கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2014.05

Page 1
www.gnanan.info/ www.gnanam.lk "
' மே 2014
கலைஇலக்

எம்.
ന്നുള്ളത
விலை!
ரூபா 100/=
மம். பார்வர்டியம்
ற வித்தகர் கலாபூஷணம்
அடங்காப்பிடாரி” சி.சிவநேசன்
14 பா வான்- கொ" 7 ப.காம்

Page 2
agung gawa amasogie Nagalingan
Jeuw
Designers and Manufac 22kt Sovereign Gold
Quality Jewellery
101, Colombo Street, Kandy. Tel: 081 - 2232545
CENTR
Suppliers t
DEALERS IN ALL KIND FOOD COLOURS, !
CAKE INGRE
76B, Kings S Tel: 081 - 2224187, 081

S
ellers
turers of
Stwicklunce
.
AL ESSENCE
SUPPLIERS
o Confectioners & Bakers
S OF FOOD ESSENCES, FOOD CHEMICALS, EDIENTS ETC.
Street, Kandy. - 2204480, 081 - 4471563

Page 3
ஒளி:14 பகிர்தலின் மூலம்
ஞானம் சுடர் :12 ப9ை004லம் 6
இது
கவி
கல்
த. 6
செ. மூது கவி
ஒளி:14 சுடர் :12
168 வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும் |
கவிப்பெருக்கும் மேவுமாயின், பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவிகொள்வர்.
ஆசிரியர் குழு ஆசிரியர், ஸ்தாபகர் : தி.ஞானசேகரன் இணை ஆசிரியர் : ஞானம் ஞானசேகரன் ) நிர்வாக ஆசிரியர் : ஞா. பாலச்சந்திரன்
தொடர்புகளுக்கு தொ.பேசி.ச 0094-11-2586013
0094-77-7306506 தொ.நகல் ச 0094-11-2362862 இணையம் + WWW.gnanam.info
Www.gnanam.lk
தளம்.ஞானம். இலங்கை மின்னஞ்சல்: editor@gnanam.info
editor@gnanam.lk அஞ்சல் r 3B-46h Lane, Colombo-6,
Sri Lanka வங்கி விபரம் T. Gnanasekaran
ACC. No. - 009010344631 Hatton National Bank, Wellawatha Branch. Swift Code : HBLILKLX (மணியோடர் மூலம் சந்தா அனுப்பு பவர்கள் வெள்ளவத்தை தபாற் கந்தோரில் மாற்றக்கூடியதாக
அனுப்புதல் வேண்டும் ) சந்தா விபரம் Sri Lanka
ஒரு வருடம் :ரூ 1,000/= ஆறு வருடம் :ரூ 5,000/= ஆயுள் சந்தா ரூ 20,000/=
ஒரு வருடம் Australia (AUS) Europe (€)
40) India (Indian Rs.) 1250) Malaysia (RM)
100 | Canada ($) UK (£) Singapore (Sin. $) Other (US$)
9 சிறு
உ.! இப் கீதா நெ
50)
2388
நூல் வெ.
சி.
7 ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்பு களின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய
ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.
புனைபெயரில் எழுதுபவர்கள் தமது சொந்தப் பெயர், முகவரி, ஆகியவற்றை வேறாக இணைத் தல்வேண்டும்.
பிரசுரத்திற்குத் தேர்வாகும் படைப்புகளைச் செவ்வைப்படுத்த ஆசிரியருக்கு உரிமை யுண்டு.
படைப்புகள் கணினியில் தட்டச்சு செய்யப்பட்டு மின்னஞ்சலில் அனுப்பப்படவேண்டும்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (168)
சமுக கே.

பிரிவுமழைபெறுவாரும்
திரள்ளே ...
1971,
31/45
16ப்ப..
தைகள் வயல் வே.குமாராசாமிர்தம் ஜெயசீலன் சுதர்சன் பார் கலைமேகம்
ஞர் கலைந்தி
39
** ** *'r,
242MXY 204
* 'இயக்'செங்கடல்
62
ஆதிநகர3
கட்கார
0 கட்டுரைகள்
சிச it)
சரம்பாகு சீனா உதயகுமார் 03 பேரா. சபா ஜெயராசா
12 கார்த்திகா கணேசர்
- 25 பேரா. என். சண்முகலிங்கன்
12
07
கதைகள் நிசார்
னு அஸ்மத் ரகணேஷ்
ல்லை லதாங்கி
29
35
பத்தி கே.விஜயன் எஸ்.எம்.எம்.பஷீர் பேரா. துரை மனோகரன் கே.ஜி.மகாதேவா
43 46 59
63
ம் விமர்சனம் ங்கட் சாமிநாதன் வன்னியகுலம்
17 40
கால இலக்கிய நிகழ்வுகள்
பொன்னுத்துரை
49

Page 4
" " " " மாயையையே
ஆசிரியர் பக்கம்)
மலையக மேதினம் என்பது தொழிலாளர் லாளர்களால் கொண்டாடப்படும் ஒரே
நமது நாட்டைப் பொறுத்தவரை . துறையாக மலையகப் பெருந்தோட் பெருந்தோட்டத்துறையில் கொண்டா இழந்த நிலையிலேயே வருடாவருடம் இங்கு கொண்டாடப்படும் மேதினக் அமைந்து விடுவதுதான்.
இதற்கு முக்கிய காரணம் மற் தினத்தை தொழிலாளர் அமைப்புக நாட்டில் அரசியல் கட்சிகளே மேதின் பெருந்தோட்டத்துறை சார்ந்த மேதின கட்சிகளால் ஒழுங்கு செய்யப்படுகி நலன்களே இங்கு முதன்மை பெறுகி
இந்த அரசியல் கட்சிகள் மேதின வெளியுலகுக்குக் காட்டும் கொண்டா! இந்த மேதினக் கொண்டாட்டங்களுக் கொண்டுவரப்படுகின்றனர். அவர்களு அரசியல் வாதிகள் மேடைகளில் அமர் கட்சிகளுக்கு எதிரான கருத்துக்க ை இருக்கிறது. இதனால் போட்டி பொ தொழிலாளர்களிடையே ஏற்பட ஏதுவா பற்றும் தொழிலாளர்களில் பெரும்
வழக்கமாக உள்ளது. இவர்களை பேச்சுக்களும் அமைவதுண்டு. இந் போர்த்துவதும் பூமாலை சூட்டுவதும்
இந்நிலை மாறவேண்டும். மேதினம் பலப்படுத்துவதாகவும் அவர்களது விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் அக்கறையுடன் செயற்படுபவர்களை க மறுக்கப்படும் நிலையில் அதற்கெத் சமூகநலன் தொடர்பான விடயங்க வகுப்பதுமே மேதினக் கொண்டாட்ட வேண்டும்.
மறுக்கப்படும் உரிமைகள் வெல களுக்கு நன்மை ஏற்படும் வகையிலு கட்டியெழுப்பி உரிமைகள் வென் கொண்டாட்டங்கள் இடம்பெறவேண்டு உணர்ந்து இனிவரும் காலங்களிலான்
முள்ளதாக்க வேண்டும் என வெண்டு

த்தில் மேதினம் களுக்கான தினம். உலகெங்கும் தொழி)
ஒரு தினமாகவும் இது அமைகிறது. புதிகளவு தொழிலாளர் படையைக்கொண்ட டத்துறை அமைந்துள்ளது. பெரும்பாலும் டப்படும் மேதினம் அதன் அர்த்தத்தை கொண்டாடப்படுகிறது. அதற்குக் காரணம் கொண்டாட்டங்கள் அரசியல் மேடைகளாக
றைய நாடுகளில் இந்தத் தொழிலாளர் ள ஒழுங்கு செய்கின்றன. ஆனால் எமது எத்தை ஒழுங்கு செய்கின்றன. மலையகப் க் கொண்டாட்டங்கள் மலையக அரசியல் ன்றன. இதனால் அரசியல் கட்சிகளின் ன்றன.
மேடைகளைத் தமது அரசியல் பலத்தை ட்டமாகவே கருதுகின்றன. தொழிலாளர்கள் க்கு தோட்டங்களிலிருந்து பஸ்கள்மூலம் க்கு மதிய உணவும் வழங்கப்படுகின்றது. ந்து தமது எதிரணியைச் சாடுவதும் மாற்றுக் ளக் கூறுவதுமே வழமையான நிகழ்வாக றாமை குரோதம் பிரிவினை போன்றவை Tகிறது. மேதின கொண்டாட்டங்களில் பங்கு பாலானோர் மதுபோதையில் இருப்பதும் உருவேற்றும் விடயங்களாகவே மேடைப் தே அரசியல்வாதிகளுக்கு பொன்னாடை
பெருவழக்காகியுள்ளது. - என்பது தொழிலாளர்களின் ஒற்றுமையைப்
உரிமைகளை வென்றெடுப்பதற்கான அமைய வேண்டும். தொழிலாளர் நலனில் கெளரவிப்பதும் தொழிலாளர்கள் உரிமைகள் ரொகக் குரல் எழுப்புவதும் தொழிலாளர் ளை முன்னெடுப்பதுமான திட்டங்களை ங்களின் முக்கிய செயற்பாடாக அமைய
எறெடுக்கப்படும் வகையிலும் தொழிலாளர் பம் தொழிலாளர்களிடையே ஒற்றுமையைக் றெடுக்க ஏற்ற வகையிலும் மேதினக் மம். மலையக அரசியல் வாதிகள் இதனை பது மேதினக் கொண்டாட்டங்களை அர்த்த
கிறோம்.

Page 5
பல்துறை 6
2005ஆம் ஆண்டு வேலை கிடைத்து வவு வவுனியா எனக்குப் புத அந்த இடத்தில் அறிமு மைத்துனருமான க.செந் கிடைத்து வவுனியா கச்ே
வவுனியா குருமன்க தங்கியிருந்தார்கள். சில செந்தில்நேசன் மன்னார் அறிந்து அங்கு சென் நான் முதலில் சந்தித்து என்பதால் அவர் வீட்டு வ அவர்களுக்கு மாற்றிய கா. அவர் ஒரு சிறந்த கட்டிட அவர்களை வழியனுப்பி சாதாரணமானதாகவே எ அடிக்கடி மாலை நேரங் இவருமாக என்னோடு வலிந்த வார்த்தைகளைப் நான் காணவில்லை. உரையாடுவார்
வேலை இடமாற்றம் ஞானம் சஞ்சிகையில் அ 'தட்டிக்கொடுங்களப்பா' எ இவர் ஒரு நாடக நடிக் கவிஞன் என்பதையும் .. இனிமை பற்றி அவரோ? அப்படி நான் சொல்லும் உணர்ந்தேன்.
யாழ்ப்பாணம் என்ற பெயரில் இருந்து பிறந்தது பாணனுக்குப் பரிசாக வழ என்னும் கலை ஊர் ஆகு
'கலையால் ஊர் வள அரியாலை என்ற ஊருக்கு . கிராமத்தில் பிறந்து வளர்ந்
சமரபாகு
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (168)

வித்தகர் கலாபூஷணம்
அடங்காப்பிடாரி சி.சிவநேசன்
3 என்று நினைக்கிறேன். பட்டதாரி நியமன னியாவில் கடமையாற்றிக் கொண்டிருந்தேன். கிய இடமாக இருந்தது. யாருமே எனக்கு மகமாகி இருக்கவில்லை. எனது நண்பரும் மதில்நேசனும் பட்டதாரி நியமன வேலை சேரியில் கடமை புரிந்து கொண்டிருந்தார். காட்டில் தாஜ்மகாலில் ஆசிரியர்கள் பலர் நாட்கள் அங்கு நானும் தங்கியிருந்தேன். ரோட்டில் பண்டாரிக் குளத்தில் இருப்பதாக றேன். அங்கேதான் சிவநேசன் ஐயாவை உரையாடினேன். அது ஒரு மாலை நேரம் பாசலில் தொழிலாளர்கள் பலரும் நின்றார்கள். சுகளை எண்ணிக் கொடுத்துக் கொண்டிருந்தார். க் கலைஞர் என்பதை அறிந்து கொண்டேன். விட்டு வந்து என்னோடு உரையாடினார். மது உரையாடல் அன்று அமைந்திருந்தது. களில் அங்கு போவேன். செந்தில்நேசனும் உரையாடுவார்கள். அவர் உரையாடலில் யோ மனசை நோகடிக்கும் சொற்களையோ கண்கூசிய சிரிப்புடன் நகைச்சுவையாக
) பெற்று யாழ்ப்பாணம் வந்துவிட்டேன். ல்வாயூர் கவிஞர்.சி.சிவநேசன் என்ற பெயரில் ன்றொரு கவிதை படித்தேன். அப்போதுதான் ன் மட்டுமல்ல நல்லதொரு புதுக்கவிதைக் அறிந்து கொண்டேன். அந்தக் கவிதையின் > தொலைபேசியில் உரையாடி மகிழ்ந்தேன். பாது அவர் மிகவும் சந்தோசமாக இருந்ததை
சொல் யாழ்பாடி பாணன் எனும் மன்னனின் நாகவே சரித்திரம் கூறுகிறது. அந்த யாழ்பாடி வங்கப்பட்ட மணற்றிடர் கிராமமே அரியாலை
ர்ந்தது, ஊரால் கலை வளர்ந்தது' என்றுதான் அடைமொழி சொல்லுவர். அத்தகைய பாரம்பரிய நவர்தான் கவிஞர்.சி.சிவநேசன் ஆவார். இவரை

Page 6
'அடங்காப்பிடாரி சி.சிவநேசன்' என்று சொன்னால் தான் யாருக்கும் தெரியவரும்.
1946 ஆம் ஆண்டு வைகாசி மாதம் பதிக மூன்றாம் நாள் பிறந்தார். நல்லூர் ஆனந்த் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைக் கற் இவர், யாழ்ப்பாணம் ஸ்ரான்லிக் கல்லூரியில் இடைநிலைக் கல்வியைத் தொடர்ந்தார். படிப்பில் ஆர்வமாக இருந்தாலும் குடும்பநிலை அவரை தொடர்ந்து படிக்க இடம் கொடுக்கவில்லை அதனால் கட்டிடத் தொழிலில் நாட்டம் கொண்டு அந்தத் தொழிலை முறைப்படி அனுப அறிவால் கற்று அதில் சிறந்த கலைஞரா மிளிர்ந்தார்.
நாடகக் கலையில் கவிஞர் சி.சி
தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாடகம் எழுதி, தான் பிறந்த ஊரில் நிகழும் ஒவ்வொரு நாடக விழாவிலும் அரங்கேற்றம் செய்வார். 'சதிகாரன் நாகப்பா' எனும் கற்பனைச் சரித்திர நாடகத்தை எழுத நண்பர்களோடு அரங்கேற்றியிருந்தார். அவரின் முதலாவதாக அமையப்பெற்ற இந்த நாடகம் பலரது பாராட்டுக்களையும் பெற்றது. இதனால் உற்சாகமான இவர் தொடர்ந்தும் நாடகம் எழுதி ஆற்றுகை செய்வதில் ஆர்வம் காட்ட தொடங்கினார்.
அரியாலை சிறீகலைமகள் ச.ச.நிலைய நாடக மன்றம் மேடை ஏற்றிய 'மணி மகுடப் எனும் சரித்திர நாடகத்தில் பெண் பாத்திர ஏற்று நடித்திருந்தார். முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவைப் பாத்திரமேற்ற அப்பெண் பாத்தி நடிப்புத் திறன் வெளிப்பாடே பின்நாளில் எந்தவொரு நாடகத்திற்கும் முக்கிய பென் பாத்திரத்திற்கு கவிஞரைத் தெரிவு செய்ய தூண்டியது எனலாம்.
அந்தக்காலத்தில் பெண் பாத்திரம் ஏற்ற நடிக்க பெண்கள் யாரும் முன் வருவதில்லை அந்த நிலை காரணமாக பெண் பாத்திரத்தில் சோபிக்கக் கூடிய பெண்களைப் போல நளினம் காட்டக் கூடிய பெண் அழகியலுக்கு பொருத்தமான ஆண் நடிகர்களைத் தேடி பிடித்து நடிக்க வைப்பார்கள். அந்த வகையில் கவிஞர் சி.சி. அவர்கள் அதில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் சாதனையும் செய்திருந்தார்.
1959ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சுண்டுக்கும் முத்தமிழ்க் கலாமன்றத்தினரின் “குற்றம் எங்கே எனும் சமூக சீர்திருத்த நாடகமும் அரியாலை

C அ - ப .- 9' C C - V1
ܩ ܘ ܘ ܘ ܘ
பு.
• 9: (: b:
) சிறீ கலைமகள் ச.ச.நிலையத்தினரின் 'கடமை
வீரன்' எனும் கற்பனைச் சரித்திர நாடகமும் மிக முக்கியமானவை ஆகும். இரு நாடகங்களிலும் பெண் பாத்திரம் ஏற்று நடித்திருந்த கவிஞர் சி.சி அவர்கள் - நடித்த 'குற்றம் எங்கே?' எனும் நாடகம் 250 மேடைகள் ஏறியது என்பது மாபெரும் சாதனைதானே!
இத்திறமை காரணமாக 'மயான காண்டம்' எனும் புராண நாடகத்தை முழுநீள வசன நாடகமாக மேடை ஏற்றினார்கள். இந்த நாடகத்தில் கலைஞர் அவர்கள் காலக்கண்டியாக நடித்து பலரது பாராட்டுக்களையும் பெற்றதோடு சிறந்த நடிகருக்கான விருதும் பரிசும் பெற்ற ஒரு சிறந்த நடிகராகத் துலங்கினார்.
'குற்றம் எங்கே? என்ற சமூக நாடகம் யாழ்கலாமன்றத்தில் மேடை ஏற இருந்த ஒரு நாளில் கலைஞரின் தாயார் இறந்து போனார். நுளைவுச் சீட்டுக்கள் எல்லாம் விற்பனையாகி நாடகம் பார்த்து மகிழ்வதற்கு ரசிகர்கள் பெருந் திரளாக வந்திருந்தார்கள். கலா மன்றத்தினர் செய்வதறியாது திகைத்தனர். உடனடியாக கலைஞரின் தந்தையாரை அணுகி இக்கட்டான தருணத்தைச் சொன்னார்கள். கலைஞரின் தந்தையும் ஒரு நாடக கலாரசிகன் என்பதாலோ என்னமோ தன்மகன் கவிஞர் சி.சிஐ அவர்களோடு அனுப்பி வைத்திருந்தார். இந்த விடயம் அவர் உறவுகள் யாருக்குமே தெரியவே தெரியாது.
தாய் இறந்த கவலைகளைக் காட்டிக் கொடுக்காது மறந்து சிறப்பாக நடித்தார். அரங்கமே கரகோச வெள்ளத்தில் ஆழ்ந்தது. தனக்காக ஒவ்வொரு காட்சியையும் திறம்பட வெளிப்படுத்தி நடித்த இவர், மேடையின் பின்னே நின்று தாயிற்காக ஒவ்வொரு முறையும் அழுவார். பிறகு அடுத்த காட்சிக்காக மேடையில் ஏறி பார்வையாளர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைப்பார். இத்தகைய திறமை எவராலும் இலகுவாகச் செய்யக் கூடிய ஒன்றல்லவே! அதை கவிஞர் சி.சி. செய்தார்.
இவரின் பெயருக்கு முன் அடைமொழி யாக வந்து குதித்த 'அடங்காப் பிடாரி' எனும் நாடகம் முதன்முதலாக பாண்டியன்தாழ்வு எனும்), இடத்திலேதான் மேடையேறி இருக்கிறது. ஒரு மணித்தியால நேரம் கொண்ட இந்த நாடகமானது ஓரிரவில் தேடவைக்கு மேல் யாழ்ப்பாணத்தின் வெவ்வேறு பிரதேசங்களிலும் மேடையேறி சாதனை படைத்தது என்பதுதான் வியப்பான விடயமாகும்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (168)
5: *
பின்:" படுத்து வாரு
பி.
3
ல்
ஒ..)
5

Page 7
மேலும், இந்த நாடகமானது யாழ்ப்பாணத் தின் எல்லாப் பிரதேசங்களில் மட்டுமன்றி வவுனியா, திருகோணமலை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, கொழும்பு என்று மேடை ஏறி சாதனை செய்திருக்கிறது. 500க்கும் மேற்பட்ட மேடைகள் கண்ட 'அடங்காப்பிடாரி' எனும் நாடகமே இவரை ஒரு தேசிய நடிகனாக இனம் காட்டியிருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
வெண்சங்கு திரைப்படத்தில் கவிஞர் சி.சி.
சிலோன் தியேட்டர் உரிமையாளரும் திரைப்படத் தயாரிப்பாளருமான றொபின் தம்பு அவர்கள் ஒருமுறை யாழ்ப்பாணம் வந்திருந்தார். சுண்டுக்குளி கலாமன்றத்தினரின் 'அடங்காப்பிடாரி' நாடகத்தைப் பார்த்திருக்கிறார். அங்கே அடங்காப்பிடாரியாகத் தோன்றி நடித்த பெண் பாத்திரம், தான் எடுத்துக் கொண்டிருக்கும் 'வெண்சங்கு' திரைப்படத்தில் நடிக்க வேண்டும் எனக் கேட்டிருக்கிறார். கலாமன்றம் அதற்கு பூரண சம்மதத்தை வழங்கியது. இதற்காக கவிஞர்.சிசி கொழும்பு சென்றார். அடங்காப் பிடாரி நாடகத்தின் சில காட்சிகளை சில மாற்றங்களோடு திரைப்படத்தில் சேர்த்திருந்தார்கள். இத்திரைப்படத்தில் ஆணாகவும் பெண்ணாகவும் தோன்றி தில்லு முல்லு செய்த அந்த நகைச்சுவைக் காட்சிகளைப் பார்த்த பெரியவர்கள் இதை, இப்போதும் சொல்லிச் சிரிப்பதை நானும் கேட்டிருக்கிறேன்.
இசை நாடகத்தில் கவிஞர் சி.சி
காங்கேசன்துறை வசந்தகான நாடக சபாவின் 'ஏழுபிள்ளை நல்லதங்காள்' இசை நாடகம் சாவகச்சேரி நுணாவில் எனும் பிரதேசத்தில் மேடையேற இருந்தது. அந்த நாடகத்தில் மூளி அலங்காரியாக நடிக்கவிருந்த நடிகர் சுகவீனமுற்றிருந்தார். எங்கே நாடகம் நடக்காமல் போய் விடுமோ என்ற மனநிலையில் இருந்த வி.வி.வைரமுத்து அவர்களின் நினைவில் தோன்றியவர்தான் கவிஞர் சி.சி. அப்போது அவர் அடங்காப்பிடாரி நாடகத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந்த காலமது. கவிஞரின் வீடு தேடிச் சென்ற வி.வி.வைரமுத்து ஏழுபிள்ளை நல்லதங்காள் நாடகத்தில் மூளி அலங்காரியாக நடிக்கும்படி கேட்டிருக்கிறார். கவிஞர் மிக விருப்போடு சம்மதம் தெரிவித்திருந்தார். ஆனாலும் தயக்கம் காட்டினார். "பாடல்கள் எதுவும் எனக்குப் மனப்பாடமில்லை" என்று சொல்ல, "தம்பி நீர் நடிப்பை மட்டும் பாரும்,
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (168)

பாடல்களை நானே பாடுகிறேன்” என்றாராம். பின்னர் உற்சாகம் வழங்கிவிட்டுச் சென்று விட்டார். வி.வி.வைரமுத்துவோடு சேர்ந்து தன் அபார நடிப்பை வெளிப்படுத்தினார். கவிஞரின் நடிப்பாற்றலைப் பார்த்து வியந்த வி.வி.வைரமுத்து கவிஞரைக் கட்டித் தழுவிப் பாராட்டினார்.
அல்வாய் ஊரில் திருமணம் செய்த இவர் 'காத்தவராயன்' எனும் சிந்து இசை நாடகத்தில் முத்துமாரி எனும் வேடம் புனைந்து நடித்தார். அரியாலை கலாமன்றம் தனது வெள்ளி விழாவைக் கொண்டாடியபோது ஐந்து நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற கலை விழாவில் 'பாமாவிஜயம்' எனும் நாடகத்தில் பாமா வேடம் ஏற்று நடித்தார். பாராட்டுக்களையும் பரிசில்களையும் பெற்றார்.
கவிதை எழுதும் ஆர்வம்
இலங்கையில் வெளியாகும் வீரகேசரி , தினக்குரல், உதயன், சுடரொளி, வலம்புரி ஆகிய பத்திரிகைகளிலும் ஞானம், ஜீவநதி சஞ்சிகைகளிலும் இவரது கவிதைகள் பிரசுரமாகியுள்ளன. நல்லூர் முருகன் ஆலயத் திருவிழாவின்போது யாழ்ப்பாணம் மாநகர சபையால் வெளியிடப்படும் மலரில் இவரின் கவிதைகள் கட்டாயம் இடம் பெற்றே தீரும். மரபுவழிக் கவிதைகள் புனைவதில் ஆற்றலுள்ள இவர் புதுக்கவிதைகள் பலவற்றையும் சந்த ஓசையோடு எழுதி வருகிறார்.
அல்வாய் சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் மீது பாடிய திருப்பள்ளி எழுச்சி, வசந்த மண்டப கும்பாபிஷேக பாடல்கள் என அனைத்தையும் இறுவட்டுகளாக வெளியிட்டுள்ளார். பக்திப்பாமாலை, விழாக் கால பதிகம் ஆகியவை எல்லாம் அந்தந்த கோயில் நிர்வாக சபையினரால் நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன.
'சிறந்த நடிகன்', 'நடிகச் செம்மல்', 'கலைச்சிகரம்' என்ற பட்டங்களோடு பருத்தித்துறை பிரதேச செயலக கலாசாரப் பேரவையால் 'கலைப்பரிதி' பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளார்.
இத்தகைய சிறப்புகள் கொண்ட கவிஞர் சி.சி. அவர்கள் 2013ஆம் ஆண்டு இலங்கை அரசினால் கலாபூஷணம் விருது வழங்கிக் ளெரவிக்கபட்டிருந்தார் என்பது அவரின் கலைத் திறனுக்குக் கிடைத்த உச்ச மரியாதையே ஆகும்.
0 0 0

Page 8
POOBALASIN
IMPORTERS, EXPORTERS
STATIONE
பூபாலசிங்கம் புத்தக விற்பனையாளர்கள், ஏற்றுமதி, இற
தலை இல. 202, செட்டியார் தெரு, கொழும்பு - 11, இலங்கை, தொ.பே.: 2
கிளைகள் : 340, செட்டியார் தெரு, கொழும்பு 11 தொ.பே.: 2395665
இல. 309 A-2/3, காலி கொழும்பு 06
தொ.பே.:4-55775,
பதிய ெ
புத்தகங்களின்பயர் | பதிப்பாசிரியர்
இதுவொரு தங்க நூல்
மருதூர் ஏ. மஜீத்
இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்
ந.இரவீந்திரன்
தரிசனம்
ஆர். பிரபாகன்
காவி நகரம்
எ. நஸ் புள்ளாவீர
வெந்து தணிந்தது காலம்
மு. சிவலிங்கம்
என் எல்லா நரம்புகளிலும்
ஜே.பிரோஸ்கான்
பூச்சியம் பூச்சியமல்ல
தெணியான்
ஒரு சென்ரி மீட்டர் சிரிப்பு பத்து செகண்ட் கோபம்
ஜே.பிரோஸ்கான்
சிறகடிக்கும் சிறுகதைகள்
சித்திரவேல் அழகே
செவியோரம் கவியோசை
சித்திரவேல் அழகே

GHAM BOOK DEPOT
, SELLERS & PUBLISHERS OF BOOKS, RS AND NEWS AGENTS.
புத்தகசாலை
குமதியாளர்கள், நூல் வெளியீட்டாளர்கள் மை : !422321. தொ. நகல்: 2337313 மின்னஞ்சல் : pbdho@sltnet.lk
வீதி,
இல 4A, ஆஸ்பதிரி வீதி, பஸ் நிலையம், யாழ்ப்பாணம்.
2504266
பரவுகள்
|
பதிப்பகம்
விலை
மருதூர் வெளியீட்டு பணிமனை
650.00
புதிய பண்பாட்டுத் தளம்
400.00
எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ்
300.00
பேனா பப்ளிகேஷன்ஸ்
400.00
மலைநாட்டு எழுத்தாளர் மன்றம்
250.00
பேனா பப்ளிகேஷன்ஸ்
200.00
நியூ செஞ்சரி புக் ஹவுஸ்
600.00
பேனா பப்ளிகேஷன்ஸ்
250.00
ஸ்வரன்
100.00
ஸ்வரன்
120.00
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (168)

Page 9
நான்கு புறமும் மதில்களால் சூழப்பட்டிருந்த அந்த வீடு புறநகர்ப் பகுதியொன்றில் அமைந்திருந்தது. வீட்டின் அமைப்பும் அதன் சுற்றுப்புறச் சூழலும் அங்கு வாழ்ந்து கொண்டிருப்போரின் பிரமாண்டத்தை எடுத்துக் கூறுவன போல் அமைந்திருந்தன. பல சமூக நல அமைப்புக்களில் அங்கம் வகித்து, தன்னைப் பிரபல்யப் படுத்திக் கொண்டிருந்த சமூகஜோதி நசீமா ஹசீம் அவர்களே அங்கு குடியிருந்தார். வசீகரமான தோற்றம், பேச்சாற்றல், பிரச்சினைகளை அணுகி அவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்தல் என்பவற்றின் மூலம் சிறந்த ஆளுமையொன்றை தனக்குள் வளர்த்துக் கொண்டிருந்த அவர் அவ்வமைப்புக்களில் முக்கியமான பல பதவிகளை வகித்துக் கொண்டிருந்தார். அதுமட்டுமல்ல சமூக,
அரசியல், மதம் சார்ந்த பல பிரமுகர்களுடன் அவருக்கு நெரு ங க ய
வரை
தொ டர் பு க ளு ம இருந்தன. எனினும் அப் பிரமு கர்களை மேடைகளுக்கு அழைத்து பாராட்டி, பொன்னாடை போர்த்தி, கெளரவிப்பதன் மூலம் தனது பல தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதாக அவருக்கெதிராகச் சில குற்றச் சாட்டுகளும் இருக்கவே செய்தன.
நசீமா ஹசீமின் கணவர் ஹசீம் இலங்கை ஆசிரியசேவை தரம்1இல் சேவையாற்றி விட்டு தற்போது ஓய்வு பெற்றவராக இருந்தார். அவர்கள் இருவருக்கும் இடையே பத்து வருடத்துக்கும் மேற்பட்ட வயது வித்தியாசம் இருந்தது. தற்போதைக்கு குடும்பத்தின் ஆட்சி அதிகாரம் நசீமா ஹசீமின் கைவசமே தங்கியிருந்தது. அவர்களது மகன் அம்ரி பல்கலைக்கழகமொன்றில் கல்வி கற்றுக்கொண்டிருந்தான். மகள் பல்கலைக்கழகமொன்றில் கல்வி கற்றுக் கொண்டிருந்தாள்.
அன்றொருநாள்
மப்பும்
மந்தாரமும் ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (168)

நிறைந்த ஒரு மாலைப் பொழுதில் ஹசீம் அன்றைய பத்திரிகையொன்றை எடுத்து வாசித்துக் கொண்டிந்தார். அப்போது தனது தாயாருடன் தொலைபேசி உரையாடல் ஒன்றில் ஈடுபட்டிருந்த நசீமா ஹசீம் அது
முடிந்ததும் ஹசீமுக்குக் குரல் கொடுத்தார்.
"ஹசீம் இன்னும் கொஞ்ச நேரத்தில் உம்மா இங்க வந்திடுவா. அதனால உம்மா இங்கிருந்து போகும் வரக்கிம் ஒங்கட இருப் பிடத்த வேற எங்க சரி வச்சிக்கொள்ள இருக்கும்.”
"அதெப்பிடி நசீமா வேற எங்க சரி வச்சிக் கொள்ளுற? இது மழ காலமாச்சிது. கூதல் ஒரு பக்கம். நெளும்பு மறுபக்கம்.”
"ஹசீம், ஊட்டுள மூனு ரூம்தான் இருக்கு. ம க ண ட ரூமக் குடுக்க அவன்
விரும்ப மாட்டான். மகளும் அவட ரூமக் குடுக்க விரும்ப மாட்டா. (அதனால நாங்கதான் விட்டுக் குடுக்க வேணும்.) ஏதோ எங்களப் பாத்து சுகம் விசாரிச்சிட்டுப்
போக உம்மா இங்க வாறா. ஏழெட்டு நாளைக்கித்தான் உம்மா இங்க இருப்பா.”
"நசீமா சரி, சரி. வேற என்னதான் செய்ய? தலெக்கி மூத்த மனிசருட மனச நோகிச்சவும்
ஏழா.”
ஹசீம் வேறு வழியின்றி அவ்வாறு சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்து செல்ல, நசீமாவிடம் இருந்து அவருக்கு இன்னுமொரு கட்டளை பிறந்தது.
"ஹசீம், ஒங் களுக்கு லிஸ்ட் ஒண்டு தாரேன். கோவிச்சுக் கொள்ளாம நீங்க இப்ப ரவுனுக்குப் பெய்த்து அதிலுள்ள சாமா னுகள் வாங்விட்டு வர வேணும்.”
சிறுகதை
உ. நிசார்

Page 10
“நசீமா , இந்த அந்தி படுற நேரம். அதுவும் மழ வரப் போற நேரம், நான் இப்ப ரவுனுக்கும் போக வேணுமா?”
"ஐயோ ஹசீம், இதென்ன கத கதைக்குரிங்க? நீங்களும் பென்ஷன் எடுத்த நாளேலிருந்து ஊட்டுள்ளுக்கு அடபட்டு, வேலவெட்டி ஒண்டுமில்லாமத் தானே இருக்குரிங்க. அதனால இந்த அந்திபடுற நேரத்தில கையக்கால வீசி, நடந்து பெய்த்து, ரவுனுல இருந்து சாமான் சட்டிகள் தூக்கிக் கொண்டு வாங்களே. அது ஒங்களுக்கு ஒரு
எக்சைசாகவும் இருக்கும்.”
"சரி, சரி. அப்ப காசையும் லிஸ்டையும் இங்கால தாங்கோ.”
நசீமாவிடம் இருந்து காசையும் சாமான் பட்டியலையும் பெற்றுக் கொண்ட ஹசீமுக்கு அவரிடம் இருந்து இன்னுமொரு கட்டளையும் பிறந்தது.
"ஹசீம் இன்னுமொரு விஷயமுமிருக்கு. உம்மா வருகிறத்துக்கு மொதல்ல ஒங்கட தலயண, பெட்ஷீட் எல்லாத்தயும் ஒங்களுக்குத் தேவயான எடமொண்டுல கொண்டு பெய்த்து வச்சிக் கொள்ளுங்களே. நான் இப்ப உம்மாக்கு இந்தக் கட்டில ரெடி பண்ணி வச்ச வேணும்.”
இ-. சரி, சரி ' இருக்கு ,

(இது
இ., "11:11:itii!"
"இதெல்லாம் ஏண்ட தலே நசீபு.” “என்ன சென்னீங்க?”
"நான் என்னதான் செல்ல? ஏண்டதலயண, பெட்ஷீட் எல்லாத்தயும் எனக்குத் தேவையான எடமொண்டுல கொண்டு பெய்த்து வச்சிக் கொள்ளுறேன் என்டுதான் சென்னேன்.”
பிரச்சினைகளை
வளர்த்துக் கொள்ள அவர் விரும்பா ததால் உடனே அவற்றை எடுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தார். அப்போது அம்ரி அங்கே வந்து சேர்ந்தான்.
"என்ன வாப்பா, என்ன இது? தலயண, பெட்ஷீட் எல்லாத்தையும்
எடுத்துக் கொண்டு வீட்ட விட்டு எங்கசரி போகப் போறீங்களா?” "நான் எங்க போக? இந்த வயசு காலத்துல் என்னப் பொறுப்பெடுக்க யார் இருக்காங்க? இன்னம் கொஞ்ச நேரத்துல உம்மம்மா இங்க வரப் போறாவாம். அவவுக்கு ஏண்ட கட்டில குடுத்துப் போட்டு, நான் இது எனக்கேத்த எடமொண்டத் தேடிக் கொண்டு போறேன்.”
“வாப்பா, நீங்க எங்கயும் போகத் தேவ இல்ல. ஏண்ட கட்டில் இருக்கு. அதுல படுங்கோ. நான் செட்டீல படுக்குறேன்.”
"அம்ரி, உம்மம்மா ஏழெட்டு நாட்களுக்கு இங்க தங்குவாவாமே. ஒனக்கு ஏழெட்டு நாட்களுக்கு செட்டீல படுக்க ஏழுமாகுமா?”
"வாப்பா, உம்மம்மா ஏழெட்டு நாட்களுக்கு அல்ல, ஒரு மாசம் இங்க தங்கினாலும் பரவாயில்ல. எனக்கு செட்டீல படுக்க ஏழும். நீங்க அதப்பத்திக் கவலப்படத் தேவ இல்ல.”
"அம்ரி, நீ கெம்பஸ்ல படிச்சிற புள்ள. ஒனக்கு எவளவு விஷயம் படிச்சிறத்துக்கு இருக்கும். வாப்பா பென்ஷன் எடுத்துப் போட்டு ஊட்டுல சும்மா இருக்கிற மனிஷன். அவருக்கு நல்லா செட்டீல படுக்கலாம். நீ ஓண்ட ரூம்ல படுத்துக்கோ.”
“உம்மா, நான் ஒரு மொற ஒங்களுக்குச் செல்லிட்டேன். வாப்பா ஏண்ட ரூம்ல படுக்கட்டும். நான் செட்டீல படுக்கிறேன்.”
அவன் தனது தந்தையிடம் இருந்து தலையணை, பெட்ஷீட் என்பவற்றை வாங்கி,
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (168)

Page 11
97
அவற்றைத் தனது அறைக்குள் கொண்டு போய் வைத்தான்.
"நசீமா , பாத்தீங்களா? அம்ரி ஏண்ட மகன். உம்மா, வாப்பாவுக்கு செய்ய வேண்டிய கடமகள் நான் அவனுக்குச் சின்ன வயசில் இருந்தே படிச்சிக் குடுத்திருந்தேன். அதெல்லாம் இப்ப வேல செய்யுது."
"மகனுக்கு ஐசு வச்சி வச்சி அவண்ட படிப்பப் பாழாக்குறது ஒங்களுக்கு இப்ப வேலயாப் பெய்த்திட்டுது."
"சரி, நசீமா சரி. அப்ப நான் ரவுனுக்குப் பெய்த்து இந்தச் சாமான் சட்டிகள் வாங்கிட்டு
வாரேன்."
"வாப்பா, இந்த அந்தி படுற நேரத்தில் என்ன சாமான் சாட்டிய வாங்குறத்துக்கு ரவுனுக்குப் போறீங்க?”
"மகன், உம்மம்மா வாராவல்யா. அதனால அவவ நாங்க நல்லா கவனிச்சி அனுப்ப இருக்குமே. அதுதான் உம்மா இது லிஸ்ட் ஒண்டு தந்திருக்கிறா. இந்தச் சாமானுகள்
வாங்கி வரச் செல்லி.”
“உம்மா, இங்க வாங்கோ. அந்த டிரைவர் நானாகிட்ட இந்த லிஸ்ட்டக் குடுத்து ஒங்களுக்குத் தேவையான சாமானுகள் அழப்பிச்சி எடுக்க இருந்திச்சிதே.”
"ஐயோ அம்ரி, அந்த டிரைவர் புள்ள குட்டிக்காரன். அவண்ட பொண்சாதி பாவம். அவனுக்கு ஊட்டுக்குப் போனா ஆயிரம் வேல வெட்டி இருக்கும். வாப்பா ஊட்டுல சும்மா இருக்கிற மனிஷன்தானே. ரவுனுக்குப் பெய்த்து இந்தச் சாமான் சட்டிகள் எடுத்து வாரது அவருக்கு பெரியதொரு வேலயா?”
"உம்மா நான் இது சென்னது பெரிய வேல , சின்ன வேலயப் பத்தி அல்ல. அந்தி படுற நேரத்தில், அதுவும் மழ காலத்துல வாப்பாவ ரவுனுக்கு அனுப்புறது பிழ எண்டுதான் சென்னேன்.”
“வாப்பாவுக்கு வக்காலத்து வாங்குறது மகனுக்கு இப்ப வேலயாப் பெயித்திட்டுது. வாப்பா திருந்தவும் இல்ல. இப்பிடியே போனா மகனும் திருந்த மாட்டாரு போல.”
"வாப்பா, இந்த அந்திபட்ட நேரம் நீங்க ரவுனுக்குப் போகத் தேவ இல்ல. அந்த லிஸ்ட்டையும் காசையும் இங்கால தாங்கோ. நான் பெய்த்து அந்தச் சாமான்கள் வாங்கிட்டு
வாறேன்.”
தனது தந்தையிடம் இருந்து பணத்தையும் ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (168)
* * * * * */i
28
4 * * * *
|

சாமான் பட்டியலையும் பெற்றுக் கொண்ட
அம்ரி அங்கிருந்து வெளியேறி விட்டான்.
"ஹசீம், அப்ப ஒங்களுக்கு வேறொரு வேல இருக்கு. ஏண்ட கையெழுத்த விட ஒங்கட கையெழுத்து அழகா இருக்கிறத்தால லிஸ்ட் ஒண்டு தாரேன். அதில் உள்ள பேர்கள் இந்த இன்விடேஷன் கார்ட்களில் நீங்க எழுதித் தர வேணும்.”
அடுத்த வாரம் நடைபெறவிருந்த சர்வதேச மகளிர் தின விழா அழைப்பிதழ்களையும் பெயர் பட்டியல்களையும் நசீமா கொண்டு வந்து ஹசீமிடம் கொடுக்க, வேண்டா வெறுப்புடன் அவற்றைப் பெற்றுக் கொண்ட அவர் தனது பணியை ஆரம்பித்தார். அப்போது நசீமாவின் தாயார் குல்தூம் நாச்சியா அங்கே வந்து விட்டார். தாயாரைக் கண்டதும் நசீமாவுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.
“உம்மா ரெண்டொரு நாட்களுக்கு முந்தி நீங்க எனக்கு அறிவிச்சிருந்தா நான் ஏண்ட காரையே அனுப்பி வச்சிருந்தீப்பேனே."
"சரி, சரி. மகள் நான் இப்ப வந்திட்டேன் தானே . மறுமகன் எங்க? பேரப்புள்ளகள் எங்க? ஒருத்தரையும் காண இல்லயே?”
"அவர் அங்கால் சின்ன வேலயொண்டு. மகன் ரவுனுக்குப் பெய்த்திருக்கிறாரு. மகள் இப்ப வந்திடுவா. ஹசீம், உம்மா வந்திட்டா. இங்கால் வந்து காருக்குள்ள இருக்கிற உம்மாட பேக்குகள் எடுத்திட்டு வாங்களே."
செய்து கொண்டிருந்த வேலையை இடை நிறுத்திய ஹசீம் வெளியே சென்று தனது மாமியார் கொண்டு வந்திருந்த பேக்குகளை எடுத்துக் கொண்டு உள்ளே வந்தார்.
"மறுமகன் எப்பிடி சொக துக்கங்கள்? பென்ஷன் எடுக்கிறத்தையும் எடுத்திட்டீங்க. இப்ப வேல வெட்டி ஒண்டும் இல்லாம ஊட்டுள சும்மா காலத்தக் கழிச்சிறீங்க போல.”
"மாமி. நான் நாப்பது வருஷம் ஒழச்சது போதாதா? நீங்க எனக்கு இன்னும் ஒழச்சச் செல்லுறீங்களா?”
“மறுமகன், ஆம்புள எண்டா கடசி மூச்சுவர ஒழச்ச வேணும். அப்பிடியெண்டாத்தான் அந்த ஆம்புளக்கி கவுரவமா ஊட்டுல வாழ முடியுமாக இருக்கும். நான் ஏண்ட அனுபவத்தச் சென்னேன். அவளவுதான்.”
அப்போது அவ்விடத்துக்கு அம்ரி வந்து சேர்ந்தான்.
"ஹாய், உம்மம்மா வந்திட்டீங்களா?” “என்னப் பார்க்க ஏண்ட பேரப்புள்ள வர

Page 12
இல்ல. அதனால பேரப்புள்ளய பார்த்திட்டு போக உம்மம்மா வந்திருக்கிறா. அது சரி மகன் ஒங்கட படிப்பு விஷயமெல்லாம் எப்பிடி போகுது?”
“உம்மம்மா அதெல்லாம் ஒழுங்காப் போகுது.”
"வாப்பாவப் போல வாத்தித் தொழில் எடுக்காம நல்லாப் படிச்சி பெரிய உத்தியோகம் ஒண்டு எடுக்க இப்பவே மனசில வச்சிக் கொண்டு படியுங்கோ.”
"உம்மம்மா, வாப்பா வாத்தித் தொழிலச் செஞ்சி எங்களுக்குத் தின்னத் தர இல்லயா? உடுக்கத் தர இல்லயா? படிப்பிச்ச இல்லயா? வாப்பா எங்களுக்கு எந்தக் கொறயும் வச்ச இல்ல.”
அப்போது அவ்விடத்துக்கு அம்ரா வந்து சேர்ந்தாள்.
“உம்மம்மா, தங்கச்சி வந்திட்டாதானே. எனக்கு படிக்கிறதுக்கு அதிகமான விஷயங்கள் இருக்கு. நான் அப்ப போறேன். தங்கச்சியோட நீங்க கதச்சிக் கொண்டு இரீங்கோ.”
அம்ரி அங்கிருந்து அகன்று செல்ல, நசீமா தனது தாயாருக்குத் தேநீர் எடுத்துக் கொண்டு வந்தாள்.
"நசீமா, அம்ரி அவன்ட வாப்பாக்கு ஏத்த மகனாக இருக்கிறான். வாப்பாவும் மகனுக்கு ஏத்த வாப்பாவாக இருக்கிறாரு போல. உம்மாமாரு , ஆம்புளப் புள்ளகள் வாப்பாட பக்கத்துக்கு சார்ந்து போக உடப்படாது. அது பெறகொரு காலத்துல உம்மாமாருக்கு பிரச்சினகள் ஏற்படுத்திப் போடும். நீ மகண்ட விஷயத்துல கவனமாக இருந்து, அவன ஓண்ட பக்கத்துக்குச் சார்ந்த புள்ளயா வளர்த்துக் கொள்ளப் பாரு.”
"நான் ஒங்கட மகள். அவன வாப்பாட பக்கத்துக்குச் சார்ந்து போக நான் விடுவேனா? இருந்து பாருங்களே.”
"உம்மா, நானா அங்கால இருக்கிறாரு. நீங்க பேசுறது அவருக்குக் கேட்டா பலாய் ஒண்ட இழுப்பாரு. அதனால கவனமாகப் பேசுங்கோ."
"ஆம்புளகளுக்கு இப்படிப் பயந்தா எப்பிடி மகள் பொம்புலகள் உலகத்துல வாழுற? பொம்புலகள்ட உடம்புல ஓடுற ரத்தம் எப்பவும் சூடாக இருக்க வேணும். அது எப்ப குளுந்து போகுமோ அப்ப அவ ஆம்புலக்கி அடிமயாப் போக வேண்டி வரும். அதெல்லாம் எங்க என்னோட? நீ உம்மம்மாவோட ஊர்
பக்கத்துக்கு ஆம்புள இருக்கிறார்
10

புதினங்களப் பத்தி கொஞ்ச நேரம் கதச்சிக் கொண்டு இருந்து போட்டு, படிப்பு வேலகளக் கவனி. எனக்கும் நெரய வேலவெட்டிகள் இருக்கு.”
அதன் பிறகு நசீமா நேரே தனது கணவனிடம் வந்தார்.
“ஹசீம், மாதர் சங்க வேலகள் எக்கச் சக்கமா பாக்கியா இருக்கு. அதனால இண்டிரவுச் சாப்பாட்ட நாங்க கடயாலதான் வாங்க வேணும். இன்விடேஷன் கார்ட் எழுதுற வேல முடிஞ்சதும் நீங்க கடைக்குப் பெய்த்து சாப்பாட்ட வாங்கிக் கொண்டு வாங்கோ. ஒங்கள சாப்பாடு வாங்க அனுப்பினது மகனுக்குத் தெரிய வந்தா அவன் என்னோட சண்டக்கி வருவான். அதனால அவனுக்குத் தெரியாமத்தான் நீங்க கடக்கிப் போக வேணும். தேவயான காசு இங்க இருக்கு.”
சாப்பாட்டுக்குத் தேவையான காசை எண்ணிக் கொடுத்து விட்டு, தனது இருக்கையில் வந்து அமர்ந்த நசீமா, சர்வதேச மகளிர் தின விழாவில் தான் சமர்ப்பிக்க எடுத்துக் கொண்ட 'பெண்களுக் கெதிரான வன்முறைகள்' எனும் தலைப்பிலான கட்டுரையை எழுத ஆரம்பித்தார். ஆனாதிக்கம், மாமியார் கொடுமை, பெண்களை வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கு அனுப்பி வைத்தல், சீதனக் கொடுமை, பாலியல் வல்லுறவு, போதிய காரணமின்றி பெண்களை விவாகரத்துச் செய்தல், ஆண்கள் தொழிலுக்குப் போகும் போது பெண்கள் வீடுகளில் தனிமைப் படுத்தப் படுதல், ஆண்கள் இரவு நேரங்களில் கால தாமதம் செய்து வீட்டுக்கு வருகை தருதல், ஓய்வு கொடுக்காது பெண்களை வீட்டு வேலைகளுக்குப் பயன்படுத்துதல், ஆண்களின் போதைப் பழக்கம்.. என அங்குள்ள விடயங்கள் நீண்டு கொண்டு போயின. அவை அனைத்தும் பெண் விடுதலைக்குச் சார்பானதாகத் தென்பட்டாலும் அவற்றுள் சில ஆண்களுக்கு எதிராக பெண்களைத் தூண்டி விடுவன போலவும் இருந்தன.
கட்டுரையை எழுதி முடித்த நசீமா அதைப் பல முறை செவ்வை பார்த்தார். அங்கு வரும் அனைத்து விடயங்களும் ஒழுங்காக ஒன்று சேர்க்கப்பட்டிருப்பதைப் பார்க்க அவருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. சிறிது நேரம் தனது கட்டுரையில் மெய்மறந்திருந்த நசீமா அவ்வாரத்துக்குரிய நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பதில் ஈடுபட்டார்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (168)

Page 13
அ
தா
அ
;ெ
வ
ரீத்
க!
சர்வதேச மகளிர் தின விழாவுக்கு வரவிருக்கும் அதிதிகளுக்கு அழைப்பிதழ் களைக் கொடுத்தல், அன்றைய தினம் மேடையில் வைத்து வாழ்வாதாரமற்ற பெண்களுக்கு உதவி
செய்வதற்காக அனுசரணையாளர்களைக் கண்டுபிடித்தல், மாதர் சங்கத்துக்கு புதிதாக அங்கத்தவர்களைச் சேர்த்துக் கொள்ளல், விவாகரத்துப் பெற்றுக் கொள்ள இருக்கும் பெண்களுக்கு சட்ட ஆலோசனை பெற்றுக் கொடுத்தல் என அந்நிரல் நீண்டு கொண்டு போனது.
அப்போது
ஹசீம் உணவுப் பார்சல்களுடன் வந்து சேர்ந்தார். அதன் பிறகு எல்லோருமாக சேர்ந்து உணவருந்திவிட்டு படுக்கைக்குச் சென்று
விட்டனர்.
நசீமாவுக்கு அன்றிரவு தூக்கம் வரவில்லை. அடுத்த வாரம் பூராக தனக்கிருக்கும் ஓய்வில்லாத உழைப்பின் மூலம் தனக்கு ஏற்படப் போகும் பேரையும் புகழையும் நினைக்கும்போது அவருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.
காலம் வேகமாகச் சுழன்றது. அவ்வருட சர்வதேச மகளிர் தின விழாவுக்குரிய சகல ஏற்பாடுகளும் நசீமாவின் பொறுப்பிலேயே நடைபெற்றன. அதற்குப் பலர் உதவி செய்ய, குறிப்பிட்ட தினம் மாலை ஐந்து மணியளவில் கோலாகலமாக விழா ஆரம்பமாகியது. அதிதிகளின் வருகை தாமத மானாலும் பார்வையாளர்களால் மண்டபம் நிறைந்திருந்தது. நகரெங்கும் இடையிடையே பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கிகள் மூலம் விழா நிகழ்ச்சிகள் ஒலித்துக் கொண்டிருந்தன.
பார்வையாளர்கள் மத்தியில் நசீமாவின் தாயாரும், மகள் அம்ராவும் அமர்ந்து உற்சாகமாகக் காணப்பட்டனர். தலைமை உரை, வரவேற்புரை, ஒரு சில அதிதிகளின் பேச்சு என்பவற்றுக்குப் பிறகு நசீமா தனது ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பிப்பதற்கு மேடையில் சமூகம் கொடுத்தார். அப்போது பார்வையாளர்கள் மத்தியில் பலத்த கரகோஷம் ஒன்று எழுந்தது. வீட்டில் இருந்த ஹசீமுக்கு நகரில் பொருத்தப்பட்டிருந்த ஒலி பெருக்கி ஒன்றினூடாக நசீமாவின்
த6
ை கெ
வ
ப
மு
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (168)

-- கட
பச்சு தெளிவின்றிக் கேட்டுக் கொண்டிருந்தது.
தை உள்வாங்கிக் கொள்வதற்கு அவருக்குத் தவையொன்று இருந்தாலும் உடல் அசதி தற்கு இடங் கொடுக்கவில்லை. அம்ரியும் வரத் மதமானதால் தனிமையும் அவரை வாட்டியது. தனால் அவர் தனது படுக்கையில் வந்து சாய்ந்து காண்டார். அப்போது என்றுமில்லாதவாறு
வரது இடது கை இலேசாக வலி எடுக்க ரம்பித்தது.
'எதுக்கும் பணடோல் ரெண்டப் போட்டுக் காண்டு படுத்தா எல்லாம் சரியாயிடும்.'
ஆனால் அவரால் எழுந்து நிற்க டியவில்லை. இடது கை வலி நெஞ்சையும் ஆக்கிரமித்திருந்தது.
நசீமா தனது கட்டுரையை தொடர்ந்து ரசித்துக் கொண்டிருந்தார்.
"ஆண்கள் இரவு நேரங்களில் தாமதமாகி ட்டுக்கு வருவது, பெண்களை உடல், உள யொகப் பாதிப்படையச் செய்வதனால் அதுவும் பண்களுக்கெதிரான ஒரு வன்முறையாகவே
நதப்பட வேண்டியுள்ளது."
ஹசீமுக்கு நெஞ்சுவலி அதிகரிக்க, அவர் லையணையொன்றை எடுத்து அதை நெஞ்சில் வத்து அழுத்தியவாறு நசீமாவின் குரலை சவிமடுக்க முயற்சி எடுத்தார்.
A அறிஞர் அ. முகம்மது சமீம்
அவர்களின் மறைவு ரபல மார்க்சிய ஆய் எளரும் அறிஞரும் ன் னுாலாசியருமான லாபூஷணம் அ. கம்மது சமீம் அவர்கள் மீபத்தில் அமரரானார். மன்னாரின் பிரிவால் வாடும் உற பனர்கள் இலக்கிய நெஞ்சங்கள் தகியோரின் துயரில் பங்கு கொண்டு தானம் கண்ணீர் அஞ்சலி செலுத்து
றது.

Page 14
ஒடுக்கப்பட்டே ஓரங்கட்டப்பட்ட இலக்கி
ஒடுக்கப்பட்டோர், ஓரங்கட்டப் பட்டோர், (Marginalized) மற்றும் சமூக ஒதுக்கலுக்கு உள்ளானவர்கள் (Social Exclusion) தொடர்பான இலக்கியங்களும் ஆய்வுகளும் உலகமயமாக்கல் என்ற பெருங் கவிப்பையும் மீறி
மேலெழத் தொடங்கியுள்ளன. உலகம் தழுவிய பெரும் சுரண்டல் வலையமைப்பு பண்பாடுகளின் பன்மை நிலை களையும் மீறிப்பெருங் கவிப்பை ஏற்படுத்தி வரும்
சூழலில், சிறுபான்மையினரின் குரல்கள் முன்னரிலும் விசை கொண்டெழும் சமூகத்தருக்கம் நீட்சிகொள்கின்றது.
ஓரங்கட்டப்பட்டவர்கள் மற்றும் சமூக ஒதுக்கலுக்கு உள்ளானவர்கள் என்ற கருத்தாக்கங்கள் பிரான்சிய மார்க்சியப் பின்புலத்தில் உருவாக்கம் பெற்றன. மக்களை விளிம்பு நிலைப்படுத்தல் சமூகத்தின் அதிகார மேலாதிக்கத்துடன் தொடர்புடையது.
பேரா. சபா ஜெயராசா

ரர் மற்றும் டோரின் ரம்
அதிகார வலுவைக்கட்டிக்காப்போர் தமக்கு எதிரான கருத்துக்களை ஓரங்கட்டிவைக்கும் செயற்பாட்டைச் சாதுரியமாக முன்னெடுப்பர்.
தொழிலாளர்கள், சிறுபான்மையினர், சாதிய அடுக்கிலே தாழ்த்தப்பட்டோர், வறுமைக்குள் சிக்கிக் கொண்டோர், சமூகமேலடுக்கைச் சாராத பெண்கள், மாற்றுத் திறனுடையோர் என்போர் மட்டுமல்லர், கல்வி நிலையில் தாழ்ந்தோரும் ஓரங்கட்டப்படும் மேலாதிக்கம் பல நிலைகளிலே வெளிப்பாடு கொள்ளல் சுட்டிக்காட்டப்படுகின்றது.
ஓரங்கட்டப்பட்டோர் உளவியல் நிலை யில் அனுபவிக்கும் தாக்கங்கள் கலை இலக்கிய ஆக்கங்களுக்குப் பலத்தையும் வளத்தையும் வழங்குகின்றன. அவற்றை அடியொற்றியே ஒடுக்கப்பட்டோர் இலக்கியம், சிறுபான்மையினரின் இலக்கியம், கருமை இலக்கியம், தலித் இலக்கியம், பெண்ணிய இலக்கியம், மாற்றுத்திறனாளிகளின் இலக்கி யம் முதலியவை அழகியல் வலுவைப் பெற்றுக்கொள்கின்றன.
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஓரங்கட்டப்பட்டவர்களின் பட்டியலில் பிறி தொரு சாராரும் உள்ளடக்கப்பட்டனர். மிசேல் பூக்கோவின் எழுத்தாக்கங்களில் அந்தக் கருத்து வலியுறுத்தப்பட்டது. அதாவது, பாலியல் நிலையில் மாற்று நடத்தை கொண்டோரும் சமூக ஒதுக்கலுக்கு உள்ளாகும் அவல நிலையைத் தமது கண்ணோட்டத்தில் அவர் வலியுறுத்தினார்.
சமூக வரலாற்றில், 'மாற்றுச் சிந்தனைகளை' முன்வைத்தோரும் மேலாதிக் கத்தினால் ஒதுக்கிவைக்கப்பட்ட சம்பவங்கள் உண்டு. அவ்வகை எழுத்தாக்கங்களும்

Page 15
இலக்கியங்களும் வரன்முறையான கற்பித்தலில் இருந்து தவிர்க்கப்பட்டன. உதாரணமாக கனகி புராணம் வரன்முறையான கல்வியில் சேர்க்கப்படாது ஒதுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஓரங்கட்டப்படுதல் பல்வேறு உளவியல் தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. தனிமைப்பட்டு ஒதுங்குதல், சமூகப்பதகளிப்பு, (Social Anxiety) மனவழுத்தம், தாழ்நிலையில் உள்ள தற்கணிப்பு, சமூக நிலையில் அங்கீகாரம் பெற முடியாத பதற்றம், முதலியவை, நேர் நிலையிலும், எதிர் நிலையிலும் இலக்கிய வடிவெடுக்கின்றன.
நேர்நிலையில் ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு வலுவூட்டலும் கலை இலக்கிய வழிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமது ஆற்றல்களையும் திறன்களையும் தாழ்வாக மதித்தலை முறியடிக்கும் ஒடுக்குமுறை நீக்கத்துக்கான அரசியலும், கல்வியும் கலை இலக்கியங்களும் எழுகின்றன. 'ஒடுக்கப்பட்டோர் அரங்கு' என்ற தனிவடிவம் வளர்ச்சியடைந்துள்ளது. இந்தியச்சுசூழலில் தலித் இலக்கியம் தனித்தவடிவமாக வலுப்பெற்றுள்ளது. 'கருமை இலக்கியம்' ஆங்கில இலக்கியப்பரப்பில் தனித்ததுறையாக மேலெழுந்துள்ளது.
புதிய கருத்து நிலை வளர்ச்சியின் நீட்சியில் 'விடுதலை உளவியல்' (Liberation Psychology) என்ற புதிய வடிவம் தோற்றம் பெற்றுள்ளது. மரபு வழி உளவியல் ஒடுக்கப் பட்டோரின் உளவியலை விளக்கத்தவறிவிட்டது என்ற திறனாய்வுடன் விடுதலை உளவியல் மேலெழுந்துள்ளது. தென்- அமெரிக்காவின் ஒடுக்குமுறைச்சூழலில் 1970ஆம் ஆண்டில் விடுதலை உளவியல் தோற்றம் பெற்றது. மார்க்சியக் கருத்தியலை உள்வாங்கி இக்னாசியோ மாட்டின் பரோ என்பவர் அதனைத் தோற்றுவித்தார். விடுதலை உணர்வுக்கு வலுவூட்டலை அது சிறப்பார்ந்த
நோக்காகக் கொண்டுள்ளது.
- தமிழ்ச் சூழலிலும் உலக நிலைவரங்களிலும் நாட்டார் கலை இலக்கியங்கள் ஒடுக்கப்பட்டோர் அல்லது புறம் தள்ளப்பட்டவர்களின் குரல் களாகவே எழுந்து வந்துள்ளன.
செவ்வியற்கலைகளும் இலக்கியங்களும் ஒடுக்குமுறையினதும் மேலாதிக்கத்தினதும்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ரே 2014 (168)

'று 2 இல்லெக்சி
வடிவங்களாகவே இருந்து வந்துள்ளன. பெரும்பாலான செவ்வியல் இலக்கியங்கள் நிலமானிய சமூக அமைப்பின் மேலாதிக்க விழுமியங்களையும் தொன்மையான வணிகர் களின் மேலாதிக்கக்கருத்தியல் களையுமே சுமந்துள்ளன,up>>
கல்விச் செயற்பாடுகளும் சமூக அடுக் கமைவுடன் தொடர்புபட்டே காணப்பட்டன. வரன் முறையான எழுத்தறிவு சமூகத்தின் உயர்ந்தோருக்குரியதாயிற்று.
வரன்முறை சாரா நாட்டார் அறிவுக்கையளிப்பு சமூக அடுக்கமைவின் தாழ்ந்தோருக்குரியதாயிற்று. அந்நிலையில் மேலோர் என்போரும் ஒதுக்கப் பட்டோரும் தத்தமது சமூகத்தளங்களில் நின்று இலக்கியங்களைப் படைக்கலாயினர். உயர்ந்தோர் இலக்கியங்கள் எழுத்துவழியும், ஒதுக்கப்பட்டோர் இலக்கியங்கள் வாய்மொழி வழியும் மேலெழுந்தன.
நாட்டார் கலைகளில்
'நேரடி வெளிப்பாடுகளின் பரவல்' மிகையாக இடம்பெற்றது. மேலோங்கிகளின் கலைகளில் குறியீடுகளும், அலங்கார நுட்பங்களும் மிகுந்திருந்தன.
மேலோரின் கலை இலக்கியங்களை அடியொற்றியே அணி இலக்கணங்களும் அலங்கார சாஸ்திரங்களும் உருவாக்கப்பட்டன.
நாட்டார் கலை இலக்கியங்கள் அமைப் பியல் நோக்கில் பெருமளவு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதேவேளை எழுத்து வழி இலக்கியங்கள் அழகியல் நோக்கில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட அளவுக்கு நாட்டார் இலக்கியங்களின் சமூக அழகியற் பரிமாணங்களும் எதிர் ஒடுக்குமுறைப் பரிமா ணங்களும் ஆழ்ந்து தரிசிக்கப்படவில்லை. தமிழகச் சூழலிற் பேராசிரியர் வானமாமலை அவர்களே அத்துறையில்
கவனம் செலுத்தினார்.
ஒடுக்கப்பட்டோரதும் விளிம்பு நிலை யினரதும் இலக்கிய வடிவங்களுள் ஒன்றாக சுவர்க்கவிதை (Wall Poetry) அமைந்துள்ளது. தமது அமுங்கிய உணர்ச்சிகளை அவ்வப்போது சுவர்களிலே கவிதைகளாக எழுதும் மரபு வளர்ச்சியடைந்துள்ளது. வித்தியாசமான அனுபவங்களின் வெளிப்பாடுகள் சுவர்க் கவிதைகளிலே இடம்பெற்றுள்ளன. மரப் பலகைகளிலான
வீடுகளில்
வாழ்ந்த
13

Page 16
கர்
ஒடுக்கப்பட்டு புகலிடம் தேடியவர்கள் பலகைகளிலே குடைந்து எழுதிய கவிதைகள் பெறுமதிமிக்க வரலாற்று ஆவணங்களாகவும் காணப்படுகின்றன. ,
எதிர்விசைப்பு (Resistance) இலக்கியமும் ஒடுக்குமுறைக்கு எதிராகத் தோற்றம்பெற்ற வடிவமாகும். பலஸ்தீனிய இலக்கியச் சூழலில் அந்தக்கருத்தாக்கம் மேலெழுந்தது. பலஸ்தீனிய எழுத்தாளர் காஸ்ஸான் கனாபானி
அந்த எண்ணக்கருவை முன்வைத்தார்.
இஸ்ரேலியப் படைகள் ஜோர்டான் நதியின் மேற்குக் கரையோரத்தையும் காஸாப் பகுதியையும் கைப்பற்றின. அவ்வாறு கைப்பற்றப்பட்ட பிரதேசங்களையும் அயற் பிரதேசங்களையும் உள்ளடக்கிய புலத்தில் வாழ்ந்தோரால் உருவாக்கப்பட்டவை எதிர்விசைப்பு இலக்கியங்கள் என அடையாளப் படுத்தப்பட்டன.
ஆக்கிரமிப்பும் அழுத்தமும் மிக்க சூழலில் இருந்து மேலெழும் இலக்கியங்களிற் காணப்படும் எதிர்விசைப்பு உந்தலும், மொழி நடையும் ஏனைய இலக்கியங்களிற்காணப்படாத தனித்துவங்களுடன் மேலெழுந்துள்ளன. உலகில் விடுதலைப் போராட்டங்கள் எழுச்சி கொண்ட சூழலில் அவற்றோடு இணைந்ததாக எதிர்விசைப்பு இலக்கியங்கள் பரவலாக தோற்றம் பெற்றன. அந்த இலக்கியங்கள் மேலாதிக்கத்தைத் தகர்க்கும் உள்ளடக்கக் கனதியுடன் உலாவத்தொடங்கின.
மூன்றாம் உலக நாடுகளில் எதிர்விசைப்பு இலக்கியம் பலநிலைகளிலே தோற்றம் பெற்றுள்ளது.காலனித்துவத்துக்கு எதிரானவை, இன மேலாதிக்கத்துக்கு
எதிரானவை, சாதிய ஒடுக்குமுறைக்கு
எதிரானவை, உள்ளூர் முதலாளிய அழுத்தங்களுக்கு எதிரானவை, பெண்ணிய ஒடுக்கு முறைக்கு எதிரானவை என்ற பல நிலைகளிலே தோற்றம் பெற்றுள்ளன. அவை ஒவ்வொன்றும் தத்தமக்குரிய கருத்துவினைப்பாடுகளையும் சொல்லாடல்களையும் வேறு வேறுபட்ட அழகியல் நிலைவரங்களையும் கொண் டுள்ளன.
எதிர்விசைப்பு இலக்கிய அழகியலில் முரண்படும் கோலங்களையும் காணலாம். ஒருபுறம் அவற்றில் அழகியல் நிரவல்
14

மேலோங்கியிருக்கின்றன. இன்னொரு புறம் அழகியல் - குன்றிய வாய்பாடு தழுவிய சொல்லாடல்களுமாக இருநிலைக்கோலங்கள் காணப்படுகின்றன. - அதாவது நல்ல இலக்கியங்களும் தோற்றம் பெற்றுள்ளன. பொறிமுறையான வாய்பாட்டுவடிவங்களும் தோன்றியுள்ளன.
நிலைபேறான மொழிக்கோலங்களிலே தகர்ப்பை ஏற்படுத்துதல் எதிர்விசைப்பு இலக்கியங்களின் பிறிதொரு பண்பு. மொழிக்கட்டமைப்பு எப்பொழுதும் மேலாதிக் கத்துடன் தொடர்புடையதாகவே இருக்கும். பெண்ணிய ஆய்வாளர் இதனை விரிவாக விளக்கியுள்ளனர்.
ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் சொற்களைக் கேலிக்குரியதாக மாற்றியமைத்தலும் எதிர் விசைப்பு இலக்கியங்களிலே காணப்படும் பிறிதோர் அவதானிப்பாகும். யாழ்ப்பாணச் சமூகத்திலே காணப்படும் 'நயினர்' என்ற மேலாதிக்க எண்ணக்கருவை டானியல் தமது எழுத்தாக்கங்களில் கேலிக்குரியதாக வடிவமைத்திருந்தலைக் காணலாம்.
ஒடுக்குமுறையும் மேலாதிக்கமும் பல் வேறு நுண் அலகுகளுடன் தொழிற்பட்டுக் கொண்டிருக்கும். மேலாதிக்கம் செலுத்துவோர் மனித உடலைப் பணிந்து வாழச்செய்யும் 'பணிவுடலாக' மாற்றிக்கொண்டிருப்பர். அதாவது மேலாதிக்கத்துக்கு உட்படுவோரின் உடல் பணியவைக்கப்படும் உடலாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும். இதனை மிசேல் பூக்கோ தமது ஆய்வுகளிலே விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஒடுக்குமுறையினதும் மேலாதிக்கத்தினதும் நுண்ணிய அலகுகளைத் துளாவி எடுத்து வெளிக்கொண்டுவரும் கலைவீச்சு எதிர் விசைப்பு இலக்கியங்களில் இடம்பெற்ற வண்ணமிருக்கும்.
ஒடுக்குமுறை மற்றும் ஓரங்கட்டப்படுதல் தொடர்பான கலை இலக்கியங்கள் தமக்குரிய அழகியற் பரிமாணங்களை வெளிப்படுத்த தொன்ம நுட்பங்களைப் பயன்படுத்துதல் உண்டு. தொன்மங்களை மானிடப்படுத்திக் கதை கூறும் நுட்பத்தைத் தமிழில் புதுமைப்பித்தன் வலிதாக்கினார். பாஞ்சாலி என்ற தொன்மம் பாரதியின் சபதமாக மாற்றம் பெற்றது.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (168)

Page 17
மேலாதிக்கத்துக்கு எதிரான இயக்கத்தில் அண்மைக்காலமாகப் பிறிதொரு செயல் வடிவம் தோற்றம் பெற்றுள்ளது. அது வினைப்பாட்டு வாதம் (Activism) என்ற வடிவமாகும். கலை இலக்கியங்களை மாற்றத்துக்கான வினைப்பாடுகளுக்கு கருவி யாக்குதல் வினைப்பாட்டு வாதத்தில் வலியுறுத்தப்படுகின்றது.
சமகால உலக நிலைவரத்தின்படி நீதிக்காகப் போராடுவோரும் உளர் - அநீதிக்காகப் போராடுவோரும் உளர். ஐரோப்பியச் சூழலில் உருவாக்கம் பெற்ற அவ்வாறன முரணுறு வினைப்பாட்டுவாதம் இன்று உலகம் முழுவதும் பரவியுள்ளது.
அண்மைக்காலத்தைய ஆய்வாளர் வினைப்பாட்டு வாதத்தை ஒரு 'கைத் தொழில்' (Industry) என்றும் குறிப்பிடுகின்றனர். அரச சார்பு நிறுவனங்களும், அரசு சாரா நிறுவனங்களும்
இக் கைத்தொழிலில்
ஈடுபடுகின்றன. நீதிக்காகப் போராடும் வினைப் பாட்டு வாதிகளை ஒடுக்கிவிடும் செயற்பாடுகளும் உலக அரங்கிலே இடம்பெற்றுவருகின்றன.
ஆழ்ந்து நோக்கும் பொழுது, வினைப் பாட்டு வாதத்துக்கும் வர்க்க நிலைப்பாடுகளுக்கும் தொடர்புகள் இருத்தலைக் காணமுடியும். தொழிலாளர் வினைப்பாடுகளும், சுரண்டலுக்கு உள்ளாவோரின் இலக்கியங்களும் தீவிர வெளிப்பாடுகளைக் கொண்டவையாகவே இருக்கும். ஆனால் பின் நவீனத்துவம் அதனை வர்க்க நோக்கிலே தரிசிக்காது, உதிரியாகவும் தனிமனித நோக்கிலும் காண முற்படுகின்றது. மீண்டும் தனிமனிதவாதத்தை நோக்கிய தேடலையே அவர்கள் முன்னெடுக்கின்றனர்.
ஒடுக்குமுறைக்கு எதிரான நாடக அரங்கில் புதிய குறியீடுகள் முன்வைக்கப்படுகின்றன. ஒடுக்குமுறையை நிராகரிக்கும் இசையில் புதிய ஒலி அலகுகள் சேர்க்கப்படுகின்றன. ஒடுக்குமுறையை எதிர்க்கும்பொழுது புத்தாக் கங்களுக்குரிய நுழைவாயில்
திறக்கப் படுதலைச் சமகாலக் கலை இலக்கிய அனுபவங்கள் வெளிப்படுத்துகின்றன. சமூகத்தால் முன்பு ஒதுக்கிவைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் இன்று
வியக்க வைக்கும் கலைப்படைப்புக்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
0 0 0
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (16

என் இல்லாளுக்கு!
என்னால் அற்புதமாக எழுத முடியாது வந்து ஓர் முன்னுரையுடன் முன் உதாரணமாய் வெளிப்படுத்தி ஒரு கவிஞனிடமிருந்து ஒரு கவிதையை நான் சொல்லுவதற்கு துணிந்து விட்டிருந்திருக்கிறேன்.
-கல்வயல் வே, குமாரசாமி
அதற்காகவோ இங்கே
இந்தப்பூ இதழ்கள் வீழ்ந்து விட்டிருக்கின்றன உகந்த ஒன்றை நீ காண்பதற்கு உனக்கு காதல் காற்றில் மிதக்கும் இசை உன் கூந்தலின்மேல் காற்றும் குளிரும் இப்பொழுதும் அது இணைகிறது
வயாககாணடாராம்:ா
களமாய் உறைந்து அன்பு அற்ற நிலமாய் இருக்கும் அது காதோரம் பேசும் அந்தரங்கம் அந்த நந்த வனத்தில் நீயே விளங்கிக் கொள்வாய்
மூலம் : OSCAR WILDE
15

Page 18
விரிந்து கிளைபரப்பி வேர்விழுதும் முறுகிநிற்கும் விருட்ச அடியிருந்து விறுவிறென்று ஏறிவந்தேன். பெருத்துத் திரண்ட அடித்தண்டில் கால்வைத்து விரைவாக ஏற முடியாது..ஓரிரண்டு முறைசறுக்கி..முக்கி.... முயன்றேறி
முதற்கிளையில் கால்பதித்தேன்! பின்பு.. ஏற்றம் இலகுவாச்சு. மேலே கிளைகள் மிகுந்து. திடீர் திடீரென்று ஏறிச் சடைத்துக் கிடந்தது. இலகுவாகக் காலூன்றிக் கடகடென்று கிளைகடந்து விருட்சத்தின் உச்சக்கொம் படைந்து ஒருமுறை...கீழ்...பார்த்தேன் நான். பருந்தொன்றின் பார்வையாக “எண்திசையும்" என்பார்வைப் புலத்துள் சிறைப்பட்டென் காலடியில் வீழ்ந்திற்று! என்னோடு நின்றவர்கள் இப்போ..குறுணிகள் என்கீழ்க் கிடந்தார்கள்! அவர் என்னை வியந்துபார்க்க என்கிறுக்கும் எகிறிற்று! நேற்றுவரை எனக்கெட்டா.. எண்ணற்ற பூ, பழங்கள் என்கைக்குள் ஆடி என்கன்னம் வருடிக் காற்றுவந்து கொஞ்சிற்று! எண்ணற்ற பறவைகள் எனக்கு மிகஅருசே வந்து வந்து போயின.... வாண்டு சிறுவரெல்லாம் என்னைக் கழுத்துநோகப் பார்த்தயர்ந்தார்

@song
വാ
பாய்
அவ்விருட்சம் சிம்மா சனமொன்றாய் எனைஉயர்த்த உச்சத்தில் ஊசலாடும் நுனிக்கிளையில் உயர்ந்துநின்ற வேளையிற்தான் "இந்த உயரமே போதுமென்ற உள்ளுணர்வு என்னுள் கிளம்பிற்று. என்முயற்சி பலிதமாகி இந்த வரம். இடமே கிடைத்ததென்றும் இதற்குமேலும் போக முயன்றால் என்னாகும் என்பதுவும் ஊறிற்று விசம்போலே! ஊஞ்சலாடும் கிளைதன்னைக் கவனமாகப் பற்றி கவனமாகக் கால்வைத்து இறங்குகிறேன். எனைக்காத்த தெது? அதற்கு நன்றிசொல்வேன்!
ற்று!
- ந.ஜெயசீலன்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (168)

Page 19
செறிதே எட்டுத்திக்கும்
கே.எஸ்.சுதாகர்
"புலப்பெயர் வாழ்க்கை
வெங்கட்சாமிநாதன்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ரே 2014 (168)

ஈழத்தமிழர்
வாழ்க்கையில் 1983 ஒரு பெரிய திருப்பம். பிறந்த மண்ணைவிட்டு வெளியேறுவது அப்படி ஒன்றும் சாதாரணமாக எதிர்கொள்ளும் முடிவு அல்ல. நிர்ப்பந்தமாகிப் போகும்போது தாய்மண்ணைத் திரும்பப் பார்க்கப்போகிறோமா? இல்லையா? என்ற நிச்சயமின்றி எங்கு போகப்போகிறோம்? எப்படி வாழப்போகிறோம்? என்ற நிச்சயமுமின்றி சொந்த மண்ணைவிட்டு பிரிவதும், பின் எங்கெங்கோ உலகப் பரப்பெங்கும் அலையாடப் படுவதும், ஒருபயங்கர சொப்பனம் நிஜமாகிப்போகிற காரியம்தான். இப்போது முப்பதுவருடங்கள் அலைக்கழிக்கப்பட்ட பிறகு கனடாவிலோ, ஆஸ்திரேலியாவிலோ இன்று ஒரு நிம்மதியுடன் வெளிமண்ணில், சூழலில் கலாசாரத்தில் வாழ்பவர்களின் வாழ்க்கை ஒருவாறான அலையாடல் ஓய்ந்த அமைதி பெற்றுள்ளது, இழப்புகளின் நினைவுகள் சிலரை வருத்த, சிலர் விதிக்கப்பட்டுள்ள வாழ்க்கையுடன் சமாதானம் கொள்ள, அயல் மண்ணில் முதலில் வாடிவதங்கிப் பின் வேர்கொண்டு முளைதுளிர்த்து வாழும் வளர்ச்சி கொள்ளும் இயல்பில் அல்ல.
ஒரு தலைமுறைக்காலம் சிலருக்கு பிறந்தமண்ணுடன் உறவுகளை அவ்வப்போது தொடர வாய்ப்புக்கள் தந்துள்ளது. சிலருக்கு அவ்வுறவுகள் மட்டுமல்ல மண்ணும் இல்லையெனவும் ஆக்கியுள்ளது. மிகவும் சிக்கலான வரலாற்றை ஈழமண்ணில் பிறந்துள்ளோருக்கு தந்துள்ளது, அந்த வரலாறு ஈழத்தமிழரை உலகெங்கும் வீசியெறிந்துள்ளது, இரண்டு தலைமுறை வரலாறு.
துன்பத்தினிடையேதான் புதிய, நினைத் துப் பார்க்காத மலர்ச்சிகளையும் மனிதரின் வாழவேண்டும் என்ற துடிப்பும். பச்சையே பார்க்க முடியாத அடிவானம்வரை நீளும் பாலையில்கூட அபூர்வமிக அழகான விதவிதமான கத்தாழைகள் பூக்கும் மலர்கள் பார்க்க வினோதமானவை. உயிர்ப்பு இத்தகைய ஆச்சரியங்களைக் கொண்டது. எங்கு எதுமலரும், எது எத்தகைய பயனுமற்ற விளைச்சல்களைப் பரப்பும் என்று யார் சொல்லமுடியும்? அமைதியான காலங்களில் வெற்றுப்
17

Page 20
பிரசாரங்களையும் கோஷங்களையும் தந்த ஒரு இனம், அலைக்கழிக்கப்பட்டு எங்கெங்கோர் உயிர்த்தரிப்புக்கு வீசப்படும்போது அதன் ஜீவத்துடிப்பின் அடியோட்ட உணர்வுகளை மீட்டெடுக்கிறது. எதிர்நிற்கும்
வாழ்வை அதன் குணத்தில் எதிர்கொள்கிறது. அதைப் புரிந்துகொள்ள முயல்கிறது.
அரசியல், சித்தாந்த, ஜாதீய கோஷங்களை ஒதுக்கி. அதன் வாழ்க்கையின் ஆழ்ந்த அர்த்தங்களையும் மீட்டெடுக்கிறது.
இதையெல்லாம் வெற்று
அரசியல் வாய்ப்பாடுகளில் அடைத்துவிடமுடியாது. மனிதஜீவனின் அர்த்தங்கள் இப்படியெல்லாம் சுலபத்தில் சுலப், தயாரிக்கப்பட்டு அளிக்கப்படும் சித்தாந்த வாய்ப்பாடுகளில் சிக்கிவிடுவதில்லை. ஒவ்வொரு ஆளுமையை யும் பொறுத்தது இது. எந்த ஆளுமை எப்படி எதிர்வினையாக்கும் என்பதும் எந்த அரசியல் சமூகவியல் வாய்ப்பாடுகளிலும் அடங்கிவிடுவதில்லை. ஒருவாய்ப்பாடு உரு வாக்கப்பட்டதுமே, அதைமீறும் ஒருஜீவன் உடன் தோன்றிவிடுகிறது.
எங்கெங்கோ அலையாடப்பட்ட வாழ்க்கையில் உயிர்தரிப்பதே முழுமையும் முக்கியமானதுமாகிப் போய்விடும் நிர்ப்பந்தங்களில், அன்னிய மண்ணில் இரவு பூராவும் யந்திரங்களோடு யந்திரமாக இயங்கிவிட்டு, காலையில் தினசரி செய்தித் தாள்களை வீடுவீடாக விநியோகித்துவிட்டு வீடுதிரும்பினால் பசிக்கு உண்டு படுக்கையில் விழச்சொல்லுமா, இல்லை கவிதை எழுதச்சொல்லுமா? இந்நிலைகளில், கவிதை எழுதும் ஜீவனை எப்படிப் புரிந்துகொள்வது? அல்லல்பட்ட ஜீவன்வாழும் இந்த மனிதக்கூட்டம்தான் தன் மொழியைப்பற்றிக் கவலைப்படுகிறது. உலகப் பரப்பு முழுதும் வீசி
எறியப்பட்ட தமிழரோடு தமிழில் உறவுகொள்ள விழைகிறது. அதற்கு ஏற்ப புதிதாகத் தோன்றிய இணையத்தை தன் வசப் படுத்துகிறது. ஆச்சரியம் தான் . இதில் முதல் காலடி வைப்பு புலம்பெயர்ந்த
தமிழர்கள்தான் கே.எஸ், அதகர்

தமிழுக்கு
அதை
வளைத்துக் கொண்டுவந்ததும் புலம்பெயர்ந்த தமிழர்கள்தான். அவர்களுக்கு அந்தத் தேவை இருந்தது, செய்தார்கள் என்பது வேறுவிஷயம்.
புலம்பெயர்ந்தோர் இலக்கியம் புலம்பல் இலக்கியம் என்று ஒருவர் சொன்னதாகப் படித்தேன். இதைவிட சின்னத்தனம் வேறு இருக்கமுடியாது. சின்னத்தனமோ அல்லது தமிழருக்கே பழக்கமாகிப்போன வார்த்தை அலங்கார மோகமோ, எதுகாரணம் என்பது தேடுவது இதுகொண்டுள்ள சின்னத்தனத்தை மறைப்பதுதான்.
உலகப்பரப்பு முழுவதையும் தமிழ் இலக்கியத்தின் கதைக்களமாக்கியது புலம் பெயர்ந்தோரின் காரியம்தான். அ.முத்துலிங்கம், பொ.கருணாகரமூர்த்தி, ப.சிங்காரம், ஜெயந்தி சங்கர், என, இப்படி ஒரு நீண்ட அணிவகுப்பே முன்நிற்கிறது. இன்றைய தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தியவர்கள் இவர்கள். பல வண்ணங்களும் வளமும் பரப்பும் சேர்த்தவர்கள் இவர்கள்.
சமீபத்தில் வல்லமை என்னும் ஒரு இணைய இதழ் ஒரு வருடகாலத்திற் போட்டி ஒன்றை நடத்தியது. அதில் எனக்குத் தெரியவந்த சிறப்பான சிருஷ்டித்திறன்கள் வெளிநாட்டில் வாழும் தமிழர்களதுதான். அமெரிக்காவிலிருந்து, மிச்சிகனா? பழமை பேசி, பெல்ஜியத்தில் வாழும் மாதவன் இளங்கோ, ஆஸ்திரேலியாவில் வாழும் சுதாகர், இவர்களில் எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம் தந்தவர்கள் பழமைபேசி, மாதவன் இளங்கோ பின் இப்போது நாம் அதிகம் பேசப்போகும் சுதாகர். இவர்கள் தாம்வாழும் வாழ்க்கையை எழுதுபவர்கள். தாம் சந்திக்கும் மனிதர்களைப்பற்றி எழுதுகிறார்கள். எல்லோரும் எனக்குத் தெரிந்தத வரையில் இணைய இதழ்களிலிருந்தே, எழுதவந்தவர்கள். புதிய திறன்கள், புதிய உலகங்களை, புதிய மனிதர்களை, புதிய உறவுகளை, புதிய வாழ்க்கைச் சிக்கல்களை, புதிய தார்மீக இடர்பாடுகளைப்பற்றி எழுதுபவர்கள். பிறந்த மண்ணின், விட்டுவிட்டுவந்த மண்ணின் நினைவுகளும் மனிதர்களும் இன்னம் மறக்கவில்லைதான். எதையும் முழுதாக
அழித்துத் துடைத்துவிடமுடியுமா என்ன?
சுதாகர் ஈழமண்ணிலிருந்து 1995-ல் வெளியேறியவர். இப்போது வாழ்வது ஆஸ்திரேலியாவில் தான் எழுதியவற்றிலிருந்து
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (168)

Page 21
பன்னிரெண்டு கதைகளை ஒரு தொகுப்பிற்காக
முன்வைத்துள்ளார்.
"விளக்கின் இருள்” என்று ஒருகதை: மெல்போர்னில் வாசம் கோடை வெப்பம் தமிழ்நாட்டை ஒத்தது. வாழ்வது எங்கும்போல ரசாயனகழிவுகளும் மின்னணுக்கழிவுகளும் இட்டு நிரப்பிய மண்ணின்மேல், மெதேன்வாயு நிலத்தடியிலிருந்து மேலெழுகிறது. சிலர் பயந்து வீடுகளைக் காலி செய்து வேறிடம் போகிறார்கள். ரியல் எஸ்டேட்காரர்கள் இதுதான் நல்லவாய்ப்பு என எண்ணி வீடுகளை மலிவுவிலையில் வாங்கத் தொடங்குகிறார்கள். பிலிப்பைன்ஸ்ய் ரொபஸர் லோரென்ஸோ ஆஸ்வாஸப்படுத்துகிறார். இன்னும் கொஞ்சநாளில் இது சரியாகிவிடும் என்கிறார். சிலர் தைரியசாலிகள். பாராளுமன்றத்தில் சர்ச்சை கிளம்புகிறது. எதற்கும் ப்ரொபஸர் லோரென்ஸோ வைக் கேட்கலாம் என்றுபோனால், இதுகாறும் தைரியம் சொன்னவரே காலிசெய்துவிட்டுப் போய்விட்டது தெரிகிறது.
இன்னொரு கதையில் இலங்கையிலிருந்து ஒரு சிறு பெண்ரசிகை பள்ளிமாணவி அவள். அவளிடமிருந்து கடிதங்கள் வருகின்றன மனைவியின் கிண்டலுக்கோ எரிச்சலுக்கும் ஆளானவர் விடுமுறையில் இலங்கைக்குப்போக, அந்தப்பெண் சாதனாவைப் பார்க்கப்போக, சிங்களவர்களும் ஆர்மிக்காரர்களும் நிறைந்த அந்த பழம்கிராமம் சென்று சாதனா வீட்டைத்தட்ட அடுத்த வீட்டுக்காரர் நடந்த கதையைச் சொல்கிறார்: வெளியே பள்ளிக்குப் போகும்போதும் வரும்போதும் இடையில் ஆர்மிக்காரர்களின் ஹிம்ஸை (மார்பைத்தடவி இதென்ன குண்டை ஒளிச்சு வச்சிருக்கியா?...) பொறுக்க முடியாது நிஜமாகவே குண்டை மார்புக்குள் ஒளித்து ஆர்மிகாம்புக்குள் போய் வெடித்துச் செத்துவிட்டாள் என்று அந்தப்பெண் இறந்த செய்தியைச் சொல்கிறார் அவர்.
சொந்த மண்ணிலிருந்து உயிருக்கு பயந்து ஆஸ்திரேலியா போயாச்சு. ஆனால் அங்கு ஏதாவது வேலைசெய்தால்தானே பிழைக்கலாம். வேலை அனுபவஸ்தர்களுக்குத்தான் கிடைக்கும் ஆர்க்கிடெக்டாக உயர்கல்வியும் பயிற்சியும் இருந்தாலும், ஆஸ்திரேலியா அனுபவம் வேண்டுமே? அங்கு வேலை செய்தால்தானே கிடைக்கும் எந்த வேலை யாயினும் சரி, செய்தால்தானே அனுபவம் வரும்? வேலை தேடினால், அனுபவம் என்ன என்று கேள்விவரும். இரக்கம் கொண்டவர் சிபாரிசில்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (168)

வேலைக்குச் சென்றால் அது கணக்குப் பிரிவில் ஏதோவேலை. இடையில் ஆசனவாயில் நோய் ஏதேதோ மருந்துதேடி, கடைசியில் அது மிகமோசமான நிலைக்குப்போகிறது. மருத்துவ செலவு இலவசம்தான் ஆஸ் திரேலியாவில் இரண்டு மூன்று தடவை ஆபரேஷன் செய்தும் சரியாகவில்லை. யார்யாரோ தன் உடலைவைத்து அனுபவம் தேடிச் சேர்ப்பதாகத் தெரிகிறது. இந்த தடவை சீனியர்டாக்டர் ஃபரகரிடம்தான் ஆபரேஷன் செய்துகொள்ளவேண்டும் என்று தீர்மானித்து / பரகருக்காகக் காத்திருந்து அவரைக்கேட்டால் அவர் என்ன சொல்கிறார்? "இதுவரை ஆபரேஷன் செய்த சாகிடி என் உதவியாளர். அவரும் ஆபரேஷன் செய்தால்தானே அனுபவம் பெற்று எனக்குப்பின் என் இடத்தைப் பெறுவார்? என்வயது 65. நான் இல்லையென்றால் அவர்தானே செய்யவேண்டும்?” இடையில் வேலைக்கு மனுச் செய்த இடத்திலிருந்து பதில்வருகிறது. “உங்களைவிட அதிகவருஷங்கள் அனுபவம் பெற்றவர்கள் இருப்பதால் உங்களை வேலைக்கு எடுத்துக்கொள்ள முடியாமைக்கு வருந்துகிறோம்?
வவுனியாவில் இருந்த காலம். கொழும்பு வில் தெமட்டகொட அங்கிள், சரியான முசுடு. அரசாங்கத்தில் உயர் அதிகாரியாக இருந்தவர் எப்படி இப்படி ஒரு முசுடாக இருக்கமுடியும்? ஒருமுறை பாலாவுக்கு அம்மை வந்தது என்று அவனிருந்த இடத்தை டெட்டால் போட்டு கழுவி, அவன் உபயோகப்படுத்திய பொருட்களைக்கூட வீட்டில் வைக்கப் பிடிக்கவில்லை மாமாவுக்கு. அவர் மனைவி அவருடன் வாழப்பிடிக்காது வெளியேறி, அவ்வப்போது தன்மகளை மாத்திரம் பார்த்துப்போகிறாள். இப்போது அந்த அங்கிள் கனடாவில் சாகக்கிடக்கிறார் முதியோர் இல்லத்தில் பாலாவும் கலைச்செல்வியும் கனடா போனபோது பழசை எல்லாம் மறந்துவிட்டு சாகக்கிடக்கும் மனிதனைப் பார்க்கவேண்டும் என்று செல்வி, தன் கணவன் பாலாவை வற்புறுத்துகிறாள். பார்க்க வந்திருக்கும் பாலாவை யாரென்று தெரியாது என்று அலட்சியம் செய்கிறார் சாகக்கிடக்கும் தெமட்டகொட அங்கிள். இறந்துவிடுகிறார். உறவினர் யாருக்கும் பாலா, தான் அங்கிளைப் பார்த்து வெறுத்துவிட்ட செய்தியைச் சொல்லவில்லை. யாராயிருந்தாலும் மன்னிக்கத் தெரியாத மனுஷன் என்றே அவனைப்பற்றிய நினைப்பு அவர்களுக்கு.
19

Page 22
பார்த்துவிட்டு வந்ததைச் சொல்வதற்கென்ன என்று கலைச்செல்வி கேட்கிறாள். யார் அவரைப் பார்க்கப்போனார்கள்? என்று தன் வெறுப்பை உமிழ்கிறான் பாலா.
இப்போது இருப்பது நியூசிலெண்ட் ஆக்லண்டு நகரில் மனைவி சாந்தினி கர்ப்பமாக இருக்கிறாள். மருத்துவமனையில் பிறக்கப்போவது என்ன குழந்தை என்று சொல்ல முடியவில்லை என்கிறார்கள். உசிலம்பட்டி என்ன, ஆசிய நாடுகளிலிலேயே எங்கும் பெண்குழந்தைக்கு நேரும் கதியை உலகம் அறிந்த எச்சரிக்கை உணர்வு. தன்வீடு செல்லும் பாதையில் எதிரில் இருக்கும் எண்பது வயது கிழவி கிறேஸ். போலந்து நாட்டவள். சாந்தினிக்கு உதவியாகவும் ஆதரவாகவும் இருக்கிறாள். தனிக்கட்டை. புருஷன் இறந்து 30வருடங்கள் ஆகிவிட்டன. நான்கு பிள்ளைகளும் தனித்தனியே. அவ்வப்போது வந்துபோவார்கள். நியூஸிலெண்டில் 18 வயதானால் பிள்ளைகளைப் பெற்றோருடன் இருக்க விடுவதில்லை. அரசு உதவிசெய்கிறது. தானே கார் ஓட்டிக் கொண்டு எல்லோருக்கும் உதவியாக, தன் காரியத்தை தானே பார்த்துக்கொள்வாள் கிறேஸ். நியூ ஸிலெண்டின் ஆதிகுடிகளான மெளரிகளுக்கு தன்நாட்டில் வந்து நிறைந்துள்ள வெள்ளையரைக் கண்டால்பிடிப்பதில்லை. ஒருவரை ஒருவர் மதித்து நடக்கவேண்டும் என்று சொல்கிறான் ஒரு மௌரி. குழந்தை சாக்லெட் சாப்பிட்டு மேல்உறையைத் தூக்கி எறிந்தால், அந்தச் சிறுவனைக் கூப்பிட்டு அதை எடுத்து குப்பைத்தொட்டியில் போடகட்டளை வெளியிலிருப்பவரிடமிருந்து வரும். சாந்தினிக்கு பெண்குழந்தை பிறக்கிறது. கிறேஸ் வரவில்லையே ஏன் என்று கேள்வி எழ அவள் வீட்டுக்குப் போய்ப்பார்த்தால், மனித நடமாட்டம் ஏதும் அங்கு இல்லை. ஜன்னல் வழியாகப் பார்த்து அவள் சலனமற்றுக் கிடப்பதுகண்டு போலீஸுக்கு தகவல் தெரிவித்து உள்ளேபோனால் அவள்காலடியில் ஒரு குளிர் உடுப்பு. அதனுடன் ஒருசீட்டு: for the new born baby' என்று எழுதியிருந்தது அதில்.
ஒருபுறம் அன்னியரோடு ஒட்டுறவு. இன்னொரு புறம் அன்னியரைக் கண்டால் வெறுப்பு.
இரண்டு குழந்தைகளும் மனைவியுமாக யாழ்ப்பாணத்தில் இருக்கும் தேவன் மாரடைப்பில் இறந்துபோகிறார். யாருக்கும் செய்தி சொல்லமுடியாது. ஆர்மியின் ஆக்கிரமிப்பில் இருக்கும் இடம். வெளியில் ஒரு வெள்ளைத் 20

துணியை ஆகாயத்தில் வீசிக்கொண்டு போய் செய்தி சொல்லிவரவா என்ற பக்கத்து வீட்டு கிழவர் மார்க்கண்டின் கேள்விக்கு, "ஏன் சுடப்பட்டு சாகிறதுக்கா? என்று இறந்தவரின் மனைவி வாசுகியிடமிருந்து பதில் வருகிறது. கனடாவில் இருக்கும் வாசுகியின் தங்கைவீட்டில் செத்தவீடு சடங்குகள் நடக்கின்றன. ஒப்பாரி நன்றாக வைக்கத் தெரிந்த பாக்கியம் வந்து சேர்கிறாள். வாசுகியின் பெற்றோர் அக்கா தங்கை தம்பி எல்லாரும் கனடாவில் யாழ்ப்பாணத்தில் வாசுகிவீட்டில் செத்தவீட்டு சடங்குகள் விடிகாலையில்தான் நடக்கின்றன. கணவர் இறந்த செய்தியை அதே நகரத்தில் இருக்கும் அவனது பெற்றோருக்கும் தங்கைக்கும் உடன் செய்திசொல்ல முடியாது, ஆர்மியின் பிடிப்பில் அடங்கி வாழும் தமிழ் இனத்தின் அவலத்தை குரல் எழுப்பாமல், உணர்ச்சிக் கொந்தளிப்புகள் இல்லாது சொல்லிவிடுகிறது கதை.
இந்த கதை மட்டுமல்ல. சுதாகரின் எழுத்தே எந்த அவலத்தையும், வாழ்க்கையின் எந்த ஏற்ற இறக்கத்தையும், ஆரவாரமோ, இரைச்சலோ இல்லாது, கிட்ட இருந்தும் எட்டப்பார்வையுடன், சொல்ல
முடிந்துவிடுகிறது.
ஒரு பத்திரிகையாளரைப்போல், ஆனால் தானும் ஒரு மனிதனாக, அவலத்தையும் சந்தோஷங்களையும் புரிந்துகொள்ளும் மனிதனாக கண்ணுக்குத் தெரியும் ஒருபக்கம் மாத்திரமல்ல, இன்னொருபக்கமும் இதற்கு உண்டு என்ற தெரிவுடன். மெளரிகள் வாழும் இடத்தில்தான், கிறேஸும் வாழ்கிறாள். இந்தியாவில், இலங்கையில் இருக்கும் எஸ்டேட் ஏஜெண்டுகளுக்கும் அவுஸ்திரேலியா எஸ்டேட் ஏஜெண்டுகளுக்கும் ஏதும் வித்தியாசமில்லை. இராசாயனக்கழிவு மூடப் பட்டமண்ணில் எழுந்த வீட்டை விற்பவர்களும் அவர்கள்தான். மெதேன்காஸ் செய்தி பரப்பி மலிவாக வீட்டைவாங்க வழிசெய்பவர்களும் அவர்கள்தான். கெமிஸ்ட்ரி ப்ரொஃபஸர்களுக்கும் இதில் இடமுண்டு. எங்கு சென்றால் என்ன? உலகம் எல்லா வண்ணங்களையும் கொண்டது.
தன் பன்னிரண்டு கதைகளைத் தொகுத்திருக்கிறார் சுதாகர். அவர் எழுதியுள்ளது இன்னம் உண்டு. நம்மிடமும் ஹெமிங்வே மாதிரி ஒதுங்கி நின்று மனிதவாழ்க்கையின் மனிதர்களின் பலவண்ண சித்தரிப்பைத் தரும் ஒருவர் இருக்கிறார். இனிவரும் சுதாகர் எழுத்துக்களையும் நாம் கவனிக்கவேண்டும். அவருக்கென ஒரு ஆளுமை இருக்கிறது.
0 0 0 ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (168)

Page 23
வஹாரை, முன்பைவிட இப்போது ஓர் ஒழுங்கமைப்புடன் காணப்பட்டது. புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கோபுரத்தினால் முழு விஹாரையுமே முழுமையடைந்துள்ளது. விஹாரையைக் காணும்போது எனது மனதுக்குள் நுழையக்கூடியதாக இருந்த ரம்மியமான பரிசுத்த கோபுரம் மென்மையான உயர் கோபுரத்தினால் மறைக்கப்பட்டிருப்பதான எண்ணம் எனக்குள் எழுகிறது. நானிருந்த காலத்தைவிட முன்னேற்றம் இந்தப் பூமி முழுவதிலுமாக பரவலாகி இருப்பது இதற்குக் காரணமாக இருக்கலாம். இன்றெனது எதிர்பார்ப்பு வெற்றியடையுமாயின் நானும் இந்த முன்னேற்றத்தில்
பங்காளியாக ஆகலாம்.
"காவி உடையை அணிந்து கொண்டிருக்கும் போது அதன் பெறுமதி தெரியாது" என விஹாரையின் தலைமைத் தேரர் ஒருமுறை மாணவர் சங்க போதனையின்போது கூறிய போது, சித்தந்த தேரர் தனது விரலினால் என்னைக் குத்திக் காட்டினார். எனக்குத் திடீரென தூக்கிவாரிப் போட்டது. தலைமைத் தேரர் அதைக் கண்டும், காணாதவாறு ஒரு பத்து நொடிகளுக்கு தனது உரையை நிறுத்தியபடி இருந்தார்.
எதுவாக இருந்தாலும் என்னதான் இருந்தாலும்
சொல்லும்போது அதில் பெறுமதி கிடையாதுதான். காவி உடையைக்
இஜை
சிங்களத்தில்: விக்கிரமசிங்ஹ அத்தபத்து
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (168)

கழற்றிவிட்டு, சாரம் அணிந்து கொண்ட நாள் முதல் நான் எண்ணியிருந்த பகட்டு எண்ணங்கள் யாவும் மானுட நேயத்தின் முன்பாக அடிபட்டுப் போயின. பரவாயில்லை, தலைமைத் தேரர் எனக்குப் புதிய வாழ்க்கையொன்றைத் தருவார். அவர் என்பால் அன்பு கொண்டவர். நான் தலைமைத் தேரரின் பாதங்களில் விழுந்து வணங்கி, துறவறம் பூண்டிருந்த காலத்தில் காலை, மாலை என தர்ம போதனைகளைக் கூறும் போதெல்லாம் அவரது நெஞ்சு உருகிப் போய்விடும்.
"ஓகாச தேவாரத்தயேன தத்தங் சப்பங் அபராதங்
கமத்த மே ஹன்த்தே ஓகாச கமாமி ஹன்னே”
"வவ்..... வவ்.....வவ்.....வவ்.....வவ்....... வவ்.......வவ்.......வவ்.....வவ்........
ஐயோ ....... இந்த பெட்டை நாயின்ட நிலைமை!
நானிருந்த காலத்தில் இந்த "பினி”யின் சடை வழிந்து கொண்டிருந்தது. இப்போது இந்த நாயைப் பராமரிப்பதற்கு எவரும் இல்லைப் போலும்..... பாவம். சிரங்கு பிடித்துப் போயுள்ளது.
''பினி ..... என்னை அடையாளம் காண முடியாதா உனக்கு?”
"வவ்.....வவ்......வவ்.....”
பாவீன்
மொழிபெயர்ப்புச்
சிறுகதை
தமிழில்: இப்னு அஸ்மத்
21

Page 24
---சடி14.
"நான் உனக்கு சாப்பிடக் கொடுத்தேன். குளிப்பாட்டினேன். மருந்து கொடுத்தேன். தூக்கி வைத்துக் கொண்டு இருந்தேன். இப்படி அல்லவே ....... அப்போது நான் ஒரு புண்ணியக் கட்டையாக இருந்தேன்.
யாரேனும் வந்து "தம்மிக்க தேரர் இருக்கிறாரா?” எனக் கேட்டால், நீதான் முந்திக் கொண்டு ஓடி வந்து "ஆமாம்! ஆமாம்! என பதில் கூறுவாய். இப்போது என்னிடம் அந்த புண்ணிய மோப்பம் கிடையாது. கூலி வேலை செய்து நொந்துபோன வியர்வை நாற்றம் நிரம்பிய இந்த சரீரத்தினுள் உனக்குப் பழக்கமான மோப்பம் இல்லை என்பதை நானறிவேன்”.
வயது போனாலும் கூட "பினி”தான் இந்த விஹாரையின் காவலாளினி.
தேரர்களின் வாசஸ்தலத்தின் முன் பக்கக் கதவு பூட்டியிருந்தது. பின் பக்கமாய் போய்ப் பார்க்க வேண்டும்.
"விஹாரையில் யார்?"
அன்னதான மடுவத்தின்
கதவுகள் திறந்து கிடக்கின்றன. பாத்திரங்கள் கழுவும் சத்தங்கள் கேட்கின்றன. பெரிய தேரர் பாவம். தனித்திருந்து வேலைகளைச் செய்கிறார் போலும்.
"பெரிய தேரர்.... பெரிய தேரர்...”
“பெரிய சாமி கண்டிக்கு போயிட்டாரு. வெளியில் இருங்க....... இன்னும் புத்த பூஜை
வைக்கல்ல”
22

என்ன?.... செல்லாவின் குரல்... முன்பு விஹாரையில் நானிருந்தபோது செல்லாவை
அன்னதான
மடுவத்திற்கு மாத்திரமல்ல சமையலறைக்குள் கூட நுழைய விடவில்லை. இவன் தமிழன்...... பெரிய தேரரின் அனுதாபத்தினால் எஞ்சிய சோற்றினைச் சாப்பிட்டு பழக்கப்பட்டதால் விஹாரைக்கு வருபவன்.
விறகுக் கட்டைகள் பிளந்து ....... தண்ணீர் கொண்டுவந்து கொடுத்து ...... செல்லா கொஞ்சம் உணவை இங்கிருந்து எடுத்துச்
செல்வான்.
எவ்வளவு வித்தியாசம்? அந்த செல்லா இன்று அன்னதான மடுவத்திற்கு
பொறுப்பாக இருக்கிறான். "செல்லா..... செல்லா ..... நான் தம்மிக்க தேரர்”
செல்லா கையில் ஒரு பாத்திரத்துடன் வெளியே வந்தான். இப்போது நன்றாக இருந்தான். சாரம், பெனியன் அணிந்திருந்தான். எலும்புகளை மூடி சதை பிடித்திருந்தது. முகம் முழுதும் பரவியிருந்த வெள்ளை, கறுப்பு நிற தாடி மழிக்கப்பட்டிருந்தது.
“நீங்கள் யார்?” செல்லா என்னிடம் கேட்டான்.
“செல்லாவுக்கு ஞாபகம் இல்லையா? நான் முன்பு இங்கிருந்த தம்மிக்க தேரர்”.....
"ச்சா.... எங்கட தம்மிக்க தேரர்! என்ன இது? ச்சே!... ரொம்ப மோசம்! ரொம்ப மோசம்! வாங்க வீட்டுக்குள்ள. குடிக்க தேத்தண்ணி ஊத்துறேன்...
இன்றைக்கு யாருமில்ல. பெரிய தேரரும் சின்ன தேரரும் கண்டிக்கு போயிட்டாங்க.
சின்ன தேரர்ட உயர் ஸ்தான சடங்கு பற்றி பேசுவதற்கு... நான் இங்க தனியாத்தான் இருக்கிறேன்.”
“என்ன!.... சின்ன தேரர்?....” நான் எதிர்பார்த்திராத வார்த்தைகள் சிலவற்றை உதிர்த்த செல்லாவின் பேச்சுக்கு தடை ஏற்படுத்த நினைக்கும் அளவுக்கு ஆவேசத்துடனான பலஹீனம் எனது மனதுக்குள் எழுந்திருந்தது.
"ஆமாம்... ஆமாம்... சின்ன தேரர்...”
Fi பாம்
சாம்ப பிடிக்குள் எத்துஜே தேரரு"
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ரோ 2014 (168)

Page 25
"யார் அவர்?”
"ஏன்...... தம்மிக்க தேரருக்கு ஞாபகம் இல்லியா? அந்தக் காலத்தில் இருந்த கேசவன்”
"யார்? சமரபால?”
"சரி... சரி.... சமரபால துறவறமாயிட்டாரு..... இப்போ நல்ல ஒழுக்கமாக இருக்கிறாரு. ரொம்பவும் நல்லவரா..... கருணை உள்ளம் கொண்டவரா இருக்கிறாரு”.
"அப்படியென்றால்.... சமரபால் துறவறம் பூண்டு விட்டாரா?”
”ஆமாங்க... ஆமாங்க..... துறைவி யாயிட்டாரு.”
"உயர் ஸ்தான சடங்கு இந்த வருஷத்திலேயே செய்ய வேணும்னு தர்ம சபைக்காரங்ககரைச்சல் கொடுக்கிறாங்களாம்... அதனால பெரிய தேரர் கண்டிக்குப் போயிட்டார்... அதுக்கு ஒரு நாள் நிச்சயம் பண்ண.........”
என்னையறியாமலே
என்னிலிருந்து வெளியான நீண்ட பெருமூச்சு செல்லாவின் தொடர் பேச்சை மாற்றி விட்டது.
"என்ன பெருமூச்சு விடுறீங்க...... ரொம்பவும் களைப்பா இருக்கு போல... கொஞ்சம் பொறுங்க... நான் தேத்தண்ணி கொஞ்சம் ஊத்தித் தாறேன்.....”
நடந்து முடிந்திருப்பது சாதாரண பிறழ்வு அல்ல. எனது தான்தோன்றித்தனமான முடிவினால் நிகழ வேண்டிய அனைத்து மாற்றங்களும் பன்சலைக்குள் நிகழ்ந்துள்ளன. இரு பாதங்களையும் ஊன்றி நிற்கக் கூட பலனின்றிய கால்கள் நடுங்க ஆரம்பித்தன. இதற்கு முன் நான் ஒருபோதும் அமர்ந்திராத பன்சலையில் இருந்த தேங்காய்த் துருவியில் அமர்ந்து கொண்டேன். அன்று எனக்குக் கீழ் பன்சலையில் வேலை செய்திருந்த இரு ஊழியர்களும் இன்று பன்சலையின் நிர்வாகத்தை கையில் எடுத்திருக்கின்றனர். பெரிய தேரரால் வேறு எதுவுமே செய்ய இயலாதிருக்கிறது. சமரபால இன்றோ அல்லது நாளையோ உயர் ஸ்தானம் பெற்ற தேரராகி விடுவார். அவரை நான் கும்பிட வேண்டும்.
அந்தக் காலத்தில் அவர் எனது எடுபிடியாக இருந்தவர். என்னிடம் அவர் அடி வாங்கிய சந்தர்ப்பங்கள் ஏராளம். தந்தையின் குடிகார வாழ்க்கை காரணமாக சமரபாலவின் தாய் அகாலத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவரது தந்தை எங்கே சென்றார் என்பது ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2011 (168)

பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லை. தனது தாயார் தற்கொலை செய்து கொண்ட சில தினங்கள் கழித்து சமரபால இந்த பன்சலைக்கு வந்தான். எவருமே இல்லாத தரித்திரம் பிடித்த ஒரு பிள்ளையாகவே சமரபால அன்று காணப்பட்டான். பெரிய தேரர் மாத்திரமே அவன் மீது அனுதாபம் கொண்டிருந்தார். இவ்வாறானவர்கள் மீது பரிவும், கருணையும் கொண்டு பார்ப்பதற்கான மனம் அக் காலத்தில் எனக்கில்லாதிருந்தது ஏன் என்பது குறித்து நானறிவேன்.
ஒருவித அகங்காரமே மனதில் இருந்தது. இந்தப் பகுதி முழுவதிலுமே பெரியோர், சிறியோர் அனைவரினதும் கௌரவத்திற்கும் வணக்கத்திற்கும் பாத்திரமான என்னைப் போன்ற நபர்கள், எதுவிதக் குறைபாடுகளுமின்றி அகங்காரத்தினால் மாத்திரம் நிரம்பி இருப்பதானது புதுமையானதொன்றல்ல. என்றாலும், இன்று அந்த அனைத்திற்குமாக நான் தண்டனை பெற்றுக் கொண்டிருப்பது உண்மை.
துள்ளிக் குதித்தும் ஓடியாடியும் செயற்பட்டுக் கொண்டிருந்த செல்லா, வெளி யாட்களுக்கு தேநீர் கொடுக்கும் கிளாஸில் தேநீர் தயாரித்துக் கொடுத்தான். களைப்பும் தாகமும் காரணமாக அந்த "கிளாஸ்” பற்றிய
அருவருப்பு அடிபணிந்திருந்தது.
நான் செல்லாவுடன் எதுவும் கதைக்காமலே ஓரிரு மடக்காக தேநீரைக் குடித்து முடித்தேன்.
புத்த பூஜைக்கான பாத்திரத்தை தயார் செய்த செல்லா, உடுத்தியிருந்த சாரத்தை அவிழ்த்து உதறினான். பின்னர் மீண்டும் அந்த சாரத்தை ஒழுங்குற அணிந்து கொண்டு விஹாரையின் சாவியையும், பாத்திரத்தையும் கைகளில் ஏந்தியவாறு என் அருகில் வந்தான்.
"பூஜை
பாத்திரத்தை
தொட்டு கும்பிடுங்கோ”
செய்த பாவங்கள் அகல,
இந்தப் புண்ணியம் காரணமாகும் என செல்லா நினைத்திராவிடினும் நான் இவ்வாறு நினைக்க செல்லா வாய்ப்பளித்தான். முன்பெல்லாம் நான் புத்த பூஜைக்கான பாத்திரத்தை ஏந்தியவாறு விஹாரைக்குப் போகும்போது செல்லா எதிரில் வந்தானென்றால், தூசண வார்த்தைகளுக்கு குறைந்த பட்சமான வார்த்தைகளை என்னிடமிருந்து அவன் கேட்பான். என்றாலும் இரு கரங்களையும் கூப்பி வணங்குவதும் சகல வார்த்தைகளையும் ஒரு சிரிப்புடன் ஏற்றுக் கொள்வதும் அவனது
23

Page 26
வழக்கம். அவனுள் இருந்த பரிசுத்த எண்ணமானது இன்று வெற்றியின் உருவை நிர்மாணித்துள்ளது. இன்று விஹாரையின் படிக்கட்டுகளில் ஏறிச் செல்லும் செல்லாவுக்கும், அன்று வியர்வை வடிய விறகு வெட்டிய செல்லாவுக்குமிடையில் பாரிய மாற்றங்கள் இருப்பதைக் காணுகின்றேன்.
மூன்று முறை மணியை அடித்த செல்லா, தீர்த்தத்துடன் படியிறங்கி வரும் போது அனைத்து அம்சங்களும் பொருந்திய அரசனைப் போல் தென்படுகின்றான். இன்றைய நாள் செல்லாவுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கக்கூடும் என நான் நினைத்தாலும் அவன் அவ்வாறு நினைத்திருக்க மாட்டானென நினைக்கிறேன். என்றாலும் வெற்றிவாகை சூடியவனைப் போல் அன்னதான மடத்தை நோக்கிச் சென்ற செல்லா, சுறு சுறுப்புடன் உணவு தயாரிக்கும் விதத்தை பார்த்துக் கொண்டிருப்பதற்கு எனது விதி என்னை அழைக்கிறது. இன்னும் சில நிமிடங்களில் உணவுக்காக அவன் என்னை அழைக்கக்கூடும். அந்தச் சந்தர்ப்பம் கிட்டுவதற்கு முன்பாக, செல்லா இந்த விஹாரைக்கு வந்த முதல் நாள் எனது ஞாபகத்திற்கு வருகிறது. அன்று மமதை கொண்ட இளம் தேரராக இருந்தேன். செல்லா, அன்னதான மடத்தையொட்டிய பகுதியில் அமர்ந்திருந்தான்.
“எங்கிருந்து வந்தீர்?' "சாமி... தோட்டத்தில்
இருந்து... தோட்டத்தில்...”
”நீ தமிழனா?” "ஆமாங்க சாமி”
"தமிழன்களுக்கு இங்கே சாப்பாடு கிடையாது. நயினாதீவுக்கு செல்ல எங்களுக்கு நீங்கள் வழி விடுகிறீர்களா? எத்தனை.... எத்தனை வணக்க வழிபாட்டுத் தலங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்தன?... அனைத்தையும் நீங்கள் அழித்து விட்டீர்கள்...”
"சாமி... நான் அழிக்கல்ல சாமி ...... நான் இங்க... தோட்டத்தில்...” "மூடு வாயை....”
நாட்டை ஐக்கியப்படுத்திய துட்டகைமுனு மன்னன் எனது சித்தப்பாபோல் சிங்கள வெறி கொண்ட ஒரு தேரராக நானிருந்தேன். எனது எச்சரிக்கையின் முன்பாக செல்லா பயங் கொண்டிருந்தான்.
தானம் உட்கொண்ட பின்னர் எஞ்சியிருந்த உணவினை செல்லா பார்த்துக் கொண்டிருக்கும் 24

போதே நாய்க்குப் போட்டது இன்று நடந்த சம்பவம் போல் தோன்றுகிறது.
"சாமி... எனக்கு தாங்க சாமி... புள்ளைகளுக்கு நேத்து ராத்திரியும் ஒன்னுமில்ல சாமி...”
செல்லாவின் வேண்டுகோளுக்கு முன் இனவாத உணர்வுடன் தேசாபிமானமென நான் கொண்டிருந்த கீழ்த்தரமான எண்ணம் எனது முறைகேடுகளுக்கு உதவுவதாக அமைந்தது. செல்லா பார்த்தக் கொண்டிருக்கும் போதே நாய் அந்த உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. )
"தாங்கள் ஏனிந்த கீழ்த் தரமான காரியத்தை செய்தீர்கள்?”
பெரிய தேரர் என்னிடம் வினவினார். "ஏன்.... பெரிய தேரர்?” | "அந்த மனிதர் பார்த்துக் கொண்டிருக்கும் போது உணவை ஏன் நாய்க்கு போட்டீர்?.”
“அவர்கள் தமிழர்கள்... எங்களது இனத்தவர்களல்லர்...”
"அப்படி என்றால் உமது இனம் நாயா?”
பெரிய தேரர் இப்படிக் கூறும்போது சமரபால சிரித்து விட்டான். நாயும் நானும் ஓரினத்திற்கு உட்பட்டதும் செல்லா இன்னொரு இனத்திற்கு உட்பட்டதுமான தீர்மானம் எனதாக இருந்ததால் கோபமடைந்த நான் சிரித்த சமரபால “ஆ” என்று அலறுமளவிற்கு உணவுக் கோப்பையை வேகமாக அவனது தலையை நோக்கி வீசி எறிந்தேன்.
“ஐயா.... கொஞ்சம் சோறு சாப்பிடு வோம்”
செல்லா என்னை அழைக்கின்றான். அவன் நீட்டிய தண்ணீர் கிளாஸைகையிலெடுத்தவாறே எழுந்து நின்ற நான் பெரிய தேரர் வருவதற்கு முன்பதாக இங்கிருந்து போய் விடுவது நல்லதென தீர்மானித்துக் கொண்டேன்.
இன்று நான் மனரீதியாக பாதிக்கப் பட்டவன். உடல் ரீதியாகவும் பசி, களைப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவன். என்னைப் போல் பாதிக்கப்பட்டவனுக்கு ஒரு வேளை உணவு வழங்கும் செல்லா நான் மனப்பாடம் செய்திருந்த தர்ம பதத்தை ஞாபகப்படுத்துகின்றான்.
"யோ கிலானங் உபட்டெனி சோ மங் உபட்டெனி”
"பாதிக்கப்பட்டோருக்கு
எவரேனும் உதவுகிறார்களோ... அவர் எனக்கு வந்தனை செய்தவராவார்” என கெளதம புத்தர் போதித்திருக்கிறார்.
0 0 0
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014

Page 27
441 - 17" 44 4 4 WW1 கு: -
1114:11:"'''1, 11:
சிட்டும்..
நாட்டிய இருப்பதாக பா. ஆடலை விளக்கு வருகிறது. அரங் இது பழமையான அறிவுக்கு விருந் எமது அரங்கக்க அதே வேளை, கொள்ளலாம்.
ஆங்கிலேய இந்தியாவின் அ புராதன வேத சுவடிகளையும் இந்தியவியல் - போன்ற நாடுக அதே காலகட்ட இலக்கியம், க
** |
நாட்டியகலாநிதி கார்த்திகா கணேசர் (அவுஸ்திரேலியா)
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (168)

4ந் - -
* EE: 'டியர்
உட"க்யரங்கம்
Oாஸ்த்திரம்
ஸாஸ்த்திரம் எனும் வடமொழி நூல் லர் அறிந்திருந்தும், அது பரதநாட்டியம் என்ற தம் நூல் என்ற தப்பான கருத்தும் பலரிடம் நிலவி கக்கலையை விளக்கும் மிக பழமையான நூலே T நூல் ஆனபோதும் இன்றும் அரங்கக்கலைஞரின் தாவது நாட்டிய ஸாஸ்த்திரம் இதன்மூலம் அன்று லை எவ்வாறு அமைந்திருந்தது என்பதை அறியும் இன்றைய கலைஞருக்கு பயனுள்ள நூலாகவும்
ர் இந்தியாவை ஆட்சி புரிந்த காலத்தில் னைத்து செல்வங்களையும் தீவிரமாகத் தேடினர். நூல்களையும், கலாசாரத்தை காட்டும் ஓலை அவர்கள் ஆராய்ந்தனர். Imdo logists எனப்படும் ஆய்வாளர்கள் இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் ளில் இருந்து இந்தியாவிற்கு வருகைதந்தனர். ந்தில் இந்திய அறிஞர்களும் தம் பழமைவாய்ந்த லை யாவற்றையும் ஆராயப்புகுந்தனர். அதை
25

Page 28
அடுத்து 1894இல் நாட்டிய ஸாஸ்த்திரத்தின் முழு பிரதிகளும் கண்டெடுக்கப்பட்டன. இப்பாரிய நூலில் ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்கள் காணப்படுகின்றன. நாட்டிய ஸாஸ்த்திரம் பரதரால் எழுதப்பட்டது என கூறப்பட்டபோதும், காலத்துக்கு காலம் பலரால் எழுதப்பட்டு புதிப்பிக்கப்பட்ட நூலே இன்று நமக்கு கிடைக்கும் நாட்டிய ஸாஸ்த்திரம் கி.மு 2ம் நூற்றாண்டு முதல் கி.பி 5ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட சேர்கையே இந்நூல். 5569 சுலோகங்களால் ஆன 37 அத்தியாயங்கள் கொண்ட நாட்டிய ஸாஸ்த்திரம். 108 கரணங்கள், சுவைகள், பாவங்கள், அபிநய வகைகள், நாடக மேடையில் கையாளப்படும் உரையாடல்கள், நாடகவகைகள், நாடகக் கதை அமைப்பு, ஆடைகள் அணிகலன்கள், ஒப்பனை, நாடகக் கதை நடத்தும் சூத்திரதாரி, இசைக்குறிப்புகள் இராகம், தாளம், நாடக மேடை அமைப்பு என அத்தனையையும் தன்னுள் கொண்ட நூலே நாட்டிய ஸாஸ்த்திரம்.
அன்றைய நாடகங்கள் இசையுடன் ஆடியும் பாடியும் நடிக்கப்பட்டவையே. இத்தகைய கூத்தையே வடமொழி நாட்டிய ஸாஸ்த்திரம் நாட்டியம்' என கூறுகிறது. நாட்டிய ஸாஸ்த்திரம் எவற்றை நடித்துக்காட்டலாம், எவற்றை மேடையில் நடித்து காட்டக்கூடாது என்பதில் முக்கிய கவனம் கொள்கிறது. இன்றும் வானொலி, தொலைக்காட்சி, சினிமா, மேடை நாடகத்திற்கு தணிக்கை போன்று அமைந்துள்ளது. வயோதிபர், இளவயதினர், சிறுவர் சிறுமியர் யாவரும் கூடி இருந்து பார்ப்பதால் மேடையில் முத்தமிடல், தழுவுதல், அல்லது ஆண்பெண் உறவை குறிப்பிடும் செயல்கள் மேடையில் செயலாகவோ அல்லது வார்த்தைகளாக தன்னும் உணர்த்தாது இருத்தல் வேண்டும் என்கிறது நாட்டிய ஸாஸ்த்திரம். பார்வையாளர் கேட்பவை பார்ப்பவை பண்பானவையாகவும் மனதுக்கு இதம் அளிப்பதாகவும் அறிவை வளர்ப்பதாகவும் அமையவேண்டும். உலகில் நடப்பவற்றையே நடிப்பாக கலை அம்சத்துடன் காட்டுவதால் அவர்கள் நன்மை எது, தீமை எது என்பதை அறிந்து உணர்ந்து தம் வாழ்வை மேம்படுத்துவதாக அமைவதே நாட்டியம்.
அறம், அமைதி, நகைசுவை, போர் போன்றவற்றை மக்களுக்கு எடுத்துக் காட்டியும்,

அறவழியில் நின்றவர்கள் பெருமைகளையும், தீயசெயல்செய்தவர்களை அடக்கும் வழியையும், அறிவற்றோரின் கீழ்நிலையையும் கற்றோரின் சிறப்புக்களையும், பொருள் தேடுவோரின் விடாமுயற்சியையும் மற்றும் அந்த அந்த நிலையில் உள்ளோரின் மனோபாவங்களையும் அபிநயத்தால் காட்டி மக்களுக்கு நல்வழியில் ஊக்கம் ஊட்டும்படியான உணர்வுகளை தூண் டுவதே நாட்டியத்தின் நோக்கம். இத்தகைய நாட்டியம் மக்களின் களைப்பைப்போக்கி புத்துணர்ச்சி அளிப்பதாகவும் மனதுக்கு சாந்தி அளிப்பதாகவும் அமைய வேண்டும் என்கிறார் பரதர். நாட்டியம் மகிழ்வூட்டும் அதே வேளை அறிவை வளர்ப்பதாக அமைய வேண்டும் என்கிறார் பரதர். நாட்டியத்தில் காணமுடியாத அறிவோ, கலைகளோ, அருஞ்செயல்களோ வேறு எதிலும் இல்லை என்கிறது நாட்டிய ஸாஸ்த்திரம்
பரதர் நாட்டியத்தை மேடை ஏற்றும்போது மேடையில் நடிக்கக்கூடியது எது கூடாதது எது என கூறியதுடன் அமைதி காணவில்லை. அவற்றை எவ்வாறு காட்ட வேண்டும் எனவும் விளக்கம் தந்துள்ளார். நிஜவாழ்வில் நடப்பவற்றை போலியாக நடித்துக்காட்டுவதே நாடகம். அவற்றை நடித்துக் காட்டும் நடிகர்கள் ஏற்றுக்கொண்ட பாத்திரத்தை உரையாடல் அபிநயம் செயல் மூலமும், தமது குரலின் தொனியாலும் வெளிப்படுத்த வேண்டும். நாட்டியத்தின் தன்மைக்கேற்ப நாட்டியத்தை நான்காக வகைப்படுத்தி அவற்றை விருத்தி என்கிறார். 1. பாரதி விருத்தி - சிறப்பான உரையாடல்
சார்ந்தவை 2. கைசிகீ விருத்தி - மென்மையான
ஆடை மலர்கள் முதலியவற்றை அணிந்து, இசையும் நடனமும் மிகுந்து பெண்களால் பயன்படுத்தப்படுவது காம்
போகானுபாவத்தை காட்டுவது கைசிகீ 3. சாத்விகி விருத்தி - இது உணர்ச்சிமிக்க
வீரம் அற்புதம் ரௌத்திரம் போன்ற ஆடலைக் கொண்டவை. ஆரபடி விருத்தி - இது அதிகப்படியான உடல் இயக்கத்துடன் கூடியது. இங்கு மேடையில் குதித்தல் பாய்ச்சல் போன்றவை நடைபெறும். ஓர் அழிவு போர் காட்சி என நாம் கற்பனை பண்ணலாம்.
இயக்குநர் நாடகத்திற்கு பாத்திரத்தை தெரிவுசெய்யும் பொழுது நடிகரின்
நடை,
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (168)

Page 29
உரையாடும் தன்மை, உடல் உறுப்பு உடல் பருமன், அவரது உயரம் ஆகியவை இயற்கையாக அமைந்திருக்கிறதா எனப் பார்த்தல் வேண்டும். மனப் பக்குவம் போன்றவை நன்கு ஆராயப்பட வேண்டும். நாட்டிய ஸாஸ்த்திரம் நடிகனானவன் நாட்டியத்தின் ஒவ்வொரு அம்சங்களையும் நன்கு புரிந்தவனாக இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறது. மொழியை கையாளும் திறமை, உணர்ச்சியை வெளிப்படுத்தும் தொனியை உணந்தவனாக இசையால் உணர்ச்சி வசப்படுபவனாக இருத்தல் வேண்டும். நடிகனுக்கு உடலின் பாகங்களான தலை, கை, இடை, மார்பு, கால், கண், புருவம், உதடு, தாடை போன்றவற்றை பயன்படுத்த விசேட பயிற்சி அளிக்கப்படும். அவனது நடை, காலை எடுத்து வைக்கும் வேறுபாடுகள் அவன் எதை உணர்த்துகிறான் என புலப்படுத்தல் வேண்டும். அது மட்டுமல்ல ஒவ்வொரு பாத்திரத்தின் சமூக அந்தஸ்த்து, வேறுபட்ட மொழி, நடை, வயது, ஆணாகவா பெண்ணாகவா நடிப்பது அதற்கு ஏற்ற அங்க அசைவு அத்தனையும் உணர்ந்தவனாக நடித்தல் வேண்டும்.
இறுதியாக நடிகன் தான் பூண்ட வேடத்தின் இயற்கையுடன் ஒன்றி தானே கதை பாத்திரத்தின் சுக துக்கத்தை தனதாக கொண்டு காண்போர் மெய்மறந்து போகும்படி நடிக்கும் திறமை உடையவனாக நடிக்க கூடியவனே சிறந்த நடிகன்.
பரதர் நாட்டியத்தில் எடுத்துக்கொண்ட ஆழ்ந்த ஆய்வை வியக்காமல் இருக்க முடியாது. ஒரு சிறு விஷயத்தை தன்னும் அவர் விட்டு வைக்கவில்லை. ஆரம்பம் முதல் இறுதிவரை பார்வையாளர்கள் கவனம் சிதறவிடாது படிப்படியாக எவ்வாறு நாடகம் கட்டுக்கோப்பாக அமைய வேண்டும் என்பதை விரிவாக எடுத்துக்கூறியுள்ளார்.
நாட்டியத்திற்காக வேடம் பூணுதலும், ஒப்பனை பூசிக் கொள்வது வரை மிக மிக விரிவாக ஆழமாகவும் நுணுக்கமாகவும் விளக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிறங்களை முறை அறிந்து தக்கபடி பூசிக்கொள்ளவேண்டும் எனவும், சிகை அலங்காரம், நாட்டியத்தில் அணிந்து கொள்ளும் உடை கிரீடம் அத்தனையும் விரிவாக வெவ்வேறு பாத்திரத்திற்கு ஏற்ப விளக்கப்பட்டுள்ளது.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2011 (168)

நாட்டியத்தில் உபயோகிக்கும் பொருட்களான சூலம், வேல், அம்பு, வில்லு, கதை, வஜ்ரம் போன்ற கருவிகளின் நீளம் அகலம் ஆகியவை கூறப்பட்டு, அவை எவ்வகையான மரத்தினால் செய்யப்பட வேண்டும், எவ்வாறு செய்யப்பட வேண்டும் எனும் விளக்கம் தரப்பட்டுள்ளது. இந்த ஆயுதங்கள் உலக வழக்கில் பலவகை அளவுகளை கொண்டிருக்கலாம், ஆனால் மேடை பிரயோகத்திற்காக அவற்றினை நாட்டியத்திற்கு ஏற்ப அமைந்திருக்கவேண்டும்.
மேடை அலங்காரமாக உபயோகிக்கும் பொருட்கள், உலகத்தில் உள்ளபடி நாடகத்தில் பயன்படுத்த இயலாது. உலக மரபு உண்மையானது, நாட்டிய மரபு செயற்கையானது. அதனால் பார்வையாளர்கள் கருத்தால் மட்டும் அறிய கூடிய வகையில் மேடை அலங்காரம் அமைய வேண்டும். மரம் இரும்பு போன்றவற்றால் செய்தால் அவை கையாள்வது கடினம். அதனால் அவற்றை இலேசான தோல், துணி, அரக்கு, மூங்கில் போன்றவற்றால் இலேசாக இருக்கும்படி அமைக்கவேண்டும்.
நாட்டியம் நடைபெறவேண்டிய அரங்க அமைப்பு பற்றி விரிவாகவே கூறப்பட்டுள்ளது. நாட்டியத்தின் அமைப்பிற்கும் அது கூறும் கருத்துக்கும் ஏற்ப மண்டபத்தின் அளவு வேறுபடுவதை நாம் அவதானிக்கலாம். விகிருஷ்டம் பெரியது. சதுரச்ரம் மத்திம அளவானது. திரியச்சரம் முக்கோண வடிவான சிறியது. பல எண்ணிக்கை உள்ள பாத்திரங்களை கொண்டதாகவும் அதிகப்படியான பாய்ச்சல் குதித்தல் போன்ற ஆடல்கள் நிறைந்ததான நாட்டியம் ஆடுவதற்கு நீள சதுரத்தினால் (விகிருஷ்டம்) ஆன பெரிய மண்டபமே உகந்தது. இங்கு பார்வையாளர்கள் மேடையை நோக்கி அமர்வார்கள். இத்தகைய நாட்டியம் பார்வைக்கு ஏற்றவை. பார்வைக்கும் கேட்பதற்குமான நாட்டியங்களை இரசிக்க மத்திம அளவிலான சதுர (சதுரச்ரம்) மண்டபங்களே உகந்தது. இங்கு ஆடலை பார்ப்பதுடன் உரையாடலை கேட்டு மகிழலாம். பார்வையாளர்கள் மண்டபத்தை சுற்றி அமர்வார்கள். இறுதியாக காதால் கேட்டு இரசிக்க வேண்டிய நாட்டியங்கட்கு மிக சிறிய முக்கோண வடிவிலான மண்டபமே பொருத்தமானது.
பார்வையாளர்கள் மண்டபத்தை சுற்றி மூன்று பக்கங்களிலும்
27

Page 30
க
உம் அ. கா தல்
டே
நடு
வா செ
டே
வா பத்
நா.
இ
எதி
நட
பா
5 S* 5
iiiiiiiiii
அமர்ந்து நாட்டியத்தை பார்த்தும் கேட்டும் இரசிக்கலாம்.
இன்று போன்று மின் ஒலி, ஒளி கருவிகள் இல்லாத காலகட்டத்தில் மண்டபத்தில் வேறுபாட்டை கொண்டு பார்வையாளரை நாட்டியத்தை இரசிக்க செய்த யுத்தி போற்றாமல் இருக்க முடியாது.
நாட்டியத்திற்கு இசை உயிர்நாடி போன்றது. நாட்டிய ஸாஸ்த்திரம் வேறுபட்ட இசைக்கருவிகள் பற்றிய அறிவை நுணுக்கமாக கூறி, வாத்தியம் இசைப்போர் தகைமையையும் கூறி யுள்ளது. இங்கு நாம் கவனிக்க வேண்டியது நாட்டியத்திற்கே உயிர்நாடி இசை ஆதலால் நாட்டிய சுவைக்கேற்ப வேறுபட்ட வாத்தியத்தை வாசிப்பதையும் ஆராய்ந்துள்ளது.
இசையின் அங்கமான ராகம், ஸ்வரம், தாளம் போன்றவற்றையும் எடுத்தாழ்கிறது. இசை கருவிகளை பிரயோகிக்கும் கலைஞர்கள் அரங் கத்தில் அமர்ந்திருக்க வேண்டிய
முறையாவும் கூறப்பட்டுள்ளது.
இத்தனை பக்குவமாக தயாரிக் கப்பட்ட நாட்டியத்தை பார்க்க வரும் பார்வையாளரின் தகைமை என்னவாக இருக்கவேண்டும் என பரதர் சிந்தித்து எழுதத்தவறவில்லை. பண்பட்ட மனம் கொண்டவராக, கலைகளிலே விருப்பம் உள்ளவராக நாட்டிய கதையை புரிந்து இரசிப்பவராக இருத்தல் வேண்டும். அதற்கு மேலும் நடிப்பை பார்க்கையில் உணர்ச்சி வசப்படுபவராக இசைக்கு வசப்படுபவராக அமைய வேண்டும் என்கிறார் பரதர். ஏனெனில் நாட்டியமானது மனதை சுவை இன்பத்தில் மூழ்கித் திளைக்கச் செய்து, பார்வையாளர்களின் மனதில் நல்லறிவை புகுத்த வேண்டும் என்பதே பரதரின் நோக்கம்.
மதிப்பீடு - திறனாய்வு இல்லாத கலைகள் மேலும் வளரமுடியாதல்லவா? நாட்டிய தரத்தை மதிப்பிடுபவர்கள் (விமர்சகர்கள்) தகைமையை அறியவேண்டாமா? இவர்கள் உளத் தூய்மை உள்ளவர்களாக சமநிலை உள்ளவர்களாக இருத்தல் வேண்டும். இசைக் கருவியை கையாள்வதில் தேர்ச்சி பெற்றவராக வேடம் பூணுவதில் உள்ள நுணுக்கங்களை அறிந்தவராக 28
விை
இத் அட் அே
வெ கண் ஈர்
வ ல 9 -
* 2-2 !

மாக
ஊல சிற்பம் போன்ற லலித கலைகளில் ஆர்வம் டையவராகவும் இருத்தல் அவசியம். சுயமாக பிநயங்கள் செய்ய தெரிந்தவராக அமைந்தவர், ப்பிய சுவையை உணரகூடியவராக என இவர் கைமைகள் பட்டியல் நீள்கிறது.
மேலும் பரதர் காலத்தில் நாட்டிய ாட்டிகள் நடந்திருத்தல் வேண்டும். போட்டிக்கு வர்களாக பத்துபேர் இருக்கவேண்டும் என லியுறுத்தியுள்ளார். இந்தப் பத்து பேரும் பவ்வேறு துறை விற்பன்னர்கள். நாட்டிய பாட்டியின் போது கருத்து வேறுபாடுகளும் தங்கள் தோன்றும் அதை கையாளவே இந்த து பேரை தேர்கிறார் பரதர்.
இரண்டாயிரம் வருட நாட்டிய மரபு சார்ந்தவர் ம் எனப் பெருமைப்படும் அதே வேளை த்தகைய ஒரு பாரம்பரியத்தை உடைய நாம் துணை பொறுப்புணர்வுடன் அரங்கக்கலைகளை ாத்த வேண்டும் என்பதையும் உணர்வோம்.
நாட்டிய ஸாஸ்த்திரத்தின் மேலோட்ட ர்வையே இது. அந்த அறிவுச் செல்வத்தை ள்ளிப்பருக தூண்டுவதே இக்கட்டுரையின் நாக்கம். பருக விரும்புவோருக்கு அறிவுச் ரங்கமே நாட்டிய ஸாஸ்த்திரம்.
0 0 0
நூல்: நகர வீதிகளில் நதிப்பிரவாகம் (கவிதைகள்)
ஆசிரியர் : ஷெல்லிதாசன். வெளியீடு: ஜீவநதி 2013 ல: ரூபா 250
தொகுதியில் மொத்தம் 69 கவிதைகள் பங்கியுள்ளன. அவற்றுள் 12 குறுங்கவிதைகள். "னகமான கவிதைகள் இடதுசாரிச் சிந்தனையை ளிக்கொணர்கின்றன. பெண்ணியம் சிறுமை படு பொங்குதல் கட்டிளமைப்பருவத்தின் கவன ப்புகள் போன்ற கருத்துக்களிலும் கவிதைகள் ள்ளன. ஒரு புதிய உலகை உருவாக்கும் நம்பிக்கையோடு எளிமையான சொற்களில் கவி
- முருகா ஞர் கவிதைகளை யாத்துள்
நரப் பரவலம் ளார். சமூக அக்கறையுடன் ஒடுக்கு முறைக்கு எதிரான குரல்களாக இக்கவிதைகள் சிறந்து விளங்குகின்றன்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (168)

Page 31
3 - 4
'ம் )
காத்திருப்பு
தன்னிடம் விரைந்து ஓடி வரும்படி தன் அலைக்கைகளால் கடலன்னை அழைக்கிறாள் போலும் அன்புத்தாயின் அழைப்பு! சூரியன் தன் கடலன்னையிடம் ஓடிவருகிறான். ஒரு நாள் கூட இவன் தன் மகனைப் பிரிந்திருந்திருக்க மாட்டாள் போலும்! "மகனே! சூரியா! வா!” நீயும் சில வேளைகளில்..."கடலன்னையின் ஏக்கம் அலைகளாய் விரிகிறது. இருள் வேகமாய் ஆட்கொள்கிறது. இருளோடு போட்டியிட்டு தத்தம் வீடு செல்லும் மக்கள்.
ம்மா...ம்மா...ம்மா...
கச்சான் நன்றாக வறுக்கப்பட்டதை காற்றோடு கலந்து வந்த வாசனை சொல்லியதும் இரண்டு கச்சான்களை வாயில் போட்டுப் பதம் பார்க்கிறாள். மணலுக்குள் ஒளிந்து கிடக்கும் கச்சான்களையெல்லாம் முழுவதுமாய் அரித்து எடுத்து பெட்டியில் போடுகிறாள். நெருப்பில் துவண்டு வந்த கச்சான்களை மெல்லிய காற்று தடவிக் கொடுப்பது போல் இளம் தென்றல், கூடவே. நல்லம்மாவின் நெற்றியோரத்தில் வழிந்த வியர்வைத் துளிகளையும் தன்னுடன் கூட்டிச் செல்கிறது.
வேலை முடித்து செல்ப வர்களால் கிழவியின் கச்சான் வியாபாரம் சூடுபிடிக்கும் அவள்
கீதா க ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (168)

* 1:11
வியாபாரத்தின் இலவச விளம் பரமாய் வறுத்த கச்சானின் நறுமணம்.
உண்மைதான்.
வேலை முடிந்த களைப்பில் செல்லும் ஜடங்களுக்கு, இந்த வறுத்த கச்சானின் வாசனை மூக்கினுள் நுழைய கைகள் தாமாகவே பணப்பையைத் தேடும்..... |
தினமும் புதிதாய்ப் பய ணிக்கும் மக்களை விடவும் கிழவிக்கு வழக்கமான வாடிக்கை யாளர்களாய் அதிகமானோர் இருந்தனர்.
ஏன்? வெற்றிலையைச் சப்பி பேருந்துடன் கூடவே தம் வாழ்க்கைப் பயணத்தையும் ஓட்டிச் செல்லும் ஓட்டுனர்களும் வெற்றிலையைக் கைவிட்டு
கச்சானையும் மஞ்சட் கடலை யையும் கொறிக்கப் பழக்கியதில் கிழவி வெற்றி கண்டது என்னவோ உண்மைதான்.
"ஆச்சி எனக்கு முப்பது ரூபாய்க்கு” "எனக்கு ஐம்பது ரூபாய்க்கு” "ஆ...... அம்மம்மா. எங்களுக்கு
பத்து ரூபாய்க்கு தாங்க அம்மம்மா” பள்ளிச் செலவுக்குக் கொடுக்கும் பணத்தில் மீதப்படுத்தி பத்து ரூபாய்க்கு கச்சானை வாங்கி மூன்று நான்கு பேராய் பங்கிட்டு உண்ணும் சிறுசுகள்.
"டேய் நீ எனக்கு 'அஞ்சு' கச்சான் கடனல்லே.”
”அம்மம்மா பாத்துப் போடண... கடன் கச்சான் குடுக்கோணும்”
"டேய் பயலுகள்! கச்சானெல்லாம் கடன்
வாங்குறீங்கடா! ம்... அஞ்சு கச்சா னுக்குக் கடன்”
நான்கைந்து கச்சான்களை அவனின் கையிலும் கொடுத்து சிறுபையினுள் நிரப்பிக் கொடுக் கிறாள் கிழவி.
ம்மா...ம்மா....ம்மா....
அவன் ரூபனும் இப்படித்தான் பத்து வயசுவரைக்கும் ஓடித்திரிஞ்சு சுட்டியா இருந்தவன். பதினொரு வயதில் சுயமாகவே தன்
பொறுப்புணர்ந்து வளர்ந்தவன். ணேஷ்

Page 32
ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் வீடு மெழுகுவதற்குத் தேவையான சாணகம், தண்ணி என்பவற்றை ஆயத்தம் செய்து வீட்டையும் ஒழுங்கு செய்வான்.
தினமும் பொழுதுபட்டதும் தன் சிறு கைகளால் விபூதி போட்டு சிமினியைப் பக்குவமாய்த் துடைத்தெடுக்கும் பாங்கு நல்லம்மாவிற்கு அவன் மீதான நம்பிக்கையின்
அடித்தளமாயமைந்தது.
அவன்தான் சுவாமி அறையிலும் விளக்கேற்றிப் பின் லாம்பையும் ஏற்றி வைப்பான்.
'வீட்டிற்கு வெளிச்சம் கொடுப்பது அந்த சிறிய லாம்புதான்.'
வீட்டின் முன் விறாந்தையில் விளக்கு ஒளிர அவன் தன் பாடங்களை நேர்த்தியாய் படிக்கும் அழகை நல்லம்மா குப்பிவிளக்கில் பிட்டுக் கொத்திக் கொண்டே ரசிப்பாள்.
சீராக வாரப்பட்டிருக்கும் தலை, மாலையில் தேவாரம் படித்து, நெற்றி நிறைந்த விபூதியும் சந்தனமும் அவன் அழகை மெருகூட்டும்.
'உனக்காக நான் எனக்கா நீ' என்ற பாசப்பிணைப்பில் நல்லம்மாவும் ஒரே மகன்
ரூபனும் அந்தச் சிறுகுடிசை வீட்டினுள்.
பதினைந்து வயதுக் கட்டிளமைப் பருவத்தில் அவனுடன் கூடவே பொறுப்புணர்ச்சியும் அதிகரித்தது.
விறகு கொத்தி, சந்தைக்குப்போய், சமையல் சரக்குக் கொள்வனவு என தாய்க்குரிய தேவைகளை நிவர்த்தியாக்கியதன் பின்பே தன் காரியம்.
"டேய் நீ ....பொன்ஸ்தான்.
அம்மா பிள்ளையாகத்தான்
வளரப் போறாய்"
ரூபனின் நண்பர்கள் அவனைக் கேலி செய்யும் போதெல்லாம் அவனுக்கும் பெருமையாயிருக்கும். அதை விட வேறு சந்தோசம் என்ன இருக்கடா?
* * * "என்ர பிள்ளை வருவான். நான் இதில் இருந்து கச்சான் விக்கிறதும் என்னத்துக்கு? அவனுக்குத் தெரியும். அம்மா எங்கையும் போகமாட்டா எண்டு...'
“இப்ப இருபது, இருபத்தைஞ்சு வருசம்..... இதிலான் இருக்கிறன்... என்ர சீவியத்துக்கு ஏத்த மாதிரி வருகுது என்றத விட வருமானத்துக்கு தக்கபடி வாழப்பழகீறன் மோனே”
அருகிலிருக்கும் மாம்பழ வியாபாரிக்கு கூறிக்கொண்டிருந்தாள்.
30

நாராயண வியாபாரி மாம்பழ வியாபாரத்திற்காய் இவ்விடம் வந்து ஒரு கிழமை கூடக் கடக்கவில்லை.
நல்லம்மாக் கிழவி, கச்சானை வறுத்துக் கொண்டே, ரூபனைப் பற்றிய நினைவுகளை அவன் வருகையை முன்மொழிவது வழக்கமாயிற்று.
நாராயணன் வருகைக்கு முன்பு, அவள் கதைகளை கேட்பது, கச்சான் தாச்சியும் மணலும்
அகப்பையும்தான்.
“உங்களுக்கு எல்லாரும் இருக்கினமே...? ஒருத்தரும் காணாமப் போகேல்லயே...?”
"நாங்க வவுனியாவில் இருந்து கிட்டடிலான் இங்கவந்தனாங்கள். நாலு பெடியள். ரெண்டு பேர் கட்டீற்றினம். ஒருத்தன் அவுஸ்ரேலியா போயிட்டான். கடைசி இவன்தான் ராமு.
"அவுஸ்ரேலியாவுக்கு என்ன கள்ளமாயோ போனவன்?.. ஐயோ என்ர மோன அந்த நாளேல் எத்தின தரம் சொல்லியிருப்பன் போடா எண்டு... என்ன விட்டுக் கொஞ்சமும் அரக்கமாட்டான் தம்பி. அவன் ஓ.எல்., படிக்கேக்க பள்ளியால் சுற்றுலாக் கூட்டிக்கொண்டு போனவை. அம்மாவத் தனியா விடமாட்டன் எண்டு போக மாட்டான் எண்டான்.
“அப்டியிருந்த என்ர பிள்ளை எப்பிடியும் என்னத்தேடி வருவான். இருபத்தைஞ்சு வயது கடந்த இளந்தாரியாட்டம் வருவான்.”
கறுத்தக் கொழும்பான், விளாட், விளாட், கிளிமூக்கு... ஒண்டு பத்து.. ரூபா ... பத்து ரூபா நாராயணன் கூவியழைத்தும் யாரும் செவிசாய்ப்பதாயில்லை. காலையிலிருந்தே வியாபாரம் அவரோகணமாய் இருந்தது.
ம்மா...ம்மா..ம்மா.... "தம்பி நாராயணா! இதில் சிவப்பு ரீசேட்டோட வந்து கச்சான் வாங்கினான்.... சிவலப் பெடியன்... அவனப் போலதான் என்ர மோன் ரூபனும். இன்னும் சிவல எண்ணலாம். எப்பன் கோவம் வந்தாலும் முகம் சிவந்திடும்....
அப்பிடியே அந்த முருகப் பெருமானை வடிச்செடுத்தது மாதிரி...”
வாடிக்கையாளரைக் கவனித்துக் கொண்டே அவனுடனான கதையாடலையும் தொடர்ந்தாள்.
"மகன் எங்கையணை போனவன், வெளிநாட்டுக்கோ?” அவள் மீது கொண்ட பரிவால் அவனுக்கு கேட்க வேண்டும் என்று தோன்றியது போலும்.
"எங்கட பண்பாட்ட சாகடிச்சு உயிர் வாழுறதவிட, பண்பாட்டோட செத்துப் போறது மேல்” நல்லம்மாக் கிழவி தத்துவமாய் எடுத்துரைத்தாள்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (168)

Page 33
“அப்ப மோன் இங்கையே இருக்கிறான்? நாராயணனுக்கு ஆவல் விழித்துக் கொண்டது.
*
ம்மா...ம்மா....ம்மா.... "99 ஆம் ஆண்டு ஐப்பசி வெள்ளிக்கிழமை.... என்ர பிள்ளைதான் ஒவ்வொரு நாளும் சிமினி துடைச்சு வீட்டு விளக்குக் கொளுத்துவான்.
அந்தச் சின்ன விளக்கு அடக்கமாய் எரிஞ்சாலும் அந்தளவு வெளிச்சமும் எங்களுக்குப் போதுமாயிருக்கும்.
பளிச் பளிச் என்று சிமினி மினுங்கும். எல்லாத்தையும் நேர்த்தியா செய்வான்.
“அண்டைக்கெண்டு நான் பாவி, சிமினி துடைக்க எடுக்க, அதுக்கே பிடிக்கேல்ல
அப்பிடியே கீழே விழுந்ததுதான்.
"அம்மா இருட்டில் இருக்கக் கூடாதெண்டு வேலுவின்ர கடையில் சிமினி வாங்கப்போனவன்.
“உங்களுக்கும் தெரியுமெல்லே. சிமினி அவரின்ர கடையில் மட்டும்தான் இருக்கும்... ஆலடிப் பிள்ளையார் கோயிலுக்கு வடக்கால ...”
நாராயணன் தலையசைத்து ஆமோதித்த வாறே தன் அன்றைய கணக்கிடலில் மூழ்கினான்.
அவன் கேட்க வேண்டும் என்ற சிரத்தையெல்லாம் அவளுக்கு இல்லை.
ரூபனின் பிரிவின் பின் காற்றோடும் கதை பேசும் காலமாய் அவள் வாழ்வு....
"ம்... ஏக்கமாய் வந்த பெருமூச்சு, அவள் உள்ளத்து மூட்டையை அவிழ்த்துக் கொட்டியது.
"அம்மா... உங்க மகனக் கொஞ்சம் விசாரிக்க வேணுமாம். கூட்டிக்கொண்டு போறம். கொழும்புக்குத்தான் கொண்டு போறம். இரண்டு கிழமையால கூட்டிவாறம்...
மொழி பெயர்க்கப்பட்ட செய்தி அவளிடம் வந்தது என்னவோ... இப்படித்தான். கடையில வைச்சுப் பிடிச்சவன சிமினி கொண்ணந்து தர விட்டாங்கள்... ஆனால்... அவன் இல்லாம... விளக்கு எப்பிடி...”
"பிறகு போய்ப் பாக்கேல்லயோண?” "ரெண்டு தரம் கொழும்பில் போய்ப்பார்த்தனான் மோன. பிறகு எனக்கும் சிக்குன் குனியா .வந்து முடங்கிப் போனன். பிறகு போக்குவரத்தெல்லாம் பிரச்சனையாயிட்டுதே...
“என்ர மோனுக்குத் தெரியுமடாம்பி, அம்மா இதிலான் கச்சான் வித்துக் கொண்டு ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (168)

இருப்பா எண்டு, ... போனமாசம் கூட அவன்ர போட்டோவெல்லாம் குடுத்து
பெரிய அதிகாரிகளோட கதைச்சிற்று வந்தனான்..."
அந்த இருளிலும் கிழவியின் பற்கள் நம்பிக்கையோடு பளிச்சிடுகின்றன.
"எல்லாம் விளக்கமாய்க் கேட்டுப் பதிஞ்சவை.”
* * * * * ..ம்ம்.....ம்மா....ம்மா...
தன்னிடம் மீதமாய் இருக்கும் நேரத்தைத் துரத்திக் கலைப்பதற்காய், பலரும் வந்து கூடும் முச்சந்தியில் துரையர் ஒரு கிழமையின் பின் தன் வரவைப் பதிவு செய்கிறார்.
கிழவி வறுக்கும் கச்சானின் சுகந்தம் மூக்கைத் துளைக்க, வெற்றிலை சப்பல் விடுதலை பெற்று வீதியோரமாய் விழுகிறது.
"தம்பிதுரை ..என்ன காணாதமாதிரி நிக்கிறாய் கனகாலமா உன்னக்காணவுமில்ல?” நல்லம்மா வழக்கம் போல் தானாகவே ஆரம்பித்தாள்.
"தம்பி துரை ......போனமாசம் என்ர மகன்ர போட்டோவெல்லாம் குடுத்து ஒரு பெரியவரிட்ட பதிஞ்சு இருக்கிறன். எப்பிடியும் தான் முயற்சி செய்யுறன் எண்டவர்.....
வீடு வீடா வந்து ஆக்களக் கணக்கெடுப்புச் செய்தவ. மகன் இருக்கிறான் எண்டுதான் பதிஞ்சனான். அவன் வருவான்..... என்ன தம்பி.
நம்பிக்கையாய் உதிர்ந்த அவள் சொற்களில் ததும்பும் குளிர்மை, குரல்வளையை விறாண்டி
வரட்டி எடுத்தனவாயிருந்தன.
"இந்த வருசம் எப்பிடியும் வெளிச்சத்துக்கு வரும்..... ஒரு கைப்பிடியாய் அள்ளிய கச்சானை துரையின் கையில் கொடுத்து, கச்சான் மூட்டையை சரிசெய்து முடிச்சுக்களைப் போட்டுக் கொண்டே...
மீண்டும்....
"தம்பி துரை என்னப்பா பேச்சு மூச்செத்து நிக்கிறாய்?
“ஓமண எதப்பேசிறது...எதவிடுறது?
காசுக்கட்டை சீலைத் தலைப்பில் முடிந்து இடுப்பில் பத்திரப்படுத்தி, ஆயத்த நிலையில் கிழவி பெருமூச்சொன்றை உதிர்த்து நீண்டதாய் விடுவித்தாள்.
.....ம்மா....ம்மா....ம்மா.......
"கிழவியும் பாவம், நன்மை தீமை தெரியாது”
“ஏதோ மகன் பக்குவமா இருக்கிறான் என்ற நினைவு.”
31

Page 34
நினைவுகள் அநாதையாய் போனால் எஞ்சுவது... எதுவுமில்லை.... இல்லை... எதுவும் பேசிக்கொள்ளலாம். சுயமே தொலைந்தபின் யாருடன் எதைப்பேசுவது என்பது மட்டும் எப்படி விளங்கும்?
"நாராயணா! கிழவிக்கு எப்ப வெளிச்சம் வரப்போகுதோ தெரியேல்ல.”
"ஓமண்ணை இண்டைக்கு
இந்தப் பின்னேரத்துக்கிடையிலேயே ...... எனக்கு தலை வெடிச்சிடும் போலிருந்தது. பாவம் மனுசி. வயசு போயும் ஏதோ மனத்தைரியத்தில் சீவிக்கிறா...
.....ம்மா...ம்மா....ம்மா....
"தம்பி துரை ஒரு கிழப்பசுவொண்டு காத்தால் இருந்து கதறிக்கேக்குது.”
ஆரும் கணக்கெடுக்கிறதா இல்ல. எங்கையோ தூரமாக் கதறிக்கேட்டது. இன்னும் கதறி முடியேல்ல...வரவர கிட்டவாக்கேக்குது....
எத்தனையோ ஆயிரம் கூர்மையான செவிகளில் பட்டும் செல்லுபடியற்றுப் போன அலறல் கிழவியின் செவிப்பறையில் மட்டும் ஒலித்து அவளின் உள்ளத்தை ரணகளப்படுத்திக் கொண்டிருந்ததன் வெளிப்பாடாய் கொட்டித் தீர்த்தாள்.
கச்சான் மூட்டை அவள் தலையில் ஏறி அமர்ந்து கொண்டது.
....ம்மா....ம்மா....ம்மா..
ஒட்டிய வயிறு, கண்களின் ஓரத்தில் வடிந்து காய்ந்த கண்ணீர், ஏதோ ஒன்றின் ஏக்கம் படர்ந்திருக்க... கதறிய படி.....
ம்மா....ம்மா.... "கன்டுக்குட்டி போனகிழமை காணமப் போனதாம் நேற்றுத்தான் எங்கையோ பத்தேக்க அதுகின்ர மண்டையோடு கிடந்து எடுத்ததாம். தாய் கதறிக் கொண்டு திரியுதாம்"
நல்லம்மா, என்ன நினைத்தாளோ? எதைத்தான் நினைப்பாள் அவள்?
"பாவியள் ஈவிரக்கம் இல்லாம... வாய்விடாச் சாதியள கொல்லுறாங்கள்.”
ச்சீ ...... ஒரு கிழப் பசுவ இப்படி துடிக்க விட்டவங்கள் உருப்படுவாங்களே...
அந்தப் பிஞ்சுக் கண்டு தாய நினைச்சு எப்பிடிக் கத்தியிருக்கும்?
கிழவி தன் அனுபவங்களை முன்வைக்கி றாளோ?
"பித்தாகும் பெத்த மனங்கள்.”
உயர்திணையென்ன? அஃறிணையென்ன? "பாவியள் கத்தியக் தூக்கேக்க தன்னும் கொஞ்சம் யோசிக்கிறேல்ல......
32

"இவங்களெல்லாம் பிள்ள குட்டி இல்லாத மலட்டுக் கூட்டங்களாக்கும்"
"தம்பி துரை! இப்பிடி பசுமாடு கதறுறத பாக்கிறதும் பாவம்.. அதுக்கும் மனுசர் போல விசர்கிசர் பிடிக்கிதோ தெரியேல்ல...”
தலையில் சுமந்த மூட்டையுடன் இரண்டடி நகர்ந்திருக்க மாட்டாள் திரும்பி வந்து,
"தம்பியவ நான் நாளைக்கு ஏ.ஜி. ஒவ்வீசுக்கு போவன். இங்க வாறது சமசியம். நாளைக்கு அந்தப் பெரியவரப் போய் காணவேணும். அந்த மனுசன் பாவம்...ஏதோ... தெய்வத்தப் போல”
"மகன்ர போட்டோவெல்லாம் வாங்கி, எழுதினவர். சிலவேளை வாற கிழமை மட்டில் கொழும்புக்குப் போவன்”
..ம்மா...ம்மா...ம்மா....
கிழப்பசு நல்லம்மாவைக் கடந்து செல்ல அவளும் அதன் பின்னே சென்று.... சிறு புள்ளியாய் மறைகிறாள்.
நாராயண வியாபாரி நீண்ட பெருமூச்சை இறக்கி வைத்து வானொலியை அவசரமாய்
முறுக்கினான்.
“இதுவரை மீட்கப்பட்ட மண்டையோடுகளின் எண்ணிக்கை 77 ஆக அதிகரிப்பு.”.
..ம்மா...ம்மா... கிழப்பசுவின் |
கதறல் மெலிதாய் காற்றில் கலந்து செய்தியோடு காதில் நுழைந்தது.
* *
"ஏன் அப்பா எல்லாரையும் புதைச்சுப்போட்டு திரும்ப கிளறி எடுப்பினமோ?”
மாம்பழங்களை பெட்டியில் அடுக்கி சைக்கிள் கரியலில் கட்டி ஆயத்தமாக, அவனுடன் கூடவே இருந்த பன்னிரண்டு வயசு வாரிசு இடைவிடாத கேள்விகளால் துளைத்துக் கொண்டிருந்தான்.
நடந்ததை எல்லாம் மறந்து புதுவாழ்வு வாழவேண்டும். இனிமேலும் இந்த அழிவுகள், துன்பங்கள், கதறல், ஓலங்கள், அங்கங்களைப் பிய்த்து எடுக்கும் வேட்டுக்கள்... எல்லாமே எங்கள் சந்ததியோடு மரணித்து விடவேண்டும். இந்தப் பிஞ்சுகளாவது சுதந்திரமாய் பழுத்து, வாழ்வை ருசியாக்கட்டும். நெஞ்சுப் புதைக்குழிக்குள் புதைக்கப்பட்டு வாய்ப்பூட்டு போட்டு பூட்டிவிட எண்ணியவற்றையெல்லாம்,
அவனின் இடைவிடாத கேள்விக்கணைகள் கிளறி எடுக்க, சைக்கிளின் முன்கரியலில்
அமர்ந்திருக்கும்
அவனுக்கு நெஞ்சப் புதைகுழியிலிருந்து இரகசியங்களை ஒப்பு விக்கிறான்.
0 0 0 ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (168)

Page 35
எங்கள் கலை - இலக்கிய வரலாற்றில் ஆக்கத்திறனும் ஆழ்ந்த சமூக உணர்திறனும் கொண்ட ஆளுமையாக விளங்குபவர் காவலூர் ராசதுரை சிறுகதை, நாவல், நாடகம், திரைப்படம், ஆக்க இசை, விளம்பரக்கலை, விமர்சனக் கலை என விரியும் பல்துறைகளிலும் முன்னோடியாக இவரின் முத்திரை பதிந்துள்ளது. அனைத்துக்கும் மேலாக நல்லதொரு சமூக மனிதராக அவரது உறவின் மேன்மை உணரப்படுகின்றது.
புலம்பெயர் வாழ்வில் அவுஸ்திரேலியா விலிருக்கும் காவலூர் அவர்கள், தற்பொழுது நோயின் கொடுமுகத்தில் நலிந்திருப்பதான சேதியில் நெஞ்சத்து கிளர்ந்த நினைவலைகளின் பிரதிபலிப்பே இந்தக் குறிப்பாகும்.
தற்துணிவும் தாராள மனதும் எல்லையற்ற ஆக்கத்திறனும் கொண்ட காவலூரின் வாழ்வனுபவங்களின் பெறுமதி தனித்துவ மானது. ஈழத்து கலை வரலாறு பற்றிய வரன் முறையான ஆய்வுப்பதிவில் காவலூரின் இடம் விசாலமானது - விலாசமானது என்றால் மிகையில்லை.
ஈழத்தின் பன்முக கலை
கால்லும்
பேராசிரியர் எண் .சண்முகலிங்கன் (முன்னாள் துணைவேந்தர், சமூகவியல் பேராசிரியர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.)
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (168)

யாழ ப் பாண த் து ஊர் காவற் துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட காவலூரின் இலக்கிய ஈடுபாட்டுக்கும்
ஊடக கல்விக்கும் களமாக சுதந்திரன், வீரகேசரி. தினகரன் போன்ற செய் தித்தாள்கள் விளங்கின. அருமையான பல சிறு கதைகளை, நாவல் களை படைத்தற்கான வாய்ப்புக்களை இவை யளித்தன.
காவலூரின் ஆங்கில மொழிப்புலமை அவரது அனுபவப் பரப்பின் விரிவாக்கத்துக்கும் தொடர்பியல் வல்லமைக்கும் அரணானது என்றால் மிகையில்லை.
ஒரே தொழில், ஒரே நிகழ்ச்சிநிரல் என்ற யந்திரப்பாங்கான வாழ்வினைப் புறந்தள்ளி, ஆளுமையின் நெருக்கடிகள், அது தரும் சந்தர்ப்பங்கள் அனைத்தையும் நதா ன த மாக
பெரியா4 i 1
இலக்கிய ஆளுமை ராசதுரை
தன் வயப்படுத்தி புதிய புதிய தேடல்களுடன் தன்னம்பிக்கையுடன் பயணித்த காவலூரின்
வாழ்பவனுவங்கள் மகத்தானவை.
வீரகேசரி முதலான பத்திரிகை நிறுவனங்கள், இலங்கை வானொலி யுனிசெவ் உள்ளூர் அமைச்சுக்கள், விளம்பர நிறுவனங்கள் என பல தொழில் புலங்களுடு பயணித்த காவலூர் பின்நாட்களில் வசீகரா என்ற பெயரில் சொந்தமாக ஒரு விளம்பர நிறுவனத்தை உருவாக்கிக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
காவலூரின் படைப்பாளுமைக்கு சான் றாக குழந்தை ஒரு தெய்வம், (1961), ஒரு வகை உறவு , (1976) எனும் இரண்டு சிறுகதைத் தொகுதிகள், வீடு யாருக்கு (1973) எனும் நாவல், விளம்பரத்துறையின் தோற்றம், வளர்ச்சி, வீச்சு, ஆதிக்கம் (2001)
33

Page 36
புக்குறிக்கொம், இ
எனும் ஆய்வனுபவ நூல் ஆகியவற்றுடன் AProphet Unhonoured (1996) என்ற தலைப்பிலான ஆங்கில சிறுகதை நூல் ஒன்றும் வெளியாகி உள்ளன. இவற்றை விட இன்னமும் பதிப்புப் பெறாத எண்ணற்ற எழுத்துக்களும் காற்றோடு காற்றாக கலந்து கரைந்த வானொலி - தொலைக்காட்சி படைப்புகளும் உள்ளன.
காவலூரின் படைப்புக்கள் முழுமையும் அவருக்குள் நிறைந்த அற்புத மனிதனை, நியாய மனத்தின் உயிர்ப்பினைத் தரிசிக்க முடியும். அறிவும் உணர்வும் இசைந்த அனுபவ ஞானம், அனைவரையும் இலகுவில் தொற்றிக்கொள்ளும் வல்லமையான படைப் புக்களாகும்.
வசனம் கொண்டு கவிதா உணர்வை ஏற்படுத்துவது சிறுகதை
என்றால், இராசதுரை எமது தலைமுறையின் உணர்வுக் கவிஞர்களில் ஒருவர்' என அந்நாளின் முதல் சிறுகதைத் தொகுப்புக்கு தந்த அணிந்துரையில் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் குறிப்பிடுவார்.
இந்த உணர்வுக் கவிஞரின் அனைத்துப் படைப்புக்களிலும் இவரின் மனிதாய - சமுதாய உணர்திறன் துல்லியமாகவே வெளிப்பட்டது. சமூகத்தின் முற்போக்கான ஆக்க செயற்பாடுகளிளெல்லாம் காவலூரின் அயரா ஈடுபாடு நிறைந்திருந்தது.
இலங்கை வானொலியின் ஆக்க இசைக் களங்களின் வழியாகவே காவலூருடனான அறிமுகம் எனக்கானது என்பேன். மலிபன் விளம்பர நிகழ்ச்சியொன்றினை ஈழத்துக்கான பாடல்களின் தோற்றக் களமாக்கி அண்ணன் பரா. எஸ்.கே.பரராஜசிங்கம் அவர்களுடன் இணைந்து அவர் தயாரித்த மலிபன் கவிக்குரல் பாடல்கள், எங்கள் ஆக்க இசை வரலாற்றின் தோற்றுவாயானதும் இந்தப் பாடல்களின் அருட்டுணர்வில் எங்களுக்கான பாடல்களை ஆக்கும் பணியில் நாங்கள் இசைந்து உழைத்தும் இன்று வரலாறாகும்.
உலக பண்பாட்டுப் புலங்களிளெல்லாம் பண்பாட்டின் பாடல்களுக்கான தேடலும் படைப்பும் நாட்டார் பாடல்களிலேயே தொடக்கம் பெறுவதனையும் அவை வானொலி என்ற ஊடகத்தினை மையமாகக் கொண்டமைந்தமையையும் லத்தின் அமெரிக்கா போன்ற புலங்கள் பற்றிய இனக்குழும இசை சார்ந்த பதிவுகளின் வழி இன்று அறிந்து
34

கொள்கின்றோம்.
இத்தகையதொரு
உணர்திறனுடன் எங்கள் ஈழத்துப் பாடல்களின் தொடக்கப் புள்ளியாகவும் நாட்டார் பாடல்களை தேடி இசை வடிவாக்கித் தந்த பரா-காவலூர் - ரொக்சாமி கூட்டுழைப்பின் படைப்புக்கள் காலத்தால் அழியாதன.
காவலூரின் புத்தாக்க உணர்வும், பரிசோதனைகளை துணிந்து மேற்கொள் வதற்கான துணிவும், வானொலியிலும், பின்னர் தொலைக்காட்சியிலும், சினிமாவிலும் இவர் புகழ் பதிவு பெற ஏதுவாயின. வானொலி என்ற வல்லமை மிக்க தொடர்பூடகத்தின் நுட்பங்களை அனுபவ பாடமாக கற்றுக் கொண்ட காவலூரின் ஆக்கங்கள் ஊடக வெளியின் அனைத்து முகங்களிலும் ஒலித்தன. செழுமையான கலை - இலக்கிய உரையாடல்கள் முதல் மேம்பாட்டுக்கான
அறிவுரை விகசித்திருந்தன.
வானொலியைப் போலவே புதிதாய் அறிமுகமான தொலைக்காட்சியிலும் அவர் 'கால்கள்' பதிந்தன. இரவல், இறக்குமதி வணிக நிகழ்ச்சிகளால் நிரப்பப்படும் ஊடக வெளியிடை மலையக மக்களின் வாழ்வாதாரத்தைப் பேசிய காவலூரின் காலங்கள் தொலைக்காட்சி நாடகம் இன்றுவரை அனைவராலும் நினைவு கூரப்படும்.
காவலூரின் திரைப்படைப்பான பொன்மணி' ஈழத்து திரைப்பட வரலாற்றில் குறிப்பிடத்தக்க முயற்சியாக அமைந்தமையும் ஈண்டு குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படவாக்கத்தின் தொடக்க உயிர்விசையாக கிடைத்த என் பொழுதுகள் மறக்க முடியாதவை.
நண்பனாய், மந்திரியாய், அண்ணனாய், அப்பாவாய் பன்முக உறவு நிலையிலும் அர்த்தங்கள் தந்த காவலூரை நான்கு ஆண்டுகளுக்கு முன் ஒரு பொழுதில் என் துணைவேந்தர் பணிமனையில் சந்திக்க நேர்ந்ததும் விளம்பரக் கலை பற்றிய அவரின் புதிய நூலை பல்கலைக்கழக அரங்கில் வாழ்த்திப் பேசியதும் இன்னமும் பசுமையாய் நெஞ்சிலே இது போல் நீள இன்னமும் வாழும் பொழுதுகளுக்கான காத்திருப்பிடைதான் நேற்றைய செய்தி.
எந்த ஒரு நிலையிலும் அவரின் ஆத்ம வீரம் இன்றைய நோய் நிலையிலும் அவரைக் காத்திடும் என்பது என் அசையாத நம்பிக்கை - பிரார்த்தனை.
0 0 0
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ரே 2014 (168)

Page 37
5ெ .ே
சிiiiiiiiiii
வழமையாக திறப்பு வைக்கும் இடத்தில் திறப்பு இருந்தது, ஆனாலும் சுற்று முற்றும் நோட்டம் விட்டு விட்டு ஒருவரும் இல்லை என முடிவு செய்தவளாக அவக்கெனத் திறப்பை எடுத்துக் கொண்டாள் சித்ரூபா , புத்தகப்பையை மதிலுடன்
சாற்றி வைத்துவிட்டு மாங்காய்ப் பூட்டைத் தனது பிஞ்சுக் கரத்தால்
பிடித்துக் கொண்டு
மற்றைய கரத்தால்
திறப்பைச் செலுத்தினாள்,
பூட்டு
படாரெனத் திறந்து கொண்டது, அதிசயத்திலும் அதிசயமாக இருந்தது சித்ரூபாவுக்கு. வழமையாக
அந்த மாங்காய்ப் பூட்டுடன் படும் அவஸ்தை, அவளுக்கும் அந்த உயிரற்ற கேற்றுக்கும் தான் தெரியும், "பூட்டை மாற்றுங்கள்" என்று அப்பா
அம்மாவுக்குச் சொன்னால் அவர்கள் காதில் வாங்கிக் கொள்வதில்லை,
எப்ப பார்த்தாலும் பிசி பிசி என்று பறந்து கொண்டிருப்பார்கள், அப்பிடி என்னதான்
செய்கிறார்களோ சாதிக்கிறார்களோ?
மனம் விரக்தியுற மர்மக்கதைகளில் வருவது போல் யாராவது உள் நிற்கிறார்களோ என்று அங்கும் இங்கும் பார்த்து உறுதி செய்த பின், மறுபடியும் கேற்றைச் சாற்றி, உள்புறம்
சாற்றி விட்டு, மாங்காய்ப் பூட்டைப் போட்டுப் பூட்டி முடிக்கு முன் அவளுக்குப் போதும் போதுமென்றாகி விட்டது,
"இனி அடுத்த வேலைப் பாடு".
சிறுகதை
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (168)

மனம் புறுபுறுக்க நிலத்திற்கு கீழ் மறைத்து வைக்கப்பட்ட திறப்புக் கோர்வையை எடுத்து ஹோல் கதவைத் திறந்தாள், தனது பிஞ்சுப் பாதங்களை மெது மெதுவாக நகர்த்தி ஹோலுக்குள் நுழைந்து, ஒரு தடவைக்கு இரு தடவை கண்களைச் சுழல் விட்டவாறு அறைக்கதவைத் திறந்தவளின் இருதயம், பட படவென அடிக்கத் தொடங்கியது.
அவசர அவசரமாக உடையை மாற்றி விட்டு ஹோலுக்கு வெளியே ஓடி வந்தாள், இருதயத்தின் படபடப்பு இன்னமும் குறைய வில்லை. தொடர்ந்து படபட என ஓசையை எழுப்பிக் கொண்டிருந்தது. போதாக் குறைக்கு இரவு பார்த்த படத்தில் இடம் பெற்ற மோகினிப் பிசாசின் உருவம் மனக்கண் முன் வந்து, படபடப் பின் வேகத்தை அதிகரித்துக் கொண்டது.
அன்னை சூர்யா மூடி வைத்த உணவைச் சாப்பிட முடியாது பயம் கௌவியது. மீண்டும் வெளியே ஓடி வந்து விறாந்தையில் அமர்ந்து கொண்டாள்.
நேரம் அதிகரிக்க அதிகரிக்க பசிவேறு வயிற்றைப் பிடுங்கியது. காலையில் அவக் அவக் என முழுங்கிப் போட்டுப் போன உணவு. றிங்பொட்டிலில் எஞ்சியிருந்த நீரின் உதவியால் வயிற்றை நிரப்பிக் கொண்டாள். ஆனாலும் பசி நீங்கவில்லை. வயிற்றைக் கடித்துக் குதறியது. கொடுமையிலும் கொடுமை தனிமை. இரண்டும் சேர்ந்து அவளது உள்ளத்தைப் படாத பாடுபடுத்தியது.
தாத்தா, பாட்டி கூட இருந்த காலம், ஒரு கணம் மனதில் முட்டி மோதிச் சென்றது. பாடசாலையிலிருந்து வீட்டிற்கு தாத்தாவின் சைக்கிளில் வந்து இறங்க, பாட்டி ஓடி வந்து அள்ளி அணைத்து, முத்தம் கொடுத்து,
ஆடைகளைக் களைந்து உடையை மாற்றி, அன்பாக அமுதூட்டி..........
நினைக்க நினைக்க சித்ரூபாவின் விழிகளில் நீர் பனிக்கத் தொடங்கியது. பிள்ளைகளின் நலனுக்காகத்தானே பெற்றார் கண்டிக்கிறார்கள். அதனை உணராது அன்னை முறுக தந்தை
- நெல்லை லதாங்கி

Page 38
கறுவ வீட்டில் ஒரு பிரளயமே நடந்து முடிந்து விட்டது. இதன் பாதிப்பு யாருக்கு?......
அம்மா வேளைக்கொரு சேலையை அணிந்து கொண்டு ஸ்கூட்டி பப்பில் புறப்பட்டு விடுவா. அப்பா சைக்கிளிலோ சாளியிலோ நேரத்தைக் கருதி அதற்கேற்ப சென்று விடுவார். சிறுமியானாலும் அநுபவ மூலமாக பெற்ற நினைப்பு மனதில் விரக்தி நிலையை ஏற்படுத்த,
அறைக்குள்ளே ஏதோ சரக்கிடும் சத்தம். நரம்பு நாளங்களினூடே ஓடிய குருதி உறைந்து விட்டாற் போன்ற உணர்வு. உள்ளே செல்லவும் முடியாது, வெளியே செல்லவும் முடியாது, இருந்த இடத்திலேயே விறைத்துப் போய் உட்கார்ந்து விட்டாள் சித்ரூபா.
அவ்வாறு எவ்வளவு நாழிகை உட்கார்ந்திருந்தாளோ தெரியவில்லை.
"சூர்யா, சூர்யா"
கேற்வாசலில் பக்கத்து வீட்டு அன்ரியின் குரல், துள்ளி எழுந்தாள் சித்ரூபா, யார் அழைத்தாலும் கேற்றைத் திறக்கக் கூடாது என்பது அன்னை தந்தையின் உத்தரவு மீண்டும் அன்ரியின் குரல் அவசரமாக ஒலித்தது. சனிக்கிழமை சூர்யா வீட்டில் நிற்பா என்று 36

தப்புக் கணக்குடன் வந்திருக்கிறா. எது எப்படியோ சித்ரூபாவுக்கு தனது நிலையை அறிந்து,
அந்தக் கடவுளே அன்ரியை அனுப்பி யிருக்கிறார் என்ற நினைப்புடன் ஓடி வந்து கேற்றைத் திறந்து விட்டாள்.
அன்ரி சித்ரூபாவை உற்று நோக்கினாள். சித்ரூபாவின் தேக மெல்லாம் வியர்த்துக் கொட்டி இருந்தது.. கண்களிலும் ஒருவித இனம் புரியாத மருட்சி.
“சித்ரூபா, உடம்புக்கு என்னம்மா? அம்மா இல்லையா?
அன்ரி
கேள்விக்கணைகளைத் தொடுத்தாள்.
"அம்மா இல்லை அன்ரி” குரல் உதறியது.
"ஏனம்மா பயந்து நடுங்குகிறாய்?” அன்ரி புரியாது விழிக்க,
"உள்ளை போக பயமாயிருக்கு அன்ரி. பசி வேறு வயிற்றைப் பிடுங்குகிறது.”
சித்ரூபாவின் கண்களில் நீர் திரட்சி பெற்றது. சித்ரூபாவின் வார்த்தைகளையும் அவளுடைய பதட்டத்தையும் பார்க்க அன்ரி மதுமிதாவின் உள்ளத்தில் நெருப்பை யாரோ இறைத்துக் கொட்டியது போன்ற உணர்வு.
'இந்தப் பிஞ்சுகளைப் பரிதவிக்க விட்டு விட்டு கண்டறியாத உழைப்பு"
சித்ரூபவுக்கு கேளாது தனது மனதிற் குள்ளேயே வுெடித்துக் கொண்ட மதுமிதா.
"வாம்மா , அன்ரி நிக்கிறன். நீ எடுத்துச் சாப்பிடு. சாப்பிட்டிட்டு என் கூட வா"
அக்கறைப்பட்டாள் மதுமிதா. "ஐயோ அன்ரி , அம்மா அறிஞ்சால் தொலைச்சிடுவா. நான் சாப்பிடு மட்டும் நிண்டாலே போதும் அன்ரி. நில்லுங்க அன்ரி பிளீஸ்”
சித்ரூபா கெஞ்சினாள்.
சித்ரூபாவைப் பார்க்க பார்க்க பரிதாபமாக இருந்தது மதுமிதாவுக்கு.
"அன்ரி, வாங்கன்ரி” மதுமிதாவின் கைகளைப் பற்றி குசினிக்குள் அழைத்துச் சென்றாள் சித்ரூபா. குசினிக்குள் செல்வதற்கே அச்சப்படும் இந்தப் பிஞ்சு உள்ளத்தின் முடிவு தான் என்ன?
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ரே 2014 (168)

Page 39
* * *
என்ன கறுமமப்பா, இந்தப் பிஞ்சுகளின் நிலையை எண்ணிப் பார்க்க மிகுந்த
வேதனையாக இருந்தது.
பெண்கள் வேலைக்கு செல்வதால் இப்பொழுது அநேகமான வீடுகளில் இந்த நிலைமைதானே. குழந்தைகளைத் தனிய விட்டு விட்டு, அல்லது பக்கத்து அக்கத்து வீடுகளில் விட்டு விட்டு, மனம் நிம்மதியின்றித் தவிக்கும் பெற்றோர்தான் அதிகம். வேலை பார்க்கும் இடங்களிலும் தமது கடமைகளைச் சரிவர நிறைவேற்ற முடியாது தவிக்கும் பெண்கள் கூட்டம்.
குழந்தைகள் பாடசாலையால் வர அவர்களின் வரவை வழிமேல் விழிவைத்து காத்திருந்து, அவர்கள்வந்ததும் அவர்களுக்கான கடமைகளை நிறைவேற்றுவது. இவைதானே சுகமானவை. அதனை விடுத்து பணம் தான் வாழ்க்கை என்ற குறியில் அலையும் மக்கள் கூட்டம். மதுமிதாவின் உள்ளம் குமுற,
சித்ருபா தட்டுடன் வெளியே வந்து அவக் அவக் என உணவை வாய்க்குள் அள்ளிப் போட்டுக் கொண்டாள்.
அன்ரி நிக்கிறன், ஆறுதலாய்ச் சாப்பிடம்மா"
சித்ருபா உணவு அருந்தி முடிந்ததும், அன்ரி புறப்பட்டு விட்டாள்.
மீண்டும் கேற்றைப் பூட்டி, திறப்பை எடுத்துக் கொண்டவள், ஜன்னல் வெளிகளால் சுவர்க் கடிகாரத்தை எட்டிப் பாரத்தாள். நேரம் ஒரு மணி. அம்மா, அப்பா வர இன்னமும் ஒன்றரை மணித்தியாலம் இருக்குது. இந்த நேரத்தை எவ்வாறு பயன்படுத்துவது .....?
சிந்தித்தவள் விழிகளில் உறக்கம் மெல்லியதாக எட்டிப் பார்த்தது. உறங்கி எழுந்தால் ரியூசனுக்கு உற்சாகமாய்ப் போய்ப் படிக்கலாம். புத்தகப்பையை தலைக்கு வைத்தவளாக விழிகளை மூடிக் கொண்டாள்.
விழிகளை மூடியதும் உறக்கத்திற்குப் பதிலாக மோகினிப் பிசாசின் உருவம் விழிகளுக்குள்ளும், மருட்சி தரும் ஒலிகள் செவிகளுக்குள்ளும் வந்து போன வண்ணம் இருந்தன.
பயம் அதிகரித்தால் பாடல்களைப் பாடி அந்தப் பயத்தை போக்குவதை அறிந்து கொண்டவள் சித்ரூபா. அன்றைய தினம் ஆசிரியர் சொல்லிக் கொடுத்த பாடலை முணுமுணுத்தவாறு உறங்கி விட்டாள். ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (168)

உறங்கியவள் செவிகளில் கீயா மாயா என்று வழமையாக கேட்கும் ஒலிகள். குடும்ப உறுப்பினர்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டார்கள் என்பதை அந்த ஒலிகள் உணர்த்தியது.
விழித்துக் கொண்டால் அம்மா அதைச் செய் இதைச் செய் என்று ஆய்க்கினை கொடுப்பா. கண்களை இறுக மூடிக்கொண்டு உறக்கம் போல பாவனை செய்தாள். சில நிமிடங்கள் கழிந்திருக்கும்.
"மகாராணிக்கு படிச்சுக் களைச்ச அலுப்புப் போலை. வீட்டுப் பாடம் ஏதாவது செய்திருக்கலாம், அல்லது எதையாவது மனனம் செய்திருக்கலாம். கும்பகர்ணன் போல கிடந்தால் என்ன முடிவு?”
அன்னையின் நச்சரிப்பு சித்ரூபாவின் செவிகளில் நன்றாக விழுகிறது.
பயந்து பயந்து உறங்கியவளுக்குத் தான் அதன் தார்ப்பரியம் தெரியும்.. உறக்கம் தந்த இறைவனுக்கு நன்றி செலுத்தியவள் சித்ரூபா. அவ்வாறிருக்க அன்னையின் இந்தப் பொல்லாப்பான வார்த்தைகள் மனதிற்கு கவலையை உண்டு பண்ணியது.
ஓய்வில்லாத படிப்பால் என்ன நன்மை? படித்த பெற்றோருக்கே விளங்கவில்லையே. பாடசாலை, பாடசாலை விட்டவுடன் ரியூசன், ரியூசன் விட்டவுடன் இரவுப்படிப்பு போதாதற்கு இந்தப் பிஞ்சுகளை விடியப்புறம் எழுப்பி பனிக்குளிரில் தூங்கித் தூங்கி வழிந்து படிக்கும் படிப்பு. இதனால் பாடசாலை செயற்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபடாமல் சோர்ந்து போய் இருக்கும் நிலைமை.
அதிலும் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கும் அவர்களுடைய பெற்றோர்களுக்கும் உறக்கமே கிடையாதே!
அந்தக் காலத்தில் ரியூசனும் இல்லை. பெற்றோர் பிள்ளைகளை படி படி என்று நச்சரிக்கிறதும் இல்லை. ஆனாலும் பிள்ளைகள் படித்து பட்டங்கள் பதவிகள் பெறவில்லையா?
ஆசிரியர்கள் சிலர் தமக்குள்ளே பகிர்ந்து கொண்ட விடயங்களை மனக்கண் முன் கொண்டு வந்தாள் சித்ருபா.
"சித்ருபா, நான் கத்திறது காதிலை விழயில்லையா? எழும்பு, ரியூசனுக்கு நேரமாகுது.”

Page 40
அன்னையின் கட்டளைக்கு அடி பணிந்த வளாக புத்தகப்பையை மேசைமீதுவைத்துவிட்டு ரியூசனுக்கு புறப்படத்தயாரானாள்.
சூர்யாவும் தனது கடமைகளை முடித்துக் கொண்டு சிறிது உறங்கலாம் என்று கட்டிலில் தொப்பென விழுந்தாள்.
உறக்கம் வர மறுத்தது. பிள்ளைகளின் கடமைகள், ஆபீஸ் கடமைகள் என்று மனதில் பட்டியல் போட்ட வண்ணம் இருந்தது.
உத்தியோகம் பார்க்காத பெண்கள் எவ்வளவு புண்ணியம் செய்தவர்கள். தமது வேலைகளை சாவகாசமாக முடித்து, சமையல் செய்து, சுடச்சுட உணவு அருந்தி, சீரியல் பார்த்து, உறங்க விரும்பும் நேரம் உறங்கி எழுந்து ..
அப்பிடி ஒரு வாழ்க்கை வாழ அறுபது வயது ஆக வேண்டும். அப்போதும் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்
அவர்களின் கடமைக்கூறுகள்.
மனம் எதை எதையோ கற்பனை செய்ய உறக்கம் எங்கே வரும்? மனம் அமைதியுடனும் மூளை எதுவித சிந்தனையுமின்றி இருந்தால் தானே உறக்கம் வரும்.
மீண்டும் எழுந்து தனது மாலைக் கடமைக் கூறுகளை முடித்துக் கொள்ள சித்ரூபா ரியூசன் விட்டு வந்து விட்டாள்.
நிமிடங்கள் நகர புவிச் சுழற்சி போல் இரவும் வந்தது. இரவு உணவைத் தயாரித்த வண்ணம் அன்னை சூர்யா குசினிக்கும் ஹோலுக்கும் இடையில் நடை பயின்று கொண்டிருந்தாள். ஒரு சில சீரியலைப் பார்த்த மோகம் அதனைப் பார்க்காமல் இருக்கமுடியவில்லை. அதன் விளைவுதான் இந்த நடை பயிலல்.
இதனிடையே சித்ரூபா
படித்துக் கொண்டிருந்தவளுக்கு பாடத்தில் சிறு சந்தேகம். தந்தையிடம் சந்தேகத்தை கொட்டினாள். தந்தை சிறீராமனோ நான் இஞ்சை ஒவ்வீஸ் வேலை செய்து கொண்டிருக்கிறன். போய்
அம்மாவிடம் கேள் என்றான்.
சித்ரூபா அன்னையை நோக்கிச் சென்றாள். அன்னை கத்தத் தொடங்கி விட்டாள். அன்னைக்கு அவளுடைய வேலைச்சுமை.
ஆணும் பெண்ணும் ஒரே உத்தியோகம் பார்த்தாலும் வீட்டுக்கு வந்ததும் ஆணுக்கு ஓய்வு. பெண்ணுக்கு ஏது? அந்த ஆதங்கத்தில்
38

போய் கொப்பரைக் கேள். தம்பி ராகவன் உறங்குவதற்கு இடையில் உணவு தேடி முடிக்கவேணும்.
சித்ரூபா மத்தளமாகி இரண்டு பக்கமும் உருண்டு கொண்டதுதான் மிச்சம்.
ஜதி தான் உண்டாகவில்லை. மீண்டும் ஒரு நப்பாசையில் தந்தையை நாடிச் சென்றாள். தந்தையோ ஆத்திரம் தாங்க முடியாதவனாக கத்தத் தொடங்கி விட்டான். சித்ரூபாவிற்கு அவளுடைய பாடசாலைக் காட்சிப் பலகையில் அன்று எழுதிய வாசகம் தான் நினைவுக்கு வந்தது.
"அதிகமாகப் பேசினால் அமைதியை இழப்பாய்.”
அப்பாவும் அம்மாவும் தேவையற்றுக் கத்திக் கத்தி இங்கு அமைதியைத் தானே இழந்து நிற்கிறார்கள்.
"செல்லம், அப்பா வேலை முடிச்சிட்டு சொல்லித் தாறன் குஞ்சு . அல்லது அம்மா சமையல் முடிச்சிட்டு சொல்லித் தருவா”
என்று சொல்லியிருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும். அந்த உபசரணையான
வார்த்தைக்குத் தான் வீட்டில் இடம் ஏது?
பல தடவைகள் யோசித்திருக்கிறாள். பிள்ளைகளை வாம்மா, படியம்மா, இந்த வேலையைச் செய்யம்மா என்று கூறும் போது அவர்கள் முகமலர்ச்சியுடன் நிறைவேற்றுவார்கள். அதே விடயங்களை எதிரான தோரணையில் கூறினால் பிள்ளைகள் செய்யாமல் விடுவதுடன் அவர்கள் முகமும் வாடிவிடும். கடமைக்கு செய்து முடிப்பார்கள். இந்த சாதாரணமான அம்சங்கள் தெரிந் திருந்தும் பெண்களின் வேலைச்சுமை எதையும் தலைமை தாங்கி செய்ய வேண்டிய கட்டாயங்கள், அவர்களையும் கத்த வைத்து விடும்.
உடைந்தது உடைந்தது தான், ஒட்ட முடியாது. அது போல குழந்ழைதகளின் மனங்களிலும் ஏற்படும் காயங்கள், காயங்கள் தான். கிழிந்த ஆடைகளை ஊசி நூலால் தைத்துக் கொள்ளலாம். கிழிந்த நெஞ்சங்களை தைக்க முடியுமா?
அன்னை, தன்னை சாகவாசப் படுத்திய வளாக,
"சித்ரூபா குட்டி, சித்ரூபா செல்லம் நீங்கள் சாப்பிட்ட பிறகு உங்கடை சந்தேகத்தைத்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ரே 2014 (168)

Page 41
தீர்த்து வைக்கிறன் அம்மா. சரிதானே" மனது கண்ணாடித் துண்டங்களாக நொருக்கப்பட்ட நிலையிலும் சித்ரூபாவை சமாதானம்
செய்தாள் சூர்யா.
"சரி அம்மா"
அவளுடைய அழகான வதனம் மேலும் பொலிவு பெற, சிட்டுக்குருவி போல் பறந்து தனது படிக்கும் அறைக்குள் நுழைந்துவிட்டாள். வேலைப்பழுக்கள் நிறைந்த அவசரமான யுகத்தில் மனிதர்கள் உலாவுவதால், இந்தச் சின்னஞ் சிறார்களின் உளம் எத்தனை விதமான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன.
குழந்தைகளுக்கு உணவு கொடுத்து, சித்ருபாவின் சந்தேகம் தீர்த்து, கணவனுக்கு உணவு கொடுத்து தானும் உண்டு, அன்றைய பாத்திரங்கள் கழுவிக் கவிட்டு முடிய, நேரம் ஒரு மணியைத் தாண்டிவிட்டது.
உடம்பை சரித்து கண்ணுறங்கவில்லை. அலாரம் கிரீச்சிடத் தொடங்கியது. நேரத்தைப் பார்த்தால் அதிகாலை 4 மணி. சித்ரூபாவுக்கு நேரே மூத்தவள் 4 மணிக்கு எலாம் வைத்திருக் கிறாள்.
இப்போது கண் மூடியது போல் இருந்தது. அலாரத்தின் ஓசையை காதில் வாங்காது அனைவரும் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தார்கள்.
அலாரம் அவளைத் தான் எழுப்புமே தவிர, பிள்ளைகள் எழுந்து படிக்க 5 மணியாகிவிடும்.
பழையபடி அன்றைய முடிவுறாத கடமை கள்.
எல்லோரும் அவரவர் இடங்களுக்குச் சென்று விட்டார்கள்.
வீடு உறக்கத்தில் ஆழ்ந்தது. அநேகமான வீடுகள் காலை 8 மணிக்கு உறங்கினால் மாலை 3 மணிக்கு தான் விழிப்படையும்.
மீண்டும் ஒரு மணிக்கு சித்ரூபா வரப்போகின்றாள்.
அதே பாணியில் வீட்டுக்குள் நுழையப் போகின்றாள்.
அன்ரி போல யாரையாவது கடவுள் கொண்டு வந்து விட்டால் உண்டு. பயந்து பயந்து வீட்டுக்குள் நுழையப் போகின்றாள்.
பயந்து பயந்து உணவருந்தப் போகின் றாள்.
குறிப்பிட்ட வயதினை அடையும்போது சித்ரூபாவின் மனதிற்கு அமைதி கிடைத்து விடும்.
0 0 0
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ரே 2014 (168)

'செசுதர்சன்
படப் பக்கம்
கருகிய புல்வெளியில்
ஒரு கடிதம் விண்ணுக்கும் மண்ணுக்குமாய்
எழுதப்படுகிறது.
என்னவெனில், தம்மைக் கருக்கிறவர்கள் நிலத்தைக் காப்பார்கள்
ஏனெனில்,
அவர்கள் பனிக்காலத் தேவதைகளின் கரத்தில்
மீண்டும் சிரிப்பார்கள் தம்மைக் கருக்கிறவர்கள் நிலத்துக்கு ஆடையாவார்கள்
ஏனெனில்,
- அவர்கள் நிலத்தின் அம்மணத்திற்குப்
போர்வையாவதால் 'வேனில் காலத்து உயரக்கிளைகளில்
' மீண்டும் துளிர்த்துப் பனித்துளி சூடுவார்கள்
தம்மைக் கருகிறவர்கள் நிலத்துக்கு எருவாவார்கள்
ஏனெனில்,
அவர்கள் நிலத்தின் மார்பில் தம்மைக் கரைப்பதால் இளஞ்சூரிய ஒளியில் இலைகளின் பசுமையாய்
- பிறப்பார்கள் தம்மைக் கருகிறவர்கள் நிலத்துக்கு இருக்கையாவார்கள்
- ஏனெனில்,
அவர்கள் "பூமிபுல்வெளியை இழுத்து நீளவிரிக்கும் இனிப்புத் திருநாளில்
பறவைகள் வந்தமரும்
தாயின் மடியாய்
சிறப்பார்கள் தம்மைக் கருக்கிறவர்கள் விண்ணுக்கும் மண்ணுக்கும்
உரியவர்கள் ஏனெனில்,
அவர்கள் மண்ணுலகில் தியாகியாகவும் விண்ணுலகில் விருந்தாளியாகவும்
வரவேற்கப்படுவார்கள்
l.ini.in
திருமுக இருமுகம்,
39

Page 42
ஒரு! சமூக
கிழிசல்
ஈழத்தின் முது பெரும் எழுத்தாளர் வேல் அமுதன் எழுதிய 'கிழிசல்' எனும் மகுடத்திலான கு று ங் க  ைத க ள' தொகுப்பு
நூ ல்
அண்மையில் (30.11.2013 ஆம் திகதியன்று, கொழும்பு தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில்) வெளியிடப் பட்டுள்ளது. வேல் அமுதனின் 75 ஆவது வயதில் 75 குறுங்கதைகளைத் தாங்கி கிழிசல் வெளிவந்துள்ளது. சுமார் 175 பக்கங்கள் கொண்டதும் மிக நேர்த்தியான பதிப்பினைக் கொண்டதுமான இந்நூலைத் தமது மனைவிக்கு அன்புக் காணிக்கையாகவும் இலக்கிய நெஞ்சங்களுக்கு அன்பளிப்பாகவும் சமர்ப்பித்துள்ளார் வேல் அமுதன்.
சுமார் ஒன்று அல்லது இரண்டு பக்கங்களை மட்டுமே கொண்ட குறுங்கதை ஓர் இலக்கிய வடிவமாகுமா என்ற கேள்வி இன்று நேற்று எழுந்த ஒன்றல்ல.
நிமிடக்தைகள், நொடிக் கதைகள், குறியீட்டுக் கதைகள், உபகதைகள், மணிக் கதைகள் போன்றே குறுங்கதைகளும் இன்று
40

நிதர்சனமான
யதார்த்தம்
இலக்கிய அந்தஸ்துப் பெற்றுள்ளன. ஈழத்தில் கடந்த நூற்றாண்டின் நடுப் பகுதியிலேயே குறுங்கதைகள் தோற்றம் பெற்றுவிட்டன. 1970களின் முன்பின்னாக குறிப்பாக செ.கணேசலிங்கனின் 'குமரன்' சஞ்சிகை குறுங்கதைகளுக்குச் சிறப்பிடம் தந்தது. மிகக் காத்திரமான முற்போக்கான விடயங்களைத் தாங்கி நூற்றுக்கணக்கான குறுங் கதைகள் குமரனில் பிரசுரமாயின. இத்தகு குறுங் கதைகளுக்கு வேல் அமுதன் மிக நேர்த்தியான வடிவத்தை வழங்கியுள்ளார்.
சமுதாய அமைப்பிலான மாற்றங்கள், இலக்கிய வடிவத்தையும்
அதன் பொருளமைதியினையும் பாதிக்கவே செய் துள்ளன. ஐம்பெரும் காப்பியம் கண்ட சமுதாயத்திலேதான் இரண்டடிகள் கொண்ட திருக்குறளும் தோன்றியது. செய்யுளிலிருந்து கவிதைவழி புதுக்கவிதை தோன்றியது போல, நாவலிலிருந்து சிறுகதை வழியாக குறுங்கதை வடிவம் தோற்றம் பெற்றது.
காப்பியம் புனைவுவழிப் பிறந்தது, திருக்குறள் வாழ்க்கையின் யதார்த்த வழிப்பிறந்தது. சிறுகதை மன உணர்வு நிலையைத் தொற்றவைப்பதெனில், குறுங் கதை உண்மை அல்லது யதார்த்த நிலையைத் தொற்றவைப்பதெனலாம்.
கலியாண ஆற்றுப்படுத்துநர் அல்லது
கலியாணப் பொருத்துநராகத் தொழில்புரியும் வேல் அமுதனின் குறுங்கதைகளில் மிகப் பெரும் பாலானவை திருமணங்கள் பற்றியும் அத்திருமணங்களினால் ஏற்படும் உறவு, பிரிவு, ஏமாற்று, தோல்வி, இயலாமை பற்றியவையாகவும் விளங்குதல்
வியப்பன்று.
சி.வன்னியகுலம்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (168)

Page 43
இந்தக் குறுங்கதைகளில் தமது வாழ்க்கை அனுபவங்களின் சாரத்தை வடித்தெடுத்து சுவைபட அவர் தந்திருக்கின்றார். திருமணம் மற்றும் குடும்பம் என்ற பந்தத்துள் சிக்குண்டு போன பெண்களின் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு. அந்த எல்லைகள் மீறப்படுமிடத்து பெண்கள்
பொங்கி எழவேண்டியதன் அவசியத்தை அவரது கதைகள் வற்புறுத்துகின்றன. இதனால் சமூகக் கொடுமைகளுக்கு எதிராக நிமிர்ந்து நிற்கும் பெண்ணியத்தின் வாடையை அவரது கதைகளிலே நுகரமுடிகிறது.
இலக்கியமென்பது தனியே காலத்தின் கண்ணாடி மட்டுமன்று. அது அக்கால சமுதாயம் பற்றிய விமர்சனமாகவும் விளங்குகின்றது. இலக்கிய விமர்சனம், இலக்கியத்தையும் சமூகத்தையும் அவற் றினிடையேயான தொடர்பியல்லையும் விஞ்ஞானபூர்வமாக அணுகுகின்றது. அது ஒரு சமூக விஞ்ஞானமே!
கிழிசல் தனியே திருமணம் மற்றும் குடும்பம் பற்றி மட்டும் விமர்சிக்காது இந்த நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டம் சங்கள் பற்றியும் நிர்த்தாட்சண்யமாக விமர்சிக்கின்றது. இந்தத் தொகுப்பு நூலின் முதற்கதையாக கிழிசல் குறுங்கதை அமைந்துள்ளது. இந்தக்கதை தமிழ்ப்புனைகதை இலக்கியத்தில் பெரும் சூறாவளியாகக் குறிப்பிடற்குரிய பண்புகள் கொண்டது. நாட்டின் நல்லாட்சி, சட்டவாக்கம், நீதி, நிருவாகம், சமூக பண்பாட்டம்சங்களை கடுமையான கேள்விக்குள்ளாக்குகின்றது.
ஒரே ஒரு பக்கத்தில் மட்டும் அமைந்துள்ள இக்குறுங்கதையின் பிரதான பகுதி பின்வருமாறு
'சாரத்தை மடித்துக்கட்டிய - மண்ணிற அரைக்கை சேட் அணிந்த - கறுத்த, பருத்த - முகம் சேவ் எடுக்காத - கவலை தோய்ந்த உருவமொன்று மிகப்பக்குவமாகவும் பணிவாகவும், குற்றவாளிக்கூண்டுக்குள் பிர வேசிக்கின்றது. (களவு) குற்றம் சுமத்தப்பட்ட சண்முகத்தை நிமிர்ந்து பார்த்த நீதிபதிக்கு சினம் சீறிப்பாய்கிறது.
"ஆர் இவர்?” ""சாரத்தை அவிட்டுவிடச் சொல்லுங்கோ” என ஆணையிடுகிறார்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ரே 2014 (168)

சண்முகம் மிகுந்த பயபக்தியோடு மறுபேச்சு இல்லாமல் சாரத்தை இறக்கிவிடுகின்றார். என்ன அவமானம் சாரப்பீத்தல் அந்தரங் கங்களை அப்படியே, முழுமையாக
அம்பலப்படுத்தியது. - 'நீதிபதி உட்பட அனைவரின் தலைகளும் வெட்கத்தால் சாய்கின்றன' என கதை முடிவடைகின்றது.
கதையில் கூறப்பட்ட சம்பவம் மிகச் சாதாரணமானதாக இருக்கலாம். ஆனால் கதையின் முடிவிலிருந்து பிறக்கும் கேள்விகள் மிகப் பாரதூரமானவை. ஒரு சமுதாய அமைப்பையே தலைகீழாகப் புரட்டிவிடும் தன்மை கொண்டவை.
ஒரு சிறந்த நீதிபதிக்கு சண்முகத்தைக் கண்ட மாத்திரத்தில் அவனது சமூக அந்தஸ்து விளங்கியிருத்தல் வேண்டும். யார் இவர் என கோபப்படவோ சாரத்தை அவிட்டுவிடச் சொல்லுங்கோ எனச் சீறிப்பாயவோ வேண்டிய அவசியமில்லை. யார் இவர் என்று கேட்பதற்குப் பதிலாக யார் இவரை இந்தப் பரிதாப நிலைக்கு உள்ளாக்கியது என அவர் சிந்தித்திருக்க வேண்டும். ஆர் இவர் என்ற முட்டாள்தனமான கேள்விக்கு முகத்திலடித்த பதிலே அவனது அரைநிர்வாணத்தோற்றம். அவனது இந்தக் கையறு நிலைக்கு நீதிபதி மட்டுமல்ல முழுச் சமுதாயமுமே வெட்கித் தலைகுனிய வேண்டும். எமது நீதி தேவதைகள் எமது சமூகத்திலிருந்து தோன்றியவர்கள்தானா? அவர்கள் தம்மை வானத்திலிருந்து வந்தவர்களாகக் கருதும்வரை இத்தகு சமூக அவலம் தொடரவே செய்யும்.
ஒரு நாட்டின் நல்லாட்சி அல்லது அதன் ஜனநாயக விழுமியங்கள் ஆகியன சட்டவாக்கம், நீதி, நிருவாகம் என்பவற்றின் தனித்தன்மையிலும் அவற்றின் சுதந்திரமான செயற்பாட்டிலுமே தங்கியுள்ளன. ஒன்றி லொன்று மேலாண்மை செய்யுமிடத்து ஜனநாயக விழுமியங்கள் குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றன.
வாழ்க்கையில் வஞ்சிக்கப்பட்ட ஒருவனே கிழிசல் சண்முகம். சுரண்டுபவனைத் தண்டிக்காத நீதிமன்றம், அதிகாரவர்க்கத்தால் சுரண்டப்பட்டு பஞ்சையாய் நிற்கும் சண்முகத்தைத் தண்டிப்பதற்கு கங்கணம்
கட்டி நிற்கின்றது.
41

Page 44
சட்டவாக்கம், நீதி, நிருவாகம் ஆகிய மூன்று துறைகளும் ஆளும்வர்க்கத்தின் பாதுகாப்பிற்காகவே தொழிற்படுகின்றன. இத்தகைய ஒரு நிலையில் வஞ்சிக்கப்படும் மக்களின் ஒரு பிரதிமையாக கிழிசல் சண்முகம் சித்தரிக்கப்பட்டுள்ளான். ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நீதிபதி சித்தரிக்கப்பட்டிருக்கின்றார். கிழிசல் குறுங் கதையை ஒரு பதச்சோறெனலாம்.
இத்தொகுப்பின் கணிசமான அளவு கதைகள் பெண்களின் அண்மைக்கால சிந்தனை மாற்றங்களைப் புலப்படுத்தி நிற்கின்றன. கடந்த காலத்தில் இடம் பெற்றுவந்த போர், மிகக் கொடூரமாக பெண்களையே பாதித்துள்ளது. போர் இழப்புக்கள் மற்றும் சமூகக் கொடுமை களைத் தாங்கிக்கொள்ள முடியாத பெண்கள் அவற்றால் நசுங்குண்டு போவதையும் இன்னொரு பகுதியினர் (பெண்கள்) சமூக கொடுமைகளுக்கு எதிராக நிமிர்ந்து நிற்கும் பெண்விடுதலை உணர்வு வெளிப்பாட்டாளர்களாகவும் குறுங் கதைகளிலே சித்தரிக்கப்பட்டுள்ளனர்.
கிழிசல் தொகுப்பினுள்ள 75 குறுங்கதை களையும் நினைவில் நிறுத்துவதும் தனித்தனியே அவை பற்றி விமர்சனம் செய்வதும் இலகுவான ஒன்றன்று. ஆயினும் இக்கதைகளினின்றும் பெறும் சாரம் மிக முக்கியமானது.
தமிழ்மக்களின், குறிப்பாக யாழ்ப்பாண சமூகத்தினரின் அப்பாவித்தனமானதும், போலியானதும், மூடத்தனங்கள் நிறைந்ததும். எதிலும் வெறும் பகட்டிற்கும், பணத்திற்கும் முன்னுரிமை கொடுக்கின்றதுமான கஞ்சத் தனமான வாழ்வியல் பற்றிய ஒரு முழுமையான விமர்சனமாகவே கிழிசல் அமைந்துள்ளது. இந்த மக்களின் போலித்தனமான வாழ்க்கை முறைகளை அவர்தம் கருத்தியலை கேலியும் கிண்டலும் அங்கதச்சுவை நிறைந்ததுமான ஒரு மொழிநடையிலே சுவைபடத் தருகின்றது கிழிசல். இந்த சமூகத்தின் செயலிலும் சிந்தனையிலும் புதுமையான ஒரு மாற்றத்தினை கிழிசல்
அவாவி நிற்கின்றது.
குறுங்கதை வடிவமென்பது கற்பனை வரட்சி கொண்ட ஒரு கருத்து முதல்
42

ண
ஊடகமாகும். அத்தகைய ஒரு வடிவத்தை தமது வாகனமாகப் பயன்படுத்தி யாழ்ப்பாண சமூகத்தின் குறுக்கு வெட்டுமுகத்தோற்றத்தை கிழிசல் ஊடாக எமது கண்முன் நிறுத்துவதில் வேல் அமுதன் வெற்றிகண்டுள்ளார் எனக் கூறுவது உண்மை, வெறும் புகழ்ச்சியன்று!
0 0 0
|-11:11://4.
நாள் வருமோ!
- மம்ப42 --"
ஆளில்லா றெயில்ப் பயணம் அடுத்த றெயில் தீப்பிழம்பு துளி கூடப் பயமின்றி தாறு மாறாய் பஸ்ஸோட்டம் நாளிகையாய் விபத் தழிவு நகரெங்கும் கொலை கொள்ளை தொழிலாளர் பகிஷ்க் கரிப்பு தீரும் நாள் புலராதோ
""-iGPய
வவஜaREாரளி
* * *
கங்க்டேர் பக்கம் |
சர் பா பா
குடு வென்னும் போதை வஸ்த்து கடத்தல் தொழில் அதிகரிப்பு தடுப்புப் படை அதில் மாட்டி) தவறிழைத்துச் சிறை வாசம்) அடுக்கடுக்காய் ஆட் கடத்தி அநியாயக் கப்பம் பெறல்) படு மோசச் சூதாட்டம்! பதுக்கல் முறை அருகாதோ!
புAெHAT!14:31:14:TIVITHI 14.
-- ecunited)
சாள்புரை:/14)
* *
** ...'' **!"
-மூதுர் கலைமேகம்
ஊரெல்லாம் டெங் கபாயம் ஊத்தை கூளம் சூழல் மோசம்
கோர வடு கடற் சீற்றம் கொடுக்கல் வாங்கல் ஏமாற்றம் இரக்க மில்லா கற்பளிப்பு! ஈனச் செயல் புகைபிடித்தல்' இரவெல்லாம் வெறி யாட்டம் இவை தொலையும் நாள் வருமோ!
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ரே 2014 (168)

Page 45
526-57l4EL522ப4:14:14:51161452:2எH 43பு4ப45:TLEாபெ
கே.விஜய. நினைவுகளில் குரல்
தமிழ் இலக்கிய உலகின் ஜாம்ப வான்களில் ஒருவரான தி.க.சி.எழுதுவதை நிறுத்திவிட்டு, அவர் குறித்து பேசும்படியான, எழுதும்படியான நிர்ப்பந்தத்தையும் ஏற்படுத்தி, தனது 91வது அகவையில் மீளா நித்திரையில் ஆழ்ந்துவிட்டார். பல தசாப்த காலம் அயர்வின்றி எழுதிக் கொண்டிருந்த கைகள் அசைவை நிறுத்திவிட்டன. ஓய்வின்றி வாசித்துக் கொண்டிருந்த கண்கள் இமைக்க மறுத்துவிட்டன. மார்ச் இருபத்தாறில் இத்துயரம் நிகழ்ந்தது. அவரை அறிந்தவர், அவர் எழுத்தில் தோய்ந்தவர் உணர்வில் துயர நிர்ச்சலனம் மழைச்சாரலாகிறது.
எழுத்தாளர். திறனாய்வாளர், ஊடக வியலாளர், மொழிபெயர்ப்பாளர், தொழிற் சங்கவாதி, சமூக சேவையாளர் இப்படி பல அவதாரங்களின் நாயகராகத் திகழ்ந்தமையே திருநெல்வேலி கணபதி சிவசங்கரன் குறித்த எழுத்துகளினதும் உரைகளினதும் உள்ளடக்கமாகும்.
தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்காகவே பலதசாப்த காலத்தை அர்ப்பணித்துக் கொண்டிருந்த ஓர் இலக்கிய மகான் தனது அந்திமக் காலம் வரையில் "தமிழ் இலக்கியத்தில் நான் இன்னும் ஒரு மாணவனே” என்று கூறிக்கொண்டிருந்த வார்த்தைகள்
அமுத மொழியாகும்.
'இளம் புதிய படைப்பாளிகளையும் சதா சிரித்த முகமுடன் வரவேற்பான் சிவசங்கரன்' என்ற புகழ் மொழி பல தசாப்தமாகவே அவரைத் தொடர்ந்து வருகிறது.
'புத்தகக் குவியல்களின் நடுவில் சதா தேடுதல் வேட்டையில்தான் இருப்பாராம்' என்பது
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014

வேதமான தி.க.சி
அவருக்கு மிகவும் நெருக்கமானவர்களின்
கூற்று.
ஆறு மொழியாக்க நூல்கள், நான்கு திறனாய்வு நூல்கள் விமர்சனங்கள். மதிப்பீடுகள். பேட்டிகள்' என்ற நூல் இரண்டாயிரமாம் ஆண்டில் இந்திய சாகித்திய விருதினைப் பெற்றது. சோவியத் நூல்களின் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி வெளிக்கொணர்ந்த இலக்கியப் படைப்புக்களின் பெருக்கம் அதிகம்.
'வண்டிக்காரன்' முதலாவது சிறுகதை. பிரசாந்த விகடனில் வெளிவந்தது. புகழ்பெற்ற நாராயணன் துரைக்ண்ணன் அதன் ஆசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்தார். வண்டிக்காரனைத் தொடர்ந்து கிராம ஊழியன், கலாமோகினி, ஹனுமான், இந்துஸ்தான் ஆகிய சஞ்சிகைகளிலும் படைப்புகள் பிரசுரமாகின. தி.க.சியின் உரைநடையில் ஈர்ப்புக்குள்ளவரான வல்லிக்கண்ணன் ஒருமுறை, "ஏலே! தி.க.சி. சினிமாவைப் பற்றி கொஞ்சம் தொட்டுக்கோ” என்றாராம்.
அதைக்கேட்ட பேராசிரியர் வானமாமலை பேயாகப்பாய்ந்திருக்கிறார். "தி.க.சி. வாணாம்டா அந்த சனியனை விட்டு எட்டிப்போ" என்று உபதேசம் பண்ணியிருக்கிறார்.
பேராசிரியர் வானமாமலை அடிக்கடி ' சாமி! கொஞ்சம் தலையை உள்ளே நுழைச் சிக் கொள்ளவா?' என்று அனுமதி கேட்ட ஒட்டகத்தின் கதையை சொல்வாராம். ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரிக்கு ஆப்பு வைத்த கதை தெரிந்ததுதானே. அந்த நிலைக்கு திகசி. ஆகிவிடக்கூடாது என்பதுதான் பேராசிரியரின் கவலை.
இளமைக்காலம் முதலே சுதந்திரதாகம்
43

Page 46
முகிழ்ந்த சிறுவனாகத் திகழ்ந்தார். 1936களில் இந்திய மக்களிடையே சுதந்திர தாகம் எழுச்சி கொண்டிருந்தது. தமிழகம் பாரதியின் சுதந்திரப் பள்ளுகளினால் வீறுபெற்றிருந்தது. திருநெல்வேலி சுடலைமாடன் கோவில் தெருவில் காங்கிரஸ் பிரமுகர் சுப்ரமணியம் தலைமையில் பாரதி பஜன்கள் பாடி கலக்கியடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் உடையும், சட்டையில் அணிந்திருந்த பகவத்சிங் பதக்கமும் தொப்பியும் தி.க.சியை வெகுவாக ஈர்த்தன.
சண்முகம் காங்கிரஸ் பிரமுகர்களில் முக்கியமானவர். கைது செய்யப்பட்ட இவர் சிறைவாசத்தின் பின்னர் கம்யூனிஸ்ட்டாக மாறிவிட்டார். பல சோவியத் நூல்களை மொழி பெயர்த்து தனது சொந்தச் செலவிலே பிரசுரித்து வெளியிட்டு வந்தவர் அந்நூல்களை தி.க.சிக்கும் வழங்கினார். பெரும் வாசிப்பு பசியாளியான தி.க.சி அவற்றை ஆழ்ந்து வாசித்தமையால் கம்யூனிஸ்ட் கோட்பாட்டினால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.
எனினும் கோட்பாட்டு ரீதியான இலக்கியச் சிந்தனை ப.ஜீவானந்தத்தை சந்தித்ததன் பின்னர் அவருள் ஊற்றெடுத்தது. அதுவே ஜீவிதகாலமானது. எழுத்தும், திறனாய்வும், படைப்புகளும் பொதுவுடைமைச் சிந்தனை விளைநிலத்திலிருந்தே விருட்சங்களாகின.
ப.ஜீவானந்தத்துடன் ஏற்பட்ட சந்திப்பு உன்னதமானது. 1947 அக்டோபர் 13இல் நிகழ்ந்தது. எட்டையபுரத்தில் பாரதி மணிமண்டபம் திறந்துவைக்கப்பட்ட தினம். தொமுசி சிதம்பர ரகுநாதனுடன் திகசி விழாவில் கலந்து கொண்டர் தமிழக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த ஜீவானந்தம் அங்கு உரை நிகழ்த்தினார். 'பாரதி வாழ்க்கை' என்ற தலைப்பில் சமூக விடுதலைக்கான கவிதைப் பங்களிப்புக் குறித்தும் கலை இலக்கியம் கோட்பாட்டு ரீதியாக எவ்வாறு வளர்ச்சிகாணவேண்டும் என்பது பற்றியும் ஒரு மணித்தியாலம் உரை நிகழ்த்தினார்.
வங்கத்தில் புதிய இலக்கியச் சிந்தனை கள் ஓரளவிற்கு முதிர்ச்சி
அடைந்து கொண்டிருந்தபோதும் தமிழகத்தில் திறனாய்வு குறித்த புதிய வளர்ச்சி குறைவாகவே இருந்தது. கம்பராமாயண காவியம் பற்றிய வாதப்பிரதிவாதங்கள் பெரிய அளவில் நடை பெற்றுக் கொண்டிருந்தபோதும், சிற்றேடு கள் ஏராளமாக வரத்தொடங்கியிருந்த நிலையில் க.நா.சுப்ரமணியமும், எழுத்து
44

எஸ்.எஸ். செல்லப்பாவும் ஓரளவிற்கு கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தார்கள். அதே காலகட்டத்தில் நமது பேராசிரியர்களான கைலாசபதி, சிவத்தம்பி, நுஃமான் ஆகியோர் தமிழகத்தில் புதிய முற்போக்கு இலக்கிய கோட்பாட்டின் வழிகாட்டிகள் என்ற வகையில் பேசப்படுபவர்களாகத் திகழ்ந்தார்கள் என்பது வரலாற்று நினைவில் ஓர் ஆனந்த நீர் வீழ்ச்சியே.
1941இல் தி.க.சியின் கல்லூரி வாழ்க்கை ஆரம்பமானது. அது புதிய சிந்தனைகளுக்கு மேலும் ஒரு வாய்க்காலாகத் திகழ்ந்த நிலையாக அமைந்தது. பாரதிதாசன் கவிதைகள், வ.ராமசாமி(வ.ரா.), புதுமைப்பித்தன் ஆகி யேரின் எழுத்துக்களுடன் பரிச்சயம் அதிகரித்தது. கல்லூரி பேராசியர்களான கே.அருணாசலகவுண்டர், ஏ.முத்துசிவன் ஆகியோர் இவர்களின் நூல்களை வழங்கி வாசிக்கும்படியாகக் கூறினர். புரட்சிக் கவி பாரதிதாசன் கவிதைகள் தன்னை ஒரு கவிஞனாக வளர்த்துவிட்டதாக தி.க.சி ஓரி டத்தில் கூறியதைக் காணமுடிகிறது.
அக்கல்லுாரியின் பழைய மாணவனான புதுமைப்பித்தன் கல்லூரி நிகழ்வொன்றில் கலந்து 'நானும் என் கதைகளும்' எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். இவைகள் தி.க.சியின் புதிய சிந்தனைகளின் வளர்ச்சிக்கு உரமிட்டன.
அதே காலகட்டத்தில் வல்லிக்கண்ணன் தனது தொழிலை ராஜினாமா செய்துவிட்டு முழுநேர எழுத்துத் தொழிலில் ஈடுபடுவதற்காக திருநெல்வேலியில் குடியேறினார். தி.க.சியும். வல்லிக்கண்ணனும் நெருங்கிப்பழகலாயினர். இரு நீரோடைகளின் சங்கமம் புதிய அலை பாய்ச்சலுக்கு ஊற்றாகுமல்லவா. தொ.மு.சி ரகுநாதனின் இலக்கிய விமர்சனம் என்ற நூலும், கிளாரா ஸெட்கினின் Lenin on art and Culture மாக்சிய நூல்களும் தொடர்ச்சியாக வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஆக்க இலக்கியத்துறை சமூக உணர்வு மிக்கதாகவும் அடிப்படைக் கோட்பாட்டு ரீதியாகவும் அமைதல் வேண்டும் என்ற சித்தாந்தத் தெளிவிற்கு தி.க.சி உள்ளானார். அதன் பின்னர் மிகவும் தெளிந்த மாக்சிய சிந்தனையின் அடிப்படையில் அவருடைய நூல் அறிமுகங்கள், திறனாய்வுக் குறிப்புகள், படைப்புக்கள் வெளிவரலாயின.
1945இல் தமிழ்நாட்டில் தமிழ் புனைகதை இலக்கியத்துறையும்,
சிற்றேடுகளும்,
பரி, கா.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (168)

Page 47
திறனாய்வுகளும் புதிய கனதியான விளிம்பு களை எட்டத் தொடங்கியிருந்த காலம். கிராம ஊழியன், தாமரை, ஜனசக்தி, இளம்தமிழன், சிதம்பர ரகுநாதனின் சாந்தி, விஜயபாஸ்கரனின் சரஸ்வதி, சின்னப்பபாரதியின் செம்மலர், மற்றும் பல சிற்றேடுகளிலும் தி.க.சியின் ஆக்கங்கள் புதிய நீர்ப்பாய்ச்சலுடன் வெளி வரலாயின.
டாக்டர் மு.வரதராசனாரின் நுால்கள் அனைத்தையும் முழுமையாக வாசித்த தி.க.சி. அவை குறித்த திறனாய்வுக் குறிப்புக்களை ஜனசக்தியில் எழுதியிருந்தார். அவற்றைத் தொகுத்து மு.வ.விற்கு அனுப்பிவைத்தார். அதனை அமைதியாக வாசித்த மு.வ. பதில் அனுப்பிவைத்திருந்தார்.
“Dear Siva, you have written on your Own back. Thanks for the comments'
என்று குறிப்பிட்டிருந்தாராம்.
கரங்கள் நடுங்கத் தொடங்கிவிட்ட முதுமையிலும் எழுதுவதை நிறுத்தவில்லை. படைப்புக்களை பணத்திற்காக ஜனரஞ்சகம் என்ற பெயரில் எழுதுபவர்கள் எல்லாம் கசாப்புகறி சமாச்சாரங்களை வாரிக் கொட்டிக் கொண்டிருக்கும் வேளையில் நல்லவையே அவர் எழுத்து மூச்சாக இருந்து வருகிறது. அண்மையில் வெளிவந்த தினமணி நாளிதழின் பிரதம ஆசிரியர் கே.வைத்தியநாதனின் பத்திரிகையில் வெளியான தலையங்களின் தொகுப்பான 'உண்மை தெரிந்து சொல் வேன்' நூலுக்கு எழுதியிருந்த முகவுரையும், ஓய்வு பெற்ற விவசாய பொறியியலாளர் எம்.எஸ். அகமுடையான் நம்பியின் 'குறள் கூறும் குடிமை' நூலுக்கும் எழுதியிருக்கும் முகவுரையும், மற்றும் நாள்தோறும் அவரை வந்தடையும் சிறு சஞ்சிகைகள், கவிதை, சிறுகதைத் தொகுப்புக்கள், பல்வேறு வகையான நுால்களுக்கும் சளைக்காமல் எழுதிவரும் திறனாய்வுக் குறிப்புகளும் உன்னதமான இலக்கியப் பணிகளாகும். இதில் இன்னொரு அதிசயம் என்னவென்றால் சிறுசஞ்சிகைகளில் வெளிவரும் கடிதங்களுக்கும் அஞ்சல் அட்டையில் என்றாலும் திறனாய்வுக் குறிப்புகளை அனுப்பிவிடுவாராம்.
தி.க.சி இலக்கியத்தில் தீவிரமாக இறங்குவதற்கு முன்னர் சொம்கொஸ் வங்கியில் காசாளராக பணியாற்றி வந்தார். உண்மையில் காசாளராக பணியினை செய்து அமைதியாக காலத்தை ஓட்டவில்லை. தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரமாக இருந்தார். இதனால் வங்கி நிருவாகம்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (168)

iiiiii
தண்டனை வழங்கத் தொடங்கியது. சென்னை, பரமக்குடி, கொச்சின் என பல கிளைகளுக்கும் மாநிலங்களுக்கும் விரட்டியடித்தது. கொதித்துப்போன தி.க.சி ஏலே! போலே, நீயும் உன் தொழிலும் என்று அதற்கு கும்பிடு போட்டுவிட்டு சரஸ்வதி விஜயபாஸ்கரன் பணியாற்றிக் கொண்டிருந்த சோவியத் அலுவலகத்தின் மொழிபெயர்புப் பிரிவின் தலைவராக இணைந்தார். சோவியத் நூல்கள் மடை திறந்த வெள்ளமாகின. 25 ஆண்டுகளின் பின்னர் ஓய்வு கொண்டார்.
தாமரை சஞ்சிகை அவர் நிருவாகத்திற்கு வந்தது. அவரின் கீழ் நூற்றுக்கும் அதிகமான இதழ்கள் வெளிவந்தன. பிரபஞ்சன், பொன்னீலன், வண்ணநிலவன், பா.செயற்பிரகாசம், கந்தவனம்,
வீர. வேலுச்சாமி போன்ற அற்புதமான படைப்பாளிகளெல்லாம் உருவான காலம் அது. தாமரை உரமிட்ட நிலமானது, தி.க.சி.உந்து சக்தியானார்.
புதுமைப்பித்தனின் படைப்புக்களில் ஆழ்ந்துபோனவர் தி.க.சி. இளம் தலைமுறை படைப்பாளிகள் புதுமைப்பித்தனின் ஆக்கங் களை ஆதர்சமாக எடுத்துக் கொள்ளவேண்டும். 'மொழியறிவும் ஆக்க இலக்கிய ஞானமும் என்றும் தேடுபொருளாக அமைதல் வேண்டும். சர்வதேச மனிதவுணர்வும் நமது சமூகப்பார்வையும் ஒரு கோட்பாட்டுரீதியில் சங்கமித்து இலக்கியம் உழைக்கும் மக்களின் உயர்விற்குரியதாக வேண்டும். நமது புனைகதை இலக்கியம் அந்த எல்லையை அடைகின்றபோதுதான் நாம் கனதிமிக்க படைப்பாளிகள் ஆவோம்.'
எண்பதுகளில் என்று நினைவு. ஒருமுறை பகவானின் பாதங்கள் என்ற சிறுகதைத் தொகுப்பினைத் தந்த நண்பர் மு.கனகராசனுடன் திருநெல்வேலி சுடலைமாடன் கோவில் தெருவில் தி.க.சியை சந்தித்திருக்கிறேன். அப்பொழுது என் கையிலிருந்த தாமரை சஞ்சிகையில் சில வரிகள் எழுதினார். கீழ்க்காணும் அந்த வரிகள்தான் அவை
சொல்லடி சிவசக்தி எனை - சுடர் மிகும்
அறிவுடன் படைத்து விட்டாய் வல்லமை தாராயோ இம் மாநிலம் பயனுற வாழ்வதற்கே.
தி.க.சி போன்ற உயர் இலக்கியவாதிகளின் நலம் வேண்டியே பாரதி இவ்வாறு ஊனுருகப் பாடி தவம் செய்திருக்கிறான் போலும்.
0 0 0
45

Page 48
கபிரியேல் கார்சியா மார். அவரின் இறவா இது?
புதிதாக கதைகளைப் புனையும் நாங்கள் எதையும் நம்புகிறோம். அடுத்தவர் எப்படிச் சாகவேண்டும் என்று யாரும் தீர்மானிக்கமுடியாத, உண்மையும் மகிழ்ச்சியும் சாத்தியம் என்பதை அன்பு நிரூபிக்கின்ற, தனிமையில் நூறு ஆண்டுகள் தண்டிக்கப்பட்ட இனங்கள் இறுதியாகவும் நிரந்தர மாகவும் பூமியில் இன்னுமொரு சந்தர்ப்பத்தை பெறு கின்ற ஒரு முழுமையான மாற்றத்துக்கு உள்ளாகும் ஒரு புதிய உன்னத வாழ்க்கை உருவாக்கத்தில் ஈடுபட அதிகம் காலம் கடந்து விடவில்லை என்று நம்புவதற்கு உரித்துடையவர்கள் என்று உணர்கிறோம்”
(கபிரியேல் கார்சியாமார்க்கேஸ் "தனிமை யின் நூறு ஆண்டுகள் மற்றும் அவரின் சிறுகதைகளுக்காகவும் நோபல் விருது பெற்றவேளையில் ஆற்றிய உரையிலிருந்து)
உலகின் நன்கு அறியப்பட்ட பிரபல நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர் 'கபோ' எனப் பரவலாக அறியப்பட்ட கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் தனது 87வது வயதில் 17ஆம் திகதி ஏப்ரல் மாதம் 2014ல் மரணமடைந்தார் என்பது வெறும் ஒரு சம்பவமாக பார்க்கப்படவில்லை என்பதை தேச எல்லைகளைத் தாண்டி, அரசியல் முரண்பாடுகளைத் தாண்டி உலகின் அரசியல் தலைவர்கள்கள், உலகின் தலைசிறந்த
இலக்கியப் படைப் பாளிகள், சினிமா துறைசார் ந் தோர் உட்பட ஆயிரக் கணக்கான சாமான்ய மக்களினதும் அனு தாபச் செய்திகள் கு விவதிலிருந்து கண்டுகொள்ள முடி கிறது.
இது, உலக நாவல் சிறுகதை
எஸ்.எம்.எம்.பஷீர் (இங்கிலாந்து)
46

நிகேஸ்சின் மரணமும்
2 மனை
இலக்கியத்துறையில் தனக்கென அழியா இடம்பெற்றுவிட்ட நாவல் இலக்கியத்தில் ஒரு மொழிநடைக்கு சர்வதேச அங்கீகார வரைவிலக்கணம் அளித்த ஒரு படைப்பாளியின் ஜீவித சரித்திரம் சரிந்திருக்கிறது என்பதையே சுட்டிக்காட்டுகிறது.
1928ல் கொலோம்பியாவில் பிறந்து, தனது சொந்த நாட்டில் வாழமுடியாமல் மெச்சிக்கோவிற்கு சென்று மூன்று தசாப்தங்கள் அங்கேயே வாழ்ந்து இறுதியில் அங்கேயே இறந்துபோன ஒரு மனிதனின் எழுத்துக்கள் இன்று அவரது மரணத்துடன் மரித்துப்போகவில்லை என்பதை அவரின் எழுத்துக்களை இன்று உலகே நினைவுகூர்ந்து பேசுவதில் கபிரியேல் கார்சியா மார்க்கேசின் படைப்புக்களின் கனதியை அதியுயர் இலக்கியத்தரத்தை சொல்லாமல் சொல்லி நிற்கிறது.
உயர்தர இலக்கியப் படைப்புக்கள் மூலம் முழு மக்கள்மீதும் செல்வாக்கு செலுத்திய ஓர் எழுத்தாளர் என்றவகையில் கபிரியேல் கார்சியா மார்க்கேஸ் தனித்துவ மானவர் என்று பிரபல பிரித்தானிய ஆங்கில எழுத்தாளர் இயன் மக் இவான் சிலாகித்துக் கூறுகிறார். கபிரியேல் கார்சியா மார்க்கேசின் மொழிநடையை, கதைசொல்லும் பாணியை தனது படைப்புக்களை தனது தாய்மொழியான ஸ்பானிய மொழியில் மந்திர யதார்த்தம் அல்லது மாய யதார்த்தம் எனும் கற்பனை வடிவமும் யதார்த்தவடிவமும் சேர்ந்ததான வகையில் படைப்பதில் இவர் தென் அமெரிக்காவில் மட்டுமல்ல ஸ்பானிய மொழியிலே முன்னோடியாகத் திகழ்ந்தார். அந்தவகையில் ஸ்பானிய மொழி இலக்கியத்துக்கு இவர் மூலமும் ஒரு முகவரி கிடைத்தது என்றால் மிகையாகாது.
இந்த வடிவ மொழி முன்னோடிகள் பற்றிய சர்ச்சைகள் இன்றுவரை இருந்துவந்த போதிலும் இவரின் மந்திர யதார்த்தப்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (168)

Page 49
பிடெல்காஸ்ட்ரோவும் கபிரியேல் கார்சியாவும்
படைப்புக்கள் உலகளாவிய ரீதியில் பல நவீன எழுத்தாளர்களின் எழுத்துக்களின்மீது பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது என்பதை பிரபல ஆங்கில எழுத்தாளர்கள் சிலரும் இன்று ஏற்றுக்கொள்கின்றனர். ஆங்கில நாவலாசிரியரும் சமூக ஈடுபாட்டாளருமான சார்ல்ஸ் டிக்கன்ஸை ஆங்கில கற்பனை யும் யதார்த்தமும் கலந்த நாவல் இலக்கியம், மற்றும் அரசியல் என்று பல அம்சங்களில் இவருடன் ஒப்பீடு செய்வதும் பொருத்தமாகவே தோன்றுகிறது.
தனது சட்டப்படிப்பையும் இடையிலே கைவிட்டு ஏதோ ஒருவிதத்தில் எழுத் துத் துறைக்குள் ஒரு இதழாளராக நுழைந்தபின்னர் பிரபல நாவல் சிறுகதை எழுத்தாளராக மாறி உலகம் அறியும் வண்ணம் 1982ல் நோபல் பரிசு பெற்ற படைப்பாளியாக மாறிய பின்னரும் அவர் தனது இதழாளர் (Journalist) தொழிலை விடவில்லை. 1967ஆம் ஆண்டில் பிரசுரமான அவரின் 'தனிமையின் நூறு ஆண்டுகள்' (One Hundred Years of solitude) என்ற நாவல் யுத்தத்திற்கும் சமாதானத்திற்கும் இடையே மக்கண்டோ எனும் கற்பனைக் கிராமத்தில் வாழ்ந்த புவேண்டா குடும்பத்தின் பல தலைமுறைகளின் கதையைப் பேசும் நாவலாகும். இவரின் கதாபாத்திரங்கள் உயித்துடிப்புள்ள நமக்கு மிகமிக நெருக்கமான மனிதர்களைப் பற்றிய ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (168)

HKIA பி.
கதைபோல் வாசகர்களை ஆகர்சித்து ஆட்கொள்பவை மட்டுமல்ல நாம் நிஜமாக இருக்கவேண்டும் என்று விரும்புகின்ற கற்பனைப் பா த த ர ங க ளு ம சம்பவங்களும் கொண்டவை யாகும். இந்நூல் உலக இலக்கிய படைப்பாளி களின் பார்வையை
இவர்மீது ஈர்த்தது.
கொலம்பிய சிவில்
யுத்த காலத் தில்
இராணுவ கேர்ணலாக பணியாற்றிய தனது பாட்டனாரின் நிஜ அனுபவத்தையும் தனது பாட்டியின் கற் பனையான பாட்டிக்கதைகளையும் பின்னியே தனது யதார்த்தத்துக்கும், மந்திரத்துக்கு மான கதைக் கருவின் இழையினை அவர் பின்னிக்கொண்டார். தனது சிறுபராயக் கதைகளை நிஜ சம்பவங்களைக் கோர்த்தே அவரின் 'தனிமையின் நூறு ஆண்டுகள்' நூல் படைக்கப்பட்டது.
கபிரியேல் கார்சியா மார்க்கேஸ், தனது நாவலில் தான் கையாண்ட மந்திர யாதார்த்த எழுத்து நடையினைப் பற்றிய தனது அனுபவத்தைக் கூறுகையில் "உண்மையாகத் தோன்றுவதிலிருந்து கற்பனையாகத் தோன்றுவதைப் பிரிக்கின்ற எல்லைக்கோட்டை அழிப்பதுதான் எனது மிகப்பெரும் பிரச்சினையாக இருந்தது” என்று அவர் ஒப்புக்கொண்டார்.
இவரின்
'தனிமையின்
நூறு ஆண்டுகள்' நாவல் வெளியாகி சுமார் 46 வருடங்களின் பின்னரே ஜூன் 2013 இல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என்பது தமிழில் அந்த நூலை வாசித்து அனுபவிக்கும் சந்தர்ப்பம் மிக நீண்டகாலமாகவே இடம்பெறவில்லை என்பது வருத்தத்துக்குரியதே.
ஓர் உலக இலக்கிய ஜாம்பவானின் மரணம் இன்று இலத்தீன் அமெரிக்கா முழுவதும் ஒரு சோகத்தைப் பரப்பியுள்ளது. இன்றைய அமெரிக்க ஜனாதிபதி தொடக்கம் முன்னாள் ஜனாதிபதி கிளிங்டன்வரை இவரின் எழுத்துக்கள் பற்றி சிலாகித்துப் பேசுகின்றனர். அதிலும் கிளிங்டன் தனிப்பட்டவகையில் ஓர் எழுத்தளார், ஒரு பத்திரிகையாளர்
47

Page 50
என்பதைக் கடந்து கொலம்பிய சமூகத்தை அவலப்படுத்திய போதைவஸ்து வியாபாரிகள், உள்நாட்டு யுத்தத்தில் மிகக் கொடூரமான வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்ட கெரில்லாக்கள் எனப்படுவோரை ராஜீய ரீதியில் கையாள்வது தொடர்பில் தனது இலக்கிய பிரபல்யத்தைப் பயன்படுத்திய ஒரு நவீன ஒரு அரசியல் சாணக்கியன் ஆவார். அந்த வகையில் கொலம்பிய அரசுக்கும் கெரில்லாக்களுக்கும் இடையே ஒரு சமரசம் செய்பவராக கொலம்பியாவின் போதை தடுப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் நிதியுதவி பெறுவதிலும் இவர் முன்னின்று செயற்பட்டுள்ளார். கொலம்பியாவை ஒரு சமாதான பூமியாக்க வேண்டும் என்பதே அவரின் குறிக்கோளாக இருந்தது. கற்பனையும் யதார்த்தமும் கடந்த எழுத்துகளுக்கு அப்பால் கொலம்பியாவில் போதை கடத்தல் கார்டேல்களின் (Cartel) ஆட்கடத்தல்கள், சித்திரவதைகள், கொலைகள் என்பவற்றை கடத்தல் செய்திகள் என்று தலைப்பிட்டு போதைவஸ்து கடத்தல்காரர்களின் பயங்கர வாத செயற்பாடுகளை செய்தியாக தொகுத்து வெளியிட்டுவந்தார். இதனால் பல அச்சுறுத்தல்களுக்கு உள்ளானார். கொலம்பியாவின் சாபக்கேடான போதைவஸ்து வியாபாரம் ஒழிக்கப்படவேண்டும் என்பது அவரின் குறியாக இருந்தது.
ரோம், பாரிஸ், நியூயோர்க், பார்சிலோனா, காரகாஸ் ஆகிய இடங்களில் எல் எச்பெக்டடர் என்ற செய்திப் பத்திரிகையின் வெளிநாட்டு செய்தியாளராக பணியாற்றிய அனுபவங்கள் அவரின் படைப்பிலக்கியங்களின் மூலம் பெற்ற பிரசித்தி என்பன உலகின் அரசியல், தேசத்தலைவர்களுடனும் நெருங்கிப்பழகும் வாய்ப்பை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தது, ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இவர் ஒரு பத்திரிக்கையாளன் என்ற வகையிலும் நன்கு அறியப்பட்டவரானார். பலதடவை கொலொம்பிய முன்னாள் ஜனாதிபதி அமைச்சர் பதவிகளையும், தூதுவர் பதவிகளையும் வழங்கி அவரை நேரடி அரசியலில் பங்காற்ற அழைத்தபொழுதெல்லாம் அவர் அதனை மறுத்தார். முதலில் நாட்டில் யுத்தத்தை நிறுத்துவோம், அமைதியை கொண்டுவருவோம் பின்னர் எங்களின் அபிப்பிராய வேறுபாடுகளைக் கண்டறிவோம் என்பதே சமாதானத்துக்கான வழி என்று அவர் 48

அழுத்தம்திருத்தமாக வலியுறுத்தினார்.
பத்து நாவல்களையும் பல சிறு கதைகளையும் எழுதியுள்ள அவரின் நாவல் களில் 'தி ஓட்டம் ஒப் பட்ரியார்ச்' (The Autumn of Patriarch) எனப்படும் நாவல் ஒரு இராணுவ சர்வாதிகாரியினதும் அவனுக் கெதிரான புரட்சியாளர்களினதும் கதை. இந்நாவல் மிகவும் சுவாரசியமான கதை சொல்லும் உத்திகளைக்கொண்டு எழுதப்பட்டுள்ளது. இதனை ஆங்கிலத்தில் கிரகோரி ராபாசா மொழிபெயர்த்துள்ளார். இவரின் 'லவ் இன் தி டைம் ஒப் கொலரா' , (Love in the time of Cholera) 'தி ஜெனரல் இன் ஹிஸ் லப்ரிந்த் (The General in his Labyrinth) என்பன மிகப் பிரபல்யமான நாவல்களாகும். இவை உட்பட இவரின் பல நாவல்களும் சிறுகதைத் தொகுதிகளும் ஆங்கிலம் உட்பட பல உலகின் முதன்மை மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவுடன் கொலம்பிய நாட்டு தேசிய விவகாரங்கள் தொடர்பில் அவர் மேற்கொண்ட பட்ட ராஜீய செயற்பாடுகள் காரணமாக அமெரிக்காவின் முன்னாள் ஆட்சித்தலைவர் பில்கிளிங்டன் இவருடன் நட்புறவு பேணிவந்துள்ளார். அதேநேரம் தென் அமரிக்க இடதுசாரி புத்திஜீவிகளில் சிலரைப்போல் கபிரியேல் கார்சியா மார்க்கோஸ்ஸம் கியூபாவின் முன்னாள் தலைவர் பிடல் காஸ்ட்ரோவுடன் தொடர்பினைப் பேணிவந்துள்ளார். ஆனால் அவரின் பிடல் காஸ்ட்ரோவுடனான தொடர்பு குறித்து கேள்வி எழுந்தபொழுது, "பிடெல் காஸ்ட்ரோ ஒரு பண்பட்ட மனிதர், நாங்கள் சந்திக்கும் பொழுது இலக்கியம் பற்றியே பேசுவோம்” என்று அவர் பதிலளித்தார்.
கபிரியேல் கார்சியா மார்க்கேஸின் அரசியல் குறித்த ஒரு சில் எதிர் விமர்சனங்களுக்கு அப்பால் இவரின் மறைவு ஓர் உலக இலக்கிய ஜாம்பவானின் மறைவு மட்டுமல்ல மனிதநேயமிக்க, ஒரு சமூக மாற்றம் வேண்டிநின்ற, அதற்காக தனது எழுத்து ஆளுமையையும், அதனால் பெற்ற கீர்த்தியையும் முதலீடு செய்த ஓர் அற்புத மனிதனின் மறைவுமாகும். தென் அமரிக்க வரலாற்று நாயகர்களில் இவர் பெயரும் நின்றுலாவும்.
0 0 0
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (168)

Page 51
நாட்12 11EEய
எப்படியோக்கம்
4
சம கால 2 கலை கலக்
நிகழ்வுகம்
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் “இலக்கியமான எழுத்தாளர் அமரர் கே. டானியல் அவர்களின் திருவு
"மக்கள் எழுத்தாளர்" கே. டானியல் திறந்துவைத்தார்.
காலஞ்சென்ற பிரபல எழுத்தாளர் நாவேந்த கதைகள்' என்ற நூலும், புலம் பெயர்ந்து பி இளங்கோவனின் ஆங்கில நூலான (Tamil Store திருமதி பத்மா இளங்கோவனின் சிறுவர்களு எழுத்தாளர்” கே. டானியல் படத்திறப்பும் கொழும் (27.03.2014 வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு "இலக்கிய புரவலர்" ஹாசிம் உமர் முன்னிலையில் நடைபெற்றது.
கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் ஆ. இ தமிழ்ச் சங்கப் பொதுச் செயலாளருமான தம்பு. சி கலாநிதிதி . ஞானசேகரன் எழுத்தாளர் அந்தனி | இலக்கியபுரவலர் ஹாசிம் உமர் முதற்பிரதியைப்
இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக 'தினக் "ஞாயிறுதினக்குரல்" ஆசிரியர் ஆர் பாரதி, “வீ ஆர்.பிரபாகன், தினகரன் வாரமஞ்சரி பிரதம கலந்து சிறப்புச் செய்தார்கள்.
நூல்கள் குறித்து திறனாய்வாளர் கே.எஸ். கலைக்கேசரி ஆசிரியர் திருமதி அன்னலட். பத்மாசோமகாந்தன், எழுத்தாளர் தம்பிஐயா ( ஓங்காரமூர்த்தி, "காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரி எழுத்தாளர் வி.ரி. இளங்கோவன் ஏற்புரை வழங்
ஆர். சிறப்பு° இத்து தி?
அமரர் கே.எஸ்.பாலச்சந்திரன் நினைவு
மறைந்த மூத்த கலை ஆளுமை கே.எஸ்.பால் கலாசார நிலையத்தின் ஆதரவில் கொழும்புத் தமி கலாசார நிலையத்தின் தலைவர் எம் இராம இந்நிகழ்வில் அமரர் கே.எஸ்.பாலச்சந்திரன் அ நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
"சர்வதேச நாடுகளில் கலைஞர் கே. என அறிவிப்பாளர் பி.ஏச் அப்துல் ஹமீத் தன் ! "வானொலியில் கே.எஸ்.பாலச்சந்திரனின் பை யோகராஜன் உரையாற்றினார். "கரையை தேடு தலைப்பில் பிரான்ஸ் வி.ரி இளங்கோவன் உரை நாடகத் துறைக்கான பங்களிப்பு" என்ற தலைப்பு
நன்றியுரையை கே.எஸ்.பாலச்சந்திரனின் மக கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரனின் கலைப் ப பெருந்திரளான ஒளி. ஒலி, கலைஞர்கள், ஊ6
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (168)

அயர்
லை”யில் நான்கு நூல்களின் வெளியீடும் "மக்கள் புருவப்படத் திறப்பும்.
படத்தினை பேராசிரியர் சபா. ஜேயராசா
னின் சிறுகதைகளின் தொகுப்பான 'நாவேந்தன் பிரான்சில் வாழும் மூத்த எழுத்தாளர் வி.ரி. es From France) என்ற சிறுகதைத் தொகுதியும், க்கான இரு நூல்களும், மறைந்த "மக்கள் ம்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் கு) பேராசிரியர் சபா. ஜேயராசா தலைமையில் ல் கொழும்பு கலை இலக்கியவட்டம் ஏற்பாட்டில்
ரெகுபதி பாலஸ்ரீதரன், எழுத்தாளரும் கொழும்புத் வெசுப்பிரமணியம், "ஞானம்" ஆசிரியர் வைத்திய ஜீவா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். ப் பெற்றுச் சிறப்பு செய்தார். க்குரல்” பிரதம ஆசிரியர் வீ.தனபாலசிங்கம், ரகேசரி வாரவெளியீடுகளின் பிரதம ஆசிரியர் ஆசிரியர் தே. செந்தில்வேலவர் ஆகியோர்
சிவகுமாரன், சட்டத்தரணி ஜீ.இராஜகுலேந்திரா. சுமி இராஜதுரை, எழுத்தாளர் திருமதி தேவதாஸ், ஓய்வுநிலை கல்லூரி அதிபர் இ. இப்புதீன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். பகினார்.
மச்சந்திரன் அவர்களின் நினைவுநிகழ்வு இந்திய
ழ்ச் சங்கத்தில் (30.03.2014) நடைபெற்றது.இந்திய மச்சந்திரனின் வரவேற்புரையுடன் ஆரம்பமான வர்களின் உடன் பணிபுரிந்த பணியாற்றிய பலர்
ல். பாலச்சந்திரன்" என்ற தலைப்பில் உலக பாணியில் மிக அருமையாக உரையாற்றினார். டப்புகள்” என்ற தலைப்பில் இராஜபுத்திரன் திம் கட்டுமரங்கள் நாவல் படைப்புகள்" என்ற யாற்றினார் "கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரனின் பில் அருணா செல்லத்துரை உரையாற்றினார்.
ள் திருமதி சுபாஷனி ஹன்டி வழங்கிவைத்தார். டைப்புகளும் நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டன. படக நண்பர்கள் கலந்து கலைஞர் கே.எஸ்.
49

Page 52
பாலச்சந்திரனின் கலைப் படைப்புகளுக்கு அஞ்சலிசெலுத்தினார்கள். நிகழ்வுகளை மூத்த ஊடகவியலாளர் எஸ். ஏழில்வேந்தன் மிக
அருமையாகத் தொகுத்து வழங்கினார்.
சி.அ. யோதிலிங்கத்தின் இரு நூல்கள் வெளியீடு
ஆசிரியரும் அரசியல் ஆய்வாளருமான சி.அ. யோதிலிங்கத்தின் 13 ஆவது திருத்தமும் தமிழ் மக்களும், இலங்கையின் இனப்பிரச்சனையும் அரசியல் யாப்புகளும். என்ற இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு கொழும்புத் தமிழ்ச் சங்க மாலதி மண்டபத்தில் (06.04.2014) அருட் தந்தை ம.சக்திவேல் தலைமையில் நடைபெற்றது.
பிரதம அதிதியாகப் பேராசிரியர் சபா. ஜெயராசா கலந்து சிறப்பிக்க, பிரசித்த நொத்தாரிசும், சமூகசேவையாளருமான க.மு.தர்மராசா
முதற்பிரதியைப் பெற்று சிறப்புச் செய்தார்.
நூல்: ஹராங்குட்டி (சிறுகதைகள்)
ஆசிரியர்: முஸ்டீன் வெளியீடு: செய்ஹ் இஸ்மாயீல் ஞாபகார்த்த பதிப்பகம் இந்தத் தொகுதியில் 12
கதைகள் அடங்கியுள்ளன. இச்சிறுகதைத் தொகுதியானது போர்க்காலத்தில் முஸ்லிம் பிரதேசத்தில் வாழ்ந்த மக்களின் அவல வாழ்வின் வெட்டுமுகத்தை ஒரு வலுவான முனைப்புடன் தருகின்றது. பல்வேறு இயக்கங்கள் விடுதலைக்காக இயங்கிய காலம், இந்திய அமைதிப்படைக் காலம், சமாதான ஒப்பந்தக்காலம் ஆகிய கால கட்டங்களின் நடவடிக்கைகள் இக்கதைகளில் பதிவாகியுள்ளன. அனேகமானவை அக்கால நிகழ்வுகளின் உண்மைப்பதிவுகள். தலைப்புக் கதையான ஹராங்குட்டி வித்தியாசமானது. மார்க்கத்தின் பேரால் சிறுவர்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் மெளலவிகள் பற்றியது. முஸ்லிம் மார்க்கப் போதகர்களை விமர்சிக்கும் துணிச்சலான
கதை. பிற எழுத்தாளர்கள் க எழுதத் தயங்கும்
விடயங்களை முஸ்டீன் கதைகளாக்கியுள்ளார். இத்தொகுதி பலராலும் வாசிக்கப்பட வேண் டிய வித்தியாசமான
தொகுதி
24
EEEர்
மஸ்100
8||

மூத்த எழுத்தாளர்களைக் கௌரவித்து விருதுவழங்கும் விழா.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனமும், கொடகே புத்தக நிறுவனமும் இணைந்து தேசிய இலக்கியத்திற்கு பாரிய பணிபுரிந்த மூத்த இலக்கியவாதிகளைக் கெளரவித்து விருதுவழங்கும் விழா இலங்கை ஒலிபரப்புக் கூட்டுதாபன ஆனந்த சமரக்கோன் உள்ளக அரங்கில் (7.04.2014 பிற்பகல் 3.00 மணிக்கு) நடைபெற்றது.
சிறப்புரையை பேராசிரியர் பாதேகம் ஞானீஸ்வரதேரர், பேராசிரியர் பிரணீத் அபயசுந்தர மற்றும் மூத்த எழுத்தாளர் திக்குவல்லை கமால்
ஆகியோர் வழங்கினார்கள்.
கெளரவிக்கபட்ட மூத்த எழுத்தாளர்களில் தமிழ் எழுத்தாளர் திருமதி பத்மா சோமகாந்தனும் விருதுவழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.
0 0 0
நூல்: போர்க்கால சிங்கள இலக்கியங்கள் (ஒரு பன்மைத்துவ ஆய்வு 1983-2007) ஆசிரியர் எம். சீ. ரஸ்மின் 1983முதல் 2007 வரையான 25 வருட கால சிங்களப் படைப்பிலக்கியங்களை அடிப்படையாக வைத்து இந்நூலை ஆய்வு செய்துள்ளார் ஆசிரியர். தமிழ் இலக்கியத்தில் தோன்றிய போர்க்கால இலக்கியங்கள் போன்று சிங்கள் இலக்கியத்திலும் போர் இலக்கியங்கள் தோன்றியுள்ளனவா? அவ் வாறு தோன்றியிருப்பின் அவற்றின் இடம் எத்தகையது? சிங்கள் எழுத்தாளர்கள் இன நல்லுறவுக்குக் குரல் கொடுத்தார்களா? அல்லது பேரினவாதத்துக்கு துணை நின்றார்களா? இதில் விகிதாசாரம் எத்தகையது? போன்றவற்றை அறிய இந்த நூல் உதவுகின்றது. ஒன்பது தலைப்புகளில் பல பயனுள்ள தகவல்களை ரஸ்மின் தந்துள்ளார். இந்த ஆய்வு
2007இல் பேராதனைப் ப ல க  ைல க க ழ க தமிழ்த்துறைக்கு சமர்ப்
பாயா பா பார்ப்பார்
யான்பயந் ல் 1 ம1 ம் பிக்கப்பட்டு பல திருத்தங்களுடன் இப் போது நூல் ஆக்கம் பெற்றுள்ளது. பயன்மிக்க நூல்.
ம்! ஸ்மின்
214 E 1 |
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (168)

Page 53
கண்டித் தமிழ்ச் சங்கம் நடத்திய
5. ஞானசேகரன் 5 'எனது இலக்கியத்தடம்' நூல் அறி
30 - 03- 2014 அன்று கண்டி இந்துக் கலா . கண்டித் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில், எழுத்தாளர் 'எனது இலக்கியத் தடம்' என்ற நூலில் நடைபெற்றது. பேராசிரியர் துரை. மனோகர நடைபெற்ற இவ்விழாவில் வரவேற்புரையை நிகழ்த்தினார். பேராதனைப் பல்கலைக்கழக எம்.ஜெயசீலன் அறிமுக உரையையும் பேராசிரிய எழுத்தாளர் மு.சிவலிங்கம், ஊவா வெல்லஸ் விரிவுரையாளர் எம். ரூபவதனன் ஆகியோர் க வழங்கினர். ஏற்புரையை நூலாசிரியர் நிகழ்த்தினார். முதற்பிரதியை திரு. பெரியய்யா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பலர் இந்நிகழ்ச்சி பேராசிரியர் துரை.மனோகரன் தலைமையுரை.
“எழுத்தாளர் ஞானசேகரன் உரும்பிராய் உயர்வகுப்பில் படிக்கும்போது நாடக ஆசி இயக்குநராகத் திகழ்ந்தார். அதன் பின்னர் அவர் சி விளங்கினார். அதற்குப் பிறகு அவர் நாவலாசிர் பின்னர், ஞானம் சஞ்சிகை ஆசிரியராகக் காட் பிறகு அவர் பயண இலக்கிய ஆசிரியராக விள எனது இலக்கியத்தடம் என்ற நூல், அவரது இ சிறப்பாக இனங்காட்டுகிறது. இந்த நூலின் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கிறேன் சஞ்சிகை, இலங்கையில் வெளிவரும் நேர்மை சஞ்சிகையாக விளங்குகின்றது. துணிச்சலாக
அவற்றை வெளியிடுவதற்குத் துணிச்சல் வேண் எனக்கு ஏராளமான வாசகர்களைச் சம்பாதித்துத் விரிவுரையாளர் எம்.ஜெயசீலன் அறிமுக உரை
ஞானசேகரன், பற்றிய புரிதலுக்கு அவர்த இட்டுத்தரும் எனலாம். அவர் இதுவரை காலமும் நாவல், பயண இலக்கியம், நேர்காணல்கள், மிகவும் விரிவாக இந்நூலில் பேசியுள்ளார். சாதியம், தீண்டாமை, போர், மலையகத் தமிழ விரிவடைவதைக் காணலாம்.
ஓர் அந்தண சமூகத்தில் பிறந்த ஞானசேகரன் தன் குறித்தும் அவர்கள் அக்காலத்தில் எதிர்கொண்ட சவ குறித்தும் கலந்துரையாடி இருப்பதோடு வடக்கில் நிலவிய மக்களின் வாழ்வியல் அம்சங்கள் குறித்தும் பதிவு செ வாழ்ந்த காலத்தில் மலையகத்து பெருந்தோட்டத்துறையி கோலங்கள் எவ்வாறு இருந்தன என்பதையும் பதிவு எழுதுவதற்கான தகவல்கள் இந்நூலில் அடங்கியிருப் இலக்கியச் செயற்பாடுகள் மூலம் ஈழத்தில் நிலவிய சம. செல்கிறார். ஈழத்து இலக்கிய வரலாற்றை எழுதுவது நூல் விளங்குகிறது. அடுத்தாக நூலின் மொழி) ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (168)

பிமுகவிழா
சார மண்டபத்தில் தி.ஞானசேகரனின் ர் அறிமுகவிழா ன் தலைமையில் இரா.அ.இராமன்
விரிவுரையாளர் பர் எம்.ஏ.நுஃமான்,
- தி. ஞானசேகரன் பல்கலைக்கழக ருத்துரைகளையும்
தி.ஞானசேகரன் செல்லையா பெற்றுக்கொண்டார். பேராதனைப் யில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்துக்கல்லூரியில் ரியராக, நடிகராக, சிறுகதை ஆசிரியராக சியராகத் திகழ்ந்தார். சியளித்தார். அதன் ங்கத் தொடங்கினார். ருவேறு தடங்களைச்
இரண்டாம் பாகம் 7. அவரது ஞானம் யான, துணிச்சலான
எழுதுவதை விட, டும். அதை ஞானம் கொண்டிருக்கிறது. ஞானம் - தந்துள்ளது” என்று குறிப்பிட்டார்.
கரும் தகவல்கள் எமக்குப் புதிய வெளிச்சத்தை D ஈடுபட்டிருந்த துறைகளான நாடகம், சிறுகதை,
இலக்கியச் செயற்பாடுகள் போன்றவற்றை அவருடைய படைப்புகளின் உள்ளடக்கமானது ஊரின் வாழ்வியல், பத்தி எனப் பலதடங்களில்
5 குடும்பப் பின்னணியூடாக அந்தணர் சமூக வாழ்வியல் ால்கள் குறித்தும் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் 1 சாதிய சமூக அமைப்புக் குறித்தும் அதில் ஒடுக்கப்பட்ட ய்துள்ளார். இதற்கு அடுத்த நிலையில் மலையகத்தில் கனருடைய சமூக அமைப்பும் அவர்களுடைய வாழ்வியல் செய்துள்ளார். இவற்றின் மூலம் சமூக வரலாற்றை பதைக் காணலாம். இதற்கு அடுத்த படியாக இவரது கால இலக்கியப்போக்குகள் பற்றியும் பலவாறு குறித்துச் நற்கான பல்வேறு தகவல்களைக் கொண்டதாக இந் நடைபற்றிக் கூறுவதாயின் மிகவும் இயல்பான
51
• இலத்தி". இதற்கு சமூக வ.

Page 54
போக்கில் இலகு தமிழில் எளிமையாக எழுதப்பட்டுள்ளது. ஆசிரியரின் புனைவு நடை நூலுக்கு மிகவும் செழுமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. தன்வரலாறுகள் யாவும் தற்சார்புடன் எழுதப்படுவதால், அவற்றின் நடுநிலைமை குறித்த ஐயங்கள் எழலாம். இத்தகைய தன்வரலாற்று நூல்களை வாசிப்பவர்கள் அவற்றைத் தகவல்களாகப் பயன்படுத்துபவர்கள் அவற்றின் வன்மை மென்மை உணர்ந்து பயன்படுத்துவதே நன்று.
விரிவுரையாளர் ரூபவதனன் கருத்துரை
ஞானசேகரனின் இலக்கியத்தடம் என்ற இந்த நூலினை நோக்கும்போது, இது அவரது சிந்தனைத்தடம், செயல் தடம், எழுத்துத் தடம் என முத்தடங்களில் அமைந்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஞானசேகரனது சிந்தனைத் தடம்
மானுடம் பற்றியதாகும். மானுட மேன்மைக்கு உதவும் உறுதுணையாகவும் இது கொள்ளப்படுகிறது. பிற கருத்தியல்களையும் இணைத்த ஒரு ஒட்டு மொத்த, மனிதகுல மேம்பாட்டுக்கான கருத் தியல் ஒன்று உள்ளது. அது மானுடக்கருத்தியல் Humanitic Ideology
என இந்த நூலின் 50ஆவது பக்கத்தில் குறிப்பிடுகிறார். மேலும் எழுத்தாளனுக்கு கோட்பாடுகள், தத்துவங்கள் இஸங்கள் பற்றிய பிரக்ஞை இருக்கலாம்
ஆனால் அவை எதுவும்
அவனது படைப்பூக்கத்திற்குத் தடையாக இருக்கக்கூடாது என்ற எண்ணமுடையவன் நான் (பக் 50) என ஆணித்தரமாக வாக்குமூலம் அளிக்கிறார். அதாவது இவரது சிந்தனைத்தடம், எவரும் எதைப்பற்றியும் எழுதத் தயங்கக் கூடாது என்கிற ஒரு பன்மைத்துவ தன்மையைக் கொண்டதாக அமைகிறது.
நான் எந்தக் குழுவையும் சேரந்தவனல்லன் தனியாகவே நின்று ஈழத்து இலக்கிய உலகில் என்னாலான பணியைச் செய்து வருகிறேன் என்கிறார். இதுவும் ஒருவகை குழுமனப்பான்மைதான். இத்தகைய சிந்தனைத் தடம் உடைய ஒன்றுக்கு மேற்பட்டவர்கள்
52

சேர்ந்து இயங்கவும் முடியும்
தனது உருவாக்கம் பற்றிக் கூறுகையில் தனது குடும்பம், பெற்றோர், உறவினர் என்கிற பரம்பரை பரம்பரையாக வருகின்ற தமிழ் மரபிலே உற்பத்தியானவராகக் குறிப்பிடுகிறார். அந்த மரபு இவரையும் வந்தடைகிறது. ஒரு எழுத்தாளனின் எழுத்துக்களை அவன் வளர்ந்த இளவயதுச் சூழல், வாழ்வு, அனுபவம், கல்விநிலை பண்பாடு, மனவிகசிப்பு என்பன தீர்மானிக்கின்றன என்று கூறும் ஞானசேகரன் தனது எழுத்துக்களையும் இவையே தீர்மானித் தன என வாக்கு மூலம் அளிக்கிறார். இதே வாக்கு மூலத்துடன் நாம் சில உண்மைப் பகிர்வுகளையும் தரிசிக்க வேண்டியிருக்கிறது. இவரது முதற் சிறுகதை சிற்பி சரவணபவன் நடத்திய கலைச்செல்வியில் பிரசுரமாகியது. அதேபோல நா. சுப்பிரமணியம் (பக்:116) தனது எழுத்து முயற்சிகளுக்கு ஊக்கமளித்து தன்னை எழுத்துலகில் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர் என்கிறார். இவரது கூற்று மூலம் இவரது சமூகம் இவரை உருவாக்குவதில் பங்கு வகித்துள்ளது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இதுவும் ஒரு யதார்த்தம்.
ஞானசேகரன் அவர்கள் ஏழ்மை, கல்வி, பண்பாடு, சாதி, தொழில் ஆகிய வற்றில் பல பல இன்னல்களைச் சந்தித்திருக்கிறார். ஏழ்மைக் குடும்பம், தொழில் நிமித்தம் பொற்சிறையில் வாழவேண்டிய நிலை, கல்வி மறுக்கப்படல், பண்பாட்டு அல்லது சாதி ஆசாரங்களால் நையாண்டிக்கு உள்ளாகியமை என்பவை இவருக்குச் சவாலாக இருந்திருக்கின்றன. இவையாவற்றிற்கும் ஒரேவழி, எத்துறை யானாலும் அறிவாற்றலால் தம்மை உயர்த்திக் கொண்டால் மற்றவர்களுக்குக் கைகட்டிச் சேவகம் செய்யும் நிலை எவருக்குமே ஏற்படாது எனக் குறிப்பிடுகிறார். இதைத் தான் வாழ்ந்த யாழ்ப்பாணத்துச் சூழலிலே பொருத்தமானதாகவே காண்கிறார். இத்த கைய தீர்வையே மலையகச் சூழலில் அறிமுகப்படுத்திக் காண்பித்தும் இருக்கிறார் உதாரண புருஷராகவும் இருந்திருக்கிறார். இத்தகைய தீர்வுக்கு அடித்தளமாக உள்ளது சாதி முறைமை என்பதை ஆசிரியர் ஏற்றுக்கொள்வது புலனாகிறது. ஆக்க இலக்கிய வேலைகளில் இவர் ஈடுபடும்போது சாதிபற்றி
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (168)

Page 55
வருகிற பிரச்சனைகளை இவர் எதிர்கொள்ளாது ஈழத்தில் ஏனைய எழுத்தாளர்களைப்போல ஒரு ல் நழுவல் போக்கை இவர் தனக்குள் கொண்டுவருவதைப்
பார்க்கக்கூடியதாக இருக்கிறது.
யதார்த்தத்தை அப்படியே காட்டுவது என்பது சமூக மேம்பாடு அல்லது புரட்சி மறைந்துவிடுகிறது. ஒரு எழுத்தாளன் இவற்றை எழுதும்போது எவற்றைத் தவிர்க்க வேண்டும் எவற்றை முறையாகக் கையாள வேண்டும் எப்படி எழுதவேண்டும் என்பவற்றையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
யாழ்ப்பாணத்துச் சூழலில் சாதியக் கதைகளையும் மலையகச்சூழலில் மலை யக மக்களின் வாழ்வியல் கதைகளும் எழுதப்பட்டமை குறித்து பிற எழுத்தாளர்கள் மனதில் ஏற்புடமை இருக்கவில்லை என்கிறார் ஆசிரியர். நான் மொழிவழி வாழ்வை உற்று நோக்குகிறேன். எழுத்துக்கள் மூலம் சமூகத்தைச் சித்தரிக்கிறேன். இது எனது இலக்கியச் செயற்பாடு இந்தச் செயற்பாட்டின் நோக்கம் மானுட நேயமும் சமூக மேம்பாடும்தான்.... இவ்வாறான கூற்றுக்கள் வாசகர்களுக்கு ஆசிரியர் பற்றிய நிலைப்பாட்டை மேலும் நிலைநிறுத்த உதவுகின்றன.
மொழிவழி படைக்கும்போது ஆசிரியர் கையாள்கின்ற அந்த நுட்பம் அவரது நடை என்ற அடையாளத்தை வாசகர்களுக்குக் கொடுக்கிறது. ஞானசேகரனுடைய தமிழ் நடை மிகவும் சிறப்பு வாய்ந்தது. பதப் பிரயோகம், வாக்கிய அமைப்பு, நேரடியாக விடயத்தைக்கூறும் பண்பு என்பன இவற்றுக்கு முக்கியமானவை. ஆயினும் மொழியைக் கையாளும்போது ஒருவித குழுநிலை சார்ந்து நிற்கிறாரா என ஐயப்படும் அளவிற்கு அவரது பதப் பிரயோகங்கள் அமைந்து விடுகின்றன. உதாரணமாக அவர் தனது தந்தை பற்றி கூறுகையில் எனது தந்தை ஒரு பிராமணர், ஒருபூசகர் என்கிற ஒரு பலத்த மரியாதை ஒருமையில் எழுதும் ஞானசேகரன் 43ஆம்பக்கத்தில் ஒரு பூசாரியைப்பற்றிக் கூறும்போது படர்க்கைக்கும் ஒருமைக்கும் உள்ள வேறுபாடும் மொழியின் ஆழ்நிலை வாசிப்புக்கும் மேல்நிலை வாசிப்புக்கும் எம்மைக் கொண்டு போய் விடுகின்றன. இவ்வாறு மொழியைப் பயன்படுத்தும்போது அந்த மொழி பற்றிய அவரது மனப்பாங்கு பலரிடம் இருப்பதும் நோக்கற்பாலது. இதையும் யதார்த்தம் என்பதற்குள் இலேசாக அடக்கிவிடமுடியும்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (168)

ஞானசேகரன் குழுமனப்பான்மையால் ஏற்றுக் கொள்ளப்படாத நிலை குறித்து மனக்கிலேசம் அடைகிறார். குறிப்பாக முற்போக்கு வாதிகள், சாதி எழுத்தாளர்கள், மலையக எழுத்தாளர்களிடமிருந்து இந்த ஏற்புடமைகள் நல்லவகையில் அமையவில்லை என்ற ஆதங்கம் இடை இடையே வந்து போகிறது. தமது படைப்புகள் பல் கலைக்கழகப் பாடவிதானங்களில் பேசப் பட்டிருப்பதைத் துணிவுடன் கூறும் இவர் அதனைத் தடித்த எழுத்துக்களில் குறித்து விடுவதையும் அவதானிக்க முடிகிறது.
நிறைவாக, நூலின் அமைப்பைப் பற்றி நோக்கும்போது, ஒவ்வொரு அத் தியாயக் கட்டுரையும் தன்னளவில் நிறை வுடையதாகவும் பொலிவுடையதாகவும் காணப்படுகிறது. வாசகர்களுக்கு சலிப்பு ஏற்படாவண்ணம் அமைந்திருக்கிறது. இது அவரது வெற்றிகளில் ஒன்று. ஆயினும் கட்டுரைகளின் வைப்பு முறையில் கால வரன் முறையைக் கடைப்பிடித்திருக்கலாம். அத்துடன், காலவரன்முறையைக் கருத்திற் கொள்ளாமல் வலிந்து புகுத்தப்பட்ட இரண்டு கட்டுரைகள், குறிப்பாக சர்வதேச எழுத்தாளர் மாநாடு பற்றியதும், கா.சிவத்தம்பியினுடைய பதிவும் இரண்டாவது தொகுதியில் சேர்த் திருக்கலாம். மற்றது குறைந்த பட்சம் ஞானம் சஞ்சிகையின் தோற்றம் பற்றியாவது இந்தப்பகுதியில் வந்திருக்க வேண்டும் என்பது எனது அபிப்பிராயமாகும் | எழுத்தாளர் மு.சிவலிங்கம் கருத்துரை
மலையகத்திலே பல நாவல்கள் வந் துள்ளன. எனினும் ஞானசேகரனுடைய குருதிமலை நாவல்மட்டும் பேசப்படும் நாவலாக இருக்கிறது. இந்த நாவல் தமிழகத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்புக்கு பாடநூலாக வைக்கப்பட்ட பெருமைக்குரியது. இரசனைக்காக ஞானசேகரன் எழுதுவதில்லை. மனித விடுதலை, மனிதனுடைய வளர்ச்சி, மனித நேயம், தேசிய மனித மகிழ்ச்சி, தேசிய இலக்கிய இலட்சியம் இவற்றைப்பேசும் இலக்கியங்களே இன்றைய தேவை. இவற்றையே ஞானசேகரனின் எழுத்துக்களில் காண முடிகிறது. இந்தக் குருதிமலை நாவல் தேசிய ஒடுக்குமுறை பற்றிக் காட்டப்பட்ட நாவல். இங்கு ஒடுக்குமுறை என்பது திட்டமிட்ட குடியேற்றங்கள்.
பெரும்பான்மை இனம்
53

Page 56
இல்லாத இடங்களில் பெரும்பான்மை இனத் தைக்குடியேற்றி சிறு பான்மையினரை ஒடுக்கி விடுதல். உலகத்திலேயே மனித இனத்திலே மிகப் பெரிய ஒடுக்கு முறை என்பது திட்டமிட்ட குடியேற்றங்கள். லெனின்
தனது சித்தாந்தத்திலே இது பற்றியும் கூறியுள்ளார். இந்த நாவலில் ஞானசேகரன் அதனைக் காட்டுகிறார். அந்த நாவல் இன்றும் பேசப்படுகிறது என்றால் அதுதான் அந்த நாவலின் வெற்றி. சாரல் நாடன் ஒருமுறை ஞானசேகரனிடம் கூறினாராம், 'லயத்துக் கூரைகள் ஒழுகும்போது அதிலே நனைந்து கஷ்டப்படுகிறவனின் வலி மலையக எழுத்தாளனுக்குத்தான் தெரியும். அதே வேளை அந்த ஓட்டையை எப்படி அடைக்க வேண்டும் என்பது பிறமாநில எழுத்தாளர்களுக்குத் தெரிகிறது.'' என்றாராம். இக்கூற்றை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நாட்டில் முதல்முதல் எழுச்சி பிறந்தது மலையகத்திலேதான். 60க்கு முன்னரே எதிர்ப்பு இலக்கியம் ஆவேச இலக்கியம் மலையகத்திலே தோன்றிவிட்டது. ஞானசேகரன் மொழிப்பிரவாகத்தைத் திறம் படக் காட்டியுள்ளார். சீட்டரிசி என்ற கதையில் ஒரு புதுமைப்பெண்ணைக் காட்டுகிறார். பொருளாதாரத்தால் நசுக்கப்பட்ட ஒரு கிராமிய வாழ்க்கையை, மிக அருமையாகக் காட்டுகிறார். வறுமையையும் பட்டினியையும் மடியில் கட்டிக்கொண்டு கண்ணீர் வடிக்கும் ஒரு சமூகம் தன்னுடைய கையிருப்பு களில் எப்படி மாற்றங்களைச் செய்துகொண்டு தங்களைத் தக்க வைத்துக்கொள்வதற்கு, பிழைத்துக்கொள்வதற்கு செய்யும் பிரயத்தனங்களை மிக அற்புதமாகக் காட்டியுள்ளார். திருப்பு முனைத் தரிப்புகள் என்ற கதையும் சிறந்ததொரு கதை. தோட்டத்து மக்கள் கல்வியிலே மேம்படவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் கதை கவ்வாத்து நாவல் ஓர் அற்புதமான படைப்பு. தோட்டத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளை எடுத்துக்காட்டும் ஞான சேகரன், தொழிலாளர்களின் பட்டினியால் வேலை நிறுத்தம் முறிந்து போகாமல் இருக்கவேண்டுமானால் அவர்கள் கொழுந்தைப்
54

பறித்து விற்று தமது பசியைப் போக்கலாம் என்ற ஒருகருத்தையும் இந்த நாவலில் சூசகமாகக் கூறுகிறார். தோட்டத்தில் இருந்து கொண்டே நிர்வாகத்துக்கெதிரான இந்த நாவலை துணிச்சலுடன் எழுதியுள்ளார். ஞானசேகரன் ஒரு சமூகவாதி அவர் எழுத்தாளராகவும் இருக்கிறார். அவரது படைப்புகள் இந்தக் கதைமாந்தர்களின் கைகளைச் சென்றடைய வேண்டும். அப்போதுதான் அதன் பிரதிபலன் கிடைக்கும். ஞானசேகரனின் படைப்புகள் வழிகாட்டும் படைப்புகள். வெற்றிப்படைப்புகள்.
பேராசிரியர் எம். ஏ. நுஃமான் கருத்துரை
ஞானசேகரன் இலங்கையின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவர் என்பதில் எனக்குக் கருத்து வேறுபாடு இல்லை. சிறுகதை ஆசிரியர், நாவலரிரியர், பத்திரிகையாளர் ஒரு பல்புனைகதை எழுத்தாளர். அந்த வகையில் அவர் முக்கியமான தடம்பதித்தவர். இந்த நூலை எழுதாவிட்டாலும் அவரது தடம்
ஆழமாகப் பதிந்திருக்கிறது.
இந்நூலில் இலக்கிய வாழ்க்கை சம்பந்தமான முக்கியமான தகவல்களை ஒன்றுதிரட்டித் தந்திருக்கிறார். இது இவரைப் பற்றிய முக்கியமான பதிவு என்று நான் நினைக்கிறேன். இது அவரைப்புரிந்து கொள்வதற்கான ஒரு வழியாகவும் இருக் கிறது. அவருடைய படைப்புகள் மூலம் அவரைப் புரிந்து கொள்வது ஒன்று. இந் நூல் மூலம் புரிந்துகொள்வது மற்றொன்று. ஞானசேகரனுடைய பல்வேறு கோணங் களை இந்நூல் மூலமாக நாம் புரிந்து கொள்ளலாம்.
இந்த நூலைப் படிக்கும்போது இவருக்கு ஒரு அறிவுப்புலப் பின்னணி இருக்கிறது என்பதை நான் அறிந்து கொண்டேன். கணேசையருடைய தாய் வழிப் பூட்டன் இவர். அந்த வழியில் இவருக்கு சில விடயங்கள் வந்திருக்கின்றன.
இந்த நூலின் இறுதியில் ஞானசேகரன் ஒன்று சொல்கிறார். "நான் கால் பதித்த இலக்கியத் துறைகள் எனக்கு வெற்றியையும் மகிழ்ச்சியையும் மன நிறைவையும் தந்துள்ளன”. என அவர் சுயதிருப்தியுடன் இருக்கின்றார். சுயதிருப்தி கற்றலின் எதிரி என மாசேதுங் சொல்கிறார். எழுத்தாளனுக்கு அது இருக்கலாம். அது வேணுமென்று நினைக்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (168)

Page 57
கிறேன். இல்லாவிடில் அவன் முன்னுக்குப் போக இயலாது ஆனால் அவன் அத்துடன் தேங்கிப்போகக் கூடாது. சுயதிருப்தியால் குறைபாடும் உண்டு.
பல்கலைக்கழகத்தில் எனது நூல்கள் பாடநூல்களாக உள்ளன. அல்லது பல்கலைக் கழகங்களில் எனது நூல்கள் எம். ஏ. அல்லது பி.எச்டி பட்டத்திற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன என ஞானசேகரன் பதிவு செய்துள்ளார். இது போன்று டொமினிக் ஜீவாவும் நான் உயர்நிலையை அடைந்து விட்டேன் மற்றவர்கள் இதில் என்ன சொல்வதற்கு இருக்கிறது? என்று சொல்லியிருக்கிறார். வேறும் சிலரும் சொல்லியிருக்கிறார்கள். இப்படிச் சொல்லி சிலர் பெருமை கொள்கிறார்கள்.
நான் 30 வருடங்கள் பல்கலைக்கழகத்தில் கற்பித்து வருகிறேன். எனது அபிப்பிராயம் என்னவென்றால் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிலைமை வீழ்ச்சி அடைந்துவிட்டது.
பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புக்கு 40, 50 சமாணவர்கள் இருக்கும்போது விஷயமில்லாத நிலையில் நாங்கள் எவராவது ஒருவரைப்பற்றி ஆராய்ச்சி செய்யும்படி கூறிவிடுவோம். எழுத்தாளன் தன்னைப்பற்றி ஆராய்ச்சி நடப்பதாக பெரிதாக நினைக்கிறான். பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சித் தன்மை மிகவும் சீரழிந்துவிட்டது. அந்தமாதிரியான சிக்கல் இருக்கிறது. ஆனபடியால் இதனைப் பெருமையாக எடுக்கக் கூடாது. அதேபோல் பல்கலைக்கழகங்களில் பாடநூலாக இருப் பதையும் பெரிதாக நினைக்கக்கூடாது. அதில் ஒரு அபாயம் உண்டு. என்னவெனில் அதனை நாம் ரெம்ப மெக்கானிக்கலாகப் பார்க்கிறோம். அதில் ஒரு எதிர்ப்பு வருகிறது. அதன் ஆன்மாவை இழந்து விடுவோம். இந்த மாதிரியான ஒரு எடுகோளை வைத்துக்கொண்டு நாம் தரநிர்ணயம் செய்யக் கூடாது என்பது எனது கருத்து.
சாகித்தியப்பரிசு மற்றும் விருதுகளுக் கெல்லாம் இக்காலத்தில் மரியாதை இல்லை. அவற்றைப்பற்றி நாம் பேசக்கூடாது. சாகித்திய விருது பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். மாப்பிள்ளை இல்லாத இடத்தில் மண்பொம்மையை வைத்துத் தாலி கட்டியது போன்று ஒண்டும் இல்லை அவருக்குக் கொடுப்பம். இதுதான் வந்திருக்கு அதனாலை இவருக்குக் கொடுப்பம். நாம் யாருக்காவது கொடுக்கத்தான் வேணும். சிங்கள
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (168)

11பப்' 21 பார்
மொழியில் பலருக்குக் கொடுக்கிறார்கள். நாமும் கொடுக்கத்தான் வேணும் இப்படியாகத்தான் சாகித் திய விருதுகள் தீர் மானிக்கப்படுகின்றன, கொடுக்கப்படுகின்றன. விருதுகளுக்கெல்லாம் மரியாதை இல்லை.
எனவே விமர்சன பூர்வமாகவே நாம் எல்லாவற்றையும் பார்க்கவேண்டும்.
இன்னொரு விடயம் ஞானசேகரன் முற்போக்கு இலக்கியம் தொடர்பான - குழுவிமர்சனம் தொடர்பான கருத்துக்களை முன் வைத்துள்ளார். குழுவிமர்சகர்கள் யார்? முற்போக்கு விமர்சகர்களைக் குறிப் பிடுவதற்குத்தான் இத்தகைய வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. கைலாசபதி, சிவத்தம்பி, எம்.ஏ.நுஃமான் எல்லோரும் குழுவிமர்சகர்கள்தான். இவர்கள் தனிப்பட்ட படைப்பாளிகளை விமர்சனத்துக்கு உட் படுத்துவதில்லை. Practical criticism என்ற ஒன்று நம்மிடையே இல்லை. சிவத்தம்பி கைலாசபதி போன்றவர்கள் கோட்பாட்டு விமர்சனங்கள் செய்துள்ளனர். அப்போது முக்கியமான இலக்கிய கர்த்தாக்கள் என சிலரைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார்கள். அவ்வளவுதான். முற்போக்கு எழுத்தாளர்கள் தங்களது ஆட்களைத் தூக்கிவிட்டார்கள் என்பது எஸ். பொ. தொடக்கிவைத்த புருடா.
சின்ன வயதில் எனக்கு ஆதர்ஸ் மாக இருந்தவர் எஸ் பொ. 60களிலே கொழும்பு இலக்கியத்தைக் கைப்பற்றி வைத் திருந்தவர்கள் எஸ்.பொ.வும் எம். ஏ. ர.. மானும்தான். முற்போக்கு எழுத்தாளர்கள் அல்ல. கைலாசபதி கொஞ்சக்காலம் தினகரனில் இருந்துவிட்டு அவர் போய்விட்டர் . என்னுடைய கவிதைகள் தினகரனிலும் வேறு சிலவற்றிலும் வெளிவந்தது இவர்கள் மூலமாகத்தான்.
முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றவர்களை மட்டந்தட்டினார்கள் தங்களைத் தூக்கிவிட்டார்கள் என்பது ஒரு Myth. ஒரு மாயை. அந்த மாயை தொடர்ந்தும் பலராலும் பேசப்பட்டு வருகிறது. அதற்கு ஞானசேகரனும் ஆட்பட்டுவிட்டடார். உண்மையில்
55

Page 58
பொன்னுத்துரைதான் இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆளாக வேண்டியவர். அவர்தான் மற்றவர்களை மட்டந்தட்டி தன்னுடைய ஆட்களைத்தூக்கினார்.
தளையசிங்கமும் இத்தகையவர்தான். அவர் மு.பொ.வின் 'அது' கவிதைத் தொகுதிக்கு எழுதிய முன்னுரையில் மஹாகவி, முருகையன், நீலாவணன் போன்றவர்களைவிட முக்கியமான கவிஞர் மு. பொ. என்று சொல்லியிருக்கிறார். மு. பொ. அவரது தம்பி என்பதற்காக அவ்வாறு சொன்னார் என நான் சொல்லமாட்டேன். அந்தளவுக்கு நான் தளையசிங்கத்தைச் சிறுமைப்படுத்த விரும்பவில்லை. தளையசிங்கம் தனது கொள்கையை அடிப்படையாகக் கொண்டுதான் அவ்வாறு சொன்னார். பிரபஞ்ச யதார்த்தம், ஆத்மார்த்தம் என்ற அடிப்படையிலேதான் பொன்னம்பலத்தை அவர் தூக்குகிறார். அந்த அளவுக்கு கொள்கை Ideology முக்கியமானது.
ldeology ஒரு பிரச்சனைதான். ldeology எல்லோருக்கும் இருக்கிறது. ஆகவே நாம் இதில் நிரந்தனமாக நிதானமாக இருக்கிறோம் பக்கச்சார்பற்று இருக்கிறோம் என்று சொல்வதற்கில்லை. முற்போக்கு எழுத்தாளர்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் ஒரு மாயைதான். அவர்கள் தங்களது வட்டத்தை உயர்த்தி மற்றவர்களை மட்டந்தட்டினார்கள் என்பதற்கு நான் அறியச் சான்றுகள் இல்லை.
சிவத்தம்பி 'சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். டொமினிக் ஜீவா அதில் தன்னைப்பற்றி எழுதவில்லை எனப் பெரிதாகக் கோபித் துக் கொண்டார். அதற்கு
சிவத்தம்பி சொன்னார், புதுமைப்பித்தன், கு.பா.ரா போன்றவர்களைப்பற்றி எழுதிய புத்தகத்தில் இவரைப்பற்றி எப்படி எழுதுவது? என்று. நான் சிவத்தம்பியுடன் பழகியிருக்கிறேன் அத்தகைய போக்கு அவரிடம் இருந்ததில்லை.
மற்றும்படி எனக்கு இது மிகவும் பிடித்த புத்தகம் அதனை நான் நேரிலேயே ஞானசேகரனிடம் கூறியிருக்கிறேன். நான் இதனை வாசித்து இவரைப்பற்றிய பல விடயங்களை அறிந்திருக்கிறேன். அந்நிலையில் இது முக்கியமான புத்தகம். கருத்து வேறுபாடு எல்லோருக்கும் உள்ள விடயம். அவருடைய எழுத்துக்கள் முக்கியமானவை. அவை சரியான விமர்சனத்துக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
56

ஞானசேகரன் ஏற்புரை
இங்கு பேராசிரியர் நுஃமான் சொன்ன கருத்துக்களுக்கு முதலில் எனது விளக்கத்தைத் தரலாமென எண்ணுகிறேன். முற்போக்கு விமர்சகர்களை நான் குழுவிமர்சகர்களாகவும் குறிப்பிட்டு அவர்கள் பற்றி நான் பேசியும் எழுதியும் வருவது என்ற குற்றச்சாட்டு ஒரு Myth - ஒருமாயை எனப் பேராசிரியர் நுஃமான் குறிப்பிட்டார். நான் எனது கூற்று சரியானது என்பதற்கு சில எழுத்து மூலமான ஆதாரங்களை முன்வைக்க விரும்புகிறேன். பேராசிரியர் நுஃமான் தனது உரையிலே ஓரிடத்தில் சிவத்தம்பியை பேர் குறிப்பிட்டுப் பேசினார். எனவே நானும் பேராசிரியர் சிவத்தம்பியை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்கிறேன். 'உலகத் தமிழ் இலக்கியம்' என்ற ஒரு நூலை தமிழகத்தில் இயங்கும் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் 2005 இல் வெளியிட்டது. அந்த நூலில் இலங்கை இலக்கியம் தொடர்பாக பேராசிரியர் சிவத்தம்பி ஒரு முன்னுரை எழுதியுள்ளார். அதிலே பேராசிரியர், இக்காலப்பகுதியில் தொழிற்பட்ட - பிரதான புனைகதை ஆசிரியர்களாகப் பின்வருவோரைக் குறிப்பிடலாம் எனக்கூறி ஒரு பட்டியலைத் தந்துள்ளார். அந்தப்பட்டியலிலே சிறந்த புனைகதை ஆசிரியர்கள் பலரைப் புறந்தள்ளிவிட்டு வாழ்நாளில் ஒரு கதை தன்னும் எழுதாத ஒருவரை உலகத்தமிழ் இலக்கிய புனைகதை ஆசிரியராகக் குறிப்பிடுகிறார் இதுவா விமர்சன நேர்மை? இன்னுமொரு உதாரணத்தையும் தருகிறேன். ஞானத்தின் சார்பில் பேராசியர் சிவத்தம்பியை நான் ஓர் நேர்காணல் கண்டேன். அப்போது, “முற்போக்கு விமர்சகர்கள் எப்போதும் தங்களைச் சூழவுள்ள வட்டத்தினரையே எதற்கும் தட்டிக்கொடுத்தனர். மற்றவர்களின் எழுத்துக்களைப் பொருட்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறதே அதற்குத் தங்களின் பதில் என்ன?” என்ற கேள்விக்கு, "அது அந்தக்காலத்தின் தேவையாக இருந்தது" என்றும், "எனது கண்ணோட்டத்தில் அது பிழையாகத் தெரியவில்லை. ஏனென்றால் என்னுடைய குறூப்பைப் பற்றித்தான் நான் பேசுவேன். அந்தக்காலத்தில் அப்படியான இலக்கிப் 'பொலிற்றிக்ஸ் தான் இருந்தது” என்றும் பதில் கூறினார். இங்கு நான் எழுத்து
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (168)

Page 59
மூலமான ஆதரங்களையே தந்துள்ளேன். இங்குள்ள ஆய்வு மாணவர்கள் - அந்நூல்களின் மூலப்பிரதிகளை வாசித்து அவற்றை உறுதி செய்து கொள்ள வேண்டும். வேறு எந்த சுயசரிதை நூல்களிலும் இல்லாதவாறு எனது நூலிலே ஒவ்வொரு அத்தியாயங்களின்
முடிவிலே
உசாத்துணை நூல்களின் பட்டியல்கள் தந்துள்ளேன். அவற்றையும் நீங்கள் பார்த்து உண்மையைத் தெளிந்து கொள்ளவேண்டும்.
அடுத்ததாக பல்கலைக்கழகத்திலே நடைபெறும் ஆய்வுகள் மிகவும் தரங்கெட்ட நிலையில் சீரழிந்துள்ளது. எனவே பல் கலைக்கழகங்களில் இடம்பெறும் ஆய்வு களை மேற்கோள்காட்டி ஒரு நூலைத்தரமானது என்று கொள்ளமுடியாது என விஸ்தாரமாகப் பேசினார். எனது படைப்புகள் தமிழகத்திலும் இலங்கையிலும் முறையே பி.எச்.டி, எம்.ஏ பட்டப்படிப்புகளுக்கு ஆய்வு செய்யப்பட்ட நிலையிலும் நான் அதனை இந்த நூலில்
எங்கும் பெருமையாகக் குறிப்பிடவில்லை
எனது நூல்கள் பல்கலைக்கழகங்களில் பாடநூலாகியது பெருமைப்படக்கூடிய விடயமில்லை என்றார். ஈழத்து இலக்கிய வரலாற்றிலே இதுவரை வெளிவந்த 750க்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுதிகளில் ஐந்து சிறுகதைத்தொகுதிகள் மட்டுமே பல்கலைக்கழகங்களில் பாடநூலாகும் தகுதியைப்பெற்றன. அவற்றுள் எனது சிறுகதைத் தொகுதியும் ஒன்று.
மற்றது, இரண்டு நாடுகளில் உள்ள இரண்டு பல்கலைக்கழகங்களில் இரண்டு துறை சார்ந்த
அதாவது நாவல் - சிறுகதை சார்ந்த எனது நூல்கள் இரண்டு பாடநூலாகும் தகுதியைப் பெற்றன. தமிழ்ச் சூழலில் எனது படைப்புகளுக்கு மட்டுமே இத்தகைய தகுதி கிடைத்துள்ளது. இவை பெருமைப்படக்கூடிய விடயம் என நான் கருதுகிறேன். அதனால் நான் சுயதிருப்தி அடைகிறேன் என்பதை எனது இலக்கியத்தடத்தில் பதிவு செய்யாமல் வேறெங்கு பதிவு செய்வது?
இத்தகைய தகுதி பெற்ற நூல்களைப்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (168)

படித்த இந்தக் குழுவிமர்சகர்கள் கள்ள மௌனம் சாதித்தார்கள் என்ற நேர்மையற்ற போக்கை நான் வெளிப்படுத்த வேண்டி யிருந்தது. அவர்கள் வேண்டு மானால் இந்த நூல்கள் தரமற்றவை என்று விமர் சித்திருக்கலாம். அவர்கள் அப்படி ஏன் செய்யவில்லை? வாழ்நாளில் ஒரு கதைதானும் எழுதாத ஒருவரை புனை கதை ஆசிரியராகப் பட்டிய
லிடும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், பல்கலைக் கழகங்களில் பாடநூலாகத் தகுதிபெற்ற நூல்கள்கள் பற்றி பேசாதிருந்தார்கள் என்ற நேர்மையற்ற போக்கை அவர்களது கள்ள மௌனத்தை நான் எங்கே வெளிப்படுத்துவது? எப்படி வெளிப்படுத்துவது?
கள்ள மௌனகாரர்களின்
கண்டு கொள்ளாமை மற்றும் பல்வேறு தரப்பட்ட விமர்சனங்களால் நான் சோர்வடையாமல் இருப்பதற்கும் கட்டம் கட்டமாக நான் பல்வேறு இலக்கியத் துறைகளில் ஈடுபட்டு வெற்றிகொள்ளவும் சுயதிருப்தி எனக்கு உதவியிருக்கிறது. எனது சுயதிருப்தி என்னை வளர்த்திருக்கிறது. இது எனது மனப்பாங்கு சம்பந்தப்பட்ட விடயம் எனது அடுத்த கட்ட வளர்ச்சிக்கும் அது எனக்குத் தேவைப்படுகிறது. நுஃமான் தனது இலக்கிய முயற்சிகளால் தனக்கு சுயதிருப்தி ஏற்பட்டதில்லை என்றார். அது அவரது மனப்பாங்கு சம்பந்தப்பட்ட விடயம்.
ஒருமுறை செங்கை ஆழியான் என்னுடன் கதைத்துக் கொண்டிருந்தபோது என்னிடம் கூறினார், - "நீர் ஒரு பிராமணனாக இருப்பதால் எமது இலக்கியச் சூழலில் உமது எழுத்துக்கள் அங்கீகரிக்கப்படமாட்டாது...” என்றார். அது எனக்கு ஒரு புதிய தகவலாக இருந்தது. ஒரு கம்யூனிஸ்ட்டாக இருந்தால் மட்டுமே எமது இலக்கியச் சூழலில் அங்கீகாரம் கொடுக்கப்படும் என அதுவரை நான் கணித்திருந்தேன். எழுத்துலக அங்கீகாரத்துக்கு சாதியமும் ஈழத்து இலக்கியச் சூழலில் ஒரு
இருப்பது இலக்கியத் யதிருப்தி
57

Page 60
முக்கிய பங்கு வகிக்கிறது என்ற செய்தியை செங்கை ஆழியானின் கூற்றுக்குப் பின்பு இன்று விரிவுரையாளர் ரூபவதனனின் கருத்துரை எனக்கு ஞாபகப்படுத்தியது. அவர் கூறினார், "சிற்பி சரவணபவன் அவரது கதைகளுக்குக் களமமைத்துக் கொடுத்தார். நா. சுப்பிரமணியம் இவரது நூல்களை விமர்சனம் செய்து முன்னிலைப்படுத்தினார். இவரது சமூகம் இவரைத் தூக்கிவிட்டுள்ளது” என்றார். அது சரியானது. அவர் இன்னுமொன்றைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். டொமினிக் ஜீவா நான் அனுப்பிய கதைகள் எதனையும் மல்லிகையில் பிரசுரிக்கவில்லை. பேராசிரியர் சிவத்தம்பி எனது நூல் எதனையும் விமர்சிக்கவில்லை என்ற தகவல்களும் எனது
பா.
தி.ஞானசேகரன்
எழுதும் இலண்டன் - பயண . அனுபவங்கள் 5:
.::::47:34:12:/*ேட்சா..
--1'::::"டாடியX'AAAAAz): |

நூலில் இருக்கின்றன என்பதனையும் குறிப் பிட்டிருக்க வேண்டும்.
பேராசிரியர் நுஃமான் தனது பேச்சில் ஒரு விடயத்தைக்கூறினார். "ldeology ஒரு பிரச்சனைதான். Ideology எல்லோருக்கும் இருக்கிறது. ஆகவே நாம் இதில் நிரந்தரமாக நிதானமாக இருக்கிறோம் பக்கச்சார்பற்று இருக்கிறோம் என்று சொல்வதற்கில்லை.... என்றார். அவர் கூறியது சரி. அதுவே உண்மை. சகல இலக்கியச் செயற்பாடுகளிலும் இலக்கியக் கருத்துரைகளிலும் ldeologyதான் அடிநாதமாக இருக்கிறது. இருக்கும். நன்றி
0 0 0
அடுத்த
இதழில்
இடம்பெறும்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (168)

Page 61
* எழுத்த் இ
எண்ண
சுத்து
இன்னொரு காலத்தில் ஓர் உலகத்தில் பேய்களும், பிசாசுகளும் ஆட்சிபுரிந்து வந்தன. காலப்போக்கில், அந்த உலகத்தை ஆண்டுவந்த பேய்களையும், பிசாசுகளையும் விட அதிசக்தி வாய்ந்தவனான சாத்தான், அதன் மாபெரும் தலைவனாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டான். சாத்தான் தோற்றப் பொலிவிலும், புத்திசாதுர்யத்திலும், பேச்சு வன்மையிலும் கபடத்தனத்திலும் அந்த உலகத்தை அதுவரை ஆண்டுவந்த அத்தனை பேய், பிசாசுகளையும் விடத் திறமை வாய்ந்தவனாக விளங்கினான். ஆதாமும் ஏவாளும் புசிக்கக்கூடாது என்று தேவனால் விலக்கப்பட்டிருந்த கனியை, சர்ப்பமாக அப்போது வந்து அவர்களைப் புசிக்கச் செய்த சாத் தான், பின்னர் ஓர் உலகத்தின் மன்னனாக விளங்குவதைப் பார்த் துத் தேவனே ஆச்சரியப்பட்டார்.
சாத்தான் அந்த உலகத்தின் மன்னனாக வந்த காலத்தில் இருந்து, எந்தப் பேய், பிசாசுகளினாலும் அவனை அசைக்க முடியாமலே இருந்தது. அவ்வளவு வலிமையும், வல்லமையும் பொருந்தியவனாக அவன் விளங்கினான். தேவனுக்கோ, தேவகுமாரனுக்கோ, பரிசுத்த ஆவிக்கோ தான் கட்டுப்பட்டவன் அல்லன் என்ற மமதை சாத்தானிடம் நிறையவே இருந்தது. தானே சகல உலகங்களினதும் மேய்ப்பன், சகல ஆட்டுக்குட்டிகளும் தனக்குக் கீழ் அடங்கியவையே என்ற திமிரோடுதான் அவன் எப்போதும் நடந்து கொள்வான்.
சாத்தான் தொடர்ந்தும் அந்த உலகத்தின் மன்னனாக இருக்கக்கூடாது, வேறு ஏதாவது பேய், பிசாசு வந்தால் பரவாயில்லை என்ற கருத்துக்
கொண்ட
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (168)

தூண்டும் மல்கள்
பேராசிரியர் துரை மனோகரன்
ஜீவராசிகளும் அந்த உலகத்தில் இருந்தன. சாத்தானைத் தோற்கடித்து, அந்த உலகத்தின் எதிர்கால மன்னனாக விளங்கவேண்டும் என்ற நப்பாசையில் முயற்சி செய்த ஒரு பலவீனமான பிசாசு, தனது வல்லமை இன்மை காரணமாகத் தோல்வி அடைந்தது. ஜீவராசிகளின் முன்னிலையில் தன் கருத்துகளை ஒழுங்காக, தெளிவாக எடுத்துரைக்கத் தெரியாத தன்மை அந்தப் பிசாசிடம் காணப்பட்டது. வசீகரமாகப் பேசி ஜீவராசிகளைக் கவரும் தன்மை, அந்தப் பிசாசிடம் அறவே காணப்படவில்லை. பொதுவாக, அந்தப் பிசாசுக் கூட்டத்தில் கூட
அதற்கு எதிர்ப்பு
வின் வேதம்
இருந்தது. எப்படியோ தனது பிசாசுக்கூட்டத்தின் தலைமைப் பதவியை அது தக்கவைத்துக் கொண்டது. காலப்போக்கில், அதனைவிட வல்லமை கொண்ட பிசாசு ஒன்று, பல ஜீவராசிகளின் துணையுடன் சாத்தானை வென்று மன்னனாகிவிடவேண்டும் என்று முயற்சித்தது. ஆயினும், அதுவும் தோல்வியிலேயே முடிந்தது. அதனால், சாத்தானை வெல்வது என்பது, அந்த உலகத்தில் சாத்தியப்படாத ஒன்றாகவே அமைந்திருந்தது. சாத்தானை மனதார விரும்பாத பேய், பிசாசுகள் கூட, அவனை வீழ்த்த முடியாது
என்ற காரணத்தால், அவனுடன்
ஒட்டிக்கொண்டிருந்தன.
சர்வலோகத்துக்கும் தனது மகிமையை உணர்த்த விரும்பிய சாத்தான், பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என்று இருப்பதைப் போல், தனக்கென்றும் ஒரு வேதத்தை ஆக்கினான். அது சாத்தானின் வேதம் என்று
59

Page 62
அவனது உலகத்தில் பேசப்பட்டது. அவனின் வேதத்தில் உள்ள சிந்தனைகள், அதுவரை எந்த உலகத்திலும் எவராலும் கூறப்படாதவை என்று அவனைச் சார்ந்த பேய், பிசாசுகள் சொல்லித் திரிந்தன. சாத்தானும் ஜீவராசிகள் முன்னிலையில் பேசும் போது, தான் படைத்த வேதத்தில் இருந்து தனது சிந்தனைகளை எடுத்துக்காட்டுவான். அவனைச் சார்ந்த பேய், பிசாசுகளும் தேவையின்றியே அவனது வேதத்தில் இருந்து பல வசனங்களை எடுத்துக்காட்டிப் பேசிவந்தன. இதில் இருந்து, சாத்தானைச் சார்ந்த பேய், பிசாசுகளுக்குச் சொந்த மூளை என்பதே கிடையாது என்பதை, அந்த உலகத்தில் வாழ்ந்த கணிசமான ஜீவராசிகள் புரிந்துவைத்திருந்தன.
சாத்தானின் வேதத்தின் வெளிப்பொருளை வெளி உலகங்களில் உபதேசிக்கும் பொறுப்பை உயரப்பிசாசு ஒன்று மேற்கொண்டிருந்தது. சாத்தானின் கூட்டத்திலேயே படித்த பிசாசாக அது விளங்கியது. ஆனாலும், அதிகம் படித்து மூளையைக் கலக்கிக்கொண்ட பிசாசு போலவே அது நடந்து கொண்டது. தலையைத் தலையை ஆட்டியும், துள்ளித்துள்ளியும் பேசும் இயல்பு கொண்ட உயரப் பிசாசு, சாத்தானின் வேதத்தை ஓதும்போது, மிகப் பரிதாபகரமாக இருக்கும். "இந்தப் பிசாசுக்கு இந்தக் கதியா?” என்று பல்வேறு ஜீவராசிகளும் நினைத்துக்கொள்ளும். அந்த உலகத்தின் உள்ளே சாத்தானின் வேதத்தின் உட்பொருளை உபதேசிக்கும் பொறுப்பைக் கரடிப்பிசாசு மேற்கொண்டிருந்தது. அவ்வப்போது பல்வேறு ஜீவராசிகளையும் கூட்டிவைத்துக்கொண்டு, சாத்தானின் வேதத்துக்குச் சார்பாகப் பொய்களையும், புரட்டுகளையும் அது சொல்லிக்கொண்டிருக்கும்.
சாத்தானின் அரசவை சுவாரஸ்மான மந்திரி பிரதானிகளைக் கொண்டிருந்தது. சாத்தானுக்குச் சார்பான பேய், பிசாசுகளும், அவற்றுக்குச் சார்பான ஜீவராசிகளும் ஒருபுறத்திலும், பலவீனமான பிசாசுக்குச் சார்பான பேய், பிசாசுகளும், சுதந்திரமாக எதிர்க்குரல் எழுப்பும் ஜீவராசிகளும் மறுபுறத்திலும் இருந்தன. ஆசைகளை அறுத்ததாகக் காட்டிக்கொள்ளும் பேய், பிசாசுகளும் சாத்தானின் பக்கத்தில் இருந்தன. சாத்தானுக்குச் சார்பாக இருந்த சில ஜீவராசிகள், பாதிக்கப்பட்ட ஜீவராசிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இருந்தபோதிலும், அவை தம் சுயநலத்தின் காரணமாகச் சாத்தானின் வேதத்தையே ஓதிவந்தன. அவ்வாறு சாத்தானின் தேவத்தை
60

2.
ஓதுவது, அவைகளுக்குப் பதவிகளையும், வசதிகளையும் வாரிவழங்கியது. .
அந்த அரசவையில் கல் வீற்றிருந்த பிசாசு ஒன்று, தலைக்குள் ஒன்றும் இல்லாத நிலையிலும் சாத்தானின் வேதத் தையே ஓதி, வீரவசனங்களைப் பேசும். அதனால், அதற்கு வீரப்பிசாசு என்ற பெயரும் ஏற்பட்டது. அந்த அவையில் வீற்றிருந்த கோமாளிப் பிசாசு ஒன்று, தான் சார்ந்த ஜீவராசிகளுக்காக எதனையும் பேசாது, சாத்தானின் வேதத்தை மட்டுமே மனனம் செய்து ஒப்புவித்தது. எப்போதும் சாத்தானுக்கு ஆதரவாகவே அது கோமாளித்தனமாகப் பேசும், கோமாளித்தனமாகச் செயல்படும். தனது ஜீவராசிகளுக்கு ஏதாவது துன்பம் ஏற்பட்டாலும் அது கவலைப்படாது. ஆனால், சாத்தானுக்கு ஏதாவது பிரச்சினை என்றால், அவனுக்காகப் பிரார்த்திக்குமாறு தனது ஜீவராசிகளை வேண்டிக்கொள்ளும். இவ்வாறு, ஒவ்வொரு பேய், பிசாசும் ஒவ்வொருவிதமாக நடந்துகொள்ளும். சாத்தானின் பக்கத்திலும் சில நல்ல பேய், பிசாசுகளும் இருந்தன. ஆனால், அவற்றினால் வாய்களை அகலமாகத் திறக்கமுடியாமல் இருந்தது.
அந்த
அரசவையில்
சாத்தானின் வேதத்தை மறுக்கும் ஜீவராசிகளும் எதிர்தரப்பில் இருந்தன. அவைகள் மட்டுமே சாத்தானினாலும், அவனது பேய், பிசாசுகளாலும் பாதிக்கப்பட்ட ஜீவராசிகளுக்காக அந்த அரசவையில் துணிந்து குரல் கொடுத்தன. அவற்றின் குரல்கள் சாத்தானின் பேய் பிசாசுகள் மத்தியில் நாராசமாக ஒலித்தன. அவற்றைச் சகிக்கமுடியாத பேய், பிசாசுகள் “இவைகள் எல்லாம் தேவனின் கையாட்கள், சாத்தானின் எதிரிகள், பரிசுத்த ஆவியினால் தூண்டப்படுபவைகள் சாத்தானைப் பர மண்டலத்துக்குக் காட்டிக்கொடுப்பவைகள்” என்று அரசவையில் கத்திக்குள்றும். "இந்த உலகத்துப் பிரச்சினைகளையும் வெளி உலகங்களின் பிரச்சினைகளையும் தீர்க்கவல்ல விடயங்கள் சாத்தானின் வேதத்தில் உள்ளன. தேவதூதர்கள் யாரும் எங்களுக்கு உபதேசிக்கத் தேவையில்லை” என்றும் அவை உரக்கக்
குரல் எழுப்பும்.
சாத்தானின் பேய், பிசாசுகளுக்குள் மிக மோசமானது கொள்ளிவால் பேய் ஆகும். சாத்தானின் கபடத்தனமான திட்டங்களைச் செயல்படுத்துவது, அதன் முக்கிய வேலை. பிற ஜீவராசிகளின் வாழிடங்களைப் பறிப்பதிலும், அவற்றின் வாழ்வுரிமைகளை
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (168)

Page 63
ilini11:11
நசுக்குவதிலும் கொள்ளிவால் பேய் எப்போதும் குறியாய் இருந்தது. பிற ஜீவராசிகளுக்கு எப்போதும் கொள்ளிவைக்கும் நோக்கோடு அது செயல்பட்டு வந்தமையால் அதற்குக் கொள்ளிவால் பேய் என்ற பெயர் ஏற்பட்டது.
இவ்வாறு எல்லாம் நடந்ததும், சில பிசாசுகள் தாம் சார்ந்த ஜீவராசிகளுக்காக எதனையும் செய்யாமல், சாத்தானுக்காகத் தலயாத்திரைகளிலும், பூசை வழிபாடுகளிலும் ஈடுபட்டன. தாம் கற்றுத்தேர்ந்த வேதத்தை மறந்து, தம் சுயநலத்துக்காகச் சாத்தானின் வேதத்தை ஓதின. சில அலட்டல் பிசாசுகள், தம் வயிற்றுப்பிழைப்புக்காக,
சந்தர்ப்பம் நேரும்தோறும் சாத்தானின் புகழையே பேசி, சாத்தானுக்கு எதிராகவும், அவனது உலகத்துக்கும் எதிராகவும் குரல் கொடுக்கும் ஜீவராசிகளைக் கொச்சைப்படுத்தி வந்தன.
சாத்தானின் உலகத்துக்கு வெளியிலும், அவனை ஆதரிக்கும் பேய், பிசாசுகள் இருந்தன. சாத்தானின் உலகத்துக்குப் பக்கத்து உலகை அரசாண்ட பூனைப்பிசாசு அவனை நினைத்தாலே பயந்து நடுங்கும். நேரே காணநேர்ந்தால், இரு கைகளையும் ஒருபக்கமாகப் பவ்வியமாக வைத்துக்கொண்டு, தனது உலகைச் சேர்ந்த ஜீவராசிகள் தன்னைக் குறை கூறக்கூடாது என்பதற்காக சாட்டுக்கு ஏதாவது சாத்தானோடு பேசித் தொலைக்கும்.
சாத்தானதும், கொள்ளிவால் பேயினதும் பிற பேய், பிசாசுகளினதும் அநியா யங்களையும், அட்டூழியங்களையும் தாங்க முடியாத அந்த உலகத்து ஜீவராசிகளும், அவற்றின் மீது அனுதாபம் கொண்ட பிற உலக ஜீவராசிகளும் ஒன்று சேர்ந்து தேவனிடம் முறையிட்டன. "பரமண்டலத்தில் இருக்கிற எங்கள் பிதாவே உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக! உம்முடைய ராஜ்யம் வருவதாக! உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக! எங்களைச் சோதனைக்குட்படப் பண்ணாமல் தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும். ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே ஆமென்” என்று அவை வேண்டிக் கொண்டன. ஜீவராசிகள் தம் பிரார்த்தனையின் ஊடாகச் சாத்தானின் கபடச் செயல்களையும் தேவனிடத்தில் தெரிவித்தன. அவன் எப்போதும் தேவனுக்கும், தேவகுமாரனுக்கும், பரிசுத்த ஆவிக்கும் எதிராகச் செயல்பட்டு வருவதை அவை பரமண்டலத்தில் தெரிவித்தன.
அப்போது, ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (168)

தேவனின் சார்பாகத் தேவகுமாரன் பேசினார். "ஒருவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகத் தூஷணஞ் சொல்வானாகில், அவன் என்றென் றைக்கும் மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான்” என்று அவர் குறிப்பிட்டார். நியாயத்தீர்ப்பு வழங்கப்படும் நாளில், சாத்தான் இதற்கெல்லாம் தேவனின் முன் பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தேவகுமாரன் தெரிவித்தார்.
பரமண்டலத்தில் இடம்பெற்ற இவ்விட யங்களை எல்லாம் கேள்வியுற்ற சாத்தான் மேலும் கொதிப்படைந்தான். "நான் எந்தத் தேவனுக்கும், தேவகுமாரனுக்கும், பரிசுத்த ஆவிக்கும் அடிபணியமாட்டேன். என்னை நம்பும் பேய், பிசாசுகள் எனது உலகத்திலும், வேறு உலகங்களிலும் நிறையவே இருக்கின்றன. தர்ம தேவதையும், தேவதூதர்களும் இந்தச் சாத்தானைப் பார்த்தும், சாத்தானின் உலகத்தைப் பார்த்தும் பொறாமை கொள்கிறார்கள். அதனால் இல்லாதது பொல்லாதது எல்லாவற்றையும் பரமண்டலத்தில் பரப்பியிருக்கிறார்கள். சாத்தானின் உலகத்துள் தர்மதேவதையோ, தேவதூதர்களோ நுழையமுடியாது” என்று ஆவேசமாகக் கத்திக்குளறினான். அவனின் ஆவேசத்தைப் பார்த்துப் பேய், பிசாசுகள் ஆரவாரம் செய்தன.
சாத்தானின் சொற்களையும், செயல் களையும் பரமண்டலத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த அப்போஸ்தலராகிய பவுல், பரிசுத்த ஆவியினால் சூழப்பட்டவராகக் கோபத்துடன் அவனைப் பார்த்தார். பின்னர், அவனை நோக்கி "எல்லாக் கப்டமும், எல்லாப் பொல்லாங்கும் நிறைந்தவனே, நீதிக்கெல்லாம் பகைஞனே கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதில் ஓயமாட்டாயோ? இதோ இப்பொழுதே கர்த்தருடைய கை உன்மேல் வந்திருக்கிறது” என்று சொன்னார். அதைக் கேட்டதும் சாத்தான் கலவரமடைந்தான் அவனது வார்த்தைகள் தடுமாறின.
பரமண்டலத்தில் இருந்து சிலுவையின் ஒளி அவனை நோக்கி வந்துகொண்டிருந்தது. கோடிச் சூரியப் பிரகாசம் கொண்ட அதன் ஒளி, சாத்தானின் கண்களைக் கூசச் செய்தது. சிலுவையின் ஒளிக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவன் தட்டுத்தடுமாறினான். சாத்தானின் அப்போதைய நிலையைக் கண்ட அவனைச் சார்ந்த பேய்களும் பிசாசுகளும் மறுபக்கம் பாய்வதற்குத் தம்மைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தன.
0 0 0
61

Page 64
நறுக்குக
அதிகாரம் அறியாமை ஆகுமாக்கப்பட்டவை
பேசப்படுகிறது அனாதையாக்கப்பட்டது
இனவாதம் ஒடுக்கப்பட்ட
வங்கிகளில் உணவு முத்திரை
எல்லா மதங்களினதும் தகுதி
இரத்தங்கள்! நடுவர்களாக நடிகர்கள்
இரவல் கூத்துக்களுக்கு கூட்டு மதிப்பெண்கள்!
தமிழுக்கில்லை
தட்டுப்பாடு சட்டம்
“டேக் இட் ஈஸி” சமம் சரிந்தது
தமிழ்க்கவிஞன் எடுத்த பிச்சை! வீதிகளில் கவசமில்லாத
பெண்மை தலைகள்!
“கண்” என்ற
கருவுக்குள் பணவிரயம்
சிலரின் வறுமைக்கு
காணாமற்போய்விடும் வழி சொல்லாத
குழந்தை கபோதிகளின் கைத்தடி!
முதுமை
ஒப்பனை
கடவுச்சீட்டை வெள்ளையடிக்கப்படுகின்ற
கையில் வைத்திருக்கும் கலையுலகங்களின்
ஊருக்குத் ஓட்டை வீடுகளின்
திரும்ப முடியாத உறவுகள்!
பிரயாணி!
Hi filtil பி in பா ப்ப இ
பாபா க .ப ப
வெட்கம் தாய் மொழி தலை குனிந்தது தமிழன் தலையில் ஆங்கிலப் பேய்!
பேறு கையடக்கப் பேசியில் காதல் களவு கைதியானது கருவில் குழந்தை
வறுமை கோயிலில்
துவேஷம் பால் அபிஷேகம்
மனிதத்தை பக்கத்துக் குடிசையில்
மிதிக்கின்ற பால் கேட்டு அழுகிறது
முட்டாள்களின் குழந்தை! முகங்கள்!
62

எழுத்தாளன் உலகம் பார்க்காததை உள்ளத்தால் உரசிப்பார்க்கின்ற உளவாளி!
கள்
இ
விபச்சாரம் உயில்கள் எழுதப்படாத உடல்களின் ஓப்பந்தம்!
கிரிக்கட்
நாணல்
வக்கற்ற கரங்கள் நேரத்தை மதிக்கின்ற
வாங்கி வைத்திருக்கும் அறிவாளிகளின்
அடிமைச் சொத்து! நரகம்
அடையாளம் கோயில்
கணவன் தொட்டால் புனிதம் ( மனைவி உடைக்கப்பட்டது
கண்டவர்கள் தொட்டால் கட்டப்பட்டது
நடிகை! நடிகர்களுக்கு!
திரைப்படம் (சந்தோஷங்களை அனுபவிக்க
அரசியல் ( பலருக்கும்
அடிக்கடி
கட்டிக்கொடுக்கப்படுகின்ற வரையப்படுகின்ற
திரையுலக சொர்க்கம் கேலிச்சித்திரம்!
பேய்
நெடுந்தொடர்
இனங்களை மிதிக்கும் தொடர்பில்லாமல்
இனவாதிக்கு ஓடிக்கொண்டிருக்கும்
எழுதப்பட்டிருக்கும்
இன்னொரு பெயர்! தொங்கோட்டம் தொலைக்காட்சிகளில்
நடிப்பு தமிழ் நாடகம்! கட்டியணைத்தல்
முத்தமிடுதல் அறிக்கை
அரை குறை ஆடை கட்டணம் செலுத்தப்படாத
கட்டணம் செலுத்தப்படுகின்ற கவர்ச்சிகரமான
திரையுலக
வியாபாரம்! விளம்பரம்!
* !! 1 "II II II 11 "
கை
தவறணை தாவுதல் ஆராயும் புத்தி பிழைக்கத் தெரிந்த
அடகு வைக்கப்படும் பெரிய மனிதர்களின்
வீதியோர குரங்குப் புத்தி! வட்டிக் கடை
விலைவாசி (ஆபாசம் உச்சியில் ஏறி பலரும்
ஆடி மகிழும் படித்து ரசிக்கும் பெரிய மரத்துப் ) பாவங்களின்
பேய்!
பக்கம்!
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (168)

Page 65
தமிழகச்
செப்
கே.ஜி.மகா
இந்தியாவின் பதினாறாவது நாடாளு மன்றத்தேர்தலுக்கான ஒன்பது வாக்கெடுப்பும் மக்களின் ஆர்வ மிகுதியினால் கூடுதல் விகிதாசார வாக்களிப்பு கண்டு, அத்தனை மாநிலங்களின் தலைவிதியும் ஒரே நாளில் இம்மாதம் பதினாறாம் திகதி எழுதப்படுகிறது. ஒரு, சுதந்திர பேரியக்கமான காங்கிரஸ் கட்சியை, ஈரெழுத்து தனிநபர் மோடியின், நிழலில் பாரதீய ஜனதாகட்சி எதிர்த்து நிற்கிறது. இந்த நிலையில் இத்தேர்தல் பிரசாரத்தில் நமது கண்ணைக் குத்தியது, தேசிய கட்சித் தலைவர்கள் மூன்றாம் நிலைகீழ்த்தரமான தனிநபர் விமர்சனங்கள்தான்! அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கை லட்சணம்!
உணர்ச்சிகளைத் தூண்டி, அதில் அரசியல் ஆதாயம் தேடி, அரசியல் நாகரிகத்தை அநாகரிகமாக்கி, இதுவரை நடைபெற்ற பதினைந்து நாடாளுமன்றத் தேர்தலிலும் கட்டிப் பாதுகாக்கப்பட்ட ஜனநாயக அரசியல் பண்பாட்டை சாக்கடைக்குள்ளாக்கி, தேர்தல் பிரசாரத்தையே தேசியத் தலைவர்கள் கேலிக்
கூத்தாக்கிவிட்டனர்!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இத்தேர்த லில் காங்கிரஸ், பாரதீய ஜனதாகட்சிக் கூட்டணி, கம்யூனிஸ்ட் கட்சிகள், அ.தி.மு.க , தி.மு.க. கூட்டணி என்று ஐந்து முனைப்போட்டி நடைபெற்றது. இக்கட்சிகள் விடுத்த தேர்தல்
அறிக்கைகள், மக்களை எந்தவிதத்திலும் கவரவில்லை. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தன்மீது முழுவதுமாக கறைபடிந்த ஊழலை மறைக்க
புதிய மொந்தையில் பழைய கள். கடந்த பத்து ஆண்டுகளில் மக்கள் கவனத்தை
சற்று ஈர்த்த தகவல் அறியும்
அதன் இந்திய
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ரே 2014 (168)

நிகள்
தேவா
பற்றியே" அளவில் து, தி.மு.க அறிக்
உரிமைச் சட்டம், விவசாயக் கடன் ரத்து, உணவுப்பாதுகாப்புச் சட்டம் ஆகியவை, அரைத்த மாவை மீண்டும் அரைப்போமா கதைதான். பா.ஜ.க. அறிக்கையில், ராமர் கோவில் வலியுறுத்தப்பட்டு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்துச் செய்யப்படும் என்று பூதம் கிளம்பியிருக்கிறது. இலங்கைத்தமிழர்கள் பற்றியோ, தமிழக மீனவர்கள் குறித்தோ பெயர் அளவில் கூட கவலைப்பட்டு ஒரு வரி கூட இல்லை! தி.மு.க அறிக்கையில் மொத்தம் நூறு வாக்குறுதிகள். அறிக்கையில் காணாமல் போனது 2-ஜி அலைக்கற்றை
விவகாரம்! அ.தி.மு.க. அறிக்கையில் அம்மாவின் ராசி எண் ஏழு வரும் வகையில் 43 வாக்குறுதிகள். தமிழ் ஈழம், கச்சித்தீவு மீட்பு என்று அசத்தல்! கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் முதிர்ச்சி பளிச்சிடுகிறது. ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த அறிக்கைகள் என்னதான் சொன்னாலும், மக்கள் படித்து அல்லது மக்களுக்குத் தெரியப்படுத்தி வாக்குகள் கிடைத்துவிடவில்லை என்பது உண்மை. காரணம், இவற்றில் காணப்படுவது வெறும் கண்துடைப்பு என்பதை உறுதிப்படுத்துவது போல் இருக்கிறது காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. நடைமுறைகள்.
தேர்தலின் முதல் கட்ட வாக்களிப்பு நடைபெற்ற தினமன்றுதான் பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையை நான்கு சுவர்களுக்குள் வெளியிட்டது என்றால் காங்கிரஸ், தேர்தல்
5 பண்பு காணாமல்போன » அநாகரிக அரசியல்!
63

Page 66
நடைபெறுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் தான் பகிரங்கப்படுத்தியது. மக்கள் மீது தான் எவ்வளவு அக்கறை! ஆட்சியைப்பிடிக்க ஆலாப் பறக்கும் இந்த இரண்டு கட்சிகளும் தங்களது தேர்தல் பிரசார பீரங்கி மூலம் "சுட்டுத்தள்ளிய " சில நச்சுக் குண்டுகளைக் கவனிப்போம்:
செத்துப் பிழைத்த அரசியல் நாகரிகம்!-
நாட்டின் நாலா புறங்களிலும் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டங்களில் காங்கிரஸ், பாரதீய ஜனதாகட்சித் தலைவர்கள் தூபமிட்ட அர்ச்சனைகள் சொல்லும் தரமன்று! காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டத்தில் சோனியா காந்தி பேசுகையில்: "மோடி ஒரு கொலைகார வியாபாரி" என்று குரலிட, மைந்தன் ராகுல் காந்தி தனக்குத் தெரிந்த அரசியல் அறிவில், "நரேந்திர மோடி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் ரவுடி” காந்திஜியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். இயக்கம்தான்" என்று கண்டுபிடித்ததும், வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் "நரேந்திர மோடி ஆண்மையற்றவர்” தனது மனைவியை மறைத்தவர் என்று சான்றிதழ் வழங்கினார்.
மற்றுமொரு பிரசாரக்கூட்டத்தில், தேசிய வாத காங்கிரஸ் தலைவரும் மத்திய அமைச்சருமான சரத் பவார், "மோடி ஒரு பைத்தியக்காரன். மனநோய் மருத்துவ மனையில் அனுமதிக்க வேண்டும்” என்று அலற, உத்தரப்பிரதேச காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத் தனது பிரசார கூட்டத்தில் இரத்தவெறி பிடித்து "மோடியைக் கண்டதுண்டமாக வெட்டுவேன்" என்று கறிக்கடைக்காரரானார்! இப்படியாக ஒரு அசிங்க அரசியல் காங்கிரஸ் தரப்பில் "மாவிலை தோரணம்” கட்டி அரங்கேறியது, காங்கிரஸ் தலைவர்களை ஊனப்படுத்தவில்லை. மாறாக, இம்ரான் மசூத் போட்டியிட்ட தொகுதியில் ராகுல் காந்தி பிரசாரம் செய்ததுடன் வேட்பாளரின் இழிவான கருத்துக்கு மன்னிப்போ வருத்தமோ தெரிவிக்கவில்லை. இவர்கள் பார்வையில் இவ்விதம் கேட்பது, ஜனநாயகப்பண்பாகத் தெரியவில்லை போலும். "இவர்கள்" தான் மக்கள் பிரதிநிதிகளாக நாடாளுமன்றம் செல்பவர்கள். இந்த அர்ச்சனைக் கேட்டு பாரதீய ஜனதாகட்சி கைகட்டி நிற்குமா என்ன?
பா.ஜ.க மூத்த தலைவர் ஹீராலால் ஒரு பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸாரின் கண்ணியக் குறைவான கணைகளுக்கு ஒட்டு மொத்தமாக ஒரே வரியில், "பா.ஜ.க., ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலை, சோனியா காந்தியை 64

நிர்வாணமாக்கி இத்தாலிக்கு ஓட ஓட விரட்டு வோம் "ராகுலையும் துரத்துவோம்” என்று பா.ஜ.க.வீரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இம்மாதிரியான அரசியல் அநாகரிகம் மத்தியில்தான் ஜனநாயகமும் சாகாவரம் பெற்று இந்தியாவில் சோலோச்சுகிறது! அரசியல் நாகரிகம் உறுதிப்படுத்தப்படாத பட்சத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல், மக்கள் ஆட்சி என்பதெல்லாம் செல்லாக்காசாகிவிடும். நாற்பதும் நமதே: முடிவில் யாருக்கும் கிடைக்காத சூழல்!
தமிழ் நாட்டில் ஐந்து முனை போட்டி நடைபெற்றாலும், பதினெட்டுத் தொகுதிகளில் சமமாக போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்ளிய கம்யூஸ்ட் களத்தில் இறங்கிய நிலையில் மற்றைய அ.தி.மு.க., தி.மு.க, பா.ஜ.க, கூட்டணி, காங்கிரஸ் நான்குமே "நாற்பதும் நமக்கே" என்று பிரசாரத்தில் சூளுரைத்தன. ஆனாலும் கடைசி நேர கணிப்புகள், எந்தக்கட்சிக்கும் முழுசாக நாற்பதும் யாருக்குமே கிடைக்காது என்று அடித்துக் கூறின. அதிகமாக எதிர்பார்க்கும் அ.தி.மு.க., தேர்தல் நடைபெற்ற கடந்த 24ம் திகதிக்கு இரண்டு நாட்கள் முன்னர் வரை பணப்பட்டுவாடா வீடுதோறும் நடத்தியதாக செய்தி எழுதாத தினசரிகளும் இல்லை. வார இதழ்களும் கிடையாது. ஆனாலும் நிறுத்தப்படவில்லை. இதேமாதிரி தி.மு.க. தரப்பிலும் நோட்டுகள் கைமாறப்பட்ட போதிலும் அ.தி.மு.க வுடன் போட்டிபோட முடியவில்லை. விஜயகாந்தின் மே.மு.தி.க. பதினான்கு வேட்பாளர்களும் முற்பணம் இழக்க வேண்டுமென்பதில் ஜெயலலிதா மிகுந்த கவனத்துடன் செயல்பட்டார். நரேந்திரமோடி ரஜினிகாந்தை சந்தித்ததைத் தொடர்ந்து குஜராத் மீது பாய்ந்த முதல்வர் ஜெயலலிதா மோடியை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை. குஜராத்தில் மோடி ஆட்சியில் நடைபெற்ற மதக்கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ் லிம்கள் கொல்லப்பட்டது குறித்தும் கண்டனம் தெரிவிக்கவில்லை. ஜெயலலிதாவின் விமர்சனம் பற்றி மோடி தமக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே நல்ல நட்புறவு உண்டென்று கூறினார். ஜெயாவின் விமர்சனங்கள் மோடிக்கு மயில் இறகு உரசுபோல் இருந்திருக்கலாம். இம்மாதம் 16ல் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்துவிடும்.
0 0 0
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - மே 2014 (168)

Page 67
(0)
- ஐshi.
OUR PRODUCTS ARE THE FOLLOWING; => MASALA POWDERS
IDDLY PODDY ITEMS
VADAGAM ITEMS - PICKLES ITEMS
Manufactured by:- SITHI ENTERPRISES,
1472, Madampitiya F
(“ஞானம்” சஞ்சிகை :
பூபாலசிங்கம் 202, 340, செட்டியார் (
பூபாலசிங்கம் 309AI 2/3, காலி வீதி
பூபாலசிங்கம் 4, ஆஸ்பத்திரி வீ
தூர்
சுன்ன
ஜீவ அல்வாய். தொகை
லங்கா சென்ற 84, கொழும்பு

Enterprises
1AFFOrd
PUBLIC LIBRARY
healபேkin and gேienicalாது
prepared.
- Tel: 01 - 2540083
கிடைக்கும் இடங்கள்
புத்தகசாலை தெரு, கொழும்பு-11
புத்தகசாலை ,ெ வெள்ளவத்தை.
புத்தகசாலை தி, யாழ்ப்பாணம்.
க்கா பாகம்
நதி லபேசி: 077 5991949
ல் புத்தகசாலை
வீதி, கண்டி.

Page 68
GNANAM - Registered in the Department of E
(Luck
BIS MATRUFA
Luckyland
1
NATTARANPOTHA, KU T: +94 081 2420574, 2420
E: luckylar

Posts of Sri Lanka under No. Dெ/18/News/2014
ylan) 30T
CTURERS
உலக சாதனை எங்கள் பாரம்பரியம்
| பிஸ்கட்டிலும் தான் !
UNDASALE, SRI LANKA. D217. F: +94 081 2420740 nd@sltnet.lk
-- -- -- -------------------
- ரோ) - Tel 847)