப்பிராயப்படுகின்றனர். ஒரு சிலரால் தலைமைத்துவ பயிற்சி வழங்கப்படுகின்றன. என மாணவர்களுக்கு இவர்களது தெரிவு
சிறந்த பிரசையை உருவாக்குதல் எனும் கப் பண்புடன் தெரிவு செய்யப்படுகின்றபோது மைதாங்கும் பண்பு கொண்ட, நீதி நியாயமான களை உருவாக்கமுடியும். எனவேதான் - முதற்தர முகாமையாளரான அதிபர்கள்
து மாண வர் களினது திறமையை லயேல் சோம்பேறியான சமூதாயத்தையும் பற்ற, பேச்சாற்றலற்ற, பொதுநலமற்ற ம்தான் எதிர்காலத்தில் காணக்கூடியதாக
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 205
முனை
சிந்தனை
நீ உன்னைப் பற்றிக் குரை உன்னைப் பிறர் குறைத்
ஒருவரையும் வீணாகச் ச உன்னை அடுத்தவர் ச
மற்றவர் பிரச்சினைக்குள் மூ
உன்னைப் பிரச்சினை
அடுத்தவரை வாழ வைக்க ஆலோசனை வளப்படுத்த ஆலோசனை பெறும் ரே
பெறு
நண்பர்களிடையே கொடுக்கல் நட்புக்கு மட்டுமல்ல நல்லெ
உன்னை நீ தி பிறர் உன்னை திருந்
வலிந்து உதவி செய்ய | உதவிக்கு அழைக்கும்போது உத்
எல்லோரிடமும் எல்லாவற்ள உன்னை எல்லோரிடமும் ஒன்
சந்தர்ப்பவாத ] சண்டைக்கார நண்பர் நல்ல நல
குறிக்கோளுடன் ஒவ்வொரு |
உனது முன்னேற்றத்தின்
நேற்றுக்களுக்காய் இன்றைய இன்றைய பொழுதை செலவு செய்! ந
ககூர்மதி -

பூரான்
ஆரிதம்
பத்து மதிப்பிடாதே - அது தது மதிப்பிடச் செய்யும்
ந்தேகப் படாதே - அது ந்தேகப்படச் செய்யும்
க்கை நுழையாதே - அது க்குள் தள்ளி விடும்
மன வழங்கும் நேரத்தை - உன்னை கரமாக மாற்று! அடுத்தவரும் வளம்
வர்
| வாங்கல் செய்யாதே - அது ண்ணத்திற்கும் கேடாகும்
ருத்திக் கொள் தச் சொல்லும் முன்
முயல்வதிலும் பார்க்க கவி செய்ய முயலுவதே பெறுமதி
ஊறயும் சொல்லாதே - அது றுமில்லாதவராய் ஆக்கிவிடும்
நண்பரை விட
ன்பரென்பதை மனதில் நிறுத்து
மிெடத்தையும் கடத்து - அது
படிக்கற்களாய் அமையும்
பொழுதை செலவு செய்யாதே களைய நாட்களின் வெற்றிகளுக்காய்!
(185)
185

Page 206
மூளையை வடி
வளர்த்தெடுப்ப
எமது மூளையை எமக்கேற்ற விதத்தில் த வடிவமைத்துக் கொள்ள முடியுமா? என்ட கேள்வியாகும். உண்மைதான். அப்படி செய் அளவுக்கு அதனை செய்து வந்துள்ளோம் ஒன்றாகும்.
எமது பிள்ளைகளை பாடசாலைகளுக் ஆசிரியர்களிடமும் அதிபர்களிடமும் முற்றி அவர்கள் மூளைசாலிகளாக வளர்த்தெடுக்கப் அவர்கள் நாம் என்ன எதிர்பார்க்கிறோம் என்று பாடப் புத்தகங்களை வாசித்து கேள் கற்றுக்கொடுக்கின்றனர்.
மொத்தத்தில் பரீட்சையில் பாஸ் செ தொழில் ஒன்றைத் தேடிக்கொள்வதே இ மட்டுப்படுத்தப்பட்டு விட்டது.
இன்று விஞ்ஞானமும் தொழில் நுட்பமு அதீதமாக சிந்திக்கும் அபார மூளைகள் நம் மூளைகளை தொல்பொருள் காட்சியகத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
இன்று நமக்கு சதா துடித்தியங்கும் நினைவில் வைத்துக்கொள்ளல், மிகக்
தீர்மானமொன்றை மேற்கொள்ளும் மன உர புரிந்து கொள்வதற்குத் தேவையான பொது அறி ஒருவனுக்கு மிக அவசியம். தரவுகள், புள் தன் உள்ளங்கையில் வைத்து பகுப்பாய்வு . ஒவ்வொருவருக்கும் வேண்டும். ஆதலால் மூளை கட்டி வளர்க்கப்படல் வேண்டும்.
வாழ்வின் எதிர்பார்ப்பு
ஒரு வளர்ந்து வரும் இளம் ஆணோ, ய நேரத்தில் என்ன செய்கிறார்கள் என்பதைக் தீர்மானித்துவிட முடியும். அவர்கள் ஒன்றில் | அல்லது வெறுமனே பார்வையாளர்களாக ( இரண்டு வகைக்குள் உள்ளடக்கப்படுவார்கள். 8
(186)

வமைத்து து சாத்தியமா?
இரா. சடகோபன் சட்டத்தரணி, சுகவாழ்வு சஞ்சிகை ஆசிரியர்
ட்டி, வளைத்து, நெளித்து, உருளையாக்கி பது நீண்டகாலம் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பய முடியும். ஆனால் இதுவரை நாம் எந்த என்பது மீளாய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய
க்கு அனுப்பி விட்டு இது விடயத்தில் நாம் லும் நம் பிள்ளைகளை ஒப்படைத்து விட்டு படுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் தெரியாமலேயே அரசாங்கம் விதந்துரைக்கும் விக்கு எவ்வாறு பதிலளிப்பது என்று
ய்து எதிர்கால வாழ்வுக்கு வாழ்வாதாரமாக ன்றைய கல்வி முறையின் நோக்கமாக
மம், அபரிமிதமாக வளர்ந்துவிட்ட நிலையில் க்குத் தேவைப்படுகின்றன. ஆனால் நாமோ வைத்து நூற்றாண்டு காலமாக அதனையே
மூளைகள் தேவைப்படுகின்றன. சிந்தித்து குறைந்த நேரத்தில் மிக முக்கியமான வதி, மனிதனின், சமூகத்தின் இயல்புகளை வைத் தன்னுள் கொண்டிருத்தல் முதலானவை f விபரங்கள், உண்மைகள் என்பனவற்றை செய்து ஒரு சரியான முடிவுக்கு வரும் திறன் [ என்பது உரிய விதத்தில் வடிவமைக்கப்பட்டு
228
புவதியோ அவர்கள் தமது சும்மா இருக்கும் 5 கொண்டு அவர்களின் எதிர்காலத்தைத் டைப்பாற்றல் உள்ளவர்களாக இருப்பார்கள் இருப்பார்கள். எல்லா மனிதர்களுமே இந்த இவர்கள் ஒன்றில் வாழ்க்கை என்ற நாடகத்தில்
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 207
ஒரு காத்திரமான பாத்திரமேற்றுக்கொள்வ பார்வையாளர்களாக மாத்திரம் இருந்து விடுவா சின்னத்திரை மெகா சீரியல்களின் ரசிகைகள்
இளம் பிள்ளைகளின் இளம் பருவக்காலம் விளையாட்டுக்கள், பந்தயங்களில் மட்டும் கழி. முழுவதும் பார்வையாளர்கள் என்ற வரிசையிலே வாழ்வுக்காலம் நிறைவெய்தும் பொழுது அவ சம்பவமும் பதியப்பட்டிராது. அவர்களது மழை ஆனால் ஒரு மனிதன் தான் வெறுமனே க அறிவைப் பெறுவதிலும் விசேட பயிற்சிகளைப் படைப்பாற்றலை ஈடுசெய்ய மற்றுமொருவனின் வ கழித்திருந்த ஒருவன் 30 வயதடைந்த போ சேர்ந்து படித்தவர்கள் எங்கேயோ முன்னேறிட்
வாழ்க்கை என்ற ஏணி
வாழ்க்கை என்ற ஏணியில் ஏற விரும் ஏனையோர் அதன் அடிவாரத்தில் மட்டுமே த
ஒரு சமயம், 14 வயதுடைய சிறுவன் இருந்தும் நிதி வசதியில்லாததால் ஒரு பெ பணியாளனாகச் சேர்ந்தான். அவன் ஓர் அ ஏனைய அலுவலக பணியாளர்களை விட வித் புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற த
முதல் வேலையும் அந்தக் கம்பனி பற்றிய முழு அதன் உற்பத்தி நடவடிக்கைகள், செயற்பாடு, அவன் விபரமாக ஆராய்ந்து தெரிந்து கொண்
அவன் தனக்கு கிடைத்த விடுமுறை ! கழிக்காமல் நிறுவனத்தின் தொழிற்சாலை செயற்பாட்டைக் கவனிப்பதற்காக தனது மு அனுமதியை அவன் உயர் அதிகாரிகளிடம் கோ பார்த்தாலும் அதற்கான அனுமதி கிடைத்தது ஒரு விசேட சிறுவனாகத் தோன்றினான். எனினு அவன் பைத்தியக்காரன் என பரிகாசம் செய்
அவனுக்கு 18 வயதாகும் போது அ மேலதிகாரிகள். அவனுக்கு பதவி உயர்வு
ஆனால் அவன் அதனால் திருப்தியுறவில்லை சந்தைப்படுத்தல், விற்பனை முதலானவற்றுடன் தொடங்கினான். அவன் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டான். அவன் தனது முன் பற்றி மட்டும் அக்கறை எடுத்துக் கொள்வது ப கூறினர்.
ககூர்மதி.

பார்கள் அல்லது நாடகத்தை ரசிக்கும் ர்கள். நமது பெரும்பாலான இல்லத்தரசிகள் Tானது இப்படித்தான்.
» ஆடல் பாடல்களிலும் சினிமா பார்ப்பதிலும் க்கப்படுமாயின் அவர்கள் வாழ்க்கை காலம் லயே இடம்பெற்று விடுவார்கள். அவர்களின் பர்கள் வாழ்வில் குறிப்பிடும்படி எந்த ஒரு றவு பற்றி யாரும் வருத்தப்படமாட்டார்கள். ழிக்கும் பொழுதில் அரைவாசியையாவது பெறுவதிலும் செலவழிப்பானாயின் அவனது பரவு தேவைப்படும். சும்மா சுற்றி பொழுதைக் எது திரும்பிப் பார்ப்பானாயின் அவனுடன் ப போயிருப்பார்கள்.
புபவனால் மட்டுமே அதில் ஏற முடியும். ங்கி விடுவார்கள்.
எ ஒருவன் மேற்படிப்பு படிக்க விருப்பம் பரிய உற்பத்திக் கம்பனியில் அலுவலக டர்வமிக்க சுறுசுறுப்பான சிறுவன். அவன் தியாசமானவனாக இருந்தான். எதையாவது துடிப்பு அவனிடமிருந்தது. அவன் செய்த ழத் தகவலையும் அறிந்து கொண்டதாகும். - சந்தைப்படுத்தல், விற்பனை என்றவற்றை
டான்.
தினங்களையெல்லாம் பொழுது போக்கில் மகளுக்குச் சென்று தொழிற்சாலையின்
ழு நாளையும் செலவிட்டான். இதற்கான சரியபோது அவர்கள் அவனை விநோதமாகப் 1. அவன் அவர்கள் மத்தியில் பேசப்படும் ம் அவனையொத்த ஏனைய பணியாளர்கள் தனர்.
புவனது நடவடிக்கைகளை அவதானித்த வழங்கி சம்பளத்தையும் அதிகரித்தனர். 5. அவன் அந்த நிறுவனத்தின் உற்பத்தி, சம்பந்தப்பட்ட நூல்களை வாங்கி வாசிக்கத் 5 அந்த நிறுவனத்தின் முன்னேற்றத்துக்கு எனேற்றம் பற்றி கவலைப்படாமல் நிறுவனம் ற்றி அவனது நண்பர்கள் அவனைக் குறை

Page 208
அந்த வகையிலேயே அவன் ஏனை ஏனையோருக்குத் தோன்றினான். பலரது எடுத்துக்கொள்ளவில்லை. அவன் தன்னை . ஏணிப்படியில் ஒவ்வொரு படியாக ஏறுகின் முடியவில்லை. அவனின் அர்ப்பணிப்புக்குப் பதவி உயர்வுகளைப் பெற்றான். இறுதி
அந்நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப் தொழிலாளர்களை நிர்வகிக்கும் பொறுப்பு
அவனை பரிகசித்தவர்களும் தமது ே நினைத்தவர்களும் அவனது நிர்வாகத்தி செய்கின்றனர். அவர்கள் அவனது வளர்ச்சி ! செய்திருப்பான் என்று விமர்சித்தனர். வெறும் சூட்டி அவனின் முன்னேற்றத்துக்குக் காரண மறுத்து விட்டனர். அதனால் அவர்கள் முன்னே விட்டனர்.
கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்
- நம் காலத்தில் உழைப்பால் உயர் பில்கேட்ஸ் என்ற கணினி தொழிலதிட காரணமில்லாமல் இல்லை. மிகக் கீழ் நிை மனிதன் என்ற அந்தஸ்துக்கு உயர்வது. இசைக்கலைஞன் மைக்கல் ஜாக்ஷனின் த குதிக்காதோர் மிகச் சிலரே. முழு உலகையே அக்கலைஞன் அந்த முன்னேற்றத்துக்காக த முன்னேற்றம் அடைந்தான் என்று எண்ணிப் உச்சியை அடைந்தான் என்றால் அது அவ என்பது வெறும் மாயைதான். அது வரலா வாழ்நாளெல்லாம் அதிர்ஷ்ட லாபச் சீட்டு வா மண்ணாகிப் போய் விடுவர்.
வாழ்வில் முன்னேற்றம் என்பது என ஜாக்ஷன்களாகவோ வரவேண்டுமென்பதல்ல கடப்பவனும் வெற்றியடைந்த மானுடனே.
எல்லா மனிதர்களுக்கும் ஒரு விலைய ரூ 100,000/= இப்படி அது உயர்ந்து கொ ஏஞ்சலோ, லியானாடோ டாவின்சி, அல்பர் மதிக்க முடியாதவர்களாகக் கருதப்படுகின் பொழுதின் ஒரு நொடியைக் கூட வீணடிக்கவி இருக்கும் மதிப்பை விட மூளைச்சக்திக்கு மனிதன் தன் உடல் உழைப்பை விட மூன வேண்டும் என்பது இதிலிருந்து புலனாகின்ற
மனிதன் எப்போது தன் மூளையை அவன் செல்லாக் காசாகி விடுவான். ஒரு விடும்போது அதற்கப்பால் அவனால் மேலே
188

னயோரிலும் பார்க்க வித்தியாசமானவனாக ம் பரிகாசத்தை அவன் ஒரு பொருட்டாக அறியாமலேயே வாழ்வின் முன்னேற்றம் எனும் றான் என்பதனை பலராலும் புரிந்துகொள்ள பலன் கிடைத்தது. படிப்படியாக அவன் பல யில் அவனது உச்சக்கட்ட வளர்ச்சியில் 1பாளரானான். அந்த நிறுவனத்தின் 3500
அவனுக்கு வழங்கப்பட்டது..
வேலையை மட்டும் செய்தால் போதும் என்று பின் கீழ் இப்போதும் அதேவேலையையே கண்டு வியந்தனர். அவன் ஏதோ திருகுதாளம் மனே அவன் "அதிர்ஷடகாரன்” என்று பெயர் மாக இருந்த அவன் முயற்சியை அங்கீகரிக்க னற்றத்தை அவர்களே குழிதோண்டிப் புதைத்து
தே ஒரு மனிதனென உதாரண புருஷனாக பரையே அனைவரும் கூறுவர். அதற்குக் லயிலிருந்து உலகிலேயே முதல் பணக்கார சாதாரணமானதல்ல. அண்மையில் மறைந்த துள்ளல் இசையை ரசித்து தாமும் துள்ளிக் ப தன் சுண்டுவிரலில் வைத்து ஆட்டிப்படைத்த தன்னையே அர்ப்பணித்துக்கொண்டு எவ்வாறு - பார்ப்பவர் எத்தனை பேர்? அவன் புகழின் பனது அதிர்ஷ்டம் மட்டும்தானா? அதிர்ஷ்டம் ம், வராமல் விடலாம். வரும் வரும் என்ற ங்குவோர் அதிர்ஷ்டம் வராமலேயே மண்ணோடு
கலோரும் பில்கேட்ஸ் ஆகவோ, மைக்கல் D, வாழ்வு என்ற ஏணியின் முதல் படியைக்
புண்டு. ரூ 10,000/= ரூ 20,000/=, ரூ50,000/=, எண்டே போகும். ஷேக்ஸ்பியரும், மைக்கல் பட் ஐன்ஸ்டீன் போன்றவர்கள் ஏன் விலை றனர்? அதற்குக் காரணம் அவர்கள் தமது ல்லை என்பதாகும். மனிதனின் உடற்சக்திக்கு இருக்கும் பெறுமதி மிக அதிகமானதாகும். ளயின் உழைப்பை அதிகமாக்கிக் கொள்ள எது.
- பயன்படுத்த தவறுகின்றானோ அப்போதே மனிதன் தன் மூளையைப் பயன்படுத்தாது ல செல்ல முடியாது. அவன் சிந்தனைகள்
- கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 209
மழுங்கிப் போய்விடும். மூளையை மீள் தேவை. அவர்களுக்கு அது சாத்தியமற்ற
மொத்தத்தில் மூளையின் ஆற்றலை பாடசாலைகளுக்கும் பல்கலைக்கழகங்கா துறை எப்போதோ ஒரு குட்டையில் மூழ்கிய வழிகாட்டுவதனை விட தமக்கு வேறு நே நாட்களுக்கு முன்பே தீர்மானித்து விட்டனர். 3 இன்று காலாவதியான செயல்முறையாகிப்
எல்லாவற்றுக்கும் மேலாக ஒவ்வொ காணப்படுகின்றது. அது இந்தச் சமூகம், ஏ சூழலை சரியாகப் புரிந்து மதிப்பீடு செய்து மாயையாகவுமே உள்ளன. ஊதினால் உன்
ஒரு கவிஞன் சொன்னான்...
"கத்தியைத் தீட்டாதே உன் புத்தியைத் தீட்டு'
உண்மைதான் கத்தியைத் தீட்டினால் அ புத்தியைத் தீட்டினால் அது மேலும் மேலும் நாளும் துருப்பிடிப்பதில்லை.
உணர்ந்தால் உயர்வு பெறலாம்.
6) எந்தச் செயலையும் செய்து முடி வந்தாலும் அதனை முகங்கொ போய்விடக் கூடாது என்ற மனோ கொண்டால் மாத்திரமே நாம் | முடியும். நீ தோற்றுப் போனாய் வாழ்வில் ஒரு கதவு மூடியிருந்தால்
GS
கூர்மதி.

செயற்படுத்தச் செய்வதற்கு பாரிய முயற்சி
முயற்சியாகும்.
அபிவிருத்தி செய்யும் வேலையை நமது தக்கும் மட்டும் செய்ய முடியாது. அந்தத் 1 மட்டைகளாகி விட்டது. தொழில் ஒன்றுக்கு பக்கங்கள் இல்லை என்று அவர்கள் நீண்ட அதனால் நமது நாடுகளின் கல்வி முறைமைகள்
போய்விட்டன.
ரு தனிமனிதனுக்கும் ஒரு பாரிய கடமை பொருளாதாரம், அரசியல் மற்றும் சுற்றுப்புறச் | கொள்வதாகும். இவை போலியானதாகவும் டைந்து போகத்தக்க மணற் கோபுரங்கள்.
என்று
து வெட்ட வெட்ட மழுங்கிப் போய்விடும். ம் கூர்மையடைந்து பிரகாசிக்குமேயன்றி ஒரு
தக்காக டக்க வேண்டும். எந்தப் பிரச்சினை நத்துத் தீர்க்க முடியும். தளர்ந்து
பலத்தினை நம்முள் தோற்றுவித்துக் நமது துன்பங்களிலிருந்து விடுபட என்று ஒரு போதும் எண்ணாதே. 5 மற்றுமொரு கதவு திறந்திருக்கும்.
ஓலை 2
189

Page 210
கல்வியும் மாணவ, ஓர் பொது நோக்கு
கல்வியானது நுண்மதியாற்றலையும் தி வாழ்க்கைக்கு வேண்டிய நற்பண்புகளையும் மூலமே வாழ்க்கையின் குறிக்கோளை கல்வி வாழ்க்கை. வாழ்க்கையே கல்வி. இதனையே தன்மையினை மனிதர் பெறத் துணையாக வி கண்டார்.
கற்றல் கற்பித்தல் செயற்பாட்டை பே விளங்குவது பாடசாலையாகும். வரையறுக்க கலைத்திட்ட அமுலாக்கத்தினூடாக மால் பாடசாலைச் செயற்பாடுகள் அமைந்துள்ளன. சீரான மாணவர் பாடசாலையிலிருத்தல் : இருந்தால் போதாது. அவர்கள் கற்றுக் கெ வேண்டும்.
வளர்ந்து வரும் உலகளாவிய கல்வி இலங்கையின் கல்வி விருத்தியும் மாற்றம் கல்வியமைப்பானது மாற்றமுறும் போது அதர் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் திறனி நடவடிக்கைகளிலிருந்து இடைவிலகும் தன்
கூடுதலாகக் காணப்படுகின்றது எனலாம்.
இவ்வாறு மாற்றமுறும் கற்றல் நிலைக மாணவர்கள் உளவியலாளரின் தீவிர கவன நடவடிக்கையிலிருந்து மாணவர் இடைவில உளவியல் செயல் முறையின் ஒழுங்கு குலை தன்மையானது குடும்ப நிலை, தாம் முதன்மு சகபாடிகள் போன்ற இன்னோரன்ன காரணிக
இடைவிலகல் என்ற எண்ணக்கரு நா கல்விப்புலத்தில் காணப்படுகின்றது. பொதுக் பாடசாலையை விட்டு மாணவர் விலகுவதே எனக் கருதப்படும் 6-14 வயது வரையில விலகுகின்றனர். கல்வி சிறுவர்களின் உரிை சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும். சிறுவர்கள்
(190)

* இடைவிலகலும்
திருமதி நிலாந்தி ரவிச்சந்திரன் அண்ணாமலை மகா வித்தியாலயம்,
நாவிதன்வெளி, கல்முனை.
றன்களையும் வளர்க்கின்றது. அத்துடன் வளர்க்கின்றது. நற்பண்புகளை வளர்ப்பதன் யால் பெற்றுக் கொடுக்க முடியும். கல்வியே ஆங்கிலக் கவிவாணர் வேட்ஸ்வர்த் “மனிதத் Tங்குவது கல்வி'' என்று கல்விக்கு வரையறை
மற்கொள்ளும் பிரதான கல்வி நிறுவனமாக கப்பட்ட இலக்குகளையும் நோக்கங்களையும் னவர்களிடத்தில் உருவாக்கும் வகையில் இவற்றைத் திருப்திகரமாக முன்னெடுப்பதற்கு அவசியமாகும். சீரான மாணவர்கள் மட்டும் காள்வதற்கு ஏற்ற மனவிருப்புடன் இருத்தல்
அபிவிருத்திச் செயல் நெறிகளுக்கு இணங்க பெற்றுக் கொண்டே செல்கின்றது எனலாம். 3கு ஈடு கொடுக்க முடியாமலும், அதேவேளை ன்மையாலும் மாணவர்கள் தமது கல்வி மை இன்று அதிகரித்துச் செல்லும் போக்குக்
-ளிலிருந்து பின்னடைவுகளை எதிர்நோக்கும் ஈர்ப்பைப் பெறத் தொடங்கியுள்ளனர். கல்வி தம் நிலை மாணவர்களின் அடிப்படையான லவினால் ஏற்படுகின்றது. இவ் இடை விலகும் முதலில் சந்திக்கும் ஆசிரியர்கள், பாடசாலை, களால் ஏற்படலாம்.
உளாவிய ரீதியில் பெரும் பிரச்சினையாகக் 5 கல்வியைப் பூர்த்தி செய்யாது இடையில் இடைவிலகலாகும். கட்டாய கல்விக்காலம் 7வது கற்றல் வாய்ப்பினைத் தொடராமல் ம என ஐ.நா.சாசனம் முக்கியப்படுத்துவதும் பின் கல்வி வாய்ப்பானது
- கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 211
1. பாடசாலையில் சேரவேண்டிய வயதுக்
பாடசாலையில் சேர்ந்தவர்களில் பொ செல்வோர் எனும் வகைப்பாட்டிற்கு இழப்பதையும் அவதானிக்க முடிகின்ற
இடைவிலகலானது பல காரணங்களால் 6 பாடசாலைப் பின்னணி. சமூகச் சூழல், கலை ஊக்கம், பொருளாதார நிலை, சமூகநிய கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள். ஆசிரிய திருப்தியின்மை, பய உணர்வு ஆகிய பிரச் காரணிகளாக இனங் காணப்பட்டுள்ளது.)
மாணவர்களின் இடைவிலகுவதற்கான கார்
இடைவிலகல்
வறுமை
பாலியல் குற்றம் பொருத்தமற்ற பாடத்திட்
பாடசாலை இல்லாபை
தொழிலுக்குச் செல்ல
காரணமின்மை
மொத்தம்
மூலம்: பொரு
இலங்கை நாட்டின் பல பகுதிகளிலும் மாறி வருகின்றது. காரணம் பொருளாதா பிரச்சினையாகும். அதுவும் இப்பிரச்சினை புறங்களில் கூடுதலாகக் காணப்படுகின கிராமப்புறங்களில் பெற்றோர் கல்வி மீது கிராமப்புறப் பெற்றோர்களின் பொதுவான க அதன் மூலம் கையொப்பமிடத் தெரிந்தாலே இருந்தால் போதும் எனும் மனநிலையுமாகும் என்பதும் தூர விலகக் கூடிய நிலை ஏற்ப
சமகாலத்தில் இடைவிலகல் என்பது எண்ணிக்கை அளவும் குறைந்து கொண்டு ெ நாடளாவிய ரீதியில் 1096 பாடசாலைக்கு 8 குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணத் கல்வியியலாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர் சிறைச்சாலை மூடப்படுகின்றது என்பார்கள். பாடசாலைகள் மூடப்படுவதற்கு மாணவர்க விட்டது எனலாம். இதனால் களவு குற்றச்செ திறக்கப்படுவதற்கும் காரணமாகி விட்டது.
கூர்மதி - 15-CM 013788

குரிய காலத்தில் சேராதோர்.
எதுக்கல்வியைத் தொடராமல் இடைவிலகிச் - இணங்க தமது கல்வியைத் தொடராமல் துே.
ஏற்படுகின்றது. அதாவது குடும்பப் பின்னணி, லத்திட்ட இடர்பாடுகள், கற்போனின் மனநிலை, மமில் பழக்கவழக்கங்கள், பரீட்சை மையக் ர் மற்றும் வள ஆளணியினரின் கடமைகளின் சினைகள் மாணவர்கள் இடைவிலகுவதற்கான
ணங்கள் பற்றிய பொது நோக்கின்படி
நூற்றுவீதம்
48.29%
14.18%
டம்
12.01%
4.01%
1.09%
20.42%
100%
-ளியல் நோக்கு
D இப்பிரச்சினையானது பாரிய தலையிடியாக ர நெருக்கடியும் யுத்த நிலையுமே பாரிய யானது நகரப் புறங்களை விடக் கிராமப் ன்றது. ஏனெனில் நகர்ப்புறங்களை விட
காட்டும் ஆர்வம் குறைவடைவதனாலாகும். கருத்தின்படி தம் பிள்ளைகள் ஓரளவு படித்து ல போதும் என்பதுடன் ஏதோ ஒரு உழைப்பு D. இந்நிலைமை மாறும் போதே இடைவிலகல்
டும்.
துடன் மாணவர் பாடசாலைக்குச் செல்லும் செல்வதும் பிரச்சினையாக உள்ளது. இதனால் முடு விழா இடம் பெற்றுள்ளதையும் அதிலும் அதில் இந்நிலை ஏற்பட்டுள்ளமையையும் 5. ஒரு பாடசாலை திறக்கப்படும் போது ஒரு ஆனாலும் இன்றைய நிலையில் பாரியளவான ளின் இடைவிலகலும் காரணமாக அமைந்து பல்கள் அதிகரித்து விட்டதுடன் சிறைச்சாலை
(191)

Page 212
இடைவிலகலிற்கான பொதுவான காரணங்கள்
1. குடும்பப் பிரச்சினைகள்
மகிழ்வான குடும்பச் சூழல் பிள்ளைகளில் அங்கத்தவர்கள் காரணமின்றி பிள்ளைகளை ை போதே பிள்ளைகள் உளத்தாக்கமடைகின்றனர் நடக்க வேண்டிய காலப்பகுதியில் பெற்றோர் வாழ்வதனாலும் பெற்றோரின் அக்கறையின்மையு மாணவர்களை இட்டுச் செல்கின்றது எனலாம்
2. பொருளாதார நிலை
கல்வி விருத்திக்கு பொருளாதாரம் முக்கியமா கல்வி விருத்திக்கு பின்னணியாக விளங்கும் பிள்ளைகளின் கற்றலுக்கு தடையை ஏற்படுத்தி நிலவும் பொருளாதார நெருக்கடிகள், பி நிறைவேற்றப்படாமை, வகுப்பறையில் காணப்படு அதனை அடிப்படையாகக் கொண்டு அவ பிள்ளைகளிடம் உளரீதியான பாதிப்பை ஏற்பு தடையாக அமைவதுடன் இடைவிலகலுக்கும் சூழலில் வளரும் பிள்ளையானது குடும்ப நிலை நல்க வேண்டும் என நினைத்து தொழிலில் ஈ உண்பதற்கே கேள்விக்குறியாக இருக்கும் ே எழுப்பும் போதும் மாணவரது மனநிலை மாற்ற கொண்டு வரப்படுகின்றது.
3. எதிர்பாராத நிகழ்வுகள்
நம் வாழ்க்கையில் எதிர்பாராது பல விடய பொதுவானதே. இவ்வகையில் கற்றலில் ஆர், தோன்றும் நோய்கள், விபத்துக்கள், பெற்றே யுத்தங்கள், இனக்கலவரங்கள், சாதி முரண்பாடு பாதிப்படையச் செய்யலாம். இவை ஒருவராக நிகழ்வதே. இவ்வாறான நிகழ்வுகள் கூட இடைவிலகலிற்குக் காரணமாகின்றது.
4. சகபாடிக் குழுக்கள்
வயதிலும், சமூகமதிப்பு நிலையிலும் அண் சகபாடிகள் என அழைக்கப்படுகின்றனர். கு மாணவர்கள் மீது கூடிய தாக்கத்தை ஏற்ப செயற்பாடுகள் யாவும் மாணவரது கற்றலில் சகபாடிக் குழுக்களின் தாக்கத்தினால் வீடே இடமாக மாறுவதுடன் சகபாடிகளைப் போன்று இச்சந்தர்ப்பத்தில் கற்றலில் ஈடுபாடு குறைவன அமையலாம்.
-192

ன் கல்விக்கு அடித்தளமாகும். குடும்ப வத்துக் கொண்டே தம்மிடையே முரண்படும் 1. அத்துடன் பிள்ளைகளுடன் அன்பு காட்டி [ வெளிநாடு, வேலைப்பளு என பிரிந்து ம், கல்வி அறிவின்மையும் இடைவிலகலிற்கு
என ஒன்றாகக் காணப்படுகின்றது. மேற்படி ம் பொருளாதாரம் சில சந்தர்ப்பங்களில் 6 விடுகின்றது. அவ்வகையில் குடும்பத்தில் ள்ளைகளின் பாடசாலைத் தேவைகள் நம் பொருளாதார ரீதியான ஏற்றத்தாழ்வுகள், ர்கள் புறக்கணிக்கப்படுதல் போன்றன படுத்தி இறுதியில் அவர்களது கற்றலிற்கு - காரணமாகின்றது. வறுமையான வீட்டுச் ல காரணமாக தானும் தனது உழைப்பை டுபடும் போதும், வீட்டின் வறுமைச் சூழல் பாதும், படிப்பு எதற்கு எனும் வினாவை றமடைந்து பாடசாலைக் கல்வி முடிவிற்கு
ங்கள் ஏற்படுகின்றன. இது சகலருக்கும் வத்துடன் ஈடுபடும் பிள்ளைக்கு திடீரெனத் ாரின் இழப்புக்கள், நாட்டில் இடம்பெற்ற கள் போன்றன அவர்களின் வாழ்க்கையைப் ல் எண்ணி ஏற்படுவதில்லை. எதிர்பாராது சில சந்தர்ப்பங்களில் பிள்ளைகளின்
ணளவான ஒருமைப்பாடு உடையவர்கள் இம்ப நிலைக்கு அடுத்ததாக இவர்களே டுத்துகின்றனர். இவர்களது நடத்தைகள் செல்வாக்குச் செலுத்துகின்றது. காரணம்
இவர்களுக்கு தேவையற்ற விருப்பமற்ற தாமும் தம் நடத்தையை மாற்ற முனைவர். டவதுடன் இடைவிலகலிற்கும் காரணமாக
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 213
5. போதனை முறை
கற்றலில் மாணவர் சலிப்படைந்து இடைவில காரணம் கற்பிக்கும் முறையாகும். வகுப்பறைய மிகவும் பின்தங்கிய மாணவர்கள் எனப் பல அவர்களுக்கேற்ற வகையில் கற்பித்தல் செயற் பயன்படுத்திக் கற்பிக்கும் போது பாடத்தில் செல்கின்றது. எனவே இத்தகைய நிலையிலி சமுதாயத்தைக் கட்டியெழுப்ப நாம் காத்தி இதற்காக இடைவிலகலைக் குறைப்பதற்கு வேண்டும்.
இடைவிலகலைக் குறைப்பதற்காக கையாள
1.
ஆசிரியரானவர் பாடசாலைக்குள் உள் போல கருதிச் செயற்பட வேண்டும்.
வகுப்பறையானது முறையாக ஒழுங் வகையிலும் கற்கத் தூண்டும் வகையில்
ஆசிரியரானவர் பாடப்பொருளை மாணவர்க தொடர்பு படுத்திக் கற்பிப்பதில் கூடிய .
ஆசிரியர் தமது மாணவர்களிடம் அவர்களி கொண்டிருக்க வேண்டும்.
5. வகுப்பிலுள்ள சகல மாணவர்களையும்
6. மாணவர்கள் தாம் கற்றவற்றை மீட்பத்
கொடுக்க வேண்டும்.
7. வகுப்பிலுள்ள சகல மாணவர்களுக்கும்
ஒப்படைக்க வேண்டும்.
மாணவர்களின் திறனைக் கருத்தில் கெ
9. பரீட்சை முறைகளுக்கு கூடிய முக்கியத்
கற்பித்தலிற்கு முதலிடம் வழங்க வேண்
10. கற்பிக்கும் போது மாணவர்களுக்கு வி
கட்புல செவிப்புல சாதனங்களைப் பய மாணவர்களது கற்றலை தூண்டக் கூடிய
இவ்வாறு பல்வேறு நடவடிக்கைகளையும் இ போது ஒவ்வொரு நாட்டினதும் மனிதவளம் மே ஏற்படும்.
கூர்மதி.

கலிற்கு இட்டுச் செல்ல இன்னோர் முக்கிய பில் மெல்லக் கற்போர், மீத்திறன் உடையோர், "தரப்பட்டோர் இருக்கும் போது வேறுபடுத்தி Bபாட்டினை மேற்கொள்ளாது ஒரே முறையைப் சலிப்பு ஏற்பட்டு இடைவிலகலிற்கு இட்டுச் ருந்து மாணவர்களை மீட்டெடுத்து சிறந்த திரமான முடிவுகளை எடுத்தல் வேண்டும். - எம்மாலான நடவடிக்கைகளை எடுத்தல்
ரக் கூடிய நடவடிக்கைகள்
நுழையும் பிள்ளையைத் தன் பிள்ளை
தபடுத்தப்பட்டு மாணவர்களைக் கவரும் லும் அமைதல் வேண்டும்.
களின் யதார்த்த வாழ்க்கை அனுபவங்களுடன்
அக்கறை செலுத்த வேண்டும்.
என் முன்னேற்றம் பற்றி அடிக்கடி அறிவுறுத்தி
சமமாகக் கருதுதல் வேண்டும்.
கற்கு குழு முறையமைப்பை ஏற்படுத்திக்
அடிக்கொரு தரம் தலைமைப் பொறுப்பை
ரண்டு அதற்கேற்பக் கற்பிக்க வேண்டும்.
துவம் கொடுப்பதை விடுத்து குழுமுறைக் டும்.
பருப்பத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் பன்படுத்துதல் வேண்டும். ஏனெனில் இது
பது.
உடைவிலகலைக் குறைப்பதற்காக எடுக்கும் ம்பட்டு நாடு அபிவிருத்தியடையச் சந்தர்ப்பம்

Page 214
2011 அகில தமிழ்மொழித்தி
முதலாமிட மாணவர்களத
(194)
194

இலங்கை னப் போட்டியில் டம் பெற்ற
ஆக்கங்கள்
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 215
தற்கொலை) பிரச்சினைக்கு
இரவு பத்து மணியை தாண்டிக் கொ தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. அந்த அ ஓசை கேட்டுக் கொண்டிருக்கிறது. இன்று ே இயங்கிக் கொண்டிருக்கிறது.
பதினொரு மணி வரைக்காவது தைக் இயங்க கடந்த கால நினைவுகளும் சக்க
யோகராஜினதும் மங்களத்தினதும் இல் செல்வராணி, யோகநாதன். அன்பிற்கே இ வாய்ப்புக்கள் இல்லாவிடினும் அன்றைய நா கொண்டிருக்கிறது.
இவர்களது இல்லற வாழ்வின் சந் விரும்பவில்லை போலும்.... வேலைக்குச் செ வந்து படுத்தவர் எழும்பவில்லை. அவரை க மீட்கவும் முடியவில்லை.
தந்தையின் பிரிவால் அந்தக் குடும்ப ஊர் முழுதும் உறவுகள் பல இருந்தும் ஏ
பத்துப் பத்து வீடுகளில் பாத்திரம் 6 அல்லது பட்டினியாகவோ அவர்களது கா முன்வருவதாயில்லை. இருப்பினும் சேற்றி அவர்களது வாழ்வில் ஒளி கொடுக்க முன்
தன்னால் முடிந்த உதவியை செய்ய பணத்தில் தையல் மெஷின் ஒன்றை அ சந்தோசத்தில் நிலை தடுமாறவே செய்தது
அன்றிலிருந்து இன்றுவரை பிள்ளை உருகிக் கொண்டே இருக்கிறாள்.
டங்.. டங்..... டங்......
கையில் இருந்த கத்தரிக்கோல் விழ
அவளது இரு இமைகளிலும் சோர் சாய்ந்து கொள்கிறாள். பூமா தேவி அவரை
ககூர்மதி -

தீர்வாகி விடுமா?
செல்வி எம்.எச்.எவ். ஹுஸ்னியா மாத்தறை / அறபா தேசிய பாடசாலை, வெலிகம
ண்டிருக்கிறது. எங்கும் அமைதியின் கணம் மைதியை கிழித்த வண்ணம் தையல் மெஷின் நற்றல்ல ஏழு வருடங்களாய் சதாவும் ஓயாமல்
கணும் என எண்ணிய மங்களம் இயந்திரமாய் -ரமாய் இயங்க ஆரம்பித்தன.
ல்லற வாழ்வின் இனிய நினைவுச் சின்னங்களே லக்கணம் என பெயர் பெற்ற குடும்பம். வசதி ளுக்குரிய தேவைகளை நிறைவேற்றி வாழ்ந்து
தோஷத்தையும் சுபீட்சத்தையும் இறைவன் =ன்ற யோகராஜா நெஞ்சு வலி என்று வீட்டுக்கு கால தேவனின் பிடிக்குள் இருந்து அவர்களால்
பம் அநாதரவாய் தவிக்க வேண்டி ஏற்பட்டது.
றெடுத்துப் பார்க்க ஒருவருமில்லை.
தய்த்தும், பிடவை கழுவியும் அரை வயிரோ லம் ஓடிக் கொண்டேயிருக்க யாரும் உதவ லும் செந்தாமரை பூக்கலாம் என்பது போல - வந்தான் கணேஷ்.
வேண்டும் எண்ணிய கணேஷ் தனது சொந்தப் அன்பளிப்பு செய்த போது அந்தக் குடும்பம்
களை படிக்க வைக்க மெழுகுவர்த்தியாய்
அவளது சிந்தனா பட்டமும் அறுபடுகிறது. வு குடிகொள்ள அப்படியே போய் கட்டிலில்
ள ஆட்கொள்கிறாள்.
(195)

Page 216
காலமெனும் செடியிலே மாதம் எனு உயர்தரத்தை அடைந்தாயிற்று... தாயினதும் வேண்டும் என்பதே அவனது மனம் சதாவும்
"அம்மா....அம்மா'' "இதோ வந்துட்டேன்ப்பா”
வார பலன்
"அம்மா நாளைக்கு தான் பரீட்சைக்கு ( இருநூத்தி ஐம்பது ரூபா கட்டிடனும், இல் வேண்டியிருக்கும்”
இளமை குடிகொண்டிருக்க வேண்டிய தாயுள்ளம் பதறவே செய்கிறது. பெற்ற மனம்
"என்னடாப்பா....திடீரென்று வந்து கேட்
"அம்மா நீ யார்க்கிட்டயாவது கேட்டு பா கேட்டு பார்க்கிறன்”
கூறி விட்டு செல்லும் மகனை விழிகள்
தன்மானத்தை ஒரு புறம் தள்ளி வை விட்டான். எல்லோரும் முடியாது என்று கை திரும்புகிறான். உலகமே அவனை பார்த்து அவனுள் ஏற்படுகிறது. இதனை இரு சோடி
வீட்டை நோக்கி அவனது கால்கள் ! கண்ட தாய்
"மகன் போன காரியம் என்னப்பா ஆய
"அம்மா....தாயின் மடியில் முகம் புதை தாயுள்ளம் இரத்தக் கண்ணீர் வடிக்கிறது.
"அம்மா... ஏழையா பொறக்குறது நம்ப சீப்பா போயிடுச்சா..... ஏன்ம்மா எங்கள் மட்டு தான் புரியல"
"ராசா, அழாத ராசா, கடவுள் நம்ம நிச்சயம் வெற்றி கிடைக்கும். தாய் கூறும் இருவரது செவியிலும் பட்டு மோதுகிறது.
"மங்களமக்கா....மங்களமக்கா.....
"யாரது.....ஓ நம்ம கணேஷ் தம்பியா சாப்பிடறியா..."
"அதெல்லாம் ஒண்ணும் வேணாம்மா.... யே வந்தேன்ம்மா... இன்னிக்கு காலைல பணம் கண்டு தான் இங்க வாரன்... ஏனம்மா...என்கிட்ட
கணேஷ் இப்படி கேட்டதும் தாயுள்ள போய்விட்டது. "அதில்லப்பா எங்க குடும்ப இதுக்கு மேலும் உன்ன கஷ்டப் படுத்த விரு எந்த கோவமும் கிடையாது...''
(196)

ம் மலர்கள் பூத்து குலுங்க யோகநாதன் > தந்தையினதும் ஒரே கனவை நனவாக்க
இயம்பும் வார்த்தை.
விண்ணப்பிக்கிற கடைசி திகதி. இன்னிக்கே கலேன்னா அடுத்த வருஷம் தான் எழுத
வயதில் சோகம் நிறைந்திருப்பதை கண்டு மல்லவா?....
டா நான் எப்படிடா தர முடியும்.''
ரேன்..... நான் என் பிரன்ட்ஸ் யார்கிட்டயாவது
மங்க நோக்குகிறாள்.
வத்து விட்டு பலரிடமும் கேட்டுப் பார்த்து
விரிக்க ஏமாற்றமே பரிசாக கிடைத்து வீடு ஏளனமாய் சிரிப்பது போன்ற ஒரு பிரமை கண்கள் அவதானித்த வண்ணம் இருந்தன.
நடை பயில்கின்றன. மகனின் வருகையை
பிடுச்சி" கத்து கேவி கேவி அழும் மகனை பார்த்து
ம தப்பம்மா... ஏம்மா ஏழைன்னா அவ்வளவு டும் கடவுள் இப்பிடி சோதிக்கிறானே என்று
5 கைவிடவே மாட்டாரு. அவன நம்பினா அதே வேளை கோயில் மணியின் ஓசை
வா புள்ள வா இப்பிடி உட்காரு... மோர்
பாகநாதனோடு பரீட்சை விஷயமா பேசலாம்னு - புரட்ட பட்ட கஷ்டத்த என் கண்ணால் - ஒதவி கேட்டா நான் செய்ய மாட்டேனா...?
ம் நெருப்பு பட்ட புழுவாய் துடிதுடித்துப் த்துக்காக நீ நிறைய ஒதவி செஞ்சிட்ட. தம்பல..... மத்தப்படி எங்களுக்கு உன்மேல
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 217
அம்மா.....எக்ஸாம் பீஸ் கட்டிட்டன். ச என்ன நான் வர்ரேன்ம்மா....
அவன் விடை பெற்றுச் செல்ல தா சிலைபோல் செயலற்று நிற்கிறாள்.
"டேய் ராசா ஓடி வாடா..... "என்னம்மா” ''கடவுள் கண் திறந்திட்டாருப்பா” "என்னம்மா சொல்ற''
"ஆமாப்பா இப்போ கணேஷ் தம்பி எக்ஸாம் பீஸை அவனே கட்டிட்டு வந்து சொல்லிவிட்டு போய்விட்டான்”
தாய் கூறிய வார்த்தையானது தேனி தாயை கட்டிப் பிடிக்கிறான்.
காலம் யார்க்காகவும் நிற்பதில்லை திறம்பட எழுதியாச்சு.
இவ்வாறு மாதங்கள் பல கடந்து விட் மகனை பார்த்து "எங்கப்பா காலங்காத்த
"ஆமாம்மா... இன்னிக்கு எக்ஸேம் பெற்றுவிட்டு கடவுளை கும்பிட்டு விபூதி நோக்கி அவனது கால்கள் வேகநடை டே
ஈசல்கள் போல் மாணவர்கள் கூட்டம் வெளியே வருவதும் உள்ளே போவதுமாய் ரேகை நிழலாய் தென்படுகிறது.
யோகநாதனுக்கோ தலைப்பிரசவத்தி நடத்தையில் இழையோடுகிறது.
காரியாலயத்தில் இருந்து வெளியே பார்வைகளும் அவரை நோக்கி பார்க்க கொண்டிருக்கிறது.
அதிபர் தேடும் மாணவன் நானாக உள்ளங்களும் தமக்குள்ளே பிரார்த்தித்து
ஆம், அதிபர் தேடும் மாணவன் வேறு தாயின் அரவணைப்பில் வாழ்ந்த யோகநா
யோகநாதா! நீ தான் எங்க ஸ்கூல்க்கு தான் பெருமை சேர்த்து தந்த ரொம்ப சர்
அதிபர், ஆசிரியர், மாணவர் என . மகிழ்ச்சியுடன் வீடு செல்கிறான். தனது
ககூர்மதி.

ந்தோஷமா போய் எக்ஸாம் எழுத சொல்லுங்க.....
யுள்ளம் நன்றியின் பெருமிதத்தால் அப்படியே
வந்து நீ பணம் தேவப்பட்டு அலஞ்சியாம்னு து உனக்கு நல்லா படிக்கணும் அப்படின்னு
ல் அமுக்கி எடுக்கப்பட்ட கரும்பாய் இனிக்க
யே...இரவு பகலாக கஷ்டப் பட்டு எக்ஸாமை
டன. அன்று வழமைக்கு மாற்றமாக செயல்படும் Tல கிளப்பிட்ட போல''
ரிஸல்ட் வருதாம்...'' தாயிடம் ஆசீர்வாதம் Dய நெற்றி நிறைய பூசிவிட்டு பாடசாலையை பாடுகின்றன.
எய் அதிபர் காரியாலயத்தை மொய்க்க அதிபர் ப இருக்க மாணவர்களது முகத்தில் பயத்தின்
சிற்கு காத்திருக்கும் தாயின் தவிப்பு அவனது
றும் அதிபரை பார்க்கும் போது அனைவரது அதிபரின் பார்வை மட்டும் ஒருவனை தேடிக்
இருக்கக் கூடாதா என அனைத்து மாணவ க் கொள்கின்றன.
பயாருமல்ல ஏழ்மையிலும், தந்தையை இழந்து
தனே!
த மட்டுமல்ல, இந்த மாவட்டத்துக்கே ஒருத்தன் 5தோசம்பா.....
அனைவரது வாழ்த்தினாலும் மனம் நிறைந்த | சந்தோசத்தை தாயிடமும் தங்கையிடமும்
(197)

Page 218
பகிர்ந்து கொள்கிறான். தாயால் மட்டுமே வாழ்த் ஓர் ஊமை. பிறவியிலேயே ஊமையல்ல தந் அவளை ஊமையாக்கி விட்டது.
பல்கலைக் கழகம் தெரிவாகி நான்கு 6 வருகிறான்.
"மகனை கண்ட தாய் மெலிந்து போனாய் ராசா....என கூற
அம்மா.... நல்லா தானே இருக்கன்......
இவ்வாறு காலங்கள் கடந்து கொண் காத்திருப்பதில்லையே! படித்து பட்டம் ெ கிடைக்கவில்லை. பல இடங்களிலும் சென்று எல்லாம் அவனை கிண்டலாக பார்த்து கேலி
"பாருடா இவன பெரிசா படிச்சானாம் சுத்திக்கிட்டே இருக்கான்... வீட்டில் உழைக்க போயிடுச்சி"
அவர்களது வார்த்தை கன்னத்தையும்
ஒரு நாள் தன்னோடு படித்த நண்பன் ர என்னடா இந்தப் பக்கம்...''
"வேல விஷயமா ஒருத்தர பார்த்துகிட்டு கெம்பஸ் எல்லாம் போய் படிச்சேன்னு கேள்வி
"அத ஏண்டா கேக்குற படிச்சும் பட் மாட்டேங்கிறது. எத்தனையோ கம்பனி படிய நாயா விரட்டுராங்க...''
சொல்லும் போதே அவனது கண்கள் கு
"டேய் கவலபடாத.... படிச்சவனுக்கு எங் படாத எனக்கு தெரிஞ்ச எடத்துல வேல காலிய உனக்கு தகவல் தாரன். அதுக்கா நீ உன்னோ
இரு. 2)
கூறி விடை பெற்று செல்லும் நண்பலை
ஐந்து மாதம் பம்பரமாய் சுழன்று போய் இல்லை. அவனும் எத்தனையோ படி ஏறியா அவன சோதிக்கிறானோ தெரியவில்லை.
அன்றும் உச்சி வெயிலின் கொடூரம் கேட்டு வெறும் கையோடு வருகிறான். உடல் கொதிக்க வந்து கொண்டிருக்கான்.
( 198

து தெரிவிக்க முடியும். தங்கை செல்வராணி தையின் இறப்பால் ஏற்பட்ட தீடீர் அதிர்ச்சி
பருடம் தாயை பிரிந்து பட்டம் பெற்று வீடு
டே செல்கிறது. காலம் யாருக்காகவும் பற்றும் இதுவரை அவனுக்கு தொழில் று அலைந்தாயிற்று. போவோர் வருவோர்
செய்யவே செய்தனர்.
... வெறும் வெட்டிப் பயலா ஊதாரியா ம தண்டச் சோறு சாப்பிடறதே பொழப்பாப்
மனதையும் மாறி மாறி பதம் பார்க்கிறது.
மேஷ் வருவதை கண்டு "ரமேஷ்.... வாடா
B போலாம்னு வந்தேன்.... ஆமா என்னடா ப்பட்டன். இப்ப என்னடா பண்ணிட்டிருக்க...''
டம் பெற்றும் ஒரு தொழிலும் கெடக்க மிதிச்சிட்டன். வேல் கிடையாது போனா
களமாகிவிடுகின்றன.
க போனாலும் தொழில் கிடைக்கும். கவல பா இருக்குண்ணு கேள்விப்பட்டன் கேட்டுட்டு - முயற்சிய கைவிடாம நீயும் தேடிக்கிட்டே
எ நன்றிப் பெருக்கோடு நோக்குகிறான்.
விட்டது. நண்பனிடமிருந்து எந்த தகவலும் ரயிடுச்சி இருந்தாலும் கடவுள் ஏன் தான்
தாக்குகிறது. பல இடங்களிலும் வேலை - மட்டுமல்ல அவனது மனமும் தணலாய்
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 219
"பாருடா இவன் நடந்து நடந்து கால் படிக்க கூடாதுங்குறது. படிச்சி என்னதான்
கோபம் சுள்ளென்று மண்டையை த பார்வை அவர்களை பார்க்கிறான்.
"என்னடா... நீ அப்படி பார்த்த சாப்பிடறவங்களுக்கு சீக்கிரமா கோபம் ஏறு
வந்த ஆத்திரத்தை அடக்கியவனாக அவனது தீர்வு தான் என்ன?
வீட்டை ஒரு தரம் கண்களால் துல கேட்கிறது. தங்கை முற்றத்தில் விளையாடு
ஓசை செய்யாமல் கட்டிலின் கீழே கா இழுக்கிறான். சத்தமில்லாது திறந்து கே துணிமணிகளை அகற்றி உள்ளே கிடந்த க
கையில் எடுக்கிறான்.
பணம் அதில் இருப்பதற்கு அடையா
உண்டியலை எடுத்து ஒரு துணியில் உடைக்கிறான். நாணயக் குற்றிகளை சேர் இருக்கிறது. அதை கையில் எடுத்த வண்
வரும் பொழுது அவனது உள்ளங்கை அதை பிடித்த வண்ணம் மலையின் பள்ள
அங்கே அவனை பார்த்து என்னடா த போல் அவனுள் ஒரு பிரமை.
மாமியாரின் சீதனக் கொடுமையால் 2 உயிர் விட்ட தனுஷ், கணவனின் குடிவெ பலரும் அவ்விடம் அவனது மனக் கண்ணில்
மரண பயம் அவனையும் ஆட்கொள்ள செல்லும் போது அண்ணா...... அண்ணா.....
கையிலிருந்த போத்தல் கீழே விழுந்தது
"ராணி உனக்கு பேச்சு வருது"
அவனது ஆனந்தத்துக்கு அளவே இல்
"எங்கண்ணே போன... எங்கெல்லாம் ? இந்த பக்கமா போனேன்னு. இந்தா உனக்
அவசரமாக பிரித்து பார்க்கிறான்
ஆம் அவனுக்கு வேலை கிடைத்து உறங்காது.
அவனுள்ளம் ஓர் வீரம் தலையெடுக்க அழைத்துக் கொண்டு செல்கிறான்.
கூர்மதி

ல் தேஞ்சி குள்ளமாயிட்டான். இதுக்குத்தான்
கண்டுட்டான்.
அடைகிறது. கண்கள் நெருப்பை கக்க ஒரு
கா பயந்துடுவோமா... தண்டச் சோறு துவது சரிபோல” அவன் கூற
ஒரு தீர்வோடு வீட்டை நோக்கி நடக்கிறான்.
ாவுகிறான். அம்மா தைக்கும் ஓசை காதில் டுவது கண்களுக்குப் புலப்படுகிறது.
ணப்பட்ட அந்த தகரப் பெட்டியை மெதுவாக பாணல் மாணலாய் மடித்து இருந்த தனது ளிமண்ணால் வடிவமைக்கப்பட்ட உண்டியலை
ளமாய் அது கனக்கிறது.
- சுற்றி சத்தம் வராதவாறு நிலத்தில் தட்டி பத்து எண்ணுகிறான். எண்பத்தி மூணு ரூபா மனம் ஓர் முடிவோடு செல்கிறான்.
கயில் ஒரு சிறிய கருப்பு போத்தல், கனமாய்
த்தை அடைகிறான்.
கற்கொல பண்ணப் போறியா என்று கேட்பது
உயிர் விட்ட லட்சுமி, காதலி ஏமாற்றியதால் பறியால் தற்கொலை செய்த மீனாட்சி என
ல் வந்து போயினர்.
மூடியை திறக்கிறான். வாயினருகே கொண்டு
து சிதறுகிறது.
ல்லை....
உன்ன தேடறது. வேலு தான் சொன்னான். நீ
கு என்னவோ லெட்டர் வந்திருக்கு...''
விட்டது. கல்வியின் கண்கள் ஒரு நாளும்
5 வீர நடை போட்ட வண்ணம் தங்கையை
(199)

Page 220
"காலம் ஒருநாள்
பாத்திரங்கள்
கல்யாணி
- காலினை இழந்தபெண் வதனன்
- கல்யாணியுடன் கல்விகற் ராமு
- தரம் 10ல் கல்வி பயிலு வதனி
- கல்யாணியின் தோழி ஆசிரியர்
ராமுவின் வகுப்பாசிரி
காட்சி
இடம்
பாடசாலை வளாகம் காலம்
: பாடசாலை வேளை (8 பாத்திரங்கள் - : ராமு, ஆசிரியர் காட்சிப்பொருள் : பாடசாலை வளாகத காட்சிப்படுத்தல்.
மேை காணப் படு வ து
அமைப்பு காணப்படல்.
(ராமு மேடையின் முன் இடதுபுறத்தில் ஆழ்
ராமுவிடம் (காலைப்பொழுதிற்கான உற்சாகமான இன
42 2 2 2 2 )
ஆசிரியர் : ராமு.................ராமு.... ராமு
(யோசனையில் இருந்து தி
சேர் ஆசிரியர் :
(புன்னகைத்தவாறு) குட்
காலங்காத்தால? ராமு
அது..................ஒண்டும்....... ஆசிரியர்
ஒண்டும் இல்லை எண்டு உ6
சொல்லுது. சொல்லப்பா உ ராமு
(விம்மி விம்மி அழுதவாறு
நடந்ததல்லோ? ஆசிரியர்
ஓம் ! அதுக்கென்ன? ராமு
எனக்கு பேச்சுப் போட்டியில்
நல்ல ஆசை ஆசிரியர் :
நல்லது தான் ! ராமு
ஓம் சேர். நேற்று பேச்சுப் போனனான். இடையில தடு எல்லாரும் என்னை பாத்து சொல்லினம்.
200

மாறும்...
செல்வி ஆர். மைதிலி யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி, பருத்தித்துறை
3கும் மாணவன்
ம் மாணவன்
பியர்
காலை)
த்திற்கு பொருத்தமான அமைப்பினை டயின் முன் வலதுபுறம் வகுப்பறைகள்
போன் று
ஒந்த யோசனையில் நிற்கின்றான். ஆசிரியர்
வருகிறார்) செயினை மேடையில் ஒலிக்கச் செய்தல்)
டுக்கிட்டவாறு) சேர்.............. குட் மோனிங்
மோனிங். என்ன யோசனை? அதுவும்
.........இல்ல சேர் (தயங்கியவாறு கூறுதல்) ன்ர வாய்தான் சொல்லுது. கண் இருக்கெண்டு என்ர சேரல்ல கேட்கிறன். 1) சேர்..................நேற்று பேச்சு போட்டி
) எடுபட்டு தேசியத்துக்கு போகனும் எண்டு
போட்டியில நல்லாத்தான் பேசிக் கொண்டு மாறி மாத்திமாத்தி சொல்லி குழம்பிட்டன். சிரிச்சுக்கொண்டு “கொண்ணையன்” எண்டு
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 221
ஆசிரியர்
அதுக்கு நீ ஏன்னப்பு அ ராமு
என்ன சேர் நீங்களும் ! ஆசிரியர்
அழாதேப்பு ! நான் சொல்
நீ போட்டிக்குப்போய் பு ராமு
போங்கோ சேர் ! எல
இல்லாதவன் சேர். ஆசிரியர்
ஏன் அப்பிடிச் சொல்லு
முதல்ல தெரிஞ்சுக்கோ ராமு
இல்லை சேர் ! எனக்கு
தான் இருப்பன். ஆசிரியர்
இல்லை ராமு, வாழ்க்ை
வெற்றி தோல்வி எல்ல ராமு
இதெல்லாம் சொல்ல ந
இல்ல சேர் ! ஆசிரியர்
ஆர் சொன்னது நடை!
எப்பவும் மாறாது. ராமு
என்ன சேர் சொல்லுறீங் ஆசிரியர்
(ராமுவை விளித்தவாறு
நிலையானது என்ன தெ ராமு
என்ன சேர்? ஆசிரியர்
மாற்றம் தான். உனக்கு ! படிக்கிற காலத்தில 6
சொல்லுறன். ராமு
சொல்லுங்கோ சேர். ஆசிரியர் : அவசரப்படாத ! சொல்
(இவ்வாறு ஆசிரியர் தனது பழைய
(மேடையின் அனைத்து விளக்குக
கா! (பழைய
இடம் காலம் பாத்திரங்கள் காட்சிப்பொருள் :
பாடசாலை வளாக பத்து வருடங்களுக் கல்யாணி, வதனன் பாடசாலை வளாக காட்சிப்படுத்தல், பா வலப்புறம் காணப்பு
(வதனன் நூலகத்திலிருந்து புத்தகத்
தெரியாமல் மோதுகின்ற
கூர்மதி

Iழுவுற? இப்படி கேட்கிறீங்கள் ! (அழுதல்)
லுறதக் கேள். இண்டைக்கு விட்டால் நாளைக்கு, தெலாவது இடத்தை தட்டித்தான் போற பாரன். எக்கு லக்கே இல்ல. நான் ஒரு அதிஷ்டம்
2. தோல்வி என்றது நிலையானதல்ல அதை
அதிஷ்டம் இல்ல. நான் தோத்துக் கொண்டே
க ஒரு சக்கரம் மாதிரி அதில்ல. இன்ப துன்பம், ாம் மாறி மாறி வரும்.
லாத்தான் சேர் இருக்கும். ஆனா நடைமுறையில
முறையில் இல்லை எண்டு, அது இப்ப இல்ல
கள்? ) ராமு ! உலகத்திலேயே மாறாதது, அதுவும் நரியுமா?
புரியிற மாதிரி சொல்லுறன் கேள். உன்னைப்போல என்னோடு படிச்ச ஒரு பிள்ளையைப் பத்தி
லுறன் கேள்.
ஞாபகத்தினை புரட்டத் தொடங்குகிறார்) ளும் அணைகின்றன. மேடையின் திரை
மூடப்படுகின்றது)
ட்சி - 2 நினைவுகள்)
-கு முன் (காலை) - வதனி த்திற்கு பொருத்தமான காட்சி அமைப்பினை டசாலை நூலகம் போன்ற அமைப்பு மேடையின் டுதல்.
தை பார்த்தவாறு வருதல். கல்யாணியுடன் நான். கல்யாணி விழுகிறான்)
(201)

Page 222
வதனன்
(கோபமாக) சீ ! ! உன்னைப் பார்த்தாலே...
செய்தல்) கல்யாணி
சொறியுங்கோ ! (பயப்படுத வதனன்
உன்ர சொறியை தூக்கி கு
சொன்னனான் என்ர கண் ( கல்யாணி
(மெதுவாக எழுப்புதல்) ஏ
விழுறீங்கள்? வதனன்
ஆ ! உன்னில நல்ல ஆல்
(சிறிது நேரத்தில் வதனி மே வதனி
என்ன பிரச்சனை வதனன்? வதனன்
அதுவோ! அதை இந்த றெ வதனி
ஏன் அவள நீர் நொ6 பார்த்துக்கொண்டுதான் வா
இருக்கிறீர். வதனன்
அது ஒண்டும் இல்ல வதனி.
ஒத்துவராது. ஒரு அருவெறு வதனி
அதுக்காக அவளை நீர் ஏ. வதனன்
எனக்கு அதெல்லாம் சரி எனக்கு
முன் வாறன் (மெதுவாக வதனன் மேடையின் பி
! ! ! ! ! !!! 1:11!!! ! ! ! 6
கல்யாணி : பார்த்தியா வதனி, அவன்
(சோகமாக பின்னிசை எழு வதனி
அவனை விடு கல்யாணி. கல்யாணி :
இல்ல வதனி அவன் மட்டும்
பேசுறாங்கள். வதனி
ஆர் என்ன சொன்னாலும் ந கல்யாணி
இல்லை வதனி, உனக்கு என்னால இந்த உலகத்தி
நடக்கப் போறதில்லை. வதனி
இல்ல கல்யாணி அப்பிடிச் கல்யாணி
இல்ல வதனி போன கால் தி
மாதிரி என்னை நொண்டிச்சி வதனி
கல்யாணி! இங்க பார். அவ உன்ர மனச குழப்பாத. நீ !
உயர்ந்தவளா இருக்கவேண கல்யாணி
இல்லை வதனி. எனக்கு இன வையிண்ட தலைவிதியை
(சோகமாக பின்னணி இசை வதனி
(உரத்த குரலில்) கல்யாணி.. எப்பவும் சோதனையும் 6 மனவேதனை படக்கூடாது.
(202)

-... ஏன்டி நொண்டிச்சி பார்த்து வரமாட்டியே
(அருவெறுத்து போன்று பாவனை
ல்)
தப்பைத் தொட்டியில போடு. உன்னை நான்
முன்னால் வரக்கூடாதென்று.
ன் வதனன் என்னைக் கண்டால் எரிஞ்சு
சைதான். அதுதான் அப்பிடி இருக்கிறன். மடையின் வல பின்புறத்தில் இருந்து வருதல்)
நாண்டிச்சியையே கேளும்.
ண் டிச்சி எண்டு சொல்லுறீர். நானும் றன். அவளில எரிஞ்சு விழுந்து கொண்டே
எனக்கு இந்த ஊனமானவங்களை பார்த்தாலே பப்பு மாதிரி. சுறது சரியே!
மாதிரித்தான் கிடக்கு, இனிமேல் இவள் னால வரக்கூடாது. அவ்வளவுதான் நான்
பின் இடப்புறமாக வெளியேறுதல்)
என்னை எப்பிடி பேசிட்டு போறான் எண்டு. ப்புதல்)
மில்ல எவ்வளவோ பேர் என்னை ஒருமாதிரி
> அதையெல்லாம் கேட்காத ! ஒண்டும் தெரியாது. இந்த பொய்காலோட ல வாழ முடியாது. நான் படிச்சு ஒண்டும்
சொல்லாத! ரும்பி வரப்போகுதா? இல்ல இந்த வதனனை எண்டுதான் சொல்லாமல் விடப்போறாங்களா? பன் சொன்னான், இவன் சொன்னான் எண்டு படிச்சு வந்து இந்த சமூகத்திற்கு முன்னால பம். | வசந்த காலம் எண்டது இல்லை. அவைய
ஆரால மாத்த முடியும்.
எழுப்புதல்) ........! அப்பிடிச் சொல்லாத எல்லாருக்கும் வதனையும் வரும் தான். இருந்தாலும்
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 223
கல்யாணி : என்ன சொல்லுற வதனி? வதனி
ஓம் கல்யாணி. நீ உன்ர கல்யாணி : ஓம் ! வதனி அந்த அகே
முடியாது (மேடையில் அகோர சம்பவத்தை ஞாபகம்! போன்று சத்தம் எழுப்புதல். அபாயத்தில் ஒளிரச்செய்து அணைத்தல்)
வதனி
அப்ப நீ நினைச்சனியா ந
எண்டு? இல்லதானே. அந்த கல்யாணி
ஓம் வதனி ! விதி மட்டும் வதனி
உன்னை மாதிரி எத்தின அவையளுக்கு ஒரு கா
காத்துக்கொண்டே இருக்க கல்யாணி
அதுவும் சரிதான் வதனி வதனி
அது ரொம்ப தூரத்தில் ! கோரிக்கை எல்லாத்தையும்
இருக்குது. கல்யாணி
ஓம் வதனி ! உண்மைதா வதனி
அதை மாதிரித்தான் உன்
தளரவிடாத. கல்யாணி :
ஓம் வதனி! இனி ஆர் செ காலத்துக்காக நான் காத்தி
மாறும். வதனி
சரி சரி.
...வா.. அடிக்கப்போகுது.
(மணியோசை மேடை
(இருவரும் வகுப்பறை (பொருத்தமான பின்னணி இ
(மேடையின் திை
காட்சி (பழைய எ
இடம் காலம் பாத்திரங்கள் : காட்சிப்பொருள் :
வைத்தியசாலை பழையநினைவில் ஐந் கல்யாணி, வதனி, வத் வைத்தியசாலையின் அ காட்சிப்படுத்தல் மேன் மூடப்பட்டிருத்தல். படு வலப்புறம் இருத்தல்)
(கல்யாணி டொக்டர் வெள்ளைக் கோட்டை
இருத்தல். வ
கூர்மதி

காலை மிதிவெடியால இழந்தனீ. பாரம் இண்டை வரைக்கும் என்னால மறக்க
சபடுத்தும் வகையில் மிதிவெடி வெடிப்பது னை சுட்டுவதற்காக சிவப்பு விளக்கினை
ன் மிதிவெடியால் காலை இழக்கப்பபோறன் ந நேரம் உன்ர விதி மாறிப்போனதுதானே?
ல்ல, வாழ்க்கையும் தான்! பேர் எத்தினையோ இழந்திட்டு இருக்கினம். லம் வருமெண்டு தான் இதுவரைக்கும் னம்.
இல்ல கல்யாணி, அரசாங்கம் அவையிண்ட ஏத்துக்கொண்டு செயற்பட்டுக் கொண்டுதான்
க்கும் ஒரு காலம் வரும். நீ உன்ர மனச
சான்னாலும் நான் அழமாட்டன் என்ர வசந்த ருப்பன். நான் நல்லாப்படிப்பன். என்ர நிலையும்
..வகுப்புக்கு போவம். பாடவேளை மணி
- எங்கும் ஒலித்தல்) இக்குச் செல்கின்றனர்) ஒசை மேடையில் ஒலித்தல்) ர மூடப்படுகிறது)
2 - 3 தாபகங்கள்)
து வருடங்களுக்கு பின்பு. நனன். புமைப்பிற்கு பொருத்தமா காட்சிப்பொருட்களை டையின் மூன்று புறமும் பச்சைத்திரையால் க்கை கட்டில் (நோயாளியின்) மேடையின்
அணிந்து கொண்டு மேடையின் இடப்புறம் தனி வருதல்)
203

Page 224
(கல்யாணி நோயாளிகளின் அறிக்கைப்பட்டி
(மெதுவாக பின்னணி இசை
வதனி
குட்மோனிங் டொக்டர். கல்யாணி :
குட்மோனிங் (வதனியை நி
வதனீ.............எப்பிடி இருக்கி வதனி
பரவாயில்ல டொக்டர். கல்யாணி
முதல்ல இந்த டொக்டர் எம் வதனி
அப்பிடியா? சரி கல்யாணி. கல்யாணி
கண்டு எவ்வளவு காலம் என் வதனி
நான் லோயரா இருக்கிறன். கல்யாணி :
அப்பிடியா?............... உனக்கு
சொல்லுறதில்ல எக்ஸ்பேட் வதனி
(செல்லமாக) என்ன சொன்ன கல்யாணி
ஒண்டுமில்ல. வதனி
எனக்கு நல்ல சந்தோஷமா கல்யாணி
ஓமடி வதனி. நீயும் இல்லா வதனி
அதற்காக எல்லாத்துக்கும் |
நீயும் தான், உன் படிப்பும் (சிறிது நேரத்தில் அவலமான குரல் ே
: ஐயோ!..
....... கடவுளே... வலிக்குது. அம்மா.... (வதனியும் கல்யாணியும் ஒடோடி அறுவை
(மேடையின் இடப்புற -- (நோயாளி படுக்கையில் காலை இழந்
குரல்
31 11 11 1 6
கல்யாணி : கவலைப்படாதீங்கோ! உங்க
காலத்தான் வெட்டி எடுக்க வதனி
(உற்று பார்த்தவாறு) பொறு கல்யாணி
தெரியேல வதனி! வதனி
இவன் தான் வதனன். உ
பண்ணினவன். கல்யாணி : என்ன வதனனா? வதனன்
ஓம் வதனனே நான். அந்த கல்யாணி :
என்ன நடந்தது வதனன்? வதனன்
கூலி வேலைக்கு போகேக்க
ஏறிடுத்து கல்யாணி (பயங்க கல்யாணி :
(பதற்றத்துடன்) அப்பிடியா?
ஆப்பிரரேஷன் செய்தவர். இப் வதனன்
ஆர் செய்தாலும் போற கால் கல்யாணி
அழாத வதனன். இனித்தான் வதனி
பாத்தியா வதனன்! அண்
இண்டைக்கு கடைசியில நீ வதனன் : (அழுதவாறு) ஓம் வதனி......
(204)

யலை பார்த்துக் கொண்டு இருக்கிறாள்) + மேடையில் ஒலித்தல்)
மிர்ந்து பார்த்தவாறு)
கண்டு சொல்லுறத நிப்பாட்டு.
நல்ல இருக்கிறனடி. சன் செய்யிற? (வதனியை அரவணைத்தல்)
த ஏத்த பதவிதான். நீதான் அட்வைஸ்
ஆச்சே! சீ! (கல்யாணியின் காதினை முறுக்குதல்)
இருக்கடி ட்டி நான் இப்பிடி வந்திருக்க மாட்டன். நான் தான் காரணம் எண்டு சொல்லிடாதே!
தான். எல்லாத்துக்கும் காரணம். கட்டல். மேடை எங்கும் ஒலித்தல்)
..! என்னை காப்பாத்துங்கோ! ஐயோ!
வ சிகிச்கை அறைக்குள் செல்லுதல்) மாக செல்லுதல்) தவராக அழுதுகொண்டு இருத்தல்)
கட உயிருக்கு ஒண்டும் ஆபத்து இல்லை. வேண்டி வந்தது.
கல்யாணி! இது யாரெண்டு தெரியுதே?
உன்னை "நொண்டிச்சி” எண்டு கிண்டல்
மூடனே நான்.
5 லொறி அடிச்சு, சில்லு என்ர காலில ரமான ஒலி மேடையில் ஒலித்தல்)
நான் வரும்போது மற்ற டொக்டர் தான் கபிடித் தெரிஞ்சிருந்தா நானே செய்திருப்பன். 5 போறது தானே! (அழுதல்)
நீ உறுதியா இருக்க வேணும். டைக்கு இவள நீ நொண்டி எண்டனி. யே நொண்டியாப் போட்டே!
......!
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 225
வதனி
அதுதான் வதனன் ஒவ்வொரு
எண்டு சொல்லுவினம். கல்யாணி
ஒம் வதனன். காலம் எண்ட
வரும். வதனி
கவலைப்படாத வதனன் உ வதனன்
(கண்ணீரைத் துடைத்தவாறு வதனி
ஓம்! வதனன். கல்யாணி
உன்ர இந்த நிலையும் மா வதனி
உன்ர கஷ்டமும் ஒருநாள்
மனச மாத்த முயற்சி செய் வதனன்
கல்யாணி என்ன மன்னிச்சி கல்யாணி
வதனன் நீயும் ஒருவிதத்தி
நீயும் ஒருவிதத்தில் நான் இந் வதனி
பார்த்தியா கல்யாணி நான்
போகுது. எல்லாற்ற காலமு கல்யாணி
ஓம்! வதனி இது மறுக்கமு (பொருத்தமான பின்னணியில்
(பழைய ஞாபகங்கள் (மேடையின் விளக்குகள் அணைதல்.
காட்சி (பழைய நினைவு
இடம்
: பாடசாலை வளாகம் காலம்
: காலை பாத்திரங்கள் : ராமு, ஆசிரியர் . காட்சிப்பொருள் : (பாடசாலை வளாகத் த
காட்சிப்படுத்தல். முதலாம் 8 வலதுபுறம் வகுப்பறை கா
ஆசிரியர் ராமு
ஆசிரியர்
: என்ன ராமு..........! இப்ப எ ஓம் சேர்! எனக்கு நல்லா மாத்திட்டன். : ஓமப்பு! நீ மறுபடியும் முயற் தான் பலன் கிடைக்கும். ஏ பார்த்தல்) ஒரு நாள் மாறும் (பார்வை அது அப்படித்தான் எண்டு கண்டிப்பா வெற்றி உங்க
(மணியோசை மேை : வா! ராமு பாடவேளை மணி
ராமு
ஆசிரியர்
(இருவரும் மேடையின் பின் வல
(மேடையின் பின்னணியில்
கூர்மதி.

நத்தருக்கும் அவையவையிண்ட நிலை மாறும்
டது ஆரப் பொருத்தாலும் மாறி மாறித்தான்
உனக்கும் ஒருகாலம் வரும்.
3) அப்பிடியா?
றும். மாறத்தான் போகுது. இனிமேலாவது உன்ர
ல் நான் நன்றி சொல்லத்தக்க நபர்தான். மத நிலைக்கு வரக்காரணம் தான். பரவாயில்ல சொன்னமாதிரி மாற்றம்தான் நிலையானதா மம் நிலையும் மாறிடுத்து. ஓடியாத உண்மைதான்.
சை மேடையில் ஒலித்தல்) ர் முடிவடைகிறது) - மேடையின் திரை மூடப்படுகிறது.)
- 4 முடிவடைந்தது)
நிற் கு பொருத்தமான அமைப்பினை காட்சிப் பொருட்கள் காணப்படல். மேடையின் -ணப்படுவது போன்ற அமைப்பு காணப்படல்)
என்ன சொல்லுற?
விளங்கிடுத்து. என்ர எண்ணத்தை நான்
-சி செய். திரும்ப திரும்ப முயற்சி செய்தால் னெண்டால் காலம்..
(ராமுவை
யாளர்களைப் பார்த்து கூறுதல்) இனிமேல் மனம் தளராமல் விடாமுயற்சி செய்யுங்கோ ளுக்குத் தான். டயில் ஒலித்தல்) | அடிச்சிடுத்து. நாங்கள் வகுப்புக்கு போவம்.
ப்புறமாக நகர்ந்து செல்லுதல்.
தனிக்குரல் எழுப்புதல்)
(205)

Page 226
தனிக்குரல் :-
பார்வையாளர்களே! ராமு எடுத்த முடிவுப்போல காத்திருப்போம். எமது வெற் வரும்..
(மேடையின் திரைகள்
* சுட
வளர்ச்சியையும் கல்வியையும் பிற செல்லவோ” முடியாது. எவரும் தா சொந்த முயற்சிகள், கடும் உழைப்பு பெற முடியும். பிறரிடமிருந்து ஊக் எனவே, சுதந்திரமான தேட்டமே பெறும் வழியும் ஆகும்.
பத்து விஷயங்களை மேலோட்டமா விஷயத்தை விரிவாகவும் முழுமைய தரும்.
கல்வியின் சத்தும் காரமும் அதன் : நம்மிடமுள்ள அறிவாற்றலை, மு திறமையாகப் பயன்படுத்துவதிலுமே
R)
206

» நாமும் மனம் தளராமல் முயற்சியோடு றிக்காய். ஏனென்றால் "எங்களுக்கும் காலம்
1 மூடப்படுகின்றன)
கடு
ஓர் “அள்ளித் தரவோ, எடுத்துச் ங்களது சொந்த நடவடிக்கைகள், ஆகியவற்றின் மூலமே அவற்றைப் தவிப்பு மட்டுமே பெற முடியும்... கல்வியின் நோக்கமும் அதைப்
கக் கற்பதைக் காட்டிலும் ஒரு பாகவும் கற்பதே மிகுந்த பயன்
அளவைப் பொறுத்ததல்ல, மாறாக ழுவளர்ச்சி பெற்றதாக்குவதிலும்
• அடங்கியுள்ளன.
அடால்ப் டைஸ்டெர்வேக், ஜெர்மன் கல்வியியலாளர்
வா
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 227
சங்க இலக்கி
L (அகத்த
பரந்து விட்டது இவ்வுலகம், அதிலே பெ பாமரர்கள். ஆயிரம் மொழிகள் அவர்க அமர்ந்திருக்கின்றது எம்தாய் மொழியாம் தப் தோன்றியிருப்பினும் தொன்று தொட்டு இ எம்தாய் மொழியாம் தமிழ்மொழி.
தமிழ்மொழி தன்னகத்தே கொண்டுள்ள சேமித்துக் கொண்ட ரசிகர்களும், மன்ற வரிசையிலே தமிழ் மொழியானது முதலிடத் ஆம் நூற்றாண்டில் ஆதி இலக்கியங்கள் கன்னடத்தில் கி.பி.09 ஆம் நூற்றாண்டிலும் பல தேசங்களிற் சிறப்புடன் பயிலப்பட்டு வ தோன்றியது கி.பி. 09 ஆம் நூற்றாண்டில் மொழியானது கி.பி.முதலாம், இரண்டாம், மூ எனப் பெயர் கொண்டு தமிழ் வளர்க்கப்பு கொண்டது.
முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்ச புலவர்கள் ஒன்றிணைந்து தமிழை வளர்த் அகத்தியரிடம் பிறந்து, தொல்காப்பியரிடம் தம் சிறப்புடன் கூறப்படுகின்றது.
சங்ககால மக்களின் வாழ்க்கை ! காணப்பட்டது. ஆதலால்தான் சங்க க அழைக்கப்படுகின்றது. இவர்களுடைய வாழ் மன்னர்களின் செங்கோலாட்சியும், மன்னர்கள் மிக்க காலமாக சங்க காலம் விளங்கியது வாழ்ந்த மக்களின் ஒழுக்கங்களின் அடி ஒழுக்கப்பாடுகள் வகுக்கப்பட்டன.
போர், வீரம், ஆண்மகனின் ஒழுகலா புறத்திணையுள் உள்ளடக்கப்பட்டன. ஒத்த . அவர்களின் உள்ளத்தில் தோன்றும் உண வகையில் காதல், காதலுணர்வுகள், இளை சார்ந்த நுட்பங்கள் அகத்திணையுள் உள்
கூர்மதி - 16-CM 013788

யங்களில்) நினை ஒழுக்கம்
செல்வி A.L. பாத்திமா றிஸ்னா மட்/காத்தான்குடி மத்திய கல்லூரி,
காத்தான்குடி
பருகிவிட்டனர் படிப்பாளிகள், அருகிவிட்டனர் களுக்குண்டு. அதிலே அழகு மொழியாய் மிழ்மொழி. பல்லாயிரம் மொழிகள் இப்பாரினில் ன்றுவரை மலர்ந்து மணம் வீசி நிற்கின்றது
இலக்கியங்கள் கட்டுக்கடங்காதவை. இம்மொழி ங்களும் அவ்வாறு தான் செம்மொழிகளின் தைப் பெறுகின்றது. மலையாளத்தில் கி.பி.14 தோன்றின. தெலுங்கில் கி.பி. 11 இலும், ஆதி இலக்கியங்கள் தோன்றின. தற்போது நம் ஆங்கில மொழியில் கூட இலக்கியங்கள் தான். ஆனால், எம் தாய் மொழியாம் தமிழ் மன்றாம் நூற்றாண்டுகளிலேயே 'சங்க காலம்' பட்டு பற்பல இலக்கியங்களை தனதாக்கிக்
ங்கம் ஆகிய முச்சங்கங்களிலும் பல தமிழ்ப் தனர். இதனால் தான் தமிழ் மொழியானது வழ்ந்து, சங்கப் புலவர்களிடம் நடை பயின்றதாக
இயற்கையோடு இணைந்த வகையிலேயே பலம் "இயற்கை நெறிக் காலம்” என்று வில் காதலும், வீரமும் நிரம்பிக் காணப்பட்டன. ளின் வலுவான தன்மையும் நிரம்பிய செழிப்பு 1. இவ்வாறு பசுமை மிக்க சங்க காலத்தில் ப்படையில் அகத்தினை, புறத்தினை என
று முதலான பல புறம் சார்ந்த விடயங்கள் அன்பான ஒருத்தனும், ஒருத்தியும் கூடும்போது ர்வுகள் அகத்திணையின் பாற்படுவன. அந்த ம, இல்வாழ்வு முதலிய இன்னோரன்ன அகம் ளடக்கப்பட்டன.
(207)

Page 228
இத்தகு அகத்தினை ஒழுக்கங்கள் ஐவன கூறப்பட்டன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய், புணர்தல், இருத்தல், ஊடல் அல்லது பரத்த உடன்போக்கு ஆகிய அகத்திணை ஒழுக்க பெருந்திணை ஆகியனவும் அகத்தினை ஒழு
குறிஞ்சி நிலத்திற்குரிய அக ஒழுக்கம் பிரதேசமுமாகிய குறிஞ்சி நிலத்தில் ெ வேட்டையாடுதலை தொழிலாகக் கொண்டிருந்த பெண்கள் நிற்கும் வழியால் செல்வர். இச்சந்தர் ஒருவரையொருவர் கண்டு காதல் கொள்வர் கண்டு காதல் கொண்டு கூடி மகிழ்வதால் குறி
முல்லை நிலம் காடும் காடு சார்ந்த பிர மந்தை மேய்த்தலை தொழிலாகக் கொண்டிரு, சென்று பாடி வீடு அமைத்து தங்கியிருந்து தமது வரவுக்காக அவர்களது மனைவியர் தத்த ஆற்றிக்கொண்டு காத்திருப்பர். ஆதலால், முல்
வயலும், வயல் சார்ந்த இடமும் மருது நிலம் வளமும், வனப்புமிக்க செழிப்பான நிலப் வயல்களில் வேலை செய்யும் ஆடவர்கள் | பரத்தயரை நாடிச் செல்கின்றனர். பரத்தய பரந்தயர்குலப் பெண்களோடு நாட்களைக் க
ஆதலால் இந்நில ஒழுக்கம் “பரத்தயர் ( ஆடவர்களின் இச் செயல்களால் அவர்களுக்கு ஊடல் ஏற்படுகின்றது. ஆதலால் "ஊடல்"
அழைக்கப்படுகிறது.
கடலும், கடல் சார்ந்த இடமும் நெய்தல் மீன் பிடித்தலைத் தொழிலாகக் கொண்டிருக்க போடுதல் போன்ற தொழில்களில் ஈடுபட்டனர். மீ புறப்பட்டுச் செல்லும் ஆடவர்கள் மாலை வேை திரும்ப மாட்டார்கள். இச்சந்தர்ப்பத்தில் அ உட்கார்ந்து ஆடவர்களின் வரவுக்காக இரா ஒழுக்கம் "இரங்கல்” எனப்பட்டது. மேலும், உட்கார்ந்திருந்து பறவைகளைப் பார்த்து, அ
அடையச்செய்வதற்காக கற்பனை செய்து கவ போன்ற உயிரினங்களின் செயற்பாடுகளைக் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இவ்வில காதலுணர்வை விளங்கிக் கொள்ளலாம்.
மணலும், மணல் சார்ந்த பிரதேசமும் ! சூறையாடுவதை தொழிலாகக் கொண்டிருந்தன பொருட்களைப் பறிமுதல் செய்வதற்காக ஆடல்
(208)
208

மக நிலங்களுக்கும் தனித்தனியாக வகுத்துக் தல், பாலை ஆகிய நிலங்களுக்கு முறையே யர் ஒழுக்கம், இரங்கல், பிரிதல் அல்லது கங்கள் குறிப்பாக்கப்பட்டன. கைக்கிளை,
க்கங்களாகக் கொள்ளப்பட்டன.
> புணர்தலாகும். மலையும் மலை சார்ந்த பண்கள் திணைபுனங் காத்து நிற்பர். காளையர் வேட்டை ஆடுதலை முடித்துவிட்டு ப்பத்தில் குறிஞ்சி நில ஆடவரும், பெண்டிரும் - இவ்வாறு அவர்கள் ஒருவரையொருவர்
ஞ்சி நில ஒழுக்கம் "புணர்தல்” எனப்பட்டது.
தேசம் ஆகும். இம்முல்லை நில ஆடவர்கள் ந்தனர். கிராமத்தின் எல்லைப்புறங்களிற்குச் து தொழிலை மேற்கொள்ளும் ஆடவர்களின் நமது இல்லங்களில் தமது துன்பத்தை லை நில ஒழுக்கம் “இருத்தல்” எனப்பட்டது.
நம் எனப்பட்டது. இயற்கையிலேயே மருத மாக காட்சியளித்தது. காலை வேளைகளில் மாலை வேளைகளில் இன்பப் பேறிற்காக பர்களின் ஆடல், பாடல்களில் மகிழ்ந்து ழிக்கின்றனர். ஒழுக்கம்” எனப்பட்டது. மேலும், மருத நில ம், அவர்களது மனைவியருக்கும் இடையில் எனவும் இந்நில அகத்தினை ஒழுக்கம்
எனப்படுகின்றது. நெய்தல் நில ஆடவர்கள் - பெண்கள் உப்பு விளைவித்தல், கருவாடு ன் பிடிப்பதற்காக கடலுக்கு நேர காலத்தோடு ளயாகி வானம் இருட்டிய பிறகும் இருப்பிடம் வர்களது மனைவியர் கடற்கரை மணலில் ங்கிக் கொண்டிருப்பர். ஆதலால் இந்நில இந்நிலப் பெண்கள் கடற்கரை மணலில் வை தன் கூடுகளுக்கு பெண் பறவைகளை லை கொள்கின்றனர். பறவைகளின் நீராடல் கண்டு பெண்கள் அதிகம் இரங்குவதாக க்கியங்களினூடாக சங்க கால மக்களது
பாலை எனப்படுகிறது. பாலை நில மக்கள் 1. பாலை வழியால் செல்லும் வணிகர்களின் பர்கள் பெண்களை விட்டும் பிரிந்து செல்வர்.
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 229
இதனால் இந்நிலத்து அக ஒழுக்கம் “பிரித அவர்களுடன் சென்றதால் “உடன் போக்கு
கைக்கிளை, பெருந்திணை என் கொள்ளப்பட்டன. கைக்கிளை என்பது சிறு காமம் எனவும் அழைக்கப்பட்டது. பெரு ஊழ்வசத்தால் கூடுமுன் தலைவனிடத்தில் தேறல் முதலியவற்றைக் குறிக்கும்.
இத்தகு அகத்திணை ஒழுக்கங்கள் பொருளாயின. சங்க காலத்தில் அகத்தின் எழுந்தன. இவற்றுள் அகநானூறு, குறுந் ஐங்குறு நூறு ஆகிய ஐந்து தொகை ! எழுந்தன.
சங்க கால இலக்கியங்கள் காதலுணர்வை
"செம்புலப் ( அன்புடை நெஞ்சம்
எனும் சங்கப் பாவடியைக் கூறலாம்.
மேலும் ஔவையார் பரணர், கபிலர் அகத்திணை ஒழுக்கங்களை சிறப்பித்து ப இலக்கியத்தில் இடம் பெற்றுள்ள முல்லை ! பாடும் பின்வரும் பாடற் கருத்து போற்றத்
"கரிய கால்களை உடைய வேப்ப | கார் காலமானது உதயமாகி விட்டது. திரும்பு காணாத என் நெஞ்சு அயலவர்களின் கொ
இப்பாடலை அழகிய உவமை மூலம் 8 விடயத்தினடாக முல்லை நிலத்துக்குரிய அ எடுத்துரைக்கப்படுகிறது. மேலும் குறுந்தொகை பாடிய "நல்லுரையிகந்து புல்லுரை தாஅய சந்திக்காது ஏங்கும் தலைவனது ஏக்கங்க குறியில் தலைவியை கூட முயல்கிறான் மிகுந்த துன்பம் அடைகிறான். இவ்வாறு அப் இன்ப நாட்டத்தை வெளிக்காட்டுகின்றது.
மேலும் குறுந்தொகையில் இடம்பெறும் இடம் பெறும் "வண்டும், நண்டும்” ஆகி தெளிவாக எடுத்தியம்புகின்றன.
இவ்வாறு சங்க கால இலக்கியங்கள் தமிழ் மொழி இப்புவிமிசை ஓங்குவதற்கு
கூர்மதி.

தல்” எனவும், சில வேளைகளில் பெண்களும் த” எனவும் அழைக்கப்பட்டது.
பனவும் அகத்தினை ஒழுக்கங்களாகவே துமையான உறவைக் குறிக்கும். பொருந்தாக் ந்திணை என்பது தலைவனும், தலைவியும் - பெரும்பாலும் தோன்றும் அச்சம் தெளிதல்,
ர் சங்க கால இலக்கியங்களில் பிரதான ண கூறும் இலக்கியங்களாக பத்து நூல்கள் தொகை, கலித்தொகை, நற்றிணை நானூறு, நூல்களும் மூன்று பத்துப்பாட்டு நூல்களும்
அழகாக வெளிக்காட்டுகின்றன. உதாரணமாக
பெயனீர் போல - தான் கலந்தனவே”
1, நக்கீரர் போன்ற பல சங்கப் புலவர்கள் ாடியுள்ளனர். அந்த வகையில் குறுந்தொகை நிலத்துக்குரிய அக ஒழுக்கத்தை சிறப்பித்துப்
தக்கது.
மரத்தின் ஒளி பொருந்திய பூக்கள் பூக்கின்ற பி வருவேன் எனக் கூறிச் சென்ற தலைவனைக் டுஞ்சொற்களால் வேதனையடைகிறது”
இறுதியில் விளக்குகின்றார் ஆசிரியர். மேற்கூறிய க ஒழுக்கமான இருத்தல் ஒழுக்கம் தெளிவாக க இலக்கியத்தில் இடம்பெறுகின்ற ஒளவையார் பப் என்று ஆரம்பிக்கும் பாடல் தலைவியை ளைப் படம் பிடித்துக் காட்டுகிறது. இரவுக் தலைவன். தலைவி மறுக்கவே தலைவன் பாடலும் தலைவனது அகக் காதல் உணர்வை,
- "சூர்மலை நாடன் கேண்மை”, நற்றிணையில் ய பாடல்கள் அகத்திணை ஒழுக்கங்களை
பலவகையிலும் சிறப்புற்ற காணப்பட்டதுடன் வழிசமைத்தன.
209

Page 230
இலக்கியம் நயத்தல்
மையக்கருத்து:
கி.ராஜநாராயணன் அவர்களால் எழுதப்பு அவரது சிறுகதைகளில் ஒரு முக்கியமான இட "கதவு” என்ற மூன்று எழுத்துக்களாலான ஒரு இக்கதையை நகர்த்திச் சென்றுள்ளார். பெற் கொண்ட ஒரு சிறிய குடும்பத்தின் அன்றாட காட்டியுள்ளார் ஆசிரியர். வறுமையின் கோரப் பி நிலையை பல்வேறு கட்டங்களுடாக ஆசிரியர் ( வாட்டினாலும் அச்சிறுவர்கள் நன்கு விளைப் ஊடாக ஏழ்மையை எண்ணாது நிமிடங்களை மகிழ்ச்சியாகப் பொழுதைப் போக்குவதற்கு இக்குடும்பத்திற்கு சொல்லொணாத் துயரங்கை தன் உயிர் நீக்கவும் அக்கதவே காரண கர் சிறுவர்கள் அடைந்த இன்பத்தையும் கதவில்லா துன்பத்தையும் ஒருங்கே காட்டி இவையனைத்த மையக்கருத்தாகக் கொண்டு இச்சிறுகதையை
கூறப்பட்டுள்ள உத்திகள்
அழகு தமிழிலே அற்புதமாக எழுதப்பட் சிறப்பானதாகவும் ஆழமானதாகவும் அர்த்தமும் இக்கதாசிரியர் கி.ராஜநாராயணன் அவர்கள் த மக்கள் மனங்களில் மையப்படுத்துவதற்கு பல இத்தகைய உத்திகளின் பயன்பாடு கதாசிரிய அந்த வகையில்,
• அனைவரும் இலகுவில் புரிந்து கொள்க நடையில் கதையினை எழுதியுள்ளார்.
அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சொற்க சொற் கையாட்சி ஆழமாக அதேநேரம் :
தமிழ்ச்சொற்களையே அதிகளவில் கை சொற்களே கையாளப்பட்டுள்ளன. (உ-ம்) டிக்கட்
தான் கூற வந்த விடயங்களை பாத்திரங்க அந்த வகையில் தந்தை பேசாப் பாத்திரம் ரங்கம்மாவும், குழந்தைகளான சீனிவாச பாத்திரங்களாகக் காட்டப்படுகின்றனர். 6 ஆகியோர் துணைப் பாத்திரங்களாக காட
210

பட்ட "கதவு" என்னும் இச்சிறுகதையானது படத்தைப் பிடித்தது என்றால் மிகையாகாது. சொல்லைக் கொண்டு அற்புதமான வடிவில் Bறோரிருவருடன் பிள்ளைகள் மூவரையும்
வாழ்வியலை அழகாக படம் பிடித்துக் பிடியில் சிக்கித் தவிக்கும் இக் குடும்பத்தின் எடுத்துக் கூறுகின்றார். வறுமை அவர்களை பாடி மகிழ்வதையும், அவ்விளையாட்டின் - அவர்கள் கடத்துவதையும் காட்டுகிறார்.
உதவியது கதவு. அத்தகைய கதவே மளத் தருவித்தது. பச்சிளம் மென்குழந்தை ஈத்தாவாகியது. இவ்வாறு கதவின் மூலம் மல் போன போது அச்சிறுவர்கள் அடைந்த திற்கும் வறுமை ஒன்றே காரணம் என்பதை | எழுதியுள்ளார் ஆசிரியர் எனலாம்.
ட்டிருக்கின்ற இச்சிறுகதையானது மிகவும் ள்ளதாகவும் அமைந்து காணப்படுகின்றது. தான் எடுத்துக்கொண்ட மையக் கருத்தை உத்திகளைக் கையாண்டுள்ளார். அவரது ரின் எழுத்தாற்றலை வியக்க வைக்கிறது.
எக் கூடியவாறான எளிய தமிழ் மொழி
களைக் கையாண்டுள்ளதோடு அவருடைய அமர்ந்த நடையைக் காட்டுகிறது.
பாண்டுள்ளார். ஒருசில வேற்று மொழிச்
ளின் வாயிலாக சிறப்பாகக் காட்டுகின்றார். ாக எழுத்தில் காட்டப்படுகிறார். தாயாகிய ஈகன், லட்சுமி, பாப்பாவும் உயிருள்ள மலும், தலையாரித் தேவர், நண்பர்கள் உடப்படுகின்றது.
ல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 231
நாடகப் பாணியில் கதையை அமைத்த
பொருத்தமான இடங்களில் பொருத்த (உ-ம்) "இல்லை, இல்லை, இடிச்சித் தள்ள "சரி எந்த ஊருக்கு டிக்கட் வேணும் இசைச் சொற்களை ஓசைப் பொருத் (உ-ம்) "பீப்பி..பீ...பீ'- "திடும்.......திடும்.......ததிக்குணம்........
அடுக்கு மொழிகளைக் கையாண்டுள் (உ-ம்) "முன்னும், பின்னும்” "சரி, சரி”
பேச்சு மொழி வழக்கினைக் கையான (உ-ம்) "பாப்பாவைத் தொட்டுப்பாரு அக்கா, "அக்கா எனக்கு சீக்கிரம் கஞ்சி 2 ஒட்டணும்”
எனினும் கதாசிரியரது பேச்சு வழக்கு அடையவில்லை.
(உ-ம்) "'எனக்குத் தெரியாது" "இப்போ போகிறீர்களா இல்லையா க இவற்றை, "'எனக்குத் தெரியா” "இப்ப போறிங்களா இல்லையா கழு6
இவ்வாறாக மேலும் பேச்சு வழக்கிற் மொழிநடை நயக்கத்தக்கது.
பொருத்தமான தலைப்பினை இட்டு மகிழ்ச்சியாகப் பொழுதைப் போக்கு துன்பம் வர வாயிலாகவும் இருந்த இக்கதைக்கு சாலவும் பொருந்தும். அது எமன் வருகை தந்த வழியாகவும் பொருத்தமுடையதே!
பொருத்தமான வர்ணனைகளைக் கை (உ-ம்) 1. பாரமான பெரிய கதவு
கூர்மதி

துச் சென்றுள்ளமை சிறந்ததொரு உத்தியாகும்.
மான குறியீடுகளைக் கையாண்டுள்ளார்.
ல'' >>
தத்திற்காக கையாண்டமை சிறப்புக்குரியது.
-ததிக்குண...
ளார்.
ன்டு சிறுகதையை ஆக்கியுள்ளார் ஆசிரியர்.
உடம்பு சுடுது" ஊத்து, பசிக்கி சாப்பிட்டு இந்தப் படத்தை
- மொழி நடை ஒரு முழுமையை நிலையை
கழுதைகளே"
தைகளே”'
குத் திருத்த முடியும். எனினும் ஆசிரியரது
: இக்கதையை எழுதியுள்ளார் ஆசிரியர். வதற்கு உதவிய கதவே இக்குடும்பத்திற்கு எது. இதனால் கதவு எனும் தலைப்பு மட்டு மல்லாது குழந்தையின் உயிர் எடுப்பதற்கு அக்கதவு காணப்படுவதால் இத்தலைப்பு
யாண்டுள்ளார்.
(211)

Page 232
2. வேகமாக நொண்டி அடித்துக் கொன
இவ்வாறு பற்பல உத்திகளைக் கையாண்
அணிகள்
தான் கூற எடுத்துக் கொண்ட விடயங்களை இ சொல் அமைவுகளுக்காகவும் பயன்படுத்தப்ப
அந்த வகையில் இக்கதையில் காணப்படினும் (
(உதாரணம்) 1. நாதஸ்வரம் வாசிப்பவனைப் போல் 2. தவுல் வாசிப்பவனைப் போல் 3.
மூச்சே நின்றுவிடும் போல் 4. தாங்க முடியாத ஒரு வலி தோன்றியது 5. விஷக் காற்றைப் போல்
விஷக்காற்று என்ற சொல்லில் காற்றை விஷ
நயந்த பகுதி, காரணம்
கி.ராஜநாராயணன் அவர்களால் எழுதப்பட் நயக்கத் தக்கதாகவே காணப்படுகின்றன. என பிடிப்பதற்கு முன்னுள்ள பகுதிகள் என் மன ை அப்பகுதியே என்னால் மிகவும் நயப்பதற்குரிய
கதவு இல்லாமை காரணமாக நாய் வந் போனமையையும், படத்தை ஒட்டுவதற்கு கதவில்லாமையால் ஏமாற்றம் அடைந்ததைய எம்மையறியாமையாலேயே எம் கண்கள் துளி
தான் பசியோடு இருந்தாலும் தன்னுடை! என்பதை நினைத்தும் உருகும் குழந்தையின்
ஏமாற்றத்தாலும், பசியாலும் அழுது 6 கதவைத் தேடிக் கண்டு பிடித்து இருவரும் இவ்வாறு துக்கமும், அதன் பின்னர் மகிழ்ச் காரணமாகவே இப்பகுதி என்னால் நயக்கப்ப
(212)

ர்டே போனான்
டு இக்கதையை அமைத்துள்ளார் ஆசிரியர்
இலகுவில் புரிய வைப்பதற்காகவும், அழகு, வெனவே அணிகளாகும். ஒரு சில உவமையணிகள் கூறப்பட்டுள்ளன.
போல்
மாக உருவகித்துள்ளார் ஆசிரியர்.
-ட இக்கதையின் அனைத்துப் பகுதிகளுமே பினும் சிறுவர்கள் கதவைத் தேடிக் கண்டு த மிகவும் கவலை கொள்ளச் செய்ததால் பதாயிற்று.
து எல்லாக் கஞ்சியையும் குடித்து விட்டுப் தத் தேடிய சீனிவாசகனின் கைகள் பும் கூறும் இப்பகுதியை வாசித்த போது பிர்க்கின்றன.
ப தாய் பசியோடு காட்டிலிருந்து வருவாள்
மனம் காட்டப்படுகின்றது.
கொண்டிருந்த சிறுவன் அன்று மாலையே
சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார்கள். சியும் அடைவதை இப்பகுதி காட்டுவதன் ட்டது.
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 233
NHNN
திறன
செல்வி அ/இக்கிரிகொல்லாவ முஸ்லிம் ம. 6
Iறனாய்வு என்பது வெறும் கூற்றுத்திறே அம்சமாக இருக்கும். அதேவேளை ஆய்வறி என பேராசிரியர் க.கைலாசபதி கூறுகின்றார். அணுகும் ஒரு முறையாகும். திறனாய்வு தங்கியுள்ளது. அணுகரணக் கொள்கை, ப வெளிப்பாட்டுக் கொள்கை இன்னும் பல கொ போன்றோர் வகுத்துள்ளனர். திறனாய்வாள அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல் போன் கூறுகின்றார். மேலும் திறனாய்வு படைப்பு விமர்சிப்பதாகும்.
திறனாய்விற்காக தரப்பட்டுள் இச்சிறு சிறுகதை என்பதன் வரைவிலக்கணத்தை புதுமைப்பித்தன் இவ்வாறு கூறுகின்றார். "சிற மாட்டப்பட்டிருந்தால் கதை முடியும் போது என்கின்றார். மேலும் ஆலன்போ என்பவர் ஓ உலகத்தைப் பார்ப்பது சிறுகதையாகும்' வரைவிலக்கணம் செய்கின்றனர். அந்த வை விமர்சிக்க கதைக்கரு, களம், பாத்திரவார்ப்பு தலைப்பிற்கும் இடையிலான பொருத்தம், க ை மனோநிலை, உணர்ச்சி வெளிப்பாடு, கத் கதாசிரியரின் கொள்கைகள், மண்வாசனை, செய்கின்றேன்.
ஆக்க இலக்கிய கருத்தா ஒருவன் ஒன்றை முதன்மைப்படுத்தி எழுதி இருப்பான். தோய்ந்த வார்த்தைகளே சிறுகதை என்ே அமைந்த இந்தச் சிறுகதையை நோக்கு சிரமங்களுக்கு மத்தியிலும் சுபேந்திரனை உ சுபேன் தான் வேறு இடம் செல்ல, அவ ஏமாந்துபோன அவளது அவலநிலை காட்டப்ப வெல்லாது என்ற கருத்தை முதன் முதலில் 2 காணப்படுகின்றது. உண்மையான காதல் கதைக்கருவில் காட்டப்பட்டுள்ளது. இதனை எழுதியவர் எனக்கு ஏன் எழுதவில்லை" ( கொண்ட எல்லையற்ற காதலை கண்டுகொள்6 கதாசிரியர் இவ்வாறு காட்டுகின்றார் "சுபேத வழிந்தது. தனக்கு ஏற்பட்டுள்ள இந்தத் துய
கூர்மதி -

WWW 142,
ராய்வு
NNANN
ரி.நஜ்பா வித்தியாலயம், வஹைமல் கொல்லாவ
னா விவரணமோ அல்ல அழகியல் சார்ந்த ரவு சார்ந்த ஒரு ஆயுதமாகவும் இருக்கின்றது
அந்த வகையில் திறனாய்வு இலக்கியத்தை - பல்வேறு கொள்கையின் அடிப்படையில் யன்வழிக் கொள்கை, புறநிலைக்கொள்கை, எள்கைகளை டி.கே.சி, விம்லாற், கா.சிவத்தம்பி சன் ஒருவன் குணம் நாடி குற்றமும் நாடி D இருக்க வேண்டிய அவசியத்தை வள்ளுவர் ஒன்றையோ அல்லது எழுத்தாளனையோ
புகதையை விமர்சிக்க உள்ளேன். முதலில் சிறுகதை உலகின் முடிசூடா மன்னனான வகதை ஆரம்பிக்கும் போது சுவரில் துப்பாக்கி வ அத்துப்பாக்கி வெடித்திருக்க வேண்டும்" இவ்வாறு கூறுகின்றார் "ஒரு யன்னலினூடாக ” இவ்வாறு பல அறிஞர்களும் பலவாறு கயில் விமர்சகராகிய நான் இச்சிறுகதையை பு, மொழிநடை, தலைப்பு, முடிவு, கதைக்கும் த சொல்லும் பாங்கு, உத்திகள், கதாசிரியரின் தாசிரியரின் வாசகனுக்குத் தரும் மதிப்பு, - நோக்குநிலை, இரசனை போன்றன ஆய்வு
ஒரு கதையை எழுதும்போது அதிலே கரு பொதுவாக கருவின் அடிப்படையில் உணர்ச்சி பாம். அந்த வகையில் கருவில் சிறப்பில் தவோம். சுபேதா என்ற பெண் பல்வேறு உயிராக காதலித்து, யுத்தப் பிரச்சினையால், ன் வரவையே எதிர்பார்த்து கனவு கண்டு ட்டுள்ளது. உண்மையான காதலை எச்சக்தியும் உடைத்தெறியும் தன்மையே இதன் கருவாகக் லின் உருவகமே அவன் என்ற தன்மை "ரவிக்கு கடிதமா எழுதியிருப்பார் அவருக்கு என்ற வரிகள் மூலம் அவள் அவன் மேல் எளலாம். ஏமாந்து போன அவள் அவலநிலையை எவின் நொந்துபோன இதயம் கண்வழி நீராய் ரம் வேறு ஒருவருக்குமே ஏற்படக்கூடாது என
(213)
213

Page 234
நினைத்துக் கொண்டாள்” என்ற பகுதியைக் காதல் பிரியாது என்ற அவள் மனநிலை ஏமாற்ற
சிறுகதைக்களத்தை நோக்கும்போது ய யுத்தத்தின் கோரப்பிடியைக் காட்டவே கதாசிரிய சுபேதா தனது பழைய வாழ்க்கையை நினை எடுத்துக்காட்டு “வாசல் படி ஏறி வீட்டின் முன் முன் இருந்த அறைக்கதவு தேக்கு மரத்தாலா இருந்தது. சில துப்பாக்கி சன்னங்களின் க என்ற பகுதி யுத்தத்தின் கோர நிலையில் மேலும் கதை வளர்ச்சிக் கட்டத்தில் மீசாலை "மீசாலையில இருந்து வந்த கையோட மாப்பி பகுதி மீசாலைப் பிரதேசம் கருவாக சித்த முடிவுக் கட்டத்தில் வன்னிப்பிரதேசம் களமாக ஒத்துக்கொள்ளேல்லையா என்று சுபேதா நிலை கதைக்களம் வெகு சிறப்பாக அமைந்துள்ளது
ஒரு பெண்ணின் கலைந்து போன க கையாளப்பட்டுள்ளன. அந்த வகையில் உ சுபேதன், அம்மா, சாந்திமாமி போன்றோர் கா ரவி, சுபேதனின் அப்பா, பாலேஸ்வரி போ குணவியல்பை நோக்கும்போது பனித்துல காணப்படுகின்றாள். இதனை "அவளைச் சூழ வீட்டில் பறித்த மொட்டுக்கள், அழகான மாலை அருகாக நெருங்கிவந்தான் என்ற பகுதியும், உயரமில்லை அளவான உயரம். முகம் மு தேன் தடவியது போல லேசான ஈரம்” இவ்வ
மேலும் தனது சாந்தி மாமி மீது அதிகம் மட்டுமல்ல அவள் வீட்டில் இருக்கும்போது அப் தான் பாடுவாள்" என்ற பகுதியைக் காட்டலாம். அவனிடம் இருந்து ஒரு பதிலுமே இல்லை என காட்டப்பட்டுள்ளது. இதனை “ரவிக்கு கடிதமா எனக்கு ஏன் எழுதவில்லை..?'' என்று அவள் ம மேலும் தன் காதலன் வேறு பெண்ணை தி மென்மைத் தன்மையை இவ்வாறு காட்டுகின்ற இதயம் கண் விழி நீராய் வழிந்தது” என்ற துரோகம் செய்ததற்காக பாலேஸ்வரியின் வாழ் கொச்சைப்படுத்திப் பேசுகிறாள். இதனை வெக்கமாயில்லை.... இது ஆம்பிளைத்தனமா” கூறின் ஒரு பெண்ணிற்குள்ள அனைத்து நற்கு
சுபேந்திரன் எனும் பாத்திரத்தை நோக்கு நிலை காட்டப்பட்டுள்ளது. மேலும் சுபேதன் இருந்தாலும் இறுதியில் மாறும் நிலை காட்ட நாலு வீடு தள்ளி இருக்கா, நீண்ட நாள் ! தெரியும். அம்மான்ரை பெஸ்ட் ஃபிரண்ட்” எ: காதலியையும் தான் செய்த தவறுக்காக பொ
(214)

காட்டலாம். இவ்வாறு யுத்தத்தினாலும் த்தில் முடிவதே கருவாகக் காட்டியுள்ளார்.”
பாழ்ப்பாணப் பிரதேசம் காணப்படுகின்றது.. பர் யாழ்ப்பாணத்தை எடுத்துள்ளார். இதனை க்கும் போது ஆங்காங்கே காட்டியுள்ளார். விறாந்தைக்கு முன் சென்றாள். வாசலுக்கு னது ஒற்றைப் பிணைச்சலில் தொங்கியபடி எயங்களோடு இருந்த அந்தக் கதவை...'' பாதிப்புண்ட நகரத்தைக் காட்டுகின்றது. 0 பிரதேசத்தைக் காட்டியுள்ளார். இதனை ள்ளை பார்க்கப் போயிட்டாள அவ” என்ற ரிப்பதைக்காண முடியும். மேலும் கதை சித்தரிக்கப்படுகின்றது. இதனை "வன்னி ரப்பதிலிருந்து அறியலாம். அந்த வகையில்
னவுகளைக் காட்டுவதற்கு பாத்திரங்கள் பிரோட்டமுள்ள பாத்திரங்களாக சுபேதா, ணப்படினும் சில துணைப் பாத்திரங்களாக ன்றோர் காணப்படுகின்றனர். சுபேதாவின் பம் மிக்க அழகுப்பதுமையாக அவள்
பிச்சிப்பூ வாசனை மாலையில் அவனது தயாய் அவளது அடர்ந்த கூந்தலை, அவன் அவள் அப்படியொன்றும் வெடவெடப்பான ழுவதுமே கண்கள், குவிந்த உதடுகளில் ாறு அவளது அழகு காட்டப்பட்டுள்ளது.
பாசம் வைத்துள்ளாள் இதனை "சுபேனிடம் பாவிடமும் அம்மாவிடமும் மாமி மான்மியம் - மேலும் சுபேனின் வரவுக்காக காத்திருந்து ன்ற நிலையில் கலங்கி உருகும் தன்மைக் - எழுதியிருப்பார்...? அவருக்கு எழுதியவர் னம் தவிப்பதிலிருந்து இதனைக் காணலாம். ருமணம் முடித்ததை தாங்காத அவளது றார். இதனை "சுபேதாவின் நொந்துபோன பகுதியை காட்டலாம். மேலும் காதலன் க்கையை அழிக்க விரும்பாமல் அவனைக் ன "இப்படிக் கதைக்க உங்களுக்கு
என்ற பகுதியைக் காட்டலாம். சுருங்கக் குணங்களையும் காணலாம்.
நம் போது சுபேதாவின் அழகில் மயங்கும்
காதலானது ஆரம்பத்தில் உண்மையாக டப்பட்டுள்ளது. இதனை "இவ தெரிஞ்சவ, பழக்கம். சின்னப் பெட்டையில் இருந்தே ன்ற பகுதியானது தனது மனைவியையும் ய்கூறி சமாளிக்கும் அவனது பச்சோந்திப்
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 235
புத்தியைப் படம்பிடித்துக் காட்டுகின்றது. திருமணம் முடிக்க விரும்பும் தன்மை க கொச்சத்தனமிருக்கு, அவள விட்டுவிட்டு லீக் என்ற பகுதியைக் காட்டலாம். மேலும் 4 கொண்டவனாக இருக்கின்றான். இவ்வாறு ந
சுபேதன் காணப்படுகின்றான்.
இச்சிறுகதையின் மொழிநடையை நே சொற்களும் மீசாலை பிரதேச வழக்குச் ( அப்படியா அப்ப அம்மாவையே கட்டிக்கெ உம்மட்ட ஒரு விஷயம் கேப்பன், சத்திய மேலும் ஆங்கில மொழிச் சொற்களை இ "பெஸ்ட் ஃபிரெண்ட், சோ, எஸ், எல், ஏ, 6 பகுதியைக் காட்டலாம். மேலும் உவமை "தேன் தடவியது போல மேலும் பல உதார கையாண்ட சொற்பிரயோகம் அவனது தனித் சார்ந்த கிளர்ச்சிகளுக்கு மேலாக வாழ்க்கை சுபேதாவின் கூற்று சமூகத்திற்கு எடுத்து தனித்தன்மையை காட்டுகின்றது.
இச் சிறுகதையின் தலைப்பு தொடக்கம் ஆரம்பத்தில் அனைவரும் ஆர்வத்துடன் இரு இதனை "அந்த வீட்டைப் பார்த்ததும் அவ அவளுக்கு என்ன செய்வதென்று தெரியாது கதைத் தொடங்கி யுத்தத்தின் நிலையும் ஏமாற்றப்படும் அவளது சோக நிலை காட்ட பலவீனங்களும் சத்தியத்துக்கும் எனக்கும் விட்டன'' என்ற வரிகளில் உணர முடியும். !
கதைக்கும் தலைப்பிற்கும் இடையில இலக்கிய கலைஞன் ஒருவன் தனது படை ஒரு தலைப்பை முதன்மைப் படுத்தி இல் தலைப்பே ஆகும். இதனை அடிப்படையா? எனும் சிறுகதையை நோக்குவோம். சுடே சுபேனை மறக்காமல் உண்மையாகக் காத் நிலையும், சுபேதன் படித்து நல்லநிலையில் தொடங்க வேண்டுமென நினைக்கின்றாள் செல்கின்றான். அங்கு ஒரு பெண்ணை மணக் அவளுடைய கனவைக் கலைக்கிறது. என6ே பொருத்தமான தலைப்பாக உள்ளது.
அடுத்ததாக கதைசொல்லும் பாங்கை முதன்மைப் படுத்தி கதையைக் கொண்டு ஒருவருக்கு கூறப்படுவதுபோல வாசகருக்கு பார்த்ததும் அவள் அசையாமல் அப்படியே கதையை கதாசிரியர் வாசகருக்கு கூறுகின் அனர்த்தத்தை அதாவது பழைய சம்பவம்
கூர்மதி.

மேலும் சுபேதாவை இரண்டாம் தாரமாக ட்டப்பட்டுள்ளது. இதனை "இதிலை என்ன லா உன்னை என்னால் சடங்கு முடிக்கேலும்" அழகை மாத்திரம் அனுபவிக்கும் மனநிலை ல்லவனாக நடித்து ஏமாற்றும் பண்புள்ளவனாக
ாக்கும்போது யாழ்ப்பாணப் பிரதேச வழக்குச் சொற்களும் காணப்படுகின்றது. இதனை “ஓ காள்ளன். என்ன பகிடியா? போதும் சுபேன். ம் செய்வீரா? என்ற பகுதியைக் காட்டலாம். ச்சிறுகதையில் இடம்பெற்றுள்ளன. இதனை பஸ் மற்றும் ஸொரீ, பீஸீரியஸ், போன்ற பல
அணிகள் கையளாப்பட்டுள்ளன. இதனை ணங்களைக் காட்டலாம். மேலும் எழுத்தாளன் இதன்மையைக் காட்டுகின்றது. இதனை உடல் கயில் எவ்வளவோ விஷயங்களிற்கு... என்ற துக்காட்டும் தத்துவ நிலை கதாசிரியரின்
D வளர்ச்சி முடிவை நோக்கும்போது கதையின் க்கும் நிலையில் தொடக்கம் அமைந்துள்ளது. ள் அசையாமல் அப்படியே நின்று விட்டாள். |...." என்ற பகுதியைக் காட்டலாம். இவ்வாறு - காதலின் உணர்வையும் காட்டி இறுதியில் டப்படுகின்றது. இதனை "காலத்தின் சுமையும் ான பிணைப்பை என்னமாய் அந்நியப்படுத்தி இவ்வாறு தொடக்கம் முடிவு அமைந்துள்ளது.
Tன பொருத்தப்பாட்டை நோக்குவோம். ஆக்க டப்பாக்கத்தை சமர்ப்பிக்கும் போது அதிலே நப்பான். அதாவது மணிமுடியாக இருப்பது கக் கொண்டு ''கலைந்து போன கனவுகள்” பதா என்ற பெண் எந்தச் சூழ்நிலையிலும் தலிக்கின்றாள். கனவு காணுகின்றாள். யுத்த ல் வந்து திருமணம் முடித்து வாழ்க்கையை - ஆனால் யுத்தப் பிரச்சினையால் வன்னி 5கின்றான். அவனுடைய சுயநலம் அனைத்தும் வ கலைந்து போன கனவுகள் இச்சிறுகதைக்கு
நோக்கும்போது கதாசிரியன் ஒரு பாத்திரத்தை செல்கின்றான். அதாவது இக்கதை வேறு கூறப்படுகின்றது. இதனை “அந்த வீட்டைப் நின்று விட்டாள்...'' என்றவாறு அவருடைய றார். மேலும் ஆரம்பத்தில் இடம்பெற்ற யுத்த இதை எடுத்துக்கொண்டு கதாசிரியர் யுத்தம்
215

Page 236
முடிந்த நிலையிலும் காதலனின் மோசடி வாயிலாக நகர்த்திக் காட்டியுள்ளார் எனலாம் தோய்ந்த வார்த்தைகளையும் கைக்கொண்டு
அடுத்ததாக கதாசிரியனின் மனோநிை கனவுகள்" என்ற கதையில் கதாசிரியனின் ம கதாசிரியனானவன் இக்கதைபால் தன்னை மனோநிலையிற்கூடாக தனது மனோநிலையை எழுதியிருப்பார்? அவருக்கு எழுதியவர் ஏன் எ சுபேதாவின் தவிப்பையும் ஏக்கத்தையும் அவ மனநிலை வாயிலாக வெளிப்படுத்துகின்றார் யுத்தத்தை ஒழித்த போதிலும் சமுதாயமான ஒரு சில காதலர்கள் இதற்கு விதி விலக் கதாசிரியனின் மனோநிலை காணப்படுகின்றது
சுபேந்திரனின் திடீர் முடிவு சுபேதாவின் . வெளிப்படுத்த கதாசிரியர் ஆவேச உணர்ச்சிை கதைக்க உங்களுக்கு வெக்கமாயில்லை இ காட்டமுடியும். இவ்வாறு சுபேதா வாயிலாக ச சிலவற்றில் வெளிப்படுத்தியுள்ளார் எனலா சந்தர்ப்பத்திற்கேற்ப அளவாகவும் அளவு கட
கதாசிரியன் வாசகனுக்கு தரும் மதிப் மதிக்கின்றான். இதனை தான் கதாசிரியன் விரும்பாதவனாகவும் வாசகர்கள் இதுபோன்ற 1 செய்கின்றனர். இதனைத் திருத்தும் முகமாக அங்கதச் சுவையில் கூறியுள்ளார். இதனை வாழ்க்கையில் எத்தனையோ விசயங்களிருக்கு கதாசிரியர் வாசகனைத் தன்னைவிட சற்றுத் கூறி வாசகனைச் சற்றுத்தாழ்வாக மதிக்கும்
கதாசிரியனின் கொள்கைகளை நோக்கு என்ற கொள்கையைக் காட்டியுள்ளார். இதனை தன்னை தயார் செய்வதில் அவன் தீவிரமாக என நினைத்து..." என்ற பகுதியில் அவள் அவனைக் குழப்ப மனம் வரவில்லை” என்ற புனிதத்தன்மை மேலும் கதாசிரியன். "பெண் கொள்கையையும் காட்டியுள்ளான். இதனை " பாருங்க பார்த்துப்பேசி செய்த சடங்கை உ கவனமாப் பாருங்க” என்ற பகுதியைக் காட்ட
இச்சிறுகதையின் மண்வாசனையை நோக்க உள்ள இயற்கை வளங்களாக சாரைப்பாம்பு இதனை "நாகதாளிக்கும் பாம்புக்கும் அப்படி காட்டலாம். மேலும் இப்பிரதேசத்தில் வில காணப்படுகின்றது. இதனை “அவளது குரல் பற்றித் தட்டாமாலை சுற்றினான்” என்பதிலிருந்து மேலும் யுத்தத்தினால் ஏற்பட்ட சேதங்களை இக்
(216)

செயலைக் கூறி அதாவது பாத்திரத்தின் ம். இவ்வாறு பிரதேச வழக்கும், உணர்ச்சி - கதையைக் கூறியுள்ளார்.
லயை நோக்கும்போது "கலைந்து போன னோநிலை ஆழமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ன சுபேதாவாகப் பாவித்து அவளுடைய க் காட்டுகின்றான். இதனை "ரவிக்கு கடிதமா னக்கு எழுதவில்லை" என்ற பகுதியினூடாக ருடைய மனோநிலை என்ற பெயரில் தனது -. இக்கதாசிரியரின் மனோநிலை மேலும் து உண்மையான காதலை ஒழிக்கின்றது. கோகும் என்ற உன்னதமான தன்மையில் து எனலாம்.
அவலத்திற்கு காலாய் அமைந்தது. இதனை ய வெளிப்படுத்துகின்றார். இதனை “இப்படிக் இது ஆம்பிளைத்தனமா” என்ற பகுதியைக் பேந்திரனுக்கு குத்திக்காட்ட உணர்ச்சியை ம். சுருங்கக் கூறின் இச்சிறுகதையின் டந்தும் சென்றுள்ளது.
ப்பை நோக்கும்போது தன்னை தாழ்வாக என்ற ரீதியில் நல்லவனாக யுத்தத்தை காதலிக்கு துரோகம் செய்யும் தவறுகளைச் - கதாசிரியர் வாசகரை தாழ்வாக மதித்து - "உடல் சார்ந்த கிளர்ச்சிக்கு மேலாலை த” என்ற பகுதியைக் காட்டலாம். இவ்வாறு 5 தாழ்வாக மதித்து அங்கதச் சுவையில்
நிலை காட்டப் பட்டுள்ளது.
ம்போது பெண் எப்போதுமே புனிதமானவள் ன "எஸ், எல், ஓ, எஸ் பரீட்சைக்கு அவன் இருந்தான். அவனைக் குழப்ப வேண்டாமே - பெண். அவள்மனம் புனிதமாயிருந்தால் பகுதியைக் காட்டலாம். இது அவளுடைய னுக்கு பெண்ணிங்கு எதிரியில்லை" என்ற பாலேஸ் பாவம் விவாகப் பதிவுக்காரரைப் றுதிப்படுத்தங்க அவளையும் குழந்தையும் டலாம்.
க்கும் போது இவர்கள் வாழும் பிரதேசத்தில் -, நாகதாளி போன்றன காணப்படுகின்றன. - என்ன ஜன்மப்பிரப்தி என்ற பகுதியைக் ஒளயாடும் விளையாட்டாக தட்டாமாலை கேட்டு வந்த அவன் அவளது கரங்களைப் - அப்பிரதேச விளையாட்டைக் காணமுடியும். க்கதை காட்டுகின்றது. "படங்கள், சட்டங்கள்
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 237
தகர்ந்த நிலையில் உடைந்த கண்ணாடிக பகுதி இப்பிரதேச இயற்கை வளங்கள் சீர்கு விவசாயத்துறையில் ஈடுபடுகின்றனர் மற்ற காட்டுகின்றது. அத்துடன் இப்பிரதேச மக்க அதிகம் பயணிக்கும் நிலை காட்டப்பட்டுள் சப்பறத் திருவிழா...'' என்ற பகுதியைக் 8 உள்ளது.
அடுத்தாக இக்கதையின் நோக்கு நிலை கையாண்டுள்ளார். காதலில் என்னதான் ே எதிராகப் பேசும் தன்மை சிறந்த முற்பே முற் போக்கு நிலையைக் காட்டினா பெண்ணியத்தன்மையைக் காட்டடியுள்ளார். புத்தியும், கண்ணீரும் சமர்ப்பணமாக இருந் காட்டுகின்றது.
இச்சிறுகதையின் இரசனையை நோக் காதலின் இரசனையைக் காட்டுகின்றன. மேலு சொற்களஞ்சியம் எடுத்துக்காட்டுகின்றது.
க.சட்டநாதன் எனும் இக்கதாசிரியர் முக்கூடல் தொகுதிபால் பல சிறுகதைகை புதுமைப்பித்தனின் கதையைப் போன்று பித்தன் "'சாபவிமோசனத்தில்" இராமனுக்கு கதைகளில் கதாநாயகனுக்கு இழிவு கற் ஜெயகாந்தனின் "அக்கினிப் பிரவேசத்தில் ! இக்கதையில் காதல் நம்பிக்கை தகர்த்து எ புதுமைப்பித்தனின் கதைகளை ஊன்றிப்
முக்கூடல் கதைத் தொகுதி உள்ளது. இத
மேலும் இக்கதையில் நிறைவையும் கா காட்டுகின்றார். இதனை சுபேந்திரனின் திருப் உணர முடியும். மேலும் இவர்கள் அதாவது மனைவி பாலேஸ்வரி இவர்களின் கதை இவ்வாறு ஓரளவு குறைவுகளும் பல நிறைவுக் கருவை நோக்கினோம் அல்லவா? அதற்கு பொய்யற்க, பொய்த்த பின் தன் நெஞ்சே த ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும். எனது இத்துறையில் இன்னும் ஆய்வு செய்வேன்.
கூர்மதி

ளுடன் நிலத்தில் சரிந்து கிடந்தன'' என்ற லைந்த நிலையைக் காட்டுகின்றது. இப்பிரதேச ம் விநாயக வழிபாடு காணப்படுவதையும் ளின் பண்பாடாக கோவில் திருவிழாக்களில் எது. இதனை "இன்று அரசடிப் பிள்ளையார் காட்டலாம். இவ்வாறு பிரதேச மண்வாசனை
மயைப் பார்த்தால் முன்னோக்கு சிந்தனையைக் தால்வியடைந்தாலும் துவளாமல் ஆணுக்கு Tக்கு சிந்தனையாகும். மேலும் கதாசிரியர் லும் சில சந் தர் ப் பங் களில் மரபுப்
தன்னை ஏமாற்றியதற்காக அவளுடைய த நிலை மரபுப் பெண்ணியத் தன்மையைக்
கும்போது கதாசிரியர் கையாண்ட சொற்கள் வம் யுத்தத்தின் அவலத்தையும் கதாசிரியனின்
ஈழத்தின் சிறந்த கதாசிரியராவார். இவர் ளப் படைத்துள்ளார். இவருடைய கதைகள். மரபு மீறும் நிலைகாணமுடியும். புதுமைப் இழிவு கற்பிக்கின்றார். க.சட்டநாதன் தனது பிக்கும் நிலையை காணமுடியும். மேலும் சமுதாய நம்பிக்கை தகர்த்து எறிவது போல றியப்படுகின்றது. இவ்வாசிரியர் ஜெயகாந்தன், படித்து அந்த அடிப்படையில் இவருடைய
னை படித்தால் உணரலாம்.
ட்டிய ஆசிரியர் சில இடங்களில் குறைவையும் Dணத்திற்குரிய காரணத்தை கூறாததிலிருந்து
சுபேந்திரன், சுபேதா இருவரும் பேசியபோது யை செவிமடுத்த நிலையை காட்டவில்லை. களும் கொண்டு அமைந்துள்ளது. இக்கதையின் கப் பொருத்தமான குறள் "தன்நெஞ்சறிவது என்னைச் சுடும்” என்ற குறள் சுபேந்திரனுக்கு ஆய்வை நிறைவு செய்கின்றேன். ஆனால்
217

Page 238
“முயற்சி திருவி
மணி!” என்று வாசலில் நின்றவாறே ராமு வீட்டில் இருக்கின்றானா? இல்லையா? என்று ! மணியின் மனைவி சாரதா அன்ன நடையில் கண்களைச் சிமிட்டியவாறு எட்டிப் பார்த்தா கேட்க நான் மணியின் சிநேகிதன், "மணி வீ பெண். படிப்பறிவு இல்லாதவள். அவளது க கிராமப்புறப் பெண்ணான சாரதாவைத் திரு புதுத்தம்பதிகள். "மணி வீட்டில் உள்ளாரா?'' எதுவும் கூறமுடியாமல் போனது.
"சாரதா!” என்று கேட்டைத்திறந்தவாறே ஏன் வெளியே நிக்குற. உள்ளே வா! என்று அ சொன்னான். இல்லை மணி நேரமாகுது. 6ே கொஞ்சம் பொறு. "சாரதா! இரண்டு தே கொண்டுவாம்மா?'' என்று மணி அன்போடு ச பழைய நினைவுகளை நினைவுபடுத்திய கொண்டிருந்தார்கள். "என்னங்க தேனீர் ரெடி!' குரலில் கூப்பிட்டாள். மணி உள்ளே சென்று ராமுவிற்கும் கொடுத்துவிட்டு தானும் இனிமை
சாரதாவின் செயற்பாடுகள் ராமுவை பூ சாரதா கிராமப்புற பெண். மிகவும் அடக்கமா பட்டணத்திற்கு வந்து மணியுடன் எளிமைய அடக்கமாக, கணவனுக்கு சிறந்த மனவிையாக "சாரதா நான் வேலைக்குப் போய் வருகிே சேர்ந்து இருவருமாக கதைத்த வண்ணமே ( அலுவலகத்திற்குச் சென்றார்கள்.
அலுவலகம் ஆரம்பமாவதற்கு சற்று நேரம் அமைக்கப்பட்ட கதிரையில் உட்கார்ந்து கெ வரிசையாக வந்து கொண்டே இருந்தார்கள். அது விரைந்து வந்து கதவைத் திறந்து தந்தவுடன் உள்ளே நுழைந்தார்கள். உள்ளே நுழைந்தது போல் இருந்தது. கதிரவனின் சூடு அங்கிருந்த வைத்தது. அதுவும் சரியாக நடுப்பகல் பன் உச்சம் கொடுத்துக் கொண்டிருந்த நேரம்.
இருவரும் மிகவும் களைப்புடன் வாடிவ நிலையில் கடமைக்காக எப்படியோ தம்ம (218)

னையாக்கும்”
செல்வி எம்.ஏ.எவ். அஷ்ரபா கா/துந்துவ முஸ்லிம் ம.வி,
துந்துவ
மெல்லிய தொனியில் அழைத்தான். மணி தெரியாது. பதில் எதுவும் கிடைக்கவில்லை. மெதுவாக நடந்து வந்து வாசலை நோக்கி -ள். "யாரைக் காண வந்தீர்கள்?'' என்று ட்டில் உள்ளாரா?”. சாரதா ஒரு கிராமத்துப் ணவன் "மணி'' பட்டணத்தைச் சேர்ந்தவன் மணம் முடித்து பட்டணத்தில் வசிக்கின்ற என்று ராமு கேட்டதற்கு சாரதாவால் பதில்
மணி உள்ளே நுழைந்தான். அட ராமுவா? புழைத்துக் கொண்டு கதிரையில் அமருமாறு வலைக்குப் போக வேண்டும் இல்லையா? னீர் கோப்பைகளைத் தயார் பண்ணிக் மரதாவைச் சொன்னான். ராமுவும், மணியும் பவாறு சுவாரஷ்யமாகக் கதைத்துக் என்று சாரதா உள்ளே இருந்து மெதுவான தேனீர்க் கோப்பையைக் கொண்டு வந்து மயான சுவையுடன் பருகி மகிழ்ந்தார்கள்.
பூரிப்படையச் செய்தது. ஏனோ தெரியாது. னவள் பெற்றோர் எவரும் இல்லாது அவள் பான முறையில் கஷ்டப்பட்டு இவ்வளவு வாழ்க்கையை நடாத்திக் கொண்டிருந்தாள். றன்” என்று மணி கூறிவிட்டு ராமுவுடன் தெருவை நோக்கி தாம் வேலை செய்யும்
) இருந்தது. அதுவரை இருவரும் வெளியில் ாண்டிருந்தார்கள். வேலையாட்கள் வரிசை லுவலகத்திற்குப் பொறுப்பானவர் சைக்கிளில் அங்கிருந்து அனைத்து வேலையாட்களும் » ராமுவிற்கும் மணிக்கும் தலை சுற்றுவது , அனைவரையும் வியர்வையால் நனைக்க சிரெண்டு மணி. கதிரவன் நடு உச்சியில்
தங்கிப் போய் வேலை செய்ய முடியாத rல் முடிந்தவரை வேலையைச் செய்து கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 239
கொண்டிருந்தார்கள். சாரதா வீட்டில் தனிமையா மீன்குழம்பும் சமைத்து பொட்டலமாகக் கட்! அலுவலகத்தை நோக்கி விரைந்து சென்றாள். 8 வருவதைக் கண்ட மணிக்கு மிகவும் சந் கன்னத்தைத் தடவி புன்னகைத்தவாறு சார கணவன் மணியைக் கண்டதும் அவளது க முகத்திலிருந்து வியர்வைத் துளிகள் சாரதாவில் அனைத்துத் துன்பங்களையும் பொறுத்து வேலைசெய்கிறாரே! என்று மனதார வருந்தின கஷ்டத்தைக் காட்டிக் கொள்ள விரும்பவ கொண்டிருக்கிறது என்ற தான் கூறுவான். செ கொடுத்துவிட்டு கண்களைத் தனது சேலையில சென்றாள்.
"ராமு!" என்று அலுவலகத்திற்கு வெ என்னடா மணி” என்று கேட்டவாறு ராமு உணவுப் பொட்டலத்தைப் பிரித்தார்கள் அதில்
ருசித்தவாறு சாப்பிட்டார்கள். சாப்பிட்டு மும் மோரையும் கோப்பையொன்றினுள் ஊற்றி | அவர்களுக்கு தாகத்தைத் தீர்த்ததாகவும், ப. சந்தோசமாக உள்ளே சென்று வேலையைத்
அவர்களுக்கு வேலையில் களைப்பு தயாரித்த மோரின் சுவை இருவரையும் களை வேலையைச் செய்து கொண்டிருந்தார்கள். 4.30 மணி ஆகிவிட்டது. அலுவலகம் மூ அனைவரையும் அவசரமாக வேலைகளை அனைவரும் வேலைகளை முடித்து வெளி வேலையை அவசரமாக முடித்துவிட்டு கதி ை மூழ்கிக் கொண்டிருந்தான். அவனுடைய என விலகி ஒரு நல்ல தொழிலில் சேர்ந்து கூடி தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையைய வேண்டும் என்று உறுதி பூண்டு ஆழ்ந்த யே
"அடே மணி!" என்னடா? இது என்ன ே போக ஐடியா இல்லையா? என்று ராமு கே போகலாம். எல்லோரும் சென்று ரொம்ப நேரமா மூடப்போகிறார்கள் என்று சொன்னவாறு மணி வெளியே இறங்கி வந்தான். மணி தான் எண்: வீட்டினுள் நுழைந்து பத்திரிகையும் கையும் புரியவில்லை. இவர் என்ன வந்ததும் வராதது
கூர்ந்து கவனித்தாள்.
"என்னங்க” என்ன தேடுறீங்க? என்று இல்லை சாரதா புது வேலை உள்ளதா? எ நம்மளுக்கு இந்த சம்பளம் பத்தாது. "உ வேண்டும்” அதற்குத் தான் இந்த மாற்றம்.
கூர்மதி -

க இருந்து அவசர அவசரமாக பழஞ்சோறும், > மோரையும் போத்தலொன்றினுள் ஊற்றி ஜன்னல் வழியாக சாரதா ஒரு பொட்டலத்துடன் தாசம். விரைந்து ஓடி வந்து சாரதாவின் தாவுடன் பேசினான். சாரதாவுக்கோ தனது ண்கள் கலங்கத் தொடங்கியது. மணியின் ன் கையில் விழுந்தது. தமது குடும்பத்திற்காக துக் கொண்டு இவ்வளவு கஷ்டப்பட்டு ாள். மணியோ! சாரதாவின் முன்னால் ஏதும் 1ல்லை. வேலை சந்தோசமாகப் போய்க் காண்டு வந்த உணவை மணியின் கையில் எ நுனியால் துடைத்தவாறு வீட்டை நோக்கிச்
ரியே நின்றவாறு சத்தமிட்டான் மணி "ஏன், வெளியே வந்தான். இருவருமாக சேர்ந்து
இருந்த பழஞ்சோற்றையும், மீன் குழம்பையும் டிந்ததும் போத்தலில் அடைக்கப்பட்டிருந்த "மட மட” வென பருகினார்கள். அதுவே சியைத் தீர்த்ததாகவும் இருந்தது. இருவரும்
தொடந்தார்கள்.
இருந்ததா? என்று கூட சந்தேகம், சாரதா ப்பில் இருந்து தடுத்தது. அவசர அவசரமாக நேரம் போனதே தெரியவில்லை. பிற்பகல் மடுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தது. - முடித்துக்கொள்ளும்படி வினவப்பட்டது. யேறிக் கொண்டிருந்தார்கள். மணி தனது ரயில் அமர்ந்தவாறு ஆழ்ந்த யோசனையில் ன்ணம் தான் கஷ்டமான தொழிலை விட்டு ய வருமானத்தைப் பெற்று சாரதாவையும், பும் ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வர பாசனையில் இருந்தான்.
காலம் என்று முதுகைத் தட்டடி வீட்டிற்குப் ட்டான். திடுக்கிட்டு எழுந்து நின்றான். வா தது! சீக்கிரம் வா போவோம். அலுவலகத்தை யின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு ணிய யோசனையுடன் வீட்டிற்குச் சென்றான். டாகவே இருந்தான். சாரதாவிற்கு ஒன்றுமே பமாக பத்திரிகையுடன் அழைக்கிறார் என்று
பாசமுடன் மணியைக் கேட்டாள் சாரதா. ன்று பார்த்தேன். அதென்ன திடீர் மாற்றம்? ன்னை ராணி போல் வெச்சிக் காப்பாற்ற மணியின் பேச்சைக் கேட்ட சாரதாவிற்கு
-219
219

Page 240
சந்தோசமும் உள்ளத்தில் கவலையும் ஏற்ப வாழ்கிறாரே? என்ற சாரதா சிந்தித்தாள்.
மறுநாள் காலையிலே எழுந்து கடவுள் வேலைக்குச் சென்றான். சாரதாவின் நல்ல எண் ஆபீஸ் ஒன்றில் வேலை கிடைத்தது. ஆனந்த வந்தடைந்தான். வந்த சந்தோசத்தில் " கட்டியணைத்து முத்தமிட்டான். சாரதாவுக்கு என்று விஷயத்தைச் சொல்லுங்களேன்? என் சரியாப் போயிற்று சாரதா. "உண்மையா முடியவில்லை. சாரதா மணியின் தலையைத்
சிறிது காலத்தின் பின் சாரதா ஒரு குழந் இருவருக்கும் சகித்துக்கொள்ள முடியாத சந் சம்பாதித்து வீட்டுக்குத் தேவையான அத்தனை துணிமணிகளையும் எடுத்துத் தயாராகினான் ஒன்ற பிறந்தது. மணியைப் போன்று முகவா முகத்தோற்றம் இருந்தது. மணி தனது பிள்ன வைத்தான்.
மூன் று பேரைக் கொண் ட அந் காணப்பட்டது.அவர்களுக்கு பழைய நினைவுக போது அவையனைத்தும் இன்பம் தருவதாகே வசதியாக வாழ்ந்தாலும் தமது பழைய து நினைத்துக் கொண்டே இருந்தார்கள்.
வசதியாக இருந்தும் தமது குடும்ப முறையில் கழித்துக் கொண்டே சென்றார்கள் எளிமையாக வசதியான முறையில் வாழ்வத மனம் ஒன்றைத் தவிர வேறொன்றுமில்லை.
(220)

ட்டது. எனக்காக இவ்வளவு துன்பத்துடன்
மள வணங்கி கடவுளின் ஆசீர்வாதத்துடன் பணத்திற்கோ என்னவோ தெரியாது. மணிக்கு க் கடலில் மூழ்கியவாறு விரைந்து வீட்டை சாரதா"! என்று சத்தமிட்டு ஓடிப்போய் ஒன்றுமே புரியவில்லை. என்ன நடந்தது று மணியைக் கேட்டாள். நான் சொன்னது கவா?”' சொல்றீங்க என்னால நம்பவே - தடவினாள். கதைக்கு தாயாகும் நிலைக்கு ஆளாகினாள். தோசம். மணி ஆபிஸுக்குச் சென்று பணம் சாமான்களையும், பிள்ளைக்குத் தேவையான . சாரதாவுக்கு அழகிய பெண் குழந்தை க்கை உடையதாகவே அக் குழந்தையின் Dளக்கு ''சரோஜா'' என்ற அழகிய பெயரை
த மணியின் வீடு மங் களமாகவே ள் அனைத்தையும் ஞாபகப்படுத்தி பார்க்கும் வ அமைந்தது. மணியும் சாரதாவும் எப்படி ன்ப வாழ்க்கையை இன்ப வாழ்க்கையாக
வாழ்க்கையை நாகரீகமாக, அமைதியான ர் ஆடம்பரத்தை விரும்பாத அவர்களுக்கு ற்குக் காரணம் அவர்களிருவருடைய தூய
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 241
நாமும்
நவீன தொனை
"எவ்வ துரைப்பது உ
அல்ல துரைப்
என்பது பொய்யாமொழிப் புலவர் வள்ளுவ அதாவது, உலகம் எவ்வாறு நடைபெற்றுக் நாமும் செயற்படுதல் நல்லறிவு படைத்த நூற்றாண்டிலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் பயணம் செய்து தண்மதியிலே குதித்து விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சியே என்பதளை அசுர வளர்ச்சியினாலேயே தொழினுட்பம் த பெருமையை சிறுகல் செப்புமா? எல்லையி தொலைபேசிகளின் பங்களிப்பு சொல்லினி தொலைபேசிகள் மனிதனுடன் நெருப்போடு விட்டமை குறிப்பிடத்தக்கது.
"கிணற்றுத் தவளை போல” அன்று முடங்கிக் கிடந்தனர். பிற பிரதேசங்களில் | அறி ந் திருக் கவில்லை. கார ண ம் ? வளர்ச்சியடைந்திருக்கவில்லை. மனிதன் மூடந
அறிவு குப்பைக் கிடங்குகளில் இடப்பட்டு மூ யுகத்து மனிதன் தன் மார்பு தூக்கி பெருமிதம் அது மிகையாகாது. அந்த மனித சாதனைகள் பூர்த்தி செய்வதற்கென பற்பல ஊடகங்க திருவினையாக்கும்” என்ற நம் மூதாதைய "அலெக்சாண்டர் கிரகம்பெல்'' என்ற விஞ்ஞ கண்டு பிடிக்கப்பட்ட ஊடகமே தொலைபேசி தொலைபேசி இன்று பல வடிவங்களில் பல குறிப்பிடத்தக்கது.
தொலைபேசிகளானது "உள்ளங்கை | நம் மானிட குழாமுக்கு பல்வேறுபட்ட விதங்க எமக்களிக்கும் நன்மைகளை எடுத்துநோக்கு வெவ்வேறு பிரதேசங்களிலும் மற்றும் நாடு உறவினர்களுடன் தொடர்பினை ஏற்படுத்த வேள் பல நாட்களும், பணமும் தேவைப்படும். ஆல் எந்த மூலைமுடுக்கிலும் வாழ்ந்து கொண்டிருக்க எங்கிருந்து கொண்டும் உரையாடக்கூடிய நி விடயமாகும். ஆமாம்! தொலைபேசியின் கண் விட்டதை நாம் அறிய முடிகின்றது.
கூர்மதி -

கைபேசிகளும்
செல்வி. ஆர். உமையாளினி யா/அருணோதயாக் கல்லூரி, அளவெட்டி
உலகம் உலகத்தோடு பபது அறிவு”
ப் பெருந்தகையினது பொன் வாக்காகும். கொண்டிருக்கிறதோ, அதற்கேற்ற வகையில் செயலாகும். இன்று நாம் இருபத்தோராம் -. மண்ணின் மைந்தர் நாம் விண்ணுலகிலே விட்டோம். இவற்றுக்கெல்லாம் காரணம்? 0 நாம் மறந்து விடலாகாது. அவ் விஞ்ஞான லை தூக்கியுள்ளது எனலாம். இமயத்தின் ல்லா தொழினுட்ப வளர்ச்சிதனிலே நவீன "ல சிக்குமா? எனக் கூறுமளவுக்கு நவீன -கலந்த சூடு போல பின்னிப் பிணைந்து
நம் மூதாதையர் கிராமங்களுக்குள்ளேயே நடப்பவற்றையெல்லாம் நம் மூத்த குடியினர் அன்று உலகிலே தொழினுட்பம் ம்பிக்கைகளால் சூழப்பட்டிருந்தான். அவனது மூடப்பட்டது. ஆனால், இன்றைய மிலேனிய த்துடன் வெற்றி நடை போடுகிறான் என்றால் ரின் வரிசையிலே மனிதனது தேவைகளைப் கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. "முயற்சி பப் பெருமக்களினது முதுமொழிக்கிணங்க தானியது அயராத தொடர் முயற்சியினால் R என்பது நாம் யாவரும் அறிந்ததொன்று. நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகின்றமை
நெல்லிக்கனி போல" வெளிப்படையாகவே ளில் பயனளித்துக்கொண்டிருக்கிறது. அவை மிடத்து, இப் பெரிய பரந்த உலகினிலே டுகளிலும் வசித்துக்கொண்டிருக்கின்ற நம் ண்டுமாயின், நேரில் சென்று பார்வையிடுவதற்கு எால், இத் தொலைபேசியினூடாக உலகின் கின்ற அனைவருடனும் விரும்பிய நேரத்துக்கு
லை ஏற்பட்டுவிட்டமை பெருமிதத்துக்குரிய எடு பிடிப்பால் உலகமே கைக்குள் சுருங்கி
221)

Page 242
இன்றைய நவீன உலகிலே அலுவலக மற்றும் பொது இடங்களிலும் சரி ஏன்! வீடுகள் காணப்படுவதை நாம் கண்ணூடாக காணக் நாம் வீட்டிலிருந்த அல்லது வேறு இடங்களி சந்தர்ப்பங்களிலே தொலைபேசி நமக்கு பெ பிறந்த பச்சிளங் குழந்தை முதல் வயோதிப வரை இன்று தொலைபேசியினை தமது ந தொலைபேசி மனிதனுடன் இரண்டறக் க தொலைபேசியினூடாக ஒரு உயிர் காப்பாற்ற நடந்து இருக்கின்றது. தொலைபேசி மனித முக்கிய பங்கு எடுத்துவிட்டமை குறிப்பிடத் தொலைபேசி கண்டு பிடிக்கப்படவில்லை அதனு அதிகாலையிலே துயிலெழ தொலைபேசி பிரயோகிக்கலாம். படம் பார்க்க முடியும். அ உற் பத்தி செய் யப் படுகின்ற தொலை பயன்படுத்தப்படுகின்றமை தெரிய வருகிறது. எடுக்கும் கருவியினை காவிச் செல்லாது, ை எடுத்துச் சென்றோமானால், அதனூடாகவே 6
இவ்வாறு பல வழிகளிலே மனிதனுடன் 2 விட்ட இத் தொலைபேசியினூடாக "நெல்வே நன்மையுடன் தீமையும் கலந்தே வருகின்றது. உரையாடுவதனூடாக நம்முடைய செவிப்புல கருத்து தெரிவிக்கின்றன. அது மட்டுமல்ல, ம ஆக்கத்திற்குப் பயன்படுத்தாது அழிவுக்கே ! நம் இளம் இளைஞர்கள் மற்றும் யுவதிகள் | காதல் எனும் அசுர நிகழ்ச்சிக்கூடல், தேவையற் எடுத்தல் போன்ற காரணங்களினால் தம்முள் குறியாக்கி விடுகின்றமை மிகவும் வருந்தத் நன்மைக்கும், தீமைக்கும் தனக்கென ஓரிடத் மனிதனது பாதகமான செயற்பாடுகளால் தெ மானிட குழாமுக்கே தலை சுற்றும் விடயமாக
எனவே “அரிது அரிது மானிடராகப் பிற பொன் வாக்கிற்கிணங்க அரிதான இந்த மா. பணத்திற்கு குதிரையும் வேண்டும், ஆறுகடக்கப் அறிவியல் தந்த பல அரிதான சாதனைக தொலைபேசியெனும் இவ்வரிய கண்டுபிடிப்பில அளவு மீறினால் அது நெருப்பு" என்ப பயன்படுத்தினோமானால், நாம் என்றோ ஒருந சிமிட்டும் நட்சத்திரக் கூட்டங்களைப் போல 6 ஐயமில்லை.
(222)

ம் என்றாலும் சரி, கல்வியற் கல்லூரிகள் ரிலும் கூட ஒன்றுக்கு பல தொலைபேசிகள் கூடியதாக உள்ளது. இரவு நேரங்களிலும், லே இருந்து கொண்டு வெளியேற முடியாத பருந்துணை புரிகின்றது எனலாம். உடன் நிலையை அடைந்துவிட்ட வயோதிபர்கள் நண்பர்களாக்கிவிட்டனர். அந்த அளவுக்கு லந்து விட்டமை சிறப்புக்குரியது. இத் Bப்பட்ட சம்பவம் ஒன்று நம் உலகத்திலே னது தனிமையைப் போக்குவதில் இன்று தக்க விடயமாகும். கதைப்பதற்கு மட்டும் பாடாக நாம் நேரத்தை அறிந்து கொள்ளலாம். சியிலுள்ள அலார கடிகாரத்தை நாம் வை மட்டுமா?, இன்றைய நவீன உலகிலே -பேசிகளிலே நனோ தொழினுட் பம் நாம் புகைப்படம் எடுப்பதற்கு புகைப்படம் கக்குள்ளே அடங்கும் தொலைபேசியினை எளிதாக புகைப்படம் எடுக்க முடியும்.
உயிரும் உடலும் போல் பின்னிப் பிணைந்து மாடு களையும் சேர்ந்து வருமாற் போல்” தொடராக அதிக நேரம் தொலைபேசியில் ன் பாதிப்படைகிறது என ஆய்வுகள் பல மனிதர்களாகிய நாமும் தொலைபேசியினை பயன்படுத்துகின்றோம். அந்த வகையிலே, தேவையற்ற விடயங்களை உரையாடுதல், ற படங்களை தொலைபேசியில் புகைப்படம் டெய அழகான எதிர்காலத்தை கேள்விக் தக்க விடயமாகும். இவ்வாறு மனிதனது இதைப் பெற்றுவிட்ட தொலைபேசியானது, கால்லை பேசிகளாக மாறி வருகின்றமை,
க உருவாகியுள்ளது.
த்தல் அரிது" என்ற ஒளவைப் பிராட்டியின் னிடப் பிறவியில் அவதரித்த நாம் ஐந்து பாயவும் வேண்டுமென பேரவா கொள்ளாமல் ளை அளவோடு பயன்படுத்த வேண்டும். னை "அளவோடு எரித்தால் அது விளக்கு,
தை உணர்ந்து தேவைக்கு மட்டும் Tள் வானம் எனும் அகண்ட பரப்பில் கண் வானோங்கும் புகழ் படைப்போம் என்பதில்
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 243
க ற் றா ங் கு
"கற்கக் கசடற க
நிற்க அத
என்பது வள்ளுவப் பெருந்தகை கூறும் மாண் நடக்க வேண்டும்” என்பதாகும். இப் பரந்து அத்தியாவசிய தேவையாகிவிட்டது. இன்று கற்றபடி எவ்வாறு ஒழுகுவது என்பது பற்றி
கல்வி ஒருவருக்கு அவசியம் காணப்பட சுழன்று கொண்டிருப்பதற்கு அச்சாணியாக உரிமைகளிலும் கல்வியின் முக்கியத்துவத் அவசியம் அளிக்க வேண்டும் என குறி அவசியமாகின்றது. அதனால் தான்
"கற்கை நன்றே பிச்சை புகினும்
என்றனர். என்னதான் வறுமையில் வாட் கட்ட நிலையை அடையலாம்.
"இளமையிற் கல்” என்கிறது பழமொழி நற்பிரஜைகளாக உருவெடுப்பதனோடு நம் இதனால் தான் “இளமையிற் கல்வி சிலைய
கல்வி ஒரு அழியாச் செல்வமாகும் முடியாததொரு சக்தியாகும். இப்படி கல்விய கற்பதற்கு உதவுகின்றது. கல்வியை கேட்ட மூலமும் பெற்றுக்கொள்ளலாம். மாணவர்கள் | ஒழுகவும் வேண்டும்.
அற நூல்கள், நீதி நூல்கள், நற்பழக்க நம் கற்றல் செயற்பாடுகளில் புகுத்தியுள்ளதர் என்பதற்காகத்தான் என்பதே மெய்.
அற நூல்களை கற்பதன் மூலம் நாம் 6 முடியும். அதாவது நாங்கள் அறஞ் செய்வதன் இதை புரிந்து ஒளவைப் பிராட்டி “அறஞ் செய
நீதி நூல்களும் எமக்கு நன்மை பய உண்மை பேசுதல், நேர்மையாக வாழுதல் ே சிறைபடுத்தி வைத்துள்ளன.
கூர்மதி 17-CM 013788

ஒ ழு கு வோ ம்
செல்வன் எஸ். அனந்ததர்வின்
நு/ஹைலன்ட்ஸ் மத்திய கல்லூரி, ஹட்டன் கற்றவை கற்றபின் ற்குத்தக”
(புறு வாக்கு. அதாவது "கற்றபின் அதன்படி விரிந்த உலகு தனிலே கல்வி ஒருவருக்கு கல்வியில்லாத இடங்களே இல்லை. நாம் சிறிது நோக்குவோம்.
ல் வேண்டும். ஏனெனில், இன்றைய உலகம் 5 நின்று உதவுவது கல்வியே. சிறுவர் இதை அறிந்து அதனை மாணவர்களுக்கு ப்பிடப்பட்டுள்ளது. வறுமையிலும் கல்வி
கற்கை நன்றே கற்கை நன்றே”
டினாலும் நாம் கற்பதனால் வாழ்வில் உச்ச
P. நாங்கள் இளமையில் கற்றால் நாளைய நாட்டின் பொருளாதார நிலையும் உயரும். பில் எழுத்து” என்றனர்.
D. திருடர்களாலும் தீயினாலும் அழிக்க பின் சிறப்புக்கள் ஏராளம். இவைகளே நாம் ல் மூலமும், வாசித்தல் மூலமும், பார்த்தல் யாவரும் கற்றால் மட்டும் போதாது அதன்படி
- வழக்கங்கள் போன்ற நல்ல விடயங்களை ற்கு காரணம் நாம் கற்றபடி ஒழுக வேண்டும்
ஒரு விடயத்தை தெளிவாக புரிந்து கொள்ள மூலம் மகிழ்ச்சியாக வாழலாம் என்பதாகும். விரும்பு” என்று ஆத்திச்சூடியில் பாடியுள்ளார்.
பக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. பான்ற நல்ல விடயங்களையே தன்னகத்தே
223

Page 244
நற்பழக்க வழக்கங்களான உண்மை ே பெரியார்க்கு மதிப்பளித்தல் போன்றவற்றைக் அரிச்சந்திரன், நேர்மையாக வாழ்ந்த அவ வழக்கங்களை கடைப்பிடித்த தனாலேயே 6
இப்படி பல்வேறு விடயங்களை நாம் மிகச் சிலர். இனி நாமும் கற்றதை கற்ற விபுலானந்தர் போன்றோர் கற்றபடி ஒழுகியத
நாம் அனைவரும் கற்றபடி ஒழுகினால் நமது நாட்டில் சமாதானம் நிலவும். அத்துடன் நமது நாட்டிற்கு அவசியமாக காணப்படுகிறது ஒழுகுபவர்களாலும் தான் என்றால் மிகையா
நாங்கள் மட்டும் கற்றபடி ஒழுகினால் ? அனைவரும் மற்றவர்களை கற்றது படி நடக் நாடே அமைதிப் பூங்காவாக மாறும்.
நம் நாட்டில் அனைவரும் கற்றது படி நட முன்னிலை வகிப்பதோடு மகிழ்ச்சிகரமான ந மாறும்.
எனவே நாம் அனைவரும் அரிச்சந்திரன் லிங்கன், சுவாமி விபுலானந்தர் போன்று கற்றம் வாழ வைப்போமாக.
224

பசல், நேர்மையாக வாழல், நன்றிமறவாமை, கொண்டுள்ளன. உண்மைக்கு அதிபதியான எனை தெரேசா போன்ற பலர் நற்பழக்க வாழ்வில் உயர்ந்தனர்.
கற்கிறோம். ஆனால் அதன்படி ஒழுகுவது படி ஒழுக வேண்டும். ஆபிரகாம் லிங்கன், தாலேயே உயர் நிலையை அடைந்தனர்.
எமக்கு பல்வேறு நன்மைகள் வந்து சேரும். சண்டை சச்சரவுகளும் ஏற்படாது. சமாதானம் 1. அதை தருவதும் அற நூல்களும் கற்றபடி
காது.
உலகம் ஒன்று பட்டுவிடுமா? என்பதால் நாம் க உதவ வேண்டும். அப்பொழுது தான் நம்
ந்தால் நமது நாடு மட்டுமே இப் பிரபஞ்சத்தில் டாகவும், செல்வச்செழிப்பு மிக்க நாடாகவும்
ன், அன்னை தெரேசா, மகாத்மா, ஆபிரகாம் படி ஒழுகி நாமும் வாழ்ந்து மற்றவர்களையும்
- கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 245
இ6
தம்
செல்வி. தி/ஸ்ரீ இராமகி
அக்கா
இன்பத் த
இனிய த இனிமை தந்த இன்பத் தம்
இதயம் துடிக்கும்
இமைகள் 0 இரவும் சூழ்ந்த
இடிபோல்
இன்பம் என்றி
இரத்தம் ! இன்பத் தமிழ் 6
இதயம் து
இனிதாய் வாரு
இதயம் து இமைபோல் வாரு
இமயம் 6
இல்லறம் சிறப்பு
இளமையும் இனிதாய் வாழி
இனிய 6
இனிய செம்மெ இலங்கைத் த இதயம் கவர்ந்த
இனிதாய் 6
கூர்மதி

ர்பத் ேெழ
1.lulali.
என்.சதுஜா
நஷ்ண கல்லூரி, ரைப்பற்று
மிழே! - என் எய்மொழியே டுெம் நல் - என் ழ் மொழியே!
> முன்னே - தினம் முடும் முன்னே டொமல் - தினம்
வா தமிழே!
இss its பி பி சி :
டும் முன் - என் சிந்துது பார் மொழிபோல் - என்
டிக்கின்றதே!
மென்போம் - தினம்
துடித்திடவே மென்போம் - தினம் தொட்டிடவே!
ஹவே தினம் - என் நிலைத்திடவே " என்பேன் - என் செந்தமிழே!
வாழியாய் - தினம் மிழ் மொழியாம் த நல்ல - தினம் வரும் தமிழே
225

Page 246
இன்னல் வந்திடு
இனிய தமிழ்ெ இமைகள் திறந்தி
இதயம் துடிப்
இனிமையான இலங்ை
இன்பத்தமிழைச் இந்துக் கல்லூரியில்
இனிதாய் எடுத்துச்
இலங்கை முழுவது
இனிய கவிதை இரத்தத் துளியின இன்பத் தமிழைச்
இனிய ஆசான்களே
இனிதாய் வாக் இனிய பேச்சும் உந்
இனிய தமிழ்பெ
இட்டது கையளவு
இதயம் சொல்ல இதயம் சொல்கின இன்பக் கடல்
இன்பக் கடல் அள்
இதயக் கோய இனிதாய் அமர்த்தி ன
இன்பத் தமிழி.
இரண்டு நிமிடம் எ
இருபது நிமிடம் இனிய தமிழினை சொல்
இருதயம் துடிக்
இருதயம் துடிக்க எ
இனிய தமிழ்ெ இமைகள் மூடிடா. இன்பத் தமிழ் வ
(226)
கிபி

மா - என் மாழிக்கு டுமா - என் ப்பதற்கு
கயிலே - தினம் - சொல்ல
அதை - தினம் - சொல்வேன்
வமாய் - என் 5 இதை பிசிலே - என்
சொல்வேன்
இதை - தினம் சித்திடும் ங்கள் - தினம் மாழிதான்
என்று - என் Dவில்லை
எறது - என்
அளவே!
ஈவாய் - என் பிலிலே "வத்தேன் - என்
னையே!
ன்ன - தினம் ம் என்ன ல்லிடவே - தினம்
கின்றதே
வைத்த - என்
மாழியே மல் - என் பளர்ப்பேன்
்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 247
இன்பத் தமிழ்
இனிதா இத்தனை நா
இனிய தமி
இனிய அன்னையின்
இனிய ஆசான் இதயம் கவர் இனிய தமி
இனிய குளிர் நி
இன்பத் த இன்பத் தமிழின
இனிய நி
இரத்தத்தில் உன
இன்பத் த இனிதாய் தட்டி
இருதயம் 4
அன்பைக் கண்
அன்னையின் ஆரிரோ பாடுக ஆத்மாவில்
ஆத்ம ஜீவன் 6
அன்னையின் ஆருயிர் சிரிக் அமைதித்
அரும்பினைப் போல்
அருவியைப் டே அலைபோல் திர
அன்புத் த.
அல்லல் படு
ஆருயிர் அடிக்கடி மா அன்புத் த
கூர்மதி.

வளர்த்து - தினம் | பாடுபட்டு களுமே - தினம் ழ் வளர்ப்பேன்
ன் அன்பினிலும் - என் ரின் அன்பினிலும் ந்து நின்ற - என் ழைக் கண்டேன்
'லவினிலே - தினம் மிழ் கண்டேன்
னப் போல் - தினம் லவு என்பேன்
ப : 19 # 5 14 |
பறந்து நிற்கும் - என் தமிழினையே
எழுப்பிடவே - என் துடிக்கின்றதே!
டிடுவேன் - தினம் ஈ தமிழ் கேட்டு கின்றாள் - தினம் - தமிழ் எழுப்ப
எழுகின்றதே - என் ச தமிழ் கேட்டு க்கின்றதே - என் தமிழ் கேட்டு
உள்ள தமிழே - தினம் பால் பாய்கின்றதே
ள்கின்றதே - தினம் மிழ் மொழியே
வதனால் - என் பிரிவதனால் றிடுமோ - என் மிழ் மொழியே
227

Page 248
அலைந்து திரிகின்
அகிலம் யா அகிலம் போற்றும்
அன்பை வளர்த்
அன்பினால் நிறைந்
அறிவினால் வ அன்புத் தமிழ் எம் அறிவுத் தமிழ்
அறிவுக்கு அமைதியட
அன்புக்கு அகி அன்பாய் கூறிவிடு
அன்னைத் தமிழெ
ஆர்ப்பாட்டம் செய்ய
அன்பின் கவி அலைந்து திரியலை.
அறிவுச் சுடர்
அறிவின் சிகரமும்
அழகிய தமிழ் அழகிய தமிழினிலே
தமிழ் கவ
அழகிய தமிழ் செ
இலங்கை மக் அழகிய இலங்கை அடிநெஞ்சம் வெ
அடிப்படை உரிமை
அன்புத் தமிழு ஆருயிர் மக்களிட அடிப்படை தமிழ்
அன்பு தமிழ் இல்ன
அடி நெஞ்சம் வ அன்பினை வளர்த்த தமிழ் தகைமையை
228

"றதே - தினம்
விலுமே தமிழ் - தினம் தே தமிழே!
தேதுவே - என் வந்ததுவே என்பேன் - என்
என்பேன்.
T தோழா - தினம்
லம் என்று அதை - தினம் மனக் கூறிவிடு
வேண்டாம் - என் தையிடம் வப்போம் - என்
தமிழே!
மாய் - தினம்
மொழியாம் - நான் - தினம் சியாம்
ரல்லவா - என் ககளுக்கே கயிலே - என் படித்திடவே!
யிலே - தினம் ம் உண்டு உம் - தினம் ழம் உண்டு
Dலயேல் - என்
றள்கின்றதே கிடுவேன் - என் ப உயர்திடவே
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 249
கருவறையில் உதி
கற்பனையை வ காலத்தின் கோல
காண்
கள் நெஞ்சம் ப
கண்ணீரில் கவிதை எழு
கதை செ
கலக்கம் ஏன் க
கண்ணீர் ஏ கலங்காமல் இ கனிவாய் வ
| i ii I 1 di Fil |
காற்றையும் நிறு கவித் தமிழுக் கவிதை சொ கவித் தமிழுக்
கற்ற இடத்த
கலைக் ( கவிதை சொல்
கனிய தமி
கல்லிலே ஈரப்
கவிதைத் த கண்ணிலே ஈர கவித் தமிழ்மல்
கவிதையில் சி
கருத்தமிழ் காலத்தின் கே
கருவாய் தம்
அன்பாய் எழுது
அறிவாய் 6 ஆர்ப்பாட்டம் செ அன்னைத் தமிழ்
கூர்மதி

க்கும் முன்னே - தினம் வளர்க்கும் முன்னே
மடா அதை - தினம்
மனிதா
டைத்தவரும் - என்
கண்டவரும் த வந்து - என் ல்கின்றேனே
ண்மணியே - தினம் ர் கண்மணிலே ன்பத்தமிழ் - தினம்
ளர்த்தெடுப்பேன்
| i di 121 நப் 11 இல் |
த்தும் சக்தி - என் கு உள்ளதென்று ல்லிடவா - என் குச் சொல்லிடவா
தினிலும் - என் கோயிலிலும்
ல வந்தேன் - என் "ழ் மொழிக்கு
மில்லை - தினம் தமிழ் வளர்க்க "முண்டு - தினம் ழை பொழிவதற்கு
றந்த கவி - என் » என்றிடவே பாலமுமாய் - என் ழ்ெ வளர்ப்பேன்
கின்றேன் - தினம் எழுதுகின்றேன் சய்வதற்கு - தினம் ழ் விடவில்லையே
229

Page 250
அன்னைத் தமிழே
அன்புத் தமிழ் இனிய தாய் மெ
இன்பத் தமிே
இலங்கை நாட்டி இறைமை கொ இன்பம் நிறைந்த இன்பத் தமிழ்
இனியதாய் வளரு
இனிய தமிழ் இன்பப் பசுமை
இனிய தமிழ்
இனிதாய் தமிழ் 6
இயல்பாய் வா இனிய தமிழே எ
இயல்பாய் வ
தமிழே தமிழே 6
தலையிலே து தாராள மனம் பல தமிழெனச் சொ
வாழ்க தமிழே தி
வண்ணமாய் 8 வடிவம் பல எடுத
வளராய் இன்ட
- வளராய் இனிய தமிம்
வளர்ப்பாய் இன்
1 1
(230)

என்பேன் - என் - மொழியை பாழியாம் - என்
ழ என்பேன்
லுமே - தினம் எண்டு நிற்கும் டெவே - தினம் வளர்ப்போம்
நது பார் - என்
மொழியே யிலே - என் 5மொழியே
வளரும் - அது ளர்ந்துவரும் ன்போம் - அது
ளர் தமிழே
பன்று - அதை பக்கிவைத்த
டத்த - என்றும் எல்லிடுவோம்
னம் - என்னை வளர்தமிழே த்து - என்னை பத் தமிழே!
- தினம், என்னை
ழே தினம் - என்னை பத் தமிழே! -
1
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 251
விஞ்ஞான இன்றைய உ
இன்றைய உலகையே மாற்றியமைத்தது 6 "ஆத்தும ஞானம், விஞ்ஞானம், இலக்கியம் மனித வாழ்க்கை” என்று கூறுகிறார் அறி தவிர்த்து ஏனையவற்றை கொண்டு வாழ் மனிதனாக கருதப்படமாட்டான்.
பச்சை மாமிசத்தை இச்சையுடன் கண்டானல்லவா, அன்று பிறந்தது இந்த
அமைத்த மனிதன் பருத்திப்பஞ்சின் பக்கு இந்த அறிவியல். நடந்து சென்ற மனிதன் ப அன்று ஏறு நடைபோட்டது இந்த அறிக தேவைகள் அதிகரித்தன. இத்தேவைகளை பல சாதனைகளைச் சந்திக்க ஆரம்பித்தா உருவெடுக்க, கண்டுபிடிப்புகளும் புற்றீசல
இவ்வாறு தனது ஆரம்பக் கதை வேரைப்போன்று உலகெங்கும் பரவி ! சுருங்கக்கூறின் சூழலை நம்பி வாழ்ந்த மனித மாற்றியது இந்த விஞ்ஞானம் தான்.
ஆம், ஒரு நாணயத்திற்கு இரண்டு விளைவுகளில் நன்மையும் போலவே த எவ்வாறிருப்பினும் விஞ்ஞானத்தால் நமக்கு
இன்றைய வைத்தியத் துறையை எடுத் என்று கூறி உயிரைவிட்ட மனிதனுக்கு, | அவசியத்தை எடுத்துரைத்தது விஞ்ஞ குணப்படுத்தக்கூடிய சக்தியையும் வசதி வைத்தியர்களுக்கு கொடுத்துள்ளது. அந்த அவதானிப்பதற்கு 'X' கதிர்களை பயன்ப இதன் மூலம் உடலின் உட்பகுதியில் ஏற்பட்டு புலப்படாத கோளாறுகள் போன்றவற்றை முறைகளையும் மேற்கொள்ளக் கூடியதா? இதயத்தையும் இயங்க வைக்கலாம் என்ற ஓ கேட்கக் கூடியதாய் இருந்தது. இவையவை
கூர்மதி

ரமும்
Dகமும்
செல்வி எம்.என். சஸ்னா பர்வின் ப/அல்-அதான் முஸ்லிம் வித்தியாலயம், பதுளை
பிஞ்ஞானம் என்றால் அதில் சந்தேகமேயில்லை. ம், இவை மூன்றையுமே உள்ளடக்கியது தான் ஞர் வினோபாவே. இவற்றுள் ஏதாவதொன்றை வை அமைத்துக் கொண்டவன் ஒரு பூரண
ர் தின்றவன் சுட்டுத்தின்பதற்காக தீயை - அறிவியல். இலைகளை கொண்டு ஆடை தவம் உணர்ந்தானல்லவா. அன்று நிமிர்ந்தது பனிப்பதற்காக சக்கரங்களைக் கண்டானல்லவா, வியல். நாட்கள் செல்ல செல்ல மனிதனின் நிறைவு செய்ய சிந்திக்க ஆரம்பித்த மனிதன் ன். இவ்வாறே ஆங்காங்கே அறிவியலாளர்கள் ாய் புறப்படத்தொடங்கின.
யைக் கூறும் விஞ்ஞானம் இன்று ஆலமர பல புதுமைகளை நமக்கு அளித்துள்ளது. தனை சூழலையே மாற்றியமைக்கும் மனிதனாக
பக்கங்கள் இருப்பதுபோல விஞ்ஞானத்தின் தீமையும் காணப்படவே செய்கின்றன. எது 5 ஏற்பட்டுள்ள வசதிவாய்ப்புகளோ பல.
துக்கொண்டோமேயானால், பேய் அடித்துவிட்டது நோய் அடித்துவிட்டது என்று கூறி வாழ்வின் மானமே! இன்று எவ்வித நோய்களையும் 5 வாய்ப்புகளையும் அறிவியல் இன்றைய த வகையில் உடலின் உள் உறுப்புக்களை டுத்துவது மிகவும் முக்கியமான ஓர் விடயம். கள்ள நோய்கள் மற்றும் சாதாரண கண்களுக்குப் - விரைவில் அறிந்து, அதற்கான சிகிச்சை க உள்ளது. அது மட்டுமன்றி, செயலிழந்த மர் அதிர்ச்சித் தகவலை அண்மைக் காலங்களில் னத்தும் விஞ்ஞானத்தின் விந்தைகளே!
(231)

Page 252
அடுத்து போக்குவரத்து துறையை சற்று 6 தனது கால்களின் உதவியுடன் நடந்து சென்ற பயணித்தான். காலஞ் செல்ல செல்ல சக்கரங்க பயணித்த மனிதனோ இன்று ஊரைக்கடந்து, விண்வெளிக்கும் பயணிக்கும் வாய்ப்பை இன்றை புகைவண்டிகள், பேரூந்துக்கள், ஆகாய விமா மக்கள் அனைவரையும் ஒன்றிணைக் கின்றன என்று கூறப்படுகிறது.
இக்கூற்றை இன்னும் உறுதிப்படுத்த ! சாதனங்களோ பல. அவற்றுள் விஷேடமாக ை முதல் பெரியோர் வரை பயன்படுத்தப்படு உள்ளவர்களுடனும் உடனடியாகப் பேசக்கூ காலத்தில் புறாக்கள் மூலமும் ஊளையிடுவதல் மனிதன் கைத்தொலைபேசியைப் பற்றி கனவில் எனினும் ஆதிகால மனிதனின் நுண்ணிய கண் அத்திவாரம் "சிறு துளி பெரு வெள்ளம்” உதாரணமல்லவா. அடுத்து கைத்தொலைபேசி கருத்துக்களை பரிமாற இன்னும் தொலைக்காட்சி தொலைநகல் என பல சாதனங்களை அடுக்கி அறிவியல் என்ற தாய் பெற்றெடுத்த குழந்தை
அடுத்து மின்சாரம் என்ற வடிவத்தில் வி முடியாது. வீட்டில் ஒளியூட்டி, சமைக்க, துல் பொழுது போக்கை சிறப்பாக்கி, மனதை மகிழ்வு அறிவியல் அளித்துள்ள பரிசில்கள், சுருங்கக் மிகச்செய்தும் கூலிமிகக்கேளா சேவகனாயும்
அடுத்ததாக விஞ்ஞானத்தின் பாரிய ஓர் பற்றி கூறுவது மிகமிக அவசியம். ஏனென்றால் வி நூற்றாண்டில் பாரிய வெற்றியை கண்டுள்ளது புதிய கோள்களைப் பற்றியும் நாளாந்தம் தக எதிர்காலத்தில் நாம் வாழும் இந்த பூமியானது வாழக்கூடிய வாய்ப்புக்கள் ஏற்படலாம். இதில் அமெரிக்கா போன்ற நாடுகளில் வேற்று கிரகா பற்றி கேள்விப்படுகிறோம் அல்லவா?
அடுத்து, விவசாயத்துறையிலும் அறிவியலி ஏரையும் கொண்டு வயல் உழுத மனிதன் பசளைகளையும் கொண்டு தனது உற்பத்தி கிணறுகளில் இருந்து ஆவி விரைய நீர் வா தோட்டங்களுக்கு நீர் இறைக்கிறான். இதன் மூல பெருக்கி பொருளாதாரத்தையும் மேம்படுத்திக்
அது மட்டுமன்றி கல்வி நடவடிக்கைகள் இலங்கையில் இன்று ஓரளவில் இம்முறை காண ரஷ்யா போன்ற வல்லரசுகளில் ஏட்டைக் ெ
போக கணணியைக் கொண்டு கற்கும் காலம்
232

நோக்குவோமேயானால், அன்றைய காலத்தில் மனிதன் பின்னர் விலங்குகளைக் கொண்டு கள் கண்டுபிடிக்கப்பட்டு அதனைக் கொண்டு நாட்டைக் கடந்து, உலகத்தையே கடந்து, ய அறிவியல் பெற்றுத்தந்துள்ளது. அதிவேக னங்கள் என பல பல வாகனங்கள் உலக -. இதனால் தான் "உலகம் ஒரு கிராமம்"
விஞ்ஞானம் அளித்த வெகுசன தொடர்பு கயடக்க தொலைபேசிகள் இன்று சிறியோர் நிகின்றது. இதன் மூலம் தொலைவில் டிய வாய்ப்புக் காணப்படுகின்றது. ஆதி எ மூலமும் தனது கருத்துக்களை பரிமாறிய லும் நினைத்திருப்பானா? இல்லவே இல்லை நிபிடிப்புக்கள் தான் இன்றைய அறிவியலின் - என்ற பழமொழிக்கு இது ஓர் சிறந்த சியை போன்றே கதைக்க, சிரிக்க, தனது கள், வானொலிகள், இணையம், மின்னஞ்சல், 7 கொண்டே போகலாம். இவையனைத்தும் 5களே.
விஞ்ஞானம் ஆற்றும் பணிகளோ கணக்கிட -டைக்க, கழுவ பலபல இயந்திரங்களும், ட்டும் சாதனங்களும் இன்றைய வீடுகளுக்கு - கூறின் நல்லதோர் இல்லாளாய், வேலை
பணிபுரிகின்றது.
கண்டுபிடிப்பான விண்வெளிப்பயணங்களை விண்வெளிப்பயணங்கள் இந்த இருபத்தோராம் 1. விண்ணில் உள்ளவை பற்றியும் புதிய கவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அழிந்து போனாலும் வேற்று கோள்களில் சந்தேகமில்லை. காரணம் தற்காலத்திலும் ங்களுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளை
ன் பங்களிப்பு அதிகம் அதாவது எருதையும், - இன்று இயந்திரத்தையும், செயற்கை யை பெருக்கிக் கொள்கிறான். ஆழமான ர்த்த மனிதன் இன்று குழாய்கள் மூலம் மம் நேரச்சிக்கனம் மட்டுமன்றி உற்பத்தியை
கொள்ளலாம்.
நம் இன்று கணனிமயப்படுத்தப்பட்டுள்ளன. எப்பட்டாலும் வளர்ச்சியடைந்த அமெரிக்கா, காண்டு கல்விகற்ற காலம் மலையேறிப் ம் பிறந்துள்ளது. நாளடைவில் இலங்கை
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 253
அரசாங்கமும் இவ்வாய்ப்புக்களை மாணவர்க நகர்புறங்களில் இம்முறை காணப்படுவது
தேவைகளை உருவாக்கி, அதற்கா பயன்படுத்த மனிதனையும் உருவாக்கும் அ அழித்து முழு உலகையும் சுடுகாடாக மா
ஆம், இன்றைய வல்லரசு நாடுகளில் தீவிரமடைந்து வருகின்றன. இதனால் நாடு உயிரிழப்புகளும் நிகழ்ந்த வண்ணம் உ போது ஹிரோஷிமா, நாகசாகி நகர்களின் இன்று பிறக்கும் அப்பாவி குழந்தைகள் கூட விளைவு என்றே கூறலாம்.
அது மட்டுமன்றி கைதொலைபேசிகள் போக்கு அபாயகரமானது. தற்போது தொலைப்பேசிகளை தவறான வழியில் உபயே நாம் அறிந்துள்ளோம்.
அது மட்டுமா, வெகுசன தொடர்பு சா ரீதியிலும் பாதிப்புக்களை இன்றைய நவீன ய மின் காந்த அலைகளின் பாதிப்பால் புற்று ஏற்பட கூடிய சாத்தியம் காணப்படுகின்றது
எது எவ்வாறிருப்பினும் பாதிப்புக்கனை பாதிப்புக்களை தவிர்த்து ஆக்கங்களை பெரு எனவே, எந்த ஒரு உயிருக்கோ, பொரு கண்டுபிடிப்புக்களை பெருக்குவதில் ஒவ் விண்வெளியுகத்தில் வாழும் ஒவ்வொரு மனி
விடயம் இது. அறிவியல் வாழ்க !
சிறகு முளைக்
மையக்கருத்து
மட்டுவில் ஞானக்குமாரன் என்பவரால் பாட் கவிதை இளம் சமுதாயத்தினரை மையப் இளஞ்சமுதாயத்தினர் சிறகு முளைத்த பூச் அவர்களுக்கான சுதந்திரமும், நிம்மதியா வலியுறுத்துகிறார். பண்டைக்காலம் தொட்டு மனிதனுக்கு வகுத்துக்கொண்ட சட்டங்களுக்கு கூடாது. "எமது சுதந்திரம் எமக்கே" என்று வேண்டும். நம் ஒவ்வொருவரதும் பெயர்க உயர்ந்தவர்கள் ஆகனும் என்று கவிஞர் நம் எடுத்து தீயவற்றை ஒதுக்கி, ஓர் அன்னப்பறை
கூர்மதி -

ளாகிய எமக்கு பெற்றுத்தரலாம். இன்றளவிலும் பெருமைக்குரிய ஓர் விடயம்.
ன பொருள்களையும் உருவாக்கி, அதை றிவியல், இவையனைத்தும் கணப்பொழுதில் ற்றக்கூடிய சக்தியையும் கொண்டுள்ளது.
அணு ஆயுத உற்பத்திகள் நாளுக்கு நாள் களுக்கிடையே போர்களும், அதனால் பல ள்ளன. இரண்டாம் உலக மகாயுத்தத்தின் மீது போடப்பட்ட அணுக்குண்டின் விளைவை அனுபவிக்கின்றன. இது கூட விஞ்ஞானத்தின்
ளால் இன்றைய மாணவச்சமூகம் செல்லும் நவீன வசதிகளுடன் கூடிய கையடக்க பாகித்து தனது உயிரை விட்ட மனிதர்களையும்
தனங்களால் உளரீதியில் மட்டுமன்றி உடல் புக மனிதன் முகங்கொடுக்க வேண்டியுள்ளான். 1நோய் மற்றும் கண் நோய்கள் போன்றவை
ளயே கூறி ஆக்கங்களை தவிர்ப்பதை விட நக்குவது தான் சிறந்த மனிதனின் இலட்சணம். தளுக்கோ ஆபத்து விளையாத வண்ணம் வொருவரும் கவனஞ்செலுத்த வேண்டும். தனும் நிச்சயம் கருத்திற் கொள்ள வேண்டிய
கும் தீயாக......!
ப்பட்ட "சிறகு முளைக்கும் தீயாக...!" என்ற Dாக வைத்தே பாடப்பட்டுள்ளது. அதாவது, நகளை போன்றவர்கள் என்று கூறும் கவிஞர் எ வாழ்வும் வழங்கப்பட வேண்டும் என்றும் காணப்படும் சம்பிரதாயங்கள் என்று மனிதனே த இளஞ்சமுதாயத்தினரான நாம் அடிமைப்படக் நம்பிக்கை கொண்டு சாதனைகள் படைத்தல் கள் நிலவில் பொறிக்கும் அளவுக்கு நாம் மை ஊக்கமூட்டுகிறார். நல்லவற்றை மாத்திரம் வயை போல் செயற்படுவதன் அவசியத்தையும்
233

Page 254
கவிஞர் கூற மறக்கவில்லை. எவ்வாறான தீ சிறைப்படாமல் இளம் சமுதாயத்தினர் சாத இக்கவிதையில் மையக்கருத்தாகும்.
கவிஞர் பயன்படுத்திய உத்திகள்
ஓர் கவிஞர் தனது கருத்துக்களை - கருத்துக்கள் மக்கள் மத்தியில் சென்றடை வாழ்வில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். இவையே ஒவ்வொரு கவிஞரினதும் ஒரே நோக் மேற்கொள்ள கவிஞர்கள் பல உத்திகளை ஞானக்குமாரன் என்பவர் பல உத்திகளை எடுத்துக்கூறுகின்றார். அதாவது, பூக்கடை சமுதாயத்தினரை ஒப்பிட்டு தனது கருத்தை
வாசிக்கும் வாசகர்கள் உள்ளத்திலும்
ஓர் சிறந்த உணர்வை ஏற்படுத்துவதாக ! "'சிறகு முளைக்காத சின்னப்பூக்களே!" என்ற இளைஞர்கள் உள்ளத்தில் ஓர் விழிப்பை ( முன்னிலைப்படுத்துவதன் மூலம் வாசகர் க அது மட்டுமன்றி "பறவுங்கள்” , "திறவுங்கள் உறுதியாக கூறுவதன் மூலம் எமது ம நயத்திற்குரியது. அழகான சொற்கள் மூலம் கவிஞர் கையாண்ட உத்திகளுள் ஒன்றாகும். பூக்கள் என்று கூறி இளைஞர்களின் கவனத்
குறிப்பிடத்தக்கது.
பயன்படுத்தப்பட்டுள்ள அணிகள், அழகி
இக்கவிதையில் கவிஞர் சில இடங்களில் அணி மெருகூட்டியுள்ளார். அந்த வகையில்,
இருக்கைகள் மற இதழ்களிலே
இறக்கை
என்ற பாடலடியில் மோனை அணி பயன்படு
சிறகு முன் சின்னப் பூ.
என்ற அடியிலும் கவிஞர் மோனை அணி அமைத்துள்ளார். அது மட்டுமன்றி உருவக
வேர்களே வி காம்புகளே சி
(234)

யவிடயங்களுக்கோ, சம்பிரதாயங்களுக்கோ நனைகள் படைத்திடல் வேண்டும் என்பதே
கவிதையாக வெளியிட காரணம், தனது டய வேண்டும். இதன் காரணமாக மனித ஓர் சிறந்த சமூகம் உருவாக வேண்டும். க்காக காணப்படுகின்றது. இவற்றை சிறப்பாக 1ா கையாளுகின்றனர். அவ்வாறே கவிஞர் - பயன்படுத்தி தனது கருத்தை சிறப்புற ள மையமாக வைத்து அதற்கு இளம் 5 தெரிவிக்கின்றார். இதனால் கவிதையை
இது அமைகிறது. இக்கவிதையின் இறுதியில் கவிஞர் இளைஞர்களை விழித்துப் பாடுவது ஏற்படுத்துகிறது. அதாவது இளைஞர்களை வனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ள்”, "பொறியுங்கள்” என்று கட்டளைகளை னதிலும் ஓர் உறுதியை ஏற்படுத்துவது மும், வசனங்களை சுவைப்பட எழுதியதும் - இளம் சமுதாயத்தினர் சிறகு முளைக்கும் தை தனது கவிதையின்பால் ஈர்த்துள்ளமை
பல் அம்சங்கள்
களை பயன்படுத்துவதன் மூலம் கவிதையை
துக்கப்பட்டதால்
இப்போது -கள்...!
த்தப்பட்டுள்ளதை காணலாம்.
Dளக்காத
க்கள் .......
யை பயன்படுத்தி கவிதையை சிறப்புற அணிகளையும் காணக்கூடியதாகவுள்ளது.
லங்காகவும் றையாகவும்....
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 255
என்ற அடியில் வேர்களை விலங்காகவும், க அதுமட்டுமன்றி இக்கவிதை முழுவதிலும் இள இளம் பூக்களாக உருவகித்துள்ளார் என்பது
அதுமட்டுமன்றி, இக்கவிதையினை வாசிக் வாசிக்கும் கூடிய உணர்ச்சி ஏற்படுகின்றது. - காணப்படுகிறது. இதன் காரணமாக கவிதை சாதனை படைத்திடல் வேண்டும் என்ற உணர்வு மூலமேயாகும்.
நயந்த பகுதியும் காரணமும்
மட்டுவில் ஞானக்குமாரன் என்பவரால் பாடப்பப் நமக்கு அளிப்பதாக உள்ளது. இக்கவிதையின் அனைத்து பாடல் வரிகளும் நயத்தலிற்குரிய
சிறகு முன்.
சின்னப் பூ ஈக்கள் உங்கள்
சிறை செ தயக்கம் கூ
என்ற பாடலடிகள் என்னை மிகவும் கவ நடைபெறும் ஓர் முக்கிய விடயத்தை மேலும் அதாவது சிறுவர்கள் சுதந்திரமானவர்கள், எ இவ்வாறானவர்களை அடக்கி வைத்து அவர் கூட்டத்தினர் காத்திருக்கின்றனர். இவ்வாறான சாதனைப்படைத்தல் வேண்டும் என்ற கருத் மட்டுமன்றி இளம் சமுதாயத்தினருக்கு ஏற்படுத்துவதாகவும் மேற்படி வசனங்கள் அ நயப்பதற்கான காரணங்களாகும்.
கூர்மதி

பாம்புகளை சிறையாகவும் உருவகிக்கிறார். ம் சமுதாயத்தினரை அதாவது சிறுவர்களை
நயத்தலிற்குரியது. கும் போது ஓர் அமைதியான பின்னணியுடன் அதற்கு ஏற்றவாறு கவிஞரின் சொல் வளம் ய வாசிக்கும் தேவையும், கவிஞர் கூறியபடி வும் ஏற்படுவது கவிஞரின் அழகிய சொற்கள்
ட இக்கவிதையானது ஓர் சிறந்த கருத்தை அனைத்து பகுதிகளும் என்னை கவர்ந்தது. து. எனினும்,
ளக்காத பூக்களே [ சிறகுகளை ப்யலாம்
டாது..........
ர்ந்தன. காரணம், இன்றைய சமுதாயத்தில் ள்ள வரிகள் படம்பிடித்துக் காட்டுகின்றன. தையும் படைக்கும் ஆற்றல் உள்ளவர்கள். களின் ஆற்றலை இல்லாதொழிக்கவே ஒரு வர்களின் வலையில் சிக்காமல் தப்பித்து, தை இவ்வரிகள் உணர்த்துகின்றன. அது ஓர் அறிவுறுத்தலாகவும், தைரியத்தை மைகின்றன. இவையே நான் இப்பகுதியை
235

Page 256
11ts)
அகில இல்
தமிழ் மொ தேசிய நிலைப் இறுதிப் பெறு
4. 46 2
236

லங்கைத் Tழித்தின
போட்டிகளின் பேறு - 2010
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 257
1.
மாகாணம் : வட மாகாணம்
இல/ போட்டியாளரது பெயர்
பாடசாலையின்
01 (செல்வி. P. காருண்யா
யாசென். ஜோன் பொள் யாழ்ப்பாணம்
|செல்வி. P. கஸ்தூரி
0)
செல்வி. P. கஜிதா
யா/வேம்படி மகளிர் கல் யாழ்ப்பாணம் யா/மீசாலை வீரசிங்கம் மீசாலை யா/யூனியன் கல்லூரி, தெல்லிப்பளை
செல்வி. K.
சிவகௌரிநாயகி
05
செல்வன். 1. சுயாந்தன் 06 (செல்வன். A. கோகுலன்
வபுதுக்குளம் ம.வித், வ
யா/நெல்லியடி மத்திய நெல்லியடி
யா'ஸ்கந்தவரோதயாக் 4
செல்வன். \ திவாகரன்
03
செல்வி. I. பிரியங்கா
09 செல்வி. T. சாம்பவி
யா/மெதடிஸ்த பெண்கள் பாடசாலை வ/இறம்பைக்குளம் மகள் வவுனியா வ/இறம்பைக்குளம் மக வவுனியா
10 (செல்வி. S. டிலக்ஷினி
செல்வன். S. நிறோஜன்
யா' கரவெட்டி மாணிக்கம்
12)
செல்வன். I. அபிநாத்
| யா/இந்து ஆரம்பப் பாடச்
13 செல்வி. T. கீர்த்தனா
கிளி கிளநொச்சி இந்துக்
14)
|செல்வன் K.வசீகரன்
யா/மானிப்பாய் இந்துக் .
15 (செல்வி. 1. கிருதிகா
மன்/சித்தி விநாயகர் இ கல்லூரி, மன்னார்
16 செல்வி. R. யதுசா
யா/வேம்படி மகளிர் உய பாடசாலை, யாழ்ப்பாணம் மன்/சித்தி விநாயகர் இந் கல்லூரி, மன்னார்
செல்வி, C. செறின் சியாமா
18
செல்வி. Y. வத்சாங்கித |செல்வன். V. வத்சாங்கித
20 |
செல்வி. N. சிமிரா
மன்விபுலானந்தாக் கல் கொ/இந்துக் கல்லூரி, ெ வ/இறம்பைக்குளம் மகள் வவுனியா யா யூனியன் கல்லூரி, தெல்லிப்பளை
யா/செங்குந்தா இந்துக் < யாழ்ப்பாணம்
21
செல்வன். A.
சண்முகப்பிரியன் 22 செல்வன். K. வர்ஜிகன்
கூர்மதி

பெயர்
நிகழ்ச்சி
பிரிவு
நிலை
போட்டி இல.
கோ வித்.,
01
01
01
கட்டுரை வரைதல் (எழுத்து - ஆக்கம்)
லூரி,
02
கட்டுரை வரைதல்
02
ம.வித்.,
05
05
01
தமிழியற் கட்டுரை இலக்கியம் நயத்தல்
07
இலக்கணம்
05
வுனியா
08
திறனாய்வுப் போட்டி
01
ம.விதி.
10
குறுநாடக ஆக்கம்
05
கல்லூரி
| 13
சிறுகதை ஆக்கம்
04
- 02
உயர்தரப்
| 14
சிறுகதை ஆக்கம்
05
01
ரிர் ம.வித்.
15
வாசிப்பு
01
03
ரிர் ம.வித்.
16
வாசிப்பு
02
02
வாசகர் வித்.
1
-4)
03
ஆக்கத்திறன் வெளிப்பாடு
Fாலை
15
பேச்சு
01
01
5 கல்லூரி
19
பேச்சு
03
03
கல்லூரி
22
பேச்சு
05
01
மதுக்
23
பாவோதல்
01
01
ர்தர
24
பாவோதல்
02
03
துக்
27
பாவோதல்
05
03
லூரி
13
01
03
இசையும் அசைவும்
இசை - தனி
காழும்பு
34
02
01
ரிர் ம.வித்.
30
இசை - தனி
03
03
| இசை - தனி
04
03
கல்லூரி,
32
இசை - தனி
05 | 01
237

Page 258
இல. போட்டியாளரது பெயர்
பாடசாலையின் பெய
வ/இறம்பைக்குளம் மகளிர் ம வவுனியா யா/இந்து மகளிர் கல்லூரி
25 (செல்வி. S. பாவனா
யா/வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை, யாழ்ப்பாணம்
26 (செல்வி. K. அபிநயா
யா/வேம்படி tகளிர் உயர்தர பாடசாலை, யாழ்ப்பாணம்
செல்வி. S. லாவண்யா
யா/விக்டோரியாக் கல்லூரி
யா யாழ் மத்திய கல்லூரி யா/யாழ் மத்திய கல்லூரி
29
வவிபுலானந்தா கல்லூரி
யா/சென் ஜோன்ஸ் கல்லூரி
யாழ் இந்துக் கல்லூரி
யா/சாவகச்சேரி இந்துக் கல்லு
மாகாணம் : கிழக்கு மாகாணம்
இல போட்டியாளரது பெயர்
பாடசாலையின் பெயர்
01 செல்வன். R.V. முகம்மது)
மட்/ஹிமுறியா வித்தியாலயம்,
காத்தான்குடி 02 செல்வி. M.M.E.
கமு/அல்-மனார் மத்திய கல்லு பாத்திமா
மருதமுனை 03 (செல்வி. R. அக்ஷனா
திசென் மேரிஸ் கல்லூரி,
திருகோணமலை 04 (சேல்வன். M.A. அம்ஸர்
கமு/அல்-மனார் மத்திய கல்லு
மருதமுனை 05 செல்வி, A. கோபுஜிதா
மட்/வின்சன்ற் பெண்கள் உயர்
பாடசாலை, மட்டக்களப்பு |செல்வி. S. றேச்சள்
மட்சிசிலியா பெண்கள் பாடசா
மட்டக்களப்பு செல்வி M. சதிசா பானு ) சமு/அல் அஸ்ரத் ம. வித்.
இறக்காமம் செல்வி A.VF.ஸஹிரா
| சது'தாருஸ்ஸலாம் ம, வித்பேகம் 09 செல்வி A.S.F, சமீரா
மட்அலிகார் தேசிய பாடசாலை ஏறாவூர்
238

நிகழ்ச்சி
|பிரிவு நிலை
|போட்டி
இல.
வித்.) G33
இசை - குழு !
குழு)
0!
34
இசை - குழு II
திறந்த போட்டி
30
நடனம் - தனி
03
01
37
நடனம் - தனி
04
02
38
05
0!
| நடனம் - தனி
நடனம் - குழு !
G39
குழு!
01
40
01
நாட்டிய நாடகம்
(ஆடல் கதை)
திறந்த போட்டி
G42
இலக்கிய நாடகம்
- 01
திறந்த போட்டி
G43
வில்லுப்பாட்டு
}}
திறந்த போட்டி திறந்த போட்டி
44
விவாதம்
61
45
02
தமிழ் அறிவு வினாவிடை
திறந்த போட்டி
நிகழ்ச்சி
பிரிவு
நிலை
போட்டி இல.
01
T- 01
02
கட்டுரை வரைதல் (எழுத்து - ஆக்கம்)
02
கட்டுரை வரைதல்
02
01
03
கட்டுரை வரைதல்
03
08
ர்,
(4
04
02
கட்டுரை வரைதல் இலக்கியம் நயத்தல் இலக்கணம்
நரப்
06
04
லை,)
07 (இலக்கணம்
03
01
08
திறனாய்வுப் போட்டி
13
03
11
கவிதை ஆக்கம்
04
33
13
கவிதை ஆக்கம்
03
3!
கனி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 259
இல போட்டியாளரது பெயர்
பாடசாலையின் ெ
12
10
|செல்வி K. சௌதாமினி
திஸ்ரீ சண்முகா இந்து மக
கல்லூரி, திருகோணமலை
11 |
செல்வி M.N. அம்னா
அக்/ஆயிஷா பாலிகா ம.வி
அக்கரைப்பற்று
|செல்வி M. நிதர்ஷினி
திசென் மேரிஸ் கல்லூரி,
திருகோணமலை 13 (செல்வன் S. விஹ்ராஜ்
தி இ.கி.ச.ஸ்ரீ கோணேஸ்வ
திருகோணமலை
14 செல்வன் J. சேஷ்யன்
மட்புனித மிக்கேல் கல்வ
மட்டக்களப்பு 15 செல்வி M. அமிர்த நிலா
| மட்களுதாவளை ம. வித்
16 செல்வி 1சாருணி
மட்/வின்சன்ற் பெண்கள் உ
பாடசாலை, மட்டக்களப்பு
17
செல்வி S. சுபானி
மப்களுதாவளை ம. வித்
18 செல்வன் Tகீதபவன்
19 செல்வி Gப்ரணவி
தி/கட்டைபறிச்சான் விபுலா வித்தி தி/ஸ்ரீ சண்முகா இந்த மக கல்லூரி, திருகோணமலை திசென் மேரிஸ் கல்லூரி, திருகோணமலை
திற சண்முகா இந்து மக கல்லூரி, திருகோணமலை திரீ சண்முகா இந்து மக கல்லூரி, திருகோணமலை திஸ்ரீ சண்முகா இந்து மக கல்லூரி, திருகோணமலை
22 செல்வி R.அபிலாஷ்
23 (செல்வி T.டிலக்ஷி
24 (செல்வி T. கிரிஜா
மட்/செங்கலடி மத்திய கல்
25
மட்/சிசிலியா மகளிர் ம. 5
26
27
திஸ்ரீ சண்முகா இந்து மக கல்லூரி, திருகோணமலை தி பெருந்தெரு விக்னேஸ். வித்தி தி பெருந்தெரு விக்னேஸ்வ வித்தி மட் அந்நூர் தேசிய பாடசி
28
29
30 செல்வி W. வசுந்தர
தச்சரணி
திதிஸ்ஸ ம. வித்தி. திருகோணமலை
கூர்மதி 18-CM 013788

யர்
நிகழ்ச்சி
பிரிவு
நிலை
போட்டி இல.
ளிர்
15
வாசிப்பு
01
19
பேச்சு
02 - 1 01
21
பேச்சு
04
IT இ.க.
23
பாவோதல்
0}
02
ரி,
பாவோதல்
02 |
| 01
25
பாவோதல்
03
டயர்தரப்
26
பாவோதல்
(34
01
* 27
பாவோதல்
05
02
னந்தா
29
இசை - தனி
02
02
ளிர்
31 Iஇ:ை
இசை - தனி
04
01
G33
இசை - குழு 1
குழு
03
ளிர்
34
இசை-குழுப்
03
திறந்த போட்டி
ளிர்
35 -
நடனம் - தனி
02
02
ளிர்
36
நடனம்-தனி
03
02
மலூரி
38
நடனம் -தனி
05
03
வித்தி
G41
நாட்டார் பாடல்
| 01
திறந்த போட்டி
ளிர்
G4)
| இலக்கிய நாடகம்
02
திறந்த போட்டி திறந்த போட்டி
பரா ம.
G43
|வில்லுப்பாட்டு
02
பரா ம.
G45
01
தமிழ் அறிவு வினாவிடை முஸ்லிம் நிகழ்ச்சி
திறந்த போட்டி
கலை
G46
[ 01
திறந்த போட்டி
48
வி.பி
01
தமிழ் பேச்சு (சிங்கள மாணவர்)
239

Page 260
மாகாணம் : மேல் மாகாணம்
இல.போட்டியாளரது பெயர்
பாடசாலையின் பெயர்
கம்/அல்-அஸ்ஹர் ம. ம. வித்
01 (செல்வன். R.A.A.
அஹ்பாக்
செல்வி A. சிவரூபினி
கொ/விவேகானந்தாக் கல்லூரி கொழும்பு
06
03 (செல்வி M.S.F. ஸுரயா
களு/பாசியத்துல் நஸ்ரியா மு
வித்தி 04 செல்வி P. சியாமளி
நீர் விஜயரத்தினம் கல்லூரி,
நீர்கொழும்பு
செல்வி J. குகப்பிரியா
கொ/விவேகானந்தாக் கல்லூரி தர்ஷிகா
கொழும்பு |செல்வன், J பிரவீன்
கொ/றோயல் கல்லூரி, கொழு
செல்வன். S. மிருணாளன்
கொ/றோயல் கல்லூரி, கொழு
செல்வன். M.H.M.
நீர் /அல்-பலாஹ் ம. வித்தி, மின்சார்
நீர்கொழும்பு செல்வி J. ஜனனி
கொ/புனித மரியாள் தமிழ் ம.
வித்தி, கொழும்பு 10 செல்வி 6 அர்ச்சனப்
கொ/கணபதி இந்து மகளிர் பிரியா
கல்லூரி
07
செல்வன். R. யாதவன்
நீர் விஜயரத்தினம் கல்லூரி, -
நீர்கொழும்பு 12 செல்வன். P. கஜீவ்
கொ/றோயல் கல்லூரி, கொழு
13
|செல்வி S. நிவேதிதா
கொ/இராமநாதன் இந்து மகளிர்
கல்லூரி, கொழும்பு 14 (செல்வன். M.0. சைபுல்
|கொ/டி.எஸ்.சேனநாயக்கா கல் இஸ்லாம்
கொழும்பு 15 (செல்வன். K. மதுராங்கன் 1 கொ/இந்து கல்லூரி, கொழும்
16 செல்வன். R. பிரதாப்
|பிலி/இரத்மலானை இந்து கல் அர்ஜீன் 17 செல்வி P. ஹம்சத்வனி
கொ/நல்லாயன் மகளிர் ம.வி
கொழும்பு 18 செல்வன், P. சதீஸ்குமார் பிலிஇரத்மலானை இந்து கல்
செல்வன். Y. கிரிசேயோன் கொ/ இந்து கல்லூரி, கொழும்பு 20 (செல்வி 1. யதுநந்தினி
கொ/நல்லாயன் மகளிர் ம.வி
கொழும்பு |21 செல்வி, Iமாதங்கி
கொநல்லாயன் மகளிர் ம.வி
கொழும்பு 22
கொ 'இந்து கல்லூரி, கொழும்பு |23 (செல்வி S. கீர்த்தனா
கொ/ சைவ மங்கையர் வித்தி,
கொழும்பு 24 (செல்வி. S மதுரா
கொ/ சைவ மங்கையர் வித்தி, கொழும்பு
(240)

நிகழ்ச்சி
|பிரிவு
நிலை
போட்டி இல.
01 |
03
(கட்டுரை வரைதல்
| 01 (எழுத்து - ஆக்கம்)
04
4
கட்டுரை வரைதல் இலக்கியம் நயத்தல்
பெ.
05
05
02
தமிழியற் கட்டுரை இலக்கியம் நயத்தல் இலக்கணம்
06
04
02
081 திறனாய்வுப் போட்டி
05
ம்பு
09
குறுநாடக ஆக்கம்
04
01
ம்பு
- 10
குறுநாடக ஆக்கம்
05
03
12
கவிதை ஆக்கம்
05
02
13
சிறுகதை ஆக்கம்
01
14
சிறுகதை ஆக்கம்
02
16 - 1வாக':
வாசிப்பு
0)
01
20
பேச்சு
0)
21
பேச்சு
04
01
லூரி,
-22
பேச்சு
05
02
23
பாவோதல்
03
வரி | 25
பாவோதல்
03
02
த்தி
26
பாவோதல்
04
லூரி
- 27
பாவோதல்
02
29
இசைதன் 30 ) இசை-தனி
த்தி.
01
த்தி,
32 |
| இசைதனி
05
G33
| இசைகுழு!
குழு!
02
| நடனம்-தனி
04
0)
38
நடனம்-தனி
-- 02
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 261
இல. போட்டியாளரது பெயர்
பாடசாலையின் பெ
நீர் விஜயரத்தினம் கல்லூரி, நீர்கொழும்பு கொ/'சைவ மங்கையர் வித்து கொழும்பு களு/அல் பஹ்ரியா மு.ம. 5
3
29
நீர் விஜயரத்தினம் கல்லூரி, நீர்கொழும்பு நீரா விஜயரத்தினம் கல்லூரி, நீர்கொழும்பு கொ/தேவிகா பாலிகா வித்த
30
செல்வி. Kரவினி நிர்மானி
செல்வி. GA.D அனுராதா கம்/டென் பொஸ்கோ ம.வித் டில்றுக்ஷி
மாகாணம் : தென் மாகாணம்
இல போட்டியாளரது பெயர்
பாடசாலையின் பெ
01 (செல்வி M.M.F. நிஸ்கா
கார் நாவின்ன முஸ்லிம் க.வி நாவின்ன
(4
02 செல்வி M.I.F. தஹ்ரா
மாறை அந்-நூர் முஸ்லிம் ம
வித்தி, அக்குரஸ்ஸ 03 (செல்வி M.E.F. பௌசியா கா/நாவின்ன முஸ்லிம் க.வி
நாவின்ன செல்வி F.GF. இர்பானா
மாறை /அந்-நூர் முஸ்லிம் ப
வித்தி அக்குரஸ்ஸ செல்வி M.S.F. ஸப்ரா
கா/உஸ்வத்துன் ஹஸனா 1 செல்வி M.A.F. மின்ஹா
|கா'ஸாஹிரா தேசிய பாடசா
07
செல்வி Y.G உவனி
ஹம்/தெபரவெவ ம.ம, வித் உதித்தரா 08 செல்வன் V.B. சானக
ஹம்/தெபரவெவ ம. ம. விதி லக்ஷான்
05 |
- மாகாணம் : மத்திய மாகாணம்
இல போட்டியாளரது பெயர்
பாடசாலையின் பெ
01
செல்வி N. வினோஜினி -
க/சரஸ்வதி மத்திய கல்லூ
02
செல்வன் S.கஜன்
நு'எல்பியன் த.ம், வித்தி - | 03 செல்வி (.ரதுஷா
க/கதிரேசன் இந்து மகளிர் கல்லூரி, நாவலப்பிட்டி
கூர்மதி.

நிகழ்ச்சி
| பிரிவு
நிலை
போட்டி) இல.
G39 (நடனம்-குழு
குழு
12
(G40
02
நாட்டிய நாடகம் (ஆடல் கதை) |இலக்கிய நாடகம்
பித்தி
G42
03
திறந்த போட்டி திறந்த போட்டி திறந்த போட்டி
G43 (வில்லுப்பாட்டு
03
44
விவாதம்
3
திறந்த போட்டி
வி.பி. 1 02
தமிழ் வாசிப்பு (சிங்கள மாணவர்)
தி
வி.பி. T 02
தமிழ் பேச்சு
ச்சு
{சிங்கள மாணவர்)
பர்
நிகழ்ச்சி
பிரிவு நிலை
போட்டி இல.
த்தி
கட்டுரை வரைதல்
- 02
03
03
கட்டுரை வரைதல்
03
03
பத்தி
இலக்கணம்
03
கவிதை ஆக்கம்
04
02
ம.வித்தி
20
பேச்சு
03
02
லை
பேச்சு
05
49
வி.பி.
தமிழ் உறுப்பெழுத்து (சிங்கள மாணவர்) தமிழ் உறுப்பெழுத்து (சிங்கள மாணவர்)
50
வி.பி
பர்
நிகழ்ச்சி
பிரிவு நிலை
போட்டி இல்.
12
கவிதை ஆக்கம்
05
03
18
பேச்சு
01
03
28
இசையும் அசைவும்
01
0!
241

Page 262
இல போட்டியாளரது பெயர்
பாடசாலையின் பெய
04 செல்வன் R.R. பிரசாந்
கதிரித்துவக் கல்லூரி 05 செல்வன் B. சஞ்ஜெயன்
|க திரித்துவக் கல்லூரி 06 செல்வி பிருந்தா
கபெண்கள் உயர்தரப் பாடச் கண்டி நுடயகம மேற்கு இல.2 த.ம
வித்தி நுஹைலன்ஸ் கல்லூரி, ஹப்
திம்புல்ல த.ம.வி
மா/அந்நூர் மு.ம.வித்தி
கறணபிம றோயல் கல்லூரி
செல்வன் 3. பிரவீன் சிரஞ்ஐய தி சீல்வா செல்வி E.ஷேனிகா நிசாதி
12
நு ஸ்ரீ பாத கல்லூரி
13
கறணபிம றோயல் கல்லூரி
செல்வன் அமில சம்பத் திசாநாயக்க
6.
மாகாணம் : வடமேல் மாகாணம்
இல. போட்டியாளரது பெயர்
பாடசாலையின் பெயர்
செல்வி A.N.F. நுஹா
செல்வி AF. அஸ்மினா
குரு கெகுணகொல்ல தே. பாடசாலை பு:உளுக்காப்பள்ளம் முஸ்லிப் வித்தி புஎருக்கலம்பிட்டி முஸ்லிம் ம
வித்தி புதகழி முஸ்லிம் ம. வித்தி
03 S்
செல்வி B.E. பஸ்ரினா
(4
செல்வி T சரண்யா
05 (செல்வி M.N. நஸ்ஹத்
ஆரா
பு:முதலைப்பாளி முஸ்லிம் ம. வித்தி புமுசல்பிட்டிய முஸ்லிம் வித்
06 செல்வி M.A.F. நுஹா
புமுசல்பிட்டிய முஸ்லிம் வித்
செல்வன் M.K.M. சிஹாப் ஆக்கில்
செல்வி K. ஹாசேக்கா
பு: இந்து தமிழ் ம, வித்தி
குரு மலியதேவ மாதிரி ம.வி
செல்வி P.A மனிஷா பிரசாதன தி சில்வா
10
செல்வி H.M. துலக்ஷி (குருவயம்ப றோயல் கல்லூரி வருணிகா ஹேரத்
242

போட்டி
நிகழ்ச்சி
|பிரிவு
நிலை
இல.
30
03
02
3!
இசைதன் இசை-தனி இசைதனி
(4
02
லை,
32
05 | 33
G4)
| 03
நாட்டிய நாடகம் | (ஆடல் கதை) | நாட்டார் பாடல்
திறந்த போட்டி
டன்
4
02
திறந்த போட்டி திறந்த போட்டி
45
03
தமிழ் அறிவு வினாவிடை |முஸ்லிம் நிகழ்ச்சி
G46
03
திறந்த போட்டி
வி.பி 1 |
47
தமிழ் வாசிப்பு (சிங்கள மாணவர்)
48
விம்.
தமிழ் பேச்சு (சிங்கள மாணவர்)
50
விம்.
தமிழ் உறுட்பெழுத்து) (சிங்கள மாணவர்)
போட்டி இல,
நிகழ்ச்சி
பிரிவு
|நிலை
03 -
கட்டுரை வரைதல்
13
32
2 ம.
07
இலக்கணம்
02
09
குறுநாடக ஆக்கம்
03
15
வாசிப்பு
01
17
3!
01
ஆக்கத்திறன் வெளிப்பாடு
18
பேச்சு
0!
02
தி
24
பாவோதல்
02
32
33
இசைதன்
02
03
த்தி
47
வி.பி !
தமிழ் வாசிப்பு {சிங்கள மாணவர்)
49
தமிழ் உறுப்பெழுத்து) வி.பி 1) 03 (சிங்கள மாணவர்)
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 263
7.
மாகாணம் : வடமத்திய மாகாணம்
இல போட்டியாளரது பெயர்
பாடசாலையின் பெய
01 (செல்வி A. முபாசா
அ அங்குதொச்சிய மு.ம.வி.
மாகாணம் : ஊவா மாகாணம்
இல. போட்டியாளரது பெயர்
பாடசாலையின் பெய
|01 (செல்வி M. வினோதினி |பது பசறை தமிழ் தேசிய
பாடசாலை, பசறை 02
| செல்வி P. டினோஷினி
|பது பூணாகலை தமிழ் ம.வி
03 செல்வன் P பிரவீன்
பகனவரல்லை இல 01 த.
|ப'ஊவா ஹைலண்ட் த.ம. பதுமேயலை தமிழ் வித்தி
3)
04
| செல்வி K. தருஷிதா
செல்வி V.தனுஜா
06
செல்வி R. பவ்யதரணி 37
செல்வி R. ஜெயந்தி as|செல்வி V. தனுஷியா
09 செல்வி S.
பவ்யலோஷினி
| செல்வன் R. ஹர்சான்
|பது/பண்டாரவளை தமிழ் ம. |பசௌதம் தமிழ் . வித்தி |ப'கனவரல்லை இல.03 தமிழ்
வித்தி பது தமிழ் மகளிர் ம, வித்தி பதுளை பது/சரஸ்வதி தேசிய கல்லூ பதுளை பது தமிழ் மகளிர் ம.வித்தி (பதுளை
| 10
11
செல்வி M. கிருபாலனி
|பது தமிழ் மகளிர் ம. வித்தி
பதுளை பது பாரதி தமிழ் ம. வித்தி
ப்
34
|பது/பண்டாரவளை பூணாகல்
தமிழ் {£. வித்தி பது ஊவா விஞ்ஞானக் கல்வி
15 செல்வி WAM. சத்துனி
தில்ஹார
பது/விசாகா மகளிர் ம. வித்த
16 செல்வி நில்கி பாக்யா
உதயகாத்த
கூர்மதி. 19-CM 013788

போட்டி
நிகழ்ச்சி
பிரிவு
நிலை
இல.
(04
04
03
கட்டுரை வரைதல் இலக்கியம் நயத்தல்
போட்டி
நிகழ்ச்சி
பிரிவு
நிலை
இல.
05
03
தமிழியற் கட்டுரை இலக்கியம் நயத்தல்
த்தி
16
வாசிப்பு
02
வித்தி
13
01
02
ஆக்கத்திறன் வெளிப்பாடு
சித்தி
13
பேச்சு
01
03
20
பேச்சு
13
01
வித்தி
15
பாவோதல்
03
03
26
பாவோதல்
04
28
| இசையும் அசைவும்
01
02
| நடனம் - தனி
0}
36
நடனம் - தனி
33
37
நடனம் - தனி
04
01
G39
நடனம் குழு!
குழு
03
G41
நாட்டார் பாடல்
03
திறந்த போட்டி
44
02
விவாதம்
திறந்த
போட்டி தமிழ் உறுப்பெழுத்து (சிங்கள மாணவர்)
ர்
49
02
50
தமிழ் உறுப்பெழுத்து வி.பி 1) 03 (சிங்கள மாணவர்)
243

Page 264
9. மாகாணம் : சப்ரகமுவ மாகாணம்
இல போட்டியாளரது பெயர்
பாடசாலையின் பெயர்
|01
செல்வி A.E. அகிலா
|இ அஸ்ஸலாம் முஸ்லிம் ம. 6
02 (செல்வி S. சம்சாத் பேகம் இ பரியோவான் தமிழ் ம.வித்தி
எம்பிலிபிட்டி |செல்வன் S. தர்ஷன ஸ்ரீ
|கே தெஹியோவிற்ற தமிழ் விர் நாத் | 04 செல்வி R. சுபானி
கே ஸ்ரீ கதிரேசன் தமிழ் ம. வித்
05 செல்வி S. பிரதீபா
கே/தெஹியோவிற்ற தமிழ் வித் 06 (செல்வன் A.M. முஷாரப் (இஜெய்லானி தேசிய பாடசாை 07 செல்வி P. கோசல்யா
இபரியோவான் தமிழ் ம. வித்த எம்பிலிபிட்டி
( 244 )
124)

நிகழ்ச்சி
பிரிவு
நிலை
போட்டி இல.
இத்தி
09
குறுநாடக ஆக்கம்
4
03
10
குறுநாடக ஆக்கம்
0)
02
தி
11
கவிதை ஆக்கம்
04
01
ந்தி
13
சிறுகதை ஆக்கம்
04
03
தி
சிறுகதை ஆக்கம்
05
33
ல்
19
பேச்சு
02
33
21
பேச்சு
(34
02
வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011'

Page 265
அகில இ
தமிழ் மெ தேசிய நிலைப் இறுதிப் பெற
ககூர்மதி.

லங்கைத் ாழித்தின ப போட்டிகளின் jபேறு - 2011
245

Page 266
போ.இல
போட்டியின் பெயர்
நன்?
31
வட:
ஆக்கம் எழுத்து - பிரிவு 1 தரம் : 4, 5 ஆக்கம் எழுத்து - பிரிவு ! தரம் : 4, 6
01
02.
மேல்
03
கிழி.
ஆக்கம் எழுத்து - பிரிவு 1 தரம் : 4, 7
03
ஊளவு
மத்த
|ஆக்கம் எழுத்து - பிரிவு 1
தரம் : 4, 3 கட்டுரை வரைதல் - பிரிவு 2 தரம் : 6, 7 கட்டுரை வரைதல் - பிரிவு 2 தரம் : 6, 8
02
02
மேல்
03
வடலி
கட்டுரை வரைதல் - பிரிவு 2 தரம் : 6, 9
03
31
வடக்
கட்டுரை வரைதல் - பிரிவு 3 தரம் : 3, 9
02 (கிழக்
கட்டுரை வரைதல் - பிரிவு 3 தரம் : 3, 10
03
03 மேல்
கட்டுரை வரைதல் - பிரிவு 3 தரம் - 8, 11
கட்டுரை வரைதல் இலக்கியம் நயத்தல் -1
கசியம் கடத்தல் - 01 ஊவ |பிரிவு 4 தரம்: 10, 11
04
(கட்டுரை வரைதல் இலக்கியம் நயத்தல் -102
பிரிவு 4 தரம் 10, 12
மத்தி
04
கட்டுரை வரைதல் இலக்கியம் நயத்தல் -03 கிழக் |பிரிவு 4 தரம்: 10, 13
03
|தமிழியற் கட்டுரை இலக்கியம் நயத்தல் - 01 (கிழக்
பிரிவு 5 தரம் : 12, 13
05
- தமிழியற் கட்டுரை இலக்கியம் நயத்தல் -102 மத்தி
|பிரிவு 5 தரம் : 12,
03
தமிழியற் கட்டுரை இலக்கியம் நயத்தல் - 03 |பிரிவு 5 தரம் : 12,
246
-கல்

மாகாணம்
பாடசாலையின்
| போட்டியாளரின் பெயர்
பெயர்
நகு
செல்வி. P. எடின்ஷிகா செல்விMI.N.தபான்
முல்யோகபுரம் ம.வி.மல்லாவி (கம் 'முஸ்லிம்
பாலிகா வித்தி. கஹட்டோவிட்ட மட்/வின்சன்ட் மகளிர் உ.பா. மட்டக்களப்பு பதமிழ் மகளிர் ம.வி. பதுளை
க்கு
செல்வி.P.சங்கர்
செல்வி.T.தஸ்மிதா
ஹஹைலன்ட்ஸ்
|செல்வன். ம.க. ஹட்டன்
|S.அனந்ததர்ஷன் |பிலிபரிதோமாவின் செல்வன், அபுனாப்
கல்லூர், பிலியந்தலை பு:பாத்திமா
செல்வி. மு.ம.வி. புத்தளம்
|M.S.F.சம்ரத் தீனா
மேல்
யா அருணோதயாக் (செல்வி. கல்லூர்,
[R.உமையாளினி அளவெட்டி
திபாத்திமா
மு.மகளிர் ம.வி. மூதூர்
செல்வி. |A.J.ஸியானத்
பானு
கொ/புனித பிறிட்ஜட்ஸ் க.ம். கொழும்பு
செல்வி, 1.பிறிஸ்கா
!
|ப அல். அதான் முஸ்லிம் வி. பதுளை
செல்வி. MN.சஸ்னா
பர்வீன்
செல்வி, S.ரிஷானி
ஹஹைலன்ட்ஸ் ம.க. ஹட்டன்
மட் அல் அமீன் மகா வி. காத்தான்குடி
(செல்வி. |M.J.பாத்திமா
ஷப்னா
மட்காத்தான்குடி மத்திய க. காத்தான்குடி
செல்வி. AL.பாத்திமா றிஸ்னா
க கதிரேசன்
செல்வி. மத்திய கல்லூரி
|S.மதிவதனா கம்பளை ព្រល់
செல்வி. புதுக்குடியிருப்பு
A.மனுஜான்சி |ம.க. முல்லைத்தீவு
தி
7 அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 267
போ.இல
போட்டியின் பெயர்
நி ை
06
இலக்கணப் போட்டி - பிரிவு 4 தரம்: 10, 11
06
இலக்கணப் போட்டி - பிரிவு 4 தரம்: 10, 11
06
03
இலக்கணப் போட்டி - பிரிவு 4 தரம் 10, 11
07
(இலக்கணப் போட்டி - பிரிவு 5
தரம்: 12, 13
07
02
(இலக்கணப் போட்டி - பிரிவு 5
தரம். 12, 13
07
33
இலக்கணப் போட்டி - பிரிவு 5 தரம்: 12, 13
08
திறனாய்வுப் போட்டி - பிரிவு 5 தரம் 12, 13
08
02
திறனாய்வுப் போட்டி - பிரிவு 5 தரம்: 12, 13
திறனாய்வுப் போட்டி - பிரிவு 5 தரம்: 12, 13
09
குறுநாடக ஆக்கம் - பிரிவு 4 தரம் 10, 11
09
02
குறுநாடக ஆக்கம் - பிரிவு 4 தரம்: 10, 11
09
குறுநாடக ஆக்கம் - பிரிவு 4 தரம்: 10, 13
: : : : : : :
குறுநாடக ஆக்கம் - பிரிவு 5 தரம் 12, 13
10.
02
குறுநாடக ஆக்கம் - பிரிவு 5 தரம்: 12, 13
10
குறுநாடக ஆக்கம் - பிரிவு 5 தரம் 12, 13
கவிதை ஆக்கம் - பிரிவு 4 தரம்: 10, 11
கூர்மதி.

ல
மாகாணம்
பாடசாலையின் போட்டியாளரின்
பெயர்
பெயர்
மேல்
செல்வி. N. திவ்யா
நிவிஜயரத்தினம்)
இந்து ம.வித். கொழும்பு
வெடக்கு
யா/வட, இந்து மகளிர் க. பருத்தித்துறை
செல்வி K. கீதாஞ்சனா
இளவா
செல்வி.I. அஸ்மா
ப ஊவா விஞ்ஞானக் க.
ஹா-எல
மேல்
நீவிஜயரத்தினம்
இந்து ம.வித். கொழும்பு
செல்வி. P சியாமளி
கிழக்கு
செல்வி. R. சுஜீதா
கழுகார்மேல் பற்றிமாக் க. கல்முனை
வடக்கு
மன்' சித்திவிநாயகர் செல்வி.
இ.க. மன்னார்
1.ஜெயகலா
வடமத்தி
செல்வி.T.நஜீபா இக்கிரிகொல்லாவ
மு.ம.வி. வஹமல்கொல்லாவ
தென்
காஸாஹிறா தேசிய பா. கிந்தோட்டை
செல்வி. M.S.S.சட்ண
வடக்கு
செல்வன். 1.ஜனார்த்தகன்
முல்மல்லாவி மத்திய க. மல்லாவி
அகலாவெவ
மு..ம.வி. விஜிதபுர
வடமத்தி
செல்வி.
M.S.மனாஸிலா
வடக்கு
செல்வி. P.அஜித்தா
கிளிகிளிநொச்சி மத்திய க. கிளிநொச்சி
திவா
செல்வி.S.பிரியா
பகோணகலை த.வி. பசறை
வடக்கு
செல்வி R.மைதிலி
யா:உடுப்பிட்டி [[களிர் க. பருத்தித்துறை
தென்
செல்வி, M1.GF.ஹாஜ
காஉஸ்வதுன் ஹஸனா [.வி. கால் இபரியோவான் த.ம.வி. இறக்குவானை
சப்ரகமுவ
செல்வி. K.ஜெயலக்ஷ்மி
தென்
மாறை அறபா தேசிய பா, வெலிகம
செல்வி. |M.NEபஸ்
( 247 )

Page 268
போ. இல
போட்டியின் பெயர்
நிலை
1!
32
கவிதை ஆக்கம் - பிரிவு 4 தரம்: 10, 11
கவிதை ஆக்கம் - பிரிவு 4 தரம் 10, 11
கவிதை ஆக்கம் - பிரிவு 5 தரம் 12, 13
13
கவிதை ஆக்கம் - பிரிவு 5 தரம்: 12, 13
13
கவிதை ஆக்கம் - பிரிவு 3 தரம்: 12, 15
சிறுகதை ஆக்கம் - பிரிவு 4 தரம் 12, 13
13
சிறுகதை ஆக்கம் - பிரிவு 4
தரம் 12, 13
13 -
சிறுகதை ஆக்கம் - பிரிவு 4 தரம்: 12, 13
சிறுகதை ஆக்கம் - பிரிவு 5 தரம்: 12, 13
14
02
சிறுகதை ஆக்கம் - பிரிவு 3 தரம்: 12 13
14)
13
சிறுகதை ஆக்கம் - பிரிவு 5 தரம்: 12, 13
14
சிறுகதை ஆக்கம் - பிரிவு 5 தாம்: 12, 13
வாசிப்பு - பிரிவு 1 தரம்: (04, 05
15
வாசிப்பு - பிரிவு 1 தரம்: 04, 05
15
3)
வாசிப்பு - பிரிவு 1 தரம் : 04, 05 வாசிப்பு - பிரிவு 1 தரம்: 04, 05
15
15 -
வாசிப்பு - பிரிவு ? தரம்: 06, 07
248

மாகாணம்
பாடசாலையின் போட்டியாளரின்
பெயர்
பெயர்
வா
பரீ
வடமேல்
குளி
கிழக்கு
அதன்
மேல்
தென்
செல்வி.A. ஏன்சி இராமகிருஷ்ணா க. பிரதீகா லுணுகலை
செல்வி. கொட்டம்பபிடிய
S.M.Eஸானாஸ் மு.மி.வ ஹெட்டிபொல திஸ்ரீ
செல்வி. N.சதுஜா இராமகிருஷ்ணா க. அக்கரைப்பற்று மாறை அந்-நூர்
செல்வி. மகளிர் ம.வி.
(M.1.F.இர்பானா தெனிப்பிட்டிய களு அல்
செல்வி. மஸ்ரா ம.க
M.I.M. இம்தாத் களுத்துறை காதுந்துவ
செல்வி, முஸ்லிம் ம.வி.
M.AE.அஷ்ரபா துந்துவ
அ
செல்வி, R.சப்னா இக்கிரிகொல்லாவ
மு.ம.வி. வஹமல்கோல்லாவி இஇந்துக் கல்லூரி செல்வி, S.சாதுலா பலாங்கொடை
மாறை அறபா
செல்வி. தேசிய பா.
M.H.F.ஹுஸ்னியா | வெலிகம
இ அல் மக்கியா
செல்வ. மு.ம.வி.
S.A.Eாப்ரா இரத்தினபுரி கொநல்லாயன்
செல்வி. Rடிலானி மகளிர் ம.வி கொழும்பு ப'நிவ்டேர்க் த.ம.வி செல்வி. S.சத்திய ପ୍ରଶ୍ନ)
லோஜனி
வடமத்தி
சப்ரகமுவ
தென்
சப்ரகமுவ
மேல்
வா
மத்திய
வடமேல்
வஹ ஹைலன்ட்ஸ்
செல்வி. ம.க ஹட்டன்
விக்காஷன்
குஅல்- இபான்
செல்வி. .க
|M.AEஹம்தா பொல்கஹவெல . இஹிதல்லன த.வி செல்வி. Rதினுஷா
இரத்தினபுர் திஸ்ரீ சண்முக இ.
|செல்வி. மகளிர் க.
|S.அபிஷேகா திருகோணமலை
அஜித்
சப்ரகமுவ
கிழக்கு
மேல்
செல்வி. R.அம்ரிதா
கொநல்லாயன் - கன்னி.. மி, கொழும்பு
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 269
போ. இல
போட்டியின் பெயர்
நிை
18
வாசிப்பு - பிரிவு 2 தரம்: 06, 38
32
03
வாசிப்பு - பிரிவு 2 தரம்: 06, 08
3!
ஆக்கத்திறன் வெளிப்பாடு - பிரிவு ! தரம்: (04, 05
(02
ஆக்கத்திறன் வெளிப்பாடு - பிரிவு 1 தரம்: 04, 05
17
03
ஆக்கத்திறன் வெளிப்பாடு - பிரிவு ! தரம்: 04, 07
18
பேச்சு - பிரிவு ! தரம்: 04, 05
{8
பேச்சு - பிரிவு 1 தரம்: 04, 05
48
பேச்சு - பிரிவு 1 தரம்: 34, 37
பேச்சு - பிரிவு 2 தரம்: 36, 37
02
பேச்சு - பிரிவு 2 தரம்: 06, 07
பேச்சு - பிரிவு 2 தரம்: 06, 07
20
01
20
0)
பேச்சு - பிரிவு 3 தரம்: 38, {}9 பேச்சு - பிரிவு 3 தரம்: 08, 10 பேச்சு - பிரிவு 3 தரம்: 38, 11
பேச்சு - பிரிவு 4 (தரம்: 10, 11
0!
: - - - -
31
(பேச்சு - பிரிவு 4
தரம்: 10, 11
பேச்சு -- பிரிவு 4 தரம் 10, 11
21
பேச்சு - பிரிவு 4 தரம்: 10, 11
கூர்மதி.

மாகாணம்
பாடசாலையின் போட்டியாளரின்
பெயர்
GLUT
சப்ரகமுவ
மத்திய
வடக்கு
மத்திய
வடமேல்
இஸ்பரிங்வூட்
செல்வி, த.வி
S.சுதர்ஷிகா இறக்குவானை நுஹோல்புரூக்
|செல்வி. P.கருணியா த.ம.வி அக்கரப்பத்தனை வதனிக்குளம்
செல்வி. Sகஸ்மிதா கணேஸ் வி. வவுனியா பார்கேபல் த.வி.
செல்வன். கெட்டபுலா
M.லோகதர்ஷன் புதாராக்குடிவில்லு செல்வி.
மு.மி.வி.
M.E.Fநப்ரினா அகுணுவில் கமுகண்ணகி
|செல்வி. Rசனுஜா இந்து வி. கல்முனை கொ/கொழும்பு இ. செல்வன். கல்லூரி கொழும்பு 3.தனுஷன்
கிரி அறக்கியால்
செல்வன். மு.ம.வி
1.M. இன்சாப் அறக்கியால கிளி திருவையாறு செல்வி.M.அபிராமி £கர வி. கிளிநொச்சி - இபுனித ஜோக்கிம் செல்வி. J.கவிஷலா த.வி இரத்தினபுரி
கிழக்கு
மேல்
வடமேல்
வடக்கு
சப்ரகமுவ
வடமத்தி
மத்திய
அ
செல்வன். கஹடகஸ்திகிலிய (A.S.நிசாத் கஷ்ட
மு.மவி கஹடகஸ்திகிலிய
ஹஹைலன்ட்ஸ் (செல்வி. K.ரஜீவா ம.க ஹெட்டன் முல்செம்மலை
செல்வி.K. நிதர்சனா மகா வி மல்லாவி மட்/அல் அமீன்
செல்வி. ம.வி காத்தான்குடி
|H.MF.சேஹா
வடக்கு
கிழக்கு
கிழக்கு
மட்/புனித சிசிலியா செல்வி. ம.ம.வி
MI..D.மதுஷகா மட்டக்களப்பு
மேல்
புனித
ஆசீர்வாதப்பர் க. கொழும்பு
செல்வன். அன்ரூ அஜித்
வடமேல்
முஸ்லிம் ம.வி.
செல்வன், S.M. உளுக்காட்பள்ளம் 1இன்சாம்
வடக்கு
மன்' சித்திவிநாயகர்
செல்வி. I. இ.க மன்னார்
கிருப்திகா
249

Page 270
போ. இல
போட்டியின் பெயர்
நிலை
22
01
பேச்சு - பிரிவு 5 தரம்: 12, 13
22
02
பேச்சு - பிரிவு 5 தரம்: 12, 13
22
03
பேச்சு - பிரிவு 3 தரம் 12, 13
23
1ெ
பாவோதல் - பிரிவு 1 தரம்: 04, 05
23
|பாவோதல் - பிரிவு 1
தாம்: 04, 05
23
பாவோதல் - பிரிவு 1 தரம்: 64, 05 |பாவோதல் - பிரிவு 2
தரம்: 06. 07
24
}}
02
24.
== * - * - * - * - * - * * *
பாவோதல் - பிரிவு 2 தரம்: 06, 07 |பாவோதல் - பிரிவு 2
தரம்: 06, 07 பாவோதல் - பிரிவு 3 தரம் -
25
25
025
பாவோதல் - பிரிவு 3 தரம்: 08, 11 பாவோதல் - பிரிவு 3 தரம்: 09, 09
25
26
3!
பாவோதல் - பிரிவு 4 தரம்: 10, 11
26
1)
|பாவோதல் - பிரிவு 4
தரம்: 10, 13
25
033
பாவோதல் - பிரிவு 4 தரம்: 10, 11
27
01 |
பாவோதல் - பிரிவு 3 தரம்: 12, 13
03 8
பாவோதல் - பிரிவு 3 தரம் 12, 13 பாவோதல் - பிரிவு 3 தரம்: 12, 13
27
03
28
G[க
(இசையும் அசைவும் - பிரிவு 1
தரம்: 04, 05
250

மாகாணம்
பாடசாலையின் போட்டியாளான்
பெயர்
பெயர்
மேல்
றோயல் கல்லூரி,
செல்வன் B. கொழும்பு
அஜன்
மத்திய
வடக்கு
கரீ
செல்வன் R. இராமகிருஷ்ணா
ராஜ்துசன் ம.க கலகா வ/இறம்பைக்குளம் செல்வி.S.சாருகா மகளிர் ம.வி. வவுனியா யாசென்.ஜோன் -
|செல்வி A. ஆரபி பொஸ்கோ
யாழ்ப்பாணம்
வெடக்கு
கிழக்கு
செல்வன் Mபுருசோத்மன்
மத்திய
செல்வி C.ரதுஷா
கமுகர்மேல் பற்றிமாக் க. கல்முனை கதிரேசன் இ.ம.க நாவலப்பிட்டிய கமுகார்மேல் பற்றிமாக் க. கல்முனை
கிழக்கு
செல்வி S.பிர்யஞ்சனா
மேல்
மத்திய
Sழக்கு
படமேல்
பிடக்கு
டக்கு
ழக்கு
கொநல்லாயன்
செல்வி ம.ம.க.வி கொழும்பு|M இலட்சியா கதிரேசன் இ.க
|செவ்வி நாவலப்பிட்டிய ,
Pபவதாரணி மட்/புனித மிக்கேல் செல்வன் J. கல்லூரி
சேஷபன் மட்டக்களப்பு புஇந்து தமிழ்
செல்வி K.கவிதா மவி புத்தளம் யா/மானிப்பாய்
செல்வி A. மகளிர் க,
அமிர்தவர்ஷினி மானிப்பாய்
யா/வேம்படி மகளிர் செல்வி S.சாரங்கா 2.பா. யாழ்ப்பாணம் கடிகார்மேல்
செல்வி P. பற்றிமாக் க,
டினோஜா கல்முனை
கொ
செல்வி S.ஷியானி சைவமங்கையர் வித்தி, கொழும்பு யா/மானிப்பாய்
செல்வி R. மகளிர் க.
மேரு3ெ7 மானிப்பாய் கொநல்லாயன்
செல்வி S. ம.ம.வி கொழும்பு ஜெயந்தினி திசென்மேரிஸ் |
செல்வி S. கல்லூரி
திவ்யஹேஷினி திருகோணமலை மட்/புனித சிசிலியா செல்வி A. ம.ம.வி
றோமிக்கா மட்டக்களப்பு
மல்
டக்கு
மல்
ழக்கு
ழக்கு
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 271
போ. இல
போட்டியின் பெயர்
நி)
இசையும் அசைவும் - பிரிவு 1 தரம்: (04, 05
இசையும் அசைவும் - பிரிவு 1 தரம்: 04, 05 இசை - தனி - பிரிவு 2 தரம்: 06, 07
19
29
இசை - தனி - பிரிவு 2 தரம்: 06, 07 இசை - தனி - பிரிவு 2 தரம்: 06, 07
19
30
இசை - தனி - பரிவு 3 தரம்: 08, 09
30
இசை - தனி • பிரிவு 3 தரம்: 08, 09
30
இசை - தனி - பிரிவு 3 தரம்: 08, 09
இசை - தனி - பரிவு 4 தரம்: 10, 11
31
இசை - தன் - பிரிவு 4 தரம்: 10, 11 இசை - தனி - பிரிவு 4 தரம்: 10, 11 இசை - தனி - பிரிவு 3 தரம் 12, 13
32
32
இசை • தனி - பிரிவு 3 தரம்: 12, 13
இசை - தனி - பிரிவு 3 தரம்: 12, 13
G 33
இசை - குழு ! தரம்: 06, 07, 03, 09 இசை - குழு 1 துரம்: 06, 37, 38, 09
G 33
G 33
இசை - குழு ! தரம் 06,07,08, 09 இசை - குழு II தரம்: 10, 11, 12, 13
G34
G 34
இசை - குழு I தரம்: 10, 11, 12, 14
கூர்மதி.


Page 272
போ. இல
போட்டியின் பெயர்
நிலை
G 34
03
(இசை - குழு II
தரம்: 10, 11, 12, 13
35
நடனம் - தன் - பிரிவு 2 தரம்: 06, 07
02 1;
நடனம் - தனி • பிரிவு 2 தரம்: 06, 07
03 |
நடனம் - தன் - பிரிவு 2 தரம்: 06, 07 நடனம் - தனி - பிரிவு 3 தரம்: 08, 09 நடனம் - தனி - பிரிவு 3 தரம்: 03, 09
8)
க
நடனம் - தனி - பிரிவு 3
தரம்: 08, 09
37 - -
01
நடனம் - தனி - பிரிவு 4 தரம்: 10, 11
நடனம் - தனி - பிரிவு 4 தரம் 10, 11 நடனம் - தன் - பிரிவு 4 தரம்: 10, 11
கி
01
நடனம் - தனி • பிரிவு 3 தரம்: 12, 13
நடனம் - தனி - பிரிவு 5
தரம்: 12, 13
G39
01 |வ
நடனம் - தனி - பிரிவு 5 தரம்: 12, 13 நடனம் - குழு 1 தரம்: 04, 05, 06, 07, 08, 09 நடனம் • குழு ! |தரம்: 4, 35, 36, 37, 38, 09
நடனம் - குழு ! தரம்: 4, 05, 06, 07, 0s, 09
G39
02
G39
03 அ
G40
வ
G40
02
ே
நாட்டிய நாடகம் (ஆடல் கதை) நாட்டிய நாடகம் (ஆடல் கதை) நாட்டிய நாடகம் (ஆடல் கதை)
G4)
03 (கி
252

மாகாணம்
பாடசாலையின்
போட்டியாளரின் பெயர்
பெயர்
மத்திய
வடக்கு
கிழக்கு
fல்
மல்
மடக்கு
ழெக்கு
கொட்டகலை
குழு த.ம.வி கொட்டகலை யா/கொக்குவில்
செல்வி P. இந்துக் க..
கஜேந்தினி கொக்குவில் கமுகர்மேல்
செல்வி G. பற்றிமாக் க,
கிருஷாகரி கல்முனை
கொ/இராமகிருஷ்ணர் செல்வி M. வித்தி, கொழும்பு (நிரோஷினி கொ 'இராமநாதன்
|செல்வி K யுவர் இ.ம.க கொழும்பு யா/கொக்குவில்
செல்வி J, இந்துக் க.
சுபானுஜா கொக்குவில் மட்மத்திய
செல்வி S. கிஷானி கல்லூரி, செங்கலடி
யா/வேம்படி மகளிர் செல்வி V ஸ்ரீதரா உபா,
யாழ்ப்பாணம் கொ 'இராமநாதன் (செல்வி R. இ.ம.க கொழும்பு கேதீஸ்வரி திர் சண்முக
செல்வி S. சோபிகா ஆ. மகளிர் க. திருகோணமலை
யா/இணுவில்
செல்வி V. வானதி மத்திய க. இணுவில்
தி ஸ்ரீ சண்முக இ.
செல் மகளிர் க.
லக்ஷனா திருகோணமலை நீா விஜயரத்தினம்
செல்வி V நர்மதா இ.ம.க நீர்கொழும்பு வஇறம்பைக்குளம் குழு மகளிர் ம.வித்தி
டக்கு
மல்
ழக்கு
டக்கு
முழுக்கு
ல்
டக்கு
த்திய
17
டக்கு
ஹைலன்ட்ஸ் ம.க குழு
ஹட்டன் பபண்டாரவளை
குழு த.ம.க பண்டாரவளை யா/இணுவில்
குழு மத்திய க. இராமநாதன் இ.ம (குழு கல்லூரி கழுகார்மேல் குழு
பற்றிமா க. கல்முனை
ல்
ழக்கு
கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 273
போ.இல
போட்டியின் பெயர்
G40
நாட்டிய நாடகம் (ஆடல் கதை
G41
|நாட்டார் பாடல்
G41
நாட்டார் பாடல்
64]
நாட்டார் பாடல்
03
G42 மேடை நாடகம்
G42 மேடை நாடகம்
G42
மேடை நாடகம்
G43
வில்லுப்பாட்டு
G43
வில்லுப்பாட்டு
G43
வில்லுப்பாட்டு
G43
(வில்லுப்பாட்டு
03
G44
விவாதம்
G44
விவாதம்
02
G44
விவாதம்
03
G45
தமிழறிவு வினா விடை
31
தமிழறிவு வினா விடை
G45 |தமிழறிவு வினா விடை
G45 முஸ்லிம் நிகழ்ச்சி
G45 (முஸ்லிம் நிகழ்ச்சி
கூர்மதி

மாகாணம்
பாடசாலையின் போட்டியாளரின்
பெயர்
பெயர்
கிழக்கு
-(குழு
கிழக்கு
குழு
கமுகார்மேல் பற்றிமா க, கல்முனை
அக'முஸ்லிம் மத்திய க.
அக்கரைப்பற்று மு/கள்ளப்பாடு அ.த.க.பா.
வடக்கு
குழு
மத்திய
கவரவில த.ம.வி சாமிமலை
குழு
வடக்கு
கிழக்கு
வவிபுலானந்த க. (குழு வவுனியா திஉவர்மலை
குழு விவேகானந்தாக் கல்லூரி இந்து தேசிய
குழ கல்லூரி புஸ்ஸல்லாவ
யாசென். ஜோன்ஸ் குழு
மத்திய
வடக்கு
5,
மேல்
வா
கிழக்கு
மேல்
வடமேல்
கிழக்கு
விஜயரத்தினம்
குழு இ.ம். கல்லூரி பரொக்கத்தன்னை
(குழு தவி ஹாலி-எல மய்மகா
குழு வித்தியாலயம், செட்டிபாளயம் பரிதோமாவின்
குழு கல்லூரி சிலா நஸ்ரியா ம.க குழு சிலாபம் திஇ.கி.ச. ஸ்ரீ
குழு கோணேஸ்வரா
இ.க. திருகோணமலை கமுகார்மேல்
1குழு பற்றிமாக் கல்லூரி, கல்முனை
யா'விக்னேஸ்வராக் குழு கல்லூரி
கே/அல் அகீல்
குழு மு.ம.வி. கொட்டியாகும்புர டி.எஸ்.
குழு சேனநாயக்க கல்லூரி , கொழும்பு
அக முஸ்லிம்
குழு மத்திய க.
அக்கரைப்ற்று
கிழக்கு
வடக்கு
சப்ரகமுவ
மேல்
கிழக்கு
253

Page 274
போ. இல
போட்டியின் பெயர்
நிலை
G45
|முஸ்லிம் நிகழ்ச்சி
சிங்கள மாணவர்களுக்கான தமிழ் வாசிப்பு - விசேட பரிவு 1
சிங்கள மாணவர்களுக்கான தமிழ் வாசிப்பு - விசேட பரிவு I
47
13
சிங்கள மாணவர்களுக்கான தமிழ் வாசிப்பு - விசேட பரிவு 1
8
சிங்கள மாணவர்களுக்கான தமிழ் வாசிப்பு - விசேட பரிவு II
02
03
சிங்கள மாணவர்களுக்கான தமிழ் வாசிப்பு - விசேட பரிவு II சிங்கள மாணவர்களுக்கான தமிழ் வாசிப்பு - விசேட பரிவு II (சிங். மாண. தமிழ் உறுப்பமைய
சொல்வதெழுதல் வி. பி 1 தரம்: 06.07
3!
02
சிங், மாண. தமிழ் உறுப்பமைய சொல்வதெழுதல் வி, பி 1 தரம்: 06,07 சிங். மாண. தமிழ் உறுப்பமைய சொல்வதெழுதல் வி. பி 1 தரம்: 06,07
03
49
சிங். மாண. தமிழ் உறுப்பமைய சொல்வதெழுதல் ப 2 தரம் 08.09
சிங். மாண. தமிழ் உறுப்பமைய சொல்வதெழுதல் : 2 தரம்: 08,09
403 III
(சிங், மாண. தமிழ் உறுப்பமைய |சொல்வதெழுதல் பி 2 தரம். 08,09
(254

மாகாணம்
| பாடசாலையின் போட்டியாளரின்
பெயர்
பெயர்
தென்
குழு
மாறை 'அந்நூர் மகளிர் ம.வி. தெனிபிட்டிய பலுணுகலை
ம.ம.வி பசறை
ஊவா
செல்வி S. ரசாங்கி சந்தருவனி
மதன்
மாறை கீ.
செல்வி R.G. அபேவிக்ரம் தே.பா. காஞ்சனாசெவ்வந்தி மொரவக்க
fாகஐனகம் ம.வி
செல்வி WVG தீபேந்தியெல்ல
தினுஷா லக்மாலி
வடமேல்
வடமேல்
சிலாகார்மேல்
செல்வி W. மரிய (மகளிர் க. சிலாபம் டிலூஜனி
பெர்ணாந்து மீலுணுகலை
செல்வி EM. ம.ம.வி பசறை
கவிந்தி நிவர்த்தனா
வா
மத்திய
தென்
சப்ரகமுவ
மத்திய
கபெண்கள்
செல்வி F ஹசினி உயர்தர பா. கண்டி இமல்கா
ஹ தெபரவெவ
செல்வி AIR. ஜனாதிபதி க.வி
தெவ்மினி அனுபமா திஸ்ஸமகாராம் கேசாந்த ஜோசப்
செல்வி SUN ம.ம.வி கேகாலை
ஜயதிலக கறணபிம றோயல் செல்வன் RGVRB கல்லூரி
ரத்னாயக பேராதனை இ பர்குசன்
செல்வி KED. பெண்கள் உ.பா.
விந்தயா பிரபாவி இரத்தினபுரி கொ தேவிபாலிகா
செல்வி HDRN. ம.வி. கொழும்பு |
குருகுலாதித்ய கறணபிம றோயல் செல்வன். UPCDel கல்லூரி
சில்வா பேராதனை
சப்ரகமுவ
மல்
த்திய
| கல்வி அமைச்சின் தமிழ்மொழிக் கல்விச் சஞ்சிகை 2011

Page 275
நன்றி!
கல்வி அமைச்சின் தமிழ் மொழி அலகின இம்முறையும் வெகுசிறப்பாக புது மெரும் அடைகின்றோம். இவ் வேளையில் இச்சஞ்சி அனைவருக்கும் நன்றி நவில வேண்டியது எப் இம்முறையும் இக் கல்விச் சஞ்சிகையை வெ ஜனாதிபதி அவர்கட்கும், கல்வி அமைச்சர் பிரதிக் கல்வி அமைச்சர் கௌரவ காமினி | கல்வி அமைச்சின் செயலாளர் திரு. எச்.எம்.குண மேலும் இந்த சஞ்சிகையை வெளியீடு செய் ஒத்துழைப்பையும் தந்துதவிய மேலதிக செய திரு.எஸ்.யூ. விஜயரட்ண, ஜனாப் க. முஹம்மட் பிரிவின் பணிப்பாளர் திரு.எஸ்.எல்.எம்.டி. வெளியீட்டிற்காக எமக்கு ஒத்துழைப்பையும் பாடசாலைகள் அபிவிருத்தி பிரிவின் பணிப்பா நன்றிகள் உரித்தாகட்டும். மேலும் நல்லூக்கம் | பிரிவு பணிப்பாளர் ஜனாப். இஸ்ட் தாஜுடீன் மற் பிரிவு பணிப்பாளர் திருமதி. எம்.சபாரஞ்சன் அவ அத்துடன் இச்சஞ்சிகையின் தரத்தை ஆய்வுக்கட்டுரைகளையும் வழங்கிய பேராசிரியர் விரிவுரையாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். மேலும் ஆக்கங்களை ஒப்பு நோக்கி 6 நல்கிய ஓய்வுபெற்ற பேராசிரியர் சோ. சந்திர மொழிப்பிரிவின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் கல்வி வெளியீட்டுத் திணைக்கள பிரதிக் கல் அவர்கட்கும் சமயம் மற்றும் விழுமியங்கள் | இதயராஜா அவர்கட்கும், அபிவிருத்தி உதவியாள அவர்களுக்கும், சட்டத்தரணி திரு. இரா. ச அத்துடன் அட்டைப்படத்தை வடிவமைப்பு | திரு.எஸ்.அனுர்ஜன் அவர்களுக்கும் கணனி பாடசாலைகள் பிரிவு அபிவிருத்தி உதவியால் பக்க வடிவமைப்பு செய்த ஜனாப் எஸ். ஏ. ஜெசி இச் சஞ்சிகையை அழகுற அச்சிட்டுத்தந்த 8 நன்றிகள். 2011 ஆம் ஆண்டின் கூர்மதி சஞ்சிகையில்
வீரகேசரி பத்திரிகையின் வெளியீடான கலை வெளியீடு என்பவற்றிலிருந்து எடுக்கப்பட்டவை தெரிவித்துக்கொள்கின்றேன். மேலும் இச் சஞ்சிகையின் வெளியீட்டிற்காக 9 சகலருக்கும் எனது உளமார்ந்த நன்றியை க6 தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகி
தமிழ் மொழிப்பிரிவு கல்வி அமைச்சு இசுருபாய பத்தரமுல்லை
கூர்மதி.

நவிலல்
ல் வெளியிடப்படும் சஞ்சிகையான கூர்மதி தடன் வெளிவருவதையிட்டு பெருமகிழ்ச்சி கையின் ஆக்கத்திற்கு அருந்துணை புரிந்த து பணியாகும். ளியிடுவதற்கு அனுமதி வழங்கிய அதிமேதகு கெளரவ பந்துல குணவர்தன அவர்கட்கும் விஜித விஜயமுனி த சொய்சா அவர்கட்கும் சேகர அவர்கட்கும் எமது நன்றிகள் உரித்தாகுக. ய பல வழிகளிலும் ஆலோசனைகளையும், லாளர்கள் திரு.எச்.யூ.ஹேமந்த பிரேமதிலக்க, தம்பி, தேசிய மொழிகள் மற்றும் மானுடவியல் பியசேன அவர்களுக்கும் சஞ்சிகையிைன் ஊக்குவிப்பையும் வழங்கிய தமிழ் மொழிப் ளர் திரு.எஸ். முரளிதரன் அவர்கட்கும் எமது வழங்கிய முஸ்லீம் பாடசாலைகள் அபிவிருத்தி றும் பெருந்தோட்ட பாடசாலைகள் அபிவிருத்திப் பர்களையும் நன்றியுடன் நினைவு கூறுகின்றேன். ( மெருகூட்ட சிறந்த ஆக்கங்களையும் Tகள், கல்விப் பணிப்பாளர்கள், எழுத்தாளர்கள், ர், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்
ஒழுங்கமைப்பையும் செய்து ஒத்துழைப்பு சேகரம் அவர்கட்கும் சக இரண்டாம் தேசிய செல்வி எஸ்.எம்.எஸ். ஷிபாயா அவர்கட்கும் ல்வி ஆணையாளர் திரு. லெனின் மதிவானம் பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.எஸ். பர்கள் திருமதி.வாசுகி அத்தனாயக்க, திரு.ஸ்ரீசங்கர் டகோபன் அவர்களுக்கும் எனது நன்றிகள். செய்து தந்த டிசைன் லேப் உரிமையாளர் -எழுத்தமைத்து உதவி செய்த முஸ்லிம் பர் திருமதி கௌசல்யா தயாளன் அவர்கட்கும் ம் அவர்கட்கும் எனது நன்றிகள் உரித்தாகட்டும். அரசாங்க அச்சக திணைக்களத்திற்கும் எனது
இடம் பெற்ற சில கட்டுரைகள் துணுக்குகள் பக்கேசரி, சுகவாழ்வு, மற்றும் “தாமரை” மலர் வ என்பதால் அவற்றுக்கும் எமது நன்றியைத்
க்கமும் ஊக்கமும் ஒத்துழைப்பையும், நல்கிய ல்வி அமைச்சின் தமிழ் மொழிப் பிரிவு சார்பாக ன்றேன்.
255

Page 276


Page 277


Page 278


Page 279


Page 280
தமிழுக்கு எத்தனை அடை மொழிகள்
தேவார முதலிகளில் முக்கியமானவராகப் போற்றப்படும் திருஞா6 மொழிக்குப் பல அடைமொழிகளைக் கொடுத்துப் பாடல் பாடினார் 'அடைமொழிகளாக மிளிர்ந்தன.
ஆரா அருந்தமிழ், இசைமலிதமிழ், இன்புறுந்தமிழ். இன்றமிழ், உரு உரையார் தமிழ். ஏரினார் தமிழ், ஒண்டமிழ், ஒளிர்பூந்தமிழ், கை வளர்தமிழ், குலமார் தமிழ் குற்றமில் செந்தமிழ். குன்றாத்தமிழ், சா சொல்லார் தமிழ், ஞாலம் மிக்க தண்டமிழ். ஞானத் தமிழ், தகைமலி தல் - தண்ட மிழ். சந்தமார் தமிழ், சந்தமார்ந்தழகாய தண்டமிழ். சர் சந்தமின்றமிழ், சந்துலாந்தமிழ், சீர்மிகுந்த தமிழ், சீரின் மலிசெந்தமி செறிவண்டமிழ், தவமல்கு தமிழ், தன்னார்வம் செய்தமிழ், திருநெறிய தமிழ், தேனேரார் தமிழ், நல்லவாய இன்றமிழ், நலங்கொள்தமிழ், நற்றமிழ், படமலிதமிழ், பண்ணிய தமிழ், பண்ணாருந் தமிழ். பந்தமார் தமிழ், பர தமிழ். பலமிகு தமிழ். பாரினார் தமிழ் . புகழ்நின்ற தமிழ், பேரியல் 8 தமிழ், மறையிலங்கு தமிழ், மறைவளரும் தமிழ், முடிவில் இன்தமிழ், தமிழ், விலையுடை அருந்தமிழ் என்பன சம்பந்தப் பெருமான் தமிழ் வெப் அடைமொழிகள். தம்மைத் தமிழ் ஞானசம்பந்தர் என்றும் நற்றமிழ் வல்லஞான சம்பந் பிட்ட அவரே தான் தமிழ் மொழிக்கு அதிகூடிய அடைமொழிகளைக் எனப் போற்றத் தகுந்தவராகின்றார். வண்ணச் சரபந் தண்டபாணி அடிகளார் 'தன்னேரில்லாத் தமிழ் என்றார் 'இருந்தமிழ்' என்றார். கவிச்சக்கரவர்த்தி கம்பனோ என்று முளதென்தமி சேக்கிழார் சுவாமிகள் 'ஞாலமளந்த மேன்மைத் தமிழ்', 'ஏழிசை இ தமிழ், சீர்மன்னு செந்தமிழ்', 'செஞ்சொற்தமிழ்', 'தண்ணார் தமிழ். தமிழ்', 'தூய தமிழ்', “தெய்வத் தமிழ்', 'தென்னன் தமிழ், தேக்குறு தம் 'நல்லிசைத் தமிழ்', 'பண்பட்ட செந்தமிழ்', 'பூந்தமிழ்', 'பொய்யாத் தமிழ் "மேன்மைத் தமிழ்', “வியன்தமிழ் என்றெல்லாம் தமிழைப் ! கொண்டழைத்துச் சிறப்பித்தார்.
- தமிழ்மனம்

ன சம்பந்தர், தமிழ் -. அவை புதுப்புது
வாகும் ஒண்டமிழ், லமலிதமிழ், கலை ங்கமலி செந்தமிழ். ன்டமிழ், சந்தநிறை கதமாலைத் தமிழ், ழ், செந்தண்டமிழ், - தமிழ். துளங்கில்
நிகரில்லன தமிழ். வார் தமிழ், பரவிய இன்தமிழ், மருவிய முத்தமிழ், வளமார் மாழிக்குக் கொடுத்த
தன் என்றும் குறிப் கொடுத்த முதல்வர்
5. தமிழ் விடுதூதார் ழ்ே' என்றார்.
ன்றமிழ்', 'ஒண்தீந் 'தீந்தமிழ்', 'துய்ய Sழ்', 'தேமருதமிழ்', '. "மூவாத் தமிழ், பல அடைமொழி
ரி அகளங்கன்