கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உயிரினவியல்: க.பொ.த சா/த

Page 1
கார்ட்டா பாட்டர்
உயிரின
BIOL க, பொ. த,
G, C. E.
பாடப் புரin ILாடப்புiா ாபாட்டார் -
"பா- பட்டம்
Iாட பாட்பு
ஈலைவாரி புத்
10, மெயின் வீதி, 130, திருகோணமலை
- T-ய. IT சாரா சி iெr

வியல்
DGY
(சா. த.) (0.1.)
|
தக் + சுபம்
யாழ்ப்பாணம், 5 வீதி, கண்டி..
iாடா
Tாந - 1ாப

Page 2

S.Srivea Ya Than
T. Ce
C. Triat voor i
Festy.
GUTLU Gfy Emij is 1 541t
„Sag
| JAFFNA CENTRAL COLLEGE
1984-11-12
JAFFNA
49-6

Page 3


Page 4

உயிரி ன'வி யல்
BIOLOGY
G. C. E. (0. L.) க. பொ த. (சா த) வகுப்பு
(திருத்திய முதற்பதிப்பு)
நூாலாக்கம் : கண்டி திருத்துவக்கல்லூரி விஞ்ஞான ஆசிரியர் சி. யே. எஸ். தானியல் எம். ஏ., பி.எஸ்சி.
தமிழாக்கமும் மீள்பார்வை செய்தலும்
நா. இராமலிங்கம்
கலைவாணி புத்தக நிலையம்
10, மெயின் வீதி, யாழ்ப்பாணம். கிளை: 130, திருகோணமலை வீதி, கண்டி. பதிப்புரிமை]
1962
(விலை ரூ. 6-80

Page 5
திருத்திய முதற்பதிப்பு - செத்தெம்பர் 1962.
கலைவாணி அச்சகம், யாழ்ப்பாணம் 215 62

முகவுரை
எங்கள் உயர்நிலைப் பள்ளிகளில் கற்பிக்கப்பட்டுவரும் பயன் றரு பாடங்களுள் உயிரினவியலும் ஒன்றாகும். மருத்துவம், பயிர்ச்செய்கை என்பவற்றைக் கற்று முன்னேற விழைவோர்க் கும், அவரல்லாத பிறர்க்கும் உயிரினங்களைப்பற்றிய அறிவு இன்றியமையாதது. தாவரவியல், விலங்கியல் என்பவற்றைத் தனித்தனி பாடங்களாக க. பொ. த. (சா.த) வகுப்பில் கற்பிப் பதிலும்பார்க்க, அவை இரண்டும் ஒருங்கு சேர்ந்த உயிரினவிய லைக் கற்பிப்பதே மாணவர்க்கு உறுபயன் அளிக்கவல்லது என், பதே, இலங்கைக் கல்வித்திணைக்கள அறிஞரின் கருத்து ஆகும். இக்கருத்துப் போற்றத்தக்கது.
வளரும் மாணவர்கள் தத்தம் நாளாந்த வாழ்க்கைக்கும், உயிரினங்களால் ஏற்படும் விளைவுகளுக்குமிடையேயுள்ள நன்மை தீமைகளை உள்ளவாறு தெரிந்துகொள்ள ஊக்கம் அளிப்பதோடு, அவற்றின் உண்மை இயல்புகளை ஊன்றி ஆராய்வதற்கான உத விகளையும், உயிரினவியற் கல்வி நல்குகின்றது.
உயிரினங்களைப்பற்றிப் படித்தற்கு, நுண்மாணுழைபுலத்த ராய் நுனித்து நோக்கலும், நோக்கியவற்றை நுணுகி ஆராய் தலும், ஆராய்ந்து அறிந்தவற்றைச் சீரிய பரிசோதனைகள் வாயி லாகத் துணிதலும் இன்றியமையாது வேண்டப்படுவன. எனி
னும், இலங்கைத் தமிழ் மாணவர்களை இத்துறையில் வழிப்படுத்த, ஏற்ற ஒரு பாடநூால் இதுவரை நந்தம் செந்தமிழ் மொழியில் இல்லாத குறையை நிவிர்த்தி செய்யுமுகமாகவே, இந்நூல் எழு தப்பட்டுள்ள து.
தன்மொழியில் விஞ்ஞான நுால்களை ஆக்குவது புத்தம்புதிய வோர் முயற்சி என்பதுவும், அவ்வாறு ஆக்குங்கால் பல குற்றங் குறைகள் ஏற்பட இடமுண்டென்பதுவும், யாவரும் அறிந்தவைக ளேயாம். ஆதலால், இந்நூலின் கண்ணுள்ள குற்றங்களை எடுத் துக்காட்டி ஆக்கப்பாடான கருத்துக்களைத் தெரிவிக்குமாறு ஆசிரியவுலகத்தைப் பணிவுடன் வேண்டிக்கொள்கின்றேன்.

Page 6
17
இந்நாலைப் புதுக்கியும், திருத்தியும், மீள்பார்வை செய்தும் தமிழில் ஆக்குவதற்கு உதவியவர் ஆசிரியர், திரு. நா. இராமலிங்கம் ஆவார். அவர் கலைச்சொற்களை உபயோகித்துத் தமிழில் விஞ் ஞான நூல்களை ஆக்கிய அனுபவமுடையவரென்பதற்கு இந்நூாலும் சான்றுபகரும். இந்நூலுக்கு வேண்டிய வெளியுருவப்படங்களை வரைந்து உதவியவர் திரு. எம். பி. வீரசிங்கா என்பவர், இவர்கள் இரு வருக்கும் எனது மனமார்ந்த நன்றியும், என்றும் மாறாக் கடப் பாடும் உரியதாகுக.
11- 11 - [i: யாழ்ப்பாணம்
கலைவாணிபதிப்பகத்தார்.

பொருளடக்கம்
பக்கம்
-j * + படம் பி
13
2)
34
அத்தியாயம்
1. உயிருள்ள, உயிரில்லாத பொருள்கள்
தாவரங்களும் விலங்குகளும்
ஒர் எளிய விலங்கைப்பற்றிக் கற்றல் 4. ஓர் எளிய தாவரத்தைப்பற்றிக் கற்றல் 5. பூக்குந்தாவரம் ஒன்றின் பகுதிகள் 1. வேரும் அதன் தொழில்களும் 7. அங்குரத்தொகுதி - பசிய இலை ஒன்றின்
| அமைப்பு 8. ஒளித்தொகுப்பு 3. தாவரங்களின் சுவாசித்தல் 10. ஆவியுயிர்ப்பு 11. பூ 12. மகரந்தச்சேர்க்கையும் கருக்கட்டலும் 13. பழங்களும் வித்துகளும் பரம்பல் 14. வித்தும், அதன் முளைத்தலும் 15. தாவரங்களின் அசைவுகள் (தூண்டுதிருப்
பங்கள்) 16. தாவரங்களின் பதியமுறை இனப்பெருக்கம் 17. பசிய தாவரங்களின் உணவு
நைதரசன் வட்டமும் காபன் வட்டமும் 19, மண் 20. சில, சிறப்பான போசணை முறைகள் | 21. சில சிறப்பான போசணை முறைகள் 11
எலி-தோலும் அதன் தொழிலும் 23. எலி- சமிபாட்டுத்தொகுதி 24. எலி - சுற்றோட்டத் தொகுதி 25. எலி - சுவாசத்தொகுதி
64 70
3
12
18.
103 107 11] 135 142 14ா 15;} 13 173 183 114
22.

Page 7
ஈர்
அத்தியாயம்
+ பக்கம்
200 205 217 23ா 23ா 241 215 252 258
26. எலி-சிறு நீர்ச்சனனித்தொகுதி 27. எலி நரம்புத்தொகுதி 28. எலி எலும்புக்கூட்டுத்தொகுதி 20. சமூகவாழ்க்கைப் பூச்சிகள்- கறையான் 30. |
சமூகவாழ்க்கைப் பூச்சிகள் -தேனீ 31. சமூகவாழ்க்கைப் பூச்சிகள்- எறும்புகள் 32. குளங்களில் வாழும் உயிர்கள் 33. களைகள் 34. தவளையின் வாழ்க்கைவட்டம் 35.
நுளம்பினது வாழ்க்கை வட்டம் 36. கடற்கரையில்வாழும் உயிரினங்கள் 37. நாடாவுருப்புழு 38. வண் ணத்திப்பூச்சியின் வாழ்க்கை வரலாறு 39. உயிரினங்களின் பரம்பல்
தாவரங்களின் உள்ளமைப்பு
இந்நாலில் எடுத்தாளப்பட்ட கலைச்சொற்கள் 42. இந்நூலில் எடுத்தாளப்பட்ட உயிரினங்களின்
பெயர்கள் 43. சுட்டுமுதற்குறிப்பகராதி
265
263 27) 202 287 25 208
41. அறம்
'பும் 14H

உயிரினவியல்
அத்தியாயம் 1
உயிருள்ள, உயிரில்லாத பொருள்கள் உயிரினவியல் என்பது உயிரினங்களைப்பற்றிய விஞ்ஞானம் என்பது யாமனைவரும் அறிந்த விடயமாகும். இப்புவியில் வாழும் எண்ணிறந்த உயிரினங்கள் அமைப்பு விவரங்களிலும் பழக்க வழக்கங்களிலும் ஒன்றற்கொன்று அதிக வித்தியாசமுடையன. எனினும், அவற்றைத் தாவரங்கள், விலங்குகள் என்று பாகுபாடு செய்ய முடியும். தாவரங்களைப்பற்றிச் சிறப்பாகக் கூறுவது தாவரவியல் எனப்படும். அவ்வாறே, விலங்குகளைப் பற்றிச் சிறப் பாகக் கூறுவது விலங்கியல் என வழங்கப்படும். ஆதலால், தாவர வியலும் விலங்கியலும் ஆகிய இரண்டும் உயரினவியலின் இரு பெரும் பிரிவுகளாகக் கொள்ளப்படும்.
'உயிர்' என்பது யாது?- என்ற வினாவிற்கு விடையிறுத்தல் முடிந்த காரியம் அன்று. எனினும், உயிருள்ள பொருள்களின் சிறப்பியல்புகளை விவரித்துக் கூறுவது சாலும். இவ்வாறு விவரிப் பதனால் உயிருள்ள பொருள்களை உயிரில்லாத பொருள் களினின் றும் வேறுபிரித்தறிதல் எ ளி தா கு ம். உதாரணமாக, ஒர் உயிருள்ள பொருள் உயிர் வாழ்வதற்கு உணவு ஆ வசிகம். அவ் யுயிர்ப்பொருள் வாழ்வதற்கு இன்றியமையாத பலத்தையும் சத்தியையும் உணவு அளிக்கின்றது. ஆனால், உயிரில்லாத பொரு ளா கிய கல்லிற்கு உணவு தேவைப்படாது: ஏனெனில், அதற்கு உயிர் கிடையாது. உணவை உட்கொள்ளுங்காரணத்தால் உயிர்ப் பொருள் கள் வளர்ச்சி அடைகின்றன. உயிருள்ள பொருள்களினது வளர்ச்சி உட்பக்கத்திலிருந்து நிகழ்வது, பளிங்குகள் போன்ற உயி ரில்லாத பொருள்களிற் சிலவும் வளர்ச்சியுறுகின்றன. எனினும், அவ்வளர்ச்சி வெளிப்பக்கத்திளிருந்து நிகழ்வது. உயிர்ப்பொருள் களுக்குச் சத்தி அளிப்பது உணவு என முன்னரே கூறியுள் ளோம். ஒட்சியேற்பம் என்னும் செயன் முறையால் இச்சத்தி உண வினின்றும் பெறப்படுகின்றது. ஒட்சியேற்றம் என்னும் செயன்
215)

Page 8
|--
உயிரினவியல்
உடலினுள் பலவகைகள் உ
முறை நிகழ்வதற்கு ஒட்சிசன் இன்றியமையாதது. எனவே, உயிருள்ள பொருள்கள்.- ஒட்சியேற்றச் செயன்முறை நிகழ்வ தற்காக,- ஒட்சிசனை உட்கொள்ளுகின்றன. இவ் ஒட்சிசன் உணவை ஒட்சியேற்றுவதன் விளைவாகக் காபனீரொட்சைட்டும் நீராவியும் பெறப்படுகின்றன. இச் செயன்முறை மூச்சுவிடுதல் அல்லது சுவாசித்தல் எனப்படும். உயிரில்லாத பொருள்கள் சுவா சிப்பதில்லை.
பெரும்பாலும் உயிருள்ள பொருள்கள் அசைவு உடையன; அதாவது: இடப்பெயர்ச்சி உடையன; எனினும், தாவரங்களிற் பெரும்பாலானவை அசையும் வலு இல்லாதன; இடம்விட்டு இடம் பெயருந் தன் மை இல்லாதன, உயிருள்ள பொருள்களின் உடலினுள் நிகழ்ந்து கொண்டிருக்கும் பல்வேறு தொழில்கள் காரணமாகப் பலவகையான கழிவுப்பொருள் கள் உண்டாகின் றன. இக்கழிவுப்பொருள்கள் உடலினின்றும் கழிக்கப்படுகின்றன, (அதாவது : வெளியேற்றப்படுகின் றன). உயிரில்லாத பொருள் களில் இத்தகைய கழிவகற்றல் நிகழ்வதில்லை. உணர்ச்சிப்புலன் இருத்தல் உயிருள்ள வற்றிற்குள்ள இன்னொரு சிறப்பியல்பாகும். உதாரணமாக, எமது கை சூடான ஒரு பொருளைத் தொட்டமாத் திரத்தில் உடனே அக் கையை அப்புறம் எடுத்துவிடுகிறோம். அதாவது: புறத்தேயுள்ள வெப்பம் போன்ற தூண்டல்களுக்கு எம்மால் தாண்டற்பேறு நிகழ்த்த முடிகின்றதென்று, இதனை இன்னொரு வகையாகச் சொல்லலாம். எனவே, உயிருள்ள பொருள்கள் புறத்தே (வெளியே)யுள்ள பொருள்களுக்குத் தூண் டற்பேறு நிகழ்த்தவல்லன. ஈற்றில், உயிருள்ள பொருள்கள் தம் இனந்தைப் பெரும்.. வல்லன்; இதனால் இனப்பெருக்கம் நிகழுகின் றது என்று கூறலாம்.
இதுகாறும் கூறியவற்றைச் சுருக்கிக் கூறின், உணவு உட் கொள்ளல் (போசா), வளர்ச்சி, சுவாசித்தல், அசைவு, கழிவு (அகற் றல்), உணர்திறன் (உணர்ச்சியுடைமை) என்பனவே உயிருள்ள பொருள்களின் சிறப்பியல்புகள் என்று கூறலாம். இச்சிறப்பியல்பு கள் உயிரில்லாப் பொருள்களிடத்து இருப்பதில்லை.
வினாக்கள் உயிர்ப் பொருள்களை உயிரில்லாத பொருள்களினின்றும்
வேறுபிரித்துக் காட்டும் சிறப்பியல்புகள் யாவை? 2. ஒட்சியேற்றம் என்பது யாது? இதனால் எவ்வாறு சத்தி
வெளிவிடப்படுகின்றது.

தாவரங்களும் விலங்குகளும்
3.) ஒரு மரத்தினது வளர்ச்சிக்கும் ஒரு பளிங்கினது வளர்ச்
சிக்குமிடையிலுள்ள வித்தியாசம் யாது? தாண்டல், காண்டற்பேறு, என்பவற்றை விளக்கி உதார
ணந்தருக.
செய்முறைப் பயிற்சிகள் பரிசோதனைச் சாலையில், "பளிங்கு வெளிப்பக்கத்திலிருந்து வளர்வது" என்பது பற்றிய பரிசோதனையை, உனது ஆசிரிய ரின் உதவியுடன் செய்க,
அத்தியாயம் 2
தாவரங்களும் விலங்குகளும்
உயிருள்ள பொருள்கள் எல்லாம் தாவரங்கள், விலங்குகள் எனப் பாகுபாடு செய்யப்பட்டிருக்கின்றன. தாவரங்கள் விலங்குகளைக் காட்டிலும் அதிகம் வித்தியாசமுடையன; எனினும், உயிருள்ள பொருள்களுக்கு உள்ள எல்லாச் சிறப்பியல்புகளும் உடைய உயிருள்ள பொருள்களேயாகும். தாவரங்கள் தமக்கெனப் பல தனிச்சிறப்பியல்புகளை உடையனவாதலால், அவற்றை விலங்கு களிலிருந்தும் வேறுபிரித்தறிதல் மிக எளிது.
போசலைசாரேயப் பெற்றுக்கொள்ளும் முறையிலேயே தாவரங் களுக்கும் விலங்குகளுக்குமிடையில் மிகப்பெரிய வித்தியாசங் காணப்படுகின்றது. காபனீரொட்சைட்டு, நீர், கனிப்பொருள் உப்புகள் போன்ற எளிய அசேதனவுறுப்புச் சேர்வை (சுடட்டு கள் என்பவற்றின் உதவிகொண்டு, பலவகைச் சிக்கலான சேதன வு,றுப்புள்ள உணர்வுப்பதார்த்தங்களைப் பருப்படியாக ஆக்கும் வலு, பல தாவரங்களுக்கு உண்டு. விலங்குகளுக்கும் பலவகை யான உணவுப்பதார்த்தங்கள் அத்தியாவசிகமேயெனினும், அவை இவ்வுணவுப்பதார்த்தங்களைத் தம் உடலில் பரும்படியாக ஆக்கிக், கொள்ளும் வலு இல்லாதன ஆகும். ஆகவே, அவைகள் தங்கள் உணவுத் தேவைகளுக்குத் தாவரங்களிலேயே தங்கியிருக்கின்றன, தாவரங்கள் உணவைப் பெற்றுக்கொள் ளும் முறை, - உணவுப் பதார்த்தங்களைத் தாமாகவே பரும்படியாகச் செய்து கொள்ளும்

Page 9
உயிரினவியல்
முறை - நாவரமுறைப் போசணை எனப்படும். ஆனால், விலங்குகள் உணவைப் பெற்றுக்கொள்ளும் முறை, - பரும்படி செய்யப்பட்ட உணவைத் தாவரங்களிடத்துப் பெற்றுக்கொள் ளும்முறை, - விலங்கு முறைப் போபட்ரா கானப்படும்,
உணவைத் தேடி அலையும் பொறுப்பு, தாவரங்களுக்குக் கிடை யாது; ஏனெனில், வளியிலிருந்தும் மண்ணிலிருந்தும் அவை எளிதாக உணவைப் பெறக்கூடியனவாக அமைந்திருக்கின்றன, ஆதலாற்றான், அவை அசைந்து திரியும் வலுவை இழந்து விட்டன. ஆனால், விலங்குகளோவெனில், தாவரங்களைப் போலன்றி. ஆக் கப்பட்ட உணவைத் தேடி அலைந்து திரிய வேண்டி இருத்தலால் அசைந்து இடம் பெயர்ந்து, திரியும் வலுவைப் பெற்றிருத்தல் இன்றியமையாததாகின்றது. எனவே, பொதுவாகக் கூறுமிடத்து, உடறுத்துணர்ச்சி (தூண்டவுணகுந்தன் மை அல்லது உணர்திறன் என் பதுவும், அசைவும் விலங்குகளிடத்தில் மிக அதிகமாக விருத்தி யடைந்திருக்கின்றன. ஆனால், தாவரங்கள் தூண்டல்களுக்குத் தாண்டற்பேறு நிகழ்த்துகின்றமை காரணமாக, ஒரு சிறிய அள வில், மந்தமாக அசைகின்றனவென்பது தெரிய வருகின்றது. எனினும், கிளமிடோபானசு என்னும் ஆநிந்தாவரம் போன்ற பல தாவரங்கள், ஆதி விலங்குகளைப் போன்று, ஓரிடத்திலிருந்து இன் னோரிடத்திற்கு இடம் பெயர்ந்து செல் லுந்தன்மைய. (இதன் விவரம் 4 ஆம் அத்தியாயத்திற் காண்க)
' மந்தமறு நிகம் ஆனால்,"
2. கம்பாலும், தாவரங் கிமப்பொருள் தட்சையத்தின்
பெரும்பாலும், தாவரங்கள் எல்லாம் பச்சை நிறம் உடையன. பர்சையம் என்னும் பச்சை நிறப்பொருள் தாவரங்களிடத்துக் காணப்படுதலே இதற்குக் காரணமாகும். இப்பச்சையத்தின் உதவியினாலேயே தாவரங்கள் சிக்கலான உணவுப் பொருள்களை ஆக்கும் வல்லமை பெற்றிருக்கின்றன. ஆனால், விலங்குகளின் உடலில் பச்சையம் இருப்பதில்லை,
பொதுவாக, விலங்குகள் திண்ம உணவையே உட்கொள்ளு கின்றன. ஆனால், தாவரங்கள் கரைசல் நிலயிலிருக்கும் எளிய அசேதனவுறுப்புள்ள உப்புகளையே உறிஞ்சி, உணவாகக் கொள்ளு கின்றன, தாவரங்கள் உணவை ஆக்குவதற்காக, வளி மண்டலத் திலிருந்து காபனீரொட்சைட்டையும் உறிஞ்சிக் கொள்ளுகின்றன. ஆனால் அவ்வாறு விலங்குகள் ஒருக்கா லும் செய்வதில்லை.
பல தாவரங்கள் ஒழுங்கில்லாத கிளையமைப்பு உடையன; மேலும், வரையறையில்லா வளர்ச்சியும் உடையன. ஆனால், விலங்

தாவரங்களும் விலங்குகளும்
5
குகளின் வளர்ச்சி வரையறை உள்ளது '- எல்ல உள்ள து. அவர் றிற்கு ஒழுங்கான, நெருக்கமான அடக்கமான) உருவமைப்பு துண்டு.
உணவுச் சமிபாடு, சுவாசித்தல், கழிவகற்றல் முதலிய உடற்றொழில்களைச் செய்வதற்கு வேண்டிய சிறப்பான உறுப்புகள் விலங்குகளின் உடலிற் பொதுவாகக் காணப்படுகின்றன. ஆனால், இத்தகைய, சிறப்பான உறுப்புகள் தாவரங்களில் காணப்படுவ தில்லை.
தாவரங்கள் அனைத்தினதும் உடலில் செலுலோசு என்னும் ஒரு பதார்த்தம் காணப்படுகிறது. விலங்குகளின் உடலில் இப் பதார்த் தம் காணப்படுவதில்லை. விலங்குகளின் உடலிற் காணப்படுவது கைற்றின் என்னும் பதார்த்தமாகும்.
தாவரங்களின் எல்லாப்பகுதிகளும் வளர்வனவேயாயினும், பிரதானமாக முனைப்பகுதி (தண்டுமுனை, வேர்முனை) களும் அகத்தேயுள்ள சில பகுதிகளுமே வளர்கின்றன. எனவே, தாவ ரத்தின் எல்லாப் பகுதிகளிலும் ஒரே சீராக வளர்ச்சி நிகழ்வ தில்லை; இறப்பு வரைக்கும் வளர்ச்சி நிகழ்ந்து கொண்டேயிருக் கும், விலங்குகளின் உடலில் எல்லாப்பகுதிகளும் ஒரே சீராக வளருகின்றன; இறப்பு நிகழ்வதற்குப் பல்லாண்டுகளுக்கு முன் சனரே வளர்ச்சி ஓய்ந்து விடுகின்றது.
தாவரங்கள் மந்தமாக வாழ்க்கை நடாத்துவன. எனவே, உட்சேர்க்கையாற் சேகரிக்கப்படுஞ் சத்தி வெளியெறிகையால் - இழக்கப்படுஞ் சத்தியினும் அதிகமாகவே இருக்கும். இக் காரணத்தாலேயே அவை பருமனுள்ளனவாக வளருகின்றன. விலங்குகள், பெரும்பாலும் உயிர்ப்புடன் தீவிரமாக (ஒடி யாடி) வாழ்க்கை நடாத்துவன. எனவே, உட்சேர்க்கையார் சேகரிக்கப்படுஞ் சத்தி வெளியெறிகையால் இழக்கப்படுஞ் சத்தியை ஏறத்தாழ ஈடு செய்வதாகவே அமையும். இக்கார ணத்தாலேயே அவை, வரையறையின்றி வளர்வதில்லை. அவற் றின் வளர்ச்சி ஓர் எல்லைக்கு உட்பட்டதாகவே இருக்கும்.
தாவரங்களின் இன்றியமையாமை : உலகியல் நடைபெறுவதற்குத் தாவரங்களும் விலங்குகளும் இன்றியமையாதன. எனினும். விலங்கினங்கள் தானும் உயிர் வாழ்வதற்கு வேண்டிய சத்தியைத் தாவரவினங்களே உணவுருவத்தில் தந்துதவுகின்றன.
உண.

Page 10
உயிரினவியல்
வளிக்கும் இச் செயன்முறை நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ அமையும், ஊனுண்டு உயிர்வாழும் விலங்குகள் தானும், உய்த் துணருங்கால், தாவரங்களினால் ஆக்கப்பட்ட உணவுப்பதார்த்தங்" களையே, தாவரங்களை உண்டுவாழும் வேறு விலங்குகளை உண் நணும் முறைமையால், உட்கொண்டு வாழுகின்றன வென்பது! வெளிப்படை. எனவே, தாவரங்கள் இல்லையேல், விலங்குகள் உயிர்வாழ முடியாது.
தாவரங்கள் ஒளித்தொகுப்புச் செயன்முறையால் சூரியனின் கதிர்வீசுஞ்சத்தியைப் பச்சையத்தின் உதவிகொண்டு நிலைப் பண்புச்சத்தியாக மாற்றுகின்றன. இந்த நிலைப்பண்புச் சத்தி. தாவரங்களால் தொகுக்கப்படும் காபோவைதரேற்றுகள், புரதங் கள் கொழுப்புகள் முதலிய பதார்த்தங்களில் மறைந்து கிடக் கின்றது. இப்பதார்த்தங்களை, மனிதனுட்பட விலங்கினங்கள் உண்டு. தங்கள் உடற்றொழிலுக்கு இன்றியமையாத சத்தித் தேவை களைப் பெற்றுக்கொள்ளுகின்றன. உணவு வாயிலாகப் பெற்ற நிலைப்பண்புச்சத்தியே உடற்றொழிலுக்கும், இடப்பெயர்ச்சி முது லிய தொழில்களுக்கும் வேண்டிய இயக்கப்பண்புச்சத்தியாக மாற்றப்படுகின்றது. விறகு முதலிய தாவரப்பொருள்களிலிருந்து, அவை எரியும்போது வெளிப்படுத்தப்படும் வெப்பச்சத்தியும் பச் சையத்தால் ஒளித்தொகுப்பின்போது நாட்டப்பட்ட கதிர்வீசுஞ், சத்தியேயாம். எனவே, உலகின் சத்தித் தேவைகளைப் பெரும். பாலும் தந்துதவுவது தாவரமேயாம்.
மாற்றப்படுக்கும் வேன்கும், இடப்பெயர் "பற்ற
வினாக்கள்
1.
தாவரங்களுக்கும் விலங்குகளுக்குமிடையிலுள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அட்டவணைப்படுத்துக.
2. "தாவரங்கள் உலகியல் நடைபெறுதற்கு இன்றியமையா
தன'' என்பதுபற்றி ஒரு கட்டுரை வரைக.
செய்முறைப் பயிற்சிகள் சாதாரண தாவரங்கள், விலங்குகள் என்பவற்றின் வெளியுரு. வப்படங்கள் வரைந்து, அவற்றை விவரிக்குக. பெரிய மரங் களின் ஒளிப்படங்களை எடுத்து, அவற்றை விவரிக்க.

அத்தியாயம் 3 ஓர் எளிய விலங்கைப்பற்றிக் கற்றல்
அமீபா புரத்தியசு
அமீபா என்பது ஒரு மிகச் சிறிய சிருட்டி. அது அரைமில்லி மீற்றர் நீளமுடையது; நன்னீர்க் குளங்களி லும் குட்டைகளிலும் வாழும், மழை நீர் தேங்கி நிற்கும் மடுக்கள், பள்ளங்கள் என்ப வற்றின் அடியில் உள்ள 'நீராள மான சேற்றில் அதிட்டசாலிகள் அமீபாக்களைக் கண்டுகொள்ள முடியும்.
உயிருள்ள அமீபா ஒன்றை நுணுக்குக்காட்டியின் கீழ் வைத்து ஆராய்ந்தால்.. அஃது ஒழுங்கில்லாத உருவம் உடைய தென்பதைக் காண்போம். அதே சமயத்தில், அது தனது உரு வத்தைச் சிறிது சிறிதாக மாற்றுவதையும், நாம் நோக்கலாம்,
உரு 1.
அமீபா புரத்தியசு UV/ சுருங்கத்தக்க வெற்றிடம்; 11! புறக்சுலவுரு : EN அகக் கலவுரு; 17/' உணவுச் சிறு வெற்றிடம்; N கரு; " போலிக் கால்கள்,
அதன் உடலினின் றும் உண்டாகும் நிலையில்லா (தற்காலிக) எறியங்கள் ஆகிய போலிக்கால்களே இவ்வித உருவமாற்றத்திற்குக்

Page 11
உயிரினவியல்
காரணமாகும், உணவைச் சிறைப்படுத்தற்கும் இடப்பெயர்ச்சிக் கும் இப்போலிக் கால்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அமீபாவின் உடல் தனிக்காலத்தால் ஆக்கப்பட்டுள்ள து. அதா வது, ஒரு தனியிரலகால் ஆனது. ஆனால், பெரிய உயிர்ப் பொருள்களின் உடல், ஒரு சில அல்லது பல கலங்களால் ஆக் கப்பட்டிருக்கும். ஆகவே, அமீபாவைத் தனிக்கலமுடையது என்றும், - பெரிய உயிர்ப் பொருள் களைப் பல்கலமுடையன என்றும் கூறுவோம். இந்தக் கலம், முதலுரு எனப்படும் உயிர்ப்பதார்த்தத்தினால் ஆக் கப்பட்டுள்ளது. முதலுருவானது ஒளிபுகவிடுந்தன்மைள்ளது; பாகுபோன்றது; வழுவழுப்பானது ; சமையல் செய்யப்படாத
முட்டையின் வெண்கருப் போன்றது.
முதலுருவின் பெரும்பகுதி கல்வுருவினால் ஆனது. கலவுரு வின் வெளிப்பக்கம் ஒளிபுகவிடுமியல்புள்ள புறக்கலவுருவினாலும்; நடுப்பகுதி சிறுமணி போன்று அசுக்கூலவுருவினு லும் ஆக்கப்பட்டி ருக்கும். அகக்கலவுருவில் முட்டை வடிவினதான அல்லது கோளவடிவின தான கரும் தொங்கிக் கொண்டிருக்கும். உயிருள்ள அமீபாவின் அகக்கலவுருவினது வெளிப்பகுதியில் தெளிவானதும். வட்டமானதுமான இடைவெளி ஒன்று அமைந்திருப்பதை நாம் காணமுடியும். இவ் இடைவெளி பாருங்கத்தக்க சிறு வெற்றிடம் எனப் படும். இது துவக்கத்தில், அகக்கலவுருவின்கண் மிகச்சிறிய ஒரு புள்ளி போன்று தென்படும்; பின்பு, நீர் சேர்ந்து திரள்வ தனால், வரவரப் பெரிதாகி ஈற்றில், திடீரென வெடித்து, நீரை வெளியேற்றும். சிறிது நேர இடைவேளையின் பின்னர், இன் னொரு சுருங்கத்தக்க சிறு வெற்றிடம் தோன்றும். இவ்வாறு அடிக்கடி நிகழுதல் சவ்வூடுபரவல் வாயிலாக உறிஞ்சப்பட்ட அள வுக்கதிகமான நீரைச் சுருங்கத்தக்க சிறுவெற்றிடமானது வெளி யேற்றி விடுவதற்கென்பது தெளிவாகின்றது. (இதன் விவரத்தை 6 ம் அத்தியாயத்திற் காண்க.) அகக்கலவுருவினிடையே சுருங்கத் தக்க சிறு வெற்றிடம் காணப்படுவதோடு கூட, உணவுத் துணிக் கைகளை உள்ளடக்கிய வேறு பல உணவுச் சிறு வெற்றிடங்களும் கானாப்படுகின்றன.
இடப்பெயர் சியயும், நடனானவர் சிறைப்படுத்தலும்: அமீபா மிக மந்த கதியுடன் போலிக்கால்களை வெளியே நீட்டி, இடத்துக்கு இடம் நகர்ந்து செல்லும். தெளிவான புறக்கலவுருவினாலான சிறிய -எறியத்தினூடு, சிறுமணி போன்ற அகக்கலவுரு பாய்தலினாலே போலிக்கால்கள் உண்டாகின்றன. இதன் விளைவாகப் புதிதாக

ஓர் எளிய விலங்கைப்பற்றி கற்றல்
உண்டான போலிக்கால்கள் இருக்கும் திசையை நோக்கி. அமீபா அசைகின்றது. வினோதமான முறையில் அமீபா ஊர்ந்து செல் லும் இத்தகைய அசைவிற்கு, அமிபளாைவு எனப் பெயரிடப்பட் டுள்ளது. இவ் அசைவு வேறு , எத்தனையோ நுணுக்குயிர்களிடத் துங் காணப்படுகின்றது.
அமீபா, (பற்றீரியா, தயற்றம் என்னும் அல்கா. வேறு - நுணுக்குயிர்கள் போன்ற) ஒர் உணவுத் துணித்கையைச் சந் திக்க நேர்ந்தவிடத்து, அவ் உணவுத் துணிக்கையோடு ஒட்டிக் கொண்டிருக்கும் அதன் உடற்பகுதி, அசைவாட்டம் இன்றி இருக் கும், இதன் விளைவாக, அகக்கலவுருவிலுள்ள ஒரு சிறிய குழியி னுள் உணவுத்துணிக்கை ஒரு சிறு துளி நீருடன் சேர்ந்து சிக் கிக்கொள்ளும். அதிவிரைவில் இவ் உணவுத் துணிக்கை முற்ருக
உரு 2. அமீபா புரத்தியசு - இடப்பெயர்ச்சியும் உணவைச்
சிறைபிடித்தலும் 1, 2, 3, 4, உணவைச் சிறைபிடித்தல்; 5, 6, சமித்த உணவுக் -கழிவை அகற்றுதல்; 1) தயற்றம்; N கரு; 1” போலிக் கால்கள்.
மூடப்படுதலும், உணவுச்சிறு வெற்றிடம் ஒன்று உண்டாகும். இவ் உணவுச் சிறு வெற்றிடத்தைச் சுற்றியுள்ள முத,லுருவிலி

Page 12
10
உயிரினவியல்
ருந்து நொதிச்சத்துகள் சுரக்கத் துவங்கும். (இதன் விவரம் 2 ம் அத்தியாயத்திற் காண்க. இந் நொதிச்சத்துக்கள் அவ் உணவுத் துணிக்கையைச் சமிபாடு அடையச் செய்யும். சமி பாடடைந்த உணவு, முதலுருவினால் உறிஞ்சப்படும்; சமிபாட டையாத பகுதி, வெளியே அகற்றப்படும்; ஆதலால், உணவுச் சிறு வெற்றிடமானது அமீபாவுக்கு நிலையில்லா இரைப்பையாகப் பயன் படுகிறதென்பது விளங்கக்கிடக்கின்றது.
சுவாசித்தல்: தாம் ஒட்சியேற்றும் உணவிலிருந்தே, உயிர்ப் பொருள்கள் தம் சக்தித் தேவையைப் பெற்றுக்கொள்ளுகின்றன என்பது குறித்து, முன்னரே கூறியுள்ளோம். பெருவிலங்குகளி டத்துக் காணப்படுவது போன்ற சிறப்பான சுவாச உறுப்புகள் அமீபாவிடத்துக்கிடையா. ஆயினும், அதன் உடல் ஒட்சிசன் கரைந்திருக்கும் நீரினோடு தொடர்புள்ள தாயிருக்கும். அதன் உடல் மிக நுண்ணியதாதலால், நீரிற் கரைந்திருக்கும் ஒட்சி சனே அதனுடைய முத லுருவில் பரவிக் கலக்கும். அவ்வாறே,- முதலுருவில் உள்ள காபனீரொட்சைட்டும் நீருட்பரவி வெளியேறு கின்றது.
கழிவு: முதலுருவின் கண் உண்டான கழிவுப்பொருளும் நீருட்பரவி வெளியேறுகின்றது - சுருங்கத்தக்க சிறுவெற்றிடத் தினுள் இக் கழிவுப்பொருளில் ஒரு பகுதி பரவிக்கலந்து, பின் னர் வெளியேற்றப்படுகின்றது. அதாவது, கருவின் அண்மையில் - உற்பத்தியான சுருங்கத்தக்க சிறு வெற்றிடமானது' தன்னைச் சூழ்ந்திருக்கும் முதலுருவினால் வெளியேற்றப்படும் கழிவுப்பொரு ளால் நிரம்பப்பெற்று, புறக்கலவுருவுக்கு அணித்தாயுள்ள மேற் பரப்பை அடைந்து, வெடித்து உடைந்து விடுகின்றது.
வெளிப்புறத் தாண்டல்களுக்கும் துண்டற்பேறு நிகழ்த்தல் : அமீபா ஓர் எளிய விலங்காக இருந்தபோதும், வெளிப்புறத் தூர ண் ட ல் களுக்குத் தாண்டற்பேறு நிகழ்த்து ந் இயல்பினது. மிகவுந் துலக்கமான ஒளியில் அமீபாக்களை வைத்தால், அவை உணவு உட்கொள்ளுவதை நிறுத்திவிடும் ; போலிக்கால் களை உள்ளே வாங்கிக்கொள்ளும். பின்னர். ஒளிமுதலை விலக்கி அப்புறம் சநகர்ந்து செல்லும். மெல்லமிலங்கள் போன்ற இரசாயனப் பொருள்கள் தன் உடலிற்பட நேர்ந்தால், அது தன் போலிக் கால்களை உள்வாங்கிக்கொண்டு கோளவுருவினதாகிவிடும்; வெப் பத்தாண்டல், பரிசத்தாண்டல்களுக்கும் அவ்வாறே தாண்டற் பேறு நிகழ்த்தும்.

ஓர் எளிய விலங்கைப்பற்றிக் கற்றல்
11
சிரைப்பையாக். கம்: நன்னீர்க் குளங்களில் வசித்தலால், குளங் கள் வற்றுங்காலங்களில், தன்னைப் பாது கொள்ளும் பிரச்சினை அமீபாவை எதிர்நோக்கியிருக்கும். இத்தகைய இடையூறான காலங்களில் அமீபா. தனது போலிக்கால்களை உள்வாங்கிக் கொண்டு, கோளவடிவினதாகிச் சிறுைப்பை என்னும் பெயருடைய வன்மையான வெளியுறை ஒன்றைச் சுரந்து கொள்ளும். , இவ் வாறு தனக்கோர் வெளியுறையைச் சுரந்துகொள்ளுதல் சிறைப்பை "யாக்கம் எனப்படும். இந்நிலையில், அமீபா சிறைப்பைபிட்டுக்கொண் டது எனக் கருதப்படும், மறுபடியும், குளத்தில் நீர் நிரம்பியதும், சிறைப்பை உடைந்து விடுகிறது; அமீபா, திரும்பவும் தனது சாதாரண வாழ்க்கையை நடாத்தத்தொடங்குகிறது. குள ம், நீர் வற்றி வரண்டதும், சிறைப்பையிட்டுக்கொண்ட அமீபாக்கள் காற்றினால் காவிச்செல்லப்பட்டு, வேறு குளங்களிற் சேர்க்கப் படும், இக்காரணத்தாலேயே மழை நீர்தேங்கி நிற்கும் குள ங்க
3
1 பு
உரு. 3 அமீபா புரத்தியசு- இனம் பெருக்கல் 1. கரு நீட்சியடைதல்; 2. இரு சிறிய கருக்கள் உண்டா தல்: 3. முத லுரு நீட்சியடைதல்; A, B இரண்டு சிறிய மகள்
அமீபாக்கள்.
குட்டைகளில், அமீபாக்கள் திடீரெனத் தோன்றுகின்றன, உலகம் முழுவதும் அமீபாக்கள் பரம்பியிருத்தலுக்குரிய காரணம் அவர்

Page 13
12
உயிரினவியல்
றின் சிறைப்பையாக்க வ,5 (வேயாம். இச்சிறைப்பை உண்மை யாகவே ஒரு பாதுகாப்பான உறையாகும். சிறைப்பையிட்ட நிலையில் அமீபா-270" ச அளவுள்ள மிக, மிகக்குறைந்த வெப்ப நிலையிலும், 100" ச அளவுள்ள அதி உயர்ந்த வெப்பநிலையிலும் எவ்வித இடர்ப்பாடுமின்றி வாழுந்தன்மையுடையது.
வளர்ச்சியும் இனம் பெருக்கலும் : உயிர்ப்புடன் வாழும் அமீபாவி னால் உட்கொள்ளப்படும் உணவின் பெரும்பகுதி அதன் முத லுருவை ஆக்குவதில் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் அது பருமன் அடைந்து வளருகின்றது; ஆனால், ஓர் எல்லை யின்றி வளர்ச்சி அடையமாட்டாது. அமீபா, தனக்குரிய பருமனை அடைந்ததும், இனம் பெருக்கல் செய்ய முற்படுகின் றது. அதன் இனம் பெருக்கற் செயன்முறை மிகவும் எளியது. முதன்முதல் அமீபாவின் கரு இரு மகட்கருக்களாகப் பிரியும்; பிரிந்து, ஒன்றைவிட் டொன்று அ க ன் று செல்லும், இதைத் தொடர்ந்து கலவுருவானது சிறிது நீட்சி அடைந்து இரு பகுதி களாகப் பிரியும். ஒவ்வொரு பிரிவுடனும் புதிதாக உண்டான மகட்கரு ஒன்று சேர்ந்துகொள்ளும். ஒரு பெரிய அமீபாவிலி ருந்து, இவ்வாறே இரண்டு சிறிய மகள் அமிபாக்கள் உண்டாகும். இவ்வித இனம்பெருக்கல் முறைக்கு இருகூற்றுப்பிளப்பு எனக் -கூறப்படும்.
வினாக்கள்
1. அமீபா தொடர்பாக, உயிருள்ள முதலுருவின் சிறப்பியல்பு
களைச் சுட்டிக் காட்டுக.
அமீபாவின் இடப்பெயர்ச்சியும், அஃது உணவைச் சிறைப் படுத்தலும் எவ்வாறு நிகழுகின்றனவென்பதை விவரிக்க, அமீபாவை (அ) ஓர் உயிர்ப்பொருள் எனவும், (ஆ) ஒரு விலங்கு எனவும் நீர் கருதுவது ஏன்?
செய்முறைப் பயிற்சிகள் ஒரு "பாட்டம்' மழை பெய்த பின்னர், நிலையில்லாத ஒரு நீர்க்குண்டிலிருந்து சிறிதளவு சேற்றுடன் கூடிய நீரை, ஒரு முகவையில் எடுத்து, அம்முகவையை யன்னல் ஒன்றின் பக்கத் தில் வைத்துக்கொள்க. ஏறத்தாழ ஒரு வாரத்தின் பின்னர், முக வையின் அடியிலுள்ள நீரிலிருந்து ஒரு சில துளிகளை எடுத் துச் சோதித்துப் பார்த்துக்கொள்க.

ஓர் எளிய தாவரத்தைப்பற்றிக் கற்றல்
13
சில உயிருள்ள அமீபாக்களை, முதலில் தாழ்வலுவுள்ள நுணுக் குக்காட்டியின் கீழ்வைத்தும், பின்னர் உயர்வலுவுள்ள நுணுக் குக்காட்டியின் கீழ்வைத்தும் நோக்குக. அதன்மேல், அதன் வெளியுருவப்படங்களை வரைக. அமீபாவின் ஒளிபுகவிடுமியல் பைக் குறித்துக்கொள்க. சிறிதளவு அதிட்டமிருந்தால் அதனது சுருங்கத்தக்க சிறு வெற்றிடத்தையும், உணவுச் சிறு வெற்றிடத் தையும் நீர்கண்டு கொள்ளல் முடியும்.
உண்டாக்கப்பட்ட வழுக்கியிலிருந்து அமீபாவின் வெளியுரு வப்படத்தை வரைக. தெளிவான புறக்கலவுரு, சிறுமணி போன்ற அகக்கலவுரு, கரு என்பவற்றைக் குறித்துக்கொள்க.
அத்தியாயம் 4 ஓர் எளிய தாவரத்தைப்பற்றிக் கற்றல்
கிளமிடோமானசு
கிளமிடோமானசு என்பது தனிக்கலத்தாலான, பச்சைய முள்ள ஒரு தாவரம் ஆகும். அது நன்னீருள்ள குளங்களிலும் (கேணிகளிலும் அகழிகளிலும் காணப்படும். அது மிகத் தாழ்ந்த உறுப்புகளால் இயன்றனவும், பிரதானமாக நீரில் வாழ்கின்றனவு மாகிய அல்காக்களின் கூட்டத்தைச் சேர்ந்தது. இது மிக, மிகச் சிறிய துணுக்குயிராதலாலும், மிகத் தீவிர அசைவு உடையதா தலாலும் ஆரம்ப அறிவு பெற விரும்புவோர்க்கு மிகுந்த ஏமாற் றத்தை விளைவிக்கும் ஒரு பொருளாக அமைந்திருக்கிறது. எனி னும், மிக உயர்ந்தவலுவுள்ள நுணுக்குக்காட்டியில் அதன் பகுதிகளில் அதிகமானவை புலப்படும்.
சிளமிடோமானசின் உடல் 1 மில்லிமீற்றர் விட்டமுடைய ஒரு கலம் ஆகும்; அது முட்டையுரு அல்லது கோளவுருவுடை யது, கயத்தைச் சுற்றி மெல்லிய, வன்மையுடைய கலச்சுவர் காணப்படும். இக்கலச்சுவரினுள்ளே உயிருள்ள முதலுரு இருக் கின்றது. கலச்சுவர் செலுலோசு என்னும் பதார்த்தத்தினாலான து. செலுலோசு என்னும் இப்பதார்த்தம் தாவரங்களில் மட்டும் காணப்படுகின்றது. அதனது முற்பக்கமுனை (அசையும்போது

Page 14
14
உயிரினவியல்
முன்னோக்கும் முனை)யில், கலச்சுவரானது ஒரு சிம்பி போன் று புடைப்பாக நீண்டிருக்கின்றது. கலச்சுவரினுள்ளிருக்கும் இரண்டு நுண்னணிய துவாரங்களினுள்ளே செல்லும் இரு பெரிய சவுக்கு முப்ளாகள், முற்பக்கமுனையிலுள்ள, நிறமில்லாத முதலுருவினின்றும்
Hப
உரு. 4
கிளமிடோமானசு பிட பச்சையமணி | v சுருங்கத்தக்க சிறு வெற்றிடம்; w கலச்சுவர் ; E= கட்புள்ளி ; 11 சவுக்குமுளைகள் ; N11 கரு; Py வித்துருமணி ; 1' சிம்பி.
(முளைத்திருக்கும். இச் சவுக்கு முளைகளை வீசி அடிப்பதனால் அது நீரிற் சுழன்றுகொண்டு நகர்ந்து செல்லும். முதலுருவி

ஓர் எளிய தாவரத்தைப்பற்றிக் கற்றல்
15 - லுள்ள தேவைக்கதிகமான நீரை வெளியேற்றுந் தொழிலைப் புரி கின்ற ஒரு சோடி சுருங்கத்தக்க சிறுவெற்றிடங்கள் அதன் உடலின் முற்பக்கத்தில் அமைந்திருக்கின்றன. சுருங்கத்தக்க சிறு வெற்றிடங்களுக்குப் பிற்பக்கமாகக் கட்புள்ளி என்னும் ஓர் செம்புள்ளி காணப்படுகின்றது. இவ் உறுப்பு ஒளியை உணருந் தன்மையுடையது என நம்பக்கிடக்கின்றது. * பச்சையத்தினால் ஆக்கப்பட்ட பெரிய, கிண் ணவடிவினையுடைய பர்சையாமணியானது + கலத்தின் பிற்பக்கத்திலுள்ள முக்காற்பங்களவு இடத்தை நிரப் பிக்கொண்டிருக்கின்றது. உணவுத்திரவியங்களின் சேமிப்பைக் குறிக்கும் வித்துருமணி என்னும் உருண்டைப் பொருள் ஒன்று, பச்சையமணியினுள் பதிந்துகிடக்கக் காணப்படும், வித்துரு மணியின் முன்னால், பச்சையமணி இருக்கும் குழிக்குள், ஒரு தனிக் கருக் கிடக்கின்றது.
கிளமிடோமானசு இரு சவுக்குமுளைக (அல்லது பிசிர்கள்) ளின் உதவியினால் அசைந்து திரிகின்றது. முன்னோக்கி அசையும் போது, அது தன் அச்சில் தானே சுழன்று கொள்கிறது. இரசா யனப் பதார்த்தங்கள், ஒளி முதலிய வெளித்தாண்டல்கள், அதன் அசைவு தொடர்பாக அதிக செல்வாக்கு உடையன. துலக்க முடைய பரவலான ஒளியினால் கிளமிடோமானசு கவரப்படுகின் றது ; ஆனால், அதிக செறிவுள்ள ஒளியை ஒருவி அப்பால் வில கிச் செல் லுந்தன்மையுடையது.
சாதாரண பசிய தாவரங்கள் உணவை ஆக்கிக்கொள்ளுவது போலவே கிளமிடோமானசும் உணவை ஆக்கிக் கொள்ளுகின் றது. "(8 ம் அத்தியாயம், காண்க.) - கனிப்பொருளுப்புகளின் மெல்லிய கரைச பழம் காபனீரொட்சைட்டும் உள்ள நீரிலேயே அது வாழும். இப்பொருள்கள், முதலுருவினால் உறிஞ்சப்பட்டுச் சூரிய ஒளியினின்றும் பெறும் சத்தியினால் மாப்பொருள், புரதங் கள் போன்ற சிக்கலான சேதனவுறுப்புச் சேர்வைகள் ஆக்கப் படுகின்றன. உயர்ந்து, உறுப்புகளால் இயன்ற, பல்வேறு உறுப்பு களையுடைய தாவரங்கள் இலைகளாலும் வேர்களாலும் இயற்றும் பிரதான தொழில்களை எல்லாம், கிளமிடோமானசு என்னும் இந் நுண்ணிய தாவரமும் செய்கின்றது.
இனப்பெருக்கல் : அமீபாவைப் போன்றே கிளமிடோமானசும் கலவியின்முறை இனம்பெருக்கல் செய்கிறது. இருகூற்றுப் பிளப்புப் பெருக்கத்தினுஞ் சிறிது வேறுபட்ட 'பிளப்பு' முறை "பால் இனம் பெருக்கல் நிகழுகிறது. இனம்பெருக்கத்தொடங்

Page 15
16
உயிரினவியல்
கும்போது, கலத்தி லுள்ள சவுக்குமுளைகள் உள்வாங்கப்படுதலும், அஃது ஆறுதல் எடுத்துக்கொள்ளுகிறது; அதன் கட்புள்ளியும் சுருங்கத்தக்க சிறு வெற்றிடமும் மறைந்து விடுகின்றன. கலச் சுவரினின்றும் முதலுருவானது உள்வாங்கிச் சுருங்குகிறது; பின்னர்க் கலத்திலுள்ள கருவானது 4, 8 அல்லது 16 மகட்கருக் களாகப் பெயர்த்தும், பெயர்த்தும் பிரிவு அடைவதனால் பெருக்க மடையும், கருக்களைத் தொடர்ந்து, எஞ்சியிருக்கும் முதலுருவும் அவ்வாறே பிரியும். இதன் விளைவாக, இனம்பெருக்கல் செய் யும் கிளமிடோமானசின் கலச்சுவரினுள்ளே 4, 8 அல்லது 16 மமகட்கலங்கள் உண்டாகும். ஒவ்வொரு மகட்கலமும் துவக்கத்தில் கலச்சுவர் இன்றியே காணப்படும், சீக்கிரத்தில், அவை ஒவ் வொன் றையுஞ் சுற்றிச் செலுலோசாலான கலச்சுவர் உண்டாகி. விடும். ஒரு சோடி சவுக்குமுளை களும் வெளியிற் காணப்படும்,
உரு. 5 கிளமிடோமான சு-கலவியின் முறையினம் பெருக்கல் 1. கிளமிடோமானசு; 2. இரு கருக்கள் உண்டாதல்; 3. நான்கு கருக்கள் உண்டாதல்; 4. இயங்குவித்திகள் உண்டாதல்: 5. இயங்கு வித்திகள் வெளிவருதல்.
விரைவில் இம் மகட்கலங்கள் அல்லது இயங்குவிதிகள் (கலத்தி னின்றும்) வெடித்து வெளியேவந்து வளருகின்றன. இவ்வித ;

ஓர் எளிய தாவரத்தைப்பற்றிக் கற்றல்
17
இனம் பெருக்கலைப் பல்கூற்றுப்பிளப்புப் பெருக்கம் என்று சொல் வர்.
இவைதாமெனக் குறிப்பிட முடியாத சில சந்தர்ப்பங்களில் சிறிது வே று பா டு டை ய கலவியின்முறையினம் பெருக்கலும் நடைபெறுகின்றது. பதினாறு மகட்கலங்களாகப் பிரிவதற்குப் பதிலாக அனேக மிகச் சிறிய மகட்கலங்களாகப் பிரிகின்றது. ஆனால், தாய்க்கலத்தினதும், மகட்கலங்களினதும் கலச்சுவர் சனியமுள்ள தாகவோ, தா ன் ப  ைச யு ள் ள த ா க வோ மாற்ற மடையும். ஏன் பசையாவான் திணிவினுள் பலகலங்கள் பொதி யப்பட்டிருக்கும். இந்நிலையைப் பாமெல்லா (Palmulla) நிலை என் பர். சூழலில் உள்ள நிலைமைகள் வாய்ப்பாக மாறியவுடன் இச் சிறிய கலங்கள் அல்லது இயங்குவித்திகள் சவுக்குமுளைகள் உடையன வாய்ச் சளியத் திணிவினின்றும் வெளியேறி நடமாடத் தொடங்குகின்றன.
உணவுக் கட்டமுள்ள அல்லது வறட்சியான அல்லது குளிர் மிகுத்த காலங்களில் கிளமிடோமானசு கலவிமுறையினம் பெருக் கலைக் கடைப்பிடிக்கின்றது. கலவிமுறையினம் பெருக்கலின் போது கிள மிடோமானசுக் கலச்சுவரினுள்ளே 64 மிகச்சிறிய கலங்கள் வரையும் உண்டாகின்றன. சில கிளமிடோமானசு இனங்களில் இச் சிறிய கலங்கள் கலச்சுவரைச் சுரந்து கொள்ளு கின்றன. வேறு சில இனங்களில் இச்சிறிய கலங்கள் கலச்சுவர் இன்றியே இருக்கும்; எனினும், ஏனைய இயல்புகளில் இயங்கு வித்திகளைப் போன்றே இருக்கின்றன. ஆனால், இச்சிறிய கலங் கள் தாய்க்கலத்தினின்றும் பிரிந்த பின்னரும் முழுவளர்ச்சி யுடைய கிள மிடோமானாசுகளாக வளரமாட்டா. மற்று, இவை சோடி சோடியாக ஒன்றுசேர்ந்து இபோதல் செய்யும். இவ்வாறு கலவி நிலை அடைந்த சிறிய மகட்கலங்கள் புனாரிகள் எனப்படும். வழக்கமாக, இருவேறு பெற்றோர்களினின்றும் உதித்த இரு புணரி கள் தத்தம் முற்பக்கம் ஒன்று சேரும்படியாக முதலில் இணை யும்; பின், படிப்படியாக அவற்றின் உடல் முழுவதும் இணைந்து விடும். அதாவது, ஒன்றினது கலவுரு மற்றையதன் கலவுரு வோடும், ஒன்றினது கரு மற்றையதன் கருவோடும் முழுவதாக இணைந்துவிடும். புணரிகளுக்குக் கலச்சுவர் இருக்குமேயானால், அவற்றின் முதலுருப்பகுதி அக்கலச்சுவர்களினின்றும் நழுவி, ஒன்றோடு ஒன்று இணைந்துவிடும், கலவியின் பின் வெற்றுக் கலச்சுவர்கள்தான் மீதிப்படும். இரு புணரிகள் (ஒத்த புணரி
215 3

Page 16
13
உயிரினவியல்
கள்) இணைதலால் உண்டாகும் தனிக்கலம் புணரிவித்தி எனப்படும் இந்நிலையில் முதலில் இருந்த பிசிர்களின்றி நிறைகோளவுரு வுடையதாய்க் காணப்படும். இப்பொழுது, தடிப்புள்ள கலச்சுவர் ஒன்றைச் சுரக்கும். இதன்மேல் 'ஆறுதல் நிலையை அடைகின் றது. ஆறுதலாய் இருக்கும் நிலையில் ஓரளவு வறட்சியையுந் தாங்கிக் கொள்ளும் இயல்புடையது. பின்னர், காற்றினால் காவிக்
<---
2002
உரு. 6 கிளமிடோமானசு- கலவிமுறையினப்பெருக்கம் 1. கிளமிடோமானசு; 2. இருகருக்கள் உண்டாதல்; 3. நான்கு கருக்கள் உண்டாதல்; 4. கருக்கள் உண்டாதல்; 5. புணரிகள் வெளிவருதல்; 6. இரண்டுபுணரிகள் இணைதல்; 7. இரண்டு கருக் களும் ஒன்றாகச் சேருதல்; 8. புணரிவித்தியினுள் இயங்குவித்தி கள் உண்டாதல்; 9. இயங்குவித்திகள் வெளிவருதல்.
கொண்டு போகப்படுகிறது. சில நாட்களின் பின், போதிய அளவு ஈரலிப்பான நிலைமை ஏற்பட்டதும். இப்புணரிவித்தி முளை கொண்டு இரண்டு அல்லது நான்கு இயங்குவித்திகளாகப் பிரி யும். இவ் இயங்கு வித்திகள் கிளமிடோமானசுகளாக வளர்ச்சி அடை யும்.

ஓர் எளிய தாவரத்தைப்பற்றிக் கற்றல்
10
கிளமிடோமானசு இனங்கள் பல வற்றின் புணாரிகள் எல்லாம் -சம பருமனுடையவை, ஆகவே, அவைகளை ஒத்த பு33ாரிகள் என்று சொல்வர். கிளமிடோமானசு நிவாலிசு (Chlarmlidarmons riivalis) என்பது இதற்கு உதாரணமாகும், ஆனால், கிளரிடோமானசு மொனநினு (Chl:Inidomiயா Inoபயdlin1) சிளமிடேமானசு புறேனி (Chlamiclomonas brainii) என்னும் மற்றைய இனங்களின் புணரி கள் இரு வேறுவகையான பருமன் உடையவை; எனவே, அவை :பல்லினப்புணரிகள் எனப்படும்.
வினாக்கள் 1, நுணுக்குக்காட்டியின் கீழ் கிளமிடோமானசின் தோற்றம் எவ்வாறு இருக்கும் என்பதை விவரிக்க, அது எப்படிக் கலவியின்முறையினம் பெருக்கல் செய்கிறது?, விலங்குகள், தாவரங்கள் என்பவற்றிற்கிடையில் காணப் படும் வித்தியாசங்களை அமீபா, கிளமிடோமானசு என்ப வற்றில் மாட்டேற்றிக் கூறுக. உயிருள்ள முதலுருவின் சிறப்பியல்புகளைக் கிளமிடோ மானசினது வாழ்க்கை வரலாற்றுடன் தொடர்புபடுத்திக் காட்டுக.
3.
செய்முறைப் பயிற்சிகள் 1. பாழ்ங்கிணறு அல்லது கவனிக்காது விடப்பட்ட கேணி ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு துளி 'பச்சை நிற நீரைச் சோதனை செய்து பார்க்க. உயர்வலுவுள்ள நுணுக்குக்காட்டியின் கீழ் உயிருள்ள சிளமிடோமானசுகள் தோன்றுவதை நோக்குக. அயடீன் கரைசலில் அவற்றைத் தோய்த்தபின், கலத்தின்கண் ணுள்ள விவரங்களை ஆராய்ந்தறிய முற்படுக.
2. ஆக்கப்பட்ட வழுக்கியிலிருந்து, உயர்வலுவுள்ள நு அணுக் குக்காட்டியின் உதவியோடு ஒரு கிளமிடோமானசை ஆராய்ந்த பின், அதனை வரைந்து பகுதிகளுக்குப் பெயரிடுக.

Page 17
உயிரினவியல்
அத்தியாயம் 5
பூக்குந் தாவரம் ஒன்றின் பகுதிகள்
காசித்தும்பை (BaISTrm) ச் செடி அல்லது மிளகாய்ச் செடி ஒன்றை வேர்கள் அறுந்துபோகா வண்ணம் பிடுங்கி, மிக நுணுக்கமாக ஆராய்ந்து பார்க்க. உரு. 7 இல் காட்டியவாறு அதன் பல்வேறு பகுதி களையும் உன்னாற் கண்டுபிடிக்க முடியு மோவென அறிக.
ஒரு தாவரத்தின் உடல் இரு தலை மையான பகுதிகளை உ ப ைட ய து. அவையாவன: நிலத்தின் மேலுள்ள அங்குரத்தொகுதி; " நிலத்தின் கீழுள்ள வேர்த்தொகுதி என்பன வாம். அங்குரத் தொகுதி பொதுவாகப் பச்சை நிற முடையது; மேனோக்கி, ஒளியை நாடி வளருவது. வேர்த்தொகுதி பொது வாகக் கபில நி ற மு டை ய து; கீழ் நோக்கி நிலத்தினுள் வளருவது.
வேர்த்தொகுதி ஒரு ஆணிவேர், பல பங்கவேர்கள் என்பவற்றை உடையது. வேர்த்தொகுதியின்  ைம ய ப் ப கு தி ஆணிவேராகும். பக்கவேர்களைத் துணை A.B, கக்கவரும்பு; L இலை; I..", பக்க
உரு. T வேர்; MS தலைமைத்தண்டு: N/ கணு IN கணுவிடை; TE முனையரும்பு;
ஒரு பூக்குந் தாவரத்தின்
பகுதிகள் T':R. ஆணிவேர்,
வேர்கள் என்றும் கூறுவர்; அவை பெயர்த்தும் பல சிறு வேர்களா கப் பிரியும், (மேற்கொண்டு, விவரங்களுக்கு 5 ம் அத்தியாயம் பார்க்க.) -4
அங்குரத்தொகுதி பல கிளைகளோடு கூடிய தலைமைத்தண்டினை - உடையது. அங்குரத்தொகுதியின் தலைமைத்தண்டும், வேர்த்

பூக்குந் தாவரம் ஒன்றின் பகுதிகள்
21
தொகுதியின் ஆணிவேரும் ஒன்றோடொன்று தொடர்ச்சியாக இருக்கும். தலைமைத்தண்டு, கிளைத்தண்டுகள் என்பவற்றிலுள்ள கணுக்களில் எண்ணற்ற பசிய இலகள் காணப்படும், " அடுத்திருக் கும் இரு கணுக்களுக்கிடையிலுள்ள பிரதேசம் நணளிடை எனப்படும். தண்டிற்கும் இலைக்கும் இடையில் மேற்பக்கமாய் அமைந்திருக்கும் கோணம் சுக்கம் எனப்படும். இலைக்கக்கத்தில் ஒரு சிறிய அரும்பு காணப்படும். இதனைக் சுக்சுவருப்பு என்பர். இக் கக்கவரும்பே நாளடைவில் கிளையாக வளருவது. தலைமைத் தண்டின் முனைப்பகுதியிலும் ஓர் அரும்பு காணப்படும். இது புனேயரும்பு எனப்படும். ஒவ்வொரு கிளையும் ஒவ்வொரு முனை யரும்பு உடையதாயிருக்கும். முழுவளர்ச்சி அடைந்த ஒரு தாவ ரத்தில், பல பூக்களும் பழங்களும் காணப்படலாம்.
வினாக்கள்
ஒரு தாவரத்தின் பகுதிகள் யாவை? 2. முனையரும்பு, கக்கம், கணுவிடை ஆணிவேர், சிறு வேர்.
துணைவேர், இவற்றை விளக்குக.
செய்முறைப் பயிற்சிகள் 1. காசித்தும்பை, குப்பைமேனி (Aualypha ) சீதேவியார் செங்கழுநீர் (Vernoria) மிளகாய்ச் செடி என்பவற்றுள் ஒன்றை மாதிரிக்காக வரைந்து, பகுதிகளுக்குப் பெயரிடுக.
2. ஆணிவேர், பக்கவர்கள், தண்டு, கிளைகள், இலைகள். பூக்கள் முதலியவற்றை நுனித்து நோக்கியபின், சிறு குறிப்பு கள் எழுதுக.
அத்தியாயம் 6
வேரும் அதன் தொழில்களும்
நீரை நாடியும் ஒளியை விலக்கியும், பொதுவாகக் கீழ்நோக்கி மண்ணுக்குள் வளருகின்ற, தாவரத்தின் சிறப்பான தன்மை வாய்ந்த பகுதியே வேர் எனப்படும். வேரில் இலைகளோ, அரும்பு .களோ கிடையா. அது கணுக்களாகவோ, கணுவிடைகளாகவோ

Page 18
22
உயிரினவியல்
பிரிக்கப்பட்டிருப்பதில்லை. வித்தின் கண்ணுள்ள முடிவேரே நாள்! டைவில் வேர்த்தொகுதியாக வளர்ச்சி அடைகிறது. (14 ம் அத்தி யாயம் காண்க.) முளைவேரிலிருந்து விருத்தியடையும் வேர்த்
உரு. 3
வேர்த்தொகுதிகள் 4 ஆணிவேர்த்தொகுதி; B இடமாறிப்பிறந்த வேர்த்தொகுதி தொகுதியே II ஆன வேர்த்தொகுதி எனப்படும், ஆணிவேர் தொகுதியில் தலைமைவேர் எனப்படும் வேர் ஒன்று உண்டு. அதுவே பக்கவேர்களையும் கிளைவேர்களையும் உண்டாக்குகிறதுஎனினும், பல தாவரங்களில், அவற்றின் ஆணிவேர்த்தொகுதி முந்தியோ, பிந்தியோ இடமாறிப்பிறந்த வேர்த்தொகுதியால் கொள் ளப்பட்டுவிடும், (உரு. 8 காண்க) இடமாறிப்பிறந்த வேர்கள் நேரடியாகத் தண்டிலிருந்து வளருகின்றன. ஒரு சில தாவரங் களில் இலைகளிலிருந்தும் வளருகின்றன.
இடமாறிப்பிறந்த வேர்களின் வகை: இடமாறிப்பிறந்த வேர்களை, அவற்றின் சிறப்பான தொழில்களின் அடிப்படையில் பாகுபாடு செய்யலாம்:
(அ) அவைகளிற் பல சேமிப்புவேர்கள் ஆகும். உதாரண மாகச், சினிவற்ருளை, மரவள்ளி என்பவற்றின் முகிழுருவேர்கள் மாப் பொருள் வடிவில், அதிக அளவில், ஒதுக்க உணவுகளை உடை

வேரும் அதன் தொழில்களும்
(( 1-1
உரு. . இடமா றிப்பிறந்த சேமிப்புவேர்கள் (வேர்முகிழ்கள்) A வற்றாளையின் முகிழுருவேர்; 12 மரவள்ளியின் முகிழுருவேர் யன. சீனிவற்றாளை,யில் முகிழுருவேர்கள் கணுக்களிலிருந்து உண் டாகின்றன; ஆனால், மரவள்ளியில் தண்டின் அடியிலிருந்து கொத்துக்கொத்தாக உண்டாகின்றன.
(ஆ) பல தாவரங்கள் தங்களைத் தாங்கிக்கொள்ளும் பொருட் டாகக் சிறப்பான வேர்க&ா உண்டாக்குகின்றன. ஆலமரத்தின்
உரு. 10 ஆலமரத்தின் தாங்கும் வேர்கள்
T' தாங்கும்வேர்

Page 19
24
உயிரினவியல்
கிடையாக வளரும் மிகப்பெரிய கிளைகளிலிருந்து தாங்கும் வேர்கள்
கீழ்நோக்கி வளருகின்றன. அவ் வாறு வளரும் வேர்கள் ஈற்றில், தரையை தள டு ரு வி ச் சென்று, பருமையடைந்து, கிளைகளைத் தாங் கும் தூண்கள் போன்று உதவுகின் றன; அதனால், கிளைகள் மேலும் பரந்து வளர ஏதுவாகின்றது. தாரை - சுண்டல் மு த லி ய தாவரங்களினது தண்டுகளின் பக்கங்களிலிருந்து வேர்
கள் சரிவாக வளர்ந்து நிலத்தை உரு. 11
அடைந்ததும், தலைமைத்தண்டைத், தாழையின் மிண்டி
தாங்கி நிற்கின்றன. அவைகள் 1பிண்டி வேர்கள் 3. I. மிண்டி வேர்
வேர்கள்என்று சொல்லப்படும். பிளகு,
வெற்றிலை, "போதசு' முதலிய ஏறுதாவரங் கள்தங்கள் கணுக்களிலிருந்து சிறிய இடமாறிப்பிறந்த வேர்
5. H.,
--- [L =
உரு. 12
ஏறும் வேர்கள் "A.CL, போதசின் ஏறும்வேர்கள்;T!-ப்., வெற்றிலையின் ஏறும்வேர்கள்
களை உண்டாக்கித், தத்தம் கொளுகொம்புகளைப், பற்றிக் கொள்ளு கின்றன.

வேரும் அதன் தொழில்களும்
25
(இ) உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாத தொழில்களைச் செய்வதற்காகப் பல தாவரங்கள் இடமாறிப்பிறந்த வேர்களை உண்டாக்குகின் றன. ஒட்டுண்ணிகளது :1றிஞ்சும் வேர்கள் அல்லது பருங்கள் இவ்வகையின. (21 ம் அத்தியாயம் காண்க) குருவிச்சை, தூத்துமக்கொத்தான் என்பவை இதற்கு உதாரணங்களாகும். கண் டல் போன்ற தாவரங்கள் உவர்ச்சேற்றுநிலங்களில் சதுப்பு நிலங்களில் வளருகின்றன. சதுப்பு நிலங்களில் உள்ள மண் ரில், மட்காற்று இருப்பதில்லை, இருந்தாலுங்கூட மிகச்சிறிய அளவாகவே இருக்கும். இவ்வினத்தைச் சேர்ந்த தாவரங்கள் மிண்டிவேர்களுக்கு மேலதிகமாகச் சுவாசவேர்கள் அல்லது மூச்சு
**{YY!
உரு - 13 கண்டலின் சுவாசிக்கும் வேர்கள் M கண்டல்; S மிண்டிவேர்; " சுவாசிக்கும் வேர்கள் வேர்கள் எனப்படும் சிறப்பான வேர்களையும் உண்டாக்கிக் கொள்ளுகின்றன. இவ்வேர்கள் மரவடியைச் சுற்றிலுமுள்ள தரை யின் மேற்பரப்பின்மீது கூம்பிய 'கம்பு'கள் போல் நிலைக்குத் தாக வளர்ந்திருக்கும். இவற்றில் நுண்டுளைகள் அமைந்திருக்கும். இந்நுண்டுளைகளின் வாயிலாக வாயுக்கள் (ஒட்சிசன்) தாவரத்தி னுள் புகுதல் சாலும். சுண்ணு என்னும் சதுப்பு நிலத்தாவரம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும், பல சிக்கிட்டுகள் பிற தாவரங் களின் கிளைகளில் ஒட்டிக்கொண்டு வளரும். அவ்வாறு வளர்வத னல். அவை மேலொட்டித்தாவரங்கள் எனப்படும். அவைகள் தம்மைத் தாங்கி நிற்கும் தாவரத்தினின்றும் எவ்வகையான
கே இடி தேஜா போசணையையும் பெற்றுக்கொள்வதில்லை;
ஆனால், காற்றில்

Page 20
20
உயிரினவியல்
கட்டின்றித் தொங்கிக்கொண் டிருக்கும் சிறப்பான வகையைச் சேர்ந்த வேர்களை உண்டாக்கிக் கொள்ளுகின்றன. இவ்வேர்கள் கடற்பஞ்சு அனையன; எனவே, தம்மைச் சூழ்ந்திருக்கும் வளி"
ER
உரு. 14 ஒக்கிட்டின் மேலொட்டி வேர்கள்
E. 12. மேலொட்டி வேர்
உரு. 15 ஆணிவேரில் உண்டான முகிழுரு வேர்கள் A தேனிப்பு வடிவமுள்ளது (தேனிப்பு); B கதிருருவுள்ளது" (முள்ளங்கி); ( கூம்பிய வடிவுள்ள து (கரற்று). யிலிருந்து ஈரலிப்பை உறிஞ்சிக்கொள்ளும் வல்லமை வாய்ந்தன. இத்தன்மை பொருந்திய வேர்கள் மேலொட்டி வேர்கள் என்று சொல் லப்படும்.

வேரும் அதன் தொழில்களும்
21
ஆஹவேர்களின் வகைகள்: பொதுவகையைச் சேர்ந்த ஆணி வேர்த்தொகுதியான து, முன்னர்க் குறிப்பிட்டபடி, ஒரு மூலவேர் அல்லது ஆணிவேரையும், எண்ணிறந்த பக்கவேர்களையும் உடையதா யிருக்கும். எனினும், ஒதுக்கவுணவுடைமை காரணமாக ஒரு சில தாவரங்களின் ஆணிவேர்கள் முகிழுருப் பெறுகின்றன, முள்ளங்கி பின் முகிழுருவேர்கள் ஏறத்தாழக் கதிருருவுடையனவாதலால், இருமுகசாயுங்ககூம்பிய வேர்கள் எனக் கொள்ளப்படும். பிற்று, தேளிப்பு முதலியவற்றின் ஆணிவேர்கள் ஏறத்தாழக் கோளவுரு உடை யனவாதலால் 'தேளிப்பு 'வடிளின எனப்படும். ஆணிவேரான து. அடிப்பகுதி அகன்றும் உச்சியை நோக்கிப் படிப்படியாகக் கூம் பியுமிருப்பின், கூம்பிய வடிவுடையது எனப்படும். கரன்று இதற்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.
ஆணிவேர்த்தொகுதியிலிருந்தோ, இடமாறிப்பிறந்த வேர்த் தொகுதியிலிருந்தோ வளரும் மிகச் சிறிய கிளைவேர்கள் சிறு வேர்கள் எனப்படும். மண்ணிலுள்ள நீரை உறிஞ்சுவதற்குக் காரணமாயிருத்தலால் சி று ( ேவ ர் கள் ஒரு தாவரத்திற்கு மிக முக்கிய மானவையாகும், சி று  ேவ ர் க ள் நான்கு பிரதேசங்களை உடையன, அவை, வேபர்மூடிப் பிரதேசம், வளரும் 1பிர தேசம், வேர்மயிர்ப் பிரதேசம் (அல் லது உறிஞ்சும் பிரதேசம்), கடந்தும் 1பி ர 3 த ா ம் என்பனவாகும். சிறு வேரின் கூரியமுனை அல்லது நுனி வேர்முடி என்னும் உறையாற் பாது காக்கப்பட்டிருக்கும். வே ர் மூ டி பொதுவாக மிக நுண்மையாகவே
ட: H. இருக்கும். ஆனால், தாழை (Tund. பாபs) போன்ற தாவரங்களில், இது
--- £ட 5 வழக்கத்திற்கு மாறாகப் பெரிதாகவே
உரு. 16 இருக்கிறது. வேர்மூடியை அடுத்து பக்கவேரின் பகுதிகள் மேல் இருக்கும் மழமழப்பான பகுதி L. R. பக்கவேர்; 12, 1. சிறு 1 வளரும் பிரதேசம் எனப்படும். வேர்; C, R. கடத்தும் பிரதே வேரின் ஏனைய பிரதேசங்களைக் சம்; IR-II,IR. வேர் மயிர்ப் பிர காட்டிலும், வளரும் பிரதேசத்தி தேசம்: 3.II. வளரும் பிரதே லேயே தீவிரமான வளர்ச்சி நிகழு) சம்; 11.0.I, வேர்மூடிப் பிர கின்றது. வளரும் பிரதேசத்திற்கு தேசம்.
ட் :

Page 21
ஈசா + 1..11
7 பு:
E H+
உயிரின்வியல் 'நேர்மேலே வேர்மயிர்ப்பிரதேசம் காணப்படும். இங்கே, சிறு வேரை மிக நுண்ணிய குழல் போன்ற வெளிமுளைகள் மூடியிருக்
கக் காணலாம். இவ்வெளி முளை க ளே வேர்பாபிர்கள்
ஆகும். இவ் வேர்மயிர் -'
களே நீரை உறிஞ்சுவதற் குக் காரணமாவன, ஆத லினாலேயே, இப்பிரதேசம்
உறிஞ்சும் பிரதேசம் என உரு. 17
வும் பெயரிடப்பட்டுள்ளது. வேர்மயிரின் அமைப்பு
சிறுவேரின் அதிமுதிர்ந்த N, கரு; W, சிறு வெற்றிடம்; A, I,
பகுதி கடத்தும் பிரதேச -வேர்மயிர்.
மேயாகும். இப்பிரதேசத்
தில் வேர்மயிர்கள் காணப் படா. வேர்மயிர்கள் உறிஞ்சிய நிரைத் தாவரத்தின் மேற்பகுதி களுக்குக் கடத்தும் பகுதி இதுவேயாம்.
வேரினது தொழில்களுள் மிகமுக்கியமான து மண்ணிலுள்ள நீரை உறிஞ்சுதலேயாம், முன்னரே கூறியதுபோல், வேர் மயிர் களே உறிஞ்சுந் தொழிலுக்குப் பொறுப்பாயிருக்கின்றன. சிறு வேர்களின் மேற்பரப்பிலுள்ள கலங்களிலிருந்து உண்டாகும் வெளிமுளைகளே வேர்மயிர்கள் எனப்படும். (உரு. 17, 18 காண்க) அவைகள் எண்ணிறந்தன வாயும், மிக நுண்மையானவையாயும் இருத்தலால், மண்ணீர் அதிக அளவில் உறிஞ்சப் படக்கூடிய வாறு. மிக அதிக பரப்புள்ள மேற்பரப்பு உடையனவாய் அமைந் திருக்கின்றன. இம் மேற்பரப்பினூடாகவே நீர் உட்செல்லு கின்றது. வேர்மயிர் ஒவ்வொன்றும் தனிக்கலவுறுப்புகளாகும். முதலுருவினாலான உட்புறவுறையுள்ள மெல்லிய கலச்சுவரால் வேர்மயிர்க்கலமானது சூழப்பட்டிருக்கும். அதன் மையப்பகுதி யில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிறு வெற்றிடங்கள் உண்டு. அவற்றுள் உயிரில்லாத கலச்சாறு என்னும் திரவப்பொரு ளுண்டு. முதலுருவினாலான மெல்லிய உட்புறவுறையினகத்தே கரு ஒன்று காணப்படும். வேர்மயிர்கள் மட்டுணிக்கைகளுக் கிடையே வளர்வதால், அம்மட்டுணிக்கைகளைச் சுற்றியிருக்கும் நீரினோடு மிக நெருங்கிய தொடர்பு வைத்துக்கொள்ளுகின்றன" " மண்ணிரிலுள்ள நீரில் நைத்திரேற்றுகள், பொசுபேற்றுகள் சல், பேற்றுகள், குளோரைட்டுகள் போன்ற கனிப்பொருள்கள் அடங்கி பயிருத்தலால், வேர்மயிர்கள் அவற்றை உறிஞ்சிக்கொள்ளுகின்றன.
இருத்தலால் அதிக பரப்ருமற்பரப்

வேரும் அதன் தொழில்களும்
20
தாவரங்கள் நீரை உறிஞ்சுவதற்கு மேற்கொள்ளும் பொறி + முறையை விளங்கிக்கொள்ளுவதற்குச் சவ்வூடுபரவல் என்னுஞ்
R.H .
உரு. 18
நீர் கடத்தப்படுதல் X காழிக்கலங்கள்; 1 உரியக்கலங்கள்; H, P. மேற்றோல்; R, H, வேர் மயிர்கள்; ", I, கிடை. (அம்புக்குறிகள் நீர் செல்லும் வழியைக் காட்டுவன.)
செயன்முறையைப்பற்றி அறிந்து கொள்ளுதல் இன்றியமையா ததாகும். வித்தியாசமான செறிவுள்ள இரு வெல்லக்கரைசல்களை (அல்லது வெல்லக்கரைசலையும் நீரையும்) ஆட்டினது சிறு நீர்ப்பை அல்லது 'செல்லோவேன்' போன்ற, உகந்த ஒரு மென்ற கட்டால் பிரித்துவைத்தால், நீரானது செறிவு கூடிய வெல்லக் கரைசலினுள்ளே செல்லும்; ஆனால் வெல்லம் செல்லாது. இன்

Page 22
-30
உயிரினவியல்
னொருவகையாகச் சொல்லுமிடத்து, ஆட்டினது சிறுநீர்ப்பை நீரை அளடுபுகவிடுமியல்புடையது; வெல்லத்தை ஊடுபுகவிடுமியல்பு இல்லாதது. அத்தகைய மென்றகடு ஒருபங்கூடுபுகவிடுகின்ற மென்றாடு எனச் சொல்லப்படும். இந்தப் பரிசோதனையில் நீரானது மென் றகட்டி னூடாகச் செறிவு மிகுந்த வெல்லக்கரைசலை நாடிச் செல்கின்ற மையை, நாம் அறியலாம். செறிவு குறைந்த கரைசலிலுள்ள நீரானது ஒரு பங்கூடுபுகவிடுமென்றசுட்டி னூடாகச் செறிவு மிகுத்த கரைசலினுட் செல்லுகின்றமையே சவ்வூடுபரவல் எனப் படும். (செம்மையாகச் சொல்லுமிடத்து, ஒரு மென் றகடானது குறிப்பிட்ட சில கரைதிரவங்களையும், கரைபொருள்களையும் ஒரு பங் கூடுபுகவிடுமியல்புடையது. அதாவது. ஒரு குறிப்பிட்ட ஒரு பங்கூடுபுகவிடும் மென்றகடு, நீரைப்போன்ற ஒரு கரைதிரவத்தை ஊடுபுகவிடும்; ஆனால், ஏனைய கரை திரவங்களை அவ்வாறு விடாது; மேலும், அது குறிப்பிட்ட சில கரைபொருள்களை -ஊடுபுகவிடும்; ஆனால், ஏனைய கரைபொருள்களை அவ்வாறு விடாது). பின்வரும் பரிசோதனைகள் வாயிலாகச் சவ்வூடுபரவற் செயன்முறைபற்றி அறிந்து கொள்ளலாம்.
T. 17. முள்ளிப்புனல்
S. S. வெல்லக்கரைசல்
S. M1. ஒருபங்கூடுபுக
விடும் மென் றகடு
VW நீர் -
உரு. 19 சவ்வூடுபரவல் - பரிசோதனை

வேரும் அதன் தொழில்களும்
31
பரிசோதனை 1. ஒரு முள்ளிப்புனலின் வாயில் ஆட்டினது சிறு நீர்ப்பை ஒன்றை நன்கு விரித்து இறுக்கமாகக் கட்டிவிடுக. செறிவு மிகுத்த வெல்லக்கரைசலால் (அல்லது நீர்கலந்த வெல் -லப்பாகினால்) முள்ளிப்புனலின் ஒரு பகுதியை மட்டும் நிரப்பிக் கொள்க. வெல்லக்கரைசல் இருக்கும் மட்டத்தை புனலின் வெளிப்பக்கத்தில் அடையாளமிட்டுக் குறித்துக்கொள்க. இதனை நீருள்ள முகவை ஒன்றினுள் அமிழ்த்திவிடுக. முள்ளிப்புனலில் உள்ள திரவத்தின் மட்டம் (அமிழ்த்திய) சிறிது நேரத்தில் ஏறத் துவங்கும். ஒரு சில மணி நேரத்தில் திரவமட்டம் பல அங்குலங் கள் வரை ஏறிவிடும்.
பரிசோதனை 2. ஐதான ஐதரோகுளோரிக்கமிலத்தில் கோழி முட்டை ஒன்றை இட்டு, அதனது ஓட்டைக் க  ைர த் து க் கொள்க. ஒட்டின் கீழ் உள்ள ஒட்டுமென் றகடு மிகச் சிறந்த ஒருபங்கூடுபுகவிடுமென்றகடாகும். இப்பொழுது (ஓடு இன் றிய) அம்முட்டையை ஒரு சில மணி நேரத்துக்கு நீரில் வைத்து விடுக, முட்டையுள்ளிருக்கும் வெண்கரு செறிவு மிகுத்த கரை சலாதலால், வெளிப்பக்கத்திலுள்ள நீர் முட்டையினுட் பரவுகின் றது. இதன் விளைவாக முட்டையானது கனவளவிற் சிறிது பெரி தாகின்றது.
வேர்மயிரில் முதலுருவினாலான மெல்லிய உட்புறவுறை (கலச் --சுவர் அன்று) ஒருபங்கூடுபுகவிடும் மென்றகடுபோல் அமைந் திருக்கின்றது. தாவரத்திலுள்ள கலச்சாறு வெளியில் இருக்கும் மண்ணீரிலும் செறிவு மிகுத்த திரவப்பொருள் ஆகும். ஆதலால்' மண்ணீர் வேர்மயிரின் நடுபுகுந்து பரவுகின்றது. வேர்மயிரி னுள் மண்ணீர் நிரம்பியதும், அது வீக்கம் அடைகின்றது. வீங்குத "லால் இயற்கையாகவே வேர் மயிர்க்கலத்தின து உட்பக்க அமுக் -கம் அதிகரிக்கின்றது: அதிகரிப்பதனால், அயலேயுள்ள கலங்க (ளுக்குள் நீர் உட்புகுகின்றது. உட்புகுந்த நீர், ஈற்றில் சிறு வேர்களுக்கூடாக வேரின் மையத்திலுள்ள சில சிறப்பான (காழ்) கலங்களை அடைகின்றது. (உரு. 18 காண்க) மண்ணீர் உண் னோக்கிப் பரவல் அகமுகச்சவ்வூடுபரவல் எனப்படும். மண்ணீரா எனது கலச்சாற்றிலும் செறிவு மிகுத்த தாயின் கலங்களிலுள்ள நீர் வெளியே உறிஞ்சப்பட்டுவிடும். (வெளிப்பக்கப் பரவலால் கலச்சாறு வெளியேறும்) வெளிப்பக்கம் நோக்கிக் கலச்சாறு பாய் தல் புறமுகச்சவ்வூடுபரவல் எனப்படும். உப்பினது நிரம்பற் கரைச லுள்ள ஒரு முகவையில் ஒரு செடியை வைத்துப் பரிசோதனை நிகழ்த்துவதனால், புறமுகச்சவ்வூடுபரவலைப் பற்றிக் கற் று க் கொள்ளலாம்,

Page 23
3)
உயிரினாவியல்
இதற்கு அடுத்தபடியாக வேரினது முக்கிய தொழில் உறிஞ் சப்பட்ட மண்ணிரைத் தன்டு. கிளைகள் என்பவற்றிற்கூடாக இலைகளுக்கு மேனோக்கிக் கடத்துதல் ஆகும், வேரினதும் தண்டி னதும் மையத்தில் சலன்சுகட்டுகள் என் னும் சிறப்பான கால்வாய் கள் உண்டு. ஒரு கலன்கட்டில் பிரதானமாக இரண்டு வகை யான கலங்கள் காணப்படும். அவை காழ்க்கலங்கள், உரியக்கலங்கள் எனப்படும். க ரா ழ் க் க ல ங் க ள் பெரு ம் பா ,லு ம் நீர்க் குழாய்த் தொகுதி போன்றன. அதாவது, ஒரு காழ்க்கலத் தின் முனையுடன் மற்றையதன் முனை தொடுக்கப்பட்டிருக் கும். எனவே, ஒரே தொடர்ச்சியான குழாய்கள் போன்றன . இந்தக் கா ழ் க் க ல ங் க ளி னூ ட ா க வே  ேவ ர் ம யி ர் க ளால் உறிஞ்சப்பட்ட மண்ணீர் தாவரத்தின் மேற்பகுதிக்குக் கடத்தப்படுகின்றது. ஒரு காசித்தும்பைச் செடியை 24 மணி நேரம் நிறமுள்ள நீரில் வைத்தபின், அதனுடைய வேர் அல்லது தண்டின் ஒரு மெல்லிய வெட்டுமுகதைச் சோதித்துப் பார்ப்ப தனால், இந்த உண்மையை எளிதாகச் செய்து காட்டலாம். நீரை மேனோக்கிச் செலுத்தும் விசையை வேரழுக்கம் என்பர். வேரி லுள்ள எல்லாக் கலங்களிலும் நீர் நிரம்பியதும் அவை வீங்கி விடும். இவ்வாறு, கலங்கள் வீங்குகையினாலேயே வேரமுக்கம் உண்டாக்கப்படுகின்றது. தாவர உடலில் நீர் மேல்நோக்கி ஏறு வதற்கு வேரமுக்கம் மட்டுந்தான் காரணம் அன்று, நீரை மேலே இழுப்பதற்குக் காரணமாய் அபையும் வேறு விசைகளைப்பற்றி மேல்வரும் அத்தியாயம் (10 ம் அத்தியாயம் ஒன்றிற் கற்றுக் கொள்வோம்.
வேரமுக்கூத்தைக் காட்டும் ஒரு பரிசோதனை : பூச்சட்டியில் வைத்து வளர்க்கப்படும் செரேனியம் (CerAuiபய) அல்லது வேறு செடி ஒன்றை எடுத்துக்கொள்க. அதற்கு நிரம்ப நீருற்றிக்கொள்க. சில மணித்தியாலங்களின்பின், மண்ணிலிருந்து ஒரு சில அங் குலம் வைத்து, அதன் தலைமைத்தண்டினை வெட்டி எடுத்து விடுக. வெட்டப்பட்ட தலைமைத்தண்டின் முனையில் ஓர் இரப் பர்க் குழாயைப், பொருத்தி இறுக்கிக் கட்டிவிடுக. கட்டியபின். இரப்பர்க் குழாயினுள் நீர் நிரப்புக. நிரப்பியபின், இரப்பர்க், குழாயின் கட்டில்லாமுனையில் ஒரு கண்ணாடிக் குழா 'யைச் செருகிவிடுக. இப்பொழுது இவ் ஆய்கருவியைக் தாங்கு மாறு தாள் ஒன்றை நிறுத்திக்கொள்க. கண்ணாடிக் குழாயினுள், (ஏறத்தாழ) உடனே நீர் ஏறுவதைக் காணலாம். இரண்டொரு நாட்களில் கண்ணடிக்குழாயின் நுனிவரைக்கும் நீர் ஏறி வழிந் தோடுவதைக் காணலாம்.

வேரும் அதன் தொழில்களும்
33
வேரினது மூன்றாவது முக்கிய தொழில் தாவரத்தை நிலைநாட்டு தல் ஆகும். மண்ணில் ஆழத்திற்கு வேர்கள் ஊடுருவிச் சென்று தாவரத்தை உறுதியாக மண்ணில் நிலைநாட்டுகின்றன.
வினாக்கள் 1. வேர்த்தொகுதிகள் எத்தனை வகைப்படும்? அவற்றை
விவரிக்க. சிறு வேர்களிற் காணப்படும் நான்கு பிரதேசங்கள்
யாவை? அவற்றை விவரிக்க. 3. வேர் மயிர் ஒன்றின் அமைப்பை வெளியுருவப்படம்
வரைந்து விளக்குக. அது தான் செய்யும் தொழிலுக்கு இணங்க அமைந்திருக்கிறது என்பதைக் காட்டுக, 4. சவ்வூடுபரவல் என்பதன் கருத்து யாது? அதனைக்
காட்டுவதற்கு ஏற்ற இரு பரிசோதனைகளை விவரிக்க. 5. மண்ணீர் எவ்வாறு இலைகளுக்குக் கடத்தப்படுகின்றது? 6. வேரமுக்கம் என்பது யாது? இதனை ஒரு பரிசோதனை
வாயிலாக விளக்குக. 7.இடமாறிப்பிறந்த வேர்களின் வகைகளைக் கூறுக.
செய்முறைப் பயிற்சிகள்
1. 5-ம் அத்தியாயத்தில் கூறப்பட்ட தாவரங்களுள் ஒன்றி னது வேர்த்தொகுதியை விவரமாக அறிந்து கொள்க.
2. புல்லினது நாருருவேர்களை வரைந்து, பகுதிகளுக்குப் பெயரிடுக.
3. கைவில்லையின் உதவி கொண்டு வெங்காயம் அல்லது கடுகினது வேர் நுனியை ஆராய்க. அவற்றின் வேர்மயிர்களை வரைக.
4. காற்று, முள் ளங்கி, பீற்றுக்கிழங்கு, தேனிப்பு, மரவள்ளி | வற்றாளை போன்ற முகிழுரு வேர்கள் சிலவற்றை வரைந்து, பகுதி களுக்குப் பெயரிடுக.
2154

Page 24
உயிரினவியல்
5. ஆலமரத்தின் தாங்குவேர், தாழையின் மிண்டிவேர், திறை மோகுளசம் (DryILogl0:Sirm) என்பதின் மேலொட்டி வேர், குரு விச்சை (Loாanthus) யின் ஒட்டுண்ணிவேர், கரும்புவேர், சோள வேர் முதலிய இடமாறிப்பிறந்த வேர்களை வரைக..
6. சதைகரைச்சான் (Bryophyllurit) இலை ஒன்றை உனது புத்தகத்துள் வைத்து, ஒரு வாரஞ் சென்றபின் சிறிய வெண்
ணிற வேர்கள் உண்டாவதைக் குறித்துக் கொள்க.
7. இப் பாடத்தில் வரும் பரிசோதனை 1, பரிசோதனை 2 என் பவற்றைச் செய்து பார்த்துக்கொள்க.
8. காசித்தும்பைச் செடி அல்லது அவரைச்செடி ஒன்றை உப்பினது நிரம்பற்கரைசலில் வைத்துப், புறமுகச் சவ்வூடு பரவல் எவ்வாறு நிகழுகின்றதென்பதை நோக்குக.
11. இப்பாடத்தில் வேரமுக்கம் பற்றி வரும் பரிசோதனை யைச் செய்து பார்த்துக்கொள்க. (மாணவர்கள் இரண்டு பாட நேரத்துக்குள், அதாவது ஏறத்தாழ 1 மணி நேரத்துக்குள், பரிசோதனைகளைச் செய்து முடிக்கக் கூடியவாறு ஆசிரியர் முன் னேற்பாடான ஒழுங்குகள் செய்திருக்க வேண்டும்.)
TH
அத்தியாயம் 7
அங்குரத்தொகுதி -பசிய இலை ஒன்றின் அமைப்பு
அங்குரத்தொகுதியில் முநர்றண்டு, அல்லது தலைமையச்சு, துப்பாணத்தண்டுகள் அல்லது துணைக்கிளைகள், புடைத் துண்டுகள் அல்லது புடைக்கிளைகள், சிறு கிளைகள், அரும்புகள் (முளைக்குமியல்புள்ள பதிய அருப்புசுள், ஈக்கவரும்புகள், பூவரும்புகள், முனேயரும்புகள்) இலகள் முத லியன விருக்கும். இவற்றுட் தண்டு, கிளைகள், இலை யரும்புகள், இலைகள் என்பன (வேர்களுமுட்பட) தாவரத்தின் பதிய உறுப் புகளாகும். பூக்கள் இனம்பெருக்கல் உறுப்புகளாம். தண்டு Eஎன்பது முளைத்தண்டின் வளிமண்டல வளர்ச்சியேயாகும். கிளை கள் பக்கக்கிளைகள் எனவும் பெயர் பெறும். கிளைகளும் இலைக (ளும் கக்கவரும்பின் வளர்ச்சியால் உண்டாவன. தண்டுமுனை !

அங்குரத் தொகுதி - பசிய இலை ஒன்றின் அமைப்பு 35
யிலுள்ள பதியவரும்பு நேராகவோ, பக்கப்பாடாகவோ வனருந் தன்மையது. ஆனால், தண்டின் முனையரும்பு பூவரும்பாக இருக்கு மாயின் அத்தண்டுச்சி மேற்கொண்டு வளராது. (புறனடை அருகிக் காணப்படும்).
| தண்டுகள் பல உருவங்களை உடையன, சில உருளை உருவின. (உ-ம், மாமரம், தென்னை, பனை) சில முக்கோண உருவின. (உ-ம். கோரை), சில நாற்கோண உருளின. (உ-ம். துளசி, கற்பூரவல்லி), நாகதாளி, சதுரக்கள்ளி போன்றவற்றில் பல்வேறு உருவினவாயும் சதையுள்ளனவாயும், சாறுள்ளனவாயுங் காணப்படும்.
தண்டுகளின் மேற்பரப்பு மழமழப்பானதாகவோ சிறு முட் களையுடையதாகவோ, நீண்டமுட்களையுடையதாகவோ, தோல் கம் (மெழுகுப்பூச்சு) உடையதாகவோ அமைந்திருக்கும்.
தண்டுகளை அவற்றின் இயல்பு நோக்கி நிமிர்ந்த தண்டுகள், நலிந்ந தண்டுகள் என இரண்டாக வகுக்கலாம். நிமிர்ந்த தண்டு களுக்குத் தென்னை, பலா Iமுதலியன உதாரணங்களரம். நலிந்த தண்டுகள் மூன்றுவகையின. அவை, படர்கொடிகள், நகர்கொடிகள், ஏறுகொடிகள் எனப்படும். படர் கொடிகள் கணுக்களில் வேர் ஊன் றுவதில்லை. (உ-ம். நெருஞ்சில், மூக்குத்திப்பூண்டு, மூக்கறைச்சி) நகர் கொடிகள் பொதுவாகக் க ணுக்களில் வேர் ஊன்றும். (உ-ம். வல்லாரை, சேம்பு, ஆகாசுத்தாமரை, சாமந்தி நகர் கொடிக ளில் பலவகை உண்டு. அவைகள், பதியமுறை இனப்பெருக்கஞ் செய்வன (16 ம் அத்தியாயம் காண்க). ஏறு கொடிகள் பலவகைப் படும். இவை பற்றிஏ றும்முறைபற்றி சிறுவேர்முறையேறிகள் (உ-ம். வெற்றிலை, மிளகு, நொளுக்கி முறையேறிகள் (உ-ம். பிரம்பு, தாதுவளை), பற்றி முறையேரிகள் (உ-ம். பாகல், பீர்க்கு), இலே முறை யேர்கள் (உ-ம். காந்தள், கெண்டித்தாவரம்), தண்டு, முறையேரிகள் (உ-ம். முசுட்டை. மயிர்மாணிக்கம்), மரமயவேறிகள் (உ-ம். மந் தாரவல்லி, மாதவிக்கொடி ) எனப் பகுத்துக் கூறப்படும். இவற் றுட் சில பதியமுறை இனப்பெருக்கம் செய்வன.
தாவரங்களை அவற்றின் தோற்றம் பற்றிப் பூண்டுகள், செடிகள், மர ங்கள், ஏறிகள் எனப்பிரித்துக் கூறலாம். பூண்டுகளில் ஓராண்டின, ஈராண்டின, பல்லாண்டின என மூன்று வகைகள் உண்டு. சில தண் டுகள் வேறு பாடடைந்து நிலத்தின்கீழ் இருக்கின்றன, அத்த கைய தண்டுகள், நிலக்கிழ்ந்தண்டுகள் எனப்படும். இவை பதிய முறை இனப்பெருக்கஞ் செய்வன. (விவரம் 16-ம் அத்தியாயம் காண்க).

Page 25
36
உயிரினவியல்
உணவைப் பரும்படி செய்யும் தலையாய கடமையைப் புரி வது இலை. எனவே, தாவரத்தின் முக்கிய உறுப்புகளில் இலை யும் ஒன்றாகும். ஒரு நழையிலையானது பொதுவாகவும், தட்டை யாகவும், அகன்றும், பச்சை நிறமுள்ளதாகவும் இருக்கும், சில : தாவரங்களின் இலைகள் மிகச் சிறியனவாயும் தொழிலற்றனவாக. வும் இருக்கும். அவற்றைச் செதிலிலைகள் என்போம். சவுக்குமரம் (காசுரினா), சில கள்ளியினங்கள் (கந்தசுகள்) செதிலிலைகள் உடை யன பூவிலைகள் மிகச்சிறத்தலடைந்த அமைப்பு உள்ளன. அவைகள் பூக்களின் பகுதிகளாக அமைகின்றன.
H, E.
செவ்வரத்தை (ஐபிசுக்கசு உரோசாசினெஞ்சிசு)ச் செடியின் இலையைச் சாதாரண இலக்கு உதாரணமாகக் கொள்ளலாம். (உரு. 20 காண்க) அவ் இலைக்கு ஓர் இலையடி, ஓர் இலைக்காம்பு, ஓர் இலைப்பரப்பு என்பன உண்டு. இலையடி யினால், அவ் இலை தண் டினோடு இணைக்கப்பட்டிருக் கின்றது. இலைக்காம்பு பொது வாக நீண்டதாகவும், இலைப் பரப்பை அதன் முனையில் தாங் கிக்கொண்டும் இரு க் கு ம். இலைக்காம்பு, அகன்ற இலைப் பரப்பினூடே தொட ர் ந்து சென்று நடுநரம்பாக அமைகின் றது. பல சிறிய நரம்புகள், நடுநரம்பிலிருந்து கிளை த் து இலையின் பரப்பில் தொடர்ந்து செல்லுகின்றன. இச் சிறிய
உரு. 20 நரம்புகள் இலைப்பரப்பில் வலை செவ்வரத்தை இலையின் பகுதிகள் வேலை போன்று அமைந்திருக்
- L.T, இலையுச்சி; MT.R. நடு கி ன் ற ன, இலைப்பரப்பின் நரம்பு: B.T. இலையடிச்செதில் விளிம்பு ஒழுங்காக இரு க்க கள் ; L.B. இலையடி : A, B. கக்க வில்லை; பல்லுள்ள தாக அமைந் வரும்பு; P. இலைக்காம்பு; L.B.L. திருக்கிறது. இலையடி தண் நிலப்பரப்பு. டைச் சேருமிடத்தில் ஒரு சோடி இலையடிச்செதில்கள் காணப்படுகின்றன .

அங்குரத் தொகுதி - பசிய இலை ஒன்றின் அமைப்பு 37
ஓர் இலையின் மெல்லிய குறுக்கு வெட்டுமுகம் ஒன்றை நுணுக்குக் காட்டி யின் கீழ் வைத்து ஆராயுமுகத்தால் அதன் உள்ளயைப்பை அறிந்து கொள்ளலாம்.
இலைப்பரப்பு. இலநடு பிழையம் என்று சொல்லப்படும் பசியகலங்களாலான மையத்
உரு. 21 இலை நரம்பு (குறுக்கு வெட்டுமுகம்)
M நடுநரம்பு; V நரம்புகள். திணிவை அடக்கியுள்ளது. இலை நடுவிழையத்தின் இருபக்கங் களிலும் மேற்பக்க மேற்ருல், பழ்ப்பக்க மேற்ரேல் என்பன பாதுகாப்பு அளிக்கும் உறைபோல அமைந்திருக்கின்றன. மேற்றோல் நிற மில்லாத ஒரு படைக் கலங்களால் ஆனது. இலையினுள் நீருட் புகாவாறு மெல்லிய, ஒளிபுகவிடுகின்ற புறத்தோல், மேற்றோலின் மீது அமைந்திருக்கின்றது. ஆனால், மேற்றேலில் எண்ணிறந்த சிறிய இலைவாய்கள் காணப்படுகின்றன. இலைவாய்கள் கண் ணுக்குத் தெரியாத மிகச் சிறிய துவாரங்கள் ஆகும். பெரும் பாலான இலைகளில், அவை இலையின் கீழ்ப்பக்கப் பரப்பிலேயே அதிகமாகக் காணப்படுகின்றன. ஆனால், நீரில் மிதக்கும் இலை களையுடைய தாமரை போன்ற நீர்த்தாவரங்களில், விசேடமாக இலையின் மேற்பக்கப்பரப்பிலேயே இலைவாய்கள் அமைந்திருக் கின் றன- வெற்றிலேயின் கீழ்ப்பக்கத் தோலில் ஒரு துண்டைக் "கிழித்து எடுத்து, வழுக்கி ஒன்றின் மீது ஏற்றி, நுணுக்குக் காட்டி யின் கீழ்வைத்து நோக்கினால், முதன்முதல் எங்கள் கண்களுக் குப் புலப்படுவது கீழ்ப்பக்க மேற்றோலிலுள்ள கலங்களேயாம். அக்கலங்கள் ஒழுங்கின்றியும் சித்திரவடிவுள்ளவையாயும் ஒன்றே டொன்று நெருக்கமாகப் பொருந்தியிருக்கக் காணலாம். இம் மேற்றோற் கலங்களினிடையே இலைவாய்கள் அங்குமிங்குஞ் சித றிக் கிடப்பதையும் காணலாம். சிறு நீரகவடிவமுள்ள காவற் சபலங்கள் என்னும் இரு கலங்களினிடையில் இலைவாய்கள் ஒவ் வொன்றும் அமைந்திருக்கின்றமையினால் அவற்றை, நாம் எளி தாகக் கண்டுகொள்ளலாம். காவற்கலங்கள் பச்சை நிறமுடை யவை; இலைவாய்களின் பருமனைக் கூட்டுவதும் குறைப்பதுமே அவற்றின் தொழிலாகும், இலை நடுவிழையத்தில் இருவகையான

Page 26
38
உயிரினவியல்
கலங்கள் உண்டு. அவை வேலிக்காற்கூலங்கள், கடற்பஞ்சுார். கலங்கள் என்பனவாம், அவற்றுள் வேலிக்காற்கலங்கள் பச்சை நிறமுடை யனவாகவும் உருளை வடிவினவாகவும் இருக்கும். அவை மேற் பக்க மேற்றோலின் அடியில் ஒன்றோடொன்று நெருக்கமாகப் பொருந்தியிருக்கின்றன. வேலிக்காற்கலங்களில் உள்ள முத லுரு வில் சிறுமணிகள் போன்று பச்சைய மணிகள் இருப்பதன லேயே அவை பச்சை நிறமாகத் தோன்றுகின்றன. இலையின் கீழ்ப்பக்கப் பிரதேசத்திலேயே கடற்பஞ்சுக்கலங்கள் இருக்கின் - றன. அவைகள் ஒழுங்கின்றியும் நெருக்கமின்றியும் இருத்தலால், அவற்றிடையே எண்ணிறந்த காற்றிடைவெளிகள் காணக் கிடக் கின்றன. இந்த வெட்டுமுகத்தில் இலையிலுள்ள இரண்டொரு.
(பு
பE -
"144' "T
| உரு. 22
இலையின் உள்ளமைப்பு Cய புறத்தோல்; U.E, மேற்றோல்; (மேற்பக்கம்) S.', கடர் பஞ்சுக்கலங்கள்; S.T. இலைவாய்; G.C. காவற்கலம்; TF உரியக் கலங்கள்; Xy. காழ்க் கலங்கள், நரம்புகளும் காணப்படலாம். நரம்பு என்பது தண்டி லுள்ள கலன் கட்டுகளின் கிளையாதலால், அதில் காழ்க்கலங்களும் டரியக் கலங்களும் காணப்படும். வெல்லம் போன்ற உணவுப்பதார்த்தங் களைப் பரும்படியாகச் செய்தற்கு வேண்டிய மண்ணீரைக் காழ்க்

அங்குரத் தொகுதி - பசிய இலை ஒன்றின் அமைப்பு 34
கலங்கள் இலக்குக்கொண்டு வருகின் றன, தாவரங்களின் வேர் மயிர்களால் உறிஞ்சப்பட்ட மண்ணிரே உணவுப்பதார்த்தங்களை - ஆக்குவதற்கு இலையில் பயன்படுத்தப்படுகின்றது. இலையில், ஆக்கப்பட்ட உணவுப்பதார்த்தங்களை, உரியக்கலங்கள் தாவர வுடலின் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லும்.
வினாக்கள் 1. நலிந்த தசண்டாவது யாது? அதன் வகைகளைக் கூறி
உதாரணங்கள் தருக! 2. ஒரு பசிய இலையினா து வெளிப்பக்க, உட்பக்க அமைப்பை
விவரிக்க.
செய்முறைப் பயிற்சிகள் 1. செவ்வரத்தை, மாமரம் முதலிய சாதாரண தாவரங்களின் இலைகளை வரைந்து, பகுதிகளுக்குப் பெயரிடுக.
2. ஒரு சாதாரண பசிய இலையின் குறுக்கு வெட்டுமுக மொன்றைத் தாழ்வலுவுள்ள நுணுக்குக் காட்டியின் கீழ்வைத்து
ஆராய்ந்தபின், பகுதிகளுக்குப் பெயரிடுக.
| 3, வெற்றிலையின் கீழ்பக்க மேற்றோலை உரித்து எடுத்து அதிலுள்ள இலேவா ய்களே ஆராய்ந்தறிசு,
4. வேறுபடுத்தப்பட்ட இலைகளுள்ள பின்வரும் மாதிரிகளை வாக.
(1) ஒரு சுத்தசு (இலைகள் முட்களாக வேறுபடுத்தப் பட்டி ருத்
தலைக் காட்டுதல் ). (2) பட்டா1111 i=hl 1, காந்தள் (இலைகள் பற்றிகளாகவோ
- படுத்தப்பட்டிருத்தலைக் காட்டுதல்) (3) சவும்.குரம் (இலைகள் செதில்களாக வேறுபடுத்தப்பட்டிருத்
தஃலக் காட்டுதல்), (4) சவ்வுப்பையு நப்பூண்டு (இலைகள் சவ்வுப்பையாக வேறுபடுத்தப்
பட்டிருத்தலைக் காட்டுதல்). (5)
கெண்டி தாவரம் (இலைகள் கெண்டியாக வேறுபடுத்தப்பட்டி
ருத்தலைக் காட்டுதல்). பாக்சிக்ரோனியா (இலைகள் இல்லபுரைகாம்பாக வேறுபடுத் தப்பட்டிருத்தலைக் காட்டுதல்). எலுமிச்சை (இலைகள் சிறகுள்ள காம்பினையுடையனவாக வேறுபடுத்தப்பட்டிருத்தலைக் காட்டுதல்).
E

Page 27
பி)
அத்தியாயம் 8
ஒளித்தொகுப்பு
பசிய தாவரங்கள், சூரியவொளியில், வளிமண்டலத்திலிருந்து காபனீரொட்சைட்டையும், மண்ணிலிருந்து நீரையும் பெற்றுக்' காபோவைதரேற்றுப்போன்ற சிக்கலான உணவுப் பதார்த்தங் களை ஆக்கி, ஒட்சிசனை வெளிப்படுத்தும் செயன்முறை ஒளித் தொகுப்பு அல்லது காபன்றன்மயமாதல் எனப்படும். எனினும், இச் செயன்முறையில் பசிய நீர்த்தாவரங்கள் நீரிற் கரைந்திருக்கும் காபனீரொட்சைட்டையே உறிஞ்சுகின்றன, சூரியவொளியுள்ள போது (பகற்காலத்தில்) பசிய தாவரங்கள் ஒட்சிசனை வெளிப் படுத்துகின்றன என்பதைப் பரிசோதனை வாயிலாக நிறுவலாம்,
நீரினுள் அமி .. ஒன்றினுள் 2 தலைகீழாக
பரிசோதனை; ஐதிரில்லா போன்ற நீர்த்தாவரம் ஒன்றினை நீருள்ள கண்ணடித்தாழி ஒன்றினுள் இடுக. இட்டபின், அதனை அகன்ற வாயுள்ள ஒரு புனவினால் மூடிவிடுக. மூடியிருக்கும் புனல் முழுவதும் நீரினுள் அமிழ்ந்திருக்குமாறு செய்துகொள்க.
13
சோதனைக்குழாய் ஒன்றினுள் நீர் நிறைத்து, அதனைப் புனல் (தண்டின்) மீது தலைகீழாகக் கவிழ்த்துவிடுக. இப்பொழுது, இள் ஆய்கருவி யைச் சூரியவொளியில் வைத்து விடுக. சூரிய வொளி அதிகமாயிருக்குமாயின், பெரும் பாலும், உடனே வாயுக்குமிழிகள் ஐதிரில்லர் வினின்றும் வெளிப்பட்டுச் சோதனைக் குழா யினுள் சென்று சேரும். போதுமான அளவு
வாயு சோதனைக் குழாயுள் சேர்ந்த பின்னர், உரு. 23
அதன் வாயைக் கைப்பெருவிரலால் மூடிக் ஒளித்தொகுப்பு
கொண்டு, அதனைக் கவனமாக வெளியே பரிசோதனை எடுத்துக்கொள் க சோதனைக்குழாயினுள் 02 ஒட்சிசன் செஞ்சூடுள்ள குச்சி ஒன்றைப் புகுத்துவத
னால், அதன் உள்ளிருக்கும் வாயு என்ன வென்பதைச் சோதித்தறிக. அக்குச்சி உட்புகுத்தப்பட்டவுடன் மிகத் துலக்கமாக வெடித்து எரிவதைக் காண்பாய். எனவே, அதனுள் இருக்கும் வாயு ஒட்சிசனேதான் என்பதை அறியலாம்.

ஒளித்தொகுப்பு
4T
---
ஒளித்தொகுப்பின் போது தாவரம் காபனீரொட்சைட்டிலிருந்து காபனைப் பிரித்தெடுக்கின்றது: பிரித்தெடுத்து நீரிலுள்ள ஒட்சி சன் ஐதரசன் என்பவற்றுடன் சேர்த்துக் காபோவைதரேற்று ஆக்குகின்றது. இக்காபோவைதரேற்றுப் பெரும்பாலும் குளுக் கோசாகவே இருக்கும். (குளுக்கோசு என்பது திராட்சை வெல்லம், காபோவைதரேற்று என்பது காபன், ஐதரசன், ஒட்சிசன் என்ப வற்றலாகிய சேர்வை (கூட்டுப் பொருள்; காபோவைதரேற்றிற் சேர்ந்திருக்கும் ஐதரசனும் ஒட்சிசனும் நீரிற் கலந்திருக்கும் (H,0] விகிதசமப்படி அமைந்திருக்கும்). காபனீரொட்சைட்டி லிருந்து காபனையும் ஒட்சிசனையும் பிரித்துக் கூறு செய்தல் மிக வும் கட்டமான ஒரு செயன்முறையாதலால், அதனை நிகழ்த்து வதற்கு அதிக அளவான சத்தி தாவரத்திற்குத் தேவைப்படுகின் றது. இச்சத்தி சூரியனிலிருந்து ஒளி வடிவில் தாவரத்தால் பெற் றுக்கொள்ளப்படுகின்றது. தாவரமானது தனக்கு வேண்டிய இச் சத்தியைத்தானே சிருட்டித்துக்கொள்ள முடியாது, எனவே, சூரிய ஒளியிலிருந்து சத்தியைப் பெறுகின்றது. ஒளித்தொகுப்பின் போது நிகழும் இரசாயன மாற்றங்களை நடைபெறச் செய்தற் காகத், தாவரங்களில் (இலைகளில் பெரும்பாலும் காணப்படும்) உள் ள பச்சை நிறப்பதார்த்தமாகிய பச்சையம் சூரிய ஒளியிலுள்ள சத்தியின் ஒருபகுதியை உறிஞ்சக் கூடியதாய் அமைந்திருக்கின் றது. (பச்சையத்தினால் சூரியவொளியிலிருந்து உறிஞ்சப்படும் சத்தி கதிர்வீசுஞ்சத்தி எனப்படும். இச்சத்தி இலையில் ஆக்கப் படும் காபோவைதரேற்றின்கண் நிலைப்பண்புச்சத்தி வடிவத் தில் மறைவாகச் சேமித்து வைக்கப்படும். இக்காபோவைத ரேற்றிலுள்ள நிலைப்பண்புச் சத்தியே தாவரத்தின் உடலியற் றொழில்களுக்கு இயக்கப்பண்புச்சத்தியாகப் பயன்படுகிறது).
ஒளித்தொகுப்பின்போது நிகழும் இரசாயன எதிர்த்தாக்கம் பற்றிய முழுச் செயன்முறையையும் பின்வருமாறு சுருக்கிக்
கூறலாம்:
"ஒளித்தொகுப்பின்போது காபனீரொட்சைட்டான து காபம் ஈட்சிச 4ாரமாகப் 41பிரிக்கப்படுவதில் நபயென்றும், நீரே ஐதாச டம் ஒட்சிச 11மாகப் பிரிக்கப்பட்ட நீரிலுள்ள ஒட்சிசனே வெளியேறுகிறதென்றும். நீ சிலுள்ள ஐதரசன் காபனீரொட்சைட்டுடன் சேர்ந்து பல படி முறைகள் இரசாயன மாற்றங் களே அடைந்து. ஈற்றில் மாப் பொருள் (காபோ:533வதரேற்று) ஆகின்றதென்றும், ஆகவே, தாவரத்தினரின் றும் வெளி யே றும் ஒட்சிசன் நீரின் றேயன் நிக் காபரொட்1ை.சட்டின் பல்லவென்றும் இக் காயத் தாவரவியயறிஞர் ஆராய்ச்சிகளின் போகக் கண்டுள்ளார்கள் என்பது. ஈங்ழ் -கவரிக்கற்பா சிப்து.

Page 28
உயிரினவியல்
காபனீரொட்சைட்டு+நீர் + சூரியவொளிச்சத்தி -
(பச்சையம்) வெல்லம் - ஒட்சிசன்
ஒளித்தொகுப்பின்போது முதன்முதலாக உண்டாக்கப்படும் பதார்த்தம் குளுக்கோசு எனப்படும் பொது வெல்லம் ஆகும். ' (குளுக்கோசு திராட்சைவெல்லம் எனவும் பெயர் பெறும்). அது வருமாறு:
6 காஓ +6m.ஓ-சு, ரியவொளிச்சத்தி -
(பச்சையம்) கா ஐ.ஓ., -லே,
குளுக்கோசு நன்கு கரையுந்தன்மை உள்ள து; ஆதலால் அஃது உரியக்கலங்களரினூடாகத் தாவரத்தின் ஏனைய பகுதிகளுக் குக்கொண்டு செல்லப்படுகின்றது. தாவரத்தின் தேவைக்கு மேலதிகமாக உண்டாக்கப்படும் குடிக்கோசான து, தற்காலிக மாக, மாப்பொருள் வடிவத்தில் இலைகளிற் சேமித்து வைக்கப் படும், அச்செயன்முறை பின்வருமாறு:
பா, ஐ, ஓ. + 41. ஐ.ஏ. + 2 + (குளுக்கோசு) (மாப்பொருள்) (நீர்)
பிந்தியோ, முந்தியோ.- எந்த நேரத்திலாவது சேமித்து வைக்கப்பட்ட மாப்பொருளானது, மீண்டும் குளுக்கோசாக மாற் றப்பட்டுத் தாவரத்தின் ஏனைய பகுதிகளுக்குக் கொண்டு செல் லப்படும்.
கா, 11, H. + 3 4 + கா, 11 + 1 (மாப்பொருள்) (நீர்) (குளூக்கோசு) பசிய இலையில் முதன்முதல் கட்புலனுகக் கூடிய பொருள் மாப் பொருளே ஆகும். குளுக்கோசு போன்ற வெல்லங்கள் நன்கு கரையுந்தன்மை உடையனவாதலால், அவை உண்டாக்கப்பட்ட உடனேயே இலையினின்றும் தாவரத்தின் ஏனைய பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்படுகின் றனவாதலால், மாப்பொருள் மட்டுமே இலையிற் காணப்படும்.
ஒளித்தொகுப்பின் முடிவுவிளைவுகள் மாப்பொருளும் ஒட்சிசனு மேயாமென இப்பொழுது கண்டோம். இலைகளிலுள்ள இலைவாய் களின் வாயிலாக ஒட்சிசன் வெளியேறும். இலைகளின் பசிய கலங்களில் நிலையின்றிச் சேமித்து வைக்கப்படும் மாப்பொருள் !

ஒளித்தொகுப்பு
11
ஈற்றில் வெல்லமாக மாற்றப்பட்டு, இரவு நேரத்தில் தாவரத்தின் ஏனைய பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்படும். வெல்லம் இவ் வாறு அப்புறப்படுத்தப்படுஞ் செயன்முறைக்குக் கொண்டு செல்லல் என்று சொல்லப்படும். வேறு சில மூலகங்களையும் காபோவைத ரேற்றுகளுடன் சேர்த்துப் புரதங்கள், கொழுப்புகள் என்பவற்றை ஆக்கும் வல்லமையும் தாவரங்களின் பசிய கலங்கட்கு உண்டு. (17 ம் அத்தியாயம் காண்க). கரையுந் தன்மையுள்ள இவ் உண வுப் பதார்த்தங்கள் எல்லாம், உரியக் கலங்களினூடாகப் பல் வேறு சேமிப்பிரையங்கட்கும், சேமிப்புறுப்புகளுக்கும் கடத்தப்பட்டு, ஆங்கு சேமித்து வைக்கப்படும். வேர்களின் மேற்பட்டையிலுள்ள கலங்களிற் சில சிறந்த சேமிப்பிழையங்களாக அமைகின்றன. விந்திப்பாள் வித்துகளிலுள்ள விந்நகவிரையம், படிப்பள், முகிழுருவேர் சுள், சதையுள்ள தண்டுகள், சாறுள்ள இலைகள், நிலக்கிழ்ந் தாண்டுகள் முத லியன தாவரங்களிற் காணப்படும் பல்வேறு சேமிப்புறுப்புகளா கும், இனிவற்றளை, மரவள்ளரி, பிற்றுக்கிழங்கு, காற்று, முள்ளங்கி முதலியன யாம் நன்கறிந்த முகிழுருவேர்களாகும். பல கத்தசு இனங்களில் சதையுள்ள தண்டுகளும் கிளைகளும் காணப்படுகின்றன. (உ-ம். நாகதாளி, கள்ளி), சதைகரைர்ரானிலும் பல கற்றாழை இனங்களிலும் சாறுள்ள இலைகள் உண்டு. இஞ்சியின் வேர்த்தண்டுக்கிழங்குகள், உருளைக்கிழங்கின் முகிழ், ரேம்பின் தண்டுக்கிழங்கு போன்ற நிலக் கீழ்த்தண்டுகள் ஏராளமான ஒதுக்கவுணாவை உடையன. (15 ம் அத்தியாயம் காண்க.) வெங்காயத்தினது சதையுள்ள செதிலிலை களிலும் ஒதுக்கவுணவு நிரம்ப உண்டு.
மாப்பொருளுக்குரிய சோதனை: சூரியவொளியில் சில மணி நேரம் வரை இருந்த இலை ஒன்றினைக் கொதித்துக் கொண்டிருக்கும் அற்க கோலில் இட்டு, அதில் உள்ள பச்சையத்தைப் பிரித்து வேறாக் கிக்கொள்க. இலை முழுவதும் நிறமற்று (வெளிறிப் போனபின், அதனை நீரில் நன்கு கழுவி எடுத்துக்கொண்டு, அயடீன் கரைச லில் சில துளிகளை அதன் மீது விட்டுக்கொள்க. உடனே, அவ் இலை கருநீல நிறமாக மாறும். மாப்பொருள் உண்டு என்பதைக் காட்டுவதற்கு, இஃது ஒரு செம்மையான சோதனையாகும். -
ஒளித்தொகுப்பு நிகழுவதற்கு மூன்று முக்கிய நிபந்தனைகள் தேவையென்பது இப்பொழுது தெளிவாகின்றது. அவையாவன: - பச்சையம் சூரியவொளி, காபனீரொட்சைட்டு என்பனவாம்,
பச்சையம் என்பது ஒரு பச்சை நிறப் பொருள் எனப் பொது - வாகக் கருதப்படினும், அது நான்கு வித்தியாசமான நிறப்

Page 29
-44
உயிரினவியல்
பொருள்களின் கலவையாகும். இந் நிறப்பொருள்கள் கலங்களின் முதலுருவில் உள்ளன. அவையாவன: பர்ரையம்.1, பச்சையம்-b, கரற்ற்ன், சந்தோபில் என்பனவாம், அவற்றுள், பச்சையம்-3 காபன் ரா ஐதரசன் ஒட்சிசன், நைதரசன், மகனீசியம் (0, H,, 0, N, Mg) என்பன சேர்ந்த நீலப்பச்சை நிறப்பொருள் ஆகும். பச்சை யம்-h என்பது காபன்.. ஐதரசன், ஒட்சிசன் நைதரசன், மகனி சியம் (0, I,, 0, N, Mg) என்பன சேர்ந்த பச்சைநிறப்பொருள் ஆகும். கரற்றீன் என்பது காபன், ஐதரசன். (0,, Hz) சேர்ந்த செம்மஞ்சள் நிறப்பொருள் ஆகும். சந்தோபில் என்பது காபன் ,, ஐதரசன், ஒட்சிசன், (0, H. 0,) சேர்ந்த மஞ்சள் நிறப்பொருள் ஆகும், இந்நான்குவகை நிறப்பொருள்களும் பின்வரும் விகிதத் திற் கலந்துள்ள கலவையே பச்சையம் எனப்படும். அவற்றின் கலப்பு விகிதம் வருமாறு: பச்சையம்-{1, பச்சையம்-h என்பவற் றில் ஆறு பங்குகளுக்குக் கரற்றீன், சந்தோபில் என்பன இரண்டு பங்குகள் கலந்திருக்கும், பச்சையஞ்சேர்ந்த அற்ககோல் கரை சிலை எப்படி ஆக்கலாமென்பது முன்னரே விவரிக்கப்பட்டுள்ளது. செலுத்தப்பட்ட ஒளியில், பச்சையம் துலக்கமான பச்சை நிற மாகவும், தெறிக்கப்பட்ட ஒளியில் கருஞ்சிவப்பு நிறமாகவும் தோற்றும்.
பச்சையம் உண்டாதற்கும் சூரியவொளியும் இரும்பும் தேவைப் படுகின்றன, பச்சைய மூலக்கூற்றில் இரும்பு இருப்பதில்லை; எனினும், இரும்பு மண்ணில் இருந்தாற்றான் பச்சையம் உண் டாக முடியும். இது வினோதமாகத் தோன்றினும், உண்மையில் அப்படித்தான். அவரைநாற்றை இருட்டில் வளரும்படி விடப் படின், அவற்றில் பச்சையம் உற்பத்தி செய்யப்படாது. மற் று. அவை வெளுத்துவிடும். வெளுத்த தாவரத்தின் இலைகள் மிகச் சிறியன வாயும், அசாதாரணமாக நீண்ட கணுவிடைகளை உடை யனவாயும் வெளுத்த மஞ்சள் நிறமுடையனவாயும் காணப்படும். இரும்பு இல்லாத மண்ணில் (அல்லது நாடகத்தில்) வளர்க்கப் பட்ட தாவரத்தின் இலைகளும் பச்சையத்தை உண்டாக்கமாட்டா. அது வெளிறிப்போம், அத்தகைய தாவரம் வெளுத்தமஞ்சள் நிற முடையதாயும், வளர்ச்சி குன்றிக் குட்டையாயும் இருக்கும்.
பச்சையம் ஒளித் தொகுப்புக்கு ஆவசிகம் என்பதைக் காட்டும் பரிசோதனை: சூரியவொளியில் சில மணி நேரம் இருந்த, பன்னிற - முள்ள,- மஞ்சள் நிறப்புள்ளிகளுள்ள, - குரோட்டன் இலை போன்ற ஓரிலையை எடுத்துக்கொள்க. அவ் இலையினது வெளி

ஒளித்தொகுப்பு
45
யுருவப்படம் ஒன்றை வரைந்துகொள் க. வெளியுருவப் படத்தில் பச்சை நிறமுள்ள பகுதிகளுக்கு நிழல் நிறம் மாட்டிவிடுக. இப் பொழுது, அவ் இலையைக் கொதித்துக்கொண்டிருக்கும் அற்க கோலில் இட்டு, நிறமற்றுப் போகும்படி செய்தபின், முன்னரே போல மாப்பொருட் சோதனையைச் செய்க. மாப்பொருளானது இலையினது பச்சை நிறமுள்ள பகுதிகளில் காணப்படுவதை
உரு. 24 பச்சையம் ஒளித்தொகுப்புக்கு ஆ, வசிகம்- பரிசோதனை
1 பன்னிறமுள்ள குரோட்டன் இலை (பச்சையமுள்ள இடங் கள் புள்ளியிடப்பட்டுள்ளன), B பச்சையத்தைப் போக்கியபின் அயடீன் கரைசலில் இடப்பட்ட இலை (பச்சையம் இருந்த இடம் கறுப்பாக இருக்கிறது).
நோக்கலாம். வெளியுருவப்படத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இந்த உண்மை விளங்கும், இலையின் மஞ்சள் நிறப் பகுதிகளில் மாப்பொருள் ஆக்கப்படவில்லை. காரணம்: பச்சை யம் இன்மையே.
சூரியவொ ளி ஒளித்தொகுப்பிற்கு அவசிகம் என்பதைக்கட்டும் பரிசோதனை : ஒரு தாவரத்தில் இருக்கும் இலையினது ஒரு பகுதியின் இரு பக்கங்களையும் கறுப்புக் கடதாசியால் மூடிவிடுக. அவ் இலையை அத்தாவரத்தில் (இருந்தபடியே இருக்குமாறு) அடுத்தநாள் பின்னேரம்வரை விட்டுவிடுக. பின்னர், அவ் இலையைப் பிடுங்கி,

Page 30
ப4)
உயிரினவியல்
முன்ன ரேபோல் நிறமற்றுப்போகச் செய்ததின் மேல் மாப் |-- பொருட் பரிசோதனை செய்க. அவ் இலையின் மூடப்படாத
உரு. 25 சூரியவொளி ஒளித்தொகுப்புக்கு ஆவசிகம்-பரிசோதனை
A B.P. வட்டவடிவமான கறுப்புக் கடதாசி; 3 கடதாசியி ஆனால் மூடப்பட்ட இடம் கருநிறமாக மாறவில்லை.
பகுதி (சூரியவொளி பட்ட பகுதி)யில் மாப்பொருள் இருப்பதைக் காணலாம்,
ஒளித் தொகுப்புக்குக் காமனிரொட்சைட்டு ஆவசிகம் என்பதைக் காட்டும் பரிசோதனை: ஒரு பூச்சட்டியில் வளர்க்கப்பட்ட ஒரு சிறிய அவரைச் செடி இப்பரிசோதனையை நிகழ்த்துவதற்குப் போதுமானது. அவரைச்செடியின் இலைகளில் மாப்பொருள் அறவே இல்லை என்பதைப் பரிசோதனையைத் துவங்கமுன்னரே நிச்சயப்படுத் திக்கொள்ள வேண்டும். மேற்படி செடியைச், சில மணி நேரம் (அல்லது இரவு முழுவதும்) இருட்டில் வைப்பதனாலேயோ, காலையில் பரிசோதனையை நிகழ்த்து வதனாலேயோ, இதனை யாம் சாதிக்க முடியும். வாய் அகன்ற போத்தல் ஒன்றும் அதற்கு உகந்த இறுக்கமான தக்கை ஒன்றும் எடுத்துக்கொள்க. தக் கையை (சரி பாதியாக) இரண்டாகப் பிளந்து கொள்க. பிளக்

ஒளித்தொகுப்பு
4T
கப்பட்ட தக்கையின் இடையில் மேற்படி அவரை இலை ஒன்றை, -அதன் ஒரு பகுதி போத்தலினுள்ளும் மற்றைய பகுதி போத்த."
லின் வெளியிலும் இருக்குமாறு செ ய் த பி ன். தக்கையினால் போத்தலின் வாயை இறுக்க மாக மூடிவிடுக. போத்தலின் உள்ளே ஓரளவு எரிசோடா வையோ, ஏரிபொற்றசையோ, போத்தலை மூட முன்னதா
கவே இட்டுவிடுக. இவ் இர NCH சாயனப் பொருள்கள் காபனீ
ரொட்சைட்டை உ றி ஞ் சும்
வலுவுடையன. இவ் ஆய்கரு உரு. 20
வியைத் தாள் ஒன்றின் ஆதர ஒளித்தொகுப்புக்குக் காபனீ
வில் வைத்துச், சில மணி ரொட்சைட்டு ஆவசிகம் -
நேரம் சூரியவொளி விழுமாறு பரிசோதனை
செய்க, பின்னர், அவ் இலை A-CO, போத்தலில் காபனீரொட் யைப் பறித்து நி ற ம ற் று ப் சைட்டு இல்லை; Nாப் எரிசோடா போகும்படி செய்தபின், மாப்
பொருட் பரிசோதனை செய்து கொள்க. போத்தலினுள்ளே இருந்த இலையின் பகுதியில் மாப் பொருள் இல்லாமையையும், வெளியிலிருந்த பகுதியில் மாப் பொருள் இருப்பதையும் காண்பாய். போத்தலினுள்ளே இருந்த இலையின் பகுதி காபனீரொட்சைட்டைப் பெறமுடியாமையினா லேயே மாப்பொருள் ஆக்கவில்லை.
சூரியவொளி இருக்கும் வரைக்கும் (பகற்காலத்தில்) பச்சை நிறமுள்ள வேலிக்கார்கலரிங்களிலும் கடற்பஞ்சுக்கலங்களிலும் காபோவைதரேற் று ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மேற்படி பரிசோதனை கள் வாயிலாக யாம் அறிந்து கொள்ள வாம், குழாய் போன்ற காழ்க்கலங்களினூடாகக், கனிப்பொரு (ளுப்புகள் கரைந்த நீர். இக்கலங்களுக்குக் கொண்டுவரப்படுகின் றது. இலைவாய்களினூடாக உறிஞ்சப்படும் காபனீரொட்சைட்டு இலைநடுவியைக்கலங்களினிடையே விரைவாகப் பரம்புகின்றது. அதுபோலவே, இலைகளில் உண்டாக்கப்படும் ஒட்சிசனும், இலை வாய்களினூடாக வெளிப்படுத்தப்படுகின்றது. சூரியன் மறைந்த பின்பு, இலையானது ஒரு தொழிலுமின்றி வாளாவிருக்கின்றதென நினைத்தல் தவறு. மாப்பொருளைப் படிப்படியாகத் திராட்சை 'வெல்லம் (குளுக்கோசு) ஆக மாற்றுஞ் செயன்முறை இருட்

Page 31
48
உயிரினவியல்
டிலே (இரவிலேயே நடைபெறுகின்றது. ஆனபடியாற்றான். சில மணி நேரம் இருட்டில் வைக்கப்பட்ட செடி (அல்லது காலையில்மாப்பொருளுக்காகச் சோதிக்கப்படும் செடி )யில் மாப்பொருள் இருப்பதில்லை. குளுக்கோசு என்னும் வெல்லம் நீரிற்கரையுந் தன்மையுடையது. இவ்வெல்லம் ஒவ்வொரு கலமாகக் கடந்து சென்று, ஈற்றில் உரியக் கலங்களை அடையும். உரியக்கலங்கள் வெல்லத்தைத் தாவரவுடலின் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்கின்றன.
வினாக்கள்
ஒளித்தொகுப்பு என்பதன் பொருள் யாது? அது நிகழ் வதற்கு இன்றியமையாத நிபந்தனைகள் யாவை? அந் நிபந்தனைகளுள் யாதேனும் ஒன்றை நிறுவிக்காட்டவல்ல ஒரு பரிசோதனையை விவரிக்க. பச்சையம் என்பது யாது? அதன் பல்வேறு கூறுகள் யாவை? பச்சையம் உண்டாக்கப்படுவதற்குரிய நிபந்.
தனைகள் எவை எனக் கூறுக. 3. தாவரங்கள் வெளுத்துப்போதல் எதனால்? இதனைக்
காட்டவல்ல பரிசோதனை ஒன்றை விவரிக்க.
2,
செய்முறைப் பயிற்சிகள்
1. ஐதிரில்லா போன்ற ஓர் நீர்த்தாவரத்தில், ஒளித்தொகுப்பு நிகழுமாற்றைக் காட்டும் ஒரு பரிசோதனையைச் செய்க; அதனை வரைந்து விவரிக்க.
2. பசிய இலை ஒன்றை மது சாரத்திலிட்டு (மிகக் கவனமாக) கொதிக்க வைத்தபின், நீரிற் கழுவி, அயடீன் கரைசலிற் சிலதுளிகளை அதன்மீது விடுக. அது கருநீல நிறமாக அல்லது கரு நிறமாக மாறி, மாப்பொருள் இலையில் உண்டென்பதைக் காட் டும்.
3. சிறிதளவு அரிசிமா (மாப்பொருள்) உடன் நீரைக் கலந்த பின், அயடீன் கரைசலில் சில துளிகளை அதன்மீது விடுக.
4. சூரியவொளியும், காபனீரொட்சைட்டும் ஒளித்தொகுப் புக்கு ஆவசிகம் என் பதைக் காட்டும் (பாடபுத்தகத்தில் விவரிக் கப்பட்ட) பரிசோதனைகளைச் செய்க.

தாவரங்களின் சுவாசித்தல்
1 பூ
5. சூரியவொளியில் இருக்கும் பன்னிறமுள்ள குரோட்டன் இலைகள் சிலவற்றை வெளிறச் செய்தபின் மாப்பொருளுக்குரிய சோதனையைச் செய்க.
6. மரத்தாசு உள்ள ஒரு சட்டியில் அவரை நாற்றுக்களை உண்டாக்கி, நன்றாக நீரூற்றியபின், அதனை ஒரு அலுமாரியி னுள் ளே வைத்துவிடுக. ஏறத்தாழ ஒரு கிழமை சென்றபின், அவரை நாற்றுக்கள் வெளிறிப்போயிருத்தலைக் காண்பாய், கார ணத்தைக் கண்டறிக.
அத்தியாயம் 9 தாவரங்களின் சுவாசித்தல்
உயிர்வாழ்வதற்கு இன்றியமையாத செயன்முறைகளை நிகழ்தி துவதற்கு வேண்டிய சத்தியைப் பெற்றுக்கொள்வதற்காகத் தாவ ரங்களும், ஏனைய உயிர்ப்பொருள்களைப் போலவே சுவாசிக்கின்ரன, சிறப்பாகக் காபோவைதரேற்றுகளிலும், பொதுவாக ஏனைய உணவுப்பதார்த்தங்களினது மூலக்கூறுகளிலும் 'அடைபட்டுக் கிடக்கும்' சத்தியிலிருந்தே, இச் சத்தி பெற்றுக்கொள்ளப்படு கின்றது. இச்சத்தியை வெளியிடுதற்கு உணவுப்பதார்த்தங்கள் தனித்தனி எளிய பதார்த்தங்களாகப் பிரிக்கப்படவேண்டும்; அல்லது ஒட்சியேற்றப்படவேண்டும். இவ் ஒட்சியேற்றச் செயன் முறையால் காபனீரொட்சைட்டு, நீர் ஆகிய கழிவுப்பொருள்கள் உண்டாகின்றன. ஆகவே, சுவாசித்தலுக்கு வேண் டிய ஒட்சிசன் வளியிலிருந்து பெற்றுக்கொள்ளப்படுகின்றது; காபனீரொட் சைட்டும் நீரும் சத்தியுடன் கூட உண்டாக்கப்படுகின்றன. இச் சத்தியின் ஒரு பகுதி, வெப்பமாகத் தோன்றுகிறது. உயிருள்ள கலங்கள் ஒவ்வொன்றும் இடையீடின் ரிச் சுவாசித்துக்கொண்டிருக் கின்றன, சுவாசித்தற் செயன்முறையின் போது ஏற்படும் இரசா யன எதிர்த்தாக்கத்தைப் பின்வருமாறு குறித்துக்காட்டலாம்.
காபன் ஜதரசன், ஒட்சிசன், +ஒேட்சிசன்,கோபனீரொட்காட்டு.
+ஜேதரசன், ஓட்சிசன் - சத்தி (0, 11, 20, +60+600, +611,0-IENIERCIX) (குளுக்கோசு +ஓட்சிசன்டிகாபனீரொட்சைட்டு- நீர்+சத்தி)
- 215 ;

Page 32
50
உயிரினவியல்
ஆகவே, ஒளித்தொகுப்புக்கு நேர்டாருனா செயன்முறை சுவா சித்தல் ஆகும். தாவரங்களின் சுவாசித்தலுக்கு (வளியில் கலந் திருக்கும்) கட்டின் றிய ஒட்சிசன் இன்றியமையாததேனும், உயிர்ப் புள்ள விலங்குகளைப்போல, அவை, ஒட்சிசனை மிக விரைவாகப் பயன்படுத்துவதில்லை, தாவரங்களில் ஒளித்தொகுப்புச் செயன் முறை தீவிரமாக நடைபெறுவதால், சுவாசித்தற் செயன்முறை அவ்வளவு வேகமாக நடைபெறுவதில்லை, எனினும், தாவரங் களில் உயிர்ப்புடன் வளரும் பகுதிகள் (உதாரணமாக, முளைக். கும் வித்துகள், அலரும் பூவரும்புகள், பழுக்கும் பழங்கள் முத லியன) அதிக அளவான ஒட்சிசனைப் பயன்படுத்துவதனால், அதிக அளவான காபனீரொட்சைட்டும் வெப்பமும் வெளியிடப் படுகின் றன,
சுவாசித்தலக்காட்டும் பரிசோதனை: உரு. 27 இல் காணப்படுவது போன்று, ஆய்கருவியை ஒழுங்கு செய்துகொள்க. வளியிழு
ட்பு -
உரு. 27 தாவரங்கள் சுவாசித்தல் - பரிசோதனை S.L. எரிசோடா; L. W. பேரியமைதரொட்சைட்டு; "A வளி யிழுகுடுவை.
குடுவை வேலை செய்யும்பொழுது, காபனீரொட்சைட்டை உறிஞ் சும் எரிசோடா இருக்கும் (SL எனப் பெயரிடப்பட்ட) குழாய் வழியாக, வளி உள்ளே இழுக்கப்படுகிறது. இவ்வாறாகக் காபனீ ரொட்சைட்டு இன்றிய வளி. தெளிவான பேரியமைதரொட்சைட் டுக்கரைசல் உள்ள குடுவையினூடாகப், பூச்சட்டியில் உள்ள தாவரத்தினைக் கொண்டிருக்கும் குடுவைக்குள் நுழைகிறது. இவ் வளியான து, பின்னர், அடுத்த குடுவையிலுள்ள பேரியமைத ரொட்சைட்டுக்கரைசலைப் பால் நிறமாக மாற்றிவிடுகின்றது. எனவே, பேரியமைதரொட்சைட்டுக் கரைசலுள்ள குடுவையுட்

தாவரங்களின் சுவாசித்தல்
51 ,
புகுந்தவளியில் காபனீரொட்சைட்டு இருக்கிறது என்பதையும், இக்காபனீரொட்சைட்டுப் பூச்சட்டியிலுள்ள தாவரத்திலிருந்தே உண்டாகியிருக்க முடியும் என்பதையும், இப்பரிசோதனை காட்டுகின்றது.
ஒரு சில உயிர்ப்பொருள்கள் ஒட்சிசன் இன்றியே உணவுப் பதார்த்தங்களிலிருந்து சத்தியை வெளிப்படுத்தும் வலுவுடையன, வெல்லக்கரைசலில் நொதிக்கலங்கள் சிலவற்றை விருத்தியாகும்படி விடுவோமேயானால் அவை, அக்கரைசலில் நெடுச்சந்தை உண் டாக்கும். உண்டாக்கப்பட்ட நொதிச்சத்து, அவ்வெல்லக் கரைச லில் உள்ள வெல்லத்தை ஈ-தைலற்ககோல் ஆகவும், காபனீரொட்சைட்டா கவும் பிரித்துவிடும். இச் செயன்முறை காற்றின்றிய பசுவாசம் எனப் படும். இது, வளியில் உள்ள கட்டில்லா ஒட்சிசனைப் பயன் படுத்துவதனால் பொதுவாக நடைபெறுகின்ற, காற்றிற்சுவாசத்திற்கு ஒத்த செயன்முறையாகும். வளியிற்கலந்திருக்கும் கட்டில்லா ஒட்சிசன் கிடையாதபோது, முளைத்துக்கொண்டி ருக்கும் வித்து களிற் கூடக் காற்றின்றிய சுவாசம் நடைபெறுகின்றது. முளைத் துக்கொண்டிருக்கும் வித்துகளிற் பிரிந்தழியும் சில இழையங்களி லிருந்தே காற்றின் றிய சுவாசத்திற்கு வேண்டிய ஒட்சிசன் பெறப்படுகின் றது. இக்காரணத்தால் (இழையங்
25 கள் பிரிந்தழிதலினால்} காற்றின்றிய சுவாசம் மு ளை க் கு ம் வித்துகளை அழித்து விடுகின்றது. இதனால், அவ் வித்து முளை கள் இறந்துவிடுகின்றன.
(0,
பரிசோதனை: வன்மையான கண் ணடியாற் செய்த சோதனைக்குழாய் ஒன்றினுள், இரசத்தை ஊற்றி நிரப் புசு, இச்சோதனைக் குழாயை இரசம் உள்ள தாழி ஒன்றினுள் தலைகீழாகக் கவிழ்த்து நிறுத்திவிடுக. இப்பொழுது, முளைத்துக்கொண்டிருக்கும் அவரை
உரு. 28 வித்துகள் சிலவற்றை அச்சோதனைக் காற்றின்றிய சுவாசம் குழாயுட் புகுத்திவிடுக. அடுத்த நாள்
பரிசோதனை வரைக்கும் இவ் ஆய்கருவியை அப் (0, காபனீரொட்சைட்டு; படியே இருக்குமாறு விட்டுவிடுக. BS அவரை வித்துகள். அடுத்த நாள் நோக்கும்போது, ஓர எவு வாயு சோதனைக்குழாயுள் சேர்ந்திருப்பதைக் காணலாம். சோதனை செய்தபொழுது, இவ்வாயு காபனீரொட்சைட்டு எனக் -காணப்படும்.

Page 33
52
உயிரினவியல்
| சுவாசத்தின்போது வெப்பம் வெளிப்படுத்தப்படுகின்றது என்பதைக் காட் டும் பரிசோதனை: உயிர்ப்புடன் சுவாசிக்கும் தாவரம் ஓரளவு வெப் பத்தை வெளிப்படுத்துகின்றதென்பதைப் பரிசோதனை வாயிலா கக் காட்டலாம், இரண்டு வெப்பக்குடுவைகளை எடுத்துக் கொள்க, அவற்றுள், ஒன் றினுள் முளைத்துக்கொண்டிருக்கும் அவரை வித்துகளையும், மற்றையதில் முளை கொள்ளமாட்டாத, உயிரற்ற (அவித்த) அவரை வித்துகளையும் இட்டுக்கொள்க. இறந்த வித்துகளை இட்ட வெப்பக்குடுவைக்குள், அவ்வித்துகள் அழுகுதலைத் தடுக்கும்பொருட்டு, மெல்லிய போமலினைச் சிறிது ளவு ஊற்றிக் கொள்க. (அழுகுதலின் போது ஓரளவு வெப்பம் வெளிப்படுகின்றது; இதனைத் தடுக்கவே போமலின் காற்றப்பட் டது). வித்துகளை இடமுன்பு. இரண்டு குடுவைகளினதும் வெப் பம் ஒரே அளவாகவே இருக்கும். ஆனால், இரண்டு மூன்று நாட்களின் பின், முளைக்கும் வித்துகளையுடைய குடுவையின் வெப்ப நிலை, மற்றைய குடுவையின் வெப்பநிலையினும்பார்க்க அதிகரித்
TE
பா.
35 -
உரு. 20 முளைக்கும் வித்துகள் வெப்பத்தை வெளிப்படுத்தல் - பரிசோதனை
T வெப்பமானி; 1,14. பஞ்சு; T.IE', வெப்பக்குடுவை; . (1,S, முளைக்கும் வித்துகள் : B.S. உயிரற்ற வித்துகள்.

தாவரங்களின் சுவாசித்தல்
5)
திருத்தலைக் காணலாம். (குடுவைகளைத் தக்கையால் அடைத்து, அவற்றுள் வெப்பமானி ஒவ்வொன்றைச் செருகிக்கொள்ள வேண் டும், உரு. 29 காண்க). முளைக்கும் வித்துகள் அதிக உயிர்ப் புடன் சுவாசித்தலால், அதிக அளவான வெப்பத்தை வெளிப் படுத்தின.
சுவாசித்தலின்போது உட்கொள்ளப்படும் ஒட்சிசனின் அள வுக்கும் சம அளவான காபனி ரோட்காட்டி வெளிப்படுத்தப்படும் என்பதைக் காட்டும் பரிசோருளா: உயிர்ப்பொருள்கள் சுவாசித்தலின்போது வெளிப் படுத்தும் காபனீரொட்சைட்டின் கனவளவு, அவற்றால் உட்கொள் பிளப்படும் ஒட்சிசனின் கண வளவுக்குச் சமனாகும்.
83.
- , ப4
உரு. 30 சுவாசித்தலின் போது வெளியிடப்படும் காபனீரொட்சைட்டு
உட்கொள்ளப்படும் ஒட்சிசனுக்குச்சமன்- பரிசோதனை 11 வடிகலன்; B அவரை வித்துகள்; R.S. சோடியமைதரொட் சைட்டுக் கரைசல் வடிக்கலனில் (உயிர்ப்புக்காட்டியில்) ஏறி நிற்றல்.
சோடி யமைதரொட்சைட்டினது செறிந்த கரைசல் உள்ள முகவை ஒன்றினுள், முளைத்துக்கொண்டிருக்கும் அவரை வித்து க ள் கொண்ட வடிகலன் ஒன்றை வைத்துக்கொள்க. ஈரஞ் செறிந்த பருத்திப்பஞ்சில் வித்துக்களை வைத்து அவை.

Page 34
54
உயிரினவியல்
முளைப்பதற்கு ஏற்ற நிலைமையை ஏற்படுத்திக் கொள்க. இரண்டு அல்லது மூன்று நாட்கள் சென்றபின் ஆய்கருவியை நோக்குக. வாலையின் கனவளவில் ஐந்திலொரு பங்கு (1) அளவிற்குச் சோடியமைதரொட்சைட்டுக் கரைசல் ஏறியிருக்கக் காண்பாய். அந்த அளவிற்கு மேல் ஏறாது இருத்தலையும் நோக்குவாய். வளி மண்டலத்திலுள்ள வளியில் ஐந்திலொரு பங்கு ஒட்சிசன் என் பதை எல்லோரும் அறிவரன்றோ? முளைத்துக்கொண்டிருக்கும் வித்துகளுக்கு அதிக அளவு ஒட்சிசன் தேவைப்படுகிறது என் பதையும் யாம் அறிவோம். எனவே, முளைத்துக்கொண்டிருக்கும் வித்துகள், வடிகலனில் உள்ள எல்லா ஒட்சிசனையும் பயன்படுத்திக் கொண்டு, அதே அளவான காபனீரொட்சைட்டை வெளிப்படுத்தி யுள்ளன என்பது, இப்பரிசோதனையால் நிறுவப்பட்டுள்ள து.
ஒளித்தொகுப்புக்கும் சுவாசித்தலுக்குமிடையே உள்ள வித்தி யாசங்கள் பின்வருமாறு:
இல.
ஓளித்தொகுப்பு
சுவாசித்தல்
1. |
பா B ++
காபனீரொட்சைட்டு உறிஞ்
ஒட்சிசன் உறிஞ்சப்படுகின் சப்படுகிறது. ஒ ட் சி ச ன்
றது. காபனீரொட்சைட்டு வெளிப்படுத்தப்படுகின்றது.
படுகின்றது. வெளிப்படுத்தப்
வெளிப்படுத்தப்படுகின்றது. சூரியவொளி இன்றியமை)
சூரியவொளி ஆவசிகமில்லை. யாதது.
பகற் காலத்தில் மட்டும் |
தொடர்ந்து நடைபெறும். நடைபெறும்.
பச்சையம் ஆவசிகம்,
பச்சையம் ஆவசிகமில்லை. தாவரத்தின் பச்சை நிற |
தாவரவுடல் முழுவதும் நடை முள்ள பகுதிகளில் மட்டுமே
பெறும். நடைபெறும்.
ஆக்கப்பாடான  ெச ய ன் |
அழிதற்பாடான செயன் முறை,
முறை. தாவரம் நிறையில் அதிகரிக்
தாவரம் நிறையிற் குறையும். கும்,
சத்தி நிலை நாட்டப்படும்.
சத்தி வெளிப்படுத்தப்படும். (உணவு வடிவத்தில் சேமி
(உணவு பிரிந்தழிகிறது) த்து வைக்கப்படுகிறது)

தாவரங்களின் சுவாசித்தல்
55
காற்றிற் சுவாசத்திற்கும் காற்றின்றிய சுவாசத்திற்குமிடையே உள்ள வித்தியாசங்கள் பின்வருமாறு:
இல.
காற்றிற் சுவாம்
காற்றின்றிய சுவாசம்
உணவு முழுவதும் ஒட்சி
உணவு பருமட்டாக ஒட்சி யேற்றப்படும்.
யேற்றப்படும். காபனீ ரொட்ன, சட்டு ம்.
காபனாரொட்சைட்டும் ஈதை நீரும் வெளிப்படுத்தப்படும்.
லற்ககோலும் வெளிப்படுத்தப்
படும். அதிக சத்தி வெளிப்படுத்
குறைவான சத்தி வெளிப் தப்படும்.
படுத்தப்படும், தொடர்ந்து நடைபெறும்.
ஒரு சில மணி நேரமே நிக
ழும், நீடித்தால் இறப்பு நிகழும். வாழ்க்கை வளம்பெறும்.
வாழ்க்கை நலிவுறும். கழிவுப் பொருள் கள் அகற்
கழிவுப் பொருள்கள் (சேரும். றப்படும்.
வளியிலிருந்து ஒட்சிசன்
மூலக் கூறுகளின் அகத்தேயி பெறப்படும்,
ருந்து ஒட்சிசன் பெறப்படும். வினைத்திறன் அதிகம்.
வினைத்திறன் குறைவு.
5.
E, T
தாவரங்கள் பகற்காலத்தில் இலைவாய்கள் வழியாகவும், இரவு நேரத்தில் (இலை வாய்கள் மூடப்பட்டிருத்தலால்) பட்டை வாய்கள் வாயிலாகவும் சுவாசிக்கின்றன. தாவரங்கள் பகற்காலத் தில் (சூரியவொளியுள்ள போது) சுவாசிக்கும்போது வெளிப்படுத் தும் காபனீரொட்சைட்டை உடனடியாகவே அவற்றின் பச்சைய முள்ள பகுதிகள் ஒளித்தொகுப்பிற்குப் பயன்படுத்திக் கொள்ளு கின் றன.
சுவாசித்தலின் போது உணவுப்பதார்த்தங்கள் ஒட்சியேற்றப் | படுகின்றன. இதனால், வெப்பமும் கழிவுப்பொருள்களும் உண்டா கின்றன. எனவே, இஃது ஒர் வெளியெறிகைச் செயன்முறையாகும். ஒளித்தொகுப்பின்போது, மாப்பொருள் ஆக்கப்படுகிறது. எனவே, இஃது ஓர் உட்சேர்க்கைச் செயன்முறை ஆகும். இவற்றுள், உட் சேர்க்கை முத,லுருவின் ஆக்கப்பாட்டிற்கும், வெளியெறிகை அதன் அழிதற்பாட்டிற்கும் காரணங்களாய் அமைகின்றன. இவ் இரு செயன்முறைகளும் தாவரங்களில் ஒரே சமயத்தில் நிகழ கின்றன. அதாவது : உயிர்ப்பொருள்களின் நல்வாழ்விற்கு இன்றி

Page 35
56
உயிரின்வியல்
யமையாத சேர்க் ைஈயெரிகைத், தொழில் தாவரங்களில் ஒரே சமயத் தில் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் என்பதாம்.
வெளியெறிகையின் போது சிக்கலான பதார்த்தங்கள் தனித் தனியாகப் பிரிகை அடைகின்றன. இதனாற் பல்வேறு பதார்த்தங் கள் உண்டாகின்றன. பிரிகையினால் காபனீரொட்சைட்டு, நீர், அமினோவமிலங்கள் என்பனவும். நொதிச்சத்துகள், செலுலோசு, அமுதம் முதலிய சுரப்புப் பொருள்களும், தானின்கள் எளிதி லாவியாகும் எண்ணெய்கள், குங்கிலியம். கனிப்பொருட் பளிங்கு கள், மரப்பால், சேதனவுறுப்பமிலங்கள், எத்தியோலின், காரப் போலிகள் முதலிய கழிவுப்பொருள்களும் உண்டாகின்றன. இக் கழிவுப்பொருள்கள் முத லுருவிற்கு ஊ ரப பயப்பனவாதலால், முத விருத் தொழிற்படும் பிரதேசத்திற்கு அப்பால் அகற்றப்படுகின் றன. இவை, மரவுரி, முதிர்ந்த இலைகள் உண் மரவைரம் சுரப்பி கள் முதலியவற்றிற் சேமித்து வைக்கப்படுகின்றன. இக்கழிவுப் பொருள்கள் பக்களிஃராவுகள் எனப்படும். இவற்றிற் சில தாவரத் தின போசனைக்கு உதவாவிடினும், வேறு வழிகளில் அதற்குப் பயன்படுகின்றன. செலுலோசு. கியூற்றின் (தோலகம்), இலிக் கினின், வாசனைப் பொருள்கள் ஆதிய இதற்கு உதாரணங்களா
கும்.
'படும் அருவி ருள் கா." எத்
வினாக்கள்
1. சுவாசித்தல் என்பதன் கருத்து யாது? இச் செயன்
முறையிலுள்ள சிறப்பு யாது? தாவரங்கள் சுவாசிக்கின் றன என்பதை, எப்படிப் பரிசோதனை வாயிலாக நிறுவிக் காட்டுவாய் என்பதை விவரிக்க. தாவரங்கள் வெப்பத்தை உண்டாக்குகின்றன என்பதைக் காட்டவல்ல ஒரு பரிசோதனையை விவரிக்க. வெப்பத் தின் முதல் யாது? பசிய இலையான து உலகத்திலுள்ள தலைமையா கனா தொழின் மனை எனச் சில வேளைகளில் விவரிக்கப்படுகின்றது. இக்கூற்றை ஏற்புடைத்தாக்குக.
செய்முறைப் பயிற்சிகள் 1. உரு. 27 இல் காட்டியபடி, ஆய்கருவியை ஒழுங்குசெய்து கொள்க. நடுவண் இருக்கும் குடுவையினுள் (செடிக்குப் பதி லாக) முளைத்துக்கொண்டிருக்கும் வித்துகள், அலர்ந்துகொண்டி

ஆவியுயிர்ப்பு
5T
ருக்கும் பூவரும்புகள், பழுத்துக்கொண்டிருக்கும் பழங்கள் மு லியவற்றைப் பிரதியீடு செய்துகொள்க. இப்பிரதியீடு காரண ! மாகப் பேரியமைதரொட்சைட்டுப் பால் நிறமாக மாறுகின்றதோ வெனக் குறித்துக்கொள்க.
2. உரு. 23 இல் காட்டியபடி, ஆய்கருவியை ஒழுங்கு செய்து கொள்க, சில நாட்கள் கழிந்தபின், சோதனைக்குழாயினுள் சேர்ந் திருக்கும் வாயுவுடன் தெளிந்த சுண்ணாம்பு நீரைக்கூட்டி, அவ்
வாயு இன்னதெனச் சோதித்தறிக.
3. சுவாசம் நடைபெறுங்கால் வெப்பம் (சத்தி) வெளிப் படுத்தப்படுகின்றதென்பதைக் காட்ட, உரு. 20 இல் உள்ளவாறு
ஆய்கருவியை ஒழுங்கு செய்துகொள்க.
4. உரு. 31 இல் காட்டி யபடி, உயிர்ப்புக்காட்டி தொடர்பான பரிசோதனைகளைச் செய்து கொள் க.
அத்தியாயம் 10
ஆவியுயிர்ப்பு ஒளித்தொகுப்பு, சுவாசித்தல் என்னும் இரு செயன்முறை களிலும் வாயுமாற்று நனடபெறுவதைக் கண்டுள்ளோம், வாயு மாற்று! ஈரமுள் ள மேற்பரப்பினூடாகவே நிகழமுடியும், ஆத -லால், வாயுமாற்றுக் காரணமாகத் தவிர்க்கமுடியாதபடி நீர் இழப்பு நேரு கின் றது. இவ்வாறு, நீர் தாவரங்களினின்றும் இழக் கப்படுதல் ஆவியுயிர்ப்பு எனப்படும், நீர், முக்கியமாக இலைகளி
ட்
உரு. 31
இலைவாயும் காவற்கலங்களும் 0 இலைவாய்; G.C, காவற்கலம்; E,0. கீழ்ப்பக்க மேற்றோற்கலம்

Page 36
58
உயிரினவியல்
னூடாகவே இழக்கப்படுதலால், ஆவியுயிர்ப்பு இலைகளின் து முக்கியமான தொழில்களுள் ஒன்றாகும். இலையிலுள்ள இகலநடு விழையக் கலங்களினது ஈரமுள்ள கலச்சுவர்களிலிருந்து ஆவி யாகும் நீர் (இலையிலுள்ள) இலைவாய்கள் வழியாக நீராவி வடி வத்தில் வெளிப்படுகின்றது. எனவே, இலையின் அமைப்பே, நீராவி இழப்பைத் தவிர்க்கமுடியாததாக்குகின்றது.
கிளிறிசிடியா (சீமைக்கிளுவை)வின் புதிய கிளை ஒன்றை (அல் லது மெல்லிய இலையுள்ள தாவரம் ஒன்றினது கிளையை) நீருள்ள முகவை ஒன்றினுள் வைத்துவிடுக. முகவையில் உள்ள நீர் ஆவியாகாது தடுக்குமாறு, இரண்டொரு துளி எண் ணெயை அந் நீரின் மீது ஊற்றிக்கொள்க. முகவையை ஒரு கண்ணடித் தட் டின் மீது வைத்து, ஈரம் சிறிதுமில்லாத ஒரு மணிச்சாடியால் மூடிவிடுக. மிக விரைவில், தாவரக்கிளையை மூடியிருக்கும் மணிச் சாடியின் உட்பக்கத்தில் நீர்த்துளிகள் சேர்வதைக் காணலாம், தாவரக்கிளையிலிருந்தே நீராவி வெளிப்படுகின்றதென்பது வெளிப் படை. இந்நீராவியே மணிச்சாடியின் குளிர்ந்த உட்பக்கத்தில் ஒடுங்கி, நீர்த் துளிகளாகக் காணப்படுகிறது.
உ.
ஆவியுயிர்ப்புச் செயன்முறை இலைவாய்களின் செல்வாக்குக்கு உட்பட்டது. காவற்கலங்களில் நீர் நிரம்புவதால், அவை வீக்க
மடைந்து பருமனில் அதிகரிக் கின்றன. அதிகரித்தலும், இலை வாய்கள் திறக்கின்றன. துலக்க மான சூரியவொளியில், இலையில் ஏராளமாக நீர் இருக்கும்போது. இவ்வண்ணம் காவற் க ல ங் கள் விங்கிப்பருத்துப் பெரிதாகலும் இலைவாய்கள் திறப்பது பொது வாக நிகழும் நிகழ்ச்சியாகும். இராக்காலத்தில் காவற்கலங்கள்
(நீர் நிரம்பியிருத்தலால் ஏற் உரு. 32
படும்) வீக்க நிலையை இழந்து இலைவாய்களும் மேற்றோற்
நுகைந்து, தளர்ந்து, இளகிவிடு கலங்களும்
வதால், இலைவாய்கள் மூடப்பட்டு S.T. இலைவாய்; G,C, காவற்
விடுகின்றன, இலையின் மீது வச கலம்; E மேற்றோற்கலம்.
லினத்தடவி, இ லை வ ர ய க ளை
அடைத்துவிட்டால், நீர் வெளிப் .
தாய்; 2.0. கா" "அகத்தடவி, இ ப ர் வெளிப்

ஆவியுயிர்ப்பு
5)
படுவது தடுக்கப்படும்; தடுக்கப்படுதலும், இலை வாடாது தளிர்த்தவண்ணம் நெடுநேரத்திற்கு இருக்கும்.
நீரானது இலையினூடாக மாறின்றி இழக்கப்படுதல் தாவரத் திற்கு ஒருவகையில் நன்மை பயக்கின்றதென்றே சொல்லலாம். இந்நீர் இழப்பே ஆ,வியுயிர்ப்பிபூவைக்கும் காரணமாகி, ஆ,வியுயிர்ப் போட்டத்தைத் தொடர்ந்து நிகழும்படி செய்கின்றது. கனிப்பொரு (ளுப்புகள் கரைந்திருக்கும் நீர் வேரிலிருந்து மிக விரைவாகத் தாவரத்தின் மேற்பகுதிகளுக்கு ஏறிச்செல்ல ஆவியுயிர்ப்போட் டம் உதவுகின்றது.
உறிஞ்சன் மானி என் னும் ஆய்கருவிகொண்டு, வெளிப்புற நிபந்தனை (சூழ்நிலை) கள் ஆவியுயிர்ப்பு வீதத்தின் மீது செலுத் தும் செல்வாக்கை ஆராயலாம். இவ் ஆய்கருவியின் ஒருவகை உரு. 33 இல் காட்டப்பட்டுள்ளது.இவ் ஆய்கருவியை ஒழுங்கு செய்யும்போது, அதனுள் ஒரு சிறிதளவேனும் வளியுட்புகாத | வாறு, போதிய கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். பரிசோதனை
அது
உரு. 33 உறிஞ்சன்மானி - பரிசோதனை
W நீர்; A வளி புகும்வழி யின் தொடக்கத்தில், இவ் ஆய்கருவி நிரம்ப நீர் இருக்கவேண் டும். உரு. 33 இல் காட்டியவாறு, வளிக்குமிழி ஒன்றைக் கண் ணடிக்குழாயினுள் விட்டு அடைக்கவேண்டும், ஆவியுயிர்ப்பு நிகழுதலும், கிளிறிசிடியாக் கிளையினால் அதிக நீர் உறிஞ்சப்படு மாதலால், வளிக்குமிழி கண்ணடிக்குழாய் வழியே பிரயாணஞ் செய்யும். ஓர் அளவுத்திட்டத்தின் உதவிகொண்டு, குறிக்கப்

Page 37
60
உயிரினவியல்
பட்ட காலவெல்லையுள் அவ்வளிக்குமிழி சென்ற தூரம் துணியப் 11 படலாம், கண்ணடிக்குழாயில் இந்நீளம் (வளிக்குமிழி பிரயா ணஞ் செய்த தாரம் எவ்வளவு கனவளவு நீரைக் கொள்ளுமென் பதையும் துணியலாம். புனலின் குழாய்வாயிலைத் திறப்பதனால்
அவ்வளிக்குமிழியை முன்னிருந்த இடத்தை அடையும்படி செய்ய .. லாம். வெளிப்புறச் சூழ்நிலையில் மாற்றங்களை உண்டுபண்ணி, ஒவ்வொருவகையான மாற்றத்தினாலும் பெறப்படும் அளவீடுக ளைக் குறித்துக்கொண்டு, ஒப்பிட்டுப் பார்க்கலாம். உதாரண மாக, உறிஞ்சன் மானியைச் சூரியவொளியிலோ, நிழலிலோ, இருட்டிலோ வைத்துப் பரிசோதனை செய்து, அளவீடுகளைக் குறித்துக்கொண்டு ஒப்புநோக்கலாம். திவிரமாகக் காற்றை விசிறுவதனால், உறிஞ்சன் மானியைச் சுற்றிக் காற்றோட்டத்தை அதிகரிக்கச் செய்துகொண்டும், பரிசோதனை நிகழ்த்தலாம்.
- மேற்படி பரிசோதனைகளிலிருந்து வெப்பம், வறட்சி, காற்று என்பன இலைகளிலிருந்து மிகவிரைவாக நீரை ஆவியாகச் செய் தலால் ஆவியுயிர்ப்பு வீதம் அதிகரிக்கின்றதென்ற உண்மையை, யாம் அறிந்துகொள்ள முடியும், அசைவின்றித் தேங்கிக்கிடக்கும், ஈரப்பதன் அதிகமுள்ள காற்று உள்ள நிலைமையில், ஆவியுயிர்ப்பு வீதம் மிகத்தாழ்வாக இருக்கும். இருட்டில் பொருட்படுத்தக் கூடிய அளவுக்கு ஆவியுயிர்ப்பு நிகழுவதில்லை என்றே சொல்ல லாம்.
ஆவியுயிர்ப்புத் தாவரங்களுக்குப் பலவகைகளில் அதிக முக் கியம் வாய்ந்தது.
(அ) வேர்களினால் உறிஞ்சப்படும் நீரின் அளவு தாவரத் தின் உடனடியான தேவைக்கு மிக மேலதிகமான து, மேலதிக மாசு உறிஞ்சப்பட்ட மிகைநீர் ஆவியுயிர்ப்பு வாயிலாக அகற் றப்படுகின்றது.
(ஆ) இலைகளின் மேற்பரப்பிலிருந்து நீர் ஆவியாகல், வேலிக்காற்கலங்களும் கடற்பஞ்சுக்கலங்களும் அதிக நீரை உறிஞ் சக் காரணமாகின்றது. அதனால், அளியுயிர்ப்போட்டம் தாபிக்கப் படுகின்றது. ஆவியுயிர்ப்போட்டத்தின் வாயிலாக உணவு ஆக்கு வதற்கு வேண்டிய பல கனிப்பொருளுப்புகள், தாவரத்தின் உட லிலுள் கொண்டுவரப்படுகின்றன.
(இ) கலச்சாற்றின் செறிவு ஆவியுயிர்ப்பினால் காக்கப்படு கின்றது. இது சவ்வூடுபரவலுக்கு உதவி அளிக்கின்றது.

ஆவியுயிர்ப்பு
1
(ஈ) இலை மேற்பரப்பிலிருந்து நீராவி வடிவத்தில் இழக்கப் -படும் நீர் உறிஞ்சல்விசையாகத் தொழிற்படுகின்றது. இவ் விசை தா வரங்களின் நுனிப்பகுதிகளுக்கு நீர் ஏறுவதற்கு உதவும் கிறது'.
(உ) ஆவியுயிர்ப்பின் விளைவாகத் தாவரவுடலின் எல்லாப் பகுதிகளுக்கும் நீர் ஒரே சீராகப் பரம்புகிறது.
| (ஊ) ஆவியாகலால் குளிர்ச்சி ஏற்படுகிறது. அதனால், இலை கள் அளவுக்கதிகமாக வெப்பமடையாது தடுக்கப்படுகின்றன.
(எ) நீர் ஆவியாகும்போது, சில உப்புகள், இலைகளின் மேற் பரப்பை வந்தடைகின்றன. வந்தடைந்த உப்புகள் அங்கேயே விடப்படுகின் றன. அவ்வுப்புகள் வளிமண்ட லத்திலிருந்து ஓரளவு ஈரலிப்பை உறிஞ்சி, இலைகள் உலர்ந்துபோகாது தடுக்கின் றன.
இத்தகைய நன்மைகள் எல்லாம் இருந்தபோதிலும், அளவுக் கதிகமான நீர் (ஆ,வியுயிர்ப்பு வாயிலாக) ஆவியாகல், தாவர வாழ்க்கைக்கு அதிக ஊறு பயப்பதாகும். மிக நீண்ட காலத் துக்கு. அளவுக்கதிகமாக ஆவியுயிர்ப்பு நிகழுமேயானால் தாவரங் கள் உலர்ந்து, இறந்து படும்.
- வறட்சியுள்ள இடங்களிலும், ஏறத்தாழப் பாலை நிலக் கால் நிலையுள்ள இடங்களிலும் உள்ள தாவரங்கள், அளவுக்கதிகமாக நீரை இழக்காது தம்மைக் காத்துக்கொள்ள வேண்டும். இத்தகைய சூழ்நிலைகளில் வளருந் தாவரங்கள் வளரிலத்தாவரங்கள் எனப் படும். இத்தாவரங்கள் பின் வரும் இயல்புகளை உடையனவாகக் காணப்படும்.
அவைகள் அறவே இலை களின்றியிருக்கும். = உ-ம்.: சில கூத்தாாகள் (ஆ) அவற்றின் இலைகள் முட்களாக வேறுபடுத்தப்பட்டி ருக்கும்.
உ.ம், 1 சுந்தசுகள் (இ) அவற்றின் இலைகள் மிகச்சிறிய செதிலிலைகளாக வேறு ) படுத்தப்பட்டிருக்கும்.
உ-ம்.: காசுசினு (சவுக்குமரம்) (ஈ) அவற்றின் இலைகளை மெழுகுக்கவசம் மூடியிருக்கும்.
உ. ம். 1 அலமாண்டா

Page 38
6)
உயிரினவியல்
பாப்1
1ெ)
(உ) அவற்றின் இலைகள் தடிப்பாகவும் சதையுள்ள னவாயு மிருக்கும். ஆனால், தடிப்பான புறத்தோலால் மூடப்பட்டிருக்கும்.
உ-ம். 1 பினறயோவில்லம் (சதைகரைச்சான்) (ஊ) அவற்றின் இலைகளில் குழிவுள்ள இலைவாய்கள் இருக்கும்.
உ-ம். : நீரியம் (காட்டலரி) (எ) அவற்றின் இலைகள் மெல்லிய மயிர்களால் மூடப்பட் டிருக்கும்.
உ-ம். ' பேய்க்கோம்மட்டி (சைத்திரல்லசு) (ஏ) அவைகள் மரப்பாலுள்ளனவாயிருக்கும்.
உ-ம். : கவத்துரப்பிசு (எருக்கு)
பொதுவாக, இலைவாய்கள் வாயிலாக ஆவியுயிர்ப்பு நிகழு கின்றது ; எனினும், சில வேளைகளில் புறத்தோல் வாயிலாகவும், பட்டை வாய்கள் வாயிலாகவும் இது நடைபெறுகின்றது.
சூரியவொளியில் இலைகள் வாடுதல்: சூரியவொளி அதிகமாகவுள்ள நண்பகல் வேளைகளில் இலைகள் வாடுவதைக் காணுகிறோம் அல் லவா? சூரியவொளி இலைகளை எவ்வளவுக்கெவ்வளவு நிலைக்குத் தாகத் தாக்குகின்றதோ, அவ்வளவுக்கவ்வளவு ஆவியுயிர்ப்பும் அதிகரிக்கும், ஆனால், தாவரமானது இலைப்பரப்பைச் சரிவான - கோணத்தில் வைத்துக்கொள்ளுவதனால் சூரியவொளியின் நிலைக் குத்தான தாக்கத்தினின்றும் தப்பிக்கொள்ள வழியுண்டாகிறது. அதாவது, சூரியவொளியின் தாக்கம் குறைவாகவே இருக்கும். அதனால், ஆவியுயிர்ப்பு வீதமும் குறையும். எனவே, இலையிலி ருந்து குறைந்த அளவான நீரே இழக்கப்படும். ஆகவே, இலை கள் நண்பகலில் வாடுவதால் தாவரத்திற்கு நன்மையே விளைகிறது.
வினாக்கள்
ஆயியுயிர்ப்பாவது யாது? இது தாவரத்திற்கு நன்மை பயக்கிறதென்பதைக் காட்டுக,
2.
ஆவியுயிர்ப்பு வீதம் அதிகரித்தற்குரிய வெளிப்புற நிலை மைகள் யாவை? இந் நிலைமைகள் ஆவியுயிர்ப்பை அதி கரிக்கச் செய்யுமாற்றை விளக்குக.

ஆவியுயிர்ப்பு
வறணிலத்தாவரங்களின் இசைவாக்கங்களையும் அவ்விசை வாக்கங்கள் ஆவியுயிர்ப்பைக் குறைத்தற்கு வழி கோலு மாற்றையும் விளக்கிக்காட்டுக.
4. 'ஆவியுயிர்ப்புத் தாவரங்களுக்கு இன்றியமையாதது'
என் பதுபற்றி ஒரு கட்டுரை வரைக.
செய்முறைப் பயிற்சிகள்
4. |
1. பூச்சட்டியில் வளரும் தாவரம் ஒன்றை மணிச்சாடியால் மூடிவிடுக. சிறிது நேரத்தின்பின் மணிச்சாடியின் உட்பக்கத் தில், சிறுநீர்த்துளிகள் சேர்ந்திருப்பதைக் குறித்துக்கொள்க.
2. உரு. 33 இல் உள்ள வாறு உறிஞ்சன் மானியை அமைத் துக்கொள்க. பின்வரும் பல்வேறு வெளிப்புற நிலைமைகளில் எவ்வளவு நீர் கிளையினால் உறிஞ்சப்பட்டதென்பதைத் தனித்தனி கணித்துக்கொள் க.
(அ) துலக்கமான சூரிய ஒளியில் வைத்தல்.
(ஆ)
வலுவுள்ள காற்று (விசிறியின்கீழ் எனக்கொள்க) வீசும் இடத்தில் வைத்தல்.
(இ) ஈரப்பதனுள்ள வளி (நீருள்ள தாழியின்மீது எனக்
கொள் க) படக்கூடியதாக வைத்தல்.
(ஈ) இருட்டில் (ஒரு அலுமாரியினுள் எனக் கொள்க) வைத்
தல்.
(உ) அசைவில்லாவளி உலாவும் இடத்தில் (பூட்டப்பட்ட
கண்ணடி யன்னல்கள் உள்ள அறை எனக்கொள்க) 50 வத்தல்.
3, ஓர் இலையை சில செக்கன்களுக்குக் கொதித்துக்கொண் டிருக்கும் நீரில் இட்டு விடுக. அவ் இலையின் கீழ்ப்பக்கத்தில் " வளிக்குமிழிகள் சேர்வதைக் குறித்துக்கொள்க. இலை வாய்களிற் பெரும்பாலானவை இலையின் கீழ்ப்பக்கத்தில் உண்டென்பதை, இது காட்டும்.

Page 39
உயிரினவியல்
4. தடித்த கண்ணாடிக்குழாய் ஒன்றினது ஒரு முனையில், - கிளிறிசிடியா அல்லது ஆவரம் கிளையொன்றைப் பொருத்தியபின், அக்குழாய் நிறைய நீர் நிரப்பி, இரசமுள்ள கிண் ணமொன்றினுள் (அக்குழாயை) நிறுத்திவிடுக. இவ் ஆய்கருவி காற்றுட்புகாத வாறு அமைக்கப்படுமாயின், ஆவியுயிர்ப்பு இயூவை காரணமாக இரசம் மேலெழும்.
5. ஒரு யன்னலுக்குக் குறுக்கே ஒரு கயிற்றைக்கட்டி, அதில் நான்கு மாவிலைகளைத் தொங்கவிடுக, வசலினை முதலாவது இலைக்கு இரண்டுபக்கத்திலும், இரண்டாவதிலைக்குக் கீழ்ப்பக்கத் தி லும், மூன்றாவது இலைக்கு மேல்பக்கத்திலும் பூசித்தடவிவிடுக.- நான் காவது இலையை வசலின் பூசாது விட்டுவிடுக. ஏறத்தாழ நான்கு நாட்களின்பின், இவ் இலைகளின் நிலைமையை ஆராய்க.
16. பல்வேறு கந்தசுகள். காசுரித (சவுக்குமரம்), அலிமாண்டா, பிறையோவில்லம் (சதைகரைச்சான்] நீரியம் (காட்டலரி) பேய்க்கொம்பு மட்டி (சைத்திரல்லசு) முதலிய வறணிலத்தாவரங்களின் இலை" களை ஆராய்ந்து கற்க, கற்றபின், அவற்றை வரைந்து கொள்க.
அத்தியாயம் 11
மிகச் சிறத்தலடைந்த அங்குரம் பூ எனப்படும், அவ் அங் குரத்தின் பகுதிகள் வித்துகளை உண்டாக்குவதற்கென வேறு படுத்தப்பட்டிருக்கும். ஆதலால், தன் குலத்தை விருத்தி (இனப் பெருக்கம்) செய்தலே பூவினது தொழிலாகும், பூக்கள் (மயிற் கொன்றைபோல) கொத்துக்களாகவும், (செவ்வரத்தைபோல) தனித் தனியாகவும் காணப்படும்.
நவினது பருதிகள்: பொதுவாக, ஒரு பூவிற்கு நீண்ட காம்பு அல்லது பூந்தண்டு ஒன்று உண்டு. இக்காம்பின் அடியில் பசிய

பூ
பக்
இலைபோன்ற அமைப்புள்ள பூவடி யிலை காணப்படும் பூக்காம்பின் சேய்மையிலுள்ள முனை பருமை அடைந்து, ஏந்தியாக அமைந் திருக்கும், இவ் ஏந்தியிலிருந்து விருத்தியடைந்திருப்பனவே பூ விலைகள் ஆகும். (பூவிலைகளைத் தழையிலைகளென எண்னாரி மலை வுறு தல் கூடாது. தழையில்கள் வழக்கமாகத் தா வ ரங் க ளி ர் காணப்படும் பச்சை நிறமுள்ள
இலைகள் ஆகும்).
பூவிலைகளில் நான்குவகை உண்டு. அவைகள், ஏந்தியில் ஒ ழு ங் கா க அமைந்திருக்கும். ஏந்தியின் அடியில், பூவுறுப்பு க ளு ள் அதிவெளிப்பக்கமாகப்
உரு. 34 புல்லிகள் அமைந்திருக்கும். புல்லி ஒரு பூவின் பகுதிகள் களின் தொகுதிப்பெயர் புல்லி - P. பூக்காம்பு; 'T. ஏந்தி; S. வட்டம் எனப்படும். புல்லிகள் புல்லிகள்; P. T. அல்லிகள்; பொதுவாகப் பச்சை நிறத்தன; F. இழை; 4. மகரந்தக் கூடு பூ அரும்பாக இருக்கும்போது கள்; S. T', கேசரங்கள்; 0. பாதுகாப்பு அளிப்பன. சில பூக் சூலகம்; S.V. தம்பம்; 8.I. குறி. களின் புல்லிகள் நிறமுடையன வாயிருக்கும். நிறமுள்ள புல்லிகள் அல்லிப்போலி எனப்பெயர் பெறும். உ-ம். மயிற்கொன்றை (சிசல்பீனியா புல்கெரிமா), மணிவாழை (கன் னாசு) முதலியன. புல்லிவட்டத்தை அடுத்து, உட்பக்கமாக அல்லி கள் அமைந்திருக்கும். அல்லிகளின் தொகுதிப்பெயர் அல்லிவட்டம் எனப்படும். அல்லிகள் பொதுவாகத் துலக்கமான நிறமுடை யன. சில பூக்களில் இவை பச்சை நிறமுடையன (புல்லிப்போளி ) வாயுங் காணப்படும். உ-ம். அன்னமுண்ணு (துனேனா). புல்லி களும் அல்லிகளும் பூவின் பிரதானமின்றிய பகுதிகள் ஆகும், ஏனெ னில், இவைகள் வித்துகள் உண்டாவதற்கு நேரடியான தொடர்பு உடையவைகள் அல்ல.
புல்லிவட்டத்தின் முக்கிய தொழில் பூவரும்பைப் பாதுகாப் பதேயெனினும், ஒளித்தொகுப்புச் செய்தலும் அதன் தொழிலாக
215 -6

Page 40
உயிரினவியல்
இருத்தல் சாலும், புல்லிகள் பொதுவாகப் பழங்கள் உண்டாவ தற்கு முன்னதாகவே விழுந்து விடும்; ஆனால், சில பழங்களில் அவை விழுந்து போகாது நிலைபெற்றிருக்கக் காணலாம். இது தகைய புல்லிகள் நிலைபேறுடைய புல்லிகள் எனப்படும். உடம். கொய்யா, பங்குத்தான், கந்தரி முதலியன. சில தாவரங்களின் பூக் களில் உள்ள புல்லிகள், பழங்களோடு நிலைபெற்று, மெல்லிய மயிர்களாக வேறுபட்டு, அப்பழங்களின் பரம்பலுக்கு உதவி : செய்கின்றன. உ-ம். மூக்குத்திப்பூண்டு, ஈதேளியார் செங்கழுநீர் (வேனோ னியா) முதலியன. எண்னெனாய்மரம் (தித்தரோக்காப்பசு), தணக்கு (கைரோக்காப்பசு) என்பவற்றின் பழங்களின் புல்லிகள் சிறகு (இறக்கை) போன்ற அமைப்புடையனவாக வேறுபடுத்தப்பட்டி ருக்கின்றன. பல தாவரங்களினது பூக்களிலுள்ள புல்லிகள் ஒருங்கு இணைந்து கிண்ணவடிவு பெற்றிருக்கின்றன. இவ்வாறு, இணைந்திருக்கும் புல்லிகளைப் புல்லி இணைந்த என்றும், இணை யாது தனித்தனி இருக்கும் புல்லிகளைப் புல்லி பிரிந்த என்றும் விவரிப்பர்.
அல்லிகள் தானும் இணைந்து கிண்ணவடிவின (அல்லி இளந்த) தாகவோ, இணையாது தனித்தனி (அல்லி பிரிந்த) ஆகவோ இருக் கும், பூச்சிகளைக் கவர்ந்து அயன்மகரந்தச்சேர்க்கைக்கு உத வுதலே அல்லிகளின் தலைமையான தொழிலாகும்; (12 ம் அத்தி யாயம் காண்க). அவை பெரும்பாலான தாவரங்களில் அழகான, கவர்ச்சியுள்ள நிறமுடையனவாயும், நறுமணமுடையனவாயும் இருக்கின்றன. அதிகமாக அல்லிகளின் அடியில் அமுதம் சுரக்கப் படுகின்றது.
பூவின் பிரதான பகுதிகள் கேசரங்களும் போயுமேயாம், யோனி பெண்ணாகம் எனவும், கேசரங்களின் தொகுதி ஆணாம் - எனவும் பெயர் பெறும். கேசரங்கள் அல்லிவட்டச்சுற்றினை அடுத்து உட்பக்கமாக அமைந்திருக்கும். ஒவ்வொரு கேசரமும் இரண்டு பகுதிகளை உடையது. கேசரத்தின் கீழ்ப்பகுதி காம்பு போன்றது. அது இழை எனப்படும். கேசரத்தின் மேற்பகுதி மகிரந்தக்கூட்டைத் தாங்கிநிற்கும். மகரந்தக்கூடு சிறிய பேழை போன்று மகரந்தமனசரிகளை உள்ளடக்கி இருக்கும். சில தாவரங் களினது கேசரங்களின் இழைகள் (ஏந்தியிலிருந்து உண்டாவ தற்குப்பதிலாக) அல்லிவட்டத்தோடு இணைந்து காணப்படும். அவ்வாறு, இணைந்து காணப்படும் கேசரங்கள் அல்லிமேலொட்டியன என விவரிக்கப்படும். உ-ம். நாமத்தாத (தத்தாரா) முசுட்டை (இரி வியா), கத்தரி முதலியன, இனம் பெருக்கலுக்குரிய ஆண் உறுப்புகள் கேசரங்கள் ஆகும்.

பூ
இனம் பெருக்க,லுக்குரிய பெண் உறுப்பு யோனி ஆகும். யோனியின் அடிப்பகுதி சூலகம் எனவும், நடுப்பகுதி தம்பம் என + "வும், சேய்மையிலுள்ள முனைப்பகுதி குறி எனவும், பெயர் பெறும். சூலகத்தின்கண் சூல்வித்துகள் இருக்கும். இச் சூல்வித்து களே (கருக்கட்டியபின்) விந்துகளாக விருத்தி அடைகின்றன.
யோனிகள் கல்வித்தல்களினால் ஆக்கப்பட்டவை. அவை தனிச் சூல் வித்திலையாலோ, பல சூல்வித்திலைகளாலோ, ஆக்கப் பட்டிருக்கும். தனிச்கல்வித்திலையால் ஆக்கப்பட்டயோனி ஒரு நூல் வித்திலையுள்ளா யோசி எனப்படும்; ஏனையவை பல சூல்வித்திலையுள்ள யோனிகள் எனப்படும்; டில்வித்திலைகள்பிரிந்த யோனிகளும் உண்டு. உ-ம். அன்னமுண்ர் (அஷேன) சூல்வித்திகள் ஒட்டிய யோனி சளில் ஓரறை தொடக்கம் பல அறைகள் காணப்படுகின்றன. ஓரறை யுள்ள யோனிக்கு மூக்குத்திப்பூண்டு உதாரணமாகும். வெண்டி. பல அறையுள்ள யோனிக்கு உதாரணமாகும்.
"உதய கீர்த்தி' (Morning Glory)ப் பூவினது பகுதிகள்
'உதய கீர்த்தி' (ஐப்போமியா இலியறி) என்பது வேலிகளில் பொது வாகக் காணப்படும் ஒரு சுற்றி அல்லது சுற்றுஞ் செடியாகும், அது, துலக்கமான, பொலிவுள் ள, பெரிய, நீல நிறமுள்ள 'எக்காள' வடி வுள்ள பூக்களைப் பூக்கின் றது. பூக்கள் சிறிய கொத்துகளாகக் காணப்படும். காலையில்," பூக்கள் துலக்கமான நீல நிறத்துடன், மிக அழகாகத் தோன்றும். மாலைப்பொழுதில், செவ்வூதா நிற மாக மாறுவதோடு, கவர்ச்சியுள்ள தாகவும் இருக்கும், ஆதலி
னால், இதற்கு 'உதயகீர்த்தி' எனப்பெயர் உண்டாயிற்று.
உதயகீர்த்தியின் பூவில், பூவுக்குரிய எல்லாப்பகுதிகளும் உண்டு. பூவரும்பைப் பாதுகாப்பதற்கு ஆவசிகமான, இலை போன்ற, தனித்தனி கட்டின் நியமைந்த, ஐந்து புல்லிகள் கொண்ட, புல்லிவட்டம் உடையது, இப்பூ- இதன் அல்லிவட்டம் ஐந்து, இணைந்த அல்டிரிகளை உடையது. அல்லிகள் நீண்டு, குழாய் போன் றனவாய் ஈந்து சோணகளை உடையனவாயிருக்கும், ஒவ்வோர் அல்லியிலும் அதன் அடிப்பகுதியை நோக்கிப் பிரித்தறியக் கூடிய ஒரு கோடு காணப்படும். அல்லிவட்டத்தின் அடியில் ஐந்து, வெண்ணிறக் கேசரங்கள் தொடுக்கப்பட்டிருக்கும். (எனவே, கேசரங்கள் அல்லிமேலொட்டியவை) ஆனால், எல்லாக் கேசரங்களும் ஒரே பருமனுடையவை அல்ல, இழைகளின் அடிப்பகுதி மயிர் போன்று மெல்லிதாக இருக்கும். மகரந்தக்கூடுகள் நீண்டவை

Page 41
68
உயிரினவியல்
யாய் இருக்கும். யோனியில் சிறிய ஓர் அடிச்சூலகமும் நீண்ட ஒரு தம்பமும், இரு சோணையுள்ள ஒரு குறியும் உண்டு. சூலகம் மூன்று!
S)
உரு. 35 உதயகீர்த்தியின் பூ (ஐப்போமியா இலீயறீ) A - இரு அரும்புகளுள்ள ஒரு பூ; 13-பூவின் நெடுக்கு வெட்டு முகம்; (0 அல்லிவட்டக்குழாய்; 8 குறி; A மகரந்தக்கூடு; F இழை; (CA புல்லிவட்டம்; ST தம்பம்; ) சூலகம்.
அறைகளை உடையது. ஒவ்வோர் அறையிலும் இரண்டு நிரை யில் சூல்வித்துகள் அமைந்து கிடக்கின்றன.
கல்வித்தமைப்பு: சூல்வித்திலைகளின் விளிம்புச்சேர்க்கையால் உண்டான பொருத்திற் காணப்படும் வெளிமுளைகள் போன்ற இவ்ளித்தகங்களிலே, சூல்வித்துகள் இணைந்திருக்கும், சூல்வித்தகங் களிலே சூல்வித்துகள் அமைந்திருக்குமாற்றைச் டில் எந்தமைப்பு என்பர், இச்சூல்வித்தமைப்புப் பலவகைப்படும். அாந்து போன்ற தாவரங்களில் விளிம்புச் ல்ளித்தமைப்பும், எலுமிச்சை போன்றவற்றில் அச்சுச்கல்வித்தமைப்பும், பப்பாசி போன்றவற்றில் சுவர்ச் சூல்வித்தமைப்புப், மூக்குத்திப்பூண்டு போன்றவற்றில் அடிச்சூல்.மித்தமைப்பும் காணப்படு கின் றன.

பூ
60
ஒவ்வொரு சூல்வித்தும் சூல்வித்தகத்துடன் சூல்வித்திரை ஒன்றினாற் பொருத்தப்பட்டிருக்கும்.
பூக்கள், இலைக்கக்கங்களிலோ பதியவச்சு முனையிலோ, தனித்து அல்லது கொத்தாகக் காணப்படும். " கொத்தாகப் பல பூக்கள் சேர்ந்திருக்கும்பொழுது, அப்பூக்கொத்து பூந்துணர் எனப்பெயர் பெறும், பூந்துணர்கள் இருவகைப்படும். அவை, நுனிவளர் முறைப் யூந்துணர், நுனிவளராமுரைப் பூந்துணர் எனப்படும். பூக்கள் உச்சி நோக்கும் வரிசையில் அமைந்திருப்பது நுனிவளர்முறைப்பூந்துணரா கும். உம். கிலுகிலுப்பை (குரத்தலேரியா) இதில், முதிய பூக்கள் அடியிலும் இளம்பூக்கள் நுனியிலும் அமைந்திருக்கும். இது வரையறையில்லா வளர்ச்சியுடையது. நுனிவளரா முறைபூந்துணரில் தலைமையச்சு ஒரு பூவுடன் வளராது நின்றுவிட, அதன் கீழ்ப் பக்கத்திலிருந்து துணையச்சு உண்டாகி அதுவும் (ஒரு பூவுடன்) வளராது நின்றுவிட,- இவ்வாறே வரையறையுள்ள வளர்ச்சி காணப் படும். இதன் அடியில் இளம்பூக்களும், உச்சியில் முதிர்ந்த பூக் களும் காணப்படும். ஆகவே, பூக்கள் புமையநிக்கவரிசையில்" அல் லது அடிநோக்குவரிசையில் அமைந்திருக்கும். தலைமையச்சி ஒ ள்ள பூவினது பூவடிச் சிற்றிலைக் கக்கத்தில், மற்றைய பூ. -உண்டாகும். உ-ம். கொடிமல்லிகை.
வினாக்கள் 1. நீர் ஆராய்ந்து பார்த்த ஒரு பூவினது பகுதிகளை விவ
ரிக்க.
பூவுறுப்புகளின் தொழில்கள் யாவை? ,3, தம்பம், குறி, சூல்வித்தகம், சூல்வித்திலை, பூந்துணர்
என்பவைகள் பாவ்வொன்றையும் பற்றிச் சிறு குறிப்பெழு அக்.
செய்முறைப் பயிற்சிகள் 1. செவ்வரத்தை, அவரை, அகத்தி, மயிற்கொன்றை, உதய கீர்த்தி முதலிய பூக்களை வரைந்து, பகுதிகளுக்குப் பெயரிடுக. ஒவ்வொரு பூவினதும் நிலைக்குத்துவெட்டுமுகத்தை வரைந்து. பகுதிகளுக்குப் பெயரிடுக.
2. வெண்டிப்பூவின் யோனியினது நிலைக்குத்துவெட்டு | முகத்தைக் கைவில்லையால் ஆராய்ந்து அறிக.

Page 42
அத்தியாயம் 12
மகரந்தச்சேர்க்கையும் கருக்கட்டலும்
வித்துகள் உண்டாதற்பொருட்டு மகரந்தக்கூடுகளில் உள்ள மகரந்தமணிகள் குறியை அடைய வேண்டும்; அல்லது குறிக்கு இடமாற்றப்படவேண்டும். இவ்வாறு, நிகழும் இடமாற்றுகை மகரந்தச்சேர்க்கை எனப்படும். ஒரு பூவிலுள்ள மகரந்தக்கூடுக ளில் இருக்கும் மகரந்தமணிகள் அதே பூவிலுள்ள குறிக்கு இட மாற்றப்படுமாயின், அவ் இடமாற்றுகை தன்மகரந்தச் சேர்க்கை எனப்படும், அன்றி, ஒரு பூவினது மகரந்தக்கூட்டிலுள்ள மக ரந்தமணிகள் அதே வகையைச் சேர்ந்த இன்னொரு பூவின து
குறிக்கு இடமாற்றப்படுமாயின், அவ் இடமாற்றுகை அயன் மகாந் , தச்சேர்க்கை எனப்படும். அயன் மகரந்தச்சேர்க்கையின் பயனா கவே பெரிய, நல்ல வித்துகள் உண்டாகின்றன; தாவரங்கள் வாழ்க்கைப்போரில் வெற்றி அடைகின்றன; தாவரங்களில் புதியபுதிய இனங்கள் விருத்தியாகின்றன. இக்காரணங்களாலேயே, தாவரங்கள் பெரும்பாலும் தன் மகரந்தச்சேர்க்கை நிகழவிடாது தவிர்க்கின் றன.
தன் மகரந்தச்சேர்க்கை தாவரங்களின் விருத்திக்கு அத் துணை சிறந்ததன்று; இதனால், பெரிய, நல்ல வித்துகள் உண்டா தல் குறைவு. ஆகவே, நலிவுள்ள பெலமில்லாத, வாழ்க்கைப் போரில் பெரும்பாலும் தோல்விகாணும் இனங்களே விருத்தியா - கின்றன. தன் மகரந்தச்சேர்க்கை ஒருபாலுள்ள பூக்களில் நிகழமுடியாது. எனினும், இருபாலுள்ள தாவரங்கள் சிலவற்றில் தன் மகரந்தச் சேர்க்கை அருகிக் காணப்படுகின்றது. மகரந்தக் கூடுகளும் குறியும் ஒரே காலத்தில் முதிர்வடைதல் (ஒத்நபுகாரி புண்மை) தன் மகரந்தச் சேர்க்கை நிகழ வாய்ப்பு அளிக்கின்றது. அந்திமல்லிகை அல்லது நாலுமணிச்செடி (மிராபிலிசு யலப்பா) இதற்கு உதாரணமாகும். மகரந்தக்கூடுகளும் குறியும் பூவுறை யினுள் மூடுண்டு ஒருங்கே கிடக்கும் கானவாரை அல்லது எருமை நாக்கி (கொம்மெலினா) என்னும் பூண்டில், தன் மகரந்தச்சேர்க்கை நடைபெறுகின்றது. இதனை அல்ராநிலைப்புணர்ச்சி என்பர்.

மகரந்தச் சேர்க்கையும் கருக்கட்டலும்
தன்மகரந்தச்சேர்க்கை நிகழவிடாது தவிர்க்கும் முறைகள்
(i) இருகாலமுதிர்வு: வெவ்வேறு காலங்களில் மகரந்தக்கூடு களும் குறியும் பக்குவம் அடைவதனால் தன் மகரந்தச்சேர்க்கை தவிர்க்கப்படுகின்றது. பெரும்பாலான தாவரங்களில் மகரந்தக் கூடுகளே முதலில் முதிர்வடைகின்றன. உ-ம். சூரியகாந்ரு, செல் வரத்பாந. உதயகிர்த்தி முதலியன. மற்றும் சில தாவரங்களில், குறியே முதலில் முதிர்வடைகின்றது. உ-ம். புல்லினர்.
(ii) கோரங்களையும் யோனியையும் ஒன்றிற்கொன்று சேய்மையில் வைத்திருத்தல் (சமனில்லாத்தம்பமுடைமை): பல தாவரங்கள் தங்கள் கேசரங்களையும் யோனியையும் ஒன்றிற்கொன்று (மருவி இருக்காதபடி) தூரத்தில் இருக்குமாறு செய்தலால், தன் மகரந் தச்சேர்க்கை நிகழவிடாது தவிர்க்கின்றன. பொதுவாகக் குறி, கேசரங்களுக்கு மேலாக நீண்டு (எட்டாது) இருத்தலால் தன் மகரந்தச்சேர்க்கை தவிர்க்கப்படுகின்றது. உ-ம். இந்திரபுட்பம் அல் லது நீலவல்லி (தன்பேக்கியா கிராண்டி:வுளோறு) உதயகிர்த்தி முதலியன, சில வேளைகளில் முற்கூறியதற்கு நேர்மாறாகக், கேச ரங்கள் குறிக்குமேலாக நீண்டு (எட்டாது) இருத்தலாலும், தன் மகரந்தச்சேர்க்கை ஏற்பட வாயப்பு ஏற்படாது. உ-ம். பட்டிப்பு (விங்கா உரோசா), கொடியல்லினக (யாசுமினம் சம்பக்கு) முகலி யன, சமமில்லாத கேசரங்களும் தம்பங்களும் உள்ள இப்பூக் களை, ஈருருவுள்ள பூக்கள் "என்பர். மூவுருவுள்ள பூக்களையுடைய - தாவரங்களும் உண்டு.
(iii) கோரமுள்ள (ஆண்) பூக்களையும் யோனியுள்ள (பென்) பூக் 'களையும் உடைத்தாதல் (ஒரு பாலுண்மை): புல்லிகள், அல்லிகள் என்ப வற்றோடு கேசரங்கள் மட்டுமுள்ளனவாய்ச் சில பூக்கள் இருக்கின் றன. இவை, அன்பு,க்கள் ஆகும். அதுபோலவே, புல்லிகள் அல்லிகளோடுசுகூட யோனி மட்டுமுள்ள, சில பூக்கள் இருக்கின் றன. இவை பெண் பூக்கள் எனப்படும். இத்தகைய பூக்களில் அயன் மகரந்தச்சேர்க்கை மாத்திரமே நிகழமுடியும்; தன்மகரந் தச்சேர்க்கை பற்றிய பிரச்சினைக்கே இடமில்லை. உ. ம். பூபினி, கொவ்வை முதலியன.
கருக்கட்டல்: மகரந்தமணி (அல்லது) மகரந்தம் ஒரு நுணுக் குப்பொருள். அஃது இரு சுவர்களால் பாதுகாக்கப்பட்டிருக்கும்; அதன் மையத்தில் முதலுருத்திணிவு ஒன்று காணப்படும்.

Page 43
| 72
உயிரினவியல்
சுவர்கள் இரண்டினுள் உட்பக்கச் சுவர் மெல்லிதாகவும், வெளிப் பக்கச்சுவர் தடிப்பாகவும் கரடு முரடாகவும் இருக்கும், மையத்தி
லுள்ள முதலுருத்திணிவில் இருகருக் கள் உண்டு. அ வ ற் று ள் ஒன்று (கலவி நிலை அடைந்த ஆண்கலம்) ஆண்புணரி எனக்கருதப்படும், மகரந் தச்சேர்க்கை நிகழ்ந்தபின், மகரந்த மணியின் வெளிச்சுவர் உ ன ட ந் து விடும். உடைந்துவிடுதலும், மகரந்த மணியின் உட்சுவர் மகரந்தக்குழாய் என் னும் உறுப்பாக வளர ஆரம்பிக்கும். குறியின்கண் சுரக்கும் வெல்லங்கலந்த ப த ா ர் த் த ங் களி னால் இரசாயனத் தாண்டு திருப்பம் அடைந்த மகரந் தக்குழாய் குறிக்கூடாகவும், தம்பத் திற்கூடாகவும் வளர்ந்து செல்லும், வளர்ந்து செல்லும்போது, ஆண்புண ரியையுங்கூட எடுத்துச் செல் லு ம். இஃது, ஈற்றில் சூலகத்தை அடைந்து, ஆங்குள்ள சூல்வித்து ஒன்றைச்
சென்று சேரும். இந்நிலைமையில் உரு. 3ா
மகரந்தக்குழாயின் நுனி உடையும்' மகரந்தக்குழாய்
உடைத,லும் ஆண்புணரி சூல்வித்தின் உண்டாகுமாறு
கண்ணுள்ள் பெண்புனாரி (முட்டைக் 83 குறி; TG மகரந்த
கலம், - இது கலவி நிலையடைந்த பெண் மணி; PT' ம கரந் தக் கலம்) யுடன் இணையும். ஆகவே, மக குமாய்; ST' தம்பம்; 0V ரந்தமணியிலுள்ள ஆ ண் பு ண ரி யு ம் சூலகம்; ) சூல்வித்துகள், சூலகத்தின் கண்ணிருக்கும் சூல்வித்தி
லுள்ள பெண்புணரியும் இ ணை யு ம் செயன்முறை கருக்கட்டல் எனப்படும். கருக்கட்டியபின் சூலகம் பழமாகவும், சூழ்வித்துகள் வித்துகளாகவும் வளர்ந்து மாற்ற மடையும். மகரந்தச் சேர்க்கை இன்றிக் கருக்கட்டல் நிகழ முடி யாது என்பது இப்பொழுது தெளிவாகிறது.
அயன் மகரந்தச்சேர்க்கை நிகழவேண்டுமாயின், மகரந்த மணிகள் விலங்குகளாலோ, காற்றினிலோ, நீரினாலோ ஒரு பூவிலிருந்து இன்னொரு பூவிற்குக் காவிச் செல்லப்படவேண்டும். ஆகவே, விலங்குகள் காற்று, நீர் என்பனவே அயன் மகரந்தச்சேர்க்கை நிகழச்செய்யும் கருவிகளாகும். சிலவேளைகளில், ஓர் இனப் பூ

மகரந்தச்சேர்க்கையும் கருக்கட்டலும்
'வின் மகரந்தமணிகள் மற்றோர் இனப் பூவின் குறிக்குக்காவிச் செல்லப்படுதலுமுண்டு. இத்தகைய நிலைமைகளில் மகரந்தக்
குழாய்கள் உண்டாதலுமில்லை: கருக்கட்டல் நிகழ்தலுமில்லை,
S குறி
3 T தம்பம்
T -
] சூலகம் 0Y சூல்வித்துகள் T ஏந் தி
உரு. 37 யோனியின் நெடுக்குவெட்டுமுகம்,
விலங்குகளால் நிகழும் மகரந்தர் சேர்க்கை: விலங்கு நாட்டமுடைய + பூக்களில் விலங்குகளால் மகரந்தச்சேர்க்கை நடைபெறும், பூக் களுக்கு உதவி செய்யும் விலங்குகளில் பூச்சிகளே மிகமுக்கிய மான கருவிகள் ஆகும், அவற்றுள்ளும், தேனீக்கள், வண்டுகள், வண்ணத்திப்பூச்சிகள், அந்து (விட்டில்) கள் என்பன குறிப்பிடத் தக்கன. சில தாவரங்களில் பறவைகளும் வேறு சிலவற்றில் அணில்கள், வெளவால்கள், எறும்புகள், நத்தைகள் முதலியன வும் மகரந்தச் சேர்க்கை நிகழ்த்தும் கருவிகளாக அமைகின்றன. பூச்சிகளால் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் பூக்களின் சிறப் பியல்புகள் பின்வருமாறு :
(அ) பூச்சிகளைக் கவரக்கூடிய துலக்கமான நிறமுடையனவா யிருத்தல் : உ-ம். இந்திரபுட்பம் அல்லது நீலவல்லி (தன்பேக்கியா) .. கடநயக்ர்த்தி (ஐப்போமியா இயேறி), சல்ளியா, செவ்வரத்தை முதலியன -
(ஆ) நறுமணம் வீசும் அல்லிகளை உடையனவாயிருத்தல்: 'நறுமணமுள்ள பூக்கள் பொதுவாக இராக்காலத்தில் மலருவன.

Page 44
74
உயிரினவியல்
இரவில் சஞ்சரிக்கும் அந்துகளைக் கவர்வதற்காகவே சில பூக் கள் இரவில் மலருகின்றன. இவை அதிக துலக்கமான நிற முடையனவாயிருத்தலில்லை. பொதுவாக, இரவில் மலரும் பூக் கள் வெண்ணிறமுடையன. வெண்ணிறம் இரவில் ஓரளவுக்குக் கட்புலனாகக் கூடியது. உ.ம். நிசிராணி (செசுத்திரம்), கொடிகல்லினா, . (யாசுமினம்). முசுட்டை (இரிவியா) முதலியன.
(இ) அல்லிகளின் அடியில் பெரும்பாலும் அமுதச்சுரப்பு உடை, யனவாயிருத்தல் : இவ் அமுதம், பூவை நாடும் பூச்சியினங்களுக் குத் தாராளமாக வழங்கப்படும். அமுதமுண்ட பூச்சிகள் கைமா றாக மகரந்தச்சேர்க்கை நிகழ்த்துகின்றன. அமுதமானது அமுதச் சுரப்பி என்னும் சிறப்பான சுரப்பியிலிருந்து சுரக்கப்படுகின்றது. உ-ம், வாழை, பொன்னெச்சி (தெக்கோமா தாஞ்சு) முதலியன.
(ஈ) பொதுவாக ஏராளமான மகரந்தமணிகள் உண்டாக்கா திருத்தல்: பூச்சிகள் மிகவும் நம்பிக்கைக்குரிய கருவிகளாதலால் குறைந்த தொகையான மகரந்தமணிகளே போதுமானவை. சில வேளைகளில் தமக்கு உதவி செய்யும் பூச்சிகளுக்குக் 'காணிக்கை" யாகப் பெருந்தொகையான மகரந்தமணிகளை உண்டாக்குதலும் முண்டு. உதாரணமாகத் தேனீக்கள் மகரந்தச்சேர்க்கை நிகழ்த் துவதோடுகூடப், பெருமளவில் மகரந்தமணிகளை அருந்தியும் விடு கின்றன. உ-ம். பொப்பிச்செடி, உரோசு முதலியன.
(உ) பூச்சிகளால் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் பூக்க | ளிற் பெரும்பாலானவை, பூச்சிகள் தம்மை நாடுங்கால் அவை உகந்தவாறு புழங்குவதற்கு ஏற்ற விசேட அமைப்பு முறை உடையன, இதனால், மகரந்தமணிகள் நிச்சயமாகக் காவிச் - செல்லப்படுதற்கு ஏற்றனவாயிருக்கின்றன. உ-ம், ஆடு நின் னப்பாலை (அரித்தலொச்சியா). சில பூக்கள், ஒரு குறித்த இனப் பூச்சிகளை மட்டும் கவரக்கூடியனவாய் அமைந்திருக்கின்றன. உதாரணமாக, இந்திரபுட்பம் (தன் பேக்கியா) தச்சத்தேனீயை மாத் திரம் கவரக்கூடியதாய் அமைந்திருக்கிறது.
இந்திரபுட்ப (தன்பேக்கியா)த்தினது மகரந்தச்சேர்க்கைப் பொறிமுறை: இப் பூ பெரிதாயும் கண்களைக் கவரக்கூடியதாயும் அமைந்திருக் கிறது. புல்லிகள் சிறுத்துக் காணப்படும். ஆனால், பூவடிச் சிற்றிலைகள் இரண்டும் மிகவும் பெரிதாக இருக்கின்றன. அல்லி கள் ஐந்தும் இணைந்து அல்லிவட்டக்குழாயாக அமைந்திருக் கின்றன. அல்லிவட்டக்குழாய் எடுப்பான தோற்றமுடையது.

மகரந்தச்சேர்க்கையும் கருக்கட்டலும்
மிகக் கீழேயுள்ள அல்லி பெரிதாகவும் ஏனையவற்றினின்றும் சிறிது வித்தியாசமான தோற்றமுடையதாகவும் இருக்கும். இத. னைப் பூச்சிகள் வந்து அமரும் 'மேடை' எனக் கூறலாம். பூவின் அடிப்பகுதியில், அல்லிவட்டமானது குழாய் போன்று குறிப்பிடத்தக்கவளவு ஒடுங்கிச்சென்று, சுருக்குப்போன்ற அமைப் பாக மாறுகிறது. குறுத்து, அசுன்ற இழைகளையுடையதும் தூரிகைபோன்ற மகரந்தக்கூடுகளையுடையதுமான நான்கு கேச ரங்கள் இப்பூவில் உண்டு. யோனியானது ஒரு சிறிய சூலகத் தையும், நீண்ட ஒரு தம்பத்தையும், துடுப்புப்போன்ற ஒரு குறியையுமுடையது. குறியானது, கேசரங்களுக்கு அப்பாலும் நீண்டு ஓங்கியிருக்கும். சூலகத்தைச் சுற்றி அமுதம் சுரக்கும் அமுதச்சுரப்பி ஒன்று உண்டு, இந்திரபுட்பத்தினது பொலிவும், எடுப்பான தோற்றமும், நிறக் கோடுகளும் பூச்சிகளைக் கவர்கின்
உரு. 38 இந்திரபுட்பத்தின் மகா ந்தச் சேர்க்கைப் பொறிமுறை
(தன்பேக்சியா கிராண் டி.வுளோறா ) - T' பூக்காம்பு; 8 புல்லிகள் - B பூவடியிலைகள்; SY தம்பம்; CT அல்லிவட்டக்குழாய்; 1,1' அமரும்மேடை; SI குறி; 4 மகரந் தக்கூடு ; 1' அகலமான இழை; ( சுருக்கு; N/ அமுதச்சுரப்பி,
றன. கவரப்பட்ட பூச்சி பூவிலுள்ள 'அமரும் மேடை'யின் கண்னே சென்று தங்குகிறது. பின்னர். அல்லிவட்டக்குழாயி னுட் புகுந்து, ஆங்கு உலாவித்திரியும் போது, அதனது முதுகு குறியைப் பரிசிக்க நேரிடுகின்றது. தன்முதுகினிடத்து மகரந்த மணிகள் இருக்குமாயின் அவற்றிற் சிலவற்றைக் குறியின்மீது சேர்த்துவிடும். குறுத்து. அகன்ற இழைகள், பூவினது சுருக்கு அமைந்திருக்கும் இடத்திற்கு சிறிது மேற்பக்கமாக அமைந் திருக்கின்றன. இவ் இழைகள் ஒர் இறக்கம் உண்டாகத்தக்க வாறு அமைக்கப்பட்டிருத்தலால், அவ் இறக்கத்தினுள் தேனி

Page 45
76
உயிரினவியல்
யின் பெரிய தலையானது 'பூண் போல இணக்கமாகப் பொருந்தக், கூடியதாயிருக்கின்றது. பூவினது அடிப்பகுதியிலுள்ள சுருக்குத், தேனீயானது அமுதத்தை அணுகுவதற்கு இடர் விளைக்கின்றது. எனவே, தேனீ" அப்பால் செல்லமுடியாத நிலைமை ஏற்படுகிறது. ஏற்படுதலும், அது தனது தும்பிக்கைச் சுருளைக் குலைத்து நீட்டு கின்றது. நீட்டிய தும்பிக்கையைச் சுருக்கினூடாக நுழைத்து அமுதத்தை அருந்துகிறது. அருந்தும் சமயத்தில் தூரிகை போன்ற மகரந்தக்கூடுகள் குழப்பப்படுகின்றன. குழப்பப்பட்ட மகரந்தக்கூடுகளிலிருந்து புத்தம்புதிய மகரந்தமணிகள் தேனீ" யின் முதுகில் மழை பொழிந்தாற்போன்று சொரியப்படும். அத் தேனீ", மென்மேலும் அமுதம் அருந்தும்பொருட்டு, இன்னொரு பூவை நாடிச் செல்லும். செல்லுங்கால், மகரந்தமணிகளையும் முதுகின் மீது காவிச் செல்லும். தாரிகைபோன்ற மகரந்தக்கூடு களையுடைமையால், இப்பூவினால் மேற்கொள்ளப்பட்ட பொறி 2 முறை ''தூரிகைப் பொறிமுறை" எனப்படும்.
அகத்தி (செசுபேனியா ப்பு,ளின் மகரந்தச்சேர்கைப் பொறிமுறை: அகத் திப்பூவில் ஐந்து புல்லிகளும் ஐந்து அல்லிகளுமுண்டு. அல்லி களில் வெளிப்பக்கமிருப்பது பெரிது. இது பதாாை. எனப்படும். இதன் உட்பக்கமாக இரண்டு சிறையல்லிகள் உண்டு. இவற்றை அடுத்து, அதி உட்பக்கமாக ஏரா உண்டு. ஏராவினுள்ளே கேச ரங்களும் யோனியுமுண்டு. கேசரங்கள் இரு சுற்றையுடையவை: ஒன் பது கேசரங்களின் இழைகளும் ஒருங்கு இணைந்து இருக்கும்; ஒரு கேசரம் தனித்திருக்கும். ஒன்பது கேசரங்கள் சேர்ந்த கற்றை யோனியின் பெரும்பகுதியை மூடியிருக்கும். இழைகள் சிறிது ஏற்றத்தாழ்வாக இருக்கும். அல்லிகள் எல்லாம் சேர்ந்து வண்
ணத்திப்பூச்சியுருவுடையனவாயிருக்கும். யோனியின் அடியில் அமுதர்சுரப்பியுண்டு. பதாகை என்னும் கொடியல்லி பூச்சிகளைக் சுவரும் இயல்பினது. சிறையல்லிகள் பூச்சிவந்து அமரும் மேடை யாக அமைந்திருக்கின்றன. சிறையல்லிகளில் அமர்ந்துகொண்டு பூச்சி அமுதமருந்தும். அமுதமருந்தும் பூச்சியின் பாரத்தால் கொடியல்லி தாழ்தலும், ஏராவின் உச்சியிலுள்ள துளையினூடாகக் கேசரங்களின் முனைகள் (மகரந்தக்கூடுகள்) ஆடுதண்டுபோன்ற சையும் குறியினால் உந்தப்பட்டுப் பூச்சியின் வயிற்றுடன் உரா யும். குறியும் அவ்வாறே உராய்ந்து மகரந்தச்சேர்க்கை பெறும். ஆடுதண்டு போன்றசையும் யோனியையும் கேசரங்களையுமுடை மையால் இப்பூவினால் மேற்கொள்ளப்பட்ட பொறிமுறை, ஆடு நண்டுப் பொறிமுறை எனப்படும்.

மகரந்தச்சேர்க்கையும் கருக்கட்டலும்
77
"சல்வியா' (Salvin) வின் மா. ரந் தர் சே ர் க் கை பொ ரி மு றை: பொதுவாக "இருடி' (Singா) என்று அழைக்கப்படும் 'சல்வியா தோட்டங்களில் மிகவுஞ் சாதாரணமாக வளரும் ஒரு செடி ஆகும். இதில் பல வகைகள் உண்டு. இவற்றுள், அதிகமாக எங்கும் காணப்படும் ஒருவகை, ஏறத்தாழ இரண்டு அடி உய ரம் வரையில் வளர்ந்து, சிறிய, நீண்ட, துலக்கமான சிவப்புப் பூக்களைக் கொத்துக் கொத்தாகப் பூத்திருக்கும்.
புல்லிவட்டமானது அல்லிப்போலியான ஐந்து புல்லிகளை உடையது. இப்புல்லிகள் இணை ந்து. இரு சோணைகள் உடை யனவாய் இருக்கும். அல்லிவட்டத்திலும் ஐந்து இணைந்த அல்லி கள் உண்டு. இவ் அல்லிகள் ஈருதடுள்ளன (அதாவது: ஆழமா கப் பிரிப்புண்ட இரு உதடுகளை உடையன). இவ் உதடுகளில் பொலிவுள்ள கீழுதடு பூச்சிகளைக் கவர்வதோடு, அவை வந்து
அமர்வதற்கு ஏற்ற ஓர் மேடை ஆகவும் அமைந்திருக்கிறது."
உரு. 3)
சல்லியாவின் பூ (A) பூந்துணர்; (1}) பூவின் நெடுக்குவெட்டுமுகம்: 3 இரு . பிளவுள்ள குறி; SA கேசரம்; (0 அல்லிவட்டக்குழாய்; (IA புல்லி வட்டம்; (0) ஒரு கேசரம்; 1. அரைமகரந்தக்கூடு; 2. தொடுப்பு! 3. மகரந்தக்கூட்டின் மலடான பகுதி; 4, இழை.

Page 46
-- * "78
FTE
உயிரினவியல்
பூவின் மேலுதடு சிறிது வளைந்து, வினோதமான கேசரங்களை யும் தம்பத்தையும் பாதுகாத்து நிற்கின்றது. ஒவ்வொரு கேசர மும் மிகக் குறுத்த இழை உடையது. இவ் இழைகள் கீழுதட் டின் பின்புறத்தில் அல்லிவட்டக் குழாயுடன் தொடுக்கப்பட்டிருக் கின்றன. நீண்டு, வளைந்திருக்கும் 'தொடுப்'பினது நடுப்பகுதி யுடன் இழை தொடுக்கப்பட்டிருக்கும், (மகரந்தக்கூட்டின து இரு சோணைகளையும் தொடுத்துக்கொண்டிருக்கும் நரம்பு போன்ற அமைப்பே தொடுப்பு என்று சொல்லப்படுவது). தொடுப்பினது, மேன் முனையில் மகரந்தக்கூட்டின் ஒரு சோணை காணப்படும், இது கருக்கட்டுந்தன்மை உள்ளது. தொடுப்பினது கீழ்முனையி லுள்ள சோணை தட்டையாக்கப்பட்டு, மலடாக இருக்கும். ஆகவே, கேசரங்கள் ஒவ்வொன்றும், ஒரு நெம்புகோல் போன் று அமைந் திருக்கும். தொடுப்பின து கீழ்முனையைப் பின்னோக்கித் தள்ளும் பொழுது, அதன் (மேன்முனை முன்னோக்கி நகரும் இயல்பின து.
இயற்கையாக அமைந்திருக்கும் நிலையில், தொடுப்பானது ஏறத்தாழ நேராக நிமிர்ந்து இருக்கும். பூச்சி (வழக்கமாகத் தேனீ) யானது அல்லிவட்டத்துள் புகுந்ததும், தொடுப்பினது மல டான கீழ்ப்பகுதியைத் தள்ளுகிறது. இதன் விளைவாக தொடுப் பினது மேன்முனையில் இருக்கின்ற, கருக்கட்டுந்தன்மை வாய்ந்த சோணையான து கீழ்நோக்கி அசைந்து', அப்பூச்சியினது முது கின்மீது மோதி, மகரந்தமணிரிகளைச் சொரிந்துவிடுகிறது. மற் றொரு பூவை அப்பூச்சி தரிசிக்குங்கால், கேசரங்களின் மட்டத்தி லும் உயர்ந்திருக்கின்றதும், இருபிளவுள்ளதுமான அப்பூவின் குறி, பூச்சியின் முதுகுடன் முட்டிக்கொள்கிறது. முட்டிக்கொள்ளு த லும், அயன் மகரந்தச்சேர்க்கை நிகழுகின்றது. சல்வியாவில் நிகழும் மகரந்தச் சேர்க்கைப் பொறிமுறை நெம்புகோல் பொறிமுறை -எனப்படும்.
”க நிகாம் து. முட், அப்பூவின்
அந்திமல்லிகை (மிராபிலிசு யலப்பா), மூக்குத்திப்பூண்டு (திறை தாட்சு). பேராபட்டி (ஐபிசுக்கசு மைக்கிரந்தசு) போன்ற தாவரங்' சுளில் அயன் மகரந்தச்சேர்க்கை நடைபெறாவிட்டால் தன்மகரந் தச் சேர்க்கை நிகழுகின்றது. பக்குவமடைந்த குறிக்கு அணித் தாக இழைகள் வளைந்து மகரந்தக்கூடுகளைக் கொணர்தலால், அந்திமல்லிகை (மிராபிலிசு யலப்பா) யில் மகரந்தச்சேர்க்கை நிகழுகின்றது. இதற்கு நேர்மாறாகப், பக்குவமடைந்த குறியா ன து வளைந்து, மகரந்தக்கூடுகளுக்கு அண்மையிற் சென்று | மகரந்தம் பெறுதலுமுண்டு. உ - ம். மூக்குத்திப்பூண்டு, பேரா =

மகரந்தச்சேர்க்கையும் கருக்கட்டலும்
| 79
T)
மெட்டி முதலியன. மகா ந்தச்சேர்க்கை மேற்கூறியவாறு நடை
பெறும் முறை சமயோசித முறை எனப்படும்.
காற்றினால் நடைபெறும் மகரந்தச்சேர்க்கை: மகரந்த மணிகளைப் பரப்புவதில் காற்று அதிக பயன் விளைக்கத்தக்க ஒரு கருவியா புயிருந்தபோதும், பூச்சிகளைப்போன்று அவ்வளவு நம்பிக்கைக்கு உரிய ஒன்றன்று. எனவே, காற்றினால் மகரந்தச்சேர்க்கை நடை ச பெறும் பூக்கள், பூச்சிகளில் மகரந்தச்சேர்க்கை நடைபெறும் பூக்களினின்றும் அதிக வித்தியாசம் உடையன. அவற்றிற்குப் பின்வரும் சிறப்பியல்புகள் உண்டு :
(அ) அவை, பொலிவோ, எடுப்பான தோற்றமோ இல்லா தன; பொதுவாகச் சிறியவையாயிருக்கும்; துலக்கமான நிற முடைய அல்லிகளையோ, நறுமணமுள்ள அல்லிகளையோ உண் டாக்காமையால், அதிக சத்தியைச் சேமித்து வைத்துக்கொள்ளு
வா.
(ஆ) அவற்றில் அமுதச்சுரப்பி விருத்தியடைந்திருக்காது,
(இ) மகரந்தம் வழங்கும் விடயத்தில் காற்றை ஒரு நிச்சய மான கருவியாகக்கொள்ள முடியாமையால், ஒரு சில மகரந்த மணிகளே, அவை சென் று சேர்தற்குரிய இடங்களைச் சென்ற டைய முடியும். இந்நிலைமையை மேற்கொள்வதற்காக, இப்பூக்கள் அதிக கணியமுள்ள (எண் கறந்த) மகரந்தமணிகளை உண்டாக்கு கின் றன.
(ஈ) மகரந்த மணிகள் பாரமில்லாதனவாயும் "உலர்வு' உடை ":யனவாயுமிருக்கும். ஆதலால், அவை காற்றினால் மிக எளிதாகக்
-காவிச் செல்லப்படுகின்றன.
(உ) மகரந்தக்கூடுகள் இழைகளுடன் தளர்வாகத் தொடுக் கப்பட்டிருக்கும் (இம்மகரந்தக்கூடுகள் சுழலக்கூடியவை) இவ்வித அமைப்பு, -சுழலக்கூடிய தன்மை,-காற்றானது மகரந்த மணிகளை அசைத்து உதிர்த்து விடுவதற்கு உகந்ததாகும்."

Page 47
EL
உயிரினவியல்
(நடா)
குறிகள் கிளைகளுடையனவாயும், இறக்கைபோன்றும்
அமைந்திருத்தலும், பூக்களின் ஏனைய உறுப்புகளைப் பார்க்கிலும் உயர்ந்தும், பொலிவுடைத்தாக வும் இருத்தலும், தற்செயலாகக் காற்றினால் காவிச்செல்லப்படும் ஒரு மகரந்த மணியையேனும் பற் றிக் கொள்வதற்கு உகந்த இயல்பும் களாகும்.
அது /
14 1-தி "
புல் இனத்தில் காற்றினால் நடை பெறும் மகரந்தச் சேர்க்கை; புல் இனப் பூக்கள் மிகச்சிறியன; அ தி க. அளவான வேறுபாடுகள் உடை யன. உள் நரிகள் என்று கூறப்' படும் சிறப்பான, இரு பூவடிச் சிற்றிலைகளால் பூவின் பிரதான உ று ப் பு கள் பாதுகாக்கப்பட்டி
ருக்கும். கிழ் உள் ளுரி மேல் உள்ளுமி உரு. 40
யிலும் ஓரளவு சிறியது. அன்றி நெல்லினது சிறு காம்பிலி
யும், முன்னையது பின்னையதை (பூந்துணர்)
ஓர ள வுக்கு மூடிக்கொண்டிருக்
கும், உள்ளுமிகளினடியில் வேறு பாடடைந்து ஒடுக்கப்பட்ட உயியடிச்செதில்கள் என்னும் இரு 4 உறுப்புகள் உண்டு. இவற்றைப் பூவடியிலைகள் என்றும் கூற லாம். அல்லிகளும் புல்லிகளும் ஒடுக்கப்பட்டு, இரண்டு அல்லது மூன்று சிறு மூடிகளாகச் சூலகத்தின் அடிப்பகுதியில் இருக்கின் றன. சுலபூக்கூடியதும், பொலிவான தோற்றமுள்ளதுமான மக ரந்தக்கூடுகளையுடைய மூன்று கேசரங்கள் உண்டு. யோனியா னது கோளவுருவினதான சூலகத்தையும், இரு பிளவுள்ள, இறக்கைபோன்ற அமைப்புள்ள குறியையுந் தாங்கி நிற்கும். பொதுவாகத், தம்பம் இருப்பதில்லை.
பூவின து பிரதான உறுப்புகள் முதிர்வடைந்ததும், உள்ளுமி கள் விரியும்; விரிதலும். கேசரங்கள் கீழே தூங்கும். சுழலக் கூடிய மகரந்தக்கூடுகளின் மகரந்தமணிகளைக் காற்று எளிதாகக் காவிக் கொண்டு செல்லும். இறக்கையமைப்புடைய குறியானது! கேசரங்களின் மட்டத்திலும் எவ்வளவோ மேலே இருக்கும். இந்

மகரந்தச்சேர்க்கையும் கருக்கட்டலும்
31
நிலைமையில் காற்றினால் காவிச் செல்லப்படும் மகரந்தமணிகளில் எதையாவது குறி பிடித்துக்கொள் ளல் சாறும்.
உரு. 41
ஒரு புல்லினது பூ - Pஉள்ளுமி; A மகரந்தக்கூடு; ST தம்பம்; 0 சூலகம்;
L சிறு மூடிகள். -
வேலம் பாரிச்செடி (வலிசுனோ ரிடர பைராலிசு) 'பரில் நீரினால் நிகழும் மாரக் தச்சேர்க்கை: வேலம்பாசிச்செடி முழுவதாக நீரிலமிழ்ந்திய நீர்த் - தாவரமாகும். இஃது, ஒரு பால் பூக்களையுடையது; ஈரில்லமுடை யது, (ஆண்பூவும் பெண்பூவும் தனித்தனி வெவ்வேறு செடிகளில் காணப்படும்). எனவே, இச்செடிகளை 'ஆண் செடி' 'பெண் செடி எனப்பிரித்துக்கூறலாம். பூக்குங்காலம் அணுகியதும் ஆண் செடி கொத்துக்கொத்தாக ஆண்பூக்களைப் பூக்கும். இவ் ஆண்பூக்கள் முதிர்வடைந்ததும், தத்தம் குடித்த புக்காம்புகளினின்றும் பிரிந்து, நீர்மட்டத்திற்கு எழுந்து, நீரின் மேற்பரப்பில் மிதந்து திரியும்.
215ா

Page 48
ஈஉயிரின வியல்
நீரின் அடியில் சுருளிபோன்ற சுருளுள்ள காம்புகளுடன் இருந்து " கொண்டிருந்த பெண்பூக்கள் தத்தம் நீண்ட காம்புகளின் சுரு
உரு. 42 வேலம்பாசியின்-ஆண், பெண் செடிகள் (வலிசுனேரியா) - (4) பெண் செடி; (2) ஆண் செடி ; F பெண்பூ; IMI ஆண்பூ.
ளைக் குலைத்துக்கொண்டு நீர்மட்டத்திற்கு வந்துசேரும். அவற்றின் குறிகள் நீர்மட்டத்திற்குமேல் உயர்ந்து இருக்கும். அப்பொழுது, அயலிலே மிதந்து கொண்டு திரியும் ஆண்பூக்கள், தங்கள் மகரந்த மனரிகளை அக்குறிகளில் சொரிந்துவிடும். மகரந்தமணிகள் ஒட் டுந்தன்மையுடையனவாதலால். பெண்பூக்களின் குறிகளினது ஒரங்களில் எளிதாக ஒட்டிக்கொள்ளுகின்றன. மகரந்தச்சேர்க்கை நிறைவேறியதும், பெண்பூக்கள் தங்கள் நீண்ட பூக்காம்புகளைச் சுருளிபோன்ற சுருள்களாகச் சுருட்டிக்கொண்டு, மகரந்தச்சேர்க் கைக்கு முந்திய நிலைமையை அடைந்து, நீருள் அமிழ்ந்துவிடும். அங்கு, கருக்கட்டிய சூலகம் வளர்ச்சியடைந்து முற்றிப் பழமா கி.ப்றது.

மகரந்தச்சேர்க்கையும் கருக்கட்டலும்
B]
வினாக்கள்
(மகரந்தச்சேர்க்கையின் முக்கியத்துவம் யாது? நன்கு ஆராய்ந்தறிந்த பூச்சிகளால் மகரந்தச்சேர்க்கை நடை பெறும் பு, கழன்றினது சிறப்பியல்புகளையும், விசேட பொறிமுறைகளையும் விவரிக்க.
பெயரிடப்பட்ட பாரு பூவில், காற்றினால் எவ்வாறு மகரந்
தச் சேர்க்கை நிகழுகின்றதென்பதை விவரிக்க. 3. வேலம்பாசி (வலிசுனேரியா) ச் செடியில், நீரினால் மகரந்தச்
சேர்க்கை நிகழுமாற்றை விளக்குக.
செய்முறைப் பயிற்சிகள்
1. கடதாசிப்பு, போகன்வில்லா), பட்டிப்பூ, (விங்கா), கொடி மல்லிகை (யாசுமினம்), பப்பாரி (கரிக்கா பப்பாயா), நென்னே (கொக் கொசு நியூசிவெரா), பு, 1. (குக்குபிற்றா மட்சிமா)முதலியவற் றைப்போன்ற, வேறுபடுத்தப்பட்ட பூக்கள் சில வரைந்து. பகுதி களுக்குப் பெயரிடுக.
2. இந்திரட்பம் (தன் பேக்சியா), சல்ளியா, சூரியகாந்தி (எலியாந் தசு அன்னசு) என்னும் புடிக்களை வரைந்து, பகுதிகளுக்குப் பெய ரிடுக. சூரிய காந்தியில், சுதிர்ச் சிறுபூக்களையும் வட்டந்தட்டுச் சிறுபு,க் களையும் பிரித்தெடுத்த வெவ்வேறாக வரைக. - ' 3. நுணுக்குக்காட்டியின் கீழ் சில மகரந்தமணிகளை வைத்து
நோக்குக,
4. செவ்வரத்தப்பு, வின் சூலகத்தினது குறுக்குவெட்டுமுகத் தைக் சாகவில்லையால் ஆராய்க.
5. புல்லின தும், நெல்லின து ம் பூக்களை வரைந்து, அவை எவ் வாறு காற்றினால் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதற்கு இணக் கந்தெரிவிக்கின்றன வென நோக்குக.
6. ஒரு மீன் நீர்த்தொட்டியில் வேலப்பாசிச்செடி (வவிசுனேரியா' சிலவற்றை வளர்த்துச், சில மாதங்கள் வரை நோக்குக. அதிட்ட மிருக்குமாயின், அவற்றில் பூக்கள் உண்டாவதைக் காணலாம்.

Page 49
அத்தியாயம் 13
பழங்களும் வித்துகளும் பரம்பல்
பழங்கள் உண்டாதல்: கருக்கட்டலான து சூல்வித்தை விதி தாகவும், சூலகத்தைப் பழமாகவும் வளரத் தாண்டி விடுகின்றது - சிலவேளைகளில், பூவின து வேறு சில பகுதிகளும் வளரும்படி தாண்டப்பட்டுப், பழத்தின் ஒரு பகுதியாக அமைதலுமுண்டு. உதாரணமாகப், புல்லிகள் நிலைபேறுடையனவாய்ப் பழத்தொடு கூடவளர்ந்து சதையுள்ளனவாத லுங்கூடும். உ-ம். கொய்யா, கத் தரி, Irாதுப்பா முதலியன, 1மரமுந்திரிகை (அனக்காடியம் ஒட்சிடன் தேல்), அப்பிள் (பைரசு மா லுசு), பேரை [பைரசு கொம்மியூனிசு) முதலியவற்றில் ஏந்தியே சதைப்பகுதியாக வளர்ந்து, பழத்தின் ஒரு பகுதி ஆகின்றது, சில பழங்களில் விருத்தியுறாத வித்துகள் இருப்பதை நாம் கானாவாம். அவைகள் கருக்கட்டாத சூல்வித்து களாகும். கருக்கட்டாத சூல்வித்துகள் விருத்தியுறுவதில்லை, உ-ம். பப்பாசி (கரிக்கா பப்பாயா].
மேற்கூறியவற்றிலிருந்து, பழமென்பது முதிர்ந்த சூலகமாகும் என்பது தெளிவாகின்றது. சூலகம் மட்டும் முதிர்வதனா லுண்டா வது மெய்ப்பழம் எனப்படும், சூலகத்தோடு பூவின் ஏனைய பகுதி களில் ஒன்றோ, பலவோ சேர்ந்து முதிர்வதனால் உண்டாவது + போலிப்பழமாகும். போலிப்பழத்தில் புல்லிவட்டமோ, பூவுறையோ, ஏந்தியோ, ஏந்தியும் பூந்தண்டும் சேர்ந்தோ இருத்தல் கூடும். பல சிறிய மெய்ப்பழங்கள் சேர்ந்த திரள்பழமும், பூந்துணாரிலுண் டாகும் கூட்டுப்பழமும் போலிப்பழங்கள் எனக் கொள்ளப்படும். திரள்பழத்திற்கு அன்னமுன் ஏ (அைேன)வும் கூட்டுப்பழத்திற்குப் பலா (ஆட்டோக்காப்புசு), அன்னுசி (அனனசு), தாழை (பந்தா னுசு) என்பனவும் உதாரணங்களாகும்.
பழங்களைச் சதைப்பழங்கள், உலர்பழங்கள் எனப் பாகுபாடு செய் யலாம், சதைப்பழங்கள் தடிப்புள்ள பழச்சுவர் அல்லது சுற்றுக் கனியம் உடையன. இச் சுற்றுக்கனியம் மூன்று பகுதிகளை உடையது. வெளிப்பகுதி வெளிச்சுவியம் எனவும், நடுப்பகுதி இடைக்கனியம் எனவும், உட்பகுதி உட்கரியம் எனவும் கூறப்படும், பல பழங்களில் உட்கனியம் காணப்படுவதில்லை. சதைப்பழங் களுக்கு, பாம்பழம், தெங்கம்பழம், கொய்யாப்பழம், வாழைப்பழம், கெக்.

பழங்களும் வித்துக்களும் பரம்பல்
61
காசிக்காய், தக்காளிப்பழம், பப்பாசிப்பழம் முதலியன சிறந்த உதாரணங் களாகும். அவரைக்காய், வெண்டிக்காய், நெல், முருங்கைக்காய் முதலியன உலர் பழங்களுக்கு ஏற்ற உதாரணங்களாகும்.
பழங்களும் வித்துகளும் பரம்பவேண்டியதன் ஆவசிகம்;
பரப்பல் என்பது பழங்களும் வித்துகளும் பல்வேறிடங்களி லும் பரப்பப்படுதல் ஆகும். பொதுவாகத் தாவரங்கள் அவற்றை ஏராளமாக உற்பத்தி செய்கின்றன, அவைகள் எல்லாம் தாய்த் தாவரத்தின் கீழ் விழுமேயானால், முளைப்பதற்கும், வளருவ தற்கும் போதுமான இடவசதியோ, தகுந்த உணவுப்பொருளோ, வளியோ கிடையாது போய்விடும். இந் நிலைமை தாவரங்க ளுக்கிடையில் வாழ்க்கைப்போரில் போட்டியை உண்டாக்கி விடும். இப்போட்டியால் சில தாவரவினங்கள். அழிந்து ஒழிந்து போதலுமாம், வித்துகள், பழங்கள் பரம்பல் தாவரவினங்கள் பலவிடங்களிலும் பரவி விருத்தியாதற்கும், மற்று, அவை நிலைபெற்று வாழ்வதற்கும் ஏதுவாகின்றது.
பழங்களும் வித்துகளும் பரம்புவதற்கு விலங்குகள், காற்று, நீர் என்னும் புறத்தேயுள்ள கருவிகள் முக்கிய காரணங்களாகும், சில தாவரங்களில் சிறப்பான அதிர்ந்து வெடிக்கும் பொறிமுறை ஒன்று. பழத்தினுள்ளே விருத்தியாகி, வித்துகளை உந்தித் தள்ளி வெளி யேற்றி விடுகின்றது.
காற்றினால் பரம்பல் : காற்றினால் பரம்பும் பழங்களுக்கும் வித் "துகளுக்கும் பின் வரும் சிறப்பியல்புகளில் ஒன்றோ, பலவோ
அமைந்திருக்கும்.
(அ) இவற்றிற் பல மிகநுண்ணியவையாயும் பாரமில்லாதன வாயும் இருக்கும். இவை வளியில் நீண்ட நேரத்திற்கு மிதந்து திரியும் இயல்பின; ஆதலால், அதிக தொலைவிலுள்ள இடங்க ளுக்குக் காற்றினால் காவிச் செல்லப்படும். உ-ம். ஒங்கிட்டுகள். -
(ஆ) பழங்களில் மென்றகடு போன்ற வெளிமுளைகள் அல்லது பிறகுகள் இருத்தலால், அவை பாரமில்லாதனவாயும், காற்றோடு - கூடப் பிரயாணம் பண்ணும் தன்மையுடையனவாயுமிருக்கும். தலாக்கு (கைரோக்காப்புசு), எண்ணெய் மரம் (தித்தரோக்காப்புசு), பெற்றியா முதலிய தாவரங்களில் உள்ள பூக்களின் புல்லிகள் நிலை பேறுடையனவாதலால், பழங்களின் சிறகுகளாக மாற்றம் அடை

Page 50
பர்
உயிரினவியல்
கின்றன. வேங்கை (தெரோன் காப்புசு) வட்டவடிவுள்ள மென்றகடு போன்ற சிறகுகளையுடைய பழங்களை உடையது.
உரு. 43 காற்றினால் பரம்பும் பழங்களும் வித்துகளும்; 4 எண்ணெய் (தித்தரோக்காப்புசு): B ஆச்சா (ஒரட்சிலம்): 0 தங்கவலரி (தெக்கோமா); 1 முருங்கை (மொறிங்கா ); E மூக்குத்திப்பூண்டு (திரைதாட்சு); " தணக்கு (கைரோக் காப்புசு); G வேங்கை (தெரோக்னாப்புசு); H சீதேவியார் செங்கழுநீர் (வேனுேனியா).
(இ) இவ்வாறே. சிவ உலர்பழங்களின் வித்துகளினது விதை யுறையிலிருந்து மெல்லியரிவுகள் விருத்தியாகின்றன. இவ்விரிவு கள் அவ்வித்துகளைப் பாரமில்லாதனவாக்குவதால், அவை பிக எளிதாகக் காற்றினால் காவிச்செல்லப்படக் கூடியனவாகின் றன. பொன்னெச்சி" (தெக்கோமா) வித்தைச் சுற்றிலும் ஒடுக்கமான விரி வுகளை உடைய து.. ஆச்சா (ஒரட்சிலம்) மரத்தின் வித்துகள் ஒரு பங்குஒளிபுகவிடுந் தன்மையுள்ள, கடதாசிபோன்ற வெளிமுளை களை உடையது. பருப்பாக (மொறிங்காயின் வித்துகள் சனத யுள்ள 'கங்குகளை' உடையன, இவ்வித்துகள் உலர்ந்தபின், மென் றகடுபோன்ற சிறகுகளாக மாற்றம் அடைகின்றன.
(ஈ) சில தாவரங்களின் உலர்பழங்கள் ஒரு முனையில் மென் மையான ஒரு பயிர்க்கற்றை உடையன. இம்மயிர்க்கற்றை பரக்
* இது தங்கவடரி எனவும் வழங்கப்படும்,

பழங்களும் வித்துக்களும் பரம்பல்
BT
குடை போன்று அமைந்திருத்தலால் அவ்வித்துகள் வளியில் நீண்ட நேரம் பறந்து செல்லும் தன்மை வாய்ந்தன வாயும், எளிதாகப் பரம்புந்தன்மையுடையனவாயும் இருக்கின்றன. உ-ம், மூக்குத்திப் பூண்டு (திறை தாட்சு), சிதேவியார்செங்கழுநீர் (வேனே னியா).
(உ) சில தாவரங்களினது வித்துகளின் ஒரு முனையில் பாரமில்லாத, மெத்தென்ற ஒரு மயிர்க்கற்றை காணப்படும், உ-ம். எருக்கு (கலத்துரப்பிசு), வேலிப் பருத்தி (இடேமியா), குறிஞ்சா (திரக்கியா) முதலியன. பந்தி வித்துகள் மெத்தென்ற, பாரமில் லாத ஒரு மயிர்க்கற்றைக்குள் பொதியப்பட்டுக் கிடக்கின்றன, இவ் அமைப்பு அவைகள் வளியிற் பறந்து செல்ல உதவுகின்றது.
விலங்குகளாற் பரம்பல்: விலங்குகளாற் பரம்பும் பழங்களும் வித்துகளும் பின்வரும் சிறப்பியல்புகளுள் ஒன்றோ, பலவோ உடையவை.
(அ) உண்ணக்கூடிய பகுதிகளே உடைமையால் பழங்கள் விலங் குகளால் காவிச்செல்லப்படும். இப்பழங்களின் இனிய சதைப் பகுதியை விலங்குகள் உண்டபின், வன்மையான வித்து களைக் கவனிக்காது விட்டுவிடும், உதாரணமாக, மாம்பழத்தின் இடைக்கனியம் சதையுள்ள து; உட்கனியம் வன்மையானது; உட் கனியமே வித்தைக் காக்கின்றது. மங்குத்தான் (காசீனியா மங் குத்தானு), இறம்புட்டான் (நெவீலியம் இலப்பாசியம்) முதலிய பழங்கள் மேல்வளரிகள் என்று சொல்லப்படும் மாதுரியமான வெளிமுளை சதை)களை உடையன. இம் மேல்வளரிகள் விலங் குகளால் விரும்பி உண் ணப்படுகின் றன. உண்ணப்பட்டதும், வித்துகள் கைவிடப்படுகின் றன. சில விலங்குகள் சில பழங்களை முழுவதாகவே உண்டுவிடுகின்றன. இப் பழங்களின் வித்துகள் வன்மையான வித்துரைகளையுடைமையினால் ச மி ப ா டு அடைய மாட்டா. எனவே, அவை ஒருவித ஊறுமின்றி வெளியே மலத் துடன் - எச்சத்துடன் - வந்து விடும். உ-ம். கொய்யா (சிடியம்) வேம்பு (அசாடிராத்தா இந்திக்கா), நாயுண்ணி (இலந்தான) முத லியன.
(ஆ) வஞ்சித்தல் : நன்றி (அபுரசு பிறிக்காற்றோரியசு- குன்றி மணி) யின் வித்துகள் துலக்கமான நிறமுடையனவாதலால் பறவை களைக் கவருந் தன்மையன. சில வித்துகள், வண்டுகள் போன்ற - தோற்றமுடைமை காரணமாகப், பறவைகளாற் காவிச்செல்லப்

Page 51
SS
உயிரினவியல்
பட்டு, ஈற்றில் கைவிடப்படும். உ-Iம், ஆமணக்கு (இரெசினசு கொம்மியூனிசு).
(இ) ஓட்டுந் தன்மையுள்ள வித்துகள் : குருவிச்சை (உலராந்துசு) போன்றவற்றின் இடைக்கனியம் ஓட்டுந்தன்மையுள்ளது. ஆகவே, அதன் வித்து கள் பறவைகளின் சொண்டில் ஒட்டிக் கொள்ளுவ தால், பிற இடங்களுக்குக் காவிச் செல்லப்படுகின்றன.
உரு. 44 விலங்குகளாற் பரப்பும் பழங்கள் A புலிநகம் (மாட்டாரியா ]; 13 ஒட்டுத்துத்தி (திறையம் வெற்ற); (] தொட்டாற்சுருங்கி (மைமோசா பிடிக்கா 1; I நாயுருவி (அச்சிராந்தசு இந்திக்கா).
(ஈ) சில வித்துகள் மயிர்கள், முட்கள், மயிர்முட்கள், கொளுக்கி சுள் என்பவற்றை உடையன. விலங்குகளின் உடலில் உள்ள மயிர்ப்போர்வையில் இத்தகைய வித்துகள் பற்றிக்கொள்ளு கின்றன. உ-ம். ஓட்டொட்டி, வெற்றிலைக்காலி, (சோனியா தைவில்லா),

பழங்களும் வித்துக்களும் பரம்பல்
8]
நாயுருவி (அச்சிராந்தசு), நெருஞ்சில் (திறைபியூலசு), புலிநகம் (மாட் 1உனியா ). ஆடையொட்டி (பியூப்பேலியா), ஒட்டுத்துத்தி (திரையம் வெற்று) முதலியன. ஒட்டுத்துத்தியின் கனியில் கொளுக்கிகள் உண்டு. நாயுருவியில் நிலைபேறான புல்லிகள் முட்களாகின்றன. தொட்டாற்சுருப்டு (மைமோசா பியூடிக்கா), வெற்றிலைக்காலி என்ப வற்றில் சிறு மயிர்களுண்டு. நெருஞ்சிலில் வன்மையான இரு சோடி முட்களுண்டு.
நீரினற் பாம்பல் : நீரினாற் பரம்பும் பழங்கள் மிதந்து செல்வ தற்கு ஏற்றவகையில் பாரயிரல்லாதனவாக இருக்கும். அவை வளி சடள்ளடக்கிய மேலுறைகளை யுடைமையால் பாரமில்லாதனவாயிருக் கின்றன. வித்துகள் நீரில் கறி, அழுகிப்போகாதவாறு, இம் மேலுறைகள் காக்கின்றன', தெங்கம்பழத்தின் இடைக்கனியம் நாருள்ளதாய், வளியை உள்ளடக்கி இருக்கும். ஆதலால், அது
பாரமில்லாததாய் இருக்கிறது. அதன் உட்கனியம் கற்சுலங்களால் ஆக்கப்பட்டிருப்பதால், அதன் உள் ளிருக்கும் வித்துக்கு நல்ல பாது காப்பளிக்கின்றது. புன்னை (கலோ விலம் இனோவிலம்) ப் பழத்தின் வித்தைச் சுற்றிலும் அமைந்திருக் கும், பகடற்பஞ்சுபி வழியம் அப்பழத் தைப் பாரமில்லாததாக்குகின்றது, உடலே (சேபேரா ஓடலம்) ப் பழத் தின் வித்தைச் சுற்றிலும் கடற் பஞ்சு போன்ற படை ஒன்று இருக் கிறது. தாமரை (நெ லும்பியம் ]ப்
பழமும் கடற்பஞ்சு போன்றது. - உரு. 45
அது முற்றியதும், காம்பினின்றும் நீரினற் பாம்பும் பழங்கள் - பிரிந்து, நீரில் விழுந்து மிதந்து
"(தெங்கம் பழம்) திரியும். அதன் வித்துகள் கடற் 1' நாருள் கள இடைக்கனியம் பஞ்சு போன்ற ஏந்தியிற் பொதி
யப்பட்டிருக்கும், ஏ ந் தி அமுகத் தொடங்குதலும், வித்துகள் ஒரு முறைக்கு ஒன்றாக, நீருள் விழு கின்றன. வாதுனா (புரூனசு அமித்தாலுசு) வித்து, நீர் உட்புக விடாத தக்கை இழையங்களால் சூழப்பட்டி ருக்கும். இத்தக்கை - இழையத்தின் உதவியால் வாதுமைப்பழம் நீரில் மிதந்து செல் லக்கூடியதாயிருக்கின்றது. ( தக்கை இழையம் அதனைப் பாரமில் லாததாக்குகின்றது). மருதமர (தேமினலியா கிளாபிரு) த்தின் பழமும் இன்னோர் உதாரணமாகும்.

Page 52
III
உயிரினவியல்
அதிர்ந்து வெடிக்கும் பொறிமுறை : இது பழச்சுவரிலேயே விருத் தியாகும் ஒரு விசேட உபகரணம் ஆகும். ஒரு சில உலர்வெடி பழங்களில் சுற்றுக்கனியமான து, நிடீ ரென உலர்ந்து விடுவதனால் அவை அதிர்ந்து வெடித்து, வித்துகளைப் பல திசைகளிலும் சிதறுண்டு போகும்படி செய்கின்றன. உ-ம், புளியாரை (ஒட்சா லிசு), அவரை (தொலிக்கொசு), பபறு ( பேசியோலசு ), குன்றி
( அபுரசு), இரப்பர் (ஈவியா பிரேசிலியெஞ்சிசு) போன்ற தாவரங்களின் வித்துகள் மிக உக்கிரமாக அதிர்ந்து வெடிக்கும். காசிந்தும்பை (போல்சம்) ச் தி ச டி யி ன் வில்லயங்கள் கையால் மெல்ல அமுக்கியதும் அதிர்ந்து வெடிக்கின்றன. வெடிபலவன் (உறுவெல்லியா) இக்கிரி (பாலேரியா) எள் பன வும் அதிர்ந்து வெடிக் கும் உலர்கனிகளாகும், வெடி பலவன் எடை, பளி என்பவற்றில் நனைதல் காரணமாகவும், இக் சிரிபோன்றன வளியின் வெப்ப நிலை அதிகரிப்புக் காரணமாக வும் அதிர்ந்து வெடிக்கின் றன. தளாப்பத்து (கொறிவா அம்பிராக்கூலிவெரா). மந் தாரவல்லி (பவுனியா வாகிலி)
என்பவற்றின் உலர்பழங் உரு. 46
கள், மிகப் பெரிய சத்தத்து அதிர்ந்து வெடிக்கும் (பழங்கள்)
டன் அதிர்ந்து வெடித்து வித் பொறிமுறை
துக் களைப் பல திசைகளி A, A, காசித்தும்பை (போல்சம்) லும் பரம்பச் செய்கின்றன. B 13, வெடி.பலவன் (உறுவெல்லியா) அதிர்ந்து வெடிக்கும் உலர்
பழங்களின் வி த் து க ள் குறைந்தது ஒருசில அடி தூரத்திற்காவது வீசி எறியப்படும் என்பது கவனிக்கற்பாலது.
வினாக்கள் 1. பழங்கள், வித்துகள் பரம்பலில் காற்று எவ்வாறு உதவி செய்கின்றது?

பழங்களும் வித்துக்களும் பரம்பல்
பு1
2. 'பழங்களும் வித்துகளும் விலங்குகளாற் பரம்பல்" என் பதுபற்றி ஒரு கட்டுரை வரைக.
3. எவ்வெவ் வகைகளில், குறிப்பிட்ட சில பழங்களும் வித் : துகளும் நீரினாற் பரம்பலுக்கு இசைவாக்கமுடையனவாயிருக் - கின்றன?
|செய்முறைப் பயிற்சிகள் | 1. பொதுவாகக் காணப்படும் மாம்பழம், பேரீச்சம்பழம், தெங்கம்பழம், பூசிளரிப்பழம், தோடம்பழம், 'பப்பாசிப்பழம், வாழைப்பழம் முதலியவற்றின் வெளியுருவப் படங்களை வரைக. ஒவ்வொன்றினதும் குறுக்குவெட்டு முகத்தை வரைந்து, பகுதிக (ளுக்குப் பெயரிடுக,
2. பொதுவாகக் காணப்படும் அவரை, பயறு, முருங்கை, வெண்டி, என்பவற்றின், உலர்பழங்களினது வெளியுருவப்படங் கள் வரைக.
3. மங்குந்தான், இறம்புட்டான், கொய்யா, வேம்பு, குன்றி, மஞ்சாடி (அடி னந்தரா) அ,மணக்கு, நாம், நெருஞ்சில், நாயுருவி, ஒட்டுத்துத்தி, தொட்டாற்சுருங்கி முதலிய, -விலங்குகளாற் பரம்பலுக்குச் சிறப் பான இசைவாக்கமுள்ள,-பழங்களினதும், வித்துகளினதும் வெளி யுருவப்படங்களை வரைக.
4. காற்றினாற் பரம்பலுக்கெனச் சிறப்பான இசைவாக்க முள்ள எண்ணெய் (தித்தரோகாப்புசு), நணக்கு (கைரோக்காப்புசு) "மகோகனி (சுவியெற்றினியா மகோகனி), பெற்றியா (பெற்றியா வொலு பிலிசு), பொன்னெச்சி (தெக் கோமா), ஆச்ரா (ஒரட்சிலம்), முருங்கை (மொறிங்கா), மூக்குந்திப்பு, -ண்டு (திறைதாட்சு), சிதேனியார்செங்கழுநீர் (வேனோனியா), எருக்கு (கலத் துரப்பிசு), மாரி (இபுதாக்கே மட, புளற்ரு), விராலி (உடோடோனியா), பருந்தி கொசிப்பியம்) முதலிய தாவரங்களின் பழங்களினா தும் வித்துகளினதும் வெளியுருவம்! படங்களை வரை..
5. நீரினாற் பரம்பலுக்கெனச் சிறப்பான இசைவாக்கமுள்ள தென்னை, வாதுனம், புன்னை, தாமரை, உடலைப் (சேபேரா), இரப்பர், மருது முதலிய தாவரங்களின் பழங்களினதும் வித்துகளினதும் வெளியுருவப் படங்களை வரைக. காசித்தும்பைப்பழம், வெடிபலவன் பழம் போன்றவற்றின் அதிர்ந்து வெடிக்கும் பொறிமுறையைச் சோதித்து அறிக.
6. மேற்கூறப்பட்ட பழங்கள், வித்துகள் ' என்பவற்றைக் கூடுமானவரை சேகரித்து வைத்துக் கொள் க.

Page 53
அத்தியாயம் 14 வித்தும் அதன் முளைத்தலும்
கருக்கட்டலின்பின் சூல்வித்துகள் விருத்தியடைவதனால் வித்துகள் உண்டாகின்றன. இருபகுதிகளையுடைய ஒரு வித்துறை யினால் வித்தின் உட்பகுதிகள் நன்கு பாதுகாக்கப்பட்டிருக்கின் றன. வித்துறையின் வன்மையான வெளிப்பகுதி விதைவெளியுறை என்றும், மெல்லிய உட்பகுதி விதையுன்வளுறை என்றும் கூறப்படும். வித்தின் ஒருபக்கத்தில், பொதுவாக இருண்ட ஒரு தழும்பு காணப்படும், இதுவே, விந்துந்தாழப்பு எனப்படும். பழத்தினது சுற்றுக்கனியத்துடன் இணைக்கப்பட்டிருந்த வித்தின் பகுதியே வித்துத்தழும்பு எனக் கூறப்படுகிறது. வித்துத்தழும்பின் ஒரு முனையில் ஒரு சிறிய துவாரம் காணப்படும். இத்துவாரமே நுணுக்குத்தொள எனப்படும். வித்து முளைத்துக்கொண்டிருக்கும் போது, நுணுக்குத்தொளையினூடாகவே நீர் வித்தி னுட்புகுகின்
உரு. 47
அவரைவித்தின் அமைப்பு 30 வித்துறை M நுணுக்குத்தொளை; H வித்துத்தழும்பு; P முளைத்தண்டு; 1: முலாவேர்; ( வித்திலை.
றது. வித்துறையை அகற்றினால், உள்ளே புலிவுடு இருப்பதைக் காணலாம். இஃது, ஒன்று அல்லது இரண்டு வித்திட்ட்களையும் - முதலர்mசயும் உடையதாயிருக்கும். முதல்ச்சு என்பது முளைந்தண் டுப், புளேவேரும் சேர்ந்த உறுப்பு ஆகும். முளைத்தண்டு அங்கு ரத்தொகுதியாகவும், முளை வேர் வேர்த்தொகுதியாகவும் வளர்ந்து -விருத்தியுறுகின்றன.

வித்தும் அதன் முளைத்தலும்
63
வித்துறையின் வெளிப்பகுதி, பொதுவாக மழமழப்புள்ள தாகவே இருக்கும். ஆனால், சில வித்துகளில் சிறகுகள், மயிர் கள் முதலிய சிறப்பான அமைப்புகள் காணப்படுதலுமுண்டு. ஆமணக்கம் வித்தின் ஒடுக்கமான பகுதியில் மேல்வளர்சதை என் னும் வெளிமுளை ஒன்று உண்டு. வேறுசில வித்துகளில் நுணுக் குத்தொளையிலிருந்து சதையுள்ள ஒரு வெளிமுளை உண்டாகி, வித்து முழுவதையுஞ் சூழ்ந்திருக்கும், இது, மேல்வளாரி எனப்படும். உ-ம். மங்குத்தான், (காசினியா). சாதிக்காய் (மிரித்திக்கா விறக்கி ரஞ்சு), இறம்புட்டான் (நெவீலியம்) என்பன.
| இரண்டு வித்திலைகளையுடைய வித்துகளை உண்டாக்கும் தாவ ரங்கள், இரு வித்திலைத்தாவரங்கள் எனப்படும். ஒரு வித்திலையுள்ள வித்துகளை உண்டாக்கும் தாவரங்கள் ஒரு வித்திலைத்தாவரங்கள் எனப் படும். விருத்தியாகிக்கொண்டிருக்கும் முளை (நாற்றுக்கு வேண் டிய ஏராளமான ஒதுக்கவுணவுப் பொருள், பொதுவாக இவ்வித் திலைகளில் (அல்லது வித்திலையில்) அடங்கியிருக்கும். ஆனால், சில வித்துகளில் வித்தாளினபுயம் என்னும் பகுதி காணப்படுகிறது. வித்தகவிழையத்தில் உள்ள ஒதுக்கவுணவு செறிவுள்ளதாயும் திண்மவடிவிலும், பொதுவாக எண்ணெய்ப்பொருளாக வைக்கப் பட்டிருக்கும். வித்தகவினபுயமுள்ள வித்துகளை வித்தாவிழையமுள் என அல்லது வெள்ளரிழையறுள்ளன என்றும்; அஃது இல்லாத - வித்துகளை ளித்தாளிழையமில்லாதன அல்லது வெண்ணரிழையமில்லாதன என்றும் சொல்லப்படும். வித்தகவிழையமுள்ள வித்துகளின் வித்திலைகள் (அல்லது வித்திலை), இலை போன்று மெல்லிதாக இருக்கும்.
எங்களில் எம் வித்தி2. பொ.
நடதாரராங்கள்!
(1) வித்தகவிழையமுள்ள, இருவித்திலையுள்ள வித்துகள் :
வெண்டி, அமலாக்கு, முசுட்டை முதலியன. '
பன்பளிப்பு "ழையலர் பிர சி நிதிகள்
(11)
வித்தகவிழையமில்லாத, இருவித்திலையுள்ள வித்துகள்: அவரை, கடலை (சீக்கர் அரியெற்றினம்), முருங்கை முத லியன்,
(iii)
வித்தகவிழையமுள்ள ஒருவித்திலையுள்ள தென்னை, பனை, நெல், சோளம் முதலியன.
வித்துகள் :
[14] விந்து
வித்தகவிழைமில்லாத ஒருவித்திலையுள்ள வித்துகள், ஒக்கிட்டுகள்,

Page 54
104
உயிரினவியல்
விந்துகள் முளைத்தல்: வித்தானது இளந்தாவரமாக அல்லது நாற்றாக உருமாற்றமடைதல், வித்துமுளைத்தல், எனப்படும். வித்துகள் முளைப்பதற்குப் பின்வரும் மூன்று வெளிப்புற நிபந் தனைகள் இன்றியமையாதன. அவையாவன, (1) உகந்த வெப்பநிலை; (ii) நீர் (அல்லது ஈரலிப்பு) (iii) ஒட்சிசன் என்பனவாகும், *
இடைவெப்பவலய நாடுகளில் வெப்ப நிலைத் தாழ்வு காரண மாக, மாரிகாலத்தில் வித்துகள் முளைப்பதில்லை. ஆனால், அயன வலய நாடுகளில் ஆண்டு முழுவதும் வித்துகள் முளைப்பதற்கு உசுந்த வெப்பநிலை நிலவுகின்றது. ஈரலிப்புள்ள மரத்தூசுக் குள் ளே சில அவரைவித்துகளை நாட்டிப், பனிக்கட்டியுள்ள பெட்டி ஒன்றிற்குள் வைத்தால், அவ்வித்துகள் முளைக்கா.
வித்துகளை உலர்ந்த நிலையில், நீண்ட காலத்துக்குக் கெட்டுப் போகாது வைத்திருக்கலாமென்பது, யாமனைவரும் அறிந்த விடயமாகும். உலர்ந்த நிலையிலுள்ள வித்துகள் "உரங்கு நிலையில் உள்ளன என்று சொல்லப்படும். வித்துகள் நீருடன் தொடர்பு கொ ண்டவுடன் "விழிப்புநிலை எய்தி, உடனே முளைக்கத் துவங்கு கின்றன. வித்திலைகளில் (அல்லது வித்திலையில்) சேமித்து வைக் கப்பட்டிருக்கும் ஒதுக்கவுணவைச் சமிக்கச் செய்தற்கும், சமித்த உணவை முளைத்தண்டுக்கும் முளைவேருக்கும் கொண்டு செல்வதற்
கும், நீர் இன்றியமையாதது.
வளியிலிருந்து தேவையான ஒட்சிசனை முளைக்கும் வித்துகள் பெற்றுக் கொள்ளுகின்றன. நீரில் ஊறவைக்கப்பட்ட வித்துகளை, ஒட்சிசன் இல்லாத ஓரிடத்தில் வைத்தால், அவை முளைக்க மாட்டா; மற்று, அவை பிரிந்தழிந்துவிடும், இவ் உண்மையைப் பரிசோதனை வாயிலாக நிறுவிக்காட்டலாம்.
பரிசோதனை: மூன்று வடிகலன்களை எடுத்துக்கொள் ச. அவற் றுள், நீரில் ஊறிய வித்துகளை இட்டபின் முதலாவதைப் பைரகலல் உள்ள ஒரு பாத்திரத்தினுள்ளும், இரண்டாவதைப் பொற்றாசிய மைதரொட்சைட்டுக்கரைசல் உள்ள ஒரு பாத்திரத்தினுள்ளும், மூன்றாவதை நீர் உள்ள ஒரு பாத்திரத்தினுள்ளும், உரு. 48 இல் காட்டியவாறு அமிழ்த்திவைத்து விடுக. முதலாவது, வடிகலனில் உள்ள ஒட்சிசன் பைரகல்லால் உறிஞ்சப்பட்டுவிடும், எனவே, பைரகலல் வடி கலனில் ஏறி நிற்கும்; வித்துகளும் முளைக்கத் தவறிவிடும் ;- முளைக்கமாட்டா. இரண்டாவது வடி கல் னுள் பொற் ருசியமைதரொட்சைட்டுக்கரைசல் ஏறியிருக்கக்
காணலாம்;

விந்தும் அதன் முளைத்தலும்
45
ஆனல். வித்துகளும் முளைத்திருக்கும். இதிலிருந்து நாம் அறி யக்கிடப்பது என்னவெனில்: வித்துகள் முளைக்கும்போது ஒட்சி "சன் உறிஞ்சப்படுகிறதென்பதுவும், காபனீரொட்சைட்டு வெளிப் படுத்தப்படுகிறது என்பதுவுமாம். மூன்றாவது வடிகலனில் உள்ள
பசிட்!
தி
உரு. 48 வித்துகள் முளைத்தற்கு ஒட்சிசன் ஆவசிகம்-பரிசோதனை
A பைரகல்லில் அமிழ்த்தப்பட்ட வடிகலன் (வித்துகள் முளைக்க -வில்லை); B பொற்றாசியமை தரொட்சைட்டில் அமிழ்த்தப்பட்ட வடி
கலன்; ( நீரில் அமிழ்த்தப்பட்ட வடிகலன்.
வித்துகளும் முளைத்திருக்கும்; ஆனால், வடி கலனுள் நீர் ஏறி யிருக்காது, வெளிப்படுத்தப்பட்ட காபனீரொட்சைட்டின் அளவு, உறிஞ்சப்பட்ட ஒட்சிசனின் அளவுக்குச் சமன் என்பதை, இதி லிருந்து அறிகிறோம்.
போஞ்சி (பேபியேபாலா வற்சாரிசு) வித்தின் அமைப்பும், முளைத்தலும்: (போஞ்சிவித்துக்குப் பதிலாகப் பயற்றம்வித்து, அவரைவித்து - முதலியவற்றையும் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளலாம்). போஞ்சிவித்து சிறுநீரக வடிவமுடையது; இருவித்திலைகளுள் எது: வித்தசுலிழையமில்லாதது. வித்தின் குழிந்த பகுதியில் நுணுக்குத்தொளையும் வித்துத்தழும்பும் காணப்படும் (உரு. 47 காண்க). விதைவெளியுறையானது விதையுள்ளுறையிலும் பார்க் கத் தடிப்பான து. வித்தின் பெரும்பகுதி ஏராளமான புரதங்க களாலும், மாப்பொருளாலும் நிரம்பியிருக்கிறது. சிறியதும், வளை வுள்ளதுமான முதலச்சு என்னும் அமைப்பு, இரண்டு வித்திலைக (ளுக்கும் நடுவே, ஒரு முனையில் அமைந்திருக்கிறது.
இரண்டு வித்திலைகளும் நுணுக்குத்தொளையினூடாக நீரை உறிஞ்சுகின் றன. உறிஞ்சியதும், இவை விரிகின் றன. அதே சமயத்தில், ஏராளமான சமிபாட்டிற்குரிய நொதிச்சத்துகளையுஞ் சுரக்கின்றன. இந்நொதிச்சத்துகள் வித்திலைகளில் சேமித்து

Page 55
பு
உயிரினவியல்
வைக்கப்பட்டிருக்கின்ற, கரையுந்தன்மையில்லாத, ஒதுக்கவுண வுப்பொருளைக் கரையக்கூடிய வெல்லப்பொருளாக மாற்றிவிடு கின்றன. மாற்றப்பட்ட உணவுப்பதார்த்தம் கரைசல் வடிவத்தில் முதலச்சுக்குக்கொண்டு செல்லப்படும். உணவு முதல்ச்சை அடைந்ததும், முதன்முதலாக வளரத்தொடங்குவது முளை வேரே. யாம். எனவே, முளைவேர் வெளியே வந்து, கீழ்நோக்கி வளரத் தொடங்கும். இந்நிலையில் வித்திலைகள் விரிந்து விம்மிப்புடைப் பதனால், வித்துறை வெடித்துக் கிழிந்துவிடும், வித்திலைகளுக்குச் 1 சிறிது கீழேயுள்ள முளைவேரின் முதற்பகுதியாகிய வித்திலோபிழ்த்
உரு. 4) அவரைவித்தின் அமைப்பும் முளைத்தலும் 1., 2. முளைவேர் வெளிவருதல்; 3. இரண்டு பக்கவேர்கள் உண்டாதல்; 4. முளைத்தண்டு வெளிவருதலும், வித்திலைக்கீழத் தண்டு வளையம் உண்டாதலும்; 5. நன்றாக நிமிர்ந்த "செடி ; 6. இலைகள் உண்டாதல்,
தண்டு, வளையம் போன்று வளரத்தொடங்கும். இதற்கு வித்திலைக் கீழ்த்தண்டு வளையம் என்று பெயர். இதனை யாம் கண் (GUாற் பார்த் தல் முடியும். இவ்வளையம் பின்பு, மெல்ல, மெல்ல நிமிர்கின்றது. இவ்வாறு, நிமிர்தலினால், அது நிலத்தினுட்கிடக்கும் முளைத்தண் டையும், அதனை மூடியிருக்கும் வித்திலைகளையும் தரைக்கு வெளியே இழுத்துக்கொணர்ந்து விடுகின்றது. வித்திலைகள் நாளடைவில் பருமனிற் குறைந்து, சிறுத்துச் சுருங்கிவிழுந்துவிடும்; சுருங்கி வருங்கால், முதற்சோடி இலைகள் தோன்றுகின்றன. அதேசமயத் தில், முளைவேரானது பல பக்கவேர்களையும், சிறு வேர்களையும் !

வித்தும் அதன் முளைத்தலும்
உடையதாகித் தரைக்குள் வளர்ந்து செல்லும். முதலாவது சோடி இலைகள் தனியிலைகளைப் போன்றே தோற்றமளிக்கும். அதன்பின்னர், உண்டாகும் இலைகள் அதற்குரிய இயல்பான (தழை) இலைகளாகவே இருக்கும், வித்திடப்ப கள் தரைக்கு மேர் கொண்டுவரப்படுதலால் இவ்வகையான (வித்து) முளைத்தலுக்
குத் தரை பேல்பமேளாந்தன் என்பர்.
- அ,மனாக்கம்ளிந்தின் அமைப்பும், முளைந்நாய்: ஆமணக்கம்வித்து ஏறத்தாழ முட்டையுருவியா தாகவும் ஓரள வு தட்டையானதாகவும் இருக்கும். அஃது இருவித்திலைகளையுடைய, வித்தக விழையமுள்ள வித்து; வித்துறை வன்யையா சபா து; ஓடு போன்றது; சாம்பனிற முடையது. கடற்பஞ்சுபோன்ற மேல்வளர்சதை வித்தின் கூடம் பிய முளையிற் கா ணாப்படுகின்றது. மேல்வளர்ச:3தயின் அடியில் அமைந்திருக்கிறது, இதன் நுணுக்குத்தொட்ளை. ஒன்றை ஒன்று
உரு. 50
ஆமணக்கம் வித்தின் அமைப்பு - T வித்துறை (வெளியுறை ); () மேல்வளர்சதை: Tற விதை யுள்ளுறை; 11 வித்தகவினழயம்; Lt) வித்திலை: 1' முளைத்தாண்டு IR முளைவேர்.
நோக்கினர்போல் இரண்டு, மெல்யே வெண்மையான வித்திலே களை, இவ்வித்தின் நெடுக்கு வெட்டுமுகத்திற் காணலாம். ஒவ் வொரு வித்திட்லயும் சிறிய ஓர் இலயைப்போன்று நரம்புகள் உடையதாக இருக்கும். முதலச்சு மிகச்சிறிய காய், வித்திலேக ளின் கூம்பிய முனையுடன் இணைக்கப்பட்டிருக்கும். வித்தகவிழை. யத்தில் எண்ணெய் நிறைய உண்டு. அது வித்திலைகளைச் சூழ்ந் திருக்கிறது.
215 -

Page 56
48
உயிரினவியல்
முளைத்தல் நிகழும்போது நுணுக்குத்தொளையினூடாக நீர் வித்தினுட்புகும், புகுதலும், வித்திலையிலுள்ள நொதிச்சத்துகள் உயிர்ப்பு எய்தித் தொழிற்படத் துவங்கும். துவங்கியதும், வித்தக
உரு. 51
ஆமணக்கம்வித்து முளைத்தல் 1. முளைவேர் வெளிவருதல்; 2. பக்கவேர்கள் வெளிவருதல்; 3., 4. வித்திலைக்கீழ்த்தண்டுவளையம் உண்டாதல்; 5. இலைகள் உண்டாதல்.
விழையத்தி லுள்ள எண்ணெய்ப்பொருள் வெல்லப்பொருளாக மாற்றப்படும். மாற்றப்பட்ட, உணைவு வித்திலைகளால் உறிஞ்சப் பட்டு, முதலச்சுக்குக் கொண்டுசெல்லப்படும். முதலச்சுக்கு உணவு சென்றதும், முதன்முதலாக முளைவேர் வெளிப்பட்டுக் கீழ்நோக்கி வளரத்துவங்கும். பின்னர். வித்திலைக்கீழ்த்தண்டு வளையம் உண்டாகும், இது வித்திலைகளைத் தரைக்குமேல் கொண்டு வருகிறது. தரைக்குமேல் கொண்டுவரப்பட்ட வித்திலைகள் அதிக பருமன் அடைதலோடு, பச்சை நிறமும் எய்துகின்றன, ஆம ணக்கிற்குரிய முதல் இரண்டு இலைகளும் உண்டாகும்வரைக்கும், இவ்வித்திலைகளே உணவை ஆக்கும் பணியை மேற்கொள்ளு கின்றன. முளைவேர், பக்கவர்களையும் சிறு வேர்களையும் உண் டாக்கிக்கொண்டு, கீழ்நோக்கி வளரும். இதுவும் தரைமேல் முளைத்தலுக்கு மற்றோர் உதாரணமாகும்.

வித்தும் அதன் முளைத்தலும்
99.
கடலை (ரிக்கர் அரியெற்றினாம் ) வித்தின் அமைப்பும், முளைத்தலும்: சுடலை, வித்தகவிழையமில்லாத, இருவித்திலையுள்ள ஒரு வித்தாகும். இஃது, ஏறத்தாழப் "பம்பரம்' போன்ற வடிவுடையது. வித்தின்
முளை வளைந்து கூரிதாக இருக்கும். வித்துறை ஓரளவு தடிப்புள் 2' ள து. இவ்வித்தின் நடுக்கோட்டில் ஒரு தவாளிப்பு உண்டு.
உரு. 52
கடலை வித்தின் அமைப்பு M நுணுக்குத்தொளை; SC' வித்துறை; 3 வித்திலை;' IR முளை வேர்; 1' முளைத்தண்டு.
இக்கவாளிப்பு வித்தை இரு பிரதேசங்களாகப் பிரிக்கின்றது. வித்தின் கூம்பிய பகுதிக்கு மிக அண்மையில், நுணுக்குத்தொளை இருக்கிறது. நீரில் ஊறிய கடலை வித்துகளைச் சிறிது அமுக்கி னால், இந்நுணுக்குத்தொளையினூடாக வளிக்குமிழிகளும் நீரும் வெளிப்படுதலைக் காணலாம், நுணுக்குத்தொளையின் கீழே வித் தித்தழும்பு காணப்படும். இது சிறிது குழிவுள்ளதாக இருக்கும். வித்துத்தழும்பின் மேற்பக்கமாக வரம்பு போன்ற ஓர் அமைப்புக் காணப்படுகிறது. இதனைச் சந்திக்கோடு என்பர். வழக்கம்போல, இருவித்திலைகளுக்குமிடையில், ஒரு முனையில் முதலச்சு இருக்கும்,
கடலைவித்து மிகக் குறுகிய காலத்தில் முளைத்துவிடும். நீரை உறிஞ்சுவதனால் வித்திலைகள் விம்மிப்புடைத்தலும், வித்துறை நெகிழ்ந்து வெடித்துவிடும். வித்திலைகளிலுள்ள நொதிச்சத்துக ளின் தொழிற்பாட்டினால் அதன் கண்ணுள்ள புரதங்களும் மாப் பொருளும் வெல்லப் பொருளாக மாற்றப்பட்டு முதல்ச்சை அடை தலும், முளைவேர் வெளிப்பட்டு ஆணிவேராகக் கீழ்நோக்கி வள ரத்தொடங்கும், அதேசமயத்தில், பக்கவேர்களும் சிறு வேர் களும் தோன்றி வளரும், வித்திலைகளுக்குச் சிறிது மேலேயுள்ள

Page 57
100
உயிரினவியல்
முதலச்சுப்பிரதேசம் வித்திலேமேற்றண்டு எனப்படும். இப்பகுதியில் - வித்திலைமேற்றண்டுவளையம் ஒன்று உண்டாகிறது. இவ்வளையம்
உரு.. ஈ.)
கடலைவித்து முளைத்தல் 1., 2. முளைவேர் வெளிவருதல்; 3. முளைத்தண்டு வெளிவரு தல்; 4. பக்கவேர்கள் உண்டாதலும், அங்குத்தொகுதி உண் டாதலும்,
நிமிர்தலும், முளைத்தண்டு மட்டுமே தரையின் மேற் கொண்டு வரப்படுகின்றது. ஆனால், வித்திலைகள் தரையின் கீழே தங்கிவிடு கின்றன. ஆகவே, இவ்விதமான முளைத்தல் நனராழ்முளைந்தல் எனப்படும்.
சோள (சியா போயிசு) வித்தின் அமைப்பும் முளைத்தலும்: சோளம் என்னும் தானியம் உண்மையாக வித்து அன்று, அஃது, ஒர் உலர்பழமாகும். அதன் வித்து, சுற்றுக்கணியத்தோடு ஒன்றிக் கிடக்கின்றது. சுற்றுக்கனியத்தினின்றும் இதை வேற சுப்பிரித் தெடுக்கமுடியாது. நெல் என்னும் தானியமும் இதனைப்போன் றதே, எனவே, சோளத்தின் உலர்பழமே இங்கு 'விந்து' என எடுத்தா காப்படும்.
சோளவித்து வித்துகவிழையமுள்ள, ஒருவித்திலையுள்ள வித் தாகும், வித்துறையோடு சுற்றுக்கனியமும் சேர்ந்திருத்தலினால் அவற்றை இவை, இவையெனப்பிரித்தறிதல் எளிதன்று. இவ் வித்து ஆப்பு உருவுடையது. வித்தின் அகன்ற பகுதியில் வித் தகவிழைபம் நிறைந்திருக்கும், வித்தகவிழையத்தின் கண்ணே ஒதுக்கவுணவானது மாப்பொருள் வடிவத்தில் சேமித்துவைக்கப்,

வித்தும் அதன் முளைத்தலும்
101)
பட்டிருக்கும். எனினும். வித்தவிழையத்தின் வெளிப்பகுதியில் 1புரதமார்கள் கானாப்படும். இதனை, அலிரோன்படை எனக்கூறு
J 1 _ நீ
உரு 54
சோளத்தின் அமைப்பு (A) சோளப்பழம்; (1) சோளப்பழத்தின் நெடுக்கு வெட்டு முகம்; ] சுற்றுக்கனியமும் வித்துறையும்: L வித்தகவிழையம்; S) சிறுபரிசை; பL முளைத்தண்டுக்கவசம்; T முளைந்தண்டு; -CR முளைவேர்க்கவசம்.
வர். புல்லினத்தாவரங்களின் பழங்களில் பெரும்பாலும் அலி ரோன்படை காணப்படுகின்றது. உ-ம். நெல், கோதுமை முதலியன, தானியங்களைத் தீட்டுவதனால் அலிரோன்படை அகற்றப்பட்டு விடும். இக்காரணத்தாலேயே தானியங்களைத் திட்டுதல் புத்தி சாலித்தனமான செய்கையாகாதெனக் கொள்ள ப்படுகின்றது. ', சோளவித்தின் ஒடுக்க மா ன" பகுதியிலேயே வித்திலையும் முதலச் சும் ஒருங்கு சேர்ந்த மு: லவுருவானது அமைந்து கிடக்கின்றது, கபித்திபே, சிறியதாகவும் பரிசைவர் வின தாகவும் இருத்தலால், சிறுபரிமா எனப்படுகிறது, இச்சிறுபரிசை, முள்ளந்தண்டு பளை வேர் என்பவற்றோடு இஃ13னக்கப்பட்டிருக்கிறது. முளைத்தண்டா ன து புளே' நண்டு நாளா காலும், முளவேரானா புப்ளவேர்க்கவாத் தாலும் பாதுகாக்கப்பட்டிருக்கும். அவை உறை போன்று பாது காப்பு அளிக்கின்றன.
பொதுவாக, எல்லா ஒருவித்திலையுள்ள வித்துகளும் தரை பாழ் புளெத்தலையுடையன. வெங்காயம் போன்றவை இதற்குப் புறனடை. [ வெங்காயம் நானரமேல் முளத்தலை உடையதா), முளைவேரானது, முளை வேர்க்கவசத்தோடு பாதுகாப்பாக இருக்கும் நிலையிலேயே,

Page 58
102
உயிரினாவியல்
வெளியே வந்து, ஒருசில வேர்களையும் சிறு வேர்களையும் உண் டாக்கி வளரும். எனினும், இம்முளேவேர் தாவரத்தின் நிலையான வேர்த்தொகுதியாக விருத்தியடைவதில்லை. முளைத்தண்டின் அடிப்
உரு. 55 சோளவித்து முளைத்தல் 1. முளைவேர் வெளிவருதல்; 2. 3. முளைத்தண்டு வெளிவரு தல்; 4. பக்கவேர்கள் உண்டாதல்: 5., 6. இலைகள் வெளிவருதல்..
பகுதியிலிருந்து, முந்தியோ. பிந்தியோ உற்பத்தியாகும் இடமாறிப் பிறந்தவேர்கள் மேற்படி முளை(வேரின் இடத்தை வகித்துக்கொள்ளும். அதே நேரத்தில், முளைத்தண்டு மேனோக்கி வளரத் துவங்கும். இந்நிலையிற் கூட முளைத்தண்டுக்கவசம் இருந்துகொண்டிருக்கும். மிக விரைவில் முளைத்தண்டுக்கவசம் வெடித்துக் கிழிந்து விடுத லும், முதலிலை வெளிப்படும். வித்திலையே வித்தகவிழையத் தில் உள்ள ஒதுக்கவுணவை, முளை வேருக்கும் முளைத்தண்டுக்கும் கொண்டுசெல்வதற்குக் காரணமாயமைகிறது. வித்தகவிழைய முள்ள பகுதியையும் மூலவுருவுள்ள பகுதியையும் பிரித்து நிற் கும் மேலணிப்படையால் சுரக்கப்படும் நொதிச்சத்துகளே வித் தகவிழையத்திலுள்ள உணவைச் சமிக்குமாறு, செய்கின்றன. சமிபாடடைந்த உனவுப்பதார்த்தம் வித்திலையினால் உறிஞ்சப் படும்,
வினாக்கள் 1. வித்துகள் முளைத்தற்கு இன்றியமையாத நிபந்தனைகள்
யாவை? வித்து முளைத்தலைக் காட்டும் ஒரு பரிசோதனையை விவரிக்க,

தாவரங்களின் அசைவுகள்
103.
2. வித்தவிழையமில்லாத, இருவித்திலையுள்ள
ஒரு வித்தின் அமைப்பையும், முளைத்தலையும் விவரிக்க, 3. வித்தகவிழையமுள்ள, இருவித்திலையுள்ள ஒரு வித்தின்
அமைப்பையும், முளைத்தலையும் விவரிக்க. 4. ஒரு வித்திலையுள்ள வித்து ஒன்றினது அமைப்பையும்
முளைத்தலையும் விவரிக்க. 5. தரைமேன்முளைத்தல் தரைக்கீழ்முளைத்தல் என்பவற்றின் பொருள் யாது? தரைக்கீழ்முளைத்தலையுடைய, இருவித் திலையுள்ள ஒரு வித்தினது முளைத்தலே விவரிக்க.
செய்முறைப் பயிற்சிகள் 1. போஞ்சி, வ ா ள வ ன ர (கனுவலியா எஞ்சிவோமிசு) சோளம், கடலை, நெல் என்பவற்றின் வித்துகளை (நீரில் ஊறவிட்ட பின்), அவற்றின் இருவேறு தோற்றங்கள் புலப்படுமாறு வரைக.
2. மேற்குறிப்பிட்ட வித்துகளின் நாற்றுகளை பல்வேறு நிலை களில் ஆராய்ந்தறிக.
3. வித்துகள் முளைப்பதற்கு ஒட்சிசன் இன்றியமையாதது என்பதைக்காட்ட உரு. 43 இல் காட்டிய பரிசோதனையைச் செய்க,
அத்தியாயம் 15 தாவரங்களின் அசைவுகள் (தூண்டுதிருப்பங்கள்)
உயிர்ப்பொருள்கள் புத்தாண்டல்களுக்குத் தாண்டற்பேறு நிகழ்த்துகின்றனவென முன்னரே கூறியுள்ளோம். இந் நிகழ்ச்சி விலங்குகளிடத்துத் தெளிவாகக் காணப்பட்ட போதிலும், தாவ ரங்களும் சேதனப்பொருள்கள் என்பதையும், விலங்குகளைப் போலவே தாவரங்களும் புறத்தூண்டல்களுக்குத் தகுந்தாற் போலத் தாண்டற்பேறு நிகழ்த்தவல்லன என்பதையும், - யாம் மறந்துவிடுதல் கூடாது. உண்மையில், பெரும்பான்மையான தாவரங்கள் இடத்துக்கிடம் அசைந்து திரியும் (இடம் பெயரும்) இயல்பு இல்லாதன. ஆனால், பலவகைப் புறத் தாண்டல்களால் தாக்கப்படும்போது அவை, வினோதமான முறையில் காண்டற் பேறு நிகழ்த்துகின்றன எனலாம். ஒரு குறித்த திசையில் தூண் . டற்பேறு நிகழச்செய்யும் புறக்கருவியே துாண்டி (சாண்டல்) எனப் படும். தாண்டல் காரணமாக நிகழும் பதிலியக்கம் நண்டற்பேறு எனப்படும். தாண்டியை நோக்கித் தாண்டற்பேறு நிகழுமாயின், நேர்த்தாண்டற்பேறு எனவும், வேறுவகையாக நிகழுமாயின் எதிர்த்

Page 59
101
உயிரினவியல்
தூண்டற்பேறு எனவும் கொள்ளப்படும். ஒரு தாவரத்தின் உடல் அல்லது உறுப்பு நேராகவோ, எதிராகவோ தாண்டற்பேறு நிகழ்த்துதல் அதற்கு ஆச்சுப்பாட்டையே நல்கும். உதாரணமாக, வேர்கள் நிரை நாடியும், தண்டு ஒளியை நாடியும் வளருகின்றன. வேர்கள் ஒளியை ஒருவி வளர்வதற்குக் காரணம், அவற்றின து "- வளர்ச்சிக்கு ஒளி வேண்டப்படாமையேயாம், தாவரங்களின் வளர்ச்சியைத் தாக்கும் தலைமையான தாண்டிகள் ஒளி, புளி யீர்ப்பு நீர் (அல்ல அது ஈரப்பதன் , பாசம், இரசாயனப்ப நார்த்தங் கள் என் பனவாம். இத் தாண்டி களை நோக்கி அல்லது ஒருவி (விலக்கி) தாவரவுறுப்புகள் வளர்கின்ற இயல்பு துண்டுநிருப்பம் எனப் படும்.
தாவரவுறுப்புகள் ஒளித்தாண்டலை நோக்கி நிகழ்த்தும் காண் டற்பேறு எளிதுண்டுதிருப்பம் எனப்படும். பொதுவாகத் தண்டு, நேர் ஓளிதாண்டு திருப்பமுடையது; வேர். எதிர்ஒளிதுண்டு திருப்பமுடையது. தாவரத்தின் கிளைகள், சூரியன து கதிர்கள் இலைகள் மீது நன்கு விழுப்படி செய்தற்காகவே பக்கப் பாடாக வளருகின் றன. இக்கா ரனாத்தால், கிளைகள் சரிவானஒளி துண்டுதிருப்பமுடையன எனப்படும்,
பரிசோதாள " ஒரு பக்கத்தில் ஒரு சிறிய துவாரமுள் ள கடதாசியாட் டைப் பெட்டி ஒன்றினால், ஒரு பூச் சட்டியிலிருக்கும் செடி யை முழுவ தா சு ( டி வி டுசு, ரிசப் நாட்கள் சென் ராபின், அச்செடியின் தண்டு அத்துவார த், ரியாடாசு வெளிவரு வதர்கு முயற்சிப்பதை நோக்க
பா.
- புவியீர்ப்புக் காண்டாக்குத் தாவரவு பரப்புகள் |
தாண்டற்பேறு நிகழ்த்துகின்றன இது புவியாண்டு
உரு - 5ா. திருப்பம் எனப்படும். வேர். 1* நர்புரி ஆண்டு நேர் ஒளி] தாண்டு தாண்டுதிருப்பம் உடையது . தண்டு
திருப்பமுடிடயது எதிர்புவி தாண்டு திருப்பமுடைய து +
1. ஒளி வரும் திசை பக்க வேர்களும், சிறு வேர்களும், தண்டுப்பகுதியிஜாள் ள கிளைகளதம் 1il.வான ஈரி துண்டுதிருப்பம் -
3 டையான,

தாவரங்களின் அசைவுகள்
1115
பரிசோதளை 1: ஒரு சில அவரை வித்துகளை மரத்தூசு உள்ள பெட்டி ஒன்றில், பல திசைகளிலும் நாட்டி விடுக, (சிலவற்றை நிறுத்தியும், சிலவற்றைக் கவிழ்த்தும், மேலும் சிலவற்றைச் சரி
வாகவும் பலவாறு நாட்ட வேண்டும்), எல்லா வித் துகளிலிருந்தும் முளை (வேர், கீ ழ் ( ேநா க் சி வளர்ந்து கொண்டிருக் சுக் காணலாம்.
பரிசோதனை 2: பூச்சட்டி. ஒ ன் றி ல் வ ள ர் நீ அ கொண்டிருக்கும் ஒரு
செடியை, அது கிடை உரு. 5ா
நிலையில் இருக்குமாறு புவி தூண்டு திருப்பம் பரிசோதனை
(டச்சட்டியைக் கிடை I, இலைகள், எதிர்புவித் தாண்ட
பாகவைத்து) சில நாட் லால்புவிக்கு எதிராகத் திரும்பல்;
களுக்கு விட்டுவிடுக. அச் D வேர், நேர்புவித் தாண்டலால்
செடியின் தண்டுவனைந்து, புவி நோக்கித் திரும்பல்,
புவியீர்ப்புக்கு எதிராக வளருவதைக் காணலாம்.
நீர்த்தூண்டலுக்குத்
தாவரவுறுப்புகள்,- -
சிறப்பாக வேர் * கள்,- தாண்டற்பேறு நிகழ்த்துதல் நீர் தாண்டுதிருப்பம் எனப் படும். வேர்கள் நேர் நீர் காண் ந்நிருப்பமுடையன. அவை நீரை உண ருந்தன்மை யுள்ளன. பரை நோக்கி வேர்களை வளரச் செய்த லால், இத்தாண்டற்பேறு அவற்றிற்கு மதித்தற்கரிய நன்மை விளக்கின் றது.
பரிசோதனை : மரத் தாகஉள் ள பெட்டி ஒன்றினுள் அவரை நாற்றுகளை உண்டாக்கிக் கொள்க. அப்பெட்டியின் நடுப்பகுதி யில், நீர் பொசிந்து வெளியேறக்கூடிய இல்லிப்பாத்திரம் ஒன்றை வைத்து விடுக. நாற்றுகளுக்கு நீர் ஊற்றுவதை நாம் நிறுத்திய வுடன், அவற்றின் வேர்கள் அப்பாத்திரம் இருக்கும் திசையை நாடி வளர்வாதக் கானாலாம். சிலவேளைகளில் வேர்கள் புவியீர்ப் புக்கு எதிராகத் தாண்டற்பேறு நிகழ்த்தி நீரைத்தேடி அடை கின்றன.
தாவரவுறுப்புகள் பரிசத்தூண்டலுக்கும் தூண்டற்பேறு நிகழ்த்துகின்றன. இது பரிசந்தூண்டுதிருப்பம் எனப்படும். ஒருசிறு

Page 60
106
உயிரின்வியல்
கல்லை வேர்நுனி சந்திக்க நேருமாயின், அஃது அக்கல்லை விலக்கி, அதைச் சுற்றிவளரும். ஆதலால் வேர், எதிர் பசந்தாண்டுதிருப்ப முடையது. ஆனால், இதற்கு நேர்மாறாகப் பற்றிகள், சுற்றுஞ்செடி
தீப்தி
/" / (AE7 (
உரு. 58 வேர்கள் நேர் நீர் தாண்டுதிருப்பம் உடையன - பரிசோதனை PP இல்லிப்பத்திரம்; MV நீர்; WB பெட்டி; SD மரத்தூசு; GBS முளைக்கும் அவரை வித்து.
கள் (சுற்றிகள்) முதலியன நேர் பரிசந்தூண்டுதிருப்பமுடையன, இவ் உறுப்புகள் பொருள்களைப் பரிசிக்க நேர்ந்தபோது, உடனே
அவற்றைப்பற்றிச் சுற்றிக்கொள்ளுகின்றன.
தாவரவுறுப்புகளின் வளர்ச்சியில் இரசாயனப்பதார்த்தங் களும் அதிக செல்வாக்கை உடையன. சூல்வித்தை நோக்கி மகரந்தக்குழாய் வழிதவறாது செல்லுவதற்குச் சில இரசாயனப் பதார்த்தங்களே வழிகாட்டியாக அமைகின்றன. மகரந்தக்குழாய்" நேர் இரசாயனத் தூண்டுதிருப்பம் உடையது. பசளை உள்ள இடங்களே நாடி, வேர்கள் செல்வதும், சுவாசவேர்கள் ஒட்சிசனை நாடித் தரையின் மேல் வருவதுமாகிய இவையெல்லாம் நேர் இரசாயனத் தாண்டுதிருப்பத்தால் நிகழ்வனவேயாம்.
வினாக்கள்
1.
தாண்டு திருப்பம் என்பது யாது? முக்கியமான தாண்டு திருப்பங்கள் எவை? அவை தாவரத்திற்கு எவ்வாறு உத
வுகின்றன? 2. புவியீர்ப்புவிசைக்குத்
- தாவரங்கள்
தாண்டற்பேறு நிகழ்த்துமாற்றை விவரிக்க.

தாவரங்களின் பதியமுறையினப்பெருக்கம்
10"
செய்முறைப் பயிற்சிகள்
1. உரு. 56 இல் உள்ளவாறு, நேர்ஒளி தூண்டு திருப்பத்தைக் | காட்டும் பரிசோதனையைச் செய்க.
2. மரத்தூசு உள்ள பெட்டிஒன்றில் அவரை வித்துகளைப் பல திசைகளிலும் நாட்டி விடுக, எல்லா வித்துகளினதும் முறை வேர்களும் நேர் புவி தூண்டுதிருப்பத்தைக் காட்டும் வகையில் கீழ்நோக்கி வளருவதைக் காண்க.
3. உரு 57இல் உள்ளவாறு, அங்குரத்தொகுதியின் எதிர்புவி தாண்டுதிருப்பத்தைக் காட்டும் பரிசோதனையைச் செய்க.
4. உரு 58இல் உள்ளவாறு வேர்கள் நேர் நீர் தாண்டுதிருப் பம் உடையன வென்பதைக் காட்டும் பரிசோதனையைச் செய்க.
அத்தியாயம் 16 தாவரங்களின் பதியமுறையினப்பெருக்கம்
- அத்திய" ன்னாரிய " ந்கலம்
மகரந்தக்குழாய் அதன து நுனியில் இரண்டு கருக்களை ஏந் திச் செல்கின்றது என்பதுபற்றி முன்னர் அறிந்திருக்கிறோம், இக்கருக்களில் ஒன்று ஆண்ராருபுநல் அல்ல து தண்புணரி எனப் படும், (12 ம் அத்தியாயம் காண்க). ஆண்புணரி சூல்வித்தைச் சென்றடைந்தபின்பு, பெண்ணாரியுடன் சேர்ந்து புகாரிக்கலத்னத ஆக்குகிறது. (பெண்புணரி முட்டைக்கலம் எனவும் பெயர் பெறும்). இச்செயன்முறை கருக்கட்டல் எனப்படும். கருக்கட்ட லின் பின், சூல்வித்து வித்தாக விருத்தி அடைகிறது. இவ்வித்தை நாட்டினால், அது முளைத்துத் தாவரமாக வளரும். இவ்வகையான . இனம்பெருக்கல், - வித்தினால் இனம் பெருக்கல்,-- கல்விமுறையீனம் : பெருக்கல் எனப்படும். எனினும், பல தாவரங்கள் கலவியின்முறை யினம் பெருக்கல் முறையை அனுசரித்து இனப்பெருக்கல் செய்கின் றன. இவ்வகை இனம் பெருக்கலில் கருக்கட்டல் நிகழுவதில்லை, (எனவே, வித்துகள் உண்டாவதில்லை). மற்று, ஒரு தாவரத்தின் சிறிய பகுதி, தன்னை ஒத்த புதிய தாவரம் ஒன்றை உண்டாக்கும் - வல்லமையுடையதாய் அமைகின்றது. பதியமுறையை மேற்கொண்

Page 61
108
உயிரினவியல்
டும், சிந்திகளை உண்டாக்கலாலும் கலவியின் முறையினம் பெருக்கல், - இத்தாவரங்களில், நிகழுகின்றது. தன்னைப் போன்ற புதியவொரு தாவரத்தை உண்டாக்கும் தன்மை வாய்ந்ததும், அத்தாவரத்தின் சிறப்பான ஒரு பகுதியில் உண்டாவதுமான ஒருசிறிய கலமே, வித்தி எனப்படும். பதியமுறையினம்பெருக்கலை மேற்கொள்ளு மிடத்து, பொதுவாகத் தாவரத்தினது அரும்புடன் கூடிய பெரிய ஒரு பகுதி, தாய்த்தாவரத்தினின்றும் பிரிந்து, தன்னைப்போன்ற புதிய ஒரு தாவரத்தை உண்டாக்குகின்றது. பதியமுறையினம் பெருக்கல் இயற்கையாகவோ, செயற்கையாகவோ நிகழும்.
இயற்கைமுறையில் நிகழம் படுமுறையினப்பெருக்கம்:
(i) ஒடிகள்: வல்லாரை (செந்தெல்லா ஏசியாற்றிக்கா), புளியாரை ஒட்சாலிசு), துரோபெரி (விருக்கேரியா) முதலிய நகர்தாவரங்களின் கிளைகள் ஓடிகளுக்கு உதாரணங்களாகும். ஒவ்வோர் ஓடியும்
ஒ
உரு. 548 ஓடி-வல்லாரை (செந்தெல்லா ஏசியாற்றிக்கா)
அதனது நுனியில், ஒவ்வோர் அரும்பை உடையதாயி (ருக்கும். இவ் அரும்பு தரையோடு ஒன் றுங்கால், வேர்விட்
டுக் காற்றங்குரத்தொகுதியை உண்டாக்கும்.
(11) குறுங்கடைகள்: இவைகள் பெரும்பாலும் ஓடிகளை ஒத் தன வே, ஆனால், இவை மிதந்து திரியும் நீர்த்தாவரங்களிடையே

தாவரங்களின் பதியமுறையினப்பெருக்கம்
1ப்பு
நரு. பிர் குறுங்கிடை-ஆகாயத்தாமரை (பிசிற்றியா] "L இலைகள் ; 13 குறுங்கிடை; 11 வேர்.
காணப்படும். உ.ம். ஆ,காசந்தாமரை (பிசிற்றியா), குளவாழை (எயிச் சோனியா] முதலியன.
(iii) 1உறிஞ்சிகள் : சில கா / ரங்களின் கிளைகள் தரையின் கீழ் உண்டாகின் றனா, அப் வாறு உண்டாகும் கிளை பாள் உறிஞ்சிகள் எ ன ப் ப டு ம். இ ன வ க ள் நிலத்தின் மேல் வந்து தனித்தனி தாவரங்க , ளாக வளருகின்றன. நகம். கோரை (சைப்பறுசு உரத்தண் டசு), உருளைக்கிழங்கு (சொலா
உரு. 11 உறிஞ்சி - தோரை (சைப்பருசு) 8 உறிஞ்சி.
னம் திப்ரோசம்ரம் உறிஞ்சிகளை உண்டாக்குகிறது.
(iv) வேருறிஞ்சிகள்: சில தாவரங்களின் வேரில் உள்ள கலங் கள் சிறிதளவு சேதமடையுங்கால், (அந்தக் கலங்கள் உயிர்ப் படைந்து, புதிய காற்றங்குரத்தொகுதியை உண்டாக்குகின்றன. இத்தகைய புதிய அங்குரங்கள் வேருறிஞ்சிகள் எனப்படும். உ-ம். வேம்பு, ஈரப்பலா (ஆட்டோக்காப்புசு இஞ்சிசா) முதலியன.

Page 62
110)
உயிரினவியல்
LG -
8
உரு, [12 இலை அரும்புகள்-சதைகரைச்சான் (பிறையோவில்லம்)
உரு. 63 குமிழம்-கருக்குக்கற்றாழை (அகேவு அமெரிக்கான)

தாவரங்களின் பதியமுறையினப்பெருக்கம்
111
(v) இலேயரும்புகள்: சதைகரைச்சான் (பிறை  ேய ாவில் ல ம்) போன்ற செடிகளின் இலைகளில் அரும்புகள் இருக்கின்றன. இவ் இலைகளை நாட்டினால், இவற்றின்கலங்கள் உயிர்ப்படைந்து, புதிய அங்குரங்களை உண்டாக்குகின்றன.
914
காலி கம்
உரு. 64 கருக்குக்கற்றாழை (அகேவு அமெரிக்கான)
1. பூந்துணர்.

Page 63
112
உயிரினவியல்
(vi) குமிழ ங்கள் : ஒதுக்கவுணாவு ஏராளமாகப் பொதியப்பெற்றி ருக்கும், சுருக்கப்பட்ட, சுக்கவரும் பே குமிழம் எனப்படும், இந்து இனம்பெருக்கும் ஒரு பல்கல அமைப்பு ஆகும், சில வேப்ள களில், இவை பூந்துணர்களில் காணப்படும். உ.ம். வள்ளி (இடயாக் கோரியா). கருக்குங்கற்ருடைய (அகேவு அமெரிக் கானா), ஒக்கிட்டுகள் முதலியன -
(vii) துண்டுபடல்: பெ ரு ம பா ன்  ைம யா ன நீர்த்தாவரங் கள் சிறு, சிறு துண்டுகளாகப் பிரிந்து, புதிய தாவரங்களை உண் டாக்குகின் றன. உ-ம். நீர்ப்பாசி (பைரோகைரா),
(viii) வேர்ந்தண்டுக்கிழங்கு: இஃது ஒருவகை நிலக்கீழ்த்தண்டு. இதன் தலைமையச்சுப் பொதுவாகத் திரட்சியுடையதாயிருக்கும், இதன்கண் சேமித்து வைக்கப்பட்ட ஏராளமான உணவு உண்டு. சில வேர்த்தண்டுக்கிழங்குகள் நீண்டும், மெலிந்தும் காணப்படும். உதாரணமாகப் புல்லினத்தைக் கொள் ளலாம். அறுகு (சைனோ தன் இடாற்றிலன்) ஒரு சிறந்த உதாரணம். பொதுவாக, வேர்த்தண் நிக்கிழங்குகள் கிடையாக வளரும்; கணுக்களையும் கணுவிடை
E
4 F.
உரு. 5ெ
வேர்த்தண்டுக்கிழங்கு - இஞ்சி 1TB முனை யரும்பு; SL செதில்கள் ; AI இடமாரிப்பிறந்தவேர்கள்,,
களையும் உடையதாயிருக்கும். இலைகள் செதில்களாகச் சிறுத்து வேறுபட்டிருக்கும். கணுக்களில் அரும்புகள் காணப்படும். வேர்த்தாண்டுக்கிழங்கின் முனையரும்பே அதன் நீட்சி (வளர்ச்சிக் கும் காரணமாகும். இடமாறிப்பிறந்த வேர்களும் கணுக்களிற் காணப்படும், வேர்த்தண்டுக்கிழங்கை நாட்டினால், கக்கவரும்பு

தாவரங்களின் பதியமுறையினப்பெருக்கம்
113
கள் உயிர்ப்படைந்து காற்றங்குரங்களாக மேனோக்கி வளருகின் றன. உ-ம். இஞ்சி (சிஞ்சிபர் ஒவ்வீசினேல் ]. வாழை, புல்லினங் கள், ஆம்பல் (நிம்பியா நெளச்சாலி), பன்னங்கள் முதலியன.
TH Z
(ix) தண்டுக்கிழங்கு: இஃது உணவைச் சேமித்து வைத் திருக்கின்ற, திரட்சியான நிலக்கீழ்த்தண்டுவகைகைச் சேர்ந்தது ; குறுத்துப்புடைத்திருக்கும்; ஏறத்தாழக் கோள வுருவுடையது;
இதில் க ணு க் க ளு ம் கணு விடைகளும் தெளிவாகப்புலப் பட ா து. கணுக்களில் மிக நுண்ணிய செதிலிலைகளும் நாருருவுள்ள, இ ட ம ா றி ப் பிறந்த வேர்களும் காணப் படும். இது நிலைக்குத்தாக வளரும். அதனால், மேற்பக்க மும் அடிப்பக்கமும் சி றி து தட்டையாயிருக்கும். மேற்பக் கத்தில் 'வட்டத்தட்டு' எனப்படும் C. பகுதி காணப்படும். இதன், நடுவே பல செதி லிலைகளுக்கு மத்தியில் முனை யரும்பு இருக் கும். இம் முனை ய ரு ம் பைத் தவிர மிகச்சிறிய கக்கவரும்பு களும் பக்கங்களில் இருக்கும். இவைகள், புதிய த ண் டுக்
கிழங்குகளை உண்டாக்கும் வல் உரு. 66
லமை உடையன. தண்டுக் தண்டுக்கிழங்கு - கிளாடி யோசு
கிழங்குகளை நாட்டினுல் அதன் NC புதிய தண்டுக்கிழங்கு
முனையரும்பு மேல்நோக்கிக் 00 பழைய தண்டுக்கிழங்கு ;
| காற்றங்குரத்தொகுதியாக வள AIR இடமாறிப்பிறந்தவர்கள் |
ரும், நாட்டப்பட்ட (பழைய)
தண்டுக்கிழங்கு அ ழிந்து போகப், புதிய தண்டுக்கிழங்கு ஒன்று அதன் மேல் உண்டாகும். உ-ம். சட்டிக்கருப்பனா (அமோவோவாலுசு), கிளாடியோலா, ரேம்பு (கொலக்கேசியா), திரிற்றோனியா முதலியன.
1 F
1215-3

Page 64
114
உயிரின்வியல்
(x) முரிழ்: உறிஞ்சிகளின் நுனியில் முகிழ்கள் உண்டா கின்றன. இன்னொருவகையா கச் சொல் லுயிடத்து. இவைக ளும் து ர ா ள ம ா ன ஒதுக்க வுணாவை உள்ளடக்கிய ஒரு வகை நிலக்கீழ்த்தண்டுகளே யாம். இவை கோளவுருவின வாகவோ, நீள்வளைய வடிவின வாகவோ இரு க் கு ம். ஒவ் வொரு முகிழும் நுண்ணிய செதிலிலைகளையுடையதாயிருக்
உரு. 67 கும். செதிலிலைகளிருக்கும் கக்
முகிழ்-உருளைக்கிழங்கு கங்களிலே கக்கவரும்புகள் R கிளை; 15 'கண' 3 அரும்பு. காணப்படும். இவ் அரும்பு கள் பொதுவாகக் "கண்கள்'' என்று வழங்கப்படும். இக்கண்க களயே பதியமுறையினாப்பெருக்கத்திற்குப் பயன்படுத்துகிறோம். உ-ம், உருளைக்கிழங்கு, கோரை.
(xi) குமிழ்: இது மிகவும் குறுத்த, வட்டத்தட்டுப்போன்ற நிலக்கீழத்தண்டாகும். வட்டத்தட்டுப்பகுதி குவிந்தவுரு அல்லது
கூம்புருப் பெ ற் றி ரு க் கு ம். தண்டில் (வ ட்ட த் தட் டு ப் போன்ற பகுதியில்) உணவுப் பொருள் சேமித்து வைக்கப் பட்டிருக்காது. தண்டின்மேல் இ ரு க் கு ம் சதைப்பற்றுள்ள செதிலிலைகளிலேயே உணவுப் பொருட் சேமிப்பு உண்டு. இச்செதிலிலைகள் ஒ ன் றின் மேலொன்றாக அடுக்கப்பட்டி ருக்கும். சதைப்பற்றுள்ள இச்
F, L-F
5. E,
உரு. 68 குமிழ்-வெங்காயம் SL செதில்கள்; STI சதை யுள்ள செதில்கள் ; 11 முனைய ரும்பு; AB க க் க வ ரு ம் பு; 3 தண்டு: AR இடமாறிப் பிறந்த வேர்கள்.

தாவரங்களின் பதியமுறையினப்பெருக்கம்
115
'செதிலிலைகளின் கக்கங் களிலே கக்கவரும்புகள் இருக்கும். இவை கள். "மகட் (புதிய ) குமிழ்களாக விருத்தியடையும். தட்டை யான தண்டின் கீழ்ப்பக்கத்திலிருந்து இடமாறிப்பிறந்தவர்கள் உண்டாகும். குமிழை நிலத்தில் நாட்டினால், அதன் முனையரும்பு காற்றங்குரமாக மேனக்கி வளரும், உ-ம், வெங்காயம், வெள்ளப் பூண்டு, (அலியம் சற்றிவம்), நரிவெங்காயம் (சில்லா). குமிழில், செதிற் குமிழ் என ஒருவகையும் உண்டு. உ-ம், இலில்லி (இலில்லியம்)
செயற்கைமுறையில் நிகழும் பரியமுறையினப்பெருக்கம்:
(i) வெட்டுத்துண்டங்கள்: பல தாவரங்களை வெட்டுத்துண்டங்கள் அல்லது சிறு துண்டுகள் மூலம் இனப்பெருக்கம் செய்யலாம். இவை காய்த்தாவரத்தினர் றும் பிரித்தெடுக்கப்பட்ட குறைந்த நீளமுள்ள தண்டுகளாகும். அயனவலய நாடுகளில் இம்முறை யான இனப்பெருக்கம் சருவசாதாரணமாக மேற்கொள்ளப்படும். இம்முறை மிகவும் சித்தியடைந்துள்ளதாக நிறுவப்பட்டுள்ளது. சிறு துண்டுகளை மழை காலத்தில் ஈரமுள்ள மண்ணில் நாட்டுதல் வேண்டும். உ-ம். சமைக்கிளாவை (கிளிறிசீடியா), மரவள்ளி, உரோசு, குரோட்டன், செல்வரந்தை, முள் முறுக்கு (எரிதிரினா இந்திக்கா), பூவரசு [திசுப்பீசியா), தேமா (புளுமேரியா), முருங்கை, சதுரக்கள்ளி (இயூ போவியா அந்திக்கோரம்) முதலியன.
11 (ii) படுவைத்தல்: பதிவைத்தல் என்பது மிகக் காலஞ்சென்று பலனளிக்கும் செயன்முறையாக விருந்தபோதும், நிச்சயமான ஒன்றெனக்கூறலாம். பதிவைத்தல் பலனளிக்கவேண்டுமாயின், "வளம்பொருந்திய கிளை ஒன்றைத் தெரிந்தெடுத்துக்கொள்ளவேண் டும். அக்கிளை நிலத்திற்கு அணித்தாக இருத்தல் விரும்பத்தக்
கது- அக் கிளை யை ஊறு அடையாதபடி வளைத்து, ஒரு கணுவுக்கு அண்மை யிற், தரைக்குச் சமாந்தர மாக, ஓ ர ங் கு ல ம் வரை நீளப்பாடாகச் ச ரி வ ரி க வெட்டி, வெட்டிய இரு பகுதி களும் ஒன்றித்து விடாத படி, வெட்டுவாய்ச் சந்தி
னுள் மணலைத் திணித்து உரு. 69
விடுக. பின்னர், அக்கிளை பதிவைத்தல்
யின் து வெட்டப்பட்ட பகுதி நிலத்தினுள் நன்கு மறை

Page 65
116
உயிரினவியல்
யும்வண்ணம் மணலை இட்டு மூடி விடுக. மூடியபின், கிளை பெயர்ந்து மேலெழாவண்ணம் பாரமுள்ள கல் ஒன்றை அவ்விடத் தில் வைத்து விடலாம்; அல்லது ஒரு மரக்கவரைப் பயன்படுத்தி அவ்வாறு செய்துகொள்ளலாம். நிலம் காய்ந்து விடாதிருக்கும் பொருட்டு நாடோறும் நீரூற்றிவரின், வெட்டிற்கு அருகிலுள்ள கணுவிலிருந்து வேர்கள் உண்டாகி வளரும்: வானிலை வாய்ப் பாகவிருக்கும் காலம் பார்த்துத், தாய்த்தாவரத்தினின்றும் கிளையை வெட்டிப்பிரித்தெடுத்து, வேறிடத்தில் நாட்டலாம். நாட்டப்பட்ட கிளை தனித்தாவரமாக வாழ்க்கை நடாத்தும். பதிவைப்பதற்குத் தெரிவுசெய்யக்கூடிய கிளை வளைக்கமுடியாத அளவுக்குப் பெரி தாகவோ, நிலத்திற்கு அண்மையில் இல்லாமலோ இருக்குமாயின், மேற்கூறியவாறு சாதாரண முறையில் பதிவைத்தல் முடியாது. இந்நிலைமையில், கூட்டுப்பதி முறையை மேற்கொள்ளலாம். கூட் டுப்பதிமுறை பின்வருமாறு: வளமுள்ள கிளையைத் தெரிர் தெடுத்து அதன் மரவுரி (பட்டை) யை ஓரங்குலம் அளவிற்குச் சூன் றெடுத்தபின், ஒரு தகரத்துண்டை (பிளக்கப்பட்ட மூங்கில் கொட்டு அல்லது உடைந்த பூச்சட்டி முதலியவற்றையும் வசதி போலப் பயன்படுத்தலாம்). எடுத்து, அச்சூன்றெடுத்த பகுதியை நடுவாகக்கொண்டு சுற்றி நிறுத்தி (உருளைபோலாக்கி), அதனுள் மணல் கலந்த உக்கலை இட்டு, (அத்தகரவுருளை) வழுவாதவண் ணம் பலப்படுத்திக்கொள்ள வேண்டும். பின்னர், நாடோறும்; நீரூற்றிவரின் சில நாட்களில், (வெட்டியெடுக்கப்பட்ட மரவுரி யின் மேற்பகுதியிலிருந்து) வேர்கள் உண்டாகும். ஒரு மாத காலத்தின்பின், வாய்ப்பான வானிலையுள்ளபோது, இக்கிளையை வெட்டிப் பிறிதோரிடத்தில் நாட்டிவிடலாம். நாட்டப்பட்ட கிளை தனித்தாவரமாக வளரும். உ-ம். உரோசு, சாதிக்காய் மரம் (மிரித். திக்கா விருக்கிரஞ்சு), தோடை, எலுமிச்சை (சைத்திரசு அசிடா) மாதுளை முதலியன.
(iii) ஒட்டுதல்: ஒரேவகையைச் சேர்ந்த தாவரங்களின் இரு வேறு அங்குரங்களில் உண்டாக்கப்படும் வெட்டுவாய்களின் மேற் பரப்புகளை, அவை இரண்டினதும் இழையங்கள் ஒன்று சேரக் கூடிய விதத்தில், பொருந்த வைக்கும் செயன்முறையே ஒட்டுதல் எனப்படும், ஒட்டப்படுவதற்கு நிலைக்களனாய் நிலத்தில் நிற்கும் தாவரம் ஒட்டுக்கட்டை எனவும், ஒட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பல அரும்புகளுள்ள கிளை ஒட்டுக்கிளை எனவும் வழங்கப்படும். ஒட்டுக்கிளையை ஒட்டுக்கட்டையிற் பொருந்தவைந்து ஒட்டு நாடா வால் உறுதியாகச் சுற்றிக்கட்டி விடவேண்டும். நாளடைவில் ஒட்டுக்கட்டையும் ஒட்டுக்கிளையும் ஒரே தாவரமாக வளரும்.

தாவரங்களின் பதியமுறையினப்பெருக்கம்
11ா
வளர்ந்து ஒட்டுக்கிளையினாது தாய்த்தாவரத்தின் பண்புகள் பொருந்தியதாகிப் பலன் தரும். விரும்பிய ஒரு தாவரத்தின் அரும்பு ஒன்றினை, அதேவகையைச் சேர்ந்த, (ஒட்டுக்கட்டை யாகப் பயன்படும்) ஒரு தாவரத்தின் மரவுரியில் ஏற்றவாறு உண்டாக்கிய பிளவினுள், நுழைத்துச் செருகிவிடும் செயன் முறை, அரும்பொட்டுதல் எனப்படும், செருகிய அரும்பு வளரத் தொடங்கியதும், ஒட்டுக்கட்டையிலிருந்து வளரும் கிளைகள் வெட்டி அகற்றப்படும், அரும்பொட்டின் மேல் உள்ள தாவரத் தின் தண்டுப்பகுதியும் வெட்டி அகற்றப்படும். இதனால், அரும்பு ஒட்டப்பட்ட இடத்திலிருந்து அங்குரத்தொகுதி ஒன்று உண்டாகி ஓங்கிவளர, வாய்ப்பு ஏற்படுகின்றது. எத்தாவரத்திலிருந்து அரும்பு பெறப்பட்டதோ அத்தாவரத்தின் பண்புகள், அரும்பிலி
| 54 குச
உரு. 70 ஒட்டுதல் -So ஒட்டுக்கிளை; St: ஒட்டுக்கட்டை; Gr ஒட்டப்பட்டகிளை.
ருந்து வளர்ந்த தாவரத்தில் காணப்படும். ஒட்டுமுறைகள் பல வகைப்படும். சில தாவரங்களில் சில ஒட்டுமுறைகளே மேற் கொள்ளப்படுகின்றன. ஒட்டுமுறையால் அதிக நன்மைகள் உண்டு. ஒரு குறித்தவகைத் தாவரம் இனம் மாறுபடாது இருந்த வாறே இருக்கும். பயன் தருவதில் குறைவான, கூடாத இனங் களைப், பயன்தரும் நல்ல இனங்களாக மாற்றிவிடலாம். (பயன் படாத்தாவரம் ஒட்டுக்கட்டையாகப் பயன்படும்). குறுகிய காலத் துள் பயன்பெறலாம். பொருளாதாரத்தை உயர்த்த ஒட்டுமுறை பெரிதும் உதவுகிறது. உ-ம். மா. உரோசு, தோடை, செவ்வரத்தை கத்தரி முதலியன.

Page 66
118
உயிரினவியல்
வினாக்கள் தாவரங்களில் காணப்படும் பதியமுறையினப்பெருக்கம் என்பது யாது? பதியமுறையினப் பெருக்கத்திற்குரிய ஏதேனும் நான்கு முக்கிய உறுப்புகளை விவரிக்க.
பின்வருந்தாவரங்கள் பதியமுறையினப்பெருக்கம் செய் வதற்குப் பயன்படுத்தும் உறுப்புகள் யாவை?
(அ) வல்லாரை (செந்தெல்லா ஏசியாற்றிக்கா) - - (ஆ) கோரை (சைப்பருசு உரத்தண்டசு) (இ) ஆ, காரந்தாமரை (பிசிற்றியா) (ஈ) சளநருளரச்சான் (பிறையோவில்லம்) (உ) கருக்குக்கற்றழை (அகேவு அமெரிக்கான) (ஊ) நிரிற்றேனியா (எ) இஞ்சி (சிஞ்சிபர் ஒவ்வீசினேல்)
செய்முறைப் பயிற்சிகள்
1. பதியமுறையினப்பெருக்கத்திற்குதவும் உறுப்புகளுள்ள, பின்வரும் நிலக்கீழ்த்தண்டுகளின் வெ ளி யுரு வ ப் படங் க ளை வரைந்து, கற்றுக்கொள்க.
(அ) புல்லினது (வேர்த்தண்டுக்கிழங்கு) (ஆ, இஞ்சி (சிஞ்சிபர் இவ்வீசினேல்) (இ) 1மஞ்சள் (குக்கூமா தொமெத்திக்கா) - (ஈ) ப3ரியாரை (கன்ய சு) (உ)
ஆம்பல் (நிம்பியா) (ஊ) பன்னம் (Trin) (எ ) சினாடிபோலரின் (தண்டுக்கிழங்கு) ( ஏ) சேப்பு (கொலக்கேசியா) வின் தண்டுக்கிழங்கு (ஐ) கருணை (அமோவோவா சு) யின் தண்டுக்கிழங்கு
கருங்கருணை (தைபோனியம்ரயின் தண்டுக்கிழங்கு (ஓ) பின்வருவனவற்றின் முகிழ்கள்: |
(1) உருளைக்கிழங்கு (சொலானம் தியூபரோசம்) (ii)
கோரை (சைப்பருசு உரத்தண்டசு)

பசிய தாவரங்களின் உணவு
11பி
(ஒள) பின்வருவனவற்றின் குமிழ்கள்:
(i) வெங்காயம் (அலியம் செப்பா) (ii) வெள்ளைப்புடு (அலியம் சற்றிவம்) (ii) இளில் (இலில்லியம்)
2. வல்லாரை, ஒட்சாலிசு, துரோபெரி, என்பவற்றின் ஓடிகள்; குளவாழை. ஆராசந்தாமரை என்பவற்றின் குறுங்கிடைகள் கோரை யின் உறிஞ்சிகள் , சுருக்க, 1ார் ழை, ஒக்கிட்டு, அன்னாசி, வள்ளி என்ப வற்றின் குமிழங்கள் ஆகிய பதிய முறையினப்பெருக்கத்துக் குரிய உறுப்புகளை ஆராய்ந்தறிக. அறிந்தபின், அவற்றின் வெளி யுருவப்படங்களை வரைந்து பெயரிடுக.
3. செவ்வரத்தை, மரவள்ளி, தேமா, முருங்கை, ஈமைக்கிளுவை, பூவரசு என்பவற்றின் வெட்டுத்துண்டங்களை நாட்டி. அவை வளருமாற்றை நோக்குக.
4. பதிவைத்தல், ஒட்டுதல், அரும்பொட்டுதல் என்பவற்றைக் கற்றுக்கொள்வதற்கென, அண்மையிலுள்ள தாவரவியற்தோட்ட மொன்றிற்கு, ஒரு சுற்றுப்பிரயாணத்தை மேற்கொள்வதற்கு
வேண்டிய ஒழுங்குகளைச் செய்க.
அத்தியாயம் 17
பசிய தாவரங்களின் உணவு
" "உயிர்ப்புடன் வளர்ந்து கொண்டிருக்கும் தாவரங்கள் எல் லாவற்றிற்கும் உணவு வேண்டும். உணவு இன்றியமையாததென் பதற்கு இரு காரணம் உயிர்ப்பொருளுக்குச் சத்தி வழங்கப்பட (வேண்டும் என்பதேயாகும். விலங்குகள், பொதுவாகத் தாவரங்க ளிலும் பார்க்சு, அதிக உயிர்ப்புடன் வாழ்வதால், அவற்றிற்கு அதிக அளவில் "சத்தி அளிக்கும் உணவு தேவைப்படுகிறது. உடலைப் போசித்து வளர்ப்பதற்கும் அழிந்து சிதைந்த இழை யங்களைத் திருத்திச் சீர்ப்படுத்துவதற்கும் உணவு வேண்டப்படு "கின்றது. பசிய தாவரங்கள் வாழ்க்கைத் தொழிலை நடாத்துவ - தற்குச் சத்தி மிகக்குறைவாகவே தேவைப்படுதலால், அவை உட்

Page 67
12)
உயிரினவியல்
கொள்ளும் உணவின் பெரும்பகுதியை வளர்ச்சிக்காகவே பயன் படுத்துகின்றன. பசிய தாவரத்திற்கும் விலங்கிற்குமிடையிலுள்ள முக்கியமான வித்தியாசம்: முன்னையது நீர், கனிப்பொருளுப்பு கள், காபனீரொட்சைட்டு என்னும் எளிய தொடங்கு பொருள் களிலிருந்து சிக்கலான உணவுப்பதார்த்தங்களைத் தொகுத்துக் கொள்ளவல்லது என்பதுவும் ; பின்னையது அவ்வாறு செய்யவல்ல தல்லது என்பதுவுமாம்.
விலங்குகள் ஆக்கப்பட்ட உணவையே உண்டு உயிர்வாழும் தன்மையன. தாவரங்கள், தங்கள் தேவைக்கு மேலதிகமாக ஆக்குகின்ற உணவுப் பதார்த்தங்களை வேர்கள், தண்டுகள், நிலக் கீழ்த்தண்டுகள், இ ல க ள் முதலிய பல்வேறு உறுப்புகளில் சேமித்து வைக்கின்றன.
வேர்கள் கனிப்பொருளுப்புகள் கரைந்திருக்கும் மண்ணீரை உறிஞ்சுகின்றனவென முன் ன ர் க் கற்றிருக்கின்றோம். இம் மண்ணீர், சிக்கலான சேதனவுறுப்புள்ள உணவுப்பதார்த்தங்க ளைப் பரும்படியாகச் செய்கின்ற இலைகளுக்கு அனுப்பிவைக்கப் ! படுகின்றது. முதன்முதலாக ஆக்கப்படும் சேதனவுறுப்புள்ள உணவு காபோவைதரேற்றுகளே ஆகும். அவற்றிலிருந்து புரதங் கள் , கொழுப்புகள் முதலிய, சிக்கலான உணவுப் பதார்த்தங்கள் தாவரக் கலங்களால் ஆக்கப்படுகின்றன.
தாவரவுணவிலுள்ள மூலகங்கள் : தாவரங்களின் இழையங்களை உகந்த முறையில் பகுப்பதனால், அவற்றின் வளர்ச்சிக்கு முக்கிய மான மூலகங்கள் இவைதாமென அறிந்து கொள்ளலாம். முத லாவதாக, தாவரங்களின் பல்வேறு பகுதிகளாகிய தண்டு, இலை கள், வேர்கள், வித்துகள், பழங்கள், பூக்கள் முதலியவற்றை ஒரு சோதனைக்குழாயில் இட்டுச் சிறிதளவு வெப்பம் ஏற்ற வேண்டும். ஏற்றியதும், சோதனைக்குழாயின் உட்பக்கத்தில் (நீராவி ஒடுங்கி) ஈரம் இருப்பதை நோக்கலாம். இழையங்களில் நீருண்டு என் பதை இது தெளிவுபடுத்தும். நீர் உண்டெனவே, ஐதரசன் ஒட்சிசன் ஆகிய மூலகங்கள் தாவரத்தில் உண்டென்பது பெறப்படும். மெல்லிதாக வெப்பமேற்றியமையால் ஒரளவுக்கு உலர்ந்திருக்ரும் மேற்படி தாவரவிழையங்களினின்றும், அவற்றில் இரசாயன முறை யில் சேர்ந்திருக்கும் நீரினை வெளியேற்றக்கூடிய அளவுக்குச் சோதனைக்குழாயைக் கடுநெருப்பின்மீது வெப்பமேற்ற வேண் டும். பல்வேறுவகைத் தாவரங்களின் இழையங்கள் 40 தொடக்கம் ஒ0 நூற்றுவீதம் நீரினை உடையன. அதிக வெப்பமேற்றியமை
மேற்பமாக வெப்பமாவரத்தில் .

பசிய தாவரங்களின் உணவு
121
-யால் கரிந்திருக்கும் தாவரவிழையங்களின் தன்மை, அவற்றில் காபன் ஏராளமாக உண்டென்பதைக் காட்டும். கருகிய இழையங் களை மென் மேலும் வெப்பமேற்றி எரித்து அவற்றிலிருந்து வெளி (யேறும் வாயுப்பொருள்களைச் சேர்த்துக் கொள்ளலாம். சேர்க்கப் பட்ட வாயுப்பொருள் களில் காபன், நைதரசன், கந்தகம் என்பன இருக்கக் காணலாம். சோதனைக்குழாயில் மீந்திருக்கும் சாம்ப ரைப் பகுத்தால், அதனால் பொசுபரசு, கல்சியம், பொற்றசியம், பானி சியம், இரும்பு, சோடியம் என் பன இருக்கக்காணலாம், சில தாவரங் களின் சாம்பரில் குளோரின், பி.க்கன், ஈயம், நாகம், செம்பு, குரோமியம், 1போரன், அலுமினியம், மொலிபர், நாம் என்னும் மூலகங்களின் சுவடுக {ளும் காணப்படுகின்றன. இவற்றுள் பொற்றாசியம், கல்சியம், மகனீசியம், இரும்பு, சோடியம் என்பன உலோகங்கள்; ஏனை யவை உலோகமல்லாதவை. பொதுவாகத் தாவரவுடலில் 5% சாம் பரும், 45% காபனும், 42, ஒட்சிசனும், 65", ஐதரசனும், 1:5%
நைதரசனும் உண்டு.
Pநபிப் கிங்
மேற்கூறிய முறைப்படி , பல தாவரங்களைப் பகுத்துப் பார்க்கு மிடத்துச், சில, குறிப்பிட்ட மூலகங்கள் எல்லாத் தாவரங்களிலும் மாறிலியாகக் காணப்படுவதையும், வேறு சில மூலகங்கள் சில குறிப்பிட்ட தாவரங்களில் மட்டும் காணப்படுவதையும் அறிய முடியும், எல்லாத் தாவரங்களிலும் காணப்படும் மூலகங்கள் பிர தான மூலகங்கள் எனப்படும்; சதாவரங்களின் நல்வாழ்விற்கு இவை 4 இன்றியமையாதனவாதலால். ஐதரசன், ஒட்சிசன், காபன், ந்ைத ரசன், கல்சியம், பொசுபரசு, கந்தகம், பொற்றாசியம், மக்னீசியம், இரும்பு என்பன எல்லாத்தாவரங்களின் வளர்ச்சிக்கும் இன்றிய மையவாத பிரதான மூலகங் களாகுமென, ஐயம் திரிபுக்கிடமின்றி அறுதியாக நிறுவப்பட்டுள்ள து. மேற்படி மூலகங்களைக் கொண் டுள்ள போசணைக்கரைசல்களைப் பரிசோதனைச் சாலையில் செயற்கை முறையில் ஆக்கி, அவற்றில் தாவரங்களை நாட்டி, அவை வளருமாற்றைக் கற்றுக்கொள்ளலாம்.
வளர்ப்புக் கரைசல்களே ஆக்குதலும், அவற்றில் தாவரங்களை வளர்த்தலும்: பொதுவான வளர்ப்புக் கரைசல்! என் பது தாவரவளர்ச்சிக்கு இன்றிய மையாத எல்லாப் பிரதான மூலகங்களையும் திருத்தமான, விகித சமத்தில் கொண்டிருக்கும், நொப்'பின் கரைசல் என்னும் பின்வரும் - கரைசல், சிறந்த வளர்ப்புக்கரைசல் எனக் கொள்ளப்படுகிறது:-

Page 68
122
உயிரினவியல்
கல்சியம் நைத்திரேற்று 2-00 கிராம் பொற்றாசியம் நைத்திரேற்று (1) •50) பொற்றாசியம் பொசுபேற்று 1:25 மகனீசியம் சல்பேற்று
|- 5) இரும்புக் குளோரைட்டு
சுவடுகள் காய்ச்சிவடித்த நீர்
2 இல்ற்றர்
காபன் வளிமண்டலத்திலிருந்து தாவரங்களால் பெறப்படுதலால் பொதுவான வளர்ப்புக்கரைசலில் அது தவிர்க்கப்பட்டுள்ள து. இக்கரைசல் காரத்தன்மை அடையாதிருக்கும் பொருட்டு பொசு போரிக்கமிலத்தில் ஒரு சில துளிகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனைய மூலகங்கள் கரைசலில் கரை நிலையிருக்கச் செய் தற்காக, ஒரு சிறு காரியமான குளோரினை மேற்படி கரைசலில் புகுத்திவிடலாம். பல்வேறு பிரதான மூலகங்கள் இன்றிய - தவிர்க்கப்பட்டுள்ள - பல்வேறு வளர்ப்புக் கரைசல்களில் தாவரங் களை வளர்த்துப் பரிசோதனை செய்யலாம். இத்தகைய பரிசோ தனைகள் * நீர்வளர்ப்பு முறைகள்' எனப்படும்.
மெல்லிய தக்கையால் அல்லது தடித்தகடதாசி அட்டையி னல் அடைக்கப்பட்ட, துப்புரவான வாயுச்சாடி ஒன்றை எடுத் துக்கொள்ள வேண்டும். # பங்கசுக்கள் அல்லது களகங்களினது வித்திகளைக் கொல்லும் பொருட்டு வளர்ப்புக்கரைசலைக் கொதிக்க வைத்துக்கொள்ள மேண்டும். கொதிக்கவைத்தபின், கரைசலை வாயுச்சாடிக்குள் ஊற்றவேண்டும். தக்கையில் செடி ஒன்றைப் புகுத்தக்கூடிய துவாரமொன்றையும், இ ர ண் டு கண்ணடிசு குழாய்களைப் புகுத்தக்கூடிய இரண்டு துவாரங்களையும் ஆக் கிக்கொள்ள வேண்டும். தக்கையானது கிருமியழிக்கப்பட்டோ: பரபின் மெழுகுக்கவசமிடப்பட் டோ இ ரு த் த ல் வேண்டும், சாடியைச் சுற்றிலும் கறுப்புக்கடதாசித் துண்டினால் திரை யிட்டுக்கொள்வதனால் கரைசலில் ஒளி விழா து தடுத்துக் கொள்ள, லாம். இவ்வாறு தடுப்பதனால் அக்கா போன்ற நுணுக்குத் தாவ ரங்கள் வளராது செய்யலாம், பரிசோதனைக்குப் பயன் படுத்தும் (சோள) நாற்றுகளின் வேரைக் காய்ச்சிவடித்த நீரினால் நன்கு கழுவிவிட வேண்டும். ஒவ்வொரு நாற்றையும் தக்கையிலுள்ள துவாரத்தினுாடாகப் புகுத்திக், கரைசலில் நாட்டிவிடவேண்டும். தக்கையிலுள்ள, நாற்றுப் புகுத்திய துவாரத்துள் , உறிஞ்சுந்தன் மையற்ற பருத்திப்பஞ்சைச் செருகி, அடைத்துவிட வேண்டும். வேர்த்தொகுதி மட்டும் கரைசலில் இருக்குமாறு பார்த்துக்கொள்
11 நிறமில்லாத் தாவரங்கள்

பசிய தாவரங்களின் உணவு
பால் முக்கியமாகும். பங்கசுக்கள் முளைக்கா வண்ணம் தக்கையை எப்பொழுதும் உலர்வுள் ளதாக வைத்துக்கொள்ளல் வேண்டும். கண்ணாடிக் குழாய்க்சுடடாக வாரத்திற்கு இருமுறை வளியை
ELAI
HTMLH4 HITTE(H
1LI LH)
பக்CE
THTHளிப்பு 4ாப்பா
உரு 71 '
வளர்ப்புக்கரைசல் பரிசோதனை 1 பொதுவான வளர்ப்புக்கரைசல்; 2 கந்தகம் இல்லாத செடி.: 3 பொற்றாசியம் இல்லாத படி: 4 நைதரசன் இல்லா செடி; 5 கல்சியம் இல்லாத பெடி; 6 இரு ம் பு இல்லாத செடி; T பொசுபரசு இல்லாத பெடி; 3 மகனீசியம் இல்லாத செடி.
உள்ளே ஊதிவிட வேண்டும். வளியிலுள்ள ஒட்சிசன் வேர்க ளுக்கு "இன்றியமையாதது என்பது கவனிக்கற்பாலது. கரைச லில் உள்ள நீர் நீராவியாகிக் குறையுமேல் காலத்துக்குக்காலம் காய்ச்சிவடித்த நீரைக் கரைசலிற் பெய்து கொள்ளவேண்டும், இவ் வாறு ஒன்பது சாடிகளை ஆயத்தம் செய்து, ஒவ்வொன்றிலும் வித்தியாசமான கரைசல்களை ஊற்றி, நாற்றுகளை நாட்டி வளர்க்க : வேண்டும். இள் ஒன்பது சாடிகளில், முதலாவதில் பொதுவான வளர்ப்புக் கரைசலும், கடைசியாக உள்ள தில் காய்ச்சிவடித்த நீரும் இருக்கவேண்டும். ஏனைய சாடிகள் ஒவ்வொன்றிலும் (ஒவ்வொரு மூலகம் இன்றிய) வித்தியாசம், வித்தியாசமான கரைசல்கள் இருக்க வேண்டும். பின்னர், இச்சாடிகளை ஒளிவிழக் கூடியவாறு, பன்னல் ஒன்றில்வைத்து, அவற்றின் வளர்ச்சியைக் கூர்ந்து நோக்கி அறிய வேண்டும்.

Page 69
124
உயிரினவியல்
பிரதான மூலகங்களின் முதல்களும், பயன்களும், எதிலிருந்து தாடை ரம் குறிப்பிட்ட மூலகம் ஒன்றைப் பெறுகிறதோ அதுவே, அம் மூலகத்தின் முதல் ஆகும், உதாரணமாக நீரிலிருந்து ஐதரசனும் ஒட்சிசனும் பெறப்படுகின்றன. எனவே, நீர் ஐதரசன் என்னும் மூலகத்துக்கும், ஒட்சிசன் என்னும் மூலகத்துக்கும் முதலாக அமைகிறது.
வேர்களினால் உறிஞ்சப்படும் நீரிலிருந்து ஐதரசனும் ஒட்சிச னும் பெறப்படுகின்றன. முதலுருவை உண்டாக்குவதற்கும், வெவ்வேறு வகையான உணவுகளைப் பாரும்படியாகச் செய்தற்கும் நீர் தேவைப்படு கிறது. கனிப்பொருட்பதார்த்தங்களை இலைகளுக்குக் கொண்டு செல்வதற்கும், இலைகளில் ஆக்கப்பட்ட உணவைப் பல்வேறு இழை யங்களுக்குக் கொண்டுசெல்வதற்கும் நீர் இன்றியமையாதது. கணிப்பொருட்பதார்த்தங்களும் உணவும் கரைசல் வடிவத்தி லேயே தாவரத்தினால் கொண்டுசெல்லப்படக் கூடியன. இழை யங்களின் வீங்குகையை நிலைநிறுத்துவதற்கும் நீர் ஆவசிகமானது.
காபன் வளிமண்டலத்திலிருந்து - பெறப்படுகின்றது. நீரிற் கரைந்திருக்கும் காபனீரொட்சைட்டிலுள்ள காபனையே நீர்த்தா வரங்கள் பயன்படுத்துகின்றன. எல்லாவகையான. சேதனவுறுப் புள்ள உணவுப் பொருள் களிலும் முதலுருவிலும், கலச்சுவர்களி
லும் இது காணப்படுகிறது. ஆதலால், காபன் மிக இன்றியமை யாத மூலகமாகும்.
நைதரசன் புரதங்களில் காணப்படும் மூலகம்; ஆதலால், முதலுருவிலும் இஃத உண்டு என்பது பெறப்படும். நைதரசன் சடத்தன்மையுள்ள வாயுவாதலால், வளிமண்டலத்தில் உள்ள கட் டில்லாத இல்வாயுவைத் தாவரங்களால் பயன்படுத்திக் கொள்ளல் முடியாது. ஆகவே, மரணில் உள்ள நைதரசன் உள்ளடக்கிய உப்புகளை நம்பியே தாவரங்கள் உயிர்வாழுகின் றன. இவ் உப்பு கள் பொதுவாக நைத்திரேற்றுகள், நைத்திரைற்றுகள், அமோ பிரியவுப்புகள் என்பனவாம். நைதரசன் இன்றிய (தவிர்க்கப் பட்ட) வளர்ப்புக்கரைசலில் வளர்க்கப்படும் தாவரம் வளமுற்று வளராது. முதலுருவை உண்டாக்கமுடியாமையே இதற்கு (வளர்ச் சிக்குறைவுக்குக் காரணமாகும்.
கந்தகமும் பொசுபரசும் மண்ணிலுள்ள சல்பேற்று, பொசுபேற்று சுளிலிருந்து பெறப்படுகின்றன. இவைகள் முதலுருவிற் காணப் படுதலால் இழையங்களை உண்டுபண்ணுவதற்குத் தேவைப்படு

பசிய தாவரங்களின் உணவு
125.
கின்றன. இந்த இரண்டு மூலகங்க (கந்தகம், பொசுபரசு) ளும் வளர்ப்புக்கரைசலில் தவிர்க்கப்படின், தாவரத்தின் வளர்ச்சி ) தாக்கப்படும்.
மண்ணிலுள்ள பொற்றசியவுப்புகளிலிருத்து பொற்றாசியம் பெறப் படுகிறது. காபோவைதரேற்றுகளும் புரதங்களும், உண்டாக்கப் படுவதற்கு இதன் உதவி வேண்டும். பொற்றாசியவுப்புகள் இன் றிய வளர்ப்புக்கரைசலில் வளர்க்கப்படும் தாவரம், வளர்ச்சி குன்றியதாயும், குறுத்த தோற்றமுடையதாயுமிருக்கும்.
மண்ணிலுள்ள மகனீசிய உப்புகளிலிருந்து (மகனிசியத்தைத் தாவரம் பெற்றுக்கொள்ளுகிற து. பச்சையத்தின் கூறுகளில் இது வும் ஒன்று. புரதங்கள் உண்டாக்கப்படுதற்கு இஃது ஆவசிக மாகும். -- மகனீசியம் இன்றி வளருந்தாவரங்கள் வெளிறிய தோற்றமுடையனவாயிருக்கும்,
கல்சியவுப்புகளிலிருந்து தாவரங்கள் கல்சியந்தைப் பெறுகின் றன. இவ்வுப்பும் மண்ணிலேயே காணப்படுகிறது; மாப்பொருளைச் சமிக்கச் செய்தற்கும், தாவரவுறுப்புகளில் உண்டாகும் ஒட்சா லிக்கமிலம் போன்ற சில அமிலங்களை நடுநிலையாக்கவும் இன்றி யமையாதது. கல்சியவுப்பு இன் றிய வளர்ப்புக்கரைசலில் வளர்க் கப்படும் தாவரம் நோய்கொண்ட தோற்றத்தையுடையதாயும் ஒழுங்கில்லாத வளர்ச்சியுடையதாயுமிருக்கும்,
மண்ணிலுள்ள இரும்பு உப்புகளிலிருந்து இரும்பைத் தாவரம் பெற்றுக் கொள்ளுகிறது. பச்சையம் உண்டாதற்கு இஃது இன் றியமையாதது; எனினும், இது பச்சையத்தின் கூறாக அமைவ தில்லை; முதலுருவின் சகூறாக இருக்கிறது. காபோவைதரேற்று உண்டாக்கற்கும் உதவுகிறது. இரும்பு இன்றிய வளர்ப்புக்கரை சலில் வளர்க்கப்படுந் தாவரங்கள் வெளிறிப் போகும்.
இனி, மேற்கூறிய மூலகங்களைக் கொண்டு தாவரங்கள் ஆக் கும் பிரதான உணவுப் பதார்த்தங்களைப்பற்றி அறிவோம்.
காபோவைதரேற் படிகள் : காபன், ஐதரசன் ஒட்சிசன் என்பவற் றின் சேர்வைப்பொருள் களே காபோவைதரேற்றுகள் எனப்படும். இதில், ஐதரசனும் ஒட்சிசனும் நீரிலிருக்கும் விகிதசமத்தில் (2:1) உண்டு. காபோவைதரேற்றுகள் முக்கியமாகப் பதிய இழையங் ளிலேயே காணப்படுகின் றன; இவற்றுட்பல முக்கிய உணவுப்

Page 70
126
உயிரின்வியல்
பொருள்களாய் அமைகின்றன. கிளைக்கோசன் (விலங்குமாப்போ ருள்) என்பதுவும் குடுக்கோசு என்பதுவும் காபோவைதரேற் றுகளேயாம். இவை இரண்டும் விலங்குகளின் இழையங்களிற் காணப்படுகின்றன. ஒரு சிறுகணியமான காபோவைதரேற்றைச் சூடாக்கினால், 'கரமல்' வாசனை போன்ற ஒருவகை மணம்வீசு வதை அறியலாம். தொடர்ந்து வெப்பமேற்றினால், அது சுரிந்து போகும். கடுமையாக வெப்பமேற்றினால், அதிலுள்ள காபன் மெல்ல மெல்ல மறைந்து போதலை நோக்கலாம்.
மிக, மிக எளிய காபோவைதரேற்று ஒருாக்கரைட்டுகள் எனப் படும், உ-ம், குளுக்கோசு (காபன். ஐதரசன் ஒட்சிசன்,--0, 11 -0; மற்றையவகை இருசக்கரைட்டுகள் எனப்படும். இரண்டு ஒருசக்கரைட்டுகளின் மூலக்கூறுகள் ஒருங்கு சேர்ந்து, ஒருமூலக் கூறு நீரை இழப்பதனால் இருசக்கரைட்டுகள் உண்டாகின்றன. அது வருமாறு:
2 காபன்.ஐதரசன் புஒட்சிசன் * காபன் ஐதரசன், ஒட்சிசன்"
(குளுக்கோசு)
(கரும்பு வெல்லம்)
(இருசக்ரைட்டு) ஐதரசன், ஒட்சிசன்
( நீர் ] [2 0 H,0 -
-* ( 1, 1, +H.01
இரண்டுக்கு மேற்பட்ட ஒருசக்கரைட்டுகளின் மூலக்கூறுகள் ச[முன்கூறியது போலவே) ஒடுங்குவதனால் பலரக்கரைட்டுகள் உண்
டாகின்றன. அது வருமாறு:
ந காபன் ஐதரசன், ஒட்சிசன் )+ந(காபன் ஐதரசன் ,ஒட்சிசன், ]
(குளுக்கோசு)
(மாப்பொருள்) +ந(ஐதரசன் ஒட்சிசன்)
( நீர் ] (N0, 11,0] -
--NCH,,0) +N(H, 0)]
மாப்பொருள் மிகப் பிரசித்தமான பலசக்கரைட்டு ஆகும். கரும்பு வெல்லம் நன்கு பழக்கமான இருசக்கரைட்டு ஆகும். குளுக்கோசு (அல்லது பழவெல்லம், அல்லது திராட்சை வெல்லம்) பலருக்குத் தெரிந்த ஒருசக்கரைட்டு ஆகும்.

பசிய தாவரங்களின் உணவு
127
குளுக்கோசு (நிராட்சை வெல்லம்): இது பழங்களிலும், தேனிலும், மிகச்சிறிய அள வில் குருதியிலும் காணப்படும் ஒரு சக்கரைட்டு ஆகும்; வெந்நீரிலும் தண்ணிரிலும் மெல்லிய அற்ககோலிலும் கரையுந் தன்மையது : பளிங்குரு உடைய பதார்த்தம்; கரும்பு வெல்லத்தைப் போன்று இனிப்பு உடையதன்று; ஒட்சிசனுடன் எளிதாகச் சேரும் இயல்பினது; சேர்வதால் காபனீரொட்சைட்டும் நீரும் உண்டாவதோடு சத்தியும் வெளிப்படும். (குப்பிரிக் கொட் சைட்டு உள்ள) நீல நிறமான பீலிங்கின் கரைசலுடன் ஒரு சக் கரைட்டைச் சேர்ந்து வெப்பமேற்றுங்கால், குப்பிரிக்கொட்சைட்டு உண்டாதலினால், அஃது ஒரு சிவப்புநிறக் கரைசலாகத் தாழ்த்தப் படுகின்றது.
ப னரிப்பு (டய பதார்த்தம்,"லும்
கருப்பு வெல்லம் (சக்குரோசு): இஃது ஓர் இருசக்கரைட்டு, தாவர விராச்சியத்தில் இஃது அதிகம் பரம்பலாகக் காணப்படுகின் றது தாவரங்களின் சாற்றிலும், பழங்களின் சாற்றிலும் உண்டு; விசேடமாகக் கரும்பு (சக்கரம் ஒவ்வீசினாரம்), பீற்றுக்கிழங்கு (பீற்றா வற்காரிசு) முதலியவற்றில் நிரம்ப உ ண் டு; பனை, தென்னை போன்ற தா பவிருட்சங்களின் இளம் பூந்துணரிலும் காணப்படுகிறது. உணவுப்பொருள் என்றவகையில், கரும்பு வெல்லம் மிகமுக்கியமானதாகும். இது நீரிற்கரையும்; ஆனால், எளிதாக ஒட்சிசனை உறிஞ்சாது. ஆகவே, நீலநிறமுள்ள பீலிங் கின் கரைசலைத் தாழ்த்தாது, எனினும், இரண்டுபங்கு கரும்பு வெல்லக் கரைசலை ஒருபங்கு ஐதான ஐதரோகுளோரிக்கமிலத் துடன் சேர்த்து வெப்பமேற்றினால், அஃது உடனே ஒருசக்க ரைட்டாக மாற்றப்பட்டுவிடும். அதன்பின்னர், பீலிங்கின் சோத ைேனயை நிகழ்த்தலாம்.
* 1ாாப்பொருள்: இஃது ஒரு பலசக்கரைட்டு; தாவரவிராச்சியத் தில் பரவலாகக் காணப்படுகிறது. தத்தம் உற்பத்தி (முதல்)க் கேற்பப் பருமனிலும் தோற்றத்திலும் பல்வேறு வகையின வாயும், நுண்ணிய மணியுருளினவாயும் இயற்கையிற் காணப்படும், நீரிற் கரையாது; கொதிநீரில் மிகச்சிறிதளவாகக் கரையும். அயடீனோடு கலக்கப்பட்ட மாப்பொருட்கரைசல் கடும் நீலச் செவ்வூதா நிற மாகத் தோற்றும்.
கிளேகோசன்: இதுவும் காபோவைதரேற்றுகளில் ஒன்று விலங் குகளிடத்தில் காணப்படுதலால் விலங்குமாப்பொருள் எனவும் பெயர் - பெறும். இது பளிங்குருவில்லா வெண்ணிறத் துணிக்கைகளாக இருக்கும். அயடன் கரைசலைக்கூட்டினால், சிவந்த கபில நிற மாகமாறும்,

Page 71
123
உயிரினவியல்
செலுலுலோசு, அரைச்செலுலோசு, இனூலின் என்பனவும்கா போ வைதரேற்றுகளேயாம்.
புரதங்கள்: இவை தாவரம், விலங்கு ஆகிய இருவகைச் சேத னப்பொருள்களிலும் காணப்படும் நைதரசன் சேர்ந்த பொருள், களாகும். இவை காபன், ஐதரசன், ஒட்சிசன், நைதரசன், கந்தகம், பொசுபரசு முதலியன சேர்ந்த மிகச் சிக்கலான சேதனவுறுப்புள்ள சேர்வைகளாகும்; இழையங்களைப் புதுவதாக "ஆக்கவும், தேய்ந்தழிந்த இழையங்களைச் சீர்ப்படுத்தித் திருத்த வும் வல்லன; வளர்ச்சிக்கு உதவுவன. புரதங்கள் விலங்குகள், தாவரங்கள் என்பவற்றின் இழையங்களில் ஏராளமாக உண்டு. சுவாசத்தில் இவை மிக, மிக அருமையாகவே பயன்படுத்தப் படும். (நைத்திரிக்கமிலத்தில் இரசத்தைக் கரைப்பதாற் பெறப் படும்) மில்லனின் சோதனைப்பொருளுடன் புரதத்தைச் சேர்ப் பதால், வெண்ணிற வீழ்படிவு உண்டாகும். இக்கரைசலுக்கு, வெப்பமேற்றினால், அது செங்கட்டிச்சிவப்பு நிறமாக மாறும்.
கொழுப்புகளும் எண்ணெய்களும்; காபோவைதரேற்றுகளைப் போலவே கொழுப்புகளும் எண்ணெய்களும் காபன், ஐதரசன்" ஒட்சிசன் ஆகிய மூன்றும் உடையன. ஆனால், இதில் ஒட்சிசன் சிறிய அவிஎற்றான் உண்டு. தென்னை, ஆமணக்கு, சணல் (குரத்த லேரியா இயஞ்சியா), கடுகு (பிராசிக்கா இயஞ்சியா), எள்ளு (செசாமும் இந்திக்கம்) முதலியவற்றின் வித்துகளினது வித்தகவி ழையத்தில் எண்ணெய் ஏராளமாக உண்டு. இவை நீரிற் கரையா; அனல், ஈதரில் கரையும். இவை ஒசுமிக்கமிலத்துடன் சேர்ந்தால் கபில நிறமாகத் தோற்றும். "சூடான் 3' என்பதுடன் எண் ணெய் கள் சேர்க்கப்படின் செம்மஞ்சள் நிறம் தோன்றும்.
- 1
ஒதுர்கவுணாவுச் சேமிப்பு: தாவரங்களில் பல்வேறு இழையங்கள் உணவைச் சேமித்துவைக்கின்றன. சேமித்த உணவு இனம் பெருக்கலுக்குப் பெரிதும் உதவுகின்றது. + சேமிப்புறுப்புகள்:
1. வேர்கள்; (அ) முகிழுருவேர்: உ-ம். மரவள்ளி
(ஆ) சிறுகணுச்செறிந்தவேர்: உ-ம். அவரையர்
குடும்பத்தாவரங்கள் (இ) சதையுள்ள வேர்கள் : உ. ம். சாத்தாவாரி (அசுப்
பரக்கசு) பிற்றுக்கிழங்கு

பசிய தாவரங்களின் உணவு
120
2., தண்டுகள் :(அ) தண்டுகளின் மேற்பட்டை
சிந்தில் (தினசுப்போரா) (ஆ) மையவிழையம்: உ-ம். சவ்வரிப்பட்னா (மெத்தி
ரோசைலன் சாகு), கரும்பு (இ) நிலக்கீழ்த் தண்டுகள்:
(i) வேர்த்தண்டுக் கிழங்கு: உ-ம். இஞ்சி (ii) தண்டுக்கிழங்கு உ-ம். நாப்ள (iii) குமிழ்
உ-ம். வெங்காயம் (iv) முகம்
உ-ம். உருளைக்கிழங்கு (ஈ) சதையுள்ள தண்டுகள்: உ-ம். சதுரக்கள்ளி 3, பழங்கள்:
சதையுள்ள சுற்றுக்கனியம்: உ - ம், தக்காளி 4. வித்துகள் : [அ] வித்திலைகள்: உ-ம். அவரை
(ஆ) வித்தகவிழையம்: உ-ம். தென்னை, தானியங்கள் 5. பூவின் பகுதிகள் -பூந்துணர்: உ-ம். பூக்கோவா
(பிறசிக்கா ஒலிராசியா) 6. சதையுள்ள இலைகள் : உ. ம். சதைகரைச்சான்
பல்லாண்டு வாழுமியல்பு : எல்லா உயிர்ப்பொருள்களும், முடிந்த வரையில், நிலைத்து வாழ்வதற்கேற்ற இசைவாக்கங்கள் உடையன. இஃது உயிர்களின் அடிப்படை இயல்பு. அதனால், அவை தத்தம் வாழிடங்களுக்கு உகந்த அமைப்பும், வாழ்க்கை முறையும் இனம் பெருக்கலுக்குரிய சாதனங்களும் உடையன வாயிருக்கின்றன. இக்காரணங்களால் வாழ் 4.1கப்போரில் வெற்றியடைந்து வாழுகின் றன. அநுகூலமான நிலைமைகளில் வாழ்க்கையை - நடாத்துவது, எளிது: எனினும், இயற்கையில் சூழ்நிலை எப்பொழுதும் அது சுடபலமாக இருப்பதில்லை. பருவகால மாற்றங்கள் உயிரினங்ககளுக் குப் பாதகமாக இருத்த,பயமுண்டு. பாதகமான சூழ்நிலையில் வாழ்க்கை நடாத்துவதில் பெரும் பிரச்சினைகள் எழுதல் இயல்பு. இப்பிரச்சினைகளை மேற்கொண்டு வாழத் தகுதியுடையனவே வாழ்க்கைப்போரில் வெற்றியுறும். எனவே, தக்கனபினரந்து வாழ் தாலும், ஏனைய அழிந்து வழிந்து போதலுமுண்டு. அது இயற் கை யின் நியதி. எனினும், உலகில் இன்று வாழும் உயிரினங்கள் தங் களுக்குப் பாதகமான சூழ்நிலைகளை மேற்கொண்டு தக்கனா பிழைத்துவாழ்தல் என்ற தத்துவப்படி வாழ்க்கை நடாத்தி 'வருகின்றன.
215-10

Page 72
130
உயிரினவியல்
வறணிலத்தாவரங்கள் நீண்ட வேர்கள், தடித்த புறத்தோல் முதலிய இசைவாக்கங்களாலும்; நீர்த்தாவரங்கள் கடத்துமிழை யங்கள், உறிஞ்சுமிழையங்கள். தாங்குமிழையங்கள், வேர்த் தொகுதி என்பவற்றைக் குறைத்துக்கொண்டு, நீரையுறுஞ்சத் தக்க மேற்றோல், வளியைச் சேமித்து வைத்திருக்கக்கூடிய காற் றுக்கலவிழையம் என்பவற்றைப் பெற்றிருத்தலாலும்; கிள மிடோமானசு. அமீபா என்பன கோடையில் கவசமிட்டுக்கொள் - (ளுவதாலும், பிழைத்துவாழக் கூடியனவாயிருக்கின்றன. இவ் வாறு நீண்ட காலத்துக்குப் பிழைத்து வாழும் இயல்பு பல்லாண்டு வாழுமியல்பு எனப்படும்.
பல்லாண்டு வாழ்தற்குப் போதிய அளவு நீர், ஒதுக்கவுணாவு முதலியன இன்றியமையாதன, இவற்றைச் சாதகமான நிலைமை களிற் பயன் படுத்தி வளர்ந்து, முழுமை அடையக்கூடிய நிலைப் பண்பு உயிரினங்களில் இருத்தல் வேண்டும். பொதுவாக நிலக்கீழ்தி தண்டுகள் வாய்ப்பான பருவத்தில் காற்றங்குரங்களை உண் டாக்கி, அதிக உணவைத் தேடித், தம்மகத்தே சேமித்துவைத்துக் கொள்ளுகின்றன, பாதகமான பருவத்தில், - காற்றங்குரங்கள் மடிந்து போக, ஒதுக்கவுணவையுடைய நிலக்கீழ்த்தண்டுகள் கோடைநெடுந் தூக்கநிலையில் தம் வாழ்க்கையைக் கழிக்கின்றன. விலங்குகளிலும் கோடைநெடுந்தாக்க நிலையில், பாதகமான பருவத்தைக் கழிக்கும் நத்தை போன்ற உயிரினங்கள் உண்டு. இடைவெப்பநிலைப் பிரதேசங்களில் தாவரங்கள் தங்கள் வளர்ச் சியைக் குளிர்ப்பருவத்தில் ஒடுக்கிக்கொண்டு, மாரிநெடுந் தாக்க நிலையில் இருக்கின்றன. வெப்பமும் வறட்சியுமுள்ள பாலை நிலத் தாவரங்களும் வளர்ச்சிக்கு வாய்ப்பற்ற காலத்தை அவ் வாறே கழிக்கின்றன. அயனப்பிரதேசத் தாவரங்களிற் சிலவும், அகன்றவிலைக்காட்டுப் பிரதேசத் தாவரங்களும் இலைகளை உதிர்ப்பதனாலும்; அயனப்பிரதேசத் தாவரங்களிற் பலவும், மத் தித்தரைக்கால நிலைப் பிரதேசத் தாவரங்களிற் பலவும் வாய்ப் பான காலத்தில் நீரைச் சேமித்து வைத்துக்கொண்டு, ஆவி யுயிர்ப்பைக் குறைக்கும் இசைவாக்கங்களை மேற்கொள்ளுவதா லம்; பாதகமான பருவங்களைக் கழிக்கின்றன, இலையுதிர்க்கும் மரங்கள் தக்கைப்படையினாலும், இலைச்செதில்களாலும் தங்கள் அரும்புகளைப் பாதுகாத்துக்கொண்டு வாய்ப்பற்ற பருவத்தைக் கழிக்கின்றன. நீர்த்தாவரங்களிற் சில, வெள்ளப்பெருக்குள் ள காலங்களில், சேற்றினின்றும் தம்மை விடுவித்துக்கொண்டு நீரில் மிதத்தலாலும்; வேறுசில, நீர் மட்டத்திற்கு இசைவாக இலை

பசிய தாவரங்களின் உணவு
131
-களை வைத்துக்கொள்ளக்கூடிய இலைக்காம்புகளை உடைமையா
லும், பல்லாண்டு வாழத் தகுதியுடையனவாகின்றன.
" கலவி,மறயினம் பெருக்கல் முறையாலேயே பல உயிர்க்குலங்கள் பல்லாண்டு வாழ்கின் றன. இதற்கு வித்து உதவுகிறது. ஐதரா பதியமுறை அரும்புதலால் இனம் பெருக்குகிறது. எனினும், வாய்ப்பற்ற பருவத்தில் கல்விமுறையினம்பெருக்கலை மேற் கொள் ளுகிற து. மேற்கொ ண்டு விருத்தியடையும் நிலையில் கவச மிட்டுக்கொள்ளுகிறது. பொதுவாகத் தாவரங்கள், பாதகமான பருவம் வருவதற்குச் சிறிது முன்னதாகவே பூத்துக் காய்த்து வித்துகளை உண்டாக்கிவிடுகின் றன. வித்துகள் உறங்குநிலையில் உயிருடன் காலங் கழிக்கச் சட்டியவாறு அமைந்திருக்கும். சில வித்துகள் பல்லாண்டுக் காயத்திற்கு உறங்கு நிலையில் உயிரு டன் இருக்க வல்லன. வித்துறை, வித்திலை (வித்திலைகள்) வித் தகவிழையம் என்பவற்றால் மூலவுரு பாதுகாக்கப்படுதலால் வித் துகள் உறங்குநிலையில் பிரமத்துவாழுகின்றன,
வாய்ப்பான சூழ்நிலைகளிற்றாறும் விருத்தியடையும் இளம் -உயிரினங்கள் (முட்டை, குட்டி, வித்து) இறந்துபடாதிருத்தற்கு உகந்த இசைவாக்கங்கள் தாவரங்களிலும், விலங்குகளிலும் காணப்படுகின்றன. கருக்கட்டிய முட்டைகள் மென்றகட்டால் அல்லது சுண்ணம்புள்ள ஒட்டினால் உறையிடப்பட்டிருக்கும். பாதுகாப்பு இல்லாத புணரிக்கலங்கள் கருப்பையில் விருத்தியா கும், முளைப்பதற்கு வாய்ப்பான பருவம் வாய்க்கும்வரையும், உரமான வித்துறைகள் வித்துகள் வைக்கப்பட்டிருக்கும். அழு கிப்போகக்கூடிய பழங்களினும் வித்துகளிலும் உள்ள வித்துகள், கற்கலங்களால் ஆக்கப்பட்டிருக்கும்.
விருத்தியடையும் இளம் உயிரினங்கள், ஒதுக்கவுணவைப் பயன்படுத்தி வளரக்கூடிய வாய்ப்பு, பல தாவரங்களிலும், விலங்குகளிலும் காணப்படுகிறது. விலங்குகளின் முட்டைகளில் வெண்கரு, மஞ்சட்கரு இருத்தலும், தாவரங்களின் வித்துகளில் ஒதுக்கவுணவுள் ள வித்திலைகள் அல்லது வித்தகவிழையம் இருதி தலும் நோக்கத்தக்கது. முட்டைகளில் ஒதுக்கவுணவு இல்லாத பட்சத்தில் (முலையூட்டிகளில் இத்தகைய முட்டைகள் உண்டு) இளம் உயிரானது கருப்பையகத்தே தாயினது குருதியோட்டத்தி னின்றும் பரவன்முறையால் போசணை பெற்று வளருகின்றது.

Page 73
132
உயிரின வியல்
வினாக்கள் தாவரங்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாத மூலகங்கள் எவை? அவற்றின் பயன்கள் யாவை? அவற்றை எவ் வாறு தாவரங்கள் பெற்றுக்கொள்ளுகின்றன?
2. நீர் எவ்வாறு பொதுவான வளர்ப்புக்கரைசல் ஒன்றை
ஆக்குவீர்? அக்கரைசலில், ஒரு தாவரத்தினது வளர்ச் சியை, எவ்வாறு பரிசோதித்து அறிவீர் என்பதை விவ ரித்துக் சுடறுக.
மூன்று வகையான சேதனவுறுப்புனாவுப்பொருள்களைத் தாவரங்கள் எவ்வாறு ஆக்குகின் றன? இவ்வுணவுப் பொருள், தாவரத்தின து எவ்வெவ்வுறுப்புகளில் சேமித்து வைக்கப்படுகின்றது ? பல்லாண்டுவாழ்தலாவது யாது? உயிரினங்கள் எம் முறைகளை மேற்கொண்டு பல்லாண்டு வாழுகின்றன என்பதுபற்றி, ஒரு கட்டுரை வரைக.
செய்முறைப் பயிற்சிகள் 1. இந்த அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டவாறு, தாவரத் திர வியங்களின் மாதிரி ஒன்றைப் பகுத்து அறிக.
2. உரு 71 இல் காட்டியவாறு, வெவ்வேறு வகையான வளர்ப் புக்கரைசல்களில் நாற்றுகளை வளர்த்து, அவற்றின் வளர்ச்சியை '
ஆராய்க.
3. பின் வரும் உணவுச் சோதனைகளை நிகழ்த்துக.
உணவுச் சோதனைகள் காபோவைதரேற்றுகள்! பொதுச் சோதனை ;
காபோவைதரேற்று மாதிரி ஒன்றை எடுத்து, இரண்டு க. ச. மீற்றர் நீரிற் கரைத்துக்கொள் க. (அக் காபோ வைதரேற்றுக் கரையாவிட்டால் தொங்கற்கரைசல் ஒன்று ஆக்கிக்கொள்க.) இக்கரைசலுடன் ஏறத்தாழ 5 துளி நத்தோல்சேர் அற்ககோலைக் கூட்டுக. வெண் பணிற வீழ்படிவு ஒன்று பெறப்படும். சோதனைக்குழாயி னுள் செறிந்த சுந்தகவமிலத்தில் ஒரு சில துளிகள் விட்டுக்கொள்க. வீழ்படிவின் அடியில், செவ்வூதா நிறவளையம் ஒன்று உண்டாவதைக் காணலாம்.

பசிய தாவரங்களின் உணவு
13)
வெல்ல மாதிரி ஒன்றைச் சோதனைக்குழாய் ஒன்றில் இட் டுக், கடுமையாக வெப்பம் ஏற்றியபின், அதன் மணத் தைக் குறித்துக்கொள்க.
யிலுள்ள கா.முன்னர், பீலிங்கா நிக்குக. சோ
குளுக்கோசு: பீலிங்கின் சோதனையைப் பிரயோகிக்குக. (சோத
னையை நிகழ்த்துமுன்னர், பீலிங்கின் கரைசல் நன்னிலை யிலுள்ளதாவென நிச்சயப்படுத்திக்கொள்க. இதனை அறிந்துகொள்வதற்கு 'அ' என அடையாளமிடப்பட்ட ஒரு க, ச. ம்", பீலிங்கின் கரைசலோடு "ஆ" என அடை யாளமிடப்பட்ட பிரு அ.ச. மீ, பீலிங்கின் கரைசலைக் கலந்துகொள் க. மெல்லிதாக வெப்பமேற்றுக. கரைசல் நன்னிலையிலுள்ள தாயின், தெளிவான நீலநிறக்கரைசல் ஒன்று பெறப்படும்.) 2 க.ச. மீ. அளவுள்ள, தெளிவான பீலிங்கின் கரைச லுக்குக் குளுக்கோசு மாதிரி ஒன்றைக் கூட்டிக், கொதிக் கச் செய்துகொள்க. சிவப்புநிறக் கரைசல் ஒன்று பெறப் படும். பப்பாசி, வாழைப்பழம் என்பவற்றின் மாதிரிகளோடு மேற்படி சோதனையை மீட்டும் செய்து கொள்க.
-பாக்குரோசு (கரும்பு வெல்லம் அல்லது வெண்ணிறவெல்லம்) :
முதலாவது பீலிங்கின் சோதனையைச் செய்து பார்த்துக் கொள்க. (வென்ணரிற வெல்லத்தில் குளுக்கோசின் சுவடு கள் இருக்குமாகையால் பீலிங்கின் கரைசல் மெல்லிய சிவப்பு நிறமாக மாறுதலுங் கூடும். ] எந்த விதமான எதிர்த்தாக்கமும் நிகழாது. இப்பொழுது, நிரம்பிய வெண் ணிற, வெல்லக் கரைசலில் ஏறத்தாழ 2 க, ச, மீ., அளவு எடுத்துக்கொண்டு, அத ஷேடு செறிந்த தேரோகுளோரிக்கமிலத்தில் ஒருசில துளிகளைக் கூட்டிக் கொதிக்கவைத்துக்கொள்க. வெண் பிற வெல்லம் குளுக்கோசாகத் தாழ்த்தப்படும்.
இப்பொழுது பீலிங்கின் சோதனையைப் பிரயோகிக்குக.
மாப்பொருள்: மாப்பொருட் கரைசல் அல்லது தொங்கற்கரைச
லில், அயடீன் கரைசல் துளிகளில் ஒருசிலவற்றை விட் டுக்கொள் க,

Page 74
உயிரினவியல்
அது இருண்ட செவ்வூதா நிறமாகவோ, இருண்ட நீல நிலமாகவோ மாறும். உருளைக்கிழங்கில் மிக, மிக மெல்லிய துண்டு ஒன்று வெட்டி எடுத்துக்கொள்க. அதன் மீது ஒருசில அயடீன் கரைசல் துளிகளை விட்டபின், நுணுக்குக் காட்டி ஒன்றின் கீழ் வைத்துச் சோதனை செய்க. மாப்பொருண்மணிகளின் வெளியுருவப்படத்தை வரைக..
புரதங்கள் : ஒரு சிறிய துண்டு இறைச்சியை ஒரு பரிசோதனைக்
குழாயிலிட்டு எரித்து, அதன் மணத்தைக் குறித்துக் கொள் க. ஒரு சிறிய துண்டு இறைச்சியோடு செறிந்த நைத்திரிக் கமிலத்தைக் கூட்டியபின், நிகழும் மாற்றங்களைக் கூர்ந்து, நோக்குக, ஏறத்தாழ 2 க, ச. மிமீ, வெண் கருவுடன் 1 க. ச. மி. மில்லனின் சோதனைப்பொருளைக் கூட்டுசு, வெண்ணிற வீழ்படிவு ஒன்று பெறப்படும். கடுமையாக வெப்பம் ஏற்றுவதனால் இவ்வீழ்படிவு செய்கட்டிச்சிவப்பாக
மாறும். கொழுப்புகள்: 1க. ச. மீ. ஒலி, வெண்ணெயுடன் 'சூடான் 3' இல்
ஒரு சில துளிகள் கூட்டுக. சிவப்புநிறக்கரைசல் ஒன்று + பெறப்படும்,
ஆமணக்கம் வித்துகள் சிறவற்றை எடுத்துக, கசக்கிப் பிழிந்து, ஒரு சிறு கணியமான எண்ணெயை எடுத்து, அதனோடு ஒசுமிக்கமிலமும், நீரும் சேர்ந்த 17 கரைசலில் ஒருசில துளிகள் சுட்டுக. எண்ணெய் கறுப்பு நிறமாக மாறும். ஈதர் (அல்லது பென்சோலில்) ஒரு சிறுகரியத்தை ஒரு சோதனைக்குழாயில் விட்டுக்கொள்சு, அதனுடன் ஒருசில தேங்காயெண்ணெய் அல்லது நல்லெண்ணெய்த் துளிகளைக் கூட்டி, நன்கு குலுக்குக. ஈதரும், (அல்லது பென்சோலும்) எண்ணெயும் இரண்டறக் கலந்து நிற்ப தைக் காணலாம், அதாவது : எண்ணெய் ஈதரில் (அல் லது பென்சோலில்) கரைந்துவிட்டமையே, இரண்டறக் கலந்தமைக்குரிய காரணமாகும்.
- --வித்து "அயமான "-ர்ந்த 15

135
அத்தியாயம் 18
நைதரசன் வட்டமும் காபன் வட்டமும்
டபோதும், கொள்ளுகில் தங்களுக்கு 7
மாதரசன் வட்டப் : தநைதரசன் தாவரங்களுக்கு இன்றியமை யாத மூலகம் என் பதுவும், மண்ணில் செறிந்திருக்கும் கட்டில்லா நைதரசனை, அவைகள் பயன்படுத்தமாட்டா வென்பதுவும், நாம் முன்னரே அறிந்துகொண் டோம். ஆதலால், மண்ணிலுள்ள நைத்திரேற்றுகள். நைத்திரைற்றுகள் அமோனியாச்சேர்வைகள் பிஎன் னும் உப்புகளிலிருர் - தாவரங்கள் தங்களுக்கு வேண்டிய நைதரசனைப் பெற்றுக்கொள்ளுகின்றன. அவ்வாறு பெற்றுக் கொண்டபோதும், மார் 13லிருந்து உ ப் பு க ள் ஓரளவுதான் கிடைக்கமுடியும், மட்டுணிக்கைகள் இரசாயன மாறுபாடு அடைந்து பிரிந்தழிதலிருல், ஒரு சிறிய கணியமான உப்புகளே தாவரங்களுக்குக் கிடைக்கக்கூடியதாயிருக்கும், மண்ணிலுள்ள இவ்வுப்புகள் தாவரங்களால் கரைசனிலையில் உறிஞ்சப்படுவதால், அதில் இவை வரவரக்குறைந்து, இல்லாது ஒழிந்துவிடுமன்றோ? எனவே, தாவரங்கள் 1மண்ணிலிருந்து உணவாக எடுத்துக்கொள் ளும் உப்புகளுக்குச் சமகரியமான உப்புகள் அதில் திரும்பவும் ஏதோ ஒருவகையிற் போய்ச்சேரவேண்டும் என்பது முக்கியமா கும், அல்லது, புவியிவள்ள பண் நைதரசன் சேர்ந்த உப்புகளின்றி, வளங்குன்றும், வளங்குன்111த,லும் தாவரங்கள் அழிந்தொழியும். அழிந்தொழியவே, ஏனைய உயிரினங்களும் மாண்டுமடியும், நைத ரசனின் அளவு மண்ணில் பாப்பொழுதும் சமநிலையில் இருக்க வேண்டும். சில பயன் தரு பற்றீரியாக்கள் மண்ணில் நைதரச 'னின் அளவு குறைந்து போகாதவாறு தலைமையான தொண்' டைச் செய்துவருகின்றன. இவை மண்ணிலேயே வாழுகின்றன. இவற்றிற்கு அடுத்தபடியாகத், தாவரங்களே உண்டுவாழும் விலங் குகளும் நைதரசன் மண்ணில் நாட்டப்படுவதற்கு உதவி புரி கின்றன. மாண்டுமடிந்த தாவரங்களும் இதற்குக் கைகொடுத்து உதவுகின்றன.
விலங்குகள், தாவரங்கள் என்பவற்றின் சேதனவுறுப்புப் பொருள்களையும், விலங்குகளினது நைதரசன் சேர்ந்த கழிவுகளை யும் அழுகச்செய்யும் தொழில் அழுகல்வளரிகளான பற்றீரி யாக்களாலும், சிறப்பாக பற்றிரியம்மைக்கோயிடிசு' என்பதனாலும் - நடைபெறுகின்றன. அழுகுதல் காரணமாக அமோனியவுப்புகள் - நிலத்தில் உண்டாகின்றன. இவ் அமோனியவுப்புகள் எளிதாகப்

Page 75
13
உயிரினவியல்
பிரிந்தழியும் இயல்பினவாதலால், அவற்றிலிருந்து அமோனியா வெளிப்படுத்தப்படுகின்றது. இவ் அமோனியா ஒட்சியேற்றப்படு
>நைதரசன் - நைதரசனிறக்குகின்ற
பற்றிரியா
அவரையக் குடும்பத்
தாவரங்கள் நைத்திரேற்றுகள்
வோகளினால் உறிஞ்சப்படுதல்
நைத்திரிக்கமிலம்
புரதங்கள்
தாவரங்களினிழையங்கள்
நைத்திரசமிலம் (எந்தரோ பற்றர்)
விலங்குகளிழையங்கள்
அமோனியா நைதரோசொம னுசு
அழுகுதல்
அமினோவமிலங்கள் அமோனிய,
உ ப்புகள
உரு. 72 நைதரசன் வட்டம்

நைதரசன் வட்டமும் காபன் வட்டமும்
13T
தல் (ஒட்சிசனோடு சேர்தல்) காரணமாக நைதரசமிலம் உண்டா கிறது. இச்செயன்முறைக்குக் காரணமாயமைவன "நைதரோசோம் னுசு' என்னும் பற்றீரியாக்களே, நைதரசமிலம் மண்ணிலுள்ள பல் வேறு பதார்த்தங்களோடு சேர்வதனால், நைத்திரைற்றுகள் உண் டாகின்றன. ஆனால், சருவசாதாரணமாக நைத்திரசமிலம் 'நைத ரோபற்றா' என்னும் பற்றீரியாவினால் மேலும் ஒட்சியேற்றப்படு தலினால். நைத்திரிக்கமிலமாக மாற்றமடைகின்றது. இந்நைத் திரிக்கமிலம் மண்ணரிலுள்ள உலோகங்களோடும் காபனேற்று களோடும் சேர்ந்து நைத்திரேற்றுகள் ஆகின்றன. அமோனியாச் சேர்வை ஒட்சியேற்றப்பட்டு ஈற்றில் நைத்திரேற்றாகும் செயன் முறை கநைத்திரேற்ருக்சுல் எனப்படும். இச்செயன்முறை தொடர் பான் பற்றீரியாவை தநைத்திரேய் பூக்கும் பற்றீரியா என்பர்.
வளிமண்டலத்திலுள் ள நைதரசனை மண்ணில் நாட்டி, நைத்தி ரேற்றுகள் ஆக்கும் வலு, 110 பற்றீயாக்களுக்கு உண்டு. இந்த பற்றீரியாக்கள் மண்ணில் கட்டின்றி வாழும், வேறு சில வேர்ச் சிறுகணுக்கள் எனப்படும் சிறிய புடைப்புகளில், அவரையக்குடும் பத்தாவரங்களின் வேர்களில் வாழும். (அவரை என்னும் தாவரத் தின் குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்களே அவரையக்குடும்பத் தாவரங்களாகும்). வேர்ச்சிறுகணுக்களில் காணப்படும் பற்றீரி யாக்கள் 'வரிலசு இராடிசிக்கோலா' (வேர்க்கோ லுருக்கிருமி) என்னும் இனத்தைச் சேர்ந்தவை. இவற்றைத் தவிர, மண்ணிற்காணப்படு வன "ஏசொற்பேற்றர்', குளத்திடியம் என்னும் இனங்களைச் சேர்ந் தவையாகும். நைதரசனை நாட்டும் இந்த பற்றீரியாக்கள் மிக முக் கியம் வாய்ந்தவை, ஏனெனில், இவையே வளிமண்டல நைதரச னிலிருந்து நைத்திரேற்றுகளை ஆக்கவல்லன. எசொற்றோபற்றர் ஒட்சிசனுள்ள நிலைமையில் தொழில்படும். குளத்திரிடியம் ஒட்சி சனில்லாத நிலைமையில் தொழிற்படும், வேர்ச்சிறுகணுக்களி லுள்ள பற்றீரியாக்கள் கொடுத்துவாங்குமியல்பு உடையன. இவை வளிமண்டலத்திலுள்ள நைதரசனைத் தாம்வாழும் சிறுக எனுக் களிலே நாட்டவல்லன. இவை வேர்மயிர்களில் தொற்றி, அதனா டாக வேரின் மேற்பட்டையை அடைந்து, அதன் கலச்சுவர்களில் பல நுண்டுளைகளை உண்டாக்கிக்கொண்டு, பல சமுதாயங்களைத் தாபித்துக்கொண்டு வாழுகின் றன, தாம் வாழும் சிறுகணுக்களில் அமீனோச்சேர்வைகளின் வடிவத்தில் வளியிலுள்ள நைதரசனை நாட்டுகின்றன. இவ் அமினோச்சேர்வைகளின் ஒரு பகுதி, தாவரத் கினால் உறிஞ்சப்படும். இன்னொரு பகுதி, சிறுகணுக்களிலிருந்து தரையில் இழக்கப்படும். மீதி, அச்சிறுகரணுக்களிலேயே பொதிந்து 'வைக்கப்பட்டிருக்கும், இந்த பற்றீரியாக்களின் தொழிற்பாட்டிற்கு

Page 76
138
உயிரினவியல்
இன்றியமையாத சத்தியை தாவரங்களே காபோவைதரேற்று" வடி.வத்தில் அவற்றிற்கு அளிக்கின்றன, எனவே, தாவரம் பற்றீரி யாவுக்கு காபோவைதரேற்றை அளிக்க, அதற்குக் கைமாறாகப் பற்றீரியா நைதரசன் சேர்ந்த உணவைத் தாவரத்திற்கு அளித்
துக், கொடுத்துவாங்கும்வாழ்க்கை நடாத்துகின்றன.
வளிமண்டலத்தில் மின்னல் காரணமாக, மின்றீப்பொறிகள் உண்டாகிக் குழப்பமேற்படும் வேளைகளில் நைதரசனும் ஒட்சி சனும் சேர்ந்து, நைதரசனின் ஒட்சைட்டுகள் உண்டாகின்றன. மழை நீரில் இவ் ஒட்சைட்டுகள் கரைந்து மெல்லிய அமிலங்கள் உண் டாகின்றன. இவ் அமிலங்கள் மன்னாரிலுள்ள பல்வேறு பதார்த் தங்களுடன் சேர்ந்து நைத்திரேற்றுகளும் நைத்திரைற்றுகளும் உண்டாகின்றன.
காற்றூட்டல் குறைந்த மண்ணில் ஒருவகை பற்றீரியா வாழுகின்றது. அவை பெருகுரானிறக்கும் பப்பிரியா எனப்படும். அவை நைதரசன் சேர்ந்த உப்புகளை நைதரசனுகவும். வோ பதார்த் தங்களாகவும் பிரிந்தழியச் செய்வதால், தரைக்குத் தீங்கு விளை விக்கின் றன. அதாவது, மண் ணின் வளத்தைக் குன்றச் செய் கின் றன. நல்ல மண்ணுள்ள நிலங்களில் அதிட்டவசமாக க ைந்த ரசனிறக்கும் பற்றீரியா காணப்படுவதில்லை.
மேற்கூறிப்போந்தவற்றிலிருந்து, புவியிலுள் ள நைதரசனா னது இடையீடின்றிச் சுற்றோட்டம் உடையதெனக் கண்டோம், தாவரங்கள் மட்டுந்தான் அச்சுற்றோட்டத்துடன் தொடர்புடை யளா என யாம் தவறுதலாக நினைத்தல் கூடாது. இறந்த தாவரங்களின் பகுதிகள் விரைவாக அழுகுவதில்லை, அழுகுஞ் செயன்முறை இவற்றில் மிக மந்தமாகவே நடைபெறுகின்றது. தாவரப்பொருள் களின் பெரும்பகுதி, உண்மையாகவே விலங்கு களால் உண்ணப்படுகின்றது, உண்ணப்பட்ட தாவரப்பொருள் கள், விலங்குகளின் வாழ்க்கைக்கு இன்றியமையாத சத்தியை அ ளிக் கி ன் ற ன. வி ல ங் கு க ளி ன் உட லில் இத்தாவரப் பொருள் கள், இரசாயன மாற்றமடையும் செயன்முறைகளாலும், அ வ ற் றி ன் சேர்க்கை யெறிகைச்செயல்களினாலும், சிறு "நீருப்புப் போன்ற நைதரசன் நிரம்பிய கழிவுப்பொருள்களை உண்டாக்குகின்றன. மண்சாளிலுள்ள பற்றிரியா சிறு நீருப்பை மிக எளிதாக , அமோனியா ஆக்கிவிடும்; அதன் மேல், நைதி திரேற்றுகள் ஆக்கிவிடும். மண்ணிலுள் கா பற்றீரியாவால் இறந்த 4

நைதரசன் வட்டமும் காபன் வட்டமும்
13
விலங்குகளின் இழையங்களும் எளிதாக, நைத்திரேற்றுகளாக மா ற்றப்படும். ஆகவே, விலங்குகளும் நைதரசன் வட்டத்தைக். கதிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
நைதரசன் தரையிலிருந்து இழக்கப்படுமாறும், தரையில் நாட்டப்படுமாறும், கைதாசனின் சமநிலை மண்ணில் குலைவுறு - வாறும் இதுவரையும் கூறப்பட்டது.
காபன்வட்டம்: தாவரங்கள் விலங்குகள் என்பவற்றின் இழை யங்களின் பிரதானகூறு காபன் ஆகும் . இயற்கையில் அகப் படும் வைரம், பென்சிற்கரி என்பன காபனின் பளிங்குருவுள்ள வடிவங்களாம். பளிங்குருவற்ற காபன் உள்ள பொருள் கள் மரக் கரி, புகைக்கரி முதலியன, பெற்றோலியம் போன்ற சில கனிப் பொருணெய்களும் ஏராள மான காபனை உடையன. காபன் நீரிற் கரையுந்தன்மை இல்லாதது. ஆதலால், வளிமண்டலத்தி லேயுள்ள மிகச்சிறிய கaரிய (1* [4]மான காபனீரொட்சைட்டி லிருந்தே, தாவரங்கள் தங்கள் தேவைக்கு வேண்டிய காபனப் பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. காபனீரொட்சைட்டைத் தாவரங்கள் எல்லாம் மாறின்றி ( சூரியவொளியுள்ளபோது ! உறிஞ்சிக்கொண்டிருத்தலால் வளிமண்டலத்தில் அதன் நூற்று வீதம் குறைவுபடுதல் சுட்டுமன்றோ? அவ்வாறு குறைவுபடாது, பல வழிகளாலும், அப்து இருந்த அளவிலேயே இருக்கும் நிலைமை, எப்போதும் உடாதி குலையாது இருந்துகொண்டே வரு கிறது. அதாவது: வளிமண்டலத்தில் காபனீரொட்சைட்டின் நூற்றுவீதம் மாறிலியாகவே இருந்து வருகிறது என்பதாம். இஃது எப்படி நிகழுகிறது என்பதை, இனி அறிவோம்.
உயிரினங்கள் சுவாசிக்கும்போது காபோவைதரேற்றுகள் ஒட்சி யேற்றப்படுதலால், காபரொட்சைட்டும் நீராவியும் உண்டாகின் றன. இக்காபனீரொட்சைட்டு மீண்டும் வளிமண்டலத்தையே அடைகிறது. அது வருமாறு:
காபன், ஐதராள், ஓட்சிசன், - ஒட்சிசன்.டி காபன்ஒட்சிசன், -ஜேநான்,
ஒடான் -பந்து (ருளுக்கோ +ஓட்ரிசன்-காபனீரொட்னாட்டு- நீர்-சத்தி)
[C, T 0-60 -+GC) -H,0+ENVIEG1:Y) நொதிக்கலங்களினல் வெல்லங்கள் நொதிப்படைகின் றன. அத - ல்ை, ஈதைலற்ககோலும் காபனீரொட்சைட்டும் உண்டாகின்றன.

Page 77
14)
உயிரினவியல்
அது வருமாறு: காபன், Hநரசன், ஒட்சிசன்+கோபன், ஜதரசன், ஒட்சிசன் ஆதரசன்
+2காபன்ஒட்சிசன், (1 Nளுக்கோசுஈநைலற்ககோல்+காபனீரொட்ாைடடு)
[C, H, 0, > 20, H, OH + 200)
காபனேற்றுகள் (சுடுதல்) காபன் எரிதல்)
*கபனீரொட்
சைட்டு -
தாவரங்களிள்
பச்சைய மனணிகர் கொதிப்படைதல் சுவாசித்தல் காபோவைதரேற்றுகள்
புரதங்களும்
கொழுப்புகளும்
தாவர்- விலங்பிதழ்யங்கள்
பிராயங்கள்
அழுகுதலும் பிரிந்தழிதலும் எரிதலும்
உரு. 73

நைதரசன் வட்டமும் காபன் வட்டமும்
141
சேதனவுறுப்புப்பதார்த்தங்கள் அழுகும்போது, குறிப்பிட்ட ஒரு கணியமான காபனீரொட்சைட்டு உண்டாகின்றது.
காபனுள்ள பதார்த்தங்கள் எரியும்போது, பிற பதார்த்தங்க ளோடு கூடக் காபனீரொட்சைட்டும் உண்டாகின்றது.
வளிமண்டலத்திலுள்ள காபனீரொட்சைட்டு, நீரிற் கரைந்து மெல்லிய காபனிக்கமிலக்கரைசலாகின்றது. இவ்வமிலம் மண்
ரிலுள்ள, உலோகங்களோடு சேர்ந்து காபனேற்றுகள் உண்டா கின்றன. காபனேற்றுகள் பிரிகை அடையின் காபனீரொட்சைட்டு உண்டாகும். இக்காபனீரொட்சைட்டு மீண்டும் வளிமண்டலத்தை -
அடைகின்றது.
நிலப்பிளப்புகளிலும் மலைக்குகை போன்ற இடங்களிலும் இருக்கும் காபனீரொட்சைட்டு முறையே மழையாலும் காற்றோட் டத்தாலும் வெளியேறி, வளிமண்டலத்தை அடைகிறது.
மேற்கூறிய வழிகளால் - தாவரங்களால் பயன்படுத்தப்படுவ தால் வளிமண்டலத்திலிருந்து இழக்கப்படும் காபன், - ஈடுசெய் யப்படுகின்றது.
வினாக்கள் 1. இயற்கையில் நிகழும் நைதரசன் வட்டத்தை விவரிக்க. 2. தாவரங்களால் உறிஞ்சப்படும் காபன் எவ்வாறு ஈடு
செய்யப்படுகிறது. 3. தாவரங்கள் காபனோ வேர்வாயிலாகக் கரைசல் வடிவில்
உறிஞ்சாமைக்குரிய காரணம் யாது? 4, கொடுத்துவாங்குமியல்புபற்றி ஒரு சிறிய கட்டுரை வரைக.
செய்முறைப் பயிற்சிகள் தொட்டாற்சுருங்கியின து வேர்ச்சிறுகணுக்கள் சிலவற்றை - நொறுக்கியபின் கண்ணாடி வழுக்கிமீ து வைத்து, நுணுக்குக் காட்டியின் உயர்வலுவின்கீழ் ஆராய்க, நைதரசன் நாட்டும் பற் நீரியாவின் தோற்றத்தைக் குறித்துக்கொள்க.

Page 78
அத்தியாயம் 19
மண்
புவியின் மேற்பரப்புப் பலவகைப்பாறைகளால் ஆக்கப்பட்டுள் ளது. இப்பாறைகள் வானிலையாலழிதலாலும், உரிவினாலும் கணந் தோறும் மட்டுணிக்கைகளாகப் பிரிந்தழிந்துகொண்டிருக்கின்றன, இவ்வாறுண்டான மட்டுணிக்கைகளின் மேற்படயே தாவரங்க (ளுக்குப் போசனை அளிக்கவல்ல கனிப்பொருளுப்புகளை உடை பப்பது.
சிறிய கற்கள், பரல்கள். மணல்மணிகள் தொடக்கம் மிக நுண்ணிய களித்துணிக்கைகள் ஈறாகப், பல்வேறு பருமனுள்ள பாறைத் துணிக்கைகளை உள்ளடக்கியது மண் எனப்படும். Iமண் ணில் ஒரு குறிப்பிட்ட அளவு அழுகிய தாவர, விலங்குப்பொருள் களும் உண்டு. இஃது உக்கல் எனப்படும். மட்டுணிக்கைகள் ஒன் றுடனொன்று நெருக்கமாகப் பொருந்தியிருக்காமையினால் அவற்றிற்கிடையில் மிகச்சிறிய காற்றிடைவெளிகள் இருக்கும். காற்று வேர்களுக்கு ஆவசிகமானது. ஒவ்வொரு மட்டுணிக்கை யைச் சுற்றிலும், ஒரு மெல்லிய படலம்போன்று பரண் ணீர் ஒட் டிக்கொண்டிருக்கும். இந்நீரையே, வேர்கள் உறிஞ்சுகின்றன. ஆகவே, வேர்த்தொகுதி வளியை (உண்மையாகவே ஒட்சிசனை) பும் நீரையும் மண்ணிலிருந்தே பெறுகின்றது. நீர் நிரம்பிய மண்ணில், வளியிருக்கவேண்டிய இடத்தை நீர் வகித்துக்கொள் (ளுவதால், வேர்த்தொகுதி சுவாசிக்கமுடியாது இறந்துவிடும். தோட்டப்பயிர்களுள் வெள்ளம்புகுந்து நிலையாக நின்றால், அப் பயிர்கள் அழிந்துவிடும். தாவரங்கள் தங்கள் வேர்களை நன்றாக ஊன்றித் தம்மை உறுதிப்படுத்திக்கொள்வதற்கும் மண் இன்றி
யமையாதது.
தாவரங்கள் வாழ்வதற்கு மண் எவ்வளவு இன்றியமையாததோ, அவ்வளவு நீரும் இன்றியமையாதது எனக் கூறுதல் ஒருவகை யில் குன்றக்கூறலாகும். தாவரங்களின் இழையங்களில் நீர் தலைமையான கூறாக அமைந்திருக்கின்றது. தாவரத்தின் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத தொழில்களுக்கெல்லாம், நீரே பிரதானம். மண்ணிலுள்ள நீர் சிழ் வடியும் நீர் அல்லது கட்டில்லாநீர், பரு சுனார், மயிர்த்துளே நீர் என மூவகைப்படும். இவற்றுள் மயிர்த்துளை நீரே தாவரங்களின் வேர்மயிர்களால் உறிஞ்சப்படுகின்றது. ஏனைய

மண்
143
வகை நீர்கள் தாவரத்திற்குப் பயன்படுதல் இல்லை. எனவே, மட்டுணிக்கைகளைச் சுற்றி மெல்லிய படலம் போலிருக்கும் நீரே, மயிர்த்துணை நீராகும். மட்டுணிக்கைகளால் உறிஞ்சிவைத்துக் கொள்ளப்படும் நீர், பருகணீர் எனப்படும். மட்டுணிக்கைகளுக் கிடையில் கீழ்வடிந்து செல்லும் நீர், கீழ்வடியும் நீர் எனப்படும். மட்டுணிக்கைகளுக்கிடையில் இருக்கும் சிறிய இடைவெளிகளின் தொடர்ச்சி மயிர்த்துணைப் போலிருக்கும். இம்மயிர்த்துளைகளின் தன்மை வெவ்வேறுவகை மண்ணில் வெவ்வேறுவகையாக இருக்கும்.
ஒரு சிறு கணியமான (தோட்டமண்ணை நீரிற்கரைத்து அடை
டபு
யும்படி விட்டால், பருமனுக்கேற்ற வாறு. மட்டுணிக்கைகள் பல தரங் களாக அடையும். முதன்முதலாகப் பரல்கள் பாத்திரத்தினடியில் அடை யும். அதன் மீது மணற்றுணிக்கை கள் அடையும். மணற் றுணிக்கைக ளி ன் மீ து - களிமட்டுணிக்கைகள் அடையும். மிக நுண்ணிய களிமட் டுணிக்கைகள் முற்றாக அடைவ தற்கு நீண்டநேரம் (சில வேளைக ளில் வாரக்கணக்கில்) பிடிக்கும்.
"ஆகவே, பெரிய களிமட்டுணிக்கை 57
களின்மீது நுண்ணிய களிமட்டுணிக்
கைகள் நீரில் 'தொங்கிக்கொண்டி உரு. 74
ருக்கக் காணப்படும். அழுகிய - தோட்டமண்ணின் பகுப்பு
இலைகள்- சிறுகிளைகள் உள்ளிட்ட ST சிறுகற்கள் (பரல்கள்);
உக்கல், நீரின் மேற்பரப்பில் மிதந்து 8 மணால்: 0 களிமட்டு
கொண்டிருக்கக் காணப்படும், ணிக்கைகள் ; CT' சிறிய களி மட்டு ணிக் கைகள்;
தாவரங்கள் நன்றாகச் செழித்து HI உக்கல்.
வ ள ர்ந் து ஓங்கவேண்டுமாயின்,
மண் 'நிறைவுள்ளதாக அல்லது சரி 'விகிதக்கலப்புள்ளதாக இருக்கவேண்டும். நல்ல மண்ணில், பல் வேறுவகையான பருமனுள்ள மட்டுணிக்கைகள் கலந்திருப்ப தோடு, உக்கலும் கலந்திருக்கவேண்டும். அதில், அதிக அமிலத் தன் மையோ, காரத்தன்மையோ இருக்கக்கூடாது. அத்தகைய மாண் நன்மன் எனப்படும். அதிக உக்கல் கலந்த மண் அமிலத் தன்மை கூடியதாயிருக்கும். குறிப்பிட்ட சில தாவரங்களே அத்

Page 79
144
உயிரினவியல்
தண்ணாம்பு அதிக அன்பா துவாகத் தோத்தில் இருத்தல் விரு
தகைய மண்ணில் வளரமுடியும். இதற்கு மறுதலையாக, மன்பில் சுண் ணும்பு அதிக அளவிலிருப்பதைப் பல தாவரங்கள் சகித் "துக்கொள்ள மாட்டா. பொதுவாகத் தோட்டமண்ணில் மணட , களி, உக்கல் என்பன பின்வரும் நுற்றுவீதத்தில் இருத்தல் விரும் பத்தக்கது: மணல் 80; களி 18: உக்கல் 20, - நன் மண்" ணில் மணல், களி, உக்கல் மூன்றும் கலந்திருப்பதால், அவை மூன்றிற்குமுரிய நல்ல இயல்புகள் அதில் இருக்கும். அந்நல்லி பல்புகளாவன : காற்றாட்டல். நீரைப்பற்று திறன் கனிப்பொரு (ளுப்புகளைப்பற்றி வைத்திருத்தல், மயிர்த் துளைத்தன்மை காரமு மில்லாது அமிலமில்லாது நடுநிலையாக இருத்தல், குளிரோ வெம்மையோ இன்றி இருத்தல், அளவான இறுக்கமும் நொய் மையுமுடைமை என்பனவாகும்,
நோட்டமண் பகுப்பு: - பரிசோதனை : 10 சிராம் தோட்டமண்ணே (நன் மண்ணை) எடுத்து ஒரு பாத்திரத்திலிட்டு, கடும் வெப்ப மேற்றி நன்கு வறுத்த பின்னர், அதன் நிறையைக்கண்டுகொள்க. முந்திய நிறைக்கும் பிந்திய நிறைக்குமுள்ள வித்தியாசமே உக் கலின் எடையாகும். இதை, நாற்றுவிதத்திலும் கூறலாம். மேற் படி, வறுத்தமண்ணைச் சாடி.யிலிட்டு நீர்விட்டு நன்கு கலக்கிய பின் அடையவிடுக. பெரிய மட்டுணிக்கைகள் சாடியின் அடியி லும், சிறியவை அதன் மீதும், அதிலும் சிறியவை முந்தியதன் மீதும் மேனோக்குவரிசைப்படி அடைந்திருக்கக் காண்பாய். பின்பு, வேறு இரண்டு சாடிகளை எடுத்து, அவற்றின்மீது வடி தாள் உள்ள புன ல் ஒவ்வொன்று வைத்து, முதலாவது சாடியில் மேற்படி மண் கரைசலை (நன்கு கலக்கியபின்) ஊற்றிக்கொள்க, நுண்ணிய களிமட்டுணிக்கைகள் புனலிலுள்ள வடிதாளிற் படிந் திருக்கக்காண்பாய். (கரைசலை ஊற்றும்போது கரைசலின் அடி யில் அடைந்திருக்கும் மட்டுணிக்கைகள் சாடியின் அடியிலே இருக்குமாறு கவனித்துக்கொள்க). மேற்கூறியவாறு மென் மேலும் நீரை ஊற்றிக்கலக்கி, குறைந்தபட்சம் நான்கு முறைக ளாவது கரைசலை முதலாவது சாடியில் ஊற்றிக்கொள்க. இவ் வாறு செய்தபின், கரைசலிருந்த சாடியின் அடியில் மணல் மீந் திருக்கக் காண்பாய். இதனை இரண்டாவது சாடியின்மீதுள்ள வடிதா(Gளுள் ள புயலில் பாற்றிக் கொள்க. இப்பொழுது வடிதாள் களிலுள்ள களியையும் மணலையும் ஏற்றவாறு உலர்த்தியபின் தனித்தனி நிறை காண்க. கண்டவற்றை நாற்றுவீதத்தில் கணக் கிட்டுக் கொள்க. சாடிகளிலுள்ள (கரைசலின் சுடாகிய நீரை) ஒரு பாத்திரத்திலிட்டு வற்றக்காய்ச்சினால், அப்பாத்திரத்தினடி யில் எஞ்சியிருப்பதுவே. அம்மண்ணிலுள்ள கனிப்பொருளுப்புக

மண்
145
ளாகும், இதனது நிறையையும் காண்க. இப்பரிசோதனையின் பெறுபேறாக 100 கிராம் தோட்டமண்ணிலுள்ள உக்கல், களி, மணல், கனிப்பொருளுப்புகள் என்பவற்றின் விகிதத்தை அல்லது நுாற்றுவீதத்தைக் கூறிவிடலாம். (இது பருமட்டான மண் பகுப் புப் பரிசோதனையேயாகும்).
மண்ணை அதன் சிறப்பியல்பு நோக்கி மணற்றரை, களித் தரை, உக்கல்தரை எனப் பாகுபாடு செய்யலாம்.
மாற்றரை (அல்லது பாரால்): இத்தரையில் பெரிய மட்டுணிக கைகள் காணப்படும். இது பாரமில்லாததாகவும், நுகைவு உள்ள தாகவும் இருக்கும்; அதிகம் காற்றாட்டல் உள்ளது; மயிர்த் துளைத்தன்மை குறைவான து; எளிதில் காய்ந்து உலர்ந்துவிடும். இத்தரையினூடாக நீர் விரைவாகக் கீழே இறங்கிவிடும். கீழிறங் கும்போது, தாவரங்களுக்குப் பயன்படக்கூடிய உப்புகளையுங் கரைத்துத் தன்னுடன் கொண்டு செல்லும். வேர்த்தொகுதி உறுதி யாக ஊன்றிக்கொள்ள இந்கரை இடந்தராது. மணால் வெம்மை மிகுத்ததாயிருக்கும். மணற்றரையிலுள்ள தாவரங்களை எளிதாக வேருடன் பிடுங்கிவிடலாம். எனவே, மணற்றரை தோட்டப் பயிர்கள் செய்ய உதவாது.
களித்தரை (அல்லது களிமண்): மணற்றரைக்கு நேர்மாறானது களித்தரை. களிமட்டுணிக்கைகள் மிகச்சிறியவையாயும் பார முள்ளனவாயுமிருக்கும்; நீரை ஏராளமாக உறிஞ்சி வைத்துக் கொள்ளும்; ஆதலால், உப்புகள் இத்தரையினின்றும் எளிதாக இழக்கப்படுதலில்லை, மயிர்த் துளைத்தன்மை அதிகம், அதனால், பற்றிவைத்திருக்கும் நீரை எளிதில் இழந்துவிடும். நீரைப்பற்றி வைத்திருக்கும்போது, களிமட்டுணிக்கைகள் பெருத்தலால் இவற் றிடையேயுள்ள மயிர்த்துளைகள் அடைபட்டுப்போகின்றன, களி நிலத்தில் பெய்யும் மழை நீர், கீழ்வடிதல் இன்றி மேற்பரப்பிற் தேங்கிக்கிடத்தற்குக்காரணம் மயிர்த்துளைகள் அடைபடுதலே யாம். மயிர்த்துளைகள் அடைபடுதலால் காற்றூட்டல் குறைவு. வெய்யிற்காலத்தில் விரைவில் நீரை இழத்தலால், தரை மிக இறுக்க மடைந்துவிடும். அதனால், தாவரங்களின் வேர்கள் ஊடுருவிச் செல்வது எளிதன்று. களி குளிர் மிகுத்தது. தாவரங்களைக் களி மண் தரையிலிருந்து எளிதாக வேருடன் பிடுங்கிவிடமுடியாது.
215 11

Page 80
145
உயிரினவியல்
உக்கல் தரை (அல்லது உச்கல்): அயனவலயத்திலுள்ள அடர்ந்த வெப்பவீரக்காடுகளின் மேற்றரை நிரம்ப உக்கல் உடையதா யிருக்கும். இஃது ஏராளமான நீரைப்பிடித்து வைத்துக்கொள்ளும்; அதாவது, நீர்பற்றுதிறன் மிகுந்தது. இதில் காற்றுாட்டலும் அதிகம்; மயிர்த்துளைத்தன்மை குறைவு; அமிலத்தன்மையுண்டு. பாரங்குறைந்தது ; நுகைவுள்ளது; வெம்மையோ, குளிரோ இல்லா தது. உக்கல் நைத்திரேற்றாக மாற்றமடைந்து தாவரவுணாவா கின்றது. வறட்சிக்காலத்தில் தாவரங்கள் பிழைத்து வாழ்வதற்கு உதவியாயுள்ளது. வேர்த்தொகுதி உறுதியாக ஊன்றிக்கொள்ள இடந்தராது. அதிகம் நனைந்த உக்கலில் காற்றூட்டல் குறைவா யிருக்கும்.
இதுவரையும் மண்ணினது பௌதிக, இரசாயன இயல்புகள் கூறப்பட்டன, மண்ணில் எண்ணிறந்த உயிர்ப்பொருள்கள் வாழ்ந்து மடிகின்றன. உதாரணமாகக், கொடுத்து, வாங்குமியல் புள்ள பற்றீரியா, ஈக்கள், அழுகல்வளரிகளான பற்றீரியாக்கள் முதலியனவும் மண்புழு, எலி, அகழான் போன்ற விலங்குகளும், மண்ணின் வளத்திற்குக் காரணமாகின்றன. இவை, தரையின் பெளதிக, இரசாயன இயல்புகளை மாற்றித், தரையை வளம்படுத்து கின்றன. எனவே, இவற்றையெல்லாம் தொகுத்து வாழ்க்கைக்காரளி கள் எனலாம்.
தரையின் வளத்தைச் செயற்கைமுறையாக மேம்படுத்துத லால், பயிர்கள் செழித்து வளர்ந்து அதிக பலனைத்தரும். இது பின்வரும் முறைகளிற் செய்யப்படுகிறது:
1. பண்படுத்தல்: உழுதல், கொத்துதல் முதலியன.
2. பத்திரக் கலவையிடல்: இது நீரிழக்கப்படாது காக்கும், ஈற்
றில் பயிருணவாகப் பயன்படும்.
3. நரிசுகிடக்கவிடுதல்: ஒரு பருவத்தில் பயிர்செய்துவிட்டு,
அடுத்தபருவத்தில் பயிர்செய்யாது விடுதல். இதனால், மண்பற்றீரியாக்கள் நைத்திரேற்றுக்களைத் தொகுக்க - வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
சுழன்முறைப்பயிர்ச்செய்கை: நெல்லும் கரும்பும், அல்லது ஒரு தானியமும், ஒரு அவரையக்குடும்பப்பயிரும் மாறிமாறிப் பயிரிடல்.

சில சிறப்பான போசணைமுறைகள்
14T
பாளையிடல்: சேதனவுறுப்புள்ள பசளைகளும் அசேதனவுறுப் புள்ள பசளைகளும் இடப்படலாம். தரையினின்றும் இழக் கப்பட்ட உப்புகள் இதனால் ஈடு செய்யப்படுகின்றன.
வினாக்கள் 1. நன்மண்ணின் இயல்புகள் யாவை?
மணல், களி, உபி கல் என்பவற்றின் குறை நிறைகளை
ஆராய்க.
செய்முறைப் பயிற்சிகள்
1. நீருள்ள வாயுச்சாடி ஒன்றில், ஒரு கணியமான தோட்ட மண்ணை இட்டுக் கலக்குக, 10 நிமிடங்கள் சென்றபின், மட்டு ணிக்கைகள் அமைந்திருக்கும் ஒழுங்கைக் காட்டும் வெளியுருவப் படம் ஒன்று வரைக.
2. மேற்படி பரிசோதனையைப் போலவே மணல், களி, உக் கல் என்பவற்றின் விடயத்திலும் செய்க.
அத்தியாயம் 20 சில, சிறப்பான போசணைமுறைகள் - 1
அழுகல்வளரிகள்: சாதாரண பசிய தாவரங்கள் வளிமண் டலத்திலிருந்தும் மண்ணிலிருந்தும் தாம் நேரடியாகப் பெற்றுக் கொள்ளும் இரசாயனச் சேர்வைகளிலிருந்து த ம து உடலி லேயே தமக்குவேண்டிய உணவை ஆக்கிக் கொள்ளுகின்றன, , ஏனைய உயிரினங்கள், தங்கள் உணவை அவற்றிலிருந்து நேரடி " " யாகவோ, சுற்றுவழியாகவோ பெற்று வாழுகின்றன. ஆகவே,

Page 81
143
உயிரினவியல்
பசியதாவரங்களின் போசணை தாவா முன்றப்போாபோ' எனப்படும் - பொதுவாக, விலங்குகளின் போசணை விலங்குமுறைப்போசனோ எனப் படும். இன்னொருவகையாகச் சொல்லுமிடத்துப், பசியதாவர ங் கள் தற்போசப்பண உடையன எனவும், ஏனைய உயிரினங்கள் பிப - போசம்னா உடையன எ ன வு ம் கூறலாம். ஒட்டுண்ணிகள், அழுகல்வளரிகள், பங்கசுக்கள் (கவகங்கள்) பற்றீரியாக்கள்.. ஊனுண்ணுந்தாவரங்கள் என்பனவெல்லாம் பிறபோசனனா. உடையன.
அழுகிய சேதனவுறுப்புப்பதார்த்தங்களை உணவாகக்கொண்டு வாழும் பிறபோசணையுள்ள எண்ணிறந்த நிறுமில்லா (பச்சைய மில்லா)த் தாவரங்களும் புவியின் கண் உண்டு. அவைகள், அழுகல் வளரிகள் எனப்படும். அவற்றின் போசணை அழுகன்முறைப்போசணை எனப்படும். அநேக பற்றீரியாக்களும், எளிய பங்கசுக்களும் அழுகன்முறைப்போசணையால் வாழ்க்கை நடாத்துகின்றன. சேதனவுறுப்புள்ள பலவகையான அழுக்குகளை அகற்றும் இயல்பு அழுகல்வளரிகளாய் பற்றீரியாக்களுக்கு உண்டு. ஆதலினால், அவை திறமை வாய்ந்த "தோட்டி "களின் வேலையைச் செய்து கொண்டு வருகின்றன. அவை அழுகிப்போன சேதனவுறுப்புப் பதார்த்தங்களிடையே வாழ்ந்து, அவற்றைப் பிரிகை செய்து சிதைத்து, அவ்வாறு சிதைக்கப்பட்ட பதார்த்தங்களை உணவாகக் கொள்ளும் முறையால், அழுக்ககற்றும் தொழிலைச் செய்கின்றன. பலவகைக் காளான்களும், பூஞ்சனாங்கங்கும் எளிய அழுகல்வளரி களாய பங்கசுக்கள் ஆகும்,
சிதப்பூஞ்சணம்: (கோதுமையப்பத்தில் வளரும் பூஞ்சணம்) இஃது தாவரவியலின்படி, 'மீயூக்கர் மியூசிடோ' எனப்பெயர் பெறும். ஈரலிப்புள்ள ஒரு கோதுமையப்பத் துண்டைச், சில நாட் களுக்கு வளியில் திறந்தபடி வைத்துவிடுக. சில நாட்களின்பின், அதன்மீது அழுகல்வளரிகளாய பலவகைப் பூஞ்சணங்கள் வளர் வதைக் காணலாம். அவற்றுள் சீதப்பூஞ்சணமே சருவசாதா ரணமாக அப்பத்தின் மீது வளருகின்றது. இப்பூஞ்சணம் மிக மெல்லிய, வெண்ணிற மயிர்களாலான, அடர்ந்த வலைவேலை போலக் கண்ணுக்குத் தோன்றும். உண்மையில், இப்பூஞ்சணத் தாவரமானது, கிளைவிட்டுப்பிரியும் பல நாலிழைகளின் திணிவே என்பது புலப்படும். இந்நூலிழைகள் பூசணளிழைகள் எனப்படும், இவைகளின் தொகுதியே பூஞ்சணத்தின் உடல் அல்லது பூசண வலை எனப்படும்." ஒவ்வொரு பூசணவிழையும் பல கலங்களால் 1 ஆனது; இக்கலங்களின் மு னை க ள் ஒன்றுடன் மற்றொன்று "

சில சிறப்பான போசணைமுறைகள்
149
எசேர்ந்து, நெடுக்காக அமைந்திருத்தலினால் இழைபோன்ற தோற் றம் அளிக்கின்றது. இக்கலங்களின் குறுக்குச்சுவர்கள் அற்றுப்
போவதால், பூசணவிழையா னது ஒரு நீண்ட குழாய் போ லத் தோன்றுகிறது. ஒருபெ ரிய சிறு வெற்றிடத்தைச் சுற்றிவர மூடிக்கொண்டிருக் கும் மெல்லிய முதலுருவாலான உட்புறவுறை, உட்பக்கத்தில் இருக்கும். ஒரு தொகையான கருக்கள் இம்முதலுருவில் சித றுண்டு கிடக்கும். அழுகிக் கொண்டிருக்கும் அப்பத்தில் காணப்படும் சாதாரண (ஒட் டற்பண்புள்ள) பூசணவிழை களுக்கிடையே உனயா வை உறிஞ்சும் (உறிஞ்சற் பண் புள்ள) சிறப்பான பூசணவிழை கள் காணப்படும். இவை உண வுத் துணிக்கைகளைத் துளைத்து உட்சென்று, நொதிச்சத்துக
ளைச் சுரக்கின்றன. இந்நொ உரு - 15
திச்சத்துகள் சிக்கலான இர
சாயனப் பதார்த்தங்களாத பூஞ்சணம் (மீயூக்கர் மீயூசிடோ)
லால் உணவுப்பொருளைத் 1ML பூச பிணவலை: EL" வித்தி தாக்கி, அதனைக் கரையக்கூடி யசுக் காம்பு: BMI வித்தியகம். யதாகவும், பரவக்கூடியதாக
வும் செய்துவிடும். இவ்வாறே, பூஞ்சணத்தின் பூசணாவலை முழுவதும் சேதனவுறுப்புள்ள உணவை உறிஞ்சிக் கொள்ளவும், சமித்துக் கொள்ளவும் உசுந்தமுறையில் சிறந்திருக்கின்றன. ஆதலால், அழுகல்வள ரிகளின் சமிபாடு கலந்திற் ப்புறமார் நிகழ்சின்ற து. பூசணவலையிலுள்ள முத லுரு வைச் சூழ்ந்திருக்கும் மென் றகடு தாவரக்கலங்களிலுள்ளது (போன்று செலுலோசினால் ஆக்கப்படாது, எநற்றின் என்னும் பதார்த்தத்தினால் ஆக்கப்பட்டிருக்கின்றமையால் கலத்திற்குப் புறமான சமிபாடு. எளிதாக நடைபெறுகின்றது.
கோதுமையப்பத் துண்டின்மீது திடீரெனப் பூஞ்சணம் தோன் றியமைக்குக் காரணம் யாது? இதன் காரணத்தைக் கூறு

Page 82
150
உயிரினவியல்
தல் கூடுமா? வளியில் எந்திகள் எனப்படும் எண்ணிறந்த நுணுக் குப்பொருள்கள் உண்டு. இவ்வித்திகள் சீதப்பூஞ்சணத்தினதா யின், அப்பத்துண்டின்மீது விழுந்ததும் முளைக்கின்றன. முளைத் துப் பூசணவலை என்னும் பூஞ்சண உடலாக வளருகின்றன. வித்திகள் இனம்பெருக்கலுக்கெனச் சிறத்தலடைந்த கலங்கள் என்பது வெளிப்படை. வித்திகள் வித்தியாங்கள் என்னும் சிறப் பான அறைகளில் உண்டாகின்றன. எனவே, அவற்றை வித்தி கள் பிறக்கும் உறுப்புகள் எனலாம். பூசணவலை என்னும் உடலி லிருந்து மேனோக்கி நிலைக்குத்தாக வளரும் சிறப்பான பூசணை விழைகளின் நுனியில் வித்தியகங்கள் காணப்படும். ஒரு பூசண விழை, ஒரு வித்தியகத்தையே தாங்கி நிற்கும், வித்தியகங்கள் கோளவுருவுடையன. நிலைக்குத்தாக வளரும் பூசணவிழையின் நுனியிலிருக்கும் வித்தியகம், அதன் மற்றைய பகுதியினின்றும் குறுக்குச்சுவர் ஒன்றினால் பிரிக்கப்பட்டிருக்கும். முதலில், வித்தி யகத்திலுள்ள முதலுருவான து, பல துண்டுகளாகப் பிரிகிறது. பின், ஒவ்வொரு துண்டும் இரண்டு தொடக்கம் பத்துக்கருக்க ளைச் சூழ்ந்து கொள்ளும். இப்பொழுது, ஒவ்வோர் அலகும் தடிப் புள்ள சுவர் ஒன்றைச் சுரந்துகொண்டு, ஒவ்வோர் வித்தியாக உருப்பெறும், இந்நிலையில் வித்தியகச்சுவரானது வன்மையடை யும்; அடைதலும், முதலில் கபில நிறமாக இருந்த வித்தியகம் முற்றிக், கருநிறம் அடையும். வித்திகள் பரம்பலுக்கு ஆயத்தமா னதும், வித்தியகச்சுவர் வெடிக்கும் வெடித்ததும், வித்திகளைக் காற்றுக் காவிச் சென்றுவிடும். பூஞ்சணத்தில் நிகழும் மேற்படி (வித்திகள் உண்டாக்குவதால்] இனம்பெருக்கன் முறை, கல்வியின் முறையினம் பெருக்கலாகும்,
பிபி,லுள்ள "Tறினால் அதன் பாய் பூச
கலவிமுறையினம்பெருக்கஃல மேற்கொண்டும் சீதப்பூஞ் சணம் இனம் பெருக்கல் நிகழ்த்துகிறது. எனினும், இது அரு கியே நடைபெறுகிறது; வழக்கமாக நிகழுவதன்று.
- சீதப்பூஞ்சணம் எளிய உடலமைப்புடையது; வேர்கள், தண்டு, இலைகள் முதலியனவாகப் பிரித்தறியமுடியாத தாவரம். இத்தாவரக்குலங்களில் பலவகை உண்டு. குல வகைகள் வித்தி யாசப்படினும் வெளியுருவம், அமைப்பு என்பவற்றில் குலவகை க்ளுக்கிடையில் வித்தியாசம் கிடையாது. உடற்றொழிலில் மட்டும் சிறிது வித்தியாசம் காணப்படும். வித்தியாசமான குலவகை களுக்கிடையில்தான் இப்தல் மூலம் கல்விமுறையினம்பெருக் கல் நடைபெறும், கல்விமுறையினம்பெருக்கல் பின்வருமாறு : நிகழும். வித்தியாசமான குலவகையைச் சேர்ந்த இரு பூசண

கில சிறப்பான போசணைமுறைகள்
151
அக்கம் எதுவு, இ)
வினழகள் அவற்றின் முனைப்பகுதிகள் பொருந்தும்படியாக, ஒன்றையொன்று சந்திக்கின்றன. சந்திக்கும் இப்பூசணவிழை கள், புணரி முதல்கள் எனப்படும், ஒவ்வொரு புணரிமுதலின தும் முனையிலிருந்து புாரிமுநவகம் எனப்படும் சிறப்பான கலம் ஒவ் வொன்று, பிரிசுவர் உண்டாவதனால், அப்பூசணவிழைகளினின்றும் துண்டிக்கப்படுகின்றன. இக்கலம் பல் கருக்களையுடைய கூட்டுக் கலம் ஆகும். தாவரங்களின் புணரியை ஒத்ததே இதுவும், புணரி முதலகம் புணரியை உள்ளடக்கியிருக்கும். இப்புணரிகள் இரண் டும், அவற்றைப் பிரித்து நிற்கும் பிரிசுவர் கரைதலும், ஒன்றாக
இணையும். இணைதலும் புணரிக்க லம் ஒன்று உண்டாகும். இப்புண ரிக்கலம் தன்னைச்சுற்றி இருப் டைகளுள்ள, கருநிறமுள்ள சுவர் ஒன்றை உண்டாக்கிக்கொள்ளும். வெளியிலுள்ள படை, தடிப்புள்ள தாகவும் கரடுமுரடானதாகவும் இருக்கும். வெளிச்சுவர் வெளி வித்தியம் எனவும், மெல்லிய உட் சுவர் உள்விந்தியம் எனவும் பெயர் பெறும், இப்புணரிக்கலம் சிறிது காலத்துக்கு ஆறிக்கிடக்கும் . பின்பு, நிலைமைகள் சாதகமான
உரு. எd 4 - பூஞ்சணம் கலவிமுறையினம்
பெருக்கல் A 1 இரண்டு பூசண விழை கள் ; 2 பூசணவிழைகள் இணைதல்; 3 புணரிக்கலம் உண்டாதல்: 4 புணரிக் காலம்
ஆறியிருத்தல்.
உரு. 76 B B 5 பூசணவிழை உண்டாதல் [ புணரிமுதலகங்கள் ; Z புண ரிக்கலம்; T11. X வெளிவித்தியம்;
H) உள் வித்தியம்.

Page 83
15!
உயிரினவியல்
தும் முளைக்க ஆரம்பிக்கும். தடிப்பான வெளிவித்தியம் வெடித்து விடுதலும், தனது நுனியில் வித்தியகம் ஒன்றைத் தாங் கிக்கொண்டு, ஒரு பூசணவிழை வெளிவரும். நிலைக்குத்தாக வள ரும் இப்பூசணவிழை, பூரணவல்லமுதல் எனப்படும். இந்த வித்தி யகத்திலுண்டான வித்திகள் கலவியின் முறையினம் பெருக்கலால் உண்டான வித்திகளை எல்லா வகையிலும் ஒத்தன. இவ்வித்தி கள் முளைத்துப் பூசணவலையை உண்டாக்கி வளரும்.
வினாக்கள்
கோதுமையப்பத்தின் மீது வளரும் சீதப்பூஞ்சண (மீயூக் கர் மியூசிடோ)த்தை அழுகல்வளரி என்பதற்குரிய கார
வணங்கள் யாவை? 2. சீதப்பூஞ்சணத்தின் க ல வி மு றை யின ம் பெரு க் க லை
விவரிக்க.
போசணைபெறும் முறையில், அழுகல் வளரிக்கும் தாவர முன ரப்போசணையுள் ள பசிய தாவரத்திற்கும் இடையி லுள்ள வித்தியாசங்கள் எவை?
செய்முறைப் பயிற்சிகள்
ஈரலிப்புள்ள ஒரு துண்டு கோதுமையப்பத்தை மணிச்சாடி ஒன்றால் மூடி விடுக. (மணிச் சாடியின் மேற்பக்கம் திறந்திருக்க வேண்டும்) சில நாட்களுக்கு அவ்வாறிருக்குமாறு விடுக. அப் பத்தின் மீது சீதப்பூஞ்சணம் வளருமாற்றை நோக்குக. ஒரு கிழமை சென்றபின், அப்பத்திலுள்ள பூசணவலையில் ஒருபகு தியை எடுத்து , நுணுக்குக்காட்டியின் தாழ்வலுவின் கீழ்வைத்து ஆராய்க். ஆராய்ந்தபின், அதன் வெளியுருவப்படத்தை வரைக.

153
அத்தியாயம் 21
சில சிறப்பான போசணைமுறைகள் - II
ஒட்டுண்ணிகள் : விலங்குகளில் அதிகமானவை திண்ம உணவுப் பொருள் களை உண்ணுகின் றன, பசிய தாவரங்கள் எல்லாம் தங் கள் உணவைத் தாமே ஆக்கிக்கொள்ளுகின்றன; ஆயினும், இப்பொதுவிதிக்குப் புறனடைகளும் உண்டு. இப்புறனடைகளுள், ஏனைய உயிர்ப்பொருள்களின் உடலின்மீதோ, உடலின் அகத்தோ வாழும் ஒட்டுண்ணிகள் அடங்கும், தாவரங்களிலும் விலங்குகளி லும் ஒட்டுண்ணிகளாக வாழ்க்கை நடாத்தும் பல தாவரவொட் டுண்ணிகளும், விலங்கொட்டுண்ணிகளும் இருக்கின்றன. இவை ஏனைய உயிரினங்களிலிருந்தும் உணவைப் பெற்றுக்கொள்ளுத லால், பிறபோசணை உடையன. இவை ஒரு தனிக்கலத்தாலான தாவரங்கள், விலங்குகள் தொடக்கம், ஒட்டுண்ணிவாழ்க்கை நடாத்தும் பெரிய பூக்கும் தாவரங்கள், முள்ளந்தண்டுவிலங்கு கள் ஈர கப், பரந்து காணப்படுகின்றன. இவ்வொட்டுண்ணிகள் எண்ணசிறந்தனவாய் எங்கும் பரம்பியிருத்தலால், இவற்றின் தாக் குதலால் பாதிக்கப்படாத உயிர்ப்பொருள்கள் ஒன்றாவது உண்டு எனச் சொல்லுதல் முடியாது.
ஒட்டுண்ணிகள் இருவகைப்படும். ஒன்று வெளியொட்டுண்ணி; மற்றையது உன்னொட்டு -13/1. பேன், உள், அட்டை, பங்சுசுச்க எரிற்சில - வெளியொட்டுபண் காரிகளுக்கு உதாரணங்களாகும். குட வில் வாழும் புழுக்கள், மலேரியா ஒட்டுண்3ரி (பிளாசுமோடியம்), பற் மரியா முதலியன உள்ளெரட்டுண்ணிகளுக்கு உதாரணங்களாகும். குருவிச்சை போன்ற தாவரங்கள் குறையொட்டுண்ணிகள் எனப்படும். குறையொட்டுண்ணிகள் பச்சையமுடையனவாதலால், தங்கள் உணவைத் தாங்களே ஆக்கிக்கொள்ளுகின்றன. எனினும், தங் களுக்கு விருந்துவழங்கியாகவிருக்கும் தாவரத்தின் மீது நீர், கனிப்பொருளுப்புகள் என்பவற்றைப் பெறும் வகையில் தங்கி யிருக்கின்றன. எனவே, இவை தங்கள் பருகிகளை விருந்து வழங்கி யின் காழி இழையத்துள் மட்டும் செலுத்தித், தம் தேவையைப் பூர்த்திசெய்துகொள்ளக்கின் றன, தூத்துயக்சொத்தான் (குசுக்குற்ரு) போன்றவை புழுவொட்டுண்ணிகள் ஆகும். இவைகள் பச்சயமில் - கலாதனவாதலால், தங்கள் விருந்து வழங்கிகளிடமிருந்து, தங்கள் (நீர், கனிப்பொருளுப்புகள் உள்ளிட்டு) உணவுத்தேவை முழுவ பதையும் பெற்றுக்கொள்ளுகின்றன. இவற்றின் பருக்கள் விருந்து

Page 84
154
உயிரினவியல்
வழங்கியின் உரியவிழையம், காழ் இழையம் என்பவற்றை அடைந்து முறையே உணவையும் நீரையும் பெற்றுக்கொள்ளு கின்றன.
முழவொட்டுண்ணிகள்: உ.ம். சாத்துமக்கொத்தான் (குசுக்குற்ற சைனெஞ்சிசு). இத்தாவரத்தைப் பாரதநாட்டுத் தமிழகத்தார் முடித் தாளி என அழைப்பர். ஆங்கிலத்தில் ''உடொடர்" (Iorlder) என்பர் இஃது ஒரு சிறிய பூக்குந் தாவரம்; சிறிதளவேனும் பச்சையம் இல்லாதது. இது புல் பூண்டுகளிலும், செடிகளிலும் ஒட்டுண்ணி யாக வளரும். மூக்குத்திப்பூண்டு, பூவரசு, கிளுவை என்பவற்றில் இதனைக் காணலாம். இது முசுட்டை, வற்றாளை, உதயகீர்த்தி, அடம்பு என்பவற்றின் குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகுமென்பது, இத் " -
னுடைய பூவிலிருந்து தெரிகிறது.
னுடைய குடும்பத்தை' வற்றாளை."என்பவற்றில் சோ
அ தெரிது."சர்ந்த தாதயகிர்தல் இதனைக்
தாத்துமக்கொத்தானுக்கு | வேர்த் தொகுதி கிடையாது. இதன் அங்குரத் தொகுதி மெல்லிய ம ஞ் ச ணி ற மா ன நாலிழை போன்று இருக்கும். கட்புலனாகாத, பச்சையமின். றிய செதிலிலைகள், இதன் தண் டில் உள்ள கணுக்களில் காணப் படும்; தழையிலைகள் காணப் ! படாது; சிறிய மஞ்சணிறப் பூங்கொத்துகள் ( பூந்துணர் கள்) காணப்படும்; கணுவிடை
உரு. TT தூத்துமக்கொத்தான் (குசுக்குற்று )
SH விருந்து வழங்கியின் தண்டு - பா , BP ஒட்டுண்ணியின் தண்டு Tஒட்டுண்ணியின் பூக்கள்
கள் நீளமாகவிருக்கும். * இவ் ஒட்டுண்ணி ஓட்டப்பன்புள்ள வட்டத் தட்டுகளின் உதவிகொண்டு விருந்துவழங்கியைப் பற்றிக்கொள்

பட 1ாட்-பட்ட
சில சிறப்பானா போசணை முறைகள்
155
ளும், "ஒட்டுண்ணியினதும் விருந்துவழங்கியினதும் உறுப்புகள் ஒன்றோடொன்று நெருக்கமான தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளத் தக்க வகையில், பருதிகள் எனப்படும் சிறப்பான இடமாறிப் பிறந்தவேர்கள் அமைந்திருக்கின்றன. ஒட்டுண்ணியின் உடலி. லுள்ள கலன்கட்டுகளி
ஈ 4, 5 னின்றும் உண்டான கிளை கள் பருகிகளுக்சுட்டாகச் சென்று, விருந்துவழங்கி யின், கலன்கட்டுகளுடன் இணை ந்து கொ ள் ளு கின் றன்.
HLLE EL
இத்தாவரம் அதிக மான வித்துகளை உண் டாக்குகிறது. பதியவுறுப் புகளை எவ்வளவுக்கெவ்வ ளவு குறைத்துக்கொள்ள முடியுமோ, அவ்வளவுக் கவ்வளவு குறைத்துக் கொ ண் டு, வாழ்க்கை நடாத்தும் சிறப்பு இத் தாவரத்தில் காணப்படு கிறது. இதன் முளையி லேயே இச் சிறப்பைக்
| "F5. கானா முடிகிறது. இதன்
உரு. 78 மு ளை மி க எ ளி ய
தாத்தும க்கொத்தான் (குசுக்குற்ரு) அமைப்பை உடையது;
குறுக்கு வெட்டுமுகம் முளை வேர், முளைத்தண்டு.
P3 ஒட்டுண்ணியின் தண்டு வித்திலைகள் என்ற பகுதி
H3 விருந்துவழங்கியின் தண்டு களைப் பிரித்தறிய முடி
| 11VB விருந்து வழங்கியின் கலன் யாத, வி & ன த மா ன PVB ஒட்டுண்ணியின் கலன் கட்டுகள்
H பருகிகள்
(கட்டுகள் அமைப்புடையது. மண் மீதில் விழுந்த வித்துகள் முளைத்துச் சுயாதீனமாக வாழு' கின்றன. முளையில் ஒரு சிறிய வேர் மட்டும் இருக்கும். இது விரைவில் இறந்துவிடுகிறது. இதன் தண்டு சிறிதாகவும், மெல் லிய நூலிழைபோன்றுமிருக்கும். தூத்துமக்கொத்தானின் இளம் நாற்றின் நுனிப்பகுதி, தீவிரமான சுற்றுத்தலையசைப்பு உடையது. விருந்துவழங்கி ஒன்றைப் பற்றிக்கொள்ளும் வரையும், இது நிக ழும். பற்றிக்கொண்டதும், அதனைச் சுற்றிக்கொள்ளும். சுற்றிக் -

Page 85
-15)
உயிரினவியல்
கொண்டபின்னர், பருகிகளை உண்டாக்கி, விருந்து வழங்கியின் இழையங்களுள் நுழைந்து, உணவையும் நீரையும் பெற்றுக் கொள்ளுகிறது. விருந்துவழங்கியின் தொடர்பு ஏற்பட்டதும். 1மண்ணோடுள்ள தொடர்பை நீக்கிக்கொள்ளும். நீக்கிக்கொண்ட நாள் தொடக்கம், விருந்துவழங்கியிலேயே தங்கி வாழுகிறது.
கொந்தான் (கவிதா) என்னும் தாவரமும் தாத்துமக்கொத்தா இனப்போன்ற முழுவொட்டுண்ணியாகும். அயன வலயத்திலுள்ள பற்றைக்காடுகளில் இதனைக் காணலாம். "இராளில்சியா' என் னும் முழுவொட்டுண்ணியினது கிளைத்த அங்குத்தொகுதி 'வைற்றிசு' என்னும் தாவரவினத்தின் வேர்களில் ஒட்டுண்ணி யாக வாழுகிறது. இந்த ஒட்டுண்ணியின் உறுப்புகளில் பூ மட் டுமே வெளியில் தெரியும். இதன் பூ 2 அடிக்குமேல் விட்டமுடை யது. உலகத்திலுள்ள பூக்களுள் மிகவும் பெரிய பூ, இதுவேயாம். சுமத்திரா தீவிலுள்ள மத்திய கோட்டுக் காடுகளில் இது காணப் படும்.
குறையொட்டுண்ணிகள்: உ.ம். குருளிச்சை (உலராந்துசு) குரு விச்சை போன்ற குறையொட்டுண்ணிகள் முழு ஏறிகளாதலால், அவற்றிற்கும் மண்ணிற்கும் தொடர்பே கிடையாது. அவைகளும் முழுவொட்டுண் கணினிகள் (பொ யப் பருகிகளே உண்டாக்கி, அவற்றினூடாகக் கலன்கட்டுகளின் கிளை களை, விருந்துவழங்கியின் காழ்க்கலங்க (ளுள் நுழைத்துக், கனிப்பொருளுப்புகள் கரைந்த நீரை உறிஞ்சிக்கொள்ளுகின் றன. குருவிச்சை சதையுள்ள, பெரிய இலைகளையுடையது. இலைகள் பச்சைய முடையன, ஆதலால், உணவை ஆக்கு கின்றன.
உரு. T! குறையொட்டுண்ணி - குருவிச்சை
(உலராந்தசு) P குறையொட்டுண்ணியின் தண்டு II விருந்து வழங்கியின் தண்டு HA பருகி
குருவிச்சையானது மா, பலா, வேம்பு, எலுமிச்சை, தோடை, குரோட்டன், பூவரசு போன்ற தாவரங்களின் கிளைகளில் அதிகமா

சில சிறப்பான போசணைமுறைகள்
151
கக் காணப்படுகிறது. இதன் இலைகள் சதையுள்ளன; தடிப்பா னவை: பெரியவை; மினுமினுப்புடையவை, பூக்கள் பெரியன; நீளமுள்ளன; பூந்துணராகக் காணப்படும். பழங்கள் ஒற்றை வித்துள்ள சதையங்களாகும். பழங்களின் இடைக்கனியம் ஒட் டுந்தன்மையுள்ளது. பறவைகளுக்கு இப்பழங்களில் பெருவிருப்பு உண்டு. எனவே, பறவைகளால் இதன் வித்துகள் எளிதா கப் பரம்புகின்றன'. ஒட்டுந்தன்மையுள்ள பழங்களை உண்ட பறவைகள் தங்கள் சொண்டை மரக்கிளைகளில், உரோஞ்சித் தேய்க்கும். தேய்க்குங்கால், வித்துகள் மரவுரியிற் சிக்கிக்கொள் (ளும். சிக்கிய வித்துகள் மரக்கிளைகளில் முளைத்து, வட்டத்தட்டு களையும், பருகிகளையும் உண்டாக்கி, விருந்து வழங்கியைப் பல விடங்களில் பற்றிக்கொண்டு வளருகின்றன.
சந்தனமும் (சாந்தலம் அற்பம் குறையொட்டுண்ணியாகும். இதன் வேர்கள், அயலிலுள்ள தாவரங்களின் வேர்களில் நுழைந்து. நீரையும் கனிப்பொருள் உப்புகளையும் உறிஞ்சிக்கொள்கிறது.
விலங்கொட்டுண்ணிகள்: உ-ம். உருண்டைப்புழு (அசுக்கேரிசு உலும் பிரிக்கோயிடிசு) ஆங்கிலத்தில் "உருண்டைப்புழு' என்னும் பொரு ளில் வழங்கப்பட்டுவரும் இகன்பெயர் தமிழகத்தின் பல பகுதி களிலும் பலவாறு வழங்கப்பட்டுவருகிறது. யாழ்ப்பாணத்தில் -
உரு. 80 A
உரு. 80 B உருண்டைப்புழு (அசுக்கேரிசு உலும்பிரிக்கோயிடி சு)
A பெண்புழு 1 ஆண்புழு
"ரைப்பாம்பு' என்றும், தமிழ்நாட்டில் 'நாக்குப்பூச்சி" என்றும் வழங் '' கப்படுகிறது. இதனுடைய கிட்டிய இனத்தவர்கள் கொளுக்கிப்புழு - ஆனைக்கானுேய்ப்புழு, நரம்புச்சிலந்திப்புழு (கின்னியாப்புழு) முதலியன
வாம்.

Page 86
153
உயிரினவியல்
உருண்டைப்புழு மனிதனின் குடலில் வாழுகின்றது. + முழு வளர்ச்சியடைந்த உருண்டைப்புழு 14 அங்குல நீளம்வரையில் இருக்கும்; இது மங்கிய செம்மை கலந்த மஞ்சணிறமுடையது. இதன் உடல் உருளை வடி.வமுடையது. தலையும் வாலும் கூரிய முனைகளையுடையனவாயிருக்கும். பெண்புழுவின் பிற் பக்கமுனை ஏறத்தாழ நேரிதாக அமைந்திருக்கும்; ஆண்புழு வின் பிற்பக்கமுனை அகப்பக்கமாகக் கொளுக்கிபோல் வளைந் திருக்கும். இதன் வாய் முற்பக்கமுனையிலிருக்கும். அதனை மூன்று உதடுகள் அல்லது சோணைகள் காவல் செய்கின் றன. இவ் உதடுகளில் ஒன்று புறப்பக்க நடுக்கோட்டிலும், ஏனே யவை இரண்டும் அகப்பக்கப் பக்கங்களிலும் அமைந்திருக்கின் றன. முற்பக்கமுபைாக்குச் சிறிது பின்னல் அகப்பக்கமாக நடுக் கோட்டுக் கழிவு நுண்டுளை இருக்கின்றது. பிற்பக்கமுனோக்குச் சிறிது முற்பக்கத்தில் அகப்பக்கமாக அமைந்திருக்கிறது குதம். இது ஆண் புழுவின் விடயத்தில் இனம் பெருக்கற் றுவாரம் ஆகவும் பணியாற்றுகிறது. பெண்புழுவின் இனம்பெருக்கற்றுவாரம் பிரித்
இ
உரு. 81 உருண்டைப்புழுவின் முற்பக்க, பிற்பக்க முனைகள்
4 முற்பக்கமுனையின் புறப்பக்கத் தோற்றம் B முற்பக்கமுனையின் அகப்பக்கத் தோற்றம் ( பெண்புழுவின் பிற்பக்க முனை D ஆண்புழுவின் பிற்பக்க முனை
தறியக்கூடியதாய்க், குதத்தினின்றும் வேறாக அமைந்திருக்கிறது. இத்துவாரம் பெண்புழுவின் முற்பக்கமுனையிலிருந்து, அதன் உடலின து நீளத்தில் ஏறத்தாழ மூன்றிலொரு பங்களவு தூரத் தில் அகப்பக்கமாகக் காணப்படுகிறது.
உருண்டைப்புழுவின் உடலில் நெடுக்காக நான்கு வரிகள் உண்டு. இவற்றில் இரண்டு முறையே புறப்பக்கமாகவும், அகப்

சில சிறப்பான போசணைமுறைகள்
159
பக்கமாகவும், ஏனைய இரண்டும் பக்கத்துக்கொன்றாகவும் இருக்கின் றன. இதன் தோல் மழமழப்பாகவும் வெளிவன்கூடு இன்றியும் இருக்கின்றது. உடலான து தடித்த புறத்தோலாலாகிய உறை யால் மூடப்பட்டிருக்கிறது. உடலில் நான்கு கூட்டம் தசைகள் நெடுக்காக அமைந்திருக்கின்றன.
வாய், தொண்டையைச் சென்று சேருகின்றது. தசையாலான |--தொண்டை முக்கோணவடிவுள்ள குழியும், தடித்த உட்பக்கவுரை யும் உடையது. தொண்டைகுடலைச் சென்றடைகின்றது. தொண் டைக்கும் குடலுக்குமிடையில் ஒரு வாயில் உண்டு. தொண்டை யால் உறிஞ்சப்பட்ட உணவு திரும்பவும் வெளியே வராது தடுக் -கிற து, இவ்வாயில். ருடலாக பது புறவசுப்பக்கமாகத் தட்டையாக் கப்பட்டிருக்கிறது; உட்பக்கத்திலும் வெளிப்பக்கத்திலும் மெல் விய உறையிடப்பட்டுள்ள து; தசையாலான சுவர்கள் குடலுக்கு இருப்பதில்லை, குடலானது பிற்பக்கமாக ஒடுங்கிச்சென்று, தசை பாலான சுவர்களையுடைய, குறுத்த நேர்க்ருடலாக அமைகிறது. உருண்டைப்புழு, மனிதனது குடலிலிருக்கும் கூழ்நிலையிலுள்ள உணவைத் தசையாலான தொண்டையை அசைப்பதனால் உறிஞ்சு கிறது. மனிதனே உருண்டைப்புழுவினது விருந்துவழங்கி ஆவான். விருந்துவழங்கியின் குடலிலுள்ள உணவானது அரைப் பங்கு சமிபாடு அடைந்துள்ளதாதலினாலே, அதனைச் சமிபா டடையச் செய்வதற்கெனச், சிறப்பான சமிபாட்டுச்சுரப்பிகள் உருண்டைப்புழுவின் உடலில் விருத்தியடைந்திருப்பதில்லை.
குடலிலுள்ள நொதிச்சத்துகளே சமிபாட்டுக்கு உதவுகின்றன.
சுலன்றொகுதியும், சுவாசத் தொகுதியும் இதற்கு இல்லை. இது - வாழும் சூழ்நிலை காரணமாக இதற்கு ஒட்சிசன் கிடைப்பது குறைவு. தலா து சேர்க்கையெறிகைத்தொழிலுக்கு வேண்டிய சத்தியைப் பெற்றுக்கொள்வதற்குக், காற்றின்றிய சுவாசமுறையை மேற்கொள்ளுகின்றது. இது அதிகமான உணவை உறிஞ்சுவ தால், தேவைக்கதிகமான வெல்லங்கள், கரையுந்தன்மையில்லாத கிளைகோசனாக மாற்றப்பட்டு, இழையங்களில் சேமித்து வைக்கப் படும். நொதிச்சத்துகளால் அவை பிரித்தழிக்கப்படுதலினால், வேண்டிய சக்தியை இது பெற்றுக்கொள் நாடுகிறது. விருந்து வழங்கியிடமிருந்தும் சிறிதளவு ஒட்சிசனைப் பெற்றுக்கொள்ளுகி றது.
ஒவ்வொரு பக்கக்கோட்டிலும் நெடுக்காக அமைந்திருக்கும் கழிவுக்கால்வாய் ஒன்று பதிந்து கிடக்கின்றது. ஒவ்வொரு கால்வா

Page 87
160
உயிரினவியல்
யும் சிறப்பாக நீட்சியடைந்த ஒர்கலமேயன்றி, வேறெதுவுமன் று. நீட்சியடைந்த இக்கலம் கலத்தகத்துள்ள குழியுடையது. இரண்டு கால்வாய்களும் முன்னால் ஒருங்கு சேர்ந்து, வாய்க்குப் பின் னல், அதற்கு அண்மையில், அகப்பக்கமாகவுள்ள கழிவுத் துவாரத்தின் வழியாக வெளித்திறக்கின்றன.
யயாம்.
--- 4]
-- 4"
உரு. 82 உருண்டைப்புழுவின் இனம் பெருக்கற்றொகுதி 1 0V சூலகம்; ( கருப்பை; 0] சூலகக்கான் ; 4 யோனிமடல்,
தொண்டையைச் சுற்றி நரம்புத் தொகுதி அமைந்திருக்கிறது.- இந்த நரம்புத்தொகுதி ஒரு நரம்புவளையத்தை உடைய து. இதி லிருந்து முன்னோக்கி ஆறு சிறிய கிளைகளும், பின் (னெக்கி ஆறு சிறிய கிளைகளும் பிரிந்து செல்கின்றன. பின்னோக்கி ஒடும் ஆறு சிறிய கிளைகளுள் இரண்டு, ஏனையவற்றிலும் புடைப்பாக இருக்கும். இந்த இரண்டு கிளைகளும் முறையே புறப்பக்கக் கோட்டிலும் அகப்பக்கக்கோட்டிலும் பதிந்துகிடக்கின்றன. உத டுகளிலிருக்கும் சில சிப்பிகளைத் தவிரச், சிறப்பான புலனுறுப்பு கள் உருண்டைப்புழுவிற்குக் கிடையாது. புலனுணர்வுள்ள இச் சிம்பிகள் தொட்டுணர்வுறுப்புகளெனக் கருதப்படுகின்றன, நாற்புறமும் எல்லைப்படுத்தப்பட்டுச் சுற்றிவளையப்பட்ட சூழ்நிலை யில் வாழ்தலால், நன்கு விருத்தியடைந்த புலனுறுப்புகள் இப் புழுவிற்கு இருக்கவேண்டிய ஆவசிகமில்லை. இதன் சூழ்நிலையில் மாற்றங்கள் ஏற்படுதல் மிக அருகியே நிகழும், என வே, சூழ லின் பௌதிக, இரசாயன நிலைமைகளைக் காட்டும் தன்மை வாய்ந்தனவாகவே. சிம்பிகள் அமைந்திருக்கின்றன.
உருண்டைப்புழு ஒருபால் உள்ளது. ஆண்புழு வேறு; பெண் புழு வேறு. வெளித்தோற்றத்திலிருந்தே இவற்றைப் பிரித்தறிய முடியும், பெண், வழக்கமாக ஆணைக்காட்டிலும் நீளமானது. இதைத்தவிர, ஆண்களின் பிற்பக்கமுனை சிறிது வளைந்திருக் கும், ஆண்புழுவின் இனம் பெருக்கற்றொகுதி ஒரு சுருளுள்ள குழாய்போன்று இருக்கும். இக்குழாய் படிப்படியாக வகையீடு

சில சிறப்பான போசணைமுறைகள்
101
அடைந்து, விதை, அப்பாற்செலுத்தி, சுக்கிலப்புடாம், வெளியேறிகான் எனப் பல உறுப்புகளாக உருப்பெறுகின்ற து. குழாயின் முற் பக்கத்தில் விதை உண்டு. விதையானது நீளமான நாற்சுருள் போன்று, உடற்குழியில் கணணிசமான பகுதியைத் தானிருப்பதற்கு இடமாக அமைத்துக்கொண்டிருக்கிறது. இதன்கண்ணேயே விந்து சுள் விருத்தியாகின் றன. விதையின் பிற்பக்கமுனை அப்பாற்
4 ) --
உரு. 834 உருண்டைப்புழுவின் இனம்பெருக்கற்றொகுதி 11 T விதை; VD அப்பாற்செலுத்தி; VS சுக்கிலப்புடகம்;
| D4 வெளியெறிகான். செலுத்தியாகத் தொடர்ந்திருக்கின்றது. இந்த இரண்டு அமைப் புகளும் ஒன்றோடொன்று மயங்கிக்கிடக்கின்றன. அப்பாற் செலுத்தியை அடுத்துச், சிறிது பெருத்திருக்கும் பகுதியே சுக் கிலப்புடகம் ஆகும், இங்குதான் விந்துகள் சேமித்துவைக்கப் படுகின்றன. சுக்கிலப்புடகமானது குறுத்து, ஒடுங்கிய தசைக் குழாயாதிய வெளியெறிகா(3)க உருப்பெற்று, நேர்க்குட லுக்குள் சென்று திறக்கின்றது. (நேர்க்குடலுக்குப் பின் னல். அதன் புறப் பக்கச்சுவருள் வந்து திறக்கும் இரண்டு பைகள் காணப்படுகின் றன. இப்பைகளுள் ஊ சி) வடிவுள்ள இரண்டு ஆண்குரிச் சிளிர் முட்கள் இருக்கின்றன. இவைகள் புர்ச்சிறுநுண்கடர்கள் எனவும் பெயர்பெறும்.
பெண்புழுவினது இனம்பெருக்கற்றொகுதி ஆண்புழுவினதை ஒத்ததேயாம். எனினும் அதன் இனப்பெருக்குமுறுப்புகள் எல்லாம் இரட்டிப்பாக இருக்கும், நாற்சுருள் போன்ற இரண்டு சூலகங்களும், அவற்றைத் தொடர்ந்திருக்கும் சூலகக்காள்களும்; சூலகக்கான்களோடு தொடர்ந்தாற்போல் அமைந்திருக்கும் கருப்பைகளும், கருப்பைகள் சேர்ந்து, குறுத்த தசைக்குழாயாவத னால் உருப்பெறும் யோனிமடலும் ஆகிய இவைகளெல்லாம், பெண்
21512

Page 88
162
உயிரிளவியல்
புழுவின் இனம்பெருக்கல் உறுப்புகளாகும். பெண் புழுவின் முற் பக்கமுனையிலிருந்து, அதன் உடலினது முழு நீளத்தின் மூன்றி லொரு பங்கு சாரத்தில் அகப்பக்கமாக யோனிமடல் வெளித் திறக்கின்றது.
உருண்டைப்புழு, பொதுவாக நாடோறும் ஏறத்தாழ 15,000 முட்டைகள் வரையில் இடும். சாதாரணமான பருமனுள்ள ஒரு பெண்புழு, தன்னுடலில் சராசரி இரண்டரைக்கோடி (2,50,00,000) முட்டைகளை உடையது என்றும், நாடோறும் ஏறத்தாழ இரண்டி லட்சம் (2, 110,000) முட்டைகளை இடும் எனவும், சில விலங்கிய லறிஞர்கள் கூறுகின்றனர். எவ்வாறாயினும், உருண்டைப்புழு எண்ணிறந்த முட்டைகளை இடுகிறது என்பதில், ஐயமிருக்க, வேண்டியதில்லை. ஆண் புழுக்களுக்கும் பெண்புழுக்களுக்குமிடை யில் புணர்ச்சி நடைபெறுவதனால், உடலின கத்தே கருக்கட்டல் நிகழுகிறது. பெண்புழு இடும் முட்டைகள், விருந்துவழங்கியின் மலத்துடன் வெளியேறுகின்றன. முட்டைகளைச் சுற்றிக் கைற் றின் என்னும் பதார்த்தத்தாலான உரமான ஓடு உண்டு. வாய்ப் பான நிலைமைகளில், மூலவுருவானது முட்டையினுள் விருத்திய டையும்; ஆனால், முட்டையினின்றும் ஒருக்கா ,பிலும் வெளிப் படாது. மூலவுருக்கள் உள்ள முட்டைகள் அழுக்குப்படுத்தப் பட்ட நீருடன், அல்லது உணவுப்பதார்த்தங்களுடன் விருந்து வழங்கியின் (மனிதனின்) வாய் வழியாக உட்கொள்ளப்படுவது னாலேயே, தொற்று உண்டாகின்றது. 'விருந்துவழங்கியால் உட் கொள்ளப்பட்ட மூலவுருவுள்ள முட்டைகள் முன்சிறுகுடலை அடைந்து, அங்கு பொரிக்கின்றன; பொரித்தவுடன் முழுவளர்ச்சி அடைவதில்லை; குடல் தவிர்ந்த ஏனைய இடங்களில் வாழத் தலைப்படும். முதலில் குடற்சுவருக்கூடாகக் குருதிக்கலன்க ளையோ, நிணநீர்க்கலன் களையோ அடைந்து அவற்றின் வாயி லாக, இதயத்தையும், இதயத்திலிருந்து நுரையீரலையும் அடைந்து
அங்கு வளருகின்றன. நுரையீரலின் கண்ணே குருதியருவியை விட்டு நீங்கி, அதன் சிற்றறைகளை அடைந்து, அங்கிருந்து மூச் சுக்குழற்றொடுவைக்கு வந்து, ஈற்றில் தொண்டைவாயிலாகக் களத்தைச்சேர்ந்து, இரைப்பையின் வழியாகச் சிறுகுடலை அடை கின்றன. குடலே உருண்டைப்புழுவின் வாழிடமாகும். இவை, சிறுகுடலைத் துளைத்துச்சென்று மீண்டும் சிறுகுடலை வந்தடை யும் செயல் குடலுக்கப்பால் வாழிடமாறல்' எனப்படும். சிறுகுடலை
அடைந்த புழு, மேலும் வளர்ச்சியடைந்து இருமுறை கவசங்கழற்றி | முழுவளர்ச்சி அடைகிறது. தொற்றிய காலம் தொடக்கம், குட லுக்கப்பால் வாழிடமாறிக்கொண்டு, மீண்டும் சிறுகுடலை வந்த

சில சிறப்பான போசணைமுறைகள்
163
டையச் செல்லும் காலம் ஏறத்தாழப் 10 நாட்களாகும். இஃது இரண்டு மாதகாலத்தில் முழுவளர்ச்சி அடைந்து, இனம்பெருக் கல் செய்ய முற்படும்.
விருந்துவழங்கியின் குடலிலுள்ள சமிபாட்டு நொதிச்சத்து கள் தாக்காவண்ணம், உருண்டைப்புழுவின் உடலைச்சுற்றித் தடிப் பான புறத்தோல் அமைந்திருத்தலும், அது சீதப்பொருளைச் சுரந்து, தன்னைச்சுற்றியுள்ள நொதிச்சத்துகள் தன்னை ஊறு படுத்தாவண் ணம் செய்து கொள்ளுதலும், தன்னைத், தான் வாழும் சூழ்நிலையில் பாதுகாத்துக் கொள்வதற்கு ஏற்படுத்திக்கொண்ட இணக்கமுறைகளாகும்,
உருண்டைப்புழுக்கள் குடலில் அதிகமாக இருக்குமாயின், ஒன்றோடொன்று திருகல் முறுகலாகப் பிணைந்து, குடலே அடைத்து நோயை உண்டாக்கும். சிலவேளைகளில் முழுவளர்ச்சியடைந்த, புழுக்கள், பித்தக்கான், 44 தையக்கான் என்பவற்றுட் புகுந்து, பல சிக்கலான நோய்களை வருவிக்கின்றன. குடம்பி நிலையில் வாழிடமாறுங்கால் நுரையீரலுக்கு ஊனமுண்டாக்குகின்றன. குடம் பிகள் குடலைத்துளைப்பதால் உண்டாகும் காயங்கள் நோய் விளைத்தலுமுண்டு.
2. கொளுக்கிப்புழு: இதனை "அங்கிலொத்தோமா தாதனேல்" fAncylostoma (lnodenalt) என விலங்கியலறிஞர் வழங்குவர்.
' வாயறை
பாய
(£ட்ட பற்கள்
பாசம்
தொண்டை கழியறைத்
துவாரம் களுத்துச்
சுரப்பிகள்
| உரு- 33 B உருண்டைப்புழுவின் இ ன ம் பெருக்கற்றொகுதி (தொடர்ச்சி)
T' விதை: Y) அப்பாற்செலு - த்தி; ' YS சூலகக்கான்; DE
வெளியெறிகான்.
உரு. 83 I கொளுக்கிப்புழு வின் தலை
உறுப்புகள்

Page 89
164
உயிரினவியல் கொளுக்கிப்புழுக்கள் சிறிய உருண்டையான புழுக்களாகும். இவை, 14 மில்லிமீற்றர் நீளம்வரை வளரும் இயல்பின : மனித னின் சிறுகுடலில் பெருந்தொகையாகக் காணப்படும். இவற் றுள் பெண் ஆணிலும் பெரியது; 10 தொடக்கம் 14 மில்லிமீற் றர் நீளம்வரை வளரும், ஆண், 8 தொடக்கம் 11 மில்லிமீற்றர் நீளமுடையது.
கொளுக்கிப்புழுக்கள் உருளை வடிவுடையன. அதன் வாய் உடலின் முற்பக்கமுனையில் புறப்பக்கமாக அமைந்திருக்கும். வாயைச்சுற்றி 4 பெரிய பற்களும், 2 சிறிய பற்களும் காணப் படும். வாய்க்குழியிலுள்ளே "அறுவை மருத்துவக்கத்தி' போன்ற இரு சிறிய பற்கள் உண்டு. கொளுக்கிப்புழுவின் பொதுவான உடலமைப்பியல், ஏறத்தாழ உருண்டைப்புழுவைப் போன்றிருக் கும், கழிவுத்தொகுதியின் வகைக்குறிப்பாக இரண்டு கடந்தும் சுரப்பிகள் காணப்படுகின்றன. இச்சுரப்பிகள் இரண்டும் ஒன்று கூடி, உடலின் அகப்பக்கத்தில் தொண்டைப் பிர தேசத்தின் கீழ் வெளித்திறக்கின்றன. கழிவுநுண்டுளைப் பிரதேசத்தின் பின்னால்,
இரண்டு சிறிய சுழுத்துச் சிப்பிகள் காணப்படும்.
(அக்கிவப்புடகம்
அப்பாற் செலுத்தி அக்பிவப்புடசம்
வெளியேறிகான் நுண் கூடர்கள்
நோக்குடல்
கழியறை
புணர்ச்சிப்பை
உரு, 33 (! கொளுக்கிப்புழுவின் இனம்பெருக்கற்றொகுதி

சில சிறப்பான போசணைமுறைகள்
105
ஆண்புழுவின் உடலினது பிற்பக்கமுனையில் புணர்ச்சிப்பை காணப்படுதல், அதற்குரிய சிறப்பியல்பாகும். புணர்ச்சி நிகழும் போது பெண்புழுவை அணைத்துப் பிடித்துக்கொள்வதற்கு, இப் புணர்ச்சிப்பை உதவுகிறது. நேர்க்குடலின் முனைப்பகுதியில் -புணர்ச்சி நுண்கூர்களைப் பொதிந்திருக்கும் மிகச்சிறிய பைகள் 'இரண்டு உண்டு. இப்புணர்ச்சி நுண் சுடர்கள் உருண்டைப்புழுவி லுள்ள ஆண்குறிச்சிலிர்முள் போன்றது. உருண்டைப்புழுவிற் போலவே, வொரியேரிகா னும் நேர்க்குடலினுள் திறக்கின்றது. ஆத லினல், நேர்க்குடலின் முசோ ப்பகுதி, ஒரு பொது அறையாக இருக்கின்றது. இப்பொ துவறையானது சுரியறை எனப்பெயர் பெறும். பெண் கொளுக்கிப்புழுவினது இனம் பெருக்கல் தொகுதி யும் உருண்டைப்புழுவில் இருப்பதைப் போன்றதே. பெண்ணி -- பது! இனம்பெருக்கல் துவாரம் உடலின் அகப்பக்கத்தில், முற் பக்கமுனையிலிருந்து மூன்றிலொரு பங்கு தாரத்தில் காணப்படும்.
இறையுருக் படப்பி
வட்டவுருக் குடமபி
உரு. ]ே 1) கொளுக்கிப்புழுக் குடம்பிகள்
கொளுக்கிப்புழுவின் முட்டைகள், கருக்கட்டியபின்பு, விருந்து வழங்கியின் குடலினுள் இடப்படுகின்றன. இடப்பட்டவுடனேயே

Page 90
16ர்
உயிரினவியல்
விருத்தியடைய ஆரம்பிக்கின்றன. எனினும், விருத்தியடைதலில் அவ்வளவாக முன்னேறுவதில்லை, இம் முட்டைகள் விருந்து வழங்கியின் மலத்துடன் வெளியேறி, வாய்ப்பான நிலைமைகளில், அதாவது, ஈரலிப்பும் இளஞ்சூடும் உள்ள நிலைமைகளில், தங்கள் விருத்தியடைதலை முற்றுப்பெறச் செய்கின்றன. பொதுவாக, இரண்டு நாட்களுக்குள் வட்டவு நக்குடப்பிகள் எனப்படும் மிகச் சிறிய குடம்பிகள் முட்டையினின்றும் வெளியேறி, மண்ணிலுள்ள சேதனப்பொருள்களை உண்டுவாழும். இவ்வாறு மூன்று நாட் கள் சென்றபின்பு, இழையுருக்குடம்பிகள் என்ற நால்போன்ற, நீண்ட குடம்பிகளாக விருத்தியடைகின்றன. இவ் இழையுருக் குடம்பிகள், உணவு உண்ணுதலை விரைவில் ஒழித்துவிடும். ஒழித்தபின்பு, வெறுங்காலோடு நடந்துவரும் அல்லது வேலை செய்யும் மனிதன் ஒருவனைச் சந்திக்கும் வரைக்கும், மண்ணில் ஈரலிப்புள்ள இடங்களில் தங்கி இருக்கும், மனதளச் சந்தித்த தும், அவனது (காலில் உள்ள) தோலைத் துளைத்துக்கொண்டு நிண நிர்க்கலன் அல்லது குருதிக்கலன் ஒன் றி றுள் புகுந்து கொள்ளுகின்றன. அங்கிருந்து, முதன்முதல் இதயத்துக்கும், பின்னர் நுரையீரலுக்கும் அவை காவிச் செல்லப்படும். இதன் மேல், நுரையீரற் சிற்றறைகளுக்குள் 1131பூர்,து, அங்கிருந்து மூச்சுக்குழற்றெடுவைக்குக் காவிச் செல்லப்படுகின்றன, மூச்சுக் குழற்றொடுவையிலிருந்து தொண்டை வாயிலாகக் களத்தை அடைந்து, ஈற்றில் குடலை அடைகின்றன. இவ்வாறு, வாழிடபாறும் போது வளர்ச்சி நடைபெறுகிறது; குடலினகத்தே மூன்றாவது முறையாகக் கவசங்கழற்றியபின் (7 ம் நாளில்) முழுவளர்ச்சி . அடைந்த புழுவாகிவிடும், ஒருவார காலத்துள் பால்யுதிர்வு ஏற் பட்டுவிடும்,
கொளுக்கிப்புழுக்கள் பொதுவாக மனிதன் தும், சிறப்பாகச் சிறுவர்களினதும் சேர்க்கையெறிகைத் தொழிலுக்கு இடர்விளேக் கின்றன. குடலிலிருந்து அதிக குருதி இழக்கப்படுதலால், குருதிர் சோகை என்னும் நோய் சிறுவர்களுக்கு உண்டாகின்றது. அவர் க்ளுடைய வளர்ச்சியும் நலிவுறும். வேறு நோய்கள் உடலில் வாராது காக்கும் தடைவ லுவும் குறைந்துவிடும். வாழ்க்கை நலனுக்குரிய நிலைமைகள் திறம்பட அமைந்திருக்குமாயின், கொளுக்கிப்புழு தொற்றுதலைத் தடைசெய்தல் எளிது. வெளி யான இடங்களில் மனிதயபலம் பிரிகையுற்று அழுகுமாறு விடுதல் சுடடாது. எங்கள் கிராமப்புறங்களில் மக்கள் வெளியான இடங் களில் மலங்கழிக்கின் றார்கள்! இவ்வாறு, செய்வது தவிர்க்கப்பட " வேண்டும். மக்கள் பாதரட்சைகளை உபயோகிக்கும் வழக்கத் -- 4"

சில சிறப்பான போசணைமுறைகள்
167
தைக் மேற்கொண்டால் கொளுக்கிப்புழுக்கள் உடலில் நுழை வனத நிச்சயமாகத் தடுக்கலாம்.
வினாக்கள்
1. ஒட்டுண் லாரிகள் என்பன யாவை? அவை அவற்றின் வாழ்க்கைக்கேற்ற இசைவாக்கமுடையன என்பதை, ஒரு தாவரவொட்டுண் சரி. ஒரு விலங்கொட்டுண்ணி என்ப வற்றின் துணை கொண்டு விளக்கிக்காட்டுக.
2. அழுகல் வளரிக்கும் ஒட்டுண்ணிக்குமிடையே காணப்
படும் வித்தியாசங்கள் யாவை?
3, தனது விருந் து வழங்கியிலிருந்து தூத்துமக்கொத்தான்
போசணை பெறுமாற்றை விவரிக்க.
4. உருண்டைப்பு 11வப்போன்ற பி பி ங் கொட்டு ண் ணி
ஒன்று, தனது சிறப்பான வாழ்க்கைமுறைக்கு இணாக்கர் தெரிவிக்குமாற்றை விவரிக்க.
கொளுக்கிப்புழுவின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கி எIL துக.
செய்முறைப் பயிற்சிகள்
1. தூத்துமக்கொத்கா (குசுக்குற்ற) னின் மாதிரிப்பொருள் களைச் சேகரித்து அவற்றின் வெளியுருவப்படங்களை வரைக. (புதிய மாதிரிப்பொருள் கள் கிடைக்காவிடில், பேராதனை யுள் ள தாவரவியற் தோட்டத்திலிருந்து காப்பாற்றிவைக்கப்பட்டிருக்கும் மாதிரிப்பொருள்களைப் பெற்றுக்கொள்க).
2. ஒட்டுண்ணி வேர் களைக் காட்டக்கூடியவாறு', குருவிச்சை (உலராந்தசு) யின் வெளியுருவப்படத்தை வரை ஈ.
3. உருண்டைப்புழுவின் மாதிரிப்பொருள்களைக் கைவில்லை யின் உதவியோடு ஆராய்க, அதன் வெளியுருவப்படத்தை வரைந்து, பகுதிகளுக்குப் பெயரிடுக.
4. கொளுக்கிப்புழுவின் வழுக்கி ஒன்றை நுணுக்குக் காட்டி பயின் கீழ்வைத்து ஆராய்க.

Page 91
1UH
அத்தியாயம் 22
எலி - தோலும் அதன் தொழிலும்
இந்தப்புவியில் வாழும் விலங்குகளில், முலையூட்டிகள் உயர்ந்த - விலங்குகளாகும். அவற்றின் உடலமைப்பு, உடற்றொழில் என்ப வற்றைக் கற்றுக் கொள்வதற்கு ஏதுவா, எலி என்னும் முலையூட் டியை எடுத்துக் கொள்வோம். முலையூட்டி என்ற பெயர்க்கார
ணம் வெளிப்படை.
முலையூட்டிகள் என்று சொல்லப்படும் முள்ளந்தண்டு விலங்கு களின் சுடட்டத்தைச் சேர்ந்தது எலி (இரார் பராற்றசு) என் றும் சிறிய விலங்கு. முலையூட்டி கள் இளஞ்சூட்டுக் குருதிநிலை யுள்ள சிருட்டிகள் ஆகும். அவற்றின் உடலின் மீ து மயிர்கள் இருப்பது அவற்றிற்குரிய சிறப்பியல்பாகும். விலங்குகளில் மிக உயரிய சிறத்தலை அடைந்தவை முஃப்யூ,ட்டிகள் எனக் கருதப் படுகின்றன. அவை புவிமுழுவதும் பாம்பி வாழுகின்றன. முலை யூட்டிகள் என்னும் கூட்டத்தில் பல உட்பிரிவுகளுண்டு. "கொறி யுபயிர்கள்' என்பது, பல உட்பிரிவுகளில் ஒன்று. இவ் உட்பிரிவைச் சேர்ந்ததே எலி என்னும் விலங்கு. முயல், காட்டு முயல், அணில், பெருச்சாளி, நீர்நாய் என்பனவெல்லாம் எலியைப் போன்று கொறியுயிர்கள் என்னும் உட்பிரிவைச் சேர்ந்தனவேயாகும்.
கொறியுயிர்கள் என்பன ''கொறித்து" (அரித்து அ ல் ல து நறுக்கி) வாழும் விலங்குகளாகும். அவற்றின் தாடைகளில் "உளி' போன் ற வெட்டும்பங்கள் இருக்கின்ற காரணத்தால், அவற்றை ஏனைய முவையூட்டி களிலிருந்து வேறு பிரித்தறியலாம். பொதுவா கக், கொறிக்கும் விலங்குகள் இட்லயுண்றுபவை; ஆனால், அவற்றுட் சில,- எலி போன்றவை, - - புனேந்துமுன் றுடவை,
எலியை, யாம் எல்லோரும் கண்டிருக்கிறோம். அஃது ஏறத் - தாழக் கருமை நிறம் வாய்ந்த நீட்சியுடைய சிறு விலங்கு. அதன் உட ல் இருபக்கச்சம்ச்சீருள்ள து. இருபக்கச்சமச்சீருள்ள விலங்குகள் ஆறு பக்கங்களை உடையன. முதுகுப்பக்கம் புறப் யக்கம் எனவும், வயிற்றுப்பக்கம் அபப்பர்சும் எனவும், உடலில்
ச தாவரபட்ச சரி அல் நு சாகபட்சll
சர்வபட்சாரி

எலி - தோலும் அதன் தொழிலும்
169
முன்னோக்கி அசையும் பகுதி முற்பக்கம் எனவும், அதற்கு எதிர்ப்பக்கம் பிற்பக்கம் எனவும் வலது, இடது பக்கங்கள் பக்கங்கள் எனவும் கொள்ளப்படும்,
டரு. 84 எலி எலியின் உடல் தலை, மூலம், வால் என முப்பிரிவுகளையுடை யது. தலை முன்னுக்கு ஒடுக்கமாகவும் பின்னுக்கு அகன்றும் இருக்கும், தலையின் முற்பக்கத்தில் வாய்உண்டு. வாய்க்கு மேற் அரனட, கீழ்த்தாடை என்பன 1 இருக்கின்றன. மேலுதடு இருபாதி களாகப் பிளவுண்டிருக்கும், வாயின் பிற்பக்கத்தில், இரு வெளி மூக்குத்துவாரங்கள் உண்டு. தலையின் இருபக்கங்களிலும் பிதுக்க மாடிய கண்கள் இருக்கின்றன, கண்ணிற்கு மேல்மடல், கீழ்மடல் என்பனவும், குறைக்கப்பட்ட சிமிட்டுமென்றகடும் உண்டு. கண்
ணுக்குப் பின்னால், இருபக்கங்களிலும் காதுக்குழிகள் இருக்கின் றன. காதுக்குழியைச் சுற்றி, அசையக்கூடிய வெளிக்காதுச் சோணைகள் காணப்படும். வாயையும் மூக்குத் துவாரத்தையும் சுற்றி, உரத்த, நீண்ட தொண்டுணாரிகள் என் னும் மயிர்கள் இருக் கின்றன, தலையும், மூலமும் ஒடுக்கமான கழுத்தால் வேறு பிரிக் கப்பட்டிருக்கின்றன.
மூலம், ஏறத்தாழ முக்கோண வடிவான குறுக்குவெட்டு முகம் உடையது. மூலத்தோடு முன்னவயவமும், பின்னவயவ மும் தொடுக்கப்பட்டிருக்கின்றன. முன்னவயவம் தோளில் பொருத்தப்பட்டிருக்கும்; வாலின் இருபக்கங்களிலும் பின்னவய வம் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்னவயவம் பின்னவயத்திலும்

Page 92
1ாப்
உயிரினவியல்
சிறிது குறுமையுடையது. முன்னவயத்தில் கட்டில்லாத நான்கு விரல்களும், பின்னவயவத்தில் ஐந்து விரல்களும் உண்டு. 'இவர் றின் முனைகளில் உகிர்கள் உண்டு. உள்ளங்கால்கள் மெத்தென்ற தன்மையுடையவை.
எலிகளில் ஆண், பெண் எனத்தனித்தனி பால் உண்டு. ஆண் : களில் சிறு நீர்வழியும், உற்பத்தித் துவாரமும் ஒன்றாகவே இருக் கும், இவற்றைத்தவிர, ஆண்குறியின் பக்கங்களில், இரு விதைப் பைகள் இருக்கின்றன, ஆண்களினதும், பெண்களினதும் உண வுக்கழிவுகள் அகற்றப்படும் குதத்துக்குரிய துவாரம் உடலின் அகப்பக்க நடுவில் இருக்கின்றது. பெண் எலியினது குதத்தின் முன்னால், உற்பத்தி யறை இருக்கிறது. இதில் முற்பக்கத்தில் சிறு நீர்த்துவாரமும், பிற்பக்கத்தில் உற்பத்தித் துவாரமும் இருக்கின் - றன. மூலத்தின் அகப்பக்கத்தில் ஐந்துசோடி முலைக்காம்புகள் உண்டு.
"எலிபினது தோளின் அமைப்பும் தொழிலும் : முலையூட்டிகளின் தோல் (எலியிற் காணப்படுவது போலவே) இரண்டு படைகளைக் கொண்டது. வெளிப்பக்கமிருக்கும் படை மெல்லியதாயிருக்கும். உட்பக்கமிருக்கும் படை புடைப்புள் ளதாக இருக்கும். வெளிப் பக்கத்திலுள்ள து மேற்ரேல் எனவும், உட்பக்கத்தி லுள்ள து உட் டோல் எனவும் கூறப்படும், மேற்றோலின் அதிவெளிப்பக்கத்தில் தட்டையான, வன்மையுள்ள இறந்ந சுலங்களாலான சொரப்புப் பொருட்படை அமைந்திருக்கிறது, போதிய அளவு உராய்வுக்கு உட்படும் இடங்களாகிய உள்ளங்கைகளிலும், உள்ளங்கால்களி - லும் இக்கொம்புப் பொருட்படை மிகப் புடைப்புள் ளதாக இருக் கும், மேற்றோலின் நடுப்பகுதி உயிருள்ள கலங்களாலான து. அது சிறுமணிகள் ஒருங்கு சேரந்திருந்தார் போலத் தோற்றுவ = தால், சிறுமரிப்படை எனப்படும், மேற்ரேலின் அடிப்பகுதி அல்லது அதிகீழ்ப்பகுதி விரைவாகப் பிரியும் கலங்களை யுடையது. இது பல்பரியின்பாட எனப்படும்.
1. உடடோல் ஒரளவு புடைப்புள்ள படையாகும். அ த னி ல் தசைகள், குருதிக்கலன்கள், நரம்பு நார்கள் பிற இழையங்கள் என்பன உண்டு. மேற்றேலின் சிறப்பான ஒர் உள்ளிறக்கமாகிய " மயிர்ப்புடைப்பிலிருந்தே மயிர் உண்டாகின்றது. மேற்றோலின் உள்ளிறக்கமாகிய மயிர்ப்புடைப்பு ஏறத்தாழ உட்டோலின் அடிப் பகுதிவரை ஆழ்ந்திருக்கிறது. (மயிரானது பல இறந்தகலங்களால், அக்கப்பட்டுள்ளதேனும், மயிர்ச்ம்ெபிரான் என்னும் ஒரு கூட்டம் உயிருள்ள கலங்களிலிருந்தே உண்டாகின்றது. இம் மயிர்ச்சிம்பி

எலி- தோலும் அதன் தொழிலும்
171
கள் மயிர்ப்புடைப்பின் அடியில் அமைந்திருக்கின்றன. ஒவ் வொரு மயிர்ப்புடைப்பினுள்ளும் ஒரு நெய்ர்சுரப்பி திறக்கின்றது. இதிலிருந்து சுரக்கப்படும் நெய்ச்சுரப்பு, மயிர் துப்புரவாகவும், நனையாதவாறும் இருப்பதற்கு உதவுகிறது.
HF
5 GL
- 4 +
5 F -
GT..
ஃப் 04 =dc34...
:532ஃ33:23
டரு. 85 எலியின் தோலினா து அமைப்பு 14 மேற்றேல்; 1) உடடோல்; H மயிர்; 11.1 மயிர்ப். 'புடைப்பு; 8.1 .L நெய்ச்சுரப்பி; 3.0, கொப்புப் பொருட்படைB, MI, மல்பீசியின் பண்ட; 3.1), வியர்க்கான்; 3.1.3 வியரிச் சுரப்பி; B, T. குருதிக்கலன்: 17 கொழுப்பு; S.T, உணர்ச்சிக் குரிய சிம்பிகள்; 14 நரம்பு: பி.பி, சிறுமணிப்படை.
மயிர்ப்புடைப்புகள் படித்தவையே வியர்ச்சுரப்பிகளும். ஒவ் வொரு வியர்ச்சுரப்பியும் மிகமெல்லிய குழாய்போன்ற அமைப் புடையது. அவை, உட்டோவின்கண் சுருளுள்ள குமிழுருப்பெற்று முடிவடைகின்றன. சுருளள்ள குமிழுருவுள்ள இப்பிரதேசத் திலேயே, குருதியிலிருந்து கழிவுப்பொருள் வேறாகப் பிரிக்கப் படுகிறது. வியர்க்கான் வழியாக வியர்வெளியேறுகிறது. வியர்ச் சுரப்பிகள் எலியில் அவ்வளவாக விருத்தியடைந்திருப்பதில்லை, ப
உட்டோலின்கண் உளார்ச்சிக்குரியசிம்பிகளும் உண்டு. இவைகள் நரம்புநார்களால் மைய நரம்புத்தொகுதியோடு தொடுக்கப்பட் டுள் ள ன,

Page 93
172
உயிரினவியல்
உடலிற்குச் சிறந்த பாதுகாப்புத்தரும் உறைபோன்று, தோல் அமைந்திருக்கிறது. உராய்வுக்கு உட்படும் பகுதிகளில் தோல் அதிக புடைப்புடையதாயிருக்குமென முன்னரே கூறியுள்ளோம். நசுங்கள், உகிர்கள் முதலியனவும் தோலிலிருந்துண்டான சிறப் பான வெளிமுளைகளேயாம்.
தோலின் வழியாக, ஒரு குறிப்பிட்ட அளவு கழிவுப்பொருள் வியர்வடிவத்தில் வெளியேற்றப்படுகின்றது. வியர் என்பது சிறு நீருப்பு, சிறு நீரமிலம், சோடியம்குளோரைட்டின் சுவடுகள் முதலியன சேர்ந்த நீரேயன்றி, வேறு எதுவும் அன்று. உட் பிடா லுக்குக் கொண்டுவரப்படும் குரு தியிலிருந்து, வியர்ச்சுரப்பிக ளால் வடித்தெடுக்கப்படுவதே வியர் ஆகும்.
உடலின் வெப்பநிலையை ஒழுங்காக்கத் தோல் உதவுகின்றது." வெப்பநிலை இனஞ்சூடாயிருந்தால், தோவிற்கு அதிக அளவான குருதி வந்துசேரும். எனவே, வியாராக ஏராளமான நீர் உடலி -னின் றுங் கழிந்துவிடும். இந் நீருடன்சுகூட உடலிலிருந்து ஓரளவு வெப்பமும் இழக்கப்படுகின்றது. குளிர்மிகுத்த நாட்களில் தோலி லுள்ள குருதிச்சுற்றோட்டம் குறைவாதலால், சிறிதளவு நீரையும், சிறிதளவு வெப்பத்தையு மே தோல் இழக்கின்ற து.
தோல் வெளிப்புறத் தூண்டல்களுக்குத் தூண்டற்பேறு நிகழ்த்தவல்லது. உட்டோலின் கண் ணுள்ள உணர்ச்சிக்குரிய சிம்பிகள், தூண்டல்களை முண்ணணுக்கு அல்லது மூளைக்கு நரம்புநார்கள் வழியாகக் காவிச் செல்கின்றன, ஆதலால், தோல் தொடுகைப்புலனை உணரும் உறுப்பாகும்.
வினாக்கள் முலையூட்டிகளின் தோலின் அமைப்பையும் மூன்று முக்கிய தொழில்களையும் விவரிக்க. வியர்ப்பதனால் வெப்பம் ஓரளவு இழக்கப்படுகிறது என்
னும் கூற்றை விளக்கிக்காட்டுசு.
செய்முறைப் பயிற்சிகள் 1. எலியின் (பக்கப்பார்வை) வெளியுருவப்படம் ஒன்று - - பு, வரைந்து, பகுதிகளுக்குப் பெயரிடுக.,)
2. எலியினது அல்லது வேறொரு புலையூட்டின து தோலின் வெட்டுமுகம் ஒன்றை, நுணுக்குக்காட்டியின் கீழ்வைத்து நோக் நியபின், அ தி ல் காணப்படும் தோற்றத்தை வரைந்து, பகுதிகளுக்குப் பெயரிடுக.

1ா!!
அத்தியாயம் 23 எலி - சமிபாட்டுத்தொகுதி
-- LL
[L |
L, E.
E. பு.'
உரு. 86 எலியினது உள்ளமைப்பு TR மூச்சுக்குழற்றொடுவை; H இதயம்; LI, இடது நுரை பீரல் (சுவாசப்பை); 1, நுரையீரற்சோணை ; '3 இரைப்பை, 11 குருட்டுக்குழல்; 1 சுருட்குடல், LU இடது கருப்பை (மூலவுரு வுடன்): UB சிறு நீர்ப்பை: BV குமிழ்த்தலைவாயிற் சுரப்பி.

Page 94
174
உயிரினவியல்
- 5
உணவுக்கால்வாயும் அருள் சுரப்பிகளும், அவற்றின் தொழில்களும்: வாயைத் தொடர்ந்து இடமகன்ற வாய்க்குழி அமைந்திருக்கின்றது. இக்குழிக்கு மேற்பக்கத்தில், அசையுந்தன்மையில்லாத மேற் றருடை யும், கீழ்ப்பக்கத்தில் அசையுந்தன்மையுள்ள பிர்த்தாடையும் உண்டு. ஒவ்வொரு தாடையிலும் ஒரு சோடி உளிபோன்ற வெட்டுப்பற்சு எளும், மூன்று சோடி சிறிய, தட்டையான கடைவாய்ப்பற்களும் (அரைக்கும் பற்களும்) உண்டு. ஆ, தலால், வெட்டும்பற்களுக்கும் கடைவாய்ப்பற்களுக்குமிடையில் பல் பிணளிடைளெளி எனப்படுமொரு ' பெரிய இடுக்கு (இடைவெளி) உண்டு.
வாய்க்குழியில் பிற்பக்கப்பகுதி நொண்டை எனப்படும், தொண் டையானது களம் எனப்படுங்குழாயாக ஒடுங்கித், தொடர்ந்து நீண்டு செல்கின்றது. களம் நெஞ்சறைக்கூடாகச் செல்கின்றது.- மேலும், அது மார்புவயிற்றிடை மென்றகட்டிற்கூடாகச் சென் று. வயிற்றறையை அடைகின்றது. பின்பு, அது ('U'') * 'பு,"" வடிவ முள்ள இரைப்பை என்னும் ஒரு  ைப ன ய ச் சென்றடைகிறது. இரைப்பை, தொடர்ந்துஒருங்கு சுருண்ட குழாய்போன்ற சிறு குடலாக உருப்பெறுகிறது. சிறு குடலின் முதற்பகுதியும் ("U") = "யூ" வடிவமுனடயதேயாம். இப் பகுதி புன்சிறுகுடல் எனப்படும். சிறுகுடலின் மீதியான பகுதி சுருட்குடல் எனப்படும். சிறுகுட லைத் தொடர்ந்து குறுத்த (நீளத் திற்குறைந்த) பெருங்குடல் இருக் கின்றது. இது சிறுகுடலிலும் பார்க்க அகன்றது. பெருங்குட லும் சிறுகுடலும் சந்திக்குமிடத் தில் குருட்டுக்குபுல் எனப்படும்
உரு. 87 துளையில்லாத அமைப்பு ஒன்று எலியின் உணவுக்கால்வாய் ' ' -- இருக்கிறது. முலையூட்டிகளினது BC வாய்க்குடு; " தொண்டை; சிறப்பியல்பாய் அமைந்திருக்க 0 களம்: 3 இரைப்பை; 1 சுருட் வேண்டிய குடல்வளரி. எ லி யி ல்
குடல்; SR உருண்டைச்சிறு அவ்வளவாக விரு த் தி ய டை ந்
பை; ( குருட்டுக்குழல்; Gப் திருக்கவில்லை. பெருங்குடலா குடற்குறை; 1% நேர்க்குடல் னது குடற்குறை, நேர்க்குடல் என
A குதம்.

எலி - சமிபாட்டுத்தொகுதி
1ா5 இரு பகுதிகளை உடையது. நேர்க்குடலின் வெளிப்பக்கத்துவாரம் குதம் எனப்படும்,
உணவுக்கால்வாயிலுள்ள சுரப்பிகள்: வாய்க்குழியினுள் மூன்று சோடி, உமிழ்நீர்ச்சுரப்பிகள் வந்து திறக்கின்றன. முதலாவது சோடி
-LL ட்.,
- *. 4. [L- - A/ - LL.
TE []
>[/
| L -
- L. AL - 1.H, .
L. 1 .1,
-L IL
-- L .ப. -- ப. 4
- LE - ப.F
உரு. 88 எலியின் உணவுக்கால்வாயிலுள்ள சுரப்பிகள் TIR மூச்சுக்குழற்றொடுவை; L ஈரல்; 8 இரைப்பை: P சதைச் சுரப்பி; D முன்சிறுகுடல் : 0 குருட்டுக்குழல்; 1 சுருட்குடல்; IT, I', சிறு நீர்ச்சனனிச்சிம்பி. U,R, சிறு நீர்க்குழாய், L.. இடது கருப்பை; ப.B, சிறுநீர்ப்பை: LL,L, இடது புடைதாங்கி நாடி ; 1.V.C. கீழ்க்குழிநாளம்; L... இடது உற்பத்திநாளம்; L.K. இடது சிறு நீரகம்; L.A.D. இடது அதிரனற் சுரப்பி; 0 களம்; D.I. மார்பு வயிற்றிடைமென்றகடு (ஒரு பகுதி வெட்டப்பட்டுவிட்டது); L,L, நுரையீரல்; A.A. இனைனபடா நாளம்; S.V.0.L, இடது மேற்குழி நாளம்; L.C, 0, இடது பொதுச்சிரசு நாடி.

Page 95
176
உயிரினவியல்
காதுகளின் அடிப்பகுதியில் அமைந்திருக்கும் கன்னசுரப்பிகள் : இரண்டாவது சோடி நாக்கின் கீழ் அமைந்திருக்கும் நாத்திழ்ச் சுரப்பிகள் ; மூன்றாவது சோடி கீழ்த்தாடைகளின் பின்னால் அமைந்
தி ருக்கும் சிபுகக்ங்ழ்ர்சுரப்பிகள் எனப்படும், உமிழ்நீர்ச்சுரப்பி களிலிருந்து உண்டாகும் சுர ப்பு, உமிழ்நீர் என்று கூறப் படும்.
முன் சிறுகுடலின் இரு அவயவங்களுக்கிடையில் பகை யச்சுரப்பி (ச ன த ச் சு ரப் பி. சதையம்) எனப்படும் பரவ லாகவனமந்துள்ள, மெல்லிய சுரப்பி இருக்கிறது. இதன் சுரப்பு, சதைர்பா /1 (சதையச்...
சாறு) எனப்படும். எலியின் E, F1.
உடலிலுள்ள எல்லா உறுப்பு களையும் விடப்பெரியது ஈரல்
ஆகும். இஃது ஏழு சோணை உரு. 84)
களை உடையது. இதுவும், எலியின் உமிழ்நீர்ச்சுரப்பிகள்
(ன் சிறுகுடலுக்கு அண்மை P கன்னச்சுரப்பி; S.T. நாக்
யில் அமைந்திருக்கிறது. இதன் கீழச்சுரப்பி; 3.MI. சிபுகக்கீழ்ச்
சுரப்பு, பித்தம் எனப்படும். ஈர சுரப்பி (கீழ்த்தாடைத்சுரப்பி)
லில் உண்டாக்கப்படும் பித்தம்
பித்தக்கானற் சேகரிக்கப்படு கிறது. பித்தக்கான் சதையச்சுரப்பிக்கூடாகச் சதைப்பிந்தக்கான் என்னும் கானாக முன்சிறுகுடலினது சேய்மையிலுள்ள முனை யுள் திறக்கின்றது. எலியில், சதைக்கான் என ஒன்று தனியா கக்கிடையாது. ஏனைய முலையூட்டிகளின் சிறப்பியல்பாகவுள்ள (பித்தம் சேமித்துவைக்கப்படும்) பித்தப்பை, எலியில் இருப்ப தில்லை.
இந்த இரண்டு (ஈரல், சதையச்சுரப்பி) சுரப்பிகளையுந்தவிர, இரைச்பைச் சுவரிலும், முன் சிறுகுடலின் அகத்தும், எண்ணில் லாத நுணுக்குச்சுரப்பிகள் இருக்கின்றன. இரைப்பைச் சுவரி லுள்ளவை, இரப்பைச்சுரப்பிகள் எனப்படும். இவை, இரைப்பைச்சாறு என்று கூறப்படும் சமிபாட்டுப்பாய்பொருளைச் சுரக்கின்றன. சிறுகுடற் சுவரில் காணப்படும் நுணுக்குச்சுரப்பிகள், "பிரன்னரின்

எலி- சமிபாட்டுத்தொகுதி
1ார்
சுரப்பிகள்'' என வழங்கப்படும்.
இவை, குடற்சாறு என்னும் சமி பாட்டுச் சாற்றைச்சுரக்கின்றன.
கப்
PDD
உரு. 90 எலியின் சதைச்சுரப்பியும் ஈரலும் T, ஈரல்; 0 களம்; C.S. இரைப்பை; P.S. குடல்வாய்; 1) முன்சிறுகுடல்; P.E,I, சதைப்பித்தக்கான்; 13, 1). பித்தக் கான்; P சதைச்சுரப்பி.
உணவுக்கால்வாயில் உணவு அடையும் மாற்றங்கள்: முலையூட்டிகளின் உணவில், காபோவைதரேற்றுாள், புரதங்கள், கொழுப்புகள், தாதுப்பொரு ளுப்புகள் என்னும் நான்கு தலையாய வகைகளைச் சேர்ந்த பதார்த் தங்களே அடங்கியிருக்கின்றன. மேற்கூறிய நான்கனுள், முதற் கண் கூறப்பட்ட மூன்று வகைகளும், சிக்கலான சேதனவுறுப் புச்சேர்வைகளாதலால், உணவுக்கால்வாயில் அவைகள் எளிய பதார்த்தங்களாக மாற்றப்பட்டாலேயன்றி, உடலினால் உறிஞ்சப் படமாட்டா. சிக்கலான சேதனவுறுப்புள்ள பதார்த்தங்களை
215-13

Page 96
178
உயிரினவியல்
எளிய, கரையக்கூடிய பதார்த்தங்களாக மாற்றுஞ் செயன்முறையே சமிபாடு எனப்படும்.
சமிபாடு முதன்முதலாக வாய்குழியினுள்ளேயே துவங்குகின் நது. உட்செலுத்தப்பட்ட உணவு, உமிழ்நீரின் உதவியோடு. பற்களில் நறுக்கப்பட்டும், மெல்லப்பட்டும், அரைக்கப்பட்டும் சிறு துணிக்கைகள் ஆக்கப்படுகின்றது. தயலின் எனப்படும் (உமிழ் நீரி) நொதிச்சத்து உமிழ்நீரிலுண்டு. தயவினானது மாப் பொருளை மாப்பசைவெல்லம் போன்ற சிக்கலான வெல்லங்களாக மாற்றிவிடுகின்றது (நொதிச்சத்துகள், வழக்கமாகப் பாய்பொருள் சுளாகவே இருக்கும் சேதனவுறுப்புச் சேர்வைகள் ஆகும். அவை, பிற சேதனவுறுப்புச் சேர்வைகளில் மாற்றங்களை உண்டாக்கவல் லன. ஆனால், அம்மாற்றங்களை உண்டாக்கும்போது, தாம் எவ் விதத்திலும் மாற்றமடைவதில்லை. அவைகள், ஏறத்தாழ ஊளக்கி கள் போல்வன; குறித்த தாக்கம் உடையன. அதாவது : ஒரு குறித்த நொதி. ஒரு குறித்தவகைப் பதார்த்தத்தின் மீதே தாக்கம் நிகழ்த்தி, அதனை மாற்ற வல்லது; அன்றி, வேறு எவ்வகைப் பதார்த்தத்தின்மீதும் அது தாக்கம் நிகழ்த்துவதில்லை. ஆகவே, தயலின், மாப்பொருளில் மட்டுமே தாக்கம் நிகழ்த்தும்), புரதங் களும், கொழுப்புகளதம் வாய்க்குழியில் தாக்கமடைவதில்லை.
வாய்க்குழியினின்றும் உணவான து களத்தின் வழியாகச் சென்று, இரைப்பையை அடைகின்றது. சுற்றுச்சாறுக்கு (சுற்றிழுப் பசைவு) என்று சொல்லப்படும் அலையலையாகச் சுருங்கும் அசைவினாலேயே, உணவு களத்தினுள் இறங்கிச் செல்ல முடிகிறது. இரைப்பையைச் சென்றடைந்த உணவு, அங்குள்ள நுணுக்குச் சுரப்பிகளாகிய இரைப்பைச்சுரப்பிகளால் சுரக்கப்படும் இரைப் பைச்சாற்றின் தாக்கத்துக்கு உட்படுகின்றது. இரைப்பைச்சாறு பெச்சின், இரெனின் என்னும் இருவகை நொதிச்சத்துகளை உடை யது. பெச்சின் நொதிச்சத்து அதிகமான புரதங்களைப் பெந்தோன் களாகமாற்ற, இரெனின் கொதிச்சத்து பாலை உறையச்செய்து விடுகிறது. (பால் என்பது! கேசின், வெண்புரதம் என்னும் கரையக் கூடிய புரதங்களும், பால் வெல்லம் அல்லது இலற்ருேசு என்னும் வெல்லமும், கொழுப்புச் சிற்றுருண்டைகளும், சோடியம், பொற் ராசியம் போன்றவற்றின் பொசுபேற்றுகள், குளோரைட்டுகள் என் னும் அசேதனவுறுப்புப்புகளும் நீரிற்கரைந்துள்ள பாய்பொரு ளாகும்). ஓரளவு ஐதரோகுளோரிக்காலமும் இரைப்பையுட் சுரக்கப் படுகின்றது. அது, தயலின் மாப்பொருள் மீது நிகழ்த்தும் தாக்கத்தை நிறுத்திவிடும் முக்கிய தொழிலைச் செய்கின்றது.

எலி - சமிபாட்டுத்தொகுதி
1ார்
மேலும், உணவிலுள்ள தீமைபயக்கும் பற்றீரியாக்களை அழித்து விடுகின்றது; தவிர, இரைப்பையிலுள்ள ஊடகம் அமிலத்தன்மை அடையுமாறும் செய்கிறது. கொழுப்புகளும் காபோவைதரேற்று களும் இரைப்பையினுள் எவ்வகையான இரசாயன மாற்றத்தை யும் அடைவதில்லை, ஆனால், உடலினது இளஞ்சூட்டினால் கொழுப்புகள் திரவப்பொருளாக மட்டும் நெகிழ்ச்சி அடைகின்றன. இரைப்பையின் அசைவினால், உணவு குலுங்கிக், குழம்பு போலாகி விடுகிறது.
இந்நிலையில், உணவின் ஒருபங்கு மட்டும் சமிபாடு அடைந் துள்ள து. ஒருபங்குசமிபாடடைந்த உணவு, இனரப்பைப்பாகு எனப்படும், இரைப்பைப்பாகு பாலாடை நிறமுள்ள, கூழ் போன்ற பாய்பொருளாகக் காணப்படும். இஃது இரைப்பையிலிருந்து, குடல்வாய் வழியாகச் சிறிது சிறிதாக, இடைவிட்டுவிட்டு முன். சிறுகுடலுள் செல்லும் இரைப்பை அமிலத்தன்மையுடையதாயி ருக்கும். இங்கு, உணவு பித்தத்துடனும் சதைச்சாற்றுடனும் கலக்கின்றது. பிரன்னரின் சுரப்பிகளிலிருந்து சுரக்கப்படும் குடற்சாறும், இங்கேவைத்து உணவுடன் கலக்கிறது. பித்தத்தில் சமிபாட்டு நொதிச்சத்துகள் ஒன்றுமேகிடையாது. ஆனால், அஃது (இரைப்பையிலிருந்து வந்த) அமிலத்தன்மை பொருந்திய உண வுடன் கலந்து, அதனை நடுநிலையடையச் செய்கின்றது; சதைச் சாறும் குடற்சாறும் தாக்கம் நிகழ்த்துவதற்கு வழிகோலிவைக் கிறது. காரவூடகத்திலேயே இச்சாறுகள் தாக்கம் நிகழ்த்துதல் கூடும். மேலும், பித்தமான து கொழுப்புச் சிற்றுருண்டைகளைச் சுற்றி நிலவும் மேற்பரப்பு இழுவிசையைத்தாழ்த்தி, இட்லப்போ (கொழுப்புப்பிரிநொதிச்சத்து) தாக்கம் நிகழ்த்த வழிபிறக்கச் செய்கின்றது. இவற்றைத்தவிரப், பித்தமானது சதைச்சுரப்பி யைத் தாண்டி, அதிக சதைச்சாற்றைச் சுரக்கச் செய்கின்றது; மேலும், உணவுக்குழம்பு " நீராளமாக' இருக்கும்பொருட்டு ஒரு கணியமான நீரையும் அதனுடன் கூட்டிவிடுகிறது. சோடியம் காபனேற்றுப்போன்ற சில தாதுப்பொருளுப்புகள் பித்தத்தின் - கூறாக அமைந்திருக்கின்றனவென முன்னர்க் கண்டோம். இவை, உணவினது அமிலத்தன்மையைக் குறைப்பதில் முக்கிய பங் கெடுத்துக்கொள்ளுகின்றன. இதனால், உணவு குடலில் அழுகிப் போகாது தடுக்கப்படுகின்றது.
சதைச்சாற்றில் விசேடமாக திரிச்சின், அமிலேசு, இலைப்பேசு என் னும் நொதிச்சத்துகள் உண்டு. இவற்றுள் திரிச்சின் சமிபாட

Page 97
18ர
உயிரினவியல்
டையாத புரதங்களைப் பெத்தான்களாக மாற்றிவிடும், அமி' லேசு சமிபாடடையாத காபோவைதரேற்றுகளை மாப்பசைவெல் கலம் (மோற்றோசு) ஆக மாற்றிவிடும். இலைப்பேசு கொழுப்புப் பொருளில் ஒருபகுதியைக் கொழுப்பமிலங்களாகவும் கிளிசரோல் ஆக. வும் மாற்றிவிடும்.
குடற்சாற்றில் அடங்கியிருக்கும் பல நொதிச்சத்துகளில் இரப்பிசின், அமிலேசு (மாப்பொருள் நொதிச்சத்து), மோற்றேசு (மாப் பசைநொதிச்சத்து) இப்லப்பேசு, இவற்றுேசு (பாைெதிச்சத்து] என்பன முக்கியமானவை. இவற்றுள், இரப்பிசின் பெத்தோன் களை அமினுேவமிலங்களாக மாற்றிவிடும்; மோற்றேசு மாப்பசை வெல்லத்தைக் கு"க்கோசு (திராட்சைவெல்லம்) ஆக மாற்றி விடும், இலற்றேசு பால்வெல்லத்தைக் குளுக்கோசாக மாற்றிவிடும். உணவுச் சமிபாட்டினால் பெற்ற, முடி வுபொருள் களாகிய குளுக் கோசு, அமிைேவமிலங்கள், கிளிசரோல், கொழுப்பமிலங்கள் என்பன மிக எளிதிற் கரையுந்தன்மையவாதலால், குடலினால். எளிதாக உறிஞ்சப்படுகின் றன. சமிபாடடைந்த உணவு, சிறு குடலிலிருந்து சுருட்குடற்குறையிடைவாயில் வழியாகப் பெருங்குடலை அடைகின்றது. உணவுக்குழம்பு நேரடியாகப் பெருங்குடலுள் செல் லாதவாறு, மேற்படி வாயில் தடுத்து நிற்கின்றது. இவ்வாயில் இருக்கும் குருட்டுக்குழலில் வாழும்பற்றீரியாக்கள், செ லுலோணோப் பிரித்தழித்துத் தன்மயமாகக்சுகூடிய பொருள்களாக்கிவிடுகின் றன. செலுலோசு (நொதிச்சத்துகளால் தாக்கப்படுவதில்லை.)
உணாவை 3உறிஞ்சுதலும் தன்மயமாக்கலும், உணவு, கரைசல் நிலை யிலேயே குடலினால் உறிஞ்சப்படுதல் கூடும். குளுக்கோசு, அமினோவமிலங்கள், கொழுப்பமிலங்கள் கிளிசரோல், என்பன நன்றாகக்கரையக்கூடி யனவாதலால், நன்கு உறிஞ்சப்படக்கூடி யனவாகும். உணவுக்கால்வாயில் எவ்வித மாற்றமுமடையாமலே, தாதுப்பொருளுப்புகள், அற்ககோல் என்பன நோடியாக உறிஞ் சப்படுகின்றன. உணவுக்கால்வாயின் (குடலின் உட்புறவுரை யாகிய மென்ற கட்டின்கீழ்க், குருதிமயிர்த்துளைக்குழாய்களும் நிண நீர்மயிர்த்துளைக்குழாய்களும் இருக்கின்றன. இந்தக் குருதி மயிர்த்துளைக்குழாய்களுள், குடலின் உட்புறவுறையினூடாக, உணவு சென்று சேருகிறது. இச்செயன்முறை, உணவுரிஞ்சுதல் எனப் படும். உணவு சுருட்குடலிலேயே பெரும்பாலும் உறிஞ்சப்படு கிறது; எனினும், நீர் போன்ற பதார்த்தங்களும் அற்ககோ லும். உப்புகளும் இரைப்பையில் வைத்து உறிஞ்சப்படலாம்.

எலி - சமிபாட்டுத்தொகுதி
181
சுருட்குடல் ஓரளவு புடைப்புள்ள து; தசைகளையுடையது. இதன து, உறிஞ்சற்பரப்பு சாடாளோள் என்று கூறப்படுகின்ற, விரல் போன்ற, நுணுக்கு எ றியங்களால் எத்தனையோ மடங்கு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ் -வொரு சடைமுளையின் மையத்தி லும், பாற்குழாய் என்னும் ஒரு சிறிய கலன் உண்டு. இப்பாற்குழாயைச் சு ற் றி அ ம் குருதிமயிர்த் துக்ளக் குழாய்களாலான வஃபவேலே ஒன்று அமைந்திருக்கிறது. பாற்குழாய் களுள் நிண நீரும், குருதி மயிர்த்து 2ளேக் குழாய்களுள் குருதியுமுண்டு. சாபோவைதரேற்றுகளின தாம் புர தங்களினதும் முடிவுபொருள்கள் [பல்வகை வெல்லங்கள், அமினோ வ மி ல ங் க ள்) குருதி மயிர்த்துளைக் 'குழாய்களால் உ றி ஞ் ச ப் ப ட, கொழுப்புகளின் முடிவுபொருள்கள்
ஓ சி ர - 3 - கொழுப்பமிலங்கள், கிளிசரோல்) பாற்குழாய்களால் உறிஞ்சப்படும். -சடைமுளைகளிலுள்ள குருதிமயிர்த் து ளை க் கு ழா ய் க ள் பல, ஒன்று
உரு. 41 சேர்ந்து சிறிய குருதிக்கப்களாக
எலியின் குடலிலுள்ள -உருப்பெறுகின் றன. அவைகளும்,
சடைமுளை அம்முறையே ஒன்றுசேர்ந்து, ஒரு
130. மயிர்த்துளைக்குழாய் பெரிய குருதிக்கலனாகின்றன, இக் L பாற்குழாய்
குருதிக்கலன் ஈரல்வாயினுளம் எனப் படும். இந்நாளம் குடலிலிருந்து ஈரலை அடைகிறது; ஈரலில் திரும்பவும் பல குருதிமயிர்த்துளைக்குழாய்களாகப் பிரிகின்றது. சடைமுளைகளிலுள்ள பாற்குழாய்கள் பல, ஒன்றுசேர்ந்து பெரிய நிணநீர்க்கலன்களாகின்றன. நிளாநீர்க்கலன்கள் குருதிக்கலன்க ளோடு தொடுக்கப்பட்டுள்ளனவாதலால், ஈற்றில் கொழுப்புகளும் குருதியருவியைச் சென்றடைகின்றன. பெருங்குடல், நீரை மட் டும் உறிஞ்சும். இப்பொழுது, உணவின் கழிவுப்பகுதி இருக்க மடைந்து கழிவாகக், குதத்தின் வழியாக வெளியேறும்.
ஈ ர லு க் கு க் காவிச்செல்லப்பட்ட உணவில், உடலின் ' தேவைக்கு மேலதிகமாக உள்ள வெல்லங்கள், விலங்கு மாப் பொருளாக (கிளைக்கோசனாக) மாற்றப்பட்டு, அங்கேயே சேமித்து

Page 98
182
உயிரினவியல்
வைக்கப்படும். தேவைக்கு மேலதிகமான அமினோவமிலங்களும் பிரித்தழிக்கப்பட்டுக் கிளைக்கோசனாகவும், சிறு நீருப்பு சிறுநீரமில மாகவும் மாற்றப்படும். கிளைக்கோசன் ஈரலிற் சேமித்து வைக் கப்படும், சிறு நீருப்பு, சிறுநீரமிலம் என்பன கழிவு உறுப்புகள் வழியாக வெளியேற்றப்படுகின் றன.
அமிைேவமிலங்களும் உப்புகளும் முதலுருவின் கூறுகளாக அமைகின்றன; அமைந்து, வளர்ச்சிக்கு உதவுகின்றன. வெல் லங்கள் ஒட்சியேற்றப்பட்டு, உடலிற்கு வேண்டிய வெப்பத்தை 'யும் சத்தியையும் அளிக்கின்றன. கொழுப்புச்சிற்றுருண்டைகள் உட்டோலில் ஒதுக்கவுணவாகச் சேமித்து வைக்கப்படும், இவ் ஒதுக்கவுணவு தேவைப்படும்போது பயன்படுத்தப்படும்.
வினாக்கள்
பெயர் குறிப்பிடப்பட்ட ஒரு விலங்கினது உணவுக்கால் வாயையும் அதிலுள்ள சுரப்பிகளையும் வெளியுருவப்படங் களின் உதவியோடு விவரிக்க.
எலியினது உணவுக்கால்வாயிலுள்ள பல்வேறு பகுதிகள் யாவை? சிறுகுடலில் உணவு அடையும் மாற்றங்களை
விவரிக்க. 3. உணவு உறிஞ்சப்படுதலையும் துன்மயமாதலையும்பற்றி, ஒரு
கட்டுரை வரைக.
செய்முறைப் பயிற்சிகள்
1. ஒரு எலியை வெட்டி அதன் உறுப்புகளைப் பொது வகை யால் சோதித்தறிக. அதன் வெளியுருவப்படத்தை வரைந்து பகுதிகளுக்குப் பெயரிடுக.
2. சிறுகுடலின் குறுக்குவெட்டுமுகத்தையுடைய (ஆக்கப்பட்ட) வழுக்கி ஒன்றை, நுணுக்குக்காட்டியின் கீழ்வைத்துச் சோதிக்க, அதன் வெளியுருவப்படத்தை வரைந்து', பகுதிகளுக்குப் பெயர் ரிடுக.

18)
அத்தியாயம் 24
எலி - சுற்றோட்டத்தொகுதி
புட்டிகளின் இதயவாகமப்பும் அது வேலைசெய்யுமாறும் : நெஞ் சறைக்குழியின் கண்ணோ காணப்படும் "பேரை'ப்பழ வடிவ முள்ள உறுப்பு இதயம் எனப்படும். இஃது. இநயவுறை (இதயவ றைச்சுற்றுச்சவ்வு) யினுள் அமைந்திருக்கிறது. இதயவுறை மிக மெல்லிய மென் றகட்டிலானது. இதிலிருந்து இநயவுறுைப்பாயம்
சுரக்கின்றது. இத்திரவம், இதயம் - வேலைசெய்யும் போது ஏற்படுகின்ற உராய்வை நீக்குகின்றது. இதயத்தின் அடிப்பகுதியி லிருந்து அதன் உச்சி வரைக்கும், ஒரு தவாளிப் புக் காணப்படுகின்றது.
உரு. 92 எலியினது இதயத்தின்
வெளியமைப்பு 1.A இடது சோணை 13.A வலது சோணை T,- \" இடது இதயவறை M, வலது இதயவறை 1'இதயவுறை T,1' இதயவுறைப்பாயம்
இத்தவாளிப்பு, அதனை ஏறத்தாழ இரு பாதி களாகப் பிரிக்கின் றது. ஓரளவான கொழுப்பு : இத்தவாளிப்பினுள்ளும் இதயத்தின்
அடியிலும் படிந்திருக்கிறது.
இதயமானது தசைகள் நிறைந்த ஓர் உறுப்பு: நான்கு. அறைகளையுடையது; முற்பக்கமாக இடது, வலது சோணையறை களையும்; பிற்பக்கமாகச் சோணைகளிலும் பெரிய இடது, வலது இதையவறைகளையும் உடையது. இடது சோலைரா, இடது இதயவரை யோடு
இடதுசோணைபம்பறைத்துவாரத்தினூடாகத் தொடர்பு

Page 99
184
உயிரினவியல்
கொண்டிருக்கின்றது. அதைப்போலவே. வலது சோணை, வலது இதையவறையோடு, வல் துரோணபம்பறுைத்துவாரத்தினூடாகத் தொடர்பு கொண்டிருக்கின்றது. இரு சோணைகளுக்கும் எவ்வித
1LA
H-TELA
- 5
40,
LITHா,
டாட
உரு. 43 எலியினா து இதயத்தின் உள்ளமைப்பு R. V' வலது இதயவறை; T, முக்கூர்வாயில்: R.A, V.S வலது சோணை பம்பறைப்பிரிசுவர் ; S.V அரைமதிவாயில், 0.A.V.ப முற் பக்க மேற்குழிநாளத் துவாரம்; A, V.0, முற்பக்க மேற்குழிநாளம்; 1,A நிருநாமநாடி ; A.A பெருநாடி ;- P,A நுரையீரனாடி; P.V.) நுரையீரனாள த்துவாரம் ; IL, A.V.S இடதுசோணை பம்பறைப் பிரிசுவர்: T.A இடது சோணை ; B.V இருகூர்வாயில்; (.) இதய நாண்கள்; (.0 சதைக்கம்பங்கள்.
மான தொடர்பும் கிடையாது. அவ்வாறே, இரு இதயவறைக (ளுக்குமிடையில் எந்தவிதமான தொடர்பும் இல்லை, சோணைபம் பறைத்துவாரங்கள், கூர்வாயில்கள் எனப்படும் வாயில்களால் காவல் செய்யப்படுகின்றன. இந்தவாயில்கள் சோணைகளிலிருந்து. குருதியான து இதயவறைகளுக்குள் மட்டும் பாயவிடுமேயன்றி,

எலி - சுற்றோட்டத்தொகுதி
185
அதற்கு நேர்மாறாக நிகழ இடந்தரா. இடது பக்கத்திலிருப்பது இருகடர்வாயில் என வும், வலதுபக்கத்திலிருப்பது முக்கூர்வாயில் எனவும் வழங்கப்படும். இதயவறைச் சுவர்கள் அதிக தசைக ளால் ஆக்கப்பட்டிருக்கின்றன, அத்தசைகள் எண்ணில்லாத "தாண்கள் போன்ற அமைப்புகளாக உயர்ந்து காணப்படுகின் றன, இவ் அமைப்புகள் சதைக்கம்பங்கள் எனப் பெயர்பெறும். இச்சதைக்கம்பங்களிலிருந்து இழை போன்ற சில அமைப்புகள் உண்டாகின்றன. அவைகள், இதயநாண்கள் எனப்படும், இவ் இதய நாண் சுளே இருகூர், முக்கூர் வாயில்களின் மடிகளை (மூடி களை) நிலைகுலையாதிருக்கும்படி, சதைக்கம்பங்களோடு தொடுத்துக் கொண்டிருக்கின்றன. குழிநாளங் கள் எனப்படும் மூன்று பெரிய குருதிக்கலன்கள், வலது சோணைக்குள் வந்து திறக்கின்றன; துரைரனுளங்கள் எனப்படும் இரு பெரிய குருதிக்கலன்கள், இடது சோணக்குள் வந்து கிழக்கின் றன. இவைகள் சோணைகளுடன் சேருமிடத்திலுள்ள துவாரங்கள் அரைமதி வாயில்களால் காவல் செய்யப்படுகின்றன, அலா மதிவாயில்கள் சோணைகளுக்குள் மட் டும் குருதிபாய அனுமதிக்கும், இடது இதயவறையிலிருந்து ஒரு பெரியகுருதிக்கலன் வெளிப்படுகின்றது. இது பெருநாடி எனப் படும்; அவ்வாறே, வ ல து இதயவறையிலிருந்து நுரையீரனுடி வெளிப்படுகின்றது. இவற்றின் துவாரங்களும் அரைமதிவாயில் சுளால் காவல் புரியப்படுகின் றன.
மாசுள்ள குருதி, குழிநாளங்களால் வ ல து சோணைக்குக் கொண்டுவரப்படுகின்றது. அதேநேரத்தில், தூயகுருதி நுரையீரலி லிருந்து இடது சோணைக்கு நுரையீரனாளங்களால் கொண்டு வரப்படுகின்றது; இரண்டு இதயச்சோணைகளும் ஒரே நேரத்தில் -சுருங்குகின்றன; சுருங்கும்போது, மாசுள்ள குருதி வலது இதய வறைக்குள்ளும், தயகுருதி இடது இதயவறைக்குள்ளும் பாய் கின்றது. பின்னர், இதயவ ைறகள் இரண்டும் ஒரே நேரத்தில்) சுருங்குகின்றன. அப்பொழுது, குருதி சோணைகளுக்குள் திரும் பிச் செல்லாதவாறு, கூர்வாயில்கள் தடைசெய்கின்றன, ஆகவே, வலது இதயவறையிலிருந்து மாசுள்ள குருதி நுரையீரனாடியி "னுள்ளும், இடது இதையவறையிலிருந்து தாயகுருதி பெருநாடி யினுள்ளும் பாய்கின்றன, மாசுள்ள குருதியானது, தூய்தாக்கப் படுதற்காக நுரையீரனாடிவழியாக, நுரையீரலுக்கு எடுத்துச்செல் லப்படுகின்றது; அதேசமயத்தில், பெருநாடிவழியாக எடுத்துச் செல்லப்படும் தூயகுருதி, உடலின் பல பகுதிகளுக்கும் சென்று பரவுகின்றது.

Page 100
186
உயிரினாவியல்
நாடித்தொகுதி: குருதியை இதயத்திலிருந்து அப்பால் ஏடுத் துச்செல்லும் குருதிக்கலன்கள் நாடிகள் எனப்படும். நாடித்தொ குதியானது பெருநாடிவில்லையும், அதன் கிளைகளையும், நுரையிரணு, யையும், அதன் கிளைகளையும் கொண்டுள்ளது. பெருநாடி வில் என்பது, இடது இதயவறையில் பெருநாடியாக ஆரம்பித்து,, இதயத்தைச் சு ற் றி, உடலின் புறப்பக்க நடுக்கோட்டை அடைந்து, புறப்பக்கமாகப் புறப்பக்கப் பெருநா1டியாக ஓடுகிறதுநிருநாபநாடி, இடது பொதுச்சிரசுநாடி, இடது காறையெலும்புக்ழ்ேநாடி என் னும் மூன் றுகிளைகள் பெரு நாடிவில்லிலிருந்து உண்டாகின்றன, நிருநாமநாடியானது வலதுபொதுச்சிரசு,11, வலது காறையெலும்புக்
உரு. 14 எலியின் நாடித்தொகுதி
I நிருநாம நாடி ; L0.0 இடது +13, பொதுச்சிரசு நாடி ! 1.3 இடது
காறையெலும்புக்கிழ்நாடி ; 4 பெரு. நாடிவில்: 1'.4 பூசார யீரனடி ! ப.ப இடது நுரையீரல் 1 I ஈரல் | I,A பழு விடைநாடி ; 11, 14 புறப்பக் கப்பெருநாடி ; (1' குழிக்குடனடி; A. MI முற் ப க் க நா ம டி ப் பு ந ா டி ; 11. T! வ ல து சி ப நீ ர க ந Iா டி 1 41 IL சுருட்குடல்; L.K இடதுசிறு நீரகம்; 1. இடது உற்பத்தி நாடி; IL,1,1. இ ட து பு டை தாங் கி
நாரிநாடி; 1'.ML பிற்பக்க நடுமடிப்பு
F. H.
நாடி; L.I இடது பொதுப்புடை தாங்கிநாடி; 0 வானாடி.
Liபட
ஈழ்நாடி என இரண்டு கிளைகளாகப் பிரிகிறது. பொதுச் சிரசு, நாடிகள் உட்சிரசுநாடி, வெளிச்சிரசு நாடி என இரண்டாகப் பிரிந்து, தலைக்குக் குருதி வழங்குகின்றன, 14 காறையெலும்புக்கிழ்நாடி கள் முன்னவயவங்ளுக்குக் குருதி வழங்குகின்றன. இதயத்தை
அடுத்து, அதன் பின்னால், புறப்பக்கப்பெரு நாடி பல பழுளிடை | நாடிகளாகப் பிரிந்து, விலாவெலும்புகளுக்கும் அதன் தசைகளுக்' கும் குருதி வழங்குகின்றது. பின்னர், அது மார்புவயிற்றிடை

எலி - சுற்றோட்டத் தொகுதி
18ா
மென்றகட்டிற்கூடாகச் சென்று, குழிக்குடனும் என்னும் (சோடி பில்லாத) இணைபடா நாடியாகி, ஈர லுக்குக் குருதி வழங்கும் ஈர ஞாடி எனவும், வயிற்றுக்குக் குருதிவழங்கும் இரைப்பைநாடி எனவும் மண்ணீரலுக்குக் குருதிவழங்கும் மண் ணீரனாடி எனவும் மூன்று கிளைகளாகப் பிரிகின் ற),து. குழிக்குடனடியை அடுத்து, அதன்பின் னால், மற்றொரு (சோடி யில்லாத) இணைபடாநாடி உற்பத்தியா கின்றது. இதுமுற்பம் தடுயடிப்புநாடி எனப்படும். இந்நாடி சிறு குட லுக்கும் குருதிவழங்குகின்றது. சிறுநீராநாடிகள் சிறு நீரகத்திற்கு எதிரில், வெவ்வேறு மட்டங்களில் உற்பத்தியாகின்றன. இனம் பெருக்கற்றொகுதிக்குக் குரு வழங்கும் உற்பத்திநாடிகள் சிறு நீரக | நாடிகளுக்குச் சிறிது பின் முனல் உண்டாகின்றன. ஆண் (முலை யூட்டி )களில் இவைகள் பார்துநாடிகள் என வழங்கப்படும். பெண் (முலையூட்டி ) களில் இவைகள் நவநாடிகள் எனப்படும், இரண்டு சிறிய புடைதாங்கிநாரிநா11ன் உற்பத்திநாடிகளுக்குப் பின்னால் காணப்படும். இவைகள் முதுகுத்தசைகளுக்குக் குருதிவழங்கு வன. இதன்மேல் பூப் 1, ாப்பெருநாடி, பின்னவயவங் (கால்) -- களுக்குக் குருதிவழங்குயா (1) வலது பொதுப்புடை தாங்கிநாடி, இடது பொதுப்புடைதங்கிநாடி என இரண்டாகப் பிரிகின்றது. இந்நாடிகள் இரண்டும் பிரியும் சந்தியிலிருந்து, நேர்க்குடலுக்குக் குருதி வழங் கும் பிற்பர்கநடுமடிப்புநாட்டி: வாலுக்குக் குருதி வழங்கும் வானுடி என்னும் இரு சிறியநாடி கள் உற்பத்தியாகின்றன. பின்னவயவங் களைச் சென்றடைந்தபின்பு, பொதுப்புடைதாங்கி நாடிகள் ஒவ் வொன்றும் உட்புடைதாங்கிநாடி வெளிப்புடைதாங்கிநாடி என இரண் டாகப்பிரிகின்றன.
நுரையிரனுடி: வலது இதயவறையிலிருந்து வெளிப்பட்டு, இரு கிளைகளாகப் பிரிந்து, இரு நுரையீரல்களுக்கும் செல்கின்றது - மாசுள் ளகுருதியைத் தாங்கிச் செல்லும் நாடி இஃதொன்றுமட்டு மேயாம், (நாடி எனப்பெயர் பெறினும், இதில், 1 காயகுருதி ஓடு வதில்லை)
2 குரிநாளங்கள் எனப்படும், பெரிய மூன்று குருதிக்கலன்க ளால் 3 மாசுள்ள குருதி மீண்டும் இதயத்திற்குக் கொண்டுவரப் படுகின்றது. அவை வலது 1 மேற்குழிநாளம், இடதுமேற்குழிநாளம், 5 கீழ்க்குழிநாளம் என்பனவாம். இவற்றுள், மேற்குழிநாளங்கள்
1 தாயகுரு தி நாடிக்குருதி எனவும் பழங்கப்பெறும். ' குழி நானம்
- பெருநாளாம் எனவும் வழங்கப்பெறும். 4 மாகள்ளகு கு தி நாள க்ரா எனவும் வழங்கப்பெறும், - மேற்குழி நா ளம் முற்பக்கர்குழிநாளம்: என வும் வழங்கப்பெறும். 3 கீழ்க்குழிநாளம் பிற்பக்கக்குழிநாளம் எனவும் வழங்கப்பெறும்.

Page 101
188
உயிரினவியல்
இரண்டும் உடலின் முற்பக்கப் (மேல்) பகுதிகளிலுள்ள மாசுள்ள குருதியை இதயத்துக்குக் கொண்டுவருகின்றன. கீழ்க்குழிநாள மா தனது உடலின் பிற்பக்க (கீழ்)ப் பிரதேசங்களிலிருந்து மாசுள்ள குருதியை இதயத்துக்குக் கொண்டுவந்து சேர்க்கின்றது. மேற் குழிநாளங்கள் ஒவ்வொன்றும் உட்கழுத்துநாளம், வெளிக்கழுத்து நானம், காறையெலும்புக்கீழ்நாளம் என்னும் மூன்று நாளங்கள் இணை வதால் ஆனவை. தலைப்பகுதியிலுள்ள குருதியைக் கழுத்து நாளங்கள் கொண்டுவர.காறையெலும்புக் கீழ் நாளம் முன் என வயவங்களிலிருந்து குரு தி யை க் கொண்டுவருகின் றது. மாசுள்ள குருதியைப் பின்னவயவங்களிலிருந்து கொண்டுவரும் இரண்டு புடைதாங்கிநாளங்களும், வாலிலிருந்து கொண்டுவரும் வாளைமும், இனம்பெருக்கல் தொகுதிப் பிரதேசத்திலிருந்து கொண்டுவரும் உற்பத்திநாளங்களும், சிறப்ப நீரகத்திலிருந்து கொண்டுவரும் சிறுநீரகநாளங்களும், ஈரலிலிருந்து கொண்டுவரும் சானுளங்களும்,- ஆக இவையெல்லாஞ் சேர்ந்து, கீழ்க்குழிநாளம் உருப்பெறுகின்றது. இடது உற்பத்தி நாளம், இடதுசிறு நீரக நாளத்துடன் சேர, வலது உற்பத்திநாளம் நேரடி யாகக் கீழ்க்குழி -
உரு. 95
- LFT
- L IL..
எலியின் நாளத்தொகுதி
L,C, இடது பொதுக் கழுத்து நாளம்; 1,3 இடது காறையெலும்புக்கீழ்நாளம் ; S.V.CLL இடது  ேம ற் கு ழி நாளம்; L,P.V இடது நுரை யீரனாளம்; 1.V.C கீழ்க்குழி நாளம் ;1.H இடது ஈராளம்; H. ஈர ல் வ ா யி னா ள ம்; L.R இடது சிறுநீரக நாளம்; L.G இடது உற்பத்திநாளம்; R.G வலது உற்பத்திநாளம்; L.I,I இடது புடைதாங்கிநாரி நாளம்; L.I இடது பொதுப் புடைதாங்கிநாளம்; வானா எம்.
- LIL

எலி - சுற்றோட்டத்தொகுதி
13ம்
நாளத்துடன் சேருகின்றது. முதுகிலுள்ள தசைகளிலிருந்து புடை தாங்கிநாரிநாளங்கள் மாசுள்ள குருதியைக் கொண்டுவருகின்றன. நுரையீரனுளங்கள், காயகுருதியைக் கொண்டுசென்று, வேறாக. இடது சோணைக்குள் திறக்கின்றன. சாயகுருதியைக் கொண்ட நாளம் இஃதொன்று மட்டுமே உடலில் இருக்கிறது.
எலியினது குருதிச்சுற்றோட்டத்தின் ஒரு பகுதியாக வாயிர் ருெருதியும் அமைந்திருக்கிறது. உடலின் குறிப்பிட்ட ஒரு பகுதி யிலிருந்து, மயிர்த்துணைக்குழாய்களாக ஆரம்பித்து, உடலின் இன் னொரு பகுதிக்குச் சென்று, மயிர்த்துளைக்குழாய்களாகப் பிரியும் சுற்றோட்டத் தொகுதி, வாயிற்றொகுதி எனப்படும். எலியில் Fஈரல் வாயிற்றெருகுதி அமைந்திருக்கிறது. அது, குடலில் ஆரம்பித்து, ஈர லில் முடிவடைகிறது. குடலிலுள்ள சடைமுளை களிற் காணப்படும், மயிர்த்துளைக்குழாய்கள் சமிபாடடைந்த உணவின்கூறுகளாய வெல்லங்கள், அமினோவமிலங்கள், தாதுப்பொருளுப்புகள் என் பவற்றை உறிஞ்சிக்கொண்டு, ஒருங்குசேர்ந்து, பெரிய குருதிக் கலன்களாக உருப்பெற்று, ஈரலை அடைந்து, அங்கு மீண்டும் குருதிமயிர்த்துளைக்குழாய்களாகப் பிரிகின்றன.
குருதியின் அமைப்பும் சேர்க்கையும்: முலையூட்டிகளின் குருதியில் திரவளிழையம் என்னும் ஒரு திரவமும் எண்ணிறந்த கலங்கள் அல்லது குருதிச்சிறுதுணிக்கை (குருதிக்குழியம்)களும் சிறுதட்டுகள் என் னும் பொருள்களும் அடங்கியிருக்கின்றன. திரவவிழைய மா னது அசேதனவுறுப்புப்புகளும், சேதனவுறுப்புப்பதார்த்தங்களும் கலந்திருக்கும் சிக்கலான ஒரு கலவையாகும். அசேதனவுறுப்புப் புகளின் மொத்தத்தொகை குருதியின் மொத்த நிறையின் 19 ஆகும். குருதியிலுள்ள உப்புகளில் பெரும்பகுதி சோடியத்தின் குளோரைட்டுகளும், இருகாபனேற்றுகளும் ஆகும். இவை தவிர்ந்த ஏனைய உப்புகளில் முக்கியமான வை: பொற்றாசியத்தின் குளோரைட்டுகளும், இருகாபனேற்றுகளும், சோடியம், பொற்ற சியம் என்பவற்றின் சல்பேற்றுகளும், பொசுபேற்றுகளும் ஆகும்' இந்த உப்புகள் குருதியில் இருப்பதனாலேயே அஃது, ஒரளவு காரத்தன்மையுள்ள எதிர்த்தாக்கம் உடையதாயிருக்கின்றது. குருதியிற் காணப்படும் சேதனவுறுப்புப்பதார்த்தங்களில் தலை மையானவை புரதங்களேயாம். புரதங்களுள் தலைமையானவை வெண்புரதங்கள், சிறுகுமிழிப்புரதங்கள், பைபிரினாக்கி என்பவை களாம். பொதுவாகக், குருதியிற் காணப்படும் மற்றைய பொருள் கள் குளுக்கோசு, கொழுப்புகள், அமிைேவமிலங்கள் என்ப வற்றை உள்ளிட்டனவாகும். சிறு நீருப்புப்போன்ற கழிவுப்பதார்த்

Page 102
190
உயிரின வியல்
-((29) 6)
தங்களும், அகஞ்சுரக்குஞ் சுரப்பி(கானில் சுரப்பிகளின் சுரப்பு -கள் அல்லது தூண்டுமுட்சுரப்புகளும் குருதியிற் காணப்படும்.
குருதிச் சிறுதுணிக்கைகள் இரண்டு வகைப்படும்; அவையா வன: செங்குருதிர்சிறுதுணிக்கைகள் அல்லது செங்குருதிக்குழியங்கள்., வெண்குருதிச்சிறு துணிக்கைகள் அல்லது வெண்குருதிக்குழியங்கள் ஆகும். செங்குருதிக்குழியங்கள் இரு குழிவுள்ள வட்டத்தட்டுகள் போன்
றவை. அவற்றின் சராசரி -- K.B.C. விட்டம் 1 - 5 மைக்கிரன்
கள் (அல்லது I] -0000005 மீற் றர்) ஆகும். முழுவளர்ச்சி யடைந்த எலி ஒன்றில், ஒரு கனமில்லிமீற்றர் குருதியில் 70 இலட்சம் தொடக்கம் 1 கோடி செங்குருதிக்குழி யங்கள் வரை காணப்படும். ஒவ்வொரு செ ங் குரு தி ந் குழியமும் மீன் சத்தியுள்ள மிகமெல்லிய மென்றக' டால் சூழப்பட்டிருக்கும். மீள்சத்தியுள்ள இம்மென்
றகட்டாலான கவசம், செங் உரு. 96
"குருதிக்குழியங்களைக் காட்
டிலும் பெரும்பாலும் குறை -எலியின் குருதிச்சிறுதுணிக்கைகள்
வான் விட்டமுள்ள குருதி KB) செங்குருதிச்சிறுதுணிக்கை
மயிர்த்துளைக்குழாய் க ளு க் WW B1 வெண்குருதிச் சிறுதுணிக்கை
கூட ாக, அவை செல்வதற்கு 1 குருதிச்சிறுதட்டுகள்
இடங்கொடுக்கின்றது . இவற்
றில் கரு என்பது கிடை யாது. ஆனால், இவற்றினது கலவுருவில், குருதிநிறச்சத்து என்னும் மஞ்சள் கலந்த செம்மஞ்சள் நிறமுள்ள நிறப்பொருள் (நிறப் பசை) உடைய சிறுமணிகள் அடங்கியிருக்கின்றன. செங்குரு திக்குழியங்களைப் நோக்கும்போது அவை மஞ்சள் கலந்த செம். மஞ்சள் நிறமுடையனவாகவே தோற்றும்; எனினும், தொகையா -கக் குருதியில் இருக்கும்போது, சிவப்பு நிறமாகத் தெரியும். குருதி நிறச்சத்து ஒட்சிசனில் அதிகம் நாட்டமுடையது; அதனு டன் சேர்ந்து ஒட்சிக்குருதிநிறச் சத்து ஆகின்றது.
#1 மைக்கிரன் ஒரு மீற்றரில் பத்தியட்சத்தில் ஒரு பங்கு ஆகும்.
அதாவது: ப்ப்ப்ப்ப்ப்1 மீற்றர் ஆகும்.
- 4,

எலி - சுற்றோட்டத்தொகுதி
191
வெண்குருதிக்குழியங்கள் பல வகையின; அமீபவசைவு உடையன. இவைகளை இரு பெரும்பிரிவுகளாகப் பாகுபாடு செய்யலாம், அவை, சிறுபளாரியுள்ள வெண்குருதிக்குழியங்கள், சிறுமணி பயில் வெண் குருதிக்குழியங்கள் என்பன ஆகும். இவற்றில் கரு உண்டு. இவை செங்குருதிக்குழியங்களிலும் சிறிதளவு பெரியன. ஒப் பீட்டளவில் செங்குருதிக்குழியங்களைக் காட்டிலும் மிகக்குறைந்த எண்ணிக்கை உடையன. ஒரு கனமில்லிமீற்றர் குருதியில், 6000 தொடக்கம் 18,000 வரை காணப்படும்.
குருதியிலுள்ள சிறுதட்டுகள் (அல்லது குருதிச்சிறுதட்டுகள்) மெய்ம்மையான கலங்களல்ல; ஒருவேளை, குருதிச்சிறுதுணிக்கை களின் சில விளைவுப் பொருள்கள் (அல்லது விளைவுகள்) ஆக இருக்கலாம். சிறுதட்டுகள், வெண்குருதிக்குழியங்கள் செங்குரு திக்குழியங்களிலும் மிகச்சிறியவை; ஒழுங்கில்லாத வட்டத்தட்டு கள் போன்ற வடிவமுடையவை. குருதிக்கலன்களிலிருந்து குரு தியை வெளியே எடுத்தவுடன் சிறுவட்டத்தட்டுகள் மிகவிரை வில் பிரிந்தழிந்து போகிறபடியால், அவற்றின் எண்ணிக்கை யைக் கண்டறிதல் மிகவும் முட்டான (கடினமான) விடயமாகும், ஒரு கனமில்லிமீற்றர் குருதியில், 5000 தொடக்கம் பத்திலட்சம் சிறுதட்டுகள் வரை உண்டென்று நம்பப்படுகின்றது.
குருதியின் தொழில்கள்: உடலின் பல்வேறு இழைங்களுக்கு ஒட் சிசனைக் காவிக்கொண்டு "செல்வதற்குக் காரணமாயமைவன செங்குருதிக்குழியங்களே. நுரையீரல்களில் குருதி நிறச்சத்தானது ஒட்சிசனோடு சேர்ந்து மிகவும் உறுதியில்லாத சேர்வை ஒன்றை -உண்டாக்குகிறது. இச்சேர்வை ஒட்சிக்குருதி நிறச்சத்து எனப் படும். இது, குருதிமயிர்த் துளைக்குழாய்களில் தன்னிடமிருக்கும் ஒட்சிசனை எளிதாகப் பறிகொடுத்துவிடும். சேர்க்கையெறிகை யால் விளைந்த கழிவாகிய கரபனீரொட்சைட்டைச் செங்குருதிக் குழியங்கள் சேர்த்து, நுரை யீரலுக்குக் கொண்டுவருகின்றன. ஒவ் வொரு செங்குருதிக்குழியமும், ஏறத்தாழத் தன து கனவளவிற் பாதியளவு ஒட்சிசனைக் காவிச்செல்லும்.
குருதியிலுள்ள திரவவிழையமான து சமிபாட்டின் விளைவை (உணவுக்கூறுகளை) உணவுக்கால்வாயிலிருந்து முதலில் ஈரலுக் கும், பின்னர் உடலின் பல்வேறு பகுதிகளிலுள்ள இழையங்களுக் 'கும் காவிச்செல்லுமாற்றால், போசணைக்குரிய தொழிலைச் செய் கின்றது. சேர்க்கையெறிகைக்கழிவாகிய சிறுநீருப்பு, சிறுநீரமி லம் (இவை முக்கியமாக ஈரலில் உண்டாக்கப்படுகின்றன)

Page 103
291
உயிரினவியல்
நதியி இற்றால், அன்றன: சதி நடு"
போன்ற நச்சுப்பொருள்களை,- கழிவுகளை அகற்றுவதில் சிறப். படைந்துள்ள சிறுநீரகம் போன்ற உறுப்புகளுக்கு எடுத்துச் செல்கின்றது.
அகஞ்சுரக்குஞ்சுரப்பிகளின் சுரப்பு (காண்டுமுட்சுரப்பு)களே அவை வேண்டப்படுமிடங்களுக்குக் காவிச்செ லுமாற்றால், திரவ விழையமானது இரசாயனப்பதார்த்தங்களைப் பரம்பச் செய்கின் றது.
முழு உடலின் வெப்பநிலையும் ஒரே சீரான தாயிருக்குமாறு, தசைகளின் இயக்கத்தா லுண்டாகும் வெப்பத்தைப் பரம்பச்செய் கின்றது.
குருதி உடலைப்பாதுகாக்கும் தொழிலைச் செய்கின்றது. வெண் குருதிக்குழியங்களே பாதுகாப்புத் தொழிலைச் செய்கின் றன. பற்ரீரியா போன்ற நோய் விளைக்கும் பிறபொருள்களைத் தம் உடலில் உட்செலுத்திக் கொள்வதனால், நோய் தாக்காது பாது காக்கின்றன. பிரிந்தழிந்த செங் தருதிக்குழியங் கள் போன்ற, குருதியிலுள்ள கழிவுத்துணரிக்கைகளை உட்செலுத்திச் சமித்துக் கொள் ளுமாற்றால், வெண்குருதிக்குழியங்கள் உடலின் 'தோட்டி" யாகப் பணியாற்றுகின்றன, பற்றீரியாக்களினால் விளையும் நச்சு விளைவை எதிர்த்தாக்கம் நிகழ்த்தி நடுநிலையாக்கவோ, அந்த பற் றீரியாக்களைத் தான் அழிக்கவோ கூடிய பிறபொருளெதிரிகளேர் சுரப் பதனால், உடலின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கிறது. இப் பிறபொருளெதிரிகள், நாளடைவில் சில குறிப்பிட்ட நோய்களால் பாதிக்கப்படாதிருத்தற்குக் காரணமாகின்றன.
குருதியுறைதல்: குருதிக்கலன் களுள் ஓடும் குருதி, ஒரு பாய் பொருள். ஆனால், அது குருதிக்கலனை விட்டு வெளிப்பட்டதும் உறைந்துவிடுகிறது. இவ்வாறு நிகழ்வது, குருதிக்கலன்கள் உடையும்போது, குருதி அதிகமாக வெளியேறாது தடுக்கப் பெரி தும் உதவுகின்றது.
குருதியின் முக்கிய இயல்புகளில் ஒன்று அதன் உறைதல் வலு வேயாகும். குருதி உா பயும் (திரளும்) போது, பைபிரினக்கி (என் னும் புரதம்) டைபிரின் எனப்படும் மிக மெல்லிய இழைகளுள்ள, அடர்த்தியான வலை வேலையாக மாற்றப்படுகின்றது. இந்த வலை வேலையினுள் குருதிச்சிறு துணிக்கைகள் சிக்குப்படுகின்றன. துரம்பின் என்னும் நொதிச்சத்தே பைபிரின் உண்டாவதற்குக் காரணமாகின்றது. இந்நொதிச்சத்துக் குருதியில் உயிர்ப்பில்லாத - வடிவத்தில் புரத்நூரம்பின் அல்ல து தூரம்பின் முதல் என்னும் பெய ரோடு இருக்கிறது. குருதியிலுள்ள கல்சியவுப்புகளின் தாக்கத்தின

எலி - சுற்றோட்டத்தொகுதி
19)
லேயே புரத்தாம்பின், காம்பிகை மாற்றப்படுகின்றது. பொது வாகச் சாதாரண மான குருதிக்கலன்களில் குருதி உறைவதில்லை, ஏனெனில், குருதியில் உண்டாகும் அரம்பினை தி, துரம் 1 னெடுர் என் னும் பதார்த்தம் நடுநிலையாக்கிவிடுகின் 11 து. ஆனல், குருதிக்கடன் ஒன்றிற்கு ஊறு பரப்படும்போது, பரம்போ பாயோ என்னும் ஒரு பதார்த்தம் ஊரடைந்த தலங்களிலிருந்தும் சிறு தட்டுகளிலி ருந் தும் வெளிப்படுத்தப்படு கின்றது. இந்நிகழ்ச்சி துரம்பினெதிரி யைப் பயனற்றதாக்கிவிடு-ன் Tா,து. எனவே, புரத்துரம்பின் உயிர்ப்புப்பெற்று, பைப்பரின் உண்டாவதைத் தீவிரப்படுத்துகின்
ந க -
கல்சியவுப்புகள் செயபாதாக்கப்படுமாயின் , குருதி ஒருக் கா லும் உறையாது. துர்ப்பாக்கியசாலிகளான சில மனிதர்களின் குருதி உறைவதில்லை. கார் பேருகத், தோலில் ஏற்படும் ஒரு சிறிய காயந்தானும் தொடர்ந்து குருதிவெளியேற்றம் நிகழக் காரணமாகின்றது. இந்நியமை, குருதியுறையா நோய் எனப்படும்..
வினாக்கள் 1. முலையூட்டி களின் 201தயத்தினது உள்ளமைப்பு, வெளி
யமைப்பு என்பவற்றைப், பெயரிடப்பட்ட விளக்கப்படங் கள் வரைந்து காட்டுக. 2. ஒரு குருதிச் சிறு, பாரிக்கை இடது சோணையிலிருந்து
வலது சிறு நீரகத்திற்கும், மீண்டும் அங்கிருந்து இடது சோணைக்கும் செல்லும் பாதையை, முறைப்படி கூறுக. நுணுக்குக்காட்டியின்கீழ்க் குருதி எவ்வாறு தோற்ற
மளிக்கும் என்டf001த விவரிக்க,
குருதி எவ்வாறு உறைகின்றது? 5. குருதியின் பல்வேறு தொழில்கள் எவை?
செய்முறைப் பயிற்சிகள் 1. எருத்து மாட்டின் அத. இதயத்தின் அகப்பக்க, புறப்பக்கத் தோற்றங்களை வரைந்து, பகுதிகளுக்குப் பெயரிடும்.
2. எலியினது தலைமையான குருதிக்கலன்களைக் காட்டத் தக்கவாறு, ஓர் எலியை வெட்டிச் சோதிக்க, அதனை வரைந்து, பகுதிகளுக்குப் பெயரிடுக.
3. குருதிச் சிறு துணிக்கைகளைக் காட்டத்தக்க முறையில் ஆக்கப்பட்ட வழுக்கி ஒன்றை, நுணுக்குக்காட்டியின் உயர்வலு வின்கீழ் வைத்துச் சோதிக்க.
215-14

Page 104
194
அத்தியாயம் 25
எலி - சுவாசத்தொகுதி
வளிமண்டலத்திலிருந்து வளியை உள்ளே வாங்கி, வெளியே விடுதல் தான் சுவாசம் எனச் சாதாரணமாகக் கூறிக்கொள்ளு கிறோம். சுவாசம் அல்லது சுவாசித்தல் என்னும் செயன் முறையை நுணுகி ஆராய்ந்தால் அஃது அதிக ஆழமான பொரு (ளுடையது என்பது விளங்கும், சத்தியை அடக்கிய உணவுகளி லிருந்து, அதனை (சத்தியை) விடுவிக்கும் செயன்முறையும், ஒட் சிசனைப் பெறுவதற்கும், காபனீரொட்சைட்டை அகற்றுவதற்கும் காரணமாகிய பொறிமுறையும் ஆகிய இரண்டும் சேர்ந்தே சுவா "சம் எனப்படும். இச்செயன்முறை நிகழும்போது, கழிவுப்
பொருள்கள் உண்டாகும். அவை, வெளியே அகற்றப்படும். பல் வேறு இழையங்களிலுள்ள கலங்களுக்குக் குருதிகாவிச்சென்று வழங்கிய குளுக்கோசு என்னும் வெல்லமான து. கலங்களின் கலவுருவினாற் சுரக்கப்படும் சுவாசநொதிர்சந்துகளால் பிரிந்தழிவத னல், அவற்றில் அடைபட்டிருந்த சத்தி விடுவிக்கப்படுகின்றது. இவ்வாறு, தொழிற்படுவதனால் இச்சுவாச நொதிச்சத்துகள் சிறிது நேரத்துள் செயலற்று விடுகின்றன. செயலற்றுத் தொழிற்படா திருக்கும் இந்நொதிச்சத்துகளை மீண்டும், உயிர்ப்புடன் தொழி லாற்றச் செய்யும் இயல்பு ஒட்சிசனுக்கு உண்டு. ஆகவே, ஒட் சிசன் செய்யும் இவ்வுதவியினால் சத்தியானது இடையாடின்றித் தொடர்ந்து விடுவிக்கப்படுகின்றது. எனவே, சத்தியை விடுவிக் கும் இச்செயன்முறை நிறைவு பெறுவதற்கு ஒட்சிசன் இன்றி யமையாதது. ஒட்சிசன் தொழிற்படும்போது உண்டாகும் கழி வுப்பொருள்களாகிய காபனீரொட்சைட்டும் நீரும் வெளியேற்றப் படவேண்டும். பின்வரும் இரசாயனச் சமன்பாடு சுவாசித்தல் பற்றிய விவரம் முழுவதையும் விளக்குவதில்லை. அச்சமன்பாடு வருமாறு:
காபன், ஐதரசன், ஒட்சிசன் +6 ஓட்சிசன்>சத்தி+காபள்+ஒட்சிசன்,
+ 6 துதரசன், ஒட்சிசன் (குளுக்கோசு +ஓட்சிசன்>சத்தி+காபனி ரொட்சைட்டு+நீர்)
[0, 1, 0 +6 0 +ENEGRY +600, +GH,0]

எவி - சுவாசத்தொகுதி
105
கலங்களில் ஐதான கரைசல் நிலையிலேயே குளுக்கோசு காணப் படுகின்றது. உடலின் வெப்பநிலை இதனை எரிக்கப்போதுமான தாயில்லை, எனவே, மிக மந்தமாகவே குளுக்கோசினின்றும் சத்தி விடுவிக்கப்படுகிறது. சுவாசநொதிச்சத்துக்கள் சத்தி விடுவிப்பை (கலங்களில்) ஊக்கிவிடுகின்றன.
எலி, சுவாசித்தலுக்கு வேண்டிய ஒட்சிசனை வளிமண்டலத்தி லிருந்து பெற்றுக்கொள்ளுகிற து. திரும்பவும் கழிவுப்பொருளா
கிய காபனீரொட்சைட்டை யு ம்
நீ ரை யு ம் வளிமண்டலத்தில் வெளியேற்றிவிடுகின்றது. இச் செயன்முறை எவ்வாறு நிகழு கி ன் ற தெ ன வு ம், அதனோடு தொடர்புள்ள உறுப்புகள் எவை எனவும், இனிக் கற்றுக்கொள்ளு" :
வோம். | உருக 97 எலியினது சுவாசத்தொகுதியின்
வளிமண்டலத்திலுள்ள வளி முதற்பகுதி
வெளிமூக்குத்துவாரங்களால் உள்ளே 17.0, முக்கறை: T நாக்கு; வாங்கப்படுகிறது. அண்ணத்தினுல் P அண்ணம்; 3 மூச்சுக்குழல் வாய்க்குழியினின்றும் பிரிக்கப் வாய்; E. G. மூச்சுக்குழல்வாய் பட்டுள்ளதும், அவ்வாய்க்குழியின் மூடி ; T.0.N.C. மூக்கறையின் மேல் அமைந்திருப்பதுமான முக் உட் துவாரம் ; ) களாய்; கறையினூடாக, உள் ளி ழுக் கப் "T.I. மூச்சுக்குழற்றொடுவை, பட்டவளி செல்லுகின்றது. மூக்
கறை பிற் ப க்க மாகச் சென் று தொண்டையின் 'கூரையில் திறக்கின்றது. தொண்டையின் "தள 'த்திலே மூச்சுக்குழல்வாய் என்னும் துவாரம் அமைந்திருக்கிறது. இத்துவாரம் மூச்சுக்குழற்றெடுவைக்கு இட்டுச்செல்லுகின்றது. இதன், மேலே, மூச்சுக்குழல்வாய்மூடி என்னும் ஒரு மடி தொங்கிக்கொண்டி ருக்கிறது. உணவு உண்ணும்போது, உணவுத்துணிக்கைகள் தப் பித்தவறி மூச்சுக்குழற்றெடுவைக்குள் செல்லாவண்ணம், இது தடுத்துக்கொள்ளும். மூச்சுக்குழற்றொடுவையின் முதற்பகுதி, குரல்வளை எனப்படும் குரல்வளையினகத்தே, தானுண்கள் அல்லது குரற்பெட்டி இருக்கிறது. இக்குரனாண்கள் ஒருசில சுசியிழையங்க, ளால் வெளிப்பக்கத்தில் தாங்கப்படுகின்றன. நெஞ்சறையை மூச்சுக்குழற்றொடுவை அடைந்ததும், இரு சுவாசப்பைக்குழாய் (மூச் சுக்குழற்கவர்)களாகப்பிரிந்து, இரண்டு நுரையீரல் பகுதிகளுக் 1கும் ஒவ்வொன்றாகச் செல்கின்றது. நெஞ்சுக்ககூட்டுக்குழி என்னும்

Page 105
106
உயிரினவியல்
சிறப்பான அறையினுள்ளே இருக்கின் றனவும், க ட ற் பஞ்சு போன் ற ன வு மா கி ய உறுப்புகளே நுரையீரல்கள் எனப்படும். நுரையீரல்கள் இருப்பர்சிடமாசா நெர் சுக்கூட்டுக்கு ழி யி னு ள் ளே, இரு நுரையீரல்களையும் நெரு பக்ரகூட்டுச்சவ்வு படிப்போர்த் துக் ெக ா ண் டி கு # கி ற து . வலது நுரையீரலில் நான் கு சோதோ கள் உண்டு. அவ ற்றை முற்பக்க முனையிலி ருந்து முரயெ ப ப் ப க் க இனோபடாச்சோனோ, பிஎது முற் பக்கர்சோப்பா, வது பிர்பர்கர் சோணா, பிற்பக்க இணைபடாச் சோnை எ பின க் கூ ற ல IT ம். இடது நுரையீரல் ரெண்டு சோணைகளை மட்டும் உடை
உரு. HE யது. அவை, இடது முர்டாக்
பாலியினா து நுரையீரலின் அமைப்பு கச்ரோப்ள, இடது பக்கர்
H G, மூச்சுக்குழல் வாய்மூடி சோப்ரா எனப்படும்,
'I மூச்சுக்குழற்றெடுவை;
R.B, வடி தசுவாசப்பைக்குழாய்; சுவாசப்பைக்குழாய்கள்
1..B, இடதுசுவாசப்பைக்குழாய்; நுரையீரல்களின் உட்பக்கத்
A.A. முற்பக்க இணை ப ட ாச் தில் பல சுவாசப்பைச் சிறுகுழாய்
சோணை ; 1,4, வலது முற்பக்கச் [ மூச்சுக்குழற்கவர்க்கி 2 |
சோணை: R.I'. வலது பிற்பக்கச் களாகப் பிரிகின்றன. சுவா
சோணை : '.A. பிற்பக்க இணை சப்பைச்சிறுகுழாய்கள் ஒள்
படாச்சோகை; L.A. இடது முற் வொன்றும் ஒரு வளிப்பை
பக்கச் சோணைா; 1,T. இடது பிற் (காற்றுப்பை) யாக முடி.
பக்கச்சோணை, வடைகின்றது. நுரையீரல் கள் ஒவ்வொன்றிலும் எண்ணிறந்த வளிப்பைகள் உண்டு. இவைகள், ஒன்றோடொன்று தொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒவ் வொரு வளிப்பையும், மேலும் பல சிறு சோனோ,களாகப்பிரிக்கட், பட்டிருக்கும். இச்சோணைகள் சிற்றறைகள் எனப்படும். ஒவ்வொரு சி ற் றறையையும் சுற்றிப் பல குருதிமயிர்த்துளைக்குழாய்கள் வdை

எலி -- சுவாசத்தொகுதி
111
வே லை போ ன் று அமைந் திருக்கும். இப்பாயிர்த்துடளைக் குழாய்கள் நுரையீரளைங்க (ளுடனும் நுரையீரனடிகளு டனும் தொடுக்கப்பட்டிருக் தம். Iபயிர்த்துட்ளக்குழாய்க ளிலுள்ள குருதியும் சிற்றறை யிலுள்ள வளியும், இரண்டு 1மிகமெல்லிய மென் றகடுக ளால் பிரிக்கப்பட்டிருக்கும், மயிர்த்துட்ளக் குழாய் க ளி ன்
சுவரும் விற்றறையின் சுவ உரு. 9:
ரும் ஆகிய இரண் டு  ேம எலியினது நுரையீரலின் அ49ாமப்பு
அம்மென்றகடுகளாம். இம் (தொடர்ச்சி)
மென் றக டு க ளு க் கூ டா சு 1: சுவாசப்பைச்சிறுகுழாய்!
வாயுப்பரால் நி க ழு கி றது." (1) வளிப்பைக்கான்;
வாயுப்பரவல் காரணமாகக் "',A, நுரையீரனளத்தின் சிபாரங்ளை,
காபனீரொட்சைட்டுப் பறி
கொடுக்கப்படுகிறது; ஒட்சி சன் உறிஞ்சப்படுகிறது. செங்குருதிக்குழியங்களில் உள்ள குருதி நிறச்சத்து ஒட்சிசனைப் பெற்றுக்கொள்ளுகிறது; பெற்றுக்கொண்டு, நுரையீரனாளத்தின் வழியாக இதயத்தை அடைந்து, அங்கிருந்து இழையங்கஎளுக்கு எடுத்துச்செல்லப்படுகின்றது. இழையங்களில் உள்ள கலங்களில் ஒட்சியேற்றம் நிகழுகிரது - ஒட்சியேற்றத்தின் விளைவாகிய காபனீரொட்சைட்டும், நீரும், சத்தியும் வெளியிடப்படு சின்றன. சத்தியை உடல் பயன்படுத்துகிறது. காபனீரொட் சைட்டும் நீரும் குருதியருவியிற் கலந்து, நுரையீரலை அடைந்து, அங்கிருந்து வெளியேற்றப்படுகின்றன *
சுவாரப்பொறிமுறை: விலாவெலும்புகள், மார்புவயிற்றிடைமென் றகடு என்பவற்றின் அசைவினால் நுரையீரற்காற்றோட்டம் தாக் கப்படுகிறது. நுரையீரல் பசுளை மூடிக்கொண் டிருக்கும் நெஞ்சுக் கூட்டுக்குழியுள் எள்ளத்தனயேனும் வளி புகுதல் முடியாது. நுரையீரல்களின் உட்பகுதியே வெளியேயுள்ள வளிமண்டலத் தோடு தொடர்பு வைத்துக்கொண்டிருக்கிறது. மார்புவயிற்றிடை மென்றகடு, ஒரு வில்மச்சு 'ப்போன்று அமைந்திருக்கிறது. அதன் -வளைவு நெஞ்சறைக்குழிப்பக்கமாக முனைத்துக்கொண்டிருக்கிறது. நெஞ்சறைச்சுவரிலிருக்கின்ற விலாவெலும்புகள் உட்பழவிடைத் து:ாகளாலும் வெளிப்பழளிடைந்தரைகளாலும் அசைக்கப்படக்கூடி

Page 106
193
உயிரினவியல்
யனவாக அமைந்திருக்கின்றன. உட்சுவாசத்தின் (மூச்சு உள் வாங்கும் போது மார்புவயிற்றிடைமென் றகடு அதனது தசை கள் சுருங்குவதனால், தட்டையாக்கப்படுதலோடு, விலாவெலும்புர்
IL.
UR ).
4 H
உரு. 100
எலியின் சுவாசப்பொறிமுறை T மூச்சுக்குழல்; H இதயம்; - ",0, நெஞ்சுக்கூட்டுக்குழி A-TV. வயிற்றறையின் முன்சுவர்; 1) மார்புவயிற்றிடைமென்ற கடு; & விலாவெலும்பு; L.L.. இடது நுரையீரல்.
களும் முன்னோக்கிப் பக்கப்பாட்டில் அசைகின்றன. அதனுல், நெஞ்சுக்கூட்டுக்குழியின் கனவளவு அதிகரிக்க, வளியானது வெளிமூக்குத்துவாரங்கள், மூக்கறை, தொண்டை, மூச்சுக்குழல் வாய், மூச்சுக்குழற்றொடுவை, சுவாசப்பைக்குழாய்கள், சுவாசப் பைச்சிறுகுழாய்கள் வழியாக, ஈற்றில், சுவாசப்பைச் சிற்றறைக ளுக்குள் உள்வாங்கப்படுகிறது. விலாவெலும்புகளும் மார்புவயிற் றிடைமென்றகடும், பொதுவாக உள்ள நிலைக்கு மீண்டதும், வளியானது உட்புகுந்த அதே வழியாக வெளியேற்றப்படுகின் றது. இச்செயல் வெளிச்சுவாசம் எனப்படும். இந்தச் சுவாச அசை வுகளால் எக்காலத்திலாவது, நுரையீரல்களிலிருந்து முழுவதாக வளியை வெளியேற்றி விடல்முடியாது. எவ்வளவு அதிகமாக வெளி யேற்றியபோதுங்கூட, நுரையீரல்களுக்குள் ஒரு சிறிய கணிய முள்ள வளி, எப்போதும் இருக்கும், அது, மிதிவளி எனப்படும்.

எலி - சுவாசத்தொகுதி
190
மூக்கறையான து', வளி போக்குவரவு செய்யும் பாதையாக இருப்பதோடு அமையாது, மேலும் பல தொழில்களையும் செய் கின்றது. உட்சுவாச வளி, சுருளெலும்புகளின் பரந்த மேற்பரப் புக்கூடாகச் செல்வதால், வளியிலுள்ள தாசுகளைச் சீதமென்றகடு பிடித்துக்கொள்ளுகிறது; எனவே, நுரையீரல்களில் புகும் வளி, "தூசியில்லாததாய் இருக்சு, இஃது உதவுகிறது: உடலின் வெப்ப நிலைக்கு உட்சுவாசவளியின் வெப்ப நிலையை உயர்த்துகிறது, மேலும், மூக்கறை மணப்புல னுறுப்பாகவும் அமைந்திருக்கிறது. மூக்கறையிலுள்ள தேவுட்புறவுறையே மணப்புலனுணர்வுக்குக் காரண மாகின்றது.
தவினாக்கள் எலியின் சுவாசத்தொகுதியை விவரிக்க. சுவாசம் என்பது யாது? அதனால், நுரையீரல், இழை யக்கலங்கள் என்பவற்றில் நடைபெறுவனவற்றைக்
கூறுக. 3. சுவாசப்பொறிமுறையை விளக்குக.
செய்முறைப் பயிற்சிகள் 1. 'கசாப்பு'க்கடைக்காரனிடமிருந்து எருத்துமாட்டின் நுரை யீரல்களைப் பெற்று, அதன் வெளியுருவப்படத்தை வரைந்து, பகுதிகளுக்குப் பெயரிடுக.
2. எலியினது நெஞ்சறையிலுள்ள உறுப்புகளை வெட்டிச் சோதித்தறிக.
3. உரு. 100 இல் காட்டியபடி -
சுவாசப்பொறிமுறைப் பரி சோதனையைச் செய்து காட்டுக.

Page 107
20]
அத்தியாயம் 26 எலி -சிறுநீர்ச்சனனித்தொகுதி ஆண் எலியின் சிறுநீர்ச்சனனித் தொகுதி : இத்தொகுதி இரு சிறு நிரகங்கள், இரு விதைகள், அவற்றோடு தொடர்புள்ள கான்கள் என்,
_L.A.
L ப.
L.
-L B,
_14']
LF
IL FI
- L 7
FIL
உரு. 101 ஆண் எலியினது சிறுநீர்ச்சனனித்தொகுதி - L. இடது அதிரனற்சுரப்பி; L,K இடது சிறு நீரக ம்; 1,0 இடது சிறுநீர்க்குழாய்; ..!" இடது சுக்கிலப்புடகம்;. IL.0 இடது உறைவுச்சுரப்பி; ப.B சிறுநீர்ப்பை; ப.Y,1) இடது அப்பாற்செலுத்தி; L.1' இடது முன்னிற்குஞ்சுரப்பி; 11 சிறு நீர் வழி; 13.0 கூப்பரின்சுரப்பி; 1' ஆண்குறி; 18.P முன்றேற் சுரப்பி; G.ML கிரிமாத்தர் தசை; (H.ML ஆட்சித்தசை; L.T இடது விதை; (G H விதைமேற்றினரிவுத்தலை;
(ப. 2 விதைமேற்றிணி வுடல்; மே 18 விதைமேற்றிணிவுவால்.

எலி - சிறு நீர்ச்சனனித்தொகுதி
201
பவற்றைத் தன்னகத்துடையது. வயிற்றறையின் புறப்பக்க நடுக் கோட்டின் இருபக்க ய்களிலும் சமச்சீரின்றி அமைந்திருக்கும், அவரை வித்துகளைப் போன்ற வடிவமுடைய அமைப்புகளே, சிறு நீரகங்கள் எனப்படும். வயது சிறுநீரகம், இடது சிறு நீரகத்தைக் காட்டிலும் சிறிது முற்பக்கமாய் அமைந்திருக்கும், பிற்பக்கமா "யமைர் திருக்கின்ற தும், மெல்லிய சுவராலான சபை போன்றது LIrாகிய சிறுநீர்ப்பையினுள், சிறுநீரகத்திலிருந்து செல்லும் வலது, இடது, சிறுநீர் குழாய்கள் தாண்டும் திறக்கின்றன. சிறு நீர்ப்பை, வெளிப்புறத்தோடு, பிபாராதானா என்னும் கால்வாய் வழியாகத் தொடர்பு கொள்ளுகிற து. சிறு நீர்வழி, ஆண்குறி என்னும் தசை யாலான உறுப்பினுாடாகச் சென்று, வெளிப்பக்கத்தை அடைகி ITY ப.
இடது, வலது விதை போ ஆணினது இனம் பெருக்கற்பொருள் களாகும். முழுவளர்ச்சி அடைந்த ஆண் எலியில், அவைகள் இரண்டும், கரிதப்பையின் கண் ணே அமைந்திருக்கின் றன. அசா தாராணநிலைமைகளில், விசா தகளின் முற்பக்க முனைகளோடு தொடுக்கப்பட்டிருக்கும் சமாந்தர்தசைகள் என்னும் ஒரு கூட்டம் தசைகள் சுருங்குவதனால், அவைகள் (விதைகள்) வயிற்றறைக் குள் இழுக்கப்பட்டு, அங்கு செருகுண்டுகிடக்கும். விதைகளின் பிற்பக்க முனைகளில், தொடுக்கப்பட்டி ருக்கும் ஆட்சிந்தரைகள் சுருங்குவதால், அவைகள் (விதைகள் )விதைப்பையினுள் இறங்கி இருத்தல் சாத்தியப்படும்.
விதைகள் ஒவ்வொன்றும் சுக்கிலாரிறுகுழாய்கள் என்னும் பல நு வாக்குச் சிறுகுழாய்களால் உண்டாக்கப்பட்டிருக்கின்றன. அவைகள், விதையின் ஒரு முனையில் ஒன்றோடொன்று ஒருங்கு சேர்ந்து, ஒருசில பெரிய சுக்கியச்சிறுகுழாய்களை உண்டாக்கு கின்றன. இப்பெரிய சுக்கிவச்சிறு குழாய்களின் தொகுதி விதைமேற்றிரிவு எனப்படும், விதைமேற்றிணிவு என்பது, விதை போற்றி எரியுந்ந,11, விதைமேற்றினிவுடல். விதைமேற்றரினவால் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள து. இவற்றுள், விதை மேற்றிணிவுவாலானது அப்பாற்செலுத்தி என் னும் ஒருதனிக் குழாயாக முன்னோக்கிச் சிறிது தாரம் செல்லுகின்றது. இரண்டு அப்பாற்செலுத்திகளும், பின்னர், பின்னுக்கி வளைந்து, ஈற்றில் சிறு நீர்வழியின் முற்பக்கப்பகுதியில் சென்று திறக்கின்றன., ஆகவே, சிறுநீர்ப் பையிலிருந்து சிறு நீரை வெளிப்புறத்திற்குக் * காவிச் செல்வதற்கும், சுக்கிலப்பாயத்தை விதைகளிலிருந்து வெளிப்புறத்திற்குக் காவிச் செல்வதற்கும் உரிய பாதையாக இவை அமைந்திருக்கின் றன.

Page 108
202
உயிரினவியல்
சிறு நீர்வழியின் முற்பக்கப்பகுதியில் பல சுரப்பிகள் வந்து திறக்கின்றன. இச்சுரப்பிகளில் முதலாவதாகப், பெரிய சுக்கிலப் புடகங்கள் அமைந்திருக்கின்றன. இப்புடகங்களில் விந்துகள் சேமித்து வைக்கப்படும். இவற்றை அடுத்து, ஒருசோடி நிரளச்செட்சுரப்பி களும், ஒருசோடி முன்னிற்குஞ்சுரப்பிகளும் காணப்படும். சிறு நீர் வழியின் பிற்பக்கப் பகுதியில் ஒரு சோடி படப்பரின்சுரப்பிகள் வந்து திறக்கின்றன. பெரிய ஆண்குறிமுன்நேற்சுரப்பிகள், குறியின் நுனியில் (அல்லது ஆண்குறி முன் றோலில்) வந்து திறக்கின்றன, இச்சுரப்பிகள் எல்லாம் பல்வேறு இரசாயனப்பதார்த்தங்களைச் சுரக்கின்றன. இச்சுரப்பிகளிற் சில. விந்துகளின் போசணைக்குக் காரண மாயிருக்கின்றன.
பெண் எலியபினது சிறுநீர்ச்சனனித்தொகுதி: சிறுநீரகங்களுக்கு அண்மையில் கொழுப்பினால் சூழப்பட்டிருக்கும் இரண்டு சூலகங் களுமே பெண் எலியினது
இனம்பெருக்கற்பொருள்களாகும். ஒளிபுகவிடுந்தன்மையுள்ள சூலகப்பை என்றும் நபர் உறையி னுள்ளே சூலகங்கள் ஒவ்வொன்றும் தனித்தனி மூடப்பட்டுக் கிடக்கின்றன. சூலகப்பையினுள் பலோப்பியாக்குழாய் சென்று திறக் கின்றது. பலோப்பியாக்குழாயின் முற்பக்கம் பல மடிப்புகளை
LL பட
உரு. 102
பெண் எலியினது சிறுநீர்ச்சனனித்தொகுதி LA இடது அதிரனற்சுரப்பி TLK, இடது சிறு நீரகம் IFI3 கொழுப்புப்பொருள் L0 இடது சூலகம் FT பலோப்பியாக்குழாய் LI இடதுசிறு நீர்க்குழாய் LIr இடதுகருப்பை UL சிறுநீர்ப்பை ர சிறுநீர்வழி V யோனிமடல் LEVஇடதுகுமிழ்த்தலைவாயிற்சுரப்பி OT சிறு நீர்வழித்துவாரம் 0V யோனிமடலின் துவாரம் LP உற்பத்திச்சிம்பி
LL F"
L4 45
-பு:

எலி - சிறு நீர்ச்சனனித்தொகுதி
202"
யுடையதாய்க் காணப்படும். ஆயினும், அதன் பிற்பக்கம் அகற் சியடைந்து, தசையாலான கருப்பை உண்டாவதற்கு ஏதுவாகின் றது. கருப்பைகள் வயிற்றறையின் புறப்பக்க நடுக்கோட்டில் சந்தித்து, விரிந்த, பையாகிய யோனிமடல் ஆக உருப்பெறுகின் றன, கருப்பைகளளுக்கும், யோனிமடலுக்கும் அகப்பக்கமாகச் சிறுநீர்ப்பை இருக்கிறது. சிர நீர்ப்பை ஒடுங்கிச்சென்று, சிறுநீர்வழி ஆகின் றது. சிறுநீரகங்களிலிருந்து வரும் இரு சிறுநீர்க்குழாய் களும், சிறு நீர்ப்பையுள் சென்று திறக்கின்றன. சிறு நீர்வழியும் யோனிமடலும், உற்பத்திச்ம்ெபி என்னும் சிறிது உயர்ந்த, ஓர் அமைப்பின்மீது வெவ்வேறாகத் (தனித்தனி) திறக்கின்றன. பெண்ணினது சிறு நீர்ச்ச னா னித்தொகுதியோடு ஒரு சோடி சுரப்பிகள் மட்டுமே தொடுக்கப்பட்டிருக்கின்றன. அவைகள் "குமிழ்ந்தலைவாயிற்சுரப்பிகள் எனப்படும், ஆணிலுள்ள ஆண்குறி முன் றோற்சுரப்பிகளை ஒத்தன, இக்குமிழ்த்தலைவாயிற்சுரப்பிகள்.
சிறுநீரகங்களின் அமைப்பும்' கட்டற்றொழிலியலும் : வயிற்றறையின் "கூரையிலிருந்து விருத்தியடைந்திருக்கும் உறுப்புகள் சிறு நீ
உரு. 10)
சிறு நீர்தாங்குசிறுகுழாய் ஒன்றினது அமைப்பு IRA சிறு நீரகநாடியின் ஒரு சிறு கிளை; RV சிறுநீரக நாளத் தின் ஒரு சிறுகிளை; ( கலன்கோளம்; B் பவுமனின்பை DI" சிறு நீர்தாங்குசிறுகுழாயினது இறங்குதடம்; HL கெனி லியின் தடம் AT" சிறு நீர்தாங்குசிறுகுழாயினா து ஏறுதடம்:- CT சேகரிக்குஞ்சிறுகுழாய். ILCT பெரிய சேகரிக்குஞ்சிறு .
குழாய்

Page 109
214
உயிரினவியல்
ரகங்கள் எனப்படும், சிறு நீரகத்தின் உட்பக்கமாக அமைந்திருக் கும் சிறு நீரகவிடுப்பு என்னும் இறக்கத்திலிருந்தே, சிறு நீர்க்குழாய் ஆரம்பிக்கின்றது நுணுக்குச்சிறுகுழாய்களாலாக்கப்பட்டசிறுநீர் சிறு குழாய்கள் அடங்கிய ஒரு சிக்கலான தொகுதியே, சிறு நீரகம் எனப்படுவது. இச்சிறுநீர்ச்சிறுகுழாய்கள் ஒன்றோடொன்று , சேர்ந்து, பெரிய சோரிக்குஞ்சிறுகுழாய்கள் ஆகின்றன; ஆகிக் - 1டம் |பசும் என்னும் சிறு நீரகத்தின் உயர்ந்த பகுதியில், சிறு நீரகவிடுப் பினுள் சென்று திறக்கின்றன. ஒவ்வொரு சிறு நீர்ச்சிறுகுழாயி "னதும் அதிஉட்பக்கமுனை பவுனன்உாை எனப்படும் விரிந்த பைவடிவம் பெற்றிருக்கின்றது. பவுயனரின் உரை எனப்படும் விரிந்த பை மிக, மிக மெல்லிய சுவருடையது; 1லன்கோளம் எனப்படும் குருதிமயிர்த்துளைக்குழாய்களாலான, புடைப்பான வலை வேலையை உள்ளடக்கியிருக்கின்றது. சிறுநீரகநாடியின் ஒரு கிளை கலன்கோளத்தினுள் செல்லுகின்றது. சிறு நீரகநாளத்தின் ஒருகிளை கலன்கோளத்திலிருந்து வெளிச்செல்கின்றது. பவும் னின்உறையும் கலன் கோளமுஞ் சேர்ந்து உருப்பெறுவதால் உண்டாவது, மல்பரியின்(றுதுனரிக்கை எ ன ப் ப டு ம். கலன் கோளத்தினூடாகக் குருதி செல்லும்போது, மெல்லிய சுவருள்ள பவுமனின்உறைக்கூடாக, நீரும் பிற [சிறு நீருப்பு சி பரேமிலம் முதலியன) பதார்த்தங்களும் சிறு நீர்ச்சி குழாய்க்குள் , பாவ படைகின்றன. இங்கிருந்து, சேகரிக்குங்குழாய்கள் வழியா கப். பரவலடைந்த பதார்த்தங்கள், சிறு நீரகவிடுப்பை அடைந்து, பின் ன ர்ச் சிறு நீர்க்குழாய்கள் வாயிலாகச்' சிரா நீர்ப்பாபாயைச் சேரு கின் றன. சிறுநீர்ப்பையிலிருந்து சிறு நீரானது, சிறுநீர்வழியூடாக வெளியேறுகின் றது. சிறு நீரைப் பிரிக்கும் தொழிலைச் சிறு நீரகம் செய்கின்றது. எனவே, புரதங்களின் கழிவுப்பொருளாகிய சிறு நீருப்பு, சிறுநீரமிலம் என்பன, சிறு நீரகத்தால் பிரிக்கப்படுகின் றனா. ஆதலால், இது முக்கியமான ஒரு கழிவுறுப்பு ஆகும்.
இனம் பெருக்கல்: எலிகளில் புணர்ச்சி மூலம் இனம்பெருக்கல் நடைபெறுகிறது. பெண் எலியின் சூலகத்தில் உற்பத்தியாகும் முட்டைகள் பலோப்பியோக்குழாயில் வைத்து, விந்துகளால் கருக் கட்டப்படுகின்றன. கருக்கட்டிய முட்டைகள் கருப்பைச் சுவ -
ரைப் பற்றிக்கொண்டு விருத்தியடைகின்றன. சூல் கொள் வருங்காலம் ஏறத்தாழ மூன்று கிழமைகள் ஆகும். மூன்று கிழமைகளின்பின், இளம் எலிகள் (எலிக்குஞ்சுகள்) உயிரோடு பிறக்கின்றன. இவ் வகையாக இளம்பிறவிகளை ஈணுதலாகிய தன்மை பிள்ளையானுந்தன்மை - எனப்படும்.

எலி - நரம்புத்தொகுதி
25
விருக்கள்
பகுதிகளுக்குப் பெயரிடப்பட்ட வெளியுருவப்படங்களின் உதவிகொண்டு, ஆ எண் பாலியின் சிறு நீர்ச்சனானித்தொகு தியை விவரிக்க, பகுதிகளுக்குப் பெயரிடப்பட்ட வெளியுருவப்படங்களின் உதவிகொண்டு, பெண் எலியின் சிறுநீர்ச்சனனித்தொகு
தியை விவரிக்க. 3. சிறுநீரகம் சிறுநீரைப் பிரிக்கும் விடயத்தைப்பற்றி ஒரு
கட்டுரை வரை பா. 4. |
சிறு நீரகத்தின் கொடுக்கு வெட்டுமுகம் ஒன் று வரைந்த பகுதிகளுக்குப் பெயரிட்டு, அதன் அமைப்பை விவரிக்க.
செய்முறைப்பயிற்சிகள் ஆண், பெண் 5ாலிபணியாது சிறு நீர்ச்சனனித்தொகுதியை வெட்டிச் சோதிக்க, அவர் பின் புறவுருவப்படங்களை வரைந்து பகுதிகளுக்குப் பெயரிடுக:
அத்தியாயம் 27
எலி - நரம்புத்தொகுதி
தாண்டல்களை வாங்கி 4, கொள்வதற்கும், தூண்டற்பேறுகளைத் துவக்குவதற்கும் காரணமாயிருப்பது, நரம்புத்தொகுதி. நரம்புத் தொகுதி, இருபெரும்பிரிவுகளை உடைய து. அவை, HTMLLAப நரம்புத் தொகுதியும் சுற்றயல்நரம்பும் நாகுதியுமாகும். மையநரம்புத்தொகுதி * உடலின் புறப்பக்க நடுக்கோட்டில் அமைந்திருக்கிறது. பல பய நரம்புத்தொகுதியுடன் உறுப்புகளைத் தொடுக்கும் நரம்புகளின் தொகுதி சுற்றயல் நரம்புத்தொகுதியாகும். இத்தொகுதியில் உட் காவுநரம்பு (உணர்ச்சி நரம்புகளும், வெளிக்காவு நரம்பு (இயக்கு நரம்பு) களும் அடங்கியிருக்கின்றன. இந்நரம்புகள் மண் எடை யோட்டுநரம்புகளாகவோ,
முள் ளந்தாண்டுநரம்புகளாகவோ இருக்கும். இவற்றைத்தவிரப், பாரியய்நரம்புந் தொகுதியும் அறுபரிடம்

Page 110
2]டு
உயிரினவியல்
நரம்புத்தொகுதியும் சேர்ந்த தன்னுட்சிநரம்புத்தொகுதியும் சுற்றயல் நரம் புத்தொகுதிக்குள் அடங்கும். உடலக உறுப்புகளை, முள்ளந்தண்டு நரம்புகளுக்கூடாக மையநரம்புத்தொகுதியோடு தொடுப்பது, தன்னாட்சிநரம்புத்தொகுதியாகும். பொதுவாகப். பரியும்நரம் புத்தொகுதி மனக்கிளர்ச்சி தொடர்பாகவும், அனுபரியும் நரம்புத் " தொகுதி மனத்தடை தொடர்பாகவும் தொழிற்படுகின்றன.
மையநரம்புத்தொகுதி: மையநரம்புத்தொகுதி மூளையையும் முண் ணுணையும் உள்ளடக்கியது. மூளை இத்தொகுதியின் முற்பக்கப் பகுதியாகவும், முண்ணண், பிற்பக்கப்பகுதியாகவும் அமைந்திருக் தின்றன. மண்டையோடு அல்லது மூளைப்பெட்டிக்குள் மூளையும், முள் னந்தண்டினுள் முண்ணணும். பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின் றன. மேலும், இவற்றிற்குப் பாதுகாப்பு அளிப்பது முளைச்சருமம் (மென்றகட்டுப்போர்வை) என்னும் ஒரு கவசம், இது, மூன்று -மென்றகடுகளையுடையது. இவற்றுள் அதியுட்பக்கத்திலிருப்பது. மென்ருயி எனப்படும். இது மூளையோடும் முண்ண ணேடும் நெருக்க சமாகப் பொருந்தியிருக்கிறது. மேலும், இதனில் குருதிக்கலன் கள் நிறையக்காணப்படும், அதிவெளிப்பக்கமாக இருக்கும் மென்றகடு. வன்ருயி எனப்படும். இது மிக உரத்த,து. இந்த இரண்டு மென்றகட்டுப்படைகளுக்குமிடையில், சிலந்திவலைப்படை என்னும் நுகைவுள்ள மென்றகடு காணப்படும்.
FLE
உ ப -
F]
எட்.,
Fi rL -
உரு. 104 A எலியினது மூளையின் அமைப்பு 0.L,P. பார்வைச்சோணை ! ( மூளி; 1 புன லுரு: '1' உள்ள றைத்தலையம்: 0.NT. பார்வை நரம்பு; P.B. பித்துத்தாப்பொருள்; + S.C. முண்ணண்; M.0. நீள்வளையமையவிழையம்; T.B.I. கூம் புருவப்பொருள்; (.H, மூளையவரைக்கோளம்; 0,L. மணநுகர்ச்.) சிச்சோணை,

எலி - நரம்புத்தொகுதி
20T
மூளை, மூன்று பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. முன்மூளை, நடுமுளை, பின்மூளை என் பனவே அப்பிரதேசங்களாம். முன் மூளையின் முற்பக்கப்பகுதி அல்லது ஈற்றுத்தப்லயம், இரண்டு சிறிய மண நுகர்ச்சிச் சோணைகளையும், இரண்டு பெரிய முளையவரைக் - கோளங்களையுமுடையது. முன் மூளையின் பிற்பக்கப்பகுதி அல் லது உள்ளறைத்தஃலயம், மிக ஒடுக்கமாக இருக்கும். இதன் புறப்பக்க மேற்பரப்பிலிருந்து கடம்புருவப்பொருள் அல்லது மேலென்பு முளையும், அகப்பக்க மேற்பரப்பிலிருந்து பித்தந்தாப்பொருள் அல் லது எழுள்ளவளரி உண்டாவதற்கு இருப்பிடமான புனலுருவும் எழு கினறன.
நடுமூளை மிகவும் சிறியது. இது நான்கு சிறிய பார்வைச் போஃபகளை அல்லது நாற்பெருரடலத்தையுடைய து, பார்வைச்சோணை களின் அகப்பக்கத்திலிருந்து பார்வை நரம்புகள் உற்பத்தியாகி முன்னோக்கி ஓடுகின்றன. புனலுருவின் முன்னிலையில் அவை ஒன்றையொன்று கடந்து சென்று பார்வைக்கோப்பு ஆக அமை கின்றன.
பு--ட.
-H
( 1
LP LI
(SFE
-FI ப்
உரு. 104 13 எலியினது மூளையின் அமைப்பு (தொடர்ச்சி) 0.L, மண நுகர்ச்சிச்சோணை ; C.II, மூளையவரைக்கோளங்கள்; M.0. நீள்வளையமையவிழையம்; 3.0. முண்ணண்; P.B. பித்தத் தாப்பொருள்; P.B.I, கூம்புருவப்பொருள்; 0.N: பார்வை நரம்பு; 0.0. பார்வைக்கோப்பு; 1 கம்பளிச்சிறுகற்றை; 0.0. நாற்பெரு முடலம்.

Page 111
பாம்
உயிரினவியல்
பின் மூளையின் முற்பக்கப்பகுதி, அதிகம் புடைப்படைந்து, Uளி ஆக அமைகிறது. மூளி முன் னோக்கியும், மூளையாரைக் கோளங்கள் பின்னோக்கியும் வளர்ந்திருத்தலால், பார்வைச் சோபேண கள் பொதுவாக மறைக்கப்பட்டிருக்கின்றன. எலியினது மூளி, நன்கு விருத்தியடைந்து, பக்கங்களில் முளைத்துக்கொண்டி ருக், கின்றது, அதனை, நடுக்கோட்டிலுள்ள சிடம் எனவும், பக்கங்களி லுள்ள கம்பளிச்சிறுகற்றை எனாவும் பிரிக்கலாம். பின் மூளையின் பிற்பக்கப்பகுதி, நள்ளனயள யளிரையம் எனப்படும், நீள்வளை ய மையவிழையம், [பண்ணனா சுத் தொடர்ந்து, மண்டையோட்டி லுள்ள ஒரு சிறிய துவாரமாகிய பெருங்கு-டையந்தி =ாடாகச் செல் கின்றது.
புரேயின் குழிகள்! மூளை யின் வெளிப்பக்கத்தைச் சோதித்துப் பார்த்தால், அது மிகத்திண்மையான ஒன்றாசுக்காணப்படும். எனி னும், புயறைகள் எனப்படும் நுண்ணிய, ஒடுக்கமான குழி கள் அதனிடத்து இருக்கின்றன. மூக்குக்பழிகளோடு தொடர்ந்தாற் போல அமைந்திருக்குப் பார்வைச்சோணைகள் என் நாம் முதலாம், இரண்டாம் அறைகள், மூளை யவரைக் கோளங்களினா ரிதே காணப்
உரு.. 1415
மூளையின் குழிகள் ப.ப., மண நுகர்சீசிச்சோணைகள்; I மூக்குக்குழிகள் C. H. மூளையவரைக்கோளங்கள் 1, 2 முதலாம், இரண்டாம் மூளேயறைகள் '' உள்ளறைத்தலையத்தின் பிற்பக்கம் 1 + மூன்றுவது அன்றை 1),P.L, பார்வைச்சோபோகள் 1 வாய்க்கால் (மூளை) ] பார்வைக்குபுகள் (',MI. மூளி 41 நான்காவது மூளேயறை
M.ப. நீள்வளை ய ைாயவிழையப் C., மையக்கால்வாய் 3.0. முண்ணண்
படுகின்றன. மூன்றாவது அறை உள்ளறைத்தலையத்தினுள்ளும், நான்காவது அறை பின் மூளையிலும் இருக்கின்றன, மூன்றாம்,

எலி - நரம்புத்தொகுதி
20ா
நான்காம் அறைகளைத் தொடுத்துக்கொண்டு, நடுமூளைக் காடாக ஒரு கால்வாய் செல்லுகின்றது. இது மூளைக்கால்வாய் எனப் படும், பார்வைச்சோணைகளின் அகத்தே, பார்வக்தர்கள் பானப் படும் குழிகள் காணப்படும். நான்காவது அறை, ஈராபர்1:ால்வாயாக முண்ணணினூாடாசுத்தொடர்ந்து செல்கின்றது.
முண்ணன்: இது மென்மையான பதார்த்தத்தால் ஆக்கப் பட்ட ஒரு கம்பம் ஆகும் மூளையிலிருந்து கீழ்நோக்கி, டபள் ளந் தண்டில் அமைந்திருக்கும் சிறப்பான நரம்புக்கல்யாயனூடாகச்
செல்கின்றது. முண்னணு சாரின் நீளம் முழுமையிலும், அதன் புறப் -_ பக்கமாக, ஒரு ஆழமான தவாளிப்புக் காணப்படுகிறது'. இத்
தவாளிப்புப், புயப்பக்கப்பிளான கலாப்படும், இதனை, ஒத்த மற்றொரு தவாளிப்பு எதிர்ப்பக்கத்தில் இருக்கின்றது. அஃக, அகப்பங்கப்பிளவு எனப் பெயர்பெறும். முண்ணணின் இரு பாதிகளையும் பாலப் போன்று இணைத்து நிற்கும் மிக ஒடுக்கமான ஒரு பகுதியை மட்டும் நீக்கி, இப்பிளவுகள் இரண்டும் ஒன்றையொன்று சந்திக்.
பு:
ப
டரு. 10
புண் (1-30 நான் அமைப்பு D.R. புறபக்கவேர்; 11,II,B. சாம்பனிறப்பொருளின் புறப்பக் கக்கொம்பு: ,C, மையக் கால்வாய்: V. M,G, சாம்பனிறப்பொரு எளின் அகப்பக்கக்கொம்பு; N.R. அகப்பக்கவேர்; ", H, மென் றாயி; V.11, அகப்பக்கப்பிளவு: 4.L. சிலந்திவலைப்படை; I. M. வன்றாயி; WW. MI. வெண் சடப்பொருள் ; 1.T', புறப்பக்கப் பிளவு.
215-15

Page 112
210
உயிரினவியல்
கும் அளவிற்கு, முண்ணணில் ஆழமாகப் பதிந்திருக்கின்றன. இந்தப்பாலத்தின் மையத்திலேயே, மையக்கால்வாய் அமைந்திருக் கிறது. முண்ணண் முழுவதும் முக்கியமாக நரம்பிழையங்களால் ஆக்கப்பப்பட்டிருக்கிறது. அதன் வெளிப்பகுதி உட்பகுதியிலும் பார்க்க இளம் நிறமுடையதாதலால், வெண்ாடப்பொருள் எனப்படும். வெண்சடப்பொருளானது அதன் அகத்தேயிருக்கும் சாப்பளிரப் பொருண் மூடியிருக்கிறது. சாம்பனிறப்பொருள் வெண்சடப்பொரு ளி,லும்பார்க்கச் சிறிது கருமை வாய்ந்தது;- சாம்பனிறமுடை யது. ஒடுக்கமான பாலமொன்றினால் தொடுக்கப்பட்ட இரு கொம்புகளைப்போலச், சாம்பனிறப்பொருள் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு கொம்பினதும் புறப்பக்கத்திலிருந்து, குறித்த இடை வெளிக்கொன்றாக, ஒர் ஒழுங்குபற்றி, நரம்புநார்க்கட்டுகள் உற் பத்தியாகின்றன. அவ்வாறே, அகப்பக்கத்திலிருந்து உற்பத்தி யாகும் நரம்புநார்க்கட்டுகளும் உண்டு. இந்நரம்புநார்க்கட்டு சுளில் முன்னையது புறப்பக்கவேராகவும், பின்னையது அகப்பக்ருவேரா "கவும் அமைகின்றன,
நரம்புக்கலத்தின் அமைப்பு: மூளையும் முண்ணணும் பெரும் பாலும் நரம்புக்கலங்களை உடையன. அவற்றின் அமைப்பில் நரம் புக்கலங்களே அதிகமாகச் சேர்ந்திருக்கின்றன. நரம்புக்கல
மானது நரம்புக்கலவுடலையும் நாப்புநார் களையும் உடையது. மூளையின் சுற்ற யற் பிரதேசங்களில் நரம்புக்கல் வுடல்கள் மிக நெருக்கமாக அடர்ந் திருத்தலினுல், அது சT ம் ப னி ற மாகத் தோன்றுகிறது. நரம்புநார் கள் உண்னோக்கி ஒன்றற்கொன்று சமாந்தரமாகச் செல்கின்றன. இந்
உரு. 107 நரம்புக்கலத்தின் அமைப்பு 1) உட்காவு நரம்புமுனைகள் (1,B. நரம்புக்கலவுடல்; IN கரு; A.C. அச்சுருளை; N.I. இரான் விய ரின்கணு; M,.S, மையவிழையமடல்; HI.A. நரம்புமடல்; A வெளிக்காவு நரம்புமுளை.

எலி - நரம்புத்தொகுதி
211
நரம்புநார்கள், மூளையின் மையப்பகுதியை வெண்ணிறமாக'க் காட்சியளிக்குமாறு செய்கின்றன. ஆகவே, மூளையின் வெளிப் பக்கத்தில் சாம்பனிறப்பொருளும், உட்பக்கத்தில் வெண்ணிறப் பொருளும் காணப்படுகின்றன எனலாம். முண்ணணில், முன் னர்க்கூறியவாறு, இவை நேர்மாறாக அமைந்திருக்கின்றன, (சாம் பனிறப்பொருள் உட்பக்கத்திலும் வெண்ணிறப்பொருள் வெளிப் பக்கத்திலும் அமைந்திருக்கிறது.)
நரம்புத்தொகுதியின் அமைப்புக்கும், தொழிலுக்கும் நரம்புக் கலமே அலகாக அமைகிறது. ஒரு நரம்புக்கலமானது மையத் திள் சுருவையுடைய ஒரு கலவுடலையும், அதிலிருந்து மிக, மிக நுட்பமாக நீண்டு செல்லும் கலவுருவினுலாய நரம்பு நார்களை பயும் உடையது. இந்நரம்பு நார்கள் நரம்புக்கணத்தாக்கங்களைக் கடத்துகின்றன. ஒவ்வொரு நரம்புக்கலத்தி லுமிருந்து உற்பத்தி யாகும் நரம்புநார்கள் இருவகைப்படும். நரம்புநார்கள் ஒவ் வொன்றும், கணத்தாக்கங்களைக் கடத்தும் திசையின் அடிப்படை ; யில் வேறுபிரித்தறியப்படும். நரம்புநார்கள் உணர்ச்சி நரம்பு நர்ர்களோ, இயக்குநரம்பு நார்களோ என்பதை, அவை கணத் தாக்கங்களைக் கடத்தும் திசையையே சுட்டிக்காட்டும் எனலாம். கணா த்தாக்கங்களை நரம்புக் கலவுடலுக்குக் கொண்டுசெல்வன உட்காவுநரம்புமுளைகள் எனப்படும். நரம்புக்கலவுடலிலிருந்து கணத்தாக்கங்களை அப்பாற்கொண்டுசெல்வன, வெளிக்காவு நரம்பு கிளைகள் எனப்படும். பொதுவாக, ஒரு நரம்புக்கலம் ஒப்பீட்டள வில், குறுத்த கிளை களையுடைய பல உட்காவுமுளைகளையும், நுனி பயில் மட்டும் கிளைகளையுடைய ஒரு நீண்ட வெளிக்காவுமுளையை
யும் உடையது.
நரம்புக்கலவுட லிலிருந்து கணத்தாக்கங்களை அப்பாற் காவிச் செல்லும் ஒரு நரம்புநார் (வெளிக்காவுமுளை), மையத்தில், ஒரு பங்கு திண்மையான அமைப்பையுடைய ஓர் அச்சுருளையை உடையது. இது, வெளிக்காவுநரம்புமுனையின் தொடர்ச்சியே யன்றிப், பிறிதொன்று அன்று. இஃது, இரண்டு மடல் (உறை) களால் மூடப்பட்டி ருக்கும். அகத்தே உள்ள மடல் ஏமயவிழைய பாடல் (மையவிழையவுறை) எனவும், புறத்தே உள்ள மடல் தரம்புமடல் (நரம்புறை) எனவும் பெயர் பெறும். மையவிழைய மடல் கொழுப்புத் தன்மை வாய்ந்த, ஒரு வினோதமான பதார்த் தத்தாலானது, நரம்புமடல் மெல்லிதாகவும் மிருதுவாகவும் இருக்கும். அச்சுருளையானது தொடர்ந்து நீண்டிருக்கும் ஓர் அமைப்பாக இருக்கிறது, எனினும், அதனை மூடியிருக்கும் மைய

Page 113
212
உயிரினவியல்
விழையமடலானது, தொடர்ச்சியாகவிருக்கா து, அங்குமிங்கும் 2 அங்குல இடைவெளியளவிற்கு இல்லாது உடைந்திருக்கக் காணப்படும். மையவிழையமடல் இல்லாது இருக்கும் இடங்கள் இரான்ட்'டரின் கோபக்கள் எனப்படும். ஒரு நரம்புக் ககரம் முழுவதும் ஒரு திசையில் மட்டுமே கணத்தாக்கங்களைச் செலுத்தவல் 5ல் து.. கணத்தாக்கங்கள் ஒரு நரம்புக்கலத்திலிருந்து மாற்றெரு நரப்புக் கலத்திற்குச் செல்லும்போது, முன்னையதன் வெளிக்காவுகாப்பு முளையின் பனேக்கிளை சுளிலிருந்து, பின்னைய தன் உட்காவுநரம்பு 'முளைக(களுக்குப் "பாய்கிறது'.
நரம்புகள்: வழக்கமாக ஒரு மடலினுள்ளே பொதியப்பட்டி.' ருக்கும் பல நரம்புநார்களையுடைய து, ஒரு நரம்பு - ஒரு நரம் பில், முழுவதாக 19மணர்ச்சிநார்கள் மட்டும் இருக்கலாம்; அல்லது இயந்ரு நார்கள் மட்டும் இருக்கலாம், அல்லது கலப்புதார்கள் (உணர்ச்சிநார்கஎநம் இயக்குநர்களும் மட்டும் இருக்கலாம். தாண்ட (காக்குவிக்கப்பட்ட ஒரு தானத்திலிருந்து மூளை அல் லது முண்ணுண் போன் ற நரம்புமையம் ஒன்றிற்குக் கணத்தாக் கங்களைக் கடத்தும் நரம்புநார் உணார்ச்சி நரம்புகார் அல்லது உட் சாவு நரம்பு நார் எனப்படும். ஒரு நரம்புமையத்திலிருந்து, தான் டற்பேறு நிகழுமாறு தாண்டப்படவேண்டிய தனச, அல்டது சுரப்பி போன்ற இழையம் ஒன்றிற்குக் கணத்தாக்கங்களைச் செலுத் தும் நரம்பு நார் இயக்குநரப்புகார் அல்லது வெளிக்கான நரம்பு, நார் எனப்படும், - உணர்ச்சிநார்கள் தொடுக்கப்பட்டிருக்கும் ஒரு கூட்டம் நரம்புக்கலங்களால் (அல்லது ஒரு நரம்புக்சுலத்தால்). முதன் முதலாக, வெளிப்பக்கத்திலிருந்து கணத்தாக்கங்கள் ஏற்று (வாங்கி)க்கொள்ளப்படுகின்றன, அத்தகைய உணர்ச்சிநரம்புக் கலங்கள் பொங்கிகள் எனப்படும். தூண்டப்பெறும் தசை, அப்ப்து சுரப்பி போன்ற இழையம், எஃளவுகாட்டி எனப்படும். கலப்புநார் களில், உனர்ச்சிநார்களும் இயக்குநர்களும் இருக் கின்றன. மூளையிலிருந்து பன்னிரண்டு சோடி நரம்புகள் உற்பத்தியாகின் றன. அவை மண்டையோட்டு நரம்புகள் எனப் பெயர்பெறும், இம் மண்டையோட்டு நரம்புகளிர்
- சில உணர்ச்சி நரம்புகளாம்; இன்னுஞ் சில, இயக்குநரம்புகளாம்; மேலும் சில, கலப்புநரம்பு களாம். முண்ணணிலிருந்து முப்பத்து நான்கு சோடி நரம்புகள் . உற்பத்தியாகின்றன. அவை, முள் ளந்தண்டுநரம்புகள் எனப்படும்; முள்ளந்தண்டுநரம்புகள் எல்லாம் கலப்பு நரம்புகளாம்,

213
எலி - நரம்புத்தொகுதி சபாடிண்டையோட்டுதரப்புகள்:
1. பனா நுகர்யைரப்பு: இஃது ஒர் உணர்ச்சிநரம்பு; மூக்கில் உற்பத்தியாகி, முன் Uளயில் (மனமா நுகர்ச்சிச்சோணைகளில்) முடிவடைகிறது.
1. பார்வைாரப்பு: இதுவும் ஓர் உணர்ச்சி நரம்பு. இது கண் பணி உற்பத்தியாகி, நடுமூளையின் (பார்வைச்சோணைகளில்) முடி
வடைகிறது.
3. விழியியநொம்பு இது ஓர் இயக்குநரம்பு; நடுமூளையில் உற்பத்தியாகிச், சில கண் தசைகளுக்கு இயக்கு நார்களை வழங்கு கின்றது.
4. கப்பிப்புரு.நரம்பு: இது ஒரு சிறிய இயக்குநரம்பு; நடு மூளை யின் உற்பத்தியாகிர், சில கண் தசைகளுக்கு இயக்குநார் களை வழங்குகின்றது.
2.
3.
உரு. 118 மண்டையோட்டுநரம்புகள் 1. மன நுகர்ச்சிநரம்பு
பார்வைநரம்பு விழியியக்கு நரம்பு 4. கப்பியுருநரம்பு 5,
முப்பெருநரம்பு அபநயன நரம்பு முகநரம்பு
செவிநரம்பு 9. நாவுருத்தொண்டைநரம்பு 111. அலேயு நரம்பு 11. முள்ளந்தண்டுத்துணை நரம்பு 12. நாக்கிழநாம்பு
E,
5. முப்பெருநாம்பு: இது ஒரு பெரிய கலப்புநரம்பு நீள் வளை யமையவிழையத்தில் உற்பத்தியாகித், தலையின் சுற்றயல் பகுதிகளுக்கு நரம்புநார்சுகளை வழங்குகிறது.
3. அபநயன நரம்பு: இந்து ஓர் இயக்குநரம்பு; கண்மடல் "களுக்கும் சில கண் தசைகளுக்கும் இயக்குநர்களை வழங்கு
கி றது.

Page 114
214
உயிரினவியல்
7. முகநரம்பு: இஃது ஒரு பெரிய கலப்புநரம்பு; முகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நரம்பு நார்களை வழங்குகிறது.
3. செவிநரம்பு: இஃது ஓர் உணர்ச்சி நரம்பு; காதில் ஆரம். பித்துப், பின் மூளையில் முடிவடைகிறது.
9. நாவுருத்தொண்டைநரம்பு: இஃது ஒரு கலப்புநரம்பு; நாவிற் கும், நாத்தசைகளுக்கும், தொண்டைக்கும் நரம்புநார்களை வழங்கு. கின்றது.
10), அலையுநரம்பு: இதுவும் ஒரு கலப்புநரம்பே; இஃது இத, யத்திற்கும், சிலகுருதிக்கலன்களுக்கும், ஈரலுக்கும், உணவுக் கால்வாய் முதலியவற்றிற்கும் நரம்பு நார்களை வழங்குகின்றது.
11. முள்ளந்தண்டுத்துனோ நரம்பு: இஃது ஓர் சிறிய இயக்கு நரம்பு: கழுத்துத்தசைகளுக்கு இயக்குநார்களை வழங்குகின்றது..
12. நாக்கீழ்நரம்பு: இதுவும் ஒரு இயக்கநரம்பேயாம்; நாவி லுள்ள சில தசைகளுக்கு இயக்குநார்களை வழங்குகின்றது.
முள்ளந்தண்டுநரம்புகள் : ஒவ்வொரு முள்ளந்தண்டு நரம்பிற் கும் வேறு பிரித்தறியக்கூடிய இரு கிளைகள் உண்டு; முண்ணணி லுள்ள புறப்பக்கவேரினது தொடர்ச்சியாக நீண்டிருக்கும் புறப் பக்கக்கிளை, ஒன்று; முண்ணணிலுள்ள அகப்பக்கவேரின து தொடர்ச்சியாக நீண்டிருக்கும் அகப்பக்கக்கிளை, மற்றொன்று. முள் ள ந்தண்டு நரம்பினது புறப்பக்கக்கிளையில் உணர்ச்சிநார் கள் மட்டும் உண்டு; அகப்பக்கக் கிளையில் இயக்குநார்கள் மட்டும் உண்டு; எனவே, முள்ளந்தண்டுநரம்புகள் ஒவ்வொன்றிலும் உணர்ச்சிநார்களும் இயக்குநார்களுமாகிய இருவகை நார்களு முண்டு. முள்ளந்தண்டுநரம்பானது முண்ணாணை விட்டகன்று பின்னர், பல கிளைகளாகப்பிரிகின்றது. சில கிளைகளில் உணர்ச்சி நார்களும், வேறுசில கிளைகளில் இயக்குநார்களும், மேலும் சில கிளைகளில் கலப்பு நார்களும் காணப்படும். மண்டையோட்டு நரம்புகள் வழங்கப்படாத உடலின் பகுதிகளெல்லாவற்றிற்கும் முள்ளந்தண்டு நரம்புகள் நரம்பு நார்களை வழங்குகின்றன. ஒரு முள்ளந்தண்டு நரம்பிலுள்ள உட்காவுநரம்புக்கலங்கள் எல்லா வற்றினதும் கலவுடல்கள் முண்ணணின் வெளிப்பக்கத்தில் ஒரு சிறப்பான திரட்சிபோன்று அமைந்துகிடக்கின்றன. இத்திரட்சி திரட்டு எனப்படும். (மையநரம்புத்தொகுதிக்கு வெளிப்பக்கத்தில் | ஒருங்கு குவிந்திருக்கும் நரம்புக்கலங்களின் தொகுதி திரட்டு என்று வழங்கப்படும்). ஆனால், வெளிக்காவு நரம்புக்கலங்கள்

எலி- நரம்புத்தொகுதி
215
எல்லாவற்றினதும் கலவுடல்கள் முண்ணணி லுள்ள சாம்பனிறப் பொருளின் கண்ணே அமைந்துகிடக்கும். ஆகவே, முண்ணணி லுள்ள அகப்பக்க வேரானது இயக்குநரம்புக்கலங்களின் வெளிக் காவுமுளைகளை மட்டும் உடையனவாயிருக்கும்.
மையநரம்புந்தொகுதியின் தொழில்கள்: உடலினது உயிர்நிலைச் செயல்கள் எல்லா வற்றையும் அ, ளுவது மையநரம்புத்தொகுதியே யாம், உடலின் உயிர் நிலைச் "செயல்களை இரு பெரும்பிரிவுக ளுள் அடக்கலாம். (சித்தத்தின் ஆட்சிக்குட்பட்ட) இச்சைவழி மியங்கு செயல்கள் என் பாம், சித்தத்தினட்சிக்குப்படாத இச்சை யின்றியியங்குசெயல்கள் என்றும், அவை வழங்கப்படும், இச்சையின் றியியங்கு செயல்களை இப் பையில்செயல்கள் எனவும் கூறுவோம்.
ஒரு வாங்கியிலிருந்து உள் நோக்கிச் செலுத்தப்படும் கணத் தாக்கத்தினால், சித்தத்தின் தொழிற்பாடு இன்றி, மூளை அல்லது முண்ணணில் விளையும் அசைவு அல்லது அசைவுகள் இச்சை யில்செயலால் ஏற்படுவன என்று கூறப்படும். இச்சையில் செயல் தொடர்பானா கயா தாக்கங்கள் இச்சையில்ளில் எனப்
FM +
உரு. 114
இசையில் செயல் T} வாங்கி; 11 விளைவுகாட்டி ; ! | திரட்டு: 1.14 - உட்காவு நரம்பு: 11, MI, வெளிக்காவுநரம்பு; 1,N. இடையிட்ட நரம்புக்கலம்,
படும் பாதையின் வழியே செல்கின்றன. உதாரணமாக, யாம் சூடுள்ள உலோகத்தட்டொன்றைக் கையினால் தொட்ட மாத்திரத் தில், தோலிலுள்ள = வாங்கிக்கலங்களிலிருந்து, ஒரு முள்ளந் தண்டுநரம்பினது உணர்ச்சிநார்கள் வழியாக, நரம்புத்திரட்டி னுள் "கணத்தாக்கங்கள் சென்று, பின்னர் (முண்ணணின்) புறப் பக் கவேர்வாயிலாக முண்ணணை அடைகின்றன. அடைந்ததும்,

Page 115
21
உயிரின வியல்
** நரம்பிணைப்பு வாயிலாகத் தூண்டப்பெற்ற இயக்கு நரம்புக்கலங் கள், இயக்குநர்களின் பதியாகம், கையினதும் புயத்தினா தும் தசைகளுக்கு, வெளிநோக்கிக் கணத்தாக்கங்களை அனுப்புகின் றன. பெரும்பாலும், உணர்ச்சி நரம்புக்கலங்களுக்கும் இயக்கு நரம்புக்கலங்களுக்குமிடையில் இடையிட்டாரப்புக்கலங்கள் ஒன்றே. பல வோ இருத்தல் கூடும். இவகள், பிஎப்பொழுதும் முண்ணு ணினது சாம்பனிறப் பொருளின் கண்ணேயே இருக்கும். இவை கரும், காத்தாக்கங்களை இயக்க நரம்புகளுக்கு அனுப்பு பதில் பங்குபற்றுகின்றன. ஈற்றில், விளைவுகாட்டிகள் செயற்படும். செயற்படுதலும், கையானது உலோகத்தட்டி னின்றும் எடுக்கப் படுகின்றது. இவை எல்லாம் சேர்ந்து, ஒரு கணப்பொழுதில் நிகழ்ந்து விடுகின் றனா.
ஓர் இச்சையில்வில்லில் ஐந்து : பகுதிகள் பங்குபற்றுகின் றன. அவை: (1) வாங்கியுறுப்பு, (2) விளைவு காட்டியுறுப்பு; (3) இயக்குநரம்புக்க பெம்; (4) உணர்ச்சி நரம்புக்கலம்; (5) இடை யிட்டநரம்புக்கலாம் என்பனவாம்.
இச்சையில் செயல்கள் பான் றுவகைப்படும். அவையாவன:
1. எளியவிச்சபையில்ரெயல்கள்: இதில் முண்ணே கறுக்கு அப்பால் கணத்தாக்கங்கள் செல்வதில்லை. உ-ம். நீர் பருகுதல், உணாவை விழுங்குதல், கண்ணிமைத்தல் முதலியன .
2. புவியினிச்சைசில்யொல்கள்: இதில் மூளிக்கு அப்பால் கணத்தாக்கங்கள் செல்வதில்லை, உ-ம், நடத்தல், ஓடுதல் போன் mண,
3. புளோவிச்சையில் ரயல்கள்: இதில் கணத்தாக்கங்கள் மூளை பயத்தை அடைகின் றன. உட்செல்கணத்தாக்கங்களும் வெளிச் செல் கணத்தாக்கங்களும் பலவாறு நிகழுகின்றன. உம், காயம் பட்ட ஒருவன் காயத்துக்குக் கட்டுப்போடல்.
தும்முதல், குளிரால் நடுங்குதல், பயந்ததும் ஓடுதல், பாய் தல் முதலியனவும், இச்சையின்றியியங்கு செயல்களாதலால், இச்சையில் செயல்களே யாம்.
| 1 காயம்புக்கல நார்க ளுக்கிடையிலுள்ள நுட்பமாசா இடைவெளி இருக்கும் நரம் பிப்11ப்பு எனப்படும்,

எலி - எ வம்புக்கூட்டுத்தொகுதி
217
உடற்றொழில்களெல்லாவற்றையும் இசைவாக்கி ஒரு முகப் படுத்து தலும், மையநரம்புத்தொகுதியின் தொழிலேயாகும்.
வினாக்கள்
முலையூட்டிகளின் மூளையினது
வெளித்தோற்றத்தை விவரிக்க. 2, இச்சையில் செயபாவ ப யாது? உதாரண ந்தந்து விளக்
குக. இச்சையில் பி1) என்ப து பாது?
மண் IT டயோட்டு நாய்புகஃப்பற்றி, ஒரு கட்டுரை வரைக,
செய் முறைப்பயிற்சிகள்
1. கசாப்புக்கடைக்காரரிடமிருந்து எருத்துமாட்டின் மூளை யைப்பெற்று, அதன் வெளியுருவப்படத்தை வரைந்து, பகுதிக (ளுக்கும் பெயரிடுக.
2. எலி அல்லது முயபினது முண்ணணின் குறுக்குவெட்டு முகத்தை, நு 10-க்குக் காட்டியின் தாழ்வாவின் கீழ்வைத்துச் சோதிக்க. அதன் வெளியுருவப்படத்தை வரைந்து, பகுதிகளுக் குப் பெயரிடுக.
அத்தியாயம் 28 எலி - எலும்புக்கூட்டுத்தொகுதி
முலை யூட்டிகளின் உடற்குழியின் முற்பக்கம் நெஞ்சறை என வும், பிற்பக்கம் பயிற்றறை எனவும் பெயர்பெறும். நெஞ்சறையும் வயிற்றறையும் முற்பக்கம் குவிந்த மார்புவயிற்றிடைமென்ற கட்டால் பிரிக்கப்பட்டிருக்கின்றன, உடற்குழியின் கண்ணே இருக்கும் படணவுக்கால்வாய், குழாய்போன்று அமைந்திருக்கிறது. இதன் முற்பக்கத்தில் வாயும், பிற்பக்கத்தில் குதமும் உண்டு. சானவே, உணவுக்கால்வாய் இரண்டு பக்கங்களிலும் வெளிப்பக்கமாகத்

Page 116
218
உயிரினவியல்
திறப்பு உடையது. உடற்குழியின் மற்றைய பகுதி முழுவதும் வெளிப்பக்கத் தொடர்பின்றி மூடப்பட்டிருக்கிறது. உடற்குழி முழுவதும், உடற்குழிமேலணியினால் உட்பக்கமாக உறையிடப்பட் டிருக்கிறது. ஆகவே, எல்லா உடற்குழி உறுப்புகளும் மேலணி யுறை உடையன.
உடற்குழிக்கும், உடலின் ஏனைய பகுதிகளுக்கும் வன்மையும் பலமும் அளிப்பது எலும்புக்கூடு; எலியினது உடலில் உள்ள எலும்புக்கூடு அகளெலும்புக்கட்டு எனப்படும். (வெளியெலும்புக்கூடு உள்ள விலங்குகளும் உண்டு. உ-ம். நண்டு) எலும்புக்கூடு, வன்கூடு எனவும் வழங்கப்படும். அகவெ எலும்புக்கூட்டில் எலும்பு களும், கசியிழையமும் உண்டு. எலும்புகள் வன்மையும் உடையுந் தன்மையுமுடையவை. கசியிழையம் இளக்கமும் நெகிழ்ச்சியும் முடையது. எலும்பு வன்மையுடையதாகத் தோன்றினாலும் அத னுள், குருதிக்கலன்களும் நரம்புகளும் செல்லும் கால்வாய்கள் இருக்கின்றன.
எலும்பிழையங்களும், கசியிழையங்களும் கலங்களாலானவை, அ வ ற் றி ன் கலங்களுக்கிடையில், கலத்திடைச்சடப்பொருள் காணப்படுகின்றது. இவற்றின் கலங்களே இச்சடப்பொருளே உண்டாக்குகின்றன. எலும்பிழையத்தில் பெரும்பாலும் சோடி யம், கல்சியம் என்பவற்றின் பொசுபேற்றுகள் கலத்திடைச் சடப்பொருளாகக் காணப்படுகின்றனடி சுசியிழையங்களில் குருந் தெலும்புப்பாகு என்னும் பதார்த்தம், கலத்திடைப்பொருளாகக் காணப்படுகின்றது. குருத்தெலும்புப்பாகு நார்களால் பலப்படுத் தப்பட்டி ருக்கும்.
எலும்புக்கூடு உடலுக்கு ஒரு வடிவத்தை அளிக்கின்றது. தசைகள் தொடுக்கப்படுவதற்கு எலும்புகள் உதவுகின்றன, உட லகத்துள்ள மிருதுவான உறுப்புகளுக்கும் மூளை, முண்ணண், இதயம், சுவாசப்பை என்பவற்றிற்கும் அது பாதுகாப்பு அளிக் கின்றது.
எலியினது எலும்புக்கூடு, அர்செலும்புக்கூடு, தூக்கவெலும்புக்கூடு என இரண்டாகப் பாகுபாடு செய்யப்படலாம். உடலினது நடுக் கோட்டில் அமைக்கப்பட்டிருக்கும் எலும்புக்கூட்டுப் பகுதிகள் அச்செலும்புக்கூடு எனப்படும். நகலயோடு, முள்ளந்தண்டு, விலாவெ லும்புகள் என்பவற்றை உள்ளடக்கியது, அச்செலும்புக்கூடு. சோடி " சோடியாகப் பக்கங்களில் அமைந்திருக்கும் எலும்புக்கூட்டுப் பகுதிகள் தாக்கவெலும்புக்கூடு எனப்படும்; தாக்கவெலும்புக்)

எலி - எலும்புக்கூட்டுத்தொகுதி
214
கூடு 'முன்னவயங்கள், பின்னவயங்கள், அவயவவளோயங்கள் என்பவற்றை உடையது.
(1) S.
உரு. 110 எலியினது எலும்புக்கூடு (பக்கப்பார்வை)
எலியின் தலையோடு: மண்டையோட்டையும், மண நுகர்ச்சியுறை, செவியுறை என்பவற்றையும், மேற்றாடை, கீழ்த்தாடைகளையும் உள்ளடக்கியது, தலையோடு எனப்படும், மண்டையோடு மூளைக்கு உறைபோன்று பாதுகாப்பளிக்கின்றது.
தலையோட்டின் முற்பக்கத்தில் ஒரு சோடி முற்பக்க மூக்கெ லும்புகளும், ஒரு சோடி ராகளெலும்புகளும் நடுக்கோட்டில் அசை வில்லாது பொருத்தப்பட் டி ருக்கின்றன. ஒருசோடி சுவரெலும்புகள் புறப்பக்க நடுக்கோட்டில் பொருத்தப்பட்டிருக்கின்றன. தலை யோட்டின் பிற்பக்கத்தில் மூளையின் தொடர்ச்சியான முண்ணன் செல்வதற்குரிய பெருங்குடையம் என்னும் துவாரம் இருக்கிறது. பெருங்குடையத்தின் மேற்பக்கத்தில் மேற்பிடரெலும்பும், பக்கங்க ளில் ஒரு சோடி வெளிப்பிடரெலும்புகளும், கீழ்ப்பக்கத்தில் அடிப்பிட ரெலும்பும் காணப்படுகின்றன. வெளிப்பிடரெலும்புகளில், அத்தி லசுமுள்ளெ பாம்புடன் மூட்டாக அமைவதற்கேற்ற இரண்டு முட்டுக்குமிழிகள் உண்டு.
தலையோட்டின் தளத்தில் ஏர்க்காலென்பும், அதையடுத்து அடி "பாப்புருளெலும்பும் இருக்கின்றன. ஏர்க்காலென்பு மூக்குறையை அகப்பக்கமாக மூடியிருக்கிறது. அடியாப்புருவெலும்பு அடிப்பிட ரெலும்புடன் பொருந்துகிறது. அகப்பக்கமாக ஏர்க்காலென்பு

Page 117
22ா
உயிரினவியல்
கள் மீது அண்ணாவெலும்புகளும், இறுக்கையருளென்புகளும் காணப் படும். இறக்கையுருவெண்புகள் மேற்ருடையை மண்டையோட் 1டின் அடிப்பக்கத்தோடு பொருத்த உதவுகின்றன. செவியுயார்கள் சுவரெலும்புகளுடன் அகப்பக்கமாகவும், பக்கமாகவும் இணைந்து செவிப்பறைக்கு!பிழ்முனைப்பை உண்டாக்குகின்றன.
போற் குடையானது மண்டையோட்டின் அடிப்பக்கத்திலுள்ள எலும்புகளோடு முழுவதாக இணைந்திருக்கின்றது. மேற்றாடை எலும்பில் முன்னருளே கம்பு, புனுவெலும்பு, நுகவொழிப்பு என்டான இணைந்திருக்கின் ரா. முலையூட்டிகளில் நுகவெலும்பும், செதிலொள்' பும் சேர்ந்து, வில்போன்ற அமைப்புடையனாவாசி, மண்டையோட் டிற்கு அப்பால் அமைந்திருக்கும். இவ்வில் அமைப்பு நு கவுருவில் எனப்படும், செதி ளென்பு பிற்பக்கமாகச் சுவ ரெலு பபுகளுடன் இணைகிறது- கீழ்த்தாடை ஒரு எலும்பி) ல் ஆக்கப்பட்டுள்ளது அவ்வெலும்பு பால்:Tாயெலும்பு எனப்படும்.
தலையோட்டின் பக்கங்களில், நுகவுருவில்லுக்கும் மண்டை யோட்டின் பக்கங்களுக்குமிடையிலுள்ள இடைவெளியில், கண் கள் அமைந்திருக்கின்றன. மண்டையோட்டின் பக்கங்கள் அய லாப்ரிடையம், நுநலாப்பிகட்டயாம். கண்ணரிரெலும்பு என்பவற்றால் ஆக்கப் பட்டிருக்கும்.
இவர்ன ரத்தவிரச், சுருளோ லும்பு முதலியனவும் தலையோட்டில் உண்டு. குருதிக்கலன்களும் நரம்புகளும் செல் லும் பலகுடையங் கள் தலையோட்டில் உண்டு.
| பாலியின் முள்ளந்தண்டு: மோதிர வளையங்களை ஒன்றின்மீ தொன்று அடுக்கினாற் போன்று, தொடராக அமைந்திருக்கும் முள்ளந்தண்டெலும்பு (முள் ளௌ லும்பு] களைக் கொண்டது, முள்ளந் தண்டு ஆகும், முள்ளந்தண்டெலும்புகள் ஒன்றின்மீது ஒன்றாக அடுக்கப்பட்டிருத்தலால், சங்கிலி போன்றிருக்கும், முள்ளந் தண்டை முதுகெலும்பு எனவும் வழங்குவர். அது முக்கியமாக ஐந்து பிரிவுகளுள் அடங்கும். முள்ளந்தண்டின் முற்பக்கமுனையி லிருந்து இவ்வைந்து பிரிவுகளும் பின் வருமாறு அமைந்திருக்கும். சுபுரத்துமுள்ளந்தண் டெழுப்பு.
நெஞ்சறைமுள்ளந்தண்டெலும்பு, நாரிமுள் ளந்தண்டெலும்பு, திருமுள்ளந்தண்டெலும்பு, வான்முள் ளந்தண்டெறும்பு

எலி - எ வாய்புக்சுடட்டுத்தொகுதி
221)
என்பனவே, அவ் ஐந்து மாய், கழுத்துமுள்ளந்தண்டெலும்புகள் T! நெஞ்சறைமுள்ளத்தப் டெலும்புகள் 13; நாரிமுள் ளந்தனாடெ லும்புகள் 6; திருமுள்ளந்தண்டெலும்புகள் 4; வான் முள்ளந் தண்டெலும்புகள் 27ாதாடக்கம் 40, ஆக இவை எலியின் முள் ளந் தண்டில் காணப்படும்.
புர் ளந்தண்டின் தொழில்கள் : மூளையை ஊறுபடுத்தக்கூடிய தாக்குகளை உறிஞ்சி, அக்னட் பாது காக்கிறது; தாக்கவெலும்புக் சுட்டின் பகுதிகள் உறுதியாப்பந் தொடுக்கப்படுகற்கு உகந்தவா று அமைந்திருக்கியது 1 பிய துவா HEா பண்யா வாக்குப் பாதுகாப்பு ளிக்கிறது, முதுகுத்தசைகள் உறுதியாகத் தொடுக்கப்படுவதற்கு ஏற்றமுைேளகளை டடைய பார தஃப் அசைவதற்கு ஏற்ற மூட்டில்
- HI 5
PH.E,
-- H -
F -
டரு. 111 நாரிமுள்பொலும்பின் அமைப்பு 1 மையம்: NIS நரம்புகள்: M அனவென்புமுளை, T.T முறுக்கு முளை; Tr, முன் னுகவென்பமுளை; P. பின்னுக வென்புமுளை : A, ஆரம்பமேலென்புமுளை; 10 நரம்புக்கால்
வாய்.
அமைந்திருப்பதற்கு உதவுகிறது; விலாவெலும்புகள் தொடுக்கப் படுதற்கு உதவுகிறது.
மாதிரி முள்ளந்தண்டெடுப்பு ஒன்றினது அலாப்பு: நாரிமுள்ள ந தண் டெலும்பொன்றை மாதிரிக்காக எடுத்துக்கொள்ளலாம். அதன் உடலின் தட்பமையாகப் பகுதி, உருளவடிவுள்ள எலும்பின வாக்கப்பட்டி ருக்கிறது. அதன் பெயர் யையம் எனப்படும், - யயத் தின் மேற்பக்கத்தில் நரம்பு வில்லினாலாய சிறிய தரப்புக்கால்வாய் ஒன்று காணப்படுகிறது. எல்லா முள்ளந்தண்டெலும்புகளினதும் * நரம்புக்கால்வாய்கள் எல்லாம் சேர்ந்து, முண்ணன் அமைந் திருக்கத்தக்க, தொடர்ச்சியான ஒரு கால்வாயாக உருப்பெர் றிருக்கிறது. நரம்புவில்லின் புறப்பக்கத்தின் நடுப்பக்கத்திலி

Page 118
-222
உயிரினவியல்
ருந்து உண்டாகி, முன்னோக்கி எறியப்பட்டிருக்கும் நரம்புமுனை எ ன் னு ம் குறுத்ததுண்டு ஒன்றினது இருபக்கங்களிலும், அணுவென்புமுளைகள் என்பன இருக்கின் றன. மையத்தினது அகப் பக்கத்திலும், பக்கங்களிலும் முன்னோக்கி எறியப்பட்டிருக்கும் இரண்டு குறுக்குமுளைகள் இருக்கின்றன, குறுக்குமுளைகள் இரண் டிற்குமிடையில், மையத்தினது அகப்பக்க நடுப்பகுதியில், கீழ் நோக்கி நீண்டிருக்கும் ஓர் உபவென் புமுளை உண்டு. பிற்பக்கமாக மையத்தின் புறப்பக்கத்தில் இரண்டு சிறிய எறியங்கள் உண்டு. இவை, ஆரம்பமேலென்புமுளைகள் எனப்படும். நுகவெள்புமுளைகள் என் னும் சிறப்பான மூட்டுகளால் முள்ளந்தண் டெலும்புகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக் கின் றன. முன்னுகவொப்புமுளை - கள் எனப்படும் அத்தகைய ஒருசோடி. மூட்டு மேற்பரப்புகள், முற்பக்க முனையில் அனுவென்புமுளைகளுக்குக் கீழ்க்காணப் படுகின்றன. பின்னுக்கவென்புமுளைகள் எனப்படும் ஒருசோடி மூட்டு மேற்பரப்புகள், பிற்பக்கமுனையில் ஆரம்பமேலென்புமுளை களுக்கு மேலே காணப்படுகின்றன,
கழுத்துமுள்ளந்தண் டெலும்பை, அதனிடத்து விருத்திடைந்திருக் கும் கழுத்துமுள்ளெலும்பேர் என்னும் சிறப்பான அமைப்பைக்
கொண்டு, இனங் கண்டுகொள்ள லாம். அது மிகவும் குறுமையடைந் ததாயும், "உவை'' ('''') உருவுடை யதாயும், அமைந்து குறுக்குமுறைக ளோடு தொடுக்கப்பட்டிருக்கும். கழுத்துமுள்ளெலும்பேரி "உவை"' யுருப்பெற்றிருத்தல் காரணமாக, முள்ளெலும்பு, தாடிக்கால்வாய் என்னும் மிகச்சிறிய துவாரம் ஒன்று அதற் கும் குறுக்குமுறைகளுக்குமிடையில் உண்டாக் கப் பட் டி ரு க் கி ற து .
''*
உரு. 112 அத்தில் சுமுள்ளெலும்பு 1. முற்பக்கப்பார்வை TP குறுக்குமுளை
2 முற்பக்கப்பார்வை AT மூட்டுமுகப்பு
3 பக்கப்பார்வை NS நரம்புமுள்

எலி - எலும்புக்கூட்டுத்தொகுதி
223
- F4
கழுத்துமுள்ளந்தண்டெலும்புகளில் முதலாவதாக உள்ள அத்தி வீசுமுள்ளெலும்பு ஏனையவற்றிலும்பார்க்கச் சிறிது வித்தியாசமுடை யது. அத்திலசுமுள் ளெலும்புக்கு நுகவென்புமுளைகள் கிடை யாது. எனினும், அது தலையோட்டுடன் தொடுத்துக்கொள்வ தற்கு ஏற்ற வகையில், அதனது முற்பக்க முகத்தில் சிறப்பான மூட்டுமுகப்புகள் விருத்தியடைந்திருக்கின்றன. அவ்வாறே, அஃது இரண்டாவது கழுத்துமுள்ளந்தண்டெலும்புடன் தொடுத்துக் கொள்வதற்கு ஏற்றவகையில் அதன் து பிற்பக்கமுகத்தில் சிறப்
- H. பு..
பான மூட்டுமுகப்புகள் விருத் தியடைந்திருக்கின்றன. இரண் டாவது கழுத்துமுள்ளந்தண் டெ லு ம்பு அச்சுமுள்ளெலும்பு எனப்படும். அச்சுமுள்ளெ லும் புக்கு முன்னுகவென்புமுளை கள் கிடையாது. ஆயினும்,
உரு. 113
அச்சுமுள்ளெ லும்பு N, S.
1 முற்பக்கப்பார்வை NS நரம்புமுள் AF மூட்டுமுகப்பு
2 பக்கப்பார்வை NS நரம்புமுள்
OP பல்லுருமுளை பின் னுகவென்புமுளைகள் உண்டு. மையத்தின் முற்பக்கமுகம் முன்னோக்கி நீண்டிருத்தலால் உண்டான பல்லுருமுளை அதனிடத் துக் காணப்படுகின்றது. அத்தில்சுமுள்ளெலும்பின் நரம்புக்கால் வாயின்கீழ் விருத்தியடைந்திருக்கும் ஒரு குழியினுள் பல்லுரு முளை நன்கு பொருந்திக்கொள் கிறது. தலையைச் சுழற்றும் போது, அது பல் லுருமுளையின் மீது பொருந்தியிருக்கும் அத்தி லசுமுள்ளெலும்புடன் சேர்ந்து அசைகிறது. ஆனால், தலையை மேலும், கீழும் அசைக்கும்போது அது, அத்திலசு முள்ளெலும் பின் மூட்டுமுகப்புகளின் மீது அசைகிறது. அனு வென்புமுளை களும், ஆரம்பமேலென்புமுளைகளும், உபவென்புமுளையும் நாரி முள்ளெலும்புகளுக்கே சிறப்பாக உரியவை. | ஏனைய முள் ளெலும்புகளில் இவை காணப்படா.
3. ஈ -
நெஞ்சறைமுள்ளந்தண்டெலும்புகளில் பின்னோக்கி எறியப்பட்டிருக் கும் நீளமான நரம்புமுட்கள் இருக்கின்றன. மேலும், அவைக

Page 119
224
உயிரினவியல்
(ளுக்குக் குறுக்குமுளை களின்மீது இருக்கும் சிற்றேரியுருமுகப்பு என். னும் சிறப்பான ஒரு மூட்டு முகப்பும், மையத்தின் இரு பக்
-- NA.
ப- T, P.
உடு- 114
கருத்துமுள்ளெ லும்பு (மாதிரி) NS நரம்புமூள்; T முன்னுகவென்பு முகா : II' குறுக்குக்கணும்
ஈப் முள்ளெலும்பு நாடிக்கால்வாய்: (1 மையம்.
கங்களிலுமுள்ள இருமுனைகளிலும் இருக்கும் இரண்டு சோடி தப்லயுருவரை கப்புகளும், உண்டு. இரண்டு 'கழுத்துமுள்ளெலும்பு கள் பொ ருந்திக்கொள்ளும் போது, அவை இரண்டினதும் நலோருவரைபுகப்புகள் சந்திப்ப தால், ஒரு முழமுகப்பு உண் உரு. 115
- - - நெஞ்சறைமுள்ளெலும்பு
(மாதிரி) NVS நரம்புமுள் "II சிற்றேரியுரு
E விலாவெலும்பு CA தலையுரு
டாகிறது. இந்த இரண்டு முகப்புகளும் விலாவெலும்புகளினது சிற்றேரியுரு, தப்லயுரு என்பன தொடுக்கப்படுவதற்காக அமைந்தி
ருக்கின்றன.
திருமுள்ளெலும்புகள் நான்கும் ஒருங்கிணைந்து, ஒரு கூட் டமைப்பாகித், திருவெலும்பு எனப் பெயர்பெறுகின்றன. இடுப்பு வளையம் தொடுக்கப்படுவதற்கு உகந்தவாறு, திருவெலும்பு சிறப் பாக விருத்தியடைந்திருக்கிறது.

எலி - எலும்புக்கூட்டுத்தொகுதி
225
வான்முள்ளெலும்புகள் சிறியவை, அவற்றுள் முற்பக்கத்திலுள்ள ஒருசிலவற்றில் மட்டுமே நரம்புவில், நரம்புமுள், நரம்புக்கால்வாய் என்பன காணப்படும்; ஏனையவற்றில் இவை இருப்பதில்லை.
மார்புப்பட்டை: இஃது ஒர் ஈட்டி. வடிவமுள்ள எலும்பு, நெஞ் சறையின் அகப்பக்க நடுவில் இஃது அமைந்திருக்கிறது. இதன் முற்பக்கம் அகன்றும், பிற்பக்கம் ஒடுங்கியுமிருக்கிறது. இதில் ஐந்து எலும்புத்துண்டுகள் அசைவில்லாதபடி இணைந்து, ஒன் றாக உருப்பெற்றிருக்கின் றன, இதன் பிற்பக்கமுனையில், மெல் லிய, தட்டையான கசியிழையம் காணப்படுகிறது.
காறையெலும்பும் விலாவெலும்புகளும் மார்புப்பட்டையுடன் மூட்டப்பட்டிருக்கின்றன. மார்புப்பட்டை நெஞ்சறையிலிருக்கும் இதயத்தைப் பாதுகாக்கின்றது.
வளைந்த இரும்புக்கோல்கள் போன்ற 13 விலாவெலும்புகளி னதும் புறப்பக்கமுனைகள் நெஞ்சறைமுள்ளெலும்புகளுடனும், அகப்பக்கமுனைகள் மார்புப்பட்டை (மார்பெலும்பு) உடனும் தொடுத்திருக்கின்றன. விலாவெலும்பின் தலைப்பகுதி, தலேயுரு எனப்படும். தலையுருவான து, இரு நெஞ்சறைமுள்ளெலும்புகளுக் கிடையிலுள்ள தலயுருபுருப்புடன் மூட்டப்பட்டிருக்கும். தலையுரு விற்குச் சிறிது அப்பால், விலாவெலும்பின் புறப்பக்கத்தில், சிற்
---- """19:2"2", ""2 றேரியுரு என்னும் மேடான சிறிய பகுதி ஒன்று காணப்படுகிறது. குறுக்குமுளைகளில் அமைந்திருக்கும் சிற்றேரியுருமுகப்புடன் இது மூட்டப்பட்டிருக்கிறது. கடைசியிலிருக்கும் 11, 12, 13வது சோடி விலாவெலும்புகளின் அகப்பக்கமுனைகள் மார்புப்பட்டை யுடன் மூட்டப்பட்டிருக்கா. எனவே, அவைகள் மிதக்கும்விலா வெலும்புகள் எனப்படும். 7-வது விலாவெலும்புடன் 3, 9, 10-வது விலாவெலும்புகளின் அகப்பக்கமுனைகள் சேர்ந்து, அதனூடாக மார்புப்பட்டையோடு தொடுக்கின் றன. எனவே, அவை போலி விலாவெலும்புகள் எனப்படும்,
எலியின் தாக்கவெலும்புக்கூடு: முன்னவயவத்தின் எலும்புகளும் மார்புவளையமும் பின்னவயவத்தின் எலும்புகளும் இடுப்புவளை யமும் சேர்ந்து, தாக்கவெலும்புக்கூடு எனப்படும்.
மார்புவளையமும் முன்னவயவமும்: மார்புவளேயம் முள்ளந்தண்டுடன் இணைய (இணை கருவி) ங்களால் தொடுக்கப்பட்டிருக்கிறது. முன்
215 16

Page 120
226
உயிரானவியல்
னவயவத்தினையும் அது தொடுத்துக்கொண்டிருக்கிறது. முக் கோணமான தட்டையெலும்பாகிய தோட்பட்டையையுடையது, இம் மார்புவளையம். தோட்பட்டையின் உச்சி, கீழ்நோக்கியவாறு இருக் கும். வெளியேயிருக்கும் அதன் முனையில், சின்னக்குழி எனப் படும் ஒர் இறக்கம் உண்டு. புயவெலும்பின் தலை இவ் இறக் கத்தி னுள் தொடுக்கப்பட்டிருக்கும். நெடுக்காக அமைந்திருக்கும் பீடம்போன்ற 'மூரியொன்று தோட்பட்டையின் வெளிப்பக்க முகத்தில் விருத்தியடைந்திருக்கிறது. இம் மூரிக்குத் தோட்பட்டை முள் என்பர். இம்முள் பின்னோக்கியவாறு அனுத்நோட்பட்டைமூளை யாக முடிவடைகின்றது. தோட்பட்டையெலும்பின் உச்சியின் முற்
---
அது அணை
1
உரு. 116 மார்புவளையமும் முன்னவயவமும் 30 தோட்பட்டையெலும்பு: SP மூரி பீடம்) போன்ற முள் THI புயவெலும்பு; 1 ஆரையெலும்பு; 11 அரந்தி(முழங்கை யெலும்பு); ( மணிக்கட்டெலும்புகள்; MC அனுமணிக்
கட்டெலும்புகள்; PH விரலெலும்புகள். பக்கமுனையை நோக்கி, வளைந்திருப்பது, தேசட்பட்டைமுள எனப் படும். இந்த முளையோடு காறையெலும்பின் காக்கையாகுருமுளை தொடுக்கப்பட்டிருக்கின்றது.
முன்னவயவமானது மேற்புயம், முன்கை, (முன்னங்கை, முற் புயம்) மணிக்கட்டு, உள்ளங்கை, (கை) விரல்கள் எனப் பிரிக்கப்பட் டிருக்கிறது. மேற்புயம் நிண்ட 'மொத்தையான புயவேலும்1ை உடையது. புயவெலும்பின் தலை தோட்பட்டையின் கிண்ணக்குழி
யுட் பொருந்துகிறது. முன்கையில் ஆரை, அரந்தி (முழங்கை பு!"

எலி - எலும்புக்கூட்டுத்தொகுதி
22T
யெலும்பு) என்னும் இரு எலும்புகள் உண்டு. இவைகள் ஒன்றே டொன்று உறுதியாகத் தொடுக்கப்பட்டிருக்கின்றன; எனினும், ஒன்றோடொன்று இணைந்து (சேர்ந்து இருக்கவில்லை, மாரிக் கட்டில் ஏழு Ifnaflக்கட்டெலும்புகள் இருக்கின்றன, உள்ளங்கை 'யில் அனுயனணிக்கூட்டெலும்புகள் எனப்படும், ஐந்து, நீண்ட எலும்பு -கள் உண்டு. இவைகள், மக்கட்டெலும்புகளுடன் தொடுக்கப் பட்டிருக்கின்றன. விரல்கள் ஐந்து உண்டு. இவற்றுள் முத
% ..
HIT/
Fi
உரு. 117 இடுப்புவளையமும் பின்னவயவமும் IL புடைதாங்கியெலும்பு: P பூப்பெலும்பு: IS நாரியம்; 10 அசற்றபுலாம்( கிண்ணக்குழி ]; 11' தொடையெலும்பு; PA முழங்காற்சில்; 'T' க நறுக்காலுள்ளெலும்பு: Fr கணுக்! கால்வெளியெ லும்பு: T A க ணு க் காலெ லு ம்புகள் ;
MIT அனுக்கணக்காலெலும்புகள்; PH விரலெலும்புகள். லாவது விரலில் இரண்டு எலும்புகளும் ஏனைய நான்கிலும் விர லொன்றிற்கு மும்மூன்றாகப் பன்னிரண்டு எலும்புகளும், - ஆக மொத்தம் பதினான்கு எலும்புகள், - உண்டு.
*நான்கு விரல்களே வெளியில் தெரியும்.

Page 121
223
உயிரினவியல்
இடுப்புவளையமும் பின்னவயவமும்: இடுப்புவளையம், மூன்று எலும்பு களை உடையது. இவற்றுள், பெரியதும், தட்டையாக்கப்பட் டதுமான - புடைதாங்கிஎலும்பு திருவெலும்புடன் தொடுக்கப்பட் டிருக்கிறது. பூப்பெலும்புநாரியம் என்னும் மற்றைய இரண்டெலும் புகளும் ஒன்றோடொன்று முழுவதாக இணைந்திருக்கின் றன. புடைதாங்கியும், பூப்பெலும்பும், நாரியமும் சந்திக்கும் பிரதே சத்தில், அசற்றபுலம் (இடுப்பெலும்புக்கிண்ணக்குழி) என்னும் ஒரு சிறிய இறக்கம் காணப்படுகிறது. இதனுள்ளேயே தொடை எலும்பு தொடுக்கப்பட்டிருக்கிறது.
பின்னவயவமானது தொடை, கீழ்க்கால், காற்கணு, உள்ளங்கா ல் (கால்) விரல்கள் எனப் பிரிக்கப்பட்டிருக்கிறது. தொடையில் தொடைஎலும்பு உண்டு. இது மிக நீண்டு புடைத்த எலும்பாகும். கீழ்க்காலில் சுணுக்காள்ளெலும்பு, கணுக்கால்வெளியெலும்பு என, இரு எலும்புகள் உண்டு. கணுக்கால் வெளியெலும்பின் முற்பக்கமுனை கட்டின்றி இருக்கிறது. ஆயினும், அதன் பிற்பக்கமுனை கணுக். காலுள்ளெலும்புடன் முழுவதாக இணைந்திருக்கிறது. கணுக்கா லில் ஏழு கணுக்காலெலும்புகள் உண்டு. இவற்றை அடுத்து, உள் ளங்காலில் நான்கு அடிக்கனுக்காலெ ஒப்புகள் உண்டு. கால்விரல்கள் ஐந்து உண்டு. அவற்றில் முன்னவயவத்தின் விரல்களைப் போலவே பதினான்கு விரலெலும்புகள் இருக்கின் றன. தொடை யெலும்பும், கணுக்கா 5வள்ளெலும்பும் சந்திக்கும் பிரதேசத்தின் அகப்பக்கத்தில், முட்டுர்சில் (முழங்காற்சில்லு) என்னும் கட்டில் லாத சிறிய எலும்பு ஒன்று இருக்கிறது,
மூட்டுகள்: இரண்டு எலும்புகள் பொருந்தும் பிரதேசம் முட்டு எனப்படும். மூட்டுகள் அசையும்மூட்டு, அசைவில்லாமூட்டு என இரு வகைப்படும், மண்டையோட்டி,லுள்ள எலும்புகள் புருவால் பொருத்துப்போன்று, அசைவில்லாதவாறு பொருந்தியிருக்கின் றன. அசையும் மூட்டுகள் பல, எலியின் எலும்புக்கூட்டி ல் இடம் பெற்றிருக்கின்றன.
அசையும் மூட்டுகள் உள்ள இடங்களில், மெல்லிய சுவரா லான பைபோன்ற ஏட்டுரை, அவற்றைச்சுற்றி மூடியிருக்கின் றது. இது முட்டுறைப்பாயர் என்னும் உராய்வுநீக்கியைச் சுரத்தலி னால், எலும்புமுனைகளுக்கிடையில் நிகழும் உராய்வு குறைக்கப் படுகின்றது, மேலும், எலும்புமுனைகள் கசியிழையங்களால் கவிக் கப்பெற்றிருத்தலும் உராய்வைக் குறைக்கக் காரணமாகின்றது. மூட்டுகளில் உள்ள எலும்புகள் இணையங்களால் தொடுக்கப்பட்டுள் ளன. அசையும் மூட்டுகள் பலவகைப்படும்.

எலி - எலும்புக்கூட்டுத்தொகுதி
223
(1) பந்துநாங்குகுழிமூட்டு: எல்லாத் திசைகளிலும் அவயவத்தை 'அசைப்பதற்கு, இம் மூட்டு இடந்தரும். உ-ம். மேற்புய வெலும்பு தோட்பட்டைக்கிண் ணக்குழியுடன் பொருந்துத லும்; தொடையெலும்பு அசற்றபுலத்துடன் பொருந்துதலும்.
12) சுழற்சிந்தானமுட்டு: அத்திபசுமுள்ளெ லும்பு, அச்சுமுள்ளெலும்பி
லுள்ள பல்லுருமுளையின்மீது சுழலுதலை இவ்வகை மூட்டுக்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
(3) 12.3ாயன்புட்டு: இவ்வகை மூட்டிப் பிணையல்களைப்போல், ஒரு
தளத்தில் மட்டும் அசைவ நிகழ முடியும். உ-ம். முழங்கை மூட்டு, விரன் மூட்டுகள்,
வழக்கு முட்டு: கணுக்காலிலும் மணிக்கட்டிலுமுள்ள சிறிய எலும்புகள், ஒன்றோடொன்று வழுக்குவதால் எல்லாத் திசை களிலும் அசைவு நிகழல் முடியும்,
உடலிலுள்ள தசைகள் சிரைகளினாலே எலும்புகளோடு தொடுக்கப்பட்டிருக்கின்றன. இச்சைவழியியங்கும் தசைகளையே சிரைகள் தொடுக்கின்றன. நரம்புகளால் தூண்டப்பட்ட தசை களே, எலும்புகளை அசைப்பதற்குக் காரணமாகின்றன.
வினாக்கள்
1. முலையூட்டிகளின் முள்ளந்தண்டெலும்பில் காணப்படும்
பல்வேறு பகுதிகளெவை?
முள்ளந்தண்டெலும்பின் தொழில்கள் யாவை? 3. எலும்புக்கூட்டில் காணப்படும் பல்வேறு மூட்டுகளைப்
பற்றி ஒரு கட்டுரை வரைக.
செய்முறைப்பயிற்சிகள் எலியினது அல்லது முயலினது எலும்புக்கூட்டுத்தொகு தியை (தலையோடு நீங்கலாக) முழுவதாக வரைந்து, பகுதிகளுக் குப் பெயரிடுக. (எலியினது எலும்புக்கூட்டைப் பெறுமாறு:- பெரிய எலி ஒன்றைப் பிடித்துக், குளோரபோம் பண்ணியபின், எலும்புகள் சேதமடையாவண்ணம், அதன் உடலகவுறுப்புகளைக் காவளமாக நீக்குக. அதன் மேல்தோலைக் கவனமாக உரித்துக் கொள்க. இம்மாதிரிப்பொருளை, அதன் தசை மென்மையாகும்

Page 122
230
உயிரினவியல்
வரை நீரிலிட்டு அவித்துக்கொள்க. முடிந்தவரைக்கும் எலும்பு களின் மீதுள்ள தசையை அப்புறப்படுத்துக. அப்பால், 10% சோடியம் அல்லது பொற்றாசியமைதரொட்சைட்டில் மீண்டும் அவ்வெலும்புக்கூட்டை அவித்துக்கொள்க. அவித்தெடுத்தபின், நன்கு கழுவி எடுத்து, வெளியில் காயவைத்துக்கொள்க).
அத்தியாயம் 29
சமூகவாழ்க்கைப் பூச்சிகள்.--கறையான்
TIFIAL
பு]ெ.
பி.
கறையான்: சேதனவுயிர்கள் பல வகையான பழக்கவழக்கங் களை உடையன. பல உயிரினங்கள் தனித்தே வாழ்க்கை நடாத்துகின்றன. சிங்கம், புலி முதலியன தனித்தனி வாழுகின் றன. ஊனுண்ணும் விலங்குகளிற் பல இத்தகையன. ஆனால், பல உயிரினங்கள் கூடிவாழுகின்றன. எதிர்பாரா நிகழ்ச்சி காரணமாக, மயிர்கொட்டிகள் கூட்டமாக வாழுகின்றன. வண் ணாத்திப்பூச்சிகள் ஓரிடத்தில் முட்டைகளைக் குவியலாக இட்ட மையே, அவைகளின் கூட்டத்திற்குக் காரணமாகும், மற்ற வகை களில், அவை தனித்தே வாழுகின்றன. ஆடுகள், மான்கள், மாடு கள் முதலியன மந்தையாகக் கூடிவாழுகின்றன. தற்பாதுகாப்பு ஒன்றிற்காகவே அவை கூடி வாழ்கின்றன. மற்றையவிடயங்களில் அவை தனித்தனி வாழ்க்கை நடாத்துகின்றன. ஒநாய்கள் போன்றவை இரையைப் பிடிப்பதற்காகச் சில காலங்களில் மட் டும் கூட்டமாக வாழுகின்றன. ஆகவே, மேற்கூறிய கூட்டு வாழ்க்கைகளில் ஒவ்வொரு உயிர்ப்பொருளும், தனக்காகவே தான்வாழும் முறைமை காணப்படுகிறது. ஒரு சில கருமங்களைக் கூட்டாகச் சாதித்துக்கொள்ளுமளவிலேயே, அவற்றின் கூட்டு வாழ்க்கை நீடிக்கிறது.
ஆனால், நிலையான கூட்டுவாழ்க்கை நடாத்தும் உயிரினங்க ளும் இருக்கின்றன. அவைகள் சமுதாயங்களாக வாழுகின்றன.

சமூகவாழ்க்கைப் பூச்சிகள் - கறையான்
231
அவற்றிடையே தொழிற்பிரிப்பு உண்டு. இச்சமுதாயங்களில் ஒவ் வொரு குழுவும் ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்யும். அதாவது. சமுதாயத்திலுள்ள உறுப்பினர்களிடையே தொழில் வகையீடு காணப்படும். இத்தொழில் வகையீடு காரணமாக, உடலமைப்பு வகையீடும் ஏற்படுகின்றது. கு றித்த தொழிலைச்செய்யும் உறுப்பினர்களே, குறிப்பிட்ட அமைப்புடையவர்களாயிருப்பர். ஒரு குழுவினர். மற்றைய குழுவினருக்குத் துணையாக இருப்பர். வெவ்வேறு வேலைகளைச் செய்ய, வெவ்வேறு குழுவினர் சிறத்தல் டைந்திருப்பதாலேயே இவ்வுயிரினங்கள் வெற்றியோடு வாழ்க்கை நடாத்துகின்றன. இவற்றிடையே நிலவும் கூட்டுறவும், தொழிற் பிரிப்புமே இவை வினர் குழுவாக வாழ உதவுகின்றன. எனவே, உடற்றொழிலியற் தொழிற்பிரிப்புள் ளி, ஒரேவகையைச் சேர்ந்த விலங்குகளின் கூட்டமே விலங்குச் சமுகம் எனப்படும்.
பல சட்டதிட்டங்கள் அமையப்பெற்ற ஒரு சமூகத்தைப் போலச் சுறுசுறுப்புடனும், விடாமுயற்சியுடனும், பல வேலைகளை சமூகவாழ்க்கைப் பூச்சிகள் செய்யும். ஆனால், உலகில் சமுக வாழ்க்கைப்பூச்சிகள் சிலவே. கறையான், எறும்பு, தேனீ, குளவி ஆகியவை பெயர்பெற்ற சமூகவாழ்க்கைப் பூச்சிகளாகும். இவற் றின் எண்ணிக்கை மிகப்பெரிதாகும். சில கறையான் பூச்சி களின் சமூகத்தில் இலட்சக்கணக்கான பூச்சிகள் இருக்கும். ஒரு தேனீக்கூட்டில் பொதுவாக 35,000 முதல் 50,000 தேனீக்கள் வரை இருக்கும். பிரேசில் நாட்டில்வாழும் ஒருவகை எறும்பின் கூட்டில் 6 இலட்சம் எறும்புகள் வரை வாழுகின்றன. என அறிகி சரும்.
கறையா னை "வெள் ளை எறும்பு' எனத் தவறாகப் பெயரிட்டு அழைக்கிறார்கள். எ னி தா ம், அவற்றிற்கும், மெய்ம்மையான எறும்புகளுக்குமிடையில் எந்தவிதமான ஒப்புமையுங் கிடையாது. எறும்புகளுக்கும், கறையான்களுக்குமிடையில் இராணிகள், வேலைக்காரர், போர்வீரர் என்னும் சிறத்தலடைந்த பிரிவுகள் தொடர்பாகமட்டுமே, பொதுவான ஓர் ஒப்புமை காணப்படுகின் றது. ஆனால், அமைப்பிலும், விருத்திப்பாட்டிலும் அவற்றிடையே பென்னம்பெரிய வித்தியாசங்களுண்டு. உதாரணமாக, மெய்ம் பாமயான எறும்புகள் முழுஉருமாற்றம் உடையன. (34. ம் அத்தி யாயம் காண்க). கறையான்களில் உருமாற்றத்தின் சுவட்டைத் தானும் காண்டல் அரிது. இளங்கறையான்கள் தோற்றத்தளவில் பெரிய கறையான்களை ஒத்திருக்கும். கறையான் மங்கலான வெண்ணிறமுடையது; அன்றி வெண்ணிறமுடையதன்று.

Page 123
232
உயிரினவியல்
கறையான்கள், சமூகவாழ்க்கை நடாத்தும் பூச்சிகளாதலால், தனித்தனி பலபூச்சிகளைக்கொண்ட ஒரினக்குழுக்களாகக் காணப் படும். இலங்கையில் 3000 அடி உயரத்துக்கு உட்பட்ட பிரதேசங் களில், (புற்றுகளை நிலத்திற் கட்டி வாழும்) கரையான்களினது கூம்புருவுள்ள புற்றுகள் எங்கும் காணப்படும். (சிலவகைக் கறை யான்கள் உக்கிப்போன மரங்களிலும் வசிக்கின்றன) இப்புற்று களில் அவை ஓரினக்குழுக்களாக,- சமுதாயங்களாக - வாழும் ஒரு சமுதாயத்தில் உள்ள முழுவளர்ச்சியடைந்த கறையான்களில் வேலைக்காரர், போர்வீரர், சிறகுமுளைத்த ஆண்கள், பெண்கள், துணையாக வுள்ள ஆண்கள், துணையாகவுள்ள பெண்கள் என்றும் பிரிவுகள் உண்டு. இப்பிரிவுகள் தொழிற்பிரிப்புத் தொடர்புடையனவாதலால் சாதிகள் எனப்படும். சிறகுமுளைத்த ஆண்களையும், பெண்களையும் "ஈசல்" அல்லது நத்தார் ஈக்கள் என்பர். ஒருபாட்டம் நல்லமழை பெய்த தும், அவை (ஈசல்கள்) வீடுகளில் நடமாடுவதை நாம் காண லாம். கலவியின்பின், ஆண்களும் பெண்களும் சி ற கு க ளை உதிர்த்துவிடும். உதிர்த்துவிட்டு, நிலத்திலுள்ள சந்து பொந்துக ளில் எங்காவது நுழைந்துகொள்ளும். நுழைந்தபின், பெண் கறையான் அங்கே ஒரு கூட்டம் முட்டைகளை இடும். பெரும் பாலும், வேறு புற்றுகளிலிருந்து பெயர்ந்து 'காலி' யாகத்திரியும் சில வேலைக்காரக் கறையான்களின் துணையோடு, ஆணும், பெண்ணுமாகத் தங்கள் புதிய குடும்பத்தைப் பாதுகாத்துவரும். மிகவிரைவில், சிறப்பான ஒரு சிறு அறையினுள் ஆ, பழம், பெண் சணுமாகிய அப்பெற்றோர், லேலேன் சாரர் கூட்டம் ஒன்றினற் சிறை அபயக்கப்படுவர். வைக்கப்பட்ட பெற்றோர் வேலைக்காரர் கூட்ட மொன்றினற் சூழப்படுவர், சூழ்ந்தபின், வேலைக்காரர் கூட்டமா னது தாமுண்டாக்கிய 'வேத்தறையினுள் சிறிய புற்றுத்துவரங் கள் வாயிலாக உள்ளும் புறமும் நடமாடித்திரியும், பெற்றோர் இருவரில் பெண் ( இராணியாக்கப்பட்டிருக்கும் கறையான் ) ஆனது ஏறத்தாழ மூன்றங்குல நீளத்திற்குமேல் பருமை அடை யும் வரைக்கும், அவ்வேத்தறையின் கண்ணே வளர்ச்சி அடை யும். அஃது உண்மையாகவே, எண்ணிறந்த முட்டைகள் நிறைந்த ஒரு 333பபோல ஆகிவிடும். இராணி முட்டைகளை இடுத்தோறும், வேலைக்காரர் கூட்டம் இடையீடின்றி நிரை நிரையாகச் சென்று, அம்முட்டைகளைச் சிறப்பான 'வளர்ப்புப் பண்ணே'களுக்குக்

சமூகவாழ்க்வகப் பூச்சிகள் - கறையான்
233
காவிச்சென்று, அங்கு வைத்துப் பாதுகாத்து வரும். இளங்கறை பயான்கள் தம்மைத்தாமே கவனித்துக்கொள்ளக்கூடிய பருவம்
அடையும் வரைக்கும் வேலைக்காரர் அவற்றைக் கவனித்து வருவர், கறை யான் சமுதாயம் பெருக்க மடையுந்தோறும், புதிய புற்றுகளும் புதிய வளர்ப் புப்பண்ணைகளும் உண் டாக்கப்படும். புற்றுகளை உ ண் டா க்கு ம் போது, அவற்றிலிருந்து அகழ்ந் தெடுக்கப்படும் மண், புற் றுகளின் வாயிலில், நில மட்டத்தின்மேல் குவித்து நாவக்கப்படும். - இவை களே யாம் வழக்கமாகக் காணும் கறையான் புற்
றுகள் ஆகும்.
உரு. 118 கறையான்கள் 4 வேலைக்காரன்; B போர்வீரன்; ' சிறகுமுளைத்த ஆண்
அல்லது பெண்; 1) இராணி (முட்டைகள் நிறைந்த வயிற்றறை யுடன்).
சிறப்பான காற்றோட்டக்குழாய்கள் கறையான் புற்றுகளின் அகத்தே, ஆழத்திற்குச் செல்லுகின்றன. இக்காற்றோட்டக்குழாய் களைச் சுற்றிலும் கூட்டம் கூட்டமாகக் காணப்படும் குழிகள்' ஓரினப்பங்கசு (கவகம்) வினாலும், மரக்கூழினாலும் ஏறத்தாழ முழுவதாக நிரப்பப்பெற்றிருக்கும். இப்பங்கசு, வளரும் இளங் -கறையான்களுக்கு நல்ல போசணையுள்ள உண்வாக அமைகின்

Page 124
234
உயிரினவியல்
றது. மேலும், இப்பங்கசு புற்றினகத்தே நிலவும் வெப்பநிலை
யைத் தணிக்கப் பெரிதும் உதவுகின்றது.
வேலைக்காரக்கறையான்கள் உருவத்திற் சிறியவை; குருடா னவை; சிறகு இல்லாதவை; வெளிறிய நிறத்தவை. அவற்றில் பாற்குறிகள் விருத்தியடைந்திருப்பதில்லை. வேலைக்காரக்கறை. யான்களின் உடல்: தலை, நெஞ்சறை, வயிற்றறை என முப்பிரிவு களையுடையது. தலையில் வாயும், வாயைச்சுற்றித் தாடைகளும் உண்டு. அவற்றின் தாடைகள் அதிக வலுவுள்ளவை; உமிழ்நீர்ச் 'சுரப்பிகள் மிகநன்கு விருத்தியடைந்திருக்கும். உணர்கொம்பு கள் சிறப்பான உணர்ச்சிக்கலங்களை உடையவை. உணர்கொம்பு களின் உதவிகொண்டு வேலைக்காரர் தத்தம் உறையுளைக் கண்டு பிடித்துக்கொள்வர். உணவைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கும், - தமது சமுதாயத்திலுள்ள உறுப்பினர்களை இனந்தெரிந்துகொள் (ளுவதற்கும் உணர்கொம்புகள் உதவுகின்றன. நெஞ்சறை, மூன்று - பிரிவுகளையுடையது. அவை ஒவ்வொன்றிலும் பொருத்துள்ள ஒவ்வொருசோடி நடக்கும் கால்கள் உண்டு. வயிற்றறையில் அவ யவங்களிலில்லை.
போர்வீரர்களுக்கும் சிறகு கிடையாது. அவற்றிற்கு விருத்தி யடையாத பாற்குறிகள் உண்டு. அவைகளும் குருடானவையே. அவற்றிற்கு நன்குவிருத்தியடைந்த கத்தரிக்கோல் போன்ற தாடைகள் இருக்கின்றமையால், அவற்றை ஏனைய சாதிகளினின் றும் வேறு பிரித்தறிதல் எளிது. போர்வீரனின் தலையானது அதன் தலைதவிர்ந்த உடலின் பகுதியிலும்பார்க்கப் பெரிதாகவும், கருமை நிறம் வாய்ந்ததாகவும் காணப்படும்.
துணை யாயுள்ள ஆண்களும், பெண்களும் பெரும்பாலும் பெரிய உருவமுள்ள வேலைக்காரரைப் போன்ற தோற்றமுடை யன. ஆனால், அவற்றிற்கு நன்கு விருத்தியடைந்த கண்கள் உண்டு. எனினும், அவற்றின் இனம்பெருக்கலுறுப்புகள் அரை குறையாகவே விருத்தியடைந்திருக்கும். பாற்குறிகள் நன்கு விருத்தியடைந்திருக்கும் தலைமையான கறையான்கள், இனம் பெருக்கல் செய்யத் தவறுங்கால், அவை இளங்கறையான்களை உற்பத்தி செய்யும் வகையில், இனம்பெருக்கலுக்குரிய கடமை யைச்செய்து, அக்குறையை ஈடுசெய்யும் பணியை மேற்கொள்ளு கின்றன.
உண்மையான ஆண்களும், பெண்களும் ஏனைய கறையான் சாதிகளினின்றும் அதிக வித்தியாசமுள்ளன. அவை ஏனைய

சமூகவாழ்க்கைப் பூச்சிகள் - கறையான்
235
சாதிகளிலும் பார்க்கக், கருமைவாய்ந்த நிறமுடையனவாகவும், பார்வைக்குரிய உறுப்புகள் உடையனவாகவும் காணப்படும், கறையான் சமுதாயத்தில் பாற்குறிபடைத்த ஆண்களும் பெண் களும் மிகத் தொகையாக உற்பத்திசெய்யப்படுகின்றன. அவை மழைக்காலத்தில், தம் உறைவிடங்களாய புற்றுகளினின்றும் கூட் டங்கூட்டமாக வெளிப்போந்து, கலவியின் பொருட்டுப் பறந்து திரிவதை, யாம் காணலாம். உண்மையான பெண்கறையான் களில், முட்டைகள் நிரம்பிய மிகநீண்ட வயிற்றறையையுடை யவை, இராணிகள் எனப்படும். ஒரு கறையான்புற்றில் பல இராணரிகள் இருக்கும்,
புற்றுகளை உண்டாக்குவதும், உணவுதேடுதலும் இளங்கறை யான்களின் நலம்பேணுத லும் வேலைக்காரரின் கடமைகளாம் -- உணவு தேடச்செல்லும் (வலைக்காரக் கூட்டங்களின் பக்கங்க ளில், துணையாகவிருந்து, அவற்றிற்குப் பாதுகாப்பு அளிக்கும் சுடமையைப் போர்வீரர்கள் செய்கின்றனர்.
+ கறையான்கள் அழுகிய மரக்கூழையே உணவாகக் கொள்ளு கின்றன. இளங்குடம்பிகளுக்கு வேலைக்காரர் தம் உமிழ்நீரையே உணவாகக் கொடுக்கின்றனர். சிறிது முதிர்ச்சியடைந்த குடம்பி களுக்கு உமிழ் நீரையும் மரக்கூழையும் உணவாக அளிக்கின்றனர். முதிர்ந்த குடம்பிகளுக்கு மரக்கூழே உணவாகக் கொடுக்கப்படு கின்றது. குடம்பிகளுக்கு உணவூட்டல், விருப்பத்துடன் செய்யக் கூடிய, மனதிற்குகந்த வேகபயன்று:- மிகச் சிரமமான வேலையா கும். இளங்குடம்பிகளின் வயிற்றறையில் காணப்படும் சிறப் பான சுரப்பிகளிலிருந்து பாகுபோன்ற ஒரு பதார்த்தம் சுரக்கப் படுகின்றது. உணவுட்டும் வேலைக்காரர் இச்சுரப்பை விரும்பி அருந்துகின் றனர். தங்களுக்கு உணவட்டும் சிரமத்தைக் குறைப் பதற்காக, இள ங்குடம்பிகள் இச்சுரப்பை அளித்துக் கைமாறு செய்கின்றன.
கறையான்புற்றுகளில் வண்டுகள், பாம்புகள் முதலியனவும் உறைகின்றன. கறையான்கள் இவற்றையெல்லாம் சகித்துக் கொண்டு வாழ்க்கை நடாத்தும் இயல்பின.
வினாக்கள் 1. பூச்சிகளின் சமூகவாழ்க்கையைப்பற்றி ஒரு கட்டுரை
வரைக. கறையானின் சாதிகளையும், அ ன வ சமூகவாழ்க்கை நடாத்துமாற்றையும் விவரிக்க.
2.

Page 125
T]ர்
உயிரினவியல்
செய்முறைப் பயிற்சிகள்
கறையான்களில் இராணி, வேலைக்காரர், போர்வீரர் என் பவற்றைப் பிடித்துக், கைவில்லையினால் அவற்றின் பகுதிகளைச் சோதிக்க; சோதித்தபின், அவற்றின் புறஉருவப்படங்களை வரைக.
2. கறையான்புற்று வளருமாற்றை நாளிலும் பொழுதிலும் கவனித்து வருக.
அத்தியாயம் 30 சமூக வாழ்க்கைப்பூச்சிகள் -- தேனீ தேனீக்களின் சமுதாயம் ஒன்றில், மூன்றுசாதித் தேனீக்களே காணப்படும். அவை, இராணரித்தேனி, வேலைக்காரத்தேனி, ஆண்தேனீ -என்பனவாம். ஆண் தேனீ, சோம்பர்த்தேனீஎனவும் வழங்கப்படும்.
ஒரு தேனீக்கூட்டில் இனம்பெருக்கற்றொழில் செய்யும் இரா ணித்தேனீ ஒன்றுமட்டுமே இருக்கும். சிறப்பாக இனம்பெருக் கல் செய்வதற்காக வாழும்இராணி 24 மணி நேரத்தில் 2000 முதல் 3000 முட்டைகள் வரையில் இடும். ஏறத்தாழ மூன்று வருடகாலத்திற்கு இக்கடமையைச் செய்யும்.
இராணியின் வயிறு மிக நீளமானது. அதன் வயிறு அதனது உடலை மூடிக்கொண்டிருக்கும் சிறகுகளின் நுனிகளுக்கு அப் பாலும் அதிக தூரம் நீண்டிருக்கும். * மகரந்தம் சேர்த்துவைப்ப தற்குரிய உபகரணம் அதனிடத்து இல்லை, அதிகமான பூக்களி லுள்ள அமுதச்சுரப்பிகளை அடைந்து, அமுதம் உறிஞ்சத்தக்க நீளமுள்ளதாக, அதனது வாய்ப்பகுதிகள் அமைந்திருக்கவில்லை, உறிஞ்சுங்குழாயாகிய தும்பிக்கை குறுத்திருக்கும். ஆகவே, தானாக உணவு தேடி உண்ண முடியாத நிலையில், அஃது இருக் கிறது. எனவே, வேலைக்காரரின் தயவிலேயே உணவுக்குத் தங்கி யிருக்கிறது. கொட்டக்கூடிய 'கொடுக்கு" ஒன்று வயிற்றறையின் பிற்பக்கத்துண்டில் அமைந்திருக்கிறது. அதன் கொடுக்கிற்கு இறகிழைகள் இல்லை, ஆதலால், அது தன் கொடுக்கை மீட்டும், மீட்டும் கொட்டுவதற்குப் பயன்படுத்தலாம். எனினும், தன்னோடு போட்டிக்குவரும் இராணிகளோடு சண்டை செய்யும்போதுதான், கொடுக்கைப் பயன்படுத்தும்,
ஆண்தேனீ உருவத்தில் வேலைக்காரரிலும் பெ ரி ய து. பெரிய சிறகுகளை உடையது; நன்கு விருத்தியடைந்த கண்களை உடையது; பறக்கும்போது சிறகுகள் அசைவதனால் உண்டா.. |

சமூகவாழ்க்கைப் பூச்சிகள் - தேசof
கும் ஓசை, இரீங்கார ஒலியை உண்டாக்கும். கொடுக்கோ, மக ரந்தஞ் சேர்க்கும் உபகரணமோ அதனிடத்து இல்லை, அவை பால் முதிர்வுள்ளன; இராணியோடு ஒருமுறை மட்டும் கலவி செய்யும் தொழில் ஒன்றேயன்றி, வேறு தொழில் இல்லாதன. இராளியிடும் முட்டைகளைக் கருக்கட்டச் செய்வதற்கு ஆண் தேரீ இன்றியமையாதது.
ஒரு கூட்டில் உள்ள தேனீக்களில் பெரும்பாலானவை வேலைக் காரத் தேனீக்களேயாம். வேலைக்காரத்தேனீ" இனம்பெருக்கற் றொகுதி நன்கு விருத்தியுருத பெண் தேனீயேயாம், அஃது, உருண்
டையான உடலமைப்புடையது. அதன் உடல், ஏனைய தேனீக் களைப்போலவே தலை, நெஞ்சறை, வயிற்றறை என முப்பிரிவு டையது; தலையில் ஒரு சோடி உணர்கொம்புகளும், நன்கு விருத்தியடைந்த ஒரு சோடி கூட்டுக்கண்களும் உண்டு; கடிக் கவும் உறிஞ்சவும் கூடிய வாய்ப்பகுதிகளை உடையது. உறிஞ் சுங் குழாயாகிய தும்பிக்கை முக்கியமாகப் பிற்சொண்டினால் உருப்பெற்றிருக்கும். கடிக்குந்தாடைகளில் பற்கள் இல்லை; ஆனால், அவை மழமழப்பான ஓரங்களை உடையன. கடிக்கும் தாடைகளுக்கு மகரந்தமணிகளை மென்று, பசைபோல் ஆக்கும் வலுவுண்டு. முதல் அனு உனர் கொம்புபோல் பயன்படும். நெஞ் சறை மூன்று துண்டுகளால் ஆக்கப்பட்டிருக்கும், நெஞ்சறை யின் இரண்டாம், மூன்றும் துண்டுகளில் மென்றகடுபோன்ற. சோடியாய் அமைந்த சிறகுகள் உண்டு. பறக்கும்போது, இரண்டு நீ ச ா டி சி ) கு க ளு ம் தொழிற்படுகின்றன. நெஞ்சறைப்பிரிவுகள் மூன்றிலும், பிரிவுக்கு ஒரு சோடியாக மூன்று சோடி கால்களுண்டு. கால்கள் பொருத்துள்ளவை. ஒவ் வொருகாலிலும் வளைவான இரண்டு உகிர்களுண்டு. கால்கள் இடர்பெயர்ச்சியுறுப்புகளாகத் தொழிற்படுவதோடு, சிறப்பான வேறு தொழில்களையும் செய்கின்றன. முதலாவது காலினது கணுக்காற் பொருத்தின் அண்மையிலுள்ள முனையில், சீப்புப் போன்ற ஓர் அமைப்பு உண்டு. இவ்வமைப்பில் உரத்த மயிர் களுண்டு. பூவிலிருந்து கொணர்ந்த மகரந்தம் உணர்கொம்பு கள், தட்பை என்பவற்றிற் ஒட்டிக்கொண்டிருக்கும். இம்மகரந்தத் தைத் தாரிகைபோன்று துப்புரவு செய்வதற்குச், சீப்புப்போன்ற அமைப்பு உதவுகின்றது. மூன்றாவது காலில் உள்ள மகரந்தம் சலடையினின்றும் மகரந்தத்தைக் கிளறி வெளிப்படுத்த, இரண் டாவது காலின து காணுவிலுள்ள 'கோல்' போன்ற அமைப்பு உதவும். மூன்றாவது காலின் கணுக்கால் மூட்டில் மகரந்தத் கூடை இருக்கிறது. இதில், ஐந்து நிரையில், தூரிகைபோன் று உரத்தமயிர்கள் அமைந்திருக்கின்றன, அவைகள், மகரந்தக் தூரிகைகள் எனப்படும். வயிற்றறையின் பிற்பக்கத்துண்டில்

Page 126
238
உயிரினவியல்
கூரிய முளைபோன்ற கொடுக்கு' இருக்கிறது; மேலும், சோடி யாயமைந்த, உறுத்தும் பாயமுள்ள பைகளும் இருக்கின்றன. கொடுக்கினடியில் சில இறகிழைகள் உண்டு. வேலைக்காரத்தேனீ, யாரையும் கொட்டுமேயானால், அதன் வயிற்றறையின் பிற்பக்கத் துண்டு, கொடுக்குடன் பிரிந்துவிடும். எனவே, கொட்டிய தேனீ உயிரிழந்துவிட நேருகிறது.
வேலைக்காரத் தேனீக்கள், சிறிய அறைகளில் உள்ள முட்டைக ளிலிருந்து வெளிவந்த தேனிக்குடம்பிகளுக்கு, மிதமான உணவூட்டி வளர்ப்பதனாலேயே, வேலைக்காரத்தேனீக்கள் உதிக்கின்றன. நித மான உணவு கொடுத்துச் சிறிய அறையில் வைத்து வளர்ப்பதனல், வருங்காலத்தில் வேலைக்காரத்தேனீயாக விருத்தியடைய வேண் டிய முட்டை ஒன்றினைப், பெரிய அறையில் வைத்து, அதிலி
ருந்து வெளிவந்த குடம்பிக்குச், சிறந்த உணவு பாட்டப்படுமாயின், அதன் இனம் பெருக்கலுறுப்புகள் முழுவளர்ச்சியடை ந்து, அஃது ஈற்றில் இராணித்தேனீ யாக மாறிவிடும். வேலைக்காரத் தேனீக் கள் மகரந்தமணிகளைச் சேகரிக்கக்கூடிய வேறுபடுத்தப்பட்ட பின்னங்கால்களால் மகரந்தத்தையும், தும்பிக்கையால் அமு தத்தையும் பெற்றுத், தாம் கட்டும் கூடு களில் சேமித்து வைக்கின்றன. விருத்தி யடைந்து கொண்டிருக்கும் முட்டைக ளின் நலம்பேணுதல், குடம்பிகளுக்கு உணவூட்டல், கூட்டின் வெப்பநிலையை ஒழுங்குக்குட்படுத்தல் என்பன வேலைக் காரரின் தொழில்களேயாகும்.
நீட்சியுடையனவும், அறுகோணவடி வுள் ளனவும் ஆகிய, ஆயிரக்கணக்கான சி ற் ற  ைற க ன ால் ஆக்கப்பட்டுள்ள து, தேனீக்கூடு. அமுதத்தை (தேனை) ச் சேமித்து வைப்பதற்கும், இளங்குடம்பி களின் வளர்ப்புப்பண்ணையாகப் பயன்
உரு. 119
தேனீக்கள் A இராணி; B ஆண்; ( வேலைக்காரன்.

சமூகவாழ்க்கைப் பூச்சிகள் – தேனீ
23ா
த சிற்றPை:வலைக்கார விருக்கு.பதற்கே
யடுதற்கும் இக்கூடு உதவுகிறது. வளர்ப்புப்பண்ணைகளாக அமை யும் சிற்றறைகள் ,- அவற்றினுள் விருத்தியடைய இருக்கின்ற முட்டைகள், வேலைக்காரர்களாக வளரவிருக்கும் முட்டைகளோ, ஆண் தேனீக்களாக வளரவிருக்கும் முட்டைகளோ, இராணியாக வளரவிருக்கும் முட்டையோ என்பதற்கேற்ப, முறையே சிறி யனவாயும், நடுத்தரமானவையாயும், பெரியனவாயும் இருக்கும்.
இராணி முட்டைகளை இட முன்னதாகவே அவற்றின் பால் துணியப்பட்டுவிடும். இராணியிடும் முட்டைகள் எல்லாம் கருக் கட்டல் இன்றியே ஆண் களாக விருத்தியடையக்கூடிய நிலைப் பண்பு உடையன. இச்செயன்முறை கன்னிப்பிறப்பு எனப்படும். ஆனால், முட்டைகள் முன்னதாகவே கருக்கட்டப்படுமாயின், பெண் தேனீக்களே உண்டாகும். குடம்பிகள் சிறப்பாக ஆக்கப் பட்ட 'இராசபாகு' என்னும் உணவு ஊட்டி வளர்க்கப்படின், இராணியாக உருப்பெறும், முட்டை இடப்பட்ட தினத்திலிருந்து 16 ம் நாளில் இராணியும், 22 ம் நாளில் வேலைக்காரரும், 25 ம் நாளில் ஆண்தேனீக்களும் வளர்ச்சியடைந்து வெளிவருகின்றன,
தேனீக்கூட்டில் புதிய இராணி வளர்ந்து வருவதைக்கானஎக் கானாப், பழைய இராணியின் அமைதி குலையும். அமைதிகுலைந்த பழைய இராணி, புதிய இராணியைக் கொல்லப் பலமுறை முயற்சி செய்து, வேலைக்காரரின் குறுக்கிட்டால் தோல்வியுறும். தோல்வி யுற்ற இராணி, தான் வாழும் கூட்டில், மேலும் மேலும், அளவுக் கதிகமாகத் தேனீக்கள் பெருகுவதைக்கண்டு, ஒரு கூட்டம் வேலைக்காரர் புடைசூழ, அக்கூட்டைவிட்டு வெளியேறும். இந் நிகழ்ச்சி தேனீக்கள் 'கலை தல்' எனப்படும். இப்பொழுது, பழைய கூட்டில், விருத்தியடைந்துகொண்டிருக்கும் முட்டைகளின் நலம் பேணுதற்கு வேண்டிய ஒருசில வேலைக்காரரே, எஞ்சியிருப்பர். மிகவிரைவில், இன்னொரு புதிய (இளம்) இராணி பழைய கூட் டில் தோன்றி, ஒன் றில், அங்கு எஞ்சியிருந்த வேலைக்காரர் புடை சூழ இரண்டாம் முறையாகக்கலையும்; அல்லது, பழையகூட்டைத் தன் ஆட்சிக்குட்கொண்டுவரும். இராணி, தான் வெளிவந்த ஐந்து முதல் ஏழு நாட்களுக்குள்ளாக 'மணவினை' நாடி வெளியே பறந்துசெல்ல, ஆண்தேனீக்கள் அதனைப் பின்தொடரும், தொட ரப்பட்ட இராணரி, ஆகாயத்தில் மென்மேலும் உயரப்பறந்து செல்லும், அதிக உயரத்துக்குப் பறந்து செல்லுந்தோறும், பின்னே தொடர்ந்து வந்த ஆண் தேனீக்களிற்பல, தொடர்ந்தும் - மேற்பறக்கமுடியாமையினால் பின்னே தங்கிவிடும். ஈற்றில், ஒரு ஆண் தேனீயே இம்முயற்சியில் வெற்றிபெறும். நீ கடும் விடா

Page 127
240
உயிரினவியல்
முயற்சி காரணமாக இராணியைத் தொடர்வதில் வெற்றிபெற்று இராணியோடு கலவி செய்யும் பேறுபெற்ற ஆண் தேனீக்குக் கிடைக்கும் கைமாறு பெரிதும் இரங்கத்தக்கது. ஏனெனில், புணர் ச்சி மிக உக்கிரம் உடையதாதலினால், துரதிட்டசாலியான ஆண் தேனீயின், இனம்பெருக்கலுக்குரிய உறுப்புகளை, இராணி பிய்த்துப் பிடுங்கிவிடும். இதனால், உயிரிழந்த ஆண் தேனி பிணமாகி நிலத்தில் விழும். இதன் மேல் ஆண் தேனீயினது இனம் பெருக்கலுக்குரிய உறுப்புகளோடு, இராணி கூட்டிற்குத் திரும்பும், ஆணின் இனம் பெருக்கலுறுப்புகளைத் தனது முட்டைகளைக் கருக்கட்டச் செய் யும் கருவியாக இராணி பயன்படுத்தும். கூட்டிற்குத்திரும்பி வந்த இராணி ஒரு புதிய தேனிக்கூட்டத்திற்குத் தலைமைதாங்கி வெளியேறிக் கலையும்வரைக்கும், பழைய கூட்டிலேயே வாழும். மணவினை முடித்து இராணி கூட்டிற்குத் திரும்பிவருதலானது. அத்தேனீக்கூட்டில் புத்துணர்ச்சியும், உற்சாகமும் பெருக, உயிர்ப் புள்ள வாழ்க்கை துவங்குவதற்கு, ஓர் அடையாளமாகும். சில வேளைகளில், ஒரு புதிய கூட்டை அமைத்தலுமுண்டு.
தேனீக்கள் மனிதனுக்கு அதிகம் பயன் தரும் வகையில் தமது வாழ்க்கையை நடாத்துகின்றன; தேனும், தேன் மெழுகும் அவற்றால் உண்டாக்கப்படுவனவே; பூக்களில், அயன்மகரந்தச் சேர்க்கை நிகழ்த்தும் கருவிகளில் மிகமுக்கியம் வாய்ந்தவையா தலால், தாவரங்கள் பயன் தரும்படி செய்கின்றன.
வினாக்கள் 1. தேனீயின் சமூகவாழ்க்கையைப்பற்றி, ஒரு கட்டுரை
வரைக,
2.
ஒரு வேலைக்காரத்தேனீக்கும் ஆண் தேனீக்குமிடையில், வெளியுருவத்தில் காணப்படும் வித்தியாசங்களெவை?
செய்முறைப் பயிற்சிகள் 1. இராணித்தேனீ', வேலைக்காரத்தேனீ, ஆண் தேனி என்ப வற்றின் மாதிரிப்பொருள்களைச் சேகரித்துக் கைவில்லையினுதவி யோடு, அவற்றைச் சோதித்தபின், அவற்றின் வெளியுருவப்படங் களை வரைக.
2. ஒரு தேனீக்கூட்டில் என்ன நிகழுகின்றது என்பதை நேரிற் சென்று காண்க

241
அத்தியாயம் 31
சமூகவாழ்க்கைப்பூச்சிகள் - எறும்புகள்
எறும்புகளில் பல இனங்கள் உண்டு. சமூகவாழ்க்கைப் பூச்சி கள் எல்லாவற்றுள்ளும் அதிகம் விருத்தியடைந்த சமூக அமைப்பு (அமையம்) உடையன எறும்புகளே யாம். பல்வேறு எறும்பினங் களும் பல்வேறு பழக்கவழக்கங்கள் உடையன. சமுதாயங்கள் அமைத்துக்கொள்வதிலும், அவற்றிடையே வேற்றுமைகள் காணாப் படுகின்றன, எனினும், எல்லாம் சமூகவாழ்க்கையையே நடாத்து கின்றன.
சிவப்பு எறும்பு (முயிறு) கள் சமுதாயங்களாகவே வாழ்க்கை நடாத்துகின் றன. ஒவ்வொரு சமுதாயத்திலும் பல வேலைக்காரர்; சில போர்வீரர்; ஒருசில இரானரிகள்; ஒருசில ஆண்கள் உண்டு. சிவப்பு எறும்புக்கூட்டில் பல இராணிகள் உண்டு. இராணிகள், உண்மையில் பால்முதிர்வுள்ள பெண்களே யாம், ஆண்களுக் கும் பெண்களுக்கும் சிறகுகளுண்டு. போர்வீரர்களுக்கும் வேலைக் காரருக்கும் சிறகுகள் கிடையாது. ஒரு கூட்டைவிட்டு இன்னொரு கூட்டுக்குக் "கலையும்"போ து வேலைக்காரருக்குச் சிறகு முளைத் தலுமுண்டு.
ஒரு கூட்டில் பல வேலைக்காரர்கள் இருப்பார்கள், அவற் றிற்கு நன்கு விருத்தியடைந்த கடிக்கும்தாடைகளுண்டு. தாடைகள் குழாய்போன்று அமைந்திருக்கும். தாடைகளின் அடிப் பகுதியில் நச்சுச்சுரப்பிகளுண்டு. அவை, எதிரிகளைக் கடிக்கும் போது, இந்நச்சுச்சுரப்பை அவர்கள் து உடலிற்புகுத்திவிடுகின் றன. வாய்ப்பகுதிகள் கடிக்கவும், மெல்லவும் ஏற்றவை. உணவு தேடலும் குடம்பிகளுக்கு உணவூட்டலும், அவற்றின் தொழில் களாம்.
போர்வீரர்கள் தொகையிற் குறைவாக இருப்பர். அவற்றின் தலை பெரிதாக இருக்கும்; தாடைகள் மிகவும் வலுவுடையவை. அவற்றின் நெஞ்சறைப்பிரிவு மிகமெல்லிதாக, நூலிழை போன்று காணப்படும். உணவு தேடச் செல்லும்போது, வேலைக்கார எறும்பு களுக்குப் போர்வீரர் பாதுகாப்பு அளிக்கின்றனர்.
215-17

Page 128
242
உயிரினாவியல்
ஆண்களும், பெண்களும் பெரிய நெஞ்சறையையும் நீண்ட வயிற்றறையையும் உடையன, பெண்களுள் ஒருசில இராணி களும் உண்டு. அவற்றின் வயிற்றறை ஏனைய சாதிகளின் வயிற்றறைகளைப்பார்க்கிலும் பெரிதாகவும், நீளமாகவும் இருக்கும். முட்டையிடுதல் மட்டுமே அவற்றின் தொழில். ஆண் கள் இராணி களோடு கலவி செய்தலை மட்டுமே தொழிலாக உடையன.
எறும்பின் வயிற்றறை அதன் நெஞ்சறையோடு வினோதமான முறையில் தொடுக்கப்பட்டிருக்கிறது. வயிற்றறையின் முற்பக் கத்துண்டுகள் அதனினின்றும் பிரிந்து, காம்பு போன்ற உருவ முடையனவாய், அசையக்கூடிய மூட்டாக அமைந்திருக்கும். இது சிறடிஎனப்பெயர் பெறும், சீறடி உடலின் நடுப்பிரிவாக அமைந் திருக்கிறது. எறுப்பின து உணர்கொம்புகளின் அடிப்பகுதியி லுள்ள பொருத்துகள், நீண்டனவாகவும் நுனிப்பகுதி, மடிக்கக் கூடியனவாகவும் இருக்கின் றன.
உரு. 120 எறும்புகள் 1 சிறகு முளைத்த பெண்; B சிறகுமுளைத்த ஆண்; 2 வேலைக்காரன்,
சிவப்பெறும்புகள் இலைகளில் தங்கள் கூடுகளை அமைத்துக் கொள்ளு கின்றன. இலைகளின் விளிம்புகளை வேலைக்காரர் மடித்து ஒன்று சேர்த்தபின், பசைபோன்ற ஒர் பதார்த்தத்தைச் சுரக்கும் சுரப்பிகளையுடைய ஒருசில இளம் வேலைக்காரரைத் தம் வாயில் கௌவிக் கொண்டு, மடி யுண்ட ஓரங்கள் ஒட்டிக்கொள்ளும்வரைக்

சமூகவாழ்க்கைப்பூச்சிகள் - எறும்புகள்
241
கும், அவ்விடத்திலேயே மொய்த்துக்கொண்டிருக்கும். பின்னர், பட்டுநால்போன்ற இழைகளால் அவ்விலைப்பையின் உட்பக்கத்தை இரைத்துக் கூட்டை அமைத்துக்கொள்ளும்.
பெண்களும் ஆண்களும் மணவினை நாடி வானவிதியிற் பறக் கும், மணவினை முற்றுப்பெற்றதும், ஆண்கள் இறந்துவிடும். மணவினைக்காலத்திலேயே ஆண் களுக்கும் பெண் களுக்கும் சிறகு முளைக்கிறது. மணவினை முடிந்ததும் பெண்கள், சில வேலைக் கா ரர் புடைசூடவோ, தணித்தோ புதிய சமுதாயம் ஒன்றை -அமைத்துவாழும். இராசாணிகள் இடும் முட்டைகளை வேலைக்காரர் பணவூட்டிப் பாதுகாக்கின்றனர். பெண்களும் இக் கடமையிற் - பங்குபற்றுவதுண்டு. முட்டைகள் தனித்தனி அறைகளில் வைத் துப் போற்றப்படுவதில்லை. அவைகள் கூட்டங்கூட்டமாக அறை களில் வைத்துக்காப்பாற்றப்படும்.
ஒரு சிவப்பு எறும்புக் கூட்டில் சிறிய முட்டைகள், வெண் ணிறமான, காலில்லாக்குடம்பிகள், கூட்டுப்புழுக்கள் (இவற்றைத் தவறுதலாக முயிற்று முட்டை எனக்கூறுகிறார்கள்), முழுவளர்ச்சி -யடைந்த சிவப்பெறும்புகள் என்பன காணப்படும்.
எறும்புகள் கதியாக ஒடுந்தன்மையுடையன. அவற்றினது நீண்ட, பலமான கால்கள் நடப்பதற்கும், ஓடுவதற்கும் உகந்த -வாறு அமைந்திருக்கின்றன. கூரிய உகிர்களுள்ள அ தன் பாதங்
கள் மரங்களில் ஏறவும், தலைகீழாக நடக்கவும் உதவுகின்றன.
பெரும்பாலும், உணவை அதிகமாகச் சேமித்துவைக்கும் வழக்கம் எறும்புகளிடம் கிடையாது. அகப்பட்ட உணவை உட னுக்குடன் அவை உண்டுவிடுகின்றன, பல்வேறு இன எறும்பு களும் பல் வேறு முறையான வாழ்க்கையை மேற்கொண்டிருக் கின் றன. சில எறும்புகள் மாமிசத்தை உணவாகக் கொள்ளுகின் றன. சில தாவரங்களின் வித்துகள், பலவகைக் கவகங்கள், பூச்சி புழுக்கள் என்பவற்றை உட்கொள்ளுகின்றன, மேலும் சில இனங்கள், தங்கள் உணவைத் தாமே உண்டாக்கிக்கொள்ளுகின் றன. இவ்வினத்தைச்சேர்ந்த வேலைக்காரர்கள் உண்ணத்தகுந்த காளான் வகைகளின் வித்திகளைத் தெரிந்தெடுத்துத், தங்கள் புற்று களில் சேர்த்துவைத்திருக்கும் உக்கலில் நாட்டிக், காளான்களை வளர்த்துத் தம் சமுதாயத்தி லுள் ள உறுப்பினர்களுக்கு உணவு - வழங்குகின்றன. சில எறும்பினங்கள் 'ஏப்பிட்டுகள்' எனப்படும் "பச்சைநிற ஈ'க்களோடு சேர்ந்து அவற்றிற்கு உதவியாக வாழ்ந்து,

Page 129
24
உயிரினவியல்
தாங்களும் பலனடைகின்றன. இந்த ஏப்பிட்டுகள் 'தேன் பனி' எனப்படும் மதுரமான ஒருவகைத்திரவபதார்த்தத்தைச் சுரக். கின்றன. இப்பதார்த்தத்தை எறும்புகள் ஆவலோடு உறிஞ்சிக் குடிக்கின்றன. ம னி த ர் பசுவை வளர்த்துப் பால் கறப்பது போலவே, இவ்வெறும்புகளும் ஏப்பிட்டுகளேப், பிடித்துக்கொண்டு போய்த் தங்கள் கூட்டில்வைத்து உணவூட்டுகின்றன, ஏப்பிட்டுக. ளின் வயிற்றுப்பகுதியை இவ்வெறும்புகள் மெல்லிதாக வருடுத லும், அவை தேன்பனியைச் சுரக்கும். வேலைக்கார எ றும்புகளிர் சில, அளவுக்கதிமான தேன் பனியைத் தங்கள் பருத்தவயிற்றினுள் "உறிஞ்சி எடுத்துச்சென்று, பின்னர், அதிக உற்சாகத்தோடு வேலைசெய்யும் தங்கள் கூட்டாளிகளுக்கு, அதனை ஊட்டுகின்றன. இம்முறைமையால், அவை தங்கள் கூட்டாளிகட்குத் தேன் நிறைந்த குடங்கள் போன்று சேவை செய்கின்றன,
சில எறும்புகளின் தாடைகள் மிகப்பெரிதாக அமைந்திருத்த லால், அவை, தாமாகவே உணவு அருந்தமுடியாத நிலைமையிலிருக் கும். இத்தகைய கா றும்புகள் அயலிலேயுள்ள குழுக்களோடு, அடி மைகளைப்பெற்றுக்கொள்ளும் நோக்கத்தோடு, சண்டை செய்யும்; அதிட்டவசமாக, அடிமைகளைப்பெற்றுக் கொண்டால், அவ்வடி மை கள், அவைகளுக்கு உணவூட்டவும், அவைகளுக்காக வேலை செய்ய
வும், குடம்பிகளின் நலம்பேணவும் உதவி செய்கின் றன.
எறும்பினங்களின் வாழிடங்களும், கூடுகளும் இனத்துக்கினம் வித்தியாசப்படுகின்றன. பல எறும்புச்சமுதாயங்கள் நிலத்தி லுள்ள நீண்ட புற்றுகளில் வாழுகின்றன; சில மரங்களில் வாழு கின் றன; சில நீர்க்கரைகளை அண்டி வாழுகின்றன.
இதுகாறும் சமூகவாழ்க்கைப் பூச்சிகள் சிலவற்றைப்பற்றிப் படித்தோம், சமூகவாழ்க்கை நடாத்தும் மனிதனைப்போல, இப் பூச்சிகளும் ஒரு வகையா னா சமூகவமைப்பை உடையனவாய்க் காணப்படுகின்றன. சமூகமாகக் கூடி வாழ்வதற்கு உகந்த சிறப் பியல்புகள் இவைகளிடத்துக்காணப்படுகின்றன. அவையாவன. சமூகவாழ்க்கைப்பூச்சிகள்! எண்ணிக்கையிற் பலவாக இருக்கும்; தாம் சமூகமாக வாழ்வதற்கு ஏற்றவாறு ஒரு சமுதாயத்தை அமைத்துக்கொள் ளும், ஒரு கூட்டையோ, புற்றையோ அமைத் துக் கொள்ளும்; வாய்ப்பான பருவத்தில் உணவைச்சேகரித்துச் சேமித்துவைத்துக்கொண்டு, உணவு குறைவாக அகப்படும் காலங்களைக் கழிக்கும்; தொ ழிற் பிரி ப் பு உடையன; தொழிற்பிரிப்புக்கேற்ற வாறு உடலமைப்பு வகையீடு உள்ளன.

குழங்களில் வாழும் உயிர்கள்
245
உருவவித்தியாசத்தால் சாதிகனாக வகுக்கப்பட்டிருக்கின்றன; விருத்தியடையும் குடம்பிகளுக்கு 'விருத்திமுறையில் உணவு ஊட்டுகின்றன. உணவூட்டும் விடயத்தில் இளம்குடம்பிகளுக்கும் முழுவளர்ச்சியடைந்த வேலைக்காரருக்குமிடையில் நெருங்கிய தொடர்பு கானப்படுகிறது.
வினாக்கள் 1. எறும்புகளின் சமூகவாழ்க்கையைப்பற்றி ஒரு கட்டுரை
வனர க.
2. சிவப்பெறும்புகளின் வாழ்க்கை முறையை விவரிக்க. 3. சமூகவாழ்க்கைப்பூச்சிகளின் சிறப்பியல்புகள் யாவை?
செய்முறைப் பயிற்சிகள் 1. சிவப்பு எறும்புகளின் கூட்டையும் அதனுள் இருக்கும் பிஎறும்புகளின் சாதிகளையும் குறித்துக்கொள் க. அவற்றின் முட்டை களையும் கூட்டுப்புழுக்களையும் வேறு பிரித்தறிக. அவற்றின் வெளி யுருவப்படத்தை வரைந்து, பகுதிகளுக்குப் பெயரிடுசு.
அத்தியாயம் 32
குளங்களில் வாழும் உயிர்கள்
உயிர்ப்பொருள்கள் பிழைத்து வாழ வேண்டுமாயின், சூழ் நிலைக்குகந்த இசைவாக்கங் (இணக்கம் களை உடையனவாயிருக்க வேண்டும், சூழ் நிலையின் தேவைகளை நிறைவேற்றக்கூடிய சிறப் பியல்புகள் அவற்றில் காணப்பட வேண்டும். குளங்கள் நிலையாக நிற்கும் நன்னீர் உடையவை, குள நீர் நன்கு காற்றுாட்டப்பெற் றிருக்கும்; காபனீரொட்சைட்டும், ஒட்சிசனும் அதில் கரைந்திருக் கும். குளங்கள், பொதுவாக ஆழமில்லாதனவாதலால், சூரிய வொளி அதன் அடி வரைக்கும் ஊடுபுகும். குளத்தின் அடியில் களி, அல்லது மணல் சேறாகக் காணப்படும். நீர்ப்பரப்பைக்

Page 130
24ா
உயிரினவியல்
காற்றுத்தாக்கிச் சிறிய அலைகளை உண்டாக்கும், எனவே, நீரின் அசைவு மந்தமாகவே இருக்கும். குளங்கள் கோடைகாலங்களில் வற்றிவிடுகின் றனா. குளத்தின் நீர்மட்டம் வெள்ளம் வந்து விழு தலால், மாரிகாலத்தில் உயருதலுமுண்டு. ஆகவே, இத்தகைய சூழ்நிலைத்தேவைகளை நிறைவேற்றக்கூடிய உயிரின ங்களே குளங் களில் வாழமுடியும். ஒட்சிசன், சூரியஒளி முதலியன இருத்தலால் " சில தாவரங்களும், சில விலங்குகளும் சூழ்நிலைக்கேற்ற இசை
வாக்கமுடையனவாய் அங்கு வாழுகின் றன.
நன்னீருள்ள குளங்களில் எண்ணிறந்த சேதனப்பொருள்கள் பரம்பி வாழுகின்றன. அவற்றை எல்லாம் இந்நூலில் அடக்கிக் கூறுதல் இயலாத காரியம். எனவே, பொதுவாகக் காணப்படும் ஒருசில தாவரங்களையும், விலங்குகளையும் தெரிந்தெடுத்துக் கற் றுக்கொள் வோம்.
| "நீரின் மேற்பரப்பில், அல்லது அதற்கு அணித்தாகக் கட் டின்றி மிதக்கும் உயிரினங்கள் பல குளங்களில் காணப்படும்.. அவற்றையெல்லாம் சேர்த்து நீரிலலேயா முயிர்கள் (பிளாந்தன்) என வழங்குவர். நீரிலலையுமுயிர்கள் நுணுக்குயிர்களாகும்; ஒளியூடு புகவிடுமியல்புடையனவாகும். கிளமிடோமானா, பரமேசியம் முதலி யன அவற்றிலடங்கியிருக்கும். நீரில் வாழும் பெரிய உயிரினங் களுக்கு அவை நல்ல உணவாக அமைகின்றன.
நீர்வாழ் விலங்குகள் திரவ ஊடகத்தில் வாழ்க்கை நடாத்தத் தக்கவாறு, வெவ்வேறு வழிகளிற் தம்மைத்தாமே இணங்க மாற் றிக்கொண்டு வாழுகின்ற ன. நீரிற் கரைந்திருக்கும் ஒட்சிசனைச் சுவாசித்துக்கொண்டு வாழவேண்டியிருத்தலால், அவை சுவாசித் தற்கேற்ற சிறப்பான உறுப்புகளாகிய பூக்கள் போன்றவற்றைப் பெற்றிருக்கின்றன. இடப்பெயர்ச்சிக்கு இன்றியமையாத சிறட் பான உறுப்புகளும் அவற்றில் விருத்தியடைந்திருக்கின்றனர், சில விலங்குகள் உண்மையாகவே நீரில் வாழ்வன. ஆனால், வேறுசில ஈரூடகவாழ்வின; - நிலத்திலும், நீரிலும் வாழ்வன. மிகத்தாழ்ந்த வகை நுண்விலங்காகிய அப்பாவும் குளங்களிற் காணப்படுகிறது. யூதரா என்னும் பல்கலநுண்விலங்கும் குளங்களின் அடியில் வசிக்கும். ஐதரா கற்களிலும், களைப்பூண்டுகளிலுல் ஒட்டிக் கொண்டு வாழும். அது உருளைவடிவமுள்ள உடலமைப்புடை யது. அதன் கட்டில்லாமுனையில் வாய் என்னும் உறுப்புக் காணப் படும். வாயைச்சுற்றி விரல்வடிவமுள்ள பரிசக்கொம்புகள் சிறு வட்டவடிவில் அமைத்திருக்கும், இப்பரிசக்கொம்புகள், ஐதரா

குளங்களில் வாழும் உயிர்கள்
24T
தன் உணவைச் சிறைபிடிக்க உதவுகின்றன. சிறிய நீர்ப்பூச்சி கள், நீர்த்தெள்ளு முதலியனவே ஐதரா சிறைபிடிக்கும் உணவு ம். களாகும்.
> * - *
E
உரு. 121 நீர்வாழ்விலங்குகள் (விகிதசமமின்றி வரையப்பட்டது) A ஐதரா : B அட்டை; ( நீர்வண்டு; ID) நீர்த்தெள்ளு; 15 இறால்; 1' கருநீலச்சிப்பி(சேற்றில் புதைந்தபடி)
அட்டைகள் முள்ளந்தண்டு விலங்குகளின் குருதியை உறிஞ் சிக்குடித்து வாழுவன. அதன் முற்பக்கமுனையிலிருக்கும் உறிஞ் சியால் குருதியை அஃது உறிஞ்சுகிறது. அட்டைகள் நீண்ட காலத்திற்கு உணவின்றி வாழும் தன்மைய. நந்தைகளும் சுருநீலச் சிப்பிகளும் குளங்களில் சருவசாதாரணமாகக் காணப்படும். நத்தையானது சுருளியுருவான முறுக்கமைந்த தனி ஓடுள்ள ,து. ஆனால், கரு நீலச்சிப்பி பக் கப்பாட்டில் இறுக்கமாக மூடியிரு கும் இரண்டு ஓடுகளையுடையது. நன்னீரில் வாழும் கருநீலச் சிப்பிகள் ஒரளவுக்குச் சேற்றினுள் புதைந்துகொண்டு வாழுகின் நனா.

Page 131
213
உயிரின்வியல்
கிரத்தேசியாக்களுள், நண்டுகள், இறால்கள், கேந்தெள்ளுகள் தான் அ பன குளங்களில் பொதுவாகக் காணப்படுகின்றன. கிரத்தேசியா என் ணும் நீர் வாழ்விலங்குகள் வெளிவன்சுடடும், பல தாக்கங் களும் உடையன, இத் தாக்கங்களிற் சில நீந்துவதற்கும், சில நடப்பதற்கும் ஏற்ற முறையில் வேறுபடுத்தப்பட்டிருக்கின்றன. இவை நீரிற்கரைந்திருக்கும் ஒட்சிசனைச் சுவாசித்தலுக்குப் பயன் படுத்துகின்றன. நீரில் வாழும் எண்ணசிறந்த பூச்சிவகைகளில் நீர்வண்டு, நீர் புட்டுப்புச்சி என்பன சாதாரணமாகக் குளங் களில் வாழுகின்றன. இந்நீர்வாழ்பூச்சிகளுக்குத் துடுப்புப் போன்ற தாக்கங்களுண்டு. நீந்துவதற்கு இத்தாக்கங்கள் உதவு கின்றன, தரையில் வாழும் பல பூச்சிகளின் குடம்பிகள் நீரில் குடம்பிப் பருவத்தைக் கழிக்கின்றன. உதாரணமாக நுளம்பு, தும்பி முதலியவற்றின் குடம்பிகள் நன்னீருள்ள குளங்குட்டை களில் எல்லாம் காணப்படுகின்றன. நீரில் வாழும் விலங்கு களுக்கு இன்றியமையாத சிறப்பான பூக்கள் போன்ற அமைப்பு , கள் இக்குடம்பிகளுக்கு இருக்கின்றன. இப்பூக்கள் குடம்பிகளின் சுவாச உறுப்புகளாகப் பயன்படுகின்றன, ஒரு வகை நீர்ச்சிலந்தி யும் நீரில் வாழுகின்றது. எண்ணில்லாத மீனினங்கள் குளங் களில் வசிக்கின்றன, பரோயேறி என்னும் மீன் குளங்களில் சருவ சாதாரணம், அதன் உடலமைப்பு நீந்துவதற்கு இணக்கமுடை யது. குளத்தில் நீருள்ளகாலங்களில் அது, நீரிற் கரைந்திருக் கும் ஒட்சிசனைப் பூக்கள் வாயிலாகச் சுவாசிக்கப் பயன்படுத்தும், இப்பூக்களுக்கு முற்பக்கமாகக் குருதிகலன்களுள்ள மெல்லிய மென்றாகட்டுமடிப்புகள் காணப்படுகின்றன. இவைகள் துணைச் சுவாசஉறுப்புகள் ஆகும். குளத்தில் நீர் வற்றும் காலங்களில், வளிமண்டலஒட்சிசனைப் பனையேறி உறிஞ்சுவதற்கு வாய்ப்பாக இவ்வுறுப்புகள் பயன்படுகின் றன. வறட்சிக்காலங்களில் தனது மார்புச்செட்டையை மிண்டிகள் போல் பயன்படுத்தி, நிலத்தில் நடந்துசெல் லும், இம்மீன் சில வேளைகளில் பக்கத்திலுள்ள பற்றை செடிகளிற்கூட ஏறிவிடும்.
தவளைகளும், தேரைகளும் ஈரூடகவாழ்க்கை நடாத்துவன. ஆனால், இவற்றின் இளமைப்பருவம் நீரிலேயே கழிகிறது. ஆன படி யாற்றான், பல்வேறு வளர்ச்சி நிலை களிலுமுள்ள வொர்பேய்கள் அதிகமான குளங்குட்டைகளிற் காணப்படுகின்றன. முள்ளந் தண்டுவிலங்குகளில் உயர்ந்த படியிலுள்ளவை நீரில் வாழ்வன வல்ல.
தாவரவிராச்சியத்தில் தாழ்ந்தபடியிலுள்ள பல தாவர இனங் களையும் குளங்குட்டைகளிற் காணலாம். நீருக்குச் சிறப்பான

குளங்களில் வாழும் உயிர்கள்
24)
-பச்சை நிறத்தையளிக்கும் கிள Fடோமாளசு இயங்ளேன என்பன கோடிக்கணக்கில் குளங்களில் வாழுகின்றன. நீரில் சில தாவ ரங்கள் மிதந்து கொண் டிருக்கும். சில நீரிலமிழந்தியிருக்கும். வேறுசில குளத்தின் அடியிலுள்ள சேற்றில் முளைத்து வளரும். இவைகள் தங்கள் தங்கள் சூழ்நிலைக்கேற்ற இணக்கமுடையன.
பள சூழ்ந்த காற்றில் அழிந்தியா:ாவ
உரு. 123
நீரில் வாழுந்தாவரங்கள் A ஆம்பல் (நிம்பியா]: E இலெமின; (1 குளவாழை (எயிச்சோளியா]; ) சவ்வுப்பையுருப்பூண்டு (ஏட்டிக்குலேரியா)
நீரில் மிதக்கும் தாவரங்களுக்கு, ஆகாசத்தாமரை, சல்வீ னியா, இயசியா, இயெமி என்பவற்றை உதாரணமாகக் கொள் ளலாம், இத்தாவரங்களில் ஆகாசத்தாபரை பல வேர்ப்பைகளையுடை 'யதாயிருக்கும். இவற்றுள் வளி நிரம்பியிருக்கும். அதனால், அது நீரில் மிதந்து கொண்டு வாழ வழிபிறக்கிறது. குறுங்கிடைகளைக் " கொண்டு பதியமுறை இனப்பெருக்கம் செய்வது ஆகாசத்

Page 132
250)
உயிரினவியல்
தாமரை. எயிர் சோனியா என் னும் மிதக்கும் தாவரம் பல சிறுவர் ககள் நீரில் பரப்புவதோடு, இலைக்காம்புகளிலுள்ள இழையங் களில் வனியைச் சேமித்துவைத்துக்கொள்வதனால், நீரில் மிதந்து கொண்டு வாழக்கூடியதாயிருக்கின்றது. இதுவும், குறுங்கிடை கள் வாயிலாகப் பதியமுறையினப்பெருக்கம் செய்கிறது. நீர் மட் டம் அதிகம் குறைந்துபோகும் காலங்களில், நிலத்தில் வேர்விட் டுக்கொண்டு வாUமும், இயசியா என்பது கணுக்களில் கடற்பஞ்சு போன்ற வேர்களை உண்டாக்கி அவற்றுள், வளியைச் சேமித்து வைத்துக்கொள்வதனால் நீரில் மிதந்து கொண்டு வாழுகிறது. பால் வினியாவுக்கு வேர்கள் இல்லை, அதன் தண்டு நீர்மட்டத்தில் பரப்பி யிருக்கும், அதன் ஒரு கணுவில் இருக்கும் மூன்று இலைகளில் ஒன்று பல சிறு துண்டுகளாகப் பிரிந்து வேர் போலக் காட்சி யளிக்கும். துண்டுபட்ட இலைகள் நீரில் தொங்குவதனால் சல்வீ னியா சம நிலைகுலையாது மிதந்துகொண்டு வாழுகிற து. இலெமி ] மிதந்து திரியும் ஒரு சிறிய நீர்த்தாவரம். அதற்கு ஒரு வேர் மட்டும் உண்டு. அதற்கு இலைகள் கிடையாது. ஆனால், அவர் றின் தண்டுகள் இவைகள் போலத் தட்டையாயும், பச்சை நிற முடையனவாயும் இருக்கும். தட்டையான தண்டுகள் நீரில் மிதக்க வாய்ப்பளிக்கின்றன.
நீரிலமிழ்ந்திவாழும் தாவரங்களில் ஒரே சீரான அமைப்புக் காணப்படுகிறது. அவை வகையீடடைந்திருத்தல் குறைவு. அவர் றின் உடல் புறத்தோலால் மூடப்பட்டிருக்காது. நீரும், உப்பு களும், வாயுக்களும் முழுஉடலினாலும் உறிஞ்சப்படும். நீர் அவற்றின் உடலைத்தாங்கி நிற்பதால், அவற்றின் உடலில்தாங்கு 1மிழையங்கள் மிகக்குறைவாகவே காணப்படும். அவற்றின் உட லில் காற்றைச் சேமித்துவைக்கக்கூடிய காற்று 1. கலவிழைய முண்டு. சுவாசித்தலுக்கும், ஒளித்தொகுப்புக்கும் வேண்டிய வாயுக்களை, இவ்விழையங்களில் சேமித்துவைத்து, அவை பயன் படுத்தும், அவற்றின் இலைகள் துண்டுபட்டிருக்கும். இலைகள் நீரி னல் மோதுண்டு கிழிந்துபோகாதிருத்தற்கும், இலைப்பரப்பைக் கூட்டுவதால் நீர், வாயுக்கள், உப்புகள் என்பவற்றை உறிஞ்சு வதற்கும், துண்டுபட்ட இபை கள் உதவுகின்றன. உடல் முழுவ தும் உறிஞ்சுந்தொழிலைச் செய்தலால், கடத்துமிழையங்கள் மிகக்குறைவாகவே அவற்றின் உடலில் உண்டு. பரவலான ஒளியையே நீரிலமிழ்ந்திய தாவரங்கள் பெற்றுக்கொள்ளவேண்டி யிருத்தலால், அவற்றின் உடல்முழுவதும் பச்சையம் காணப்படும்." அதனால், அவை ஒளிக்குறைவை ஈடுசெய்து, வேண்டிய உணவை ஆக்கிக்கொள்ளுகின்றன.

குளங்களில் வாழும் உயிர்கள்
251
பலபவருக்கும் "வேல்
நீரிலமிழந்திய தாவரங்களுக்கு உதிரில்லர், ஒரு நல்ல உதா ரணமாகும். அது ஏறத்தாழ ஒரு அடி நீள மான து; வழக்க Irாக வேர்களுடைய து; உடல் பலபடக்கிளைத்திருக்கும். இலை கள், மெல்லியனவாகவும், ஒடுக்கமாகவும் இருக்கும். ஒவ்வொரு கணுவிலும் நாலு அல்லது ஐந்து இலைகள் இருக்கும். வேலம்பாசி யும் நீரிலமிழ்ந்திய தாவர மேயாம். நீரிலமிழந்திய தாவரமாகிய சவ்வுப்பையுருப்பூண்டிற்கு வேர் படையாது. இஃது ஊனுண் ணுந் தாவரங்களில் ஒன்று.
நீரின் மேல் இலைகளைப் பாப்பி, குளத்தின் அடியில் வேர் விட்டு வாழும் தாவரங்களுக்குத் தாமரை, "16ம்பல், அல்லி என் பன நல்ல உதாரணங்களாகும். இவை சேற்றில் புதைந்து கிடக்கும் நிலக்கீழ்த்தண்டுகளை உடையவை; நீண்ட இலைக்காம்பை உடையவை, இவற்றின் நிலக்கீழ்த்தண்டுகள் கடற்பஞ்சு போன் றன. வாய்ப்பான காலத்தில் காற்றங்குரங்களை விடுத்து, உண பிவைத் தேடித், தமது நிலக்கீழ்த்தண்டுகளிற் சேமித்துவைத்துக் கொள்ளும்; இலைக்காம்புகளின் முனையில் அகன்று பரந்த வட்ட மான இலைகள் காணப்படும். இலைகளின் மேற்பரப்பு மெழுகுப் பூச்சுள் ளதாக இருக்கும். எனவே, அவை நீரில் நனையா, இலை வாய்கள் மேற்பரப்பில் சிறிது உயர்ந்து காணப்படும். இலையின் கீழ்ப்பரப்பில் முள் போன்ற மயிர்கள் காணப்படும். பூக்கள், பூச்சிகளால் மகரந்தச்சேர்க்கைபெறும். பழங்கள் நீரினாற் பரம் புவன, வறட்சியான காலத்தில் குளம் வற்றிப்போதலும் நிலக் கீழ்த்தண்டு தவிர்ந்த காற்றங்குரங்கள் யாவும், உலர்ந்து இறந்து விடும். வாய்ப்பான காலம் மீண்டதும் நிலக்கீழ்த்தண்டுகள் பதியவங்குரங்களை உண்டாக்கி வளரும்.
வினாக்கள் 1. குளங்களில் வாழுந் தாவரங்கள் சூழ்நிலைக்கு எவ்வாறு இணக்கம் தெரிவிக்கின்றன என்பதை விளக்கிக் காட்டுக. குளங்களில் வாழும் இரண்டு விலங்குகளின் பெயர் தருக. அவை எவ்வாறு இசைவாக வாழ்க்கை நடாத்து கின் றன என்பதை விவரிக்க,
செய்முறைப்பயிற்சிகள் ஒரு குளத்தில் காணப்படும் சாதாரண தாவரங்களையும், விலங் குகளையும் தேடிச்சேர்த்துக்கொள்க. பூச்சிகன்ன் குடம்பிகள், நண்டுகள், இறால்கள், வாற்பேய்கள், நீர்ச்சிலந்தி, ஐதிரில்லா, தாமரை வேலம்பாசி, சவ்வுப்பையுருப்பூண்டு என்பவற்றைச் சேர்க்கலாம், சேர்த்து அவற்றைப்பற்றிக் கற்றுக்கொள்க.
- Fi

Page 133
252
அத்தியாயம் 33
களைகள்
களைகள் ஒருவகைத் தாவரக் கூட்டமாகும். அவை, தோட்டங் களை நன்னிலையில் வைத்திருக்கவிடாது, இடையீடின்றித் தொந் தரவு கொடுப்பன. ஒரு பயிருக்குத் தனது வளர்ச்சியால் பாளாறு பயக்கும் எந்தச்செடியும் கட்ளைப்பூண்டு ஆகும். அவை, பயிர்களி லிருந்து கருதிய பயனைப்பெறுவதற்குத் தடையாயிருக்கின்றன, எனவே, களைப்பூண்டுகள் பயனில்லாத்தாவரங்களாகும்.
களைப்பூண்டுகளில் இரண்டுவகையுண்டு. அவை, சார்க்ளப் 1பூண்டுகள், தனிக்களப்பூண்டுகள் எனப்படும், தாம் வளர வேண்டிய இடத்தில் வளராது பயிர்களுக்குத் தீங்குவிளைப்பவை சார்களைப் பூண்டுகளாகும். வெங்காயப்பயிருக்குள் வளரும் மிளகாய்ச் செடி, வெண் டிச்செடி போன்றவை சார்களைப் பூண்டுகளாகும். பயிரிடு வோனுக்கு எந்தவிதமான பயனையும் நல்காது, செய்கைபண் ணப் படும் எல்லாப்பயிர்களுக்குள்ளும் வளர்ந்து, அவற்றிற்குத்தீங்கு விளைப்பவை தனிக்கட்ளைப்பூண்டுகளாகும். உ-ம். முக்குந்திப் பூண்டு, அம்மான்பச்சரிசி, (இயூபோவியா கேட்டா) கோரை, அறுகு, ஓட்சாலிசு முதலியன. தனிக்களைப்பூண்டுகளே அதிக தீங்கை உண்டுபண்
ணு வனவாதலால் அவற்றைப்பற்றியே இங்கு கூறப்படும்.
களைகளால் விளையுந்திமைகள்: இவைகள் பயிர் வளருவதற்கு இன்றியமையாத இடைவெளிகளைப் பிடித்துக்கொள்ளுகின் றன. இதனால், பயிர்களின் வளர்ச்சிக்கு வேண்டிய காற்றாட்டல், ஒளி, வெப்பம் என்பன குறைக்கப்படுகின்றன. ஒளியைக்குறைப்ப (தோடமையாது, நிழற்படுத்திப்பயிர்களை வெளுப்படையவும் செய் சின்றன. சில களைகள் ஏறிகளாதலாலே பயிர்களின் தண்டுகளை ஏறிப்படருவதற்கேற்ற கொளுகொம்புகளாகக்கொண்டு, அவற்றை நலிவடையச் செய்கின்றன.
களைகள் பயிர்களுக்கு உணவாகவிருக்கும் கனிப்பொருளுப்பு களைக்கவர்ந்து உண்ணுவதனால், பயிர்கள் தமக்கு உரிய போச ைேணயின்றி, நலிவடையுமாறு செய்கின்றன, அத்துடன் நீரையும் உறுஞ்சிவிடுகின்றன. ஆகவே, மண் வளம் குன்றிப்போவதோடு விரைவாக உலர்ந்தும் விடுகிறது.

களைகள்
25),
பலகளைப்பூண்டுகளின் வித்துகள், நெல், குரக்கன், சாமை முதலிய தானியங்களோடு கலந்து அவற்றின் பெறுமதியைக் குறைத்துவிடுகின்றன. விதைப்புக்கு இத்தானியங்கள் பயன் படர்.
சி1 களைப்பூண்டுகள் ஒட்டுண்ணிகளாக வாழுவன. உ-ம். தாத்தாமக்கொத்தான். குருவிச்சை பழந்தரும் மரங்களாகிய எலுமிச்சை, தோடை, மா முதலியவற்றில் ஒட்டுண்ணியாக வளருகிறது, தாத்துமக்கொத்தான், தானியப்பயிர்களுள் ஒட்டுண்
ணியாக வளருகின்றது.
சில களைப்பூண்டுகள் நோய்விளைக்கும் பூச்சிபுழுக்கள் முத லியன் வாழ்வதற்கு இடமாக இருத்தலினுல், அவற்றைத்தாக்கும் பூச்சிபுழுக்கள் முதலியன. அவை வளரும் இடத்திலுள்ள பயிர் கள யுந்தாக்கும், சில களைப்பூண்டுகள் அழிவைத்தரும் ஒட்டுண் ரிக்கவகங்களின் விருந்து வழங்கிகளாக இருத்தலினால், அவ் வொட்டுண்ணிகள் பயிரைத் தாக்குதலும் கூடும். உ-ம். பூஞ் சணம்.
களைகள் ஒராண்டுச்செடி களாகவோ, ஈராண்டுச்செடிகளா கவோ, பல்லாண்டுச்செடிகளாகவோ இருக்கும். ஓராண்டுக்களை கள் ஒரு பருவத்துள் வளர்ந்து, இனம்பெருக்கித் தமது வாழ்க்கை வட்டத்தை முடித்துக்கொள்ளுகின்றன. உ-ம். எதேவியார்செங்கழு நீர், கீழ்காய் நெல்லி (பிலாந்துசு ரூெரி) முதலியன. ஈராண்டுக்களை கள் முதற்பருவத்தில் பதியவளர்ச்சியடைந்து உணவைத்தேடிச் சேகரித்துக்கொள்ளும். பின், அ வ ற் றி ன் காற்றங்குரங்கள் அழிந்துவிடும். அழிந்துவிடுத லும் நிலத்தின் கீழ்க் கிடக்கும் பகுதி. அடுத்த பருவத்தில் பூத்துக் காய்த்து இனம் பெருக்கும், பல களை கள் பல்லாண்டுவாழ்வன. அவற்றில் சில ஓடி கள், நிலம்படரிகள் முதலியனவாகும்; பல நிலக்கீழ்த்தாண்டுகளாகும்.
களைகள் பரப்புமா : பல களைப்பூண்டுகள் வித்துகளாற் பரம்பு வன. ஓராண்டு, ஈராண்டுக் களைப்பூண்டுகள் இவ்வாறு பரம்பு கின் றன. அவற்றின் வித்துகள் மிக எளிதிற்பரம்பக்கூடிய பொறி முறைகளையுடையன, உ-ம். மூக்குத்திப்பு,ண்டு, சில களைப்பூண்டு கள் நிலக்கிழத் தண்டுகளை உடையன, உ - ம். சுருங்கருணை, அறுகு முதலியன. களைப்பூண்டுகளின் வித்துகள் பயிர்களின் வித்துகளோடு கலந்து இருப்பதனாலும், எருப்பசளைகளோடு {["சர்ந்திருத்தலினாலும் தோட்டத்தை அடைந்து, அங்கு பரம்பு கின்றன.

Page 134
254
உயிரினவியல்
களைகளை அழித்தல்: சுளைகளை அழிக்கவேண்டுமாயின் அவற் றின் வாழ்க்கை, வட்டத்தை யாம் அறிந்திருக்கவேண்டும், ஒரு களைப்பூண்டை அழிப்பதற்குக் கைக்கொள்ளப்படும்முறை இன் னெரு களைப்பூண்டை அழிப்பதற்குப் பயன்படாது. எனினும், பொதுவாகக் களைப்பூண்டுகளை அழிப்பதற்குப் பின்வரும் முறை கள் கைக்கொள்ளப்படுகின்றன. களைகளின் வித்துகள் கலந்த வித்துகளைப் பயிரிடக்கூடாது. அவற்றின், வித்துகள் கலந்த எருப்பசளை, குப்பைகூளங்களைத் தோட்டத்தில் இடக்கூடாது. தோட்டத்தில் உதிர்ந்துகிடக்கும் களைகளின் வித்துகளை, நீர்ப் பாய்ச்சி முளைக்கச்செய்து, அவை ஒருசில அங்குலங்கள் வளர்ந்த பின் நிலத்தை உழுது, அல்லது கொத்திப்புரட்டி அழிக்கலாம். களைக்கொட்டு. முள்ளுக்கலப்பை முதலியவற்றைப் பயன்படுத் திச் சிலவகைக் களைகளை அழிக்கலாம். பெரிய களேப்பூண்டுகளை முழுவதாகப்பிடுங்கி அழித்துவிடலாம், வயலில் நீரைத்தேங்க வைத்துக், களைப்பூண்டுகளை அழுகும்படி செய்து அகற்றிவிட லாம், சில பசளை கண் இடுவதனால் சில களைப்பூண்டுகள் நலி வடைந்து, ஈற்றில் அழிந்துவிடும். கடுங்கோடையில் குப்பை கூளங்களைத் தரையிற் பரவி எரித்தலினால், சில கடைகளை அகற்ற லாம். சுழன்முறைப்பயிரிடலாலும் களை களை நலிவடையச் செய்ய லாம், சில இரசாயனப்பொருள்களைத் தரையில் இடுவதனால், பல களைகள் அழிந்து போகின் றன.
சில சாதாரண சுட்ளப்பூண்டுகள் :
(1) ஈதேனியார்செங்கழுநீர் வேனோனியா): இது சூரியகாந்திக் குடும்பத்தைச் சேர்ந்த ஓராண்டுர். களைப்பூண்டு, ஏறத்தாழ சரன் றரை அடி உயரம்வரையில் வளரும். இதனுடைய தண்டு மென் மையான நுண்னணிய மயிர்களால் மூடப்பட்டிருக்கும். இது நிமிர்ந்த தண்டுடைய பூண்டுத்தாவரம்; சிறிது உரத்த, உருளை வடிவத்தண்டுடையது. அடியிலுள்ள இலைகள் ஏறத்தாழ இரண் டங்குல நீளமுடையவை; உச்சிநோக்குவரிசையிற் செல்லுந் தோறும் இலைகள் சிறுத்துக்கொண்டேபோகும்; தலையுருப்பூந்துணர் உடையது; பழங்கள் சிறியனவாகவும், பாரமில்லாதனவாகவும், மயிருள்ளனவாகவும் இருக்கும். வித்துகள் காற்றினாற்பரம்பும்.
(2) புளியாரை (ஒட்சாலிசு): "ஒட்சாலிசு' இனத்தைச்சேர்ந்த பல பூண்டுகள் இலங்கையிலுண்டு. இஃது ஒரு பல்லாண்டுப்பூண்டு; மிக மெல்லிய நகருந்தண்டுகளையுடை யது; ஒடிகளையுண்டாக்கு வதனால் அயலிலேயுள்ள தரைமுழுவதும் விரைவில் படர்ந்து விடும்; வேர்கள், பெரும்பாலும் முகிழுருவினவாயும் திரட்சியுடை

களைகள்
255
பயன வாயுமிருக்கும்,
ஒவ்வோரிலேயும் மூன்று கொண்ட கூட்டிலையாகும்.
சிற்றிலைகள்
" ('ஃ) மூக்குத்திப்பூண்டு (தினறதாட்சு): இஃது ஓராண்டுப்பூண்டு; சூரியகாந்திக்குடும்பத்) தச்சேர்ந்தது ; தண்டும், இலைகளும் மெல்லிய மயிர்களால் மூடப்பட்டிருக்கும். இலைகள், பெரும்பாலும் முட்டை வடிவின. ஆனால் இவைகளின் விளிம்புகள் கூரியபற்கள் போன் றவை. பொதுவாக, இப்புண்டு, சில கிளைகளையுடையது, ஒவ் வொருகிளையின து நுண்ணியும் நீண்ட பூக்காம்பையுடைய நாலடகுப் பூர் அணாரைத்தாங்கி நிற்கும். பழங்கள் மயிருள் ள னவாகவும், எளி திற் காற்றினால் பரம்பக்கூடியனவாகவுமிருக்கும். இது, தென்ன பெரிக்காவிலிருந்து இலங்கை முதலிய எல்லா நாடுகளிலும் பரம்பியிருக்கிறது. 'தரிசு' நிலங்களில் அதிகமாகக் காணப் படும்.
தட
உரு. 12:3)
களைகள் A மூக்குத்திப்பூண்டு (திறைதாட்சு); 13 புளியாரை (ஒட்சாலிசு)
(4) ரிழ்காய் நெல்லி (பிலா ந்த சு நிரூரி): இஃது ஒரு சிறிய, நேரிய பூண்டு, வாண்டினது; ஓரில்லமுள்ளது: பூக்கள் ஒரு பாலின ; இஃபக்கக்காங்களில் சிறிய ஆண்பூக்கள் காணப்படும்.

Page 135
25டு
உயிரினவியல்
பெண்பூக்கள் தனித்தனி காணப்படும். வில்லையமுடையது. வித்துகள் மிகச்சிறியவை. இலைகள் சிறியவை; நீள்வளை யவடி வானவை. இவற்றின் இலைக்கக்கங்களில் பழங்கள் அடுக்கடுக் காக இருக்கும். இவற்றின் கிளைகள் கூட்டிலைகள் போல் தோற்ற மளிக்கும்.
(5) அம்மான்பச்சரிசி (ஈயூ போவியா கேட்டா): இதனைப்பெரிய சித்திரப்பாலாவி எனவும் சொல்வர். ஆமணக்குக்குடும்பத்தைச் சேர்ந் தது; பாலுள்ள பூண்டு; தண்டில் மெல்லிய மயிர்கள் அடர்ந் திருக்கும், தண்டு நிலத்திற்படர்ந்து மேனோக்கி வ ள ரும்; ஓராண்டுத்தாவரம்; இலைகள் எதிர் ஒழுங்குள்ளவை, இலைக் காம்பு குறுத்தது; ஒழுங்கில்லாத வடிவமுடைய இலைகளை உடை யது; இலைக்கக்கங்களில் தரி நுனிவளராப்பூந்துராார்களை உடையது. பூக்கள் வெண்பச்சை நிறத்தன. பல சிறிய வித்துகளை உடை யது.
(6) சிறுபீளை (அருவா இலனற்ரு): இது தேங்காய்ப்பூக்கீரை எனவும் பெயர் பெறும்; சுரைக்குடும்பத்தைச் சேர்ந்த ஓராண்டுரரெடி; பெரும்பாலும், மூன்றடி வரையில் வளரும். இது நிலத்திற் படர்ந்து நிமிர்ந்து வளரும்பூண்டு; பல கிளைகளையுடைய து. பூக்கள் மிகச்சிறியவை; வெண்ணிறத்தன; சுக்கங்களில் காம்பிலி களாகக் காணப்படும். கீரைக்கொட்டை போன்று, பல சிறிய வித்துகளையுடைய, வில்லையங்கள் காணப்படும்.
(7) நாயுருவி (அச்சிராந்தசு இந்திக்கா): இதுவும் கிரைம் குடும்பத்தைச்சேர்ந்த ஓராண்டுப் பூண்டு; ஏறத்தாழ, இஃது இரண்டடி வரையில் வளரும்; தண்டுகளில் பல தவாளிப்புகள் காணப்படும். இலைகள் முட்டைவடிவின. இலைக்காம்புகள் சிறகுடையன. இலை களில் சில வேளைகளில் குங்கும நிறப்புள்ளிகள் காணப்படும். நீண்ட காம்பிலிப்பூந்துணருடையது. வித்துகள் மனிதர்களாலும்,
விலங்குகளாலும் பரப்புவன.
(3) மூக்கரைச்சி (போரவியா திவ்வியூசா): இது நுனி நிமிரப் படுக்கும் பூண்டுத்தாவரமாகும்; அடியிலுள்ள இலைகள் பெரிதாக இருக்கும்; செவ்வூதா நிறப்பூக்களையுடைய பூந்துணாருடையது. வித்துகள் ஒட்டுந்தன்மையுள்ளவை; மனிதர்களாலும், விலங்கு களாலும் வித்துகள் பரம்பும், சதையுள்ள ஆணிவேர், பதியமுறை யாக இனப்பெருக்கம் செய்யவல்லது, இதைப் பல்லாண்டுப்பூண் டெனக்கூறலாம்.

களைகள்
257
(9) தயிர்வேளை (கைனாந்துரப்பிசு பெந் தவில்லா): இது நிமிர்ந்த, சதையுள்ள, தண்டினையுடைய வாண்டுப்பூண்டு. ஒட்டுந்தன்மை யுள்ள சுரப்பிகள் இதன் உடல் முழுவதுமுண்டு. ஒருவகை மணமுடையது. ஐந்து சிற்றிலைகளையுடைய கூட்டிலைகளை உடை யது. ஒரு அடி உயரம்வரையில் வளரும், பூக்கள் வெண்ணிறத் தன, நேர்கோடு போன்ற வில்லையமுடையது. வித்துகள் சிறி யவை.
(10) கோரை (சைப்பாறுசு உரத்தண்டசு-Cyperus rotundus) இஃது ஈரமான பிரதேசங்களில் அதிகமாக வளரும் ஒருவகைப் புல் ஆகும்; 19உறிஞ்சிகளின் வடிவத்தில் நிலக்கீழ்த்தண்டுகளை உடையது. வறண்ட பருவத்தில் இதன் காற்றுங்குத் தொகுதி இறந்துவிடும். ஆனால், நிலத்தின் கீழுள்ள உறிஞ்சிகள் இறவாது! பிழைத்துக்கொள் ளுகின் றன; இவ் உறிஞ்சிகள் மழைக்காலத்தில் புதிய அங்குரங்களை உண்டாக்கி வளருகின்றன; வளர்ந்து, வித் துகளை உண்டாக்குகின்றன. இவ்வித்துகள் தோட்டம் முழுவதும் எளிதாகப்பரம்புகின்றது.
(11) குப்பைமேனி (அக்கலிவா இந்திக்கா-Acalypha indica) இது 10 அங்குல உயரம்வரையில் வளரும் ஒரு சிறிய பூண்டு; பரவலாக எங்கும் பரம்பி வளருகின்றது. பூக்கள் ஒருபாலின. எனினும், ஆண்பூக்களும் பெண்பூக்களும் ஒரே தாவரத்தில் கானாப்படும். (அவாவது, குப்பைமேனி ரில்லமுள்ள செடியாகும்). இஃது ஓராண்டுவரை வாழும். (அதாவது, 'ஓராண்டுச்செடி'; இரு வருடங்கள் வாழ்வனவற்றை 'ஈராண்டின' என்றும், மூன்றாண்டு களுக்கோ, அதற்கு மேலோ வாழ்வனவற்றைப் 'பல்லாண்டின' எனவும் கூறுவர்.) இச்செடி இறக்க முன்னதாகவே ஏராளமான வித்துகளை உற்பத்தி செய்துவிடும், வித்துகள் மிகச்சிறியவை; எனவே, எளிதாகப்பரம்புகின்றன. இவை, தோட்டக்காரனின் கண்களுக்குப் புலப்படாமலே நழுவிப் பரம்பி விடுகின் றன.
(12) தொட்டாற்சுருங்கி (மைமோசா பியூடிக்கா - Mrim04:31 pudice): இத்தாவரம் பிரேசில் தேசத்தைத் தன் பிறப்பிடமாக உடையது. ஏறத்தாழ 18014 ம் ஆண்டளவில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது. இது முள்ளுள்ள, நகர்தண்டுகளை உடை ய து - இலைகள் சிறியவை; இரட்டைச் சிறைப்பிரிப்பானாவை; --மிகவும் உணர்ச்சியுள்ளவை; தொட்டவுடன் (இலைகள்) மூடிக் கொள்ளும் இயல்பின, உழவனுக்கு அதிக தொந்தரவு கொடுக்கும்
215 18

Page 136
253
உயிரினாவியல்
களைப்பூண்டுகளில் இதுவும் ஒன்றாகும். மேய்ச்சனிலங்களிலும், கவனியாதுவிட்ட புல்வெளிகள் முதலியவற்றிலும் இது காணப் படுகின்றது. 4000 அடி உயரம் வரையுள்ள நிலங்களில் நன்கு செழித்துவளரும். அவரியம் என்னும் உலர்பழக்குலைகளை உடைய தாகையால், சிறுபழங்களாகப் பிரிந்து வித்துகளைப்பரம்புகின்றது.
வினாக்கள் உங்கள் பாடசாலைத்தோட்டத்திலுள்ள மூன்று களைப் பூண்டுகளின் பெயர் களைத்தருக.
அவை, நிலைத்திருப்பதற் குரிய காரணங்களை விளக்குக.
செய்முறைப்பயிற்சிகள் சீதேவியார்செங்கழுநீர், புளியாரை, கோரை, குப்பைமேனி, மூக்குத்திப்பூண்டு, தொட்டாற் சுருங்கி என்பவற்றின் வெளியுரு வப்படங்களை வரைக,
அத்தியாயம் 34
தவளையின் வாழ்க்கைவட்டம்
தவளை ஈரூடக வாழ்க்கை நடாத்தும் முள்ளந்தண்டு விலங்குக ளின் கூட்டத்தைச் சேர்ந்தது. அஃது ஈரலிப்புள்ள இடங்களிலும், குளங் குட்டைகளிலும், ஆறுகளிலும் வாழும், அதன் அவயவங்கள் நீரிலும், நிலத்திலும் வாழ்வதற்கு உகந்தனவாக அமைந்திருக்கின் றன. அதன் நிறம் அதன் வாழிடத்துக்கு ஏற்றதாக அமைந்திருத் தலால், அது தனது பகைப்பிராணிகளிடமிருந்து தப்பிக்கொள்ளு கிறது. தவளை பெரும்பாலும் பூச்சி, புழுக்கள், சிலந்திகள், நத்தை கள் என்பவற்றை உணவாகக் கொள்ளுகிறது. உணவாகக்கொள்
ளும் "இரை' அசைந்துகொண்டிருக்கும்போது தான், தவளை தன், இரையை அகப்படுத்தி உண்ணுகிறது. தனது பெரிய கண்களால் தானிருக்குமிடத்தின் சுற்றுப்பக்கங்களை அது கவனித்துக், கொள் ளுகிறது. அதன் கேள்விப்புலன் மிகக்கூர்மையானது. அத .

தவளையின் வாழ்க்கைவட்டம்
25)
னாலேயே, ஒரு சிறியசத்தம் கேட்டதும் பாதுகாப்புக்காக நீரில் பாய்ந்துவிடுகிறது. தவளை நி லத் தில் தங்கியிருக்கும்போது,
முன்ன வயங்களினால் முற்பக்கத்தைத் தாங்கிக்கொண்டு, வினோதமானமுறை யில், முதுகைக் கூடியபடியே அமர்ந் திருக்கக் காணலாம்.
தவளையின் உடலைத் தல், புவம் என இருபகுதிகளாகப் பிரிக்கலாம், இவை இரண்டிற்குமிடையில் கழுத்து என்னும் உறுப்புக் காணப்படுவ தில்லை, தவளைக்கு வாலும் கிடையாது. அதன் உடல் மங்கலான பச்சை நிற முடையது.
உரு. 124 தவளை (இருப்பு நிலை)
தவளையின் தலே சிறிது இறக்கமுடையதாய்த் தட்டையாக வும், பருமட்டான முக்கோணவடிவினதாகவும், அகன்றதாகவும் இருக்கும். அதன் கண்கள் பக்கத்திற்கொன்றாக, மூக்குத்துவாரங் களின் பின்னால், பிதுங்கியபடி உற்று நோக்கிக்கொண்டிருக்கும். கண்களின் மேன்மடல் நன்கு விருத்தியடைந்திருக்கும்; கீழ்மடல் அவ்வாறில்லை. ஒளியூடுபுகவிடும் சிமிட்டுமென்றகடு, கண்களில் உண்டு. அது, கண்ணை மு ழுவதாக மூடத்தக்கமுறையில் அமைந் திருக்கிறது. தவளையினது கண்களின் கீழே, கண்களைத் தாங்கும் எலும்பினாலான தாங்குகுழி கிடையாது. ஆகவே, தவளை தன் கண்களை, வேண்டியபோது உட்பக்கமாக இழுத்து, மேன்மடல்க ளால் மூடிக்கொள்ளும். தவளையின் தலையினது முற்பக்கமுனை யைச்சுற்றி, அதிக அகலத்துக்குத் திறக்கக்கூடியதான, அகன்ற வாய் அமைந்திருக்கிறது. தலையின் ஓரளவு கூம்பிய, முற்பக்கமுனை தவளையின் "நீண்டபுக்கு' எனப்படும், நீண்ட மூக்கின் புறப்பக்க மாக, இருசிறிய வெளிமூக்குத்துவாரங்கள் உண்டு. கண்கள் இரண்டிற் கும் பின்னால், சிறிது தாரத்தில், ஒருசோடி செவிப்பறையென்றுகடுகள் அல்லது செளிமென்றாடுகள் காணப்படும். தவளைக்குக் கழுத்து இல்லாதபடி யால், அதன் தலை மூலத்தோடு நேரடியாக இணைக்கப் பட்டிருக்கும். மூலத்தின் முற்பக்கத்தில் ஒரு சோடி முன்ன வயவங் களும், பிற்பக்கத்தில் ஒரு சோடி. பின்னவயவங்களும், ஆ, க - இரண்டுசோடி அவயவங்கள் காணப்படுகின்றன. மூலத்தின் நடுக்கோட்டில், சிறிது புறப்பக்கமாக உணவுக்கால்வாய், சிறு நிர்ச்சனனித்தொகுதியுறுப்புகள் என்பவற்றின் பொதுத்துவார 4 மாகிய கழியாறைத்துவாரம் அமைந்திருக்கிறது. ஆரையொழுங்கில்

Page 137
260)
உயிரினவியல்
அமைந்திருக்கும் தசைகள் கழியறைத்துவாரத்தைச் சுருக்கவும் விரிக்கவும் உதவுகின்றன.
மூலத்திலிருந்து எழும் இரண்டுசோடி அவயவங்களுள், முற் பக்கமுள்ள முன்னவயவங்கள், பிற்பக்கமுள்ள பின்னவயவங்க ளிலும் பார்க்கக் குறுத்தனவாயிருக்கும். பின்னவயவங்கள் நீள மானவையாயும், அதிகம் தசைகளுடையனவாயும் காணப்படும். முன்னவயவங்கள் ஒவ்வொன்றிலும் நான்கு விரல்களும், பின் னவயவங்கள் ஒவ்வொன்றிலும் ஐந்து விரல்களுமுண்டு. விரல் சளின் முனையில் உகிர்கள் கிடையாது.
தவளையின் தோல் ஈரமுள்ளதாயிருக்கும், தோற்சுரப்பிகள் பல,.. அதனிடத்துக்காணப்படும். தோற்சுரப்பிகளாற் சுரக்கப்படும் சீதமான து, தோலின் மேற்பரப்பை ஈரமுள்ளதாக வைத்துக் கொள்ளும். தோலானது அதன்கீழுள்ள தசைகளோடு, நுகை வாகத் தொடுக்கப்பட்டிருக்கும், தோலுக்கும், அதன்கீழுள்ள தசைகளுக்குமிடையில், நிணநீர் எ ன் னு ம் நிறமில்லாத பாய் பொருள் காணப்படும்.
தவளையினது வாய்க்குழியின் மேற்பக்கத்தின் முற்பக்கமுனே யில் இரண்டு உள் மூக்குத் துவாரங்களும், வாய்க்குழியின் பிற் பக்க எல்லையில், குறுக்காகவிருக்கும் ஒரு பிளவும் உண்டு. இத் துவாரம் உணவுக்கால்வாயின் தொடக்கமாகும். வாய்க்குழியின் தளத் தில், உணவுக்கால்வாய்த் துவாரத்தின்முன்னால் காணப்படும் நில க்குத்தான பிளவு, மூச்சுக்குழல்வாய் ஆகும். இத் துவாரம் சுவா சப்பைகளுக்குச் செல்லும் வழியாகும். தாடையின் கோணத்தில் ஊத்தேகியோவின் துவாரங்கள் இருக்கின் றன. இத் துவாரங்கள் காதுக்குச் செல்கின்றன. மேற்றாடையில் ஒருவரிசை நுணுக்குப் பற்கள் உண்டு. இப்பற்கள் கூரியனவாயும், பின்னோக்கி வளைந் தனவாயும் காணப்படுகின்றன. வாய்க்குழியின் முற்பக்கமுனையி லும் சிலபற்கள் உண்டு. தசையாலான, அசையக்கூடிய நாக்கு, வாய்க்குழியிலுண்டு. பொதுவாக, வாய்க்குழியினுள் நாக்குமடிந் திருக்கும். வேண்டிய நேரத்தில் நாக்கு வெளியே நீட்டப்படக் கூடியது. நாக்கு, நுனி கவருள்ளதாகவும், ஒட்டுந்தன்மையுள்ளதா கவும் இருக்கும்,
தவளைகளின் பின்னவயவங்களிலுள்ள விரல்கள் ஒரு சவ்வி னல் தொடுக்கப்பட்டிருக்கின்றன. எனவே, தவளை தன் பின்னவ யவங்களைத் துடுப்பாகப் பயன்படுத்தி, மிகவேகமாக நீரில் நீந்து மியல்பினது. நிலத்திலிருக்கும்போது, தனது நீண்ட பின்னவய

தவளையின் வாழ்க்கைவட்டம்
261
வங்களை மடித்துக் கொண்டிருப்பதனால்தான். முதுகைக் கூனிக் கொண் டிருக்கிறது போல். அது தோற்றமளிக்கிறது. குறுத்த முன்
ன வயவங்களும், நீண்ட பின் னவயவங்களும், தவளை, நிலத்தில் நடப்பதற்கு ஏற்ற னவாக அமைந்திருக்கவில்லை; ஆதலால், அது பின்னங்கால்களால் நிலத்தை உந்திக்கொண்டு பாய்கின்றது.
தவளை ஒட்டுந்தன்மையுள்ள நாக்கை வெளியே நீட்டிப், பூச்சி புழுக்களை அதில் ஒட்டிக்கொள் (எநம். பின்னர், நாக்கைமடித்து நேரடியாகத் தன து இரையை, உணவுக்கால்வாயின் துவாரத்துள் செலுத்திவிடும். வாய்க்குழியில் உள் ள சீதச்சுரப்புகளும், பின் னேக்கி வளைந்திருக்கும் கூரிய பற்களும் இரை தப்பிப் போகாது தடுத்துக்கொள்ளுகின்றன.
தவளையின் கண்கள் அதிக தாரத்திற்குப் பார்க்கக்கூடியன ; மூக்குத் துவாரங்கள் 1பனா புர்ச்சித் தொழிலச் செய்கின் றன; காதுகள் நன்கு விருத்தியடைந்திருக்கின்றன. உட்கா து உடலின் சமநிலை பற்றி அறிவிக்கும் கருவியாக அமைந்திருக்கிறது. உடல் முழு வதும் தொடுகைப்புலன் உண்டு.
தவளைகளில் ஆண் வேறு, பெண் வேறு. ஆண்கள், பெண்க களக்காட்டிலும் குறைந்த நிறமுடையனவாயும், தாடைகளின் கோணத்தில் குரற்பைகள் உடையனவாயும் இருக்கும். இனம் பெருக்கற்காலத்தை அடுத்து, ஆண்களின் முன்னவயவங்களின் முதலாவது விரல்களினடியிலுள்ள தோலானது புடைப்பேறி, *மணவினைச்சும்மாடு' ஆக உருப்பெறும். பொதுவாக, ஆண்க ளின் தலையினது அகப்பக்கம், இளஞ்சிவப்பாக இருக்கும். மழை கால முடிவில் ஆண்களும் பெண் களும் சேரும். பெண்களின் முதுகில், ஆண்கள் சவாரிசெய்துகொண்டு செல்வதை, இக்காலங் களில் காணலாம். மணவிளைச்சும்மாடுகளால் பெண்களின் அக்குளை இறுகத்தழுவியவாறே, ஆண்கள் சவாரிசெய்யும். ஏறத்தாழ 24 மணிநேரத்திற்கு இந்நிலை நீடிக்கும். அதன் பின்னர், பெண் தவளை கழியறைத்துவாரந்தி,னூாடாகச் சீதங்கலந்த முட்டைகளை வெளி யேற்றும், வெளியேற்றியதும், சிறிதும் காலந்தாழ்த்தாது - உட னேயே ஆண்தவளே சீதங்கலந்த அம் முட்டைகளின்மீ து விந்தைச் சொரியும், கருக்கட்டல் வெளியில் உடனடியாகவே நிகழும். ஆண் தவளே நுரை கிளம்பும் வரையும் முட்டைத்திரளை அடித்துக் கொண்டிருக்கும், கருக்கட்டிய கரியமுட்டைகள், நுரையோடு நீரில் மிதந்து கொண்டிருக்கும். கருக்கட்டிய தவளை முட்டைகள் 14 'சினை'' எனப்படும். முட்டைகளைச்சுற்றி நுசையுண்டானபிறகு, விந்துகள் கருக்கட்டலைச் செய்யமுடியாது. நுரையாலான கவ

Page 138
2ா)
உயிரினாவியல்
சத்தை ஊடுருவிச்சென்று கருக்கட்டக்கூடிய வலு, விந்துகளுக்கு இல்லை,
தவளைமுட்டையில் ஒரு கணியமான மஞ்சட்கருவுண்டு. அத னைச்சுற்றி, மெல்லிய மஞ்சட்கருவாக்க மென்கடு ஒன்று காணப்படும். மஞ்சட்கரு வெண்ணிறமான து. முட்டையின் கனவளவில் முக்காற் பங்குக்குமேல் மஞ்சட்கருவே நிறைந்திருக்கும். மஞ்சட்கருவின் மேல், ஒருமுனையில், இருண்டநிறமுள்ள மெல்லிய முதலுருப்படை ஒன்று காணப்படும்.
நுரைபோன்றதும், பாகு போன்றதுமான பதார்த்தத்தினால் மட்டும் பாதுகாக்கப்பட்ட, கருக்கட்டிய முட்டைகள் நீரின்மேற் பரப்பில் மிதந்து கொண்டிருக்கும். இக்காலத்தில் மூலவுருவானது முட்டையினுள் விருத்தியடையும். விருத்தியடையும்போது, முட் டையினுள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் மஞ்சட்கருவைப் பயன்படுத்தும். வெளிப்புறச்சூழ்நிலை வாய்ப்பாயிருக்குமாயின் இரண்டுவாரங்களிம் முட்டைகளிலிருந்து வாற்பேய்கள் பொரித்து) வெளிவரும். புதிதாகப் பொரித்த வாற்பேய்கள், ஒருசில மில்லி மீற்றர் நீளமுடையனவாகவிருக்கும். வாற்பேயின் தலை பெரிதா
கவும், வால் குறுத்ததாகவுமி ருக்கும். அதன் தலையின் அகப் பக்கமாக விருத்தியடைந்தி ருக்கும், 7மந்துச்சுரப்பியின் உத வியால், நீரிலுள்ள களைப்பூண் டொன்றைப் பற்றிக்கொண்டு சில நாட்களுக்கு அது வாளா கிடக்கும். இந்தநிலைமையில், வாற்பேய்களுக்குவாய் என்னும்
உரு. 125 தவளையின் வாழ்க்கை வட்டம் | 1 தவளை முட்டை; 2 வாற் பேய் ( பொரித்தவுடன் ); 3 வெளிப்பூக்கள் உள் ள நிலை; 4 உட்பூக்கள் உள்ள நிலை(கைக் கடிகாரத்தின் சுருள் போன்ற உணவுக்கால்வாயைக் காண துலாம்]] 5 பின்ன வயவங்கள் தோன்றல்; 6 சிறிய தவளை.

தவளையின் வாழ்க்கைவட்டம்
26)
உறுப்புக் கிடையாது. மிகவும் விரைவில் இரண்டுசோடி கிளை யுள்ள முளைகள் அதன் தலையின் பக்கங்களில் உண்டாகும். இம் முளை கள் வெளிப்புக்கள் எனப்படும். பின்னும் அதிவிரைவில் மூன் ருவது சோடி வெளிப்பூக்கள் உண்டாகும். இதற்குப்பின், தலை யின் அகப்பக்கமாக, வட்டமான துவாரம்ஒன்று உண்டாகும். "இத்துவாரமே வாற்பேயின் வாய் ஆகும். இந்நிலைமையில், வாற் போய் வாலின் உதவியோடு நீந்தித்திரியும். அது, தாவரப்பொருள் களை உண்டுவாழும், பூக்கள், தோல் என்பவற்றின், வாயிலாகச் சுவாசிக்கும், தாவரவுகாணவுகளை உட்கொள்ளுங் காரணத்தால், அதன் உணவுக்கால்வாய் ககைக்கடிகாரத்தின் ஈருள்வில்போன்று நீளமாக அமைந்திருக்கும்.
வாற்பேயான து, நா,6/முதல் ஆறு கிழமைவரை வளர்ச்சி அடைந்திருக்கும் நிலைமையில், வெளிப்பூக்களின் அடியில், நான்கு பூப்பிளவுகள் தோன்றும். இந்தப்பூப்பிள வுகள், சுற்றிலுமுள்ள நீரு டன், தொண்டையானது தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளச் செய் கின்றன. இப்பொழுது பழைய வெளிப்பூக்கள் இருந்த இடத்தை (அவை அற்றுப்போக), முடியுரு என்னும் தோன்மடிப்பால் மூடப்பட்டவையும், பூப்பிளவுகளுக்கு அண்மையில் உண்டான வையுமான புதியபூக்கள் வகித்துக்கொள்ளும், இப்புதிய பூக்கள் உட்பூக்கள் எனப்படும். முடி யுருவினால் மூடப்பட்ட அறை பூ, அல் லது, பூவறை எனப்படும். இப்பொழுது, வாற் பேயானது எல்லா வகைகளிலும் மீனைஒத்திருக்கும். வெளிப்பக்கத்திலுள்ள நீரானது, வாய்க்குழியினுட் சென்று தொண்டையை நிரப்பியபின், பூப்பிள வுகளுக்கூடாகத் தொண் டையை விட்டகன்று, பூவறையை நிரப் பும். பூவறையினூடாக நீர் செல்லும்போது. பூக்களைத் தன்னுள் தோயும்படி செய்கின்றது. ஆதலால், வாயுமாற்று இங்கேதான் நிகழுகின்றது. பின்னர், இடதுபக்கத்திலுள்ள நீர்த்தூம்பு என் னும் ஒருசிறிய துவாரத்தினூடாக நீர் வெளியேறுகின்றது.
முட்டையினின்றும் வாற்பேய், வெளியேறி இரண்டுமாதகாலம் கழிந்தபின்னரே, உருமாற்றம் நிகழுகின்றது. வளர்ச்சியடையா உறுப்புகளின் "சாயல்' இப்பொழுதுதான் முதன் முதலாகத் தோன் றத்தொடங்கும்; எ னி னு ம், முன்னவயவங்கள் பூ,வறைக்குள் மறைந்துகிடக்கும், வாலின் அடியில், பின் னவயவங்கள் இரு சிறிய சிம்பிகள் போன்று தோற்றும். இவை நாளடைவில் முழு வளர்ச்சியடைந்த அவயவங்களாக மாற்றமடையும், பின்னவய வங்கள் முழுவளர்ச்சியடைந்த பின்பு, வாற்பேய்கள், சுவாசிப்ப தற்காக நீரின் மேற்பரப்புக்கு வரத்தொடங்கும். அதன் உடலிற்

Page 139
214
உயிரினவியல்
குள் நுரையீரல்கள் விருத்தியடைந்துவிட்டன என்பதை இச் செயல் காட்டா நிற்கும். இந்நிலையில் முடியுருவைக் கிழித்துக் கொண்டு முன்னவயவங்கள் வெளிப்பட்டு வளரத் துவங்கும். இதன் பின்னர், வாற்பேய் மீனைப்போல் நீந்தித்திரிவதைச் சிறிது சிறிதாக ஒழித்து, அதிகமாக நீரின் மேற்பரப்பிற்குச் சுவாசிக் கும்படி வரும்.
TET
மிகவிரைவில், அதனுடைய வால் உடலினுள் உறிஞ்சப்பட்டு "விடும். அதன் வாயைச்சுற்றியுள்ள கொம்புப் பொருளாலான
தாடை. கள் அருகிப்போதலும், தவளைக்குச் சிறப்பியல்பு அளிக் கும் அகன்றவாய், அவ்விடத்தை வகித்துக்கொள்ளும். கடிகாரச் சுருள் வில் போன்றிருந்த உணவுக்கால்வாய் கு று த் து வி டு ம்; குறுத்துவிடுதலும், தவளை முழுவதாக ஊ னுண் ணும் விலங்காக மாறிவிடுகின்றது. இப்பொழுது, கடைசிமுறையாகக் கவசம் கழற் - றப்படும் : சுண் கள் பிதுங்கினாற்போன்று முன் னரிலும் பெரிதாகத் தோன்றும்; பூப்பிளவுகள் மூடிக்கொள்ளும்: முடி யுருவும் உட் பூக்களும் அற்றுப்போம். அதன் அவயவங்கள் பருமனிற் பெரி தாகி வளர்ச்சியடைதலும், அது படிப்படியாக நீரைவிட்டு வெளி (யேறும். இந்நிலையில் உருமாற்றம் முழுவதாக நிகழ்ந்துவிட்டது எனலாம். அதாவது, தவளை முழுவளர்ச்சி அடைந்த விலங்காகி விட்டது என்று கூறலாம்.
பொதுவாகக், குளங்களில் வாழுந் தவளைகள் வளிமண்டல ஒட்சிசனைச் சுவாசிக்கின் றனவெனினும், சுவாசிப்பதற்காக நெடு (நேரத்திற்கு நீரினின்றும் வெளியேறாது இருப்பதை, யாம் அவ தானிக்கலாம், தவளையைச் சூழவர உள்ள நீரினோடு, தவளையின் தோலிற்கூடாகச், சிறிதளவு வாயுமாற்று நிகழ்வதே தவளை நெடுநேரம் நீரிற்குள் இருப்பதற்குக் காரணமாகும். தவளையின் தோலில் நுண்ணிய குருதிக்கலன்கள் நிரம்பக் காணப்படும், நீரிற்கரைந்திருக்கும் ஒட்சிசன் ஈரமுள்ள தோலினூடாக, அதன் அடியிலிருக்கும் நிண நீருடன் பரவிக்கல ந்து, பின்னர், குருதி யுடன் பரவிக்கலக்கின்றது. காபனீரொட்சைட்டும், இம்முறையா கவே வெளியேற்றப்படுகின்றது. தரையில் தவளை நடமாடும் போதும், தோலினூாடாக ஓரளி வு வாயுமாற்று நிகழுகின்றது. வாயு மாற்று நிகழ்வதற்கு உதவியாகவே, அதன்தோல் எப்பொழு த ம் ஈரமாக இருக்கிறது.

நுளம்பின து வாழ்க்கைவட்டம்
265
வினாக்கள்
1. தவளையின் புது வாழ்க்கைவட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, விருத்தி, வள ர்ச்சி, உருமாற்றம் என்பவற் றின் கருத்தை விளக்குக. தவளையின் சுவாசம் என்பதுபற்றி ஒரு கட்டுரை வரைக. 3, தவளை ஈரூடகவாழ்க்கைக்கு உகந்த இசைவாக்க
முடையதென்னுங் கூற்றை விளக்கிக் காட்டுக.
செய்முறைப்பயிற்சிகள்
1. வாற்பேய்களின் பல பருவங்களையும் காட்டும் வெளியுரு வப்படங்கள் வரைந்து, பகுதிகளுக்குப் பெயரிடுக.
2. தவளையின் வாழ்க்கைவட்டத்தைச் சித்தரித்துக்காட்டக் கூடிய வெளியுருவப் படங்களை வரைக.
3, சவ்வரிசிக்கஞ்சிபோல், குளங்களில் (மாரிகால முடிவில்) நீர்மட்டத்தில் மிதக்கும் தவளைச்சினைகள் சிலவற்றைச் சேர்த்துக் கொண்டுவந்து, கைவில்லைகளின்கீழ் வைத்துச் சோதிக்க.
1081 -ர் - 3
அத்தியாயம் 35
நுளம்பினது வாழ்க்கைவட்டம்
பூச்சிகளின் கூட்டத்தைச் சேர்ந்தது நுளம்பு. பூச்சிகளின் வாழ்க்கைவரலாற்றில், பொதுவாக வேறுபிரித்தறியக்கூடிய நான்கு நிலைகள் காணப்படுகின்றன. அவை, புலவுருநில, குடம்1 ைெல, கூட்டுப்புழுநிலை, முழுவளர்ச்சிநிலை என நான்காம், ஒரு பூச்சி பின் வாழ்க்கையில், அஃது இந்நான்கு நிலைகளையும் அடைந் திருந்தால், முழுஉருமாற்றம் அடைந்துளதாகக் கருதப்படும். பல பூச்சிகளின் வாழ்க்கை வரலாற்றில், கூட்டுப்புழு நிலை இல்லா திருத்தலுங்கூடும். அத்தகைய பூச்சிகள் முழு உருமாற்றம் அடைந் தனா வாகக்கருதப்படா; அதாவது, குறையுருமாற்றும் உள்ளன என்று -கொள்ளப்படும்.

Page 140
2ார்
உயிரினவியல்
நுளம்பு நீர்த்தேக்கங்களின் மேற்பரப்பில் முட்டையிடும். முட்டைகள் ஊாசிவடிவின; 1, அங்குல நீளமுடையன. ஒருசில : நாட்களில், முட்டைகள் பொரிக்கக், குடம்பிகள் வெளிவரும். குடம் பியானது முழுவளர்ச்சியடைந்த நுளம்பைக்காட்டிலும் மிகவும் வித்தியாசமானது, அஃது, உருண்டையான தலையும், கோளவடி வினதான நெஞ்சறையும், கூம்பிச்செல்லும் வயிற்றறையுமுடை, யது. அது 11 அங்குல நீளமும், புழுப்போன்ற வடிவமும் கொண்டிருக்கும்; துளம்பைப்போன்று கால்களும், சிறகுகளும், கூட்டுக்கண்களும் அதற்குக்கிடையாது. குடம்பியானது நான்கு முனற கவசம் கழற்றிக்கொண்டு, ! அங்குல நீளம் வரையில் வளரும், 'கியூலெட்சு" இனத்தைச்சேர்ந்த குடம்பி தலைகீழும், வால் மேலுமாக, நீர்மட்டத்தின்கீழ்ச், செங்குத்தாகத் தொங்கிக்கொண்டு கிடக்கும். இவ்வாறு கிடந்துகொண்டு, வயிற்றறையின் எட்டா வது பிரிவில் அமைந்துள்ள ஓட்டுகுழாய்போன்ற அமைப்பினால்
உரு. 12ா நுளம்பினது வாழ்க்கைவட்டம் 1 நுளம்புமுட்டைகள் ; 2 நுளம்புக்குடம்பி; 3 நுளம்பினது கூட்டுப்புழு; 4 முழுவளர்ச்சியடைந்த நுளம்பு.
நீர்ப்படலத்தைக் கிழித்துக்கொண்டு இருக்கும். இவ் ஒட்டுகுழாய் அல்லது சுவாசக்குழாயின் முனையில், இரண்டு சுவாசத்துவாரங்கள் அல்.

நுளம்பினது வாழ்க்கைவட்டம்
26
லது வளித் துவாரங்கள் காணப்படும். குடம்பியானது நீரின் மேற்பரப்பிலிருந்து கீழிறங்கும்போது, சுவாசக்குழாயினுள் நீருட் புகாவண்ணம், இரண்டு மென்மையான மடிகள் அல்லது வாயில் கள், அவ்விரு சுவாசத்துவாரங்களையும் மூடிவிடும். குடம்பி மிகத் தீவிரமாக உணவு உண்ணும். அதன் உணவு தாவர, விலங்குப் பொருள் (சேதனவுறுப்புப்பொருள்) களின் துணிக்கைகளே யாகும்.
பலவாரங்களின்பின், நுளம்புக்குடம்பி உணவு உட்கொள் வதை விடுத்துக், கூட்டுப்புழுவாக மாறிவிடும்; தஃலநெஞ்சு என்னும் உறுப்புள்ளதாகவும், உறுப்பிளசக்குறி [ ' ] வடிவமுள்ளதாகவும் கூட்டுப்புழுநிலையில் தோற்றும், இந்நிலையில், பெரிய தலைநெஞ் சும் மெல்லிய வயிற்றறையுந்தான் இருப்பதாகத் தோன்றும். தலைநெஞ்சின் புறப்பக்கமாக இரண்டு சுவாாக்குழல்கள் காணப் படும். அவை, நீரின் மேற்பரப்பைக் கிழித்தபடியே இருக்கும். அது கூட்டுப்புழு நிலையிலும் அசைந்து கொண்டுதானிருக்கும். சிலவேளைகளில், கூட்டுப்புழுக்கள் நீந்தியும் திரியும், மெல்லிய வயிற்றறைப்பகுதி இவ்வாறு அசைவதற்கு உதவியாயிருக்கிறது. நாலைந்து நாட்களின்பின், கூட்டுப்புழுவினது புழுவுறையின் சுவர், புறப்பக்கமாக வெடித்துக்கிழியும். கிழிதலும், முழுவளர்ச்சி யடைந்த நுளம்பு, புழுவுறையினின்றும் வெளிவரும். கழித்து விடப்பட்ட புழுவுறையின்மீது, வெளிவந்த நுளம்பு செட்டைகளை யும், கால்களை யும் காய்ச்சுவதற்காகச் சிறிதுநேரம் ஆறியமர்ந் திருக்கும்.
|பெண் நுளம்புகள் குருதியுண்டு வாழ்வன. ஆண் நுளம்புகள் வழக்கமாக இலைச்சாறு உண்பன். 'அனுேவிலிசு' என்னும் இனம் மலேரியாக்காய்ச்சலைப் பரப்புகிறது. யானைக்கானோய், மஞ்சட் காய்ச்சல் என்பனவும், வெவ்வேறின நுளம்புகளால் பரப்பப்படு கின்றன.
வினாக்கள் நுளம்பில் உருமாற்றம் நிகழுமாற்றை விவரிக்க.
செய்முறைப்பயிற்சிகள் 1. முபுவளர்ச்சியடைந்த நுளம்பு, அதன் குடம்பி, கூட்டுப் புழு என்பவற்றின் வெளியுருவப்படங்களை வரைந்து, பகுதிகளுக்
குப் பெயரிடுசு, " 2. மாரிகாலத்தில், நீர்தேங்கிக்கிடக்கும் தகரக் கொள் கலங்க ளில், நுளம்பினது குடம்பிகள் கூட்டுப்புழுக்களைக் காணலாம். அவற்றைக் கைவில்லையின் கீழ்வைத்துச் சோதிக்க.

Page 141
2GH
சிறிதளவு நீர் எளிதாக உறுதளர்வு உடைய 2
அத்தியாயம் 36 கடற்கரையில் வாழும் உயிரினங்கள் கடற்கரையில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப, அங்கு வாழும் விலங்குகளும், தாவரங்களும் அதிகம் வேறுபடுத்தப்பட்டிருக் கும். உதாரணமாகக், கடற்கரை மண் பெரும்பாலும் மணற்பாங் குள்ளதாகவே இருக்கும். அது நீரைப்பற்று திறன் (பிடித்து வைத்திருக்குந்தன் மை) இல்லாதது. அங்கு அகப்படக்கூடிய சிறிதளவு நீர் தானும் உவர்த்தன்மை உடையது. எனவே, தாவரங்கள் இந்நீரை எளிதாக உறிஞ்சிக்கொள்ள மாட்டா. ஆத லால், கடற்கரையிலுள்ள மண் உடற்றெழிலுலர்வு உடையது எனக் கொள் ளப்படும், அதனுல், அங்கு வாழுந் தாவரங்கள், ஆவியு யிர்ப்பால் அதிக நீரை இழக்காதிருக்கும்பொருட்டு வறணில வளரிகளின் சிறப்பியல்புகளை உடையனவாயிருக்கின்றன. மேலும், அவை ஓரளவுக்கு உவர்த்தன்மையைச் 'சகித்துக்கொள்ளும் வன்மை உடையன. இலைகள், பொதுவாகத் தோல் போன்றவை; தடித்த புறத்தோல் உடையவை; சிறப்பான நீர்ச்சேமிப்புக்கலங் களை உடையனவாயிரு, தத லுங்கூடும். இராவணான்மனச (சிப்பினி விட்சு - Spirifox) போன்ற புல்லினங்கள் ஊசிபோன்ற இலைகள் உடையன, கடற்கரையில் வீசுங் கடுங்காற்றுத், தாவரங்கள் செழித்து வளரத் தடையாயிருக்கிறது. ஆதலால், கடற்கரைத் தாவரங்களிற் பல, நிலத்துடன் அமுக்கப்பட்ட நிலையில் வளரு கின் றன; அவற்றின் கிளைகள் ஓடிகளை உண்டாக்கி, மிக விரை வாகப் பரவிப்படருகின்றன; வேர்த்தொகுதி, நன்கு விருத்தி அடைந்திருக்கும்; பெரும்பாலும், மிக ஆழத்திற்குச் சென்று, (போசணை பெற்றுக்கொள்ளும் தன்மையது. மரங்களும் செடி களும் கடுங்காற்றல் வேரொடு பிடுங்கி எறியப்பட்டுவிடுமா தலால், கடற்கரைக்கு அப்பால் இருக்கும் உண்ணுட்டுப் பகுதி களிலேயே, அவை வளருகின்றன.
கடற்கரைத்தாவரங்களை மூன்று கூட்டங்களாக, அல்லது பிரிவுகளாகப் பாகுபாடு செய்யலாம்:
1. கடற்கரை ஓரமாகக் காணப்படும் தாவரங்கள்: இவை களைக் கரைத்தாவரங்கள் என்பர், இவற்றுட் பெரும்பாலானவை பூண்டுகளாகும். இவை, நிலத்திற்படர்ந்து வளருகின்றன. இவற்றின் பழங்களும், வித்துகளும் வழக்கமாகக் காற்றற் பரம்புவன.

கடற்கரையில் வாழும் உயிரினங்கள்
2ா)
(அ) இராவணன்மிசை: (சிப்பினிவிட்சு இலிற் றோ றி ய சு
Spirlitex littorens): இது புற்குடும் பந்தைச் சேர்ந்தது ; ஊசிபோன்ற இலைகளும், ந க ரு ந் த ண் டு ம் உடையது; ஓடிகளை உற்பத்தி செய்து, மிக விரைவாகப் பல திசைகளிலும் பரவிப்படருகின் றது. பழங்கள் ஊசிகள் போன் நன; உருண்டைவடிவினதாய்
தலை யுருப்போன்று ஒன்று சேர்ந் உரு. 127
திருக்கும். காற்று வீசும்போது, இராவணன் மீசை {சிப்பி
இத்தலையுருக்கள் கடற்கரையில் விட்சு)
உருண்டோடி, எளிதாகப் பரவு [! ஒடி: A. 1. இடமாறிப் பிறந்தவேர்கள்; L இலைகள்.
கின் ற ன.
(ஆ) அடம்பு (ஐப்போமியா பெசுக்கப்பிறே - Ipom peSca. prac): இது தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள கடற் கரைகளில் சருவசாதாரணமாகக் காணப்படும் பூண்டு; உதய கீர்த்திக்கு நெருங்கிய இனமுடையது; ஓடி. களை உண்டாக்கி, மிக விரைவாகப் பரவிப்படருந் தன்மையது. இதன் இலைகள் இரு சோணைகள் உடையன; தடிப்பானவை; துலக்கமான பச்சை நிறம் உள்ளன. பூக்கள் பெரியவை; "எக்காள' வடிவுள்ளவை; துலக்கமான இளஞ்செவ்வுதா நிறம் உள்ளவை.
(இ) நெருஞ்சில் (திறைபியூசு தெரெற்றிசு - 'Tribulus terrestris): இஃது ஒரு சதையுள்ள பூண்டு: பரவலாகப்படுக்கின்ற கிளைகளை யு. டயை து. இதன் இலைகள் சிறியவை; சிறைப்பிரிப்புடையவை; ஆனால்,பூக்கள் துலக்கமான மஞ்சள் நிறமுடையவை; பழங்கள் சிறியவை; வன்மையுடையவை; வளையாத முட்கள் உள்ளவை; விலங்குகளால் பரம்புகின்றன.
(ஈ) தாழை (பந்தானுசு ஒடராற்றிசிமா - Paridaritus odor:w tissina): இது பற்றையாக வளரும் ஒரு பெரிய செடி, இதன் கிளைக எளின் உச்சியில், முடி போன்று இலைகள் காணப்படும். நுகை வான மணலில், இதன் தண்டுகள், பல் மிண்டிவேர்களால் தாங் கப்படுகின்றன. இதன் இலைகள் நீளமானவை; அழு த் த மானவை; தடிப்பானவை; தோல்போன்றவை; இது பெரிய பழங்களை உடையது; பழங்கள் கூட்டுப்பழவகையைச் சேர்ந் தன; நீரினிற் பரம்புவன,

Page 142
27)
உயிரினவியல்
2. சில தாவரங்கள் கடற்கரைக்கு அண்மையில், உண்ணாட் டில் வளருகின்றன. இவை, குறுத்ததோற்றமுடையன வாய், அடர்ந்து வளருவதைக் காணலாம். இவற்றுட்பல செடிகளாகும். இச்செடிகள் தடிப்பான சாறுள்ள இலைகளுடையன. இவ்விலை கள் நீர்ச்சேமிப்புக்கலங்களை உடையன, வேர்கள் மிக நீண்டன வாயும், மணல் நிலத்தில் நீரைச் சேகரிக்கக்கூடியவாறும், சிறப் பானமுறையில் வேறுபடுத்தப்பட்டனவாயும் இருக்கும். சாட்டா மணக்கு (இயற்றோவா - Jatroplin ) இனத்தாவரங்கள் பல இம்மண் டலத்திற்காணப்படும்.
3. கடலினது நேரடியான செல்வாக்கிற்கு உட்பட்ட பிர தேசத்தில் வளரும் செடிகளும், மரங்களுமே மூன்றாவது வகைத் தாவரவினத்தைச் சேர்ந்தன. இத்தாவரவினங்கள், பொதுவாகக் "கடற்கரைக்காடு' என்று சொல்லும்படியாகக் காட்சி அளிக்கும். இத்தாவரங்களின் இலைகள் பெரும்பாலும் தடிப்பாக இருக்கும்; பழங்கள் நீரினால் பரம்புகின் றன. இந்தப்பிரதேசத்தில் வளருந் தாவரங்கள் தென்னை, புன்னை (கலோவிலம் - Calorpliylum), பூவரசு (திசுப்பீசியா 'TIYespesi ) முதலியனவாம். கடற்கரையில், சில இடங்களில் சதுப்பு நிலங்கள் காணப்படுகின் றன. இத்தகைய பிரதேசத்தில் வாழுந்தாவரங்களை 'உவர்ச்சதுப்புநிலந்தாவரங்கள்" அல் களது உவர்ச்சேற்று நிலத்தாவரங்கள் என்பர். கண்டல் Magive) இதற்கொரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
கடற்கரையிலுள்ள விலங்குகள், முழுக்க வித்தியாசமான இயல் புகள் உடையவை, இவ்விலங்குகள் வாழும் வலயம் (நெய்தனில வலயம்), இருபிரதேசங்களாகப் பிரிக்கப்படலாம். அவையாவன: (1) கரைவலயம் அல்லது வற்றுப்பெருக்கு மண்டலம், (ii) பரவைக் கடல், தரைவலயத்திற்கும் கடல்வலயத்திற்கும் இடைப்பட்ட மாறும்பிரதேசம் வற்றுப்பெருக்கு மண்டலமேயாகும். இம்மண் டலத்திலுள்ள விலங்குகள் நாடோறும் இருமுறை கடல் வற்றுவத னல் தாக்கப்படுகின்றன, என வே, இவ்விலங்குகள் உயர்வைத் தாங்கும் வன்மை உடையனவாய் இருக்கவேண்டும். மூடக்கூடிய ஒடுகளைக்கொண்டோ, வேறு உபாயங்களை மேற்கொண்டோ, ஈரமணலினுள் வளைதோண்டி அதனுள் இருப்பதனால், கடல் வற்றும்போது ஏற்படும் உலர்வை, ஒருவாறு தாங்கிக்கொள்ளு கின்றன. இவற்றிற்கு, நீரின் உள்ளும் புறத்தும் இருக்கும் காலங்களில் சுவாசிக்கக்கூடியவாறு, சிறப்பான துணைச்சுவாச உறுப்புகள் இருத்தல்வேண்டும். வற்றுப்பெருக்குகளின் உயர் +- வித்தியாசம் காரணமாக, வற்றுப்பெருக்கு மண்டலம் பரப்பில்
வித்தியாக இருத்தல்வேண் "அ, சிறப்பான இருக்கும்

கடற்கரையில் வாழும் உயிரினங்கள்
2ா
மாறுபடுந்தன்மையுடையது. இம்மண்டலம் ஒருசில அடிகளிலி ருந்து பல மைல் தாரம்வரை பரவி, அகலமுடையதாய் இருக்கும்.
8
உரு. 123 கடற்கரையில் வாழும் உயிர்கள் (A) சொறிமுட்டை; (1}) R.I, பாறைச்சிப்பி (இலெப்பாசு): S.B. சுப்பற்சிப்பி; 1, வெண்சிப்பி (இலிப் பெற்று ); (0) கடல் அனிமனி; (11) கடல் நட்சத்திரம்,
பாறைகள் அடர்ந்த ஒரு கடற்கரையில், கடல்விலங்குகளில் ஏராளமான பேதங்களை ஒருவர் கண்ணுறுதல் சாலும். அவற் பறுள் அதிகமாகக் காணப்படுபவை பாறைப்சிப்பிகளும், கப்பற்பிப்பிகள் வெண்பிப்பிகள், ஆளிகள், கருநீலச்சிப்பிகள் என்பவைகளே
யாம். பாறைச் சிப்பிகள், கப்பற்சிப்பிகள் வெண்சிப்பிகள் என்பன, பொதுவாகப் பாறைகளிலும், மிதக்கும் மரக்கட்டைகளிலும், கப்ப லின் அடிப்பக்கங்களிலும் ஒட்டிக்கொண்டிருக்கும். பாறைச்சிப் பிகள், கப்பற்சிப்பிகள் என்பவை, நெடுகலும் ஒட்டியபடியே அசைவின் றிவாழும்; ஆனால், வெண்சிப்பிகள் சிறிதளவு ' நகர்ந்து

Page 143
272
உயிரின்வியல்
திரியும் இயல்பின. வளை தோண்டி வசிக்கும் இயல்புள்ள கடல் அனிமனிகளும் இடைக்கிடை காணப்படும். பாறைகளில் உள்ள சந்து பொந்துகளில் சிலவேளைகளில் சில கடற்பஞ்சுகள் இருப்ப தைக் காணலாம். எண்ணிறந்த நண்டு இனங்களும், பாறை-யின் களும், பொதுவாக அங்கு வசிக்கின்றன. பல நண்டுகள், நீரை. விட்டு வெளியேறிக் கடற்கரைகளில் பக்கப்பாடாக நடந்து திரி வதை, எவரும் பெரும்பாலும் காணக்கூடியதாயிருக்கும். விசேட மாகக், கடற்ரைகளில் முருகைப்பார்த்தொடர்கள் இருக்கும் இடங் களில், குழாய்களில் வாழும் புழுக்கள், கடல்முள்ளெலிகள் (கடல் அப்பம்), கடல்நட்சத்திரங்கள், கடல் வெள்ளரிகள், கடன்மெல்லுடலிகள் என்பன உள்ளிட்ட மற்றைய கடல் விலங்குகளும் வாழுவதைக் காண லாம்.
"'பரவைக்கடலா" 'னது தாழ்நீர் மட்டவெல்லை (அதாவது வற் றின்போதுள்ள நீர்மட்டம்) யிலிருந்து ஏறத்தாழ 100 பாக ஆழ முள்ள பகுதி வரைக்கும் பரந்துகிடக்கும் கடலின் பகுதியாகும். கடலில் வாழும் சேதனப்பொருள் களிற்பல், இப்பகுதியில் வாழுவ தால், இது கடலில் மிகவும் முக்கியமான மண்டலம் ஆகும். பரவைக்கடலின் அடித்தளம், சூரியவெளிச்சம் பெறும் நிலைமையி லுள்ளதாலும், கடற்றவரவினங்கள் நிறைந்திருத்தலாலும், எண் ணிறந்த நுண்விலங்குகள் வாழ்வதற்கு இசைந்த இடமாக அமைந் திருக்கின்றது. பெரும்பாலான முருகைப்பார்த்தொடர்கள் இவ்வலயத் திலேயே காணப்படுகின்றன. அவுத்திரேலியாக்கண்டத்தின் கீழ் பால், 400 மைல் தாரம்வரை பரந்து காணப்படுகின்ற பெருந்தடுப் புக்கற்பார்த்தொடர் இந்த மண்டலத்தைச்சேர்ந்ததேயாம். எண்ணற்ற கடற்பஞ்சு இனங்களும் இங்கு காணப்படும் இவ்வலயத்தில் வாழும் ஏனைய விலங்குகளுள் பெருநண்டு இனங்கள், சிப்பிகள், ஆளி கள், பட்டிகள், சிங்களிறல்கள், இருல்சுள், விச்சிரல்கள், கருநீலச் சிப்பிகள், கடல்அனிமனிகள், சொறிமுட்டைகள் முதலியனவும் பொதுவாகக் காணப்படும்.
வினாக்கள்
1. கடற்கரைத்தாவரங்கள் இரண்டின் பெயர் தருக, அவை
கடற்கரைச் சூழ்நிலையில் வாழுவதற்கு இசைவாக அமைந் திருக்கின்றன என்பதை விளக்குக. கரைவலயம், பரவைக்கடல் என்பவற்றில் வாழும் விலங்கு களுக்கிடையில் காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகளை விவரிக்க.
2.

நாடாவுருப்புழு
2T)
செய்முறைப் பயிற்சிகள் கடற்கரையில் சாதாரணமாகக் காணப்படும் சில தாவரங் களையும் விலங்குகளையும் சேகரித்து அவற்றின் வெளியுருவப் படங்களை வரைக, பின்வரும் மாதிரிப்பொருள்கள் சாதாரண மாகக்காணப்படுபவை: இராவணன் மீசை, அடம்பு. நெருஞ்சில், தாழை, சிப்பிகள், வெண் சிப்பிகள், ஆளிகள், மட்டி கள், கருநீலச் சிப்பிகள், நண்டுகள், சந்நியாசி நண்டுகள், நத்தைகள், கடல் அனிமனிகள் முதலியன,
அத்தியாயம் 37
நாடாவுருப்புழு நாடாவுருப்புழு தட்டைப்புழுக் கூட்டத்தைச் சேர்ந்தது. அதன் உடல் நாடா வடிவம் பெற்றிருத்தலாலேயே, அஃது அப்பெயர் பெற்றது. எல்லாநாடாவுருப்புழுக்களும் உள்ளொட்டுண்ணிகளா கும். அவை, நாய்கள், எலிகள், குரங்குகள், பூனைகள், மனிதன் போன்ற முள்ளந்தண்டு விலங்குகளின் உணவுக்கால்வாயிலே வாழுகின்றன. மாடுகளின், ஈரலில் வாழும் ஈரற்றட்டையன் நாடா வுருப்புழுவினது நெருங்கிய உறவினன் ஆகும். மனிதனின் உட வில் வாழும் சாதாரண நாடாவுருப்புழு நனியா சொளியம் ('T'auntin Solium) என்ற இனத்தைச் சேர்ந்தன.
தீனியா சொலியம் எனப்படும் நாடாவுருப்புழுவான து, தொங்கும் நாடாபோன்ற உடலுடையது; ஏறத் தாழ மூன்று யார் நீளம்வரை வளருந் தன்மையது. இப்புழுவினது பிரமாண் டமான பருமன் காரணமாக, ஒரு விருந்து வழங்கியின் உடலில் பொது வாக ஒன்றே ஒன்றுதான், ஒட்டுண்ணி
3- பு!
பாகஒன் வழங்கியின் பணமாக,
உரு. 120 நாடாவுருப்புழு (தீனியா சொலியம்)
8 கிடகச்சென்னி " விருத்தியுடன் மூட்டு
215 19

Page 144
274
உயிரினவியல்
யாக வாழுகின்றது. இதன் உடல் மூன்று பெரும்பிரிவுகளையுடை யது. உடலின் முற்பக்கம் தலை அல்லது கிடகச்சென்னி எனப்படும். சீடகச்சென்னியைத் தொடர்ந்து, ஒடுக்கமான காத்துக் காணப் படும். கழுத்தின் பிற்பக்கமாக, விருத்தியுடன்முட்டு எனப்படும், பல துண்டுகள் தொடராக இணைந்த, நீளமான பகுதி இருக்கும். குடற்சுவரில் இதன் கீடகச்சென்னி பற்றிக்கொண்டிருக்கும். குப் லைப் பற்றிக்கொண்டிருக்கும் கீடகச்சென்னி மிகச்சிறிய து;- ஒரு குண்டூசித்தலையளவு பருமனுடையது. கீடகச்சென்னியின் கட்டில்லாமுனை, கத்தியின் விளிம்பு போன்றது. இதனைச் சஞ்சு என்பர். சஞ்சு என்னும் பகுதியின் கீழ்ப்பக்கமாக, மிகச்சிறிய கொளுக்கிகள், ஒருசிறுவட்டமாக அமைந்திருக்கும். இவற்றைத் தொடர்ந்து நான்கு உரிஞ்சிகள் அமைந்திருக்கும்.
..
உரு. 130 நாடாவுருப்புழுவின் தலை It சஞ்சு; 11 கொளுக்கிகள்; 8 உறிஞ்சிகள் ;
N[ கழுத்து
சஞ்சு, கொளுக்கிகள், உறிஞ்சிகள் என்னும் சிறப்பான அமைப்புகள் எல்லாம், நாடாவுருப்புழுப்போன்ற ஒட்டுண்ணிகளில் காணப்படுகின்றன. இவற்றின் உதவியாலேயே கிடகச்சென்னி, குடற்சுவருள் புதைந்துகிடக்கின்றது. 'கழுத்து" மிகவும் ஒடுக்க மான து. ஆனால், இது, படிப்படியாக விரிவடைந்து, ஈற்றில், பிற்பக்கமுனையில், உடலானது 13 தொடக்கம் 2 சதமமீற்றர் அகலமுடையதாகின்றது. கழுத்தை அடுத்துக் காணப்படும் விருத்தியுடன் மூட்டுகள் மிகமிகச்சிறியவை. ஆனால், பின்முனைப் பக்கமாக அவை பருமனில் அதிகரித்துக் காணப்படும். இவ் விருத்தியுடன் மூட்டுகள் இருத்தலாலேயே நாடாவுருப்புழுவினது உடல் "துண்டுபட்டது' எனக் கருதப்படுகின்றது. எனினும், நாடா வுருப்புழுவின் துண்டுப்டல்', மண்புழு போன்ற ஏனைய விலங்கு களின் துண்டுபடலினின்றும் வித்தியாசமானது.. மண்புழுவா ன து (இத்தனை துண்டுகள் என) வரையறையான எண் ணிக்கை யுள்ள துண்டுகளை உடையது. ஆனால், நாடாவுருப்புழுவில் அவ் வாறில்லை, அது வளருந்தோறும், அதன் உடலின் பிற்பக்கமுனை யில் விருத்தியுடன் மூட்டுகள் சேர்ந்துகொண்டே இருக்கும், இதன் விளைவாக, முதிர்ந்த (பழைய) விருத்தியுடன் மூட்டுகள் கீடகச்

நாடாவுருப்புழு
275
சென்ணியினின்றும் படிப்படியாக, அப்பால் தள்ளப்பட்டுக்கொண் டிருக்கும். எனவே, முதிய விருத்தியுடன் மூட்டே அதிபிற்பக்க முனையில் கடைசியாக இருக்கும் நாடாவுருப்புழு, முழுப்பரும னடைந்து வளர்ந்தபின்பு, முதிய விருத்தியுடன் மூட்டுகள் பிற் பக்கமுனையிலிருந்து அகற்றப்படுகின் றன. ஆயினும், அதே நேரத்தில் புதிய விருத்திஉடன் மூட்டுகள் கீடகச்சென்னியை அடுத்து உண்டாகின்றன. இதனால், நாடாவுருப்புழுவின் நீளம் எப்பொழுதும் ஏறத்தாழ ஒரே அளவினதாகவே இருக்கும், முழு வளர்ச்சி அடைந்த நாடாவுருப்புழுவில் எண்ணூறு விருத்தி பயுடன் மூட்டுகள் வரை காணப்படலாம்.
நாடாவுருப்புழுவின் உடற்சுவரினது வெளிப்பக்கம் மிகவும் மழமழப்பாக இருக்கும், அதன் உடற்சுவரில் சிறப்பான வன் கூட்டுக்குரிய மூலகங்கள் எதுவும் இருப்பதில்லை. அதன் உடற் சுவரின் வெளிப்பக்கம் மனிதனின் சமிபாட்டுப் பாய்பொருள் களால் தாக்கப்படாதவாறு தடையாயிருக்கக்கூடியதும், மீள்சத்தி யுள்ளதுமான புறத்தோலால் போர்க்கப்பட்டிருக்கிறது. புறத்தோ லின்கீழ் நீண்ட கலங்களால் ஆக்கப்பட்ட மேற்றேல் (அல்லது புற முதலுருப்படை காணப்படுகிறது. இது நெடுக்காக அமைந்திருக்கும்.
L-FI
பார்பரா 1 1
ப H.
E
H..
ப ப [.
உரு. 131 நாடாவுருபுழுவின் குறுக்குவெட்டுமுகம்
• புறத்தோல்: E] மேற்ரோல் (புறமுதலுருப்படை); Ex பக்கக்கழிவுக்கால்வாய்: NO நரம்புநாண்; 0I) சூலகக் கான்; 1 கருப்பை; 10 சூலகம்; 'T' விதை; CM வட்டத் தசைகள்; LML நெடுக்குத்தசைகள்
தசைநார்கள்: மேற்றோற்கலங்களுடன் கலந்திருக்கும், இது வரை விவரிக்கப்பட்ட புறத்தோல், மேற்றேல், நெடுக்கான தசை

Page 145
HT]
உயிரினவியல்
நார்கள் என் ப ன மேற்பட்டைமண்டலத்துக்குரியன. |
அதைத் தொடர்ந்து, ஒரு படை வட்டவடிவானதசைகள் அமைந்திருக்கும். இத்தசைகள் வெளிப்பக்கமிருக்கும் மேற்பட்டைமண்டலத்தை உட் பக்கமிருக்கும் மையளிழையமண்டலத்திலிருந்து பிரிக்கின்றன. மைய விழையமண்டலமானது நகைவாக அமைந்திருக்கும் கலத். திணிவினால் நிரப்பப்பட்டிருக்கும். இக்கலத்திணிவின்கண்ணே, உடலின் உள்ளுறுப்புகள் பதிந்துகிடக்கும். பெரும்பாலும் ஏனைய புழுக்களைப்போன்று, உடற்குழியானது நாடாவுருப்புழு வில் (மற்றைய தட்டைப்புழுக்களிலும்) இருப்பதில்லை,
நாடாவுருப்புழுவில் உணவுக்கால்வாய் என்னும் உறுப்பு இல்லை.- இவ் ஒட்டுண்ணி சமிபாடடைந்த உணவின் மத்தியில் வாழ்த லால், விருந்து வழங்கியின் குடலிலிருந்து, தனது உடற்சுவரி னூடாக உணவை உறிஞ்சி எடுத்துக்கொள்கின்றது. எனவே, உணவுச்சமிபாடு முதலியவற்றிற்குரிய உணவுக்கால்வாய் இருக்க வேண்டிய ஆவசிகமே இல்லை, அது செய்யவேண்டியதெல் லாம், உணவை உறிஞ்சுவது மட்டுமே. இதற்குச் சிறப்பான சுவாரஉறுப்புகளோ, கலன் தொகுதியோ இருப்பதில்லை.
கீடகச்சென்னியில் அமைந்திருக்கும் ஒருசி றிய நரம்புவளைய மும், இரண்டு பக்க நரம்புநாண்களும் ஆகிய இவைகளே, நாடா வுருப்புவின் நரம்புத் தொகுதி ஆகும், பக்கநரம்புநாண்கள் கீட கச்சென்னியிலுள்ள நரம்புவளையத்தில் உற்பத்தியாகி, விருத்தி யுடன் மூட்டுகள் எல்லாவற்றிற்கும் ஊடாக, உடலின் பிற்பக்க முனைவரை, இருபக்கங்களிலும் செல்கின்றன. நரம்புவளையத்தி லிருந்து உறிஞ்சிகளுக்கும், கொளுக்கிகளுக்கும் சிறிய நரம்பு நார்கள் செல்கின்றன, பக்கநரம்புநாணிலிருந்து உடலின் பல் வேறு பகுதிகளுக்கும் சிறிய நரம்புநார்கள் செல்கின்றன.
சுழிவுத்தொகுதியும் மிக எளிய அமைப்புள்ள து. நரம்புநாண் களை அடுத்து உட்பக்கமாகக் பக்கக்கழிவுக்கால்வாய்கள் இரண்டு காணப்படுகின்றன, இக்கால்வாய்கள் ஒவ்வொரு விருத்தியுடன் மூட்டி ன தும் பிற்பக்கப்பகுதியிலும் ஒவ்வொரு குறுக்குக்கானல் தொடுக்கப்பட்டிருக்கும். இந்தக் குறுக்குக்கலன்களிலிருந்து எண் ணிறந்த நுண்ணிய கிளைகள் உண்டாகின்றன. இக்கிளைகள் எண்ணற்ற கழிவுக்கலங்களில் சென்று முடிவடைகின்றன. இக் கழிவுக்கலங்கள் சுவாலைக்கலங்கள் எனப்படும். உடலிலுள்ள கழிவுப் பொருள்களைப் பிரித்து எடுக்கும் பொறுப்பு சுவாலைக்கலங் களைச் சார்ந்தது. பிரித்து எடுக்கப்பட்ட கழிவுப்பொருள்கள்

நாடாவுருப்புழு
217
பக்கக்கழிவுக்கலன்களுக்கு அனுப்பப்படும்.
பக்கக்கழிவுக்கால் வாய்கள் கடைசி விருத்தியுடன் முட்டின் பிற்பக்கமுனையில் வெளித்திறக்கின் ற ளா,
H, I
ப் A A A
உரு. 132 நாடாவுருப்புழு (இனம்பெருக்கற்றொகுதி) A விருத்தியுடன் மூட்டில் உள்ள ஆண் இனம் பெருக்
"கற்றொகுதி E விருத்தியுடன் மூட்டில்
உள்ள பெண் இனம்பெருக்
கற்றொகுதி NC பக்கநரம்புநாண் EY பக்கக்கழிவுக்கால்வாய் T விதை VD அப்பாற்செலுத்தி V (யோனிமடல் S{1 ஓட்டுச்சுரப்பி
ப கருப்பை 0 சூலகம் V மஞ்சட்கருவாக்கிச்சுரப்பி (HP உற்பத்தித்துவாரம்
B ஈ.ப
பி.பி
இதுகாறும் கூறப்பட்ட விவரணங்களிலிருந்து, நாடாவுருப் புழுவின் உடலிலுள்ள உள்ளுறுப்புகளில் அதிகமானவை, மிக எளிய அமைப்பு உடையன என்பது தெளிவாகிறது. சமிபாட்டுத் தொகுதி, சலன்தொகுதி, சுவாசத்தொகுதி என்னும் தொகுதிகள், நாடா வுருப்புழுவில் இருப்பதில்லை. இத்தொகுதிகள் இல்லாதிருக்கின் றமைக்குரிய காரணத்தை விளக்குதல் மிக எளிது. நாடாவுருப் புழுவானது உள்ளொட்டுண்ணியாதலால், மிக எளிய அமைப்பு உடையது. சமிபாடடைந்த உணவு வேண்டியவாறு கிடைக்கக் கூடியதாயிருத்தலால் சிறப்பான சமிபாட்டுருப்புகளை வைத்தி (ருக்கவேண்டிய தேவை, இப்புழுவிற்கு இல்லை; தனது தோலி
திராடாகவே உண வை எளிதாக உறிஞ்சமுடியும். மனிதனது * உடலின் உட்பக்கத்தில், இவ் ஒட்டுண்ணி நன்கு பாது காக்கப்

Page 146
278
உயிரினவியல்
பட்டிருத்தலால், இதற்குக் கண்கள், காதுகள், மூக்குப்போன்ற புலனுறுப்புகள் இருக்கவேண்டிய ஆவசிகம் இல்லை, உடற்சுவ ரில் நிலையாகக் கொளுவிக்கொண்டு வாழ்தலால், இடப்பெயர்ச் சிக்குரிய உறுப்புகள் இதனிடத்து இல்லை, உடலின் சேர்க்காயெறி கைத்தொழில்கள் மிக மந்தகதியுடன் நடைபெறுதலால் சுவாசத் தொகுதி, கலன் தொகுதி என்பன ஆவசிகமில்லை எனக்கூறலாம். இதன் உடலில் நன்கு விருத்தியடைந்திருக்கும் தொகுதி, இனாம் பெருக்கல் தொகுதி மட்டுமேயாம். இதனை இங்கு விவரமாகக் 'கற்போம்.
நாடாவுருப்புழு இருபால்உள்ளது. இதனிடத்து இனம்பெருக். கற்குரிய ஆண், பெண் உறுப்புகள் உண்டு. உண்மையைக் கூறுமிடத்து, விருத்தியுடன் மூட்டுகள் ஒவ்வொன்றிலும் இரு. பாலுக்குமுரிய தொகுதி முழுவதாக அமைந்து இருக்கின்றது. ஒரு கூட்டம் கலங்கள் இதனுடைய விதையாக அமைகின்றன. விதையானது சூலகங்களுக்குப் புறப்பக்கமாக இருக்கின்றது. சூலகங்கள் கான்களால் தொடுக்கப்பட்டிருக்கின்றன. இச்சூல் கச்சிறுகான்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, அப்பாற்செலுத்தி என்னும் தனியுறுப்பாக அமைந்திருக்கின்றது. அப்பாற்செலுத்தியானது விருத்தியுடன் மூட்டின் ஒருபக்கத்திலுள்ள உற்பத்தியறை என்னும் எறியத்தினூடாக வெளிப்பக்கம் திறக்கின்றது. உற்பதியறையை" உற்பத்திநுண்டுளை எனவும் கூறுவர். அப்பாற்செலுத்தியின் முனைப் பகுதி வெளியெறிகான் எனப்படும்,
பெண்பாலுக்குரிய இனம் பெருக்கல் தொகுதி இருசோணை யுள்ள ஓர் சூலகத்தைக் கொண்டது. இது விருத்தியுடன் மூட்டின் பிற்பக்கமுனையில், ஒப்பீட்டளவில், விதையிலும்பார்க்க அதிக அகப்பக்கமாக அமைந்திருக்கின்றது. சூலகத்தினின்று வெளி வரும் முட்டைகள் ஒரு சிறிய சூலகக்கானினுள் இறக்கப்படுகின் றன. இச்சூலகக்கான் தனி மஞ்சட்கருவாக்கிக்கான் ஒன்றுடன் தொடுக்கப்பட்டிருக்கும். விருத்தியுடன் மூட்டின் பிற்பக்கமுனையி' லிருக்கும் மஞ்சட்கருவாக்கிச்சுரப்பிகளின் நெருக்கமான தொடை யொன்றிலிருந்து, இம்மஞ்சட்கருவாக்கிக்கான் உற்பத்தியாகின் றது. சூலகக்கானும் மஞ்சட்கருவாக்கிச்சுரப்பிகளும் சந்திக்கு மிடம் கருக்கட்டுங்கால்வாய் எனப்படும். கருக்கட்டுங்கால்வாயானது பொலிவுள்ள ஒட்டுச்சுரப்பிகளின் தொடை ஒன்றினால் சூழப்பட் டிருக்கும். கருக்கட்டுங்கால்வாயிலிருந்து எழுகின்ற கருப்பையி னுள்ளே கருக்கட்டிய முட்டைகள் எல்லாம் சேமித்துவைக்கப் படுகின்றன, தொடக்கத்தில் கருப்பை சிறிதாக இருக்கும்.

நாடாவுருப்புழு
273
ஆனால், மென்மேலும் முட்டைகள் உண்டாக்கப்படுதலும் - முட் டைகளின் எண்ணிக்கை அதிகரிக்குந்தோறும் - கருப்பையா னது ஒரு கணியமான அளவுக்கு, ஊதிப்பெருத்து விடுகின்றது. இதனால், விருத்தியுடன் மூட்டி லுள்ள ஏனைய உறுப்புகள் எல்லாம் சிதைந்துவிடுகின்றன. கருக்கட்டுங்கால்வாயிலிருந்து எழுகின்ற இன்னொரு கான் யோனிமடல் எனப்படும். இது அப்பாற்செலுத் திக்குச் சமாந்தரமாக வெளிப்பக்கம் சென்று சேருகின்றது.
தற்கருக்கட்டல் (உண்மையிலேயே இரண்டு விருத்தியுடன் மூட்டுகளுக்கு இடையில்) நிகழ்ந்தபின், ஒருசில காலத்திற்குக் கருப்பையின் கண்ணே முட்டைகள் விருத்தியடையும். முட்டை கள் ஒவ்வொன்றும் இரு மென்றகடுகளினால் மூடப்பட்டிருக்கும். இம்மென்றகடுகள் இரண்டும் முட்டையின் ஓடாக அமைகின்றன. முட்டையினுள் விருத்தியடையும் மூலவுருவானது முட்டையுரு வின தாக இருக்கும். இம்மூலவுருவின் ஒரு முனைவில் மூன்று சோடி கொளுக்கிகள் அமைந்திருக்கும் எனவே, இதனை அறுமுள் ளிக்
உரு. 133 அறுமுள்ளிக்குடம்பி (நாடாவுருப்புழு)
குடம்பி அல்லது கொளுக்கிங்கலம் என்று அழைப்பர். விருத்தியுடன் மூட்டுகள் உடலினின்றும் துண்டிக்கப்பட்டபின், பிரிந்தழி கின்றன; பிரிந்தழிதலும், கொளுக்கிக்கலங்களையுடைய முட்டை கள், குடலிலுள்ள கழிவுகளுடன் கலந்து, விருந்துவழங்கி யின் மலத்துடன் வெளியேறிச் சிதறுண்டு பரம்புகின் றன.
அறுமுள்ளிக்குடம்பிகள் தங்கள் விருத்தியை நிறைவாக்குவ தற்கு வெளியிடங்கள் ஏற்றனவாகா. அதாவது: அவற்றின் விருத்தி வெளியிடங்களில் நிறைவுபெற முடியாது. துளாவிருந்து வழங்கி ஒன்றினால் விழுங்கப்பட்டாலொழிய, இக்குடம்பிகளின் விருத்தி நிறைவுபெறாது. பெரும்பாலும், பன்றியே துணைவிருந்து வழங்கியாய் அமைகின்றது. பன்றியின் குடலினுள்ளே, அறு முள்ளிக்குடம்பி ஓட்டினின்றும் வெளியேறுகின்றது. வெ ளியே

Page 147
25I]
உயிரினவியல்
றியதும், இரைப்பையையோ, குடலையோ துளைத்துக்கொண்டு, குருதிக்கலன் ஒன்றை அடைந்து ஈரலுக்குக் காவிச்செல்லப்படு கின்றது. இப்பொழுது, குடம்பியானது அதிகம் விருத்தியடைந்து விடும். விருத்தியடைந்த இக்குடம்பி னபவாற்ப ருவப்புழு (சிசிர்றி சேக்கசு) எனப்பெயர்பெறும். இப்பொழுது, இஃது ஒருமுனையில் உண்முகமடிப்புள்ள தாயும், ஏறத்தாழக் கோளவுருவின தாயும், தோன்றும். இந்த உண்முகமடிப்பின் கண்ணே சீடகச்சென்னியி லுள்ள வருங்காலக் கொளுக்கிகளும், உறிஞ்சிகளும் காணப் படும், பைவாற்பருவப்புழுவினது தோற்பையுருப்போன்ற தோற் றத்தினால், அது தோற்சபையுருப்புழு எனவும் பெயர்பெறுகின்றது. ஏறத்தாழ ஒரு மாதகாலத்தின் பின், இது ஈரலை விட்டகன்று, (பன் றியின்) தசைகளை அடைந்து, அங்கு சிறைப்பை ஒன்றை ஆக் கிக்கொண்டு வாழும். இந்த நிலையில், சிவந்த புள்ளிக் கூட்டங்
உரு 134 பைவாற்பருவப்புழு (நாடாவுருப்புழு) A பைவாற்பருவப்புழு - உண்முகமடிப்பு உண்டாக முன்
(வெட்டுமுகம்) B பைவாற்பருவப்புழு - உண்முகமடிப்பு உண்டான பின்
னுள்ள நிலை,
கள் நிறைந்து காணப்படும், பன்றியின் தசைகளில். எனவே, இப் 'பன்றியிறைச்சியில் சின்னமுத்துப்போன்ற வடுக்கள்' காணப்படும். சிறைப்பையாக்கத்திற்குச் சற்று முன்னதாக, உண் முகமடிப்பானது வெளிப்பக்கமாகப் புரட்டப்படும். இவ்வாறு உட்பக்கம் வெளிப்பக்கமாகப் புரட்டப்படுவதனால், சஞ்சு, கொளுக்கிகள், உறிஞ்சிகள் என்பன முழுவளர்ச்சியடைந்த

நாடாவுருப்புழு
281
நாடாவுருப்புழுவில் இருப்பதுபோலத் தத்தம் சார்நிலைகளை வகித் துக்கொள்ளுகின்றன, ஈற்றில், சிவந்த புள்ளிகளுள்ள பன்றி யிறைச்சியை மனிதன் உண்ணுங்கால், சிறைப்பையினுள் வாழ்ந்த குடம்பி வெளிப்படுத்தப்படுகின்றது: தோற்பை கரைந்துவிடு கின்றது. கீடகச்சென்னியானது குடற்சுவரைப் பற்றிக்கொள்ளு கிறது. அசாதாரணமான நிலைமைகளில், மனிதன் துணைவிருந்து வழங்கி ஒன்று பங்குபற்றாமலே கொளுக்கிக்கலங்களுள்ள முட்டை களால் மீண்டும் தொற்றைப் பெற்றுக்கொள்ளுதல் கூடும்.
வினாக்கள் 1. நாடாவுருப்புழுவின் உடலமைப்பை விவரிக்க. 2.
துணைவிருந்துவழங்கி என்பது யாது? இப்புழு தொற் றிக்கொள்வதில், அதன் பங்கு யாது? 3. நாடாவுருப்புழுவின் இனம்பெருக் கலைப்பற்றி ஒரு கட்
டுரை வரைக. 4. சிறுகுறிப்பு எழுதுசு: (அ) பைவாற்பருவப்புழு,
(ஆ) விருத்தியுடன் மூட்டு, (இ) கிடகச்சென்னி,
(ஈ) தற்கருக்கட்டல். 5. நாடா வுருப்புழுவில் நரம்புத்தொகுதி, இனம்பெருக்கற் றொகுதி தவிர்ந்த பரனைய தொகுதிகள் இல்லாமைக்குரிய
காரணங்களை விளக்குக.
செய்முறைப் பயிற்சிகள் கீடகச்சென்னி தாழ்வ,அநுணுக்குக்காட்டியில் தோன்றும் தோற்றத்தை வரைந்து, பகுதிகளுக்குப் பெயரிடுக.

Page 148
20)
அத்தியாயம் 38
வண்ணாத்திப்பூச்சியின் வாழ்க்கைவரலாறு
வண்ணாத்திப்பூச்சியும், நுளம்பைப் போலவே, பூச்சிகளின் கூட்டத்தைச் சேர்ந்தது. வண்ணாத்திப்பூச்சிகளும், அந்துகளும் "செதிலுள்ள சிறுகுகளையுடையபூச்சிகளின் கூட்டத்தைச் சேர்ந்தனவா கும். இவை மிகவும் அழகானபூச்சிகள், 'சாதுவான' குணமுடை யவை; பூக்களில் அயன்மகரந்தச்சேர்க்கை நிகழ்த்தும் பெரும் பணியை மனிதகுலத்துக்குச் செய்து வருகின்றன. வண்ணாத்திப் பூச்சிகள், பகல்வேளையில் உயிர்ப்புடன் சஞ்சரிப்பன, ஆனால்,
அந்துகள் இரவு வேளையில் நடமாடித்திரிவன.
- நமக்கு நன்குதெரிந்த சாதாரண 'அரித்த லொச்சியா வண்ணத்திப் பூச்சி' (Aristolochin butterfly)யை நம் ஆராய்ச்சிக்குரிய மாதிரிப் பொருளாக எடுத்துக்கொள்வோம். இது சருவசாதாரணமாகப் பெருமருந்துக்கொடி (அரித்தலொச்சியா இந்திக்கா - Aristolothi:டி indica)க்கு அருகாமையில் காணப்படுகின்றது. பெண் வண்ணத் திப்பூச்சியானது தனது முட்டைகளைப் பெருமருந்துக்கொடியின் இலைகளினது கீழ்ப்பக்கத்தில் இட்டுவைப்பதனாலேயே அச்செடி -
LF =
H F
AH
உரு. 135 வண்ணத்திப்பூச்சியின் அமைப்பு A உணர்கொம்பு: LF இடது முன் சிறகு; R.F வலது" முன் சிறகு; T நெஞ்சறை; A,B வயிற்றறை.
யின் அருகாமையில் காணப்படுகிறது. முழுவளர்ச்சி அடைந்த , வண்ணாத்திப்பூச்சியின் உடல் அழகுள்ளதாக இருக்கும். இதற்கு )

வண்ணாத்திப்பூச்சியின் வாழ்க்கை வரலாறு
28:T இரண்டுசோடி சிறகுகள் உ ண் டு. தூசுபோன்ற செதில்களால் சிறகுகள் மூடப்பட்டிருப்பதனால் அவற்றிற்குச் சிறப்பியல்பு வாய்ந்த அந்நிறம் ஏற்பட்டிருக்கிறது. இதன் பின்சிறகுகளில் ஓர் சிறிய எறியம் காணப்படுகின்றது. அதனைத் "'துக்கணவால் (Swallow tail) என்பர். சிறகுகள் ஒவ்வொன்றினதும் மையப் பகுதி, கடுங்கறுப்பு நிறமுடையது, முன் சிறகுகளின் சுற்றயற் பகுதிகள் சாம்பனிறமுடையனவாயும், கரிய கோடுகள் உள்ளன வாயும் காணப்படும். பின்சிறகுகளின் சுற்றயற்பகுதிகள் ஒரு தொடரில் ஆறு புள்ளி கள் உடையனவாயும், அவற்றைவிட இன் னொரு தொடரில் ஐந்து நீண்ட கடுஞ்சிவப்புநிறப்புள்ளிகள் உடையனவாயும் இருக்கும். வண்ணாத்திப்பூச்சி ஆறி அமர்ந். திருக்கும் போது, தனது சிறகுகளை முதுகுக்குமேல் நிலைக்குத் தாக மடித்துவைத்திருக்கும். அதன் கால்கள் நடந்து திரிவதற் குப் பயன்படுத்தப்படுவதில்லை. ஆதலால், அவை மிகமெலிந்து பொலிவின்றி இருக்கின் றன. வளர்ந்த வண்ணத்திப்பூச்சி திரவ . உணவையே உண்டு வாழுகின்றது. தாவரங்களின் சாறுகளே, பிரதானமாகப் பூக்களின் அமுதமே, அதன் உணவாக அமை கிறது. திரவவுணவை உறிஞ்சுவதற்கு ஏற்றவாறு நீண்ட துதிக்கை அல்லது நாக்கு, அதனிடத்து உண்டு. அதன் தும்பிக்கை உபயோகிக்கப்படாத வேளைகளில் சுருளிபோலச்சுருண்டிருக்கும்.
எN IB-c.t
- பூ, E
உரு. 136 வண்ணாத்திப்பூச்சியின் தலையிலுள்ள
உறுப்புகள் A உடணர் கொம்பு:GE கூட்டுக்கண்; 1..'' பிற்சொண்டுப்பரிசம்; " தும்பிக்கை. (நாக்கு).
அதன் தலையில் பிதுக்கமான இரண்டு கட்டுக்கண்கள் உண்டு. இந்த இரண்டு கண்களினதும், அத்துடன் அதனது இரண்டு உணர்கொம்புகளினதும் உதவியோடு, பூக்களில் அமுதம் இருக்கும் இடத்தை, அது கண்டுபிடித்துக்கொள்கிறது - உணர்கொம்புகளின் உருண்டுதிரண்ட உருவமுள்ள முனைகளே, மணப்புலனின் இருப் பிடமாகும்.
நுளம்பைப்போலவே, வண்ணாத்திப்பூச்சியின் வாழ்க்கை வர லாற்றிலும், நான்கு வேறுபிரித்தறியக்கூடிய நிலைகள் உண்டு. அவையாவன: மூலவுரு நிலை, குடம்பிநிலை, கூட்டுப்புழுநிலை, முழுவளர்ச்சி

Page 149
284
உயிரினவியல்
நிலை என்பனவாம். முழுவளர்ச்சி அடைந்த வண்ணத்திப்பூச் சியைப்பற்றி, முன்னரே விவரித்துவிட்டோம். கருக்கட்டிய முட் டையின் அகத்தே நிகழும் மாற்றங்களை உள்ளடக்கியது 'மூல வருநிலை' யாகும். முன்னரே கூறியதுபோல், இம்முட்டைகள் பெருமருந்துக் கொடியினது இலைகளின் கீழ்ப்பக்கத்தில் இட்டு வைக்கப்படும். மிகச்சிறிய முட்டைகளின் பாதுகாப்புக்கு ஏற்ற இடமாக இலைகளின் கீழ்ப்பக்கமே தெரிந்தெடுக்கப்படுகிறது. -மழையினின்றும், சூரிய வெப்பத்தினின்றும் இலையின் கீழ்ப்பக்கத்


Page 150
280
உயிரினவியல்
(அல்லது பொற்புழு) எனப்படும். கூட்டுப்புழுவினது உடலி னுள்ளே மிகமுக்கிய மாற்றங்கள் நிகழுகின்றன. வருங்கால வண்ணாத்திப்பூச்சியின் சிறகுகள், கால்கள் என்பன, கூட்டுப் புழுவினது கூட்டினூடாகக் காணப்படும். கூட்டுப்புழுவானது தோற்றத்தளவில் உயிரில்லாதது போன்று, சில காலத்துக்குத் தொங்கிக்கொண்டிருக்கும், கூட்டுப்புழு நிலையின் முடிவில், சிறப் பாக மழைகால முடிவில், முழுவளர்ச்சி அடைந்த வண்ணத்திப் பூச்சி, கூட்டை உடைத்துக்கொண்டு வெளிவந்து, வாழ்க்கை நடாத்தத் தொடங்கும்.
யாம், இதுகாறும் படித்துக்கொண்டவற்றிலிருந்து, நுள ம் பைப்போலவே, வண்ணத்திப்பூச்சியும் தனது வாழ்க்கை வர லாற்றில் விருத்தி, வளர்ச்சி, உருமாற்றம் என்னும் மூவகை மாற்றங் களை அடைகின்றதென்பது தெளிவாகின்றது. மூலவுரு நிலையில் முட்டையினகத்தும், புழுவுறையினகத்தே வண் ணாத்திப்பூச்சியாக மாற்றமடையும்போதும், விருத்தியடைதல் மிகத் தீவிரமாக நிகழு கின்றது. குடம்பிநிலையில், குடம்பியானது பென்னம்பெரிய புழு வாகும்போது, வளர்ச்சி நிகழுவதைத் தெளிவாகக் காணலாம். குடம்பி (மயிர்கொட்டி) கூட்டுப்புழு (பொற்புழுவாக மாற்றம் அடையுங்கால், உருமாற்றம் நிகழுகின்றது.
வினாக்கள்
வண்ணத்திப்பூச்சியின் வாழ்க்கைவரலாற்றில் இடம் பெறும் மூவகை மாற்றங்களை விவரிக்க தான் வாழும் சூழ் நிலைக்கு இணங்கி வாழக்கூடிய வகை யில், வண்ணத்திப்பூச்சி அமைந்திருக்கிறது என்பதைக் காட்டுக,
செய்முறைப் பயிற்சி
ஏதாவது ஒரு வண்ணாத்திப்பூச்சியையும், அதன் மயிர் கொட்டியையும், பொற்புழுவையும் வரைந்து பகுதிகளுக்குப் பெயரிடுக.

20T
அத்தியாயம் 39
உயிரினங்களின் பரம்பல்
உலகில் வாழும் உயிரினங்களாய தாவரங்களும், விலங்குக ளும் இடத்துக்கிடம் தொகையிலும், வகையிலும் வேறுபட்டிருக் கக்காண்கின்றேம். அருவிகள் வீழுகின்ற பசுமையான மலைச் சரிவுகளும், வெயில் நுழையாத அடர்த்தியான காடுகளும், பற் றைக்காடுகள் நிறைந்த பகுதிகளும்; கடலலையும், ஆற்றுப் பொங்குமுகமும், இடம்பெயரும் மணற்குன்றும், உவர்க்கழியும் உள்ள நெய்தனிலத்தாவரங்களும் என - இவ்வாறு இடத்துக்கிடம் தாவரங்கள் வேறுபட்டிருத்தல் காணக்கூடியதாயிருக்கின்றது. அதுபோலவே, நுணுக்குயிரான அமீபாமுதல், பென்னம்பெரிய யானை ஈறாகவும், பாலைகளில் வாழும் விலங்குகள் தொடக்கம் கடுங்குளிர்வலயத்தில் வாழும் விலங்குகள் ஈறாகவும் பல்வேறிடங் களில் பல்வேறுவகையான விலங்குகள் வாழ்வதையும் அறிவோம். இவ்வாறு, தொகையிலும், வகையிலும் உயிரினங்கள் இடத்துக் கிடம் வித்தியாசப்படுதல் உயிரினங்களின் பரம்பல் எனப்படும்.
பரம்பலைத்துணியும் காரணிகள், கால நிலைக்காரணிகள், மண் ணியற்காரணிகள், உணவுகிடைக்கும் அளவு, உயிர்க்காரணிகள் (பிறவுயிரினங்களினால் ஏற்படும் போட்டி, ஏற்படும் உதவி முதலியன), புவியில் ஏற்படும் மாற்றங்கள் எனப்பலவகைப்படும். சூரிய வெப்பம், ஒளி, மழைவீழ்ச்சி, வளிமண்டல ஈரப்பதன், காற்றுக்கள் வீசுந்திசை, மலைத்தொடர்கள் அமைந்திருக்கும் திசை, கடன் மட்டத்திலிருந்து உயரம், அகலக்கோட்டுத் தூரம் முதலியன உ யி ரி ன ங் க ளி ன் பரம்பலை ஆளுவனவாதலால், அவற்றை எல்லாம் உள்ளிட்டுக் காலரிலேக்காரணிகள் என்று கூற பலாம், மண்ணினியல்பு (களி, மணல், உக்கல் முதலிய பாகுபாடு கள்), அதன் இரசாயனத்தன்மை, நீரைப்பற்றுந்திறன், அதிலுள்ள நுணுக்குயிர்கள் முதலியன, உயிரினங்களின் பரம்பலை ஆளும் மண்ணியற்காரணிகளாம், உயிரின வாழ்க்கைக்கு உணவு இன்றிய மையாததாதலால், அவற்றின் பரம்பலை ஆளும் காரணிகளுள் பிரதானமானது உணவு கிடைக்கும் அளவேயாகும். பிற உயிரினங் களால் ஏற்படும் போட்டியும், உதவியும் உயிரினப்பரம்பலை. ஆளும் கடாயிர்க் காரணிகளாகும்.
புவியியலின்படி, பூமியான து, சூரியவெப்பத்தையும், ஒளியை -- பும் அதிகமாகப்பெறும் வெப்பவலயம் எனவும், அளவான சூரிய

Page 151
238
உயிரின்வியல்
வெப்பத்தையும் ஓளியையும் பெறும் இடைவெப்பவலயம் என வும், கடுங்குளிருள்ள கடுங்குளிர்வலயம் எனவும் மூன்று பெரிய கால நிலைவலயங்களாக வகுக்கப்பட்டுள து. அவற்றுள் வெப்பவலயம் புவிமத்தியகோட்டின் இருபக்கங்களிலும் 30 வ. 30' தெ. அகலக் கோடுகளுக்கிடையில் 60" வரை வியாபித்துள்ளது. இடைவெப்ப வலயமான து 30" வ, அகலக்கோடு 66!' வ, அகலக்கோடு என்ப வற்றிற்கிடையிலும், 30' தெ. 661" தெ. அகலக்கோடுகளுக்கிடையி லும் இருக்கின்றன. 66!" வ. அகலக்கோடு தொடக்கம் வட முனைவுவரையும், 6ே!" தெ, அகலக்கோடு தொடக்கம் தென்முனைவு வரையும் காணப்படும் பிரதேசம் கடுங்குளிர்வலயமாகும். இக் கால நிலைவலயங்களுள் பல உட்பிரிவுகள் உண்டு. மழைவீழ்ச்சி, வீசுங்காற்றுக்கள் முதலியவற்றால் ஏற்படும் வித்தியாசங்களால் இவ்வுட்பிரிவுகள் தோன்றுகின்றன.
புவிமத்திய கோட்டின் இருபக்கங்களிலும் ஏறத்தாழ 6' அக லக்கோடுவரைக்கும் வருடம் முழுவதும் மழைபெய்யும், இங்கு வெப்பநிலை 80" ப. அளவில் இருக்கும். வளிமண்டல ஈரப்பதன் இங்கு அதிகம், இப்பிரதேசம் வெப்பமான ஈரக்காடுகள் எனப் படும். மழைவீழ்ச்சி 80" வரையில் உண்டு. தாவரங்கள் ஓங்கி வளர்வதற்கு வேண்டிய வெப்பம், நீர் என்பன இங்கு நிரம்ப உண்டு. வளிமண்டல ஈரப்பதனும் இங்கு அதிகம். ஆதலால், இங்கு பெரிய மரங்கள் வளருகின்றன. அடி பருத்து முடிபரந்த மகோகனி, இரப்பர், தேக்கு, சவ்வரிசிப்பனே ' போன்ற மரங்கள் இங்கு உண்டு. சூரியவொளி காட்டினுள் நுழையமுடியாதபடி, மரங்கள் அடர்ந்திருக்கும். காட்டினகத்தே இருள் நிலவும். மரங்களின் கிளைகள் சூரியவொளியைப் பிடிப்பதற்காக ஒன்றோடொன் ய பின்னிப்பிணைந்து மேலோங்கி வளரும். பெரிய மரமயவேறிக ளும் இக்காட்டிலுண்டு. மரங்களின் மீது குரங்குகளும் பறவை யினங்களும்வாழும். தரையில் பூச்சிபுழுக்கள், பாம்புகள், பல்லி கள் என்பன வாழும்.. காண்டாமிருகம், யானைபோன்ற பெரிய விலங்குகள் மட்டுமே இக்காடுகளில் வாழத்தகுதி பெற்றிருக்கின் றன. இவற்றிற்கு வேண்டிய உணவு இங்கு தாராளமாகக்கிடைக் கிறது. வடபிரேசில், மத்திய ஆபிரிக்கா, மேற்கின்னிக்கரை, கிழக்கிந்திய தீவுகள் மலாய்க்குடாநாடு என்னும் பிரதேசங்கள் வெப்பவீரக்காடுகளையுடையன.
வெப்பவீரக்காடுகளை அடுத்து 18' அகலக்கோடுவரைக் கும் அயனவலயப்புல்வெளிகள் காணப்படும். இங்கு கோடையில் மழைவீழ்ச்சியுண்டு. மாரி வறண்டபருவமாகும். வெப்பநிலைச் 1

உயிரினங்களின் பரம்பல்
28)
சராசரி 85° ப; மழைவீழ்ச்சி ஏறத்தாழ 25". இங்கு மழைவீழ்ச் சிக்குறைவால் பெரிய புல்லினங்கள் வளருகின் றன. இடைக் கிடை சிறிய மரங்களும் காணப்படும். மான், மரை, ஒட்டகச் சிவிங்கி, வரிக்குதிரை போன்ற இலை யுண் தணுகின் ற) விலங்குகள் இப்புல்வெளிகளில் வாழுகின் றன, இவற்றைப்பிடித்து உண்டு வாழும் சிங்கம், புலி, கழுதைப்புலி போன்றனவும் இங்கு வாழு கின்றன. வறண்டபருவத்தில் புல்லினங்கள் காய்ந்து, சருகாகி விட, இப்பிரதேசம் முழுவ தாம் கபில நிறமாகக் காட்சியளிக்கும், ஊனுண்ணும் விலங்குகளாகிய சிங்கம், புவி முதலியனவற்றிற்கு இக்கபில நிறத்தோற்றம், மறைந்திருந்து இரையை அகப்படுத்த உதவுகின்றது. வெனசுவெலா, கியானாவின் தென்பகுதி (தென் ன மெரிக்கா), சூடான், தென் மேலாபிரிக்கா), உறொடேசியா, குவீன் லாந்து முதலிய பிரதேசங்களில் இத்தகைய உயிரினப்பரம்பல் காணப்படும்.
அயனவலயப்புல்வெளிகளை அடுத்து 30' அகலக்கோடுவரை பாலைகள் காணப்படுகின் றன. இங்கு மழைபெய்வதில்லையென்றே கூறலாம். சராசரி வெப்பநிலை 80' ப. மேலிருக்கும். பகற்காலம் கடும் வெப்பமாகவும், இராக்காலம் கடுங்குளிராகவும் இருக்கும். வளிமண்டல ஈரப்பதன் மிகக்குறைவு. தரை வெடித்து, மணற் பரப்பாகப் பரல் செறிந்து கிடக்கும். காற்றுவீச்சு மிகவதிகம். மணற்குன்றுகள் காற்றினாலாக்கப்படுவதும், அழிக்கப்படுவதுமாக விருக்கும். பெரும்பாலும், இங்கு மணற்புயல்கள் வீசும். எனவே, இங்கு வறணிலத்தாவரங்கள் சிலவே வளர முடியும். இவைகள், வறணிலவளரிகளுக்குள்ள இசைவாக்கங்கள் உடையனவாய்க் காணப்படும், முட்புதர்களும் சிறிய புல்லினங்களும் இங்கு வள் ரும். ஆகவே, இவற்றை உண்டுவாழக்கூடிய ஒட்டகம், ஆடு, குதிரை, கழுதை, தீக்குருவி முதலியன, இங்கு வாழுகின்றன. நீருள்ள இடங்களில் பேர்ந்தும் வளரும். சகாரா, அரிசோனா, கல காரி, தார், கோபி, மேற்கு அவுத்திரேலியா, என் பன பாலைக
ளுள்ள பிரதேசங்களாம்.
அயளவலயப்புல்வெளிகளும் பாலைகளும் நிலவும் அகலக் கோடுகளில், தென் கிழக்காசியாவில், பருவக்காற்றுவலயம் காணப்படு கின்றது. இங்கு, நிலையானகாற்றுக்கள் வேறுவிதமாக வீசுகின் றன. இதற்குரிய புவியியற்காரணிகளை யாம் இங்கு ஆராய்வதை விடுத்து, இவ்வலயத்தின் சிறப்பியல்புகளை நோக்குவாம். இங்கு கோடைகாலத்தில் தென் மேல்பருவக்காற்றும், மாரிகாலத்தில்
215--20

Page 152
20)
உயிரினவியல்
வடகீழ்பருவக்காற்றும் வீசுகின்றன. தென்மேல்பருவக்காற்று இப்பிரதேசத்திலுள்ள பல பகுதிகளுக்கு நல்ல மழையைக் கொடுக்கிறது. இப்பிரதேசத்தின் சராசரி வெப்பநிலை 80° ப, மழைவீழ்ச்சி 40* முதல் 200" வரையுண்டு. அசாம் மலைப்பிர தேசத்தில் 400" மழைவீழ்ச்சியும் உண்டு. வளிமண்டல ஈரப்ப தன் மட்டாக இருக்கும். மழைவீழ்ச்சி அதிகமுள்ள இடங்களில் பெருங்காடுகள் காணப்படும். இக்காடுகள் என்றும் பசுமையாக இருக்கும். தேக்கு, சமண்டலே, பால், முதிரை, கருங்காலிபோன்ற பெரிய மரங்கள் இங்கு வளருகின்றன. மழைவீழ்ச்சி குறைந்த இடங்களில் புதர்க்காடுகள், புன்னிலங்கள் காணப்படும். இங்கு, பல விலங்குகள் வசிக்கின்றன. யானை, புலி, கரடி, மான், மரை, குரங்கு, பறவையினங்கள், பாம்பு, பல்லி, ஓணான் முதலியன வாழுகின்றன. இலங்கையும் பருவக்காற்று வலயத்திலுள்ளதாகை யால், தென் மேல்பருவக்காற்றால் மழைபெறும் பகுதிகளாகிய தென்மேல்பகுதி செழிப்பான காடுகளுடையது. வடகீழ்பருவக் காற்றால் குறைவான மழையைப்பெறும் வடகீழ்பகுதிகளில், புதர்க் காடுகளும் முட்காடுகளும் உண்டு. அம்பாந்தோட்டை, மன்னார்ப் பகுதிகளில் மழைவீழ்ச்சி மிகக்குறைவாதலால், அவை ஏறத்தாழப் பாலைகள் போன்று இருக்கின்றன. தென்கிழக்காசிய நாடுகள் அவுத்திரேலியாவின் வடபகுதி என்பன பருவக்காற்து வலயத் துள் அடங்கும்.
பாலைப்பிரதேசங்களை அடுத்து மத்தித்தரைவலயம் காணப்படு கிறது. இவ்வலயம் 30' அகலக்கோடு தொடக்கம் 43' அகலக் கோடுவரை பரந்திருக்கிறது. சராசரி வெப்பநிலை 70" ப ஆகும். மழை, மாரிகாலத்தில் மட்டும் உண்டு. மழைவீழ்ச்சி 35" வரை யிலிருக்கும் இங்கு என்றுப்பசுமையானகாடுகள் காணப்படுகின் றன, நீண்ட வேருள்ள தாவரங்கள் இவ்வலயத்தில் அதிகம். நீரைச்சேமித்துவைத்து உயிர்வாழ்வதற்கு வேண்டிய இசைவாக் கங்கள் இவ்வலயத்தாவரங்களிற் காணப்படும். பழந்தருமரங்கள் இங்கு அதிகம். மத்தித்தரைக்கடலைச் சூழ்ந்த நாடுகள், கேப் மாகாணம், மத்தியசில்லி, வடகலிபோனியா, மேற்கு அவுத்திரே லியா முதலிய பகுதிகளில் மத்தித்தரைவலயம் காணப்படும்.
மத்தித்தரைவலயத்தை அடுத்து, முனைவுகளை நோக்கி 55' அகலக்கோடுவரை இடைவெப்பக்காலநிலை, நிலவுகிறது. இடைவெப்ப வலயத்தில் வசந்தம், கோடை, இலையுதிர், மாரி என நான்கு பருவங் களுண்டு. சராசரி வெப்ப நிலை 65* ப. சராசரி மழைவீழ்ச்சி 40" இங்கு. பெரும்பாலும் கோடைகாலத்திலேயே மழை பெய்கிறது. கோடையில் வளிமண்டல ஈரப்பதன் அதிகமாயிருக்கும். மாரிகாலம்

உயிரினங்களின் பரம்பல்
201
குளிராயிருக்கும். வசந்தகாலத்தில் சூரியவொளி அதிகமுண்டு; மழை குறைவாகவுண்டு. வசந்தத்தில் தாவரங்கள் முளைத்துக் கோடையில் வளர்ந்து, இலையுதிர்காலத்தில் இனம் பெருக்கலுக் குரிய வித்துகளை உண்டாக்கிவிட்டு, மாரிகாலம் அண்மித்தலும் இலைகளை உதிர்த்துக்கொண்டு நெடுந்தூக்கநிலை எய்துகின்றன. - மரங்களில் உள்ள அரும்புகள் குளிர் உட்புகமுடியாதவாறு செதி விலைகளால் மூடப்பட்டிருக்கும், மாரிகாலத்தில், பனி உறைந்து தரை கடுங்குளிராகவிருப்பதால், தாவரங்கள் நீரை உறிஞ்சாது விட்டுவிடும். எனவே, மாரிகாலத்தில் இப்பிரதேசத்திலுள்ள தரை, உடற்றெழிலுலர்வுடையதாகவிருக்கும். இலைகளை உதிர்ப்பதால், இங் குள் ள தாவரங்கள் பல்லாண்டு வாழுகின்றன. இவ்வலயத்தி லுள்ள காடுகள் இலையுதிர்காடுகள் எனப்படும். இங்குள்ள விலங் கினங்களிற் பல, மாரியில் கடுங்குளிர் காரணமாக மாரி நெடுந்தூக்க நிலை எய்துகின்றன. இலையுதிர்காடுபள் உள்ள அதே அகலக் கோடுகளில், கண்டங்களின் நடுப்பகுதிகளில், மழைவீழ்ச்சி குறை வான, வெப்பமதிகமுள்ள பிரதேசங்களில் இடைவெப்பவலயப் புல்வெளிகள் காணப்படுகின்றன. இங்கு ஆடு மாடுகள், குதிரை கள் முதலிய விலங்கினங்கள் காணப்படும். வடசீனா, கோரியா, பிரித்தானியத்தீவுகள், தென்கீழ் அமெரிக்கஐக்கிய நாடுகள், கிழக்கு ஆசெந்தீன, நத்தால், தென்குவீன்லாந்து, பிறேயரிசு, தெப்புப்புல்வெளி என்பன இவ்வலயத்தில் உள்ளன.
இலையுதிர்காட்டுவலயத்தை அடுத்து, 65" அகலக் கோடுவரை காசியிலக்காடுகள் காணப்படுகின்றன, இப்பிரதேசத்தில் மழை வருடம் முழுவதுமுண்டு. சராசரி மழைவீழ்ச்சி 30". சராசரி வெப்பநிலை 50' ப வரையிலிருக்கும். மாரிகாலம் கடுங்குளிராக விருக்கும். இங்குள்ள மரங்களின் கிளைகள், ஆவியுயிர்ப்பைக் குறைப்பதற்காக இலைகள் போன்று வேறுபடுத்தப்பட்டிருக்கும். தரை கடுங்குளிராயிருத்தலால் உடற்றொழிலுலர்வுடையது. மாரி காலத்தில் இக்காடுகளில் சிறிய தாவரவினங்களெல்லாம் அழிந்து விடும். மயிர்ப்போர்வையுள்ள விலங்கினங்களே இங்கு பெரும் பாலும் காணப்படும், "அவைகளும் குளிர்காலத்தில் மாரிநெடுந் தாக்க நிலை எய்துகின்றன. கனடா, உரூசியா முதலிய பகுதிகள் ஊசியிலைக்காட்டு வலயங்களாகும்.
ஊசியிலைக்காட்டுவலயத்தையடுத்து, முனைவுவரை இருக்கும் கடுங்குளிர்ப்பிரதேசம் தண்டிராப் பிரதேசமாகும். இங்கு வெப்ப மும் ஒளியும் மிகக்குறைவு. சிலவகைப்பாசிகளே இங்கு வளரும். முனைவுமான், முனைவுநாய் என்னும் விலங்குகளும், இங்கு வாழ்

Page 153
202
உயிரினவியல்
வதற்கேற்ற இணக்கங்களுடையன. சீல், கடற்சிங்கம் என்பன வும் கடுங்குளிரில் வாழுகின்றன. வட அமெரிக்காவின் வடபகுதியி லும், ஆசியாவின் வடபகுதியிலும் தண்டிராவலயம் காணப்படும்,
உயிரினங்கள் புவிமத்திய கோட்டிலிருந்து முனேவுகள் வரைக் கும் பரம்பியிருத்தல்போலவே மலைத்தொடர்களிலும் பரம்பியிருக் கின்றன. கால நிலை உயரத்திற்கேற்ப வித்தியாசப்படுதலால், பரம்பலும் அதற்கேற்ப வித்தியாசப்படும்.
மேற்கூறப்பட்ட வலயங்களில் எல்லாம் ஒரே சீரான உயிரி னங்கள் வாழ்வதில்லை. ஒரே வலயத்தில் ஆபிரிக்காவில் வாழும் விலங்கு, அவுத்திரேலியாவில் காணப்படுவதில்லை. ஒன்றற்கொன்று அண்மையிலுள்ள இரு பிரதேசங்களில் வெவ்வேறு உயிரினங் கள் காணப்படுகின்றன. பரம்பலில் இத்தகைய முரண்பாடுகள் காணப்படுவதற்கு மலைத்தொடர்கள், கடல்கள், வெப்பநிலை, நீர்கிடைக்கும் அளவு, உலாவுபெறும்வாய்ப்பு, ஒன்றற்கொன்று உதவியாக வாழ்நல் ஆகிய தடுப்புகளே காரணங்களாகும்.
கிழக்கிந்திய தீவுகளிற்காணப்படும் தாவரங்கள் அவுத்திரேலி யாக்கண்டத்தில் காணப்படுந் தாவரங்களைக்காட்டிலும் வித்தியா சமானவை. விலங்குகளுக்கிடையிலும் இவ்வித்தியாசம் காணப் படுகிறது. இந்நிலப்பரப்புகள் கடல்களாற் பிரிக்கப்பட்டிருக்கின் றமையே இதற்கு ஒரு காரணமாகும்.
இமயமலைத்தொடரின் இருபக்கங்களிலுமுள்ள தாவரங்கள்,, விலங்குகளுக்கிடையில் பெரிய வித்தியாசங்களுண்டு. இமய மலைத்தொடரின் வடக்கேயுள்ள தாவரவினங்கள், விலங்கினங்கள் ஐரோப்பிய தாவரவிலங்கினங்களைச் சார்ந்தவை; தெற்கேயுள் எவை இந்தியாவிலுள்ளவற்றைச் சார்ந்தவை.
வெப்பவலயத்திலுள்ள தாவரவிலங்கினங்களுக்கும் இடை வெப்ப, கடுங்குளிர்வலயங்களிலுள்ளவற்றிற்குமிடையில் வெப்ப நிலை காரணமாக வித்தியாசங்கள் காணப்படுகின்றன. இடை வெப்பவலயத்தில் சூழல் வெப்பக்குருடுநிலையுள்ள விலங்குகள் மாரிநெடுந்தூக்க நிலை எய்துகின்றன. கடுங்குளிர்வலயத்தில் அவ்வாறில்லை.
பெரியபாலைவனங்கள், தாவரவினங்களைப் பரம்பாது தடுக்கின் றன. போதிய அளவு நீர்கிடைக்காமையே இதற்குக்காரண மாகும். சகாராப்பாலை நிலத்தின் தெற்கிலும் வடக்கிலும் காணப் படும் உயிரினங்களுக்கிடையில், வித்தியாசங்கள் காணப்படுகின்
ற்கனா ..
மாரிநெயத்தில் வித்தியாசம் அள்ளவற் .

உயிரினங்களின் பரம்பல்
293
சிங்கம், புலிபோன்ற ஊனுண்ணும் விலங்குகள் புன்னிலங் -களை அடுத்து வாழ்தலும், யானை, காண்டாமிருகம்போன்றவை பெருங்காடுகளில் வாழ்தலும், அவைகளுக்கு வேண்டிய உணவு அவ்வவ்விடங்களில் அகப்படுகின்றமையினாலேயாம். புன்னிலங் களில் சிங்கம், புலி என்பவற்றிற்கு உணவான. புல் உண்டு வாழும் மான், மரைபோன்றன அகப்படும். அவ்வாறே, யானை காண்டாமிருகம் என்பவற்றிற்குவேண்டிய இலை, குளை பெருங் காடுகளில் நிரம்பக்கிடைக்கும்.
""d ' மாலினம்
சில தாவரங்களின் பூக்கள் சில இனப்பூச்சிகளாலேயே பகரந்தச்சேர்க்கை பெ று கின்றன. அப்பூச்சிகள் இல்லாவிட்டால் இனம்பெருக்கலைச் செய்யமுடியாத அத்தாவரவினம், அப்பூச்சி கள் இல்லாத இடங்கட்குப்பரம்பாது. மலேரியாவை உண்டாக் கும் பிளாசுமோடி யம் என்னும் தனிக்கலவிலங்கொட்டுண்ணி தனது விருந்து வழங்கி களாக 'அனோவிலிசு' நுளம்பையும் மணி தனையும் கொண்டிருக்கிறது பிளேக்கு என் னும் கொள்ளை நோயை விளைக்கும் கிருமி, தெள்ளையும் மனிதனையும் விருந்து வழங்கிகளாகக் கொண்டிருக்கிறது. மலேரியாவையும் பிளேக்கை யும் கட்டுப்படுத்த வேண்டுமாயின், முறையே இடைவிருந்து வழங்கிகளாய நுனம்பையும் தெள்ளேயும் அழிக்கவேண்டும். எனவே, நுளம்பு இல்லாத இடங்கட்குப் பிளாசுமோடியம் பரம் பாது; தெள்ளில்லாத இடங்கட்குப் பிளேக்குக்கிருமி பரம்பாது. எனவே, உயிரினங்கள் ஒன்றையொன்று சார்ந்து வாழ்வதற்குத் தடை உண்டாயின், அவற்றின் பரம்பலும் தடைப்படும். உயிரி னங்கள் ஒன்றையொன்று சார்ந்து வாழ்தலாலேயே இயற்கைச் சமநிலை குலையாதிருக்கின்றது.
விலங்குகளுக்கு இடப்பெயர்ச்சிக்குரிய உறுப்புகளிருத்தலால் உணவு, துணை என்பவற்றைத் தேடி வாழிடமாறல் ஏற்படல் முடி யும். எனினும், இத்தகைய வாழிடமாறலும் ஓர் எல்லைக்குட்பட்ட தேயாகும். கடற்பறவைகள், பறக்கும் வாய்ப்புக்காரணமாகவும், சமுத்திரத்தின் சூழ்நிலை பொதுவாகப் பூமியில் எங்கணும் ஓரே சீரானதாயிருத்தலாலும், வாழிடமாறி வாழுகின் றன. ஆனால், தரையிலுள்ள பறைவகள் சூழ்நிலை மாறுபாடுள்ள இடங்களுக் குச்சென்று வாழுதல் மிகக்குறைவு. எங்கு செழிப்பான தாவர வளர்ச்சியுண்டோ அங்கு, அவற்றையுண்டுவாழும் விலங்குகளும், அவ்விலங்குகளை உண்டுவாழும் விலங்குகளுமாகப், பல விலங் கினங்கள் வாழும். ஏனெனில், எல்லாவற்றிற்கும் உணவு பிர தானம்.

Page 154
204
உயிரினவியல்
தாவிக்குதித்து மரக்கிளைகளில் வாழத்தகுதிபெற்ற குரங்குகள் பெரிய காடுகளிலும்; மரத்தில் மறைந்திருந்துகொண்டு உணவைப் பிடிக்கும் மலைப்பாம்புகள், பச்சைப்பாம்புகள் என்பன பசியா காடுகளிலும்; ஓணான் முதலிய பற்றைக்காடுகளிலும், மான், மரை போன்றன புன்னிலங்களிலும், வாழத்தக்க இணக்கங்கள் உடை யன. ஆகவே, இவை வேறிடங்களில் பரம்பி வாழ்தல் கட்டுப் படுத்தப்படுகின்றது.
ஒரே தாவரவினத்தைச் சேர்ந்த தனித்தனியுயிர்களும் வெவ் வேறு இனங்களைச்சேர்ந்த தனித்தனியுயிர்களும் தமக்குள்ளே நீர், கனிப்பொருளுப்புகள், இடம், ஒளி ஆகியவற்றிற்காகப் போட்டி போடுகின்றன. இந்தப்போட்டியிலே, போட்டித்திறமைமிக்க தாவ ரங்கள் பிழைத்து வாழுகின்றன.- நிலைக்கின்றன. சூழ்நிலைக் குகந்த இசைவாக்கங்களும் போட்டியில் வெற்றிபெற உதவுகின் றன, மனிதனோடும் விலங்குகளோடும், தாவரங்கள் ஓயாது போராட்டம் நிகழ்த்துகின்றன. மனிதனோடு விலங்குகளும் போராட்டம் நிகழ்த்துகின்றன. இவைகள் எல்லாம் உயிரினங்சு. ளின் பரம்பலைப் பாதிக்கின்றன.
இவற்றைத்தவிரத் தீ, வெள்ளம், பூகம்பம், எரிமலை வெடிப் புப்போன்ற நிகழ்சிகளாலும் உயிரினத்தொகுதிகளில் வேறுபாடு நிகழ்தலுண்டு. இவ்வித நிகழ்ச்சிகளின் பின்னே, ஒரு புதிய தாவரக்கூட்டமோ, விலங்குக்கூட்டமோ' தோன்றி நிலைபெறுதலு' முண்டு. புவியின் மேற்பரப்பில் ஆதிகாலத்தில் வாழ்ந்த தாவ ரங்களுள் ஒரு சிலவே, இன்று பிழைத்திருக்கின்றன.
இதுகாறும் கூறியவற்றால் உயிரினங்களின் பரம்பலைத் துணி யும் காரணிகளில் முக்கியமான சிலவே இங்கு காட்டப்பட்டுள் ளன. அவற்றைத்தொகுத்துப் பின்வருமாறு கூறலாம். காலநிலை; மண்சரியல்பு; உணவு அகப்படும் அளவு: உயிரினங்களுக்கிடையிலுள்ள வாழ்க்கைப்போராட்டப்போட்டி; உயிரினங்கள் ஓன்றையொன்று சார்ந்து வாழ் தல்; உயர்ந்த மலைத்தொடர்கள்; சாத்திரங்கள்; பாலைநிலங்கள் என்பவற்றின்: தடுப்புகள்; உயிரினங்களின் சூழ்நிலைக்குகந்த இனணக்கங்கள் என்பனவே. பரம்பலைத் துணியும் பிரதான காரணிகளாம்.
வினாக்கள் 1. உயிரினங்களின் பரம்பலைத் துணியும் காரணிகள் எவை?
இவற்றை, விளக்கி ஒரு கட்டுரை வரைக. புவியியலின்படி, தாவரங்களும் விலங்குகளும் பரம்பி: யிருக்குமாற்றைச் சுருக்கிக்கூறுக.

தாவரங்களின் உள்ளமைப்பு
205
செய்முறைப் பயிற்சிகள்
1. இலங்கையிலுள்ள விலங்குச்சாலைக்குச் சென்று, அங் குள்ள விலங்கினங்களின் பெயர், அவற்றின் சொந்த நாடு என் பன பற்றிய ஒரு அட்டவணை ஆக்கிக்கொள்க, பரம்பல் விதி களின் அடிப்படையில் இத்தரவுகளை ஆராய்ந்து பார்க்க.
2. இலங்கையிலுள்ள தாவரவலயங்களைச் சுற்றுப்பிரயாணஞ் செய்து நேரிற் காண்க, கால நிலைக்காரணிகள் பரம்பலை எவ்வாறு தாக்கியுள்ளனவென ஆராய்க.
அத்தியாயம் 40
தாவரங்களின் உள்ளமைப்பு
பூக்குந் தாவரங்கள் ஒருவித்திலைத்தாவரம், இருவித்திலைத்தாவரம் என இருபெரும் பிரிவுகளுள் அடங்கும். அவற்றின் உட லினது உள்ளமைப்பு மிகவும் சிக்கலானது. எனினும், அவற்றைப் பற்றிச் சுருக்கமாக அறிந்துகொள்ளுதல் தாவரங்களைப்பற்றிய விடயங்களை விளங்கிக்கொள்வதற்கு உதவியாயிருக்கும்.
இருவித்திலைத்தாவரம் ஒன்றினது தண்டின் குறுக்குவெட்டு முகத்தை நுணுக்குக்காட்டியின் கீழ்வைத்துப் பார்த்தால், பின் வரும் பகுதிகள் அதிற்காணப்படும்.
தண்டின் அதிவெளிப்பக்கப்படை மேற்றேல் எனப்படும். மேற் றோல் ஒரு படைக் கலங்களால் ஆனது. மேற்றோலின் மீது புறத் தோல் எனப்படும் ஒரு மெல்லியபடை காணப்படும். இப்படை கள் இரண்டும் தண்டிற்குப் பாதுகாப்பு அளிக்கின்றன, மேற் றோலினுள்ளே பல படைகளாலான கலங்கள் காணப்படும். இக் கலப்படைகள் எல்லாம் சேர்ந்து, மேற்பட்டை எனப்படும். இது தாங்குமிழையமாகும், மேற்பட்டையினுள்ளே ஒருபடைக்கலங் கள் உ ண் டு, அப்படை அகத்தோல் எனப்படும். அகத்தோலி னுள்ளே காணப்படும் படைகள் பரிவட்டவுறை எனப்படும். பரி வட்டவுறையினுள்ளே தண்டின் மையவுருளை அல்லது கம்பம் இருக்கிறது. கம்பத்தின்கண்ணே மோதிரவளையம் போன்று கலன் கட்டுகள் காணப்படும். கலன்கட்டுகளின் மையத்திலும், இடை

Page 155
21)
உயிரினவியல்
LF
EFu
TH'
P||
14
5t "
உரு. 138 இருவித்திலைத் தண்டின் அமைப்பு (விளக்கப்படம்) " ( புறத்தோல்; 13 மேற்றேல்; CIN மேற்பட்டை; EN அகத் தோல்; PIX பரிவட்டவுறை: TH உரியம்; XY காழ்; MR மைய விழையக்கதிர்; P சிடை; 1 மாறிழையம்.
யிலுமுள்ள பகுதிகள் புடைக்கலவிழையக் கலங்களால் நிரப்பப் பட்டிருக்கும். மையத்திலிருக்கும் புடைக்கலவிழையப்பகுதி கிடை எனப்படும். கலன்கட்டுகளுக்கு இடையிலுள்ள பகுதி மையளிழை யக்கதிர் எனப்படும். கலன்கட்டுகளில், உட்பக்கமாகக் காழ்க்கலன் களும் வெளிப்பக்கமாக உரியக்குழாய்களும் காணப்படும். கம்பம் தண்டின் தாங்குயிழையமாகத் தொழிற்படுகிறது. காழ்க் கலன் கள் வேர்மயிரால் உறிஞ்சப்படும் கணிப்பொருளுப்புக் கரை சலைத், தாவரத்தின் மேற்பகுதிகளுக்குக் கடத்துந் தொழிலைச் செய்கின்றன. உரியக்குழாய்கள் இலைகளில் ஆக்கப்படும் உண வைத் தாவரத்தின் இழையங்களுக்குக் கடத்துகிறது. மேற் பட்டைக்கலங்கள், பெரும்பாலும் உணவுச்சேமிப்பு உடையன. மையவிழையக்கதிர் பக்கங்களுக்கு நீரும் உணவும் செல்லும் வழியாக அமைகின்றது. காழிற்கும் உரியத்திற்குமிடையில் மாறி ழையம் எனப்படும் ஒருபடை காணப்படுகிறது. இதன் கலங்கள் பிரிந்து பெருகுவதனாலேயே, கம்பம் நாளடைவில் பருமனடை யத், தாவரம் பருத்து வளருகிறது. இருவித்திலைத்தாவரங்களே பருமனடைந்து வளருகின்றன.
ஒருவித்திலைத்தாவரத்தின் தண்டினது உள்ளமைப்பு வித்தி யாசமானது. ஒரு சோளத்தண்டின் குறுக்குவெட்டுமுகத்தில் பின் வரும் பகுதிகளைக் காணலாம். தண்டைச்சுற்றி அதிவெளிப்
" எனப்படும் * *காழிற்கும் உள்: 200ாவும் செ.,

தாவரங்களின் உள்ளமைப்பு
207
புறமாகப், பாதுகாப்பளிக்கும் மேற்ருேள் காணப்படும். இதனா கத்தே அடியிழையம் நிரம்பியிருக்கும், அடியிழையத்தின் கண்ணே
E
GR
PK
உரு. 13) ஒருவித்திட்பத்தண்டின் அமைப்பு (விளக்கப்படம்) | 10 மேற்றோல்: G.1? அடியிழையம்; P.X உரியமும் காழும். கலன் கட்டுகள் சிதறுண்டு கிடக்கும். கலன்கட்டுகளில் காழ்க்கலன் களும், உரியக்குழாய்களும் காணப்படும். ஆனால், மாறிழையம் காணப்படாது. ஆதலினாலே, ஒருவித்திலைத்தாவரங்கள் பருமன
டைந்து வளருவதில்லை,
இருவித்திலைத் தாவரங்களின் வேர்களும் பொதுவாகத் தண் டினது உள்ளமைப்பே உடையன. எனினும் காழும் உரியமும், ஒன்றுவிட்டொன்றாக அமைந்திருக்கும். ஒருவித்தலைத் தாவரங்க ளின் வேர்களின் அமைப்புப், பொதுவாக அதன் தண்டின் அமைப்பைப் போன்றது. |
வினாக்கள் கலன்கட்டுகளின் தொழில் யாது? 2. சேமிப்பிழையங்கள் யாவை? 3. ஒருவித்தலைத்தாவரம் பருமனடைந்து வளராமைக்குக்
காரணம் யாது?
செய்முறைப் பயிற்சிகள் சூரியகாந்தித் தண்டின் குறுக்குவெட்டுமுகத்தை நுணுக் குக்காட்டியில் வைத்துச் சோதிக்க.
2. சோள த்தண்டின் குறுக்குவெட்டுமுகத்தை நுணுக்குக் காட்டியின் கீழ்வைத்துச் சோதிக்க.
1.

Page 156
208
உயிரினவியல்
இந்நூலில் எடுத்தாளப்பட்ட கலைச்சொற்கள்
அ
அகக்கலவுரு அகப்பக்கமான அகப்பக்கப்பக்கமான அகப்பக்கப்பிளவு அகப்பக்கவேர் அகப்பக்கநடுவான அகஞ்சுரக்கின்ற அகஞ்சுரக்குஞ்சுரப்பி அகத்தோல் அகவெலும்புக்கூடு அகலக்கோடு அகமுதலுருப்படை அகமுகச்சவ்வூடுபரவல் அகழி அகன்றவிலைக்காடு அங்குரம் அங்குரத்தொகுதி அச்சு அச்சுருளை அச்சுமுள்ளெலும்பு அச்செலும்புக்கூடு அசற்ற்புலம் கிண்ணக்குழி) அசாதாரணமான அசேதனவுறுப்புள்ள அசைவு அசையும் மூட்டு அசைவில்லாமூட்டு அடிச்சூலகம் அடித்தளம் அடியாப்புருவெலும்பு அடிநோக்குவரிசை அடியிழையம் அடிப்பிடரெலும்பு அண்ணம் அண்ணவெலும்புகள் அண்மையிலுள்ள அத்தில்சுமுள்ளெலும்பு
Endoplasm Ventral Veritro - Iatural Ventral fissure Ventral root Mil-Ventral Endocrine Endocrine gland Endodermis Endoskelton Latitudo Endoderm Endosmosis
Ditob Broad-leaved forest Shoot Shoot system Axis Axis cylinder Axis vertebra Axial skeleton AcotibuluiTI Abnormal Inorganic
Movement Movablo joint Inmovable joint Basal ovary Beil (801 bed) Basi-splienoid bone Contripetal successione Ground tissue Busi - பிபipital boாரு Tulatப்
Palatines Proximaal Atlas vertebra

கலைச்சொற்கள்
2001
அதிட்டம்
Llick அதிர்ந்து வெடிக்கும் பொறிமுறை 13xplosive mechanism அதிர்ந்து வெடித்தல்
Explosion அப்பாற்செலுத்தி
Vas deferung அபநயனநரம்பு
Abducens tierve அமிலம்
Acid அமினோவமிலம்
Amino acid அமிலேசு
Amylase அமீபவசைவு
Amoeboid movement அமுதம்
Nectuur அமுதச்சுரப்பி
Nectary அமைப்பு
Structure அமையம் (அமைப்பு)
Organisation அமோனியவுப்புகள்
Ammonium salts அயன் மகரந்தச்சேர்க்கை
CrnH4 - pollinnliurn அயனவலயம்
'Tropical zone அயனவலயப்புன்னிலம்
Tropical grassland அரந்தி (முழங்கையெலும்பு)
JIna அரும்பு
Bud அரைமதிவாயில்
Sernilunar valve அரைச்செலுலோசு
Seni - CellulaSC அல்கா
Alga அல்லி
Petal அல்லிவட்டம்
Corolla அல்லிப்போலி
Petaloid அல்லியிணைந்த
Polypetalous அல்லிபிரிந்த
Gamopetalous அல்லிமேலொட்டிய
Epipatalous அல்லிவட்டக்குழாய்
Corollary tube அலகு
Unit அலரா நிலைப்புணர்ச்சி
Cleistogamy அலிரோன்படை
Aleuronc layer அலுமினியம்
Aluminium அலையுநரம்பு
Vagus nerve அவயவவளையம்
Limb girdlo அவரையக்குடும்பம்
Leguininolo அவரியம்
IL011&Ihtயம் அழுகல்வளரி
Saprophyte அழுகன்முறைப் போசனை
Saproplıytic nutrition அழுகுதல்
Putrefaction அழுத்தமான
Glabrous

Page 157
300
உயிரினவியல்
அளவுத்திட்டம் அற்ககோல் அறை அறுமுள்ளிக்குடம்பி அறுவைமருத்துவக்கத்தி அனு அனுவெலும்பு அனுபரியும் நரம்புத்தொகுதி அணுக்கணுக்காலெலும்பு அணுமணிக்கட்டெலும்பு அனுத்தோட்பட்டைமுளை அனுவென்புமுளை அனைத்துமுண்ணுகிற
Scale Alcohol Locule, Chamber HExacuuth larv11 (OnliOSriliாப்) Lancet
Inxilla Maxillary bone Parasympathetic nervous systein Metatarsal bono Metacarpal bone Metacromiati procesa Metapophysis Oırmnivorous
ஆ
ஆட்சித்தசை ஆடுதண்டு ஆடுதண்டுப்பொறிமுறை ஆண் உறுப்பு ஆண் கருமுதல் ஆண்குறிமூன்றேல் ஆண்குறிமுன்றோற்சுரப்பி ஆண்குறிச்சிலிர்முள் ஆண்புணரி ஆண்பூ ஆணகம் ஆணிவேர் ஆதித்தாவரம் ஆதிவிலங்கு ஆப்பு ஆப்புருவெலும்பு ஆய்கருவி ஆரம்பமேலென்புமுனைகள் ஆரையெலும்பு ஆவியாதல் ஆவியுயிர்ப்பு ஆவியுயிர்ப்போட்டம் ஆவியுயிர்ப்பிழுவை |
Gubernacular muscle
Piston Piston mechanism Male organ Male pronucleus Trritiா
Prepatial gland Pineal sete Maule gamate Malo flower Androecium Ta]] Tபப்'; Primitive plant Primitive animal MVetIழா Sphenoid Appatus Anapophysis
Radius Evaporation Transpiration Transpiration current Transpiration pull
Rest
ஆறுதல்

கலைச்சொற்கள்
301
இ
இச்சையில்வில்
Reflex Aru இச்சையில் செயல்
Itoflex Lution இச்சையின்றியியங்குகின்ற
Irivoluntity for No1 Voluntary) இச்சைவழியியங்குகின்ற
Voluntary இடப்பெயர்ச்சி
Locomotion இடமாற்றுகை
Transferenco இடமாறிட்பிறந்த
Adventitiolik இடமாறிப்பிறந்தவேர்கள்
Adventitious roots இடுப்புவளையம்
Pelvic girdle இடைக்கனியம்
MEEUCur] இடைச்சிறுகுடல்
-Iபjui11101 இடைப்பட்ட
InterIridiulப் இடைவெப்பவலயம்
l'emperate zone இடைவெப்பப்புன்னிலம்
Temperate grassland இணக்கம் (இசைவாக்கம்)
Adaptation இணை ந்த
Fused இணைதல்
T1sion இணே படா
AA ராOS இணையம் (இணை கருவி)
Ligament இதயம்
Hearl; இதயவறை
Ventricle of heurt இதயவுறை (இதயவறைச்சுற்றுச்சு வர்] PerignTdiurn இதயவுறைத்திரவம்
Pericardial liquid இதயச்சோணை
Auricle of heart இதயநாண்கள்
Chordae tendine இயக்கப்பண்புச்சத்தி
Kinetic energy இயக்குநரம்பு
Motor nervo இயக்குநார்
Motor fibre இயங்குவித்தி
Zoospore இயற்கையானா"
Natural இரசம்
MIETCHIN இரச்சின்
Erepei இரசாயன
Chemical இரசாயனஎதிர்த்தாக்கம்
Chemical reaction இரசாயனத் தாண்டுத்திருப்பம்
Chenotropism இரசாயனப்பதார்த்தம்
Chemical substance இரட்டைச்சிறைப்பிரிப்புள்ள
Bi-pinnate

Page 158
302
உயிரினவியல்
இராசபாகு இரான்வியரின்கணு இருகற்றையுடைய இருகாபனேற்று இருகாலமுதிர்வு இருகுழிவுள்ள இருகூர்வாயில் இருகூற்றுப்பிளப்பு இருசக்கரைட்டு இருசோணையுள்ள இருபாலான (அலி) இருபாலுள்ள இரும்பு இரும்புக்குளோரைட்டு இருமுனையும் கூம்பியவடிவம் இருவித்திலைத்தாவரம் இரைப்பை இரைப்பைச் சுரப்பி இரைப்பைச்சாறு இல்லிப்பாத்திரம் இவற்றேசு இலிக்கினின் இலைக்காம்பு இலைநடுவிழையம் இகலப்பரப்பு இவையடி இலையடிச்செதில் இலையுண் ணுகின்ற இலையுதிர்காடு இலைப்பேசு இலைபோன்ற இலைவாய் இலைவிளிம்பு இழுவிசை இழை இளஞ்சூடு இழையுருக்குடம்பி இறக்கம் இறக்குதல் (இறக்கம்)
Royal jelly Node of Rativier Diadelphoua Bicarbonate Dichog my Biconcavo Tituspid (DT IMilral)
Binary fission Disaccharide Bilobed Herina phrodite Bisexual Iron Iroti chloride Fusiform Dicotyledon Stofnach Gastric gland Gastric juico Porous vessel ILCtOS Ligniu Tank-stills Mesophyll Leaf blado Leaf base Stipulo
Herbivorous Deciduous forest Lipinse Lat' - 11lic
Stoma Leaf margin Tபா14ioா
Filarmont Warinth Filariforen larva Depression Dischargo

கலைச்சொற்கள்
303
இறக்கைபோன்ற இறக்கையுருவென்பு இறகிழை இறெனின் இனங்கள் இனப்பெருக்கம் இனம்பெருக்கற்றுவாரம் இனம்பெருக்கற்றொகுதி இஷாலின்
Feathery Tiryguid
Barb Rennin Speci14 Prorாழாtion Reproductive aperture Reproductive system Inuliti
ஈ
ஈதர் ஈதைலற்ககோல் ஈரப்பதன் ஈரல் ஈரலிப்பு ஈரல்வாயினளம் ஈரலுக்குரிய ஈராளம் ஈரடி ஈரல்வாயிற்றொகுதி ஈராண்டின ஈராண்டுக்களை ஈரில்லமுள்ள ஈருதடுள்ள ஈரூடகவாழ்வுள்ள ஈற்றுத்தலையம் ஈனுதல்
Ether Ethyl-alcohol Humidity Liver Moisture Hepatic-pப்rtal ஈcin Hepatic Hopatie vein Hepatic artery Hepatic - portal system Biennials Biennial Weed Tio00013 Bilabiaute Amphibious Telencephalon Parturition
ப
உக்கல் உகந்த
கிர் உச்சி நோக்குவரிசை உட்கணியம் உட்கழுத்துநாடி உட்காவுகின்ற உட்காவுநரம்புமுளை
Huni118 " Suitablo CI114' Acropetal succession Endocarp Internal jugular vein Afferent Dendrite

Page 159
304
உயிரினவியல்
உட்சுவாசம்
Inspiration உட்செலுத்தல்
Ingustion உட்சேர்க்கை
Anabolismi உட்டோல்
Derimis உட்பக்கமான
Interior உட்பிரிவு
BI b-divisiu11 உட்புற (உட்பக்க]
ILLETTIn) உட்புறவுறை
Lining உட்பூக்கள்
Internal gilla உடல்கத்துள்ள
Visceral உடலமைப்பியல்
Anatomy உடற்குழி
Coeloiti உடற்றெழில்
Physiology உடற்றொழிலுலர்வுள்ள
Physiologically dry உண்மர் வைரம்
DurELITIon உண்முகமடிப்பு
Irvingination உணர்கொம்பு
Antenna உணர்ச்சிக்குரியசிம்பி
Sensory papillia உணர்ச்சியுள்ள
Sensitive உணர்ச்சிநரம்பு
Serisory InerYO உணர்ச்சி நார்
SetuHory fibre உணர்ச்சிப்புலன்
Sense of feeling உணர்திறன்
Sensitivity உணருந்தன்மையுள்ள
Sensitive தி_3ணவு
Food உணவுட்கொள்ளல்
Feeding உணவுக்கால்வாய்
Alimentary Canal உணவுச்சிறு வெற்றிடம்
Food vacuole உணவுச்சேமிப்பு
Food storage உணவுத்திரவியங்கள்
Food materials உப்புகள்
Salt= உபகரணம்
Device, பquipment உபவென்புமுளை
Hy[31 puphysis உமியடிச்செதில்
Glum! உமிழ்நீர்
Salivil உமிழ்நீர்ச்சுரப்பி
Salivary gland உயர்ந்த உறுப்புக்களால் இயன்ற Highly Orgiuliscl உயர்வலு |
Higli power உயிர்க்காரணி
Biotic factor

கலைச் சொற்கள்
31
உயிர்ப்பில் லா
Tபபtiv! உயிர்ப்புக்காட்டி
TH[Mirr HCopா. உயிர்ப்பொருள்
(11 Irid=111 உயிரில்லாத பொருள்
ப11 - liviபா illinா உயிரினம்
Lif உயிரினாவியல்
Biolபபு உயிருள்ளபொருள்
Living thing உராய்வு நீக்கி
Lubricant உரியம்
Phloem உரிவு
Denudition உருமாற்றம்
Metamorpliosis "உருள
Cylinder உலர்பழம்
Dry fruit உவர்ச்சதுப்புநிலத் தாவரங்கள் Sult- 11uralh plant உவர்த்தன்மை
Salinity உலர்வு
Dryness "உவை' உதவுள்ள
Y - Sherl உள் வித்தியம்
Hind03(ப்[!! உள்ளங்கால்
Sole உள்ளங்கை உள் ளறைத்தலையும்
Tha.lamencephaloti உள் ளுமி
Pulபம் உள்ளிறக்கம்
Inp11=liா! உள்ளொட்டுண்னணி
Endoparasite உற்பத்திச்சிம்பி
Genital papilla உற்பத்திநாடி
Genital artery உற்பத்திநுண்டுளை
(படital 1011' உற்பத்தியறை
படtiitml 11tiா உறங்குநிலை
Dorinant stinge உறிஞ்சல்விசை
Suction force உறிஞ்சன்மானி
Tuturn tET 44 உறிஞ்சிகள்
Sபாl:cr3 உறிஞ்சுதல்
Absolution (sutlking) உறிஞ்சும் வேர்கள் (பருகி)
Sucking roots உறுத்துணர்ச்சி
Irritablity உறை
Coverinா, aெpsule.
Palm
215 - 21

Page 160
3ாடு
உயிரினவியல்
வா
ஊக்கி
ஊளசியிலைக்காடு ஊடகம் ஊடுபுகவிடுமியல்புள்ள தத்தேகியாவின்துவாரம்
2ாறு (திங்கு) "தன்பசை
Catalyst Coniferos forest Mediumi Permeable Eustacheun opening HarIII Gelatin
எ.
l'riLipet - shu ped
4711
எக்காளவடிவமுள்ள எண்ணெய் எத்தியோலின் பா.திர் எதிர்த்தாக்கம் எரிசோடா எரிபொற்றாசு எலும்புக்கூட்டுத்தொகுதி எலும்புக்கூடு (வன்கூடு) எளிதிலாவியாகுமெண்ணெய் எளிய(தனி, பொது) எறியம் (முனைப்பு)
Etiolin Negative Rection பய11ati Sala Caustic potish Sikeletal system Skeleton Volatile oil Simple Projection
ஏ
ஏந்தி ஏர்க்காலெலும்பு ஏரா ஏறுகொடி
Thalutnus. Voinor (Tiாம் Climbing plant
ஐ ஐதரசன் (ஐ) ஐதரோகுளோரிக்கமிலம் ஐதான
HIyilrogen (H) Hydrochloric acid Diluto
ஒசுமிக்கமிலம் ஒட்சாலிக்கமிலம் ஒட்சிசன் (ஒ)
Oamic acid Oxalic acid
xygen (0)

கலைச்சொற்கள்
267
ஒட்சியேற்றம்
[]xitlatioII ஒட்டற்பண்பு
Adliesioti ஒட்டுண்ணி
Tirailப் ஒட்டுந்தன்மையுள்ள
Sticky ஒத்தபுணரி
THOSILIete "ஒத்தபுணரியுண்மை
Homபாழாmy ஒதுக்கத்திரவியம்
Reservo Interial ஒதுக்கவுணவு
Reserve food ஒப்பீடு
பொ|Inrisா ஒருங்குசுருண்ட
Convoluted ஒருசக்கரைட்டு
Moloccharide ஒருகல்வித்திலையுள் ளா
IMIாப்பா/Jellury ஒருபங்கு திண்மையுள்ள
அபாயi - Halitl ஒருபங்கூடுபுகவிடுமியல்புள்ள
பிபாாப் - [IErnEable ஒருபாலுண்மை
Dicliny ஒருபாலுள்ள
Unisex Lual ஒருவித்திலைத்தாவரம்
Monocotyledore ஒரேசீரான
Uniform ஒழுங்காக்கும்
Regulating ஒழுங்கான
Regular ஒழுங்கில்லாத
Irregulக!" ஒளித்தொகுப்பு
Photosynthesis ஒளி தாண்டுதிருப்பம்
Heliotropis11 ஒன்றையொன்று சார்ந்துவாழ்தல் little Enlar1CU
ஓட்டுச்சுரப்பி
டி
ஒடு
Elitll-Ill Runner HT11 ANIITLal Weed AIIItunla 1IIIIIIIII
ஒராண்டுக்களை ஓராண்டின ஓரில்லமுள்ள
க
கக்கம் கக்சுவரும்பு சுங்கு (பீடம், மூரி) கசியிழையம் ' கட்டில்லா
Axil Axillary bud Ridge Cartilage Free

Page 161
318
உயிரினவியல்
கட்டின்றி
Freely கட்டுரை
114:HIE கட்புலனாகுந்தன்மை
Visiblity கட்புள்ளி
11vd-4pnt கடத்துதல்
Conduction கடத்துமிழயம்
Conducting tissue கடற்பஞ்சு
Sponge கடற்பஞ்சுக்கலம்
3பப்பgy Ill கடற்கரை
Sen-Slord கடற்கரைக்காடு
Beach jungle கடல்விலங்கு
3ப41 -4inirmil) கடுங்குளிர்வலயம்
Frigid zone கடைவாய்ப்பல் (அரைக்கும்பல்) MIolar கண்டிக்குபாய்
Glass tube கண்ணீரெலும்பு
Liochrymal bone கண்விழி
11 - Jall கணத்தாக்கம்
Impulse காரியம்
Quantity கன்று
Node கணுக்காலுள் ளெலும்பு
Tibia கணுக்கால் வெளியெலும்பு
Tibula கணுக்காலெலும்பு
Tursal bone கணுவிடை
Iritornode கதிர்வீசுஞ்சத்தி
Radiant energy கதிர்ச்சியட
பயV-IIUrEt கதிருருவுள்ள
Spinclle-slı ped கந்தகம்
SulphinT கப்பியுருநரம்பு
Trochlear nerve கபில நிறம்
Brown colour கம்பளிச்சிறுகற்றை
Flocculi கம்பி
Roul கரமல்
Carmel கரற்றீன்
(Jaratiா கரு
Nucleus கருக்கட்டல்
Fertilization கருக்கட்டுங்கால்வாய்
Fertilization Czuial கரு நீலம்
Darili -IIUE கரும்பு வெல்லம் (சக்குரோசு)
Cand Sugar கருப்பை
Uterug

கலைச்சொற்கள்
34
கருவி
1பப்பர் கருவுள் ள
Nucleated கரைசல்
Solution கரைத்தாவரம்
Strutid-plant: கரைதிரவம்
Sultil. கரையுந்தன்மையுள்ள
Sulullகரைபொருள்
Solute கரை வலயம்
Struitid Zolo சுப்பியம்
Cluium கல்சியம்நைத்திரேற்று
Calcium nitrate கப்ப ச்சுவர்
'!-II - Will சுவம்
( 'II கலச்சாறு
clI-S:M] ஈலவிமுறை இனம் பெருக்கல்
Sexual reproduction கலவியின்முறை இனம்பெருக்கல் AHIGXIIml reproductioாட கலத்திற்கப்புறமான
ILatin-Ltllulal" கலப்புநரம்பு
Mixl 141"%' -கலப்புநார்
Mixed fibro கண்கட்டு
Vascular bundle நலன் கேரளம் (மயிர்த்துணை ப்பந்து)
Glomerulus கப்ரு
CytoplusIII கப் படாவ
Mixture கலன்
படிகLil கலன் தொகுதி
Vascular Hystem சுலைதல் (தேனி)
SWIFTning கவசங்கழற்றல்
Moulting கழியறை
[ 11பகப்1. கழியறைத்துவாரம்
Cloncul aperture கழிவு
Excretion கழிவுக்கால்வாய்
Excretory Cathal கழிவுத்தொகுதி
Excrotory system கழிவுநுண்டுளை
Excretory poro கழிவுப்பொருள்கள்
Waste products கழுத்து
Neck கமுத்துச்சிம்பி
Cervical papilla கழுத்துச்சுரப்பி
Cervical Gland கழுத்து நாடி
Jugınlar Artery கழுத்துமுள்ளெ லும்பேரி
Cervical rib - சுழுத்துமுள்ளந்தண்டெலும்பு Cervical Wurtebrா.

Page 162
31]
உயிரினாவியல்
களம்
Oesophagus களி
CIAT கறியுப்பு
(ப1In H41.11 கன்னவுமிழ்நீர்ச்சுரப்பி
Parotid gland கன்னிப்பிறப்பு
Parthenogenesis கனமில்லிமீற்றர்
Cubic milli imeter கனிப்பொருட்பளிங்கு
Mineral Crystal கனிப்பொருணெய்
Mineral oil களிப்பொருளுப்பு தாதுப்பொருளுப்பு)MLinural Biult
கா
காக்கையலகுருமுளை கானரிக்கை காபன் காபன்றன்மயமாதல் காபனிக்கமிலம் காபனீரொட்சைட்டு காபனேற்று காபோவைதரேற்று காம்பிலி காம்பு காய்ச்சிவடித்தநீர் காயம் காரப்போலி காரமான கால நிலைக்காரணி காவற்கலம் காழ் காளான் காற்கமறு காற்றங்குரம் காற்றிடைவெளி காற்றிற்சுவாசம் காற்றின்றியசுவாசம் காற்று காற்றுக்கலவிழையம் காற்றுாட்டல் காறையெலும்பு (சிறுசாவி) காறையெலும்புக்கீழ்நாடி
Corcoid process Offering Carbon Carbon-assimilation Carbonic acid Carboாdioxitle (1) ('arlpat 1 Carbohydrato Spike St:IE Distilled Water LesioIL Alkaloid Alkaline Clirruitio frutor Guard cell Xylem MushrooTEL Aukle Aerial shoot Air -அபாப்ப Aerobic respiration Anaerobic respiration
Wind AererichyIDIL Aeration Clavicle (Collarbono) Subclavian artery

கலைச்சொற்கள்
311
காற்றோட்டம் கான் கான் மூட்டு
Ventilation 111tt. Podomero
கிடை
Pith கிண்ணக்குழி
Glenoid civity கிண்ணாவடி வுள்ள
Cu-axiliarl கிரந்தேசியா
CrustLOCILI கிரியாத்தர்தசை
Cremaster muscle சிருமியழித்தல்
Sterlination கிளிசரோல்
Glycerol கெ
Barich கின் கோசன் (விலங்குமாப்பொருள்) lெy 10ப -
கீடகச்சென்னி கீடம் கீழ்க்கால் கீழ்க்குழிநாளம் கீழ்த்தாடை கீழ்ப்பக்கமேற்றேல் கீழ்வடியும் நீர்
Scolex Verimiz Lower les Inferior vena cava TWI' [AMW
Lா!WET பideTiriE Percolating water
கு குங்கிலியம் குடம்பி குடம்பிநிலை குடல் குடல்வளரி குடல்வாய் குடலுக்கப்பால் வாழிடமாறல் குடற்குறை குடற்சாறு குடற்சுவர் குடுவை குடையம் குதம்
Resin 1.ப்ராம் Larval stage Intestine Appendix IL'IIIIE ExtTal-intestinal migration Ciil SUCULIS entericus Fol - AW :III TI:1All Forainen AIIIE

Page 163
312
உயிரினவியல்
குப்பிரிக்கொட்சைட்டு குமிழ் குமிழ்த்தலைவாயிற் சுரப்பி குமிழம் குமிபுரு குரல்வளை குரணுண் குரற்பெட்டி குரற்பை 'குருட்டுக்குழல்
குருத்தெலும்புப்பாகு குருதிக்கலன் குருதிக்கலனுள்ள குருதிச்சிறுதட்டு குருதிச் சிறு துணிக்கை குருதிச்சோகை குருதி நிறச்சத்து குருதிமயிர்த்துளைக்குழாய் குருதியருவி குருதியுறையாநோய் குலம் குல்வகை (கணம்) குழம்பு குழாய்களில் வாழும்புக்கள் குழாய்போன் ற குழிக்குடனாடி குழிநாளம் குளுக்கோசு குளோரைட்டு
Cupric oxide
Bulb Bulbo-vestibular gland
Bulbil Knob TMITHIIX
Vocal cord
பiபா - h12 11111 Hi!! பயடப்பு11 Chondrin Blood vessel Vascular Tlirainbபாyte (plattlr t) (பTT114lH Anemia HaemoglobiLL பகillary
Blood strcinin Haemophilia 1:11ப் Strikin Emulsion 'Tube-dwelling wOTIIS
Tubulaar
Coelinc Litery VOIIEL CILVIL
11பப்பர் Chloride Stigen Specific Lution Transverse veasol T'ELIH Yerse procOSS Trensverse section Offset Incomplete metamorphosis Semi - partisite
குறி
குறித்ததாக்கம் குறுக்குக்கலன் குறுக்குமுறை குறுக்குவெட்டுமுகம் குறுங்கிடை குறையுருமாற்றம் குறையொட்டுண்ணி

கலைச்சொற்கள்
21)
சுகூட்டம் கூட்டுக்கண் கூட்டுப்பழம் கூட்டுப்பதிவைத்தல் கூட்டுப்புழு சுப்பரின் சுரப்பி
சுகூம்பியவடிவமுள்ள 'கூப்புருவப்பொருள்
கூர்வாயில்
டரியம் கூற்று
கே கேசரப் கேசின்
கோரி கேள்விப்புலன்
Tெour)
நாராயtl 15
பா11மயாil Fruit, 1.பாtபய - '13tin Pupal stango 114 |யா' [InIntl
Conical Pineal body Cuspid valve T'rir:lkle HILLEriciit
StLITION Cascin Pond Sense of hearing
Hand leis Chitin
31க கைவில்லை கைற்றின்
கொ கொடுக்கு (கொட்டல்) கொடுத்துவாங்குமியல்பு கொண்டுசெல்லல் கொத்து கொம்புப் பொருட்படை கொழுப்பமிலம் கொழுப்பு கொளுக்கி கொளுக்கிக்கலம் கொளுக்கிமுறை ஏறிகள் கொறிக்கின்ற கொறியுயிர்
கோ கோடை நெடுந்தூக்க நிலை கோதுமையப்பம்
Sting SரமiliiHi4 Translacntiori Cluster Strutum corneLLITI Fatty acid Fat Hooli Onchosplhere Hal: - பlimbierg 11பwi11பு Rolent
Aestivution
Breud

Page 164
314
உயிரினவியல்
கோளம் கோளவுருவுள்ள
Sphere Spherical
ச
Tolerate Rostellum
சகித்துக்கொள் (வினை) சஞ்சு சடத்தன் மையுள்ள சடைமுளை சத்தி சதைக்கம்பங்கள் சதைச்சாறு சதைப்பழம் சதைப்பித்தக்கான் சதையக்கான் சதையச்சுரப்பி சதையுள்ள சந்திக்கோடு சந்தோபில் சமச்சீரின்றிய சமயோசிதமுறை சமனில்லாத்தம்பமுடைமை சமிபாடு சமிபாட்டுத்தொகுதி சரிவு சவ்வூடுபரவல் சவுக்குமுளை (பிசிர்) சளியம்
Villus Energy Columiile carine l'ancreatic juice Fleshy fruit PariET:1tio-lil durt Pancreatic duct Palicrels Fleshy Raplie XanthoplıyIL Asymmetrical Makeslift Arrangement Heterostyly Digestion Digestive System
bliqா! (03ILogi Flagella Mucilage
சா
சாதாரண சாதி சாம்பனிறப்பொருள் : சாம்பனிறம் சார்களைப்பூண்டு
Common Genus Grey Imatter Grey colour Relative weed
சித்தம் சித்திரவடிவு சிதைவு
4Ti11 Mosaic Degeneration

கலைச்சொற்கள்
315
Sub - maxillary gland
Mandiblo T'apill4 Carotid artery Creuiture AT11litாil 1:4TGr Hili11 II Alveolus
Inlnl1 Tubercului Tulierculiar fiscot
Wing
சிபுகக்கீழுமிழ்நீர்ச்சுரப்பி சிபுகம் (கீழ்த்தாடை) சிம்பி) சிரசு நாடி சிருட்டி சிலந்திவலைப்படை சிலிக்கன் சிற்றறை) சிற்றுருண்டை சிற்றேரியுரு சிற்றேரியுருமுகப்பு சிறகு சிறத்தல் சிறத்தலடைந்த சிறப்பான சிறப்பியல்பு சிறுகுடல் சிறுகுமிழிப்புரதம் சிறுதட்டு சிறு துண்டு சிறு நீர் சிறு நீர்க்குழாய் சிறு நீர்ச்சனனித்தொகுதி சிறு நீர்தாங்குசிறுகுழாய் சிறு நீர்ப்பை சிறு நீர்வழி சிறு நீரகம் சிறுநீரகக்கூம்பகம் சிறு நீரகநாடி சிறு நீரகநாளம் சிறு நீரகவிடுப்பு சிறு நீரமிலம் சிறு நீருப்பு சிறுபரிசை சிறுபழம் சிறுமணி சிறுமணிப்படை சிறுமணியில்லாத 1 சிறுமணியுள்ள
EvolutioIL Specialised
Sriuiu! Characteristic Small intestine
Globulin Platelet Slip Urine Ureter Urino-genital system Uriniforolis tubulo Urinary bladder (Totlir4 Kidnary Pyra III id or kidney Renal artery Reial vein Pelvis
Uric cid 11.
Scutellutni Fruitlet Granule Strutuum granulosum
பா1- பாaniulur Granular

Page 165
316
உயிரினவியல்
சிறுவட்டம் சிறு வேர் சிறுவேர்முறையேறி சிறைப்படுத்து (வினை) சிறைப்பை சிறைப்பைபாக்கம் சிறையல்லி
Circlet Rootlet Tபப்itlet-tilitiihl=1" Capture (yat Enoystinent 4Wi11ா - ரயtal
சீதம் சீமந்துச்சுரப்பி
MIE113 Ceulent - gland Policle
சீறடி
| சு சுக்கிலச்சிறுகுழாய் சுக்கிலப்பாயம் சுக்கிலப்புடகம் சுண்ணாம்பு நீர் சும்மாடு சுரப்பி சுரப்பு சுருக்கு சுருங்கத்தக்கசிறு வெற்றிடம் சுருட்குடல் சுருட்குடற்குறையிடைவாயில் சுருள்
சுருளி
Seminiferous tubule Seminal fluid Vesicula Heminalis Lime Water Pad Glatid Secretion Constriction Contractile VILCuole Tleunt 1IEd-olic wnlvய Coil Spiral "Turbinal bone, Scroll bono "Irrince
Respiratory trumpet Respiratory tubo Respiravtry System Respiration Spiracle Bronchus Bronchiole Respiratory enzyme Breuthing root Flame coll Parietal
சுருளெ எலும்பு சுவடு சுவாசக்குழல் சுவாசக்குழாய் சுவாசத்தொகுதி சுவாசம் (சுவாசித்தல்) சுவாசத்துவாரம் சுவாசப்பைக்குழாய் சுவாசப்பைச் சிறுகுழாய் சுவாசநொதிச்சத்து சுவாசிக்கும்வேர் (முச்சுவேர்) சுவாகபக்கலம் 11 சுவரெலும்பு

கலைச்சொற்கள்
317.
சுழலக்கூடடிய சுழற்சி சுழற்சித்தான மூட்டு சுழன்முறைப்பயிர்ச்செய்கை சுற்றயல் நரம்புத்தொகுதி சுற்றயலான சுற்றி சுற்றுக்கனியம் சுற்றுச்சுருக்கு சுற்றுஞ்செடி சுற்றோட்டத்தொகுதி
Versatile RotatioIL
Pivot joint Rotiction of crops Peripheral nervous Hystem Poripheral TwiriET T'பயr| Peristinlais Twining plant Circulatory systenti
சு சூல்கொள்ளல் சூல்வித்தகம் சூல்வித்திழை சூல்வித்திலைபிரிந்த சூல்வித்திலைஒட்டிய சூல்வித்தமைப்பு சூல்வித்து
Gestination Placentin Finicle A[பாயITHII EVIELTTI3,
Placotilaitioti
Fil: Ovary Oviduct Ovarian artery Environment
சூலகம்
சூலகக்கான் சூலக நாடி சூழ்நிலை (சூழல்)
செ செங்கட்டிச்சிவப்பு செங்குருதிக்குழியம் செஞ்சூடுள்ள செடி செதில் செதிளென்பு செதிற்குமிழ் செம்மஞ்சள் நிறம் செய்முறைப்பயிற்சி செயற்கையான செயன்முறை (முறை) செல்லோவேன் செல்வாக்கு
13rick-TEil Erythrocyte Eul-Int SLiruul பிபnl Squa nosal Scaly bulb Orange colour Practical exercise Artifical ProceHS Cellophane Influence

Page 166
1718
உயிரினவியல்
செலுத்தப்பட்ட
Transmitted செலுத்தல்
Transmission செலுலோசு
Celluloso செவ்வுதா
Purple செவிநரம்பு
Auclitory 11erve செவிப்பறை
TyInpa.in செவிப்பறைக்குமிழ்முனைப்பு
Tympanic bulla செவிமென்றகடு
Auditory membrano செவியனா
Auditory capsule செறிந்த (செறிவுள்ள)
Concentrated செறிவு
Concentration, Intensity
சே
சேகரிக்குஞ்சிறுகுழாய்
Collecting tubulo சேதனப்பொருள் (டயிர்ப்பொருள்) gெhai III சேதனவுறுப்பமிலம்
Organic acid சேமிப்பிழையம்
Storago tiesue சேமிப்புவேர்
Adventitotis root சேமிப்புறுப்பு
Storage orgian சேய்மையிலுள்ள
11514] சேர்க்கை (சேர்வை)
Composition சேர்க்கையெறிகை
Lietaboliai சொ. சொண்டு
EnE" சோ சோடியம்
Sodium சோடியங்காபனேற்று
Sodium Curbonate சோடியமைதரொட்சைட்டு
Sodium hydroxide சோளே
Lobe சோணை பம்பறைத்து வாரம்
Auriculo-ventricular Lperture சோதனை
Test சோதனைக்குழாய்
Testi tube
தக்கன பிழைத்துவாழ்தல் தக்க தக்கையிழையம் தசை தடுப்பு தடைவலு தண்டு
இபTwiஈl ' unா (fittest, பரl: Corky tissue Muscle Barrier Power of resistance Stem

கலைச்சொற்கள்
319
தண்டுக் கிழங்கு தண் டுமுகிழ் தண் டுமுறையேறி தம்பம் தயவிகள் தயற்றம் (தையற்றம்) தாய் தரிசுகிடக்கவிடல் தரைக்கீழ்முளைத்தல் தரைமேன்முளைத்தல் தலநெஞ்சு
தலைமையான தலையுரு தலையுருமுகப்பு தலையுருவரைமுகப்பு தலையோடு தவாளிப்பு தழும்பு தழையிலை தற்கருக்கட்டல் தற்போசணையுள்ள தன் மகரந்தச் சேர்க்கை தன் மயமாக்கல் தன்னாட்சிநரம்புத்தொகுதி தனக்கண் தனிக்கலமுள்ள தனிக்களைப்பூண்டு
Curm Steini tuber Stem climber SIyl: Ptivalin 1jitபாl
Grindo Fallowing Hypogeial germination 11ரப்பூடய பபTாப்டிtioா 1 பரlinlothாTAX MIhi, Chier Capitulum ப1ritiila1 ILICEt. Turitul:1.1 - 1:11ificat HIE11ll
பாப்பாப் ScLT Folio.gu leaf Self fertilization Autotrophic Self pollination Assimilation AILபLInாபH III Tu8 ETET Sinople eye Unicellular Absolute weed
தா
தாக்கம் தாங்குகுழி தாங்கும் பபாயம் தாங்கும் வேர் தாய்க்கலம் தாய்த் தாவரம் தாலவிருட்சம் தாவரம் தாவர முயறப்போசனோயுள்ள தாவரவியல் தாவரவிராச்சியம்
ALiபாட Sockot Silpporting tissuo Prop Toot MIitler - LEll MIothuா' - Tilatnt Palmi Plant Holophytic Botany Vegetable kingdom

Page 167
120
உயிரின வியல்
தாவரவினம்
Vegetation தாழ்த்து (குறை)
Reduco தாழ்ந்தஉறுப்புக்களால் இயன்ற L11ly - பாரurni= E11 தாழ் நீர்மட்டம்
ILYW - Wate1 121 தாழ்வலு
IL144 power தாழி
Trough தாள்
Stand தானின்
L'alliri
தி
திண்மம் திணிவு திரட்டு திரவம் திரவவிழையம் "திரவியம்
திரளச்செய்சுரப்பி திரள்பழம் திரளல் திராட்சைவெல்லம் திரிச்சின் திருத்தமான திருமுள்ளந்தண்டெலும்பு திருவெலும்பு
Arilil Mass Ganglion Liquid PlinsIma.
Material Coalgulating gland Aggregate fruit Cogulation Grape Sugar Trypsin Correct Sacral vertibra SILCruil
து துடுப்புப்போன்ற துண்டு துண்டுதுண்டாக்கல் துண்டுபடல் துணி (வினை) துணிக்கை
துணை துணைத்தண்டு துணைவேர் துதிக்கை துரம்பின் துரம்பினெதிரி துரம்போகைனேசு துலக்கமான
AliuTAll-liIES Segment Fragmentation Segmentation Determine Particle Secondary Secondary stem Secondary root Proboscis Thrombin Antithrombin TlifornhalaiaHா Bright

கலைச்சொற்கள்
321
தூக்கணவால் தூக்கவெலும்புக்கூடு தாண்டல் (தாண்டி) தூண்டற்பேறு தூண்டு தூண்டுதிருப்பம் தாண்டுமுட்சுரப்பி தாய் தாக்கல் தூரிகை தூரிகைப் பொறிமுறை தெப்புப்புல்வெளி தெளிவான - தெறிக்கப்பட்ட
தே தேனிப்புவடிவம்
தோ தோட்டி தோட்பட்டைமுளை தோட்பட்டையெலும்பு தோல்போன்ற தோல்கம் தோற்பை (சவ்வுப்பை) தோற்பைப்புழு தோற்றம்
Swallா14" - tni1 Appendicular Skeleton Stirunnil13 Response Stumulate Tropis Hormone 1'iiTitul Il Brinli Brush mechanism அப[[IES CIEiLI" Reflected
Napiforin
11h 4 titani 91
Scavenger AUTOnior T!TOLDER Scapula Leathery Cutin Bladder Bladder - worm A]]] ITI12
ந
நகம்
நகர் கொடி நகர்தண்டு நடுக்கோடு நடுநரம்பு நடுநிலையாக்கல் நடுநிலையாக்கு நடுமடிப்புநாடி நடுமூளை நடுவான நத்தார் ஈக்கள் (ஈசல்)
121522
Nenil (Cirteper" Creeping steun MItali111-1iriா MIil - ril, Neutralization Neutralize Mczenteric artery MLit] - braii1 Middle Clhristmus-fliயா

Page 168
132)
உயிரினவியல்
நத்தோல்சேர் அற்ககோல் நரம்பிணைப்பு நரம்பிழையம் நரம்பு நரம்புக்கலம் நரம்புக்கால்வாய் நரம்புத்தொகுதி நரம்புநார் நரம்புமடல் நரம்புமுள் நரம்புவளையம் நரம்புவில் நறுமணம் நன் மண் நன்னீர்
Marihtihol.in.alculikal STILLIEL Nervoils tissue NFT44 IMEIITOா (nHTT் பப்ll)
Neural Catal Nervous system 1NET'ரப் Fibrt Neurilemima
பITul Hitic Nerve ring Neural arch Pleasant smoll Lom Fresh Water
நா
நாக்கு நாக்கீழ்நரம்பு நாக்கிழுமிழ் நீர்ச்சுரப்பி நாகம் நாடா நாடி நாண் நார் நாரிமுள் ளந்தண் டெலும்பு நாரியம் நாருருவேர் நாவுருத்தொண்டை நரம்பு நாளம் நாற்பெருமுடலம் நாற்று (முளை)
Taபரப்பு Hypoglossal nerve Hill - linInal Inal Aiu Ribbon Artery Cord Fibre Lumber vertebra Ischium Fibrous root {/lo15/11/11 பாl 11CIVப்
Vein CorpTi), புundrignin4 Seedling
நிணநீர்க்கலன் நிண நீர்க்கலன்கள்
நிபந்தனை (நிலைமை) நிமிர்ந்ததண்டு நிரம்பனிலை
TLymphlistic VESHா! Lymphatics Condition Erect stem Saturation point

கலைச்சொற்கள்
21
+ நிரம்பற்கரைசல்
திருநாமநாடி நிலக்கீழ்த்தண்டு நிலை நிலைக்குத்தான நிலை நாட்டல் நிலைப்பண்பு நிலைப்பண்புச்சத்தி நிலைபேறுடைய நிலை நிறுத்துதல் நிலையின் றிய (தற்காலிக) நிறப்பொருள் நிறுவல்
Saturated solution Innominate artery Underground stein Etடாப் THrtial
Fixation Potentiaal Kinetic ciorgy Persistent Minintaining Temporarily Piginent Proof
1
நீண்ட மூக்கு நீர்க்குண்டு நீர்ச் சேமிப்புக்கலம் நீர்த் தாம்பு நீர்தாண்டுதிருப்பம் நீர்வளர்ப்புமுறை நீர்வாழ்விலங்கு நீராவி நீராள மான (வழுவழுப்பான) நீரில மிழ்ந்திய தாவரம் நீலச்செவ்வுதா நீள் வளையமையவிழையம்
பாப்பர்: 1ா பயர்:
Snout Puddle
Winter - storage cell Spout
Hydrotropism \Winter - culture Aquatic animal 1Wanter - VL/JII Slimmy Submerged water plant
Bluish purple Medulla oblongata
நு நுகவுருவில் நுகவெலும்பு நுகவென்புமுட்கள துகைவான (தளர்ச்சியான) நுண்கூர் நுண்டுளை நுண்ணரிய நுண் விலங்கு நுணுக்குக்காட்டி நுணுக்குத்தொளை
Zygomatic Arcli Jபரkl Zygunpophysis
LIE Spiculo
Pore Ninute | Microscopio animal
Microscope Micropyle

Page 169
324
உயிரினவியல்
நுணுக்குப்பொருள் நுணுக்குயிர் நுதலாப்பிடையம் நுதலெலும்புகள் நுரையீரல் (சுவாசப்பை) நுரையீரனாடி நுரையீரனாளம் நுனி நுனிவளர்முறை நுனிவளராமுறை
Microscopic body MicroStopic - OrganisIII Orbit - Spheroid TIrontials Lum[3 Pulmonary artery Pulmonary vein 'T'i]]
கோப்In08 (Cy InHEL
நூ
நூற்றுவீதம்
Percentage நெ நெஞ்சறை
Thorax நெஞ்சறை முள்ளந்தண்டெலும்பு'Thorncit: wortclur:1 நெஞ்சுக்கூட்டுக்குழி
Pleural cavity நெஞ்சுக்கூட்டுச்சவ்வு
Pleural membrane நெடுக்கு வெட்டுமுகம்
Longitudinal section நெம்புகோல்
Lever நெம்புகோல் பொறிமுறை
Lever mechanism நெய்ச்சுரப்பி
Sobuceous gland நெருக்கமான அடக்கமான)
Compact நே நேர்
Positive நேர்க்குடல்
Rectul நேர்மாறாக (மீளும்)
IRTETHப்
நை நைத்திரிக்கமிலம்
Nitric acid நைத்திரேற்று
NiLTEnL நைத்திரைற்று
Nitrits நைதரசன்
Nitrogen நைதரசமிலம்
Nitrous acid நொ நொதி
Yenat நொதிச்சத்து
பேAVII நொப்பின் கரைசல்
Krupa Solution
in.டப 11 பi 1

கலைச்சொற்கள்
325
நோ நோக்குதல்
Observation
பக்கமான பக்கவிளைவு பக்க(வேர் பச்சையம் பச்சையமணி பசளையிடல் பசிய இலை பசியதாவரம் பட்டைவாய் படர்கொடி படை பண்படுத்தல் பத்திரக்கலவையிடல் பதாகை (கொடியல்லி) பதார்த்தம் பதியமுறையினம் பெருக்கல் பதியவரும்பு பதிவைத்தல் பந்து தாங்குகுழிமூட்டு பரக்குடை பரப்பு பரபின் பரம்பல் பரவல் பரவைக்கடல் பரிசக்கொம்பு பரிசந் தாண்டுதிருப்பம் பரிசோதனை பரியும் நரம்புத்தொகுதி பரிவட்டவுறை பருகனீர் பருகி (உறிஞ்சும்வேர்) பரும்படியாகச் செய்தல் பருமன் 'பருவக்காற்றுவலயம்
Lateral By-product Lateral root Chlorophyll பIhloானplast Manuring Green leaf Green plant Lenticel "Iraniliபா -plant Layer Tilling Mulching Vexillum Substance Vegestativo reproduction Vegetative bud Liyering Ball & socket joint Parachute Area Paraflin Tistribution, Tig[UTEnl
Diffusion Shallow Scal Tentacle
Haptotropism Experiment Sympathetic nervous system Pericycle Hygroscopic water Haustorium Manufacturing Size
Monsoon belt

Page 170
32)
உயிரின வியல்
பல்கலமுள்ள பல்கூற்றுப்பிளப்பு பல்லமையெலும்பு பல்லாண்டின பல்லாண்டுக்களை பல்லாண்டுவாழுமியல்பு பல்லினப்புணரி பல்லினவிடைவெளி பல்லுருமுளை பல்லுள்ள பலசக்கரைட்டு பலம் பலசூல்வித்திலையுள்ள பலோப்பியோக்குழாய் பவுமனின் உறை பழச்சுவர் பழம் பழுவிடைத்தசை பழுவிடைநாடி பளிங்கு பளிங்குருவற்ற பளிங்குருவுள்ள பற்றி பற்றிமுறையேறி பற்றீரியா பற்றுதிறன் பற்றை பன்னிறமுள்ள
Multicellular Multiplo fission Dentary Perennials Perennial wecd Perennation Heterogamete Diilstein Odontoid process Dentate Polysaccharide Strength Polycarpellary Fallopian tubo Bowman's capsule Fruit will Fruit Intercostal muscle Intercostal artery Crystal Norl-UryHLallirn
Crystallino Tendril Tendril climber Bacteria Retenteivity Bush Variegated
பா
பாகு (கூழ்) பாதரட்சை (காலணி) பாதிக்கப்படாமை பாதுகாப்பிழையம் பாதுகாப்பு பாமெல்லாநிலை பாய்பொருள் (பாயம்) பார்வைக்குழி பார்வைக்கோப்பு
Jelly
Toot-IWCur Immunity
Protective tissue Protection Palniella stage Fluid Opticocl Optie chiasme

கலைச் சொற்கள்
32T
பptic Teryட Ligit THETrt.
Sexual maturity 1LALய Sexual orgILII
பார்வை நரம்பு பாரமில்லாத பாலை (நிலம்) பால்முதிர்வு பாற்குழாய் பாற்குறி
பி பிசிர்கள் பிணையன் மூட்டு பித்தம் பித்தக்கான் பித்தப்பை பித்தத்தாப்பொருள் பிதுக்கமான (எடுப்பான) பிரதேசம் பிரதியீடு பிரன்னரின் சுரப்பி பிரிகை (பிரிக்கை) பிரிவு பிரித்தறியக்கூடிய பிரிந்தழிதல் பிள்ளை யீனுந்தன்மை பிளப்பு பிளவு பிற்சொண்டு பிற்சொண்டுப்பரிசம் பிற்பக்கக்குழிநாள ம் பிறபொருள் பிறபொருளெதிரி பிறபோசணையுள்ள பின் மூளை பின்னவயவம் பின்னுகவென்புமுளை
பி பீலிங்கின் கரைசல்
Cilin Hinge joint Bile IBillunt (ப11-bladiler
Pituitary body Prominent Region Substitution
Brunners gland Decomposition Division Distinct Distintegration Vivirயாity Fission Fissure Labium Labial pulp Posterior venn av Foreign body Arnti - bruly Heterotrophic TIinl - lyruir பint] - IIinb Postzygapophysis
# Fehling's solution
புகைக்கரி புடகம்
Hul. Vesicle

Page 171
528
உயிரினவியல்
புல்லி
புடைத்தண்டு
Tertiary stem புடைதாங்கி
Ilium புடைதாங்கி நாடி
Iliac artery புடை தாங்கிநாரி நாடி
Ilio-lum bar artery புடைதாங்கிநாளம்
Iliac voin புணாரிக்கலாம்,
Zygote புணர்ச்சி
Copulation புணர்ச்சிநுண்கூர்
Copilatory spicule புணர்ச்சிப்பை
Copulatory bursa "புணரி
Gamete புணரிமுதல்
Progamate புணரிமுதலகம்
Progametangium புணரிவித்தி
AyLOSpore புயவெலும்பு
Hurnerius புரத்துரம்பின் (துரம்பின்முதல்) Pruthronbir புரதம்
Protein புரதமணி
Protein grain புறாவாற்பொருத்து
100We-tamil joint.
Sepal புல்லிப்போலி
Sepaloid புல்லிபிரிந்த
aெmOSGpalous புல்லியிணை ந்த
Polysepulous புல்லின ங்கள்
பிrnSHES புல்லிவட்டம்
பக1yX புலணுறுப்பு
Sense organ பு புவிதாண்டு திருப்பம்
Geotropism புவிமத்தியகோடு
Equator புவியீர்ப்பு
Gravity புற்குடும்பம்
Grass family புறக்கலவுரு
Ectoplasm புறத்தோல்
Cuticle புறப்பக்கநடுக்கோடு
Turad - IncliaII புறப்பக்கநடுவான
Mid - lorSnl புறப்பக்கப்பிளவு
Dorsal fissure புறப்பக்கப்பெரு நாடி
Dorsal aorta புறப்பக்கமான
Dorsul புறப்பக்கவேர்
Dorsal root புறமுகச்சவ்வூடுபரவல்
EXOSLIosis

கலைச்சொற்கள்
320
புறமுத லுருப்படை புற வகப்பக்கமான புறனானட புன்னிலம் புன லுரு
Ectoderin
பTE) - ஈOutrinl Exception LL WII Infumulibulum
பூ பூ
144 Er' பூக்கள்
Gills பூச்சட்டி
11 AVOT = 10t பூச்சி
11140 | பூசணவலை
Myceliuun பூசண வலைமுதல்
Promycelium பூசணவிழை
Hypha பூஞ்சணம்
Mould பூண்டு
Herb பூண்டுத்தாவரம்
Herbaceous plan பூந்தண்டு
Pedicel பூந்துணர்
Inflorescence பூந்துணர்த்தண்டு
Pudu11:l; பூப்பிளவு
(Gill - alit பூப்பெலும்பு
Pubes பூவடிச்சிற்றிலை
Bractcolo பூ.வடியிலை
Bract பூ வரும்பு
Floral bud பூவறை (பூ)
Branchial chamber பூவிலைகள்
Floral leaves பூவுறை
Perianth பெ பெச்சின்
Pepsin பெண் உறுப்பு
Ferinale organ பெண் ணகம்
(Cynoபாப்பம் பெண்புணரி
Female gamete பெண்பூ
Female flower பெருங்குடல்
Large intestine பெருங்குடையம்
Foramen magnum பெருந்தடுப்புக்கற்பார்த் தொடர் TIhe (Iront, barrier Tecf பெருநாடி
4பrt:41 *பெருநாடிவில்
Aortie Arcli

Page 172
33)
உயிரினவியல்
பெற்றோலியம்
Petroleum பென்சிற்கரி
Graphite பே பேதம்
Variety பேரியமைதரொட்சைட்டு
Barium hydroxide
சபை பைபிரின்
Fibrin பைபிரினக்கி
Fibrinogen பைவாற்பருவப்புழு
Cysticercus பைரகவல்
Pyrogallol பொ பொசுபேற்று
Phosphate , பொசுபோரிக்கமிலம்
Phosphoric acid பொது (தனி, எளிய)
Siniple பொது அறை
Common chamber பொதுவான
NoIImal பொருத்தில் கால்
Prolog பொற்புழு
Chrysalis பொற்றாசியம்பொசுபேற்று
Potassium phosphate பெற்றாசியம்நைத்திரேற்று
Potassium nitrate பொற்றாசியமைதரொட்சைட்டு Totassiun liydroxide பொறிமுறை
Mochanisti போ போசணை
Nutrition போட்டி
Competition போமலின்
Formalin போலிக்கால்கள்
Pseudopodia போலிப்பழம்
Paeudocarp போரன்
ByToti
பௌ பெளதிக
Physical
ம மகட்கலாம்
Daughter cell மகட்கரு
Daughter nucleus மகரந்தக்குழாய்
Pollen tube

கலைச்சொற்கள்
/31
மகரந்தக்கூடு மகரந்தத்தாரிகை மகரந்தம் மகரந்தமணி மகள் அமீபா மகனீசியம் மகனீசியம்சல் பேற்று மஞ்சட்கரு மஞ்சட்கருவாக்கிக்கான் மஞ்சட்கருவாக்கிச் சுரப்பி மஞ்சட்கருவாக்கிமென் றகடு மஞ்சட்காய்ச்சல் மட்காற்று மட்டம் மட்டுணிக்கை மடல் (உறை) மடிகள் (மூடிகள்) மடிப்பு மண்டலம் மண்டையோடு மண்டையோட்டுநரம்பு மண்ணியற்காரணி மண்ணீர் மண்ணீரலுடி மண நுகர்ச்சிச்சோனையா மண நுகர்ச்சிநரம்பு மணை நுகர்ச்சியுறை மணல் மணக்கட்டு மணிக்கட்டெலும்பு மணிச்சாடி மத்தித்தரைவலயம் மதுசாரம் மயிர் மயிர்கொட்டி மயிர்ச்சிப்பி மயிர்த்துளை நீர் மயிர்த்துளைத்தன்மை மயிர்ப்புடைப்பு
Autllur Pollen brush Pollen Pollen grain IDaughter amoebut Magnesiuin Magnesium sliulphate THII; Witelliri luct. Vitellius gland \'iticlitiா பப்mthiran Yellow fever Soil air Level Soil perticle Sheath Flaps Convolution /riட Cruniuiti Cranial nerve Edaphic factor Soil water Spelenic artery Olfactory lobo Olfactory nerve Olfactory capsule Sand
Wrist Carpal tionc
Bell -jir Mediteranean belt Spirit Hair Caterpillar Hair papilla Capillary water Capillarity Hair follicle

Page 173
132
உயிரினாவியல்
மயிர்முள் மரக்கரி மரக்கூழ் மரத்தூசு மரம் மரப்பால் மரமயவேறி மரவுரி மல்பீசியின் சிறு துணரிக்கை மல்பீசியின்படை
மதிப்டான் மலேரியா மனக்கிளர்ச்சி மனத்தடை
|ங்க ,
Bristlo Charcoal 4Tool - pulp SaW - (lust, Trec Latex LiaILA Bark Malpighian corpuscle Stratum Malpighi Sterile
Malarita. Excitation Inhibition
H: 1
மா
Iமாசு மாட்டேற்று மாதிரி மாப்பசைவெல்லம் 1மாப்பொருள்
மார்புப்பட்டை மார்புவயிற்றிடைமென்றகடு மார்புவளையம் மாரிநெடுந்தூாக்கநிலை மாற்று மாறிலி மாறிழையம் மாறின்றி
மி
Impurity
Reference Sample, specimen
Maltose Starch Sternum (breast bone) Diaphragm Pectorul girdle Hibernation Exchange Constant Caimbium Constantly
மிண்டிவேர்
Stilt.TInt: மிதக்கும்விலாவெலும்பு
Floating rib மில்லனின் சோதனைப்பொருள் MillunIE reagerit;
ம்
மீதிக்காற்று (மீதிவளி) மீள்சத்தியுள்ள மீன் நீர்த்தொட்டி
Residual air Elastic Fish tank

கலைச்சொற்கள்
3:33
முள்
மு முக்கியமான
Important முக்கூர்வாயில்
Tricuspid valve (முகநரம்பு
Faciul iervo முகப்பு
1' t; முகவை
Benker முகிழ்
Tuber முகிழுருவேர்
Tuberous root
Thorn முட்டை
பபா முட்டைக்கலம்
1பா- Lபll முட்டையுருவுள்ள
11yill (முடிபுரு
Operculum முடிவுவிளைவுகள்
1Lit] - [ITirlict3 முண்ணண்
Spinal cord முதல் (உற்பத்தி)
Source முதலச்சு
Primury axis முதலுரு
Protoplasm முதலுருத்திணிவு
Protoplasmic mass முதற்றண் டு
Primury stem முதிர்வு
Maturity முதுகெலும்பு
Baclk-liurIE முப்பெருநரம்பு
Trigeminal nerve முலையூட்டி
Maintal முழு உருமாற்றம்
Camplete Inetamorphosis முழு ஏறி
Total climber" முழுவளர்ச்சிநிலை
Adult stage முழுவொட்டுண்ணி
Total pirataito முள்ளந்தண்டு (முதுகெலும்பு) Verticlur:11 aluinT1 முள்ளந்தண்டுத்துணை நரம்பு
Sirul !ICLESSory-tier முள்ளந்தண்டுநரம்பு
Spinal nervo முள்ளந்தண்டுவிலங்கு
Vertebrate முள்ளிப்புனல்
TIristle-furITigl முள்ளெலும்பு
Vertebral. முள்ளெலும்புநாடிக்கால்வாய்
Vertebrarterial Canal முளை
Process முளைத்தண்டு
Plutlule முளைத்தண்டுக்கவசம்
Coleoptile முளைத்தல்
Germination

Page 174
134
உயிரினவியல்
முளை வேர் முளை வேர்க்கவசம் முற்பக்கக்குழிநாளம் முற்பக்கமான முருகைப்பார்த்தொடர் முன் கை (முகன் காய்கை, முற்புயம்) முன் சிறுகுடல் முன் மூளை முன்னவயவம் முன்னிற்குங்சுரப்பி முன் னுகவென்புமுனை முனே முனைக்கிளை முனைப்பகுதி முனா யரும்பு
முனைவு
Rudicle Coleorhiza
IntErior Heria LAT Anterior Coral reef ForearIII Duodenum பTU-lirnin பாப் - litrili Prostate gland I'FOF Vாய பாliyais
HITIl Terminal brauch Terminal part Terminal bud Polo
மு
Lாக்கறை
மூக்குக்குழி மூக்குறை மூக்கெலும்புகள் மூச்சுக்குழல்வாய்
மூச்சுக்குழல்வாய் மூடி மூச்சுக்குழற்றொடுவை மூச்சுவேர் (சுவாசிக்கும் வேர்) மூட்டு மூட்டுக்குமிழி மூட்டுச்சில் (முழங்காற்சில்லு) "மூட்டுரை) மூட்டுறைப்பாயம் மூரி (கங்கு, பீடம்) மூலம் மூலக்கூறு மூலகம் மூலவுரு மூலவுருநிலை மூவுருவுள்ள மூளி
Naval chamber Rhinocoel NILSul capsule Ma5als, 13lotti: டபாழப்tutis Tr:clic: (wirel - pipe) Pneumantapliore Articulation Condyie Tintellu (kut - Cari) Synovial Cupstule Synovial fluid Ridge Trunk
Molecule Clement Embryo Embryonic stage Trimorphic Cerebellum

கலைச்சொற்கள்
335
மூளை
Brinin மூளைச்சருமம் மெகள் நாட்டுப் போர் :11ய Iriபதாக மூளை யம்
1பாlriயாட மூளை யவரைக்கோளம்
Cerebral hemisphere மூளையறை
Ventricle of brain மெ மெய்ப்பழம்
Trno fruit மெல்லியகரைசல்
Waile solution மெல் 5 தல்
Clhewing மெழுகுக்கவசம்
WILxy covering மென் றகடு (சவ்வு)
Membrane மென்றாயி
Pia Imuter மே மேடை
Platform மேய்ச்சனிலம்
Pasture மேல் வளர்சதை
Carluncle மேல்வளரி
AIll மேலணி
Epitheliu III மேலென்புமுளே
Epiphysis மேலொட்டித்தாவரம்
பபiptito மேலொட்டி வேர்
Epiphytic root மேற்குழிநாளம்
Superior veliL CLva மேற்பக்கமேற்றோல்
Upper epidermis மேற்பரப்பு
பிபா':11:2 மேற்பட்டை
Lurli1% - மேற்பிடரெலும்பு
Bujira - [ccivitial bolid மேற்புரம்
Upper urini மேற்ருடை
1 pper jLW மேற்றோல்
Epidermis மொ மொத்தையான
Stபாl மொலித்தனம்
Molybdenum மோ மோற்றேசு
Malt:HHIII ய மைக்கிரன்
1Lior311 பிணமயக்கால்வாய்
Centrul canal

Page 175
336
உயிரினவியல்
மையம் மையமான மையநரம்புத்தொகுதி மையவிழையக்கதிர் மையவிழையம்
arilTITI, critrப் Central Central nervous system
Medullary ray Medulla
யா'
யானைக்கானோய்
Elephantiasis
11 - Sliapd
"யூ" உருவுள்ள
யோ யோனி யோனிமடல்
Pistil Vagina
புெ
வகை வகையீடு வட்டத்தட்டு வட்டத்தட்டுச்சிறுபூ வட்டவுருக்குடம்பி வடிகலன் வண்ணாத்திப்பூச்சியுருவுள் ள வயிற்றறை (வயிறு) வரையறையான வரையறையில்லாத
வ ழி வலைவேலே வழுக்கி வழுக்கு மூட்டு வளர்ச்சி வளர்ச்சியடையாஉறுப்பு வளர்ப்புக்கரைசல் வளர்ப்புப்பண்ணை வளி வளிக்குமிழி வளித்து வாரம் வளிப்பை (காற்றுப்பை) வளிமண்டலம்
Kind Differentiation TiHப் Tis! - IIorEt Rhabditiform larva 12tti
Papilionaceous Abdolon 11cfinil: Indefinite
Power Network Slido Gliding joint Growth Rudimentary organ Culture solution NurEET
Air Air - bubbl Air - Ihal Airt - காப் Atmosphere

337
கலைச்சொற்கள் வளியிழுகுடுவை
Aspirator * வளையம்
I.ப வற்றுப்பெருக்குமண்டலம்
Tidal zone வறணிலவளரி (வறாலத்தாவரம்)
Xerophyte வன்மையான
Hard வன்றாயி
Duri Litter வா வாடுதல்
Wilting வாய்க்கால் (மூளை)
Tter (Liruiri) வாய்க்குழி
Buccal cavity வாயில்
Winlvப் வாயிற்றொகுதி
Portal Hystem வாயினுளம்
Portal vein வாயுக்குமிழி
Gus bubble வாயுமாற்று
Exchange of gubes வாலுக்குரிய
Caudal வாழ்க்கைநலனுக்குரிய
Sanitary வாழ்க்கைப்போர்
Struggle for existence வாழ்க்கைவட்டம்
Lificycle வாழ்க்கைவரலாறு
Life-history வாழிடமாறல்
Migration வான்முள்ளந்தண்டெலும்பு
Candal vertebra வானிலையாலழிதல்
Weathering வானடி
Caudal artery வானளம்
Caudal vein
வி
விகிதசமம் விகிதம் விசிறுதல் விசை விஞ்ஞானம் வித்தகவிழையம் வித்தகவிழையமில்லாத வித்தி வித்தியகம் வித்திலை வித்திலைக்கீழ்த்தண்டு வித்திலைமேற்றண்டு வித்துத்தழும்பு 215 -23
Proportion Ratio Humnitiா Force Science Endosperm Not - cnd03UCாயட Spore Sporangium Cotyledon Hypot.l Epicotyle Hilum

Page 176
333
உயிரினவியல் வித்துருமணி
Pyrenoid வித்துறை
Sel - (பார் விதை
Testis விதைப்பை
3:Tutill=8:10 விதைமேற்றிணிவு
Epididymia விதைமேற்றிணிவுடல்
Corpus epididymis விதைமேற்றிணிவுத்தலை
Caput epididymis விதைமேற்றிணிவுவால்
Cauda epididymis விதைவெளியுறை
Testa விதையுள்ளுறை
Tegmeli விந்து
Sperim. விந் துக்குரிய
Sperinatio விந்து நாளம்
Sperimentic vein வியர்
SHWHALt வியர்க்கான்
Sweat duct வியர்ச்சுரப்பி
Swant gland -விரல்
Digit விரலெலும்பு
Phalange விரிவு
Ex[nnzioா! விருத்தி
Development விருத்தியுடன் மூட்டு
Proglottis விருத்தி முறையான
('TOIFSSivபு விருந்துவழங்கி
Host வில்மச்சு
Donie வில்லையம் (பழம்)
Capsulo விலங்கியல்
Zoology விலங்கு
Animal விலங்குநாட்டமுள்ள
Zoophilo19 விலங்குமுறைப் போசனேயுள்ள
Holozoic விலாவெலும்பு
Iil விவரணம்
Description விளிம்பு (ஓரம்)
Edழா விளியியக்க நரம்பு
Occulotlotor nerve விளைவு
Products விளைவுகாட்டி
Effector "வினைத்திறன்
EIIIபப்பரld
ன்
வீக்கம் வீக்கநிலை (வீங்குகை) வீதம்
Turgor Turgidity
Rato

330
Cutting
கலைச்சொற்கள் வெ வெட்டுத்துண்டம் வெட்டும்பல்
Incisor வெட்டுமுகம்
Section வெடிபழம்
Dehiscent fruit, வெடியாப்பழம்
Indehiscent fruit வெண்கரு (வெண்ணிழையம்)
Albuinen வெண்குருதிக்குழியம்
1.11ILப்புytம் வெண்சடப்பொருள்
White matter வெண்ணிறவெல்லம்
White sugar வெண்ணிழையமில்லாத
11A111111111பIH வெண்ணிழையமுள்ள
Albuminious வெப்பக்குடுவை
Therinos flask வெப்பவலயம்
'T'oril Honா வெப்பவீரக்காடு
IIont-wet firgt வெல்லக்கரைசல்
Sugar Bolution வெல்லம்
3பட்டி! வெளிக்களியம்
ILyrical) வெளிக்கழுத்துநாடி
External jugular vein வெளிக்காவுகின்ற
Efferent வெளிக்காவுநரம்புமுளே
AXOII வெளிச்சுவாசம்
Expiration வெளிப்பக்கமான
10xterior" வெளிப்புற
ExtETTIா) வெளிப்புக்கள்
External gills வெளிப்பிடரெலும்புகள்
11x - பாடipitals வெளிமுளை
Out growth வெளிமூக்குத் துவாரம்
External nara வெளியுருவப்படம்
Slketch வெளியெறிகான்
Eljaculatory duct வெளியெறிகை
Katabolism வெளி யொட்டுண்ணி
Ectopisite வெளிவன்கூடு
Exoskeleton வெளிவித்தியம்
I:1xSpird வெளிறிய
Chlorotic வெளுத்தல்
Etiolution வே (வேத்தறை
Royal cell வேர்ச்சிறுகணு
THut-IIபரிulg வேர்த்தண்டுக்கிழங்கு
Rhizome வேர்த்தொகுதி
Root Mysteinn வேரமுக்கம்
pேut - DTH Sur'ப வேகுறிஞ்சி
1ul - HRICIET வேறுபடுத்தப்பட்ட
Modified
மகிந்தப்பாப்ய :

Page 177
34)
உயிரினவியல்
இந்த நூலில் எடுத்தாளப்பட்ட உயிரினங்களின் பெயர்கள்
அ
அகத்தி
Sesbania grandiflora அட்டை
Leech அடம்பு
Ipoாபப்படி [CH - பspTaப் அந்திமல்லிகை
Mirablis jalapa அந்து (விட்டில்)
Motih அப்பிள்
Prunus malus அம்மான்பச்சரிசி (பால்முடங்கி) Engphorbia thirt அமீபா (புரத்தியசு)
Amoeba proteus அலமாண்டா
Allamanda அவரை
Talith08 (llam) அழகு
Cynodon Dactylon அன்னமுண் டுணு
Ar11:4 நIA TI14:4 அன்னாசி
ATI/unmLE H11tiVIE அனோவிலிசு
AriorphiclEE ஆ ஆகாசத்தாமரை
Pixt=11. ஆச்சா
Oroxylum ஆடுதின்னப்பாலை
Aristolultie bra: Da ta"
Nymphaea nouchali ஆமணக்கு
Recibus coIITIunie (castor) ஆலமரம்
Ficus benghalensis (banyan treo) ஆளிகள் (மட்டிகள்)
()vatET: ஆனைக்கானேய்ப்புழு
Filaria Banerofti
ஆம்பல்
இக்கிரி இஞ்சி
இந்திரபுட்பம் (நீலவல்லி) இயசியா இயூக்கிளே ன இரப்பர் இராவணன் மீசை இராவில்சியா (சர்ப்பகந்தி) இலில்லி இலெமினா இவண் சிப்பிகள் இறம்புட்டான் - இறால்
Barleria mysorensis Zingiber officinale (ginger) Thunbergia grandiflora THAH1:44 Euglena Hevea braziliensis SittifEx littor 13 Rafflesia arnoldi Lillium Lபlmir14 Limpets Nephrlium linP[1aceurய TruLHII

கலைச்சொற்கள்
141
HT ஈரப்பலா || ஈரற்றட்டையன்
Artocarpus incisa Liver fluke
உடலே உதயகீர்த்தி உருண்டைப்புழு உருளைக் கிழங்கு உரோசு உழுந்து
Cerberi ordollum 1011021 IIIrii (பபாப்பா பாப்பா)
Ascaris lumbricoides Solnr11iril ubா]AuTI (plot:110)
HேIL (r(140) Phaseolus mungo
எ
எசொற்றேபற்றர் எண்ணெய்மரம் எருக்கு எலி எலுமிச்சை எள்ளு
Azotobacter Dipterocarpus zeylanica Caltropis gigantea RattuE (rat) Citrus acida Sesamum indicum
ஏப்பிட்டுகள்
Aphides
ஐ திரில்லா
Hydrilla
ஒட்டுத்துத்தி ஒட்டொட்டி
Triumphetta IL0g - Ta84
ஓக்கிட்டு
Orchid
க
கடதாசிப்பூச்செடி கடல் அனிமனி கடல் நட்சத்திரம் கடல்முள்ளெலி (கடலப் பம்) கடலை கடற்பஞ்சு கடன்மெல் லுடலிகள் கடுகு கண்டல் கண்ணா கத்தசு
215-24
Botigninvilen Sea - Anemone HIAT - fi:ll அபய - பா liட Cicer arietinum Spயாழும் Sen - slug4 Brassiபய juild1 (ininstall) Rhizophora Avicutinis officinalis Cactus

Page 178
31!
உயிரினவியல்
|
Solanum melongena (brinjal) Slhi barrincs (lcpா3) T111 Is Caratய (LIMITrut) Agave americani Typhonium trilobatum
Euscle Saccharum officinarum Enphorbia iTutiquorum Euphorbiaceae Aloe
கத்தரி கப்பற்சிப்பிகள் கரற்று கருக்குக்கற்றாளை கருங்கருணை கருநீலச்சிப்பிகள் கரும்பு கள்ளி (சதுரக்கள்ளி) கள்ளிக்குடும்பம் கற்றாளை
கா காசித்தும்பை காட்ட வரி காட்டுமுயல் காந்தள் (கார்த்திகைப்பூ) கானா வாழை (எருமை நாக்கி)
தி கியூலெட்சு கிலுகிலுப்பை கிளமிடோமான சு கிளாடியோலசு கிளுவை
Balsam impatieIB Nerium oleucider FIALTJ Gloriosa superba Commelinin benghalensis
Culex Crotolaria CIhl:Iriyluthidas Glavliolus Balsamotlendrum
AinarmintliLE13 Phyllanthus niruri
கீரைக்குடும்பம் கீழ்க்காய் நெல்லி
கு குப்பைமேனி குருவிச்சை குரோட்டன் குளத்திரிடியம் குளவாழை' குறிஞ்சா குன்றி (மணி)
கெ செக்கரி கெண்டித்தா வரம்
கொ கொடி மல்லிகை கொத்தான் கொய்யா
Acalypha indica Loranthux Talcutus CodinCUIU variegatum ClostridiuIL
Eichhornia. Dregia volublis Abrus precatorius
Cucumis melo Nepenthes
Jasminum sem buc - 144 tliா
Psili 111 ப III1 114 (101)

கலைச்சொற்கள்
Coccinia cordifolia
343
கொண்வை
கோ கோதுமை கோபிப்பா
Triticum vulgal'e (wlicat) Cyporus rotundus
ச
சட்டிக்கருணை சரணால் சதைகரைச்சான் சந்தனமரம் சல்வியா (இருடி) சல்வீனியா சவ்வரிசிப்பனை சவ்வுப்பையுருப்பூண்டு சவுக்குமரம்
சா சாத்தாவாரி சாதிக்காய்
Amorphophallus Crotolarit junceit Bryophyllum pinnatum Santaluni album Salvin (Sபழe) Silviniai Metroxylon HIGIE (rlicularia (BludilerWorl.]
Chisuarina Equestifolia
AEDITா 13 1:11 பயI11]SL13 Myristica fragrans
சி
சிங்க இறால்
Lobster சிவப்புஎறும்பு
1121 - 11:IIt சிறுபீளை (தேங்காய்ப்பூக்கீரை) AGr'11 11 linat;1
சிதப்பூஞ்சணம் 'சீதேவியார் செங்கழுநீர் சீந்தில் சீமைக்கிளுவை சீனிவற்றாளை
Mucor Icedo \'பார்ம் பiriLII Tiriospora cordifolian Gliricidia "பலாப்பil Intati1S (3 N Octi-putinto)
சூ
Helianthus III13
Hibiscus rosisinglisis
சூரியகாந்தி
செ செவ்வரத்தை
சே (சேம்பு
சொ சொறிமுட்டை
சோ சோளம்
Colocasin
Jelly-fish
Zea mays
தக்காளி
Lycopersicuit esculentum

Page 179
உயிரினவியல்
(TEntur பய 11|1t-WOrII Gyrocarpus jacquini Gynandropsis pentaphylla 1யf11 GHCalent4 (froா)
Pandanus odoratissimus (screw-pine) Nalurnbi11111 (lat.LLE )
Tritபாப்ய Drymoglossum
344
தச்சத்தேனீ தட்டைப்புழு தணாக்கு தயிர்வேளை தவளை
தா தாழை தாமரை
தி தி ரிற் றோனியா திறைமோ குளசம்
புது தும்பி துரோபெரி
தா தூத்துமக்கொத்தான் தூதுவளை
தெ தென்னை
தே தேமா (அலரி) தேனிப்பு
தொ தொட்டாற்சுருங்கி
தோ தோடை
Traபூப11-1ly Fragariz. (strawbory)
Cuscuta chinesis Solanum trilobatum
Cocus 11ucifera (coconut)
Plunicria (termile-tree) Brassica campestris (turnip)
MimoSEL pudica
Citorius sincisis (orange)
ந
Crab Snail
Dracunculus medinensis Scilla
நண்டு நத்தை நரம்புச்சிலந்திப்புழு நரிவெங்காயம்
நா நாகதாளி நாடாவுருப்புழு நாயுண்ணி நாயுருவி
(puritii11 (lilleni (Prickly-pear) Tuti Blinா (tape worm) Lantana mixta Achranthes indica
பி
நிசிராணி
Qெueen-of-the-night (cestran)

கலைச்சொற்கள்
345
நீர்ச்சிலந்தி நீர்த்தெள் ளு நீர் நாய் நீர்மூட்டை நீர்வண்டு நீரிலலையுமுயிர் (பிளாந்தன்) நர்ப்பாசி (பைரோ கைரா)
WWintET-grlitle" 4Viutur=tlபம் Tu1 4III
MWalkir.bபர் WWintu-lbuttly Plunkton Sர்பழyriL
நு
நுளம்பு
Mosquito
நெ
Tribulus terrestris drizா Sativ:4 (parldy)
Nitrifying bacteria Nitrosomanus Nitrobactor
நெருஞ்சி நெல்
நை நைத்திரேற்ருக்கும் பற்றீரியா நைதரோசோமனசு நைதரோபற்றர்
ப பட்டிப்பூ பப்பாசி பயறு பரமேசியம் பருத்தி பலா பற்றீரியம் மைக்கோ யிடிசு பன்னம் பனே பனையேறி (மீன்)
TITLLAH IIYAH பயrit41, 11:4[Iya (pa[LW) Phaseolus radiatus (green gram) Parameciuri GazViபா lierbuciu11 (totton) ArtபாlT]]ப்5 IntETா Ructerium Imycoides Fern Bul:185LIs IIllullifer பlimbing-யாull
பா
பாக்கிஞ் சோனியா பாகல் பாறைச்சிப்பிகள் பாறைமீன் கள்
Parkinsonin alculenta Miniordicin churantia Rotulk burniuleH (lepH3) Thuli-TialiEHA
பிரம்பு -
Cala M118 Tatang
பி
பீர்க்கு
பீற்றுக்கிழங்கு
LII Beta vulgaris (beetroot)

Page 180
32]
உயிரினவியல்
"='!
பு
புலிநகம் புளியாரை புன்னை
Martynia diandra Oxalis Corniculata Calophyllum inlophyllum
பூ
பூசினி
Ciruita Ii:13IIIEL பூவரசு
Thespesia populnea பெ பெருச்சாளி
BTdit பெருமருந்துக்கொடி (ஈசுரமூலி) Aristolochin, indicu
பே
Citrullus Colocynthes Phoenix dactylifera Pyrus Cornrniunnis ([Neur)
பேய்க்கொம்மட்டி பேரிந்து பேரை
பொ பொப்பிச்செடி. பொன்னொச்சி
போ போஞ்சி போதசு
Papaver somniferum Tecolma stans
Phaseolus vulgaris (french bean) Potlhos
ம
மகோகனி மங்குத்தான் மஞ்சள் மஞ்சாடி மணிவாழை மந்தாரவல்லி மயிர்மாணிக்கம் மயிற்கொன்றை மரமுந்திரிகை மரவள்ளி (மருது மலையாமணக்கு மலேரியா ஒட்டுண்ணி
Swietenia Imahogani
Garcinia mongostula (Inongoosteen}} Curcumi, doimustica AderneLinthera pavonia Chinnas Baubnin vahili Iபாபe: புமாInotlit
Cilesillpinia pulcherrima AnaCILrdium Occidentale
Manihoti ultissima (mattioc) Terminalia glabrat Jatropha indica Plasmodium vivax
மா
மா. மாதவிக்கொடி குருக்கத்தி) மாதுளை
Mangifcra iridic:au (maபழo)
Hiptare IIIdan blota Punica granatum

கலைச்சொற்கள்
31T
மி
மிளகாய்ச் செடி
மிளகு
(ர>Riாயா (cliilly plunt ) T'iper rigiா (/01/1யா)
மு
RivCIL Orniti R:1li11il. Moringa oleiferIL Erythrinus indican Raphanus sativus (radish)
Boerhaavin diffus Tridax procumbens
முசுட்டை முயல் முருங்கை முள்முருக்கு முள்ளங்கி
மூ மூக்கறைச்சி மூக்குத்திப்பூண்டு
வ வசியசு இராட்சிக்கோலா வண்ணாத்திப்பூச்சி வல்லாரை வள்ளி
வா வாதுமை வாழை வாற்பேய்
வி விராலி
வி வீச்சில்
வெ
Bacillus radicicolas Butterfly Centella asiatica TiOS-]ாப்பு
Prun118 பயygilalus (nilmond)
MISL Tadpolo
Dodonaean
CTIV - fiali
AIliயா பாரா. Ruellia prostrata Hibiscus esculentis (lady's finger) Allium sativum (garlie) Tiரயா Letle (luetal)
வெங்காயம் வெடி.பலவன் வெண்டி வெள்ளைப்பூடு வெற்றிலை
வே வேங்கை வேம்பு வேலம்பாசிச் செடி வேலிப்பருத்தி
--' வை வைற்றிசு
Tteri IITI 1119 11:11'HIiiii1 Azardirızlıtı indica Vulistlerin spiralis Dacnis externs
Vitis

Page 181
318
உயிரினவியல்
ப]
22
சுட்டுமுதற்குறிப்பகராதி அகஞ்சுரக்குஞ்சுரப்பிகள் 100
ஆணிவேர்களின்வகைகள் 27 அகத்தோல்
205
ஆணிவேர்த்தொகுதி அகப்பக்கப்பிளவு
20]
ஆமணக்கம்வித்து அகப்பக்கவேர்
21)
முளைத்தல் 07 அங்குரத்தொகுதி
2)
ஆரை
22) அச்செலும்புக்கூடு
218
ஆவியுயிர்ப்பிழுவை 54, 54 அட்டை
24ா
ஆவியுயிர்ப்பு
57 அடியிழையம்
207
ஆவியுயிர்ப்புவீதம்
50. நர் அதிர்ந்து வெடிக்கும் பொறி
ஆவியுயிர்ப்போட்டம் முறை) 90
ஆளிகள்
271 அப்பாற்செலுத்தி
131, 278 அமினோவமிலம்
18]
இச்சையில்வில்
215, 216 அமீபா
, 24;
இச்சையின்றி அமுதச்சுரப்பி
எ4
| யியங்கு செயல் 215 அயன் மகரந்தச்
இச்சைவழியியங்கு செயல் 215 (சேர்க்கை ரப், 72, 73,
இடமாறிப்பிறந்தவேர்த் அயனவலயப் புல்வெளி |
288
தொகுதி அரந்தி
22)
இடுப்புவளேயம்
218 அரும்பொட்டுதல்
117
இடையிட்ட நரம்புக்கலம்
21ா அல்லிப்போலி
5ே
இடைவிருந்துவழங் கி அல்லிவட்டம்
135
இடைவெப்பக்கால நிலை
200 அவயவவளையங்கள்
211
இடைவெப்பவலயம்
288 அவரீயம்
253
இணைதல் அழுகல்வளரி
இதயத்தின் தொழில்
155 பற்றீரியா 135, 147
இதயவமைப்பு 183, 184, 185 அழுகன்முறைப் போசணை 148
இயக்குநார்
211, 212 அறுமுள்ளிக்குடம்பி
2ார்
இயங்குவித்திகள் 16, 17, 18 அனுத்தோட்பட்டைமுளை
22)
இது, கிளேன)
29 அனுபரியும் நரம்புத்
இரசாயனத்தாண்டு தொகுதி 205
திருப்பம் 105 இரான் வியரின்கணுக்கள்
212 ஆட்சித் தசைகள்
இருகா லமுதிர்வு ஆண்குறிச்சிலிர்முட்கள்
161
இருகூற்றுப்பிளவு
12 ஆ, ண்குறிமுன்றேற்
இரு சக்கரைட்டுகள்
126 - சுரப்பி
இருவித்திலைத்தாவரம்
205 ஆண்புணரி *
T2, 107
இரைப்பைச்சமிபாடு
178 ஆணகம்
6ே இரைப்பைச்சுரப்பிகள்
Iாடு
20:3
1ா
201
202

கலைச்சொற்கள்
344
2ா?
இரைப்பைப்பாகு
1ாப்
உற்பத்திச் சிம்பி இலைகள் வாடுதல்
உற்பத்தியறை இலையுரும்புகள்
111
| உரிஞ்சன் மானி இலையுதிர்காடுகள்
201
உறிஞ்சிகள் இழையுருக்குடம்பி
111]
உறிஞ்சும் வேர்கள் இறப்
118, 272 இனப்பெருக்கல் (எலி) |
214
காசியிலைக்காடுகள்
பா
50 1017, 25ா
25
உர1
1T] 2T)
ஈரல் ஈரற்றட்டையன் ஈரில்லமுடைய தாவரம் ஈருருவுள்ளபூக்கள் ஈற்றுத்தலையம்
81
T1 20T
எண்ணெய்கள்
12 எலி
163 எலும்புக்கூட்டுத்தொகுதி
217 எலும்புக்கூடு – தொழில் 218 எளியவிச்சையில் செயல்
கள் 216 என்றும் பசுமையான
காடுகள் 20
ஏசொற்றோபற்றர், ஏந்தி ஏப்பிட்டுகள்
1:37
65 243
ஐதரா
2ா
உத்சுல்தரை
14] உட்காவுநரம்புமுளை
211 உட்சுவாசம்
108 உட்சேர்க்கை
55 உட்பூக்கள்
20) உடற்குழி
217, 218 உடற்றொழிலுலர்வு
203, 201 உணர்ச்சி நார்
211, 212 உணவுக்கால்வாய் 174, 2TH உணவுச்சோத
நினைகள் 132, 133, 1:34 உணவு தன் மயமாகல் உணவுறிஞ்சப்படல் 130), 181 உமிழ்நீர்ச்சுரப்பிகள் 1ா5, 1ாடு உயிர்க்காரணி
28MT உயிரில்லாதபொருள்
1, 2 உயிரினங்களின்பரம்பல்
2MT உயிரினப்போட்டி
204 உயிருள்ளபொருள்
1, 2 உருண் டைப்புழு
15ா உலர்பழங்கள் உள்ளறைத்தலையும்
2]T உள் ளொட்டுண் ணி
152
181
ஒட்சிக்குருதிநிறச்சத்து
14] ஒட்சியேற்றம்
11 ஒட்டுக்கட்டை
11) ஒட்டுக்கிளை
116 ஒட்டுண்ணிகள்
15) ஒட்டுதல்
11ா ஒத்தபுணரிகள்
11 ஒதுக்கவுணவுச்
சேமிப்பு 128, 131 ஒருசக்கரைட்டுகள்
125 ஒருபா லுண்மை
T1 ஒருவித்திலைத்தாவரம்
205 ஒளித்தொகுப்பு
41, 5) ஒளிதூண்டுதிருப்பம்
104
14

Page 182
15]
உயிரின்வியல்
25
2ார்
ஓக்கிட்டு ஓட்டுகுழாய் ஓட்டுச்சுரப்பி ஓடிகள் ஓராண்டுச் செடி ஓரில்லமுள்ள செடி
278 108
257
2கா
கழியறை
165, 2011 கழிவுத்தொகுதி
27ti, 2ார் களித்தரை
145 களை கள் பரம்புதல்
25), 251 களைகளால் விளையுந்
- தீமைகள் 252, 25:) கறையான் |
2) கறையான் - வகை
21) கன்னிப்பிறப்பு
23] காபன்வட்டம் 139, 140, 141 காபோவைதரேற்றுகள்
125 கால நிலைக்காரனரி
287 காழ்க்கலன்
200,
207 காற்றங்குரத்தொகுதி காற்றிற்சுவாசம் -
51, 55 காற்றின் ரியசுவாசம்
51, 55 காற்றினாற்பரம்பல்
Bா - காற்றுக்கல்வி மையம்
250 காறையெலும்பு
225
271
257
கிடை
கட்டில்லா நீர்
14) கடத்துதல்
13! கடல் அனிமனி
272 கடல் நட்சத்திரம்
213 கடல் முள்ளெலி
272 கடவ்விலங்கு, கடலை முளைத்தல்
4ழ் கடற்கரைக்காடு
270 கடர்கரைத்தாவரம்
263 கடுங்குளிர்வலயம் -
| 28, 212 கடைவாய்ப்பற் கள்
174 கண்கள்
15 கப்பற்சிப்பிகள்
271 கம்பம்
205 கம்பளிச்சிறுகற்றை
2IE கருக்கட்டல்
" T1, 12. 117 கருக்கட்டுங்கால்வாய்
278 கருநீலச்சிப்பிகள் 247, 271 கருப்பை 11, 203, 278 கரும்பு வெல்லம்
12T கரைத்தாவரம்
2GH கரைவலயம்
27) கலத்திற்குப்புறமான
| சமிபாடு 149 கலப்புநார்கள்
21) கல்விமுறையினம்
பெருக்கல் 107, 15ா கலவியின்முறையினாம்
பெருக்கல் 107, 131, 15] கலன்கட்டுகள் 32, 155, 156, 295 கலன்றொகுதி
2ா; கவசங்கழற்றல்
285
கிண்ணக்குழி கிரத்தேசியா கிரிமாத்தர்தசைகள் சிள மிடோமானசு கிளைக்கோசன்
பப்பு 22] 245
2011 13, 24; 126, 127
கீடகச்சென்னி கீழ்வடியும் நீர்
274 142
குடம்பிநிலை 265, 2ரா, 283 குடலுக்கப்பால்
வாழிடமாறல் 162 குடற்சாறு
177, 181] - குமிழ்
114 குமிழ்த்தலைவாயிற்
சுரப்பிகள் 2013 குமிழங்கள்
11-117 குரற்பெட்டி
105

கலைச்சொற்கள்
351
சமிபாட்டுத்தொகுதி
27ா சமுதாயங்கள்
23] சமூகவாழ்க்கைப்பூச்சிகள் 230 சவ்வுப்பையுருப்பூண்டு 250 சவ்வூடுபரவல்
| 30, 31 சவுக்குமுளை
14
குரனாண்கள்
195 குருதிச்சிறுதுணிக்கைகள்
189, 190 குருதி நிறச்சத்து
10) குருதியமைப்பு
18) குருதியின் தொழில்கள்
191 குருதியுறைதல்
19) குருதியுறையாநோய்
11) குழிநாளங்கள்
187 குளத்திரிடி யம்
13ா குளுக்கோசு
12ா
[ா குறுக்குக்கலன்
2ாப் குறுங்கிடைகள்
118 குறையுருமாற்றம்
205 குறையொட்டுண்ணி
15t;
சாதாரணகளைப்பூண்டுகள் 254 சாம்பனிறப்பொருள்
21) சார்களைப்பூண்டு
252
குறி
கூட்டுப்புழுநிலை
265, 283 கூப்பரின் சுரப்பிகள்
202 கூம்புருவப்பொருள் .
27
சிமிட்டுமென்றகடு
259 சிலந்திவலைப்படை
2II[1 சிறுகுடற்சமிபாடு
170 சிறு நீர்க்குழாய்
201, 2013 சிறுநீரகம் - அமைப்பு
213 சிறு நீரகம் - தொழில்
21) சிறு நீர்ச்சனனித்தொகுதி
2010 சிறு நீர்ப்பை
203 சிறு நீர்வழி
201, 2013 சிறுபரிசை
101 சிறுமணிப்படை
1ார் சிற்றறைகள் - நுரையீரல் 196 சிறைப்பையாக்கம்
கேசரம்
6ே
11
கொடுத்துவாங்குமியல்பு
137, 146 கொம்புப்பொருட்படை
17] கொழுப்புகள்
128 கொளுக்கிக்கலம்
2T) கொளுக்கிப்புழு
163 கொறியுயிர்
168
சீதப்பூஞ்சணம் சீமந்துச்சுரப்பி
THE 21) 242
சீறடி
கோடைநெடுந்தாக்க நிலை 13)
2ாரம்
சுக்கிலச் சிறுகுழாய்கள்
2ா1 சுக்கிலப்புடகம்
11 சுருட்குடற்குறையிடை
வாயில் 18) சுவாசக்குழல் சுவாசத்துவாரம்
266 சுவாசத்தொகுதி
271 சுவாசநொதிச்சத்து
104 சுவாசப்பைக்குழாய்
195 சுவாசப்பொறிமுறை
107"
1ார்
சஞ்சு
2ா4, 280 சதைச்சுரப்பி சதைப்பழங்கள் சதைப்பித்தக்கான்
1ாடு சந்திக்கோடு * சமனில்லாத்தம்பமுடைமை 71
ஒ4
1)

Page 183
352
உயிரினவியல்
சுவாசித்தல்
49, 104 சுவாலைக்கலம்
27 | சுழன்முறைப்
பயிர்ச்செய்கை 147 சுற்றயல் நரம்புத்தொகுதி 205 சுற்றுச்சுருக்கு
173 சுற்றுத்தலையசைப்பு
15)
தவளை
248, 258 தற்கருக்கட்டல்
27] தற்போசணை
143 தன்மகரந்தச்சேர்க்கை
T) தன்னாட்சிநரம்புத்தொகுதி 206 தனிக்களைப்பூண்டு
252
2]
204
24
63 ர
சூல்கொள்ளுங்காலம் சூல்வித்தமைப்பு சூல்வித்திலை சூல்வித்துகள்
Hா சூலகக்கான்
131, 278 சூ லகப்பை சூலகம்
67, 101 சூழல் வெப்பக்குருதி நிலை 292
தாங்குமிழையம் தாங்கும் வேர்கள் தாடை எலும்புகள்
22II தாவரங்களின்
இன்றியமையாமை 5 தாவரங்களின் உள்ளமைப்பு 295 தாவரமுறைப்போசணை 4, 148 தாவரவுணாவிலுள்ள முகங்கள்
12ர
202
திரளச்செய்சுரப்பி
202
செவிப்பறைக் குமிழ்
முனைப்பு 220 செவிமென்றகடுகள்
25)
சேமிப்பு வேர்கள் - சேமிப்புறுப்புகள்
{சேர்க்கையெறிகை
22
128 கர், 278
துண்டுபடல் துணைவிருந்து வழங்கி
துரம்பின் துரிம்பினெதிரி துரம்போகைனேசு
112, 214
261 112 10) 11)
சொறிமுட்டை
212
சோளம் - முளைத்தல்
100
தூக்கணவால்
ப3) தாக்கவெலும்புக்கூடு 218, 225 தூண்டற்பேறு
103 தாண்டி (தூண்டல்)
103 தூண்டுதிருப்பம்
103 தூண்டுமுட்சுரப்புகள்
10)
12) 27:)
202 201 113
ET 1பார்
தேன் பனி தேனீ"
தக்கன பிழைத்து வாழ்தல் தட்டைப்புழு தடுப்புகள் (பரம்பல்) தண்டி ராப்பிரதேசம் தண்டுக் கிழங்கு தம்பம் தரைக்கீழ்முளைத்தல் தரைமேல் முளைத்தல் தரையின் வளம். தலையோடு
24 21
தொடுகைட்புலன் தொழிற்பிரிப்பு
2ா1 231
17
14T 213
தோட்டமண்பகுப்பு
144

கலைச்சொற்கள்
35ப்
தோட்பட்டைமுள் தோட்பட்டைமுகளை தோற்சுரப்பி தோற்பையுருப்புழு
211) 2ா 2ப
231]
நெஞ்சறை) நெஞ்சனறக்கால் நெஞ்சுக்கூட்டுக்குழி நெடுந் தாக்க நிலை நெய்ச்சுரப்பி
217, 285
285 195
21
171
நைத்திரேற்ருக்கல்
137 நைதரசன்வட்டம்
135 நைதரசனிற்க்கும்பற்றீரியா 138 நைதரோசோமனுசு
137 ந்ைதரோபற்றார்
177
நச்சுச்சுரப்பு
211 நண்டு
24 நத்தை
2ா நரம்புக்கனனாத்தாக்கம்
211 நரம்புக்கலத்தின் அமைப்பு 210 நரம்புக்கலவுடல்
21) நரம்புக்கால்வாய்
2) நரம்புகள்
21? நரம்புத்தொகுதி
215, 2T நரம்புநாண்
2T) நரம்புநார்
21) நரம்பிணைப்பு
216 நரம்புமடல்
211 நரம்புவளையம்
2ாடு
நொதிக்கலங்கள் நொப்பின் கரைசல்
1:11 131
நாடாவுருப்புழு நாடிக்குருதி நாளத்தொகுதி நாற்பெருமுடலம்
2T) 12ா 183 2IT
203
நீர்த்தாவரங்கள்
141) நீர்த்தூம்பு நீர் தாண்டுதிருப்பம்
105 நீர்த்தெள்ளு
247, 248 நீர்மூட்டுப்பூச்சி
248 நீரிலலையுமுயிர்கள்
20 நீரினாற்பரம்பல் நீள்வளையமையவிழையம் 208
பக்கக்கழிவுக்கால்வாய்
2T பக்கவிளைவுகள்
கப் பச்சையம் பச்சையமணி
15 பசளையிடல்
148 பட்டைவாய்கள்
55 பதியமுறையினப்பெருக்கம்107 பதியவத்தல்
115 பரம்பற்காரணிகள்
204 பரவைக்கடல்
27] பரிசந்தாண்டு திருப்பம்
1பர் பரியும் நரம்புத்தொகுதி
215 பரிவட்டவுறை)
205 பருகௗர்
142 பருகி
25, 155, 156 பருவக்காற்றுவலயம்
28] பல்கூற்றுப்பிப்புப்
பெருக்கம் பல்லாண்டுவாழுமியல்பு -
12 பல்லினப்புணரிகள்
10 பலசக்கரைட்டுகள்
126 பலோப்பியோக்குழாய்
202 பவுமனின் உறை
204 பழங்கள்
34 -
B]
1ா
நுகவுருவில் நுரையீரலின் அமைப்பு நுரையீரனடி நுள்ம்பு
220. 115 18ா 265

Page 184
354
உயிரினவியல்
17
lt;
2ார்
1ார்
பி
பாமெல்லா நிலை பார்வைக் கோப்பு
20T
பெண்ணகம் பார்வைச்சோனேனா
பெண்புணரி
72, 107 பாடலகள்
280
பெருங்குடையம்
21) பித்தம்
பெருந்தடுப்புக்கற்பார்த் பித்தத்தாப்பொருள்
20T
தொடர்
272 பிரன்னரின் சுரப்பிகள்
1T) -பிள்ளையீனுந்தன்மை
204
பைபிரின்
112 பிளப்புமுறை இனம்
பைபிரினாக்கி
1IE பெருக்கல்
15
பைவாற்பருவப்புழு
28] பிறபோசணை
148 பின்னவயவங்கள்
211, 22;
பொருத்தில் கால்கள்
105 # பொற்புழு
280 புணர்ச்சி நுண்சுடர்
101, 105 புணர்ச்சிப்பை
165
போலிக்கால்கள் புணரிக்கலம்
152 புணரிகள்
11
மகரந்தக்குழாய்
T) புணரிமுதல்கள்
157
மகரந்தக்கூடு புணரிமுதல் கம்
152
மகரந்தக்கடடை
2:17 புணரிவித்தி
மகரந்தச்சேர்க்கை. புரத்துரம்பின்
10)
காற்று
[1], H) புரதங்கள்
128
மகரந்தச்சேர்க்கை- நீர்
31 புல்லிப்போலி
15)
மகரந்தச்சேர்க்கைப் புல்லிவட்டம்
115
பொறிமுறை
- 74, 75, 76 புவிதூாண்டு திருப்பம்
114
மகரந்தமணி புழுவுறை
2IT
மகரந்தச்சேர்க்கை. புறத்தோல்
25
விலங்கு
73, 74 புறப்பக்கப்பிளவு
2II
மஞ்சட்கருவாக்கிக்கான் 278 புறப்பக்கவேர்
210
மஞ்சட்கருவாக்கி புறமுத,லுருப்படை
மென்றகடு
202 மட்டிகள்
2ா) பூ (Gill)
21]
மண்டையோட்டுதரம்புகள் 212 பூசணவலை
மண்டையோடு
2ாடு பூசணவலைமுதல்
152
மண்டையோட்டென்புகள் 211) பூசணவிழை
113
மண்ணியற்காரணரி
28T பூந்துணர்
11)
மாப்ள நுகர்ச்சிச்சோணை -
207 பூப்பிளவு
மணவினைச்சும்மாடு
ZiL பூவறை
பா)
மணற்றரை
- 145 பூவின துபகுதிகள்
[பு |
மத்தித்தரைவலயம்
20)
13
நீடு
275
148

கலைச்சொற்கள்
355
142
மயிர்கொட்டி
285 மயிர்த்துளை நீர் மயிர்ப்புடைப்பு
17] மல்பீசியின்சிறுதுசணிக்கை 2014 மல்ட்சியின் படை
17)
127
11
மாப்பொருள் மார்புப்பட்டை
125 மார்புவயிற்றிடை
மென்றகடு
217 மார்புவளையம்
215 மாரிநெடுந்தூக்க நிலை 131, 2011 மாறிழையம்
211, 2ார
மூக்குக்குழி
தாழ் மூச்சுக்குழல் வாய்
2பர் மூட்டுக்குமிழி
211 மூட்டுகள் வகை
228 மூப்பகங்களின் பயன்கள்
124 மூலகங்களின்முதல்கள்
121 மூலவுரு நிலை -
265, 283 மூபெவுருவுள்ள பூக்கள் மூளியின் இச்சையில்
* செயல்கள் 216 மூளைக்கால்வாய்
202 மூளையவரைக்கோளம்
2IT மூளையவிச்சையில்
செயல்கள் 21ார் மூளையறைகள்
208 மூளையின் குழிகள்
2ாரம்
மிண்டிவேர்கள் மிதக்கும்விலாவெலும்புகள் 225
மென்றாயி
20ா
T)
2IT
25
மேல்வளர்சதை மேலென்புமுளை மேலொட்டித்தாவரங்கள் மேலொட்டி வேர்கள் மேற்பட்டை மேற்பட்டைமண்டலம் மேற்றோல் 1
20 205 பரம் 205
முகிழ்
114 முகபரு வேர்கள் முட்டைக்கலம் (புடியுரு
263 [[பகப் ரண்
20ா. 20ா முருகைப்பார் புலையூட்டிகள்
108 முழுவளர்ச்சிநிலை
205, 23: முழுவுருமாற்றம்
26) முழுவொட்டுண்ணி
154 முள்ளந்தண்டு 20ா, 213, 218,
22ா, 225 முள்பாந்தண்டுநாம்பு 12, 21:! முள்ள ந்தண்டுவிலங்கு 1138 முள்ளெலும்பு-அமைப்பு212 21:) முளைத்தாண்டு
11 முளைத்தண்டுக்கவசம்
111 முளைவேர் முளவேர்க்கவசம்
111 முன்னாவயவங்கள் 211, 125 226 முன்னிற்குஞ்சுரப்பி
மையக்கால்வாய்
211, 21ா மைய நரம்புத் தொகுதி 205, 215 மையவிழையக்கதிர்
பப் கம்யனியைமடல்
211 மையவுருளே
245
யோனி யோனிமடல்
பர், 203, 2T)
11]
வட்டவடிவானதசை வட்டவுருக்குடம்பி
2ா 1ார்
* 202

Page 185
356
டயிரினாவியல்
வயிற்றறை
217, 205
விலங்குகளாற்பரம்பல்
HT வயிற்றறைக்கால்
28ா
விலங்குச்சமூகம்
2:11 வளர்ப்புக்கரைசல்
121
விலங்குமாப்பொருள்
181 வற் றுப்பெருக்குமண்டலம் 27)
விலங்குமுறைப் வறணிலத்தாவரங்கள் 1ெ, 130
போசணை 1, 148 வன்றாயி
2tIர்
விலங்கொட்டுண்ணி
15T விலாவெலும்புகள்
225 வாங்கி
212
விளைவுகாட்டி
212, 21 | வாய்க்குழிச்சமிபாடு
1TS வாயிற்றொகுதி
18
வீக்கம்
31, 32, 58 வாழ்க்கைக்காரணிகள்
146 வாழ்க்கைப்போர்
120
வெட்டுத்துண்டங்கள்
115 வாழிடமாறல்
203
வெட்டும்பங்கள்
171 வாற்பேய்
202
வெண்சடப்பொருள்
21) வெண் சிப்பிகள்
1T1 வித்தகவிழையம்
H)
வெப்பவலயம்
2ST வித்திகள்
15]
வெப்பவீரக்காடுகள்
330 வித்தியகம்
15)
வெளிக்காவு நரம்புமுனை
311 வித்திலை
பிர்
வெளிச்சுவாசம்
1114 வித்திலைக்கீழ்த்தண்டு
பர்
வெளிப்பூக்கள்
2H) வித்திலைக்கீழ்த்தண்டு
வெளிமூக்குத்து வாரம்,
25! வளையம் பிர்
வெளியெ றிகான் 11, 165 வித்திலைமேற்றண்டு
வெளியெறிகை வித்து
02
வெளியொட்டுண்ணி
115 வித்துமுளைத்தல்
பு4 வித்துருமணி
வேர்த்தண்டுக்கிழங்கு
112 விதை
2011
வேர்த்தொகுதி விதைப்பை
211
வேரிப்பிரதேசங்கள் | விதைமேற்றிரிவு
201
வேர் மயிர்
26 வியர்க்கான்
171.
வேரமுக்கம் வியர்ச்சுரப்பி
171
வேரின்தொழில் விருத்தியுடன் மூட்டு 274, 275
வேருறிஞ்சிகள் விருந்து
வழங்கி 155, 156, 162, 163
100
15
20
32
2!
104)
197EW 1- Tயட 1 1 1


Page 186
Cj 2
ਥlk · S)3 |9 ਮਾਸvS.


Page 187
G. C. E. (0.
பாடபுத்
பொற்காலப் பூமி சா
* , S. S, R சரித்திரம் (உலகமும்
= 1, E. B, Tam
T, W, E. Moா நவீன உயர்தர எண்.
N. நடராசா, B, S
17. இராமநாதன் சுகாதாரமும் சரிரசாத்
N. நடராசா, B New Model Test Pa
H. Miranda, T
BIO)
G, C.
T
70. J. S DANப்
Selece Master T
KALAIVANI
10, Main Sti Branch : 130, Trinco சேரதாப்ht !

L.) வகுப்புக்குரிய தகங்கள்
5-5]
5=0)
த்திரம் - H. 1,,
இலங்கையும்) 1, MI, ட, 4 arthy, E. A., (Hons.] கணிதம் ப., (Hons.] M, A., &t
[-]ா
த்திரமும்
5-50 - Ed., (Hons.) M, A., pers with Answers 3-00 |
1, A, (Dip, ini Ed.)
LOGY
E. (0. L.) AMIL.) -
11*
EL, M. A., B.Sc., ஈinity Callage, Kandy,
BOOK CENTRE
28t, JAFFNA.. 11alee Street, KANDY..
Price F3, fi-பிப்