கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆரம்பப் புவியியல்: எட்டாம் வகுப்புக்குரியது

Page 1
B.

ஆரம்பப் புவியியல்

Page 2

ஆரம்பப் புவியியல்
அரிசல் பட கா எ ர் ரெகி த க
JA EFNA CHUNDIKULU GIRLS COLLEGE

Page 3

ஆரம்பப் புவியியல்
- எட்டாம் வகுப்புக்குரியது -
படப்பயிற்சி நூல் தனிநூலாகவுளது |
(புதிய பாடத்திட்டப்படி ஆச்கப்பட்டுள்ளது.)
ஆக்கியோன்; க. குணராசா, B. A. Hons, (Cey.) C. A. S. ( முன்னாள்:-
* புவியியற் பயிற்சியாளர், இலங்கைப் பல்கலைக்கழகம், பேராதனை. * புவியியல் உதவி விரிவுரையாளர், இலங்கைப் பல்கலைக்கழகம், கொழும்பு.
அதிதிப் போதனாசிரியர், கனிட்ட தொழில் நுட்பக் கல்லூரி, யாழ்ப்பாணம்.
புவியியல் ஆசிரியர். கொக்குவில் இந்துக்கல்லூரி, கொக்குவில்.
அதிதி விரிவுரையாளர், அரசினர் ஆசிரிய கலாசாலை, கொழும்புத்துறை.
பயிற்சிகள் தயாரிப்பு:
கமலாம்பிகை B. A. (Qey.)
கு.
திருத்திய பதிப்பு
49.797 tப 2ல்

Page 4
0 திருத்திய ஐந்தாம் பதிப்பு: பெப்பிரவரி 1973
(ு இந்நூலின் எ ப் ப கு தி யும் வெளியீட்டாரின் அனுமதியின்றி வேறெந் நூலிலும் எடுத்துக் கையாளப்படக் கூடாது. வாக்கிய அமைப்பு விளக்கப் படங்கள், நிழற் படங்கள், பயிற்சிப் படங் கள், அத்தியாய ஒழுங்கு, பயிற்சி ஒழுங்கு, நூலமைப்பு, அட்டை அமைப்பு எனும் எதனையும் பிறர் வெளியீட்டாரின் அனுமதி யின்றிக் கையாளக் கூடாது எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விற்பனையாளர்:
ஸ்ரீ லங்கா புத்தகசாலை. 234, காங்கேசன் துறை வீதி,
யாழ்ப்பாணம்.

ARAPUBA PUVIIYAL (The Fox wiations of Geography)
For Grade: 8
By: K.KUNARASAH B. A. Hons (Cey.) G. A. S. Former: *
Tator, Dept. of Geog. University of Ceylon, Peradeniya. Asst. Lecturer, Dept. of Geog.
University of Ceylon, Colombo * Visiting Instructor in Com. Geography.
Junior Technical College, Taffna. Tutorial Staff, J/Kokuvil Hindu College. Kokavil
Visiting Lecturer in Geography. Colombagam Government Teachers College, Jaffna. Published By:
SRI LANKA VELIYEEDU 234, K. K. S. Road,
JAFFNA.
சான்றிதழ்
பா. பி. ஆ. ச. 3/540 ஆரம்பப் புவியியல் 1952-ம் ஆண்டு பெப்ருவரி மாதம் 29-ந் திகதி வெளி வந்துள்ள இலங்கை அரசாங்க வர்த்தமானப் பத்திரிகை யில் உதவி நன்கொடைபெறும் தன்மொழிப் பாடசாலை களுக்கும், இரு பாஷைப் பாடசாலைகளுக்கும், ஆங்கில பாடசாலைகளுக்குமான ஒழுங்குச் சட்டத்தின் 19 (ஏ) ம் பிரிவில் பிரசுரிக்கப்பட்டதற்கமைய இப் புத்தகம் எட்டாம் வகுப்புக்குப் படிப்பித்தற்கு ஒரு பாடப் புத்தகமாக 1971-ம் ஆண்டு மார்கழி மாதம் 31-ந் திகதிவரை உபயோகித் தற்கு மகாவித்தியாதிபதி அவர்களால் அங்கீகரிக்கப்பட் டுள்ளது ,
பாடநூற் பிரசுர
(ஓப்பம் ) சோமரத்னவிஜயசிங்க ஆலோசனைச் சபை
செயலாளர் மலாய் வீதி, கொழும்பு-2
பாடநூற் பிரசுர ஆலோசனைச்சபை

Page 5
முன்னுரை
'ஆரம்பப்புவியியல்' என்ற இந் நூல், எட்டாம் வகுப்பிற்குரிய அர சினர் பாடத்திட்டத்திற்கும், வடமா கரண ஆசிரியர் சங்கப் பாடத்திட் டத்திற்கும் ஏற்ப ஆக்கப்பட்டுள்ளது. புவியியல் கற்கும் மாணவர்கள் தங் களது ஆரம்பப் புவியியல் அறிவைச் சரிவரப் பெற்றுக் கொள்வதற்கு இந் நூல் உதவும் என நம்புகின்றேன்.
இந்நூலில் ஏராளமான விளக்கப் படங்களும் பயிற்சிகளுமுள்ளன பல படங்கள் வர்ணப் படங்களாக இத் திருத்திய பதிப்பிலுள்ளன. இந்நூல் பல ஆசிரியப் பெருமக்களது அன் பான ஆலோசனை களுடன் - திருத்தி யமைக்கப்பட்டுள்ளது ;விலையும்குறைக் கப்பட்டுள்ளது. இந்நூலில் சில குறை கள் அறிஞர் பார்வையில் தென்பட லாம். அவற்றை அறியத்தரில் நன்றி யோடு ஏற்று அடுத்த பதிப்பில் திருத் திக் கொள்வோம்.
என் நூல்களை விருப்போடு உப யோகிக்கும் - ஆசிரியப் பெருந்தகை களுக்கு என் நன்றிகள் என்றுமுள்
ளது.
40, கல்லூரி வீதி, நீராவியடி, யாழ்ப்பாணம்.
அன்புடன், க. குணராசா

பொருளடக்கம்
பக்கம்
பகு தி: ஒன்று
முதலாம் பருவம் அத்தியாயம்
1: நமது பூமி
அகலக்கோடுகளும் நெடுங்கோடுகளும் இலங்கைப் புவியியல் நெற்செய்கை
வியாபாரத் தானியப் பயிர்கள் 6. இலங்கையின் வர்த்தகப் பயிர்கள் 7. இலங்கையின் ஏனைய விளைபொருட்கள் 8. பருத்திச் செய்கை
- 0 v * *
1 : : : : : ! !
10 20 27 38 45 52 66 71
பகு தி: இரண்டு இரண்டாம் பருவம்
9; காலநிலை மூலகங்கள் 10. காலநிலைப் பிரதேசங்கள் 11: இலங்கையின் நீர்ப்பாய்ச்சல் திட்டங்கள் 12. விலங்கு வேளாண்மை 13. பாற்பண்ணைத் தொழில் 14. மீன்பிடித் தொழில் 15. காடுகளும் காட்டுத் தொழில்களும்
76 88 98 106 110 113 121
பகுதி: முன்று மூன்றாம் பருவம்
129 137 141
16. இலங்கையின் கைத்தொழில்கள் 17. இரும்பு உருக்குக் கைத்தொழில்கள் ... 18.
இலங்கையின் நீர்மின்சக்தி 19:
உலகின் குடிப்பரம்பல் 20.
உலகின் பிரதான வியாபாரப் பாதைகள் 21; இலங்கையின் குடியிருப்புகள் 22: வினாத்தாள்
144
150 360 164

Page 6

பகுதி: ஒன்று
முதலாம் பருவம்
ஆ: பு: 2

Page 7
அத்தியாயம் :
நமது பூமி
1. ஞாயிற்றுத் தொகுதி
இரவு வேளையில் உங்கள் வீட்டு முற்றத்தில் நின்று கொண்டு, வானத்தை அண்ணார்ந்து பாருங்கள்; மின்மினிக ளென ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் ஆகாயம் எங் கும் நிறைந்து கண் சிமிட்டிக் கொண்டிருப்பதைக் காண லாம். உலகிற்கு ஒளியைத் தருகின்ற சூரியனும் ஒரு நட் சத்திரமே, ஆனால், சூரியன் பூமிக்கு மிகவும் அண்மையில் இருப்பதால், ஏனைய நட்சத்திரங்களை விடப் பெரியதாயும், நிறைந்த ஒளி தருவதாயும் விளங்குகின்றது. வானவெளி யில் நாம் காண்கின்ற நட்சத்திரங்களில் சில, நமது சூரிய னைக் காட்டிலும் பெரியனவாக இருக்கின்றன. ஆனால், அவை பூமிக்கு மிகவும் தூரத்தில் விலகி இருப்ப தனால் அளவில் மிகமிகச் சிறியனவாயும், மிக்க ஒளி அற்றனவாயும் காட்சி தருகின்றன,
நட்சத்திரங்கள் நிறைந்த இந்த வானவெளி வரை யறை செய்ய முடியாதது. நீங்கள் இருக்கும் வீட்டு வளவின் பரப்பினை அளந்து கூறி விட முடியும். ஆனால் வான வெளியின் பரப்பினை அளவிட்டுக் கூறமுடியாது. இந்த, வானவெளியை அண்டம் என்பர்.
இந்த வானவெளி எனும் அண்டத்தினை நீங்கள் வாழ் கின்ற கிராமம் அல்லது நகரம் என்று எடுத்துக் கொள் வோம். உங்கள் கிராமத்தில் பல குடும்பங்கள் வாழ்கின் றன. அது போன்றே இந்த அண்டத்திலும் பல கோள் குடும்பங்கள் உள். உங்கள் அப்பாவை நம்பி உங்கள் குடும் பம் இருப்பதுபோல, அண்டத்திலும் ஒவ்வொரு பெரும் நட்சத்திரத்தை நம்பிப் பல கோள் கள் இருக்கின்றன. இவற்றைக் கோள் தொகுதிகள் என்பர். இவற்றில் நாம் ஓர ளவு அறிந்ததாக இருப்பது சூரிய குடும்பம் ஆகும். இதனைச் சூரியமண்டலம் என்றோ ஞாயிற்றுத் தொகுதி என்றோ கூறுவர்.

நமது பூமி
11
ஞாயிற்றுத் தொகுதியில் புதன், வெள்ளி பூமி, செவ் வாய், வியாழன், சனி, யூரேனஸ், நெப்டியூன், புளூட்டோ எனும் ஒன்பது கோள் கள் அடங்கி உள்ளன. இந்த ஒன்பது கோள் களும் சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. சூரியனிலிருந்து பெற்ற ஒளியைக் கொண்டே இவை பிர காசிக்கின்றன.
சூரியனுக்கு மிக அண்மையில் இருக்கும் கோள் புதனா கும்: மிகத் தூரத்தில் காணப்படும் கோள் புளூட்டோ வாகும். புதனுக்கு அடுத்துக் காணப்படும் கோள்கள் வெள் ளியும் பூமியுமாகும். ஞாயிற்றுத் தொகுதியில் மிகப்பெரிய கோள் வியாழன் ஆகும்.
சூரியனின் விட்டம் 8,64,000 மைல்களென கணிக் கப்பட்டுள்ளது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் உள்ள தூரம் 9, 30,00,000 மைல்களாக இருக்கின்றது.
சூரிய குடும்பத்திலுள்ள சில கோள்கள் துணைக்கோள் களைக் கொண்டுள்ளன. பூமியின் துணைக்கோளாகச் சந் திரன் உள்ளது : சந்திரன் பூமியிலிருந்து 2,40,000 மைல் கள் தூரத்தில் அமைந்துள்ளது. இது பூமியைச் சுற்றிவர 29 நாட்கள் எடுக்கின்றது.
2. புவியின் வடிவம் பூமி கோள வடிவமானது என்பதை நம்பவும் ஏற்கவும் .மறுத்து, பூமி தட்டையான து என்று மக்கள் நம்பி வாழ்ந் திருக்கின்றார்கள். விஞ்ஞான ஆராய்வுகள் விரிவடையாத அக்காலத்தில், தாம் வாழ்ந்த ஒரு குறுகிய நிலப்பரப்பின் தட்டை வடிவத்தினை நோக்கி, உலகமே தட்டை வடிவ மானது என்று நம்பி வாழ்ந்தனர். ஆனால், விஞ்ஞான ஆய்வு வளர்ச்சியால் இன்று பூமி, கோள வடிவமானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
பூமி கோள வடிவமானது என்பதற்குப் பல சான்று 'களை இன்று கூறலாம்; அவையாவன:
- (அ) பூமியின் ஓரிடத்தில் இருந்து கிழக்குப் புறமாகப் புறப்பட்டால் அதே இடத்தை மேற்குப் புறமாக நாமின்று

Page 8
--0புளுட்டோ
நெப்டியூர்
யூரோம்
வியாழன்
0-செவ்வாய்
-O-பூமி
- வெள்ளி
-O-புதன்
படம் : 1 ஞாயிற்றுத்தொகுதி

நமது பூமி -
வந்துசேர முடியும்; பூமி தட்டை வடிவானது என்றால் அப்படி வந்து அடைய முடியாது - 1522 ஆம் ஆண்டில் மகெலன் என்ற கடலோடி முதன்முதல் உலகத்தைச் சுற்றி வந்து, உலகம் உருண்டையானது என்று நிரூபித்தான்.
(ஆ) சமுத்திரக் கரையிலிருந்து வெகு தொலைவில் வரும் கப்பல் ஒன்றின் பாய்மரத்து உச்சியே கரையில் நின்று பார்ப்போருக்கு முதலில் தெரிகிறது. கப்பல் கரையை நெருங்க நெருங்கத்தான் அதன் ஏனைய பகுதிகள் தெரி கின்றன. இதற்குக் காரணம் பூமி உருண்டையாக இருப் பதேயாகும். கப்பலின் பாய்மரத்து உச்சி முதலில் தெரி வதற்கும், பின் கரையை நெருங்க நெருங்க, பாய்மர த்து உச்சியிலிருந்து கப்பலின் ஏனைய பாகங்கள் தெரிவதற்கும் பூமியின் வடிவமே காரணமாகும்.
(இ அடிவானம் வட்டமாகத் தெரிவதற்கும், சந்திர கிரகண காலத்தில் சந்திரனில் விழும் பூமியின் நிழல் வட் டமாக இருப்பதற்கும் பூமி உருண்டையாக இருப்பதே காரண மாகும்.
(ஈ) ஞாயிற்றுத்தொகுதியில் காணப்படும் கோள்கள் யாவும் உருண்டையானவையாக இருக்கின்றன. பூமியும் ஞாயிற்றுத் தொகுதியில் ஒரு கோள்; ஆகையால் பூமியும் உருண்டை வடிவானது என்பதில் ஐயமில்லை.
பா (உ) றொக்கட், செயற்கைக் கோள் கள் என்பன வான வெளியினின்று பூமியைப் படம் பிடித்துள் ளன; பிடிக்கப் பட்ட அந்நிழற் படங்கள் பூமியின் உருண்டை வடிவினைத் தெளிவாகக் காட்டுகின்றன: அண்மையில் றொக்கெட் மூலம் சந்திரனுக்குச் சென்று திரும்பிய விண்வெளி வீரர்கள், சந்திரனிலிருந்து பூமியை நோக்கியபோது பூமி கோள வடிவமாக இருப்பதைக் கண்டனர்.
இக்காரணிகளினின்றும் பூமி கோள வடிவமானது என் பதனை நன்கு உணர்ந்து கொள்ளலாம்.

Page 9
படம்: 1 (அ) றொக்கட் பூமியை வான் வெளியினின்றும் பிடித்தபுகைப்
படம். பூமியின் கோள வடிவினைக் காட்டுகின்றது.
படம் : 1 (ஆ) சந்திரனில் நின்றுகொண்டு பூமி உதயமாவதை விண்
வெளி வீரர் ஒருவர் பார்க்கின்றார். 'பூமியோதயம் ' கோளவடிவாகத் தெரிகின்றது.
(படம்: 'ராலி

நமது பூமி
ப!
-7900 பைல்.
3. புவியின் அளவுகள் பூமியின் மேற்குக் கிழக்கான மத்திய விட் டம் 7926 மைல்களா கும், வடக்குத் தெற் கான முனை வு விட்டம் 79 00 மைல்களாகும்.
7926 மைல்.--தி பூமியின் மேற்பரப்பு 19,70,00,000 ச து ர
மைல்களாகும். இதில் மூன்றிலிருபங்கு நீர்ப் பரப்பாகும்; மிகுதியே நிலப்பரப்பாகும். பூமி
பெ பின் சுற்றளவு ஏறத்
படம் : 2 தாழ 25,000மைல்களா
பூமியின் விட்ட அளவுகள் கும்,
4. புவியின் இயக்கங்கள் (சலனங்கள்)
பூமி தன்னைத்தானே சுழல்வதோடு, சூரியனை யும் நீள் வட்டப் பாதையில் சுற்றி வருகின்றது. இவற்றையே புவி யின் சலனங்கள் என்பர். பூமி தன்னைத்தானே சுழல்வதைப் புவிச்சுழற்சி என்பர். சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருவதைப் புவிச்சுற் றகை என்பர்.
பூமி தன்னைத்தானே சுழல 24 மணித்தியாலங்கள் செல் கின்றது. புவிச் சுழற்சி மேற்குக் கிழக்காக நடைபெறு கின்றது. புவிச்சுழற்சியினால் இரவு, பகல் தோன்றுகின்றன. பூமி சுழற்சியற்றிருக்குமானால், பூமியின் ஒரு பகுதியே சூரி யனை என்றும் எதிர்நோக்கியிருக்கும். அப்போது எதிர்நோக்கி -யிருக்கும் அவ்வொருபகுதி என்றும் பகலாகவும், மறுபுறம் என் றும் இரவாகவும் காட்சி அளிக்கும், ஆனால் பூமி சுழற் சியுடையதாக இருப்பதனால், பூமியின் ஒவ்வொரு பகுதியும் சூரியனின் ஒளிக்கதிர்களைப் பெறுகின்றது. பூமியின் ஒரு
• மேற்பரப்பு சூரியனை நோக்கி இருக்கும்போது அங்கு பக

Page 10
16
ஆரம்பப் புவியியல்
லும், அதேமேற்பரப்பு சூரியனை நோக்கியிராதபோது அங்கு இரவும் தோன்றுகின் றன.
பூமி சூரியனைச் சுற்றிவர 3651 நாட்கள் எடுக்கின் றது. அதாவது ஓர் ஆண்டு செல்கின்றது. பூமி சூரியனைச் சுற்றி வருகின்ற நீள்வட்டப் பாதை புவியொழுக்கு எனப் படும். இப்புவியொழுக்கில் பூமியின் அச்சு 66!° சாய்ந்து அமைந்துள்ளது. இவ்வச்சு எப்போதும் ஒரே திசையை நோக்கியே அமைந்து காணப்படும்.
புவியச்சு புவியொழுக்கில் 66° சாய்ந்தமைந்திருப்பதானா லும், புவியச்சின் திசை எந்நிலை யிலும் மாறாது இருப்பதனாலும் தாம், பூமியின் வடமுனைவுப் பிர தேசம் ஆறு மாதம் சூரிய ஒளி யைப் பெ று ம் போது தெல் முனைவு அந்த ஆறு மாதங்களும் இருளில் ஆழ்ந்து கிடக்கின்றது. அதேபோல் வருடத்தின் மற் றைய ஆறு மாதங்களும் தென் முனைவுப்பிரதேசம் இடைவிடாது சூரியஒளியைப்பெற வடமுனைவுப் பிரதேசம் இருளில் ஆழ்ந்து கிடக் கின்றது.
அதாவது முனைவுப் பிரதே படம்: 3 பூகோளம்
சங்கள் தொடர்ந்து ஆறு மாதங் கள் பகலாகவும், தொடர்ந்து ஆறு மாதங்கள் இரவாக வும் உள்ளன. (படம் 4-ஐ அவதானிக்கவு ம்.)
பூமி, சூரியனைச் சுற்றி வருவதானாலும், புவியொழுக் கில், புவியச்சின் சாய்வினாலும் பூமியில், பருவகாலங்கள் ஏற். படுகின்றன. அவை எவ்வாறு எனப் பார்ப்போம்.
சூரியன் சில காலங்களில் பூமிக்குச் சற்று வடக்கேயும்.. சில காலங்களில் சற்றுத் தெற்கேயும் சாய்ந்து இருப்பதை

நம் து பூமி
17
அவதானிக்கலாம், ஜூன் 21-ந் திகதி சூரியன் மத்திய கோட்டிற்கு வடக்கே நகர்ந்துள்ளது போன்றும், டிசம்பர் 22-ந் திகதி மத்திய கோட்டிற்குத் தெற்கே நகர்ந்துள்ளது போன்றும் இருக்கின்றது. ஆனால், சூரியன் அசைவதில்லை . பூமி சூரியனைச் சுற்றி வரும்போது அதன து நிலையே சூரிய அசைவு ஏற்படுவது போன்ற மயக்கத்தை ஏற்படுத்துகின் றது.
ஜூன் 21-ந் திகதி சூரியன் வடக்கே கடகக்கோட்டில் உச்சம் கொடுக்கிறது. இதனைக் கோடைச் ' சூரிய கண நிலை நேரம் என்பர், டிசம்பர் 22-ம் திகதி சூரியன் தெற்கே மகரக் கோட்டில் உச்சம் கொடுக்கிறது. இதனை மாரிச் சூரிய கண நிலை நேரம் என்பர்.
பூமி சூரியனைச் சுற்றிவரும்போது இருமுறைகள் மத் திய கோட்டை அடுத்த பகுதிகள், சூரியனது கதிர்களை
இhயுதிர்காறச் சமவுராக் காயம்
செப்டம்பர்:23
1ாரki டி,ரி// கார்டிகோர்
கோடைச்சூரிய
கனரி2பநேரம்
சூரியன்
8 கேர்
டிசம்பர் 3:1.
ஜீன்:2!
மார்ச் 2!
வ - வடமுனைவு கெ- தென் முர ம கோ - மத்திய காபி க - கடக்கக் கார் ம - மகாக் கே ஈடி
ஓ01),து:ரிசி நலம்
சாவிராகா3ய 62 [dசந்த காலம்)
அw psharTNTாகங்கணமாயகம் அட3லயப்பப7: அங்கலாமாal.
படம்: 4 புவியொழுக்கில் பூமியின் நிலை. புவியச்சு திசைமாறாது இருப்பதையும், சூரிய உச் சம் நிகழும் அகலக்கோடுகளையும்
காலங்களை யும் அவதானிக்க ஆ. பு. 3

Page 11
18
ஆரம்பப் புவியியல் நேராகப் பெறுகின்றன. கோடைச் சூரிய கணநிலை நேரம் நிகழ்ந்ததன் பின்பும், மாரிச் சூரியகண நிலை நேரம் நிகழ்ந் ததன் பின்பும் மத்திய கோட்டை அடுத்த பகுதிகள் சூரிய னது கதிர்களை நேராகப் பெறுகின்றன. இத்தன்மை மார்ச் 21- ந் திகதியும், செப்டம்பர் 23-ம் திகதியும் நிகழ்கின்றது. இக்காலங்களைச் சமவிராக்காலங்கள் என்பர். செப்டம்பர் 23-ந் திகதி நிகழும் சமவிராக்காலம் இலைதுளிர்காலச் சம்விராக்காலம் என்றும், மார்ச் 21-ந் திகதி நிகழும் சமவிரரக்காலம் இலை யுதிர்கால அல்லது வசந்தகாலச் சமவிராக்காலம் என்றும் அழைக் கப்படுகின்றன.
அதாவது, சூரியன் கடகக்கோட்டில் உச்சம் கொடுக் கும்போது (ஜுன் 21) வட அரைக்கோளத்தவர்களுக்குக் கோடைகாலமும், தென்னரைக் கோளத்தவர்களுக்கு மாரி காலமும் நிலவுகின் றன; சூரியன் மகரக் கோட்டில் உச்சந் தரும்போது (டிசம்பர் 22) வட அரைக்கோளத்தவர்களுக்கு மாரிகாலமும், தென்னரைக்கோளத்தவர்களுக்குக் கோடை காலமும் நிலவுகின்றன. சூரியன் மத்திய கோட்டில் உச் சம் கொடுக்கும் மார்ச் 21-இல் வசந்தகாலமும், செப்டம் பர் 23-இல் இலையுதிர்காலமும் பூமியில் நிலவுகின்றன.
பயிற்சிகள்
பயிற்சி: 1
மேல் வரும் வினாக்களுக்கு விடை தருக.
ஞாயிற்றுத் தொகுதி என்றால் என்ன?
ஞாயிற்றுத் தொகுதியிலுள்ள கோள்கள் எவை? 3. பூமியின் துணைக்கோள் யாது? 4. பூமி கோளவடி வமான து என்பதற்குரிய சான்றுகள் எவை? 5. பூமியின் சலனங்கள் எவை? 6. புவிச்சுழற்சியால் என்ன ஏற்படுகின்றது? 7, பருவகாலங்கள் எதனால் ஏற்படுகின்றன?

நமது பூமி 8. பருவகாலங்கள் எவை?
வடவரைக் கோளத்தில் மாரியாக இருக்கும்போது, தென்னரைக்
கோளத்தில் கோ டையாக இருக்கக் காரணம் யாது? பயிற்சி: 2
மேல்வரும் வினாக்களிலுள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக.
பூமியை சூரியன், புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யூரேனஸ், நெப்டியூன், புளூட்டோ என்னும் கோள்கள் சுற்றி
வருகின்றன. பிரமை 2. சூரியனுக்கு மிக அண்மையில் இருக்கும் கோள் பூமியாகும். மனசி , 3. சூரியமண்டலத்திலுள்ள மிகப்பெரிய கோள் யூரேனஸாகும். ம டிை 4. புவிச்சுற்றுகையினால் இரவு பகல் தோன்றுகிறது. 51 . 5 பூமி பந்துபோன்று உருண்டை வடிவமான து? பழை

Page 12
அத்தியாயம் : 2
2 - 1)
அகலக் கோடுகளும் நெடுங்கோடுகளும்
பூமியின் மேற்பரப்பில் இருக்கின் ற ஏ தாவது ஓரிடத் தைத் தெளிவாகக் குறித்துக் கொள்வதற்கோ, சந்தேக மின்றி அறிந்து கொள்வதற்கோ அகலக்கோடுகளும், நெடுங் கோடுகளும் பயன்படுகின்றன. இவை பூமியில் கீறப்பட் டிருப்பனவல்ல. பூமியில் கீறப்பட்டு இருப்பதாகக் கருதப் படும் கற்பனைக்கோடுகளே, பசு .பிக் சமுத்திரத்தில் உள்ள ஒரு தீவிற்குப் பிரயாணம் செய்வதானால், அம் மாபெரும் சமுத்திரத்தில் அத்தீவு எங்கே அமைந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது இலகுவன் று. ஆனால், அத்தீவு அமைந்துள்ள அகலக்கோட்டு, நெடுங்கோட்டுப் பாகையளவுகள் தெரிந்து இருக்குமானால், அத்தீவை வெகு சுலபமாக அடைந்துவிட முடியும்.
1, அகலக் கோடுகள் மத்திய கோட்டுக்கு வடக்கேயும், தெற்கேயும் முனைவு கள் வரை பாகையளவில் பிரித்து பூகோளத்தில் வரையப் படும் வட்டமான கோடுகளே அகலக் கோடுகளாகும்.
பூமியின் சுற்றளவு 25,000 மைல்களைக் கொண்ட ஒரு வட்டமாகும். இவ்வட்டத்தை 360 பாகைகளாகப் பிரித் தால் ஒரு பாகை 69; மைல்களாகும்.
- 25,000-691 மைல் 1° - 260 70 ---
360
அதாவது, கிட்டத்தட்ட 70 மைல்கள். எனவே, ஒவ் வொரு அகலக் கோடுகளும் 70 மைல்களை இடைவெளியா கக் கொண்டு வரையப்படுகின்றன, ஒவ்வொரு பாகை அக லக்கோடுகளும் படங்களிலோ, பூகோளத்திலோ வரையப் படுவது கிடையாது. 10 பாகை அகலக்கோடுகள் அல்லது

160)
3 '203 raa -
694 180 1ாமே
வட" ஆடித்திரம் |
திங்கள் க
மேற்கும்
கிழக்கு
IெIIா)
ஐரோப்பா
பசுபிர்
கடககசம்
சமர்
அட்ரிப்கா
திகதிக
கோடு
மத்தியதோடு
5: தெற்கு பணம் வடக்கு
N. தென்அமெரிக்கா
* பா
இந்துசமுத்திரம்
பாம்
- 1)
மகரக்கொடி
அவுஸ்திரேலியா
பியப்பாய
கிரள்விச் வெக்காப்
தென்சாத்திரம்
165. அந்திக்க வட்டம்
log
80
மும்
12
T
ானதி 1 ே10
படம்: 5 அகலக்கோடுகளும் நெடுங்கோடுகளும்

Page 13
22
ஆரம்பப் புவியியல்
15 பாகை அகலக்கோடுகள் போன்று, தேவைக்கு ஏற்ப அகலக் கோடுகள் வரையப்படுகின்றன. ' படம் 5-ல் வரை யப்பட்டிருக்கும் அகலக்கோடுகள் 20 பாகை இடைவெளி கொண்ட அகலக்கோடுகளாகும்.
மத்தியகோடு 0° அகலக்கோடாகும்; முனைவுகள் 90° அகலக் கோடுகளாகும். ஆனால், 90° அகலக்கோடுகளை அக லக்கோடுகள் என்று கூறமுடியாது. ஏனெனில் 90° அகலக் கோடுகள் வடமுனைவிலும், தென்முனைவிலும் ஓவ்வொரு புள்ளிகளாகவே காணப்படுகின்றன.0°அகலக்கோடே அதாவது மத்தியகோடே ஏனைய அகலக்கோடுகளில், சுற் றளவில், மிகவும் பெரியது.
- அகலக் கோடுகளில் மத்தியதோடு, கட்கக்கோடு, மகரக்கோடு, ஆக்டிக்வட்டம், அந்தாட்டிக்வட்டம் என்பன முக்கியமானவை. மத்திய கோடு 0° அகலக்கோடாகும். மத்திய கோட்டிற்கு வடக்கே 234° இல் வரையப்பட்டுள்ளது கடகக்கோடாகும்; மத்திய கோட்டிற்குத் தெற்கே 333' இல் வரையப்பட்டுள் ளது மகரக்கோடு எனப்படும். 664° வட அகலக்கோடு ஆக்டிக்வட்டம் என்றும், 60° தென் அகலக்கோடு அந் தாட்டிக்வட்டம் என்றும் வழங்கப்படுகின்றன.
மத்தியகோட்டிற்கு வடக்கே கீறப்பட்டிருக்கும் அகலக் கோடுகளை வட அகலக்கோடுகள் என்றும், தெற்கே கீறப்பட் டிருப்பனவற்றை தென் அகலக்கோடுகள் என்றும் வழங்குவர். மத்திய கோட்டிற்கு வடக்கேயும், தெற்கேயும்," கடகக் கோட்டிற்கும், மகரக் கோட்டிற்கும் அப்பாலுள்ள அகலக் கோடுகள் உயர் அகலக்கோடுகள் எனப்படுகின்றன,
2. நெடுங்கோடுகள் நெடுங்கோடுகள் என்பன பூகோளத்தில் வடக்குத் தெற் காக அகலக்கோடுகளுக்குக் குறுக்காக வரையப்பட்டுள்ள கோடுகளாகும்.
அகலக் கோடுகளைக் கீறப் பூமியின் சுற்றளவை 360 பாகைகளால் பிரிப்பது போல, இங்கு நெடுங்கோடுகளைக்

அகலக் கோடுகளும் நெடுங்கோடுகளும்
23
கீறவும் மத்தியகோடும், ஏனைய அகலக்கோடுகள் எவ் வொன்றும் 360 பாகைகளாகப் பிரிக்கப்பட்டு, முனை வுகளை இணைத்து வரையப்படுகின்றன. இவ்வாறு வரையப்படும் அரை வட்டங்களே நெடுங்கோடுகளாம். வரையப்படும்
2) (2.
(டுதுமோடு
அயம் கோர்
தெ ழ.
படம் 6 பூகோளத்தில் அகல நெடுங்கோடுகள் நெடுங்கோடுகளுக்குப் பெயரிடுவதற்கு உச்சநெடுங்கோடு ஒன்று தேவை. இவ்வுச்ச நெடுங்கோடு 0° எனப்படும், உடச்ச நெடுங் கோடாகப் பூகோளத்தில் இருப்பது கிறீன் விச் என்னும் இடத்துக்கு ஊடாக வரையப்பட்டிருக்கும் நெடுங்கோடா கும். 0° நெடுங்கோடு இதனாலேயே கிறீன் விச்கோடு என்று அழைக்கப்படுகின் றது.
கிறீன்விச் கோட்டிலிருந்து ஏனைய நெடுங்கோடுகள் இலக்கமிடப்படுகின்றன. 0° தொடக்கம் 180° கிழக்காக வும், 180° மேற்காகவும் இலக்கப் பெயரிடப்படுகின்றன. கிறீன்விச் கோட்டிற்குக் கிழக்கே வரையப்பட்ட கோடுகள்

Page 14
24
ஆரம்பப் புவியியல்
கிழக்கு நெடுங்கோடுகள் என்றும், மேற்கே வரையப்பட்ட கோடு கள் மேற்கு நெடுங்கோடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. 180° நெடுங்கோடு கிழக்கிற்கும், மேற்கிற்கும் பொதுவான ஒரு கோடாகும். உதாரணமாக, 15° நெடுங்கோட்டில் இரண்டு உள்ளன. ஆனால் 180° நெடுங்கோட்டில், 0° நெடுங் கோடு போ ல ஒன்றுதான் இருக்கிறது. நெடுங்கோடுகள் யாவும் அகலக்கோடுகள் போன்று ஒவ்வோர் அள வின வல்ல, இவை யாவும் ஒரேயளவின.
3, நேரமும் நெடுங்கோடுகளும் பூமி ஒரு முறை சுழற்சியுற 24 மணித்தியாலங்கள் செல்கின்றது; அதாவது 360 பாகை நெடுங்கோடுகளும் சூரிய ஒளிக்கதிர்களுக்குக் கீழேசுழன்று, கடந்து செல்ல 24 மணித்தியாலங்கள் எடுக்கின்றன. ஆகவே, 15 பாகைகள்
சூரியனைக் கடந்து செல்ல 1 மணித்தியாலம் செல்கிற து. எனவே, 1 பாகை சூரியனைக் கடந்து செல்ல 4 நிமிடங் கள் செல்கின்றன.
பூமி மேற்குக் கிழக்காகச் சுழல்வதால் 0 பாகையில் நண்பகல் 12 மணியாக இருந்தால், 1° கிழக்கு நெடுங் கோட்டில் 12 மணி 4 நிமிடங்களாக இருக்கும். ஆனால் அதே, நேரத்தில் 1 பாகை மேற்கு நெடுங் கோட்டில் 11 மணி 56 நிமிடங்களாக இருக்கும். எனவே, கிழக்கு நெடுங் கோடுகளில் ஒவ்வொரு பாகைக்கும் 4 நிமிடங்கள் நேரம் கூடிச் செல்ல மேற்கு நெடுங்கோடுகளில் ஒவ்வொரு பாகைக் கும் 4 நிமிடங்கள் குறைந்து காணப்படும், மேல்வரும் அட்ட வணை ைய அவதானத்துடன் நோக்குக.
1800
| 90°மே ) 75°மே | 60°மே 45 மே | 30 மே 15 மே
மாலை
இரவு
(அ. கா.
அ - கா. அ. கா', காலை
காலை 12
6
0 15 இ
30°கி
| 45 இ
| 608 • 75 இ
| 90க
180°
காலை
காலை
காலை
காலை
காலை
காலை
ந. ப.
மாலை
சி.

அகலக் கோடுகளும் நெடுங்கோடுகளும்
25
4. நியம நேரம் ஒவ்வொரு நெடுங்கோட்டுப் பாகைக்கும் 4 நிமிடங் கள் வித்தியாசப்படுவதால், பல பாகைகளை உள்ளடக்கிய பெரிய ஒரு நாடு, ஓர் அரசாக இயங்கும்போது. பிரதேசத் திற்குப் பிரதேசம் வித்தியாசமான நேரங்களை உடைய தாக இருப்பது நிர்வாகம் போன்ற யாவற்றிற்கும் சிரம மானதாகும். ஆகையால், அவை நியம நேரத்தைப் பயன் படுத்துகின்றன. நெடுங்கோட்டிற்கு இணங்க நேரம் வேறு படுவதைக் கவனத்திற் கொள்ளாது, நிர்வாகத் தேவைக் காக ஓர் அரசில் எங்கும் ஒரே நேரம் கைக்கொள்ளப்படு வதே நியமநேரம் எனப்படும். உதாரணமாக கீறின்விச்சில் (0°) நண்பகல் 12 மணியாக இருக்கும் போது , 15° நெடுங்கோட்டுப் பிரதேசங்களில் பிற்பகல் 1 மணியாக இருக்க வேண்டும். ஆனால், அப்பிரதேசங்களும் தமது நேரத்தை நண்பகல் 12 மணியெனக் கொள்வதையே நியம நேர ம் என்பர்.
5. சர்வதேசத் தேதிக்கோடு 180° நெடுங்கோடு சர்வதேசத்தேதிக்கோடு என்று அழைக்கப்படுகின்றது. இக்கோட்டில் மட்டும் ஒரு நாள் கிழக்கிலும் மேற்கிலும் வித்தியாசப்படுகின்றது 180° நெடுங் கோட்டிற்கு மேற்குப் பக்கத்தில் நேரம் கிறீன் விச் நேரத்திலும் 12 மணி கூடுதலாக இருக்கும். ' 80° நெடுங்கோட்டிற்குக் கிழக்குப் பக்கத்தில் நேரம், கிறீன்விச் நேரத்திலும் 12 மணி குறைவாக இருக்கும். ஏனெனில், ஒவ்வொரு பாகை நெடுங் கோட்டிற்கும் 4 நிமிடங்கள் நேரம் வேறுபடுவதனாலாகும். எனவே, மேற்கிலிருந்து இக் கோட்டைக் கடப்பவர்கள் ஒரு நாளை இழந்து விடுகிறார்கள். கிழக்கிலிருந்து இக் கோட்டைக் கடப்பவர்கள் ஒரு நாளைப் பெறுகிறார்கள், இக் கோட்டிற்குக் கிழக்கே ஞயிறக இருந் தால் மேற்கே திங்களாக இருக்கும். அதனாலேயே இக்கோடு சர்வதேசத்தேதிக் கோடு என்று வழங்கப்படுகின்றது. இத் தேதிக் கோடு நேர்கோடன்று. நிலப்பரப்புக்களை அடுத்து இக்கோடு கிழக்காகவோ மேற்காகவோ கோணமாக முறிவு படுகிறது, ஏனெ னில், ஒரு சிறு தீவின் ஊடாக இக்கோடு வரையப்பட்டிருக்குமானால், அச்சிறுதீவில் ஏற்படும் திகதி மயக்கம் தீவின் நிர்வாகத்திற்கு ஏற்றதாக அமையாது என்பதனாலாகும்.
• ஆ: பு. 4
தால் மேற்கே' தி கோட்டிற்குக் கிட்டவர்கள் ஒரு ;

Page 15
26
ஆரம்பப் புவியியல்
பயிற்சிகள்
சுருக்கமாக விடை தருக.
அகலக் கோடுகளில் பெரியது எது?
நெடுங் கோடுகளில் சிறியது எது? 3. மேல்வரும் அகல, நெடுங் கோ டுகளின் பாகை அள வு களையும்,
திசைகளையும் குறிக்க.
(அ) - மத்தியகோடு (ஆ) கடகக்கோடு (இ) கிறீன்விச் கோடு (ஈ) மகாக்கோடு (உ) சர்வதேசத் தேதிக்கோடு (ஊ) ஆக்டிக் வட்டம் (எ) அந்தாட்டிக் வட்டம்.
4, புவியின் மேற்பரப்பில் கிழக்குப்புறமாகச் செல்ல நேரம் கூடுமா?
குறையு மா? 5 சர்வதேசத் தேதிக் கோட்டிற்கு மேற்குப் புறத்தில் திங்களாக
இருந்தால், கிழக்குப் புறத்தில் என்ன கிழமை? கிறீன்விச்சில் (0°) காலை 7 மணியாக இருந்தால், 10° கிழக்கு நெடுங்கோட்டில் நேரம் என்ன? கிறீன்விச்சில் (0°) மாலை 6 மணியாக இருந்தால், 15° மேற்கு நெடுங்கோட்டில் நேரம் என்ன?
8. உலகப் புறவுருவப் படத்தில் மேல் வருவனவற்றைக் குறித் துப் பெயரிடுக.
(அ) ஆக்டிக் வட்டம்
(ஆ) அந்தாட்டிக் வட்டம் (இ) மத்தியகோடு
(1) கடகக்கோடு (உ) மகரக்கோடு
(ஊ) சர்வதேசத் தேதிக்கோடு (எ) கிறீன் விச் கோடு
(ஏ) 80° கி. நெடுங்கோடு (ஐ) 100° மேற்கு நெடுங்கோடு (ஓ) 120° கிழக்கு நெடுங்கோடு

அத்தியாயம்: 3
இலங்கைப் புவியியல் இந்து சமுத்திரத்தின் மத்தியில், இந்தியாவிற்குத் தென் கிழக்கே இலங்கை அமைந்துள்ளது. இந்தியாவும் இலங்கை யும் ஒரே கண்ட மேடையில் அமைந்துள்ளன.
நிலையம்
இலங்கை மத்தியகோட்டுப் பிரதேசத்தில் அமைந்துள் ளது, இத்தீவு 5°54' (5 பாகை 54 நிமிஷங்கள்) வடக்கு அகலக் கோட்டிற்கும்9° 52' அகலக்கோட்டிற்கும், 79° 39'
போது இலங்கையின் நியைமும், கடலடித்தளமேடை
பருப்பமும்.
-பாைழ்னை
'
இராயா அன்.
மனாைரக் லடித்தளமேடை
வாரகேட்லடித்தல்
-270ல்ை -
மைல்
கொழும்பு
-அங்கமான்
கந்தை
முணை
சின்னபா தி
சிபெரிய பாசு
தேவேந்திரமுனை
படம்: 7 இலங்கையின் நிலையம்

Page 16
28
ஆரம்பப் புவியியல்
கிழக்கு நெடுங்கோட்டிற்கும், 81° 53' கிழக்கு நெடுங்கோட் டிற்கும் இடையே அமைந்துள்ளது. அதாவது ஏறத்தாழ 4° அகலக்கோட்டுப் பரப்பையும், 2° நெடுங்கோட்டுப் பரப்
பையும் கொண்டிருக்கின்றது :
பருப்பம்
இலங்கையின் மொத்தப் பரப்பு 25, 532 சதுர மைல் களாகும். இதில் நீர்த்தொகுதியின் பரப்பினைத் தவிர்ந்த நிலப்பகுதியின் மொத்தப் பரப்பு ஏறக்குறைய 25,036 சதுர மைல்களாகும். தீவின் நீளம் அகலத்தைப்போல, இருமடங்கு களாக உள்ளது. பருத்தித்துறைக்கு இரண்டு மைல்கள் மேற்கேயுள்ள பனை முனையிலிருந்து, இலங்கையின் தெற்கே யுள்ள தேவேந்திரா முனைவரையுள்ள 270 மைல்களே, இலங்கையின் ஆகக்கூடிய நீளமாகும். ஆகக்கூடிய அகலம், பொத்துவிலுக்கு 9 மைல் வடக்கேயுள்ள சங்கமான் கந்தை முனையிலிருந்து கொழும்பு வரையுள்ள தூரமாகும். இத்தூரம் 140 மைல்களெனக் கணிக்கப்பட்டுள்ளது.
தரைத்தோற்றம் இலங்கையில் இரு வேறுபட்ட தரைத்தோற்றங்களைக் காணலாம். இலங்கையின் மத்திய பாகத்தில் (அ) மலைநாடும், அதனைச் சூழ்ந்து (ஆ) சமவெளிகளும் காணப்படுகின்றன. இதனை ஆதாரமாகக் கொண்டு இலங்கையின் தரைத்தோற் றத்தை மேல்வருமாறு வகுத்துக் கொள்ளலாம்.
1. தென்மேற் சமவெளி 2. தென்கீழ்ச் சமவெளி 3. வடசமவெளி 4. மத்திய மலைநாடு

இலங்கைப் புவியியல்
இலங்கையின் தரைத்தோற்றம்
வட சமவெளி
காகேக்கை
தெதுறுஓயா
நெண்,
\ கேன்ஸ்)
தென்
கிழ்ச்
மேற்
மேற் > மலைநாடு 8
சமவெளி
சமவெளி.
பறக்குவானை
வளவகங்கை
கையி
படம்: 8 இலங்கையின் தரை த்தோற்றப் பிரிவுகள். 1. தென்மேற் சமவெளியின் புவியியல் அம்சங்கள்
தரைத்தோற்றம் தெல்மேல் சமவெளியின் எல்லைகள் மிகத்தெளிவா னவை, இச் சமவெளியின் வடக்கு எல்லையாகத் தெதுறு ஓயாவும், தென்கிழக்கு எல்லையாக வளவகங்கையும், கிழக்கு எல்லையாக 1000' சமவுயரக் கோடும், மேற்கெல்லையாகக் கடலும் இருக்கின்றன. இதனுயர்ந்த பகுதிகள் றக்குவானை மலைகளைச் சூழ்ந்துள்ளன. கரையோரத்திற்குச் சமாந்தர

Page 17
30
ஆரம்பப் புவியியல்
மாகப் பல பாறைத் தொடர்கள் அடுக்கடுக்காக இருப் பதைக் காணலாம், இப்பாறைத் தொடர்கனைப் பாயும் நதிகள் துண் டித்துள்ளன.
இப்பிரதேசத்தின் வழியாகப் பாயும் நதிகள் தெதுறு ஓயா, மகாஓயா, களனிகங்கை, களுகங்கை, பெந்தோட்டை கங்கை, ஜின் கங்கை, நில்வள கங்கை, வளவகங்கை ஆகியன வாம். வெள்ளச் சமவெளிகளை நில்வள கங்கை, ஜின்கங்கை, களனிகங்கை, மகாஓயா, தெதுறுஓயா ஆகிய நதிகளின் கீழ்ப் பள்ளத்தாக்குகளில் காணலாம்.
மண்வகை
இச்சமவெளியின் கரையோரங்களை அடுத்துக் கொழும்பு, குருநாகல், சிலாபம் ஆகிய பட்டினங்களை இணைக்கும் முன் கோணப் பிரதேசத்திலும் கரையோர மண்ணையும், (மணல் நதி வடி நிலங்களில் வண்டல் மண்ணையும், இவை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் செம்பூரான் ஈரக் களிமண்ணையும் காண லாம்.
மழைவீழ்ச்சி: தென்மேற்சமவெளி இலங்கையின் ஈரலிப் பான பகுதியாகும், இங்கு 75 அங்குலங்களுக்குமேல் மழை கிடைக்கின்றது. பருவ மழை, மேற்காவுகை மழை, சூறா வளிக் காற்றுடன் கூடிய மழை என்பன தென்மேற் சம வெளியில் மழைவீழ்ச்சி வகைகளாகும். யூன் மாதம் தொடக். கம் செப்டம்பர் மாதம் வரை இலங்கையில் தென்மேற் பருவக் காற்று வீசுகின்றது. இக்காற்று இந்து சமுத்திரத்தில் உற் பத்தியாவதால், அதிக ஈரப்பதனுடையது. இக்காற்று தென்மேற் சமவெளியினூடாக வீசும்போது. மத்தியமலை நாட்டினால் தடுக்கப்பட்டு, மேலுயர்ந்து, குளிர்ந்து தென் மேற்சமவெளிக்கு அதிக மழையைத் தருகின்றது தென் மேற் சமவெளியின் உயர் வான வெப்பநிலை காரணமாக மேற்காவுகை மழையும் அடிக்கடி நிகழ்கின்றது. பகல்வேளை' களில் அதிக ஆவியாகுதலும், மாலைவேளைகளில் இடி மின்ன லோடு மழையும் இச்சமவெளியிற் பொழிவதற்குக் காரணம் , மேற்கா வுகையா கும், தென்மேற்சமவெளி ஒக்டோபர், நவம்

இலங்கைப் புவியியல்
31
பர் மாதங்களில் சூறாவளியினால் மழையைப் பெறுகின்றது. பொதுவாக இச்சமவெளி வருடம் முழுவதும் மழையைப் பெற்றபோதிலும், பெப்ரவரி மாதம் மழை குறைவான மாதமாகும்.
இயற்கைத்தாவரம்: தென் மேற் சமவெளியின் அதிக மழை வீழ்ச்சி, உயர் வெப்பநிலை என்பன காரண மாக, இங்கு ஈரலிப்பான வலயக் காடுகள் காணப்படுகின்றன. இவற்றை ஈரப்பருவக்காற்றுக் காடுகள் எனவும் கூறலாம். இக்காடுகள் என்றும் பசுமையானவை; அதிகம் உயரமானவை; இக் காட்டு மரங்கள் X 50 அடி தொடக்கம் 200 அடி வரை உயர்ந்து வளர்கின் றன. இக்காடு களில் நிலத்தர வர அடர்த்தியாயும் ஏறு கொட்டடகள் அதிகமாயும் வளர்ந்துள்ளன, பலா, லுனுமிதிலை, பாலை, கோரா, வேம்பு முதலிய மரங் களை இக் காடுகளிற் காண லாம். 2. தென்கீழ்ச் சமவெளியின் புவியியல் அம்சங்கள்
தரைத் தோற்றம் இச்சமவெளியின் எல்லைகளும் தெளிவாக வரையறுக்கக் கூடியன. வடக்கு எல்லையாக மகாவலிகங்கையும், தென் மேற்கு எல்லையாக வளவகங்கையும் மேற்கு எல்லையாக 1000' சமவுயரக் கோடும், கிழக்கெல்லையாகக் கடலும் அமைந்திருக்கின் றன.
இச் சமவெளியினுயர்ந்த பாகம் மத்திய மலைநாட்டை அடுத்து அமைந்திருக்கின்றது. இவ்வுயர்ந்த பாகத்திலேயே கல்ஓயா, மதுறுஓயா, கெடஓயா ஆகிய நதிகள் உற்பத்தி யாகின்றன, இவ்வுயர் நிலப்பகு தி 500 அடிக்கும் 1000 அடிக்கு முட்பட்டது ஏனைய பகுதிகள் 500 அடிக்குட்பட்டன, இச் சமவெளியில் பாய்கின்ற மகாவலி கங்கை, வளவ கங்கை, கிரிண் டி ஓயா ஆகிய நதிகளின் வடிநிலங்கள் அகலமான வையாக இருக்கின் றன.
இச் சமவெளியில் நுவெரகல் கந்தை, பிறேயஸ்கூட், வெஸ்மினிஸ்ரர் அபே, கதிர்காமம், இங்கினியக்கல எனும்

Page 18
32
ஆரம்பப் புவியியல்
T
0ன
தனிப்பட்ட குன்றுகள் வரிசை வரிசையாக அமைந்திருப் பதோடு, மலை நாட்டை நோக்கிச் சாய்வாகவும் அமைந்திருக் கின்றன.
இச் சமவெளியின் கரையோரங்களில் கடல் நீர் ஏரி கள் காணப்படுகின்றன. இவற்றுள் முக்கியமானது மட்டக் களப்புக் கடல் நீரேரியாகும். நதிகள் பல கிளைகளைப் பரப் பிக் கடல் நீரேரிகளுள் பாய் வ தால், வண்டல்மண், பரந்த பிரதேசத்தில் பரப்பப்படுகின்றது. இச்சமவெளியின் கரை யோரங்கள் வண்டல் மண்ணையும், கரையோர மண்ணையும். மணற் குன்றுகளையும் கொண்டிருக்கின்றன. தென்பகுதியும், மலை நாட்டை அடுத்துள்ள மேற்குப் பகுதியும், செம்பூரானல் லாத ஈரக் களிமண்ணைக் கொண்டுள்ளன. |
மழைவீழ்ச்சி: தென்கீழ்ச் சமவெளி இலங்கையின் வரண்ட பிரதேசத்தைச் சேர்ந்ததாகும். இங்கு பொதுவாக 75 அங் குலங்களுக்குக் குறைவாகவே மழை பொழிகின்றது. நவம் பர் தொட்டு யனவரி மாதம் வரையிலான காலமே தென் கீழ்ச் சமவெளியின் மழைக்காலமாகும்; ஏனைய மாதங்கள் வறட்சியான காலமாகும். டிசம்பர் மாதம் தொட்டு பெப்ர வரி மாதம் வரை இச் சமவெளியில் வடகீழ்ப்பருவக்காற்று வீசுகின்றது. இப்பருவக்காற்றுக் காலத்தில் இப்பகுதி மழை யைப் பெறுகின்றது. நவம்பர் மாதத்தில் இச்சமவெளியில் சூறாவளியுடன் கூடிய மழை பொழிகின்றது.
இயற்கைத் தாவரம்: இச் சமவெளியில் வெப்ப வலயக் காடு கள் காணப்படுகின்றன. இவற்றை உலர்பருவக் காற்றுக் காடுகள் எனவும் வழங்குவர். இக் காட்டுமரங்கள் ஏறக் குறைய 60 அடி உயரம் வரை வளர்கின்றன. இம்மரங் கள் வைரமானவை; கருங்காலி, யாவறணை, கல்மில,முதிரை, பாலை என்பன இங்குள்ள மரங்களாகும். தென்மேற் சம வெளியின் தென் பாகத்தில் முட்புதர்கள், நீரைச் சேகரித்து வைத்திருக்கக்கூடிய கள்ளி வகைகள் வளர்ந்திருக்கின்றன.
3. வடசமவெளியின் புவியியல் அம்சங்கள்
தரைத்தோற்றம் வடசமவெளி தெதுறு ஓயாவிற்கும், மாத்தளை மலை களுக்கும், மகாவலி கங்கைக்கும் வடக்கே அமைந்துள்ளது.

3?
இலங்கைப் புவியியல் இதன் பெரும்பாகம் 500' உயரத்திற்குக் குறைவானதாக இருக்கின்றது. உயரமான பகுதி மாத்தளை மலைகளைச் சூழ்ந் தமைந்திருக்கின்றது. ஜான்ஓயா, காலஓயா, மல்வத்து ஓயா (அருவியாறு), அம்பன் கங்கை (மகாவலிகங்கையின் கிளை நதி) என்பன மாத்தளை மலைகளிலுற்பத்தியாகின்றன.
இச் சமவெளி வடமேற்கு நோக்கியும், வடக்கு நோக்கி யும், வடகிழக்கு நோக்கியும், சாய்வாக அமைந்திருக்கின்ற தென்பது நதிகளின் போக்கை அவதானிக்கும்போது புலனா கின்றது. இச் சமவெளியின் தென்மேற்குக் கரையில் உயரங் குறைந்த சிறிய பாறைத் தொடர்கள் காணப்படுகின்றன. பாயும் நதிகள் இப்பாறைத் தொடர்களைத் துண்டித்துப் பாய்கின்றன.
வடசமவெளியிலுள்ள பாறைத் தொடர்களின் அமைப்பு ஏனைய இரு சமவெளிகளிலும் வித்தியாசமானதாக இருக் கின்றது. மாத்தளை மலைகளிலிருந்து விசிறி போலப் பாறைத் தொடர்கள் வடமேற்கு நோக்கியும் வடகிழக்கு நோக்கியும் அமைந்துள்ளன.
இச் சமவெளியின் வடமேற்கரையை அடுத்து கரையோர மணல் பரந்துள்ளது; ஏனையவிடங்களில் செம்மண்ணும், சாம்பல் நிற ஈரக் களிமண்ணும், செம்பூரானல்லாத ஈரக் களிமண்ணும், நதிகளை அடுத்து வண்டல் மண்ணும் காணப் படுகின்றன. யாழ்ப்பாணக் குடா நாட்டில் சுண்ணாம்புக்கல் காணப்படுவதால் ரெறா றோசா எனும் செந்நிறமண் காணப்படுகிறது.
மழைவீழ்ச்சி: வடசமவெளி இலங்கையின் பிரதேசத்தில் அமைந்திருக்கின்றது. இச்சமவெளி 50 அங் குலந் தொட்டு 75 அங்குலம் வரை மழைவீழ்ச்சியைப் பெறு கின்றது. மழை வீழ்ச்சிக்காலம் செப்டம்பர் மாதம் தொடக் கம் யனவரி மாதம் வரையாகும். இச்சமவெளி வடகீழ்ப் பருவக்காற்றினாலும், மேற்காவுகையினாலும், சூறாவளி களி னாலும் மழையைப் பெறுகின்றது. ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் வடசமவெளி அதிகமழையைப் பெறுவதற்குச் சூறாவளிகளே காரணங்களாக உள்ளன.
ஆ. பு. 5

Page 19
34
ஆரம்பப் புவியியல் - இயற்கைத்தாவரம்: வடசமவெளியில், வடமேற்குப் பாகம் தவிர்ந்த (மன்னார்ப் பகுதி) ஏனைய பாகத்தில் வெப்பவலயக் காடுகளே காணப்படுகின்றன. கருங்காலி, பாலை, முதிரை. வீரை என்பன இச் சமவெளியிலுள்ள மரங்களாகும். வட மேற்குப்பகுதியில் முட்புதர்களோடு சேர்ந்த பற்றைக் காடு கள் காணப்படுகின்றன. ஆனைமுள்ளி, காம்பை, நாகதாளி. கள்ளி, குக்குறுமன் என்பன இங்குள்ள தாவரங்களாகும். 4, மத்திய மலைநாட்டின் புவியியல் அம்சங்கள்
தரைத்தோற்றம்
1000 அடி உயரத்திற்கு மேற்பட்ட பகுதி, இலங்கை யின் மலைநாடாகக் காணப்படுகின்றது. இம்மலை நாட்டின் அதி உயரம் 82 81 அடி உயரமான பேதுருதாலகாலை மலைச் சிகரமாக உள்ளது, இம்மலை நாட்டில் 5000 அடிகளுக்கு மேற்பட்ட பகுதி, நங்கூரவடிவமான உயர் பகுதியாகக் காட்சி தருகின்றது, இந்த உயர் பகுதியிலேயே பேதுரு தாலகாலை, கிரிகாலப் பொத்தை, தோட்டப்பாலை, சிவனொளி பாதம் முதலிய மலைகள் அமைந்துள்ளன. நங்கூர வடிவ மான உயர் பகுதிக்கு மேற்குப் பாகத்தில் கற்றன் மேட்டு நிலமும், கிழக்குப் பாகத்தில் ஊவா வடிநிலமும் அமைந் துள்ளன. இவை இரண்டும் 3000 அடிகளுக்கு மேற்பட்டன. கற்றன் மேட்டுநிலத்தில் மகாவலி கங்கை உற்பத்தியாகின் றது, ஊவா வடிநிலத்தில் மகாவலி கங்கையின் > கிளை நதி களான உமாஓயா, வதுளைஓயா, லொக்கல்ஓயா என்பன உற்பத்தியாகின்றன. கற்றன் மேட்டு நிலத்திற்கும் ஊவா வடிநிலத்திற்கும் வடக்கே, கண்டி மேட்டு நிலமும் நக்கிள்ஸ் மலைகளும் காணப்படுகின்றன. கண்டி மேட்டு நிலம் 2000 அடிகளுக்கு மேற்பட்டது. மலை நாட்டின் தென்பாகம் ஒடுங் கிய ஒரு மேட்டுநிலமாக இருக்கின் றது. இதனைத் தென் மேட்டு நிலம் என்பர். மலை நாட்டின் தென் மேற்குப் பாகத் தில் றக்குவானை மலைத்திணிவு உள்ளது. (இலங்கையின் தரைத்தோற்றப்படத்தை நோக்குக.

இலங்கைப் புவியியல்
35
மழைவீழ்ச்சி: மத்திய மலை நாட்டின் மேற்குப் பகுதி ஈரலிப் பான தாயும், கிழக்குப்பகுதி வரண்டதாயும் விளங்குகின்றன. மலைநாட்டின் மேற்குப் பகுதி, தென்மேற் பருவக் காற்றைத் தடுத்துக் குளிரச் செய்வதால் 75 அங்குலங்களுக்கு மேல் மழையைப் பெறுகின்றது. வட்டவளை, சிவனொளிபாதம் எனும் பகுதிகள் 200 அங்குலம் வரையிலான மழையைப் பெறு கின்றன. மலைநாட்டின் கிழக்குப் பகுதிக்குத் தென்மேற் பருவக்காற்று மழையைக் கொடுப்பது கிடையாது: இங்கு
இது வரண்ட காற்றாகவே வீசுகின்றது. மலைநாட்டின் கிழக் குப்பகுதி வடகீழ்ப்பருவக்காற்றுக் காலத்தில் 75 அங்குலங் களுக்குக் குறைவாகவே மழையைப் பெறுகின்றது.
இயற்கைத்தாவரம்: மலைநாட்டின் ஈரலிப்பான மேற்குப் பாகத்தில் மலைப்பிரதேசக் காடுகள் காணப்படுகின்றன. இக் காட்டு மரங்கள் உயரம் குறைந்தன; என்றும் பசுமையான இம்மரங்கள் அதிக கிளைகளையும் தடித்தபட்டைகளையும் கொண்டுள்ளன. சப்பு, கினா, தம்ரோ, மாகிறியா என்பன இங்குள்ள மரங்களாகும். மலை நாட்டின் வரண்ட கிழக்குப் பகுதியில் பத்தனாப் புற்றரைகளைக் காணலாம். இவை 3 அடி உயரமானவை.
பயிற்சிகள்
பயிற்சி: 1
சுருக்கமாக விடை தருக.
இலங்கையின் தரைத் தோற்றத்தின் இரு பெரும் பிரிவுகள் யாவை?
மத்திய மலைநாடு எத்தனை அடி உயரத்திற்கு மேற்பட்டது? இலங்கையிலுள்ள மலைகள் மூன்றின் பெயர்களைத் தரு க? தென்மேற் சமவெளி யின் எல்லைகள் யாவை?
வடசமவெளியின் எல்லைகள் யாவை?
6, இலங்கையின் எப்பகுதி அதிக மழையைப் பெறுகின்றது?

Page 20
36
ஆரம்பப் புவியியல்
7: இலங்கையில் வீசும் பருவக்காற்றுக்கள் எவை?
யாழ்ப்பாணக் குடாநாடு எப்பருவக் காற்றால் அதிக மழையைப் பெறுகின்றது?
தென்மேற் சமவெளியின் இயற்கைத்தாவரம் யாது? 10. இலங்கையில் காணப்படும் புல்வெளிகளில் ஒன்றினைக் கூறுக. பயிற்சி: 2
மேல் வருவன என்ன என்பதனை எழுதுக.
அ. பேதுறுதாலகாலை
.....
ஆ. எல்க்
இ..
" றம்பொட
ஈ.
தும்பறை
4பே.தி. ... கமீன்க.
களனி
ஊ, பெரலகல்
எ. இங்கினியகல
ஏ.- மல்வத்து
ஐ. தோட்டப்பாலை
ஒ. எல்ஜின் பயிற்சி: 3
இலங்கைப் படம் ஒன்றில் குறித்துப் பெயரிடுக.
சிவனொளிபாதமலை, தோட்டப்பாலை, கதிர்காமக்குன்று, மகாவலிகங்கை, கனகராயன் ஆறு, தெதுறு ஓயா, றம்பொட நீர்வீழச்சி, றக்குவானைத் திணிவு, வளவகங்கை, ஆயிரம் அடிச் சமவுயரக் கோடு.
பயிற்சி: 4
1. மேல்வருவன நிகழும் மாதங்களைக் குறிப்பிடுக: அ. தென்மேல் பருவக் காற்று ஆ. வடகீழ்ப் பருவக்காற்று

இலங்கைப் புவியியல்
(37
இ. மேற்காவுகை
ஈ.
சூறாவளிகள்
உ.
தென் மேற்பகுதியில் அதிக மழைவீழ்ச்சி
II. மேல்வரும் நிலையங்கள் எதனால் அதிக மழையைப் பெறுகின்றன.
(தென். மே. பருவக்காற்றாலா, வ. கீ. பருவக் காற்றாலா, சூறாவளியாலா)
அ.
கொழும்பு
ஆ வட்டவளை
இ. யாழ்ப்பாணம்
ஈ.
கண்டி
2...
திருகோணமலை
ஊ. வதுளை
எ. -
மன்னார்
ஏ.
மட்டக்களப்பு
கற்றன்
அம்பாந்தோட்டை
பயிற்சி: 5
மேல்வரும் பகுதிகளில் காணப்படும் இயற்கைத் தாவரம் யாது?
அ. மன்னார்ப்பகுதி
ஆ. வதுளைப்பகுதி இ. தென் மேற்பகுதி
7'.
அம்பாந்தோட்டைப்பகுதி
உ. தென் கீழ்ப்பகுதி ஊ. கண்டிப்பகுதி

Page 21
அத்தியாயம் : 4
நெற் செய்கை
நெல்
இலங்கை ஒரு பயிர்ச்செய்கை நாடு. இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் ஏறத்தாழ 674 இலட்சம் ஏக்கர் பிரதேசமே பயிர்ச் செய்கைக்கு உகந்ததாக உள்ளது. இதில் ஏறக்குறைய 40 இலட்சம் ஏக்கரில் பயிர்ச் செய்கை நட வடிக்கைகள் இடம் பெற்றுள்ளன. இலங்கை மக்களின் பிர தான உணவு நெல்லாகும்,
வரலாற்றுக் காலத்தில் இலங்கை நெற் செய்கையில் விருத்தி பெற்றுத் தன்னிறைவு கொண்டு இருந்ததோடு, இந்தியா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்திருக் கின்றது. ஆனால், இலங்கை இன்று அரிசிக்காக வெளிநாடு களை எதிர்பார்க்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.
இலங்கையிலின்று 15 இலட்சத்திற்கு அதிகமான ஏக் கர் பரப்பில் நெல் பயிரிடப்படுகின்றது. வருடா வருடம் நெல் பயிரிடப்படுகின்ற பரப்பளவு அதிகரிக்கப்பட்டு வரு கின்றது.
நெல் ஒரு பருவ வறட்சியும் பருவ மழைவீழ்ச்சியும் - உள்ள பகுதிகளில் பயிராகும். சராசரி 80".. மழைவீழ்ச்சி யும் 75°ப. வெப்பநிலையுமுள்ள காலநிலை நிலவும் பகுதிகள் ஏற்றன. இலங்கையைப் பொறுத்தமட்டில் ஈரவலயத்தில் நெல் நீர்ப்பாய்ச்சல் உதவியின்றிப் பயிரிடப் படுகின்றது. உலர் வலயத்தில் பருவமழை சில காலங்களில் பொய்த்து விடுவதாலும், மழைவீழ்ச்சி போதாமையினாலும் நீர்ப்பாய்ச் சல் வசதிகள் தேவைப்படுகின்றன. இலங்கையின் எல்லாப் பாகங்களிலும் நெல் பயிரிடப்பட்டு வருகின்றது, எல்லா மாகாணங்களும் நெல்லைப் பயிரிட்டு வருகின்றன. நெல் வயல்களில் பரப்பளவு, தென் மாகாணம் (32,59,000) ஏக்கர்,

இலங்கைப் புவியியல்
39
வடமேல் மாகாணம் (2 ,23,900 ஏக்கர்) கீழ்மாகாணம் (1,96,100 ஏக்கர்,) மேல்மாகாணம் (1,558,400 ஏக்கர்),
ஆகிய மாகாணங்களில் கூடுதலாக இருக்கின்றது.
ஆம்பசியா
உாழ 0 1
நெல்
முல்லைத்தீவு
மாங்குளம்
மன்னா
தடவவுனியா
திருகோணமலை
அநுராதபாம் !
புத்தளம் இ
பொலநறுவை .
மட்டக்களப்பு
சிலாபம் இ
இகுருமாதல்
கல்முனை
கண்ணம்
நீர்கொழும்பம்
ஐகேகாலை
கொழும்பு து
நுவரேலியா ஓ பேது
இ இரத்தினபுரி
களுத்துறை து
அம்பால் தோட்டை
மாத்தறை
சிSPIRATTNMK 1ாராTITஆரிப் PெAL
படம்: 11 இலங்கையின் நெல் விளை பிரதேசங்கள்
இலங்கையின் நெற்செய்கையில் இரு பருவங்கள் உள் ளன. மகாபோகம் அல்லது முன்மாரி என்று வழங்கப்படும் பெரும்போகம் நெல் வளரும் பிரதான பருவமாகும், ஆகஸ்ட் மாதத்திற்கும் ஒக்டோபர் மாதத்திற்கும் இ  ைட யி ல் விதைத்து, வடகீழ்ப் பருவக் காற்றின் முடிவில் பெப்ரவரி,

Page 22
40
ஆரம்பப் புவியியல் மார்ச் மாதங்களில் அறுவடை செய்வர். ஜாலபோகம் அல்லது பின்மாரி எனும் சிறுபோகம் குறுகிய பருவமாகும். மார்ச், ஏப்பிரல், மே மாதங்களில் விதைத்து தென்மேல் பருவக் காற்றின் முடிவில் ஜூலை, ஓகஸ்ட், செப்டம்பர் மாதங்களில்
அறுவடை செய்வர்.
உலர் வலயத்தில் முன்மாரிப் பருவத்தில் நெல் விளை விக்கப்படுகின்றது, இப்பிரதேச நெற் செய்கை பெரும் பாலும் வடகீழ்ப் பருவக்காற்றினால் பெறப்படும் மழையை நம்பியே நடைபெறுகின்றது. ஈரவலயத்தில் இருபோகத் திலும் மழையை நம்பி நெற் செய்கை நடைபெறுகின்றது. உலர் வலயத்தில் போதிய மழையின்மை நெற்செய்கைக்குத் தடையாகும். ஆனால், ஈரவலயத்தில் அதிக மழை நெற் செய்கைக்குத் தடையாகும். அதிக மழையினால் ஈரவலய நெல் வயல்கள் வெள்ளப் பெருக்கிற்கு உட்பட்டுச் சேத முறுகின்றன.
இலங்கையில் நெற்செய்கை இரு வேறுபட்ட தரைத் தோற்றங்களில் நடைபெறுகின்றது. ஒன்று சமவெளிகளில் நடைபெறும் நெற்செய்கை. மற்றது மலைச் சாய்வுகளில் நடைபெறும் நெற்செய்கை. சமவெளிகளில் குளங்களையும் நதிகளையும் அண்மி அமைந்துள்ள வயல்களிலும், மழையை மட்டும் நம்பியுள்ள வயல்களிலும் பயிரிடப்படும். நெல் ஈர நெல் எனப்படும். ஈரநெல்லிற்கு நீரதிகம் தேவை. மலைச் சாரலில் ஒடுக்கமான பள்ளத்தாக்குத் தளங்களில் படிக் கட்டுகளமைக்கப்பட்டும் நெற்செய்கை நடைபெறுகின்றது. இத்தகைய படிக்கட்டுகளில் பயிரிடப்படும் நெல் மலைநெல் எனப்படும். இதற்கு ஈரநெல்லைப் போன்று நீரதிகம் தேவை யில்லை.
வருடாவருடம் இலங்கையில் நெல் உற்பத்தி அதி கரித்து வருகின்றது என மதிப்பிடப்பட்டுள்ளது. 1957-ம் ஆன்டு 3 கோடியே 13 இலட்சம் புசல் நெல் இலங்கை யில் அறுவடை செய்யப்பட்டுள்ளது. 1968-ஆம் ஆண்டு 6 கோடியே 40 இலட்சம் புசல் நெல் அறுவடை செய்யப் பட்டுள்ளது. எனினும் இலங்கை தன் சுயதேவையைப் .

நெற் செய்கை
பூர்த்திசெய்து கொள்ளவில்லை. 40 வீதம் நெல்லை பர்மர, சீனா, எகிப்து, தாய்லாந்து முதலிய தேசங்களிலிருந்து இறக்குமதி செய்து வருகின்றது.
இலங்கையில் நெல் உற்பத்தி குறைவாக இருப்பதற்கு இருகாரணங்களுள்.
1. நெல் பயிரிடப்படும் நிலப்பரப்புப் போதாமை. 2. ஏக்கருக்குரிய விளைச்சல் போதாமை
இலங்கையின் நெற்செய்கை விருத்திக்கு விளை நிலத் தின் பரப்பளவை அதிகரிப்பதோடு ஏக்கருக்குரிய விளைச் சலையும் அதிகரிக்கச் செய்தலவசியமாகும். இலங்கையின் ஏக்கருக்குரிய விளைச்சல் இன்று சராசரி 32 புசலாகவுள்ளது.
அண்மை ஆண்டுகளில் இலங்கை நெற்செய்கையில் தன் னிறைவு பெறுவதற்காகப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்நடவடிக்கைகள் வருமாறு:
1. பசளையிடுதல். நாற்று நடுதல் களை பிடுங்குதல், முதலிய நவீன முறைகள் நெற் செய்கையில் பின்பற்றப்பட்டு வருகின்றன. "
2, புதிய விளை நிலங்கள் பயிர்ச்செய்கைக் குட்படுத்தப்பட்டன.
3. றக்ரர் போன்ற நவீன உபகரணங் 'கள் நெற்செய்கையில் பயன்படுத்தப்படுகின்
றன.
4. நீர்ப்பாய்ச்சல் வசதிகள் நன்கு அமைக் கப்பட்டு வருகின்றன. பழைய குளங்களையும் வாய்க்கால்களையும் திருத்தி வருவதோடு, புதிய நீர்ப்பாசனங்களும் நிறுவப்பட்டு வருகின்றன. மகாவலி கங்கையை வடக்கே - திருப்புவதும் இத்தகையதே.
5. விவசாயிகளுக்குக் கடன் வசதி விற் பனை வசதி என்பன செய்து கொடுக்கப்பட்டு - வருகின்றன.
நெல் ஆ, பு, 6

Page 23
42
ஆரம்பப் புவியியல்
இந்நடவடிக்கைகள் காரணமாக அண்மை ஆண்டுகளில் இலங்கையின் நெற்செய்கை, பெருவிருத்தியுற்று வருகின் றது. எனினும் நம் நாடு நெற்செய்கையில் தன்னிறைவு பெறாத காரணத்தினால் பர்மா, சீனா, தாய்லாந்து போன்ற வெளிநாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்து வரு கின்றது.
உலகின் நெற்செய்கை பருவக்காற்றுப் பிரதேசங்கள் நெல் விளையும் பிரதான பகுதிகளாகவுள்ளன. இடைவெப்பப் பிரதேசங்களின் பரந்த வேளாண்மைக்குக் கோதுமை தக்க உதாரணம் என்றால் பருவக்காற்றுப் பிரதேசங்களின் செறிவான பயிர்ச் செய்
து
\'கத்தாதாம். 40 கோடி!
கலப்பையும் உழு இயந்திரமும் கைக்கு நெல் தக்க உதாரணம். தென்னாசியா, தென்கிழக்கு ஆசியா மக்களின் பிரதான உணவாகவும் நெல் விளங்கு கின்றது.

நெற் செய்கை
43
நெல் கழிமுகப் பகுதிகளிலும், வண்டல் மண் செறிந்த பள்ளத்தாக்குகளிலும், வண்டல் மண் பரந்த கடற்கரைச் சமவெளிகளிலும், மலைச்சரிவுகளிலும் பயிரிடப்பட்டு வரு கின்றது. மலைச்சரிவுகளில் படிமுறைச் செய்கை மூலம் மேனில நெல் பயிரிடப் படுகின்றது. படிமுறைப் பயிர்ச் செய்கை இலங்கை, சீனா, யாவா, பிலிப்பைன், யப்பான் எனும் நாடு களில் நடைபெற்று வருகின்றது. சமவெளிகளில் தாழ்நில நெல் பயிரிடப்படுகின்றது. மேனில நெல்லின் ஏக்கருக் குரிய விளைவு குறைவாகும். மழை வீழ்ச்சி அதிகமாக இருப்பதனால் அதிகம் பாதிக்கப் படுகின்றது. ஆனால், தாழ் நில நெல்லின் ஏக்கருக்குரிய விளைவு அதிகமாகவும் மழை நீர் தேங்கி நிற்கக் கூடியதாகவும், நீர் பாய்ச்சக் கூடியதாக வும் உள்ளது.
நாட்டிற்கு நாடு ஏக்கருக்குரிய விளைச்சல் வேறுபடு கின்றது. யப்பானில் சராசரி ஏக்கருக்குரிய விளைவு 60 புசல் களாகவும், இலங்கையில் 14 முதல் 45 புசல்கள் வரையும், எகிப்தில் 30 முதல் 35 புசல்கள் வரையும், இந்தியாவில் 20 முதல் 25 புசல்கள் வரையும், வேறுபடுகின்றது. இத் தகைய வேறுபாட்டிற்குக் காரணம் பயிர்ச் செய்கையிலுள்ள தொழில் நுட்ப வேறுபாடுகளேயாகும்.
இந்தியா, இலங்கை, பர்மா, கம்போடியா, சீனா, யப் பான், கிழக்கிந்திய தீவுகள் என்பன நெற் செய்கையில் முக்கியமானவையாக விளங்குகின்றன. இக் கீழைத் தேச நாடுகளை விட ஐரோப்பாவில் போசமவெளி, ஸ்பானியா என்பனவும், வட அமெரிக்காவில் விரிகுடாக் கரையோரம், கலிபோர்ணிய சான்யுவான் - சக்கிரமன்ரோப் பள்ளத்தாக்கு என்பனவும், தென்னமெரிக்காவில் பிறேசில், கயானா, ஈக்கு வடோர், கொலம்பியா, பேரு கரையோரங்கள் என்பனவும், ஆபிரிக்காவில் மடகஸ்கார்தீவு, மேற்குக் கரையோரத்தில் சிலசிறு பகுதிகளும் நெற்செய்கையில் ஈடுபட்டுள்ளன. இவற் றில் 95 வீதம் நெல்லை உற்பத்தி செய்கின்ற கீழைத் தேச நாடுகளில் ஓரளவு தமது தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளும் நாடுகள் இந்தியா, யப்பான், சீனா என்பனவர

Page 24
44
ஆரம்பப் புவியியல் கும். போதாமையால் இறக்குமதி செய்யும் நாடுகள் இலங்கை, பிலிப்பைன் தீவுகள், மலாயா என்பனவாகும். ஏராளமாகத் தமது தேவைக்கும் அதிகமாக சீனா, பர்மா, 1 தைவான் எனும் நாடுகள் விளைவிக்கின்றன.
கோதுமை வர்த்தகம் போன்று நெல் வர்த்தகம் உலக மெங்கும் நடைபெறுவ தில்லை. நெல் வர்த்தகம் கீழைத் தேசநாடுகளிடையே நடைபெற்று வருகின்றது. ஏராளமாக உற்பத்தி செய்கின்ற நாடுகள் பற்றாக் குறையான நாடு களுக்கு நெல்லை ஏற்றுமதி செய்கின்றன. பர்மாவிலிருந்து இலங்கை அரிசியை இறக்குமதி செய்கின்றது. பர்மா கிழக்கிந்தியத் தீவுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றது. யப்பான் தைவானிலிருந்து நெல்லை இறக்குமதி செய்கின்றது."
பயிற்சிகள்
1. இலங்கையின் நெற்செய்கை குறித்து ஐந்து வாக்கியங்கள்
எழுதுக. நெற்செய்கைக்கு உவப்பான நிலைமைகள் யாவை? இலங்கையில் நெற்செய்கைப் பருவங்கள் எவை?
உலர் வலயத்தில் எப்பருவ நெல் விளைவிக்கப்படுகின்றது? 5. இலங்கையில் நெல் உற்பத்தி குறைவாக இருப்பதற்குரிய
காரணங்கள் யாவை? 6. இலங்கை அரசாங்கம் நெற்செய்கையை விருத்தி செய்வதற்காக
மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் எவை?
எக்காலநிலைப் பிரதேசங்கள் நெற்செய்கைக்கு உகந்தன? 8. நெல்லை அதிக அளவில் பயிரிடும் ஆசிய நாடுகள் எவை?
உலகின் நெல் வர்த்தகம் எத்தகையது? 10.
இலங்கை தனக்குத் தேவையான நெல்லை எந்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வருகின்றது?
க : பி - ம 9

அத்தியாயம்: 5 வியாபாரத் தானியப் பயிர்கள்
கோதுமை
வியாபாரத்திற்குரிய தானியப் பயிர்கள் என கோதுமை, சோளம், வாற் கோதுமை, ஓட்ஸ், றை என்பனவற்றைக் குறிப்பிடலாம். நம் நாடு இறக்குமதி செய்யும் உணவுப் பொருட்களுள் கோதுமை மா பிர தானமானது.
இடைவெப்பப் பிரதேசங்களின் பரந்த வேளாண்மைக் குக் கோதுமை தக்க உதாரண மாக விளங்குகின்றது. உலக மக்கள் இன்று உபயோகிக்கும் உணவில் கோதுமை ஒரு முக்கியமான தானியமாக உள்ளது. மஞ்சள் நிற மக்களும், கருநிற மக்களும் அரிசியைத் தமதுணவில் மிக முக்கியமான தானியமாகக்கொள்வது போல, வெள்ளை நிற மக்கள் தமதுண வில் கோதுமையை மிக முக்கியமான தானியமாகக் கொண் டுள்ளனர். ஆனால், ஒரு சிறு வித்தியாசமுள்ளது. அரிசியை உப் யோகிக்கும் மக்கள் தமது ணவில் 90% அரிசியை உபயோகிக் கின்றனர். ஆனால், கோதுமையை உபயோகிக்கும் மக்கள் தம் துணவில் 40 வீதமே கோதுமையைப் பயன்படுத்துகின்ற னர். மேலும், அரிசியை முக்கிய உணவாகக் கொள்ளும் (மஞ்சள் நிற. கருநிற மக்கள் இப்போது தமதுணவில் கோது மையையும் குறிப்பிடத்தக்களவு சேர்த்துக் கொள்கின்றனர். - கோதுமை பல்வேறுபட்ட காலநிலைகளிலும் பயிரிடக் கூடியதாகவுள்ளது. இடைவெப்பக் காலநிலை, மத்தியகோட் டுப் பருவக்காற்றுக் கால நிலை, சவன்னாக் காலநிலை முதலிய பல்வேறு வகையான காலநிலைப் பிரதேசங்களிலும் இது
விளையக்கூடியது. அதனால், உலகின் பல்வேறு பாகங்களிலும் இது பயிரிடப்பட்டு வருகின்றது. எனினும், இடைவெப்ப வலயக் காலநிலையே கோதுமைக்கு உகந்ததாக இருக்கின் றது. கோதுமை முளைத்து வரும் பருவத்தில் ஈரலிப்புத் தேவையான தாகவுள்ளது. இக் காலத்தில் 20" முதல் 30"

Page 25
கசாப்
ஐரோப்பா
சோவியத்ருலியா
4 இ நா :
இந்தியா
கருமங்காடிஇ
- அவுஸ் திரோல் ஐ த,
ஆ ஜந்தீன
உலகில் கோதுமை பியும் பிரதான
பிரதேசங்கள்
படம்: 14 உலகில் கோதுமை விளையும் பிரதான பிரதேசங்கள்

வியாபாரத் தானியப் பயிர்கள்
47
வரை மழைவீழ்ச்சி நிகழில் போதுமானது. தா னியம் முற் றும்போது 3 முதல் 8 வாரங்கள் வரை ஏறக்குறைய 60°ப. மேற்பட்ட வெப்பநிலை தேவைப்படுகின்றது.
பலவகையான கோதுமைகள் காலநிலைக்கும், இடத்திற் கும் ஏற்ப விளைவிக்கப்பட்டு வருகின்றன. விஞ்ஞான ஆராய்ச் சிகளும் இவ்வகையான கோதுமைகளைக் கண்டுபிடித்து உதவி யுள்ளன. மாரிகாலக் கோதுமைகள், இளவேனிற்காலக் கோதுமைகள் என இன்று உலகில் விளைவிக்கப்படும் கோது மையினங்களை இரு பெரும் பிரிவுகளாக வகுக்கலாம். மாரி காலக் கோதுமைகள் இலையுதிர் காலத்தில் விதைக்கப்படு கின்றன, இளவேனிற் காலக் கோதுமைகள், இளவேனிற் காலத் தன்மைகள் தோன்றியதும் விதைக்கப்படுகின்றன. மேலும் குளிரை, வறட்சியைத் தாங்கக்கூடிய கோதுமை யினங்களும், குறுகிய காலத்தில் வளர்ந்து பயன் தரும் கோதுமையினங்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
ஐரோப்பிய நாடுகள், ஐக்கிய சோவியத் சமவுடை மைக் குடியரசு, வட அமெரிக்காவில் பிரேரி, கலிபோர்ணியா, மலையிடை மேட்டு நிலங்கள், ஆசியாவில் இந்தியா, பாகிஸ் தான், சீனா, ஆபிரிக்காவில் எகிப்து, மொறோக்கோ, அல் ஜீரீயா, தென்னாபிரிக்க மத்தியதரைக் காலநிலைப் பிரதேசம், தென் அமெரிக்காவில் ஆயெந்தீனா, சில்லி, அவுஸ்திரேலி யாவில் மறேடாலிங் வடிநிலம் என்பன உலகின் கோதுமை விளைவிக்கும் நாடுகளில் முக்கியமானவை.
ஐரோப்பிய நாடுகளில் செறிவான முறையிலும், சுழல் முறையிலும் கோதுமை பயிரிடப்படுகின்றது. புதிய கண்டங் களில் பரந்த வேளாண்மையாகக் கோதுமை பயிரிடப்படு கின்றது. சீனா, இந்தியா என்பனவற்றில் பழைய முறை களைப் பின்பற்றிக் கோதுமைச்செய்கை நடைபெறுகின்றது. ஐரோப்பிய நாடுகளில் செறிவான முறையில் கோதுமைச் செய்கை நடைபெறுவதால் ஏக்கருக்கு 53 புசல் விளைவு சராசரியாகக் கிடைக்கின்றது. புதிய கண்டங்களில் பரந் தளவில் நடைபெறுவதால் ஏக்கருக்குச் சராசரி 15 புசலே கிடைக்கின்றது.

Page 26
48
ஆரம்பப் புவியியல்
கனடா, ஆயெந்தீனா, அவுஸ்திரேலியா எனும் நாடுகள் தம் தேவைக்கும் அதிகமாகக் கோதுமையை உற்பத்தி செய்து, அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகளாக உள்ளன. ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ரூஷியா, ரூமேனியா எனும் நாடுகள் ஒரளவு கோதுமையை ஏற்றுமதி செய்கின்றன. ஸ்பானியா, இந்தியா என்பன சுயதேவைக்குப் போதுமான வளவு கோதுமையை உற்பத்தி செய்யும் நாடுகளாக விளங்கு கின்றன. ' ஜேர்மனி, இத்தாலி, ஸ்கண்டிநேவியா, பிரித் தானிய தீவுகள், இலங்கை என்பன கோதுமையை இறக்கு மதி செய்து வருகின்றன.
சோளம்
உலகத்தின் இன்றைய பிரதான உணவுப் பயிர்களில் சோளமும் மிகப் பிரதானமான ஓரிடத்தை வகித்து வரு கின்றது. பொருளாதாரத்தில் தன்னிறைவும், மேம்பாடும் அடையாத நாட்டு மக்களுக்குச் சோளம் நேரடியான உண வாகவும், பொருளாதாரத்தில் மேம்பாடுடைய நாட்டு மக் களுக்குச் சோளம் நேரடியல்லாத உணவாகவும் இருக்கின்
றது.
சோளம் கோதுமைபோன்று பல கால நிலைகளிலும் பயிராகும் பயிர். வளம் பொருந்திய ஈரக் களிமண் பகுதி கள் பெரிதும் ஏற்றன. கோடைக்காலப் பயிரான தால், இத்ற்குக் கோடை மழை தேவை. வளர்ச்சியடையும் பரு வத்தில் வெப்பநிலை உயர்வாக இருக்கவேண்டும். மேலும், உறைபனி சோளத்தின் வளர்ச்சியைப் பாதிக்கக்கூடியது. அதனால் 120 நாட்கள் முதல் 170 நாட்கள் வரை உறை பனியற்ற பிரதேசங்களிலேயே இது பயிரிடப்படுகின்றது.
ஐக்கிய அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோ, பிறேசில், ஆயெந்தீனா. ஐரோப்பாவில் ரூமேனியா, யூகோசிலாவியா, இத்தாலி, ஹங்கேரி, ரூஷியா, ஆபிரிக்காவில் தென்னாபிரிக்கா, றொடீசியா, எகிப்து, ஆசியாவில் கங்கைச் சமவெளி, சீனா, யா வா, அவுஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ் என்பனவற்றை உலகில் சோளம் பயிரிடப்படும் பிர தான நாடுகளாகக் குறிப்பிடலாம்,

வியாபாரத் தானியப் பயிர்கள்
உலகின் சோள உற்பத்தியில் 3 பங்கை ஐக்கிய அமெரிக் காவின் சோள வலயம் உற்பத்தி செய்கின்றது. அதாவது 70% சோளம் ஐக்கிய அமெரிக்காவிலேயே விளைவிக்கப்படு கின்றது. இங்கு சோளத்தை ஆடு, மாடு முதலிய மிருகங் களுக்கு உணவாகக் கொடுத்து பின் அவற்றின் இறைச்சி
யைப் பயன்படுத்துகின்றனர்.
ஆயெந்தீனா சோள வலயத்தில் செறிவான முறையில் சோளம் பயிரிடப்படுகின்றது. இங்கு சோளம்; சோளமாகவே ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. கடற்கரையை அண்மி இச் சோளவலயம் இருப்பதால் ஏற்றுமதி செய்வது இலகு வாக உள்ளது. இங்கு உற்பத்தியாகும் சோள த் தில், 80% ஏற்றுமதி செய்யப்படுகின்றது. பெருந் தொகையை மேற்கு ஐரோப்பிய நாடுகள் இறக்குமதி செய்து கொள்கின்றன.
ஆபிரிக்காவில் விளைவிக்கப்படுகின்ற சோளம் ஏற்றுமதி செய்யக்கூடியளவிற்கு இல்லை. ஆபிரிக்காவில் தென்னாபிரிக் கச் சோளச் செய்கையே குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பாவின பிரதான சோள உற்பத்தி கண்டத்தின் தென்கிழக்குப் பகுதியில் காணப்படுகின்றது. ரூமேனியா, யூகோசிலாவியா, கங்கேரி, இத்தாலி என்பன ஐரோப்பா வின் முக்கிய சோள உற்பத்திப் பிரதேசங்களாகவுள்ளன. . ஆசியாவில் கங்கைச் சமவெளியிலும், சீனாவின் வட பகுதியிலும், மத்திய பகுதியிலும், யாவாவிலும் சோளம் பயிரிடப்பட்டு வருகின்றது, வளமான மண்ணும் கோடை மழையும், உறைபனியற்ற தன்மையும், வளர்ச்சிக் காலத் தில் இரவும் பகலும் வெப்பமாக இருத்தலும், அதிக மக் கள் தொகையும் இந்நாடுகளின் சோள உற்பத்திக்குச் சாதக மானவையாக இருக்கின்றன.
சோளம் கோதுமையிலும் பார்க்க மூன்று மடங்கு அதிகமாகப் பயிரான போதிலும், உலக வர்த்தகத்தில் கோதுமை போன்று முக்கியம் பெறவில்லை.
ஆ. பு: 72

Page 27
50
ஆரம்பப் புவியியல்
வாற்கோதுமை, ஓற்ஸ், றை வாற்கோதுமை, ஓற்ஸ், றை என்பன இடைவெப்ப வலயத் தானியங்களாகும். கோதுமைக்கு ஏற்ற காலநிலைப் பிரதேசங்களில் வாற்கோதுமை பயிராகும். வாற்கோதுமை பெரும்பாலும் குடிவகைகள் தயாரிக்கவே பயன்படுத்தப் படுகின்றது. மத்தியதரைக்கடல் நாடுகளில் இது முக்கிய மான பயிராகவுள்ளது, ஸ்காண்டிநேவியா, ஸ்கொட்லாந்து ; மொராக்கோ, அல்ஜீரியா, யப்பான் ஆயெந்தீனா என்பன வாற்கோதுமை பயிரிடப்படுகின்ற பிரதான நாடுகள்.
ஓற்ஸ் பெரிதும் மிருகவுணவாகப் பயன்படுத்தப்படு கின்றது. கோதுமை பயிரிட முடியாத பகுதிகளில் ஓற்ஸ் பயிராகும். மத்திய ஐரோப்பிய நாடுகளில் ஓற்ஸ் அதிகம் பயிரிடப்பட்டு வருகின்றது.
றை சதுப்பு நிலப் பகுதிகளுக்கும், மணற்றரைகளுக் கும் ஏற்ற தானியம். போலாந்து, ரூஷியா என்பன இதனை மிருக உணவாகக் கொடுக்கின்றன. இது ஜேர்மனி, போலந்து, ஐரோப்பிய ரூஷியா எனும் நாடுகளிலேயே அதிகமாகப் பயிரிடப்படுகின்றது.
பயிற்சிகள்
சி.
1. கோதுமை எவ்வெக் காலநிலைப் பிரதேசங்களில் வளரும்? 2. கோதுமையை விளைவிக்கும் பிரதான நாடுகள் ஐந்தின் பெயர்
கூறுக. 3. அதிகளவில் கோதுமையை ஏற்றுமதி செய்யும் நாடு யாது? 4. இந்தியாவில் சோளம் எப்பகுதிகளில் விளைவிக்கப்படுகின்றது?
5. சோளத்தின் இரு பிரயோசனங்கள் யாவை?

வியாபாரத் தானியப் பயிர்கள்
51
ஐ.
மேல் வரும் நாடுகளில் அதிகளவில் செய்கை பண்ணப்படும் பயிர்கள் யாவை?
1. கங்கைக் கழிமுகம்
2. ஆயெந்தீனா 3. ஐக்கிய அமெரிக்கா
இலங்கை
5. பிறேசில்
மேல் வரும் வசனங்கள் சரியெனில் என்ற அடையாளத்தையும், பிழையெனில்
X என்ற அடையாளத்தையும் இடுக:- 1. நெல் மேலைத்தேய மக்களின் முக்கிய உணவாகும்.
2. மத்திய கோட்டுப் பருவக் காற்றுக் காலநிலையிலும்
கோதுமை பயிரிடலாம். 3. ஓற்ஸ் பெரிதும் மிருக உணவாகப் பயன்படுத்தப்
படுகிறது.
சீனா, இந்தியா, இலங்கை எனும் மூன்று நாடுகளுமே
அதிகவ ளவில் நெல்லை உற்பத்தி செய்கின் றன.
கோதுமைப் பயிருக்கு நீர் வடிந்தோடக் கூடிய ஈர மண் தேவை.

Page 28
அத்தியாயம் : 6
இலங்கையின் வர்த்தகப் பயிர்கள்
தேயிலை இலங்கையின் வர்த்தகத்திற்குரிய பயிர்கள் எனும்போது தேயிலை, றப்பர், தென்னை ஆகிய மூன்று பயிர்களுமே முக்கி யத்துவம் பெறுகின்றன. இலங்கையின் பொருளாதாரம் இம் மூன்று பயிர்களினதும் ஏற்றுமதியிலேயே முற்றாகத் தங்கி யிருக்கிறது.
இலங்கையின் மிகவும் வருமானமுள்ள வர்த் தகப் பயிராக விளங்குகின்றது. உலகில் தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளில் உற்பத்தியளவுப் படியும், பயிரிடப்படும் பிரதேசங்களின் பரப்பளவுப்படியும் இலங்கை இரண்டாவது இடத்தை வகிக்கின்றது.
- தேயிலைச் செடி ஓர் அயனப்பிரதேசப் பயிரா கும். பகல் நேரத்தில் வெப்பநிலை ஏறக்குறைய 75°ப. ஆக இருக்கவேண் டும்; 80-120 அங்குல மழை வீழ்ச்சி இன்றியமை யாததாகும். சிறிதளவு
தேயிலைக் கொழுந்து உறைபனியைப் பயிர் தாங் கும். ஆனால் பயிரின் வேர்களைச் சுற்றி நீர் நிற்கக் கூடாது. இதனால் தேயிலை மலைநாட்டின் மத்திய பாகத்திலும், தென் மேல் பாகத்திலுள்ள மலைச்சரிவுகளிலும் பயிரிடப்படுகின்றது.
இலங்கையில் இன்று ஏறக்குறைய 5 இலட்சத்து 87 ஆயிரம் ஏக்கர் பரப்பு தேயிலைச் செய்கைக்காகப் பயன் படுத்தப்பட்டு வருகின்றது. இதில் பெரும்பகுதி மத்திய மாகாணத்திலும் (3, 22,000 ஏக்கர்), ஊவா மாகாணத்

இலங்கையின் வர்த்தகப் பயிர்கள்
53
திலும் {94,000 ஏக்கர்), சப்பிரகமூவா மாகாணத்திலும் (93,000 ஏக்கர்) காணப்படுகின்றது.
தேயிலைச் செடியை வளரவிட்டால் 20 அல்லது 30 அடிவரை மரமாக வளரும். தேயிலைக் கொழுந்துகளை இலே சாகக் கொய்வதற்கும், இலைகளைத் துளிர்க்கச் செய்வதற்கும் காலத்திற்குக் காலம் அவை 2 அல்லது 4 அடி உயரத்தில் வெட்டப்படுகின்றன. தேயிலைக் கொழுந்துகளைப் பெரும் பாலும் பெண்தொழிலாளரே கொய்வார்கள், கொழுந்துகளை உரிய பருவத்தில் கொய்யாவிடில் தேயிலையின் தரம் குறைந்து விடும்; தேயிலைக் கொழுந்தினளவு பயிர்ச் செய்கை முறைக் கும் தரையின் உயரத்திற்கு மேற்ப வேறுபடும். கொய்யப் பட்ட கொழுந்தினைத் தேயிலையாக்கும் வேலை தொழிற்சாலை களில் நடைபெறும்.
தேயிலை கொய் தல்
இலங்கையில் இன்று 46 கோடி இறாத்தலிற்கு அதிக மான தேயிலை உற்பத்தி செய்யப்படுகின்றது. ஓர் ஏக்கருக் குரிய வருடச் சராசரி விளைவாக 700 இறாத்தல் தேயிலை பெறப்படுகின்றது.

Page 29
54
ஆரம்பப் புவியியல்
மாத்தளை : 'இண்டி
ஓபேராதனை
தேயிலைப் பெருந்தோட்டங்களில் இன்று கிட்டத்தட்ட 5 இலட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இவர் களில் 80 வீதமானோர் இந்தியத் தொழிலாளராவர், ஏனைய 20 வீதமானோர் இலங்கைத் தொழிலாளராவர்.
ஒரு வருடத்தில் சரா சரியாக 40 கோடி இறாத்
S தேயிலை தலிற்கு அ தி க ம ர ன
தேயிலை தேயிலை ஏற்றுமதி செய் யப்படுகின் றது; உள் நாட் டில் வி ற் ப னை யா கு ம்  ேத யி லை ஏறக்குறைய இரண்டு கோடி இறாத்தல் களாம்.
தேயிலைத் தோட்டங் களின் பரப்பையும் ஏக்க ருக்குரிய விளைவையும் அதி
நாவலப்பிட்டி கரிப்பதற்கு அரசாங்கம் பலவழிகளில் முயற்சித்து
இரத்தின்புரி வருகின்றது. ப ைழ ய தோட்டங்களில் உள்ள
இந்தேகம் தேயிலைச் செடி க ளை அழித்து விட்டு, புதிய செடி களை திருப்பி நடுவதற்கும், படம்: 15 இலங்கையில் தேயிலை
பு தி ய - தோட்டங்களில் பயிராகும் பிரதான பகுதிகள். தேயிலைச் செய்கையை ஆரம்பிப்பதற்கும், மண்ணரிப்பைத் தடுப்பதற்கும், போதிய பசளை இடுவதற்குமாக அரசாங் கம் கடன் வசதி அளித்து வருகின்றது,
இலங்கையில் உற்பத்தியாகும் தேயிலை பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, மத்திய ஐரோப்பிய நாடுகள் என்பனவற்றிற்கு ஏற்றுமதியாகின்றது.
இலங்கையைத் தவிர உலகின் வேறு பல நாடுகளும் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டிருக்கின்றன. இந்தியா, சீனா, இந்தோனேசியா, யப்பான், தைவான் என்பன அந் நாடு,
5வது
கற்றன்
கா பண்டாரவளை

பாகில்
குவாட்டமாலா " சல்வடோர்
கரிசோ
இந்தியா,
இலங்கை
சுமாத்திரா
கொறைபியா
3. தேயிதை +] கொக்கோ இகோப்பி
பிரேசில்
படம்: 16 உலகில் தேயிலை, கொக்கோ, கோப்பி என்பன பயிரிடப்படும் பிரதான தேசங்கள் களுள் முக்கியமானவை. இந் நாடுகளைவிட, யமேக்கா, பிறேசில், கெனியா, நயாசலாந்து, உகண்டா, தன்சானியா எனும் நாடுகளும் தேயிலையை உற்பத்தி செய்து வருகின்றன, தென் ரூஷியாவிலும் அண்மையாண்டுகளில் தேயிலைச் செய்கை நடைபெறுகின்றது.
தென்கிழக்காசியப் பருவக்காற்றுப் பிரதேசங்களில் தேயிலைப் பெருந்தோட்டங்கள் ஐரோப் பியரின் வருகைக்குப் பின்பே ஆரம்பிக்கப்பட்டன, மேலை நாடுகளில் தேயிலைக்கு இருந்த தேவை யும், பருவக் காற்றுப் பிரதேசங்களின் பௌதிக வியல்புகளின் சாதகமான தன்மைகளும், அனு கூலமான பகுதிகளில் கிடைத்த பெருந்தொகையான நிலமும், போதியளவு தொழிலாளர்

Page 30
56
ஆரம்பப் புவியியல் கிடைத்தமையும் இந்நாடுகளில் தேயிலைப் பெருந் தோட்
டங்களைத் தொடக்கி வைத்தன.
தேயிலையை உற்பத்தி செய்யும் ஒவ்வொரு நாடுகளும், அதனை ஏற்றுமதிக்காகவே உற்பத்தி செய்கின்றன. உலக உற்பத்தியில் சீனா, இந்தியா, இலங்கை எனும் மூன்று நாடு களும் 85% உற்பத்தி செய்கின்றன. ஏனைய 15% தேயிலையை யப்பான், பாக்கிஸ்தான் முதலிய நாடுகள் உற்பத்தி செய் கின் றன. உலகத் தேயிலை ஏற்றுமதியில் முதலிடம் பெறுவது இந்தியாவாகும். உலகத் தேயிலை வர்த்தகத்தில் 45% தேயிலையை இது ஏற்றுமதி செய்கின்றது. உலகத் தேயிலை வர்த்தகத்தில் இரண்டாம் இடம் பெறும் இலங்கை 35% தேயிலையை ஏற்றுமதி செய்து வருகின்றது.
தேயிலையை அதிகமாக ஐக்கிய இராச்சியமே இறக்குமதி செய்கின்றது, ஏறத்தாழ 45% தேயிலையை ஐக்கிய இராச் சியம் வாங்கிக் கொள்கிறது. ஐக்கிய அமெரிக்காவும் கணிச மானவளவு தேயிலையை இறக்குமதி செய்து கொள்கின்றது. 10% தேயிலையை இந்நாடு வாங்கிக் கொள்கிறது, அவுஸ்தி ரேலியா, கனடா, எகிப்து, ஈரான், நெதர்லாந்து, இராக், சோவியத் ரூஷியா முதலிய நாடுகள் சிறிதளவு தேயிலையை இறக்குமதி செய்து வருகின்றன.
றப்பர் இலங்கையில் றப்பர் பயிரிடப்படும் பிரதேசத்தின் பரப் பளவு, தேயிலை பயிரிடப்படும் பிரதேசத்தின் பரப்பளவிலும் கூடுதலாக இருக்கின்ற போதிலும் வருமானம் தேயிலையிலும் குறைவானதாகவே இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக் கது. உலகில் உற்பத்தி செய்யப்படும் றப்பரில் ஏறக்குறைய 5 வீதம் இலங்கையிலிருந்து கிடைக்கின்றது.
தேயிலையைப் போன்று றப்பரும் அயனப் பிரதேசப் பயிராக இருக்கின்றது. வெப்பநிலை 80°ப அளவில் அதிக வேறுபாடின்றி இருக்கவேண்டும். மழை வீழ்ச்சி ஏறக் குறைய 80 அங்குலங்கள் ஆகவோ அதற்குச் சற்றதிக மாகவோ இருக்கவேண்டும், நீர் வழிந்தோடக் கூடிய நில

இலங்கையின் வர்த்தகப் பயிர்கள்
மாக இருக்கவேண்டியது அவசியமாகையினால், மலைச்சரிவு களின் கீழ்ப்பாகங்களில் இது பயிரிடப் படுகின்றது.
றப்பர் தோட்டங்கள் 2000 அடி உயரப் பிரதேசத் துள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. றப்பர் மரம் 1200 அடிக்கு அதிகமான உயரமுள்ள பகுதிகளிலும் நன்கு வளருமெனி னும் 1200 அடிக்குட்பட்ட பகு தி யி ல் கிடைக்கின்ற விளைவை அளியா 1200 அடிக்கு மேற்பட்ட பகுதிகளில் பயிரிடப்படுகின்ற றப்பர் தரும் பயன் குறைவாகவே உள்ளது.
நப்பர்
கேகாலை
கொழும்பு
"இரத்தினபுரி
களுத்துறை
காலி
படம்: 17 இலங்கையில் றப்பர் பயிராகும் பிரதான பகுதிகள் |
இலங்கையில் இன்று 6 இலட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பரப்பு றப்பர் பெருந்தோட்டங்களாகக் காணப்படுகின்றன. இதில் பெரு ம் ப கு தி சப்பிரகமூவா மாகாணத்திலும் (2,57,000 ஏக்கர்), மேல் மாகாணத்திலும் (1,95,000 ஏக் கர்), தென் மாகாணத்திலும் (105,000 ஏக்கர்), மத்திய
ஆ பு. 8

Page 31
58
ஆரம்பப் புவியியல்
மாகாணத்திலும் (79,000 ஏக்கர்) காணப்படுகின்றன. ஊவா மாகாணத்திலும் வடமேல் மாகாணத்திலும் றப்
பர்த் தோட்டங்களுள்ளன.
- றப்பர்ப் பாலை எடுப்பதற்கு அதிக தொழிலாளர் தேவைப் படாவிடினும், பயிற்றப்பட்ட தொழிலாளர் தேவைப்படுகின் றனர். மே, ஜூன் மாதங்களில் நிகழும் அதிக மழை வீழ்ச்சி றப்பர்ப் பால் எடுப்பதற்குத் தடையாக இருக்கின்றது.
வருடத்தில் இலங்கையில் உற்பத்தியாகும் 1,00,000 தொன் றப்பரில் 3 இலட்சம் இறாத்தலே உள் நாட்டில் உப் யோகிக்கப்படுகின்றது. மிகுதி ஏற்றுமதி செய்யப்படுகின்றது. பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா, சீனா என்பன அதிகள வில் எமது றப்பரை வாங்குகின்றன.
றப்பர்த் தோட்டங்களிலுள்ள வயது சென்ற மரங்களை அழித்து விட்டுப் புதிய மரங்களைத் திருப்பி நடுவ தற்கும், புதிய தோட்டங்களில் றப்பர்ச் செய்கையை ஆரம்பிப்ப தற்கும் அரசாங்கமின்று கடன் வசதி அளித்து வருகின்றது. றப்பர்த் தோட்டங்களின் பரப்பையும் ஏக்கருக்குரிய விளை வையும் அதிகரிக்கச் செய்வதற்கு அரசாங்கம் கூடிய கவனம் எடுத்து வருகின்றது.
சர்வதேசச் சந்தையில் அண்மைக் காலத்தில் இலங்கை றப்பரின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. பல நாடுகள் றப்பரை உற்பத்தி செய்து போட்டியிடுவதும், செயற்கை றப்பர் உபயோகம் கூடியுள்ளமையும் றப்பரின் வீழ்ச்சிக்குக் காரணங்களாகவுள.
மூன்று வகையான றப்பர்கள் இன்று உலக சந்தைக்கு வருகின்றன. அவையாவன: (அ) காட்டு றப்பர். (ஆ) பெருந் தோட்ட றப்பர். (இ) செயற்கை றப்பர்.
காட்டு றப்பர் இயற்கையாகவே காடுகளில் வளர்ந் திருக்கும் றப்பர் மரங்களிலிருந்து பெறப்படுகின்றது. இது ஓர் ஒழுங்கு முறையான பயிர்ச் செய்கையன்று. பிறேசில், கானா, அங்கோலா, கொங்கோ என்பன ஆரம்ப காலத் தில் அதிகமாகவும், இன்று ஓரளவும், காட்டு றப்பர் மரங் களிலிருந்து றப்பர் பாலைப் பெற்று ஏற்றுமதி செய்கின்றன.)

*#யம்:Tற Ut PETA)
ரியார்
படம்: 18 உலகில் றப்பர் பயிரிடப்படும் பிரதான தேசங்கள் முதன் முதல் றப்பர் உற்பத்தியில் முதலிடம் பெற்று விளங்கியது பிறேசிலாகும், உலக றப்பர்த் தேவையில் 99% பிறேசிலே அவித்து வந்தது. இன்று றப்பர் உற்பத்தியில் இந்நாடு வீழ்ச்சியடைந்துள்ளது,
மலாயா, இலங்கை, சுமத்திரா, யாவா, இந்தியா, போர்னியோ, தாய்லாந்து முதலிய தென்கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படும் றப்பர்ச் செய்கை, பெருந்தோட்ட றப்பர்ச் செய் கையாகும். இது ஒழுங்கு முறையான பயிர்ச் செய்கையாகும், இந்நாடுகள் ஐரோப்பியரின் ஆதிக் கத்தின் கீழ் இருந்த காலத்தில், ஐரோப்பிய நாடுகளின் றப்பர்த் தேவையைப் பூர்த்திசெய் வதற்காக இந்நாடுகளில் றப்பர்ப் பெருந்தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

Page 32
60
ஆரம்பப் புவியியல்
றப்பர் உற்பத்தியில் செயற்கை ரப்பர் இன்று முக்கிய மான ஒரு இடத்தை வகிக்கின்றது. இயற்கை றப்பருக்குப் போட்டியாகச் செயற்கை ரப்பர் விளங்குகின்றது. உலக தேவையை இயற்கை ரப்பர் பூர்த்திசெய்ய முடியாதிருந்த போது 1-ம் உலக மகாயுத்த காலத்தில் ஜேர்மனி செயற்கை ரப்பர் உற்பத்தியிலீடுபட்டது. இன்று ஐக்கிய அமெரிக்கா, கனடா என்பன பெருமளவிலும், கிழக்கு, மேற்கு ஜேர் மனிகள், செக்கோசிலாவியா, சோவியத் சமவுடைமைக் குடி யரசு என்பன குறிப்பிடத் தக்களவிலும் செயற்கை றப் பரை உற்பத்தி செய்து வருகின்றன.
தென்னை
தென்னந் தோட்டங்களை மிகவும் குறைவான தொழி லாளருடன் சுலபமாக மேற்பார்வையிட முடிவதால் இலங்
11
தென்னந்தோட்டம் கையர் தென்னைப் பெருந்தோட்டச் செய்கையையே பெரி தும் விரும்புகின்றனர்.

இலங்கையின் வர்த்தகப் பயிர்கள்
61
(யாழ்ப்பாணம்
பளை
மன்னார்
Aபுத்தளம்
தென்னை பயிரிடுவதற்கு வருடச் சராசரி வெப்பநிலை 75° - 80°ப. வரையோ அதற்கு மேலதிகமாகவோ இருக்க வேண்டும். சிறந்த பயனைப் பெறுவதற்குச் சராசரியாக 80 அங்குல மழை வீழ்ச்சி தேவை. கடற்கரையை அடுத்துள்ள மணற்பாங்கான பகுதிகளில் இது நன்கு வளர்கின்றது. 2000 அடிக்கு அதிக உயரமுடைய பகுதிகளில் வளர்க்கப்படும் தென்னை நல்ல பயனைக் கொடுப்பதில்லை.
- இலங்கையிலே தென்னை வளரும் பிரதேசங்கள் தென் மேல் கரையோரத்தில் பரந்திருக்கின்றன. கடற்கரைக்குச் ச மீ ப மா க வு ள் ள. இடங்களில் இது ஒடுங்கிய பிரதேச மாக உள்ளது. உதா
தென்னை ரணமாக க ா லிக் கும் அ ம் ப ல ா ங் கொடைக்கும் பின் னணியாகவுள்ள பகு
திருகோணமலை திகளைக்கூறலாம். நீர் கொழும்பிற்கும் சிலா பத்திற்கும் பின்னணி
சிலாபம் 4
மட்டக்களப்பு யாக - வி ரு க் கு ம்
தருநாகல் தென்னை வளரும் பிர
நீர்கொழும்பு தேசம் உண்ணாடு நோக்கிப் பொல்கா
கொழும்பு வலை, குருநாகல்வரை
களுத்துறை பரந்துள்ளது. மட்டக் களப்புக் கரையோ ரங்களிலும் மன்னாரி லும் வரண்ட கால நிலை காரணமாகப் படம் : 19 இலங்கையில் தென்னை பயி, ா பலன் கு றை வ ா க
கும் பிரதான பகுதிகள் விருக்கின்றது.
இலங்கையில் 50 இலட்சம் ஏக்கர் பரப்பிற்குமேல் தென்னந்தோட்டங்களிருக்கின்றன. வடமேல் மாகாண க் தில் 4,20,000 ஏக்கர்களும், மேல் மாகாணத்தில் 2 33,000
|
பேச இன்பெகம்
- அம்பாந்தோட்டை
காவி
Sாத்தறை

Page 33
62
ஆரம்பப் புவியியல்
ஏக்கர்களும், தென் மாகாணத்தில் 1,03,000 ஏக்கர்களும், சப்பிரகமூவா மாகாணத்தில் 82,000 ஏக்கர்களும், வட மாகாணத்தில் 24,000 ஏக்கர்களும், கீழ் மாகாணத்தில் 21,000 ஏக்கர்களும், வடமத்திய மாகாணத்தில் 2750 ஏக் கர்களும், ஊவா மாகாணத்தில் 1500 ஏக்கர்களும் தென் னைச் செய்கைக்குட்பட்டுள்ளன.
பழைய தென்னந் தோட்டங்களில் புதிய கன்றுகளை நடுவதற்கும், புதிய தென்னந்தோட்டங்களை உருவாக்கு வதற்கும் அரசாங்கம் நிதியுதவி செய்து வருகின்றது. பசளை விநியோகத் திட்டத்தின் கீழ் பசளையை ஏராளமாக அளித்து வருகின்றது.
கொப்பறா, தேங்காய்நெய், தேங்காய், தும்பு, பிண் ணாக்கு முதலிய தெங்குப் பொருட்கள் இலங்கையிலிருந்து ஏற்றுமதியாகின்றன. இந்தியா, பாகிஸ்தான், பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகள் என்பன எமது நாட்டின் தெங்குப் பொருட்களை வாங்குகின்றன, இந்தோனேசியா, பிலிப்பைன் தீவுகள், பசுபிக்கடல் தீவுகள் என்பனவற்றிலும் தென்னைச் செய்கை முக்கியம் பெற்றிருக்கின்றது.
ஏனைய வர்த்தகப் பயிர்கள்
கொக்கோ இலங்கையில் வர்த்தகப் பயிர்களான தேயிலை, றப்பர், தென்னை, என்பவற்றிற்கு அடுத்ததாகக் கொக்கோ ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றது. ஆசியாவிலேயே அதிகளவு கொக்கோ விளைவிக்கும் நாடு இலங்கையாகும்.
கொக்கோ ஒரு மத்திய கோட்டுப் பயிராகும், ஏறக் குறைய 30°ப வெப்பநிலையும், வருடம் முழுவதும் பரந் திருக்கும் 80 அங்குல மழை வீழ்ச்சியும் தேவை. இளம் கொக்கோச் செடி கள் சூரிய வெப்பத்தினால் பாதிக்கப் படு வ தால், நிழல் மரங்கள் நடவேண்டியுள்ளது. இலங்கையில் றப்பர், மரங்களைக் கொக்கோத் தோட்டங்களின் இடையே நடுகின்றனர்.
இலங்கையில் ஏறக்குறைய 34,000 ஏக்கர்ப் பரப்பில் கொக்கோ விளைவிக்கப்படுகின்றது. கொக்கோத் தோட்டங்

இலங்கையின் வர்த்தகப் பயிர்கள்
63
கள், கண்டி, மாத்தளை மாவட்டங்களிலும், அதனை அடுத் துள்ள குருநாகல் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் உள்ளன. கண்டி மாவட்டத்தில் 18,350 ஏக்கரிலும், மாத்தளை மாவட் டத்தில் 11,200 ஏக்கரிலும் கொக்கோ பயிரிடப்படுகின்றது.
ஒரு வருடத்தில் சராசரியாக 50,000 அந்தர் கொக்கோ பிலிப்பைன் தீவுகள், யப்பான், பிரித்தானிய, ஐரோப்பிய நாடுகள் ஆகியனவற்றிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
கறுவா
கறுQ!
கறுவா இலங்கைக்கு வருவாயைக் கொடுத்துவரும் பழைய பயிர்களில் ஒன்றாகும். ஏறக்குறைய 30,000 ஏக் கர் பரப்பில் இது பயிரிடப்பட்டு வருகின்றது.
- நல்ல தர மான கறுவா 80° ப. வெப்பநிலையும், 70
கறவா கொக்கோல தொட்டு80 அங்குலங்கள் மழை வீழ்ச்சியுமுள்ள படிக மணல்
கொகவே!
புகைபிடி! பகுதிகளில் நன்கு வளரும். இத னால் இலங்கையின் தென்மேல் கரையோரங்களில் பெருமளவு பயிரிடப்படுகின்றது. கறுவாப் பெருந்தோட்டங்கள் நீர்கொ ழும்பு, காலி ஆகிய மாவட் டங்களில் இருக்கின்றன, . ஏறத்தாழ 55,000 அந் தர்க் கறுவா மெச்சிக்கோ, ஐக் கிய அமெரிக்கா, அவுஸ்தி ரேலியா முதலிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
இலவம் பஞ்சு இது ஈரலிப்பான பிரதே சத்தில் 2500 அடிக்குக் குறை வான இடங்களில் பயிரிடப்படு
படம் : 20 கொக்கோ, கறுவா, கின்றது. இது பொதுவாக இலங்கையின் மத்திய பிரதே புகையிலை என்பன பயிரிடப்படும் சங்களிலும், தாழ்நிலப் பிர பிரதான பிரதேசங்கள்.

Page 34
64
ஆரம்பப் புவியியல்
தேசங்களிலும் வளரக்கூடியது. மாத்தளை, கண்டி மாவட் டங்களில் அதிகமாக வளர்க்கப்படுகின்றது. ஒரு மரத்தி லிருந்து சராசரி 20 முத்தல் பஞ்சு வரை சேகரிக்க முடியும். 1962-ஆம் ஆண்டு 4 875 இறாத்தல் இலவம் பஞ்சு ஏற்று மதி செய்யப்பட்டது. இதில் பெரும் பங்கை அவுஸ் திரேலியா வாங்கிக்கொள்கிறது.
பாக்கு
கமுகு ஏறக்குறைய 69,000 ஏக்கர்ப் பரப்பில் வளர்க் கப்படுகின்றது. கண்டி, கேகாலை, இரத்தினபுரி மாவட்டங் களில் அதிகமாக வளர்க்கப்படுகின்றது
பாக்கில் பெரும் பகுதி இந்தியா, ஐக்கிய இராச்சியம், மாலை தீவு என்பனவற்றிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
ஏலம்
வரலாற்றுக் காலத்தில் வாசனைத் திரவியத்தொழில் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தபோது ஏலம் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது. நுவரெலியா, மாத்தளை, கண்டி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் 5,300 ஏக்கர் நிலப்பரப்பில் பயிராகின்றது. இலங்கை மொத் தம் 31,000 அந்தர் ஏலம் உற்பத்தி செய்கிறது. உலகின் தேவையில் 6 வீதத்தை இலங்கை பூர்த்தி செய்கிறது.
மிளகு மிளகு இலங்கையின் தாழ் பிரதேசத்தில், 1700 அடிக் குக் குறைவான இடங்களில் பயிரிடப்படுகின்றது. மாத் தறையிலும், தும்பறைப்பள்ளத்தாக்கிலும் இது ஏராளமா கப் பயிரிடப்படுகின் றது. |
சித்திர நெல்லாப்புல் சித்திர நெல்லாப்புல் மாத்தறை, அம்பாந்தோட்டைப் பாதங்களில் ஏராளமாகப் பயிரிடப்படுகின்றது வருடம் இரு முறை இப்புற்கள் வெட்டப்பட்டு புல்லெண்ணெய் வடிக்கப் படுகின்றது. வருடா வருடம் சராசரியாக 7,50,000 இறாத் தல் புல்லெண்ணெய் ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெ ரிக்கா ஆகியவற்றிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது,

இலங்கையின் வர்த்தகப் பயிர்கள்
பயிற்சிகள்
(அ) 1. இலங்கையின் வர்த்தகத்திற்குரிய பயிர்கள் எவை?
2. தேயிலைச் செய்கைக்கு உகந்த நிலைமைகள் யாவை?
உலகில் வேறு எந்த நாடுகளில் தேயிலைச் செய்கை நடைபெறு
கிறைது? 4. இலங்கையிலி ருந்து தேயிலை யை வாங்கும் நாடுகள் எவை? 5. இலங்கையின் றப்பரை அதிகளவில் வாங்கும் நாடுகளெவை? 6. றப்பர் எத்தனை வகைப்படும் ? 7. இலங்கையில் தென்னை எங்கு அதிகளவில் செய்கைபண்ணப்
படுகின் றது? 8. ஏற்றுமதி செய்யப்படும் தெங்குப் பொருட்கள் எவை? (ஆ) மேல்வரும் வசனங்கள் சரியெனில் என்ற குறியீட்டையும், பிழையெனில் X
என்ற குறியீட்டையும் இடுக. 1. தேயிலை மன்னார்ப் பகுதியில் பயிரிடப்படுகின்றது.
கற்றன் பகுதியில் தேயிலை முக்கிய பயிராகும். தேயிலைச் செய்கையில் மட்டக்களப்பு முதலிடத்தைப் பெறுகின்றது.
றம்புக்கணைப் பகுதியில் வாழை முக்கிய பயிராகும், 5. கொக்கோத் தோட்டங்கள் திருகோணமலையில் ஏராள
மாகவுள் ளன. 6. மாத்தறையில் சித்திர நெல்லாப்புல் செய்கை பண்ணப்
படுகிறது. (இ) மேல்வரு வன இலங்கையில் விளைவிக்கப்படும் இவ்விரண்டு பிரதேசங்களின்
பெயர்களைத் தருக!
அ. நெல்
கொக்கோ இ. தேயிலை ஈ."
இலவம் பஞ்சு ஊள. - பாக்கு எ. தென்னை
ஆ. பு. 9
றப்பர்

Page 35
அத்தியாயம்: 17
இலங்கையின் ஏனைய விளைபொருட்கள்
இலங்கையின் முக்கிய விளைபொருட்கள் தேயிலை, றப் பர், தென்னை, நெல் என்பனவாகும், இவை தவிர, இன் னும் பல விளை பொருட்கள் நாட்டின் பல்வேறு பாகங்களில் விளைவிக்கப்படுகின்றன காய்கறிகள், பழவகைகள், சிறுதானி யங்கள் என்பன இத்தகைய விளைபொருட்களாகும், இவை பெரிதும் சுயதேவைக்காகவே பயிரிடப்பட்டு வருகின்றன.
அண்மை ஆண்டுகளில் இலங்கை அதிக உணவு உற் பத்தியில் கூடியளவு கவனம் செலுத்தியதன் காரணமாக இவ்விளை பொருட்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
குரக்கன்
குரக்கன் 70,000 ஏக்கருக்கு அதிகமான பரப்பில் பயி ரிடப்படுகின்றது. இது உலர் பிரதேசத்தில் நன்கு செழித்து வளர்கின்றது. 1 சேனைப் பயிர்ச் செய்கைக்காகக் காடுகள் அழிக்கப்பட்டதும், முதல் வருடமும் இரண்டாம் வருடமும் குரக்கன் பயிரிடப்படுகின்றது. யாழ்ப்பாணக் குடா நாட்டில் நீர்ப்பாய்ச்சல் உதவியுடன் நாற்று நட்டு ஏக்கர் ஒன்றிற்கு ஏறக்குறைய 40 புசல் பெறுகின்றார்கள். இலங்கையில் ஒரு வருடத்தில் ஏறத்தாழ 7 இலட்சம் புசல் குரக்கன் விளைவிக் கப்படுகின்றது.
சோளம்
சோளம் ஏறக்குறைய 40,000 ஏக்கர் பரப்பில் பயி ரிடப்படுகின்றது. சேனைப்பயிராகவும், கிராமத் தோட்டப் பயிராகவும் இது விளங்குகின்றது. சோளம் உணவுத் தானியமாகவும், மிருகவுணவாகவும் பயன்படுகிறது. இலங் கையில் ஏறத்தாழ வருடமொன்றிற்கு 3 இலட்சம் புசல் சோளம் விளைவிக்கப்படுகின்றது.

இலங்கையின் ஏனைய விளைபொருட்கள்
67
எள்
28 000 ஏக்கர் பரப்பில் பெரும்பாலும் வடமத்திய மாகாண ம், யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாந்தோட்டை மாவட்டங்களில் எள் பயிரிடப்பட்டு வருகின்றது. வருடத் தில் சராசரி 2 இலட்சம் புசல் விளைவிக்கப் படுகின்றது. சேனைப் பயிர்ச் செய்கையில், இது ஒரு சிறுபோகப் பயிராக வுள்ளது.
வெங்காயம்
உலர் பிரதேசத்திலும், மத்திய மாகாண த்திலும், பெரு மளவில் யாழ்ப்பாண த் திலும் 10,000 ஏக்கர்களுக்கு மேல் வெங்காயம் பயிரிடப்படுகின் றது. இறக்குமதியைக் குறைப் பதற்காக அரசாங்கம் வெங்காயச் செய்கைக்கு ஊக்கமளித்து வருகின்றது, இன்று வருடத்தில் ஏறக்குறைய 8 இலட்சம் அந்தர் வெங்காயம் விளைவிக்கப்படுகின்றது.
மிளகாய்
ஏறத்தாழ 40,000 ஏக்கர்ப் பரப்பில் பெரும்பாலும் வரண்ட பிரதேசத்தில் மிளகாய் பயிரிடப்பட்டு, வருடத்தில் 6 இலட்சம் அந்தர் பெறப்படுகின்றது. இலங்கை இன்று தனக்குத் தேவையான மிளகாயை உற்பத்தி செய்கின்றது.
தக்காளி 36 ஆயிரம் அந்தர் தக்காளி இன்று விளைவிக்கப்படு கிள் றது.' தக்காளி உலர் பிரதேசத்திலேயே நன்கு செழித்து வளர்கின்றது. அம்பாந்தோட்டை மாவட்டத்தில் - இது ஏராளமாகப் பயிரிடப்படுகின்றது.
வத்தாளை வத்தாளை ஏறக்குறைய 35,000 ஏக்கர் பரப்பில் இலங் கையின் ஈரவலயத்தில் பயிரிடப்படுகின்றது. நீர் வழிந்தோடக் > கூடிய வெண்மையான ஈரக்களிமண் பிரதேசம் இதற்குச் சிறந்தது. பயிரிடப்படும் பரப்பில் பெரும் பகுதி தென் மாகாணத்திலுள்ள து. 11 இலட்சம் அந்தர் வத்தாளை ) வருடா வருடம் பெறப்படுகின்றது.

Page 36
ஆரம்பப் புவியியல்
உருளைக்கிழங்கு வருடத்தில் ஏறக்குறைய 77,000 அந்தர் உருளைக் கிழங்கு நுவரெலியாவிற்கு அண்மையிலும், உடப்புசல்லா வையிலும், ஊவாமாகாணத்தின் உயர்ந்த பகுதிகளிலும் விளைவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணப்பகுதியில் அண்மை ஆண்டில் இச்செய்கையில் அதிக ஊக்கம் எடுக்கப்பட்டுள்ளது.
மரவள்ளி
ஏறக்குறைய 1 இலட்சம் ஏக்கர் பரப்பில், பெரும் பாலும் ஈரவலயத்தில் மரவள்ளி பயிரிடப்படுகின்றது. மண் ணிலுள்ள பசளையை முற்றாக இது உறிஞ்சி விடுவதால் சுழல் முறைப் பயிரிச் செய்கை மூலம் பயிரிடுகின்றனர்.
கரும்பு கரும்பு பலகாலமாக ஜின் கங்கைப் பள் ளத்தாக்கில் வத் தேகமையையும் நாகொடையையும் சூழ்ந்துள்ள பகுதிகளி லும், இன்று கல்லோயா (1718 ஏக்கர்), கந்தளாய் (1367 ஏக் கர்) பகுதிகளிலும் பயிரிடப்பட்டு வருகின்றது. இப்பயிருக்கு வரண்ட பிரதேசகாலநிலை ஏற்றது. விவசாயிகள் கருப்பஞ் செய்கையிலும் நெற்செய்கைக்கே அதிக முக்கியத்துவமளிக் கின்றனர். எதிர் காலத்தில் கருப்பஞ் செய்கை விருத்தியடை யும் என்று எதிர்பார்க்கக் கூடியதாகவுள்ளது,
- கோப்பி
கண்டி, மாத்தளை மாவட்டங்களில் கோப்பி' சிறிதளவு பயிரிடப்படுகின்றது. தேயிலை, றப்பர் எனும் பயிர்கள் பெருந் தோட்டங்களில் பயிரிடப்படுவதற்குமுன் கோப்பியே பிரதான பெருந்தோட்டப் பயிராக இருந்திருக்கின்றது. இலங்கையின் பல பாகங்களிலும் இதனை நட இப்போது முயற்சிகள் நடைபெறுகின்றன.
புகையிலை இலங்கையில் புகையிலை தின்பதற்காகவும், புகைப்பதற் காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணக் குடாநாட்டிலேயே புகையிலைச் செய்கையில் குறிப்பிடத்

இலங்கையின் ஏனைய விளை பொருட்கள்
69
தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இக்குடா நாட்டில் ஏறக் குறைய 5000 ஏக்கர் பிரதேசத்தில் காரம் கூடிய புகை யிலை பயிரிடப்படுகின்றது காரம் குறைவான புகையிலை தும் பறைப் பள்ளத்தாக்கு, குருநாகல் மாவட்டம், மட்டக் களப்பு, ஏறாவூர், தம்பன்கடவை, அங்குரான் கட்டை, நில் தாண்டகின்ன. மாத்தளை ஆகிய இடங்களில் பயிரிடப்படு கின்றது. இப்போது தும்பறைப் பள்ளத்தாக்கிலும், 7 மேல் மாகாணத்தில் சில பகுதிகளிலும் சிகரெட் புகையிலை பயி ரிடப்படுகின்றது.
பழவகை வாழை ஏராளமாகப் பொல்காவலையிலும், றம்புக்கணை யிலும், யாழ்ப்பாணத்திலும் பயிரிடப் படுகின்றது. நீர்ப் பாய்ச்சல் வசதிகளுள்ள இலங்கையின் பல பாகங்களிலும் வாழை வளர்க்கப்படுகின்றது. பிபிலை, மொனராகலை, வவு னியா முதலிய இடங்களில் தோடை அதிகளவில் பயிரா கின்றது. யாழ்ப்பாணம், ஹிங்குராங்கொடை என்பனவற் றில் மாம்பழம் அதிகளவில் கிடைக்கின்றது. இலங்கையின் தென் மேல் பகுதியில் அன்னாசி பயிரிடப்பட்டு வருகின்றது.
இப்பல்வகைப் பழங்கள் தகரங்களில் அடைக்கப்பட்டும், பழச்சாறு தயாரித்தும் வெளி நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றது.
பருத்தி அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஏறக்குறைய 3000 ஏக்கர் பிரதேசத்தில் பருத்தி பயிரிடப்படுகின்றது. மொன ராகலை மாவட்டத்திலுமிது பயிரிடப்பட்டு வருகின்றது. ஏனைய உலர்பகுதிகளிலும் இதனைப் பயிரிடலாம். 1 வருடத் தில் ஏறக்குறைய 8000 அந்தர் பருத்தி இலங்கையில் கிடைக் கின்றது. இப்பருத்தி முழுவதையும் வெள்ளவத்தை நெசவு
ஆலை வாங்கிக்கொள்கின்றது
விலங்கு வளர்ப்பு விலங்கு வளர்ப்பிலும் இலங்கை விருத்தியுற்று வரு சகின்றது. அம்பேவலை, பொகவந்தலாவை, பொலநறுவை, திய கம எனுமிடங்களில் விலங்கு வளர்ப்புப் பண்ணைகள் உள் ளன. தம்பன் கடவை எனுமிடத்தில் தகரப்பால் தொழிற் | சாலை அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றது.

Page 37
7)
ஆரம்பப் புவியியல்
பயிற்சிகள்
மேல்வரும் பிரதேசங்களில் விளைவிக்கப்படும் முக்கிய பயிர்களின் பெயர் கணைத்
தருக.
அ. யாழ்ப்பாணக் குடாநாடு
2. கல்பிடி
இ., மாத்தளை
7. " அம்பாந்தோட்டை
உ, மர் த்தறை
ஊள . பொல்காவலை
கற்தளாய்
- குருநாகல்
ஐ., நீர் கொழும்பு
ஒ கற்றன்
2, மேல் வருவன உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பிரதேசத்தைத் தருக.
அ. 9 குரக்கன்
ஆ. 5 எள்
வெங்காயம்
மிளகாய்
தக்காளி
வாமை)
தோ1ை.
ஏ, புகையிலை,
ஐ.பருத்தி
ஒ. , தகரப்பால்

அத்தியாயம் : 8
பருத்திச் செய்கை
நமது நாட்டு மக்களின் உடைகள் பெரிதும் பருத்திப் புடவையினால் தயாரிக்கப்படுகின்றன வெப்பக் காலநிலை நிலவும் நாடுகளுக்குப் பருத்திப்புடவையே சிறந்ததாகும். இலங்கையில் வெள்ளவத்தை, துல்கிரியா எனுமிடங்களில் நெசவு ஆலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அத்துடன் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலும் பருத்தி : நெசவு நடைபெற்று வருகின்றது. அதனால் அம்பாந்தோட்டை, மொனராகலை மாவட்டங்களில் பருத்திச் செய்கை நடை பெற்று வருகிறது.
இந்தியா, சீனா, யப்பான், சோவியத்ரூஷியா, செக்கோ சிலாவிக்கியா, பாக்கிஸ்தான் எனும் நாடுகள் இலங்கைக் குப் பருத்தித் து ணி வகைகளை அனுப்புகின்றன. இந்நாடு கள் தமக்குத் தேவையான பருத்திப் பஞ்சை வெப்பவலய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொள்கின்றன.
பருத்தி அயன வலயத்திற்கும், அயன வயல் வலயத் திற்கும் உரிய மரப் பயிராகும், நெசவுக் கைத் தொழிலுக் குப் பயன்படும் நாரியற் பொருட்களில் பருத்தி மிக முக் கியமானது. உலக ஏற்றுமதி இறக்குமதியிலும் இது பிர தானமாக இருக்கின்றது.
சம நிலங்களே பருத்திச் செய்கைக்குப் பெரிதும் சாதக மானவை. கருமண் பிரதேசங்களில் பருத்தி மிகச் செழிப்பாக வளரும். இதற்கு 20" முதல் 40" வரை மழைவீழ்ச்சி போது மானது. 40" க்கு மேற்பட்ட பிரதேசங்களிலும் இது செய்கை பண்ணப்படுகிறது. 20" க்குக் குறைந்த பகுதிகளில் நீர்ப் பாய்ச்சல் உதவியுடன் இதனைச் செய்கை பண்ணமுடியும். 70° ப, வெப்பநிலை பருத்திக்குகந்தது. உறைபனி பருத்திச் செடிக்கு ஏற்றதன்று.
மண் ணிலுள்ள சத்தை பருத்தி : விரைவில் உறிஞ்சி | விடக்கூடியது. அதனால் பசளையிடுதலும், சுழல் முறைப்

Page 38
கடன் டைரி tாடி :: க
அகவை 22 கபட.
45-கேட்டா 227 அன்றும்.
//
பிரான்சு க
"சோவியத் ருஷயா
ஐ.அ.நா
7ே எ ன *
எகிப்து
மெக்சிக்கோ |
சர்atiyழப்யா"
ராசா
8 ஒணேடா
பிரேசில் |
தங்கனீக்கா
இ பருதி
கி சணல்
3 பட்டுச்சால்
படம்: 21 உலகில் பருத்தி, சணல், பட்டுச்சண ல் என்பன உற்பத்தி செய்விக்கப்படும் பிரதான பிரதேசங்கள்.

பருத்திச் செய்கை
73
பயிர்ச் செய்கையும் பருத்தி உற்பத்திப் பிரதேசங்களில் கையாளப்பட்டு வருகின்றன, ஐக்கிய அமெரிக்கா பருத்தி விளை நிலத்தின் வளத்தைப் பாதுகாக்கப் பெருமளவில் பசளை யிட்டு வருகின்றது.
பருத்திச் செடி, கோப்பிச் செடியைப்போன்று இலகு வில் நோய்களினால், தாக்கப்படக் கூடியதாக உள்ளது. 'பொயில்பீகல்' என்னும் ஒருவகை வண்டு பருத்திச் செடியை நாசப்படுத்திவிடுகின்றது. ஐக்கிய அமெரிக்காவின் பருத்திச் செய்கை இதனால் பெருமளவில் நாசப்படுத்தப்பட்டது. தென்னமெரிக்காவில் இப் பூச்சியினால் பெரும் பருத்தித் தோட்டங்கள் அழிந்து போயின.
ஐக்கிய அமெரிக்கா, சோவியத் சமவுடைமைக் குடியரசு, இந்தியா, சீனா, எகிப்து, சூடான், பிறேசில், ஆஜெந்தீனா, நைஜீரியா, கானா, கினியா, றொடீசியா, பாகிஸ் தான், மெக் சிக்கோ முதலியன பருத்திச் செய்கையில் ஈடுபட்டிருக்கும்
முக்கியமான நாடுகளாம்.
ஐக்கிய அமெரிக்காவே உலக பருத்தி உற்பத்தியில் ஏறத்தாழ 45% உற்பத்தி செய்கின்றது. வடகறலீனா, தென் கறலீனா, ஜோர்ஜியா, அலபாமா, ரெனசி, ஆக்கன்சாஸ், ரெக்சாஸ் ஆகிய பாகங்களை உள்ளடக்கிய பருத்தி வலயத் தில் பருத்தி விளைவிக்கப்படுகின்றது. ஐக்கிய அமெரிக்கா பருத்தி உற்பத்தியில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
பருத்தி உற்பத்தியில் இந்தியா உலகில் மூன்றாவது இடத் தைப் பெறுகின்றது. புராதன காலத்தில் இருந்தே இங்கு பருத்தி உற்பத்தி செய்யப்பட்டு வந்திருக்கின்றது.
பருத்தி உற்பத்தியில் சோவியத் சமவுடைமைக் குடியரசு இரண்டாமிடத்தையும், சீனா நான் காம் இடத்தையும் பெறு கின்றன.
பருத்திப் பஞ்சைப் பறிப்பதற்கு அதிக தொழிலாளர் கள் தேவைப்படுகின்றனர். சில நாடுகளில் யந்திரங்களின் உதவியோடு பருத்திப்பஞ்சு பறிக்கப்படுகின்றது. பறிக்கப் \பட்ட பஞ்சின் விதைகள் வேறாக்கப்பட்டு. பஞ்சு சிப்பங்க
ஆ. பு.10
பருத்திப் பதா றனர். சில உப்படுகின்றது. இப்பங்க

Page 39
74
ஆரம்பப் புவியியல்
ளாகக் கட்டப்பட்டுத் தொழிற்சாலைகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன, பருத்தி விதைகள் மிருக உணவாகவும், பசளையாகவும், எண்ணெய் தயாரிப்பதற்கும் உபயோகிக்கப் படுகின்றன.
பருத்தியின் உலக வர்த்தகத்தை நோக்கில் வருடாவரு டம் ஏறத்தாழ 25 இலட்சம் தொன் பருத்தி ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இதில் ஐக்கிய அமெரிக்கா 40% ஐயும், எகிப்து 10% ஐயும், பாக்கிஸ்தான் 10% ஐயும், பிறேசில் 10%ஐயும், சோவியத் சமவுடைமைக் குடியரசு 10% ஐயும் ஏற்றுமதி செய்கின்றன. இந்தியப் பருத்தியில் பெரும்பகு தியை இந்தியாவே உபயோகிக்கின்றது. இந்த ஏற்றுமதியில் ஐக்கிய இராச்சியம் 20% ஐயும், பிரான்ஸ் 10%ஐயும், யப்பான் 10% ஐயும், இத்தாலி 10% ஐயும், இந்தியா 10% ஐயும் இறக்குமதி செய்கின்றன. இவற்றைவிட ஜேர்மனி, கனடா, பெல்ஜியம், போலந்து. சீனா என்பன தம்மிடமில் லாத நீண்ட பருத்திப் பஞ்சினையே இறக்குமதி செய்து கொள்கின்றன.
பயிற்சிகள் அ. 1. இலங்கையில் பருத்திச் செய்கை நடைபெறும் இடங்கள் எவை?
2.
இலங்கைக்குப் பருத்தித் துணிகளை அனுப்பும் நாடுகள் எவை? 3. எப்படிப்பட்ட பிரதேசம் பருத்திச் செய்கைக்கு ஏற்றது?
4. உலகில் பருத்திச் செய்கை நடைபெறும் நாடுகள் எவை? ஆ. கீழ்வரும் வாக்கியங்களில் உள்ளவை சரியா பிழையா என எழுதுக.
1. உலகில் பருத்தி உற்பத்தியில் இந்தியா மூன் றாம்
இடத்தை வகிக்கின்றது. 2. பருத்திப் பஞ்சைப் பறிக்க அதிக தொழிலாளர் தேவை
யன்று. 3. பருத்திச் செடியை ''பெயில்பீகல்'' என்ற வண்டு நாசப்
படுத்துகின்றது. 4. பருத்தி உற்பத்திப் பிரதேசங்களில் சுழல்முறைப்
பயிர்ச் செய்கையும் நடை பெறும். 5. மலைப்பிரதேசங்களே பருத்திச் செய்கைக்கு எற்றது....

பகுதி: இரண்டு இரண்டாம் பருவம்

Page 40
அத்தியாயம்: 9
காலநிலை மூலகங்கள்
காலநிலை மூலகங்கள் என்று கூறும்போது, வெப்ப நிலை, அமுக்கம், மழைவீழ்ச்சி, காற்று என்பனவற்றையே கருது கின்றது. இக்காலநிலை மூலகங்களே பயிர்ச்செய்கை நடவடிக்
கைகளை நிர்ணயிக்கின்றன,
வெப்பநிலை சூரியனிடமிருந்தே பூமி வெப்பத்தைப் பெறுகின்றது. சூரியனிலிருந்து பூமியை நோக்கி வரும் சூரிய கதிர் வீச் சில் ஒரு சிறு பகுதியே பூமியின் மேற்பரப்பை அடைகின் றது. சூரிய வெப்பம் இல்லையேல் பூமியில் உயிரினங்களே வாழமுடியாது.
பூமியின் மேற்பரப்பில் வெப்பநிலை எங்கும் சமனாகப் பரந்து இருக்கவில்லை; இடத்திற்கு இடம் வெப்பநிலை வித்தி யாசப்படுகின்றது.
பூமியின் மேற்பரப்பின் சமனற்ற வெப்பநிலைப் பரம் பலுக்குப் பல காரணிகள், ஏதுக்களாக உள்ளன, அவை மேல்வருவன:
(1) அகலக்கோட்டுநிலை (2) நிலப்பரப்பினதும், நீர்த்தொகுதியினதும் பரம்பல் (3) குத்துயரம் (4) காற்றுக்களும், நீரோட்டங்களும்.
1. சூரிய கதிர்கள் மத்தியகோட்டுப் பகுதிகளில் குத் தாக விழுகின்றன; அதாவது உச்சம் கொடுக்கின்றன. அத னால் மத் தியகோட்டை அடுத்த பகுதிகள் அதிக வெப்பத் தைப் பெறுகின்றன. " முனைவுப் பகுதிகளை நோக்கிச் செல்லச் செல்ல சூரிய கதிர்கள் சாய்வாக விழுகின்றன.,

கால நிலை மூல கங்கள்
77
அதனால், உயரக் கோட்டுப் பகுதிகள் குறைந்த வெப்பத்தை அனுபவிக்கின்றன.
கோடைகாலத்தில் கண்டங்கள் சமுத்திரங்களிலும் அதிக வெப்பமானவையாக இருக்கின்றன; மாரிகாலத்தில் கண்டங்கள் சமுத்திரங்களிலும் குளிரானவையாக இருக் கின்றன.
யாழ்
சT #
dே Tறாம்!
- படம்: 2 2 சூரிய கதிர்கள் விழுங் கோணம் 3 குத்துயரத்துக்கேற்ப ஒவ் வொரு 300 அடிக்கும் 1' பரன்கைற் வெப்பநிலை குறைவடைகின்றது; 1000 அடி உயரமுடைய ஒரு பிரதேசத்தின் வெப்பநிலை, கடல் மட்டத்து வெப்பநிலையிலும் பார்க்க, 3 • 3° பரன்கைற் குறைவான தாக இருக்கும், 300 அடிக்கு 10 பரன்கைற் வீதம் குறை வடையும் வெப்பநிலை வி தத்தை 'நழுவு வீதம்' என்பர். 2200
• அடி உயரத்திலுள்ள 2 வதுளையில் சராசரி வெப்பநிலை. கொழும்பிலுள்ள சராசரி வெப்ப நிலையிலும் பார்க்க 7° பரன்
கைம் குறைவான தாக உள்ளது.

Page 41
78
ஆரம்பப் புவியியல்
- 4. வெப்பப் பகுதிகளில் இருந்து குளிரான பகுதிகளை நோக்கி அசையும் காற்றுக்களும், நீரோட்டங்களும் வெப் பத்தைக் குளிரான பகு திகளுக்குக் கொண்டு செல்கின்றன. அதுபோல குளிரான பகுதிகளில் இருந்து வெப்பப் பகுதிகளை நோக்கி அசையும் காற்றுக்களும், நீரோட்டங்களும் குளிரை வெப்பமான பகுதிகளுக்குக் கொண்டு செல்கின்றன.
எனவே, வெப்பநிலையின் பரம்பலை, அகலக்கோடு. நிலப் பரப்பினதும் நீர்த்தொகுதியினதும் பரம்பல், குத்துயரம் காற்றுக்கள், நீரோட்டங்கள் என்பன நிர்ண யிக்கின்றன.
வெப்ப வலயங்கள்
இவ்வளவு நேரமும் படித்ததிலிருந்து மத்திய கோட் டுப் பகுதிகளில் அதிக வெப்பமும், மத்திய கோட்டிலிருந்து
ஏ மு
பட கடுங்குளிரியர்
..
நாடு
* Inப்பவரியம் (:-)"
வெப்பவல்யம்.
"மய
2%.
+ தென் இடை!
தென்அடை /> ..
அந்தாட்டி 2
தென் > கடுங்குளிர் வலயம்
தொ
படம்: 23 வெப்பவலயங்கள்
முனைவுகளை நோக்கிச் செல்ல வெப்பம் படிப்படியாகக் குறை கின்றது என்பதனையும் அறிந்திருப்பீர்கள். இவ்வெப்பநிலைப்

கால நிலை மூலகங்கள்
79
பரம்பலை அடிப்படையாகக் கொண்டு பூமியை வெப்பவல யங்களாகப் பிரிக்கலாம்.
கடகக் கோட்டிற்கும் மகரக் கோட்டிற்கும் இடைப் பட்ட பகுதி வெப்பவலயம் எனப்படும், கடகக் கோட்டிற்கும், ஆக்டிக் வட்டத்திற்கும் இடைப்பட்ட பகுதி வட இடை வெப்ப வலயம் என்றும், மகரக் கோட்டிற்கும், அந்தாட்டிக் வட் டத்திற்கும் இடைப்பட்ட பகுதி தென் இடை வெப்பவலயம் என்றும் அழைக்கப்படுகின்றன. மேலும் ஆக்டிக் வட்டத் திற்கு வடக்கேயுள்ள பகுதி வடகடுங்குளிர் வலயம் என்றும், அந்தாட்டிக் வட்டத்திற்குத் தெற்கேயுள்ள பகுதி தென்கடுங் குளிர் வலயம் என்றும் வழங்கப்படுகின் றன.
வெப்பநிலையை அளத்தல் வெப்பநிலையை அளக்கவுதவும் கருவிக்கு வெப்பமானி என்று பெயர். இதில் பல வகைகளுள்ளன. எனினும் பெரி தும் நாடுகளால் பரன் கைற் அளவுள்ள வெப்பமானியே உபயோகிக்கப்படுகின்றது. சென்ரிகிறேட் அளவுள்ள வெப்ப மானி சதமவளவை வெப்பமானி பெரிதும் விஞ்ஞான ஆராய்வுகளுக்கே பயன்படுத்தப்படுகின்றது. பரன்கைற் வெப்பமரனியில் நீரின் உறை நிலை 32 பாகைகளாகும்; நீரின் கொதிநிலை 212 பாகைகளாகும்.
அமுக்கமும் காற்றுக்களும் வளியின் அடர்த்தியே அமுக்கமாகும். ஓரிடத்தின் வளி அடர்த்தி குறைந்து அமுக்கம் குறையும்போது அவ்விடத் தில் 'தாழமுக்கம்' ஏற்படுகின்றது. வெப்பத்தினால் சூடாகி விரிவடைந்து மேலெழுந்த வளி, இன்னோர் இடத்திற்போய் இறங்கும்போது அவ்விடத்தின் அமுக்கம் கூடுகின்றது. அல் லது ஓரிடத்தின் வளி சூடாகாது இருக்குமானால் அவ்விடத் தின் அமுக்கம் குறையாது. இது ''உயரமுக்கம்'' எனப்படும், அமுக்க வேற்றுமைகளுக்குக் காரணம் வளி, சூடாகுவதில் உள்ள ஏற்றத்தாழ்வே. எனவே ஓரிடத்தின் அமுக்கம் குறை யும்போது அங்கு தாழமுக்கமும் ஓரிடத்தின் அமுக்கம் கூடும் |போது அங்கு உயரமுக்கமும் ஏற்படுகின் றன.

Page 42
80
ஆரம்பப் புவியியல்
** பேரா.AFபப் பட்---
பட 4:41 TYTY YTFrgTTTTTTTTTTTTTாறுT
பூமியின் மேற்பரப்பில் ஏழு அமுக்க வலயங்கள் காணப்படுகின்றன. மத்திய கோட்டைச் சூழ்ந்து ஒரு தாழமுக்க வலயமும் -- 30° வடக்கிலும், 30° தெற்கி லும், இரு உயரமுக்க வல யங்களும்-60° வடக்கிலும், 60" தெற்கிலும் இரு தாழ முக்க வலயங்களும் - முனைவு களில் இரு உயர முக்க வலயங் களும் அமைந்துள்ளன.
மத்திய கோட்டுப்பகுதி யில் அதிக  ெவ ப்ப நிலை காணப்படுகின்றது. அதனால் இங்குள்ள வளி சூடாகி, விரி வடைந்து மேலெழுகின்றது. அதனால் இங்குள்ள வளியின் அடர்த்தி குறைந்துபோக, தாழமுக்கம் ஏற்படுகின்றது. இத் தாழமுக்கத்தில் காற்று அசைவற்றும் அமைதியாக வும் காணப்படும். அதனால் இதனை * அமைதி வவயம்'' என் பர். 30° வடக்கிலும், தெற் கிலும் காணப்படும் உயர முக்க வலயங்கள் பரி அகலக் கோடுகள் என்றும் அழைக் கப் படுகின்றன.
பபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபபட
பா.மம்
உயரமுக்கத்திலிருந்து
தாழமுக்கத்தை நோக்கிக் படம் : 24
படம் : 25 பரன்கைற்
காற்று வீசும் இயல்பினது.
சதமவளவை வெப்பமானி -
பூமியில் ஏழு அமுக்க வல
வெப்பமானி

கால நிலை மூலகங்கள்
யங்கள் காணப்படுகின்றன என்றும் அறிந்தோம், அதனால் ஆறு காற்றுத் தொகுதிகள் காணப்படுகின்றன, 30° வடக்கு, 30° தெற்கு உயரமுக்க வலயங்களிலிருந்து மத்திய கோட் டுத் தாழமுக்க வலயத்தை நோக்கி வீசும் இரு காற்றுத் தொகுதிகள், 60° வடக்குத் தெற்குத் தாழமுக்க வலயங் களை நோக்கி, 30° வடக்கு, தெற்கு உயரமுக்க வலயங்களி லிருந்து வீசும் இரு காற்றுத் தொகுதிகள், முனைவு உயர முக்க வலயங்களிலிருந்து 60° வடக்கு, தெற்கு தாழமுக்க வலயங்களை நோக்கி வீசும் இரு காற்றுத் தொகுதிகள் என்பனவே அவை.
வாகனம்
- க.கோ
2 ரிம் 1 to My,
உ யராஜாக்கள் // வடகிழ் முராவுக் காற்று
தாழமுக்கம் தென்மேபேக்காற்று' '' உயரக்கம்: 10- வடகீழ் வியாபாரக் காற்று »
தாழமுக்கம்4AHம் நெள் கீழ்" வியாபாரக் காற்று ' உயர்க்கம் 2
வடமேலக்காற்று ///தாழமுக்கம்777777 தென் கீழ் முனைகிக் கார்
.'முனைவு து".
உயரமுக்கம்:
தெழு நீ
ம.கே.
ர-நோ.
படம்: 26 அமுக்க வலயங்களும், காற்றுத் தொகுதிகளும்
காற்றுத் தொகுதிகள் புவியின் மேற்பரப்புக் காற்றுக்களில் மூன்று காற்றுத் தொகுதிகள் குறிப்பிடத்தக்கன.
ஆ; பு: 11

Page 43
8:2
ஆரம்பப் புவியியல்
1. வியாபாரக் காற்றுக்கள்: 30° வடக்குத் தெற்கு அயன வயல் உயரமுக்கப் பகுதிகளிலிருந்து, மத்திய கோட்டுத் தாழமுக்கப் பகுதியை நோக்கி இக்காற்றுக்கள் வீசுகின்றன. இவை வடவரைக் கோளத்தில் வடகீழ் வியாபாரக் காற் றுக்களாக வும், தென்னரைக் கோளத்தில் தென்கீழ் வியாபாரக் காற்றுக் களாகவும் வீசுகின்றன. இவை ஒழுங்கான காற்றுக்களாம்; இவ்வியாபாரக் காற்றுக்களைத் தடக்காற்றுக்கள் என்றும் வழங் குவர்.
2. மேலைக் காற்றுகள்: 30° வடக்கு தெற்கு அயன வயல் உயரமுக்கப்பகுதிகளிலிருந்து, 60° வடக்கு, தெற்கு இடை வெப்பத் தாழமுக்கப் பகுதிகளை நோக்கி வீசும் காற்றுக்கள் மேலைக் காற்றுக்கள் எனப்படும். வடவரைக் கோளத்தில் இவை தென் மேல் காற்றுக்களாக வீசுகின்றன; இவற்றைத் 'தென் மேல் மாறு ங் காற்றுக்கள்' என்பர். ஏனெனில், இவற்றின் திசை ஒழுங்கற்றுக் காணப்படும். தென் னரைக் கோளத்தில் வீசும் மேலைக் காற்றுக்கள் வடமேல் காற்றுகளாகும். இவை வடவரைக்கோள மேலைக்காற்றுகள் போன்று ஒழுங்கற்றவை யல்ல. இவை ஒழுங்காகக் காணப்படக் காரணம், தென் னரைக் கோளத்தில் நிலப்பரப்புக் குறைவாகவும், சமுத்திர வெளித்தொடர்ச்சியாகவும் இருப்பதே.
3, முனைவுக் காற்றுகள்: முனைவு உயரமுக்கப் பகுதிகளி லிருந்து இடைவெப்பத் தாழமுக்கப் பகுதிகளை நோக்கி வீசுங் காற்றுக்களே முனைவுக் காற்றுக்களாம். இவை குளி ரான காற்றுக்கள், வடவரைக் கோளத்தில் வடகிழக்கு முனைவுக் காற்றுக்களாகவும், தென்னரைக் கோளத்தில் தென் கிழக்கு முனைவுக் காற்றுகளாகவும் முனைவுக் காற்றுக்கள்
வீசுகின்றன.
மழை வீழ்ச்சி நிலத்தைக் குளிர்விக்கின்ற வளிமண்டலச் செய்முறை களில் மழைவீழ்ச்சி மிகவும் முக்கியமானது. மழைவீழ்ச்சி உருவாக வெப்பமும், நீரும் தேவை.
நீராவி உருவாகுவதற்கு நீரும், வெப்பமும் மிகவும் இன் றியமையாதன. சமுத்திரங்கள், கடல்கள், நதிகள், ஏரி)

கால நிலை மூல கங்கள்
83.
கே : பா
கள், குளங்கள், கிணறுகள் முதலிய நீர் நிலைகளிலுள்ள ஒரு பகுதி வெப்பத்தினால் ஆவியாக மாற்றப்படுகின்றது. மேற்கூறிய நீர்நிலைகளில் இருந்து மட்டுமன்றி, ஈரமான நில மேற்பரப்புக்களிலிருந்தும் வெப்பத்தினால் நீராவி உரு வாகின்றது.
நீராவி பாரமற்றதாகையால் மேலெழும். மேலெழும் நீராவி குளிர்ச்சியடைந்து திரவமாக மாறி மழையாகப் பொழியும், நீராவி நீர்த்துளிகளாக மாறுகின்ற நிலை ஒடுங் கல் எனப்படும்.
- இந் நீர்த்துளிகள் மிக மிக நுண்ணியவை யாதலால், முகில்களா கக் காற்றிலே மிதக் கின்றன. பெரிய நீர்த்
பனிபடு நி4h
துளிகள் பனியையும், உறைநிலையிலும் வெப்ப நிலை கு  ைற ந் த  ைவ வெண் ப னி யை யு ம்
iேaலெழம் காற்றுகள் தோற்று வி க் கி ன் ற ன. நீராவி தொடர்ந்து நீர்த்துளிகளாக மாறும் போது, சிறு சிறு துளி கள் ஒன்றோடொன்று சேர்ந்து .பெருந்துளிக ளாக மாறுகின்றன. அவை மழைவீழ்ச்சியா கப் பூமியின் மேல் வீழ்
படம்: * 37 " மேற்காவுகை மழை கின்றன. மூன்று வகையான மழை வீழ்ச்சி வகைகளுள்ளன. அவையாவன:
1, மேற்காவுகை மழை.
தரையுயர்ச்சி வேற்றுமை மழை. சூறாவளி மழை.
கேசி 2வர் பக்கம் 19ாம் 27: * 4. 5:7:T: 3 க':4ா: கச-1 4=-
ஆரியகதிர்கள்
77:12

Page 44
84
ஆரம்பப் புவியியல்
1. மேற்காவுகை மழை: வெப்பத்தினால் சூடாகி, விரி வடைந்த காற்றுக்கள், அடர்த்தி குறைந்து மேலெழுகின் றன. மேலெழும் காற்றுக்கள் குளிர்ச்சியடையும் என ஏற் கனவே கண்டோம், காற்றுக்கள் மேலெழுந்து ஒடுங்கு வதால், நீர்த்துளிகளாக மாறி மழை வீழ்ச்சி நிகழ்கின்றது. இதனை மேற்காவுகை மழை என்பர்.
மேற்காவுகை மழை ஏற்படுவதற்குக் காற்றுக்கள் வெப் பமாகி மேலெழல் அவசியமாகையினால், மத்திய கோட்டுப் பகுதிகளில் மேற்காவுகை மழை வருடம் முழுவதும் ஏற் படுகின்றது.
2. தரையுயர்ச்சி வேற்றுமை மழை: இவ்வகையான மழை வீழ்ச்சியை மலையியன் மழை என்றோ, இயற்கைத் தோற்ற மழை என்றோ அழைப்பர். ஈரலிப்பான காற்றுக்கள் மலைத்தொடர் களை நோக்கி வீசும்போது மேலெழுகின்றன: மேலெழும்
--.
-ஐ சமயம் சாக்கிறோமோ
வர்:
Uா_அபாயம்
77ம் 7
கர்ப்பபப்பகம
ப ைழா
தக தக
இ காறறபபத்கார்
படம்: 28 தரையுயர்ச்சி வேற்றுமை மழை
படியாக மலைத்தொடர்கள் தடையாக நின்று தள்ளுகின் றன. மேலெழுவதனால் காற்றுக்கள் குளிர்ச்சியடைந்து" ஒடுங்கி காற்றுப்பக்கம் மழை வீழ்ச்சியையும் காற்றொதுக்குப் பக்கம் வறட்சியையும் பெறுகின்றன. ஏனெனில், மலைத் 1

கால நிலை மூல கங் கள்
85
தொடர்களைக் கடந்து வீசும் காற்றுக்கள், காற்றுப் பக்கத்தில் ஈரலிப்பு முழுவதையும் இழந்து, காற்றொதுக்குப் பக்கத்தில் வறண்டனவாகவே வீசுகின்றன,
3. சூறாவளி மழை: சூறாவளி காரணமாகவும் மழை ஏற் படுகின்றது. அமுக்கவிறக்கம் கடற்கரைகளைக் கடந்து செல் லும்போது, தரைத் தோற்றத்தின் விளைவினால் சூறாவளி மழை கடுமையாகப் பெய்யும். வெப்பவலயத்தில் இதனால் இடைவிடாத தூறல் காணப்படும். வெப்பமான காற்றுக் களும், குளிரான காற்றுக்களும் சந்திப்பதால், சூறாவளியோடு மழையுமேற்படுகின்றது. மேலைக் காற்று வீசும் பகுதிகளில் இத்தகைய நிலைமைகளைக் காணலாம்.
மழைமானி
மழை வீழ்ச்சியை அளக்க உதவும் கருவியான மழை மானி மிக இலகுவானதொரு கருவியே, உருளைவடிவமான ஒரு கண்ணாடிப் பாத்திரத்தின் மேல், 5 முதல் 8 அங்குலம் வரை விட்ட மான ஒரு புனல் வைக்கப்பட்டிருக் கும்; அது மழை நீரைப் பெற்றுப் பாத்திரத்தினுள் சேர்க்கும். பாத் திரத்தினுள் சேரும் நீர் ஆவியாக மாறாது. குறிப்பிட்ட காலவேளையிற் சேர்ந்த மழை நீர், அளவு பாத்திரம் ஒன்றினுள் விட்டு அளக்கப்படும். அளவு பாத்திரத்தில் குறிக்கப்பட்ட டிருக்கும் அளவுகள் அங்குலத்திலோ மில்லிமீற்றரிலோ குறிக்கப்பட்டிருக் கின்றன. அளவு பாத்திரத் தில் பெறப் படம்: 29 மழைமானி பட்ட அளவே அவ்விடத்தில் பெய்த மழை வீழ்ச்சியின் அளவாகும். அதாவது, கழுவு நீராக ஓடாமல், நிலத்தில் ஊறாமல், ஆவியாகாமல் பெய்த மழை முழுவதும் நிலத்தில் தேங்கி நின்றால், எவ்வளவு தடிப்பாக
• இருக்குமோ அந்த அளவை மழைமானி காட்டும்.
السلسلمللسلمللسلسلبيلسليل

Page 45
86
ஆரம்பப் புவியியல்
பயிற்சிகள்
பயிற்சி: 1
1. பூமி எங்கிருந்து வெப்பத்தைப் பெறுகின்றது? 2. வெப்பநிலைப் பரம்பலை நிர்ணயிக்கும் எதுக்கள் எவை? 3. காற்றுக்கள் எவ்வாறு வெப்பநிலையைப் பாதிக்கின்றன? 4, 300 அடி உயரத்திற்கு எவ்வளவு பாகை பரன்கைற் வெப்ப
நிலை குறைவடையும்? 5. வெப்ப வலயங்கள் எவை?
பயிற்சி: 2
மேல்வரும் வாக்கியங்கள் சரியாயின் என்ற அடையாளத்தையும், பிழை யாயின் X என்ற அடையாளத்தையும் இடுக:- (அ) சூரிய கதிர்வீச்சில் முழுப்பகுதியும் பூமியை அடை
கின்றது.
(ஆ)
(இ)
வெப்பநிலைப் பரம்பலை நிர்ணயிப்பதில் அகலக்கோடு மிகமுக்கியமானது. நீரோட்டங்கள் ஓரிடத்தின் வெப்பத்தையோ, குளி
ரையோ மாற்றியமைக்கக் கூடியன. வடகடுங்குளிர் வலயம் அந்தாட்டிக் வட்டத்திற்குத் தெற்கேயுள்ளது. வெப்பநிலையை அளக்க உதவும் கருவி வெப்பமானி எனப்படும்.
அது அம்பி,
(உ)
பயிற்சி: 3
1. பூமியில் எத்தனை அமுக்கவலயங்களுள்ளன? 2. அமைதி வலயம் என்றால் என்ன?
காற்றுத் தொகுதிகள் எத்தனை? 4. மூன்று காற்றுத் தொகுதிகளின் பெயர்களைத் தருக.

கால நிலை மூலகங்கள்
பயிற் சி: 4
1. மழைவீழ்ச்சி எவ்வாறு ஏற்படுகின்றது? 2. மழைவீழ்ச்சி வலயங்கள் எவை? 3. மேற்காவுகை மழைவீழ்ச்சியை விபரிக்க? 4. உலகில் எப்பகுதிகள் அதிக மழைவீழ்ச்சியைப் பெறுகின்றன? 5. மழைவீழ்ச்சியை அளக்க உதவும் கருவியின் பெயர் யாது?
பயிற்சி: 5
பின்வரும் வசனங்கள் சரியெனில் சரியென்றும், பிழையெனில் பிழையென்றும் எழுதுக.
1. மழைவீழ்ச்சி உருவாக வெப்பமும் நீருந்தேவை.
2. நீராவி பாரமானது; மேலெழா து.
3. மலையியன் மழை என்பது மேற்காவுகை மழைவீழ்ச்சி
யையே குறிக்கும். 4. மழைவீழ்ச்சியை வெப்பமானியால் அளக்கலாம். 5. 10 அங்குல மழைவீழ்ச்சிக்குக் குறைவாகப் பெறும்
பகுதிகள் ஈரலிப்பானவை.

Page 46
அத்தியாயம் : 10
காலநிலைப் பிரதேசங்கள்
இரு பிரதேசங்கள் ஒரே மாதிரியான கால நிலையை அ னுபவிப்பதில்லை. எனினும் முக்கியமான கால நிலை அம் சங்களைப் பொதுவாகக் கொண்டுள்ள பிரதேசங்களை ஒரே பிரிவின் கீழ் அமையக்கூடியதாக வகுத்து ஆராய்வதே கால நிலைப் பிரதேசங்கள் பற்றிய ஆராய்வாகும். கால நிலையை அடிப்படையாகக் கொண்டு உலகினைப் பல காலநிலைப் பிர தேசங்களாகப் பிரிக்கலாம். கலாநிதி டட்லி -ஸ்ராம்ப் என் பார் உலகினைப் பதின் மூன்று கால நிலைப் பிரதேசங்களாக வகுத்து ஆராய்ந்துள்ளார். அவை:
1. மத்திய கோட்டுக் காலநிலைப் பிரதேசம்
மத்திய கோட்டிற்கு இரு புறங்களிலும் மத்திய கோப் இக் காலநிலைப் பிரதேசங்கள் அமைந்துள்ளன. இது பெரும் பாலும் மத்திய அமெரிக்கா, அமேசன் வடிநிலம், கொங்கோ வடிநிலம், ஆபிரிக்காவின் கிழக்குக் கரை, மலாயா, சுமாத் திரா, யாவா, போர்னியோ, பிலிப்பைன் தீவுகள், நியூகினி, அவுஸ்திரேலியாவின் வடகரையோரம் என்னும் பிரதேசங் களில் காணப்படுகின்றது.
மழைவீழ்ச்சி, வெப்பநிலை மத்திய கோட்டுக் காலநிலைப் பிரதேசங்களில் ஆண்டு முழுவதும் மழை வீழ்ச்சியுண்டு. இம்மழை வீழ்ச்சியில் பெரும் பங்கு மேற்காவுகை மூலமே நிகழ்கின்றது. வருடச் சராசரி மழைவீழ்ச்சி 70" முதல் 80" வரையில் காணப்படுகின்றது. இக் காலநிலைப் பிரதேசங்களில் வெப்பநிலையும் அதிகமே. வருடச் சராசரி வெப்பநிலை 78° ப. முதல் 80° ப. வரை காணப்படும்.
இயற்கைத் தாவரம் இக்காலநிலைப் பிரதேசத்தின் இயற்கைத் தாவரம் வெப்ப வலயக் காடுகளாகும். இக்காடுகள் என்றும் பசுமையான

காலநிலைப் பிரதேசங்கள்
98
அடர்த்தியான காடுகளாகும். இவற்றை “செல்வாஸ்" காடுகள் என்றும் அழைப்பர். இக்காடுகளில் பலவின மரங்கள் காணப் படுகின்றன. இம்மரங்கள் வைரமானவை. ஏறு கொடிகள் மர உச்சிகளில் பரந்துள்ளன. மலைவேம்பு, கருங்காலி, தேக்கு, சால், றப்பர், சிங்கோனா முதலிய மரங்கள் இங்கு காணப் படுகின்றன.
பொருளாதார விருத்தி மத்திய கோட்டுக் காலநிலைப் பிரதேசம் பொருளாதாரத் தைப் பொறுத்தமட்டில் அதிக தூரம் விருத்தியடையவில்லை. இப்பிரதேசங்களில் காணப்படும் இயற்கைத் தாவரம் இலகு வில் அழிக்கமுடியாததாய் இருப்பதினாற் பயிர்ச்செய்கை நட வடிக்கைகளை மேற்கொள்வது இலகுவானதாய் இல்லை. சிற் சில பகுதிகளில் பெருந்தோட்டங்கள் விருத்தியடைந்துள்ளன.
2. அயனமண்டலக் காலநிலைப் பிரதேசம்
அயன மண்டலக் காலநிலைப் பிரதேசங்கள் மத்தியகோட் டுக் காலநிலைப் பிரதேசங்களுக்கு வடக்கேயும் தெற்கேயும் அமைந்திருக்கின்றன. இக்கால நிலையைச் சூடான காலநிலை மாதிரியென்றும், அயன மண்டலப் புல்வெளிக் கால நிலையென் றும் வழங்குவர், இக்காலநிலை கயானா உயர்நிலம், ஒறி னோக்கோ வடிநிலம், பிறேசில் உயர் நிலம், ஆபிரிக்கா, 'மட கஸ்கார், வட அவுஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் காணப்படு கின் றன.
மழைவீழ்ச்சி, வெப்பநிலை இக் கால நிலைப் பிரதேசத்தினுள் மழைவீழ்ச்சி இடத்திற் கிடம் வேறுபடுகின்றது. மத்தியகோட்டுக் காடுகளை அடுத்து வருடச் சராசரி மழைவீழ்ச்சி 70" முதல் 80" வரை காணப் படுகின்றது. பாலை நில எல்லைகளில் 10" முதல் 15" வரை காணப்படுகின்றது. இங்கே மாரிகாலம் வரண்ட பருவமா கும். அயனமண்டல காலநிலைப் பிரதேசங்களில் வெப்பநிலை 43° ப, இலிருந்து 80° ப, வரை காணப்படும்.
ஆ. பு. 12

Page 47
90
ஆரம்பப் புவியியல்
இயற்கைத் தாவரம்
இக்காலநிலைப் பிரதேசத்தில் இயற்கைத் தாவரம் வெப்ப வலயப் புல்வெளிகளாகும், இப் புல்வெளிகளில் 6" முதல் 12" வரை உயரமான புற்கள் வளர்கின்றன. இப் புல்வெளி களின் இடையிடையே மரங்கள் ஆங்காங்கு வளர்ந்திருக்கின் றன. இடையிடையே மரங்களைக் கொண்டுள்ள புல்வெளி களைச் சவன்னா என்பர். ஒறினோக்கோ வடிநிலத்தில் இப் புல்வெளிகள் லானோஸ் என்றும், பிறேசில் உயர்நிலத்தில் கம்பஸ் என்றும் அழைக்கப்படுகின்றன. ஆபிரிக்காவில் சவன் னா என்றழைக்கப்படுகின்றது.
பொருளாதார விருத்தி
அயன மண்டலப் புல்வெளிகளுள் சிலவே விருத்தியாக் கப்பட்டுள்ளன. விலங்கு வேளாண்மை பல இடங்களில் நடைபெறுகின்றது. இக்கால நிலைப்பிரதேசங்களில் ஒழுங்கற்ற மழைவீழ்ச்சியும், மண்ணைப் பேனை த் தெரியாமையும் பொரு
ளா தார விருத்திக்குத் தடைகளாக உள.
3. பருவக்காற்றுக் காலநிலைப்பிரதேசங்கள்
பருவக்காற்றுக் காலநிலைப்பிரதேசங்கள் இந்துசமுத் திரத்தைச் சூழ்ந்து இந்தியா, இலங்கை, பர்மா, சீயம், இந்தோசீனா, தென் சீனா ஆகிய பகு திகளில் சிறப்பாக அமைந்து காணப்படுகின்றன. பருவக் காற்றுக்களினால் இப் பிரதேசங் கள் மழையைப் பெறுவதினால் இவை பருவக்காற்றுக் கால. நிலப் பிரதேசங்களென வழங்கப்படுகின்றன.
மழைவீழ்ச்சி, வெப்பநிலை இக்காலநிலைப் பிரதேசங்களில் அதிக வெப்பமும், அதிக மழைவீழ்ச்சியுமுடைய கோடையும், வரட்சியும், சூடுமுடைய, மாரியும் காணப்படுகின்றன. வருடச். சராசரி மழை வீழ்ச்சி 80" வரை உள்ளது. ஆனால் 500" மேல் மழையைப் பெறு கின்ற பகுதிகளுமுள.

கால நிலைப் பிரதேசங்கள்
91
இயற்கைத் தாவரம் மத்திய கோட்டுக் காடுகளே இக்காலநிலைப் பிரதேசங் களின் இயற்கைத் தாவரமாகும். இக்காடுகள் உயர்ந்தன; எ பெ றும் பசுமையானவை. மத்திய கோட்டுக் கால நிலைப் பிரதேசக் காடுகளிலும் அடர்த்தியில் குறைந்தன,
பொருளாதார விருத்தி இக்காலநிலைப் பிரதேசங்கள் நன்கு விருத்தியடைந்துள் ளன. தொடக்கத்து இயற்கைத் தாவரம் பல இடங்களி லும் நீக்கப்பட்டுப் பயிர்ச் செய்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. நெல், சோளம் போன்ற தானிய வகைகளும் பருத்தி, தேயிலை, றப்பர், சணல் போன்ற பணப் பயிர்களும் இக்காலநிலைப் பிரதேசங்களில் சிறப்பாகச் செய்கை பண்ணப்படுகின்றன.
4. வெப்பப் பாலைநிலக் காலநிலைப்பிரதேசங்கள்
300 வடக்கு, தெற்கு உயர் பா அமுக்க வலயங்களில் வெப்பப் பாலைநிலக் காலநிலைப்பிரதேசங்கள் அமைந்துள் ளன, மெச்சிக்கோ, பேரு, வடசில்லி, சகாரா, அரேபியா, பாரசீகம், அவுஸ்திரேலியா, தார், கலகாரி முதலிய பிர தேசங்களில் இக்காலநிலை காணப்படுகின்றது.
வெப்பநிலை, மழைவீழ்ச்சி இக்காலநிலைப் பிரதேசங்களில் மழை வீழ்ச்சி மிகவும் குறைவு; சராசரி 10" மழை வீழ்ச்சிக்குக் குறைவாகவே இப் பிரதேசங்கள் பெறுகின்றன. முற்றாக மழைபெறாத பகுதி களுமுள, உலகிலேயே அதிக வெப்பமான பகுதிகள் இக் கால நிலைப் பிரதேசங்களிலேயே காணப்படுகின்றன.
இயற்கைத் தாவரம் அதிக வெப்பத்திற்கும் குறைவான மழைவீழ்ச்சிக்கும் இணங்கத் தாவரங்கள் இப்பகுதிகளில் உள். சிலபகுதிகளில் - தரங்குறைந்த புல்வெளிகளும், சில பகுதிகளிற் புதர்நிலங்

Page 48
92
ஆரம்பப் புவியியல்
களும், முட்காடுகளும் காணப்படுகின்றன. இத் தாவரங் கள் நீளமான வேர்களையும், தடிப்பும், மெழுகுத் தன்மை யும், முட்களும் வாய்ந்த இலைகளையும் கொண்டுள்ளன.
பொருளாதார விருத்தி இக்காலநிலைப் பிரதேசங்களில் நீர் கிடைக்கின்ற பகுதி கள் பசுஞ் சோலைகளாகவுள்ளன, அப்பகுதிகளிலேயே பயிர்ச் செய்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எகிப்து தக்க உதாரணமாகும். இக்காலநிலைப் பிரதேசங்களில் சுரங் கம் அறுத்தற்றொழில் நன்கு விருத்தியடைந்து வருகின்றது.
5. இடைவெப்பப் பாலைநிலக் காலநிலைப்
, பிரதேசங்கள் இடைவெப்பப் பாலை நிலக் கால நிலைப் பிரதேசங்கள் ஐரோப்பிய - ஆசியா பெருநிலத் திணிவின் மத்தியிலும் வட அமெரிக்காவில் றொக்கிமலைத் தொடரினால் சூழப்பட் டிருக்கும் மேட்டு நிலங்களிலும், தென் அமெரிக்காவில் பற்றகோனியா மேட்டு நிலத்திலும் காணப்படுகின்றன.
இப்பிரதேசங்களில் மழைவீழ்ச்சி 15" உக்குக் குறைவா னது. வெப்பப் பாலை நிலங்களிலும் பார்க்க இங்கு வெப்பநிலை குறைவு. இக்காலநிலைப் பிரதேசங்களில் வளமற்ற புல்வெளி களும் புதர்களும் இயற்கைத் தாவரமாகவுள. இப்பிரதேசங் களில் நீரும் கனிப் பொருட்களும் கிடைக்கின்ற பகுதிகள் ஓரளவு விருத்தியடைந்துள்ளன.
6. மத்தியதரைக் காலநிலைப் பிரதேசங்கள்
மத்தியதரைக் காலநிலைப் பிரதேசங்கள் ஆறு பகுதி களில் காணப்படுகிறது. மத்தியதரைக் கடலைச் சூழ்ந்து காணப்படும் பிரதேசங்களே மிகமுக்கியமான பகுதிகளாகும். வட அமெரிக்காவில் கலிபோர்னியா, தென் அமெரிக்காவில் மத்தியசில்லி, ஆபிரிக்காவில் தென் ஆபிரிக்காப் பகுதி, அவுஸ்திரேலியாவில் தென்மேல் அவுஸ்திரேலியா, தென்கீழ் அவுஸ் திரேலியா என்பன ஏனைய பகுதிகளாகும்

கால நிலைப் பிரதேசங்கள்
93
மழைவீழ்ச்சி, வெப்பநிலை மத்தியதரைக் காலநிலை எனும்போது அது கோடை வரட்சியையும், மாரி மழைவீழ்ச்சியையும் குறிக்கும். வரு டச் சராசரி வெப்பநிலை 40°ப. இருந்து 70°ப வரை வேறு படும். வருடச் சராசரி மழைவீழ்ச்சி 10" முதல் 40 வரை நிகழ்கின்றது.
இயற்கைத் தாவரம் இடைவெப்ப வலயக் காடுகளே இப்பிரதேசத்தின் இயற் கைத் தாவரங்களாம். சிறிய மரங்களும் புதர்களும் இங்கு பொதுவாக உள்ளன. இவை என்றும் பசுமையானவை. ஓக், சாரக், பீச் என்பன அங்கு காணப்படும் மரவகை களரம்.
பொருளாதார விருத்தி இக்காலநிலைப் பிரதேசங்கள் பொருளாதார நடவடிக் கைகளில் நன்கு விருத்தியுற்றுள்ளன. பயிர்ச் செய்கை இப் பிரதேசங்களில் வேறு எங்குமில்லாதளவு விருத்தியுற்றுள் ளது. பழச்செய்கை இங்கு மிக முக்கியம். 7. இடைவெப்பக் கிழக்குக் கரை இளஞ் சூட்டுக்
காலநிலைப் பிரதேசங்கள் இக் கால நிலைப் பிரதேசங்கள் இடைவெப்ப வலயத்தில் கண்டங்களின் கிழக்குக் கரையோரங்களில் அமைந்துள்ளன. சீனாவின் பெரும் பகுதி, அவுஸ்திரேலியாவின் தென் கீழ்க் கரையோரம், ஐக்கிய அமெரிக்காவின் தென் கிழக்குப் பகுதி நேட்டால், உருகுவே - பிறேசில் பகுதிகள் என்பன இக்காலநிலை நிலவும் பிரதேசங்களாம்.
இக் காலநிலைப் பிரதேசங்கள் வருடச் சராசரி மழை வீழ்ச்சியாக 40" முதல் 80" வரை பெறுகின்றன. 40°ப. மேற்பட்ட வெப்பநிலையையும் அனுபவிக்கின்றன.
இப் பிரதேசங்களில் காணப்படும் மரங்கள் என்றும் 'பசுமையானவை மட்டுமல்ல, உயரமும் ஆனவை. இவை

Page 49
9 4
ஆரம்பப் புவியியல்
அடர்த் தியான வையல்ல. ஆனல் மிகவும் செழிப்பானவை, இக் காடுகளில் பொதுவாக அகள் ற இலை மரங்களும் காணப் படுகின்றன.
இப் பிரதேசங்கள் நன்கு விருத்தியுற்றுள்ளன. நெல் , பருத்தி, தேயிலை, பட்டு என்பன இப்பிரதேசங்களில் செய்கை பண் ணப்படுகின் றன. கைத்தொழில்களும் இப் பிரதேசங்களில் விருத்தியுற்றுள்ளன.
- 8. இடைவெப்பக் குளிரான சமுத்திரக்
காலநிலைப்பிரதேசங்கள் இக் காலநிலைப் பிரதேசங்கள் கண்டங்களின் மேற்குப் பகுதிகளில் காணப்படுகின்றன, வடமேற்கு ஐரோப்பா, பிரித்தானிய கொலம்பியா, வடமேல் ஐக்கிய அமெரிக்கா, தென்சில்லி எஸ்பன இக்கால நிலையை அனுபவிக்கும் பிர தேசங்களாகும்.
உவப்பான மாரியையும் குளிர்ந்த கோடையையும் இப் பிரதேசங்கள் கொண்டிருக்கின்றன. சராசரி 50" உக்கு மேற் பட்ட மழைவீழ்ச்சியை இப்பகுதிகள் பெறுகின்றன.
இலையுதிர்காடுகள் இப்பிரதேசங்களின் இயற்கைத் தாவர மாகும், இக்காடுகள் மாரிகாலக் குளிரிலிருந்து தம்மைப் பாது காக்க மாரிகாலத்தில் இலைகளை உதிர்க்கின்றன. இவை ஓரள்வு வைரமா னவை. ஓக், எலும், மாபில், பீச், பேர்ச் என்பன இங்குள்ள மரங்களாகும்.
இக் கால நிலைப் பிரதேசத்திலுள்ள பெரும் பகு திக் காடுகள் பயிர்ச் செய்கை, விலங்கு வேளாண்மை, கைத் தொழில் என்பவற்றின் விருத்திக்காக அளிக்கப்பட்டுள் ளன'. கோதுமை, வாற்கோதுமை, ஓற்ஸ் என்பன இப்பிரதேசங் களில் பயிரிடப்படுகின் றன.
9. இடைவெப்பக் கண்டக் காலநிலைப்
பிரதேசங்கள் இக் காலநிலைப் பிரதேசங்கள் கண்டங்களின் உட்பகுதி களில் அமைந்துள்ளன. கனடா, ஐக்கிய அமெரிக்கா, தென் ,

கால நிலைப் பிரதேசங்கள்
95
ஆபிரிக்கா, சைபீரியா, மொங்கோலியா, மறேடாலிங் வடி நிலம் ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன.
இக் கால நிலைப் பிரதேசங்கள் உலர்ந்த கோடையை யும், குளிர்ச்சியான மாரியையும் உடையன. மழைவீழ்ச்சி மிகவும் குறைவு. 10" முதல் 30" வரை மழைவீழ்ச்சி காணப் படுகிறது.
இடைவெப்ப வலயப் புல்வெளிகளே இக்கால நிலைப் பிரதேசங்களின் இயற்கைத் தாவரமாகும். இப்புல்வெளி கள் உயரம் குறைந்தன, இடையிடையே மரங்களைக் காண முடியாது. வட அமெரிக்காவில் இப்புல்வெளிகள் பிறேயறிஸ் எனவும், ஐரோ-ஆசியாவில் ஸ் ரெப்பீஸ் எனவும், தென் அமெரிக்காவில் 1ம் பாஸ் எனவும், தென் ஆபிரிக்காவில் வெல்ட் 57னவும், அவுஸ்திரேலியாவில் டவுன் ஸ் எனவும் அழைக்கப் படுகின்றன.
இக் காலநிலைப் பிரதேசங்கள் உலகின் தானியக் களஞ் சியங்களாக விளங்குகின்றன. கோதுமை, வாற்கோதுமை, றை முதலிய தானியங்கள் இப்பகுதிகளில் நன்கு பயிர் செய் யப்படுகின்றன,
10. இடைவெப்பக் கிழக்குக்கரைக் குளிரான
காலநிலைப் பிரதேசங்கள் இடை வெப்பவலயத்தில் கண்டங்களின் கிழக்குக் கரை களில் இக் கால நிலைப்பிரதேசங்கள் அமைந்துள்ளன. வட அமெரிக்காவில் பேரேரிகளைச் சூழ்ந்துள்ள பிரதேசங்களும் சென் லோறன்ஸ் பள்ளத்தாக்கும், ஆசியாவில் மஞ்சூரியா, யப்பான் என்பனவும், அவுஸ்திரேலியாவில் தென் கீழ்க்கரை நியூசிலாந்து என்பனவும் இக்கால நிலையை அனுபவிக்கின் றன.
இப்பிரதேசங்களில் மாரி குளிரான து. கோடை சிறிதளவு லெப்பமானது. வருடச் சராசரி மழைவீழ்ச்சி 40" எனலாம். வருடச் சராசரி வெப்பநிலை 50°ப, ஆகும்,
இலையுதிர் காடுகளே இப்பிரதேசத்தின் இயற்கைத் தாவ ரமாம்.

Page 50
96
ஆரம்பப் புவியியல்
இக்காலநிலைப் பிரதேசங்களில் பயிர்ச் செய்கை, கைத் தொழில் என்பன விருத்தியடைந்துள்ளன.
11. இடைவெப்ப நனிகுளிர்க் காலநிலைப்
பிரதேசங்கள் வட அமெரிக்காவின் வட பகுதியிலும், ஐரோப்பாவின் வட பகுதியிலும், ஆசியாவின் வட பகுதியிலும் கிழக்கு மேற் காகப் பரந்து காணப்படும் பிரதேசங்கள், இடைவெப்ப நனி குளிர் காலநிலையை அனுபவிக்கின்றன.
வருடச் சராசரி வெப்பநிலை 40°ப ஆகும். ஊசியிலைக் காடுகளே இப்பிரதேசத்தின் இயற்கைத் தாவர மாம். இம் மரங்கள் ஊசிபோன்ற இலைகளைக் கொண்ட கூம்பு வடிவின. அதனால் மழைப்பனி மரங்களில் தங்காது நிலத்தை அடைந்து விடுகிறது. தேவதாரு, பைன் ஸ்புறூச், லாச், பேர்ச் என் பன இங்குள்ள மரவகைகளாம், இவை என்றும் பசுமையானவை, ரூஷியாவில் இக்காடுகளைத் தைக்கா என்பர்.
மரம் வெட்டும் தொழில் இப்பிரதேசங்களில் விருத்தி யடைந்துள்ளது.
12. ஆக்டிக் அல்லது குளிர்ப்பாலைநிலக்
காலநிலைப் பிரதேசங்கள் இக்கால நிலைப் பிரதேசங்கள் ஆக்டிக் வட்டத்திற்கும், அந்தாட்டிக் வட்டத்திற்கும் அப்பால் முனைவுகள் வரை அமைந்துள்ளன . இவை ஆண் டின் பெரும் பகுதியில் பனி யினால் மூடப்பட்டுக் காணப்படுகின் றன. இவை தண்டிராக் கால நிலையெனவும் அழைக்கப்படுகின்றன.
இக்காலநிலைப் பிரதேசங்களில் காளான்களும், பாசியின ங் களுமே இயற்கைத் தாவரமாகவுள்ளன.
13. மலைக் காலநிலைப் பிரதேசங்கள் குத்துயரத்திற் கிணங்க வெப்பநிலை குறைவடைகின்றது. அதனால் மலைப்பிரதேசம் ஒன்றின் அடிவாரத்தில் காணப்

கால நிலைப் பிரதேசங்கள்
97
2.
3.
படும் நிலைமையை உயர்பகுதிகளில் காண முடியாது. இக் காலநிலைப் பிரதேசங்களை றொக்கி, அந்தீஸ், இமயம், அல்ப்ஸ் முதலிய மலைப்பகுதிகளில் காணலாம்.
இப் பிரதேசங்களில் பல்வகையான இயற்கைத் தாவரங் களைக் காணலாம். மத்திய கோட்டிலிருந்து) முனைவுகளை நோக்கிச் செல்லக் காணப்படும் தாவரங்களை கடல்மட்டத்தி லிருந்து மலைகளில் ஏறும்போது அவதானிக்கலாம்,
பயிற்சிகள் பயிற்சி : 1
சுருக்கமாக விடை தருக. 1. மத்திய கோட்டுக் காலநிலைபற்றி ஐந்து வாக்கியம் எழுதுக.
அயன மண்டலக் காலநிலை காணப்படும் இடங்கள் எவை? மத்தியதரைக் காலநிலைப் பிரதேசங்கள் எங்கெங்கு காணப்
படுகின்றன? 4. இடை வெப்பப் புல்வெளிகள் எவை?
5, வெப்பப் பாலை நிலங்கள் எவை? பயிற்சி: 2 மேல் வருவனவற்றிற்கு சுருக்கமாக விளக்கம் தருக.
அ. செல்வாஸ் ஆ.
கலகாரி லானோஸ் சவன்னா
டவுன்ஸ் ஊ, வெல்ட் எ. தைக்கா ஏ.
தண்டிரா
பிரேயறீஸ் ஒ.
ஸ்ரெப்பீஸ் பயிற்சி: 3 உலகப்படம் ஒன்றில் குறித்துப் பெயரிடுக.
தென் அமெரிக்காவில் மத்திய கோட்டுக் காடுகள், லானோஸ், கம் பஸ், சவன்னா, கலகாரி, தார், அவுஸ்திரேலியாவில் மத்தியதரைக் காலநிலைப் பிரதேசம், பிரேயறீஸ், ஸ்ரெப்பீஸ், பம்பாஸ், வெல்ட், டவுன்ஸ், தைக்கா,
ஆ: பு. 13

Page 51
அத்தியாயம்: 11
இலங்கையின் நீர்ப்பாய்ச்சல் திட்டங்கள்
இலங்கை பொருளாதாரம் குன்றிய நாடுகளுள் ஒன் றாகும். இந்நிலைமைக்குக் காரணம் அதிகரித்து விட்ட, மக்கள் தொகையும், வருடா வருடம் அதிகரித்துவரும் மக்கள் தொகையுமாகும்.
உணவும் தொழில்களும் மக்களுக்குக் கொடுப்பதானால் ஒன்று பயிர்ச் செய்கையை விருத்தி செய்யவேண்டும், மற் றது கைத்தொழில்களை ஆரம்பிக்கவேண்டும். இவ்விரண்டின் விருத்திதான் இலங்கையின் பொருளாதாரத்தைச் சீர்படுத் தக் கூடியனவாகவுள்ளன.
உலர் வலயத் தாழ்நிலங்களைப் பயன்படுத்தி அதிக நிலப் பரப்பைப் பயிர்ச்செய்கையின் கீழ் கொண்டுவரவும், உணவு உற்பத்தியை அதிகரிக்கவும், தென்மேல் பிரதேசத்தில் காணப் படும் அதிக மக்களடர்த்தியைக் குறைக்கவும், அரசாங்கம் பல குடியேற்றத் திட்டங்களை வகுத்திருக்கின்றது.
இலங்கைக்கு ஓரளவு போதிய மழைவீழ்ச்சி கிடைக்கின் றது. ஆனால், சில காலங்களில் பருவந்தப்பி மழை பெய்வ துண்டு. அதிக மழை நீர் வீணே கட லுடன் கலக்கின்றது. அதனால், அம்மழை நீரைச் சேகரித்து விவசாயிகளுக்குத் தேவையான நேரத்தில் நீரை வழங்கவேண்டியது அவசியம். எனவே மழை நன்றாகப் பெய்யுங் காலங்களில் நீரைத் தேக்கி மழை பெய்யாத காலத்தில் வயல்களுக்குப் பயன்படுத்தக் கொடுப்பதும், அநேக ஏக்கர் காட்டு நிலத்தை விளை நில மாக்குவதும் அரசாங்கத்தின் கடமையாயது.
காடுகளை அழித்து, விளை நிலமாக்கி, நீர்ப்பாய்ச்சல் வசதி களைச் செய்து கொடுப்பதே குடியேற்றத் திட்டத்தின் முதல் முக்கிய செயலாகும். பழைய குளங்களைத் திருத்தியும் புதி தாக அமைத்தும், கால்வாய்கள் மூலம் நதிகளையும் குளங் களையும் இணைத்தும் விளை நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி கள் செய்து கொடுக்கப்படுகின்றது.

இலங்கையின் நீர்ப்பாய்ச்சல் திட்டங்கள்
99
இலங்கையின் நீர்ப்பாசனத் திட்டங்கள்
ஏர ஆளு 754
இரசwar குளம்
பிகுளம் இ பிரதான நீர்ப்பாசனத்
திட்டங்கள்
ஆடட்டுக்காக -
பதாககும்
இத அருவிஆறு
பழம் தால
நவரலிவோ ,
நச்சவோ (4
இாஅல்லேககுளம் கடுதாாய குளம்
உண்வா
காcoவீவா,
மின்னேரியாகதாம்
8 ஓயா இந்தல தளம்!
விமல் (3)
இராபராக்கிரம சமுத்திரம்
ராசிபனர) - 5
வைதேக்கந்த |
பிமாEெ க க த
நருக்கம் குளம்
உன்னிச்சைக்குலாம்
கல்லோயம்
சனனாயக்க 7) சமுத்திரம்
அ : 30:
எட்டு 1A)
உலர்வலயத் தாழ்நிலம்
இ9ை Trாடிய
படம்: 32 இலங்கையின் நீர்ப்பாய்ச்சற் திட்டங்களும் குடியேற்றத்
திட்டங்களும்,

Page 52
100
ஆரம்பப் புவியியல்
கத்துடனும் நெறி சொப்பாய்ச்சல் வந்து விருத்தி
இன்று இலங்கையில் 57 குடியேற்றத் திட்டங்களுள் ளன. 1,95,570 ஏக்கர் நிலம் பயிர்ச் செய்கையின் கீழ்க் கொண்டுவரப்பட்டுள்ளது. இப்பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களில் பராக்கிரம சமுத்திரத் திட்டம், மின்னேரி யாத்திட்டம், மினிப்பேத்திட்டம், காலவீவாத்திட்டம், எல கராத் திட்டம், கல்லோயாத்திட்டம், மல்வத்துஓயாத்திட் டம், மகாவலிகங்கையைத் திருப்புத்திட்டம், வளவகங்கைத் திட்டம், உன்னிச்சைத்திட்டம், நாலந்தா திட்டம், தெதுறு ஒயாத்திட்டம், கிரிண்டிஓயாத்திட்டம், மினிப்பே எலத் திட்டம், களனிகங்கைத்திட்டம் என்பன குறிப்பிடத் தக்கன. இவற்றுள் முதல் ஆறு திட்டங்களும் செயற்படுத்தப்பட்டுள் ளன நல்ல வெற்றியையும், பலனையும் அளித்துள்ள திட்டம் கல்லோயாவாகும்.
உலர் , பிரதேசத்தில் அமைக்கப்பட்ட நீர்ப்பாய்ச்சல் திட்டங்களுடன் குடியேற்றத் திட்டங்களும் இணைந்து விருத்தி அடைந்தன. போதிய நீர்ப்பாய்ச்சல் வசதிகளுடன் இரு போகங்களிலும் நெற் செய்கையை விருத்தியாக்கும் நோக் கத்துடன், 1947-1953 இல் மேல்வரும் நீர்ப்பாய்ச்சல் வசதி களை அமைத்ததோடு பெரும் விளை நிலத்தையும் பயிர்ச் செய்கைக்குட்படுத்தியது.
ஏக்கர் 1. பராக்கிரம சமுத்திரத் திட்டம்
18150 2. மின்னேரியாத் திட்டம்
4167 காகம் விஸ்தரிப்புத் திட்டம்
3288 நுவரவீவா விஸ்தரிப்புத் திட்டம்
1563 மினிப்பேத் திட்டம்
3425 6 ரிதிபென்டி எலத் திட்டம்
5000 கல்லோயாத் திட்டம்
120,000 8,
கந்தளாய் மிகையாக்குத் திட்டம்
19,000 9. அல்லை விஸ்தரிப்புத் திட்டம்
19,000 10. குறு லுவீவாத் திட்டம்
10,000 1954-60 இல் மேல் வருந் திட்டங்கள் செயலாக்க நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சில இன்னும் முடிக் கப்படாதுள்ளன.
1. இரணைமடு விஸ்தரிப்புத் திட்டம் - 14,000 2. பதவியாத் திட்டம்
4,500
- ல் 5 vi
| ! | | | III

இலங்கையின் நீர்ப்பாய்ச்சல் திட்டங்கள்
101
3. பாவற்குளத் திட்டம்
4,600 4. கந்தளாய்த் திட்டம்
4, 200 5. மினிப்பேத் திட்டம்
28,000 6. அருவியாறுத் திட்டம்
30,000 7. வளவைத் திட்டம்
45,000 இக் குடியேற்றத் திட்டங்களில் 1955-ம் ஆண்டிற்கு முன் ஒவ்வொரு குடியேற்றவாசிக்கும் ஐந்து ஏக்கர் தாழ் நிலமும் மூன்று ஏக்கர் உயர் நிலமும் வழங்கப்பட்டன. 1955-ம் ஆண்டிற்குப் பின் மூன்று ஏக்கர் தாழ் நிலமும் இரண்டு ஏக்கர் உயர் நிலமும் வழங்கப்பட்டன, தாழ்நில விளை நிலங் கள் நீர்ப்பாய்ச்சல் வசதியுடையனவாயும், உயர்நிலங்கள் நீர்ப்பாய்ச்சல் வச தியற்றனவாகவுமுள்ளன.
குடியேற்றங்களின் தாழ்நிலங்களில் நெற்செய்கை முக் கியவிடத்தைப் பெற்றுள்ளது. நெற்செய்கை பெரிதும் நீர்ப் பாய்ச்சல் வசதியில் தங்கியுள்ளவிடத்தில், வடகீழ்ப் பருவக் காற்று மழையினால் மேலதிக நீரையும் பெறுகின்றது. இரு பருவங்களினாலும் நீர் பெறக்கூடிய குடியேற்றங்களில் பெரும் போகத்திலும் (மகா), சிறுபோகத்திலும் (யால) நெற் செய்கை நடைபெறுகின்றது.
உயர் நிலப் பயிர்ச்செய்கையில் தென்னை, பலா, தோடை, முருங்கை, மா, இலவம் எனும் நிரந்தரமான மரப் பயிர் களும், வாழையும், வெங்காயம் மிளகாய் முதலிய காய் கறிப் பயிர்களும், குரக்கன் எள், சோளம், கடலை முதலிய தானியப் பயிர்களும் பயிரிடப்பட்டு வருகின்றன.
இத்த கைய பொருளா தார அபிவிருத்தித் திட்டங்கள் சில குறித்து விரிவாக ஆராய்வோம்.
கல்லோயா அபிவிருத்தித் திட்டம் கல்லோயா அபிவிருத்தித் திட்டம் ஒரு பல பயன் தரு திட்டமாகும். இத்திட்டம் கிழக்கு மாகாணத்தில் மேற் கொள்ளப்பட்டு பெரிதும் பூர்த்தியடைந்துள்ளதோடு, நல்ல பயனையும் அளித்துள்ளது.

Page 53
102
ஆரம்பப் புவியியல்
கல்லோயாந்தி, 4300 அடி உயரத்தில் இருக்கும் மதுள் சீமாக் குன்றிலிருந்து உற்பத்தியாகி, கிழக்கு முகமாக 68 மைல்கள் வரை பாய்ந்து கடலிலிருந்து 25 மைல் அளவில் வெள்ளச் சமவெளியாகிறது. எனவே, இவ் வெள்ளத்தை தடுப்பது அவசியமாயிற்று. மேலும் கல்லோயா நதி நீர் பெறும் தளம் சுமார் 385 சதுர மைல் பரப்பை அடக்கியது இப்பெரிய பரப்பில் பெய்யும் மழையானது அதிக நீரை இந் நதிக்கு அளிக்கிறது. வடகீழ்ப் பருவக் காற்றாலும் இப்பகுதி வருடச் சராசரியாக 83 அங்குலங்களுக்கு மேல் மழைவீழ்ச்சி யைப் பெறுகின்றது. இவ்வளவு நீரும் வீணே கடலுடன் கலப் பதுடன் கழிமுகத்தை அண் மியிருந்த வயல்களையும் வெள்ளத்
நவகிரிஆறு
குளம்
கட லிரயாட
கல்லே
2. கனே!
அலுவல
அம்பாறை)
• 5ே07 62
A) 2-44:24
66/27ம்
கமரேச
பிபிலை
அம்புலம்
" பி யா (TL)
பள்ளம்ஒயா
தேஎம்
எல்லை
பாசிசம்
படம் 33: கல்லோயா அபிவிருத்தித் திட்டம்
துள் ஆழ்த்தி வந்தது. அத்தோடு இப்பகுதியின் தரையில் மூடப்பட்டுள்ள மண் அதிகம் தடிப்பும், இறுக்கமுமானது, அத னால் பருவ மழை நீர் இத் தடிப்பான மண்ணை ஊடறுத் துப் பொசிந்து தரைக்கீழ் வடிகாலாகத்தேங்கி நிற்கக்கூடிய

இலங்கையின் நீர்ப்பாய்ச்சல் திட்டங்கள்
103
தன்மையற்றிருக்கின்றது. எனவே, நிரந்தரமான பயிர்ச் செய்கை, குளங்களில் தான் தங்கி இருந்தது. இத்தகைய காரணங்களுக்காக இப்பல பயன் தருதிட்டம் உருவாக்கப் பட்டு செயல்படுத்தப்பட்டு முள்ளது.
கல்லோயாப் பகுதிகளைப் பொறுத்தமட்டில் நெல், மழை அதிகம் பெய்யும் பெரும்போகத்தில் செய்கைபண்ணப் படுகின்றது. சிறுபோகத்தில் துணையுணவுகள் விளைவிக்கப் படுகின் றன. இங்கு சராசரி நெல்விளைச்சல் ஏக்கருக்கு 40 புசல் ஆகும். மேட்டு நிலப் பயிர்களrாகப் பருத்தி, நிலக்கடலை புகையிலை என்பன பயிராகின்றன. இன்று இங்கு புகையிலைச் செய்கை முக்கியமாகவுள்ளது. கோழிப்பண்ணைகள் மூலம் வருடம் ஒன்றிற்கு 55 இலட்சம் முட்டைகள் பெறப்படுகின் றன. இங்கு கரும்பு 1200 ஏக்கரில் பயிரிடப் படுகின்றது. நன் னீர்த் தேக்கங்களிலும், சேனனாயக்கா சமுத்திர ஏரியிலும் மீன்பிடிக்கப்படுகின்றது,
கல்லோயாப் பகுதியில் கைத்தொழில் விருத்தியுற்றுள் ளது. சீனி ஆலை, குடிவகைகள் தயாரிக்கும் தொழிற்சாலை, ஓட்டுத் தொழிற்சாலைகள், சவர்க்காரத் தொழிற்சாலை என் பன உருவாகி இயங்கி வருகின்றன, கல்லோயாப் பகுதியில் 72 இலட்சம் கிலோ வோர்ட் நீர் மின் சக்தி பெறப்படுகின்றது.
மகாவலி கங்கையைத் திருப்புத் திட்டம்
இலங்கையின் மிகப்பெரிய பொருளாதாரத் திட்ட மென்று, மகாவலிகங்கையை வடக்குநோக்கித் திருப்புந் திம் டத்தைக் கூறலாம்.
மகாவலிகங்கை மிகப்பெரிய வடிநிலத்தைக் கொண் டுள்ளபோதிலும் ஏனைய வடிநிலங்களிலும் விருத்தி குண் றியதாகவே காணப்படுகின்றது, 4000 சதுரமைல் பரப்பினை வடி நிலமாகக் கொண் டிருக்கிறது. ஆனால், இதில் 3000 சதுர மைல் காட்டரிந்த பிரதேசமாகும். மகாவலி கங்கையின் கீழ்ப்பாகத்திலேயே அதன் நீர், நீர்ப்பாய்ச்சலிற்குப் பயன் பெடுத்தப்படுகின்றது.

Page 54
104
ஆரம்பப் புவியியல்
மகாவலி கங்கை 40,00,000 ஏக்கர் அடி நீரை ஆண் டிற்கு ஆண்டு, கடலுடன் கலக்கின்றது. நீரைப் பயன் படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட பல பயன்தரு திட்டமே
ARe:RERைைமலகாணமமைகளனாமாலைகணவSைERARANRESMAC) மகாவலிகங்கையைத் திருப்புத்திட்டம் ----- விருத்திக்குரிய பிரதேசத்தின் எல்லை ----- .வவளவை செய்யப்பட்ட பிரதேசத்தின் எல்லை "பட்ட. கால்வாய் ( குளம்
வவுனியா.
சபுத வியா
கந்தளாய்குளம்
• நூவரவிவா.
காவலீவா ?
இகவுல்லத்தளம்
பேராக்கிரம சமுத்திரம்
லென்டொர் நீர்மின் நிபையும்,
டிக்கவு நீர்மின்நிலயம் உக்குவெல நீர்மின்நிலயம் N
பிறிம்ரோஸ்அனை கண்டி
கொத்மளிஅள >
4) மல்ககள்
14LMLA: சா
வே.
படம் 34: மகாவலி கங்கையைத் திருப்புத் திட்டம். மகாவலிகங்கையை வடமாகாணம் நோக்கித் திருப்பும் திட்ட ' மாகும். இத்திட்டம் நிறைவேறில் 3,25,000 ஏக்கர் பரப் பிற்கு நீர்ப்பாய்ச்ச முடியும், உலர் பிரதேசத்திற்கு ஊடாக •

இலங்கையின் நீர்ப்பாய்ச்சல் திட்டம்
105
மகாவலி கங்கையை கொத்மலியிலிருந்து வவனியா (பத வியா) வரை திருப்பி ஓட விடுவதால் உலர் பிரதேசம் செழிப்பு வாய்ந்த பகுதியாக மாறிவிடும்.
மகாவலிகங்கையைத் திருப்புத் திட்டத்தை நிறைவேற்ற 120 கோடி ரூபா தேவையென மதிப்பிடப்பட்டுள்ளது. இலங் கையின் பொருளாதார நிலையில் 120 கோடி ரூபா பெருந் தொகையாகவுள்ளது. அதனால் தான் இத்திட்டத்தை நிறை வேற்ற அரசாங்கம் தயங்குகிறது. இத்திட்டம் வகுக்கப் பட்டபோது ஐக்கிய அமெரிக்கா உதவுவதாக இருந்தது. பின் ஐக்கிய அமெரிக்கா உதவ மறுத்துவிட்டது. 120 கோடி. ரூபா செலவானாலும் இத்திட்டம் நிறைவேறில் வருட வரு மானமாக 18 கோடி ரூபாவை பெறமுடியும் எனக் கணக் கிட்டுள்ளனர். இத்திட்டம் இப்போது செயற்படத் தொடங்கி யுள்ளது.
பயிற்சிகள் 1. இலங்கையின் பிரதான நீர்ப்பாய்ச்சல் திட்டங்கள் மூன்றினைக்
கூறுக. 2. நீர்ப்பாய்ச்சல் திட்டங்கள் என் அமைக்கப்படுகின்றன?
இலங்கையில் எத்தனை குடியேற்றத் திட்டங்களுள்ளன?
தாழ்நிலப் பயிர்கள் எவை? 5. உயர்நிலப் பயிர்கள் எவை? 6. மகாவலிகங்கையைத் திருப்பும் திட்டம் குறித்து நான்கு வசனங்
கள் தருக. 7. கல்லோயா அபிவிருத்தித் திட்டம் ஏன் அமைக்கப்பட்டது?
கல்லோயா அபிவிருத்தித் திட்டம் குறித்து மூன்று வாக்கியங் கள் எழுதுக, மகாவலிகங்கை வடக்கே திருப்பப்பட்டால் கிடைக்கும் பயன் கள் யாவை?
8.
9.
ஆ: பு: 14

Page 55
அத்தியாயம்: 12
விலங்கு வேளாண்மை மனிதன் விலங்குகளை நல்ல முறையில் பயன்படுத்திப் பயன்பெறும் பொருளாதார நடவடிக்கையே விலங்கு வேளாண்மை எனப்படுகின்றது. மாடு, ஆடு, செம்மறியாடு. பன்றி, கோழி, பட்டுப்பூச்சி என்பன விலங்கு வேளாண் மையில் அடங்கும் உயிரினங்களாம். ஆடு மாடுகள் இறைச் சிக்காகவும், பாற்பண்ணை விளைவுகளுக்காகவும் வளர்க்கப் படுகின்றன. செமமறியாடுகள் கம்பளி மயிருக்காகவும், பட் டுப்பூச்சி பட்டிற்காகவும் வளர்க்கப்படுகின்றன,
உலக வர்த்தகத்தில் இறைச்சி ஏற்றும் தி இன்று குறிப் பிடத்தக்கதோர் இடத்தை வகித்து வருகின்றது. இறைச் சிக்கு இருந்த தேவையும், நவீன போக்குவரத்துச் சாதன வசதிகளும் உலக வர்த்தகத்தில் இறைச்சிக்குக் குறிப்பிடத் தக்கதோர் இடத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளன. முன்பு முழு ஆடு மாடுகளாகவும், உப்பிட்ட இறைச்சியாகவும் ஏற்று மதி செய்யப்பட்டது. ஆனால் குளிரூட்டும் முறை வந்ததும் இறைச்சி ஏற்றுமதி மிக மலிவானதாகவும், இலகுவானதாக வும் மாறியுள்ளது.
தென் அமெரிக்காவில் ஆசெந்தீனாவும், உருகுவேயும் இறைச்சி உற்பத்தியில் முக்கியமானவை. வடமேற்கு ஐரோப் பாவில் ஆடு மாடுகள் ஏராளமாக இருக்கின்ற போதிலும், அங்கு உற்பத்தியாகும் இறைச்சி உள் நாட்டுத் தேவைக்கே போதுமானதாக இல்லை. வடஅமெரிக்காவில் பிரேரிப் பகுதி யில் ஏராளமாக ஆடு மாடுகள் உள்ளன. இவை சிக்காக்கோ வில் இறைச்சியாக்கப்பட்டு ஏற்றுமதியாகின்றன. அவுஸ்தி ரேலியாவில் குயின்ஸ்லாந்துப் பகுதியிலும், வட அவுஸ்தி ரேலியாவிலும் இறைச்சி உற்பத்தி நடைபெறுகின்றது.
ஐக்கிய அமெரிக்கா விலங்கு வேளாண்மையில் முக்கியம் பெறுகின்றது. பேரேரிகளுக்குத் தெற்கே பரந்துள்ள சோள வலயம் எனும் பிரதேசத்திலும், றொக்கிமலைப் பிரதேசத்தை

விலங்கு வேளாண்மை
107
அடுத்துள்ள உயர்ந்த சமவெளிப் பகுதியிலும் மந்தை வளர்ப்பு அதிகளவில் நடைபெறுகின்றது. றொக்கி மலையின் காற்றொதுக்கில் உயர் சமவெளிகள் இருப்பதால், இப்பகுதி களில் மழைவீழ்ச்சி சராசரி 20 அங்குலங்களாகும். அத னால், இப்பகுதிகளில் புற்களே அதிகளவில் வளர்கின்றன. இப்பகுதிகளில் வளர்க்கப்படும் மந்தைகள், கொழுக்க வைப் பதற்காகச் சோளவலயத்திற்குக் கொண்டுவரப்படுகின்றன. சோளத்தை மிருக உணவாகக் கொடுத்து இறைச்சியாக ஏற்றுமதி செய்வது இலகுவானதும், இலாபகரமானதுமாகும். ஏனெனில் மிருக உணவாகக் கொடுப்பதனால் சோளத்தை அறுவடை செய்யத் தேவையில்லை சோளப்பயிரைப் பட்டி பட்டியாக அடைத்து, ஒவ்வொரு பட்டியாக மிருகங்களுக் குத் திறந்து விட்டால் அவை தாமாகவே அவற்றைத் தின்று கொழுக்கின்றன. கொழுத்த பின் அம்மாடுகள் பன்றிகள் என்பன சிக்காக்கோ, கன்சாஸ், சின்சினாட்டி, சென் லூயி, சென் போல் முதலிய நகர்களுக்கு இறைச்சியடிப்பதற்காக எடுத்துச் செல்லப்படுகின்றன, அந்நகர்களில் இறைச்சியாக் கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இறைச்சி பதனிடும் தொழிலில் சிக்காக்கோ ஐக்கிய அமெரிக்காவில் முதலிடத்தைப் பெறுகின்றது. இங்கு வருடா வருடம் 400 கோடி டொலர் பெறுமதியான இறைச்சிப் பொருட்கள் உற்பத்தியாகின்றன. சிக்காக்கோவின் மேற்குப் பகுதியில் மந்தைகளுக்கான மேய்ச்சல் நிலமுளது. வலைய மைப்பிலமைந்த இருப்புப் பாதைகள் சிக்காக்கோவில் வந்து சேர்கின்றன, இவை காரணமாக சிக்காக்கோ இறைச்சி யடிப்பதில் முக்கியம் பெற்றுள்ளது.
உலக மாட்டிறைச்சி ஏற்றுமதியில் ஏறக்குறைய 50% ஆசெந்தீனா ஏற்றுமதி செய்கின்றது., இரண்டாம் இடத் தைப் பெறும் அவுஸ்திரேலியா 15%யும், நியூ சிலாந்து 13% யும், உருகுவே 10%யும், கனடா 7%யும், பிறேசில் 5%யும், ஏற்றுமதி செய்கின்றன. வருடா வருடம் ஏறத்தாழ 6 இலட் சம் தொன் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்படுகின்றது. -

Page 56
108
ஆரம்பப் புவியியல்
ஆட்டிறைச்சி வருடா வருடம் ஏறக்குறைய 4 இலட் சம் தொன் ஏற்றுமதியாகின்றது. இதில் நியூசிலாந்தே அதிகமாக ஏற்றுமதி செய்து வரு கின்றது. நியூசிலாந்து, ஏற்றுமதியாகும் ஆட்டிறைச்சியில் ஏறத்தாழ 60%யும்,
படம்: 35 அவுஸ்திரேலியாவில் மாட்டுமந்தை
ஆசெந்தீனா 15%யும், அவுஸ்திரேலியா 13%யும், உருகுவே 5%யும் ஏற்றுமதி செய்து வருகின்றன.
உலக நாடுகள் பல பன்றியிறைச்சிக்காகப் பன்றிகளை வளர்த்து வருகின்றன. உலகில் ஏறக்குறைய 28 கோடி பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதில் சீனாவில்

விலங்கு வேளாண் மை
-109
25%மும், சோவியத் சமவுடைமைக் குடியரசில் 10%மும், பிறேசிலில் 10% மும் உள்ளன. ஜேர்மனி, பிரான்ஸ், போலந்து. மெக்சிக்கோ போன்ற நாடுகளும் பன்றிகளை வளர்த்து வருகின்றன. பன்றியிறைச்சியை அதிகமாக ஏற்று மதி செய்யும் நாடு டென்மார்க்காகும். கனடா, ஆசெந்தீனா. போலந்து என்பனவும் குறிப்பிடத்தக்களவு ஏற்றுமதி செய் கின்றன.
பயிற்சி
1. விலங்கு வேளாண்மையில் அடங்கும் உயிரினங்கள் எவை?
விலங்குகள் என்னென்ன பயன் கருதி வளர்க்கப்படுகின்றன?
3. இறைச்சி உற்பத்தியில் முக்கியம் வகிக்கும் இரு நாடுகளின்
பெயர் தருக. 4. பன்றிகள் அதிகம் வளர்க்கப்படும் நாடுகளைக் குறிப்பிடுக. 5. ஐக்கிய அமெரிக்காவில் மந்தைகள் அதிகம் வளர்க்கப்படும்
பகுதிகள் எவை?
6.
சிக்காக்கோவில் இறைச்சி பதனிடுதல் முக்கியம் பெறுதற்குரிய காரணங்கள் எவை?

Page 57
அத்தியாயம் : 13
பாற்பண்ணைத் தொழில் இன்று இலங்கை மக்களின் உணவில் பாற்பொருட்கள் மிக முக்கியம் பெற்றுள்ளன. 1985-ஆம் ஆண்டிற்கு முன் நமக்குத் தேவையான பாற் பொருட்கள் யாவும் வெளி நாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டன. நமது சுய தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 1968- ஆம் ஆண்டிற் குப் பின் இலங்கை அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற் கொண்டிருக்கின்றது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி யாகும் பாற்பொருட்களின் அளவைக் குறைத்துள்ளது. உள் நாட்டில் பால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதற்காக, இன்று தேசிய பாற்சபை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் நம் நாட்டிலேயே பாற்பொருட்களை உற்பத்தி செய்வதற்காக ஐந்தாண்டுத் திட்டம் ஒன்றும் (1966 1970) வகுக்கப்பட்டிருக்கின்றது.
தம்பன் கடவை, அம்பாவெல, போபத்தலாவை, றிடிய கம், குண்டசாலை எனும் இடங்களில் கால்நடைப் பண்ணை கள் இன்று அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ளன. தனிப் பட்டவர்களுக்குத் தரமான விலங்குகளை வழங்கவும், பாற் சபைக்குப் பால் வழங்கவும், இப்பண்ணைகளுக்கு அவுஸ்தி ரேலியா, நியூசிலாந்து, இந்தியா எனும் நாடுகளில் இருந்து மாடுகள் வாங்கப்பட்டுள்ளன. அம்பாவெல, போபத்தலா வைப் பண்ணையில் 2500 ஏக்கர் புல் நிலமும், தம்பன்கட வைப் பண்ணையில் 3000 ஏக்கர் புல் நிலமும் விருத்தியாக் கப்பட்டுள்ளன. நாரகன்பிட்டியில் பாலை ப் பதனிடும் தொழிற்சாலை அமைக்கப்பட்டிருக்கின்றது. பொலநறுவை யில் பாற்கட்டித் தொழிற்சாலை அமைக்கப்பட்டிருக்கின் றது. இத் தொழிற்சாலைக்குத் தேவையான பால், தம்பன் கடவைப் பண்ணையிலிருந்து பெறப்படுகின்றது. இத் தொழிற் * சாலையை அமைக்க நியூசிலாந்து நாடு உதவி செய்தது. இத் தொழிற்சாலையிலேயே பரகும், கவ் அன் கேற் எனும்

பாற்பண்ணைத் தொழில்
111
அகட்டிப் பால் கள் (ரின் பால்) உற்பத்தியாகின்றன, வெலிசறை எனுமிடத்தில் பால்மா அடைக்குந் தொழிற்சாலை ஒன்றுள் ளது. இது வெளிநாடுகளிலிருந்து பால்மாவை இறக்குமதி செய்து, தகரங்களில் அடைத்து வருகின்றது. லக்ஸ்பிறே எனும் பால்மா இத்தொழிற்சாலையின் உற்பத்தியே,
உலக மக்களின் உணவில் பாற்பண்ணை விளைவுகளான பால் வெண்ணெய், வெண் ணெய்க்கட்டி என்பன குறிப்பிடத் தக்க இடம் பெற்று வருகின்றன. மேலைத் தேய மக்களின் உணவில் இவை முக்கிய இடம் பெறுகின்றன.
ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, அவுஸ்திரேலியா, இந்தியா, ஜேர்மனி, இத்தாலி, பிரான்ஸ், டென்மார்க் நெதர்லாந்து, சுவீடன், போலாந்து, சுவிற்சர் லாந்து, ஆசெந்தீனா, நியூசிலாந்து என்பன பாற்பண்ணை நடைபெறும் பிரதேசங்களாக உள்ளன.
ஐக்கிய அமெரிக்காவிலுள்ள பாற்பண்ணை வலயம் மிக முக்கியமானது. இது பேரேரிகளுக்குத் தெற்கே பரந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் பாற்பண்ணை வலயம் சிறந்த பாற் பண்ணை வேளாண்மைப் பிரதேசமாக விருத்தியடைந் தமைக்குச் சில காரணங்களுள்ளன. போதிய மேய்ச்சல் நிலம் இருப்பதும், இங்கு பயிர்ச் செய்கைக்கு ஏற்றமண்ணோ, கால நிலையோ இல்லாது இருப்பதும் இப் பாற்பண்ணை வலயத் திற்கு அருகே அதிக மக்கள் வாழ்வதால் நல்ல தோர் சந்தை இருப்பதும், போக்கு பேரத்து வசதிகள் நன்கு அமைந்திருப் பதும் இதன் விருத்திக்குத் தூண்டுதலாக இருக்கின்றன.
ஐரோப்பாவில் பாற்பண்ணை வேளாண்மையில் டென் மார்க் முக்கியமான நாடு. டென்மார்க்கில் போதிய மேய்ச் சல் நிலமின்மையினால், தீன் பயிர்களை விளைவித்து மாடு களுக்கு அளிக்கின்றனர்.
நியூசிலாந்தில் பாற்பண்ணைத் தொழில் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது. நியூசிலாந்தின் வடதீவிலுள்ள தாழ் நிலங்களிலும், தென் தீவின் தென் கிழக்குப் பகுதியிலும் பாற் பண்ணைத் தொழில் நடைபெற்று வருகின் றது. வடதீவுத் தாழ் நிலங்கள் காற்றுப் பக்கத்தில் இருப்பதனால் அதிக மழையைப் பெறுகின்றன, அதனால், செழிப்பான புல் இப் பகு திகளில் வளர்கின்றது. வடதீவில் ஒக்லாந்து சிறந்த பாற் பண்ணைப் பிரதேசமாகும். இங்கு சிறந்த பால் மாடுகள் 'வெ ளர்க்கப்படுகின்றன.

Page 58
112
ஆரம்பப் புவியியல்
உலக நாடுகளில் சோவியத் சமவுடைமைக் குடியரசு தவிர்ந்த ஏனைய நாடுகள் வருடா வருடம் ஏறக்குறைய 18 கோடி தொன் பாலும், 3 கோடி தொன் வெண்ணெ யும், 2 கோடி தொன் வெண்ணெய்க் கட்டியும் உற்பத்தி செய்து வருகின்றன. இதில் முதலிடத்தை ஐக்கிய அமெரிக் காவே பெறுகிறது.
வெண்ணெய் ஏற்றுமதியில் நியூசிலாந்தும் டென்மார்க் கும் முப்பது வீதத்தை வகிக்கின்றன. வெண்ணெய்க் கட்டி ஏற்றுமதியிலும் - நியூசிலாந்தே முதலிடத்தைப் பெறுகின்றது. இது ஏறக்குறைய 30%யும், நெதர்லாந்து 20%யும் ஏற்று மதி செய்கின்றன. வெண்ணெயையும், வெண்ணெய்க் கட் டியையும் அதிகமாக இறக்குமதி செய்யும் நாடு ஐக்கிய இராச்சியமாகும்.
பயிற்சி 1. உள்நாட்டில் பால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதற்காக
இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைள் எவை? இலங்கையில் முக்கிய கால்நடைப் பண்ணைகள் எங்கெங்கு உள்ளன?
இலங் கை எந்த நாடுகளிலிருந்து தரமான மாடுகளைத் தருவித்
துள் ளது? 4. மேல்வரும் இடங்கள் எதற்கு முக்கியமானவை?
பொலநறுவை வெலிசறை தம்பன்கடவை
ஒக்லாந்து 5. உலகில் பாற்பண்ணைத் தொழில் எந்நாடுகளில் விருத்தியுற்
றுள்ளது? நியூசிலாந்தில் பாற்பண்ணைத் தொழில் எப்பிரதேசத்தில் முக் கியம் பெற்றுள்ள து? நியூசிலாந்தில் பாற்பண்ணைத் தொழில் விருத்தியுற்றமைக்குரிய
காரணங்கள் எவை? வெண்ணெய்க் கட்டியை அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நாடு எது?
57.
8.

அத்தியாயம் : 14
மீன்பிடித் தொழில்
உலக மக்களின் தொழில்களில் மீன் பிடித்தல் முக்கிய மான ஒன்றாகும். மீனை ஏராளமாக ஏற்றுமதி செய்ய வேண் டிய இலங்கை, இறக்குமதி செய்யும் நிலையில் இருப்பதற்குக் காரணம், மீன்பிடித் தொழிலின் விருத்தியில் கூடிய கவனம் எடுக்காமையேயாகும்.
இலங்கையின் மீன்பிடித் தொழில் விருத்திக்குச் சாதக மான ஏதுக்கள் பலவுள்ளன. இக்கைத்தொழிலின் விருத்திக்கு
பசிப்??-174XE:4 " ".
படம்-.
2 12 1/11 'HE
படம் 36 மீன்பிடிக்கும் கலங்கள் .
ஆ3 பு: 15

Page 59
114
ஆரம்பப் புவியியல்
இலங்கையைச் சூழ்ந்து நான்கு புறங்களும் கடல் காணப் படுவது சாதகமான ஏதுக்களில் முதன்மையானதாகும். இலங்கையின் கரையோரம் ஏறத்தாழ 800 மைல்கள் நீள மானதாகவுள்ளது. தீவைச் சுற்றி 20 மைல்கள் தூரத்திற் குச் சென்று கரையோர மீன்பிடி நடைபெறுவதால் 16,000 சதுரமைற் பிரதேசத்தில் மீன் பிடிக்கக்கூடியதாகவுள்ளது.
இலங்கை ஒரு கண்டமேடையில் அமைந்திருப்பதோடு இக் கண்டமேடை கரையிலிருந்து 10 மைல்கள் வரை அகல மான தாக அமைந்திருப்பது மீன்பிடித் தொழிலுக்குப் பேருத வியாக விளங்குகின்றது. கண்டமேடைகள் ஆழ்கடல் அடித் தளங்கள் போலன்றி சூரிய வெப்பத்தைப் பெறுவ தால் மீன் கள் வாழ்வதற்கேற்ற "பிளாங்ரன்' போ {¢ty ற உணவுகளைக் கொண்டனவாகவுள்ளன. மேலும் இனப் பெருக்கத் திற் கேற்ற வெப்பத்தையும், மறைந்து வாழ்வதற்கேற்ற ஒதுக் கிடங்களையும் இவை கொண் டிருக்கின்றன.
ஏராளமாக மீன்கள் வசிக்கும் கடலடித்தள மேடைகள் இல ங்கையில் முக்கியமாக இரண்டு உள்ளன, யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு வடகிழக்கே இந்தியாவின் கோடிக்கரை முனை வரை பரந்துள்ள பீ ற் று கடலடித்தளமேடை 1000 சதுர  ையல்கள் பரந்த சிறந்த மீன்பிடித் தளமாகும், கன்னியா குமரிக்குத் தெற்கே இந்தியாவின் தொடராக அமைந்துள்ள ஜோர்ஜ் கடலடித்தளமேடை இன் னொன்றாகும்.
இலங்கையின் வடமேற்குப் பகுதிகளும், கிழக்குப் பகுதி களும் தாம் இலங்கையின் சிறந்த மீன்பிடிப் பகுதிகளாக வுள்ளன. கற்பிட்டி தொட்டு மன்னார், யாழ்ப்பாணம், பாருக் தித்துறை, முல்லைத் தீவு எனப்ளவற்றை உள்ளடக்கித் திரு கோண மலை வரையுள்ள பகுதிகளில் அதிகமாக மீன் பிடிக் கப்பட்டு வருகின்றது. இவற்றிற்கு அடுத்ததாகத் தென் மேல் பகு தி முக்கியவிடத்தைப் பெறுகின்றது. சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு, அம்பலாங்கொடை, தங்காலை என் பன தென் மேல் பகுதியின் மீன்பிடியிடங்களாகவுள்ளன. இலங்கையின் கரையோரங்களில் ஏறக்குறைய 70,000 மக் கள் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களிற்
106)

115
மீன்பிடித் தொழில் பெரும்பாலானோர் தீவின் வடகரைப் பாகங்களிலேயே உள் ளனர்.
புராதனகாலச் சிறு படகுகளை யும், தோணிகளையும், வள் எங்களையும், கட்டுமரங்களையும், உபயோகித்து இன்று மீன் பிடித்து வருகின்றனர், கரையோர மீன்பிடித்தலிற்கே இவை பெரிதும் பயன்படத்தக்கனவாக விளங்கிவருகின்றன, கரை யோர மீன்பிடித்தலிற்குப் பல்வகை வலைகள் பயன்படுத்தப் பட்டு வருகின்றன, வள்ளங்களோ கட்டுமரங்களோ இன்று கரையோரக்கடலில் இறங்கி, வலைவீசிப் பிடிப்பதற்கு 'வீசு வலை கள்' பயன்படுத்தப்படுகின்றன. இலங்கை எங்கிலும் பரவ லா 3 இம்முறையுள்ளது. பல மைல்கள் நீளமான வலையைக் கரையோரத்தில் ஒரு முனை இருக்க மறு முனை பல்மைல்கள் கடலினுள் வளைத்துக் கொண்டு வரப்பட்டு ஈற்றில் இரு முனைகளை யும் கரையினின்றும் கோலி வளைத்து மீன் பிடிக் கின்றனர், இதனை 'கரைவலை' என்பர். இம் முறை தென்மேல் பகுதிகளில் பெரிதும் நடைமுறையிலுள்ளது. கரையோரத் திலோ அன்றி சிறிது ஆழத்திலே7 கம்பங்களை நட்டு அவற் றில் வேலிபோன்று வலையைக் கட்டி மறித்தும் மீன் பிடிக் கின்றனர். கலவலை மீன் பிடித்தல் அல்லது இறகுவலை மீன் பிடித்தல் என்று இது வழங்கப்படும். இவற்றைவிட இன்று கரையோர மீன்பிடித்தலிற்கு நைலோன் வலைகளும் பயன் படுத்தப்படுகின்றன. மேலும் தூண்டிலிட்டு மீன்பிடித்தல் பேரளவில் இலங்கை எங்கினும் செயலிலுள்ள து, பொறிகட்டிப் பிடித்தல் சூள்கொண்டு பிடித்தல் என்பன இலங்கையின் கடல் நீரேரிகளில் நடைபெறுகின்றன,
பெயர்
இன்று ஆழ்கடலிற்குச் சென்று மீன்பிடித்தல் நடை பெறு கின்றது. மீனவர்களின் கலங்கள் யந்திரசாதனங்கள் இணைக்கப்பட்டனவாகவுள்ளன. எல்லாக் கலங்களிலும் யந் திர சாதனங்கள் இல்லை எனினும், கணிசமானவளவு யந்திர வள்ளங்கள் இன்று மீன்பிடித்தலில் ஈடுபட்டுள்ளன. இம் மோட்டார் வள்ளங்களை உபயோகித்து அதிக மீன் பிடிப் பதற்கு அரசாங்கம் வழிகாட்டி வருகின்றது.

Page 60
116
ஆரம்பப் புவியியல்
இலங்கையில் ஆழ்கடலில் சென்று மீன் பிடிக்கக்கூடிய 'றோலேஸ்' என்னும் பெரிய மீன்பிடிக் கப்பல்கள் இரண்டே யுள்ளன. இன்னும் 5 'றோலேஸ்' கப்பல்களை யுகோசிலா வியாவிலிருந்து வாங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
உலகின் சிறந்த மீன்பிடியிடங்கள் இடைவெப்பப் பகுதி களிலேயே காணப்படுகின்றன. இடைவெப்பச் சமுத்திரங்களில் நான்கு பிரதான மீன் பண்ணைகள் உள்ளன. அவையாவன:
1. வடகீழ்ப் பசுபிக் மீன் பண்ணைகள். 2. வடமேல் அத்திலாந்திக் மீன் பண்ணைகள் 3. வடகடல் மீன் பண்ணைகள். 4. வடமேல் பசுபிக் மீன் பண்ணைகள்.
வடகீழ் பசுபிக் மீன் பண்ணைகள்: வட அமெரிக்காவின் மேற்குக் கரையோரத்தில் அலாஸ்கா வின் பெரிங்தொடு கடலிலிருந்து கலிபோர்னியாக் குடாவரை வடகீழ் பசுபிக் மீன் பண்ணைகள் அமைந்துள்ளன. இப் பகுதிகளில் சமன் என்னும் மீன் வகையே அதிகமாகப் பிடிக்கப்படுகின்றது. அத்தோடு கலிபட், ரியூனா, கொட். சாடின் எனும் மீன் வகைகளும் பிடிக்கப்படுகின்றன.
நவீன யந்திர வசதிகளோடும், குளிர்சாதனப் பாது காப்புக்களோடும் கூடிய கப்பல்கள் இப்பகுதிகளில் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளன. வர்த்தக நோக்கான வடகிழ் பசுபிக் மீன் பண்ணைகள், வருடா வருடம் பெருந் தொகையான மீன்களை ஏற்றுமதி செய்கின்றன.
வடமேல் அத்திலாந்திக் மீன் பண்ணைகள்: வடமேல் அத்தி லாந்திக் மீன் பண்ணை 1,00,000 சதுர மைல்கள் பரப்புடை யது. இது ஆதியிலிருந்தே வர்த்தக ரீதியாக இயங்கி வரு கின்றது. நியூ இங்கிலாந்து, கிழக்குக் கனடா, நியூ பவுண் லாந்து என்பனவற்றை உள்ளடக்கி வட அமெரிக்காவின் கிழக்குக் கரையோரப் பிரதேசங்களை இம் மீன் பண்ணைகள் உள்ளடக்கியுள்ளன.

மீன்பிடித் தொழில்
117
கிராண்ட்பரங், சென்பியரிபாங், பிறவுண் பாங், ஜோர்ச் பாங் முதலிய சிறிதும் பெரிதுமான கடலடித்தள மேடை கள் இங்குள்ளன. இக்கடலடித்தள மேடைகள் சிறந்த மீன் பிடித் தளங்களாக இருக்கின்றன. இவையே வடமேல் அத்தி லாந்திக் மீன் பண்ணைகளின் விருத்திக்குப் பெரிதும் தூண்டு தலாக இருக்கின்றன.
லபிறடோர், நியூபவுண்லாந்துப் பகுதிகளில் வாழும் மக்கள் பரம்பரை பரம்பரையாகவே மீன் பிடிப்பவர்கள். இப்பகுதிகளில் வாழும் மக்களில் 80 சத வீதத்தினர் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
வடமேல் அத்திலாந்திக் மீன் பண்ணைகளில் கெறிங், காட்டொக், றோஸ்பிஸ், கலிபட், கொட் முதலிய மீன்வகை கள் பிடிக்கப்படுகின்றன. இறால் வகைகள் இப்பகுதிகளில் அதிகமாகப் பிடிக்கப்பட்டு வருகின்றன. வட நியூ பவுண்லாந் திற்கும், நியூ இங்கிலாந்திற்கு மிடையில் கெறிங் மீன் வகை அதிகமாகப் பிடிக்கப்படுகின்றன. - வடமேல் அத்திலாந்திக் . பகுதிகளில் காட்டொக் மீன் வகையே பிரதானமானது. றோஸ்பிஸ், கலிபட் வகை மீன்களும் தொகையாகப் பிடிக்கப் படுகின்றன.
வடகடல் மீன் பண்ணைகள்: வடகடல் மீன் பண்ணைகள் மேற்கு ஐரோப்பியப் பகுதிகளில் அமைந்துள்ளன. பிஸ்கே குடாவிலிருந்து நோர்வேயின் வடபகுதி வரை, வடகடல் மீன் பண்ணைகள் பரந்துள்ளன. வடகடல், பால்டிக் கடல், பிரித்தானியத் தீவுகளைச் சுற்றியுள்ள கடல் முதலியன ஆழ மற்றன. ஐஸ்லாந்தைச் சுற்றியுள்ள கடலடித்தள மேடை யும் இதனுள் அடங்கும்.
கடலடித்தள மேடைகளில் மிகவும் முக்கியமான டொக் கர் பாங் வடகடலிலேயே அமைந்துள்ளது. டொக்கர் பாங் மீன் களுக்குகந்த உணவுகளைப் பெருமளவில் கொண்டிருப் பதால் ஏராளமான மீன்கள் இம் மேடையில் உள்ளன. இக்கடலடித்தள மேடையில் ஐரோப்பிய நாடுகள் பலதும்

Page 61
118
ஆரம்பப் புவியியல்
மீன் பிடிக்கின்றன, கெறிங், கொட் மீன்வகைகளே இங்கு அதிகமாகக் கிடைக்கின்றன,
ஸ்கண்டி நேவியன் மக்கள், பிரித்தானிய மக்கள் என் போர் வடகடல் மீன்பண்ணைகளில் அதிகமாக மீன்பிடித்து வருகின்றனர். பிரித்தானியா சாதகமான கடல் பரப்பினை
படம் 39 றோலர் மீன்பிடிக் கப்பல் மீன் பிடிக்கிறது - யப்பான்
யும், எண்ணிறைந்த துறைமுகங்களையும் கொண்டிருப்பதனால் வடகடல் மீன் பண்ணைகளில் அதிகமானோர் மீன்பிடித்தலில் ஈடுபடுகின் றனர்.
வடகடல் மீன் பண்ணைகளில் அதிகமாகக் கெறிங், கொட், சாடின், சமன், ரியூனா எனும் மீன் வகைகள் பிடிக் 'கப்படுகின்றன. டொக்கர் பாங்கிலும், பால்டிக்கடலிலும்

மீன் பிடித் தொழில்
119 கெறிங் அதிகமாகப் பிடிக்கப்படுகின்றது. ஸ்கண்டிநேவியக் கரையில் கொட்மீன் அதிகமாகப் பிடிக்கப்பட்டு வருகின் றது. சாடின் மீன் ஐபீரியன் குடாவில் பெருந் தொகை யாகப் பிடிக்கப்படுகின்றது.
வடமேல் பசுபிக் மீன் பண்ணைகள்: கிழக்காசியப் பகுதிகளே வடமேல் பசுபிக் மீன் பண்ணைகளில் அடங்குகின்றன. பெரிங் தொடுகடல், ஒக்கொற்ஸ் கடல், யப்பான் கடல், மஞ்சட் கடல், சீனக்கடல் என்பனவற்றை இம்மீன், பண்ணைகள் உள் ளடக்கி யுள்ளன.
ஆழமற்ற கடல்கள் இங்கு காணப்படுவது மீன்பிடித் தொழிலை விருத்தியாக்கியுள்ளது. மேலும் வடமேல் பசுபிக் மீன் பண்ணைகள் விருத்தியடைய அப்பகுதிகளில் வாழும் அதிக மக்கள் தொகையும் காரணமாகும்.
வடமேல் பசுபிக் மீன் பண்ணைகளில் சமன், கெறிங், சாடின், மக்கேறல் எனும் மீன் வகைகளே அதிகமாகப் பிடிக்கப்படுகின்றன. சமன் மீன் பெரிங்கடல், ஒக்கெசற்ஸ் கடல், யப்பான் கடல் முதலிய பகுதிகளில் அதிகமாகப் பிடிக்கப்பட்டு வருகின்றது. கெறிங்மீன் யப்பான் கடலில் அதிகமாகப் பிடிக்கப்படுகின்றது.
பயிற்சிகள்
2
இலங்கையில் அதிகமாக மீன் பிடிக்கப்படும் பகுதிகள் ஆறின் பெயர் தருக. இலங்கையின் மீன்பிடி த ஓ தாழிலுக்கு சாதகமான ஏதுக்கள் எவை?
இலங்கையின் மீன் பிடி முறைகள் மூன் றின் பெயர் தருக. 4. மீன் பிடி த்தலுக்குப் பயன் படும் கலங்க ளெவை? 5, மீன் பிடித் துறைமுகங்கள் இரண்டின் பெயர் தருக, 6. யாழ்ப்பாணக் குடாநாட்டின் மீன்பிடி இடங்கள் எவை?
எத்தகைய கடல் மீன் பிடி த்தலிற்கு ஏற்றது?

Page 62
120
ஆரம்பப் புவியியல்
8. உலகில் பிரதான மீன் பண்ணைகள் எவை? 9. வட கீழ் பசுபிக் மீன்பண்ணைகளில் எவ்வகை மீன் அதிகமாகப்
பிடிக்கப்படுகிறது? 10. வட மேல் அத்திலாந்திக் மீன் பண்ணைகளில் காணப்படும் கட
லடி த்தள மேடைகள் இரண்டின் பெயர் தருக. அதிகளவில் மீன் பிடிக்கும் மூன்று நாடுகளின் பெயர் தருக.
1 .
மேல் வரும் வாக்கியங்களில் பிழையானவற் றை நீக்கிவிடுக.
1க
1. உலக நாடுகள் வருடாவருடம் பிடிக்கும் மீன் களின் தொகை:-
50 கோடி தொன், - 25 கோடி தொன். உலகில் அ,திகமாக மீன் பிடிக்கும் நாடுகள் :-
இலங்கை, யப்பான், ஐக்கிய அமெரிக்கா, சுமா ததிரா
நோர்வே, யாவா. 3. மீன் அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நாடு:-
இத்தாலி, இலங்கை, நோர்வே. 4. அதிகளவில் மீனை இறக்குமதி செய்யும் நாடு:-
இந்தியா, ஜேர்மனி, ஐக்கியராச்சியம்.

அத்தியாயம்: 15
காடுகளும் காட்டுத் தொழில்களும்
ஆதிகாலத்தில் இருந்தே காட்டுமரங்களின் தேவை மக்களுக்கு இருந்து வருகின்றது, வீடுகள் அமைக்கவும் வீட்டுத்தளபாடங்கள் செய்யவும், பயிர்ச் செய்கை, கைத் தொழில்கள் என்பனவற்றிற்குத் தேவையான கருவிகளைச் செய்யவும், நெருப்புண்டாக்கவும் ஆகிய இன்னோரன் ன செயல்களுக்கு மரங்கள் இன்றியமையாதனவாக இருக்கின் றன, மரங்களின் தேவை இன்று வரவர அதிகரித்து வரு கின்றது. இன்று காட்டு மரங்கள் ஒட்டுப்பலகை செய்ய வும், காகிதக் கூழ் செய்யவும், தீப்பெட்டி செய்யவும், வேறு பலவற்றிற்கும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
உலகக் காட்டு மரங்களை அவற்றின் தன்மை குறித்து மூன்று பெரும் பிரிவுகளாக வகுக்கலாம்.
1. ஊசியிலைக் காட்டு மென்மரங்கள் 2. இடைவெப்ப வலயக் காட்டு வைர மரங்கள் 3. அயன மண்டலக் காட்டு வைரமரங்கள்
நனிகுளிர் கால நிலைப் பிரதேசங்களில் ஊசியிலைக் காடுகள் காணப்படுகின்றன. இவை வடவரைக் கோளத்தில் கண்டங் களின் வடபாகங்களில் மேற்குக் கிழக்காகப் பரந்து அமைந் துள்ளன. கனடா, ஐரோப்பா, ஆசியாப் பகுதிகளை இக் காடுகள் கொண்டுள்ளன.
ஊசியிலைக்காட்டு மரங்கள் மென்மையானவை. அத் தோடு அதிக காலம் உபயோகிக்கக் கூடியனவாயும் உள் ளன. இம் மென் மரங்களில் வேர், டீல், பைன் என்பன முக்கியமானவை. ஊசியிலைக் காட்டு மரங்கள் ஒரே தன்மை யானவையாதலால், மரப்பண்ணைத் தொழில், சிறப்பாக நடைபெறுகின்றது. கனடாவில் ஒன்றாறியோ குவிபெக் பகுதி களில் மரப்பண்ணைத் தொழில் நன்கு முன்னேறியுள்ளது.
ஆ. பு. 16

Page 63
12 2
ஆரம்பப் புவியியல்
பால்டிக் பகுதிகளில் நல்ல விருத்தியடைந்துள்ளது. நோர்வே, சுவீடன், பின்லாந்து எனும் இப்பகு திகளில், மரம் வெட்டுந் தொழில் முக்கியம் பெறச் சில ஏதுக்கள் துணை நிற்கின்றன. பயிர்ச் செய்கைக்குப் பயனற்ற இந்நிலங்களில் ஊசியிலைக் காட்டு மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. பனி படர்ந்த நிலமும், நதிகளும் மரங்களைத் தொழிற்சாலைகளுக்கு இலகு வாக எடுத்துச் செல்ல உதவுகின்றன. சோவியத் சமவுடை மைக் குடியரசில் சில பகுதிகளில் இத்தொழில் விருத்தி
படம் 40 பின்லாந்தில் வெட்டு மரங்கள் உள் நாட்டு ஆலைகளுக்கு
நதிமூலம் எடுத்துச் செல்லப்படுகின்றன. யடையவில்லை. ஏனெனில், அக்காட்டுப் பகுதிகள் சதுப்பு நிலப் பிரதேசங்களாக இருப்பதனால் மக்கள் உட்பிரவேசிக்க முடியாதுள்ளது.

காடுகளும் காட்டுத் தொழில்களும்
1 2 3
ஊசியிலைக் காட்டு மரங்களை த் தறித்து மாரிகாலங்களில் இறுகிய பனிக்கட்டி.மேல் உருட்டி வந்து நதிகளில் சேர்த்து விடுவர். பனியுருக மரங் கள் மிதந்து செல் லும், கனடா, பால்டிக் பகுதிகளில் இவ்வாறு பனிக்கட்டியும் நதியும் இத்
தொ ழிலிற்குத் துணைநிற்கின்றன.
மொத்த வெட்டு மரங்களில் மென் மரங்களே அதிக மாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கட்டிடங்கள், சுரங் கத் தூண்கள், காகிதக்கூழ், மரப்பெட்டிகள், தளபாடங்கள் முதலியன செய்வ தற்கு மென்மரங்களே பெரிதும் உகந்தன வாக இருக்கின்றன. உலக மரத் தேவையில் 80% மென் மரங்களாக உள்ளது.
மென்மரங்களில் இருந்து வருடா வருடம் 'ஏறத்தாழ 1500 கோடி கியூபிக் அடிவெட்டு மரங்கள் உற்பத்தி செய் யப்படுகின் றன. இதில் ஏறக்குறைய 45%ஐ ஐக்கிய அமெ ரிக்கா உற்பத்தி செய்கின்றது. கனடா ஏறக்குறைய 20% உற்பத்தி செய்கின்றது. சுவீடன், பின்லாந்து, ஜேர்மனி முதலிய ஐரோப்பிய நாடுகள் 25% உற்பத்தி செய்கின்றன.
மென் மரவெட்டு மரங்களில் ஏற்றுமதியில் முதலிடம் பெறுவது பின்லாந்தாகும். பின்லாந்து, மேற்கு ஜேர்மனி, பிரான்ஸ், கனடா, ஐக்கிய அமெரிக்கா என்பன மொத்த உலக ஏற்றுமதியில் 90% ஏற்றுமதி செய்து வருகின்றன. மிகுதியை பெல்ஜியம், சுவீடன் முதலிய நாடுகள் ஏற்றுமதி செய்கின்றன்.
அயனமண்டலக் காட்டு வைர மரங்கள் அதிகம் பய னுடையவை என்று கூறமுடியாது. அமேசன், கொங்கோ, மேற்கு ஆபிரிக்காக்கரை, பருவக்காற்றுப் பிரதேசங்கள் முதலியவற்றில் இவ்வைர மரங்கள் உள்ளன. இப்பகுதி களில் மெஸ்மரப் பகுதிகளைப் போன்று மரப்பண்ணைத் தொழில் நன்கு அமையவில்லை. இங்கு காணப்படும் மரங் களில் தேக்கு, மலைவேம்பு என்பன முக்கியமான வைர மரங் கள். இவை பெறுமதியும் வாய்ந்தவை, பர்மா, சீயம் இரண்டி

Page 64
':"!
X 2
* ** ***** . ********
* ***
* - *yd
**
X Y
*:*** *****x |
* * * *
( 9°4 த.
-ட
ܗܘ
1
:32
(+13
படம்: 41 காடுகள் - (1) ஊசியிலைக்காட்டு மென்மரங்கள் (2) இடைவெப்ப வலயக் காட்டு வைரமரங்கள்
(3) அயன மண்டலக் காட்டு வைர மரங்கள்

காடுகளும் காட்டுத் தொழில்களும்
12 5
லும் தேக்குமரம் அதிகமாகவும், மத்திய அமெரிக்காவிலும் மேற்கு ஆபிரிக்காவிலும் மலைவேம்பு அதிகமாகவும் உள்ளன. அயனமண்டலக் காடுகள் பொருளாதார இலாபத்தோடு இன்னும் முற்றாகப் பயன்படுத்தப்படவில்லை.
இடைவெப்ப வலயக்காட்டு வைர மரங்கள் ஊசியிலைக் காட்டு மென்மரங்களோடு ஒப்பிடும்போது வைரமானவை. ஆனால் அயனமண்டலக் காட்டு வைர மரங்களோடு ஒப் பிடும்போது வைரமானவையல்ல. இடைவெப்ப வலயக் காட்டு வைர மரங்களில் ஓக் மரம் முக்கியமானது. யூக் கலித்ஸ், சரா, காறி எனும் மரங்களும் வைரமான மரங் களே. இடைவெப்ப வலயக்காட்டு வைர மரங்களை வட மேற்கு ஐரோப்பியப் பகுதிகளிலும் அவுஸ்திரேலியாப் பகுதி களிலும் காணலாம்.
வைர மரங்களிலிருந்து வருடாந்தம் 1400 கோடி கியூ., பிக் அடி வெட்டு மரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் வட அமெரிக்க நாடுகள் ஏறத்தாழ 25%யும், தென் அமெரிக்க நாடுகள் ஏறத்தாழ 25%யும், ஆபிரிக்க நாடுகள் ஏறத்தாழ 20%யும், ஆசிய நாடுகள் ஏறத்தாழ 20%யும் உற்பத்தி செய்கின்றன. ஐரோப்பிய நாடுகள் மிகுதியை உற் பத்தி செய்கின்றன.
வைரமர வெட்டு மரங்களின் ஏற்றுமதியில் பிரான்ஸ், கானா, நைஜீரியா, பிலிப்பைன், வடபோர்னியோ, கனடா, கொங்கோ' என்பன 75%ஐ ஏற்றுமதி செய்கின்றன. அதிக மாக வைரமர வெட்டுமரங்களை ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ், என்பன இறக்குமதி செய்கின்றன. நெதர்லாந்து, மேற்கு ஜேர்மனி, இத்தாலி முதலிய நாடுகளும் இறக்கு மதி செய்கின்றன.
மென் மரங்களிலும், வைரமரங்களிலும் 36• 1% மரக் கட்டைகளாகவும், 41 7% எரிகட்டைகளாகவும், 12 •1% காகிதக் கூழாகவும் பயன்படுத்தப்படுகின்றன. உலகில் வருடா 'வருடம் ஏறத்தாழ 3 கோடி தொன் காகிதக் கூழ் உற்

Page 65
126
ஆரம்பப் புவியியல்
பத்தி செய்யப்படுகின்றது. இதில் ஐக்கிய அமெரிக்கா 45% ஐயும், கனடா 25% ஐயும், சுவீடன், பின்லாந்து, நோர்வே, ஜேர்மனி என்பன 25%ஐயும் உற்பத்தி செய்கின்றன.
காடுகளை ஒழுங்கற்று அழித்ததால் மண்ணரிப்பு, வெள் ளப் பெருக்கு, காலநிலை மாறுதல் முதலியன ஏற்பட்டுள் ளன. இதனை இன்று உலக நாடுகள் தெளிவாக உணர்ந் துள்ளதால் காடுகளைப் பாதுகாப்பதில் கூடிய கவனம் செலுத்தி வருகின்றன. புதிய காடுகளையும் அமைத்து வரு கின்றன.
இலங்கையில் காட்டு மரத்தொழில் அவ்வளவு தூரம் விருத்தியுறவில்லை, இங்கு காணப்படும் காடுகள் அதிக பொருளாதார மதிப்புடையனவாக இல்லை. இலங்கையின் ஈரலிப்பான பகுதிகளில் பலா, மலைவேம்பு, நா, டூன், லுனு வில, கினா, சப்பு, மாகிறியா முதலிய மரங்கள் காணப்படு கின்றன. வரண்ட பகுதிகளில் கருங்காலி, யாவறணை, நா, கல்மில, பாலை, மு திரை முதலிய மரங்கள் உள்ளன. ஈர வலய மரங்கள் ஒட்டுப்பலகை, தளபாடங்கள் முதலியன செய்வதற்கும், வரண்ட பகுதி மரங்கள் கட்டிடங்கள், சிலிப் பர்க் கட்டைகள், விறகு என்பனவற்றிற்கும் உபயோகிக்கப் படுகின்றன. வரண்ட பிரதேசக் காடுகளை அழித்து, விலை மதிப்புள்ள தேக்கு மரங்களை நடுவதில் இன்று இலங்கை கூடிய கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
பயிற்சிகள்
சுருக்கமாக விடை தருக.
1. - உலகக் காட்டு மரங்களை எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கலாம் ?
அவை எவை?
ஊஐ சியிலைக காடுகள் எங்கே காணப்படுகின்றன?
- ஊசியிலைக்காட்டு மரங்கள் எத்தகையன ?
மரப்பண்ணை த் தொழில் நன்கு விருத்தியடைந்துள்ள நாடுகளைக் கூறுக?
இரு

காடுகளும் காட்டுத் தொழில்களும்
1 27
5.
மென் மரங்கள் பெரிதும் என்ன தேவைகளுக்குப் பயன் படுத் தப்படுகின்றன ?
அயன மண்டலக் காட்டு மரங்கள் எப்பகுதிகளில் காணப் படுகின்றன?
இலங்கையில் காட்டு மரங்கள் எத்தேவைகளுக்கு உதவுகின்றன ?
கீறிட்ட இடங்களை நிரப்புக.
மென் மர வெட்டு மரங்களின் ஏற்றுமதியில் முதலிடம் பெறு
008 ஆகும்.
வதி .4- 980 -
காட்டு மரங்கள் வைரமானவை.
இடைவெப்ப வலயக் காட்டு மரங்களில் ... ... ........... ... மரம் முக்கியமான து.
4. வைர வெட்டு மரங்களில்......
கள் அதிகளவில் ஏற்றுமதி செய்கின்றன.
... ஆகிய நாடு
5
அதிகமான மென் மரங்களை ...
....... ஆகிய நாடுகள் உற்பத்தி செய்கின றன .

Page 66
பகுதி: மூன்று மூன் றாம் பரு வம்

அத்தியாயம்: 16
இலங்கையின் கைத்தொழில்கள்
இலங்கை, அண்மைக் காலங்களில் கைத்தொழில்களில் விரைந்து முன்னேறி வருகின்றது. சீமேந்து, நெசவுப் பொருட்கள், சீனி, காகிதம், தோற் பொருட்கள், பாற்
கசன்துறை
பெயணம்
முல்லைத்தீவு
புல்மோட்டை
அனுராதபுரம் *
புத்தளம்!
இயிண்கல் வ
வொழைச்சேனே
அம்பாறை
வங்கதெனியா சநாத்தாண்டி மொத்தளை
அஇண்டி நீர்கொழும்பு
யாங்கொடை களனியா Teயாகல"
ல்கிரியா கொழும்பு
8 இவரெலியா இரத்மலானை
ைேறாதனை
ஐ பண்டாரவளை மொறட்வோ ?
சிகவெல
களுத்துறை , பையகல
நேபொட யந்தூேட்டை ஒபலப்பிட்டி
2ஜினதேசலே. காலி
3டியான
படம் : 42 இலங்கையிலுள்ள பிரதான கைத்தொழில்கள் நடை பெறும் இடங்களை இப்படம் குறிக்கின்றது. தென்மேற் சமவெளி யிலே அதிக கைத்தொழில் நிலையங்கள் அமைந்துள்ளதை
அவதானிக்குக; ஆ. பு. 17

Page 67
130
ஆரம்பப் புவியியல்
பொருட்கள், சிற்றுண்டிகள் முதலான வற்றை உற்பத்தி செய்வதில் கூடியளவு கவனம் செலுத்தி வருகின்றது.
இலங்கையில் இன்று காணப்படுகின்ற கைத்தொழில் களை மூன்று பிரிவுகளாக வகுக்கலாம். அவையாவன:
1. குடிசைக் கைத்தொழில். 2. வேலைத்தளக் கைத்தொழில். 3. தொழிற்சாலைக் கைத்தொழில்.
குடிசைக் கைத்தொழில் என்பது, ஒரு குடும்ப அங்கத் தினரால் தம் வீட்டிலிருந்து, சூழலில் பெறக்கூடிய மூலப் பொருட்களைக் கொண்டு பொருட்களை உற்பத்தி செய்வ தாகும். குடிசைக் கைத்தொழிலில் யந்திர உபயோகமுமில்லை: கட்டுப்பாடுமில்லை. களுத்துறையில் இண் டி எனும் ஒருவகை ஈச்சமரத்தின் இலையை உபயோகித்துக் கடகங்கள், தொப் பிகள் இழைக்கின்றனர். பாணந்துறையிலும், மட்டக்களப் பிலும் புல்லினங்களையும், யாழ்ப்பாணக் குடா நாட்டில் பனை ஓலையையும் உபயோகித்தும் பாய் முதலியன இழைக்கின் றனர். கண்டியில் கித்துள் பனங்கட்டியும், பித்தளைப் பாத் திரங்களும் செய்யப்படுகின்றன. காலியில் ஆமையோட்டை உபயோகித்து அணிகள் செய்கின்றனர். யாழ்ப்பாணத்தில் சீமேந்து வெற்றுப் பைகளைப் பயன்படுத்தி, சாமான்கள் போட்டுக் கொடுக்கும் பைகள் செய்கின்றனர். நெடுந்தீவு. சாவகச்சேரி என்பவற்றில் வெங்காயக் கூடை
பின்னுகின் , றனர்.
- மூங்கில் பிரம்பு என்பன கொண் டு கூடைகள் இழைக் கப்படுகின்றன. தென்னந் தும் பைக்கொண்டு பல்வகையான பொருட்கள் (கயிறு, துடைப்பம்) செய்யப்படுகின்றன. இவற் றையெல்லாம் குடிசைக் கைத்தொழில்கள் என்ற பிரிவினுள் அடக்கலாம்.
தொழிலாளர்கள் பலரினுதவியுடன் சிறிதளவு யந்திரங் களை உபயோகித்து, சிறிதளவில் நடைபெறும் கைத்தொழில் களை வேலைத்தளக் கைத்தொழில்கள் எனலாம். பெனியன் கள் சேட்டுகள் பியர் குடிவகைகள், தீப்பெட்டிகள், சவர்க்

இலங்கையின் கைத்தொழில் கள்
131
காரங்கள், பிஸ்கோத்துக்கள், இனிப்புக்கள், வீட்டுத் தள பாடங்கள், செங்கல் ஓடு, கயிறு முதலியன உற்பத்தி செய் யப்படும் கைத்தொழில்கள் இதனுளடங்கும்; கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி, காலி முதலிய நகர மையங்களில் இவ்வகைக் கைத்தொழில்கள் அதிகமாக அமைந்துள்ளன, இன்று யாழ்ப்பாணக் குடாநாட்டில் இயங்கிவரும் சுருட்டுக் கைத்தொழிலைக் குடிசைக் கைத்தொழில் பிரிவில் அடக்கி விட முடியாது; அது தொழில் நிலையக் கைத்தொழிலே.
இலங்கையின் தொழிற்சாலைக் கைத்தொழில்கள் என காங்கேசன்துறையிலுள்ள சீமேந்துத் தொழிற்சாலையையும், ஜின்தோட்டையிலுள்ள ஒட்டுப் பலகைத் தொழிற்சாலை யையும், வாழைச்சேனையிலுள்ள காகிதத் தொழிற்சாலை யையும், மட்டக்குளியாவிலுள்ள தோல் தொழிற்சாலையை யும், கல்லோயாவிலும், கந்தளாயிலுமுள்ள சீனித் தொழிற் சாலைகளையும், பரந்தனிலுள்ள இரசாயனத் தொழிற்சாலை யையும் குறிப்பிடலாம்.
ஓரிடத்தில் ஒரு கைத்தொழில் அமையவேண்டுமானால்; அவ்விடத்தில் அக் கைத்தொழிலிற்குத் தேவையான வச திகள் சாதகமாக அமைந்திருக்கவேண்டும். மூலப்பொருட்கள், வலு, தொழிலாளர் வசதி, முதல் போக்குவரத்து வசதிகள், சந்தை முதலிய கைத்தொழில்களை ஓரிடப்படுத்தும் ஏதுக்கள் அமைந் திருந்தால், அவ்விடத்தில் கைத்தொழில்கள் நன்கு இயங் கும்.
கைத்தொழில்களுக்குத் தேவையான மூலப் பொருட் களாகப் பலவகைக் கனிப்பொருட்கள் இலங்கையில் காணப் படுகின்றன. சுண்ணக்கல், சீனக்களி, கண்ணாடிமணல், காரீயம், இரும்புத்தாது, இல்மனைட் முதலியன இலங்கையிலுள்ள கனிப்பொருட்களாகும் றப்பர், கரும்பு, கொக்கோ முதலிய விவசாய மூலப் பொருட்களும் இங்குள்ளன. நீர்மின் வலு வையும், இலங்கையில் எதிர்காலத்தில் இன்னமும் பெருந் தொ கையாக விருத்திசெய்து கொள்ள முடியும். இவை யாவும் இலங்கையின் கைத்தொழில்களை விருத்தியடையு வைக்கக்கூடியனவாயுள்ளன.

Page 68
13 2
ஆரம்பப் புவியியல்
காங்கேசன்துறையிலுள்ள சீமேந்துத்
தொழிற்சாலை காங்கேசன்துறையில் நிறுவப்பட்டு இயங்கி வரும் சீமேந் துத் தொழிற்சாலை இலங்கையின் உன்னதமான தொழிற் சாலையாகும். கைத்தொழிலை நிர்ணயிக்கும் ஏதுக்கள் இத் தொழிற்சாலைக்குச் சாதகமாக அமைந்துள்ளன. சீமேந்து செய்வதற்குத் தேவையான மூலப்பொருளான சுண்ணாம்புக் கல் ஏராளமாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் கிடைக்கின்றது. தேவைப்படும் களிமண் முருங்கனிலிருந்து புகையிரத மூலம் கொண்டுவரப்படுகின்றது. கிப்சம் என்ற இரசாயன உப்பு இறக்குமதி செய்யப்படுகின்றது. ஆனையிறவு உப்பளங்கள் விஸ்தரிக்கப்பட்டால் தேவையான கிப்சத்தை இலங்கையி லேயே பெற முடியும். சீமேந்துத் தொழிற்சாலைக்குத் தேவை யான மின்வலு 15 மைல் தூரத்திலிருக்கும் மின்வலு நிலை பத்திலிருந்து கிடைக்கின்றது. இத் தொழிற்சாலையின் இன் றைய உற்பத்தியளவு நாளொன்றிற்கு 225 தொன்னாகும்.
* அடி 11) 1 )13) புத
பா =ITா:
படம் 44 சீமேந்துத் தொழிற்சாலை
சீமேந்து உற்பத்தியை அதிகரிப்பதற்காகப் பல நடவடிக் கைகள் கைக்கொள்ளப்பட்டுள்ளன.
காங்கேசன்துறைத் தொழிற்சாலையில் புதிதாக ஒரு சூளை அமைக்கப்பட்டிருப்ப'

இலங்கையின் கைத்தொழில்கள்
133
தோடு, நவீன யந்திர வசதிகளும் நிறுவப்பட்டுள்ளன. காலி யில் புதிதாக ஒரு சீமேந்துத் தொழிற்சாலை அமைக்கப் பட்டு இயங்கத் தொடங்கியுள்ளது. புத்தளத்திலும் புதி தா க ஒரு சீமேந்துத் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஜின்தோட்டையிலுள்ள ஒட்டுப் பலகைத்
- தொழிற்சாலை இத்தொழிற்சாலை 1949- ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தேயிலை ஏற்றுமதி செய்வதற்குத் தேவையான பெட்டி களைச் செய்வதே இத் தொழிற்சாலையின் நோக்கமாக இருந் தது. ஆரம்பத்தில் இலங்கைக்குத் தேவையாகவிருந்த தேயி லைப் பெட்டிகளுள் % பங்கை இத்தொழிற்சாலை உற்பத்தி செய்தது. ஆனால், வெளிநாட்டுப் போட்டியும், மரங்கள் நன்கு பயன்படுத்தப்படாது வீணாக்கப்பட்டதும், திருப்தி கரமான பசை கிடைக்காமற் போனதும் நட்டத்தை ஏற் படுத்தின. அதனால் 1953-இல் கைத்தொழில் உற்பத்திப் பொருட்களுக்கான சட்டத்தின்படி 5 தேயிலைப் பெட்டிகளை இறக்குமதி செய்யும்போது ஒரு பெட்டியை இத்தொழிற் சாலையிலிருந்து வாங்க வேண்டும் என்று சட்டம் விதிக்கப் பட்டது. இத்தொழிற்சாலை உற்பத்தி செய்யுமளவை வரு டம் ஒன்றிற்கு 60,000,00 சதுர அடியாக்குவதே அரசாங் கத்தின் நோக்கமாகும். 1959-60 க்கு மிடையில் இது 4,80,000 தேயிலைப் பெட்டிகளை உற்பத்தி செய்தது.
தோல் தொழிற்சாலை இத் தொழிற்சாலை மட்டக்குளியாவில் இருக்கின்றது. மாதந்தோறும் 5500 மாடுகளினதும், 5000 ஆடுகளினதும், 100 எருமைகளினதும் தோல்கள் பதனிடப்படுகின்றன. உள் நாட்டிலிருந்து கிடைக்கும் தோல்கள் குறைந்த தரமான வையாகவுள்ளன. தோல் பதனிடும் வேலை 16 தனிப்பட் டவர்களின் பதனிடும் நிலையங்களிலும், ஓர் அரசாங்கத் "தொழிற்சாலையிலும் நடைபெறுகின்றது.

Page 69
134
ஆரம்பப் புவியியல்
வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை
வாழைச்சேனையில் அமைந்துள்ள காகிதத் தொழிற்சாலை யில் நாளொன்றிற்கு 12 தொடக்கம் 15 தொன் வரை காகிதம் உற்பத்தி செய்யப்படுகின்றது. இத் தொழிற்சாலை யின் நோக்கம் வருடமொன்றிற்கு 400 தொள் காகிதம் உற் பத்தி செய்வதாகும். ஆனால் இன்று திட்டத்திற்கும் அதிக மாக உற்பத்தி செய்து வருகின்றது. 1962-ம் ஆண்டு இத்தொழிற்சாலை 4,690 தொன் காகிதம் உற்பத்தி செய் துள்ளது.
காகித உற்பத்திக்கு வைக்கோ லும், இலுக் புல்லுமே பிரதான மூலப் பொருட்களாம். 4000 தொன் காகிதம் உற்பத்தி செய்ய 5000 தொன் வைக்கோலும், 5000 தொன் இலுக் புல்லும் தேவைப்படுகின்றன, தொழிற்சாலையிலிருந்து 15 மைல்கள் தூரத்திலுள்ள புனானை எனுமிடத்தில் இலுக் புல் பயிரிடப்படுகின்றது.
இத் தொழிற்சாலையை விரிவாக்க 4 கோடி ரூபா ஒதுக்கப்பட்டிருக்கின்றது.
சீனித் தொழிற்சாலை கல்லோயாவில் முதலாவது சீனித் தொழிற்சாலை அமைந் துள்ளது. 10,000 ஏக்கர்ப் பிரதேசம் இங்கு கரும்புக் செய் கைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு வருடமொன்றிற்கு 2500 தொன சீனியும், 2000 தொன் வெல்லமும் உற்பத்தி செய்யப்படுகின்றன. கந்தளாயில் இரண்டாவது சீனித் தொழிற்சாலை இயங்க ஆரம்பித்துள்ளது இங்கு 1000 ஏக் கருக்கு மேல் கரும்புச் செய்கை நடைபெறுகின்றது. வரு டம் 1000 தொன் வரை சீனி உற்பத்தி செய்கின்றது. அத் தோடு 800 தொன் வெல்ல மும் உற்பத்தி செய்கின்றது.. அரசாங்கம் இவ்விரு சீனித் தொழிற்சாலைகளைவிட, இன்னும் 3 தொழிற்சாலை நிறுவத் திட்டமிட்டுள்ளது. அதில் இன் '

இலங்கையின் கைத்தொழில்கள்
135
னொன்று கந்தளாயிலும், இரண்டு வளவையிலும் நிறுவ முடிவு செய்துள்ளது.
பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை இத்தொழிற்சாலை பரந்தனில் 1955-இல் நிறுவப்பட்டது. இத் தொழிற்சாலைக்கு அடிப்படையாக அமைவது உப்பா கும். இது அண்மையிலுள்ள ஆனையிறவிலிருந்து கிடைக் கின் றது. இதன் விருத்திக்காக 24 கோடி ரூபா ஒதுக்கப் பட்டது.
1962-ம் ஆண்டு இத்தொழிற்சாலை 1,100 தொன் காஸ்ரிக் சோடாவும், 930 தொன் குளோரினும் உற்பத்தி செய்தது. இவ்வுற்பத்தி அளவுகள் பிந்திய ஆண்டுகளில் படிப்படியாகக் கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏனைய தொழிற்சாலைகள் வியாங்கொடையிலும் துல்கிரியாவிலும்  ெந ச வு த் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. ஒருவெல எனுமிடத்தில் இரும்புருக்குத் தொழிற்சாலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பொலநறுவாவில் தகரப்பால் தொழிற்சாலை இயங்கி வரு கின்றது.
பயிற்சிகள்
1. 1. இலங்கையின் கைத்தொழில்களை எத்தனை பிரிவுகளாக வகுக்
கலாம்?
2, குடிசைக் கைத் தொழில்களுக்கு உதாரணங்கள் சில தருக. 3.
இலங்கையில் காணப்படும் தொழிற்சாலைக் கைத்தொழில்கள் எவை?
சீ மேந்துத் தொழிற்சாலை காங்கேசன் துறையில் அமைந்துள்ள
மைக்கு சாதகமான ஏதுக்கள் யாவை? நெசவுத் தொழிற்சாலைகள் இலங்கையில் எங்கு அமைந்துள்ளன?

Page 70
136
ஆரம்பப் புவியியல்
2. மேல்வரும் இடங்களில் காணப்படும் தொழிற்சாலைகளைக் கு றிக்குக்.;-
அ. காங்கேசன் துறை
ஆ. வாழைச்சேனை
பரந்தன்
நாத்தாண்டியா
உ.
கல்லோயா
ஊள, ஜின்தோட்டை
எ. - மட்டக்குளியா
இந்துருவை
பொலநறுலா

அத்தியாயம்: 17
இரும்பு உருக்குக் கைத்தொழில்கள்
உலகின் ஏனைய கைத்தொழில்கள் யாவற்றிற்கும் அடிப் படை இரும்புருக்குக் கைத்தொழிலேயாகும். 7. இரும்புத் தாது. நிலக்கரி என்பன இலகுவில் கிடைக்கக்கூடிய பகுதி களில் இரும்புருக்குக் கைத்தொழில்கள் காணப்படுகின்றன.
வட அமெரிக்காவில் இரும்புருக்குக் கைத்தொழில்கள் நன்கு விருத்தியடைந்துள்ளன. ஐக்கிய அமெரிக்கா வட அமெரிக்காவில் 95% இரும்புருக்கை உற்பத்தி செய்கின்றது. ஐக்கிய அமெரிக்காவில் ஏராளமான நிலக்கரி, இரும்புத் தாது என்பன கிடைப்பதே அதன் விருத்திக்குக் காரண மாகும். வட அமெரிக்காவில் அலபாமா, பிற்ஸ்பேக் பிரதேசம், சிக்காக்கோப் பிரதேசம், மத்திய அத்திலாந்திக் பிரதேசம் என்பன முக்கியமான இரும்புருக்குக் கைத்தொழில்கள் நடைபெறும் பகுதிகளாகும்.
ஐரோப்பாவில் பலபகுதிகளில் இரும்புருக்குக் கைத் தொழில்கள் நடைபெறுகின்றன. பெரிய பிரித்தானியாப் பகுதி கள். ஜெர்மனியிலுள்ள ஊர்பிரதேசம், பிரான்ஸ், பெல்ஜியம், லக்சம் பேர்க் என்பன குறிப்பிடத்தக்க இரும்புருக்குக் கைத்தொழிற் பிரதேசங்களாம். இத்தாலியிலும் சுவீடனிலும் இரும்புருக்குத் தொழில். கணிசமானவளவு விருத்தியடைந்துள்ளது.
ஆசியாவில், சோவியத் ருஷியா, யப்பான், மஞ்சூரியா' சீனா, இந்தியா எனும் நாடுகளில் இரும்புருக்குக் கைத் தொழில்கள் நடைபெறுகின்றன, அவுஸ்திரேலியாவில் நியூ சவுத்வேல்ஸில் இரும்புருக்குத் தொழில் நடைபெறுகின்றது.
ஊர் கைத்தொழிற் பிரதேசம் உலகின் பழைய பெருங் கைத்தொழில்களில் ஊர் மிக முக்கியமான தொன்றாகும். மேற்கு ஜேர்மனியில் இரைன்
ஆ. பு. 18

Page 71
138
ஆரம்பப் புவியியல்
நதிப் பள்ளத்தாக்கில், இலிப்பே, றூர் எனும் கிளை நதிகளின் மருங்கே ஊர் கைத்தொழிற் பிரதேசம் அமைந்துள்ளது. மேற்கு ஜேர்மனி, ஐரோப்பாவின் முக்கிய நாடுகளிலொன் றாக விளங்குவதற்கு அதன் நிலையமும் கனிப்பொருள் வள மும் காரணங்களாம். மேற்கு ஜேர்மனி முற்றாகவே ஒரு கைத்தொழில் நாடாகும். இதில் நூர் பள்ளத்தாக்கு சதுர மைலிற்கு 3500 மக்களுக்கு மேற்கொண்டுள்ள சிறந்த கைத்தொழிற் பிரதேசமாகும்.
நூர் பள்ளத்தாக்கு சிறந்த நிலக்கரி வயல்களைக் கொண் நள்ளது, உலக நிலக்கரி உற்பத்தியில் 7 சதவீதத்திற்கு மேல் இங்கு உற்பத்தியாகின்றது. ஏராளமாக நிலக்கரி இங்கு கிடைத்தமையினாலேதான் கைத்தொழிற் பிரதேச மாக இது உருவாகியது. ஊர் கைத்தொழிற் பிரதேசத்
இக்புரி க்க, மாயம் tntதப்:1 TiL பால்
14.
தி விப்,ே
காசி 15:18ாட்சி- II சை:45 கா.
இன்ரனி நதி
38duv Uா.ை
- 1
(சபோட மண்ட்
எசென்[.NN
டுயிலே
நார க
முேல்கிம்
எள்ளிக் | எதிரியும்
கதிபேல்ட் ப
பபேற்றால் இலதிகாரி
செல்போப்
WAMWStre)", " 1
படம்: 45 ஊர் கைத்தொழிற் பிரதேசம். தின் தேவைக்கும் மேலதிகமாக நிலக்கரி இங்கே உற்பத்தி செய்யப்படுவதால், பிரான்ஸ், சார், லக்சம்பேர்க், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகியனவற்றிற்குக் கணிசமானவளவு நிலக்கரி ஏற்றுமதிசெய்யப்படுகின்றது..

இரும்பு உருக்குக் கைத்தொழில்கள்
139
ஊர் கைத்தொழிற் பிரதேசம் இரும்புருக்குக் கைத் தொழிலிலேயே முக்கியமானதாகவுளது. இக் கைத்தொழிற் பிரதேசம் கிறிபேல்ட், டுசெல்டோப், ஒபேகான்சன், முல்கிம், டோட்மண்ட், எசென், டுயிஸ்பேக் முதலிய நகர்களை உள் ளடக்கி 33 சதுர மைல்களாகவுள்ளது. இரும்புருக்குக் கைத் தொழிலிற்குத் தேவையான இரும்புத் தாதும் ஏனைய மூலப் பொருட்களும் அயல் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்விக் கப்படுகின்றன. நன்கமைந்த போக்குவரத்து வசதிகள் மூலப் பொருட்களின் இறக்குமதிக்கு அதிக செலவை ஏற்படுத்த வில்லை. இருப்புப் பாதைகளும், வீதிகளும், கால்வாய்களும், கப்பலோட்டத்திற்குகந்த நதிகளும் ஊர் கைத்தொழிற் பிர தேசத்தின் விருத்திக்குத் துணை நிற்கின்றன. மேலும், மிக ஆரம்பகாலத்திலிருந்தே இங்கு இரும்புருக்குக் கைத்தொழில் ஆரம்பமாகி விட்டபடியால் இன்று இங்கு திறமை வாய்ந்த போதிய தொழிலாளர்கள் உள்ளனர். 1960-ம் ஆண்டில் றூர் 1,59,90,000 மெற்றிக்குத் தொன்கள் இரும்புருக்கை உற் பத்தி செய்தது.
நூர் பிரதேசத்தில் பல கைத்தொழில் மத்திய நிலையங் கள் நிறுவப் பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கைத்தொழில் நிலையமும் இரும்புருக்குத் தொழிலில் பிரசித்திபெற்று விளங் குகின்றன. டோட்மண்ட், எசென், டுசெல்டோப் என்பன உருக்குப் பொருட்கள், போர்க் கருவிகள், கைத்தொழில் யந்திரங்கள் என்பனவற்றை உற்பத்தி செய்து வருகின்றன. குயிஸ்பேக் எனும் நிலையம் கப்பல் கட்டுதலில் முக்கியம் பெற்று விளங்குகின்றது. கொலோன் பிரதேசம் யந்திரங் களை உற்பத்தி செய்து வருகின்றது.
றூர் பிரதேசத்தில் இரும்புருக்குத் தொழிலோடு பிற கைத்தொழில்களும் நடைபெற்று வருகின்றன. இப்பிரதேசத் தில் இரசாயனப் பொருட்கள், நெசவுப் பொருட்கள், வாச னைத் திரவியங்கள், பசளை முதலியனவும் உற்பத்தி செய் யப்பட்டு வருகின்றன.
இலங்கையின் உருக்கு ஆலை இலங்கையில் 'ஒரு வெல' எனுமிடத்தில் உருக்காலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இந்த ஆலைக்குத் தேவையான இரும்

Page 72
140
ஆரம்பப் புவியியல்
புத் தாது, ஒருவெலவைச் சூழ்ந்தமைந்துள்ள ககாவத்தை, றக்குவானை, பலாங்கொடை, அக்குரச, தெனியாய முதலிய இடங்களில் அமைந்துள்ள இரும்புத் - தாதுப்படிவுகளில்
THE கதி SA 5
மகா பங்KேNEWEE?
கதம்பககத
ஒருவெல உருக்காலை எகிரும்புத்தாது தாதுவதைலாம் * கிதொைைமந் .பின்பசிணாபய
தொட ர் ம ம்
ஒருவெல்
நோட்டன
நீர்மின் நிலையம்
நீதியெங்கம்
லோாவகொல). பாவத்தை
முக்குவானோ
ஆழச
அழுத்கம 1
அம்பலாங்கொ
காருக சி தணியாய
படம்: 46 ஒருவெல உருக்காலையின் நிலையம் இருந்து பெறப்படும். இந்த ஆலைக்குத் தேவையான வலு, நோட்டன் பிறிச் நீர்மின் நிலையத்திலிருந்து பெறப்படுகின்றது. இந்த ஆலை இரும்புத் தண்டவாளம், கேடர்கள், கம்பிகள் என் பனவற்றை உற்பத்தி செய்கின்றது.
பயிற்சி
21.
இரும்புருக்குக் கைத்தொழில்கள் உலகில் எந்நாடுகளில் நன்கு விருத்தியடைந்திருக்கின்றன?
2. வட அமெரிக்காவில் இரும்புக்குத் தொழில் நடை பெறும்
பகுதிகள் யாவை?
ஊர் கைத்தொழிற் பிரதேசத்தில் இரும்புருக்குத் தொழில் நன் கு விருத்தியுற்றமைக்குச் சாதகமான ஏதுக்கள் யாவை?
றூர் பிரதேசத்திலுள்ள கைத்தொழில் நிலையங்கள் எவை?
இலங்கையின் உருக்காலை எங்குள்ளது?

அத்தியாயம் : 18
இலங்கையின் நீர்மின் சக்தி
உலக நாடுகளின் கைத்தொழிற் பொருளாதார விருத் திக்கு வலுப் பொருட்கள் மிகவும் இன்றியமையாதன. நிலக்கரி, பெற்றோலியம், நீர் மின்வலு (மின்சாரம்) என்ப னவே உலகின் இன்றைய பிர தான வலுப், பொருட்களாக விளங்கி வருகின்றன. நிலக்கரியையும், பெற்றோலியத்தையும் அதிகளவில் கொண்டுள்ள ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என்பன கைத்தொழிலில் பெரிதும் முன்னேறியுள் ளன. நம் நாட்டில் நிலக்கரியோ, பெற்றோலியமோ இல்லை; ஆனால் நீர்மின் சக்தியைக் கணிசமானவளவு விருத்தியாக் கப் போதிய வள முண்டு.
இலங்கையில் உபயோகிக்கப்படும் மின்சாரத்தில் பெரும் பங்கு நீரிலிருந்தே பெறப்படுகின்றது. நீர்மின் சக்தியை உற்பத்தி செய்வதற்குச் சாதகமான புவியியல் காரணிகள் இலங்கையில் காணப்படுகின்றன. அவை வருமாறு:
1, அதிக மழை நீரைப் பெறுகின்ற மலைநாட்டிலிருந்து
பல நதிகள் உற்பத்தியாகின்றன. அவை செங்குத் தான மலைச்சரிவுகளிலிருந்து கீழிறங்கும்போது நீர் வீழ்ச்சிகளாக வீழ்கின்றன. நீர்வீழ்ச்சிகள் நீர்மின் சக்தி உற்பத்திக்கு அத்தியாவசியமானவை, லக்ச பானா, அப்டீன் நீர் வீழ்ச்சிகள் இத்தகையனவே. சமவெளியில் பாய்கின்ற நதிகள் கொண்டுவரும் நீரை அணைகள் மூலம் மறித்துக் கட்டி, செயற்கை யான விரைவோட்டத்தினை ஏற்படுத்தி நீர்மின் வலுவினைப் பெறத்தக்க தரைத் தோற்றத் தன் மைகளும், காலநிலையும் இலங்கையிலுள்ளன. கல்
லோயா, இங்கினியக்கலை இத்தகையதே. இலங்கையின் மலை நாட்டில் பல நீர்வீழ்ச்சிகள் உள்ளன. லக்சபானா, அப்டீன், உலப்பனை, சென் கிளியர், நுவரெலியா,

Page 73
142
ஆரம்பப் புவியியல்
துங்கி ந்தை என்பன குறிப்பிடத்தக்கன. இந் நீர்வீழ்ச்சிகளைப் பயன்படுத்தி நீர்மின் வலுவினை உற்பத்தி செய்வதற்குத் திட்டங்களுள்ளன. மக்காவலிகங்கையை வடக்கே திருப்பும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இத் திருப்பத் தால் ஏற்படும் செயற்கையான நீர் வீழ்ச்சிகளிலிருந்தும் நீர்மின் வலு உற்பத்தி செய்யப்படவுள்ளது.
தற்போது இலங்கையில் நீர்மின் சத்தியை உற்பத்தி செய்யும் நிலையங்களுள் அபடீன் - லக்சபானா முக்கியமானது. களனிகங்கையின் கிளை நதியான மஸ்கெலிய ஓயாவில் இந் நீர்மின் சக்தி நிலையம் அமைந்துள்ளது. லக்சபானா ஏறத்தாழ 50,000 கிலோவார்ட் மின்சக்தியை உற்பத்தி செய்து வரு கின்றது. கற் றன், நுவரெலியா, கொழும்பு முதலியன லக்ச பானாவிலிருந்தே மின்சாரத்தைப் பெறுகின்றன.
கல்லோயாவிலுள்ள இங்கினியக்கல, நீர் மின்சக்தியை உற்பத்திசெய்யும் பிறிதோர் மையமாகும். இங்கு வருடத் திற்கு ஏறத்தாழ 12,000 கிலோவார்ட் மின்சாரம் உற் பத்தியாகின்றது. மட்டக்களப்பு, அம்பாறை, அக்கரைப் பற்று, வதுளை என்பன இங்கிருந்து நீர்மின் சக்தியைப் பெற்று வருகின்றன.
இலங்கையின் நீர் மின்சக்தியோடு, வெப்ப மின்சக்தியும் உபயோகிக்கப்படுகின்றது. வெப்ப மின் சக்தி என்பது. நீரி லிருந்து பெறப்படுவதல்ல. மின் பிறப்பாக்கி யந்திரங்களை - பெற்றோல், டீசல் என்பனவற்றின் மூலம் இயக்கிப் பெறப் படும் மின்சாரமே வெப்ப மின் சக்தியாகும். இலங்கையில் கிராண்ட்பாஸ், சுன்னாகம் எனுமிடங்களிலுள்ளவை வெப்ப மின்சக்தி நிலையங்களாகும். காங்கேசன் துறை சீமேந்துத் தொழிற்சாலைக்குத் தேவையான மின் சக்தி, காங்கேசன் துறையிலுள்ள வெப்ப மின் நிலையம் ஒன்றிலிருந்தே பெறப் பட்டது. இன்று யாழ்ப்பாணத்திற்கு லக்சபானாவிலிருந்தே நேரடியாக மின்சக்தி கிடைக்கின்றது. அதனால், யாழ்ப் பாணத்திலுள்ள வெப்பமின்சக்தி நிலையங்கள் இன்று இயங் காதுள்ளன.

இலங்கையின் நீர்மின் சக்தி
143
உலக நாடுகள் பலவற்றிலும் நீர் மின் சக்தி விருத்தி செய்யப்பட்டிருக்கின்றது. சுவிற்சலாந்து, யப்பான், நோர்வே, சுவீடன், இத்தாலி, கனடா எனும் நாடுகளில் நீர் மின் சக்தி சிறந்த முறையில் விருத்தியாக்கப்பட்டிருக்கின்றது.
மின்சக்தி பல வசதிகளுக்கும் உபயோகமாகும் மலி வான வலுவாகும். மின்சார விளக்குகள், விசிறிகள், யந்தி ரங்கள், வானொலிப் பெட்டிகள் என்பனவற்றை இயக்கு வதற்கு மின்சக்தி இலங்கையில் உபயோகிக்கப்படுகின்றது.
பயிற்சி
1, வலுப் பொருட்கள் எவை? 2 இலங்கையிலுள்ள வலுப் பொருள் யாது?
நீர்மின் சக்தியை விருத்தி செய்வதற்குச் சாதகமான புவியியற் காரணிகள் யாவை? இலங்கையிலுள்ள பிரதான நீர்மின் சத்தி நிலையங்கள் இரண்
டினைக் கூறுக. 5, இலங்கையிலுள்ள வெப்பமின் சக்தி நிலையங்கள் இரண்டிருக்
கும் இடங்களைக் கூறுக. 6. மின் சாரத்தின் உபயோகங்கள் எவை? 7. உலகில் மின் சக்தியை விருத்தி செய்துள் ள நாடுகள் எவை?

Page 74
அத்தியாயம்: 13
உலகின் குடிப்பரம்பல்
இன்று உலகின் மொத்தக் குடித்தொகையை ஏறத் தாழ 230 கோடி என மதிப்பிட்டுக் கூறலாம். உலகின் மொத்தக் குடித்தொகையான 280 கோடியில் 130 கோடி மக்கள் கீழைத் தேசங்களில் வாழ்கின்றனர். இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், சீனா, பப்பான், பர்மா, தாய்லாந்து. லாவோஸ், கம்போடியா, வியட்னாம்கள், மலேசியா, இந் தோனேசியா என்பன இதனுளடங்குகின்றன, ஏறத்தாழ 40 கோடி மக்கள் ஐரோப்பாவிலுள்ளனர். சோவியத் யூனிய னோடு சேர்ந்த கிழக்கு ஐரோப்பியப் பகுதிகள் தவிர்ந்த ஏனைய ஐரோப்பிய நாடுகளில் அடங்குகின்றன. மேலும், சோவியத் யூனியனில் 21 கோடி மக்களும், ஆபிரிக்காவில் 21 கோடி மக்களும், மத்தியகிழக்கு நாடுகளில் 19 கோடி மக்களும், அமெரிக்காக்களில் 35 கோடி மக்களும் வாழ் கின்றனர், அவுஸ்திரேலியாவில் 1 கோடி மக்களே வாழ் கின் றனர்.
பூமியின் மேற்பரப்பு 19 கோடி சதுர மைல்களாகும். இதில் ஏறத்தாழ 6 கோடி சதுர மைல்களே நிலப்பரப் பாகும். இந் நிலப்பரப்பில் 280 கோடி மக்கள் வாழ்கின் றனர். அதாவது ஒரு சதுர மைலிற்குச் சராசரி 46 மக்கள் வாழ்கின்றனர். ஆனால், உலகின் எல்லா நிலப்பகுதிகளிலும் மக்கள் வாழவில்லை. மக்கள் வாழாப் பகுதிகள் அதிகமாக வுள்ளன. மேலும் மக்களடர்த்தியும் எங்கும் ஒரேயளவின தாகவில்லை.
கீழைத் தேசங்களில் சதுரமைலிற்கு சராசரி 169 மக் கள் வாழ்கின்றனர். ஐரோப்பிய நாடுகளில் (சோவியத் ஐரோப்பா தவிர்ந்து) சதுர மைலிற்குரிய சராசரி அடர்த்தி 210 ஆகும். ஆபிரிக்காவில் 18 மக்களே சராசரியாக ஒரு சதுரமைலிற்கு வாழ்கின்றனர், அவுஸ்திரேலியாவில் சதுர மைலிற்குரிய அடர்த்தி 3 மக்களாவர்.

உலகின் குடிப்பரம்பல்
145
உலகின் குடிப்பரம்பலைக் காலநிலை, தரைத்தோற்றம், பாறையமைப்பு, நீர்வளம் முதலியன நிர்ணயித்துள்ளன. மக்கள் வாழ உகந்த பகுதிகளை நிர்ணயிப்பதில் காலநிலை முதலிடத்தைப் பெற்றுக்கொள்கின்றது எனலாம். இயற் கைத் தாவரம், தானிய உற்பத்தி என்பன கால நிலையைப் பொறுத்தே அமைந்திருக்கின்றன. ஈரலிப்பான பிரதேசங் களும் உலர் பிரதேசங்களும் மழைவீழ்ச்சியினதும், வெப்ப நிலையினதும் அளவுகளிலேயே தங்கியுள்ளன. - ஈரலிப்பான பிரதேசங்களில் வாழ மக்கள் விரும்புகின்றார்கள். மேலும், மக்கள் பெரிதும் சமவெளிகளிலேயே வாழ விழைகின்றனர். அவர்களது பொருளாதார நடவடிக்கைகளுக்கும், இலேசான வாழ்க்கைக்கும் சமவெளிகளே உகந்தனவாகவுள்ளன. பாறை யமைப்பைப் பொறுத்தே கனிப்பொருள் வளம் அமைகின்றது. கனிப்பொருள் வளத்தைப் பொறுத்தே மக்களதிகமாக வாழ் கின்ற கைத்தொழில் மையங்கள் உருவாகின்றன. மேலும், நீர்வளம் நிறைந்த பிரதேசங்களில் மக்கள் அதிக செறி வாக வாழ்கின்றனர். எனவே, உலகின் குடிப்பரம்பலைக் கால நிலை, தரைத்தோற்றம், பாறையமைப்பு, நீர்வளம் என் பன நிர்ணயித்துள்ளன.
உலகின் குடிப்பரம்பல் சமனற்றுக் காணப்படுகின்றது. ஏனெனில், இயற்கை வருவாய்களும் உலகில் சமனற்றுக் காணப்படுகின்றன, எல்லாப் பகுதிகளும் பயிர்ச் செய்கைக் குகந்த காலநிலையையும், மண்ணையும் கொண்டிருக்கவில்லை, எல்லாப். பகுதிகளும் கனிப்பொருள் வளத்தைக் கொண் டிருக்கவில்லை.
அடர்த்தியான பிரதேசங்கள் உலகில் பெருந்தொகையான மக்கள் மூன்று பகுதிகளில் காணப்படுகின்றார்கள்.
, (அ) ஆசியாவின் பருவக் காற்றுப் பிரதேசங்கள்: சீனா. யப்பான், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, மலேசியா, இந்தோனேசியா முதலிய நாடுகள் இதனுளடங்குகின்றன.
ஆ. பு. 19

Page 75
கன்".
* * *
உலகின்
குடிசனப்பரம்பல் t+F1 - கீழ் (சதுராயலுக்கு
S1 - 50
:::: 50-100
100 - மேல்
படம் : 47 உலகின் குடிசனப் பரம்பல் - (குறிப்பு: சதுர மைலுக்கு 50-100, 100-மேல் மக் கள் வாழும் பகுதிகள் அடர்த்தியான பகுதிகளாகும். 1-50 வரை மக்கள் வாழும் பகுதிகள் மத்திமமான பகுதிகள்: ஏனையன ஐதாக மக்கள் வாழும் பகுதிகள்)
வா

உலகின் குடிப்பரம்பல்
147
(ஆ) ஐரோப்பாவும், சோவியத் யூனியனின் கிழக்குப் பகுதியும்-ஐரோப்பாவின் கைத்தொழிற் பிரதேசங்கள் யாவு மிதனுள் அடங்குகின்றன.
(இ) ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குப் பகுதி-ஐக்கிய அமெரிக்காவின் கைத்தொழில் மையங்கள் கிழக்குப் பகுதி யிலேயே காணப்படுகின்றன.
பருவக்காற்றுப் பிரதேசங்கள் பயிர்ச்செய்கைக்குகந்த பகு திகளாக இருப்பதால் அதிக குடிப்பரம்பல் இங்கு காணப் படுகின்றது. கைத்தொழில் மையங்கள் மக்களுக்குத் தொழில் வாய்ப்புகளை அளிப்பதால் உலகின் கைத்தொழிற் பிரதே சங்கள் அதிக குடிப்பரம்பலைக் கொண்டு விளங்குகின்றன. கனிப்பொருட் சுரங்கங்கள் காணப்படும் பகுதிகளிலும் மக் கட் பரம்பல் அதிகமாக இருக்கின்றது.
ஐதான பகுதிகள் அதிக குளிரான ஆக்டிக் பகுதிகள், ஈரலிப்புக்குறைந்த பாலை நிலங்கள், உலர்புல் நிலங்கள், கரடுமுரடான உயர் நிலங்கள், குத்துச் சாய்வுகளும் அதிக வெப்பமும், அதிக ஈர லிப்பும் கொண்ட அயனமண்டலக் காடுகள், புல்வெளிகள் என்பன குடியற்ற பகுதிகளாகவும் மிகக் குறைவாகவுள்ள பகுதிகளாகவும் உள்ளன.
உலகின் குடித்தொகை வருடாவருடம் 2 கோடியாக அதிகரித்து வருகின்றது. இதற்குக் காரணம் இறப்பு வீதம் குறைந்து பிறப்பு வீதம் அதிகரித்ததேயாகும். விஞ்ஞான ஆராய்ச்சிகளால் மருத்துவ உலகில் ஏற்பட்டுள்ள முன்னேற் றம் இறப்புவீதத்தைக் குறைத்துள்ளது.
உலகம் முழுவதும் மக்கள் தொகை அதிகரித்து வருகிற போதிலும், சில நாடுகளில் அதிகரிப்பு வீதம் அதிகமாகும். இந்தியா, சீனா, சோவியத் ரூஷியா என்பவற்றோடு ஒப்பிடும் போது பிரான்சில் மக்கள் தொகை அதிகரிப்பு வீதம் மிகக் குறைவாகும்.
மக்கள் தொகை அதிகரித்து வருவதனால் சில நாடுகள் பெரும் பிரச்சினை களுக்குள்ளாகி உள்ளன. ஏனெனில் அந்

Page 76
148
ஆரம்பப் புவியியல்
நாடுகளிலுள்ள பொருளாதார வருவாய் போதுமானதாக வில்லை. பருவக்காற்று நாடுகளில் இத்தகைய நிலைமை காணப் படுகிறது. இந்நாடுகளில் மக்கள் தொகை அதிகரிப்பால் உண்வுப் பற்றாக் குறையும், வேலையில்லாத் திண்டாட்ட
மும் அதிகரித்து வருகின்றன.
மக்கள் தொகை அதிகரிப்பால் சில நாடுகள் பிரச்சனைக் குள்ளாகவில்லை. அவுஸ்திரேலியா, ஐக்கிய அமெரிக்கா எனும் நாடுகளைக் குறிப்பிடலாம். அவுஸ்திரேலியாவில் பெரிய நிலப்பரப்பும், சிறிதளவு தொகை மக்களுமே வாழ்கின்றனர். அதனால் இங்கு மக்கள் தொகை அதிகரிப்பதால் பிரச்சனை யில்லை,
உலகில் மக்கள் தொகை அதிகரிப்பால் சில நாடுகளின் மக்கள் உணவு, இருக்கவிடம், தொழில் என்பன கிடைக் காமல் பெரும் பிரச்சனைக்குள்ளாகி வருந்துகின்றனர். உல கின் பல பகுதிகள் மக்கள் வாழக்கூடிய பகுதிகளாகவும், குடிப்பரம்பல் குறைவான பகுதிகளாகவும் இருக்கின்றன. இப்பகுதிகளில் அதிக மக்களைக் கொண்டுள்ள நாட்டு மக்களைக் குடியேற்றுவிக்கலாம். இதற்கு நாடுகளின் மனம் மாறவேண்டும். பிறநாட்டு மக்களைத் தம் நாடுகளில் குடியேற்ற அனுமதிக்க வேண்டும். அவுஸ்திரேலியாவிற் பெரும்பகுதி வெற்றிடமாக விளங்கி வருகின்றது. ஆனால், அவுஸ்திரேலியா, வெள்ளை - அவுஸ்திரேலியாக் கொள்கை எனும் சட்டத்தின் மூலம் வெள்ளையரைத் தவிர, ஏனைய மக்களைக் குடியேறாது தடைசெய்துள்ளது. இக் • குறுகிய மனப்பான்மை மாறவேண்டும். மேலும் மக்களின்று வாழ முடியாதுள்ள பாலை நிலங்கள் எல்லாம், விஞ்ஞான ஆராய்ச் சிகள் மூலம் மக்கள் வாழக் கூடிய பசுஞ்சோலைகளாக மாற் றியமைக்கப்படல் வேண்டும். இவையே அதிகரித்து வரும் மக்கள் தொகைப் பிரச்சனையை உடனடியாகத் தீர்க்கக் கூடியன.
மேலும் மக்கள் தொகை அதிகரித்துள்ள ஒவ்வொரு நாடுகளும் விளை நிலத்தையும், விளைச்சலையும் அதிகரிப்பதன் மூலம் பயிர்ச்செய்கையையும், உள் நாட்டு மூலப்பொருட்

உலகின் குடிப்பரம்பல்
149
களைப் பயன்படுத்துவதன் மூலம் கைத்தொழிலையும் விருத்தி செய்துகொள்ளல் அவசியம். அத்தோடு குழந்தைகளை அள் வோடு பெற்றுக்கொள்ளலும் முக்கியம். இவையே மக்கள் பிரச்சனையைத் தீர்த்து வைக்கக்கூடியன.
பயிற்சிகள்
பயிற்சி: 1
1. உலகின் மொத்தக் குடித்தொகை யாது? , 2. கீழைத் தேசங்களில் எவ்வளவு தொகை மக்கள் வாழ்கின்றனர்? 3. உலகில் எங்கெங்கு மக்கள் அடர்த்தியாக வாழ்கின்றனர்?
4. ஏன் மக்கள் ஆக்டிக் பகுதிகளில் வாழவிரும்புவதில்லை? 5. மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் எவை?
பயிற்சி: 2
மேல்வரும் வாக்கியங்களில் உள்ள பிழைகளைத் திருத்துக.
1. 4
உலகில் கீழைத் தேசங்களிலே மக்கள் குறைவாக வாழ்கின்றனர்.
2.
ஆக்டிப் பகுதிகளில் மக்கள் விரும்பி வாழ்கின்றனர்.
3. உலகில் ஒரு சதுர மைலுக்கு சராசரி 400 மக்கள் வாழ்கின்
றனர்.
4
உலகில் வருடா வருடம் மக்கள் அதிகரித்து வருவதற்குப் பிறப்பு வீதம் குறைந்து இறப்பு வீதம் அதிகரிப்பதே காரணமாகும். மக்கள் தொகை அதிகரிப்பதால் பொருளாதாரப் பிரச்சனைகள் ஏற்படாது.
5,

Page 77
அத்தியாயம்: 20
உலகின் பிரதான வியாபாரப்பாதைகள்
ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குச் செல்வதற்கு நாட்கணக்காகவோ, மாதக்கணக்காகவோ, வருடக்கணக் காகவோ எடுத்த பிரயாணம். இன்று நாட்கணக்காகி மணிக் கணக்காகி விட்டது. அவ்வளவு தூரம் போக்கு வரத்து வேகம் கூடியதாகவும், வசதிகள் நிறைந்ததாகவும் மாறி விட்டது. உலகின் ஒவ்வொரு பகுதிகளும் போக்குவரத்துப் பாதைகளினால் இணைக்கப்பட்டுள்ளன.
- உலக நாடுகள் யாவற்றினதும் புவியியல் நிலைமைகள் நாட்டிற்கு நாடு வேறுபடுகின்றன. அதனால் அந்நாடுகளின் உணவு, உடை, இல்லம் என்பனவும் பிரதேசத்திற்குப் பிர தேசம் வேறுபடுகின்றன. எந்த ஒரு நாடும் தனக்குத் தேவை யான எல்லாப் பொருட்களையும் உற்பத்தி செய்து, தன் னிறைவு உடையதாக இன்று இல்லை. அதனால், உலக நாடு கள் ஒவ்வொன்றும் தத்தமக்குத் தேவையான சில பொருட் களுக்கு வெவ்வேறு நாடுகளில் தங்கியிருக்க வேண்டியுள் ளது. எனவேதான், சர்வதேச வியாபாரத் தொடர்புகள் இன்று உலக நாடுகளிடையே முக்கியம் பெற்று விளங்கு கின்றன.
உலகின் இன்றைய போக்குவரத்தை மூன்று பெரும் பிரிவுகளாக வகுத்து ஆராய்வர். அவையாவன:
(அ) கப்பற் போக்குவரத்து (ஆ) விமானப் போக்குவரத்து (இ) உள் நாட்டுப் போக்குவரத்து
கப்பற் போக்குவரத்து நவீன கைத்தொழிற் பொருளாதாரத்தில் கப்பற்போக்கு வரத்து முக்கியமானதாக இருக்கின்றது. கப்பல் போக்கு

பா.
மது--
லெனின்கிராட்
மொஸ்கோ
எக்குர்ஃக்
சியாளாக
ரொரன்க்
அA:At:Kruாகமான 10:48
லண்டன்
474ாகோ
* 010
ரட்சி!
பா?வரக்
மொன்ரியல்
நியூயோக்
எசமாசுyான கணிசயxr It:ரயார்'
லிஸ்பன்
கல்கத்தா
சுயம்
லிப்ரோவீரர்
அகராட்சி
2 ஏடள்
சான்பிரான்சிஸ்கோ
4 ரங்கூன்
லாகோஸ்
/t:ஆசீர
சிங்கப்சா .
பனா
கொழும்பு
ரொசா
பத்தேனியா
ரியோ ட யனிரியா
23 பேர்த
அடி மழை
வல்பரைசோ !
புவனஸ் அயர்ஸ்
சிபல்போன
4. வாங்ரன்
படம்: 48 உலகின் கப்பற்பாதைகளும், பிரதான இருப்புப் பாதை களும்.

Page 78
152
ஆரம்பப் புவியியல் வரத்து சர்வதேச வர்த்தகத்தில் மிக முக்கியம் வாய்ந்த தாக இன்று இருப்பதற்குக் காரணம், கப்பற் போக்கு வரத்து மலிவானதாகவும், ஏராளமாகப் பொருட்களை ஏற் றக்கூடியதாகவும் இருப்பதனாலேயேயாகும். இன்று உலக நாடுகளிடையே நடைபெற்று வரும் வர்த்தகத்தில் 70%க்கு மேல் கப்பல்கள் மூலமே நடைபெற்று வருகின்றது.
வட அமெரிக்கத் துறைமுகங்களான குவிபெக், மொன் ரியல், நியூயோக், பொஸ்ரன், பிலடெல்பியா, போல்ரிமோர் என்பனவற்றிற்கும், ஐரோப்பிய துறைமுகங்களான லிவர்ப் பூல், சவுதம்ரன், கிளாஸ்கோ, லண்டன், சேர்பேக், ரொட் டாம், கம்பேக் என்பனவற்றிற்கும் இடையிலேயே உலகி லேயே அதிகளவில் கப்பற் போக்குவரத்து நடைபெற்று வருகின்றது. விரிகுடாத் துறைமுகங்களும், ஆசெந்தீனா, உருகுவே, பிறேசில் நாடுகளின் துறைமுகங்களும் ஐரோப் பிய துறைமுகங்களுடன் கப்பற்போக்குவரத்துடையனவா கவே விளங்குகின்றன.
பனாமாக் கால்வாய் வெட்டப்பட்டதால், தென்னமெரிக் காவைச் சுற்றிவந்து அத்திலாந்திக் சமுத்திரத்தில் பிரவே சிக்கின்ற கப்பல்கள் எல்லாம், இதனூடாகச் செல்கின்றன. இதனால் தூரமும், நேரமும், செலவும் மிச்சப்படுகின்றன. இத்தகைய நிலைமைதான் சுயெஸ்கால்வாய் வெட்டப்பட்ட தலுைம் ஏற்பட்டிருக்கின்றது. ஆபிரிக்காவில் நன்னம்பிக்கை முனையைச் சுற்றி வந்து இந்து சமுத்திரத்தில் பிரவேசித்த கப்பல்கள் எல்லாம் இன்று, மத்தியதரைக் கடலூடாக வந்து சுயெஸ்கால்வாய் வழியாக இந்துசமுத்திர நாடுகளுக் குச் செல்கின்றன. இன்று எகிப்து-இஸ்ரேல் யுத்தம் காரண மாக சுயெஸ்கால்வாய்க் கப்பல் போக்குவரத்து கட்டுப் படுத்தப்பட்டுள்ளது.
பசுபிக் சமுத்திரத்தில் நடைபெறும் கப்பல் பேரக்கு வரத்து, அத்திலாந்திக் சமுத்திரத்தில் நடைபெறும் கப்பல் போக்கு வரத்திலும் குறைவாகும். பிலிப்பைன் தீவுகளுக், கும், யப்பானுக்கும் வட அமெரிக்காவின் மேற்குப்புறத் துறைமுகங்களுக்கும் (சான்பிரான்சிஸ்கோ முக்கியமானது)

உலகின் பிரதான வியாபாரட பாதைகள்
15 3
இடையே குறிப்பிடத்தக்களவு கப்பற்போக்குவரத்து நடை பெறுகின்றது. வட கடலில் கப்பற் போக்குவரத்து நன்கு விருத்தியடையவில்லை.
இலங்கையின் வெளிநாட்டு வியாபாரத்திற்குக் கப்பற் போக்குவரத்து பெருந்துணை புரிகின் றது. சிட்னி, மெல் போர்ன், பேர் த மு தலிப் அவுஸ்திரேலியத் துறைமுகங்களி லிருந்து, கொ ழும்புத் துறைமுகத்திற்குப் பெருமளவில் கோதுமை, பாடி என வுப் பொருட்கள் என்பன வந்து சேரு கின்றன, ஐக்கிய அமெரிக்காவின் நியூயோக் துறைமுகத்தில் இருந்து தென்னாபிரிக்கா வின் கேப்ரவுண் ஊடாக இலங் கைக்குப் பயிர்ச்செய்கை யந்திரங்கள் இறக்குமதியாகின்றன.
கே)
படம்: 4) எட்றியாட்டிக் கடலிலுள்ள றியேக்காக்
கப்பற்றுறை - யூகோ சிலாவியா
கொழும்பிலிருந்து தேயிலை, றப்பர், என்பன லிஸ்பன், லண் டன் முதலிய துறைமுகங்களுக்கு அனுப்பப்படுகின்றன. ரங் 'கூன், பாங்கொக், சாங்காய் முதலிய துறைமுகங்களிலிருந்து
ஆ. 4. 20

Page 79
154
ஆரம்பப் புவியியல் அரிசியும், டோக்கியோவிலிருந்து நெசவுப் பொருட்களும் இலங்கைக்கு அனுப்பப்படுகின்றன.
விமானப் போக்குவரத்து விமானப் போக்குவரத்தில் ஏனைய போக்குவரத்துக் களில் இல்லாத சில நன்மைகள் இருக்கின்றன. விமானப் போக்குவரத்தில் நேரம் மிச்சப்படுத்தப் படுகின்றது. வேகம் கூடிய தன்மையினால், நீண்ட தூரத்தைக் குறைந்த நேரத் தில் அடைந்துவிட முடிகிறது. அதனால் தான் பிரயாணிகள் இன்று அதிகமாக விமானங்களில் பிரயாணம் செய்ய விரும் புகின்றனர். மேலும் மதிப்பு வாய்ந்த பொருட்களையும், அத்தியாவசியப் பொருட்களையும், அழுகுந்தன்மை வாய்ந்த பொருட்களையும் விமானமூலம் கொண்டு செல்வது மலி வானதாகவும், சுலபமானதாகவும் உள்ளது.
விமானப் போக்குவரத்தினால் ஒரு நாட்டிலிருந்து இன் னொரு நாட்டிற்குப் பிரயாணம் செய்வோர் விரைவாகவும், சுகமாகவும் பிரயாணம் செய்யக்கூடியதாக இருக்கிறது. மேலும் மதிப்பு வாய்ந்த, பாரமற்ற உற்பத்திப் பொருட் களைச் சந்தைகளுக்கு வேகமாகவும், பாதுகாப்பாகவும் எடுத் துச் செல்லவும் உதவுகிறது. எனினும், விமானப் போக்கு வரத்தில் ஒரு குறைபாடுமுள்ளது. என்னவெனில், பாரமான பொருட்களை எடுத்துச் செல்ல இது பயன்படாதுள்ளது.
வட அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் • நடைபெறும் விமானப் போக்கு வரத்து அதிகமாகும். ஆசிய நாடுகளுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையில் நடை பெறும் விமானப் போக்குவரத்து மிகவும் குறைவான தாக உள்ளது. உள் நாட்டு விமானப் போக்குவரத்து ஐக்கிய அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலுமே அதிகமாக நடை பெறுகிறது. உலகின் ஒவ்வொரு பிர தான நகரங்களுக்கும் விமானப் போக்குவரத்து நடைபெறுகின்றது.
உள்நாட்டுப் போக்குவரத்து உள் நாட்டுப் போக்குவரத்துக்கு இன்று மூன்று முக்கிய, பாதைகள் பெரிதுந் துணையாகவுள்ளன. அவை, (அ) உள்

"1
சியாற்றில்,
சான்பிரான்சிஸ்கோ
மொஸ்கோ
மொனரியல்
பாரதபசிச,
கெதிராக
வெனிடி வள்
மாசெயில்ஸ் Nராமி
நியுயாத்
கசபினாங்கா
4 : கல்கத்தா "ஆ.
கெங்கள் )
டெலவி
கொங்கொங் 7
தெப்பம்!
مه كوو
ஒRபன்
மங்கூன் 20
மெக்சிகோ
ரிச.'
அவோம்
அ 4" 1 கர்)
44ா?
-காடாம்
பமாயம்
மரியோ"
/யறாயே
லாதோம்
ԵՑոլակ),
ரகோரமு*
niv• பினுங் 4 சிங்கிப்புத்
விமாம்
நைரோபி * 'பிராக்கிள்தில் { {
9 லிஸ்பறி
புத்தேவியா
அட்ரா *
டார்வின்
ரசி,
புலவயோ' (1)
கிம்பேர்ளி டேர்பன்
சினேகுறி
பிரிஸ்பேன்
சந்தியாகோ !
ரைட்பர
அஸ்ஜிரே
கேப்ரவு!
சிரி
S அடிலடி
மினல் .அபரஸ்
உலகின்பிரதான விமானப்பாதைகள்
-14:4"ஆமாட்சி
படம் ! 50 உலகின் பிரதான விமானப் பாதைகள்

Page 80
166
ஆரம்பப் புவியியல்
நாட்டு நீர்ப்பாதைகள், (ஆ) இருப்புப் பா ைத கள், (இ) வீதி கள் என்பனவாம்,
உள் நாட்டு நீர்ப்பாதைகள்: ஆதிகாலத்திலிருந்தே நதிகள் போக்குவரத் திற்கு உ. தவியாக இருந்துள்ளன. கால்வாய்கள் மனிதனால் கட்டப்பட்ட நீர்ப்பாதைகளாகும் உள் நாட்டு நீர்ப்பாதைகள் எனும் போது, போக்குவரத்து நதிகளையும், கால்வாய்களை யுமே கருதும், நதிகள் Lாவும் போக்கு வரத் துக்கு உகந்தனவாகவில்லை, போதிய நீரற்ற நதிகளும், போ திய அகலமற்ற ந திகளும், விரைவோட்ட வாற்றுப் பகுதிகளை இடையிடையே கொண்டுள்ள நதிகளும் போக்கு வரத்திற்கு உகந்தனவல்ல.
உள் நாட்டு நீர்ப்பாதைகள் வட அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளான பிரான்சிலும், ஜேர்மனியிலும் நள் கு விருத்தியடைந்துள்ளன.
இருப்புப் பாதைகள்: இன்றைய உலகில் உள் நாட்டு நீர்ப் பாதைகளிலும், இருப்புப் பாதைகளே முக்கியமானவையாக உள்ளன. ஓரளவு உள் நாட்டு நீர்ப்பாதைகளின் முக்கியத் துவத்தைக் குறைத்த ைவ இருப்புப் பாதைகள் எனல 7ம். நாகரிக விருத்தியடைந்த ஒவ்வொரு நாடுகளிலும் இருப்புப் பாதைகள் அமைக்கப்பட்டி. ர்க்கின்றன. கைத்தொழில் நாடு களில் இருப்புப் பாதைகள் பேரளவில் காணப்படுகின்றன. கனடா, ஐக்கிய அமெரிக்கா, தென்ன மெரிக்காவின் கிழக் குக் கரை, ஐரோப்பா ஐரோப்பிய ரூசியா, தென்னாபிரிக்கா, இந்தியா, சீனா, யப்பான், யாவா, கிழக்கவுஸ் திரேலியா முத லிய நாடுகளில் இருப்புப் பாதைகள் குறிப்பிடத்தக்களவு அமைக்கப்பட்டிருக்கின்றன. ஐ க் கி ய அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் இருப்புப் பாதைகள் ஏராளமாக அமைக் கப்பட்டிருக்கின்றன.
வட அமெரிக்காவில் ஒன்பது , பி ர த ா ன கண்டக் குறுக்குத் தண்டவாளப் பாதைகள் உள் ளன. இவற்றில் மூன்று கனடாவில் காணப்படுகின்றன.
ஐரோப்பியா - ஆசியாவின் கண்டக் குறுக்குத் தண், டவாளப் பா ைத அதி முக்கியமான து. கலேயில் தொடங்

உலகின் பிரதான வியாபாரப் பாதைகள்
157
கும் இப்பாதை (கொலோன் பேர்லின் , வார்சோ, மொஸ்கோ, ஓம்ஸ்ச் ரொம்ஸ்க், இர்க்குஸ் . எற்ற, காபின் எனும் பிர தேசங்கள் ஊடாக வெலாடி வஸ்ரொக்கை அடைகின்றது.
படம் 31 புளோன் சிலுள்ள பொதுவழி ஒன்று-இத்தாலி
இதுவே உலகின் மிகப்பெரிய கண்டக்குறுக்குத் தண்ட வாளப் பா)ை தயாகு உம்.
ஆபிரிக்காவில் பெய்ராவிலிருந்து சலிஸ்பரி, புலாவாயோ, "லுஸாக் ஊடாக பெங்குவேலாவை இணைத்து ஒரு கண்டக் குறுக்குத் தண்டவாளப் பா ைதயுள்ளது. தென் அமெரிக்கா வில் புவனெஸ் அயசையும் வல்பறை சோ வையும், இணை த்து

Page 81
158
ஆரம்பப் புவியியல்
ஒரு கண்டக் குறுக்குத் தண்டவாளப் பாதையும், அவுஸ்தி ரேலியாவில் பேர்த்திலிருந்து கூல்காடி, கால்கூர்லி, ஒகஸ்ரன், புறொக்கன்கில் என்பனவூடாகச் சிட்னிவரை ஒரு கண்டக் குறுக்குத் தண்டவாளப் பாதையும் உள்ளன.
வீதிகள்: உள் நாட்டுப் போக்குவரத்தில் வீதிகள் முக்கிய மானவை. ஒவ்வொரு நாட்டின் ஒவ்வொரு பகுதியும் வீதி களினால் இணைக்கப்பட்டிருக்கின்றன. மோட்டார் வண்டி களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் வீதிகளின் தேவையும் அதிகரித்து வருகின்றது.
பம்பாய் துறைமுகம் பம்பாய், இந்தியாவின் மேற்குக் கரையில் அமைந்திருக் கின் றது: பம்பாய் இந்தியாவின் முக்கிய நகரமாகவும் பிர தான இயற்கைத் துறைமுகமாகவும், சிறந்த விமானத் தள மாகவும் விளங்குகின்றது. இந்தியாவின் மிகச் சிறந்த இறக்கி யேற்றும் துறைமுகப் பட்டினம் பம்பாயாகும்.
பம்பாயின் பின்னணி நிலம் செழிப்பான கருமண்ணைக் கொண்டிருக்கின்றது. அதனால், இப்பிரதேசம் மிகச் செழிப்பு வாய்ந்த பருத்தித் தோட்டங்களையுடையதாக விளங்குகின் றது. பம்பாயில் பல பருத்தி நெசவு ஆலைகள் உள்ளன. தென்மேல் பருவக் காற்றினால் பம்பாய்ப் பிரதேசம் அதிக மழையைப் பெறுகின்றது. அதிக மழை பெறும் பகுதிகளில் ஈரலிப்புப் பயிர்கள் செய்கைபண்ணப்படுகின்றன.
இந்தியாவின் முக்கிய வர்த்தக மையமாகவும் நிர்வாக மையமாகவும் பம்பாய் விளங்கிவருகின்றது. ஏறத்தாழ 18 இலட்சம் மக்களைக் கொண்டுள்ள பம்பாய் டெல்கி, அலகா பாத் சென்னை எனும் ஏனைய பிரதான நகர்களுடன் இருப் புப் பாதைகளினாலும் வீதிகளினாலும் இணைக்கப்பட்டுள்ளது.
பயிற்சிகள்
பயிற்சி: 1
' 1. உலகின் இன்றைய போக்குவரத்து வகைகள் எவை?
2. உள்நாட்டு நீர்ப்பாதைகள் நன்கு விருத்தியடைந்துள்ள மூன்று,
நாடுகளின் பெயர்களைக் கூறுக.

உலகின் பிரதான வியாபாரப் பாதைகள்
159
உலகின் மிகப் பெரிய கண்டக் குறுக்குத் தண்டவாளப் பாதை எது? கொழும்பிலிருந்து லண்டனுக்குச் செல்லும் கப்பற் பாதையின்
தரிப்பிடங்களைக் கூறுக.
6.
விமானப் போக்குவரத்தின் நன்மைகள் எவை? 6. உலகின் பிரதான துறைமுகங்கள் ஐந்து கூறுக. பயிற்சி: 2
(அ) மேல் வரும் துறைமுகங்கள் எந்நாடுகளுக்குரியன? 1. பொஸ்ரன் 2. பிலடெல்பியா 3. லிவப்பூல் 4. கிளாஸ்கோ 5. கேப்ரவுண் 6. பம்பாய்
(ஆ) உலகின் கப்பற் போக்குவரத்தில் முக்கியம் பெறும் இரண்டு கப்பற்
கால்வாய்களின் பெயர்களைக் கூறுக.
இலங்கைக்குப் பொருட்களை வழங்கும் துறைமுகங்கள் நான்கினைக் கூறுக.
* ல் ச

Page 82
அத்தியாயம் : 21
இலங்கையின் குடியிருப்புகள்
ஓர் இடத்தில் மக்கள் கூடி, வாழும்போது குடியிருப்பு உருவாகின்றது ; 22 க வு, உ ைட, இல்லம் என்பனவற்றை இலகு வில் பெறக்கூடிய பகுதிகளிலேயே மக்கள் விரும்பிக் குடியேறி வாழ்,வர் இலங் ைக ::பீர்ன் மிகப்பழைய குடியிருப்பு களைப் பாகுபாடு சேய் து விளக்கு வெ து கடின 4.0ாகும். நா கர், இயக்கர் போன்றோர் இலங்கையில் வாழ்ந்ததாக வரலாறு கூறுகின் றவிடத்தும், ஆரியரின் வரு)ை கக்குட்டி பின்பே நிலை யான குடியிருப்புகள் தோன்றியிருக்கின்றன.
ஏதாவது ஒரு முக்கிய சாதக காரணியை ஆதாரமாகக் கொண்டு நதிக் கரைகளிலோ, குளங்களை யடுத்தோ கால் வாய் கலை அடுத்தோ மக்கள் வாழும் போது அக்குடியிருப்பு கள், ஆற்றுப் பக்கக் குடியிருப்புகள் கு ளக்குடி கயிருப்புகள், கால்வாய்க் கு 4 - நப்பு க ள் எ ன வழங் கப்படுகின்றன. தோட் டங்களை அடிப்படையாகக் கொ? என் டு மக்கள் குடியேறும் போது அவை தோட்டக் கு டி யிருப்புகள் ஆகின்றன. சந்தி களை ஆதாரமாக 2 கொண்டு மக்கள் குடியேறும் போது அவை சந்திக் குடியிருப்புகள் ஆகின்றன எனவே குடியிருப் யுகள் ஒவ்வொன்றும் தாம் ஆற்றுகின்ற செயலைப் பொறுத்தே பெயர் பெறுகின்றன.
1. இக்கு டி. tட ருப்புகள் ஒவ்வொன்றிலும் மக்களது வாழ்க் கைக்கு இன்றியல 21) யா அ த ைவ க ளெனக் கருதப்படும் வசதி கள் யாவும் அமைந்திருக்க வேண் டும் போக்கு வரத்து வச திகள், பாடசாலைகள், தபாற்கந்தோர், கோவில்கள், ஆஸ்ப் பத்திரிகள் பொலிஸ் நிலையம், சந்தை முதலியன யாவும் அமைந்திருக்க வேண்டும், இவ்வசதிகளைப் பொறுத்த மட்டில் ஏற்றத் தாழ்வுகள் இரு கி ககலாம். ஆ னல் மற்ற க இல்லாது இருக்க முடி யாது ,
இலங்:ை கயி எல் குடியிருப்புகளிற் (பெரும்பா லானவை கீரா; மக் குடியிருப்புகளாகும்; கைத்தொழிலாக்கங்களில் முன்னேறாத"

இலங்கையின் குடியிருப்புகள்
161
எந்தவொரு நாட்டிலும் கிராமக் குடியிருப்புகளே அதிகமாக வுள்ளன. பயிர்ச் செய்கையில் தங்கி வாழ்கின்ற மக்கள் கிராம மக்களாக விளங்குகின்றனர். கிராமக் குடியிருப்புக்கள் மேல்வரும் வகையினதாக அமைந்துள்ளன.
1. குளக் குடியிருப்பு 6. துறைக் குடியிருப்பு 2. மீன்பிடிக் குடியிருப்பு 7. கடவைக் குடியிருப்பு 3. சந்திக் குடியிருப்பு 8, வரலாற்றுக் குடியிருப்பு 4. தோட்டக் குடியிருப்பு 9. புதுக் குடியிருப்பு 5. சந்தைக் குடியிருப்பு 10. கணவாய்க் குடியிருப்பு
குளக்குடியிருப்பு: குளங்களை ஆதாரமாகக் கொண்டு நடை பெறும் பயிர்ச்செய்கைக் குடியிருப்பாகும், மின்னேரியா, பராக் கிரம சமுத்திரம், சேனனாயக்கா சமுத்திரம் முதலியனவற் றைச் சூழ்ந்தமைந்தவை இத்தகையனவாம், கடற்கரை யேரரங்களை அடுத்து மீன்பிடித்தலிற்காக மக்கள் குடியேறி வாழும்போது அவை மீன்பிடிக் குடியிருப்புகளாகின்றன. நாவாந் துறை, தங்காலை, பேசாலை, குச்சவெளி என்பன இத்தன் மையனவாம். பிரதான வீதிகள் இணைகின்ற சந்திகளை யடுத்து மக்கள் குடியேறி வாழும்போது அவை சந்திக் குடி யிருப்புகளாக விளங்குகின்றன. கொடிகாமம், கெக்கிராவை. மாகோ, பிபிலை என்பன சில சந்திக் குடியிருப்புகளாம். கிராமத் தோட்டங்களையோ, பெருந் தோட்டங்களையோ. ஆதாரமாகக் கொண்டு அமையுங் குடியிருப்புகள் தோட்டக் குடியிருப்புகள் அல்லது பெருந்தோட்டக் குடியிருப்புகளாகவுள்ளன. நீர்வேலி தக்கதோர் தோட்டக் குடியிருப்பாகும். கற்றன், வதுளை, தலவாக்கொல்லை என்பன பெருந்தோட்டக் குடி யிருப்புகளாம், கிராமப் புறங்களிலே விளை விக்கப்படுகிற பொருட்களை விற்கவும், தேவையான பொருட்களை வாங் கவும் சந்தைகள் தேவைப் படுகின்றன, இச் சந்தைகளை அண்மி மக்கள் வாழத் தலைப்படும்போது சுன்னாகம், சாவ கச்சேரி, போன்ற சந்தைக் குடியிருப்புகள் உருவாகின்றன. > ஊர்காவற்றுறை, வல்வெட்டித்துறை, கல்பிட்டி, முல்லைத் | தீவு போன்ற சில துறைகளை அடுத்து மக்கள் மீன் பிடி
ஆ: பு. 21

Page 83
162
ஆரம்பப் புவியியல்
நோக்கமாகவோ, வர்த்தக நோக்கமாகவோ வாழும்போது துறைக் குடியிருப்புகள் அமைகின்றன. நதிக்கரைகளின் ஒரு புறத்தினின்று மறுபுறத்திற்கு நதிவற்றும் வேளைகளில் நடந்து கடக்கக்கூடிய இடங்களிலோ சிறு வள்ளங்களின் துணை கொண்டு கடக்கக்கூடிய இடங்களிலோ, கடவைக் குடியிருப் புகள் அமைகின்றன. இலங்கை எங்கிலும் பரவலாக இவற் றைக் காணலாம். குருநாகல், அநுராதபுரம், கண்டி என் பன வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தனவெனினும், நகரக் குடியிருப்புகளாக விளங்குகின்றன. எனவே, இலங்கையில் பொலநறுவை, தம்புளை, நல்லூர் என்பன வரலாற்றுக் குடி யிருப்புகளாக விளங்குகின்றன. இவற்றைவிட இன்று குடி யேற்றத் திட்டங்கள் மூலம் மக்கள் பல பகுதிகளிலும் குடி யேற்றப்படுகின்றனர். இக்குடியேற்றங்கள் மூலம் பதவியா, உன்னிச்சை, வவுனிக்குளம் முதலிய பகுதிகளில் அமைந்த
குடியிருப்புகளே புதுக்குடியிருப்புகளாம்.
மலைப் பிரதேசங்களில் போக்குவரத்து வசதிகளுக்காக கணவாய்களுக்கு அண்மையில் மக்கள் வாழும்போது கண வாய்க் குடியிருப்புகள் உருவாகின்றன. கடுகண்ணாவை, அப் புத்தளை என்பன கணவாய்க் குடியிருப்புகளாகும். - இலங்கையில் நகரக் கு டி யி ரு ப் பு க ள் குறைவாகும் மேலைத்தேய நகரப் பண்புகளைக் காணாவிடினும் கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி, குருநாகல், காலி, களுத்துறை, நுவ. ரெலியா, திருகோணமலை, மட்டக்களப்பு என்பனவற்றை நகரக் குடியிருப்புகள் எனக் கூறலாம். கொழும்பு, திரு கோண மலை, காலி, காங்கேசன்துறை என்பன சிறந்த துறை
முகக் குடியிருப்புகளாக விளங்குகின்றன.
பயிற்சிகள்
நீர் வாழும் மாவட்டத்திலுள்ள குடியிருப்புகள் ஐந் தினைக் கூறுக.
ஆ.

இலங்கையின் குடியிருப்புகள்
163
சல சல சல 000 000 Va ஒ0 369 Pா மலை 6.4000 மால
*.
உ.
மேல்வரும் குடியிருப்புகளுக்கு ஒவ்வோர் உதாரணம் தருக. உ-ம்: துறைக்குடியிருப்பு - காங்கேசன்துறை.
குளக்குடியிருப்பு 2. மீன் பிடிக் குடியிருப்பு 3. சந்திக் குடியிருப்பு 4. தோட்டக் குடியிருப்பு 5. சந்தைக் குடியிருப்பு 6. கடவைக் குடியிருப்பு 7. புதுக் குடியிருப்பு 8. கணவாய்க் குடியிருப்பு 9. வரலாற்றுக் குடியிருப்பு

Page 84
164
ஆரம்பப் புவியியல்
வினாத்தாள்: 1
புவியியல்
[1 மணி)
(எல்லா வினாக்களுக்கும் இத்தாளிலேயே விடை எழுதுக. எழுத்துக் கள் தெளிவில்லாதவிடத்து புள்ளிகள் குறைக்கப்படும்.)
சுருக்கமாக விடை தருக:
(அ) பூமியின் வடிவம் யாது?
20: மா மலை 00: 90 999 984.09ச 1மடி *
(ஆ) மத்திய மலைநாட்டின் பிரதான மலைகள் நான்கினைக் கூறுக?
110 நla மலை மலை eேs கமல் சம 8மக இக அமல 9 (11)
(iii)
(இ) இலங்கையின் எப்பாகம் அதிக மழையைப் பெறுகின்றது?
0 காச 00: ன ச மல சல 000 00 000 ஓல அ:ை 006 -
(ஈ) பருத்திச் செய்கைக்குப் புகழ்பெற்ற நாடுகள் எவை?
(1)
(உ) காலநிலையை நிர்ணயிக்கும் காரணிகள் எவை? , ..
(ii)
2. மேல்வரும் வாக்கியங்களைப் பூர்த்தி செய்வதற்குரிய பொருத்தமான சொல்லை
அடைப்புக்குள்ளிருந்து தெரிந்தெடுத்துக் கீறிட்ட இடங்களில் எழுதுக. எ, (அ) இலங்கையில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை.
... நடைபெற்று வருகின்றது. (தென் மேல் தாழ்நிலத்தில், தென்கீழ்த் தாழ்நிலத்தில், மத்திய மலைநாட்டில்)

புவியியல்
165
01 - ல க ல எனவும்
* மிக
(ஆ) ஆசிய ஊசியிலைக்காடுகளை த்
அழைப்பர்
(லானோஸ், தைக்கா, டவுன்ஸ், வெல்ட்) (இ) இலங்கையில் மீன்பிடித் தொழிலிற்கு..
உகந்தது.
(வடமேற்குப் பிரதேசம், மத்தியபிரதேசம், தென்பிரதேசம்) (ஈ) பரம்பரைபரம்பரையாக வீடுகளில் நடை பெற்றுவரும் கைத்
தொழிலை ...
•............. என்பர்.
(தொழிற்சாலைக் கைத்தொழில், கு டி  ைச க் கைத்தொழில், வேலைத்தளக் கைத்தொழில்)
... வலயம்
(உ) மத்தியகோட்டுப் பகுதியில்.
ஒன்றுள்ள து.
(உயரமுக்க, தாழமுக்க, குளிர், மத்திம அமுக்க)
றைன் கைத்தொழிற்பிரதேசம் இரும்புருக்குத் தொழிலில் விருத்தியடைந்த
மைக்குச் சாதகமான ஏதுக்கள் யாவை?
(i)

Page 85
166
ஆரம்பப் புவியியல்
(iv)
4. ஒவ்வொரு வினாவிற்கும் 3 விடைகள் தரப்பட்டுள்ளன. அவற்றுள் மிகப்
பொருத்தமான விடையின் கீழ்க் கீறிடுக.
(அ) மகாவலிகங்கை எங்கு உற்பத்தியாகின்றது?
(1) வெலிமடை மேட்டுநிலத் தில் (fi) சிவனொளிபாதமலையில் (iii) கற்றன் மேட்டுநிலத்தில்
(ஆ) புவிச்சுற்றுகையால் பூமியில் யாது நிகழ்கின்றது?
(i) இரவும் பகலும் (ii) கோடையும் மாரியும் (iii) பருவகாலங்கள்
(இ) கோதுமைச் செய்கைக்குப் புகழ்பெற்ற நாடு யாது?
(1) சீனா (ii) ஐக்கிய அமெரிக்கா (iii) பர்மா
(ஈ) வளியின் அமுக்கத்தை அளக்கும் கருவியின் பேயர்யாது?
(i) பாரமானி (i) வெப்பமானி
(iii) மழைமானி (உ) இலங்கையின் பிரதான நீர்மின் சக்தி நிலையம் யாது?
(1) நுவரெலியா (ii) லக்சபானா - அபடீன் (iii) உக்வெல-லெண்டோர்

புவியியல்
167
5 சிறு விளக்கந் தருக:
(அ) வண்டல்
(ஆ) தண்டரா
(இ) டவுன்ஸ்
(ஈ) தைக்கா
(உ) றைன்
மேல்வரும் வாக்கியங்கள் சரியாயின் "சரி'' என்றும், பிழையாயின் 'பிழை' என்றும் எழுதுக. (அ) பூமியின் ஓரிடத்தில் இருந்து மேற்குத்திசையாகச்
செல்லும்போது நேரம் கூடும்.
- [ ] (ஆ) எமது நாட்டிற்கு வருவாய் தரும் வர்த்தகப் பயிர் கள் தேயிலை, இறப்பர், தென்னை எனபன.
" [ ] (இ) இந்தியாவிற்கு உயரின் மந்தைகள் இலங்கையிலிருந்து
ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
[ ] (ஈ) பம்பாய் முக்கிய நகரமாகவும், பிரதான இயற்கைத்
துறைமுகமாகவும், விமானத் தளமாகவும் விளங்கு கின்றது.
[ ] (உ) இலங்கையின் பெருந்தொகையான மக்கள் நகரப்
புறங்களில் வசிக்கின்றனர்.
[ ] 'அ' பகு தியிலுள்ள சொற்களுடன் 'ஆ' பகுதியிலுள்ள சொற்கள் தொடர்பு படுகின் றன. அவ்வாறு தொடர்புபடும் சொற்களின் இலக்கங்களை அடைப்புக்
குறிக்குள் எழுதுக.
(அ)
(ஆ)
(அ) நியூசிலாந்து
கட்டிப்பாற் தொழிற்சாலை. (ஆ) ஸ்கண்டி நேவியா [ ] 2. இரும்புருக்கு. (இ) றைன் பிரதேசம் [ ] 3. பாற்பண்ணை. (ஈ) தமன்கடுவை [ ] 4. மரம் வெட்டுதல். (உ) நியூபவுன்லாந்து ' [ 1 5. மீன் பிடித்தல்.

Page 86
168
ஆரம்பப் புவியியல்
8. 0°- நெடுங்கோட்டிலுள்ள லண்டனில் காலை 8 மணியாக இருந்தால், 15° கி.
நெடுங்கோட்டில் நேரம் யாது?
9. உலகப்பட மொன்றில் குறித்துப் பெயரிடுக.
அந்தீஸ்மலை, கங்கைநதி, மலாக்காத் தொடுகடல், மத்தியகோடு, கருங்கடல், யாவா, நியூசிலாந்து, ஆயென்ரீனா, விக்டோரியா ஏரி, கடகக் கோடு.

வினாத்தாள்: 2
புவியியல்
1 மணி
(எல்லா வினாக்களுக்கும் இத்தா ளிலேயே விடை எழுதுக )
சுருக்கமாக விடை தருக.
(அ) புவிச்சுற்றுகை என்றால் என்ன?
(ஆ) இலங்கையின் சமவெளிகள் எவை?
(ii)
(iii)
(இ) உலகில் நெல்விளை யும் பிர தான நாடுகள் எவை?
(i)
(ii) (iv)
(iii)
(ஈ) தேயிலைச் செய்கைக்கு உகந்த நிலைமைகள் யாவை?
(உ)' மழைவீழ்ச்சி வகைகள் யாவை? (i)
(ii)
(iii)
15 , 21ார்வார். --
மேல் வரும் வாக்கியங்களைப் பூர்த்திசெய்வதற்குரிய பொருத்தமான சொல்லை அடைப்புக்குள்ளிருந்து தெரிந்தெடுத்துக் கீறிட்ட இடங்களில் எழுதுக.
(அ) பூமி தன்னைத்தானே சுழல்வதால் ---
உண்டாகின்றன. | (பருவகாலங்கள், இரவும்பகலும், கோடையும்மாரியும்) ஆG பு: 22

Page 87
170
ஆரம்பப் புவியியல் (ஆ) சவன்னா ஓர் ----------- புல்வெளியாகும்.
(இடைவெப்பவலயப், வெப்பவலயப் தண்டராப், குளிர்ப்) (இ) இலங்கையின் கட்டிப்பாற் தொழிற்சாலை-----
அமைந்துள்ள து.
(அனுராதபுரம், கண்டி, பொலநறுவை, யாழ்ப்பாணம்) (ஈ) உலகின் இரும்புருக்குத் தொழிலில் -------------முக்
கிய இடத்தைப் பெறுகின்றது. (தாமோ தார்பிரதேசம், றைன் பிரதேசம், நோர்வேப்பிரதேசம்,)
(உ) கிறீன்விச்கோடு --.
-- ஆகும், (0°நெடுங்கோடு, 180° நெடுங்கோடு, 80° கி. நெடுங்கோடு; 100° மே. நெடுங்கோடு)
3. நியூசிலாந்தின் பாற்பண்ணைத் தொழில் குறித்து விபரிக்க.
"சை
8 8 8 8 8
(iii)
* ராக:
பேனா யூ" காப்பார் - NMாரா கா
1ாவணாமwயாகா
(iv)
காயம்
(v)

புவியியல்
171
4.
ஒவ்வொரு வினாவிற்கும் 3 விடைகள் தரப்பட்டுள்ளன. அவற்றுள் மிகப் பொருத்தமான விடையின் கீழ்க் கீறிடுக.
(அ) இலங்கையின் தென் மேற் சமவெளியின் எல்லைகள் யாவை?
(i) 1000 அடி சமவுயரக்கோடு, வளவகங்கை, மகாவலிகங்கை, (ii) தெதுறுஓயா, வளவகங்கை, 1000 அடி சமவுயரக் கோடு. (iii) தெதுறுஓயா, 1000 அடி சமவுயரக்கோடு, மகாவலிகங்கை.
(ஆ) 234° வ. அகலக்கோட்டின் பெயர் யாது?
(1) மகரக்கோடு (ii) மத்தியகோடு (iii) கடகக்கோடு
(இ) இலங்கையில் சுண்ணாம்புக்கல் எங்குளது?
(i) யாழ்ப்பாணக் குடாநாட்டில் (ii) அம்பாந்தோட்டையில் (ii) மலைநாட்டில்
(ஈ) இடைவெப்பவலயப் புல்வெளி ஒன்றினைக் கூறுக.
•(i)' சவன்னா (ii) ஸ்ரெப்பீஸ் (iii) பம்பாஸ்
(உ) ஐக்கிய அமெரிக்காவில் மந்தைகளின் பிரதான தானிய உணவு
யாது?
(i) சோளம் (ii) கோதுமை (ii) நெல்

Page 88
17 2
ஆரம்பப் புவியியல்
5. மேல்வரும் நாடுகள் எப்பயிர்ச் செய்கைக்குப் புகழ் பெற்றன?
(அ) பாகிஸ்தான்
(ஆ) மலாயா
(இ) இலங்கை
(ஈ) எகிப்து
(உ) பர்மா >
மேல்வரும் வாக்கியங்கள் சரியாயின் "சரி' என்றும், பிழையாயின் 'பிழை'
என் றும் எழுதுக.
(அ) இலங்கை தேயிலையை ஏற்றுமதி செய் கின்றது. [ ] (ஆ) பூமியின் அச்சு புவியொழுக்கில் 694 ° சரிவுடையதாகக்
காணப்படும்.
(இ) ஐக்கிய அமெரிக்கக்குடியேற்ற நாடுகளில் சோளம்
விளையும் பாகங்களை அண்டி விலங்கு வேளாண்மை செய்யப்படுகின்றது.
(ஈ'
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய் யப்படும் மீனின் அளவு கூடிக்கொண்டே வருகின் றது.
[ 1
(உ) இரும்பு, உருக்குக் கைத்தொழிலில் யேர்மனியிலுள்ள
றைன் கைத்தொழிற் பிரதேசம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
7, 'அ' பகுதியிலுள்ள சொற்களுடன் 'ஆ' பகு தியிலுள்ள சொற்கள் தொடர்பு
படுகின்றன. அவ்வாறு தொடர்புபடும் சொற்களின் இலக்கங்களை அடைப்புக் குறிக்குள் எழுதுக.
(அ)
(ஆ) (அ) வெப்பவலயப் புல்வெளிகள். [ ] 1. கரையோரமணல்
(ஆ) இலங்கையில் றப்பர் அதிகம்
செய்கை பண்ணப்படும்மண் [ ' ] 2. றைன் (நூர்)

புவியியல்
178
(இ) தென்னைச் செய்கைக்கு
உகந்த மண் [ 4 ] 3. கம்பாஸ், சவன்னா (ஈ) இரும்புருக்குத் தொழிற்குப் [ ] 4. யாழ்ப்பாணக்
புகழ்பெற்ற பிரதேசம்
குடாநாடு
(உ) சுண்ணாம்புக்கல்
( ] 5. கபூக்
8.
மேல்வரும் வெப்பநிலை, மழைவீழ்ச்சி அளவுகளை நோக்குக. பின்வரும் வினாக்களுக்கு விடைதருக.
ஜ Tபெ
மா
மே 1 ஜ9 ஜ9)
செ 1 1 ந T டி.
வெப்பநிலை ப°
80 181
1 82 8382 80 81 80 180808080
மழை வீழ்ச்சி அங்.
6:25•3 |10• 411•5/21 018
512 -711 •414 518 • 514 • 8| 91
(அ) சராசரி வருட வெப்பநிலை யாது?
(ஆ) வருட மழை வீழ்ச்சி யாது?
(இ) வெப்பநிலை வீச்சு யாது?
(ஈ), எம்மாதங்களில் அதிக மழை பெய்கிறது?
இலங்கைப் புறவுருவப் படத்தில் குறித்துப் பெயரிடுக.
மகாவலிகங்கை, பேதுறுதாலகாலை, கொழும்பு, காலி, திருகோண மலை, யாழ்ப்பாணக் கடனீரேரி, மன்னார்த்தீவு, வவுனியா, தெதுறு ஓயா, 1000 அடி சமவுயரக்கோடு, புத்தளம்.

Page 89


Page 90
672
ALIb. 164|| Aiog.


Page 91
ARAMBA PUVIIYAL
For GRADE 8
by
K. MUNARASAH, B. A. Hona, (C
2
di Lanka Printing works, Jaffna.

-ey.) C, A. S.
விலை: ரூ. 400