கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஜீவநதி 2013.08

Page 1
( 0)) വ
ഇ
ക മരി
യൂഖയീ = 201

Bகாரணீதரன்
ய மாத சஞ்சிகை
80/=

Page 2


Page 3
நதியில்
கவிதைகள்
எல்.வஸிம் அக்ரம் எஸ்.திலகவதி வி.வே.சிற்றரசு ஷெல்லிதாசன்
வேரற்கேணியன்
இத பராம் நாம்,
கட்டுரைகள்
முருகபூபதி
ஸ்ரீ.நிலுஜா இ.சு.முரளீதரன் ச.முருகானந்தன் த.வசந்தன் அந்தனிஜீவா
குறுங்கதை
வேல்.அமுதன்
கலை இலக்கிய நிகழ்வுகள் அட்டைப்படம் - நன்றி இணைய

னுள்ளே...
சிறுகதைகள்
எஸ்.முத்துமீரான் ஆனந்தி ராதா
கா.தவபாலன்
நேர்காணல்
பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா
நூல் அறிமுகக்குறிப்பு
அர்ச்சுனன்
கடிதங்கள்
இளையவன் சைவப்புலவர் சி.வல்லிபுரம்

Page 4
ஜீவநதி
2013 ஆவணி இதழ் - 59|
பிரதம ஆசிரியர் கலாமணி பரணீதரன்
துணை ஆசிரியர்
வெற்றிவேல் துஷ்யந்தன்
இ)
வா
பப்காயம்
பதிப்பாசிரியர்
எந்;
கலாநிதி த.கலாமணி
இருக்க வே கருமத்தை
வேண்டும். ( தொடர்புகளுக்கு :
இடையிட் கலை அகம்
எதிர்பார்த்த சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி அல்வாய் வடமேற்கு அல்வாய்
நெறிப்படுத் இலங்கை.
வாழ்ந்து வ
கெட்டுப் ஆலோசகர் குழு:
தீங்கையே வ திரு.தெணியான் திரு.கி.நடராஜா
வா
திசை கெட தொலைபேசி : 0775991949
தீங்குகளுக்கு 0212262225
டலையே த! செயல் நட
வல்லனவே. E-mail : jeevanathy@yahoo.com
சமூக நலம்,
ஒன்றையொ வங்கித் தொடர்புகள்
ஏதேனும் ? K.Bharaneetharan
தாக்கத்தை Commercial Bank
களும் கூட Nelliady
தீமைகளை A/C - 8108021808 CCEYLKLY
எம் தீமைகளுக்
கொள் ள ( இச்சஞ்சிகையில் இடம்பெறும் அனைத்து
நோக்குடன் ஆக் கங் களின் கருத் துக் களுக் கும் |
கோள நலம் அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்
நடவடிக்ன புடையவர்கள். பிரசுரத்திற்கு ஏற்றுக் |
தனிமனித ) கொள் ளப் படும் படைப் புகளைச் |
களும் கூட! செம்மைப்படுத்த ஆசிரியருக்கு உரிமை உண்டு.
ஜீவநதி -

ஜீவந்தி
(கலை இலக்கிய மாத சஞ்சிகை)
அறிஞர் தம் இதய ஓடை
ஆழ நீர் தன்னை மொண்டு செறி தரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றி... புதியதோர் உலகம் செய்வோம்.!
- பாரதிதாசன்
தும் நன்றும் பிறர் தர வாரா
த ஒரு காரியத்துக்கும் காரணத் தொடர்பொன்று ண்டும் என்பது பொது அறிவு. எனின், எந்த ஒரு பும் நாம் குறிக்கோளுடனேயே மேற்கொள்ள தறிக்கோளுடன் மேற்கொள்ளும் கருமங்களையே, ட மதிப்பீடுகள் மூலம் திசைப்படுத்தி, நாம் இலக்கை எய்தவும் முடியும்.
ழ்க்கையும் கூட, குறிக் கோள்களின் வழியே தப்படுவது தான். குறிக்கோள்களின்றி எப்படியும் டலாம் என்று வாழ்வோரின் வாழ்க்கை திசை போவது மாத்திரமன்றி, ஏனையோருக் கும் பிளைவிக்கும்.
ழ்க்கைக் குறியின்றி மனம் போன போக்கெல்லாம் ட்டுத் தடுமாறி வாழ் வோரினால் விளையும் தம் அப்பால், குறுக்குவழியிலேனும் பொருளீட் மது வாழ்க்கைக் குறியாகக் கொண்டு வாழ்வோரின் வடிக்கைகளும் கூடப் பிறருக்குத் தீமையைத் தர இன்று தனிமனித நலம் என்பது குடும்ப நலம், நாட்டுநலம், புவிக்கோள் நலம் என விரிவுபட்டு, என்று சார்ந்தும் இருப்பதைக் காணலாம். இவற்றுள் ஒன்றில் ஏற்படும் பாதிப்பும் ஏனையவற்றிலும் விளைவிக்கும். எனவே, தனிமனித நடவடிக்கை நன்கு திட்டமிடப்பட்ட வகையில், நன்மை, ப்பகுப்பாய்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.
க்கு ஏற்படும் எல்லா வகையான நன்மைகளுக்கும் தம் நாமே காரணகர்த்தர் என்பதை நாம் மனங் வேண்டும். எதிலும் நலம் காண விழையும் - குடும்ப நலம், சமூக நலம், நாட்டுநலம், புவிக் - என்ற வரிசையில் தனிமனித நலம் சார்ந்த செயல் -ககளைத் தூர நோக்குடன் செய் யும் போது, கலத்திற்குக் கேடு இல்லை. அரசியல் நடவடிக்கை இதற்கு விதிவிலக்கல்ல.
- க.பரணீதரன்
இதழ் 59

Page 5
இல முற்போக்கு எழு நடந்த கெளரவிப்
திரும்பிப் ப சில நினைவுகளு
கொழும்பில் இயங்கும் இலங்கை முற்போக்கு கலை, இலக்கிய மன்றம் கடந்த 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் முன்னோடி முற்போக்கு எழுத்தாளர்கள் ஒன்பது பேரை கெளரவித்து பாராட்டுவதற்காக ஒரு விழாவை நடத்திய தாக அறியக்கிடைத்தது. நல்ல செய்தி, வாழும் காலத் திலேயே ஒருவரை பாராட்டுவதென்பது முன்மாதிரி யான செயல் இந்தச்செயல் இலங்கையில் ஒரு மரபாக பின்பற்றப்பட்டு வருவதும் மகிழ்ச்சியானது.
பொன்னாடைகள் யாவும் பன்னாடைகளாகிக் கொண் டிருக் கும் சமகாலத்தில் இலங் கையில் முற்போக்கு இலக்கியப்பணியை இயக்கமாகவே நடத்தி வந்த முன்னோடிகள் பற்றிய தகவல்களையும் இன்றைய தலைமுறையினர் இந்த நிகழ்வின் ஊடாகவும் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னர் ஒரு காலத்தில் முற்போக்கு என்ற வுடன் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்தான் நினைவுக்கு வரும். தமிழ்நாட்டிலும் அந்தப்பெயரில் ஒரு சங்கம் இயங்குகிறது. மாக்சிஸ்ட் - லெனினிஸ்ட் சிந்தனையுள்ள இடது கம்யூனிஸ்ட் கட்சி அதற்கு பின் பலமாகவும் பின்புலமாகவும் இருக்கிறது. செம்மலர் என்ற சிற்றேட்டையும் அந்த அமைப்பு வெளியிடுகிறது.
அதே சமயம் வலது கம்யூனிஸ்ட் (மாஸ்கோ சார்பு) இயக்கமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் இயங்குவது தமிழ்நாடு கலை, இலக்கிய பெருமன்றம். அதன் ஸ்தாபகர் தோழர் ஜீவானந்தம். அவர் ஆசிரியராக பணியாற்றி வெளியானது தாமரை இதழ். பின்னர் யார் யாரோ அதற்கு ஆசிரியரானார்கள்.
இலங்கையில் இந்த நிலைமை இருக்கவில்லை. இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர்
ஜீவநதி -

முருகபூபதி
ங்கை த்தாளர்களுக்கு பு- பாராட்டுவிழா பார்க்கிறேன்
ம் சிந்தனைகளும்
சங்கத்தை உருவாக்கிய பெருமை மறைந்த கே. கணேஷ், மற்றும் இலங்கையில் சிறிது காலம் வாழ்ந்த இந்தியரான கே. ராமநாதன் ஆகியோரைச் சாரும். இவர்கள் இணைந்து பாரதி என்ற இதழையும் சிறிது காலம் வெளியிட்டனர்.
சர்வதேச ரீதியாக கம்யூனிஸம் பிளவுபட்ட போது, இலங்கையில் மாஸ்கோ சார்பு, பீக்கிங் சார்பு இடதுசாரிக்கட்சிகள் தோன்றினாலும்கூட எழுத்தாளர் களின் முற் போக்குச்சங்கம் பிளவுபடவில்லை. இச்சங்கம் புதுமைஇலக்கியம் என்ற இதழை வெளி யிட்டது. பின்னர் காலத்துக்குக்காலம் நடத்திய சங்கத் தின் மாநாடுகளையொட்டிய புதுமை இலக்கியம் சிறப்பு மலர்களை வெளியிட்டது.
மாஸ்கோ சார்பு எழுத்தாளர்கள் டொமினிக் ஜீவா, பிரேம்ஜி ஞானசுந்தரன், பேராசிரியர் கா. சிவத்தம்பி உட்பட சிலரும், பீக்கிங் சார்பு எழுத்தாளர்கள் டானியல், என்.கே.ரகுநாதன், செ.கணேசலிங்கன், நீர்வை பொன்னையன், இளங்கீரன், பேராசிரியர் க. கைலாசபதி உட்பட சிலரும் அரசியல் கருத்து முரண் பாடுகளுக்கு அப்பால் இச்சங்கத்தில் இணைந்தே இயங்கி வந்தார்கள். இவர்களில் ஜீவா, டானியலுடன் நெருக் கமான நட்புறவை பேணிய வர் தான் எஸ்.பொன்னுத்துரை. யாழ்ப்பாணத்தில் இவர்கள் எழுதப் புகுந்த காலத்தில் தமக்குத்தாமே சூட்டிக் கொண்ட புனைபெயர்கள் வருமாறு:- டானியல் - புரட்சிதாசன், பொன்னுத்துரை-புரட்சிப்பித்தன், ஜீவா - புரட்சிமோகன்.
இப்படி புரட்சிபேசியவர்கள் காலப் போக்கில் திசைக்கொன்றாய் பிரிந்துசென்றார்கள். அவர்களின் வாழ்வில் புரட்சி ஏதும் நடந்ததா என்பதும் தெரிய வில்லை.
13
இதழ் 59

Page 6
சாகிராக்கல்லூரியில் 1960 களில் நடந்த மாநா எக்.ஸி. நடராஜாவும் கனகசெந்திநாதனும் வ.அ.இராசரத் இவர்களைப் பின்தொடர்ந்தார்.
பொன்னுத்துரை முற்போக்கு இலக்கிய இ முகாம் உருவாக்கினார். அதற்கான காரணத்தை எனக்கு குறிப்பிட்ட நேர்காணல் இடம்பெற்ற எனது சந்திப்பு நூல்
யாழ்ப்பாணத்தில் நடந்த சாகித்திய விழா சம்பவத்தையடுத்து பொன்னுத்துரை காலம்பூராகவும் முற் களினால் விமர்சித்தே வருகிறார். இலங்கை முற்போக்கு புலம்பெயரும்வரையில் பிரேம்ஜி செயலாளராகவே அருப்
பல்கலைக்கழக வளாகத்தின் முதலாவது தலைவராக நி முற்போக்கு எழுத்தாளர் சங்கம்.
இவர்கள் மீதுள்ள காழ்ப்பினால் இவர்களை பிரேம்ஜி, பீடாதிபதி கைலாசபதி என்றும் எள்ளி நகைய
1975 இல் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 4ெ செய்த பொழுது, டானியல், என்.கே. ரகுநாதன், சில்லைய பலர் திருகோணமலையில் ஒரு எதிர்வினை மாநாட்டை
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்குத்தீர்வ முன்மொழிந்து அனைத்துக்கட்சிகளுடனும் தொடர்ச்சி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவிடம் மாநாட்டில் அதனை
போராட்டமாக வெடிக்காத அந்தக்காலப்பகுதியில் அர்
1972இல் மல்லிகையில் எழுதத்தொடங்கியிருந் இளங்கீரன், முருகையன், சிவத்தம்பி,' கைலாசபதி, 6 யிருந்தேன். மாநாட்டின் பணிகளில் ஈடுபட்டு உழைத்தேன் மற்றும் கொழும்புக்கிளைகளின் செயலாளராகவும் இயங்கினேன்.
- சங்கத்தின் மாதாந்தக்கருத்தரங்கு, சங்கத்தின் எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகம்.. என்று பலபணிகன ஊழியராகவும் மாதம் 150ரூபா ஊதியத்தில் நியமித்த
ஜீவநதி

T
ட்டில் ஏற்பட்ட பிளவினால் பொன்னுத்துரையுடன் எஃப். தினமும் வெளியேறினார்கள். இளம்பிறை ரஹ்மான்
பக்கத்திற்கு எதிர்வினையாக நற்போக்கு இலக்கிய 5 விரிவாக ஒரு நேர்காணலும் தந்தவர் பொன்னுத்துரை. | 1998 இல் வெளியாகியிருக்கிறது. வில் நற்போக்குவாதிகளுக்கு கூழ் முட்டை வீசப்பட்ட போக்கு இலக்கிய முகாமைகடும் வார்த்தைப் பிரயோகங்
எழுத்தாளர் சங்கத்தில் நீண்டகாலமாக, கனடாவுக்கு Dபணிகள் பல ஆற்றினார். கைலாசபதியை யாழ்ப்பாணம்
யமிக்கும் விடயத்தில் பின்னணியிலிருந்து செயல்பட்டது
யும் பொன்னுத்துரை விட்டுவைக்கவில்லை மடாதிபதி பாடினார். காழும்பில் தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டை ஏற்பாடு பூர் செல்வராசன் மற்றும் புதுவை ரத்தினதுரை உட்பட - நடத்தினார்கள். சக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 12 அம்சத்திட்டத்தை பாக உரையாடியது. அப்பொழுது பிரதமராக இருந்த கையளித்தது. தேசிய இனப்பிரச்சினை இனவிடுதலைப் தத்திட்டத்தை அன்றைய அரசு கிடப்பில் போட்டது. த நான், மல்லிகை ஜீவாவினால் பிரேம்ஜி ஞானசுந்தரன், சாமகாந்தன், தெணியான் ஆகியோருக்கு அறிமுகமாகி -சங்கத்தின் தேசிய சபை உறுப்பினராகவும் நீர்கொழும்பு, அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வரும்வரையும்
வெள்ளிவிழா 'மாநாடு, பாரதி நூற்றாண்டு விழாக்கள், ள சங்கம் முன்னெடுத்தது. என்னை ஒரு முழுநேர து. வீரகேசரியில் இணையும் வரையில் இந்தப்பணியி
இதழ் 59

Page 7
லிருந்தேன். பின்னரும் சங்கத்தின் நிகழ்ச்சிகளில் இ
இறுதியாக 1986 ஆம் ஆண்டு இறுதியில் நடத்திய மாநாட்டிலும் கலந்துகொண்டேன். 1987 கருதியது.
1972 முதல் 1987 வரையில் முற்போக்கு இ கொழும்பில் கெளரவிக்கப்பட்ட ஒன்பது பேருடனும் 6 இலங்கை செல்லும் சந்தர்ப்பங்களில் சந்திக்க முடிந்தவு
சுமார் 11 வருடங்களின் பின்னர் தாயகம் தி இல்லத்தில் எனக்கு வரவேற்பு தேநீர்விருந்துபசாரத்தை சங்கத்தை கட்டிக்காப்பாற்றினார். எதிர்பாராதவிதமாக மறைந்தார்.
சங்கம் செயல் இழந்தது. பிரேம்ஜி மீண்டும் இலா கமாலை செயலாளராக்கினார். ஆனால் சங்கம் அன்று
நீர்வை பொன்னையன் சங்கத்தை இயக்க
மல்லிகையில் மாத்திரம் செலுத்தினார். சங்கத்தின் ஏ போனாலும் அந்த வெற்றிடத்தை ஜீவாவின் மல்லிகை
தற்போது மல்லிகையும் நின்றுவிட்டது.
பிரேம்ஜியும் என்.கே. ரகுநாதனும் கனடாவில். க செ.கணேசலிங்கன் நீண்டகாலமாக சென்னைவாசியாகி முகம்மது சமீமும் கொழும்பில். பேராசிரியர் நுஃமான்
இந்த இலக்கிய நண்பர்களுக்கு கொழும்பில் நடக்கவிருக்கிறது என்ற தகவலை ஊடகங்கள் ஊட தொடர்ச்சியாக இலக்கியம், அரசியல், சமூகம், திரைப் சொன்னேன்.
அவரும் தகவல்களை ஊடகங்களில் பார்த்திரு நன்கு தெரியும்.
அவர் என்னிடம் கேட்ட கேள்வியும் இந்தப்பத்தி
“அதென்ன முற்போக்கு எழுத்தாளர்கள் ப முன்னோடிகள் ஏன் புறக்கணிக்கப்படுகிறார்கள். எழுத்த போக்கு... இந்தப்போக்கு என்று ஏன் பிரித்துப்பார்க்கிற
ஜீவநதி -

12
ணைந்திருந்தேன்.
யாழ்ப்பாணம் நல்லூர் நாவலர் மண்டபத்தில் சங்கம் இல் நான் புறப்பட்டதை சங்கம் ஒரு இழப்பாகவே
லக்கிய வட்டாரத்துடன் பின்னிப்பிணைந்திருந்தமையால் எனக்கு அன்று முதல் உறவும் நட்பும் தொடருகிறது. ர்ளையும் சந்திப்பேன். ரும்பியவேளையில் (1998 இல்) நண்பர் சோமகாந்தன் சங்கம் நடத்தியது. சோமகாந்தன் இறக்கும் வரையில் பிரேம்ஜியும் கனடா புறப்பட்டார். ராஜஸ்ரீகாந்தனும்
பகை வந்து சங்கத்தை புனரமைக்க முயன்று, திக்குவல்லை 1 நின்ற இடத்திலேயே நின்றது. நகரவே இல்லை.
முயன்றதாக அறிகின்றேன். ஜீவா தனது கவனத்தை
=Bா
டாக புதுமை இலக்கியம் தொடர்ந்து வெளியாகாது
நிரப்பியது.
ாவலூர் ராஜதுரை அவுஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டார். விட்டார். டொமினிக் ஜீவாவும் நீர்வை பொன்னையனும் - கண்டியில். ஏ. இக்பால் பேருவளையில். செல்வி திருச்சந்திரன் தலைமையில் கெளரவிப்பு விழா ாக அறிந்துகொண்டதும், அவுஸ்திரேலியாவில் நான் படம் தொடர்பாக உரையாடும் நண்பர் நடேசனிடம்
க்கிறார். கெளரவிக்கப்படுபவர்களில் சிலரை அவருக்கும்
ைெய எழுதுமாறு தூண்டியது எனவும் சொல்லமுடியும். மாத்திரம் கெளரவிக்கப்படுகிறார்கள், ஏனைய மூத்த தாளர்களை முற்போக்கு, பிற்போக்கு, நற்போக்கு, அந்தப் மார்கள்? பிரதேசவாதம் போன்று இதுவும் ஒரு வகையில்
D5)
இதழ் 59

Page 8
புறக்கணிப்பு வாதமாகிவிடுமே... ஆக்க இலக்கியம் மற்றும் விமர்சன இலக்கியத்தில் தேர்ந்த ரஸனைகளை உருவாக்கிய ஆளுமைகள் பலர் இருக்கிறார்கள். தேசிய, சர்வதேசப்பார்வைகளை பதிவு செய்தவர்கள் இலங்கையில் இருக்கிறார்களே..? ஏன் அவர்களை யெல்லாம் விட்டுவிட்டார்கள்?”
நடேசனுக்கு நீண்ட விளக்கம் சொல்ல நேர்ந்தது. ஆனால் இன்னும் முடியவில்லை.
- இலங்கையில் வடபுலத்தில் புரையோடிப் போயுள்ள சாதிப்பிரச்சினை, பொருளாதார ரீதியில் நலிவுற்ற மக்கள், ஏற்றதாழ்வுகள், சுரண்டல், பார் பட்சம், புறக்கணிப்பு முதலானவற்றை கருப்பொருளாகக் கொண்டு எழுதப்பட்ட படைப்புகள், பிரதேச மொழி
வழக்குகளை அறிமுகப்படுத்திய நாவல், சிறுகதைகள், கவிதைகள் என்பன விமர்சனத்திற்குள்ளான தருணத் தில் எதனை மக்கள் ஏற்கவேண்டும் எதனை நிரா கரிக்க வேண்டும் என்ற கருத்தியல் தவிர்க்கமுடியாமல் தோன்றிவிட்டது. இலங்கையில் முற்போக்கு இலக்கி யத்தின் தோற்றம் வளர்ச்சிதொடர்பாக பல நூல்கள் வெளியாகியுள்ளன. அவற்றையெல்லாம் படித்தால் உங்களது கேள்விக்கும் சந்தேகங்களுக்கும் விளக்கம் கிடைக்கும், என்று சுருக்கமாகச்சொல்லி விட்டு இந்தப் பத்தியை எழுதத் தொடங்கினேன்.
ஒரு திருமண நிகழ்வுக்கோ அல்லது பொது நிகழ்வுக்கோ வரும் அனைவருமே கோபதாபமற்றவர் கள் என்றோ, முரண்பாடுகள் இல்லாதவர்கள் என்றோ நாம் கருதமுடியாது என்பது எளிய உதாரணம்.
- கெளரவிக்கப்பட்ட ஒன்பதுபேருமே மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள்தான். ஏன் சிலர் ஒருவரோடு ஒருவர் முகம்கொடுத்தும் பேசுவதில்லை. டொமினிக் ஜீவாவும் நீர்வைபொன்னையனும் எப் பொழுது இறுதியாக சந்தித்துப்பேசிக்கொண்டார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
சென்னை வாசியாகியுள்ள கணேசலிங்கனும் டொமினிக்ஜீவாவும் 1970களில் சுமுகமான நட்புற வுடன் இருக்கவில்லை. ஆனால் பின்னாட்களிலும் தற்பொழுதும் நிலைமை மாறிவிட்டது. ஜீவாவினால் தொகுக்கப்பட்ட நூல்கள் கணேசலிங்கனின் சென்னை
குமரன் பதிப்பகத்தினால்தான் வெளியானது.
நான் 2001 இல் எழுதிய 'மல்லிகை ஜீவா நினைவுகள் நூலையும்கணேசலிங்கன்தான் அச்சிட்டுத் தந்தார். அத்துடன் மல்லிகைப்பந்தல் வெளியீடாக வந்த எனது 'பாட்டி சொன்ன கதைகள்' நூலையும் அவரே அச்சிட்டுத்தந்தார். காலம் காயங்களை மாற்றும் என்பதற்கு இந்நிகழ்வுகள் சிறு உதாரணம்.
எழுத்தாளர்கள் மத்தியில் செ.கணேசலிங்கன் முற்றிலும் வித்தியாசமான இயல்புகளைக்கொண்டவர். அவருக்கு 60 வயது பிறந்ததும் மணிவிழாவுக்கு, ஏற்பாடுகள் நடந்தன. பின்னர் 75 வயதானவுடன் பவள ஜீவநதி -

விழா நடத்துவதற்கும் அதனை முன்னிட்டு ஒரு மலர் வெளியிடவும் தமிழகத்தில் சில இலக்கியவாதிகள் முயன்றனர். ஆனால், கணேசலிங்கன், "ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் தானே..." எனச் சொல்லி தமக்கு எந்தவொரு விழாவும் வேண்டாம் என்றார். அவரும் நுஃமானைப் போன்று பாராட்டு விழாக்கள், விருதுகளை விரும்புவதில்லை. இலங்கை எழுத்தாளர்களிலேயே மிகவும் அதிகமான நாவல் களை எழுதியவரும் கணேசலிங்கன் தான்.
அவர் இலங்கை வந்த பொழுது மல்லிகை ஜீவாவின் வேண்டுகோளை தட்டிக்கழிக்க இயலாமல் ஒரு ஒன்றுகூடலுக்கு மாத்திரம் ஒப்புக்கொண்டார். அவருடைய 75 ஆவது பிறந்தநாள் காலத்தில் ஒரு கட்டுரையை ஞானம் இதழில் எழுதினேன்.
- இயக்குநர் பாலுமகேந்திராவின் இனிய நண்பர். ஆனால் பாலுமகேந்திரா இவரை தனது மூத்த சகோதரன் என்றே அழைப்பார். பாலுமகேந்திரா வின் 'கோகிலா' திரைப்படத்தின் தயாரிப்பு நிருவாகி யாகவும் கணேசலிங்கன் செயல் பட்டிருக்கிறார்.
- பிரேம்ஜி முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தின் ஊடாக எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்தை தோற்றுவித்தபோதும் கூட தனது ஒரு நூலையாவது இந்த அமைப்பின் ஊடாக வெளியிடவே இல்லை. இதனை எழுதிக்கொண்டிருக்கும் பொழுது லெனின் மதிவானம் பிரேம்ஜி பற்றி எழுதிய பதிவு கிடைத்தது. அதில் பிரேம்ஜியின் அமைதியும் ஆளுமையும் அழ காக பதிவாகியுள்ளது. பிரேம்ஜி தனக்காக அல்லாமல் பிறருக்காகவே இயங்கியவர். முற்போக்கு எழுத் தாளர் சங்கத்தின் அச்சாணியாகவே விளங்கியவர்.
மற்றவர்களின் நூல்களை வெளியிடுவதில் ஆர்வம் கொண்டிருந்த பிரேம்ஜி தனது நூலை வெளியிடுவதில் நீண்ட காலமாக தாமதித்தார். எனினும் நீண்ட காலத்திற்குப்பின்னர், பிரேம்ஜியின் கட்டுரை கள் தொகுக்கப்பட்டு வெளியானது. அதனை கணினியில் பதிந்தவர் மற்றுமொரு முற்போக்கு எழுத்தாளரான தெணியானின் தம்பி கனடாவில்
வதியும் நண்பர் நவம்.
'பிரேம்ஜி இலங்கையில் வாழ்ந்த காலப் பகுதியில் சங்கத்தின் சார்பாக பல அமைச்சர்களை யும் நேரில் சந்தித்து தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாக தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். அத்துடன் தமிழ்த்தலைவர்களையும் அவர் சந்திக்கத்தவறவில்லை. ஆனால், அதனால் பயன் ஏதும் கிட்டாமல் அவர் சோர்வுற்ற தருணங்களும் உண்டு. யாழ்ப்பாணத்தில் 1986 இல் விடுதலைப் புலிகளின் தளபதி கிட்டுவையும் சந்தித்துபேசுவதற்கு விரும்பினார். ஆனால் கிட்டு பேச்சுவார்த்தைக்கு வரவில்லை.
- பேச்சுவார்த்தைகளில் நிதானம் இழக்காமல் - கருத்துக்களை வலியுறுத்துவார். இலங்கையில்
- இதழ் 59

Page 9
அரசியல்வாதிகளின் இயல்புகளினால் அவர் விரக்தி யுற்ற தருணங்களையும் அருகிருந்து பார்த்திருக் கின்றேன். கனடாவுக்குச்சென்றும் பிரேம்ஜியை சந்தித் தேன். அவ்வப்போது தொலைபேசியிலும் உரை யாடுவேன்.
என்.கே. ரகுநாதன், டானியலின் மச்சான். டானியலின் தங்கையை மணம் முடித்தவர். அவர்களின் குடும்பங்களுக்குள் பிணக்குகள் ஏற்பட்டதனால் பேச்சு வார்த்தைகளை முறித்துக் கொண்டவர்கள். தனிப்பட்ட குடும்பப் பிரச்சினைகள் குடும்பத்துடன் நின்றிருக்க வேண்டும். அதனை இலக்கிய உலகத்திற்கும் பறை சாற்றியது தவறு.
| டானியலைப்பற்றி அங்கதக்கவிதை எழுதும் அளவிற்கு தன்னைத்தாழ்த்திக்கொண்ட ரகுநாதன், ஒரு காலத்தில் எழுதிய 'நிலவிலேபேசுவோம்' என்ற சிறுகதை இன்றளவும் பேசப்படுகிறது. அந்தக்கதை கைலாசபதியை வைத்துத்தான் எழுதப்பட்டதாக நம்பி யவர் பிரபல இலக்கிய விமர்சகர் வெங்கட்சாமிநாதன். ஆனால், அதில் கிஞ்சித்தும் உண்மை இல்லை என்று ஒரு சந்தர்ப்பத்தில் ரகுநாதனே வாக்குமூலம் தந்தார்.
கைலாசபதியை தாக்குவதற்கு அந்தக் கதையை யும் வெங்கட்சாமிநாதன் ஒரு ஆயுதமாக பிரயோகித் தார். எதிரிக்கு எதிரி நண்பன் என்பது போன்று, பொன்னுத் துரையும் வெங்கட்சாமிநாதன் பக்கம் நெருங்கினார்.
செ.கணேசலிங்கனின் 'செவ்வானம்' நாவ. லுக்கு நீண்ட முன்னுரை எழுதியவர் கைலாசபதி. பின்னர் அதனை விரிவாக்கி தமிழ்நாவல் இலக்கியம் என்ற விமர்சன நூலை எழுதினார் கைலாசபதி. அதற்கு 'நடை' இதழில் எதிர்வினையாற்றினார் வெங்கட்சாமி நாதன். அதன் தலைப்பு 'மாக்சீய கல்லறையிலிருந்து ஒரு குரல்.'
'நடை' இதழ் இலங்கையில் தேர்ந்த இலக்கிய வாசகர்களுக்கு பரவலாக கிடைக்கவில்லை. ஆனால் பூரணி குழுவினருக்கு கிடைத்தது.பூரணியின் ஆசிரியர் குழுவிலிருந்த என்.கே. மகாலிங்கம், மு.தளைய சிங்கத்தின் சிந்தனைகளினால் ஆகர்ஷிக்கப்பட்டவர். தளையசிங்கம் மாக்சீய சிந்தனைகளுக்கு எதிர்வினை யாற்றியவர். அன்றைய கால கட்டத்தின் ( 1972 இல்) தேவை கருதி 'பூரணி' இதழ் வெங்கட்சாமிநாதனின் கட்டுரையை மறுபிரசுரம் செய்தது.
கைலாசபதியின் மாணாக்கரும் மாக்சீய விமர்சகருமான நுஃமான் அதனைப் பார்த்துவிட்டு சும்மா இருப்பாரா? உடனே வெங்கட்சாமிநாதனின் கருத்துக்களுக்கு எதிர்வினையாற்றி ஒரு தொடரை மல்லிகையில் எழுதினார். அதில் சில பந்திகளை ஜீவா நீக்கிவிட்டதாக நுஃமான் என்னிடமும் இளங் கீரனிடமும் கவிஞர் சண்முகம் சிவலிங்கத்திடமும் குறைப்பட்டார்.
அந்தத்தொடர் முடிவுற்றதும் மு. தளைய சிங்கத்தின் தம்பி மு. பொன்னம்பலம் மல்லிகையில்
ஜீவநதி

அதற்கு எதிர்வினையாற்றினார். ஆனால் இன்று வரை யில் அதற்கு எந்தவொரு முற்போக்குவாதியும் பதில் கொடுக்கவில்லை. ஏன் மு.பொன்னம்பலத் தின் கட்டுரைக்கு மல்லிகை களம் கொடுத்தது என்று ஜீவாவை கடிந்துகொண்ட முற்போக்காளர்களைத் தான் நான் பார்த்தேன். அதனால் ஜீவாவுக்கும் மு.பொ. வுக்கும் இடையே நிழல் யுத்தம்தான் தொடர்ந்தது.
இந்தப் பின்னணிகளுடன் தான் நண்பர் காவலூர் ராஜதுரையைப் பார்க்கின்றேன். சுருக்க மாகச் சொன்னால் எந்தவம்பு தும்புக்கும் போகாத ஒரு அப்பாவி மனிதர். இவர் எவரையும் பகைத்ததும் இல்லை. எவரும் இவரை பகைத்ததும் இல்லை. கொழும்பில் கொள்ளுப்பிட்டியில் ஹட்சன் வீதியில் இருந்த இவரது வீட்டின் முகவரிதான் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முகவரியாக பயன்பட்டது. பின்னர் அந்த முகவரி சோமகாந்தனின் அண்டர்ஸன் தொடர்மாடிக்குடியிருப்புக்கு மாறியது. முற்போக்கு எழுத்தாளர்களின் வாழ்விடங்களும் சிந்தனைகளும் இடம்பெயர்ந்தது போன்று சங்கத்தின் முகவரியும் காலத்துக்குக்காலம் இடம்பெயர்ந்தது.
காவலூர் ராஜதுரை மிகவும் அமைதி யானவர். ஆர்ப்பாட்டமற்றவர். அண்மைக்காலமாக சுகவீனமுற்று அவுஸ்திரேலியா சிட்னியில் ஓய்வில் இருக்கிறார். அவரை எமது அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் எழுத்தாளர் விழாவில் பாராட்டி கௌரவித்திருக்கிறது. அவரது பொன்மணி திரைப்படவேலைகள் யாழ்ப்பாணத்தில் நடந்து கொண்டிருந்த தருணத்தில் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கூட்டுறவுப்பதிப்பகம் அவரது 'ஒருவகை உறவு' கதைத்தொகுப்பை வெளியிட்டது.
வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த குறிப்பிட்ட நூலின் வெளியீட்டு விழாவிலும் கலந்து கொள்ள முடியாதளவுக்கு காவலூர், பொன்மணி படத்தயாரிப் பில் பிஸியாக இருந்தார். வசூலில் இந்தப்படம் தோல்வி என்றாலும் இலங்கையில் வெளியான தமிழ்ப்படங்களில் குறிப்பிடத்தகுந்தது.
தர்மசேன பத்திராஜா இயக்கிய பொன்மணி படத்தில் சர்வமங்களம், கைலாசபதி, மெளனகுரு, சித்திரலேகா மௌனகுரு, டொக்டர் நந்தி ஆகி யோரும் நடித்தனர்.
முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் முரண்பட்டு நின்ற டானியல், சில்லையூர் செல்வ ராசன் ஆகியோருடன் ஆரோக்கியமான நட்பை அவர்கள் மறையும் வரையில் தொடர்ந்தவர்தான் காவலூர்ராஜதுரை. டானியல் தமிழகம் சென்று தஞ்சா வூரில் மறைவதற்கு முன்னர் காவலூர் வீட்டிலிருந்து தான் புறப்பட்டார். அங்குதான் ஒரு மாலை நேரத்தில் நான் டானியலுக்கு விடைகொடுத்தேன். அவர் எழுத் தாளர் இளங்கோவனுடன் தமிழகம் புறப்பட்டார்.
07
-இதழ் 59

Page 10
அதுவே இறுதிச்சந்திப்பு.
சில நாட்களில் டானியலின் மறைவுச் செய்தியை எனக்குச் சொன்னவர் சில்லையூர் செல்வ ராசன். கருத்தியல் ரீதியாக முரண்பட்டிருந்தாலும் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கொழும்புக் கிளை டானியலுக்கு இரங்கல் கூட்டம் நடத்தியது.
- அவுஸ்திரேலியாவில் நான் அங்கம்வகித்த அவுஸ்திரேலியா தமிழர் ஒன்றியம் சார்பில் நடத்தப்பட்ட பாரதிவிழாவுக்கு பொன்னுத்துரையை சிட்னியிலிருந்து வந்து பேசுவதற்கு அழைத்து, விழாவில் நடத்திய நாவன்மைப்போட்டியில் ஒரு பிரிவில் போட்டியிட்டு வெற்றியீட்டிய மாணவனுக்கு எமது முற்போக்கு எழுத் தாளர் சங்கத்தின் சார்பாக வழங்கப்பட்ட தங்கப்பதக் கத்தை பொன்னுத்துரையிடம் கொடுத்தே அணிவித்தேன்.
பின்னர் அவர் மனைவி சகிதம் கொழும்பு சென்ற போது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினைச் சேர்ந்த பிரேம்ஜி, ராஜஸ்ரீகாந்தன்,அந்தனி ஜீவா உட்பட சிலர் இன்முகத்துடன் வரவேற்க ஒரு பாலமாக
இயங்கினேன்.
பகை மறந்த செயற்பாடுகள் என்று ராஜ ஸ்ரீகாந்தன் இந்தச்சம்பவங்களை குறிப்பிடுவார்.
முகம்மது சமீம் கம்பளை சாகிராக்கல்லூரி அதிபராகவும் பின்னர் மட்டக்களப்பில் கல்விப் பணிப் பாளராகவும் அதேசமயம் இலக்கியத்திறனாய்வாளராக வும் இயங்கியவர். முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய ஆறுமுகநாவலரின் நூற்றாண்டு விழாக்களில் கருத்தாழமிக்க உரைகள் நிகழ்த்தியவர். கொழும்பில் ஒரு பதிப்பகத்தை நிறுவி பல நூல்களை வெளி யிட்டவர்.
நீண்ட நாட்களாக சுகவீனமுற்றுள்ள சமீம் அவர்களை எமது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011 இல் நடைபெற்றவேளையில் நண்பர் ஸ்ரீதரசிங் குடன் சென்று பார்த்தேன். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் வளர்ச்சியில் இவருக்கும் கணிசமான பங்குள்ளது. நீர்வை பொன்னையனையும் அவரில்லம் சென்றுபார்த்து மாநாட்டு அழைப்பிதழைக் கொடுத்தேன். தான் அதற்கு வரமாட்டேன் என்று சொன்னார். இத்தனைக்கும் 2010 ஜனவரியில் நடந்த மாநாடு தொடர்பான ஆலோசனைக்கூட்டத்திற்கு வந்தவர்தான் நீர்வைபொன்னையன். மாநாட்டின் அமைப்புக்குழுவின் தலைவராக இயங்கிய ஞானம் ஆசிரியர் ஞானசேகரன், நீர்வைபொன்னையன் சார்ந்த முற்போக்கு முகாமில் இல்லை.
- ஆனால், ஞானசேகரன் முற்போக்கு முகாமைச் சேர்ந்த பேராசிரியர் கா.சிவத்தம்பியின் நீண்ட நேர்காணலை ஞானத்தில் தொடராக வெளியிட்டதுடன் அதனை நுாலாகவும் பதிப்பித்து, சிவத்தம்பியை கௌரவித்து விழாவும் எடுத்தவர். சிவத்தம்பியின் அந்திம காலங்களில் அவரை அடிக்கடி சந்தித்தவர் ஜீவநதி -
08

தான் ஞானசேகரன்.
முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தூண் களில் ஒருவராக விளங் கிய சிவத்தம்பியுடன் அவருக்கு மிகவும் நெருக்கமான முற்போக்கு எழுத் தாளர் தெணியான் அந்திமகாலம்வரையில் தொலை பேசித் தொடர்பிலும் இருந்தார். அவரைப் பற்றி நீண்ட தொடரையும் தினக்குரலில் எழுதினார். குமரன் கணேசலிங்கன் அதனை நூலாக வெளியிட்டார். சிவத் தம்பி இலங்கை முற்போக்கு இலக்கியவாதி களினால் ஓரம்கட்டப்பட்டதற்கு சிவத்தம்பியின் சந்தர்ப்பவாதமும் ஒரு காரணம் எனக்கூறப்பட்ட வேளையில் அவரை தம்வசம் நெருங்க வைத்துக் கொள்வதில் ஞானசேகரன்
ஓரளவு வெற்றியும் கண்டார்.
நீர்வைபொன்னையன் இறுதியாக எழுதிய 'நினைவலைகள்' என்ற நூல் முற்போக்கு வட்டாரத் தில் அதிர்வுச்சிற்றலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. டானியல், ஜீவா, மற்றும் சண்முகதாசன் குறித்து நீர்வை வெளியிட்டுள்ள கருத்துக்கள் ஏற்படுத்திய சல சலப்பு அவுஸ்திரேலியாவிலிருந்த எனக்கும் கேட்டது.
இந்த ஆண்டு முற்பகுதியில் நீர்வை பொன்னையன் சிட்னிக்கு மகளிடம் வந்தபொழுது தொலைபேசியில்தான்உரையாடமுடிந்தது. பொன்னையன் ஒரு மூத்த எழுத்தாளர். எமது மாநாட்டில் பங்கேற்ற இளம்தலைமுறையினரின் கருத்துக்களை அறிவதற் காவது வந்திருக்கலாம் என்ற வருத்தம் எனக்குண்டு.
பேராசிரியர் நுஃமான் கொழும்பில் அல்ஹிதாயாவில் ஆசிரியராக பணியாற்றிய 1973 காலம் முதல் அறிவேன். கொள்ளுப்பிட்டியில் அவர் ஒரு அறையில் தங்கியிருந்த காலத்தில் அவரை சந்திப்பேன். எழில்வேந்தன், சண்முகம் சிவலிங்கம் மு. நித்தியானந்தன் ஆகியோரும் அவரது அறையில் சந்தித்து உரையாடுவோம். நான் மிகவும் மதிக்கும் நல்ல நண்பர். அவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்திற்கு விரிவுரையாளராக சென்றபின்பும் மட்டுமல்ல இன்றுவரையில் அவருடனான நட்பு எந்தவிக்கினமும் இல்லாமல் தொடருகிறது. காரணம் அவரது இயல்புகள்தான்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நாவல் நூற்றாண்டு கருத்தரங்கை கைலாசபதி இரண்டு நாட்கள் ஒழுங்குசெய்திருந்தார். தமிழகத் திலிருந்து அசோகமித்திரன் அழைக்கப்பட்டார். அவர் திரும்பிச்செல்லும்வரையில் அவரை நுஃமானே பார்த்துக் கொண்டார். குரும்பசிட்டியில் நோய் உபாதைகளுடன் வாழ்ந்த இரசிகமணி கனகசெந்தி நாதனை பார்க்க அசோகமித்திரனை அழைத்துச் சென்றார். இத்தனைக்கும் கனக செந்தி நாதன் , - முற்போக்கு முகாமில் இல்லை.
அண்மையில் நுஃமான் தமக்கு அளிக்கப் பட்ட விளக்கு விருதின் ஏற்புரையை, எமது இலக்கிய
இதழ் 59

Page 11
ஜாம்பவான்கள் அவசியம் படிக்கவேண்டும். 'காலச் சுவடு' இதழில் மட்டுமன்றி 'தேனீ' உட்பட பல இணையத் தளங்களிலும் வெளியானது. நானும் அதனை பிரதி எடுத்து சில இணைய இதழ்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பினேன்.
- கொழும்பு கம்பன் விழாவில் மங்கள விளக் கேற்ற வருபவர் கூட மேடையில் ஒரு வார்த்தையும் பேசாமல் பொன்னாடை கெளரவம் பெற்றுச் செல்லும் அருங்காட்சியை பார்த்திருக்கிறேன். எமது எழுத் தாளர் கள் ஒரு சாதராண நூல் வெளியீட்டிலும் பொன்னாடை, பூமாலை சகிதம் மாப்பிள்ளை கோலத் தில் நிற்கிறார்கள். அவற்றை எதிர் பார்ப்பவர்களும் அதற்காக நேரம் ஒதுக்குபவர் களும் அவசியம் பேராசிரியர் நுஃமானின் 'விளக்கு விருது' ஏற்புரையை ஒருதடவை படிக்கவேண்டும்.
விடுதலைப்புலிகளினால் யாழ்ப்பாணத்தி லிருந்து முஸ்லிம்கள் 48 மணிநேர அவகாசத்தில் வெளியேற்றப்பட்டபோது நுஃமானும் தமது குடும்பத் துடன் வெளியேறினார்.
'நுஃமான் மாமா இல்லாத தமிழ் ஈழத்தை ஏற்க முடியாது' என்று சொன்னவர்தான் கனடாவி லிருக்கும் நண்பர் சேரன். 'புலிகள் தமிழ்மக்களை நந்திக்கடலில் விட்டுவிட்டு போய்விட்டார்கள்' என்று காலச்சுவடு இதழில் நுஃமான் நேர்காணல் வழங்கி யதையும் சில உள்ளுர், புலம்பெயர் 'புலி' ஆதரவு எழுத்தாளர்களினால் ஜீரணிக்க முடியவில்லை.
கவிஞர் ஏ.இக்பால், துணிச்சல் மிக்க படைப் பாளி என்று அழைக்கப்படுபவர். தமது 16 வயதிலேயே இலக்கியப்பிரவேசம் செய்தவர். ஆசிரியராகவும் ஆசிரிய பயிற்சிவிரிவுரையாளராகவும் பணியி லிருந்தவர். தம்மிடம் கற்ற பல மாணவர்களுக்கு இலக்கிய பிரக்ஞையை ஊட்டியவர். தாம் பணி யாற்றிய பாடசாலைகளில் கையெழுத்து சஞ்சிகை களை அறிமுகப்படுத்தியவர். இஸ்லாமிய இலக்கி யங்கள் தொடர்பாக திறனாய்வு செய்தவர். பல நூல் களின் ஆசிரியர். திக்குவல்லைகமாலும் இக்பாலின் மாணவர்தான்.
ஒருசமயம் ஒரு இஸ்லாமிய இலக்கிய நூலை மல்லிகை ஜீவாவிடம் கொடுத்து மல்லிகை யில் அந்த நூலை மதிப்பீடு செய்யுமாறு கேட்டுள்ளார். அதற்கு ஜீவா, “இந்த நூலைப்பற்றி எழுதுவதற்கு ஒரு இஸ்லாமியரைத்தான் தேடவேண்டும்” என்று தனக்கே உரித்தான பாணியில் சொல்லிவிட்டார். அதனால் கோப் மடைந்த இக்பால் பலகாலம் மல்லிகையில் எழுத வில்லை. எனினும் திக்குவல்லை கமால் இக்பாலுக்கும் ஜீவாவுக்கும். இடையே பாலமாக நின்று உறவை தொடரச் செய்தார். 2003 இல் இக்பாலின் - படத்துடன் மல்லிகை வெளியானது. கமால்தான் அவரைப்பற்றி எழுதினார். மல்லிகை பல முஸ்லிம் எழுத்தாளர்
ஜீவநதி

களை அறிமுகப்படுத்தி களம் வழங்கியிருக்கிறது. அதனைப் பார்த்துவிட்டு, “மல்லிகை என்ன முஸ்லிம் சஞ்சிகையா...?” என்று ஜீவாவிடம் நேரடியாகக் கேட்டவர்களுக்கு ஜீவா புன்னகையால் பதில் தந்தார்.
பொன்னுத்துரை, காலம்பூராகவும் சிவத் தம்பி, கைலாசபதி, டானியல், ஜீவா உட்பட பல முற் போக்கு எழுத்தாளர்களை வசைபாடியபோதிலும் அவர்கள் அதற்காக பொன்னுத்துரைக்கு பதிலே கொடுப்பதில்லை. மௌனமாகவே இருந்து விடுவார்கள்.
ஏன்... என்று கேட்டால்...
“மலக்கும்பத்தை மிதித்தாலோ... அடித் தாலோ' அதனால் யாருக்கு நட்டம்” என்று சொல்லி விட்டு ஒதுங்கிவிடுவார்கள்.
ஆனால், இக்பால் அப்படியல்ல. பொன்னுத் துரை தொடர்பாக எழுதியவர். பேசியவர். 1970 களில் அறிஞர் அஸீஸ் (கொழும்பு சாகிராக்கல்லூரி அதிப ராகவும் பின்னர் செனட்டராகவும் பதவி வகித்தவர். இவரது மாணாக்கர்கள்தான் சிவத்தம்பி, தினகரன் முன்னாள் ஆசிரியர் சிவகுருநாதன், எச்.எம்.பி. மொஹிதீன்) மறைந்தபின்னர் அவரது நினைவு களை தொடராக தினகரன் வாரமஞ்சரியில் எழுதி பகிர்ந்து கொண்டார் எச்.எம்.பி. மொஹிதீன். பின்னர் அதனை நூலாக வெளியிட்டார்.
அந்த நூலுக்கு எதிர்வினையாற்ற மூன்று பேர் இணைந்தார்கள். அவர்கள் எம்.எஸ்.எம் இக்பால், எம்.எச்.எம்.ஷம்ஸ், ஏ.இக்பால், சிவத்தம்பியின் முன்னு ரையுடன் அந்த நூல் வெளியானது. கமால்தீன், பொன்னுத்துரை உட்படசில முற்போக்கு எழுத்தாளர் களும் அந்த நூலில் கடுமையாக விமர்சிக்கப் பட்டிருந்தனர்.
த வழக்கம்போலவே முற்போக்காளர்கள் அதற்கும் பதில் அளிக்கவில்லை.
ஆனால், அதற்காக பொன்னுத்துரை சும்மா இருப்பாரா?
இரவோடு இரவாக 'இஸ்லாமும் தமிழும் என்ற நூலை எழுதி சில வர்த்தகப்புள்ளிகளின் ஆதரவுடன் வெளியிட்டார்.
இரண்டு இக்பாலும் ஷம்ஸும் இணைந் திருந்தமையால் அந்தக்கூட்டணியை இக்குவால்ஷ் என்று வர்ணித்து வசைபொழிந்து அந்த நூலை எழுதினார் பொன்னுத்துரை.
இவ்வாறு பல்வேறுபட்ட இலக்கிய சச்சரவு களுடன்தான் இலங்கையில் முற்போக்கு இலக்கிய முகாம் இணைந்தும் பிளவுபட்டும் வளர்ந்திருக்கிறது.
மல்லிகை இதழ்களில் நீர்வை பொன்னை யன் தவிர்ந்த ஏனைய முற்போக்கு எழுத்தாளர்கள் அனைவரையும் பற்றிய அட்டைப்பட கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன.
09
இதழ் 59

Page 12
குறிப்பிட்ட கட்டுரைகள் பின்னர் அட்டைப் பட ஓவியங்கள், மல்லிகை முகங்கள், முன்முகங்கள், அட்டைப் படங்கள் முதலான பெயர்களில் வெளியாகி யுள்ளன. இலங்கையில் முற்போக்கு இலக்கிய முகாமுக் கும் சிங்கள - தமிழ் முஸ்லிம் எழுத்தாளர் களுக்கும் மல்லிகை அளித்த விரிவான களம் விதந்து போற்றுத லுக்குரியது. ஏராளமான சிங்களச் சிறுகதைகளை தமிழ் வாசகர்களுக்கு மல்லிகை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
- இன்று பரவலாகப்பேசப்படும் இணக்க அரசிய லுக்கு எப்பொழுதோ கால்கோளிட்டது மல்லிகை. தேசிய ஒருமைப்பாட்டுக்கும் தொடர்ச்சியாக குரல் கொடுத்துவந்தது. ஆனால் பேரினவாதிகளும், குறுகிய தமிழ்த்தேசியம் பேசியவர்களும் மல்லிகையினதும் ஜீவாவினதும்சேவையை கவனத்தில் கொள்ளவே யில்லை என்பதுதான் காலத்தின் சோகம்.
சிங்கள இலக்கிய மேதை மார்டின் விக்கிரம சிங்காவின் அட்டைப்படத்துடன் மல்லிகை வெளியானதை பொறுக்க முடியாமல் ஒரு தீவிரத்தமிழ்க்கொழுந்து, யாழ்ப்பாணம் மத்தியகல்லூரிக்கு முன்பாக ஜீவாவை வழிமறித்து குறிப்பிட்ட மல்லிகை இதழை வாங்கி கிழித்து விட்டு ஜீவாவின் முகத்திலே வீசிவிட்டுச் சென்றார்.தற்பொழுது அந்தத் தமிழ்க்கொழுந்து ஐரோப்பிய நாடொன்றில் வாழ்கிறார். ஆனால், ஜீவா யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் தெருத்தெருவாக அலைந்து தமிழ் இலக்கியத்தை இலங் கையில் வளர்த்தார். இணக்க அரசியல் பேசப்படும் இன்றைய இலங்கையில், இலக்கியத்தின் ஊடாக இணக்க அரசியல் பேசிய மல்லிகை இதழ் நின்றுவிட்டது என்பதும் காலத்தின் சோகம்தான்.
எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயற்குழுக்கூட்டங்கள் கொழும்பில் பெரும்பாலும் சுந்தா சுந்தரலிங்கம், எம்.ஏ. கிஸார், ரங்கநாதன், சோம காந்தன், காவலூர் ராஜதுரை, மாணிக்கவாசகர் ஆகி
நூ
ம.லிவிரைவர்
நினைவு நல்லது வேண்டும்
நூல் - நினை ஆசிரியர் - ப.
வெளியீடு - ஜீ
விலை - 250/
ஜீவநதி
10

யோரின் இல்லங்களில்தான் நடைபெறும். அந்த நாட் கள் இனிமையான்  ைவ.  ெந ஞ் சில் பசுமையானவை. இவர்களில்லாமல் நாம்
இயங்கவில்லை.
செல்வி திருச்சந்திரன் தலைமையில் இலங்கை முற்போக்கு கலைமன்றம் கொழும்பில் நடத்திய மூத்த முற்போக்கு இலக்கியவாதிகளுக்கான கெளரவிப்பு நிகழ்வு, பயனுள்ள விளைவுகளை ஏற் படுத்தினால் இலங்கையில் நீடித்த போரினால் ஏற்பட்ட இலக்கிய தேக்கத்தை களைவதற்கும் உந்து சக்தியாக அமை யும் என்று கருதுகின்றேன். அத்துடன் இளம் தலைமுறை எழுத்தாளர்கள், தாம் கடக்க விருக்கும் பாதைகுறித்தும், கடந்து சென்றவர்களைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கும் உதவும்.
பிரேம்ஜி, ரகுநாதன், கணேசலிங்கன், காவ லூர் ராஜதுரை, நுஃமான், டொமினிக் ஜீவா ஆகியோர் தவிர்ந்து ஏனைய மூவரும் - ஏ.இக்பால், முகம்மது சமீம், நீர்வை பொன்னையன் ஆகியோர் மாத்திரம் இந்த நிகழ்விற்கு வருகைதந்தனர் என்றும் விழாவில் கணிசமானோர் கலந்துகொண்டதாகவும் அறிந்து கொண்டேன்.
இவர்கள் குறித்த உரைகளை சமர்ப் பித்தவர்கள் பேராசிரியர்கள் தில்லைநாதன், சபா. ஜெயராசா, செ. யோகராசா, கலாநிதி ரவீந்திரன், டொக்டர் எம்.கே.முருகானந்தம், திக்குவல்லை கமால், மேமன்கவி. தேவகெளரி, லெனின்மதிவானம் ஆகி யோர். மிகவும் பொருத்தமானவர்களையே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பேசுவதற்கு அழைத்திருக்கிறார்கள்.
தொலைவில்இருந்தாலும் இந்தப் பேச்சாளர் களையும் முற்போக்கு இலக்கிய முன்னோடிகளை யும், எம்மிடம் நினைவுகளைத்தந்துவிட்டு மறைந்த வர்களையும் திரும்பிப்பார்க்கின்றேன். நினைத்துப் பார்க்கின்றேன்.
ல் அறிமுகம்
-வு நல்லது வேண்டும் -விஷ்ணுவர்த்தினி வேந்தி (28 ஆவது வெளியீடு)
"-
இதழ் 59

Page 13
எஸ்.முத்துமீரான்
பொம்பளைக்கு இட்டும இப்படி இருக்கப்புடா
விடாமல் பெய்யும் மழையால் ஊரெல்லாம் வெள்ளக்காடாகிக் கிடக்கிறது. வெளியில் வரமுடியாமல் மக்களெல்லாம் வீடுகளிலேயே வதங்கிக் கிடக்கின்றனர். சிலர் வீடுகளில் வெள்ளம் புகுந்து விட்டதால் அகதிகளாகி பாடசாலைகளில் தஞ்சமடைந்து கிடக்கின்றனர். வானம் சதா, கேரிக் கேரி மழையை ஊத்திக் கொண்டே இருக்கிறது. பாவம்! சூரியனைப் பல நாட்களாகக் காணாத மக்கள், குளிரையும் கூதலையும் தாங்க முடியாமல் பசியின் கைப்பொம்மையாகித் தவிக்கின்றனர்.
நேரம் ஏழு மணியைத் தாண்டி விட்டதை, என் வளவுத் தென்னைகளில் கொடுகிக் கிடந்த காகங்கள் விழித்துக் கத்திக் கொண்டிருக்கின்றன. நான் தேநீரைக் குடித்து விட்டு, அமைதியாக விறாந்தையில் குந்திக் கொண்டிருக்கிறேன். என் மனைவி சோகமே உருவாகி, மனவேதனையுடன் வந்து நிற்கிறாள். குளிரின் கொடுமையைத் தாங்க முடியாமல் இரவெல்லாம், அடுப்படியில் கிடந்த எங்கள் வீட்டுப் பூனை எங்கள் பக்கத்தில் வந்து கத்திக் கொண்டிருக்கிறது.
என் பக்கத்தில் நின்று கொண்டிருந்த மனைவி “உம்மா, லாவெல்லாம் அறவ படுக்கெல்ல. நாசமத்துப் போன இருமலால ஒரே படுக்காம இரிமிற் ரே கெடந்தா.. பாவம்! நல்லாச் சவுத்தும் பெயித்தா..லாவு நானும் கண் மூடிப்படுக்கெல்ல. வயசிம் எண்பதாப் போச்சி... அடிக்கடி நானும் எழும்பிப் போய் பாத்தன். எதுக்கும் நல்ல டாக்குத்தர்ர, மருந்துகளக் குடித்தாத் தானே மகன்ட குளிச குடிச்சாத்தானா வருத்தம் தீர்ர?
ஜீவநதி .

என்ன சொன்னாலும் இந்த மனிசி கேக்கமாட்டா... எல்லாத்திலயும் பிடிவாதம் தான்...” என்று தன் தாயின் நோயைப் பற்றியும், பிடிவாதத்தையும் பற்றி கூறி விட்டு பெருமூச்சு விடுகிறாள். பெற்ற தாயின் பிடிவாதமும் நோயும் என் மனைவியைக் கடுமையாகப் பாதித்து விட்டதை, அவளின் வேதனையிலிருந்து புரிந்து கொண்டேன். வாழ்க்கையில் நாட்டு வைத்தியர்களைத் தவிர, வேறு எந்த டாக்டர்களின் மருந்துகளைத் தொட்டும் பார்க்காமல் வாழும் என் மனைவியின் தாய்க்கு, ஒரு கிழமையாக நல்ல வருத்தம். மழையும், குளிரும் நன்றாகப் பாதித்து விட்டது. இதனால் நானும் என் மனைவியும் சேர்ந்து எங்களூர் ஜாபீர் டாக்டரிடம் போய் மருந்து எடுத்து வரச் சற்று கோப மாகக் கூப்பிட்டதினால், எங்கள் வீடே போர்க்களமாகி, எங்களுடன் சண்டை பிடித்துக் கொண்டு, தன் மகனின் வீட்டிற்கு போவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக் கிறா... நாங்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் பிடிவாதமாக சாப்பிடாமல் இருப்பதால், என் மனைவி
யும் மக்களும் சோர்ந்து கிடக்கின்றனர்.
அயர்வடையாச் சிற்றெறும்பு போல், விடியச் சாத்திலேயே எழும்பி சுபஹுத் தொழுகையைத் தொழுது விட்டுப் பின் வீட்டு வேலைகளைச் செய்வா. மருந்து குடிக்கும் விடயத்தில் தாய்க்கும் மகளுக்கும், அடிக்கடி வீட்டில் சிறுசிறு சண்டைகள் வருவது வழக்கம். இச்சண்டைகள் வந்தது போலவே போய் விடும். சிலநேரம் ஓரிரு நாட்களுக்கு தொடர்ந்து இருக்கும். இப்படியான நேரங்களில் என் மனைவி
இதழ் 59

Page 14
யுடனும் என்னுடனும் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் இருப்பா.
இன்று, இரவிலிருந்துதான், என்றுமில்லாத வாறு சற்று கோபமுடன் எங்களுடன் முரண்பட்டுக் கொண்டு, மகனின் வீட்டுக்கு போவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறா. அப்பாவியான என் மனைவியை ஓயாமல் ஏசிக் கொண்டிருக்கிறா. நாங்கள் டாக்டரின் மருந்து குடிக்கச் சொன்னது தான் பெரிய குற்றமாகி விட்டது. காலையிலேயே வழமையாக அவ மருந் தெடுத்துக் குடிக்கும் நாட்டு வைத்தியனிடம் குளிசை வாங்கி வருவதற்கு, என் மகன் போய் விட்டான். அவன் வருவதற்குள் மகனின் வீட்டிற்கு போவதற்கு தயாராகி விட்டா...
எனக்கு மூன்று பிள்ளைகள். இவர்களோடு என் மாமிக்கு உயிர். எப்பொழுதும், என் மனைவி யோடும், பேரப் பிள்ளைகளோடும் அளவிட முடியாத அன்போடும் பாசத்தோடும் இருக்கும் என் மாமிக்கு நாங்கள் ஒரு குற்றமும் செய்யவில்லை. இரவு கடும் குளிரோடு, காய்ச்சல் வேதனைப்பட்டுக் கொண்டிருந்த மாமியை எங்களூர் வைத்தியசாலைக்கு கொண்டு போய், டாக்டரிடம் காட்டி மருந்து எடுத்துக் கொண்டு வந்து குடிக்கச் சொன்னதைத் தவிர, நாங்கள் எதுவுமே செய்யவில்லை. எடுத்து வந்த மருந்தைக் குடியாமல் கொஞ்சம், முரண்டு பண்ணிய நேரம், என் மனைவி கோபமாகப் பேசி விட்டாள். இதனால், எங்கள் வீடே போர் க கள மாகிக் கிடக்கிறது. பாவம்! என் மனைவி சோர்ந்து போய் வேதனையில் வெந்துருகிக் கிடக்கிறாள்.
விடாது பெய்யும் மழை யால் ஊரே வெள்ளக் காடாகிக் கிடக்கும் நிலையில் மாமி பிடி வா த மாகத் தன் மகனின் வீட்டிற்குப் போவதற்கு, உடுப்பு வேக்கோடு நிற்பது, எங்களுக் கெல்லாம் வேதனையாக இருக் கிறது. மாமியின் பிடிவாதத் தினால் சிந்தனை குலைந்த என் மகள் ஹாஸ்னா “லொக்கோ!... ஒக்கென்ன லூசா...? இப்ப ஒனக்கு என்ன செஞ்சதிக்கு, இவ்வளவு இட்டும் காட்டிக்கு நிக்காய்...? படுத்த பாயில மூத்திரம் போன தெரியாமக் கிடந்த ஒன்ன. ஆசிபத்திரிக்கு கொண்டு போய், மருந்தெடுத்து வந்து குடிக்கச் சென்ன ஒரு குத்தமா...? ஒனக்கு அவன் முத்தலிபாட மகன்ட, அவனில செஞ்ச அந்த நாத்தக் குளிசதானா வேணும்...? என்னரிந்தாலும் பொம்புளைக்கு இந்த இட்டும
ஜீவநதி

இரிக்கப் புடா... அல்லாஹ் உனக்குத்தான இந்த இட்டுமையையும் கோவத்தையும் வெச்சி படைச்சா? ஒன்னால இந்த ஊட்டில எத்தன சீவனுகள் பட்டினி யோட கெடக்காக தெரியிமா..? வாகா..! வந்து "சாபிடுகா... எழும்பி வாகா... எனக்கும் செரியாப் பசிக்கிறது. நீ,ஒண்ட மகன்ட ஊட்ட போறெண்டால் போக... அதுக்கு முன்ன, சாப் பிட்டுப் போட்டு போகா... எழும் புகா... வருத் தக் காற நாம், வெறுங்குடலோட இரிக்கப்புடாகா.. வாகா...” என்று கூறி முத்தம்மாவிடம் கெஞ்சுகிறா. என் மனைவி செய்யாத பிழையை எண்ணிக் கண்ணீர் உதிர்க்கிறாள். பூனை கத்திக் கொண்டே இருக்கிறது.
என் மகளின் வேண்டுதலும், கெஞ்சுதலும் தோல்வியைத் தழுவ, என் மாமி மகனின் வீட்டிற்கு போவதற்கு கட்டி வைத்த பேக்கைத் தூக்கியபடி “ஒன்ட உம்மா வாப்பாட ஊட்ட நீங்க தான் இரிங்க... என்ர செல்லுக்கு இந்த ஊட்டில ஒரு மதிப்பிரிக்கா...? என்ர செல்ல இப்ப ஆரு கேக்காக... எல்லாத்திற்கும் எனக்கு ஏசிற பேசிற...! நானென்ன வந்தாள் வரத்தாளா...? கொழுத்த காணிக்காறி... எங்க வாப்பாட பேரக் கேட்டாலே, ஊரு நடுங்கும்... ஒங்கும்மாட சோறு கறி இனி, எனக்குத் தேவல்ல... இஞ்ச நான் ஒரு நாளும் வரமாட்டன். என்ர மையத்தும் இனி என்ர மகன்ட
ஊட்ட இரிந்து தான் போகும். ஒங்கிட சோத்தக் கறிய நீங்க தின்னுங்க..." என்று எல்லோருக் கும் ஏசிக் கொண்டிருக்கிறா... என் வீடு அமைதியின் கைப் பொம்மையாகிக் கிடக்கிறது. எங்கள் வீட்டில் என் மாமியின் மேல் எல்லோருக்கும் பயமும், பாசமும் மரியாதையும் எப் பொழுதும் உண்டு. என் துணைவி தாயின் சொல்லுக்கு என்றும் மரியாதை கொடுத்து நடந்து கொள்வாள். என் பிள்ளைகள் மீது மாமிக்கு நல்ல இரக்கம். அதிலும் என் மகள் ஹாஸ்னாவின் மீது ஒரு தனி விருப்பம். அப் படி இருந்தும் இன்று, என் மகளின்
சொல் லை யும் கேட்காமல் மகனின் வீட்டிற்கு போவதற்கு ஒத்தக்காலில் நிற்பது எங்களுக்கெல்லாம் வியப்பாக இருக்கிறது.
( என் மகளின் பிள் ளைகள் மாமியின் பிடிவாதத்தை கணக்கெடுக்காமல், விளையாடிக் 'கொண்டிருக்கின்றனர். என் பேரப் பிள்ளைகளின் மேல் மாமிக்கு உயிர். இவர்கள் எந்தக் குறும்புகள் செய்தா லும் அதையெல்லாம் கணக்கெடுக்காமல் பொறுத்து, அவர்களோடு அன்பாக இருப்பா... இன்று அவர்கள்
- இதழ் 59

Page 15
மாமியைப் போகவிடாமல் தடுத்தும், கேட்காமல், மகனின் வீட்டிற்குப் போவதற்கு துடிக்கிறா... என் பேரன் ஆசிம், கத்திக் கொண்டிருக்கும் பூனையைத் துரத்துகிறான். பேரனின் கரச்சல் பொறுக்க முடியாமல் பூனை கத்திக் கொண்டு வெளியில் ஓடுகிறது.
அப்பொழுது, எங்களோடு இருக்கும் ஹாய் எளயம்பி, கடக்கரைக்கு போய் வருகிறான். இவரைக் கண்ட நாய் பொட்டு ஊளையிட்டுக் கொண்டு ஓடுகிறது. “கடல் செரியான ஒரம். கடுமையா உக்கலடிக்கிறது. இதால தோணி ஒண்டும் கடலக்க தள்ளல்ல... எல்லாத் தோணிகளையும் கரையில் ஏத்தி வெச்சிரிக்கானு கள்...” என்று சொல்லியபடி உள்ளுக்கு வருகிறான். எளயம்பியிடம் என் மனைவி,
“எங்களால இனி ஒண்டும் செய்ய ஏலா... நீதான் இதப் பாத்து ஒரு மாதிரி சமார் புடிக்கணும். மகன்ட ஊட்ட போப்புறாவாம்...” என்று கூறி விட்டு ஓடிக் கொண்டிருக்கும் என் பேத்தியைப் பிடித்து அதட்டிக் கொண்டிருக்கிறாள். எளயதம்பி தீப்பந்தமேந்தி உருவில் நிற்கும் என் மாமியைப் பார்த்து,
“என்ர தாயே..! ஒன்ட பேய்க்கு மந்திரமோத எனக்கோ, வாப்பா... ஒங்கும்மா செய்யிறாப் போல செய்யட்டும். நீ ஒண்ட வேலயப் பாத்துக்கிரி... முருங்க மரத்தில ஏறின பேய எந்த பரிகாரியாலயும் இறக்கி கஷ்ரம்... நீங்கெல்லாம் பசியோட இரிக்காம சோத்தப் போய் தின்னுங்க...” என்று சொல்லி விட்டு மாமியிடம் போகிறான். எளயம்பியிடம் மாமி கோபமாக அடே! எளயம்பி ஒன்ட லூசிக் கதய உட்டுப் போட்டு என்னக் கொண்டு போய் , என்ர மகன்ட ஊட்ட உட்டுப் போட்டு வாந்திரு. இந்த நரகத்தில ஒரு நிமிசமும், என்னால இரிக்கேலா... கெதியா என்னக் கூட்டிக்கு போ...” என்று மாமி கூறுகிறா...
மாமியின் கதையைக் கேட்டு வெறுப்பு அடைந்த என் மகள் ஹாஸ்னா: “ஓங்கா...! இந்த ஊடு இப்ப ஒனக்கு நரகமாப் போச்சா..? இதுக்கெல்லாம் காரணம் எங்கு உம்மா வாப்பா ஒனக்குத் தந்த எளக்காரம் தான். இந்த ஊருக்க நடக்கிறாப்போல் ஒன்னயிம் பார்த்திருந்தா, ஒனக்கிந்த இட்டும், திமிரெல்லாம் வந்திருக்குமா...? நீ இப்படியெல்லாம் பேசுவியா? நிழலுக்க இரிந்து வெயிலுக்க, நீ போனாத்தான் நிழல்ல அரும தெரியும்... ஒன்ட மகன்ட பொன்சாதிர குணம் ஒன்னக்கென்ன தெரியாதா? ஒரு ஒகுத்து சோறு தாறத்திக்கே, ஆயிரம் கத கதைக்கிற ஒண்ட மருமகள், ஒன்ன எங்களப் போல வெச்சிரிப் பாண்டா போ... வீணா எங்கு உம்மா வாப்பாட மனச இப்படி கசக்கிப் புழியாத... ஒன்னால அவகிட மனசி பர்ற பாட அந்த அல்லாஹ் தான் அறிவான். இப்பிடி இட்டும் காட்ற ஒனக்கெங்க, இது புரியப் போகிது...? மனிசனுக்கு வயசில போனா, எல்லாத் தயிம்
ஜீவநதி

குறச்சிரணும்... இது, வயசி போன காலத்தில தான் எல்லாம் கூடிரிக்கு..." என்று பேசி விட்டு ஹாய் எளயம்பியிடம், முத்தம்மாவக் கூட்டிக்கு போய் அவவின் விருப்பப்படி மகன்ட வீட்டில் விட்டுப் போட்டு வா என்று சொல்கிறா. மகளின் பேச்சுக்கு பின், வீட்டில் போர்க்களம் உக்கிரமடைகிறது.
மூத் தம் மாவின் கையிலிருந்த உடுப்பு பேக்கை, என் மூத்த பேரன் பறிக்கிறான். சின்னப் பேரன் ஆஸிம் மாமியின் கையைப் பிடித்து இழுக் கிறான். என் குடும்பமே ஒன்றுபட்டுப் போராடியும், மாமி - எதையும் சட்டை செய்யாது, தன் மகனின் வீட்டிற்கு போகிறா. ஹாய் எளயம்பி பின் தொடர்ந்து போகிறான். மாமியும் எளயம்பியும் போவதைப் பார்த்து, வாசலில் படுத்துக் கிடந்த நாய் பொட்டு ஊழையிடுகிறது.
தாய் மீது அளவு கடந்த அன் போடும் பாசத்தோடும் இருந்த என் மனைவி அவள் முயற்சிகள் யாவும் ஊமையாகிப் போனதை எண்ணி கண்களில் கசியும் கண்ணீர்த் துளிகளை, முந்தானையால் துடைக்கிறாள். சொல்ல முடியாத வேதனையில் என் மகள் ஹாஸ்னா, உம்மம்மா போவதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறா. வீடு சோர்ந்து கிடக்கிறது. என் பேத்தி ஓடி வந்து என் மடியில் இருக்கிறாள்.
அப்பொழுது றோட்டால் மீன் வியாபாரி தங்காள் மக்கீன் கத்திக் கொண்டு வருகிறான். வந்தவன் என் வீட்டுக் கேற்றடியில் நின்று “புள்ளே! நம்முட கைமீன் இரிக்கி வேணுமாகா? கொறுக்காப் புளி வெச்சி ஆக்கினா, ஆணம் நல்லாரிக்கும்... வெள்ளத்தண் ணில வந்த மீன் கறிக்கு ருசியா இரிக்கும். ரெண்டு துண்டப் போட்டு பொரிச்சாலும் சோக்காரிக்கும்.. வாகா, நாலு இடத்திக்கு நானும் போகணும். என்ன வாறியாகா?” என்று கூப்பிட்டுக் கொண்டு பெட்டியிலிருந்து மீனைத் தூக்கி எடுக் கிறான். நாய் பொட்டு, மீன் பெட்டியைப் பார்த்து அணுங்கிக் கொண்டிருக்கிறது. மகள் ஹாஸ்னா மக்கீனிடம் வந்து, மீனை வாங்கிக் கொண்டு போகும் போது, பூனை பின்னால் கத்திக் கொண்டோடுகிறது.
மக்கீன் “மீனிரிக்கோ..! கைமீன், செத்தல்... விடியச் சாத்தில புடிச்ச மீன்... வேணுமென்டாக்கள் ஓடியாங் க...! புள் ளேய் ...! நான் போயிற்று பின்னேரம் வாறன், காச வெய்கா...” என்று சொல்லிக் கொண்டு போகிறான்.
வானம் வெளிக்காமல், மப்பு மந்தாரமாகவே இருக்கிறது. உம்மா வீட்டை விட்டுப் போன துக்கத்தில் என் மனைவி சோர்ந்து போய்க் குந்திக் கொண்டிருக் கிறாள். தாயின் வேதனையைப் பார்த்து என் மகள் “நீ என்னத்திக்கு இப்பிடி இடிஞ்சி போய் குந்திரிக்காய்? எழும்புங்கா... அவ எங்கட பெயித்தா..? அவட
13
- இதழ் 59

Page 16
மகன்ட ஊட்டதானே போயிரிக்கா. ரெண்டு மூணு நாள் சோட்டைக்கு அங்கயிம் இருந்து போட்டு வரட்டுமே... ஒன்ட தம்பிதானே! அவனென்ன உம்மாவை சும்மா உடுவானா? லொகறாய்ப் பெயித்து, எழும்புகா... வாங்கின மீன் சட்டிக்க கெடக்கு... லாவும் சோறும் திங்கெல்ல... எழும்பிக்கந்து மீன அறுகா..” மகளின் சொல்லைக் கேட்டு என் மனைவி எழுந்து போகிறாள். றகுமானியா பள்ளிவாசல் மோதின், லுகர் தொழுகைக் கான பாங்கை விடுகிறார். என் மூத்த பேரன் பள்ளிக்கு தொழப் போக, றெடியாகி வந்து நிற்கிறான். அவனையும் கூட்டிக் கொண்டு, பள்ளிக்குத் தொழப் போகிறேன்.
***
அஸர் தொழுகையை நிறைவேற்றி விட்டு வந்து குந்திக் கொண்டிருக்கும் எனக்கு, மகள் ஹாஸ்னா அவித்த மையறுக்கிழங்கும் தேத்தண்ணியும் கொண்டு வந்து தந்து விட்டு, போகிறா. பள்ளக்காட்டுக்கிழங்கு நன்றாக அவிந்து ருசியாக இருக்கிறது. எனக்கு பக்கத்தில் கிழங்குக் கோப்பையோடு வந்து ஹாய் எளயதம்பி இருக்கிறான். எங்களூர் பாடசாலை களெல்லாம் அகதி முகாங்களாகி விட்டதால் பாடசாலை களுக்கெல்லாம் லீவு கொடுத்து விட்டார்கள். இதனால் என் பேரன்மார்கள், பாடசாலைக்கு போகாமல், வீட்டைப் பிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். தாய் வீட்டை விட்டுப் போன கவலையிலிருந்து விடுபடாமல், என் மனைவி வேதனையில் வெந்துருகிக் கொண்டிருக் கிறாள். மூத்தம்மாவின் பிரிவு என் மகளையும் வாட்டிக் கொண் டே இருக்கிறது .... பக் கத் தில் குந்திக் கொண்டிருந்த எளயதம்பி “இப்ப என்ன செஞ்சத்திக்கு இந்த மனுசி இப்பிடிக் கோவிச்சுக்கு போனா...? என்னரிந்தாலும் இப்பிடிக் கோவிசிக்கா போற..?” என்று சொல்லிக் கொண்டு, அவித்த கிழங்கை சாப்பிடுகிறான். பூனை எளயம்பியின் பக்கத்தில் வந்து
ஜீவநதி சந்
தனிபிரதி - 80/= ஆண்டுச்சந்தா - மணியோடரை அல்வாய் தபால்
அனுப்பி வைக்கவும். அனுட் K.Bharaneetharan, Kalaiah:
வங்கி மூலம் சந்தா ( K.Bharaneetharan Commer
A/C No.- 8108021
ஜீவநதி.

கத்திக் கொண்டிருக்கிறது.
அப் பொழுது, வாசலில் அமைதியாகப் படுத்துக் கிடந்த நாய் பொட்டு எழும்பி, அனுங்கிக் கொண்டு, என் வாசல் கேற்ரடிக்கு ஓடுகிறது. அங்கே, எங்களோடு சண்டை பிடித்துக் கொண்டு போன என் மாமியை மச்சினன் கூட்டிக் கொண்டு வருகிறான். வந்தவன் “என்ர அல்லாஹ்வே! நடக்கேலாம தள்ளார்ர இந்த மனிசிர கோலத்தப் பாத்தா, எனக்கு என்ன செய்யிறென்டே தெரியல்ல.... என்ர, ஊடு வள வெல்லாம் சொயினா தண்ணி, மச்சான்! நாங்கள் லாவயில் படுக்கிறதே பெரிய கஸ்ற்ரம். இதுக்குள் இந்த வயசி போன மனசிய எப்பிடி மச்சான் வெச்சிக்கு இரிக்கிற?... என்னெரிந்தாலும் ஒரு பொம்புளைக்கு இவளவு இட்டம் இரிக்கப்புடா..! வருத்ததிற்கு மருந்து செய்யச் செல்றது ஒரு பெரிய குற்றமா? ஊருக்க புள்ளயள் கவனிக்காம, உம்மா வாப் பா பர்ற கஸ்ரம்...! இது உத்துணர்ந்து பாக்கி றெல்லியா? பெரிய பணக்காரனுகள்ர உம்மா வாப்பா சோறு கஞ்சியில்லாம, ஊடுடா பிச்சை முத்துக்கு திரியிற பிச்செடுத்துக்கு திரியிற, தெரியிறெல்லியா?” என்று சொல்லிக் கொண்டு உள்ளுக்குள் போகிறான் மாமியைக் கண்ட என் பேத்தி, சந்தோஷமாக ஓடிப் போக மாமி அவளை வாரித் தூக்கியெடுத்து கொஞ்சுகிறா. இதைப் பார்த்து என் மனைவி. கவலையை மறந்து சிரிக்கிறாள்.
மண்வளச் சொற்கள் லாவு - இரவு, அறவ - முற்றாக, இட்டும் - கோபம், பிடிவாதம், மையத்து - சீவனில்லாத உடல், உக்கல் - கொந்தளிப்பு, ஒகுத்து - நேரம், லுகர்/ லோகர் - மதியம், தொழுநேரம், பாங்கு - அழைப்பு, அஸர் - பின்னேரம் , தொழும் நேரம்
-தா விபரம்
1200/= வெளிநாடு - $ 50U.S நிலையத்தில் மாற்றக்கூடியதாக ப வேண்டிய பெயர்/முகவரி im, AIvai North west, Alvai. செலுத்த விரும்புவோர் cial Bank - Nelliady Branch 308 CCEYLKLY
இதழ் 59

Page 17
எமது நாட்டின் நாகரிகத்தையும் பண்பையும் உயிரையும் ஓம்பி வளர்த்த பெருமை கிராமங் களுக்குரியது. இயற்கைக்கு மிக அருகாமையில் இருக்கும் காரணமாக வாழ்வு என்னும் உயிரூற்றுடன் கிராமங்கள் நெருங்கிப் பிணைக்கப் பட்டுள்ளன. இத்தகைய கிராமங்களில் வாழும் மக்கள் வளர்த்த அழகுக் கலையே கூத்து. இது பல்லாயிரக்கணக்கான பொது மக்களின் விலை மதிக்க முடியாத சொத்து. அவர் களின் உணர்ச்சிகளையும் செயல்களையும் வெளியிடும் சாதனம். அவர்களின் உள்ளத்திற்கு அழகையும் இன்பத்தையும் அளிக்குமாற்றல் இதற்குண்டு. கூத்துக்கு தேசிய முக்கியத்துவமுண்டு அது நாட்டின் கலாசார பாரம்பரியத்தின் முக்கிய அம்சம். நாட்டு மக்களின் உள்ளக் கருத்து, குணச்சிறப்பு, கலை, பண்பாடு, வாழ்க்கை முறை முதலியவற்றை எடுத்து விளக்குவது அக்கலை.
இன்றைய காலம் மாறிவரும் காலமாகும். அந்நியம் என்ற பெரு வெள்ளத்தினால் எமது கலை,
கூத்து விழா ஓர் அனுபவ பகிர்வு
ஸ்ரீ.நிலுஜ
கலாசாரம் அடித்து செல்லப்பட்டு விடுமோ என்ற ஐயப்பாடு நிலவுகின்றது. இக்கால கட்டத்தில் எமது பாரம்பரியத்தின் வேர்களைத் தேடுவதும் அவற்றை வெளியே கொண்டு வருவதும் மக்கள் மத்தியில் பரப்புவதும் நமது கடமையாகும். நமது எதிர்காலச் சந்ததியினருக்கு நாம் நமது கலை மரபுகளைக் கையளிக்க வேண்டும். அப்படிக் கையளிக்க வேண்டிய மரபுகளுள் நமது கூத்து மரபும் ஒன்றாகும். எனவே நவீனத்துவத்தினாலோ நாகரீகத்தினாலோ புறக்கணிக் கப்படவில்லை என்பதை இனம் காட்டும் வகையில் இக் கூத்து விழாக் காணப்பட்டதை உறுதி செய்ய முடிந்தது.
கிழக்கு மாகாணப் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் அண்மைக்காலமாக நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றது.
எமது தமிழ் பாரம்பரியம் வாயிலாகவும் பாரம்பரியத்தை மேன்மைப்படுத்தும் நிகழ்வுகள் ஆக ஏற்பாடு செய்து வரும் நிலையில் சமுகம் சார் அம்சங் களிலும் கவனம் செலுத்த தவறவில்லை. 05.07.2013 அன்று கூத்து விழா எனும் நிகழ்வினையும் ஏற்பாடு செய்து இருந்தது. இவ் விழா பசுமையான தரு சூழ, இதமான காற்று இடைவெளிகளில், பட்டும் படாமலும் தெறிக்கும் வெயில் ஒளியில், பயனியர் வீதி வாகை மர
ஜீவநதி -

நிழலில் ஒழுங்குபடுத்தப்பட்டு இருந்தது. இங்கு ஒரு பார்வையாளராக நான் பங்கு கொண்டமை குறிப்பிடத் தக்கது. இக் கூத்து விழா ஒரு கலை விழாவாக அமைந்து இருந்தன. ஆனாலும் கூத்து ஊர் சார்ந்த கலையாகவும் தொழில் முறையாகவும் தற்போது போட்டி நிகழ்வாகவும் நிகழ்த்தப்படும் நிலையும் உண்டாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. இக்கூத்து விழா வானது ஒரு போட்டி நிகழ்வாக நிகழ்த்தப்பட்டாலும் என்னுடைய பார்வையில் போட்டி என்ற சிந்தனையை அறுத்துவிட்டு ஒரு ஊரில் கூத்து ஆடும் போது அல்லது கோயில் வெளியில் கூத்து ஆடும் போது எவ்வாறான உணர்வு இருக்குமோ அந்த உணர்வுடன் நான்
பார்த்துக்கொண்டு இருந்தேன்.
என்னுடைய சிந்தனை போட்டிச் சிந்தனைக்
கும் மேலாக ஒரு கூத்து பார்க்கிறோம் என்ற நிலையிலேதான் அதைப்பார்த்தேன். ஆனால் முழு இரவுக் கூத்து 30 மணி நேர பகல் கூத்தாக இருந்தமை மட்டுமே எனக்கு மாற்றமாக இருந்தது. ஒரு முழு இரவுக் கூத்தில் பார்ப்போர் கலைஞர்கள் சிறுவர்கள் போன்ற சமூகம் அந்த சூழலில் எவ்வகையான செயற் பாடுகளை செய்வார்களோ அதேபோல் பார்வையிட்ட மக்களை அவதானிக்கும் போது உணவுப்பண்டங்களை உண்டும் பாய்களில் படுத்து உறங்கியும் போவதும் வருவதுமாக இருக்க சிறுவர்கள் தொடங்கலாக வயோதிபர் வரை அவதானித்தபடியே இருந்தனர். மேலும் கூத்தர்கள் உடை ஒப்பனைகளுடன் வந்து உரையாடுவதுமாக இருந்த அதேவேளை கூத்திற்கு உயிர்ஆடலும் பாடலுமாக இருந்தாலும் இக் கூத்துக் களில் இவற்றோடு சேர்ந்து நடிப்பும் உயிராக இருந்ததை கவனிக்க முடிந்தன. போட்டித்தன்மை யாகவே யோசிக்க முடியவில்லை. எது திறமையாக இருந்தது எது திறமை இல்லை என வரையறுக்க முடியாமல் இருந்தன. ஆயினும் மக்களது பண்பாட்டு பாரம்பரிய அம்சங்களை வெளிப்படுத்துவதாகவும் மக்களது வாழ்வியலோடு இணைந்ததாகவும் இக் கலைகள் இவ்வாறு விழாவாக முன்னெடுக்கப்பட்டு
- இதழ் 59

Page 18
வருகின்றமை வரவேற்கத்தக்க ஓர் விடயமே.
மேலும் அண்ணாவியார் பற்றி குறிப்பிட வேண்டும் ஒவ்வொரு கூத்து அண்ணாவிமாரும் ஒவ்வொரு தனித்திறமையினைக்கொண்டு காணப் பட்டனர். மத்தள அடிகளிலும் வாசிக்கும் முறையிலும் விரல்களின் லய அசைவுகளிலும் மத்தளம் இடுப்பில் கட்டிய முறைகளிலும் அதனை வாசிக்க அவர்களது உடல் வளைந்து கொடுக்கும் விதமும் ஒரு கலை அம்சமாகவே காட்சி அளித்தது.இவை இவ்வாறு இருந்த போதும் முக்கியமாக களரி பற்றி குறிப்பிட வேண்டும். கூத்து தொடங்க முன் நான் அங்கு வந்து களரியை அவதானித்தேன் அதுவும் ஒரு கலையாகவே காட்சி தந்தது. களரியில் கட்டி இருந்த சேலைகளின் அழகும் சேலை வர்ணங்களுக்கேற்றால் போல் சேலைகளை ஒழுங்கமைத்த விதமும் அவற்றைக்கட்டியிருந்த நேர்த்தியும் சீரும் சேலைகளை ஒன்றாகக்கட்டி இழுத்து அதனை ஒரு மரக்கிளையில் துாக்கிக்கட்டியிருந்தது. இதிலும் ஒன்றைக்கூற வேண்டும் அவ் மரக்கிளையும் களரிக்கு ஏற்ற விதத்தில் வளைந்து இருந்தமையும் களரி கட்ட இடம் தீர்மானித்த நபரை இவ் இடத்தில் பாராட்ட வேண்டியும் உள்ளது. எட்டுக்கம்புகளில் சேலைகளை சீராக சுற்றி கீழ் தொங்க விட்டு இருந்த நிலையில் கீழ்தரை ஒரு மேடு பள்ளம் இன்றி நீர் தெளித்தும் இருக்க ஒட்டு மொத்தமாக அக் களரியை அவதானிக்கின்ற போது ஒரு விருப்புடன் அதனை உரு வாக்கி இருந்தமையும் அதனையும் ஒரு கலைப் படைப்பாக பார்க்க வைத்தது.
எனவே இவ்வாறான கூத்துக்கள் இடம் பெறும் போது நோயாளர்களுக்கு ஒரு மன விடுதலையாகவும், நோய் வலிகளுடன், இருப்போருக்கு வலி தெரியாம லும் நோய் பற்றி சிந்தித்து கவலைப்பட்டுக் கொண்டி ருக்கும் நோயாளிகளுக்கு இச்சிந்தனை திசை மாறிப் போகும் தன்மையும் சில வேளைகளில் மன அழுத்தங் களுக்கு உள்ளானோர் இதில் இருந்து விடுபடும் நிலை கூட தோற்றுவிக்கப்படும். அன்றைய தினம் தோற்று விக்கப்பட்டு இருந்திருக்கும் எனவே இக் கூத்துக்கள் இவ்வாறு மனித மனங்களை சீர் செய்வதாகவும் மன நிலை மாற் றத் திற்கு ஒரு வழிமுறையாகவும் இருப்பதை நோக்கின் இதனை ஆழமாக படிக்கும் போதும் பார்க்கும் போதும் கூத்து அரங்க மானிடவியல் பற்றியும் எம்மால் பிரித்து அறிய முடியகூடியதாக
கூத்துக்கள் காணப்படுகின்றன.
* காலணித்துவ வருகையின் பின்னர் எம்மீது திணிக்கப்பட்ட நவீனத்துவத்திற்கு ஒரு தளர்நிலையாக கூத்து காணப் பட்டது.எமது பண் பாடு கலைகள் அனைத்தும் சிதைக்கப்பட்டு வர்த்தக நோக்கு பிரதானப் படுத்தப் படுகிறது.இது ஒரு பகுதியாக இருக்க காலணித்துவகாலத்தில் எங்களிடம் காணப்பட்ட இக்கூத்துக்கலை இன்னும் வழக்கிலிருந்துவருவதை
ஜீவநதி -

- சி.எம்., : "யாகப் பாடி !
இவ்வாறான நிகழ்வுகள் உணர்த்தி வருவது மகிழ்ச்சிக் குரியது. யுத்தம் அசாதாரண சூழ்நிலைகளினால் மக்கள் அடிக்கடி இடப்பெயர்வுகளை சந்தித்து பெரிதும் பாதிப் படைந்தனர்.இச் சூழ் நிலைகளிலும் கூட பாதுகாத்து வந்த கூத்துக்கலை இன்னமும் உயிர்த் துடிப்புடன் வழக்கில் இருப்பது எமக்கு பெருமை சேர்க்கின்றது.
வாளவீமன் கூத்தில் பெண் பாத்திரம் தாங்கி வந்தவர்கள் ஆண்களா பெண்களா என எமக்கே யொரு ஐயப்பாடான நிலையைத்தோற்றுவித்தது. அதற்கு தகுந்த முறையில் அவர்களின் உடை ஒப்பனை ஆட்டம் லாவகமாக அமைந்தன.ஆணா பெண்ணா என இனம்கண்டு கொள்ளமுடியாமல் இருந்த நிலையில் பாத்திரத்துக்குரிய பாடலைப் பாடும் போதுதான் அவர்களின் குரலை வைத்துக்கொண்டு எம்மால் ஆண் என தீர்மானிக்க முடிந்தது. கூத்துக்களில் பெண்கள் ஆடுவதில்லை என்பதில் நான் தெளிவாக இருந்தாலும்
அந்த கணத்தில் நான் தடுமாறிப்போனேன்.அவ்வளவு தத்துரூபமாக அவர்கள் அலங்கரிக்கப்பட்டமை வியப் பாக இருந்தன. ஆட்டம் தாளக்கட்டுக்கள் ஒரே மாதிரி யாக அமையாமல் வெவ்வேறு சுவாரஸ்யமான ஆட்டம் தாளங்கள் உருவாக்கப்பட்டமையானது பார்ப்பதற்கு விறுவிறுப்புத்தன்மையை ஏற்படுத்தியிருந்தன..
- மேலும் சண்டைக்காட்சிகள் கூட பார்ப் போரின் கண்மணிகளை அசைக்கவிடாமல் பற்றிப் பிடித்த வண்ணம் இழுத்து வைத்திருந்ததோடு அரக்கன், அரசன் ஒருவருக்கு ஒருவர் வாள்தர்க்கம் புரியும்போது இருவருக்கும் இடையேயான ஒருமித்த கட்டுப்பாடு எம்மை மேல்சிலிர்க்க வைத்தன. அரசன், அரக்கன் மீது வாளினை வீசி அருகில் சென்று நிற்கும் போது, அரக்கனது மூக்கு நுனி அருகில் எப்படித்தான் அது கட்டுப்படுத்தப் படுகின்றதோ எனத்தெரியாது இருந்தன. அந்த அளவு அவர்களின் சுயகட்டுப்பாட்டை என்னால் அவதானிக்க முடிந்தது. மேலும் பாத்திரத் தெரிவு என்பது வாளவீமன் கூத்தில் அரக்கன் பாத்திரத் தின் பாத்திரப்படைப்பை மெச்சக்கூடியதாக இருந்தது. . பாத்திரத்திற்கு ஏற்றாற்ப் போல் அக் கலைஞனின் உடலமைப்பு கண்கள், உடைஒப்பனைகள் அப்படியே
-இதழ் 59

Page 19
ஓர் அரக்கனைக் கொண்டு நிறுத்தியது. அவரது வேகமான ஆட்டமும் பார்வையும் என்னை மிகவும் கவர்ந்தன. அத்தோடு வள்ளி திருமணம் கூத்தானது விறுவிறுப்புக்குறைவாகக் காணப்பட்டாலும் ஆட்டக் கலைஞர்கள் மத்தியில் பெரும் மதிப்பை ஏற்படுத்தி யிருந்தன. கிட்டத்தட்ட நாற்பத்தைந்துக்கும் மேலான வயதுகள் கடந்த கலைஞர்களே அதில் பங்கு பற்றி இருந்தனர். அண்ணாவியார், தாளக்காரர், பிற்பாட்டுக் காரர் தொடங்கலாக கலைஞர்கள் வரை மேற்குறித்த வயதினை ஒத்தவர்களாகவே காணப்பட்டனர்.எனவே அந்தக்கூத்தை விட ஆடிய கலைஞர்கள் இந்த வயதிலும் கூத்துக் கலையில் ஆர்வம், ஆடிய துணிவு, அவர்களது வயது போன்ற இன்னோரன்ன விடயங்கள் என்னைச் சிந்திக்கச் செய்தன. ஆனால் விறுவிறுப்பாக இல்லாமல் ஒரு சீரான தொடர்ச்சியாக ஆற்றப்பட்டு இருந்த போதி லும் அந்தந்தப் பாத்திரங்களுக்குரிய உடை ஒப்பனை களில் அதிகம் கவனம் செலுத்தி இருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது.
நல்லதங்காள் கூத்து தொடர்பாக கூறும் போது எனக்கு மட்டுமின்றி பார்வையிட்ட அத்தனை மக்களுக் கும் கூத்தின் ஆற்றுகைத்தாக்கம் ஆழமாகப் பதிந் திருந்தன. அந்த அளவு மக்கள் மனங்களில் தாக்கத்தை செலுத்திவிட்டது. இரு கலைஞர்களின் வீரர் ஆட்டம் வேகத்துடனும் விறுவிறுப்புடனும் அமைந்திருந்தன. சதங்கைகள் துள்ளிக்குதிக்க அணிந்திருந்த உடைகள் சிதறவும்,கட்டியிருந்த தாறுபாச்சிகளின் நேர்த்தி குலையவும் சுறுக்கான கண்பார்வையும் வைத்த கண் வைத்தவாறே அப்படியேயிருக்க களரியைவிட்டு கண் பார்வை பிசகாது அவ்வாட்டம் முடியும்வரை ஒவ்வொரு வரினதும் கண்கள் சூழ இவ்வாட்டக்கோலம் இடம் பெற்றன. ஆனால் அக்கலைஞரின் உடையுருவாக்கம் அவருக்கு ஒருஅசாதாரண சூழலைத்தோற்றுவித்தது. அவரது ஆட்டத்தை குழப்பியபோதும் அக்கலைஞர் தடுமாறவில்லை தனது ஆட்டம், தாளத்தில் கவனமாக யிருந்து ஆடிமுடித்தார்.இதில் கூத்துக்கலைஞர்கள் ஆற்றுகை செய்யும்போதும் எவ்வளவு கலையாற்றல்கள் உள் ளடங் கியிருக் கின் றன.ஆடைகள் அகன் று விழுந்தாலும் சரி சதங்கைகள் தெறித்தாலும் சரி அவ் விடத்தில் அதைப்பொருட்படுத்தாமல் நமது ஆட்டத்தை ஆடிமுடிக்க வேண்டும் என்பதற்கு மேலாக ஒருவகை யான பழக்கவழக்கமும் கலையாகவுமே தென்பட்டது.
அத்தோடு ஏழுசிறுவர்கள் பங்குபற்றி இருந் தனர். உண்மையில் ஏழு பெரியவர்கள் அப்பாத்திரத்தை தாங் கியிருப்பார்களாயின் அந்த ஆட்டநேர்த்தி இருந்திருக்குமா என்பது கேள்விக்குறியாக எனக்கு எழுந்தது. ஏழு சிறுவர்களும் வளர்ச்சி உயரத்தின்படி ஒழுங்கமைக்கப்பட்டு அதில் ஒருவர் பெண் பாத்திரத் துக்கு வடிவமைக்கப்பட்டு இருந்தமையும் அவர்களின் மழலைக் குரல்களில் பாடிய பாடல்கள் மனதில் பதிய அவர்களின் ஆட்டமும் சளைக்கா வண்ணம் ஏழு
ஜீவநதி

சிறுவர்களின் கண்களும், கால்களும் ஒரேமாதிரி யாகவே தாளத்துக்கு ஏற்றாற்போல வைக்கப்பட்டதை யும், கைகளின் நேர்த்தித் தன்மையும் பார்ப்போர் அனைவரையும் கவர்ந்திற்று.
நல்லதங்காள் தன் ஏழு பிள்ளைகளையும் கிணற்றில் போடும் காட்சி கண்கலங்க வைத்தன. சிறுவர்களது முகபாவனை நல்லதங்காள் நடிப்பு திறன் பட இருக்க பார்ப்போரை உறைநிலையில் வைத் திருந்தன. அக் காட்சியில் பிள்ளைகளை ஒன்றன் பின் ஒன்றாக கிணற்றில் போடும்போது அச் சிறுவர்கள் களரியின் இரு கம்புகளுக்கு இடையே விழுத்திவிட அவர்கள் எப்படி விழுந்தார்களோ அப்படியே உதாரண மாக கால்கள் பின்னப்பட்ட நிலையில் விழுந்தால் அவ்வாறே, கைமடித்துக்கால்விரித்து இருந்தால் அப்படியே எந்த விதமான அசைவுகளும் இன்றி இறந்தாற்போல் கிடந்தனர்.ஒரு சிறு அசைவு காண கூட அவர்கள் எமக்கு ஒரு வாய்ப்பாகத்தரவில்லை. ஏழு சிறுவர்களும் வரண்முறையாக இரு கம்புகளுக்கு இடையே சரியாக நின்று வீழ்த்தப்பட்டனர்.இதில் நான் ஒன்றை விளங்கிக் கொண்டேன் ஆடலும் பாடலும் முடிய இரு கம்பு இடைவெளியில் முடியும்படி அதற் குரிய நெகிழ்வுத்தன்மையுடன் முறைச்சமன் செய்தபடி தம்மை கட்டுப் படுத்தி ஆற்றுகை செய் தார்கள் அத்தோடு ஏழு சிறுவர்களையும் தூக்கி ஒரே இடத்தில் அடுக் கும் போது அழுகையுடன் அடுக்குவதும் ஒவ்வொருவரையும் துாக்கி எடுக்கும் விதம் பின் எரிக்கும் போது விறகுகளைப் போடும் முறை போன்றன சோகத்தை ஏற்படுத்தி இருந்த போதிலும் பார்த்த மக்களனைவரும் அதனை உண் மைச் சம்பவமாக நினைந்து கொண்டு அச்சூழ்நிலைக்குள் தம்மை ஈடுபடுத்தி பார்க்கும் போது அவர்கள் முகத்தில் இருந்த சோக உணர்வு இப்பவும் என் கண் முன் நிற்கின்றது. இவ்வாறு இக் கூத்துக்கலைஞர்களின் ஆற்றுகை எம்மைப் பாதிக்கச் செய்தன.
இவைகள் நிறைவுபெற கூத்துக்கலைஞர் களைப் பார்ப்போர் கைகளைக் குலுக்கித் தமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டு தமது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்கள். எனவே கூத்து மக்கள் மனதில் எழுப்பப்பட்ட உணர்வுகள் அவர்களின் வாழ்க்கை நெறிகளைச் செழிக்கச் செய்கின்றன. கூத்துக்கலையின் நன்மைகள் இவ்வாறு சமூகத்தின் மனப்பக்குவத்தைச் செழிக்கச் செய்வதுடன் வாழ்வின் நோக்கங் களையும் முழுமையாக்கி வருகின்றன். இவ்வாறு சமுதாயம் ஏற்றுக்கொண்ட பண்பின் பரிமானங்கள் மக்களின் பழக்கவழக்கமாகப் படிந்து கொள்கின்றன. அதன் உறைநிலையால் அந்தநெறிகள் அழிந்து போகாது காலம் காலமாகப் பேணிப் பாதுகாத்து வரப்படுகின்றன. இத்தகைய நிலையில் தான் மரபு மாறாத கூத்துக்கலை வேரூன்றி உள்ளமைகுறிப்பிடத்தக்கது.
-இதழ் 59

Page 20
சபை
ஏறாம் வழா
ஆத்மார்த்தமாக, அன்புக்கு வசப்படாத ஒரு வார்த்தைப்பிரயோகம், ராதாவின் வாயிலிருந்து புறப்பட்டு வருமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அவளின் கடுஞ்சொல்லாக வருகின்ற விமர்சனக் குறியீடெல்லாம், பகீரதி மீது தான். கல்லூரிக்குப் படிக்க வந்த நிலையில், அவளைப்பற்றி, ராதா கூறுகின்ற விமர்சனக் கருத்தியல் அம்பு, நேராக அவள் நெஞ்சைக் குறி பார்த்துத் தைத்துவிட்ட நிலையில், அம்புப்படுக்கை யில், உதிரம் கொட்ட வீழ்ந்து கிடந்த பீஷ்மரைப்போல, அவளின் நிலைமை ஓர் உணர்வுக் கொலைக்காளாகி, பதறப்பதற, அவள் உயிர் துடித்துக் கொண்டிருந்த காட்சி, அவ்வகுப்பறையினுள், முட்கள் தைக்கின்ற ஓர் அவலக் காட்சியாய் வந்து விழுந்தது.
அதைப் பொருட்படுத்தாமல், அப்படியொரு வார்த்தையைக் கேட்க நேர்ந்ததற்காக, எதிர்மறையாகக் கிளர்ந்தெழுகின்ற மாணவியரின் ஒன்று திரண்ட சிரிப்பலைகளின் நடுவே, மெளனம் கனக்க, அவள் ஒரு நிழல் பொம்மையாக உறைந்து போய் நின்றிருந்தாள். ராதா அவளைப் பற்றி, என்னதான் கூறி விட்டாள்? உண்மையில் அது ஒரு ஜோக்கல்ல. பிறர் மனம் புண்படும்படி நாகரீகமில்லாமல் பேசுவது எப்படி ஒரு ஜோக்காகி விடும்?
ராதாவின் குரல், ஒரு மழுங்கடிக்கப்பட்ட சிந்தனைத் தோரணையுடன், நையாண்டிச்சிரிப்பு வழிய, உச்சஸ்தாயியில் ஒலிக்கும் போது, பகீரதி ஒன்றும் அறியாத பேதையாய், எதிர்த்திசையில் நின்று, கவனம் குலையாது, அதைக் கேட்டுக் கொண் டிருந்தாள். அப்போது ராதாவின் கையில், அவளுடைய தபால் அஞ்சலட்டைக்கான படம் இருந்தது. மகோன்னதமான உயிரின் சுவடு கூட அறியாத, வெறும் நிழற்படம் தான்.
ஜீவநதி -

வகுகள்
ஆனந்தி
ராதாவின் கணிப்புப் படி, அது அழகாயில்லை. மெல்லிய ஒடுங்கிய, களை இழந்த முகவார்ப்பு , பகீரதிக்கு அதில் பற்கள் வேறு துருத்திக்கொண்டு நிற்பதாக, ஒரு காட்சி நிழல். ராதா அதைக் கண்டு தான், முகம் சுழித்து அப்படியொரு குரூரமான வார்த்தைப் பிரயோகத்தை மனம்போனபடி கட்ட விழ்த்து விட்டிருக்கிறாள். அப்படி அவள் என்னதான் சொல்லி விட்டாள் பகீரதி பற்றி? அதுவும் ஒரு தவச்சாலையில், வைத்து இந்த உணர்வுக் கொலை, பகிரங்கமாகவே அரங்கேறியிருக்கிறது. இதில் படிப்பு எந்த மூலைக்கு? பகீரதியை அடியோடு வேரறுத்து நிலை சாய்த்து விடவே, எதிர்மறையான ராதாவின் அந்தப் பகிடி வார்த்தைக் கணைகள். ரொம்பக் குளிர்ச்சியாக அந்தப் போட்டோவைக் கையில் உயர்த்திப் பிடித்த படி உரத்து, மேளம் கொட்டி அவள் சொல்கிறாள்.
| “வடிவாயிருக் கு, பிரேம் போட்டுச் ஷோக்கேஸிலை வையும்.” இந்த வார்த்தைகளைக் கேட்டு வகுப்பறையினுள் ஒரே சிரிப்பு அதிர்வலைகள். அதை உள்வாங்கி ஜீரணிக்க வழியின்றிக் குடை சாய்ந்து சரிந்து வீழ்ந்த நிலைமை பகீரதிக்கு. தோலுரிக்கப் பட்ட அவமானத்தில், முற்றாக மன மொடிந்து போன சூனிய நிலைக்கு அவள் தள்ளப் பட்டிருந்தாள். இருப்புகளைத் தவறவிட்ட முற்றிலும் இருள் மயமாகிப்போன, இந்த சூனிய நிலை அவளை யறியாமலே, வெகுநேரம் வரை நீடித்தது. இது ஒன்றும் அறியாமல், மறு புறுத்தில் உலகம் விழித்துக் கொண்டிருந்தது... அவளைச் சிலுவையில் அறைந்து போட்ட சகதியில் மகிழ்ச்சியில் குளித்தவறே அவளின் வகுப்பறை ஆரவாரம் கொண்டிருந்தது. அவர்களுக்
18
இதழ் 59

Page 21
கென்ன விழுந்து விழுந்து படிப்பார்கள். அவள் மட்டுமென்ன, இது வரை படிப் பே உலகமென்று இருந்தவள் தானே அவளும். அந்த ஒளி மயமான அறிவுப் பிரக்ஞையான படிப்பு வானில் பறக்க முடியாமல், அவள் வாழ்வில் மட்டும் இப்படித் திடீரென்று அந்தகாரம் சூழ்ந்தது ஏன்? இது யாரால் நேர்ந்தது? ராதா! ராதா! நீ என்ன சொல்லி விட்டாய். என் படிப்பு வெற்றிகள் என் கண்ணில் படாமல் போனது ஏன்? அவளுக்குப் புரியவில்லை. ஒரே மனக்குழப்பமாக இருந்தது. அவளின் காதுகளுக்கு எட்டும்படியான, அந்தச் சிரிப்பு வெள்ளம், அவளை விடாமல் துரத்திய படியே இருந்தது. வகுப்பில் இருக்கப் பிடிக்கவில்லை படிப்புக் கனவு அடியோடு மறந்து விட்டது. பஸ்பிடித்து எப்படி வீடு வந்து சேர்ந்தாளென்று தெரியவில்லை. அவளின் ஒளிவரண்ட கண்களுக்கு, ஏழாலையென்ற அந்தச் சிரஞ்சீவியான கிராமமே, களையிழந்து நிற்பது போல்பட்டது.
அதோ அவள் வீடு. சராசரியான மனிதர்கள். அம்மா ஒற்றை நிலை விளிம்பினுள், வெகுவாகத் தனிமைப் பட்டுப் போயிருந்தாள். அவளின் சுமை அவளுக்கு... குடும்ப பாரம் எந்நேரமும் பாறாங் கல்லாய் கனக்கும்... வாழ்க்கையே போராட்டமாய் போனது. செல்லரித்துப் போன குடும்ப உறவில் குழந்தைகள் தாம், அவளுக்குண்டான ஒரு ஆறுதல். துருவம் மாதிரி அவள் கணவன். இந்த வேறுபட்ட ஒறுத்துகின்ற துருவநினைப்பினிடையே, அவள் கனவு காணும்படியாய், மக்கள் பற்றிய நினைப்பு. அவளுக்கு நான்கு பிள்ளைகள். பகீரதி அதிலே ஒரு தனி விழுது. அது படிப்பென்று களத்தில் கலூன்றி, விருட்சமாய் தழைக்க வேண்டுமென அவள் நினைவு. அவள் நினைப்பில் மண்விழ, அதுதான் பகீரதியின் இன்றைய விபரீத வருகை கட்டியம் கூறுகிறதே.
அச்சாணித்தேர் சில்லு முறிந்து நிலை சரிந்த கோலமாய் அகால நேரத்தில் பகீரதியின் இந்தத் திடீர் வருகை, அம்மா வயிற்றில் புளியைக் கரைத்தது. ஓடிப்போய் வாசலுக்கு வந்து , அவளை வரவேற்கையில் பேச எழவில்லை. பகீரதி அம்மாவைப் பொருட்படுத் தாமல் அழுது வடியும் முகத்துடன் புத்தகப் பையை ஒரு மூலையில் வீசியெறிந்து விட்டு, முன் வாசலைத் தாண்டிக் ஹாலுக்குள் நுழைகையில், வீடு களை இழந்து போனது. அம்மா அவளைத் துரத்தியவாறே உள்ளே
வந்து கேட்டாள்.
“என்ன பிள்ளை. என்ன இந்த நேரத்திலை வந்திருக்கிறாய்? இன்னும் வகுப்புக் கூடத் தொடங்கி யிராது. வெளியிலை ஏதும் பிரச்சினையே?”
அதற்கு பகீரதி உடைந்து போன குரலில், உயிர் வரண்டு சொன்னாள்.
“வெளியிலை இல்லையம்மா பிரச்சினை. எனக்குள்ளேதான் எல்லாம் பற்றியெரிது. நான் இனி
ஜீவநதி

எங்கை போய் ப் படிக் கிறது ? இனி என்னால் போகேலாது. என்னை வேறை பள்ளிக்கூடம் மாத்தி விடுங்கோ!"
- "என்ன பிள்ளை இப்படிச் சொல்கிறாய்? வாற மாதம் உனக்கு ஓ.எல் சோதனையல்லே. அது
முடியட்டும் பிறகு பார்ப்பம்."
அம்மா! நான் கட்டாயம் சோதனை எடுக்க வேணுமே?"
"ஓம்! படிப்பு முக்கியமல்லே. அங்கை போகாதளவுக்கு இப்ப உனக்கு என்ன வந்திட்டுது?”
“ஐயோ அம்மா. என்ரை படத்தைப் பார்த்து அங்கை பகிடி பண்ணினவை. பிரேம் போட்டுச் ஷோக் கேஸிலை வைக்கட்டாம். நான் வடிவில்லை யாம். எனக்கு மனமே சரியில்லாமல் போட்டுது. ஒரே குழுப்ப மாக இருக்கு. நானெப்படிப் படிக்கிறது? அப்படிப் படிச்சாலும் சோதனையிலை பாஸ் பண்ணுவனே?”
“வடிவை விடு பிள்ளை. இந்த உடம்பு அழியுறது தானே. இதைப் போய்ப் பெரிசுபடுத்திக் கொண்டு படிப்பைக் கோட்டை விடுறது, எந்தளவுக்கு புத்திசாலித்தனம்?"
| "அம்மா! நானும் அப்படித்தான் இருந்தேன். இப்ப என்ரை படத்தைப் பார்த்து அவையள் சிரித்ததால் எனக்கு மனமே உடைஞ்சு போச்சு. ஒரே குழப்பமாக இருக்கு.
அதன் பிறகு அம்மா பேசவில்லை. பகீரதி மனம் கழன்று போக அந்தக் குழப்பத்துடனேயே ஒரு வழியாகப் படித்து ஓ.எல் சோதனை எடுத்துப் பாஸ் பண்ணிய போது அம்மாவுக்குக் கவலை விட்டுப் போனது. அவள் எல்லாப் பாடத்திலும் விசேட சித்தி பெற்றிருந்தாள். இனியென்ன... அடுத்த வருடம் ஏ.எல் படிக்க அவளுக்குச் சிறகு முளைத்துவிடும். அதற்கப் புறம், பல்கலைக்கழகத்திற்கு எடுபட்டு விட்டால், இவளுக்கு இந்த உலகம் மறந்து போகும். ஆனால் நடந்ததோ எதிர்முரணாக இருந்தது. பகீரதி அதற்குப் பிறகு கல்லூரி போவதையே அடியோடு நிறுத்தி
விட்டாள்.
ஒரு வருடம், படிப்பை மறந்து உலகப் பிரக்ஞைக்கு தப்பி வீடே கதியென்று அடைந்து கிடந்தாள். அப்போது சின்னச் சின்னக் குழப்பங்கள். வருட முடிவில் மீண்டும் படிக்க வேண்டுமென்று கிளம்பினாள். தன்னை வேறு கல்லூரியில் சேர்த்து விடும் படி அம் மாவைத் தொந்தரவு செய்ய ஆரம்பித்தாள். அம்மாவுக்குத் தெரியும் அவள் நன்றாகப்படித்து, முன்னுக்கு வருவாள். அந்த அழகுச் சலனம் ஒரு சிறு சலசலப்புத்தான், கல்லூரி மாறினாள் எல்லாம் சரியாகி விடுமென்று அடியோடு நம்பினாள். இவ்வளவு காலமும் அவள் படித்து வந்தது, யாழ்ப் பாணத்திலுள்ள கல்லூரியில், ஒவ்வொரு நாளும் நீண்ட தூரப் பஸ் பயணம். வெளியிலே நாட்டுப்
19
இதழ் 59

Page 22
பிரச்சினை முற்றி விட்டதால், பஸ் ஓட்டமும் அடியோடு நின்று விட்டது. இனிக் கல்லூரிக்கு போவதானால் சைக்கிளில் தான் போக வேண்டும். டியூஷனுக்குப் போவதற்காக பகீரதிக்கு ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுத்திருந்தாள், அதுவும் கடன் பட்டுத்தான். இனி வேறு வழியில்லை. கல்லூரி மாற்றி விட வேண்டியது தான். பிரைவேட்டாக உடுவில் பாடசாலையில் கொண்டு போய்ச் சேர்த்து விட்டாள். ஏ.எல் கணிதப் பிரிவில் பகீரதி மீண்டும் படிக்கப் போய் வந்து கொண்டிருந்தாள். படிப் பில் புலியாக இருந்தாள். கணிதம் சரளமாகவே வந்தது. ஒவ்வொரு முறை யும் தவணைச் சோதனை யில் நுாறு புள் ளிகள் எடுத்து வந்தாள்.
அ ப'  ேப ா து டியூஷனுக்குப் போவதும் அடியோடு நின்று விட்டது. வீட்டிலேயே இருந்து கணிதம் படிப்பாள். இடை நடுவில், மனம் குழம்பி னாலும் மனதை ஒரு முகப் படுத்திப் படித்துக் கொண்டிருந்தபோது தான், அந்தத் துன்பகரமான சோக சம்பவம் நடந்தது. அவள் வீட்டிலிருந்த சமயம் மாதச் சோதனையை வைத்து விட்டார்கள். அவள் அதற்கு முகம் கொடுக்க நேர்ந்திருந்தால், நான்கு பாடத்திலுமே அதிவிசேட சித்தி பெற்றிருப்பாளே. மாறாக என்ன நடந்தது? அவள் கல்லூரிக்கு போன சமயம், இது ஓர் அதிர்ச்சியூட்டும் செய் தியாக, அவளை எதிர் கொண்டது. அதன் பிறகு அவளுக்குக் கல்லூரிப் பிரக்ஞையே அடியோடு விட்டுப் போயிற்று. வீடு வந்து சேர்ந்த பின்னும் மனம் ஒரு நிலையில் இருக்கவில்லை. முற்றிலும் சிறகொடிந்து போன பறவையாக அவள் நிலைமை. தொடர்ந்து இரு நாட்கள் அவளால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. பகலில் முற்றாக நிம்மதியிழந்து, புத்தி பேதலித்து அவள் அங்குமிங்கு மாக நடைபயின்று கொண்டிருப்பதைப் பார்த்து அம்மா யோசனையுடன் அவளைத் தடுத்து நிறுத்திக் கேட்பாள்.
“என் ன பிள் ளை? இப் ப சோதனை எடுக்காட்டால் என்ன அடுத்த முறை எடுத்தால் போச்சு. நீ எதுக்கு கவலைப்பட வேணும்?
“அம்மா! அதெப்படி இருக்கிறது? நான் எடுத்திருந்தால் நிறைய மார்க் எடுத்திருப்பனே. அதைப்பார்த்து எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பேன். பாவி! நான்! ஒன்றுக்கும் கொடுத்து வைக்கேல்லை என்றாள். மனம் சிதறி அழுது கொண்டே. “நான் வடிவில்லை” என்றாள் தொடர்ந்து, அவளைத் தேற்றும் வழி அறியாது, அம்மா பெரும் கவலைக்குள்ளானாள்.
ஜீவநதி

அவளைத் தூங்க வைக்க என்ன வழி என்று புரிய வில்லை. உள்ளூர் வைத்தியரிடம் சென்று மருந்து மாத்திரைகள் பெற்று வந்தாள். அவர் ஓர் அப்போதிகாரி. அவர் எழுதிக் கொடுத்த மருந்தைக் கொடுத்ததன் பலன் நோய் தீவிரமடைந்ததே தவிரக் குறையவில்லை. பகீரதி எந்நேரமும் வாய் பிதற்றும் முழுப் பைத்தியக்காரியாக மாறிவிட்டிருந்தாள். நிலைக்கண்ணாடி முன் நின்று, ஓயாமல் பேசிபடியே இருந்தாள். இதுதான் அவளுடைய ஆரம்ப அழிவு.
அவளைக் குண மாக்கி இயல்பு நிலைக் குக் கொண்டுவர, எத்தனை வைத்தியம் செய் தும் பயனில்லை. காலம் ஓ டி ய  ேத த வ ர , வாழ்க்கை கண் திறக்க வில்லை. அவளுடைய உலகம் இருண்டு விட்டது. அந்த ஒளிமங்கிப்போன துருப் பிடித்த இருண்ட யுகத்தில் அவள் சராசரி
பெண்ணாகவே இருக்க வில்லை. காலம் அவளை விழுங்கி விட்டது. ஒரு குரூரமான உணர்வுக் கொலைக்காளாக நேர்ந்ததால் அவள் உயிருடனேயே சமாதி வைக்கப்பட்டு, ஒழிந்து போன இந்தக் கொடுமைக் கண் ணீர் நதியில் குளித்தவாறே ஒரு நீண் ட கானல் யுகமாகத் தொடர்கிறது. அவளுக்கு இப்போது வயது நாற்பதாகி விட்டது. அம்மாவின் கண்ணெதிரில் காட்சியொளி மறைந்து போன நிறையிருட்டில் வெறும் ஜடக்கூடாக வெறும் நடைப் பிணமாக அவளைப் பார்க்கப் பொறுக்காமல், பெற்ற வயிறு பற்றியெரிய அம்மா மௌனமாக ஓலமிட்டு அழுகிற சப்தம் காற்றுக்கு இரையாகிக் கலந்து போகிறது. அது எட்டாத வெகு தொலைவில் வாழ்ந்து சிறக்கிற உலகின் ஒளிச்சஞ்சார துருவ நடை மறுபுறம். மனிதர்கள் மனிதர்களாகவே வாழ்கின்ற அத்துருவ உலகில், அவ் வுணர் வுக் கொலைக் கு, ஒரு குற்றவாளியாகவே இனம் காணப்பட்ட ராதாவைக் கண்டு கொள்ள, அவள் தோலுரிக்க, வழக்குப்பேசி வாதிட்டு, அவளைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிச் சிலுவை சுமக்க வைக்க அம்மா படும்பாடு கொஞ்சநஞ்சமல்ல. ஆனால் அது நடந்தேற வேண்டுமே. பகீரதி பற்றிய அந்தக் கொடிய வழக்கு, தீர்ப்பு எழுதப் படாமலேயே விடுபட்டுக் கிடக்கிறது. காரியத்திலல்ல. கற்பனையிலல்ல. உண்மையில் இது ஒரு தீர்ப்பு எழுதப்படாத வழக்குத் தான். அது இன்னும் சபை ஏறாமல் துருப்பிடித்துக் கிடக்கிறது.
000
இதழ் 59

Page 23
அந்த மணல் மேட்டை அரித்தும் நனைத்த கூடிய கடலலை அன்வருடைய பாதங்களையும் க வினியுடைய பாதங்களையும் வருடியவாறு வருவதும் 6 என்ற மாலை நேரம். குளிர் காற்றுடன் வானமும் கறுத்த பிடிப்பதும் விடுவதுமாக விளையாடிக் கொண்டிருந்த "தம்பி குளிர் காத்து அடிக்குது குழந்தையை தூக்கப்பா நீரைப் புடவைத் தலைப்பால் மறைத்தவாறு அட்ரஸ் ஒன்ல
வயது ஏறத்தாழ எழுபதை எட்டிப்பிடித்திருந்தது கோல். வலக்கையில் ஓர் தோற்பை. பித்த வெடிப்புள்ள ! கவர்ந்து செல்லும் பளீரென்ற முகத்தில் கவலையில் கிடந்தன. “பாட்டி இந்த இடத்துக்கு போறது அவ்வளவு சுல் பஸ்ஸில் ஏறி மூன்றாவது ஹோல்ட்டில் இறங்கி றோய வேணும். எப்படிப் பாட்டி போவீங்க ? வானமும் இருட்டுது போவது தான் நல்லம்”. என்றவன் அங்கிருந்த ஸ்டோன் “இல்லைத் தம்பி போக வேணும். எனக்கு உறவு என்று 4
இந்த இடத்தில். இரவு பஸ் ஏறினா நல்லம்." என நெகிழ்ச்சி இருக்கிறன், எங்கட வீட்டை தங்கி விட்டு நாளைக்குப் அணுகினான். மண்ணை விளையாடிக்கொண்டு இருந்த ( இறந்து போயிட்டா, எனக்கு அம்மாவும் இல்லை, நீங்க எ உடைத்தாள். மண் கையால் கண்ணீரைத் துடைத்தாள். இலகுவாக உடைத்தது.
“சரி தம்பி கொஞ்ச நேரம் இதில இருப்பம்” நிறைந்தன நீரால், “பாட்டி அழுகிறீங்களா?” என நெருங்க கொஞ்சம். “இல்லை தம்பி எனக்கும் உன்னைப்போல ஒரு இருக்கே. அதை வார்த்தையில் சொல்ல முடியாது” என நினைவுகள் பாட்டிக்கு ஒரு சீரியல் ஆகின. அதில் பாட்டியும்
பண வாழ்க்கை இல்லை என்றாலும் என்ர மனப் நெய்து கொண்டிருந்தாலும் அந்தப் புடவையில் கிழிசல் வி திடீரென்று வந்த மாரடைப்பு என் கணவனைக் காலனு வைத்திருந்த பணத்தில் நொண்டி வாழ்க்கை வாழ aே
ஜீவநதி

வா
« = 9
பம் மோதிய நுரைகளுடன் வனுடைய ஒரே வாரிசு பாவதுமாக இருந்தது. ஜில் திருந்தது. கடல் நுரையைப்
வினியைப் பார்த்த பாட்டி - என்றவாறு வழிந்த விழி மறக் காட்டிவழிகேட்டாள் 1. இடக்கையில் ஓர் ஊன்று கால்கள். பார்ப்பவர்களைக் 7 கோடுகள் ஆழப் பதிந்து Dபம் இல்லை. 47 ம் நம்பர் ல் எக்ஸ்பிரஸ் இல் போக 1. நீங்க பாட்டி நாளைக்குப் ன் பெஞ்சில் சாய்ந்தான். சொல்லிக்க யாரும் இல்லை
தை
மலர்
வல்
யுடன் பார்த்தாள் பாட்டி. அன்வரோ “பாட்டி உறவாக நான் போகலாம். 47 ம் பஸ் அடிக்கடிவராது” என இதமாக வினியும் ஓடி வந்து “பாட்டி என்ர பாட்டியும். போனமாசம் ங்களோட இருங்க பாட்டி” என இமையை மூடிக் கண்ணீரை வினியின் வார்த்தைகளின் வலிமை பாட்டியின் மனதை
என்றவள் கல் நாற்காலியில் அமர்ந்தாள். நேத்திரங்கள் 1 அமர்ந்தான் அன்வர். இரு நெஞ்சங்களும் நெருங்கின மகன் இருக்கிறான். அவனை வளர்க்க நான் பட்ட கஷ்டம் வழிந்தகண்ணீரைக் கையினால் துடைத்தாள். பழைய நடித்தாள். நிறைந்தவாழ்க்கையின் புடவையைப் பூக்களால் கடவுள் ழ ஆரம்பித்தது எனது விதி என்று தான் சொல்ல வேணும். ன் சேர்த்துக் கொண்டது. அவர் போன பின்பு சேர்த்து பண்டியதாகிவிட்டது. சின்ன வீட்டையும் சீமந்த புத்திரன்
- இதழ் 59

Page 24
சீனுவையும் தவிர முதுசமென்று சொல்லுமளவுக்கு என்னிடம் ஒன்றுமில்லை. தையல் வேலை செய்து கொண் டதால் சேர் ந் த வருமானம் நொண் டி வாழ்க்கையைச் சீராக்கியது. இதற்கு நைந்து போன பாதங்கள் தான் சாட்சி. என இரத்த நாளங்கள் புடைத்துப் போய் வீங்கிக்கிடந்த கால்களைக் காட்டினாள். கால்களைப் பார்த்த அன்வருக்கு தனது அம்மாவின் நினைவு வரவே "பாட்டி எண்ட அம்மாவுக்கும் இப்படி இருந்தது காலப் போக்கில் குணமாகி விடும்” என தேனினும் இனிய வார்த்தைகளால் மருந்து இட்டுத் தொட்டான் இதயத்தை. பாட்டி நன்றியுடன் பார்த்தாள். மீண்டும் தொடர்ந்தாள்.
- சீனுவின் வாழ்க்கைப் பள்ளியில் வறுமைக் கோடுகளைப் பாடங்களாக நான் அனுமதித்ததே இல்லை எல் கே ஜி இல் இருந்து எஞ்சினியரிங் வரை அவனுக்கு எல்லாமே நான் தான். எனக்கும் எல்லாமே அவன் தான். பி.எஸ்.சி எஞ்சினியரிங் பெஸ்ட் கிளாசில் பாஸ் பண்ணியதால் முக்கிய மான கம்பனிகள் எல்லாம் தாமாகவே அழைப்பு விடுத்தன. எல்லாவற்றையும் தட்டிக்கழித்த அவன் இன்டர்நேஷனல் பிரவுன் கம் பனியைத் தேர் ந்
தெடுத்தான் இரண்டு இலட்சம் மாதச் சம்பளம். கார். எனக் கூரையைப் பிய்த்துக் கொண்டு யோகம் குட்டிக் கரணம் போட ஆரம்பித்தது.
| ஆறு மாதங்கள் வேலை செய் தபின் ஆறாவது மாதத்தில் அவனுக்கு அசிஸ்டெண்டாக இருந்த சிவந்தியை வீட்டுக்குக் கூட்டி வந்தான். "அம்மா இவளை கல்யாணம் கட்டிக்கலாமென நினைக்கிறன். அவவுக்கும் என்னைப் பிடித்திருக்கிறது. இவள் ஒரே பெண். அம்மா இல்லை. அப்பா பெரிய தொழிலதிபர். நாளைக்கு முறையாப் பெண் கேட்டிருங்க அம்மா. வாற மாசம் முகூர்த்தம் வைச்சிரலாம்” என வரிசையாக வார்த்தை களை அடுக்கினான். நானும் பார்த்தான் என்ர ஒரே மகன் ஆசைப்பட்டதெல்லாம் இவ்வளவு காலமும் செய்தனான் இதையும் ஆசைப்படுகிறான். பெண் பார்த்தால் மகாலஷ்மி வீட்டுக்கு வந்தது போல் இருக்க மறுநாளே பெண் கேட்கச் சீனுவுடன் சிட்டிக்குப் புறப்பட்டேன்.
சிவந்தியின் அப்பாவோ தணிகாசலம் முதற் சந்திப்பிலேயே கல்யாண வாழ்த்துச் சொல்ல நானும் “ஆல் த பெஸ்ட்” என கல்யாணத்தை நடாத்தி முடித்தேன். கல்யாணம் முடிந்து இரண்டு மாதமும் ஹனிமூன், பிரண்ட்ஸ் எனச் சுத்தினவர்கள் மூன்றாம் மாதம் முடிந்த கையோடு இந்தவீடு சரியில்லை. நல்ல வீடா டவுனில்
ஜீவநதி -

பார்ப்பம் என்று சிவந்தி சொல்ல சீனுவும் வேலைக்குக் கிட்ட என் று டவுனிலை வீடு வாங் கிப் புதுக்குடித்தனம் போய்விட்டார்கள். அம்மா நீங்களும் எங்களுடன் வாங்க”, என சீனு சொல்ல நானும் ஒரே பிள்ளை என்று அவர்களுடன் போய் விட்டேன். பகட்டுக்களை விரும்பாத பணக்காரப் பெண்ணாக இல்லாமலும் வறுமை வந்த போது துரும்பைப் பற்றாமலும் இருப்பாள்; இருக்க வேண்டும் என நம்பிய எனக்கு அவளுடைய செயல்கள் எல்லாம் மாறாகவே இருந்தன. கல்யாணம் முடிந்து மூன்று மாசம் ஆகியும் லேடிஸ் கிளப், வேலை, பியூட்டி பாலர், நைட் ஸோ, எனச் சுற்றுவதிலும் எஞ்சிய நேரத்தை சீனுவுக்குப் புகார் சொல்லுவதிலும் தான் கழித்தாள். வீட்டு
வேலைகள் அவளுக்குக் கசந்தன. நானே வீட்டு வேலை செய் ய வேண்டியாகி விட்டது.
எனது உள்ளம் உடைந்து விட் டாலும் சீனுவுக் காக அதை பொறுத்துக்கொண்டேன். நாகரிக மோகம் கொண்ட அவளுக்கு நான் கதைப்பது, கொண்டை போடுவது, சேலை கட்டுவது போன்ற கிராமியப் பழக்க வழக்கங்கள் பிடிக்காமல் போகவே மூன்று மாதத்தில் கசப்புகள் எட்டிப் பார்க்கத் தொடங் கி இப் பொழுது வெட்ட வெளியில் நர்த்தனம் ஆடத் தொடக்கிவிட்டன. அன் று அதிகாலை எழும் பி விளக்கேத்தி சமையல் வேலைகளை முடித்து விட்டு சீனுவுக்கு, 'ஏழரை சனி"
சிவன் கோவிலுக்குப் போய் எள் எண்ணை எரிக்கலாமென நினைத்த நான் சீனு, சீனு எனக் கதவைத்தட்டினேன். பதிலுக்கு சிவந்தி தான் குரல் கொடுத்தாள். ஏன் இப்ப கதவைத் தட்டுறீங்க?. நைட் ஸோ முடிஞ்சு இப்ப தான் படுத்தனாங்கள் விடிய நாலு மணிக்கு ஏன் உயிரை வாங்குறீங்க?
“சிவந்தி சமையல் எல்லாம் முடிஞ்சுது நான் சீனுவுக்கு எள் எண்ணை எரிச்சுப் போட்டு வாறன், அது தான் சொல்லத் தட்டினனான்”. கோவிலுக்கு சாமி கும்பிடவா போறனீங்கள்? ஊர் வம்பளக்க எல்லோ போறது. யாருக்குச் சனியனோ? யாரு சனியனோ?" எனப் பதிலுக்கு வார்த்தைகளை அள்ளி வீசினாள். சீனுவோ ஒரு வார்த்தை பேசாமல் ஊமையானான். சிவந்தியின் குணம் தெரிந்து வாயை மூடினானோ என்னவோ? பிறகு நடக்கப் போகும்பெரிய நிகழ்ச்சிக் குரிய கரு அன்று தான் உருவானது.
காலம் யாருக்கும் காத்திருப் பதில்லை வேகமாக ஓடியது. அவளோ சகஸ்ர நாமம் சொல்லும் ஐயர் போல் தலையணை மந்திரங்களை ஓதினாள்,
22
-இதழ் 59

Page 25
அம்மந்திரங்களுக்கு சீனுவும் மயங்கினான் போலும். அம்மா சாப்பிட்டீங்களா? ரீ.வீ பார்த்தீங்களா? என நித்தம் கேட்கும் சீனு இப்பொழுதெல்லாம் கதைப் பதைக் குறைத்துக்கொண்டான். நானும் அவனுடைய முகக் குறிப்பை உணர்ந்து மெளனமானேன். சிவந்தியோ முடிவெடுப்பதில் குறியாக இருந்தாளே தவிர மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிப்ப தாகத் தெரியவே இல்லை.
அன்றும் அப்படித்தான். அவர்களுடைய வெடிங் டே , அவள் வேலைக்கு லீவு போட்டிருந்தாள். “ஈவினிங் ரெடியாக இரு ஃபிரெண்ட்ஸ் எல்லாம் வந்து போனதன் பின் வெளியில் போகலாம். அங்கு உனக்கு ஒரு சப்ரைஸ்" என சீனு காலையில் சொல்லிச் சென்றான். நானோ கல்யாண நாள் என்று வீட்டைப் பெருக்கி சமையல் எல்லாம் முடிச்சு அப்பாடி என ஓய்வெடுக்க இரண்டு மணி ஆகிவிட்டது. அவளோ தன்னை அலங்கரிப்பதிலேயே அக்கறை காட்டினாள். வேலைப்பளு பாதங்களைப் பதம் பார்க்க கால் வீங்கத் தொடங்கியது எனக்கு. நோவால் துடித்துப் போன நான் சீனுவுக்கு ஒரு போன் போட்டு “காலுக்கு போடுகிற குளிசை முடிஞ்சுது வாங்கிக்கொண்டு வா வரேக்கை” என்றன். நேரம் ஓடவே சீனுவைக் காணாத அவள் போன் போட்டாள். பதில் இல்லை. பொறுமை இழந்து வீட்டுக்கும் கேற்றுக்கும் இடையில் நடந்தாள். மணி, மூன்று அளவில் அவனுடைய கறுப்பு நிற பி.எம்.டவிள்யு. கார் காம்பவுண்டுக்குள் நுழைந்தது ஷூக்களைக் கழற்றி வாசலில் எறிந்தவன், பிரீப் கேசை மேசையில் போட்டு விட்டு சுழல் நாற்காலியில் சாய்ந்தான். "அம்மா நீங்க சொன்ன மருந்து ஒரு இடமும் கிடைக்கவில்லை அடுத்த டவுனுக்கு போய் வாங்கி வந்தன். வாற வழியில் மழை. கார் ஓட முடியாமல் போயிட்டுது. அது தான் லேட்டாகி விட்டது" என மருந்துப் பார்சலை என்னிடம் கொடுத்தான்.
அவ் வளவு தான். “வரவர ரெம் பத்தான் அம்மாவில அக்கறை. நான் ஒருத்தி இங்க காத்திருக் கிறன் என்றில்லை மருந்தா வாங்கப் போனனீங்க? ஒரு நாள் மருந்து இல்லை என்றால் உயிரா போயிரும்? அல்லது கால் கழன்றா போயிரும்? என்ர அப்பாவும் தானே தனியாக இருக்கிறார். நீங்களும் அப்படிப் போய் இருக்கிறது", என மூச்சு விடாமல் அக்கினிக் கோல்களை அள்ளி வீசினாள். சீனுவோ நாற்காலியைக் காலால் உதைத்தானே தவிர நாலு வார்த்தை பேசவில்லை. அவனுக்கும் இப்பொழுது காது வழி போன சகஸ்ர நாமம் மூளையில் பதிந்து வாய்வழியாக அம்பெனப் புறப்பட்டது.
“சிவந்தி சொல்லுவது சரி தானே. உங்களுக்கு டவுன் வாழ்க்கை சரிவராது. நாளைக்கு டிக்கெட் போடுறன் நீங்க ஊருக்குப் போயிருங்க. நான் மாதம் ஒரு முறை வந்து பார்க்கிறான்". என அவளுடைய வார்த்தைகளுக்கு எண்ணெய் வார்த்தான். எனக்கோ ஜீவநதி -

யாரோ பல முறை சம்மட்டியால் ஓங்கிப் தலையில் அடித்தது போலிருக்க சிவந்தியின் அப்பாவினுடைய கார் வீட்டினுள் நுழைந்தது. நான் குசினியுள் வேலையில். மூழ்கலானேன். நேரே குசினிக்குள் வந்த தணிகாசலம் “வணக்கம் அம்மா” என, நானும் பதிலுக்கு வணக்கம் சொல்லி இப் படியான தகப் பனுக்கு இப்படிப்பிள்ளையா? என்று நினைத்தபடி சாப்பாடு களை அடுக்கலானேன்.
'பார்ட்டி'க்கு வந்திருந்தவர்கள் எல்லாம் வாழ்த்தி விடை பெறத் தணிகாசலமும் போய்விட்டார். ஆராவது வெளியில் தட்டுப்படுகிறார்களா என எட்டிப்பார்த்த எனக்கு மரத்தடியில் யாரோ கதைப்பது கேட்கவே பார்வையை சுற்றும் முற்றும் சுழல விட்டேன். மரத்தடியில் சிவந்தியின் லேடீஸ் கிளப் சிநேகிதி ஒருத்தி சிவந்தியுடன் சிரித்துச் சிரித்து பேசிக் கொண்டிருந்தாள். சமையல் எல்லாம் சுப்பரடி. யார் எல்லாம் சமைத்தது?. எல்லாம் யாரு? வீட்டுக்கார ஆயா தான். பதில் இடியாய் இறங்கியது என் தலையில் தான். கொஞ்ச நேரம் முன்பு சம்மட்டியால் அடிக்கப்பட்ட தலையின் வலி குறையு முன்னரே மீண்டும் ஆணி அடிக்கப்பட்டது. நானும் ஒரு தீர்மானத்துக்கு வந்து விட்டேன். வயோதிப உணர்வுகளையாவது உணரத் தெரியாத மனிதப் பிணங்களுடன் வாழ்வதை விட தனிமையே மேலென உணர்ந்த நான் “கிராமம் போகிறேன்" என எழுதி வைத்து விட்டு இந்தப் பையுடன் வந்து விட்டன். பையை எடுத்து மடியில் வைத்த அன்வர் பாட்டியின் துன்பத்தை கேட்டு “சீர் கெட்ட மனிதர்களா?” என்று மனதில் திட்டியவாறு பாட்டியின் வலிகளுக்கு வலி நிவாரணியாக மாறினான். “பாட்டி இந்த உலகத்தை நாம் அனுபவ வழியாகத் தான் பார்க்க வேண்டும். அங்கு வெப்பமும் தட்பமும் மாறி மாறி அடிக்கும். வெண் முகிலுடன் கரு முகிலும் ஓடும். மேடும் பள்ளமும் ஏறி இறங்கும் இதற்கு நாங்கள் பண்பட்டால் வாழ்க்கை இனிக்கும். என்னைப் பாருங்க பாட்டி வினியத் தவிர எனக்கு யாரு இருக்காங்க? உங்களுக்கு நான் ஒரு மகனாகத் தெரியவில்லை? எனக்கு ஒரு தாயன்பு வேண்டும் அம்மா. கலங்கிய கண்களுடன் பாட்டியின் கையைப் பிடித்தான். அந்தக் கைகளின் சங்கமத்தை கண்ணீர் ஆசிர்வதித்தது. வினியின் தனிமையை உங்களால் தான் போக்க முடியும் அன்புருவான அன்னையாக எங்கட வீட்டுக்கு வாங்க அம்மா. சீனுவும் சிவந்தியும் நிச்சயம் மனம் மாறி உங்களைத் தேடி வருவினம். பதிலுக்குக் காத்திராமல் தோற் பையைத் தோளில் போட்டான் பாட்டி ஊன்று கோலை ஊன்றி நடக்க ஓடி வந்த வினி தானும் “பாட்டி” என்று ஊன்று கோலை சின்னக் கைகளால் பிடித்து நடந்தாள். பண வாசனை அற்ற மன வாசனை உள்ள அந்த மனையினுள் அன்புருவங்கள் மூன்றும் அடி வைத்தன.
000 23
இதழ் 59

Page 26
சொல்ல மறந்த கதை
இதயம் முழுக்க விரவியிருக்கின்றது சொல்ல மறந்த ஒரு சொல்லின் வலிகளும் வேதனைகளும்
அந்தச் சொல் பெறுமதியற்றுப் போய்விடக் கூடும் உன்னுடன் பகிர்ந்து கொள்ள முடியாத போது
பேசவும் முடியாது மௌனத்தை
அது உணர்வின் சுமையாகி . எனக்குள் ஒலிக்கின்றது சுனாமியின் வலியெனவோ
அல்லது அதனைவிடப் பாரமான ஒரு நிகழ்வின் நினைவாய் கசிகின்றது
பின் மாலைப் பொழுதாய் எனக்குள் இருள் கவிந்துகொண்டிருக்க குப்பைத் தொட்டிக்குள் கிளறியபடி என் மனது நனவுகளில் கழிகின்றது
சுவர்ணம் வடிந்து கொண்டிருக்கின்ற பொழுதுகள்
சற்று விரு விருப்பு உதிர்ந்து கொண்டிருக்கின்றது மயிலிறகுச் சலவையில் தேகம் உலைந்து நித்திரைக் கரையைத் தொட எண்ணுகின்றது
காற்றுச் சிதைந்து சிதைந்து வீசிக் கொண்டிருக்க என்னைப் போர்த்திய விழிகளில் மயங்கி விழுந்து விடுகின்றது என் ஆத்மம்
புதிதாய் முளைக்கின்ற கனவுகளில் எல்லாம் வெற்றிடமாகி மறைந்து கொள்கின்றது
நான் என்னை அழைக்கின்ற கை ரேகைகளில் விழுந்து விட்டு உன்னை அழைக்கின்றேன்.
நித்திரை விரைக்கின்றது இரவுச் சூரியன் முளைக்கின்றது
எல். வஸீம் அக்ரமின் B கவிதைகள்
ஜீவநதி.

நத்தைகளின் ஓட்டம்
மழைகளை எதிர்பார்த்து பயிர் செய்ய காத்திருக்கும்
ஓர் கனவு......
சோதிடம் பார்த்து வாழாமல் வீழும் ஓர் உணர்வு
எல்லாம் எப்போதும் யதார்த்தமாய் நகர்கிறது இன்னும் பழைய முறைகளில்
வாழ்வு நெறிகள் எல்லாவற்றிலும் பின்னப்பட்டு
க -
குனிந்த தலைகளுடன் ஒடுங்கிய பார்வையுடனும் நகர முடியாது
நத்தைகள் ஒட பழகாவிடின் அதன் இனம் அழிந்து போகும் நத்தையாக முடியாது நகர்ந்து
வேகமாய் நகர்ந்து
காலத்தின் முடிச்சுகள் அவிழ்த்துவிடுவோம்."
எஸ்.திலகவதி
24
இதழ் 59

Page 27
உற்பத்திக் கருவிகளும்
உற்பத்தி உறவுகளும் உலகில் மக்கள்
சமுகத்தையே மாற்றுது!
கற்கால மனிதர்களால்
கல்லினாலே செய்ததனைத்தும் பிற்காலம் பிறிதொன்றாய்ப்
பிறந்து மாறுது!
எஃகுலைஞன் தச்சனோடு
ஏர் உழுவோன் இடையனென எப்படியோ நால்வரிடை
உறவு மலருது!
வேட்டையாடி ஊனுணவை
விருப்போடு உண்டவர்க்கு வேறு தொழில் உற்பத்தியாய்
விவசாயமாய் மாறுது!
கச்சைகூட இல்லாத
கற்கால மனிதருக்கு கைத்தறிமின்தறியில்
கவர்ச்சி உடையாகுது.
சந்தை வாய்ப்பைத்தேடுது!
கட்டை வண்டி கால்நடையைக்
கண்டுற்ற மனிதரிடை கடுகதிப் பேருந்து
விமானமென மாற்றுது!
அப்பப்ப வினைஞர் பலர்
அவரவர் சிந்தனையால் அறிவு கொண்ட புதுக்கருவி
படைத்துத் தருகிறார்!
இறைவணக்கம் அரசியல்
இன்னோரன்ன அனைத்திலுமே இயங்கியல் பொருளுடமை
இரண்டறவே பிணையுது.
உடற்பளுவைக் குறைத்து நிதம்
உற்பத்தியைப் பெருக்கியதால் உலகிடையே புரட்சிசெய்து
சந்தை வாய்ப்பைத்தேடுது!
சி.வே.சிற்றரசு
ஜீவநதி

தீராத நோய்!
சராசரிமனிதர்கள் நோய் நோயெனச் செத்துக்கொண்டிருக்க சராசரிவைத்தியர்கள் பாவம் பணம் பணமென செத்துக்
கொண்டிருக்கிறார்கள்!
பெறுமானம்
எங்களிற் பலரை அவன் சுட்டு வீழ்த்தியபடியே இருப்பான் வீழ்த்திய உடல்களின் எண்ணிக்கையை வைத்தே
அவனுக்கு பதவி உயர்வு பரிந்துரை செய்யப்படுகிறது!
சொந்தம்
குயிலும் நானும் ஒரு வகையில் சொந்தக்காரர்கள்
இரவல் வீடுதான் இருவருக்கும்.
கைமிச்சம்
வாழ்நாளில் நான் குடை வாங்கியதே கிடையாது மழைவெய்யிலெல்லாம் என் வீட்டுக்குள்ளே!
ஷெல்லிதாசன்
25
இதழ் 59

Page 28
வெகுமக்களை எளிதில் தன் வசப்படுத்தும் வீரியத்தோடு திரையிசைப் பாடல்கள் காணப்படுகின்றன. கவித்துவப் பெறுமதியின்றி இசைக்கு அமைவான வார்த்தைகளின் கட்டமைப் போடு, குறு ஜீவிதத் தன்மையினை கொண்டதாக அநேக பாடல்களைத் தரிசிக்க முடிகிறது. தமிழ்ச் சமூகத்தின் வாழ்வியலில் வசீகரமான தருணங்களிலெல்லாம் சினிமாப்பாடல்கள் பங்கெடுப்பதை இனங்காணக் கூடியதாக வுள்ளது. இசையின் முறிப்பு நடனத்திற்குப் பொருத்தமான சொற்தேர்விலும், அடர்த்தி யான அர்த்தத்தினை அவாவும் பிரயத்தனத் தோடு பாவநாசம் சிவன், மருதகாசி, உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கண்ணதாசன், வாலி, வைரமுத்து, பா.விஜய், தாமரை போன்றோர் பாடல் புனைய எத்தனித்துள்ளனர். எனினும் சேர்மக்கலையான சினிமாவில் விட்டுக் கொடுப்புகளே முதன்மைப்படுத்தப் படுவதால் கனதியான கவித்துவத்தினைப் புறந்தள்ளி,
ஊரெல்லாம் உன் பாட்டுத்
கச்சிதமான மொழியடுக்குகளை கையாண்டு வணிக வெற்றியின் உச்சத்தினை எட்டினர். மகிழ்நெறியை நடுவனாகக் கொண்ட வர்த்தக நச்சுவட்டத்திற்கு வளைந்து கொடுத்து அரைநூற்றாண்டுகளுக்கு மேலாக விந்தைமொழி வங்கியாக ஊழியஞ் செய்த கவிஞர் வாலி அவர்கள் யூலை-18-2013 அன்று இயற்கை எய்தியுள்ளார். அவர் குறித்த சிறு பதிவாக இக்கட்டுரை அமைகிறது.
திருச்சியிலுள்ள திருப்பராய்த்துறையில் 29ஒக்ரோபர்-1931 அன்று பிறந்து திருவரங்கத்தில் வளர்ந்த டி.எஸ்.ரங்கராஜன் சிறுவயதிலேயே ஓவியக் கலை மீது வாத்சல்யம் கொண்டிருந்தார். ஆனந்த விகடன் சஞ்சிகையில் ஓவியங்களை வரைந்த “மாலி” மீது கொண்ட ஈடுபாட்டை கண்ட, நண்பரொருவர் இவருக்கு “வாலி” என்று புனைபெயரிட்டார். 1958 இல் "அழகர் மலைக்கள்ளன்” திரைப்படத்திற்கு பாடலை எழுதத் தொடங் கியவர் இற்றைவரை 15000 பாடல்களை எழுதிக் குவித்துள்ளார். இயக்குநர் வசந்தபாலனின் படமொன்றுக்கு இறுதிப் பாடலைப் புனைந்து கொடுத்து விட்டு சென்னை கிரீம்ஸ் சாலை யிலுள்ள அப்பலோ மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் அனுமதி பெற்றவர், நுரையீரல் தொற்றால்
ஜீவநதி

சிகிச்சை பலனின்றி உயிர் நீத்தார்.
அவதார புருஷன், பாண்டவர் பூமி, கிருஸ்ன விஜயம் போன்ற நூல்களை எழுதியுள்ள வாலி, 2007 இல் பத்மஸ்ரீ விருதினையும், ஐந்து தடவை தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதினையும் பெற்றுள்ளார். சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம்,
தான் உள்ளத்தை மீட்டுது
இ.சு.முரளிதரன்
போன்ற படங் களிலும், கையளவு மனசு என்ற தொலைக்காட்சித் தொடரிலும் நடித்துள்ளார். திரைத் துறையில் நின்று நிலைத்தமைக்கு முகாந்திரமாக அமைந்த எம்.எஸ்.விஸ்வநாதனின் புகழை விதந்தோது வதில் விருப்புக் கொண்டிருந்தார். கடவுச்சீட்டு (pass port) இல்லாத கவிஞராக அந்திம காலம் வரை வாழ்ந்த சினிமாப் பிரபலம் இவராகவே இருக்கலாம்!
படைப்பாளுமையூடாக இலக்கியத் தரத் தினை எட்ட முடியாத தருணங்களில், பழந்தமிழ் இலக்கியங்களை நகலெடுத்து பாடலாக்கும் நுட்பத் 'தினை தமிழ் சினிமாப்பாடலாசிரியர்கள் தொன்று தொட்டு கையாண்டு வருகின்றனர். கண்ணதாசனிடம் மிகை வெளிப்பாடாக இனங்காணக்கூடிய இப்பண்பு வாலியிடம் அருகியே காணப்பட்டுள்ளது.
“மல்லிகையே வெண் சங்காய் வண்டூத வான் கருப்பு
வில்லி கணை தெரிந்து மெய் களிப்ப” என்னும் நளவெண்பா அடிகளை, “மல்லிகையை வெண் சங்காய் வண்டினங்கள் ஊதும்” என ஆடற் கலையே பாடலில் (படம் – ஸ்ரீராகவேந்திரா) பதிவு செய்துள்ளார். மேலும் “யாயும் ஞாயும்.." என்ற கலித்தொகைப் பாடலில் இடம்பெறும் “செம்புலப்
இதழ் 59

Page 29
பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாங் கலந்தனவே என்ற அடிகளை “நீரும் செம்புலச் சேறும் கலந்தது போலே கலந்தவர் நாம்” என்று “முன்பே வா என் அன்பே வா” பாடலில் பாடபேதம் செய்து பயன்படுத்தியுள்ளார் “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்து வோம்” என்ற பாரதியின் வரிகளை “மாதர் தம்மை கேலி பேசும் மூடர் வாயை மூடுவோம்” (படம் – மனதில் உறுதி வேண்டும்) எனக் கையாண்டுள்ளார்.
யாப்பிலக்கணத் தெளிவு கைவரப் பெற்றதால் அலாதியான சந்தங்களையும், அற்புதமான அணிகளை யும் திரையிசைப்பாடலுக்குள் சிறைப்பிடித்துள்ளார் “அழகுமலராட” என்ற பாடலில் “பகல்நிலவு பல நினைவு இரு விழியில் வரும் பொழுது” என நகரும் வரிகளில் கருவிளங்காய்ச்சீரின் அமைப்பினை தரிசிக்க முடிகிறது. அநாயாசமான சொல்லாட்சியினை “வாலி” கையாண்டு நயக்க வைத்துள்ளார்.
“அதுவல்லவோ பருகாத தேன்! அதை இன்னும் நீ பருகாததேன்” ஊதா ஊதா ஊதாப் பூ ஊதும் வண்டு ஊதாப் பூ” “எந்த வேர் வைக்குமே வெற்றிகள் வேர்
வைக்குமே” என்பன தக்க எடுத்துக்காட்டுக்களாகும்.
வாலியின் பாடல்கள் எம்.ஜி.ஆரின் விம்பத் தினை விஸ்வரூபமாக்கி பிரார்த்தனைக்குரிய பிரதிமை யாகச் செப்பனிட்டு அரசியல் வெற்றிக்கு அடித்தள மிட்டுள்ளன. நான் ஆணையிட்டால், மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், கொடுத்ததெல்லாம் கொடுத்தான், நான் செத்துப் பிழைச்சவண்டா போன்ற பாடல்கள் பாமர அரசியலை செதுக்கும் நுட்பத்தோடு அமைந்திருந்தன. வாலியால் தனிநபர் துதியினை இறுதிவரை கைவிட முடியவில்லை. ராஜ்யமா இல்லை இமயமா (ரஜனி காந்த்) இளமை இதோ இதோ(கமலஹாசன்) ஒரு நாயகன் உதயமாகிறான் (கே.பாக்யராஜ்) நதியா நதியா நைல்நதியா(ந்தியா) ஓல்டு மாடலு பாடலில் “காதலுக்கு மரியாதை செய். சொல்வது உங்க நண்பன் விஜய்' “கலக்குவேன்" பாடலில் “நான் சொன்னா நம்பு. உன் நண்பன் தானே சிம்பு” போன்றன தனிநபர் பிரார்த் தனைக்கு வலுச்சேர்க்கும் வகையிலான திட்ட மிட்ட
வரிகளேயாகும்.
ஆபாசமான - விரகதாபத்தின் உச்சமான பாடல்களுக்கு வாலியே ஒட்டுமொத்த குத்தகைக்காராக குற்றுஞ் சுமத்தப்படுகின்றார். நேற்று ராத்திரி யம்மா. நிலாக் காயுது, நான் ஆளான தாமரை, சக்கரை இனனிக்கிற சக்கரை போன்ற பல பாடல்கள் வாலி மீது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தின. அனைத் திற்கும் உச்சமாக “சர்க்கரை வள்ளிக் கிழங்கு சமைஞ்சது எப்படி" என்ற பாடல் வாலி மீது ஆபாசக் கவிஞர் என்ற
ஜீவநதி

“லேபிளை" ஒட்டி பலரை முகஞ்சுழிக்க வைத்தது. அப்பாடல் இயக்கநர் ஷங்கரால் எழுதப்பட்ட பின்பு, ஓசைக்கேற்ப தன்னால் ஒழுங்கு படுத்தப்பட்டதாக கூறித் தப்பிக்க முயன்றார். எனினும் பட்டிமன்றங்களின் பேச்சாளர்களோ வாலிவதை நிகழ்த்தும் இராமபாண மாக அந்தப் பாடலையே பயன்படுத்தி வருகின்றனர். முக்காடு போட்ட வார்த்தைத் தோரணங்களால் கட்டமைத்த விரசம் சுவறிய பாடலான “மாலையில் யாரோ மனதோடு பேச..." என்ற பாடலானது அற்புதமான அனுபவங்களை தொற்ற வைக்கும் வகையிலே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தீவிர இலக்கிய வாசனையற்ற சுவைஞர் களின் அவையிலே வாலி அமரக் கதாநாயகனாகவே வலம் வந்தார். மாயா மச்சீந்திரா பாடலில் வரும் (படம் - இந்தியன்)
"பொத்தி வைத்த தித்திப்பை நீ தந்தாலென்ன
முத்தமிட்டு சர்க்கரை நோய் வந்தாலென்ன” போன்ற வரிகளில் கிறங்கிப்போன முகப்புத்தகப் பதிவர்கள் பலர் வாலிக்கு "வாலிபர் கவிஞர்" என்று நாமமிட்டு மகிழ்வெய்தினர்.
தாய்மையின் சிறப்பினை தமிழ்சினிமாப் பாடல்களிலே அதிகமாக வெளிக் கொணர்ந்த பெருமை வாலிக்கே உரித்தானது. அம்மா என்று அழைக்காத உயிரில்லையே, நானாக நானில்லை தாயே, காலையில் எழுந்ததும் கண் விழித்தால், மாதா உன் கோயிலில் போன்ற பாடல் களில் வாலி கம்பீரமாகவே காணப்படுகிறார். “அம்மா என்றழைக் காத உயிரில்லையே" என்ற பாடல் திருச்சியில் உள்ள கோயிலொன்றில் கல்வெட்டாக வைக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது. '
கூறியது கூறலாகவும் வாலியின் பல பாடல் வரிகளைக் காண முடிகிறது.
“கூவுகின்ற குயிலை கூட்டுக்குள் வைத்து பாடொன்று சொன்னால் பாடாதம்மா தோகையில் தன்னை சிறைவைத்துப் பூட்டி
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா” என்று "கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே” (படம் - புதுப் புது அர்த்தங்கள்) பாடலில் கையாண்ட
வரிகளை
“குயிலப் புடிச்சிகூண்டிலடைச்சு
கூவச் சொல்லுகிற உலகம் மயிலப் புடிச்சிகால உடைச்சு
ஆடச்சொல்லுகிற உலகம்” | என்று சின்னத்தம்பி திரைப்படத்தில் மீட்டெடுத்துப் பயன்படுத்தியுள்ளார்.
கண்ணதாசனின் தத்துவச் சிதறல்களுக்கும் , இலக்கிய எளிமைப்படுத்தல்களுக்கும் தமிழ்த் திரை சுவைஞர் அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில் வாலி
27
இதழ் 59

Page 30
கனவுத் தொழிற்சாலைக்குள் நுழைந்தார். வாலியின் கீர்த்தி மிகு பாடல்களின் இறும்பூதுகளெல்லாம் கண்ண தாசனின் காலடிக்கே சென்று விட்டன. "தீர்க்க சுமங்கலி" திரைப்படத்தில் இடம்பெறும் “மல்லிகை என் மன்னன் மயங்கும்” என்ற பாடல் கண்ணதாசனால் எழுதப் பட்டதாகவே இசைத்தட்டுகளில் காணப்படுகின்றது. இவ் வாறு வாலியின் எண் ணற்ற பெருமைகளை எந்தவிதமான திட்டமிடலுமின்றி கண்ணதாசன் ஈட்டியுள்ளார். தஞ்சைப் பல்கலைக்கழக துணைவேற்தர் இவவை நடராசன் அவர்கள் வாலி அமர்ந்திருந்த மேடையொன்றில் “காற்று வாங்கப் போனேன்” என்ற பாடலைக் குறிப்பிட்டு “இப்படிக் கண்ணதாசன் போல அர்த்தச் செறிவுடன் இன்று எழுதுவோர் யாருமில்லை" என்றார். எனினும் அப்பாடலுக்கு வாலியே உரித்துடை யவர். நடிகை மனோரமா பேட்டி ஒன்றிலே “கண் போன போக்கிலே கால் போகலாமா” என்ற பாடலைப் பாராட்டி “கண்ணதாசன் போல இப்போது உள்ளவர்களால் எழுத முடியுமா?” என்று சவாலாகக் கேட்டார். அப்பாடல் வாலி எழுதியதென்பதை அவரும் அறிந்திருக்கவில்லை. இயக்குநர் மணிரத்னத்தின் சகோதரரான தயாரிப்பாளர் ஜீ.வி. அவர்கள் “நிலவு மொரு பெண் ணாகி" என்ற பாடலை கண்ணதாசன் பாடியதாக குறிப் பிட்டு சமகாலக் கவிஞர்களைக் கிண்டலடித்தார். எனினும் அந்தப் பாடலுக்கும் வாலியே சொந்தக் காரர் என்பது வியப்பான உண்மை யாகும்.
ஒரு  ெப ண  ைண ப பார்த்து, ராஜாவின் பார்வையில் ராணியின் பக்கம், தரைமேல் பிறக்க வைத்தான், மாதவிப் பொன் மயிலாள், மூக்குத்திப் பூமேலே, ஸ்ரீரங்க ரங்க நாதனின், காற்றில் வரும் கீதமே, உன் மதமா என்மதமா, ஓ.பட்டர் பிளை என்றவாறாக எண் ணற்ற ஜீவிதத் தன் மை மிகு பாடல்களை வாலி புனைந்துள்ளார். எம்.ஜி.ஆர் நடித்த அரச கட்டளை திரைப்படத்திற்கு “ஆண்டவன் கட்டளை முன்னாலே - உன் அரச கட்டளை என்னாகும்” என்று பல்லவி எழுதியபோது எம்.ஜி.ஆர் சற்றே கடுப்பாகி விட் டார். வாலிக்கு உடனடியாகக் காரணம் புரியவில்லை. “ஆண் டவன் கட்டளை” என் பது சிவாஜிகணேசனின் திரைப்படத் தலைப்பு என்பதை எம்.ஜி.ஆர் தெளிவு படுத்திய பின்னர் வாலி பல்லவியை மாற்றியமைத்தார்.
செறிவான அர்த்தம் பொதிந்த கவித்துவமான பாடல்கள் பலவற்றையும் வாலி திரைப்படங்களுக்குள் பதியம் போட்டுள்ளார்.
ஜீவநதி
28

“நியூ யோர்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது நான்க கண்ணாடிச் சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும்..."
என்று “சில்லென்று ஒரு காதல்” திரைப் படத்திலே உன்னத அனுபவத் தொற்றலை நிகழ்ந்தும் வகையிலான பாடலினை எழுதியுள்ளார்.
இருக்கிறானா? இல்லையா? எனும் அய்யத்தை எழுப்புவது இருவர்; ஒன்று - பரம்பொருளான பராபரன்; இன்னொன்று ஈழத்துத் தமிழர்க்கு அரும் பொருளான பிரபாகரன்!
ஜீனியன் விகடன் சஞ்சிகையின் 06-032011 அன்று பார்வதியம்மாளின் அஞ்சலிக் கவிதை இடம்பெறும் வரிகளே மேலுள்ளவை!
வாலி பழகு வ தற் கு இனிய மனிதராகக் காணப் பட் டார் . பிரமுகர்த்தனமற்ற எளிமையான ப ண புடன் பேசும் ஆளுமை மிக்கவர். பல தடவை தொலை பேசியில் உரையாடிய அனுபவத் திலேயே இக்கருத்தினைப் பதிவு செய்கிறேன். நளமயந்தி தட்டச்சுப் பிரதியினை வாசித்து விட்டு கனிவோடு வாழ்த்தினார். "நகரும் படிமங் களில் நாகேஷ் ” என் ற தலைப் பில் எழுதிய கட்டுரை
வெளிவந்த ஜீவநதியை அனுப்பி வைத்தேன். கட்டுரையைச் சிலாகித்துப் பேசியதோடு யாழ்ப் பாணத்திலிருந்து வெளிவரும் சஞ்சிகை முயற்சியினையும் மனமு வந்து பாராட்டினார்.
“நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜன்தான்
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்” என்ற வரிகளில் திருமாலின் பெருமையும், சுயநாமம் சார்ந்த இறும்பூதும் வெளிப் படும் வகையிலே “தசாவதாரம்" திரைப்படத்திற்கு பாடலினைப் புனைந் திருந்தார், "வாழ்வே மாயம்” திரைப்படத்திற்கு வாலி புனைந்த வரிகளை எழுதி, அஞ்சலி செலுத்தி நிறைவு செய்கிறேன்.
“தாய் கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை நோய் கொண்டு போகும் நேரமம்மா!”
இதழ் 59

Page 31
நேர்க
தமிழ் இன் எஸ்.சி
து தமிழ்
கடு காரன் இல ஆய்
பேராசிரியர் எம்
பேராசிரியர் அவர்களே உங்களுடைய குடும்பப் பி குறிப்பிடுவீர்களா?
கரவெட்டி கிழக்கு கிராமத்தில் சாதாரண கார் சாரதியாக இருந்தார். தாயார் ஒரு புலமை ச.பொன்னம்பலபிள்ளையிடம் பாடம் கேட்ட தாயார். பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்க தாயாரின் வீட்டினைப்பற்றிக் குறிப்பிடும்போது எனக்கு சகோதரர்கள் நால்வர் அண்ணா ஓய்வுபெ உடுவில் மகளிர் கல்லூரியில் ஆசிரியராக உள்ள ஆணும் ஒரு பெண்ணும் எனக்குப் பிள்ளைக மருமக்களும்கூட வைத்திய கலாநிதிகள்தான். சேயவனுடன் அமைதியாகவும் மகிழ்ச்சிகரமாகவு
எனது கல்விப் பின்னணியைப் பொ மெதடிஸ்தமிஷன் பாடசாலையை முக்கியமாகக் ( சித்திபெற்றேன். தமிழ், இலக்கியம் என்பவற்றில் குரிய தமிழ் ஆசிரியர் திரு ஆ.த.சுப்பிரமணியம் மிட்டவரும் அவரே என்பது குறிப்பிடத்தக்கது. கல்வி முயற்சியிலிருந்து விடுபட்டிருந்தேன். அ. வரன்முறையாக தமிழ் இலக்கண, இலக்கியங்க படித்து சைவப்புலவர் பரீட்சையிலும் பால பண்ட இன்று இலக்கணத்தை இலக்கியம்போல் கற்பிப்பு எனலாம். பின்பு கரவெட்டி விக்னேஸ்வரா கல்டு ஆனால் பின்பு வெளிவாரியாகவே உயர்தரப் தெரிவானேன்.
நீங்கள் தமிழ்த்துறைப் பேராசிரியராக வரவேண்டும்
உண்மையில் நானொரு தமிழ் ஆசிரியர் ஆனால் இறையாசி கூடிவர, நான் தமிழ் பேராசிரி
ஜீவநதி

5ாணல்
த்துறைப் பேராசியராக இருந்து று ஓய்வு பெற்றுள்ள பேராசிரியர் வலிங்கராஜா அவர்கள் மரபுவழித் மிழிலக்கியங்களிலும் ஈழத்து லெக்கிய வரலாற்றிலும் பெரிதும் பாடுகொண்டிருப்பவர். இதன் சமாக 19 ஆம் நூற்றாண்டு ஈழத்து க்கியத்தின் சிறப்புகளை இவர் வு மூலம் நிறுவி வருபவராவார்.
ஸ்.சிவலிங்கராஜா
ன்னணி, கல்விப் பின்னணி என்பன பற்றி சுருக்கமாக
T குடும்பத்தில் பிறந்தவன் நான். தந்தையார் வாடகைக் மப் பாரம்பரியத்தில் வந்தவர். வித்துவ சிரோமணி கரவெட்டி கார்த்திகேசுவின் பேர்த்தியாரே எனது கள் "எனது அனுபவம்” என்ற தமது கட்டுரையில் எனது அது ஒரு பல்கலைக்கழகம் எனக் குறிப்பிட்டுள்ளார். ற்ற அதிபர் மற்றும் சகோதரியர் மூவர். எனது மனைவி எர். அவர் ஒரு தமிழ் சிறப்புப் பட்டதாரியாவார். ஓர் கள். அவர்கள் வைத்திய கலாநிதிகள். எனது இரு நான் இப்பொழுது இளைப்பாறியதன் பின் பேரன் ம் பொழுதைக் களித்துக்கொண்டிருக்கின்றேன். றுத்தவரை பாடசாலை கல்வியில் கட்டைவேலி குறிப்பிட வேண்டும். அங்கு எஸ்.எஸ்.சி வரை படித்துச் அதியுன்னத சித்தி கிடைத்தது. எனது அபிமானத்துக் ஆவார். எனது தமிழ் புலமை விருத்திக்கு அத்திவார எஸ்.எஸ்.சி. பரீட்சை சித்திக்குப் பின்பு சிறிது காலம் க்காலப்பகுதியில் பண்டிதர் க.வீரகத்தி அவர்களிடம் ளைக் கற்றேன். கரவெட்டி வாணி கலைக்கழகத்தில் டிதர் பரீட்சையிலும் சித்தியெய்தினேன். இவை யாவும் பதாக எனது மாணவர்கள் கூறுகின்றமைக்கு காலாயின லூரியில் உயர்தர வகுப்பில் சிறிது காலம் படித்தேன். 1 பரீட்சைக்குத் தோற்றி பல்கலைக்கழகத்திற்குத்
ம் என்று பாடசாலைக் காலத்தில் கனவுகண்டதுண்டா? Tக வரவேண்டும் என்பதே எனது கனவாக இருந்தது. யரானேன். பரணி, எனக்கு இப்போதும் நல்ல நினைவு,
29)
- இதழ் 59

Page 32
சோதிடரான உமது பேரனார் ச.தம்பிஐயா அவர்கள், எனது கைரேகையைப் பார்த்துவிட்டு, “இது ஒரு தமிழ்ப் பேராசிரியரின் கை” என்று அன்று கூறினார். ஆனால் நான் அதைக் கருத்திலெடுக்கவில்லை.
ஆளமை மிக்க தமிழ்ப் பேராசிரியராக உங்களை விருத்தி செய்வதற்கு உங்களுக்கு பக்கபலமாக அமைந்தவர்கள் பற்றிகுறிப்பிடுவீர்களா?
பல்கலைக்கழகத்திற்கு வருமுன்னர் நான் ஆரம்பத்தில் பயின்ற மரபுவழித் தமிழ்க் கல்வியும் தொடர்ச்சியான எனது வாசிப்புப் பழக்கமும் பிரபல்யமானவர்களுடைய சொற்பொழிவைக் கேட்பதற்குக் கிடைத்த வாய்ப்புகளும் எனக்கு அநுகூலமாக அமைந்தன. அதன் பின்பு பல்கலைக் கழகத்தில் எனக்கு நல்லாசிரியர்கள் வாய்த்தார் கள். தமிழியல் ஆய்வின் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொருவரை நான் முன்மாதிரியாக எடுத்துக் கொண்டேன். ஆய்வு முயற்சிகளுக்கு பேராசிரியர் க.கைலாசபதியும் சமூகவியற் பார்வைக் கு பேராசிரியர் கா.சிவத்தம்பியும் நாட்டார் வழக் காற்றியல் துறைக்கு பேராசிரியர் அ.சண்முகதாஸ், பேராசிரியர் எம்.ஏ நுஃமான் ஆகியோரும் மனி தாபிமான அணுகுமுறைக்கு பேராசிரியர் சு.வித்தி யானந்தனும் தொல்லியல் ஆய்வு ஈடுபாட்டுக்கு பேராசிரியர் குர். இந்திரபாலா அவர்களும் எனக்கு ஆசிரியர்களாக அமைந்தார்கள். எனது மனைவி சரஸ்வதியும் எனக்கு அநுசரணையாக இருந்தார்.
தமிழ்க் கல்வியின் எதிர்காலம் எவ்வாறு இருக்கு மென்று நீங்கள் கருதுகின்றீர்கள்?
இப்பொழுது தமிழ்க் கல்வி சற்று நலி வடைந்தே காணப்படுகின்றது எனலாம். மாணவ ரிடையே, வாசிக்கும் பழக்கம், தேடல், குருபக்தி முதலியன அருகிவருகின்றன. இதனாலே தமிழ்க் கல்வி வளர்ச்சி குன்றுவதாகக் கொள்ளலாம். பாடசாலைகளில் ஆரம்பக் கல்வி முதல் தமிழ் மொழி, தமிழ் இலக்கியக் கல்வி என்பன சிறப்பா கக் கற்பிக்கப்படாமை பொதுவாக நிலவுகின்றது.
நீங்கள் எழுதிய நூல்கள்பற்றிக் கூறுவீர்களா?
வடமராட்சியின் கல்விப் பாரம்பரியமும் இலக்கியவளமும் வித்துவசிரோமணி கணேசையரின் வாழ்வும் பணியும் (யாழ் பல்கலைக் கழகம் வெளியிட்ட முதலாவது தமிழ் நூல்) 19 நூற்றாண்டில் யாழ்ப்பாணத்துத்
ஜீவநதி -
3

தமிழ்க் கல்வி ஈழத்துத் தமிழ் இலக்கியச் செல்நெறி (4 பதிப்பு) ஈழத்துத் தமிழ் உரைமரபு சுன்னாகம் அ.குமாரசுவாமிப்புலவரின்
வாழ்வும் பணியும் யாழ்ப்பாணத்து வாழ்வியற் கோலங்கள் சொல்லினால் ஒரு மாளிகை - கவிதைத் தொகுதி சி.வை.தாமோதரம்பிள்ளை வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம் யாழ்ப்பாணப் பண்பாடு மறந்தவையும் மறைந்தவையும் (அச்சில்)
இதேவேளை பல நினைவுப் பேருரைகள் சிறுசிறு நூல்களாக வெளிவந்துள்ளன.
இந்த நூல் களை எனது ஆசிரியர் களுக்கும் பெற்றோர்களுக்கும் சமர்ப்பணம்
செய்தமை எனக்கு மனநிறைவைத் தருகின்றது.
உங்களுடைய உரையால் கவரப்பட்ட பலர் உங்களின் விசிறிகளாக இருப்பது எல்லோருக்கும் தெரியும். இந்தப் பேச்சாற்றலை எவ்வாறு வளர்த்துக் கொண்டீர்கள்?
பாடசாலைக் காலத்திலிருந்தே ஓரள விற்குப் பேச்சு வன்மை என்னிடம் இருந்தது. அதனை நெறிப்படுத்தியவர். ஆ.த. சுப் பிர மணியம் ஆசிரியராவார். அகில இலங்கை ரீதியில் குரும்பசிட்டி சன்மார்க்கசபையினர் நடத்திய பேச்சுப் போட்டியில் பாடசாலைப் பருவத்திலேயே தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டமை பெருமைக்குரியது. இவ்வாறு பல பேச்சுப் போட்டிகளில் முதல் பரிசைப் பெற்றுக் கொண்டேன். இவ்வாறாக எனது வாசிப்பு, தேடல், இரசனை என்பவற்றை இணைத்து எனது பேச்சாற்றலை வளர்த்துக்கொண்டேன். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை யில் நான் இணைந்தமை எனது பேச்சாற்றலை வெளிப்படுத்த அநுகூலமாக அமைந்தது.
நீங்கள் மரபுக் கவிதைகளையும் புனைய வல்லவர் என்பதை அறிந்துள்ளோம். ஆக்க இலக்கியங் களில் உங்களின் ஈடுபாடுபற்றிக் கூறுங்கள்.
மரபுவழிக் கவிதை வடிவங்கள் அனைத் திலும் கவிதை எழுதக்கூடிய ஆற்றல் என்னிடம் உள்ளது. இந்த ஆற்றலின் வளர்ச்சிக்கு பண்டிதர் க.வீரகத்தி அவர்கள் மிக முக்கியமான காரண கர்த்தர். கவிதை பற்றிய எனது கருத் து நிலையைப் பொறுத்தவரை, கவிதை சொல்லு
- இதழ் 59

Page 33
2:11:4ாக 1 1 21
கின்ற செய்தியை அழகியல் அம்சம் சார்ந்து ஓன் உணர்வுக்கு உட்பட்டவகையில் வெளிப்படுத். வது சிறப்பானது. கவிதை என்பது கவிதைதான் அதில் மரபுக் கவிதை, புதுக்கவிதை என் பாகுபாடு அவசியம் இல்லை என்பது என் கருத்து ஒரு செய்தியை வாசகனின் மனதில் ஆழமாக பதித் து சில அதிர்வுகளை ஏற் படுத் து 1 அம்சங்களைக் கொண்டதாகக் கவிதை இருக் வேண்டும் என நான் நம்புகின்றேன். சங்ககால கவிதைகளும் சமகாலப் புதுக் கவிதைகள் சிலது. எனது கருத்துநிலையுடன் ஒத்துப்போவதை நா அவதானிக்கின்றேன்.
மரபுக் கவிதை ஈடுபாட்டினால் ப ஆல ய ங் களுக் கு ஊஞ் சற் பாட்டு எழுது ! பாக்கியம் எனக்குக் கிடைத்தது. இப்பாடல்களை புதிய நோக்கிலும் போக்கிலும் அமைத்தவை மனநிறைவைத் தருகின்றது.
பல்கலைக்கழகத்திற்குப் பிரவேசிப்பதற் முன் னர் சிறுகதைகளும் எழுதியுள் ளேன் சிரித்திரன் நடத்திய அ.ந.கந்தசாமி ஞாபகார்த் சிறுகதைப்போட்டியில் இரண்டாவது பரிசை பெற்றுக்கொண்டேன். ஆனாலும் அதன் பின்ன சிறுகதை எழுதுவதில் நான் அதிக ஆர்வம் காட்ட
வில்லை.
மரபிலக்கிய கல்வியில் இன்றைய மாணவர்களின் நாட்டம் எவ்வாறு உள்ளது?
-- உண்மையில் மரபிலக்கியக் கல்வியில் இன்று மாணவர்களின் நாட்டம் வெகுவாக. குறைந்து வருகின்றது. எமது பரீட்சை நோக்கி லான கல்வி முறைமையும் பாடத்திட்டங்களும் இதற்குக் காரணம் எனலாம். அதேவேளை கிராம புறங்களில் இருந்த தமிழாசிரியப் பாரம்பரிய
அற்றுப் போனமையும் மரபுவழிக் கல்வி மீதான நாட்டத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் எனலாம்.
மரபுத் தமிழிலக்கிய வரலாற்றில் உங்களின் பெய தவிர்க்கப்பட முடியாதது என்பதை அறிவோம். 1 ஆம் நூற்றாண்டு தமிழிலக்கியத்தின் சிறப்புகள் எவையென நீங்கள் கருதுகின்றீர்கள்.
ஈழத்து இலக்கிய வரலாற்றை எனது சிறப்பாய் வுத் துறையாகக் கொண்டதனால் பல்வேறு வகைகளிலும் மரபுகள் மாறிய, 19ஆம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தில் எனது கவனத்தைச் வெலுத்தவேண்டி வந்தது. பொது வான தமிழிலக்கிய வரலாற்று ஓட்டத்தில் பா வகையிலும் நவீனத்துவங்களின் வருகை 19ஆம் நூற்றாண்டிலேயே நிகழ்கின்றது. ஒப்பீட்டு
ஜீவநதி.

செ
ற
அடிப்படையில் நோக்கும்போது தமிழகத்திலும் பார்க்க இலங் கையில் 19 ஆம் நூற்றாண்டு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றது. 19 ஆம் நூற்றாண்டு மரபிலக் கியங்களுக்குள்ளேயே சமூகப் பார்வை தலை காட்டத் தொடங்கிவிட்டது.
6.
ல்
மரபுத் தமிழிலக்கியங்களில் பரிச்சயமின்றி, நவீன தமிழிலக்கியத்தை சிலாகித்துப் பேசும் இன்றைய இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள்?
மரபுவழித் தமிழிலக்கியங்களில் நல்ல பரிச்சயம் இல்லாமல் நவீன இலக்கியங்களுக்கு வருவதென்பது மிகவும் கடினமானது. நவீன இலக்கியங்களின் முன்னோடிகள் என நாங்கள் பெயர் சுட்டிச் சொல்லுகின்ற பாரதியும் புதமைப் பித்தனும் மரபிலக்கியங்களில் நல்ல பயிற்சியும் தேர்ச்சியும் உடையவர்கள் என்பதை இன்றைய இளைய தலைமுறையினர் மனங் கொள் ள வேண்டும். பழந்தமிழ் இலக்கியங்கள் நவீன இலக்கிய கர்த்தாக்களுக்கு அடித்தளமாக இருந் தால் அவர்களின் படைப்புகளில் ஒரு தனித் தன்மையைக் காணமுடியும். இதற்கு ஒருசில புறநடைகளும் இருக்கலாம். இன்றைய இளைய தலைமுறையினர் பழந்தமிழ் இலக்கியங்களை விரும்பிப் படிக்கவேண்டும் என்பது எனது விருப்பமாகும்.
4 5• '. b• 5 ச• 2
E•
ஜீவநதி வாசகர்களே அடுத்த இதழ் ஜீவநதியின் 6 ஆவது ஆண்டு நிறைவு
மலராக வெளிவரவுள்ளது என்பதை அறியத் தருகின்றோம்.
ம்
31
இதழ் 59

Page 34
பெ
அப்போது நவரத்தினம் கொழும் பில் உத்தியோகம் பார்த்துக் கொண்டிருந்தான். நாலு ஊருக்குப் போய் வருபவன் என்ற முறையில் நாலு பேரைத் தெரிந்திருக்கும் என்று நினைத்தோ என்னவோ இவனது ஒன்று விட்ட சகோதரி கலைவாணிக்குத் திருமணம் பேசும் கடமை இவனிடம் ஒப்படைக்கப்பட்டது. நவரத்தினம் பல இடங்களில் விசாரித்தும் ஒன்றும் சரி வரவில்லை. இறுதியாக இவனுடன் ஒரே காலத் தில் வேலைக்குச் சேர்ந்தவனாகிய நண்பன் பாலசிங்கத்திடம்,
“பாலா என்ரை ஒன்று விட்ட அக்கா வுக்கு திருமணம் பேச வேணும்; உனக்குத் தெரிந்த பொருத்தமான மாப்பிள்ளை இருந் தால் சொல்லு” என்று சொன்னான்.
“தனியூற்று முத்தையரின் மகன் வசந் தன் மாத் தளையிலை பட்டதாரி ஆசிரியராக இருக்கிறார்; குடிகிடி இல்லை; நல்ல பையன் கேட்டுப் பாருங்கோ; சரி வந்தால் நல்லது” என்றார் பாலசிங்கம்.
- ந வ ரத் தின ம் அடு த் த நா ளே கந்தோருக்கு லீவு போட்டு விட்டுத் தனது ஊரான கணுக்கேணிக்குப் போய்ச் சேர்ந்தான்.
“தம்பி வந்திட்டியே உப்பிடி இரு; ஏன்
சிவக்கொ லேற்றாய்ப் போச்சு” என்று அம்மா பேச்சை ஆரம்பித்தா.
ஆசிரியர் "களைச்சு வேத்து வந்த பொடியனுக்கு
தான் பாத் முதல் தண் ணி வென்னியை குடுங் கோ அதுக்குப் பிறகு புதினம் கேக்கலாம்” என்றார் சொல்லி. நவரத்தினத்தின் அப்பா சிவக்கொழுந்து.
நவரத்தினத்தின் தங்கை தேநீர்
கூறப்பட்ட தயாரித்துக் கொண்டு வந்தாள். தேநீர் குடித்து
அட்டமி | முடிய விட்டுச் சிவக்கொழுந்தர் கேட்டார்.
வீட்டுக்கு - "பின்னை என்ன புதினம் தம்பி
கொழுந்து கொழும்பிலை” என்று
விஜயம் “கொழும்புப் புதினத்தைப் பிறகு
வாருங்ே சொல்லுறன்; அதுக்கு முதல் சொல்ல வேண்டிய
பலதும் ப முக்கிய புதின மொண்டு இருக்குது” என்று பேச்சு வா நவரத்தினம் பீடீகை போட்டான்.
- “ அதென்ன முக்கிய புதினம் சொல்லு உங்களின் தம்பி” என்றார் அம்மா சிவபாக்கியம்.
என்றார் சி “ க  ைல வ ா ண அ க க ா வு க கு கலியாணம் பேசச் சொல்லி என்னட்டைச்
கையோடு சொன்னவையள் தெரியும் தானே"
" ஓ  ேமாம் தெரியு ம் ; ஏ து ம் பாத்தனியே”
யும் கதை “ஓம் பாத்தபடியால் தான் அவசரமாய் சீதனம் பா வந்தனான்”.
ஜீவநதி -
32

மல்லத் றந்தது கதவு
5ா.தவபாலன்
“ஆர் தம்பி ஆக்கள்" “தனியூற்று முத்தையரைத் தெரியுமெல்லோ”. “ஓ சந்தையடியிலைதானே அவற்றை வீடு" என்றார் எழுந்தர். -"அவற் றை மோன் மாந்தையிலை பட்டதாரி ாக வேலை பார்க்கிறாராம் பேர் வசந்தன். அவரைத் திருக்கிறன். “அப்படியே சங்கதி நான் நாளைக்கே அண்ணரிட்டைச் விடுறன்” என்றார் சிவக்கொழுந்தர். அடுத்தநாள் அண்ணர் சின்னத்தம்பியிடம் விடயம் து. சின்னத்தம்பியும் மனைவியும் அகமிக மகிழ்ந்து நவமி கழித்து நல்ல நாளாக பார்த்து முத்தையா ப் போவது என்று தீர்மானித்தார்கள். அதன் படி சிவக் துவும் வேறு மூன்று பேருமாக முத்தையா வீட்டுக்கு
செய் தார்கள். முத்தையா குடும்பத்தினர் "ஆ கா” என்று வாயெல்லாம் பல்லாக வரவேற்றார்கள். த்தும் கதைத்துத் தேநீரும் குடித்து முடிந்ததும் திருமணப்
ர்த்தை ஆரம்பமானது. “சின்னத்தம்பி அண்ணரின் மூத்தமகள் கலைவாணிக்கு தரை மகன் வசந்தனைக் கேக்கத் தான் வந்தனாங்கள்” சிவக்கொழுந்தர்.
“அப்படியா ரொம்பச் சந்தோஷம்; சாதகக் குறிப்பு டை கொண்டு வந்தனீங்களோ?” “ஓமோம் இந்தாருங்கோ" "அப்ப பொருத்தத்தைப் பாத்திட்டு மற்ற விஷயங்களை ப்பம் என்ன... கதையோடை கதையாய் அவை என்ன
ருங்கோ குடுப்பினம்.” "கணுக்கேணியிலை வீடு வளவு குடுப்பினம் மற்றது
இதழ் 59

Page 35
வயல் தோட்டம்”
“வயல் தோட்டம் எங்கை இருக்குது”
“வயல் மூண்டு ஏக்கர் தண்ணி முறிப்புச் குளத்துக்குக் கீழை நல்ல நீர்ப்பாய்ச்சல் காணி; தோட்டப் முறிப்புக் குளத்துக்குக் கிட்ட இருக்குது.” .
"அப்படியே மிகவும் நல்லது; நான் மகன்ரை சாதகத்தைத் தாறன்; நீங்களும் பொருத்தம் பாருங்கோ பொருத்தத்தை பாத்திட்டு மற்ற விஷயங்களைச் கதைப்பம்” என்றார் முத்தையர்.
சாதகக் குறிப்பை மகிழ்ச்சியுடன் பெற்று கொண்டு “அப்ப நாங்கள் போட்டு வாறம்” என்று கூறி விடை பெற்றனர் திருமணப் பேச்சாளர்கள்.
பையனின் சாதகத்தைப் பெற்றுக் கொண்ட சின்னத்தம்பி, மகாலிங்கம் சாத்திரியாரிடம் சென்று பொருத்தம் பார்ப்பித்தார். “எண்பது வீதம் பொருத்தப் உண்டு; திருமணம் தாராளமாகச் செய்யலாம்” என்றார் சாஸ்திரியார். ஒரு கிழமையின் பின்பு முத்தையரும் வேறு ஒருவருமாகச் சின்னத்தம்பி வீட்டுக்கு வந்தார்கள் சாதகம் நல்ல பொருத்தமென்றும் எதற்கும் தனியூற்று ஊற்றங்கரைப் பிள்ளையார் கோவிலில் மணமகனும் மணமகளும் ஒருவரையொருவர் பார்க்க ஒழுங்கு செய்வோமென்றும் கூற இருபகுதியினரும் அதற்கு பூரண சம்மதத்தைத் தெரிவித்தார்கள். அதன்படி கோவிலுக்குப் பூசை செய்யச் சென்றார்கள். மணமகனும் மணமகளும்
ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.
- மேலும் ஒரு கிழமை சென்றிருக் கும் மணமகன் வீட்டில் இருந்து மணமகள் வீட்டிற்கு ஒரு தகவலும் வரவில்லை. மணமகனின் தாயாருக்கு இவ்விடயத்தில் உடன்பாடு இல்லையென்றும், யாழ்ப் பாணத்தில் வசிக்கும் அவவின் தம்பி தங்கராசாவிட மிருந்து வந்த செய்தியே குழப்பத்துக்கு காரணம் என்றும் அரசல்புரசலாகச் செய்தி கிடைத்தது. “முறை மச்சாள் மேகலா வசந்தனையே செய்வது என்று ஒற்றைக் காலில் நிற்கிறாள்; தேவையான சீதனம் தர தான் காத்திருக்கிறேன்; எங்களைப் புறக்கணித்துவிட்டு வெளியாளுக்குள் செய்வது நியாயம் தானா" என்று கேட்டுத்தான் தங்கராசா செய்தி அனுப்பியிருந்தார்.
- இதனிடையே மாத்தளையில் இருக்கும் வசந்தனை உடனே புறப்பட்டு ஊருக்கு வரும்படி அம்மா மீனாட்சி தந்தியொன்றை அனுப்பி விட்டா. வசந்தன் அடுத்த நாளே புறப்பட்டு ஊருக்கு வந்தான்.
“ஆ வந்திட்டியா தம்பி நல்லதாய்ப் போச்சு என்றா மீனாட்சி.
“எதுக்கம்மா அவசரமாய்க் கூப்பிட்டனீங்கள்?”
“உன்ரை சொந்த மச்சாள் மேகலாவை உனக்குச் செய்யச் சொல்லி உன்ரை மாமா ஒற்றைச் காலிலை நிற்கிறான்; ஒண்டுக்குள்ளை ஒண்டுதானே தம்பி அது தான் உன்ரை சம்மதம் கேக்க அவசரமாய்ச்
கூப்பிட்டனான்” என்றா மீனாட்சி.
ஜீவநதி -

ப'
5
“அம்மா உங்களுக்கென்ன விசரா; கணுக் கேணியிலை பேசி சாதகமும் பாத்து பொம்பிளையும் பாத்து, ஓமெண்டும் சொல்லியாச்சு; இனி எந்த முகத் தோடை போய், அதை வேண் டாமென்று சொல்லப் போறியள்”? என்றான் வசந்தன்.
சின்னத்தம்பியரிட்டை காசு பெரிசாயில்லை; காணி பூமி மட்டும் தருவினம்” ஆனால் கொம்மான் காசு எக்கச் சக்கமாய் வச்சிருக்கிறான்; காணி பூமியும் இருக்கு; எது இலாபம், எது நட்டமெண்டு யோசிச்சுப் பார்த்து முடிவு சொல்லு” என்றா மீனாட்சி.
- “இஞ்சேரப்பா ஊற்றங்கரைப்பிள்ளையார் சாட்சியாகச் சின்னத்தம்பிக்கு வாக்குக் குடுத்திட்டு, இனிமாட்டன் எண்டு சொன்னால் என்ரை மானம் மரியாதை என்னாகிறது; பொடியனும் பொம்பிளை பாத்து 'ஓம்' எண்டு சொன்ன பிறகு நீ சும்மா குழப்பிக் கொண்டு நிக்கிறாய்.” என்று மனைவியை கடிந்து கொண்டார் முத்தையர்.
“அவைக்கு உத்தியோகம் இருக்குது; பணம் இருக்குது; நாங்கள் தோட்டக்காரர்” பணமும் பெரிசாய்
இல்லை எண்டு எங் களை இவ் வளவு காலமும் அண்டாமல் இருந்தவர் தங்கராசா மாமா; நான் கம்பஸ் போய் படித்துப் பட்டதாரியாகி ஆசிரியர் வேலையும் கிடைச்ச பிறகு தான் உவையளுக்கு சொந்த பந்த மெல்லாம் ஞாபகத்துக்கு வருகுது போலை. ஏன் கன கதை. நான் கட்டினால் கலைவாணியைத் தான் கட்டுவன்; நீங்கள் அந்த மேகலாவுக்கு ஆரையெண் டாலும் கட்டி வையுங்கோ; நான் படுக்கப் போறன்” என்று கோபமாகக் கூறிய வசந்தன் தாயின் பதிலை எதிர்பார்க்காமலே வேகமாகத் தனது அறைக்குச் சென்று கதவைப் உட்புறமாகப் பூட்டிக் கொண்டான். “சாப்பிட வா” என்று பல முறை கூப்பிட்டு கதவு திறக்கப் பட வில்லை. இரவு பன்னிரண்டு மணியும் ஆகி விட்டது.
அம்மா, “சரி சரி கணுக்கேணிக் கலியாணத் தையே செய்வம் வா சாப்பிட” என்று கூறிக் கதவைத் தட்டிய போது கதவு மெல்லத் திறந்து கொண்டது.
33
இதழ் 59

Page 36
IDண்ட 47 வருட வரலாற்றைக் கொண்ட 400 இதழ்களை வெளிக்கொணர்ந்த மல்லிகைப் பண்ணையின் அசுர சாதனை பின்நாளில் பலருக்கு ஆதர்சமாக இருந்தது. மல்லிகை சமைத்துக் கொடுத்த பாதையில் இன்னும் பல சஞ்சிகைகள் தோன்றின. பல மறைந்தாலும் சில வெற்றிகரமாக அறுவடையாகிக் கொண்டிருக்கின்றன.
விழுதுகளைத் தேடும்
5555555
தனிமனித ஆளுமைக்குச் சவாலாக இருப்பது வயோதிபம். அதிலும் நோய் நொடி வாட்ட ஆரம்பித் தால் சொல்ல வேண்டியதில்லை. 50ஆவது ஆண்டு மலர் வரையாவது அயராது உழைத்து மல்லிகை சஞ்சிகையை வெளிக் கொணர்வேன் என்று உறுதி
யுடனும், பெரு விருப்புடனும் இருந்த மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா உயர் குருதி அழுத்த நோய் வாய்ப்பட்டு அதன் விளைவாக பக்கவாதம் ஏற்படக் கூடிய ஏது நிலையை எட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மல்லிகையின் தொடர் வருகை கேள்விக் குறியானது. அலுவலகத்தில் மல்லிகையின் அடுத்த இதழை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த வேளையில் ஜீவா மயங்கிச் சாய்ந்த போது பெரு விருட்சமான மல்லிகையும் சரிந்து போகும் நிலை ஏற்பட்டது. அதைத் தாங்கும் விழுதுகளாக மேமன்கவி முதலான சிலர் அடுத்த சல மல்லிகை இதழ்களை வெளிக் கொணர்வதில் ஜீவாவுக்கு கைகொடுத்தனர். எனினும் 400ஆவது இதழுக்குப் பின்னர் தடைப்பட்டுப் போனது. இது மல்லிகை அபிமானிகளுக்கும், மல்லிகை எழுத்தாளர்களுக்கும், மல்லிகை வாசகர்களுக்கும் மட்டுமல்லாது ஈழத்து இலக்கியப் பயணத்திற்கும் தடங்கலையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது.
ஜீவா சுகயீனமுற்றதை அறிந்ததும் அவரது இருப்பிடம், புதிய தொலைபேசி எண் முதலானவற்றை அறியாததனால் உடனும்ஜீவாவைப் பார்க்க முடிய வில்லை. டாக்டர் ஞானசேகரனிடம் ஜீவாவின் புதிய தொலைபேசி எண்ணைப் பெற்று, அவருடன் தொடர்பு கொண்டு புதிய வதிவிட விலாசத்தை அறிந்து அவரைப் பார்க்கச் சென்றேன். அன்று முதல், மாதம் இருதடவை ஒரு எழுத்தாளன் என்ற வகையில் மட்டுமன்றி குடும்ப வைத்தியராகவும் சென்று வருகின்றேன்.
நோய் வாய்ப்பட்டு சற்று தளர்ந்து போயிருப் பினும் ஜீவாவின் மன உறுதி குறையவில்லை. வயோதிபத்தின் உடலியல் மாற்றங்கள் ஒரு புறம், நோயின் தாக்கம் மறுபுறும் என்பவற்றினால் அவர்
ஜீவநதி -

ச.முருகானந்தன்
விருட்சம்
OOOOOO།
சோர்வடையவில்லை. அதே உற்சாகம்; அதே தன் நம்பிக்கையுடனும், நட்புடனும் உரையாடுவார். தன்னால் தனித்து இயலாது என்ற போதிலும் மல்லிகை தொடர்ந்து வெளிவரவேண்டும் என்ற பெரு விருப்பு 7 அவரிடமிருப்பதை அவதானித்தேன்.
மல்லிகை சஞ்சிகை வெளிவர ஆரம்பித்து 47 வருடங் களாகின்றன. ஜீவா எண் பதுகளின் பிற்கூற்றில் வாழ்கிறார். முதுமை - முற்றிப் பழுத்த அனுபவங்களைக் கொண்ட கனி. எனினும் அது எப்போதாவது அழுகி விடும் அபாயம் உண்டு. யாழ்ப் பாணத்தில் சிகை அலங்கார நிலையம் ஒன்றுள் தனிமனித முயற்சியில் அதிகம், படிக்காத ஒரு தொழிலாளியான அறிவாளியின் அயராத உழைப் பினால் அது வாடாமல்லிகையாக பல்லாண்டு வலம் வரும் என்று அப்போது யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். மல்லிகையின் மலர்வையும் அது தொடர்ந்து பூத்துக்குலுங்கியதையும் நோக்கும் போது ஆச்சரியமாகவே இருக்கிறது, தமிழகத்திலேயே இத்தனை காலம் தாக்குப் பிடிக்க முடியாமல் பல இலக்கிய சஞ்சிகைகள் பாதியிலேயே நின்று போன போது மல்லிகை ஒரு தனிமனித ஆளுமையாலும், அசுர உழைப்பாலும் தொடர்ந்து வெளிவந்தமை ஒரு வரலாற்றுச் சாதனை தான் என்பதை மறுக்க முடியாது. பொருளாதார நெருக்கடி, விற்பனை, பரவலான விநியோகம், ஆக்கங்களுக்கான பற்றாக்குறை, விற்பனையான இதழ்களின் பணத்தைப் பெறுதல், மீத மான பிரதிகளை மீளப் பெறுதல், நாட்டின் போர்க்கால சூழ்நிலை என அனைத்து சவால்களையும் எதிர் கொண்டு தான் மல்லிகை இன்று வரை மலர்ந்து வந்ததை அறிவீர்கள். அதிலும் மல்லிகையை, அதன் அலுவலகம், தளபாடங்கள். அச்சுக்கோர்க்கும் உப கரணங்கள் அனைத்தையும் விட்டு விட்டு டொமினிக் ஜீவா தனியனாக வெற்றுக் கையுடன், மக்களோடு மக்களாக இடம்பெயர்ந்து கொழும்புக்கு வந்து மறுபடி யும், மல்லிகையைத் தொடங்கி தொடர்ந்து வெளிக்
- இதழ் 59

Page 37
கொண்டு வந்த சாதனையை வார்த்தைகளில் வடிக்க முடியாது. யாழ்ப்பாணத்து சஞ்சிகை, கொழும்பு சஞ்சிகையாக வெளிவரத் தொடங்கியது. மல்லிகை யின் தனித்துவமும், பல்வேறு பிரதேசங்களை உள் வாங்கிச் செயற்பட்டமையும் தொடர்ந்தது..
- ஒரு தொழிலாளியான ஒருவர் ஈழத்து இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பினால் , ஜீவாவுக்கு பல்வேறு அங்கீகாரங்கள் கிடைத்தன. சாகித்திய விருது, தேசத்தின் கண்கள், சாகித்திய இரத்தினா விருது என்று பட்டியலிடலாம். ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப் பட்டவர்களின் துயர் பேசும் சஞ்சிகையாகத் தொடர்ந்து, மக்கள் விடுதலைக்கான பாதையை எழுச்சியை ஏற்படுத்திய மல்லிகை நின்று போதல் எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. வடக்கு, கிழக்கு, மலையகம், தலைநகர் மற்றும் தமிழ்பேசும் மக்கள் வாழ்ந்த பிரதேசங்கள் அனைத்தையும் அரவணைத்துச் சென்ற மல்லிகையை வாட விடலாமா? தமிழர், இஸ்லாமியர், சிங்களவர் என அனைத்து இனங்களை யும் அரவணைத்துச் சென்ற மல்லிகை எனும் பெரு விருட்சம் சரிந்து விடக்கூடாது.
மல்லிகை தொடர்ந்து வெளிவந்த போது அதில் உணரப்படாத - இப்போது அதிகம் உணரப்படு கின்ற முக்கிய விடயம், ஒரு சஞ்சிகையை வெற்றிகர மாக நடாத்துவது என்பது எவ்வளவு சிரமமான விடயம் என் பதாகும். மல்லிகையைப் பொறுத்து வரை தனிமனித முயற்சியால் வெளிவந்தமையினால் ஒரு வாரிசு உருவாகவில்லை. குடும்ப உறுப்பினர்கள் எவரும் மல்லிகை வெளியீட்டில் நேரடியாகப் பங்காற்றவில்லை. அவர்களது ஆர்வமான முறை வேறாக இருந்தது. மா.பா.சி, மேமன் கவி, ஆப்டீன் போன்றவர்கள் அவ்வப்போது உதவி புரிந்தாலும் வாரிசாக வளரவில்லை. மல்லிகை விருட்சத்திற்கு பல விழுதுகள் இருந் தாலும், ஆழ வேர் பதித் து மல்லிகையை தாங்கக் கூடிய விழுதுகள் இல்லை. ஜீவா ஒரு ஆசிரியராக மட்டுமன்றி சகல நிர்வாகங் களையும் பார்த்து வந்தார். புதிதாக பாரமெடுக்கும் ஒருவரால் அத்தனை பணிகளையும் மேற்கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறியே. அத்துடன் முழுநேரத்தை ஒதுக்கிப் பணியாற்றுவது, பொருளா தார சிக்கல் எனப் பல விடயங்கள் உள்ளன. இப்போதுள்ள நிலையில் மல்லிகையைக் கூட்டு முயற்சியால் வெளிக் கொணர முடியுமா என ஆர்வலர்கள் யோசிக்கின்றார்கள்.
மல்லிகை தனக்கென ஒரு வாரிசை உருவாக்காமல் இருந்தமையே இன்றைய தேக்கத் திற்குக் காரணம். இந்த தேசத்தின் பொக்கிஷமான ஜீவாவை அவரது மகன், மருமகள் முதலானவர் அன்பாக பராமரிக்கின்றார்கள். எனினும் அவர்கள் மல்லிகையின் வாரிசாக வளர்க்கப்பட வில்லை. காலம் பதில் சொல்லுமா?
D•• ) -
ஜீவநதி

வேல் அமுதன்
உபத்திரவம்
• •1 ))
நிர்மலாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
அதனைத் தொடர உள்ளவை கலியாண எழுத்தும், கலியாண வைபவமும். நிர்மலாவின் அம் மா இந்திரா இரண்டையும் ஒரே நாளில், முடிந்தளவு கெதியாக நடத்திடத் திட்டமிட்டாள்.
நாலு பெடியங்களைத் தொடர்ந்து பிறந்த கடைக்குட்டி நிர்மலா. அவள் செல்லமாக வளர்க்கப் பட்டவள். அவளின் மண வாழ் வும் நலமாக அமைந்திட, அவளுக்குத் தனிக்குடித்தனம் அமைத்துக் கொடுத்திடவும், தான் அயலில் இருந்து உதவிடவும் இந்திரா விரும்பினாள்.
இந்திராவின் குடும்பம் வாழுவது எப்பார்ட் மெண்ட் ஒன்றின் நாலாம் தட்டின் முதலாம் வீட்டில். அதே தட்டின் இரண்டாம் வீட்டைக் குடும்பம் ஒன்று வாடகைக்கு எடுத்திருந்தது. இந்திராவின் இரகசியத் திட்டம் இரண்டாம் வீட்டாரை எப்படியாவது விரட்டி விட்டு, அதனில் தாம் நிர்மலாவுக்குத் துணையாக வாழ்வது.
பெரிய கில்லாடியான இந்திராவுக்கு, அது பெரிய வேலையல்ல. இரண்டாம் வீட்டுப் பிள்ளைகள் வீட்டில் இருந்து மனமொன்றிப் படிக்க முடியாதவாறு சதா சத்தமெழுப்புவது போன்று, பல உபத்திரவம் கொடுத்தார். அரியண்டத்தைச் சகிக்க மாட்டாத இரண்டாம் வீட்டார் இடம் மாறினர்; வெறுமையான அவ்வீட்டை இந்திரா வாடகைக்கு எடுத்தாள்; குடும்ப சோதிடரைச் சந்தித்துக் கலியாண வைபவத்திற்கு நல்ல நாள் நேரத்தையும் தெரிந்து கொண்டாள்.
ஆனால்,
மாப்பிள்ளை வீட்டாரின் செய்தியொன்றால் இந்திரா ஆடிப்போனாள். அதிர்ச்சியைக் கொடுத்த அச்செய்தி: "நாங்க விசாரித்தவிடத்து பிந்தி வந்த செய்தி திருப்தி ஏற்படுத்தவில்லை; கலியாணப் பேச்சை இத்தோடு ரத்துச் செய்ய நிர்பந்திக்கப் பட்டுள்ளோம்.”
35
- இதழ் 59

Page 38
த.வசந்தன்
அரங்கினூடாக ஆற்றுப்படுத்
அறிமுகம்
மனிதனுக்கு தேவையானது ஆரோக்கியமான மகிழ்ச்சி தான். மனித தேவைகள் பூர்த்தியாகும்போது ஆரோக்கியமான மகிழ்ச்சி பிறக்கும். மனித வாழ்வின் மகிழ்ச்சிக்கு நிறைவான பணம், பொருள், பண்டங்கள், பட்டம், பதவிகள் இருந்தால் மட்டும் போதாது. இவற்றை அனுபவிக்கும் மனநிலை, நம்பிக்கை அவசியமா கின்றது. இன்று மனிதன் “இயற்கையின் சீற்றத்தினாலோ, போரின் தாக்கத்தினாலோ, உறவின் இழப்பினாலோ, சமூக, சமுதாய முரண்பாட்டினாலோ மனதளவில் பாதிப் பிற்கு உள்ளாகின்றான். இவ் நெருக்கீட்டுச் சூழலில் மனநிலையில் தன்னம்பிக்கை வாழ்வை கட்டி எழுப்பி மனவடுக்களிலிருந்து ஒருவரை மீட்க ஆற்றுப்படுத்தலை மேற்கொள்வது சாலச்சிறந்ததெனலாம்.
ஆற்றுப்படுத்தல் என்பதை நோக்குவோமா யின் 1945இல் குட்(Good) என்பவர் “தனிப்பட்ட கல்வித் தொழில் சமூக பிரச்சினைகளில் அடங்கியுள்ள உண்மைகளை ஆராய்ந்து பகுப்பாய்வு செய்து, தீர்வு காண உதவுவது” என்கிறார். மேலும் நபரொருவர் மற்றொரு நபரின் இணக்கப் பிரச்சினைகளை (adjustment Problems) புரிந்து கொள்ளவும், தீர்த்துக் கொள்ளவும் உதவுகின்ற முயற்சி என்கின்றார். 1951 இல் ரென் என்பவர் “இருவர் அல்லது இரு குழுக்களுக்கு இடை யிலான நோக்கமுள்ள பரஸ்பர உறவுநிலை. இது ஒருவர் மற்றவர் சூழலுக்கு மாறுதல் அல்லது மாற்ற மடைச் செய்ய உதவுகின்றது” என்கிறார். 1962 இல் அமெரிக்க உளநலச்சங்கம் கூறுமிடத்து “ஒருவர் தனது உளவளங்களின் முழுமையான விருத்தியை நோக்கிச் செல்லுகின்ற பயணத்தில் சந்திக்கின்ற தடைகளை தகர்த்து வெற்றிப்பாதையை நோக்கிச் செல்ல உதவும் செயற்பாடே” ஆற்றுப்படுத்தல் என்கிறார். அதாவது நபரிடையே முடியாது, இயலாது என்ற மனநிலையை தகர்த்து தன்னால் முடியும் என்ற மனத்திடம் கொண்டு இலக்கை அடையவழி சமைப்பது எனலாம். ஆதிகால மனிதன் முதல் தற்கால மனிதன் வரை அவனது அடிப்படைத்தேவையில் ஆற்றுப் படுத்தல் தவிர்க்க முடியாததொன்றாக காணப்பட்டது. ஆதிகால மனிதனின்
ஜீவநதி

த்தல்
தேவைகள் மட்டுப்படுத்தப் படுவதால் அவனது இலக்கு உணவுத்தேவை, பாலியற்தேவை யாக இருந்தது. அவை நிறைவு செய்யப்பட்டதும் மனமகிழ்ச்சி அடைந்தான்.
அரங்கில் ஆற்றுப்படுத்தல் அதிசயம்
அரங்கு என்பது பார்க்கும் இடம், செய்யும் இடம் என்ற பொருளில் நோக்கப்படுகின்றது. இது ஏதோ ஒன்றினை நிகழ்த்துவதற்கு அடிப்படையாக அமைகின்றது. செயல் /நிகழ்வு, இடம்/அரங்கு,/ நேரம் எனும் அரிஸ்ரோட்டிலில் கூறும் நாடக மும்மைகள் முதன்மைப்படுகின்றது. அரங்கு என்பது வெறுமனே நிகழ்த்தும் இடத்தினை சுட்டுவதல்ல. அதனுள் மனித மனங்களின் கடந்தகால, நிகழ்கால, எதிர்கால வாழ்வியல் அனுபவங்கள் நிறைந்த நிகழ்வுகளாக நாடகங்கள் பொதிந்து காணப்படு கின்றன. இன்று அரங்கு(Theatre) என்பது உடல், உள நன்நிலையை பிரதிபலிப்பனவாக சமூகமட்டங்களில் காணப் படுகின்றன. வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை செய்யும் theatre நோயாளியின் உடல் வருத்தம் குறைக்கப்படுகின்றது. Film பார்க்கும் theatre உளம் சார் மனவலிமை, மகிழ்ச்சி கிடைக்கிறது. Drama பார்க்கும் theatre பார்வையாளருக்கு, உடல், உளம் சார் சிகிச்சை தாராளமாக கிடைக்கின்றது. மேற்கூறிய மூன்று இடங்களிலும் நிகழ்த்துவோர், பங்குபற்று வோர் தொடர்புபட்டு உடல், உளம் சார் நிலை பேணப் படுகின் றது. நாடகத்தில் மனித மனங் களில், மனவடுக் கள், மனநிலைகள் தத் து வ ரூபமாக காட்சிப் படிமங்களாக வெளிப் பட்டு பங்குபற்று வோரிடம் ஓர் உணர்வுக் கையளிப்பு நடைபெற்று ஆற்றுப்படுத்தல் நடைபெறுகின்றது. இவ் அனுபவக்  ைக ய ள ப் ப  ைன வ ரை ப டத த னு டாக இனங்காணலாம்.
ஆற்றுவோன்
ஆற்றுகை
உர்வா |-ணாடி அலுவலக வலம்||வமனை
உணர்வு அனுபவம் செய்தி 5
கையளிப்பு
ஆற்றுகை
பார்ப்போர்
இதழ் 59

Page 39
அரங்கில் மூலக் கூறுகளான கட்டிட, சிற்ப, இசை, நடன, தொழில் நுட்ப(ஒலி,ஒளி) இலக்சிய வேட உடை, ஒப்பனை, மேடைப்பொருள் உருவாக்கல் கலை முகாமைசார் மேடை முகாமை, நெறியாள்கை போன்ற கலைகளின் சங்கமிப் பும் தற்கால பல் பரிமாண ஆற்றுகைகளான கல்வி, பொழுதுபோக்கு, சமூக மாற்றுத்தன்மை, சுகாதார சமூக விழிப்புணர்வு, நோய் தீர்க்கும் (Healing theatre) அரங்காற்றுகை வடிவங்களும் நாடகத்தின் தனித்துவமான படைப்பாளி நுகர்வோர் உணர்வுக் கையளிப்புத் தன்மை, சுதந்திர வெளித் தன்மை, வெளிப்பாட்டுச் சுகந்திரம், பேச்சு, கருத்து சுதந்திரத்தன்மையை நாடக செயல் இயக்கங்கள் கொண்டிருப்பதால் மனித மனங்களில் புதைந்திருக்கும் எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள், மனமகிழ்ச்சிகள், மனவடுக்களை களைந்து மனித மனங்கள் இலக்கினை நோக்கி வெற்றிநடைபோட்டு நம்பிக்கை வாழ்வினைக் கட்டியெழுப்ப அரங்கின் ஆற்றுப்படல் வல்லமையை சாதனமாக்கி மக்களை ஆற்றுப்படச் செய்யலாம்.
ஆற்றுப்படுத்தலைப் புரிதலும் அரங்கினூடாக ஆற்றுப்படுத்தலும்.
| இன்று ஆற்றுப்படுத்தலானது சிறுகுழந்தை முதல் முதியோர் வரை அவசியமான ஒன்றாகக் காணப்படுகின்றது. இன்றைய நவீன இயந்திர மயமான சூழல், யுத்தம், நபரின் அகப்புறக் காரணிகளின் தாக்கத் தினால் மனிதன் ஒவ்வோரு கணமும் மனவடுவிற்கு உட்பட்டு மனச்சஞ்சலத்திற்கு உட்படுகிறான். சில மனிதர்கள் தனிமையில் இருந்தும் கோவிலுக்குச் சென்றும், மனதிற்கினிய இடத்திற்குச் சென்றும் தமது கருத்தை அனுசரிக்கக் கூடிய ஒத்துணர்வு மனநிலை யுள்ளவருடன் கூறியும் மனச் சஞ்சலத்தைக் குறைத்தும் ஆற்றுப்பட எத்தனிக்கின்றனர். இங்குள்ள தனிமையான சூழல் மனத்திற்கினிய இடங்கள், மனரசனைக்குரிய இடங்கள், பிரச்சினைக்குப் பரிகாரம் கூறப்படல், கலைநயங்கள் தேவைநாடியின் மனவிறுக்கத்தைக் குறைக்கவோ அல்லது அதிலிருந்து விடுபடவோ துணை புரிகின்றது. நாடகச் செயல் இயக்கத்தில் மேற்கூறிய தேவைநாடியின் மனஇறுக்கம் குறைப் பதற்கான சாத்தியப்பாடுகள் ஆற்றுவோர், நுகர்வோர் நேரடித் தொடர்பாடல் உணர்வுக் கையளிப்பின் மூலம் சாத்திய மாகின்றது.
தற் போதைய சூழலில் ஆற்றுப் படுத்தல் அத்தியாவசியமானது என்பதை எமது ஆற்றுப்படுத்தல் கற்கைநெறி நேரடிக்கள ஆய்வின் போது மனித மனங்களிடமிருந்து இனங்கண்டு கொண்டேன். 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் “இப்ப ஒண்டும் செய்யேலாது, எல்லாம் மாறி விட்டது” என்கிறார். 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் “என்னத்தைச் சொல்லுறது, எல்லாம் முடிஞ்சு போட்டுது” என்கிறார். 18 வயது இளைஞர் கூறுமிடத்து, “படிப் பில் மனம் ஜீவநதி

ஒன்றிக்கவே முடியலே” என்கிறார். 33 வயது மதிக்கத்தக்க உயர் கல்வி கற்று விட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் ஒருவர் கூறுமிடத்து "நாம் படித்தது வீணாய் போச்சுது எவ் வளவு காலம் பெற்றவருக்கு பாரமாய் இருக்கிறதோ தெரியலை. பணக்கஷ்டம் ஒரு புறம், உளரீதியாக பாதிப்பிலிருந்து எப்ப மீளுவேனோ தெரியலை” என மன சஞ்சலத்துடன் கூறினார்.
இன்று ஆற்றுப்படுத்தல் என்பது சமகாலத்தின் உடனடி நிவாரணியாக தேவையாக உள்ளது. தனிநபர் தனக்குத் தானாக முரண்பாடுகள் இன்னொருவருட னான முரண்பாடுகள், சமூக, கடவுள் முரண்பாடு களுக்கு சிகிச்சை அளிக்கும் வல்லமையை அரங்கு கொண்டுள்ளது. மேலும் அரங்கின் சுகந்திரத்தன்மை, வெளிப்பாட்டுத் தன்மை, வெளிப்பாட்டுச் சுகத்திரம், உணர்வு, அனுபவ, செய்தி கையளிப்புத்தன்மை, பல்கலை இணைவுத்தன்மை, கலைஞர்கள் ஒருங் கிணைந்து கூட்டுணர்வுத்தன்மை, கலைஞர், சுவை மன இறுக்கத்திலிருந்து விடுபடுவதற்கான சாத்தியத்தன்மை என்பன நாடகத்தினூடான சமூகப் படிப்பினையை வழங்கி மக்களின் மனசஞ்சலத்திற்கு வடிகாலாக அமைகின்றது.
அரங்கின் பல்பரிமாண பங்காற்றும் தன்மை யான கல்வி, கலாசார, அரசியல், சமூக, சமய, சம்பிரதாய, நோய் தீர்க்கும் சிகிச்சைத்தன்மைகள் விழாவெளி அரங்காற்றுத்தன்மை, சடங்காற்றுத் தன்மை, நகைச்சுவைக் கதைகளால் ஏற்படும் Healing விகடவழிகள், நாடக இயக்கத்தில் செயற்படும் நபரிடையான உடல்மொழிகள், சைகைகள், ஊமங்கள் (mimc) குரல் வெளிப்பாடுகள் நாடக கள அழகு நிலைகள், ஒத்திசைவு, மேடைச்சமநிலைகள், நவரச உணர்வு வெளிப்பாடுகள், நடிகர்-சகநடிகர்-பார்வை யாளர் ஒத்துணர்வுகள், சிகிச்சை வழியான செயல் இயக்கங்கள், குரலின் ஏற்ற இறக்கங்கள் எமது பாரம் பரியங் களின் குழையடித்தல், தண்ணீர் விசுறுதல், கடந்தகால விடயம் கூறப்பட்டு எதிர்கால விடயம் முன்மொழிதல் போன்ற அதிர்ச்சி வைத்திய செயற்பாடுகளை நாடக இயக்கங்கள் கொண்டுள்ளன.
முடிவுரை
நாடக அரங்கில் மலிந்து காணப் படும் ஆற்றுப்படுத்தல் அதிசயங்களை (Healing miracles) சமூக மக்கள் உணர்ந்து நாடக அரங்க செயற்பாட்டில் பங்காற்றி மனவடுவிலிருந்து விடுபட்டு அன்பு, ஆதரவு, தன்நம்பிக்கை வாழ்வு, மன அமைதி, வழிகாட்டல், எதிர் கால இலக்கினை நோக்கி மனத்தைரியம், செயல் திறனை பெற்ற உடல், உள் நன்நிரயுளள ஆரோக்கிய மான மானிடராக வாழச்செய்வதே அரங்கியலாளர், உளவியலாளர் சமூக விழிப் புணர் வுள் ளோரின்
காலத்தின் தேவை என்றால் மிகையாகாது. 37
- இதழ் 59

Page 40
-நூல் அறிமுகக் குறிப்பு
கே.எஸ்.சிவகுமாரனின் "திறனாய்வு” மீதா
மீரா பதிப்பகத்தின் 100 ஆவது வெளியீடாக ஈழத்தில் தனக்கென தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ள திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரனின் 51 திறனாய்வுக் கட்டுரைகள் அடங்கிய “திறனாய்வு” என்னும் நூல் வெளிவந்துள்ளது. கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் ஏற்கெனவே திறனாய்வுக் கட்டுரைகள் அடங்கிய பல நூல்களை வெளியிட்டவர். இவரது திறனாய்வுப் பார்வைகள் வித்தியாசமானவை; பரந்து பட்டவை. இவர், படைப்பாளனை, படைப்பை, இலக்கி யத்தை நடுநிலையாக நின்று பார்க்கும் இயல்பு உடையவர்.
இத்தொகுப்பில் உள்ள திறனாய்வு கட்டுரை களின் வழியே படைப்பாளிகள், படைப்புகள், இதழாசிரி யர்கள், திறனாய்வின் முக்கியத்துவம், ஈழத்து இலக்கி யம், சிறுகதை இலக்கியம், திரைப்படங்கள், நாடகங்கள், பார்வையாளர்கள், நாவல் இலக்கியம் என பல வகைப்பட்ட விடயங்கள் திறனாய்வு செய்யப்பட்டுள்ளன.
நாவல் பற்றிய திறனாய்வை மேற்கொள்ளும் போது “நாவல் என்றால் என்ன?", "நாவல் இலக்கியமும் கருப்பொருளும்", சரித்திர நாவல், சிருங்கார நாவல், துப்பறியும் நாவல், பயங்கர - மர்ம நாவல், “ஈழத்தில் நாவல் வளர்ச்சி - சில்லையூர் செல்வராஜன்”, "ஈழத்தில் நாவல் இலக்கியம்: நா.சுப்பிரமணியம்” என விரிவாக நாவல் தொடர்பான திறனாய்வை செய்துள்ளார். நாவல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்கு இக்கட்டுரைகள் பயனுள்ளவையாக அமையும். இத் திறனாய்வு வழியே தான் வாசித்த சில நாவல்களைப் பற்றிய தனது எண் ணப் பதிவுகளையும் பதிவு செய்துள்ளார்.
திரைப்படங்கள் தொடர்பான திறனாய்வு கட்டுரைகளில் “இலக்கியமும் திரைப்படமும்” என்னும் கட்டுரை இன்னும் விரிவாக எழுதப்பட்டிருக்கலாம், எனினும் தொடர்ந்து வரும்; "நான்கு ஐரோப்பிய படங் கள்" என்னும் கட்டுரையில் “லியோன் - புரொபெஷனல்”, “யூலியலின் கூர் நோக்கு”, “பியோன்ட் த க்ளவுட்ஸ்”, “த கொன் வென்ட்” ஆகிய படங்கள் பற்றிய தன் எண்ணங்களையும் கருத்துக்களையும் சிறப்பாக
ஜீவநதி.

அர்ச்சுனன்
மன எண்ணப்பதிவுகள்
கே.எஸ்.சிவகுமாரன்
பதிவு செய்துள்ளார். "என்னைக் கவர்ந்த சில திரைப் படங்கள்” என்னும் திறனாய்வு வழியே தன்னைக் கவர்ந்த திரைப்படங்களின் கதை, கரு, முக்கியத்துவம் என்பவை சொல்லப்படுகின்றது. “ஆசியத்திரைப்பட மையம்” என்னும் திறானாய்வில் 1975 இல் French தூதரக அனுசரனையுடன் ஆரம்பிக் கப்பட்டு இலங்கை மன்றக் கல்லூரியிலும் இலங்கைத் தொலைக்காட்சி யிலும் கல்வி நிறுவனங்களிலும் திரைப்படங்கள், வீடியோக்கள், கருத்தரங்குகள் மேற்கொள்ளப் பட்டமை பற்றியும், அங்கு காட்டபெற்ற -In the company of max linder', 'Angels of the Street', 'L'Atlante', 'Blood of a poet', 'Toni', 'Hotel Du Nova', 'The Rules of the sane', 'Children of paradice', 'A Jag in the earth', 'Airwe Aizawe', 'Carnival in 7 Earden', 'The jevis Envoy', 'zew for couduet', 'citizen Kane', 'Battle of a .Nation' போன்ற படங்களின் நெறியாளர், வெளியான ஆண்டு, கதைக்கரு என்பவற்றை சருக்க மாகத் தந்துள்ளார். இவற்றோடு “டில்லி திரைப்பட விழா", சென்ற நூற்றாண்டின் ஐரோப்பிய / அமெரிக்க சினமா நடிகைகளில் அதிக கவனத்தை பெற்ற "மாலின் மன்றோ” பற்றியும், “பாதை தெரியுது பார்”, “அருந்ததி யின் முகம் திரைப்படம்”, “துப்பறியும் கதை மெலோ ட்ராமாவாகும் படம்", “இலக்கியத் தழுவல்” போன்ற திறனாய்வுகள் சினிமா சார்ந்ததாக பல்வேறு தகவல் களை உள்ளடக்கி எழுதப்பட்டள்ளது.
“திறனாய்வாளர் கைலாசபதி” என்னும் கட்டுரையில், கைலாசபதியின் பல்துறைப் புலமை,
- இதழ் 59

Page 41
கைலாசபதியின் இலக்கியக் கோட்பாடு, சமூகக் கொள்கையை கைலாசபதி அனுஷ்டித்தாரா?, ஒப்பியல் ஆய்வுத்துறையில் கைலாசபதியின் பங்கு என்பவை பற்றி ஆராயப்பட்டுள்ளது. இதழாசிரியர் ஆர்.சிவகுரு நாதனுக்கும் தனக்கும் உள்ள தொடர்பை “இதழாசிரியர் ஆர்.சிவகுருநாதனும் நானும்” எனும் கட்டுரை மூலம் கூறுவதோடு, தனக்கு “பத்தி” (Column) எழுத்தை ஆரம்பிக்க ஒத்துழைப்பு வழங்கியமையையும் நன்றி யோடு நினைவு கூருகின்றார். மார்ட்டின் விக்கிரமசிங்க, சிறி குணசிங்க, அவுஸ்திரேலியப் பெண் படைப்பாளி, கோகிலா மகேந்திரனின் உளவியல் சார்ந்த கதைகள், பஹார்த்தீன் ஆப்டீன்: முன்னைய கதைகள், கருவறை எழுதிய தீர்ப்பு: தி.ஞானசேகரன், கொலின் வில்சன்: மேலும் சில பகிர்வுகள், கப்ரியேல் கார்ஸியா மாக்கு வெஸ், என்ற தலைப்புகளினூடாக செய்யப் பட்ட திறனாய்வுகள் வழியாக படைப்பாளர்களின் ஆக்கத் திறன், படைப்புலகம், படைப்பு வீச்சு, குணநலன்கள், வல்லமை என்பவற்றை அலசி ஆராய்ந்துள்ளார்.
“எளிமையான ஆங் கில எழுத்து” என்ற திறனாய்வினூடாக ரிச்சர்ட் றைட் என்னும் கறுப்பின எழுத்தாளரது இலகு ஆங்கில எழுத்துப் பற்றியும், Collin Wilson எழுதிய “The out sider” என்னும் நூல் கே.எஸ் மீது ஏற்படுத்திய தாக்கத்தை “என்னைப் புரட்டிப் போட்ட புத்தகம்” வழியாகவும் அறிய முடிகின்றது.
விமர்சனம் சரியான வகையில் விளங்கிக் கொண்டு ஆக்கப்படாதவிடத்து அது படைப்பையும் படைப்பாளனையும் காயப்படுத்துவதோடு இலக்கியம் படைக்க படைப்பாளி பின்நிற்பர் என்பது பற்றியும், உருவ உள்ளடக்கம், ரசிகன், விமர்சகர் என்பவற்றை பற்றி “குழப்ப வேண்டாம்” என்ற திறனாய்வு கட்டுரை
அந்நாளில் வீதியோரம் நின்றதொரு மருத மரம்
வளமான நன்றாய் வளர்ந்து நாற்றிசையும் கிளை செழித்துசூரியனை மறைத்து
அழியுண் நிழல் குடையாய்.
எதிர்கால .
அறுவன இன்று இல்லை என்றாயிற்று.
ஆவினம் கண் எட்டும் தூரத்தில்
ஒட்டு கண்ணகை அம்மன் கோவில்.
கொட்டு அடியார்கள் காலை மாலை
பொறுக்கும் வீதியை விட்டிறங்கி கால் நடையாய்
நெல்வயல் கோவிலுக்கு செல்லும் பாதை
அகழா காடு பத்திக் கிடக்க
வெட்ட ெ வயல் வரம்பில் நடக்கிறேன் நான்.
முடிவில்
அகழான் அடடே! கோவில் எங்கே?
நான்கு ப என்னம்மா தாயே நீ
வேரல், கடம் எங்கே இருக்கிறாய்
மகிழ், மரு கற்குவியல் நடுவிலா?
தேமா எ அந்நியர் வருகையும்
வீதிவல் எங்கள் இடப்பெயர்வும்
-வேரர் ஜீவநதி -

மூலம் குறிப்பிடுகின்றார்.
“ஈழத்து உடனிகழ்கால இலக்கியம்" பற்றிய திறனாய்வு விரிவாக மேற்கொள்ளப்படவில்லை. திறனாய்வாளர் இதனை விரிவாக எழுதியிருக்கலாம். “யாழ்ப்பாணத்தவரின் படைப்புகள், கொழும்பில் உள்ளவர்கள் படிக்கும் வாய்ப்பு கிட்டுவதில்லை எனவும், ஏனைய இடத்து எழுத்தாளர்களுக்கு யாழ்ப்பாணத்தவர் களைப் படிக்கும் வாய்ப்பு இருக்க வில்லை” என்றும் இத்திறானய்வில் கூறுவது ஏற்கும் படியாக இல்லை. ஆர்வம் உள்ள வாசகன் எதனையும் தேடி வாசிப்பான் என்பது எனது கருத்து. மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, மலை யகம், யாழ்ப்பாணப் படைப்பாளர்கள் அவர்களது கருப் பொருளாக கொள்பவற்றை பிரித்து காட்டி யுள்ளமையும் ஏற்புடையதன்று.
இளைஞர் தலைமுறைக் கு இலக் கிய ஈடுபாட்டை உண்டு பண்ணும் கட்டுரையாக “இன்றைய இளைய தலைமுறையினர் எங்கு செல்கிறார்கள்?", மாலின் அவர்களுக்கு எதிர்வினைக் கட்டுரை ஒன்றும், யதார்த்த வாதம் பற்றிய விளக்கம், திறனாய்வு பற்றிய விபரங்கள், திறனாய்வு பற்றிய விரிவான கட்டுரைகள், புனைகதைகளில் உருவமும் உள்ளடக்கமும் பற்றியும், ஈழத்து சிறுகதை இலக்கியம் பற்றியும் தன் திறனாய்வு பாணியில் ஆசிரியர் திறனாய்வுகளை சீருடன் செய்துள்ளார்.நூலை முழுமையாக வாசிக்கின்ற போது நல்லதொரு பயன்மிக்க அறிவுதர வல்ல தகவல்களை உள்ளடக்கிய நூலைப் படித்த களிப்பு மனதில் ஏற்படு கின்றது. திறனாய்வாளர் கே.எஸ் இதில் உள்ள சில இலக்கியம் சார்ந்த கட்டுரைகளை இன்னும் விரிவுபடுத்தலாம்.
- எங்களுர்
- கோவிலும் ஆய்வுக்காய். டெயின் பின் 5 கூட்டமாய் 5 மேயும்
ண்ட நெல் பறவையினம்.
காகம், குயில், கிள, அணில் - ஆங்காங்கே கூடு கட்டும்
கூடி விளையாடும் கொஞ்சும் இயற்கை எழில் ஓங்கும். ஒரு கிளையில் ஊரும் பச்சை வண்ண பாம்பு பார்த்து விழி பிதுங்கும் பஞ்ச வண்ண ஓணான் நெல்லி மரக் கொப்பில் மந்தி கனி பறித்து உண்ணும் கல் எறியும் எங்களுக்கு கனி எடுத்து வீசும்.
லின் சுரங்கம் -ன் பொந்து
வட்ட நீளும் கிடைப்பது மட்டுமல்ல டி நெல்லும். Pபு, கொண்டல், 5து, தாளை, ஓர் கோலம் மம் கூடல்.
கேணியன்
39)
வைகறைப் பொழுதில் அயலாக மங்கையர் நீராடும் பொய்கை வானம் பொய்த்ததால் வற்றிக் கிடக்கிறது.
***
வளமான ஊர் தான் எங்கள் நுணாவிலூர் இன்றல்ல அன்று.
-இதழ் 59

Page 42
சொல்லவேண்டிய கதைகள் 8
காவியமாகும் க
எந்தவொரு உயிரினத்துக்கும் கருவறை இருக் கிறது. ஆனால் எல்லா உயிரினங்களுமே மரணித்தவுடன் கல்லறைகளுக்குச்செல்வதில்லை. பெரும்பாலான நிலத் திலும் நீரிலும் வாழும் ஜீவராசிகள் ஆறறிவு படைத்த மனிதர் களினால் கொல்லப் பட்டதும் உணவாகி வயிற்றறைக்குச்சென்று சமிபாடாகி விடுகின்றன.
இந்த மனிதர்களுக்கு மாத்திரம் கல்லறைகள் இருப்பதாக நாம் கருதமுடியாது. மேலைநாடுகளில் தமது செல்லப்பிராணிகள் மரணித்தவுடன் அவற்றை அடக்கம் செய்து கல்லறை அமைக்கின்ற நாகரீகம் பரவி யுள்ளது. இந்துசமயத்தவர்கள் இறந்தால் தகனக்கிரியை செய்து அஸ்தியை எங்காவது புனித கங்கைகளில் அல்லது கடலில் கரைத்துவிடுவார்கள். ஆனால் எல்லா இந்துக்களும் அப்படி அல்ல. கல்லறைகளுக்குள் அடக்க மானவர்களும் இருக்கிறார்கள்.
- கத்தோலிக்கர்களும் இஸ்லாமியரும் பூத வுடலை அடக்கம்செய்துவிடுகிறார்கள். கத்தோலிக்கர் களின் பூதவுடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவு சமாதி அமைப்பார்கள். மறைந்தவர்களின் பிறந்த நாள், மறைவுநாட்களில் மயானம் சென்று சமாதியில் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்துவார்கள்.
அரசியல் தலைவர்கள், கலைஞர்கள், படைப் பாளிகள் மற்றும் மறைந்தவர்களின் நினைவுக் கல்லறை களை பார்த்திருக்கிறேன். ஈழப்போராட்டம் தொடங் கியதும் மாவீரர் துயிலும் இல்லங்களையும் தரிசித் திருக்கிறேன்.
தமிழ்நாட்டில் சென்னை மெரீனா கடற்கரை யில் மீளாத்துயிலிலிருக்கும் முன்னாள் தமிழக முதல்வர் கள் அண்ணாத்துரை, எம்.ஜி.ஆர். ஆகியோரின் கல்லறை களை பார்த்திருக்கும் எனக்கு, தஞ்சாவூரில் அடக்கமாகி விட்ட எமது எழுத்தாளர் டானியலின் கல்லறையைத் தான் தரிசிக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அதுபோன்று இங்கிலாந்தில் கார்ல்மாக்ஸின் கல்லறையையும் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்காதபோதிலும் கியூபாவில் சாந்தாகிளாரா என்னுமிடத்தில் அமைந்துள் ள
ஜீவநதி.

முருகபூபதி
ல்லறைகள்
ஏர் ணஸ் ட் சேகுவேராவினது கல் லறையை தரிசித்தேன்.
மாஸ்கோ செஞ்சதுக்கத்தில் துளசிவாசம் கமழும் மண்டபத்தில் நீண்ட நெடுங்காலமாக நிரந்தர துயில்கொள்ளும் மேதை லெனின் பொன்னுடலையும் தரிசித்திருக்கின்றேன். அவுஸ்திரேலியாவில் தஸ்மானிய மாநிலத்தில் போர்ட் ஆதர் என்னுமிடத்தில் அமைந் துள்ள அவுஸ்திரேலியா அபோர்ஜனிஸ் இனத்தைச் சேர்ந்த முதலாவது இலக்கியப்படைப்பாளி ஹென்றி லோசனின் கல்லறையையும் பார்த்திருக்கிறேன்.
அவுஸ்திரேலியாவில் வதியும் கவிஞர் அம்பி அவர் கள் தான் இலங்கையின் தமிழ் மருத்துவ முன்னோடி டொக்டர் சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் அவர்
8) 54* *
களின் வாழ்வையும் பணிகளையும் பல ஆண்டுகளுக் முன்னர் தமிழ்மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர். 1848 இல் மானிப்பாயில் மருத்துவ சிகிச்சை நிலையம் ஒன்றை அமைத்த இந்தப்பாதிரியாரைப்பற்றி தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிய அம்பி, அத்துடன் நில்லாமல் அமெரிக்காவில் மசாசூசெட் மாநிலத்தில் வூஸ்டர் என்ற கிராமத்திலிருக்கும் கிறீனின் கல்லறையையும் சென்று பார்த்துவிட்டு வந்து தனது அனுபவங்களை பதிவுசெய்தார். கிறீனின் அந்தக்கல்லறையில் Medical Evangelist to the Tamils என்று பொறிக்கப் பட்டிருக்கிறது.
சரி, இனி சென்னை மெரீனா கடற்கரைக்கு
10
-இதழ் 59

Page 43
வருகின்றேன். ஞாயிற்றுக்கிழமைகளில் அண்ணா, எம்.ஜி.ஆர் சமாதிகள் அமைந்துள்ள இந்த இடத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் திரளுகிறார்கள். இந்த ஆண்டு தொடக்கத்தில் அங்கே சென்று ஜனசமுத்திரத்துக்குள் நானும் குடும்பத்தினரும் திக்குமுக்காடிப் போனோம்.
- 1990 இல் எனது தாயாரையும் குடும்பத் தினரையும் அழைத்துச்சென்றபொழுது நான் கண்ட காட்சி வியப்பில் ஆழ்த்தியது. ஒரு கிராமப்புறப் பெண், தனது குழந்தையை எம்.ஜி.ஆரின் கல்லறை மீது வைத்து, “ஐயா.. சாமி... என் பிள்ளையை ஆசிர்வாதம் பண்ணுங்க தலைவரே..." என்றாள்.
அங்கு கடமையிலிருந்த ஒரு பொலிஸ் காரரிடம் எனது வியப்பை பகிர்ந்துகொண்டபொழுது, “இதென்ன சார் அதிசயம். தமிழ்நாட்டில் பல கிராமங் களில் கிழவிகள், எம்.ஜி.ஆர் தற்போது இல்லை என்ற உண்மையையும் ஏற்கத்தயாராக இல்லை” என்று சொல்லி என்னை மேலும் வியப்பிற்கு ஆளாக்கினார்.
| எம்.ஜி.ஆர் ஏன் மண்ணுக்குள் அடக்கமானார் என்பதற்கும் பல கதைகள் சொல்லப்படுகின்றன. அவர் திராவிட அரசியல் பாரம்பரியத்தில் வந்தமையால் அண்ணாத்துரையைப்போன்றே அடக்கமானதாகவும் சொல்லப்படுகிறது. அதேசமயம் அவர் தகனம் செய்யப் பட்டிருந்தால் எத்தனைபேர் அந்தச் சிதையில் பாய்ந்து தீக்குளித்திருப்பார்களோ?என்ற அச்சமும் இருந்ததாம். ஏன்... இன்றைய தமிழக முதல்வரும் எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசுமான செல்வி ஜெயலலிதா கூட உடன் கட்டை ஏறவிருந்ததாக வெளிவந்த செய்தியும் மறைவதற்கு பலகாலம் எடுத்தது.
கல்லறைகள், அதனுள் உறங்குபவர்களின் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் காவியம்தான்.
இச்சந்தர்ப்பத்தில் நான் அறிந்த செய்தி யொன்றும் என்னை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
ஐரோப்பிய நாடொன்றில் அகதியாக புகலிடம் பெற்ற எங்கள் ஈழத்து தமிழ் இளைஞர்களுக்கு, அரசின் உதவிப்பணம் செலவுக்கும் ஊருக்கு அனுப்புவதற்கும் போதவில்லை என்ற காரணத்தினால், அவர்கள் வரு மானத்துக்காக புதிய உத்தியொன்றை கையாண்டார் களாம்.
தங்கவைக்கப்பட்டுள்ள அகதி முகாமுக்கு சமீப மாக இருக்கும் மயானங்களுக்குச்சென்று, சமீபத்தில் மறைந்து கல்லறைகளுக்குள் அடக்கமானவர்களின் சமாதி களை பார்வையிட்டு அவர்களின் பிறந்த திகதி மற்றும் மறைந்த திகதிகளை ஒரு டயறியில் குறித்துக் கொண்டு வந்துவிடுவார்களாம். குறிப்பிட்ட முக்கியமான நாட் களில் மறைந்தவர்களின் நெருங்கிய உறவினர்கள் அங்கே வருவதற்கு முன்பே சென்று கல்லறை அமைந்துள்ள இடத்தில் வளர்ந்துள்ள புல், புதர்களை வெட்டி சுத்தப் படுத்தி அழகுபடுத்துவார்களாம். உறவினர்கள் அஞ்சலி செலுத்தவரும்பொழுது குறிப் பிட்ட சுத்தம் செய்யும்
ஜீவநதி

வேலையை தாமே செய்ததாகச் சொல்லி அவர்கள் தரும் ப ண த் தை நன் றி யு டன் பெற் றுச் சென்றார்களாம்.
இந்தப் புண்ணியத்தை இலங் கையில் செய்ய முடியாமல் தடுத்துவிட்டார்கள் ஆட்சி யாளர்கள். இன விடுதலைப்போரில் வித்தானவர் களின் துயிலும் இல்லங்கள் அழிக்கப் பட்டது கொடுமையிலும் கொடுமை. கல்லறைகள் என்ன பாவம் செய்தன.
ஒரு சிங்களத்திரைப்படத்தின் கதையையும் சொல்லிவிடுகின்றேன்.
இந்தப் போரில் கொல்லப்பட்ட இராணுவ வீரனின் சடலம் சீலிடப்பட்ட சவப்பெட்டியில் எடுத்து வரப்பட்டிருக்கிறது என நம்பிக்கொண்டு, குடும்பத் தினர் அதனை திறந்து பார்க்காமலேயே அடக்கம் செய்கின்றனர். படிப்பறிவற்ற பாமரனான அந்த வீரனின் தந்தையான கிராமவாசிக்கோ, சவப்பெட்டியிலிருப்பது தனது மகன் அல்ல என்ற உள்ளுணர்வு. ஏனென்றால் படையிலிருந்த மகனின் கடிதம் சமீபத் தில் தான் தந்தைக்கு கிடைத்திருக்கிறது. ஒரு நாள் விடியு முன்பே மண்வெட்டியுடன் புதைகுழி நோக்கிச் செல்லும் தந்தை, நிலத்தைக் கிண்டி சவப்பெட்டியை எடுத்து திறந்து பார்க்கிறார். உள்ளே அவருக்கு பேரதிசய மும் பேராச்சரியமும் காத்திருக்கிறது. மகனின் சடலத்துக்குப்பதிலாக இரண்டு வாழைமரக் குற்றிகள் அதனுள்ளே கிடத்தப்பட்டிருந்தன.
பிரஸன்னவிதானகேயின் “புறஹந்த களு வர" திரைப்படத்தைத்தான் இங்கே குறிப்பிட்டேன். (இந்தப்படம் பற்றிய பதிவை ஜீவநதி வாசகர்கள் ஜீவநதியின் கடந்த வைகாசி மாத இதழில் பார்த்திருக் கலாம்) இந்தப்படத்திற்கு முன்னைய ஆட்சியாளர் களினால் சிறிதுகாலம் தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஜோ அபேவிக்கிரம் என்ற பிரபல சிங்கள திரைப் படக்கலைஞர் தந்தையாக அற்புதமாக நடித்திருந்தார். அவர் அந்தப்படத்தில் பேசும் வசனங்கள் ஒரு சிலவே.
இலங்கையில் பிரபல சிங்கள திரைப்பட நடிகை ருக்மணிதேவி. எங்கள் நீர்கொழும்பு ஊரைச் சேர்ந்தவர். 1978ஆம் ஆண்டு நீர்கொழும்பு கொழும்பு வீதியில் ஜா-எல என்ற இடத்தில் நடந்த வாகன விபத் தில் கொல்லப்பட்டார். இந்த விபத்தை நான் வேலைக்குச் சென்றுகொண்டிருக்கும்பொழுது பார்த்தேன்.
அவரது பூதவுடல் நீர்கொழும்பு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவர் அணிந்திருந்த விலை யுயர்ந்த சாரியையும் விலையுயர்ந்த சவப்பெட்டியை யும் இரவோடு இரவாக தோண்டி களவாடி எடுத்துச் செல்ல சில கயவர்கள் முயன்றபொழுது மயானக் காவலர்களினால் கையும்மெய்யுமாகப்பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்தச்சம்பவம் 1978 அக்டோபர் மாதத்தில்
41
இதழ் 59

Page 44
நடந்தது எனக்கு நல்ல நினைவு. நீண்ட காலத்திற்குப் பின்னர் நீர்கொழும்பில் ஒரு மரணச்சடங்கில் கலந்து கொண் டபொழுது அந்த மயானத்துக்குச் சென்று ருக்மணிதேவியின் கல்லறையை பார்த்தேன். அந்தக் கல்லறை சரியான பராமரிப்பின்றி சிதிலமாகியிருந்தது. மயானத்தை பராமரிக்கும் காவலர்களிடம் விசாரித்தேன். அவர்கள் என்னை அங்கிருந்த ஒரு கட்டிடத்திற்கு அழைத்துச்சென்றார்கள். அதனைத் திறந்து அவர்கள் காண்பித்தவற்றை பார்த்து வியப்புற்றேன்.
அங்கே ருக்மணிதேவியின் முகத்துடன் ஒரு வெள்ளைச்சிலை, அவர் நடித்த அனைத்து திரைப் படங்களின் பட்டியல் பதிந்த சீமெந்துப்பலகை, மற்றும் அலங்கார தூண்கள், வளைவுகள். அவை அனைத்தும் தூசுபடிந்து அலங்கோலமாக காட்சி அளித்தன.
“ஏன் ... இப் படிக் கிடக் கின் றன?” எனக் கேட்டேன். “எல்லாம் குடும்ப அரசியல்தான்” என்றார்கள். மேலும் விபரித்தார்கள்.
நீர்கொழும்பு மாநகரசபையின் ஆளுகைக்குள் அமைந்துள்ள பூங்காவின் அருகில், ருக்மணி தேவிக்காக ஒரு நினைவு இல்லம் அமைந்துள்ளது. பிரேமதாஸா பிரதமராக பதவியிலிருந்த காலப்பகுதியில் டவர் பவுண்டேஷன் மூலமாக ருக்மணிதேவிக்காக , கட்டப் பட்ட இல்லம். அதனை அவருக்கு பிரதமர் சம்பிரதாய பூர்வமாக ஒப்படைக்கவிருந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக ருக்மணிதேவி விபத்தில் கொல்லப்பட்டதும், அந்த இல்லத்தை அடைவதற்கு ருக்மணிதேவியின் குடும்பத்தினரும் உறவினர்களும் போட்டியிட்டனர்.
“எவருக்குமே இல்லை” என மறுத்துவிட்ட பிரேமதாஸா, அதனை அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். மூலம் திறந்துவைத்து டவர்பவுண்டேஷனின் பொறுப் பில் விட்டுவிட்டார். அந்தக்கோபம்தான் இங்கு அந்த நடிகையின் கல்லறையின் இன்றைய கோலம்.
உறவினர்களுக்கோ, கல்லறையில் பாசம் இல்லை. காசில் தான் பாசம் இருந்திருக்கிறது. இத்தனைக்கும் தனக்கென ஒரு வீட்டை சொந்தமாக வாங்கிக்கொள்ளாமல் இரவு பகலாக ஓய்வின்றி நடித்து உழைத்து உறவினர்களுக்கு சோறுபோட்டவர்தான்ருக்மணி தேவி. அவரது கல்லறையின் கதை இப்படி இருக்கிறது என்றால், எங்கள் டானியலின் தஞ்சை கல்லறை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
அவரை அங்கு அடக்கம்செய்யும்பொழுது அருகிலிருந்தவர்கள் எமது நண்பர்கள் செ. கணேச லிங்கன் மற்றும் பிரான்ஸில் வதியும் இளங்கோவன்.
கடந்த ஆண்டு அங்கு சென்ற நண்பர் இளங் கோவன் பேரதிர்ச்சியடைந்துள்ளார். குறிப்பிட்ட இடத்தில் டானியலின் கல்லறையை காணவில்லையாம். புதர்கள் மண்டிய நிலையில் அந்த மயானம் காட்சி அளித்திருக் கிறது. இளங்கோவனின் பதிவை இங்கு சமர்ப்பிக் கின்றேன்.
ஜீவநதி -

“இலங்கை தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்க அமைப்பாளரும் - மக்கள் கலை இலக்கியப் பெரு மன்றத் தின் தலைவரும் - தலித் இலக்கியப் பிதாமகர் - முன்னோடி எனப் போற்றப்படுபவரும் - பொதுவுடமை வாதியுமான கே.டானியல் 23-03-1986-ல் தஞ்சாவூரில் காலமானார். அங்கு வடவாற்றங்கரையில் நாத்திகர்கள் - பொதுவுடமை வாதிகள் அடக்கம் செய்யப்படும் இடத்தில் பெருமளவிலான கலை இலக்கிய – அரசியல் தோழர்கள் முன்னிலையில் அவரது அடக்கம் இடம்பெற்றது.
புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் அமைக்கப்பட்ட கல்லறை - நினைவுச் சின்னத்தைப் பேராசிரியர் பா. கல்யாணி 1987 -ல் திறந்து வைத்தார். சில வருடங்களுக்குப் பின்னர் டானியல் புதல்வர்கள் - பேராசிரியர் அ. மார்க்ஸ் ஆகியோர் முயற்சியினால் அது புதுப்பிக்கப்பட்டது. ஆனால் இன்றைய நிலை கவலை யளிக்கிறது.
கடந்த 11 - 05 - 2012 காலை தோழர் பசு. கெளதமன் மற்றுமொரு தோழருடன் டானியல் கல்லறையைப் பார்க்கப் போனேன். அடையாளம் காண முடியாதபடி முட்புதர்களால் மூடப்பட்டிருந்தது. நினைவுச் சின்னத்தைக் காணவில்லை.
அது மறைந்த மாயம் என்ன..? அது பொருத்தப்பட்ட இடம் சிறிது சிமெந்து பூசி மறைக்கப் பட்டிருந்தது.
புகழ்பெற்ற படைப்பாளியும் சமூக விடுதலைப் போராளியுமான டானியல் மற்றும் திராவிட இயக்கத் தலைவர்களில் ஒருவரான பட்டுக்கோட்டை அழகிரி ஆகியோரின் கல்லறைகள் அமைந்த இடத்தை இப்படியா பராமரிப்பது..? தஞ்சை நகரசபைகண் திறக்குமா..?
இது குறித்து டானியலின் உற்ற தோழரான பேராசிரியர் அ. மார்க்ஸின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது...!”
ஒரு சந்தர்ப்பத்தில் மல்லிகையில், ஜீவா ஒரு கேள்வி பதில் பகுதியில், “என்றைக்காவது ஒருநாள் டானியலின் கல்லறையை பெயர்த்துக் கொண்டு இலங்கைக்கு கொண்டுவரவேண்டும்” - என்று ஒரு குழந்தையுள்ளத்தோடு குறிப்பிட்டதும் தற்பொழுது ஞாபகத்திற்கு வருகிறது.
ஒவ்வொரு கல்லறைகளுக்கும் பின்னாலும் எந்தவொரு விடுதலைப்போரிலும் உயிர்த்தியாகம் செய் தவர் களின் துயிலும் இல் லங் களுக்குப் பின்னாலும் கதைகள் இருக்கின்றன.
எந்தவொரு பூதவுடலுக்கும் மரியாதை தரப் படுகிறது. பொலிஸார், படையினரும் தமது தொப்பியை கழற்றி தலைவணங்குவார்கள். இது உலகப்பொது நாகரீகப் பண்பு. எனவே கல்லறைகளும் மரியாதைக் குரியவை. அவற்றுக்கு காவிய மரபு இருக்கிறது.
இதழ் 59

Page 45
அந்தனி ஜீவாவின் அரை
ஒரு வானம்!
அந்தனி ஜீவா
நாவலாசிரியர் கு, சின்னப்பபாரதி அவர் களுடன் பழகியது, பேசியது, அவர் பெயரால் இயங்கி வரும் அறக்கட்டளை அதன் செயற்பாடுகள், முதற் தடவை அவர் வந்த பொழுது யாழ்ப்பாணம் சென்றது. பின்னர் இரண்டு தடவை இங்கு வந்த பொழுது, அவரை மலையகத்துக்கு கூட்டிச் சென்றது, அவரது எழுத்தைப் போல அவரது வாழ்வும் பணியும் அமைந்திருந்தது அனைத்தும் என் நெஞ்சில் பசுமையாக உள்ளது. அது மாத்திரமல்ல அவர் ஈழத்து எழுத்தாளர் மீதும் ஈழத்து படைப்புகள் மீதும் பெரும் மதிப்பு வைத்திருந்தார். அவரது நண்பர்கள் நாமக்கல்லை சேர்ந்தவர்கள். நாவலாசிரியர் கு.சின்னப்பபாரதி என்ற அறக்கட்டளை ஆரம்பித்து இலக்கியப் படைப்புக்களுக்கு பரிசளித்த பொழுது ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புகளுக்கும், புலம்பெயர்ந்து வாழும் நம்மவர்களின் படைப்பு களுக்கும் பரிசு வழங்க வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார்.
2008 ஆம் அண்டு ஏப்ரல் மாதம் நாவலா சிரியர் கு.சின்னப்பபாரதியின் இலக்கியப் படைப்பு களைப் பற்றி கருத்தரங்கு நடத்துவது என டாக்டர் பொ.செல்வராஜ் அவர்கள் தலைமையில் இலக்கிய ஆர்வலர்களைக் கொண்ட ஒரு கூட்டம் நாமக்கல்லில் கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில் கு.சின்னப்பபாரதியின் இலக்கியப்படைப்புகள் இந்திய மொழிகள் பலவற்றில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதால் இலக்கிய ஆய்வாளர் கள், விமர்சகர்கள், படைப்பாளிகளை அழைத்து கருத்தரங்கம் ஒன்றை இரண்டு நாட்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக சிறப்பு மலர் ஒன்று வெளியிடுவது என்றும், மலருக்கு விளம்பரம் பெறுவதன் மூலம் கருத்தரங்கச் செலவை ஈடுகட்டுவது
ஜீவநதி -

= நூற்றாண்டு அனுபவங்கள் பாடியின் கதை
என முடிவு செய்யப்பட்டது. கருத்தரங்கம் ஜீலை 19., 20 ஆம்திகதிகளில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
பின்னர் இலக்கிய ஆர்வலர்களின் முயற்சி யால் கருத்தரங்கம் இரண்டு நாட்கள் சிறப்பாக நடை பெற்றுவிழா இறுதியில் செலவு போக மீதமான ரூபாய் ஐந்து இலட்சம் நாவலாசிரியர் கு.சின்னப்பபாரதிக்கு வழங்கப்பட்டது. அவர் அதை ஏற்று நன்றி கூறியதுடன் அவரிடம் வழங்கப்பட்ட ஐந்து இலட்சம் ரூபாவை இலக்கியப் பயன்பாட்டுக்குச் செலவிடும்படி கூறி பணத்தை விழாக்குழுவினரிடமே ஒப்படைத்தார். அதன் பின்னர் விழாக்குழு கலந்துரையாடி கு.சின்னப்ப பாரதியின் பெயரில் அறக்கட்டளை ஒன்று பதிவு செய்த அந்த பணத்தில் பெறும் வட்டிப் பணத்தை இந்திய மொழிகளில் ஏதாவது ஒரு மொழியின் சிறந்த படைப்பாளிக்கு பரிசு வழங்குவது என தீர்மானிக்கப் பட்டது. அதன் அடிப்படையில் அறக்கட்டளையில் தலைவராக பொ.செல்வராஜ் அவர்களும், கா.பழனி சாமி செயலாளராகவும் அறக்கட்டளையின் ஒருங் கிணைப்பாளராக பேராசிரியர் நா.செந்தில்குமார் துணைத்தலைவராக சி.க.கருப்பண்ணன், கவித்ரா நந்தினி பாபு, சி.ரங்கசாமி, எழுத்தாளர் ச.தமிழ்ச் செல்வன், பேராசிரியர் அருணன் ஆகியோர் உறுப்பின ராகக் கொண்ட அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டது. ஐந்து இலட்சம் ரூபா வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டது.
- நாவல், சிறுகதை, நாடகம், கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என பங்களிப்பு செய்பவர்கள் சிறப்பானவர்களை தெரிவு செய்து ஒவ்வொருவராக கெளரவிப்பது என முடிவு செய்து ஒவ்வொரு ஆண்டும் காந்திமகான் பிறந்த அக்டோபர் 2ம் திகதி பரிசளிப்பு விழாவை நடத்துவது என அறக்கட்டளை குழுவினர் முடிவு செய்தனர். அதனை 2009 அக்டோபர் 2ம்திகதி நாமக்கல்லில் முதலாவது பரிசளிப்புவிழா மலையாள மொழியில் புகழ் பெற்ற எழுத்தாளரும் ஆய்வாளரு மான பி.கோவிந்தபிள்ளைக்கு ஐம்பதாயிரம் பரிசும் விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
தமிழ்ப் படைப்பாளியின் பெயரால் உரு வாக்கப்பட்ட அறக்கட்டளை என்பதால் இந்திய இலக்கிய பரிசோடு நிற்காமல் முதன்மை பரிசு ஐம்பதாயிரம் ரூபாவும் சிறப்பு பரிசாக ஏழு பேருக்கு
13)
இதழ் 59

Page 46
ரூபா ஐயாயிரம் வழங்குவது என அறக்கட்டளை முடிவு செய்யப்பட்டது. 2010 இல் மே மாதம் 2 ம் திகதி கு.சின்னப்பபாரதி பவளவிழா மலர் மூலம் கிடைத்த நிதியையும், அறக்கட்டளை உறுப்பினர்களின் கணிச மான பங்களிப்பும் சேர்ந்து பரிசளிப்பு விழாவை சிறப்பாக நடத்த நிரந்தர வைப்பு உத்தரவாதம் ஏற்பட்டது. கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விழாவில் இந்தியா வில் வாழும் எழுத்தாளர்கள் மட்டுமன்றி உலக அளவில் வாழும் தமிழ் எழுத்தாளர்களும் பங்கு பற்றலாம் என அறிவிக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 2ம்திகதி சேலம் தமிழ்ச்சங்கத்தில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விருது விழாவில் இலங்கை எழுத்தாளர்களான திருமதி தாமரைச்செல்வி அவர் களின் “பச் சை வயல் கனவு ” நா வலுக் கும் , நீ.பி.அருளானந்தத்தின் “வெளிச்சம்” சிறுகதைத் தொகுதிக்கும் பரிசு வழங்கப்பட்டது.
இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக நானும், கு.சின்னப்பபாரதியின் “சுரங்கம்” நாவலை சிங்களத்தில் மொழி பெயர்த்த உபாலி லீலாரத்னவும் கலந்து கொண்டோம். எங்களோடு திருச்சியில் இருந்த
மூத்த பத்திரிகையாளர் கே.ஜி.மகாதேவா ஆகிய மூவரும் கலந்து கொண்டோம்.
பத்திரிகையாளர் கே.ஜி.மகாதேவாவைப் பற்றிக் குறிப்பிடுவது மிகவும் அவசியமாகும். இவர் இலங்கையில் முப்பது வருட காலம் பத்திரிகைத் துறையில் பணியாற்றியவர். இருபத்து இரண்டு ஆண்டுகள் “ஈழநாடு” பத்திரிகையிலும் எட்டு ஆண்டு கண்டியிலிருந்து வெளிவந்த “செய்தி” பத்திரிகையின் பிரதம ஆசிரியராக பணியாற்றியவர். இவரின் “நினை வலைகள்” என்ற நூல் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெளியிடப் பட்டுள்ள இந்த இரண்டு நூல்களின் வெளியீட்டு விழாவை நண்பர் மகாதேவாவின் வேண்டுகோளின் படி 2006 ஆம் ஆண்டு ஜூலை 23ம் திகதி மூத்த
.. இல்லத்தி2 :
ஜீவநதி

பத்திரிகையாளரான ஈ.வி.டேவிற்ராஜூ தலைமையில் வெளியீட்டு விழாவை சிறப் பாக நடத்தினேன். இரண்டாவதாக வெளிவந்த இவருடைய “கதையல்ல நிஜம்” என்ற ஈழகேசரியில் எழுதி பத்தி எழுத்துக் களைக் கொண்ட நூலின் வெளியீட்டு விழாவையும் கொழும்பில் சிறப்பாக நடத்தினேன்.
யாழ்ப்பாணம் ஈழநாடு பத்திரிகை காரியா லயத்திலும் கண்டி செய்திபத்திரிகையிலும் பணி யாற்றிய பொழுது நேரில் சந்தித்து உரையாடி மகிழ்ந்துள்ளோம். இவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் “ஈழநாடு” பத்திரிகையில் பணியாற்றி தற்போது புலம் பெயர்ந்து லண்டனில் “புதினம்” பத்திரிகை வெளியிடும் ஈ.கே.ராஜகோபால். இவர் மூத்த எழுத்தாளர் வரதரால் ஊக்குவிக்கப்பட்டு பத்திரிகைத் துறைக்குள் வந்தவர். இவர்களின் நட்பு இன்று வரை தொடர்கின்றது.
இனி விடயத்திற்கு வருவோம் சேலத்தில் நடைபெற்ற சின்னப்பபாரதி அறக்கட்டளை விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியதன் பின்னர், இலங்கை எழுத்தாளர்களின் விருதுகளையும், பரிசு பணத்தை என்னிடம் வழங்கினார்கள் அதனை கொழும்பில் வைத்து கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் பேராசிரியர் சபா.ஜெயராசாவின் தலைமையில் சிறிய நிகழ்வாக நடத்தி உரியவர்களுக்கு வழங்கினோம்.
சேலம் விழாவில் ஓர் மிக முக்கியமானவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரை நானும், என்னை அவரும் தெரிந்து வைத்திருந்தார் விழா நடைபெற் றுக் கொண் டிருக்கும் அவசரமாக வந்திருந்தார். வேறுஒரு இலக்கியவிழாவிலும் கலந்து கொள்ள வேண்டியிருப்பதால், அவர் உரையாற்றி விட்டு விழா அழைப் பிதழை காட்டி என் னை விசாரித்தார் பின்னர் என்னை விசாரித்தார். பின்னர் என்னை அடையாளம் கண்டு கொண்டு என்னை சிறிது தனியே அழைத்து அவசரம் போக வேண்டியிருப்பதால் இலங்கை திரும்பும் முன்னர் ஈரோடுக்கு வரும் படி அன்பு அழைப்பு விடுத்ததுடன் தனது கைத்தொலை பேசி எண்ணையும் தந்து ஈரோடுக்கு வரும்படி ரயில் நிலையத்திற்கு வந்து அழைத்துச் செல்வதாகவும்
கூறினார்.
மறுநாள் ரயில் நிலையம் சென்று ஈரோடு போவதற்கு டிக்கட்டுகளை வாங்கிக் கொண்டு சிற்றிதழ் சேகரிப்பாளர் பட்டாபிராமனையும் சந்தித்து விட்டு, திருச்சியிலுள்ள சசிபாரதி இல்லம் சென்று அவரையும் சந்தித்து உரையாடிய பின் திருச்சி ஹோட்டலுக்கு திரும்பினோம். மாலை பத்திரிகையாளர் மகாதேவா வுடன் ரயில் நிலையம் வந்து அவரிடம் விடை பெற்று ஈரோடு செல்வதற்கு ரயிலில் பயணமாகின்றோம்.
(தொடரும்)
A
இதழ் 59

Page 47
பிரபல எழுத்த. ரர் தெணியானுக்கு வந்த கடிதம்
எழுத்தாளர் இளையவன் எ
அன்புடன் நாவலாசிரியர் திரு.தெணியான் அவர்க
நலம். நலம்பெற மிக விழைகிறேன். நிற்க படைப்பு நூலுருவில் கிடைக்கப் பெற்று வாசித்தே பெற்ற அனுபவங்களின் உந்துதலால் தங்களுக்கு ஆழமாக படிக்கும் போது மாறுபாடான எண சித்தமாயுள்ளேன்.
த ஈழத்து சைவக் கோவில் பூசகர்கள் அ தாங்கள் சித்திரித்துக் காட்ட எடுத்த முயற்சிக்கு சிறுகதைகள் என் பார்வை மண்டலத்தினுள் சிக்க எடுத்துக் கொண்டு கதை மாந்தர்களும், புலமும் 6 கருத்து இருக்க முடியாது என்றே நம்புகின்றேன். 8 பற்றியும் எனக்கு எந்த முரண்பாடும் இல்லை. இத்த ஆளுமை, படைக்கப்பட்ட முறைமை, கதைப்பாங் கவனம் செலுத்தியிருந்தால் சிறப்பாக அமைந்திரு தான் அவர்களுக்காகவும் பேனா தாங்க முன்வந் வேண்டியதவசியம் எனக் கருதுகிறேன். இது ! என்பதைத் தயவு செய்து ஏற்றுக் கொண்டு நான் என்னுடன் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.
- முதலில் பிராமணர்கள், ஐயர்மார் என்ற பதி என் கருத்தாகும். வர்ணாசிரம் தர்ம அடிப்படை! செல்வாக்கு மிக்க ஒரு சமூகக் குழுவாகவே பி பிடிப்பை பலப்படுத்திக் கொண்டு சுரண்டல் நடத பெரியார் ஈ.வெ.ரா. இனங்கண்டார். இந்த எந்த வ அடங்க மாட்டார்கள் என்பதுவே என பணிவா இந்துமதகுருமார் என்பன போன்ற பதப்பிரயோக நம்புகின்றேன். இனி இந்தச் சமூகக் குழுவினர் எதிர்
முதலாவதாக ஏனைய மதங்களைப்போல் ஒழுங்கமைக்கட்டதாக இல்லை. கீருத்துவத்திற்கு நிறுவன ரீதியான ஒழுங்கமைப்பு இருப்பதால் (Inst விதிமுறைகள் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இத் "பக்தி” என்பது அவசியப்படுகின்றது. ஆனால் இந் கட்டுப்பாடுகளும் இல்லை. அதுபோல் மதகுருவு தில்லை. இந்த நிலைமையினால் பல விளைவுகள்
அடிப்படை உணர்வு கூட இல்லாத பலர் தொ!
ஜீவநதி

வ்கள்
'ழுதியிருக்கும் சில கடிதங்கள்
ஊரெழு மேற்கு, சுன்னாகம்
1.1.1990
ளுக்கு.
. “பொற்சிறையில் வாடும் புனிதர்கள்" என்ற தங்கள் ன். ஒரேயொரு தடைவை வாசித்த போது கிடைக்கப் : இம்மடல் வரைகின்றேன். மீண்டும் ஒரு தடைவை ணங்கள் தோன்றுமாயின் பகிர்ந்து கொள்ளச்
ல்லது அர்ச்சகர்கள் வாழ்க்கையின் மறுபக்கத்தை என் பாராட்டுக்கள். தாங்கள் குறிப்பிட்ட மற்ற இரு Tமை குறித்து கவலைப்படுகிறேன். நிற்க. அந்நாவல் ஏனைய எவரும் எடுத்தாராயது என்பதில் இரண்டாம் இப்படைப்பின் மூலம் தாங்கள் சொல்ல வந்த செய்தி தகைய இலக்கியத்தின் தேவை இந்நாவலின் எழுத்து பகு, மற்றும் அழகியல் அம்சங்கள் குறித்து மேலும் க்குமே என்ற ஆதங்கம் எனக்குண்டு. இந்த வகையில் தே தாங்கள் சில செய்திகளைத் தெரிந்து கொள்ள ஆலோசனையோ அல்லது அறிவுரையோ அல்ல - பார்க்கும் கோணத்திலிருந்து முரண்பட்டு நிற்பின்
தப்பிரயோகங்களே இங்கு பொருத்தமானது அல்லது பில் உயர்ஜாதியினர் எனக் கருதப்பட்டு, அரசியல் ராமணர்கள் இருந்திருக்கிறார்கள். பொருளாதாரப் ந்தியவர்களை பார்ப்பனர் அல்லது ஐயர்மார் எனப் கையிலும் ஈழத்தில் வாழும் சைவாலய அர்ச்சகர்கள் ன கருத்தாகும். ரசவாலய அர்ச்சகர்கள் அல்லது ங்களே இங்கு பொருத்தமானதாக இருக்கும் என -நோக்கும் பிரச்சினைகளை ஆராய முற்படுகிறேன்.
சைவம் அல்லது இந்துமதம் ஒரு ஸ்தாபன ரீதியான தம், இஸ்லாத்திற்கும், பௌத்தத்திற்கும் இத்தகைய rtutionalise) மதகுருமாருக்கிடையே வரையறுக்கப்பட்ட துடன் இந்த மதங்களில் மதகுருவாக மிளிர்வதற்கு து மதத்தைப் பொறுத்தவரையில் வரையறுக்கப்பட்ட க்கு “பக்தி” என்பதும் அவசியமாக வேண்டப்படுவ தோன்றுகின்றன. உதாரணமாக "இறைபக்தி” என்ற ஜில் ரீதியான மதகுருவாக மிளிர்கின்றனர். இங்கு
45
- இதழ் 59

Page 48
குறிப்பிடப்படும் அத்தகைய நபர்களோ அல்லது ஒ ஆனால் அதனால் பாதிக்கப்படுவோர் குருமார்கள் என்பது போலித்தனமான கெளரவங்களை நிலைநாட அல்லது இறை அச்சம் என்பதற்கு இடமளிக்காத எனப்படுபவர் வெறும் கூலிக்காரனாக மட்டுமே இருக் வரையில் அனைவருக்கும் தம் அந்தஸ்து குல நிலைநாட்டும் சமூக மையமாக கோவில்களை க அப்போது தான் அர்ச்சகர்களும் பெருமை பெற முடிய
இரண்டாவது கிருத்துவத்திற்கு ஒரு பைபி தம்பபதம் இருப்பது போல் சைவம் அல்லது இந்து | வெளிப்படை. இதன் காரணமாக கோவில்களில் நி சடங்குகளுக்கான பொருத்தமான காரணகாரிய வி பான் மையோரால் அளிக்க முடிவதில்லை என வரைமுறையாகப் போதிக்ககூடிய நிறுவனங்கள் இல்
மூன்றாவதாக மதகுருமாரின் சமூக அந் பொருளாதாரப் பலத்தால் அல்லது மக்கட்தொகை வகையிலும் பலம் குறைந்த மதகுருமார் பலவகைத்த
இப்படியே பலவற்றை விரித்துச் செல்லல என்பதால் உடனடியாக எதிர் நோக்கப்படும் சிக்கல்கள்
அர்ச்சகர்களின் உளப்பூர்வமான அடிமைத்த இங்கு நிலவும் சாதிய அடக்குமுறையில் அர்
2.பூசகர்களின் சமூக பலம்.
முதலாவதனை எடுத்துக் கொண்டால் அர்ச் கூட "ஆசாரத்தை காப்பாற்றுதல்” என்ற நிர்ப்பந்தத் சமூகக் கட்டுப்பாடுகள் பல உள். சாப்பாட்டிற்கு பால் வரை, சலூனில் முடிவெட்டுவது முதல் உடுப்பு வெ கண்களுக்கு தென்பட்டால் மெல்லும் வாய்க்கு அவல் என்பது போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் அதிகபட்சத் குடும்பம் முழுமைக்கும் கிடைத்து விடும் இந்தக் கேடு
|இரண்டாவதாக இங்கு நிலவும் சாதிய அட ஒடுக்கப்படுபவர்கள் அர்ச்சகர்கள் தான். "ஐயா” விலங்குகளை அறுத்து எறிய முடியாமல் அவலப்ப பூசகர்களாக அல்லது அர்ச்சகர்களாக அல்லாத பே (தன் வசதிக்கேற்ப) ஆசாரக்குறைவாகவே எண்ன முறைகளுக்கு இந்த அர்ச்சகர்கள் எவ்வித்திலும் கார அடக்கப்பட்ட மக்களுக்கும் அர்ச்சகர் களுக்கும் இ இவை கெதச்சைத்தனமான விமர்சனங்களால் உ "ஐயர் குடிக்கிறார்”, “மச்சம் தின்னுறார்” என்ற அர் சமூகத்தில் அர்ச்சகர்களை மட்டம் தட்டுகிறது.
மூன்றாவதாக சனத்ரெகை ரீதியாக மிகச் சி மொத்த உற்பத்தித்துறை எதிலும் எவ்வித பங்கும் செ பாதுகாக்கும் சின்னங்காக கோயிலும் பூசையும் இரு பூசகர்களின் இன்றைய அவல நிலை போக்கப்பட ( பாத்திரத்தை கௌரவத்தை அர்ச்சகர்களுக்கும் அவர்களும் அடுத்த நேர உணவு பற்றியோ அல்லது சமூகத்திற்கும் தங்கள் பங்கையாற்றும் மானிடர்களா
எல்லாவற்றிற்கும் மேலாக அர்ச்சகர்களாக ! கொண்ட எவரையும் நியமிக்கும் நிலை பெற வேண் அமையாமல் தொழில் தகமைகள் நிறைந்தவர்கள் ந கடவுள் கொள்கை இனிமேலும் கூட சமூகத்தை க என்பதும் அராயப்பட வேண்டியதே. பிற பின்.
ஜீவநதி

ந சில தனிநபர்களேர் பொறுப்பேற்க முடியாது. ாகவே உள்ளனர். சமூகத்திலும் கூட கோயில் டும் சின்னங்களாக மட்டுமே உள்ளன. இறைபக்தி னவாகவே இருக்கும். கோயில்களில் அர்ச்சகர் க முடியும். தர்ம கர்த்தாக்கள் முதல் வழிபடுவோர் பெருமை, மற்றும் போலிக் கௌரவங்களை கருதும் போக்கை எப்போது கைவிடுவார்களோ
ம் என நான் நம்புகிறேன்.) ர், இஸ்லாத்திற்க ஒரு குர்ஆன், பௌத்தத்திற்கு மத்திற்கு சித்தாந்த வரையறுப்பு இல்லை என்பது கழ்த்தப்படும் கிரியைகளுக்கான அல்லது சமயச் எக்கங்களை இங்குள்ள மதகுருமார்களில் பெரும் 'பது உண்மை. இங்கு சைவசித்தாந்தத்தை
லை என்பதும் இதற்கொரு காரணமாகலாம். தஸ்து அல்லது அரசியல் அந்தஸ்து என்பது ப் பலத்தால் நிர்ணயிக்கபடும்போது இவ்விரண்டு பக்கங்களுக்கு உட்பட நேரிடுகின்றது கண்கூடு. ாம். ஆனால் கடிதத்தை நீட்ட விரும்பவில்லை ளை வகைப்படுத்திக் கூற முற்படுகிறேன். னம் ச்சகர்கள்
சகரின் பூசை நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் தின் கீழ் 24 மணிநேரமும் கட்டிக்காக்க வேண்டிய ண் வாங்குவது முதல் கடையில் தேநீர் குடிப்பது ளுப்பிப்பது வரையில், அனைத்தும் ஏனையோரின் லாகி விடுகின்றன. ஒழுக்கக்கேடு ஆசாரக்குறைவு தண்டனை சம்பந்தப்பட்ட ஒருவருக்கு மட்டுமன்றி கெட்ட சமூக நீதி மன்றத்தில், டக்குமுறைகளில் மிகவும் கேடுகெட்ட முறையில் என்ற வார்த்தைக்குள்ளேயே பூட்டப்பட்டுவிடும் - வேண்டிய தொழில் ரீதியானதாகி விடுகின்றது. எதிலும் கூட சமூகத்தின் கட்டுப்பாடுகளை மீறுதல் னப்படுகின்றது. எனினும் இங்கு சாதிய அடக்கு
ண கர்த்தாக்காளக இல்லாமையினால் இயல்பாக இடையே ஒருவகை உறவு மலர்கின்றது. ஆனால் ருச்சிதைக்கப்படுகின்றது. இதன் மறுவிளைவாக த்தமற்ற பொய்கள் விசுவரூபப் பிரச்சாரமெடுத்து
"றுபான்மையினராக ஒரு சமூகக் குழு சமூகத்தின் லுத்தாமல் போலித்தனமான கௌரவங்கள்ளைப் க்கும் வரை இந்த நிலைமை மாறப் போவதில்லை. வேண்டுமானால் சமூகம் ஒரு மதகுருவுக்கு உரிய வழங்க முன் வரவேண்டும். அப்போது தான் தின சொந்த பிரச்சிரனகள் பற்றியோ அல்லாமல் கமலர முடியும் என்பது என் நம்பிக்கை. பக்தியும், சித்தாந்த தெளிவும், இறை நம்பிக்கையும் நிம். குலம், சாதி அடிப்படையில் அர்ச்சகர் தெரிவு மறைய வேண்டும். இவை அனைத்தற்கும் மேலாக ட்டுப்படுத்த அல்லது வழிப்படுத்த போதுமானதா
க.பாலநடராசன் (இனியவன்)
-இதழ் 59

Page 49
சைவப்புலவர் சி .வல்லிபுரம்
கேழ்ச்சி பனை " சீர்திருத்,ஆர்
அன்புடையீர்,
சென்ற ஞாயிற்றுக்கிழமை(21.11.78) ஓய்வ வெளிவந்திருந்த ஒரு சிறு கதையினை வாசித்தே
அதில் உயர்ந்த அம்சங்கள் அநேகம் காணப்பட கதையின் தரத்தைப்பெரிதும் உயர்வடையச்செய்து
ஒரு சிறு நிகழ்ச்சியை அடிப்படையாகக் கெ இணைந்து செல்லுங் கற்பனைகள் யாவுமே கலையம்சங்க்ளே கதாசிரியனுடைய சீர்திருத்த உ பதியவைத்து அவர்களைச் சிந்திக்கச் செய்யும் ஆற்
கதையின் தலைப்பு மிகமிகப் பொரு; எத்தனையோ காரியங்களில் கண்ணை மூடிக் அனுபவிப்பவர்களை கண்ணைத் திறந்து வெல் நடக்கிறோம்” என்ற அந்தக் கதையின் தலைப்பு. இ. விஷயங்களுக்கு மட்டுமன்றி மிகச்சிக்கலான பாரம் காலப்போக்கில் உங்கள் சிறுகதைத் தொகுதி நடக்கிறோம்” என்ற இந்தப் பெயரே சாலப் பொ நினைவுபடுத்தவே இதனை எழுதலானேன்.
அன்புடையீர்,
குறிப்பிட்ட உங்கள் சிறுகதை ஏக கால் பெற்றமைக்கு முக்கிய காரணம் அதில் நீங்கள் ன. உலகில் இதற்குத் “த்வனிதாலங்காரம்” என்று வ தமிழில் “உள்ளுறை உவமம்” என்று சிலரு கூறுகின்றார்கள். அஃதாவது, படைப்பாளி சொ சொல்லாமல் விட்டுவிட்ட பலகருத்துக்களை வாசக
வியாபார நோக்கத்ாேடு இன்று வெளிய நூற்றுக்கணக்கான விமர்சனக் கட்டுரைகள் எழுத கண்டனம் செய்வதிலும் பார்க்கக் கூடிய பயனை ! மறுக்கமுடியாத உண்மையாகும்.
கவிஞர்முருகையனுடைய கருத்தை அறி அணிந்துரையான எனது கருத்து என் உள்ளத்திலே
அணியான 6
சிறுக தெணியான் எழு
சிறி, திணியான்; ச
எண்ணி பணியான் பலர்
நூலை
ஜீவநதி.

எழுதியிருக்கும் சில கடிதங்கள்
வதிரி 23.11.76
Tக இருந்தபொழுது, “மல்லிகை” 12ம் ஆண்டுமலரில் ன். அந்தக்கதை என்னைப் பெரிதுங் கவர்ந்துள்ளது. ட்டன. பிரசார அம்சம் எதுவுமே இல்லாதிருந்தமை பள்ளது. காண்டு கதை உருவாக்கப்பட்டிருந்தும், சம்பவத்தோடு
கலையம்சம் நிரம்பித் திகழ்கின்றன. இந்தக் -ட்கோளை வாசகருடைய உள்ளங்களிலே கதையைப் ஊறல் படைத்தனவாகும். த்தமும் ஆற்றலும் ஒருங்கமைந்து மிளிர்கிறது. கொண்டு இருளில் நடந்து பற்பல இன்னல்களை ரிச்சத்தில் நடக்குமாறு செய்யவல்லது “இருளில் அந்த அருமையான தலைப்பு சாதாரணமான லெளகீக மார்த்திக விஷயங்களுக்குக் கூடப் பொருத்தமானதே. வெளிவரும்போது அந்த நூலுக்குமே “இருளில் ருத்தமாக இருக்கும் ஆற்றல் படைத்ததென்பதனை
- சி.வல்லிபுரம் (ஆசிரியர்)
த்தில் முதுபெருங்கவிஞர் இருவரது பாராட்டைப் >கயாண்டிருக்கும் ஆபூர்வ “உத்தி"யேயாகும். காவிய -மொழியிலும் சிங்கள மொழியிலும் கூறப்படுகிறது. ம் “இறைச்சிப் பொருள்” என்று வேறு சிலரும் ல்லியதிலிருந்து, மேலும் சொல்லக்கருதி ஆனால் கர்கள் உய்த்துணர்ந்து ரசிப்பது. -
டப்படும் ஆபாசமான சினிமாப்படங்களைப் பற்றி |வதிலும் பார்க்க மேடை ஏறிநன்று கத்துகத்தென்று இது போன்ற சிறுகதைகள் கொடுத்தேவிடும் என்பது
ந்தபொழுது உங்கள் சிறுகதைத் தொகுதி நூலுக்கு கவிதையாகவே உருவெடுத்தது அது பின்வருமாறு:- பச்சுத் தமிழில் தை ஆக்குகின்ற மத்துத் தணியான் தளவும் விரசம் முகம் திருந்திட நற் சிந்தனைசெய் க்கும் பயன்படும் ] படைத்துளனே.
-சி.வல்லிபுரம் (ஆசிரியர்)
17)
- இதழ் 59

Page 50
கலை இலக்கி
வெலிப்பன்னை அத்தாஸின் “பூவும் கனியும்” சி வெலிப்பன்னை ரஹ்மானிய்யா ம.வித்தியாலய யூசு தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக பாரளுமன் சிறப்பித்தார். நூல் அறிமுக உரையை கவிஞர் ஏ. இக்பா ரிம்ஸா முஹம்மத் மேற் கொண்டார். ஏற்புரையை நூலாசி
2) - தென்புலோலியூர் பரா றமேஸின் சிறுவர் | மகாவித்தியாலயத்தில் 30.6.2013 அன்று திரு.ஆ.ரகுநாத விகடகவி மு.திருநாவுக்கரசு கலந்து சிறப்பித்தார். வெளியீட்டுரையை பெரிய ஐங்கரனும் நயப்புரையை கல எற்புரையை நூலாசிரியர் நிகழ்த்தினார். நன்றியுரையை 6
3) சுவிஸ் Luzevn மாநிலத்திலுள்ள Zentrum Michel 3ஆம் உலகப்போர் என்ற நூல் அறிமுக விழா நடைபெ பொன்றனநடைபெற்றன. நாட்டிய நிகழ்வு பலரது கல் நிகழ்ச்சிகளையும் எழுத்தாளரும், இலாபமைய அதிபரும் வைரமுத்து சுவிஸ் வருவதற்கும் ஏற்பாடுகளையும் செ இந்திரன், ரஞ்சன், விக்கி நவரட்ணம் ஆகியோர் கவி பாடின கனடா உதயன் ஆசிரியர் லோகேந்திரலிங்கம் ஆகியோ காப்பீட்டுறுதி பொறுப்பாளர் பீற்றர் மேயர், எவ்லிமேயர், 6 தமிழில் உரையாற்றி அனைவரது பாராட்டையும் பெற்றா அவர்களும் உரையாற்றினார். இந்தடேவிற்கப் என்பவர் மொழிபெயர்த்து பிறருக்கு வழங்கியுள்ளார்.
ஈற்றில் வைரமுத்து பேசும்போது, இந்திய விவசா மோசமான வறுமையே காரணமாகும். இதற்குள் அரசிய மழை பெய்கிறது, மரம் செடியை காக்கிறது, செடி மண்ல நிற்கும் போது! நாம் இயற்கையை பல வழிகளில் சீண்டுகி மண்ணிற்கும், விண்ணிற்கும் நடைபெறும் போர் இது அணுக்குண்டும் அணுக்குண்டும் மோதும் போரல்ல. மன ஓசோன் எனப்படுகின்ற படையில் ஏற்பட்ட துளையால் வசதியின்மையால் விவசாயம் பட்டுப்போகிறது. மேலும் பூமிப்பந்து பிளந்து போகும். விவசாயம் பட்டுப்போகும். வி மக்கள் ஆபிரிக்காவின் சில நாடுகளைப்போல பட்டினியா?
உலகம் சனத்தொகையை குறைத்து மரத்தொன விற்கப்படக்கூடாது, விற்பனைக்கு வரும் விளைநிலங்கள் நீரும்; மின்சாரமும் உபரியாய் உண்டாக்கப்பட வேண்டும் செல்லப்படல் வேண்டும், விவசாயி கற்றவனாக வேண் வெப்பமாதலை தடுக்க வளர்ந்த நாடுகள் சரியான தி பூமிப்பந்தில் 3வீதம் வனப்பகுதி ஆக்கப்படல் வேண்டும் பிறசொத்துக்களை விட்டுப்போகாமல் இருக்கலாம். ஆனா
இந்த மூன்றுக்கும் மூலமாய்விளங்கும் வேளான தமிழர் பங்கு தான் இந்த “மூன்றாம் உலகப் போர்”, என்றா
ஜீவநதி.

ப நிகழ்வுகள்
அவர் பாடல் நூல் வெளியீட்டு விழா 2013.07.01 அன்று | ஞாபகார்த்த மண்டபத்தில் எஸ்.டபிள்யூ பெரேரா ற உறுப்பினர் கௌரவ டாக்டர் ராஜித சேனாரத்ன கலந்து ல் நிகழ்த்தினார். நூல் பற்றிய ஆய்வுரையை வெலிகம உயர் நிகழ்த்தினார்.
ாடல் நூல், இறுவட்டு வெளியீட்டுவிழா யா/ புற்றளை ன் தலைமையில் நடைபெற்றது. முதன்மை விருந்தினராக அறிமுகவுரையை திரு.ந.சிவலிங்கம் அவர்களும், நிதி பண்டிதர் செ.திருநாவுக்கரசு அவர்களும் நிகழ்தினர். வல்.நந்தகுமார் நல்கினார்.
மண்டபத்தில் 2013.6.16 அன்று கவிஞர் வைரமுத்துவின் ற்றது. வயலின் இசையுடன், பரதநாட்டிய நிகழ்வு. பாட்ட ன்களுக்கு இனிய விருந்தாக அமைந்திருந்தன. சகல ான டாக்டர் கல்லாறு சதீஸ் ஒழுங்கமைத்ததோடு கவிஞர் ய்தார். கவிஞர் வைரமுத்துவைப்பற்றி ஜெயந்தி ஜீவா, Tார்கள். பேச்சாளர்களாக பொலிகை ஜெயா, யூலியர் சீசர், எரும் ,முக்கியமாக வெள்ளை இனத்தவர்களான சுவிஸ் லவன் சுந்தரலிங்கம், இந்த லவன் என்ற சுவிஸ் பெண்மணி ர். மேலும் ஜேர்மன் நாட்டின் விரிவுரையாளர் டேவிற் கப் வைரமுத்துவின் 8 கவிதைகளை ஜேர்மன் மொழியில்
-யிகளின் அவலநிலைக்கும், தற்கொலைக்கும் அவர்களின் லும். இயற்கையும் கலந்து கிடக்கிறது. காற்று சவீசுகிறது, மண காக்கிறது இப்படி இயற்கை மனித குலத்துக்கு உதவி றோம். இதனால் இயற்கை பொய்த்து விடுகின்றது. அதவது 1. இது துப்பாக்கியும், துப்பாக்கியும் சுடும் போரல்ல, எணும், விண்ணும் மோதிடும் போர். விண்ணில் உள்ள புவி மண்டலம் வெப்பமடைகிறது. இதனால் போதிய நிவ பூமிப்பந்தில் கூரிய வெப்பம் அதிகளாவில் படும்போது வசாயம் பட்டுப் போனால் மக்களுக்கு உணவு கிடைக்காது. மடிந்து போவார்கள். கயை ஐரோப்பா போல ஆக்கவேண்டும், விளைநிலங்கள் மள அரசே வாங்கி வேளாண்மையை தொடர வேண்டம். நவீன தொழில் நுட்ப முறைமைக்கு விவசாயம் கொண்டு டும்; அல்லது கற்றவன் விவசாயி ஆக வேண்டும். புவி ட்டங்களை ஒருமித்து நடைமுறைப்படுத்தல் அவசியம். - நாம் இப்பூமியில் எம்பிள்ளைகளுக்கு பொன், பணம், ல் நல்ல வளமிக்க பூமியை விட்டு போகவேணும். மையை காப்பது உலகக் கடமை. அந்த உலகக் கடமையின்
தகவல் - பொலிகைஜெயா(சுவிஸ்)
இதழ் 59

Page 51


Page 52
அரச அங்கீகாரம் பெற்ற மு
New Nelsc
நியூ நெல்ச
89, Kandy Road, ( T.P: 021 222 4527, 077 3581916 * சாரதிப் பயிற்சிகள் எமது அலுவல * சகல வாகனங்களிற்கும் அனுபவம்
பயிற்றுவித்து விரைவாக் சாரதி அ * எழுத்துப் பரீட்சையில் சித்தியடைய * அதி கூடிய பயிற்சி நேரங்கள் அதி * தவணை முறைக் கட்டணங்கள். * வீதி ஒழுங்கு நூல் இலவசமாக வ நவீன வாகனங்களி சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவதற்கு தே பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் போட்டோ பிர
அடையாள அட்டை போட்டோ பிரதி. 31/2cm x 41/2cm அளவு கொண்ட 5 கறு மருத்துவ சான்றிதழ் N.T.M.I.
11_SON)
3 AIRN
INIL. D.S.520
41.!*/ 4:
dே Fic)*
கிளைகள்;
അടിയന
நல்வியறதுபிளப்பு IH42811 NiE:32
അതിൽ சாகர்சேரி THEIRS
RE60
இலட்சி சுரக்
யாழ்ப்பாம் LETE224 ரா80
இசி சஞ்சிகை அல்வாய் இணையம் வெளியீட்டு உரிமையாளர் கலாநிதி

ன்மைச் சாரதிப் பயிற்சிப் பாடசாலை
on Learners ன் லேணர்ஸ்
Chundukuli, Jaffna. , 0777 906064 Fax: 021 2229109 நீத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும். பக்க சாரதிகளால் சிறந்த முறையில் றுமதிப்பத்திரம் பெற்றுக் கொடுக்கப்படும்.
விசேட வகுப்புக்கள். 'கூடிய பயிற்சி காலங்கள்.
ழங்கப்படும் ல் வாகன பயிற்சிகள் பவையான ஆவணங்கள் எதி.
ப்பு வெள்ளைப் படம்.
வயிறவிதி, வி எம்.
ൽനിയൻ சுன்னாகம் 07m50007 1214023782
6
பிரதானவீதி
ണിത്താ 197870 IRUREVKS
த ணமணி அணிணாலி நி ண் இறுணத்தில் விட்டு இணம்