கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாயக ஒலி 2015.01-02

Page 1
தாய
கொட்டும்,
THAYAKA OLI
IDR
தை - மாசி 2015
பொங்கல்

க ஒலி.
இரு திங்கள் ஏடு (15)
சிறப்பிதழ் விலை ரூபா 100/=

Page 2
வாடிக்கையாளர்க இனிய தைத்திரு
J 3 W 123 T] 3
20) (101) 1 02) 33)
26 Ealing Road, Wemble

ள் அனைவருக்கும் ாள் வாழ்த்துக்கள்!
12 நதி கால வர் சாவு
5 Road, Tooting SW17 NG
- 020 8/6/ /S00 SewellerschotmaillCOUN
'\ xA0 4. 3ெ0 823: 20)

Page 3
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்
2015
உங்கள் திருமணத்தில் லட்சணமாய் ஜொலிக்க சுபமுகூர்த்த பட்டுப்புடவைகளை
- மற்றும் புதிய ஆடைத்தெரிவுகளையும்
தெரிவு செய்ய இன்றே எமது காட்சியறைகளுக்கு விஜயம் செய்யுங்கள்...
பம் 10
Wellawattı Dream BIG | Think
317, 317A, Galle Road, Wellawatta, Colombo 06. T: +94 11 250 4470, 250 0098 Fax : +94 11 250 8934 E : info@littleasia.lk
Find Us On: (1) (

கள்
Tயும்
-e ASIA
e | Pettah
BIG | Achieve BIG
73, 75A, Main Street, Colombo 11. T: +94 11 239 1592, 239 1593 Fax: +94 11 239 1745 E: info@littleasia.lk
De Oes

Page 4
GRAND OPENING
Wednesday, 10th December 2014
OPENING OFFI
AT ]
8g Gold Jewellery 'for £220* (offer lasts for 3 d
ஒரு பவுண் தங்கநகை செய்கூ
£220 மட்டும் (இச்சலுகை திறப்புவிழா சலுகையாக * மூன்று நாட்களுக்கு மட்டும்) -
செய்கூலி இல்லாமல்
தங்கநகை சேமிப்பு திட்டம் திட்டத்தின் முடிவில் நீங்கள் செலுத்திய _ பணத்திற்கு செய்கூலி இல்லாமல் நங்கநகைகள் பெற்றுக்கொள்ளலாம்
REE |
தங்கநகை திட்டத்தில் சி
அனை வாடிக்கையாள Preethi அர்பளி வழங்க
PREETHI MIXER
'Branch: Saghana Jewellers, 11 Ealin

> SMGHNA
Jewellers 254, High Street, North London
Eastham, E12 6SB Tel: 0770 107 6626
020 8586 5861
R
as only)
பியுடன்
சேமிப்பு அணையும்
த்து
சர்களுக்கும் Mixer ப்பாக ப்படும்
1)
அனைத்து சலுகைகளும் மூன்றுந
2g Road, Wembley, HA0 4AA. Tel: 0208-907 2030

Page 5
Olcoóidion
ANNA JEEVAKI
HELA Brea
Amma-SE
ANNA INTERNATIONALP
ANNA SUPER
Pick n Day
KKS Road, Inuvil, Jaffna

தயாரிப்புக்கள்
AMA
ChinCCe
VTITD.coOMPO.
12.360ாற. 011. 283/483)
அ ளான்கள் கு திரு
1 இலட பாயாமமமம்
Tee everything's
bette.
SHOP ற 5 *
- Inspired by You

Page 6
|
加斯加
With。
"|
En
Luckyl
》
DDDDDDDD
||||

Best Compliments from
Luckyland
IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
Tastier
3
nergy Foods
and Biscuit Manufacturers,
ndasale, Kandy, Sri Lanka. =l: +94 81 2420217, 2420574
Fax : + 94 81 2420740 --mail : luckyland@sltnet.lk
IIIIIIIIIIII
IIIIIIIIIIIIIIII

Page 7
Since 1986
(aேhee
Weve N
அன்பார்ந்த ஏக இற
விநியோகஸ்தர்
வாடிக்கையா இனிய தைப்பொங்கல்
Rabeena Foo
90 lteclamation Tead Colo
Tel 94 11 2136602/03 | E-mail: info@rabecna.com W

20) 2015
lastered Taste
க்குமதியாளர்கள், ஏகள், மற்றும் எர்களுக்கு
நல்வாழ்த்துக்கள்
T
id (P/C) Ltd)
trilo 11,nilanila Fa1 94 11 2112397 Et iெc witti.ralicchia corin

Page 8
WEKAN
DISPENSAI
SPECIAL CLINICS * DIABETIC CLINIC
* WOMEN DISE, * DIETARY CONSULTATION + LABORATORY INVESTIG
(NAWALOKA METROPOL
CHAIRMAN: DR. A
(Thass Family Private Regd !
NO. 09, SA
COLOMBO Tel :011 2438801 Mob
Fax : 011 2307762 Er

DE CILNIC
STD 1990
RY & SURGERY
* SKIN CLINIC ASES CLINIC
* HERBAL MEDICINE
CATIONS LIS)
RHAMED,
-a
LK THASSIM
m Ahamed) Physician,
Medical Practitioner : 667) = (General - SLIMC)
UNDER'S COURT,
02. SRI LANKA e :077 966 4063, 071 843 0715 hail: doctorthassim@gmail.com

Page 9
Easan Chartered Managem Specialists in arrang
I I I II I
196 Merton High Street South Wimbledon London SW19 1AX

13 CO
Lent Accountants
ing Commercial Loans
Self Assessment Tax Return CIS Refunds Accounts & Book Keeping VAT Returns PAYE Management Accounting
S.Eswaranathan ACMA
(Easan)
Tel: 020 8543 8484 Fax : 020 8540 0107
Mobile : 07801227017

Page 10
யாயாயாயாயாயா
தமிழ் ம. ஒரு மகிழ்ச்சி BARRISTER பாரிஸ்டர் செ.
நேரடியாக உங்கள் வழக்குக
இல்லாமலேயே ஆஜராக உரிை இதுதவிர, Home 0 உயர்நீதிமன்றத்தில் இ
உத்தர போன்ற சகா
CHAMBERS OF E 39, HERMITAGE ROAD, LONDON N

க்களுக்கு சியான செய்தி
S.J.JOSEPH யோ.யோசேப்
களை ஆராய்ந்து சொலிசிற்றர் 1 நீதிமன்றத்தில் ம பெற்றுள்ளார். ffice விண்ணப்பங்கள், கடைக்காலத் தடைக்கான
வு பெறல் லவற்றுக்கும்...
தென் லண்டனில்
90, HIGH STREET, coLLIERS WOOD LONDON SW192BT
SARRISTER.JOSEPH 14 1LU 020 8809 3083, 07831 594 270

Page 11
"பெற்ற தாயும் நற்றவ வானி
'தாய (தாயக மண்ணின் தனித்
வள்ளுவர் ஆண்டு 2045
ை
இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகமும்
இணைந்து வெளியிடும் 'தாயக ஒலி'
பிரதம ஆசிரியர் த.சிவசுப்பிரமணியம் (தம்பு சிவா) தொலைபேசி : 0094(0)718676482
துணை ஆசிரியர்கள் தாயகன் (இலண்டன்), சி.பவன் (இலங்கை)
மதியுரைக் குழு பேராசிரியர் சபா ஜெயராசா வவுனியூர் இரா உதயணன் சைவப்புலவர் சு.செல்லத்துரை
ந.கருணை ஆனந்தன் எஸ்.ஈஸ்வரநாதன் (இலண்டன்) வைத்திய கலாநிதி தாஸிம் அகமது
சஞ்சிகைக் குழு
மூ.சிவலிங்கம்
கா.வைத்தீஸ்வரன் ஸ்ரீபதி சிவனடியான் (இலண்டன்) வெளிநாட்டுப் பிரதிநிதிகள்:
முருகேசு கிருபாகரன்
து.நடராஜா, அ.பற்குணன் இலண்டன் : சி.அமிர்தலிங்கம் அமெரிக்கா : வே.பிரேமதயாளன் அவுஸ்திரேலியா : தி.திருநந்தகுமார்
ஐரோப்பிய நாடுகளுக்கான விசேட ஒருங்கிணைப்பாளர்
திருமலை பாலா தொ.பேசி : 0044 (0)7956486014 தொடர்பு : 9-2/1, நெல்சன் இடம்,
கொழும்பு - 06, இலங்கை.
தொ.பேசி : 0094(0)12364124 E-Mail : thayakaoli@gmail.com
காடா
தாயக ஒலியில் இடம்பெறும் படைப்புகளுக்குப் படைப்பாளிகளே பொறுப்புடையவர்கள். ஆக்கங் கள் ஆசிரியரின் அவதானிப்புடன் பிரசுரமாகும்.
-ஆசிரியர்தரணியெங்கும் பவனி வரும் மானிடத்தின் மனோரதம்

= பிறந்த பொன்னாடும் லும் நனி சிறந்தனவே” பக ஒலி' துேவம் காக்கும் இருதிங்கள் ஏடு)
த - மாசி 2015
வில் - 03
ஒலி - 15
உள்ளே ஒலிப்பவை
பக்கம்
02
03 05 08
15
23
11 16 40
13 14
14
பல்லாம்
பேனா முனையிலிருந்து....... கட்டுரை :
மெடியின்மை மனித வடிவானது
வங்கக் கவிஞர் தாகூர் எபோலா நல்ல நண்பர்களை ..... பண்பாட்டுக் கோலங்கள் தெனிநாயக அடிகளார் கல்விப் பணி சிறுகதை:
6அஸ்தமனம் என்பது முடிவல்ல
நகைச்சுவைக் கதை
நிஜம் - ஒரு கடிதம் கவிதை :
6 தையே நீ வருக!
பச்சை மலையில்... அபுல்லின் இதழ்கள்
ஞாயிறைக் கேள் நூல் அறிமுகம்
என் எழுத்தாயுதம் நேவீன திறனாய்வுக் கோட்பாடுகள் உங்கள் விருந்து
தமிழ்ச் சிறப்பிக்கும் தமிழ் ஒலி இதாயக ஒலியின் தனித்துவம் விளையாட்டு
தேசிய சாதனைகள்
முத்தையா முரளிதரன் மாணவர் உலகம்
தமிழ்த்தூது தனிநாயகம் தனிநாயகம் அடிகளார் ஆரோக்கியம்:
தாய்ப் பாலின் முக்கியத்துவம் ஏனையவை
வாழ்த்துகிறோம் தொயக ஒலியின் அஞ்சலி
வித்தகர் விருது பெற்றார் 6அறிமுக விழா (அட்டையில்......
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்
* S 8 - 8 9 ஐ ஐ
43
07
22,28
36
39

Page 12
'மாமாமாமாமாமாமாமாமா!
பேனா முனையிலிருந்து .....
இயற்கையின் சீற்றமு
வறட்சியின் கோரத் தாண்டவம் வடக்குத் தெ ஏற்படுத்தியமையை ஏற்கனவே பதிவுக்கு உட்படு ஏற்பட்ட இயற்கையின் சீற்றம், இலங்கையின் 6 துயரச் சுமைகளை சுமக்க வைத்துவிட்டது. அல் களைச்சொல்லணாத் துயரத்துக்குள் புதைத்துவி மீரியபத்தைப் பகுதியில் இடம் பெற்ற மண்சரிவில் கள் முற்றாக நாசமாகியமை மட்டு மன்றி அங்கு மண்ணில் புதைந்தவர்களைத் தேடும் பணிகள் மாகத் தேடும் பணிகள் மந்தகதியிலேயே நடை மூன்று சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டன எனல் துள்ளது. வெள்ளப்பெருக்கு, மண்சரிவு காரணம ளார்கள். இச்சோகச் சம்பவம் மக்கள் மனங்கை
இதேவேளை, மலையகத்தின் பல பகுதிகள் முறிந்து வீழ்ந்த நிலையில் போக்குவரத்துத் தன பெரும் சிரமத்தை ஏற்படுத்திவிட்டது. புகையிரப் சரிந்து விழுந்து பல சேதங்களை ஏற்படுத்திய நி நிலையை ஏற்படுத்துவதில் பல அசெளகரியா பதுளை, நுவரெலியா, கண்டி, மாத்தளை, கேகால் அபாயம் உள்ளதாகவும் பாதுகாப்பான இடங். நிலையம் மக்களைத் தெளிவுபடுத்தியிருந்தது.
உண்மையிலேயே தோட்ட மக்கள் உயிரைக் வாழ்க்கையையே வாழ்ந்து கொண்டிருக்கின்றா தூக்கி வீசப்பட்டு உடைந்த நிலையில், தொடரும்
'சோதனை மேல் சோதனை - அடைமழை, ம கள் மலைகளில் ஏறி இறங்க முடியாத நிலை பிரச்சினைகள், வாழ்க்கையை நடத்துவதற்குப்
அது மட்டுமன்றி குளவி கொட்டுக்கு இலக்காகிப்ப வரத்து செய்வதிலுள்ள சிரமங்கள் இப்படிப் பல |
இதேசமயம், மலையகம் மட்டுமல்லாமல், வ கள் முழுவதும் டிசெம்பர் கடைசி வாரங்களில் 6 ஏற்படுத்திவிட்டது. பல இடங்களில் மக்கள் கு ஏற்பட்டுள்ளது. சரியான வெள்ள நீரோட்ட வசதி அவல சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டது.
இப்படியாக இன்னோரன்ன துயரச் சுமை ஒளிமயமான எதிர்காலம் உதயமாகவேண்டும் 6
- மீண்டும் அடுத்த இதழில் சந்திப்போம்.

ம் மனித அவலங்களும் தற்கு என்று பாகுபாடு காட்டாது பல அவலங்களை த்தியிருந்தோம். ஒன்பது மாத கால வறட்சியின் பின் பரலாற்றிலே பல சோகச் சம்பவங்களை ஏற்படுத்தி கடமழை, வெள்ளப் பெருக்கு, மண்சரிவு என்று மக் ட்டது. 29.10.2014 அன்று பதுளை, கொஸ்லாந்தை, எால் ஒரு கிராமமே முற்றாக அழிந்துவிட்டது. 63 வீடு குடியிருந்த மக்களும் காணாமல் போய்விட்டார்கள். முடுக்கிவிடப்பட்டபோதிலும் சீரற்ற காலநிலை காரண பெற்றன. கடைசியாகக் கிடைத்த தகவலின்படி பதின் ம், 29 பேரைக் காணவில்லை எனவும் அறிய முடிந் ாகப் பலர் அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள் ள உறைய வைத்துவிட்டது. ரிலும் மண்சரிவு ஏற்பட்டு காற்றினால் மரங்களும் மடப்பட்டமையும், மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாதை, தெருக்கள் என்று பாராமல் மண்மேடுகள் லையில் தொடர்ந்து பெய்த அடை மழையால் சீரான பகளை எதிர்கொள்ளவும் நேர்ந்துவிட்டது. மேலும் லை, களுத்துறை மாவட்டங்களில் மண் சரிவு ஏற்படும் களில் சென்று தங்குமாறும் இடர் முகாமைத்துவ
க் கையில் பிடித்து வைத்திருக்கின்ற சோகம் மிக்க ர்கள். பலத்த காற்றுக் காரணமாக லயன்கூரைகள் மழையினால் லயன்கள் தண்ணீரில் மிதக்கின்றன.
மண்சரிவு அபாயம், தேயிலை பறிக்கும் தொழிலாளர் யில் தொழிலை மேற்கொள்வதில் எதிர்நோக்கும் போதிய வருமானம் இல்லாமல் படும் கஷ்டங்கள். டும் வேதனைகள், பனிமூட்டம் காரணமாகப் போக்கு சோதனைகள். டக்கு - கிழக்கு உட்பட இலங்கையின் ஏனைய பாகங் காட்டித் தீர்த்த மழை பெரும் வெள்ள அபாயத்தை -டியிருப்புகளுள் வெள்ளம் புகுந்து பேரனர்த்தம் கள் இல்லாததால் இயற்கைப் பேரனர்த்தம் பெரும்
களுடன் வாழும் மக்களின் வாழ்க்கையில் ஒரு என்று நாம் எல்லோரும் பிரார்த்திப்போம்.
- ஆசிரியர்.

Page 13
கட்டுரை மடியின்மை ஒரு |
இணுவில் யாழ். மண் ணின் வளம் கொழிக்கும் கிராமம். இசையின் விளைச் சல் நிலம். உழைப்பும் ஓர்ம முமாய், படிப்பும் பண்பு
மாய், பக்தியும் சக்தியுமாய் பரராசசேகரப் பிள்ளையார் வதியும் பூமி. அந்த நிலத்தில் பிறந்து உழைப்பில் உயர்ந் தவர் அண்ணா நடராசா. அண்ணா நட. ராசா இணுவில் அண்ணா நிறுவனத்தின் அதிபர். இவரை பொன்.நடராசா எனப் போற்றுவோர் உண்டு. அவரின் எழுபத்தே ழாம் அகவை ஞாபகமே இப்பத்தி. 'மடி யின்மை' எனும் அயராத உழைப்பின் அர்த் தமாக அவர் வாழ்வு இருப்பது பற்றிய பார்
வையே இது.
சரிந்த வகிட்டின் தலைக்கேசம், நீறும் சந்தனமும் சுமக்கும் நெற்றி, கூர்ந்த விழி கள், கூர்மையான நாசி, புன்சிரிக்கும் உதடு கள், அந்தச் சிரிப்பிடை தெரியும் வெண்பற் கள், மென்மையாக மெலிதாய் ஒலிக்கும் குரல்வளம், ஒற்றைச்சாடியான உடம்பு, எளிமையான உடை அலங்காரம், தன் நிழ லுக்குப் பின்னால் நிற்பவர்களை நினைக் கும் பக்குவம், தவறு செய்யும் ஊழியர் களைக் கூட அவன் தவற்றினை உணர வைக்கும் பாங்கு, எதிரியையும் மன்னிக்கும் இயல்பு, எவரையும் எடுத்தெறிந்து பேசாத பண்பு இவற்றைவிட ஒவ்வொரு வீழ்ச்சி யிலும் வேகமாய் எழுந்து நின்ற சாதனை இத்தியாதி இத்தியாதி - இவைகளின் படைப்பு உருவமே அண்ணா நடராசா.
'பற்பொடியில் தொடங்கி இன்று பண் ணைகளை உருவாக்கும் உயர்ந்த வளர்ச்சி அவர் உழைப்பின் தர்மத்தைக் குறிக்கும். ஒரு தனிமரமான நடராசர் தோப்பான
தாயக ஒலி

மனித வடிவானது!
- கோத்திரன் விந்தை விளக்க முடியாத சாதனை. துன் , பங்களை தூசாக எண்ணுகிறவர். அத னால் தோல்வி ஏற்படினும் அதனுள்ளே ஒரு வெற்றியைக் கண்டெடுக்கும் வேக மான விவேகம் அவர் பாதையின் படிகள். அதற்கான ஓர் உதாரணம், 1995 இல் நடந்த யாழ். மக்கள் இடப்பெயர்வு. ஒரு மணி நேரம் கூட அவகாசம் இல்லாதிருந்த , அந்தப் பொழுதில் அவர் எடுத்த தைரிய மான முடிவு ஒரு விசித்திரமான தற்றுணிவு. எந்த நாட்டிலும் நடக்காத ஒரு வழியை அவர் தேர்ந்தெடுத்தார். கொட்டும் மழை யின் கொடுமை, கொடியோர் நிகழ்த்தும் குண்டு மழை. இவற்றின் நடுவே தன் பின் னால் நின்ற மக்களையும், தன் நிறுவனத்தின் ஒரு பகுதியையும், ஊழியர்களையும் வழி நடத்தினார் அவர். அந்த நகர்வு ஒரு சரித் திரத்தின் சாதனை. சாவகச்சேரி தொடங்கி கிளிநொச்சி, வவுனியா வரை நகர்ந்து இரண்டாண்டு இன்னல்களிடையே நடந்த வர். அதனூடே காடு வெட்டியும் களனி செய்ததும் வேறொரு சாதனையானது. அண்ணா நிறுவனத்தின் உற்பத்திகள் அங்கும் மக்கட்குக் கிடைத்தன. அதில் கோப்பியும், ஜீவாகாரமும் குறிப்பிடத்தக் கவை. தன்னை நம்பித் தொடர்ந்த அனை வரையும் அரவணைத்த நடராசர் அந்த மக்களிடையே ஒரு 'வங்கியையும் நடத்தி னார் என்பது கூட ஒரு அதிசய நிகழ்வாக இருந்தது; ஆற்றலின் வெளிப்பாடானது. அங்கே பசியும் பஞ்சமும் நிகழாவாறு அவ ரது பரந்த அறிவின் வழிகாட்டல் பலருக்கு முன்மாதிரி ஆனது. அந்த நேரம் அவரது சொந்த உடம்பே துவண்டு போனது. வய சாகி இயலாமை கொண் டிருந்த அம்

Page 14
மாவை நினைத்து ஏங்கியதுண்டு. இருப்பி டங்கள் மாறும்போது ஏற்பட்ட இழப்பு களும் இன்னல்களும் ஏராளமானவை. எனினும் 'ஓர்மம்? எல்லாவற்றையும் எதிர் கொண்டது. யாழ். மண்ணில் இருந்து புறப் பட்டபோது ஏற்பட்ட குடிநீர் பிரச்சினையை எப்படிச் சமாளித்தார் என்பதே ஒரு கதை. சிலர் கொண்டு வந்திருந்த குடைகளை குவிந்த நிலையில் மறுபக்கமாகப் பிடித்து மழைத் தண்ணீரை சேகரித்து கொள் கலன்களில் நிரப்பினார்களாம். அதுவே வழிவழியே சமைக்கவும், தாகம் தீர்க்கவும் உதவியது. இந்த அனுபவங்களை இங்கு எழுதின் இடம் போதாமல் போய்விடும்.
இந்த இடப்பெயர்வுக்கு முன்னே நடந்த நிகழ்வைப் பார்ப்போம். இந்திய இராணுவம் யாழ். மண்ணை ஆக்கிரமித்தி ருந்த காலம். 'ஷெல்களுடன் மக்களின் மண்டைகளும் சிதறின. தம் சொந்த மண் ணிலேயே மக்கள் அகதிகளான புதுமை நடந்தேறியிருந்தது. நானூறுக்கு மேற் பட்ட மக்கள் அண்ணா நிறுவனத்தின் மேல் மாடியில் அகதிகளாக தங்கி இருந்தனர். அது பற்றிய ஒரு தவறான கணிப்பில் அவர் அவர்களின் இராணுவக் கைதியாகி இரண்டு மாதங்கள் இருக்க நேரிட்டது. அந்த இராணுவச் சிறையில் இருமுறை மரணத் தின் வாசலில் நின்று வந்தவர் நட ராசா . சிறை மீண்டதன் பின்னர் இவரிடமே இவர். பற்றிப் பலர் பரிதாபப்பட்டதுண்டாம். ஏனெ னில் அந்த அளவுக்கு இவர் உருமாறியிருந் தார். நமது முதலாளிகள் தம் சொத்துக்க ளைப் பாதுகாத்தது கண்டிருக்கிறோம். ஆனால் சொத்துக்காக முனையாது சொந் தங்களையும் காப்பாற்றக் களப்பலியாக நின்றிருந்தமை இதுவே முதல் வரலாறு ஆனது. மக்களுக்காக வதைபட்ட முத லாளி என்றால் அது இது வரை நடராசர் மட்டுமே.
சொந்தச் சிறார்கள் சோர்வுற்றிருந்த ஒரு சோதனைக் காலத்தில்தான் 'ஜீவா
தாயக ஒலி

காரத்தை' உருவாக்கினார் அவர். அது அளப்பரிய சாதனை. அந்த நாட்களின் ஆபுத் திரனாக அட்சய பாத்திரம் தாங்கி நின்ற தார்மீகப் பெருமை அண்ணா நடராசருக் குண்டு.
அது ஆயிரம் கோயில்களை உரு வாக்கிய தர்மத்தை விட மேலானது. 'ஜீவாகாரம்' இன்றைய சத்துணவு. வெளி நாட்டவர்களே அந்த உற்பத்தியை உறுதி செய்திருக்கிறார்கள். ஜீவாகாரம் சொந்த மண்ணின் விளைச்சலிலிருந்து தயாரிக்கப் பட்ட சத்துணவு. எந்த வெளிக்கலப்பும் அதனுள் இல்லை என்பது அதன் சிறப்பு.
இன்று அண்ணா நடராசா வடமாநிலத் தின் மிகப்பெரிய நிறுவனமொன்றின் அதிபர். பல வகை தொழில் துறைகளின் நிறுவுநர். பாராட்டப் பெற்ற பரிசில்கள், சாத னையாளர் விருதுகள், பட்டங்கள் என அவர் பெற்றுக் கொண்டவை ஏராளம். தன் வாழ்வின் உயர்ச்சியில் நிற்கும் ஒருவரிடம் சாதாரணமாகக் காணும் அந்தத் தனித் துவம்தான் அவரது மிகப்பெரிய விருது ஆகிறது. பற்பொடி ஆரம்பித்தபோது இருந்த பணிவும், கடமை உணர்வும், எளி மையும் இப்போதும் அவரிடம் இருக்கிறது. வசதிகள் அவரை வழிமாற்றியதில்லை. சாதனைகள் அவரை தலைக்கனமாக்கிய தில்லை. தன்நிலை அறிய கோப்பி ஏற்றி விற்ற ஈருருளியை அதன் கொள்கலனுடன் காட்சிக்கு வைத்திருக்கும் தன்மை கணக் கிடமுடியாத பெருமை. இவரை யாழ். மண் ணின் 'ஹென்றிபோர்ட்' என அழைக்க லாம். தன்னைச் சுமந்த சைக்கிளை விஜயா தோட்டத்தின் முன்வாசலில் கண் ணாடிப் பெட்டிக்குள் காட்சிக்கு வைத்தி ருக்கும் 'நாகிரெட்டியாரை ஞாபகப்படுத்து கிறார் நடராசா. " பணிவுடையான் இன் சொல்லன்...” என்ற குறள் அவரின் உற வால் நமக்கு பரிச்சயமாய்விட்டது. அவர் தொண்டும் தொழிலும் சிறப்புற வாழ்த்து வோம்.

Page 15
வங்கக் கவிஞர் ர
கப்
இந்தியாவின் தேசிய கீதமான “ஜன கண மன” பாடலை இயற்றியவரும் பங்க ளாதேஷின் தேசிய கீதமான "அமர் சோனா பங்களா” பாடலை இயற்றியவரும் இவரே. உலகிலேயே ஒரு கவிஞரால் இரு வெவ் வேறு நாடுகளின் தேசிய கீதங்கள் இயற் றப்பட்டன என்றால் அது பெருமைக்குரிய விடயமாகும். அப்பெருமைக்குரிய ஒரே ஒரு கவிஞர் இவரே. அவர்தான் ரவீந்திர நாத் தாகூர் ஆவார்.
ரவீந்திரநாத் தாகூர் கல்கத்தாவில் ஒரு பணக்காரப் பிராமணக்குடும்பத்தில் ஜோரா சாங்கோ மாளிகையில் 07.05.1861 இல் தேவேந்திரநாத், சாரதாதேவி தம்பதியின ருக்கு பதினான்கு பிள்ளைகளில் கடைசிப் பிள்ளையாகப் பிறந்தார். ரவீந்திரநாத் தாகூரின் இளம் வயதிலேயே தாயார் இறந்துவிட்டதாலும் தந்தையார் அடிக்கடி பயணங்களை மேற்கொண்டதாலும் இவ ரின் வாழ்க்கையிலே அதிக ஆதிக்கம் செலுத் தியவர்கள் அவரது மாளிகையிலிருந்த பணியாட்களும் அவரது பாடசாலை ஆசிரி யர்களும்தான். அவர்களிடமிருந்து கதை களையும், பாடல்களையும் கேட்டு ரசித்து வந்த ரவீந்திரநாத் தாகூர் சிறுவயதிலேயே கவிதைகளைப் புனைவதில் ஆர்வம் காட் டினார்.
இவருக்குப் பதினொரு வயதில் “உப் நயனம்” எனும் பூணூற் சடங்கு நடத்தப்பட்
இனிய ை
வாசகப் பெரும் நண்பர்கள், நலன் வெளிநாட்டுப் பிரதி பெருந்தகைகளும் வாழ்த்துக்களை 'த
பொங்கு
தாயக ஒலி

வீந்திரநாத் தாகூர்
டது. இதன்பின்னர் தகப்பா னருடன் ரவீந்திரநாத் தாகூர் கல்கத்தா விட்டு புறப்பட்டு பல மாதங்கள் இந்தியாவின் இதர மாநி லங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இவரது தந்தையாரின் "சாந்தி நிகேதன்” தோட்டத்திற்கும் சென் றார். பின்னர் இமயமலைப் பகுதியான டால்கூசிக்கு செல்வதற்கு முன்னர் அம் ரித்சாரிலும் இவர்கள் தங்கினர். அங்கே அவர் பலருடைய வரலாறுகளைக் கற்றது டன் வானியல், அறிவியல், சமஸ்கிருதம் ஆகிய பாடங்களைப் படித்தார். காளிதாச னின் கவிதைகளையும் கற்றார்.
அவரது பதினான்காவது வயதில் தமது கவிதையை பொதுமேடையொன்றில் அரங்கேற்றும் வாய்ப்புக் கிட்டியது. வங் காளக் கலாசார விழாவொன்றின் போது அவர் வாசித்த அந்தக் கவிதை அனைவ ரது பாராட்டையும் பெற்றது. அவர் எழுதிய முதல் நூல் “மாலைப் பாடல்கள்” ஆகும். கங்கை நதியின் வனப்புகளைப் பற்றி அவர் இயற்றிய அந்தப் பாடல்கள் கற்றறிந்தோர் மத்தியில் அவருக்குப் புகழைத் தேடிக் கொடுத்தன.
ரவீந்திரநாத் தாகூர் தான் ஒரு வழக்க றிஞர் ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் பிரைட்டன், லண்டனில் உள்ள ஒரு கல்லூ
தப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் க்கள், விளம்பரதாரர்கள், சந்தாதாரர்கள், இலக்கிய பிரும்பிகள், மாணவச்செல்வங்கள், படைப்பாளிகள், நிதிகள், மற்றும் நல்நெஞ்சங்கள் உட்பட அத்தனை கும் இனிய தைப்பொங்கல் திருநாள் பகஒலி பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறது. > மங்களம் எங்கும் தங்குக!”
5

Page 16
ரியில் 1878 ஆம் ஆண்டில் சேர்ந்தார். பின் னர் லண்டன் சர்வ கலாசாலையில் கல்வி கற்றார். ஆனால் ஷேக்ஸ்பியரினதும் அவர் போன்ற பிறரினதும் ஆக்கங்களை ஆராய் வதிலேயே ஆர்வம் காட்டியதால் பட்டப் பெறாமலே 1880 ஆம் ஆண்டில் கல்கத்த விற்குத் திரும்பி வந்துவிட்டார். .
1883 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒன பதாம் திகதி பத்து வயதுப் பெண்ணான மிருனாலி தேவியை மணந்தார். அவர்க ளுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன ஆனால் இரண்டு குழந்தைகள் வாலிபட் பருவம் அடைய முன்னரே இறந்துவிட் டனர்.
1884 இல் “கோரி கமல்” (ஷார்ப் மற் றுப் பிளாட்) என்ற கவிதைத் தொகுப்ை
எழுதினார்.
1890 ஆம் ஆண்டில் ரவீந்திரநாத்தான் இன்றைய வங்காளதேசத்தின் பகுதியாக உள்ள சிலைடாகா எனும் இடத்திலிருந்த குடும்பத்தின் பெரிய பண்ணையை நிர்வா கம் செய்யத் தொடங்கினார்.
1893 - 1900 வரை ரவீந்திரநாத் தாகூ ஏழு கவிதைத் தொகுதிகளான “சொனா தொரி” (கோல்டன் பட்கு) மற்றும் "கனிகா போன்றவற்றை எழுதியுள்ளார். 1901 இல் சிலைதஹாலில் இருந்து சாந்தி நிகே தனுக்கு குடியேறி ஓர் ஆச்சிரமத்தை நிறு வினார். அங்கு அவர் ஒரு பிரார்த்தனைக் கூடம் , ஒரு பாடசாலை, நூலகம் என்பன வற்றை அமைத்தார். மரங்கள் பலவற்றை யும் நட்டு ஓர் அழகிய பூஞ்சோலையை உருவாக்கினார். அங்கு மாணவர்களுக்கு தாய் மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டது டன் தோட்ட வேலை, உடற்பயிற்சி, சமூ. சேவை, விளையாட்டு என அத்தனை கலை களும் கற்பிக்கப்பட்டன.
பிற்காலத்தில் இப்பாடசாலை “விஷ் பாரதி" எனும் உலகப் பல்கலைக்கழகமா. உருவெடுத்தது. சாந்தி நிகேதனுக்கு அல் கில் உள்ள “சுருள்” என்ற இடத்தில் “பு
தயக ஒலி

ப:-
நிகேதன்” (Abode of Peace) எனும் பெயரில் ஒரு மாதிரிக் கிராமத்தையும் அவர் உரு வாக்கினார்.
1910 ஆம் ஆண்டில் ரவீந்திரநாத்தாகூர் வெளியிட்ட “கீதாஞ்சலி” எனும் கவிதை நூலே அவருக்கு பெரும் புகழை ஈட்டிக் கொடுத்தது. அவரது தாய்மொழியான வங்காள மொழியில் எழுதப்பட்ட அந் நூல், 1912 ஆம் ஆண்டு “Song Offerings” எனும் பெயரில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்தது.
அதே ஆண்டு ரவீந்திரநாத் தாகூர் லண்டன் சென்ற போது Y.B. ஈட்ஸ் போன்ற புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர்களுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டதன் விளை வாக, அவரது கவிதைகளின் மொழி பெயர்ப் புகள் ஆங்கில சஞ்சிகைகளில் வெளிவரத் தொடங்கின. ரவீந்திரநாத் தாகூர் எழுதிய கீதாஞ்சலி கவிதை நூலுக்கு 1913 ஆம் ஆண்டு உலகின் மிக உயரிய இலக்கியத் திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. கல்கத்தாவிற்கு அருகே சாந்தி நிகேதன் கல்விக் கூடத்தில் தங்கியிருந்த கவிஞ ரைப் பாராட்டுவதற்காக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் கூட்டம்
கூட்டமாக குவிந்தார்கள். | நோபல் பரிசு அவரை உலகப் புகழ் பெற்றவராக ஆக்கியது. இதனால் அவர் சீனா, ஜப்பான், ஐரோப்பா, ஐக்கிய அமெ ரிக்கா ஆகிய நாடுகளுக்கு அடிக்கடி விஜ யம் செய்ய வேண்டியதாயிற்று. நோபல் பரிசு பெற்ற முதலாவது ஆசிய நாட்டவர் என்ற பெருமைக்குரிய கவிஞர் ரவீந்திர நாத் தாகூர் கலை, இலக்கியத் துறை களில் ஆற்றிய பணி இன்றும் நினைவு
கூர்ந்து போற்றப்படுகின்றது.
1915 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசர் ஜோர்ஜ் ரவீந்திரநாத் தாகூருக்கு சேர் பட்டம் வழங்கிக் கௌரவித்தார். 1919 ஆம் ஆண்டில் பஞ்சாப்பில் உள்ள அம்ரித்சர சில் நடந்த கோரச் சம்பவத்தைக் கேட்ட

Page 17
தும் ரவீந்திரநாத் தாகூர் தமக்கு ஆங்கிலே யர் அளித்த சேர்பட்டத்தைத்துறந்ததுடன், உள்ளன்பில்லாத வெளிநடப்பில் தமக்குப் பற்றில்லை என்பதையும் புலப்படுத்தி செவி
தைக்கும்படி சுடுசொல் பகர்ந்தார்.
இந்திய அரசியலில் நேரடியாக ரவீந்திர நாத் தாகூர் அதிக ஆர்வம் காட்டவில்லை. இருந்த போதிலும் மகாத்மா காந்தியுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். 1916 ஆம் ஆண்டில் காந்தியை "மகாத்மா” என்று குறிப்பிட்டு, அந்தப் பட்டத்தைப் பிரபலப் படுத்தியவரும் ரவீந்திரநாத் தாகூரே.
ரவீந்திரநாத் தாகூர் தனது எட்டு வய தில் கவிதைகள் எழுத ஆரம்பித்து அவை களை பானுஷங்கோ (Sunlion) என்ற புனைப் பெயரில் 1877 ஆம் ஆண்டில் வெளியிட்டார். பதினாறாவது வயதில் சிறுகதைகளும் இருபதாவது வயதில் தனது முதல் நாட கத்தை "வால்மீகி பிரபிதா” (The Genius of Valmiki) எழுதினார். அவரது அறுபதாவது வயதில் ஓவியங்களை வரையவும் வண் ணங்களைத்தீட்டவும் ஆரம்பித்தார். தெற்கு பிரான்ஸில் சந்தித்த ஒரு கலைஞரின் ஊக்குவிப்பினால் தனது படைப்புக்களை
வைத்து பொருட்காட்சி நடாத்தினார்.
ரவீந்திரநாத் தாகூர் மகாகவி மட்டு மல்லர், சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை ஆகியவற்றையும் திறம்பட படைத்துள் ளார். இது தவிர அவர் கைதேர்ந்த வண்ண ஒவியரும் கூட. ரவீந்திரநாத் தாகூரின் இலக்கியப் படைப்புக்களின் பெரும் பகுதி இருபத்தாறு பெரும் தொகுப்புக்களாக வெளியிடப்பட்டுள்ளன.
ரவீந்திரநாத் தாகூர் இரண்டாயிரத்துக் கும் அதிகமாகப் பாடல்கள் எழுதி சில பாடல் களுக்கு இசையும் அமைத்துள்ளார். அவர் எழுதிய பல பாடல்களில் ஒரு பாடல் இந்தி யாவின் தேசிய கீதமாகவும் இன்னொரு பாடல் பங்களாதேஷின் தேசிய கீதமாக வும் உருவெடுத்தன.
சாந்தி நிகேதனின் வளர்ச்சிக்காக
//
தாயக ஒலி

பாரத நாடு முழுவதும் சுற்றினார். சீனா, ஜப்பான், இத்தாலி, நோர்வே, அமெரிக்கா முதலிய நாடுகளுக்குச் சென்று “விஷ்வ பாரதி” பல் கலைக்கழகத்திற்கு நன்கொடை திரட்டி னார். அவரின் கனவுகள் ஒவ்வொன்றாக பலித்து வந்தன. "விஷ்வ பாரதி” பல்கலைக் கழகமும் வளர்ந்து வந்தது.
1878 ஆம் ஆண்டு முதல் 1932 ஆம் ஆண்டு முடியும் வரை ரவீந்திரநாத் தாகூர் உலகின்31 நாடுகளுக்குச் சென்று வந்தார்.
1940 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட் டின் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகம் சாந்தி நிகேதனுக்கே வந்து ரவீந்திரநாத் தாகூ ருக்கு “இலக்கிய முனைவர்” (Doctor of Literature) என்ற விருது வழங்கியது.)
ரவீந்திரநாத் தாகூரின் 80 ஆவது பிறந்த நாள் விழா 1941 இல் சாந்தி நிகேதனில் கொண்டாடாப்பட்டது. அந்த நாட்களில் அவரது உடல் மேலும் பலவீனமடைந்தி ருந்தது. கல்கத்தாவிலுள்ள ஒரு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை நடைபெற்றும் சிகிச்சை பலனின்றி 1941 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஏழாம் திகதி அவரது 80 ஆவது வயதில் காலமானார்.
அல்ஹாஜ் எம்.எப்.எம்.இக்பால்
யாழ்ப்பாணம். வாழ்த்துகிறோம் 2014 ஆம் ஆண்டுக்கான கலாபூஷ ணம் விருது பெற்ற திரு.ப.சிவானந்த சர்மா (கோப்பாய் சிவம்), திருமதி கோகிலா மகேந்திரன், திரு.உடப்பூர் வீரசொக்கன், திரு.கி.பொன்னுத் துரை, திரு.வதிரி சி. இரவீந்திரன், திரு மதி ஞானலட்சுமி ஞானசேகரன், டாக்டர் ச.முருகானந்தன், திரு.ப.க.மகா தேவா ஆகியோருக்கும் மற்றும் விருது பெற்ற ஏனையோருக்கும் 'தாயக ஒலி தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித் துக் கொள்கின்றது.

Page 18
கட்டு
சவால்களும் சவா
- எபோலா
உலகமெங்கும் வாழுகின்ற மக்களின் கவனம் உயிரைக்குடிக்கும் எபோலா வைரஸ் பற்றியே இருப்பதால், அது பற்றி 'தாயகஒலி வாசகர்கள் தெரிந்து கொள்வதற்காக இங்கே தந்துள்ளோம். இக்கட்டுரையைத் தந்துதவிய டாக்டர் எம்.கே.முருகானந்தன் அவர்களுக்கு 'தாயக ஒலி தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
சிரியாலியோனின் போர்ட்லோகே மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் திடீரென திகிலடைய நேர்ந்தது: அதிர்ச்சியில் உறைந்தார்கள். காரணம் சொல்ல முடி யாத பல அவல மரணங்களுக்கு அவர்கள் சாட்சியாக இருக்க நேர்ந்தது. இது ஏதே ஒரு சூனியக்கார விமானம் விழுந்து வெடி, ததால் தான் நடப்பதாக அவர்கள் நினை தார்கள்.
ஆனால் வகை தொகை இன்றி பிண யும் சாவும் அவர்களை ஆட்கொள்ள தொடங்கியது. தங்கள் கணவன் மனைவி குழந்தைகள் மற்றும் உறவினர்கள் நாளா, தம் மரணத்தைத் தழுவ நேர்ந்ததை கண்ணால் கண்டார்கள். கிளினிக்குக நிறைந்து வழிந்தன. மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு கட்டில்கள் கிடைக் வில்லை. நோயும் பிணியும் சாவும் நித்தி சவால் ஆயிற்று.
இப்பொழுதுதான் இது ஒரு சூனி வேலை அல்ல. இயற்கையைக்கடந்த ஆப தான நிகழ்வும் அல்ல. மாறாக இது நோ. மிகவும் ஆபத்தான தொற்று நோய் என்பது அவர்களுக்கு உறைக்க ஆரம்பித்தது.
ஆனால் எபோலா (Ebola virus disease EVD) என்பது ஒரு புதிய நோய் அல்
தாயக ஒலி

ல்களைக் கடத்தலும்
டாக்டர். எம்.கே.முருகானந்தன். MBBS(Cey), DFM (Col), FCGP (Col) குடும்ப மருத்துவர்
- 3. - U. 01. - -
99.
31. சி. .' இ. -
இந்த நோய் முதல் முதலாக கொங்கோ நாட்டில் கண்டறியப்பட்டது இன்று நேற்று அல்ல. 1976 ஆம் ஆண்டில் ஆகும். ஆயினும் இந்த தொற்று நோயின் தற்போதைய புதிய அலையின் முதல் மரணம் இவ்வருட (2014) ஆரம்பத்தில் ஜூலை மாதத்தில் பதி வானது.
சிரியாலியோனின் எல்லை கடந்து லைபீரியா, கினியா போன்ற நாடுகளிலும் நோயின் கோர முகம் தாண்டவமாடத் தொடங்கியது. ஆகஸ்ட் 18ஆம் திகதி உலக சுகாதார நிறுவனமானது இது சர்வதேசங் களையும் ஆபத்திற்கு உள்ளாக்கவல்ல ஆபத்தான தொற்று நோய் என்ற அவசர அறிக்கையை உலக நாடுகளுக்கு விடுத்தது,
அதிக மரணம் - இந்த நோய் தாக்கியவர்கள் மரண மடையும் விகிதம் மிக அதிகமாகும். ஆரம் பத்தில் நோயுற்றவர்களில் 10 பேரில் 9 பேர் மரணத்தைத் தழுவினர். வைரஸ் நோயான இதற்கு அன்ரி வைரஸ் மருந்து எதுவும் கிடையாது. இருந்தபோதும் சிறப்பான பராமரிப்பு வசதிகள் காரணமாக மரணம் 10ற்கு 6 ஆகச் சற்றே குறைந்துள்ளது
தொற்றுவது எப்படி? இது ஒரு தொற்று நோய் என்பது உங்க ளுக்குத் தெரியும். எனவே நோயுற்ற ஒரு வரிலிருந்து மற்றவர்களுக்கு நேரடியாகத் தொற்றும். நோயுற்ற ஒருவரது எச்சில், நாசிச் சளி, இரத்தம், விந்து போன்ற எந்த
'

Page 19
உடற் திரவத்திலிருந்தும் மற்றவர்களுக்கு பரவும் வல்லமை படைத்தது.
நேரடியாக மட்டுமின்றி நோயாளியின் இரத்தம், சளி போன்ற உடற் திரவங்களால் மாசடைந்த உடை, படுக்கை விரிப்பு போன் றவற்றாலும் தொற்றவல்லது. இதனால் நோயாளிகளுடன் நெருங்கிப் பழகும் உற வினர்கள் மட்டுமின்றி அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர், தாதியர், ஊழியர்கள் அனைவருக்கும் நோய் தொற்
றும் ஆபத்து அதிகம்.
மரணத்தின் பின்னரும் அதன் கொலைக் கரங்கள் நீள்வதற்குத் தயங்குவதில்லை. மரணச் சடங்குகளின் போது மரணித்த வரின் உடலையும் துணிகளையும் தொட நேர்ந்தவர்களுக்கும் ஆபத்து அதிகம்.
கிருமி தொற்றினாலும் உடனடியாக நோயின் அறிகுறிகள் தோன்றும் என றில்லை. கிருமி தொற்றி 2 முதல் 21 நாட் கள் கழிந்த பின்னரே நோயின் அறிகுறி கள் தோன்றும். இதை ”நோயரும்பு காலம்” என்பார்கள்.
நோய் வந்து உயிர் பிழைத்த ஆண் களின் விந்தில் 7 வாரங்கள் வரை அதா வது சுமார் 2 மாதங்கள் வரை கிருமி மறைந் திருந்ததைக் கண்டறிந்துள்ளார்கள்.
இருந்த போதும் கிருமி தொற்றி பின் னர், அது நோயாக வெளிப்படுவதற்கு இடையேயான நோயரும்பு காலப் பகுதி யில் மற்றவர்களுக்கு தொற்றியதற்கான ஆதாரங்கள் இல்லை.
தாயக ஒலி

அறிகுறிகள் சாதாரண வைரஸ் காய்ச்சல் போலவே
அறிகுறிகள் ஆரம்பிக்கும். காய்ச்சல், உடற்சோர்வு, உடல்வலி, தொண்டை வலி, தலையிடி போன்றவை ஏனைய பல காய்ச்சல்களினதும் அறிகுறி களும் கூடவே என்பதால் ஆரம்பத் தில் பிரித்தறிவது சிரமம். 2. இதைத் தொடர்ந்து வாந்தி, வயிற் றோட்டம், சரும அரிப்பு போன்றவை
தொடரலாம். நோய் படிப்படியாக மோசமாகி ஈரல் மற்றும் சிறுநீரகப் பாதிப் புகள் ஏற்படும்போது உயிரிழப்புகளுக்கான சாத்தியம் அதிகரிகிறது.
முரசு கரைந்து இரத்தம் சுரத்தல், மலத் தோடு இரத்தம் கழிதல், இரத்த வாந்தி போன்ற திகிலுாட்டும் அறிகுறிகள் ஏற்பட லாம். இவை உடலின் உட்புறமும் வெளிப் புறமும் ஏற்படும் குருதி பெருக்கினால் நேர் கின்றன.
பரிசோதனைகள்
ஆய்வு கூடப் பரிசோதனைகளைப் பொறுத்தவரையில் வெள்ளை அணுக்க ளினதும் (White cell count) வெண்குருதிச் சிறு துணிக்கைகளினதும் (Platelet count) எண்ணிக்கை குறைந்து காணப்படும். இவை சாதராண வைரஸ் காய்ச்சல் முதல் டெங்குக் காய்ச்சல் போன்றவற்றிலும் ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயினும் நோயைத் தெளிவாக இனங் காணக்கூடிய வேறு பரிசோதனைகள் உள. எபோலா வைரஸ்கான அன்ரிபொடி, அன்ரிஜென் ரெஸ்ட் முதல் எலக்ரோன் மைக்ரஸ்கோப் பரிசோதனை போன்ற பலவும் உண்டு. ஆயினும் மருத்துவ வசதி கள் குன்றிய பின்தங்கிய பிரதேசங்களில் இவற்றைச் செய்வது சிரமம். அத்துடன் குருதி மூலம் தொற்றுவதால் ஆய்வு கூடப் பரிசோதனை செய்பவர்களுக்கு தொழில் ரீதியான பாதிப்புகள் ஏற்படக்கூடிய அபா யம் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Page 20
சிகிச்சை
இந்த நேய்க்கு எதிரான அன்ரி வைரஸ் மருந்துகள் எதுவும் இதுவரை கிடையாது. தடிமன், காய்ச்சல் முதல் மூளைக் காய்ச் சல் வரை பல்வேறு வைரஸ் தொற்று நோய்கள் உள். உடலின் எதிர்ப்புச் சக்தி யால் அவற்றில் பெரும்பாலனவை தாமே குணமாகின்றன.
கொப்பளிப்பான் நோய்க்கு மருந்து உண்டு. எயிட்ஸ் நோயைக் குணமாக்க முடியாவிட்டாலும் அதைக் கட்டுப்படுத்த மருந்துகள் உண்டு.
வைரஸ் தொற்று நோய்கள் பலவும் தாமாகவே குணமாகின்றன என்றபோதும் நோயின் தாக்கத்தைக் குறைப்பதற்கான பராமரிப்பு அவசியமாகும்.)
அதேபோல எபோலா நோய் தொற்றி யவர்களும் கைவிடப்பட வேண்டியவர்கள் அல்லர். அவர்களுக்கான பராமரிப்புச் சேவை பலனளிப்பதால்தான் ஒரு சிலரை யாவது காப்பாற்ற முடிகிறது. நாளம் ஊடாக சேலைன் மற்றும் தேவை ஏற்படும் போது குருதி மாற்றீடு செய்தல், ஏனைய அறிகுறிகளைத் தவிர்த்தல், நோய் எதிர்புச் சக்தியை வழங்கல் போன்றவை செய்யப் படுகின்றன.
இதுவரையில் நோய்க்கு எதிரான தடுப்பு மருந்துகள் எவையும் கண்டுபிடிக் கப்படவில்லை.
நோய்த் தடுப்பு நோயாளிகளை ஆரம்ப நிலையிலேயே இனங் காண்பதும், சமூக மட்டத்தில் நோய் பற்றிய விழிப்புணர்வை வளர்ப்பதுமே நோய் பரவாமல் தடுப்பதில் முக்கிய பங் களிப்பை வழங்கும். இலங்கையில் இது வரை எவரும் இந்நோயால் பாதிக்கப்பட்ட தாக அறியப்படவில்லை. எனவே நோய்ப் பரம்பல் உள்ள வெளிநாடுகளிலிருந்து வரு பவர்களோடு நெருங்கிப் பழகுவதில் அவ தானம் தேவை.
வரும்போது சுகமாக இருந்தால் நோய்
தாயக ஒலி

தொற்றியிருக்காது என்று சொல்ல முடி யாது. நோயரும்பு காலம் 2 முதல் 21 நாட் கள் வரை என அறியத் தந்தோம். அக் காலப் பகுதியில் காய்ச்சல், உடல் வலி போன்ற எவ்வித அறிகுறிகள் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை நாடுங்கள்.
நோயுற்றவரைப் பராமரிக்கும்போது மிகுந்த அவதானம் தேவை. உடற் திரவங் கள் மூலம் பரவுவதால் தும்மல், இருமல், மூக்குச் சளி, கண்ணீர், எச்சில், இரத்தம் படாமல் தங்களைப் பாதுகாக்க வேண்டும். கழிவுப் பொருட்களை கையுறை மற்றும் முகத்திற்கான மாஸ்க் இன்றித் தொடக் கூடாது. தங்களைப் பாதுகாப்பதற்கு ஏற்றவாறு நீண்ட கையுடைய கவுன் உடை அணிய வேண்டும். நோயாளிக்கு ஒரு மீற்றர் வரை நெருங்கிச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதற்கான மாஸ்க் அணிய வேண்டும்.
எபோலா வைரஸ் காய்ச்சலுக்கு மட்டு மின்றி ஏனைய பல தொற்று நோய்களுக் கும் இவை பொருந்தும். நோயாளியுடன் தொடர்பு கொண்ட பின் கைகளை நன்கு கழுவுவது அவசியம்.
நோயுள்ள நாடுகளில் வெளவால், குரங்கு, போன்றவற்றிலிருந்து முதலில் பரவக்ககூடுமாதலால் அவற்றைக் கையாள் வதில் மிகுந்த அவதானம் தேவை. இறைச்சி வகைகளை நன்கு வேக வைத்தே உண்ண வேண்டும். நோயாளியை மட்டுமின்றி நோயா ளியுடன் பழகியவர்களையும் 3 வாரங்கள் வரை அவதானிக்க வேண்டும்.
இந்தியா வரை நெருங்கி வந்துவிட்ட எபோலா ஆபத்து எம்மை அணுகாது என் பதற்கு எந்நதவித உத்தரவாதமும் இல்லை.
கடைசியாக ஒரு வார்த்தை. ”முதல் நோயாளி எனக்குப் பக்கத்தில் இருக்கக் கூடும்” என்ற நினைப்பு இருந் தால் நாம் கவனமுடன் செயற்பட்டுத் தப்பி விடுவோம்.
- 10

Page 21
(8ryகதை) அஸ்தமனம் எ முடிவுகள் அல்
“என்ன கவிதா ஏன் இவ்வளவு கோபம்? ஏக்கம் கலந்த குரலில் கேட்கும் சந் கரை உதாசீனம் செய்தபடி கடற்கரை யையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள் கவிதா.
மீண்டும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்ட சங்கரிற்கு சினம் வந்ததே ஒழிய, கவிதாவிடம் இருந்து ஒழுங்கான பதில் ஒன்றும் வரவில்லை. எதற்கும் பொறுமை அவசியம் என்று எண்ணி பொறுமையைக் கடைபிடித்த சங்கர் அவளாகவே காரணம் என்ன என்று சொல்லட்டும் என சும்மா இருந்துவிட்டான். - சில நேர மெளனங்களின் பின் அவளா கவே பேசினாள். "வீட்டில் கல்யாணம் பேசினம். வேலை இல்லாத உங்களைக் காதலிக்கிறேன் என்று சொல்லவும் முடியாத நிலை. அதனால் வேலை தேடிட்டு வந்து பின் என்னைச் சந்தியுங்கோ” என்று கூறிவிட்டு, எந்தப் பதிலிற்கும் காத்திராமல் எழுந்து சென்றுவிட்டாள்.
வீட்டிலோ தண்டச்சோறு, ஊர் சுற்றி என்பது தாய் தந்தையரிடம் வாங்கும் திட் டுக்கள். அமைதியாக மாலையைக் கழிக்க இங்கே வந்தால் காதலி கவிதாவின் ஏச்சுக் களும் திட்டுக்களும்.
ஆனால் இப்படி எல்லோரினதும் கேவ லப் பேச்சிற்கு ஆளாவதற்கு சங்கர் ஒன் றும் ஊர் சுற்றும் காவாலி அல்ல. கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வர்த்தகப் பிரிவில் படித்துவிட்டு பி.கொம் பட்டதாரி என்ற பெயருடன் வெளியேறியிருக்கும் ஒரு படித்த சாதாரண இளைஞன். இவனிற்கு இளையவர்களாக இரண்டு தங்கைகள்.
தாயக ஒலி

ன்பது
-மாதுமை அவர்களைக் கரையேற்றும் பொறுப்பும் இவன் கையில்தான்.
நோயாளி என்ற நிலையில் இளைப்பாறி விட்ட தந்தையின் பென்சனினால்தான் வாழ்க்கை வண்டியே ஓரளவு ஓடிக் கொண் டிருந்தது. சங்கருக்கு வேலை கிடைத்து விட்டால் குடும்பப் பாரங்கள் ஒரளவிற்குத் தீரும் என்பது தாயின் வேண்டுதல். அத னால் வேண்டாத தெய்வங்களில்லை. ஆனா லும், கடவுளும் கண் திறக்கவில்லை.
வேலை இல்லை. வேலை இல்லை. எங்கு திரும்பினாலும் வேலை இல்லை. யாரைக் கேட்டாலும் வேலை இல்லை என் பதாகப் போய்விட்டது. இன்றைய சமுதா யம் இந்தப் பிரச்சினையில், இந்த சங்கர் மாதிரி எத்தனையோ சங்கர்களை இக்கட் டில் மாட்டிவிட்டு நடக்கும் கூத்தை வேடிக்கை பார்க்கின்றது.
வேலை என்பது இன்று என்ன சாதா ரண விஷயமா? நினைத்தவுடன் கிடைத்து
விடுவதற்கு?
சங்கர் எண்ண அலைகளை நிறுத்தி விட்டு, எழுந்து வீடு நோக்கிச் சென்றான்.
காலங்கள் ஒரு போதும் ஸ்தம்பித்து நிற்பதில்லை. சங்கரும் தனது எழுத்து ஆற்றலை பத்திரிகைகளில் வளர்த்துக் கொண்டும், அதேவேளை, நேர்முகப் பரீட் சைகளுக்கும் சென்று கொண்டிருந்தான்.
11

Page 22
கவிதை, கதைகள் என்ன சோறு போடுமா இல்லைத்தான். ஆனாலும், சங்கரி மனத்தை அவைதான் ஓரளவாவது அடை திப்படுத்திக் கொண்டிருந்தன. அவனது கதை, கவிதைகள் எல்லாம் சமுதாயத்தில் யதார்த்த நிலையில் உள்ள மக்களின எளிய உணர்வுகளை எடுத்துக் கூறுவ
வாகவும் சோகங்களைச் சொட்டுவனவாம் வும் அமைந்திருந்தன.
வேலை தேடி ஏறாத வேலைத்தளமோ நிறுவனங்களோ இல்லை. ஆனாலும், என் லோரிற்கும் ஒரு காலம், நேரம் உண்டு இருந்தும் வேலை தேடி மட்டும் வருவத யில்லை..... அது போல இப்போது அல் னும் வேலையைத் தேடிச் செல்வத யில்லை.
ஏன், அவ்வளவு மனவிரக்தி? ஒரு மல தனின் இதயம் ஓரளவுதான் மற்றவர்களில் சினமூட்டும் வார்த்தைகளைத் தாங்கும் அதற்கு மேலும் தாங்குவதற்கு இதயம் என்ன இரும்பாலா செய்யப்பட்டது?
சங்கருக்கும் அப்படித்தான் ஒே கவலை. அதனால் உடம்பும் முடியாமல் போய்விடுகின்றது. அதற்கு அவனிற்கு ஒன்று அறுபது ஆகிவிடவில்லை. இரு தும் மனம் கவலையில்லாமல் இருந்தால் தானே உடலையும் கவனிக்க முடியும்? இ போதெல்லாம் அவனிற்குத் துணை தனிமை ஒன்றுதான். எந்நேரமும் எதையோ சி
7 தரணி எங்கும் வாழும் தமிழர்
தாயா
MAL
தொடர்புகளுக்கு: Call & Fax : 02
தாயக ஒலி

காம்
க
தித்தபடி இருப்பான்.
காலங்கள் கரைந்தோடின. கவிதாவும் திருமணம் செய்துவிட்டதாகவும் கேள்விப் பட்டான். எத்தனையோ கலக்கத்தை தாங்கியாகிவிட்டதாம். இது என்ன பெரிய கலக்கம்?
தந்தையும் இறந்துவிட்டார். மூத்த தங்கை தொண்டர் ஆசிரியர் ஒருவரை விரும்பி திருமணம்செய்துவிட்டாள். இளைய தங்கை மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக் கழகத்தில் விஞ்ஞானப் பிரிவில் இறுதி யாண்டு படித்துக் கொண்டிருக்கின்றாள்.
தாயும், சங்கருமே இப்போது வீட்டில். அந்தத் தனிமை அவனிற்கு நிறையப் பிடித் திருந்தது. தாயும் இளையவளின் திரு மணத்தைப் பார்த்துவிட்டு கண் மூடவே காத்திருந்தாள்.
இப்போது சங்கர் தனித்துவிட்டான். ம்
இளவயதில் ஏற்பட்ட தொடர்ச்சியான கசப்பு உணர்வுகள் அவனை இந்நிலைக்கு உட்படுத்திவிட்டன. சிலநேரம் சிரிப்பான். உடனே உரக்க அழுவான். ஆம். அவன் இப்பொழுது மற்றவர்களுடைய கண்ணுக்கு பைத்தியம்.
ஆனால் சமுதாயத்தில் புரையோடி இருக்கும் பொருளாதார சீரழிவிற்கு முடிவு
கட்ட வேண்டுமென்ற திடமான நம்பிக்கை நீ யோடு.... வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.0
7
ரகளை கத்திலிருந்து இணைக்கும் தளம்
LARUM.com
மலரும்
1 221 9440 Email : news@malarum.com
12

Page 23
கவிதை
தையே நீ வருக!
|ங்க பி கல்
தையே நீ வருக தமிழரவர் துயரம் பொய்யாகப் போகப் புறப்பட்டு வருக வையமிது நித்தம் வசந்தமாய் விளங்க ஐயை, நீ வருக ஆசையுடன் அழைத்தோம்!
வாழையுடன் கமுகு வாயில்தனில் நின்று தாழ உனை ஏற்கும் தமிழ் மகளே நீதான் நாளை எனும் எங்கள் நம்பிக்கையாவாய்! வாழ நீ செய்க வரம் கேட்டு நின்றோம்!
மாவிலை தோரணம் மனையெல்லாம் ஆட பூவை நீ வருக பூபாளம் பாடி ஆவலுடன் நாங்கள் அன்னையுனை அழைத்தோம் தேவி நீ, காலைத் தேரேறி வருக!
தாயக ஒலி

இன்னல் எலாம் அழிய எம் தமிழர் வாழ்வு கன்னலென இனிக்க கண்ணீரது மறைய கன்னி நீ வருக
கை குவித்து நின்றோம் மண்ணெலாம் உன்தன் மாட்சியது நிறைக!
இளங்காலை வேளை ஏந்திழையே, அரசி வளங்காண வருக வையமதில் தமிழர் பழங்காலம் போலப் பார்பேற்ற நன்கு விளங்க நீ வருக விடியல் நீ அன்றோ!
- பிசியாக ப்ளாக:
தென்றல் நீ வருக திசையெலாம் இனிக்க குன்றுதனில் இருந்து குதித்தோடும் அருவி என்று நீ வருக எடுத்தடி வைத்து, ஒன்று என 'மனிதம்' உலகாள வருக!
பொங்கலது போல புவனமெலாம் இனிக்க மங்கலங்கள் குவிய மனமெல்லாம் நிறைய தங்கமென ஒளிரும் கைஆேய உன் வழியில் பங்கமெல்லாம் தீர பாவை நீ வருக!
- வாகரை வாணன்.

Page 24
( பச்சை மலையில்
பாலைவன ஒட்டகங்கள் எப்பொழுதுமே முரண்டு செய்யாது சபிக்கப்பட்ட அகலிகையாக மலையகம்.
ஓர் இயந்திரத் தனமாய் உற்பத்திச் சக்தியாக மட்டுப்படுத்தப்பட்டு. எறும்புத் தன்மான உணர்வுகள் கூட இம்மியளவும் தோல்சேராது செதுக்கி எடுக்கப்பட்ட ஜென்மச் சிலைகளாக என்றுமே
அவர்களுக்காக. மிதித்தவன் பாதத்தை பதம் பார்த்து விட்டே மீதி வேலையைப் பார்க்கும் அந்தச் சித்தெறும்பு கூட. உதைப்பவன் பாதத்தை சிவனொளி பாதமாய் தலையிலே வைத்து பூஜிக்கச் சொல்கிறார்கள். சலுகைச் சாமரைக் காற்றை தென்றலாய் சுகித்து
இறகு கோதும் காக்காய்கள் வழிகாட்டிகளாக. குருதி உறுஞ்சும் அட்டைகளின் மேல் புகையிலைச் சாற்றை சப்பித்துப்புங்கள் அது போதுமென தற்காலிக தீர்வுப் போதனைகள். அந்த அகலிகைக்கு கூட சாப விமோசனம் கிடைத்தது சீத்தா இராமனால். இந்தக் கல்லாய் சமைந்த பச்சை மலைப் பாலைக்கு விமோசனம்...? விமோசன வில்லேந்தி முடிசூடிவரும் நம்ம நவீன இராமர்கள் துச்சாதனப் பரம்பரையின் பாதுகைகளை சிம்மாசனமேற்றி பூஜை செய்து ஆராதித்து
எம்மையும் அணிதிரள அழைக்கின்றனர் காவடி எடுக்க!
ஷெல்லிதாசன்
தாயக ஒலி

புல்லின் இதழ்கள்
புல்லின் இதழ்கள்' - வாழ்நாள் முழுவதையும் தனது கவித்துவம் அனைத்தையும் செலவிட்டு இவர் வழங்கிய ஒரே ஒரு படைப்பு. படைப்புகள் பல படைத்தவர் அல் லர். ஆனால் பலநூறு கவிஞர்கள் தங்கள் ஊற் றுக் கண்களைத் திறந்து கொள்ளத் தமது இதழ் களை உதவிவிட்டுப் போனவர் அவர். ஒவ்வொரு பதிப்பிலும் புதுவரிகள், புதுமெருகுடன்கூடியவனப் பின் கனம். காலங்கடுங்காற்றுக்கு எதிராக விட்மன் உயர்த்திக் பிடித்த வெற்றிக் கொடியாக, உரக்கப் பேசும் கவிதையின் ஒற்றை நாக்காக வாழ்வு கொண்டு விட்டது புல்லின் இதழ்கள்! அது ஒரு புதுக் கவிதையின் பொக்கிஷம்.
புல்......... எனது உணர்வுகள் உயர்த்தும் பச்சைக் கொடிகளோ? கடவுளின் கைக்குட்டையோ? வாசனையூட்டியும் அழகிய வடிவம் கூட்டியும் ஞாபகார்த்தமாக மண்ணிலே இட்ட இந்தக் கைகுட்டை மூலையில் எங்கோ உரியவன் பெயர் இருக்க,
அதனைக் கண்டு 'யாருடையது?' என்று நாம் கேட்போமோ? இல்லை..... இப்புல் தாவர உலகின் குழந்தைகளோ? குறுகிய இடத்திலும் பரந்த வெளியிலும் கறுப்பர், வெளுப்பர் எவரிடையேயும் எங்கும் வளர்ந்து எவரும் சமம் எனும்
அர்த்தம் சொல்லும் அழகிய எழுத்துகளோ? இப்போது இன்னொரு வகையாகவும் எனக்குப் படுகிறது... புதைத்த பிணத்தில் பூத்த ரோமங்கள் பூமிமேல் வந்தனவோ?
-வேல்ட் விட்மன்
14

Page 25
கட்டுரை நல்ல நண்பர்களை
அன்புக்குரிய சொல்லாக நட்பு மலர்ந்து நிற்கின்றது. உலகில் நாம் எதைச் சம்பாதிக் கிறோமோ இல்லையோ, நல்ல நண்பர் களைச் சம்பாதிக்க வேண்டும். கற்பைப் போன்றே நட்பும் உன்னதமானது. அதற்கு ஊறு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டியது நண்பர்களின் பொறுப்பாகும்.
ஒருவரது இன்பத்தை அதிகரிக்கச் செய்து அவரது துன்பச்சுமையை குறைக்க வல்ல சக்தி உண்மையான நட்புக்கு உண்டு. காதலும் பாசமும் ஒருவித அன்புப் பிணைப்பாக இருக்கின்ற போதிலும் நட்பு ஒரு மகோன்னதமான இடத்தை வகிக்கின் றது. "உன் நண்பனை வைத்தே உன்னை அறிந்து கொள்ளலாம்.” என்று சொல்லு வார்கள். அது எவ்வளவு உண்மையானது. நல்ல நட்பைப் பறைசாற்றுவதாகவே இச் சொல்லாடல் அமைந்துள்ளது.
உணர்வுபூர்வமான நட்பு தன் நண்ப னுக்காய் உயிரைக் கொடுக்கவும் தயங் காது. உமிழ்நீர் வற்றும் போதும் கூட உள் ளத்திற்குள் நட்பின் ஈரம் கசிந்து கொண்டு தான் இருக்கும். ஆற்று வெள்ளம் வற்றும் போது ஊற்று வெள்ளம் கைகொடுக்கிறது போல நல்ல நண்பர்களின் நட்பு தக்க சம் யங்களில் உதவிக்கு வரும். உண்மையான நட்பு சிறகுகளைப் போன்றது. அது பறப் பதற்கு மட்டுமல்ல, பறவையின் உடலுக்
தாயக ஒலி

எத் தெரிந்தெடுங்கள்
குப் போர்வையாகவுமல்லவா பயன்படு கிறது. அத்தகைய நிலையில்தான் நட்பு இருக்க வேண்டும்.
ஒருவன் தன் பெற்றோர், காதலி, மனைவி, பிள்ளைகள் ஆகியோருடன் தன்னுடைய நேரத்தை அதிகமாகச் செலவிடுவதை விட தன் நண்பனுடனேயே அதிக நேரத்தைச் செலவழிப்பான். அத்தகைய செயலை அவன் பெரிதும் விரும்புவதற்குக் காரணம் நட்பின் வலிமையேயாகும். கஷ்டத்திலும், நஷ்டத்திலும் உறவுகள் நிலைத்திருக்காது என்று கூறுவார்கள். ஆனால் எத்தகைய சூழ்நிலையிலும் தயங்காது இணைந்திருக் கும் உறவு நட்பு மட்டுமே. நட்பு என்பது சுகமான சாரலைப் போன்றது. பாதுகாக் கும் முள்வேலியைப் போன்றது. ஆதாயத் திற்காக உருவான நட்பு ஆபத்தில் விட்டு விடும். ஆத்மார்த்த நட்பு மாத்திரமே இறுதி வரை தொடரும்.
நல்ல புத்தகமும், நல்லவர்களின் நட்பும் இனிமையானவை. அதனால்தான் பண்பு டையாளர்களின் தொடர்பை...
“நவில்தொறும் நூல்நயம் போலும்
பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு”
என்று வள்ளுவப் பெருந்தகை இயம்பி யுள்ளார்.
நண்பர்களைச் சேர்த்துக் கொள்வதில் நாம் எப்பொழுதும் அவதானமாக இருக்க வேண்டும். நம்பிக்கைத் துரோகம் தலை தூக்கும் போதெல்லாம் தர்மத்தின் கழுத்து நெரிக்கப்படுகிறது. இங்கே நட்பு சிதைக் கப்படுகிறது. நண்பர்களால் வாழ்ந்தவர் களும் உண்டு. கூடா நட்பால் அழிந்தவர் களுமுண்டு. சரியான நேரத்தில் சரியான அறிவுரையைத் தருகின்ற நட்பு வாழ்க் கைக்கு வேலியைப் போன்றது. ஆகவே நல்ல நண்பர்களைத் தெரிந்தெடுப்போம்.
15

Page 26
பணமும் பொருளும் கனிகளைப் போன்றவை. ஆனால் நல்ல நட்பு வீரிய விதைகளைப் போன்றது. கண்ணுக்கு இடை போல, நட்புக்கு நல்ல நண்பன் அரணாக இருப்பான். "உன் நண்பனை மட்டும் விட டுக் கொடுக்காதே” ஏன் என்றால் நண்பன் உயிரைப் போன்றவன். ஒருவனின் உணர்வு களை அவனின் நண்பனைத் தவிர வேறெ வராலும் முழுமையாக உணர்ந்து கொள்ள முடியாது.
ஒருவனுடைய சிந்தனைகளையும், ஆர் றல்களையும் மிளிரச் செய்ய அவனை நன்கு உணர்ந்த ஒரு நண்பன் உந்த சக்தியாக இருக்கத் தேவைப்படுகின்றான் உண்மையான நட்பின் முன் தமது உள் ளத்து உணர்வுகளை மனந்திறந்து பகிர்ந்து கொள்ளும் போது மனதில் ஏற்படும் உளட் பூரிப்புடனான அமைதியை அளவிடமுடி
நகைச்சுவைக் கதைகள்
எங்கோ கேட்ட புதிதாகத் திருமா செல்வதற்குப் புறப்பட்ட காடொன்று குறுக்கிட்ட முள்ளொன்று தைத்து அப்படிப்பட்ட கோப
சரமாரியாகத் திட்டத் இணுவை ரகு
| "சனியனே, மூதேவி வருவது உனக்குத் தெரியாதா? அவள் அழகிய பாதத்தில் இரத்தமல்லவா வந்து படிச் செய்தால் தொலைத்து விடுவேன் ெ விக்கு வலு சந்தோசம்! தன் கணவனுக் மகிழ்ந்தாள் - மகிழ்ச்சிப் பெருக்கில் கண்
வருடமொன்று கடந்தது- அதே கண் காட்டுப் பாதையால் செல்ல வேண்டி நே பதம் பார்த்தது- மனைவியைத் திட்ட! "ச முள்ளுக்குள்ளோ கொண்டு போய் உன் உன்னைக் கட்டிக் கொண்டு அழ வேண்டி இம்முறையும் மனைவியின் கண்கள் :
0ெ0
தாயக ஒலி

|- 1 0
யாது. இத்தகைய ஆற்றல்மிக்க நட்பு ஒவ்வொருவரையும் மேலெழச் செய்யும்.
இத்தகைய சிறப்புமிக்க உன்னதமான 5 நட்பின் பெருமையைப் பறைசாற்றும்
வகையில் ஜூலை மாதம் 30 ஆம் திகதி சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப் பட்டு வருகின்றது. 1997 ஆம் ஆண்டு ) ஐக்கிய நாடுகள் சபை வின்னித பூ என்ற T பொம்மைக் கரடியை உலகின் நட்புத் தூத
ராக அறிவித்து நட்பைப் பெருமைப்படுத் ) தியது. அன்று முதல் நட்புக்காக நண்
பர்கள் தினம் கொண்டாடப்படுகின்றது. - எனவே வாழ்வில் நல்ல நண்பர்களைச் - சந்திப்போம். பழி தவிர்க்கும் ஆலோசனை
களுக்குச் செவிமடுப்போம்.
- நாமும் தவறுகளை இடித்துரைக்கும் நல்ல நண்பர்களாய் வாழுவோம். ஆரோக் கியமான நட்பு நம்வாழ்வை ஆனந்தமாக் கட்டும்.
-சத்தியன்
T)
வை (7) ணமான தம்பதிகள் நாட்கோயிலுக்குச் டார்கள். கோயிலுக்குச் செல்லும் வழியில் சிறிய டது. அப்போது புதுமனைவியின் காலில் சிறிய துவிட்டது. கணவனுக்கு வந்ததே கோபம்! ம் குத்திய முள்ளை எடுத்தெறிந்துவிட்டு தொடங்கினான் - முள்ளை! P! பிசாசு! என் அருமை மனைவி இந்த வழியால் வரும் வழியில் நீ ஏன் கிடந்தாய்? அவளது விட்டது! தரித்திரமே! இன்னுமொரு முறை இப் தொலைத்து!” என்று திட்டித் தீர்த்தான். மனை கு தன்மேல் எவ்வளவு பாசமென்று எண்ணி கள் கலங்கின.
வனும், மனைவியும் அதே கோயிலுக்கு அதே சர்ந்தது. முள்ளொன்று மனைவியின் காலைப் சனியனே, மூதேவி, பார்த்துவரத் தெரியாதா? சரை தரித்திரக் காலை வைத்தாயே பிசாசே! டக் கிடக்குதே! எல்லாம் என் தலையெழுத்து!”
கலங்கின - கவலையால்!
-16

Page 27
நூல் அறிமுகம்
இனயம்
என் எழுத்தாயுதம்
என். வித்தியாதரன்
பட்டறிவுப் பகிர்வா டிெக்க4ஆம் !
முனையிலும் பார்க்க எடுத்தியம்பி நிற்கிற னின் “பட்டறிவுப் ப உண்மையிலேயே மு. பதை அதை வாசிக்கு முடியும். அதேவேை
அணிந்துரை எழுதிய “ இந்த நூலைப் படித்து முடிந்ததும் ஒரு றேன்" என்று எடுத்தியம்பியமை மனங்கெ
'பத்திரிகைத் தர்மம் நடுநிலை தவறாடை மைப்புக்குள் நின்று உயிராபத்து நிறைந்த கு பிடித்த ஊடகவியல் போராளியின் உள்ள; ளன. ஒரு நேர்மைமிக்க பத்திரிகையாளனின் தெரிவிக்கப்பட்டுள்ள யதார்த்தத்தைத் தெரி மாக வாசிப்பதன் மூலம் வெளிச்சத்துக்கு வர கொள்ள முடியும். 30 ஆண்டு கால வரல கொள்ள இந்த நூல் வழிகாட்டியாக அன துக்களுக்கு இடமில்லை என்பதை வாசகர்க பது எனது அசைக்க முடியாத நம்பிக்கைய
வித்தியாதரன் அவர்கள் 'உதயன்' பத்திரி குடாநாடு யுத்தப் பிரதேசமாக இருந்த கால தங்கள் செய்திகளை மட்டும்தான் பிரசுர அதேவேளை - இலங்கை அரச இராணுவ கூடாது என்று மறுபுறத்திலும் கட்டளையி இருதலைக் கொள்ளி எறும்பாக இருந்து ( யிலும் துணிவுடன் செயற்பட்ட நிலையை . இந் திய அமைதிப் படையினருக்கும் - விடு. யுத்த சூழ்நிலையில் இரு தரப்பினருக்குமிடை நின்று பத்திரிகைச் செய்திகளை வெளியிட்ட
வைத்துள்ளார்.
உயர்ந்த எண்ணங்கள், உத்தமமான போ கொள்ளும் மனோபாவம் ஆகிய பண்புகள் டனும், வெளிநாட்டுத் தூதுவர்களுடனும் க கருத்துக்களை முன்வைப்பதில் என்றும் பி இருந்தது. அவற்றையெல்லாம் இந்நூலில் | தாயக ஒலி

தேடலோன்
எ என்ற எழுச்சி மிக்க ஒரு பத்திரிகையாளனின் க எழுந்துள்ள 'என் எழுத்தாயுதம்' துப்பாக்கி பேனாமுனை மிகச் சக்தி வாய்ந்தது என்பதை து. 'என் எழுத்தாயுதம்' ஒரு பத்திரிகையாள கிர்வு' என்று இலக்கணம் கூறிய போதிலும், ப்பது ஆண்டு கால வரலாற்றுப் பதிவாக இருப் ம் ஒவ்வொரு வாசகனும் உணர்ந்துகொள்ள ள, 'என் எழுத்தாயுதம்' என்ற இந்த நூலுக்கு பிரபல கவிஞரும் எழுத்தாளருமாகிய சோ.ப. நல்ல நாவலைப் படித்த உணர்வினைப் பெற் எள்ளத்தக்கது.
ம'. அந்த உன்னதமான கோட்பாட்டுக் கட்ட சூழ்நிலையிலும், துணிவுடன் தன் பேனாவைப் த்து உணர்வுகள் இந்நூலில் உட்பொதிந்துள் ர பொக்கிஷமாக அமைந்துள்ள இந்நூலினுள் சிந்து கொள்ள ஒவ்வொருவரும் உணர்வுபூர்வ சாத பல புதுமையான செய்திகளைத் தெரிந்து எற்றுத் தொகுப்பை சுவாரஸ்யமாக அறிந்து மந்துள்ளது. அதில் இரு வேறுபட்ட கருத் ள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வார்கள் என் பாகும்.
கையில் கடமையாற்றிய காலம் யாழ்ப்பாணக் ப் பகுதி. விடுதலைப் புலிகள் இயக்கத் தினர் ம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்திய த்தினர் புலிகளின் செய்திகளைப் போடக் ட்டுக் கொண்டிருந்த காலப்பகுதி. அச்சமயம் கொண்டு - கொலை அச்சுறுத்தலுக்கு மத்தி ஆசிரியர் இந்நூலில் விவரித்துள்ளார். மேலும் நலைப் புலிகளுக்கும் இடையில் நடந்ததான டயில் தமது மதிநுட்பத்தினால் நடுநிலையாக -அந்த நாட்களை ஆசிரியர் இந்நூலில் முன்
பன்
குக்கள், துணிவு, அஞ்சாமை, எதையும் எதிர் 1ால் இந்திய - இலங்கை அரச தரப்புக்களு ந்திப்புகள் நடைபெறும் வேளைகளில் தமது ன்நிற்காத மனோபாவம் அவரிடம் நிறைய வெளிப்படையாக அறியத் தந்துள்ளார்.
- 17

Page 28
(வேறுபட்ட சூழலிலே மாறுபட்ட கரு வரைந்து ஒரு புதுமைமிக்க சாதனையை மிகையாகாது. அந்த வகையில் தான் சார்ர் வித்து, எழுதிய அற்புதமான சொல்லோ வாசகர்கள் புரிந்துகொள்ளமுடியும்.
இப்படியான கருத்தாழம் மிகுந்த ஓர் , ஓர் ஊடகவிலாளராலும் எழுதப்படவில் ராலுமே எழுதமுடியாது. அந்த வகையில் முதன்மை பெற்று நிற்கின்றார். 'என் எழு; யுதமாக என்றும் திகழும் என்பது திண்ன
நவீன திறனாய்வுக் கோட்பாடுகள் - ஓர்
இப் பட் -
கொழும்புத் தமிழ்ச் சான்றிதழ்' கற்கை நெறிச் ருமான கே.எஸ்.சிவகும் றிக்கை - 'நவீன திறனா நூலாகப் பரிணமித்துள் சில வருடங்களாக ஏற்ப தந்துள்ளதாக ஆசிரியர்
களில் தமது நோக்கை மு யின் திறனாய்வு அணுகுமுறை பற்றியும் முன்னோடி என்ற பொருள்பட அவர் பற் மனதை வெளிச்சம் போட்டுக் காட்டி நிற் | "ஒரு படைப்பாளியின் இலக்கிய ஆச் அதனை ஆய்வுக்கு உட்படுத்தி, தனது இர னாய்வின் போது திறனாய்வாளர் வெளிட் யில் திறனாய்வு ஆக்கபூர்வமாக அமைய ஒரு படைப்பை நன்றாகப் படித்து அத ளையும் நல்ல அம்சங்களையும் எடுத்துக் செலுத்த வேண்டும். அதேவேளை அப்பல் யும் சுட்டிக்காட்டி, செம்மைப்படுத்துவ ஆலோசனைகளாகத் தெரிவிப்பதும் விரு பொதுப் பண்புகளை ஆசிரியர் முன் வை
ஈழத்தில் விமர்சனத்துறை, பத்திரிகை மன்றி, வானொலி, தொலைக்காட்சி, கரு; றவை மூலமும் வளர்ச்சி பெற்று வருகின்றது நாற்பது வருடங்களுக்கும் மேலாக 'கலைக் கிய விமர்சனங்களைத் தக்கவரைக் கொண் கடந்த நாற்பது ஐம்பது வருடங்களாக வி
தாயக ஒலி

ந்துக்களை எழுத்தாயுதத்தால் உயிரோவியமாக நிலைநாட்டியவர் வித்தியாதரன் என்றால் அது து நின்ற பத்திரிகைத் துறையில் கண்டு, அனுப வியங்கள் இந்நூலின் கண் பரவி இருப்பதை
அற்புதமான நூல் இலங்கை வரலாற்றில் எந்த ல. இனிமேலும் இப்படியான ஒரு நூலை எவ எழுத்துவீச்சு மிகுந்த வித்தியாதரன் அவர்கள் நாயுதம்' வருங்கால சமுதாயத்திற்கு ஓர் உயிரா
ம்.
அறிமுகம்
சங்கத்தால் நடத்தப்பட்ட 'தமிழ்ப் பட்டயச் காக நாடறிந்த படைப்பாளியும், திறனாய்வாள ாரன் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வ ப்வுக் கோட்பாடுகள் - ஓர் அறிமுகம்' என்னும் ளது. திறனாய்வுத்துறை சம்பந்தமாகக் கடந்த ட்டு வரும் விவரங்களை முடிந்தளவு இந்நூலில் * குறிப்பிட்டுள்ளார். பதின்மூன்று தலைப்பு பன்னிறுத்தியுள்ளார். பேராசிரியர் க.கைலாசபதி D, சுவாமி விபுலாநந்தர் ஈழத்தின் திறனாய்வு றியும் தந்த விடயங்கள் நூலாசிரி யரின் திறந்த Dகிறது. 5கத் திறனை இனங்கண்டு, சனையும் கணிப்பையும் திற சபடுத்துகிறார். அந்த வகை வேண்டும். திறனாய்வாளர் ல்ெ கூறப்பட்ட நுட்பங்க கூறுவதில் முக்கிய கவனம் மடப்பின் குறைப்பாடுகளை தற்கான வழி முறைகளை, நம்பத்தக்கது” என்று திறனாய்வு தொடர்பான த்துள்ளார். கள், சஞ்சிகைகள், நூல்கள் வாயிலாக மாத்திர இதரங்குகள், கலை இலக்கிய விழாக்கள் போன் - இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் கடந்த கோலம்' என்றொரு நிகழ்ச்சி மூலம் கலை, இலக் ஒெலிபரப்பி வருகின்றது. எனவே இலங்கையில் மர்சனத்துறை வளர்ந்து வருகின்றது எனலாம்.
- 18

Page 29
(ஈழத்து நவீன திறனாய்வாளர்களின் மு லிங்கம், சோ.சிவபாதசுந்தரம் ஆகியோல் இலக்கிய விமர்சன அணுகுமுறை பற்றிப் ளவிலே செழித்து வளர்ந்துவிட இயலாது. யியல், சமயம் முதலிய ஏனைய துறைகளில் இலக்கிய விமர்சனமும் இடம்பெறும் என க.கைலாசபதி வலியுறுத்தியிருக்கிறார். வி வேண்டுமாயின், அது உலகத்தை மாற்றிய சக்திகளும் ஓயாது பயன்படுத்தும் அறிவ கைலாசபதி என்று ஆசிரியர் குறிப்பிடுகின்
இலக்கியச் சுவையானது யாது, அச்சுை யாது, இலக்கியம் கற்றற்கு இயைந்த கரும் எழுப்புகிறார். இவ்வாறு செய்வதே ஒரு திற களாகும். இந்தப் படிகளை அரை நூற்றாண் தெளிவாகத் தெரிவித்திருக்கிறார். அது மாத் நாதமாகத் தொனிக்கும் விடயங்களை, இல் கருத்துகளை, அன்றே அவர் கூறியுள்ளமை தெளிவுபடுத்தியுள்ளார். "கே.எஸ்.சிவகுமார் சியபடுத்திய அறிவைப் பகிர்ந்து பயனுறச் நேயத்தின் வெளிப்பாடு” என்று பேராசிரிய திறனாய்வுக் கோட்பாடுகள்' என்ற அறிமுக வெளிப்பாடாகப் பரிணமித்திருக்கின்றது தொடரட்டும் அவர் பணி.
"தாயக ஒலி ஒரு வருடச் சந்தா - ரூபா 900 (அஞ்ச வெளிநாடு
$ 30 (U.S), £20 உங்கள் தாயக ஒலியின் வளர்ச்சிக்குச் சந்
தொடர்பு:
S.AMIRTHALINGAM
திருமலை ப 13B, CEDAR ROAD
I (Thirumala SUTTON
139, Canno
Rayns Parl ISM2 5DA,
UK..
London 02034416329
SW20 987 079564860)
சந்தாவுக்கான கால எல்லை நிறைவுபெற்ற, எங்க தங்கள் சந்தாவைப் புதுப்பித்துக் கொள்ளும் வண் பணி தொடர் உங்கள் ஆதரவு எமக்கு என்றும் மு
தாயக ஒலி

ன்னோடியாக இலங்கையர்கோன், சி.வைத்தி ரக் க.கைலாசபதி குறிப்பிட்டுள்ளார். நவீன பேசும்போது, விமர்சன இலக்கியம் தன்ன மொழி, இலக்கியம், பண்பாடு, வரலாறு, மெய் நிகழும் ஆய்வுகளுக்கியைந்த முறையிலேயே எற பண்பையும் திறனாய்வாளர் பேராசிரியர் மர்சன இலக்கியம் ஆற்றலும் ஆழமும் பெற மைப்பதற்கு உழைக்கும் வர்க்கமும் அதன் நேச யுதமாகவும் இருத்தல் வேண்டும் என்கிறார் "றார்.
வயில் ஈடுபடுவதற்கு வேண்டிய மனப்பழக்கம் விகள் யாவை என்பன போன்ற வினாக்களை மனாய்வாளரின் முயற்சிகளில் முதல்படி நிலை டுக்கு முன்னரே விபுலாநந்த அடிகள் தெட்டத் ந்திரமல்ல, கலை இலக்கியத் துறைகளில் அடி ன்றைய விமர்சகர்கள் இன்று கூறிவரும் அதே யையும் அவதானிக்கலாம் என்று நூலாசிரியர் என் அவரது வாசிப்பின் வழியாகத் தாம் களஞ் செய்யும் பொதுமை நோக்கு அவரின் மானிட பர் சபா.ஜெயராசா குறிப்பிட்டுள்ளார். 'நவீன க நூல் கே.எஸ்.சிவகுமாரனின் ஆளுமையின் என்பதை வாசகர்கள் ஒத்துக் கொள்வார்கள்.
சந்தா விவரம் ம் செலவுடன்)
U.K) நாதாரர்களாகச் சேர்ந்து ஆதரவு நல்குங்கள்.
|லர்
| Bala) 1 Hill Lane
வங்கிக் கணக்கு விவரம்: T.Sivasupramaniam A/C No: 8100086490) Commercial Bank - Wellawatte, Sri Lanka.
... ------------ -----
UK
ள் நம்பிக்கைக்குரிய வாசகப் பெருமக்கள் யாவரும் னம் பெருந்தன்மையுடன் வேண்டுகிறோம். எங்கள் தகியம்.
- 19

Page 30
கட்டுரை
| பண்பாட்டுக்
ஓர் இனத்தின் நடத்தைகளே - வாழ்க் கையை நடத்தும் முறைகளே - பண்பாடு ஆகும். முந்திய தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறை பெற்றுக் கொள்ளும் செல்வமாகும்.
நடத்தைகள் எல்லாம் பண்பாடு என்று சொல்லப்பட்டாலும் நீர் என்றால் நன்னீ ரையே குறிப்பது போல நல் நடத்தைகளே பண்பாடு எனப் போற்றப்படும். பண்பட்
டதே பண்பாடு.
ஓர் இனத்தை அடையாளப்படுத்து வது அந்த இனத்தின் பண்பாடே ஆகும். பல்லாயிரக்கணக்கான இனங்கள் வாழும் இந்த உலகத்தில் தமிழர்களாகிய நாம் எங் கள் இனத்தின் தனித்துவத்தை, அடையா ளத்தை நிலைபெறச் செய்வதற்கு எங்கள் பண்பாட்டைக் காக்க வேண்டும்.
நமது நடத்தைகள் அனைத்திலும் பண் பாடு தாங்கியுள்ளது. சிறப்பாக எமது பெயர், உடை, உணவு, உறையுள், உபச ரிப்பு முறை, உறவாடும் முறை, பெரியோ ரைக் கனம் பண்ணும் முறை, நமது சடங்கு கள், விழாக்கள், ஒழுக்க முறைகள் என
அனைத்திலும் பண்பாடு தங்கியுள்ளது.
பெயர்:
ஒருவரை இவர் எந்த இனத்தைச் சேர்ந்த வர் எந்த மொழிக்கு உரியவர், எந்தச் சமயத் தைச் சேர்ந்தவர், எந்தப் பண்பாட்டுக்கு உரி யவர், என்பதை அவருடைய பெயர்தான் அடையாளப்படுத்துகிறது ஆணா, பெண்ணா என்பதைக் கூடப் பெயர்தான் காட்டுகிறது. அதனால் எவருக்கும் பெயர் தான்முதல் அடையாளமாக உள்ளது. பெயர் இல்லாதவர் இந்த உலகத்தில் எவருமே இல்லை. ஆதலால் பண்பாட்டின் வேர்
தாயக ஒலி

கோலங்கள்
கலாபூஷணம், சைவப்புலவர் சு.செல்லத்துரை.
பெயர் ஆகும் என்பது எல்லோர்க்கும் தெரிந்த ஒன்று.
தமிழர்களாகிய நம் முன்னோர்கள் அனைவரும் தமிழ்ப் பெயர்களை உடைய வர்களாகவே இருந்தனர். பெயர் சூட்டு தலை ஒரு முக்கியமான சடங்காகவே செய் தனர். பெயரைக் கொண்டு பொருளை அறிதல் போல ஒருவரின் பெயருக்கேற்ப அவருடைய நடத்தைகள் அமையும் என் பதால் ஒரு பெரியவர் மூலம், சுபநேரத்தில் இறைவனை வணங்கிப் பெயர் சூட்டி அப்பெயரை எல்லோரும் அழைத்து அக் குழந்தையை வாழ்த்துவர். இதனை நாம் கரணம் எனப் பஞ்சாங்கம் குறிப்பிடுகிறது. ஒரு மந்திரத்தைத் திரும்பத் திரும்பச் சொல் லும் போது மந்திர பலன் கிடைக்கும். அது போலப் பிள்ளையின் பெயரும் மந்திரம் போல் அமைய அப்பெயரைச் சொல்லச் சொல்ல அப்பெயரின் பொருளுக்கேற்ற வனாய் அவன் உருவாகி வளர்வான். அத னால் தான் பெரியவர்களின் பெயரையோ அல்லது வணங்கும் தெய்வத்தின் பெய ரையோ வைக்கும் பண்பாடு நிலைபெற்று இருந்தது. “உள்ளுவதெல்லாம் உயர்வுள் ளல்” என்ற வள்ளுவன் சொல் போலப் பிள் ளையின் பெயர் மந்திரம் போலப் பலன் தந் தது.
இக்காலத்தில் இந்த உண்மைகளை நம்மவர்கள் மறந்துவிட்டார்கள். அந்நிய மோகத்துக்கு ஆட்பட்டுப் பிறமொழிப் பெயர்களை வைக்கும் நிலை ஓங்கி வரு கிறது. அப்பெயர் குறிக்கும் பொருள் என்ன
20

Page 31
என்பதைப் பெற்றார் அறிவதில்லை. பெய ருக்குரிய பொருளை பிள்ளைகளும் அறிய மாட்டார்.
இதனால் எங்கள் பண்பாட்டின் ஆணி வேராகிய தமிழ்ப் பெயர்களை இழந்து, எப் இனத்தின் அடையாளத்தையே அழித்து, அந் நியமயமாகிக் கலப்பினமாகிவிடுவோம் இக்காலக் குழந்தைகளின் பெயர்களைப் பார்ப்போமானால் எதிர்காலத்தில் இவர். கள் தமிழர்தானோ என்று கேட்கும் நிலை உருவாகிவிடும். இனப்பற்று உள்ள ஒவ் வொருவரும் இதனைச் சிந்தனைக்கு எடுத் துப் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர் களையே வைக்கவேண்டும்.
உடை
உலகிலுள்ள பல்வேறு இனத்தவர்க்குப் தனித்தனியாக அந்தந்த இனத்தின் பண்பாட் டுக்கு ஏற்ற மாதிரியான உடைகள் உள. இவை பெரும்பாலும் அவர்கள் வாழும் நாடுகளின் தட்பவெப்ப சுவாத்தியத்துக்கு ஏற்றதாக அமைந்திருக்கும். உடை உடல் அழகிற்கு மட்டுமல்ல உடல் நலத்துக்கும் இன்றியமையாதது.
தமிழர்களின் பண்பாட்டு உடை வேட்டி, சால்வை, சேட் அல்லது நஷனல் ஆண்க ளுக்குரியது. பருவம் எய்தாத பெண்குழந் தைகளுக்கு முழுப்பாவடை சட்டையும் பருவம் எய்திய பெண்களுக்கு முழுப் பாவடை சட்டையும் துண்டுத் தாவணி யும், வளர்ந்த பெண்களுக்குச் சேலையும் உரியன. இக்காலத்தில் உடைகள் பெரிதும் மாறிவிட்டன.
உத்தியோகம் மற்றும் தொழில்களுக் குச் செல்வோர், பாடசாலை மாணவர்கள் சீருடை அணிவது தவிர்க்க முடியாதது. எனினும் எங்கள் இனத்துக்குரிய திரும் ணம் முதலான பண்பாட்டு விழாக் காலங்க ளிலும் ஆலய வழிபாடு முதலான இடங் களிலும் எமது பண்பாட்டு உடைகளை
தாயக ஒலி

அணிவதைத் தவறவிடக்கூடாது. அந்நிய இனத்தவர்களின் உடைகளை அழகானது அல்லது கவர்ச்சியானது என அணிதல் அது எங்கள் பண்பாட்டையும், இன அடை யாளத்தையும் சிதைக்கும் செயலாகும்.
'
உணவு
உண்ணும் உணவும் உடைபோல மக் கள் வாழும் நாட்டின் சுவாத்தியத்துக் கேற்ற, இயற்கையோடு இயைந்த உணவா கவே இருப்பதைக் காணலாம். தமிழர்களா கிய நாம் எங்கள் மண்ணில் உற்பத்தியாகும் தானியம், பழவகை, கிழங்கு வகை, இலை வகைக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
உண்ணும் போதும் குடும்பத்தினர் எல் லோரும் ஒன்றாக இருந்து அளவளாவி ஆறுதலாக உண்ண வேண்டும். அப்போது தான் குடும்ப உறவு நிலைப்பதுடன் உண் ணும் உணவும் சரியாகச் சமிபாடடைய வும், உணவு சமிபாடு அடைவதற்குத் தேவை யான சுரப்புகள் சுரந்து சத்துக்கள் உடலில் உறிஞ்சப் படவும் வாய்ப்பாக இருக்கும்.
பல நாட்களுக்கு முன் சமைத்துக் குளிர் சாதனப் பெட்டியில் வைத்துவிட்டு அவர வர் தமக்கு வசதியான நேரத்தில் சூடாக்கி உண்ணும் பழக்கத்தால் குடும்ப உறவும், உணவின் பயனும் பாதிப்படையும்.
நாம் மட்டும் உண்ணாமல் விருந்தி னர்க்கோ இல்லாதவர்க்கோ பகிர்ந்து கொடுத்து உண்பதும் நமது பண்பாடு ஆகும். இதனை வள்ளுவர் குறளில்
“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்
நூலோர் வகுத்தவற்றுள் எல்லாம் தலை" என்றும், "செல்விருந்து ஓம்பி வருவிருந்து
பார்த்திருப்பான் நல்விருந்து வானத்தவர்க்கு"

Page 32
என்றும் சொல்வதிலிருந்து தெரிந் கொள்ளலாம்.
உறவாடும் முறை :
ஒருவரைக் கண்டவுடன் முகம் மலர்ந், வணக்கம் சொல்வதும் வணக்கம் சொ லும் போது இருகரம் கூப்பி வணங்குவது இன்றியமையாதனவாகும். மேலை நா டுப் பாணியில் கைகுலுக்குவது எங்கள் பலி பாடு அல்ல. அது சுகாதாரமான வழக் மும் அல்ல. எங்கள் வீட்டுக்குப் பிறர் வ தால் எழுந்து நின்று வரவேற்பதும், அவ களை உபசரிப்பதும், அவர்கள் போகு போது வாயில்வரை கூட்டிச் சென்று வ அனுப்புவதும் இன்றியமையாதனவாகு
விழாக்கள், சடங்குகள் :
விழாக்கள் மற்றும் சடங்குகளுக்கு போகும்போது எங்கள் பண்பாட்டு உடை யில் போவதும், எங்கள் பண்பாட்டின்ப உறவாடுவதும், உபசரிப்பதும் இன்றிய ை யாதன. இவ்விடங்களில்தான் இளம்பி ளைகள் எங்கள் பண்பாட்டைக் கற்று கொள்கிறார்கள்; தங்கள் வாழ்க்கையிலு அவற்றைக் கடைப் பிடிக்கப் பழகுகிறா கள் என்பதை மறுத்தல் ஆகாது.
மங்கல விளக்கேற்றல் :-)
அனேகமாக எல்லாவிழாக்களிலு மங்கல விளக்கேற்றும் நோக்கத்தையும்
'தாயக ஒ
ஈழத்தின் இலக்கிய வருடங்களுக்கு மேலாக வரலாறு அஸ்தமித்துவி விமர்சனங்களுக்கு மத் படைப்பிலக்கியத் துறை பொன்னுத்துரை (எஸ். 'த இனி ஒரு எஸ்.பெ நிற்கிறது. அன்னாரின் நெஞ்சங்களுக்கும் "தாய றும் அவர் நாமம் தீயாக
தாயக ஒலி

து
b• 5 6• 5. 5. 91 4. | • 6- 2. 51
முறையையும் கவனத்தில் கொள்வது குறைவு. ஒளிதான் உயிரினங்களை வாழவைக் கிறது. இறைவன் ஒளிவடிவாக இருக்கி றான். ஆதலால் எக்கருமத்தையும் தொடங் கும்போது விளக்கில் ஒளி வடிவாக இறை வனை எழுந்தருளச் செய்து எடுத்த கருமம் இனிதே நிறைவடைய வேண்டும் என வணங்குதலே விளக்கேற்றுவதன் நோக்கம். ஆதலால் எல்லோரும் எழுந்து நின்று இறை வனை வணங்க, உரியவர்கள் பயபக்தியு டன் விளக்கேற்ற வேண்டும். விளக்கேற்றிய வுடன் கடவுள் வணக்கம் பாடவேண்டும்.
') | +
எச்சமயத்தவராயிருந்தாலும் தத்தம் சமய ஒழுங்குக்கேற்ற கடவுள் வணக் கத்தைப் பாடலாம். விளக்கேற்றும் போது காலில் சப்பாத்து இருப்பது முறையல்ல. புனிதமான இடமாதலால் புனிதமாக நின்று சப்பாத்தைக் கழற்றிவிட்டே தீபம்
ஏற்றவேண்டும்.
பண்பாட்டுக் கோலங்கள் மிக விரிவா னவை. நம்முன்னோரால் எங்களுக்காக விட்டுச் சென்ற செல்வங்கள். அந்நிய அர சியல் ஆதிக்கத்தினாலும், மத மாற்றங்க ளாலும் அவற்றின் அருமையை மறந்து விடுகின்றோம். நாம் செய்யும் ஒவ்வொரு கருமத்தையும் எதற்காக, எப்படி என்று சிந்தித்து, எங்கள் பண்பாட்டைக் காத்து அடுத்த தலைமுறைக்குக் கையளிப்போம் 9
S. S. S.
5'யின் அஞ்சலி 1 வரலாற்றில் தனக்கெனத் தனிவழி அமைத்து ஐம்பது ப் படைப்பாளியாக, விமர்சகராக இருந்து செயற்பட்ட ஒரு டது. எத்தனையோ ஆக்க இலக்கியகாரர்களின் ஆழமான கியிலும் துணிந்து நின்று தன்வழி 'நற்போக்கு' என்று கூறி பில் புதுமைகள் படைத்த முதுபெரும் எழுத்துலகச் சிற்பி எஸ். பாயின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். -.வைக் காண்போமா? என்று இலக்கிய உலகம் ஏங்கி மறைவால் துயருறும் அவரின் குடும்பத்தாருக்கும் இலக்கிய க ஒலி' தனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறது. என் பிரகாசிக்கும் .
22

Page 33
யோக மாற Eபாமக
நாகபாம்பபபா கபா -'
Kulendran Immig
Law Chambe (அங்கீகார எண் : F2001 22வது ஆண்டு குடிவரவு விண்ணப்பங்கள் / கு மற்றும் சகலவிதமான குடி 0 நாடு கடத்தலுக்கு எதிரான
பிரித்தானிய குடியுரிமை 6 உங்கள் உறவினர்களை சகலவிதமான விசா நிராக மேன்முறையீடுகள் Bail Application Asylum Appeals
Human Rights Appli “லண்டன் பல்கலைக்கழக கல்ல
விசா நீடிப்புக்கள் / Prosp
விண்ணப்ப ஆலே Tel No: 020 8542 8222/ 020 8682 Fax No : 020 8542 8666 Mobile : 0776918559) E-mail : kilc_work@yahoo.co.uk
11 பா பா
பாயா காதல்

gration
காபம் கோபம் போடு :
Trs
20055)
சேவை டிவரவு மேன்முறையீடுகள் வரவு தேவைகளுக்கும். 1 மேன்முறையீடுகள் விண்ணப்பங்கள் வரவழைத்தல் கரிப்புக்கு எதிரான
= = = = EE EEE.
= = = :- பE E F - 51)
5= = = =
வக்பர்EE0ார் --- EE = :
= = Hi - பாம் இE - 2 தசா E HEதப்படும் - பார்
ப க E =
cation / Appeals
பாரிகளுக்கான அனுமதிகள் | lective Student Visa லாசனைகள்
15 பாகம் 5 -: 1721 - 50 EE : 22
4494
-= = = = = = 5:50
- 25 ந== = = = பு: 2 555 யா -2: E: கா= 5 =
nir
பாபா
90, High Street, Colliers Wood London SW19 2BT
= = = = = = = = = =

Page 34
SHUNR
НЕ
NU KA
IM EIE
LARAT
ISSHINA
ADEMY
| 59 Cranley Road Tel: 020 8518 3288, Mob: 07950346432, E AFFILIATED TO ISSHINRYU WORLD K
ALL INDIA ISSHINRYU
DEVE SELF DEFENG
SELF I COURAGE
*Renshi Raveendran is a 6th Master Shihan Hussaini(Indi Grandmaster Kichiro Shimal
*Traine branch
and fer *His Students have won mal Isshinryu Karate competition தமிழர்கள் செறிந்து
றென்ஷி ரவீந்திரனது தகுதி வாய்ந்த ஆசிரியர்
இஷின்றியு கர சிறந்த முறையில் பயிற்றுவ
OUR
EASTHAM, MANOF WALTHAMSTOW, 1 CROYDON, MITCH
SOUTHEN CONTACT: RENSH
TEL : 0.
MOB :0 Email: info@henshou.CO

NISHOU IYU KARATE ADEMY
, Ilford, Essex, IG2 GAF mail: info@henshou.com, Web: www.henshou.com ARATE ASSOCIATION - OKINAWA, JAPAN AND KARATE ASSOCIATION - INDIA
og et pa
TOP YOUR GE, SELF CONTROL DISCIPLINE,
6 LEADERSHIP
Dan Black Belt who has trained directly under a), Grandmaster Christopher Chase (USA) and puku (Japan) a and coached over 1000 students from various es (Students age varies from Syrs to 65 yrs-male male).
y awards from various local competitions and world s held in the USA 1 வாழும் பல பகுதிகளில் ஓ நேரடிக் கண்காணிப்பில் 1 குழுவின் அனுசரணையுடன் ாத்தே வகுப்புக்கள் சிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது
BRANCHES:
PARK, NEWBURY PARK PLUMSTEAD, LEWISHAM LAM, BRISTOL, HARROW D, SWINDON
KANDIAH RAVEENDRAN (6th DAN BLACK BELT) 0 8518 3288 1950 346 432
m Web: www.henshou.com

Page 35
www.jrprint.com
30 YEARS EXPERIENCE IN THE PRINTING QUICK, QUALITY & AFFORDABLE
2 Arangetram Books
Cake Boxes
Bill Books, Invoices O Leaflets O Rich Cakes & Boxes O Raffle Tickets
Rubber Stamps
Lamination O Translation Services O Birthday Cards O Letter Heads O Wedding Cards
Short Eat Boxes
Photocopying O Compliment Slips a Short eat Bags
Gold Blocking O Visiting Cards
Colour Printing O Invitation Cards O Souvenirs & Invoices Fax: 020 8521 3967 Mob: 07939 998 730 E-mail: jrprintuk@gmail.com 59-61, Hoe Street, Wal

wane Na B
Cint
www.jrprint.com - experience of the power -
INDUSTRY SERVICE
Guaranteed delivery within 72 Hours in Europe at Minimal cost
O1702 469 324
kesaltes. ASV
Crystal
Contact for FREE Quotation
20208 503 6643
thamstow, London E17 4QR

Page 36
கோல்டு ஹவுஸ் & 6
பார்
Exclusive Designer Jewellery Sarees & all Other Dresses
Selvaraja Gold i
பொன்னுருக்கலுக்கா தரப்படுவதுடன் தாலிக்
தக்கத்தின் விலைக் கூறைப்புடவைகள், பட்டுப்
40% விலைக்கழிவில் வ
162B, Mitcham Road, 'Tel : 020 8767 3795, Mq

Tஜா
டக்ஸ்டைல்ஸ்
உங்கள் எண்ணம் போல் நகைகளையும் புடைவைகளையும் தெரிவுசெய்துகொள்ள
louse & Textiles என வசதிகள் செய்து
கொடிகள் அனைத்தும்
கே செய்து தரப்படும் புடைவைகள் அனைத்தும் பற்றுக்கொள்ளலாம் London SW17 9NJ 'bile : 07825 005 269

Page 37
கட்டுரை
தவத்திரு தனிந
அவர்களின்
பெருமதிப்பிற்குரிய பேராசிரியர் தவத்திரு (1913 - 2013) விழா நினைவஞ்சலியையொட் ஆற்றியுள்ள அரும்பணிகள் சிலவற்றை நி கட்டுரை இது.
சேவியர் ஸ்தா னிஸ்லாஸ் தனிநாய கம் என்னும் பெய ருக்குரிய இவ்வரு ளாளர் 1913 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் இரண் டாம்
நாள் இலங்கை நாட் டின் யாழ்ப்பாணத்தை அடுத்த நெடுந்தீ வில் பிறந்தவர்.
இளவயதிலேயே கிறிஸ்தவ மறைக் கல்வியில் தேர்ச்சி பெற்று அத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.
தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம், இலத் தீன், இத்தாலியம், பிரெஞ்சு, ஜேர்மன், போர்த்துகேசியம், ஸ்பானிஷ் ஆகிய பல மொழிகளில் புலமை பெற்றவர்.
தமிழகத்து அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், தமிழகத்து இயற்கை வளக் கூறுகளைச் சித்திரிக்கும் சங்க இலக்கியப் பாடல்கள் பற்றி ஆய்வு செய்து எம். லிட் முதுகலைப் பட்டம் பெற்றவர். இலண்டன் பல்கலைக்கழகத்தில், பழந்தமிழ் இலக்கி யங்களில் கல்வி சிந்தனைகள் என்பது பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற வர்.
தமிழகத்தைச்சேர்ந்த நெல்லை மாவட் டத்தில் உள்ள வடக்கன்குலம் புனித திரேசா உயர்நிலைப் பள்ளியில் 1940 ஆம்
தாயக ஒலி

காயக அடிகளார்
கல்விப் பணி
தனிநாயக அடிகள் அவர்களின் நூற்றாண்டு 3, பேராசிரியர் அவர்கள் உயர் கல்வித்துறையில் னைவுகூரும் நோக்கில், வரையப் பெற்றுள்ள
ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரையில் துணைத் தலைமை ஆசியராகவும், இலங்
கைப் பல்கலைக்ககழகத்தில் 1952 ஆம் ஆண்டு முதல் 1961 ஆம் ஆண்டு வரை யில் கல்வித்துறை விரிவுரையாளராகவும், மலாயாப் பல்கலைக்கழகத்தில் 1961 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரை யில் இந்திய ஆய்வியல் துறையின் தலைவ ராகவும் பேராசிரியராகவும் அரும்பணியாற் றியவர்.
பன்னாட்டுத் தமிழ்ப் பேரறிஞர்களின் தமிழாய்வுக் கட்டுரைகளை வெளியிடு வதற்கென்று, தமிழர் பண்பாடு (Tamil Culture) என்னும் முத்திங்கள் ஆய்வு ஏட்டைத் தமிழகத்தின் சென்னை மாநகரில் 1952 ஆம் ஆண்டில் தொடங்கி, 1966 ஆம் ஆண்டு வரையில் பதினான்கு ஆண்டுகள் தொடர்ந்து வெளியிட்டவர்.
தமிழாய்வுகள் அனைத்துலக அளவில் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதற்கும் அனைத்துலக தமிழறிஞர் மாநாடுகள், கருத்தரங்குகள் ஆகியவற்றை ஏற்பாடு செய் வதற்கும், தமிழாய்வு நூல்களை வெளி யிடுவதற்கும் உரிய வழிவகைகளை வகுக்க வல்லதோர் அமைப்பினை அனைத்துல கத்தமிழாய்வுச் சங்கம் (International Association of Tamil Research) என்னும் பெயரில் 1964 ஆம் ஆண்டில் நிறுவியவர்.
தமிழாய்வுகள் உலமெங்கும் பரவும்
23

Page 38
வகையில் அனைத்துலக அளவில் த ழாய்வு மாநாடு நடத்த வழி வகுத்ததோடு மலேசியத் திருநாட்டின் தலைநக கோலாலம்பூரில் 1966 ஆம் ஆண்டில் மு. லாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு உலகத் தமிழாய்வு மாநாடுகளும் நடந்தி வித்திட்டவர்.
உலகின் பல்வேறு பல்கலைக்கழக களின் வருகைதரு பேராசிரியராகவும் உலகளாவிய தமிழ் மற்றும் அரசு அமை புகள், அரசு சாரா இயக்கங்கள் ஆகியவ றின் ஆலோசகராகவும் அருந்தொண்டா றிய இப்பேரறிஞர் 1980 ஆம் ஆண்டு செ டெம்பர் திங்கள் முதல் நாள் தம் 67 ஆம்
அகவையில் இறையடி சேர்ந்தார்.
பேராசிரியர் தவத்திரு தனிநாயக அட கள் அவர்கள் மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில் Faculty of Arts an Social Science எனப்படும் கலை மற்றும் சமூ கவியற் புலனைச் சேர்ந்த இந்திய ஆய்வு யல் துறையின் பேராசிரியராகவும், தலை ராகவும் 1961 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரையில் ஆற்றிய உயர்கல்விப்பண கள் பல்வேறு வகைப்பட்ட பெருமைகளும் குரியனவாகும். அவற்றுள் பின்வரும் சில வற்றைக் குறிப்பிடலாம்.
01. மலாயாப் பல்கலைக்கழகத்தில் இ திய ஆய்வியல் துறையின் தலைமைத் துவப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட 196 ஆம் ஆண்டு முதற்கொண்டே, | (அ) தமிழ் மொழியில் போதிக்கப் பெற்ற பாடங்களைக் கற்க வேண்டி மலாயாப் பல் கலைக்கழக இளங்கலைப் பட்டத்திற கென்று இந்திய ஆய்வியல் துறையில் பதிவுசெய்துகொண்ட மலேசிய மற்றும் சிங்கப்பூர்த் தமிழ் மாணவர்களுக்கென்று தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் ஆகிய துறை களைச் சார்ந்த புதிய பாடத் திட்டங்கள்,
(ஆ) மலாயாப் பல்கலைக்கழகக் கலைப் புலனைச்சேர்ந்த தமிழ்மொழி, இலக்கியப்
தாயக ஒலி

5 3.
0.
*
d
ஆகியவற்றைக் கற்றிராத (பெரும்பாலும் ,ெ -
மலாய், சீன) மாணவர்கள் பலரும் இந்திய ஆய்வியல் துறையைச் சார்ந்த தமிழர் பண்பாடு நாகரிகம், சமஸ்கிருத மொழி, இலக்கியம், மலேசிய இந்தியர் வரலாறு போன்ற பாடங்களை, முத லில் ஆங்கில மொழி வாயிலாகவும் (பின் னர், 1969 ஆம் ஆண்டு முதல் மலேசியத் தேசிய மொழி யாகிய மலாய் மொழி வாயிலாகவும்) கற்
கும் அரியதொரு வாய்ப்பினைப் பெற வேண் » டிச் சிறப்பாகத் தயாரிக்கப் பெற்ற புதியப் * பாடத் திட்டங்கள், ப் (இ) அப்பாடங்களைப் போதிக்கவல்ல ம் புதிய விரிவுரையாளர்கள் இந்திய ஆய்வி யல் துறையில் பணியாற்றும் வாய்ப்பு.
-ஆகியவற்றை மிக விரைவாக உரு வாக்கிய பெருமைக்குரியர் பேராசிரியர் தவத்திரு தனிநாயக அடிகள் அவர்கள்.
02. 1966 ஆம் ஆண்டு வரையில், தமிழ்ப் பெருமக்கள் அறவே கேள்விப்பட்டிராத உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை உல கத் தமிழர்கள் பலரும் வியந்து பாராட்டும் வகையில் மலேசியத் தலைநகர் கோலா லம்பூரில் மலாயாப் பல்கலைக்கழக வளா கத்தில் முதன் முதலாக 1966 ஆம் ஆண்டு ஏற்பாடு செய்து வாகை சூடிய பெருமைக் குரியவர் பேராசிரியர் தவத்திரு தனிநாயக அடிகள் அவர்கள்.
03. முதலாம் தமிழ் ஆராய்ச்சி மாநாட் டின்போது வெளியீடு கண்ட தமிழியல் சார்ந்த பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரிய நூல்களுள் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் தலைவராகப் பேராசிரியர் அவர்கள் பொறுப் பேற்ற பின்பு மலாயாப் பல்கலைக்கழக முதுகலைப் பட்டத்திற்கென்று மலேசியத் தமிழ் மாண வர்கள் தமிழ் மொழியைக் குறித்தும் தமிழ் இலக்கிய நூல்களைக் குறித்தும் ஆய்வு செய்து இயற்றிய அரிய நூல்களும் அடங் கும் என்பது குறிப்பிடத்தக்கது.
5

Page 39
04. உலகத்தின் பல்வேறு பகுதிகளில் உயர்கல்வித் துறையில் பணியாற்றி வந்த அறிஞர் பெருமக்கள் பலருடன் தொடர்பு கொண்டிருந்த பேராசிரியர் அவர்கள், அந்த அறிஞர்களில் சிலர் தம்தம் நாடுக ளில் தமிழியல் பற்றி கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டதும் தற்காலத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவது மான ஆய்வுகள் பற்றி அரும்பாடுபட்டு திரட்டிய விவரங்கள் அடங்கிய ஆய்வுக் கட்டுரைகளின் கருவூலமாகக் கருத்தப் படும் Tamil StudiesAbnai:ASymposium என் னும் ஓர் அரிய நூலைத் தொகுத்து வெளி யிட்ட பெருமைக்குரியவர் பேராசிரியர் அவர்கள்.
05. மலேசியாவில் நடைபெற்ற முத லாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் நிகழ்வுகள் பற்றிய விவரங்களும், அம்மாநாட் டின் போது பல்வேறு அமர்வுகளில் உலகத் தமிழ் அறிஞர்கள் பலர் தமிழ் மொழியிலும் படைத்தளித்த ஆய்வுக் கட்டுரைகளும் அடங்கிய இரண்டு தொகுதி களாலாகிய Proceedings of the First Intemational Conference - Seminar 1966 என அழைக்கப் பெறும் அரிய நூலை (இரண்டாம்உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு தமிழகத் துச் சென்னை மாநகரில் 1968 ஆம் ஆண்டு நடைபெறுவதற்கு முன் னரே) வெளியீடு காணச் செய்த பெருமை யும் பேராசிரியர் தனிநாயக அடிகள் அவர்களைச் சேர்ந்தாகும். - 06. தமிழ்ப் பண்பாட்டின் கருவூலமாக விளங்கும் திருவள்ளுவர் பெருமான் இயற் றியருளிய திருக்குறள், பேராசிரியர் இஸ் மாயில் ஹூசேன் அவர்களால் மலேசியா வின் தேசிய மொழியாகிய மலாய் மொழி யிலும், பேராசிரியர் செங்-சி அவர்களால் உலகப் பெருமொழிகளில் ஒன்றான மேண் டரின் எனப்படும் சீன மொழியிலும் மொழி யாக்கம் செய்யப் பெற்று 1968 ஆம் ஆண் டில், மேற்கூறிய நூல்களை வெளியிடு வதற்கு பொருளுதவி நல்கிய மலேசிய தாயக ஒலி -

நாட்டுக்கோட்டை செட்டியார் அறவாரி யத்தின் துணைகொண்டு மலேசியாவில் வெளியீடு காணச் செய்த பெருமைக்குரி யவர் பேராசிரியர் தவத்திரு தனிநாயக அடி கள் அவர்கள்.
07. 1967 ஆம் ஆண்டு வரை தமிழிய லைப் பற்றி ஆங்கில மொழியில் உலகத் தின் பல்வேறு பகுதிகளில் வெளியிடப் பெற்ற நூல்களின் விவரங்களை அரும் பாடுபட்டுத் திரட்டி அவற்றை, A Reference Guide to Tamil Studies - Books என்னும் நூலாகத் தொகுத்து வெளியிட்ட பெரு மைக்குரியவர் பேராசிரியர் தவத்திரு தனி நாயக அடிகள் அவர்கள்.
08. பேராசிரியர் தவத்திரு தனிநாயக அடிகள் மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறைத் தலைவராக வும், கலை, சமுகவியற் புலன் தலைவராக வும் அரும்பணியாற்றிய பெருமைக்குரிய வர். பேராசிரியர் அவர்கள், மலாயாப் பல் கலைக்கழகத்தில் உயர்கல்விப் பணியாற் றிய போது தமிழ் மொழியிலும் ஆங்கில மொழியிலும் ஆற்றிய அறிவார்ந்த பேரு |ரைகள் பலவற்றைச் செவிமடுக்கும் வாய்ப் பினைப் பெற்ற அனைவரும் நற்பேற்றி னைப் பெற்றவர்களாவர். மலாயாப் பல் கலைக்கழகத்தில் உயர்கல்விப் பணியாற்று வதற்கு முன்பே தமிழவேள் கோ.சாரங்க பாணி அவர்கள் ஆண்டு தோறும் சிங்கப் பூரில் மலாயாவின் பேரூர்களிலும் ஏற்பாடு செய்து வந்த தமிழர் திருநாள் நிகழ்ச்சி களில் தமிழர் பண்பாடு, நாகரிகம் பற்றி சிறந்த சொற்பொழிவுகள் ஆற்றிய தமிழ்ப் பேரறிஞர்களுள் பேராசிரியர் தவத்திரு தனிநாயக அடிகள் அவர்கள் தலையாய
வர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
09. மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையில் பேராசிரியர் தவத்திரு தனிநாயக அடிகள் பணியாற்றிய காலம், மலேசிய மற்றும் சிங்கப்பூர்த் தமிழ்
DLாய
- 25

Page 40
ஆர்வலர்களின் பொற்காலம் என்று பெ மையுடன் கூறலாம்! அந்தப் பொற்கால தில் தான் இந்திய ஆய்வியல் துறையில் தலைமைத்துவத்தைப் பற்றியும், தமிழ ராய்ச்சி பற்றியும் கேள்வியுற்ற உலகத்தமி அறிஞர்கள் பலர், மலாயாப் பல்கலை கழக இந்திய ஆய்வியல் துறைக்குச் சிறப்
விளையாட்டு
அகில இலங்6 போட்டிகளில் வட்ட அண்மையில் ஈட்டி
அகில இலங்கை தேசி பாடசாலைகளின் 84 ஆவ சேர் ஜோன் டார்பட் (TAI BET) சவால் கிண்ணத்தி கான மெய்வல்லுநர் போ டிகள் பியகம் மகிந்த ரா
பக்ஷ மைதானத்தில் 2014 ஒ டோபரில் இடம்பெற்றது. பங்குபற்றிய வ பகுதி மாணவர்கள்3தங்கப்பதக்கங்களையு ஏனைய பதங்கங்களையும் தமதாக்கினர்
01. கோலுன்றிப் பாய்தல் (18 வயதிற்குகீ பெண்கள்) மகாஜனாக் கல்லூரி மாண அனிதா3.32 மீற்றர் உயரத்தினைப் பாய்ந்து தேசிய சாதனையை சமப்படுத்தி தங்க பதக்கத்தினை வென்றார்.
02. கோலூன்றிப்பாய்தல் (ஆண்கள்) அ வெட்டி அருணோதயாக் கல்லூரி மான வன் நெப்தாலி ஜொய்ஸன் 4.20 மீற்றர் உ ரத்தினைப் பாய்ந்து புதிய தேசிய சாதனை ஒன்றை நிலைநாட்டி தங்கப் பதக்கத்து னையும் வென்றார்.
03. கோலூன்றிப் பாய்தல் (20 வயதி குட்பட்ட ஆண்கள்) தெல்லிப்பளை மகான் னாக் கல்லூரி மாணவன் ரிசோத் 3.90 உ ரத்தைப் பாய்ந்து தங்கப்பதக்கத்தினை வென்றார். தாயக ஒலி

7ெ
ஜா
வருகை மேற்கொண்ட வண்ணமிருந்த னர். இதற்குத்தக்க சான்றாக விளங்குவது, மலாயாப் பல்கலைகழகத்தின் இந்திய ஆய் வியல் துறையினர் பல ஆண்டுகளாகப் போற் றிக்காத்துவரும் வருகையாளர் பதிவேடாகும்!
-சிங்கார வேலு சச்சிதானந்தம்
(நன்றி மயில், மலேசியா)
ழ் |
கதிரவேலு மகாதேவா
கை மெய்வல்லுநர் மாகாண மாணவர்கள் 2ய தேசிய சாதனைகள் "ய எம்பிலிப்பிட்டியாவில் 03.11.2014 இல்
இடம்பெற்ற கனிஷ்ட சேர் ஜோன் டார்பட் சவால் கிண்ணத்திற்கான மெய்வல்லுநர் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல் லூரி மாணவன் பாலச்சந்திரன் ஆனந்த் 14 வயதிற்குட்பட்ட பிரிவில் பரிதி வட்டம் எறி தலில் 37.33 மீற்றர் தூரத்திற்கு எறிந்து அகில இலங்கை புதிய சாதனையை நிலை நாட்டி தங்கப் பதக்கத்தினை வென்றார். - 1960 களில் தேசிய மட்ட மெய்வல்லுநர்
போட்டிகளில் யாழ். மாவட்ட மாணவர்கள் வி சாதனைகளை ஏற்படுத்தியிருந்தனர். 1963
இல் 43 ஆவது ஜோன் டார்பட் (அகில இலங்கை பாடசாலைகள்) மெய்வல்லுநர் போட்டிகளில் யாழ். பரியோவான் கல்லூரி இரண்டாம் இடத்தைப் பெற்று, (Runner up) முதலிடம் பெற்ற கொழும்பு றோயல் கல் லூரியை விட 4 புள்ளிகள் மட்டுமே குறை வாகப் பெற்றது.
அந்தப் போட்டியில் கோலூன்றிப் பாய் தலில் R.L. ரவீந்திரகுமார் முதலிடத்தை யும், 120 யார் தடைதாண்டி (Hurdles) ஓடும் போட்டியில் M.தெய்வேந்திரா முதலிடத் தையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது. மீளவும் எங்கள் மாணவர்கள் எழுச்சி பெற் றமை பாராட்டத்தக்கது.
- 26
ப்
ள்
E 9 )
ப8 3.

Page 41
சுவதேச டெஸ்ட் உலக சாதனைகள் எம்மவர் முத்ன
1990களில் கண்டி கட்டு கஸ்தோட்டை சென்ற் அந்த னீஸ் கல்லூரிக் காக கிரிக் கெட் விளையாடும் பொழுது 1991 ஆம் ஆண்டில்
இ ல ங'  ைக தேசிய பாடசாலை களின் அதிசிறந்த கிரிக்கெட் வீரராகவும் (School Boy Cricketer) தலைசிறந்த பந்து வீச்சாளராகவும் (Best Bowler) பாடசாலை மட்டத்தில் அந்த வருடத்தின் அதிகூடிய விக்கெட்டுக்க ளைப் பெற்ற வீரராகவும் (127 விக்கெட்டு கள்) திகழ்ந்தார்.
1992 இல் இலங்கை தேசிய டெஸ்ட் அணிக்குத் தெரிவு பெற்று சுழல் பந்துவீச் சாளராக (Leg Spinner) அவுஸ்திரேலியா வுக்கு எதிராகக் களமிறங்கினார். 2010 ஆகஸ்ட் மாதம் வரை 133 டெஸ்ட் பந்த யங்களில் விளையாடி மொத்தம் 800 விக் கெட்டுகளை கைப்பற்றி சாதனை புரிந்தார். இந்திய அணிக்கு எதிராக காலியில் இடம் பெற்ற முதல் டெஸ்ட்டில் 8 விக்கெட்டுக் களை வீழ்த்தினார். தமது இறுதி பந்துவீச் சில் 800 ஆவது விக் கெட்டாக துடுப்பாட்ட வீரர் P.Olga வை வெளியேறச் செய்து இலங்கை அணி 10 விக்கெட் வித்தியா சத்தில் வெற்றிபெற வழி சமைத்தார்.
உலகில் இலங்கைக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அத்தனை அணிகளுக்குமெதிராக ஒரு இன்னிங்ஸில்
தாயக ஒலி

கிரிக்கெட்டில் பல மள தம் வசமாக்கிய மதயா முரளீதரன்
6 விக்கெட்டுக்களுக்கு மேலும், ஒரு டெஸ்ட்டில் 10 விக்கெட்டுக்களுக்கு மேல் வீழ்த்திய ஒரே வீரர். இவரது சிறந்த பந்து வீச்சு பெறுமதியாக 2001 இல் சிம்பாவே வுக்கு எதிராக எடுத்த 9 விக்கெட்டுக் களுக்கு 51 ஓட்டங்கள் விளங்கியது. ஒரு டெஸ்ட் பந்தயத்தில் சிறந்த பந்துவீச்சு பெறுமதியாக 1998 இல் இங்கிலாந்துக்கு எதிராக ஓவல் மைதானத்தில் பெற்ற 16 விக்கெட்டுக்களுக்கு 222 ஓட்டங்கள் விளங் கியது. அத்தனை டெஸ்ட் அணிகளுக்கும் எதிராக தலா 50 விக்கெட்டுகளுக்கு மேல் பெற்றதுடன், தென்னாபிரிக்கா, இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக தலா 100 விக்கெட் டுகளுக்கு மேலாகவும் வீழ்த்தியிருந்தாார். தமது டெஸ்ட் வாழ்வில் 67 தடவை ஒரு இனிங்ஸில் 5 விக்கெட்டுகளுக்கு மேலாக வும் 22 தடவை ஒரு டெஸ்டில் 10 விக் கெட்டுகளுக்கு மேலாகவும் வீழ்த்திச் சாதனை புரிந்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் உள்ள அவுஸ்திரேலிய வீரர் சேன் வோர்ன் (Shane Worne) 145 டெஸ்ட் டில் விளையாடி 708 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி 37 தடவைகள் 5 விக்கெட்டு களுக்கு மேலாகவும், டெஸ்ட் போட்டியில் 10 தடவை 10 விக்கெட்டுக்களுக்கு மேலா கவும் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முரளி 133 டெஸ்ட் போட்டிகளில் 44,039 பந்துகளை வீசியுள்ளார். கொழும்பு எஸ். எஸ்.சி. மைதானத்தில் 166 விக்கெட்டுக் களையும், கண்டி அஸ்கிரியாவில் 117 விக் கெட்டுக்களையும் எடுத்திருந்தார். துடுப் பாட்டத்தில் மொத்தமாக 1261 ஓட்டங் களைப் பெற்றதுடன் ஆகக்கூடிய ஓட்டங் களாக 67 ஓட்டங்களை கண்டியில் இந்திய
27

Page 42
அணிக்கு எதிராகப் பெற்றார். 19 தட கள் டெஸ்ட் போட்டிகளில் ஆட்டநா னாக தெரிவானார். இவரது பந்துவீச் காலத்தில் இலங்கை அணி 54 தடவை வெற்றி பெற்றிருந்தது. 42 தடவை. தோல்வியையும் 37 தடவைகள் சமநி யினையும் அடைந்திருந்தது.
சர்வதேச ஒருநாள் போட்டிகள் போது 337 தடவை பங்குபற்றி 521 ; கெட்டுக்களை வீழ்த்தி வசிம் அக்ரம் (பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர்) விக்கெட்டுகள் என்ற சாதனையை வி னார். (356 போட்டிகளில் 502 விக்ெ டுகள்) முரளியின் இந்த ஒருநாள் பெறு 7 விக்கெட்டுக்களுக்கு 30 ஓட்டங். ஆகும். 14 தடவைகள் 4 விக்கெட் களுக்கு மேலும் 10 தடவைகள் 5 விக்ெ டுகளுக்கு மேலும் வீழ்த்தினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் அத வீராகத்திகழ்ந்தயுவராஜ் சிங்“என்னைம்
உலகையே அ கிரிக்கெட் வீரர் பி
அவுஸ் பிலிப் ஹி. விளையா தலையில் விழுந்து பட்டு அதி
கோம்
சிகிச்சை பயனளிக்காத நிலையில் பிலிப் ஹியூம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய கி யும் கண்கலங்க வைத்துவிட்டது.
அவரின் பிரிவால் துயருறும் அ6 ஒலி' தனது ஆழ்ந்த அனுதாபங்கரை
தாயக ஒலி

சுக்
வை
வைத்த பந்துவீச்சாளர் இலங்கை அணி பக
யின் நட்சத்திர சுழல்பந்துவீச்சாளர் முத்
தையா முரளிதரன் ஆவார். அவரின் பந்து கள்
வீச்சை எதிர்கொள்வது கடினமாக இருக் கள்
கும்” என்று மனம் திறந்து பேட்டி ஒன்றில் லை
கூறியுள்ளார். மேலும் பல சர்வதேச துடுப்
பாட்ட வீரர்கள் முரளியின் பந்து வீச்சை
ன்
பாராட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இந்தச் சாதனைவீரர், யாழ்ப்பாணம், பின் கிளிநொச்சி மாவட்டங்களில் எமது பாட
502
சாலை மாணவர்கள் மத்தியில் பயிற்சிப்
பட்டறையினை நடத்தியிருந்தார். அத்து கட்
டன் கிரிக்கெட் உபகரணங்களையும் மதி
கையளித்தார்.
விக்
ஞ்சி
கள்
டுக்
மனிதாபிமானம் கொண்ட எமது முரளி
தரன் உலக அணிகளுக்காக பலமுறை கட்
தெரிவு செய்யப் பட்டதுடன் ஒரு தடவை
பதில் தலைவராகவும் பணிபுரிந்தார். திரடி
(இம்சமாம் உல் ஹக்கிற்கு பதிலாக). பிரள இவரை நாம் வாழ்த்தி மகிழ்கிறோம்.
திர்ச்சிக்குள்ளாக்கிய லிப் ஹியூஸின் மரணம்
திரேலியாவின் சிறந்த இளம் துடுப்பாட்ட வீரரான பூஸ் (PHILLIP HUGHES - 1988 - 2014) கிரிக்கெட் ட்டின்போது பந்துவீச்சாளரினால் வீசப்பட்ட பந்து 5 பட்டதனால் மைதானத்திலேயே மயங்கி பிட்டார். வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்
தீவிர சிகிச்சைப் பிரிவில், சேர்க்கப்பட்டார். நிலையில் இருந்த அவருக்கு தலையில் சத்திர மேற்கொள்ளப்பட்டது. எதுவித சிகிச்சையும் ல் மரணத்தைத் தழுவிக் கொண்டார். கிரிக்கெட் ரிக்கெட் வீரரின் மறைவு சாதாரண மனிதர்களை
பஸ்திரேலிய கிரிக்கெட் இரசிகர்களுக்கு தாயக
எத் தெரிவித்துக் கொள்கிறது.
28

Page 43
மாணவர் உலகம்
தமிழ்த்தூது தனிநாயகம் அடி
மேற்பிரிவில் முதலா
தமிழ்த்தூது தனிந
"தேமதுரத் தமி ழோசை உலகமெ லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்” என்ற மகாகவி பாரதி யாரின் கனவை நன வாக்கி, இன்று தமிழ் மொழியானது உலக
அரங்கில் ஓர் இடத் தைப் பெற்றிருக்கவும், பல அறிஞர்கள் தமி ழில் ஆர்வம்காட்டுவதற்கும்காரண கர்த்தா வாக விளங்கியவர் பேராசிரியர் தனிநாய கம் அடிகளார் ஆவார். தமிழ்ப் பேரறிஞர் கள், தமிழ்த் தொண்டர்கள் அவ்வப்போது தோன்றி மறைந்தாலும் நூற்றாண்டு கால மாக மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் தனிநாயகம் அடிகளாரின் தமிழ்த் தொண்டு போற்றுவதற்குரியதாகும்.
தனிநாயகம் அடிகளார் 'ஊர்காவற் றுறை கரம்பன்' என்னும் கிராமத்தில் 1913 ஆம் ஆண்டு ஆவணி மாதம் இரண்டாம் திகதி பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் சேவியர்” என்பதாகும். இவர் தனது ஆரம்பக் கல்வியை யாழ். பத்திரிசி யார் கல்லூரியில் கற்றார். தொடர்ந்து கொழும்பு புனித பெர்னாந்து குருத்துவக் கல்லூரியில் கற்றுத் தமது 21 ஆவது வய தில் 1934 ஆம் ஆண்டு ரோமபுரி உர்பன் பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடர்ந் தார். 1939 இல் இறையியலில் 'கலாநிதி' எனும் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். ரோமாபுரியில் உர்பன் பல்கலைக்கழகத்தில் ஐந்து ஆண்டுகள் கல்வி கற்ற பொழுது. நாற்பத்து மூன்று நாடுகளைச் சேர்ந்த 250
தாயக ஒலி

உகளார் கட்டுரைப் போட்டியில் மிடம் பெற்ற கட்டுரை தாயகம் அடிகளார்
செல்வி சுதர்ஷனா உலகேந்திரன், விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி, நீர்கொழும்பு.
மாணவர்களுடன் சேர்ந்து கல்வி கற்றதன் பயனாக இவருக்கு பரந்த மனப்பான்மை உண்டாயிற்று. வெவ்வேறு நாடுகளைப் பற்றியும் இலக்கியங்களைப் பற்றியும் அறிந்து கொள்ள பல்கலைக்கழகம் அரிய தொரு வாய்ப்பினை இவருக்கு அளித்தது.
கலாநிதிப் பட்டம் பெற்ற பின்னர் இவர் இந்தியாவுக்கு வந்து நெல்லை மாவட்டத் திலுள்ள வடக்கன் குலப் பிரதேசத்தில் ஆசிரியராகப் பணி புரிந்தார். அங்கு பண் டிதர் குருசாமி சுப்ரமணிய ஐயரிடம் நான்கு வருடங்கள் தமிழ் கற்றார். அப்போதுதான் ஒரு தமிழ் பெயரைச் சூட்டிக் கொள்வது நல்லதென்று “ரோச் ஆண்டகை” கேட் டுக் கொண்டதற்கு இணங்க, தனிநாயக முதலி பரம்பரையில் தான் தோன்றியவர் என்பதை அறிந்து தனக்குச் 'சேவியர் ஸ்த னிஸ் லாஸ் தனிநாயகம்' என்ற பெயரைச் சூட்டிக் கொண்டார். 1945 ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுநிலை மாணவனாகச் சேர்ந் தார். உலக நாடுகளில் தமிழ் இலக்கியங்க ளைப் பற்றியும், கலைகளைப் பற்றியும் உரைகள் நிகழ்த்த வேண் டுமென்னும் எண்ணம் இப்பல்கலைக்கழகத்திலிருந்த போது அடிகளாரின் உள்ளத்தில் உதித்தது. தமிழ் இலக்கியத்தில் மூழ்கியிருந்த அடிக ளார் அதனை உலகறியச் செய்யும் வகை யில்உழைத்திட அப்போதே உறுதிபூண்டார். நான்காண்டுகள் அண்ணாமலைப் பல்

Page 44
கலைக்கழகத்தில் பயின்று எம்.ஏ.சிற பட்டமும் எம்.லிட் ஆராய்ச்சிப் பட்ட பெற்று தமிழ் கலைகளில் மூழ்கியி இவர் நம் ஒப்பற்ற இலக்கியத்தைப் 2 உலகு அறிவதற்காக உழைக்க உ பூண்டார். அத்தோடு ஐரோப்பாவில் ப றதால் அந்நாட்டு மக்களுடனும், டெ களுடனும் தொடர்புடையவராக இரு தன் காரணமாக தமிழ்க் கலைத் நிகழ்வதற்கு இவர் பொருத்தமானவ விளங்கினார். ஆங்கிலம், இத்தாலி ஸ்பானிஷ், போர்த்துக்கேயம், பிரெ ஜேர்மன் ஆகிய மொழிகளில் மிக அரு யாக உரையாடவும், உரை நிகழ்த்த வல்லவராக அடிகளார் விளங்கினார். ஆம் ஆண்டு முதல் 1950 ஆம் ஆண்டு ஈராண்டுகள் மலேயா, சீனா, யப்ப ஐக்கிய அமெரிக்க நாடு, தென் அபெ காவிலுள்ள பனாமா, எக்குவதோர், ெ சிலி, ஆர்ஜென்டீனா, உருகுவே, பிரே. மெக்சிக்கோ, மேற்கிந்திய தீவுகளான னிடாட், ஜமேய்க்கா, மார்த்தினீக், மத் ஆபிரிக்கா, வட ஆபிரிக்கா, இத்த பலஸ்தீனம், எகிப்து எனப் பல நாடுக பயணம் செய்து தமிழ்மொழி, கலை, லாறு ஆகியவை பற்றி அடிகளார் உ யாற்றினார். இதனை அனைவரும் அற 'தமிழ்த்தூது தனிநாயகம்' என்று ( ஆரம்பித்தனர். இச்சிறப்பு வேறுயாரும் கிடைக்கப் பெறாத தனிச் சிறப்பாகும்
உலகளாவிய ரீதியில் தமிழுக்கு , விதழ் எதுவும் அடிகளார் காலம் 6 வெளிவராமை ஒரு பெருங்குறையாக இருந்தது. தமிழை வளர்ப்பதற்கும், ட வதற்கும் ஓர் ஆய்விதழின் இன்றிய யாத் தேவையை அடிகளார் உணர்ந் "தமிழ் கல்சர்” (Tamil Culture) என்ற 6 கொண்ட ஆங்கில முத்திங்கள் இதழ் றினை அடிகளார் தூத்துக்குடியிலிரு வெளியிட்டார். அதனில், பன்னாட்டு
ஞர்களின் தமிழியல் பற்றிய கட்டுரை
தாயக ஒலி

ந்த
ற்றி றுதி
வும்
மரிக்
சில்,
| புப் வெளிவரவேண்டும் என்றும், ஆங்கிலம்
மும்
அறியாத தமிழறிஞர்களுக்கும் வாய்ப்ப ளிக்க வேண்டும் என்றும், தமிழை ஆய்வு மொழியாகவும் வளர்க்க வேண்டும் என்
றும் அடிகளார் விரும்பினார். சற்றுப் பிற் பின் காலத்தில் அவ்விதழில் ஒரு சில கட்டுரை | மாழி
கள் தமிழிலும் வெளிவந்தன. 'தமிழ் கல் இந்த சர்' நீண்ட காலம் வெளிவந்தது. இது தனி ராது நாயகம் அடிகளாருக்குத் தனிச் சிறப்பி ராக
னைப் பெற்றுக் கொடுத்தது. பம்,
அடிகளாரின் உலகத் தமிழ்த்தூதுப் ஞ்சு,
பணி பெரும்பாலும் விரிவுரைகள் மூலமே மை
நடைபெற்றது. எனினும் வானொலி,
தொலைக்காட்சி, செய்தித்தாள், வானொலி, 1949
நேர்காணல் மூலமும் அவரது பணி நடை பிரை
பெற்றது. தமிழ் மொழி, இனம், இலக்கியம், Tன்,
நாகரிகம், வரலாறு ஆகியவை பற்றி எது
வுமே அறியாமல் இந்தியா என்றாலே இந் பரு,
தியாவின் வடபுலம்தான் என்று மேனாட்
டார் நினைத்து வந்த நிலையைத் தம் விரி ட்ரி
வுரைகள் மூலமும் வானொலி, தொலைக் திய
காட்சி நேர்காணல் மூலமும் பல அறிஞர் Tலி,
களோடு தொடர்பு கொண்டு விளக்கியமை ளில்
மூலம் அடிகளார் மாற்றியமைத்தார். அடி களாரின் தொண்டு காரணமாகவே உலக
அரங்கில் தமிழ் இடம்பெற்றது என்பது இந்து
மறுக்கவியலாத உண்மையாகும். பேச குேம்
இந்திய மொழிக் குடும்பங்கள் பற்றியும், வரலாறு பற்றியும் அறிந்து ஆராய்ச்சி
மேற்கொண்டு மிகுந்த மேனாட்டு அறிஞர் ஆய்
கள் திராவிட மொழிக் குடும்பங்கள் பற்றி மரை
யும் குறிப்பாக, தமிழ் பற்றியும் அடிகளார் வே
மூலம் அறிய வந்ததால், தமது தூண்டுதல்
காரணமாகத் திராவிட மொழிகளைப் பற் மை
றியும், குறிப்பாகத் தமிழைப் பற்றியும் ஆய்
வுகளை அவர்கள் மேற்கொள்ள வழி பயர்
வகுத்தார். ஒன் ந்து
அடிகளாரின் உலகப் பயணம் தமிழ் அறி
மொழியின் பண்டைய சிறப்பு, இலக்கியச் கள் செறிவு, உலகக் கண்ணோட்டம், தமிழ்ப்
வர் உரை
ரப்பு
தார்.
30

Page 45
பண்பாட்டினுடைய மேம்பாடு போன்ற வற்றைப் பேணிப் பாதுகாத்து, பரப்புவதாக அவரது தமிழ்த்தூதுப் பயணங்கள் அமைந் தன. இத்தமிழ்த்தூதுப் பயணங்களினு டாக மறைந்த தமிழ்நூல்களை கண்டு பிடித்தமை, உலகத்தமிழ் ஆராய்ச்சி மன் றம் மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவ னம் போன்ற உலகத் தமிழ் அமைப்புக் களை தோற்றுவித்தமை, உலகத் தமிழ ராய்ச்சி மாநாடுகளை நடாத்தியமை என் பன நடைபெற்றன. இவை அடிகளாரின் தமிழ்ப் பணிகளை வலியுறுத்துவனவாகக் காணப்படுகின்றன.
பழைய தமிழ் நூல் மறைந்துவிட்ட நிலையில் அவற்றுள் சிலவற்றை உ.வே. சாமிநாத ஐயர் தமிழகமெங்கும் சுற்றித் திரிந்து கண்டுபிடித்து பல ஏட்டுச் சுவடி களை ஒப்புநோக்கிய பின் திருத்திய பதிப் புக்களை வெளியிட்டு தமிழுக்கு புது வாழ்வு வழங்கியதை நாம் அறிவோம் அதேபோன்று பதினொராம் நூற்றாண் டில், அதன்பின்னர் தமிழகத்தில் சமயப் பணியாற்றி வந்த மேனாட்டுக் கிறிஸ்தவ அறிஞர் சிலர் இயற்றிய தமிழ் இலக்கணம், அகராதி, உரைநடை நூல்கள் போன் றவை மறைந்து கிடைந்த சூழ்நிலையில் தனிநாயகம் அடிகளார் அவற்றைத் தேடும் முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டார். ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்குச் சென்ற போதெல்லாம் அந்நாடுகளிலுள்ள நூலகங்களுக்குச் சென்று தமிழ் நூல் களைத் தேடுவதை வழக்கமாகக் கொண்டு, அம்முயற்சியில் வெற்றி பெற்று மறைந்து கிடந்த பல நூல்களைத் தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்தினார். இவர் அறிமுகப் படுத்திய நூல்களுள் 'தம்பிரான் வணக் கம்', 'கிரித்தியானி வணக்கம்', அடிகளார் வரலாறு' போன்ற நூல்கள் அடங்கும்.
தனிநாயகம் அடிகளாரின் நிலைத்த புகழுக்குக் காரணமாக அமைந்தது அவர் உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை நிறுவி
க
தாயக ஒலி

யதாகும். 1964 ஆம் ஆண்டு டில்லியில் நடைபெற்ற கீழைத்தேய அறிஞர்களின் உலக மாநாட்டின்போதுதான் இம்மன்றம் தொடங்கப்பட்டது. இந்த மன்றத்தின் செயற்பாடுகள் "யாதும் ஊரே யாவரும் கேளீர்” எனும் கொள்கையும் "திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும்” என்ற பார தியின் கொள்கையையும் அடிப்படை யாகக் கொண்டிருப்பது என தனிநாயகம் அடிகளாரே குறிப்பிட்டுள்ளார். உலகில் உள்ள தமிழ் அறிஞர்கள் பலரையும் ஒன்று சேர்த்தல், அவர்களை அறிமுகப்படுத்தல், அவர்கள் ஆராய்ச்சியை வெளிப்படுத்தல் என்பன இம்மன்றத்தின் சிறப்பான பணி களாகும்.
தனிநாயகம் அடிகளார் பாரிசில் நடந்த மூன்றாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட் டின் இறுதியில் சென்னையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்கப்பட வேண்டும் என்று பலவாறாகப் பாடுபட்டார். ஐந்தாம் மாநாடு யாழ்ப்பாணத்தில் நடந்த போது உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்கப்பட்டு செயற்படத் தொடங்கி யது. அத்தோடு உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளையும் தனிநாயகம் அடிகளார் நடாத்தினார். இதன் மூலம் சிதறிக் கிடந்த தமிழர்களை இணைத்ததோடு தமிழர்களி டையே விழிப்புணர்வைத் தோற்றுவித்தார். தமிழர்கள் எங்குவாழ்ந்தாலும் அவர்களை இணைக்கும்பாலமாக விளங்கினார். பழைய தமிழ் பண்பாட்டிற்குப் புதுவடிம் கொடுத்த தமிழ் மறுமலர்ச்சிச் சிற்பியாகவும், தமிழ் ஆராய்ச்சித் தந்தையாகவும் விளங்கினார்.
தமிழின் சிறப்பினை எடுத்துச் சொல்ல பல வெளிநாட்டுப் பயணங்களை மேற் கொண்டதனால் அவரைத் தமிழ்த்தூது' என்று உலகம் அழைத்து மகிழ்கின்றது. ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய பாரிய பணிகளை தமது முயற்சியின் மூலம் மேற்கொண்டார் என்பதனை நாம்

Page 46
தெளிவுற அறிந்து கொள்ளலாம்.
1955ஆம் ஆண்டு ஆவணி மாதம் 2 ஆ திகதி கொழும்பு தமிழ்ப் பண்பாட்டுச் ச கம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் “இல கையும் தமிழ்ப் பண்பாடும்”, நேற்றும் இ றும் நாளையும்” என்னும் தலைப்பில் உ நிகழ்த்திய அடிகளார் "பழங்காலத்தில் த ழரும் சிங்களவரும் இன,மத,மொழி வே பாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்தார்க இன்று இனவாதம் தலைதூக்கி ஆடுகி றது. இந்த இனவாதத்தினை ஒழிக்க தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகள் ஆட்சி மொழியாக விளங்க வேண்டும் என்று கூறினார். 1956 ஆம் ஆண்டு ஆ மாதம் 15 ஆம் திகதி சிங்களம் மட்டு ஆட்சிமொழியானதை அறிந்து கொண அடிகளார் மொழி உரிமைகளை மறுப்ப தீய விளைவுகளுக்கு வழிகோலும் என்
ஞாயின்
கிழக்குதித்து மேற்கு மறை கதிரோனே! நீ கேடுதரும் எங்களிருள் நீக்கலின்றி வழக்கம் போலெந்நாளும் கிழக்கில் தோன்ற வளர்ந்துவரும் புவியிருளைநீக்கலென்ன? உழக்கிமண்ணைப் பயிராக்கும் வேளாளர்த உயர்வெண்ணிப் புவியிருளை நீக்கினையே தழைக்கின்ற பயிரினங்கள் வாடுமென்ற தன்னலங்கள் கருதாமை உனதியல்போ?
பொய்யர்கள் இவ்வுலகில் அநந்தமன்றோ? பொறுமை என்பதிவர்களுக்கோ
தெரியவில்லை உய்யும் வழி இவர்களுக்குதெரிந்திடுமோ? உலகத்தை நிரப்பிடவா பிறந்துள்ளார்? ஐயய்யோ! மனங்குமிறி கனல்கிறதே ஆண்டவனே இல்லையென்று கூறுகின்றார் வெய்யோனே! அனைத்தினையுங்
கண்டபின்னும் வெடிக்காமல் ஏனின்னும் இருக்கின்றாய்?
தாயக ஒலி

ம்.
ங் ங்
'இலங்கையில் மொழி உரிமைகள்' என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
"வாழ்வது ஒருமுறை, எனவே, உன் னால் முடிந்த ஏதேனும் நல்ல செயல்க ளைச் சற்றேனும் தாமதியாமல் செய், உன் சக மனிதனுக்கு ஏதேனும் இரக்கம் காட்ட முடிந்ததால் அதனையும் அசட்டை செய் யாதே - ஒத்திப் போடாதே...”எனும் வாச கம் இளம் சேவியரின் மனதில் வித்தாக விழுந்ததுதான் தனிநாயகம் அடிகளாக அவர் தமிழிற்கு ஆற்றிய பணிகள். "தமி ழுக்குக் தொண்டு செய்வோன் சாவ தில்லை” என்னும் பாரதிதாசனின் கூற்றுக் கிணங்க அவர் தமிழுக்குச் செய்த தொண்டு காரணமாக தமிழ் உள்ளவரை தமிழ்மக்கள் உள்ளவரை அவர் இவ்வுலகில் நீங்காது வாழ்ந்து கொண்டே இருப்பார்..
டு - 5. 4 ; 2. 01.
று
றைக் கேள்
இங்கெதற்குப் பிறந்துள்ளோம் எனுமந்த எண்ணத்தை மனிதரெலாம் மறந்துவிட்டார்
தங்குதடை இல்லாது பெருகிவரும் தரமில்லாநாகரீகம் கடைப்பிடித்தார் மங்கையரை இழிவாக்கி ஆணினத்தின் மாண்புதனைக் கெடுத்திங்கு வாழுகின்றார் தங்கம் போல் கதிர்கள் தரும் கதிரோனே! இத் தாழ்வுள்ள செயலனைத்தும் நீக்காயோ?
பா?
மக்களுக்குத் தம் வாழ்வை அர்ப்பணித்தோர் மகிமையினைப் பேசுகையில் தூற்றுகின்றார் பக்குவமாய் இறையருளைநம்பி வாழ்தல் பகற் கனவு என்று அதை வெறுக்கின்றார் துக்கமில்லா வாழ்விருந்தாலதுவே போதும் தொல்லைதரும் வழியெதற்கு? என்கின்றார் திக்கெல்லாம் கதிர் விரிக்கும் சூரியனே! தீயவர்கள் மனத்திருளை நீக்காயோ?
-தாஸிம் அகமது
32

Page 47
தமிழ்த்தூது தனிநாயகம் அடிக
கீழ்ப்பிரிவில் முன்றாமி தமிழ்த்தூது தனிந
செல்வி சித்தாரா
காசிநாதன் யா/ இந்து மகளிர்
கல்லூரி யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் நெடுந்தீவைச் சார்ந்த ஸ்தானிஸ்ஸால் கணபதிப்பிள்ளை செசில் இராசம்மா தம்பதியினருக்கு புதல்வராக 1913 ஆம் ஆண்டு ஆவணித் திங்கள் இரண்டாம் நாள் இவ்வுலகில் அவதரித் தார். இவரின் இளமைப் பெயர் சேவியர் என்பதாகும். பின்னர் இவர் வண.பிதா சேவியர் தனிநாயகம் அடிகள் என அழைக் கப்பட்டார். இவர் ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். ஆங்கிலம், இலத்தீன் போன்ற மொழிகளிலே நல்ல தேர்ச்சி பெற் றிருந்தார். தமிழ் மொழியைத் தனியாக ஒரு ஆசிரியரிடம் ஆழமாகக் கற்றார். தமிழ்மீது அவர் கொண்ட விருப்பு அம்மொழியி லேயே மிகுந்த உயர்வான அறிவைப் பெற வேண்டும் என ஊக்குவித்தது. மேற்கூறப் பட்ட மொழிகளில் மட்டுமன்றி கிரேக்கம், இத்தாலியம், பிரெஞ்சு, ஸ்பானிஸ், ஜேர் மன் ஆகிய மொழிகளிலும் புலமை பெற் றார். மலையாளம், சமஸ்கிருதம், போர்த் துக்கீசம், எபிரேயம், மலாய், ரஷ்யன், போன்ற மொழிகளையும் அறிந்திருந்தார். இவர் தனது இடைநிலைக் கல்வியை யாழ்ப்பா ணம் பத்திரிசியார் கல்லூரியில் ஆங்கில மொழிமூலம்கற்றுத்தேறினார். 1931 தொடக் கம் 1934 வரை கொழும்பில் மறைப்பள்ளி யில் சேர்ந்து இறையியல் எனும் துறையில் கல்வி கற்றார்.
தாயக ஒலி

களார் கட்டுரைப் போட்டியில் டெம் பெற்ற கட்டுரை
நாயகம் அடிகளார்
தொடர்ந்து றோம் நகரின் வத்திக்கான் பல்கலைக்கழகத்தில் இறையியலில் முனை வர் பட்டம் பெற்றார். இலண்டன் பல் கலைக்கழகம் கல்வியியலில் முனைவர் பட்டம் வழங்கியது. அண்ணாமலைப் பல் கலைக்கழகம் முதுகலைமாணி இலக் கியப் பட்டம் வழங்கியது. இப்பல்கலைக் கழகத்திலே அடிகளார் சங்க இலக்கியம் தொடர்பாக ஆய்வு செய்து முதுமாணிப் பட்டம் பெற்றார்.
- 1945 இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் இவரது திறமை கண்டு இளமாணிப் படிப்பு முடிக்காமலேயே நேரடியாக முது கலைமாணிப் படிப்பினை மேற்கொள்ள அனுமதித்தது. 1947 ஆம் ஆண்டளவில் 'சங்க காலச் செய்யுளில் இயற்கை” என் னும் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து (M.Lit) எம்.லிட் பட்டம் பெற்றார். இதுவே இவ ரைத் தமிழாய்வு வரை கொண்டு சென்றது.
1952 தொடக்கம் 1961 வரை இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் விரிவு ரையாளராகப் பணியாற்றினார். 1957 ஆம் ஆண்டு கல்வியியலில் முனைவர் பட் டத்தை இரண்டாவது முறை பெற்று பெருமை பெற்றார். இப்பட்டத்தை இலண் டன் பல்கலைக்கழகம் வழங்கிக் கௌர வித்தது. 1968 ஆம் ஆண்டு மலேசியாவில் மலாய் பல்கலைக்கழகத்தில் பேராசிரிய ராகவும் பீடாதிபதியாகவும் கடமையாற்றி னார். அதன்பின்னர் பாரிஸ் நேப்பிள்ஸ் பல் கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணி யாற்றினார்.
உலகின் பல நாடுகளுக்கும் அடிகளார் சென்று அங்குள்ள பல்கலைக்கழகங் களில் விரிவுரைகள் ஆற்றினார். உலகின் பல பாகங்களுக்கும் சென்று அவர்களின்
கடு
33

Page 48
மொழிகளிலே தமிழ் மொழியின், த இலக்கியத்தின், தமிழ்ப் பண்பாட்டின் புக்களை எடுத்துக் கூறினார். பல ெ களிலும் தேர்ச்சி பெற்றமையால் இ தமிழ்த்தூது பயனுடையதாக அமைந் அடிகளாரின் விரிவுரையைக் கேட்ட கள் தமிழ்மொழி பற்றி அறிய ஆ கொண்டனர். இவரது தமிழ்த்தூது பட அனுபவங்கள் "தமிழ்த்தூது” எ நூலில் வெளியிட்டு வைத்துள்ளார். னால் இவரைத் 'தமிழ்த்தூது தனிநா! அடிகளார்' என அழைத்தனர்.
உரோமாபுரியிலே சமய உயர்படிப் மேற்கொள்ளச் சென்றபோது அங்கு மாமுனிவர் கழகத்தை நிறுவி தமிழோ செய்தார்.
பேராசான்களின், புலமை நல களின் தமிழ்நேயம் அடிகளின் தமிழ்ப் றையும் வளத்தையும் பெருக்கின. ச இலக்கியத்தில் தனி ஈடுபாடு கொண் சிலப்பதிகாரத்தில் சிந்தையினை வைத் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எ னார். தமிழ் இலக்கியங்களில் கிடந்த வியல் தத்துவங்களை வெளிக்கொன தார். பண்டைய இலங்கியங்களில் ஈடு கொண்டது போல் அடிகளார் ந இலக்கியங்களிலும் ஈடுபாடு காட்டில் பாரதி, பாரதிதாசன் போன்றோரது கவி களையும் மறைமலையடிகள், வி.க ணசுந்தர முதலியார், கல்கி, மு.வரதர போன்றோரது வசன இலக்கியங்கனை அடிகளார் ஆராய்ந்தார். தமிழ் இலக் வரலாறு, பண்பாடு, கல்வித்துறை அ வற்றிலும் தன்னை முழுமையாக அ ணித்து தொண்டாற்றினார் என்றால் மிகையாகாது.
தனிநாயகம் அடிகளாரின் நிலைத் ழுக்குக் காரணமாக அமைந்தது உ< தமிழாராய்ச்சி மன்றம் நிறுவியதா இதன் காரணமாக உலகத்தமிழர் யா? உச்சி மேல் வைத்து மெச்சும் வகை
தாயக ஒலி

சிறப்
Tழி
வர் வல்
அம்
மிழ்
அடிகளாரின் தமிழ்ப் பணியின் உச்சக் கட்ட கொடுமுடி அமைந்தது. அடிகளா
ரின் அருந்தமிழ்ப் பெரும் பணிக்கு மகுட ரது மாக இவ் அம்சம் விளங்கியது எனலாம். தது.
இவர் தமது சமய வாழ்விலும் தமிழ்ப் பணியிலும் மனித நேயத்தை ஆணிவேரா
கக் கொண்டிருந்தார். உலகப் புகழ் பெற்று ண
உயர்ந்தவர் ஆயினும் எல்லோருடனும்
எளிமையாக இனிமையாகப் பழகவல்ல இத
வராக விளங்கினார். கம்
அடிகளார் கிட்டத்தட்ட 54 நாடுகளுக் குப் பயணம் செய்து வந்துள்ளார். தமிழ் பை
நாட்டில் இதுவரை மறைந்திருந்த தம்பி வீர
ரான் வணக்கம், போர்த்துக்கீச தமிழ் அக சை
ராதி என்பவற்றை லிஸ்பன் பல்கலைக்
கழகத்தில் கண்டு அவற்றை அச்சேற்று ர்பர்
வித்தார். இவ்வாறு ஐரோப்பாவில் ஏராள பற்
மான பழம் பெரும் தமிழ் நூல்களை அச் சங்க
சேற்றுவித்த பெருமை அடிகளாரைச் டார்.
சாரும். இவர் தம் உரைகளைத் தொடங்
கும் முறையே அழகானது “அகரமுதல ழுதி
எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே வாழ்
உலகு” எனும் குறட்பாவைக் கூறி விவிலி னர்ந்
யத்தில் வரும் "நானே அகரமாய் இருக்கி பாடு
றேன்” எனும் திருமொழியையும் இணைத்து வீன
விளக்கித் தொடங்குவார். இவர் பேசுவ எார்.
தைக் கண்டு சபையோர் மெய்சிலிப்பார் தை
கள். இவரது பேச்சின் ஊடே பாரதியின் ல்யா
பாடல், பரிபாடல்வரிகள் என்பவற்றை இசை
யுடன் இசைத்துக் காட்டுவார். திரைப்படச் ரயும்
சுருள்கள் மூலமும் விளக்குவார். தமிழ் நாட்டு இசை, கோயில் கட்டிடக் கலை, நாட்டியம் என்பவற்றை திரையிட்டுக்
காட்டி மக்களை வியக்க வைப்பார். இவை அது
எம் மக்களிடமன்றி மேல்நாட்டவரிடமும்
எம் தமிழின் திறத்தை வெளிப்படுத்தி நின் 5புக
றன. மகத்
தான் சென்ற பல்கலைக்கழகங்கள் தம்.
எங்கும் பல நூல்களை எடுத்துச் சென்று கரும்
அன்பளிப்புச் செய்தார். "இவற்றையும் பில் கொஞ்சம் படியுங்கள்” என அனைவருக்
தார்.
சன்
கிய கிய ர்ப்ப
எனி
34

Page 49
கும் கூறினார். அமெரிக்க மக்களையே வியக்க வைத்த பெருமைக்குரியவராக அடிகளார் விளங்குகிறார். "யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற உயரிய பண்பாட் டில் உள்ளம் பறிகொடுத்தவர் எங்கள் தனி நாயகம் அடிகளார் என்றால் மிகையா காது. தூத்துக்குடியில் பணியாற்றிய காலத் தில் தமிழ் இலக்கியக் கழகம் ஒன்றை நிறுவி 1952 இல் தமிழ்க் கலாசாரம் என் னும் ஆங்கிலக் காலாண்டு இதழை ஆரம் பித்து அதன் ஆசிரியராக 1951 - 1959 வரை இருந்தார். இவ்விதழ் அமெரிக்க, ஐரோப் பிய பல்கலைக்கழகங்கள் வரை சென்ற டைந்தது. இதன் காரணமாக தமிழ் கற்கும் வேற்று மொழி இனத்தவர்களும் தமது ஆய் வுக் கட்டுரைகளை வெளியிட்டு வந்தனர்.
1961 இல் சென்னையில் "தமிழ்ப்பண் பாட்டுக் கழகம்” என்ற அமைப்பைத் தோற் றுவித்தார். முதல் தமிழாராய்ச்சி மாநாட்டி னைத் தொடர்ந்து மலேசியாவிலிருந்து உலகத் தமிழ் ஆய்வு மையத்தின் சார்பாக “Jurnal of Tamil Studies” எனும் ஒரு இதழுக் கான ஆசிரியராக சிறிது காலம் பணி யாற்றி பல சிறந்த அறிஞர்களின் கட்டுரை களை வெளிக்கொணர்ந்தார்.
இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் பல ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதி வெளியிட்டார். தமிழ்த்தூது என்ற நூல் அடங்கலாக மொத்தம் 137 நூல் களை எழுதினார். அடிகளார் எழுதிய இலக் கியக் கட்டுரைகளின் முதல் தொகுப்பு “தமிழ்த்தூது” என்பதாகும். இது 1952 இல் வெளியிடப்பட்டது. அவரது உலகப் பய ணங்களின் அனுபவங்கள் “ஒரே உலகம்” என்ற தலைப்பில் 1963 ஆம் ஆண்டு வெளி யிடப்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அடிகளார் ஆற்றிய தொடர் சொற்பொழிவு "திருவள்ளுவர்” என்ற மகுடம் இடப்பட்டு 1967 இல் நூலாக வெளி வந்தது. அடிகளார் எழுதிய ஆய்வுக் கட்டு ரைகள் 30, தமிழ் கலாசாரம் சஞ்சிகையில்
தாயக ஒலி

வெளிவந்த 70 கட்டுரைகள் என்பன பல் வேறு இதழ்களிலும் கருத்தரங்கு மலர்களி லும் வெளிவந்துள்ளன.
தமிழ் பற்றி ஐரோப்பிய மொழிகளில் வெளிவந்த நூல்களைத் தொகுப்பதன் மூலம் பன்னாட்டு ரீதியில் தமிழ்மொழியை உலகின் கவனத்திற்குக் கொண்டு வர
முயன்றார்.
அடிகளார் எழுதிய நூல்களாவன
The Carthaginian Clergy, Nature in the ancient Poety, Aspects of Tamil Humanism, Indian thoughts in ancient Tamil literature, தமிழர் பண் பாடு நேற்றும் இன்றும் நாளையும், தமிழ்த் தூது, ஒரே உலகம், திருவள்ளுவர், உலக ஒழுக்கவியலில் திருக்குறள், Reference guide to tamil studies, Tamil studies Abroad, Tamil culture and Civilization என்பனவாகும்.
தமிழ் மொழியையும் அதன் செம்மைச் சிறப்பையும் உலகளாவிய ரீதியில் பறை சாற்றும் நோக்குடன் அடிகளார் ஜப்பான், சிலி, பிரேசில், பெரு, மெக்சிக்கோ, எக்கு வடோர், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்து பேருரைகள் ஆற்றினார். ஐரோப்பிய நாடுகளில் தமிழ் நூல்கள் பற்றி
ஆராய்ந்தார்.
1963 இல் அடிகளார் முன்னின்று பாடு பட்டு உலகத் தமிழ் அறிஞர்களை ஒன்று திரட்டி உலகத் தமிழாராய்ச்சிக் கழகம் ஒன்றை உருவாக்கினார். இதன் முதல் கூட்டம் டில்லியில் நடைபெற்றது. இதில் 26 தமிழ் அறிஞர்கள் இருந்து 1964 இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை ஆரம்பித்து வைத்தனர். இந்நிறுவனத்தில் அடிகளார் இணைச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். உலகத் தமிழா ராய்ச்சி நிறுவனம் தொடர்ச்சியாக எட்டு மகாநாடுகளை பல நாடுகளில் நடத்தியது அடிகளார் உயிருடன் இருக்கும்போது நான்கு மகாநாடுகள் நடைபெற்றன. இவர் பொதுச் செயலாளராக இருந்து 1966
35

Page 50
ஏப்ரல் 16 - 23 ஆம் திகதிகளில் மலேக் வின் கோலாலம்பூர் நகரில் முதல் மா நடைபெற்றது. புரொயென்காவின் பே துக்கீச தமிழ் அகராதியை அங்கு மீள் வாக்கம் செய்து இம்மகாநாட்டில் ெ யிட்டார். சென்னையில் இரண்டாவது ழாராய்ச்சி மாநாடு நடைபெற்ற டே அதில் முதன்மை விருந்தினராக கல விழாவைச் சிறப்பிற்குரியதாக்கினார்.
1980 ஆம் ஆண்டு அடிகளார் கொழு நகரில் தந்தை செல்வா நினைவுப் 4 ரையை நிகழ்த்தினார். அதே காலப் தியில் வேலணையில் பண்டிதர் கா. இரத்தினம் அவர்கள் எழுதிய “தமிழ்ம விருந்து” என்ற நூல் வெளியீட்டு விழா பங்கேற்றார். அதன்பின் சில காலம் உ நலிவுற்று நோய்வாய்ப்பட்டிருந்தார்.
ஆம் ஆண்டு செப்டெம்பர் 1 ஆம் தி அடிகளார் விண்ணுலகை அடைந்தா 1981 இல் மதுரையில் 5 ஆவது தப கிழக்கு மாகா
வித்தகர் ! கிழக்கு மாகாண பண்பு இலக்கிய விழா அண்மைய ஆண்டுக்கான இலக்கியம் அகமது முதலமைச்சரின்
வழங்கி கெளரவிக்கப்பட்ட அம்பாறை மாவட்டம் கல்முனைக்கு. ஆண்டு 'வாழும் புலமைட் எனும் கவிதை கிய சமூக சேவைகளில் ஈடுபாடு கொல ஸ்தாபகத் தலைவரான இவர் பல தேசி ளிப்புகளைச் செய்து வருபவர். கவிதை களில் ஈடுபாடு கொண்டுள்ள இவர் மூ6 மேலும் பல கவிதை நூல்களையும் கட் - வானொலி, தொலைக்காட்சி நிகழ் கலைக்கமல் மறைந்த இசைக்கோ நூர் ளாக்கியுள்ளனர். பெப்ரவரி 2014ல் தமி மியத் தமிழ் இலக்கிய மாநாட்டின்போ, சாதனையாளர் விருதும் 2011களில் அர ஆகிய பட்டங்களும் வழங்கிக் கெளரவி. உபதலைவராகவும் பணியாற்றுகிறார்.
தாயக ஒலி

பதி
து ந்து
டல்
பா ராய்ச்சி மாநாட்டின்போது அடிகளாரது
சிலை திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பா ர்த்
ணப் பல்கலைக்கழகம் இவருக்கு இறப் பின் பின் கலாநிதிப் பட்டம் வழங்கியது. ளி |
நெடுந்தீவில் அடிகளார் அவர்களின் சிலை நமி நிறுவப்பட்டுள்ளது.
அடிகளாரின் சேவை மகத்தானது. அவர் உள்ளபோது மட்டுமன்றி மறைந்த பின்
னும் தமிழ் கூறும் நல்லுலகம் அவரை ம்பு
இலகுவில் மறந்துவிடமுடியாத வகையில் | பரு
தமிழுக்குள் தமிழாகக்கலந்து நிலை பெற்று பகு
நிற்கின்றார். இந்த வகையில் அடிகளார் பா.
நூற்றாண்டு விழா 2013 பெப்ரவரி 16 ஆம் றை
நாள் சென்னையில் கொண்டாடப்பட்டது. வில்
தமிழ் கூறும் நல்லுலகம் ஆண்டாண்டு
காலங்கள் பல சென்றாலும் அடிகளாரை 1980
நினைவு கூர்ந்த வண்ணம் இருக்கும் என் கதி
பது உண்மை. எனவே அடிகளாரை நாமும்
போற்றுவோமாக. வாழ்க அடிகளார் பணி. பிழா
வளர்க நம் தமிழ்மொழி. ண முதலமைச்சரின் விருது பெற்றார் பாட்டலுவல்கள் திணைக்களம் வருடாந்தம் நடத்தும் ல் அம்பாறையில் 13.11.2014 நடைபெற்ற போது, 2014ம் மற்றும் சமூக சேவைக்காகவைத்திய கலாநிதி தாஸிம் எல் வழங்கப்படும் வித்தகர் விருதும் பொற்கிழியும் 2ார். ஒயைப் பிறப்பிடமாகக் கொண்ட தாஸிம் அகமது 1969ம் முலம் இலக்கியத்தில் தடம் பதித்து தொடர்ந்தும் இலக் எடு வருபவர். கொழும்பு வலம்புரி கவிதா வட்டத்தின் ப, சர்வதேச இலக்கிய மாநாடுகளில் இலக்கிய பங்க கட்டுரை, ஆய்வு, நூல் விமர்சனம் எனப் பல துறை று கவிதை நூல்களை இதுவரை வெளியிட்டுள்ளார். நிரைத் தொகுப்பொன்றையும் வெளியிடவுள்ளார். =சிகளிலும் தமது பங்களிப்பைச் செலுத்தி வருபவர். தீன் ஆகியோர் இவரது கவிதைகளை இசைப்பாடல்க நாடு கும்பகோணத்தில் நடைபெற்ற உலக இஸ்லா - இலக்கியம் மற்றும் சமூக சேவைக்கான வாழ்நாள் கலாபூஷண விருதும், சமூகச் சுடர், இலக்கியவாரிதி கப்பட்ட இவர் கொம்பனித்தெரு முஸ்லிம் நூலகத்தின்
36

Page 51
உங்கள் விருந்
தமிழைச் சிறப்பிக்
- உன்னத அறிவியல் அ த) !
படத்தோடு ”தாயக ஒலி” 2014 ) தனிநாயகம் அடிக - ”இலக்கியத்தைப் படிக் எனக் கூறும் சாகித்திய ரத் மான நூல்கள் இலங்கை இலங்கை நூல்கள் இந்தி
ஏனையவர்களின் நூல்கள் யினால் இலங்கை எழுத்தாளரின் தரமும் சிற ளர் தங்களின் ஒரு சில நண்பர்களின் நூை சிறந்த எழுத்தாளர்கள் எனப் புழுகுகிறார்கள் வைத்துள்ள அக்கறையைப் பகிர்ந்துள்ளார்.
மல்லிகையை வெளியிட்ட டொமினிக் ஜீவ, கள் முன் மாதிரியாகக் கொள்வது தெணியான டொமினிக் ஜீவா நடமாடும்மல்லிகைப் பந்தல்!
'தமிழ் வாழப் பணி செய்வோம்' என இவ் ராஜா (அவுஸ்திரேலியா) தமிழன் தான் சென் வனாய் மாறிப் போய்க் கொண்டிருக்கிறானே உரத்த அடியொன்றை எமது புகலிடவாசிகள்
இன்று வேட்டி சால்வைகளைக் கூடத் தமிழ் சேலைக்கும் மதிப்புப் போய் விட்டதே! ஆங்கி கிறோம். எமது நிலை இப்படி இருக்க எப்படித் பாடும் ஊடுருவும்? இந்தத் தமிழ்ப் பரம்பல் விட துள்ளதைக் காணக் கூடியதாக உள்ளது. தட பாதுகாக்கத்தக்க மூன்று கட்டுரைகளையும் எம்.எஸ்.எப். ஹஸ்னா என்ற கட்டுகஸ்தோட்
ரைப் போட்டியில் முதல் பரிசைப் பெற்றுள்ள யில் கத்தோலிக்க தமிழறிஞர் மீது அக்கறை ராஜா போன்றோரைச் சாந்தப்படுத்துவதோடு வினையாக்கும்.
நோபல் பரிசுக்கு மாண்பை ஏற்படுத்தும் தென்னாபிரிக்கச் சுதந்திரப் போராட்ட வீரர் ( விருது அத்தேசத்தின் இறுதி ஆங்கில ஜனா துள்ளது. இதன் மூலமாகப் பதவி மோகமற்ற ஒ 17 வயதான பாகிஸ்தான் சிறுமி மலாலா ெ
தாயக ஒலி

க்கும் தமிழின் ஒலி
புறிகையை வாசகர் மயப்படுத்தும் அட்டைப் இன் 14 ஆம் இதழ் (கார்த்திகை மார்கழி - -ளார் சிறப்பிதழ் மலர்ந்துள்ளது.
கின்ற ஒருவனே உலகத்தை ஆள முடியும்” னா தெணியான் 'தமிழ் நாட்டிலிருந்து ஏராள கயில் இறக்குமதியாகின்றன. அதேவேளை யாவுக்குச் செல்வது குறைவு. அவர்களுக்கு ளை வாங்கிப் படிக்கும் வாய்ப்பு இல்லாமை மப்பும் தெரிவதில்லை. தமிழ்நாட்டு எழுத்தா ல வாங்கிப் படித்து விட்டு அவர்களையே * எனவும் தன் ஈழத்து இலக்கியத்தின் மேல்
Tவை இவ்விடயத்தில் நூல் வெளியீட்டாளர் சின் ஆதங்கத்தைச் சற்றுத் தணிக்கக்கூடும். நூல் விற்பனை நிலையமாகச் செயற்பட்டவர். விதழில் அழைப்பு விடுக்கும் பத்மினி சோதி ற இடங்களிலெல்லாம் அங்குள்ள இனத்த தவிர அடுத்தவன் தமிழனாய் மாறினானா? என் தலையில் போட்டுள்ளார். . ழ்மண்ணிலேயே காண்பதரிதாகி விட்டதே! லெ உடைகளைத் தான் கண்குளிரக் காண் தான் அந்நியனில் எமது கலாசாரமும் பண் யத்தில் இவ்விதழ் கட்டித்த கரிசனை சாய்த் மிழ்த் தூது தனிநாயகம் அடிகளார் பற்றிய 5 கவிதையொன்றையும் அடக்கியுள்ளது. டை மாணவி தனிநாயகம் அடிகளார் கட்டு சார். முஸ்லிம் மாணவியொருவர் இவ்வகை காண்டிருப்பது தமிழார்வலர் பத்மினி சோதி  ெதாயக ஒலியினரின் முயற்சியையும் திரு
செய்திப் பரவலும் இவ்விதழில் உண்டு. நெல்சன் மண்டேலாவுக்கு வழங் கப்பட்ட திபதி எவ்.டபிள்யூ.டி. கிளார்க்கும் கிடைத் ரு சுதந்திரப் பிரியர் கெளரவிக்கப்பட்டுள்ளார். பண்கள் கல்விக்காகப் போராடியமைக்காக
37

Page 52
நோபல் பரிசைப் பெற்றுள்ளார். எமது காது. அந்த வகையில் சிறுமி மலால் கள் நோபல் பரிசின் மாண்பைக் காட்
'காகத்துக்குக் கொண்டாட்டம் எ சிறுவர் தொழிலாளிகள் அவர்களோ லாளிகளால் இம்சைக்குள்ளாக்கப்படு துள்ளார் மோதிரம் சிறுகதையில் வ
எமது மூத்தோர் அனுபவத்தில் 2 ஏற்ற வகையில் இன்றைய இளைய த யில் நடத்தி வருவதை டிகாஸிநேமிநாத படுத்தியுள்ளார். ஏனைய ஆக்கங்கள் பிதழுக்கு அணி சேர்க்கின்றன. படித்
புதுப்பொல 'தாயக ஒலி” பதின்னான்காவது இ அடிகளாரின் நூற்றாண்டு தினம் செ பொறுத்தளவில் அடிகளாரின் நூற்ற கொண்டாடியிருக்க வேண்டும். சிறிய நினைவு கூர்ந்த போதிலும் ஆக்கபூர்
வருத்தத்திற்குரியது. 'தாயக ஒலி' அ அவருக்காக சிறப்பிதழ் வெளியிட்டன யைக் காட்டுகின்றது. அதற்காகச் சk
பேனா முனையில் ஒன்பது மாத கா Lடம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள். தமி கட்டுரைகளும், ஒரு இசைப் பாடலும் மனித மேம்பாட்டுக்காய் வாழ்ந்த மா( டுரை, 'சமயங்களின் பரிணாமம்' என்ற யன சிந்திக்க வைத்துள்ளன. டிகாஸி ! யும், 'மோதிரம்' என்ற வவுனியூர் இரா. களைக் காட்டுவனவாக அமைந்துள் களின் போக்குகளை முதல் கதையில யாமல் சிறுவயதிலேயே வேலைக்கு - லாம். கட்டாயக் கல்விக்கு அர்த்தம்?
'தமிழ் வாழப் பணி செய்வோம்' மானதுதான். “ஆங்கிலம் தன் வளை வன்முறையினால், அடுத்தவன் மன மண்பறிப்புக் கொள்கையினால் அது சந்ததியினர் உணரவேண்டும்” என் யங்களைச் சுவைபட சுருக்கமாகத். பல தகவல்கள் படிக்கக் கிடைத்தன
தாயக ஒலி

நாட்டில் இவ்வயதுக்காரருக்கு வாக்குரிமை இருக் உலகத்தின் பெரிய மனிசிதான். இப்பரிசுத் தேர்வு கிென்றது தானே!
துக்குத் திண்டாட்டம்' என்பது போல் இன்றைய தொழில் புரியும் கல் நெஞ்சங் கொண்ட தொழி ம் மனக் குமைச்சல்களை யதார்த்தமாகச் சித்தரித் னியூர் இரா. உதயணன்.
ண்டாக்கிய பழமொழிகளைத் திரிபுபடுத்துவதற்கு லைமுறை தமது பெற்றோரரைப் பாசமற்ற முறை ன் "பெத்த மனசு கல்லு” என்ற சிறுகதையில் வெளிப் ம் தாயக ஒலி இன் தனிநாயகம் அடிகளார் சிறப் துப் பகிர்வது பயனுள்ள இலக்கியச் செயலாகும்.
- சமரசன் (வீரகேசரி)
வுடன் தாயக ஒலி தழ் கிடைத்தது. கண்டு மகிழ்ந்தேன். தனிநாயகம் ன்ற வருடம் கொண்டாடப்பட்டது. இலங்கையைப் Tண்டு விழாவை மிக உயர்ந்த தரத்தில் சிறப்பாகக் அளவில் சிற்சில இடங்களில் அந்தப் பெரியவரை பமாக எந்தச் செயற்பாடும் முன்னெடுக்கப்படாமை வர் பெயரில் கட்டுரைப் போட்டி நடத்தியமையும், ஓமயும் அன்னாரின் மேல் கொண்டுள்ள பற்றுறுதி ஞ்சிகைக் குழுவினரைப் பாராட்டுகின்றேன்.
லமாக இலங்கையில் நிலவிய கொடூர வறட்சியைப் முத் தூது தனிநாயகம் அடிகளாரைப் பற்றி மூன்று இடம்பெற்றமை மகிழ்ச்சியைத் தருகின்றது. மேலும் பெரும் தலைவர் நெல்சன் மண்டேலா பற்றிய கட் > சிவத்தொண்டன் சிவகணேசனின் கட்டுரை ஆகி நேமிநாதனின் 'பெத்த மனசு கல்லு' என்ற சிறுகதை உதயணனின் சிறுகதையும் மனிதர்களின் சுயரூபங் ளன. பெற்றோரை அலட்சியம் செய்யும் பிள்ளை ம், வறுமை காரணமாகக் கல்வியைத் தொடர முடி அமர்த்தப்படுவதை இரண்டாவது கதையிலும் காண
ற நிலை தொடர்வதாகவே அறிய முடிகிறது. -என்ற திருமதி சோதிராசாவின் ஆதங்கம் நியாய மயாலோ செழுமையாலோ வளர்ச்சி பெறவில்லை. ணைத் தனதாக்கிக் கொள்ளும் ஆங்கிலேயனின் உலகெங்கும் பரவியது என்பதை எமது வருங்கால ) கூறியிருப்பது உண்மையே. இன்னும் பல விட ந்துள்ளீர்கள். ஒரு சஞ்சிகையிலேயே பயன்தரும் மயையிட்டு உண்மையிலேயே “தாயக ஒலி' ஆசிரி
38

Page 53
யருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின் வுடனும் தாயக ஒலி பவனி வருகின்றது. அத
- மார்க்கம்
தொடர்ந்து வருவது | இலக்கிய நண்பர் அவர்களுக்கு தங்களது 'தாயக ஒலி தொடர்ந்து வருவது கான சந்தாப் பணம் வங்கியில் வைப்பிலிட்டு ளேன். எனது வாழ்த்துக்களையும் 'தாயக ஒல் தொடர வாழ்த்துகிறேன். விரைவில் கட்டுரை
தாயக ஒலியின் தாயக ஒலி - தனிநாயகம் அடிகளார் சிறப் இன்றைய ஆசிரிய உலகின் ஆச்சரியப்பட காட்டியுள்ள எழுத்தாளர் தெணியானின் கூற்று கணும்' என்ற பாடல் வரிகளுக்கேற்றவாறு
அடுத்ததாக வாத்தியார்களே முன்னிலையில் துட்டு, மணி.... மணி... என்ற அவர்களது மன பிலா வீணாக்க தெணியான் அவர்கள் கூறும்
வைத்தியர்களையும் சுட்டுவுதாக இல்லை.)
வவுனியூர் இரா.உதயணனின் பேனா பிடித் விளிம்பு நிலை மக்களின் வேதனையை சொல்
அநேகமாக, 'வளர்ந்தவர்களையே வளர்த் விலகி, பல்வேறுபட்ட போட்டிகளை இளையே வளர்த்துவிடும் தாயக ஒலி” யின் தனித்துவம் சி
தாயக ஒலி

றேன். புதிய நோக்குட னும், புதுப் பொலி
ன் வளர்ச்சிக்கு என நல்வாழ்த்துக்கள். ன்டு தவயோகன் (நந்தாவில், கொக்குவில்)
கண்டு மகிழ்ந்தேன்
1 கண்டு உளம் மகிழ்ந்தேன். தாயக ஒலிக் அதற்கான பற்றுச் சீட்டும் இணைத் துள் 'ெக்குத் தெரிவிக்கும் நான், தங்களது பணி சில தாயக ஒலிக்கு அனுப்ப முயல்வேன். மொழிவரதன் (கணபதிபுரம், கொட்டக்கல)
[ தனித்துவம் பிதழ் கிடைத்தது. நன்றி.
த்தக்க வாசிப்பு வல்லமையை (?) சுட்டிக் மிகவும் யதார்த்தமானதே. 'ஓடி ஓடி உழைக் செயல்படுபவர்களில் வைத்தியர்களுக்கு நிற்கிறார்கள். அப்படி இருக்கும்போது காசு, னியான நேரத்தை போயும் போயும் வாசிப் கிறார்கள். (இது எல்லா ஆசான்களையும்,
த விரலுக்கு தங்க மோதிரம்' போடலாம். ன்ன அவரின் கதை மனசைத் தொட்டது. துவிடல்' என்ற கொள்கையிலிருந்து சற்று யாரிடம் வைத்து அவர்களை ஊக்குவித்து மப்புடன் தொடரட்டும். எனது வாழ்த்துக்கள்.
ஷெல்லிதாசன், திருகோணமலை.
23.11.2014 அன்று யாழ். தேசிய கலை இலக்கியப் பேரவையில் கவிஞர் முருகை யன் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஷெல்லிதாசனின் 'நகர வீதிகளில் நதிப் பிரவாகம்' கவிதை நூல் அறிமுக விழாவில் ஏற்புரையை ஆற்றும் ஷெல்லிதாசன் மற் றும் கவிஞர் எஸ்.ஜி.கணேசவேல், தாயகம் ஆசிரியர் தோழர் தணிகாசலம், கவிஞர் சோ. பத்மநாதன் (சோ.பா) ஆகியோரை இங்கு காணலாம்.
- 39

Page 54
ஒரு கடிதம்
அன்பான தங்கச்சி சுபத்திரா! நீண்ட காலத்திற்குப் பின்பு உன் : ணனிடமிருந்து ஒரு கடிதம் கிடைத்த யிட்டு நீ அதிசயம் அடையலாம். பெ மையின் எல்லை தாண்டிய நிலையில் நாட்கள் யோசித்து இத் தீர்க்கம் முடிவை எடுத்துள்ளேன். எனது மு உனது வாழ்க்கையையும் பாதிக்கக்கூ இருந்தும் எம்மைப் பெற்று வளர் ஆளாக்கிய எம் பெற்றோர்களைக் கன காலத்தில் சந்தோஷமாக வைத்துப் பு காக்க வேண்டும் என்ற குறிக்கோளும் கவே இந்த முடிவுக்கு வந்துள்ளேன்.
தங்கையின் வாழ்வா? பெற்றோ அமைதியா? இருகொள்ளி எறும்புடே பல நாட்களாக, பல மாதங்களாக ஆழ் சிந்தித்து பெற்றோருக்காக வாழ்வது எ நிலைப்பாட்டில் என் முடிவை எடுத் ளேன். இடையில் சேர்ந்த பந்தம் இ யில் போகட்டுமே! தொப்பிள் கொடி உ கடைசி காலம் வரை நீடிக்கட்டுமே! பதே என் ஆதங்கமாக இருக்கின்றது. எடு முடிவு என்ன என்று சொல்லாமல் னெல்லாமோ அண்ணை எழுதுகின்றா என்று நீ எண்ணலாம்....
கடந்த கால வாழ்க்கையை மீண் புரட்டிப் பார்க்கும்போதுதான் என் ! வுக்கு அர்த்தம் புரியுமென நம்புகின்ே நான் பல்கலைக்கழகப் படிப்பை முடித் கொண்டு ஊருக்குத் திரும்பியதும், வே கிடைக்காத நிலையில் ஊர்ப் பாட சா யில் தொண்டர் ஆசிரியராகப் பணி புரி கொண்டு ஊர்ப் பிள்ளைகளுக்குப் பா சொல்லிக் கொடுக்கும் செயற்பாடுக யும் மேற்கொண்டு வந்தேன். அந்தக் கட்டத்தில் சின்னத்துரை மாமா தன மகள் நிவேதாவை திருமணம் செய்யு வற்புறுத்தி வந்தார். நிவேதாவும் நா ஒருவரையொருவர் விரும்புவது எமது !
தாயக ஒலி

நிஜம்
டிவு டும்.
- Tா பாம் T்பபாட்டி -
ரின்
டை
ண் தை ாறு
றோருக்கும், சின்னத்துரை மாமா குடும்பத்
பல
திற்கும் தெரிந்த விடயம்.
Tன
“ அண்ண தங்கச்சிக்குக் கல்யாணம் செய்யாமல் குமரை வீட்டில் வைத்துக்
கொண்டு தம்பிக்கு இப்ப எப்படி செய்கிறது. த்து
அவனுக்கு நிரந்தரமான உத்தியோகமும் டசி
இல்ல. கொஞ்ச நாள் பொறுங்கோ சுபத் பாது
திராவின் கல்யாணத்தோட நிவேதாவுக் கும் கல்யாணத்தைச் செய்து வைப்பம்”
அம்மா சொன்ன வார்த்தைகளை ஏற்
றுக்கொண்டு சின்னத்துரை மாமாவும் பால்
போய்விட்டார். ந்து
இந்த விடயத்தைக்கேள்விப்பட்ட நிவேதா ன்ற
எங்கள் வீட்டுக்கு வந்து எமது அம்மர் துள்
வைப் பார்த்து.....
"மாமி உங்கள் வீட்டில் மட்டும்தான் கும் -றவு
ரிருக்கோ? எங்கட வீட்டிலயும் குமருகள் என்
இருக்குதுகள் எண்டதை மறந்து போகா
தேங்கோ”
ரோ
| "எடிபிள்ளை கோவியாதையடி உன்ர மச் சான் வந்தா கூட்டிப் போ. எங்களுக்கு ஒரு
ஆட்சேபணையும் இல்ல. நீயுண்டு உன்ர டும்
மச்சானுண்டு. ஏன் எங்களோட சண் முடி
டைக்கு வாறாய்.” றன்.
"அந்தப் பயம் இருக்க வேணும். மாமி
லை
நான் மச்சானோட கதைச்சுக் கொள்ளு 4
லை
கிறன். வாறன்.”
என்று வீட்டில் நடந்த சம்பாசணைகள் டம்
யாவும் உனக்குத் தெரியும். ளை -
உன்னைக் கரைசேர்ப்பதற்கு ஐயா கால்
பாக்காத புறோக்கர் இல்லை. அம்மா கும் ரை
பிடாத கோயில் இல்லை. பல பிரயத்தனங் Dபடி
களுக்கு மத்தியில் வெளிநாட்டு மாப்பிளை
இருக்கு, சாதகம் எல்லாம் நல்ல பொருத் பெற் தம் என்று கந்தையா புறோக்கர் சொல்லி
த்ெத
என்
சர;
துக்
ந்து
அம்
- 40

Page 55
விட்டுச் சென்றதும் உனக்கும் ஞாபகம் இருக்கும். - மாப்பிளை வீட்டார் வந்தார்கள்; தங் களுக்குப் பெண்ணைப் பிடித்துக் கொண் டது மேற்கொண்டு ஆகவேண்டியதைக் கவனியுங்கள் என்று சொன்னார்கள். மாப் பிளை மூன்று கிழமைதான் நிற்பாராம் அதற்குள் திருமணத்தை முடித்துக் கொண்டு போய்விடுவாராம். அங்கு பொம் பிளையை மூன்று மாதத்திற்குள் எடுப்பிப்பா ராம் என்று மாப்பிள்ளை வீட்டார் சொன்
னார்கள்.
உன்னுடைய திருமணத்திற்கு திகதி குறிப்பிட்டு திருமணத்திற்கான ஒழுங்கு கள் யாவும் மும்முரத்துடன் மேற்கொள் ளப்பெற்றன. திருமண அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுவிட்டன. சொந்தக்காரர்கள் அயலட்டை என்று ஜயாவும் அம்மாவும் வீடு வீடாகச் சென்று சொல்லிவந்தார்கள்.
கல்யாணத்துக்கு மூன்று நாட்கள் இருக்கின்ற தறுவாயில் மாப்பிள்ளை வீட் டார் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் கள். மாப்பிள்ளையின் அக்காவை மாற்றுச் சடங்குக்குச் சம்மதித்தால் திருமணம் நடக்கும் மறுத்தால் நின்றுவிடும் என்ற நிலையில் பதறிப்போன ஐயாவும் அம்மா
வும் என்னிடம் வந்து கெஞ்சினார்கள்.
“தங்கச்சி கரைசேர வேண்டும் என்றால் நீ இந்தத் தியாகத்தைச் செய்தே ஆக வேண்டும். தக்கச்சியின் கல்யாணம் நின் றால் ஊர் உலகத்தில நாங்கள் தலை காட்ட முடியாது. அவமானத்தால் அவள் எதாவது செய்தாலும் செய்துபோடுவாள். என்ற ராசா நீதான் எங்களைக் காப்பாற்ற வேணும்” என்று எம் பெற்றோர்கள் அழாக் குறையாக என்னிடம் வேண்டினர்.
நீ சிறப்பாக வாழவேண்டு என்ற அந்த ஒரேயொரு நோக்கத்துக்காக மாற்றுச் சடங்குக்குச் சம்மதித்து என்னினும் மூன்று வயது மூப்பான உன் புருசனின் அக்கா வைக் கட்டினேன். அதுவரை நடந்தவை
"]-3 (10) ஒ ஒ »
Q) ந ந ]0 - இ - 2
தாயக ஒலி

யாவும் உனக்குத் தெரியும்.
நீ கனடாவுக்குச் சென்று இரண்டு தழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்வதை அறிந்து மிகுந்த மகிழ்சியடைகின்றேன்.
நீ கனடாவுக்குப் போனபின்பு இவ்வளவு காலமும் எனது வாழ்க்கையில் உனக்குத் தெரியாத சோகம் நிரம்பிய சம்பவங்களை இக்கடிதத்தில் சொல்லவேண்டிய கட்டா யத்துக்கு வந்துள்ளேன்.
என்னை நம்பி வாழ்ந்த நிவேதா எனது கல்யாண விடயத்தை அறிந்ததும் வெப் பியாரம் தாங்காமல் கிணற்றுக்குள் குதித்துவிட்டாள். நல்லகாலம் உயிருக்கு ஆபத்து ஒன்றும் இல்லை... ஆனால் மண் டையில் காயம் ஏற்பட்ட படியால் மூளை பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர் கள் சொல்லிவிட்டார்கள். இதற்கு மேல் நிவேதாவைப் பற்றி மேலும் சொல்லி என்னை நான் வருத்திக்கொள்ளவிரும்ப வில்லை. நிவேதாவின் அப்பா மகளின் திலையால் அதிர்ச்சியடைந்து மரணத் தைத் தழுவிக் கொண்டார். அவர் பிரிவு தாங்காமல் மாமியும் போய்ச் சேர்ந்து விட்டா. தனிமரமாக நின்ற நிவேதாவை வீட்டுக்குக் கூட்டி வந்துவிட்டேன்.
மூன்று உயிர்களை வைத்துக் காப் பாற்றவேண்டிய பெரும் பொறுப்புடன் வாழும் எனக்கு வாழ்க்கைத் துணையாக வந்தவள் பெரும் சங்கடங்களைக் கொடுத் துக் கொண்டிருக்கிறாள். வீட்டு வேலை கள் எல்லாம் பார்த்து பெற்றோருக்கும் நிவேதாவுக்கும் உணவு கொடுத்து நானும் பாடசாலைக்குப் போய்வருவதால் மனைவி கேட்கும் நிகழ்ச்சிகளுக்கு சென்றுவர நேரம் இருப்பதில்லை. அதனால் அவள் சுதந்திரமாகத் திரிவதால் நேரத்துக்கு வீட் திக்கு வருவதில்லை. அவளைத் தேடித் திரிந்து கூட்டிவருவதே பெரிய வேலையா கிப் போய்விட்டது. ஏதாவது கேட்டால் கத்துவாள். வீட்டு வேலைகள் ஒன்றும் கவனிப்பதில்லை. சமைத்துச் சாப்பாடு
41

Page 56
கொடுக்கவேண்டிய பொறுப்பும் என யிற்று. எல்லாவற்றையும் பொறுத்த கொண்டு வாழ்ந்துகொண்டிருந்தேன்.
எனது மனைவி என்று சொல்லப்ப வளின் பாடசாலை அதிபர் மாற்றல வேறு பாடாசாலைக்குச் சென்றுவிட்ட அந்த இடத்திற்கு நான் அதிபரா சென்றேன். எனது பாடசாலையில் ஆ யராகக் கடமையாற்ற விரும்பாத உன் மைத்துனி முதல் அதிபர் மாற்றம் பெற், சென்ற அதிபரின் பாடசாலைக்கு மாற் கேட்டுச் சென்றுவிட்டாள். இந்த விட பாடசாலைச் சமூகம் மத்தியில் பரபரப் ஏற்படுத்தி என்னைத் தலைகுனிய வை விட்டது. இருந்தபோதிலும் அதைப் ெ தாக அலட்டிக்கொள்ள வில்லை. ந! உண்டு என் வேலையுண்டு என்று இரு
விட்டேன்.
ஒருநாள்... தங்கள் பாடசாலை பிள்ளைகளை கல்விச் சுற்றுலாவுக்
கூட்டிச் செல்ல இருப்பதால் வர இரன நாள்கள் செல்லும் என்று கூறிவிட்( சென்றுவிட்டாள். இரண்டு நாள்கள் கழித விவரம் அறிவதற்காக அவளின் ப சாலைக்குச் சென்றேன். அங்கு அதிபர் மனைவியும் அவரின் இருபிள்ளைகள் பிரதி அதிபரின் அறையிலிருந்து அழு கொண்டிருக்கிறார்கள். பிரதிஅதிபர் என நண்பரானபடியால் அவரைத் தனிய
அழைத்து விசாரித்தேன். பாடசாலை பிள்ளைகள் சுற்றுலாவுக்குச் போகவில்ல என்றும், அதிபரும் சியாமளாச் ரீச்ச காரில் போனபோது விபத்தில் காயப்ப! நாவலப்பிட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்6 பெறுவதாகவும் தெரிவித்தார்.
சியாமளாவின் நிலை அறிய நாவல் பிட்டி ஆஸ்பத்திரிக்குச் செல்கின்றே அங்கே தலையில் சிறு காயத்துக்கு மரு கட்டிய நிலையில், கால் கையில் கா! துக்கு மருந்துகட்டி இரத்தம் ஏற்றிக்கொ டிருக்கும் அதிபரின் கட்டிலுக்குப் பக். தில் நிற்கும் சியாமளாவைக் கண்டேன்
தாயக ஒலி

தா துக்
டுப Tகி
ார். கச் சிரி
எது
றுச்
றம் பம்
பை
த்து
பரி
ரன்
ந்து
பப்
திக்
ர்டு
என்னைக் கண்டு அதிர்ச்சியடைந்த சியாமளா அழத்தொடங்கிவிட்டாள். ஒருவாறு அவளை ஆறுதல்படுத்திவிட்டு வீட்டுக்குப் போவோம் வா என்று அழைத் தேன். "அதிபரை விட்டு நான் வரமாட்டேன் நீ போ” என்று கோபத்துடன் பெரிய சத்த மாகச் சொல்லிவிட்டாள். அக்கம் பக்கத் தில் நின்றவர்கள் என்னை ஒரு மாதிரி யாகப் பார்க்கத் தொடங்விட்டார்கள். இனியும் அங்கு நிற்பதில் பயனில்லை. சியாமளா வரமாட்டாள் என்ற எண்ணத் துடன். துயரச் சுமைகளைத் தாங்கிய வண் ணம் வீட்டுக்கு வந்து எனது அன்றாடக் கடமைகளில் என்னை நிலைநிறுத்திக் கொண்டேன்.
ஒரு கிழமைக்குப் பின் சியாமளா வீட் டுக்கு வந்தாள். அவள் ஒன்றுமே கதைக்க வில்லை. நானும் அவளிடம் ஒன்று கேட்கவுமில்லை. இதேவேளை பாட சாலையில் அதிபரின் மனைவி வந்து சியா . மளா ரீச்சரை கேளாத கேள்வி கேட்டுப் பேசினார் என பிரதி அதிபர் தொலைபேசி யில் தெரிவித்திருந்தார். நொந்துபோயிருக் கும் சியாமாளவுக்கு எந்தப் பிரச்சினையும் கொடுக்கக்கூடாது என்ற மன வைராக் கியத்துடன் காலத்தைப் போக்கிக்கொண் டிருந்தேன். - வீட்டில் பெற்றோரையும், நிவேதாவை யும் பார்ப்பதற்காக எங்களுடன் இருந்த தங்கம்மா அக்கா வீட்டுக்குப் போய்விட்டு பின்னேரம் வந்துவிடுவேன் என்று சொல்லி காலையிலேயே புறப்பட்டுச் சென்று விட்டா. அன்று எனது பாடசாலை விடய மாக கல்வித் திணைக்களத்துக்குப் போக வேண்டிய தேவை இருந்தது. அதனால் சியாமளாவிடம் லீவு கேட்டுவிட்டு நான் வரும்வரை வீட்டில் இருக்கும்படி கேட்டுக் கொண்டேன்.
"எனக்கென்ன தலையெழுத்து உந்தச் சனியங்களை வைச்சுப் பார்க்க; கொண்டு போய் அநாதை இல்லத்திலை விட்டுவிட்டு வா” என்று கத்தினாள். பெற்றவர்களை
நிச் த்து
Tட
ன் நம் இது
எது
பாக
லெ
நம்
ட்டு
சை
பப்
ன். ந்து
ண
42

Page 57
கடைசிக்காலத்தில் அன்பாக வைச்சுப் பார்க்கவேண்டும் என்ற இலட்சியத்தோட வாழும் எனக்கு அவள்கூற்றுமிகுந்த வேத னையுடனான ஆத்திரத்தை ஏற்படுத்தி விட்டது. பொறுமையை இழந்து “போடி வெளியால” என்று சொல்லிவிட்டேன். சொன்னவுடன் உடுப்புப் பெட்டியையும் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளி யேறிவிட்டாள்.
இரண்டு, மூன்று தினங்களின் பின் வீட்டு முகவரிக்கு விவாகரத்துப் பத்திரம் பதிவுத்தபாலில் அனுப்பப்பட்டிருந்தது. என்னுடன் வாழ விரும்பாதவளுக்கு விவா கரத்துக் கொடுத்தால் யாருடனாவது சந் தோஷமாக வாழட்டுமே என்று எண்ணி
ஆரோக்கியம்
தாய்ப்பாலின் (
குழந்தைகளுக்கு போசணையுடன் எதிர்ப்புச் சக்தியையும் வழங்கவல்ல தாய்ப் பாலின் முக்கியத்துவம் உணரப்பட்ட நிலையில் உலகத் தாய்ப்பால் தினம் ஒவ் வொரு வருடமும் ஆகஸ்ட் முதலாம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. தாய்ப்பாலூட்டு வது என்பது காலம் காலமாகவே பெண் கள் இயற்கையாக ஆற்றிவந்த கடமையா கத்திகழ்ந்து வந்தது. ஆனால், அண்மைக் காலமாக குழந்தைகளுக்குத் தாய்ப் பாலூட் டுவது பெருமளவில் குறைந்து வருகின்றது. இது இன்றைய தாய்மாரின் அசாத்தியப் போக்காகவே கருதமுடிகிறது. இத்தகைய நிலையில் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உலகளாவிய ரீதியில் விழிப் புணர்வை ஏற்படுத்தவே உலகத் தாய்ப் பால் தினத்தை முன்வைத்துள்ளார்கள்.
புதிதாகவே பிறந்த குழந்தைகள் தமது போசணைச் சத்துக்களைப் பெற்றுக் கொள்ள தாய்ப்பாலூட்டல் அவசியமான தாகும். தாய்பாலானது இலகுவில் சமி
தாயக ஒலி

விவாகரத்துப் பத்திரத்தில் கையொப்ப மிட்டு அனுப்பிவைத்துவிட்டேன். சுபத்திரா எனது இந்த முடிவால் உன் சந்தோஷ மான வாழ்க்கைக்கு ஏதாவது பங்கம் ஏற் பட்டால் தயங்காது பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு இங்கே வந்துவிடு. கடை சிக்காலத்தில் பெற்றோரைப் பார்துக் கொண்டு இங்கேயே இருந்துவிடுவோம். என் முடிவு உனக்கு அதிர்ச்சியைத் தந்தா லும், அது தீர்க்கமான முடிவு என்று எனது மனச்சாட்சி சொல்லுகிறது.
மனச்சுமையுடன்
விடைபெறும் உன் அன்பு அண்ணன்
த.சிவா.
முக்கியத்துவம்
பாட்டை அடையக்கூடிய புரத மூலக் கூறு களை உயர் விகிதத்தில் கொண்டதாகவும் குழந்தைகளை தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொண்டதாகவும் விளங்குகின்றது.
குழந்தை பிறந்தவுடன் முதலில் சுரக்கும் தாய்ப்பால் கொலஸ்ரோம் என அழைக் கப்படுகின்றது. கொலஸ்ரோமானது போசணைச் சத்துக்களை மட்டுமன்றி குழந்தைகளுக்குத் தொற்றினை ஏற்படுத் தும் பக்றீரியா மற்றும் வைரசுகளிலிருந்து
குழந்தைகளைப் பாதுகாக்கின்றது.
ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரணத்தைக் குறைப்பதற்கு உலகநாடுகள் முனைந்து செயற்படுகின்றன. குழந்தை பிறந்தது முதல் இரண்டு வயது வரை உடல், மன மற்றும் மூளை வளர்ச்சி என்பன மிக வும் வேகமாக இருக்கும். இப்பருவத்தில் குழந்தையின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு ஏதேனும் தடை ஏற்பட்டால் அது வாழ் நாள் முழுவதும் சீராக்க முடியாத பாதிப்பை
- 43

Page 58
ஏற்படுத்திவிடும். எனவே இப்பருவத் குழந்தைகளுக்குத் தாய்ப்பாலூட்டு தாய்மாரின் கடமையாகும்.
தாய்ப்பாலில் குழந்தைகளுக்குத் தே யான அனைத்துச் சத்துக்களும் சரிய விகிதத்தில் உள்ளன. மூளை வளர்ச்சி யாக அமையத் தேவையான புரதங் அத்தியாவசிய கொழுப்புச் சத்துக் தாய்ப்பாலில் மட்டுமே உள்ளன. அ டன் தாய்ப்பால் உடனுக்குடன் புதித கிடைக்கும் உணவாகும். எளிதில் ஜீ மாகக் கூடியது. கிருமிகளைக் கொல் தன்மையுடையது.
குறைந்தது ஆறு மாதங்களுக்கா தாய்ப்பால் ஊட்ட வேண்டும் எனத் த னிக்கும் வரை குழந்தைகளுக்குத் த பால் தேவைப்படுகின்றது. தாய் தன் புடன் அணைத்து குழந்தைகளும் பாலூட்டும் போது தொப்புள் கொடி பின்னர் மறுபடியும் ஒரு பிணைப்பு த கும் குழந்தைக்குமிடையே ஏற்படுகி தாயின் இரத்தத்திலுள்ள ஆக்ஸிடோ என்கிற ஹோர்மோன் பாசத்தையும் ப தையும் வளர்க்கிறது என மருத்துவ கூறுகின்றனர்.
தாய்ப்பாலூட்டுவதினால் நீண்ட நன்மைகள் இருப்பதாக ஆய்வுகள் கின்றன. இருபாலாருக்கும் (தாய், குழந் நன்மையே கிடைப்பதாக அறிய கிறது. தாய்ப்பாலை அதிகமாக அரு! குழந்தைகள் புத்திசாலித்தனமான களாக வளருகின்றனர். மேலும் தாய் லூட்டலானது தாய்மாரில் மார் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் எல் ஏற்படாது பாதுகாக்கின்றது. அத்து வகை இரண்டு நீரிழிவு ஏற்படுவதை குறைக்கின்றது என்று ஆய்வுகளின் மூ கண்டறியப்பட்டுள்ளது.
தாய்ப்பாலானது இலவசமாகக் கி பதுடன், கேள்விக்குரியதாகவும் போச்6 மிகுந்ததாகவும் விளங்குகின்றது. த பாலூட்டல் என்பது மிகவும் ஆள்
தாயக ஒலி

தில் வாய்ந்த தீர்மானமாகவேயுள்ளது. தாய் 1வது
மார் தம் சொந்த விருப்பின் பேரிலேயே
முடிவினை மேற்கொள்கின்றனர். தாய்ப் 5வை
பாலானது எளிதில் ஜீரணமாகக் கூடிய பான
போசணைச் சத்துக்கள் மிகுந்த உண 2 சரி
வாகக் கருதப்படுவதுடன், நோய் எதிர்ப்புச் கள்,
சக்தியுடையதாகவும் திகழ்வதால் வைத்தி 5கள்
யர்களால் பரிந்துரைக்கப்படுகின்றது. த்து
மேல்நாடுகளில் தாய்ப்பால் வங்கி ஆரம் ரகக்
பிக்கப்பட்டுள்ளது. இரத்த தானத்தைப் 'ரண
போன்று தாய்ப்பால் தானமும் உயிர் காக் லும்
கும் செயலாகக் கருதப்படுகிறது. அநாதைக்
குழந்தைகளுக்கும், எயிட்ஸினால் பாதிக் வது
கப்பட்ட குழந்தைகளுக்கும் வழங்கப்படு தீர்மா
கின்றது. தாய்ப்பால் ஊட்டுவது தொடர் ராய்ப்
பாக தவறான நம்பிக்கைளும் கொண்டவர் மார்
கள் இருக்கின்றார்கள். தாய்ப்பாலூட்டு க்குப் வதால் தமது இளமை அழகு இல்லாமல் க்குப்
போவதாக சில பெண்கள் நினைக்கின்ற ரய்க்
னர். இது முற்றிலும் தவறான கருத்தாகும். றது.
உண்மையில் தாய்ப்பால் ஊட்டுவதால் ஸின்
தாய்மாரின் அழகும், ஆரோக்கியமும் அதி ந்தத்
கரிக்கின்றன. தாயானவள் பாலுடன் வாஞ் ர்கள்
சையையும் பாசத்தையும் ஊட்டுகிறாள்.
எனவே, மேற்கூறப்பட்ட பல்வேறுபட்ட கால்
அம்சங்களிலிருந்து தாய்ப்பாலின் மகத்
-ജ
துவத்தை உணர்ந்து கொள்வோம்.' தை)
இணுவில் திருவூர் ஒன்றியம் - கனடா முடி ந்தும்
கார்த்திகைத் திங்கள், ஸ்காபுரோ நகர சபை எவர்
மண்டபத்தில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் பப்பா
நிர்வாக ஆண்டு (2014 - 2016 க்கான புதிய பகப்
நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டது. அதிலே 7பன
செ.தளையசிங்கம் (தலைவர்), மு.கிருபாகரன் டன்
செயலாளர்), சோ.சிவநாயகம் (பொருளார்), தயும்
ந.சிவதாசன் (உபதலைவர்), ச.சாந்தினி (உப Dலம்
செயலாளர்) ஆகியோர் பதவியேற்றனர். அங்
கத்தவர்களாக த.சிங்கேஸ்வரன், சி.விக்னேஸ் டைப்
வரன், த.சிறிஸ்கந்தராஜா, பெ.கணேசமூர்த்தி,
ணை
சோ.ரவிமோகன், இ.சபாகுலசிங்கம், இ.குகரா Tய்ப்
ஜன், ச.லலிதா, சொ.பிரபாகரன், செ.ஜெகதீஸ் மை
வரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
44

Page 59
Kanaga S
KEY PERSONNEL Name: Kanakavalli Nadarajanpilla
Kanaga Solicitors 108 High Street, Colliers W
London - SW 19 2 BT Position in the firm : Principal & So
Academics professional Qualifications: L.L.B(Hons), Barrister of Lincoln's Inn, M. Solicitor of High Court of Malaya, solicitor and Wales.
Previous Experience:
Relevant and Present Experience:
Successful practitioner with 13years of er Drugs related offences, Personnel Injury, and Corporate litigation. lawyer in the Hig
Civil Litigation Land matters Family Law Contract and Injunctions Company and Corporate law matters a Bankruptcy Motor Accident Claims
Criminal Litigation Penal Offences under the Penal Code Offences under the Dangerous Drugs
Tel: 020 8544 1100 108 High Street, Colliers W London - SW 192 BT

plicitors
Jood
olicitor
asters at Law (L.L.M), Advocate & r of the Supreme Court f of England
xperience as a Criminal, Civil, Family,
Land Law matters, Wills Probate gh Courts of Malaya.
nd winding up of Companies
Act.
Food

Page 60
சட்டத்தரணிகளும் கு Rasiah & Solicitors
O Conveyan O Residenti D Matrimon
Immigrati ) Landlord
Tel : 020 Fax : 020
180A Mert
South ) London
DX: 300004 V
rasiahsolicitoi

முவரவு ஆலோசகர்களும்
Co
cing / & Commercial
ia/
on
& Tenants
9 8543 4040 8543 2400
on High Street,
Vimbledon, SW 19 1AY
Vimbledon South
s@btconnect.com

Page 61
AÀ Accounti
Solutions 265 Haydons Road I Accountants and Mai
for Efficient and a
Accountin We Specialise in
• Year End Accounts Preparation
Management Accounts Solicitors Accounts
Book Keeping
• Self Assessment Tax Returns
Vat and TAX Investigations
• Payroll Preparation
Business Startup Advice
• Business Plans and Cash Flow Fore
• Management Consultancy
Also through we are able to raise Find
Conto
Uthayana Mob : 0774 7794 358 / 07786
www.aa-acc

ng & Business
Associates London SW19 8TY nagement Consultants quality Professional ng Services
Este
AS SEBE *6. sto
5 *
HA EST
AA
Ande
TRAS SE
casts
pur contacts ance for New Business act: 1 or Sasi - 966 207 Tel : 020 8545 0205
ounts.co.uk

Page 62
Stylish APARTMENTS ir
|
SELLING
Tomld. II - n. m.)
1-m
mt mm:
MLIMm:1
mill:1
LLO. OM
Resider Located just steps from vibrant Galle Roa large open plan living spaces, premium fi: areas, and all come with car parking ano where you can enjoy the panoramic view sea. Premium 1,2 & 3 bedrooms apartme today to secure your preferred apartment.
YD CON
CO
26A, FRA T: +94 1132
YOUR DREAM
E
Builders Reg No: PV100384

a LOCATION you'll love
ald
acies
, the apartments at Dehiwala Heart offer ctures and finishes and spacious outdoor
access to the stunning rooftop garden, s to the Colombo City, Dehiwala City and nts are now selling. Register your interest
STRUCTION PVT LTD.
WALA, SRI LA
IAIL:INFO@YDHOLDING.COM
WWW.YDHOLDING.COM

Page 63
(Lucky
BISO MANUFAC
NATTARANPOTHA, KUN T: +94 081 2420574, 242021
E-mail : luckyla

-land)
மோT
STURERS
உலக சாதனை எங்கள் பாரம்பரியம்
பிஸ்கட்டிலும்தான்!
NDASALE, SRILANKA.
7, Fax : + 94 081 2420740 ind@sltnet.lk

Page 64
21 வருட கால அனுப
Linga &
Legal Advisors & Immi
We Specialise
• Asylum and Immigration M
Human Rights applications Appeals Detention and Bail Entry Clearance Applicatio Injunctions & Judicial Revie associate solicitors
Work Permits
EEA Application (Sponsor)
• Student Visa, Visitor's Visa
• Highly Skilled Migration Prog
• Naturalisation Applications
• Family Law · Employm
• Criminal Law நீங்கள் அல்லது உங்கள் உறவினர் முன்னர் வந்துள்ளார்களாயின் உடல் மிகவும் நம்பிக்கையான
General Line : 020 8544 92 Fax : 020 8542 9530
Emergency Line

வம்
அனைவருக்கும் எமது உளங்கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்!
gration Specialists
in:
atters
n and Appeal ws through
V.P.Lingajothy LLB(Hons), M.Sc., Dip Fms, ACILEX
Principal immigration Specialist E-mail: MRLINGA@AOL.COM
gramme
ஐரோப்பிய மனித உரிமைகள்
சட்டம் சார்பாக தகுந்த ஆலோசனைகளை இப்போது நாங்கள் வழங்குகிறோம்.
ent Law
இங்கிலாந்திற்கு 2007 ஆம் ஆண்டுக்கு ன் தொடர்பு கொள்ளவும்.
வெற்றிகரமான நிறுவனம்
85
46, High Street
Collierswood London SW19 2BY)
பி
3 : 07771 646 441

Page 65
Whether it's a Celebration, a Gift to Someone Special, or just a Royal Treat for yourself.

POOJ
discover a new heaven on earth:
ORDER ONLINE FOR NEXT DAY DELIVERY *
WWW.poojaSweefs.com
SWEETS 2 SAVOURIES
TOOTING BRANCH KINGSBURY BRANCH CARDIFF BRANCH 168-170 UPPER TOOTING
KINGSBURY ROAD
Best Quality Vegetarian Food ROAD, LONDON, Sw177 ER
3 ALBANY ROAD, ROATH
ROAD, LONDON, SW17 7 ER
LONDON, NW9 9ED
CARDIFF, CF24 3LH
For Any Occasion
T: 020 8672 4523 T: 020 8206 2206
T: 029 2021 4987
info@poojasweets.com kingsbury@poojasweets.com
cardiff@poojasweets.com

Page 66
Ramesh & Co
Home Services
Welcome to Rame
We are South west London, bas business advises. We pride ou of professional service with expe personalised professional servi clients and to build a long tern Our accountants are highly exp Business, Financial and Mortga tants & Tax Consultants offer fri petitive fixed fee. If you are not fi contact with us, we would be pl know what your needs and ques to help! Call Ramesh & Co Acc
Phone: 02086823336 | 020835525
Mobile : 07823886784. Fax: 020 86728022
Website: www.rameshandco.co.ul Email: info@rameshandco.co.uk

Accountants
T.P : 020 86823336
Contact
esh & Co Accountants
sed firm and we offer accounts, tax and rselves in providing the highest levels ertise in the field. Our goal is to provide ces at the lowest fees to each of our m professional relationship with them. serienced in Accounting, Taxation and ge consultancy services. Our Accounendly professional services for a comamiliar with our company and your first eased to hear from you. Please let us stions are, we will be more than happy puntants today on 0208 682 3336.
32
ஏழை மக்கள் கண்ணீர் துடைக்க
உங்கள் முன் வரும் இணையத் தளம்
விரைவில் எதிர்பாருங்கள்!

Page 67
დიზე თუ
Jewellers d
வகை வகையான வடிவங்களில் விலையில் பெற்றுக்கொள்ள நாடு
First Tamil Jewe Specialise in 221 Gold,
& Diamond
TOOTING BRANCH 230, UPPER TOOTING ROAD
LONDON SW 17 7EW
UNITED KINGDOM TEL: 020 8767 3445
Season's Best is Summer, Saree's
SILK 2
122 Lond Tel:
EMPORIUM
Opening Hours : Monday - Saturd

00003
Gem Merchants
தரமான தங்க நகைகளைகுறைந்த தங்கள்உங்கள்வெஸ்டன்ஜூவல்லர்ஸ்
Ilery Shop in UK
White Gold, Platinum | Jewellery
இனிய தைப்பாங்கல் வாழ்த்துக்கள்
WEMBLEY BRANCH 5, PLAZA PARADE EALING ROAD,
WEMBLEY HA0 4YA UNITED KINGDOM TEL - 0208 903 0909 est is Silk Emporium Sarees
bper Tooting Road,
SAH7/N 0 8072 00
(10.30am 630pm), Sunday (11.30am-6.30pm)

Page 68
We bruwa ycur drea
PRZERZE
TIESE
SKY.
PROPERTYD
We bring your dreas
# 59, Rudra Maw Tel / Fax - 0112363767 Mok
Email - info@skycityp Web - www.skyeitypr
INDUSONSOCIALE
சிவராம் பதிப்பகம் 2032), கல்லூரி வி

zo home to your life
70% SOLD
CITY
DEVELOPERS - komme time your life Jatta, Colombo 06 2-0714553311, 0770041314 ropertydevelopers.com opertydevelopers.com MLUN Ting
51, umjŮLI 807 Lb. Qam. Gl. 021 221 94 40