கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உயர்தர தாவரவியல்

Page 1
உயர்தர த
ADVANCED LE
தாழ் கிமிே அங்க

தாவரவியல் VIEK. BOTANY
வகைத் தாவரங்கள்
(LOWER PLANTS ) னாசுப்பெரும்
(GYMNOSPERMIS ) கியோசுப்பெரும்
( ANGIOSPERMIS )
K. சங்கர ஐயர் B.Sc. C. இராமநாதன் B. SC. H. W. பெரேரா B.Sc.

Page 2


Page 3

உயர்தர தாவரவியல்
ADVANCED LEVEL BOTANY
11-4 -1 #G 1
4முச்
// 7 14:31ந் ட
ஆசிரியர்கள்:
K. சங்கர ஐயர் B. Sc. C. இராமநாதன் B. Sc. H. W. பெரேரா B. S3.
வெளியிடுவோர்: விஜயலட்சுமி புத்தகசாலை,
248, காலி வீதி - வெள்ளவத்தை -- கொழும்பு-6.
தொலைபேசி : 8 8 930

Page 4
முதற் பதிப்பு:
யூன் 1967 பதிப்புரிமை விற்கப்பட்டுள்ளது.
விலை ரூபா 750.
அச்சிட்டோர்: குமரன் அச்சகம், 201, டாம் வீதி, கொழும்பு-12.

முகவுரை
கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர வகுப்புப் பாடத் திட்டத்திற்கு ஏற்ற தாவரவியல் நூல் தமிழில் இல்லாதது ஒரு பெருங்குறையாகும். இக்குறையைத் தீர்க்கு முகமாக முதல் முறை யாக எடுக்கப்பட்ட முயற்சி இதுவேயாகும்.
இந் நாளில் கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தர வகுப்புப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியை மட்டுமே விரிவாக எழுதியுள்ளோம், இதில் தாழ்வகைத்தாவரங்கனரின் கட்டமைப்பு, வாழ்க்கை வரலாறு ஆகியவையும், கிமினோசுப்பெரும், அங்கி யோசுப்பெரும் ஆதியனவற்றின் இனப்பெருக்கமும் விளக்கப் பட்டுள்ளன. இலங்கை அரசாங்க அரசகரும மொழித் திணைக் களம் கடைசியாக வெளியிட்டுள்ள கலைச்சொற்றொகுதியிற் காணப் படும் கலைச்சொற்களையே எடுத்தாண்டுள்ளோம். கலைச்சொற் றொகுதியில் காணப்படாத சொற்களுக்குப் பொருத்தமான சொற்களைப் பிரயோகித்துள்ளோம். வேண்டிய இடங்களிலெல் லாம் வரைபடங்களினு தளி கொண்டு விளக்கம் செய்யப்பட்டுள் எதுடன் ஆங்காங்கே ஆங்கிலக் சுக்லச் சொற்களும் சேர்க்கப் பட்டுள்ளன. விஞ்யா ன ப ர ட ங் க ளி ன் கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்புப் பாடத்திட்டம் மிக விரிவான தாகும், எனவே வருட முடிவில் ஆசி ரி ய ர் க ள் மாணவர் களுடன் மீட்டல் செய்வதற்கு நேரம் கிடைப்பதில்லை. ஆகவே மாணவர்கள் தாமாகவே வினாக்களுக்கு விடை யெழுதிப் பழகிக் கொள்ளுதல் அவசியமாகிறது. அதற்காக இந்நூலின் ஈற்றில் பல் லின மீட்டல் வினாக்கள் சேர்க்கப்பட்டுள்ளன, மீட்டலுக்கு உத வும் முறையில் தாவரங்களின் வாழ்க்கைச் சக்கரங்களின் சுருக் கமும் வெவ்வேறு தாவர இனங்களிடையே காணப்படும் ஒற் றுமை வேற்றுமைகளும் தகுந்த இடங்களிற் சேர்க்கப்பட்டுள் பிளன்,
எமது வேண்டுகோளுக்கு இணங்கி மத்திய கல்லூரி அதிபர் திரு. E. சபாலிங்கம் B S. P,G.T., அவர்கள் எமக்களித்துள்ள அணிந்துரைக்காக நாம் அவர்களுக்கு நன்றி கூறுகிறோம்.

Page 5
இந்நூலை எழுதுவதற்கு எம்மை ஊக்கிய வித்தியோதய,, பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தாவரவியற் பேராசிரியர் கலாநிதி R. de ஜெயசேகரா அவர்களுக்கும், யாழ்.வைத்தீஸ்வர. வித்தியாலய அதிபர் திரு.S. அம்பிகைபாகன் B.A. , அவர்களுக்கும் எமது நன்றி உரித்தாகுக. கையெழுத்துப் பிரதிகளைப் படித்துப் பார்த்து ஆங்காங்கு வேண்டிய திருத்தங்களுக்குரிய ஆலோசனை களைக் கூட – உதவிய யாழ். மத்திய கல்லூரி ஆசி ரி ய ரு டம் , வடமாகாண விஞ்ஞான ஆசிரியர் சங்கத் தலை வ ரு மா ன திரு. J. S. அரியரத்தினம் B, S., Dip in Ed.. அவர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவிக்கிறோம்.
ஆசிரியர்களான திருவாளர்கள் 3. நல்லைநாதன் B.Sc., K. சித்திரவடி, வேல் B. Sc., A. சிவவீரசிங்கம் B.Sc., M. பர மானந்தன் B.Sc., Dip, in Ed., V, சுந்தரலிங்கம் B.Sc.. S. செல்வவினாயகம் B, SC., C, N, பாலச்சந்திரன் B. SC., ஆகியோர் அளித்த உற்சாகமும் குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு எமது நன்றி. தமது சிரமத்தைப் பொருட்படுத்தாது படங்கள் வரைந்துதவிய ஓவியர் V. பரமநாதன், ஆசிரியர் N. சண் முகானந்தா (SC, Trd.), மாணவன் S. சண்முகநாதன் ஆகியோ ருக்கும் எமது நன்றி உரித்தாகுக, எழுத்துப் பிரதியைப் பார் வையிட்டு உதவிய திருவாளர்கள் M, C. சலிம் B.A., SC, Trd. பண்டித வித்துவான் K, K. நடராஜன் B. 0. L., Dip. in Ed., S. வெங்கடேச சர்மா B. A. (Hons) ஆகியவர்கட்கு எமது நன்றி உரித்தாகுக..
கையெழுத்துப் பிரதியை எழுதி உதவிய மாணவன் K. கருணானந்தன், மாணவி K. இந்திரா, திருமதி H. கமலாதேவி ஆகியவர்களுக்கும், இந்நூலைச் சிரத்தையோடு அச்சிட்டு வெளி யிட்ட குமரன் அச்சகத்தாருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
K. சங்கர ஐயர். C, இராமநாதன். H. W. பெரேரா.

அணிந்துரை
கற்றுத் துறைபோகிய மேதைகள் எழுதும் நூல்களிலும் அவ்வவ் வகுப்புக்களில் படிப்பித்த அனுபவத்தின் விளைவாக எழு தப்படும் புத்தகங்களே மாணவர்களுக்குப் பெரிதும் பயன் படு கின்றன. இந்த உயர்தர தாவரவியலை எழுதிய திரு. K. சங்கர ஐயர், திரு. 1. இராமநாதன், திரு. H, W, பெரேரா ஆகிய மூவரும் உயர் தர பொதுக் கல்வித் தராதர வகுப்புக்களில் பல ஆண்டுகளாக விஞ்ஞானம் படிப்பித்து வருகின்றனர். இவர்கள் அங்கு பெற்ற அனுபவத்தின் விளைவே இந்நூல். மாணவரின் கஷ்டங்களை அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களே அறிவார்கள். ஆகை யால் இந்நூல், மாண வர்களுக்குச் சிறந்த பாடப் புத்தகமாக வும், ஆசிரியர்களுக்கு வாய்ப்பான ஒரு இனக நூலாகவும், அமை யும் என்பது எனது உறுதியான நம்பிக்கை.
யாழ். மத்திய கல்லூரி,
யாழ்ப்பாணம்.
E, சபாலிங்கம்
அதிபர்.

Page 6
பொருளடக்கம்
பக்கம்
11 18 24
48 153 6]
3,
தி
அத்தியாயம்
1, தாவரவியல் என்றால் என்ன? 2. தாவர இராச்சியத்தின் பாகுபாடு
அல்காக்கள் கிளாமிடொமோனசு இசுப்பைரோகைரா கிளாடோபோரா பின்னுலேரியா இலிங்பையா அலைதாவரம் பங்கசுக்கள் மியூக்கொர் பைற்றொப்தொரு அசுப்பசிவசு பெனிசிலியம் சக்கரோமைசெசு சளியோற்ற கம்பெஸ்ற்றிஸ் - பற்றீரியா 5. வைரசு 6. எம்பிரியோபீற்றர பிரியோபீற் றா
மார்க்கான்சியா பொகொதேற்றம் திரக்தியோபீற்ற
சுலன்றவரங்கள் - தாழ்கலன்றாவரங்கள் இலைக்கோபோடி யம்
செலஜிநெல்லா 8. திரக்கியோபீற்றா - பிலிசினே
நெபிறோலெபிசு 9. திரக்கியோபீற்ரு
உயர்கலன்றாவரங்கள் - கிமினோசுப்பெர்மே
சைக்கசு 10. திரக்கியோபீற்று - அங்கியோர்சுப்பெர்மே 11. மீட்டல் 12. வினாக்கள்
ஈ Tா 87 பி
பி 10ா 112
13ர்
131 13+ H 155
173 178 190 2 03 2ார் நா1
22) 244 25 298

தாவரவியல் என்றால் என்ன?
உயிரினங்கள் பற்றிய இயல் உயிரியல் (BiologT ] எனப் படும். உயிரினங்களைத் தாவர இராச்சியமென்றும் விலங்கிராச் சியமென்றும் இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். தாவரங் கள் பற்றிய இயல்! தாவரவியல் (Botany) என்றும், விலங்கு கள் பற்றிய இயல் விலங்கியல் (20ology ) என்றும் அழைக்கப் படும். உயிரினங்களின் உருவவமைப்புப் பற்றிய இயல் உருவவியல் ( Morphology) என்றும், இழையங்களைப்பற்றிய இயல் இழைய வியல் ( Histology ) என்றும் கூறப்படும். கலங்கள் பற்றிய இயல் குழியவியல் (Cytology ) எனப்படும். இது இழையவிய லின் ஒரு பிரிவேயாகும், உடலின் வெவ்வேறு பகுதிகளின் தொழில்கள் பற்றிய இயல் உடற்றொழிலியல் ( Physiology | என்றும் , முளையங்கள் விருத்தியடைவ து பற்றிய இயல் முளைய வியல் (Embryology | என்றும் , பரம்பரை அல்லது சந்ததி களுக்கிடையேயுள்ள தொடர்புபற்றிய ஆராய்ச்சி பிறப்புரிமை யியல் (Genetics ) என்றும், உயிரினங்கட்கும் அனவ வசிக்கும் சுற்றாடலுக்குமுள்ள தொடர்புபற்றிய இயல் சூழலியல் (Ecology) என்றும், பூமியில் பல வருட காலங்கட்கு முன்னர் இருந்து தற்போது மறைந்துள் ள உயிரினங்கள் பற்றிய இயல் தொல்லுயிரி பல் (Palaentology | என்றும் அழைக்கப்படும். மேற்கூறிய ஆராய்ச்சிப் பிரிவுகளிலிருந்து பெறப்பட்டுள்ள காரணிகளைக் கொண்டே உயிரினங்கள் பாகுபடுத்தப்பட்டுள்ளான. இதைப் பாகு பாட்டியல் [ Taxonomy ] எனலாம்.
கிரேக்க நாட்டுத் தத்துவஞானியும்' "விலங்கியலின் தந்தை ' ' என அழைக்கப்படுபவருமான அரிஸ்றே ற்றில் ( Ari3 - totle ) என்னும் விஞ்ஞானி விலங்குகளின் இயல்புகளைப் பொறுத்து அவை எவ்வாறு பாகுபடுத்தப்படக்கூடுமென்பதைப் பற்றிக் கூறினார். அவரின் கூற்றைப் பின்பற்றி வே ரா விஞ்ஞானி கள் உயிரினங்களைப் பாகுபடுத்துவதில் ஈடுபட்டனர். யோன் றே ( John Ray என்னும் ஆங்கிலேய விஞ்ஞானியே முதன் முத லில் இனங்களைப் பற்றிக் கூறி அதன்படி சில உயிரினங்களைப் பாகு படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார், அனால் தற்போது எல்லோ ராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாகுபாட்டுத் திட்டம் சுவீடன் தேசத்தைச் சேர்ந்த இயற்கை ஆய்வாளர் பனியஸ் [ LinாHEUS | என்னும் விஞ்ஞானி காட்டிய வழியைப் பின்பற்றியதே. அவரே முதன் முதலில் உயிரினங்களுக்கு இரு சொற்பெயரீடு ( Bing mial Nomenclature செய்யும் முறையை 175 8 ம் ஆண்டில் - வகுத்தார். அதன்படி ஒவ்வொரு தாவரத்திற் கு ம் விலங்கிற்கும்
IZ 1

Page 7
- 2 -
இரு சொற்களாலான பெயரிருக்கும், ஒன்று சாதிப் பெயர், மற்றது இனப்பெயர், சாதிப் பெயர் சிலவற்றிற்குப் பொதுவான தொன்றாகவிருக்கும். ஆனால் இனப்பெயர் ஒவ்வொன்றிற்கும் வித்தியாசப்படும். ஒரே சாதிப் பெயரைக் கொண்ட தாவரங் சுளுக்கிடையே சில பொதுவான இயல்புகள் காணப்படும். சாதிப் பெயரும் இனப்பெயரும் எப்பொழுதும் இவற்றின் மொழியி லேயே இருப்பதைக் காணலாம், ஒரே தாவரம், வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு மொழிகளில் வேறு பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டாலும் அவற்றிற்கு விஞ்ஞானிகளால் கொடுக்கப் பட்ட பெயர் ஒன்றேயாம். அது இலற்றின் மொழியிலிருக்கும் அல்லது வேறு மொழியிலிருந்து இவற்றினாக்கப்பட்டதாயிருக்கும், இது எத் தேசத்தவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகும். எனவே நாமும் தமிழில் விஞ்ஞானம் கற்கும்போது இலற்றின் மொழித்திரிபுப் பெயர்களையே விஞ்ஞான முறைப்படி கொடுக்கப் பட்ட பெயர்களாக உபயோகித்தல் அவசியமாகிறது. உதாரண மாக, ' 'குப்பைமேனி " என்று தமிழில் அழைக்கப்படும் தாவரம், விஞ்ஞான முறைப்படி '' அக்கவிஃடா இன்டிக்கா' ' ( Acalypha indica ) என்று அழைக்கப்படுகிறது, அக்கலிஃபா என்பது சாதிப்பெயர், இன்டிக்கா என்பது இனப்பெயர்.
தென்னை
கொக்கஸ் நியூசிபெஃறCocus nucifera) பனை
பொறசன் இஃபிளா பெர்பெர்
( Borassus fla bellifer | மாமரம்
மாஞ்சிஃபெறா இன்டிக்கா |
- Mangifera indica | கிளாமிடோமொனசு மொனோயிக்கா
* Chlamydomgnas monica ] மியூக்கொர் மியூசிடோ( Mucoா muCEdo | மார்க்கான்சியா பொலிமோர்பா - Marchantia polymorpha சைக்கசு செர்சினாலிசு - CyCas circinalis
தாவரங்களினது உடல் கலங்களாலேயே ஆனது. ஒவ்வொரு கலத் திலும் முதலுருவைச் சுற்றி ஒரு கலச்சுவதுண்டு. முதலுருவே உயிரின் அடிப்படைப் பொருளாகும். இது ஒரு கருவையும், அதைச் சுற்றிக் குழியமுத லுருவையும் கொண்டுள்ளது. முதலுரு பாகுத்தன்மையும், பளிங்குப்பண்பும் கொண்டது. இது புரதங் களும் ஏனைய இரசாயனப் பொருள்களும் குறிப்பிட்ட அளவிற் சேர்ந்ததொரு கலவையாகும். அனுசேபம் உயிரினங்களின் ஒரு இயல்பாகும். உடலில் நடைபெறும் அவ சேபத்திற்குரிய செயல் சுளும் உற்சேபத்திற்குரிய செயல்களும் இதிலடங்கும்.
தாவரம் உயிர்வாழ்தலுக்கும் வளர்ச்சிக்கும் உணவு அவ சியம். சாதாரணமாகத் தாவரங்கள் பச்சிலையத்தைக் (குளோ ரோபில்) கொண்டுள்ளதால், அவை ஒளித்தொகுப்பு முறையால்

- 3 -
துணனைப்படும். உயர் தாவாகின்றன
தமதுணவைத் தயாரித்துக் கொள்கின்றன. இவை தற்போசணைத் தாவரங்ளெனப்படும். ஆனால் பங்கசு போன்ற சில தாழ்ந்த தாவரங்களும், ஒரு சில உயர் தாவரங்களும் அழுகல் வளரி களாகவோ, ஒட்டுண்ணரிகளாகவோ, வளர்கின்றன. இவை பிற போசணைத் தாவரங்களெனப்படும். அழுகல்' வளரிகள் உடக்கும் சேதனவுறுப்புக்குரிய பொருள்களிலே வளர்ந்து உணவைப் பெற் றுக்கொள்கின்றன. ஒட்டுண்ணிகள் முற்றாகவோ, ஒரு பகுதி யாகவோ தமதுணவிற்கு விருந்துவழங்கியில் தங்கியுள்ளன.
தாவரங்கள் வளர்ச்சியடையும் பொழுது உருவம் பரும் எனடைகிறது. தாவரங்கள் இரவும், பகலும் தொடர்ச்சியாகச் சுவாசிக்கின்றன. அவை ஒட்சிசனை உள்ளெடுத்து, உணவுப்பொ ருள்களை ஒட்சியேற்றி சக்தியைப் பெற்றுக்கொண்டு காபனீரொட் சைட்டை வெளிவிடுகின்றன.
" ஓட்சியே அவை ஓட்சிசவம், பகலும் தெரு
தாவரங்கள் ஓரிடமாக வாழ்வதனால், அவற்றில் அசைவு ஒரளவிற்கே காணப்படுகின்றது. கிளாமிடோமொனசு, தயற்றம், பற்றீரியா போன்ற தாழ்ந்த தாவரங்கள் அசைந்து திரிகின்றன. தாவரங்களிலே அசைவு தன்னிச்சையாகவோ, தாண்டப்பட்ட தாகவோ இருக்கலாம். தாழ்ந்த தாவரங்களினனசவு வெளித் தாண்டவில்லாமலே நடைபெறக் கூடுமாதலால் இது தன்னிச்சை யான அசைவு வகையைச் சேர்ந்ததாகும், தாவரங்களினங்கங்கள் வெளித் துாண்டலினால் அசையும் பொழுது அவ்வசைவு உறுத் தாணர்ச்சி அல்லது தாண்டலசைவு எனப்படும்,
தாவரங்கள் தம் இனத்தைப் பலவகைகளில் பெருக்கிக் கொள்கின்றன, அவையாவன; பதியமுறை, இலிங்கமில் முறை, இலிங்கமுறை இனப்பெருக்கம் என்பனவாகும். தாவரத்தின் ஒரு பகுதி பிரிவடைந்து வேறாகி, புதியதொரு தாவரமாக வளரு மானால் அது பதியமுறையனப்பெருக்கமெனப்படும். இசுப்பை ரோ வகைரா போன்ற தாழ்ந்த தாவரங்களிலே இழை அறுபட்டு ஒவ்வொரு துண்டமும் புதிய இழையாக வளரும். உயர் தாவரங் சுளிலே அரும்புதல், பதினவத்தல், ஒட்டுதல் ஆகியவை பதிய முறையினப்பெருக்கமாகும்.
இலிங்கமில் முறையினப்பெருக்கத்தின் போது பாற்கவங்க ளுண்டாவதில்ஃப. சில தாவரங்களிலே கலப்பிரிவே இனப்பெருக்க முறையாகவுள்ளது. உ - ம் : மதுவம், இலிங்கமில் முறையால் பலவிதமான வித்திகள் உண்டாக்கப்படுகின்றன. இவ்வித்திகள் உண்டாகும் விதத்திலும், தாய்த் தாவரத்திலிருந்து விடுபட்ட பின் அவற்றின் நடத்தையைப் பொறுத்தும், வேறுபடுத்தப்படு கின்றன, நரிலே நீந்தித் திரியக்கூடிய பிசிர்களை அல்லது சவுக்கு முளைகளைக் கொண்ட வித்திகள் இயங்கு வித்தி ( Zogsports | களெனப்படும் . தளியவித்திகள் ConidioSpores | தூளி

Page 8
யங்களிலே உண்டாக்கப்பட்டு காற்றிலே வெளிவிடப்படுகின்றன. ' - உ.சிதமற்ற காலங்களைக் கடத்துவதற்காகக் தடித்த சுவர்களை யுடைய ஓய்வுக் கால் வித்திகள் [ Restir1) SportS ) அல்லது அபேவில் ளித்திகள் ( HplangSpoTes] உண்டாக்கப்படுகின் றன. உசிதமற்ற காலங்களில் வித்திகள் பல்மெலா நிலையிலும் காணப்படுகின்றன. மதுவத்தில் ஒரு சிறப்பான எத்திக்கலனுண் டாகி அதனுன் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கோணிவித்திகள் ( HSCOSport3 ] உண்டாகின்றன. சில பங்கசுக்களில் பூசண வலை சிறு துண்டங்களாகப் பிரிவடைந்து, அவை ஒவ்வொன்றும் புதிய தாவரங்களாக வளர்கின்றன. இவை ஒயிடியம் ( பிidiufT) எனப்படும். வன்றேல் வித்திகளும் Chlamydgspoாட்க ] உண்டாவதுண்டு,பசிடியோமீசெற்றுகளில் சிற்றடிவித்திகள் ( BasidioSpores | உண்டாகின் றன.
இலிங்கமுறையினப் பெருக்கத்தின் பொழுது புணரிகள் உண் டாகிக் கருக்கட்டல் நடைபெறுகிறது. சேரும் புணரிகள் ஒத்த வுருவமுடையனவாயிருந்தால் ஒத்தபுணரிகளென்றும், ஒரு புணரி பெரிதாயும் மற்றது சிறிதாயுமிருந்தால் ஒவ்வாப் புணரிகளென் றும் அழைக்கப்படும். பெரிய பெண் புணரிக்கலம் அசைவற்று முட்டைக்கலமாகவும், சிறிய ஆண் புணரிக்கலம் தொழிற்பா டுள்ள புணரியாகவும் காணப்படும் பொழுது முட்டைப் புணரிக் குரிய சேர்க்கை எனப்படும், உயர் தாவரங்களிலும் முட்டையும், விந்துப்போவியும் உண்டாகின்றன. பூக்குந் தாவரங்களிலே' முட் டைக் கருவும், ஆண் புணரிக்கருவும் உண்டாகி கருக்கட்டல் நடைபெறுகிறது. ஆண், பெண், புணரிகள் எப்பொழுதும் ஒரு மடியானவையே. கருக்கட்டலின் பின் உண்டாகும் நுகம் இரு மடியானது. இதுவே வித்தித் தாவரச் சந்ததியின் முதற்கல மாகும். நுகம் நேரடியாக அல்லது ஓய்வு நிலையிலிருந்து பின்னர் முளைக்கத் தொடங்கும். ஒய்வு காலத்தில் அது ஒரு தடித்த சுவரால் பாதுகாப்பளிக்கப்படுகிறது. சில வேளைகளில் இருமடியான தாவரம் ஒடுங்கற்பிரிவடைந்து ஒருமடியான இயங்கு வித்திகளை உண்டாக்குகின்றது. இவை ஒருமடி யான புணாரித்தா வரங்களாக வளர்கின்றன. இவற்றில் இரு சந்ததிகளும் உருவத் தில் ஒத்துள்ளதனால் அமைப்பொத்த சந்ததிப் பரிவிருத்தி உள்ள தெனலாம்.
பிரியோபீற்றுக்களிலும் புணரித்தாவரம் (7) வித்தித் தாவ ரத்னதவிட (ரே) மேன்மையாக விருத்தியடைந்துள்ளது. வித்தித் தாவரம் புணரித் தாவரத்தின் மேல் முழுவொட்டுண்ணியாகவோ, பகுதியொட்டுண்ணியாகவோ, காணப்படுகிறது. அது ஒருபொழு தும் சுயாதீனமாயிருப்பதில்லை. வித்தித் தாவரத்திலுண்டாகும் வித்தித் தாய்க்கலங்கள் ஒடுங்கற்பிரிவடைந்து ஒருமடியான வித்தி கள் உண்டாகி, பரம்பி ஒருமடியான புணரித்தாவரங்களாக முளைக்கின்றன. இவற்றில் இரு சந்ததிகளும் உருவமைப்பில்

-- 5 -
-'வேறுபட்டுள்ளதனால் இவற்றில் அமைப்பொவ்வாத சந்ததிப் பரி
விருத்தியுள்ளதெனக் கூறலாம்.
திரக்கியோபிற்றாக்களிலே (கலன் தாவரங்களிலே ) வித்தித் தாவரமே மேன்மையாக விருத்தியடைந்து புணரித் தாவரத்தை விட நீண்டகாலம் உயிர்வாழ்கின்றது. புணரித் தாவரத்தின் பிரிவிலி சிறியதாகவும், எளிமையான அமைப்பைக் கொண்ட தாகவுமிருக்கும். உயர் தாவரங்களிலே புடிசனரித்தாவரம் நுணுக் குக் காட்டியினுாடாகவே பார்க்கக்கூடிய அளவிற்குச் சிறிதாக்கப் பட்டிருக்கும், வித்தித்தாவரம் உண்மையான வேர், தண்டு, இலை ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இவற்றிலிருந்து வித்திக்கவன் கள் உண்டாகி, அவற்றிலுள்ள வித்தித்தாய்க்கலங்கள் ஒடுங்கற் பிரிவால் ஒருமடியான ளித்திசாஉண்டாக்கும்.
செலஜிநெல்லா, சைக்கசு, பூக்குந்தாவரங்கள் ஆகியவற்றில் பல்லின சரித்திகளுண்டாகின்றன. நுண்வித்திகன் ஆண்புணரித் தாவரங்களாகவும், மாவித்திகள் பெண்புணரித்தாவரங்களாகவும் வளர்ந்து அவற்றிலே ஆண், பெண் புணரிகளுண்டாகின்றன, முட்டைக்கலம் கருக்கட்டலின்றியே புதிய தாவரமாக முளைக் கலாம், இது கன்னிப்பிறப்பு எனப்படும்.
தாவரங்களெல்லாம் முளைத்து, வளர்ச்சியடைந்து இனத் தைப் பெருக்கி பின்னர் இறக்கின்றன. இதுவே ஒரு தாவரத்தின் வாழ்க்கைச் சக்கரமாகும், தாவரங்களின் வாழ்க்கைச் சரித்திரத் தில் இருவித சந்ததிகள் உண்டாகி அவை வாழ்க்கை வட்டத் தில் மாறி மாறி வருவது சந்ததிப் பரிவிருத்தி எனப்படும். இலிங்க மிற் சந்ததி அல்லது புணரித்தாவரச் சந்ததி ஒரு மடியான கருக் களையுடைய கலங்களைக் கொண்டது. இவற்றிலிருந்து ஒருமடியான (+ | புணரிகள் உண்டாகி, கருக்கட்டி நுகம் உண்டாகிறது. நுகம் இலிங்கமுறைச் சந்ததியாக, அதாவது வித்தித் தாவரமாக முளைக்கிறது , நுசும் இருமடியானதால் வித்தித் தாவரமும் இரு மடியானது (2 x), அதாவது வித்தித்தாவரக்கலங் களின் கருவில் நிறமூர்த்த எண்ணிக்கை புணரித்தாவரத்திலிருப்பதை விட இரு மடங்காகும்.
-ஆனால்
வித்தித்
தாவரத்தில் பாவங்கங்கள் உண்டாவதில்லை,
அவற்றிலுண்டாகும் வித்தித்தாய்க்கலங்கள் (21) ஒடுங் கற்பிரிவடைந்து அநேக வித்திகளையுண்டாக்குகின்றன. ஒருமடி யான வித்திகள் (1) புணாரித்தாவரமாக முடிக்கின்றன. இவ் விரு சந்ததிகளின் விருத்தி பல்வேறு தாவரப் பிரிவுகளிலும் பெரிதும் வேறுபடுகின்றது.

Page 9
அல்காக்களும், பங்கசுக்களும், புணரித் தாவரச் சந்ததியைச் சேர்ந்தவையே. புணரித் தாவரங்களிலிருந்து புணரிகள் உண் : 2 டாகி, புணர்ச்சியின் பின் இருமடியான நுகம் உண்டாகிறது. இவற்றிலே நுகம் மட்டுமே வித்தித் தாவரத்தைக் குறிக்கும். நுகம் ஒடுங்கற் பிரிவடைந்து புணரித் தாவரங்கள் முளைக்கின்றன . ஆனால் ஒரு சில அல்காக்களில் உதாரணமாக, கிளாடோபோரா, உல்வா போன்றவற்றில் ஒருமடியான தாவரமும், இருமடியான தாவரமும் காணப்படும். உருவ அமைப்பில் அவற்றிற்கிடையே வித்தியாசமில்லை, நிறமூர்த்த எண்ணிக்கையில் மட்டுமே வித்தி யாசமுண்டு, ஒருமடியான புணரித்தாவரத்தில் உண்டாகும் புணரி கள் புணர்ந்து உண்டாகும் இருமடியான நுகம் ஒடுங்கற் பிரிவடை யாமல் முளைப்பதாலேயே இருமடியான தாவரம் உண்டாகிறது. ஆண்புலாரி முட்டைக்கருவுடன் புணர்ந்து கருக்கட்டல் நடைபெறு கிறது. கருக்கட்டிய முட்டையிலிருந்து முனையம் உண்டாகி,
வித்தித்தாவரமாக முளைக்கின்றது,
வித்தித்தாவரம்
>
அல்கா
ஈர துருத் பாசித்
தாவரம்
தாவரம்
பன்னம் கியி
அங்கி வேசுப்
யோசுப் பெர்மே பெர்மே
புணரித்தாவரம்

தாவர இராச்சியத்தின் பாகுபாடு
பழைய முறைப்பாகுபாடு
தாவர இராச்சியம்
இராச்சியப் பிரிவு:- கிசித்தோகம்.
பனரோகம் (இசுப்பெர்மெற்றோபிற்றா
பிரிவு:- தலோபீற்ற பிரியோபீற்ற தெரிடோபீற்ரு
கிமினோசுப்பெர்மே அங்கியோசுப்பெர்மே
புதிய முறைப்பாகுபாடு:
தாவர இராச்சியம்
இராச்சியப்பிரிவு:- தலோபீற்று
எம்பிரியோபீற்ற
വല്ല:
அல்கா
பங்கசு.
பற்றீரியா.
பிரியோபீற்ரு திரக்கியோபீற்று
டபபிரிவு:
மிட்சோமைக் இயூமைக்கோ கோபீற்று
பீற்று
சைலோப்சிடா இலைகொப்சிடா இசுப்பினோப்சிடா தெரொப்சிடா

Page 10
பிரிவு: அல்கா
பிசியோபீற்று
திரக்கியோபீற்று
பங்கசு உபபிரிவு 1மிடசோ மைககோபீற்று
இலைக்கொப்சிடா
வகுப்பு
வகுப்பு:
வகுப்பு:
வகுப்பு: 1, இலைக்கோ போடிளே
1. மிட்சோமீசெற்றே
1. கெப்பறிகே
1. குளோரோபீசே 2. பசிலாரியோ பீசே
2. பிளாள் மோடியோ
2. முசுக்கி
உபபிரிவு:
3. மிட்சோபீசே
|3. அக்கிரேசியே
(மஸ்சை)
தெரொப்சிடா
4. பியோட்சே
உபபிரிவு:
- வகுப்பு:
5, றேடோபீசே
11 இயூமைக்கோபீரு வகுப்பு: 1, பீக்கோமீசெற்றெசு
1, பிலிசிளே 2. கிமினோசுப்பெர்டே
13,, அங்கியோசுப்பெர்மே .
6. சாந்தோபீசே 7. கிறிப்ரோ பீசே 8. கிறிசோபீசே 9. டையனோ பீசே 10. நிமற்றே பிசே
2. அசுக்கோமீசெற்றெசு
3. பசிடி யோமீசெற்றெசு
தியூற்றெறோ மீசெற்றெசு

- -
தாவர இராச்சியத்தின் பாகுபாடு
ஆதிகால தாவரவியல் வல்லுனர் தாவர இராச்சியத்தை கிரித்தோகம் / பனரோகம் என இரு பெரும் பிரிவுகளாகப் பாகு படுத்தினர், தாழ்ந்த தாவரங்களைக் கொண்ட கிரித்தோகாமை, தலோபீற்று
_ Thallophyta), பிரியோபீற்ற ( Bryophyta 1, தெரிடோப்ற்றா ( Pteridophyta] வென மூன்று பிரிவுகளாகப் பிரித்தனர். பனரோகம் அல்லது இசுப்பெர் மெற்ரோப்ற்ற என்னும் பிரிவு. வித்துகளையுண்டாக்கும் உயர் தாவரங்களைக் கொண்டதென எடுத்துக்கொண்டனர். "சிரித்தோ கம்' என்றால் கருக்கட்டல் மறைவானது எனவும், 'பனரோகம்' என்றால் கருக்கட்டல் வெளித்தெரிகிறதெனவும் பொருளாகும். கேசரம், யோனி ஆகிய பகுதிகளே சுருக்கட்டும் கலங்களை நேரடி யாக உண்டாக்குகின்றனவென எண்ணப்பட்டது. இவை வித்துண் டாகும் தாவரங்களில் மட்டுமே காணப்படுகின் றனவெனக் கருதப் பட்டு வந்ததால் கிரித்தோகம், பன ரோகம் என்னும் பெயர்கள் உபயோகத்திலிருந்தன, ஆனால் கருக்கட்டலின் உண்மையான தண்மை இப்போழுது அறியப்பட்டுள்ளது . பனரோகங்களைவிட கிரித்தோகம் என அழைக்கப்பட்டு வந்த தாவரங்களிலேயே வெளித்தெரியக்கூடிய நிலையில் கருக்கட்டல் நடைபெறுகிறதெனத் தெரியவருகிறது. கிரித்தோகம், பனரோகம் என்னும் பெயர்கள் பொருத்தமில்லாததால், இப் பெயர்கள் இப்பொழுது வழக்கி லில்லை,
புதியமுறைப் பாகுபாடு:-
புதிய முறைப்பாகுபாட்டில் தலோபீற்றருவிற்கு மேலான நிலையிலுள்ள தாவரங்களை யெல்லாம் எம்பிரியோப்ற்ரு என்னும் இராச்சியப் பிரிவில் சேர்த்துள்ளார்கள். எனவே, தலோபீற்ற, எம்பிரியோபீற்றா என்பன இரு இராச்சியப் பிரிவுகளாகக் கொள் னப்படுகின்றன. தலோபீற்றவை மேலும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவையாவன, அல்கா, பங்கசு, பற்றீரியா என்பன. எம்பிரியோபீற்றாவிலடக்கப்பட்ட தாவரங்களிலே நுகத்திலிருந்து ஒரு முளையம் உண்டாகி, அம் முளையம் தன் விருத்தியின் முற் பகுதியை ஆதிச்சனனியிலோ ( Archuguniபா
' 1 அல்லது முளையப்பையிலோ ( EmbryO3AC ] களிக்கிறது.
'அல்கா' என்னும் பிரிவு பத்து வகுப்புகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. அவற்றுட் சில - குளோரோபீசே, பசிலாரியோ பீசே, சையனோபிசே என்பன. பங்கசு என்னும் பிரிவு மிட்சோ மீக்கோபிற்றா ( MyKOmycophyta ] , இயூம்கோபீற்ரு ( Eபறycophyts | என இரு சிறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட் டுள்ளது. முதற் சிறு பிரிவு மூன்று வகுப்புகளையும், இயூமீ

Page 11
- 16 -
கோபீற்றவென்னும் சிறு பிரிவு நான்கு வகுப்புகளையும் கொண் . டுள்ளன.
எம்பிரியோபீற்றா என்னும் இராச்சியப்பிரிவு பிரியோபீற்ற, திரக்கியோபீற்றவென இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முன்னர் தெரிடோபீற்ற, இசுப்பெர்மெற்றோபீற்றவென அழைக் கப்பட்டுவந்த இரு பிரிவுகளும் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு திரக்கி யோபிற்றா என அழைக்கப்படுகிறது. திரக்கியோபீற்று என்றால் கலன்களையுடைய தாவரய்களென்பது பொருள், எனவே இவற்
றை கலன்-தாவரங்கள் -
Vaseular plants ) எனவும் அழைப்பர். தாவர இராச்சியத்தில் பிரியோபீற்றாவின் நிலைபற்றிச் சர்ச்சைக்கு இடமில்லை. பிரியோபீற்றா என்னும் பிரிவு கெபற்றி கே, மஸ்சை என இரு வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உயர் தாவரங்களை கலன்களின் அடிப்படையில் பாகுபடுத்தும் தாவரவியலறிஞர்கள் தெரிடோபீற்ரு. இஸ்பெர்மேற்றோபிற்ற என்ற பெயர்களை எடுத்துக்கொள்வதில்லை, அவர்கள் விதையுண் டாதலுக்கான அறிகுறி அழிந்தொழிந்த தெரிடோபீற்றுக்கள் பலவற்றிலும் காணப்படுகிறதெனக் கூறுகின்றனர். எனதயுள்ள மிக ஆதியான தாவரங்கள் தற்போது அழிந்துபோன சைகடோ பிலிக்காலேசு (Cycadoflicolas ) ஆகும், இவை பன்னத்தாவரங் களை ( Ferns ] மிக - ஒத்துள்ளன. திரக்கியோபிற்றா நான்கு வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. (1) சைலோப்சிடா (2) இலைக்கொப்சிடா, (3) பினோபசிடா, (4) தெரொப்சிடா. செலஜினெல்லா ( " Selagirella ] இலைக்கோபோடியம், போன்ற தாவரங்கள் இல்லக்கொப்சிடா என்னும் வகுப்பிலடங் கும். தெரொப்சிடா என்னும் வகுப்பு மேலும் மூன்று வகுப்புப் பிரிவுகளாக்கப்பட்டுள்ளது. அவையாவன பிலிசைனே, கிமினோ சுப்பெர்மே : அங்கியோசுப்பெர்மே பன்னத் தாவரங்கள் பிலி சைனேயைச் சேர்ந்தவை. சைக்கசு (Cycas ) பைனசு ( Pinus) போன்றவை
கிமினேசுப்பெர்மேயைச் சேர்ந்த வை. வித்து மூடியுளித் தாவரங்களெல்லாம் அங்கியோசுப்பெர்மேயி லடங்கும், கலனுருளையில் [Vascular, Cylinder) இலையிடை வெளி [ Leaf ap ] உள்ள காரணத்தால் . பன்னங்களுக்கும் வித்துத் தாவரங்களுக்குமிடையேயுள்ள தொடர்பு பன்னங்களுக் கும் ஏனைய தெரிடோபீற்றுகளுக்கு மிடையேயுள்ள தொடர்பை விடக் கூடியதெனலாம்.
ரொச்சியப்பிரிவு
1 தலோபீற்ற ( Thall phyta )
அல்கா, பங்கசு, பக்ரீரியா என்பன இவ்விராச்சியப் பிரிவி னுள்ளடங்கும் ஒரு கலத்தாலான நுண்ணங்கிகளிலிருந்து பல கலங்களாலான பெரிய தாவரங்கள் வரை இதிலுள்ளன. போ சணை முறையும் அவற்றில் மாறுபடுகிறது. சில தலோபீற்றக்க ளில் பச்சிலையமும் ஏனைய நிறப்பொருள்களுமுள்ளதால் அவை

- 11 -
தமக்கு வேண்டிய உணவைத் தாமே ஒளித்தொகுப்பு முறையால் " தயாரித்துக் கொள்கின்றன. இவை தற்போசணையுள்ள (Autotr
phic ) தாவ ரங்களென அழைக்கப்படுகின்றன, உ-ம் : அல் காக்கள். சில தலோபீற்றாக்கன் அழுகல்வளரிகளாகவோ ( Sapra
Phy tcs அல்லது ஒட்டுண்ணிகளாகவோ வாழ்கின் றன, பெரும்பாலான பங்கசுக்கள் அழுகும், அல்லது கடக்கும் சேதனவுறுப்புப் பொருள்களிலிருந்து தமதுணவைப் பெறுகின்றன. இனன அழுகல் வளரித் தாவரங்களுக்கு உதாரணங்களாகும். சில பற்றீரியாக்களும் ஒரு சில பங்கசுக்களும் ஒட்டுண்ணிகளாக வுள்ளன. இவை விருந்து வழங்கியிலிருந்து தமதுணவைப் பொறு. சின்றன. அழுகல் வளரிகளும் ஒட்டுண்ணிகளும் ( Parasites | பிற-போசணையுள்ள தாவரங்களென அழைக்கப்படுகின்றன.
புணரிகளையுண்டாக்கும் கலங்கள் மலடான சுவங்களால் சூழப்பட்டிருக்கவில்லை. புணரியை யுண்டாக்கும் கலத்தைச் சுற்றிக் கலச்சுவர் மட்டுபோயுள்ளது. இலிங்கமுறையினப் பெருக்கத்தின் பின் உண்டாகும் துகம் ஒரு சுல்த்தால் ஆனதாகும். நுகம் தடித்த சுவரையுண்டாக்கி நுசுவித்தியாதிச் சிறிது காலத்திற்கு ஓய்வு நிலை யிலிருந்து பின்னரே பிரிவடைகிறது. இவற்றில் முளையம் உண்டா வதில்லை .
இராச்சியப்பிரிவு: 11 எம்பிரியோபீற்
இவ்விராச்சியப் பிரிவு தலோபீற்றவை விட உயர்ந்ததாகும். இதில் அதிக சிக்கலான அமைப்பைக் கொண்ட தாவரங்கள் அடங்கும். இத் தாவரங்களிலே வேர்ப்போலி ( rhizoids | அல்லது வேர் : தண்டு : இலை போன்ற அமைப்புக்களை வேறு படுத்திக் காணமுடியும். ஒரு தலத்தாலான ஓய்வு நிலையிலுள்ள அமைப்புகள் ஒரு பொழுதும் காணமுடியாது. இனப்பெருக்க அங்கங்கள் பல கலத்தாலானதாயும் மலட்டுக்கலங்களால் சூழப் பட்டுமிருக்கும்,
பிரிவு - அல்காக்கள் (Algae)
தலே!Tற்றாவில் மிக முக்கிய பிரிவு அல்காக்கள் ஆகும். பெரும்பாலான அல்காக்கள் நீரில் வாழ்வனவாகும். அவை தன் னீரிலும் கடல் நீரிலும் சதுப்பு நிலங்களிலுள்ள உவர் நீரிலும் காணப்படுகின்றன. கேணிகள், குளங்கள், குட்டைகள் ஆகிய வெற்றி: பச்சை நிறத்தைக் கொடுப்பவை அல்காக்களேயாகும். பெரும்பாலான அல்காக்கள் நீரில் வாழ்வனவாயிருந்தாலும் சில ஈரலிப்பான மண், ஈரமான பாறைகள், பூச்சாடிகள், பழைய சுவர்கள், மரப்பட்டைகள் போன்ற இடங்களிலும் வளரக் காண லாம். எனினும், கடலில் வாழும் அல்காக்களே முழு வளர்ச்சி யடைந்துள்ளன, இவையே கடற் சாதாழை (3பாWeeds

Page 12
என அழைக்கப்படுகின்றன. நன்னீரிலும், சதுப்பு நிலங்களிலுள்ள -. உவர் நீரிலும் வாழும் அல்காக்கள் கடல்வாழ் அல்காக்களைப் போன்று பெரியவையல்ல. உயிர்ச் சுவடுகளாக ( fossils ) பாதுகாக்கப்பட்டுள்ள அல்காக்கள் - சுண்ணாம்பைச் சுரக்கும் கடற் சாதாழைகளும் சிலிக்காவுள்ள ஒடுகளைக் கொண்ட தயற்றங் ( Diatoms ] களுமேயாம். அல்காக்கள் நீரிலே சுயாதீன மாக மிதந்திருக்கக் காணலாம், அல்லது அடிக்கலத்தினுலோ பற்றுறுப்புகளினுலோ ஆதாரப்படையிலே ஒட்டியிருக்கக் காண லாம். சுயாதீனமாக மிதந்திருக்கும் அல்காக்கள் பொதுவாக ஒரு கலத்தாலானதாகவோ அல்லது சமுதாயமாக வாழ்வன வாகவோ லிருக்கும், இவை யெல்லாவற்றையும் ஒருமித்து அலை தாவரம் (அல்லது பீற்றே பிளாந்தன் Phyto - plankton) என அழைப்பர். நன்னீரிலும் கடல் நீரிலும் வாழும் விலங்குகட்கு அலை தாவரங்களே ( Phyto-planktons] அடிப்படை உண வாகும். கரையோரமாகவுள்ள நீரிலும் கடற் பாறைகளிலும் ஒட்டி வாழும் தாவரங்கள் ஆழ் நீர்த்தளவுயிர்த் தாவரம் [ Phytobenthon ) எனப்படும். அநேக அல்காக்கள் ஏனைய அங்கிகளுடன் ஈட்டங்கொண்டு வாழ்கின்றன, இத்தகைய வாழ்வு ஒன்றிய வாழ்வு (Symbiosis) எனப்படும். இதனில் இரு உயிரினங்களுக்குமிடையே நெருங்கிய உடன்பாடொன்றுள்ள இதைக் காணலாம், ஒரு காலத்தாலான பச்சை அல்காக்கள் ( Gree11-algae 1, அல்லது கபில அல்காக்கள் (Brow nalgat) 'ஐதரா" என்னும் சிலெந்தரேற்று விலங்கின் அகத்தோற்படை இழையங்களில் வாழ்கின்றன. இவ் அல்காக்கள் ஒளித்தொகுப்பு முறையால் மாப்பொருளைத் தயாரிக்கின்றன. ஐதராவின் ந்ைதர சன் - கழிவுப் பொருட்களிலிருந்து பெறப்படும் நைதரசனைக் காபன், ஐதரசன் ஒட்சிசனாகிய மூலகங்களுடன் சேர்த்துப் புரதங் களைத் தயாரிக்கின்றன. ஒளித்தொகுப்பின் போது வெளிவிடப் படும் ஒட்சிசன் ஐதராவினால் சுவாசித்தலின்போது உபயோகிக்கப் படுகிறது. சுவாசித்தலின் போதுண்டாகும் காபனீரொட்சைட்டு அல்காவினால் ஒளித்தொகுப்பில் உபயோகிக்கப்படுகிறது.
கட்டமைப்பு. -அல்காக்கள் உருவத்திலும் பருமனிலும் பல வேறுபாடுகளை யுடையன.. துணுக்குக்காட்டியி னூடாகவே பார்க் கக்கூடிய பருமனிலிருந்து பல நூறு அடிகள் நீளமுள்ள சாதாழை வரையிலுமுண்டு. மிகச் சிறிய அல்காக்கள் ஒரு கலத்தாலானவை யாகும். இவற்றுட் சில ஓரிடமாகவே வாழ்ந்தாலும் வேறு சில சவுக்குமுளைகளினடிப்பால் அசைந்து திரிகின்றன. ஒரு சில ஒரு கலத் தாவரங்கள் விழுவிழுப்பான பசைப் பொருளால் ஒன்று சேர்க்கப்பட்டு ஒரு சமுதாயமாக வாழ்கின்றன.
உ. ம். வொல்வொக்ஸ் ;
இவ்வாறான சமுதாயங்களிலுள்ள தனியன்கள் உடற்றொழி லியல் சம்பந்தப்பட்டவரை சுதந்திரமாகவே யுள்ளன. ஒரு படி

' உயர்ந்த நிலையிலுள்ள அல்காக்கள் நீண்ட நூல் போன்ற வடிவ பூரடையனை'. இவை இழையான அல்காக்கள் (Filamentous AlgaE ) எனப்படும். இவ் விழைகள் கிளைகளையுடையனவா சுவோ (உ. ம், கிளாடோபோரா), கிளைகளற்றவையாகவோ (, ம். இசுப்பைரேகைர இருக்கும், ஒவ்வொரு இழையும் ஒன்றே டொன்று புனேக்குமுனை தொடர்பு கொண்ட நீண்ட சுலங்களைக் கொண்டிருக்கும், மேலும் உயர்ந்த நிலையிலுள்ள அல்காக்களில்
தட்டையான விரிந்த பிரிவிலி ( Thallu5 உ.ம். உல்வா ( Ulva ). படைனா ( Padina ) டிக்றியோற்ற - Dictyota , சில ஆதியான அல்காக்கள் விலங்குகளின் கட்டமைப்பை ஒத்துள்ளன. எனவே சுயாதீனமான சில அல்காக்களையும் ஒரு கலத்தாலான விலங்கினங்களையும் பிரித் தறிவது கடினமாகும், செலுலோசுக் கலச்சுவரற்ற அல்காக்கள் சில உள்ளன, (வேறு சிலவற்றில் (குளோரோபில் பச்சிலையம் இல்லாதிருக்கக் கூடும்,
போசணை , முக்கிய அம்சங்களிலே அல்காக்களின் போசணை முறை உயர் தாவரங்களின் போசறோர் முறையைப் போன்றதே. அல்காக்கள் தற்போசணைத் தாவரங்களாகும். அதாவது, அவை காபனீரொட்சைட்டு, நீர், பச்சிலையம் ஆகியவற்றை உபயோ கித்து ஒளியிலிருந்து சக்தியைப் பெற்று ஒElத்தொகுப்பு முறை யால் மாப்பொருளைத் தயாரிக்கின்றன. அவ்காக்களெல்லாவற் றிலும் பச்சிலையம் எனப்படும் பச்சை நிறப்பொருளுண்டு. ஆனால், சுபிலநிற அல்காக்களிலே மஞ்சள் நிறப்பொருளான ஃபுயூகோ சாந்தினும், செந்நிற அல்காக்களில் பீக்கோஎரித்திரின் ( PhyCOErythriா ] " எனப்படும் செந்நிறப் பொருளும் நீலநிற அல்காக்களில் பீக்கோசையனின் ( PhyCOcyanin ] எனப் படும் நீல நிறப்பொருளும் பச்சிலையத்தின் பச்சை நிறத்தை மறைக்கின்றன.
இனப்பெருக்கம்.- அல்காக்களில் பல விதமான இனப்பெ ருக்க முறைகளுண்டு. ஒரு கலத்தாலான அல்காக்கள் பெரும் பாலானவற்றில் கலப்பிரிவு நடைபெற்று ஒவ்வொரு புதுக் கலமும் பிரிந்து செல்வதனுல் இனம் பெருகுகிறது. உ. ம். கிளாமிடொ மோனசு. இழைகளைக் கொண்ட அல்காக்களில் இன்று சிறிய துண்டங்களாக்கப்படுவதால் இனப் பெருக்கம் நடைபெறுகிறது. இது பதிய முறையினப் பெருக்கமாகும். உ. ம், இசுப்பைரோகைரா, இலிங்கமில் முறையினப் பெருக்கமும் இலிங்க முறையினப் பெருக்கம் அல்காக்களில் சாதாரணமாகக் காணக் கூடியதே. கிளாமிடொமோன சுவைப் போன்று அல்காக்களில் ஒரே கலம் பதியத் தொழிலையும் Vegetative function ) இனப் பெருக்கத் தொழிலையும் செய்யக் கூடியதாயுள்ளது. சில அல் காக்களிலே சிறப்பியல்பு பெற்ற சில கலங்களே இனப் பெருக்கத்

Page 13
தில் ஈடுபடுகின்றன .உ. ம். கிளாடோபோரா, இலிங்கமில் முறை யினப் பெருக்கத்தில் புணரிக்கலங்களோ (பாற் கலங்களோ) உண் டாவதில்லை. இலிங்கமில் முறை இனப் பெருக்கம் பல்வேறு விதங்களில் நடைபெறும்.
(1) இயங்குவித்தி (Zoospore | உண்டாதல்: - இயங்கு வித்திகளுக்குச் சுவர் கிடையாது. இவை பிசிர் அல்லது சவுக்கு முளைகளினுதவியால் நீந்தித் திரிகின்றன. சூழ்நிலை சாதக மாகவிருந்து உணவு ஏராளமாகவுள்ள பொழுது ஒரு தாய்க் கலத் திலிருந்து அனேக இயங்கு வித்திகளுண்டாகின்றன. வித்திகளை யுண்டாக்கும் தாய்க்கலம் சாதாரணமானவொரு சுலபமாகவோ அல்லது சிறப்பியல்பு பெற்றேவிருக்கும். சிறப்பியல்பு பெற்ற கலம் வித்திக்கலன் (Sporangium ) எனப்படும். இயங்கு வித்திகள் நேரடியாக முளைத்துப் புதிய தாவரங்களைக் கொடுக்கும். இயங்கு வித்தி, அலையும் வித்தி (PlanOSpore) அல்லது திரளி (
Swarmer
] என்றும் அழைக்கப்படும்,
(2) அலைவில் வித்தி : ( AplanOSpore ]
அவைளில் வித்திகளுக்கு சவுக்கு முளை கள் கிடையா, தாய்க் கலத்தின் சுவரைத் தவிர அலைவில் வித்தியொவ்வொன்றிற்கும் கலச் சுவருண்டு, சாதாரணமாக, ஒரு தாயக்கத்தினுள்ளே ஒரு அலை வில்வித்தியே உண்டாகிறது. எனினும் சில வேளைகளில் ஒன்றிற்கு மேற்பட்ட அலைவில் வித்திகள் உண்டாகக்கூடும் பொதியவளவு நீர் இல்லாத பொழுதே இவை உண்டாகின்றன. அலைவில் வித்தி கள் நேரடியாகவே புதிய தாவரங்களாக வளர்கின்றன.
(3) தன்னுருவ வித்தி ( Autospore
ஒரு அலைவில் வித்தி தாய்க்கலத்தின் உருவத்தையே கொண் டிருந்தால் அது தன்னுருவ வித்தியென அழைக்கப்படும்.
(4) ஓய்வு நிலை வித்தி அல்லது உறங்கும் வித்தி ( Resting
Spare Or Hypnospor: :
சூழ்நிலை பாதகமாகும் காலத்திலே அதாவது கோடை காலத்திலே உறங்கும் வித்திகள் உண்டாக்கப்படுகின்றன. தாய்க் கலத்தினடக்கம் உருண்டு திரண்டு தன்னைச் சுற்றி கைற்றினாலான ( Chitin) தடித்த சுவரைச் சுரக்கின்றது. இந் நிலையில் வித்தி பாதகமான சூழ் நிலையைக் கடக்கிறது. பின்னர் உசித மான சூழ்நிலை வரும் பொழுது உறங்கும் வித்தி நேரடியாகவே ஒரு தாவரமாக வளர்கிறது.

14
- (5) அசைவிலி (
AkinetE 1 ] :
அசைவிலியின் சுவர் மிகத் தடிப்பாயிருப்பதுடன் அதிக வளவு உணவுச் சேமிப்பையும் கொண்டுள்ளது. முதலுருவத்னதச் சுற்றியுள்ள சுவர்ப்படைகள் தாய்க்காலச் சுவருடன் சேர்ந்துள்ளன. அசைளிலியை மாறுபட்ட இயங்கு வித்தியென்றோ அல்லது இயங்கு வித்திகளுண்டாவதற்கான ஆயத்த நிலைகளிலொன்றென்றே கருத முடியாது. ஒரு பதியக் கலம் நேரடியாக வேறுபாடடைந்து அனசவிலியாகிறது. பாதகமான சூழ் நிலைகளின் போது அழிந்து போகாவண்ணம் இருப்பதற்கு இது ஒரு சிறந்த முறையாக விளங்குகிறது. சாதகமான சூழ்நிலை வரும் பொழுது அசை விளிகள் நேரடியாகப் புதிய தாவரங்களாக விருத்தியடையக் கூடும், அல்லது அநேக எண் ணிக்கையில் இயங்கு வித்திகளை யுண்டாக்க, அவை கவசமாகவுள்ள தடித்த சுவரிலிருந்து வெளி
வந்து வளர்ச்சியடையும்.
இலிங்க முறையினப் பெருக்கம் :
இலிங்க முறையினப் பெருக்கத்தின் போது புன்ணரிக் கலங் களிலிருந்து ( Gametingia ) புணரிகள் (Gametes | அல்லது பாற் கலங்கள் ( SEXCells] உண்டாகி, அவை புணரிச் சேர்க்கை யடைகின்றன. புணரிகள் சவுக்கு முளைகளைக் கொண்டிருந்தால் அவை அலையும் புணரிகள் ( Platiogarmetes | என்றும், சவுக்கு முளைகள் அ ற் றி ரு த் தா ல் அட்லியில், புணரிகள் (Aplario gametes
| என்றும் அழைக்கப்படும். புணரிச் சேர்க்கை (
Fuision1 ) பின்வரும் ஒரு முறையில் நடைபெறக்கூடும்.
(1) ஓத்த புணரிகளின் சேர்க்கை Isogamy
சேர்க்கை யடையும் புணரிகள் எவ்வகையிலும் ஒத்ததா யிருந்தால், அதாவது உருவத்திலும் ( Shape | பரும னிலும் (Size 1, செயலிலும் ஒத்திருந்தால், அவை ஒத்த புணரிகளெனப்படும். இப்புணரிச் சேர்க்கை இணைதல் எனவும் அழைக்கப்படுவதுண்டு. சேர்க்கையின் பின் உண்டாவது நுக வித்தி = IyTOSpgre
1 உ, ம், கிளாமிடொமோனசு இனங்கள்.
[2] ஒவ்வாப் புணரிகளின் சேர்க்கை AnisogamT ] :
சேர்க்கை யடையும் புணரிகள் தோற்றத்தில் ஒத்திருந்தும், பருமனில் வேறுபட்டுமிருந்தால் அவை ஒவ்வாப் புணரிகளெனப் படும், சிறிய புணரிகள் நுண் புணரிகள் அல்லது ஆண் புணரிக னென்றும் பெரிய புணரிகள் மாபுணரிகள் அல்லது பெண் புணரி

Page 14
16
கள் என்றும் அழைக்கப்படும். இவற்றின் சேர்க்கையால் உண்டா - - வது நுகவித்தியாகும். உ. ம். கிளாமிடொமோனசு இனங்கள்.
(3) முட்டைப் புணரிச் சேர்க்கை (Qugamy
சேர்க்கையடையும் புணரிகள் பருமனிலும் செயலிலும் மாறு பட்டிருந்தால் அவற்றுள் சிறிய அசைவுள்ள புணரி நுண் புணரி அல்லது விந்துப்பொலி என்றும் AntherGroid1, பெரிய அசைவற்ற புணரி பெண் புணரி அல்லது முட்டைப் புணரி ( Oosphere] எனவும் அழைக்கப்படும். இவ்வாறான சேர்க் கை முட்டைப் புணரிச் சேர்க்கை யெனப்படும் சேர்க்கையின் பின் உண்டாவது முட்டைவித்தி - பிபspore | யாகும்.
நுகவித்தி அல்லது முட்டைவித்தி நேரடியாகவே புதிய பதியக் கலங்களாக முளைக்கக்கூடும். அல்லது அவை சிறிது காலத் திற்கு ஓய்வு நிலையிலிருந்து அநேக இயங்குவித்திகளை யுண்டாக்க, அவை விடுபட்டு புதிய தாவரங்களாக முளைக்கக்கூடும். ஒரு தாவரத்திலிருந்துண்டான புணரிகள் சேர்க்கையனடைந்தால் அத் தாவரம் ஓரில் சமுள்ள ( Monoccious 1 அல்லது ஓரினப் பிரிவிலியான ( Homothallic ) என அழைக்கப்படுகிறது. வெவ்வேறு பெற்றோருக்குரிய கலங்களிலிருந்து உண்டாகும் புணரி சுள் சேர்க்கையடையும் பொழுது அத்தாவரங்கள் ஈரில்லமுள்ள தாவரம் ( Dicious " அல்லது பல்லினப் பிரிவிலியான தாவரம் ( Heterothallic) என அழைக்கப்படும்.
அல்காக்களின் பாகுபாடு
கலங்களிலுள்ள நிறப்பொருள்கள், உணவுச் சேமிப்புப் பொருள்களின் தன்மை, இயக்கமுள்ள கலங்களிற் காணப்படும் சவுக்கு முளைகளின் நிபை, ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டே பொதுவாக அல்காக்கள் பாகுபடுத்தப்படுகின்றன. இவ்வடிப் படையில் அல்காக்கள் பத்து வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அவையாவன :-
1. குளோரோபீசே (Chlorophyceae) 1. பசிவாரியோபிசே (Bacillatiophyceae) 3,
மிட்சோபீச (Myxophyceae) அல்லது சயனே பசே
(Cyanophy ceae) பியோபீசே (PlhaeophyCEae] 5. ரேடோபீசே (Rhodophyceae)
சாந்தோபசே (Karnithophyceae)
கிறிப்ரோபிசே (Cryptophyceae) 8. கிறிசோட்சே (Chrysophyceae பி.
டையனோபீசே (Dianophyceae) 10. நிழற்றோபீசே (Nematophyceat)
பு

வகுப்பு 1 - குளோரோபீசே
இதில் ஏறத்தாழ 35(1) சாதிகளும் 5 700 இனங்களும் உள்ளன. அவ பச்சையல்காக்களாகும், பெரும்பாலான இனங்கள் நன்னீரிலேயே காணப்பட்டாலும் ஒருசில இனங்கள் கடலிலும், உவர் நீரிலும், ஈரலிப்பான இடங்களிலும் காணப்படு கின்றன. நுணுக்குக் காட்டியினுாடாக மட்டுமே பார்க்கக்கூடிய உருவத்திலிருந்து மிகப் பெரிய உருவங்களைக் கொண்ட அல் காக்கள் வரை உள்ளன. ஒருகல்த்தாலான, சமுதாயமாக வாழ் கின் ற, இமையுருவான, பிரிவிலிப் போலியான Thalloid இனங்கள் காணப்படுகின்றன. சில இனங்களிலே பிரிவிலிப்போலி யைப் படிந்து கிடக்கும் தொகுதி (Prostrate-system நிமிர்ந்த தொகுதி " Erect-1ystem ] என இரு தொகுதி களாகப் பிரிக்கலாம். இவ்வாறான தாவர இனங்களிலிருந்தே உயர் தாவரங்கள் கூர்ப்படைந்துள்ளதெனக் கருதப்படுகிறது.
கலச்சுவர் செ லுவோசாஷலானது. அத்துடன் பெத்தின் என் னும் பொருளும் சேர்ந்துள்ளது. பல இனங்கள் தம்மைச் சுற்றிச் சீதத்தை உண்டாக்கிக் கொள்கின்றன. அயன மண்டலப் பிர தேசக் கடலில் (Tropical Sea) வாழும் சில இனங் சுளிலே கலச்சுவரில் சுண்ணம்பு படிந்திருக்கக் காணலாம். சாதா ரணமாக ஒரு கலத்திலே ஒரு மையவெற்றிடம் காணப்படும், ஆனால் சில வேளைகளில் குழிய முதலுருப் பட்டிகைகள் இவ்வெற் றிடத்தை நிறைவற்ற முறையில் பிரிக்கக்கூடும். ஆதிகால இனங் களில் இரு சுருங்கத்தக்க சிறு வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இவை கழித்தலிலும் சுவாசித்தலிலும் பங்கெடுக்கிறதெனக் கரு தப்படுகிறது. இயக்கமுள்ள தாவரங்களிலே சவுக்கு முளைகளுண்டு. சிலவற்றில் கண் புள்ளரிகளுமுண்டு. உ. ம். " கிளாமிடொயோனசு குளோரோபீசேயைச் சேர்ந்த அல்காக்களிலே நிறந்தாங்கிசுளில் பச்சிலையம் அல்லது குளோரோபில் எனப்படும் பச்சை நிறப் பொருள் உள்ளது, பச்சிலையத்தில் குளோரோபில் a, b, கரற்வீன், சாந்தோபில்Xanthophyll) என்பனவுள்ளன, இவற்றின் விகிதம் உயர் தாவரங்களிலுள்ளதைப் போன்றதே. ஆகையால் உயர் தாவரங்கள் குளோரோபீசேயிலிருந்து - கூர்ப்படைந்ததெனக் கொள்வதற்கு இது ஒரு சான்றாகும். ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலோ வித்துருமணிகள் காணப்படும். இவை புரதத்தாலானவையாகும். இவற்றைச் சுற்றி மாப்பொ ருள் சேமித்து வைக்கப்படுகிறது.
ஒரு கலத்தாலான தாவரங்களிலே முதலில் கலப்பிரிவு நடை பெற்று, பின்னர் அக்கலங்கள் (வேறாகப் பிரிவதால் இனப்பெருக் கம் நடைபெறுகிறது. பலகலத்தாலான தாவரங்களிலே இழை துண்டுகளாக்கப் படுவதால் பதிய முறையினப் பெருக்கம் நடை பெறுகிறது, இது இயற்கையாகவோ அல்லது தற்செயலாகவோ நடைபெறலாம்., இயங்கு வித்திகள் ( ZoospOTES ), அலை
1- 2

Page 15
11
வில் வித்திகள் AplanOSports
1, உறங்கும் வித்திகள் - HypnospOTE31, அல்லது அசைளிளிகள் fAlirctcS உண்டாவதால் இலிங்கமில் முறை இனப்பெருக்கம் நடை பெறுகிறது. புனாரிகள் உண்டாகி, அவை சேர்க்கையன்ட வதால் இலிங்க முறையினப் பெருக்கம் நடைபெறுகிறது. புணரி கள் ஒத்த புணரிகளாகவோ, ஒவ்வாப் புணரிகளாகவோ அல்6ல் து முட்டைப் புணரி, விந்துப்போலி என வித்தியாசப்படுத்திக்கொள் ளக் கூடியனவாகவோ இருக்கும். குளோரோபீசே ஒன்பது வருணங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
வருணம் 1. வொல்வெர்காலேசு ( Volvognles |
இவ்வருணத்திலடங்கு மினங்கள் நீரில் வாழும் ஆதிகாலத் தாவரங்களாகும். இவை சாதாரணமாக நன்னீரிலேயே காணப் படுகின்றன. நைதரசன் சேர்வைகளுள்ள நீரிலே மிகச் செழிப்பா ச
வளர்கின்றன, பெரும்பாலானவை ஒரு கலத்தாலான தாவரங் கனே யாம். இவை தனித்தோ அல்லது பல கலங்கள் சேர்ந்த வொரு சமுதாயமாகவோ காணப்படும். ஒரு சமுதாயத்திலே ( LoEndhium pr Colony விழவிழுப்பான பசைப்பொருளால் பல ஒரு கலத் தாவரங்கள் ஒன்று சேர்க்கப்பட்டிருந்தாலும், கடற்றொழிலியல் சம்பந்தப்பட்ட வரையில் ஒவ்வொரு தனியன் களும் தனித்தியங்கக் கூடியன. பதியக் கலங்கள் ( Wegtative
CElls] சவுக்கு முளைகளைக் கொண்டமையால் இயக்க முள்ளனவாகும், இயங்கு வித்திகளுண்டாவதாலோ, மகட் சமு தாயங்களுண்டாவதாலோ இலிங்கமில் - முறையினப் பெருக் கம் நடைபெறுகிறது. இலிங்க முறையினப் பெருக்கத்தின்போது ஒத்த புணரிகள், ஒவ்வாப் புணாரிகள், முட்டைப் புணரிகள், விந்துப் போலிகள் ஆகியவை உண்டாகின்றன.
கிளாமிடொமோனசு
கிளாமிடொமோனசு என்னும் சாதியிலே ஏறத்தாழ 325 இனங்கள் உண்டு. கிளாமிடொமோனசு சுயாதீனமாக நீந்தித் திரியும் ஒரு கலத்தாலான பச்சைநிற அல்காவாகும் (Algal, இது நிரந்தரமான சமுதாயங்களாக வசிப்பதில்லை, சாதாரண மாகக் குளம் குட்டைகளிலும் ஈரலிப்பான் மண்ணிலும் இது காணப்படுகிறது, சேதனவுறுப்புப் பொருட்கள் அழுகுவதால் ஏற் படும் அமோனியாச் சேர்வுப் பொருள்களைப் பெருமளவிற் கொண் டுள்ள ஆடு, மாடுகளின் தொழுவங்களின் அருகாமையிலுள்ள நீர்த் தேக்கங்களிலே அதிக அளவில் வளர்கின்றன .. கிளாமிடொ மோனசுவும் அதைப்போன்ற வேறு பச்சை நிற அல்காக்களும் மிகுதியாக வாழ்வதனாலேயே சில குளம் குட்டைகளிலுள்ள நீர் பச்சை நிறமாகத் தோன்றுகின்றது. துணுக்குக் காட்டியினூடா கப் பார்க்கும் பொழுது சுயாதீனமாக நீந்தித்திரியும் கிளாமிடொ மோன சை ஒரு புரோற்றோசோவாவென எண்ணத் தோன்றும்.

சவுக்குமுள்
அடிச்சிறுமணரி
சுருங்கத்தக்க
புன்வெற்றிடம்
கண் புள்ளி
குழிய முதலுரு
கறு
பச்சையாகுமணி
வித்துருமணி
சுலச் சுவர்
படம் 1. கிளாமிடொமோனசு

Page 16
கல்ச்சுவர்
நிறப்பொருள் கிண்ணம் ஓளியுணர்வுள்ள பொருள்
கண்புள்ளி அமைப்பு
வலயுருவான
பச்சயங்கமணி பச் கசயவுருமணி
சி. மியூசிககாலா சி. நிறற்குலா
படம் 2. மாறுபட்ட பச் சையவுருமணிகள் கட்டமைப்பு :-
பதியக்கலம் வளர்ச்சிக்குரிய சு லம்) பொதுவாக கோள் வுருவாகவோ அல்லது முட்டை வடிவமாகவோவிருக்கும், அது ஏறத்தாழ 0.02 மி.மீ., விட்டமுடையதாகும்.பேரிக் காய் உருவான சுனாமிடொமோனசு இனங்களும் உள்ளன, மத லுருவைச் சுற்றி, அத்துடன் ஒட்டிய நிலையில் எப்பொழுதும் ஒரு செலுலோசாவான கலச்சுவர் காணப்படும். பெரும்பாலும் கலத் தின் ஒரு பகுதியால், சுலச்சுவர் தடித்து நிறமற்ற ஒர் அலகு உண்டாகிறது. கினாமிடொமோனசு முட்டையுருவாக ளிருந் தால் அலகு ஒடுங்கிய முனையிலேயே காணப்படும். அலகுள்ள முனையே முன்முனையெனக் கொள்ளப்படுகிறது. சில இனங்களிலே செலுலோசுப்படைக்கு வெளியே "பெத்தின் " f Pectin என்னும் பொருளால் ஆக்கப்பட்ட விழுவிழுப்பான மடலொன் றுண்டு. கலச்சுவரினுள் காணப்படும் குழிய முதலுரு தாவரக் கலத்தின் முன்முணையிலே சுவச்சுவரினுாடாக சவுக்குப்போன்ற அமை ப்பில் வெளிவருகின்றது, இவை சவுக்குமுள என அழைக்கப்படும், கிளாமிடொமோனசுவில் இரு சவுக்குமுளைகள் உள்ளன. சவுக்கு முளைகள் பின்பக்கமாக விரைவாக அடிப்பதன் மூலம் தாவரத்னத முன்னோக்கி இழுக்கின்றன. அதே வேளையில் தாவரம் தனது நீள்பக்க அச்சில் சுழல்கிறது. ஒவ்வொரு சவுக்குப்பாளயினடியிலும் அடிச்சிறுமணி (
aேsalgalule | யொன்றுள்ளது. இது இமையடிமணி
Elepheroplast 1 எனவும் அழைக் கப்படும், இரு சவுக்கு முப்ளகளினதும் இமையடிமணிகள் மிக நெருக்கமாகவுள்ளன, அவை பிரண்டையும் தொடுக்கும் குறுக்கு நர்ே பராடெஸ்மோஸ் (
Paradesmoso
I எனப்படும்.

ஆனால் கருத்துப்பகின்றன. ஆகும் ஒட்டு வெற்றி
கின் இவ களின் போது அதாவது வ
நீள்பக்கமாகச் செல்லும் வேகுருநார் (-
Rhiozplast குறுக்கு நாரை மைய மூர்த்தத்துடன் ( Centrosoா. தொடுக்கிறது. இமையடிமணிகள் நரம்பியக்க உபகரணமாகத்
NEuromptor apparatus
| தொழில் படுகின்றன. கிளா மிடொமோனசுவிலே ஒவ்வொரு இமையடி மணிக்கும் கீழாக ஒரு சுருங்கத்தக்க சிறு வெற்றிடமுண்டு. இரு சுருங்கத்தக்க வெற்றிடங்களும் மெதுவாக வீங்கி சடுதியாகச் சுருங்குகின்றன. ஆனால் அவை மாறி மாறியே சுருங்குகின்றன, சில விஞ்ஞானி களின் கருத்துப்படி சுருங்கத்தக்க சிறு வெற்றிடங்கள் கழித்தற் தொழிலைச் செய்கின்றன. அதாவது', தாவரத்தின் வாழ்க்கைச் செய்முறைகளின் போதுண்டாகும் நைதரசன் கழிவுப் பொருள் கள் இவ் வெற்றிடங்களுள் சேகரிக்கப்பட்டு வெளியேற்றப்படு கின்றன, ஆனுல் வெறு சில விஞ்ஞானிகள் இவ் வெற்றிடங்கள் சுவாசித்தலைச் செய்கின்றனவெனவும், வேறு சிலர் இவை கழித் தல், சுவாசித்தல் ஆகிய இரு தொழில்களையும் புரிகின்றனவென வும் கூறுகின்றனர். கிளாமிடொமோனசுக் கவத்தின் முன்முனைக் கருகாமையில் ஒரு சிறிய செந்நிறமான அல்லது செம்மஞ்சள் நிறமான புள்ளி உள்ளது, இப்புள்ளி கண்-புள்ளி எனப்படும், "மாஸ்ற்' (Mast ) என்னும் விஞ்ஞானியின் கூற்றுப்படி கண்புள்ளியானது நிறப் பொருட்களாலான தட்டிலிருக்கும் வளை விலேயுன்ன ஒரு குவிந்த வில்லையாகும். இது பளிங்குப் பண்புள்ள தாயும் ஒளிக்கு உணர்ச்சியுடைய தாயுமுள்ளது. நிறப் பொருட் களக் கொண்ட பகுதியின் குழிவான பரப்பில் ஏற்படும் தேர்வுக் குரிய தெறிப்புகளினாலேயே கண்புள்ளிகளில் ஒளியிரசனைக் குரிய தாண்டற்பேறுகள் உண்டாகின்றனவெனக் கருதப்படுகிறது. கிளா மிடொமோனசுகள் எப்பொழுதும் ஒளியை நோக்கியே செல் சின்றன, ஆனால் தனி மிகப் பிரகாசமாக விருந்தால் அவை எதிர்ப் புறமாகச் செல்கின்றன. பெரும்பாலான கிளாமிடொமோனசு இனங்களிலே குழிய முதலுருவின் பிற்பகுதியில் ஒரு பெரிய கிண்ணை வடிவான பச்சைய வுருவம் உள்ளது. எனினும், சில இனங்களிலே பச்சைய வுருவம் வேறு வடிவங்வளிலே யும் காணப் படுகிறது. உ. ம். : கி. றெற்றிகுலாவில் பச்சையவுருவம் பின்னல் வடிவானது. கி. மியூசிகோலாவில் பச்சையவுருவம் ஒரு பக்க மாகவுள்ளது.
பச்சைய வுருவத்தின் தடித்த அடி ப் பா சு த் தி ல் கோளவடிவான வித்துருமணியொன்று / PNTEthaid | காணப்படும். பிவித்துருமணி புரதத்தாலானதாகும், இவற்றைச் சுற்றி மாப்பொருள் சேகரித்து வைக்கப்படுகிறது. வித்துருமணி கள் இல்லாத இனங்களும் ஒன்றிற்கு மேற்பட்ட வித்துருமணி காக் கொண்ட இனங்களும் கிளாமீடொமோனசுவில் உள்ளன. கினாமிடொமோனசு காபனீரொட்சைட்டை நீரிலிருந்து பெற்று பச்சையத்தின் உதவியில் ஒளித்தொகுப்பு முறையால் தனக்கு வேண்டிய உணவைத் தானே தயாரித்துக் கொள்கிறது. எனவே இது ஒரு தற்போசணைத் தாவரமாகும், வித்துருமணிகளின் தொரில் என்னவென்று சரிவரத் தெரியவில்லை. ஆனால் அது மாப் பொருள் ஆக்கத்திலும் சேமிப்பிலும் பங்கு கொள்வதா யிருக்கலா

Page 17
மெனக் கருதப்படுகிறது. சிண்ணவுருவான பச்சையவுருளின் குழி யிலே ஒரு கரு உண்டு, இது குழிய முதலுருப் பட்டிகைகளினால் ஒரு நிலையில் தொங்கப்பட்டுள்ளது. கரு கலத்தின் எல்லாத் தொழில்களையும் தனதாட்சிக்குள் வைத்திருக்கிறது. இனப்பெருக்கம் :
கிளாமிடொமோனசுவில் இலிங்கமில் முறையினப்பெருக்க மும் இலிங்கமுறையினப் பெருக்கமும் காணப்படுகிறது.
இயங்குவித்திகள் படம் 3. இயங்குவித்திகள் உண்டாதல்
இலிங்கமில் முறையினப்பெருக்கம் (1) இயங்குவித்தி உண்டாதல் (Zoospore formation) :-
உசிதமான சூழ்நிலையில் கிளாமிடொமோனசு இயங்குவித்தி களை யுண்டாக்குவதன் மூலம் இலிங்கமில் முறையில் இனத்தைப் பெருக்குகிறது. கிளாமிடொமோனசுளின் பதியக்கலம் வளர்ச்சி யடைந்த கலம்) சவுக்குமுளைகளை உள்ளிழுத்து அசையா நிலையை யடைகிறது. பின்னர் முதலுருவம் சுருங்கி கலச் சுவரிலிருந்து விடுபட்டு இரு சமகூறுகளாகப் பிரிவடைகிறது. பிரிவடைந்த ஓவ்வொரு பாதியிலும் தாய்க்கலத்திலிருந்த அமைப்புகளின் . அதா வது கரு, குழிய முதலுரு, பச்சையவுரு ஆகியவற்றின், அரைப் பங்கு காணப்படும், பிரிவு தொடர்ந்து இருமுறை, மூன்று முறை அல்லது நாலுமுறை நடைபெறுவதால் 4, 8 அல்லது 16 முத லுருவங்கள் உண்டாகலாம். ஒவ்வொரு முதலுருவத்திலும் இரு சவுக்கு முளைகள் உண்டாகி முதலுருவங்கள் இயங்குவித்திகளாசி ன்றன. தாய்க் காலத்தினுள் இருக்கும் பொழுதே சாதாரணமாகக் கலச்சுவர் உண்டாகிறது. தாய்க்கலச் சுவர் செயலாற்றினாக மாறிக் கரைவதனாலோ அல்லது தாய்க்கலச் சுவர் வெடிப்பதனாலோ மகட் கலங்கள் வெளிவிடப்படுகின்றன. இவை பெரிதாகி நிறை வுடலியான பதியக் கலங்களாகின்றன. இம் முறையால் ஒரு

13
- வாரத்தில் ஒரு கிளாமிடொமோனசுவிலிருந்து இருபது இலட்சம் கிளாமிடொமோனசுகள் விருத்தி செய்யப்படலாம், எனவே இது ஒரு மிக விரைவான இனப்பெருக்க முறையாகும்.
(2) அஃலவில் வித்தி உண்டாதல் (Aplanosport formation) வறட்சி காலத்தில் வெகுசில இனங்களில் மட்டும் பதியக்கலத்தின் முதலுருவம் உருண்டு திரண்டு அலைவில் வித்தியாக மாறுகிறதென உயிரியல்வல்லுனர் வில்லி (Wille ) அவர்கள் கூறி யுள்ளார். சாதகமான நிலை வந்தவுடன் அலைவில் வித்திகள் நேரடி யாக வளர்ச்சியடையலாம் அல்லது பிரிவடைந்து இயங்கு வித்தி களைக் கொடுக்கலாம்.
படம் 4 பல்மெலா நிலை
(3) பல்மெலா நிலை (Palmella stage ):-
குளம் குட்டைகள் நீரற்றுப் போகும் சமயத்தில் கிளாமிடொ மோனசு ஓய்வு நிலையை யடைகிறது. அப்பொழுது இயக்க வித்தி கள் உண்டாகும் பொழுது பிரிவடைவது போல் முதலுருவம் பிரிவடைகிறது, ஆனால் பிரிந்த மகட்கலங்கள் சவுக்குழுளைகளை உண்டாக்குவதில்லை. அவற்றின் சுவர்களும் சீதத்தன்மையடை கின்றன, மகட்கலங்கள் பருமனடைந்து, மேலும் பிரிவுகள் ஏற் பட்டு அநேக மகட்கலங்கள் உண்டாகின்றன. எனவே இயக்கமற்ற

Page 18
24 அநேக மகட்கலங்கள் ஒரு பெரிய விழவிழுப்பான திணிவிலே யுள்ளதைக் காணலாம். இந்நிலையே பல்மெலா நிலையாகும். பின் னர் உசிதமான சூழ்நிலை யேற்பட்டவுடன் மகட் கலங்களிலே சவுக்கு முளைகள் முளைத்து விழுவியப்பான திணிவிலிருந்து வெளி யேறி கலச்சுவர் உண்டாகி சாதாரண பதியக் கலங்களாகத் தொழில்படுகின்றன. சில வேளைகளில் பல்மெலாநிலைக் கலங்கள் தடித்த சுவரை யுண்டாக்கி உறங்கும் வித்திகளாகவும் மாறுவ துண்டு. ( IIypா08poES
புணரியுண்டாதல் ஒத்தபுணரிசள்
புணரும் ஓத்தபுணரிகள்
முளைத்து விழுவ... - வுடன் மகாகும். பின்
புணரும் ஓவ்பாப்புண ரிகள் நுகவித்தி படம் 5. இலிங்கமுறையினப்பெருக்கம் இலிங்க முறையினப் பெருக்கம்.-சூழ் நிலை வாழ்க்கைக்கு உகந்ததல்லாமல் போகும் பொழுது, முக்கியமாக போசணைக் குரிய உப்புகள் இல்லாமற் போகும் போது கிளா டொமோனசு இலிங்கமுறையில் இனப் பெருக்கம் செய்கிறது, கிளாமிடொ மோனசுவில் பல்லினப் பிரிவிலியான இ ன ங் க ளு ம் Helerotballic species ] ஓரினப் பிரிவிலியான (Homothallicspecies) இனங்களும் காணப்படுகின்றன. கிளாமிடொ மோனசுவின் பல்வேறு இனங்களிலும் ஒத்த புணரியியல்புள்ள, ஒவ்வாப் புணரியியல்புள்ள, முட்டைப் புணரிக்குரிய வகைகள் காணப்படுகின்றன. (அ) ஒத்த புணரியியல்பு கி, முபாரியான விலும் ( C debaryania1. கி. இரின்ஹாடியிலும் ( C. Reinhardi 1 இயக்க வித்திகளுண்டாகும் போது ஏற் பட்ட மாதிரியே ஒத்த புணரிகளுண்டாகும் போதும் பிரிவுசு ளேற்படுகின்றன. ஆனால் இங்கே வழமையாகப் பரிரிவு கூடிய அளவில் ஏற்படுவதால் எட்டு முதல் அறுபத்தினாலு ஒத்த புணரி கள் உண்டாகின்றன. ஒத்த புனாரிகளெல்லாம் கலச்சுவரற்று உருவத்தில் சிறியவையாயிருப்பதைத் தவிர ஏனைய அமைப்பு களில் தாய்க் கலத்தை யொத்துள்ளன. இவை விரைவில் வெளி விடப்பட்டு நீரிலே நிந்தித் திரிகின்றன, பின்னர் அவை சோடி சேர்ந்து முன் முனைப் பகுதியில் புணரிச் சேர்க்கை யடைந்து நுகங்களாசின்றன, ( Lygote] நான்கு சவுக்கு முளை காக் கொண்ட நுகங்கள் சிறிது காலத்திற்கு நீந்தித் திரிந்து, பின்னர் ஓரிடத்தையடைந்து சவுக்கு முட்களை உள்ளிழுக்

25
சேர்ந்த சாந்த கிளெல்லர்.
கின்றன. ஆகவே ஒரு நுகத்திலிருந்து இப்பொழுது ஒரு நுகவித்தி ( Zygospora) உண்டாகிறது. நுகவித்தி கோளவடிவமா கித் தன்னைச் சுற்றி ஒரு தடித்த கவசத்தைச் சுரக்கிறது. எட்ண சேகரித்து வைக்கப்படுவதால் அதன் நிறம் செந்நிறமாகவோ, செம் மஞ்சள் நிறமாகவோ மாறுகிறது. இந்நிலையில் நுகர்த்தி மிக உசிதமற்ற நிலையையும் அதிக காலத்திற்குச் சமாளிக்கும். அது ஒரு கெடுதிக்கும் உள்ளாகாமல் காற்றிலே கொண்டு செல் லப்படலாம், குளம் அல்லது குட்டைகளில் பதிர் வரும் வரை உலர்ந்த சேற்றிலே பாதுகாப்பாக இருக்கமுடியும். ஒத்த புணரி களை யுண்டாக்கு மினங்களிற் கூட வெவ்வேறு தாய்க்கலங்களி லிருந்துண்டாகும் புணரிகளே சேர்க்கை யடைகின்றன. எனவே இவற்றில் ஈரில்ல நிலைமை - f Diocious condition அல்லது பல்லினப் பிரிவிலி யுண்மை [ Heterothalism காணப்படுகிறது. + குலவகை (+ Strain ) யைச் சேர்ந்த தாய்க் கலங்களிலிருந்து + புணரிகளும், - குலவகை யைச் சேர்ந்த தாய்க்கலங்களிலிருந்து - புணரிகளும் உண்டா கின்றன. புணரிகளெல்லாம் பரிமாணம் உருவம் நடத்தை ஆகிய வற்றில் ஒரே மாதிரியுள்ளதால் ஆண்புணரி, பெண்புன்னரி யென வித்தியாசப்படுத்த முடியாது. ஆனால் நேர், எதிர்புணரிகளிலிருந்து 'சுரக்கப்படும் இரசாயனப் பொருளின் தன்மையில் வேறுபாடுள் ள தெனத் தெரிகிறது. இச் சுரப்புகளின் தன்மையாலேயே இர சாயனபிரசனைக்கு ரிய அசைவுகள் ஏற்பட்டுப் புணரிகள் புணரிச் சேர்க்கைக்காகச் சோடி சேருகின்றன, கிளாமிடொமோனசு இய கமீரொசுவில் தாய்க்கலங்களே பதியக்கவங்சுள் புணரிகனாகத் தொழிற் படுகின்றன. புணரிகள் ஒன்று சேருவதற்கு முன்னால் முதலுருவம் கலச்சுவரிலிருந்து வெளியேறுவ துமில்க்., சேர்க்கை யின்போது புணரிகள் ஒன்றன்மேலொன்று காணப்பட்டாலும் முன்முனையிலேயே புணரிச் சேர்க்கை நடைபெறுகிறது. கலச் சுவரை இழக்கும் இனங்களிலே புணரிகள் பக்கவாட்டிலேயே புணர்ந்து நான்கு சவுக்கு முளைகளைக் கொண்ட நுகத்தைக் கொடுக்கின்றன.
வற்றின் பணரிககாய்க்கலக்கத்து +
(ஆ) ஒவ்வாப் புணரி யியல்பு.---கிளாமிடொமோனசு பிற வுனை (C. Braபாii), கி. மொனோடைனா ( C. Monddina ) ஆகியவற்றில் புணரிகளிலுள்ள வித்தியாசம் உடற் றொழிலியலில் மட்டுமல்லாது, உருவத்திலும் காணப்படுகிறது. பெரிதாகவுள்ள புணரி பெண் புணரியென்றும் சிறியது ஆண் புணரியென்றும் கொள்ளப்படுகிறது. ஆனால் இரண்டும் இயக்க முள்ளவை. அதாவது சவுக்கு முளைகளினுதவியால் நீந்தக் கூடி யன். ஒரு தாய்க்கலத்திலிருந்து 2, அல்லது 4 பெண் புணரிகள் (அல்லது மாபுணரிகள் மட்டுமே உண்டாகினாலும் ஒரு நாய்க் கலத்திலிருந்து 8 அல்லது 16 ஆண் புணரிகள் (அல்லது துண் புணரிகள் (Microgametes] உண்டாகின்றன. இவ் வினங்களிலே புணரிகளுக்குக் கலச்சுவருண்டு, சோடி சேருதலின் போது ஆண் புணரியினுடைய உள்ளடக்கம் பெண் புணரியினுட்

Page 19
46
சென்று புணர்ச்சிச் சேர்க்கை யடைந்து நுகவித்தியுண்டாகிறது. இம் முறையிலான புணர்ச்சிச் சேர்க்கை சுருக்கட்டல் ( Fertili1ation ) எனப்படும். ஒத்த புணரிகளின் சேர்க்கை இணை தல் என்றே அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
(சி) முட்டைப் புணரிக்குரிய இயல்பு ஏogamy ]
கிளாமிடொமோனசு கொக்கிபெற - C. Coccifera 1. கி. பாகமம் ( 1,00gamum ) ஆகிய இனங்களிலே ஆண்கலம் [பதியக்கலம் பிரிவடைந்து 3,1 அல்லது 3 ! இரு சவுக்குமுளகளைக் கொண்ட சிறிய நுண் புணரிகளை (ஆண் புணரி களை உண்டாக்குகிறது. இவை விந்துப்போலி f Antherozoid ] எனவும் அழைக்கப்படுவதுண்டு. சவுக்கு முட்டாகளற்ற பெரிய கோளவுருவான முட்டை அல்லது பெண் புரியுடன் ஒரு நுண்புணரி புணர்ச்சியடைந்து ஒரு நுகம்
உண்டாகிறது.
முதிர்ந்த துசும்
துகம்
இளைப்பாறும் நுகம்
இயங்கு வித்திகள் படம் 6, நுசுவித்தி முளைத்தல்
மேலே விவரிக்கப்பட்ட மூன்று விதமான இலிங்க முறை யினப் பெருக்கத்தின் போதும் நுகம் உண்டாகி அது ஓய்வு நிலையை யடைகிறது. ஓய்வெடுக்கும் நுகம் தன்னைச் சுற்றி ஒரு தடித்த கவசத்தைச் சுரக்கிறது.
இக் கவசத்தின் மேற்பரப்பு ஒப்பரவானதாகவோ, முட்க ளுடையதாகவோ இருக்கும், பெரும்பாலான இனங்களிலே ஒய்வு நிலையிலுள்ள நுகம் முன்பிருந்ததை விட நான்கைந்து மடங்கு விட்டத்தைக் கொண்ட உருவிற்குப் பெருக்கிறது. இதற்கு வேண் டிய உணவு ஒளித்தொகுப்பு முறையாலேயே தயாரிக்கப்படுகிறது. நுகவிருத்தியின்போது சேமித்து வைக்கப்பட்டுள்ள மாப்பொரு ளின் பெரும் பகுதி எண்ணையாக மாற்றப்படுகிறது, பெரும் பான்மையான இனங்களிலே ஈமற்றேகுரோம் என்னும் செந்

நிறப் பொருளுண்டாவதால் முதலுருவம் செந்நிறமாகத் தோற்ற மளிக்கிறது. இச் செந்நிறப்பொருள் பச்சையயுருவத்தை மறைத்து விடுகிறது. ஆனால் கிளாமிடொமோனசு இயூகமிற் ரொஸ் ( C, Eugameto8 ] போன்ற தினங்களிலே நுகநிறம் மாறுவதில்லை, அது பச்சையாகவே இருக்கும்.
நுகம் முளைப்பதற்கு முன்னர் அதன் முதலுருவம் மீண்டும் பச்சை நிறமாக மாறுகிறது. பின்னர் ஒடுங்கற் பிரிவு [ Miciosis ) ஏற்படுவதனால் - நிறமூர்த்த எண்ணிக்கை
பாதியாக்கப் படுகிறது. சூழ்நிலை சாதகமாக மாறும் பொழுது துசும் முளைக்க வாரம்பிக்கிறது. முளைத்தலின்போது முத்துருவம் வழக்கமாக நான்கு ஒருகருவைக்கொண்ட பகுதிகளாகப் பிளவுபடுகிறது. துகச்சுவரில் வெடிப்பு ஏற்பட்டு அதனூடாக ஒரு கருவைக் கொண்ட நான்கு முதலுருவப் பகுதிகள் வெளியேறுகின் றன. வெளிவரும்பொழுது அவற்றில் சவுக்குமுளை இருப்பதில்லை. ஆனால் சில நிமிட நேரங்களுள் ஒவ்வொன்றிலும் இரு சவுக்கு முளைக ளுண்டாகி சுயாதீனமாக நீந்தித் திரிகின்றன, இந்நிலையில் இவற் றை இயங்கு வித்திகளெனலாம். ஒவ்வொரு இயங்கு வித்தியும் ஒரு இளம் கிளாமிடொமோானசு தாவரமாகும். இவை பச்சிலை யத்தை உபயோகித்து தமதுணைவை ஒளித்தொகுப்பு முறையால் தயாரித்து வளர்ந்து முழு உருவ மடைகின்றன.
-> இயங்கு வித்திகள்
> பல்மெவா நிக
இயங்கு விக்திகள் இலிங்கமில் முறை இனப்பெருக்கம்
கிளாரிடொமோன சு
இயங்கு வித்திகள்
(டுத்தபுணரிகள்; பு ரி புகார் இவ்வாப்புணரிகள் 1 முட் டப்புணரி + விந்துப்போகி)
இலிங்கமுறை இனப்பெருக்கம்
"நுகம்
ஓடுங்கற்பிரிவு

Page 20
வகுப்பு
குளோரோபிசே வருணம் : கொன்சுகேல்சு
இவ்வருணத்தில் ஏறத்தாழ 40 சாதிகளும் 3,000 இனங் களும் அடங்கியுள்ளன, பச்சை அல்காக்களுள் இவ் வருணம் சிறப்பியல்பு பெற்றதும் தனித்தன்மை வாய்ந்ததுமெனக் கூற லொம். குளோரோபீசே வகுப்பிலுள்ள ஏனைய வருணங்களுடன் ஒத்த தொடர்புகளை இவ்வருணத்தில் காண்பதரிது, இவ் வரு ணத்திலடங்கும் அல்காக்களெல்லாம் நன்னீரில் வாழ்வனேயாகும். அனவ ஒரு கலத்தாலானதாகவோ, அல்லது பல சவங்களாலான தாகவோ விருக்கும். பல கலங்களைக் கொண்டிருந்தால் கிளைக எற்ற ஒரு இறையாகக் காணப்படும். கலச்சுவர் பொதுவாக இரு படைகளாலானதாயிருக்கும் முதலுருவத்தைச் சுற்றியுள்ள உட்படை செலுலோசுப்படையாகவும், வெளிப்படை 'பெத்தின் ' (Pectin) என்னும் பொருளாலான படையாகவுமுள்ளன, நீருடன் தொடர்பு கொண்டுள்ள பெத்தின்பகுதி, இனையச் சுற்றி ஒரு சித்தத்திற்குரிய மடங். யுண்டாக்குகிறது. இதனால் இழைகள் தொடுவதற்கு விட விருப்பாகவுள்ளன. ஒவ்வொரு கலத் திலும் ஒரு கருவே காணப்படும். பச்சையவுருவம் சிறப்பியல் புடையதாகத் தென்படுகிறது, இவ்வருணத்திலுள்ள இனங்களி லே மூன்று விதமான பச்சையவுருவங்கள் காணப்படுகின்றன. (1) குழியமுத லுருவின் வெளிப்பகுதியிலே சுருளியுருவாகச் சுருட் டப்பட்ட நிலை யி வ ள் ள பட்டினிக்கன் கல் த்தின் நீள் பக்கமாக அமைந்திருக்கும். உ.ம். இசுப்பைரோசைரா. (2) கலத் இன் நீன்பக்கமாகத் தட்டையான உருவில் உள்ளது. உ. ம். மவுகியோரியா ( Maugeotia - (3) நட்சத்திர வடி வான இரு பச்சையவுருமாரிகள் . உ. ம். சனிமா Zygnerma
கொன்சு கேல்சின் வாழ்க்கை வரலாற்றில் எந்த நிலையிலாவது சவுக்குமுளைகள் அல்லது பிசிர்கள் கிடையா. இயங்குவித்திகள் உண்டாக்கப்படுவதில்லை. ஆனால் தெசு மிட்டுகள் ( DESIKids) போன்றவற்றில் அலையவில்-ளித்திகள் உண்டாகக்கூடும்.
சவுக்கு முளைகளற்ற அமீபாவைப் போன்ற இரு ஒத்த புணரி கள் புணரிச் சேர்க்கையடைவதால் இலிங்கமுறையினப் பெருக் கம் நடைபெறுகிறது. ஒவ்வொரு புணரியும் ஒரு தாய்க் கலத்தின் முழு முதலுருவத்திலிருந்து பெறப்படுகிறது. புணரிகள் தாய்க் கலங்களிலிருந்து விடுபட்டுப் புணரிச் சேர்க்கையடையக் கூடும். அல்லது இணையற்குழாய் உண்டாகி அக்குழாயினுள் புணரிச் சேர்க்கை நடைபெறலாம், அல்லது இசுப்பைரோகைராவில் நடை பெறுவது போல் ஒரு புணரி இணையற் குழாயினுாடாக மற்றொரு கலத்திற்குச் சென்று அங்குள்ள புணரியுடன் புணரிச் சேர்க்கை யடையக்கூடும். இவ்வருணம் மூன்று குடும்பங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. இசுப்பைரோபகைரா 'சைனியற்றேசியே' ( IVEntmataceae ) என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது.

படம் T.2
இசுப்பைரோசைரா இழைகள்
குடும்பம்
சைனிமற்றேசியே (Zygnemataceae | சாதி
-- இசுப்பைரோகைரா [SpirogTTA |
இச்சாதியிலே ஏறத்தாழ 175 இனங்களுள் ளன. இசுப்பை ரோனிகரா இமையுருவாசன், கிளைக ளற்று ஒரு பச்சை அல்கா. இது குளம், குட்டைகள் போன்ற நன்னீர்த் தேக்கங்களிலே சுயா தீனமாக மிதந்திருக்கக் காணலாம், இழைகட்கு அடிப்பாகமோ நுனிப்பாகயோ' கிடையாது. எனினும் நீரோடைகளில் காணப் படும் சில வினங்களின் இளந்தாவரங்கள் கிண்டி3 வுருவா ன, ஆனால் ஒழுங்கின்றிய முறையில் பிளவுபட்ட, பற்றுறுப்பினால் கீழ்ப்படை யில் ஒட்டியிருக்கக் காணலாம். இப்பற்றுறுப்பு இழையின் அடிக் கலத்தின் கீழ் முனையிலிருந்து உண்டாகும். இழைவே! ஒவ்வொரு கலமும் முளைக்குமுனை ஒரு வரிசையாகத் தொடுக்கப்பட்டி ருக்கும். கலங்களின் வெளிப்படையிலுள்ள பெத்தின் என்னும் பொருள் நீருடன் சேர்ந்து இழையத்தைச் சுற்றிச் சீதத்திற்குரிய மடலை உண்டாக்குகிறது. இதனால் இழைகள் தொடுவதற்கு விழுவிழுப் பாக விருக்கின்றன. பச்சை நிறமுடைய இசுப்பிபரோ கைரா இன் மகள் வேறு பச்சை அல் லாகாக்களுடன் சேர்ந்த குளம் குட்டைகளிலுள்ள நீருக்கு பச்சை நிறத் தோற்றத்தைக் கொடுக் கின்றன.
கவத்தின் கட்டமைப்பு ---
ஒவ்வொரு கலமும் உருளை வடிவானது. அதன் விட்டம் ஏறத்தாழ 0.25 மி. மீட்டரும் நீளம் 1 மி, மீட்டருமிருக்கும், கலச்சுவரிலே இரு படைகளுண்டு, முத லுருவத்தைச் சுற்றியுள்ள உட்படை செலுலோசாலானதாகும், செலுலோசுப் படைக்கு

Page 21
ப]
- கலச்சுவர்
புன்வெற்றிடம்
சுருளியானபச்சையவுரு
மணி
கரு
குழிய முதலுரு
வித்துருமணி
படம் 3. இசுப்பைசோகைரா கலம்
வெளியே "பெத்தின்" என்னும் பொருளாலான படையொன் றுண்டு. பெத்தினுக்குரிய படையி யுள்ள பெத்தின் விழுவிழுப் பான தன்மையைக் கொடுக்கிறது. கலச் சுவரினுட் காணப்படும் குமிய முதலுரு ஒரு பெரிய வெற்றிடத்தை மையத்திற் கொண் டுள்ளது, இக்குரிய முதலுருவிலிருந்து வெற்றிடத்தினுட் குறுக் காகச் செல்லும் குரிய முத இருப் பட்டிகைகள் வெற்றிடத்தின் மத்தியிலே ஒரு கருவைத் தாங்கியுள்ளன. சில வேளைகளில் சுரு ஒரு பக்கமாகத் தள்ளப்பட்டு கலச்சுவருக்கருகாமையிலுள்ள குரிய முதலுருவிற் பதிந்து கிடக்கக் காணலாம். கருவிலே ஒரு புன் கரு உண்டு. மைய வெற்றிடத்திலே 'தனின் ' ( Tannin | எனப்படும் பொருள் காணப்படும். இது கழிவுப் பொருட்களின் சேர்க்கையாகும். பெரசுச் சேர்வைகளுடன் தனின் நீல நிற வீழ் படி வைக் கொடுக்கும், குழிய முதலுருவின் வெளிப் பகுதியிலே காணப்படும் பச்சைய வுருவம் சிறப்பியல்பானதாகும். அது பற் கள் போன்று விளிம்பையுடைய நீண்ட நாடாவுருவானது', கலத் திலே சுருளி வடிவமாகக் கலத்தின் நீள் அச்சிலே அமைந்திருக்கும். பச்சையவுருவங்களின் எண்ணிக்கை இனத்திற்கு இனம் மாறு படும், ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலோ பச்சையவுருவங்கள்காணப்படலாம், இனங்களைக் கண்டு கொள்ள

31
: தலுக்கு ஒரு கலத்திற் காணப்படும் பச்சைய ருவுவங்களின் எண்ணிக்கை கவனத்திற் கொள்ளப்படுகிறது. நாடாவுருவான பச்சையவுருளின் நீளத்தில் ஒழுங்கான இடைவெளிகளில் விந்துரு மணிகள் காணப்படுகின்றன. இவற்றைச் சுற்றி மாப்பொருள் சேமித்து வைக்கப்படுகிறது. இ ஈ பி ன ப ர ா ன க ரா கலங்
கலச்சுவர்
வித்துருமணரி பச்சையவுருமணி குழியமுதலுரு
புன் வெற்றிடம்
சுரு குழியமுதலுருப்
பட்டிகை "பச்சையவுருமண
கலச்சுவர்
பட்ட
படம் ஓ, இசுப்பைரோகைராகலம் - கட்டமைப்பு

Page 22
கள் நீரிலிருந்து காபனீரொட்சைட்டை உறிஞ்சிப் பச்சிலையத்தை யுபயோகித்து சூரிய வொளியில் ஒளித்தொகுப்பு முறையால் மாப் பொருளைத் தயாரிக்கின்றன.
சலச்சுவருண்டாதல் சில இனங்களில்
டள் மடிந்த நிலை
பிரிவிற்குப் பின்
படம் 10, கலப்பிரிவு
வளர்ச்சி 1
ஒவ்வொரு கவUம் நிள்வதன் ஓரம் இழையுருப் பிரிவு முறை பால் (mitosis | கலப்பிரிவடைந்து புதிய கலங்சுளை யுண்டாக்குவதாலும் இரைகள் வளர்ச்சியடைகின்றன, இமை யின் எந்தக் கலமும் பிரிவடையக்கூடியது. இசுப்பைரோகைராவில் கலப்பிரிளின்போது சுருப்பிரிவு நடைபெறு முன்னரே கலச் சுவர் உண்டாக வாரம் பிரிக்கிறது. இச்செயல் உயர் தாவரங்களில் நடை பொம் முறையிலிருந்தும் வேறுபட்டதாகும். எனினும், இரு செய்முறைகளும் ஒரே நேரத்தில் முடிவடைகின்றன. தாய்க் கலத்தின் நீள்பக்கச் சுவரின் உட்புறத்தே ஒரு வளையமாக உள் வளரி யொன்றுண்டாகிறது. இது காலத்தின் மையத்தை நோக்கி வளர்ச்சி யடைகிறது, தாய்க் கலத்தின் சுரு இரண்டாகப் பிரி வடைந்த பின்னர் இவ் உள்வளரி தாய்க்கலத்தை இரு கலங் களாகப் பிரிக்கும் குறுக்குச் சுவராகிறது. தாய்க்கலம் எப்பொழு தும் இரு சபா கூறுகளாகப் பிரிவடைவதில்லை, புதிய குறுக்குச் சுவர் தாய்க் கலத்தில் கரு இருக்கும் இடத்தைப் பொறுத்தே பண்டாகிறதல்லாமல் கலத்தின் மையத்தில் உண்டாவதில்லை. இழைகளின் வெளிச் சுவரிலிருந்து உள் வளாரியாக புதிய குறுக்குச் சுவர் உண்டாகிக் கலம் பிரிவடைவது சாதாரணமாகக் தாழ்ந்து தாவரங்களிலே (Lower Plants - காணக்கூடிய செய

17
லாகும். இதை இடைபுகுந்த வளர்ச்சி ( Intercalary Growth ] என்பர். சில இனங்களிலே குறுக்குச் சுவர் சமமானதாயும் ஒரு படையாகவு மிருப்பதில்லை. அவற்றில் குறுக்குச் சுவர் மையத்தில் இரண்டாகப் பிரிவதனால் அவற்றினிடையே இரு புறமும் குவிந்த வில்லேயினுருவில் ஒரு வெற்றிடமுண்டாகிறது. இவ்வெற்றிடம் சீதத்தால் நிரம்பப்படுவதாயிருக்கலாம். வேறு சில இனங்களிலே குறுக்குச் சுவரிலிருந்து இரு புறமும் வரம்பு போன்ற உள் வளரி கள் உண்டாகின்றன. இது பின்புறம்மடிந்த நிலை எனப்படும். (Replicatc Condition)
இனப்பெருக்கம் :
இசுப்பைரோகைராவில் பதிய-முறையினப் பெருக்கமும், இலிங்கமுறையினப் பெருக்கமும் காணப்படுகின்றன. இலிங்கமில் முறையினப் பெருக்கம் நடைபெறுவதில்லை,
(1) பதிய முறையினப் பெருக்கம் இழை துண்டு துண்டாக் கப் படுவதால் பதிய முறையினப் பெருக்கம் நடைபெறுகிறது. இது இயற்கையாகவோ அல்லது தற்செயலாகவோ நடைபெற லாம். சில வேளைகளில் இரு கலங்களுக்கிடையேயுள்ள தடுமென்ற கடு கரைவதனால் இரை இரு துண்டுகளாக்கப்படலாம். இம் முறையால், இனழ தனிக் கலங்களாகத் துண்டாக்கப்படுவது முண்டு. நடுமென்றுகடு இரு முறைகளில் கரையக்கூடும், முதலாவது முறையில் நடுமென்றகடு நடுப் பகுதியில் இரு பகுதிகளாகப் பிரிகிறது. அவற்றினிடையே சீதம் சேர்வதனால் அவ்விடம் ஒரு குவிந்த வில்லை வடிவமாகிறது, சீதம் நிரை உறிஞ்சி வீங்குவதனால் நடுமென்றகட்டின் இரு பக்கமுமுள்ள செலுலோசுப் படைகளைத் தள்ளுகின்றது. இதனாலேற்படும் அமுக் கத்தினால் இப் பகுதியைச் சுற்றியுள்ள நீள் பக்கச் சுவரின் வெளிப் புடையானா பெத்தின் படை வெடிக்கிறது, இரு கலங்களுக்கு மிடையேயுள்ள சீதம் கரைந்து இழை இரு துண்டுகளாக்கப்படு கிறது. செலுலோசுப் படையின் கடள்முகம்மடிந்த முடிச்சுவர்கள் (வெளித் தள்ளப்பட்டு இரு துண்டங்களும் வெவ்வேறாகப் பிரி கின்றன. சில இசுப்பைரோகைரா இனங்களில் நடைபெறும் உள்முகமடிதல் மறைத்துண்டாதல் (Fragritintatioா by
replicatio11) சிக்கலான முறையாகும், நடுமென் றகடு இரு புறத்தேயுமுள்ள கலங்களினுள்ளே கிண்ணவடிவில் வளார் கிறது. இக் கிண்ணவுருக்களரில் கலச்சுவர்ப் பொருளும் காணப் படுகிறது. பின்னர் கிண்ணவுருவான அமைப்புகளுடன் கூடிய குறுக்குச் சுவர் கரைகிறது. கலங்களினகத்தேயுள்ள அமுக்கத் தினால் நடுப்பகுதி அபு:க்கப்பட்டு அதனுல் வெளிக் சுலச்சுவரில் இயலிசை யேற்பட்டு இழை இரு துண்டங்களாக்கப்படுகிறது.
IE 3

Page 23
H4
பெ குறைப்பதால் அதிகரிப்பது முறையால் இனப்பெரு.
இலிங்கமுறை இனப்பெருக்கம் :
இசுப்பைரோகைராவில் இலிங்கமுறை இனப்பெருக்கம் : இணைதல் (Conjugation | முறையால் நடைபெறுகிறது. ஒட்சிசன் செறிவை அதிகரிப்பதாலோ, அல்லது நைதரசன் செறி வைக் குறைப்பதனாலோ செயற்கை முறையில் இணைதல் நடை பெறச் செய்யலாம். இசுப்பைரோகைராவின் பதியக்கலங்களே புணரிக்கலங்களாகத் தொழிற்படுகின்றன. ஒவ்வொரு பதியக் கல்த்திலிருந்தும் சவுக்குமுளையற்ற வொரு புணரியுண்டாகிறது. இழையின் கலங்களெல்லாம் புணரிகளை யுண்டாக்கக் கூடியன் வாகையால் இனப் பெருக்கத்தின்போது ஏறக்குறைய எல்லாக் கலங்களும் ஒரே சமயத்தில் புணரிகளை உடணடாக்குகின்றன. புணரி களிடையே உருவத்தில் வேறுபாடில்லாவிடினும் உடற்றொழிலுக் குரிய முறையில் வித்தியாசமுள்ளது. புணரிச் சேர்க்கையின் முன் னர் புணரிக்கலங்கள் இணைகற் குழாய்களால் ஒன்றோடொன்று இணைக்கப்படுகின்றன. வெவ்வேறு இழைகளிலுள்ள கலங்களி னிடையே இணைப்பு ஏற்படுத்தப்பட்டால் அவை ஏணியுருமுறை இணைதல் (Scalariform Conjugation gT ladder like
Conjugation ) எனப்படும். ஒரே இழையில் அடுத்தடுத் துள்ள சுலங்களுக்கிடையே தொடர்பு ஏற்படுத்தப்பட்டு இணைதல் நடைபெற்றால் அது பக்கவிணைதல் " Lateral conjugatioா) எனப்படும்.
பாடு)
நுகம்
இணைதற்குழாய் படம் 11. ஏணியுரு இணை தல்

(ஏ)
ஏணியுருமுறை இணைதல் :
இம் முறையில் இரு இழைகள் மெதுவாக அசைந்து அரு கருகே வருகின்றன. பின்னர் அவை அவற்றின் சீதத்தினாலேயே நிலையாக நிறுத்தப்படுகின் றன. ஒவ்வொரு இழையிலும் எதிரெதி ராகவுள்ள கலங்களிலிருந்து சிம்பிகள் ( Papillae ] உருவாகி ஒன்றை யொன்று நோக்கி வளர்கின்றன. அவை முட்டுவதினால் தட்டையாகின்றன. சிம்பிகள் தொடர்ந்து வளர்வதால் இழைகள் எதிர்ப்பக்கங்களில் தள்ளப்படுகின்றன. சிம்பி முனைகளிலுள்ள சுவர்கள் கரைவதினால் இணைதற் குழாயுண்டாகிறது. ஓரு இழை பில் உள்ள ஒவ்வொரு கலத்தின் உள்ளடக்கமும் மைய வெற் விடத்திலிருந்து நீரை இழப்பதனால் கலச்சுவரிலிருந்து சுருங்கி
" தனகள்
புணரி
-- இது
நசம்
படம் 13. பக்க இணைதல்

Page 24
35
ஆண் புணரியாகின்றது. மறு இழையின் கலங்களிலே உள் எடக்கங்கள் இந்நிலையில் சுருங்குவதில், அவை பெண் புணரி களெனப்படும், ஆண் புணரிகள் முற்றாக பெண் புணரிக் கலங் களுள் வந்த பின்னரே பெண் புணரிகள் கலச்சுவரிலிருந்து சுருங்கி புண ரிச் சேர்க்கை நடைபெறுகின்றது, புனரிச் சேர்க்கையின் பின் நுகளித்தி யுண்டாகின்றது. சில வேளைகளில் சேர்க்கை இந் நிலையில் நடைபெறாமல் பிந்தியும் நடைபெறக்கூடும், ஆண் புணரி யின் பச்சையவுருவம் சாதாரணமாக இந்நிலையில் அழிந்துவிடுகிறது. புணரிச் சேர்க்கையின்போது ஒரு இழையில் கலங்களெல்லாம் வெற் விடத்தைக் கொண்டதாயும் மற்ற இழையில் துகவித்திகளைக் கொண்டதாயுமிருக்கக் காணலாம். வெற்றிடங்களையுடைய இறை ஆண் இழை என்றும், நுசுளித்திகளையுடையது பெண் இழை யென்றும் கருதப்படுகிறது. ஆண், பெண், புணரிகள் வெவ்வேறு இழைகளிலே உண்டாவதால் இசுப்பைரோகைரா பல்லினப் பிரி விலியான தாவரமெனப் படும். ( Heterothallic plants |
புணரிச் செயலருவாமல் பத்தியும் லோர்
சிலவற்றில் ஆண் புணரிகளும், பெண்புணரிகளும், மாறிமாறி யுண்டாவதுமுண்டு. இவற்றில் நுகவித்திகளும் ஒன்றுவிட்டவொரு கலங்களிலேயே உடண்டாகும்.
(ஆ) பக்கவிணைதல் :-
இம் முறையில் ஒரே இழையில் அடுத்தடுத்துள்ள கலங்களுக் கிடையே இணைதற்குழாயுருவாகி இணைதல் நடைபெறுகிறது. எனவே இவை ஓரினப் பிரிவிலியானவையாகும், இரு கலங்களைப் பிரிக்கும் பிரிசுவருக்கருகாமையில் இரு கலங்களிலிருந்தும் சிறிய எறியங்களுண்டாகும். இவை யொன்றை யொன்று நோக்கி வளர்ந்து ஒன்று சேருவதனால் இணைதற்குழாய் உண்டாகிறது. ஒரு கலத்திலிருந்து மறு கலத்திற்குப் புணரி சென்று மறு புணரி யுடன் சேர்க்கை யெய்தி நுகவித்தி யுண்டாகிறது.
சில இனங்களிலே ஏணியுரு இணைதலும் பக்கவிணைதலும் இரு இழைகளின் வெவ்வேறு பகுதிகளிலும் நடைபெறுவதைக் காணலாம்
இரு விதமான இணை தலின் போதும் உண்டாகும் நுக வித்திகள் முதிர்வடையும் போது முட்டையுருவை அடைகின்றன. மாப்பொருள் எண்ணை யாக மாற்றப்பட்டு முதலுருவும் செந்நிற மாகவோ, செம்மஞ்சள் நிறமாகவோ மாறுகிறது. ஈமற்றே குரோம் என்னும் பொருளால் இந்நிற மாற்றம் ஏற்படுகிறது. நுகவித்தியில் எண்ணையே சேமிப்புப் பொருளாகவுள்ளது. பின்னர் மூன்றுபடைகளாலான ஒரு தடித்த சுவர் சுரக்கப்படுகிறது. ஈற் நில் தாய்க்கலங்கள் வெடிப்பதனாலோ அல்லது அவை அழிந்து போவதனாலோ நுகவித்திகள் நீர்த் தேக்கங்களின் அடிப்பாகத்தை

பி
படம் 13. கருப்பிரிவும் நுகம் முளைத்தலும்
யடைந்து முளைத்தலுக்கு உகந்தகாலம் வரும்வரை ஓய்வு நிலையி லிருக்கின்றன. முளைக்குமுன் இருமடியான கரு ஒடுங்கற் பிரிக் வடைந்து நான்கு ஒருமடியான கருக்களைக் கொடுக்கிறது. இவற் தில் மூன்று அழிந்து போகின்றன. முத்தலின் போது சேமிப்பு எண்ணை மீண்டும் மாப்பொருளாக மாற்றப்படுகிறது. நுகவித்தி யின் ஒரு முனையில் சுவரின் வெளிப்படைகள் வெடித்து, உள்ளடக் கம் ஒரு மெல்லிய படையினால் சுற்றப்பட்ட நிபயில் வெளியே வளருகின்றது. இது முதலில் ஓரு குழாயுருவாகக் காணப்படும். பின்னர் இரண்டாகப் பிரிவடைகிறது. கீழேயுள்ள காலம் நிறமற்ற கலமாகவும், மேலேயுள்ளது சாதாரண பதியக்கலத்தின் அமைப் பைக் கொண்டதாயுமிருக்கும், மேற்கலம் மே லும் பிரிவனட வதனால் ஒரு இசுப்பைரோகைரா இறை உண்டாகிறது.

Page 25
38
புணரிகள் உடற்றொழிலுக்குரிய வகையில் மாறுபட்டிருந்தா லும், உருவத்தில் ஒத்துள்ளபடியால் இவற்றின் சேர்க்கை கருக் கட்டல் எனப்படாது இணைதல் என்றே அழைக்கப்படுகிறது.
ஒதுண்டுகளாதல் (பதியமுறை இனப்பெருக்கம் )
இசுப்னப்ரோகரா து
(இலிங்கமுறை இனப்பெருக்கம் )
0 புணரி புணரி
> நுகவித்தி
வகுப்பு வருணம்
குளோரோபீசே கிளாடோபொராலேசு
நாடி !
இவ் வருணத்தைச் சேர்ந்த இனங்கள் நன்னீரிலும், கடல் நீரிலும் காணப்படுகின்றன. ஏறத்தாழ 12 சாதிகளும், 350 இனங்களும் இதிலடங்கும். பிரிவிலி (Thallus | கிளைகளற்ற இழைகக் கொண்டதாகவோ, கிளைகளையுடைய இழைகளாகவோ இருக்கும், கலங்கள் பல கருக்களையுடையதாகவும் உருளை புருவாகவும் ஒன்றோடொன்று முனைக்கு முனை தொடுக்கப்பட்ட தாகவும் இருக்கும், பச்சையபவுருவம் வலையுருவாகவும், அநேக

1பு
உம்;
படம் 14
கிளாடோஃபோ ரா
கல் அமைப்பு
இயங்குனித்திகள்
கம்
பச்சைய
வுருமணி
வித் துரு
மண
இS ?
கரு
படம் 15. கலி அமைப்பு: இயங் குளித்திகள் உண்டா நல்.

Page 26
வித் துருமணிகளைக் கொண்டதாயுமிருக்கும். நான்கு சவுக்குழுளை' சுளைக் கொண்ட இயங்கு வித்திகள் உண்டாவதாலோ, அலைவில் வித்தி, அசைவியி அசியவை உண்டாவதாலோ இலிங்கமில் புனறயான இனப் பெருக்கம் நடைபெறுகிறது. இலிங்க முறை யினப் பெருக்கம் ஒத்த புணரிகளுண்டாவதாவோ, ஒவ்வாப் புணரி கள்ளுண்டாவதாலோ நடைபெறுகிறது.
சாதி கிளாடோபோரா ( Cladophora ) குடும்பம் : கிளாடோபொரேசியே
இச் சாதியில் ஏறத்தாழ 160 இனங்களுண்டு. சில இனங் கள் கடலிலும், வேறு சில இனங்கள் நன்னீரிலும் காணப்படும். இழைகள் அநேக கிளைகளையுடையன, சீதம் மிகக் குறைவாகவே யுள்ளதால் இழைகள் தொடுவதற்கு கரகரப்பாகவுள்ளன. அநேக தாவரவொட்டிகள் [Epiphytes | இவற்றில் ஒட்டி வாழும். சினாடோபோரா பிரிவிலி பாறைகளிலும் தத்தையோடு களிலும் இவை போன்று வேறு பொருள்களிலும் நீண்ட வேர்ப் போலிக் குரிய சிப்காசுளினுல் ஒட்டி வாழ்கின்றன,
சில வேர்ப்போவிகள் பிரிவிலியின் அடிப்பாகத்தேயுள்ள கலாங் களவிருந்து 1 உருவாகின்றன. பெரும்பாலான இனங்கள் பல்லாண்டு வாழ்கின்றன, உசிதமற்ற காலங்களில் பிரிவிலி இறந்து விட, வேர்ப்போலிக்குரிய தொகுதி மட்டும் உயிர் வாழ் கின்றது. படிந்து கிடக்கின்ற இத் தொகுதியில் அதிக அளவில் உணவுச் சேமிப்புகளுண்டு. சாதகமான நிலையேற்படும்போது
இவற்றிலிருந்து புதிய நேரான கிளைகள் முளைக்கின்றன.
கட்டமைப்பு :
இழையிலுள்ள ஒவ்வொரு கலமும் நீண்ட உருளை வடிவானது. விட்டத்திலும் பார்க்க நீளம் மூன்று முதல் இருபது மடங்கு அதிகம். கலெச்சுவர் தடித்து மூன்று படைகளைக் கொண்டுள்ளது, உட்படை செலுலோசா வானது. நடுப்பனாட பெத்தின் படை, வெளிப்படை ளகற்றினாலானது. கலச் சுவருக்குள்ளே மையத்தில் ஒரு பெரிய வெற்றிடத்தைக் கொண்ட குமிய முதலுரு டண்டு, குழிய முத லுருவின் வெளிப்பகுதியில் வலையுருவானதொரு பச் சையவுருவம் காணப்படும். வலைகளின் சந்திப்புகளிலே அநேக வித்துருமணிகள் உள்ளன, ஒவ்வொரு கலத்திலும் அநேக கருக்க ளுள்ளதால் கலம் பொதுமைக் குழியத்திற்குரியது ( Coonocytie ] என அழைக்கப்படும். கருக்கள் பச்சை யவுருவத்திற்கு உட்புற மாகவே காணப்படும்.
கலப்பிரிவு :-
தாவர இழையின் கலங்களெல்லாம் பிரிஸ்டயக் கூடியன வென்றாலும், உச்சிப் பிரதேசத்திலுள்ள இளமையான கலங்களி

லேயே பொதுவாக கலப்பிரிவு நடைபெறுகிறது. அப்பொழுது ஒவ்வொரு கருவும் இரண்டாகப் பிரிவடைய, கலத்தின் நடுப் பகுதியில் முத லுருவம் கவச் சுவரிலிருந்து விடுபடுகிறது. அவ் விடைவெளியில் சீதம் சேருவதால் ஒரு வளையமாகச் சீதம் காணப்படும். தாய்க்காலத்தின் செ லுலோசுச் சுவரிலிருந்து அப் பகுதியில் ஒரு தடிப்பு ஏற்பட்டு, எறியமாக உள்நோக்கி வளர்ந்து ஈற்றில் கல த்தை இருகூறுகளாகப் பிரிக்கின்றது.
கிளை கொள் ளல் :-
கிளாடோபோராவில் கிளை கொள்ளல் அதிக சிறப்பியல் பெய்தியுள்ளதால் ஏனைய கிளை கொள்ளும் அல்காக்களிலிருந்து கிளாடோபோரா சாதியை இலகுவில் வேறுபடுத்திக் கொள்ள லாம். அநேகமாக இழைகளின் முனைகளிற் காணப்படும் கலங்களி விருந்தே கிளைகள் உண்டாகின்றன. கிளைகள் ஒரு கலத்தின் மேற்பக்க முனையிலிருந்து பச்சு வெளிவளரிகளாக உண்டாகின் றன. கலத்தின் சுய பிரிவடைய வெளிவளரியிலுள்ள குழிய முதலுரு தாய்க்கலத்தின் குழியமுதலுருவிலிருந்து நிலைக்குத் தான சுவரால் பிரிக்கப்படுகிறது. பெரும்பாலும் கிளைகள் இணைக் கவர்களையுடைய தோற்றத்தைக் கொடுக்கின்றன. பக்கக் கிளை தாவரத்தின் நீள்பக்க அச்சுக்குப் பக்கமாகத் தள்ளப்படுவதால் தாவரத்தின் தலைமையச்சும் ( Main Axis ஒரு பக்க மாகச் சிறிது தள்ளப்படுகிறது.
வாழ்க்கை வட்டம் :
கிளாடோபோராவின் வாழ்க்கை வட்டத்தில் இரு சந்ததி! சுகள் உள்ளன. இவை உருவத்தில் ஒத்திருந்தாலும் உடற்றொழி லியல் முறையில் வேறுபடுகின்றன. ளித்தித் தாவரத்திற்குரிய சந்ததி ( Sporophytic Generation | புணரித் தாவரத் திற்குரிய சந்ததியைப் போலவே [ Gametophytic Generation | விருத்தியடைந்துள்ளது.வித்திக் தாவரம் இருமடியானது (Diploid , ஆனால் புணரித்தாவரம் ஒருமடியானது (Haploid). இவையிரண்டும் வாழ்க்கைச் சக்கரத்தில் மாறி மாறி வருகின்றன, இவ்வாறான செயல் அல்காக்களிலே சாதாரண மாகக் காணப்படுவதில்லை யென்பது குறிப்பிடத்தக்கது.
இனப்பெருக்கம் :
கிளாடோ போராளின் இனப்பெருக்கம் அன்று முறைக ளால் நடைபெறுகிறது. அவை யாவன பதியத்திற்குரிய முறை, இலிங்கமில் முறை, இலிங்க முறை.

Page 27
(1) பதிய முறை :--
(அ) பிரிவிலியின் [ Thallus | ஒரு பகுதி தற் செயலாக வெட்டுண்டு கீழ்ப்படையில் ஒட்டிக்கொள்ளுமாயின் அது ஓர் புதிய தாவரமாக வளரக்கூடும்.
(ஆ) உசிதமற்ற காலங்களிலே பிரிவிலி இறந்து போக வேர்ப்போலிக்குரிய பகுதி நிலத்திற்கடியிலே உயிருடன் வாழும். இவ் வேர்ப்போலிக்குரிய பகுதியிலேயுள்ள கலங்களில் அதிக அளவு. உணவு சேமித்து வைக்கப்பட்டிருக்கும். உசிதமான சூழ்நிலை யேற்படும்பொழுது இவற்றுட் சில கலங்களிலிருந்து புதிய நேர்க் கிளைகள் வளர்கின் றுன .
(2) இலிங்கமில்முறையினப்பெருக்கம் :-
இயங்கு வித்திகளுண்டாவதால் இலிங்கமில் முறையினப் பெருக்கம் நடைபெறுகிறது. அநேக இனங்களிலே இருமடியான வித்தித் தாவரத்திற்குரிய சந்ததியிலிருந்தே இயங்குவித்திகளுண் டாகின்றன.
சாதாரண மாக கிளைகளின் முனைக்கருகேயுள்ள துரித வளர்ச் சியுடைய காலங்களிலிருந்தே இயங்கு வித்திகளுமங்ரடாகின்றன, கருக்கள் ஒடுங்கற் பிரிவடைந்து, முதலுரு ( Protoplast ] அநேக கூறுகளாகப் பிரிவடைகிறது. ஒவ்வொரு சிறு பகுதியிலும் ஒரு கருவும், ஒரு சிறிய பச்சையுருவமும் காணப்படும், முற்றாக விருத்தியடைந்த இயங்குவித்திகள் சுவரற்றதாகவும், சிறிய பேரிக் காய் வடிவமானதாயுமிருக்கும். கூம்பிய முண்டியிலே நான்கு சவுக்கு முளைகள் உண்டு. கலத்தின் மேற்பகுதியினருகே ஒரு சிறிய துவாரத்தினுாடாக இயங்குவித்திகள் வெளியேறுகின்றன. சிறிது காலத்திற்கு நீரிலே நீந்தித் திரிந்து பின் கூம்பிய முனையால் ஒர் கீழ்ப்படையில் ஒட்டிக் கொள்கின்றன, சுகு பல கருக்களாகப் பிரிவடைந்தபின் கலம் இரண்டாகப் பிரிகிறது, உச்சியிலுள்ள கலம் கிளைகளைக் கொண்ட இழையாக வளர அடிப்பாகத்திலுள்ள கலம் வேர்ப் (போலிக்குரிய கிளைகளைக் கொடுக்கிறது. இவ்வாறு உண்டான தாவரம் ஒருமடியானதால் இது புணரித்தாவரத்திற்
குரிய சந்ததியைச் சேர்ந்ததாகும்.
பண்ட இன்களைக் இது புன
அசைவிலி
f AkirnetEE.
அசைஸிலி போன்று காலங்கள் சில வேளைகளில் உண்டா சின்றன, ஆனல் அவற்றை உண்மையான அசைவிலிகளெனக் கொள்ளமுடியாது. ஏனெனில் அவை தாய்த் தாவரத்திலேயே தங்கியிருந்து பின்னர் கிமாகளைக் கொடுக்கின்றன.

(3) இலிங்கமுறையினப் பெருக்கம் :-
இது வரை ஆராய்ச்சி செய்யப்பட்ட இனங்களிலெல்லாம் புணரிகள் ஒத்த புணரிகளாகவும், தாவரங்கள் பல்லினப் பிரிவிலி யாகவுமுள்ளது. அதாவது புணரிகள் ஒரே மாதிரியான உரு வத்தை யுடையனவாகவும், இரு வெவ்வேறு இழைகளிலிருந் துண்டான புணரிகளே புணரக்கூடியனவாயுமுள்ளன, புணரித் தாவரத்திலிருந்தே புணரிகள் உண்டாகின்றன. புணரிகளுண்டா தல் இயங்குவித்திகளுண்டா தலை யொத்திருந்தாலும், புணரிகள். உண்டாகும் முன்னர் நடைபெறும் சுருப் பிரிவு இழையவுருப் பிரிவுக்குரியதாகும். (Mitotic ), புணரிகள் பேரிக்காய் வடிவமாயும், இரு சவுக்குமுளைகளைக் கொண்டுள்ளதாயும், தெளி' வான கண்-புள்ளியும், பச்சையவுருவமும் உடையவையுமுள்ளன. இயங்குவித்திகள் விடுபடுவது போலவே இவையும் விடுபடுகின் றன. புணரிகள் சோடி சேர்ந்து புணர்வதால் இருமடியான நுக வித்தியுண்டாகிறது. இது ஆறுதல் நிலையை யடையாமல் உடனடி யாகவே இழையவுருப் பிரிவடைந்து புதிய தாவரமாக வளர் கிறது. எனவே நுகவித்தியிலிருந்துண்டாகும் தாவரம் இருமடி யானதால் அது வித்தித் தாவரத்திற்குரிய சந்ததியைச் சேர்ந்த தாகும்.
(2x] நுகவித்தி
(2x) நுகவித்தி -
புணரி புணரி (x) (1)
புணரி புணரி
(2)
கிளாடோ போரா (2x)
கிளாடோபோரா
[x 1 4
கிளாரிடா கிளாட்டா பாரா போரா (A)
(x)
ஓடுங்கற்பிரிவு
[x இயங்குவித்தி)
(x) இயங்குவித்தி
கிளாடோபோராளின் வாழ்க்கைச் சக்கரம்

Page 28
44
கிளாடோபோரா இனங்களுள் சி, குளோமெரேற்ற தனி" " யியல்பு பெற்ற தொன்றாகும். இதன் பிரிவில் வித்தித் தாவரத்திற் குரிய சந்ததியைச் சேர்ந்ததாகும். அதாவது இருமடியானது. இதனிலிருந்துண்டாகும் இயங்கு லித்திகளும் இருமடியானவையே. அவை இருமடி யான வித்தித் தா வரமாக வளரும். இலிங்கமுறை யினப் பெருக்கத்தின் போது ஒடுங்கற் பிரிவு நடைபெற்று ஒரு மடி யான புணரிகளுண்டாகின்றன. அவை சோடி சேர்ந்து இணை வதனால் இருபடி யான நுகளித்தியுண்டாகிறது, நுசுளித்தி இழைய வகுப் பிரிவடைந்து இருப்டியான ளித்தித் தாவரமாக வளர்கிறது. இவ்வினத்தின் வாழ்க்கை வட்டத்தில் புணரித் தாவரம் கிடை யாது. எனளே சந்ததிப் பரிவிருத்தியும் கிடையாது .
வகுப்பு - பசி.லாரியோபீசே [ Bacillariophyceae |
இவ்வகுப்பை தயற்றோபியே ( DiatamERE என்றும் அழைப்பர். இதில் தயற்றங்களெனப்படும் தாவரங்களடங்கும். அநேக இனங்கள் உயிருடனிருந்தாலும் சில இனங்கள் உயிர்ச் சுவடு நிலையில் மட்டுமே (Fossil condition | காணப் பட்டுள்ளன. தயற்றங்கள் இரு வருணங்களாகப் பிரிக்கப்பட் டுள்ளன, அவை யாவன : சென்ற்றலேசு ( Centrales பென்னலேசு ( Pennales என்பனவாகும்.
தயற்றங்கள் ஒரு கல்த்தா -வான , அல்லது சமுதாயமாக வாழும் சமச்சீருடைய நுண்தாவரங்களாகும்.)
அவை' நன்னீரிலும், உவர்நீரிலும், சரப்பற்றுள்ள மண்ணிலும் காணப்படுகின்றன சில சாதிகள் நன்னீரில் மாத்திரமும், வேறு சில சாதிகள் உவர் நீரில் மாத்திரமும் காணப்படும், ஒரே சாதி நன்னீரிலும் உவர் நீரிலும் காணப்படுமாயின் அவை வெவ்வேறு' இனங்களைச் சேர்ந்தவையாயிருக்கும்.தயற்றங்கள் நீரிலே சுயா தீனமாக நீந்தித் திரியவோ, அல்லது ஓரிடமாக ஒட்டியிருக்கவோ கூடும். கடலில் வாழும் சில தயற்றங்கள் பாறைகளில் ஒட்டியும், செந்நிற அல்காக்கள், கபில நிற அல்காக்கள் ஆகியவற்றில் தாவர வொட்டிகளாகவும் வளரக் காணலாம். வேறு சில தயற்றங்கள் கடலில் மிதந்தும் காணப்படும். இவை நீரிலலயுயிர்கள் அல்லது பிளாந்தன்கள் (Plarnk to113) என அழைக்கப்படுகின் றன. இவற்றுட் பெரும்பாலானவை வெப்பநிலை மாற்றத்திற்கும் உவர் வீத மாற்றத்திற்கும் தூண்டற்பேறடைகின்றன. கடல் பிளாந் தன்களும், தைனேபிளா ஜெல்லேற்றுகளும் ( Danuflagellates) சமுத்திர விலங்குகளின் உணவுச் சங்கிலித் தொடரில் முதற் பிணைப்புகளாதலால் மிக முக்கியமானவையாகும்.
ஆழமற்று நீர்த்தேக்கங்களின் அடியிலுள்ள சேற்றிலும், தடி கள், கற்கள், ஒடுகள், நீர்வாழ் தாவரங்கள் ஆகியவற்றின் மேலும் கபில நிறமான பசைத் தன்மையுள்ள பொருட்களாகத் தயற்றங்கள் காணப்படும், உலகின் பல பாகங்களிலும் இறந்த

45
தயற்றங்களைக் கொண்ட மண் அதிகவளாளிற் காணப்படுவதால் புவிச்சரிதக் காலத்தே தயற்றங்கள் பெருமளவில் வாழ்ந்தன வென அறியக்கிடக்கிறது. தயற்றமுள்ள மாண்r ( Diatாaceous - பartln|பெரும்பாலும் - புடையான காலத்திலேயே (Tertiar period | உண்டாகியிருந்தாலும் யுராசிக்குக் கா லத்திலேயும் - Jurasi period | அவை இருந்திருக்கிற தென உயிர்ச்சுவடுகள் மூலம் அறியப்பெறுகின்றோம்,
தயற்றுங்கள் பல உருவங்களைக் கொண்டன. ஒரு பக்கமாக நோக்கும் பொழுது வட்டவடிவாகவும், சற்சதுரங்களாகவும், புக்கோணங்களாகவும், தோலணி வடிவமாகவும் வேறு பல வடி வங்களிலும் காணப்படுகின்றன, சில இனங்கள் பசை போன்ற பொருளால் ஒன்று சேர்க்கப்பட்டு சமுதாயங்களாகவும் காணப் படுகின்றன, ஓரிடமாக ஒட்டி வாழும் தயற்றங்களும் அசைந்து திரியும் தயற்றங்களும் உண்டு, தயற்றங்களிலே மிகச் சிறப்பியல்பு பெற்ற பகுதி அவற்றின் கலச்சுவரேயாகும், கலச்சுவர்கள் பெத் தின் " Pectin என்னும் பொருளாலானது , அதன் மேல் சிலிக்கா மண் துணிக்கைகள் பதிந்திருக்கக் காணலாம். சிலிக்கா வின் லுண்டான சுவர் இல்லத்தை முற்றாகச் சுற்றி உட்புக விடுந் தன்மையற்ற கவசமாக அமையவில்லை. அது ருெ பாதிகளைக் கொண்டுள்ளது. இரு பாதிகளும் ஒரு பெட்டியும் மூடியும் போல்
அமைந்துள்ளன. இரு பாதிசுளிற் பெரிய பாதி மேலுறை ( (Epitheca) எனவும், மறு பாதி உபபரவுன் ( HypotliEC1 | எனவும் அமைக்கப்படும், சிலிக்காரவுள்ள சுவரின் மேல் அனேக நுண்ணிய குறுக்கு வரிகள் உண்டு, இவ்வரிகள் ஒழுங்கான முறை யில் விரிவாக அமைந்திருக்கும், இவை விளிம்பிலிருந்து மையத்தை நோக்கிச் சென்றாலும் மையத்திற் சந்திப்பதில், தயற்றங்களை நுணுக்குக் காட்டியினூடாகப் பார்க்கும் பொழுது மிக அழகான பொருட்களாகத் தென்படும். சிவிக்காவுள்ள கல்ச்சுவரிலுள்ள வரிகள் பொதுவாகப் பல வரிசைகளில் அமையயப்பட்ட மிசு நுண்ணிய துளைகளைக் கொண்டதாயிருக்கும், துளைகள் மிக நெருக்கமாகவுள்ளதாலேயே அவை வரிகளாகத் தென்படுகின்றன.
கலிச்சுவரினுள்ளே ஒரு தடிப்பான படையாகக் குரிய முத லுருவுள்ளது. அதன் மையத்தே ஒரு புன் வெற்றிடமுண்டு, பென் னாலேசைச் சேர்ந்த தயற்றங்களின் ( PEnrnate diatoms - | வெற்றிடத்தின் மையத்தில் குறுக்காக அகன்ற முதலுருப்பட்டினசு பியொன்று காணப்படும். அதில் ஒரு புரட்டைவடிவான அல்லது கோளவடிவான கரு இருக்கும். மையத்திற்குரிய தயற்றங்களில்
Centrales) புன் வெற்றிடத்தைச் சுற்றியுள்ள குழிய முதலுருவிலேயே கரு இருக்கும், குழிய முதலுருளில் ஒன்றே அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலோ நி றந்தாங்கி களுண்டு. இவற்றின் உருவமும் எண்ணிக்கையும் இனத்திற்கு இனம் மாறுபடும். சாதாரணமாக நிறத்தாங்கிகள் மஞ்சள் கலந்த கபில நிறமாகவிருந்தாலும் சில இனங்களிலே! பச்சை நிறமாகவோ

Page 29
AE
நீல நிறமாகவோ இருப்பதுமுண்டு. குளோரோபில் பச்சிலை யம்), மிகையான கரற்றீன்போலிகளுடனும் (Carotiroid முக்கியமாக கரற்றீனுடன் பல சாந்தோபில்களுடனும் அவற்றுள் பியூகோ சாந்தென் அதிகவளவில் உள்ளது (சேர்ந்து இருப்பதனாலேயே மஞ்சள் கலந்த கபில நிறமேற்படுகிறது. சென்ற் றாலே சுகளில் நிறப் பொருள்கள் சிறியளவாயினும், அதிக அளவிற் காணப்படும். பென்னாலேசுகளில் பெரிதாகவும், குறைந்த எண்
ணிக்கையிலும் காணப்படும். ஒவ்வொரு நிறந்தாங்கியிலும் ஒன்ரோ அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலோ வித்துரு மணிகள் / Pyrenoids) ' காணப்படுகின்றன. சிலவற்றில் வித் துருமணிகள் காணப்படமாட்டா. பொதுவாக வித்துருமணிகள் முட்டை வடிவபாகவோ, குவிந்தவில்லை வடிவமாகவோ இருக் கும். தயற்றங்களின் வித்துருமணரிகளைச் சுற்றி மாப்பொருள் இருப்பதில்லை, ஒளித்தொகுப்பின் பொழுது நிறந்தாங்கிசுரினுதவி யுடன் உணவு தயாரிக்கப்பட்டு முக்கியமாக எணணையாகவே சேமித்து வைக்கப்படுகிறது. பியூசோசின் (Leucosin என்னும் காபோவைதரேற்றாகவும் சேமித்து வைக்கப்படுவதுண்டு.
சுயாதீன வாழ்வுடைய பல தயற்றங்களும், சமுதாயமாக வாழும் சில பென்னேற்று தயற்றங்களும் (PEnnatcdiatoms | தன்னிச்சையாகவே அசையுந் தன்மையுடையன. அசையுந் தன் மையுடைய தயற்றங்களிலெல்லாம் சந்திக்கொடு f Raphe . உள்ளது. தயற்றங்கள் ஒரு தொடரான சிலிர்ப்பினால் ( Jerks அசைகின்றன. அசைவு எப்பொழுதும் நீள்பக்க அச்சிலேயே நடை
சேரும் புணரிகள்
நு கவித்தி
2. :
ஆ>?
>> இன?
புணரியுண்டாதல்
முளைக்கும் நுகவித்தி
படம் 16. இவிங்சுமுறை இனப்பெருக்கம்

பெறுகிறது. தயற்றம் சிறிது தூரத்திற்கு முன்னால் சென்றபின் ஒரு கணம் தாமதித்து, பின்னர் ஏறத்தாழ அதே பாதையில் பின்னோக்கி அசைகிறது. ஓரளவிற்கு இடது புறமோ வலது புறமோ திரும்பி மீண்டும் முன்கூறியது போன்றவாறு அசை கின்றது. நீரில் மட்டுமே அவை அசைகின்றன. எனினும் திண்ம மான கீழ்ப்படை இருக்கவேண்டிய அவசியமில்லை.
இனப்பெருக்கம் முக்கியமாக பிளவுமுறையாலே நடைபெறு சிறது. இது பதியமுறை யினப்பெருக்கமெனவும் அழைக்கப்படுவ துண்டு. ஒரு தயற்றம் பிரிவடையும் பொழுதுண்டாகும் மகட் கலங்களிலொன்று பெரியதாயும், மற்றது ஓரளவு சிறியதாயு மிருக்கும். கலப்பிரிவின்போது முதலில் வளையத்திற்குச் (Girdle ) செங்குத்தாக முதலுருவம் வீங்குவதனால் மேலுறையும் உப்பரவுறையும் சிறிது விலகுகின்றன. இதனைத் தொடர்ந்து வால்வுகளுக்குச் செங்குத்தான் அச்சில் கருவிலே இழையுருப் பிரிவு நடைபெறுகிறது. பென்னேற்று தயற்றங்களிலே கருப் பிரிவின் போது திறந்தாங்கிகளும் பிரிவடைகின்றன. ஒரு கலத் தில் ஒரு நிறந்தாங்கி மட்டுமேயிருந்தால் அது நீள்பக்க அச்சில் பிரிவடைகிறது. இரு நிறத்தாங்கிகளிருந்தால் பிரிவு நீள் பக்க மாகவோ, குறுக்கு முகமாகவோ நடைபெறலாம், வித்துருமணி களும் பிரிவடைந்து நிறந்தாங்கிகளுடன் மகட் கலங்களினுட் செல்கின்றன. இதன் பின்னர் வால்வுகளின் நீள்பக்க அச்சிற்குச் சமாந்தரமாக முதலுருவம் இரு கூருகின்றது, மகள் முதலுரு வத்திலொன்று தாய்க்கலத்தின் மேலுறையிலும், மற்றது உப் பரவுறையிலும் தங்கியிருக்கும். பின்னர் ஒவ்வொரு மகள் முத அருவமும் கலமற்ற பகுதியில் ஒரு புதிய சுவரைச் சுரக்கின்றது. புதிதாக வுண்டாகும் சுவர் எப்பொழுதும் மகட்கலத்தின் உபபர வுறையாகவே யிருக்கும். - தாய்க்கலத்திலிருந்து பெறும் பாதி முன்னர் மேலுறையாகவோ, உபபர்வுறையாகவோ இருந்தாலும் மகட்கலங்களிலே அவை எப்பொழுதும் மேலுறையாகவே யூபிருக் கும். எனவே, கலப்பிரிவு தொடர்ந்து நடைபெறும் பொழுது சில தனியன்கள் சிறிதாகி வரும், ஒரு இனத்திலே மிகக் குறைந்த பருமனை யடைந்தவுடன் மகள் தயற்றம் வளர்வித்தியை [ Aux OSpoாடு | உண்டாக்கிப் பழைய பருமனையடைகின்றது. வளர் வித்திகள் உண்டாதலின் போது கலம் பெருமளளில் சளியத்தைச் சுரப்பதனால் வால்வுகள் எதிர்த்திசைகளிற் தள்ளப்பட்டு முத் அருவம் வளர்ச்சியடைந்து, பெரிதாகி, இரு பகுதிகளைக் கொண்ட சிலிக்காச் சுவரினால் மூடப்படுகிறது. சிலிக்காச்சுவர் வெளிப் புறத்தே எறியங்களைக் கொண்டதாகவோ, அல்லது எதுவித வேலைப்பாடுகளும் அற்றதாகவோ இருக்கலாம். வேலைப்பாடும் ளிருந்தால் அவ் வேலைப்பாடு பதியக்கலத்திலுள்ளதைவிட மாறுபட்டேயிருக்கும். பருமனடைந்த வளர்ஷித்தி இரு பதியக் கலங்களாகப் பிரிவடைகிறது, இக்கலங்கள் அவ்வினத்தின் சாதா

Page 30
48
ரண பருமனாகவிருக்கும். வளர்வித்தியின் கரு இறையுருப்பிரிவு முறையானதால் இதிலிருந்துண்டாகும் சந்ததியெல்லாம் இரு மடியானதாயிருக்கும்.
இலிங்க முறையினப் பெருக்கம் பொதுவாக ஒத்தபுணரி யுள்ள முறையால் நடைபெறுகிறது. ஆனால் தொழில் முறையில் ஒவ்வாப்புணரியினியல்பு பெற்றவையும், கன்னிப் பிறப்பு முறை யும் சிலவற்றில் காணப்படுகின்றன . வளர்வித்திகளை மட்டுமல்லாது தடித்த சுவருள்ள நுண்வித்திகளையும் சென்ற்றலேசைச் சேர்ந்த தயற்றங்கள் உண்டாக்குகின்றன. நுண்வித்திகள் சவுக்கு முன் களைக் கொண்ட சிறிய உருண்ட உடலைக் கொண்டனவாயிருக்கும். இவை உண்மையில் புணரிகள்தானாளென்பது இன்னமும் நிச்சய மாகத் தெரியவில்லை. சென்றாலேசைச் சேர்ந்த தயற்றங்களுட் சில ஓய்வு வித்திகளாகிய நிலை வித்திகளையும் ( Statospores உண்டாக்குகின்றனவெனத் தெரியவருகிறது.
வருணம் - பென்னாலேசு ( Penhales |
இவற்றின் கவம் நீண்டு தோணரிவடிவாகவுள்ளது. இ ைவ பெரும்பாலும் நன்னீரிலே வாழுகின்றன. இருபக்கச் சமச் சீருடை யன. ஓரிரு திறந்தாங்கிகளையுடையன. அனேகமாக சந்திக்கோடு (Raphக இருக்கும், சந்திக்கோடுடையவை சுயாதீன அசை வுள்ளனவாகும். சந்திக்கோடற்ற தயற்றங்கள் அக்காசவதில்லை. சாதாரணமாக அலைவில் புணரிகள் இணைவதால் வளர்வித்திகள் உண்டாகின்றன.
சாதி: பின் வலேரியா (Pinnularia |
இது நன்னீர்க்குளம் குட்டை ஆகியவற்றிலே ஏராளமாகக் காணப்படுகிறது. இது சுயாதீனமாக நீந்தித்திரியும் ஒரு கலத்தா - லான, இரு பக்கச் சமச்சீருடைய தயற்றமாகும்.
சுட்டமைப்பு - கலங்கள் நீள்வட்ட வடிவாசன் (Ellpitical ) வையாகும். அகலத்தைவிட ஏழு அல்லது எட்டு மடங்கு நீண்ட தாயும், அரைக்கோள வடிவமான முனைகளையுடையவைாயுயிருக் கும், கல்ச்சுவர் பெத்தினால் - Pecti11 ஆக்கப்பட்டு, அதன் மேல் சிளிக்கா பதிந்திருக்கக் காணலாம். சிலிக்காவினா அண்டான சுவர் கலத்தை முற்றாகச் சுற்றி உட்புக விடுந் தன்மையற்ற கவசமாக அமைந்திருக்கவில்லை. ஒரு பெட்டியும் மூடியும் போல வே அது இரு பாதிகளைக் கொண்டுள்ளது. மூடிக்குச் சானுன பெரிய பாதி மே லுறை - Epithec4) என்றும், பெட்டிக் குச் சமனான சிறிய பாதி கீமுறை Hypotheca) என்றும் அழைக்கப்படும். ஒவ்வொரு பாதியும் ஒரளவு தட்டையானதெனக் சுகூறக்கூடிய வால்வுகளைக் கொண்டுள்ளது. வால்வுகளின் விளிம்பு வடிம்புபோ லுள்ள து. (Flang like Imargini), இதை வளையம்

மேலுறை
உப்பாவரை
IUUUUUUUU
மையச்சிறுக -
ԱՍՍՍՍՍՍՍՍՍՍ ՍՍՍՍՍՍՍԱՏԱՍՍՍՍՍՍՍՍՍ
கரு
(பெருநரம்புகள்
1பாபாபாபா
Iliாப்பம்
சந்திக்கோடு
முனைவுச்சிறுகணு
வளம்-நோக்கு
வால்வு-நோக்கு
படம் 17. பின்னுலேரியா
(Grdle) எனவும் அழைப்பர். (மே லுறையினதும் முறையினதும் வடிம்பு போன்ற விளிம்புகள், வளையப்பட்டை Cingulum அல் லது தொடுக்கும் - வளையம் (Connecting band | என் னும் பட்டி. பசுளாவ் தொடுக்கப்பட்டுள்ளன. வால்வுகளின் மேலும் வளையப்பட்டைகளின் மேலும் சிலிக்கா பதிந்திருக்கும். சிலிக்கா வினலான அவரின்மேல் ஒழுங்கான நுண்ணிய குறுக்குவரிகள் காணப்படும், இவை விளிம்பிலிருந்து மையத்தை நோக்கிச் சென் முலும் மையத்தையடைவதில்லை. நுணுக்குக் காட்டியினூடாகப் பார்க்கும்பொழுது தயற்றங்கள் மிக அழகாகத் தோன்றுவதற்கு இவ் வரிகளே காரணம். கல்ச்சுவரின் மேல் மிகச் சிறிய துவாரங் கள் மிக நெருக்கமாக ஒழுங்காக அமைந்திருப்பதனாலேயே இவை வரிகள் போல் தோற்றமளிக்கின்றன. இத்துவாரங்களினுாடாக வெளிவரும் சளியம் பாதுகாப்பளிப்பதுடன் தயற்றங்சுள் மிதந் திருக்கவும் உதவுகின்றது. ஒளித்தொகுப்பின் போதும் சுவாசித்த
I-24

Page 31
50
வின் போதும் வரிகளற்ற பகுதியினூடாக வாயுப் பரிமாற்றம் நடைபெறுகிறது. வால்வு மேற்பக்கம் இருக்கும் வண்ணம் தயார் ரத்னத நோக்கினால் அது வால்வு நோக்கு (Valve ViEW' | என்றும், தொடுக்கும் வளையம் மேற்பக்கமாக உள்ள தோக்கு
வளையநோக்கு (1)
Girdle View) என்றும் அழைக்கப்படும்.
வால்வின் அகமயமாகவுள்ள பெரியவாரி
சந்திக்கோடு (Raphe) எனப்படும். இது கலச்சுவரிலுள்ள ஒரு பெரிய பிளவு ஆகும். இது நேராக இல்லாமல் வளைந்திருப்பதுடன் (Sigmoid ] வால்வையும் இரு சமகூறாகப் பிரிக்கின்றது, சந்திக் கோட்டின் நடுப்பகுதியில் வட்டவடிவான மையத்திற்குரிய சிறு கணுவொன் Tள்ளது. [ - Central module] இது சந்திக்கோட்டுடன் குறுக்கிடும் சுவரின் உட்புறத்தேயுள்ள தடித்த பகுதியாகும். சந்திக்கோட்டின் ஒவ்வொரு முனையிலும் ஓவ்வொரு சிரகணு உள்ளது, சந்திக் கோடுள்ள இனங்களே இடப் பெயர்ச்சியடையக் கூடியனவாயிருக்கின்றமையால், சந்திக்கோடு அசைவுடன் தொடர்புடையதெனக் கருதப்படுகிறது.
கலத்தின் மத்தியிற் காணப்படும் புன்வெற்றிடத்தைச் சுற்றி யுள்ள குரிய முத லுருவில் சுலத்தின் நீள்பக்கமாகச் சுவருடன் ஒட்டினாற்போல் பச்சை நிறம், அல்லது கபில நிறமுடைய இய நிறந்தாங்கிகள் காணப்படுகின்றன. முக்கியமான நிறப்பொருள் தயற்றமின்னாகும் ( Diatomine
1. இது குளோரோபிலும்
பாபாராகாத
மேல் வால்வு
சரன்
உபபா வால்வு
THIITI 11
தொடுக்கும் பட்டினிக்

சிவர படம்
சந்திக்கோடு
பரபரப்IIIIIII
படம் 18,
வளை ய-நோக்கு கு.வெ.
மிகையான மஞ்சள் நிறகரற்றின், சாந்தோபில் ஆகியவற்றை யும் கொண்டவொரு கலவையாகும். சேமிப்பு உணவு எண்ணை யேயாகும். ஒவ்வொரு நிறந்தாங்கியிலும் வித்துருமணிகள் காணப் படலாம்.
சுலத்தின் மையத்தே காணப்படும் புன் வெற்றிடத்தின் மத்தி படாலே பாலம் போன்று அமைந்திருக்கும் அகன்ற குரிய முதலுருப் பட்டிகையில் கரு காணப்படும்.
இனப்பெருக்கம் :
பதிய முறையினப் பெருக்கம் கலப்பிரிவினால் நடைபெறு கிறது. இம் முறை பேசிலாயோட்சேயின் பொது இயல்புகளின் கீழ் விவரிக்கப்பட்டுள்ளது).
பின்னுலேரியாவில் இலிங்க முறையினப் பெருக்கம் நடை பெறுவதாகத் தெரியவில்லை,

Page 32
வகுப்பு: பிட்சோபீசே அல்லது சைனோபீசே [MIyxophyCEAE Sr CyanaphyCgaz)
மிக ஆதியான தும் சிக்கலற்றதுபாரன தாவரங்கள் இவ்வகுப் பிலடங்கும். இவற்றின் கலங்களிலே பச்சையவுருவம் (குளோ ரோபில்), காற்றின் போலிகள், சில சமயங்களில் பீக்கோவெரித் திரின் ( Phycoerythrin ) ஆகியவற்றுடன் பீக்கோசயை னின் (Phycocyanin) என்னும் நீலங் கலந்த பச்சை நிறப்பொருளுமுள்ளதாலேயே இத் தாவரங்கள் பொதுவாக நிலப் பச்சை அல்காக்கள் என அழைக்கப்படுகின்றன, பெரும்பாலான இனங்கள் நன்னீரிலேயே காணப்படுகின்றன. நீரோடைகள், கால் வாய்கள், அழுகும் (சேதனவுறுப்புக்குரிய பொருட்களைக்கொண்ட நீர் ஆகியவற்றில் நீலப்-பச்சை அல்காக்கள் மிகுதியாகக் காணப் படுகின்றன, சில இனங்கள் ஈரப்பற்றுள்ள மண்ணிலும் மரப்
AKIE
இ5ே35
படம் 19.
கலப்பிவு

':ாட்டைகளின் மேலும் வளரக் காணலாம், மழைகாலத்தில் நிலத் தில் பரந்து காணப்படும் சுண்ணாம்புப் பாறைக் கற்களில் மழைத் துளிகள் விழுந்தபின் நீலப்பச்சை அல்காக்கள் வளர்வதால் அப் பாறைகள் வழுவழுப்பாக விருக்கின்றன. இலங்கையிலே இயற் கைக் காட்சிக்கு இத்தாவரங்கள் ஓரளவு காரணமெனக் கூறலாம். சுவர்கள், பாறைகள், மண்புட்டிகள் ஆகியவற்றில் நீலப்பச்சை அல்காக்கள் படைகளாக வளர்ந்திருந்து கருபன மயான நீலப்பச்சை நிறத்தையோ, செந்நிறத்தையோ, கொடுக்கும், இதுபோன்ற வளர்ச்சி பின்னர் உயர் தாவரங்கள் உண்டாவதற்கான அடிப் படையைச் சீர்செய்வதில் அதிக பங்கு கொள்கின்றது. சில நீலப் பச்சை அல்காக்கள் உவர்நீரிலும் வாழ்கின்றன. பிளாந்தன் களா பவுள்ள அல்காக்களிலே வாயு வெற்றிடங்களுள்ளதனால் அவை நீரில்
மிதக்கின்றன .
பெரும்பாலான இனங்கள் மிகப் பாதகமான சூழ்நிலையிலும் உயிருடனிருக்கக் கூடியனவாயுள்ளன. உவர்த் தன்மை கூடுர பொழுதும் ஈரப்பற்று உலரும் பொழுதும், அவற்றால் தொடர்ந்து வாழமுடிகிறது. சில இனங்கள் மாறுபடும் வெப்பநிலையைச் சமா ளிக்கவல்லன, வெந்நீர் அரற்றுக்களிலே சில பற்றீரியாக்களைத் தவிர, ஒருசில நீலப்பச்சை அல்காக்களால் மட்டுமே வாழ முடிகிறது. சாதாரணமாக 50' ச. முதல் 60° ச, வரையுள்ள நீரிலே அவை வளர்கின்றன. இவ் வெப்ப நிலைகளில் ஏனைய உயி ரினங்கள் உயிருடனிருக்க மாட்டா, சில நீலப்பச்சை அல்காக்கள் 170 ச, வெப்ப நிலையிலும், வேறு சில அந்தாற்றிக்கிலுள்ள
Antarctic) உறைபனியிலும் உயிருடனிருக்கின்றன,
நீலப்பச்சை அல்காக்கள் பலவகையான உருவங்களைக் கொண்டுள்ளன. மிக எளிய உருவமுள்ளவற்றில் தனிக்கலங்களை யோ, அல்லது பல தனியன்கள் சேர்ந்தவொரு சமுதாயத்தையோ அவதானிக்கலாம், இதைவிட ஒருபடி உயர்ந்தவற்றில் கலத்தின் ஒரு முனை கீழ்பபடையில் ஒட்டியிருக்கவும், மறுமுனை சுயாதீனமாக விருக்கவும் காணலாம். இழைகளைக் கொண்ட சில இனங்களிலே ஒன்றன்மேலொன்றாகக் கலங்கள் முனைக்குமுனை தொடுக்கப்பட் டிருக்கும். இழைகளிலே தொழிற்பங்கீடு காணப்படக்கூடும். சில

Page 33
- 5 -
இழைகள் படிந்து கிடக்கவும் வேறு சில இழைகள் செங்குத்தாக் வளரவும் காணப்படலாம். ஒவ்வொரு இழையின் முனையிலு முள்ள சில கலங்களே வளர்ச்சிக்குக் காரணமாக விருக்கின்றன. சில இனங்களிலே இதைகள் கிளைகளைக் கொண்டதாயுமிருக்கும். இஸ்ரைகோனீமா [ Stigonema] என்னும் சாதியிலே இழை பலகலத் தடிப்புள்ள தாயிருக்கும்,
டெதல்) ஒதறப்படுகிறது மையமுத இல்லையாத
- நீலப்பச்சை அல்காக்களிலே முதலுருவத்தை கரு, குழிய முதலுரு என்னும் பகுதிகளாகத் திட்டவட்டமாகப் பிரிக்கமுடி யாது. அவற்றிலே உருமணரிகளும் கிடையாது. உயிருள்ள கவங் களை சிறப்பாக ஆராய்ந்து பார்த்தால் சில வேளைகளில் முத லுருவத்தில் இரு பகுதிகளை வேறுபடுத்திக் காணமுடியும். வெளி யிலுள்ள பகுதியில் நிறப்பொருள்கள் பரம்பிக் காணப்படுவதால் அப்பகுதி நிறப்பொருள் முத லுரு எனவும், மையத்திலேயுள்ள நிறப்பொருள்களற்ற பகுதி னமயமுதலுரு எனவும் அழைக்கப் படும் மையபுதலுருவிற்குக் கருவினுடைய சில இயல்புகள் உண்டு. உயர் அங்கிகளின் நிறமூர்த்தங்களிலேயுள்ள சாயமேற்கும் பொருள்களான கருவின் நிறப்பொருள்கள் மையமுத லுருவிற் காணப்படுகின்றன, ஆனால் உயர் விலங்குகளிற் காணப்படுவது போன்ற நிற மூர்த்தங்களில்லை, இழையுருப் பிரிவை (Mitosis) (ஒவ்வொரு நிற பூர்த்தமும் இரு கூறுகப் பிளக்கப்பட்டு சுலம் பிரிவடைதல்) ஒத்த கலப்பிரிவு நீலப்பச்சை அல்காக்களில் தடை பெறுகிறதெனக் கூறப்படுகிறது. ஆனல் இனவு விதிவிலக்கானவை யாகும், கலப்பிரிவின் பொழுது மையமுத லுருவிலுள்ள அமைப்பு களின் நடத்தை ஒரே மாதிரியாக இருப்பதில்லையாதலால் இதை இழையுருப் பிரிவுடன் ஒப்பிட முடியாது. இவற்றின் முதலுரு பெளதிக வியல்புகளிலும் ஏனைய தாவரங்களின் முதலுகுவிலிருந்து வேறுபடுகிறது. உயர் தாவரங்களில் பொதுவாக முதலுரு நீரை விடச் சிறிதளவே தடிப்பான தாயிருப்பதுடன் கலத்தகத்தே முத வருவோட்டம் நடைபெறுவதையும் அவதானிக்கலாம். ஆனால் நீலப்பச்சை அல்காக்களிலே இதற்கு மாறாக முதலுரு விழுது போன்று தடிப்பாகக் காணப்டாடும், முதலுருவோட்டம் அவற்றில் நடைபெறுவதில்லை ஏனைய தாவரங்களிற் காணப்படுவது போன்ற புன் வெற்றிடங்களும் முதலுருவிற் காணப்படமாட்டா. ஆனால் இவற்றிலே வாயபுக் குமிழிகள் சிறிய ஒழுங்கற்ற வடிவில், நிறப்பொருள் முத லுருவிற் காணப்படுகின்றன. ஒரு கொழுப்புப் பொருளாலான மென்சவ்வு வாயுக்குமிழிகளைச் சுற்றியுள்ளதனால் இவை ஒரளவிற்கு நிரந்தரமானவை யெனத் தோன்றுகிறது. அமுக்கத்தினாலோ அல்லது கொழுப்பை கரைக்கும் கரைப்பான் களை உபயோகிப்பதனாலோ மென்சவ்வு உடைக்கப்பட்டால் வாயுக் குமிழிகள் அழிந்து போகின்றன. முதலுரு தடிப்பாயிருப்பதால் ஒளித்தொகுப்பு போன்ற செய்முறைகளின் போதுண்டாகும் வாயுக்கள் பரவல் முறையால் வெளியேறுவது கடினமாதலால் அவை வாயுக்குமிழிகளாகச் சேருகின்தறாயிருக்கக்கூடும். ஆனால் இது பற்றி இன்னமும் சரிவர ஒன்றுந் தெரியவில்லை,

55
ஏனைய தாவரங்களிலுள்ளதைப் போன்றவொரு கலச்சுவர் நிலப்பச்சை அல்காக்களில் கிடையாது. சுலத்தைச் சுற்றியுள்ள மென்சவ்வு இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. முத லுருவுடன் நெருங்கி யொட்டியுள்ள பகுதி முதலுருவின் ஒரு பகுதியென்றே தோன்றுகிறது. இது ஏனைய கலங்களிலுள்ள முதலுருமென்சவ் விற்கு ஒப்பானதெனினும் அவற்றைவிடப் பலம் வாய்ந்ததாகும். இதற்கு வெளிப்புறமாக ஒரு கல்மடல் ( Cell sheath | உள் ளது', சில இனங்களிலே இது ஒரு விரிவான செவாற்ரின் போன்ற மடலின் உட்புடையாகவேயிருக்கும். இம்மடலின் இரசாயனச் செர்வைபற்றி இன்னும் முற்றாக ஆராயப்படவில்லை. சில வேளை சுளில் மட்டுமே செ. இரலோசு காணப்படுகிறது.
நிலப்பச்சை அல்காக்களில் பச்சையவுருவம் உண்டு. உயர் தாவரங்களைப் போன்ற காபனீரொட்சைட்டையும் நீரிலிருந்து' பெறும் ஐதரசனையும் உபயோகித்து ஒளிச்சக்தியில் காபோவைத ரேற்றுகளைத் தயாரிக்கின்றன. ஒளித்தொகுப்பின் இரசாயனம் உயர் தாவரங்களினதைப் போன்றே யிருத்தல் கூடும். சில ஒசிலர் ாேரியா இனங்கள் (108illatoria Species | நீருக்குப் பதிலாக ஐதரசன் சல்பைட்டிலிருந்து ஐதரசனைப் பெற்று காபனி ரொட்சைட்டை உபயோகித்து காபோவைதரேற்றுகளைத் தயா ரிக்கின்றனவென அறியப்பட்டுள்ளது. ஒட்சிசன் வெளியிடுத லுக் குப் பதிலாக சுலத்தகத்தே கந்தகம் சேருகிறது. ( Purplebacteria ] அளதாகந்தக பற்றரியாக்களும் இவ்வாறே ஐத ரசன் சல்பைட்டை உபயோகித்து ஒளித்தொகுப்பு நடாத்து கின்றன. ஆனால் அவற்றால் ஒரு பொழுதும் நீரிலிருந்து ஐதரசனைப் பெற்று ஒளித்தொகுப்பு நடத்தபூரடியாது. உயர் தாவரங்களிலே ஐதரசன்சல் பைட்டு ஒளித்தொகுப்பை குன்றச் செய்கிறதென்பது இங்கு குறிப்பிடத் தக்கதாகும், ஒளித்தொகுப்பினாலுண்டாகும் பொருள்களுள் முதலிற் காணக் கூடியதாயிருப்பது கிளைக்கோச னே யாகும், உயர் தாவரங்களில் ஒளித்தொகுப்பின் பொழுது உண்டாகும் மாப்பொருளை கிளைக்கோசன் ஒத்திருக்கிறது. இது பங்கசுகளிலும் விலங்குகளிலும் காணப்படுகிறது. குறிப்பிடத்தக் கவளவு சேமித்து வைக்கப்படும் உணவுச் சேமிப்பு புர தங்களைக் கொண்ட சையனோபைசின் (Cyanophycin) ஆகும். வித் திகளிலே இவை அதிகளவில் சிறுமணிகளாகக் காணப்படும்.
பச்சையவுருவத்துடன் பிக்கோசையசினே, பீக்கோஎரித்தி ரனோ, அல்லது இரண்டுபோா காணப்படக்கூடும், பீக்கோசையனி னும் பீக்கோளரித்திரனும் புரதவமைப்பைக் கொண்டனவாயும் ஈதர், அசிற்றேன் போன்ற திரவங்களிற் கரையாததாயும், ஆனால் நீரிற் கரையுந் தன்மை யு3டயனவாயுமுள்ளன. இவ் வியல்பு சுளில் இவை பச்சையவுருவத்திலிருந்து வேறுபடுகின்றன. இவற் ரல் உறிஞ்சப்படும் ஒளிச்சக்தி பச்சையவுருவத்திற்கு மாற்றப் படுவதால் அச் சக்தியைக் கொண்டு ஒளித்தொகுப்பு நடைபெற ஏதுவாகிறது. சாதாரணமாக நீலப்பச்சை அல்காக்கள் தற்போ

Page 34
சண யுள்ளனவாயிருந்தாலும் சில வேளைகளில் பற்றீரியாக்கள் பங்க்சுக்கள், விலங்குகள் போன்று பிறபோசணையுடையனவாக வும் காணப்படுகின்றன. அவ்வாறுள்ள பொழுது அவை முன்னரே' தயாரிக்கப்பட்ட நிலையிலுள்ள சேதனவுறுப்புக்குரிய (சேர்வுப் பொருள்களை உள்ளெடுக்கின்றன, உயர் தாவரங்கள் தமக்குத் தேவையான நைதரசன்ன நைதரேற்றுக்களிலிருந்தும் அமோனியச் சேர்வைகளிலிருந்தும் பெறுகின்றன, ஆனால் நிலப்பச்சை அல் காக்கள் இவ்வாறு ஒனநதரசன்னப் பெறுவதுடன் வளிமண்டலத்தி லுள்ள மூலக் கூற்று நைதரசனையும் நிலத்தில் பதிய வைக்கின்றன. சில பற்றீரியாக்களிலும் ஓரிரு பங்கசுகளிலுமே இவ்வியல்பு காணப் படுகிறது. இடை வெப்ப நிலையுள்ள பகுதிகளிலே ( TErhpEIntE regions Iளிவசாயம் செய்யப்படும் நிலத்தில் நீலப்பச்சை அல்காக்கள் பெருமளவிற் காணப்படுவதில்லை, ஏனெனில் அப் பகுதிகளிலே நைதரசனைப் பதித்த அக்கு வேறு அங்கிகள்உள்ளன. ஆனால் இலங்கையிலும் இந்தியாவிலும் வயல்களிலே நீர் தேங்கி திற்கும் பொழுது இவ் வல்காக்கள் மிக நன்றாக வளர்ச்சியடைந்து பெருகியிருப்பதால் அதிக வளவில் நைதரசன் நிலத்திற் பதிக்கப் படுகிறது. எனவே, பசளை போடாமலே வேருடத்திற்கு வருடம் சுமச் செய்கை அதிக பலனையளிக்கிறது.
பெரும்பொழுது இவர் இந்தியாவிலும் வேறு அங்கி. படுகிறது. என்னால் அதிக வாக்கள் மிக நலபல்களிலே ந ள்ள
நீலப்பச்சை அல்காக்களிலே பிசிர்களோ, சவுக்கு முளைகளோ கிடையா. இழைகளில் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை கலங் தளில் ஏற்படும் அலை போன்ற மாற்றங்களாலேயே அசைவு ஏற் படுகிறது. இவ்வசைவு மண்புழுவின் அசைவைப் போன்றிருக்கும். கலங்களுக்குச் சுருங்குந் தன்மையும் விரியும் தன்மையுமிருப்பது இவ் வல்காக்களின் முதலுருவின் விசேட இயல்பாகும், சில நீலப் பச்சை அல்காக்கள் (வேறு அங்கிகளுடன் ஒன்றிய வாழ்வு வாழ் கின் றன. இதுவும் அவற்றின் ஒர் சிறப்பியல்பாகும். சில ஈரலுருத் தாவரங்கள், ( Liver Warts 1,"அசொல்லா என்னும் நீர்ப் பன்னம் ( ATCella ), சைக்கசு ( Cycas], கன்ரோ ( (ariாப்பான என்னும் பூக்குந் தாவரம் ஆகியவற்றின் இழையங்களிலேயுள்ள இடைவெளிகளிலே அனபீனா (Anabaena | நொஸ்ற் றெக் { {nstag) போன்ற நீலப்பச்சை அல்காக்கள் காணப்படுகின்றன. இவையெல்லாம் ஒன்றிய வாழ்வுக்கு உதா ரணங்களா வென்பது சரிவரத் தெரியவில்லை, ஆனால் சிலவற்றிலே அல்காக்கள் வளியிலுள்ள நைதரசனை நிலத்தில் நாட்டிட உயர் தாவரங்களுக்கு சநைதரேற்றாகக் கிடைப்பதற்கு உதவி புரிகிற துடன் இதற்குக் கைமாறாக உயர் தாவரங்களிலிருந்து காபோ வைதரேற்றுகளைப் பெறுகின்றன, பங்கசுக்களும் அல்காக்களும் ஒன்றிவாழ்கின்ற பொழுது அவை இலைக்கன்கள் flichens | எனப்படும். நொஸ்ற்றொக் (Nustod) இஸ்ரைகோனிமா ( Stigonema ) போன்ற நீலப்பச்சை அல்காக்களே பெரும் பாலும் இலைக்கன்களிற் காணப்படுகின்றன. இவற்றிலே அல் காக்களரினால் ஒளித்தொகுப்டரின் போது தயாரிக்கப்படும் காபோ வைதரேற்றுகளை பங்கசுக்கள் பெறுகின்றன. அல்காக்கள் உல

ராமல் இருப்பதற்கு பங்கசுக்கள் உதவுகின்றன. அல்காவைச் சுற்றிப் பங்கசு ஒரு தடிப்பான படையாகக் காணப்படுவதால் சாதாரணமாக அவை வாழக்கூடிய வெப்ப நிலையிலுங் கூடிய வெப்ப நிலையிற் கூட உயிருடனிருக்கின்றன. ஒரு சில புரோற்றே சோவாக்களின் முத லுருவில் ஒரு கல்த்தாவான நீலப்பச்சையல் காக்கள் காணப்படுகின்றன, எனவே இப்புரோற்றேசோவாசிகள் தமது சேதனவுறுப்புக்குரிய உணவுப் பொருள்களை இவ்வல்காக் களிலிருந்தே பெறக்கூடியனவாயிருக்கின்றன,
நீலப்பச்சை அல்காக்களிலே இனப் பெருக்கம் சாதாரண கலப்ரினல் பட்டுமே நடபெறுகிறது. அதாவது இதுவொரு இலிங்கமில் முறை இனப் பெருக்கமாகும். இலிங்க பூறையினப் பெருக்கம் இதுவரை அவதானிக்கப்படவில்லை, இலிங்கமுறை இனப் பெருக்கம் நடைபெற வேண்டுமாகில் சிறப்பான அமைப்பு களும் பொறிமுறைகளும் கொண்ட கரு இருத்தல் அவசியம். நீலப்பச்சை அல்காக்களின் மைய முதலுரு இந்நிலையை அடைய வில்ல, ஒரு கலத்தாலான நீலப்பச்சை அவ்காக்களிலே கவப் பிரிவே முக்கியமான இலாப் பெருக்க முறையாகும். ஆனால் பல கலங்களைக் கொண்ட தாவரங்களில் கலப்பிரிவு இனப் பெருக்க மாக இருப்பதற்குப் பதிலாக வளர்ச்சியாகவேயுள்ளது. ஒரு சமு தாயம் குறிப்பிட்ட அளவு பருமனடைந்தபின்னர் பிளவுபடுவதனால் புதிய சமுதாயங்கள் தோன்றுகின்றன. இழைகளாகவுள்ள இச்சங் களிலே பதியக் கலத்திலொன்று பருமனடைந்து, சுவர்கள் தடித்து பல்லினச் சின) றப்பையாக மாறுகிறது. ஒரு இழையில் இடை யிடையே பல்லினச் சிறைப்பைகள் உண்டாகி, அப்பகுதிகளில் இழை துண்டங்களாக்கப்படுகிறது. ஒவ்வொரு துண்டமும் சங் கிலிப் பிறப்பு (Hormogone ) எனப்படும், இவை தனித் தனியே புதிய இழைகளாக இயங்குகின்றன.
ஒசிலற்றேறியாவிலும் அதனைச் சார்ந்த சாதிகளிலும் இழை யிலேயுள்ள சில கலங்கள் சிறப்பியல்பு பெறாமல் இங்கொன்று மங்கொன்றுமாக இறப்பதனால் சங்கிலிப் பிறப்புகள் (Hormogone) உண்டாகின்றன.
சையனோபீசேயேயைச் சேர்ந்த இனங்கள் இயங்குவித்திகளை யோ, அன்றி புணரிகளையோ உண்டாக்குவதில்லை யெனினும் இழைகளாகவுள்ள பல இனங்களில் அசைவற்ற ஒய்வு வித்திகள் உண்டாகின்றன. ஒரு பதியக்கலம் உணவு சேமிப்படைவதனால் பெரிதாகித் தடித்த சுவர்கள் யுண்டாக்குகிறது, இது அசைவிலி ( Akinete / எனப்படும். அசைவிலி ஒரு இழையிலே தனித் தோ, அல் லது அதிக எண்ணிக்கையில் ஒருமித்தோ காணப்பட லாம், (உ. ம். அனபீ Anabatna, அகவித்தி [ End0. Spore | என்பது வேறொருவிதமாலா , வித்தி. கலத்தகத்தே முதலுருவம் பிளவுபட்டு அனேக சிறிய, தடித்த சுவர்களையுடைய அகத்திகள் படண்டாசிப் பின்னர் கலத்திலிருந்து விடுபடுகின்றன ..

Page 35
58
நீலப்பச்சை அல்காக்கள் பலவிதங்களிலே எமக்குத் தீனம் களை விளைவிக்கின்றன. அவை குடிநீருள்ள தாங்கிகளில் வளர் வதனால் துர்நாற்றத்தையும் விரும்பத்தகாத ருசியையும் நீருக்குக் கொடுக்கின் றன, சில வேளைகளில் இவை நீர்த் தேக்கங்களின் மேற்பரப்பில் அடர்த்தியாக வளர்ந்து நீர் நீறு' ( Water
bloom ] என்னும் தோற்றற்பாடை விளைவிக்கின்றன. இந் நீரை அருந்துவதால் ஆடுமாடுகள் இறக்கின்றனவென அறியப் பட்டுள்ளது.
இவ்வல்காக்களுக்கும் ஏனைய அல்காக்களுக்குமுள்ள தொடர்பு சரிவரத் தெரியவில்லை, இவை பற்றீரியாக்களையே மிக ஒத்துள்ளன. வருணம் : கோர்மொகோனியாலேசு (Homogonials
கலங்கள் மயிருருவாக இணைக்கப்பட்டுள்ளன, சங்கிலிப்பிறப் புகள் ( Hoாாogonia | உண்டாகும் முறையால் இனப்பெருக் கம் நடைபெறுகிறது. அசைவிலிகளும் பல்லினச் சிறைப்பைகளும் உண்டாகக்கூடும்.பெரும்பாலானவை நன்னீரிலேயே வாழ் கின்றன.
குடும்பம் : ஓசிலற்றேறியேசியே |
Oscillatoriaceae சாதி : இலிங்ன:பயா ( Lyngbya
புனேக்களம்
மடல்
சங்கிலிப் பிறப்பு
நிற முதஏரு
மைய முதலுரு
மடல்
இலிங்பையா
கு. வெ, சுளம் படம் 20.

5)
வாழிடமும் தோற்றமும் :-
இது ஒரு சிக்கலற்ற, கிளைகளற்ற இழைகளாலான நீலப் பச்சை அல்காவாகும். குளம் குட்டைகளிலும், நீரோடைகளிலும் உக்கும் சேதனவுறுப்புப் பொருட்களைக் கொண்ட நீர்த் தேக்கங் களிலும் சாதாரணமாக வளரும். இவை நீரிலே மிதந்தோ அல்லது நீரின் அடியிலுள்ள பொருட்களின் மேலோ, ஈரப்பற் முள்ள நிலத்திலோ மெல்லிய படையாக வளரக் காணலாம்.
கட்டமைப்பு :
மெல்லிய கலச் சுவர்களைக் கொண்ட கலங்கள் ஒரு வரியில் மயிருருவாக அடுக்கப்பட்டுள்ள மயிருருவைச் சுற்றி தடிப்பான சளியம் கவசமாக அமைந்துள்ளது. உச்சிக் கலத்தைத் தவிர ஏனைய கலங்கள் கட்டையாயும் உருளை வடிவாயுமுள்ளன, ஒரு சத நாணயங்களை அடுக்கி வைத்தது போல் தோற்றமளிக்கும், உச்சிக்கலத்தின் மேற் பகுதி குவிந்திருக்கும். இழையிலேயுள்ள வொரு இறந்த கலத்திற்கு அடுத்துள்ள கலங்களும் குவிந்த பக் கங்கப்ளக் கொண்டிருக்கும். கல்ச்சுவரில் ஓரளவு செலுலோசு உணடு. மயிகுருவைச் சுற்றியுள்ள சளியக் கவசம் பெத்தின் சேர்வுப் பொருட்களாலானது. சில வேளைகளில் இது நிறமுடைய தாயுமிருக்கும். இது ஈரப்பற்றைச் சேகரித்து வைத்து இழைகள் உலராமற் பாதுகாக்கின் றது.
கலத்தின் முதலுருவம் சுரு,குழியமுதலுருவென வேறு படுத்தக்கூடிய நிலையிலில்லை. காலத்தின் கரையோரமாகவுள்ள நிறப்பொருட்கள் பரப்பிக் கிடக்கின்ற பகுதி நிரப் பொருள் முதலுரு ( ChrOIDataplasm ) எனப்படும், கலத்தின் மைய மாகவுள்ள நிறமற்ற பகுதி மையமுதலுரு ( Centroplasா | எனப்படும். ஆனால் இவ்விரு பகுதிகளுக்கு மிடையே வரையறை யான எல்லை கிடையாது. மையமுத லுருவில் சுருவின் நிறப் பொருள்கள் உண்டு, ஆனால் சீர்படுத்தப்பட்ட நிறமூர்த்தங்கள் காணப்படமாட்டா. இப் பகுதிக்கு கருவின் இயல்புகளுட் சில உண்டு. இலிங்பையா ( Lyngbya) வின் முதலுரு மிக வுந் தடிப்பான பசைபோன்றதனால் ஒசிலற்றேறியாவில் ( Oscil
latoria ) காணப்படுவது போன்ற அசைவு இதில் காணப் படமாட்டாது.
ஏனைய பச்சைத் தாவரங்களைப் போன்று இலிங்பையாவிலும் பச்சையவுருமணிகள் உள்ளன. அத்துடன் பிக்கோசையனினும், பிக்கோவெரித்திரினும் காணப்படும். காபனீரொட்சைட்டு, நீர், ஒளிச்சக்தி ஆகியவற்றின் உதவியுடன் ஒளித்தொகுப்பு முறையால் உணவு தயாரிக்கின்றது. ஒளித் தொகுப்பின் பொழுது கிளைக் கோசனே முதலில் உண்டாகும் பொருளெனத் தெரிகிறது. எனி

Page 36
6)
னும் சைனோபீக்கின் [Cyanophydin ) என்பதே முக்கிய சேமிப்புப் பொருளாகும்.
இனப்பெருக்கம் இலிங்கமில் முறையால் மட்டுமே நடை பெறுகிறது. உன்ரமையான பல்லினச் சிறப்பைகள் காணப்பட வில்லை. ஆனுல் இழையிலே அங்கொன்றும் இங்கொன்றுமாக கலங்கள் இருக்கும் பொழுது அவை இருபுறமும் குழிவான உரு வத்தை யடைகின்றன. ஆகவே குழிவான கலங்களையடுத்துள்ள பதியக்கலங்கள் குளித்த முனையைக் கொண்டுள்ளன, பின்னர் இறை "இறந்த கலங்களுள்ள இடங்களிலே உடைபடுவதனால் அனேக சங்கிலிப் பிறப்புசுள் ( Hormogolia) உண்டா சின்றன,
அலைதாவரம்
( Phytoplankton
நீரிலே அநேக தாவரங்களும் விலங்குகளும் வாழ்கின்றன, சிவ தாவரங்கள் நீரிலே அமிழ்ந்த நிலையில் நிலத்திற் பதிந்து வாழ்கின்றன, வேறு சில உயிரினங்கள் ஏதாவது பொருட்களில் ஒட்டி வாழ்கின்றன. இவ்வாறான உயிரினங்கள் -ஆம் நீர்த்தளவுயர் (BEnthus ) எனப்படும் கரையோரமாகக் காணப்படும் உயிரி ரினங்கள் நெய்த நிலத்திற்குரியவை ( Littoral Organisms | என அழைக்கப்படும். வேற சில உயிரினங்கள் நீரிலே மிதந்திருக் கக் காணப்படுகின்றன, இவை பிளாந்தன் Plaktar1 | எனப்படும், பிளாந்தனிற் காணப்படும் தாவரம் "அலேதாவரம்
Phytoplankto11" ட ) என்றும், விலங்குகள் * அங்வி லங்கு" "(
Zooplankton
} என்றும் அழைக்கப்படும்.
அஃதாவரங்கள் நன்னீரிலும் உவர் நீரிலும் காணப்படு கின்றன, இத் தாவரங்களின் உருவ அமைப்பும் உடற்றொழிலிய லும் மிக வேறுபாடுடையனவாதலால் சில இனங்களால் நன்மை சுளும், வேறு சிலவற்றால் தீமைகளும் உண்டாகின்றன. அனபீ ை [ Anabacnn } ஒசிலற்றோரியா : ( Oscillatoria , இலிங்
பையா ( Lyngbya ] நொஸ்ற் றொக் ( Nostoc றிவுலேரியா ( Eivularia), புரொற்றேகொக்சுஸ் ( Proto
coccus -- ), செனிடெஸ்மஸ், ( Scenedesmes ), கொஸ்மேரியம் '
Cosmarium], கிளாமிடோமோனா Chlaiாரdomonas ), பன்டோகிரைனா ( Pandoாina இயூடோரைன ( Eudgாina]. வொல்வொக்ஸ் ( VolvQ! குளொஸ்ரிரியம் [ Clusteriபா, கோனியம் f goniபற பெடியாஸ்ற்றம் (Pediastruth 1, மவுகோசியா ( Mougedia ), இசுப்பைரோகைரா ( Spirogyra ),
சைய்னீமா [Ly HeTJa, தயற்றம் |
Diatom தெஸ்மிட்டு ( Desmid ), செற்றியம் (Ceratium ஆகியவை சாதாரணமாக அலை தாவரங்களாகக் காணப்படுகின்
ப்பனா ,

அலை தாவரங்களின் விருத்தி பருவகாலம், வெப்ப நிலை. கிடைக்கக்கூடிய உணவு, ஒளி, ஒட்சிசன், நீரின் ஆபாம் ஆகிய - வற்றைப் பொறுத்துள்ளது' , சில இடங்களிலே அண்தாவரத்திலே காலத்திற்குக் காலம் வெவ்வேறு தாவர அங்சிகள் காணப்படு கின்றன , அக்காக்கள் ஒளித்தொகுப்பு முறையால் தமக்கு வேண் டிய நட13ாவைத் தயாரிக்கின்றன, அவற்றிற்கு மிகக் குறைந்த அளவு கனிப்பொருள்களே போதுமானது. அலைதாவரங்கள் வாழும் நீரிலே அல்காக்களுக்குத் தேவையான அளவு சுனிப் பொருள்கள் உண்டு. நீரிலே காணப்படும் சேத னவுறுப்புப் பொருள்கள் பற்ரீரியாவின் வளர்ச்சிக்கு உதவியளிக்கின்றன, பற் நீரியா சேதனவுறுப்புப் பொருள்களை ஒட்சியேற்றி கனிப்பொருள்க ளாக்குகின்றன, இக்கனிப்பொருள்கள் அலை தாவரங்களாலும், அவற்றுடன் சேர்ந்து காணப்படும் விலங்கு அங்கிகளாலும் உப யோகப்படுத்தப்படுகின்றன, ஆனால் அதே வேளையில் பற்றீரியா ஓட்சிசனை உபயோகிப்பதால் தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் சுவாசித்தலுக்குத் தேவையான ஒட்சிசனினளவு குறைகின்றது. எனவே வெவ்வேறு உயிரினங்களுக்கு இடையேயுள்ள தொடர்பு மிகச் சிக்கலானதெனத் தெரியவருகிறது. அல்காக்களின் வளர்ச் சிக்கு ஒளி அவசியம், வெவ்வேறு அல்கார்களுக்கும் வெவ்வொன ஒளிச் செறிவு தேவைப்படுகிறது. எனவே நீரிலே அவை வெவ் வேறு ஆழங்களில் காணப்படுகின்றன, ஒட்சிசன் ஒளி, வெப்பம், அக்கம் ஆகியவை நீரின் ஆழத்தைப் பொறுத்து மாறுபடும். சில அங்கிகளின் தன்னிர்ப்பு Specific gravity நீரின் தன்னீர்ப்பைவிட சிறிது அதிகமானது. எகோவே அவை நீரிsே சீழ் நோக்கிச் செல்கின்றன. ஆனால் நிசலே ஆராப் அது கரிக்க (வெப்பம் குறைவதனால் நீரின் அடர்த்தி அதிகரித்து அங்க! யின் தன்னீர்ப்பிற்குச் சமனாகிறது. ஆகவே ஒரு குறிப்பிட்ட நிலைக்குக் கீழாக அங்கிகள் செல்வதில்லை.
அப்பதாவரங்களுக்கும் ஏனைய உயிரினங்களுக்கு மிடையே டோசணைக்குரிய தொடர்புண்டு, இதுவே உணவுச் சங்கிலி
Food Chair1 1 எனப்படும். உணவுச் சங்கிலியின் முதற் பிணைப்பு அலைதாவர அல்காவாகும். கடல் நீரிலும், நன்னீரிலும் உள்ள அட்லதாவரங்களையும், அன்பவிலங்குகளையும் சிறிய கிறஸ் ரேசியாக்களும், மொலக்காப் பிராணிகளும், புழுக்களும் சிறிய மீள்களும் உணவாகக் கொள்கின்றன. இவற்றைப் பெரிய கிறஸ் ரேசியாக்களும் பெரிய மீன்களும் உணவாகக் கொள்கின்றன, இவற்றை இன்னும் பெரிய மீன்கள் உண்ணுகின்றன. இவ்வா முள்ள உணவுச் சங்கிலியில் சீல்கள், துருவக்கரடிகள், திமிங்கிலங்
கள் ஆகியவை மிச உயர் நிலையிற் காணப்படுகின்றன. எலா வற்றிற்கும் மேலாக மனிதர்களுள்ளனர். எமக்குத் தெரிந்த விலங்குகளிலே மிகப் பெரியதான நீலநிறத் திமிங்கிலம் பிளாந் தன் களை உணவாகக் கொள்கின்றது. பெரிய திமிங்கிலத்தின் உணவுக்குழாய் ஈd- 75 அடி நீளமுடையது. திமிங்கிலம் (1) தொன் எடையுள்ளது. அதன் குடலிலே 2 தொன் பிளாந்தன்கள்

Page 37
62
காணப்பட்டுள்ளன. அதிற் பெரும்பாலாகத் தயற்றங்களேயுள்ளன:- நீரிலேயுள்ள அலை தாவரத்தின் அளவைப் பொறுத்தே மீன்கள் காணப்படுகிறதென அறியப்பட்டுள்ளது.
நீரிலுள்ள விலங்குகள் சுவாசித்தலின் போது வெளிவிடும் காபனீரொட்சைட்டை அலை தாவரங்கள் உபயோகித்துத் தமக்கு வேண்டிய உணவைத் தயாரிக்கின்றன. ஒளித் தொகுப்பின் பொழுது வெளிவிடப்படும் ஒட்சிசன் விலங்குகளால் சுவாசித்த லின் போது உபயோகிக்கப்படுகிறது. இவ் வொட்சிசன் சேதன வுறுப்புக்குரிய பொருள்களை ஒட்சியேற்றுவதிலும் பங்கு கொள் கிறது. ஒட்சியேற்றம் நடைபெறாவிடில் இக் கழிவுப் பொருள் களினால் நீர் மாசடைந்து உயிரினங்கள் வாழ முடியாமற் போகும். காற்றுள்ள பொது சுவாசிக்கும் பற்றீரியாக்களும் இவ்வொட்சி சனை உபயோகித்து, தொழிற்பட்டு, சேதனவுறுப்புக்குரிய கழிவுப் பொருட்களை அழகச் செய்கின்றன. ஆனால் ஒரு நீர்த் தேக்கத் திலே அதிக அளவில் அலைதாவரங்களிருக்குமாயின் இரவு நேரங் களிலே அவை ஒட்சிசனைச் சுவாசித்தலுக்காகப் பயன்படுத்துவதால் மீன்களுக்குப் போதுமான ஒட்சிசன் கிடைக்கப் பெறாமல் இறக்க நேரிடும்.
" ஓட்தேவுடுக்கு ஒரு 'குரிய
சில அலைவாரங்கள், முக்கியமாக நீலப்பச்சை அல்காக் களும், தயற்றங்களும் நீர்த்தாங்கிகளிலும் நீச்சற் குளங்களிலும் வளர்ந்து நீரை அசுத்தப்படுத்துகின்றன. அல்காக்களிலிருந்து எண்ணையுண்டாகி நீருக்குத் துர்நாற்றத்தையும் அருவருக்கத் தக்க உருசியையும் கொடுக்கிறது. இதனால் நீரை அன்றாடத் தேவைகளுக்கோ தொழிற்சாலைத் தேவைகளுக்கோ உபயோகிக்க முடியாமலிருக்கின்றது, பொழுது போக்கிற்காக மீன்பிடித்தல், தோணிவலித்தல், நீந்துதல் ஆகியவற்றிற்கும் அலைதாவரங்கள் இடையூறாகவுள்ளன.அலேதாவரங்கள் நுளம்பு முட்டைகளிலிருந்து விருத்தியடையும் குடம்பிகளுக்குப் பாதுகாப்பும் உணவும் அளிக் கின்றன.
இறந்த அலை தாவரங்கள் பற்றீரியாக்களுக்கு உணவாகின்ற மையால் பற்றீரியாக்கள் தொழிற்பாடுள்ளனவாகி ஒட்சிசனை உபயோகிக்கின்றன. இதனால் நீரில் ஒட்சிசன் செறிவு குறையும்.
பொதுவாக எல்லா அப்ப தாவரங்களும் குளோரினுடன் சேரக்கூடியன. சளியமுள்ள இனங்கள் பற்றீரியாக்களைச் சுற்றி யிருப்பதனால் பற்றீரியாக்கள் குளோரினினால் அழிபடாமல் தப்பு கின்றன. இதனால் குளோரின் செலுத்தி நீரைச் சுத்தமாக்க முடியாமலிருக்கிறது. அமீபாவயிற்றுளைவு, நீச்சல் சிரங்கு ஆகிய நோய்களை உண்டாக்கும் அல்லவிலங்குகளுக்கு அலைதாவரங் கள் வாழிடமும் உணவும் கொடுக்கின்றன. நீர்ப்பங்கசுக்கள் மீன் களுக்கு நோய்களை யுண்டாக்குகின்றன. நீலப்பச்சையல்காவைச் சேர்ந்த அன்பீனா, கிளியோ டிரைக்கியா (Geotrichia) போன்ற

63
சில இனங்கள் நச்சுப் பொருள்களை யுண்டாக்குவதனால் இவை யுள்ள நீரை அருந்தும் ஆடுமாடுகள் இறக்கவும் நேரிடுகின்றது.
அலேதாவரத்தை அழிக்கும் வழிகள்:-
ஒரு பகுதி செப்புச்சல்பேற்றிற்கு 500, பாப் பகுதி நீர் என்ற முறையில் செப்புச்சல்பேற்றை உபயோகித்து அலை தாவ ரங்களைக் கொல்லலாம், குளோரின், மூன்று குளோரின் அணுக் சுளைக்கொண்ட பென்சீன் ( Trichlorinated benzene) அகியவர்
றையும் உபயோகிக்கலாம்
அதாவரத்தினால் உண்டாக்கப்படும் துர் நாற்றத்தையும், அரு
வருக்கத்தக்க உருசியையும் அகற்றல் :-
பின்வரும் முறைகளை உபயோகிக்கலாம்:
ஒட்சிசன் செலுத்துதல், அமோனியா குளோரின்
புறை பொற்றாசியம் பரமங்கனேற்று உபயோகித்தல், வெளிற்றாம் சுளி மண், ஒசோன், குளோரின் ஈரொட்சைட்டு, ஆகியவற்றை உப் யோகித்தல், குளோரினேற்றுதல்.

Page 38
64
பிரிவு:
உப பிரிவு :
மிட்சோனமக்கோபீற்று
இயூபைக்கோபீற்ற
1. மீட்சோ மீசிற்றே 2. பிளாள்மோடியோபோறியே
3. அக்கி ரேசியே !
வகுப்பு:
1 பீக்சோமீ 2 அசுக்கோமீ 3, பசிடியோ
செற்றெசு
செற்றுெசுசெற்றெசு வருண ம்
4. திற்ரெரே
மீசெற்றெசு 1. மியூகொலேசு
(உ-ம் மியூக்கொர்)
1. அகாரிக்காலேசு
(உ-ம், அகாரிக்கசு 2. பெரெனேஸ்பொரலேன்
சளியோற்ற' (உ-ம். பைற்றோப்தொரு)
கம்பெஸ் றிஸ்)
1. பிளாக்றசுக்காலேசு
(உ-ம். அசுப்பசிவலசு) (ட- ம். (பெனிசிலியம்)
2. சக்கரோமைசிற்றாலேசு
(உ-ம், சக்கரோமைசெ+ |

பங்க்சுக்கள் (Fungi)
பங்கசுக்கள் தலோபீற்றா என்னும் பிரிவிலடங்குவன. இப் பிரிவைச் சேர்ந்தவற்றிற்கு பச்சையவுருவம் இல்லை. பச்சைய வுருவம் அற்ற அல்காக்களும் உண்டு. ஆனால் இவை பங்கசுக்களி லிருந்து வேறு விதங்களில் மாறுபாடுடையன. பங்கசுக்களில் பச்சையவுருவமின்மையால் அவை பிற போசணையுள்ளனவென அழைக்கப்படுகின்றன. இவை தம் உனாவுக்கு வேறு உயிரினங் களாற் தயாரிக்கப்படும் சேதனவுறுப்புப் பொருட்களில் தங்கி யுள்ளன. மற்றைய இயல்புகளில் பங்கசுக்களிடையே பல வேறு பாடுகளைக் காணலாம், எனவே அவை எல்லாம் ஒரே ஆதியி லிருந்து பெறப்பட்டனவா அல்லது பலவிதமான பிரிவுகளிலிருந்து பெறப்பட்டனவா என்பது சந்தேகத்திற்குரியதே. பங்கசைப்பற் ரிய இயல் பூசணலியல் எனப்படும், பங்கசுக்களிடையே தோற் றம் பலதரப்பட்டது. இவை உருளத்தில் நுண்ணிய தனிக்கல் முடைய மதுவம் முதல் பருத்த சதையுடைய அகாரிக்கசு (Agaricus) | மரத்துண்டுகள், அல்லது மரங்களில் ஒட்டுண்ணி களாக வாழும் பொளிப்போர சுகள் , ( Polyprus | முத லியவை வரை வித்தியாசப்படுகின்றன. பங்கசுக்கள் வாழுமிடங் களும் பல தரப்பட்டன, இவை நீரிலும், நிலத்திலும் வேறு உயிரினங்களினுள்ளும், புறமும் வாழ்கின்றன. எங்கெல்லாம் உயிர் வாழ இடமுண்டோ அங்கெல்லாம் அவை வாழக்கூடியன, பச் சையவுருவம் இவற்றில் இல்லாதபடியாலும், ஒளிச் சேர்க்கை செய்யுமியல்பில்லாதபடியாலும் அவற்றின் வளர்ச்சிக்கு ஒளி தேவையில்லை. எனவே அதிகமான இனங்கள் ஒளியைப்பற்றி அக்கறையற்றன. வெளிச்சத்திலோ, இருட்டிலோ வாழுந் தன்மை யுடையன. எனவே இவை ஒட்டுண்ணியாக அல்லது அழுகல் வளரியாக வாழ்க்கை நடாத்துகின்றன. அநேகமான பங்கசுக் களில் அவற்றின் தாவர உடல் போசணைப் பொருட்களைப் பெறக் கூடியவாறு விஷேட அமைப்புடையனவாயிருக்கும், ஒட்டுண்ணி வகைகள் காய்கறிகள், தானியங்கள், பழங்கள், பழ மரங்கள் முதலியனவற்றிற்குத் தீங்கு விளைவிக்கக் கூடியன. அழுகல் வளய வகைகள், இறந்த சேதன வு றுப்புப் பொருட்களான சாணம், பாண், ஜாம், காறுகாய், போன்ற பொருட்களில் சீவிக்கும். சில பங் கசுக்கள் நோய் விளைவிக்கக் கூடியன. இவை மனிதருக்கும். மிருகங்களுக்கும் நோயை உண்டாக்குகின்றன. சாதாரணமாக ஒட்டுண்ணி வகையைச் சேர்ந்த பங்கசுக்களும் தேவையேற்படின் அழுகல் வளரிகளாசுச் சீவிக்கக் கூடியன. ஆகையால் அவை அமையத்திற்கேற்ற ஒட்டுண்ணிகள் என அழைக்கப்படுகின்றன. உ. ம் : பித்தியம் " Pythiபா) அநேக பங்கசுக்கள் சுட்டுப் பட்ட ஒட்டுண்ணிகளாகும். அதாவது அவை விருந்து வழங்கி காரில் ஒட்டுண்ணிகளாக மட்டுமே வாழ்வன, உ, ம். ஓயிடியம் [ 0idul J. அனவ வாழும் விருந்து வழங்கிகளுக்கு எவ் வளவு தூரம் தங்கிளைக்கும் என்பது பங்கசுக்களுக்கு ஏற்ப வேறு படும். சில பங்கசுக்கள் பூசணவிழைகளை வெளிச் செலுத்துமுன்
TZ 5

Page 39
56
ஒருவித நஞ்சைச் சுரந்து விருந்து வழங்கியைக் கொல்ல, க்கூடிய இயல்புடையன், இவை அழிவுண்டாக்கும் பங்கசுக்கள் எனப் படும். வேறுசில பங்க்சுக்கள் விருந்து வழங்கியை உடனடியாகக் கொல்லமாட்டா, ஆனல் உணவுப்பொருட்களை உறிஞ்சுவ தால் சிறிது சிறிதாக அழிவுத் தொழிலைச் செய்கின்றன, வித்த் கள் உண்டாக்குங் காலம் வந்ததும் அவ்விடத்திலுள்ள விருந்து வழ ங்கி யின் இழையங்களை அழித்து விடுகின்றன. இவுை அழிவுண்டாக்கும் ஒட்டுண்ணிகளைப் போலல்லாது அதி விசேட முடையன. அ த் துடன் சில குறிப்பிட்ட விருந்து வழங்கிகளிலேயே சீவிப்பா. இவை சமநிலையொட்டுண்ணிகள் எனப்படும்,
அமைப்பு :
பங்கசின் உடலை, இலை, வேர், தண்டு எனத் தெளிவாகப் பிரிக்க முடியாது. பாகுப் பூஞ்சணம் (Slime moulds | போன்ற சில பங்கசுக்களில் உடல் அமீபா, போன்ற முதலுரு வாய்த் தோன்றும், எனினும் அநேகமான பங்கசுக்களில் உடல் நீண்ட மெல்லிய மயிர் போன்ற பூஞ்சணவிழைகளால் ஆக்கப் பட்டுள்ளது. பூசணவினர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து பூசண வலயாகத் தோன்றும். நுணுக்குக் காட்டியினூடாகப் பார்க்கும் பொழுது ஒவ்வொரு பூசாவலையும் கண்ணாடியாலான குழாய்கள் போன்று தோன்றும். வெவ்வேறு பங்கசுக்களின் கலச்சுவர்கள் வெவ்வேறு இரசாயன மாறுபாடுடையன. தாழ்ந்த பங்கசுக்களின் கலுச்சுவர்களின் முக்கிய பகுதி செலுலோசினால் ஆக்கப்பட்ட தெனக் கொள்ளப்படுகின்றது. சிலவற்றில் கலச்சுவர்கள் செலு லோசினாலேயே உண்டாக்கப்பட்டுள்ளது. அநேக உயர்ந்த பங் கசுக்களில் கல்ச்சுவர்கள் கைற்றின் என்னும் பொருளினால் ஆக்கப் பட்டுள்ளது. இது பங்கசுச் செலுலோசு என்றும் அழைக்கப்படு கின்றது. அநேகமாக கல்சியங்காபனேற்றும், வேறு உப்புக்களும் சுலச்சுவர்களிற் படிந்திருக்கும்.
பூசணவஃலகளில் இரண்டு முக்கிய வகைகளுண்டு, முதலாவ தில் பூசணவிழைசுள் ஒன்று அல்லது இரண்டு கருக்களைக் கொண்ட திட்டமான சவங்களினால் ஆக்கப்பட்டவை. இங்கு கலப்பிரிவுக்கு முன் கருப்பிரிவு நடைபெறுகின்றது. இரண்டாவ தில் பூசணவிழை கூட்டுக் கலங்களினாலாயது. கூட்டுக் கலங்களில் ஒரு கலத்தில் பல கருக்கள் காணப்படும். ஆனால் இக் கூட்டுக் கலங்கள் பிரிக்கப்பட்டோ, பிரிபடாமலோ இருக்கும். பிரிக் கப்பட்டிருப்பினும் பிரிசுவர்கள் முழுதாயிருக்கப்படமாட்டா. அநேகமாய் நடுவிற் காணப்படும் துவாரம் கரு, குழியவுரு முதலி யவை ஒரு அறையிலிருந்து அடுத்த அறைக்குச் செல்லக்கூடிய அளவு பருமனுடையதாகவே யிருக்கும். பிரிசுவர்கள் உண்டாதற் கும் கருப்பிரிவிற்கும் எதுவித தொடர்புமில்லை. பூசணவிழையின் குழியவுருவினுள் ஒன்று அல்லது பல சிறு வெற்றிடங்கள் காணப்படும். அதேக எண்ணை த்துளிகளும் வெல்லம், கிளைக்கோ |

57.
ஜன் ஆகியவையும் குழியவுருவினுட் காணப்படும். ஆனால் மாப்பி "பொருள் இல்லை. பலவித நிறப் பொருள்கள் கலச்சுவரில் அல்லது
கலத்தினுட் காணப்படும்,
போசணை :
பங்கசுக்கள் அழுகல் வளரிகளாயினும் ஒட்டுண்ணிகளாயி னும் கரையாத பொருள்களைக் கரையச் செய்யும் நொதிச் சத்துக் சுளைச் சுரந்து அவற்றைக் கரைத்தபின் உறிஞ்சுகின்றன. ஒட்டுண் ணிப் பங்கசுக்கள் பருகிப்பூசண விழைகள் எனப்படும் விசேட பூசாவிழைகளை உண்டாக்குகின்றன. இவ்விழைகள் விருந்து வழங்கியின் இழையங்களினுள் பணடுருவிச் சென்று அங்கு நொதிச் சத்துக்களைச் சுரந்து அங்குள்ள உணவுகளைச் சமிக்கப்பண்ணி, பின் உறிஞ்சுகின்றன. பங்கசுக்கள் கரையுந் தன்மையுடைய சேதன வுறுப்புக்குரிய நைதரசன் சேர்வைகளையும் உறிஞ்சும் தன்மை யுடையன, பொதுவான வளர்ச்சிக்குத் தேவையான உயிர்ச் சத்துக்கள் போன்றவற்றைத் தாமே தயாரிக்கின்றன அல்லது வெளியிலிருந்து பெற்றுக் கொள்கின்றன.
வேர்ப் பூசணக் கூட்டம் (Mycorhiza
சில பங்க்சுக்கள் பூக்குந் தாவரங்களின் வேர்களில் நெருங் கிய உறவு கொண்டு வாழ்கின்றன. இவ்வாறு கொடுத்து வாங்கும் இயல்புள்ளவை வேர்ப்பூசணைக் கூட்டம் எனப்படும். இல்லக்கன் கள் என அழைக்கப்படுகின்றவற்றில் வே றுவித விநோதமான கொடுத்து வாங்கல் முறை காணப்படுகிறது. இது பச்சை நிற அல்காவுக்கும், பங்கசுக்குமிடையே நடைபெறும்.
இனப்பெருக்கம் :
பங்கசுக்களில் இனப்பெருக்கம் பதியமுறை, இலிங்கமில் முறை, இலிங்கமுறை என மூன்று விதமாக நடைபெறும்.
(1) பதியமுறையினப் பெருக்கம் :
(அ) துண்டு துண்டாதல் தற்செயலாக அல்லது வெளிக் காரணிகளால் பல துண்டுகளாகப் பிரிகின்ற ஒவ்வொரு துண்டும் உகந்த இடத்தையடைந்ததும் தனிப்பங்கசாக வளரும்.
(ஆ) அரும்புதல்:-மதுவத்தில் தாய்க்கலத்திலிருந்து பல அரும்புகள் உண்டாகின்றன, இவ்வரும்புகள் இளமையிலேயே தாய்க் கலத்திலிருந்து பிரிந்து புதிய பங்கசுகளாக விருத்தியடை கின் றன, சிலவேளைகளில் அரும்புகள் சங்கிலி போன்று இணைந் திருப்பதால் போலிப்பூசணவலை போன்று தோன்றும்.

Page 40
68
(2) இலிங்கமில்முறை இனப்பெருக்கம் :
இம்முறை இனப்பெருக்கம் வித்திகள் மூலம் நடைபெறு கின்றது. ஒவ்வொரு வித்தியும் தாய் மரத்திலிருந்து வெளியாக்கப் பட்ட தனிக்கலமாகும். இது தாயைப் போன்று வேறு கலங்களை உருவாக்கக் கூடியது, சாதாரணமாக தனிக்கலத்தினுவாயதா .. யினும் சில வேளைகளில் பல்கலமுடைய வித்திகளும் உண்டாகும், இவ்வித்திகளும் தனிக்கலவித்தி போலவே தொழிற்படுகின்றன.
வித்திகள் அவற்றின் உருவத்திலும், உண்டாகும் விதத்தி லும் பல வேறுபாடுடையன. சாதாரணமாக முட்டையுருவாக அல்லது கோளவுருவாகக் காணப்படும். இவை நிறத்திலும் வித்தி யாசப்படும்.
அநேகமாசு வித்தி இருசுவர்களால் ஆக்கப்பட்டிருக்கும். உட்சுவர் மெல்லிய கண்ணுடி போன்றது. இது உள்ளடை என அழைக்கப்படும், வெளிச்சுவர் தடித்ததாயும் அலங்கரிக்கப்பட்டதா யுமிருக்கும். இது வெளியடை எனப்படும். பின்வருவன இலிங்கமில் முறை இனப் பெருக்கத்தாலுண்டானவை எனக் கணிக்கப்படும்.
(1) அகவித்திகன் (Endosport
வித்திப்பைத்தண்டுகள் எனப்படும் விசேட பூசணையிழை களின் நுனியில் வித்திப்பைகள் காணப்படும். இவற்றின் முத
லுருவின் பிரிவால் அகவித்திகள் உண்டாகின்றன. (2) தூளிய வித்திகள் (1)
Conidia இவை அசைவற்ற வித்திகள் தூளியந்தாங்கி என அழைக்கப் படும் பூசண விழையின் விசேட கிளைகளின் நுனியிற் காணப்படும் சுருக்குகளினால் உண்டாக்கப்படும் வித்திகளாகும். இவை பைற் ரேப்தெராவிற் (PhytophthoTH ) போன்று தனிமை யாகவோ அல்லது பெனிசிலியத்திற் போன்று சங்கிலியுருவ மாகவோ உண்டாக்கப்படலாம்.
(3) ஒயிடியா (Oidia) :
அநேக பங்கசுக்களில் பூசணவலைகளை யுண்டாக்கும் பூசண விழைசுளின் குறுக்குச் சுவர்களால் பிரிக்கப்பட்டு பல சிறு துண்டு களாகப் பிரியும், இத்துண்டுகள் ஒவ்வொன்றும் முளைத்துத் தனித் தாவரமாக வளரக் கூடியன. இவ்வாறு சங்கிலியாகச் சேர்ந்தோ அல்லது பிரிந்தோ காணப்படும் துண்டங்கள் ஒயிடியா எனப்படும்.
4) வன்றோல் வித்தி: (Chlamydosporg):-
இவையும் ஒயிடியாவைப் போன்றே உண்டாகின்றன. ஆனால் இவற்றின் சுவர்கள் தடிப்பானவையாயும், கறுப்பு அல்லது

நர்
மண்ணிற முடையனவாயும் காணப்படும். இவை பூசணளிழை களில் ஒழுங்கற்ற இடைவெளிகளில் உண்டாகும். இவை முளைத்த பின் வித்திக் கலன்கள் அல்லது சளிய உத்திகளையுடைய குறுகிய பூசணவிழைகளை யுண்டாக்கும். 3) இலிங்கமுறை இனப்பெருக்கம் :
சில பங்கசுக்கள் ஓரில்லமுள்ளவை. இவற்றில் இருபாற் குறிகளும் ஒரே பிரிவிலியிற் காணப்படும். வேறுசில ஈரில்ல முள்ளவை, இவற்றில் பாற்குறிகள் வெவ்வெறு பிரிவிலிகளிர் காணப்படும். முன்னையது ஓரினப்பிரிவிலி எனவும் பின்னையது பல்லினப்பிரிவிலி எனவும் அழைக்கப்படும். பாற்கலங்கள் புணரி கள் எனப்படும். இரு புணரிகள் உருவத்திலும், பருமனிலும் ஒத்திருந்தால் அவை ஒத்த புணரிகளென்றும், அவை உருவத்திலும் பருமனிலும் வேறுபட்டிருந்தால் பல்லினப் புணரிகள் என்றும் அழைக்கப்படும். ஆண்புணரிகளை உண்டாக்கும் அமைப்புகள் ஆண்கலச்சனனி என்றும், பெண்புணரிகளை யுண்டாக்கும் அமைப்பு முட்டைச்சனனி என்றும் அழைக்கப்படும். ஆண் புணரி விந்துப் போலி என்றும், பெண்புணரி முட்டை என்றும் அழைக்கப்படும். உயர்ந்த பங்கசுக்களில் இலிங்கமுறையினப் பெருக்கம் அதிகம் நடைபெறுவதில்லை, இது பங்சுசுக்குரிய தணிக் குணாதிசயமாகும், அசுக்கோமைசீற்றெசுவில் இலிங்கமுறை பானப் பெருக்கத்தின் போது உண்டாகும் கலங்கள் கோவணி வித்திகள் ( ASCO9porES ] எனப்படும். இவை கோணி அல்லது அசுக் கசு என்னும் ஒரு கலத்தினுள் உண்டாக்கப்படுகின்றன. பேசிடி யோமைசிற்றெசுக்களில் உண்டாக்கப்படும் வித்திகள் சிற்றடி வித் திகள் (BasidiosporL] எனப்படும். இவை சிற்றடி அல்லது பசிடியம் என்னும் கலத்தில் உண்டாக்கப்படுகின்றன.
உபபிரிவு : இயூமைக்கோபீற்றா ( Eumycophyta)
இதில் உயர் பங்கசுக்கள் அடங்கும். இது நான்கு வகுப்புக ளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன பீக்கோமைசீற்றெசு, அசுக்கோலம் சிற்றெசு, பசிடியோமை சிற்றெசு டியூற்ரெறேமை சீற்றெசு (நிறைவில் பங்கசுக்கள்).
வகுப்பு : பீக்கோமை சீற்றெசு PhycomyCates |
அல்கா போன்ற பங்கசு என்றும் அழைக்கப்படும் பீக்கோடை சிற்றெரசு மிகவுந் தாழ்ந்த வகுப்பாகும். இதில் பிரிவிலி மிகவும் எழிமையான ஒருகலமுடைய உருண்டை வடிவான கவங்களிலிருந்து பல கிளைகளுடைய குழாய்கள் போன்ற பூசணவஃபவரை வேறு படும். பூசணவலையில் கிளைக்கும் இழைகளும் உண்டு, ஒவ்வொரு கிளையும் ஒவ்வொரு பூசண விழையாகும், பூசணவிழைகள் ஐதா கவோ, நெருக்கமாகவோ அடுக்கப்பட்டிருக்கும். பூசணவிழைகளில்

Page 41
பிரிசுவர்இல்லாமை பிக்கோமைசீற்றெசுவின் குணாதிசயங்களில் ஒன் ராகும். தாவரவுடல் ஒரு பொதுமைக்குழியமாகும். Coenocytic) வித்திப்பையில் எண்ணற்ற வித்திகள் உள்ளமை வேறு வகுப்பு களிற் காணப்படாத குணாதிசயமாகும். இயூமைக்கோபீற்ருவின் ஏனைய வகுப்புக்களைப் போன்றதல்லாத இவ்வகுப்பில் இலிங்க முறை யினப்பெருக்கம் தெளிவானதொன்றாகும். வித்திக்கலனில் வரையறை யில்லாத எண்னணிக்கையில் விரித்திகளுண்டாகின்றன, இரு புணரிகளின் கருக்கள் ஒன்றுசேர்வதால் நுகம் உண்டாக, அதைச் சுற்றி ஒரு சுவரும் உண்டாவதைக் காணலாம்.
வருணம்மியூகொறாலேசு (Mucorales |
இவற்றில் சில அழுகல் வளரிகளாயும், வேறு சில ஒட் டுண்ணிகளாயுமிருக்கின்றன. இவற்றின் பூசணவலைகள் எல்லே யின்றி வளரக்கூடியன், இளமைப் பருவத்திலாவது அதிக வளர்ச்சி யுடையனவாயிருப்பதுடன் குறுக்குச் சுவர்களற்றனவாயுமிருக்கும். அலைளில் வித்திகள் மூலம் இலிங்கமில் முறை இனப்பெருக்கம் நடைபெறுகின்றது. வித்திக்க பன் தாங்கிகளின் நுேனிகளிற் காணப்படும், வித்திக்கலன்களினுள் அஃலவில் வித்திகள் உண் டாக்கப்படுகின்றன. இலிங்க முறையினப் பெருக்கம், புணரிப் பைகளினுள் ( Gametangia) தனியாக உண்டாக்கப் படும் அலைளில் புணரிகளினால் ( Aplanogametes ) நடை பெறுகின்றது.
மியூக்கர் (Mucor ) :
மியூக்கொர்
மாட்டின் அல்லது
குதிரையின் ஈர மான சாணத்தில் அல்லது வேறு இறந்த சேதனப் பொருளில் வாழும் அழுகல் வளரியாகும். சாணத்தில் வாழும் இனம் மியூக் கொர் மியூசிடோ ( Mucor Mucedo எனப்படும்,
அமைப்பு :
மியூக்கொயரின் பூசணவவை பிரிசுவரற்ற பல கிளையுடைய பூசண விழைகளினால் ஆக்கப்பட்டது, பூசண விழைகள் சுடட்டுக் கலங்களால் ஆக்கப்பட்டவை. சிவ வேகாகளில் முதிர்ந்த பூசண விழைகள் பிரிசுவருடையனவாய்க் காணப்படும். சாதாரணமாக பூசணவிழைகள் வெண்மையானவையாயும், பல கிளைகளுடையன வாயும் உணவுப் பொருட்களின் மேல் பரந்துமிருக்கும். சில பூசனை விழைகள் அவை பரவியிருக்கும் பொருள்களினுள் ஊடுருவிச் செல்லக்கூடி யன, இவை உறிஞ்சும் பூசணவிழைகள் எனப் படும். சில பூசணவிமைகள் காற்றில் மிதப்பன. இவை வித்திப் பைத்தண்டுகள் எனப்படும். பூசணவிழையின் கலச்சுவர் கைற் றின் Chitin ) என்னும் நைதரசன் பொருளாலானது.

வித்திக்கலன்
பாட படப்ப:-
வித்திக்கலன்
தாங்கி
இரவா
பூசணவவை பூசாவலையும் வித்திக்
கலன்களும் படம் 21. மியூக்கொர் குழியவுருவினுள் பல அளவுகளுடைய பால் கருக்களும் எண்ணெய்த் துளிகளும், கிளைக்கோசனும் காணப்படும். முதஓரு எப்பொழு தும் அசைந்தபடியேயிருக்கும். போசணை:
அவை தங்கியிருக்கும் பொருள்களினுள் செலுத்தப்படும் பூசாவிழைகள் நொதிச் சத்துக்களைச் சுரந்து கடணப் பொருள் களைச் சமிபாடடையச்செய்யும், சமிபாடடைந்த உணவுப் பொருள்கள் உறிஞ்சும் பூசணளிழைகளால் உறிஞ்சப்படும். இனப்பெருக்கம்
மியூக்கொரில் இலிங்கமில்முறை, இலிங்கமுறை ஆகிய இரு முறைகளிலும் இனப்பெருக்கம் நடைபெறுவதுண்டு.
சிறுகம்பம்
வித்திகள்
இளம் விதிக்கலன்
படம் 22
புன்வெற்றிடம் வித்திக்கல விருத்தி

Page 42
வளரும் ஒவ்வொறு செங்குத்தாக நன் அடர்த்தியா
இவிங்கமில்முறை இனப் பெருக்கத்தின்போது சில பூசண ' விழைகள் மேல் நோக்கிச் செங்குத்தாக வளரும். இவ்வாறு வளரும் ஒவ்வொரு இழையின் நுனியும் பருத்து வித்திக்கலனா கிறது, எனவே இவ்வாறு செங்குத்தாக வளரும் இழை வித்திக் சுலன் தாங்கியாகும், பூசணவிழையபின் நுனி அடர்த்தியானதா யும், நடுப்பகுதி அடர்த்தி குறைந்தும் சிறு வெற்றிடங்களுடைய தாயுமிருக்கும், கருக்களெல்லாம் சுற்றுப் புறங்களை நோக்கி ஓடும். இவ்விரு பகுதிகளும் சந்திக்குமிடத்தில் ஒரு குமிழ் வடிவான சுவர் உண்டாகிறது. இவ்வாறு வித்திப்பைத்தண்டின் காம்பின் நுனி பருத்து 'சிறுகம்பம்" ( Columella ) என அழைக்கப் படுகிறது. இது விருத்தியாகும் பொழுது முதலுருவின் சுற்றுப் பகுதி பல வட்டமான தனியலகுகளாகப் பிரியும், ஒவ்வொன் விலும் பல கருக்களும் குழியவுருக்களும் காணப்படும். ஒவ்வொரு அலகும் தடித்த சுவரினாற் சூழப்பட்டு வித்தியாசின்றது. வித்திக் கலனின் மிகுதிப் பகுதி சளிபோன்ற பொருளாக மாறுகின்றது, வித்திகள் முற்றியவுடன் சளிப்பகுதி பருக்கின்றது. இந்நேரத்தில் வித்திப்பையின் சுவர் சுடினமானதாகி உடையுந் தன்மையுடைய தாய் மாறியிருக்கும். அத்துடன் அது கல்சியம் ஓக்சலேற்றினால் மூடப்பட்டிருப்பதால் கருமை நிறமாக மாறுகின்றது. சளி பொங் குவதால் வித்திக்கலச் சுவரில் அழுத்தம் கூடுகின்றது. அத்துடன் சிறுகம்பத்தின் அமுக்கமும் சேருவதால் வித்திக்கலன் வெடிக்கவே வித்திகள் வெளியாக்கப்படுகின்றன, இவ்வித்திகள் சிலகாலம் சளி யிற் பதிந்து கிடக்கும், காலகதியில் பூச்சிகளினால், அல்லது சளி வரண்டு விடுவதனால் வெளிச் செல்கின்றது. பின் காற்றினால் பரவு சின்றது. இவ்வாறு பரவும் வித்தி உகந்த இடத்தில் தங்கும் பொழுது மூலவுருக் குழாயொன்றை வெளியாக்கி புதிய பூச
வலையை உண்டாக்குகின்றது.
8 சளி பகுதி படையும் ஒக்ச
வன்றோல் வித்திகளும் ஒயிடியாக்களும் :
ஒரு பூசணவலை போசாக்குள்ள கரைசலில் வைக்கப் பட்டால் பூசலாவியை பிரிசுவர்களில் பிளவுபட்டுச் சங்கிலி (போன்ற கலங்கள் உண்டாகும். இக் கலங்களினுட்பொருள் திரண்டு, சுவர்கள் தடித்து இழைப்பாறும் வித்தி அல்லது வன் ரேல் வித்தி ஆகும். உகந்த காலம் வர இழைப்பாறும் வித்தி
முளைத்துப் புதிய பூசணவலையாகும். அநேகமாக இழைப்பாறும் கலங்கள் மெல்லிய சுவருடையன, அவை ஒயிடியா ( pidia | என அழைக்கப்படும். இவை மற்றவைகளிலிருந்து தனித்தனி யாகப் பிரிந்து அரும்புவதில் பெருகுந் தன்மையுடையன. இவை வெல்லக் கரைசலில்' அற்ககோல் நொதிப்பை யுண்டாக்கவல்லன . இது தொருலா நிலை (Torula Condition - ] என அழைக் கப்படுகிறது.

புணரிக்கல் முதல் புணரிக்கல் முதல்
சரக்கணம் புணரிக் கலம்
பூ பூப் -- அ அ
நுகவித்தி
தடித்த சுவருள்ள நுகளித்தி
படம் 23. (அ) இலிங்சு முறை இனப் பெருக்கம். இலிங்கமுறையினப் பெருக்கம் |
மியூக்கொரில் நடைபெறும் இலிங்கமுறை இனப்பெருக்கம் அவதானத்திற்குரியது. இதில் இரு குலவகைகள் உண்டு. அவைகள் நேர்குல வகைகள் அல்லது எதிர்குல வகைகளாகும். எனவே இது தனிப்பாலுடையதாகும். வெளியுருவத்தில் நேர்குலவகைப்பூசணவிழைக்கும், எதிர்குல வகைப் பூசாவிழைக் கும் வித்தியாசமில்லை, ஆனால் தொழில்முறையில் இரண்டிற்கும் வித்தியாசமிருக்கவேண்டும். இது பல்லினப்பிரிவிலியுண்மை எனப்படும்.
நேர்குல வகையைச் சேர்ந்த தாவரங்கள் மிகவும் ஆங்கார மாசு வனரும், இரு வித்தியாசமான குல்வகையைச் சேர்ந்த தாவரங்களின் பூசணவிழைகள் ஒன்றையொன்று சந்திக்கும் பொழுது சந்திக்குமிடத்தில் இரண்டும் ஒவ்வொரு கிளைவிடும். இக் கிளைகளின் நுனிகள் தட்டையாகி ஒன்றுடன் ஒன்று பொருந்தி யிருக்கும், இவை வளரத் தொடங்கும் பொழுது முன்னைய பூசண

Page 43
வித்திக்கலன்
-பித்திக்கலன்
தாங்கி
நுகவித்தி
படம் 23. (ஆ) முளைக்கும் நுகவித்தி
விழைகளிரண்டும் பிரிகின்றன. குண்டாந்தடியுருவான ஒவ்வொரு கிளையும் முதற் புணரிக்கலமுதல் எனப்படும். பின்பு, பல கரு வுடைய முதற் புணரிக்கல் முதல் நுனிகள் ஒரு குறுக்குச் சுவரால் துண்டிக்கப்படும். துண்டிக்கப்படும் பகுதி புணரிக்கல மெனப் படும். 1 எஞ்சியபகுதி தூக்கணம் எனப்படும், ஒவ்வொரு புணரிக் தலத்திலும் இருக்கும் அடக்கம் பல்கரு வுள்ள புணரியாகும், இரு புணரிக் கலங்களுக் கிடையேயுள்ள சுவர் அழிந்து அவற்றின் கருக்கள் சோடி சோடியாகச் சேர்கின்றன, சேர்க்கையடையாத கருக்கள் அழிந்து போவதாயிருக்கலாம். இதைச் சுற்றி இரு படையாலான சுவருள்ளது. வெளிப்படை வித்திப்புறக்கவசம் என்றும் உட்படை வித்தியசக்கவசம் என்றும் அழைக்கப்படும். சுவர் தடிப்படைந்து, கருமையாகி மேற்பரப்பில் சுரணையுள்ளதாக மாறுகிறது. இதுவே முழுவிருத்தியடைந்த நுகவித்தியாகும்.

ஓரளவு இழைப்பாறிய டசின் நுகவித்தி ( ZygoSpore | முளைக்கத் தொடங்கும் முளைக்கத் தொடங்கும் பொழுது அது நீரை உறிஞ்சி வெளியடை ( EROSporium] வெடித்து, உள்ளடை ( Endosporium ) ஒரு குழாய் போன்று வெளியே வந்து முதற்பூசணவலையை யுண்டாக்கும். இதில் ஒரு தனி உருண்டையான நுகவித்திக்கலன் ( Zygosporangium) உண்டாகிறது. நுகவித்தியிலுள்ள கருக்கள் ஒவ்வொன்றும் ஒடுங் கற் பிரிவடைந்து ஒருமடியான வித்திகளாக மாறுகின்றன. ஒடுங்கற் பிரிதலின் போதே நேர், எதிர் குலவகைகள் பிரிவடை கின்றன. ஒவ்வொரு கருவும் குழியவுருவாற் சூழப்பட்டு வித்தி யாகும்.வித்திக்கவச் சுவர் வெடிக்கவே வித்திகள் வெளி பாக்கப்படுகின்றன. நேர்குலகைகளுக்குரிய வித்திகள் முளைக் கும் பொழுது நேர்குல்வகைக்குரிய பூசணளிழைகளையே உண் டாக்கும், எதிர் குலவகைக்குரிய வித்திகள் முளைக்கும் பொழுது எதிர்குலவகைக்குரிய பூசணவிழைகளையே உண்டாக்கும்.
ஈரமான பாண்துண்டு ஒன்றைச் சில நாள் ஒரு கண்ணாடி முகவையினால் முடி வைத்தால் வெள்ளைப் பஞ்சு போன்ற படை காணப்படும். இதை ஒரு நுணுக்குக் காட்டியினூடாகப் பார்த் தால் மியூக்களினதும் றைசோப்பசுவின் தும் ( Mucor &
Rhizopus 1 பூசண வலைகள் தென்படும்.
மியூக்கொரின் உறவினர் :
றைசோபசு ( Rhizopus ) மியூக்கொருடன் மிக நெருங் கிய உறவுள்ள சாதியாகும். ஆனால் இரண்டிற்குமிடையில் சில வேறுபாடுகள் காணப்படுகின்றன,
மியூக்கொர்
னறுசோபசு
1. பெரும்பாலும் சாணத்தில் பாரில் வாழும்
வாழும் 2 படரியில்லை
படரியுண்டு
3. வித்திக்கலன்தாங்கி
தனிமையாயிருக்கும்
வித்திக்கலன்தாங்கி கூட்டமா
யிருக்கும்
4. கிளைகளற்றது
சிலவேளை கிளைகளிருக்கும்
5. புணரிக்கலம் ஓரேபரும்
னுடையது
புணரிக்கலம்பிட
வெ
ஒரே பருமனற்

Page 44
>> வித்திக் கலன்கள்
+ அல்லது --
+ அல்ல்து - வித்திக்கலன் தாங்கிகள்
A
> வன்றேல் வித்திகள்
+ அல்லது - வித்திகள்
ஒமிடியா
இலி ங்க மில் முகம்
(r)
மியூக்கொர் (1) + அல்லது -
புணரிக்கலமுதல்கள் +
வித்திகள்
இலிங்க முறை
புணரிக்கலங்கள் |
வித்திக்கவன் + : -
பொதுமைப்பு3ணாரிகள் +
பூசணவப்ப முதல் + [-]
நுகவித்தி
(ஒடுங்கற் பிரிவு) (2) மியூக்கொரின் வாழ்க்கைச் சக்கரம்

77
"வகுப்பு : பிக்கோமீசெற்றெசு
PhyConycetes | வருணம் : பெரெனோஸ்போராலே சு ( PErnosporaleg1
இவ் வருணத்தைச் சேர்ந்த பங்கசுக்களில் நீரில் மட்டும் வளருவனவும், நிலத்தில் மட்டும் வாழ்வனவும் உண்டு, நீரிலும், நிலத்திலும் வாழக்கூடியனவும் உண்டு. இவற்றில் அதிகமானவை வேறு தாவரங்களில் ஒட்டுண்ணிகளாகவே வாழ்கின்றன, சிவ கட்டுப்பட்ட ஒட்டுண்ணிகளாகும். அதிகமான இனங்களிலே தாய்ப் பூசண வலையிலிருந்து பிரியும் வித்திப்பை காற்றினுதவி யால் இடம் பெயர்க்கப்படுகிறது. வித்திப்பைகள் நீரில் விழுந்தால் அவற்றிலிருந்து இயங்கு வித்திகள் உண்டாகும். வரண்ட நேரத் தில் ஒரு மூலவுயிர்க் குழாய் உண்டாகி அதிலிருந்து நேராகவே பூசணவிழை உண்டாகும், அசையும் வித்திகள் இதில் உண்டாவ தில்லை.
அதிக சிறப்புப்பெற்ற - பெரெனோஸ்போராவேசுகளில் இயங்கு வித்திகள் நீரிற் காணப்படுவதில்லை.
இலிங்கமுறையினப் பெருக்கம் :
அலைவில் புணரி உண்டாவதால் நடை பெறக்கூடும். இது முட்டைப் புணரிக்குரிய வகையைச் சார்ந்ததாகும்,
சாதி ' பீற்றொப்தொரு - Phytophthora | (அல்லது பைற்றொப்தொரு ) குடும்பம்-பித்தியேசியே
இச்சாதியைச் சேர்ந்த இனங்கள் பெரும்பாலும் பூக்குந் தாவரங்களிலே ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன.
சாதாரணமாகக் காணப்படும் இனம் உருளைக்கிழங்கில் லேற் பிளைற் ( Late blight ) என்னும் நோயை உண் டாக்குகின்றது.
தாவரங்களில் நோயை உண்டாக்கும் ஏனைய இனங்களாவன
விருந்துவழங்கி பை. மியாடை
P, TEadli
இறப்பர் பை, பபெரை
P. faberi
கொக்கோ பை, அரிக்கா
P. Sr EA
கமுகு பை, பாமிவோரா ( P. palmivard |
பனை, தென்னை பை, சிற்றெஃபோரா ( P. titirophora |
தோடை எலும்
மிச்சை பை. பரசிற்றிக்கா[ P. parasitica |
ஆமணக்கு பை, கிறிப்ரோறியா ( P. Jryptoபூ
தக்காளி பை. மெகாஸ்பெர்மா ( P. mugasperma ] - முட்டைக்கோஸ்

Page 45
78
உருயை யுண்ட "இவ்லியாகள் கா கோடூரமாகயான பள் பரவுவதும்
பைற்றோப்தொரா இன்ஃபெஸ்ரன்ஸ் [Phytophthora infustang) உருளைக் கிழங்கின் இலைகளைத் தாக்கி 1'லேற் பிளேற்"" என்னும் " நோயை யுண்டாக்கின்றது, உருளைக்கிழங்கின் வியாதிகளில் அதி கொடூரமானது இவ்வியாதியேயாகும். இவ் வியாதியுனடய இலை களில் கருமையான புள்ளிகள் காணப்படும். வரட்சியான காலங் களில் இறந்த புள்ளிகள் பரவுவது குறைவு. ஆனால் குளிர்காலங் கணில் புள்ளிகள் விரைவில் பரவும். இலைகளை அழித்தபின் இது நோய் தானடத் தாக்கும், சில வேளைகளில் முழுத் தாவரத்தை
பருகி
அப்படியும்
கலத்திடைப் பூஞ்சணவலை
படம் 24, (அ) பைற்றெப்தொராவின் பூஞ்சணாவலை
யும் தாக்கும். இதனாற் தாக்கப்பட்ட இலைகளைப் பரிசோதித்துப் பார்த்தால் இப்பயின் கீழ்ப்புறத்தில் ஒவ்வொரு புள்ளியையும் சுற்றிவரத், தெளிவான வெண் சாம்பல் நிறமான வளை யங்களைக்

19
காணலாம். இவ்வாறான வேளையமிருப்பின் அது நோயிருந்ததற்கு தகுந்த அத்தாட்சியாகும், இவ் வெளிவளர்ச்சியே வித்திக் சலக்னக் காவி நிற்கும். இவ் வித்திக்கலன்களே நோயை இலையிற் பரப்பு கின்றன. நிலத்தின் மேலுள்ள பகுதிகள் தாக்கப்பட்டபின், இலை களிலிருந்து அனுப்பப்படும் உணவிலேயே தங்கியிருக்கும். நிலத் தின் சிலுள்ள கிழங்குகளின் விருத்திகுன்றும், கிழங்குகளின் கீழ்ப் புறத்தில் மண்ணிறப் புள்ளிகள் காணப்படும்,
இலைவாய்
நேரடியாகத் துளைக்கும்
மூலவுயிர்க்குழாய் மூலவுயிர்க் குழாய்
படம் 24. (ஆ) பைற்றொப்தொருளின் பூஞ்சணவலை
பூசாவலை :
பூசாவலை கிளைத்து பிரிசுவருடையதாயிருக்கும். முதிர்ந்த வலையிற் காணப்படும் கோடுகளிலிருந்து பிரிசுவர்களிருப்பதைக் காணலாம். பூசணவிழை கூட்டுக் கலமாகும். இவ் வொட்டுண்ணி

Page 46
80
உருளைக்கிழங்குத் தாவர இலையின் இழையத்தினுட் சென்று. - பருகிகள் எனப்படும் மென்மையான பூசணவிழைகளை விருந்து
வழங்கியின் கலங்களினுட் செலுத்தி போசணையைப் பெற்றுக் கொள்கின்றது. பருகிகளிலிருந்து நொதிச் சத்துக்கள் விருந்து வழங்கியின் கலங்களுக்குட் சென்று அங்குள்ள உணவை சயிக்கச் செய்தபின் பருகிகளால் உறிஞ்சப்படுகின்றன, கலச்சுவர் முக்கிய மாக செலுலோசினுலாக்கப்பட்டது. கு ழியவுருவினுள் பல கருக் களும் சிறு வெற்றிடங்களும், எண்ணெய்த் துளிகளும், கிளேக் கோசனும் உண்டு.
வித்திக்கலன்
முனைக்குரிய
வன்றேல் வித்தி இடைப்பட்ட
வன்றோல் வித்தி
இவைவாய்
படம் 25. நோய்ப்பட்ட இலையின் கீழ்ப்பரப்பு வாய்களினூடாக வெளிவரும் வித்திக்கலன் தாங்கிகள்

41
இனப்பெருக்கம் :
பைற்றேப்தொராவில் இலிங்கமில் முறை, ஆகிய இருமுறை இனப்பெருக்கம் நடைபெறும்.
இலிங்கமுறை
இலிங்கமில் முறை : உலர்ந்த காலங்களில் பூசணவலை இலையினுள்ளேயே பதிந்திருப்ப தால் இனப்பெருக்க உறுப்புகள் உண்டாவதில்லை. குளிர் காலங் களில் பூசணவலை கிளையுடைய பூசணவிழைகளை யுண்டாக்கும்' இவ் விழைகள் இலைவாயினூடாக அல்லது இலையின் மேற்ரோல் மூலம் வெளியாகின்றன. காற்றில் மிதக்கும் இக்கிளைகள் வித்திப் பைத் தண்டுகள் எனப்படும். இத்தண்டுகள் நுனியில் ஒற்னற வித்திக் சுலனையே தாங்கி நிற்கும், இவ்வாறு முதலுண்டான வித் இளம் வித்தித்கலன்
முதிர்ந்த வித்திக்கலன்
இயங்குவித்தி
வெறும் வித்திக்கலன்
3 ஐ ரெ.
முளைக்கும்
இயங்கு வித்தி
மூலவுயிர்க் குழாய்
படம் 26. இவிய்சுமில் இனப்பெருக்கம்
திக்கலன் பக்கமாகச் சாய்ந்துவிட,
வித்திக்கலனின் கீழுள்ள பகுதி மீண்டும் வளர்ந்து ஒரு புதிய வித்திக்கலனை உண்டாக்கும், இவ்வாறு வித்திக்கலன் தண்டு பல கிளைகளாகப் பிரிந்து ஒவ் வொரு கிளையும் ஒவ்வொரு வித்திக்கலனைத் தாங்கிநிற்கும்.
17 6

Page 47
82
புதிதாக வளர்ச்சி நடக்கும் ஒவ்வொரு இடத்திலும் முன்பு சித்திக் கல்னிருந்த இடத்தைக் காட்ட ஒரு முடிச்சு இருப்பதைக் காண லாம். சாதாரணமாக ஒரு வித்தி தாய்மரத்திலிருந்து விடுபட்டு . காற்றினிலோ அல்லது வேறு விசைகளினாலோ அருகிலுள்ள வேறு விருந்துவழங்கியை அடைந்தால் முளைத்துப் புதிய பூசணவிழை யைத் தோற்றுவிக்கும், இவ்வாறு நேரடி யாக முளைக்கும் பங்க சின் வித்திகள் தூளி எனப்படும், எனினும் இலையில் நீர் இருப்பின் வித்தியினுட் பொருள் இரு சவுக்கு முன்களும் ஒரு கருவுமுடைய இயங்குவித்திகளாகப் பிரிவடையும். இவை (பேரிக்காயுருவானதா யும் சவுக்கு முளைகளை இரு பக்கங்களிற் கொண்டுள்ள தாயும் இருக்கும். சிம்பி வெடித்தவுடன் அவை வெளி இலையிற் காணப் படும் மழைத்துளியில் அல்லது பனித்துளியில் நிந்தித்திரியும். சில நிமிடங்கள் நீந்தியபின் அவை தமது சவுக்கு முப்பாக இழந்து அழைப்பாறும், பின் மூலவுயிர்க்குமாயொன்றை உசோ டாக்கி இவோய் மூலம் அல்லது மேற்றேல் மூலம் இலையினுட் சென்று வளருகின்றன,
வன்றோல் வித்தி ( Chlamydospore
இவை ஆமணக்கு நாற்றுகளில் வளரும் பைற் ரீெபமதி" பரசிற்றிக்காவில் சாதாரணமாகக் காணப்படும். பங்கசுவுடலின்
பராகைனசு ஆண்கலச் சனனி
முட் டைச்சனணி
படம் 27. (அ) இலிங்கமுறை இனப்பெருக்கம்

83
இடையிலேயும், நுனியிலும் காணப்படும். ஒவ்வொரு வன்றேல் 'வித்தியும் முகாக்கும் பொழுது 3-11 வித்திக் கலன்களைக் கொண்ட
குழாய்களை யுண்டாக்கும்,
இலிங்கமுறையினப்பெருக்கம் ;
பை, இன்ஃபெஸ்ரன்ஸில் சில வேளைகளில் இலிங்க புனற யினப் பெருக்கம் நடைபெறக்கூடும். இது முட்டைக்குரிய வகை யைச் சேர்ந்ததாகும்.
பெண் கரு
-ஆண் கரு
படம் 27. (ஆ)
முட்டைச்சனனி பளிங்குப்பண்புள்ளவற்றிலிருந்து மஞ்சள் நிறமுடையதுவரை மாறுபடும், பூசணவிழைகளின் நுனிகள் பருத்து உருண்டையான முட்டைச் சனனியாகும். இது குறுக்குப் பிரிசுவரினால் துண்டிக்கப்பட்டுப் பலகருக்களைக்
கொண்ட முட்டைச்சனன உருவாகும்.
ஒருகருமட்டும் கருக்கட்ட லுக்காக மத்தியில் நிற்க ஏனை யவை முட்டையின் ஓரங்களுக்குச் செல்லும். இப்பொழுது மற் (றொரு சிறிய கிளை அதிகம் நீண்டு வளர்கிறது. இது நுனியில் விக்க மடைந்து ஒரு பிரிசுவரினால் துண்டிக்கப்படுகிறது. முதலில் பல கருவுடையதாயரிருந்த அதன் உட்பொருள் பின்பு தனிக்கருவுடைய தாக மாறுகின்றது. ஆண்கலச் சனனி பைற்றொப்தொரு கக் ருேறம் என்னும் இனத்திலுள்ளது போல் பாகைன சுவாக ( Parag ynus) அல்லது பை. பரசிற்றிக்காவிலுள் எது போல் அந்திரோகைனசாசு ( Androgyrius ) விருக் கும். பரகைனசு வகையில் ஆண்கலச் சனனி முட்டைச் சன்னியின்

Page 48
பு
பெண் கரு
ஆண் கரு
படம் 27, (இ) ஆண்கலச்சனனி பக்கங்களைத் தழுவியிருக்கும். அந்திரகைனசு வகையில் ஆண்கலச் சனனியும் முட்டைச் சனனியும் பக்கக் கிளைகளில் முளைக்கின்றன. பின்னர் முட்டைச் சனனியின் நுனி ஆண்கலச் சனனியினூடாக துளைத்துக்கொண்டு வளர்ந்து நுனியில் பேரிக்காயுருவான அல்லது கோளவுருவான முட்டைச் சனனியாகிறது.
எனவே முட்டைச்சனனியின் உடல் ஆண்கலச்சன்னிக்கு மேலிருக்கின்றது. சில காலத்தின் பின் ஆண்கலச்சனனியின் எஞ்சிய பகுதிகள் புனல் வடிவான கழுத்துப் பட்டையாகத் காணப்படும், ஆண்கலச்சனனியிலிருந்து ஆண்கரு முட்டைச்
ஆண்கலச்சனனி அந்திரோகைனசு
படம் 27. (ஈ)
முட்டை வித்தி

"சனனியினுள் செல்கின்றது. கருக்கட்டல் நடைபெறுவது காணப் படாவிடினும் நடைபெறுகின்றதென்றே கருதப்படுகின்றது. முட்டைவித்தி ஒடுங்கற்பிரிவடைந்து மூலவுயிர்க் குழாயை யுண்டாக்கி நேரடியாகவே வளர்கின்றது .
இயங்குவித்திகள்
இயங்குவித்திக்கலன்கள்
> காரியங்கள்
இலிங்கமில்முறை
ஏபைற்றேப்தொரு <
4 / 4
முட்டைச்சளா ஆண்கலக்சனனி
முட்டை IT
ஆண்கரு 27
(ஒடுங்கற் பிரிவு)
இலிங்கமுறை
(கருக் கட்டல் )
> முட்டைவித்தி
பைப்ரோப் தொராவின் வாழ்க்கைச் சக்கரம்

Page 49
86
வகுப்பு - அசுக்கோமீசெற்றெசு (T
Ascomycetes
பையுருவான பங்கசுக்களென அழைக்கப்படும் அசுக்கோமீ செற்றெசு இயூமீக்கோபிற்றா EumyCophyta ) என் எனும் பிரிவில் அடங்கும் ஒரு வகுப்பாகும், இவ்வகுப்பில் அடங்கும் பங்கசுக்கள் வேறுபட்ட வாழிடங்களிலே ஆண்டின் எக்காவங் களிலும் காணப்படும். அசுக்கோமீசெற்றெசுகள் வாழ்க்கைச் சக்க ரம் முற்றாக ஒட்டுண்ணிகளாகவோ அழுகல்வளரிகளாகவோ வளருகின்றன. சில வேளைகளில் அவை ஒட்டுண்ணிகளாக வாழ்க் கையைத் தொடங்கி விருந்து வழங்கி இறந்த பின்னர் அழுகல் வளரியாகத் தொடர்ந்து வளருகின்றன. பெரும்பாலான ஒட் டுண்ணி இனங்களின் பூசணவலைகள் விருந்துவழங்கியின் இழை யங்களினுள்ளேவளருகின்றன. ஆனால், சில அசுக்கோமீசெற்றெசுகள் விருந்து வழங்கியின் மேற்பரப்பிலேயே வளருகின்றன. பெரும் பாலான ஒட்டுண்ணியினங்கள் ஒரு குறிப்பிட்ட விருந்துவழங்கி யினத்திலோ, அதற்கு மிக ஒத்துள்ள இனங்களிலோ வளரக் காணப்படுகிறது. பயிர் செய்யப்படும் தாவரங்களில் உண்டாகும் அநேக நோய்களுக்கு அசுக்கோமீசெற்றெசுக்களே காரணம். அழுகல் வளரிகள் உக்கும் மரங்கள், இலைகள், அழுகும் பழங்கள், காய்கள். இறைச்சி, ஈரப்பற்றுள்ள தோல், நக்கல், மண் ஆகியவற்றில் வளருகின்றன. மதுவம், பெனிசிலியம் போன்ற பல அழுகல் வளரிகள் மிக உபயோகமானவையாகும்.
மதுவத்தில் பூசணவலைகள் கிடையாது. ஏனையவற்றில் பூசணவலைகள் செழிப்பாகக் கிளைத்திருக்கும். பூசணவல்ல பூசனை விழைகளால் Hyphae ) ஆக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பூசணவிழையும் பிரிசுவர்களால் துண்டங்களாகப் பிரிக்கப்பட் டுள்ளது. ஒவ்வெர்ரு துண்டமும் ஒரு கரு கொண்டதாகவோ, பல் கருவுள்ளதாகவோ இருக்கும். கலச்சுவர் அதிக அளவில் அகற் தினைக் (Chitin] கொண்டுள்ளது. இலிங்கவங்கங்கள் பூசண விழைகளரின் உச்சிகளிலும், பக்கக் கிளைகளின் உச்சிகளிலும் இலிங்க முறையினப் பெருக்கலின் பொழுது விருத்தியடைகின் றன. கோணிக்கனியில் அல்லது கனியுடலத்திலுள்ள பூசணவலை அநேகமாக பங்கசுக்குரிய இழையங்களாக அமைந்திருக்கிறது. கோணிக்கனி அல்லது கனியுடலம் ஒரு போலிப்புடைக்கலவிழைய டமாகவுள்ளது. இவற்றில் காணப்படும் கோணிகளில் ( Asci கோணிவித்திகள் இருக்கின்றன, பொதுவாக மூன்று வகையான கோணிக்கனிகள் காணப்படும், அவையாவன :
(1) கூம்புறை fா Cleistothecium]: இது விருத்தி யடையும் நிலைகள் எல்லாவற்றிலும் முற்றாக மூடப்பட்டுள்ளது.

இது திறந்த
(2) கிண்ணவுறை (
Apothecium நிலையிலும் ஓரளவு கிண்ணவுருவமாயுள்ளது.
(3) சுற்றுனர் (
Perithecium
இது உச்சியில் ஒரு துவாரத்தைக் கொண்ட குடுவையுருவானது.
உபவகுப்பு : இயகோமீசெற்றெசு (
Eucomycetes வருணம் * பிளாக்றசுக்காலேசு (Flect a:Cales) :
இவ்வருணத்தில் ஏறத்தாழ 30 சாதிகளும், 300 இனங்களும் உண்டு.இவை பாண், வெண்ணெய் - பழங்கள், காய்கறி, இறைச்சி, தோல் ஆகியவற்றில் அழு:கல்வளரிகளாகக் காணப்படுகின்றன, இவை மூடப்பட்ட கோணரிக்கனி அல்லது கூம்புறையைக் கொண் டுள்ளன, கூம்புறையில் ஒழுங்கற்ற முறையில் பரவப்பட்ட கோனி கள் அசுக்கசுக்கள் உள்ள பா.அசுக்கசுக்கள் கோளவுருவமுடையதாக வும், காம்புகள் கொண்டதாயும் உள்வான. இவற்றில் இயற்கைத் துவாரங்கள் கிடையாது. அசுக்கசுக்கள் நீர்மயமாவதால் அல்லது வெடிப்பதனுல் அவற்றிலுள்ள கோணிவித்திகள் கூம்புறையினுள் விடுபடுகின்றான். அசுப்பசி(லேசிலுள்ள இரு முக்கியமான சாதிகள் அசுப்பசிலசும் பெனிசிலியமும் ஆகும்.
சுப்பசிவசு (Aspergillus- அஸ்பெர்ஜில்லஸ் )
(குடும்பம் அசுப்பசிலேசியே)
அசுப்பசிவசு சாதாரணமாக ""பச்சைப் பூஞ்சணம்'' என அழைக்கப்படும் ஒரு அழுகல் வளரிப்பங்க்சாகும். இது இறந்த சேதனவுறுப்புப் பொருள்களிலும், சாணி, மரம், வெண்ணெய், பாண், பழச்சாறு, சப்பாத்துக்கள், தோற்பெட்டி முதலிய வற்றில் வளர்கின்றது, பேரிச்சம்பழங்கள், வேறு பழங்கள், புகை யிலை, சுருட்டுக்கள்முதலியன கெடுவதற்கு பல அசுப்பசிலசுதினங் கள் காரணமாகவுள்ளன. சில இனங்கள் விலங்கு ஒட்டுண்ணி யாக, சிறப்பாக பறவைகளில் வாழ்ந்து அவற்றில் மைகோசிஸ் என்னும் நோயை உண்டாக்குகின்றன. காசநோயை ஒத்திருக்கும் அசுபசிலோசிஸ் என்னும் நோய் அநேகமார்க பறவைகளின் நுரை யீரல்களில் உண்டாகிறது. இந் நோய் ஆடு, மாடு போன்ற விலங்குகளிலும் காணப்படுகிறது. அசுப்பசிவசு இனங்களின் முக் கியத்துவம் சிறப்பாகக் கைத்தொழில் முறைகளில் உபயோகிக்கப் படுவதில் தங்கியுள்ளது. அவை சிறப்பாக சிற்றிரிக்கமிலம், குளுக் கோணிக்கமிலம், கிளிசரோல் முதலியன தயாரிப்பதற்கு உப் யோசிக்கப்படுகின்றான் . யப்பானிய தேசத்தில் அரிசியிலிருந்து அற்ககோல் தயாரிப்பதற்கு அச்சுப்பசிவசு ஒறைசேரி உபயோகிக் சுப்படுகிறது.
பரிசோதனைச் சாலையில் ஒரு துண்டு பழைய பாண ஒரு மணிச்சாடியால் மூடிவைத்து அசுப்பசிலசை வளர்க்கலாம். அப்

Page 50
88
பொழுது அவை ஒரு பச்சைப் பூஞ்சணமாகத் தோன்றுவதைப் பார்க்கமுடியும், அசுப்பசிலசு உட்பட மியுக்கொர் ( Hugor இரைசோபசு ( R hizopLS) முதலியனவற்றையும் பார்க்க முடியும். அசுப்பசிலசு தொடக்கத்தில் வெண்நிறமுடையது. ஆனல் இனப்பெருக்க நிலையை அடைந்தவுடன் அது பச்சை நிறமுடையதாகத் தோற்றமளிக்கும், ஏராளமான தூளியங்களே. இந் நிறத்திற்குக் காணமாகும்.
பூசணவயே :
பூசண வலை பிரகாசமான அல்லது வெளிறிய, பளிங்கு ] பண்புள்ள பூஞ்சணவிழைகளினால் பின்னப்பட்டது.பூஞ்சண
பூஞ்சண இழை
காப
லம்
கண்ணா
3,
மனம்
வகை
ம)
காடா
கலை
10
வேணை
சாதாரண
மெடி
யா'
அப்பா
கல
பாடல்
உலமை .
ஒரு
1. தூளியங்கள்
2. முதல் ஆசிரையம் 3. துணை ஆசிரையம்
4 + தூளியந் தாங்கிகள் படம் 28, அசுப்பரில சு

89
விழைகள் ஆதாரப்படையினுள்ளேயும், பரப்பிலும் கிளைகொள்ளு சின்றன. பூஞ்சணவிழைகள் நன்கு கிளைத்துப், பிரிசுவருடையன வாசுவுள்ளன. பிரிசுவர்கள் பூஞ்சணளிழைகளைத் துண்டங்களாகப் பிரிக்கின்றன. ஒவ்வொரு துண்டத்தின் குழியவுருவில் பல கருக் கள் (பொதுமைக் குழியம்), எண்ணெய்ச் சிறுகோளங்கள், புன் வெற்றிடங்கள் முதலியன உள்ளன. முக்கியமாக கைற்றினைக் கொண்ட பங்கசுச்செலுலொசினால் கலச்சுவர் ஆக்கப்பட்டுள் களது +
இனப்பெருக்கம் :
அசுப்பசிலசு பதியமுறையினப் பெருக்கம், இலிங்கமில் இனப் பெருக்கம், இலிங்கமுறை இனப்பெருக்கம் முதலிய முறைகளினால் தனது இனத்தைப் பெருக்குகிறது. (1) பதியமுறையினப் பெருக்கம் :
பதியமுறையினப் பெருக்கம் துண்டுதுண்டாக்கல் முறை யினால் நடைபெறுகிறது.
(2) இலிங்கமில்முறை இனப்பெருக்கம் :
தூளியங்கள் என அழைக்கப்படும் வெளிப்புற வித்திகளை ஆக்கலினால் இலிங்கமில் இனப்பெருக்கம் நடைபெறுகிறது, பல பிரிசுவரற்ற, கிளைகளற்ற பூசணளிழைகள் பூசணவ லையின் பிரி சுவரின் கீழிருந்து தோன்றி காற்றிலே நேராக வளருகின்றன. இவைகள் தூளியந்தாங்கிகள் எனப்படும், ஒவ்வொரு தூளியந் தாங்கியின் நுனியும் கோளவடிவுருவான புடக மாக வீங்குகிறது. புடகத்தின் பரப்பிலிருந்து பல ஆசிரையங்கள் என அழைக்கப் படும் விரல்களைப்போன்ற வெளிமுளைகள் விருத்தியடைகின்றன. ஒவ்வொரு ஆசிரையத்தினுள்ளும் பல சுருக்கள் செல்கின்றன, நாட்டமுள்ள வழிமுறை வருதலினால் ஒவ்வொரு ஆசிரையத்தின் நுனியிலிருந்தும் தாளியச் சங்கிலிகள் தோன்றுகின்றன. அதாவது ஒவ்வொரு வரிசையின் உச்சியிலும் ஒவ்வொரு முதிய தரளியம் காணப்படும், சில வேளைகளில் ஆரையம் காளியச் சங்கிலியை உண்டாக்காமல் கிளைகளாகப் பிரிந்து, துணைத் தூளியங்களாதன் கிளேக்கும். அவை யொவ்வொன்றின் நுனியும் வீக்கமடைந்து ஆசிரையங்களும் காரியச் சங்கிலிகளும் தோன்றுகின்றன, தாளி யங்கள் பச்சை நிறமுள்ள சிறிய முட்டை வடிவமானவை. அவை கள் முள்ளுள்ள சுவர்களைக் கொண்டவை, அவற்றின் முதலுருவில் ஒன்று அல்லது பல கருக்கள் எண்ணெய்ச்சிறு கோளங்கள் முத சிலியன் உண்டு. அத2வகள் முதிர்ந்தவுடன் காற்றினால் எடுத்துச் செல்லப்படுகின்றன, ஒரு தகுந்த ஆதாரப்படையை அடைந்த

Page 51
40
வுடன் ஈரப்பற்றுள்ள வளியிலே தூளியங்கள் முளைத்து முதிய பூசணவவையை உண்டாக்கின்றன,
(3) இலிங்கமுறையினப் பெருக்கம் :
தூளியங்களை உண்டாக்கிய பூசணவலையிலேயே இலிங்சுவங்கங்கள் உண்டாகின்றன, பெண் அங்கம் தொடக்கக்கனியம் அல்லது கோணிச்சனனி விருத்தியடைகிறது. அதன் நுனி சுருண் டுள்ளது. ஆரம்பத்தில் தளர்ந்திருக்கும் சுருள் வளையங்கள் பின் னர் நெருக்கமாகின்றன. தொடர்ந்து பிரிசுவர்கள் உண்டாகி பல்கருவுள்ள துண்டங்களாகின்றன. முனையிலுள்ள துண்டம் பெண்ணகவிழையென ( Trichezyme) அழைக்கப்படும் கிறது. இது இதற்கு அடுத்த துண்டமாகிய முட்டைச்சனனி அல்லது உண்மையான பெண் அங்கத்திற்கு வாங்கியாக அமைந் துள்ளது. கீழேயுள்ள சுருளியான, பிரிசுவருடைய டாகம் தொடக் கக் கனியத்திற்குக் காம்பாகவுள்ளது. ஒரு தொடக்கக் கனிய முள்ள பூஞ்சண விழையிலிருந்து, அல்லது அதற்கடுத்த பூஞ்சண விழையிலிருந்து ஆண்கலச்சனனி நேராக வளர்கிறது.
இளம் )
பெண்ணைக
முட்டைச்
மால்டா தொடக்கக் கனியம் விழை
சனனி
பூஞ்சணவிழை
ஆண்கலச்
மலடான சனனி
பூஞ்சணவிழை
தொடக்கக்
கனி யம்
படம் 29. இலிங்கமுறை இனப்பெருக்கம்

91
மூடும் பூஞ்சணவிழைகள்
கோணி
இல்
தொடக்கக்கனியம்
காணி பிறப்பிக்கின்ற கோரி
பூஞ்சணவிழைகள்
வித்திகள் படம் 30. அ. இலிங்கராறை இனப்பெருக்கம் - சுணியுடலம்
உண்டாதன கோணிவித்திகள் கோணி.
கூம்புறை
சோனா படம் 80. ஆ. இலிங்கமுறை இனப்பெருக்கம் களரியுடசலம்
கோணிவித்தி
உண்டர்தல்
- 2 $ 4 இ
படம் 31. கேரணியின் குழியவியல்

Page 52
92
பத்திற்கு" கீழிருக்கு வளைந்து
ஆண்கலச்சனனி பிரிசுவரையுடையது. இதன் துண்டங்கள் பொதுமைக் குழியத்திற்குரியன. உண்மையான ஆண்கலவாக்கி உச்சித் துண்டமும், அதன் கீழிருக்கும் பிரிசுவருடைய பாகம் காம்பாகும். ஆண்கலவாக்கி சுற்றிவாைந்து தொடக்கக் கண்ணியத்தை நோக்கி வளையும். இரண்டும் சுருளாக வளைகின்றன. முட்டைச் சனணியிலுள்ள முதலுரு உருண்டையாகி ஒரு முட்டை யாவதில்லை. ஆண்கலவாக்கியின் நுனி பெண்ணகவிதையுடன் இணை யும் ஆனால் ஆண், பெண் புணரிச்சேர்க்கை என்றும் அவ தாணிக்கப்படவில்லை. சில அசுபசிலசு இனங்களில் ஆண்கல்வாக்கி கள் உண்டாகாமல் இருக்கலாம். இலிங்க முறைகள் பொதுவாக முற்றாக நிறைவேறுவதில்லை. சில இனங்களிலாவது முட்டைச் சனனியிலுள்ள கருக்களில் சோடியாக கருச்சேர்க்கை நடை பெறுதல் காணப்படுகிறது. இப்பொழுது இலிங்கவங்கங்களின் காம்புகளிருந்து மலடான பூசணவிழைகள் தோன்றி விருத்தி யடையும். முட்டைச்சனனியைச் சுற்றி கோணிக்கனியின் கணிப் படை என அழைக்கப்படும் இரு படையுள்ள சுவரை யுண்டாக்கு கின்றன.. கோணிக்கனி மூடப்பட்டிருப்பதால் கூம்புறை யெனப் படும் கனிப்படையின் உட்படை போசணை இழையமாகவும் வெளிப்படை காப்புப்படையாகவும் தொழில் புரிகின்றன. கனி யுடலங்களை இலகுவாய்ப்பார்க்கக்கூடியதாகச் செய்யும் ஒரு பிரகாச மான மஞ்சள் நிறப்பொருளை வெளிப்படை சுரக்கிறது. முட்டைச் சனனியின் ஆரம்பநிலைகள் " எவ்வாறு இருந்தாலும் பின் அது பிரிசுவருடையதாகி கோணிபிறப்பிப் பூஞ்சணவிழைகள் எனப் படும் சிறிய வெளிமுளைகள் தோன்றுகின்றன. கோணிபிறப்பிப் பூஞ்சணவிழைகள் பிரிசுவருடையதாகி, ஒவ்வொன்றின் முனையி லுள்ள, அல்லது ஈற்றயலுக்குரிய துண்டம் இரு கருவுள்ள கோணி (அசுக்கசு) யாகிறது. பெரும்பாலான இனங்களில் கோணியிலுள்ள, இரு கருக்கள் இதுவரை சேர்க்கையனடயாத முட்டைச்சனனி யிலுள்ள கருக்களிலிருந்து பெறப்பட்டதாயிருக்கலாம். இந்த நில்! யளவில் எவ்வித கருச்சேர்க்கையும் நடைபெறவில்லை. இப் பொழுது கோணியிலுள்ள கருக்கள் கருச்சேர்க்கையடைந்து, மும்முறை பிரிந்து எட்டுக் கருக்களாகின்றன. சேர்க்கைக் கருவின் முதற்பிரிவு ஒடுங்கற் பிரிவாகும். ஒவ்வொரு கருவும் ஒரு கோணி வித்தியின் கருவாகிறது. கோணிபிறப்பிப் பூஞ்சண விழைகளின் கிளைகளின் நீளம் வேறுபட்டுள்ளதால் கோணிகள் ஓர் அறையி னுள் ஒழுங்கின்றிப் பரம்பியுள்ளன. முதிர்ச்சியடைந்தவுடன் கோணிகளின் சுவர்களும் உள் மலட்டுப் பூஞ்சணவிழைகளும் அழிவதனால் கோணிவித்திகள் கனியுடலச் சுவரினுள் சுயாதீன மாகக் கிடக்கின்றன.
வரும்."வெளி சுவரு துண்
கூம்புறை அழுகியவுடன் கோணிவித்திகள் வெளியேற்றப் படுகின்றன: அவை பொருத்தமான நிபந்தனையில் நேராக முளைத்து புதிய பூஞ்சணவலையை உண்டாக்கின்றன.

3
- ஆசிரையங்கள் ==
இலிங்காமில் முறை
கிளைகளற்ற தூளியந்தாங்கிகள்
தாளியச் சங்கிலி
அசுப்பசிலசு 4
கோணிச்சனரி ஆண் கலச்சனா
கோணாசித்திகள்
(ஓடுங்கற்
டபிரிவு)
பெசண் கரு
ஆண் கரு
2 #
அசுக்கசு கோரி!
கருச் சேர்க்கை
கருக்கள்சோடி சேருதல்
3 கோணி பிறப்பிக்கின்ற
பஞ்சண இழை இலிங்கமுரை ( சோடிக் சுருக்கள் |
அசப்பரில் சுவின் வாழ்க்கைச் சக்கரம்

Page 53
பு4
வகுப்பு அசுக்கோமீசெற்றெசு. (குடும்பம் : அசுப்பசில்வேசியே)
பெனிசிளியம் ( Penicillium |
பி
பாடு
நீ ஓ
பி உட்பட
3 8
தாளிகள்
ஒ3 த
ஆசிரையம்
தூளியம் தாங்கி
-'தம்")
முளைக்கும்
தூளியம்
L+டர் படம் 32. பெனிசிலியம்
பெனிசிலியம் ஒரு அபூசல் வளரிப் பங்கசு, சாதாரணமாக இது நீலப்பூஞ்சணம் அல்லது பச்சைப் பூஞ்சணமென அழைக்கப் படுகிறது. பெனிசிலியம் உருவவியலில் அசுப்பசிலசுடன் ஒத்துள் ளது. பெனிசிலியம் பெரும்பாலும் அழகல்வளரிப் போசணைக் குரிய ஆதாரப் படைகளான அழுகும் மரக்கறி, பழங்கள், இறைச்சி முதலியனவற்றில் வளரும்.
பெனிசிலியத்தினுடைய பூசணவவை பல கிளை கொண்ட பிரிசுவருடைய, பளிங்குருப் பண்புள்ள பூஞ்சண விழைகளா லானது. ஒவ்வொரு துண்டமும் பகல் கருவுள்ளது. பூசணவலை ஆதாரப் படையின் மேற்பரப்பில் அல்லது ஆழமாக ஊடுருவியி ருக்கும் பெனிசிலியத்தில் வெவ்வேறான குல வகைகள் உள்ளன. ஒரு பரிசோதனை வளர்ப்பில் இரண்டு வேருன குல்வகைகள் ஒன்றாக வளர்க்கப்பட்டால் அவற்றின் துண்டங்கள் இணைந்து பாப்பாமெயில் வேறுபட்ட புல்கருவுள்ள துண்டங்கள் உண்டாக #லாம்.

புரி
இலிங்கமில்முறை இனப்பெருக்கம் !
காளியந் தாங்கிகளில் காளியங்கள் தோன்றுவது இலிங்கமில் இனப் பெருக்கத்தின் விளைவாகும். பொதுவாகத் தூரிகையென அழைக்கப்படும் தாளியந்தாங்கி பொறிமுறையில் பெனிசிலசு என அழைக்கப்படுகிறது, (லத்தீன் மொழியரின் பெனிசிலிய மென்
றால் தூரிகை),
வியத்தமடையாத
பூசணவலையிலிருந்து செங்குத்தாக ஒரு தூாளியந்தாங்கி வளர்ந்து, இணைக்கவராக பல முறைகிளை மயிரிட்டு விரல்கள் போன்று முளைகளை யுண்டாக்கும். ஒவ்வொரு முளையும் ஒரு ஆசிரை யத்தில் ( Sterigma] முடிவடையும். ஆசிரையங்களிலிருந்து ஒரு கருவுள்ள தாளியங்கள் சங்கிலித் தொடரில் உண்டாகின்றன. அசுப்பசிலசுவின் தாளியந்தாங்கி யினும் பார்க்க பெனிசிலியத்தின் தூளியந்தாங்கி மிகவும் சிறியது. தூளியங்கள் கோளவுரு அல்லது முட்டையுருவானவையாயும், நீலப்பச்சை நிறமுடையனவாயும், நுணுக்குக் காட்டி மயிரினபாடா கப் பார்க்கும்பொழுது அவை கண்ணாடி மணிகளைப் போன்று மிருக்கும். ஒவ்வொரு தூாளியமும் பெற்றோர் குலவகையிலொன் ரசு முளைக்கும். ஒரு பெனிசிலியத்தின் தானியங்களில் பெற்றோர் குல வகைகளை உண்டாக்கக்கூடிய வியத்தமான தூளியங்கள் உள்ளன.
இலிங்கமுறையினப்பெருக்கம் :
இலிங்கமுறையினப்பெருக்கம் அசுப்பசிலசுவின் இலிங்க முறையினப் பெருக்கத்தை ஒத்தது, ஆனால் சில வேளைகளில் மட்டுமே நடைபெறுகிறது.
பெனிசிலியத்தின் பொருளாதார முக்கியத்துவம் !
சில பெனிசிலிய இனங்கள் பொருளாதாரச் சேதத்தை விளைவிக்கின்றன, சேமிக்கப்பட்டு வைத்திருக்கும் அப்பிள், பேரிக் காய், முந்திரிகைப் பழங்கள் முதலியவை கெட்டுப் போவதற்கும் காரணமாக விருப்பது பெனிசிலியம் எக்சுபான்சம் ( Pennicillium
Expansபm ). பெனிசிலியம் இற்ராலிக்கமும் பெனிசிலி மயம் டிஜிரேற்றமும் P. digitatபார சேமிக்கப்பட்ட தோடம் பழங்கள், எலுமிச்சம் பழங்கள் முதலியன சேதமடைவதற் குக் காரணமாகயிருக்கின்றன. பெனிசிலியம் பெர்பெறேஜீனம் ( Purpurogenum] அச்சிடும் கடதாசிகள், புத்தகங் கள் முதலியனவற்றில் புள்ளிகம் உண்டாக்கிறது. சில பெனிசிலிய மினங்கள் விலங்குகளிலும், மனிதனிலும் நோய்களை உண்டாக் குகின்றன. சுவாச நோய்களினால் பாதிக்கப்பட்ட மனிதனின் நுரையீரல்களில் குறைந்தபட்சம் ஒரு பெனிசிலியமினமாவது இருக்கிறதென அறியப்பட்டுள்ளது.

Page 54
;ெ
(2) சே தனவமிலங்களாகிய சித்திரிக்கமிலம் Citric acid ] ஒட்சாலிக்கமிலம் (axalic acid ) குளுக்கோனிக்கமிலம் (Gluconic acid ] இஃபுமாரிக் கமிலம் (Fumaric acid ] காலிக் கமிலம் (Gallic acid) முதலியனவற்றை சில பெனிசிலிய தினங் கள் உண்டாக்கக்கூடியன.
(3) வர்த்தக முறையில் கேசினிலிருந்து ( Cacsin ] நீர்ப்பகுப்பால் பாலாடைக் கட்டியை உண்டாக்குவதில் பெனி சிலியம் றெக்போற்றியும் ( P. roqueforti ). பெனிசிலியம் அமெம்பெர்ரியும் ' ( P. Camemberti ) சம்மந்தப்பட் டுள்ளன,
4) பெனிசிலியம் ஒரு நுண்ணுயிர் கொல்லியாக ( Antibiotic ) உபயோகிக்கப்படுகிறது.
இக் காலத்தில் நுண்ணுயிர் கொல்லிகளெனப்படும் இரசா யனப் பொருள்கள் மருத்துவர்களால் மிகச் சிறந்த வலிமையுள்ள கருவிகளாக உபயோகிக்கப்படுகின்றன. இவை பற்றீரியா போன்ற நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைத் தடை செய்கின்றன. சில வேளைகளில் அவற்றை அழிக்கின்றன. பூஞ்சணம், பற்றீயா போன்ற உயிருள்ள அங்கிகளினால் நுண்ணுயிர் கொல்லிகள் உண்
டாக்கப்படுகின்றன.
பெனிசிலியம் நோரேரம் (P, Notaturm ) எனப் படும் பூஞ்சணத்தினால் உண்டாக்கப்பட்ட பெனிசிலின் என்னும் ஒரு அமிலமே உலக மக்களின் சிந்தனையைக் கவர்ந்த முதல் நுண்ணுயிர் கொல்லியாகும்.19 கேம் ஆண்டில், பெரிசிலியம் என்னும் பூஞ்சணம் உள்ள பற்றீரியா வளர்ப்பில் பற்றீரியா வளர மாட்டாதென்பதை ஒரு ஆங்கில விஞ்ஞானி, அலெக்ஸ்சாண்டர் பிளேமிங் பிரபு Sir Alexander Fleming என்பவர் கண்டுபிடித்தார். பல நோய்களைத் தோற்றுவிக்கும் அங்கிகளுக்கு நச்சுத் தன்மையான பொருளாகிய 'பெனிசிலினை ( Penicillin ). பெனிசிலியம் உண்டாக்குகிறது என்பதை அவர் கண்டுபிடித்தார். அவர் தொடர்ந்து பெரிசிலினைப் பற்றி ஆராய்ச்சி செய்யாததால் அவரால் கண்டு பிடிக்கப்பட்ட மிகவும் முக்கியமான உண்மையை உலகமக்களால் உணரமுடியவில்லை.
பல ஆண்டுகளுக்குப் பின் இங்கிலாந்திலுள்ள கவார்ட் டபிள்யு. ஃபுளோறி பிரபு Bir Howard W. Florey), ஏர்னெஸ்ட் போறிஸ் செயின் (Ernest Horis Chain). வேறு பலரும் பல வகையான தொற்று நோய்களுக்கு பெனிசிலினை உபயோகிப்படி சாத்தியமான தாவென்பதை ஆராய வேண்டுமென்று நிச்சயித்தார் கள். முதலில் 1941-ம் ஆண்டில் மனிதர்களுக்கு பெனிசிலின் மரு ந்து கொடுக்கப்பட்டது. இது அற்புதமான பயனை அளித்தது. அதே ஆண்டு கோடை காலத்தில் ஃபுளோரி (Florcy) என்பவர்

97
அமெரிக்காவுக்குச் சென்று U.S.A) பெனிசிலிணை பெருமளவில் தயாரிப்பதற்கு உதவியை நாடினார். 1942-ம் ஆண்டு அமெரிக்கா வின் மருந்துத் தொழிற்சாலை (AmericN'3 drug industry) ஐக்கிய ராச்சியத்தின் விவசாய இலாக்காளின் வடபமண்டல ஆராய்ச்சிப் பரிசோதனைச் சாக்ல (orthern Tegional TESEarch 1aboratory) முத லியனவற்றின் முயற்சியினால் அவரது கோரிக்கை நிறைவேறியது. இரண்டாவது உலகயுத்தத்தில் காயங்களை மாற்றுவதற்கு ஏராள் மாக உபயோகிக்கப்பட்டு பலரின் கடயிர்கள் காப்பாற்றப்பட்டன.
து தெஇரு பஞ்சாப் பெனிடிவாதத்தில்
பொதுவாகப் பெனிசிலின் காசிமருந்தாக ஏற்றப்படுகிறது (irljected), சில நோய்களுக்கு உட்கொள்ளவும் கொடுக்கப்படுகிறது. கிராம் தேர் பற்றி ரியாவைச் Grathi 105itive bacteria) சேர்ந்து எஸ் ரெப்ரோ கொக்கச்சா (streptococcus), ஸ்ரபிலோ கொக்கசு (Stapliylococcus] முதலியன இலகுவில் பெனிசிலியத்தால் அழிக்கப்படுகின்றன, கிராம் எதிர் பற்றீரியானாவச் (Gram TIegatiWe bacteria) சேர்ந்த புற்றீரியாவையும் இரிக்கற்சியாக்கள் (Tickettside)என்னும் பற்றி ரியாவைப்போன்று அங்கிகளையும் பெனிசிலி யத்தை உபயோகித்து அழிக்க இயலாது. மூச்சுக்குழற்கவரழற்சி (Brாchititis), ஏற்புவலி TEtanus), தொண்டைத்தசை வளர்ச்சி (Tonsilitis), மெனின்யிற் றிஸ்சு (meriingitis), ஒஸ்ரியோமைலிற் ரிசு, (Osteomyelitis) போன்ற நோய்களை மாற்றுவதற்கு பெனிசி லின் உபயோகிக்கப்படுகிறது. எரிகாயங்களிலும் வேறு காயங்க ளிலும் கிருமிகள் பரவாமல் பெனிசிலின் தடைசெய்கிறது. பெனி சிலினை ஆக்கும் முறை எளியது. குளுக்கோசும், நைத்திரேற்றுகளும் கரைக்கப்பட்ட ஒரு நீர்க்கரைசலில் பெனாசிலியம் நோரேற்றம் (P.notatum) என்னும் ஒரு பூஞ்சணம் வளர்க்கப்படுகிறது. அது வளரும் பொழுது சிறிதளவு பெனிசிலினை நீரினுள் கழிக்கிறது. முடிவில் வடிகட்டி பூஞ்சணம் அகற்றப்படுகிறது. பெனிசிலியத்தை வளர்த்த பாய்பொருளிலிருந்து பல வகைகளில் பிரித்தெடுக்கலாம். அமிலத்தன்மையான பெனிசிலின் நீரிலிருந்து குளோறேபோம் போன்ற திரவங்சுளினுள் அனுமதிக்கப்பட்டு, பின் நீரின் அமிலத் தன்மை அல்லது காரத்தன் மையை மாற்றி, நீரினுள் மீண்டும் செலுத்தப்படுகிறது. பிரித்தெடுப்பு முறைகளில் இதுவே முக்கிய நிலையாகும், பெனிசிலின் படப்புநிலை பயிலல்லாது அமில நிலையில் இருந் தால் ஈதர் (Ether) ஏ மைல் அற்ககோல் (Amy1 alcohol), ஏமைல் அசற்ரேற்று (Amyl acetate) போன்ற திரவங்களில் மிக இலகுவில் கரையும். வளர்ப்பு சோடகம் அமிலத் தன்மையாக்கப்பட்டு, ஏபைல் அசற்றேற்றுடன் கலக்கப்பட்டால், பெனிசிலின் ஏ மைல் அசற்றேற் றுப் படையினுட செல்வதனால் உப்புக்களிலிருந்தும், மாசுக்களி விருந்தும் வேறாக்கப்படுகிறது. பின் பெனிசிலினுள்ள ஏமைல் அசிற்றேற்று நீரிலிருந்து பிரிக்கப்பட்டு, சிறிது காரத்தன்மை யுடைய சுத்தமான நீருடன் கலக்கப்படுகிறது. பெனிசிலின் மீண்டும் நீரை அடையும், அந்நீர் பிரிக்கப்பட்டு குளோரபோமுடன் சேர்க் கப் படுகிறது. குளோரபோம் பெனிசிலினை அகற்றிவிடுவதால் காய காரத்தன்மையுடைய பெனிசிலினுள்ள நீரைப் பெறலாம். காரத் TZ., 7
டி ஓடி க2 இ ஒ ஒ இ 29ம்?

Page 55
பு8
தில் கல்சியமிருந்தால் பெனிசிலினின் கல்சியவுப்பு உண்டாகும் இன் வுப்பு நோய்க்கிருமிகளை அழிப்பதற்கு உபயோகிக்கப்படுகிறது. சாதாரண நோய்களுக்கு 30-30% பென்சிலின் உபயோகிக்கப்படும் சிறது. ஆனால் மூளையின் அறுவைச் சிகிச்சைக்கு 10 தாய்மை யான பெனிசிலின் உபயோகிக்கப்படுகிறது. சரப்பற்றற்ற இடங் களில் பெனிசிலினை வைப்பதால் அது கெட்டுப்போகாமல் பாது
காக்க வாம்.
வருணம் ! என்டோமைசிறவேசு (அல்லது சக்கரோமைசிற்றாலேசு)
இவ்வாருனத்தில் மதுவரும் ஏனைய எளிய பங்கசுக்களுமடங் கும். இவற்றில் அநேகமானவை அழுகல்வளரிகளாகவிருந்தாலும் சில ஒட்டுண்ணிகளாகவும் வாழ்கின்றன, அழகல்வளரிகளிற் சில ஒரு பூஞ்சணவக்லயுடையன, மதுவத்தில் கலங்கள் தனித்துப் பரந்து கிடக்கும்.
தனியாக உண்டாதல் இவ்வருணத்திற்குரிய சிறப்பியல்பா கும். இவற்றில் கனியுடலமில்லாததால் அசுக்கசு நிர்வாணமான தளிக்கலமாகும். கருப்புச்சளர்ச்சியைத் தொடர்ந்து முதலுருப் புணரியுண்மை நடைபெறுகிறது. சக்கரோமைசீற்றலேசுகளின் தலச்சுவர் கைற்றினாலோ, செலுலோசினாலோ ஆக்கப்படவில்லை. ஆனால் பலளித காபோவைதரேற்றினால் ஆக்கப்பட்டிருக்கின்றது. இவ்வருணத்தைச் சேர்ந்தவை ஆதியானவையாயிருப்பதால் எளி மையானவை யென்றும், கூர்ப்பின் ஆரம்பகால நிலையை இவை பிரதிநிதித்துவம் வகிக்கிறதெனவும் கவுமான் ( Gauthan1 | என்னும் விஞ்ஞானி கூறுகின்றார். ஆனால் பெஸ்ஸி ( BESSET | போன்றோர் எளிய தாவரவுடல்கள் விஷேடதன்மையினால் ஏற்பட்டது என்று கூறுகின்றனர். அவர்களின் கூற்றுப்படி அசுக் கோமைசிற்றுகளில் அதிகளவு விருத்தியடைந்த வருணம் பாச்சு ரோமைசிற்ருலேசுவாகும்.
மதுவம் - சாதாரணமாக தனிக்கலமுடைய பங்கசுவாகும், மதுவத்தின் மீன் ர சாதிகள் மிருகங்களால் ஒட்டுண்ணிகளாக வாழுகின்றன. ஏனையவை தொதிப்பால் ஒன்றுக்கு மேற்பட்ட வெல்லவகைகள் - யுண்டாக்கக்கூடிய அழகல்வளரிகளாகும். காயமடைந்த தாவரவிழையங்களிலிருந்தும் அமுதசுரப்பிகள், பழங் களுட்பட வெல்லமுடைய பல பொருள்களிலிருந்தும் அநேக அழுகல் வளரி மதுவங்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன, வேறு சில மண்ணி விருந்தும், மிருகங்களின் கழிவுகளிலிருந்தும்,
பிரித் தெடுக்கப்பட்டுள்ளன,
மதுவம் இருபெரும்
வகை களிலடங்கும். ஒரு கலம் சமமான இரு கலங்களாகப் பிரிகை யடையும் வகை டரிளப்பு-மதுவம் (Fission VEast) என்றும், ஒரு

gg
- கலத்திலிருந்து அரும்புகள் உண்டாகும் பகை அரும்பும் - ம துவம்
Budding ycnst ) என்றும் அழைக்கப்படும்,
பிளப்புமதுவத்தில், முன் UN இன முடைய சாதியான இசுக் கைசோசக்கரோமைசிசுவே சிறந்தா தகும். அரும்பும் மதுவத்தில் முப்பது இனங்களைக் கொண்ட சக்சுரோமைசெசு சாதியே நன்க ஆராயப்பட்டுள்ளது.
சக்கரோமைசெசு ( SaCCllaram Tceg :
பொருளாதாரக் கண்கொண்டு நோக்கும் பொழுது, சக்க ரோமைசெசுவே மிக முக்கிய சாதியாகும். சிறிதளவு நைதரசனும் கந்தகமுமுடைய இனிப்புப் பொருள்களில் இவை தொகையாக வளரும். உ - ம் : பூக்களின் அமுதம், பழங்களின் சாறுகள், பனந்தென்னஞ்சாறுகள், ஒரு குடுவையிலுள்ள பாச்சரின் கனர சலில் ப துவத் தானியங்களை இட்டு பாfi சோதனைச் சாலையில் வளர்க்கலாம், குடுவையில் தானியங்களையிட்டு அதன் வாயை பஞ்சினால் மூடி, போதிய வெப்பநிலையில் வைக்கப்பட வேண்டும், பின்வரும் பொருள்களைக் கலப்பதனால் பாச்சரின் கரைசல பண்
டாக்கலாம்.
நிர் பொட்டாசியம் சல்பேற்று
மகனிசியம் சல்பேற்று கல்சியம் சல்பேற்று சுக்குறேசு அமோனிய தாத்தரேற்று
41 க, ச, மீ,
1 கிராம் 0, 1 கிராம் 1, 1 கிராம் 75 கிராம் 5 கிராம்
அமைப்பு :
குழிய முதலுரு
புன்கரு
கருச்சிறு வெற்றிடம்
கிளைக்கோசன்
படம் 33, சக்கரோமைசெசு

Page 56
100
ஏனைய அசுக்கோனமசிற்றேசுகளைப் போலல்லாது சக்கரோ மைசெசு முட்டை அல்லது கோளவடிவமான தனிக்கலங்களா வானது. கலங்கள் ..01 மி.மீ., அளவுடையன. தனிக்கலங்களின் சுவர்கள் ஒருவகைக் காபோவைதரேற்றினாலான மதுவச் செலு லோசினல் ஆக்கப்பட்டது, இது சாதாரண செபிலோசோ அபே லது கைற்றினே அல்ல. கலத்தினுள் முதலுருவும் சுருவும் டண்டு. கரு ஒரு பெரிய சிறு வெற்றிடத்தினுள் இருக்கின்றது. இதுவும் கருவின் ஒரு பகுதியென்றே கருதப்படுகின்றது, சிறு வெற் றிடத்தே கருவினிறப்பொருள் நார்கள் ( Chromatin fibrils | குறுக்காகச் செல்கின்றன. வேககும் ( Wager ), பெனிஸ்ர னும் ( Penistoth 1 சாயமிடுதல் முறையால் இதைக் காட்டினர். கரு ஒரு பக்கத்தில் புன் கருவையுடையது. சில விஞ்ஞானிகள் கருவுக்கும், சிறு வெற்றிடத்திற்குமிடையில் தெளி வான பிரிமென்றகடுகள் உண்டென்றும், அது கருவையும், சிறு வெற்றிடத்தையும் மட்டுமல்லாது, அவற்றை முதலுருவிலிருந் தும் பிரிக்கின்றது என்று கருதுகின்றனர். முதலுருவினுள் எண் ணெய்த்துளிகளும், கிளைக்கோசனும், வொலுத்தின் போன்ற உணவுச் சேமிப்புக்களும் காணப்படும்.
போசணை :
ஏனைய பங்க்சுக்களைப் போன்று சக்கரோமைசெசிலும் பச் சையவுருவம் இல்லாததால் இவையும் பிற போசணையுள்ளதே. இவை அழுகல் வளரிகளாகையால் அவற்றிற்குத் தேவையான போசணையை வெல்லப் பொருள்களிலிருந்து பெற்றுக்கொள்கின்
பா.
சைமேசு (Zymese] என்னும் சிக்கலான நொதி யத்தை உற்பத்தியாக்கும் இன்வேட்டேசு என்னும் கலத்துக்குப் புறம்பான நொதியம் கலத்திலிருந்து வெளியாகும்பொழுது வெல் லத்தைக் குளுக்கோசாகவும், மதுவக்கலத்தினுள் உள்ள சிக்கலான நொதியம் குளுக்கோசை அற்ககோலாகவும், காபனீரொட் சைட்டாகவும் மாற்றுகின்றது. மதுவக்கலத்திற்கு வெளியேயும்; நொதித்தல் நடைபெறலாம். இதற்குரிய நொதியங்கள் இறந்தகலங் கள் அல்லது மதுவக்கலங்களிலிருந்து பெறப்படுகின்றது. இல் வாரன கலத்துக்குப் புறம்பான நொதிப்பில் வெளியாக்கப் படும் சக்தி மதுவக்கலங்களுக்குக் கிடைக்கமாட்டா. அற்ககோ லின் செறிவு பதினைந்து வீதமாகும் பொழுது நச்சுத்தன்மை யேற்படுவதால் நொதித்தல் நின்று விடும்.
இனப்பெருக்கம் :
அதிகமான இனங்களில் பிளத்தலே முக்கியமான இனப் பெருக்கமுறையாகும். இது உணவு தாராளமாக உள்ள காலத் திலேயே நடைபெறும்,

1ப்1
8 இன? ' 9ே Se
3 : *
அரும்புதல்
கோணிவித்தியுண்டாதல் படம் 34, சக்கரோமைசெசு
பதியமுறையினப்பெருக்கம் :
பதியமுறையினப் பெருக்கம் அரும்புதலினில் நடைபெற்று கிறது. கலத்தின் ஒருபகுதி தாய்க்காலத்திலிருந்து ஒரு காறை யால் பிரிகின்றது. கரு இப்பக்கத்திற்குச் சென்று தம்பல் வடிவ மாகின்றது " Dபmbell shaped ), ஒரு பகுதி புதிய கலத்தின் கருவாகின்றது. அரும்பு சிறிது சிறிதாகப் பெரிதாகும், ஆனால் முழுமையடையுமுன் தாய்த் தாவரத்திலிருந்து துண்டிக் கப்பட்டுவிடும். ஒரு நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அரும்புகள் உண்டாகி, இப்புதிய அரும்புகள் தாய்க்கலத்திலிருந்து பிரியு. முன்னே (வேறு அரும்புகளை யுண்டாக்கவும் கூடும். இதனல் பிணைந்த அரும்புகளில் கிளைகள் உண்டாகும்.
இலிங்கமுறையினப்பெருக்கம் :
உசிதமற்ற காலங்களில் சக்கரோமைசெசு இலிங்கமுறையில் இனப்பெருக்கம் செய்யும். இம்முறையில் பதியக்கலம் - அருப்புதலை நிறுத்தி வித்திகண்டாயுற்பத்தியாக்குகின்றது. இவ் வித்திகள் உசித மற்ற காலநிலைகளைத் தாங்கக் கூடியன. புதியக்கலங்கள் ஒரு மடியானதாகவுமிருக்கும், இருமடியானதாகவுமிருக்கும். இரு மடி யான கலத்தின் கரு ஒடுங்கற் பிரிவடைந்து நான்கு அல்லது எட்டு ஒரு மடிப்பான கருக்களையுண்டாக்கும். ஒவ்வொரு கருவும் முதலுருவாற் சூழப்பட்ட கோணிவி த்தியாகும். கோணிவித்தி சுளில் அரைவாசி, (4) நேர்குலவகைகளாகவும், அடுத்த பாதி, (-), எதிர்குல வகைகளாகவுமிருக்கும். பதியக்கலத்தினுள்ளேயே இரு சோணிவித்திக் கருக்கள் ஒன்றுசேர்ந்து இருமடியான தாக லாம், இவை கோணியிலிருந்து விடுபட்டபின் இரும்படியான பதி யக்கலங்களாக வளர்ந்து அரும்புதல் முறையால் இருமடியான

Page 57
102
சந்ததியை உண்டாக்கும். கோணிளித்திகள் கோணியிலே இணை ! யாது ஒருமடி யான பதியக்கலங்களாக விருத்தியடையவுங் கூடும். இவை அரும்புதல் பலம் ஒரு மடியான பதியக்கலங்களை யுண்டாக்கலாம், சிலவேம் இவை வித்திகளாகவும் பயன்படும். வித்தியாசமான வித்திகள் சோடிகளாகச் சேர்ந்து இருமடியான கலங்களை யுண்டாக்கலாம். கோவித்தியிலிருந்துண்டாகும் கோளவுருவான ஒருமடியான கலங்களிலும் பார்க்க இருமடிச் சந்ததிப் பரிவிருத்திக்கலங்கள் மிகப் பெரியவையாயும், நீள் வட்ட அருவுடையனவாயும் காணப்படும். எனவே சுருக்கட்டலில் அதிக பருமனுள்ளனவும் வளருந் தன்மையுடையனவாயுமிருக்கலாம் என எண்ணக்கூடியதாயிருக்கின்றது.
-> சக்கரோமைசெசு
கோணிவித்திகள் (2)
சோடிகளாக இராதல் ஈ'
(ஒடுங்கற் பிரிவு)
சக்கராப்ன மசசு (2 #) நுகம்
(2 )
சக்கரராமசெசின் வாழ்க்கைச் சக்கரம்
அற்ககோல் நொதிப்பு:
பலவிதமான வெல்லங்களும் அற்ககோலாக மாற்றப்படுதல் அற்ககோல் நொதிப்பெனப்படும் - Alcoholic fementation | சையேசு என்னும் சிக்கலான நொதியத்தை யுண்டாக்கும் மதுவக் கலங்களினால் இந்நொதிப்புண்டாகிறது. அற்ககோல் - நொதிப்பு நடைபெறும் பொழுது காபனீரொட்சைட்டு இடைப்பொரு ளாகப் பெறப்படுவதுடன் சிறிது சக்தியும் வெளிவிடப்படுகிறது. இம்முறை பின்வரும் சமன்பாட்டினால் விளக்கப்படும்.
CHig] -- > CH:0H + (0, + 27 கலோரி

103
மதுவக் கலங்கள் சுக்குரோசுக் கரைசலிலிருக்கும் பொழுது அவை இன்வெட்டேசு என்னும் நொதியத்தைச் சுரக்கின்றன. இந் நொதி பம் சுக்கு ரோசை எட்சோசாக மாற்றுகின்றது.
H2) C12H220 --> C, I,20, + C,H|20.
இம் முறை டண்மையில் மேற்காட்டியதைவிடச் சிக்க வானது, எட்சோசு வெல்லம் முதலில் அதிசக்தியுடைய பொசு பெற்றுக் கூட்டத்தைச் சேர்ப்பதனால் எட்சோசு இருபொசு பேற்றாக மாற்றப்படுகிறது. இது கிளைகோப்பகுப்பினால் பொசுபோ கிளிசறிக்கமிலமாகவும், பின் பொசுபோனபருவிக்கமில மாக வும் மாறுகின்றது'. பொசுபோனபைருலிக் அமிலம் பொசுபேற்றுக் கூட்டத்தை இந்து, பைருவிக்கமிலமாக மாறுகின்றது. அது பின் அசற்றால் டிக்கெட்டாகவும், காபனீரொட்சைட்டாகவும் மாறி ஈதைல் அற்ககோலாக மாறுகிறது .
எட்சோசு வெல்லம்
எட்சோசு இருபொசுபேற்று
பொசுபோனபளுவிக்சுமியம்
பைரூலிக்கமிலம்
பொசுபேற்று )
அற்றல்டின்கட்டு, + காபனீரொட்சைட்டு
ஈதையி:11 அற்ககோல்
இம் மாற்றப்படிகள் சிக்கலான சைப்மசு நொதியத்தின் தனிப் பட்ட பகுதிகளால் நடாத்தப்படுகின்றது. ஈதைல் அற்ககோலை விட கிளிசரால், சச்சினிக் கமிலம் ஆகியனவும் நொதித்தல் நடைபெறும் பொழுது சிறிதளவில் பெறப்படுகின்றன. -
மேற்கூறிய மாற்றங்கள் ஒட்சிசனின் பியே நடைபெறுகின் றன. ஆனால் ஒட்சிசனிருந்தாலும் நொதித்தல் ஒரளவு நடை பெறக்கட்டும், ஆனால் நட்சிசனிருப்பின் மது வக்கலன்கள் வெல்லத் தின் ஒரு பகுதியைப் பாவித்து சுறுசுறுப்பாக வளருகின் றன . ஒட்சிச வருப்பின் மதுவக்கலங்கள் காற்று வாழுயிருக்குரிய முறையிற் சுவாசிக்கின்றன, இவ்வாறு சுவாசிக்கும் பொழுது வெல்லம்" காபனீரொட்சைட்டாகவும் நிராகவும் ஒட்சியேற்றப்பட்டு, அதிக

Page 58
104
சக்தி வெளிவிடப்படுகின்றது, இச் சக்தி கலங்களின் துரித வளர்ச்'. சிக்குப் பயன்படுத்தப்படுகின்றது. ஒட்சிசனின் அளவு காற்று வாழுயிரி முறையிற் சுவாசிக்கப் போதாதாயின் காற்றின்றிச் சுவாசிப்பதால் அதிக அற்ககோல் உண்டாக்கப்படுவதில்லை,
ஒரு காலத்தில் நொதித்தல் உடயிருள்ள மதுவக் கலங்களினால் மாத்திரமே நடைபெறுமெனக் கருதப்பட்டது. ஆனால் மதுவக் அலங்களிலிருந்து பிளியப்பட்ட சாறு 1 வெல்லக்கரைசலுடன் சேர்க்கப்பட்ட பொழுது நொதித்தல் நடைபெற்று காபனீரொட் சைட்டு வெளியாக்கப்பட்டது. இதிலிருந்து நொதித்தல் மதுவக் கவங்களுக்கு வெளியே நடைபெறலாம் என்பதும், உயிருள்ள மதுவக்கலங்கள் அவசியமில்லை என்பதும் புலனாகின்றது. உண்மை யில் மதுவக் கல்த்திலிருந்துண்டாகும் சிக்கலான சைமேசு நொதி யமே அற்ககோல் நொதிப்பிற்குக் காரணமாகும், மதுவக்கலங்கள் ஒரு குடுவையில் வைக்கப்பட்டு குளோறேபோம் போன்ற அழுக வெதிரிகளால் மூடப்பட்ட பொழுது
கபிலநிறத் திரவம் உண்டாகியிருந்தது. இது தன்னியக்க மென்னும் முறை யால் நடைபெற்றதாகும். அதாவது குளோறோபோமினாற் கொல் லப்பட்டம் துவக்கலாய்கள் அவற்றினாலே யேசுரக்கப்பட்டநொதியங் களிற் கரைகின்றது, இக்கரைசல் வைக்கோல் நிறத்திற்கு ஐதாக்கப் பட்டபின் அதுஒரிரண்டு நாட்களில் சுக்குரோசைத் துரிதமாக அற்க கோலாக மாற்றுந் தன் னம யுடையதாய்க் காணப்பட்டது. அற்க கோல் நொதியத்தை செயலற்றதாக்க மாட்டாது. கிராம் மூலக் சுடறு குளுக்கோசு முற்றாக ஒட்சியேற்றப்பட்டால் பிரதி சுலோரி சக்தியைத் தரும். அதேயளவு குளுக்கோசு கொதிக்கும் பொழுது 27 கலோரி சக்தியே வெளியாக்கப்படுகின்றது. எனவே நொதித் தலினால் சக்தி வெளியாக்கப்படும் பொழுது வெல்லம் வீணாக்கப் படுகின்றது, உலர்ந்த பழங்களில் அல்லது ஜாமின் மேற்பரப்பில் மதுவக்கலங்கள் காணப்படினும் வெல்லச் செறிவு அதிகமாயிருப்ப தால் நொதித்தல் நடைபெறுவதில்லை.
பியர், சாராயம், உவைன் முதலியான தயாரிப்போர் இம் மதுசாரங்களைத் தயாரிப்பதற்கு மதுவத்தைப் பாவிக்கின்றனர். தொழில்முறையிற் பாவிக்கப்படும் மதுவங்கள் அதிகமாக சக் கரோனமசெசு சாதியைச் சேர்ந்தவையே. பியருண்டாக்கப் பாவிக் கப்படும் மதுவம் இருவகைப்படும். நொதித்தலின் பொழுது பியரின் மேற்பரப்பிற்கு வரும் மதுவம் ' மேல் மதுவம்" ('Top [ NEast | என்றும் அடியிற் காணப்படுவது 'அடி மதுவம்'
bottom yest ) என்றும் அழைக்கப்படும். மேல் " மது வத்தாற் பெறப்படும் பியரில் அடிமதுவத்தாற் பெறப்படும் பியரிலும் பார்க்கக் கூடிய அளவு அற்ககோல் காணப்படும்.விரை வாக அதிக அளவு அற்ககோலைப் பெறுவதற்காக மதுசாரம் வடிப்போர் துரிதமாகச் செயலாற்றும் மேல் மதுவத்தைப் பாவித்து உயர்ந்த வெப்ப நிலையில் தொதிப்பை நடாத்துகின்ற னர். ஆனால் இவ் வெப்பநிலை நொதியின் வெப்பவுறுதி நிலையை அதிகரிப்பதில்லை.

105
உசவைன்கள் உண்டாக்கும்பொழுது' பழச்சாறுகளை நொதிக்கச் செய்வது அதிகமாக வான் மதுவமே ' Wild yeast இம் மதுவங்கள் பழத்தோட்ட மண்ணில் வாழ்வன, இவை தாசு டன் சேர்ந்துசென்று பழங்களின் தோலை யடையும்.
வெல்லமற்ற மாப்பொருளுடைய பார்லிவித்துக்களிலிருந்து பியர் பெறப்படுகின்றது. முதலில் பார்லி வித்துக்கள் முளைக்க விடப்படுகின்றன, முளைக்கும்பொழுது ம பா ப் பொ கு ள் மோல்ற்றேசாகமாற்றப்படுகின்றது. இது அமிலேசு என்றும் அழைக் சுப்பாடும் டயஸ்ரேசினால் நடைபெறுகின்றது .மோல்ற்றோசு, மோல் யேசு என்னும்நொதியத்தினால் குளுக்கோசாக மாற்றப்படுகின்றது. முளைக்கும் பார்லி வித்துக்கள் சூளையில் இடப்பட்டு வெப்பமாக்கப் படுவதனால் இறக்கின்றன. இந்த மோல்ற்று நீரிற் கரைந்து . உவோட்டாகின்றது (Nort 1. உ வோட்டும் துவத்தினால் நொதிக்கப் பண்ணப்பட்டு அற்ககோ லுள்ள பியர் பெறப்படு கின்றது -
பேக்கரிகளில் பாவிக்கப்படும் மதுவும் செயற்கை இனமாகும். இவை வான் இனங்களுடன் கலக்காதவாறு பாதுகாக்கப்பட்ட தும், சிறந்தவை என நிருபிக்கப்பட்டதுமான குலவகைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவையாகும். சந்தையில் விற்கப்படும் அவள் கப்பட்ட மதுவத்தைப் பெற மதுங்வத்தை பரிசோதனையில் வளர்ப் பதன் நோக்கம் குறைந்த அளவு நொதித்தலுடன் கூடிய அளவு வளர்ப்புக் கரைசலில் போதியளவு காற்றுப்படுவதால் நொதித்தல் மிகவும் குறைக்கப்படுகின்றது.
பாண் செய்வதற்கு குளக்கப்பட்ட மா பேக்கரி மதுவத் துடன் கலக்கப்பட்டு ஒரு இரவு முழுவதும் வைக்கப்படுகின்றது, மதுவம் மரக்குளம்பிலுள்ள மாப்பொருளை வெல்லமாக மாற்ற
காபனீரொட்சைட்டு வெளியாக்கப்படுகின் நது. இது மாக்குளம்பை (பொங்கச் செய்கின்றது. வெப்ப மாக்கப்படும் பொழுது மாக்குளம்பில் காணப்படும் வாயுக்குமிழி கள் விரிந்து வெளியேறுவதால் பாண் மெதுமையான தாயும் துவாரமுடையதாயும் வருகின்றது. இப்பொழுதுண்டாகும் அற்சு கோல் வெப்பத்தினால் ஆவியாக்கப்படுகின்றது.
உயிர்ச்சத்து B என அழைக்கப்படும் றைபினோபிளேவின்
Fibinoflavin) பவ நொதியங்களிற் காணப்படுகின்றது, இது பல மதுவங்களின் வளர்ச்சிக்குக் காரணியாகும். எனவே, மதுவம் சில சேர்வைகளிலிருந்து உயிர்ச்சத்து Bத வைத் தயாரிக் கின்றது. உயிர்ச்சத்து B குறைவினால் ஏற்படும் வியாதிகளுக்கு மதுவக் குடிசைகள் கொடுக்கப்படுகின்றன. உயிர்ச்சத்து நர் இன் குறைவினால் முலையூட்டிகளின் கலங்களினுள் குருதிக் கலங் கள் வளருகின்றன. வேறும் பல கு றபாடுகளை யேற்படுத்துவ தால் மரணமும் சம்பவிக்கக்கூடும்.

Page 59
10
வகுப்பு : பசிடியோமீசெற்றெசு
பசிடியோம்செற்றுெசு வடிவிலும், அமைப்பிலும் உடற் ரெழிலியலிலும் பல விதங்களைக் கொண்ட பல இனங்களை யுடைய ஒரு உயர்வகுப்பாகும். குடைக்காளான், நச்சுக்கானான் முதலியவை இதிலடங்கும். அதிகமாக இவை அழகும் இயேசுள், சானனி, மணல் போன்ற சேதனப் பொருள்களில் அழுகல் வளரி சுகளாக வளருகின்றன. எல்லா பசிடியோமீசெங்ரெசுகளிலும் வேறெதிலுமில்லாத பிரத்தியேகமான சிற்றடி - சித்தி எனப்படும் வித்தியுண்டு. இவ் வித்தி பசிடியம் என அழைக்கப்படும் வித்திக் கலத்தில் ஒட்டியிருக்கின்றது அதிகமாக வித்திக்கலத்தில் நான்கு வித்திகளே காணப்படும். சில வேளைகளில் இரண்டு அல்லது எட் டும் காணப்படுவதுண்டு.அசுக்கோமீசெற்றுெசில் போலல்லாது வித்திகள் வெளியே காணப்படுகின்றன. பசிடி யோமீசெற்றசில் பூசணவஃப பல கலமுடைய தாயும், பல கிளைகளையுடையதாயு மிருக்கும். சிலவேளைகளில் வேகுரு எனப்படும் பட்டி களாக பூசணவலைகள் உண்டாகின்றன. இவை பங்கசுக்கள் பரவ உதவு கின் றன. இவை சமாந்திரமாகப் பின்னிக்கிடக்கும் பூசண விழைகளாலாக்கப்பட்டவை.பங்கசின் வாழ்காலத்தில் பசிடியோம்செற்றசில் பூசணவம் மூன்று வகையில் விருத்தியைக் காட்டுகின்றது. முதல் பூசண வலை ஒரு கருவுடைய சுலங்களா லான பூஞ்சாளிமையையுடையது. இது ஒரு கருவுடைய முளைக்கும் சிற்றடி வித்தியிலிருந்து உண்டானதே. முதற் பூசபா வலை தாளியாதல் மூலம் அல்லது ஒயிடியமாதல் மூலம் பெருகு கிறது. இனவ பூஞ்சணைவிழைகளின் நுனிகளில், அல்லது ஒயிடியோ தாங்சிகள் ( idiophorES) என்னும் விசேட தண்டுகளில் உண்டாகின்றன. துணைப்பூசண வலை ( Sபடமாdary
myCelium ) வெவ்வேறு விதங்களிலுண்டாகின்றன. சாதா ரமணமாக பூசண வலையின் இரு கலங்கள் வென்று சேருவதாலேயே இவை உண்டாகின்றன. எனவே ஒவ்வொரு கலத்திலும் இரு கருக்கள் காணப்படும். பல்லினப் பிரிவிலியான இனங்களிலே வெவ்வேறு குலவகையைச் சேர்ந்த பூசண வலைகள் ஒன்றே டொன்ற சிக்குப்பட்டு வளர்வதால் இது உண்டாகிறது. சில இனங்களிலே துணைப் பூசண வலையின் கலப்பிரிவின் பொழுது பிடித்தொடுப்புகள் (Clarmp - ConnectinTIS )உண்டா கின்றன. இவற்றில் கலப்பிரிவு பெரும்பாலும் பூசனா இழையின் நுனியிலேயே ஏற்படுகின்றது.
வருணம் - அகாரிக்காலேசு
[ Agarical |
இவை பெரும்பான்மையாக அழுகல் வளரிகளாக வளர் கின் றன. சிற்றடிகள் மென்றகட்டிலே பரம்பியுள்ளன, அவை மூடப்படாமல் வெளித் தெரியக்க, டிய நிலையிலுள் ளன, அவை பிரிசுவரற்ற பவையாயும், குண்டாந்தடி யுருவானவையாயும்" காணப்படும். 2, 4 அல்லது 8 சிற்றடி வித்திகள் ஆசிரைகளின்

107
மேற் காணப்படும், பெரும்பாலானவற்றில் ஒரு வரையறைவான கனியுடலம் உண்டாகிறது.
சலியோற்கு கம்பெஸ்ற்றில் (Salipta Campestris ]
{ அகாரிக்கசு - Agaricus |
இது சாதாரணமாகக் காணப்படும் பூவுருவான காளானாகும் ( Gill mushroom ). இது நிழலான இடங்களி ஒம், ஈரமான மரப்பட்டைகளிலும், உக்கும் சேதனவுறுப்புக்
குரிய பொருள்களின் மேலும் பெருமளவில் வளரக்காணலாம்.
சுட்டமைப்பு :
தொப்பாரம்
மென்றட்டு
-ஆவரகம்
தாள் இளம் நிலை
பூசணவப்ப |
படம் 35. சளியோற்ற சும்பென்ஸ் திஸ்
முதிர்ந்த தாவரவுடலில் இரு பகுதிகளுண்டு. [I பதிய முறைக்குரிய பூசணவலை கீழ்ப்படையினுட் காணப்படும். (2) வித்திதாங்கி வெளியே வளர்கிறது.
புதியமுறைக்குரிய பூசணவரை இளமையில் மிக அதிகளவில் கிளைத்துப் பின்னியுள்ள து.

Page 60
102
'கங்கணக்கு
ஆவரகம் மென்றட்டுகள் பூசணவலை
படம் 36, தனியுடலவிருத்தி நெ. வெ.
மென்றட்டுகள் |
காப்டை
அகவிருத் விருத்திப்
திப்படை
படை படம் 37. கு. வெ. மென்றட்டுகளுக்கூடாக

10
3 ) 8
சிற்றடிவித்தி விருத்திப்
2ாடை அகவிருத் சிற்றடி படை
திப்படை படம் 38. ஒரு மென்றட்டின் வெ. மு.
ஆசிரையம் சிற்றடி சிற்றடி.வித்தி
19 இ.
படம் 39. சிற்றம், சிற்றடிவித்திகள் விருத்தி சிலைகள்
இனப்பெருக்கம் :
சளியோற்ற கம்பெஸ்ற்றிஸ் உணவாக உட்கொள்ளக்கூடிய காளானுகையால், அதன் பூசண வலைத் துண்டங்களைவளர்ச்சிக்கேற்ற கீழ்ப்படையில் வைத்து பதியமுறையில் இனப்பெருக்கம் நடாத் தப்படுகிறது. பொதுவாக இளமையான தாளின் ( Stips | உட்பகுதியிலிருந்தே பூசணவலைத்துண்டங்கள் எடுக்கப்படுகின்றன,

Page 61
110
கப்யுடலம் உண்: ரிக்காயுருவாழை 6
சிற்றடி வித்திகளுண்டாகும் முறையால் இனப்பெருக்கம் நடைபெறுகிறது. மழை பெய்து விட்டவுடன் கனியுடலங்கள் நிலத்திற்கு மேலே தோன்றுவதை அவதானிக்கலாம். பதிய முறைக்குரிய பூசணலை வேருரு [Rlhizorroph எனப்படும் திரிக்கப்பட்ட கயிறு போன்ற அமைப்பை பனடந்க. அதன் மேலேயே கனியுடலம் உண்டாகிறது. அது முதலில் ஒரு சிறிய கோளவுருவான அல்லது பேரிக்காயுருவான வெண்ணிற உடலாகத் தோன்றும். உட்புறமாகவுள்ள பூசணளிழை வித்திப் படைத் தொடக்கமாக (வேறுபாடடைகிறது. இது' இதற்குக் கீழுள்ள பூசணவிழைகளிலிருந்து அறுபட்டுக் கங்கணக்குழி யுண்டாகின்றது. இப்பொழுது தான், தொப்பாரம் ( Pilcu1 | ஆகிய பகுதிகளைத் தெளிவாகக் காணலாம், தாளின் மத்திய பகுதி இடையிடையே வெளிகளுடைய, ச தான், பின்னப்பட்ட பூஞ்சண விழைகளைக் கொண்டதாகும். வெளிப்பகுதி அடர்த்தி யான பூஞ்சண விழைகளைக் கொண்டது. நடுப்பகுதி மையவிழை என்றும், வெளிப்பகுதி மேற்படைக்குரிய பகுதி என்றும் அழைக் கப்படும், ஆனால் இதிற் காணப்படும் மையவிரையமும், வெளிப் படையும் பங்கசுப் பூஞ்சணளிழைகளினுலான போலியிழையமாகை யால் உயர் தாவரங்களின் மையளிழையுங்களுடனோ, வெளிப்படை யுடனே, ஒத்து நோக்கக்கூடியதல்ல. கங்கணக்குழியனுள் இள விருத்திப்படையிலிருந்து மென்றட்டுகள் உண்டாகி, நீளும் குழி யினுள் வளரும். தொப்பாரம்பருக்கவே சுங்கன்னக்குழியின் தளம் வெடித்து மென்றகடுகளை வெளியாக்கும், வெடித்த பகுதி ஆவரகம் - Velumn ) எனப்படும், வளையமான மென் றகட்டிலிருக்கும் தொப்பாரம் ஏறக்குறைய குவிந்தவட்டவடிவி விருக்கும், தொப்பாரத்தின் கீழ்ப்பகுதியை அவதானித்தால் தாளி லிருந்து தொப்பசாரத்தின் அருகுவரை நிமிர்ந்த மென்மையான தட்டுகளைக் காணலாம். இவையெ மென்றட்டுகளாகும். இவை இளமையில் இளஞ்சிவப்பு நிறமாகவும், முதிர்ந்தபின் இளங் கபிலநிறமாகவுமிருக்கும். தொப்பாரத்தை தொடுதளத்திற்குரிய முறையில் வெட்டினால் மென்றட்டின் அனமப்பையறியலாம். அவ்வாறு வெட்டும்பொழுது மென் றட்டு செங்குத்தாக வெட்டப் படும்.மென்றட்டின் உட்பகுதியில் ஐதாக அடுக்கப்பட்ட கீழ் நோக்கி வளரும், பூஞ்சணவிழைகளைக் காணலாம். இது ஊடை
Tram3 ) எனப்படும் மத்திய பூஞ்சண்ணாவினழயிலிருந்து மென் றகட்டின் இரு பக்கங்களை நோக்கியும் கிளைவிடும் இக் கிளைகள் மேலும் பிரிந்து அகவிருத்திப்படை ( Subhyrmeniபா ) என்னும் அதி அடர்ந்த பகுதியை யுண்டாக்குகின்றன, அகவிருத்திப்படையின் முனைகளை விருத்திப்படை என்னும் சுருக் கட்டக்கூடிய மேற்பரப்பைக் கொண்டுள்ளன. விருத்திப்படை மென்றட்டிற்குச் செங்குத்தாய் வளரும் குண்டாந்தடி யுரு வான பூஞ்சண விழைகளினலானது. இவையே சிற்றடி எனப் படுவன. சலியோற்றளில் (Psalila 1 இவற்றிலெவை யேனும் மலடானதா வென்பது சந்தேகத்திற்குரியதே, பல்வகை இனங்களில் ஆசிரையுங்கள் எனப்படும் கூரான நான்கு வெளியுறுப்புக்

111
கண்ணக் காணலாம். ஆனால் செயற்கை முறையில் வளர்க்கப்படும் "வனகயில் இரண்டு வெளியுறிப்புக்களே காணப்படும், இளம் [பசிடியம்) சிற்றடி இருககுக்களே யுடையது,இவையிரண்டும் சேர்வதனால் ஒரு இருமடியான கரு உண்டாகி, அக் கரு ஒடுங்கற் பிரிவடைந்து நான்கு ஒரு மடியான கருக்கள் உண்டா சி றன. வான் வனகயின் (Wild foார் 1 ஒண்வொரு ஆசிரை யத்திலிருந்தும் ஒரு வித்தியாக, நான்கு சிற்றடி வித்திகளுண்டாக் கப்படுகின் றன. ஒவ்வொரு வித்தியிலும் ஒருகருவே காணப்படும். உணவுக்காக வளர்க்கப்படும்வகையில் ஒவ்வொரு ஆசியிரையத்திலி ருந்தும் இரு கருக்களைக் கொண்ட சிற்றடி வித்திகளுண்டாகின்றன.
வித்திகள் ஏராளமாக உண்டாக்கப்பட்டு அசிரையிலிருந்து வித்திகள் விருத்திப்படைக்குப் புறத்தே செல்லக்கூடிய அளவு விசையுடன் வீசப்படுகின்றன. ஆனால் அருகிலுள்ள மென் பகட்டின் பரப்பில் காணப்படும் மென் றட்டிடைவெளியைக் கடந்து செல்ப் விசை போதியதன்று.எனவே வித்திகன் பென் றுகடுகளுக்கிடையே விழுகின்றன. இவை தொப்பாரத்தின் கீழ்ச் செல்வம் பொழுது காற்றினால் பரப்பப்படுகின்றன,
அவை வருவதற்கேற்ற சூழல் கிடைத்தவுடன் வளரு சின்றன. தனிவித்தி அதிகமாக வளருவதில்லை, அதிக எளித்திகள் விதைக்கப்பட்டிருந்தால் பூஞ்சணணிழைகள் உண்டாக்கப்படு சின்றன. துரிதமாக வளரும் பூஞ்சணளிழைகள் வளர்ச்சியைத் துரண்டுவதாயமைகின்றன, Mg, K, NH; ) இடப்பட் டால் அவைகளை ஒரளவு முளைக்கப் பண்ணலாம். இந்தியா பிரான்சு, அமெரிக்க போன்று நாடுகளில் உண்ணத்தக்க உண வாக உண்டாக்கப்படுகின்றன, இவை உலர்த்தப்பட்டு சாடிகளில் அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன.
(சலியோற்ற கம்பெஸ்டறிஸ்). -அகாரிக்கசு (பூஞ்சணவலை) <.
சிற்றடி வித்திகள்
சுணியுடலம்
சிற்றடி
தாள் ஆவரகம் தொப்பாரம்
விருத்திப்படை
> மீன்பூவுரு மென்றட்டு). சளியோற்ற கம்பெஸ் ரிசின் வாழ்க்கைச் சக்கரம்,

Page 62
பற்றீரியா.
இராச்சியப் பிரிவு - தலோபிற்ரு f Thallophyta | பிரிவு "இசுக்கைசோமைக்கோப்ற்ற ( SchizonyCopliyta |
1. கொக்கசு
பசில்சு 3, பசிலசு
1. ஸ்பைரில்லம் படம் #0. பற்றீரியா
தாவரங்களில் மட்டுமன்றி உயிருள்ள அங்சிகளிலேயே பற் நீரியாவே மிகச் சிறயவையும் அமைப்பில் மிக எளிமையானவையு மாகும். அவை ஏறத்தாழ 1.5 மி.மீ, (1 மிட =I/100 மி.மீ. ) விட்டமுள்ள ஒரு சுவத்தாலான நுண் தாவரங்களாகும். சாதாரணமாக 3-5 மிய நீளமுடையன. இவை கிருமிகள் எனவும் அழைக்கப்படுகின்றன, மூன்று விதமான பற்றீரியாக்களைப் பொது வாகக் காணலாம்.
(1) கொக்கசு (Coccus ) -- கவங்கள் கோள வடிவாகவோ, முட்டை வடிவாகவோ இருக்கும். கலாரிகள் தனி யன்களாகவோ, ஒருபடைத்தடிப்பிலோ காணப்பட்டால் நுண் கொக்கசு f IMicrococcus] எனப்படும். அவை சோடி யாகக் காணப்படின் சோடித் தொகுப்புக் கொக்கசு ( Diplococcus ) எனப்படும், சங்கிலித்தொடராகக் காணப் படின் இசுறெப்ரோகொக்கசு ( StreptoCOCப்பு3 ] எனப் படும். ஒழுங்கற்ற கூட்டங்களாகக் காணப்படின் இசுரகிலோ

113
"கொக்கசு |
Staphylococcus எனப்படும், எட்டு அல் }லது அதற்கு மேலான எண்ணிக்கையில் வரையறைவான வடிவங் களில் கலங்கள் அமைந்திருந்தால் கார்சினா ( Sarcina ) எனப்
பாடும், கொக்கசுகளில் பிசிர்கள் கிடையா.
(2) பரிசு
Bacillus
- இவை நீண்ட தண்டுருவானவை ( Rod Shaped ). இவற்றில் மூன்று சாதி களுள, அவையாவன பசிலசு, பற்றீரியம், சூடோமொனசு. பசி லசு சாதியைச் சேர்ந்தவற்றில் பிசிர்களுண்டு. பற்றீரியம் சாதி யைச் சேர்ந்தவற்றில் பிசிர்கள் கிடையா, சூடோமொனசு சாதி யைச் சேர்ந்தவற்றில் சவுக்கு முளைகளுண்டு.
(3) ஸ்பைரி வம்'
Spirillum
பி : இவை சுருளியாகவோ, வளைந்த, வடிவமாகவோ காணப்படும். இவற் ரில் பிசிக்கள் உள்ளன, ஸ்பைரிலம், மைக்குரோஸ்பைரா என்பன இரு முக்கியமான சாதிகளாகும், இழையுருவான சில பற்றீரியா வினங்களும் உள்ளன. இறை கிளைத்துங் காணப் படலாம்.
ஒரு இனத்திலே புற்றரியக் கலத்தின் உருவம் மாறுபடா விடினும் சில வேளைகளில் சூழலுக்கேற்ப உருவமாறுதல்கள் ஏற் படுவதுண்டு. ஆனால் இம் மாற்றங்கள் நிரந்தரமானவையல்ல. ஒரு சில பற்றீரியா மட்டும் அவற்றின் வாழ்க்கைச் சக்கரத் திலே பலவித அமைப்புகள் ஏற்படுவதுண்டும் வரையறைவான கலச்சுவர் சில இனங்களில் அவதானிக்கப்பட்டுள்ளது. வரை யறைவான கலச்சுவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவற் றைச் சுற்றியொரு மென்சவ்வு உள்ளதென்பது நிச்சயமாகத் தெரிந்துள்ளது சில இனங்களிலே மென்சவ்வு, கலிச்சுவர், செலர் நிலையான மடல் அல்ல த வில்லையம் எண்டு. இது திலப் பச்சை அல்காக்களிலுள்ள மடலை யொத்துள்ளது. இம்மடல் நீரிலேயுள்ள பொது வீக்கமடைந்து விழுவிறுப்பான இயல்பைக் கொடுக் கிறது. இயங்குதிலோப்பசை (Toogloca) யெனப்படும் பெருமளவு செவாற்றினால் சில பற்றீயா பதியப்பட்டுள்ளன. | இந்நிலையில் பற்றீரியா பெருகக்கூடும்.
பற்றீரியத்தின் முதலுருவம் மிக ஆதியான அமைப்பைக் | கொண்டது. இதில் மென்சவ்வுடைய வரையறைவான கரு கிடை யாது. குழியாமுகனுருவில்பல்வேறுசிறுமணிகள் காணப்படுகின்றன. அவற்றுள் கருவின் நிரப்பொருள் எனத் தோன்றுபவை கருவைக் குறிப்பனவாகவிருக்கலாம். பற்றீரியாவில் பச்சையவுருமணிகள் கிடையா. பெரும்பாலான பற்றீரியா நிறமற்றதாகவே யிருந் தாலும் சிலவற்றில் செந்நிற, ஆமாதாநிறப் பொருள்கள் உள்ளன. கலச்சுவருள்ளவற்றில் அது பல்சக்கரைட்டு, கொழுப்புப் பொருள் கள், புரதம் ஆகியவற்றைக் கொண்ட கலவையினாலான தாய்க் காணப்படுகின்றது. சிலவேளைகளில் கைற்றினும் சேர்ந்திருக்கும்.
178

Page 63
114
பிசிர்களை அல்லது சறுக்குமுளைகளையுடைய பற்றிரியா அசை பக்காடியன் , சவுக்குள்களின் எண்ணிக்கையும் அவையுள்ள இட முள் வேறுபடும், ரயிலே ஒரு சவுக்குழுளையைக் கொண்டதற்கு உதாரணம் கொவரா பற்றீரியம், எஸ்பைரில்லம் அன்டுலா ( Spirill In Undula ) என்னும் பற்றீரியத்தி னெருமுனையில் சவுக்குமுளைகள் ஒரு படியாகவுள்ளன. ஸ்பைரில்லம் இனங்கள் பலவற்றில் இருமுனைகளிலும் முடியாக சவுக்குமுடிகளுள்ளன. தைபோயிட்டு பசிலசு ( Typhoid Bacillu ] போன்ற வற்றில் உடல் முற்றாக சவுக்குமுறைகளால் சூழப்பட்டுள்ளது. சவுக்குமுளகளோ, பிசிர்களோ அற்ற சிவ பற்றீசியா பாம்பு போன்று வளைந்து வளைந்து அசையக்கூடியயியல்பு பெற்றுள்ளன, சில பற்றீரியா இளமையல் அசையக்கூடியனவாயும், பின்னர் அசைவற்றனவாயுமுள்ளன."
பெரும்பாலான பற்றீரியா இறந்த தாவரங்களினதும் விலங் குளிரினதும் உடலிலேயும் அகல்வனாரிகளாக வாழுகின்றனர். சில பற்றிசியா ஒட்டுண்ணிகளாகவும் வாழுகின்றன. அழுகல் வளரிகள் பாம் நன்மைகளைப் டாயக்குவனவாயும், ஒட்டுண்ணிகள் பகல் நோய்களுக்குக் காரணிகளாயிருப்பதுவும் குறிப்பிடத்தக்கது' பற்றீரியாபற்றிய இயல் பற்றீரியவியல் எனப்படும், ஒரு சிறு துளிப்பொருளில் ஆயிரக்கணக்கான பற்றீரியா காணப்படும்.
பற்றீரியாவில் இலிங்கமில்முறை இனப்பெருக்கம் மட்டுமே நடைபெறுகிறதெனக் கருதப்படுகிறது. சாதாரணமாகக் கலப்பிரிவு முறையாலேயே இது நடைபெறுகிறது. அப்பொழுது கலத்தின் நடுப்பகுதியில் ஒரு ஒடுங்கல் ஏற்பட்டு பற்றீரியம் பின்னர் இரு புதிய பற்றீரியாவாகப் பிரிகின்றது. ஒவ்வொரு பிரிவும் 30 நிமிடங்களுக் கொருமுறை நடைபெறக்கூடும். ஒரு மணித்தியாலத் திற் கொருமுறை பிரிவு ஏற்பட்டால் ஒரு கலத்திலிருந்து பெறப் படும் புதிய பற்றீரியாக்களின் எண்ணிக்கை 24 மணி நேரத்தில் 17, 000, 000 ஆக இருக்கும், சில பற்றீரியாவில் வித்தியம் ( பிபாidium ] எனப்படும் சிறப்பு பகுதிகளுண்டாகி பரவலடைந்து புதிய பற்றீரியாவாக வளர்கின்றன. இழையுருவான பற்றீரியாக் கள் முளைகளிலே தூளியங்களை Conidia ) உண்டாக்கு கின்றன.
சூழ்நிலை உசிதபாடற்றபொழுது, அதாவது அதிக வெப்பமான காலத்திலும், ஈரப்பற்ாரம் குறைந்த பொழுதும் பசில் - குளாளர்' மீடியம் ஆகிய இரு சாதிகள் மட்டும் வித்திகளை யுண்டாக்கு கின்றன, முட்டையுருவான ஒரு வித்து, அல்லது பலவித்திகள் உண்டாகின்றன, பற்றீரியக் கவத்தினகத்தேயுள்ள ஈரப்பற்றுக் குறைந்து, உருவம் சிறுத்து புதிய சு.வருண்டாகின்றது. பின்னர் பழைய சுவர் பிரிந்தழிய வித்தி வெளிவருகிறது.
நாதா கடந்த நிறக்கதிர்வீசவ் ' Ultraviolet Radiation), இரசா யானப் பொருட்கள் ஆகியவற்றால் வித்தி நிலையில் பற்றீரியா அதிகம்

115
'பாதிக்கப்படுவதில் சில பற்றீரியா தொடர்ந்து 16 மணிநேரம் கொதிக்கும் நீரிலிருந்த போதிலும் அரிவதில்லை.. உகந்த சூம் நிலையேற்படும்பொழுது வித்திகள் நீரை உறிஞ்சி உயிர்ப்புள்ள பற்றீரியாவாக வளர்கின்றன.
பற்றீரியாவின் உடற்றொழியவியல்
பற்றீரியாவில் பச்சையவுருவம் கிடையாதாதலால் பரிகசுக் களைப் போன் மா இவையும் அபகல் வனரிகளாகவோ, ஒட்டுண்ணி களாகவோ வாமுகின் றன. ஏற்கனவே தயாரிக்கப்பட்ட நிலையா லுள்ள சிக்கலான சேதனவுறுப்புக்குரிய பொருள்கள் (காபோவை தரேற்று', புரதம்) பற்றீரியா உறிஞ்சி அவற்றை ஒட்சி (யேற்றமடையச் செய்து தமது வளர்ச்சிக்கும் ஏனைய தேவைகட் கும் வேண்டிய சக்தியைப் பெறுகின்றன. எனவே இவை பிற டோசண பள்ளவையெனக் கூறலாம் ..
சில பற்றீரியசா விருந்து வழங்சியிலிருந்து உன்னவை உய்ஞ்சுவதனால் மட்டுமே உயிர் வாழக்கூடியன. இவை கட்டுப் பட்ட ஒட்டுண்ணிகளெனப்படும், வேறு சில பற்றீரியா விருந்து! வழங்கியரின் உயிருள்ள இழையங்களரிளிருந்தே உணவை உறிஞ்சி லைப் தேவையேற்படும் பொது அழுகல் வளரிகளாகவும் வாகின்றன. இவை அமையத்திற்கேற்ற ஒட்டுண்ணிகளெனப் படும். துமுகல் வளரியாகவுள்ள பற்றீரியா இறந்த விலங்கு உடல் கள், நடக்கும் இடிகள், மரங்கள், அழுகும் பழங்கள் இறைச்சி, காய்கறி முதலியவற்றிலே வாழுகின்றன, சிப் பற்றீரியா குறிய பிட்ட வொரு சேதனவுறுப்புப் பொருளிலிருந்தே தமது போசணை னயப் பெறுகின்றன - முக்கியமாக நோய்களாயுண்டாக்கும் ஒட் டுண்னணியிரினங்களே இவ்வாறுள்ளன, சில பற்றீரியா குருதியில் மட்டுமே வாழ்கின்றன. அதிலும் குறிப்பிட்ட இனங்களுக்குக் குறிப்பு பிட்ட வகையான குருதியே தேவை.
" இவ்வாறமாக நோயாத்தே தமது பே குறிப்
எனைய தாவரங்களைப்போன்று பற்றிரியாவும் நொதியங்களைச் சுரத்து, சிக்கலான அல்லது நீரிற்கரையா நிலையிலுள்ள உணவுப் (பொருள்களை சமிபாடடையச் செய்து, நிரற்கரை யுந்தன்மை யுடையதாக்குகின்றன. பற்றீரியாவில் சுரக்கப்படும் நொதியங்க
Tளுள், அமிலேசு மாப்பொருளேவெல்லாமாக்குகிறது இப்பிப்பேசுபிகா ப்பை கொழுப்பமிலங்களாகவும், கிளிசரோவாகவும்':ாற்றுகின்றது. இன் வேட்டேசு கரும்பு வெல்லத்தை குளுக்கோசாகவும்,டரெர் (ருேசாகவும் மாற்றுகிறது, மோல்ற்றே மோல்ற்போசை குளக்கோ சாக்குகிறது. புரதப்பகுப்பு நொதியங்கள் பாதங்களை டெத்தோன் சுளொகவும், பெத்து தட்டுகளாகவும் இறுதியில் அம்பேவலங்க ளாகவும் மாற்றுகின்றன. பற்றாயாக்கலத்தினுள் நொதியங்கள் தொழிற்பட்டால் அவை அகநொதியங்களென்றும், கவத்திற்கு வெளியே சுரக்கப்பட்டு தொழிற்பட்டால்புறநொதியங்களென்றும்

Page 64
116
அழைக்கப்படும். சுவாசித்தலில் ஈடுபடும் ஒட்சியேற்ற, தாழ்த்தல் நொதியங்களும் பற்றீரியாவினால் சுரக்கப்படுகின்றன, ஒட்சிசனேசு. ஒரு ஒட்சியேற்றும் நொதியமாகும். பரவொட்சிடேசு (FeroxidoSE 1 பரவொட்சைட்டுகளைத் தாழ்த்துகிறது : சைமேசு வெல்வங்களை அற்ககோலாகவும் காபனீரொட்சைட்டாகவும் மாற் றுகிறது.
ஒரு சில பற்றீரியா தற்போசணையுள்ளவை. இவை காபனீரொட்சைட்டையும் ஏப்னய அசேதனவுறுப்புப் பொருள் களையும் உபயோகித்து சேதனவுறுப்புக்குரிய பொருள்களைத் தயா ரிக்கவல்லன். இவ்வாறான பற்றீரியா, இரசாயனத் தொகுப் புடையவை, ஒளித்தொகுப்புடையவை, என இரு பிரிவுகளி லடங்கும். இரசாயனத் தொகுப்புடைய பற்றீரியா இரசாயனப் பொருள்களை ஒட்சி யேற்றுவதனால் பெறும் சக்தியை (சேதன வுறுப்புக்குரிய பொருள்களின் தொகுப்பில் பயன்படுத்துகின்றன.
இரசாயனத் தொகுப்புடைய பற்றீரியா :
(1) கந்தக பற்றிசியா : இவை ஐதரசன்சல்பைட்டுள்ள கான்களில் ஓடும் நீரிலே வாழ்ந்து ஐதரசன் சல்பைட்டை கந்தசு மாகவும், பின்னர் சல்புயூரிக்கமிலமாகவும் ஒட்சியேற்றி சக்தி யைப் பெறுகின்றன. உ.ம், தயோபசில்லசு [Thinthacillus | குரோமற்றியம் ( Chromatium பு.
(2) இரும்பு பற்றீரியா :-- இவை இரும்புச் சத்துள்ள நீரிலே வாழ்ந்து பெரசுச் சேர்வைகளை ஒட்சியேற்றி சக்தியைப் பெறுகின்றன.
[3] ஐதரசன் பற்றீரியா : -இவை நிலத்திலுள்ள சுதர்சன் மூலக்கூறுகளை நீராக ஒட்சியேற்றி சக்தியைப் பெறுகின்றன.
(4) நைத்திரேற்ருக்கும் பற்றீரியா : இவற்றில் இரு வகை களுண்டு. நைதரோசொமொனசு அமோனியா ளவ னந்தணரற்று களாக்கின்றது. நைத்திரோபக்ற்றர் ( nitrobacter நைதரைற்றை நைதரேற்றாக ஒட்சியேற்றுகிறது .. இங்விருவகை பற்றீரியாவும் நிலத்திலேயுள்ளன.
ஓளித்தொகுப்புடைய பற்றீரியா ஏனைய பச்சைத்தாவரங் காப் போன்று சூரியவொளியைப் பயன்படுத்தி உள்ளனவா? தயாரிக்கின்றன.
(1) காதா சுந்தக பற்றீரியா : -இவற்றில் குளோரோபில்) பச்சையவுருவத்திற்கு ஒப்பான பாதா நிறப் பொருளுண்டு.

111
(2) பதா சுந்தகமற்ற பற்றீரியா :- இவை சூரியவொளி எனயைக்கொண்டு ஐதரசனையும் காபனிரொட்சைட்டையும் பயன் - படுத்தி உடணாவைத்தயாரிக்கின்றன.
(3) பச்சை பற்றீரியா 'இவ அதரசன்ச பைட்டை சூரிய ஒளியில் ஒட்சியேற்றி காபனீரொட்சைட்டைத் தாழ்த்தி சே தனவுறுப்புக்குரிய பொருள்களைத் தயாரிக்கின்றன.
இரசாயனத் தொகுப்பிற்குரியதும் ஒளித்தொகுப்பிற்குரியது மாபன பற்றீரியா மிகச் சில இனங்களேயானாலும் அவை மிக உபயோகமான வை. கந்தக பற்றீரியா புரதங்கள் உக்குவதனா அலுண்டாகும் ஐதரசன்சல் சபைட்டை கந்தகமாகவும் சல்புயூரிக் கமிலமாகவும் மாற்றுவதனால் அவ்வமிலம் பின்னர் இரசாயன மாற்றத்திற்குள்ளாகி நிலத்தில் அதிக சல்பேற்றுகள் உண்டா கிறது - இ னவ - சட்டயர் தாவரங்களின் வளர்ச்சிக்கு வேண்டிய பொருள்களாகும். இது போலவே நைத்திரோசோமொனசுவினா லும் தைத்திரோபக்ற்றரினலும் நைதரசன் நைத்திரேற்றுகளாக மண்ணில் நாட்டப்படுகின் றன.
ஏனைய உயிரினங்களைப் போன்று பற்றீரியாக்களும் சுவா சிக்கின்றன, சுவாசித்தலின் போது உணவுப் பொருள்கள் ஒட்சி யெற்றப்பட்டு பெறப்படும் சக்தி வளர்ச்சி இனப்பெருக்கம் போன்ற செய்முறைகளின் பொது பயன்படுகிறது. நைதிரேற் ருக்கும் பற்றீரியா, ஐதரசன் பற்றீரியா, கந்தக பற்றீரியா ஆகி யவை காற்றுள்ள சுவாசித்தால் நடாத்துகின்றன, காற்றின்றி வாழும் பற்றீரியா, ஒட்சிசனில்லாமலே சுவாசிக்கின்றன. அல்லது நொதிப்பை நடைபெறச் செய்கின்றன. அப்பொழுது ஒட்சியேற் றும் நொதியங்களால் உணவுப்பொருள்கள் உடைக்கப்பட்டு, ஒட்சி யேற்றப்பட்டு, காபனீரொட்சைட்டும் இடை நிலையான சேதன வுறுப்புச்சேர்வைகளான அற்ககோலும், இவற்றிக் கமிலம், பியற் றிக் கமிலம், அசெற்றிக்கமிலம் முதலான அமிலங்களும் உண்டாவ துடன் சக்தியும் வெளிப்படுகிறது ,
கிராம் தாக்கம்
Gram Teaction
கிராம் ( Gram ) என்னும் கவிஞானியால் கண்டுபிடிக் கப்பட்டசாயத்தையேற்கும் இயல்பைப் பொறுத்து பற்றீரியாவை இருவகைகளாக்கலாம், 4 சாயம் பரிங்கு -1ாதாக்கரைசவேயும்
Crystal violet solution
அயடியன் சுரைசலையும் கொண்டுள்ளது. சர்யத்தை ஏற்கும் பற்றீரியா கிராம் தேர்" என்றும் சாயத்தை ஏற்காதவற்றை 'கிராம் எதிர்", என்றும் அழைக்கப்படுகின்றன, இவ்வியல்பிலிருந்து பற்றீரியத்திற்கெதிரி யான பொருள்களுக்கான காண்டம் பேறுகளை ஆராய்வது சுலப மாகும்,

Page 65
113
பற்றீரியாவினாலுண்டாகும் தீமைகள்
F10 பற்றீரியாவினால் விலங்குகளில் டேண்டாக்கப்படும் நோய் " சுபர் -கூட்டுப் பற்றீரியாமனாதனனும், பிரியங்ககாரினும் தாவரங்களிலும் நோய்களைத் தொற்ாளிக்கின்றன, டுனவ கர்ப் பதார்த்தங்களையுடைப்பு புரதப் Lாகுப்பு (பிநாசியங்களைச் சுரந்து, விருந்த வங்கியின் முத்துருவை அழிக்கின்றன. இந் நச்சுப் பகார்த்தங்களில் சிவ எவ்விதப்பான விருந்து வழங்கி இப்ரயத்தை யும் தாக்கவல்ல. சில பற்றீரியா ஒரு குறிப்பிட்ட விருந்து வழங்கினயயே தாக்குகின்றன. நச்சுப் பதார்த்தங்கள் உயிருள்ள புற்றீசியாவினுல் பாரக்கப்படலாம், அல்ல அது' பற்றீரியா இறக்
கும்போது வெளிவரலாம்.
காசநோய், நெருப்புக் காய்ச்சல், குஷ்டநோய், வயிற்றுளவு, நியூமோனியா, காலரா, உள்நாக்கு, டபிளேக் நோய் கொள்ளை நோய் ஆகிய நோய்கள் பற்றீரியாவினால் உண்டாக்கப்படுகின்றன. ரியுபெர்குளோசிஸ் பற்றீரியம் காசநோனயாயப்பாடாக்குகின்றது. எபெர்த்தல் ல பிரைபோசா ( Eberthella 1 ypligSta ) என்னும் பற்றீரியம் நெருப்புக் காய்ச்சலை யுண்டாக்குகின்றது.பசிலசு ரெர் ஹானே Bacillu 5 1etani ) என்னும் பற்றீரியம் ஏற்பு வலிப்பை யுண்டாக்குகின்றது.
பற்ரியா ஆடு, மாடு, நாய் போன்ற வீட்டு மிருகங்களில் காச நோயை உண்டாக்குகின்றன, செம்மறி ஆட்டில் அந்திரட்சு
antlira ) என்னும் நோயை உண்டாக்குகின்றது. கோழிக்குஞ்சில் காலராவையும்,
குதிரை, ஆடு ஆகியவற்றில் கிளான்டேர்ன்ஸ் ( Glanders ) என்னும் நோயையும் உண்
டாக்குகின் றன.
(3) பற்ற்ரியாவினால் தாவரங்களிலேற்படும் நோய்கள் ; மா ற்க்கன்களிப்பு பற்றியோ அதிகமாக இருந்து இலைகளுக்கு நீர் (செல்வதைத் தடுப்பதனுல் இலைகள் வாடுகின்றன. புகையிலை யிலும் கடாபிமானசு சொலனசியாரம் (3Eudgmorag
Solanacearum ) என்னும் பற்றிரியம் இந்நோயை யுண்டாக்கு கிறது. கொரின்பற்றீரியம் மிச்சிகனென்சு ' LOTynebacterium michiganense ) தக்காளியில் புற்று நோயை ( Bacterial
Canker
யுண்டாக்குகின்றது, தண்டின் நடுப்பகுதி பழுதடைவதனால் இப்பகள் சுருண்டு.வாடி, விழுகின்றன. ஏர்வினியா அமிவோலோரா ( Erwinia amvlovgra - என்னும் பற்றரியம் அப்பிள் மரம், பேரிக்காய் மரம் ஆகியவற்றில் புற்று நோயை உண்டாக்குகின்றது. கடோமொனரசு சிற்றிரசு (Pseudoliona3 citii) வகைத் தாவரங் களிலே, அதாவது தோடை எலுமிச்சை ஆகியவற்றில், புற்று நோயை ( Citrus (Enker | உண்டாக்குகின்றது. தாவரத் தின் எல்லாப் பகுதிகளும், தண்டு, கிபாகள் கேல், பழங்கள்

11ப
ஆகியவை இந்நோயால் பாதிக்கப்படுகின்றன. முதலில் இலை களிரின் கீழ்ப்புறமாசு சுடும் பச்சை நிறத்தில் விக்கமுடைய புள்ளி களாக இந்நோய் காணப்படுகிறது. நோய் பெருக, புள்ளிகள் வெளிறி வெடித்து சுபியரிறபான் மென்மையான பகுதி வெள்ளித் தெரிகிறது. இந்நோய் குறைந்த வெப்ப நிலையுடைய இடங்களி லேயே விரைவாகப் பரவுகின்றது - காற்று, மழை, பூச்சிகள் ஆகியவற்றால் இந்நோய் பரப்பப்படுகிறது, முடியுமானால் நோயுள்ள மரங்களை வெட்டி எரித்துவிடவேண்டும். இல்லை யெனில் நோயுள்ள பகுதிகளை கோடைகாலத்தில் அகற்றிவிட வேண்டும். போர்டி யஸ் கலவை( Bordcaus. |
யையும் சுண்ணாம்புக் 'சுந்தகத்தையும் ( Time Sulphur)' தூவுவதனாலும் நோ யக் குறைக்கலாம். சாந்தோமொனசு வெசி கற்றோரியா (Xinthan1133 vasicatia ) என்னும் பற்றி ரியம் தக்காளிப்பழங்களில் விரணங்களை (
Lesions
- | உண்டாக்குகிறது. சூ டோ  ெம ா ன சு சொலனசியாரம் [ Pseudoா113 SolallacedTu1 உருளைக் கிழங்கில் அகாய பநாடிய Tir1E distHHH உண்டாக்குகிறது', முது வில் இவைகளில் நோயின் குணம் காணப்படும். பின்னர் பசிம்கள் ( Tuber | தாக்கப்படுகின்றன. கபில நிற வளையங்கள் வெளிப்புறமாகத் தோன்றி, ஈற்றில் முகிழப் பழவதும் கபிலநிறு மாகிறது. [நோயுண்டான பகுதிகளில் ஓரிரு வருடங்கள் பயிர் செய்யாமல் விட்டு, பின்னர் தானிய வகைகளைப் பட ெசெய்க அதன் பின் உருளைக்கிழங்கைப் பயிர் செய்வதனால் நோயைக் தடுக்கலாம். ஏர்வினியா கரோற்றேவோரா 1 Erwinia Hratowara ] காற்றின் (Carrot ) மென்மையான இழை யங்களுள் சென்று [தெக்கிரோசிஸ் நோயை NECT04ia | உண்டாக்குகின்றது.
அகிறோபற்றீரியம் ரியூரிஃபாசியன்ஸ் ( A Zyrasbacterium tபாlefacles ) என்னும் பற்றீரியம் சரியகாந்தி, முந்திரி போன்ற தாவரங்களிவே சீக்கங்கள் Gallortuாபா ) யுகாடாக்குகின்றது - பமரத்திலேற்படும் காயங்கள் இலைவாய்கள், படகோடவா ப்கள் ஆகியவற்றி,வரடாசு பற்ரீரியம் உட்சென்று தாவரக் கலங்கட்டி வீக்கமடையச் செய்கின்றது. பின்னர் பற்றரியா இல்லாமலே முதலில் வீக்கமடைந்த கலம் ஏனைய கலங்களை வீக்கமடையச் செய்கிறது. பற்றீரியாவினாலுண் டாகும் ஏனைய நோய்களாவன: பருத்தி வேர் அழுகல், அன்னாசி அழுகல், பூசணிவகை அழகல் ஆகியவை.
(3) பற்றீரியா உணவுப் பொருள்களைக் கெடுக்கின்றன, பால் புளித்தல், இறைச்சி ராசிப் போதவ், வெண்ணை, டாவன் (மது சாரம், உருளைக்கிழங்கு, காய்கறி, பழங்கள் முதலியன பழு தடைதலுக்கு பற்றீரியாவே காரணம், இவைகளிலே பற்றீரியா பெருகும் பொழுது நச்சுப் பதார்த்தத்தைச் சுரக்கின்றன. நஞ் சூட்டப்பட்ட உணவு வகைகண் உண்பதனுல் பாரி கருக்கு வியாதிசு பிளற்படுகின்றன. சில் வெளைகளில் இயக்கவும் நேரிடலாம்,

Page 66
120
'f | நைதரசனிறக்குகின்ற பற்றீசியா ஈரலிப்பான மண் * ணிலே காற்றின்றிய இடங்களிலே வாழ்ந்து நைதரேற்றுகள் வந்த ரசயனக்கி வெளியேற்றுகின்றன. இதனல் மாண்வரின் வளம் குறை கிறது.
நீர்ப்பீடனம் flminnunity)
விலங்குகளை ஒட்டுண்ணி பற்றரியா தாக்கும் பொழுதோ, பற்றீரியா நஞ்சுப்பதார்த்தங்கள் உடலினுட் செல்லும்பொழுதோ உடலிலே பிறபொருளெதிரிகள் உண்டாக்கப்பட்டு நச்சுத்தன்மை நடுநிலையாக்கப்படுகிறது. பிற பொருளெதிரிகள் பலவகைப்படும். அவற்றுள் நஞ்செதிரிகள் (Antitoxins ) நஞ்சுப்பதார்த் தத்தை (Toxin ) நடுநிலையாக்குகின்றன, அல்லது அழிக் சின்றன, ஒப்சொனின்கள் ([ 0psonins) வெண்குருதித் துணிக்கைகள் குருதியிலுள்ள , பற்றீரியாவை உட்கொள்ளத் தூண்டுகின்றன. போதுமானளவு பிறபொருளெதிரிகளுண்டா னல் பற்றீரியாக்கள் அழிக்கப்பட்டு விருந்துளழங்ரி நோயிலிருந்து குணப்படுகிறது. பிறபொருளெதிரிகள் யுண்டாக்கிய விலங்கு குறிப்பிட்ட பற்றீரியத்தினால் உண்டாக்கப்படக்கூடிய நோயி லிருந்து நிர்ப்பிடனம் அடைந்துள்ளதெனக் கூறப்படுகிறது. பொதுவாக ஒரு முறை ஒரு விலங்கு ஒரு நோயினால் பீடிக்கப்பட்டு அத் தாண்டலினால் பிறபொரு ளெதிரிகளுண்டாகி விலங்கு அந் நோய்க்கு நீர்ப்பீடனமடைகிறது, இதுபோன்ற நிர்ப்பீடனம் உயிர்ப்புள்ளவாறு பெற்ற நிர்ப்பீடனம் (Actively Acquired Immunity ) என அழைக்கப்படும். 1 இந் நிர்ப்பீடனம் மனிதனின் வாழ்க்கை முற்றாகவுள்ளதனால் மறுமுறை அதே நோய் ஏற்படுவதில்லை. உ ம். காலரா நெருப்புக் காய்ச்சல்'.
கூவைக்கட்டு, சின்னமுத்து, அம்மை போன்றவை.
உயிnேity க்கை முற்றாகவரா, நொ
ஒருமுறையும் நோய் ஏற்படாமலே நீர்ப்பீடனத்தை செயற்கைமுறையிற் பால் குத்துவதன் மூலம் பெறலாம். ஏற்றப் படும் பால் இறந்த அல்லது செயலற்ற பற்றீரியாக்களின் அல்லது ஐதாக்கப்பட்ட அவற்றின் நஞ்சுப்பொருமாக் (அல்லது வைரசு களை-நோயுண்டாக்கும் மற்றொரு அங்கி) கொண்டதாயிருக்கும். இப்பொருள் குருதியிலேற்றப்பட்டபின் பிறபொருளெதிரிகளை உண்டாக்குவதற்குத் தூண்டுகின்றன. பிறபொருளெதிரிகள் குருதி யிலிருக்கும்வரை குறிப்பிட்டவொரு நோய் மனிதனைப் பீடிக்க மாட்டாது. பால் குத்தியவுடனே குத்தப்பட்டவிடத்தைச் சுற்றி யுள்ள இழையத்தில் விக்கமுண்டாதல், தலைவலி, காய்ச்சல், வாந்தி யெடுத்தல் போன்றவை ஏற்படலாம், பிறபொருளெதிரிகள் உண் டாகவாரம்பிக்கும் இலேசான நோய்க்காலத்தை இவை குறிக் சின்றன,

121
நீர்ப்பாயத்தை f
SErum |
குருதியிலேற்றுவதாலும் நிர்ப்பீடனம் ஏற்படலாம். முதலில் குதிரை போன்ற விலங்கு களின் குருதியிலே பற்றீரியாநஞ்சுப்பொருள் , சிறிது சிறிதாக அதிகரிக்கும் அளளில் நீண்டகாலத்திற்கு ஏற்றப்படுகிறது. அப் பொழுது விலங்கின் குருதியிலே பிறபொருளெதிரிககளுண்டா கின் ரப . பின்னர் குருதியாற் சிறிதளவு வெளியகற்றப்பட்டு காத தித் துணிக்கைகளும், ஏன்பா ய திண்மப் பொருள்களும் அழிக்கப் பட்டு, கிருமிகள் அழிக்கப்பட்டு பெறப்படும் நீர்ப்பாயம் மனித ணின் குருதியாலேற்றப்படுகிறது. இவ் முறையிலான நிர்ப்பீடன ம் மந்தமான முறையில் பெற்று நிர்ப்பீடனம் எனப்படுகிறது.
பற்றீரியா சூரியவொளி, - கதிர் , "உனதா கடந்த நிறுச் சுதிர்வசல் கிருமிநாசினிகள், அழகலெதிரி ஆகியவற்றால் அழிக்கப் படடிவாம், அயடின், குளோரின், போமல்டி கெட்டு, போரிக்கமி லம், கற்பூரம், காபோலிக்கமிலம், சல்பூரிக்கமிலம், ஐதரசன் பரவொட்சைட்டு, சோடியம் பரபோறேற்று, மோர்க்கூரிக் குளோ ரைட்டு, வெள்ளிநைதரேற்று. ஆகியவை சாதாரணமான கிருமி நாசினிகளாகும். இவற்றிலே சில் நச்சுப்பொருளாகையால் உட் கொள்ளக்கூடியவையல்ல. கந்தகமருந்துகளும் பெனிசிலினும் மிகச் சக்திவாய்ந்த கிருமி எதிரிகளாகும். உணவுப் பொருள்களைப் பாதிக்கும் பற்றீரியாக்களை வெப்பமாக்கல், குளிர்படுத்துதல், இர சாயனப் பொருட்களைச் சேர்த்தல், உலரவைத்தல், ஆகிய மGாறு தளால் அழிக்கலாம், பாச்சர்முறை வழங்கல் f PasteuriZation சிருமியழித்தல் ( Sterilization) என இருவகையான வெப்பமுறைகள் உண்டு. பாச்சர் முறையில் வெப் பம் சிறிது நேரத்திற்கு I 50 ப [6 I' சT அளவிற்கு உயர்த்தப் படும் பொழுது பெரும்பாலான நோயுண்டாக்கும்பற்றீரியா வினங்கள் அழிக்கப்படுகின்றன. எனவே பால் , மது வகை பியர், உவைன் போன்றவை போத்தல்களிலடைக்கப்படுமுன் இம் முறைக்குள்ளாக்கப்படுகிறது. கிருமியழித்தலின்போது ( Steri11zation) மிக உயர்ந்த வெப்பநிலை யுண்டாக்கப் பட்டு பற்றீரியாக்கள் அழிக்கப்படுகின்றன, நீராவியக்கமும் உப யோகிப்பதுண்டு. இறைச்சி, மீன், பழங்கள், காய்கறி முதலியன மிகக் குறைந்த வெப்பநிலையில் வைக்கப்படுவதனால் பற் றிரியாக் களிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன. சில இரசாயனப் பொருள் கள் உணவுப் பொருட்களின் செறிவைக் கூட்டுவதனால் பற்றீரியா முத லுரு சுருங்கிய நிலைக்குக் கொண்டுவரப்பட்ட பின் இறக் கின்றன. வேறுசில இரசாயனப் பொருள்கள் நேரடி யாகவே பற்றீரியாவைக் கொல்லுகின்றன.
பய ரீரியாவினுள் ஏற்படும் நன்மைகள்:-
வினகிரி, வெண்ணை ஆகியவற்றின் வர்த்தகமுறை உற்பத்தி, தோல் பதனிடுதல், தேயிலை, கோப்பி, கொக்கோ முதலியன வற்றை நொதிக்கச் செய்து நறுமணம் கொடுத்தல் ஆகியவற்றில்

Page 67
121
பற்பீரியா மாக்கிய பங்கு கொள்கின்றன. (வெல்லங்கள், புரதங் நன் அகியவற்றை அனுசேபத்தில் பயன்படுத்தி உண்டாகும் சுழிவுப்பொருகள் - வர்த்தக முறையில் மிக முக்கியமானவை யாகும், இவற்றுள் அசெற் றேம்பக் குறிப்பிடலாம். இது வெடிகள் தயாரிப்பதிலும் புகைப்படம் எடுக்கும் செவலொயட் சுருள்
Film ] ஆகியவை தயாரிப்பதிலும் சபயோகப்படுத்தப் படுகிறது. பியூற்றைல் அற்ககோவ், இலகறிக்கவும், சிற்பிக் கயிலும், விற்றமின்கள் என்பனவும் உண்டாகின் றா. குளோஸ் விடியம் அசற்றேபியூற்ரிலிக்கம் ( Clostridiபா Acetobuty11ப்பm | தானியக் காபோவைதரேற்றுகள், கரும்புவேன் லப்பாகு MolRSES) மற்றும் Irாப்பொருட்கள் ஆகிய வற்றை நொதிக்கச் செய்து மெயில் அற்ககோல், அசெர்ரேன் பிபூற்றைல் அற்ககோல் , விற்றமின் E 2 ஆகியவற்றை யுண்டாக்கு கின்றன -
(1) வினாகிரி தயாரிப்பு ;
வினாகிரி தயாரிப்பதில் முதலில் வெல்லக்கரைச் ேமகவுத்தி அல் அற்ககோலாசு தொதிக்கப்பட்டு, பின்னர் ஒட்சிசனுள்ள பொழுது அசற்றோபக்ரர் அசெற்றைf Acetடிபப்ப்பா ACEti | என்னும் பற்றீரியம் அற்ககோக்ல அசெற்றிக்கமிலமாக ஒட்சி யற்றுகிறது. இதுவே வினாசிரியாகும்.
(2) நார் பிரித்தல் :
Flax
சணல், பிளாக்ஸ் |
] கெம்ப் ( Hemா ] போன்ற தாவரத் தண்டுகளிலிருந்து நார்களைப் பெறுவதற்காக அவை நீர்த் தேக்கங்களிலே அமிழ்த்தி வைக்கப்படுகின்றன. அங் குள்ள பியூற்றிக் பக்ரீரியா (Butryric Bacteri ' அவர் வாஉக்கச்செய்து, நார்களைப் பிரிக்கின்றன. தேங்காய் நார்ப் படைகாளும் இவ்வாறே நீரிலே போடப்பட்டு அம்புகள் பிரிக்கப் படுகின்றன. பின்னர் இத்தும்புகளிலிருந்து கயிறு திரிக்கப்படும் கிறது.
(3) தோல் பதனிடல் !
தோல் உலர்ந்தபின் உப்பிட்டு பின்னர் பற்றீரியாக்காக் கொண்டவொரு திரவத்தில் வைக்கப்படுகிறது , நொதிப்பின் தோவிலே ஒட்டியுள்ள கொழுப்பும் ஏனைய இனபங்களும் அகற் றப்படுகிறது. மயிர்கள் அகற்றப்படுவதுடன் தோலிலே இர சாயன மாற்றங்களும் நடைபெறுகின் ரசன்.
(4) 1 அமுகற்பொருள்களை
அகற்றுப்பொழுது கழிவுப் பொருள்கள் அழுகி, திரமபா3ா தியரி அள்ள புரதங்கள் திரவ மாகின் ரென, இவை முதலில் நடப்பட்ட (சாரிப்புத் தாங்கிகளில்

123
3ாவக்கப்பட்டு காற் றின்றிச் சுவாசிக்கும் பற்றீரியாவினர் மேலும் அழகப் பண் ணப்படுகிறது. வடிகட்டப்பட்டு திரவ நிலையிலுள்ள சுழிவுப் பொருட்கள் கடநரக்கோ ஆற்றுக்கோ செலுத்தப்படும் சிறது.
f5 கருதாசன் "சரகரம் - - புரதங்கள், கொழுப்புகள், காபோவைதரேற்றுகள், என ய சிக்கலான சேதன வாரப்புக்குரிய பொருட்கள் ஆகியவற்றை பற்றரியா உக்கப்பண்ணுவதால் சேதன அருப்புக்குரிய அழுகல்களை இல்லாமற் செய்து எளியபொருட்களை மண்ணுடன் சேர்க்கின்றன . இவை Ltண்ணை வளம்பெறச் செய்து பயிர்ச்செய்கைக்கு நன்மைபயக்குகின்றன. நைதரசன் சே தன வுறுப்புச் சேர்வைகள் அதிக ஓட்சிசன் இல்லாதபோது நடக்கு வதனால் துர்நாற்றம் ஏற்படுவதுண்டு. இது சுந்தகச் சேர்வை களினால் ஏற்படுவதாகும். இச் (செய்முறையே அழுகல் [ Putrriபation ] என அழைக்கப்படுகிறது.
நைதரசன் சே தன்வுறுப்புச் சேர்வைகளை உக்கச்செய்யும் பற்றிரியா மண்ணை அளப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக் கின்றது. இதில் ஈடுபடும் பற்றீரியா அமோனியாவாக்கும் பற்றீரியா, நைத்திரேற்றாக்கல் பற்றீரியா, 31நதரசன் நாட்டும் பற்றீரியா, நைதரசன் இறக்குகின்ற பற்றீரியா என்பன. அமோனி பாவாக்கும் பற்றீரியா மண்ணிலுள்ள புரதப் பொருள்களை அபிமா னியாவாக்குகின் றன. அமோனியா மண்ணிலுள்ள காபனீரொட் அசட்டுடன் சேர்ந்து அயோனியங்காடனேற்றக மாறுகிறது, இதிற் சிறிதளவு உயர் தாவரங்களால் உறிஞ்சப்படுகிறது. ஆனால் பெரும்பகுதி நைத்திரோசோபோனசு ( HitrosoாபTa: எளினாலும் நைத்தரோ கொக்கசிவம் எதை த் தி Eரை ற் ற சு ஒட்சியேற்றப்படுகிறது. நைத்திரோபக்றர் டf TNitTobactoா ! என்னும் பற்றீரியா நைத்திரைற்றுகளா நைத்திரேற்றுகளாக சாட்சி யேற்றுகின்றன, நைதரசன் சேதனவுருப்புக்குரிய சேர்வைகளாக பசளையிலும் மண்ணிலுமிருந்த சநைதரசன் உயர் தாவரங்களால் உறிஞ்சக்கூடிய தைதரேற்று நிலைக்குக் கொண்டுவரப் பட்டுள்ளன, இச் செய்முறை நைத்திரேற்றக்கல் எனப்படும்.
2NH + 30 --> 2HN0 + 2H.0 + 17 கலோரி 2HIN், + , --> 2HIN) + 18 கலோரி
இத்தாக்கங்களின் போது வெளிவிடப்படும் சக்தியைக் கொண்டு பற்றீரியா காபனீரொட்சைட்டிலிருந்து சேத னவுறுப்
புக்குரிய சேர்வைகளைத் தொகுக்கின்றன, இச் ச பப்பு பின் இரசாயனத் தொகுப்பெனப்படும். பசிலசு நைதிரிபிக்க ன்ஸ்
Bacillus பிசாடtrificans) என்னும் பற்றீரியா தைத ரேற்றுக்களைத் தாழ்த்தி நைதரசன் வாயுவை யுண்டாக்கி வ வரி! மண்டலத்திற் சேர்க்கின்றன. அவரையினத்தைச் சேர்ந்த தாவரங் கணின் வேரிலே சிறு கணுக்கள் (1ள்ளன. இக் கண்ணுக்கான்

Page 68
124
*,* 9ெ" 30
மையத்தே வாழும் பசிலசு இசடிசிகோவா (Bacillus Tadigicala ) என்னும் பற்றீரியா வளியிலிருந்து கல் இடை வெளிகளினூடாக சிறு கணுக்களையனடயும் பநைதரசான நிலத்தில் காட்டுகின்றன. பற்றீரியா இருப்பதனால் அவரையினத் தாவரங்' கள் வெளியேயுள்ள னந்தரேற்றை நம்பி வாழாமில்லை, அவை வளியிலுள்ள பனநதர சட்ன பசிலசு இரடிசி கோலா மூலமாகப் பெறும் கின்றன. பற்றீரியா தமக்குத் தேவையான காபோவைரேற்றை விருந்து வழங்கியிலிருந்து பெறுகின்றன. எனவே இதை ஒன்றிய வாழ்விற்கு உதாரணமாகக் கூறலாம்.கொக்கசு வகைபுைச் சேர்ந்த அசோற்பெக்ற்றர் f
| AEtobactor 1, பசிலசு வகையைச் சேர்ந்த குளொஸ் மீடியம் ( Clostridiபா 1 என்னும் இரு சாதி பற்றீரியாவும் நிலத்தில் சுயாதீனமாக வாழுகின்றன.
pH6 க்கு அதிகமான அமிலத்தன்மை வாய்ந்த நிலைத்தில் ஏசோபக்ரர் காணப்படமாட்டா. ஆனால் குளோஸ் மீடியம் pH5 வரை அமிலமான மண்ணில் வாழக்கூடியது. அசோற்றோபக்ற்றர் மண்ணிலிருந்து பெறும் காபோவைதரேற்றை ஒட்சிசனுள்ள பொழுது ஒட்சியேற்றி சக்தியைப் பெறுகிறது. குளொஸ்றீடியம் காற்றின்றிச் சுவாசிப்பதனால் காபோவைதரேற்ற நொதிக்கச் செய்து சக்தியைப் பெறுகிறது. இவ்விரு பற்றீரியாவும் ஒன்று பயிருக்கும் பொழுது மண்ணரில் கிடைக்கப்பெறும் ஒட்சிசனை முற்றாக அசோற்றோபக்றரே பயன்படுத்துகின்றது. இரு விதங்களி லும் பொறும் சக்தியை உபயோகித்து இவ் பற்ரீசியா வளியிலுள்ள நைதரசனே நிலத்தில் நாட்டுவதுடன், ஒரு பகுதியை பநைதரசன் சேர்வைகளாக்குகின்றன, இச் சேர்வைகள் பற்றீரியாக் கலங்களி னல் வெளியே சுரக்கப்படலாம், அல்வது பற்றிசியா இருக்கும் பொழுது மண்ணிற் சேருகின்றன.
நைதரசன் சக்கரம் > வளியிலுள்ள நைதரசன்
ப. டி. தைத்திரிபிக்கன்ஸ் ) (நைதரேற்று இறக்கம்
ப. ரெடிசிகோலா)
> அமோனியா + CO; (அழுகல்)
அமோனியம் காபனேற்று
அசோற்றோபக்ற்றர் L குளொஸ்ரீடியம் ]
தாவரப்
நை. சொமொனசு புரதங்கள் -> விலங்குப்
இதை, கொக்கசு புரதம்
நைத்திரை ற்று
'V (நைத்திரோபக்ற்றர்) ந்ைதரேற்றுகள்

125
பற்றீரியாவுக்கு ஏனைய தாவரங்களுடனுள்ள
தொடர்பு -
பற்றரியாவுக்கும் ஏட்ன ய தாவரங்களுக்கு மிடையேயுள்ளோம் தொடர்பு சரிவரத் தெரியவில்லை, ஒரு கல் அமைப்பு, வரை யாைவான கருவற்ற தன்மை, இலிங்கயில் முறையினால் மட்டும் பெருகுதல் ஆகிய இயல்புகளில் பற்றீரியா நீலப்பச்சை துல் காக்கப்ள ஒத்துள்ளன, எனவே சில ஆராய்ச்சியாளர் பற்றி யாவையும் நீலப்பச்சை அல்காவையும் சேர்த்து பஸ் ககரோசெற் யேசு என்னும் பிரிவில் அடக்குவர். ஆனால் பற்றீரியா குளோ ரோபில் அற்ற தன்மையினால் நிலப்பச்சை அல்காக்களிலிருந்து பார் வேறுபடுகின்றன. ஒரு சில இனங்களத் தவிர ஏனோ ய பற்றீரியா இனங்கள் தமது உணவைத் தயாரிக்க முடியாதிருக்கும் இப் பல் பில் பங் கசுகளை ஒத்தள்னனா .

Page 69
5
வைரசு ( Viru3 |
இல்லத்தின் மொழியில் 'லைரசு" என்றால் நஞ்சு என்று பொருள், 1893 ஆண்டு வரை வியாதியை யுண்டாக்குவன் எல்லாம் வைரசு என அழைக்கப்பட்டன. 1802 ஆம் ஆண்டில் ஐவனேஸ்சி [wanost: y] என்னும் விஞ்ஞானி துணுக்கு காட்டியினூடாகப் பார்க்க முடியாததும் பற்றீரியா வடிகளினுடாகச் Bacteri af11tur1 செல்லக்சுகூடியதுமான அங் சிகள் உள்ளதெனவும், அவையோ புகையிலைச் செடிகளில் சித்திர வடிவு நோயை f Ma33ai: disHASE
- 1 யுண்டாக்கிறதென வும் கண்டு பிடித்தார், உருளைக் கிழங்குச் செடியில் இலைச்சுருள் என்னும் நோய் வைரசினாலே உண்டாகிறதென அறியப்பட்டது. 1 923 ம் ஆண்டிலே ருவார் (Twort) என்பவர் பற்றீரியா புரோற்றேசோவா போன்ற நுனர் அங்கிகளிலும் பார்க்கச் சிறிய அங்கிகள் இருக்கின்றதெனவும், அவை எளிமையான நொதியங் களின் அமைப்பிற்கும் பற்றீரியாவின் அமைப்பிற்கு மிடைப்பட்ட நிலையூரிலுள்ளன வெனவும் கூறினர். 1935ம் ஆண்டில் ஸ்பரான் ளி
"Stanly) என்பவரும், 1938 ம் ஆண்டில் பொவுடன்
பேwd 1-1 } என்பவரும் சில வைரசுகள் கருப்புரதத்தின் Thucle) protein ) அமைப்பைக் கொண்டுள்ளனவெனக் காண்ட னர், தாவரங்களிலும் விலங்குகளிலும் காணப்படும் வைரசுகள் 10 முதல் 300 மைக்குரோமியூவரை பரும்: அனுடயன. சில வைரசு பற்ரீயாக்களையும், வேறு சில வைரசுகள் புராதங்களையும் ஒத்துள்ளதெனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில வைரசுகள் பளிங்குருவாகவும் பெறப்பட்டுள்ளன. வைரசுகள் மனி தரில் சின்னமுத்து, பொக்கழிப்பான், சிறுபிள்ளைவாதம், மஞ் சட் காய்ச்சல், கூசவைக்கட்டு, அம்ம்ை டெங்குக் காய்ச்சல் காலரா, இன்புளுவென்சா, தடிமன் போன்ற நோய்களை யுண் டாக்குகின்றன. கொள்ளை நோய், லியூக்கேமியா ஆகிய நோய்கள் (கோழிகளில் உண்டாகின்றன, ஆடு, மாடு, மீன், பச்சிகள் ஆகிய வற்றிலும் வைரசுகள் நோய்களை யுண்டாக்கின்றன. தாவரங் களில் சித்திரவடிவு தோயும், இலைச்சுருளல் நோயும் வைரசு கணினல் உண்டாக்கப்படுகின்றன. வைரசுகள் அநேக நோய்களை உண்டாக்குவதால் வைரசுகள் பற்றிய ஆராய்ச்சி முக்கியமான தாகும். மேலும் வைரசுகள் உயிரற்ற பொருட்களுக்கும், உயிரி சினங்களுக்கும் இடைப்பட்ட நிலையை வகிக்கின்றது. பல வைரசு சுள் ளிருந்து வழங்கி இழையங்களிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளன .சில தாவர வைரசுகள் பளிங்குகளாக்கப்பட்டுள்ளன. இலத்திரன் துணுக்குகாட்டி பின் உதவியால் சில வைரசுகளின் பருமன் , உருவம், ஆகியவை அறியப்பட்டுள்ளன. அவை பரிசுத்தமாக்கப் படும் பொழுது கடுமையான தாக்கங்களிற்குள்ளாகவேண்டியிருப்பு

12
சில மேயநீக்படி வித்ருமுக்கிய
தால் உறுதியானவை யாயிருத்தல் அவசியம். அதாவது, அக 11வ இரசாயனப் பொருட்களாலும், உயர் வெப்பநிலையிலும், ஒட்சி யேற்ற நதியன) யம் பிகுவி பாதிக்கப்படாதிருக்கவேண்டும். பின்வர சுகட்ளை தனிப்படுத்துவதற்கு இருமுக்கியமுறைக ளுரைடு. முதலாவது இரசாயன (17) றப்படி வீழ்படிதலாக்கள். இரண்டாவது விசை சகூடிய னயர்க்கத்தில் வைத்துச் சுழற்றல் (Centrifuging | சில்வெயா காரில் இரு முறைகளும் ஒருமித்து உபயோகிக்கப்படு சிர்யா ,தனிப்படுத்தப்பட்ட எவைரசுகளிலெல்லாம் நீயுக் சிளிபோ புரதங்களே காணப்பட்டுள்ளது. அதில் முக்கியமான பொருள்கள் நியூக்கிளிக்கமிலமும் புரதமும் ஆகும். தாவர பாவரசு களின் ரிக்கிளிக் கழிவம், மதுவத்திலும் சாதாரணக் சுபத்தின் குரியத் பெருவிறுப்புள்ள நியூக்கிளிக் அமிலத்தை ஒத்துள்ளது. இருப் பொறுபோ நியூக்கிளின் சரிவும் 'R NA. ] டபிண்டு, விலங்கு எவைர சுகளின் பதியக்கிளில் சுமிலம், காலத்தின் கருவிலுள்ள நியூக் கிரிக்கட்ல த்தை ஒத்துள்ளது. இதில்!
டி சொச்சிளறபோ நியூக்கிளி அமிலம் I. TNI. A. ) உண்டு.
29 S : 22222;
பெரும்பாலான வைரசுகள் பூச்சிகளினாலேயே பரவுகின்றன மனிதனில் மஞ்சட் காய்ச்சலை யுண்டாக்கும்வைரசு நுளம்பினிலே பரப்பப்படுகின்றது. எபிட்டுகள் (Aphids). இவப்பூ.சசி கள், ஆகிய சார உறிஞ்சும் பூச்சிகளினாலேயே பெரும்பாலான
தாவரவைரசுகள் [தொற்றுசின் பரனே.
பூச்சிகளினால் பரவப்படும் பொழுது சில விவர சுசுகள் புதிய! தொரு பிருந்து வங்கியை படையாவிடில் அழித்து போகின்றன. இவை சிலபேறற்ற வைரசுகளெனப்படும். வேறு சில வைரசுகள், பூச்சிகள் திரண்ட காலத்திற்கு நோயுன் ள்ள தாவரங்களை யடையா விடி டைப் அழிந்து போகாமலிருக்கின்றன, இவை நிலப்பரசி 11 வராகளெனப்படும், நிலைபேறற்ற வைர சுகள் பெரும்பாலும் ஏபிட்டுகளாலேயே கடத்தப்படுகின்றன, இவ் வைரசுகள் ஏபிட்டு சளின் குடலிலேசமிபாட்டு நொதியங்களால் சமிபடுகின்றபடியால் உன்வநிவே பேறற்றதா!கவுள்ளன. நிலைப்பேறான வைரசுகள் பெரும்பாலும் இப்பூச்சிகளாலேயே கடத்தப்படுகின்றன. இவை பூச்சிகளின் குடலிலுள்ள நொதியங்களால் சமிபாடடைவதில்ல. பூச்சியரின் குடலில் இன்னவரசுகள் நீண்ட காலத்திற்கு தங்கி பட்டுருந்து (வோ தாவரங்களில் தொற்கின்றன, பப்ளரசுகள் எவ் வா' பொகுன்றபின னென்பதற்குப் பரவிளக்கங்கள் கொடுக்கப் படுகின்றன.
தாவரவகைகள் தன்னாக்கிகளாவுள்ளதெனக் ( Auto
CHItalysts | கருதப்படுகிறது. இவை முன்னரே உண் டா எ பாக்கமற்ற முன் பேழைகனே PCCUTBOTE (அதாவது எளிருத்து வழங்கியின் கலங்களை). காக்குவிப்பதன்மூலம் பெருகு கின்றன. புரதப் பகுப்பு நொதியமுண்டாக்கல் முறையை இது ஒத்துள்ளது.
படய சீ! பசி

Page 70
128 .
மற்றொரு கொள்கை வைரசு இருசகூற்றுப் பிளவு முறையால் பொருகுகிறதென்பதாகும், ஒரு சில்! வைரசுகளிலேயே இம்முறை பால த்திரன் நுணாக்கு காட்டியிஷாட்டாகப் பார்க்கப்பட்டுள்ளது. பற்றிரியாவைத் தாக்கும் வைரசுகள் பற்றீரியம் விழுங்கி " Bacteriophage) எனப்படும். இவற்றுட் சிலவகை குறிப்பிட்ட சில பற்றீசிய இனங்கப்ப த் தாக்கி அவற்றை இறக்கும்படி செய் கின் றன. இவ்வாறு தாக்கப்படும் பற்றீரியாவுள் மனிதனிலும் விலங்குகளிலும் (நோய்களை யுண்டாக்கும் சில இனங்களும் அடங் கும்" எனவே, மனிதரிலோ, விலங்குகளிலோ இழையங்களைத் தாக்கமாட்டாத வைரசுகளையா கடபயோகித்து நோயுண்டாக்கும் பற்றீரியாவைக் கொல்லலாமெனக் கருதப்படுகிறது. இவ்வாறு பற்றீரியாவை அழித்தல் சிரிப்பு Tysis
| எனப்படும்,
வைரசுகளென்றால் என்ன என்பதை விளக்குவதற்கும் அவை யெவ்வாறு உண்டான வென்பதற்கும் பல விளக்கங்கள் கொடுக் கப்பட்டுள்ளன, ஒரு கொள்கை என்னவெனில் எவைரசுகள் மிக வுயர்ந்த நிலையிலான ஒட்டுண்ணியியல்பைப் பெற்றுள்ளனதென்ப தாகும். அவற்றின் விருத்தியின் போது அவை விருந்து வழங்சி யிலே அதிகம் சார்ந்து வாசித்து, தமது தொ குதிகளையெல்லாம் இமந்து, ஈற்றில் இன இயல்புகளைக் கடத்துவதற்குத் தேவையான மிகக்குறைந்த அமைப்புகளை மட்டுமே வைத்திருக்கின்றன என்பதா கும்.. விளங்குபவரசு ஆராய்ச்சியாளர் இக்கொள்கையை ஆதரித்த போதிலும் தாவர வைரசு ஆராய்ச்சியாளர் வைரசுகள் மிகமிகச் சிறிய உருவத்தையுடையனவாதலால் இக் கொள்கையை ஏற்க வில்லை, ஒரு விருந்து வழங்கியின் கலத்தினடக்கம், அதாவது முதலுருப் பரம்பரையலசின் இயல்பைக் கொண்ட பகுதி. வேறெரு லிருந்து வழங்கியினுட் சென்றடைந்த பொழுது பெரு குந்தன்மை பெற்று தனித்தியங்கக்கூடியதாக மாறியது. சமீப காலத்தில் வேறெரு கொள்கையும் கூறப்பட்டுள்ளது. அதுவும் சுயாதினமான உற்பத்தியையே குறிக்கிறது. முளைத்தலின் போது மிகையான புரதங்களைக் கொண்ட வித்துகளில் நடைபெறும் அதிதீவிரமான இரசாயனத் தொழிற்பாடுகளினால் வைரசுகள் சுயாதீனமாக உற்பத்தியாகின்றன என்பதே அக்கொள்கையா கும்.
பற்றீரியாவைத் தாக்கும் வைர சுனில் நடைபெறும் இனப் பெருக்கம் படத்தில் காட்டப்பட்டுள்ளது: 1) தொற்றுதல் - வைரா பற்றியக்கலத்தில் ஒட்டி வைரசுவின் வாற்பகுதி யினூடாக வைரசு டி.என்.ஏ. [ D. TN, A. ] பற்றீரியாவின்
குரிய முத லுருவினுட் செல்கிறது.
[2] இருண்ட காலம்:-
அடுத்த 8 - 10 நிமிடங்களுள் பு சொக்கி ஹைபோ நியூகிளிக்கமிலம் [D N, A. 1 வைரசுவுக் கா பா புரதச் சமிபாட்டைத் தயாரிப்பதற்குத் தாண்டுகிறது. (11) எழுர்சிக் காலம் - வைரசுப் கூடுகள் எவைரசு ய. - என், ஏ.

129
ட -
படம் 41, பற்றீரியக்கலத்தில் எவரசு பெருகுவதைக்
காட்டும் வரைப் படம்
(D, N. A. ) யினால் நிரப்பப்படுகின்றன. இது 10-15 நிமிடங் சுளால் நடைபெறும். (4) இறுதி நிலை: முதல் தொற்று நிலை யிலிருந்து 30 நிமிடங்களில் பற்றியாக்கலம் புதிய வைரசுகளால் நிரப்பப்படுகின்றன. பின்னர் இது வெடித்து வைரசுகள் வெளி விடப்படுகின்றன,
தாவரங்களில் வைரசு நோய்கள்
பலவகையான வைரசுகள் தாவரங்களிலே நோயை யுண் டாக்குகின்றன. இதனால் நாட்டின் பொருளாதார நிலை அதிசு மாகப் பாதிக்கப்படுகிறது. பல வைரசுகள் குறிப்பிட்ட சில பயிர்களில் மட்டுமே ஒட்டுண்ணிகளாகவுள்ளன. சாதாரணமாக வைரசுவினுல் பாதிக்கப்பட்ட பயிர்கள் மீண்டும் நல்ல நிலைக்கு வருவதுமில்லை, முற்றாக இறந்துவிடுவதுமில்லை. இதனால் வைரசு கள் அழிபடாமலிருந்து வேறு பயிர்களுக்குப் பரவுகின்றன. மிள் காய்ச் செடியில் பின்வரும் வைரசு நோய்கள் காணப்படுகின்றன.
(1) இலை சுருளல். வைரசால் தாக்கப்பட்ட மிளகாய்ச் செடிகளின் வளர்ச்சி குன்றுகின்றன, கணுவிடைகள் குறுகி, நரம்பு கள் தெளிவாக்கப்படுகின்றன, இலைகள் வெளிறி, மேற்பக்கமாகச் சுருண்டு தோணிவடிவாகின்றன.
(B) இலைகளிற் புள்ளியுண்டாதல், மிளகாய்ப்புள்ளி வைரசுவினால் இது உண்டாகிறது. இலையிலே இளம்பச்சை, IZ.

Page 71
13]
கரும்பச்சைப் புள்ளிகள் உண்டாகிப் பயிர் வளர்ச்சிகுன்றி இக - - நுனிகள் சுருள்கின்றன.
(3) இலைகளில் புள்ளியுண்டாதல்.- இது புகையிலைச் சித்திர வடிவு வைரசுவினால் உண்டாகிறது. இலையிலே இளம்பச்சைப் புள்ளிகள் பரம்பியிருக்கும்,
4) மிளகாய்ச் சிறிய இலை.- இந் நோய் பெரும்பாலும் யாழ்ப்பாணம், புத்தளம், வவுனியா போன்ற இடங்களிலேயே அதிகமாகக் காணப்படுகிறது. பயிர் முதிர்ச்சியான நிலையிலுள்ள பொழுதே இந் நோய் உண்டாகிறது. இலைகள் மிகச் சிறிதா கின் றன.
(5) கரும்பிலே வேரங்குர வளர்ச்சி குன்றும் நோய் வைர சினால் உண்டாகிறது. (Ratoon disease)
6] புகையிலைச் சித்திரவடிவு வைரசு ( T. M. V. | புகையிலைச் செடியின் இலைகளில் சுரும்பச்சை அல்லது மஞ்சள் நிறமான சித்திரவடி வுகளை உண்டாக்குகிறது. இவ் வைரசில் பல குவவகைகளண்டு. இவை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொற்றக்கூடும். பெரும்பாலும் ஏபிட்டுகளாலேயே பரப்பப்படும். கின்றன , பல வருட காலங்களுக்கு இனவ இறந்த பொருட்களிலே தொழிற்பாடுடையனவாக வாழ்கின்றன. கட்டுப்படுத்துவதற்கு சரியான முறையில்லை, மஞ்சள்வலவைரசு புகையிலையில் மஞ்சள் நிறவலை, அல்லது கரும்பச்சைவலையை யுண்டாக்குகிறது. றேகொர் 40 Rogo 40 ) என்னும் மருந்தைத் தெளிப் பதால் இது தடுக்கப்படலாம்.

எம்பிரியோபீற்றா (Embryophyta)
பிரியோபீற்ற (Bryophyta)
வதவரங்களிலிருந்த பாலும் பச்சை. ஆனால், இதைச்
எபென் "உற்பத்ன அலகாக போலான முழுமைத்ததில் ஒன்
நிலத்தில் வாழும் தாவரங்களுட் சில பிரியோபீற்றாவிலடங் கும், இவை உலகின் எல்லாப் பகுதிகளிலும் தாவர உயிர் வாழு வதற்கான ஈரப்பற்றுள்ள இடங்களிலே வளரக்கூடியன. நீர்த் தாவரங்களிலிருந்தே இவை உற்பத்தியாகியுள்ளன வென்பதிற் சந் தேகமில்லை, பெரும்பாலும் பச்சை அல்காக்களிலிருந்து உண்டாகி பிருக்கலாமெனக் கருதப்படுகிறது. ஆனால், இவற்றிலிருந்து உயர் தாவரங்கள் உற்பத்தியாகியிருக்குமென்பதற்குச் சான்றுகள் கிடையா, பெரும்பாலான அல்காக்கள் நீரிலும், ஒருசில அல் காக்கள் மட்டுமே விதிவிலக்காக நிலத்திலும் வாழ்கின்றன. ஆனால், பிரியோபீற்றுக்களுள் பெரும்பாலானவை நிலத்திலேயே வாழ்கின் றன. எனினும் இவ் இசைவாக்கம் முழுமை பெற்றுள்ள தெனக் கூறமுடியாது. ஏனெனில் வாழ்க்கைவட்டத்தில் ஒரு திலையிலாவது இவற்றிற்கு நீர் தேவைப்படுகிறது. அதிக வெப்ப முள்ள காலங்களிலும் இவை வளர்வதில்லை. நீரிலே அமிழ்ந்து வாழும் ஒருசில இனங்களைத் தவிர ஏனையவை காடுகளிலுள்ள உக்கும் மரத்துண்டுகளின் மேலும், ஈரப்பற்றுமண்ணைக் கொண்ட பாறைகளின் மேலும் வளர்கின்றன. பெரும்பாலான பிரியோ பீற்றுகள் உருவத்திற் சிறியனவேயாகும். மிகப்பெரியவை +
அங்குல நீளமுடையன, அவை அநேகமாக ஓ அங்குல நீளத்திற் குட்பட்டனவையாயே ட்ருக்கும்.
பிரியோபிற்றுக்களின் வாழ்க்கைச் சக்கரத்தில் தெளிவான சந்ததிப்பரிவிருத்தியைக் காணலாம். அதாவது, புணரித்தாவர மும்( Gametophyte ), வித்தித்தாவரமும் (SporophytE) வாழ்க்கைச் சக்கரத்தில் மாறி மாறி வரும், இனப் பெருக்க அங்கங்களை புண்டாக்கும் புணரித்தாவரம் அதிக விருத்தியடைந்து சுயாதீன வாழ்க்கையை யுடையதாயுள்ளது. அவற்றில் குளோரபில் உள்ளதால் ஒளித்தொகுப்பு முறையால் தமதுணவைத் தயாரித்துக்கொள்கின்றன. அ தி க ம் விருத்தி யடையாத இனங்களிலே புணரித்தாவர உடல் பிரிவிலிப்போலி யாகவுள்ளது Thalloid). எனினும், இப் பிரிவிலிப்போலி அல்காக்களினதைவிட அதிக விருத்தியுடையது. தாவரவுடன் ஒரு கலத்தாலான, அல்லது பல கலங்கப்பாக் கொண்ட இழைகளாலான வேர்ப்போலிகளினால் ( Rhinoids] நிலத்திலே ஊன்றப் பட்டுள்ளது. ஒருகலத்தாலான வேர்ப்போலிகள் உயர்தாவரங் களின் வேர் மயிர்களை யொத்திருக்கின்றன. மிகக் குறைந்த

Page 72
132
விருத்தியுடைய பிரியோபீற்றுக்களின் பிரிவிலி பல்கவங்கள் பதடிப் பாகவும் கீழ்ப்படையில் தட்டையாக விரிந்து வளர்வதாயுமிருக் கும், உயர் பிரியோபீற்றுக்களில் இது தண்டு போன்ற பகுதியாக வும் அகன்ற இலைபோன்ற பகுதியாகவும் பிரிக்கக்கூடியதாயிருக் கும். ஆனால் இவற்றிலே உயர்தாவரங்களிலுள்ளதைப் போன்று கலன்கட்டுத்தொகுதி (அதாவது காழ் + உரியம் கிடையாது. எனினும் இதற்கொப்பான பகுதிகள் காணப்படலாம். வித்தித் தாவரம் புணரித்தாவரத்தைப் போன்ற அளவு விருத்தியடைந்த தல்ல, தெரிடோபீற்றாவுடனும் உயர்தாவரங்களுடனும் ஒப் பிடும்பொழுது வித்தித்தாவரம் ஒரு பொழுதும் முற்றாகத் தனித் தியங்கும் தன்மை வாய்ந்ததல்லவென்பது புலனாகும். ளித்தித் தாவரம், வித்திப்பிறப்பகம் ( Sporogonium ] எனவும் அழைக்கப்படுவதுண்டு.
பிரியோபீற்றாக்களில் உருவ அமைப்பிலும் உடற்றொழிலிய லிலும் இருசந்ததிகளும் வேறுபட்டுள்ளன. கிளாடோபோரு என்னும் பச்சை அல்காவிலுள்ள இரு சந்ததிகளும் ஒத்த அமைப் பைக் கொண்டனவாயும், உடற்றொழிலியலுக்குரிய முறையில் மட்டுமே மாறுபட்டனவாயுமிருக்கின்றன. நிறமூர்த்த எண்ணிக் கையைக் கொண்டும் இவ்விரு சந்ததிகளையும் வேறுபடுத்திக் கொள்ளலாம், ஆண், பெண் புணரிகளின் சேர்க்கையால் உண்டா வதால் வித்தித்தாவரத்தின் கலங்களிலெல்லாம் நிறமூர்த்த எண் ணிக்கை இருமடியாகவேயிருக்கும் (211. இச் சந்ததி இருமடிச் சந்ததி எனவும் அழைக்கப்படும், புணரித்தாவரத்தில் ஒருமடியாக [1] இருப்பதால் இச் சந்ததி ஒருமடிச் சந்ததி என அழைக்கப் படும், வித்தித் தாவரங்களிலுள்ள வித்தித்தாய்க்கலத்திலிருந்து வித்திகளுண்டாகும் பொழுதே ஒடுங்கற்பிரிவு நடைபெறுகிறது. இலிங்கமுறையினப் பெருக்கத்தின் பொழுது இரு ஒவ்வாப் புணரிகளின் சேர்க்கை நடைபெறுகிறது. பெரிய அசையாத முட் அடைக்கலம். பிசிர்களினுதவியால் நீந்தித் திரியும் சிறிய விந்துப் போலியுடன் புணர்கிறது. ஆண், பெண் புணரிக்சலங்கள் முறையே ஆண்கலவாக்கி (அல்லது ஆண்கலச்சனனி). பெண் கலச்சனனி (ஆதிச்சனனி) என்னும் சிக்கலான இனப்பெருக்க அங்கங்களில் உண்டாகின்றன. இவ்வங்கங்கள் பல கலங்களா லானவையாயும் மலடானகலங்களால் வெளிப்புறமாகச் சூழப்பட்ட அவாயுமிருக்கும், பிரியோபீற்றாக்களின் பெண்கலச்சனனி (ஆதிச் சனனி) தெரிடோபீற்ற, கிமினேசுப்பெர்மே ஆகியவையின் பெண் கலச் சனனியுடன் ஒத்திருப்பதால் இம் மூன்று பிரிவுகளும் சில சமயம் ஆர்க்கிகோனியெற்றே (' Archegotiate என்னும் ஓர் பிரிவில் வைக்கப்படுவதுமுண்டு, பெண்கலச்சளனி தலோ பற்றுவின் முட்டைச்சனனி போன்று ஒரு கலத்தாலான தாட்சி ராமல் ஒரு காம்புடைய பலகலங்களாலான குடுவையுருவாக வுள்ளது. அக் குடுவையுருவான பெண்கலச்சனனியின் ஒடுங்கிய பாகம் கழுத்து (Neck ) என்றும், வீங்கியுள்ள அடிப்பாகம் உ தரம் VEnter] என்றும் அழைக்கப்படும். உதரத்தி

133
னுள்ளே ஒரு முட்டையும் ( EEE , ஒரு உதரக்கால்வாய்க் கலாம் (Ventral Canal Cell ) உண்டு. கழுத்துப் பகுதியில் ஆறு வரி சைகளிற் கலங்கள் உள்ளன. கழுத்தினுள்ளே பல கழுத்துக் கால்வாய்க் கலங்கள் உண்டு.
ஆண் பாலுறுப்பு ஆண்கலவாக்கி, அல்லது ஆண்கலச் சனனி (Anitheridium) எனப்படும். இவ்வுறுப்பு தலோபீற்றலிலுள்ளதை விட மிக மாறுபாட்டுள்ளது. இது கோ ள வ டி வா க வோ, முட்டைவடிவாகவோ, குண்டாந் த டி யு ரு வா க வோ இருக் கும். ஆண்கலச் சனனியில் ப ல க வ த் தா வா ன காம்பின் மேல் விந்துப்போலியுண்டாக்கும் வில்லையம் காணப்படும், அதன் வெளிச்சுவர் மலட்டுக் கலங்களைக் கொண்ட ஒரு படையாவானது'. அதனகத்தேயுள்ள விந்துத்தாய்க்கலங்கள் விந்துப்போலிகண் உரு வாக்குகின்றன. விந்துப்போலிகள் சுருளியான உடலையும் இரு சவுக்கு முளைகளையும் கொண்டுள்ளன. சவுக்குமுளைகளினுத வியால் இவை நீந்தித்திரிய வல்லன. இவ்வாறன நீந்தித்திரியும் விந்துப்போலிகளுள்ள இயல்பு புராதனமான அல்காக்களின் இயல் புகளிலொன்றாகும். மழைநீருள்ள பொழுதோ, அல்லது பனித் துளிகள் உள்ள பொழுதோ மட்டுமே கருக்கட்டல் நடைபெறும் கிறது.
கருக்கட்டிய முட்டையிலிருந்து விருத்தியடையும் புரளயம் வெளிவிடப்படாமல் பெண் கலச்சனனியின் உதரத்தினுள் வைத் திருக்கப்படுகிறது. உதரம் பெரிதாகி முளையத்தைச் சுற்றிக் கவச மாக (Calyptra) அமைகிறது. முளையம் எனப்படும் வித்திப்பிறப் பகம் (Sporagoniபா) தனித்தியங்காமல் புணரித் தாவரத்தின் மேலேயே வளர்ந்து வேண்டிய உணவையும் நீரையும் பெற்றுக் கொள்கிறது. நிலை நிறுத்துவதற்கும் உறிஞ்சுவதற்கும் பயன்படும் பகுதி 'அடி " foot ) எனப்படும். இதற்குமேல்! 'உலோமம்' (Stta) என்னும் காம்புப்பகுதியும் வில்லயம் Capsule) என்னும் வித்தியாக்கும் பகுதியும் உள்ளன. பிக்சியா ' Riccia ) போன்ற சிக்கலற்ற ஈர லுருத்தாவரங்களிலே உலோமமோ, அடியோ காணப் படுவதில்லை. வில்லையத்தின் மையத்தேயுள்ள வித்தித்தாய்க்கலுங் கள்முதலில் ஒடுங்கற் பிரிவடைந்து, அதைத் தொடர்ந்து இன்ற யவுருப் பிரிவடைவதனால் தால்கூற்றுத் தொகுதியான வித்திகள்
Tetrad of spoா4S ) உண்டாகின்றன. எனவே வித்திப்பிறப் பகக்கலங்கள் இருமடியாயிருந்தபோதிலும் வித்திகள் ஒரு மடியான சிவயே. பரியோபீற்றாவில் எப்பொழுதும் ஒத்தவித்திகளோ ( Hom08poTES ) உண்டாகின்றன. ஒருகலத்தாலான ஒருமடி யான வித்திமுளைத்து நேரடியாகவே பிரிவிலியுண்டாகலாம். அதி லிருந்து ஒரு இழையுருவான சுவருள் உளதோ அல்லது கவரர்
தோ) இழைமுதல் (Frotgnema) உண்டாகிப் பின்னர் புணரித் தாவரப் பிரிவிலி உண்டாகலாம்.

Page 73
பிரியோபீற்றாவின் பாகுபாடு
பிரிவு : பிரியோபீற்ற "
வகுப்பு:
1. கெப்பற்றிக்கே
( HepaticaE )
2. முசுக்கி
(Mfusci)
114
மஸ்சை
ஈரலுருத்தாவரங்கள்
Liverworts)
வகுப்புப்பிரிவு:
இயூபிரியா
வருணம்;
மார்க்கான்சியாலேசு
பொலித்திரைக்காலேசு
குடும்பம்!
மார்க்கான்சியேசியே
பொலித்திரைக்கேசியே
த-ம்;
மார்க்கான்சியா
உ-ம்:
பொகொநேற்றம்

134 A
கெப்பற்றிக்கே (Hepaticae) அல்லது ஈரலுருத்தாவரங்கள் (Liverworts)
பிரியோ பீற்றுக்களில் இதுவே மிகத் தாழ்ந்தது. முசுக்கி இனங்கள் உள்ள இடங்களைவிட அதிக ஈரமுள்ள இடங்களிலேயே இவைகாணப்படுகின்றன, ஆனால் ஒரு சில தினங்கள், உதா ரணமாக நிக்சியா (Riccia ) போன்றவை, நீரிலே காணப்படுகின் றன. புணரித்தாவர ம் Gametophyte) எப்பொழுதும் நிலத்தில் படிந்து வளரும், அவற்றினுடல் தட்டையான, இணை க்சுவருக் குரிய பிரிவிலியிருந்து இலைபோன்ற அமைப்புகள் க் கொண்ட நகர்ந்து வளர்கின்ற தண்டுகள் இ ஒ ர ய ல் உள்ளன. ஈர பெரும் தாவரங்களின் புனா சித்தா வரங்கள் இரு ப க் சு ச் ச மச் சிகுமாட உடவைக்கொண் டன. ஒருகத்தாலான வேர்ப்போலி களால் கீழ்ப்படமரில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. கடத்துந் தொகுதி முற்றாக இல்லையென்றே கூறலாம்.
இனப்பெருக்கி அங்கங்கள் சரிவிலியின் முனையிலோ, அல்லது மேற்பக்கத்திலோ மேற்பரப்பிற்குரிய கலங்களிலிருந்து விருத்தி யடைகின்றன. அவை மேற்பக்க இழையங்களுள் அமிழ்ந்தோ, புணரிதாங்சி (Gametopliப ) என்னும் சிறப்பான அமைப் பிலோ காணப்படும். கருக்கட்டிய முட்டை வித்தித்தாவரமாகி மது. வித்தித் தாவரம் (அல்லது இலிங்கமில் தாவரம்) குறிப்பிட்ட அளவு வளர்ச்சியுடையதாயும் குளோரபில் அற்றதாயுமிருக்கின் நமையால் புணரித்தாவரத்தின்மேல் ஒட்டுண்ணியாக வளர்கிறது. ரீக்சியா போன்ற தாழ்ந்த இனங்களிலே எரித்தித்தா வரம் பல பகுதிகளாக விருத்தியடையாபிட்டாலும் சாதாரணமாக அடி, உலோயம், வில்லியம் எனப் பிரிக்கப்படலாம். வித்தியாகு விழையம் வில்லையத்திலே உள் ளது, உயர்த்த தினங்களிலே ஆங் ற லுள்ள, வித்தியாகின்றன இசமயத்தில் மலட்டுத் தன்மையுள் காதைக் பாணாலாம். மிகவுயர்ந்த ஈரலுருத்தாவரங்களிலே வித் தியாகுவிரையம் அதிக வளவிற் குறைக்கப்பட்டு, அவற்றின் பெரும்பகுதி வித்திப்போசணையில் அல்லது வெடித்துப் பறத்த லில் உதவியளிக்கின்றது. இம் மலட்டுக் கலங்கள் செலுத்திகள்" ( Elaters ) என அழைக்கப்படும். ளித்திகள் முளைத்து உண்டா கும் இழைமுதல் சிறிது காலத்திற்கு மட்டுமே வாழுகின்றது. ஒவ்வொரு இழைமுதலிலிருந்தும் பக்க அரும்பாக புணரித்தா வரம் பப்ளாக்கிறது.
கோரசும் (Gemma ) எனப்படும் பதியமுறைக்குரிய அரும் புகள் உண்டாகும் முறையால் பதியமுறையினப் பெருக்கம் நடை பெறுகிறது. முதிர்ந்த பிரிவிலியின் பழைய பகுதிகள்

Page 74
134 E
அழுகுவதாலும் கவருள்ள கிளைகள் பிரிவடைவதாலும் புதிய புணரித்தாவரங்கள் உண்டாகக்கூடும்.
வருணம் - மார்க்கான் சியாலேசு ( Marchantiales )
இவை இடைவெப்பநிலையுள்ள பகுதிகளிலேயே பெரும் பாலும் காணப்படுகின்றன. அயனமண்டலப் பிரதேசங்களில் கடல் மட்டத்திலிருந்து 2, 500 அடி முதல் 5,000 அடி வரை உயரமுள்ள பகுதிகளில் வளர்கின்றன. புணரித்தாவரத்தின் தசைப்பிடிப்பான உடல் பலவிதமான இழையங்களைக் கொண் டுள்ளது. டுமோரீரு ( Dபறுortiera ), மொனோகிளியா [Mongclea) ஆகியவற்றைத் தவிர ஏனையவற்றில் உடலின் மேற்பக்கமாகத் துவாரங்களினூடாகத் திறக்கும் காற்றறைகள் உண்டு. உடலின் கீழ்ப்புறமாக செதில்கள் ( Scales ] இரண்டு அல்லது மூன்று வரிசைகளில் காணப்படும். பொதுவாக அழுத்தமான வேர்ப் போலிகளும் (Smooth TIhizoids) சிrபுகிழ்சுளாயுடைய வேர்ப் போலிகளும் ( Pagged rhizoids) காணப்படும்.
மார்க்கான் பியா (Merchantia )
('குடும்பம் - பார்க்கான்சியேசியே | பெண்கலச்சனளிதாங்கி
ஆண்கலச்சனனிதாங்கி வாங்கி
198ா?
வேர்ப்போலிகள்
பிரிவிலி படம் 42, மார்க்கான்சியா தாவரம்

135
பிரிவிலியின் முதுகுப்பக்க அழுத்தமான முளை மேற்பரப்பு- நுண்டுளை வேர்ப்போலி வேர்ப்போலி
பிரிவிலியின் கீழ்ப்புறப்பரப்பு
செதில் படம் 43. மார்க்கான்சியா வாழிடமும் தோற்றமும்!- மார்க்கான்சியாவின் புணரித்தா வரம் குளிர்ச்சியான, நிழலுள்ள, கடல் மட்டத்திலிருந்து 5,000 அடி உயரமான இடங்களிலே வளரக் காணப்படுகிறது. இலங்கை யிலே கடுகணவை, பேராதனை, கக்கலை, போன்ற மலைப் பிர தேசங்களிலே பச்சை நிறப் பிரிவிலியாகச் சாதாரணமாகக் காண லாம், முதிர்ந்த பிரிவிலி மேலிருந்து கீழ்ப்புறமாகத் தட்டை யாக்கப்பட்டு 3 -3 அங்குல நீளமடைகிறது. இணைக்கவருக்குரிய வாறு கிளைத்து வளரும் பிரிவிலியின் சோணைகள் நீண்டு, மேற் புறத்தே க்குமையான நடு நரம்பையுடையன, மேற்புறமாக சாய் சதுரவுருவுள்ள அடையாளங்கள் காணப்படும். ஒவ்வொரு சாய் சதுர அடையாளத்தின் மத்தியிலும் ஒரு சிறுதுளை உண்டு. புணரித்தாவரம் ஈரில்லமுள்ளதால் ஆண் இனப்பெருக்க அங்கங் கள் ஆண்பிரிவிலியின் மேற்புறத்தேயும் பெண் இனப்பெருக்க அங் கங்கள் பெண்பிரிவிலியின் மேற்புறத்தேயும் காணப்படும்.
கீழ்ப்புறமாக பிரிவினி அகு கவத்தாலான மயிர் போன்ற வேர்ப் போலிகளால் கீழ்ப்படையில் மான் றப்பட்டுள்ளன. அவாப் போலிகள் இரு வ31கப்படும் கீழ்ப்புறமான நடுநரம்பிப்பாருப்தி அமத் தமான சுவர்களு3டய வேர்ப்பாகப்கள் ( பிபப்பாய Khizoids] உண்டாகி பிரிவிலியை நிலத்தில் தனன்றுவதற்கு மட்டும் உதவுகின்றன. நடுநரம்பின் இரு பக்கங்களிலிருந்து

Page 75
135
உண்டாகும் முளைவேர்ப்போலிகள் (' PEgged Rhizoid: |
வளன்றுவதற்கும், நீரை உறிஞ்சுவதற்கும் உதவுகின்றன. இவ் -' வேர்ப்போலிகளின் உட்சுவரிலே முளைபோன்ற அமைப்புகள் காணப்படுவதாலேயே இவை முளைவேர்ப்போலிகளென அழைக் கப்படுகின்றன, பழுதடைந்த வேர்ப்போலிகள் சில வேளைகளிற் புத்துயிர் பெறக்கூடும். வேர்ப்போலிகள் பிரிவிலியின் கீழ்ப்புறத் திற்குச் சமாந்தரமாகவே வளர்கின்றன . வேர்ப்போலிகள் மட்டு மல்லாது பல கலங்களாலான கீழ்ப்புறச் செதில்களும் (Ventral Scales ) பிரிவிலியின் கீழ்ப்புறத்திற் காணப்படுகின்றன. நடுநரம்பின் - இருபக்கங்களிலும் இரு வரிசைகளில் இவை உள்ளன. நடுநரம்பிற்கு அருகேயுள்ள இரு வரிசைகளும் மையக் கோட்டிற்குரிய செதில்களெனவும், மற்ற இருவரிசைகளும் பக் கச் செதில்களெனவும் அழைக்கப்படும். மையக்கோட்டிற்குரிய செதில்களிலிருந்துண்டாகும் எறியம் மேற்புறமாக வளைந்து வள ரும் உச்சிக்கு பாதுகாப்பளிக்கிறது.
நுண்டுளை
- சழ்ே.
பற்றற்
கபா
கம்
வேர்ப்போலி செதில்
படம் 44. மார்க்கான் பிசியாப்பிரிவிலியின் வெட்டுமுகம்
(முப்பரிமாணம்)

God Gun 06 ရံ၊
PR &
a G TT (LLim)
BLD nm ရဲ့ GtitLIT ၏
၅ ၊
၏IT DmL 5 hismputb, gyIT , RT ထဲ ၀၅ n
E" ( E - E
ရှူရေရ၊ GTN က်rties Tar N Up* dAILLတံ SGDTun Li CT fr B.T LRf# ရ/1 GB GIT 6) Lifls de LiLL % ကံ n D #T pm T W. ။ LRifiFi ၏ Go ၊ တံ IT Psia , GT GU Han Juror 3 က LDT ဦး = dr LGub ၏@YT ( IT Lrer GTULJULLRd ၂။
၏ch / / T SPLu () DAITITw mL /ar GT UTiu wifi
G L FIL 4 (G tDal# #TT GUBy LiL5b.j၊ ၅sa) DEF arf) am LG ဆLG/mmcyLL IT gyi, tu ထဲ ၏ ။
L.LL Rir L, "LwFLIT ၍ n b a) ၏ရံ၊ LOL @ IT R ) U. 5 ရွဲ IT (LL Day!(5) 3D/T B5 LRTi7 ၏har ဒါy it Li ငါ့လေ။ # # CT A - LLhas mpLLULD LA ၏ F(NB ပါ # DIT Ei Tun ; ) ရဲ့ GI B. ၅၊ ၅ ၊ LITLaLHT (1) ၏ GFLA) 5 Jul Gujir II .
AD ရဲ့ ar IT 5. # # n3 L#F ACU) La Gavil = ၏။ ရှူရှLIT / |ml (15 15 ၊ GurisiGLIT (SEh Ga ရဲ့ Th Eh DLCI)

Page 76
133
வளர்ச்சி :
குழிவிழுந்த உச்சியிலுள்ள உச்சிக்கலத்திலிருந்து பிரிவிலி வளர்கிறது. உச்சிகலத்திலிருந்து வெட்டப்படும் கலங்கள் இணைக்கவருக்குரியவார கிளைத்து இருசோணைகளாக வளர்ச்சி யடைகின்றன,
இனப்பெருக்கம் :
இலிங்க
மார்க்கான்சியா பதியமுறை, இலிங்கமில்முறை, முறை ஆகிய முறைகளில் இனப்பெருக்கமடைகிறது.
(1) பதியமுறையினப்பெருக்கம் : பின்வரும் முறைகளில் நடைபெறுகிறது.
(அ) பிரிவிலியின் முதிர்ந்த பகுதி அழுகி அற்றுப் போவ தால் கிளைகள் வெவ்வேறாக்கப்பட்டு புதிய பிரிவிலிகளாக வளர்கின்றன.
(ஆ) பிரிவிலியின் கீழ்புறத்திலிருந்து கிளைகள் இடம் மாறிப்பிறந்து. தாய்ப்பிரிவிலியுடன் தொடுக்கும் இழை யங்கள் அழுகி அற்றுப்போவதனால் புதிய பிரிவிலிகளுண்டா சின்றன.
(2) இலிங்கமில்முறையினப்பெருக்கம் :
வேர்ப் கோரகக்கிண்ணம் போலிக்கலம் வளரும்பகுதி படம் 48, கோரகக்கிண்ணமும் கோரகமும்

11ம்
கோரகம்
காப்பு
படி
-வேர்ப்போலி
செதில்
படம் 4ா.கோரசுக்கிண்ணத்தின் தெ, வெ,
கோரகங்கள் ( Gmmae ] உண்டாகி இலிங்கமில்முறை யினப் பெருக்கம் நடைபெறுகிறது. பிரிவிலியின் மேற்பக்கமாக கொரகக் கிண்ணங்கள் Gemma Cups 1 அல்லது சிறு கிண்ணங்கள் ( CupulES ] எனப்படும் கிண்ணவுருவான அமைப்புகள் தோன்றி, அதனுள் கோரகங்கள் உருவாகின்றன, முதலில் பிரிவிலியன் மேற்புறத்தில் ஒரு பகுதி சிறப்பியல்பு பெற்று, அதைச் சுற்றியுள்ள இழையங்கள் மேல் நோக்கி வளரு வதால் ஒரு குழி போன்ற இறக்கம் உண்டாகிறது. இவ்வியக்கத் தின் தளத்திலுள்ள கலங்கள் கோரகங்களாக வளர்ச்சியடைகின் நன, தளத்திலுள்ள ஒரு சுலம் குறுக்குப் பிரிவினால் ஒரு "காம்புக் கலமாகவும் (அல்லது அடிக்கலம் கோரகத்தின் முதற்கல மாகவும் பிரிவடைகிறது, காம்புக்கலம் கோரகத்தின் காம்பாகத் தொழில் படுகிறது. முதற்கலம் நான்கைந்து கலங்களாகப் பிரிவடைந்த பின்னர் நிலைக்குத்தாகவும், கிடையான - தளத்திலும் ( horizontal plane பிரிவுகள் நடைபெறுவதால் தட்டுருவான
disC Shaped | கோரகமொன்றுண்டாகிறது. முதிர்ந்த கோரகங்கள் இரு பக்கங்களிலும் தவாளிப்புகளைக் கொண்ட தட்டையாக்கப்பட்ட அமைப்புகளாகும். கரையோரபாக பச்சை நிறமாகவும் மையத்தில் நிறமற்றவையாயுமுள்ளன. கோரகக் கிண்ணங்களுள் கோரகங்களுடன் சேர்ந்து சளிரியமுள்ள, ஒரு கலத்தாலான, மயிர்கள் காணப்படும், இவை நீரை உறிஞ்சி வீக்கமடைந்து முதிர்ந்த கோரகங்களை அவற்றின் காம்புகளி லிருந்து விடுவிக்கின்றன. கிண்ணங்களிலிருந்து பொங்கிவளியும் சளியத்துடன் கோரகங்களும் வெளிவரக்கூடும், அல்லது கிண்ணங் களினுள் மழைத்துளிகள் விழும்பொழுது கோரகங்கள் வெளியே வீசப்படலாம், கோரகங்கள் ஈரப்பற்றுள்ள மண்ணரிலே விழுந்த பின் நிறமற்றபகுதியிலிருந்தும் வேர்ப்போலிகள் உருவாகின்றன.

Page 77
14)
இரு பக்கங்களிலுமுள்ள தவாளிப்புகளிலிருந்தும் பிரிவிலி வளர் கிறது. இரு வளர்ச்சிப் புள்ளிகளிலிருந்தும் இணைக்கவருக்குரிய கிளை கள் எதிர்த் திசைகளை நோக்கி வளர்கின்றன, நடுப்பகுதியிலுள்ள இழையங்கள் அழுகுவதால் இரு புதிய பிரிவிலிகளுண்டாகின்றன . சாதாரணமாக ஒர் ஆண்பிரிவிலியிலிருந்துண்டாகும் கோரகங் கள் ஆண்பிரிவிலிகளாகவும், பெண்பிரிவிலியிலிருந்துண்டாகும் கோரகங்கள் பெண்பிரிவிலிகளாகவும் விருத்தியடைகின்றன.
(3) இலிங்கமுறையினப்பெருக்கம் :
மார்க்கான்சியா ஈரில்லமுள்ள தாவரப]ாகையால் ஆண், பெண் இனப்பெருக்க அங்கங்கள் முறையே ஆண், பெண் புணரித்தாவரங்களிலே உண்டாகின்றன. இலிங்கமுறையினப் பெருக்கம் முட்டைப்புணரிக்குரியமுறையிலானது. அதாவது. ஆண்கலச்சனனியிலிருந்துண்டாகும் விந்துப்போகப் பெண்கலச் சனனியிலுண்டாகும் முட்டையுடன் சேர்ந்து கருக்கட்டுகின் றது. பிரிவிலியிலிருந்து நேராகவளரும் சிறப்பியல்பு பெற்ற கிளைகளின் மேலே பாவங்கங்கள் காணப்படுகின்றன, ஆண்கலச் சனனிகளைத் தாங்கும் பகுதி ஆண்கலச்சனனிதாங்கி யென்றும் ( antheridiophore), பெண்கலச்சனனிகளைத் தாய் கும் பகுதி பெண்கவச்சணனிதாங்கி 'archicழப்niophore] என்றும் அழைக்கப்படும், இப் புணரி தாங்கிகளின் சிறப்பியல்பு களைக்கொண்டு முதிர்ந்த ஆண், பெண் புணர்த்தாவரங்களை வேறுபடுத்திக் கொள்ளலாம், ஆண்கலச்சனனி தாங்கி உச்சியிலே அலையுருவான விளிம்பையுடைய வாங்கியாக ( Teceptacle அல்லது சோணைகளையுடைய வட்டத்தட்டாக விரிவடைகிறது. பெண்கலச்சன்னிதாங்கி பல நரம்புகளையுடைய சோணைகளைக் கொண்ட வட்டத்தட்டாக விரிவடைகிறது. படிந்து கிடக்கின்ற கிளைகளின் தயாரிப்புப் பகுதியில் பிரிவிலியின் நடு நரம்பு மேல் நோக்கி வளைந்து, செங்குத்தாக வளர்ந்து, உச்சியில் பாற்கிளைகளாக விரிவடைகின்றது. ஒவ்வொரு புணரிதாங்கியி லும் ஒரு காம்பும், ஒரு வாங்கியும் உள்ளன, புணாரிதாங்கி பிரி! விலியின் மாறுபட்ட பகுதியென்பதை பின்வரும் சான்றுகளி விருந்து அறியலாம். அது பிரிவிலியின் உச்சியின் தொடர்பான வளர்ச்சியால் உண்டானது, காம்பின் குறுக்கு வெட்டுமுகத்தில் பிரிவிலியின் கீழ்ப்புறத்திற்குச்சமஅன் முற்பக்கத்தில் வேர்ப்போGt குரிய தவாளிப்புகள் காணப்படுகின்றன. பிரிவிலியின் மேற்புறத் திற்குச் சமனை பிற்பக்கத்தில் உணவு தயாரிக்கும் இழைகளைக் கொண்ட காற்றறைகள் காணப்படுகின்றன.
ஆண்கலச்சன்னிதாங்சி அல்லது ஆண்கலவாக்கிதாங்கி -
ஆவாங்கியைத் ( Thal: rCCUptacle ] தாங்கும் ஆண்கலச் சன்னிதாங்கியொன்று முதலில் ஒன்றரை அங்குலம் வரை நீளமுடையது. அதிற் காணப்படும் இரு
நீள்பக்கச் சால்களி.

141
காற்ற7ை) ஆண்கலச்சனனி
விசா #
படம் 48. ஆண்கலச்சன னிதா ங்கியின் வாங்கியினூடாக வெட்டுமுசும்
லும் பிரிவிலியிற் காணப்படுவதுபோல் (வேர்ப்போலிகளும் செதில் களும் உண்டு, இதற்கு எதிர்ப் புறத்தில், அதாவது மேற்புறமா யிருக்க வேண்டிய "பக்கத்தில் துவாரங்களும் ஒளித்தொகுப்பு இழைகளைக் கொண்ட காற்றறைகளும் விருத்தியடைந்துள்ளன, விரைவில் உச்சிப்பிரியிழையம் இணைக்கவருக்குரியவாறு முதலில் இரண்டாகவும், பின் நான்காகவும், இறுதியில் எட்டாகவும் பிரி வடைகின்றது. இதனால் எட்டுச் சோணைகளைக் கொண்டதெனக் கூறக்கூடிய அரை அங்குல விட்டமுள்ள வட்டத்தட்டொன்று காம்பின் மேல் உருவாகிறது. இதுவே 2 ஆண் வாங்கியெனப்பாடு கிறது (male receptac= 1, ஒவ்வொரு சோணையின் மேற் பக்கத்திலும் மையக்கோட்டில் ஐந்து முதல் பத்துவரை மேற் ரேலுக்குரிய கலங்கள் உச்சிநாட்டமுள்ளவாறு (அதாவது இன எமையானவை கரைக்குச் சமீபமாகவும், முதிர்ந்தவை மையத்திற் குச் சமீபமாகவும்) ஆண்கலச்சனனித் தொடக்கக் கலமாகத் தொழிற்படவாரம்பிக்கின்றன. முதிர்ந்த ஆண்கலச்சனளி முட்டை வடிவாகவும் பல கலங்களாலான காம்புடன் கூடியதாயுமுள்ளது" அது ஆண்கலச்சனனிக்குழியில் பதிந்திருக்கும். இக்குழி காற் றறைகளினிடையேயுள்ள இழையங்களில் மூழ்கியிருக்கும். அவை கருமைகலந்த ஊதா நிறமுடைய சுவர்களைக் கொண்ட கலங் களால் சூழப்பட்டிருக்கும். குடுவையுருவான ஆண்கலச்சனனிக் குமி மேற்புறத்தில் சிறு துவாரத்தினூடாக வெளித்திறக்கிறது.

Page 78
142
ஆண்கலச்சனனியின் விருத்தி -
படம் 49. ஆண்கலச்சனனி விருத்தி
இளம் ஆண்வாங்கியின் ( Young Male Receptacle | மேற்பரப்பிற்குரிய கலபொன் றிலிருந்து ஒரு ஆண்கலச்சனனி உருவாகிறது'. இக் கலம் 'வீக்கமடைந்து குறுக்குமுகமாக இரு கலங்களாலான காம்பாகிறது. மேற்கலம் குறுக்குச் சுவர்களா லும் நிலைக்குத்தான சுவர்களாலும் மேலும் பிரிவடைகிறது. பின்னர் சுற்றுச் சாய்வுள்ள பிரிவால் வெளிப்புறமாக ஒரு படையாலாசன் சுவருண்டாகிறது. உட்புறமாகவுள்ள கலங்களிலிருந்து விந்துக்குழியங்களுண்டாகின்றன. ஒவ்வொரு விந் துக் குழியத்திலிருந்தும் இரு சவுக்குமுளைகளைக் கொண்ட வொரு விந்துப்போலி யுண்டாகிறது. இம் மாற்றங்கள் நடைபெறும் பொழுது சுற்றியுள்ள இமையங்கள் வளர்வதால் தொடக்கத்தில் மேற்பரப்பிலிருந்த ஆண்கலவாக்கி இப்பொழுது குடுவையுருவான குழியொன்றில் காணப்படுகிறது. இக்குழி ஒரு சிறுவாயிலினுாடாக வெளியே தொடர்பு கொண்டுள்ளது.
ஆண்கலச்சனிை அல்லது ஆண்கவவாக்கி :..
-ஆண்கலச்சனனி பல்கலமுள்ள காம்பினால் ஆண்கலவாக்கிக் குழியின் அடிப்பாகத்தில் ஒட்டியுள்ளது. முட்டை வடிவான வில்லை யத்தினுள் விந்துப்போலிகளுள்ளன, குளோரபில்லைக் கொண்ட கலங்கள் ஒரு படையில் வில்லையத்தைச் சுற்றிச் சுவராக அமைந் துள்ளன. உள்ளேயுள்ள விந்துத்தாய்க்கலங்கள் முதிர்ந்த பின்னர்

143
சிறுவாயில் ஆண்கலனச்சனனி
gெ 2)
காம்பு
- ஆண்கலச்சனனிக்கும் விந்துப்பொலி
படம் 50. ஆண்கலச்சனனியும் வித்துப்போலியின் விருத்தியும்
மூலைவிட்டமாகப் பிளவடைந்து இரு விந்துக்குறியங்களுண்டா கின்றன, இவை யொவ்வொன்றிலிருந்தும் இருசவுக்குமுளைக ளுள்ள, சுருளியான, விந்துப்போளி யொன்றுண்டாகிறது, ஆண் கலச்சனனி முதிர்ந்த பின்னர் ஒரு துளி நீர்பட்டவுடன் சுவரின் மேற்புறமாகவுள்ள மலட்டுக் கலங்கள் பிரிந்தழிந்து, சளியத்தின லுண்டாக்கப்படும் பால் போன்ற திரவத்துளிகளுடன் விந்துப்போ லிகள் வெளிவருகின்றன. ஆண்கலச்சனனி தாங்கியின் மேற் புறத்தில் பனித்துளிகள் அல்லது மழைத்துளிகள் விழுந்து விந்துப் போளிகளை 1. பெண்கவச்சனனிக்குக் கடத்தக்கூடும். ஆண்கலச் சன னிதாங்கிகளின் அறைகளிலே ஆண்கவவாக்கிகளினுடலில் ஒட்டியுள் ள உண்ணிகள் காணப்படுவதாலும், ஆண்கலச் சனனி, பெண்கலச்சனனி ஆகிய விரண்டிலும் வெல்லம் சுரக்கப்படுவ தாலும், மார்க்கான்சியாவில் பூச்சிகளினாலும் விந்துப்போலிகள் கடத்தப்படலாமெனக் கருதப்படுகிறது,
பெண்கலச்சனனி தாங்கி ( ArchegoriophoTE )*
பெண் கலச்சனனி தாங் சி
ஆண்கலச்சனனி தாங்கினயப் போன்றேயுள்ளது.. நீள்பக்க அச்சில், வேர்ப்போலிகள், செதில்கள் எல்லாம் ஆண்கலச்சனனி' தாங்கியிலுள்ளவாறேயுள்ளன, வாங்கி இணைக் கவருக்குரிய முறையில் விரைவில் தொடர்ந்து பிரிவடைவ தால் எட்டுச் சோணைகளைக்கொண்டவொரு வட்டத்தட்டு டண் டாகிறது, ஒவ்வொரு சோணையின் உச்சியிலும் வளர்ச்சிக்குரிய

Page 79
144
நுண்டுனை உதரம் முட்டை
யு டி 4 --டி
IITLாTாபம்
ITLTILLITH
சிலிர்மயிர்ச்
சூலகச் பெண்கவச் பெண்கலச் சுற்று
சுற்று சனனி
சனணி படம் 51, பெண்கலச்சனளிதாங்கியின் வாங்சினூடாக
வெட்டுமுகம்
சுலம் உள்ளது. வட்டத் தட்டின் மேற்பரப்பிலே எட்டுச்சோணை சுளிலும் சோணைக்கு ஒருவரிசையாக எட்டு வரிசைகளில் பெண் கலச்சனனிகள் உண்டாகின்றன. ஒவ்வொரு வரிசையிலும்' ஐந்து முதல் பத்து மேற்ரேல் கலங்களிலிருந்து இவை உருவாகின்றன. இளமையானவை விளிம்பிலும் முதிர்ந்தவை மையத்திற்கரு காமையிலும் காணப்படும். குடுவையுருவான பெண்கலச்சனரி களின் கழுத்து மேல்நோக்கியிருக்கும் நிலையிலேயே கருக்சட்டல் நடைபெறுகிறது.
பெண்கலச்சனனியின் விருத்தி :
பெண்வாங்கியின் மேற்பரப்பிலே ஒரு மேற்றோற்கலத்தி விருந்து ஒரு பெண்கலச்சனனி உருவாகிறது. இக்கலம் விக்க மடைந்து குறுக்குமுகப் பிரிவடைவதால் இரு கலங்களுண்டா கின்றன. கீழ்க்கலம், மேலும் பிரிவடைந்து பல்கலமுள்ள காம் பாகிறது. மேற்கலயே பெண்கலச்சனனீயின் தாய்க்கலமா குட்ம், இதில் மூன்று சுற்றுச் சாய்வுள்ள சுவர்களுண்டாவதால் ஒரு மையக்கலத்தைச் சுற்றி மூன்று சுற்றுக் கலங்கள் உண்டாகின்றன , மையக்கலம் ஏனைய மூன்று கலங்களைவிட சிறிது உயர்ந்திருக் கும். அதன் உச்சிப்பகுதி மூடிக்கலமாக வெட்டப்படுகிறது. இது மேலும் பிரிவடைவதனால் பின்னர் பெண்கலச் சனனியன் கழுத்தை முடும் கவரங்களைக் கொடுக்கிறது. வெளியேயுள்ள கவங் கள் ஆறு கலங்களாகப் பிரிவடைகின்றன, கீழ் அடுக்கு உதரமாக விருத்தியடைகிறது கீழ் அடுக்கின் மையக்கலம் ஒரு பெரிய முட்டைக்கலமாகவும், ( Egg 1 சிறிய உதரக்கால்வாய்க் கல்

145
- தாய்க்கலம் காம்புக்கலம்
டி.க்கலம்
மு க, கா, க.
பு. உட.க.,
சு, கா, க.
உ கா க க
முட்டை
படம் 52. பெண்கலச்சனனி விருத்தி
மாகவும் ( T, C, C, 1 பிரிவடைகிறது. சூழ்கலங்கள் மேலும் பிரிவடைந்து ஒருபடையாலான சுவரையுண்டாக்குகின்றன. மேல் அடுக்கிலுள்ள சூழ்கலங்கள் பிரிவடைந்து ஆறு நீள்வரிசைகளில் கழுத்துக் கலங்களை உண்டாக்குகின்றன, மேல் அடுக்கிலுள்ள மையக்கலம் பிரிவடைந்து ஒரு வரிசையில் எட்டு முதல் பத்து வரையிலான சுழுத்துக் கால்வாய்க் கலங்களை தடண்டாக்குகிறது.
பெண்கலச்சனனி :
பெண் கலச்சனனி
குடுவையுருவானது.வீக்கமடைந்த அடிப்பாகம் உதரம்' என்றும், நீண்டு மெலிந்த பாகம் "கழுத்து' என்றும் அழைக்கப்படும். பெண்கலச்சனனி ஒரு குட்டையான, ஆனல் தடித்த காம்டபினால் அடிப்பாகத்தில் ஒட்டியுள்ளது. உதரத் தின் சுவர் ஒரு படையினலானது, அதனகத்தே ஒரு பெரிய முட்டைக் கலமும் ஒரு சிறிய டதரக் கால்வாய்க் கலமும் உள்ளன. நீண்ட கழுத்து ஆற்று நீள் வரிசைக் கலங்களின் லானது. அத
TZ 10

Page 80
146
னகத்தே எட்டு அல்லது பத்து கழுத்துக் கால்வாய்க் க லங்கள் ஒரு வரிசையிற் காணப்படும். கழுத்தின் உச்சி இளமையில் மூடிக் கலங்களால் மூடப்பட்டிருக்கும். ஆனால் பெண்கலச்சனணி முதிர்ச்சியடைய கழுத்துக் கால்வாய்க் கலங்களும் உதரக் கால் வாய்க் கலங்களும் பிரிந்தழிந்து சளியத்திரவமாகி மூடிக்கலங் களைத் தள்ளிக்கொண்டு கழுத்தினூடாக வெளிவரும்.
கருக்கட்டல் !
நீர் அல்லது பனி உள்ளபொழுது மட்டுமே கருக்கட்டல் நடைபெறுகிறது, மழைத்துளிகளோ பலரித்துளிகளோ விழும் பொழுது ஆண்கலச்சனனியின் சுவர்க் கலங்கள் வெடித்து விந்துப்போலிகள் வெளியாகின்றன. இவை ஆண்கலச்சனனிக் குழியிலிருந்த சளியத்துடன் சேர்ந்து வெளிவந்து, பெண்கலச் சனனியிலிருந்து சுரக்கப்படும் இரசாயனப் பொருளினால் கவரப் பட்டு, அவற்றின் கழுத்தை நோக்கி நீந்துகின்றன, இவ்விரசா
யனப் பொருள் புரதங்களையோ அசேதனவுறுப்புக்குரிய பொற்ற 4. சிய உப்புகளையோ கொண்டிருக்கும். விந்துப் போலிகள் பெண்
2:37
(3) 02
புடம் 53. பெண்கலச்சனனி தாங்சியின் விருத்தி நிலைகள்

147
கலச்சனனியின் கழுத்தி எனுள்ள சளியத்தினூடாக நீந்தி உத ரத்தை யடைகின்றன. ஒரு விந்துப்போலி மட்டும் முட்டைக் கலத்துடன் புணர்ந்து கருக்கட்டுகிறது. பெண்கலச்சனனிதாங்கி யின் காம்பு மிகக் குறுகியதாயும், பெண்கலச் சணனிகளின் கழுத்து கள் 4 மேல்நோக்கியும் இருக்கும்பொழுதே கருக்கட்டல் நடை பெறுகிறது. பெண்புணரித் தாவரமும் ஆண்புணரித்தாவரமும் அருகருகேயிருந்தால் மாமைத்துனரிகளோ, பனித்துளிகளோ ஆண் சலச்சனனியில் விழும் பொழுது விந்துப்போலிகள் வெளியே (தெறிக்கப்பட்டு பெண்கலச்சனனியை யடையக்கூடும்,
கருக்கட்டிய பின்னர் பெண்கலச் சனனிதாங்கி நீள்வதால் மேற்புற மையத்திலுள்ள கலங்கள் பிரிவடைந்து பெருகி, அப் பகுதி விரைவாகப் பருக்கிறது, இதனால் பெண்கலச்சனனிகளைக் கொண்ட பகுதி தள்ளப்பட்டு, தலைகீழாகின்றது (InVErted 1. இந்நிலையில் பெண்கலச்சனனிகள் கீழ் நோக்கித் தொங்கிக் கொண்டிருக்கும். இளமையானவை காம்பிற் சுருகாமையிலும் முதிர்ந்தவை விளிம்பிலும் காணப்படும். வாங்கி தடிப்பாக இருப் பதால் மேற்புறத்தே அது பாதுகாப்பளிக்கின்றது. வாங்கியில் அதிகளவில் ஒளித்தொகுப்பு இழையங்கள் உண்டாகி கருக்கட்டிய முட்டைகள் காபோவைதரேற்றைப் பெற ஏதுவாகிறது.
பெண்கலச்சனனிகளுள்ள எட்டு வரிசைகளுக்கிடையே வாங்கியின் புதிய மேற்பக்கத்திலிருந்து எட்டு அல்லது ஒன்பது தடித்த இழையங்கள் உருவாகின்றன. இவை, கதிர்கள் RaVS ) என அழைக்கப்படும், கதிர்கள் வாங்கியின் விளிம்பை மூடிவளைந் திருக்கக் காணலாம். இவை வாங்கி கிடைநிலையில் உறுதி யாக இருப்பதற்கு உதவுகின்றன. எனவே செங்குத்தாக விழும் சூரிய ஒளியைப் பெற்று வாங்கியில் ஒளித்தொகுப்பு நடாத்த முடிகிறது.
பெண்கலச் சனனிகளின் இருபுறமும் பா ளை ச் சு ற் று ( InvolபUTE ) ன்னும் மெல்லிய தகடு போன்ற இழையங்கள் உண்டாகின்றன, இருபக்கத் தகடுகளின் முனைகளும் பெண்கலச் சனனியின் உச்சியின் மேலாக முட்டுவதால் பெண்கலச்சனனி யைச் சுற்றி ஈரப்பற்றுள்ள காற்று இருப்பதற்கு அவை வழி! செய்கின்றன.
பெண்கலச்சனனியின் அடிப்பாகத்திலிருந்து பாளைச்சுற் றுக்கு உட்புறமாக பெல்லிய குழாயுருவில் ஓரிழையம் உருவாகி பெண்கலச்சனனியின் கழுத்து துனிவரை கீழ்நோக்கி வளர்கிறது. ஒருகலத் தடிப்பான இக் குழாய் போலிப்பூவுறை ( PBEL00perianth ) அல்லது குலகச்சுற்று ( Perigynium ) எனப் படும். ஒரு வரிசையிலுள்ள பெண்கலச் சனனிகளுக்கு பாளச்சுற்று எவ்வாறு உதவுகிறதோ அவ்வாறு ஒரு பெண்கலச்சனனிக்கு இப் போலிப்பூவுறை உதவுகிறது.

Page 81
143
கருக்கட்டலின் பின்னர் உதரம் மூன்று அல்லது நான்கு களத்தடிப்புள்ளதாக மாறி, விட்டம் பெருத்து, கருக்கட்டிய முட்டையின் சுவாசித்தலுக்கு வேண்டிய வெப்பமான ஈரப்பற் றுள்ள காற்றை உள்ளடக்குகிறது. இப்பகுதியே 'கவசம்" (Calyptra என அழைக்கப்படுகிறது.
பெண்கலச்சனனி தாங்கியின் காம்பு மேலும் நீள்வதனால் கருக்கட்டிய முட்டைகளைக் கொண்ட வாங்கி படிந்து கிடக்கின்ற பிரிவிலியிலிருந்து இரண்டு முதல் நான்கு அங்குலம் வரை உயர்த் தப்படுகிறது. எனவே" கருக்கட்டிய முட்டையிலிருந்து வளரும் வித்தித்தாவரத்திற்கு வேண்டிய போசணைப் பொருட்களை அதிக அளவிற் தயாரிப்பதற்கு வாங்கியினால் அதிக ஒளியைப் பெற முடிகிறது. வாங்கி அதிக உயரத்திற்கு உயர்த்தப்படுவதால் விந்
அடி
உலோமம்
-கவசம்
கட்
"வில்லையம்
ஐ.
சுவர்
செலுத்தி
வித்தி
சூலகச்சுற்று
ஐ.
படம் 54. முதிர்ந்த வித்திக்கலன்

149
துப்போலிகள் அசைந்து திரிந்து பெண்கலச்சனனியை யடைவதற் சான் நீர் கிடைக்கப்பெறாததால் இளமையான பெண்கலச்சனனி களிலிருக்கும் முட்டைகள் கருக்கட்டக்கூடிய சந்தர்ப்பத்தை இழக் சின்றனவென்பது உண்மையே. அதிகளவு உணவு தயாரிக்கப்படு முன்னரே கருக்கட்டிய முட்டைகள் நன்றாக வளரக்கூடியதாயிருப் பதால் இது ஈடு செய்யப்படுகிறது. வித்தித்தாவரம் (Sporophyte):
கருக்கட்டிய முட்டையிலிருந்து பல்சுவUள்ள முளையம் உண்டாகி வித்தித்தாவரமாக விருத்தியடைகிறது. இது உண் மையில் ஒரு வித்திப்பிறப்பகமே ( Sporagoniபா ). பெண் வாங்கியிலிருந்து அநேக வித்திப்பிறப்பகங்கள் தொங்கியிருக்கக் காணலாம். வித்திப்பிறப்பகத்தில்--ஒளித்தொகுப்பிழையங்கள் கிடையாததால் அது புணோத்தாவரத்தின் மேல் முழு வொட் டுண்ணியாகவே வளர்கிறது. ஒவ்வொரு வித்திப்பிற்பக்கத்திலும்
மூன்று பகுதிகளைக் காணலாம்.
(1) பருமனடைந்த "அடி" பெண்வாங்கியபின் இழிையத்தி னுள் புதைந்திருந்து வித்திகளின் விருத்திக்குத் தேவையான போசணையை உறிஞ்சுகிறது.
(3) 'உலோமம்" என்னும் குறுகிய, ஆனால் பல்கலங்களா லான காம்பு ளித்திப் பிறப்பகம் முதிர்வடைந்த பின்னர் விரை வாக நீண்டு, மூடியுள்ள கவசம் Calyptra, போலிப் பூவுறை ( Pseudoperiarith 1, பாளைச்சுற்று (InvolபUrE ] ஆகியவற்றை வெடிக்கச் செய்து, வித்திப்பிறப்பகத்தை கழ் நோக்கிக் கொண்டு சென்று'. காற்றிலே வெளிக்கொணர்கிறது.
(3) வில்லையம் (Capsule) என்னும் பகுதி சோள ஒரு அல்லது முட்டையுருவான தாயும், ஒருபடையினலான உறை யைக் கொண்டதாயுமிருக்கும். இக்கலங்களின் சுவர்களிலே தடித்த பட்டிகைகள் காணப்படும். உறையின் உச்சியிலே கலங்கள் இருபடைகளிலுள்ளன, வில்லையத்தினுள் அனேக விந்துத்தாய்க் கலங்களும் "செலுத்தி ' [Elater ) எனப்படும் மலட்டுக் கலங்களும் உள்ளன, செலுத்திகள் நீண்ட, சுதிருருவான, சுருங்கி விரியுந் தன்மைபெற்ற கலங்களாகும். அவற்றின் உட்புறச் சுவ ரிலே ஒரிரு, சுருளியான, தடித்த பகுதிகள் காணப்படும். செலுத் திகள் நீர்பருகுமியல்புள்ளவை.
இருமடி.யான கருக்கட்டிய முட்டை குறுக்குமுகமாகப் பிரி வடைவதிலிருந்து வித்திப்பிறப்பகத்தின் விருத்தி ஆரம்பிக்கிறது. இப்பிரிவினால் அடிக்கு மேலான கவரும் ( Epibasal Cel1 ] அடிக்குக் கீழான கலமும் - Hypobasal Cell
| உண்டா கின்றன, முதற் பிரிவிற்குச் செங்குத்தாசு ஏற்படும் பிரிவில் நான்கு கலங்களுண்டாகின்றன. அடிக்குக் கீழான் இருக்கிங் சுளும் பின்னரும் பிரிவடைந்து குமிழ் போன்ற அடியையும்

Page 82
150)
உலோமத்தின் கீழ்ப்பாகத்தையும் உருவாக்குகின்றன. அடிக்கு மேலான இரு சுலங்களும் பிரிவடைந்து உலோமத்தின் மேற் பாகத்தையும் வில்பயத்தையும் உருவாக்குகின்றன.அடியின்
foot | கலங்கள் யாவும் ஒத்தபரிமாணமுள்ளவையாகும். உலோமத்தின் கலங்களும் ஆரம்பத்தில் அவ்வாறே யிருக்கின்றன. வில்லையத்திலேயுள்ள சுற்றுக்குரிய கலங்கள் சுற்றுச்சாய்வுத் தளத்தினூடாகப் பிரிவடைவதனால் ஒருபடையிலான சூழுறை
AmphithcGium க ] உண்டாகிறது. இது உள்ளிருக்கும் அகவுறைக் கலங்களை (Endothccium] மூடியுள்ளது. குழு றையின் கலங்கள் யாவும் கங்கணத்தடிப்புப் பெற்று பலமாக்கு மிழையமாகத் தொழில்படுகின்றன. ஆரம்பத்தில் ஒத்தபரிமாண முடையனவாயுள்ள அகவுறைக் கலங்கள் வில்லையத்தின் நீள்பக்க அச்சிற்குச் சமாந்தரமாக நீண்டு, மலட்டுக் கலங்களாகவும் வள மான (Fertile | கலங்களாகவும் விருத்தியடைகின்றன. ஒவ்வொரு வளமான வரிசையிலுமுள்ள ஒவ்வொரு கலமும் குறுக்குமுகமாகப் பிரிவடைவதனுல் உருண்டையான வித்தித் தாய்க் காலங்கள் உண்டாகின்றன. ஒவ்வொரு ளித்தித் தாய்க் கலமும் ஒடுங்கற் பிரிவடைந்து நான்கு ஒருமடியான வித்திகள் உண்டாகின்றன. ஈரில்லமுள்ள தாவரங்களில் வழமையாக நடை பெறுவதுபோல் இதிலும் பாற்கள் தனிப்படுத்தப்படுகின்றன. எனவே முளைத்தலின்போது "வித்திகளின் எண்ணிக்கையின் அரை வாசி ஆண்புணரித்தாவரங்களாகவும் எஞ்சிய பாதி பெண் புணரித்தாவரங்களாகவும் வ ள ர் கி ன் ற ன. ஆனால் வித்தி களின் பருமனிலோ, உருவத்திலோ ஒரு வித்தியாசமும் காண முடியாது. ஒவ்வொரு நீண்ட மலட்டுக் கலமும் மேலும் நீள்கிறது. அவற்றின் உட்சுவரிலோ இரு சுருளி வடிவிலான தடிப்புகள் ஏற்படுகின்றன. பின்னர் உலோமத்தின் கலங்கள் நீள்வதனால் வில்லையம் கவசத்தை உடைத்துக்கொண்டு போலிப்பூவுறை. பாளைச்சுற்று ஆகியவற்றினூடாக வெளிவருகிறது. பின்னர் வில்லை யத்தின் சுவர் உச்சியிலே வெடிப்பதனால் பல் 4 சிறுசோணைக ளுண்டாகின்றன. செலுத்திகள் நீரை உறிஞ்சிப் பருத்து, வெப்ப மான பருவகாலத்தில் உலர்வதனால் வித்திகள் காற்றினால் பரவுப் படுவதற்கு வழிசெய்கின்றன,
8 இ இ இ இ இனை
படம் 55. வித்தி முளைத்தல்

13
வித்தி முளைத்தல் :
வித்திகள் பி. 013 முதல் 1.03 மி.மீ., வரை விட்டத்தைக் கொண்ட சிறிய கோளவுருவானவை. ஒவ்வொரு வித்தியிலும் ஒரு கருவுள்ள முதலுருவைச் சுற்றி இருபடைகளாலான கவ சமுண்டு, வெளியடை ( E%ine 1 அல்லது வித்திப்புறக்கவசம் ( EROSporium] என்னும் வெளிப்படை கியூற்றின்படி வினுல் தடித்திருக்கும். உள்ளடை' intine | அல்லது வித்தியகக் கவசம் ( Edosporiபற
1 ) எனப்படும் உட்படை மெல்லிய தாயிருக்கும், வித்திகள் உசிதமான சூழ்நிலையுள்ள இடத்தில் விழுந்தால் முளைக்கத் தொடங்குகின்றன. வித்தியின் முதலுருவம் பருமனடைந்து வெளியடையை உடைத்துக்கொண்டு வெளிவந்து. ஆறு அல்லது எட்டுக் கலங்களைக் கொண்ட பச்சை நிற இழையாக
> கோரகம் -
- மார்க்கான்சியாப்பிரிவிலி<-
புணரித்தவரச்சந்ததி
(புணரித்தாவரம்
(¥)
ஆண்கலச்சனனி பெண்கலச்சனனி
தாங்கி
தாங்கி
ஆண்கலச்சனன பெண்கலச்சனா இகழமுதல் இழைமுதல்
விந்துப்போலி, முட்டை !
வித்தி (x) வித்தி (x)
(சுருக்கட்டல்)
ஒடுங்கற்பிரிவு)
வித்தித்தாவரச்சந்ததி
நுகவித்தி 1x
வித்தித்தாய்க்கலம்
A (2x)
(22)
> வித்திப்பிறப்பகம் - மார்க்கான்சியாவின் வாழ்க்கைச் சக்கரம்

Page 83
152
வளருகிறது. இழையின் முன்ன இருகல்த்தடிப்பானதாயிருக்கும் ., முனைக்கலத்திலொன்று இருபக்க வெட்டுமுகங்களைக் கொண்ட உச்சிக்கலமாகத் தொழிற்பட்டு வலப்புறமும் இடப்புறமுமாக மாறி மாறி ஆறேழு கலங்களை வெட்டுகின்றது. ஈற்றில் தனியனை உச்சிக்காலம் ஒரு கிடையான வரிசையில் கலங்களை உண்டாக்கு கிறது. பின்பு மேல்கீழ் பக்க வெட்டுமுகங்களைக் கொண்ட உச்சிக் கலமாசி, தடித்து' அகன்ற பிரிவிலியுண்டாகின்றது. இதுவே புண ரித்தாவரமாகும்.
மார்க்கான்சியாளின் வாழ்க்கை வட்டத்தில் நடைபெறும் முக்கிய
நிகழ்ச்சிகள்
1. ஒருமடியான வித்தி முளைத்து வரையறைவற்ற இழை யுண்டாகிறது.
2. மார்க்கான்சியாவின் புணரித்தாவரம் இழையின் முனை யிலிருந்து உருவாகிறது.
3. புணரித்தாவரம் ஈரில்லமுள்ளது. ஆண்புணரித் தான ரத்தில் பரிசையுருவான ( Pultate | ஆண்வாங்கிகளை டச்சி பயிற் கொண்ட ஆண்கலச்சன்னிதாங்கிகள் காணப்படும்.
4. அலையுருவான விளிம்பையுடைய ஆண்வாங்கியிலே ஆண்கலச்சனனிகள் ஆண்கலச்சனக் குமிகளுள் காணப்படும். இக் குழிகள் சிறு வாயில்களினூடாக வெளித்திறக்கின்றன,
ந,குடுவையுருவான பெண்கலச்சனனிகள் பெண் வாங்கி பின் மேற்புறத்தே உண்டாகின்றன. இதில் ஒருபடையாலான உதரம் ஆறு நீள்வரிசைக் கழுத்துக் கலங்கள், 8-10) கழுத்துக் கால்வாய்க் கலங்கள், முடிக்கலங்கள், ஒரு முட்டை, ஒரு உதரக் காவ்வாய்க்கலம் ஆகியவையுண்டு.
6. முதிர்ந்த ஆண்கவச்சனனிகளிலிருந்து இருசவுக்கு முளைகளைக் கொண்ட சுருளியான விந்துப்போலிகள் அதிக எண்
ணிக்கையில் உண்டாகின்றன.
7. விந்துப்போலிகள் நீரினால் கடத்தப்பட்டு பெண்கலச் சனனியையடைந்து புரதங்கள் அல்லது அசேதனவுறுப்புக்குரிய பொற்றாசியம் உப்புகள் சுரக்கப்படுவதனால் கவரப்பட்டு கழுத்தி னுரடாக உள்ளே நீந்திச் செல்கின்றன, ஒரு விந்துப்போலி முட் டைக் கலத்துடன் புணர்கிறது.
8. கருக்கட்டியபின் தலைகீழாதல், பாளைச்சுற்றுண்டாதல், போலிப்பூவுறையுண்டாதல், கவசம் உண்டாதல்
ஆகியவை நடைபெறுகின்றன.

153
9. கருக்கட்டிய முட்டை பிரிவடைந்து வித்தித்தாவரம் உண்டாகிறது. இது இருமடியானது. வித்தித் தாவரத்தில் அடி.,
உலோமம், வில்லையம் என மூன்று பிரிவுகளைக் காணலாம்.
10, உலோமம் நீள்வதால் கவசம் வெடித்து போலிப் பூவுறை, பாளைச்சுற்று ஆகியவற்றினூடாக வில்லையம் வெளி வந்து கீழ்நோக்கித் தொங்குகிறது.
11. சூழன்று வில்லையத்தின் சுவர்களையுண்டாக்குகின்றது. அகவுறையிலிருந்து வித்தித்தாய்க்கலங்களும் உண்டாகின்றன.
12, வித்தித்தாய்க்கலங்கள் ஒடுங்கற் பிரிவடைந்து ஒரு மடியான வித்திகளைக் கொடுக்கின்றன.
13, செலுத்திகளின் நீர்பருகுமசைவினால் வித்திகள் பரப்பப் படுகின்றன.
வகுப்பு: முசுக்கி (Musci) அல்லது பாசித்தாவரங்கள்
ஈரலுருத்தாவரங்களைவிட இவை பலவிதங்களில் சிறப் பியல்புகள் பெற்றுள்ளன. உவர்நீரைத் தவிர ஏனைய வாழிடங் களிளெல்லாம் இவை வளரக்காணப்படுகின்றன வென்றாலும் பெரும்பாலும் நிலத்திலேயேவளர்கின்றன, பெரும்பாலான பாசித் தாவரங்கள் ஈரப்பற்றுள்ள நிழலான இடங்களிலேயே செழிப்பாக வளர்கின்றன.அவை மரப்பட்டைகள், பழைய சுவர்கள், ஈரப்பற்றுள்ள பாறைகள் ஆகியவற்றில் அழகான பச்சைநிற பஞ்சு மெத்தை போன்று காணப்படுகின்றன. இவ் வகுப்பிலடங்கும் தாவரங்கள்யாவும் இலைகள் போன்ற அமைப்பு களைக் கொண்டிருப்பதுடன் நேராக வளரும் இயல்புடையனவு மாகும்.
புணரித்தாவரச் சந்ததியில் இரு வித்தியாசமான அமைப்பு கள் காணப்படுகின்றன,
1. இழைமுதல்: பச்சை நிறமுடைய பல கிளைகளைக்கொண்ட இழைகளாலான இழைமுதல் [Protonema ) நீண்ட காலத்திற்கு வாழ்கிறது. (3) இழை முதலிலிருந்து பல அரும்புக் ளுண்டாகி அவை இலைகளுடைய புணரித் தாவரங்களாக நிமிர்ந்த நிலையில் வளருகின்றன, இவை சமச்சீருடையன, இருவித புணரித்

Page 84
154
தாவரங்களிலும் வேர்ப்போலிசுளுண்டு. பல்கலங்களாலான வேர்ப் போலிகள் மூலைவிட்டமான குறுக்குச் சுவர்களையும், கிளைகளையும் கொண்டுள்ளன. அவை நிலத்திலே ஊன்றுவதற்கும், நீரை உறிஞ் சுவதற்கும் பயன்படுகின்றன, இலைகள் தண்டைச் சுற்றி சுருளி யாக அமைந்துள்ளன. அவற்றிற்குக் காம்புகள் கிடையா, ஆனால் மையநரம்பு உண்டு. உச்சிவளர்ச்சி மூன்று வெட்டுமுகங்களை யுடைய கூம்பகமான கவத்திலிருந்து (Pyramidal Call) நடைபெறுகிறது. ஆண்கலச்சனனியும், பெண்கலச்சனனியும், கொத்தாக முதலச்சின் உச்சியிலோ, பக்கங்களிலோ உண்டா கின்றன. மேற்பகுதியிலுள்ள இலைகள் பாலங்கங்களைச் சுற்றி மிக நெருக்கமாக அமைந்துள்ளன, பாலங்கங்களுடன் புடை வளரிகள் [ParaphyECH ) என அழைக்கப்படும் பல் கலங் களுள்ள மயிர்கள் காணப்படுகின்றன.
பற்றதா தே இகள் பதிறேதென்பது,
இலைகளுள்ள புணரித்தாவரங்களின் முதலச்சின்,
அல்லது பக்கக்கிளைகளின் உச்சியிலே வித்தித் தாவரங்கள் உண்டாகின் றன. ஈரலுருத்தாவரங்களிலுள்ளதைப் போன்றல்லாது பாசி களின் வித்தித்தாவரம் பெரிதாயும் அதிக சிறப்பியல்புகள் பெற்ற தாயுமுள்ளது. விருத்தியின் முற்பகுதியிலேயே வித்தித்தார் ரம் கவசத்தை உடைத்துக்கொண்டு வெளிவருகிறது. ஈரலுருத் தாவரங்களில் வித்திகள் முதிர்ந்த பின்னரே வித்திப்பிறப்பகம் கவசத்தினூடாக வெளிவருகிறதென்பது குறிப்பிடத்தக்கது. வித்தியாகின்ற இழையத்தில் மலடாக்கல் பெருமளவில் நடை பெறுவதால் வில்லையத்தின் மையத்தில் ஒரு சிறுகம்பம் (Colurmulla) உண்டாகி, விருத்தியடையும் வித்திகளுக்குத் தேவை யான நீரையும் உணவையும் சேகரித்து வைக்கிறது. சிறுகம்பத் எதைச் சுற்றியுள்ள வித்திப்பையினுள் வித்திகள் உண்டாகின்றன, பாசிகளிலே செலுத்திகள் கிடையாது. வில்வயத்தின் மேலுள்ள முடி திறக்கப்பட்டு சித்திகள் காற்றினால் பரப்பப்படுகின்றன. மூடிக்குக் கீழாகவுள்ள வாய்ச்சுற்றுப்பற்களும் இதற்கு உதவு கின் றன.
வகுப்புப் பிரிவு. இயூபிரியா ( Eubrya )
இவ்வகுப்பிலடங்கும் நிமிர்ந்து வளரும் புணரித்தாவரங் களிலே பல்கலங்களாலான நடுநரம்புடைய இலைகளுண்டு. வித்தித் தாவரத்திலே அடி, உலோமம், பிளில்லையம் ஆகியவையுண்டு. வித்தியாகின்ற இழையம் சிறுகம்பத்தின் மேற்பக்கமாக மூடி பயிருக்காமல், அகவுறையின் வெளிப்பகுதியிலிருந்து விருத்தியடை கிறது. முதிர்ந்த வில்லையத்தில் சிக்கலான பல இழையங்களுள் என. மூடியும் கங்கணமும் காணப்படுகின்றன.

1
பொகொநேற்றம் ( Pogonatum )
கவசம்
வில்லையம்
ஆண ங்ரூர் உச்சி
உலோமம்
இலை
இங்'
தண்டு
தண்டு
வேர்ப்பொலி
வேர்ப்போலி
படம் 56. பொகொநேற்றம் - பெண் தாவரம்; ஆண் தாவரம்
இலங்கையின் மேல்நாட்டுப் பகுதிகளிலே பொகொநேற்றம் சர்வசாதாரணமாகக் காணப்படுகின்றதெனினும் ஏனைய பிர தேசங்களிலும் இவை " வளர்கின்றன. மார்க்கான்சியா வாழு மிடங்களில் இவை வளர்கின்றதென்றாலும், அதைவிடக் குறைந்த ஈரப்பற்றுள்ள இடங்களிலும் வளரக் கூடியவையே. பதியத்திற் குரிய தாவரம் 3-5 அங்குல நீளமான நிமிர்ந்துவரும் புணரித் தாவரமாகும். தண்டின் அடிப்பாகத்தில் அநேக பல்கலங்களா லான வேர்ப்போலிகள் உண்டு. இவை இளமையில் வெண்மை யாகவும் முதிர்ச்சியடையும் பொழுது கபிலநிறமாகவுமிருக்கும். இவற்றில் குறுக்குச்சுவர்கள் மூலைவிட்டமாகவுள்ளன. இவற்றின் பிரதான தொழில் நிலத்திலே தாவரத்தை அனன்றுவதெனினும், உறிஞ்சும் அங்கங்களாகவும் தொழில்படுகின்றன.

Page 85
1565
மேற்ரேல்
வெளி
மேற்பட்டை
உள்மேற்பட்டை
அகத்தோல் ஒல்லியன் (மெல்லிழையம்) தடியம்
[வல்லிழையம் படம் 57. பொகொநேற்றம் -தண் டின் கு. வெ, மு.

157
"தண்டின் கட்டமைப்பு :
தண்டு பச்சை நிறமாகவும், உருளையுருவாகவுமிருக்கும். சிலவேளைகளில் கிளைகள் காணப்படும். குறுக்கு வெட்டுமுகத் தோற்றத்தில் அது வட்டவடிவமாகத் தென்படும். வெளிப்படை யில் மேற்ாெலும், அதனகத்தே மேற்பட்டையும் ( Cortex | மையத்தில் கடத்தும் பகுதியும் உள்ளன, மேற்பாற் கலங்கள் தடித்த சுவர்களையும் பச்சையவுருமணிகளையும் கொண்டுள்ளன, (மேற்றோலைச்சுற்றி தடித்த புறத்தோலொன்றுண்டு. இலை வாய்கள் இருக்கமாட்டா.மேற்பட்டையிலுள்ள கலங்கள் கடத் தும் பகுதியிலுள்ள கலங்களைவிடப் பெரியவை.பச்சையவுரு மணிகளைக் கொண்ட இக் கலங்கள் நெருக்கமாக அமைந்துள்ளன, முதிர்ந்த தண்டிலே மேற்பட்டையின் கரையோரமாக தடித்த சுவர் சளைக்கொண்ட கலங்களும், உட்புறமாக மெல்லிய சுவர்களை யுடைய கலங்களும் காணப்படும். பாடத்தும் பகுதியைச் சுற்றி யுள்ள மேற்பட்டைக்கலங்களின் உட்படைகளிலே மாப்பொருள் மணிகளாகச் சேமித்து வைக்கப்படுகிறது. கடத்தும் பகுதியை இரு பகுதிகளாகப் டாரிக்கலாம். மையமாகவுள்ள தடியம் Hydrome | எனப்படும் வலயத்தில், பெரிய, தடித்த சுவர்களுடைய கலங் களுண்டு. இவை நீரைக் கடத்துகின்றன. தடியத்தைச் சுற்றி யுள்ள வலயம் 1 ஒல்லியன்'' (Leptome ) என அழைக்கப் படும். இது சிறிய, மெல்லிய சுவர்களையுடைய கலங்களாலானது. இக் கவங்கள் உணவுப் பொருள்களைக் கடத்துகின்றன, தடியமும் ( Hydrome ), ஒல்லியனும் ( Leptom: ") உயர்தாவ ரங்களின் காழ் Kylem1, உரியம் (
PhldLா | ஆகியவற்றின் தொழில்களைச் செய்கின்றனவென்பது குறிப்பிடத் தக்கது. மேற்பட்டைப்பகுதியில் காணப்படும் சிறிய பட்டிகை கள் தண்டின் கடத்தும்பகுதியிலிருந்து இலைக்குச் செல்லும் இலைச்சுவடுகளாகும்.
ஒளித்தொகுப்பு இழைகள்
[ெ1]]ப்பா இருது போனது தேரின் திருட்டு
ராசாப்
*?
கீழ் மேற்றோல் கடத்தும் பட்டிகை வல்லகுகுக் கலவிழையம்
படம் 58. பொகொநேற்றம் இல்-கு, வெ. மு.

Page 86
188
இலையின் கட்டமைப்பு :
இலைகள் வேலுருவானவை, அடிப்பாகம் அகன்றும் நுனி கூராகவுமுள்ளது. விருத்தியடைந்த நடுநரம்பொன்றுள்ளது. குறுக்குவெட்டுமுகத்தோற்றத்தில் இல் குறுகியும், நடுப்பகுதியில் நடுநரம்பு ஒரு எறியமாகவும் காணப்படும், கீழ்ப்புற மேற் றேல் ஒரு தொடர்ச்சியான படையாகவுள்ளது. அதன்மே லுள்ள நிறமற்ற கலங்களிலே சேமிப்புப் பொருளான மாப்பொருளுண்டு. எனவே இது சேமிப்பு இழையமென அழைக்கப்படுகிறது. மைய நரம்புப் பகுதியிலே கடத்தும் கலங்கள் உண்டு. இவற்றிற்குக் கீழாகவும், மேலாகவும் வல்லவுருக்கலளிழையம் உண்டு. மேற் புறப்படையிலிருந்து நிமிர்ந்து வளரும் பச்சைநிற இழைகள் பலவுள்ளன.இவ்விழைகளில் பச்சையவுருவமுள்ளதனால் சூரிய ஒளியைப் பெற்று, ஒளித்தொகுப்புமுறையால் மாப்பொருளைத் தயாரிக்கின்றன. இவை மேலே வெளித்தெரிவதனா லும், இடையே குறுகிய காற்றிடைவெளிகளைக் கொண்டுள்ளதனாலும் முழுப்பரப்பினூடாகவும் வாயுப்பரிமாற்றம் நடைபெறுகிறது. இவ்விடைவெளிகளிலே 4 நீர் சேமித்துவைக்கப்படுவதுமுண்டு. வெப்பமான காலத்தில் மேற்பக்கமாக இலை சிறிது மடிவதனால் மிகையாக ஆவியுயிர்ப்பு நடைபெறாமல் தடுக்கமுடிகிறது.
இனப்பெருக்கம் :
இனப்பெருக்கம் பதியமுறையாலும் இலிங்கமுறையாலும் நடைபெறுகிறது. 1. பதியமுறையினப்பெருக்கம் :
(1) முதல் இழைமுதலால் (Primary Protonema ] நடைபெறுதல் 1
அரும்பு
முளைக்கும் வித்தி
படம் 59, பொகொபிதற்றம் - திழைமுதல்

159
வித்தி முளைத்து பச்சை நிறமான இழைமுதல் உண்டா கிறது, இதிலிருந்து பக்க அரும்புகள் உண்டாகி, இலைசு ளுள்ள, நிமிர்ந்துவளரும் புணரித்தாவரங்கள் வளர் கின்றன.
(2)
துணை இழைமுதலால் ( Secondary protonema | நடைபெறுதல் :-
புணரித்தாவரங்களின் வேர்ப்போலிகளின் மேல் சில வேளைகளில் சூரியவொளி படும்பொழுது அவற்றிலிருந்து அரும்புகள் உண்டாகி இலைகளுள்ள புணரித்தாவரங்களாக வளர்கின்றன.
2. இலிங்கமுறையீளப்பெருக்கம்:
புணரித்தாவரம் ஈரில்லமுள்ளது . அதாவது, ஆண், பெண் தாவரங்கள் வெவ்வேறாகக் காணப்படுகின்றன.
புடைவெளll
ஆண் கலச்
சனணி
இக.
23கை
காம்பு இல்ல
TRLFi
படம் 80, பொகொநேற்றம் - ஆண் அங்குர
உச்சியின் நீ. வெ. மு. ஆண் அங்குரத்தின் உச்சி (Apex of male boot):-
ஆண் புணரித்தாவரத்தின் கீழ்ப்பகுதியில் இலைகள் பரம்பி பள்ளன் -ஆனல் உச்சியிலே அவை பூப்போன்ற சதபத்திரவுரு

Page 87
150
வாக Rosette like ] மிக நெருக்கமாகவுள்ளன. இவ் வமைப்பு கருச்சுற்று ( PErig0ாம் என அழைக்கப்படும். கருச்சுற்றிலே வெவ்வேறு விருத்திநிலைகளில் ஆண்கலச்சனனி கள் காணப்படுகின்றன, படச்சியின் நிலைக்குத்து வெட்டுமுகத் தோற்றத்தில் வெளிப்புறமாக இலைகளும், உட்புறமாக அநேக எஆண்சுலச் சனனிகளும் தென்படும், ஆண்கலச்சனனிகளுக்கி டையே பல காலங்களாலான அநேக புடைவளரிகள் ( ParaphySES ) உடள்ளன, அவற்றின் தொழில் இன்னதென்று சரிவரத் தெரியா விடினும், அவற்றினிடையேயுள்ள மயிர்த்துக்களிற் காணப்படும் நீர் ஆண்கலச்சனனிகள் உலராமலிருப்பதற்கு உதவுகின்றது. புடைவளரிகளின் முனைக்கலங்கள் விங்கியுள்ளன, புடைவளரிகளி லே பச்சையவுருமணிகள் இருப்பதனால் ஒளித்தொகுப்புமுறை யால் உணவு தயாரிக்கப்பட்டு விருத்தியடையும் ஆண்கலச்சனரி களுக்கு அளிக்கப்படுகிறது -
ஆண்கலச்சனனியின் விருத்தி;
T
படம் 61. ஆண்கலச் சனானியின் விருத்தி ஆண்கலச்சனனி மேற்பரப்பிற்குரியவொரு கலத்திலிருந்து விருத்தியை ஆரம்பிக்கிறது. பல குறுக்குப்பிரிவுகள் நடைபெற்று கீழுள்ள கலங்கள் கம்பமாக மாற, முனைக்கலம் இருவெட்டு முகங்களையுடைய உச்சிக்கலமாக மாறுகின்றது. இதிலிருந்து இரு புறமும் கலங்கள் வெட்டப்படுகின்றன. சுற்றுச்சாய்வுள்ள பிரி வால் வெளிப்புறமாக ஒருபடையாலான கஞ்சுகக் கலங்கள் ( Jacket Cellz ) உட்புறமுள்ள விந்துண்டாக்கும் காலங்களி விருந்து
Sporogenous Cells
பிரிக்கப்படுகின்

141
றன. மேலும் காலப்பிரிவுகள் நடைபெற காம்பும் ஆண்கலச் சனனியும் நீள்கின்றன.
விந்துப்போலி
படம் 62. ஆண்கல ச்சன னி
I Z 11

Page 88
162
ஆண்கலச்சனனி !
ஆண்கலச்சனனிகள் நீண்ட குண்டாந்தடியுருவானவை, (மார்க் கன்சியாவில் முட்டையுருவானதென்பதை முன்னர் அவதானித் தோம்). இவை பருத்த பல்கலங்களாலான காம்பின்மேற் காணப் படுகின்றன. ஆண்கலச்சனனியில் வெளிப்புறமாக ஒரு படை பபிலுள்ள மலட்டுக்கலங்கள் சுஞ்சுகக்கலங்கள் ( Jackut Cells ) என அழைக்கப்படும். அதனுள்ளே கனவடிவான ஆண்குழியத் தாய்க்காலங்கள் (Androcyte Mother Cells உள்ளன. கஞ்சுகக்கலங்களின் உச்சியிலே ஒன்று. இரண்டு அல்லது பல கலங்கள் உண்டு, இ க் க வ ங் க ள் பெ ரி ய ன வா யு ம், த டி த் த சுவருடையனவாயும் பளிங்குப்பண்புள்ளனவாயும் காணப்படும். ஒ வ் வொரு ஆண்குரியத்தாய்க்குலமும் பிரி! வடைந்து இரு ஆண்குரியக்கலங்களைக் கொடுக்கிறது. ஆனால் பிரிவு மார்க்கான்சியாவில் நடைபெறுவது போல் மூலை விட்டமாக நடைபெறுவதில்லை, ஒவ்வொரு ஆண்குழியக்கலமும் ஓரளவு சுருளி வடிவானதாயும், முனையிலே இரு சவுக்குமுளகளைக் கொண்டதுமான வொரு விந்துப்போலியாக மாறுகிறது.
ஈரப்பற்றுள்ள காலத்திலே முதிர்ந்த நிலையிலுள்ள ஆண் கலச்சனனியின் சுவர்க்கலங்கள் நீரை உறிஞ்சிப் பருக்கின்றமை! யால் இக் கலங்களில் அமுக்கம் அதிகரித்து, மூடிக் கலங்கள்
- கழுத்து
பொரியாக
பெண்கலச்சனனி
சாயங்காய
கத்திரிகா
இனம்:
க.
உறகேக்கை
கொங்காரு
கட்டடம்
உதரம்
காம்பு
இலை
படம் 63. பொகொ ேநற்றம் - பெண் அங்குர உச்சியின் நி. னெ.மு.

163.
- வெடிக்கின்றன, அல்லது மூடிக்கலங்கள் ஏனைய சுவர்க்கவங்களி லிருந்து வி டு ப டு கி ன் ற ன. இதனால் விந்துப்போலிகள் சளியத்துடன் வெளியேறுகின்றன.
பெண் அங்குரத்தின் உச்சி ( Apex of Female Shoot ):
பெண் புணரித்தாவரத்தின் உச்சியிலே பெண்கலச்சனனி கள் (ஆதிச்சனனிகள்) உண்டாகின்றன. ஆன்ன தாவரத்திலுள்ள தைப் போன்று இதில் இலைகள் சுருச்சுற்றாக அமையவில்லை, பெண் அங்குர உச்சியின் நிலைக்குத்தான வெட்டுமுகத்தோற்றத்தில் அநேக பெண்கலச்சனனிகளும் புடைவளரிகளும் காணப்படும். குடுவையுருவான பெண்கலச்சனனி மார்க்கான்சியாவினதைப் போன்றதே. உதரத்தின் சுவர் இருபடைகளாலானது, (மார்க் கான்சியாவில் ஒருபடையாலானது)
பெண்கலச்சனணியின் விருத்தி !
2 2 2
@ 27
1 ED
படம் 64. பெண்கலச்சனளி விருத்தி
பெண் கலச்சனனிகள் மேற்பரப்பிற்குரிய கலங்களிலிருந்து உற்பத்தியாகின்றன. ஒரு மேற்பரப்புக்கலம் இரு வெட்டு முகங் களைக் ( Two cutting faces) கொண்ட உச்சிக்கலாமா சுத் தொழில்பட்டு 4-8 கலங்களை உண்டாக்குகின்றன. இவற்றின் பிரிவுகளால் நீண்ட கம்பம் போன்ற காம்பு உண்டாகின்றது. உச்சிக்காலம் திடீரென மூன்று வெட்டுமுகங்களைக்கொண்ட உச்சிக் கலமாக மாறி, சுற்றுச் சாய்வுப் பிரிவினால் ஒவ்வொரு முகத்திலும் ஒரு கலம் உண்டாகிறது. எனவே மையத்திலுள்ள அச்சுக்குரிய கலத்தைச் சுற்றி மூன்று சுற்றுக்குரிய தொடக்கக்கலங்கள் ( Peripheral initials ] காணப்படுகின்றன.மூன்று சுற்றுக்குரிய தொடக்கக் கலங்களிலும் நிலைக்குத்தான பிரிவு ஏற் பட்டு ஆறு கஞ்சுகத்தொடக்கக்கலங்கள் உண்டாகின்றன.

Page 89
164
குறுக்குப்பிரிவுகளேற்பட்டு இக்கலங்களிலிருந்து ஆறு வரிசை களில் ஒவ்வொரு வரிசையிலும் 40-50 தவங்கள் உள்ள உயரமான கழுத்து உண்டாகிறது. கீழ்ப்புறத்தே உதரப்பகுதியில் சுற்றுச் சாய்வுப் பிரிவு ஏற்பட்டு இரு படையினலான சுவர் உண்டாகிறது. கஞ்சுகத்தொடக்கக்கலங்கள் உண்டாகும் பொழுது மைய அச்சுக்கலமும் குறுக்குப்பிரிவடைவதனால் முதல் மூடுகலமும் ( Primary Cover CE11 ] மையக்கலமும் Central
cell ) உண்டாகின்றன. மையக்கலம் குறுக்குப் பிரி வடைவதனால் முதற் கால்வாய்க் கலமும் (Primary canal gell | நடதரக் கலமும் WEntra cell] உண்டாகின்றன. பொண் கலச் சனனியின் கழுத்துக் கலங்கள் இரு உற்பத்தி ஸ்தானங்களி லிருந்து பெறப்படுகின்றதெனக் கருதப்படுகிறது. முதல் மூடு கலத்திலிருந்து பக்கவாட்டில் உண்டாகும் சலங்களிலிருந்து கழுத் தின் மேற்பகுதி விருத்தியடைகிறது. கழுத்தின் நடுப் பகுதியும், கீழ்ப்
கழுத்து
ட்ப ரா
உதரம் உ. கா. சி.
Uமட்டை,
படம் 65. பெண்கலச்சனனி - பொகொகேற்றம்

156
[பகுதியும் கஞ்சுகக்கலத் தொடக்கக்கலங்களிலிருந்து உண்டா கின் றன, முதல் மூடுகலத்திலிருந்து உட்புறமாக வெட்டப்படும் சுலங்கள் மேற்பகுதிக் கழுத்துக் கால்வாய்க் கலங்களாகின்றன.
N, C. C , கழுத்தின் நடுப்பகுதியிலும் கீழ்ப்பகுதியயி ல முள்ள கழுத்துக் கால்வாய்க் கலங்கள், முதற் கால்வாய்க் களத்தி லிருந்து பெறப்படுகின்றன. பெண்கலச்சனனியின் விருத்தி முடி அறுந்தறுவாயில் உதரக்காபம் ஒரு சிறிய உதரக்கால்வாய்க் கல மாகவும், ஒரு பெரிய முட்டைக் கலமாகவும் டாரிவடைகிறது. பொர்னாக பச்சன இனி :
பெண்கவச்சனணி குடுவையுகுவானது. அது பல் கலங்களைக் கொண்ட காம்பினால் வாங்கியிலே பதிந்துள்ளது. உதரத்தின் சுவர் இருபுடைகளாலானது , ஆனால் ஆறு நீள் வரிசைகளிற் சுலங் களைக் கொண்ட நீசோட கழுத்து ஒருபடையினலான சுவரை யுடைய து', அவ்வொரு வரிசைமாலு டம் ஒன்றின்மேலொன்றாக 41-50 கலங்கள் உண்டு, கழுத்துக் கால்வாயில் 3 D- 50 கழுத்துக் கால் வாய்க் காபங்களுள்ளன. உதரத்தில் ஒரு பெரிய முட்டைக் கல மும், ஒரு சிறிய டதரக்கால்லாய்க்கலமும் உள்ளன .. கழுத்தின் [மேற்பாகம் முடிக்கலங்களால் மூடப்பட்டுள்ளது.
சனனி குடுவையலே பதிந்துள்ளதசைகளிற்
கருக்கட்டல்!
புணரித்தாவரங்கள் மழைநீரினாலோ, பனியினாலோ, ஈர மாக்கப்படும் பொழுது கருக்கட்டல் நடைபெறுகிறது. மழைத் துளிகளோ, பனித்துளிகளோ கருச்சுற்றிலே விழும்பொழுது விந்துப்போலிகள் தெரிவிக்கப்பட்டு அருகேயுள்ள பெண்பு3ாரித் தாவரங்களின் பெண்கலச்சனளிகளை படைகின்றன 'பனம் காலத்திலே மலைச்சரிவுகளிலே வளரும் தாவரங்களில் விந்துப் போலிகள் நீரினாலே கடத்தப்படக்கூடும், அல்லது அவை நீத்திப் பெண்கலச்சனனிகளை யடையக்கூடும், பூச்சிகளும் விந்துப்போலி களைக் கடத்துகின்றதெனக் கருதப்படுகிறது.
முதிர்ந்த பெண்கவுச்சனனியிலே கழுத்துக்கால்வாய்க் கலங்களும், உதரக் கால்வாய்க்சுடிவமும் அழிந்து, சளியம் படேலாடா வதால் அக்கம் அதிகரித்து முடிக்கலங்கள் திறக்கின்றன. கழுத்தி மாடாக வெளிவரும் சனியம் வெல்லடக்கரைசலைக் கொடுள்ள தபால் விந்துப்போலிகள் இதனாற் கவரப்பட்டு, கழுத்தினூடாக மந்தி,முட்டைக்கலத் ைக யடைகின்றன. ஒரு விந்துப்போலி முட்ட சுகத்துடன் சேர்த்து கருக்கட்டுகிறது, கருக்கட்டலின். பின் உண்டாகும் சுகம் சுனச் சுற்றி யொரு சுவரைச் சுரக் சிறது. இறுதியில் புல் டவான் நடைபெற்று வித்தித் தாவரமா சு வளர்ச்சியடைகிறது. பொகோநேற்றத்தின் வித்தித் தாவரம் சிக்க வான அமைப்பைக் கொண்டது.

Page 90
165
வித்தித்தாவரத்தின் விருத்தி : -
நுகம்
அடிக்கு மேலான கலம் அடிக்குக் கீழான கலம்
உச்சிக்கலம்
(இ - 5)
வில்லையம்
வில்லையம்
சூழுரை
அகவுறை
சூழன்று வித்தியாகின்ற விழையம் சிறுகம்பம்
உலோமம்
உலோபம்
அடி
அடி
படம் 66, வித்தித்தாவர விருத்தி
நுகம் குறுக்குப்பிரிவினால் அடிக்கு மேலான கலமொன் னறயும் |
Epibasal Cell
1, அடிக்குக் - சீமான கலமொன்றையும் (Hypobasal Ce11 ) உண்டாக்கு கிறது.இரு கலங்களும் இரு வெட்டுமுகங்களுடைய உச்சிக் கலங்களாகத் தொழிற்பட்டு பல கலங்களை உண்டாக்குகின்றன, வில்லையமும், உலோமத்தின் ஒரு பகுதியும் அடிக்கு மேலான கலத்திலிருந்து விருத்தியடைகின்றன, அடியும் [ Foot உலோமத்தின் மறுபகுதியும் அடிக்குக்கீழான பகுதியிலிருந்து விருத்தியடைகின்றன, விருத்தி தொடர்ந்து நடைபெற, உதரத் தின் சுவர் பருத்து சுவசமாக மாறுகிறது. அவ்வேளையில் சுழுத்து சிறிதுசிறிதாக அழிந்துபோகிறது. முளையத்தின் அடிப்பகுதி, அதாவது ''அடி'' புணரித்தாவரத்தின் இழையத்திலே நன்றாகப்

17
ரத்தினால் சம், உடைத்திற்குப் பே வித்தித்த
பதிந்து உணவுப்பொருள்களை உறிஞ்சி வளரும் வித்தித்தாவரத் திற்குக் கடத்துகின்றது. சில காலத்திற்குப் பின் உலோமம் விரை வாக நீள்வதனல் கவசம் உடைபட்டு, அதன் மேற்பகுதி நிளும் வித்தித்தாவரத்தினால் மேலே கொண்டுசெல்லப்படுகிறது. சுவ சத்தின் அடிப்பாகம் மடலாக எஞ்சியிருக்கும், வித்தித்தா வரத் தின் உச்சிப்பகுதி வீக்கமடைந்து வில்லையமாக விருத்தியடை கிறது.மேல் உச்சிக்கலம் இருவரிசைகளில் கலங்களை வெட்டு சிறுது. இவை உட்புறக்கலங்களாகவும் வெளிப்புறக்கலங்களாக வும் விருத்தியடைகின்றன. வெளிப்புறக்கலங்கள் சுற்றுச்சாய் வுத் தளமாகவும், எதிர்ச்சாய்வுள்ள முறையிலும் பிரிவடைந்து வில்லயத்தின் சூழுறையாகிறது. உட்புறக்கலங்களும் அதே போல் பிரிவடைவதனால் அகவுறையுண்டாகிறது. உட்புறக்கவங் களின் கீழ்ப்பகுதி உலோமமாக மாறுகின்றது. அகவுறை மேலும் பிரிவடைவ தானுல் சிறுகம்பம் எனப்படும் மைய மலட்டிழையமும் அதைச்சுற்றி வித்தியாகுவிழையமும் உண்டாகின்றன, சிறுகம்பத் திற்கும் வித்தியாகின்ற இழையத்திற்குமிடையே காற்றிடைவெளி உண்டாகின்றது. காற்றிடைவெளிகளிலே குறுக்காக புன்சலா கைகள் (TrabEcula எனப்படும் கலங்களுள்ளன, இவற் றிலே பச்சையவுருமணிகள் உண்டு. வித்தியாகின்ற இழையத் திற்கு வெளியேயுள்ள பகுதியெல்லாம் சூமுறையிலிருந்தே யுண்டா கின் றன. வித்திப்பையின் வெளிச்சுவருக்கு வெளியே மற்றொரு காற்றிடைவெளி உண்டாகிறது. இதிலும் பச்சையவுருமணி களைக் கொண்ட புன்சலாகைகள் காணப்படுகின்றன. வில்லையத் தின் உச்சிப்பகுதி மூடியாகவுள்ளது, முடியின் அடியில் கங்கணம் எனப்படும் சிறப்பியல்பு பெற்ற கலங்கள் ஒரு வளையமாகக் காணப்படும், கங்கணத்திற்கு உட்புறமாக வித்தியாகின்ற இழை யத்திற்கு மேலாகவுள்ள கலங்களின் ஆரைக்குரிய சுவர்களும், முன்புறச் சுவர்களும் தடிப்பாகின்றன. இவை வாய்ச்சுற்று என அழைக்கப்படும், முதிர்வடையும் பொழுது ஆரைக்குரிய சுவர்கள் வாய்ச்சுற்றுப் பற்களாகின்றன, உட்புறமாகவிருக்கும் புடைக்கல் விரையக்கலங்கள், அதாவது சிறுகம்பத்திற்கு மேலுள்ள கலங் கள் விரிவடைந்து ஒரு வட்டத்தட்டாகவுள்ளது. இது மேன்மென் தகடு ( Epiphragm ] என அழைக்கப்படுகிறது. வில்லை யத்தின் அடிப்பாகம் மலடாகவே இருக்கிறது. நெருக்கமற்ற கலங்களைக் கொண்ட இப்பகுதி வெளிவளரி ( Apophysis) என்றும் அழைக்கப்படும். இப்பகுதியில் இலைவாய்கள் கிடையாது.
முதிர்ந்த வித்தித்தாவரம் ;
முதிர்ந்த வித்தித்தாவரத்தில் மூன்று பகுதிகளுள்ளன. அவையாவன - அடி, உலோமம், வில்லையம் என்பன, பல அங்குல நீளமுடைய "அடி" "புணரித்தாவர இழையத்திற் பதித்து உணவை உறிஞ்சுகின்றது. உடலோமம் வில்பயத்தை காற் றிலே மேலே தூக்கிவைத்திருக்கிறது.அடியினால் உறிஞ்சப்படும்

Page 91
188
முடி யுரு
வாய்ச்சுற்று
கங்கணம்
இடி இ டி - 9 * ம தி 5
மேற்ரோல் பச்சையவிழையம் வெளிக் காற்றிடைவெளி வித்திப்பையின் வெளிச் சுவர் வித்திப்பை
வித்தி
வித்திப்பையின் உட்சுவர் சிறு சலாகை உட்காற்றிடைவெளி சிறு கம்பம்
வெளிவளரி
உலோமம்
படம் 67, பொகொநேற்றத்தின் வித்தித்தாவரம் பிரு மு.

169
வாய்ச்சுற்றுப் பற்கள்
மேன், மென்றசுடு
வாய்ச்சுற்றுப்பற்கள் ஹாடாக
மேற்ரேல் பச்சைய விழையம் சிறு சலாகை உட் காற் விடைவெளி வித்திப்பை சிறு கம்பம்
வித்திப்பை யின் உட்சுவர்
பிந்திப்பையின் வெளிச்சுவர் வெளிக் கார் றிடைவெளி
வில்லயத்தினூடாக
படம் 68. வித்தித்தாவரத்தின் கு. வெ, மு.

Page 92
17]
நீசரையும் உணவையும் விருத்தியடையும் வித்தியாகின்ற இழை யத்திற்கு உலே!ா மம் கடத்துகின்றது. வில்லையம் மார்க்கான்சியா விலுள்ளதைவிட மிகச் சிக்கலானது. மலடாகவுள்ள வில்யைத் தின் கீழ்ப்பகுதி வெளிவளரியென அழைக்கப்படுகிறது. இதில் இலைவாய்கள் கிடையாது. வில்லயத்தின் மையத்தில் சிறுகம்பம் எனப்படும் மலட்டுக்கலங்களுள்ளன. அதைச்சுற்றி குழாயுருவில் வித்திப்பை உள்ளது.. வித்திப்பையின் உட்புறமாகவும் வெளிப் புறமாகவும் காற்றிடைவெளிகள் உள்ளன. இரு காற்றிடை வெளிகளிலும் புன் சபா பகைகள் உள்ளன. இக் காற்றுக்கல்விழை யங்கள் பச்சையவுருமணிகட்டளக் கொண்டுள்ளதால் ஒளித்தொகுப்பு முறையால் மேலதிகமான காபோவைதரேற்றுக்களைத் தயாரித்து விருத்தியடையும் வித்திகளுக்குக் கொடுக்கின்றன. வில்லையத்தின் சுவர் மூன்று படைகளிற் க ல ங் க ள க் கொண்டுள்ளது. வெளிப்புறமாகவுள்ள படை மேற்ரேல் என அழைக்கப்படும். அதன் கீழாகப் பச்சையவுகு பயணிகளைக் கொண்ட பச்சையலிழை யம் உண்டு, வித்திப்பையின் வெளிச்சுவர் வில்லியைச்சுவரின் முன் ரவது படையாகும்.. வித்தாகின்ற வித்தகவிமையத்திலிருந்து உண்டாகும் வித்தித்தாய்க்கலங்கள் முதலில் ஒடுங்கற் பிரி! வடைந்து அதைத்தொடர்ந்து இழையவுருப் பிரிவடைந்து நாம்
கூற்றுத் தொகுதியான வித்திகளை (
'Tetrad of Sports | உண்டாக்குகின்றன.
வில்லையத்தின் மேற்பகுதி கூம்புருவான மூடியாகவுள்ளது. மூடியின் அடிப்பாகத்தில் தடித்த ஆனரக்குரிய சுவர்களையுடைய யேற்றேற்கலங்கள் ஒரு வளையமாகவுள்ளன. இவை சுங்கணம்
Ammulu ) என அமைக்க
] என அழைக்கப்படும். சுங்கணத்தின் கீழ் வலயக்கலங்கள் மெல்லிய சுவர்களாலானவை, வில்லையும் நன் ராக முதிர்ந்த பின்னர் மெல்லிய சுவர்களையுடைய காலங்கள் உலர்வதனால் மூடி வில்லையத்திலிருந்து வேறாக்கப்படுகிறது. வில்லை யத்தின் வாயைச்சுற்றி கங்கணத்திற்கு உட்புறமாக, வித்தியா கின்ற இழையத்திற்கு மேலாசு, வாய்ச்சுற்றுப் பற்களைக் [ Peristomial teeth | கொண்ட வாய்ச்சுற்று f Puristome | உள்ளது. சிறுகம்பத்தின் மேற்பகுதி தட்டையான வட்டத் தட்டாக விரிவடைந்துள்ளது. இது மேல்மென்றுகடு ( Epiph
Tagm) என அழைக்கப்படும், இதன் கலங்கள் வாய்ச் சுற்றுப்பற்களை முட்டிக் கொண்டிருக்கின்றன. வாய்ச்சுற்றுப்பற் களினிடையேயுள்ள துவாரங்கள் பொப்பி வில்லையத்தில் ( Poppy
Capsule) உள்ளது போன்று ஒரு வளையமாகக் காணப் படுகின்றன. காற்றினால் வித்திப்பிறப்பகம் அசையும் பொழுது வித்திகள் இத்துவாரங்களினூடாக வெளியேற்றப்பட்டு பரவுகின்
ரன்,
வித்தி முளைத்தல் :
வித்திக்கு இரு சுவர்கள் உள. வெளிச்சுவர் வித்திப்புறக் கவசம் என்றும், உட்சுவர் வித்தியகக்கவசம் என்றும், அரைக்கப்

171
படும். வித்தியின் முதலுருவில் பச்சிலையமும் சேமிப்பு உணவுப் பொருள்களும் காணப்படும், சேமிப்புணவு பெரும்பாலும் எண் ணெய்ச் சிறு கோளமாகவே உள்ளது. உகந்த சூழ்நிலையில் வித்தி முளைக்கும்பொழுது வித்திப்புறக்கவசம் வெடித்து, வித்தி யசுக் கவசம் வெளிவந்து ஒரு பச்சைநிற இழைமுதல் உண்டா கிறது. இழைமுதல் செழிப்பாகக் கிளைத்து, கிளைகள் வேர்ப்போலி களால் நிலத்தில் ஊன்றப்படுகின்றன. இழைமுதலின் குறுக்குச் சுவர்கள் சாய்வாகக் காணப்படும், இதை முதலில் பச்சையவுரு மணிகள் உள்ளதாலும், வேர்ப்போலிகள் நீரையும் கனியுப்புக் களையும் நிலத்திலிருந்து உறிஞ்சுவதாலும், அவை ஒளித்தொகுப்பு முறையால் காபோவைதரேற்றைத் தயாரித்து நீண்ட காலத்திற்கு சுயாதீனமாக வாழ்கின்றன, பின்னர் பக்க அரும்புகளுண்டாகி இலைகளுடைய புணரித் தாவரங்கள் வளர்கின்றன. வித்தித்தாய்க் கலங்களிலிருந்து ஒடுங்கற் பிரிவினாலுண்டாகும் வித்திகளின் எண் ணிக்கையில் அரைவாசி பெண்புனாரித்தாவரங்களாகவும், மிகுதி ஆண்புணரித்தாவரங்களாகவும் விருத்தியடைகின்றன.
4-]
புரித் தாவரம் 1% {
புணரித்தாவரம்) <-
ஆண்கலச்சனனி பெண் கலச்சனனி
இழைமுதல் இழைமுதல்
விந்துப்போலி [X) முட்டை (x)
வித்தி X
வித்தி x |
(கருக்கட்டல்)
(ஓடுங்கற்பிரிவு )
நுகம் (24)
வித்தித்தாய்க்குலம்
17 *
-> வித்திப்பிறப்பகம்
X
பொகொநேற்றத்தின் வாழ்க்கைச் சக்கரம்

Page 93
172
சந்ததிப்பரிவிருத்தி
ஒருமடியான வித்தி முளைத்து இழைமுதலுண்டாகி, அதிலிருந்து இலைகளுள்ள புணரித் தாவரங்கள் வளர்கின்றன, இவற்றின் உச்சியிலே ஆண்கலச்சனணிகளும், பெண்கலச்சன்னி களும் உண்டாகின்றன.இவ்வமைப்புகளெல்லாம் புணரித்தாள் ரச் சந்ததியைச் (அல்லது இலிங்கச் சந்ததியைச் சேர்ந்தவை யாகும். ஆண்கலச்சனனியிலிருந்துண்டாகும் விந்துப்போலி பெண்கலச்சனனியிலுள்ள முட்டையுடன் சேர்ந்து கருக்கட்டு வ சனல் இருமடியான நுகம் உண்டாகிறது. இதுவே வித்தித் தாவரச் சந்ததியின் முதல் நிலையாகும், இது வளர்ச்சியடைந்து வித்திப்பிரிப்பகம் உ ண் ட ா கி ற து.. வித்திப்பிறப்பகத்தின் தொழில் வித்திகளையுண்டாக்குவதேயாதலால் இது வித்தித் தாவரம் எனவும் அழைக்கப்படுகிறது. வித்தித்தாவரம் இலிங்க மில் சந்ததியைச் சேர்ந்ததாகும், வித்தித்தாவரத்திலுண்டாகும் இருமடியான வித்தித்தாவரத்தாய்க்கலம் ஒடுங்கற் பிரிவடைந்து ( Maiosis ஒருமடியான நான்கு வித்திகள் உண்டாகின் றன. இவற்றில் இரு வித்திகள் இலைகளுள்ள ஆண்புணரித்தாவ ரங்களை உருவாக்கும் இழை முதல்களாகவும், ஏட்ன ய இரு வித்தி கள் இலைகளுள்ள பெண்புணரித்தாவரங்களை உருவாக்கும் இழை முதல்களாகவும் முளைக்கின்றன. எனவே பொகொநேற்றத்தின் வாழ்க்கைச் சக்கரத்தில் புணரித்தாவரச் சந்ததியும் (இலிங்கப் பரம்பரை அல்லது சந்ததி வித்தித்தாவரச் சந்ததியும் (இலிங்க மில் சந்ததி ஒழுங்கான முறையில் மாறி மாறி வரும். இதுவே சந்ததிப்பரிவிருத்தியெனப்படுகிறது.

173
பிரிவு : திரக்கியோபீற்றா (Tracheophyta ) -
கலன்றாவரங்கள் ( Vascular plants )
இப் பிரிவிலடங்கும் தாவரங்களிலெல்லாம் காழ், கட்சியம் ஆகியவற்றைக் கொண்ட கலன்றொகுதி உண்டு. காம் குழற் போலிகளைக் கொண்டுள்ளது. வித்தித்தாவரம் - புணரித் தாவரத்தை விடப் பெரிதாகவும், முதிர்ந்த நிலையில் சுயாதீன பமாக வாழக்கூடியதாகவும் உள்ளது - அடிப்படையில் கலன்றாவ ரங்கள்யாவும் நிலத்தில் வாழ்வதற்கேற்றனவேயாயினும், நீர்ப் பன்னம், நீர் அல்லி போன்றவை நீரிலேவாழ்வது நிலத்திலிருந்து நீருக்குத் திரும்பிச் சென்று இயல்பையே குறிக்கும். அலன்றொகுதி யுடைய தாவரங்களின் விருத்தி தாவர இராச்சியத்தின் கூர்ப்பிலே ஒர் முக்கிய திருப்பமாகும். இத் தாவரங்கள் ஒரு அல்காப்பிய விலிருந்தே நேரடியாக விருத்தியடைந்திருக்கின்றனவென்று கூறு வதற்குச் சான்றுகள் உள்ள பெரும்பாலும் இவை குளோரோ பீற்றவிலிருந்து உண்டாகியிருக்கலாமெனக் கருதப்படுகிறது.
திர்க்கியோபற்ற நான்கு உடப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட் டுள்ளது, அவையாவன :- (1) சைலொப்சிடா, [2] இலைக்கொப் சிடா, (3) இசுப்பினோப்சிடா, (4) தெரொப்சிடா.
தெரொப்சிடா என்னும் உபபிரிவு மூன்று வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன :-
வகுப்பு : (1) ஃபிலிசி னே, (2) கிமினேசுப்பெர்மே (வித்து மூடியிலிகள்), (3) அங்கியோசுப்பெர்மே. (வித்து மூடி யுளிகள்)
திரக்கியோபீற்ருவின் புக முதல் மூன்று உபபிரிவுகளான சைவொப்சிடா, இலைக்கொப்சிடா, இசுப்பினேப்சிடா ஆகியவற் றையும், தெரொபசிடாவின் முதல் வகுப்பான ஃபிலிசினேயை யும் ஒருமித்து "தாழ்கலன்றவரங்கள் " என அழைப்பர். இவைகளில் வித்துகளுண்டாவதில்லை, வித்திகளே ( Sports | யுண்டாகின்றன. கிடயினேசுப்பெர்யே, அங்கியோசுப்பொமே என்னும் இரு வகுப்புகளும் ஒருமித்து உயர் - கலன்றாவரங்கள்' என அழைக்கப்படும். இவற்றிலே வித்துகள் ( Sceds] உண் டாகின்றன.
தார்கவன்றவரங்கள் பழைய
முறைப்பாகுபாட்டின்படி 1: தெரிடோபீற்ற "வென
அழைக்கப்பட்ட
பிரிவி

Page 94
174
ற்குச் சமமானவையாகும்.
- உயர்கலன்றவரங்கள் இசு பெர்மெற்றோபிற்றா'' வென அழைக்கப்பட்ட பிரிவிற்குச் சம பமாகும்,
தாழ்-கலன்றாவரங்கள் (Lower Vascular plants)
(தெரிடோபிற்கு) (Pteridophyta)
பெரும்பாலான
தாழ்கலன்றாவரங்கள் நிலத்திலே வாழுகின்றன. சில தாவரவொட்டிகளாகவும், வேறு சில நீரிலும் வாழக் காணப்படுகின்றன. பிரியோபீற்றுகளைப் போன்று இவை யும் குறிப்பிடத்தக்சு முறையில் சந்ததிப்பரிவிருத்தியைக் காட்டு கின்றன. ஆனால் இவற்றில் முதிர்ந்த நிலையான வித்தித்தாவரம் புணரித்தாவரத்தில் ஒட்டுண்ணியாக இருக்காமல் சுயாதீனமான வாழ்க்கையையுடையது. வித்தித்தாவரம் பெரிதாயும் எங்கும் வியாபித்துமிருக்கக் காணலாம். புணரித்தாவரம் சிறிதாகவும், விருத்தி குன்றியதாகவும் காணப்படும். அது பிரியோபீற்றாக்களின் புணரித்தாவரங்களைப் போன்று சிக்கலான அமைப்புகளைக் கொண்டதுமல்ல, வித்தித்தாவரத்தின் அங்குரத்தொகுதி தண்டு, இலைகள் என வியத்தமடைந்திருக்கும், பெரும்பாலான வற்றிலே வேர்கள் உண்டு. ஓரளவு விருத்தியடைந்த கலன் தொகுதியும் உண்டு. வித்திக்கலங்கள் ( spOrangia ) கிளை களின் உச்சியிலே காணப்படலாம். தாவரங்கள் ஒத்தவித்தி யுள்ளவையாகவோ (ஓரே பருமனானவை. உ, ம், : நெபிரேசில பிஸ்), பல்லின வித்தியுள்ளனவையாகவோ (வெவ்வேறு பரும னைவை, உ.ம். 1 செலஜிநெல்லா இருக்கும். ஒத்த வித்தியுள்ள தாவரங்களில் புணரித்தாவரங்கள் முழுச்சுயாதீனம் பெற்றவை. இவை தமது' போசணைக்கு வித்தித்தாவரத்தை நம்பியிருப்ப தில்லை, பல்லினவித்தியுள்ள தாவரங்களில் புணரித்தாவரம் முற் ராகவோ, ஒரு பகுதியாகவோ வித்தித்தாவரத்தைச் சார்ந்துள் ளது. (தாழ்கலன்றவரங்கள் அநேகமான இயல்புகளில் பிரியோபீற்றுக்களை யொத்திருக்கின்றன. சந்ததிப்பரிவிருத்தி, புணரித்தாவரங்களின் அமைப்பில் பொதுவான ஒற்றுமை,
முதிர்ந்த ஆண்கலச்சனணிகளின் அமைப்பில் ஒற்றுமை, பெண் கலச்சனனிகளின் அமைப்பில் ஒற்றுமை, பெண்கலச்சனனியுள். முளையம் மூடப்பட்டிருத்தல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.) நl வித்திக்கவனுள்ள ( EuSporangiate
] என்று விவு ரிக்கப்படும் ஆதியுறையான ஆண்கலச்சனனி இலைக்கோபோ டி. யம், ஈக்குசிற்றம் ( Eqபiselபர்
, சில பன்னங்கள் ஆகியவற்றில் காணப்படுகிறது.

1TB
IE
1. தனிக்கம்பம்.
II. ஆரையமைப்புக்கம்பம்,
1I. முறுக்குக்சும்பம்.
IV பல்கம்பம்,
படம்-69. முதற்கம்ப வகைகள்
தாழ்கலன்றாவரங்களிலெல்லாம் கடத்துந்தொகுதி காழ். உரியம் என்பவற்றைக் கொண்டுள்ளது. காரில் கலன்கள் கிடையா. உரியத்தில் துணைக்கலம் கிடையாது. மையத்தி லுள்ள காழ்க்கலங்களை முற்றாகச்சுற்றி ஒரு படையாக உரியக் கலங்களிருக்கும் கலன்சுட்டு இழையமே மிக ஆதியானதாகும். இது முதற்கம்பம் [Protostel | பான அழைக்கப்படுகிறது. முதற்கம்பத்தில் கார்கள் ஒப்புரவான வெளிவட்டத்தை யுடை யானவாயிருந்தால் அது தனிக்கம்பம் [ Haplastel) என அழைக்கப்படும். காழ் நட்சத்திரம் போன்று -ஆரையாகும் சோணைகளையுடையதாயிருந்தால் அது ஆரையமைப்புக்கம்பம் factinostels) என அழைக்கப்படும். ஆரையமைப்புக்கம்

Page 95
176
பத்தைவிட தனிக்கம்பம் ஆதியானதெனக் கருதப்படுகிறது. தண்டின் கம்பத்திலிருந்து மேற்பட்டை ( COrtER 1 யினுாடாக இலக்குச் செல்லும் சுடத்துந்தொகுதிப்பட்டிகை இலைச்சுவடு எனப்படும். தண்டின், கடத்துந்தொகுதியை கிளயின் (தொகுதி யுடன் தொடுக்கும் பட்டின்சு கிளேச்சுவடு எனப்படும். ஒரு (வேர் தண்டிலிருந்தோ, வேறொரு வேரிலிருந்தோ உற்பத்தியாகும் பொழுது வேர்ச்சுவடு உண்டாகும். முதற்கம்பத்னதயுடைய தண்டினது இலச்சுவடு அவையுண்டாகும் கம்பத்தின் அமைப் பையே பொதுவாகக் கொண்டிருக்கும், காம் துண்டங்களாக்கப் பட்டிருந்தால் அது முறுக்குக் கம்பம் - Pluctostelt எனப் படும், மேற்றோலில் பல தனிக்கம்பங்களிருந்தால் அது பல்கம்பம் [ polystelE ) என அழைக்கப்படும், மையவிழையத்தைச் சுற்றி உருளவடிவாக கலன் சுட்டுத்தொகுதி அடையும் பொழுது அது குழாய்க்கம்பம் ( Siphonosticle பா ) எனப்படும்.
இருமைப்பேறு ள்ள வரிச்சுருட் கம்பம் (முப்பரி மாணம்)
11. குழாய்க்கம்பம்
(11,இருமைப்பே றுள்ளவரிச்சுரு
ட்கம்பம்,
1v, வெளியுரியமும்
ள்ளவரிச்சுருட் கம்பம்,
III (1)
N' வலைக்கம்பம்.
படம், ரப்

1TT
குழாய்க்கம்பத்திலே இலைச்சுவடு உற்பத்தியாகுமிடத்திற்கு மேலாக உருளையில் ஒரு இடைவெளி யுண்டாகிறது. இது இலை யிடைவெளி யெனப்படும். ஆதியான குழாய்க்கம்பத்தில் காழைச் சுற்றி உட்புறமாகவும், வெளிப்புறமாகவும் உரியம் காணப்படும். அதிக எவிருத்தியுடைய தாவரங்களிலே உட்புறமாக உரியம் இருக்க மாட்டாது. இலையிடைவெளியுள்ள கம்பங்களையுடைய தாவரங் களில் எப்பொழுதும் பெரிய இலைகளும், இலையிடைவெளியற்று கம்பங்களையுடையவற்றில் சிறிய இலைகளும் காணப்படும். அதிகம் விருத்தியடையாத குழாய்க்கம்பத்திலே அடுத்தடுத்துள்ள இடை வெளிகள் ஓரளவு தூரத்திலேயே உள்ளன. இவ்வாறான ஒன்றன் மேலொன்று படிந்திராத இடைவெளிகளைக் கொண்ட கம்பம் வரிச்சுருட்கம்பம் ( Solenostcle) எனப்படும். நெபிற லெப்பிஸ் என்னும் பன்னம் போன்ற தாவரங்களிலே அடுத்தடுத் துள்ள இடைவெளிகள் ஒன்றன்மேலொன்றாகப் படிந்திருந்தால் அவ்வாறான கம்பம் வலைக்கம்பம் ( Dictyastele ) எனப் படும். இவற்றின் குறுக்கு வெட்டுமுகத் தோற்றத்தில் பல இசை சுவடுகள் தென்படும். ஒன்றன்மேலொன்றாகப் படிந்திருக்கும் இரு இடைவெளிகளின் பக்கங்களிலேயுள்ள கலன்கட்டுத் தொகுதியின் பகுதிகள் துண்டக்கம்பங்கள் ( meristeles) எனப்படும். புலணார்ச்சியில் - பிறப்பும், வித்தியில் - பிறப்பும் (Apogamy and Apospory )
| III சிப்
புணரித் தாவரத்தில் பன்னம் - பிரிவிலிமுதல் பால் அங்கங்கள் பிடண்டாகாமல் ஒரு அரும்பு உண்டாகி, அது இளம் வித்தித்தாவரமாக வளரக்கூடும். இதை பதியத்திற்குரிய புணர்ச் சியின் -பிறப்பு எனக்கூறுவர். முட்டை கருக்கட்டாக வித்தித் தாவரமாக வளர்ச்சியடைந்தால் அதை கன்னிப்பிறப்பு அல்லது கன்னிப்பிறப்பிற்குரிய
புணர்ச்சியில் பிறப்பு எனக்கூறுவர்.
வித்தித்தாவரத்திலே வித்திகளுண்டாகாமல் இளம் வித்திக் கலனிலிருந்து நேரடியாகவே பிரிவிலிமுதல் முளைத்தால், அல்லது வித்திக்கலன்கள் உண்டாகுமிடங்களான சூல்வித்தகத்திலிருந்து பிரிளிளிமுதல் முளைத்தால், அல்லது இலையிலே குவை, வித்திக் சிலின் வித்தி ஆகியவை யுண்டாகாமல் நேரடியாகவே பிரிவிலி
முதல் முளைத்தால், அதை வித்தியில்-பிறப்பு என அழைப்பர்.
இவ்வாறான இயல்புகள் பன்னங்களிலே விதிவிலக்காக நடை பெறக் காணப்பட்டுள்ளன. 1Z 12

Page 96
178
பிரிவு : உபபிரிவு : வகுப்பு : வருணம் : சாதி 1
திரக்தியோபீற்ற இலைக்கொப்சிடா இலைக்கோ போடி னே இவைக்கோபோடியாலேசு இலைக்கோபோடியம்
உபபிரிவு :
இலைக்கொப்சிடா
வித்தித் தாவரம் வேர், தண்டு, இவைகள் என வியத்த மடைந்துள்ளது.. (வேர்களும், தண்டுகளும் பொதுவாக இணைக்கவ ருக்குரிய முறையில் கிளைத்திருக்கும், இலைகள் சிறிதாகவிருப்பதுடன் பொதுவாக சுருளியாகவும் அமைந்திருக்கும். இவற்றில் கிளைவெளி யிடை உண்டு, ஆனால் இலைவெளியிடை சிடையாது,வித்திக் கலன்கள் தனியன்களாக இலைகளின் மேற்புறத்தில் அல்லது துணி யில் உண்டாகின்றன. இவ்விலைகள் வித்தியிவேகளெனப்படும். வித்தியவைகள் தண்டுகளின் உச்சியிலே கூம்பிகளாக (Comes pr Strbili ) அமைந்துள்ளன.
பப்பு
FiLINE
-பு14]
சாப்பா/4/=EAFH4
படம் 71. இலைக்கோ போடியம் சேர்ணம்
இலைக்கோபோடி யம்
பெரும்பா லான இலைக்கோபோடிய இனங்கள் அயனமண் டலப் பிரதேசங்களிலே வளருகின்றன, இலைக்கோபோடியமினங் க ளின் வித்தித்தாவரங்கள் சிறிய பூண்டுத்தாவரமாக (Herbaceous) அல்லது செடித்தாவரமாக (Shrubs
வளரக்

17]
காணப்படுகின்றன, சில இனங்கள் நிமிர்ந்த அல்லது தூங்கும் உடலைக் கொண்ட தாவரவொட்டிகளாகவும், வேறு சில இனங்கள் நிலத்திலே நிமிர்ந்த நிலையிலோ, கிடையான நிலையிலோ வளர்கின் றன .தண்டு மெலிந்து, சாதாரண மாக கிளைத்து. அடர்த் தியான இலைகளால் மூடப்பட்டிருக்கும், இலைகள் பொதுவாக சுருளியாக ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும், பொதுவாக தண்டும், கிளைகளும், வேர்களும் இணைக்கவருக்குரிய முறையில் கிளைத்திருக் கும். ஆனால் சில இனங்களிலே தண்டிலிருந்து பக்கக் கிளைகளுண் டாகின்றன. தண்டுகளும், வேர்களும், உச்சிப்பிரியிழையத்தி லிருந்து வளர்கின்றன. இவற்றில் உச்சிக்கலம் கிடையாது.
வேர் :
இலைக்கோபோடியத்தில் வேர்கள் தண்டின் அடிப்பகுதியி லிருந்தோ, ஏனைய பகுதிகளிலிருந்தோ வளரக்கூடும். இடம் மாறிப் பிறக்கும் வேர்கள் பொதுவாகப் பரிவட்டவுறையிலிருந்தே உறி பத்தியாகி, வெளிவந்தவுடன் இணைக்கவருக்குரிய முறையில் கிளை கொள்ளுகின்றன.
குறுக்குவெட்டுமுகத் தோற்றத்தில் மேற்றோல், மேற்பட்டை கம்பம் ஆகியவை தென்படும். மேற்றேலிலிருந்து வேர்மயிர்கள் உண்டாகின்றன. இவை சோடிகளாகக் காணப்படுகின்றன. வேர் முதிர்ச்சியடைய மேற்பட்டையின் வெளிக்கலச் சுவர்கள் தடிப் படைகின்றன. மையத்திலுள்ள சம்பம் வெளியாதியான முதற் கம்பமாகும், அது ஒராதியாகவோ, சராதியாகவோ, மூவாதி யாகவோ இருக்கக்கூடும்.
மேற்றோல்
வெளிப்புறமற்பட்ட
உட்புறமேற்பட்டை
அனுக்காழ்
உரியம்
மூலக்காழ்
புடம் 72. இலைக்கோ போடியம் வேர்.கு. வெ. மு.

Page 97
18]
மேற்றேல் மேற்பட்டை
அகத்தோல்
பரிவட்டவுறை
"காழ்
-உரியம்
தண்டு கு.வெ - இலுசிடுலம்
மேற்றேல்
மேற்பட்டை அகத்தோல் பரிவட்ட வுரை -உரியம்
-அனுக்கார்
- மூலக்காம்
படம் 74. தணடு கு. வெ. - இ. சேர்ணம்

181
தண்டு :
இலைக்கோபோடியத்தின் அமைப்பு மிக அதியானது. மேரி ரேல் ஒரு காலத்தடிப்பான தாயும், இன்பசுரைப் போன்று இலைவாய் கள யுடையதாயும் காணப்படுகிறது. இளம்தண்டிலே மேற் பட்டைக்கலங்கள் மெல்லிய சுவர்களையுடையதாயும், முதிர்ந்த நிலையில் தடித்த சுவர்களையுடையதாயும், காணப்படும். இனந் தண்டில் மேற்பட்டையின் உட்புறமாக 3-5 களத்தடிப்பான பரிவட்டவுறையுள்ளது. மையத்திலே முதற்கம்பம் உள்ளது. சில இனங்களிலே காம் நட்சத்திரவுருவி லுள்ளது. அதன் கதிர்களி எளிடையே உரியம் உள்ளது. இது ஆரையமைப்புச் சம்பம் எனப் படும், சில இனங்களிலே அடிப்படையில் ஆரையமைப்புக் கம்பு மாக இருந்தாவரம், இதில் சிறிது மாறுபாடடைந்து காழ்க்கலங் களும், பிடரியக்கவங்களும் கலந்து காணப்படும். வேறு சில இனங் களிலே சாழ்க்கலங்களைச் சுற்றி உரியம் உள்ளது. இது தணிக்கம்பம் எனப்படும். இது ஆரையமைப்புக் கம்பத்தைவிட ஆதியானது." வேறு சில தினங்களிலே மிக விருத்தியடைந்த ஆரையமைப்புக் கம்பம் காணப்படுகிறது. இதில் தாம் பலதட்டுகளாகப் பிரிக்கப் பட்டு ஒன்றுக்கொன்று சமாந்தரமாகக் காணப்படுகிறது. இது
பாரக்குக்கம்பம் எனப்படும்.
பல இனங்களிலே உச்சித்தண்டு ஆsரையமைப்புக் கம்பத்தை யும், கீழ்த்தண்டு முறுக்குக்கம்பத்தையும் கொண்டுள்ளன.
அங்குர உச்சியிலே முதற்கார்க்கலங்கள் மையநாட்டமுள்ள வகையில் வியத்தமடைகின்றன. எனவே அனுக்காழ் மையமாக வுேம், மூலக்காரம் உரியத்திற்கருகாமையிலும் காணப்படும். மூலக் காழிக்கலங்கள் சிறியனவாகும், குய ற்போலிகளின் சுவரில் கங் கரோமா ன (Aninular | அல்லது சுருளியான (Spiral | தடிப்புகள் புடைப்புகள்) காணப்படும்,
1, கங்கணப்புடைப்பு 3. சுருளிப்புடைப்பு 3, 4, ஏணியுருப்புடைப்பு
படம் T5. காழ்-புடைப்புகள்

Page 98
15)
படம் 76, உரியம்-நெய்யரித்தட்டுகளை மேற்பரப்பிற் காட்டும்
நெய்யரிக்குழாயின் பகுதி
அனக்காழ்க்கலங்கள் பெரியவை. குழற் போலிகள் ஏணி புருவான தடிப்புகளைக் கொண்டுள்ளன. முதற்காம் மையநாட்ட முள்ள வகையில் விருத்தியடையும்பொழுது அவை வெளியாதி யென ( Exarch ) அழைக்கப்படுகிறது. உரியத்திலே நீண்ட நெய்யரிக்கலங்களின் சுவர்களில் நெய்யரித்தட்டுகள் காணப்படும் கின் றன. உயர்தாவரங்களிலே இத்தட்டுகள் புனைச்சுவர்களிலே யுள்ளதென்பது குறிப்டரிடத்தக்கது, நெய்யரிக்கலங்கள் சங்கிலித் தொடராக இல்லாததால் அவை நெய்யரிக் குழாய்களென அழைக்கப்படுவதில்லை. மாறிழையம் கிடையாததால் இரண்டாம் புடைப்பு நடைபெறுவதில்லை.
மேற்புற மேற்றோல்
நடுவிழையம்
கீழ்ப்புற மேற்றோல் இலைவாய் காற்றிடைவெளி.
படம் Tா, இலைக்கேசபோடியம் இலை வெ. கு.
இலை :
இலையில் ஒருசில படைக்கலங்களேயுள்ளன. மேற்புற மேற்றோலுக்கும், கீழ்ப்புற மேற்ரேலுக்குமிடையே ஒரேமாதிரி

18)
'யான க்லங்களைக் கொண்ட நடுவிழையம் உள்ளது. மேற்றேலிலே இலைவாய்களுள்ளன. மையத்தே ஒரு நரம்பு காணப்படலாம், இலையிடைவெளிகள் உண்டாவதில்லை.
இனப்பெருக்கம் :
வித்தித்தாவரத்தின் இளமையான பகுதிகளிலிருந்து பதிய புp ைறுபபினப்பெருக்கம் நடைபெறலாம். வேரின் மேற்பட்டைக் காலங்களிலிருந்து கோரகங்கள் உண்டாகின்றன.
வித்திக்கலன் !
தண்டினதும், கிளையினதும் உச்சியிலே வித்தியிலைகள் வரை யறைவான கூம்பிகளாக [ Coாes ) ஒழுங்குபடுத்தப்பட்டிருக் கும், ளித்தியிலைகளின் மேற்பரப்பிலே சித்திக்கவன்கள் தனித்தனியே உண்டாகின்றன. கூம்பிகள் நீண்டகாம்பினல் இலைகளுடைய
படம் 78. கூம்பியின் உச்சிப்பகுதி நெ. வெ. மு.
அங்குரத்திலிருந்து மேலே தூக்கப்பட்டிருக்கக்கூடும். வித்திக் கலன்களின் விருத்தி நல்வித்திக்கலனுள்ளதாகும். அதாவது, பவ கலங்களிலிருந்து விருத்தி ஆரம்பித்து, மேற்பரப்பில் குறுக்கு வரிசையிலுள்ள f-1) கலங்கள் திரு கூட்டமாக வித்திக்கலன் தொடக்கக்கலங்களாகத் தொழில்படுகின்றன. ஒ வ்  ெவ ா ரு தொடக்கக்கலமும் ச ர க் கு ச் சு வ ரா ல் (Eொரிக்கலமாகவும் உட்கல மாகவும் பிரிவடைகின்றது. (வெளிவரிசைக் கலங்கள் முதற் சுவர்க்கலங்களாகவும், உட்கலங்கள் முதல் வித்தியுண்டாக்கு கவங்களாகவும் தொழில்படுகின் றன .வித்திக்கலனின் சுவர்

Page 99
14
காம்பு
போசணே க்கம்பளம்
3. வித்தித்தாய்க்கலங்கள்
படம் 79. வித்திக்கலணின் விருத்தி
மூன்று படைகளைக் கொண்டிருக்கும். இவற்றில் உட்படைக்கவங் கள் போசணைக்கம்பளமாகத் தொழில்படுகின்றன. எமையமாக வுள்ள வித்தித் தாய்க்கலங்கள் ஓடுங்கற்பிரிவடைந்து நாற் கூற்றுத் தொகுதியான வித்திகளுண்டாகின்றன. ஏனைய தாம் க வ ன் ற வ ர ங் க ள ப் போன்ற இலக்கோ போடியத்தில் போசணைக் கம்பளம் பிரிந்த பிரிவதில்லை, வித்திக்கலன் முதிர்வடைய. வெளியுறைக்கலங்களின் உச்சிப்பகுதியிலே ஒடுங்கிய குறுக்குப் பட்டிகையாக சில கலங்கள் வேறுபாடடைகின்றன. இவை புரை எனப்படும். இவற்றின் சுவர்கள் ஏனைய கலங்களிலிருந்து மாயா பட்ட நிலையில் தடிப்படைகின்றன. கலங்கள் உலரும்போது வித்திக்கலன் இக் கலங்களின் வரிசையிலேயே குறுக்குமுகமாக வெடிக்கின்றது.

19 (19
இ) !
படர் - 8ா புணரித்தாவர விருத்தி
புணரித்தாவரம் ;
இலைக்கோ போடியத்தின் கவித்திகள் உசிதமான சூழ்நிலையில் முளைத்து பிரிவிலிமுதல் உண்டாகிறது. இலைக்கோபோட்டயம் சோர்ணம் என்னும் இனத்திலெ பிரிளிமுதல் 3-3 மி.மீ., நீள முள்ள உருளையுருவாயா, நிமிர்ந்து வளரும் உடலைக் கொண்டுள் னது, நிலத்திற்கு மேலுள்ள பாசும் பச்சை நிறமாகவும், சோணை சுளை யுடையதாயுமிருக்கும். இதில் பாலங்கங்கள் உண்டாகின்றன. இலைக்கோபோடியம் கிளாவேற்றத்தில் பிரிவினிமுதவ் நிலத்திற் குக் கீழாகவுள்ளது. இது ஓர் வேர்ப்பூசணத்துடன் அழுகல் வளரியாக வளர்கிறது.
பிரிவிலிமுதல் உண்டாதலின் போது வித்தியின் வெளிச்சுவர் உடைபட்முன்னரே வித்தி இரு காலங்களாகப் பிரிவடைகிறது, அடிக்கலம் ஒரு சிறு வில்லைவடிவான்கலத்தை உண்டாக்குகிறது. இதுவே வேர்ப்போலிக்கலமாகும். மேற்கலம் இரு பிரிவுகளில் இரு வெட்டுமுகங்களைக் கொண்ட உச்சிக்கலத்தை யுண்டாக்கு கிறது. விரைவில் ஒரு பிரிவிழையம் உண்டாகி டாரிவிலி-முதல் வளர்கின்றது. இலைக்கோபோடியம் கிளாவேற்றத்தின் கிண்ண வுருவான பிரிவிலிமுதவின் மையத்தில் பாவங்கங்கள் உண்டா கின்றன. நிலத்திற்கு மேலான, பச்சைநிறப் பிரிவிலிமுதல்கள்

Page 100
188
நிலத்திற்குக்கீழான நிறமற்ற பிரிவிலிமுதல்களிலும் பார்க்க ஆதியானவை யெனக் கருதப்படுகிறது.
உடச்சிப் பிரிவிழையத்திற்குக்கீழாக பிரிவிலிமு தலின் மேற் புறத்தே மேற்றோல் கலங்களிளிருந்து அநேக எண்ணிக்கையில் ஆண் சுலச்சனனிகளும், பெண் சுலச்சனனிகளும் ஒரே புணரித்தாவரத் திலிருந்து உண்டாகின்றன.
ஆண்சுவச்சனனி
பெண்கலச்சனனி
மேற்றோல் பூசணமுள்ளஇழையம் வெளிக்காற்புடைக்கலவிழையம்
சேமிப்பு இழையம்
1=
படம்-31 முதிர்ந்த புணரித்தாவரம் 1 இ. கொம்பிளநேற்றம் II இ. கிளாவேற்றம்

187
- ஆண்கலச்சனனி !
ஆண்கலச்சனனித் தொடக்கக்கலம் குறுக்குமுகமாகப் பிரி வதால் வெளியே முதற்சுவர்க்கமும் உள்ளே முதல் ஆண்கலச் சனனிக்கலமும் உண்டாகின்றன. முதற்சுவர்க்கலத்தில் ஏற்படும் பிரிவுகளால் ஒருபடைத்தடிப்பான உறையுண்டாகிறது. முதல் ஆண்கலச்சனனிக்கலம் பிரிவடைந்து பல ஆண்கலக்குழியங்க ளுண்டாகி, இவற்றிலிருந்து இருசவுக்குமுறைகளைக் கொண்ட விந்துப்போலிகள் உண்டாகின்றன. உறைக்கலங்களின் மையத்தே
1ம்
உ கா. க.
முட்டை
படம்-63, ஆண்கலச்சனணிவிருத்தி, பெண்கலச்சனனிவிருத்தி.
யுள்ள முக்கோணவடிவான கலம் உடைபடுவதால் விந்துப்போலி கள் விடுபடுகின்றன.
பெண்கலச்சனனி !
இவற்றின் கழுத்துமட்டும் வெளியே நீட்டப்பட்டிருக்க ஏனையபகுதிகள் பிரிவிலிமுதலில் பதிந்திருக்கின்றன. மேற்பரப்பிற் குரிய பெண்கலச்சனனித் தொடக்கக்கலம் குறுக்குமுகமாகப் பிரி ந்து வெளியே முதல் மூடிக்கலமும், உள்ளே மையக்கலமும்உண்டா கின் றன. முதல் மூடிக்கவும் " எதிர்ச் சாய்வுள்ள பிரிவுகளில் நான்கு கழுத்துத் தொடக்கக்கலங்களைக் கொடுக்கிறது. இவை குறுக்குச் சுவர்களால் பிரிவடைய, நான்கு வரிசைகளில் 3 - 4 கலங்க ளுயரமான கழுத்து உண்டாகின்றது. மையக்கலம் குறுக் குச் சுவரால் பிரிவடைந்து ஒரு முதற் கால்வாய்க்கலமும், முதல்

Page 101
183
உதரக்கலமும் உண்டாகின்றன. முதற்கால்வாய்க்கலம் பிரி வடைவதனுல் சில இடங்களிலே நான்கு கால்வாய்க்களங்களும், வேறுசில இனங்களிலே 6-8 கால்வாய்க்கலங்களும் உண்டா கின்றன, முதல் தரக்கலம் முட்டைக்கலமாகவும், உதரக்கால் வாய்க்கலமாகவும் பிரிவடைகிறதாவென்பது சரிவரத் தெரிய வில்லை,
கருக்கட்டல் !
விந்துப்போலிகள் நிந்தி பெண்கலச்சனனியை அடைந்து, உட்சென்று முட்டையுடன் சேர்வதனால் கருக்கட்டல் நடைபெறு சிறது .
1. தூக்கணக்கலம் 2. காக்கணம் 3. தண்டு 1. வித்திலை 5. அடி 6 வித்தித்தாவரம் 7. தண்டுக்கிழங்கு
முதல் இ 8, புணரித்தாவரம்
இ. பிளேக்மேரியா
இ., சேர்ணம்
படம் 83. முளையவிருத்தி
கருக்கட்டிய முட்டை குறுக்குமுகமாகப் பிரிவடைவதால் | வெளியே ஒரு தூரக்கணக்கலமும் உள்ளே ஒரு முளையக்கலமும் உண்டாகின்றன, தூக்கணக்கலம் பிரிவடைந்தாலும், அல்லதுபிரி வடையாவிட்டாலும், அது முளையத்தைக் கீழேபுணரித்தாவர இழை யத்தினுள் தள்ளுகிறது, முளே யக்கலம் ஒன்றுக்கொன்று செங்குத் தான இரு நெடுக்குமுகப் பிரிவுகளினால் நாற்பக்கவுரு நிலையைப் யடைகிறது. இவை பிரிவடைவதனால் இரு அடுக்குகளில் பாட்டுக் கலங்கள் உண்டாகின்றன. தூக்கணத்திற்கு அருகேயுள்ள அடுக் கின் கலங்கள் வித்தித்தாவரத்தின் அடியாகவும், மறு அடுக்கி லுள்ள கலங்கள் வித்தித்தாவரத்தின் ஏனைய பகுதிகளாகவும், விருத்தியடைகின்றன. வித்தித்தாவரம் சுயாதீனமாகும் வரை "அடி" புணரித்தாவரத்திலிருந்து உணவை உறிஞ்சுகிறது.

189
> வித்தித்தாவரம்
(2x) -
வித்தியில
நுகம் (2x)
வித்திக்கலன் (Zx)
ஒடுங்கற்பிரிவு
முட்டை
A(x)
விந்துப்போலி
A(x)
ஆண்கலச் சனனி
பெண்கலச்சனனி
வித்தி
(x)
-(புணரித்தாவரம்) .
பிரிவிலிமுதல்
(x)
வாழ்க்கைச் சக்கரம் - இலக்கோ போடியம்
சந்ததிப்பரிவிருத்தி -
இரும்டியான வித்தித்தாவரத்திலிருந்து வித்திக்கலன்களுண் டாகி ஒடுங்கற்பிரிவு நடைபெற்று வித்திகளுண்டாகின்றன. ஒருமடி யானவித்திகள் பிரிவிலிமுதலாகவளர்கின்றன. இவை இலிங்கமுறைச் சந்ததியைச் சேர்ந்தவையாகும். இவற்றில் பாலங்கங்கள் உண் டாகி முட்டையும், விந்துப்போலியும் உருவாகின்றன. இவையும் ஒருமடியானவையே. கருக்கட்டலின் பின் இருமடியான சந்ததி யுண்டாகிறது , இலைக்கோ போடியத்தின் வாழ்க்கைச் சக்கரத்தில் வித்தித்தாவரமும், 4 புணரித்தாவரமும் ஒழுங்கான முறையில் மாறி மாறி வரும். எனவே இதில் சந்ததிப்பரிவிருத்தியைக் காணமுடிகிறது.

Page 102
19]
பிரிவு : தெரொப்சிடா. உபபிரிவு : இலைக்கொப்சிடா. வகுப்பு : இலைக்கோபோடினேன். வருணம் : செலஜிநெல்லாலேசு. சாதி : செலஜிநெல்லா.
செலஜிநெல்லா (Selaginella)
பெரும்பாலான இனங்கள் அயணமண்டலத்திற்குரிய பிர் தேசங்களிலே வளர்கின்றன.ஒருசில இனங்கள் இடைவெப்ப நிலையுள்ள பிரதேசங்களிலும் வளர்கின்றன. இவை வளர்வதற்கு மிகையான ஈரப்பற்றும் நிழலும் தேவை. தாவரங்கள் வித்தித் தாவரச் சந்ததியைச் சேர்ந்தவையாகும்.
வித்தித்தாவரத்தின் தண்டு இணைக்கவருக்குரிய முறையில் சிமளத்து, சாதாரணமாக நிலத்திலே படிந்துவனரும், நிமிர்ந்து வளரும், அல்லது ஏறுதாவரமாக வளரும் இனங்களும் உண்டு.
கூம்பி
பாபர்
தண்டு
வேர்தாங்கி
இலே
படம் 84, செலஜிறெல்லா

191
"தாவர வுடல் வேர், தண்டு, இலை என வியத்தப்படுத்தப் பட்டுள்ளது. பிரதான தண்டிலிருந்துண்டாகும் இவைகளற்று சிறப் பான கிளைகளின் நுனியில் வேர்களுண்டாகின்றன. இக் சின்கள் வேர் தாங்கிகள் ( RhizophGTEs] எனப்படுகின்றன. இல கள் நான்கு நீள்வரிசைகளில் உள்ளன, மேலிருவரி 31சகளிலுள்ள இலைகள் கீழிருவரிசைகளிலுள்ள இலைகளைவிடச் சிறியவை. ஒவ்வொரு இள இலையின் மேற்புறமாகவும் அடியிலிருந்து 'சிறு நா" ( Ligule ) என அழைக்கப்படும் வெளிரிலுளசி! யொன்று காணப்படுகிறது. சிறுநாவின் அடிப்பாகமான நாவுருப் பாதம் (Glossopodium ] இலையினுள் பதிந்தநிலையிற் காணப்படும்.
[ மேல் (மேற்றோல்
காழ் உரியம் பச்சையவுருவம்
மடல் நாவுருப்பாதம்
சிறு நா படம் 85. 1 இலையின் கு. வெ, 11 சிறு நாவின் நெ. வெ.
இலையின் அமைப்பு எளிமையானதாகும். கீழ்ப்புற மேற் றேசிலில் இல்வாய்கள் காணப்படும், இவைநடுவிழையம் வியத்த படையவில்1ை. ஒவ்வொரு கலத்திலும் மிகக் குறைந்த எண்ணிக் கையில், சில வேளைகளில் ஒன்று மட்டுமே பச்சையவுருவம் உள்ளன. இலையிலே ஒரு மையநரம்புள்ளது.
சில வோரு கலக்கி, இலைநடுக

Page 103
படம் 88. செல ஜிநெல்லாத் தண்டுச்சியின் மை. நெ. மு.
தண்டினதும், வேரினதும் உச்சிகளில் ஒரு வரைய ைறவான உச்சிக்கலம் உள்ளது. தண்டின் குறுக்குவெட்டுமுகத் தோற்றம் ஏறத்தாம் வட்டமாகவிருக்கும். வெளியே 'ஒருபடையில் மேற் றோல் கலங்களும், அதனகத்தே மேற்பட்டையும் மேலிருந்து கீழாகத் தட்டையான தனியொரு முதற்கம்பமும் உள்ளன, முதற்கம்பத்தில் மையமாக அணுக்காலும், [TMetaIylcm இரு பக்கங்களிலும் மூலக்காங்களும் (Proto Mylem காணப்படும். எனவே இது வெளியாதிக் ( Exarch ) காம் என அழைக்கப்படுகிறது. சில தினங்களிலே கம்பம் உருளையுரு வாயும், வேறுசிலவற்றில் இரண்டு, மூன்று, நான்கு அல்லது அதற்கும் மேற்பட்ட தனிப்பட்ட கம்பங்கள் காணப்படுகின்றன. எனவே அவை பல்கம்பமுள்ளவை ( Poly Stele ) என அழைக்கப்படுகின்றன. கலன்கட்டுகள் நெய்யா' சுற்றிய சுட்டு களாக Amphitribal
\ வுள்ளன. அதாவது காழ்ச் கலங்களைச் சுற்றி உரியக்கலங்கள் உள்ளன. கார் ஏணியுருக்குழற் போலிகளையும், உரியம் நெய்யரிக்கலங்களை யும் கொண்டுள்ளன. உரியத்தைச் சுற் றி யு ள் ள ஒருபடையான பரிவட்டவுறை (PeriCycle I வெளியேயுள்ள அகன்று காற்றிடைவெளியை உடு ருவி நீண்ட புன்சவாகைகள் காணப்படுகின்றன. இவை அகத் தோலுக்குப் பதிலாகவுள்ளதெனக் கருதப்படுகிறது. இலைக்கோ போடியத்திலுள்ளதைப் போன்று இதில் மாறிழையம் கிடையாது. எனவே இரண்டாம் புடைப்பு (Secondary Thickening நடைபெறுவதில்லை. சில இனங்களிலே மேற்பட்டைக்கலங்கள் தடித்த சுவர்காயுடையனவாயிருக்கும்,

193
வேர் தாங்கி சிக்கலற்ற அமைப்பையுடையது. அதில் ஓராதி யுள்ள கம்பம் உண்டு, (MIonoarch) -- ஒரு மூலக்காழ்க்கூட்டத்
தைக் கொண்டது. இனப்பெருக்கம் :
செலஜி நெல்லாவின் எல்லாளினங்களிலும் வரையறைவான சுகூம்பிகள் கிளை துணிகளிற் காணப்படுகின்றன. இக் சாம்பி களிலே வித்தியங்கள் ஒழுங்கான முறையிலிருக்கக் காணலாம். வித்தியிலே சுளின் மேற்புறமாக, அடிப்பாகத்திற்கருகாமையில், வித் திக் கவன் கள் தனியன்களாகக் காணப்படும். இவை நல்ளித்திக் கலனுக்குரியவாறு விருத்தியுடையனவாகும், { EuSpangiate ).
மேற்றோல்
வல்ல ருகுக் அபவிகழய உள் மேற் பட்டை பரிவட்ட
வுறை உரியம் காழ்
சிறு
சல்க
உரியம்
அனுக்காழ் மூலக்காழ். முலக்காழ்
படம் 87. 1செளஜிரெல்லாத்தண்டு: துண்டக்கம்பத்தின் ஒருபகுதி 1 Z 13

Page 104
194
மேற்றேல்
வல்லருகுக் கல்விழையம் உள் மேற் பட்டை பரிவட்ட
பிறை உரியம்
காழ்
சிறு சலாகை
II செலஜி ெநல்லாத்தண்டு-கு, வெ.
ஒவ்வொரு வி த் தி ச க ல னி லும் ஒரு அறையுள்ளது. வித்திக்கல்ச்சுவர் அ ர ம் ப த் தி ல் 'ஒரு படையாகவிருந்து பின்னர் இருபடையாகின்றது. ஏனைய இலைக்கப்பொட்டுகளைப் போன்றல்லாது இதில் போசணைக்கம்பளம் வித்தியாசின்ற இழை யத்தின் வெளிப்படையிலிருந்து உண்டாகின்றது.வித்திகளுண் டாகும்வரை போசகணக்கம்பளம் உடைபடுவதில்லை. இவ்வேளை பரில் சுவரின் உட்படைக்கலங்களும் பிரிந்தழிவதனால் முதிர்ந்த வித்தியாகின்ற இறையச்சுவர்
ஒருபடையிற் க வ ங் க ளை க் கொண்டுள்ளது.
செலஜி நெல்லா பல்லின் வித்தியுள்ள தாவரமாகும், மாவித் திக்கலன்கள் நுண்வித்திக்கலன்களைவிடப் பெரியவையாயும், நான்கு சொப்பarகளைக் கொண்டனவாயுமுள்ளன, வித்தியாகின்ற இழையம் வியத்தமடையும்வரை இருவித விசித்திக்கலாய்க்களின் விருத்தியும் ஒரே மாதிரியாகவே நடைபெறுகின்றது.
நண்வித்திக்கல்லில் எல்லாத் தாய்க்கலங்களும் ஒடுங்கப் பிரிவடைந்து நான்கூடற்படத் தொகுதியான நுகரவித்திகள் உண்டா கின்னா மன் - ஆனால் மாத்திக்கலனில் ஒரு தாய்க்குலத்தைத் தவிர ஏனயவை பிரிந்தழிகின்றன. தொழிற்படும் மாபித்தித்தாயம் சுலம் பெரிதாகி, ஒடுங்கற் பிரிவனடத்து நால் கூற்றுத் தொகுதி யான, தடித்த சுவர்களையுடைய வித்திகளை யுண்டாக்குகின்றது.

195
வித்தியிலை
நுண்
வித்திக்கலன்
- மா சித்திக்கலன்
சிறு நா
படம் 88. கூம்பி நெ, வெ, மு.
நுண்வித்திகள் ஆண்புணரித்தாவரங்களாகவும், மாவித்திகள் பெண்புணரித்தாவரங்களாகவும் விருத்தியடைகின்றன. ஆசுவே பல்வினளித்தியுண்மையில் [Heterospா
] வித்திகள் ளியத்தமடைவது மட்டுமன்றி புனாரித்தாவரங்களும், வியத்த மடைந்துள்ளன."
செலவிநெல்லாலின் - ஆண்புணரித்தாவரம் நுண்வித்தியி னுள்ளேயே முற்கே விருத்தியடைகிறது. அதில் பச்சையவுரு

Page 105
196.
LL
சுவர்ப்படைகள் போசணைக் நால் கூற்று வித்தி
கம்பளம் படம் 89, நுண் வித்திக்கலனின் விருத்தி
நுண் வித்தி
4ப்பம்
பாண்ணு
12
சுவர்
-- சிறு நா
படம் ஓ0, நுண் வித்திக்கலன் நெ. வெ. பு.

17
மாவித்தி
ஈனர்.
சிறு தா
படம் 91. மாவித்திக்கடன் நெ. வெ. பு.
ஆண்கலச்
முலப்பிரிசுஞ்சுகள் பாவித்துத் சனனிக்கலம் விலிக்கலம் கலம்
தாய்க்கலம்
8
விந்துப்போலி
படம் 92, நுண்புணரித்தாவர விருத்தியும்
விந்துப்போலி டண்டாதலும்
ம 1."

Page 106
158
மாளித்தியின் சுவர்
பிரிவிலி முதல் பெண்கலச்சனனி
லேபி
படம் 99, மாபுணரித்தாவரவிருத்தி
14
படம் ஓ4. பெண்கலச்சானி விருத்தி

1pg
மணிசுள் இல்லாதிருப்பதுடன் மிகவும் சிறிய அமைப்பையும் கொண்டுள்ளது. எவித்தித்தாவரத்திலிருந்து விடுபடுமுன்னரே நுண்வித்தி முளைக்கத் தொடங்குகிறது. பதின்மூன்றுகல் நிலை யிலே ஆண்புணரித்தாவரம் நுண்வித்திக்கலனிலிருந்து விடுபடு கிறது. பின்னர் விந்துத்தாய்க்கலங்கள் பிரிவடைந்து 128 முதல் 25 வரையில் கலங்களுண்டாசி விந்துப்போலிகளாக விருத்தி ILாடைகின்றன, அப்பொழுது கஞ்சுகக்கலங்கள் பிரித்தழிந்து, விந் துப் போலிகள் நுண்வித்தியின் சுவரினுள் விடுபடுகின்றன.
கம், “கதத" இந்
பெண்புணரித்தாவரம் மாலித்தியினுள்ளேயே விருத்தியை யாரம்பிக்கிறது. அதில் கருபலட்பிரிவுகளையடைந்தபின்னர் உச்சியிலே கல்ச்சுவர்கள் உண்டாகத்தொடங்குகின்றன. இப் பகுதியில் வித்திச்சுவர் வெடித்து புணரித்தாவர இழையம் சிறிது வெளிவருகிறது. மாவித்திச் சுவரினுள்ளே பதிந்திருக்கும் புணரிக் தாவரத்தின் கீழ்ப்பகுதி உணவுச்சேமிப்பு நிலையமாகத் தொழில் படுகிறது .
பெண்கலச்சனனியின்விருத்தி :
பொதுவாக மாவித்தி வித்தித்தாவரத்திலிருந்து விடுபடும் வரை பெண்கலச்சனனிகள் தோன்றுவதில்லை, உச்சி இமையத் தின் பெரும்பாலான கலங்கள் ஆற்றலுள்ள பெண்கலச்சனணித் தொடக்கக் கலங்களாகத் தொழில்படக்கூடியவை. பொதுவாக இவற்றுள் பெரும்பாலானவை பெண்கலச்சனனயாக விருந்து யடைகின்றன. பெண்கலச்சனணித் தொடக்கக்கலம் சுற்றார் சாய்வுள்ள பிரிவினால் ஒரு முதல் மூடிக்கலத்தையும், ஒரு மையக் கலத்தையும் கொடுக்கின்றது, மையக்கலத்தின் சுற்றுச் சாய்வு கள்ள பிரிவினுல் முதற்கால்வாய்க்கலமும், முதல் உதரக்கலமும் உண் டாகின்றன. முதல்தரக்கலத்தின் சுற்றுச்சாய்வுள்ள பிரிவினள் உ தரக்கால் வாய்க்கப்படும், முட்டையும் உண்டாகின்றன.TIாகம் கால்வாய்க்கலம் பிரிவடையாமல் பெண்கலச்சனனிய பின் தனிக் காவ்வாய்க்கலமாகத் தொழில்படுகிறது. முதல்மூடி.க்கலம் ஒன் றுக்கொன்று செங்குத்தாக அடுத்தடுத்து நடைபெறும் இரு எதிர்ச் சாய்வுள்ள பிரிவுகளினால் நான்கு கழுத்துத் தொடக்கக்கலங்கள உண்டாக்குகிறது. இவையொவ்வொன்றினதும் குறுக்குப்பிசி வினால் இருகலங்கள் உயரமான கழுத்து உண்டாகிறது. இதில் மேல் நான்குகலங்களும் புணரித்தாவரத்தின் மேற்பரப்பிற்கு வெளியே நீட்டியிருக்கக் காணலாம்.
சில இனங்களிலே கருக்கட்டல் நடைபெறும்வரையிலோ, அல்லது முளையும் உண்டாகும்வரையிலோ, மாவித்தி மாவித்திக் கலனில் வைத்திருக்கப்படுகிறது. செலஜிநெல்லாவில் ஆண்புண ரித் தாவரங்கள் காற்றினாலோ, புவியீர்ப்பினாலோ மாவித்தி யிலைக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கே வித்திகள் வெளிவிடப் படுகின்றன. எனவே வித்து உண்டாகும் நிலையை மிக ஒத்தநிலை யொன்று இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்,

Page 107
2tா
தண்டு இலை
படம் 95, முளைய விருத்தி ஆரம்பநிலை
இலை தண்டு தூக்கணம்
முளையம்
சிறு நா
அடி வேர் தாங்கி மாபுணரித்தாரம் படம் 96. முதிர்ந்த முலாயம்

201
கருக்கட்டியமூட்டை குறுக்குப்பிரிவால் பிரிவடைவதனால் மேற்புறமாக ஒரு தரக்கணக்கலமும் பேspenSOT (Cell உட்புறமாக (கீழ்ப்புறமாக முளை யக்கலமும் ( Embryonal Cell | உண்டாகின்றன. தூக்கதாக்கலம் மேலும் குறுக்குச் சுவர்களால் பிரிவடைந்து, முளை யத்னாத பெண்புணரிக் கலத்தின் உணவுச் சேமிப்பினுள் தள்ளுகிறது.
கீழ்ப்புறத்தே முளையக்கலத்தின் முதற்பிரிவு நெடுக்குமுசு மானது. உண்டாகும் இரு கலங்களும் நெடுக்குமுகமாகப் பிரி வடைந்து நான்கு கலங்களுண்டாகின்றன, இவற்றிலொன்று மூலைவிட்ட நெடுக்குமுசுப்பிரிவடைவதால் தண்டின் உச்சிக்கலம் உண்டாகிறது. எஞ்சியுள்ள மூன்று கலங்களும் மேலும் பிரி வடைந்து அடி வெர்தாங்கி, இலை ஆகியவற்றைக் கொடுக் கின்றன. அடி, புணரித்தாவரத்திலிருந்து போசணையை உறிஞ்சு கிறது. விருத்தியடையும் முளையம் சுற்றில் சுற்றியுள்ள புணரித் தாவர இழையத்தினுள் வளர்கிறது. தண்டு மேல்நோக்கி வளர. வேர்தாங்கி கீழ்நோக்கி வளர்கிறது.
வித்தித்தாவரம் (2x)
வித்திந்தாவரச்சந்ததி
நுகம் (2x)
மாவித்திக்கலன் நுண்வித்திக்கலன்
1(2x)
(24)
ஒடுங்கற்பிரிவு விந்துப்டோலி (x) முட்டை (1) மாவித்தி
((x)
ஓடுங்கற்பிரிவு நுண்வித்தி
பெண்கலச்சனனி ஆண்கலச்சனனி
பெண்புணரித்தாவரம்
(X)
-ஆண்புணரித்தாவரம் புண ரித்தாவரச்சந்ததி
[E) செலஜிநெல்லாவின் வாழ்க்கைச் சக்கரம்

Page 108
202
செலஜிநெல்லாவின் இனப்பெருக்கத்திற்
காணப்படும் சிறப்பியல்புகள்
பல்லினவித்தியுள்ள தன்மை.
கூம்பியிலே இருவித வித்தியிலைகளுள்ளன.
ஆண், பெண் என இருவகையான புணரித்தாவரங்கள் உண்டு.
1.
இரு புணரித்தாவரங்களும் உருவத்திற் சிறியவை. அவற்றுள் ஆண்புணரித்தாவரம் மிகச்சிறியது.
இரு புணரித்தாவரங்களும் சுயாதீனமானவையல்ல. இரண்டும் வித்தியுறைகளுள் முற்றாக 'அடக்கப் பட்டுள்ளன. மாவித்தியில் மேற்புறம் சிறிது வெடித்து பெண்புணரித்தாவரத்தின் ஒரு ப கு தி ய 21 ழ ய ம் வெளித் தள்ளியிருக்கும்,
இரு புணரித்தாவரங்களும் போசணைக்கு வித்திகளையே நம்பியிருக்கின்றன. எனவே இவைவித்தித்தாள் ரத்தை நம்பியிருக்கிறதெனவும் கூறலாம். பெண்புண பரித்தாவரத்தில் பச்சையவுருமணிகளுள்ளதால் அவை சிறிதளவு படணவைத் தயாரிக்கக்கூடும்.
வித்திக்கலனிலுள்ள பொழுதே வித்தி முளைக்கத் தொடங்குகிறது.
8.
சிலவற்றில் மாசித்திக்கலன் பகூம்பியில் உள்ள பொழுதே இளம் வித்தித்தர்வரம் விருத்தியடையக்கூடும்.
9. நுகம் விருத்தியடையும்பொழுது ஒரு தூக்கணம்
உண்டாகிறது.

பிலிசினே - (FILICINAE)
பிரிவு : உபபிரிவு 1 வகுப்பு : குடும்பம் ! சாதி 1
திரக்கியோபிற்றா தெரொப்சிடா. பிசிசினே பொலிபோடி யேசியே நெபிறேலெபிசு
உபபிரிவு: தெரொப்சிடா
இவ்வுப்பிரிவு பன்னங்கள், கிமினேசுப்பெரும்கள், அங்கியோ சுப்பெரும்கள் ஆகியவற்றை அடக்கும், வித்தித்தாவரத்தில் உண்மையான வேர்கள், தண்டுகள், இலைகள் உள்ளன. இப்பகன் பேரிலேகளாகும் ( Madroplhiyllous
1. கிளையி3டவெளி களும், இ1ை) இடை வெளிகளும் உண்டு. வித்திக்கலன்கள் இவை களின் கீழ்ப்பரப்பிலோ, விளிம்பிலோ உண்டாகின்றன. வித் தித் தாவரங்கள் 1 புSpாரித்தாவரங்களைவிடப் பட்ட பெரியனவாயும் , முதிர்ச்சியடைந்த நிலையில் சுயாதீனமானவையாயும் உள்ளன. புணரித்தாவரங்கள் பன்னங்களிலே சுயாதீனமாயிருந்தாலும் கிமினேசுப்பெருமேயிலும், அங்கியோ சுப்பெருமேயிலும், போச ணைக்கு வித்தித்தாவரங்சுளைச் சார்ந்துள்ளன.
வகுப்பு 1 : பிலிசனே
இதில் சிங்கள் பெரியவை. வித்துகள் உண்டாவதில்ப்ப, விந்துகள் நீரினுலேயே கடத்தப்படுகின்றன. வாழ்க்கைச் சக்கரத் தில் நன்றாக விருத்தியடைந்த சந்ததிப்பரிவிருத்தி உள்ளது. அதில் சுயாதீனமான ஒருமடியான புணரித்தாவரமும், இரும்பு யான வித்தித்தாவரமும், ஒழுங்கான முறையில் மாறிமாறி இடம்பெறுகின்றன.
வருணம் : பிலிக்காலேசு
இவ்வருணத்தில் உண்மையான பன்னங்கள் அடங்கும். பெரும்பாலான பன்னங்கள் ஈரப்பற்றுள்ள நிழலான இடங்களி லேயெவளர்கின்றன. இவை உலகெங்கணம்காணப்பட்டாலும் அய ணமண்டலப் பிரதேசத்திலேயே அதிகமாக வளருகின்றன. பெரும் பாலானவை நிலத்திலும், சில பன்னங்கள் நீரிலும், வேறுசில தாவரவொட்டிகளாகவும் வாழ்கின்றன. இலைகள் பேரிகைளாகும். முதற்கம்பமுள்ளவற்றைத் தவிர ஏனையவற்றில் இலையிடை

Page 109
204
வெளிகள் உள்ளன. ஒவ்வொரு எயித்திக்கலனும், ஒரு தனிக்கவ த்தி.. லிருந்து உற்பத்தியாகிறது. (இலெத்தோளித்திக்கப்பள்ளது -
LeptgspOrangiate
1. ளித்திக்கலன் மெல்லிய சுவர்களுடைய கலங்சுளைக் கொண்டது. வெடித்தலுக்கு உதவி செய்யும் கங்கணம் பொன்னும் பகுதி தடித்த சுவர்களையுடைய கலங்களாலானது. கூட்டிலைகள் அச்சுச்சுருண்ட தளிரிலையொழுங் காகவுள்ளன. ('
Circinate Vernation
1. இது
குவை
சிறு சிறையில்
அச்சச் சுருண்ட தளிரிலை யொழுங்கு
சிறு
சிறையில
வேர்த் தண்டுக் கிழங்கு
வேர்கள் படம் ஓ7. பன்னம் - நெபிறேலெபிசு

205
- மேற்றோல்
மேற்பட்டை அகத்தோல் பரிவட்டவுறை மூலக் காம் அணுக் காழ் உரியம்
படம் 98, பன்னர்வர் - கு. வெ. மு.
"அகத்தோல்! "பரிவட்டவறை
-- உரியம்
அராக்காம்
மூலக் காம்
படம் 99, பன்கனவேர் - கம்பம்
பன்னங்களின் சிறப்பியல்புகளிவொன்றாகும். இலையுச்சி நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து வளரக்கூடியது. (வித்தித்தாவரங் சுளின் இலையுச்சி குறுகியகாலத்திற்கே வளர்ச்சியுடையது). மாறி ழையம் இல்லாததால் இரண்டாம் புடைப்பு கிடையாது.

Page 110
206
நெபிறோலெபிசு (Nephrolepis) இவை ஈரப்பற்றுள்ள நிழலான இடங்களிலே வளரும். தண்டு குறுகிய, நிமிர்ந்து வளரும் வேர்த்தண்டுக் கிழங்காகும். இது நுனியிலே அகன்றும், கீழே ஒடுங்கியுமிருக்கும். இதிலிருந்து பெரிய கூட்டிலைகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரும். கூட்டிலை கள் அச்சுச்சுருண்ட தளிரிலையொழுங்காகவுள்ளன, அவை கீழிருந்து மேலாக விரிந்து முழு வளர்ச்சியடையும் வரை இப்ப யுச்சி தொடர்ந்து வளர்கிறது. நான்கு வெட்டுமுகங்களைக் கொண்ட உச்சிக் கலங்களிலிருந்து தண்டும் வேரும் வளர்கின்றன.
வேர் :
குறுக்குவெட்டுமுகத் தோற்றத்தில் மையத்திலுள்ள காழ். வெளியாதியாகவும்" Exarch - ), ஈராதியாகவும் ( Diarch ] காணப்படும். காழ்க்கலங்களின் இரு புறமும் உரியம் உள்ளது. கலன்கட்டையைச் சுற்றிப் பலபடையிலான பரிவட்டவுறை யுள்ளது. அதற்கு வெளியே ஒரு படையில் அகத் (தோல் உள்ள து. மேற்பட்டையின் உட்கலங்கள் தடித்த சுவர் சுளக் கொண்டுள்ளன. மேற்பட்டைக்கு வெளியே மேற்ரேல் உள்ளது.
து'கண்டக்பாம்பம்
படம் 100, புன்னம் - தண்டு கு. வெ. மு.

20ா
அகத்தோல் பரிவட்டவுறை நரியம்
- அனுக்காழ்
மூலக் காழ்
தண்டு
பன்னம் - துண்டக்கம்பத்தின் அமைப்பு
படம் 101,
FM தண்டு !
வேர்த்தண்டுக் கிழங்கின் உள்ளமைப்பு கீழிருந்து மேலாக வேறுபடுகின்றது. வளர்ச்சியின் முற்பகுதியில் முதற்கம்பம் உள் ளது. இதில் காழ்க் கலங்களைச் சுற்றி உரியம் காணப்படும். வளர்ச்சி தொடர ண்டு பருத்து நடுப்பகுதியில் மையவிழைய Uம் அதைச் சுற்றி காழ்க்கலங்களும் உரியமும் காணப்படும். இது குழாய்க்கம்பம் என அழைக்கப்படும், உரியம் காழிற்கு படட்புறமாகவும் காணப்படுமாயின் கம்பம் இருமைப் பேறு ( Aimphiphlaic ) டையதெனப்படும்.
தண்டின் குறுகிய மேற்பகுதியிலிருந்து பல |
இலை கள் உண்டாவதால் கம்பம் - வல்லக்கம்பமாக மாறுகிறது. அதிலுள்ள ஒவ்வொரு துண்டக்கம்பமும் முதற் கம்பத்தின் அமைப்பைக் கொண்டிருக்கும். பன்னத் தண்டின் காழ் இடை யாதியானது.
Mesarch
அதாவது மூலக்காழ்க் கலங்களேச்சுற்றர் அனுக்காழ்க்கலங்கள் இருக்கும். முலக்காம் சுருளியான தடிப்புகளைச் சுவரிற் கொண்ட குமற் போலிகளால் ஆனது. அனுக்காழ் பெரும்பாலும் ஏணரியுருக்குமற்போலிகளை யுடையது. இவை பன்னங்களிலே சிறப்பாகக் காணப்படுகின்றன. இக் கலங்கள் நீண்டு முனைகளிற் கூராகவுள்ளன. சுவரிலே குறுக் காக ஏணிப்படிகள் போன்றவாறு தடிப்புகள் உண்டாகியிருக்கும். உரியம் நெய்யரிக் குழாய்களையும் உரியப்புடைக்கலவிழையங்களை யும் கொண்டிருக்கும். துணைக்காலங்கள் கிடையா,

Page 111
203
மேற்புற மேற்றோல்
இடை நடுவிழையம்
பச்சையவுருவம்
கீழ்ப்புற மேற்ரேல்
இலை வாய்
படம் 102. சிறு சிறையிலை - கு, வெ, தெபிறோலெபிசு
இலையின் அமைப்பு :
கூட்டிலையின் சிறிலைகள் (Leaflets ) வாளின் பற்கள் போன்ற விளிம்பையுடையன, நடுநரம்பிலிருந்து செல்லும் சிறு நரம் புகள் இணைக்கவருக்குரியவா கிண்ணத்துள்atான, இலையின் மேற் புறத்திலும் கீழ்ப்புறத்திலும் மேற்ரேல் காணப்படும், இலை வாய்கள் பொதுவாக கீழ்ப்புறத்திலேயே காணப்படுகின்றன. நிழலிலே வளருவதால் இடைநடுவிழையும் வியத்தமடையவில்லை.
இனப்பெருக்கம் :
சீறிலைகளின் கீழ்ப்புறத்தே குவைகள் ( Soti ) எனப்படும் கூட்டங்களாக வித்திக்கலன்கள் பிடண்டாகின்றன. ஒவ்வொரு

200
இம்பு
சப்பா
யப் பி
ட்பட்ட
பாட்டு
பாம்.
புறவா!
வித்திக்கலன்
படம் 103. கு. வெ. குவையினூடாக
குவையும் புறவணி ( InflusiuTI ) எனப்படும் ஒரு மெல்லிய மடிப்பால் மூடப்பட்டுள் ளது. நெபிறேலெப்பிசில் ஒவ்வொரு குவையிலும் பவளிருத்திநிலைகளிலுள்ள வி த் தி க் க வ ன் சு ள் காணப்படுகின்றன, இதுவே மிக உயர்விருத்தி நிலையான குளை.
மேற்பரப்பிற்குரிய ஒரு தனிக்கலத்திலிருந்தே ளித்திக்கவன் உண்டாவதால் இது இலத்தோலித்திக்கலனுள்ளதென ( LeptgSpoாalgiate) அழைக்கப்படுகிறது. வித்திக்கலன் தொடக்கக்கலம் சிறிது மேலாக வளர்ந்து குடிக்குப் பிரிவடைந்து இரு கலங்களை உண்டாக்குகிறது. மேற்கவத்திலேற்படும் மூன்று தொடர்ச்சியான பலவிட்டப் பிரிவுகளால் சாம்பசுமான உச்சக்கலம்! உண்டாகின் பது. இதன் மூன்றுபச்சு வெட்டுமுகங்களிருந்தும் ஒவ்வொரு பக்கத்திற்கும் 4, 5 கலங்கள் வெட்டப்படுகின்றன. முதலில் உண்டாகிய சுவங்கள் காம்பாக விருத்தியடைய. கடைசியாக வெட்டப்பட்ட முன் கலங்களும் வித் திக்கவனின் கன்சு சுக்கலன் களாகின்றன.
பின்னர் உச்சிக்கலம் சுற்றுச் சாய்வுள்ளவாறு பிரிவடைந்து
ஒரு வெ ளி க் க வ மு ம் மூடிக்கலம் | TZ 14 4

Page 112
210
காம்புக்கலம் விடப்பிலயக்சலம்
வித்திலம்
போசணைக்சும்பம்
சுவர்
படம் 104. ளி த்திக்கலனின் விருத்தி
கங்கணம்
2008
புழை,
காம்பு
பெபட்டி
அகப்ப டி.ப
Iார்
படம் 105. நெபிருே லெ பிசின் வித்திந்கலன் - வெடித்தலுக்கு முன்

211
உட்புறத்தே ஒரு கூம்பகமான கலமும் முதல் வித்திக்குரிய காலம்) உண்டாகின்றன, முதல் வித்திக்குரிய கலம் பிரிவடைந்து போச கணக்கம்பளத்தொடக்கக்கலங்களையும் முதல்லித்தியாகுகலத்தையும் உண்டாக்குகிறது. இவற்றிலிருந்து முறையே இருபடைகளாலான போசணைக்கம்பளமும் வித்தித்தாய்க்கலங்களும் உண்டாகின்றன. வித்திக்கலனின்சுவர் ஒருபடையாலானதாகவே இருக்கிறது. வித் தித்தாய்க்கலங்கள் ஒடுங்கற்பிரிவடைந்து வித்திகள் உண்டாகின் றன, பொதுவாக 16 வித்தித்தாய்க்கலங்களிருந்து 4 வித்திகள் உண்டாகின்றன,வித்திகளுக்கு போசணையைக் கொடுக்கும் போனைக்கம்பளம் முதல்வித்திக்குரிய கலத்லிருந்து உண்டாவது குறிப்பிடத்தக்கது.
முதிர்ந்த ளித்திக்கலன் வில்லையுருவானது. அதன் ஒருபடை ! யாலான சுவரில், ஒரு வரிசையாகவுள்ள 13-14 கலங்களின் ஆரைக்குரிய சுவர்களும் உட்புற தொடுதளத்திற்குரிய சுவர்களும் தடிப்பதனால் நெடுக்குமுகமாக ஒரு கங்கணம் உண்டாகிறது.
--
ஒ3
கம்;
2ம் நிதி
பங்டடக்
"கட்கப்பட்டய
படம் 106. பன் னம்:- வித்திக்கலன் வெடித்தல்
கங்கணக்கலங்கள் நீர்பருகுமியல்புடையவை. கங்கணமுனைக் குக் கீழாக உள்ள கலங்கள் புழை எனப்படும், இவை மெல்லிய சுவர்களையுடையன.

Page 113
212
கங்கனாக்கலங்கள் நீர்பருகுந்தன்மையுடையனவாதலால் அவை நீருறிஞ்சிய நிலையிலுள்ளன, வித்திக்கலன் முதிர் ந்த பின் வெப்பகாலத்தில் (Dry Weather | கங்கணக்கலங்களிலுள்ள நீர் ஆவியுயிர்ப்பினால் இறக்கப்படுகிறது. கது11ங்களிரிலே எஞ்சியமள்ள நீர் அதிகரிக்கப்பட்ட பிட்சா வளிசை Cahesive FarCE) யினுல் கலங்
உச்சிக்கலம்
வேர்ப்போலி
-1 பெண்கலச்
பன்னி
ஆண்கலச்
சனl
வேர்ப்போலி
படம் 107. வித்தி முனை த்கவும் பிரியர் முதல் விருத்தியடைதலும்

213
களிலே தங்கியிருக்கிறது. இதனால் ஒவ்வொரு கங்கனக்கலக்கி னதும் மெல்லிய வெளிச்சுவர் குழிவான நிலையையடைய, அரைக் குரிய சுவர்கள் சிறிது உட்புறமாக உள்ளிருக்கப்படுகின்றன, கலங் சுளின் சுருங்கலினால் உண்டாகும் இழுவிசையைத் Straiா | தாங்க முடியாமல் முற்றாக டெபல்லிய சுவர்களையுடைய புன்மம் கலங்கள் (வாய்க்கலங்கள் முதலில் னெ டர் த்து, பின்னர் எரித்திக் சுல னின் வில்ப்பயத்தின் ஏனைய கப்பங்கள் தொடர்ந்து வெடிப் பதனால்ளித்திக்கலன் இரு பகுதிகளாக குறுக்கு வெட்டுமுகமாகப் பிளக்கிறது. கங்காணக்கலங்கள் தொடர்ந்து சுருங்குவதனன் கங்கணம் நிமிர்ந்து.
பின்புறமாக வளைந்து, அதிசுவளவு இழுவிசையில் அந்நிட்பwடரிலிருக்கின்றது. இராதியில் இவ்விம விசை நீர் மூலக்கூறுகளின் பிணைவுவிசை, நீருக்கும் கலங்களுக்கும் மிடையே உள்ள ஓட்டல்விசை, ஆகியவற்றிலும்பார்க்க அதிக மாகிறது. ஒவ்வொரு கங்கணத்திலும் ஒரு வாயுக்குமிழ் தோன்று வதால் இழுவிசை சடுதியாக விடப்படுகின்றது. இதனால் கங்கணம் திடீரெனப் பழையநிலைக்குத் திரும்புகிறது. அப்பொழுது ஏற் படும் அதிர்ச்சிய1ைசவால் வித்திகள் வெளியே வீசப்பட்டு காற்றினால் வேறிடங்களுக்குக் கடத்தப்பட்டு பரம்பலடைகின்றன.
வித்திக்க்லனின் வில்லையம் வெடிப்பதை மாணவர் பின்வரும் முறையால் பரிசோதனை கூடத்தில் ஆராயலாம். ஒரு கண்ணாடி வாக்சியில் ஒருதுளி கிளிசரினை எடுத்து, அதில் முதிர்ந்த ஆனல் வெடிக்காத வித்திஃகலஃனை வைத்து, மூடுகண்ணுடி வக்காமல் துணுக்கு காட்டியினுாடாக நோக்கினுல், கிளிசரின் சுங்கணக் கலங்களிலிருந்து (மெதுவாரக நீரைப் பிரசாரண முறையில் அகற்றம் வதால் கங்கணக்கலங்கள் உலர்ந்து, இயற்கையில் நடக்கும் மாற்றுங்கள் நடைபெற்று, வித்திகள் கிளிசரினில் வெளியேறு வதை அவதானிக்கலாம். சிளிசரின் தடிப்பானதிரவமாதலால் புழைக்கலங்கள் வெடிப்பதை ஒரளவு தாமதப்படுத்தும்,
வெப்பநிலை வருந்த லியொனாய் நீ
புணரித்தாவரம் :
வித்தி நிலத்தில் விழுந்து, ஒட்சிசன், ஈரப்பற்று, சரியான வெப்பநிலை ஆகியவையுள்ளபோது முளைக்கவாரம்பிக்கின்றது. முத வில் வித்தியிலிருந்து ஒரு மூலவுயிர்க்குழாய் வெளிவருகிறது. இதிலிருந்து வேர்ப்போலியொன்று உண்டாகி நிலத்தில் களன்று கின்றது. பின்னர் மூலவுயிர்க்குழாய் நீண்டு பச்சைநிற இனம யொன்றுண்டாகிறது. இதன் நுனியில் 2 ஆ ப் பு வ டி வா ன (Wedge Shaped ) உ ச் சி க் க ல ம் உண்டாகி, அது இடமும் வலமுமாக மாறி மாறி கலங்களை படண்டாக்கி, அவற் றிலிருந்து மேலும் கலங்கள் உடன்பாடாகி, இதயவடிவான பிரிவிலிமுதல் உண்டாகிறது. உச்சிக்காலத்தை விட பக்கங்களிலுள்ள கலங்களின் வளர்ச்சி விரைவாக நடை பெறுவதால் உச்சிக் கலம் பிரிவிலிமுதலின் தவாளிப்பில் இருக்கின்றது. விருத்தி

Page 114
214
யடைந்த பிரிவிலிபுதலின் சோணைகள் ஒரு கலத்தடிப்பும், தவாளிப்பிற் கருகாமையில் [ TNatch ] பல கலத்தடிப்பும் கொண்டுள்ளன. பிரிவில்முதலின் கீழ்ப் பகுதியிலுள்ள வேர்ப் போலிகள் ஈரலுருத்தாவரங்களின் வேர்ப்போலியமைப்பைக் கொண்டுள்ளன. அவை பிரிவிலிமுதலை நிலத்திலே நான்றுகின்றன. பிரிவிலிமுதலில் பச்சையவுருமணிகளுள்ளதால் காபோவைதரேற் றுக்களை ஒளித்தொகுப்பு முறையால் தயாரித்து சுயாதீனமாக வாழ்கின்றது.
புணரித்தாவரங்கள் ஓரில்வமுள்ளவை. அதாவது ஆண், பெண்கலச்சனனிகள் ஒரு பிரிவிலிருந்தளிலேயே டண்டாகின்றன. இவற்றில் ஆணகம் முன்முதிர்கின்றது. பாலங்கங்கள் பிரிவிலி
பர 0 0002 பிப
02882
69
வளையக்கலங்கள்
மூடிக்கலம் விந்துப்போலி
நம் ந
1. புனல் வடிவான கலம் உண்டாதல்.
கவிகையுருவான சுவரால் வெளிக்கலம் மையக்கலத்திலிருந்து. பிரிக்கப்படல். இரண்டாவது புனற்சுவர் உண்டாதல். மையக்கலத்தின் முதற்பிரிவு. விந்துப்போலிகளைக்கொண்ட முதிர்ந்த ஆண்கலச்சனனி, விந்துப்போலிகள் வெளியெறுதல்.
படம் 103. ஆண்கலச்சனியின் விருத்தியும் வெடித்தலும்

215
முதவின் கீழ்ப்புறத்திலேயே உற்பத்தியாகின்றன. ஆண்கலச் சனனிகள் பிரிவிலிமுதலின் மெல்லிய பகுதியிலும் பெண்கலச் சனனிகள் தவாளிப்பிற்கருகாமையிலுள்ள தடித்த பகுதியிலும் உருவாகின்றன. இவை பிரிவிலிமுதலில் பதிந்திராமல் வெளி நீட்டிக் கொண்டிருக்கின்றன. ஆண்கலச் சனனியின் சுவர்க் கலங்கள், பெண்கலச்சனனியின் கழுத்துக்கலங்கள் போன்ற மலட்டுக்கலங்கள் ஆகியவை குறைக்கப்பட்டிருப்பது பன்னங்களின் பாலங்களிற் காணப்படும் ஒரு சிறப்பியல்பாகும்.
ஆண்கலச்சனனி
முதிர்ந்த ஆண்கலச்சனனி ஓரளவு கோளவடிவமானதெனக் கூறலாம். இதன் சுவர் அடிக்கலத்தைத் தவிர வேறு மூன்று கலங் களைக்கொண்டிருக்கிறது. அவையாவன: ஒரு புனல் வடிவான கம், இரு வளையம் போன்ற கலங்கள், ஒரு மூடிக்கலம். ஆண் கலச்சனனியினுள்ளே பல்பிசிர்களையுடைய விந்துப்போவிகள் காணப்படும்.
ஆண்கலச்சனனியின் விருத்தி :
பிரிவிலிமுதலின் கீழ்ப்புறத்தே மேற்பரப்பிற்குரிய கல மொன்று சிறிது வெளித்தள்ளி, ஆண்கலச்சனணித் தொடக்கக் கலமாக வியத்தமடைகிறது, இது குறுக்குச் சுவரொன்றினால் மேற்கலமாகவும் கீழ்க்கலமாகவும் பிரிவடைகிறது, பின்னர் மேற் கலம் வீக்கமடைவதால் குறுக்குச்சுவர் கீழ்க்கலத்தினுள்ளே தள்ளப்படுகிறது. இதனால் முதலில் வளையவடிவமாயிருந்த கீழ்க் கலம் புனல் வடிவமாகிறது. மேற்கலம் ஒரு குறுக்குச் சுவரினல் ஒரு கவிகையுருவானகலமாகவும் ( Dome Shaped ] மையக்கல் மாகவும் பிரிவடைகிறது. கவிகையுருக்கலத்தின் குறுக்குப் பிரிவி னால் கீழ்ப்புறமாக இரண்டாவது வளையக்கலமும், மேற்புறமாக மூடிக்கலமும் உண்டாகின்றன. புனற்கலம், வளையக்கலம், மூடிக் கலம் ஆகியவை ஆண்கலச்சனனியின் சுவராகவுள்ளன. மையக் கலம் மேலும் பிரிவடைந்து 30-5) ஆண் குழியங்களைக் கொடுக்கின்றது. இவை யொவ்வொன்றிலிருந்தும் ஒரு விந்துப் போலியுண்டாகின்றது. விந்துப் போலிகள் முன்புறமாக 20 - 50 சவுக்கு முளைகளைக்கொண்ட நீண்ட சுருளியுருவானவை.
வெளியே நீருள்ளபோது முதிர்ந்த ஆண்கலச்சனனியின் சுவர்க்கலங்கள், அதாவது புனற்காலமும் வளையக்கலங்களும், நீரை உறிஞ்சி வீக்கமடைந்து உள்ளேற்படும் அமுக்கத்தினால் மூடிக் கலத்தை வேருக்கின்றன. பின்னர் சவுக்குமுளைகளைக் கொண்ட விந்துப்போலிகள் வெளியேறி நீந்தித்திரிகின்றன.

Page 115
216
oடி ப
A/
உ- சா, க. க. கா. க. |
முட்டை
வித்துப்போலிகள்
பெண் சுலக்சனனி முதற்கலம் உட்கல மாகவும் வெளிக்கல் மாகவும் பிரிவடைந்துள்ளது. வெளிக்கலம் மேலும் பிரி வடைந்து இரு கழுத்துக்கலங்களுண்டாகியுள்ளன.
மையக்கலம், அடிக்கலம் உண்டாதல். மனமயக்கலம் தரக்கலமாகவும் கழுத்துக் கால்வாய்க்சுவ மாகவும் பிரிவடைதல். ஓரளவு முதிர்ச்ச்சியடைந்த பெண்கலச்சனனி, முட்டைக் கலம்; உ. கா. க. இருகருக்களுடைய க, கா, சு, பது கருக்கட்டலுக்குத் தயாராகவுள்ள முட்டையையுடைய பெண்
க்கச்சனனி,
படம் 109. பெண் கலச்சனணியின் விருத்தி

21ர்
பெண்சுலச்சனனி:
ஆண்கலச்சனனிகள்முதிர்ந்த பின்னரே பெண்கலச்சணனிகள் முதிர்கின்றன. முதிர்ந்த பெண்கலச்சனனியிலே வீக்கமடைந்த உதரம் என்னும் பகுதி பிரிவிலிமுத லின் இழையத்திலே ஆழமாகப் பதிந்திருக்கும். நான்கு நீள் வரிசைகளில் 5, 6 கலங்கள் உயர மான மிசுக்குறுகிய கழுத்து சமனற்றவளர்ச்சியினால் பின்புறமாக வளைந்திருக்கக் காணப்படும். அகத்தே இருகருக்களைக் கொண்ட கழுத்துக் கால்வாய்க் கலமும் ஒரு உதரக்கால்வாய்க் கலமும், முட்டையும் காணப்படும். முட்டையைச் சுற்றி கலச்சுவர் காணப் படமாட்டாது. ஆனல் வாங்குந்தன்மையுள்ள
புள்ளி ( Receptive Spot ] காணப்படும்.
பெண் கலச்சனனியின் விருத்தி :
பெண்கலச்சனனித் தொடக்கக்கலம் குறுக்குப்பிரிவுக ளடை, வதனால் மூன்றாம் கலங்கள் உண்டாகின்றன. அவை பபாவ3ொ அடிக்கப்ப ம், ன மயக்கலம், முதல் மூடிக்கலம். அடிக்கலம் பிரிவடை வதனால் பெண்கல்ச்சனனியின் அடிப்பாகத்தைச் சூழும் இழையம் உண்டாகிறது. முதல் மூடிக்கலம் ஒன்றுக்கொன்று செங்குத்தான் இரு நெடுக்குமுகப் பிரிவுகளினால் நான்கு கலங்களை உண்டாக்கு கிறது. இவை குறுக்குப் பிரிவுகளினால் நான்கு நீள்வரிசையில் 5-6 க உயரமான கழுத்தையுண்டாக்குகின்றன. இவற்றின் சமனற்ற வளர்ச்சியினால் கழுத்து பின்னோக்கிவளைந்திருக்கக் காண லாம். பி ைட்டயக்கலம் பிரிவடைந்து கழுத்துக் கால்வாய்க்கலம், உ தரக்கால்வாய்க்கலம், முட்டை என்பவற்றை உண்டாக்குகின்றது.
கருக்கட்டல்!
இரசாயனத் தூண்டலினால் வித்துப்போலி நீந்தி முட்டை யை அடைகிறது. மலிக்கமிலம் பெண்கலச்சனனியிலுண்டாவ தால் இது விந்துப்போலிகளைக் கவரக்கூடும், வேறு சேதன உறுப்பிற்குரியதும் அசேதனவுறுப்பிற்குரியதுமான உப்புக்களும் இதில் பங்குகொள்ளக்கூடும். கழுத்துக் கால்வாய்க்கலமும் உதரக் கால்வாய்க்கலமும் பிரிந்தழிவதினால் உண்டாகும் சளியம் இவ் விரசாயனப் பொருட்களுடன் வெளிவந்து விந்துப்போலிகளைக் கவருகின்றது. அநேக விந்துப்போலிகள் பெண்கலச்சளனியின் சுழுத்து நுனியை அடைகின்றன. இவற்றுள் ஒரு விந்துப்போலி சுருளியான பாதையிலே மெதுவாக நீந்திச்சென்று முட்டையி
லுள்ள வாங்குந்தன்மையுள்ள புள்ளியினூடாக முட்டையினுட் சென்று கருக்கட்டுகிறது. கருக்கட்டலின் பின் இருமடிநிலை ஏற்படுகின்றது.
ஆ ண்கலச்சனனியும், பெண்கலச்சனனியும் ஒரு பிரிவிலி முதலில் உற்பத்தியானாலும்
ஆண்கலச்சனானி முதலில் முதிர்

Page 116
218
வதால் ஒரு பிரிவிலிமுதலில் உண்டாகும் விந்துப்போலிகள் வேறொரு பிரிவிலிமுதலில் உண்டாகும் பெண்கலச்சன்னியி லுள்ள முட்டைகளுடனேயே கருக்கட்டுகின்றன.
முளையமும் அதன் விருத்தியும் !
கருக்கட்டிய முட்டை (நுகம்) தன்னைச்சுற்றி ஒரு மென் சவ்வை உண்டாக்கிக் கொள்கின்றது . நெடுக்குமுகப் பிரிவினால் (பெண்சுலச்சனனியின் நீள் அச்சிற்கு சமாந்திரமாக ஒரு முன் பக்கக்கலமும் ஒரு பின்பக்கக்கலமும் உண்டாகின்றன. பின்னர் குறுக்குமுகப் பிரிவில்ை இவ்விருகவங்களும் நான்கு கலங் களாகின்றன (இரு மேற்பக்கக் கலங்களும் இரு கீழ்ப்பக்கக் கலங் களும்). இது நாற்பக்கவுரு நிலையெனப்படும். முன்பக்கக்கலங்க னிருந்து முதல் இலையும் தண்டும் விருத்தியடைகின்றன. பின் பக்கக் கலங்களிருந்து வெரும் அடியும் விருத்தியடைகின்றன. அடி விருத்தியடையும் முளையத்திற்கு தேவையான போசணையை புணரித் தாவரத்திலிருந்து உறிஞ்சுகின்றது. முற்பகுதியில் இளம் முழையம் அதனுணவிற்கு புணரித்தாவரத்தையே முற்றாக நம்பி யிருக்கின்றது. பின்னர் வேகும் இலையும் பெண்கலச்சனனி யுறையிலிருந்து வெளிவந்து புதிதாகவுண்டான வித்தித்தாவரம் சுயாதீனமாக வளர்கிறது.
பிரிவிலி
முதல்
அடி
தண்டுச்சி
இலை
வேர்
படம் 110. புணரித்தாவரத்திலிருந்து வளரும் இளம்
வித்தித்தாவரம்

218
சந்ததிப்பரிவிருத்தி :
நெபிறேலெப்பிசின் வாழ்க்கைச்சக்கரத்தில்
இருவிதத் தாவரங்கள் உள்ளன. இவை இரண்டும் இருவிதசந்ததிகளைக் குறிக்கின்றன, சாதாரணமாக பன்னத்தாவரம் என அழைக்கப் படும் அமைப்பு வித்தித்தாவரமாகும். இது திருமாடி யாது'. இதில் இலிங்கமில் வித்திகள் உண்டாவதால் இது இலிங்கமில் சந்ததியென்றே, வித்தித்தாவரச்சந்ததியென்றே அழைக்கப்படும். இருமடியான வித்தித்தாய்க்கலத்தில் ஒடுங்கற்பிரிவு நடை பெற்று ஒருமடியான வித்திகள் உண்டாகின்றன. இவற்றி லிருந்து ஒருமடியான கலங்களைக்கொண்ட பு10ரித்தாவரம் (பிரிவிவிமுதல்) வளர்கின்றது. பிரிவிலிமுதலில் பாலங்கங்கள் உண்டாவதால் இது இலிங்கச்சந்ததி அல்லது புணரித்தாவரச் சந்ததி என அழைக்கப்படும்,
நெபிறேலெப்பிசின் வாழ்க்கை வட்டத்தில் இவ்விரு சந் ததிகளும் ஒழுங்கான முறையில் மாறி மாறி வரும், இதுவே சந் ததிப் பரிவிருத்தி என அழைக்கப்படுகிறது.
இளம் வித்தித் தாவரம்
-பிரிவிலிமுதல்
வேர்ப்போலி
வேர்
படம் 111. இளம் வித்தித்தாவரத்தையுடைய பிரிவிலிமுதல்

Page 117
12)
> வித்தித்தாவரம்.
(21)
முளையம்
வித்தியிலை
கருக்கட்டிய முட்டை (2x)
வித்திக்கலன் (21)
ஒடுங்கற்பிரிவு
| வித்தித்தாவரச்சந்ததி புணரித்தாவரச்சந்ததி
வித்தி (x)
முட்டை (2)
விந்துப்போலி (x)
ஆண்கலச் சனணி
பெண்கப்பச்சனனி !
பிரிவிலிமுதல் (x)
நெபிரேலெப்பிசின் வாழ்க்கைச் சக்கரம்

திரக்கியோ பீற்றா .
உயர்கலன்றவரங்கள் - (Higher Vascular Plants) ""இசுப்பெர்மற்றோபீற்ற" -- (Spermatophyta)
வித்துகளையுடோக்குந் தாவரங்களான கிரினேசுப்பெரும் களும், அங்கியோசுப்பெரும்களும் இதனுள்ளடங்கும். சிரி ஜேசுப் பெரும்கள் வெளித்தெரியக்கூடிய நிலையில் வித்துகளை யுடையன. அதாவது வித்துகள் திறந்த மாளித்திலைகளிலே யுள்ளன, ஆனது அங்கியோசுப்பெரும்களின் வித்துகள் பழங்களிலே மூடப்பட்ட நிலையிலுள்ளன, அதாவது வித்துகள் மூடப்பட்டுள்ள மாளித்திரை சாருள், அல்லது சூல் வித்தியபகளுள் (CarpLcla) உள்ளன. எனவே சிமினேசுப்பெரும்கள் வித்துமூடியிலிகள் எனவும், அங்கி (யோசுப்பெரும்கன் வித்துமூடியுளிகள் எனவும் அழைக்கப்படுகின்
பன்.
பிரிவு : உபடபிரிவு : வகுப்பு :
திரக்கியோபீற்ற தெரொப்சிடா சிமினேசுப்பெர்பே!
கிமினோசுப்பெர்மே
இதிலடங்கும் தாவரங்களெல்லாம் பல்லின ளித்திகளை யுண் டாக்குகின்றன. உண்மையான வேர், தண்டு, இலை ஆகியவதி றுடன், உண்மையான வித்துகளும் உள் ளன. தாவரங்கள் உரு வத்திற் பெரிதாகவும், வைரஞ்செறிந்த மரங்களாகவும் காணப் படுகின் றன , அவை பாப்பொழுதும் பச்சையாகவிருப்பதுடன் பல் பாண்டுகள் வாழ்கின்றன. முதிர்ந்த நிலையில் வித்தித்தாவரங்கள் மிகப் பெரியனவாகவும், சுயாதீனமான வாழ்க்கையை யுடையன வாகவுமுள்ளன. ஆனால் புணரித்தாவரம் மிகச் சிறியதாகவும், வித்தித்தாவரத்தைச் சார்ந்துள்ள து (Dependent). பெரும் பாலான - சிமிணேசுப்பெரும்களின் காழ் குழற் போளிகளையும், காழ்ப்புடைக் கல் விழையங்களையும் கொண்டுள்ளது, கலன்கள் ஒரு சில கி மி மனு சு ப் பெ ரு ம் சு ளி ல் காணப்படுகின்றன.

Page 118
21
உரியம் நெய்யரிக் குழாய்களையும், நெய்யரிப் புடைக்கல விழையங் களையும், மட்டுமே கொண்டுள்ளது'. இவற்றில் துணைக்கலங்கள் கிடையா, இலைகள் உருவத்திலும், அமைப்பிலும் வறண்ட நிலத்திற்குரிய இயல்புகளைக் காட்டுகின்றன. கருக்கட்டலுக்கு முன் நுண்வித்திகளைக் கடத்துவதற்கு நீர் அவசியமில்ம். காற்றி பேைலயே அவை கடத்தப்படுகின்றன. கல்வித்துகளும், வித்து களும் மூடப்படாத நிலையிற் காணப்படுகின்றன. பெண் பு3ாரித் தாவரத்தில் அநேக பெண்கலச்சனங்கள் இருப்பதால் ஒரு வித்தினுள் பா முளை யங்கள் உண்டாகக்கூடும், (பல முப்ளயங் கொள்ளுதன்மை), ஆனல், அவற்றிலொன்று மட்டுமே விருத்தி யடைகின்றது. ஏனையவை அழிந்து விடுகின்றன.
வகுப்பு
கிமினோசுப்பெர்மே
உபவகுப்பு -
சைக்கடோபிற்றா
வருணம்
சைக்கடாலேசு
குடும்பம்
சைக்கடேசியே
சைக்கசு
சைக்கசு முக்கியமாக கிழக்கு நாடுகளிலேயே பரந்து வளரக் காணப்படுகிறது. சைக்கசு செர்சினலிசு ( CyCas Circinalis ) இலங்கையிலே சாதாரணமாகக் காணப்படுகிறது. " சைக்கசு ரெவொலுயற்றவும், சைக்கசு ரும்பையும் அழகிற்காகப் பூந்தோட் டங்களிலே வளர்க்கப்படுகின்றன.
சைக்கசு செர்சினாலிசு (Cyca6 Circinalis )
சைக்கசு செர்சினாலிசு தென்னை, பனை போன்ற மரங்களின் தோற்றத்தைக் கொண்டது. இது பல நூற்றாண்டுகள் வாழக் கூடியது. தண்டு வைரஞ்செறிந்ததாயும், கம்பம் போன்றும், பொதுவாகக்கிளைகளற்றும் காணப்படும். இது 15 அடி. அளவு உயரத்திற்கு வளரக்கூடும். உச்சியிலே சிறைப்பிரிப்பான கூட்டிலே களும், சிறிய செ திவிலைகளும் ஒரு முடியாகக் காணப்படும். தாண்டின் மேற்பரப்பிலே சுருளியாக ஒழுங்குபடுத்தப்பட்ட நிமி பேறான இலையடிகள் உள்ளதனால் அது அழுத்தமற்றதாக இருக் சிறு 5. கீழ்ப்பகுதியிலிருந்து அவை விழுந்துவிடுவதனுல் அவற் பின் தழும்புகள் காணப்படுகின்றன. தாவரம் 8 - 10 அடி உயர Iமடையும் போது அரும்புகள் உண்டாகி கிளைகள் உண்டாகக் கூடும், சில வேளைகளில் தாய்த்தாவரத்திலிருந்து விழும் வித்து கள் நெருக்கமாகவுள்ள இக்லமுடியிலே அகப்பட்டு கிளைகள் போன்று வளரக்கூடும்.

213
படம் 112, சக்கசு
தண்டின் உச்சியில் சுருளிஒழுங்கில் அமைந்துள்ள இலைகள் இருவகைப்படும். அவையாவன பச்சைநிறமுடைய இவைகளும் க ப வ நி ற ப ன ட ய செதிலிலைகளுமாகும், 7-10 அடி நீள முனடய சிறைப்பிரிப்பான கூட்டிகேள் பச்சை நிறமுடையன. முதல் சிறைமேற்றண்டி லே பல சீறிலைகள் உள்ளன. இவற்றின் எண்1;க்கை தாவரத்தின் முதிர்ச்சியைப் பொறுத்துள்ளது. சிறை மேற்றண்டு ஒரு குறுகிய தடித்த அடியினால் தண்டிலே ஒட்டி யுள்ளது. சிறைமேற்றண்டின் அடிப்பாகத்தில் மேற்புறமாக குறிப் பிடத்தக்க வொரு தவாளிப்பையும், இரு பக்கங்களிலும் கூரியங் களையும் கொண்டுள்ளது. சீறிக்லகள் தடிப்பான புறந்தோளினால் மூடப்பட்டு, தோல் போன்று பரப்பையுடையன, அவை நீண்டு, காம்பற்று தொடர்விளிம்புள்ளவையாகவும் நடு தரம்பைக் கொண்டனவாகவும் உள்ளன. பக்கநரம்புகள் கிடையா. இலை கள் வறண்ட நிலத்தாவரத்திற்குரிய இயல்புகளைப் பெற்றுள்ளன. ஒவ்வொரு வளர்ச்சிக் காலத்திலே வருடமொரு முறையோ, இரு வருடங்களுக்கொரு முறையோ, புதிய இயகள் உண்டாகின் றன. புதிய பச்சிலைகள் உண்டாகுமுன் அடர்த்தியான கபில நிறுச் செதி லிகள் உண்டாகின்றன. எனவே பச் சிபகளும், செதிலிலைகளும் மாறி மாறி உண்டாகின்றன. சைக்கசுவின் கூட்டிலைகள் பன்னங்

Page 119
224
அச்சுச்சுருண்ட தளிலேயொழுங்கு
இலை
சாப்
வித்தியிலே
படம் 113, முளைக்கும் குமிழம்

205
"களின் கூட்டிலைகளைப்போன்று அச்சுச்சுருண்ட தளிரிலையொழுங் குள்ளவையாகும். ஆனால் சைக்கசில் சீறிலைகளும், பிறைமேற் றண்டின் முனையும் மட்டுமே இவ்வாறுள்ளன. சிறைமேற்றண்டின் (பெரும்பகுதி நேராகவுள்ளது. செதில் இலைகளும், இளம் கூட்டிலே களும் பல்கலங்களாலான மயிர்களால் மூடப்பட்டுள்ளன. முதிர்ந்த இலைகளில் மயிர்கள் சிறைமேற்றண்டின் அடிப்பகுதியில் மட்டுமே காணப்படுகின்றன.
சைக்கசுஆணிவேர்த்தொகுதியுடையது. தடித்த ஆணி வேரிலிருந்து சில பக்கவர்கள் உண்டாகின்றன, ஆனால் இவற்றி லிருந்து பல சிறு வேர்களுண்டாகின்றன, சாதாரண வேர்களைச் சுற்றியுள்ள மண் அநேக அல்காக்களையும், பங்கசுக்களையும் கொண் டுள்ளது. புதிய வேர்க்கிளையொன்று உண்டாகும் பொழுது பற்றி சியா உட்செல்வதனால் அப்பகுதி துரிதமாக வீக்கமடைந்து. மேற்பட்டைக் கலங்கள் பிரிந்தாளதனால் ஓர் இடைவெளியுன் டாகி, மேற்பரப்பிலேயுள்ள பட்டைவாய் போன்ற துவாரங்களி னூடாக அன்பினா சையடகாரம் (Arabaena Cyadagarum), நொஸ்டர் ருெக்கு (Nostac ) போன்ற நிலப்பச்சை அல்காக்கள் உட்சென்று இடைவெளிகளை நிரப்புகின்றன. அல்காக்சுள் பெருகுவதால் கலன் உருளைக்கும், மேற்றோல் கலங்களுக்குமிடையே தெளிவான நிலப் பச்சைவலையம் காணப்படுகிறது. அல்காக்கள் உள்ளதனால் ஒரு தாண்டல் ஏற்பட்டு, எதிர்த்திருப்பு அசைவுள்ள, சிறு முகம் கொண்ட நெருக்கமான கொத்தாகச் சிறு வேர்கள் நிலப்பரப்பிற் கருகே யுண்டாகின்றன. இவை இணைக்கவருக்குரிய வகையில் கிளைத்து முருகை யுருவாகக் காணப்படுவதால் ( Coral-like ] முருகையுரு வேர்கள் CTalloid Tots) என அழைக்கப்படுகின்றன. இவை ஒன்றிய வாழ்வுக்குரியனவாவென்பது சரிவரத் தெரிய வில்லே, பற்றீரியாக்களிருப்பதனால் அவனரயக் குடும்பத்திற்குரிய தாவரங்களின் வேர்க்கணுக்களில் நடைபெறுவது போல் இங்கே யும் நைதரசன் நாட்டல் நடைபெறக்கூடும். வாய்ப்பட்டை உண் டாவதால் முருகையுரு வேர்கள் சுவாசித்தலுக்கும் ஓரளவு உதவு கின்றனவென்று கருதப்படுகிறது.
கின்றார் முருகையா நடை.ெ
இனப்பெருக்கம்
பதியமுறை இனப்பெருக்கம் :
இடம்மாறிப் பிறக்கும் அரும்புகளாலோ, தண்டிஇரண்டா கும் குமிழங்கங்களாலோ பதியமுறையானப்பெருக்கம் நடைபெறு கி றது. இலிங்கமுறையினப்பெருக்கம் :
சைக்கசு ஈரில்லமுள்ள ஒரு வித்தித்தாவரமாகும், அதாவது ஆண், பெண் இனப்பெருக்கக் கலங்கள் வெவ்வேறு தாவரங்களிலே யுண்டாகின்றன,
1Z - 15

Page 120
இத..
படம் 114. முருகையுருவேர்
ஆண் கூம்பி !
சைக்கசின் ஆண்கூம்பி உச்சியிலுள்ள இலைமுடியிலே யுண் டாகின்றது, முதற்கூம்பி உச்சியிலே யுண்டாவதால் தண்டின் உச்சிவளர்ச்சி தடைபடுகிறது. எனினும் பின்னர் கூம்பி ஒரு பக்கமாகத் தள்ளப்பட்டு தண்டின் பக்கவரும்பு தொடர்ந்து நேராக வளர்கின்றது. கூம்பி 1-2 அடி நீளமான, இரு முனை களுங் கூம்பிய வடிவங் கொண்டது. அதன் மைய அச்சிலே அநேக நுண்வித்தியிலைகள் சுருளிவடிவாக உச்சிநாட்டமுள்ள முறைப்படி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன, அவை மிக ஒழுங்காக வுள்ளதால் பார்வைக்கு அவை முக்கோணவடிவான மஞ்சள் கலந்த செம்மஞ்சள் நிறச் செதில்கள் நெருக்கமாக ஒன்றன்மே லொன்றாக நெடுக்குமுக வரிசைகளிலே ஒழுங்குபடுத்தப்பட்டது போல் தோற்றமளிக்கின்றன. முதலில் அவை மென்மையாகவும், தசைப்பிடிப்பாகவும் காணப்பட்டாலும், முதிரும்பொழுது கடின மான் அமைப்புகளாக மாறுகின்றன. உச்சியிலுள்ள இளமையான வித்தியிலகளே முதலில் முதிர்வடைகின்றன.

227
நுண்வித்திலை
குனவை
படம் 115. ஆண் கூம்பி - கெ. வெ,
நுண்வித்தியிலை - கேசரம்)
இவை கூம்பியின் முதல் அச்சிலிருந்து ஏறத்தாழச் செங்குத் தாக 1-2 அங்குல நீளமுள்ள அமைப்புகளாகக் காணப்படுகின்றன. ஒடுங்கிய அடி சுயாதீனமான முனைப்பக்கமாக அகன்று மேல் நோக்கி வளைந்து கூரான மலட்டுமுனையாக முடிவடைகிறது,
வித்தியிலையின் கீழ்ப்பாகம் ஏறத்தாழ ஏரா (Keel) போன்ற வடிவுள்ளது. ஏராவின் இருபுறமும் வித்திக்கலன்கள் குவைகளாக ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குனவயும் 4-0 குறுகிய காம்பையுடைய நுண்வித்திக்கடன் (மகரந்தப்பை களைக் கொண் டுள்ளது. கூம்பியின் அடியிலும், நுனியிலும் உள்ள வித்தியிலை களிலே வித்திக்கலன்களுண்டாவதில்லை.
நுண்வித்திக்கலன் : (மகரந்தப்பை)
நுண்வித்திக்கலன் பல் தொடக்கக் கலங்களிலிருந்து உற்பத்தி யாகின்றது. நுண் எரித்தியிலையின் கீழ்ப்புறமாகச் சில காலங்களி

Page 121
128
"நுண்
வித்தியிலை குவை
கவன்கட்டு
0 (1)
நுண்
வித்திக்கலன்
நுண்வித்தியிலே
படம் 116. நுண்வித்தியிலையின் கு. வே.
விருந்து சிம்பிகள் போன்ற எறியங்கள் உண்டாகி, அக்கலங்கள் குறுக்காகப் பிரிவடைந்து வெளிப்படையான மலட்டுக்கலங்கள் முதற்சுவர்க்கலங்களை யுண்டாக்க, உட்படைக் கலங்கள் முதல் வித் திக்குரிய கலங்களாகத் தொழில்புரிகின்றன, நுண்வித்திக்கலன் பல படைகள் கொண்ட ஒரு தடித்த சுவரினுள் வித்தியாகு விழையத்தைக் கொண்டுள்ளது. வித்தியாகுவிழையத்தின் வெளிப் படை போசனைக்கம்பளமாக மாறுகிறது. உள்ளிருக்கும் இரு மடியான வித்தித்தாய்க்கலம் ஓள் வொன் று ம் ஒடுங்கற் பிரி வடைந்து ஒருமடியான நான்கு வித்திகளை (மகரந்தமணிகள்) யுண்டாக்குகின்றது. வித்தியின் வெளிச்சுவர் வெளியடைபியன் றும், உட்சுவர் உள்ளடையென்றும் அழைக்கப்படுகிறது. வித்திக ளுண்டாவதுடன் வித்தித்தாவரச் சந்ததி முற்றுப்பெறுகிறது.
வித்தியே புணரித்தாவரச் சந்ததியின் முதற்படியாகும் துண்வித்திக்கவனின் முன்பக்கச் சுவர்க்கலங்களுட்சில கங்கனா மாக வியத்தமடைகின்றன. வித்திக்கலன் முதிர்ச்சியடைந்த பின் தங்கணப் பகுதியிலே வெடிக்கின்றது.

12ா'
சுவர்க்கலங்கள்
போசணைக் சம்பளம்
வித்திக்கலங்கள்
நால் கூற்றுத் தொகுதி வித்திகள்
படம் 117. இளம் நுண் சித்திக்கலனின் தெ. வெ,
ஆண்கலச் சனனிக்கவும்
மூலப்பிரிவிலிக் கலம்
குழாய்க்கலம்
பிறப்பாக்குங் தவம்
மூலப்பிரிவிலிக் கலம்
படம் 118. ஆண் புணரித்தாவரத்தின் ஆரம்பகால விருத்தி

Page 122
230
ஆண்புணரித்தாவரத்தின் ஆரம்பகால விருத்தி :
புணரித் தாவரத்தின் [[தற்கலம் துண்வித்தி (அல்லது மகரந்தமணி) (யேயாகும். இது நுண்வித்திக் கலனிலுள்ள பொழுதே முளைக்கத் தொடங்குகிறது, நுண்வித்தியிலிருந்து ஒரு சிறிய மூலப் பிரிவிலிக்கலம் (Prot hallial cell Oா Vegetative CEII-பதி யக்கலம் உண்டாகிறது. பொரியகலம் ஆண்கலச்சனனிக்கலம் எனப் படுகிறது. பதியக்கலமே புணத்தாவரத்திற்குப் பதிலாகவுள் ளது. இது செலஜிநெல்லா விசள்ளதைப் போன்ற விருத்தி குன் றியதாகவும், வித்தித்தாவரத்தை முற்றுகச் சார்ந்துமுள்ளது, ஆண்கலச்சனளிக்கலம் கு று க் கு ப்பிரிவடைந்து சிறிய பிறப் பாக்குங் கலத்தையும் (பதியக்கலத்திற்கு அருகேயுள்ளது பெரிய குழாய்க் கவத்தையும் உண்டாக்கின்றது, மூன்றுகல் நிலையில் நுண்வித்தி நுண்வித் திக்கலனிலிருந்து விடுபடுகிறது.
பெண் தாவரம் : (Female Plant )
இலை
மாவித்தியிலை
செதிலிலைகள்
படம் 119, இளம் மாளித்தியிலேகளைக்கொண்ட
பெண் தாவர உச்சி
பெண் தாவரத்திலே கூம்பியுண்டாவதில்லை. தண்டின் உச்சி யில் மாவித்தியிலேகள் உச்சிநாட்டமுள்ளவாறு ஒரு சதபத்திரவுரு

231'
சிறையிலே
சூல்வித்து
படம் 120. மாவித்தியிலே
வாகச் [Rosette) சுருளிவடிவில் சாதாரண இலைகளைப்போல் அமைந்துள்ளன. உச்சிப்பிரியிழையம் தொடர்ந்து வளர்கிறது. இளந் தாவரம் வித்தியிலைகளை யுண்டாக்குவதில்லை. சைக்கசின் வளர்ச்சி மிக மெதுவாக நடைபெறுவதால் பல வருடங்களின் பின்பே தாவரம் முதிர்ச்சியடைந்து இனப் பெருக்கம் நடை பெறுகிறது. ஆனால் ஒரு முறை வித்தியிலைகள் உண்டானபின் ஒரு வருடத்திற் கொருமுறையோ, இரு வருடங்களுக்கொரு முறையோ வித்தியிலைகள் உண்டாகின்றன. இவை இலைச்சுற்று களுடன் மாறிமாறி உண்டாகும். மாவித்தியிலகள்முதலில் உட்

Page 123
132
மாவித்தித்
தாய்க்கலம்
மூலவுருப் பையக அலகு
முலவுருப் பையசும் தொழில் படும் மாவித்தி
படம் T 21,
I இளம் சூல்வித்து நெ. வெ,IL மாவித்தியையுடைய
(மாளித் திக்கத்துடன்)
இளம் சூல்வித்து நெ.வெ.
நுண்டுவாரம்
மகரந்தவனற
பெண்கலச் சனனியறை
பெண்சவச் சனணி
- வித்தக விழையம்
உட்சதைப்படை
கல்லான படை
வெளிச்சதைப் பட்டை கலன்பட்டி
படம் T22. முதிர்ந்த சூல்வித்து

233
புறமாக வளைந்து வளரும் முனையை மூடியுள்ளன, ஆனால் தண்டு நீண்டு அவற்றினுாடாக வளரும் பொழுது அவை கிடையான நிலைக்கு வ ரு கின் ற ன. இலைகளின் எண்ணிக்கையைவிட அதிக மான அளவில் மாவித்தியிலைகள் பிடண்டாகின்றன,
மாவித்தியிலை - (Maga Sporophyll |
மாவித்தியிலே ஏறத்தாழ 10 அங்குலம்வரை நீளமுடையது. அதனடிப்பாகம் உருண்டகாம்பாகவுள்ளது. நனிப்பாகம் சிறிய | சிறையில போன்ற அமைப்புகளையுடைய வேலுருவமானது. முன் விருத்தி காலத்தே அவற்றில் பச்சையவுருவம் குளோரபில்) உள்ள தனல் பச்சைநிறத் தோற்றமுடையன. ளி த் தி யி லே யி ல் நடுப் பகுதியின் விளிம்பிலே, இரு பக்கங்களிலும் 2-ம் கல்வித்துகள் (மாவித்திக்கலன்கள் உண்டாகின்றன, வித்தியிலைகள் பொதுவாக
தை, மாசி மாதங்களிலேயே தோன்றுகின்றன.
சூல்வித்து (Ovule) அல்லது மாவித்திக்கலன்-Megasporangium
எசைக்கசில் சூல்வித்துகள் நிமிர்ந்த நிலையானவை, (அதாவது நேர்த்திருப்பமுள்ள சூல்வித்து - Orthotropousavule) தாவர இராச்சியத்தில் மிகப் பெரிய கல்வித்து சைக்கசிலேயே காணப் படுகிறது. சைக்கசு செர்சினாலிசில் சூல்வித்து ஏ ற த் தா ழ 2 அ ங் கு ல நீளமுள்ளது. முட்டைவடிவாகவோ, கோளவடி வாகவோ உள்ள கரும்பச்சை நிற சூல்வித்துகள் வித்தியிலைகளின் நடுப்பகுதியின் இரு விளிம்பிலும் குழிவிழுந்த பகுதிகளில் காணப் படுகின்றன.
இளம் சூல்வித்தில் ஒரு கவசம் (Integument ) மூலவுருப் பையகம் ( INucellus 1.ஒரு தனிமாவித்தி ஆகியவையுள்ளன. மாவித்தி ஒருபொழுதும் வித்திக்கலனிலிருந்து விடுபட்டு வேறிடத் திற்குக் கடத்தப்படுவதில்லை. அது வித்திக்கவச் சுவரினகத்தேயே மாபுணரித் தாவரமாக (பெண் பிரிவிலி முதல்) வளர்கிறது .
சூல்வித்து பருத்து முதிர்வடைய கவசம் மூன்று படைசுளாக வியத்தமடைகின்றது. அசவையாவன புடைக்கலவிழையத்தையும், சீதக்கான்களையும் கொண்ட வெளிப்படை, வன்மையான நடுப் படை, சதைப்பிடிப்பான உட்படை என்பன. இம் மூன்று படை களும்பலகலத் தடிப்பானவை. முதிர்ந்த நிலையில் உட்படையை முல் வுருப்பையகத்திலிருந்து வியத்தப்படுத்துவது கடினம், வெளிப் படையிலும், உட்படையிலும் கவன்பட்டிகைகள் உள்ளன. கவசம் சூல்வி தினத முற்றாக மூடாமல் நுனியில் ஒரு துவாரத்தை விடுகிறது. இதுவே நுண்டுவாரம் (Micropyle) எனப்படுகிறது. உட்புடையிலே ஒட்டியுள்ள மூலவுருப் பையகத்தின் ஒரு பகுதி. அதாவது நுண்டுவாரத்திற்குக் கீழாகவுள்ள பகுதி, உட்படை யிலே ஒட்டியிராமல் மூலவுருப்பையக அவகாசு நுண்துவாரத்தி னுள் நீண்டுள்ளது. இவ்வவரின் நுனியிலுள்ள சில கலங்கள் அழிந்து ஒரு மகரந்த அறை உண்டாகிறது.

Page 124
234
பெண்கலச்சனனி தொடக்கக்கலம்
முதற் கயத் சக்கலம் மையக்கன்பம்
வம்
தயும்
- கா. கரு க, கலங்கள் முட்டை
சு. கபெங்கள்
இAIago
படம் 123. பெண்கலச்சனனியின் விருத்தி

235
மாளித்தி (Megaspare) அல்லது முளையபசபை : (Embryo Sac)
சூல்வித்தின் கவசம் மூன்று படைகளாக வியத்தமடையப்பன் னரே மூலவுருப்பையகத்தின் அடிப்பாகத்திலிருந்து ஒரு கலம் பருத்து, மாவித்தித்தாய்க்குலபாகிறது. இது ஒடுங்கற் பிரி வடைந்து உண்டாகும் முதலிரண்டு கலங்களுள் கீழ்க்கலம் மட் டுமே [மேலும் பிரிவடைகிறது. இதனல் மூன்று கலங்களோ உண்டா சின்றன. வழமையான நேர்கோட்டு நால்கூற்றுத் தொகுதியுண் டாவதில்லையென்பது குறிப்பிடத்தக்கது. உண்டான மூன்று கலங்களுள் கீழ்க்கலம் பாட்டு மே மாவித்தியாகத் தொழில்படு கிறது. மற்றவை பிரிந்தழிகின்றன,
பெண் புகாரித்தாவரம் -
றேறுப் பகுதித்து சுற்றும் வெற்றிடம்
மாவித்தியே பெண் புணரித்தாவரத்தின் முதற் சுலபமாகும். இது பிரிவடையுமுன் போசணைக்கலங்களிலிருந்து போசணையைப் பெற்று பருமனடைகிறது. பின்னர் சுரு பல கருக்களாகப் பிரிவடை கியது. மையத்தே ஒரு வெற்றிடம் உண்டாவதால் கருக்கள் மையத்திலிருந்து சுற்றுப்பகுதிக்குத் தள்ளப்படுகின்றன. பின்னர் சுற்றுப் பகுதியிலிருந்து காலச்சுவர் உண்டாகத் தொடங்கி உள் நொக்கிச் செல்கிறது. கலங்களைக் கொண்ட புணரித்தாவரத்தில் மேலுள்ள கலங்கள் சிறியனவாயும், கீழுள்ளவை பெரியனவாயும் காணப்படும் குளோரபில் அற்றதால் புணரித்தாவரம் தராது. உணவுத் தேவைக்கு ளித்தித்தாவரத்தையே முற்றாசுச் சார்ந்துள் ளது. பெண்கலச்சாரிகள் உண்டானவுடன் கீழ்க்கலங்கள் மாப் பொருளைச் சேமித்துவைத்து விருத்தியடையும் முளையத்திற்குக் கொடுக்கின்றது. பெண்புணரித்தாவரம் பருமனடைவதால் மூல வருப்பையகம் அழிகிறது. நுண் துவாரத்திற்குக் கீழாக சிறிய இழையமும், பெண்புணரித்தாவரத்தைச் சுற்றியொரு மென் சவ்வுமே மூலவுருப்பையகத்தின் எஞ்சியிருக்கும் பகுதியாகும்.
நுண் துவார முனையருகே 3-8 பெண்கலச்சனனிகள் விருத்தி யடைகின்றன. சுற்றுப்பகுதியிலுள்ள ஒரு சுலம் பெண்கலச் சனனித் தொடக்கக்கல மாக மாறி, ஒரு குறுக்குப் பிரிவினால் மேலே கழுத்து முதற்காலமும், கீழே மையக்கலமும் உண்டாகின் றன. கழுத்துமுதற்காலம் நெடுக்குப் பிரிவினால் இரு கழுத்துக் கலங்காக் கொடுக்கிறது. மையக்கலம் சுற்றியுள்ள கஞ்சுசுக்கலங் சுளிலிருந்து போசணையைப் பெற்று பருமனடைகிறது. அதன் கரு பிரிவடைந்து மேற்பக்கமாக உதரக் கால்வாய்க் கருவும், கீழ்ப்பக்கமாக ஒரு முட்டைக்கருவும் உண்டாகின்றன. இப் பிரிவு கருக்கட்டலுக்குச் சிறிது நேரத்திற்கு முன்பாகவே நடை பொகிறது, உதரக் கால்வாய்க்கரு அரிய , முட்டைக்கரு பரும் னடைந்து மையத்தையடையும். கழுத்துக் கலங்கள் இல்லாமை, சைக்கசின் பெண்கலச்சனனியின் குறிப்பிடத்தக்க இயல்பாகும்.

Page 125
235
மகரந்தக்குழாய்
வெளியடை
உடன்பிறப்டை
இமையடி மணி
உடற்கலம்
காம்புக்கலம்
மு லப்பிரிவிலிக்கலம்
இமையடி மணி
விந்துப்போலி
படம் I 34, நுண் வித்தியின் பிற்கால விருத்தி நிலைகள்

டிரா
பெண்கலச்சனனியைச் சுற்றியுள்ள இமையத்தின் எவிரைவான வளர்ச்சியினால் ஒரு ஆழமற்ற கிண்ணவடிவான குழியுண்டா கிறது. பெண்கலச்சனனி அறை எனப்படும் இக்குழியில் பெண் கலச்சனனியரின் கழுத்துக்கலங்கள் நீட்டப்பட்டிருக்கும்.
மகரந்தச் சேர்க்கை -
ஆண் கூம்பி முதிர்ந்தவுடன் அதன் முதலச்சு நீள்வதனால் நுண்ளித்தியிலைகள் விரிகின்றன, பலரும்பொழுது வீக்கம் குறைந்து அச்சிலே இலகுவில் விழக்கூடிய நிலையில் ஒட்டியிருக்கின்றன, வித்திக்கலனின் சுவர் வெடித்து சிறிய பாரங்குறைந்த மகரந்த மணிகள் (நுண்வித்திசுள் மூன்று கல் நிலையில் (பதியக்கலம், பிறப்பாக்குங் கலம், குழாய்க்கலம்) காற்றினிலே கடத்தப்பட்டு பெண் புணரித்தாவரத்திலுள்ள கல்வித்தின் நுண் துவாரத்தை யடைகின்றன. மூலவுருப்பையகத்தின் நுனி பிரிந்தாரிவதனாலுண் டாகும் பச்சைப்பொருளில் நுண்வித்திகள் விழுகின்றன, இப் பசைப் பொருள் உலர்ந்து நுண் துவாரத்திலிருந்து சடள்ளே சுருங்கும் பொழுது மகரந்தமணிகள் மகரந்த அறையினுள் இழுக் சுப்பட்டு நுண் துவாரம் மூடப்படுகிறது. சாதாரணமாக வைகாசி மர்தத்திலேயே மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது.
நுண் வித்தியின் மகரந்தமணி) பிற்கால விருத்தி :
மகரந்த அறையினுள் சேர்க்கப்பட்டுள்ள மகரந்த மணிசுள் உண்மையில் நுண்வித்தியல்வாது நுண்பித்திச் சு வ ரி னு ள் ளிருக்கும் நுண் புணரித்தாவரமேயாகும். வெளியடை அதன் மெலிந்த பகுதியில் வெடித்து, உள்ளனட வெளிவந்து மகரந்தக் குழாயாக வளர்கிறது. குழாய் பின்னர் புலவுருப்பையக இழை யத்தினுட் திளைத்து போசப்காயைப் பெறுகின்றது. பிறப்பாக்கு கலம் பிரிவடைந்து ஒரு காம்புக் கலமும், உடற்கலமும் உண்டா கின்றன. பின்னர் நீண்ட காலத்திற்கு ஒரு பிரிவும் நடைபெறுவ தில்லை. ஆடி மாதமளவில் கருக்கட்டல் நடைபெறும். பிற் காவத்தே பதியக்கலம் காம்புக் கலத்தினுள் நீள்கிறது. உடற்கலம் பருமனடைந்து அதனகத்தேயுள்ள கருவின் இரு புறமும் ஒவ் வொரு இமையடிமணி யுண்டாகிறது. அவற்றிலிருந்து குழிய முத லுருப் பட்டிகைகள் கதிர்க்கும். குழாயின் நிளச்சிற்குச் சமாந் திரமாகவே இமையடிமனாளிகள் தோன்றும். பின்னர் அவை 20 பாதையினூடாகச் சுழல்கின்றன. உடற்கலம் பிரிவடைவதனால் இரு விந்துப்போலித் தாய்க்கலங்களுண்டாகின்றன. அவை யொவ் வொன்றிலிருந்தும் ஒரு விந்துப்போலி யுண்டாகின்றது. பெரிய பம்பரவடிவான விந்துப்போலியில் சுருளிவடிவில் பல பிசிர்கள் உள்ளன.

Page 126
138
நுண்டுவாரம்
பா மகரந்தவறை
கவசம்
முல வுருப் பையகம் மகரந்தக் குழாய் விந்துப்போலி
பெண்கலச் சனனியறை புணரும்
ஆண்கரு பெண்கரு
பெண்கலச் சனப்னி
பெண் புணரித் தாவரம்
பட ம் 125. கருக்கட்டும் நிலையில் கல்வித்து
கருக்கட்டல் :
பெண்கலச்சனரி அறைக்கு மேலான மூலவுருப்பையகலிழை யம் அழிந்து மகரந்தக் குழாய்கள் (பெண்கலச்சனனி அறையினுள் நீள்கின்றன, மகரந்தக் குழாய்களின் உறை (உள்ளடை 1 வெடித்து, வெ ல் ல க் க ரை ச கில க் கொண்ட பெண்கலச் சனனி அறையினுள் ளிந்துப் போலிகள் விடுபடுகின்றன, பெண் சுலச்சனனியின் கழுத்துக்கலங்கள் விரிந்து விந்துப்போலிகள் பெண்கலச்சனனியினுள் நீந்திச் செல்கின்றன, விந்துப் போலி முட்டையினுட் செல்லும் பொழுது அதன் குழிய முதலுரு மென் சவ்வும் பிசிர்களும் சுழன்று விழ, கரு மட்டும் உட்சென்று முட்டைக்கருவுடன் சேருகிறது. சுருக்கட்டல் பொதுவாக மகரந் தச்சேர்க்கைக்கு 14 மாதங்கட்குப் பின்னரே நடைபெறுகிறது, கருக்கட்டலின் பின் நுகவித்தி (அல்லது நுகம்) உண்டாகிறது.

239
படம் 126. முளையமு தளின் நெ, வெ.
முளையவிருத்தி 2)
நுகவித்தி ஒய்வு நிலையிலிருந்து பின்னரே விருத்தியடைகிறது. அதன் பெரிய இருமடிய!ான கரு பிரிவடைந்து பல கருக்கள் உண்டாகின்றன. மையத்தே ஒரு வெற்றிடம் உண்டாக குழிய முதலுரு வெற்றிடத்தைச் சுற்றிக் கொள்கிறது, நுண் துவார முனையை விட சீழ்ப்புறமாகவே அதிக அளவில் கருக்கள் காணப் படுகின்றன. கீழ்ப்புறத்திலிருந்து கலச்சுவாருண்டாகவாரம்பித்து பின்னர் மேல்நோக்கி நடைபெறுகிறது. ஆனால் நுண் துவார முனேக்கருகே கலங்களுண்டாவதில்லை. அது ஒரு புட்கமாகக் காணப் படுகிறது. கிழ்ப்புறமாக கலங்களைக் கொண்ட பகுதியிலிருந்து முளையமும், சரக்கணமும், உண்டாகின்றன. அரக்கணம் சுருள் வளையமாகி, நிண்டு முளையக்கலங்களை பெண்புணரித்தாவர இழையத்தினுள் தள்ளுகின்றது. பூக்குந்தாவரங்களின் வித்தக விழயமுள்ள வித்துகளின் வித்தகனிழையம் புரியும் தொழிலை சைக்கசில் பெண்புணரித்தாவரம் புரிவதால் இதையும் வித்தக எமிழையம் என அழைப்பர். ஆனால் இரண்டினதும் உற்பத்தி வெவ்வேறானதென்பது குறிப்பிடத்தக்கது.

Page 127
24]
புடசும்
NUம்
தூக்கணம்
முளையவுருக்கலம்
படம் 12ா, விருத்தியடையும் முளையம்
ஒரு சூல்வித்திலே அநேக பெண்கலச்சனனிகளிருக்கின்றன, ஒவ்வொரு பெண்கலச்சனனியிலும் ஒரு முட்டையுண்டு. ஒவ் வொரு முட்டையும் ஒரு லிந்துருப்போளியினால் கருக்கட்டப் படுவதால் ஒரு கல்வித்திலே பல் முளையங்கள் உண்டாகக்கூடும். (பல முளையங்கொள்ளு தன்மை, ஆனால் இவற்றில் ஒன்று மட் டுமே விருத்தியடைகின்றது, தொழில்படும் முளையத்திலே ஒரு குறுகிய அச்சுண்டு. அதில் நுண் துவார முனைப்பக்கமாக வேர் நுனி (முட்ளை வேர் முண்ள வேர்க் கவசத்தினால் மூடப்பட்ட நிலை யிலும், எதிர் முனையில் ஒரு முளைத்தண்டும், இரு வித்திலைகளும் காணப்படும்.
வித்துண்டாதல் ;
மாவித்தி அல்லது முளையப்பை) சூல்வித்திலிருந்து வெளி வராததால் வித்து உண்டாகிறது. கவசத்தின் சதைப்பிடிப்பான வெளிப்படையும், வன்மையான தடுப்படையும், வித்துறையாகின்

241
ளித்த கவிழையம்
முளை வேர் முளைத்தண்டு
பு வித்திலைகள்
- பூலவுருப்பையசும்
- சாதப்படைகள்
- கல்லான படை
படம் 138. வித்தின் நெ.வெ.
- வித்துறை
- முளைவேர்
* இளம் இலை செதிலிலை
வித்திலைகள்
ப- ஆணி வேர்
1 / 1
படம் 129, வித்து முளைத்தல்

Page 128
242
றன .
உட்சதைப்படையிலிருந்தும்,
மூலவுருப்பையகத்தி. விருந்தும் போசணை பெறப்படுவதால் அவை மெல்லிய மென் சவ்வாக வித்தகளிழையத்தைச் சுற்றிக்காணப்படும், பூக்குந் தாவரங்களைப் போலல்லாது சைக்கசில் வித்தகலிழையம் கருக் சுட்டனின் முன்பே மாவித்தியிலிருந்துண்டாகியுள்ளது. எனவே அதன் ஒருமடியான நிலை குறிப்பிடத்தக்கதொன்றாகும்,
முளழியத்திலுள்ள குறுகிய அச்சின் வித்திலைக் கீழ்த்தடுப் பகுதியின் முனையில் தூக்கணத்திற்கு அருகே புளேவேர்க் கவ டிசத்தால் மூடப்பட்ட நிலையில் முனைவேருள்ளது. எதிர் முனையிலே முளைத்தண்டுள்ளது. இது ஒரு சோடி வித்திலைசளின் நடுவே காணப்படும், நன்றக முதிர்ந்து பழுத்த வித்து கபிலநிறமானது.
முளையம் முளைத்தல் !
ல் "eேalger" தினது .
வித்து பழுத்தபின் நிலத்தில் விழுந்து விலங்குகளினால் பரவப் படுகிறது. வித்தில் ஓய்வு காலத்தின்டரின் தரைக்கீழான முளைத்தல் நடைபெறுகிறது. (Hypagealgerimination) முளைத்தலின் போது முளைவேர்க்கவசத்தினால் மூடப்பட்ட புளைளேர் (வெளfiவ த்து. பின்னர் கவசத்தினாடாக வளர்ந்து மூலவேராகின்றது. அதனி லிருந்து பக்கவோர்கள் உண்டாகின்றன. முளைத்தண்டு வெளியே வருவதற்காக வித்திலைகளின் அடிப்பாகம் மட்டுமே வித்துறை பிலிருந்து சிறிது வெளியே இழுக்கப்படுகின்றது'. முளைத்தண்டு தேராசு மேல்நோக்கி வளரும்போது உண்டாகும் முதலிரண்டு மூன்று இலைகள் செதிலிபேகளாகும். நாற்று மேலும் வளர்வதற்கு வித்தகளிழையத்திலுள்ள உணவு உபயோகப்படுத்தப்படுகிறது. பின்னர் சிறைப்பிரிப்பான பச்சிலைகள் உண்டாகின்றன தாவரமசிவ வருடங்கள் வளர்ந்தபின்பே வழக்கமான" இலைமுடி யுண்டாகின் றது.
பாது உறது. வித்துறை
சைக்கசின் உபயோகங்கள் |
அழகிற்காக இசைக்கசுத்தாவரம் பூந்தோட்டங்களிவே வளர்க் கப்படுவதுண்டு.
இலைகள் சோடனைகளுக்கு உபயோகப்படுகின்றன.
3. தளிரிலைகள் கறியாகச் சமைக்கப்படுவதுண்டு.
வித்தின் வித்தகவிமையம் உலர்த்தப்பட்டு, மாவாக்கப்பட்டு, பிட்டு போன்ற உணவுப் பதார்த்தங்களைச் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

B43
மாவித்தியிலை
(2x)
> மாவித்திக்கலன்
(24)
0+ "
- ப.
சைக்கசுத் தாவரம் (22)
நுண்வித்தியில் நண்வித்திக்கவன்
(2x)
வித்து (2x)
நுகளித்தி (7ே)
ஒடுங்கற்பிரிவு ஒடுங் கற்
பிரிவு)
கருக்கட்டல்
நுண்வித்தி மாலித்தி
ப (x)
முட்டைக்,
சரு A
* விந்துப்போலி
ஆண்கலச்சன்னி <--
பதியக்கலம். (ஆண்புணரித்தாவரம்
பெண்கலச்சனனி .
- வித்தகவிழையம் (x)
(பெண்புணரித்தாவரம்)
கசக்கசின் வாழ்க்கைச்சக்கரம்

Page 129
10
திரக்கியோபீற்றா அங்கியோசுப்பெர்மே அல்லது பூக்குந்தாவரங்கள்,
(Angiospermae or Flowering plants)
காலததி வக்காலத்தில் பூண்டு
தாவரவர்க்கத்தில் மிகப் பெரியதும், மிகத் துலக்கமானதும் பொருளாதாரத் துறையில் மிக முக்கியமானதுமான வகுப்பு இதுவே. இவ்வகுப்பைச் சேர்ந்த தாவரங்களில் கடமையான வெர், உண்மையான தண்டு, உண்மையான வித்துகள் முதலிய இவைகள் உண்டு. தாவரம் வளரக்கூடிய இடங்களெங்கும் இவற் றைக் காணலாம். சில நன் நீரிலும், வேறுசில உவர் நீரிலும் காணப்படும். இவ்வாறு நீரில் வளருந்தன்மை பிற்காலத்திற் பெறப்பட்டதாகும். பச்சிலையம் மிகக் குறைவான அல்லது பச் சிவையமற்ற சில வகைகள்
அழுகல்வளரிகளாக அல்லது ஓட் டுண்ணிகளாக வாழ்கின்றன. பூக்குந்தாவரங்கள் வைரமானவை யாயினும் அதிகமானவை பூண்டுத்தாவரங்களாகும். வைரத் தன்மை முற்காலத்திற்குரியதென்றும் பூண்டுத்தன்மை பிற் காலத்திற்குரியதென்றும் கருதப்படுகின்றது..
வித்தித் தாவரம் பெரியதாகவும், தனித்து வாழ்வதாயு மிருக்கும். புணரித்தாவரம் சிறிய தாயும் வேறொன் றில் தங்கி வாழ்வதாயுமிருக்கின்றது. பத்தல் இவ்வினத்தின் மிக முக்கிய குணதிசயங்களில் ஒன்றாகும். இவ் வகுப்பில் இரட்டைக் கருக் கட்டல் நக3டபெறுகின்றது. மகரந்தக்குழாய் குறி, தம்பம் 1 சூலகத்தின் ஒரு பகுதி ஆகியவற்றினுாடாகச் சென்று பின்பு சூல் வித்தின் நுண் தொளையினுட் செல்கின்றது. மகரந்தச் சேர்க்கை காற்று, பூச்சிகள், பறவைகள் முதலிய கருவிகளால் நடைபெறுகின்றது. சில வேளைகளில் நீரினாலும் அருமையாக நடைபெறுவதுண்டு. சில நிர்த் தாவரங்களில் மகரந்தமணி குறிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது). கருவே ஆண்புணரியாகத் தொழிற்படுகின்றது', பூக்குந்தாவரங்களின் வித்துகள் மூடப் பட்டுள்ள சூலகத்தினுட் காணப்படுகின்றன. எனவே பூக்குந்தா வரங்கள் வித்து மூடியுள்ளிகள் எனவும் அழைக்கப்படுகின்றன. பகுதல் சும் ஒரு மூடிய தனிச் சூல்வித்திலையின் அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இனைந்த (சூல்வித்திலைகளின் அடிப்பகுதியைக் குறிக்கின்றது. இது முற்றி வித்துக்களுடைய பழமாகின்றது.
பூக்களின் தோற்றமும் அமைப்பும்!
பூக்கள் அரும்புகளிலிருந்து விருத்தியடைகின்றன. பூக்களின் பகுதிகளுக்கிடையே கணுவிடைகளின்றி ஒருங்கு சேர்ந்திருப்ப தால் அவை பதிய உச்சிகளிலிருந்து வேறுபடுகின்றன. பூவின் பகுதிகள் வளரத்தொடங்கும் பூக்காம்பின் நுனி வாங்கி அல்லது ஏந்தி எனப்படும். ஏந்தியிலிருந்து நான்கு வகையான பூவின் பகுதிகள் வளருகின்றன. வெளிப்புறத்திற் காணப்படும் பகுதி புல்லி எனப்படும். அதிகமான பூக்களில் இது சிறிய பச்சையான

145
இட்ல போன்றதாயிருக்கும். இது பூ அரும்பாயிருக்கும் பொழுது பூவின் ஏனைய பகுதிகளை மூடிப் பாதுகாக்கும். எல்லாப் புல்லி களும் 1 ஒருமித்து புல்லிவட்டம் எனப்படும். இதற்கு உட்புற முள்ள அழகான வாண்முடைய கண்ணைக்கவரும் பகுதி அல்லி வட்டம் எனப்படும்,
மகரந்தக்கூடு
சாதி
மகரந்தமணி தம்பம்
சூலசும் மகரந்தக்கு பாய்
கல்வித்து
கேசரம்
படம் 13. பொதுமைப்பாடுள்ள ஒரு பூளின் நெ. வெ. IT,

Page 130
16
சாதாரணமாக அல்லிகளின் எண்ணிக்கை புல்லிகளின் எண் ணிக்கையை ஒத்தோ அல்லது அதன் மடங்குகளாகவோவிருக்கும். அல்லிவட்டத்தின் முக்கிய தொழில் பூச்சிகளைக் கவருவதே. பூக் சளின் முக்கிய தொழிலான - இனப்பெருக்கத்திற்கு பூச்சிகளின் வருகை மிக அவசியமானது. சில பூக்களின் அல்லிகளில் பூச்சி களைக் கவரச்செய்யும் தேன்சுரக்கும் சுரப்பிகள் உண்டு. இதற்கு மேலுள்ள அடுக்கு மகரந்தமணிகளே புண்டாக்கும் கேசரங் களாகும், கேசரம் மெல்லிய காம்பு அல்லது இழையினாலானது. இதன் நுனியில் உருளை வடிவான அல்லது முட்டை வடிவான மகரந்தக்கூடு காணப்படும். இதனுட் " காணப்படும் மகரந்த மணிகளே பின்பு ஆண் இனப்பெருக்கக்கலங்கள் அல்லது விந்துகள் உண்டாக ஏதுவாயிருக்கின் றன. மகரந்தக் கூடு ஒரு தொடுப்பினால் இழையுடன் இணைக்கப்பட்டுள்ளது. கேசரங்கள் ஒருமித்துடன் ஆணசம் எனப்படும். பூவின் மத்தியில் யோனி அல் லது பெண்ணகம் காணப்படுகின்றது. யோனியில் (Pisti1) ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சூல்வித்திலைகள் (Carpels) காணப்படும். கல்வித்திலையில் ஒரு கோளவடிவமான சூலகம், நீண்ட தம்பம், குறி ஆகியபகுதிகள் உண்டு. கலகத்தினுட் காணப்படும் சூல் வித்தகத்தில் (Placenita ) சூல்வித்துகள் Ovuleg ) குல்வித் திழை (Fபாicle) என்னும் காம்பினால் இணைக்கப்பட்டிருக்கும்.
பூவின் முக்கிய பாகங்கள் ஆண்கமும், பெண்ணகமுமே. ஏனெனின் அவை வித்துற்பத்தியில் நேரடித்தொடர்புள்ளவை. அல்லிவட்டம், புவிவட்டம் ஆகியவை இனப்பெருக்கத்தில் நேரடித் தொடர்புள்ளவையன்று, நான்கு பகுதிகளையுமுடைய பூ பூரணப்பூ எனப்படும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பகுதி குறைவாயுள்ள பூ பூரணமற்ற பூ எனப்படும். ஆணகமும் பெண்ணாகமம் வெவ்வேறு பூக்களிற் காணப்பட்டால் அப்பூக்கள் நிறையில் பூக்கள் எனப்படும். இப் பூக்களில் கேசரங் கள் மட்டும் உள்ள பூக்கள் கெசரமுள்ள பூக்கள் எனப்படும். யோனி மட்டுமுள்ள பூக்கள் யோனிப்பூக்கள் எனப்படும், கேசரப் பூக்களும், யோனிப் பூக்களும் வெவ்வேறு தாரவங்களிற் காணப் பட்டால் அவை ஈரில்லமுள்ள தாவரங்களெனப்படும். இப்பூக்கள் ஒரேதாவரத்திற் காணப்பட்டால் அத்தாவரங்கள் ஓரில்லமுள்ள தாவரங்கள் எனப்படும். ஒருவித்திலைத்தாவரங்களின் பகுதிகள் மூன்று அல்லது மூன்றின் மடங்குகளாயிருக்கும். இரு வித்திலைத் தாவரங்களின் பூக்களின் பகுதிகள் ஐந்து அல்லது ஐந்தின் மடங்கு சுளாயிருக்கும்.
சூலகக்கீழான பூக்களில் (Hypogynous) சூலகம், கேசரம், அல்லி, புல்லி ஆகிய பகுதிகள் பொருந்தியிருக்கும் பகுதிக்கு மேலா கக் காணப்படும். இப் பகுதிகள் எல்லாம் தனித்தனியே குவிந்த ஒரு ஏந்தியிலிருந்து வளர்ந்திருக்கும். இதிற் காணப்படும் சூலகம் உயர்வுச்சூலகம் எனப்படும். சூலகச்சுற்றான்பூக்களில் (Prigynous]

27
1. குலகக்கீழான பூ 2. சூலகச்சுற்றிலுள்ள பூ 3. சூலகமேலான பூ
படம் 131,
பூவின் வகைகள்
சூலகம் தனித்திருப்பினும் ஏந்தியிற் காணப்படும் குழியினுள்ளி ருக்க, புல்லி அல்லி ஆதியன குழியரின் ஓரங்களிலிருந்து வளர்கின் றன. இதிற் காணப்படும் கலகம் பகுதித்தாழ்வுச்குலகம் எனப் படும். சூலக மேலான ( Epigாப்ப3] பூக்களில் ஏந்தி சூலகத் தைச் சூழ்ந்து மூடிவிடுகின்றது. சூலகத்தின் சுவரும் ஏந்தியின் சுவரும் இணைந்துவிட அல்லி, புல்லி போன்ற பகுதிகள் இச் சுவரின் உச்சியிலிருந்து வருவது போலத் தோன்றும். இதில் காணப்படும் சூலகம் தாழ்வுச் சூலகம் எனப்படும்.
பூக்கள்
ஆதிக்குணாதிசயங்கள்
உயர்ந்த குணாதிசயங்கள்
1. பாகங்கள், பெரியவை.
தொகை மாறுபடும்.
சிறியன குறித்த தொகை யுடையன.
2. பகுதிகள் சுருள் முறையி லடுக்கப்பட்டிருக்கின்றன.
வட்ட அடுக்குடையன்,
3. தனிப்பூக்கள்
பூக்கொத்துக்கள்
4. பகுதிகள் தனித்தவை
முற்றாகவோ பகுதியாகவோ இணைந்துள்ளன.

Page 131
248
மேற்ரேல்
போசணைக் கம்பளம் மகரந்தமணித்
தாய்க்கலங்கள்
படம் 132. மகசந்தக்கூடு, மகரந்தப்பை ஆகியவற்றின் விருத்தி
மகரந்தக்கூடு, மகரந்தமணி ஆகியவற்றின் விருத்தி
ஓர் இளம் மகரந்தக்கூடு ஓரினமான கலங்களினால் உண்டாக் கப்பட்டு, மேற்றேடலாற் சூ ழ ப் ப ட் டி ரு க் கு ம் ஆனால் முதிர்ந்தபின் மத்தியில் முதல் மாறிழையப்பட்டிகளையுடைய நான்கு சோணைகளாகப் பிரிந்திருப்பதைக் காணலாம். சிலகாவஞ்செல்ல, மாறிழையப்பட்டித் தொடுப்பிழையமுள்ளவிடத்தில் கலன்கட்டு வுண்டாக்கின்றது, ஓர் இளம் மகரந்தக் கூட்டின் ஒவ்வொரு

448
முகபயிலும் ஏனைய கலங்களைவிட உபபரத்தோலுக்குரிய (Hypg - durmal ] பெரிய கலங்கள் சுடட்டமாக வியத்தமடைகின்றன. இக்கலக் கூட்டங்களுள் வித்திக் அகலத் தொடங்கக்கலங்களாகும் ஒவ்வொரு தொடக்கக் கலத்திலும் சுற்றுச் சாய்வுள்ள பிரிவினால் வெளிப்புறமாக முதற் சுவருக்குரிய படைக்க பெங்களையும், உட புறமாக வி த்திமூலக்கலங்களையும் உண்டாக்குகின்றன, மேற் றோக்குக் கீழுள்ள முதற் சுவருக்குரிய படையில் காணப்படும் கலங்கள் மேலும் சுற்றுச் சாய்வாகவும், எதிர்ச்சாய்வாகவும் பிரிவடைந்து ஒரு மையமுடைய 3-5 கலப்படையை புண்டாக் கும், இப்படையே வித்தியாலத்தைச் சுற்றியுள்ள மகரந்த மணி பயின் சுவராகும். (மேற்ரேலுக்கடுத்துள்ள நார்ப்படை அகவுறை எனப்படும். ஆகக்கூடிய விருத்தியடைந்த பின்னரே மகரந்த மணகள் வெளியாக்கப்படுகின்றன. வித்திமூலத்தையொட்டி
மேற்ரேல்
நார்ப்படை
நடுப்படைகள்
1ப் பு
அழிவுறும் போசணைக் கம்பளம்
படம் 133. மகரந்தக்கூடு வெடித்தல்

Page 132
140
புள்ள கலங்களிலிருந்தே போசணைக் கம்பளம் உண்டாவதால் மிக ஆழத்திலுள்ள சுவருக்குரிய கவங்களும் போசணைக்கம்பள்த் தின் ஒரு பகுதியாகின்றன, போசணைக் கம்பளம் விருத்தியடை யும் மகரந்தமணிகளுக்கு
போசணையைக் கொடுக்கின்றது. வித்திமூலத்தின் கலங்களிலிருந்து அடர்த்தியானதும் பெரிய சுருவுடையதுமான குழியவுருவுடைய மகரந்தத் தாய்க்கங்கள் உண்டாகின்றன.
இக்கலங்கள் சாதாரணமான தாவரக்கலங்களைப்போல் இரு மடியான எண்ணிக்கையுடைய நிறமூர்த்தங்களையுடையனவாயி ருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒடுங்கற்பிரிவடைந்து நான்கு மகரந்த மணிகளை யுண்டாக்குகின்றது. ஒவ்வொரு மகரந்த மணியும் பிரிந்திருப்பதுடன் தனக்கென ஒரு உருவமுடையதாயிருக்கின்றது .
இவ்வுருவம் இனத்துக்கினம் மாறுபாடுடையது. ஒவ்வொரு இளம் மகரந்தமணரியும் தொடக்கத்தில் ஒரு கருவுடையதாயினும் விரைவில் அக்கரு இரண்டாகப் பிரிகின்றது. இதில் ஒன்று பிறப்பாக்குங் கருவாகும் (GETIETEtiVE nucleus). அடுத்தது குழாய்க் கருவாகும் (Tub nucleus - முதிர்ந்த மகரந்த மணியில் இருபடைகள் காணப்படும், மென்மையான உட்படை உள்ளடை என்றும், கடினமான வெளிப்படை வெளியடை என்றும் அழைக் கப்படும். வெளியனடயில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மெல்லிய மூலவுயிர் நுண் துளைகள் காணப்படும். முளைக்கும்பொழுது மகரந்தக் குழாய் இத்துளைகளினூடேயே வெளியாகின்றது. மேர் கூறிய விருத்தி மாற்றங்களின் காரணமாக மகரந்தக்கூடு இரு சோனைாகளுடையதாகின்றது. இவ்விரு சோணைகளும் கலன் கட்டுடைய ஒரு இழையினால் தொடுக்கப்படுகின்றது. ஒவ்வொரு சோணையினுள்ளும் நீண்ட உருளை வடிவான இரு மசுரந்தப் பைகள் காணப்படும். ஒவ்வொரு மகரந்தப்பையினது சுவர்கள் மேலும் வியத்தமடைகின்றன. மேற்ரேலுக்குக் கீழுள்ள கலங்கள் பெரிதாகி அவற்றின் சுவர்களில் இலிக்கினின் (Lignin ) என் னும் பொருள். படிகின்றது. இப்படிவு வெளிச்சுவர்களைத் தவிர ஏனைய சுவர்களிலெல்லாம் படிகின்றது. சில மகரந்தக் கூடுகளில் பகல் சுவர்களில் இவ்வகையான தடிப்பைக் காணலாம். வெளிச் சுவரின் மெல்லிய நார்ப்படை உலர்வதாற் சுருக்கமடைந்து புழை ( Stomium ) என்னும் விசேட கலங்களிருக்கும் பகுதி வழியே மசு ரந்தச் சோணைகளில் நீளமான வெடிப்பை யுண்டாக்கும்,
கல்வித்தின் அமைப்பும் விருத்தியும்:
சூலகத்தில் சூல்வித்தகத்திலிருந்து கல்வித்து ஒரு சிறிய புடைக்கலவிழைய எறியமாக உண்டாகிறது. இதுவே மூலவுருப் பையகமாகும். (INucclus) அதனடியிலிருந்து கவசங்கள் வளையங் சுளாகத் தோன்றி மூலவுருப்பையகத்தைச் சுற்றி வளர்ந்து நுனியில் ஒரு நுண் துளையை மட்டும் மூடாமல் விடுகின்றன,

251
படம் 134. முளையப்பையின் விருத்தி
மூலவுருப்பையகத்தின் நுனியின் அருகாமையிற் காணப்படும் ஒரு கலம் முளைப்பையின் தாய்க்காலத்தை யுண்டாக்குகின்றது. இது ஒடுங்கற் பிரிவடைந்து ஒரு வரிசையில் நான்கு கலங்களை யுண் டாக்குகின்றது. இந் நான்கு கலங்களுமே முளையப்பைகளாய் இயங்கக் கூடியன, ஆல்ை சாதாரண மாக இந் நான்சில் உட்புற பிருப்பது மட்டுமே முளையப்பையாக மாற, வெளிப்புற டமிருப் பவை அழிந்து விடுகின்றன. முளையப்டை முதலில் ஒரு கருவை யுடையதாயிருக்கும். இக்கரு இழையுருப் பிரிவடைவதனால் உண் டாகும் இரு கருக்கள் முளையப்பையின் இரு முனைகளையும் நோக் கிச் செல்கின்றன. பிரிந்த ஒவ்வொரு கருவும் மேலும் இரண்டு முறை இவ்விரண்டாகப் பிரியும். இவற்றில் நான்கு நுண்டுளைப் பகுதியிலும், மற்றைய நான்கும் எதிர்ப்பக்கத்திலும் தங்கியிருக் கும். இக்கூட்டங்களிலிருந்து ஒவ்வொரு கரு மையத்திற்கு அசைந்து சென்று இணைவதனால் துணைக்கரு உண்டாகின்றது. துண்டுப் பகுதியிலிருப்பவை முட்டையுபகரணமாகும், இவற்றின் மத்தியிற் காணப்படும் கலமே முட்டை அல்லது சூல் எனப்படும். மற்றைய இரு கலங்களும் உதவிவழங்கிகள் (SyncTgids ) எனப்படும். எதிர்ப்பக்கத்திற் காணப்படும் மூன்று கலங்களும் எதிரடிக்கலங்கள் (Antipodals) எனப்படும்.
சூல்வித்து கருக்கட்டலுக்கு ஆயத்தமாயிருக்கும் பொழுது அதனமைப்பு:
கருக்கட்டலுக்கு ஆயத்தமாயிருக்கும் பொழுது சூல்வித்து கிட்டத்தட்ட முட்டைவடிவமாயயிருக்கும். அது புடைக்கலளிழை யத்தினலான மூலவுருப்பையகம் எனப்படும் முட்டைவடிவான திரட்சியாகும். இது சூல்வித்தகத்துடன் ஒரு சூல்வித்திழையினால்
யகம் எனப்படி அது புடைக்கல்வித்து

Page 133
12
மூலவுருப்
பையகம்
எதிரடிக் கலம்
பளையப்பை
துணைக்கரு
பாக 4ாய் ய!
4 உதவி வழங்கி
டடபபிட
சுபசங்கள்
நுண் துவாரம்
படம் 135. முதிர்ந்த சூல்வித்து
தொடுக்கப்பட்டுள்ளது - கல்வித்திரை சூல்வித்துடன் இணைந்திருக் கும் பகுதி வித்துத்தம்பு (Hilபா) எனப்படும்.
மூலவுருப்பையகத்தைச் சுற்றி வழக்கமாக இரு கவசங்கள் உருவாகி இவை முசி' வுருப்பையகத்தின் நுண்துவாரமுள்ள நுனியைத் தவிர ஏப்ன ய பகுதிகளை படிக்கொள்கின்றன. முல் வருப்பையகத்தியினுள் மெல்ளியசுவரையுடைய பெரியகலம் ஒன்று காணப்படும், சுருக்கட்டலின் பின் முண்ண்யத்தாவரத்தைக் கொண் டிருப்பதால் இது பாளையப்பை எனப்படும் கருக்கட்டலின்போது பாளையப்பை சிறு வெற்றிடங்களும் பலே கருக்களுமுடைய குரிய வுருவை யுடையதாயிருக்கும், துண்டுவாரத்திற்கு எதிர்ப்புறத்தில் செல் (Gel) மென்சவ்வினாற் சூழப்பட்ட மூன்று பெரிய

253
கருக்களைக் காண வாம்.
எதிரடிக்கவங்கள் எனப்படும் இவை முளையப்பையின் போசணைக்கு உதவுகிறதெனத் தெரிகிறது ருண் துவார் முனையிலும் மூன்று பெரிய குழியவுருளினாற் சூழப்பட்ட கருக்கள் உண்டு. இவையே முட்டை உபகரணமாகும். மத்திய அலுள்ள கரு முட்டை அல்லது சூல் எனப்படும் பெண்புணரியாகும், முளையப்பையின் மத்தியில் ஒரு பெரிய கருவுண்டு. இது துணைக் கரு எனப்படும் ( Secondary nucleus 1,
1, நேர்த்திருப்பமுள்ள சூல்வித்து (Orthotropous) 2. கவிழ்ந்திருக்கின்ற சூல்வித்து (Anatropous) 3, வளைந்த திருப்பமுள்ள சூல்வித்து (Campylotropous) 4. இரு திப்பமுள்ள சூல்வித்து பார்(ATrhitropols)
படம் 136. சூல்வித்தின் வகைகள்
சூல்வித்தின் வகைகள் சூல்வித்தில் நான்கு வகைகள் உண்டு.
T) நேர்த்திருப்பமுள்ள சூல்வித்து:
இதில் சூ ல் வி த் தி ன் உடல் நேரானது, நுண் துவாரம், சூல்வித்தடி, கல்ளித்திரை, ஆதியன் ஒரு நேர் (கோட்டில் செங்குத்தாயிருக்கும். நுண்துவாரமும் வித்துத் தழும் பும் எதிராயிருக்கும். இது ஆதியானதும் மிக அரிதாகக் காணப் படும் வகையுமாகும். 1 ம் வெற்றி,

Page 134
254
(2) கவிழ்ந்திருக்கின்ற சூல்வித்து:- அநேகமான பூக்களில் இவ்வகையே காணப்படும்.
உடல் தலைகீழாயரிருப்பதால் சூல்ளித்திழை வெளிக்கவசத்துடன் இணைந் திருக்கும். சூ ல் வி த் தி ழை யி ன் இணைந்துள்ள பகுதி சந்திக் (கோடு எனப்படும், நுண் துவாரமும், வித்துத் தழும்பும் அருகிலி ருக்க சூல்வித்தடி மேல்முளையை நோக்கியிருக்கும். உடம், இவை அதிகமாக ஒன்றிய அல்லியுள்ள பூக்களிற்காணப்படுகிறது.
(3) இருதிருப்பமுள்ளவை. --- இது மேற்கூறிய இருவகைக் கும் இடைப்பட்ட வகையாகும். சூல்வித்துகளினுடல் அரைவாசி வளைந்திருக்கும், கல்வித்தபடி, வித்துத் தழும்பு, நுண்துவாரம்
கரு
பிறப்
பாக்குங்
சுரு
ஓ ஏ .
குழாய்க்
சுரு
மகரந்தக்
குழாய்
ஆண்
கருக்கள்
51, மகரந்தக்
குழாய்
குழாய்க் கரு
படம் 137. மகரந்தமணி முளைத்தல்

145
 ைடுபாக
துணைக் கரு
கருக்கட்டிய முட்டை
மகரந்தக் குழாய்
படம் 138, சுருக்கட்டல்

Page 135
E16
ஆகியவை வெவ்வே றிடங்களிற் காணப்படும், இவ்வகை அருமை. யாகவே காணப்படும். பயிராபிலிஸ் (நாலு மணிப்பூ றனன்கு லேசியே, Ranபாப்ulaceae ] குருசிஃபெரே [Cாபட்iferat) ஆகிய கடும்பத்தைச் சேர்ந்தவற்றின் பூக்களில் இவ்வகையைக் காணலாம்,
4) வளைந்த திருப்பமுள்ளவை:- இவ்வகையில் உடல் குதிரை லாடம் போன்று தன் மேலேயே வளைந்திருக்கும். ஆக லால் நுண் துவாரம் கல்வித்திழையினாருகிற் காணப்படுகிறது. இவ்வகையை அவரையினத் தாவரங்களின் பூக்கள் சிலவற்றிலும் குரு சிஃபெரே புல்லினத்திற்குரியதா வ ர ங் க ளி ன் பூக்கள் சிலவற்றிலும் சுர+33வாம்.
மகரந்தச் சேர்க்கை:
மகரந்தமணி Iமகரந்தக் கூட்டிலிருந்து குறியையடைதல் மகரந்தச் சேர்க்கை எனப்படும், ஒரு பூவின் மகரந்தமணி அப் பூவின் குறிக்கு அல்லது அதே தாவரத்தின் வேறுபூவின் குறிக்கு எடுத்துச் செல்லப்படல் தன் மகரந்தச் சேர்க்கை எனப்படும், ஒரு தாவரத்தின் பூவிலுள்ள மகரந்தமணி அதே இனத்தைச் சேர்ந்த (வேறு தாவரத்தின் பூ வின் குறிக்கு எடுத்துச்செல்லப் பட்டால் அது அயன்மகரந்தச் சேர்க்கை எனப்படும், அநேகமாக அயன் மகரந்தச் சேர்க்கையே நடைபெறினும் பல இனங்களின் நிறை பூக்களில், தன்மகரந்தச்சேர்க்கையும் நடைபெறுகின்றது. அயன் மகரந்தச் சேர்க்கையினால் உண்டாகும் வித்துகள் தன்மக சந்தச் சேர்க்கையினாலுண்டாகும் வித்துகளைவிட வலுக்கூடியன வையாயும் அதிகமானவையாயும் காணப்படும். சாதாரணமாக பூச்சிகள், காற்று, விலங்குகள், நீர் ஆகிய காரணிகளால் மகரந்தச் சேர்க்கை தடைபெறுகின்றது -
சுருக்கட்டல்
அநேகமாக குறி மகரந்த மணிகளைக் கவர்ந்து வைத்திருக்கக் சுகூடியதாக சிம்பிகளுடையதாய் அல்லது பசைத்தன்மையுடைய தாயாருக்கும். சில வேளைகளில் காற்றில் பறந்து செல்லும் மகரந்த மணிகளைப் பிடிக்கக் கூடியவாறு மயிர்கள் அல்லது இறகுகள் உடைய தாயாருக்கும்,
குறியிற் காணப்படும் வெல்வக்கரைசல் அல்லது மலீக் சுமிலத்தில் (Malimaid மகரந்த மணி முளைக்கத் தொடங்கும், மகரந்தமணியின் உள் ளட அதன் வெளியடையிற் காணப்படும் மூலவுயிர்த் துளையினுாடாசு வெளிவந்து, உருளைவடிவான மகரந் தக் குழாயாக வளர்கிறது. இது ஒட்சிசனிலிருந்து விலகி சூலகத் திற் சுரக்கப்படும் இரசாயனப் பொருள்களையும் ஈரப்பற்றையும்

பரர்
'', நோக்கி வளரமுனையும்பொழுது குறியைத் துளைத்துக் கொண்டு
தம்பத்தின் வழியே நீளும் , சில தம்பங்கள் குழாயாக இருக் சின்றன, ஆனால் வேறுசில தம்பங்கள் திண்மப்பொருளா லானவையாயிருப்பதால் - மகரந்தக்குழாய் திண்மப்பொருளைக் கரைக்கும் சுரப்புகளைச் சுரந்து, அவற்றைத் துளைத்துச் செல் சின்றன. இவ்வாறு மகரந்தக் குழாய் சீழ்நோக்கி வளர்ந்து செல்லும்பொழுது அதனுட்காணப்படும் பிறப்பாக்குங்கரு இரண்டு ஆண் கருக்களை யுண்டாக்கும். ஆண்கருக்களும், குழாய்க் கருவும் குழியவுருவுடன் சேர்ந்து மகரந்தக்குழாயின் நுனியை நோக்கி அசையும். இறுதியாக மகரந்தக்குழாய் சூலகத்தின் அறையை அடைந்து, உதவிவழங்கிகள் சுரக்கும் திரவத்தி னுதவியாலோ, வேறுவழியாகவோ சூல்வித்தின் நுண் துவாரத்தி னூடே செல்கின்றது. பின் அது' மூலவுருப்பையகத்தைத் துளைத் துக் கொண்டுசென்று முளையப்பையை (பெண் புணரித்தாவரம்) யடைகின்றது, ஒருமடியான குழாய்க்கரு இரு ஆண்புணரிக் கருக் கள் ஆகியவற்றைக் கொண்ட முளைத்த மகரந்த மணியே ஆண் புணரித்தாவரமாகும். புணரித்தாவரங்கள் வெகுவாக விருத்தி குன்றியிருப்பதை இங்கு அவதானிக்கலாம். குழாய்க்கரு ஆண் சுருவை, முளையப்பைக்கு இட்டுச் செல்வதால் அது வழிகாட்டும் (தொழிலுடையது. மூளை யப்பையினுள் குழாய்க்கரு அழிந்துவிட, மகரந்தக் குழாய் பருத்து, நுனியில் வெடிப்பதால் இரு 4-ஆண்கருக்களும் அதனூடே வெளியேறக் கூடியதாயிருக்கின்றது. ஆண்கரு வொன் ' முட்டையையடைந்து அதனுடன் அப்பப்பா' கின்றது. இவ்விளைவே சுருக்கட்டல் எனப்படும், கருக்கட்டப்பட்ட முட்டை அல்லது நுகம் புளையும், அல்லது இளம் தாவரமாக விருந்திய டசின் சி, துண்சுருவும் முட்டையும் ஒழயடி யானவையாகையால் அவற்றின் திரைவி,னற் பெறப்படும் நுகம் குரு IITாயான தாகும். அவர் Tால் ஆண் கருவா லும், முடடயா இம் கொடுக்கப்பட்ட கருமிடியான திருமூர்த்தங்கள் உண்டு.
இரண்டாவது ஆண்கரு முளையப்பையின் மத்திக்குச் சென்று அங்குள்ள துணைக்கருவுடன் இணைந்து மும்மடியான கருவை புரடாக்கின்றது. இதிலிருந்த வித்தகபபிழையம் என்றும் போசாயின் பயம் உண்டாகின்றது. இத அபகருக்களும் பங்கெடுக்கும் இப் புணர்ச்சியை இரட்டைக் கருக்கட்டல் என்பா. இரண்டு உதவின மங்களம் Iாண்று பாகிரடிக் கலர் களும் சுய கட்டலிகள் பின் இந்து விடுகின்றன. மகரந்தச் சேர்க்கைக்கும் கருக்கட்டதுமிடையுள்ள காவவெவ்ஃப இனத்துக்கிடம் வேறுபடு கின்றது. சில இனங்களில் அது சில மணித்தியாலங்கள் அல்லது சில நாட்களாகும். சில தினங்களில் இக்காதுவெல் ஓர் வருடமாகும். 1Z 17

Page 136
258
ளித்தகவிழையம் உண்டாதல்
கருக்கட்டலின் பின்
மு ளே ய ம் - விருத்தியடையுமுன் னரே சிலவேளைகளில்) வித்தகவிமையக்கரு - தொடர்பான பிரிவுகளடைவதால் பல் கருக்கள் உண்டாகின்றன,
பின்பு இக் கருக்களுக்கிடையே கலச்சுவர்கள் உண்டா கின்றன, இவ்வாறு உண்டாக்கப்படும் சேமிப்பிழையமாதிய வித் தக விழையத்தில் வளரும் முளையத்திற்கு வேண்டிய பொருள்கள் சேமித்து வைக்கப்படுகின்றன. அநேக தாவரங்களில் வித்தக விழையம் வளரும்பொழுது மூலவுருப்பையகவிழையங்களை யகற்றி விடுகின்றது. ஆனால் சில வேளைகளில் நீரல்லிப்பூக்களிற் போன்று. மூலவுருப்பையகவிழையம் அகற்றப்படாதிருந்து முதிர்ந்த சூல் வித்தின் பகுதியாகின்றது. வித்தகவிழையம் வளரும் முளையத் தினால் முற்றாகப் பாவிக்கப்படவும் கூடும். ஒரு பகு தி பாவிக்கப் படாமல் உணவுச்சேமிப்பிழையமாக விடுபடவுங்கூடும். அவரை யினத் தாவரங்களில் வித்தை நிரப்பியுள்ள முளையம் முழு வித்தக விழையத்தையும் பயன்படுத்தி விடுகின்றது. இவ்வகையான லித்துகள் வித்தகவிழையமில் அல்லது வெள்ளிரையமில் வித்துக் கள் எனப்படும். இவற்றில் உணவு எரித்திலகளிற் சேமிக்கப்படு கின்றது. ஆமணக்கு. நெல், தேங்காய், புல் முதலியவற்றின் வித்துகளில் வித்தகளிழையம் தங்கியிருக்கும். இவ்வகையான ளித்துகள் # வித்தகவிழையமுள்ள அல்லது வெள்ளிரையமுள்ள வித்துக்களெனப்படும். வித்த கவிழையம் நெல்லிற் போன்று மாப் பொருளாயுமிருக்கலாம் ஆமணக்கிற் போன்று எண்ணைப் பொரு ளாயுமிருக்கலாம், நா
ரகா யத்தின் விருத்தி
கருக்கட்டலின் பின் முட்டை அல்லது நுகம் பல் தொடர் சசிப்பிரிவுகளை யடைவதால் விருத்தி தொடங்குகின்றது. கிமி னோசுப்பொர்மேயில் நடைபெறுவதுபோன்று விருத்தி கருப்பிரிவிற் தொடங்குவதில்லை. ஆனால் ஒவ்வொரு பிரிவின்போதும் ஒவ்வொரு சுவகுண்டாகின்றது. இவ்விருத்தி இளம்பருவத்தில் ஒருவித்திலைத் தாவரங்களிலும், இருவித்திலைத்தாவரங்களிலும் வேறுபாடான தாய்க் காணப்படும்,
இருவித்திலைத் தாவரங்களில் முளை யவிருத்தி உம் காசெல்லா: " Capsella |
நுகம் நீண்டு, ஒரு குறுக்குச்சுவரால் இரண்டாகப் பிரி க:5ாறது, ஒன்று நுண்துவாரத்திற்கு அருகேயுள்ள தாக்கணக் கலம், மற்றையது முஇளயப்பையின் வெற்றிடத்திற் கருகா 5:7மயிர் காணப்படும் முளையக்கலம், மேலும் சாக்கணக்கலம்பிரிவடைவதால்

259
പ്രാ
ജി ത്തിച
മാ
t
( E
രി
o രി
bജ
படம் 133. கப் செல்லா-பெர்சாவின் முனையத்தின் முற்கால
விருத்தி நிலைகள். (இருவித்திலைத்தாவரம்

Page 137
16)
8- 10 கலங்கள் சேர்ந்த இழையுண்டாகின்றது. இவ்விழை காக்" | கணம் எனப்படும். சாக்கணத்தின்மேல் நுனியிலுள்ள காலம் பகுத்து முனையப்ட்பரின் நுண் துவாரப் பக்கமாக ஒட்டியிருக்கக் காணப்படும், இது உணவை உறிஞ்சும் தொழிலைச் செய்கிறது. தாக்கணம் முளை யக்கலத்தை வித்தகளிமையத்தினுட் தள்ளு கின்றது. முளையக் கலத்தின் மேலுள்ள தரக்கணத்தின் அடிச் கலம் கீழுள்ளவளரி' யெனப்படும். இது மேலும் பிரிகையடைவ தால் வேர் நுனி அல்லது முளேவேர் உண்டாகும், இப்பொழுது முளையக்கலம் பருத்து கோளவடிவாகின்றது. இது நீள்புறமாக இரண்டாகப் பிரிகின்றது. இரண்டாம் முறையும் முன்னையதற்குச் செங்குத்தாக நீள்புறமாகப் பிரிகின்றது. மேலும் முளையம் குறுக்கு முகமாகப் பிரிவடைவதால் நாற்பக்கவுருவாகிறது. இந்நிலையில் முளையம் முய-முதல் (Protmbryo) எனப்படும், கீழுள்ள வளரி யையடுத்துள்ள நான்கு கலங்கள் அடிக்குக்கீழான அல்லது பிற் புறமான நாற்பக்கவுரு எனப்படும், மற்றைய நான்கும் அடிக்கு மேலான அல்லது முற்புற நாற்பக்கவுரு எனப்படும், அடிக்கு (மேலான கலங்களிலிருந்து இருவித்திலைகளும், தண்டு நுனி அல்லது மூளைத்தண்டு ஆகியனவ யுண்டாகின்றன. அடிக்குக்கீழான கலங் களிலிருந்து வித்திலைக்கீழ்த்தண்டு, முளை வேரின் முக்கிய பகுதி
ஆகியன உண்டாகின்றன.
ஒருவித்திலைத்தாவரத்தின் முளையவிருத்தி!
இங்கும் முளையக்கலத்தின் பிரிவால் முளையமுதல் உண்டா கின்றது. ஆனால் முளையவியலில் பல வேறுபாடுகள் காணப்படு கின்றன. ஒரு தாவரத்தில் நடக்கும் விருத்தியையாவது ஒரு வித்திலைத்தாவரங்களுக்கு உதாரணமெனக் கூறமுடியாது. அலிஸ் மேசியே (Alismaceae ] குடும்பத்தைச் சேர்ந்த சஜிற்றேரியா (Sagittaria ) வின் விருத்தி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
முளையக்கலம் பிரிவடைந்து முளையமுதலை யுண்டாக்கு கிறது. இது ஒரு பெரிய அடிக்கலம், ஒரு கிடைக்கலம், ஒரு துனிக்கலபமாக மூன்று கலமுடைய இழையாகும். அட்டியிலுள்ள கலம் பிரிவதில்லை, நடுக்கவும் பல செங்குத்தானதும் குறுக்குமுகமானதுமான பிரிவுகளடைந்து கலங்களை புண்டாக் கின்றது. இனை அடிக்கலத்தையடுத்து சில தூக்கணக் கலங்களை யும், முளைவேர், வித்திலைக் கீழ்த்தண்டு, முளைத்தண்டு ஆகிய வற்னற தடண்டாக்குகின்றன, துனிக் கலம் ஒரு வித்திலையை யுண் டாக்கின்றது. - மு ள ய ளி ரு த் தி யில் கவனிக்கத்தக்கது யாதெனின் அநேகமாக வித்திலை முனையிலும், முளைத்தண்டு பக் கத்திலுமிருப்பதே.
பல முளை யங்கொள் ளுந்தன்மை:
பலசாதிப் பூக்குந்தாவரங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட வாழத்தக்க முளையங்கள் காணப்படுகின்றன. இந்நிலை பல்வழி களில் உண்டாகின்றது.

61
1"). முட்டை வித்தி பிளந்து விருத்தியடையும் பொழுது ஒன்றுக்கு மேற்பட்ட முளையத்தை யுண்டுபண்ணுகிறது. இத் தன்மை பிளவுப் பல முளையங்கொள்ளுந்தன்மை எனப்படும், உ-ம் : வெங்காயம், சிற்றசு.
(2) சில வேளைகளில் ஒரு சூல்வித்து ஒன்றுக்கு மேற்பட்ட தொழிற்படத்தக்க - மாவித்திகளையுடையதாயிருப்பதாலும் இந்நிலை ஏற்படலாம். ஒவ்வொரு மாவித்தியும் ஒவ்வொரு முளை யப்பையையும் ஒவ்வொரு முட்டையையும் உண்டாக்கும், இதனால் பிறக்கட்டல் " நடந்தபின் ஒன்றுக்கு
மேற்பட்ட முளை யங்களுண்டாகின்றன.
மூலவுருப்பை
யகம்
வித்திலைகள்
- தண்டுமுனை


Page 138
262
(3) சாதாரணமாக உண்டாகும் முளையத்தைவிட காருக் தட்டல் நடைபெற்றே, நடைபெறாமலோ உதவி வழங்கியிலிருந்து Synergids) அல்லது சில வேளைகளில் எதிரடிக் கலங்களிலிருந்து Antipodals) முளையங்கள் உண்டாகலாம்.
4 ) யூலவுருப்பையசுந்தின் கலங்களின் பிளவினா லுண்டாகும் வித்தரும்புதலினால் பல் முளையங்கள் உண்டாகலாம், சில வேளை களில் கவசப்பிரிவினாலும் உண்டாகலாம் உம் லில்லியேசியே குடும்பத்தைச் சேர்ந்த வெண்காயவிதையில் ஐந்து முளைய மிருந்ததாக அவதானிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒன்று சாதா ரணமுனறயிற் பெறப்பட்டதாகும், ஒன்று உதவி வழங்கிகளி விருந்தும் இரண்டு எதிரடிக் கலங்களிலிருந்தும், மற்றொன்று கவசத்திலிருந்தும் உண்டாகியுள்ளது.
விதையாகுமுன் சூல் வித்திலேற்படும் மாற்றங்கள்:
சூக்த்தில் ஸித்தகவிமையத்திற்குரிய மாற்றும் நடக்கும் பொழுது அது உருவத்தில் பெருப்பதுடன் அதிகவளவு ஈரலிப்பை யும் இழக்கின்ற து. கவசம் உடலர்ந்து கடினமாகி பாதுகாப்புக் கவசமாகின்றது. வெளிக்கவசம் வித்துறையாகவும், உட்கவசமி ருப்பின் அது மெல்லிய மூடுபனடயாகவும் மாறுகின்றன. இப்பொழுது சூல்வித்து தன்னுள் ஒரு இரைப்பாறும் முளையத்தையும் அதற்குத் தேவையான உணவுச் சேமிப்பையுங் கொண்டு வித்துறையால் மூடப்பட்ட வித்தாக மாறுகின்றது. முளையத்திற்குரிய உணவு வித்தகவிழையத்தில்' அல்லது வித்திலையில் அல்லது வித்துச் சுற் பிழையத்தில் சேமித்து வைக்கப்படுகின்றது. சூல்வித்தின் நுண்துவாரம் வித்தின் நுண்துவாரமாக மாறும். சூல்வித் திழை தொடுக்கப்பட்டிருந்த இடம் வித்துத்தழும்பாகக் காணப்படும்.
'டம் விசாக மா சூல்வித்துச் சு
பழத்தின் விருத்தி ;
-ந்தவளியே கடத்த யுண்டுபண் தங்கிய
கருக்கட்டலினாலேற்பட்ட தூண்டலினால் சூல்வித்து பல மாற்றங்களடைந்து வித்தாக மாறியதைக் கண்டோம். இத் தூண்டல் பின்பு வெளியே கடத்தப்பட்டு சூலகச் சுவரிலும் பூவின் ஏனைய பகுதிகளிலும் மாற்றத்தை யுண்டுபண்ணுகிறது. அல்லி களும் கேசரங்களும் வாடி விழுந்துவிட புல்லிகள் தங்கியிருக்கும், தம்பமும் குறியும் உலர்ந்து மறைந்து விட, சூலகம் ஓரளவு பருமனடைகின்றது. இம் மாற்றங்களால் இறுதியிற் சூலகத்தி லிருந்து சுனி (பழம்) உண்டாகின்றது. எனவே பழம் தன்னகத்தே வித்துகளைக் கொண்ட முற்றிய சூலகம் எனலாம். முற்றிய சூப் கத்தின் சுவர் பழத்தின் சுவர் அல்லது சுற்றுக்கனியமாகும். இச் சுற்றுக்கனியம் மென்மையான சதையுடையதாயுமிருக்க லாம் அல்லது உலர்ந்து சுடினமாயுமிருக்கவாம்.
யம் மென் அல்லது "லாம். முற்றியது

283
பூவின் சூலகம் மட்டும் பழமாக விருத்தியடைந்திருந்தால் அது மெறாப்பழம் எனப்படும். ஆனுல் சில வேளைகளில் பூவின் ஏனைய பகுதிகளாகிய ஏந்தி, பூவுறை போன்றவையும் தாண்டப் பட்டு பழமுண்டாக்கலிற் பங்கு கொள்கின்றன. இவ்வகையான பழங்கள் போலிப்பழங்கள் எனப்படும், அப்பிள், பேரிக்காய், அன்னாசி போன்றவை போலிப்பழங்களுக்கு உதாரணங்களாகும்.
கன்னிக்க னியமாக்கல்:
சாதாரணமாக மகரந்தச் சேர்க்கை, கருக்கட்டல் என்பவர் பின் பின்னரே வித்துக்களும் பழங்களும் உண்டாவது வழக்கம். ஆனால் சில வேளைகளில் இவை நடைபெறாமலே பழங்களுண்டா வதுமுண்டு. இத் தோற்றப்பாடு கன்/க்கனியமாக்கல் எனப் படும். இவ்வகையான பழங்களில் வித்துக்கள் இருக்கமாட்டா. வித்துள்ள பழங்களைவிட இவை சாறுடையனவாகையால் உண் பதற்கு உகந்தவை, சுன்னிக்கணீயமாதலில் இருவகையுண்டு.
(1) இயற்கைமுறையில் சுன்னிக்கனியமாதல் :
மகரந்தச் சேர்க்கை, கருக்கட்டல் கட் ஆதியன நடைபெறாத சூலகங்களிலிருந்து ஒருவித விசேட பராமரிப்புமின்றி வித்து களற்ற பழங்கள் உண்டாகின்றன.
உ-ம் : வாழை, முந்திரிகை, தோ டை அன்னாசி.
(2) தூண்டப்பட்ட கன்னிக் கா3யமாதல்!- தாவரங்களின் சூலகங்களினுள் இன்டோல் அசற்றிக் கமிலம்( Indole acetic acid), நப்தலீன் அசற்றிக் கமிலம் {TNaplithalein Acetic acid) ஆகிய வளர்ச்சியைத் தூண்டும் பொருள்களை ஏற்றுவதால் வித்துகளற்ற பழங்களுண்டாகின்றன.
பூக்குந்தாவரங் களிற் சந்ததிப் பரிவிருத்தி :
இவை வேர், தண்டு, இலைகள் ஆதியனவுடைய வித்தித் தாவரங்களாகும். இவை 2 நிறமூர்த்தங்களையுடையனவாகும், அதாவது இருமடி யானவை. தாவரங்களிலே' பூக்களுண்டாகி இனப்பெருக்கம் நடைபெறுகிறது. பூக்களில் (கேசரங்களும் சூல்! வித்திங்களும்உண்டாகின்றன. ஒவ்வொரு கேசரமும் மகரந்தக்கூட் டில்நான்கு ( பகரந்தப் பைகளையுடையதாயிருக்கும். இவை துண் வித்தித்தாய்க்கலங்களை யுண்டாக்கும். ஒவ்வொரு நுண்வித்தித் தாய்க்கலாம் ஒடுங்கற்.பிரிவால் நான்கு ஒருமடியான பா கரந்த மணிகளை யுண்டாக்கும், ஒவ்வொரு சூல்வித்திலும் ஒரு புல் அருப்பையகம் உண்டு. இப் பையகத்தினுள்ளும் ஒரு மாளித்தித் தாய்க்கலம் வளர்ந்து ஒடுங்கற்பிரிவடைந்து நான்கு முளையப்பை க்கலங்களையுண்டாக்கும். இவற்றில் மூன்று அழிந்துவிட ஒன்று.

Page 139
264 |
- பூ. < (2x)
தாவரம் (2x)
சூல்வித்திலை. கேசரம் -
கல்வித்து
மூலவுருப்பையாகம்
மகரந்தப்பை (மாவித்திக்கலன்) (நுண்வித்திகலன் )
வித்து (21)
முளையம் (2x)
- மாளித்தித் தாய்க்கலாம் நுண்ளித்தித்தாய்க்கலம்
(2x) |
(2)
(ஒடுங்கற்பிரிவு )(ஓடுங்கற்பிரிவு)
கருக்கட்டல்
முளையப்பைக்கலம்
மகரந்தமணி
(மாவித்தி) K
(நுண்வித்தி) *
முளையப்பை
விருத்தியடையாத (மாபுணரித்தாவரம்)
நுண்புணரித்தாவரம்
முட்டை (x)
ஆண்கரு (x)
அங்கியோ சுப்பெர்மேயின் வாழ்க்கைச்சக்கரம்

265
விருத்தியடைந்து முளையப்பையாகின்றது..!
மகரந்தக்குழாயுட் காணப்படும் முளைக்கும் மகரந்தமணிகளே ஆண்புணரித்தாவரத் தின் பிரதிநிதியாகும். பூக்குந்தாவரங்களின் புணரித்தாவரத்தில் வழமையான பாலுறுப்புக்களை அதாவது ஆண்கலச்சனனி, பெண் தலச்சனனி ஆகியவை காணமுடியாது. முட்டை அல்லது பெண்புணரி, துணைக்கரு அல்லது வித்தகவிமையக்கரு ஆகிய எனவயே உண்மையில் இனவிருத்தியில் பங்கு கொள்கின்றன. இரு புண ரித்தாவரங்களும் பச்சிலையமற்றவை. இவை தம்மை ஆறு வுள்ள வித்தித்தாவரத்திலேயே தங்கியிருக்கின்றன. இனப்பெருக் கத்தின் போது இவை அவற்றை விட்டுப்பிரியா, இரு ஆண் கருக்களில் ஒன்று முட்டையுடனும், மற்றையது துணைக் கருவுட னும் இணையும். கருக்கட்டப்பட்ட முட்டை இருமடியானது. இதுவே வித்தித்தாவரத்தின் முதற்சந்ததிக் காலமாகும். சிறிது காலத்தில் இது வித்தியின் முனையமாக மாறும். இன்னும் சிறிது காலத்தில் வித்து இருமடியுடைய வித்தித் தாவரமாக மாறும்.

Page 140
11 மீட்டல்
மாணவர்கள் முதல் பத்து அத்தியாயங்களிலும் கற்றவர் பறைத் தொகுத்து இவ்வத்தியாயத்திலே அட்டவணை உருவத்தில் கொடுத்துள்ளது. பரீட்சைக்குப் ப டி க் கு ம் மாணவர்களுக்கு இவ்வத்தியாயம் பெரும் பயனளிக்கும். தாம் படித்த தாவரங்களி னியல்புகளையும், அவற்றிடையேயுள்ள ஒற்றுமை வேற்றுமைகளை யும் குறுகியகாலத்தில் நினைவுபடுத்திக் கொள்வதற்கு - இது உதவும். மேலும், இப்புள்ளி விவரங்களைக் கொண்டு அடுத்த அத்தியாயத்திற் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு மாணவர் தாமாகவே விடை எழுதிப் பழகலாம்.
அல்காக்கள்
பங்கசுக்கள்
1. வாழிடம்
2. தோற்றம்
பெரும்பாலும் நீரிலே ப ளித வாழிடங்களி வாழுகின்றன.
அம் காணப்படுகின்
TH. ஒரு கலத்திலிருந்துபல் ஒரு காலத்திலிருந்து பல் கலங்களா லா ன ன வ க ங்க ளா வா ன வை வரை உள்ளன. ஒரு
வரை உள்ளன, இயக்க சுல் அல் காக் சு ளு ள் மற்றவை, பெரும் பா லா ன வை இயக்கமுடையன.
J, கலச்சுவர்
முக்கியமாகச் செலு முக்கியமாகப் பங்கசுச் பிபாசு.
செலுலோசு.
1 கரு
பெரும்பாலான இனங் பெரும்பாலான இனங் க ளி ல் ஒரு கல் கள் பொதுமைக்குரிய த்தில் ஒருகரு மட் மாவை. டுமே காணப்படுகிறது. சில இனங்கள் ஒருகரு சில இனங்கள் பொது
|வுடைய கலங்களைச் மைக்குழிய மா ன லை.
|கொண்டுள்ளன.
உண்டு.
இல்லை.
பச்சைய
வுருமணி 3, போசணை
த ற் போ ச இன உள் பி ற போ சணை யு ள் ளவை.
ளவை. அழுகல்வளரி,
அல்லது ஒட்டுண்ணி. முக் கி ய மா க மாப் பொருள்.
|முக்கியமாக கி ளை க்
7. சேமிப்பு
உணவு

251
கோசனும் எண்ணச் சிறுகோனங்களும்,
8, பதியமுறை
இனப்பெருக்கம்
பிளவுமுறை
(i) பிளவுமுறை துண்டுதுண்டா
|(ii) துண்டுதுண்டா
தல்
தவ்
(iii) அரும்புதல்
9. இலிங்கமில் முறையினப் பெருக்கம்
வித்திகள்
(i) இயங்கு
(i)
அகவித்திகள்
(அ) இயக்கமற் (ii) அலைவில்
ரஷன்! வித்திகள்
(ஆ) இயக்க (iii) பல்மெலா நிலை
முள்ளவை இயங்குவித்திகள் தூளியங்கள்
ஒயிடியா (iv) வென்றோம்!
வித்திகள்
(i) ஒத்தபுணரியி |
|i) ஒத்தபுண சரியினி னியல்பு
யல்பு (ii) ஒவ்வாப் புணரி |(ii) ஒவ்வாப்புணரி '
யினியல்பு
யினியல்பு (iii) முட்டைப்புணரி (iii) முட்டைப்புணரி
சின்னியல்பு
யினியல்பு
10, இலிங்க
முறையினப் (பெருக்கம்
கிளாமிடொமோனசு இசுப்பைரோகைரா
1. வகுப்பு
குளோரோபீசே
குளோரோபீசே
2, வாழிடம்
நன்னர்..
நன்னீர் சுயாதீனமாக நீந்தித் நீரில் மிதந்து சாணப் திரியும்.
படும்.
3. தோற்றம்
ஒரு கலத்தாலானது.
பல்சுவ ங் க ளா பா ன இழை. கிளைகளற்றது.
சிலவேளைகளில் சரி இழையைச் சுற்றி சstll யம் இருக்கக்கூடும்.-
யம் உண்டு.

Page 141
268
4. கலத்தின்
அமைப்பு:
முட்டையுரு : கோள் நீ ண் ட |
உருமளவடி. வுரு: பே ரி க் க ா ய் வானது. வடிவம்.
5, கரு!
ஒன் று.
ஒன்று. கிண்கவுருவான பச்
சாதாரணமாகக் கலத் யவுருமணியின் குழி தின் மையத்தே குழி யிலே குழியவுருப் பட்
ய வுருப்பட்டி கை க ளி டிகைகளினால் தாங்கப்
னால் தாங்கப்பட்டிருக் பட்டிருக்கும்.
கும், சில வேளைகளில் கவச்சுவருடன் ஒட்டி யுள்ள குழியவுருளிலும் அமிழ்ந்திருக்கக் காண சபா ம்.
6. புன்
வெற்றிடம்:
புன் வெற் றிட ங் க ள் புன் வெ ற் றி ட ங் உண்டு. இரு சிறிய சுளுண்டு, சுரு ங் க த் சுருங் க த் த க் க புன் தக்க புன்வெற்றிடங் வெற்றிடங்களுண்டு. கள் கி3டயா,
7. க வச்சுவர்
செவலே!Tசு.
செலுலேYTசு,
சில இனங்களில் செலு செலுலோசுச் சுவரைச் லோசுச்சுவரைச் சுற்றி சுற்றியுள்ள பெத்தின் சளியம்போன்ற பெத் படை நீரிலே வீக்க தின் மடல் சாணைப்|மடைந்து ச ளி ய ம் படும்,
போன்ற மடலாகக் காணப்படுகிறது.
8. உருமணி
ஒரு கிண்ணவுருவான ஒன்றே. அதற்கு மேற் ப சி ன ச ய வ ரு டமணி பட்ட எண் ணிக்க காண ப் ப டு ம். சில யாவோ நா டா வு கு
இனங்களிலே உருவும் வானபச்சையவுருமணி மாறுபாடும்.
கலத்தின் நீள் அச் சிலே சுருளாக அமைந் திருக்கும்.
ஒரு வித்துருமணியுள் அநேக வித்துருமணி ளது. இது கிண்ணத் கள் பச்சையவுருமணி தின் பின் பகுதியிற் யிற் கா ண ப் படும். காணப்படும், குளோ குளோரபில் உண்டு. ரபில் உண்டு (குளோ ரபில் a, b, சி றி து கரற்றின் சா நீ தோ பில்).

269
9. போசணை:
ஓளித்தொகுப்பு முறை ஒளித்தொகுப்பு முறை யால் மாப்பொருளைத் யால் மாப்பொருளைத் தயாரிக்கின்றது." -
தயா ரிக்கின்றது.
மாப்பொருள்
10, சேமிப்புப்
பொருள்:
மாப்பொருள்
11. இயக்கம்:
இயக்கமுள்ளது. இரு இயக்கமற்றது. நீரில் சவுக்குமுளைகளும் ஒரு |
மிதந்து காணப்படும், கட்புள்ளியும் உண்டு சவுக் கு மு ளா க ளோ
கட் புள் ளி பி யா
கிடையா.
12. சுவாசித்தல்
பரவல் மு ன ற ய ா ல் பரவல் முறையால் நடைபெறுகிறது,
நடைபெறுகிறது.
13. வளர்ச்சி;
ப ரு ம ன ன ட த லே கலங்கள் பிரிவடைந்து வளர்ச்சியாகும்,
பின் பருமனடைகின் றன. இடைபு கு ந்த வளர்ச்சியுடையது ,
கிடையாது.
14. பதிய முறை
இனப்பெருக் கம்:
துண்டு து ண் டா த ல் முறையால் நடைபெரா கிறது.
15. இலிங்கமில்
முறையினப். பெருக்கம்:
இ ரு ச வு க் கு முளை களுள்ள இயங்குவித்தி களுண்டாதலால்; பல் கிடையாது, மெலா நி லை ய IT ல் | அலவில் வித்திகளுண் டாவதால்,
16. இலிங்க
முனறயினப் பெருக்கம்!
ஒ த் தபுணரியினியல்பு இணை தள் ஒவ்வாப்பு ண ரி யி னி |யல்பு. முட்டைப்புண (1) பக்கவிணைதல்
சரியியல்பு.
(ii) ஏணியுருவிணைதல்
17 நுகம்!
(இளை ப் பா றி ய பின் இளை ப் பா றி ய பின் ஒடுங்கற் பிரிவடைந்து ஒடுங்கற் பிரிவடைந்து நான்கு காலங்களுண்

Page 142
270
டாகின்றன. இவை நான்கு கருக்கள் உண் யொ வ் வொ ன் று ம் (டாகி ன் ற ன. இவற் புதிய கி ளா மி டொ (ரில் மூன்று அறிந்து மோனசாக விருத்தி
|போக ஒன்று மட்டும் யடைகின்றது'.
தொழில் ப டு கி ற து. எனவே ஒரு நுகத்தி லிருந்து ஒரு இழை மட்டுமேயுண்டகிறது.
கிளாடோபோறா |
பின்னுலேரியா
இலங்பையா
1. குளோரோ
|பசிலாரியோ பீசே பிரே,
மிட்சோபீசே
நன்னீர் கடல் நன்னீர்,
நன்னீர், நீர்.
சுயாதீனமாக மிதந்து நீ ரிலே மி த ந் து ஏ தா வ தொ ரு
வாழும்.
வாழும். கீழ்ப்படையில் ஓட்டி வாழும்,
3. பல் க ல ங்க ளா ஒரு சுவத்தாலானது.
லான இ ன ழ கிளை க ளுள்ள து.
ஒன்றன்மேலொன்ற கக் கலங்கள் அடுக்கப் பட்டு ஒரு இழை உண் டாகிறது. இழையைச் சுற்றி சளியத்தாலான மடல் காணப்படும்.
4. நீண்ட உருளை நீண்ட நீள்வட்ட. உரு மிகக் குட்டையான
வடிவானது. உச்வான து.
உருளை வடிவானது. சி க் க ல த் தி ன்
உச்சிக்கலத்தின் மேற் முனை கு வி ந் த
பகுதி குவிந்தவில்லை வில்லை போன்றது
போன்றது.
பல கருக்கள் ஒரு கரு.
மு த லி ரு வை கரு. உண்டு. பச்சை
கு ழி ய வ ரு என் று மை ய ப் பு ன் வெற்றி வே று ப டு த் த முடி

271
யவுருமா! க ளின் கூட் பு ற LI IT க இனவ/கா ப்படும்,
டத்திற்குக் குறுக்காக யாது. முத லுரு நிற வுள்ள குழியவுருப்பட்வுருவம், மையவுருவம்
டி  ைக யி ல்
இது எனப் பிரிக்கப்பட்டுள் காணப்படும்.
ளது.
6. புன் வெற்றி
டங்களுண்டு சு ரு ங் க த் தச்சு புன் வெற்றிடங் சுளில்யை,
புன் வெ ற் றி ட ங் பு ன்  ெவ ற் றி ட ங் களுண்டு. சுருங்கத்தக்க களுண்டு. புன்வெற்றி ட ங் க ள் சுருங்கத்தக்க
இல்லை.
பு ன் வெ ற் றிட களில்,
பெத்தினலான படை ஓர ளவு செலுலோசு யில் சிலிக்கா படிந்துள் -
உள்ளது. சுற்றியுள்ள ளது.
பெத்தின் சளியமாகக் காணப்படுகிறது"
முன்று படைகளா வான சுவர் உட்படை செலுலோ சாவாது. நடுப்படை பெத்தின ஓம் வெ ளிப்படை அகற்றினி
 ைஓம் ஆசி பவை.
8. வலைபோன்ற ஒரு பச்சரிசய ஒ ரு ம ணி உண்டு. அதேக வித்துரு ம ணி கள் அ தி ல் உண்டு,
இரு பெரிய உருமணி வெளிப்புற முத லுரு களுண்டு. வி த் து ருவில் நிறவுருப்பொருள் ம ணி க ள் இருக்கக் கள் உள்ளன. வித்துரு கூடும்,
மணிகள் இல்லை.
கு ளோ ர பில் [ பச்சிலையம் | உண்டு.
தயற்றமின் குளோர குளோரபில்; பிக்கோ பில், அதிகளவு கரற் சையனின், பீக்கோ பின், சாந் தோ பி ல் எரித்திரின் ஆகியவை
ஆ கி ய வ ற் ன ற க யுண்டு. கொண்டது. பொன் - கபிலநிறம்,

Page 143
972
ஓ, ஒளித்தொகுப்) கொழுப்பும் வொ லுற் ஓ ளி த் தொ குப் பின் பினால் ம ா ப்) றினும் காணப்படும் போது முதலில் உண் பொருள் தயா
டாவது கிளைக்கோசன் ரி க் கப் பட்டு|
சேமிப்புப் பொருள், [சேமித்து வைக்
 ைச ய னோ பீ செ ன் கப்படுகிறது.
10. கீழ்ப்படையில் இயக்கமுள்ளது. சவுக்|இயக்கமில்லை,
ஒட்டி வா ழ் வ கு மு க சி டை யா து. தால் இ ய க் க அனல் அசைவதற்கு மில்லை.
சந்திக்கோடு உதவிபுரி சிறது.
11, பரவல் முறை ப ர வ ல் முறையால் பரவல் மு றை யா ல்
யால் சுவாசித் சுவாசித்தல் ந ன ட சு வ ா சி த் தல் நடை தல் நடைபெறுபெறுகிறது.
பெறுகிறது'. கிறது.
13. உ ச் சி க்கரு கே கலம் ப ந ம ன டைகாலங்கள் பிரிவடைந்து
யுள்ள கலங்கள் வதால் வளர்ச்சி நடைபின் னர் பருமனடை
பி பி வ டை வ பெறுகிறது.
கின் றன. தால் வளர்ச்சி ந ன ட பெ று. கிறது. கிளைசு
ளும் உண்டா கின்றன.
13. து ண் டு து ண் க ல ப் பி ifi வு நடை இழை -துண்டுதுண்டா
டாதல் முறை பெற்று கலங்கள் பிரி தலா ஒம் ச ங் கி லிப் பால் ப தி ய கின்றமையால் பதிய பிறப்புகள் உண்டாவ மு றை யி ன ப் முறையினப் பெருக்கம் தானும் பதியமுறை  ெப ரு க் சு ம் நடைபெறுகிறது.
யினப்பெருக்கம் நடை நடை பெ று )
பெறுகிறது.
கிறது.
14 , இ லி ங் க மி ல் இளிங்கமில் முறையா) இலிங்கமில் முறையி
ப ன ற யி ன ப் னப்பெருக்கம் கினட னப்பெருக்கம் கிடை பெருக்கத்தில் யாது' .
யாது' . இயங்கு வித்திக மளு ண் டா கி ன் நன, இ ன வ சுலச் சுவரற்ற தாயும் நான்கு ச வு க் கு மு கள் களை யுடை யன் வாயு மிருக்கும்.

273
15. இலிங் சுமுறை இலிங்க முறையினப் இ லி ங்க முறையினப்
யனப் பெருக்|பெ கு க் க ம் -
நடைபெருக்கம் நடைபெறும் கத்தின் போது)
பெரjவதில்லை,
வதில்லை . இரு ச வு க்கு முளை சு ளுள் ள, க லச்சு வரற்ற, ஒத்த புணரிகள் உ ண் டா கி ன் றன . இ ன வ ஒரு மடியான த ா வ ர த் தி லி ருந்து எண்டா கின்றன.
16. நுகம் இழையு
ருப் பி ரி வ டைந்து இளைப் பாறாமலே நேர டியாக முளைத்து இரு மடியான தா வ ர மா க வளருகிறது.
மியூக்கொர்
அசுப்பசிலசு
பைற்றோப் தொரு
1. வகுப்பு: (பீக் கோ பீ செ ற் பக்கோ மீசெர்
றெசு
பிறச் ..
அசுக்கோமீ செற் றெசு.
2. வாழி
இறந்த சேதன உருளைக்கிழங்கு க் இறந்த சேதனவு டம்!
வு றுப்புக்கு ரி ய தாவரத்திலும் Tறுப்புப் பொருள் பொரு ள் க ளி ல் க மு க, ஆம் களிai அ ழு க ல் அழசு ல் வ ள fணக்கு, பருத்தி, வளரியாக வளர் யாக் வளர்கின் பனை, தென்னை கின்றது. பது
ஆகியவற்றிலும் ஒட்டுண்ணியாக
வளர்கின்றது. 3. தோற்
பிரிசுவரற்ற பூஞ் பிரிசுவரற்ற பூஞ் பி ரி சு வ ரு ள் ள நம் :
சாண விழைகளா சண விழைகளா பூஞ்சண வி ழைக
லான பூஞ்சண லான பூஞ் ச ண ளாலான பூஞ் TZ 18

Page 144
274
வ பை யை யு டை வக்' ளி ரு ந் த சனவலை கீ ம் ப ய து. கீர்ப்படை வழங்கியின் கலங்
படையில் பரந்து பின் மேலும் உள் களிடையே வளர்
வளர்கிறது. ளும் வளர்கின் கிறது. பருகிகள் றது.
கல ங் க ளி ன க த் தே செலுத்தப் பட்டு பட ண வ | உ றி ஞ் ச ப் ப டு சிறது.
4. பூஞ்சன
சிங்கள ன் எ க சி ள க ளு ள் ள கி கள சுளு ள் ள . வி  ைழ
ஆனுல் பிரிசுவ பி ரி சு வ ர ர் ய பிரிசுவர் க ளுள்ள யின் அ
ரற்றது. பொது இழைகள் -
பூஞ்சண இழை மைப்பு:
மைக்குரியத் திற் பொ து 3ம் க்குழி கள், பொதுமைக் குரியது'. காலஞ் யத் திற்குரிய து'. குழியத்திற் குரி செல்லச் செல்ல காலஞ் செல்லச் யது'. பிரிசுவர்கள் உண் செல்] பிரிசுவர் டாகக்கூடும்.
கள் உண்டாகக் கூடும்.
5. கலச்
சுவர்:
பங்க்சுக் செ ல பங்கசுச் செs பங் கசு ச் செல லோசா பெ த் தி லோசு.
லேரசு, முக்கிய ன அ ம் செ வ
மாகக் கைற்றின்  ேல ா சி னா ஓ
உள்ளது, மானது'.
உண்டு.
உண்டு.
6, புன்வெ
உண்டு. ற்றிடம்:
7. கரு:
பல சு ரு க் சு ள் பல சு ரு க் க ள் பல சு கு க் க ள் உண்டு.
உண்டு.
உண்டு.
8, போ
பிறபோசணை யுள் பிறபொசணையுள் பிற போசணையு சணை !
(ளது'. அ க பில் ள்ளது - ஒட்டுண்ணனின்பது அகங்ன
வளரி,
சமிபாடடைந்த ளரி. உணவு பருகிகளி னூடாக உறிஞ் சப்படுகிறது .
4. பதிய மு (பூஞ் ச ண வ கல பூ ஞ் ச ண வ ல பூ ஞ் ச ண வ வை
றையின (துண்டுதுண்டா துண்டுது ண் டா துண்டு து ண் டா ப்பெருக்
(ததால் ந ன டத்தால் ந ன டIததால் ந ன ட கம்:
பெறுகிறது.
பெறுகிறது.
|பெறுகிறது.

275
கமில்
'10, இலிங்
111) சி கள க ளா ர் ற (1) சிளைக ளுள் ள (i) தானாயந்தாங்
எத்திக் க ல ன்
வித் திக்க வன்)
சிகள் -> முறை
தாங்கி -> வித்!
தாங்சிகள் -
- சி பிரை ய ங் இனப்
திக்கலன் ->
In னை க ளி ல்
சுள் -----> சங் பெருக்
வித்தியங்கள்
வித்திக் க ல ன்
கி லி த் தொ கம்!
காற்றால் பரம்
கள் ஒன்றன்
டரான அ டி ப வ டை பின்)
பின்னென்றாக
நாட்டமுள் ள நன் +
உண்டாகின்
காரியங்கள், நன, காற்று னல் அல்லது ம ழை த் து ளி களால் பரம் ப ல் டை கிள் றன, -> 5-10 இரு ச வு க்கு ப கள க ள ன ட ய ஒரு க ல த்தாலான தியங்கு வித்தி சுளுண்டாகின்
TJT.
(ii) வ ன் றோ ல் 111 தூளியங்கள்.
வித்திகள்.
வித் திக்க வன்) களுக்கு ஒப்பா னவை, ஆனால் நே ர டி யா க மு ள க் கி ன்
ரா. (iii ல ன் றே ல்
வித்திசுள்,
11. இலிங் கமுறை யி ன ப் பெருக் கம்!
பல்லினப்பிரிவில் முட்டைச்சனனி, ஓரினப் பிரிவிலி, கள் உ ள் ள ன.
|ஆன்சுவச்சனனி.கோ பாணிச் சன்னி
(Uாட்டை அ.ண் ஆண்கலச்சனனி, ஒத்தபுண ரிகள் . கரு. துகவித்தி பெண் கரு, ஆண் து க ம் ஒடுங்கற் ஒடுங்கற் பிரிவின்
கரு. க ரு க் க ள் பி ரி வடை ந்து பின் நேரடியாக)
சோ டிசேருதல். அதிலிருந்து வித் மு ளை த் து பூஞ்.
கோணி பிறப்பிக் திக்கலன் தாங்கி ச ண வ லை லை ய கின்ற பூஞ்சண களுடாகி, வித் யு ண் டா க் கு கி |
விரை, கோணித் தி க் க சி ன் களில் றது.
தாய்க்கலம் --> வித்திகளுண்டா |
கோ ணி. ஒடுங் கின்றன.
கற்பிரி வு ந ன ட

Page 145
276
பெற்று எட்டு கோணி வித் தி க GTF ண் ட சா கி ன் றன. இ வ ற் றி லிருந்து பின்னர்
ஞ் ச ண வ க - முளைக்கும்,
சக்கரோமீசெசு
சலியோற்ற கம்பெஸ்றிஸ்
1. வகுப்பு:
அசுக்கோமீசெற்றேசு.பசிடியோம்செற்றேசு.
2. வாழிடம்:
வெ ல் ல க் க ரை ச ல்
(மண்ணிலேயும் நடக்கும் களிலே வாழ்கின்றது.சேதன வுறுப்புக்குரிய
பொருள்களின் மேலும் வளர்கின்றது.
3. தோற்றம்:
ஒரு கவத்தாலானது.
பிரிசுவருள்ள பூஞ்சண அ ரு ம் பு த ல் நடை விழைகளாலான பூஞ் பெற்று சு வ ங் க ள் சணவன் கீழ்ப்படை பிரிந்து செல்லாதிருக் ரிலே பரவிவளர்கி கும்பொழுது இழைகள் றது. கனியுடலம் மீட் போற் தோன்றும்.
டுமே மேலே வளர்கி
றது.
4 அமைப்பு:
முட்டையுருவான அல் கிளைகளுள்ள பிரிசுவ லது கோளவுருவான ராற் பிரிக்கப்பட்ட கலங்கள்.
பூஞ் ச ண விழை கள் பொதுமைக்கு மி ய த் திற்குரியன.
பி. கலச்சுவர்!
மதுவச் செலுலோசு | பங்கசுச்செலுலோசு. ஒ ரு வ னக க் காபோ வைதறேற்றலானது.
5. புன்
வெற்றிடம்!
க ரு வி ன ரு கே ஒரு பூ ஞ் ச ண ளி மை யில் பெரிய புன் வெற்றிட பு ன் வெ ற் றி ட ங் க முண்டு. இது கருவி ளுண்டு. |னொரு பகுதியென்றும்) |கொள்வர்,

277
7. போசணை:
பிரபோசணையுள்ளது. பிறபோசணையுள்ளது. அழுகல் வளரி, இன் அழுகல்வளரி, வெட்டேசு நொதியம் மும் சிக்கலான விசமே சும் சுரக்கப்படு கின் நன, நொ தி ப் பி ன் போது அற்ககோலும் கா ப ணீரொட்சைட் டும் உண்டாகின்றன.
8, இனப்
பெருக்கம்:
(1) அரும்புதல் முறை யால் ப திய ர எனற பி ன ப் பெருக்கம் நடைபொடுகிறது,
(ii, ஓரினப் பிரிவிலியா
என த.
>பதியக்கலம் (4)
பூஞ்சகவலை
சோடி சேருதல் (கருச்சேர்க்கை) |
கனியுடலம்
பு
இருமடிச் சந்ததி
சிற்றடி
அசக்கசு [ஒடுங்கற்பிரிவு)
சிற்றடிவி த்திகள்
ட(1-4 ) கோரி!
வித்திகள்
பூஞ்சணவலை
சோடி சேர்ந்து சுரு ச் சேர்க்கை நடைபெற்று இருமடிச் சந்ததியுண்
டாகிறது.

Page 146
278
மார்க்கான்சியாவிற்கும் பொகொநேற்றத்திற்கு முள்ள ஒற்றுமை வேற்றுமைகள்.
புணரித்தாவரம்
மார்க்கான்சியா
பொகொ நேற்றம்
வித்தியே புணரித்தால் ரத்தின் முதற்கலம்.
வித்தியே புணரித்தா வரத்தின் முதற்கலம்.
வித்தி முளைத்து ஒழுங் கற்றவொரு இழை உண்டாகிறது, இது சிறிது காலத்திற்கே வாழ் சிறது .
வித்தி முளைத்து உண் டாகும் இறை, இழை முதல் எனப்படும். இது நீண்ட காலத் திற்கு வாழ்கிறது.
இழைமுதலை வேர்ப் போலிகள் நிலத்தில் ஊன்றி நீரையும் உறி ஞ்சுகின்றன. பச்சைய வுருவம் உண்டு.
இழையின்உச்சிஇணைக் க வ ரு க் கு ரி யவாறு கினைத்து பிரிவிலி உண் டாகிறது.
இ ன ற முதலிலிருந்து அ ரு ம் புகளுண்டாகி இலைகளுள்ள புணரித் தாவரங்களாக வளர் கின்றன.
ஈரில்லமுள்ளது.
சரில் லமுள்ளது.
ஆ ண் பு 33ரித்தாவர மும் பெண்புனாr சித்தா வரமும் வெவ்வேறு வி த் திகளிலிருந்துண் டாகும் இழைகளிலிரு ந்து விருத்தியடைகின் பச,
இவை க ளைக்கொண்ட ஆண், பெண் புணரித் தாவரங்கள் வெவ் வேறு வித்திகளிலிருந் துண்டாகும் இழை முதல்களிலிருந்து விரு த்தியடைகின்றன.
பிரிவிலி மேலிருந்து கீழாகத் தட்டையா பினது.
மையநரம்பு ண்டு. இணைக்கவருக் குரியமுறையிற் கிளைத் துள்ளது.
இலைகளுள் ள புணரித் தாவரம் நிமிர்ந்து வளர்கிறது, இலையில் மைய நரம்புண்டு.

279
வேர்ப்போலிகள் ஒரு சுலத்தாலானவை.
அழுத்தமானவை அல் லது முளைகளுள்ளவை.
வேர்ப்போலிகள் பல் F, வ ங்களாவொனவை, 3ரேமாதிரியானவை.
- - ன்
செதில்களுண்டு.
செதில்கள் இல்லை.
தண்டும் சுடத்துங் கல் ங்களும் கிடையா.
தண்டிலே வரையறை வான கடத்தும் சுவாங் சுளுண்டு, (தடியம்; ஒல்லியன்)
இலைகளில்லை.
இலைகளுண்டு. ஆனால் அவற்றிற்கு காம்புகள் கிடையா, மையநரம் புண்டு.
10. .
பிரிவிலியின் குறுக்கு வெட்டுமுகம் : -
இலையின் குறுக்குவெ ட்டுமுகம் :-
(i) ஒளித்தொகுப்பிழைய
மும் சேமிப்பு இழைய பும் உண்டு.
ஒளித்தொகுப்பு இழை யமும் சேமிப்பு இழை யமும் உண்டு,
(ii)
ஒளித்தொகுப்பு இழை கள் கிளேகொண்டுள்
ளா .
ஒளித்தொகுப்பு இழை கள்' சிளேகொள்வ தில்லை,
(iii) காற்றறைகள் உண்டு.
அறைகளாசுப்
பிரிக் கப்படவில்லை, ஆனால் காற்றிடை வெளிகள்
ண்டு.
(iv) இழைகளின் மேலே
மேற்றேலுண்டு,
இழைகள் மேற்றோ வால் மூடப்படவில்லை
ஒவ்வொரு காற்றறை யும் ஒரு துவாரத்தி எனுாடாக வெளித்தி றக் கிறது. துவாரத்தைச் சுற்றி நான்கு வரிசை களிற் கலன்களுண்டு.
இ ன ழ க (ளெல்லாம் வெளியுடன் நேரடித் தொடர்பு கொண்டுள் ளன. இழைகளினிடை யே காற்றடைவெளி சுள் உண்டு.
வெப்பமான காலத் தில் வி ளி ம் பு க ள்

Page 147
78]
மேலாக மடிவதனால் மிகையான ஆவியுயிர் ப்பு தடுக்கப்படுகிறது.
(vi) ஒவ்வொரு காற்றறை
க்கும் மேலாக பிரிவிலி பயின் மேற்புறத்தே சாய்சதுரப் பரப்புகள் காணப்படுகின்றன.
11.
பதியமுறை இனப் பெருக்கம்:-
புதிர்ச் சி ய ணட ந்த பகுதிகள் இருப்பத பல் கிளைகள் புதிய பு பினனா சரி த் தா வ ரங்சு ளாக வளர்கின்றன.
(i) இழை முதலிலிரு ந்து அரும்புகளுண்டா கின்றன. இழைமுதல் இறக்க, அரும்புகள் புதிய புணைசாரித்தாவரங் களாக வளர்கின்றன.
பி ரி வி லி யி ன் கீழ்ப் புறத்திலிருந்து கிளை கள் இ ட ம் மா தி ப் பிறந்து தாய்ப் பிரிவி லியுடன் தொடுக்கும் இழையங்கள் அழுகி இறக்கின்றமையால் புதிய பிரிவிலிகள் உண் டாகின்றன.
(ii) துளை இழைதல் { ேவ ர் ப் போலிகளின் மேல் ஒளிவிழும்போது அவற்றிலிருந்து அரும் புகள் உண்டாகின்றன
இலிங்கமில்முறையின. ப்பெருக்கம்! - கோரகங்களண்டாவ தல்ை நடைபெறுகி
ரிது.
இலிங்கமில்முறை யின பிபெருக்கம் நடைபெ றுவதில்லை.
இவிங்சுமுறை யினப் பெருக்கம்:-
ஆ ண் பி // னி லி புஆ கா க வ ச் ச ன களி
தா ங் கி- எ ட் டுச் சோணேசுள் கொண்ட
ஆ ண் வ ா ங் கி மேற்புறமாக' ஆண் கலச்சனனிகள் குழிக
ளுள் உள்ளன.
(i) ஆண்கலச்சனனி கள் ஒரு கூட்டமாக வுள்ளன. சதபத்திர வுருவான இலைகள் (கருச்சுற்று) இவற் றைப் பாதுகாக்கின் நன,

281
ஒழுங்கற்ற முறையில் அமைந்துள்ளன,
(ii) ஆ ண் சு லச்சன பணிகள்
உச்சி நாட்ட மு ள் ள
வாறு அப்3மந்துள் ளன. (முதிர்ந்தவை மையத்திற்கருகாமை யிலும் -
இளமையா னவை விளிம்பிலும்)
(iii) பு  ைட வ ள ரி க ள்
பிரன்டா,
புடைவளரிகள்உண்டு. இவற்றிடையே சேமி ப்படைந்துள்ள நீர் ஆண்கலச் சன்னிகள் உலராமல் இருப்பத
ற்கு உதவுகின்றது.
(iv) ஆ ண் க ல ச்ச ன னி!
கள் கோளவுருவான னவ, அல்லது முட்டை புருவானவை.
ஆ ண் க ல ச் ச ன னி கள் குண்டாந்தடியுரு னான னவை,
விந்துப்போலிகள் இரு ச வு க் கு மு ஃள சப்ளக் கொண்டவை, வளைந் தன்ருவானவை.
விந்துப்போலிகள் இரு ச வு க் கு முளை களைக் கொண்டன, சுருளியாக வளைந்துள்
Sளப்07 |
பெ ண் கலச்சனனிகள் திரு சுடட்டடாகவுள் பான.
பெண்பிரிவிலி ->
பெ ண் கலச்சனனாதா நிக் - பெண் வாங்கி எட்டுச் சோணைகளை யுடையது' - (மேர் பக்கத்தில் எட்டு வாரி சைகளில் பெண்க வச் சனசரிகள்
விருத்தி படைகின்றன.
பெண்கலச் சனனிகள் ஒழுங்கற்ற முறையில் அமைந்துள்ளன.
(vii) பெண்கலச் சனனிகள்
உ ச் சிநா ட்டமுள்ள வாறு அமைந்துள்ளன. (முதிர்ந்தவை மையத் தி ற் கருகாமையிலும் இ ள டைம் யா ன ன ள விளிம்பிலும் காணப் படும்),

Page 148
பர
பெண்கலச்சன னி குடு -
வையுருவானது.
குடுவையுருவானது
உ தரச்சுவர் ஒருபட யாலானது. கழுத்துக் கலங்கள் ஆறு நெடுக்கு வரிசைகளில் உள்ளன,
உதரச்சுவர் இருபனட களைக் கொண்டது க ழு த் து க் க லங்கள் ஆறு நெடுக்கு வரிசை களில் உள்ளன.
40-ரப் கலங்கள் ஒவ் வொரு வரிசையாலு முள்ளன. மிக நீண்ட சுழுத்து.
ச ம த் துக்கால் வாய்க் க லங்கள் 8-10, மூடிக் கலங்கள் உள்ளன.ஒரு முட்டைக்கலமும் ஒரு உதரக் கால்வாய்க்கல மும் உள்ளன,
க, கா, சு, 3 [] - 5) மூடிக்கலங்கள் உள் ளன. ஒரு முட்டைக் கவரும் ஒரு உதரக் கா ல் வா ய் க் கலமும் உள்ளன,
(ix] விந்துப்போலிகள் விடு
பட்டு கடத்தப்படுவ
தற்கு நீர் அவசியம்.
விந்துப்போலிகள் விடு புட்டு கடத்தப்படுவ
தற்கு நீர் அவசியம்.
பெண்கலச் சனனியிலி ருந்துண்டாகும் சனிய த்திலுள்ள புரதத்தினா அம் பொற்றாசியம் உப்புகளினாலும் விந் துப்போலிகள் கவரப் பாடுகின்றன.
பெண்கலச்சனனியிலி (ருந்துண்டாகும் சனி யத்திலுள்ள வெல்வத் தினால் விந்துப்போலி சன் கவரப்படுகின்றன,
(xi)
கருக்கட்டலின் பின் தலைகீழாதல், நடை பெறுவதால் பெண்க வச்சனனிகள் கீழ்ப்புற மாகக் காணப்படுகின் றன, சுதிர்கள், பாண்ட ச்சுற்று, போலிப்பூவு றை, கவசம் ஆகிய வையுண்டாகின்றன.

283
வித்தித்தாவரம்
14.
நுகம் வித்தித்தாவரத் தின் புதற்கால மாகும்.
நுகம் வித்தித்தாவரத் தின் முதற்கலம்.
15
3 த்தித்தாவரம் பு! ரித்தாவரத்தின் மேல் ஓட்டுண்ணியாகவுள் வாசி'.
வித்தித்தாவரம் புண (இத்தாவரத்தின் மேல்) கு வுற யொட்டுண்ணி யாகவுள்ளது.
வித்தித் தாவரம். நீள் வட்டவடி வானது' .
வி த் தி த் தா வ ர ம் உருளை வடிவாயும், மிக நீண்டு, உச்சியில் சுகூம்பியுமுள்ளது.
இது அடி, டலோமம், வில்டியம் என்னும் மூன்று பகுதிகளைக் கொண்டது.
அடி , உலோமம், வில் லையம் என்னும் மூன்று பகுதிகள் உள.
அடி - புணரித்தாவரத் தினட் பதிந்து வித் தித் தாவரத்தை நான் றுவதுடன் போசணை
யை உறிஞ்சுகிறது.
அடி - புணரித்தாவரத் தினுட்பதிந்து வித்தித் தாவரத்னத 281 ன்றுவ துடன் நீரையும் சுனி யுப்புகளையும் உரிஞ்சு கிறது.
உலோமம் - கடத்து கிறது.
18.
உலோமம் - கடத்து
கிறது. 19, (i) வில்லையம்- முட்டை.
யுருவானது',
உ கு ளை யா ன தா யும் நீண்டும் உள்ளது.
(ii)
ஒரு படையினாலான சவர்
பல் படைகனாவான் சுவர்.
வித்திகள் செலுத்தி (elaters) க ளு ட ன் சேர்ந்து காணப்படும்,
வித்திகள் வித்திப்பை யினுள் காணப்படும். செலுத்திகள் கிடையா
(iv) இவை கிடையா,
கம்பம். 5ை31ற. றறை.
உட்கார் வெளிக்காற் புன்சலாகை

Page 149
284
கள், மூடி, சுங் கணம், வாய்ச்சுற்று, வாய்ச் சு ற் ப ப் ப ர் க ள், மேல்மென்றகடு ஆகி யனவயுண்டு.
(*) உலோமம் நீண்டு வில்
லையத்தை
சி ] பு கொண்டுவருகிறது.
உளோ மம் நீண்டு வில் பயத்னாது ( ம க வ கொண்டு செல்கிறது.
வில்லையபர் ஒபங்கற்று முனா ரயரில் பல சோனா களாக வெடிக்கிறது. வெப்ப காலத்தில் செ லுத்திகள் உலர்ந்து வித்திகளைப் பரம்பல் டையச் செய்கின்றன.
கங்கணக்கீழ் வயத் தில் மூடி வெடிக்கிறது, வாய்ச்சுற்றுப் பற்களு க்கும் பேல்பென் ற கட் டிற்கும் இடையேய/ ள்ள துவாரங்களா டாக வித்திகள் வெளி போப் பரம்படை சின்ரன, ளில்லையம் காற்றிலே அசையும் பொழுதே வித்திகள் வெளியேற்றப்படுகின் றன வாய்ச்சுற்றுப்பற் கள் நீர் பரு உடலர்வ தபால் அல்ல.
2].
வி த் தி த் தாய்க்கலம் ஒடுங்கற் பிரிவடைந்து ஒரு மடியான வித்திசு ளு ண் டா சி ன் ற ன. உண்டாகும் வித்திக ளில் அரைவாசி ஆண் புணரித் தாவரங்களைக் (கொடுக்கும் இழைக ளாகவும்,மி கு தி பெண்புணரித்தாவரங் களைக் கொடுக்கும் இழைகளாகவும் முளை க்கின்றன."
வி த் தி த் தாய்க்காலம் ஒடுங்கற் பிரிவடைந்து சித்திகள் உண்டாவ தால் வித்திகள் ஒரு மடியானசாவ, வித்தி சளிர் பாதி ஆண்புண ரி ந் தாவரங்களையுண்r டாக்கும் அழை முதல் களாகவும், மிகுதிப் பாதி பெண்புணரித் தாவரங்களை சன்டாக் கும்இனராதல்களாக வும் முளைக்கின்றன ..

185
செலஜிநெல்லா
நெபிறேலெபிசு
1. தானா உடல் ளித்தித்தான ரச் சந்ததியைச் சேர்ந்தது'.
தாவர உடல் வித்தித்தாவ ரச் சந்ததியைச் சேர்ந்தது'.
2. ஈரப்பற்றுள்ள நிழலான 4
இடங்களில் வளர்கின்றது.
ஈரப்பற்றுள்ள நிழலான இடங்களரில் எளர்கின்றது.
3. இருவித இவைகளுள்ளன.
கன்பாலைகள் 1ள்ளன ).
இலைகளெல்லாம் ஒரேமாதி ரியானவை. ஒத்த இலைகள் உள்ளன |
சிறுநா கிடையாது.
4. இமையின் மேற்புறமாக அடிப் பாகத்தில் சிறுநாளொன் றுள் தாது ,
5. அச்ச ச்சாருண்ட த னி (fl கவ
யொழுங்கு கிடையாது.
அச்சச் சுருண்ட
தளிரிலை யொழுங்கு காணப்படுகி ரிது .
6. தண்டு இணைக்கவருக்குரிய
வாறு கிளைத்துள்ளது.
லேர்த்தண் டுக்கிழங்கு வேர் களுண்டு, வேகுருக்கள் சினடயா,
7, பருக்களும், அவற்றிலே வேர்களும் காணப்படும்.
8. கிளைகளின் நுனிகளில் சுகூம்பு
தள் காரப்படும்,
இலைகளின் கீழ்ப்புறத்தே தவைகளுண்டு.
குவை புறவணியால் மூடப் பட்டிருக்கும்.
கம்பிகளிலே துபீர எரித்திக் சுலன்களையுடைய நுண் ளித்தி சிலைகளும், மாளித்திக்கலன் சுளையுடைய மாளித்தியிலைக ளும் காணப்படும். நுண் வித் திக்கப்பன்களும் மாவித்திக் கலன்களும் ஒரே சுகூம்பியிற் காணப்படும், ஆனால் அவர் வின் ஒழுங்கு இனத்திற்கு தினம் வேறுபடும்.
3, வித்திக்கலன்களுக்குக்காம்புக
உளுண்டு.
வித்திக்கலன்களுக்கு பாம்பு சுளுன்டு.
10. நல் சித்திக்கலனுள்ள விருத்தி
இலத்தோவித்திக்கலனுள்ள விருத்தி.

Page 150
286
11. ப ல் லி ன வி த் தி யு ள் ள து.
மாளித்திக்கலனில் நT ன் கு மாவித்திகளும் நுண்வித் திக் கலனில் அநேக நு ண் வி த் தி களும் உண்டாகுகின் றன.
ஓரின வி த் தி யு ள் ள து. (' த் த ளி த் தி யு ள் ள அ . | ஒரு வித்திக்கலனில் அநேக வித்திகளுண்டாகின்றன.
வி த் தி க ன ண் டா த லின் போது ஓடு ங் க ற் பிரி வு நடைபெறுகிறது'.
12. வித்திகளுண்டாதலின்போது
ஒடுங்கற் பிரிவு நடைபெறுகி
ரது. 13. வித் திக்க ல னி லி ரு க் கு ம்
பொழுதே நுண்வித்தி ஆண் புணரித் தாவரமாக விருத்தி யடைகிறது. - பதின்மூன்று கல் நி லை யில் ஆன்மா புணரித் தாவரம்ளித்திக்கலனிலிருந்து விடுபடுகிறது. மாவித்தியும் வி த் தி க் க ல னி அ ள் ள பொ ழு தே பெண்புணரித் தா வ ர மா க புளைக்கிறது. அது வித்திக்க ல னிலிருந்து விடுபடும் நிலை மாறுபாட்டிற் குரியது. கருக்கட்டலின் பின் முளை யம் ஒரளவு விருத்திய டையும் வரையில் அது வித் திக்கலனில் வைத்திருக்கப் படலாம்.
வித்தி நிலத்தில் விழுந்து, முளைத்து, இதயவுருவான பிரிவிலியந்தல் உண்டாகி றது', இதுவே புணரித்தாவ ரமாகும் பிரிவிலிமுதல் ஆண், பெண் புணரித் தாவர பென் வியத்தப்படுத்தப்பட வில்லை.
14. ஆ ண் பு ண ரி த்தாவரத்தில்
-அ ண் க ப் ச் ச ன னி களும், பெ ண் பு ண ரித்தாவரத்தில்! பெண்கலச்சன ணிகளும் விரு த்தியடைகின்றன.
பிரிவிவிமுதலில் தவாளிப்பி னருகே தடிப்பான பகுதி யில் பெண்கலச் சன்னிசு ளும், நலிந்த பகுதிகளிலும் போர்ப்போளிகளினடயேயும் ஆண்கலச்சனனி களும் விரு த்தியடைகின்றன.
பெண் சவச்சனனிகள் முதிர் வடைய முன்னரே ஆண் கலச்சணனிகள் முதிர்கின்
[ .
இருசவுக்குமுளைகளுள்ள விந் துப்போலிகள் உண்டாகின் றன்.
ப ல = சவுக்குமுளை களுள்ள விந்துப்போலிகள் உண்டா சின்றன. விருத்தி செலஜி நெ ல் லா லி அ ள் ள தைப் போன்றதே.

267
16. பெண் கலச்சன னி:- குறுகிய
சுழுத் தா னடயது' - நான்கு நீள்வ=1சயில் வரிசைக்கு இருசு பங்களாசு எட்டு சுமுத் துக்கவங்களுள்ளன.
குறுகிய கழுத்து 16 கலங்க ளானது வரிசைக்கு நான்கு கலங்களாக நான்கு நீர் வரிசையில் ஒழுங்குபடுத்தப் பட்டுள்ளன.
17. கருக்கட்டலுக்கு நீர் தேவை.
க ரு க் க ட் ட லு க் கு நீர் தேவை ,
18. முளே ய ளி கு த்தியின் போது
நாளித்தி பிரிவடைவதனா உண்டாகும் மேற்கம் ஒரு தாக்கா மா சு ளிருத்தியடை கிறது,
தாக்கணமோ, அதற்கொப் பான அமைப்புகளோ டண்
டாகளில்,
சைக்கசு விற்கும் அங்கியோசுப்பெரும்களிற்கு மிடையேயுள்ள ஒற்றுமை வேற்றுமைகள்.
இரண்டிலும் வித்தித்தாவரங்கள் பெரியனவாகவும் சுயா தீனமாகவும் உள்ளன.
இரண்டிலும் தாவரம் வேர்த்தண்டு. இலை என வியந்தப் படுத்தப்பட்டுள்ளது.
3. சைக்கசுவில் ஆணிவேர்த் தொகுதியுண்டு. இது இருளித்திபெத்
தாவரங்களிற் காணப்படுவதற்கு ஒப்பானதாகும்.
4. உள்ளமைப்பில் சைக்கசு இரு வித்திலைத் தாவரங்களை யொத்
துள் ளது.
5. சைக்கசுவில் இரு வித்திலைத் தாவரங்களைப் போன்று துணை வளர்ச்சி நடைபெறுகிறது. எனவே மரம் வைரமாகின்றது.
6. சைக்கசுவின் இலைகள் சிறைப்பிரிப்பான கூட்டிலைகளாகும்.
ஆனல் இவற்றின் சிறிலைகளிலே பக்கநரம்புகள் கிடையா. சில அங்கியோசுப்பெரும்களிலும் சிறைப்பிரிப்பான கூட்டிலை களுண்டு, ஆனால் அவற்றில் பக்க நரம்:புகளுண்டு.
சீ,
ஒரு வித்திலைத் தாவரங்களைப் போன்று சைக்கசுனில் சாதா ரண மாகக் கிளைகள் காணப்படமாட்டா.

Page 151
283
9. சைக்கசுகளில் ஆண், பெண் வித்தியாலைகள் உண்டாகின்றன.
அங்கியோசப்டொரும்களில் இனப்பெருக்கவங்கங்கள் 'பூக்க ளாகும்.
10. சைக்கசு ஈரில்லமுள்ள் '. அங்க யோசுப்பெரும்கள் ஈரில் வ
முள்ள தாசு அல்லது திரில் வtள்ளதாக விருக்கும்.
11. இரண்டும் பல்லின வித்தியுள்ளவை.
(1) சைக்கசு: மார்த்தியிலே - மாத்திக்கவன் கல்வி த்து |
மாவித்தி (முளையப்பைக்கலங்கள் ).
அங்கியோ சுப்பெரும் : சூல்வித்திலை - சூல்வித்து - முளையப் என்புக் கடிவங்கள்,
(2) சைக்கசு: நுண்வித்தியபிலை- துண்வித்திக்கலன் - நுண்வித்தி
அங்சி!(யோசுப்பெரும்: கேசரம்-மகரந்தப்பை-மகரந்த மணி 12. இரண்டிலும் ஆண், பெண் புணரித்தாவரங்கள் மிகவும்
விருத்தி குன்றியுள்ளன.
13. சைக்கசில் மாசித்தியின் (சூல் வித்திலே) செதில் போன்றது.
அங்கியோசுப்பெரும்களின் சூல்மத்தில் கலகம், தம்பம் குறி என வேறுபடுத்தக்கூபுடயது.
14. சைக்கசில் மகரந்தச் சேர்க்கை காற்றினில் மட்டுமே நடை
பெறுகிறது. ஆனால் அங்கியோசுப்பெரும்களில் காற்றினாலும், நர், பூச்சிகள், பறவைகள் ஆகியவற்றாலும் நடைபெறு! கின்றது'.
சைக்கசில் சூல்வித்துகள் மூடப்படாமல் வெளித்தெரியும். நிலையிலுள்ளன. ஆனால் அங்கியோசுப்பொருட்களில் கல்வித்து கள் சூலகத்தினால் மூடப்பட்டுள்ளன.
1 5, சைக்சின் கல்வித்து நேர்த்திருப்பமுள்ளது. ஆனால் அங்கி
யோசப் பெரும் களில் நேர்த்திருப்பமுள்ளதாகவோ, வேறு விதமாகவோ இருக்கக்கூடும்.
1 '- சைக்கசிவசூல்வித்தில் மூன்றுபனடயுள்ள வொருகவசம்கடண்டு.
ஆனால் அங்கியோசுப்பெரும்களில் இரு சுவசங்கள் உள்ளன.
15.
சைக்கசின் இளம் சூல்வித் திலே பூலவுருப்பையசு அலகு உபிராடு. ஆசிைல் இது பதுங்கியாசுப்பெரும் சுளில் காணப்பட பாட்டாது.
10. சைக்கசின் கல்வித்தின் மகரந்த அன்றி உண்டு. !'
அங்கியோசுப்பெரும்களில் கிடையாது' .

189
3), சைக்கசின் சூல்வித் தில் பெண்கலச்சனணியறை உண்டு.
ஆனால் அங்கியாசுப்பெரும்களில் கிடையாது.
21. சைக்கசில் பெண்கலச்சனனிகளுண்டு, ஆனால் அங்கியோசுப்
பெரும்களில் கிடையாது.
23.
சைக்கசில் மகரந்தமணிகன் சூல்வித்தின்மேல் நேரடியாகவே விழுகின்றன, ஆனால் அங்கியோசுப்பெரும்களில் குறியன் மேல் விழுகின்றன.
23, சைக்கசின் மகரந்தக்குழாய் மூலவுருப்பையகத்தினுள்
கிளைத்து, பருகிகளைச் செலுத்தி, போசணைப் பொருள்களை உறிஞ்சுகின்றது. அங்கியோசுப்பெரும்களில் மகரந்த குழாய் லுள்ள குழாய்க்கரு ஆண்கருவை முளையப்பையினுள் இட்டுச் செல்கிறது.
24. சைக்கசில் டபிறப்பாக்குங்கலத்திலிருந்து அநேக பிசிர்களை
யுடைய இரு விந்துப்போலிகளுண்ட கன்றன. ஆனால் அங்கி யோசுப்பெரும்களில் பிறப்பாக்குங்கருவிலிருந்து இரு ஆண் கருக்கள் உண்டாகின்றன.
3 ,
சைக்கசில் ஒரு விந்துப்போலி முட்டைக்கலத்துடன் சேர்க்கை யடைகிறது. இது தணிக்கருக்கட்டல் எனப்படும், ஆனல் அங்கி யோசுப்பெரும்களில் ஒரு ஆண் கரு முட்டைக்கருவுடன் சேரும்பொழுது பற்றைய ஆண்கரு முதன்வித்தகவிழிையக் கருவுடன் (துணைக் கருவுடன் சேர்க்கையடைகிறது. எனவே இது இரட்டைக் கருக்கட்டல் எனப்படுகிறது.
25. சைக்கசில் வித்தகவிழையம் கருக்கட்டலின் முன்பே உண்டா
கின்றது. எனவே இது ஒருமடியானது. - அங்கியோசுப் பெரும்களில் வித்தகவிழையம் கருக்கட்டலின் பின்பே உண் டாகிறது. முதன்வித்தகளிழையக்கரு இருகருக்கள் சேர்க்கை யடை வதால் உண்டானதால் அது இருமடியானது. ஆகவே பின்னர் ஆண்கருவும் இத்துடன் சேரும்பொழுது மும்மடி யானதாகிறது',
27. இரண்டிலும் மாவித்தி (அல்லது முளையப்பைத்தாய்க் கலம்)
கல்வித்திலே நிரந்தரமாக வைத்திருக்கப்பட்டுள்ளது.
28. இரண்டிலும் வித்துகளுண்டாகின்றன. சைக்கசில் வித்துகள்
மூடப்படாமலும், அங்கியேசுப்பெரும்களில் சூலகத்திலிருந் துண்டாகும் சுற்றுக்கனியத்தால் வித்துகள் மூடப்பட்டுமுள்
63,
TZ 19

Page 152
290
29. சைக்கசில் இரு வித்திலைகளுண்டு ஆனால் அங்கியோசுப் -
பெரும்களில் இரு வித்திலைகளோ அல்லது ஒரு வித்திலையோ காணப்படலாம்,
30. சைக்கசில்தரைக்குக்கீழானமுளைத்தல் காணப்படுகிறது .அங்கி
யோசுப்பெரும்களில் தரைக்குக்கீழான அல்லது தரைக்கு மேலான முளைத்தல் காணப்படும்.
முக்கிய கவனிப்பு:-பொருத்தமான இடங்களிற் ப ட ங் க ளைச்
சேர்த்துக்கொள்ளவும். 9. பங்கசுக்களிலே நடைபெறும் இவிங்கமில் இனப்பெருக்க முறைகள் :
- பங்கசுக்கள் வித்திகளையுண்டாக்கி இலிங்கமில் முறையில் இனப்பெருக்கம் செய்கின்றன, தாய்த்தாவர உடலிலிருந்து உண் டாகும் இவ்வித்திகள் பெரும்பாலும் ஒரு கலத்தாலானவையே. வித்திகள் அவற்றின் உருவத்திலும், உண்டாகும் விதத்திலும் பல வேறுபாடுடையன, சர்தாரணமாக முட்டையுருவாக, அல்லது கோளவுருவாகக் காணப்படும் இவை நிறத்திலும் வித்தியாசப் பாடும், அநேகமாக வித்தி இரு சுவர்களைக் கொண்டிருக்கும். மெல்லிய உட்சுவர் உள்ளடையென்றும், தடித்த வெளிச்சுவர் வெளியடை யென்றும் அழைக்கப்படும்.
அகவித்திகள் (Endosports) ஒரு பருத்த கலத்தினுள் முத வருவின் பிரிவினால் உண்டாகின்றன, வித்திக்கலன்தாங்கிக னெனப்படும் சிறப்பான பூஞ்சணவிழைகளின் நுனிகள் பருத்து வித்திக்கலன்களாகின்றன. இவற்றிலேயே அகவித்திகளுண்டா கின்றன. மியூக்கொரில் உண்டாகும் அகவித்திகள் கலச்சுவரை யுடையதாயிருப்பதுடன் அசைவற்றும் காணப்படுகின்றன. பைற் றோப்தொறாவில் ஈரப்பற்றுள்ள காலங்களிலே விருந்து வழங்கியின் இவைவாய்களினூடாகவித்திக்கலன்தாங்கிகள் வெளிவந்து. கிளைத்து, முனைகளிலே வித்திக்கலன்களை உண்டாக்குகின்றன. வித் திக்கலன்கள் முதிர்வடைந்தபின் கீழே விழுகின்றன, அதன் பின் வித்திக்கலனுக்குக் கீழிருந்தபகுதி வளர்ந்து புதிய வித்திக்கலனை யுண்டாக்குகிறது, வித்திக்கலன்களினகத்தே சுவரற்ற, இரு சவுக்கு முளைகளைக் கொண்ட அகவித்திகள் உண்டாகி, வெளிவந்து, நிந்தித் திரிகின்றன. இவை இயங்குவித்திகளெனவும் அழைக்கப் படுகின்றன. ஒவ்வொரு வித்திக்கலனிலிருந்தும் 5 முதல் 11) வரையில் இயங்கு வித்திகளுண்டாகலாம். சில நிமிடங்கள் நீந்திய டன் இவை சவுக்குமுளைகளை இழந்து, கோளவுருவாகி, மூல வுயிர்க் குழாய்கள் உண்டாகி பின்னர் பூஞ்சணாவலைகள் தோன்று கின்றன,
பைற்றோப்தொற, அசுப்பசிவசு, பெனிசிலியம் ஆகியவற் றிலே தூளியவித்திகளுண்டாகும் முறையால் இலிங்கமில் முறை யினப்பெருக்கம் நடைபெறுகிறது. தூளியவித்திகள் அல்லது

391
தூளியங்கள் அசைவற்ற, சுவரற்ற வித்திகளாகும், தூளியந்தாங்கி களெனப்படும் விசேட பூர்சண இழைகளின் நுகருக்கருகானம்) யில் ஒடுங்கல்களேற்பட்டு காரியங்களுண்டாகின்றன. பைற்றோப் தொானில் இவை தனியன்களாக உண்டாக்கப்படுகின்றன. (படம். 1. ஆனால் அசுப்பசிவலசு, பெனிசிலியம் ஆகியவற்றில் சங்கிலித்தொடராக உண்டாகின்றன. (படம்.] இவற்றில் தாளியந்தாங்கியின் நுனி பருத்து . அதிலிருந்து ஆசிரையாங்க (ளெனும் முளைகள் தோன்றுகின்றன. ஒவ்வொரு ஆசிரையத் திலிருந்தும் அடிநாட்டமுள்ளவாறு சங்கிலித்தொடராகத் தாளி! யங்களுண்டாகின்றன. சில வேளைகளில் துணை ஆசிரையங்களுங் காணப்படலாம். பெனிசிலியத்தில் தூளியந்தாங்கிகள் இணைக் கவருக்குரிய முறையில் கிளைத்துங் காணப்படும்.
சங்கயந்தாங்தியின் தோன்றுவாறு சக்
மியூக்கொர் போன்ற பல டாங்க்சுக்களிலே பூஞ்சணவலையை யுண்டாக்கும் பூஞ்சண இழைகள் குறுக்குச்சுவர்களால் பிரிக்கப் பட்டு, திடண்டாகும் சிறு துண்டுகள் ஒவ்வொன்றும் முளைத்துத் தனித் தாவரமாக இயங்குகின்றன. இத்துண்டங்களே ஒயிடியா வென அழைக்கப்படுகின்றன.
ஓயிடியா போன்றே வன்றேல்வித்திகளும் உண்டாகின்றன. இவை தடித்த சுவர்களையுடையனவாயும், கரிய அல்லது கபில நிறமுடையனவாயுங் காணப்படும். இவை பூஞ்சணவிழைகளின் நுனிகளிலோ, இடையிலோ உண்டாகலாம். இவை முளைத்து உண்டாகும் குறுகிய பூஞ்சணவிழையிலே வித்திக்கலன்களோ தூளியங்களோ விருத்தியடைகின்றன,
10. பங்கசுக்களில் போசணை:
பங்க்சுக்கள் பல்வேறன வாழிடங்களிலும் காணப்படுகின் றன. இவற்றில் பச்சையவுருவம் கிடையாதாதலால் இவைதமதுணை வைத் தயாரிக்கக் கூடியவையல்ல, எனவே இவை பிறபோசணைத் தாவரங்களென அழைக்கப்படுகின்றன. சில பங்கசுக்கள் உக்கும் மரத்துண்டுகள், அழகும் காய்கறி, பழங்கள், தாவரங்கள் ஆகிய வற்றிலும் பாண், பாறுகாய், சரணம், போன்ற பொருள்களிலும் அழுகல்வளரிகளாக வளர்கின்றன. இவை தாம் வளரும் வாழிடத் தேயுள்ள பொருள்களில் நொதியத்தைச் சுரந்து, சமிபாடடையச் செய்து, பூஞ்சணவலையினுாடாக அகத்துறிஞ்சுகின்றன. பூஞ்சனை வலை மு மு வ து ம் உறிஞ்சுந்தன்மையுடையதால் உக்கும் சேதனவுறுப்புப் பொருளில் வலை மிகவும் பரந்து வளரக்காணா லாம். அழுகல்வளரிப் பங்கசுக்கள் பாண், பழங்கள் ஆசிய வற்றைக் கெடுப்பதுடன் உபயோகபுள்ள மரங்களையும் பாழாக்கு கின்றன. ஆனால் வேறோர் விதத்தில் அவை எமக்கு தன்மை செய்கிறதெனவுங் கொள்ளலாம், அழுகும் தாவர, விலங்குப்

Page 153
292
பொருள்களை நடக்கச் செய்து, அவற்றிலுள்ள முகங்களை ' மண். "
ணிலோ சாற்றிலோ சேர்க்கின்றன, மியூக்கொரர், அசுப்பசிவசு ஆகியவை அழகல் வளரிப்பங்கசுகளாகும்."
மதுவம் வெல்லக்கரைசல்களிலே செழிப்பாக வளர்கிறது. மதுவம் இருவித நொதியங்களை யுண்டாக்குகிறது. இன்வெட்டேசு என்னும் நொதியம் (பதுவக்கலத்திலே சுரக்கப்பட்டு, வெளிவந்து வெல்லக்கரைசலை குளுக்கோசாகவும் பிரற் றோசாகவும் மாற்று கிறது. இவை உள்ளுறுஞ்சப்பட்டு சைமேசு என்னும் நொதி யத்தினால் அற்ககோலாகவும் காபனீரொட்சைட்டாகவும் மாற்றப் படுகிறது. மதுவக்கலத்திற்கு வெளியேயும் நொதிப்பு நடைபெற லாம். ஆனால் இவ்வாறான கலத்துக்குப்புறமான தொதிப்பினா லுண்டாகும் சக்தி பாதுவக்கவங்களின் உபயோகத்திற்குக் கிடைப் பதில்லை.
அநேக பங்கசுக்கள் விருந்து வழங்கிகளிலே ஒட்டுண்ணியாக வும் வாழுகின்றன. ஒட்டுண்ணிப் பங்கசுக்களாலேயே பல கொடிய தாவர நோய்களுண்டாகின்றன. ஒரு சில பங்கசுக்கள் மட்டுமே விலங்குகளிலே ஒட்டுண்ணிகளாகவுள்ளன. மெதுடலில் தேமல் படர்வதும் ஒருவித பங்சுசுவினாலேயே, சாதாரணமாக ஒட்டுண்ணி களாக வாழும் பங்கசுக்களுட்சில தேவையேற்படின் அழுகல் வளரிகளாக வாழுமியல்பு பெற்றுள்ளன. இவை அமையத்திற் கெற்ற ஒட்டுண்ணிகள் என அழைக்கப்படுகின்றன. பெரும்பா வான ஓட்டுண்ணிகள் கட்டுப்பட்ட ஒட்டுண்ணிகளாகவுள்ளன. அதாவது'. இவை விருந்துவழங்சிகளில் ஒட்டுண்ணிகளாக மட் டுமே வாழுகின்றன, சில பங்கசுக்கள் பூசண விழைகளை வெளிச் செலுத்தமுன் ஒருவித நஞ்சைச் சுரந்து, விருந்து வழங்கிய னிழையங்களைக் கொல்லக்கூடிய இயல்பைப் பெற்றுள்ளன. வேறு சில பங்கசுக்கள் விருந்து வழங்கியை உடனடியாகக் கொல்லாமல் உணவுப்பொருள்களை உறிஞ்சுவதால் சிறிது சிறிதாக அழிவுத் தொழிலைச் செய்கின்றன, பைற்றொப்தொற இன்ஃபெஸ்ற்றன்ஸ் உருளைக்கிழங்குச் செடியிலே வளர்ந்து நோயை உண்டாக்குகிறது . பங்கசுவின் பூஞ்சணங்கள் விருந்து வழங்கியின் க லங்களுக் கிடையே காணப்பட்டாலும், பருசிசுளை ளிருந்து வழங்கியின் கலங்களினகத்தே செலுத்தி, நொதியங்களைச் சுரத்து. உணவுப் பொருள்களைச் சமிபாடடையச் செய்து, பின் உறிஞ்சுகின்றன.
சில பங்க்சுக்கள் பூக்குந்தாவரங்களின் வேர்களிலே நெருங் கிய உறவுகொண்டு வாழுகின்றன. இவை நிலத்திலிருந்து நீரை யும் கனியுப்புகளையும் உறிஞ்சி பூக்குந்தாவரத்திற்குக் கொடுத்து தமக்கு வேண்டிய உணவை அவற்றிலிருந்து பெறுகின்றன. இன் வாறான ஒன்றிய வாழ்வு வேர்ப்பூசணாக்பாட்டம் (MIyCorrhiza) எனப்படும், இலைக்கன்களெனப்படுபவற்றில் ( Lichers ) வேறு விதமான விநோதமான ஒன்றியவாழ்வு காணப்படுகிறது. இதில்! பச்சைநிற அல்காவும் பங்கசுவும் ஒன்றிவாழ்கின்றன.

293
-11.
பங்கசுக்களின் பொருளாதார முக்கியத்துவம்
அநேக பங்க்சுக்களால் எமக்குத் தீமையே ஏற்பட்ட பொழு அம் சில பங்கசுக்களினால் நன்மைகளும் பெறுகின்றோம், அழுகல் வளரப் பாங்காக்கள் இறந்த தாவர, விலங்கு உடல்களை உக்கச் செய்து இயற்3க அழுக்ககற்றிசுகளாகத் தொழில்புரிகின்றன. அப்
ப!Tழுதுண்டாகும் காபனீரொட்சைட்டு வெளியவே விடுபட்டு ஒளித்தொகுப்பின்போது
"' பச்சைத்தாவரங்களால் உபயோகப் படுத்தப்படுகிறது. சேதணவு பரப்புக்குரிய பந்தரசன்கழிவுப் பொருள்கள் உடைபட்டு மூலகங்கள் மண்ணிலும் காற்றிலும் சேர்க்கப்படுகின் றன. அநேக பங்கசுக்கள் வர்த்தகத்துறையில் பய னுள்ளானவாயிருக்கின்றன. அமிலேசு , பெத்தினேசு, சுக்கிரேசு, சையேசு ஆகிய நாதியங்கள்பங்க்சுக்களிலிருந்து பெறப்படுகின்றன. அசுப்பசிவசு, பெனிசிலியம், மியூக்கொர் ஆகியவை பெருமளவில் அயிலே சைச் சுரக்கின்றன, மதுவம் னச மேசைச் சுரக்கின்றது. எனவே, இதுவனக தயாரிப்பதில் மதுவம் பெரும் பங்குகொள் கிறது. பாண் தயாரிப்பதற்கு வேண்டிய புளிப்பை ஏற்படுத் துவ தற்கும் மதுவம் பயன்படுகிறது. நொதிப்பின்போது மதுவத்தி லிருந்து சுரக்கப்படும் இடன் வெட்டேசு வெல்லக்கரைசலை எட் சோசுகளாக மாற்று, சைமேசு என்னும் நொதியம் எட்சோசுகளை அற்ககோலாகவும் காபனீரொட்சைட்டாகவும் மாற்றுகிறது,
பெனிசிலியம் றொக்ஃபோற்றி போன்ற பங்கசு இனங்கள் பாவாடை தயாரிப்பதில் உபயோகப்படுத்தப்படுகின்றன. சேதன வுறுப்பு அமிலங்களினதும் விற்றமின்களினதும் வர்த்தக முறைத் தயாரிப்புகளில் அநேக பங்கசுக்கள் உபயோகப்படுத்தப்படுகின் றான சித்திரிக்கத் தயாரிப்பில் அசுப்பரில் சு இனங்களும் பெனி சிலியம் இனங்களும் முக்கிய பங்கெடுக்கின்றன.. மதுவம், அசுப்பசில இனங்கள், ஆகியவை விற்றமின் B தயாரிப்பில் இடம் பெறுகின்றன. பெனிசிலின் தயாரிப்பில் பெனிசிலியம் நொரேற்றபு:ம் பெனிசிலியம் பாசேTறினமும் உபயோகிக்கப்படு கின்றன. அஸ்ரெப்ரோSSமசின், அவுரியோமைசின், குளோரோ மெசின் ஆசிய நுண்ணுயிர் கொல்விகள் இஸ்ரெப்ரோமைசெசு சாதியைச் சேர்த்த பங்கசுக்களிலிருந்தே பெறப்படுகின்றன.
சளியோற்று கம்பெஸ் றிஸ் போன்று பங்கசுக்கள் அதிகவள விiே புரதங்களையுடையனவாயிருப்பதால் உணவாக உட்கொள் எளப்படுகின்றன, இந்தியாவிலும் பிரான்ஸ் நாட்டிலும் இவை பெருமளவில் உணவிற்காகவே வளர்க்கப்படுகின்றன.
மியூக்கொர், அசுப்பசில சு, பெனிசிலியம் போன்ற பங்கசு களரின் வித்திகள் எப்பொழுதும் வளியிலேயிருந்து, திறந்து வைக் கப்பட்ட ஊறுகாய், பழங்கள், பாண் ஆகியவற்றை யடைந்து

Page 154
194
வளர்வதனால் உணவுப் பொருட்கள் கெட்டுப்போகின்றன , துணி வகைகள், புத்தகங்கள், தோலாற் செய்யப்பட்ட பொருள்கள் ஆகியவற்றிலும் பங்கசுக்கள் வளர்ந்து அவற்றைக் கெடுக்கின்றன.
அநேக பங்கசுக்கள் எமக்கு உபயோகப்படக்கூடிய மரங் களைத் தாக்கி அழிக்கின்றன. ஒட்டுண்ணிப் பங்கசுக்கள் பயிர்களை நாசம் செய்கின்றன, தானியவகைகள், புகையிலை, உருளைக் கிழங்கு, கரும்பு, தக்காளி, கத்தரி போன்ற தாவரங்களிலே பல வித நோய்கள் வெவ்வேறுவிதமான பங்க்சுக்கள் உண்டாக்கு கின்றன. ஒட்டுண்னணிப் பங்கசுக்கள் தாவரங்களில் மட்டுமல்லாது விலங்குகளிலும் மனிதரிலுங்கூட நோய்களை புண்டாக்குகின்றன , மனிதரிலே (மண்டையில் தோல் உலர்ந்து உரிதல், நாவிதன் சொறி, பிவண்ணன் சொறி, தேமல், வேறும் சரும வியாதிகளுக்கு பங்கசுக்களே காரணமாகும், பங்காக்சுள் நுரையீரலையும் நரம்புத் தொகுதியையும் கூடத் தாக்கி நோய்களை பண்டாக்குகின்ற தெனத் தெரிகிறது.
12. மார்க்கான் சியாவினதும் பொகொ நேற்றத்தினதும் பதியத்
திற்குரிய அமைப்புகளின் ஒற்றுமை வேற்றுமைகள்.
மார்க்கான்சியாவும் பொகொநேற்றமும் பிரியோபீற்று வென்னும் பிரிவிலடங்குவனவாயிருந்தாலும் அவை வெவ்வேறு வகுப்புகளில் வைக்கப்பட்டுள்ளன. பதியத் தாவரங்களிடையே யுள்ள வேறுபாடுகளையும், ஏனைய இயல்புகளையும் கொண்டே அவை வெவ்வேறு வகுப்புகளிற் சேர்க்கப்பட்டுள்ளன. மார்க்கான் சியா சுெப்பற்றிக்கே என்னும் வகுப்பிரம், பொகொநேற்றம்
முசுக்கி என்னும் வகுப்பிலும் சேர்க்கப்பட்டுள்ளன.
மார்க்கான் சியாவிலும், பொகொநேற்றத்திலும் புணரித் தாவரங்களே பதியத்திற்குரிய தாவரங்களாகவுள்ளன. புணரித் தாவரங்கள் வித்தியிலிருந்து புளக்கின்றன, இரண்டிலும் வித்தி முளைத்து சில காலங்களாலான இழையொன்று உண்டாகிறது. மா ர் க் கா ன் சி யா ளி ல் இடைச்சி இரண்டு அல்லது அதற்கு பே ற் ப ட் ட கலங்களகலமானது. இழையை நிலத் திற்கு மேலான பகுதி, கீழான பகுதியென்று வித்தியாசப்படுத்த t:டியாது. ஆனால் பொகொநேற்றத்தில்இழைநிலத்திற்குமேலான பகுதி, கீழானபகுதி என வித்தியாசப்படுத்த முடியும், நிலத்திற்கு மேலான பகுதியில் பிரிசுவர்கள் பக்கச்சுவருக்குச் செங்குத்தாக ளிருக்கின்றன, அக் கலங்கரிலே பச்சையவுருமணிகள் டண்டு, நிலத் திற்குக் கீழான பகுதியில் டாரிசுவர்கள் பக்சுச்சுவருக்குச் செய் குத்தாகவிருக்கின்றன. அக்கவங்களிலே பச்சையவுருவம் இல்லை, நிலத்திற்குக் கீழான பகுதியில் வேர்ப்போலிசுளுண்டு, அவற்றில் பிரிசுவர்கள் மூலைவிட்டமாசுவிருக்கும்.

295
மார்க்கான்சியாவில் இழை - விரைவிலேயே இருவெட்டு முகங்களையுடைய உச்சிக்கலத்தை உண்டாக்கி ஓர் பிரிவிலியாக விருத்தியடைகிறது. ஆனால் பொகொநேற்றத்தில் உண்டாகும் இழை 'இழைமுதல்' என அழைக்கப்படுகிறது. இது நீண்ட காலம் வாழ்ந்து கலங்களிலுள்ள பச்சையவுருமணிகளைக் கொண்டு + ஒளித்தொகுப்பு நடாத்துகிறது. இழைமுதலிலிருந்து அரும்புகள் உண்டாகி இலைகளுள்ள புணரித்தாவரங்களாக வளர்கின்றன.. (படம் - மார்க்தான்சியாப் பிரிவிலி, பொகொநேற்ற இழை முதல், பொகொநேற்றத்தின் இலைகளுள்ள புணரித்தாவரம்.)
மார்க்கான்சியாவின் பிரிவிலிமேலிருந்துகீழாகத்தட்டையாக் கப்பட்டு இணைக்கவருக்குரியவாறு கிளைத்துவளருகிறது. - மேற் புறமாக சாய்சதுரவுருவுள்ள அடையாளங்கள் காணப்படும்.
கீழ்ப்புறமாகவுள்ள மையநரம்பினிருபக்கங்களிலும் "உண் டாகும் ஒரு கலத்தாலான வேர்ப் போலிகள், அழுத்தமான வேர்ப் போலிகளாகவோ, முளைவேர்ப்போலிகளாகவோ இருக்கும். அழுத்தமான வேர்ட் போலிகள் பிரிவிலியை நிலத்தில் பளன்று கின்றன. [ முளைவேர்ப்போலிகளும் பல்கலங்களான செதில்களும் நிலத்தில் ஊன்றுவதற்கு உதவுவதுடன் நீரையும் உறிஞ்சுகின்றன, பொகொநேற்றத்தில் புணரித்தாவரம் தண்டு, வேலுருவான இலைகள், பல்கலங்களாலான வேர்ப் போளிகள் என - வியத்தமடைந்து நிமிர்ந்து வளர்கிறது. தண்டைச்சுற்றி சுருளியாக இலைகளுள்ளன.
பொகொநேற் றத்தில் செதில்கள் கிடையா.
மார்க்கான்சியாப்பிரிவிலி ஒ ளி த் தொ கு ப் பை ச் செய் வதற்கான இழையத்தைக் கொண்டுள்ளது - பொகொநேற்றத்தில் இலைகளே ஒளித்தொகுப்பு நடாத்துகின்றன. ஆனால் தண்டின் மேற்பட்டைக் கலங்களிலும் பச்சையவுருவம் காணப்படுகிறது, மார்க்கான்சியாவின் பிரிவிலியின் குறுக்குவெட்டுமுகத் தோற்றத் தில் மேற்புறமாகப் பச்சையவுருமணிகளைக் கொண்ட மேற்றோல் உண்டு.
பொகொநேற்ற இலையின் குறுக்குவெட்டுமுகத் தோற் றத்தில் பல பச்சைநிற இழைகள் மேற்புறப்படையிலிருந்து நிமிர்ந்து வளர்வதைக் காணலாம். இவற்றில் பச்சையவுருவம் இருப்பதால் ஒளித்தொகுப்பு நடைபெறுகிறது. ஒளித்தொகுப் பிழைகளினிடையே குறுகிய காற்றிடைவெளிகள் உள்ள தனால் காபனீரொட்சைட்டு முழுப்பரப்பினூடாகவும் உட்செல் கிறது. வெப்பமான காலத்தில் மேற்பக்கமாக இலை சிறிது மடிவ தால் மிகையான ஆவியுயிர்ப்பு தவிர்க்கப்படுகிறது, பொகொ நேற்று இலையின் நடுநரம்பில் கடத்துங் கலங்களுண்டு.

Page 155
205
மார்க்கான்சியாவில் ஒளித்தொகுப்பு இழையத்திற்குக் கிழாக சேமிப்பு இழையமுண்டு, இதற்குக் கீழாகவுள்ள கீழ்ப்புற மேற்றேலிலே பச்சையவுருமணிகள் கிடையா. அவற்றிலிருந்து வேர்ப்போலிகள் உண்டாகின்றன.
13. மார்க்கான் சியாவின் பிரிவிலியை நெபிருே லெபிசுவின்
பிரிவிலிமுதலுடன் ஒப்பிடுதல் மார்க்கான்சியாப் பிரிவிலியும் நெபிறோலெபிசுப் பிரி வின்முதலும் புணரித்தாவரச்சந்ததியைச் சேர்ந்தவையாகும். இவை ஈரப்பற்றுள்ள நிழலான இடங்களிலே வளருகின்றன. இரண்டும் [ே:லிருந்துகீழாகத் தட்டையானவையாகவும் பச்சை நிற முடையனவாயும் உள்ளன, பார்க்கான்சியாப் பிரிவிலி இணைக் சுவருக்குரிய முறையில் கிடைத்துள்ளது, தவாளிப்புப் பகுதியி னருகே வளர்ச்சிக்குரிய உச்சிக்கலமுள்ளது, தெபிறோலெபிசுப் பிரி விளிமுதல் இதயவுருவானது. இதிற் கிளேகள் கிடையா. வளர்ச் சிக்குரிய உச்சிக்காலம் பார்க்கான்சியாப் பிரிவிலியில் உள்ளதைப் போன்று த வ ா ளிப் பி ன ரு ( சு யு ள் ள து. மார்க்கான் சியாப் பிரிவிலியில் மையநரம்புண்டு, ஆனால் நெட்றேலெபிசுவில் கிடையாது. இரண்டிலும் மையப்பகுதி பலகலத் தடிப்புள்ளதா யும் பக்கங்கள் ஒரு கலத் தடிப்புள்ளதாயும் காணப்படும். இரண்டி லும் கீழ்ப்புறமாக ஒரு சுவத்தாலான (வேர்ப்போவிகள் உண்டு. இவை நிலத்தில் ஊன்றுவதற்கும், நீரையும் கனியுப்புகளையும் உறிஞ்சுவதற்கும் பயன்படுகின்றன, மார்க்கான்சியாவிலே வேர்ப் போலிகளுடன் நான்கு வரிசைகளில் செதில்களும் காணப்படு கின்றன. இவை நீரைச் சேகரித்து வைத்து ஆவி யுயிர்ப்பைக் குறைக்கின்றன , அத்துடன் வளர்ச்சிப் பகுதிக்கும் பாதுகாப்பளிக் கின்றன. மார்க்கான்சியாப் பிரிவிலியிலும் நெபிறோலெபிசுப் பிரி வின்முதலிலும் பச்சையவுருவங்களுள்ளதால் அவை ஒளித்தொகுப்பு முறையால் தமக்கு வேண்டிய உணவைத் தயாரிக்கின்றன . எனவே இரண்டும் சுயாதீன வாழ்க்கையுடையன.
மார்க்கான் சியாப் பிரிவிலியின் மேற்புறத்தே கோரகங்களுண் டாகும் கோரகக் கிண்ணங்கள் காணப்படும். நெபிறோலெ பிசுப் பிரிவில் முதலில் இவை காணப்படமாட்டா. ஆண்கலச்சனனி சுளும் பெண்கலச்சனனிகளும் மார்க்கான்சியாவில் வெவ்வேறு பிரிவிலிகளிலும், நெபிறோலெபிசுவில் ஒரே பிரிவிவிமுதலிலும் காணப்படுகின்றன. மார்க்கான்சியாவிலே ஆண்கலச்சனனி தாங்கி, பெண்கலச்சனனிதாங்கி ஆகியவை பிரிவிலியின் கீழ்ப்

297
புறத்திலிருந்து உண்டாகி தவாளிப்புகளினூடாக மேல் நோக்கி வளர்கின்றன. இவை வாங்கிகளாக விரிவடைந்து முறையே ஆண் கலச்சனனிகளையும் பெண்கலச்சனனிகளையும் தாங்கி நிற்கின் றன, நெபிறோலெபிசில் ஆண்கலச்சனனிகள் பிரிவிலிமுதலின் கீழ்ப் புறத்தே மெலிந்த பகுதிகளிலும் வேர்ப் போலிகளினிடையேயும் உண்டாகின்றன. பெண்கலச்சனனிணிகள் தவாப்பினருகே காணப் படுகின்றன. நெட்ரோலெபிசு ஓரில்லமுள்ளதென்றாலும் ஆண் கலச்சனளிகள் முன்னதாகவே முதிர்கின்றன.

Page 156
12
வினாக்கள்
அல்கா, பங்கசு, பற்றீரியா, வைரசு
1. "'அல்காக்களின் வாழிடமும் அவற்றின் அமைப்பும்" ' என்னும்
பொருள் பற்றி ஒரு கட்டுரை வரைக.
2, ''தலோபீற்றாவில் பரம்பல்"' என்பதைப் பற்றி விளக்க
மாகக் கூறுக.
நீர் படித்த அல்காக்களிலும் பங்கசுக்களிலும் இனப்பெருக்கத் திலுள்ள ஒற்றுமைகளை ஆராய்க.
4. தலோபிற்றாவிலுள்ள இலிங்கமில் வித்திகள் வித்திக்கலன்கள்
ஆகியவற்றை ஒப்பிட்டு நோக்குக. 5. இசுப்பைரோகைராவினதும் சக்கரோமைசிசினதும் போசணை யிலும் இனப்பெருக்கமுறைகளிலுமுள்ள ஒற்றுமை வேற்று
மைகளைத் தருக. 6. இசுப்பைரோகைரா, அசுப்பசிலசு ஆகியவற்றில் இலிங்க
முறை இனப்பெருக்கத்தை ஒப்புநோக்குக.
7. கிளாமிடொமோனசு, சக்கரோமைசிசு ஆ கி ய வ ற் றி ன்
கட்டமைப்பையும் போசணையையும் ஒப்பிடுக
8. அல்காக்களுக்கும் பங்கசுக்களுக்கும் உள்ள ஒத்த இயல்புகளைக்
கூறுக. இவ்விரண்டையும் வெவ்வேறு வகுப்புகளாக வைத் திருப்பதற்கான காரணங்களை விளக்குக.
1. ஒரு அழுகல்வளரிப் பங்கசுளினதும், ஒரு ஓட்டுண்ணிப் பங்கசுவினதும் கட்டமைப்பு, போசணைமுறை, இலிங்கமில் முறை இனப்பெருக்கம் ஆகியவற்றை ஒப்பிடுக.
10. நீர்படித்த தலோபீற்றா , இனங்களில் நடைபெறும் இனப்
பெருக்க முறைகளைப்பற்றி சுருக்கமாக விளக்குக. 11. பைற்றேப்தொறா. அசுப்பசிலசு ஆகியவற்றில் வித்தியுண்
டாகும் முறைகளை ஒப்பிடுக.

200
.12.'' அசுப்பசிலசில் சுற்றுறை யுண்டாதளை விவரமாக விவரிக்குக.
13. அசுக்கோமீசெற்றெசுவைச் சேர்ந்த பங்கசுவொன்றில் அசுக்
கசுவும் கோணிவித்திகளும் உண்டாகும் முறையை விவரிக் குக. அகாரிக்கசுவின் வாழ்க்கைச் சரிதத்தில் இதற்கொப் பாசு வுண்டாகும் அமைப்பிலிருந்து இது எவ்வாறு வேறு படுகிறதென்பதைக் காட்டுக.
14. இலிங்கமுறையினப்பெருக்கம், இலி ங் க டமி ல் மு றையினப்
பெருக்கம் " ஆகியவற்றிற்கிடையேயுள்ள வித்தியாசங்க ளென்ன ?' மியூக்கொரில் நடைபெறும் இனப்பெருக்க முறைகளை விவரிக்குசு.
15. பெனிசிலியத்தினால் உண்டாகும் நன்மைகளைப் பற்றி ஒரு
கட்டுரை வரைக.
16. 'பற்றீரியா பற்றி ஒரு கட்டுரை வரைக. 17. நைதரசன் சக்கரத்தில் பற்றீரியா வகிக்கும் பங்கென்ன ? 18. "வைரசு' பற்றி ஒரு கட்டுரை வரைக. 19. பற்றீரியாவினாலேற்படும் நன்மை தீமைகளெவை ?
20, (அ) பின்னுலேரியாவின் கட்டமைப்பையும் கலப் பிரிவையும்
விவரிக்குக. (ஆ) அலைதாவரம் என்னும் பொருள்பற்றி சிறு குறிப்
பெழுதுக.
21. (அ) இலிங்பையாவின் கட்டமைப்பையும் இசுப்பைரோசை
ராவின் கட்டமைப்பையும் ஒப்பிட்டு நோக்குக.
(ஆ) உணவுச்சங்கிலியில் அலை தாவரத்தின் நிலையை விளக்குக.
23. ஒரு பெயரிடப்பட்ட ஒட்டுண்ணிப் பங்கசுவின் வாழ்க்கைச்
சரிதத்தை விவரிக்குக, அதன் சிறப்பான வாழ்க்கைக்கு அது எவ்வாறு இசைவாக்கமடைந்துள்ளது.
23. அகாரிக்கசின் கட்டமைப்பையும் இனப் பெருக்கத்தையும்
விவரிக்குக. 24. 'பங்கசுகளில் போசணை' என்னும் பொருள்பற்றி ஒரு
கட்டுரை வரைக. இவற்றின் தொழில்கள் மனிதனை எவ்வாறு
பாதிக்கின்றன ? 25. "மிட்சோபீசே யின் இயல்புகளைப் பற்றிச் சுருக்கமாகக் கூறுக.

Page 157
300
பிரியோ பீற்ற
1, சந்ததிப் பரிவிருத்தி யென்றால் என்ன ? பெயரிடப்பட்ட வொரு பிரியோபீற்றை உதாரணாமாகக் கொண்டு விளக்குக .
3. நீர் படித்த பி!//யோபீற்றுக்களிற் காணப்படும் பதியாமுறை
யினப்பெருக்கமுறைகளை விளக்குக.
3. பொகொநேற்றப் புணரித்தாவரத்தின் கட்டமைப்பை விவரிக்குக. அது' நிலத்தில் வாழ்வதற்கு எவ்வாறு இசை பாக்கப்பட்டுள்ளதென்பதை விளக்குக.
+.
பொகொநேற்றத்தில் வித்தித்தாவரத்தின் அமைப்பையும் வித்திக்கலன் எவ்வாறு வெடிக்கிற தென்பதையும் விவரிக்குக.
ச. மார்ச்சான்ரியாப்பிரிவிலியின் கட்டமைப்பை
அதன் இழையங்களின் தொழில்களையும் தருக.
விவரித்து
மார்க்கான்சியாளினதும்" பொகொநேற்றத்தினதும் பதிய முறைக்குரிய அமைப்புகளை ஒப்பிட்டு நோக்குக,
தாழ்கயன்றுவர ங்கள்
1. நெடடுறோலெப்பிசுத் தண்டின் நலன் தொகுதியை விவரிக்குக.
2. நெபிறோலெப்பிசின் முதிர்ந்த வித்திக்கலனின் அமைப்பை
யும், அது வெடிக்கும் முறையையும் விவரிக்குக. 3. செலஜிநெல்லாவின் இனப்பெருக்கத்திற் காணப்படும் சிறப்
பான இயல்புகள் ஆராய்க.
பல்லினவித்தி என்றல் என்ன ? செல் ஜிநெல்லாகவை உதா ரணமாக எடுத்து விளக்குக.
5. சந்ததிப்பரிளிருத்தி என்றால் என்ன ? நெபீரேலெப்பிசின்
சந்ததிப்பரிவிருத்தியை விளக்குக.
6. சந்ததிப்பரிவிருத்தி என்றால் என்ன ? செலஜிநெல்லுாவின்
சந்ததிப்பரிவிருத்தியை விவரிக்குக,
7. ஒரு பன்னத்தின் வித்தித்தாவரத்திற்கும் புணரித்தாவரத் திற்குமிடையே காணப்படும் முக்கிய வேறுபாடுகளைத் தருக.

301
உயர் கலன்ருவரங்கள்
சைக்கசின் வெளியமைப்3ப விவரமாக விவரிக்குசு. தென்னை போ ன் ற வொ ரு ஒருவித்திலைத்தாவரத்தின் வெளி யமைப்புடன் சைக்கசு கொண்டுள்ள ஒற்றுமை வேற்றுமை களை ஆராய்க.
சைக்கசின் முதிர்ந்த சூல்வித்தின் நீள்பக்க வெட்டுமுகத் தோற்றத்தை வரைந்து பாகங்களைக் குறிக்கும், சுருக்கட்டல் எவ்வாறு நடைபெறுகிறதென்பதையும் முளையத்தின் விருத்தி யையும் விவரிக்குக,
3. சந்ததிப்பரிவிருத்தியென்றால் என்ன ?
பூக்குந்தாவரங்களிலே இத் தோற்றப்பாடு நடைபெறுவ துண்டா ?
4. சைக்கசின் முதிர்ந்த சூல்வித்தின் அமைப்பை திரு அங்கி!
யோசுப்பெர் யேயின் முதிர்ந்த சூல்வித்தின் அமைப்புடன் ஒப்பிடுக,
எசைக்கசின் பெண்புணரிந்தாவர விருத்தியை விவரிக்குக. சைக்கசு சின் முளையவிருத்தியை ஒரு இருவித்திலைத்தாவரத் தினது முளைய விருத்தியுடன் ஒப்பிடுக. 5. சைக்கசினதும் ஒரு அங்கியோசுப்பெருமினதும் ஆண் புணரித் தாவரங்களை ஒப்பிடுக. (விருத்தி நிலைகள் தேவையில்லை.) ஒப்பிடுதலின் போது அமைப்புகளின் தொழில்களைக் கவனத் திற்கொண்டு எனக்குக.
அங்யோசப்பெர்டேமயில் மகரந்த மணி முளைத்தலையும், கருக் கட்டல் நடைபெறும் முறையையும் விவரிக்குசு.
8. 'இரட்டைக் கருக்கட்டல்' என்றால் என்ன ?
- அதன் குறிகருத்து என்னவாயிருக்கக்கூடும் ?
9. இரு வித்திலைத் தாவரத்தின் கல்வித் தில் கருக்கட்டலின் பின்
சித்துகண்டாதல்! வரை நடைபெறும் மாற்றங்களை விவரிக்குசு.
17. அங்கியோசுப்பொருமில் கவிழ்ந்திருக்கின்ற கல்வித்தின்
அமைப்பை புடம் வரைந்து விளக்குக.
11. வித்துகளில் வித்தகவிழையம் எவ்வாறுண்டாகிறது ?
ளித்தக விழையத்திற்கும் விந்துச்சுற்றிழையத்திற்குமிடையே யுள்ள வேற்றுமைகளென்ன ?

Page 158
302
பல இன வினாக்கள்
1. சிறு குறிப்பெழுதுக : அன்சளிலி, சங்கிலிப்பிறப்பு: பெண்
ணக விழை: ஒவ்வாப்புணரியினியல்பு: சுற்றுறை; பொது மைக்குழியம்: சி ற் ற டி வி த் தி ; அச்சுச்சுருண்டதளிரிலை யொழுங்கு நுகவித்தி; விந்துப்போலி; சுன்னிக்கனியமாக் கல்: புணர்ச்சியில் பிறப்பு: வித்தியில் பிறப்பு.
2. பொகொ நேற்று இலையில் குறுக்குவெட்டுமுகத்தோற்றத்தை
வி வ ரி க் கு க. இதை இருவித்திலைத்தாவர இலை யி, பின் குறுக்கு வெட்டு முகத் தோற்றத்துடன் ஒப்பிடுக,
3,
ஒரு மீன்பூவுருப் பங்கசு, ஒரு ஈரலுருத்தாவரம், ஒரு பன் 1) னம் ஆகியவற்றில் வித்திபரம்பலுக்கான பொறிமுறைகளை விவரிக்குசு.
4.
பெயரிடப்பட்ட ஒரு ஈரலுகுத்தாவரம், பாசித்தாவரம், பன்னம் ஆகியவற்றிலுள்ள ஒளித்தொகுப்பு இழையங்களை
ஒப்புநோக்குக,
5. பின்வருவனவற்றிற்கிடையேயுள்ள ஒற்றுமை வேற்றுமைகளை
உதாரணங்களுடன் விளக்குக.
(அ) முட்டைச்சனனியம் பெண்கலச்சனனியும்.
(ஆ) கோணிவித்தியும் சிற்றடி வித்தியும்.
இ தற்போசணைக்குரியதாவரமும் பிற போ ச ணை யு ள் ள
தாவரமும், 6. மார்க்கான்சியா, நெபிறோலெபிசு ஆகியவற்றின் புணரித்
தாவரங்களுக்கிடையேயுள்ள முக்கிய வேறுபாடுகளை வரை படங்களின் உதவிகொண்டு விளக்குக.
7. நீர் படித்த பிரியோபீற்றுக்களிலும் தாழ்கலன்றாவரங்களி
லும் காணப்படும் வித்திபரம்பல் பொறிமுறைகளைச் சுருக்க
மாகத் தருக. 8. (அ) மார்க்கான்சியா, (ஆ) பொகொநேற்றம், (இ) நெபினோ
லெபிசு ஆகியவற்றின் பெண்கலச்சனனிகளிடையே காணப் படும் ஒற்றுமைகளைத் தருக.
9. சைலொப்சிடா, இலைக்கொப்சிடா. இசுப்பினேப்சிடா,
தெரொப்சிடா என்னும் பிரிவுகளாக்கப்படும் திரக்கியோ பீற்றாவின் புதிய முறைப்பாகுபாட்டைத் தருசு. இராச்சியப் பிரிவு, பிரிவுகள் ஆகியவற்றின் முக்கிய இயல்புகளைத் தருக.

303
*- 10 மபயரிட்டப்பட்ட ஒரு அல்கா, ஒரு ஈரரு லுத்தாவரம் ஆகிய
வற்றின் இனப்பெருக்க அங்கங்களிற் காணப்படும் முக்கிய (வேறுபாடுகளை விளக்குக,
11,
ஒரு அங்கியோசுப்பெரும் இலையின் குறுக்கு வெட்டுமுகத் தோற்றத்தை மார்க்கான்சியாப் பிரிவிலியன் குறுக்குவெட்டு முகத் தோற்றத்துடன் ஒப்பு நோக்குக.
12.
பொகொநேற்றத்தின் வாழ்க்கைச் சக்கரத்தை நெபிறேலெபி சின் வாழ்க்கைச் சக்கரத்துடன் ஒப்பிடுக.. முக்கியமான உயர் இயல்புகளெவை!
13. தாவர இராச்சியத்தில் வித்தித்தாவரத்தின் கூர்ப்பை விவ -
ரிக்குக.
14. செலஜிநெல்லா, நெப்றோலெபிசு, ஒரு அங்கியோ சுப்
பெரும் ஆகியவற்றின் புணரித்தாவரங்களை ஒப்பிடுக.
15. சைக்கசின் புணரித்தாவரத்தின் அமைப்பையும் விருத்தியை
யும் விவரிக்குக.
செல்ல ஜிநெவ்லாவின் புணரித்தாவரத்துடன் சை க் க சி ன் புணரித்தாவரத்தை ஒப்பிடுக.
16. மார்க்கான்சியா, சைக்கசு ஒரு அங்கியோசுப்பெரும் ஆகிய
வற்றின் ஆண்புணரியின் அமைப்பையும் விருத்தியையும் விவரிக்கும், ஒவ்வொரு தாவரத்திலும் எவ்வாறு சுருக்கட்டல் நடை பெறுகின்றது என்பதை விளக்குக.
மார்க்கான்சியா, நெபிறோலெபிசு, சைக்கசு ஆகியவற்றின் பெண்கலச்சனனியின் அமைப்பை ஒப்பு நோக்குக.
I 8. (நெபிறேலெபிசு, சைக்கசு ஆகியவற்றின் பெண்கலச்சனனி
க ள், ஆண் புணரிகள், கருக்கட்டல் என்பவற்றிடையே காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்க.
19. சைக்கசினது பெண்புணரித் தாவரத்தின் அமைப்பையும்
ளிருத்தியையும் விவரித்து, செலஜிநெல்லாவின் பெண்புணரித் தாவரத்தின் அமைப்புடனும் விருத்தியுடனும் ஒப்பிடுக.
30,
ஒரு பன்னவேர்த்தண்டுக்கிழங்கினதும், ஒரு பூ ண் டு த் தாவரத்தண்டி பினதும் கலனமைப்புகளினிடையேயுள்ள ஒற் றுமை வேற்றுமைகளை ஆராய்க,

Page 159
304
21. ஒரு பன்னத்துண்டக்கம்பத்தின் அ ன ம ப்  ைப 'கல
அமைப்புஉட்பட) விவரிக்குக. அங்கியோசுப்பெருமின் சுவன் தொகுதிக்கும் இதற்குமிடையேயுள்ள தொடர்பென்ன ?
22.
ஒரு பன்னத்தின் காழ். உரியம் ஆகிய இழையங்களின் அமைப்பை விவரிக்குக. ஒரு பூக்குந்தாவரத்தின் முதன் கலன்றொகுதியிழையத்திலிருந்து இவை' எவ்வகையில் வேறு படுகின்றன.
23, மார்க்கான்சியாவினதும், நெபிறோலெபிசுவினதும் வாழ்க்
கைச் சக்கரங்களிற் காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகளைத் தரும் ,
34.
டொகொநேற்றத்தின் புணரித்தாவரச் சந்ததியை நெபிறே வெபிசுவின் வித்தித் தாவரச் சந்ததியுடன் ஒப்பிடுக. (இனப் பெருக்க அமைப்புகளைப் பற்றி விரிவாக ஆராய வேண்டிய தில்லை. ]
25, செலஜி நெல்வா, சைக்கசு, ஒருபூக்குந் தாவரம் ஆகியவற்றின்
நுண்வித்திக் கலன்களின் அமைப்புகளையும் விருத்தியையும் ஒப்புநோக்குக.
26.
பின்வருவனவற்றிடையேயுள்ள முக்கிய வேறுபாடுகளெவை?
(அ) வித்தியும் புணாரியும்
(ஆ) இணைதலும் கருக்கட்டலும் (இ) இலிங்கமில்முறையினப் பெருக்கமும் இலிங்கமுறையினப்
பெருக்கமும். உதாரணங்கள் தருக.


Page 160
ADVANCED LEV
BY
K, SANGALL ITE
C. RAMANATHA H. W. PERERA
PUBLISHER =
VUAYALUCKSHMI BO
243. Galle Road, W
COLOMBO
Price : Rs.
Printed at KUMARAT PFES

'EL BOTANY
IE B.SC 4 B. Sc.
B. Sc.
DOK DEPOT.
Vellawatte
-6.
7-50.
3. Colombo-12.