கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைக்கேசரி 2013.10

Page 1
கலைகம்
CULTURE
HERITAGE
TRADITION
- EVENTS
* FASHION VOLUME: 04 ISSUE: 10 Registered in the Department of Posts of S
வேடர்களின் வித்தைகளும் விந்தைகளும்
'www.kalaikesari.com TOctober 2013
'INDIA.............INE 100.00
SRI LANKA...SLR 125.00 'SINGAPORE.sG$ 14.00
CANADA.......C. AUSTRALIA...A SWIss.

கேசரி .
INTERVIEWS
ENTERTAINMENT ianka under No. aDINews T7012013
The World's Explorers in Stone
தம்.
SIN) (11)
AN$ 10.00 US$ 10.00 CHF 10.00
USA...........US$ 10.00 'UK............GB£ 6.00 EUROPE.EU€ 7.00

Page 2
5 ஓடும்
இ" (123
wwwwwwwwwwww
அழையுங்கள்,
மிக இலகுவானது. SLT மெகாலைன் அல்லது சிப் கேட்கப்படும் இலகுவான பொது அறிவு வினாக்கம் தெரிவு செய்து, பெறுமதியான பரிசுகளை வெல்லுங்.
மூன்றாம் பரி
முதற் பரிசு இரண்டாம் பரிசு
"டு. 25,00/- 15,000/-
ரூ.
10,00/
இப்பொழுதே அழையுங்கள். 2013 ஒக்டோபர் 17 வரை ம!
நிமிடத்திற்கு ரூ. 5 மற்றும் வரிகள் அறவிடப்படும். நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
1212 ஐ அழையுங்கள் மேலதிக விபரங்களை செவிமடுக்க அல்லது ஃபெக்ஸ் மூலம் பெற அழையுங்கள்.
www.slt.lk Email: 1212@sltnet.lk | Web chat: www.sit.lk (My SLT-Chat with us) Like us on f
CITYLI

Sri Lanka Telecom ஒரே தேசம். ஒரே குரல்.
உ.
வெல்லுங்கள்!
-டிலிங்க் தொலைபேசியில் 1298ஐ அழையுங்கள். நக்குரிய விடைகளில் பொருத்தமற்ற விடையை கள்.
மேலும் ரூ.5,000/- பெறுமதியான 10 பரிசுகள்
அழையுங்கள்
1208
டுமே.
wp//3031
198)X132744
INK30 MEGALINE30

Page 3
Magis
Fud
NSO91
ICE CREAM

Sada Magice Cnean ze
e ad GO ZA USTE
MIS-SUOM,
ENERE
A DORS.40
de la Cargilisi
80 ml

Page 4
உள்ளடக்கம் : Contents
10
வடக்கு - தெற்கு வெளிச்சங்கள்
வே
கே
25 1
குச்சிபுடி நடனத்தில் ஆங்கிகா அபிநயம்

கலைக்கேசரி
அட்டைப்பட விளக்கம்:
ਖੇਡ
இலங்கையின் ஆதிகுடிவாசிகளான வன்னியலா எத்தோக்களில்
(வேடர்கள்) ஒருவர் வேட்டையாட புறப்படுவதற்கு முன் தன் சகாக்களை கூவி
அழைக்கிறார்.
வேட்களி8). வித்தைகளும் விலைலை.
71e0d: Expபாச Ston
58. 458Kx 3:8 :14 4 29438P4:48 $$$ 144
A%81%A. 23; *. *** - ** *3
54. ச, 1:1 138;
* ... *At :23 24:44:42 ?1)
இக்கருத்து
PUBLISHER Express Newspapers (Cey) (Pvt) Ltd. 185, Grandpass Road, Colombo 14, Sri Lanka. T.P. +94 11 7209830 www.kalaikesari.com
EDITOR Annalaksmy Rajadurai luxmi.rajadurai@yahoo.com
SUB EDITOR Bastiampillai Johnsan johnsan50@gmail.com
CONTRIBUTORS Prof. C. Pathmanathan Prof. S. Krishnaraja Prof. P. Pusparatnam Prof. Saba Jeyarasa Dr. K. Nageswaran
Mrs. Vasantha Vaithyanathan Mrs. Pathma Somakanthan Dr. Viviyan Sathyaseelan R. Achuthapagan Mohanapriyan Thavarajah V. Thabendran Devaka de Silva Priyanka .R
ணுவிற் கந்தசுவாமி ரயிற் கல்வெட்டுகள்
PHOTOS Sabita Nadesan J. H. Mirunalan Theliwathai Joseph
R. Priyanka Kanivumathi
யாப்பா!
LAYOUT
M. S. Kumar S. A. Eswaran K. Kulendran
ICT S. T. Thayalan
ADVERTISING
A. Praveen marketing@virakesari.lk
CIRCULATION K. Dilip Kumar
SUBSCRIPTIONS J. K. Nair subscription@kalaikesari.lk
Navarathri
PRODUCTION L. A. D. Joseph
ISSN 2012 - 6824

Page 5
வணக்கம் கலைக்கேசி
கலைக்கேசரி வாசகர்களுக்கு வணக்கம் 'தமிழுக்கு தொண்டு செய்வோன் சாவதில்லை' என்ற பொன்னான அனுபவ மொழிக்கேற்ப, 'தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவ' வழிசெய்த 'தமிழ்த் தூது' பேராசிரியர் வண. தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு நிறைவை, ஈழத் தமிழுலகம் நன்றியுடன் கொண்டாடி மகிழ்ந்தது. சீரிளமைத் திறன் அமைந்த தமிழ் அன்னைக்கு அரிய தொண்டாற்றவென்றே பிறந்து, அந்த இலட்சியம் ஒன்றுக்காகவே வாழ்ந்து மறைந்த அந்த ஒப்பற்ற தமிழ்ப்பற்றாளரின் தனிப் பெரும் சேவை, நமது இளம் தமிழ்ச் சமூகத்தை விழிப்புறச் செய்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தூய தமிழ்ப்பணி எம்மிடையே மேலும் தொடர, அடிகளாரின் தமிழ்த் தொண்டு தூண்டுதலாக விளங்கட்டும்.
இந்த ஆளுமையின் விகசிப்பை ஏற்கனவே கலைக் கேசரியில் கட்டுரையாகச் செதுக்கி அளித்த பேராசிரியர் சபா.ஜெயராசா அவர்கள், இவ்விதழில் பன்முக ஆளுமையும் ஒடுக்கு முறைகளை விடுவிப்பதற்கான புரட்சி ஆளுமையும் கொண்ட எழுத்தாளர் கே.கணேஸ் பற்றிய கட்டுரையைத் தருகின்றார்.
மேலும் உலகத்தின் பல பகுதிகளிலும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் பழங்குடி இன குழுமங்கள் சில பற்றி ஏற்கெனவே சில சுவாரஸ்யமான கட்டுரைகளை நாம் தந்திருந்தோம். இவ்விதழில் நம் நாட்டின் பழங் குடியினரான வேடுவர் சமுகத்தின் ஒரு குழுமம் பற்றி நேரடித் தகவல்களை வாசகர்கள் அறிந்து கொள்ளும் வகையில் விசேட கட்டுரையைத் தருகிறோம்.
அது நிச்சயமாக உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கும். அத்துடன் வழமைபோல் அறிஞர்களது ஆய்வுக் கட்டுரைகளும் மற்றும் சுவையான கட்டுரைகளும் படங்களும் இவ்விதழிலும் இடம் பெறுகின்றன. வாசித்து மகிழுங்கள்.
அன்புடன் Q= te༠༠ ད ག ་ པ

ஆசிரியர் பக்கம்
Editor's Note
8 NTFSİACm! To our esteemed readers,
October, 2013
This month, Hindus all over Sri Lanka celebrate the festival of Navarathri. For nine nights and ten days devotees worship the goddess Durga and her victory over the demon Mahishasura. It is traditions such as these which keep us rooted to our families, communities, and religion.
Traditions are the handing down of beliefs, legends, customs, and information from generation to generation. From the building of megalithic temples in Malta to the Kaman Koothu folk play and the preparation of a Sri Lankan household food, kiribath, we practice traditions passed down from our ancestors. Such practices keep our heritage
alive.
Alongside tradition, is history. Monuments and
paintings such as the Padrão dos Descobrimentos
and Pablo Picasso’s Guernica remind us of the past and the actions, thoughts, and expressions of our
ancestors.
We hope that reading these articles will revive memories of your own traditions. After all, it is through traditions that values prevail in today's challenging world.
Happy reading and safe journeys!
ܚܝ ܢܤܬܝܚܚVA

Page 6
கலைக்கேசரி தி 06 வாழ்வியல்
மரங்களில் தென்னையை மட்டும்தான் பிள்ளை என அழைக்கப்பா

டுகிறது,

Page 7
தென்னம்பிள்ளைக்கு
மங்கைப்பருவ மங்கல நீராட்டு விழா
-வேதநாயகம் தபேந்திர
இந்துக்களின் மரபார்ந்த சடங்குகளி ஒன்றாக மங்கைப்பருவ மங்கல நீராட் விழா உள்ளது. பெண் குழந்தை ஒன் வளர்ந்து சிறுமிப் பருவத்தை எய்திய பி மங்கைப்பருவத்தை அடையும் நிலை வரும். மங்கைப்பருவத்தை அடைந்த உடல் பெண்ணின் பெற்றோர் மங்கைப்பரு மங்கல நீராட்டு விழாவை நடத்துவார்கள்
இம்மரபு தமிழர்களின் வாழ்விய சடங்குகளில் ஒன்றாக பன்னெடுங் காலமா இருந்து வருகிறது.தற்போதும் பெருமளவி நடைமுறையிலுள்ளது.
இதேபோல் முதலாவதாக பாளை விடு தென்னம்பிள்ளைக்கு மங்கல நீராட்டு விழ நடத்தப்படுகின்றது. - யாழ்ப்பான் பண்பாட்டு மரபிலும் இந்து - கிறிஸ்த வேறுபாடின்றி இச்சடங்கு தொடர்கின்றது இது தமிழர்களின் சடங்காக தனித்துவ பெறுகின்றது.
யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி வ மாகாணமெங்கும் இம்மரபு முன்னாளி மிகப் பிரபலமானதாக இருந்தது. இவ்வா
5 IIாடை

, கலைக்கேசரி
07
த
5 6 - 8 - 6 : 6 5 6
செய்தால் தென்னை மரம் நிறைய தேங்காய்கள் காய்க்கும் வகையில் விருத்தியாகி வளருமென்ற நம்பிக்கை இருக்கின்றது. இன்றைய சந்ததியினரில் மிகப் பெருமளவானோர் இதனைக் கை விட்டுள்ளார்கள். ஆனாலும் இத்தனித்துவ பண்பாட்டைப் பேணும் மக்கள் இன்றும்
இருக்கின்றனர்.
மரங்களில் தென்னையை மட்டும்தான் பிள்ளை என அழைக்கும் வழக்கம் இருக்கிறது. ஏனைய மரங்களை இவ்வாறு அழைப்பதில்லை. அதனால்தான் தென்னை மரத்துக்கு மங்கைப் பருவ மங்கல நீராட்டு விழா நடத்தும் மரபு உருவானது எனலாம். காணி ஒன்றில் புதிதாக நடப்பட்டு வளர்ந்த தென்னம் பிள்ளைகளில் முதலாவதாக பாளையை விடும் தென்னம்பிள்ளைக்கு மங்கைப் பருவ மங்கல நீராட்டு விழாவை நடத்துவார்கள்.
காணியின் உரிமையாளராகிய கணவனும் மனைவியும் தாய் தந்தையாக நின்று இச் சடங்கை நிறைவேற்றுவார்கள்.
பன.
6. 2 2 2 3 5.
| S

Page 8
கலைக்க்ேசரி
08
மங்கைப்பருவ பெண்ணுக்கு சடங்கு செய்வது போல தென்னம்பிள்ளைக்கு முன்னால் கும்பம் வைத்து, குத்துவிளக்கேற்றி,
உணவு வகைகள் படைக்கப்பட்டுள்ளது.
பருவமடைந்த பெண்ணுக்கு செய்வது போல அனைத்து சடங்குகளும் நடைபெறும். மங்கல நிகழ்வுக்கு உரிய நிறைகுடம் வைத்தல் நிகழ்வு நடைபெறும்.
தென்னம்பிள்ளையைக் குளிப்பாட்டி தூய்மைப்படுத்துவார்கள். பருவமடைந்த பெண்ணுக்கு உடுத்துவது போல புதிய சேலை உடுத்துவார்கள். பின்பு மாலை கட்டி விடுவார்கள். தங்க நகைகள் அணிவிப்பார்கள்.
தென்னம்பிள்ளைக்கு முன்பாக உள்ள நிலத்தில் கோலமிடுவார்கள். பொங்கல் இடுவார்கள். மங்கைப்பருவத்தை அடைந்த பெண்ணுக்கு சடங்கு செய்வது போல பலகாரம் உணவு வகைகள் யாவுமே செய்யப்படும். அவற்றை வைத்துப் படைப்பார்கள். பொங்கலை
தலைவாழையிலையில் படைப்பார்கள்.
நெல் இட்டு நிரப்பிய
Rola 4 5 Rெs . ) [ 1 E Ala la - 9 )

நெல் நிரப்பிய கொத்தில் சத்தகம் வைத்து
ஆராத்தி எடுக்கப்படுகின்றது.
பலகாரம்,
கொத்து ஒன்றில் சத்தகம் வைத்து ஆராத்தி எடுப்பார்கள்.
லட்சுமி விளக்கு ஆராத்தி, பலகார ஆராத்தி, பொங்கல் ஆராத்தி, பூக்களால் ஆராத்தி என வழமையான ஆராத்திகள் பாவுமே செய்யப்படும்.
தென்னம்பிள்ளையின் புதுப்பாளையில் ங்கிலி அணிவிக்கும் மரபு சில இடங்களில் பின்பற்றப்படுகிறது. சில இடங்களில் தென்னை மரத்தின் வட்டுக்கு சங்கிலி போடும் மரபும் பின்பற்றப்படுகிறது.
வட மாகாணத்தில் பல பகுதிகளிலும் இச்சடங்கு சிற்சில வேறுபாடுகளுடன் செய்யப்பட்டு வந்தது. |
யாழ்ப்பாணத்தில் தென்மராட்சி பிரதேச மக்கள் தென்னைசார் வருவாயை மிகக் கூடுதலாகப் பெற்று வாழும் மக்கள். ஆதலால் இவர்களிடையே இப் பண்பாடு இன்றும் ஓரளவு தொடருகின்றது."

Page 9
உங்கள் நாணயத் தாளினை தெரிந்துக் கொள்ளுங்கள்.
தற்போது வழங்கப்படுகின்றவை
முன்பு வழங்கப்பட்டவை 1000 53
*000000
රුපියල් දාහයි}
ஞாபகார்த்த தாள் ப ேம ப அப லைனை - 3) +000000
மே 99 மேல.
கன கேக்
14:44:44ம்மகாநர் க் காக்
1000
எ.12345
பந்தய 2 முப சாரதாரா கார் - மா யி ம் நாமல் ரா 1 86 ரிப்போ டாபி
பி அடி: 2 காசிக்காத சாக்கி Fாசனம் NE: IM: 34 பி 1. கார் ப:-டாக்டர் :, கமா - H-5:ாரி: 4
பாபர் ===ா - 11:51ா: பார்க்க
AE, IRISAF SPEE க்க
2 அ ன }<1)
3|-3000)
துப் பார்
க (5) 03)
போ -
4 மா.
உபாதிகள்
பற்றற
-2 - 13
20000000 பேர்
1000
23)
0 0 0 09)
நீர்வரி அடையாளத்தை பாருங்கள்
- செ, 12345
கை NSALI 380 .
தாளினை வெளிச்சத்தில்
- உயர்த்திப் பிடிப்பதனால் நீர்வரி அடையாளமாக தெளிவான வாளேந்திய சிங்கம் ஒன்றினைப் பார்க்கலாம். தாளின் இரு புறங்களிலும் இதனைப் பார்க்கக்கூடியதாயிருக்கும்.
தாளினை வெளிச்சத்தில் உயர்த்திப் படிப்பதனால் நீர்வரி - அடையாளமாக தெளிவான வாளேந்திய சிங்கம் ஒன்றினை பார்க்கலாம். - தாளின் இரு புறங்களிலும் இதனைப் பார்க்கக்கூடியதாயிருக்கும்.
தாளினை வெளிச்சத்தில் உயர்த்திப் பிடிப்பதனால் நீர்வரி அடையாளமாக நாணயத் தாளின் வலப் புறத்திலுள்ள பறவையே காணப்படுவதைப் பார்க்கலாம். நாணயத் தாளின் பெறுமதி இலக்கங்களில் நிலைக்குத்தாக தெளிவான நீர்வரி அடையாளமாகக் காணப்படுகிறது.
(2) பாதுகாப்பு நுாலினைப் பாருங்கள்

உடைந்தக் கோடு போல் தென்படும் வெள்ளி நூல். தாளினை வெளிச்சத்தில் பிடித்துப் பார்க்கும்போது “CBSL 1000” என்ற சிறிய எழுத்துக்களுடன் கூடிய உடைந்த கோடுகள் ஒரே கோடு போல காட்சியளிக்கும்.
= 33
தாளினை
சாய்த்துப்
பார்க்கும்போது
சிவப்பிலிருந்து பச்சைக்கு நிறமாற்றமடையக்கூடிய அடர்த்தியான யன்னல் வடிவிலான
நுால். வெளிச்சத்தில் பிடித்துப் பார்க்கும்போது "RS 1000” மற்றும் - "CBSL என்றார் சிரியா எழுத்துக்களுடன் கூடிய தொடர்ந்துச் செல்லும் நாலினைக் காணக்கூடியதாயிருக்கும்.
சாய்த்துப் பிடிக்கும்போது
- சிவப்பிலிருந்து பச்சைக்கு நிறமாற்றமடையக்கூடிய நுால் அல்லது உருவமைப்புடன்கூடிய அடர்த்தியான வெள்ளி நுால் அல்லது உடைந்தக் கோடு போல் தென்படும் மெல்லிய வெள்ளி நூால். தாளினை வெளிச்சத்தில் பிடித்துப் பார்க்கும்போது உடைந்த கோடுகள் ஒரே கோடு போல காட்சியளிக்கும்.
(3) மேற்கிளம்பிய அச்சிடலை உணருங்கள்
தாளின் மீது உங்கள் விரல் நுனியினை ஓடவிடுவதள் மூலம் தடிப்பான மை படர்ந்த இடங்கள் அல்லது மேற்கிளம்பிய அச்சிடல் தாக்கத்தினை உணருங்கள். (உதாரணம். மத்திய வங்கி என்ற தலைப்பு, புதிய தொடரில் இரு ஓரங்களிலும் காணப்படும் தொட்டறியக்கூடிய நாடா, மத்தியிலுள்ள படங்கள் முதலியன)
ශ්‍රී ලංකා මහ බැංකුව இலங்கை மத்திய வங்கி
100% பருத்திக் கம்பளியினால் தயாரிக்கப்பட்ட நாணயத் தாள் சாதாரண கடதாசியிலுள்ள எழுத்துக்களிலிருந்து வேறுபடுவதனை உணருங்கள்.
CENTRAL BANK OF SRI LANKA - இல் 30, சனாதிபதி மாவத்தை, கொழும்பு 1 இ 0112477355 0114797
2 0112477726, 0112477701 @ currency@cbsl.lk 6 www.cbsl.gov.lk - குற்றக் கோவையின் கீழ் போலி நாணயத் தாள் தயாரித்தல் தண்டணைக்குரிய குற்றமாகும்.

Page 10
கலைக்கேசரி, 10 தகவல்துளி
வடக்கு மற்றும் தொ
பட், பட்டென்று தோன்றி மறையும் மின்னல் வெளிச்சம் நமக்குப் பரிச்சயமானது. சில சந்தர்ப்பங்களில்
மின்னல் ஒளி கண்ணொளியைப் பறித்து விடும். சில வேலைகளில் பெரும் அனர்த்தத்தையும் மின்னலின் ஒளி சக்தி ஏற்படுத்தி விடுகின்றது.
இந்த மாபெரும் ஒளிச் சக்தியின் மற்றொரு பரிமாணமான 'வடக்கு வெளிச்சங்கள்' பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்த வடக்கு வெளிச்சங்களை (Northern Light) ஒறோறா பொறாலிஸ் (aurora borealis) எனக் குறிப்பிடுவர்.

ற்கு வெளிச்சங்கள்
இவ்விதம் தென் துருவத்திலும் வெளிச்சங்கள் தோன்றுகின்றன.
ஒறோறா என்பது ரோமானியர்களின் விடியல் பெண் தெய்வத்தின் வடக்கு காற்று (Northern Wind) என அர்த்தமாகும். லத்தீனில் ஒறோறாவின்
அர்த்தம் 'சூரியோதயம்' (Sunrise) என்பதாகும்.
இது வட துருவத்தில், குறிப்பாக அட்சர ரேகையில் (Latitude) வானத்திலே தோன்றும் ஓர் இயற்கையான ஒளிக் காட்சிக் கோலங்களாகும். இந்த அபூர்வ ஒளிக்காட்சிகள் உயர் நில நேர் கோட்டு வெளியில் உள்ள அணுக்களுடன்

Page 11
(atoms) அதிதீவிர சக்தித் துகள்கள் வேகமாக மோதுகின்றபோது தோன்றுகின்றன. அப்போது பெரும் வெடிச் சத்தங்கள் கேட்கும்.
காந்தவெளி (Magnetosphere) மற்றும் சூரியக் காற்றில் உருவாகின்ற இத்தீவிரசக்தித் துகள்கள், பூமியில், பூமியின் காந்த வெளியினால் வளி மண்டபத்துக்குள் செல்ல வழிப்படுத்தப் படுகின்றன. வடக்குத் தொடுவானில், உச்சியின் மேல் பிரகாசிக்கும் அந்தப் பிரகாசமான ஒளி, பச்சை வண்ணமாக
ஒளிரும். சில வேளைகளில், சூரியன் வழமையற்ற திசையில்

கலைக்கேசரி
இருந்து உதிப்பது போன்று மெல்லிய சிவப்பு வண்ணமாக ஜொலிக்கும். பெரும்பாலும் 'ஒறோறாக்கள்' ஔறோறா வலயம் எனக்கூறப்படும் பட்டைத் தகட்டில் (band) இடம்பெறும்.
தொடர்ச்சி அற்ற ஒளறோக்கள் அடிக்கடி காந்த வலய கோடுகளை (Magnetic field lines) அல்லது திரை போன்ற வடிவங்களைக் காட்டும். அத்துடன் அந்த வெளிச்சமானது, பெரும்பாலும், நுண் ஊதாக் கதிர்களால் ஒளிரும் பச்சையாகக் காட்சி தரும். இது தவிர இளஞ்சிவப்பு, பச்சையும் சிவப்பும் கலந்த வண்ணம், பூரணசிவப்பு வண்ணம் பின்னர் மஞ்சள்,
இறுதியில் நீல வர்ணத்தில் காட்சி தரும்.
சூரிய காற்றுடன், சூரியனில் இருந்து வெளிப் புறமாக தொடர்ந்து பாயும் மின் வலி அணு ஓட்டத்துடன் இந்த வெளிச்சம் சம்பந்தப்பட்டதாகும். மின் வலி அணுக்கள் (Ions) காற்று மண்டல அணுக்கள், மற்றும் இணைபிரிக்க முடியா அணுத்திரள் (molecules) ஆகியவற்றுக்கு இடையில் ஏற்படும் மோதல்கள், ஒறோறாக்கள் உருவில் சக்தி விடுவிக்கப்பட்டு துருவங்களைச் சுற்றி பெரிய வட்டங்களில் தோன்றும்.
தென்துருவப் பிராந்தியத்தில் தோன்றும் ஒளியும் கிட்டத்தட்ட, வடக்கு வெளிச்சத்தின் குணாம்சத்தை கொண்டிருக்கிறது. இதனை ஒறோறா ஒஸ்ரலிஸ் (aurora auslralis) எனக் கூறுவர். இந்த வெளிச்சம் அன்ராற்றிக்கா, தென் அமெரிக்கா, நியூஸிலாந்து, மற்றும் அவுஸ்திரேலியாவின் உயர் தெற்கு நிலநேர் கோட்டில் தெரியும். இந்த மாதிரியான வெளிச்சக் காட்சிகள், பூமியில் மட்டுமன்றி ஏனைய கோள்களிலும் இடம்பெறுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
- ஜெனி

Page 12
கலைகக்ேசர்) 12 வழிபாட்டு மரபு
நாயன்மார்கட்டு 6 விநாயகர் ஆலயம்
யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல பாகங்களிலும் விநாயகப் பெருமானின் ஆலயங்கள் நிறைவாகக் காணப்படுகின்றன. தமிழரசின் தலைநகர் நல்லூருக்கு மாற்றப்பட்ட பின்னர் நகரின் கீழ்த்திசையில் காவற்கோயிலாக அமைக்கப் பட்டிருப்பதே நாயன்மார்கட்டு வெயிலுகந்த
விநாயகர் ஆலயமாகும்.
விநாயகர் வணக்கம் ஆதியில் தமிழ் மக்களிடம் காணப்படவில்லை என்றும் பல்லவப் பேரரசனான மாமல்லன் எனப்படும் நரசிம்மன் சாளுக்கிய பேரரசனான இரண்டாம் புலிகேசியை வென்று, தலைநகர் வாதாபியிலிருந்து பிள்ளையார் சிலையையும் கொண்டு வந்தான் என்பர் சில ஆய்வாளர்கள். ஆனால் அது ஏற்கக்கூடிய வாதமன்று. கி.பி. 4 ஆம், 5 ஆம் நூற்றாண்டுக்குரிய விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றுப் படுக்கையில்

வெயிலுகந்த
- இ. அச்சுதபாகன் பி.ஏ.
கிடைத்துள்ளதாக தொல்லியல் பேராசிரியர் ரீ.வி.மகாலிங்கம் குறிப்பிடுள்ளார். தமிழறிஞர் கி.வா.ஜெகநாதன் சங்ககாலத்திலே விநாயக வணக்கம் இருந்தது என்கின்றார். சில ஆய்வாளர்கள் சிந்துவெளியில் விநாயகர் வணக்கம் இருந்ததற்குச் சான்றுகள் உள்ளது என்பர்.
விநாயகரின் பழைய திருவுருவங்கள் நல்லூர், கந்தரோடை, வல்லிபுரம், பூநகரி போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை சோழர் காலத்திற்கு சற்று பிந்தியது எனக் கருதப் படுகிறது. நல்லூரில் கண்டெடுக்கப்பட்ட விநாயகர் சிலை பழைய சட்டைநாதர் கோயிலுக்குரியது ஆகும். அது இப்போது யாழ் நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
நல்லை நகரின் நாற்திசை கோட்டை வாசல்களிலும் நான்கு விநாயகர் தேவாலயங்கள்

Page 13
பஞ்சமுக விநாயகர்

2. கலைக்கேசரி
13
வெயிலுகந்த பிள்ளையார் ஆலய ஐதீகங்களின் படி, மேகம் கறுத்து, மழை பெய்யும் வேளையில் கூட சூரியனின் கதிர்கள்
விநாயகரின் திருமேனியில்ப்பட்டு
பிரகாசிக்கும்.
ஆலயத்திலுள்ள கலைநுணுக்கம் மிக்க வி

Page 14
அமைக்கப்பட்டது என்பர். அதில் கீழ்த் திசையில் அமைக்கப்பட்ட விநாயகர் ஆலயமே வெயிலுகந்த விநாயகர் ஆலயம். இவ்வாலயத்தின் தீர்த்தத் தடாகம் நாயன்மார்கட்டு குளம் ஆகும். இதற்கு வடக்கு திசையில் உள்ள நிலப்பரப்பு கோட்டை வாசல் என அழைக்கப்படுவதும் ஆரிய சக்கரவர்த்திகளின் நகரின் கீழ்த் திசை வாயில் நாயன்மார்கட்டு என்பதை மெய்ப்பிக்கும் ஒரு சான்றாகும்.
வெயிலுகந்த பிள்ளையார் கோயில் அமைந்துள்ள நாயன்மார்கட்டு கீழ்வரும்
அம்சங்களில் முக்கியத்துவம் பெறுகின்றது.
1. யாழ்ப்பாண அரசின் கீழ் திசை எல்லைக் கோயில்

மூலஸ்தானம்
2. சரஸ்வதி மகால் நூல் நிலையம் அமைந்திருந்தமை.
3. அறுபத்து மூன்று நாயன்மார் குருபூசை மடம் அமைக்கப்பட்ட இடமான மடத்து வாசல் என்ற பகுதி காணப்படுவது.
4. கோட்டைவாசல் என்ற இடமும் அதன் பாரம்பரியமும் |
5. சித்த மருத்துவமும் தமிழ் கல்விப் பாரம்பரியமும் மேற்சொன்ன சரஸ்வதிமஹால் நூலகத்தில் வைத்தே அரசகேசரியின் இரகு வம்சம்
அரங்கேற்றப்பட்டது என்பர்.
வெயிலுகந்த பிள்ளையார் ஆலய ஐதீகங்களின் படி, மேகம் கறுத்து, மழை பெய்யும் வேளையில் கூட
சூரியனின் கதிர்கள்
விநாயகரின்

Page 15
திருமேனியில்ப்பட்டு பிரகாசிக்கும்.
இதனை இராமநாதபுரத்திலுள்ள உப்பூரில்
உள்ள வெயிலுகந்த விநாயகர் கோயிலின் தல புராணத்தில், தச்சயாகத்தில் வீரபத்திர சிவனால் தண்டிக்கப்பட்ட சூரியதேவன் விநாயகரை தனது பல கிரகங்களால் வழிபட்டதாகவும் அதனால் (சூரியன் விரும்பும்) வெயில் உகந்த விநாயகர் என்ற பெயர் ஏற்பட்டது
எனவும் கூறப்பட்டுள்ளது.)
அதன் செல்வாக்கால் பாண்டிய நாட்டிலிருந்து வந்த இளவரசனே முதலாம் ஆரியசக்கரவர்த்தி என்ற கதைகளை ஏற்று அதன் சொல்வாக்கால் இங்கு அமைக்கப்பட்ட விநாயகர் 'வெயிலுகந்தவர்' என்று அழைக்கப்பட்டார் என பேராசிரியர் வி.சிவசுவாமி அவர்கள் கருதுவார். பேராசிரியர் செ. கிருஷ்ணராசா நான்கு வாயில்களிலும் நான்கு

2. கலைக்கேசா
45
விநாயகர் தேவாலயங்கள் இருந்தால் கிழக்கு வாசல் உகந்த பிள்ளையார் எனத் திரிந்தது என எண்ண இடமுண்டு என்பார்.
எமது கோயில் அமைப்பு மற்றும் விக்கிரக வழிபாடு என்பன அறிவியல் உண்மைகளை
கொண்டுள்ளன.
ஆகாயத்திலுள்ள ஓம் ஒளி, ஓம் ஒலி" என்பவற்றை பிரசாதம்
- எனப்படும் மூலஸ்தானத்தின் நடுப்புள்ளியில் ஒளி நூலில் (பிரம்ம சூத்திரம் - String) குவியச் செய்கின்ற சிற்பிகளின் விஞ்ஞான வடிவமே கருவறையாகிய மூலஸ்தானம். இப்பிரசாதத்தையே மந்திரம் சொல்லி பூசிக்க வேண்டும் என்பதை 'பிரசாதம் புருஷம்
மத்வா பூஜையேதே மந்திவித்மஹ' என்று

Page 16
சு
**
16
உபநிஷதம் பேசுகிறது. மயன் என்ற மாபெரும் தமிழறிஞரின் தோற்றமே தூபி, துவாரகோபுரம், தேரமைப்பு, பிரமிட்டுகளின் அடிப்படை இலக்கணம். (ஆதாரம்: மயனின் பன்னிரு நூற்சாரம்)
இலங்கையிலுள்ள பழைமை வாய்ந்த கோயில்கள் ஏறக்குறைய யாவும் (பூநகரி மண்ணித் தலை சோழர் கால சிவாலயம் தவிர) போர்த்துக் கேயர் போன்ற அந்நியரால் அழிக்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழ்நாட்டில் காலச்சக்கரத்தின் சூழ்ச்சியில் சிக்கியழிந்தது போக கி.பி.6 ஆம் நூற்றாண்டின்
- பின்னுள்ளவை, பாரசீக படையெடுப்பால் அழிக்கப்பட்டது போக, அதே வடிவங்களில் கிடைத்தமை நாம் செய்த பாக்கியமே.
“விஞ்ஞானம் சில்ப்ப சாஸ்திரேயோ' என அமரகோஷம்
கூறும்
விஞ்ஞானக் கோட்பாடுகளின்படி கட்டப்பட்ட ஆலயங்களின் கருவறையிலுள்ள (பிரசாதம் தெய்வத் திருமேனிகளில் சூரியக்கதிர்கள் பரவிப் பிரகாசிப்பதும் அந்நாள்கள் சூரிய பூசை எனப் போற்றப்படுவதும் சிந்திக்கத்தக்கதாகும். இவ்வாறு சூரியக் கதிர்கள் மூலஸ்தானத்தில் பிரவேசிக்கும் ஆலயங்கள் சில வருமாறு:
அ. கும்பகோணம் நாகேஸ்வரம் ஆலயம் - சித்திரை 11, 12, 13 ஆம் திகதிகள்
ஆ. திருக்கண்டியூர் ஆலயம் - மாசி 13,14,15 ஆம் திகதிகள்

தலவிருட்சமாகிய அரசமரம்
இ. கன்னிப்பிரம்பூர் ஆலயம் - ஆவணி 31, புரட்டாதி 1, 2 ஆம் திகதிகள்.
ஈ. குன்றத்தூர் சேக்கிழார் தேவஸ்தானம், பூவிருந்த வல்லிதேவஸ்தானம் - மாசி 17 தொடக்கம் 21வரை
(ஆதாரம்: விஸ்வகர்மப் பிராமண வம்சப்பிரகாசி கை தெ.மு. தெய்வசிகாமணி ஆச்சாரியார் F.R.S.A (London)
மதுரை சோமசுந்தரேஸ்வரர் கோயிலில் சூரியன் மேட இராசியில் பிரவேசிக்கும் தமிழ்ப் புது வருடத்தன்று மூலஸ்தானத்தில் சூரியக் கதிர்கள் படுகின்ற நாளில், மதுரையில் சூரியன் உச்சம் கொடுக்கிறது.
அந்தவகையில் நாயன்மார்கட்டு வெயிலுகந்த விநாயகர் கோயிலும் இவ்வாறான சிற்ப திட்ப நுட்பம் நிறைந்த கோயிலாக அமைக்கப் பட்டிருக்கலாம். அதனை அறிஞர்கள் மேலாய்வு செய்வார்களாக!
இக்கோயிலுக்கென அமைக்கப்பட்ட தீர்த்தத் தடாகமாக நாயன்மார்கட்டு திருக்குளம் விளங்குகிறது. அக்குளத்தின் மேற்குத்திசையில் இன்று அரசடி விநாயகர் என்ற பெயர் தங்கி பெருமானின் கோயில் ஒன்று அமைக்கப் பட்டுள்ளது.
ஆகவே வெயிலுகந்த விநாயகரின் பழைய இருப் பிடம் தற்போதுள்ள இடமா? அல்லது திருக்குளத் தின் மருங்கிலா? கோட்டை வாசலிலா? எனவும்
ஆராய வேண்டும்.
கமாக

Page 17
நிற்க திருக்குளத்தை புனர்நிர்மாணம் செய்த போது (1940களில்) அதிலிருந்து பெறப்பட்ட கல்வெட்டில் கலி (யுகம்) 3025 இல் தீர்த்தங் கொடுக்க சிங்காரியனால் வெட்டப்பட்டது என்ற வாசகம் காணப்படுகிறது. அதன் எழுத்தமைதி 15 அல்லது 16 ஆம் நூற்றாண்டைச் சுட்டி நிற்கிறது. ஆகவே முன்னர் நடந்த சம்பவத்தை (13 ஆம் நூற்றாண்டு) அவ்வரலாற்றைத் தெரிந்தவர்கள் வரைந்துள்ளனர் என்றே அதனை ஆய்வு செய்த பேராசிரியர்கள் ப.புஸ்பரத்தினம், க.சிற்றம்பலம், ச.கிருஷ்ணராசா போன்றோர் கருதுகின்றனர்.
அதில் குறிக்கப்பட்ட காலம் உக்கிரசிங்கனின் காலம் எனக் கருதப்படும் 8 ஆம் நூற்றாண்டையும் தாண்டி கி.மு. முதலாம் நூற்றாண்டைக் குறித்து
பிரகாரத்தின் வடக்கு திசையில் வைக்கப்பட்டிருக்கும்
த சுயம்புப் பிள்ளையார் திருவுருவச்சிலை
வெ
நிற்கிறது. இச்சிக்கல் முடிச்சை அவிழ்க்க நாயன்மார்கட்டு முழுமையாக அகழ்வாய்வு செய்யப்பட வேண்டும்.
எவ்வாறாயினும் இவ்விநாயகர் ஆலயம் மிகக் கீர்த்தியுடன் இருந்தது என்றே கருதப்படுகின்றது. இதுவும் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டது.
மீண்டும் சைவசமயம் மீழெழுச்சி உற்ற காலங்களில் இவ்வாலயத்தில் சுயம்பு மூர்த்தியான (பொள்ளாப்பிள்ளையார்) விநாயகர் மூலஸ் தானத்தில் வைத்து வழிபடப்பட்டது. அது வேயாது
சூரிய ஒளி படக்கூடிய இடத்திலேயே ஆரம்பத்தில் வைக்கப்பட்டது என இன்றைய பரிபாலகர்கள் கூறுகின்றனர். இங்குள்ள எழுந்தருளி விநாயகர், வைரவர் போன்ற மூர்த்திகள் லாவண்யம் நிறைந்தவை.

கலைக்கேசரி
1993 ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத் தின்போது புதிய விநாயகர் சிலை மூலஸ்தானத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. இப்போது பஞ்சமுக விநாயகர் (ஏரம்ப கணபதி) உற்சவமூர்த்தி உருவாக்கப் பட்டு தம்பமண்டபத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார்.
பரிவாரமூர்த்திகள் சந்நிதானமாக முருகன், வைரவர் சந்நிதானங்கள் காணப்படுகின்றன. அரசமரம் தலவிருட்சம் எனலாம். சுயம்புப் பிள்ளையார் திருவுருவச்சிலை பிரகாரத்தின் வடக்கு திசையில் தற்போது ஸ்தாபிக்கப் பட்டுள்ளது.)
பங்குனி உத்தரத்தை தீர்த்தோற்சமாகக் கொண்டு தேரில் பஞ்சமுக விநாயகர் எழுந்தருளி அருள் பாலிப்பார். ஆவணிச் சதுர்த்தி, புதுவருடப்பிறப்பு,
லுகந்த விநாயகர் ஆலய தீர்த்தத் தடாகம் - நாயன்மார்கட்டு குளம்
பட கலை
நவராத்திரி, விநாயகர் ஷஷ்டி விரதம் போன்ற உற்சவங்கள் சிறப்புற நடைபெறுகின்றன.
இவ்வாலயத்தை சோ.பாலசுந்தரக்குருக்கள், அவரது சிறிய தந்தையார் பா.விநாயகமூர்த்திஐயா ஆகிய சைவகுருமார்களின் பின்னர் அவர்களது பிள்ளைகள் பரிபாலிக்கின்றார்கள். பாலச்சுந்திரக் குருக்களின் பேரன் (ஆலயக் குருக்கள்) ஆலயம் பற்றி விளங்கும் போது, கீர்த்தியும் மூர்த்திகரமும் நிறைந்த இவ்வாலயத்தின் மீது விநாயகர் அடியார் களதும், தமிழ் சைவ ஆர்வலர்களினதும் பார்வை இன்னும் படவில்லையே என்ற வருத்தம் தென் பட்டது. எலி, அன்னம், இடபம், குதிரை, ஆட்டுக் கடா போன்ற வாகனங்களும் திருவூஞ்சல் என்பனவும் ஆலயத்தில் உள்ளன. பெருமான் கட்டுத்தேரியேயே வலம் வருகின்றார்.

Page 18
கலைக்க்ேசரி . 18 சாசனம்
1ம் ::43:18
இணுவிற் கந்தசுவாமி
கலாநிதி சி.பத்மநாத தகைசார் பேராசிரியர், வ பேராதனைப் பல்கலைச்
யாழ்ப்பாணத்தில் மிகவும் வளமான மண்ணுடைய செம்பாடு என்னும் பகுதியைச் சேர்ந்த ஊர்களிலொன்று இணுவில். அது தோட்டப் பயிர்கள் செழிப்புடன் வளரும் வளமான கிராமம். பல நூற்றாண்டுகளாக, அண்மைக் காலம் வரை, அது புகையிலைச் செய்கைக்குப் பேர் சிறந்த ஊர். புகையிலை விற்பனை சுருட்டுத் தொழில் என்பவற்றின் காரணமாக கி.பி 1625 - 1975 ஆகிய காலப்பகுதியில் அங்கு பணப்புழக்கம் மலிந்து காணப்பட்டது. அதனால் பிரித்தானியரின் ஆட்சி ஏற்பட்ட பின்பு வழிபாட்டுச் சுதந்திரங்கள் கிடைத்ததாற் புராதனமான வழிபாட்டுத் தலங்களிற் பெருங் கோயில்களை அமைத்தனர். அவற்றிலொன்று இணுவிற் கந்தசுவாமி கோயில்.!
இணுவிற் கந்தசுவாமி கோயில் யாழ்ப்பாணத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்று. குடாநாட்டில் முற்காலங்களில் மிகவும்

அர்த்த மண்டபத்து வாசற் கதவு நிலைகளின் மேலமைந்த பாரக்கல்லிற் சாசனம்
கோயிற் கல்வெட்டுகள்
கன்
பரலாற்றுத்துறை, க்கழகம்.
பேராசிரியர் செ.கிருஷ்ணராஜா வரலாற்றுத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
பிரபல்யமான நாதஸ்வர வித்துவான்கள் இக்கோயிலுடன் பந்தமான குடிகளைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடற்குரியது. குடாநாட்டிலுள்ள பல கிராமங்களில் வாழ்ந்த, முன்னோர்கள் கந்தசுவாமி கோயிலைக் குறித்து மிகுந்த - அபிமானத்துடன் மேளக்கச்சேரி, நாதஸ்வரக் கச்சேரி, நாட்டியக் கச்சேரி என்பன அங்கு பேசுவார்கள். வருடாந்த உற்சவங்கள் கோலாகலமாக நடைபெற்றன.
அண்மைக் காலத்திலே பல தசாப்தங்களாக நடைபெற்ற போரின் விளைவாகக் கோயிலின் சிறப்பு ஏனைய தலங்களிற் போல் ஓரளவு மங்கி விட்டது. ஆயினும் இப்பொழுது, கட்டடங்களைச் சீரமைத்துத் திருப்பணிகள் மூலம் கோயிலின் சென்ற காலச் சிறப்பினை மீட்டுக்கொள்ளும் செயற்பாடுகளை ஆலய முகாமையாளர் முன்னெடுத்துச் செல்கின்றனர். பரமேஸ்வரன்

Page 19
YெT
மாக
கல்
முதலான கோயிலாருக்கு ஆலயத்தின் வரலாற்றுச் சிறப்புகளை வெளிக்கொணர்வதில் மிகுதியான ஆர்வமுண்டு. இது நாம் பிற பல தலங்களில் எதிர்கொள்ளும் அனுபவங்களுக்கு முற்றிலும் மாறானது.
இணுவிற் கந்தசுவாமி கோயிலின் வரலாற்றை இங்கு விபரிப்பது இக்கட்டுரையின் நோக்கமன்று. அக்கோயிலின் நீண்டகால வரலாற்றின் பிற்பகுதிக்குரிய ஆவணங்களை |
வெளிப் படுத்துவதும் மேலோட்டமாக அவற்றை விளக்குவதுமே எமது முயற்சியாகும்.'
கோபுர வாயிற் சாசனங்கள் பல மாதங்களுக்கு முன்பு, கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றுக்கு வந்திருந்த ஆறு திருமுருகன் அவர்களோடு பேசிக்கொண்டிருந்த சமயம் இணுவிற் கோயிற் கோபுர வாசலில் ஒரு கல்வெட்டிருப்பதாகச் சொன்னார். அவர் சொன்ன செய்தியை அடிப்படையாகக் கொண்டு, சில நாட்கள் கழிந்த பின்
கல்வெட்டினைப் பார்ப்பதற்குத் தலத்திற்குச் சென்றோம்.
அங்கு எல்லாமாக நான்கு முக்கியமான கல் வெட்டுகள் இருப்பதை எம்மால் அவதானிக்க முடிந்தது. அவை கோயிற் கட்டுமானங்களைப் பற்றியவை. பொதுவான நன்கொடைகளைப் பற்றிய விபரங்கள் அவற்றிலே எழுதப்படவில்லை. ஒரு கோயிலின் வரலாறு தொடர்பான, இவை போன்ற கல்வெட்டுகள் யாழ்ப்பாணத்தில் வேறெங்கும் காணப்படுவதில்லை. அந்த வகையில் அவை தனியான சிறப்பினைக் கொண்டவை.
அங்குள்ள மூன்று சாசனங்கள் கோபுர வாசலிற் காணப்படுகின்றன. அவற்றுள் இரண்டு அதன் இரு பக்கங்களிலுமுள்ள சுவர்களில் வெட்டப் பட்டுள்ளன. எல்லோரும் தெளிவாக வாசிக்கக் கூடிய வகையில் அவை அழகாகவும் பெரிய எழுத்துகளிலும் அமைந்திருக்கின்றன. மூன்றாவது கல்வெட்டு கோபுர வாசலின் மேல் அமைந்துள்ள தளமொன்றின் அடியில் வெளிப்புறத்தில் வெட்டப் பட்டுள்ளது. அதனை வாசலுக்கு முன்புறமாக, வெளியில் நின்ற வண்ணம் வாசிக்கலாம். இக்கோயிலிற் காணப்படும் எல்லாச் சாசனங்களும் முதலிற் பிள்ளையார் சுழி அமைக்கப்பட்ட பின்பே பொறிக்கப்பட்டுள்ளன.
பெரிய கல்வெட்டு நான்காவது சாசனம் மூலஸ்தான வாசலின் கதவு நிலையின் மேற் பொருத்தியுள்ள பெரும் பாறைக் கல்லின் கீழ்ப் பகுதியில் எட்டு வரிகளில்

கலைக்கேசரி
19
எழுதப் பட்டுள்ளது. அது கோயில், புதிதாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டிலே கற்றளியாக அமைக்கப்பட்ட பின் எழுதப்பட்டுள்ளது. கோயிலைக் கட்டியவரின் பெயரும் பரிபாலனம் பண்ணியவர்களின் பெயர்களும் அதில் எழுதப் பட்டுள்ளன. இந்தச் சாசனம் எழுதப்பட்டுள்ளதை முன்பு எவரும் அவதானிக்க வில்லை. அதனைப் பற்றி அறிந்ததும் கோயிலாரும் அங்கு நடைபெறும் திருப்பணிகளில் ஆர்வங்கொண்ட இளைஞர்களும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். எமது ஆய்வு முயற்களுக்கு வேண்டிய உதவிகளை வழங்குவதற்கு முன்வந்தனர்.
மூலஸ்தான வாசலுக்குப் போகும் வாசற் கதவின் மேற்பகுதியிலுள்ள சாசனத்திற் காலம் பற்றிய குறிப்பெதுவும் இல்லை. அதன் வரி வடிவங்கள் முழுமையான வளர்ச்சி நிலையிற் காணப்படுகின்றன. மெய்யெழுத்துக்களின் மேல் புள்ளிகளும் காணப்படுகின்றன. எழுத்துக்களின் வடிவமைப்பை நோக்குமிடத்து இச்சாசனம் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்குரியது என்று கருதலாம். அதிலே சொல்லப்படும்
சில குறிப்புகளும் இதனை உறுதி செய்கின்றன.
யாழ்ப்பாணம் கச்சேரி கோவில் பதிவு அட்டவணை என்ற தொடரோடு சாசனத்தின் வாசகம் ஆரம்பமாகின்றது. பிரித்தானியரின் ஆட்சிக் காலத்திலே தான் யாழ்ப்பாண மாவட்டத்தில் அடங்கிய பகுதிகளிலுள்ள கோயில்களைப் பற்றிய விபரங்களைத் தேடி, அவற்றின் அடிப்படையில் கோயிற் பதிவேடு ஒன்றை உருவாக்கினார்கள். அந்தப் பதிவேட்டைப் பார்த்துப் படிக்கும் வாய்ப்பு கச்சேரியிலே தொழில் புரிந்தவர்களுக்குக் கிடைத்திருக்கும். அவர்கள் மூலமாக அறிந்த விபரங்களை அடிப்படையாகக் கொண்டு இச்சாசன வாசகத்தின் முதற்பகுதியை மேல்வருமாறு எழுதியுள்ளனர். 'யாழ்ப்பாணம் கச்சேரி கோவில் பதிவு அட்டவணை 1735 இல் தாபித்தவர் திரு கோ.கு. வே.அருணாசலம்' என்பதை விபரிக்கின்றது.
இக்குறிப்பினால் கோயிலின் தாபகர் கோ.கு. வே. அருணாசலம் என்பவரே கோயிலை அமைத்தார் என்பதை அறியமுடிகின்றது. சாசனத்திலே 1735 என்ற இலக்கம் எழுதப்பட்டுள்ளதால் அது கி.பி. 1735 ஆம் வருடத்தைக் குறிக்கும் என்ற எண்ணம் ஏற்படக்கூடிய சாத்தியம் உண்டு. ஆனால் அது அவ்வாறானதன்று என்று கருதுவதற்கான வலுவான காரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று, பொதுவாக, ஆண்டின் இலக்கத்தை எழுதும் இடத்து, அதைக்

Page 20
கலைக்கேசரி தி 20
/ான்
குறிக்கும் வண்ணமாக ஆண்டு என்ற குறியீட்டை எழுதுவது வழமை. இச்சாசனத்தில் இலக்கத்தை அடுத்து அவ்வாறான குறியீடும் இல்லை. அத்தோடு ஆண்டினைக் குறிப்பிடும் பொழுது பெரும்பான்மையும் மாதம், திகதி என்பவற்றையும் குறிப்பிடுவது வழமை."
இரண்டாவது வலுவான காரணம் 1735 ஆம் ஆண்டு ஒல்லாந்தரின் ஆட்சிக் காலத்தில் அடங்கும். அக்காலத்தில் அவர்கள் சுதேச சமய நெறிகளுக்கு எதிரான தங்கள் கடுமையான கோட்பாடுகளை தளர்த்திக் கொள்ளவில்லை. அவர்களின் ஆட்சியின் இறுதிப் பகுதியிலே தான் தங்கள் முகவர்களான வணிகருக்கும் உயர் அதிகாரிகள் சிலருக்கும் சைவக் கோயில்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கினார்கள். மூன்றாவது காரணம் ஒல்லாந்தரின் ஆட்சியில் குறிப்பாக 1735 இல் நிர்மாணிக்கப்பட்ட ஆலயம் பற்றிய விபரங்களைப் 19 ஆம் நூற்றாண்டிற் கோயிற் பதிவு அட்டவணையினைத் தொகுத்தவர்கள் பெற்றிருப்பார்கள் என்பது ஐயத்திற்குரியதாகும். எனவே இச்சாசனம்
நகூரு அடிமா (Tக' மிருதி, தொச னெம்
டU த்தல்
LITTE Uெபும் மேபெ
ெெபெ 4 ம் முதுக - Lாக்லி
Kசம்
கோபுர வாசற் சுவர்களிலுள்ள கல்வெட்டுகள்

குறிப்பிடும் 1735 ஆம் என்ற இலக்கம் கோயில் அட்டவணையில் உள்ள குறிப்பொன்றின் இலக்கமாதல் வேண்டும். ஆகவே இங்கு முன் குறிப்பிட்டதனைப் போன்று இச்சாசனம் பிரித்தானியரின் ஆட்சிக் காலத்திலே, கோயில் முன்பிருந்த தலத்திற் புனரமைக்கப்பட்ட காலத்தின் பல தசாப்தங்களுக்குப் பின் எழுதப்பட்டிருத்தல் வேண்டும்.
பரம்பரை உரிமையான கோயிற் பரிபாலனம் இச்சாசனம் கோயிலைத் தாபனம் பண்ணிய வே.அருணாசலத்தின் பெயரைக் குறிப்பிடுவதோடு அவருக்குப் பின் கோயிற் காப்பாளராகப் பணி புரிந்தவர்களின் பெயர்களையும் குறிப்பிடுகின்றது.
அப்பெயர்கள் மேல்வருவனவாகும்:
1. அ. சுப்பிரமணியம், 2. சு. ஆறுமுகம், 3. இ. அம்பலவாணர், 4. ஆ. கதிரித்தம்பி, 5. ஆ. சுப்பிரமணியம் 6. சு.குருநாதர் இவர்களில் மூன்றாமவரான இ.அம்பலவாணர் வே.அருணாசலத்தின் குடும்பத்தவரோடு கொண்டு இருந்த தொடர்புகள் சாசன வாசகத்தின் மூலம் புலப்படவில்லை. மற்றவர்கள் எல்லோரும் அருணாசலத்தின் வழிமுறைச் சந்ததியினர். சாசனத்தின் இறுதியாகக் குறிப்பிடப்படும் சு.குருநாதர் ஆ.சுப்பிரமணியத்தின் மகனாதல் வேண்டும். அவர் ஆ.சுப்பிரமணியத்திற்கு உதவியாக இருந்தார் என்று சொல்லப்படுகின்றது. எனவே, அருணாசலத்தின் வழிவந்த நான்கு தலைமுறையினரின் பெயர்கள் கல்வெட்டின் வாச்கத்தில் இடம்பெற்றுள்ளன. ஆலய பரிபாலனம் அருணாசலத்தின் பரம்பரையினரின் உரிமையாகி விட்டது.
ஆலயத் திருப்பணிகள் | இதுவரை கவனித்தவற்றிலிருந்து, ஆலயத்தின் தாபகர் என்று சொல்லப்படும் அருணாசலத்தின் காலத்திற்கும் சாசனத்தின் காலத்திற்குமிடையில் ஒரு நீண்டகால இடைவெளி இருந்தது என்பது உறுதியாகின்றது. இந்தக் கால இடைவெளியில் ஆலயம் தொடர்பாக எத்தகைய திருப்பணிகள் நடைபெற்றன என்பது உய்த்துணர்தற்குரியது.
ஆலயத்தின் கட்டுமானங்கள் தொடர்பாக இருவேறு கட்டங்களை பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது. முதலாவது கட்டம் அதன் தாபனத்தோடு தொடர்பானது. அதனை வே. அருணாசலம் நிர்மாணஞ் செய்தார். பின்பு

Page 21
ஏறக்குறைய ஏழு, எட்டு தசாப்தங்கள் கழிந்த பின், அவரது குடும்பத்தைச் சேர்ந்த நான்காவது தலை முறையினரின் காலத்தில் அருணாசலம் அமைத்த கோயில் கற்றளியாகப் புனர்நிர்மாணஞ் செய்யப் பெற்றதென்று கொள்ளலாம். இப்பொழுதுள்ள மூலஸ்தானமும்
அர்த்தமண்டபமும் அக்காலத்திலே அமைக்கப்பட்டவை.
சுதுமலை முத்துராமலிங்கத்தின் திருப்பணிகள்
இந்த விளக்கம் கோபுரவாசலிற் காணப்படுகின்ற கல்வெட்டுகளால் உறுதியாகின்றது. அவற்றில் ஒன்று சுதுமலை முத்து நாகலிங்கம் தெரிசனை மண்டபப் பகுதிகளைக் கட்டிமுடித்தமை பற்றியது. 'தெரிசனை மண்டபத்தில் பார(க்) கல்லும் மேல் வேலைகளும் முத்து நாகலிங்கம் உபயம்' என்று ஒரு சாசனத்தில் எழுதப்பட்டுள்ளது. இக்கல் வெட்டின் தொடக்கத்தில் 1905 ஆ மாரிகழி மாதம் 5 தி(கதி) என்று எழுதப்பட்டுள்ளது. எனவே அந்த நாளிற் சாசனம் வெட்டப்பட்டதென்றும் தெரிசனை மண்டபம் தொடர்பாக முத்து நாகலிங்கம் செய்த திருப்பணிகள் அந்நாளுக்கு முன் நிறைவேறி விட்டன என்றுங் கருதலாம்.
இணுவிற் கந்தசுவாமி கோயிலின் கோபுரம் சுதுமலை முத்து நாகலிங்கத்தின் திருப்பணி என்பதை அதிலுள்ள இரு கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகின்றது. ஒரு கல்வெட்டில் 1909 தை மாதம் 13 தி(கதி) என்ற காலக்குறிப்பு தொடக்கத்தில் அமைந்துள்ளது. அதன் பின் சுதுமலை முத்து நாகலிங்கம் கோபுரவேலை உபயம் என்று எழுதப்பட்டுள்ளது. இக்குறிப்புகளின் அடிப்படையில் 13-1-1909 அளவில் கோபுரத் திருப்பணி வேலைகள் பெரும்பாலும் நிறைவு பெற்றுவிட்டன என்று கருதலாம்.
கோபுர வாசலுக்கு மேல் வெளிப்புறத்தில் முத்து நாகலிங்கம் உபையம் என்று ஒரு வசனம் கல்வெட்டாக அமைந்துள்ளது. 1912 ஆ ஆவணி (மாதம்) 30 திகதி என்ற காலக் குறிப்புடன் இச்சாசனத்தின் வாக்கியம் தொடங்குகின்றமை குறிப்பிடற்குரியது. ஆகவே கி.பி 30-8-1912 இல் கோபுரத் திருப்பணி முற்றாக நிறைவேறிவிட்டதென்று கருதலாம். | கோயிற் சாசனங்களை அடிப்படையாகக் கொண்டு மேல்வரும் முடிபுகளைக் கொள்ளலாம்: இணுவிற் கந்தசுவாமி கோயில் பிரித்தானியரின் ஆட்சியில், 19 ஆம் நூற்றாண்டின் முதலாவது காற்பகுதியிலே வே.அருணாசலம் என்பவராலே நிர்மாணிக்கப்பட்டது. கல்வெட்டுச் சான்றுகளின் அடிப்படையில் நோக்குமிடத்து, கோயிற் பரிபாலன்

, கலைக்கேசரி
21
கலை
கைமம் காத" சதும் 6ெ) முது
பாக: N3ம். கோபு
9ெ பLUம்
கோபுர வாசற் சுவர்களிலுள்ள கல்வெட்டுகள்
உரிமை பரம்பரை வழி உரிமையாக வந்துள்ளது.
அருணாசலத்தின் சந்தான வழியில் நான்காவது தலைமுறையினரின் காலத்திலே கோயில் மீண்டும் புனர்நிர்மாணம் பெற்றது. அப்பொழுது மூலஸ்தானமும் அர்த்தமண்டமும் கல்லால் அமைக்கப்பட்டன. கோயிலிற் காணப்படும் பெரிய சாசனம் புனர்நிர்மாண வேலைகள் நிறைவடைந்த பின்பு எழுதப்பட்டிருத்தல் வேண்டும். அதன் காலம் ஏறக்குறைய கி.பி. 1900 ஆம் ஆண்டினை ஒட்டியதாகலாம்.
சுதுமலை முத்து நாகலிங்கத்தின் திருப்பணியான தெரிசனை மண்டபமும் கோபுரமும் அதற்குப் பின் கட்டடப்பட்டன என்று கொள்ளலாம்.
கல்வெட்டுகள்
அர்த்த மண்டபத்து வாசற் கதவு நிலைகளின் மேலமைந்த பாரக்கல்லிற் காணப்படும் சாசனம்.
உ
1. யாழ்ப்பாணம் கச்சேரி கோவில் பதிவு 2. அட்டவணை 1735ல் தாபித்தவர் திரு 3.கோ.கு. வே.அருணாசலம்
என்பதை விபரிக்கின்றது.

Page 22
கலைக்கேசரி து
22
4. அப்பெரியவருக்குப் பின் றஸ்திகளாயி 5. ருந்து அத்தொண்டினை செய்தவர்கள் 6. அ.சுப்பிரமணியம் சு.ஆறுமுகம் 7. இ.அம்பலவாணர் ஆ.கதிரித்தம்பி தம்பி 8. ஆ.சுப்பிரமணியமும் உதவியாக சு.குருநாதர்
கோபுர வாசற் சுவர்களிலுள்ள கல்வெட்டுகள் 1. உ.
2. உ 1. 1905
1. 1909 2. ஆ மா
2. ஆ 3. ர் களி
3. தை மீ 4. மீ 5 தி
4. 13 தி(கதி) 5. தெரிச
5. சுதும் 6. னை ம
6. லை 7. ண்டப்
7. முத்து 8. த்தில்
8. நாக லி 9. பார க
9. ங்கம் 10. ல்லும்
10. கோ பு 11. மேல்
11. ர வே 12. வேலை
12. லை உ 13. களும்
12. பயம் 14. முத்து
15. நாகலி 16. ங்கம்
17. உபய 18. ம் கோபுரவாசல் வெளிப்புறக் கல்வெட்டு உ 1912 ஆவணி மீ 30 தி முத்து நாகலிங்கம் உபயம்
அடிக்குறிப்புகள் 1. அது மிகப்பழைமையான வழிபாட்டுத் தலம். ஆரியச் சக்கரவர்த்திகளின் காலத்தின் முன்பே அது தோன்றிவிட்டது. கோயில் வளாகத்தில் மிகவும் புராதனமான வேலைப்பாட்டில் அமைந்த ஏழு கட்டையான தூண்கள் உள்ளன. அவை மண்டபம் ஒன்றின் சாலையோரமாக வைக்கப்பட்டிருந்த தூண்கள் எனக் கருதலாம். அவை பல்லவர் கலைப்பாணியில் அமைந்தவை. பல்லவர் காலத்திற்குச் சற்றுப் பிந்திய காலத்திலும் பல்லவர் கலைப்பாணியிலே கட்டுமானங்களை அமைத்து இருக்கக்கூடும் என்பதால் இத்தூண்கள் 12 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டவை என்பதை மட்டுமே
இங்கு குறிப்பிடலாம்.
2. கோயிலுக்குரிய காணிகள் பற்றிய உறுதி ஆவணங்களையும் அவற்றுக்கு மூலமான கச்சேரித்தோம்புகளையும் ஆராய்வதன் மூலம்
ரன்

கோயில் வரலாறு பற்றிய சில முக்கியமான விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
3. இலங்கையிற் கிடைத்துள்ள இரண்டு வேறு கல்வெட்டுக்கள் மட்டுமே கோயில் கட்டியமை பற்றிக் குறிப்பிடுகின்றன. அவற்றிலொன்று திருக்கேதீஸ்வரத்திலே கண்டெடுக்கப் பெற்றது. அது, இப்பொழுது, கொழும்பிலுள்ள தேசிய அருங்காட்டியகத்திலே கற்றூண்சாலையிற் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அது திருக்கேதீஸ் வரத்திலே சோழரின் அதிகாரிகளில் ஒருவனாகிய தாழி குமரன் இராஜராஜேஸ்வரம் என்னும் கோயிலை நிர்மாணித்தமை பற்றிய விபரங்களைக் குறிப்பிடுகின்றது. இரண்டாவது சாசனம் கம்பளை இராசதானியாக விளங்கிய காலத்திலே சேனாலங்காதிகாரிகள் என்னும் மந்திரி லங்காதிலகம் என்னும் பௌத்த கோயிலை ஒரு தேசத்துக் கோயிலாக நிர்மாணஞ் செய்தமை பற்றிய விபரங்களைக் குறிப்பிடுகின்றது.
4. கோபுரவாசலிலுள்ள மூன்று கல் வெட்டுக்களிலும் ஆண்டு, மாதம், திகதி ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளனர். எனவே பெரிய கல்வெட்டிற் காணப்படும் 1735 என்ற இலக்கம் ஆண்டினைக் குறிப்பதாயின் மாதம், திகதி, என்பவற்றைக் குறிப்பிடுவதைத் தவிர்த்திருக்க மாட்டார்கள்.
5. இங்குள்ள ஏனைய சாசனங்களில் ஆண்டினைக் குறிப்பதற்கு இப்பொழுது வழக்கிலுள்ள எண் கணக்கு முறை இலக்கங்களையன்றிப் பழைய தமிழ் மரபின் வழியே குறியீடான எழுத்துகளையே பயன்படுத்தியுள்ளார்கள். ஆனால் அம்முறையிலே சில மாற்றங்களை இதில் ஏற்படுத்தியுள்ளனர்.
6. பார கல் என்பதை பாரக் கல் என்று படிக்க வேண்டும். பாரத்தைத் தாங்குகின்ற கல் பாரக்கல். இந்தச் சொல் இலங்கையிலுள்ள வேறெந்தக் கல்வெட்டிலும் காணப்படவில்லை.
7. இச்சாசனத்தின் இறுதிவரியின் முடிவிலுள்ள சொற்றொடர் சாசனத்தின் மைப்படியிலும் சாசனத்தின் புகைப்படத்திலும் தெளிவாகத் தெரியவில்லை.
எழுத்துகள்
ஓரளவு சிதைவாகியுள்ளன.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துத் தமிழ்த்துறையைச் சேர்ந்த மாணவராகிய றொக்ஷான் இக்கல்வெட்டுகளின் மைப்படிகளை உருவாக்கி எம்மிடம் வழங்கினார். அவருக்கு எமது நன்றிகள் உரித்தானவை.

Page 23
%
-l: +
17, * -
'செம்ம டேஸ்ட்டான சீஸ் சோஸ்ஸில் மூழ்கும் ஏராளமான டொப்பிங்கள்! தங்க நிறத்துக்கு பேக் செய்த நறு நறு க்ரஸ்ட்!
ரூ.320க்கு டெவல் சிக்கன் தந்தூரி சிக்கன் (சிக்கன் வ
ரூ.280க்கு சீஸ் மற்றும் ஒனியனுடன் பச்சை மிளகாய் | 8

பின 605/
தை) இது
0Lifeல
தூள் கிளப்புங்க!
WORD)
ஹவாயன் | சொசேஜ் டிலய்ட்
Fஸ் மற்றும் டொமாடோவுடன் பச்சை மிளகாய்

Page 24
கலைக்க்ேசரி த்து 24 நடனக்கலை
குச்சிபுடி நடனத்தில் 6
ஆங்கிகா
-18 -8
Sex |
அறம்.
சாபசா வசப்.

சல்வாக்குச் செலுத்தும்
அபிநயம்
- மோகனப்பிரியன்
ராக
நடனம் என்னும் அழகிய உளமார்த்த வல்ல உன்னத கலை மொழியினும் அப்பாற்பட்டு கலையார்வம் கொண்ட மனிதனையும் உலகினையும் இயக்கவல்லது. இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்களில் தோன்றிய நடனமாக இருந்தாலும் அவை அனைத்தும் ஒன்று கூடி பறைசாற்றுவது அன்பினாலான அதன் அழகினையும் இறைவனுடன் கொள்ளும் ஆன்மீக பக்தியினையுமே ஆகும். இதனால் தான் நடனக்கலை மிகவும் ஒரு நுணுக்கம் வாய்ந்த தெய்வீக கலையாக எல்லோராலும் மதிக்கப்படுகின்றது. ஒரு மனிதன் உளமார தனது தூய அன்பினைக் கொண்டு துதிக்கும் வழிபாட்டினையே இறைவன் ஏற்று அனுக்ரகம் வழங்குவது போல், நடனக்கலையும் உளமார உணர்ந்து உடலால் நெகிழ்ந்து அதனை அரங்கேற்றும் பொழுது அந்நடனத்தினால் உண்டாகும் உணர்வுபூர்வமான உண்மையான ரசமானது கலைப் பிரியர்களின் மனதினை களிப்பூட்டுகின்றது.
அக்காலகட்டத்தில் கோயில்களில் ஆடப்பட்டு வளர்த்து வந்த கலையின் ஆதாரமாக இன்றும் விளங்குவது. கோயில்களில் காலம் காலமாய் திகழ்ந்த ஆதாரம் எடுத்துக் கூறும் ஆடல் மாந்தர்களின் கரண சிற்பங்களே.. இந்நாட்டிய காரண சிற்பங்களை ஆராய்ந்தோமானால்
அவை நூற்றியெட்டாக வகைப்படுகின்றது. இவற்றை வகைப்படுத்தியவரும் இரண்டாம் நூற்றாண்டில் நட்டிய சாஸ்திரத்தை வகுத்த பரதமுனியே. ஆடற்கலையின் அரசன் நடராஜருடைய தாண்டவங்களின் தோற்றங்களில் இருந்து வகைப் படுத்தியிருக்கலாம் என்று யூகிக்க முடிகின்றது. இவையே இன்று நாம் கற்கும் அங்ககார அசைவுகள் பற்றி கல்வி கூறும் ஆங்கிகா அபிநயம். தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் எண்பத்தியொரு கரண

Page 25
சிற்பங்களும், கும்பகோணம் சாரன்காபாணி கோவிலினில் நூற்றியாறு கரணசிற்பங்களும் காணப்படுகின்றன. இங்கே மூல மூர்த்தி கிரிஷ்ணனாதனால் இங்கே அமைக்கப் பட்டிருக்கும் கரணச் சிற்பங்கள் கிருஷ்ணர் புரிவது போல் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தில்லை நடராஜர் கோவிலில் நூற்றியெட்டு கரண சிற்பங்களும் இலங்கையில் நல்லூர் கந்தஸ்வாமி கோவிலில் சில கரண சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளதனை கண்கூடாக காண முடிகின்றது. இக்கரணங்கள் நாட்டியத்தின் வடிவமைப்பினையும் அதன் அழகினையும் எடுத்துக்காட்ட வல்லதாக காணப்படுகின்றன. இக்கரணங்களின் தாக்க முனைவுகள் குச்சிப்புடி நடனத்தில் காண முடிகின்றது. இவற்றை விபரிக்க முன்னர் இந்நடனத்தின் தோற்றத்தினை அறிவது பொருத்தமாக இருக்கும்.

* கலைக்கேசரி
1, 42
உளமார உணர்ந்து, உடலால் நெகிழ்ந்து நடனக்கலையை அரங்கேற்றும் பொழுது அந்நடனத்தினால் உண்டாகும்
உணர்வுபூர்வமான உண்மையான ரசமானது கலைப் பிரியர்களின் மனதினை களிப்பூட்டுகின்றது.
430498 அ.

Page 26
கலைக்கேசரி து 26
யா)
இந்தியாவில் ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணாபுரம் எனும் மாவட்டத்தில் குசேலபுரம் எனும் கிராமம் இருந்தது. அங்கே சில ஏழ்மையான பிராமணர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் ஒரு நிறுத்த பரம்பரையை சார்ந்தவர்களாக காணப்பட்டனர். அவர்களுடைய கஷ்டத்தினை போக்க தமது வாழ்வாதாரமாக ஒரு நடனத்தினை உருவாக்கி அதனை அனைவர் முன்னிலையிலும் அரங்கேற்றி வந்தனர். அதுவே பிற்காலத்தில் குச்சிப்புடி என்று அழைக்கப் பட்டது. பின்னர் குசேலபுரத்தின் பெயர் மருவி
குச்சிப்புடி கிராமம் என அழைக்கப்பட்டது.
இந்நடனம் சுமார் எழுநூறு தொடக்கம் எண்ணூறு ஆண்டுகளாக பழக்கத்திலிருந்து வந்ததாக கூறப்படுகின்றது. காலப்போக்கில் இந்நடனம் பக்திரசம்
கொண்டனவாக இயற்றப்பட்டு இறைவன் பால் கொண்ட பெருமைகளையும், லீலைகளையும் குறித்து ஆடப்பட்டது. ஆண்களாலே பெரும்பாலும் இந்நடனம் ஆடப்பட்டுவந்தது, பெண்கள் கதாபாத்திரம் தேவைப்படுமிடத்து ஆண்கள் பெண்கள் வேடம் பூண்டு மிகவும் அழகு பொருந்திய ஆடை, ஆபரணங்களையும் அணிந்து ஆடுவர்.
பதினேழாம் நூற்றாண்டினைச் சேர்ந்த சித்தேந்திர யோகி பாமக்கலாபம் என்ற உருப்படியை உருவாக்கினார் இந்த உருப்படியில் கிருஷ்ணருக்கும் பாமாவிற்கும் இடையில் நிகழ்ந்த சண்டை, தாபம் போன்ற நிகழ்வுகளை
குறித்து இருக்கும். 19 ஆம் நூற்றாண்டில் கொல்லக்கலாபம் எனும் உருப்படியினை அரங்கேற்றி உள்ளனர். இந்நடனத்தில் பிராமணர்களுக்கும் பால் விற்க வந்த பெண்களுக்கும்
இடையில்
ஏற்பட்ட பிணக்குகளைக் கருவாக கொண்டு
ஆடியிருக்கின்றனர்.
நாராயண தீர்த்தருடைய கிருஷ்ண லீலா தரங்கினி என்ற நூல் வெளியான பின்பே அடவு, நடனமுறை தாளம், சொற்கட்டு என்பன உண்டானதாக கூறப்படுகிறது. குச்சிப்புடி நடனத்தில்
இடம்பெறும் உருப்படிகளாக பிரம்மாஞ்சலி, தரங்கம், சிவகவுத்துவம், ஞானவர்ணம், பத வாரணம், ஜதிஸ்வரம், காமஷ க சப்தம், கிருஷ்ண சப்தம், மேளம், தசாவதார நிருத்தம். ஷோகம், கீர்த்தனை, அர்த்தபதிகம், அத்யாத்ம இராமாயணம்,


Page 27
மண்டூக சப்தம், தில்லானா போன்றவற்றை குறிப்பிடலாம். பரதநாட்டியத்தில் வர்ணம் எனும் உருப்படி எவ்வாறு பரதநாட்டிய நிகழ்ச்சியின் ஜீவநாடியாக திகழ்கின்றதோ அதே போலத்தான் குச்சிப்புடியிலும் தரங்கம் என்னும் உருப்படி சிறந்தவொரு இடத்தை கொண்டுள்ளது. தலையில் நீர் நிரம்பிய செம்புடன் கால்களை தட்டினில் ஊன்றி தாளம் தவறாமல் மிகவும் கட்டுப்பாட்டுடன் ஆடும் இவ்வுருப்படி குச்சிப்புடி நடனக்கலைஞரின் அதீத திறமையை வெளிக் கொணரும் வகையினில் காணப்படுகின்றது
குச்சிப்புடி நாட்டிய மணியின் ஸ்தானக நிலை தொடக்கம் அங்க அசைவுகள் க்ரீவா பேதங்கள் கடி பேதங்கள் கொண்டு அமைக்கப்பட்ட அடைவுகளில் கரணங்களின் சாயல்களைக் காண முடிகின்றது. மிகவும் துரிதமான கதியில் ஆடப்படும் அடைவுகள் கரணங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கலாம்.
பொதுவாக பரதநாட்டியத்தின் அடைவுகளை பரதநாட்டிய கலைஞர் உள்வாங்கும் பொழுது அவர்களுடைய உடலில் அமைப்பு கணித சார்பிற்கு உள்பட்டு சீரான கோடுகளும் வளைவுகளும் வெளிப்படுவதனை காண முடிகின்றது. அதனுடன் குச்சிப்புடி நடன அடைவுகளை ஒப்பிடும் பொழுது அவை உடல் அசைவையும் அழகு கரணங்களையும் எடுத்துகூறுவனவாய் அமைந்துள்ளது.

கலைக்கேசரி
27
இன்றைய நாட்களில் மூத்த குருக்களை பின்பற்றி வந்த மூத்த கலைஞர்கள் குச்சிப்புடியில் இடம் பெறும் அடைவுகளுக்கு அவற்றில் அமைந்த கரணத்தின் சாயலுக்கேற்ப கரணங்களின் பெயர்களை சூட்டியுள்ளனர்.
உதாரணமாக எடகக்ரீடித, ஸ்திதாவர்த்த, அஞ்சி தகண்டிதம், ஸ்வஸ்திகாஞ்சிதகண்டிதம், கண்டித்த ப்ரசாரித, கர்த்தரிஸ்வஸ்திகம், பார்ஷ்வகட்டித, உபயபாஸ்வகட்டித,
- அக்ரதல சஞ்சாரம், தொதுவங்க, சன்னிதாச்சாரி, வாம்பாதவர்த்திதம், உத்கட்டித, - தக்ஷினபாதவர்த்திதம், கர்தரிகாதா, நூபுரபாதிக,
உபயபாஸ்வகாதா, சம்பாதகண்டிதப்ரசாரிதம் போன்ற அங்கீகார அசைவுகளை கொண்டிருக்கின்றது.
பாஸ்வ கட்டித் என்பது இடையை குறிக்கின்றது இடையின் அசைவு மிகவும் அதிகமாக இந் நடனத் தில் பயன்படுத்தப் படுகின்றன.
கால் விரல்களால் செய்யப்படும் அசைவுகள் அக்ராதலசஞ்சாரம் என அழைக்கப்படுகின்றது.
உடல் அசைவு நாட்டியத்தின் மொழி பகிரும் ஒரு ஊடகமாக திகழ்கின்றது.
ஆத்மாவோடு ஒன்றித்த இக்கலை பிரபஞ்சம் எங்கும் உன்னதமாக போற்றப்படும் சிறப்பின் உட்பொருள் ரசிகன் கண்ணால் கண்ணுற்று மெய்சிலிர்க்க உளமார உருகுவதனாலே தெய்வீக கலையென மதிக்கப்படுகிறது.

Page 28
கலைக்கேசரி
28 ஆளுமை
"T"
மலையகத் தளத்திலிருந்து பெரும் உலக நெறியைத் தரிசித்த கே.கணேஸ்
- பேராசிரியர் சபா.ஜெயராசா

மலையகத்தின் சமூக இருப்பிலிருந்து மேலெழுந்த எதிர் வினைகளை இலக்கிய வாழ்வில் ஏற்றிய எழுத்தாளராகவும் புலமையாள ராகவும் விளங்கியவர் கே.கணேஸ் அவர்கள். இலக்கிய ஆக்கங்களுக்கும் சமூக வினைப் பாடுகளுக்குமிடையேயுள்ள தொடர்புகளை ஆழ்ந்து நோக்கிய அவரது தரிசனம் 'முற்போக்கு' என்ற சிந்தனை வீச்சுக்குள் சென்றது.
மலையகத்திலுள்ள கண்டி தலத்து ஓயாவைச் சேர்ந்த கணேஸ் அவர்கள் ஒடுக்குமுறை விடுவிப்பின் உலக விசைகளோடு சங்கமமானார். அதன் தொடர்ச்சியாகவே அவருக்கு மொழிபெயர்ப்பு முயற்சிகள் மீது ஆழ்ந்த ஈடுபாடு ஏற்பட்டது. ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் புலமை கொண்டிருந்த அவர் உலகின் புரட்சிகர முற்போக்கு இலக்கியங்களை செவ்விதான தமிழ்ப் பரப்புக்குள் கொண்டு வந்தார். அவர் ஓர் இரு மொழிப் படைப்பாளி. தமிழில் வளமான ஆக்க இலக்கியங்களைப் படைத்தமை போன்று ஆங்கிலத்திலும் அதே வீச்சுடனும் அழகுடனும் படைப்பு மலர்ச்சியை முன் வைக்கும் ஆற்றல் கொண்டிருந்தார். ஆங்கில மொழியில் அவர் படைத்த கவிதைகள் அனைத்துலக நியமங்களை எட்டின. ஒரு சமயம் அவரது கவிதை ஒன்றுக்கு ஜப்பானிய
அரசின் பாராட்டுதலும் கிடைக்கப்பெற்றது.
இலக்கியங்களை மொழிபெயர்த்தல் என்பது அறிவியல் நூல்களை மொழி பெயர்ப்பதைக் காட்டிலும் மிகவும் கடினமான பணி. ஏனெனில் இலக்கிய மொழி அகவயத் தளத்தில் (Subjective Base) இருந்து மேலெழுகின்றது. மக்களின் வாழ்க்கையோடும் மனவெழுச்சி
கலந்த சொல்லாடல்களோடும் கலந்து நிற்பது. குறித்த பண்பாட்டு விசைகளோடு ஒன்றிணைந்து நிற்பது. குறிப்பிட்ட வேற்று மொழிச் சூழலில் உருவாக்கம் பெற்ற படைப்புகளைத் தமிழ்ச் சூழலுக்குக் கொண்டு வரும் முயற்சியை வினைத்திறனுடன்
முன்னெடுத்தவர் கே.கணேஸ் அவர்கள்.
பிறமொழி இலக்கிய ஆக்கங்களைத் தமிழுக்குக் கொண்டு வரும் பொழுது பின்பற்றப்படவேண்டிய நெறிமுறைகளைத் தமது ஆக்கங்கள் வழியாக மெளனமாக வெளிப்படுத்தியவர். அதாவது குறித்த விடயத்தை இவ்வாறு தான் மொழியாக்கம் செய்ய வேண்டும் என்று இலக்கண வரையறைப் படுத்தாது, தமது ஆக்கங்களால் மறைமுகமாக வெளிப்படுத்தியவர்.
- கவா

Page 29
ெ
கரன்
சுமார் இருபதுக்கு மேற்பட்ட நாவல்களைக் கணேஸ் அவர்கள் தமிழ் மொழியாக்கம் செய்தார். மூல நூல்களில் அமைந்திருந்த சரளமான வாசிப்புச் சுவைக்கு எவ்வகையிலும் ஊறுவிளைவிக்காது ஈடு கொடுக்கக் கூடிய நயம் மிக்க மொழியாக்கத்தை அவர் வழங்கினார்.
அவரால் ஆக்கப்பெற்ற நூல்களாகிய “ஹோசிமின் சிறைக்குறிப்புகள்', 'உக்ரேனியக் கவிதைகள்', 'வியத்நாம் - சிறுகதைகள்' முதலானவை உலகளாவிய முறையில் எழுச்சி கொண்ட முற்போக்கு இலக்கியச் சிந்தனைகளைத் தமிழுக்கு அறிமுகம் செய்தவையாக அமைந்தன..
கணேஸ் அவர்களின் மொழிபெயர்ப்புக்கும் சக்தி பாலையா அவர்களின் மொழிபெயர்ப்புகளுக் குமிடையே பல நிலைகளிலே ஒப்புமைகளைக் காண முடியும். இருவரும் ஆக்க இலக்கியத் தளத்தில் ஊறி நின்றமையால் இலக்கியக் கனதியைத் தமது மொழி பெயர்ப்புகளில் கலைச் சுவையோடு பராமரித்தனர்.
பிரபல எழுத்தாளர் முல்க்ராஜ் ஆனந் அவர்களின் ஆக்கங்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியோர் வரிசையிலே கணேஸ் அவர்களுக்குத் தனியிடம் உண்டு. அந்த வகையில் அவர் மொழிபெயர்த்த 'தீண்டாதான்' (Untouchable) என்ற நாவல் விதந்து குறிப்பிடப்பட வேண்டியுள்ளது. இலக்கியம் என்பது வெறுமனே பொழுதுபோக்கு இன்பம் மட்டுமல்ல - அதனூடாகப் பொல்லாச் சமூக இயல்புகளை மாற்றியமைத்தலும், மாற்றத்துக்கான விசைகளைக் கலை நயத்துடன் வலுவூட்டுதலும் என்ற கணேஸ் அவர்களின் இலட்சியத்துக்கு ஈடு கொடுக்கக் கூடியதாக அந்த நாவல் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
திட்டவட்டமான கருத்தியற் பின் புலத்தை அடியொற்றியே அவர் மொழிபெயர்ப்புக்குரிய நூல்களைத் தெரிந்தெடுத்தார்.
பன்முக ஆளுமையும் சமூக ஆளுமையும் ஒடுக்கு முறைகளை விடுவிப்பதற்கான புரட்சி ஆளுமையும் கொண்ட அகல் வரி வடிவமாக விளங்கியவர் கே.கணேஸ் அவர்கள். இதழாசிரியராக, கவிஞராக, திறனாய்வாளராக, புனை கதைசாரா எழுத்தாக்க வடிவங்களை முனைப்புடன் முன்வைத்தவராக, பேச்சாளராக, வினைப்படும் சமூக விசை கொண்டவராக விளங்கிய பன்மை விசைகளுக்குரியவர். சென்னையிலே கல்வி கற்றுக் கொண்டிருந்த வேளை, இளைஞர் காங்கிரஸில் வினைப்பட இயங்கி 1936 ஆம் ஆண்டிலே 'லோக்சக்தி' என்ற
ID|

-2, கலைக்கேசரி
29
{8 * {)
?, a C1% s: A:46..
பட் * 6 : >a, . ஆ...-4-'
ப * & பு: $ 3
கஜகஸ்தான் புகழ்மிக்க ஒவியர் "ஜாசிரோவ் கைர் பாய்' வரைந்த கே. கணேஷ் அவர்களின் படம்.

Page 30
கலைக்க்ேசர் துதி
30
இதழை வெளியிட்டார். 1945 ஆம் ஆண்டில் கே.ஏ.அப்பாஸ், வெங்கடாச்சாரி, தி.க.சிவசங்கரன் மற்றும் குயிலன் ஆகியோருடன் இணைந்து முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கினார். எழுத்துலகத்தையும் முற்போக்கு உலகத்தையும் ஒன்றிணைக்கும் முன்னோடிகளுள் ஒருவராகத் தமிழ்ச் சூழலில் விளங்கினார்.
முல்க்ராஜ் ஆனந் அவர்கள் இந்நாட்டுக்கு வருகை தந்திருந்தவேளை, விபுலாநந்த அடிகளாரைத் தலைவராகக் கொண்டு மார்ட்டின் விக்கிரமசிங்க, எதிரிவீர சரத் சந்திர முதலிய சிங்கள இலக்கிய ஆளுமைகளையும் ஒன்றிணைத்து தமிழ் - சிங்கள் எழுத்தாளர்களின் ஒன்றிணைந்த நிறுவனத்தை உருவாக்கினார். வினைப்பாடுகளை வினைத்திறன்படுத்திக் கொள்ள ஒன்றிணைந்த நிறுவனமயப்பாட்டின்
முக்கியத்துவத்தை அறிந்து
கொண்டார். உதிரிகளாக எழுத்தாளர்கள் இயங்குவதைக் காட்டிலும் ஒன்றிணைந்த நிறுவனமயப்பட்ட ஆக்கத்தளத்தில் இயங்குதலின் முக்கியத்துவமும் அவரால் எடுத்துரைக்கப்பட்டது.
முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இலங்கையிலே உருவாக்கம் பெறுவதற்குரிய மாதிரிகை வடிவமாக கே.கணேஸ் அவர்கள் உருவாக்கிய இலங்கை எழுத்தாளர் சங்கம் அமைந்தது. தெளிந்த சமூக நோக்கத்துடன் எழுத்தாக்கங்களை முன்னெடுக்க வேண்டிய இலட்சியத்தை அவர் வலியுறுத்தினார்.
1954 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி கொழும்பு விவேகானந்தக் கல்லூரியில் எழுத்தாளர் சந்திப்பு இடம்பெற்றது. கே.கணேஸ், இளங்கீரன், அ.இராகவன், எம்.பி.பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர். அங்கு கே.கணேஸ் நிகழ்த்திய உரை
உக்ரேனியக் கவிஞரின் பிறப்பிடத்தில் டாக்டர் பூர்ணிகாவுடன் கே. கணேஷ்

முக்கியமாக குறிப்பிடப்படுகின்றது. எழுத்துக்கும் சமூக வலுவூட்டலுக்குமுள்ள தொடர்புகள் அவரால் முன் மொழியப்பட்டன.
அந்தச் சந்திப்பிலே கிடைக்கப்பெற்ற பின்னூட்டல்கள் அதே ஆண்டு அதே மாதம் இருபத்து ஏழாம் திகதி இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக்கம் பெறுவதற்கு வழிவகுத்தன.
இந்நாட்டு எழுத்தாளர்களுள் மிகக் கூடுதலாக உலக எழுத்தாளர்களின் தொடர்புகளை அவர்
வளர்த்துக் கொண்டிருந்தார்.
உலக இலக்கியங்களோடு அவருக்கு ஊடாட்டங்கள் இருந்தமை போன்று உலக எழுத்தாளர் பலருடனும் அவருக்கு ஊடாட்டங்கள் இருந்தன. அவற்றின் தொடர்ச்சியாகப் பல்வேறு நாடுகளில் இடம்பெற்ற எழுத்தாளர் மாநாடுகளிலும் கலந்து கொண்டு இலக்கியம் தொடர்பான தனது கருத்தியலை வலியுறுத்தினார்.
தனது கருத்தியலுக்கு இசைந்தவாறு உலக இலக்கியங்களை மொழிபெயர்ப்புக்கெனத் தெரிந்தெடுத்தார். அவ்வாறு தெரிந்தெடுத்த வேளை, அவரின் மொழி பெயர்ப்பும் இயல்பான வீரியத்துக்கு உட்பட்டிருந்தது. வகை மாதிரிக்கு அவர் தெரிந்தெடுத்து மொழிபெயர்த்த உக்ரேனிய அறிஞர் இவன் பிராங்கோ அவர்களின் "The Spirit of Revolt' என்ற கவிதையை 'எழுச்சியின் இயல்பு' என்ற தலைப்பிலே மொழி பெயர்த்தவேளை அவரின் ஆக்கம்
பின்வருமாறு அமைந்துள்ளமையைக் காணலாம்.
'வெறுங் கண்ணீர் வடிக்காது
வினை செய்யத்தூண்டும் மேலான துணிச்சலோடு
3

Page 31
L - டி . .
070
மிகுவலிவும் தோன்றும் உறும்புரட்சி நிகழ்வதனில் உயிர்போவ தெனிலும் உம் மக்கள் வாழ்வதுவும் உயர்வாக அமையும்' (பாடல் -5) அவரது ஆக்க முயற்சியும் நூல் வெளியீடுகளும் தொடர் நிலையிலே இடம்பெற்ற வண்ணம் இருந்தன. தீண்டாதான் முதற்பதிப்பு 1947 ஆம் ஆண்டிலும், இரண்டாம் பதிப்பு 1970 ஆம் ஆண்டிலும் வெளிவந்தது. குங்குமப்பூ (கே.ஏ.அப்பாஸ்) முதற் பதிப்பு 1956 ஆம் ஆண்டிலும், இரண்டாம் பதிப்பு 1963 ஆம் ஆண்டிலும் வெளிவந்தது.
தொடர்ச்சியாக அஜந்தா (கே.ஏ.அப்பாஸ்) 1964 ஆம் ஆண்டிலும், ஹோசிமின் சிறைக் குறிப்புகள் 1973 ஆம் ஆண்டிலும், அந்தகானம் (அசர்பைஜானியக் கதை) 1974 ஆம் ஆண்டிலும், போர்க்குரல் (லூசுன்) 1984 ஆம் ஆண்டிலும், பல்கேரியக் கவிதைகள் 1984 ஆம் ஆண்டிலும், மகிழ்ச்சி மிகு குழந்தைகள் (ஜூஷி) 1986 ஆம் ஆண்டிலும், சீன எழுத்தாளர் லூசுன் சிறுகதைகள் 1986 ஆம் ஆண்டிலும், எத்தனை நாள் துயின்றிருப்பாய் என் அருமைத்தாய் நாடே (சாந்தோர் பெட்டோஃபி) 1988 ஆம் ஆண்டிலும், பாரதி பக்தன் பார்ப்பரா கவிதைகள் 1989 ஆம் ஆண்டிலும், ஒரு சோவியத் கவிஞரின் புதுக் கவிதைகள் 1989 ஆம் ஆண்டிலும், இளைஞர் எர்கையின் திருமணம் (ஜெளசூலி) 1990 ஆம்

2, கலைக்கேசரி
ஆண்டிலும், இன்றைய எனது கடமைகள் (யங்கலாலியங்கி) 1990 ஆம் ஆண்டிலும், மூங்கிற் பள்ளம் (வியத்நாமியக் கவிதைகள்) 1992 ஆம் ஆண்டிலும் உடலும் உணர்வும் (ஷாஸ்சியாங் லியாங்) 1992 ஆம் ஆண்டிலும், உக்ரேனிய மகா கவி தராஸ்ஷெவ்சேன் கோ கவிதைகள் 1993 ஆம் ஆண்டிலும் வெளிவந்தன. | கே.கணேஸ் அவர்களின் எழுத்து நடை தனித்துவ மானது. வகை மாதிரிக்குப் பின்வரும் பந்தியைத் தரலாம். 'நான் வருத்தப்பட்டேன். பின் நான் சுதாகரித்துக் கொண்டேன். ஆயினும் மகிழ்ச்சியில் என்ன செய்வதென்றே தோன்றவில்லை. நான் வெளியேறி அவனைப் பார்க்காமலிருக்க விரும்பினேன். ஆனால் அவன் என் மனதிலே குடியேறி விட்டான். அவனின்றித் தனிமையின் வேதனை தோன்றியது. ' (கூனற்பிறை, ப.50)
சிறிய வசனங்கள் வழியாக மனவெழுச்சிகளை நெகிழ்ச்சியாக வெளிப்படுத்தும் ஆற்றல் அவருக்கு இருந்தது. ஆங்கில நூல்களில் இடம்பெற்ற நீண்ட வசனங்களை அவர் தேவை கருதி சிறிய வசனங்களாகத் தமிழாக்கம் செய்தார். அதேவேளை மூலக்கருத்துக்களைச் சிதைவின்றிப் பராமரித்துக் கொண்டார்.
அவருக்குப் பல்வேறு உயர் விருதுகள் கிடைக்கப் பெற்றன. ஆயினும் அவர் அவைபற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ள வில்லை. தமது இலட்சியங்களோடு ஒன்றித்து நிற்றலையே பெரிதாகக்கொண்டார்.

Page 32
கலைக்க்ேசரி
32 நூற்றாண்டு பழைமை
வல்வெட்டித்துறை
001
ஈழத்தில் 'வல்வை நகர்' எனப் போற்றப்படும் வல்வெட்டித்துறை வரலாற்றுப் பெருமைமிக்க ஒரு பழைமையான கிராமமாகும். இவ்வல்வை நகர் பல பெருமைகளை தன்னகத்தே கொண்டது. இங்கிருந்து அமெரிக்கா வரை கப்பலோட்டிய பெருமை, பஞ்ச காலத்தில் பாய்மரக்கப்பல்கள் மூலம் இந்தியா, பர்மா, கடாரம் முதலிய நாடுகளில் இருந்து உணவுப் பண்டங்களை இறக்குமதி செய்தமை என கடல் கடந்தும் தமிழர்களின் திறமைகளையும் பெருமைகளையும் பறைசாற்றிய பெருமை கொண்டது இவ்வூர் ஆகும். இவ்வாறு பல சிறப்புகளையும் பெருமைமிக்க மனிதர்கள் பலரையும் பெற்ற வல்வை நகரில் தலைசிறந்த கல்விப் பீடமாகவும் நூற்றாண்டைக் கடந்தும் இயங்கும் கல்விக் கூடமாகவும் விளங்குவது 'சிதம்பரக் கல்லூரி' ஆகும்.
இக்கல்லூரியை ஸ்தாபித்தவர் வள்ளல் கு.சிதம்பரப்பிள்ளை ஆவார். 1861 ஆம் ஆண்டு பிறந்த இவர், இலக்கண, இலக்கியங்களை
--------------

சிதம்பரக் கல்லூரி
- உமாபிரகாஷ்
கற்றுத் தேறியதுடன் ஆங்கில மொழியையும் கற்றுத் தேர்ந்தார்.
அரச சேவையில் இணைந்து கொண்ட அவர், பல சமூக சேவைகளிலும் முன்னின்று உழைத்தார். இவர் சிறு வயதில் மாணாக்கராக இருந்த சந்தர்ப்பத்தில் வல்வெட்டித்துறையில் ஆங்கில மொழி மூலமான கற்றல் வசதிகள் இருக்க வில்லை. அதனால் அவர் ஐந்து மைல்கள் கடந்து 'உவெஸ்லி மிஷன் மத்திய பாடசாலைக்குச் (தற்போதைய ஹாட்லிக் கல்லூரி) சென்று கல்வி கற்றார். ஆங்கிலக் கல்வியைக் கற்க வேண்டும் என்று விரும்பிய அவர் பல சிரமங்களை எதிர் கொண்டார்.
தன்னைப் போன்று ஆங்கிலம் கற்க விரும்பும் மாணவர்களின் நலனைக் கருத்திற் கொண்டு வல்வையில் ஓர் ஆங்கிலக் கல்லூரியை ஸ்தாபிக்க விரும்பினார். இதன் பொருட்டு வல்வையில் உள்ள பெற்றோர்கள் அனைவரையும் 'வல்வை நெடிய காட்டுப் பிள்ளையார் கோவிலடியில் -
பாம்பயா-144: 1-11-11பாயம்
- -

Page 33
-1 -1
நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
அக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், தான் ஆங்கிலக் கல்வியைக் கற்பதில் எதிர் கொண்ட சவால்களை விளக்கியதுடன் வல்வைக் கிராமத்திலும் அயல் கிராமங்களிலும் வாழ்கின்ற இளம் பராயத்தினர் உலகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தும் பொருட்டு, ஆங்கிலத்தைக் கற்பதன் அவசியத்தை வலியுறுத்திக் கூறினார். ஆகவே முன்னேற்றத்துக்காக ஆங்கிலக் கல்லூரியை ஸ்தாபிக்க உள்ளதாகவும் அதற்கான ஆதரவை ஊர் மக்கள் வழங்க வேண்டும் எனவும் உருக்கமாகக் கேட்டுக் கொண்டார். அவரது நோக்கத்தை

கலைக்கேசரி
Ee
விஞ்ஞான ஆய்வுகூடம்
கல்லூரியின் விளையாட்டு மைதானம்
உணர்ந்து கொண்ட ஊர் மக்களுக்கு தமது ஏகோ பித்த ஆதரவை வழங்கினார்கள். கல்லூரிக்கான அடிக்கல் நாட்டப்பட்டு கல்லூரி அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
1896 ஆம் ஆண்டு கார்திகை மாதம் 11ஆம் திகதி வல்வை முத்துமாரி அம்மன் கோவிலுக்கு அருகில், ஆலடியில் சிதம்பர வித்தியாலயம் என்னும் பெயருடன் பாடசாலை இயங்க ஆரம்பித்தது. தான் எண்ணிய கருமம் நிறைவேறிய மனத்திருப்தியில் வள்ளல் சிதம்பரப்பிள்ளை அவர்கள் 1903 ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார்.
பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் 'சிதப்பர வித்தியாலயம்' என அழைக்கப்பட்ட

Page 34
கலைக்கேசரி.
34
இப்பாடசாலை காலப்போக்கில் கல்வித் திணைக்களத்தின் நன்கொடைபெறும் பாடசாலை யாகப் பதிவு செய்யப்பட்டது. ஆலடியில் இயங்கி வந்த பாடசாலை மாணவர் தொகை அதிகரிப்பின் காரணமான 1912ஆம் ஆண்டு தற்போதைய இடமான ஊரிக்காட்டுக்கு மாறியது. தொடக்க காலத்தில் அங்கு ஐந்தாம் ஆண்டு வரை கல்வி நடவடிக்கைகள் இடம்பெற்றன. 1923 ஆம் ஆண்டு இரண்டாம் தர கனிஷ்ட பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்ட இப்பாடசாலையில் 1928 ஆம் ஆண்டு 'கேம்பிரிட்ஜ்' சிரேஷ்ட பரீட்சைகளுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள்.
தொடர்ந்தும் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்த பாடசாலையில் 1935 ஆம் ஆண்டு 'லண்டன் மெற்றிக்குலேசன்' பரீட்சைக்குத் தோற்று வதற்கு ஏற்றவாறு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. அக்காலங்களில் ஹாட்லிக் கல்லூரிக்கு அடுத்தபடியாக இப்பாடசாலை தரம் - B ஐப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 1942 ஆம் ஆண்டு சிரேஷ்ட பாடசாலைத் தராதர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.
மேலும் 1958 ஆம் ஆண்டு சர்வகலாசாலையில் கற்பதற்கான வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. அதே ஆண்டு தை மாதம் தொடக்கம் கல்லூரி தரம் - ii பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டதுடன் அடுத்த ஆண்டு தரம் - i பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டு 'சிதம்பரக் கல்லூரி' என்றும் பெருமைமிக்கபெயரைப் பெற்றுக் கொண்டது. ஆனாலும் நாட்டின் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக கல்லூரியின் பெறுமதிமிக்க பொருட்கள், முக்கிய ஆவணங்கள், நூல்கள் முதலியவற்றை கல்லூரி இழந்தது.

Fா 5 F11 H 1-12-f 1514-F 150 +
ஊரிக் காட்டில் கல்லூரி இயங்கமுடியாத நிலைமை ஏற்பட்டதுடன் 1985 ஆம் ஆண்டு வைகாசி மாதம் கொம்மாந்துறை தமிழ்க் கலவன் பாடசாலையின் ஒரு பகுதியில் கல்லூரி இயங்கியது. அங்கு ஏற்பட்ட இடப் பற்றாக்குறை காரணமாக அதே ஆண்டு ஆனி மாதம் தொடக்கம் 'வல்வை கல்வி மன்றம்' என்னும் தனியார் கல்வி நிறுவனத்தில் கல்லூரி இயங்க ஆரம்பித்தது. தொடர்ந்து 1987 ஆம் ஆண்டு தை மாதம் 'வல்வெட்டி இந்து தமிழ்க் கலவன் பாடசாலையில் ஒரு பகுதிக்கு கல்லூரி இடம் மாறியது. இங்கு பெரும்பாலான வகுப்பறைகள் பனை ஓலை கொட்டில்களாகவே இருந்தன.
1987 ஆம் ஆண்டு ஆடி மாதம் மாணவர்களின் ஓலைக் கொட்டில் வகுப்பறைகள் தீக்கிரையாக்கப் பட்டன. மிகுந்த கஷ்டங்களுக்கு மத்தியில் மாற்றிடங்கள் ஏற்படுத்தப்பட்டு கல்லூரி தொடர்ந்தும் இயங்கி வந்ததுடன், 1990 ஆம் ஆண்டு மீண்டும் பழைய இடத்திற்கு மாறியது.
இக்கல்லூரி 1896 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட போது முகாமையாளராக பருத்தித்துறை விநாயகமுதலியார் கடமையாற்றினார். தொடர்ந்து ஏ.நாகமுத்து, வீ.அருணாசலம் ஆகியோர் பணியாற்றினார்கள். ஆனால் 1901 ஆம் ஆண்டு
முகாமையாளராகப்
பொறுப்பேற்ற ஞா.தையல்பாகர் கல்லூரியை அரசாங்கம் பொறுப் பேற்ற 1960 ஆம் ஆண்டு வரை கடமையாற்றினார். இவர் காலத்தில் கல்லூரிக்கான புதிய கட்டிடங்கள் தோற்றம் பெற்றன. சிறிய கொட்டில்கள் பெரும் கட்டிடங்களாக மாற்றம் பெற்றன.
இப்பாடசாலையின் முதல் அதிபர் என்னும் பெருமையை ஆசிரியரான எஸ்.சிதம்பரப்பிள்ளை

Page 35
பெறுகிறார். 1896 இல் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி மூலம் வைத்தியக் கலாநிதிகள், பொறியியலாளர்கள், நீதிபதிகள், கணக்காளர்கள், பேராசிரியர்கள், அரச நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள், கலைஞர்கள் எனப் பல்துறை சார்ந்த பலர் உருவாகியுள்ளார்கள்.
இக்கல்லூரியில் கற்றவர்கள் தாய் நாட்டில் மட்டு மல்லாமல் புலம்பெயர் நாடுகளிலும் பல பெருமைகளைப் பெற்று வல்வை நகருக்கும் சிதம்பரக் கல்லூரிக்கும் பெருமையைக் ஈட்டிக் கொடுத்துள்ளார்கள்.
கல்வியில் மாத்திரமல்லாமல் விளையாட்டு முதலிய இன்னோரன்ன துறைகளிலும் இக்கல்லூரி மாணவர்கள் சிறந்து விளங்கினார்கள். 1958 ஆம் ஆண்டு அப்போதைய கல்லூரி அதிபரான எஸ்.வண்ணமாமலை ஐயங்கார் எடுத்த முயற்சியால் கல்லூரியின் முதலாவது சஞ்சிகை வெளிவந்தது.
தொடர்ந்து காலத்துக்கு காலம் கல்லூரியை பொறுப்பேற்ற அதிபர்களும் ஆசிரியர்களும் பழைய மாணவர்களும் கல்லூரியை வளர்ப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு உழைத்தார்கள். இதனால் நூற்றாண்டைக் கடந்து தனக்கென தனிஇடம் பெற்ற கல்விக் கூடமாக 'வல்வை சிதம்பரக் கல்லூரி' விளங்குகின்றது.
ஈழ மண்ணுக்கு பெருமை தேடிக் கொடுத்த இவ்வளவு பெருமைமிக்க மண்ணில் உருவான 'சிதம்பரக் கல்லூரி நூற்றாண்டைக் கடந்த கல்லூரியாக விளங்குவது இவ்வூர் மக்களுக்குப் பெருமையே.,
ர் ரி-ராசா - பிரபல ------அபாபா
அI -அடிப்பட்ட புகைப்படம் ரொம சபா சபது ==
ராடாமாபா- --
11 பய எம்புட்டாபய தபாதம் போறும் 4 FRE
கடிகாரன் அன்சாரம்
சகானாடா
លើ 25 பல்ட்டிதா)

இ, கலைக்கேசரி
35

Page 36
கலைக்கேசரி து 36 அட்டைப்படக்கட்டுரை
வேட்டைக்குப் புறப்பட்டுவிட்ட இவர்கள், விலங்கொன்றின் காலடித்தடம் கண்டு.. அதைப்பின்தொடர்ந்து செல்கின்றனர்

- தந்தை மற்றும் பெரிய
தந்தையுடன், வேட்டைத் தொழிலில் உள்ள நுட்பங்களை - அறிய புறப்பட்டுவிட்ட இளம்பராய வன்னியலா எத்தோ.
இலங்கையில் வன்னியலா எத்தோக்கள் சமூகம் பொலன்நறுவை மாவட்டத்தில் தலுகன, மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை, அம்பாறை மாவட்டத்தில் பொல்லே ஹெட்ட மற்றும் ஹெனனிகல, பதுளை மாவட்டத்தில்
தம்பான ஆகிய இடங்களில் வாழ்கின்றார்கள்.

Page 37
வேடர்களின் வித்தைகளும்
நீருக்குள் நெருப்பைக் கொண்டு செல்வது போன்ற வாழ்க்கை முறை ஒன்றை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் இலங்கையின் கற்கால சமூகத்தின் நேரடி வாரிசுகளான வேடர்கள். வேடர்கள் என அழைப்பதை இவர்கள் விரும்புவதில்லை; அப்படி அழைப்பது தம்மை இழிவுபடுத்துவதாக கருதுகிறார்கள். வன்னியலா எத்தோ என்று அழைப்பதையே தமக்கு அளிக்கப்படும் கெளரவமாக மகிழ்கிறார்கள். வன்னியலா எத்தோ என்றால் காட்டில் வாழ்பவர்கள்; காட்டிற்கு சொந்தக்காரர்கள் என்று பொருள்படும்.
ஒரு நாட்டின் ஆதிவாசிகள் என்று கருதப் படுவோர்தான் அந்நாட்டின் பூர்வீக குடிகளாவர். ஆனால் இன்று வன்னியலா எத்தோக்கள் என்ற இலங்கையின் பூர்வீக மக்கள் நாகரீக மனிதர்களின் வாழ்க்கை முறை காரணமாக, இன்று சட்ட பூர்வமாக குந்தியிருக்கக் ஒரு சிறு பகுதி காடு கூட இல்லாது தமது தனித்துவத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கு போராட்ட வாழ்கை நிலையில் வாழ்கின்றார்கள். இவர்கள் காட்டுக்குள் இறங்கினால் அது சட்டவிரோதம் என்ற நிலை காணப்படுகிறது. ஆனாலும் அவர்கள் வேறெங்கே செல்வது? அவர்கள் அரசாங்கத்திடம் கேட்பது தமக்கென்று ஒரு குறிப்பிட்ட காட்டுப்பகுதியை தருமாறு; ஆனால் அது இன்னும் கைகூடவில்லை.

கலைக்கேசரி
37
விந்தைகளும்
இருந்தபோதிலும், தமது சுயத்தை இழக்காமல் தமது பாரம்பரிய கலாசார பண்பாட்டு வாழ்வியல் முறைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் வன்னியலா எத்தோக்கள் மிகக்குறைந்த அளவிலானோர் இன்றும் காடுகளுக்குள் பதுங்கி வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இவர்களுடைய வாழ்வியல் அம்சங்களையே இந்தக் கட்டுரைத் தொடர் வெளிப்படுத்துகின்றது.
தம்பானை - தலைநகர் கொழும்பிலிருந்து சுமார் 300 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள வேடுவர்கள் வாழும் கிராமம் ஆகும். மகாவலி கங்கையின் ஓரத்தில் இக்கிராமம் அமைந்துள்ளது. மலை நாட்டின் கிழக்கு பகுதியில் உயரம் குறைந்து செல்லும் தரைத்தோற்றத்தை கொண்ட, காட்டுப்பகுதியான இப்பகுதியில்தான் நாகரீக
வாழ்க்கைக்குத் திரும்பாத
| வன்னியலா எத்தோக்களும் மற்றும் நாகரீக வாழ்க்கைக்குத் தம்மை மாற்றிக் கொண்ட வேடர்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
வேட்டையாடுதல் வன்னியலா எத்தோக்கள் அம்புவில், கோடரி கொண்டு வேட்டையாடி தமது உணவுகளை தேடிக் கொள்கின்றார்கள். இவர்கள் மான் (புள்ளிமானை விரும்பி உண்பார்கள்), பாம்பு, எலி, நத்தை, குரங்கு, யானை போன்ற மிருகங்களையும் மீனையும்
வேட்டையாடுகின்றார்கள்.

Page 38
கலைக்கேசரி து 38
வேட்டையாடிய உணவை தமது இறந்த மூதாதையருக்கு
படையல் செய்து, நன்றி செலுத்தும் நடனம்,
வேட்டையாடிய உணவை தமது இறந்த மூதாதையருக்கு படையல் செய்து, நன்றி செலுத்தப்கிறது. தன் போது வேட்டைக்குப் பயன்படுத்திய அம்புலவும் நிலத்தில்
- ஊன்றப்பட்டிருக்கும்

ன
பெரும்பாலும் இரவில்த்தான் வேட்டைக்குப் புறப்படுவார்கள். தனியாகச் செல்வது கிடையாது. உறவினர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து கூட்டாகப் புறப்படுவார்கள்.
இவர்கள் குரங்குகளை வேட்டையாடும் முறை வினோதமானது. மரத்தில் கூட்டமாக இருக்கும் குரங்குக்கூட்டத்திற்கு அருகில் சத்தம் சந்தடி இல்லாமல் செல்வார்கள். அருகில் சென்ற இவர்கள் சிங்கத்தின் கர்ச்சனையை ஒத்த பாரிய அதிர்ச்சி யூட்டும் வகையிலான சத்தத்தை வாயினால் பிறப்பிப்பார்கள். அவ்வேளை அதிர்ச்சியடைந்த குரங்குகள் பதட்டத்தில் கீழே தவறிவிழும்போது ஓடிச் சென்று கோடரியினால் குரங்கின் தலையில் பலமாக அடிப்பார்கள். அம்பு எய்து விலங்குகளை வேட்டையாடுவதைவிட பதுங்கிப் பதுங்கி அருகில்ச் சென்று திடீர் எனத் தாக்குதல் நடத்தி நிலை குலைய வைப்பது இவர்களுக்கு பிடித்தமான வேட்டை முறை என்பதுடன் அந்த இறைச்சி சுவையானதாகவும் இருக்குமாம். செங்குரங்கின் இறைச்சியை உண்பதுடன் அதனுடைய அழகிய தோலை தோற்பையாக பயன்படுத்துவதுடன் அதை அன்பளிப்பாகவும் வழங்குவார்கள்.
மீன் வேட்டையும் இவர்களுக்கு பிடித்தமான பொழுது போக்காகும். குளம் அல்லது ஆற்றில் மீன்கள் கண்டு கொண்டால் இவர்கள் சிறுசிறு கிளைகள் கொண்ட (புளியங் கொப்பு) மரக்கிளையினாலோ அல்லது காட்டில் வளரும் ஒரு வகை செடியினாலோ நீரின் மேல் மீன்களுக்குப் படுமாறு அடித்து, அவற்றை உணர்விழக்கச்செய்து பிடித்துவிடுகின்றார்கள்.
பறவைகளை வேட்டையாடுவதும் இவர்களின் விருப்பத்திற்குரிய ஒன்றாகும். காட்டு ஆந்தை, காட்டுக்குருவி என்பவற்றை சவாலுடன் கலைத்துக் கலைத்து வேட்டையாடும் குணம் இவர்களிடம்

Page 39
வன்னியலா
எத்தோக்களை
இரண்டு வகையாகப்
பிரிக்கலாம்.
முதலாவது வகை
நாகரீக வாழ்க்கை
முறைக்குள் மாறிவிட்ட அல்லது மாறிக்கொண்டிருக்கும் பகுதியினர். மற்றைய
வகையினர்
11/11/11}
பாரம்பரியமான தமது
வேட்டையாடும்
வாழ்க்கை
முறையிலிருந்து
மாற்றம் காண விரும்பாமல் இன்றும் காடுகளில் தமது
பண்பாட்டையும்
வாழ்க்கை
முறையையும் காப்பாற்றும் ஒரு தொகுதியினர்.

குறிதவறாது வேட்டையாடுவதில் வல்லவர்களான இலங்கை பூர்வீக குடிகளில் ஒருவர் பறவை ஒன்றுக்கு குறிவைக்கின்றார்.
1. 05.
60

Page 40
தேசச்
கல்லுடன் இன்னொரு கல்லை உரசி நெருப்பு மூட்டப்படுகின்ற

நெருப்பு மூட்டுவதற்குப் பயன்படுத்தப்படும்
கல்லும் கரும் பஞ்சும்
து.

Page 41
உண்டு.
பறவைகளை
அம்பினால் இலக்குப்பார்த்து எய்து விழுத்தி விடுவார்கள். இவர்களுக்கு மிகவும் நுட்பமாக குறிபார்த்தச் சுடும் வல்லமை உண்டு.
வேட்டையாடியபின் எந்தவொரு உயிரினத் தையும் உடனடியாக உண்பது கிடையாது. அந்த உணவை காலம்காலமாக தமது மகத்தான வேட்டைக்கு உதவும் கடவுளான 'மலைஜக்க' என்ற தெய்வத்துக்கு படையல் செய்து நன்றி செலுத்திய பின்னர்தான் அதைப் பகிர்ந்து உண்பார்கள். மகத்தான சிறந்த வேட்டை என இவர்கள் கருதுவது புள்ளிமான் வேட்டையாகும். புள்ளிமான் ஒன்று இவர்களின் கண்ணில் அகப்பட்டுவிட்டால் அந்த மானைக் குழுவாக வேட்டையாடி சிறிது வெட்டையான பகுதிக்கு கொண்டுவருவார்கள். அதன் பின் ஓர் இலையில் மானின் தலை வைக்கப்பட்டு, பெரிய மண் சட்டியில் அரிசி கொட்டப்பட்டு, நன்கு கூராக்கிய தடி ஒன்றினால் தேங்காய்ப்பூ துருவப்படும். தேங்காய்ப்பால் அரிசியுடன் நன்கு கலக்கப்பட்டு 'மலைஜக்க' தெய்வத்திற்கு படையல் செய்யப் படும். இந்த படையலைச் சுற்றி, வட்டமாக நடன மாடியபடி ஓசை எழுப்புவார்கள். அதன் பின் கூடியிருந்து தமக்குள் இந்த உணவைப் பரிமாறி உண்பார்கள். 'மலைஜக்க' என்பது மலையிலுள்ள மரணத்தின் தேவதை என்று பொருள்படும். வன்னியலா எத்தோக்கள் மரணத்திற்கு பின்னர் ஆத்மாவின் அழிவற்ற வாழ்வில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள். இறந்தவர்களை தமது மூதாதையராகப் பேணும் மரபு ஆழமாக வேரூன்றியுள்ளது.
| வேட்டை ஆயுதங்கள் வன்னியலா எத்தோக்கள் கல்லாயுதங்களை பயன்படுத்தியதிலிருந்து முன்னேற்றம் கண்டு, கோடரி, ஈட்டி, அம்புவில், முனைகள் கூராக்கப் பட்ட தடிகள், கொடிவடம், கொடிவலை, பொறிகள் என்பவற்றை தமது வேட்டையாடும், கருவிகளாகவும்
தற்பாதுகாப்புக்கான கருவிகளாகவும் பயன்படுத்துகின்றார்கள்.
பொதுவாக இவர்கள் பயன்படுத்தும் அம்பின் நீளம் இரண்டரை அடி முதல் மூன்றரை அடி வரை காணப்படும். இதற்கென விசேடமான ஒரு தாவரத்திலிருந்து பாரம் குறைந்த சுள்ளித்தடி பெறப்படுகின்றது. அதன் ஒரு முனையில் உலோகத்தினால் செய்யப்பட்ட கூர் ஆயுதம் பொருத்தப்படுகின்றது. இக்கூர் ஆயுதத்தை கொல்லர் பட்டறையில் செய்வார்கள். சில

2. கலைக்கேசரி
(8
வேடர்கள் இந்த உலோகக் கூர் முனையில் நஞ்சுச் செடி சாற்றை பூசி வைப்பார்கள். இந்த நஞ்சுச் சாறு பூசிய அம்பு தைத்த மறு நிமிடமே அந்த விலங்கு சுயநினைவை இழந்துவிடும். (இந்த நஞ்சுச் செடியின் பெயரை வெளியாருக்கு சொல்வது தமது மூதாதையரை அவமதிக்கும் செயலென அதன் பெயரைக் கூற மறுத்துவிட்டார்கள்)
வில்லின் நீளம் நாணேற்றாத போது சுமார் ஆறு அடி முதல் எட்டு அடி வரையும் நாண் ஏற்றிய பின்னர் நான்கரை முதல் ஆறரை அடி வரையும் காணப்படும். வில்லுக்கான தடி இதற்கென பிரத்தயேகமான மரத்திலிருந்து நேரான தடியை வெட்டி, அதனைப் பதப்படுத்தி தெரிந்தெடுக்கப் பட்ட பலமுள்ள பழுதற்ற காட்டுக் கொடியை பயன்படுத்தியே வில் செய்யப்படுகின்றது.
வன்னியலா எத்தோக்களின் பாரம்பரியச் சின்னமாக கோடரியே அடையாளப்படுத்தப் படுகின்றது. இந்த கோடரி அவர்களின் குடும்ப கெளரவம், பாரம்பரியம் என்பவற்றையும் காண்பிக்கும் சிறப்புப்பெறுகின்றது. பொதுவாக கோடரியை குடும்பத்தின் தலைவரே தோளில் அணிந்திருப்பார். அவருக்குப் பின் அவரின் வாரிசாக அந்தக் குடும்பத்தை பொறுப்பேற்கும் மூத்த மகன் அல்லது மருமகனுக்கு முதுசொமாக கையளிக்கப்படும். பரம்பரை பரம்பரையாக கையளிக்கப்பட்டு வரும் இக்கோடரியை மரம் தறிப்பதற்கு பயன்படுத்துவது கிடையாது.
- நெருப்பு மூட்டுதல் ஆதிகால மனிதன் கற்களை ஒன்றுடன் ஒன்றை உரசி தீ மூட்டியதாக நாம் அறிந்திருக்கின்றோம். ஆனால் காடுகளில் வாழும் வன்னியலா எத்தோக் கள் இன்றும் கற்களை ஒன்றுடன் ஒன்றை உரசி தீ மூட்டுவதைச் பாரம்பரிய சம்பிரதாயமாகக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் இரண்டு கற்களை ( இதற்கென பிரத்தியேகமாக வெள்ளைக் கற்கள்) இரண்டு கைகளிலும் எடுத்து தமது முழுப் பலத்தையும் பிரயோகித்து அவற்றை ஒன்றுடன் ஒன்றை உரசி அதில் ஏற்படும் தீப்பொறியை காட்டிலிருந்து பெறப்படும் ஒருவகை விதையின் மேலுள்ள மென்மையான பஞ்சின் மேல் பட வைத்து அதிலிருந்து பெறப்படும் தீயை காய்ந்த இலைகளில் பரவச் செய்து ஊதிஊதி தீயை மூட்டி விடுகின்றார்கள். அதன் பின்னர் தீ மூட்டுவதற்கு உதவி செய்த தேவதைக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக அந்த தீயைச் சுற்றி நடனமாடி ஓசை எழுப்புவார்கள். (அடுத்த இதழில் தொடரும்)
-பஸ்ரியாம்பிள்ளை ஜோண்சன்

Page 42
கலைக்கேசரி இது 42 சுவடுகள்
குதிரைமலையில் நான் இலங்கையில் தமிழ
மணிட
முன்னா
(சென்ற இதழ் தொடர்ச்சி) எழுதும்
கலை
நாகர்களிடமிருந்தே ஆரியர்களுக்கு அறிமுகமாகியது என்பது ஆராய்ச்சியாளர் கருத்து என்று ஏகநாயகவல்லி சிவராசசிங்கம் என்பவர் எழுதிய 'நாகரும் இலங்கையின் ஆதிக்குடிகளும் நாகர் வரலாறு' என்ற நூலில் அத்தியாயம் ஆறில் கூறப்பட்டுள்ளமை கவனத்திற்குரியது. இந்நூலில் காணப்படும் மேலும் முக்கியமான ஐந்து தகவல்கள் இங்கு தரவுகளாகத் தரப்படுகின்றன.
அ. நாகரிடமிருந்து பரவிய பிராமி எழுத்துக்கள் சமஸ்கிருத மொழியின் எழுத்து வடிவத்தைப் பாதித்ததாலேயே இன்றுவரை சமஸ்கிருத எழுத்துக்கள் தேவநாகரி எனப் பெயர் பெற்றுள்ளன.
ஆ. நாகர்கள் கலைகளில், குறிப்பாக நெசவில் வல்லவர்களாக இருந்தனர். தமிழ் நாட்டின்

கருடன் ஆரம்பிக்கும் ரின் ஆட்சி வரலாறு பல்லவம் எனப்படும் நயினாதீவு-5
| - கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் ,
ள் மொழித்துறைத் தலைவர், சப்ரகமுவ பல்கலைக்கழகம்.
கிழக்கில் பாண்டிய நாட்டின் கரையோரப் பகுதிகளில் வாழ்ந்த நாகர்கள் மிகச் சிறந்த நெசவாளர்களாக இருந்து மெல்லிய மஸ்லின் துணிகளையும் நெய்தனர்; ஏற்றுமதியும் செய்தனர்; கலிங்க தேசத்தின் நாகர்கள் நெசவில் காட்டிய திறமையையொட்டித் தமிழில் 'கலிங்கம்' என்ற சொல் துணியைக் குறிப்பதாக உள்ளது. 'பழசிமுண்டு' என்பது பழைய நகர் என்பதன் திரிபு.
இ. அநுராதபுரம் தலைநகராக்கப்படும் முன்னர் நாகர்கள் குதிரைமலையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தனர். குதிரைமலை என்பது பாண்டியர்களின் குறுநில அரசுகளில் ஒன்றாக இருந்தது என்பது சங்கநூல்களின் மூலம் அறியக்கிடக்கிறது.
ஈ. ஆமூர் என்ற இடத்தில் அரச பீடம் அமைத்து நல்லியக்கோன் ஈழத்தை ஆண்டதற்கான ஆதாரம்

Page 43
சிறுபாணாற்றுப்படையில் வருகிறது. ஓவியர் எனப்பட்ட நாகர்களின் தலைவன் நல்லியக்கோன்.
உ. தென்னிந்தியர்களையும் ஈழத்தவரையும் நாகர் களிடமிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியாது. அவ்வாறே தென்னிந்தியாவிலும் ஈழத்திலும் இருந்த நாகர்களைத் தமிழ் மொழி பேசிய இனத்த வர்களிடம் இருந்து வேறுபடுத்தவும் முடியாது.
நாகர்களது அரசுகள் யாழ்ப்பாணம் இராச்சியம் என்ற ஒன்று நிறுவப்படும் முன்னரே ஈழத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்துள்ளன. குறிப்பாக, வடக்கில் வன்னி உட்பட வடக்கு, வடமேற்கு, கிழக்குக் கரையெங்கும் இவை இருந்துள்ளன. நாகர்கள் பேசிய மொழி தமிழ் என்பதற்கு ஆதாரமாகச் சங்க இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள நாகர்களது செய்யுட்கள் பற்றியும் அறிந்தோம். வல்லிபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்கத்தகடு ஒன்பது பிராகிருத தமிழில் அமைந்துள்ளது. இது கி.பி. 5ஆம் நூற்றாண்டுக்குரியது. இதில் யாழ்ப்பாண தீபகற்பம் முழுவதையும் நாகநாடு என்று குறிப்பிட்டுள்ளதாக இதனை வாசித்தோர் கூறியுள்ளனர் என ஏகநாயகவல்லி சிவராசசிங்கம் என்பவர் எழுதிய 'நாகரும் இலங்கையின்
வல்லிபுரத்தில் கண்டெடுக்
ஆதிக்குடிகளும் நாகர் வரலாறு' என்ற நூலில் அத்தியாயம் ஆறில் கூறப்பட்டுள்ளது.
நாகதீபம் என்ற பெயர் ஒரு காலத்தில் இந்திய பெரு நிலத்தில் ஒரு பெரும் பகுதியைக் குறிப்பதாக இருந்து, பின்னர் இலங்கைத் தீவு இந்தியத் தீபகற்பத்தில் இருந்து பிரிந்தபோது இலங்கையைக் குறிப்பதாகி, அதற்குப் பின்னர் இலங்கையின் வட பகுதியைக் குறிப்பதாகி, இன்று நயினாதீவு என்ற சிறுதீவைக் குறிப்பதாக உள்ளது.
நாகர்கள் வாழ்ந்த நாகநாடு என்பது முழு இலங்கையையும் குறித்தாலும் நாகர்கள் பிரதான மாக வாழ்ந்த பிரதேசம் ஈழத்தின் வடக்கும் வட மேற்கும் ஆகும். இராசதானிகள் நிறுவப்படாத மிக முற்பட்ட காலத்தில் தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக இருந்த ஈழத்தில் குறுநில மன்னர்களால்

, கலைக்கேசரி
43
இப்பிரதேசம் ஆளப்பட்டது என்பதற்குச் சங்க இலக்கியங்கள் நமக்குச் சான்று பகருகின்றன. இப்பகுதி பண்டைய தமிழ், பாளி இலக்கியங்களிலும் 'நாகநாடு' என்ற பெயரிலேயே குறிப்பிடப்படுகின்றது. குதிரைமலை, கொற்கை, மாந்தை முதலிய இடங்களிலும் சிற்றரசர்கள் இருந்து ஆட்சி செய்துள்ளனர். நாகநாடு என்ற இப்பகுதி மணிபுரம், நாகதீபம், மணிநாகதீபம், மணலூர், மணல்புரம், மணவூர், மணவை என்றும்
அழைக்கப்பட்டது.
மகாபாரதகாலம் கி.மு.1500 எனக் கொள்ளப் படுகின்றது.பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனன் மணிபுரத்தில் இருந்து நாக சித்திராங்கியை மணந்த வரலாறு இருந்ததையும் இங்கு வாழ்ந்த மக்களும் சிறப்புற வாழ்ந்ததையும் அறியமுடிகிறது.
இலங்கையில் நாகர்களுடன் ஆரம்பிக்கும் தமிழர் ஆட்சியின் வரலாறு குதிரைமலையைத் தலைநகராகக் கொண்டு ஆரம்பிக்கின்றது.
கி.மு. 200க்கும் கி.பி. 200க்கும் இடைப்பட்ட புறப்பாட்டுக்களில் ஒன்றான சிறுபாணாற்றுப் படையில் வரும் பாடல்கள் சில நன்நாகநார்
க்கப்பட்ட தங்கத்தகடு
என்பவரால் இயற்றப்பட்டவை. இவர் வட இலங்கையைச் சேர்ந்த நாகர் சங்க இலக்கியத்தில் இடம்பெறுமளவு சிறந்த தமிழ்ப்பாடல்களை நாகர்கள் பாடியது அவர்களுக்குத் தமிழில் இருந்த புலமையை வெளிப்படுத்துகின்றது.
கி.பி.2ஆம் நூற்றாண்டில் கிள்ளிவளவன் என்ற சோழ அரசன் மணிபல்லவத்தின் இளவரசியான பீலிவளை என்பவளை மணந்து அவர்கள் மகனான இளந்திரையனுக்குச் சோழ நாட்டின் ஒரு பகுதியான தொண்டை மண்டலத்தை வழங்கினான் என்று வேலூர் பாளையச்சாசனங்கள் தெரிவிக்கின்றன. (Annual report of the madras Government Epigraphist, P.1910 -1911) இளந்திரையனே தனது தாயின் பிறப்பிடமான மணிபல்லவத்தின் பெயரால் பல்லவ அரசை

Page 44
கலைக்கேசரி து 44
பிப்t
பேயம்

நிறுவியவன்.
யாழ்ப்பாணமும்
பல்லவர் ஆட்சிக்குட்பட்டிருந்தது என்பதற்குச் சான்றாகப் பல்ல வராயன் கட்டு என்ற ஊர்ப்பெயரும் நன்னீ என்ற ஆட்பெயரும் போத்தரையர் என்ற தெய்வப் பெயரும் விளங்குகின்றன.
மணிமேகலை என்ற காப்பியம் கி.பி. 3ஆம் நூற்றாண்டுக்குரியது. இது நாகநாட்டு அரசனாக இருந்தவன் வளைவாணன் என்று குறிப்பிடுகின்றது.
கடற்பாதைகளுக்கான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக 'கல்வாளை' அமைந்துள்ளமையைப் பேராசிரியர் கலாநிதி பொன்னம்பலம் இரகுபதி விவரித்துள்ளமை இவ்வாய்வு தொடர்பில் பிரதான மானதொன்றாகும். பேராசிரியரின் கூற்று வருமாறு:
கல்வாளையின் அமைவிடம் கடற்பாதைகளுக்கான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம். வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, பச்சிலைப்பள்ளி என்ற நான்கு எல்லைகளுக்கும்
மையமாக
இது அமைந்துள்ளது.
சிவஞானசுந்தரம் எழுதிய 'தமிழ் இலக்கணப்பேழை' என்னும் நூலில் மணிமேகலை குறித்து மேல் வருமாறுள்ளது.
பிறப்புக்குக் காரணம் எதுவோ அதுவே இறப்புக்கும் காரணமாகும் எனக் கூறி இவ்வுலகத்தில் பௌத்த தர்மங்கள் குறையப் பாவம் மிகுந்தன எனக்கூறி, மணி பல்லவத்தில் பெற்ற அமுதசுரபி பசி தீர்த்தலைக் காட்டிச் சமயக் கருத்தை வலியுறுத்திப் பௌத்த தர்மம் பெருக உலகில் பாவம் ஒழியும் என்பர்.

Page 45
பண்டிதர் மயில்வாகனனார் பாடிய 'காரை நகர் ஆண்டி கேணி ஐயனார் புராணம் (பாட்டும் உரையும்)' என்ற நூலில் (ப.118) மணிபல்லவம் பற்றிப் பேராசிரியர் மு.இராகவையங்கார் அவர்களது கருத்தொன்று முன்மொழியப் பட்டுள்ளது. நூலில் இடம்பெறும்
வரிகள் வருமாறு:
மணிபல்லவம் பேராசிரியர் மு. இராவையங்கார் அவர்களது 'ஆராய்ச்சித் தொகுதி' என்னும் தமது நூலில் 'மணிபல்லவம்' என்பது யாழ்ப்பாணப் பகுதிகளுள் ஒன்றான 'காரைத்தீவு' ஆகும் எனக்
குறிப்பிட்டுள்ளார்.
இத்தொடர்பில் சுயநலத்தினை மேவிய வரலாற்று நேர்மையுடன் ச.ஆ.பாலேந்திரன் 'காரைநகர் தொன்மையும் வன்மையும்' (2002) என்ற நூலை வெளியிட்டுள்ளார். 'மணிபல்லவத்தீவு' என்ற தலைப்பில் (பக்.19-64 வரை) காரைநகரே 'மணிபல்லவத்தீவு' என நிறுவமுற்பட்டுள்ளார். இந்நூலிலே மணிமேகலை, காரைநகர் மான்மியம், யாழ்ப்பாணச் சரித்திரம், ஈழத்தார் வரலாறு என்னும்
நயினாதீவு நாகபூசணி ஆலய அருங்காட்சி

உ கலைக்கேசரி
45
நூல்களை ஆதாரமாக எடுத்தாண்டதுடன் பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை, டாக்டர் கு.பகவதி, பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் போன்றவர்களின் கருத்துக்களையும் எடுத்துக் காட்டித் தமது கருத்தை வலியுறுத்தியுள்ளார் ஆய்வாளர் ச.ஆ.பாலேந்திரன்.
இக்கட்டுரையிலே ஏலவே
எடுத்துக் கூறப்பட்டுள்ள கருத்துகளில் ஒரேயொரு கருத்து இன்றைய நடைமுறையில் நாக வழிபாட்டுத் தொன்மையுடைய 'மணிபல்லவம்' எனப்படும் நயினாதீவே என்பது தான் பிரத்தியட்சமானது என்பதாலும், 'அமுதசுரபி' பற்றிய தொன்மை நவீன நடைமுறையுடன் பொருந்துவதாய் இன்று தினசரி அன்னதானம் நிகழும் பீடமாகவும் நயினாதீவு இலங்குவதும் பிரத்தியட்சமே. பொருத்தப்பாடுகள் கருதியும், அண்மைக்கால பல்கலைக்கழக ஆய்வறிஞர் என்னும் தகைமையாலும் பேராசிரியர், கலாநிதி பரமு புஷ்பரத்தினம் அவர்கள் கொண்டுள்ள கருத்துகளை இனி நோக்கலாம்.'
(அடுத்த இதழில் தொடரும்)
யத்தில் பாதுகாக்கப்படும் தொல்பொருட்கள்

Page 46
கலைக்கேசரி 2, 46 பாரம்பரியம்
அறுகம்புல் -
- டாக்டர். த
அறுகம்புல் மழை பெய்தவுடன் நன்கு தழைத்துத் தானே வளருமெனவும், இதனைக் கன்றுகளும், மான் இனம் பிணையொடும் உண்ணும் எனவும் பாழ்படுத்தப்பட்ட பகைவர் நாட்டிலே நடந்து வந்த பெரிய திருநாளின்றாகிய அச்சம் முதிர்ந்த மன்றத்திடத்தே நெருஞ்சிப் பூக்களுடன் அறுகம்புல் வளர்ந்துள்ளது எனவும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.
''பழங்கன்று கறித்த பயம்பு அமல் அறுகைத் தழங்கு குரல்வானின் தலைப்பெயற்கு ஈன்ற'
| (அக.நா.136:11-12) ''மணிவார்ந்தன்ன மாக் கொடி அறுகை பிணங்கு அரில் மென்கொம்பு பிணையொடு மாந்தி மான் ஏறு உகளும் கானம் பிற்பட'
(குறுந்.256:1-3) “பெருவிழாக் கழிந்த பேஎம்முதிர் மன்றத்து சிறுபூ நெருஞ்சி யொடு அறுகை பம்பி'
(பட்டின. 255-256)

அறுகை
ருெமதி. விவியன் சத்தியசீலன், சிரேஷ்ட விரிவுரையாளர்
ரய
சங்க இலக்கியத்தில் அறுகை என்று அழைக்கப்படும் அறுகானது தோன்றிய நாள் தொட்டு உயிருடன் வாழும் ஒரே உயிர் இந்த அறுகம் புல்லாகும். அறுகம்புல் பெரிதும் அடிமட்டத் தண்டில் இருந்து தான் வளரும். நுனியில் குருத்து மேல்நோக்கி வளர்ந்து வரும், இப்புல் இறவாமல் என்றும் நிலைத்து வளர்ந்து வாழ்ந்து வருவது எதனால் என்பதை இந்நாளில் ரஷ்ய நாட்டு உயிரியல் அறிஞர்கள் ஆராய்ந்துள்ளனர். இப்புல்லின் வளருங் குருத்தில் உள்ள செல்களை நுண்ணோக்கி மூலம் காணும் போது அவற்றில் செல்லின் கரு 'நியூக்கிளியஸ்' (Nucleus) அதில் உள்ள 'நியூக்கிளியோலஸ்' (Nucleolus) என்ற உட்கருவை எல்க்ரான் நுண்ணோக்கி மூலம் ஏறத்தாழ 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மடங்கில் பெரியதாக்கிப் பார்க்குமிடத்து அவற்றிலுள்ள குரோமோசோம்களின் (Chromosome) டி.என்.ஏ, ஆர்.என்.ஏ. (DNA, RNA) என்னும்

Page 47
மூலக்கூற்று அமிலங்கள் தென்படும். அவற்றில் பாரம்பரியத்தை தொடரச் செய்யும் RNA அமிலத்தின் மூலக்கூறு (Molecules) கணந்தோறும் சிதைந்து கொண்டு (damage) வருவதையும் அவற்றை உடனுக்குடன் சரிபார்த்து சீர்படுத்தும் மிக அற்புதமான சுரப்பிநீர் (Hormones) இம் மூலக்கூற்று அமிலத்தாலேயே உண்டாக்கப்படுகின்றன என்பதையும், அவையே சிதைந்து மூப்பைத் தரும் , RNA அமிலத்தின் மூலக்கூறுகளை சிதையாமல் கணந்தோறும் செப்பனிடுகின்றன என்பதையும் மிகத் துல்லியமாக ஆராய்ந்துள்ளனர். இந்த அற்புத சுரப்பிநீர் வேறு எந்தவிதமான உயிர்களின் 'நியூக்கிளியோலஸ்'களிலும் உள்ள RNA அமிலத்திலும் உண்டாவதில்லையாம். அதனால் ஏனைய எல்லா உயிர்களும் மூப்படைந்து சாகின்றன. எங்கனமாவது இந்த அற்புத சுரப்பி நீரை சுரக்குமாறு மனிதக் கருவில் செய்து விட்டால் RNA மூலக்கூறுகளைச் சிதையாமல் காக்கலாம் என்றும், அப்போதுதான் மனிதன் மூப்புவராமல் வாழ்வான் என்றும் 'குப்ரவிஷ்' எனும் பேராசிரியர் (பைலோ ரஷ்யன் அக்கடமி அப் சயன்ஸ்)
கூறுகிறார்.
அறுகம்புல் ஆடு, மாடு, மான், குதிரைகளுக்கு மிகச் சத்துள்ள உணவுப் பொருள் ஆகும். இதனை வெள்ளநீர், மழைநீர் நிலத்தை அரித்துவிடாமல் காப்பதற்கு ஆங்காங்கு வளர்க்கிறார்கள்.
அறுகம்புல்லை மாலையாகத் தொடுத்து பிள்ளையாருக்கு சூட்டுவர். சமய, மற்றும் கலாசார நிகழ்வுகளில் அறுகைப் பயன்படுத்துவதுபோல்

, கலைக்கேசரி
47
அ.
சித்தமருத்துவத்திலும் அறுகம்புல்லின் மருத்துவப் பண்புகள் பல குறிப்பிடப்படுகின்றன.
அறுகம் வேரை கணுபோக்கி 10 கிராம் எடுத்து, மிளகு 5 கிராம் சேர்த்து 4 மடங்கு நீர்விட்டு 74 பங்காக காய்ச்சி, 30 - 60 மில்லி அளவு காலை, மாலை 15 நாட்களுக்கு ஒருநாள் குடித்து வர உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
அறுகம் வேரை அரைத்து 5 கிராம் அளவு எடுத்து பசுவின் பால் 100 மில்லியில் கலந்து கொடுக்க பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.
அறுகம் புல்லின் ஊறல் நீர் 100 மில்லி, 100 மில்லி பசுவின் பாலில் கலந்து குடித்துவர கண் நோய், தலைப்பாரம், கண்புகைச்சல் இவை குணமாகி இரத்தம் சுத்தியாகும்.
அறுகம் புற்களை வேருடன் சேகரித்து நன்கு உலர்த்தி பொடித்து 5 கிராம் அளவு காலை, மாலை வெந்நீருடன் அருந்திவர நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் உடல் பலவீனத்தைக் குறைத்து உடற் பலத்தை அதிகரிக்கச் செய்யும்.
அறுகம் புல் வேரைக் காயவைத்து பொடி செய்து ஒன்றுக்கு 5 மடங்கு நல்லெண்ணெய் கலந்து சூடுபடுத்தி உடலில் தேய்த்து குளித்தால் தோல் நோய்கள் வராது.
அறுகம் புல்லை வேருடன் சேகரித்து கழுவி அரைத்து தினமும் 5 கிராம் அளவு சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் குணமாகும்.
அறுகம் புல்லை (15 கிராம்) 120 மில்லி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பால் 120 மில்லி கலந்து

Page 48
கலைக்க்ேசர் .. -
பார்"
48
சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் சிறுநீரகக் கோளாறுகள் நீங்கி சிறுநீர் நன்கு வெளிப்படும்.
அறுகம்புல்லை வேருடன் இடித்துச் சாறு எடுத்து தினமும் 60 மில்லி அளவு குடித்து வந்தால் நீரிழிவு, ஆஸ்மா, தலைப்பாரம் நீங்கும்.
அறுகம் புல்லை வேருடன் பிடுங்கி காயவைத்து பொடித்து 2 கிராம் அளவு தினமும் சாப்பிட்டு வர தாது விருத்தியுண்டாகும்.
அறுகம் புல்லை வேருடன் பிடுங்கி சாறு எடுத்து தினமும் 30 மில்லி வெறும் வயற்றில் குடித்து வர வயிற்றுப் புண் குணமாகும். அத்துடன் வெறும் வயிற்றில் அறுகம் சாறு குடித்து வந்தால் உடல் வளர்ச்சியும் அதிகமாக இருக்கும்.
அறுகம் புல் வேர், சிறியாள்நங்கை வேர் இரண்டையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடித்து 2 கிராம் அளவு சாப்பிட்டு வர நாட்பட்ட தோல் நோய்கள் குணமாகும்.
அறுகம் புல், வட்டத்துத்தி இலை இரண்டையும் ஒரேயளவு எடுத்து உலர்த்தி பொடித்து 2 கிராம் அளவு தினமும் சாப்பிட்டு வர தோல் மிருதுவாகி உடல் அழகுபெறும்.
அறுகம் புல் வேர் 2 கிராம், வெண்ணெய் 5 கிராம் அளவு தினமும் சாப்பிட்டு வர உடற் சூடு தணியும்.
அறுகம் புல்லில் காணப்படும் ஒருவித புரதச்சத்து உடற் பலத்தை அதிகரிக்கச் செய்யும். வீட்டில் நீங்கள் பாயாசம் காய்ச்சும்போது அறுகம் புல் சாறு

கலந்து காய்ச்சி அறுகன் பாயாசமாக அருந்தி வர உடற் பலம் அதிகரிப்பதோடு உடலின் நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கச் செய்கிறது.
அறுகம் புல்லை வேருடன் பிடுங்கி கழுவி மஞ்சள் சேர்த்து அரைத்து பூசி வர சொறி, சிரங்கு, படர்தாமரை நீங்கும். தோல் மிருதுவாகவும் வரும்.
அறுகம்புல் டொனிக் அறுகம் புல் - 3 கப், தேன் - 500 மில்லி பசு நெய் - 100 கிராம்
இரும்பு வாணலியில் அறுகம் புல் சாறு, தேன், நெய் கலந்து சிறு தீயிட்டு விறகடுப்பில் வைத்துக் காய்ச்சி பாகுபதம் வந்து நீரின் சடசடப்பு அடங்கியதும் 5 நிமிடம் கழித்து இறக்கவும். இதனை ஒருவாரம் வெயிலில் வைத்து எடுத்து பின்பு தினமும் காலை, மாலை ஒரு தேக்கரண்டி குழந்தைகட்கு கொடுத்து வரவும். இதனால் கணச்சூடு நீங்கி குழந்தைகள் சுறுசுறுப்பாக வளருவார்கள். குழந்தைகட்கு நோய்கள் வராமல் உடலை பாதுகாத்துக் கொள்ளும் சிறந்த டொனிக்காகும்.
அறுகம்புல் அடை சிவத்தப்பச்சரி மாவும் சிறிது சிறிதாக அரிந்த அறுகம் புற்களையும் சேர்த்து, தேங்காய்ப்பூ, சர்க்கரை சேர்த்து குழைத்து அடையாகத் தட்டி நெய்யில் பொரித்து எடுத்துச் சாப்பிட்டு வர இரத்தம் சுத்தியாகி உடற்பலம் பெறும்.

Page 49
60TAI
அறுகம்புல் பாயாசம் (வேறுமுறை) அறுகம் புல்லை சுத்தம் செய்து அலசி பொடியாக அரிந்தது 1 கப், பசுப்பால் % - லீற்றர், கசகசா 25 கிராம், சீனி 300 கிராம், ஏலக்காய் 6, முந்திரிப் பருப்பு 100 கிராம், குங்குமப்பூ 10 கிராம், உப்பு சிறிதளவு, பசுநெய் 20 மில்லி
அறுகம் புல்லை முதலில் மைய அம்மியில் வைத்து அரைக்க வேண்டும். கசகசாவை மைபோல அரைக்க வேண்டும். பாலை அடுப்பில் ஏற்றி மேற்குறித்த இரண்டையும் இட்டுக் கால் லீற்றர் நீரில் கரண்டியால் கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். சீனியைப் போட்டு ஏலக்காய்த் தூளையும் சேர்த்து குங்குமப்பூவை போட்டு கிளறி
இறக்கவும். இந்தப் பாயாசத்தை சாப்பிட சுவையாகவும், நல்ல மணமுள்ளதாகவும் இருக்கும். இளஞ்சூடாக இப்பாயாசத்தை அருந்துவதால் உடல், கண்கள் அனைத்தும் குளிர்ச்சியடையும். இதைவிட அம்மைநோய், அக்கி போன்ற நிலைமைகளிலும் இதனை பயன்படுத்தலாம். கோடை காலங்களில் மிக உகந்த பானமாகும்.
அறுகம்புல் ரசம் அறுகம்புல் 3கப், எலுமிச்சம்பழம் 2, காய்ந்த மிளகாய் 3, தக்காளி 2 பெரிது, கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, மிளகு 1 தேக்கரண்டி, கறிவேப்பிலை 2 நெட்டு, மல்லி இலை 1 கட்டு, மஞ்சள் சிறுதுண்டு, பெருங்காயம் 1 துண்டு, பூண்டு 6 பல், பசுநெய் 10 கிராம்.
அறுகம் புல்லை இடித்துச் சாறு எடுக்க வேண்டும். எலுமிச்சம் பழத்தை சாறு பிழிந்து உப்பு போட்டுக் கலக்கி வைக்கவும். அம்மியில் சீரகம், மஞ்சள், மிளகு வைத்து அரைத்து பூண்டு, மல்லி இலை, கறிவேப்பிலை ஒரு நசுக்கு நசுக்கி ரசத்தில் போடவும். அறுகம்புல் சாற்றையும் கலக்கவும். வாணலியில் நெய் ஊற்றி கடலைப்பருப்பு, கடுகு, மிளகாய் கிள்ளி போட்டு சிவந்ததும் ரசத்தை ஊற்றி

- கலைக்கேசரி
க்
49
தாளிக்கவும். தக்காளியை வதக்கிப் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி சாதத்தில் கலந்து சாப்பிடவும். அதிகாலையில் 200 மில்லி அருந்தவும். நீரிழிவு நோயுள்ளவர்க்கு சிறந்தது. உடற் சூடு தணியும். உடல் சுறுசுறுப்பாகும்.
அறுகின் பொதுக்குணம் 'அறுகம்புல் வாதபித்த ஐயமோ டீளை சிறுக அறுக்கும் இன்னுஞ் செப்ப அறிவுதரும். கண்ணோ யோடுதலை நோய், கண்புகை யிரத்தபித்தம் உண்ணோ யொழிக்கு முரை'
வாத, பித்த, கப நோய்கள், சளி (கோழை), கண்நோய், கண்புகைச்சல், தலைநோய், இரத்த பித்தம் மருந்துகளின் வெப்பம் இலைகளைப்
போக்கும்.
அறுகம் வேரின் பொதுக்குணம் 'ஆற அழவெல்லா மாறுத் தோடமது வீற திருக்குநல்ல மேனிதரும் - மாறக் கடியமர லங்கலணி காரளக மின்னே! கொடியறுகம் புற்கிழங்கைக் கூறு' அறுகம் வேர்கிழங்கால் தணியாத பற்பல வெப்பமும் திரிதோடங்களும் நீங்கும். உடல் மேனியழகு பெறும்.
குறிப்பு: மணமக்களை பல்லாண்டு காலம் வாழ்த்த அறுகம்பால் தலையில் வைத்து ஆசீர்வதிப்பார்கள். காரணம் அறுகிற்கு சாவில்லை. என்றும் உயிருடன் இருக்கும் செடி என்பதாலும், அறுகு சிறு பொடியாக இருந்தாலும் அறுகன் வேர் மிக நீண்டு பக்கவாட்டில் வளர்ந்து ஓடும் என்பதும் குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும். மருத்துவப் பண்புகளும் அதற்கேற்ப பலவுண்டு.
எனவே எமது மூதாதையரின் நற்பழக்க வழக்கங்களை கண்மூடித்தனமானவை என எண்ணாது விஞ்ஞான ரீதியாக எற்புடையவற்றை விளக்கம் தேடி பயன்படுத்தி முன்னோர்கள் போல் ஆரோக்கியமாக வாழவும் கற்றுக் கொள்ளல் அவசியமாகிறது.

Page 50
கலைக்கேசரி
50 சுற்றுலா
பத்து நாட்கள் கலகலப்பு
கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய பண்டிகையாக மிளிர்வது ஓணம் திருவிழாவாகும். ஓணம் ஓராயிரம் ஆண்டுகளாக இம்மாநிலத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சாதிமத பேதமில்லாமல் கொண்டாடப் படும் இப்பண்டிகையை 'அறுவடைத் திருநாள்' என்றும் அழைக்கின்றனர். உலகெங்கும் வாழும் மலையாளிகள் மிக விமரிசையாகக் கொண்டாடும் பண்டிகை ஓணம் திருநாட்களாகும்.

பூட்டும் ஓணம் பண்டிகை
'கொல்ல வர்ஷம்' எனப்படும் மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் (ஆகஸ்ட் - செப்டெம்பர்) ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் தொடங்கி, திருவோணம் நட்சத்திரம் வரையான பத்து நாட்கள் ஓணம் விழாவாகக் கொண்டாடப் படுகிறது.
இந்தப் பத்து நாட்களும், பத்துக்கும் மேலான சிறப்பு நிகழ்ச்சிகளை மக்கள் மிக உற்சாகமாகக் கொண்டாடுவர்.

Page 51
இந்தப் பத்து நாட்களும் மக்கள் அதிகாலையில் எழுந்து, குளித்து, கடவுள் வழிபாட்டில் ஈடுபடுவார்கள். கசவு என்று சொல்லப்படும் சுத்தமான வெண்ணிற ஆடையை அப்போது அணிந்து கொள்வர். பத்து நாட்களுக்கு வீட்டின் முன் புறத்தில், தொடர்ந்து பூக்களால் ஆன கோலங்களை இட்டு ஆடிப்பாடி மகிழ்வார்கள். முதல் நாள் அத்தம் எனவும் இரண்டாம் நாள் சித்திரா எனவும், மூன்றாம் நாள் சுவாதி எனவும் நட்சத்திரங்களின் பெயர்களைத்தான் சூட்டி அழைக்கின்றார்கள். இந்நாட்களில் ஒருவருக் கொருவர் பரிசுகளைக் கொடுத்து மகிழ்கின்றார்கள். நான்காம் நாளான விசாகத்தில் ஒன்பது சுவைகளில்

* கலைக்கேசரி
51
உணவுகளைத் தயார் செய்கின்றார்கள். அந்த உணவுப் பட்டியலில் குறைந்த பட்சம் 64 வகையான உணவு வகைகள் இருக்கும். 'ஓண சாத்யா' என இந்த உணவினை அழைக்கின்றார்கள். ஐந்தாம் நாளான அனுஷம் திருவிழாவன்று கேரளாவில் பாரம்பரியமான படகுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தப் படகுப் போட்டியை நடத்தும்போது, வஞ்சிப்பாட்டு என்ற பாடலைப் பாடிக்கொண்டு படகுகளைச் செலுத்துவது சிறப்பம்சமாக அமையும். ஆறாம் நாள் திருக் கோட்டை (திரிக்கேட்டா) ஏழாம் நாள் மூலம், எட்டாம் நாள் பூராடம், ஒன்பதாம் நாள் உத்திராடம் என்று அழைக்கப்படும். பத்தாம் நாள் திருகோணம்

Page 52
கலைக்கேசரி தி
52
என்ற கொண்டாட்டத்துடன் ஓணத் திருவிழா முடிவுறும். ஓணம் பண்டிகைமன்னன் ஒருவனை நினைவுக்கூர்ந்து
கொண்டாடப்படும் விசேடத்தைக் கொண்டது. இதற்கு ஒருபுராணக் கதையும் கூறப்படுகிறது.
மகாபலி என்ற மன்னர் கேரளத்தைச் சிறப்பாக ஆண்டு வந்தார். இந்த மன்னர் தான தருமங்கள் செய்வதில் பெரும் விருப்புடையவர். மக்கள் இவர் மீது மிகுந்த மரியாதையும் பக்தியும் கொண்டவர்களாக இருந்தனர். அதனால் அவர்கள் கடவுளை வழிபடுவதை மறந்து விட்டனர். சொர்க்கத்தில் இருக்கும் தேவர்களுக்கு மகாபலி மீது பொறாமை ஏற்பட்டு விட்டது. அதனால் அவர்கள் அந்த அரசனின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர தீர்மானித்தனர். எனவே தேவர்கள் மகா விஷ்ணுவை வாமன வேடத்தில் (குள்ள உருவம்) இரகசியத் தூதுவராக அனுப்பி
மகாபலியை அழிக்கத் தீர்மானித்தனர்.
மகாபலி ஒருமுறை வேள்வி செய்யும்போது, திருமால், வாமனனான (குள்ள உருவில்)
கை கொட்டுக்களி
உருவெடுத்து வந்து மூன்றடி மண் கேட்டார். மகாபலியும் அவ்விதமே அளித்தான். ஓர் அடியால் இந்த மண்ணையும் மறு அடியால் விண்ணையும் அளந்த திருமாலுக்கு மூன்றாவது அடிக்காக தனது தலையையே கொடுத்தான். அவனுக்கு முக்தி அளிக்க வேண்டி, அவனது தலையில் கால் வைத்து அவனை பாதாள உலகத்திற்குத் தள்ளினார். மகாபலி தான் நாட்டு மக்கள் மீது அன்பு வைத்திருப்பதால், வருடம் ஒருமுறை பாதாளத்தில் இருந்து, தனது நாட்டுக்கு வந்து மக்களைக் கண்டு மகிழும் வரம் வேண்டினான். அதன்படி ஒவ்வொரு திருவோணத் திருநாள் அன்றும் மகாபலி பாதாள உலகத்தில் இருந்து பூலோகத்திற்கு வருவதோடு, தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாக மக்கள்

நம்புகின்றார்கள். இதனை நினைவு கூர்ந்து, மகாபலியை மீண்டும் வரவேற்கும் வகையில் இந்த திருவிழா ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.
மகாபலி மன்னனை வரவேற்கும் முகமாக ஒவ்வொரு வீட்டு வாசலிலும் போடப்படும் 'அந்தப் பூ' என்ற பூக்கோலம், ஓணம் பண்டிகையின் சிறப்பம்சமாகும். கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமாகும். அதனால் இக்காலத்தில் வரும் ஓணத் திருநாளையும் மக்கள் திருவிழாவாக கொண்டாடுவர். ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள ஆண் பிள்ளைகள் 'அந்தப் பூ' என்ற பூவைப் பறித்துக் கொண்டு வருவார்கள். பூக் கோலத்தில் அதைத்தான் முதலில் வைக்க வேண்டும் என்பது ஐதீகமாக உள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான பூவாக அதிகரித்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களை வைப்பர்.
இப்பண்டிகையை முன்னிட்டு சிறப்பு உணவுகள் தயாரிக்கப்படும் ஆறு சுவைகளில் கசப்பு சுவை தவிர, மற்ற சுவைகளில் 64 வகையான
பூக்கோலம்
“ஓண சாத்யா' என்ற உணவு தயாரிக்கப்படுகிறது. புது அரிசி மாவில் தயாரிக்கப்பட்ட அடை, அவியல், பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, சாம்பார், காளன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரைப்புரட்டி, கூட்டு, கிச்சடி, இஞ்சிப் புளி, எரிசேரி மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு என உணவுகள் தயாரிக்கப்பட்டு கடவுளுக்குப் படைக்கப்படும்.
ஓணம் நாளின் நாலாம் நாள் 'புலிக்களி' அல்லது 'கடுவக்களி' என்று அழைக்கப்படும் நடனம் ஆடப்படுகிறது. களி என்பது மலையாள மொழியில் நடனத்தைக் குறிக்கும் இந்த நாளில் சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தினால் புலி வேடமிட்டு நடனம் ஆடி வருவர். இதனை

Page 53
புலிக்களி
இசைக்கேற்ப ஒரு வித தாளத்துடன் புலி வேடமிட்டு ஆடுவார்கள். கை கொட்டுக்களி என் னும் நடனம் பெண்களால் ஆடப்படுவது. கசவு என்னும் தூய வெண்ணிற ஆடையை அணிந்து பா டல்களைப் பாடிய படி ஆடுவர்.
மற்றொரு சிறப்பம்சமாக விளங்குவது யானைத் திருவிழாவாகும். இது ஓணம் திருவிழாவில் தவறாமல் இடம்பெறும். 10 ஆம் நாளான திருவோணத்தன்று, யானைகளுக்கு விலையுயர்ந்த பொன் மற்றும் மணிகளால் ஆன தங்க கவசங்களாலும் தோரணங்களாலும் அலங்கரித்து வீதிகளில் ஊர்வலம்
நடத்துவார்கள். யானைகளுக்கு
சிறப்பு
உணவுகளும் படைக்கப்படும்.

, கலைக்கேசரி
53
யானைத் திருவிழா
கேரளாவின் பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல், களறி, படகு போட்டிகள் பாரம்பரிய நாடகப் போட்டிகள் எனப் இப்பண்டிகையை முன்னிட்டு 10 நாட்களும் பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும். பார்வையாளர்களாக வெளிநாட்டிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து சிறப்பிப்பார்கள். வெளிநாட்டில் இருக்கும்
| மலையாளிகள் குடும்பத்துடன் இப்பண்டிகைக்காக கேரளத்துக்கு வருகை தந்து சிறப்பிப்பது ஒரு விசேட அம்சமாகும். அத்துடன் திருமண நிச்சயதார்த்தம் இப்பண்டிகை காலத்தில் இடம்பெறுவதும் ஒரு விசேடமாகும்.
- லஷ்மி

Page 54
கலைக்கேசரி து 54 தொல்லியல்
மீள்வாசிப்பிற்கு உட்படுத்தப்படும் தொல்லியல், இலக்கியச்
சான்றுகள்
பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தன
தமிழர் படையின் உதவியுடன் ஏழாம் நூற்றாண்டில் ஸ்ரீநாகன் என்னும் மன்னன் மேற்கொண்ட படையெடுப்பை அநுராதபுர மன்னன் தோற்கடித்த போதும், அநுராதபுர அரசிற்கெதிரான கிளர்ச்சிகள் தொடர்ந்தும் உத்தர தேசத்தில் (வடஇலங்கை) நடந்ததாகச் சூளவம்சம் கூறுகிறது (Culavamsa 48:83-84). ஏறத்தாழ இதே காலப்பகுதியில் 'மானா' என்ற சிங்கள இளவரசன் அநுராதபுரத்தில் ஆட்சியாளனாக இருந்த ஹட்டதாத்த மன்னனுக்குப் பயந்து உத்தரதேசத்தில் அடைக்கலம் பெற்று பின்னர் அங்கிருந்து தமிழ்நாடு சென்றதாகச் சூளவம்சம் கூறுகிறது (Culavamsa : 47. 2-7.). இலங்கை வரலாற்றில் தென்னிலங்கையில் சிற்றரசராக இருந்தவர்கள் அநுராதபுர மன்னர்களாக வருவதும், ஆட்சிப்பூசலில் பதவி இழக்கும் சிங்கள மன்னர்களும், இளவரசர்களும் தென்னிலங்கையில் அடைக்கலம் பெறுவது அல்லது தமிழ் நாடு சென்று தமிழர் படையுதவி பெற்று அநுராதபுர மன்னர்களாக மாறுவதும்
- ஒரு பொதுவான நிகழ்வாக இருந்தது. ஆனால் எந்தச் சந்தர்ப்பத்திலும் சிங்கள மன்னர்கள் வடஇலங்கையில் பாதுகாப்பு கருதி அடைக்கலம் பெற்றதற்கோ அல்லது இங்கு

லைவர், வரலாற்றுத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
சிற்றரசர்களாக இருந்த சிங்கள இளவரசன் அநுராதபுர மன்னனாக வந்ததற்கோ ஆதாரம் காணப்படவில்லை. இந்நிலையில் முதன் முறையாக 'மானா' என்ற சிங்கள இளவரசன் தென்னிலங்கையை விட வட இலங்கை பாதுகாப்பு எனக் கருதி இங்கு அடைக்கலம் பெற்றமை அநுராதபுர அரசின் மேலாதிக்கத்திற்கு வட இலங்கை சாதகமாக இருக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. ஓன்பதாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் ஸ்ரீமாறஸ்ரீபல்லவ என்பான் இலங்கை மீது படையெடுத்த போது மாதோட்டத்தில் வாழ்ந்த தமிழர்கள் பாண்டியப் படைகளுடன் இணைந்து அநுராதபுரத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த ஸேன மன்னனை தோற்கடித்ததாகச் சூளவம்ஸம் கூறுகிறது (Culavamsa 49: 84-85). இந்நிகழ்ச்சி வட இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள் தமிழகப் படையெடுப்பாளருக்கு ஆதரவாக இருந்ததுடன் அநுராதபுர அரசை அவர்கள் ஒரு பகை அரசாகக் கருதிக்கொண்டிருந்தமையும் தெரிகிறது. ஏழாம் நூற்றாண்டிலிருந்து ரோகண (இலங்கையின் தென்பகுதி), மலைய (இலங்கையின் நடுவே உள்ள மலைப்பிரதேசம்) மற்றும் உத்தரதேசம் (வடஇலங்கை) என்பன இலங்கையின் வேறுபட்ட

Page 55
ரோஹண மற்றும் மலையக பிரதேசத்தை நிர்வகிக்க அநுராதபுர ஆட்சியாளர்கள் தமது குடும்ப வாரிசுகளை நியமித்த போது, உத்தரதேசத்தை நிர்வகிப்பதற்கு ஒருவரை நியமித்ததற்கான
ஆதாரங்கள் காணப்படவில்லை.
இந்த வேறுபாடு வட இலங்கை
அநுராதபுர நிர்வாகத்திற்குள்
அடங்கவில்லை என்பதையே
எடுத்துக்காட்டுகிறது.

* கலைக்கேசரி
மூன்று முக்கிய நிர்வாகப் பிராந்தியங்களாக இருந்ததைப் பாளி இலக்கியங்கள் கூறுகின்றன. அவற்றுள் ரோஹண மற்றும் மலைய பிரதேசத்தை நிர்வகிக்க அநுராதபுர ஆட்சியாளர்கள் தமது குடும்ப வாரிசுகளை நியமித்த போது, உத்தரதேசத்தை நிர்வகிப்பதற்கு ஒருவரை நியமித்ததற்கு ஆதாரங்கள் காணப்படவில்லை (Indrapala 2005:204-5). இந்த வேறுபாடு வட இலங்கை அநுராதபுர நிர்வாகத்திற்குள் அடங்கவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது.
இது தொடர்பாக பேராசிரியர் இந்திரபாலா முன்வைத்துள்ள கருத்துக்களை இவ் விடத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும் (இந்திரபாலா 2006:230-31).
'உத்தரதேசத்தைப் பற்றிய குறிப்புக்களை ஆய்வு செய்தால் அப்பிரதேசம் ஏனைய பிரதேசங்களை விட வேறுபட்டதாக இருந்தது என்பதை அறியலாம். அநுராதபுரத்து மன்னர்களின் கட்டுப்பாட்டுக்குள் அடங்காத ஒரு பிரதேசமாகப் பலமுறை இருந்துள்ளதைக் காணலாம். அநுராதபுர ஆட்சியை எதிர்த்தோர் அங்கு ஆதரவு பெற்றதையும் காணலாம். முற்பட்ட நூற்றாண்டுகளைப் போல் அல்லாது, ஆறாம் நூற்றாண்டின் பின் தென்னிந்தியாவிலிருந்து வந்த படைகள் வடபகுதியில் வந்து இறங்குவதையும் அவதானிக்க முடிகிறது. அப்படி வந்த படைகள் வடக்கில் தங்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்திய பின் அநுராதபுரத்தை நோக்கி முன்னேறின. இவற்றை நோக்குமிடத்து அநுராதபுரத்து ஆட்சியாளருக்குச் சாதகமான சூழ்நிலை வடபகுதியில் நிலவவில்லை என்பது தெளிவு'
காளை சின்னம் பொறிக்கப்பட்ட நாணயம்

Page 56
கலைக்கேசரி து
56
இக்கருத்துக்களின் பின்னணியில் கி.பி. 10ஆம் நூற்றாண்டில் தென்னிந்திய வல்லபன் நாகதீபத்தின் மீது படையெடுத்ததாக சூளவம்சத்தில் வரும் குறிப்பின் முக்கியத்து வத்தையும் நோக்குவது பொருத்தமாகும். இப் படையெடுப்பை மேற்கொண்ட மன்னனை வரலாற்றறிஞர்களில் ஒரு சாரார் இராஷ்ரகூட மன்னன் எனவும், வேறுசிலர் இரண்டாம் பராந்தக சோழன் எனவும் கூறுகின்றனர். இவன் யாராக இருப்பினும் படையெடுப்பு நடந்த இடம் நாகதீபம் என்பது முக்கிய நிகழ்ச்சியாகும். இப்படையெடுப்பு நாகதீபத்தை வெற்றி கொள்ள மேற்கொள்ளப் பட்டதா அல்லது நாகதீபத்தை வெற்றி கொண்டதன் பின்னர் அங்கிருந்து அநுராதபுர அரசின் மீது படையெடுக்க மேற்கொள்ளப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் ஏறத்தாழ இதே காலப்பகுதியில் சோழ மன்னர்களாக இருந்த முதலாம், மற்றும் இரண்டாம் பராந்தக சோழன் இலங்கை மீது படையெடுத்தது பற்றிய செய்திகள் தமிழக வரலாற்று மூலங்களில் காணப்படுகின்றன. அதில் முதலாம் பராந்தக சோழன் இலங்கையில் சில அரசியல் வெற்றிகளை அடைந்ததாக அவன் வெளியிட்ட சாசனங்கள் கூறுகின்றன. இந்த வெற்றிகளின் மூலம் அவன் 'மதுரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரி வருமன்' எனப் புகழ்ந்துரைக்கப்பட்டதை அவனது 38 ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டு கூறுகின்றது (SII. Voll: 35). இச்செய்தியை கலிங்கத்துப்பரணி (இராசபாரம்பரியம் பாடல் : 23), குலோத்துங்கன் உலா (வரிகள்: 44-46), இராசராசசோழன் உலா (வரிகள் : 38-40) முதலான நூல்களும் உறுதிப்படுத்துகின்றன. இவ் வெற்றிகளையிட்டு இலங்கை வரலாற்றேடுகளில் எந்தச் செய்திகளும் காணப்படவில்லை. இருப்பினும் யாழ்ப்பாண அரசு தொடர்பாகத் தோன்றிய பிற்கால இலக்கியங்கள் சோழர் வருகையுடன் கதிரமலையைத் தலைநகராகக் கொண்ட தமிழ்
லொ
பல்லவர் வெள

அரசின் தலைநகர் சிங்கை நகருக்கு இடம் மாறியதைச் சூசகமாகத் தெரிவிக்கின்றன. இச்செய்திக்கும் முதலாம், இரண்டாம் பராந்தக சோழனது படையெடுப்புக்களுக்கும் இடையே தொடர்பு இருந்ததற்கான நேரடி ஆதாரங்கள் காணப்படவில்லை. இருப்பினும் இந்த இலக்கியங்கள் எழுந்த காலத்தில் இலங்கையிலும், தமிழகத்திலும் சோழ அரசு மறைந்து ஏறத்தாழ எழுநூறு ஆண்டுகள் கடந்து விட்டன. அப்படியிருந்து தமிழ் அரசின் தலைநகர் மாற்றத்தை சோழர் வருகையுடன் தொடர்பு படுத்தியிருப்பது சோழரைப் பற்றிய வரலாற்று நினைவுகள் இலங்கைத் தமிழரால் மறக்கப்படவில்லை என்பதைக் காட்டுகிறது. இங்கே இலங்கைப் பாளி நூல்களில் சொல்லப்படாத பராந்தகனின் இலங்கை வெற்றியை தமிழக வரலாற்றேடுகள் முதன்மைப் படத்திக் கூறுவதையும், இக்காலத்தில் தென்னிந்திய மன்னனொருவன் நாகதீபத்தின் மீது படை எடுத்ததாகச் சூளவம்சம் கூறுவதையும், சோழர் வருகையுடன் உக்கிரசிங்கனது தலைநகரான கதிரமலை (கந்தரோடையா?) சிங்கை நகருக்கு இடம் மாறியதாகவும் கூறுவதை நோக்கும் போது, அவன் அடைந்த வெற்றி நாகதீப் வெற்றியாக இருக்கலாம் எனக் கருத இடமுண்டு (புஷ்பரட்ணம் 2000). இந்த இடத்தில் முதலாம் பராந்தக சோழனது படையெடுப்பின் முக்கியத்துவம் பற்றிப் பேராசிரியர் கா.இந்திரபாலா கூறும் பின்வரும் கருத்துக்களை நோக்குவது அவசியமாகும்.
'மேற்கூறிய இரு கட்டங்களிலும் நடை யெற்ற சோழப்படையெடுப்புக்களின் - (முதலாம், இரண்டாம் பராந்தக சோழன்) விளைவாக வட பகுதி வடகிழக்குப் பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பிரதேசம் சோழர் ஆட்சிக்கு உட்பட்டது என்பதை ஏற்றுக் கொள்ள இடமுண்டு. ஏற்கனவே பல்லவர் தமிழ் நாட்டில் ஆதிக்கம் 'பெற்றிருந்த போது, இப்பிரதேசத்தில் பல்லவர் அதிகாரம் பரவியிருக்க கூடும் எனக் கூறப்பட்டது.
ப
ரியிட்ட நாணயம்

Page 57
படை
பல்லவர் கால | இத்தகைய சூழ்நிலையில் சோழர் படைகள் வடபகுதியில் வந்திறங்குவதைக் காணலாம். பராந்தக சோழன் காலத்தில் இப்பிரதேசத்தில் சோழர் ஓரளவு அதிகாரம் பெற்றிருப்பர் என்றே தோன்றுகிறது. முதலாம் பராந்தக சோழன் காலத்திலேயே சோழர் பொலன்னறுவையில் தங்கள் நிர்வாகத்தை நிறுவியிருந்தார்களா என்று தெரியவில்லை. அவர்கள் அதிகார மையம் பொலன்னறுவைக்கு வடக்கே அல்லது கிழக்கே பதவியா அல்லது கந்தளாய் போன்ற ஓர் இடத்தில் இருந்து பின்னர் பொலன்னறுவைக்கு மாற்றப் பட்டிருத்தல் கூடும்' (இந்திரபாலா 2006:262)
மேற்கூறப்பட்ட அனைத்து அம்சங்களையும் தொகுத்து நோக்கும் போது, வடஇலங்கை அதாவது நாகதீபம் பெரும்பாலும் அநுராதபுர அரசின் மேலாதிக்கத்திற்கு உட்படாத ஒரு நாடாக அல்லது தனித்துவமான பிராந்தியமாக இருந்ததென்ற முடிவுக்கு வர முடிகிறது. இதற்கு பண்டுதொட்டு இங்கு அரச மரபு தோன்றி வளர்ந்து வந்தமையும் ஒரு காரணம் எனக் கூறலாம். இக்கருத்திற்கு ஆதாரமாக ஏழாம் நூற்றாண்டளவில் இலங்கை வந்த கொஸ்மஸ் இண்டிகோ பிளிஸ்டிஸ் இலங்கை அரசியல் நிலை தொடர்பாகக் கூறிய கருத்தை ஆராய்ந்து பார்ப்பது பொருத்தமாகும். அவரது கூற்றிலிருந்து இலங்கையில் இரு அரசுகள் இருந்தமையும், அவற்றுள் ஓர் அரசின் மன்னனிடம் செந்நிற மணிகள் காணப்படும் நிலப்பகுதியும், இன்னொரு மன்னனிடம் மிகப் பெரிய வணிக நகரத்தை உள்ளடக்கிய துறைமுகம் இருந்தமையும் தெரியவருகிறது. பேராசிரியர் பரணவிதான செந்நிற மணிகள் காணப்படும் நிலப்பரப்பு தென்னிலங்கை அரசு எனவும், பெரிய வணிக நகரத்தை உள்ளடக்கிய துறைமுகம் மாதோட்டம் எனவும் அது அநுராதபுர மன்னனால் ஆளப்பட்ட பகுதி எனவும் கூறுகிறார். இதில் தென்னிலங்கையில் இன்னொரு சிங்கள மன்னன் ஆட்சி இருந்தமைக்கு அதன் ஆட்சியாளன் அநுராதபுர அரசிற்கு கீழ்படிய

, கலைக்கேசரி
5!
நாணயங்கள்
மறுத்ததே காரணம் என விளக்கம் கூறுகிறார் (Paranavithna 1961: 184). ஆனால் முதலியார் இராசநாயகம் பெரிய வணிக நகரத்தை உள்ளடக்கிய மாதோட்ட துறைமுகம் யாழ்ப்பாணத்தை உள்ளடக்கிய அரசிற்குரியதெனக் கூறுகிறார் (Rasanayagam 1928). ஏழாம் நூற்றாண்டின் பின்னர் நாகதீபத்திற்கும் அநுராதபுரத்திற்கும் இடையே இருந்த அரசியல் உறவுகளை நோக்கும் போது, தென்னிலங்கையைக் காட்டிலும் வட இலங்கையே அநுராதபுர அரசின் மேலாண்மைக்கு கீழ்ப்படியாதிருந்ததைக் காணமுடிகிறது. இதனால் கொஸ்மஸ் கூறும் பெரிய வணிக துறைமுகத்தைக் கொண்டிருந்த மன்னன் நாகதீபத்தில் ஆட்சி செய்த மன்னர்களில் ஒருவனாகக் கருத இடமுண்டு. இக்கருத்தை மேலும் உறுதி
- செய்ய வட இலங்கையில் கிடைத்த தமிழ் நாணயங்களின் தனித்துவமான அம்சங்களைச் சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும். | தென்னாசியாவின் முதன்மை நாணய வியலாளர்களில் ஒருவரான பரமேஸ்வரி லால் குப்தா வட இந்திய வரலாற்று ஏடுகளில் சொல்லப்படாத சில மன்னர்களினதும், சிற்றரசு களினதும் வரலாறு வெளிச்சத்திற்கு வந்ததற்கு அவர்கள் வெளியிட்ட நாணயங்களை ஆதாரமாகக் காட்டுகிறார் (Gupta 2000). இந்த உண்மை வட இலங்கைக்கும் பொருந்தும் எனக் கூறலாம். இலங்கையில் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு தொட்டு புழக்கத்திலிருந்த பல வகைப்பட்ட தமிழ் நாணயங்கள் கிடைத்துள்ளன. அவற்றுள் கி.பி. 13 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட அனைத்து நாணயங்களும் தமிழகத்திலிருந்தே கொண்டு வரப்பட்டவை என்ற ஆழமான கருத்தே இருந்து வந்தது (Codrington 1924). இதற்கு கி.பி.13 ஆம் நூற்றாண்டில் நல்லூரைத் தலைநகராகக் கொண்ட இரசாதானி தோன்றும்வரை இலங்கைத் தமிழரிடையே நாணயங்களை வெளியிடும் அளவிற்கு அரசமரபு தோன்றவில்லை என்ற

Page 58
கலைக்கேசரி
அமைச்
58
ஆழமான கருத்திருந்தமை முக்கிய காரணமாகும். ஆனால் இந்த நம்பிக்கையை ஒரு காரணமாகக் கொண்டு இலங்கையில் கிடைத்த அனைத்து தமிழ் நாணயங்களையும் தமிழகத்திலிருந்து கொண்டு வரப்பட்டவை என்ற முடிவுக்கு வந்துள்ளமை இலங்கைத் தமிழர் தொடர்பாக வெளிவந்திருக்கும் அண்மைக்கால முடிவுகளுக்குப் பொருத்தமாகத் தெரியவில்லை. அதில் இப்பாரம் பரிய முடிவுகளை மீள்வாசிப்பிற்கு உட்படுத்த உதவும் நம்பகரமான தொல்லியல் ஆதாரங்களில் ஒன்றாக - வட இலங்கையில் கிடைத்த நாணயங்களைக் குறிப்பிடலாம். ஏனெனில் வட இலங்கையில் அதிக அளவில் கிடைத்த தமிழ் நாணயங்களை தமிழக அரசவம்சங்கள் வெளியிட்ட நாணயங்களுடன் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தால் பெரும்பாலான நாணயங்களின் வடிவமைப்பு, அரச சின்னங்கள், குறியீடுகள் என்பவற்றில் வேறுபாடுகள் இருப்பதைக் காணலாம் (Pushparatnam: 2001). தமிழக நாணயங்கள் பற்றி விரிவாக ஆய்வு நடாத்திய முதன்மை நாணயவியலாளர்களான எலியொட் (Eliot; 1970), பிதுல்ஃப் (Bidduph1966), மிற்சினர் (Mictchiner 1998). போன்றோரும் வட இலங்கையில் கிடைத்த தமிழ் நாணயங்களில் சில தனித்துவமான அம்சங்கள் உண்டு என்பதை தமது ஆய்வுகளில் சுட்டிக் காட்டியுள்ளனர். இருப்பினும் அவர்கள் இந் நாணயங்களில் காணப்படும் காளை, மீன் போன்ற சின்னங்களை தமிழக அரச வம்சங்கள் வெளியிட்ட நாணயங்களுடன் தொடர்பு படுத்தி இவற்றைப் பல்லவர், பாண்டியர் வெளியிட்ட நாணயங்கள் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
முதலாவது வகை நாணயத்தில் முன்புறத்தில் பலிபீடத்திற்கு முன்னால் நிற்கும் நிலையில் காளையும், பின்புறத்தில் நான்கு கோடுகளால் இணைக்கப்பட்ட சதுரத்திற்குள் சிறிய வட்டமும், அதற்கு மூன்று அல்லது நான்கு புள்ளிகள் கொண்ட சின்னமும் காணப்படுகிறது. மிற்சினர் இந்நாணயத்தை கி.பி. 6ஆம் நூற்றாண்டில் பல்லவர் வெளியிட்டதாகக் கூறுகிறார். இவரின் கருத்தையே

ஏனைய ஆய்வாளர்களும் பொருத்தமான முடிவாக எடுத்துள்ளனர் (Codrington 1924:24, Mictchhiner 1998: 135,Seyne 1998:28). தமிழகத்தில் சதுர வடிவில் நாணயங்களை வெளியிடும் மரபு பெரும்பாலும் ஏழாம் நூற்றாண்டின் பின்னர் மறைந்து போவதால் இந்நாணயத்தை ஆறாம் நூற்றாண்டில் வெளியிட்டு இருக்கலாம் என மிற்சினர் கூறியிருப்பது பொருத்தமாக இருக்கலாம். ஆனால் தமிழகத்தில் கிடைத்த பல்லவ நாணயங்களை ஆராய்ந்தால் அவற்றில் ஒன்றுதானும் சதுரவடிவில் வெளியிடப் பட்டிருந்ததற்கு ஆதாரம் காணப்படவில்லை. அண்மையில் பல்லவர் கால நாணயங்கள் பற்றி விரிவாக ஆராய்ந்து அது தொடர்பான நூல்களை வெளியிட்ட நாணயவியல் அறிஞர்கள் இரா.கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுக சீதாராமன் போன்றோர் தமிழகத்தில் கிடைத்த நூற்றுக் கணக்கான பல்லவர் கால நாணயங்களில் ஒன்று தானும் சதுரவடிவில் அமைந்த நாணயங்கள் காணப்படவில்லை. இரா.கிருஷ்ணமூர்த்தி தனது நூலின் பின்னிணைப்பில் கொழும்பு, பம்பாய், சென்னை போன்ற இடங்களில் உள்ள அருங்காட்சியகங்களில் இருந்து பெறப்பட்டதாக கூறி சதுரவடிவில் அமைந்த சில நாணயங்களையும் சேர்த்துள்ளார் (Krishnamurthy 2004:176). அவற்றில் ஒன்று வட இலங்கையில் கிடைத்த சதுர வடிவத்தை ஒத்த நாணயமாகும். இதிலிருந்து தமிழகத்தில் சதுரவடிவில் அமைந்த பல்லவ நாணயங்கள் எவையும் கிடைக்கவில்லை என்பது தெரிகிறது. ஆயினும் இவ்வகை நாணயத்தைப் பல்லவருக்கு உரியதாகக் கருதுவதற்கு அவர்கள் தமது அரச இலட்சனையான காளையைச் சில நாணயங்களில் பொறித்திருந்ததே காரணமாகும். ஆனால் தமிழகத்தில் கிடைத்த காளையுருவம் பொறித்த பல்லவ நாணயங்களில் பெரும்பாலும் மன்னன் பெயர் அல்லது பட்டப் பெயருடன் சங்கு, சக்கரம், கப்பல், விளக்குப் போன்ற சின்னங்களும் இடம் பெற்றிருப்பது பொதுவான
அம்சமாக காணப்படுகிறது.
(மிகுதி அடுத்த இதழில்)

Page 59

TO KNOW » NEW ATTRACTIONS > WHERE TO STAY » WHERE TO DINE > WHAT TO DO
visit
in COLOMBO
aboutcolombo.lk
01. Download the QR code app on your mobile / tab from App Store / Play Store.
02. Open the app scan the image. 03. Visit our site through your Tab / smart phone.
Your Gateway to Sri Lanka...

Page 60
கலைக்கேசரி 60 தெய்வ ஊர்திகள்
தெப்
வ ஊர்திகள் என்ற தலைப்பில் தொடர்ந்து சிந்தனை செய்து வருகின்றோம். விலங்குகள், பறவைகள், முற்பிறவிப் பேற்றினால் இறைவனைத் தன் மீது சுமக்கும் பேறுபெற்று வாகனங்களாகின்றன. இந்த வரிசையில் இந்த இதழில் நாம் காணவிருப்பது குரங்காகப் பிறந்து, அறிவுள்ள மனிதனாக உயர்ந்து அதற்கும் மேலே தன்னலமற்ற தொண்டாலும், அரிய தியானத்தாலும் உயர்ந்து தெய்வநிலையில் போற்றப்பெறும் அனுமனைப் பார்க்க இருக்கின்றோம்.
பொதுவாக ஒவ்வொரு விலங்கிற்கும் தனித்த இயல்புகளே அடையாளமாக இருக்கும். உதாரணத்திற்கு எலி- தந்திரக்குணம் மிக்கது. தான் உழைக்காமல் பிறரின் உழைப்பில் உண்டு வளரும். புலி - கோபம் மிக்கது; யானை - குற்றம் இழைப்பின் மறக்காது; மாடு - உழைப்பின் சின்னம்; குதிரை - உடல் வலிமை உடையது. இப்படிப் பட்டியலிட்டுப் பார்த்தால் குரங்கிற்கு தனித்த சிறப்பியல்பு ஏதும் கிடையாது. ஓரிடத்தில் அமைதியாக இருக்காது; தாவிக் கொண்டே இருக்கும்; தரித்து இருக்காது; முழுமையாக ஒரு பொருளை வைத்திருக்காது; சிதைத்துச் சேதப்படுத்துவதில் விருப்பம்
கொண்டது. இதைத்தான் - 'குரங்கின் கையில் பூமாலை',
- -ெ

பவ ஊர்திகள் அனுமன் வாகனம்
- கலாபூஷணம் வித்துவான். வசந்தா வைத்தியநாதன்
'குரங்குப் புத்தி' என்றார்கள் போலும். மேலும் புலன் அடக்கம் கிடையாது; காம இச்சை மிகுதியும் கொண்டது.
இத்தகைய கீழ்மைக் குணங்கள் கொண்ட குரங்கு இனத்தில் புற நடையாகத் தோன்றியவர் தான் ஆஞ்சநேயர். அஞ்சனையின் மைந்தன்; உயர் குணங்களுக்கெல்லாம் உறைவிடம்; சகல சாத்திரங்களையும் அறிந்த மகா பண்டிதன்; கதிரவனின் தேருக்கு முன் நின்றவாறே ஒன்பது இலக்கணங்களையும் அவனிடம் கற்றுச் சிறந்தவன்; நவவியாகரண வேத்தன். புலன்களை வென்ற ஜிதேந்திரியன்; பக்தியின் பிறப்பிடம்; தொண்டின் இலக்கணம்; அனுமனின் வரலாற்றை
அறிந்து கொள்வதும் புண்ணிய வாய்ப்பே.
அரக்கர் கூட்டத்தை அழிக்கத் திருமால் இராமனாவும் திருமகள் சீதையாகவும் அவதாரம் செய்த பொழுது வானுலக தேவர்களே மனிதராகவும் விலங்குகளாகவும் மண்ணில் தோன்றினர். அதில் உருத்திர அம்சமாகத் தோன்றியவரே அனுமானாகும். அதனால்தான் அரக்கனையும் தீயோரையும் அழித்தான்.
குந்திதேவியைப் போல அஞ்சனாதேவியும் உருத்திர மந்திரத்தை இடைவிடாமல் உச்சரித்துத் தவமியற்ற, உருத்திரனின் அம்சம் ஒரு

Page 61
யாழ்ப்பாணம் பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் வாகனம்

பா.
கலைக்கேசரி

Page 62
கலைக்க்ேசரி
62
கனியாகி அக்கனியை வாயுதேவன் அஞ்சனைக்குக் கிடைக்குமாறு செய்தான். கனியை உண்டதனால் அனுமனின் அவதாரம் நிகழ்ந்தது. வாயுவின் அருளால் பிறந்ததால் 'வாயுபுத்திரன்' என்ற திரு நாமமும் உண்டாயிற்று. மார்கழித் திங்களில் அமாவாசையோடு வரும் மூல நன்னாள் ஆஞ்சநேயரின் அவதாரத் திருநாள்.
அனுமனின் இயற்பெயர் சுந்தரன். சுந்தரம் என்பது மூன்று வகைப்படும். அவைகள் முறையே ரூப் செளந்தர்யம், ஞான செளந்தர்யம், குண செளந்தர்யம் ஆகும். இம்மூன்று அழகுகளையும் பெற்றவன் அனுமன். இராமாயணத்தின் உயர் நிலைப்பகுதி 'சுந்தரகாண்டம்'; இதில் அனுமனின் சாதுர்யம், பணிவு, பராக்கிரமம் விரிவாகப் பேசப்படுகிறது.
அனுமன் - ஆஞ்சநேயர் - சிறியதிருவடி - இராம் தூதன் - சொல்லின் செல்வன் என்று தமிழ் நாட்டிலும், ஆந்திராவில் - ஆஞ்சநேயலு, மகாராஷ்டிரத்தில் - மாருதி, கர்நாடகத்தில் - அநுமந்தையா, வட இந்தியாவில் பொதுவாக 'மகாவீர்' என்றும் பலவாறு அழைக்கப்படும் ஒப் பற்ற வீரர், மாத்வர்களின் குலதெய்வம்.
"புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதாம் ஜா அட்யம் வாக்படுத்வம்ச
ஹனுமத் ஸ்மரணாத்பவேத் ''

மூடிய கண்களுடனும்
கூப்பிய கரங்களுடனும்
அனுமன் அமர்ந்திருக்கும் நிலையே பணிவின்
இலக்கணம்.
புத்தி, புகழ், பலம், உறுதி, துணிவு, ஆரோக்கியம், கவனம், சொல்வன்மை எல்லாம் அனுமனை நினைத்தால் கிடைக்கும்.
குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் பார்த்தனின் தேர்க் கொடியில் இருந்து கொண்டே பரந்தாமனின் கீதோபதேசத்தை நேரில் கேட்ட பாக்கியசாலி அனுமன். ஐம்பூதங்களோடு தொடர்புபட்டவன்.
"அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி அஞ்சிலே ஒன்(று)றாறாக ஆரியற்காக ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண் டயலாரூரில் அஞ்சிலே ஒன்று வைத்தான் அவனெம்மை அளித்துக் காப்பாம்'' ஐம்பெரும் பூதங்களில் ஒன்றாகிய வாயுவின் மைந்தன் நீர்ப்பரப்பாகிய கடலைத் தாண்டி, வானை வழியாகக் கொண்டு, இராமபிரானுக்காக இலங்கை சென்று பூமிதேவியாகிய சீதையைக் கண்டு, அயலவர் ஊரிலே பஞ்சபூதத் தீயினை வைத்தவன் என்னைக் காப்பானாக என்ற கம்பநாடரின் கடவுள் வாழ்த்து அனுமனுக்காகவே அமைந்தது.
பெரும்பாலும் உலகிலே கல்வி வல்லவர்களும், உடற்பலம் மிக்கவர்களும் அடக்க முடையவர்களாக இருப்பது இல்லை. ஆனால் அனுமனோ கல்வி, வலிமை இரண்டிலும் சிறந்திருந்தும் பணிவுமிக்கவனாக இருந்தான்.

Page 63
''நுணங்கிய கேள்வியரல்வார் வணங்கிய வாயின ராத லரிது'' (அறிவுடைமை -9) கற்று வல்லவர்களே பணியுமாம் என்றும் பெருமை என்பதற்கொப்ப அடக்கமுடையவராய் இருப்பர் என்பது வள்ளுவர் வாய்மொழி. மூடிய கண்களுடனும் கூப்பிய கரங்களுடனும் அனுமன் அமர்ந்திருக்கும் நிலையே பணிவின் இலக்கணம். சிரஞ்சீவியர் எழுவரில் அனுமனும் ஒருவன். (அனுமன், வீடணன், அசுவத்தாமன், வியாசர், மகாபலி, கிருபர், பரசுராமன்.)
மாத்வ வகுப்பினர் அனும் வழிபாட்டில் முன்னிற்பவர்கள். இவர்களில் சிறந்தவர் 'வியாசராயர்'; விஜய நகர மன்னர்களின் இராஜகுரு; திருப்பதி வெங்கடாசலபதியை 12 ஆண்டுகள் வழிபட்ட பெருமை மிக்கவர்; திருமலை ஆலய விமானத்தில் உள்ள வெங்கடேசுவரர் இவரது பிரதிஷ்டையாகும். இம்மகான் நாடு முழுவதும் 732 ஆஞ்சநேயர் மூர்த்தங்களை அமைத்தவர். இவர் அமைத்த ஆஞ்சநேயர் மூர்த்தங்களில் தலைக்கு மேல் வாலானது வளைந்து காட்சி தர அதில் ஒரு மணி தொங்கிக் கொண்டிருக்கும்.
இனி, அனுமனின் சிறப்பு மிக்க ஆலயங்கள் அமைந்திருக்கும் தலங்களைக் காணலாம். திருப்பதி, காஞ்சிபுரம், நாமக்கல், சுசீந்திரம், மைசூர், சோளிங்கபுரம், ஹம்பி, நங்கநல்லூர் போன்ற இடங்களில் சிறப்பான அனும் மூர்த்திகளைக் காணலாம். திருக்கடவூருக்கு கிழக்கேயுள்ள அனந்த மங்கலத்தில் மூன்று கண்களும் பத்துத் திருக்கரங்களும் கொண்ட “திரிநேத்ர தசபுஜ அனுமனை செப்புப் படிமத்தில் காணலாம். ஐந்து அடி உயரத்தில் ஊத்துக்குளி
னெ

, கலைக்கேசரி
63
ஜமீன் மாளிகையில் மரத்தாலான அனுமனை தரிசிக்கலாம். இலங்கையிலும் ரம்பொடையில் 18 அடி உயரத்திலும் இணுவிலிலும் கொழும்பிலும் ஆஞ்நேயரை தரிசிக்கலாம்.
அனும் மூர்த்தங்களுள் சிறந்து விளங்குவது பஞ்ச முக ஆஞ்சநேயரின் திருவுருவமாகும். இத்திருவு ருவம் தோன்றிய வரலாறு. இராவணின் தம்பி மயில்ராவணன் அதிபலசாலி; வரபலம் மிக்கவன். இவன் இராம லஷ்மணர்களை ஒரு பாதாளச் சிறை யில் அடைத்து வைத்து காளிக்கு பலியிட இருந் தான். மயில்ராவணனை அழிக்க வேண்டி அனுமார் அவனது உயிர் நிலையை பல துன்பங்களுக்கு மத்தி யில் ஐந்து வண்டுகளாகக் கண்டு, அதனை மயில்
இராவணன்
முன் கொணர்ந்து, ஒரே சமயத்தில் அழிக்க வேண்டு மாகையால் பஞ்சமுக ஆஞ்சனேயனாக ஐந்து முகங்களைக் கொண்டு கடித்துக் கொன்றான். இராமனையும் இலக்குவனையும் தனது தோளில் சுமந்து சிறை மீட்டான். குதிரை- (பூமி), கருடன் (ஆகாயம்), வராகம் (பாதாளம்) என்னும் மூவுலகத்திலும் தனது ஆற்றலைச் செலுத்தி ஐந்து முகங்களைக் கொண்டான்.
1. ஹயக்ரீவம் - வித்தை, மேன்மை (மேல் நோக்கிய முகம்) 2. நரசிம்மம் - பக்தர்களைக் காக்க (தெற்கு) 3. ஆஞ்சநேயம் - மேதாவிலாசம் (கிழக்கு) 4. கருடன் - வேதமூர்த்தி (மேற்கு) 5. வராகம் - பாதாள சித்தி (வடக்கு) ஆஞ்சநேயர் வழிபாட்டில் வெண்ணெய் சாத்துவது, வடைமாலை - வெற்றிலை மாலை அணிவிப்பது சிறந்த பயனைத் தரும். அனுமனின் வாலில் நவக்கிரகங்கள் அமைந்திருப்பதாக நம்புவதால் வாலில் பொட்டிட்டு வழிபாடு செய்வார்கள். வாலைப் போற்றி அமைந்த துதி ''அநுமத்லாங்கூலாஸ்திர
ஸ்தோத்திரம்'' ஆதிசங்கரர் அருளிய பஞ்சரத்தினமும் புஜங்கத் தோத்திரமும் தியான சுலோகமும் சிறப்பானவை; பாராயணம் செய்ய உகந்தவை.
இராமர் கோவில்களிலும் பெருமான் கோவில்களிலும் 'சிறிய திருவடி' எனப் போற்றப் பெறும் அநும் வாகனம் சிறப்பு வாய்ந்தது. பெருமாளையும் அனுமாரையும் ஒருசேர தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தற்கரியதாகும்.
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே! வாயு புத்தாய தீமஹி !(ஸ்ரீ ஆஞ்சநேய காயத்ரி) தந்நோ ஹனுமத் ப்ரசோதயாத்!
(ஸ்ரீ ஆஞ்சநேய காயத்ரீ) :

Page 64
கலைக்கேசரி , 64 நிகழ்வுகள்
பிரபல தென்னிந்திய நட சாஸ்திரியின் 'யூத்' என் அமைந்த பரதநாட்டிய நி. அன்று மாலை கொழும்பு
மண்டபத்தில் நை
காலங்காலமாக தர்
அதர்மத்துக்கும் இ போராட்டத்தை இந்நட6 ஆடல்கள் மூலம் மி.
சித்திரித்துக் காட்டி சாஸ்திரியின் பல்வேறு பு அழகிய நடனத் தே
படங்களில் கால்

டன வித்தகி சவிதா னும் தலைப்பில் கழ்ச்சி 13.09.2013 ' பௌத்த கலாசார
டபெற்றது. ரமத்துக்கும் டையிலான ன கலைஞர் தமது க அற்புதமாக னார். சவிதா பாவங்களுடனான மாற்றங்களை
ணலாம்.

Page 65

களைந்தேசll
65

Page 66
கலைக்கேசரி ) 66 நினைவுத்திரை
தமிழ் இயல் இசைக் உரமூட்டிய பாபநாசம் சி
- பத்மா சோ
சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவனின் நாமத்தில் சகல மக்களுக்கும் உணவூட்டி உதவியும் இயல் இசையால் உணர்வூட்டி உய்வித்தும் உயர்த்த 'சிவன்' என்ற பெயரில் இரு பெரும் மகான்கள் ஒரே காலத்தில் வாழ்ந்தனர். இருவருமே சிவ தொண்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள்.
அதில் தமிழ் நாடெங்கிலும் உள்ள ஆலயங்களில் இடம் பெறும் விழாக்கள், கும்பாபிஷேகங்கள், விசேடங்களுக்கு வரும் பக்த கோடிகளுக்குச் சாதி மத பேதமின்றி உணவளித்துப் பெரும் பணியை மேற்கொண்டிந்தவரே 'தேப்பெருமாள் நல்லூர்ச்சிவன்' என்ற சிவபக்தன். மற்றொருவர் ஒவ்வொரு ஆலய விழாக்களிலும் உள்ளம் உருகப் பாடி இனிய பக்தி இசையால் மக்களை பக்தி வெள்ளத்தில் மூழ்கடித்த 'பாபநாசம் சிவன்' என்ற இயல் இசைப் புலமையாளர்.
'ராமையா' என்று பெற்றோரால் பெயரிடப்பட்ட பாபநாசம் சிவன் 1890 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி தஞ்சை மாவட்டத்திலுள்ள போலகம் என்ற சிறிய கிராமத்திலே பிறந்தார்.
இவருடைய தாத்தா ஸ்ரீராமாம்மிருத ஐயரும் பாட்டி ஸ்ரீமதி யோகாம்பாள் இருவருமே பாடிப்பயிலாமல் இயற்கையின் கொடையாக இசை ஆற்றலும் புலமையும் மிக்கவர்கள். பாலகனாக இருக்கும் போதே தந்தையை இழந்த சிவன் தமையனாருடனும் தாயாருடனும் தம் சீவியத்தை நாடித் திருவாங்கூர் சென்றார். அங்கே மகாதேவபாகவதர், வித்துவான் சாம்பபாகவதர்

வன்
மகாந்தன்
ஆகியோரிடம் கர்நாடக ஆரம்ப இசையைக் கற்றார். இயல்பாகவே அமைந்துவிட்ட குரலின் இனிமை, பாடும் ஆற்றல் பக்தி உணர்வு என்பன ஒன்றிணைந்து பஜனையில் நாட்டம் கொள்ள வைத்தது.
மகாராஜாக் கல்லூரியில் மலையாளமும் சமஸ் கிருதமுமே கற்றறிந்த சிவன் சமஸ்கிருத மொழியில் அகராதியைத் தயாரிக்குமளவிற்குப் புலமை பெற்று சமஸ்கிருத அகராதியை எழுதி வெளியிட்டார்.
அதேவேளை தமிழிலும் சில கிருதிகளைப் புனைந்தார். தனது தனி முயற்சியாலேயே தமிழ் இயலும் இசையும் பக்தி மணம் கமழும் பல பாடல்களை இயற்றினார். ஆலயங்கள் தோறும் தவறாது சென்று பஜனை செய்வதையே தனது
வாழ்நாள் சேவையாகக் கொண்டார்.
இவருடைய அர்ப்பணிப்பு மிக்க இச்சேவையால் இறைவன் ஆட்கொள்ளப்பட்டாரோ இல்லையோ மக்கள் அத்தனைபேரும் இசைப்பிரியர்கள், பக்த கோடிகள் என எல்லோருமே இவரது பக்தி இயல் இசை வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டனர்.
தமிழ் நாட்டிலுள்ள ஆலயங்களின் கும்பாபிஷேகம், திருவிழாக்கள், விசேட பூசைகள் என நடைபெறும் சிறப்பு பூசை வழிபாடு விழாக்களிலெல்லாம் சிவனுடைய பாடல்கள், பஜனைகள் இல்லாவிடில் ஆலய விழாக்களே சோபிக்காது என எண்ணக் கூடிய வகையில் சிவனுடைய பஜனை நிகழ்ச்சிகள் பக்திபூர்வமான
முக்கியத்துவத்தைத் பெற்றிருந்தன.

Page 67
20
ஆளணி உதவியற்று வறுமையில் வாடிய, நுட்பமான ஆசாரம் பார்க்கும் குடும்பத்தைச் சேர்ந்த சிவன் இத்தனை ஆற்றலும் திறமையும் கொண்டவராயிருந்தும் மிகுந்த
பணிவும் மென்மையும் ஒதுங்கிப்போகும்
குணமும் கொண்டவராக வாழ்ந்தமையால் நீண்ட தூரமுள்ள ஆலயங்களுக்கெல்லாம் தனிமையில் கால் நடையாகவே செல்வார். அநேகமான நாட்கள் கோவில் பூசையின் பின் கிடைக்கும் பிரசாதம் தவிரப் பட்டினியாகவே இருப்பார். மெலிந்த பலவீனமான உடல் நிலையால் அடிக்கடி வயிற்று வலி உபாதையும் அவரை நன்கு பதம் பார்த்தது. உடம்பு முழுவதும் சிவனின் பிச்சாண்டிக் கோலம் போலப் பட்டையாகத் திருநீற்றுப் பூச்சுடன் எவ்வித உலோகாயுத நிகழ்வுக்கும் முக்கியத்துவம் அளிக்காமல் இறைவன் திருவடியே கதியென்ற நினைவில் ஆழ்ந்திருப்பார்கள். கருத்துள்ள பக்தி மயமான பாடல்களை வெகு அழகாகவும் அனாயாசமாகவும் ஆலயங்கள் பூராவும் சென்று பாடித்துதிக்கும் ராமையா, அடிக்கடி தவறாமல் பாபநாசம் சென்று பாடுவதைக் கண்ட மக்கள் 'பாபநாசம்சிவன்' என்றே இவரைக் குறிப்பிட்டு அழைத்தனர். அந்தப் பெயரே மிகப் பொருத்தமாக அமையவும் அது நிலைத்து விட்டது.
இவர் 20 வயதாக இருக்கும் போதே அவரது தாயார் மரணம் எய்தி விட்டார். 1922இல் மயிலை அறுபத்து மூவர் திருவிழாவில் பஜனை செய்வதற்காக சிவன் சென்னைக்கு முதன் முதல் அழைக்கப்பட்டார். அங்கு சென்றிருந்தபோது, இவரை நண்பர் மூலம் அழைத்தவர் உட்படப் பலர் சூழ இருந்து சிவனின் பஜனையைப் பற்றியும் உயிர்த் துடிப்பான இசையைப் பற்றியும் வெகு சிறப்பாகச் சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் அவர்களில் யாருமே சிவனை முன்னர் பார்த்ததில்லை. அவர்கள் மத்தியில் போன

கலைக்கேசரி
67
சிவனும் தான் இன்னாரெனத் தன்னை அறிமுகம் செய்யாமல் ஒரு மூலையில் போய் உட்கார்ந்து கொண்டார். சிறிது நேரத்தின் பின் இவரை நன்கு தெரிந்த வக்கீல் வைத்தியநாதையர் என்பவர் வந்துதான் சிவனை ஏனையோருக்கு அறிமுகப் படுத்தினாராம். இது இவருடைய அடக்கத்தையும் பணிவையும் இவ்வுலகியலில் ஒட்டிக் கொள்ளாத
ஒரு தன்மையையும் தெரிவிக்கிறது.
இப்படிப் பல சுவையான செய்திகளை வாக்கேயகாரராக, பாடலாசிரியராக, சாகித்ய கர்த்தாவாக, இசை வல்லுனராக விளங்கிய பாபநாசம் சிவன் அவர்கள் 'எனது நினைவுக்கடல்' என்ற தலைப்பில் எழுதிய தனது சுயசரிதை நூலிலே தன்னை ஆளாக்கியவர்களையும் தனது திருமண வரலாறு பற்றியும் எழுதியுள்ளார். 1968 இல் தினமணி ஞாயிறு சுடரில் தொடர் கட்டுரையாக வெளிவந்த இச்செய்திகள் இவருடைய புதல்வி திருமதி ருக்மணி ரமணி அவர்களால் நூலாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்நூலிலே சிவன் அவர்கள் தன் தாயாரை நன்கு சிலாகித்துத் தனது சங்கீத முதல் குருவே தன் தாயார் தான் என்றும் ஆயிரம் பெண்களில் ஒருவர் கூட எழுத்து வாசனை பெற்றிராத அக்காலத்தில் ஓர் எழுத்தை எழுதவோ வாசிக்கவோ தெரியாத தன் தாயார் எப்படி ஆயிரக்கணக்கான பாடல்களைக் கற்றுக் கொண்டாரோ தெரியவில்லை என மிகுந்த வியப்புடன் குறிப்பிடுகின்றார். மேலும் அவர் தனது நூலில் தாயாரை பற்றி குறிப்பிடுகையில் 'ஆண்டவன் அவருக்குத் திவ்ய சாரீரமும் அருளியிருந்தார். சங்கீத மும்மூர்த்திகளின் கீர்த்தனங்கள் 300; க்ஷேத்ரக்ஞர் பதங்கள் 50; கோபால கிருஷ்ணபாரதி போன்ற கவிகளின் பாடல்கள் பல நூறு; இது தவிர அந்த காலத்து ஸ்திரீகளுக்கே உரித்தான கல்யாணப் பரிகாசப் பாடல்கள், நலங்கு, ஊஞ்சல், ஓடம்,

Page 68
கலைக்கேசரி இது 68
கும்மி, கோலாட்டம் போன்ற குதித்துப்பாடும் பாடல்கள் எவ்வளவு என்று சொல்ல முடியாது. இத்தகைய தாயிடம் கர்ப்பவாசம் செய்யக் கிடைத்த பாக்கியமும் அவருடைய அனுக்கிரகமுமே எனக்கு வாய்த்த இசையறிவும், ஒரு வகைக் குரலிமையும். இவ்வளவு மேதையான தாயிடமிருந்தும் எனது விளையாட்டுப் புத்தியால் எதையும் கற்றுக் கொள்ளாமல் இருந்து விட்டேன். ' என்று தனது ஆங்கத்தையும் எளிமையையும் வெளிப் படுத்தியுள்ளார்.
எல்லாக் கடவுள்கள் மீதும் கீர்த்தனைகளை இயற்றியுள்ள சிவனின் வாழ்வு முழுவதுமே பக்திப் பாடல்களாலும் இசை உணர்வோடுமே பரிமளித்தது. இசையுலகின் மும்மூர்த்திகள் மீதும் மிகுந்த மதிப்பும் ஈடுபாடும் கொண்டிருந்த சிவன் 1923 இல் தனது முதல் இசைக் கச்சேரியை தியாக ராஜசுவாமிகளின் உற்சவத்திலே - தஞ்சாவூர் வைத்தியநாதையர் மிருதங்கத்துடன் பாப்பா வெங்கட்ராமையர் பிடில் வாசிக்க மூன்று மணித்தியாலங்கள் வரை கனிவு, குழைவு, இராகம், பக்தி, சோகம், அன்பு, காதல் எனப் பல பாவங்களும் வெளிப்பட அழகாகப் பாடிக் கேட்போரை இன்ப உணர்வில் ஆழ்த்தினார். தொடர்ந்தும் பல தியாகராஜசுவாமிகளின் உற்சவங்களில் கலந்து கொண்டுள்ளார். இவரது இசையாற்றலின் மகிமையையுணர்ந்தோர் 'தமிழ்த்தியாகையா' என்று இவரைக் குறிப்பிடுவர். பல இசைமேதைகள், இசைப்புலமையாளர் போன்றோருடன் தொடர்பும் உறவும் கொண்டிருந்தாலும் தனது குருவாகக் கோனேரி ராஜபுரம் வைத்தியநாத ஐயரையே வரித்துக்

கொண்டார். அவரும் இவரைப் பாடச் சொல்லி ஊக்கப்படுத்தியும் உற்சாகமூட்டியும் வந்தார். டாக்டர் செம்மங்குடி சீனுவாச அய்யர் தான் இருக்கும் தினவனந்தபுரத்திற்கே சிவனை அழைத்துப் பாடல்களை
இ ஸ்வரப்படுத்தி, அவற்றைக் கல்கியில் வெளியிட்டுள்ளார்.
நூற்றுக்கணக்கானவர்கள் பலர் சிவனுடைய சிஷ்யர்களாக இருந்தாலும் விசேடமாக எம்.எஸ். சுப்புலஷ்மி, - மதுரைமணிஐயர், லால்குடி ஜெயராமன், எஸ்.ராமநாதன், டி.கே.பட்டம்மாள், டி.கே. ஜெயராமன் ஆகிய ஒரு சிலரைக் குறிப்பிட்டாலே சிவனாரின் மகிமையை, பெருமையை அறிந்து கொள்ளலாம்.
ஆரம்பகாலத் திரை இசையிலே கர்நாடக சங்கீதமே முற்றுமுழுதாக இடம்பிடித்திருந்தது. எம்.கே.தியாகராஜபாகவதர், எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோர் பாபநாசம் சிவன் இயற்றிய பாடல்களை பாடியுள்ளனர். பல தசாப்தங்களாகச் சிவனின் பாடல்களே திரையிசையில் முதன்மை பெற்றிருந்தது. இவரது பாடல்களை பி.யூ.சின்னப்பா, தண்டபாணிதேசிகர், ஜி.என்.பாலசுப்பிரமணியம், ராதா ஜெயலஷ்மி, டி.ஆர்.மகாலிங்கம், என்.சி.வசந்தகோகிலம், செருகளத்தூர் சர்மா போன்ற பலர் பாடிச் சிவனின் அற்புதமான பாடல்களுக்கு உணர்வும் உயிர்ப்பும் கொடுத்துள்ளனர்.
'தமிழிசை இயக்கம் செயற்படு முன்னரே தமிழ் மொழியில் பல கீர்த்தனைகளை ஆக்கி தமிழ் இயல் இசைக்கு மென்மேலும் உரமூட்டிய பாபநாசம் சிவனின் நாமமும் தமிழ் மொழி இருக்கும் வரை வாழ்ந்து கொண்டே இருக்கும்.

Page 69
செய்ற வேலைய
மாலை 6 ம6 Full Servi
இப்பொழுது உங்கள் வேலையை பாதியில் நிறு எமது அனைத்து NDB வங்கிக் கிளைகளும் உ செய்யும் பொருட்டு வார நாட்களில் மாலை 6 |
வேலைகளை முடி
NDB
ESE
வேலை
அழையுங்கள் 011244 8888 AA- (Ika) Fitch Rating - நெஷனல் டிவலெப்மென்ட் பேங்க் பிஎல்சி ஆனது, இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வையின் கீழ் தாங்கும் ஒரு வர்த

முடிச்சுட்டே வாங்க,
ணி வரைக்கும் ce Banking
த்திவிட்டு வங்கிக்கு வருவதற்கு அவசியம் இல்லை. ங்களது எந்தவொரு வங்கித் தேவைகளையும் பூர்த்தி மணி வரை Full Service Banking. அதனால் உங்கள்
த்துவிட்டே வாருங்கள்.
பு
1 முடிச்சுட்டே வாங்க)
HNDBவங்கி
5 வங்கியாகும்.

Page 70
KALAIKESARIS 70 Culture
Navarathri
avarathri, a festival held over nine holy days in October, celebrates the victory of
the Hindu goddess Durga over the demon Mahishasura. It is said that when Mahishasura, the spiteful demon who was a devotee of Lord Shiva, acquired unbeatable powers of eternity, he started destroying innocent lives.
In order to stop the demon from taking over the three lokas or worlds, accordingly Swargaloka (Heaven), Bhuloka (Earth), Patalloka (Nether – World), Lord Brahma, Lord Vishnu, and Lord Mahesh of the Hindu Trinity united their supreme powers and created the warrior goddess Durga who entered a war with
Mahishasura. This war extended over nine days and on the tenth day Durga beheaded the demon. These nine nights signify the festival of Navarathri.
The word Navarathri literally means nine nights in Sanskrit, nava meaning nine and rathri meaning nights. During these nine nights and ten days, nine forms of Shakti are worshiped. The tenth day is com
monly referred to as Vijayadashami.
This festival is celebrated in the ‘pratipada’, first day of the bright fortnight of the lunar month of Ashvina. This year it is celebrated from 5th October to 14th October.
The festival is also known as Sharad Navarathri, as it is celebrated during Sharad or beginning of
winter (September-October); the festival dates change according to the lunar calendar. It is celebrated with great zeal all over India and among the Hindu Diasporas around the world including Sri Lanka, UK, Canada, Malaysia, Singapore, and USA.
Navarathri coincides with the end of the rainy season. It is considered to be an auspicious time as it is generally associated with the sowing of seeds and

watching new seeds sprout - a sign of prosperity and abundance. Most people consider it the best time of the year to undertake or start new ventures.
During Navarathri, devotees of Durga fast and pray for health and prosperity. On these days different
manifestations of Durga or Shakti are worshipped every night. These are the most popular forms under which she is worshipped: Durga - goddess beyond reach; Bhadrakali - the auspicious power of time; Amba or Jagdamba - mother of the world; Annapurna - giver of food and plenty; Sarvamangala - auspicious goddess; Bhairavi - terrible, fearful, power of death; Chandika or Chandi - violent, wrathful, furious; Lalita - playful; and Bhavani - giver of existence.
Navarathri is celebrated by fasting on all nine days and worshiping the Mother Goddess in her different forms. It is divided into sets of three days to adore three different aspects of the supreme goddess. The first three days of Navarathri are dedicated to Goddess Durga – the warrior goddess - dressed in red and mounted on a lion. Her various incarnations - Kumari, Parvati and Kali - are worshipped during these days. They represent the three different classes of womanhood that include the child, the young girl, and the mature woman. The next three days are dedi

Page 71
Kolu pictures taken at Mrs. Haripriya Mohan's House on Navarathri Function
cated to Goddess Lakshmi – the goddess of v and Prosperity - dressed in gold and mounted owl. The last three day are dedicated to Go Saraswati – the goddess of knowledge - dres:
milky white and mounted on a pure white sw order to have all around success in life, bel: seek the blessings of all three aspects of the e femininity, hence the nine nights of worship.
All around the world, the Navarathri pi performed for nine days, and work starts i from the tenth day, which is celebrate Vijayadashami. On this day, books are placı a puja in houses, nursery schools, or in tems front of the gods and goddesses. After wo ing the goddess Saraswati, one of the nine of goddess Shakti, the books are taken out ce niously for reading and writing. Vijayadash; considered an auspicious day for initiating ch into writing and reading, which is called V ambham or the day in which the children are ated into the world of letters.
On the first day of Navarathri, nine grai

KALAIKESARI
planted in a clay pot and placed in the puja room of each house. The 'navathaniyam' or nine grains are nell (paddy), ell (sesame), koll (horse gram), payaru (green gram), uzhunthu (black gram), solam (maize), irungu (a variety of grain), samai (millet), and kurakkah (a variety of grain). These nine grains are grown for prosperity.
After the puja on the tenth day, the nine grains are pulled out of the pot and given to devotees as a blessing from god. The seedlings are placed on their caps, behind their ears, and inside books to bring good luck. This custom suggests a link to harvesting. The sowing and reaping of barley is symbolic of the “first fruit.” Soon after this festival, the sugarcane crop is harvested and the winter crops are sown. Navarathri is a period of introspection, purification, and a good time to start new ventures.
Another important custom practiced during Navarathri is setting up of 'golu’ or structure with shelves. The golu represents the divine presence of Goddess Shakti. The shelves of the golu are filled with varieties of statues (men, women, animals etc) and predominantly with that of gods and goddesses, which are placed on the odd numbered padis (tiers). It is a traditional practice to have at least
some wooden dolls as well as a figurine of a boy realth
and a girl together. In front of the golu, a “kuthuvilon an
akku” (small lamp) is lit to make the golu brighter. ddess
In the evening of Vijayadasami, any one doll from sed in
the golu is symbolically put to sleep to mark the an. In end of that year's Navarathri golu. Prayers are ofievers
fered to thank God for the successful completion of divine
that year's golu and for a successful one next year.
Then the golu is dismantled and packed up for the uja is next year. afresh This auspicious time is considered to be a period ed as of purity, and therefore devotees are vegetarian. ed for During the fasting period, only fruits, milk, pota
les in
to, and other root vegetables are eaten. Foods like rship- grains, alcoholic drinks, wheat, garlic, and onion forms are to be avoided as it is assumed that they absorb remo- negative energies. ami is Most devotees take a single meal during the Fldren
day. The rest of the day is spent chanting mantras, idyar
prayers, and religious hymns related to the godiniti
dess. It is believed that practicing these rituals and
traditions during Navarathri helps to cleanse and as are purify one's body and soul. VE

Page 72
SAR
Title
Guernica Artist
Pablo Picasso Year
1937 Medium Oil on canvas Location Museo Reina Sofia, Madrid
Dimensions 137.4 in * 305.5 in (349cm * 776 Photo Source www.picasso.org
Art is a lie that makes us realize the truth" - Pablo Picas
- Pablo Picas
“Guernica is to painting what Beethoven's Ninth Symphony is to music: a cultural icon that speaks to mankind not only against war but also of hope and peace."
- Alejandro Escalona

Scm)
SO

Page 73
uernica, a mural-sized oil painting, was painted by Pablo Picasso in 1937 as his reaction to the aerial bombing of the vil
lage of Guernica in Spain by German and Italian fighter planes during the Spanish Civil
War (1936 – 1939).
The small village of Guernica, in the province of Biscay in Basque Country, had a population of approximately a thousand citizens, mostly women and children as the men were away fighting. In 1937, the village was bombed under a request made by Spanish nationalists. It was seen by many as one of the
most horrific uses of brutal force.
Pablo Picasso, born on 25th of October 1881, was a Spanish painter, sculptor, printmaker, ceramicist, and stage designer. He was trained by his father, a professor of drawing, and exhibited his first work at 13.
The Spanish Republic appointed him to paint this large mural about the bombing to display at the 1937 World's Fair in Paris. Guernica remains not only his most overt anti – war statement, but one of the most well known anti – war statements of all time as well. Picasso depicts the cataclysms of war as well as the anguish and destruction it inflicts upon people, especially innocent civilians. The mural has come to symbolize military atrocities, to the extent

KALAIKESARI
that subsequent attacks around the world are sometimes dubbed ‘the new Guernica.'
Picasso’s abstract style serves to deliberately confuse the spectator’s gaze at the centre of the painting, where figures and events can be picked out only after careful analysis. He uses striking symbols in order to create visual imagery. In the painting, you can see both humans and animals in a state of panic and fear, while buildings are destroyed by the violence. The use of black, white, and gray colours in the mural creates a somber mood expressing pain and chaos, whilst communicating the central theme of war.
In the centre, a horse is shown in agony. The spear that runs through the horse creates a visibly gaping
wound. The composition is set within a room. On the extreme left, a wide – eyed bull looms above a woman grieving for a dead child she is holding, while on the extreme right a building is in flames. The burning building may reflect the destructive power of the civil war. The bull on the left is the crucial link between the human and animal aspects of war, as it appears to stop to consider the pain of the grieving woman. Pablo Picasso seems to bring
man down to the level of beasts. The bull and the horse are very important characters in Spanish culture, and thus, Picasso cleverly chooses them as images to symbolize people.
A picture of a dove holding an olive branch is marked on the wall behind the bulb. The bright light which cuts through the dove may represent hope. The light bulb above the horse's head symbolizes the evil eye over the suffering. A woman peers into the room through an open window, her extended hand holds a lit candle. The look of horror on her face clearly shows that she was not prepared for the scene that she is witnessing.
Overall, it is clear that the painting was completed when Picasso was at low ebb, uncertain whether Spain would ever recover from the horrors of its war. The extreme right of the painting is perhaps the most conventional, featuring as it does a human figure on fire and wracked with pain. This is a more realistic portrayal of another part of the horrors of war, with flames surrounding the figure.
On the extreme right corner of the canvas, a dark door opens. There are different interpretations of this door. Some see it as the only hope for those trapped in the painting, as if they can still escape.

Page 74
KALAIKESARIS 74
Others see it as an ominous sign, a doorway to nothingness, or a sign that Picasso believes the conflict will lead only to destruction. It is possible to see the door as both simultaneously offering an equal chance of either oblivion or salvation.
This painting became the best-known piece of political art yet created. Seventy years after Guernica was bombarded, Picasso’s famous painting has helped keep its story alive so that others might have their actions checked. Shortly after the invasion of Iraq, it emerged that a copy of Guernica, which had been hanging in the Pentagon, had been ordered to be covered up while
military planners prepared for the attack. It has stood for half a century as the most powerful indictment of man's inhumanity against man that was produced by a painter in the 20th century. ook
Looking at this complex painting, it seems like it is the response of an artist consumed by the issues in front of him. Perhaps Picasso was trying to express his role and power as an artist in the face of political power and violence. Perhaps it is also his self-assertion of his own humanity and compassion, the only thing an individual can do against overwhelming forces such as political and military crimes, war, and death. It seems like Picasso concentrated his previous decades of expertise, imagery, techniques, and life experience into the painting.
The great piece was painted in Paris, where it was first exhibited, before being placed in the care of the Museum of Modern Art. It is said that it was Picasso's express

Picasso's Guernica drawn to display at the 1937 world's fair in Paris, remains not only
Picasso's most overt anti-war statement, but one of the
most well known anti-war statements of all time as well
desire that the painting should not be delivered to Spain until liberty and democracy had been re-established in the country. On its arrival in Spain, in September 1981, it was first displayed behind bomb and bullet proof glass screens at the Cason Del Buen Retiro in Madrid in time to celebrate the centenary of Picasso's birth on October 25th. The exhibition was visited by almost a million people in the first year. In 1992, Guernica was moved permanently to the Museo Reina Sofia.
R.Priyanka

Page 75
| Megalithic Temple
Malta is embellished with stunnir ruins of catacombs, Medina - a w the siege, relics from the order of palace. But what captures worldu Temples, also called Megalithic te
Tarxlen Temple, Malta

KALAIKESARI Heritage 75
es of Malta
ng churches, hypogeum, roman Falled town built to withstand - St. John, and grand masters
vide attention are the Neolithic emples.
Falta is a country which belongs to the southern European archipela
go in the centre of the Mediterranean, south of Sicily. It covers a land mass of just over 316 km’, only slightly larger than the islands of the Maldives combined,
making it one of the world's smallest states (it is approximately 17 miles long and 9
miles wide).
Archeologists claim that there were settlers in the Maltese islands as early on as 5,500 BC consisting of Stone Age hunters and farmers from Sicily. Much later, in the 1st century, St. Paul the Apostle of Jesus Christ was shipwrecked on Melite, as the Greeks called the island. Catholicism is the official religion in Malta as declared by the
Maltese constitution.
Throughout history, Malta's location has given it great strategic importance, and a succession of powers including the Phoenicians, Greeks, Romans, Arabs, Normans, Aragonese, Habsburg Spain, Knights of St. John, French and the British ruled the islands. A glance through more recent history shows that during World War II, 800 allied vessels passed through Malta each month. In September 1954, Malta became inde
pendent, and in 1974, became a republic.
Malta is embellished with stunning churches, hypogeum, roman ruins of catacombs, Medina - a walled town built to
withstand the siege, relics from the order of St. John, and grand masters palace. It was also the setting of Popeye's village (as depicted in the film) and of other films, such

Page 76
KALAIKESARIA
76
Mnajdra Temple, Malta


Page 77
as Troy. But what captures worldwide attention are the
Neolithic Temples, also called Megalithic temples.
Malta is internationally renowned as a tourist destination, with numerous recreational areas and historical monuments, including nine UNESCO World Heritage Sites, most prominently the Megalithic Temples, which are some of the oldest free-standing structures in the
world.
The story goes that the population on Malta grew cereals, raised domestic livestock and, in common with other ancient Mediterranean cultures, worshiped a fertility figure represented in Maltese prehistoric artefacts. A culture of megalithic temple builders then either supplanted or arose from this early period. During 3,500 BC, these people built some of the oldest existing, free-standing structures in the world in the form of the megalithic Ġgantija temples (pronounced Jgunteeya - Maltese for “Giants Tower”) on Gozo. The Ġgantija temples are older than the pyramids of Egypt. Other early temples include those at Ħaġar Qim (pronounced Haja Queem – Maltese for “Standing/Worshipping Stones”) and Mnajdra.
Archaeologists believe that these megalithic complexes are the result of local innovations in a process of cultural evolution. This led to the building of several temples of the Ggantija phase (3600-3000 BC), culminating in the large Tarxien temple complex, which remained in use until 2,500 BC. After this date, the temple building culture disappeared.
There are no written records for temple construction, so it is only through stipulation that the reason for their existence can be deduced. Archaeologists classify the massive stone structures as temples based on the presence of altars and offering bowls, the evidence for animal sacrifice, and the ubiquity of ‘cult’ figurines. In addition, there is no evidence that anyone actually lived at the monument sites, nor could they be burials as burials, are only associated with the Hal Saflieni Hypogeum (underground tomb) on Malta and the Xhagra stone circle near Ggantija on Gozo.
The evolution of man's civility and intelligence throughout world history is a fascinating journey. Moreover, to be able to witness the handiwork of a civilization that has long gone is in itself a very unique and rare opportunity. However, whether to witness UNESCO World Heritage Sites or to observe Stone Age culture, the Megalithic Temples of Malta are a must see for all.
Architecture and Construction
The Maltese temple complexes were built in different locations and over a wide span of years. While each

KALAIKESARI
77
individual site has its unique characteristics, they all share a common architecture. The approach to the temples lies on an oval forecourt, leveled by terracing if the terrain is sloping. The forecourt is bounded on one side by the temples' own façades, which faces south or south-east. The monuments’ façades and internal walls are made up of upright stones or slabs called orthostats, a row of large stone slabs lay on end.
The centre of the façade is usually interrupted by an entrance doorway forming a trilithon (a structure consisting of a pair of two orthostats supporting a third stone set horizontally across the top). Further trilithons form a passage, which is always paved in stone. This in turn opens onto an open space, which then gives way to the next ele
ment, a pair of D-shaped chambers, usually referred to as ‘apses’, opening on both sides of the passage. The space between the apses’ walls and the external boundary wall is usually filled with loose stones and earth, sometimes containing cultural debris including pottery shards.
The main variation in the temples lies in the number of apses found; this may vary to three, four, five or six. If three, they open directly from the central court in a trefoil fashion (in the form of three arcs arranged in a circle).
In cases of more complex temples, a second axial passage is built, using the same trilithon construction, leading from the first set of apses into another pair, and either a fifth central or a niche giving the four or five apsial form.
In one case, at the Tarxien central temple, the fifth apse or niche is replaced by a further passage, leading to a final pair of apses, making six in all. With the standard temple plan, found in some thirty temples across the islands, there is a certain amount of variation both in the number of apses, and in the overall length - ranging from 6.5m in the Mnajdra east temple to 23m in the six-apsed Tarxien central temple.
The external walls were usually built of coralline limestone, which is harder than the globigerina limestone used in the internal sections of the temples. The softer globigerina was used for decorative elements within the temples, usually carvings. These features are usually sculpted in relief, and they show a variety of designs linked to vegetative or animal symbolism.
These usually depict running spiral motifs, trees and plants, as well as a selection of animals. Although in their present form the temples are unroofed, a series of unproven theories regarding possible ceiling and roof structures have been debated for several years.
By Devaka de Silva

Page 78
KALAIKESARI 78 Tradition
LE CLAHulinga:
2 oothu is a dance, or folk art, which originated
from South India. More precisely, koothu refers
to therukoothu or street dance or street play, which is usually performed in the village square. The Sangam Literatures seen in Tamil Nadu mention that this art reached its peak in India during the 3rd and 4th century BC.
Koothu has preserved the fundamental conception of drama as a dance, namely the representation of a series of actions “through rhythmic motion.” The themes and stories of koothu were and still are religious and moral in character, perhaps reflecting its didactical nature. More than entertainment, it helps in educating the rural people about their religion and history.
In the early 19th century, during the colonial era, the British brought thousands of labourers from South India to Sri Lanka in order to work on the tea and rubber plantations. They faced a hard life, and folk traditions were one of the few forms of entertainment which helped them to recall the memories of their homeland. Koothu performances not only connected them with their homeland but also with their community. Being a vital ele
ment in the community life of the Indian Tamil people, it reflected in many ways the customs and manners of the people as well as the distinct phases of their social and institutional life.

Kaman Koothu
This particular folk theatre deals with the life and death of Lord Kama, the Hindu god of love and passion
There are many types of koothu such as Nattu Koothu, Kuravai Koothu and Valli Koothu, which are about the state and culture of different peoples in India. Kaman Koothu is a centuries old folk theatre that tells the story of the life and death of Lord Kama. Today, it is still performed by the Tamils of Indian origin who live in the
hill country region of Sri Lanka.
Folk play consists of dancing, acting, and musical dialogue inextricably interwoven. Every spring the
workers of the estate gather to celebrate the festival of Lord Kama. Here actors and spectators perform together. The performance stretches with plots, sub-plots and sometimes a play-within a play. The songs, music and dance all contribute to the drama. On the sidelines, are showcased various legends from Hindu mythology.
The entire village participates in the long-running theatre, which can go from 11 to 30 days. It is a time for celebration. The whole troupe is generally comprised of men; even female characters are performed by males. The play starts late in the evening and runs throughout the night, mainly because it begins after the men return from a day at work.
This particular folk theatre deals with the life and death of Lord Kama, the Hindu god of love and passion. Kaman and Rathi, his consort, are the main characters. The tale relates the story of how Lord Shiva, the Hindu god of destruction, reduced Kama to ashes when the latter disturbed his prayers. When Kama's grief stricken
wife prayed to Shiva to return her husband, he agreed to restore Kama, but only as an invisible man. Kama’s wife
was happy as her husband had returned to her.
Unlike modern theatrical settings with sophisticated sets including lights, microphones, props, and a constant change of scenery, these traditional theatrical perfor
mances do not employ all facilities, even up to date. At times, the only source of stage lighting came from oil torches. The play was originally performed in the open

Page 79
The play is acted out through song, with no dialogues. The characters are identified by the different colours applied on their faces.
air and usually on a rai platform. Actors move used half the stage to b and audible for those v rounding them. Instead a piece of cloth was us actors could stand befo duced to the audience.
The play is acted out no dialogue. The chara by the different colours faces. The actors are di ful, heavy costumes wi make-up. They put on dresses, sparkling shou wide colourful skirts to ters of the play. Artists in their own voice and reach the entire crowd.
Koothu is the collecti tival of the entire villag actors, singers, musici from neighbouring vill present for the perform gathers everyone in on strengthen the relations
Kaman Koothu is vei the rural areas in the up stood through the ages trace. Today, this festiv the elders of the comm incredibly interested in culture and traditions t from their ancestors. V

A KALAIKESARI
79
im
sed circular d in a circle or -e more visible
iewers surI of stage curtains, ed behind which ore they were intro
through song, with cters are identified s applied on their ressed in colourth bright elaborate high towering head Llder plates, and - portray the charac
are trained to sing in a high pitch to
ive ritual and fesge. Relatives of ans and other people sages are invited and Lance. This festival
e place and helps ship among them. y popular among country. It has without any modern -al is encouraged by
unity, who are - promoting the
hat they had learned

Page 80
KALAIKESARIS
80 Architecture
Western Profile
Dogovoros
DIENRE
ERRE

The World's
1. Ferdinand the Saint
(Son of King Johnl of Portugal) 2. Gil Eanes - Navigator 3. Pedro Nunes – Mathematician 4. Ja come de Majarca -
Cartographer 5. Games Eanes de Zurara -
Chronicler 6. Nuno Goncalves - Painter 7. Luis Vaz de Camoes 8. Frei Henrique Carvalho 9. Frei Goncalo de Carvalho 10. Philippa of Lancaster 11. Henry the Navigator 12. Joao Goncalves Zarco -
Navigator 13. Pero de Alenquer — Navigator 14. Pero Escobar – Navigator 15. Pero da Covilha – Traveller 16. Fernao Mendes Pinto -
Explorer and Writer 17. Peter Duke of Coimbra -
(Son of King John I of Portugal)
nog
15

Page 81
Explorers in
Padrão dos Descobrimentos, or Monume visited tourist attractions located in the n 52-metres high, the monument stands ve Tagus in the old harbour, the port from w
The Monument of Discoveries was first built as the ce tral piece for the World Fair in 1940. It was re-fabricate in 1960 to mark the quincentennial anniversary of Hen the Navigator's death (1394 – 1460), while, paying hon age to all the brave Portuguese sailors who ventured for in search of undiscovered land.
This monument was structured as a three-sailed shi ready to depart. Sculptures of important historical figure such as Vasco da Gama, King Manuel, Camoes, Lusiad
Magellan, Cabral, and several others stand erect on eac side of the ship. The figures are led by Prince Henry th
Navigator, who stands at the prow staring out towards th Atlantic Ocean as he holds a small vessel.
The design of the monument takes the form of the pro
1 5 1 1
CEIL 1505

KALAIKESARI
81
Stone
nt to the Discoveries, is one of Lisbon's most eighborhood of Belem. Approximately rtically along the northern bank of the River hich many great expeditions had once set sail.
! 2
1- of a caravel, a ship used in early Portuguese exploration.
The ship looks as if it is frozen in mid-swell and ready to strike out across the ocean. On either side of the monument are two ramps that meet at the prow, which is dominated by the statue of Henry the Navigator, who founded an institute in Sagres, Portugal, which included teaching
of navigation techniques and sponsoring of expeditions es among its objectives. S, On either side of the ramps are 16 standing figures, in
cluding crusaders, navigators, monks, cartographers, and Cosmographers. They represent a historical synthesis of 33 significant players who are linked with discoveries.
Each one of these idealized figures is designed to show w the movement of the discoverers towards the front to the
6
PE)
LẢO
15 0 9
ALANCA

Page 82
KALAIKESARIS
82
Eastern Profile
Vasco da Gama
unknown sea. The upper part of the monument represents the sails of a caravel surmounted by a representation of the Portuguese arms of the 14th and 15th centuries. The background of the monument is made up of a design of 3m waves carried out in traditional Portuguese pavement
mosaic – calcada.
The hollow interior of the monument consists of an auditorium with space for 101 people, a stage of 18 square metres with a film projection booth, two halls for exhibition, and four rooms. There is also an elevator that can be
used to reach the top of the monument.
A large map, showing the routes taken by the discoverers on their jouneys across the world, lies on the ground in front of the memorial in multi-coloured marble with the dates of the discoveries.
The idea of constructing this imposing monument as a temporary centre piece for the 1940 World Fair was put forward by Portuguese architect José Angelo Cottinelli Telmo and sculptor Leopoldo de Almeida in 1939. It was
made of wood and plaster and was later dismantled after the event in 1943. This event was intended to increase trade during the harsh depression years and for Portugal to enhance its position of neutrality within the growing tensions of the world.
Later, as there was a trend of romantic idealization of ]

Fernao de Magalhaes
Joao de Barros
Bartolomeu Dias
Cristovao de Gama
Portuguese history, the Portuguese government and the municipal of Lisbon decided to create the Discoveries Monument as a permanent feature.
The re-fabrication was completed in 1960 to coincide with the 500th anniversary of the death of Henry the Navigator. This refabricated memorial monument was designed by Portuguese architects Cottinelli Telmo (who upon his death was replaced by architect Antonio Pardal Monteiro) and Leopoldo Almeida. The monument was made of cement and rose-tinted stone, while the statues were made of limestone. It measures 46m long from north to south and 20m from west to east.
There are three aspects to Padrão dos Descobrimentos. The first is the well photographed and documented exterior, the second is the small museum inside the monuCment that details the history of Lisbon, and the third is the viewing platform at the top of the structure where one can see the Belem neighbourhood, Belem tower, Geronimo’s
Monastery dated from the age of discovery, and many attractions along with the 360 degree view over the river.
Today, Lisbon’s imposing and iconic monument is open from Tuesday to Sunday between 10:00 - 19:00 during che summer season (May – September) and 10:00 - 18:00 during the low season (October – April). It is closed on
Mondays as are most monuments in Belem. V

Page 83
விசேட சீன உணவு 6 நண்பர்களுடனும் கு 60s, 70s, 80s தினமு
ISANG TAO
விஜeouse
TSIN
Chinese Seafoo - Race Course Promenade, Reid Aver 'Resentations: 011269 89 89 ) Email: rese
தினமும் திறந்திருக்கும் : பகலுணவு : கானை
கடற்கரையில் சு
சீனகடலுணவை LOON TA0 Chinese seafood on the சேவக் 60s, 70s, 80s தினமும்.
LOON TAO Chinese Seafood on the beach 43/12 College Avenue, Mount Lavinia, Sri Lanka. Reservations: (011) 2722723 | E: reservations@loor தினமும் திறந்திருக்கும் : பகலுணவு : காலை 11 - பி.ப. 3 இரவு

வகைகளையும் கடலுணவு வகைகளையும்
டும்பத்தினருடனும் சுவைத்து மகிழுங்கள் ம் இரவு 7.00 - 11.00 வரை நேரடி இன்னிசை
G TAO bd @ Race Course hue, Cinnamon Gardens, Colombo 07. 'rvations@tsingtao.lk | Web: www.tsingtan.lk
311 - பி.ப. 3 இரவு உணவு : மாலை 6 - இரவு 11
வைசொட்டும் உண்டு மகிழுங்கள் இரவு 7.00 - 11.00 வரை நேரடி இன்னிசை
Certificate of Excellence
இக்கா
LIVING
taO.Com | W: www.loontao.com உணவு : மாலை 6 - இரவு 11
© 2
----
NT++ 25512 14:4ா;

Page 84
6434
Printed and published by Express Newspapers (Ce

இலங்கையின் அரவணைப்புடன் கூடிய
புன்முறுவலை கண்டறியுங்கள்!
அது பல்லாண்டு காலமாக எண்ணற்ற இதயங்களை அரவணைத்த பெருமைமிக்க ஒரு பாரம்பரியத்தின் பகுதியாகும்,
இலங்கையிலுள்ள நாம் ஒவ்வொரு பயணத்தையும் மறக்க முடியாத அனுபவமாக மாற்ற நேசத்துடன் கூடிய தனித்துவமான பண்பினை அதி நவீன தொழிநுட்பத்துடன் இணைத்துள்ளோம்.
அழையுங்கள் 1979
Srilankan
www.srilankan.com
| Air 28 X3 'F& 448 4 318
=ylon) (Pvt)Ltd,at No.185,Grandpass road,Colombo -14, Sri Lanka.