கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஞானம் 2014.06

Page 1
- ஞான
கலை இ
15 கெட்
ஞானம்
ஜேர்
-- -- ------
பபையiயம். சிறப்பிதழ்
www.gnanam.info www.gnanam
2 பாகம் - 'எப்பாகம் - 5ா E FM
விலை? ரூபா 100/=
சூசை

னம்
மக்கியச் சஞ்சிகை
ஜூன் 2014
எனயில். "169
வையில்
வா
சிற
எழுத்தாளர் எட்வேர்,

Page 2
|asong gawa nomatogia
ാട്ടങ്ങ
Jew Designers and Manufact 22kt Sovereign Gold
Quality Jewellery
101, Colombo Street, Kandy. Tel: 081 - 2232545
CENTR
Suppliers to
DEALERS IN ALL KINDS
FOOD COLOURS, F
CAKE INGRE
76B, Kings St Tel: 081 - 2224187, 081 -

ellers
Curers of
5650
AL ESSENCE SUPPLIERS
> Confectioners & Bakers
; OF FOOD ESSENCES, FOOD CHEMICALS, DIENTS ETC.
:reet, Kandy. 2204480, 081 - 4471563

Page 3
811% 1
ஒளி: 15 ஈர்தலினமும்
A111 JUN 2014
ஒளி:15 ஞானற் சுடர்:01 பகர்தலன்றலரி
*டு
வ க - > > 5 - சு -
ஜப்பாக
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவுமாயின், பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவிகொள்வர்.
ஆசிரியர் குழு ஆசிரியர், ஸ்தாபகர் : தி.ஞானசேகரன் இணை ஆசிரியர் : ஞானம் ஞானசேகரன் நிர்வாக ஆசிரியர் : ஞா. பாலச்சந்திரன்
தொடர்புகளுக்கு தொ.பேசி.ச 0094-11-2586013
0094-77-7306506 தொ.நகல் ச 0094-11-2362862 இணையம் + WWW.gnanam.info
WWW.gnanam.lk
தளம்.ஞானம். இலங்கை மின்னஞ்சல் editor@gnanam.info
editor@gnanam.lk அஞ்சல் r 3B-46h Lane, Colombo-6,
Sri Lanka வங்கி விபரம்r T. Gnanasekaran
Acc. No. - 009010344631 Hatton National Bank, Wellawatha Branch. Swift Code : HBLILKLX (மணியோடர் மூலம் சந்தா அனுப்பு) பவர்கள் வெள்ளவத்தை தபாற் கந்தோரில் மாற்றக்கூடியதாக
அனுப்புதல் வேண்டும்) சந்தா விபரம் o Sri Lanka
ஒரு வருடம் :ரூ 1,000/= ஆறு வருடம் :ரூ 5,000/= ஆயுள் சந்தா :ரூ 20,000/=
ஒரு வருடம் Australia (AUS)
50) Europe (€)
40 | India (Indian Rs.) 1250 Malaysia (RM)
100 Canada (S$)
50 UK (£) Singapore (Sin.$)
50 Other (US$) ஞானம் சஞ்சிகையில் பிரசுரமாகும் படைப்பு களின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய
ஆசிரியர்களே பொறுப்பானவர்கள். 9 புனைபெயரில் எழுதுபவர்கள் தமது சொந்தப் பெயர், முகவரி, ஆகியவற்றை வேறாக இணைத் தல்வேண்டும்.
பிரசுரத்திற்குத் தேர்வாகும் படைப்புகளைச் செவ்வைப்படுத்த ஆசிரியருக்கு உரிமை யுண்டு.
படைப்புகள் கணினியில் தட்டச்சு செய்யப்பட்டு மின்னஞ்சலில் அனுப்பப்படவேண்டும்.
) 1. 30
50|
10
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

வீழைமுமிளறுவதுஞானம்? அதிரள்ளே ...
14 19 19
-விதைகள் கே.ஆர் திருத்துவராஜா கலைவாதி கலீல் கல்வயல் வே. குமாரசாமி கா. ஜெயபாலன் பத்மா இளங்கோவன் கவிக்கிறுக்கன் ஷெல்லிதாசன்
27
30
34
53
0 கட்டுரைகள்
செ.ஞானராசா கந்தையா சண்முகலிங்கம் என். செல்வராஜா
32
சிறுகதைகள்
வி.ஜீவகுமாரன் நடேசன்
எம். பி. எம். நிஸ்வான்
07 23
31
20
பத்தி
வே.தில்லைநாதன் பேரா. துரை மனோகரன் கே.விஜயன் கே.ஜி.மகாதேவா
42 45 51
சமகால இலக்கிய நிகழ்வுகள்
கே. பொன்னுத்துரை
49
பயண இலக்கியக் கட்டுரை தி. ஞானசேகரன்
36
வாசகர் பேசுகிறார்
54

Page 4
கை
பாடியாயப்படியான
ஆசிரியர் பக்கம்
அன்பு நெஞ்சங்களே,
ஞானம் தனது பதினைந்தாவது அகம் மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுடன் மகிழ்வடைகிறோம். ஈழத்தில் மாதம் தவறா நிறைவு செய்த ஒரேயொரு சஞ்சிகை ஞ் மகிழ்ச்சி. 15 வயது என்பது வாலிப வயது. ஞானம் பவனிவந்து கொண்டிருப்பதை யான
ஞானம் இன்று பேசப்படும் சஞ்சிகையா வலம்வந்து கொண்டிருக்கிறது. பத்தாயிரத் இணையத்தின்வழி ஞானம் சஞ்சிகையை 6 எழுத்தாளர்கள் ஞானத்தில் தமது படை கருதுகிறார்கள்.
மாதத்தின் முதலாம் திகதியே ஞானம் கிடைக்கிறது. அதைத் தொடர்ந்து அச்சுவடி வருகையானது வாசகர்கள், எழுத்தாளர்கள், 4 நம்பிக்கையையும் புரிந்துணர்வையும் கட்டி ரீதியில் புதியவர்கள் மாதாமாதம் ஞானத்துப் பங்களிப்பை நல்கவும் வகை செய்துள்ளது 6 ஒவ்வொரு இதழ்களிலும் புதியவர்கள் தமது கண்டுகொள்வர்.
ஈழப்போர் உச்சக்கட்டத்தில் இருந்து தொடங்கியது.
எங்கே, எந்த நாட்டில் போர் இடம் பெறுக அவற்றைத் தொடர்ந்து புலம்பெயர் இலக்கி
எமது நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டுப் இதழை நாம் போர் இலக்கியச் சிறப்பிதழாக என்பது போரோடு தொடர்புபட்ட உண்மை நவீனத்தமிழ் இலக்கியத்தில் 'போர் இலக்க பெருமை ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களையே வகையிலும் ஈழத்துப் போர்பற்றி உலகளாவி இத்தொகுப்பு முயற்சி காலத்தின் தேவையா
போரின் காரணமாக புலம்பெயர்ந்த பரவச் செய்தவர்கள். தமிழுக்கு ஓர் அனைத்து இணைய வலையமைப்பை தமிழுக்கு வளைத் ஊடாட்டத்தை எற்படுத்தியவர்கள். பல்தேசிய I வாழ்வு அனுபங்களை தமிழுக்குக் கொண்டு 1 என்னும் இலக்கியத் தொகுதியின் உருவாக்க
இந்தப் புலம்பெயர் இலக்கிய வகைமைய I'ஈழத்துப் புலம்பெயர் இலக்கியச் சிறப்பிதழ
ஞானம் வெளிக்கொணர்ந்த ஈழத்துப் போர் ஈழத்துப் புலம்பெயர் இலக்கியச் சிறப்பிதழும் தமிழ் பங்களிப்புகளாக இருக்கும் என்பதில் பெரும்
எதிர்வரும் காலத்திலும் இத்தகைய ஞானம் சஞ்சிகையூடாக ஆற்றுவோம் என 2
Iாபம்

வையில் காலடி எடுத்து வைக்கிறது என்ற ன் பகிர்ந்து கொள்வதில் நாம் பெரிதும் து வெளிவந்து பதினான்கு ஆண்டுகளை ானம் மட்டுமே என்பதில் எமக்கு இரட்டிப்பு |
இந்த வாலிப வயதுக்கே உரிய மிடுக்குடன் பரும் அறிவர்.
க, சர்வதேச வியாபகம் பெற்ற சஞ்சிகையாக துக்கும் மேற்பட்ட வாசகர்கள் மாதா மாதம் வாசிக்கிறார்கள். உலகெங்கும் பரந்து வாழும் டப்புகள் இடம்பெறுவதைப் பெருமையாகக்
சர்வதேச அளவில் இணையத்தில் வாசிக்கக் வில் வெளிவருகிறது. ஞானத்தின் இத்தகைய ஆசிரியர் குழுவினர் ஆகியோரிடையே பரஸ்பரம் -யெழுப்ப வகைசெய்வதோடு உலகளாவிய டன் இணைந்து கொள்ளவும் தமது இலக்கியப் | என்பதை நாம் அனுபவரீதியாக உணர்கிறோம். | 1 பங்களிப்பைச் செய்து வருவதை வாசகர்கள் |
த காலகட்டத்தில் ஞானம் வெளிவரத்
றதோ அங்கெல்லாம் “போர் இலக்கியங்களும்' யங்களும்' வெளிவருவது வரலாறு. | போரின் பின்புலத்தில் ஞானம் 150 ஆவது || 5 வெளிக் கொணர்ந்தோம். 'போர் இலக்கியம்' நிகழ்வுகளின் இலக்கிய ஆவணங்களாகும். யம்' என்ற தனியான பகுப்பை உருவாக்கிய |
சாரும் என்ற உண்மையை உறுதிப்படுத்தும் | ரிய ரீதியில் மக்கள் அறிந்து கொள்வதற்கும் ||
க அமைந்தது. த ஈழத்தமிழர்கள் தமிழை உலகமெல்லாம் பலக ஏற்புடமையை பெற்றுக் கொடுத்தவர்கள். துக் கொண்டுவந்து தமிழுக்கு ஓர் அனைத்துலக க் கலாசாரங்களின் மத்தியில் வாழ்ந்து தமது வந்து சேர்த்தவர்கள். 'புலம்பெயர் இலக்கியம்' கத்தின் உரிமையாளர்கள். பினை நாம் ஞானத்தின் 15 ஆவது அகவையில்
'க வெளிக்கொணரவுள்ளோம். இலக்கியச் சிறப்பிதழும் வெளிக்கொணரவிருக்கும் |
இலக்கியத்திற்கு ஞானம் வழங்கிய உச்சப் மை கொள்கிறோம். பல காத்திரமான இலக்கியப்பணிகளை நாம் | உறுதி கூறுகிறோம்.
- ஆசிரியர்
F1:44:44 Aist194 - 14 1-2-சச பட் கட்சி

Page 5
எழுத்தாளர் சூசைஎப்வேம்
இரண்டாவது உலக இல் சூசை எட்வேட் - மிகப்பெரிய கடற்படைத் அப்போதிருந்தது. யப்பால மக்கள் இடம்பெயர்ந்தனர் யாவரும் மட்டக்களப்பு புல் இவரது தாய் அன்னம்மா
1945இல் யுத்தம் | வயதுக்குழந்தையாக இ திருகோணமலைக்கு வந்து எட்டாம் எட்வேட் மன்னர் அவருடைய பெயரையே சிறுகதைத்துறையில் தற்
இவர் வளர்ந்தது, 1 பெற்றது, இப்போதிருக்கு 1 எல்லாமே திருகோணப
கல்விப்பொதுத்தராதர வரை அர்ச்.பிரான்சிஸ் கல்விகற்றார். சென்சேவி வேயப்பட்ட பள்ளியாக ஆகக்காணப்பட்டபோதும் எஸ்.எஸ்.சி.(S.S.C) பரீட்ன சித்தியடைந்தார். இவரு. அண்மையில் காலமான என்பவர் குறிப்பிடத்தக்க
vvvN2
செ.ஞானராசா
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

யுத்தம் உக்கிரமாக நிகழ்ந்தபோது 29.08.1943 அவர்களது பிறப்பு நிகழ்ந்தது. பிரிட்டனின் ந்தளம் திருகோணமலைத் துறைமுகத்தில் ன்காரர் வந்து இங்கு குண்டுமாரி பொழிந்தனர். -, அகதிகளாகினர். இவரது தாயார் உறவினர் ரியந்தீவுக்குச் சென்று அங்கே தங்கியிருந்தனர்.
தந்தையார் சூசைப்பிள்ளை ஆவர்.
முடிவுக்கு வந்ததும் இவர் இரண்டு இருக்கையில் மீண்டும் சொந்த இடமான ப வாழ்ந்து வரலாயினர். காதலுக்காக முடிதுறந்த அப்போது பிரபலமாகப் பேசப்பட்ட ஒருவர். இவருக்குச் சூட்டினர். அதற்கமைய இவர் போது பிரதான இடத்தைப் பெற்றுவருகிறார். படித்தது, அனுபவித்தது, அனுபவங்களைப் நம் நிலைக்கு மூலக்கருவானது, உருவானது மலையில்தான்! அரிவரி வகுப்பிலிருந்து சாதாரணப் பரீட்சை சித்தியடையும் சேவியர் (சென்சேவியர்) பாடசாலையில் யெர் பள்ளிக்கூடம் அப்போது ஓலையால் வே இருந்தது. இவர் படிப்பில் மத்திமம்
இறுதியாண்டில் மிகத்தீவிரமாகப் படித்து செயில் திறமைப்புள்ளிகளோடு இவர் மட்டுமே க்கு கல்வியூட்டிய நல்லாசான் வரிசையில் சிறந்த பெண் எழுத்தாளரான ந பாலேஸ்வரி
வர்.

Page 6
11 II}}iiiiiii).
வளரிளம் பருவத்திலே பத்திரிகை, சஞ்சிகை வாசிப்பதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார். அம்புலிமாமா, கண்ணன், கல்கண்டு, கல்கி, குமுதம், ஆனந்தவிகடன், கலைமகள் என்று வாராவாரம் எடுத்து வாசிப்பதில் தீவிர ஆர்வம் காட்டி வந்துள்ளார். தொடர் கதைகளையும் தொடர்ச்சியாக வாசித்திருக்கின்றார்.
இவர் இருந்த காணியில் நான்கைந்து குடும்பங்கள் கூட்டுக் குடும்பமாகச் சேர்ந் திருந்தன. அங்கே படிப்பாளிகளும் வாசகர் களும் இருந்தனர். வார இதழ்கள், மாத சஞ்சிகைகள் ஒழுங்காக எடுப்பார்கள். இச்சூழல் இவரது வாசிப்பு வளர்ச்சிக்கு வாய்ப்பாயமைந்தது. சனசமூக நிலையங்கள், வாசிகசாலைகளைத் தேடித்திரிந்து வாசிப்பதில் மூழ்கிக்கிடந்து காலத்தைப் போக்கும் பழக்கத்தில் இளம்பராயத்திலே வல்லவராக விளங்கினார்.
புனித சவேரியார் பாடசாலையில் படிப்பை முடித்துக்கொண்டு உயர்தரம் படிப்பதற்காக கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் சேர்ந்தார். அங்கு ஒருவருட காலத்துக்கு மேல் இவரால் கல்வியைத் தொடர இயலவில்லை! காரணம் வீட்டுக்கஷ்டமல்ல. வீட்டார் கூடிய ஒத்துழைப்பை வழங்கிய போதும் இவரது மனப்பாங்கு தொடர்ந்து படிக்க விடவில்லையென்று குறிப்பிடு கின்றார். குறிப்பிட்ட சில புத்தகங்களை மட்டும் வைத்துப் படித்துப்பட்டம் பெற்று பரீட்சை சித்தி யடைந்து தாங்கள் கெட்டிக்காரர்கள் என்று மேதாவித்தனம் காட்டுவதை இவருள்ளம் ஏற்கவில்லை. பல அறிஞர்களின் நூல்களைத் தேடித்திரிந்து சுதந்திரமாக வாசிப்பதன் மூலம் அறிவாளியாக முடியுமெனத் திடமாக நம்பினார்.
அப்போது நூலகப் பொறுப்பாளராக தி.அரியநாயகமிருந்தார். அக்காலப் பகுதியில் அவருடைய சிறுகதைகள் பத்திரிகைகளில் அடிக்கடி வந்து கொண்டிருந்தன. பிரபலமான எழுத்தாளராகவும் வசீகரப் பேச்சாளராகவும் அரியநாயகம் விளங்கினார். அவருடைய தொடர்பு இவருக்கு எழுத்துலகில் பிரவேசிக்க உறுதுணைபுரிந்தது. திரு.அரியநாயகம் என்பவர் தரமான எழுத்தாளர்களை சூசை எட்வேட் அவர்கட்கு அறிமுகப்படுத்தி இனங்காட்டி வைத்ததுடன் தட்டிக்கொடுத்து உற்சாகம் ஊட்டி வைத்துள்ளார். அதனாலே, அவர் அகால மரணமடைந்தாலும் அவரை இன்றும் நன்றியோடு நினைவு கூறுகிறார். நிக்கலஸ்

செபமாலை என்ற ஆசிரியரும் இவருக்கு உந்து சக்தியாக அமைந்துள்ளார்.
பெர்னாட்ஷா என்ற அறிஞர் இளம்பராயத்திலேயே நாளாந்தம் ஐந்து பக்கம் எழுதி முடித்து விட்டுத்தான் அடுத்த வேலை யைப் பார்ப்பாராம். ஏதாவது இடைஞ்சல் காரணமாக ஒருநாள் எழுத முடியாமல் போனால் மறுநாள் பத்துப்பக்கங்கள் எழுதி விடுவாராம்! இந்த முயற்சியும் பயிற்சியும்தான் அவரை உலகம் போற்றும் பேரறிஞர் ஆக்கியதாம்! இதைக்கேட்டதிலிருந்து சூசை எட்வேட்டும் நாளாந்தம் எழுத்துப்பயிற்சியில் ஈடுபட்டார். பயிற்சி எடுத்து ஆற்றலை வளர்த்துக் கொண்டாரே அல்லாமல் எந்தப்பத்திரிகைக்கோ இதழுக்கோ அனுப்பவில்லை. உரிய வயதில் தனக்கு ஒரு துணை தேவைப்பட்டபோது தொழில் இல்லாதவன், வருமானம் இல்லாதவன் எப்படி விவாகம் செய்வது? தொழில் ஒன்று வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. S.S.C சான்றிதழுக்கு அப்போது நல்ல உத்தியோகம் எடுத்திருக்கலாம். சிங்கள மொழிச்சட்டம் தீவிர அமுல்படுத்தல் இவரை உத்தியோகத்தில் வெறுப்படையச் செய்தது. அதன் விளைவு, இவரது வாழ்க்கைப் பாதையைத் திசைதிருப்பி > விட்டது.
தந்தையார் செய்துவரும் தொழிலையே மேற்கொள்வதென்று முடிவெடுத்தார்! அந்தத் தொழிலைக் கற்றுக்கொள்வதற்காக தகப்பனின் சிகை அலங்கரிப்பு நிலையத்திற்குப் போனார்! அங்கேயும் ஒரு சிக்கல்! இவர் படித்த பாடசாலைக்கு அண்மையில் தான் இவர் முடிதிருத்தும் நிலையமும் இருந்தது. கூடப்படித்தவர்கள், படிப்பித்தவர்கள் அங்கே அடிக்கடி வருவதாயிருந்தனர்! பரிகசித்தார்கள்! கண்டித்தார்கள்! அக்காலத்தில் S.S.C சான்றிதழோடு சவரத்தொழில் புரிபவர் இவர் ஒருவராகத்தான் இருக்கமுடியும்! இருபத்து இரண்டு வயதிற்குப் பின்னர் இத்தொழில் கலையைப் பழகவந்தவரும் இவராகத்தான் இருக்கும்!
இவர் தலைமறைவாக
இருந்தே தொழிற்பயிற்சிபெற முடிவெடுத்தார். அதற்காக யாழ்ப்பாணம் சென்றார். அங்கே இவருடைய > மாமனார் சுன்னாகத்தில் சிகை அலங்கரிப்பு - நிலையத்தை நடத்திவந்தார். அங்கே நின்று இத்தொழிலில் பயிற்சி பெற்றார். அதுவே, தொழிற்பயிற்சி பெற நல்ல வாய்ப்பாக அமைந்தது.
மாமனார் மகளையே விவாகம் புரிய
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

Page 7
வேண்டியதாயிற்று. அங்கேயே நான்கு பிள்ளைகளைப் பெற்று முப்பது வருடங்களுக்கும் மேலாக வாழ்க்கையை நடத்தினார்! இந்தத் தொழிலும் குடும்பச் சுமையும் இவரது எழுத்துப்பயிற்சியையும் வாசிப்பையையும் வெகுவாகக் குறைத்து விட்டது! என்றாலும் சுன்னாகம் வாசிகசாலையில் நூல்களை எடுத்து வந்து வாசிப்பதைக் கைவிடவில்லை.
நண்பர்களுக்கு அடிக்கடி கடிதம் எழுதிவருவார். யாழ்குடாநாட்டின் சிகையலங்கார நிலையங்களின் சமாஜத்தலைவராக மூன்று வருடங்களாக இருந்து சேவையாற்றி யிருக்கின்றார். அக்காலப்பகுதியில் அடிமை குடிமை தொழில் செய்வதை முற்றாகத் தடை செய்வதில் முக்கிய கவனமெடுக்கப்பட்டது! ஊர் (குடி) வேலை செய்வதை நிறுத்தவும்
முயற்சி எடுக்கப்பட்டது.
எழுத்துலகில் இலக்கியத்துறையில் பெரும் சாதனை புரிந்த மல்லிகை ஆசிரியரை எத்தனையோ அமைப்புக்கள், நிறுவனங்கள், அறிஞர் பெருமக்கள் வாயார வாழ்த்தி கெளரவித்திருக்கிறார்கள். நமது சமூகத்தைச் சேர்ந்த அப்பெருமகனை நாம் இத்தனை காலமும் திரும்பியும் பார்க்காமல் இருந்தது சரியா? முறையா? என எடுத்துச் சொல்லி சமாஜ மாநாட்டில் அன்னாருக்கு இவர் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.
1995 இல் நடந்த மாபெரும் இடப்பெயர்வின் பின்னர் வன்னிபோய் புதுக்குடியிருப்பில் குடிபுகுந்தார்! அங்கே இவரது ஒரு மகனுக்கு பல்கலைக்கழக அழைப்புக்கிடைத்தது. அதற் கிடையில் அவர் மாவீரரானார். வன்னியில் ஏழு வருடங்களுக்கும் அதிகமாக சீவித்திருக்கிறார். இனப்பிரச்சனை ஆரம்பித்த காலப்பகுதியில் இருந்து இறுதியுத்தம் ஒன்றைத்தவிர எல்லாக் களங்களையும் தரிசித்திருக்கிறார்.
2002 சமாதான ஒப்பந்தத்தோடு தனது சொந்த இடமான திருகோணமலைக்கு மீண்டும் வந்து சேர்ந்தார். பிள்ளைகள் திருமணமாகி வெளிநாடுகளில் வாழ்கின்றனர். இவர் மனைவியோடு வாழ்ந்து வருகிறார். இப்போது இவரது நீண்டகாலக்கனவு ஈடேற வாய்ப்பு வசதிகிடைத்துள்ளது. வாசிப்பதும் யோசிப்பதும் எழுதி இலக்கியக்காற்றைச் சுவாசிப்பதும் தவிர வேறு வேலை இவருக்கில்லை.
2006இல் 'தமிழ் அலை' என்ற பத்திரி கையில் இவரது முதல் கதையான
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

'மனசிற்கு வயசில்ல' பிரசுரமாகியது. அதனைத் தொடர்ந்து மல்லிகையில் 'மனித சாதி' என்ற சிறுகதை பிரசுரமாகியது. இக்கதையைத் தொடந்து தேசியப்பத்திரிகைகளான வீரகேசரி, தினக்குரல், தினகரன் போன்றவற்றிலும் 'ஞானம்' பூங்காவனம், ஜீவநதி போன்ற சஞ்சிகைகளிலும் பிறவற்றிலும் பிரசுரம் பெற்றுள்ளன. இதுவரை எண்பது கதைகள் வெளியாகி உள்ளன. நூறு கதைகள் பிரசுரத்திற்காக தவம் கிடக்கின்றன.
மிகக் குறுகிய காலத்தில் அதிக கதைகளை எழுதிவருபவர் வரிசையில் தற்போது இவரையே முதன்மைப்படுத்தக்கூடியதாயிருக்கிறது. இதே காலப்பகுதியில் ஈரடி வெண்பா வகையில் கருத்துரை சொல்லும் கவிதைகளை எழுதியும் வந்துள்ளார். அதனைத் தொகுத்து 'கருத்துக்கவசம் ' என்ற தலைப்பில் 2010இல் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 2013ல் 'இவன் தான் மனிதன்' என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். இவையிரண்டு நூல்களும் வெளிவர 'நீங்களும் எழுதலாம்' கவிதை இதழ் ஆசிரியர் திரு.எஸ்.ஆர்.தனபாலசிங்கம் என்பவரும் பெரிய ஐங்கரன் என்னும் கவிஞரும் பெரும் பங்களிப்புச் செய்துள்ளனர். அண்மையில் அவுஸ்திரேலியா தமிழ்ச்சங்கம் நடாத்திய சிறுகதைப்போட்டியிலும் 'ஞானம்' சஞ்சிகை நடாத்திய சிறுகதைப்போட்டியிலும் பரிசுச்சான்றிதழ் பெற்றுள்ளார். 'தகவம்' இலக்கியவட்டம் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் இவரது சிறுகதையைப் பாராட்டி பணப்பரிசும் சான்றிதழும் வழங்கிக் கௌரவித்துள்ளது. 'ஞானம்' சஞ்சிகை முதன்மை ஆசிரியர் வைத்தியகலாநிதி, திரு. தி.ஞானசேகரன் அவர்கள் இவரது முயற்சிக்கு ஊக்கம் அளித்து வருகின்றார்.
மதம், கட்சி, கோட்பாடு என்ற வட்டத்தினுள் நின்று சுழலாமல் உண்மை, நேர்மை, பக்கச்சார்பின்மை என்ற பாங்கில் தமது சிறுகதைகளைப் படைத்தளிக்கின்றார். சாதி, சமயம், சமுதாயப் போலித்தனம் என எவற்றைப்பற்றியும் இவரோடு கருத்துப் பரிமாறலாம். எதையும் அலசி ஆராய்ந்து ஏற்கும் தன்மை இவரிடமுள்ளமை இவரது சிறந்த குணாதிசயங்களில் ஒன்றாகும். இனி வருங்காலமும் இவருக்குச் சிறப்பாய்த் திகழவேண்டி 'ஞானம்' ஊடாக வாழ்த்தி மகிழ்கின்றேன்.
0 0 0

Page 8
|
தமிழ்க் கதைஞர் வட்டம் - (த
தகவம்
உப்போ கண்டம்
எழுத்தாளர் முதலாம் காலாண்டு முதலாம் இடம்
வி.ஜீவகுமாரன் இரண்டாம் இடம்
சிவனு மனோகரன் மூன்றாம் இடம்
எஸ். அரசரெத்தினம் இரண்டாம் காலாண்டு முதலாம் இடம்
தாட்சாயணி இரண்டாம் இடம்
தாட்சாயணி மூன்றாம் இடம்
ராணி சீதரன் மூன்றாம் காலாண்டு முதலாம் இடம்
வழங்கப்படவில்லை இரண்டாம் இடம்
இந்திராணி புஸ்பராஜா மூன்றாம் இடம்
முருகேசு இரவீந்திரன் சிறப்புப் பாராட்டு
தேவமுகுந்தன் நான்காம் காலாண்டு
முதலாம் இடம்
வழங்கப்படவில்லை இரண்டாம் இடம்
வல்வை நெற்கொழுதாசன் மூன்றாம் இடம்
வழங்கப்படவில்லை
2001
எழுத்தாளர்
முதலாம் காலாண்டு முதலாம் இடம்
சித்தாந்தன் இரண்டாம் இடம்
வி.ஜீவகுமாரன் மூன்றாம் இடம்
கிண்ணியா சபருள்ளா இரண்டாம் காலாண்டு முதலாம் இடம்
கே.எஸ்.சுதாகர் இரண்டாம் இடம்
சமரபாகு சீனா. உதயகுமா மூன்றாம் இடம்
மல்லியப்பூ சந்தி திலகர் மூன்றாம் காலாண்டு முதலாம் இடம்
வீ. ஜீவகுமாரன்
கிரிஸ்டி முருகுப்பிள்ளை வழங்கப்படவில்லை
இரண்டாம் இடம் மூன்றாம் இடம் நான்காம் காலாண்டு
முதலாம் இடம் இரண்டாம் இடம் மூன்றாம் இடம்
வீ. ஜீவகுமாரன் இ.இராஜேஸ்கண்ணன் சமரபாகு சீனா. உதயகுமா

கவம்) சிறுகதை மதிப்பீட்டு முடிவுகள்
2012
சிறுகதை
பத்திரிகை/ சஞ்சிகை
நானும் எனதும் காமன் பொட்டல் அவள் இனி அழமாட்டாள்
ஞானம் ஞானம் வீரகேசரி
உள்ளேதான் உள்ளாயோ ஒன்பதாவது குரல் பெயர்ச்சி
கலைமுகம்
ஞானம் தினக்குரல்
கற்பெனப்படுவது நிலவு நீரிலும் தெரியும் மாறுதல்
செங்கதிர்
ஞானம் ஞானம்
ர் தள்ளாடும் கொடிமரங்கள்
1.4 % ப க th 14
தினக்குரல்
[ * 1 til 11: 1 2 / 10 11 121
சிறுகதை
பத்திரிகை/ சஞ்சிகை"
நூறாயிரம் நுண்டுளைகளால்
கலைமுகம் இது இவர்களின் கதை
ஞானம் சட்டவாட்சி
தினக்குரல்
ர்
இருவேறு பார்வைகள் சித்திரா ரீச்சர் பார்வை
ஞானம் ஞானம் வீரகேசரி
பிள்ளைபிடிகாரரும் பணக்கார அகதிகளும்
- அண்ணாவாகிய நானும் வலியின் நிஜங்கள்
ஞானம் தினக்குரல்
இடைவெளி
ஞானம் பாடகனின் மரணம்
ஜீவநதி ர் நட்சத்திரப் பொருத்தம்
சுடரொளி ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

Page 9
பட்டி11:34:ாம்பு-7===
-ர:ாசலப்பு Ti, 1ெ4-7)
" - INாபகார்காட்டாவய 15ா.
*'': .::
14:54:-சுரேட்,
5 (பு
ன்னமும் பத்து நாட்களே பாக்கி இருக்கின்றது.
ஒரு பழக்கத்தினுள் எங்களை முற்றாக ஐக்கியமாக்கிக் கொள்வதற்கு அல்லது அதிலிருந்து விடுதலை பெற்றுக் கொள்வதற்கு 21 நாட்கள் கணக்கு என்ற ஒன்றை மனோதத்துவ உலகம் வைத்திருக்கின்றது. இந்த 21 நாட்களுக்கு பின்னால் அது பழக்கமாகி விட்டுவிடும்.
வி. ஜீவகுமாரன்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

சிறுகதை
11 in:
ம ர ண வ டட் டி ன' கவலைகள், திருமண வீட்டின் களைகள், குழந்தைப் பேற்றின் வலிகள் அத்தனைக்கும் இந்த 21 நாட்கள்தான் கணக்கு. அதிலிருந்து தேறிச் செய்யும் சடங்குகள்தான் இந்த 31நாள் கணக்குகள்.
அந்தியேட்டி,
தாய்வீடு செல்லல், துடக்குக்கழிவு, இன்னும் பல இவ்வாறு தொடரும்.
இந்தக் கணக்கு உண் மையானால் எனக்கு இன்னமும் பத்து நாட்கள் மட்டுமே உண்டு - வைதேகி யின் நினைவு களை நான் மறப்பதற்கு!
11 நாட்கள் போய் விட்டது. அல்லது போக் கடித்து விட்டேன்.
இன்னும் பத்து நாட்கள் கடந்து விட்டால் எல்லாமே என்றிருந்தது எதுவுமே இல்லாமல் போய்விடும் என்று நம்புகின்றேன்.
அப்படியே போய்விடவும் வேண்டும் என விரும்புகின்றேன்.
ஏன் சுனாமி வந்தது?... ஏன் பிரளயம் வந்தது...? ஏன் பூமி நடுக்கம் வந்தது என்று நதிமூலம் ரிஷிமூலம் பார்க்க முடியாதோ அவ்வாறுதான் இந்த முகநூல் காதல் எனக்கும் வந்தது.
35 வயது. 3 பிள்ளைகளின் தந்தை. பாடசாலையின் உப அதிபர். அது கொடுத்த மடிக்கணனி எக்ஸ்செற்றா... எக்ஸ்செற்றா வசதிகள் ...
பத்து வருடத்திற்கு முன் சாதி பார்த்து, சாதகம் பார்த்து, சீதனம் பார்த்து, பெண்பார்த்து, அம்மி மிதித்து அருந்ததி பார்த்து கோகிலாவுடன் செய்த திருமணம்தான் எனது.
முதல் 5 வருடங்களுள் மூன்று பிள்ளைகளின் பிறப்பு வளர்ப்பு என்று மாறி மாறி ஓடிக்கொண்டிருந்தாலும் அடுத்த 5 வருடங்கள் எந்த சந்த மாற்றங்களும் இன்றி தாம்பரம் பீச் மின்சார றெயின்

Page 10
மாதிரி காலையும் மாலையும் மாறி மாறி ஓடிக்கொண்டு இருந்தது.
மாதச்சம்பளம் மாதம் 25ம் திகதியே முடிந்து விட பால்காரன், கீரைக்காறி, மளிகைக் கடன்காரன் என்று கடைசி ஐந்து நாட்களும் கடனிலும், 'அப்பா முதலாம் திகதிக்கு முதல் ரூர் போற காசு கட்ட வேண்டும்' 'ரியூசன் ரீச்சர் காசுக்கு நெருக்குகின்றா...' என்று சின்னத் சின்னத் தவணைக் கடன்களும் கழுத்தை நெரிக்க சாப்பாடு தொண்டைக் குழிக்குள் இறங்குவது கொஞ்சம் கஷ்டமாகவே இருக்கும்.
பொழுது போக்கிற்கு ஒரு சினிமாப்படமோ அல்லது மெரீனா பீச்சுக்கோ செல்வதற்கு கூட வீட்டின் எந்த மூலையைத் தடவினாலும் சில்லறைக் காசுகள் கூட இராது. முன் தெருவைக் கடந்து கொஞ்சம் சென்றால் இருக்கும் கற்பகவிநாயர் கோயிலடிக்கு காலாற நடந்து சென்று வந்தாலும் அங்கு காணும் நண்பர்களுடன் எத்தனை நேரம்தான் சல்லாபித்துக்கொண்டு நிற்பது.
அவ்வழியால் செல்லும் பால்காரன் சரி, கீரைக்காறி சரி சர்வசாதாரணமாகப் பார்த்துச் சிரித்தாலும் ஏதோ கடன்காரர்களைப் பார்த்து தலை குனிவது போலத் தோன்றும்.
இந்தச் சின்ன சின்ன சினப்புகள் மூட்டும் சின்ன சின்ன பொறிகள் சிலவேளை எனக்கும் கோகிலாக்கும் இடையில் இலகுவில் பற்றி எரியத் தொடங்கும். பின் அது அணைய அடுத்த இரண்டு மூன்று நாட்கள் ஆகும். அல்லது அடுத்து முதலாம் திகதி ஆகும்.
வருமானத்துக்கு எந்த புது வழியும் இல்லாது, செலவு மட்டும் அதிகரித்துக் கொண்டு செல்லும் என் போன்ற நடுத்தர குடும்பங்களின் பொழுதுபோக்கு நண்பனாக... அல்லது நண்பியாக அமைந்ததுதான் இந்த இன்ரநெற்..... முகநூல் ... ரிவிற்றர் எல்லாமே.
முகநூல்! புதுப்புது நண்பர்கள்.. புதுப்புது அனுபவங்கள். புதுப்புது தகவல்கள்.... புதுப்புது பரிமாற்றங்கள்... இரத்த நாள நாடிகளில் புது வெள்ளம் பாய்ந்தது போல
அப்படி ஒரு அனுபவமாய் இருந்தது.
முப்பது நிமிட மதிய இடைவெளியை பத்து நிமிடத்துள் குறைத்துக் கொண்டு மற்ற இருபது நிமிடமும் கணனி உலகத்துள்ளும் என் முகநூல் நண்பர்களுடனும் சற்தான்.

முன்பெல்லாம் என் காலை மாலைப் புகையிரதப் பயணத்தின் பொழுது போக்கு யன்னல்கரைச் சீற்றும் அதில் இருந்தபடி வயல்கரைகளையும் பார்த்தபடி.... அங்கிருந்து கை காட்டும் சிறுவர்களை ரசித்தபடி செல்வதும்தான். அல்லது கையில் ஒரு கல்கியினுள்ளேயோ அல்லது குமுதத்தினுள்ளேயோ மூழ்கியிருப்பேன்.
இப்போது எல்லாம் ஐபோனும் அதில் என் முகநூல் நண்பர்களும் நண்பிகளும்தான்.
நான் வேலைக்குச் செல்லும் பொழுது என் அமெரிக்க முகநூல் நண்பர்கள் தூங்கிக் கொண்டு இருப்பார்கள். அவுஸ்திரேலிய நண்பர்கள் மதிய உணவு இடைவேளைக்குப்
போய் இருப்பார்கள்.
என் புதிய போக்கு வீட்டுக்குள் ஒரு புது அமைதியை கொண்டு வந்ததை கோகிலா கண்டும் காணாமலும் இருந்தாலும் ஒருநாள் அவளே சொன்னாள், "கவனமப்பா. உந்த பேஸ்புக்ஸால் அதிக பிரச்சனைகள் வருகுதாம்” என்று.
அதில் ஒரு எச்சரிக்கையும் என்மீது அக்கறையும் இருந்தது.
ஆனால் அது கூட எனக்கு எரிச்சல் ஊட்டுவதாய் இருந்தது.
கோகிலாவை அழைத்து எனது தோழர் தோழிகள் விபரங்களை காட்டினேன்.
"பார்த்தியா?... உலகத்தில் எத்தனை பெரிய மனிதர்கள்... எத்தனை படித்தவர்கள்...”
அத்தன பேரின் விபரங்களைக் காட்டிய பொழுது மெளனமானவே அவள் அவ்விடத்தில் இருந்து விலகி விஜய் ரி.வி. யின் மாகாபாரதத்தினுள் மூழ்கினாள்.
மீண்டும் நான் கணனியுள் மூழ்கிய பொழுது நண்பர் இணைப்புக் கோரி ஒரு விண்ணப்பம் வந்திருந்தது. பெயர் வைதேகி .. அரசு உயர் அதிகாரி. கணவன் வைர வியாபாரத்தில் நொடித்துப்போன ஒது துணிக்கடை வியாபாரி. நான்கு பிள்ளைகள்.
அழைப்பை ஏற்ற மறுகணமே வைதேகி எனக்கு மாலை வணக்கம் சொல்லிக் கொண்டு கணனித்திரையின் மூலையில் நின்றிருந்தாள்.
நானும் பதில் வணக்கம் சொல்லிக் கொண்டேன்.
சாதாரணமாக தொடங்கிய உரையாடல் முடியும் தறுவாய் வந்த பொழுது நாகரீகம் காரணமாக ஆங்கிலத்தில் ”றிகாட்ஸ் யுவர் பெற்ற காவ் (உங்கள் வாழ்வின் சரிபாதி
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

Page 11
உடையவருக்கு எனது வாழ்த்துகள்)” என ஓர் இடுகையை இட்டிருந்தேன்.
அடுத்த கணமே "எனது வாழ்க்கையில் - அது கால்பகுதி மட்டுமே” என பதில்
வந்திருந்தது.
"ஏன்?" "அதுதான் என் விதி” எனக்குள் ஒரு குறுகுறுப்பு. "உங்கள் திருமணம் காதல் திருமணமா?” “இல்லை... பேசிச் செய்தது... ஏமாந்து விட்டேன்.. பிள்ளைகளுக்காக வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்...”
"மன்னியுங்கள். உங்கள் சொந்த வாழ்வைக் கேட்டு மனதை நோகடித்து விட்டேன்.”
"இல்லை. உங்களைப் போல் நல்ல மனிதர்களின் வார்த்தை எனக்கு ஆறுதலைத் தருகின்றது”
"நன்றி. இரவு பத்தரை மணியாகின்றது. நாளை தொடர்வோம்...”
"சுவீற் றீம்ஸ்..." என்றவாறு அவள் விடைபெற்றுக் கொண்டாள். எனக்குள் ஒரு கேள்வி!
கோகிலா செய்த எச்சரிக்கை இது தானா?
திரும்பி கோகிலாவைப் பார்த்தேன்.
அவள் மகாபாரத்தினுள் தன்னை மறந்திருந்தாள்.
பாஞ்சாலி ஐவருக்குமே என குந்தி சொல்லிக் கொண்டிருந்தை கிருஷ்ணர் விளக்கிக் கொண்டிருந்தார்.
கணனியை அணைத்து விட்டுக் கட்டிலில் போய் படுத்துக் கொண்டேன்.
கண்ணை மூடிய பொழுது சுவீற் றீம்ஸ் என்ற எழுத்துகள் கண் முன்னேயும் காதுக்குள் அதன் குரலும் ஒலித்துக் கொண்டிருந்தமாதிரி ஒரு பிரமை.
கண்கள் தூங்க மறுத்த இரவு அன்று.
யாரும் எடுத்த எடுப்பில் சிகரட்டை வாயில் வைத்து சுரள் சுருளாக வளையம் விடுவதில்லை. கட்டாயம் முதல் சிலநாட்கள் புரைக்கேறியிருக்கும்.
அவ்வாறே யாரும் எடுத்த எடுப்பில் ஒரு ரம்ளர் தண்ணீரை உதட்டில் படாமல் தொண்டையினுள் ஊற்றிக் கொள்வது போல சாரயத்தை எடுத்து யாரும் வாயில் ஊற்றிக் கொள்வதில்லை.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

அவ்வாறுதான் இந்த சற் சம்பாஷணை களும்.
சின்ன சின்ன தகவல்கள்.. சின்ன சின்னத் திகட்டல்கள்.. சின்ன சின்ன எதிர்பார்ப்புகள். சின்ன வார்த்தை விளையாட்டுகள். வார்த்தைகளில் உரசல்கள். அவை தரும் ஸ்பரிசங்கள்... என்னை நான் அதனுள் இழந்து கொண்டு போய்க் கொண்டிருப்பது எனக்கே நன்கு தெரிந்தது. |
ஆனாலும் ஏதோ ஒரு எச்சரிக்கை மணியும் சிவத்த சமிக்கை விளக்கும் என்னை
எச்சரிக்கை செய்து கொண்டே இருந்தன.
மனம் இழந்து கொண்டு போனாலும் வார்த்தைகளை இழக்காமல் ஒரு கயிறிழுத்தல் போட்டி போல் சம்பாஷணை நடந்து கொண்டே இருந்தது - கால நேரம் தெரியாமல்.. காதலுக்கும் காமத்துக்கும் வேறுபாடு தெரியாமல்.... அது தொடர்ந்தது.
வைதேகியை முற்று முழுதாக நம்புவதா இல்லயைா என தினம் தினம் யோசித்த பொழுது அன்றைய அவளின் வார்த்தைப் பரிமாற்றம் அவளை மேலும் நம்புமாறு இருக்கும்.
தான் என்னைப் போன்ற ஒருவரை எத்தனையோ வருடங்கள் தேடிக் கொண்டு இருந்தாளாம்.
மீண்டும் மீண்டும் கேட்டேன் - இத்துடன் உன் தேடல் முடியுமா என்று.
இமயத்தின் உச்சியில் நின்று இனி எதைத் தேடுவேன் என என் கால்களில் சரணடைந்தாள்.
அவளுக்கு தெளிவாகச் சொன்னேன். எனக்கு இது முதலும் முடிவும் என்று.
எனக்கு இது இறுதியும் முடிவும் என்று சத்தியம் செய்தாள்.
கணனித் திரையை கிழித்துக் கொண்டு இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டோம்.
மாலை மாற்றிக் கொண்டேன்.
ஒரு மாதம் சென்றபோது, தான் முழுகாமல் இருப்பதாகச் சொன்னாள்.
நான் பயந்து போனேன்.
“ஹ... ஹ... ஹ... ஹ... ஹ.. எனச் சிரித்தாள்.” என்று உங்களை என் மனத்தில் சுமந்தேனோ அன்றிலிருந்து உங்கள் பிள் ளையை என் வயிற்றில் சுமக்கின்றேன்” கணனியில் எழுதியிருந்தாள்.
கவிதையின் இரு இறக்கைகள் என்னைத் தூக்கிச் சென்று இமயத்தின் உச்சியில் வைத்தது போல உணர்ந்தேன்.

Page 12
ஒரு பெண்ணின் முதல் ஸ்பரிசம் போல அந்த வரிகள் என் உயிரின் அடி வேரைத் தொட்டு என்னைக் குளிர வைத்தது.
அவளுடன் நான் கணனியுள் சம்பாஷிக்கும் நேரம் அதிகமாகத் தொடங்கியது.
கோகிலா பிள்ளைகளின் பாடசாலை வேலைகளுடனும் மகாபாரத மற்றும் தாயுமானவன், தெய்வம் தந்தவீடு தொடர் களுடன் நடுகோலில் தனது காலத்தைக் கழித்துக் கொண்டு இருந்தாள்.
இரவு தூங்கச் செல்லும் பொழுதும் கோகிலாவின் வார்த்தைகளின் ஊடாக வைதேகியின் குரலே எனக்கு கேட்டது.
கோகிலாவின் அணைத்தலின் போது அது வைதேகியைச் சிறைப்பிடிப்பது போலவே உணர்ந்தேன்.
பாவம் கோகிலா!
முகம் தெரியாத முகநூல் காதலின் அடுத்து படிக்கு மனம் தாவியது . வைதேகியின் முகத்தைப் பார்க்க மனம் ஏங்கியது.
நூல்: வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதிய
றோமியோவும் ஜூலியட்டும் (விமர்சன நூல்) ஆசிரியர் : சி.குமாரலிங்கம்
ஆங்கில நாடக ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர் எழுதிய றோமியோ - ஜூலியட் உலகப்புகழ் பெற்ற காதல் நாடகம். பலராலும் இந்நாடகம் ஏற்கனவே பயிலப்பட்டது. தற்போது சி. குமாரலிங்கம் இலகு தமிழில் பலராலும் வாசித் துப் பயனுறும் வகையில் விமர்சன நூலாக்கித் தந்துள்ளார். 30 பாத்திரங்களைக் கொண்டு இயங்கும் இந்நாடகம் காதலும் துன்பியலும் நிறைந்தது. ஷேக்ஸ்பியர் உலகப் பெருங்கவிஞர், நாடக ஆசிரியர். 37 நாடகங்களையும் மூன்று கவிதை நூல்களையும் வெளிக்கொணர்ந்தவர் இஎன்றதகல்களும் இந்நூலில் ஆகாணப்படுகின்றன. இலக் # கிய ஆர்வலர்களுக்கு - குறிப்பாக மாணர்வர் களுக்குப் பயன்படும் வகையில் இந்நூல்
வெளிவந்துள்ளது.
ROMEO AND UND
?கதி 23
-டேட் எக்.
இ ப 11 ந்ர்

கை விரல்கள் கணனியில் விண்ணப்பத்தை அனுப்பியது.
“படத்தைப் பார்த்ததும் என்னை வேண்டாம் என்று சொல்லி விடுவீர்களா?”
“வாயும் வயிற்றோடை இருக்கிற பெண்ணை எப்படி வேண்டாம் என்று சொல்வது?
மீண்டும் அதே ஹ... ஹ.. ஹ எனச்
சிரிப்பு.
| சிuக்கா
அடுத்த சில வினாடிகளின் மௌனம் என்னைத் துறுதுறுக்க வைத்தது.
“என்ன மெளனம்?” “பொறுங்க கணனியில் என்படத்தை தேடிக்கிட்டு இருக்கிறன்...”
"ஆறு வயதுப் படம் எல்லாம் அனுப்புறதில்லை”
“உங்களுக்கு ரொம்ப குசும்பு!" “உங்களுடன் தானே.... குசும்பு பண்ணக் கூடாதா”
"இல்லை.. இல்லை.. நீங்க பண்ணலாம்"
அதே பதிலுடன் அவளது படம் வந்திருந்தது.
ஆபீசுக்கும் வீட்டுக்கும் ஓடி ஓடி தன்வாழ்வை கடமைகளுடனும் களையுடனும் கழித்து விட்டு ஒரு நடுத்தர குடும்பத்தின் படம் வந்திருந்தது.
"படம் வந்தது” "பிடித்ததா? “ஊம்” “என்ன பதிலில் உற்சாகம் இல்லையே” “பின்னே எப்பிடிச் சொல்வது?” "நல்லாய் பிடிச்சிருக்கு
என்று சொல்லுவிங்கள் என்று எதிர்பார்த்தேன். இல்லாட்டி இத்துடன் சற்றை முடித்துக் கொள்வீர்கள் என்று நினைத்தேன்”
"எதுக்காக இப்படி தாழ்வு மனப்பான்மை. நீங்கள் விரும்பியிருந்தால் வேறு ஒரு பெண்ணின் படத்தை அனுப்பி இருக்கலாம். நாங்கள்தான் எப்போதும் சந்திக்கப் போவதில்லையே.”
"இல்லேப்பா... நேர்மையை உங்களிடம் இருந்துதானே கற்றுக் கொண்டேன்"
மனச்சாட்சி குத்தியது - ஹோலில் பிள்ளைகளுடன் இருக்கும் கோகிலாவை மறந்து அறையுள் இருந்து ஒரு பெண்ணுடன் சற் பண்ணும் என்னிடம் என்ன நேர்மையை அவள் கற்றுக் கொண்டாள்?
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

Page 13
ஆனாலும் வைதேகியிடம் இருந்து விடுபடமுடியவில்லை.
'ஒரு நாளைக்கு இந்த நேர்மை உங்களை காலால் உதைக்கும் பொழுது தெரியும்' என எழுதினேன்.
"அது பறவாயில்லை... இப்படி ஒரு பிறண்ட் சிப்பை எத்தனையோ வருடமாய் தேடிக்கொண்டு இருந்தேன் தெரியுமா?”
"ஆனால் நான் யாரையும் தேடவில்லை. நீங்களாக வந்தீர்கள். நீங்கள்தான் எனக்கு
முதல் சற்தோழி..”
"நீங்கள்தான்
எனக்கு
கடைசி சற்தோழன்...”
மனம் குளிர்ந்தது.
அவளது படத்தை மீண்டும் மீண்டும் கண்கள் பார்த்தது.
என் மனமும் சற் உலகத்தில் இதுதான் எனக்கும் முதலும் முடிவும் என உறுதிசெய்தது.
அதை அவளுக்கு தெரிவித்த பொழுது, "இப்பவே நான் செத்திடணுமப்பா...” உருகினாள்.
நானும் உருகினேன்.
பின்பென்ன வீட்டில்.. ஒவ்வீசில் .. புகையிரதத்தில் போகும்போது எல்லாம் சற்! சற்! சற்!!!
என்னதான் கடுகதியில்
செல்லும் புகையிரதம் என்றாலும் எங்கேயோ ஒரு புகையிரநிலையத்தில் டீசல் நிரப்ப நிற்பது போல எனதும் வைதேகியின் இந்த விரைவுப் பயணத்தில் முதலில் எங்கேயோ ஒன்று இரண்டு நிலையத்தில் நின்று செல்லும் வண்டியாக சென்ற எங்கள் சற் பயணம் பின்பு நீராவி இயந்திர புகையிரதம் போல எல்லா எல்லா ஸ்டேசன்களிலும் நின்று நீர் நிரப்பி ... கரி நிரப்பிச் செல்லும் புகையிரத வண்டி போல உணரத் தொடங்கினேன்.
ஒரு செய்திக்கும் அடுத்த செய்திக்கும் அதிக நேரம் எடுத்தது.
“ஏன்?”
“ரொம்ப கெவி வேர்க். இதைவிட எம்.டி. பக்கத்தில்...”
"ஓ... அப்படியா..” "சொறி டியர்.. நான் என்ன செய்ய...”
நான் அதற்கு பதில் போட முதல் மறைந்து விடுவாள்.
பின் நான் எதிர்பார்க்காத சமயத்தில் கையில் தாமரையுடன் வந்து என்னை மகிழ்விப்பாள்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

எனக்கு பொறுமையில்லை. 'எனக்கு மட்டுமா?.. நானும் விரும்பியா??'
"இது எனக்கு புது உலகம் வைதேகி. எனக்கு காத்திருக்க முடியாமல் இருக்கின்றது என்பதுதான் உண்மை”
"அப்படி என்றால் உங்கள் பாடசாலைக்கு நான் ரீச்சர் வேலை தேடி வரவேணும்”
"சுத்தம் ! என்னை நேரில் பார்க்காமலேயே என் பிள்ளையை வயிற்றில் சுமக்கின்றீர்கள். நாங்கள் இருவரும் சந்தித்தால் எங்கள் பிள்ளைகளாலேயே வகுப்பு அறை நிறைந்து
விடும்.”
மீண்டும் ஹ... ஹ.. சிரிப்பு.
வரும் போது ஆசையாக நாலு வார்த்தை பேசி என்னைக் குளிர வைத்தாலும் அடுத்த நாலு வார்த்கைகளுக்காக அடுத்த நாலு மணித்தியாலங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
அதுவே ஒரு நாள் எங்களுக்குள் சண்டையாக வெடித்தது.
பயங்கரச் சண்டை. எனக்கு என்ன உரிமை இருக்கிறது... அவளை நான் கோபிக்க?
ஆனாலும் கோபித்தேன்! நீரோடையாக ஓடிக்கொண்டிருந்த என் வாழ்வில் தானாக நுழைந்து என்னுள் அவளாகி விட்ட பொழுது என்னை அவளுக்கு கொடுத்த உரிமையில் கோபித்தேன் போலும்.
அந்த சனி, ஞாயிறு நாங்கள் இருவரும் சற் பண்ணிக் கொள்ளவில்லை.
திங்கள் கிழமை காலை இருவரும் வெள்ளைக் கொடியுடனும் வெள்ளைப் புறாக்களுடன் களம் இறங்கினோம்.
ஆளை ஆள் கட்டித் தழுவி அணைத்து ஆதரவு கொடுக்கும் அத்தனை அரவணைப்பும் எங்கள் வார்த்தைகளில் பொங்கி வழிந்தது.
அன்று முழுக்க கிட்டத்தட்ட சற்றில் இருந்தோம்.
அன்றைய நாள் முடிவில் நான் உங்களுக்கு ஒன்று சொல்லப் போறன் என்று ஒரு பீடிகையுடன் வந்தாள்.
“சொல்லுங்கோ” "சொன்னப்பிறகு கோபிக்க மாட்டீங்களே” “இல்லைச் சொல்லுங்கோ” “உம்...” "சொல்லுங்கோ...” "பயமாய் இருக்கு...” "இல்லைச் சொல்லுங்கோ.....”
11

Page 14
"நான் ஒருவருடன் மின்னஞ்சல் சற்றில் 8 வருடமாய் இருக்கிறன்..... பல தடவை எங்கள் உரையாடல் எல்லை தாண்டிப் போயிருக்கு நேரில் சந்திக்க மனம் ஏங்கிய சந்தர்ப்பங்கள் அதிகம். அது ஏதாவது தப்பில் முடியும் என்றதாலை விடுபடவும் முடியாமல் ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தேன்”
தனது மற்றைய முகநூல் நண்பர் ஒருவரிடம் தன்னை இழக்க இருந்ததை என்னிடம் சொல்லி என்னிடம் பாவமன்னிப்புக் கேட்டாள்.
எனக்கு உடம்பு எரிந்தது. "நீங்கள் கடைசிவரை
அவரை சந்திக்கவேயில்லையா”
"இந்தப் பாவத்தை மட்டும்
நான் செய்யேல்லை... செய்திருந்தால் என்னை நான் இழந்திருப்பேன்”
“இப்போது எதுக்காக எனக்கு இதைச் சொல்லுறியள்...”
"முதலில் என்னை மன்னித்து விட்டேன் என்று சொல்லுங்கள்..."
நானும் பாதிரியார் போல பாவமன்னிப்புக் கொடுத்தபடியே பாவக்கிணற்றில் இறங்கிக் கொண்டு இருந்தேன்.
"என்னை உண்மையாகவும் உரிமை யாகவும் நேசிக்கிற ஒருவருக்கு நான் எல்லா உண்மையைச் சொல்லி பழைய எல்லா
வற்றிலும் இருந்து வெளியேற வேணும்”
"வெளியேறுவதும் விடுவதும் உங்கள் விருப்பம் தானே”
“அவரிடம் இருந்து விலகுவதில் ஒரு சின்னச் சிக்கல் இருக்கு.”
"என்ன சிக்கல்?..."
"அவரிடம் கொஞ்சம் பணம் கடன் பட்டிருக்கிறன்... அதைக் கொடுக்க வேணும்”
எனக்கு எங்கேயோ இடித்தது.
என் விரல்கள் பதிலை யோசித்துக் கொண்டு இருக்கும் பொழுது அவளிடம் இருந்து, "ஆனால் இந்தப் பணத்தை உங்களிடம் வாங்கப் போவதில்லை”
"எப்படிக் கொடுப்பீர்கள்?” "பாங்கில் லோன் கேட்டிருக்கின்றேன். அது இந்தக் கிழமையுள் கிடைத்து விடும்”
இதன்பின் எனது ஆண்மை அவளைச் சந்தேகிக்க இடம் கொடுக்கவில்லை.
"நான் இப்போதே தருகின்றேன். திருப்பி தருவது பற்றி பின்பு யோசிப்போம்."
12

“இல்லை பிளீஸ்... எனக்கு உங்களின் காசு வேண்டாம்.
ஆனாலும் நான் கேட்கவில்லை.
அன்று வங்கிக்குப் போய்விட்டு சைக்கிளை மிக விரைவாகவே மிதித்து வீட்டுக்கு வந்து கணனியைத் திறந்தேன்.
“உங்க மகன் சந்தோசத்தினால் ரொம்ப வயிற்றில் உதைக்கிறான்... இப்படி ஒரு அப்பாவா அவனுக்கு என என் மனம் ஆனந்திக்கிறது...” என்று இருந்தது.
வானத்தில் ஆனந்தத்தில் மிதந்த நாள் அது.
| : itiis?''
நேற்று பாடசாலையில் மாணவர்களுக்கு இறுதிப் பரீட்சை.
அவசரவசரமாக வெளிக்கிட்டுக் கெண் டிருந்தேன்.
கோகிலா எனது சாப்பாட்டுப் பாசலைத் தந்துவிட்டு ஒரு நிமிடம் நில்லுங்கள் என்றாள்.
என்ன என்று பார்ப்பது போல நிமிர்ந்து பார்த்தேன்.
இன்று சுமங்கலி பூஜை. தாலி மாற்றிக் கோர்க்க இருக்கிறன். அதுதான் என்னை ஆசீர்வதித்துவிட்டுப் போங்கள் என என் காலில் விழுந்து கும்பிட்டாள்.
மனச்சாட்சி எங்கோ உறுத்த அவளை குனிந்து தூக்கி நெற்றியில் முத்தமிட்டு விட்டு வெளியேறினேன்.
வைதேகியிடம் இருந்து ஒரு தொலைபேசி வந்தது.
"நான் அவசர அவசரமாய் வீட்டை போறன். மகள் வயதுக்கு வந்து விட்டாள் என்று தொலைபேசி வந்திருக்கு. ஓவ்வீசில் வடிவாய் கம்பியூட்டரைப் பூட்டினனானோ தெரியவில்லை. என்ரை பாஸ்வேட்டைத் தாறன். எங்கள் சற்றை தயவு செய்து அழித்து விடுங்கள்.”
"எப்படி என்னை நம்பி உங்கள் பாஸ்வேர்டைத் தருகிறிங்கள்?”
"வேறு யாரை இனி உலகத்தில் நம்புறது?”
"ஓகேடா! நீங்கள் போய் மகளின் அலுவல்களைப் பாருங்கள்.. நான் சற்றை அழித்து விடுகின்றேன்...”
பாடசாலை வரும்வரை நான் நானாக இல்லை.
எப்படி ஒருத்தி என்னை நம்பி தனது
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

Page 15
பாஸ்வேர்டைத் தந்தாள்? அவளையா காசு விடயத்தில் சந்தேகிக்க இருந்தேனே. என்னையே நான் நொந்து கொண்டேன்.
மனச்சாட்சி உறுத்தியது.
அவளின் பேஸ்புக்கைத் திறந்து அவளும் நானும் முதல் நாள் செய்த சற்றை மீண்டும் ஒரு தடவை வாசித்துவிட்டு அழித்து விட்டு அவளின் முகநூல் பக்கத்தில் வெளியேற முயன்றபோது அவளுக்கு ஒரு நண்பரின் அழைப்பு வந்தது.
"ஏன் வைதேகி கைத்தொலைபேசியை எடுக்கவில்லை... சற்றிலும் இவ்வளவு நேரம் காணவில்லை... உங்களுக்குத் தெரியும்தானே இந்த நேரம் நான் பார்த்துக் கொண்டு இருப்பேன் என்று..."
அதிர்ந்து போனேன். "நேற்றில் இருந்து உங்களுக்கு 'ஏ' ஜோக்கு சொல்லக் காத்திருக்கின்றேன். அவளது நண்பன் சற்பொக்ஸ்சினுள் தகவலை அனுப்பிக் கொண்டு இருந்தான்.
என்னையும் அறியாமல் என் கண்கள் அவளின் நண்பர்களின் வட்டத்தையும் அவளின் நண்பர்களுடன் அவள் செய்த சற்றையும் படிக்க மனம் ஏகியது.
சரி.
பிழை.. தவறு
என்றதைத்
நூல்: நலம் பல நல்கும் நாராயணர் வெளியீடு: சர்வானந்தமய பீடம் தொகுப்பாசிரியர் : கோப்பாய் சிவம், விலை: ரூபா 150/- விஷ்ணு வழிபாட்டின் தோற்றம், வளர்ச்சி, வைஷ்ணவ நெறி, தத்துவ சிந்தனைகள், சமய வழிபாட்டு முறைகள் ஆகிய தகவல்களை ஒன்று திரட்டித் தருவதாக அமைந்துள்ளது இந்நூல். எமது நாட்டில் சிவ வழிபாடு முதன்மை பெற்று விளங்குகின்ற போதிலும் விஷ்ணுவை விரும்பி வழிபடுவோரும் உளர். விஷ்ணுவுக்கான கோயில்களும் உள்ளன. இந்நூல் சமயவாதிகளுக் "கும் உயர்தரப்
In Iாடு) பரீட்சையில்
பயம் STA இந்து சமயம், இந்து
நாகரீகம், முதலிய 4 பாடங்களைப் பயிலும் 4 மாணவர் களுக்கும் # மிகவும் பயனுள்ள
Iாபம் பாபா E2
31 : 1 4
- 1 EEEET
நூல்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

தாண்டி அவளின் நண்பர்களுடன் அவள் செய்த சம்பாஷணைகளை வாசிக்கத் தொடங்கினேன்.
கைகள் நடுங்கியது. மனம் படபடத்தது.
நான் அவளுடன் சற் பண்ண முடியாது தவித்த வேளைகளில்.. குறிப்பாக வேலை ரொம்ப கெவி. எம். டீ. நின்றிருக்கின்றார் என்று பதில் போட்ட வேளைகளில் அவள் வேறு பலருடன் சற் செய்து கொண்டு இருந்திருக்கின்றாள்.
பலரிடம் எட்டு வருடக் கதை உருண்டிருக்கிறது.
நீங்கள்தான் என் தேடலின் முடிவு என்று சொல்லப்பட்டிருந்தது.
கணவன் கையால் ஆகாதவன் என்ற புராணம் ஓதப்பட்டு இருந்தது.
எனக்கு அதுக்கு மேல் எதுவும் செய்யத் தோன்றவில்லை.
எனது முகநூலில் இருந்து அவளை நீக்கி விட்டு வீட்டுக்குத் திரும்பி வந்தேன்.
கோயிலால் கோகிலா வந்திருந்தாள்.
கையில் குங்குமத்துடன் சோபாவில் அமர்ந்திருந்தாள்.
மாற்றிக் கட்டிய புதுநூலில் அவளின் பழைய தாலி மினுங்கிக் கொண்டிருந்தது.
எனக்கு கண்கள் கலங்கிக் கொண்டு வந்தன.
“என்ன நடந்தது..?” “ஒன்றுமில்லை.”
சோபாவில் போய் அவளருகே பக்கத்தில் அமர்ந்திருந்த நான் எனக்குள் புழுங்கிக் கொண்டு இருந்தேன்.
பிள்ளைகள்ரியூசனுக்குப் போய் இருந்தால் வீடும் மிக அமைதியாக இருந்தது.
கோகிலாவிற்கு நான் தன்னிடம் சொல்லாத ஒன்றிற்காக சங்கடப்படுகின்றேன் என்று புரிந்திருக்க வேண்டும்.
புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு, "மடியில் படுங்கள்” என்றாள்.
அது எனக்கு பெரிய ஆறுதலாக இருந்தது.
என் தலையைக் ஒரு கையால் கோதி விட்டபடியே மறு கையில் தனது கையில் வார இதழை வாசித்துக் கொண்டு இருந்தாள்.
நான் அவளது முழங்காலை இறுகக் - கட்டியபடி சோபாவில் படுத்திருந்தேன்.
எனது படபடப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டு வந்தது போலிருந்தது.

Page 16
எனக்கு ஒன்று மட்டும் இன்றுவரை புரியவே இல்லை.
எதற்காக என்னிடம் தனது பாஸ்வேர்டைத் தந்து தனது முகநூலுக்குள் செல்ல அனுமதித்தாள்?
எதற்காக அவள் மற்றவர்களுடன் செய்திருந்த
சற்றை
அழிக்காமல் இருந்தாள்??
எதற்காக என்னிடம் காசுவேண்டாம் என்று சொன்னாள்??? அல்லது அது ஒரு தொழில் நுட்பமா????
என்னை அவள் தொடர்ந்தும் ஏமாற்ற விரும்பவில்லையா... அல்லது எல்லாவற்றிற் கும் விடை தெரியாது இருப்பதுதான் இந்த வாழ்வின் தாற்பரியமா?????
ஆனால் அவள் இப்போது என் முகநூல் நண்பி இல்லை.
மாமிசம் சாப்பிடுவதை நிறுத்திய பின்பு என்றோ ஒரு நாள் நல்ல மீன் குழம்புடன் சோறு உண்ண மனம் ஏங்குவது போல... மதுபானம் அருந்துவதை நிறுத்திய பின்பும் என்றோ ஒருநாள் கோடை வெயில் காலத்தில் குளிர்ந்த பியரை மனம் நாடுவது போல இப்பவும் என் மனம் இடைக்கிடை வைதேகியின் முகப்புத்தகத்தை மனம் நாடத்தான் செய்கிறது.
அதில் அவளது நண்பர்களின் தொகை கூடிக்கொண்டே இருந்தது. அதிகமானோர் மிகவும் நாகரீகமானவர்களாய் இருந்தார்கள். தொழில் அதிபர்கள் .... படித்தவர்கள்... பக்திமான்கள்...
இன்னமும் பத்து நாட்களே பாக்கி இருக்கின்றன.
ஒரு பழக்கத்தினுள் எங்களை முற்றாக ஐக்கியமாக்கிக் கொள்வதற்கு அல்லது அதிலிருந்து விடுதலை பெற்றுக் கொள்வதற்கு 21 நாட்கள் கணக்கு என்ற ஒன்றை மனோதத்துவ உலகம் வைத்திருக்கின்றது. இந்த 21 நாட்களுக்கு பின்னால் அது பழக்கமாகி விட்டுவிடும்.
இந்தக் கணக்கு உண்மையானால் எனக்கு இன்னமும் பத்து நாட்கள் மட்டுமே உண்டு - வைதேகியின் நினைவுகளை நான் மறப்பதற்கு. 11 நாட்கள் போய்விட்டது. அல்லது போக்கடித்து விட்டேன். இன்னும் பத்துநாட்கள் கடந்து விட்டால் எல்லாமே என்றிருந்தது எதுவும் இல்லாமல் போய்விடும்
14

என்று நம்புகின்றேன். அப்படியே போய் விடவும் வேண்டும் என விரும்புகின்றேன்.
ஏன் சுனாமி வந்தது?... ஏன் பிரளயம் வந்தது?... ஏன் பூமி நடுக்கம் வந்தது என்று நதிமூலம் ரிஷிமூலம் பார்க்க முடியாதோ அவ்வாறுதான் இந்த முகநூல் காதல் எனக்கு வந்ததும்!... பின்பு அதே வேகத்தில் என்னை விட்டுச் சென்றதும்!!
ஆனால் அழிவின் சுவடுகள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கின்றன.
0 0 0
கே. ஆர். திருத்துவராஜா .
கானல்நீர்
WITTI 2,
கார்த்திகையிலும் மழையிருளற்று மார்கழியும் மறைந்துபோனது புதியதோர் ஆண்டினில் மாசிமாத முற்கூறில் கடுங்குளிரினால் சில இரவுகள் போர்வைகள் தேடப்பட்டன இயற்கையும் இம்மியளவும் இரங்கவில்லை பங்குனி வெயிலின் கொடுமை சாணைக்கல்லின் பொறிகளாய் வடபுலமெங்கும் பான் போறணைகளாயின கிணறுகள் சிறுகுளங்கள் பரவைக்கடல் நீரேரி அனைத்துமே வறண்டு போயின நாவறட்சியினால் உதடுகளும் பாலைவனமானது காபற் நீள் வீதியெங்கும் தகிக்கும் வெயிலினில் கண்ணுக்கெட்டிய தொலைவில் நீர்ததும்பும் நிலை தெரியும் முன்னோக்கி சென்றால் அங்கேயும் கானல் நீரின் கதை புரியும் நாடும் நடப்பும் வாழ்வியலும் அறுவடை அனைத்துமிழந்து பல வருடங்களான தாகம் கானல் நீராய்..
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

Page 17
பொருளியல், அரசியல், விஞ்ஞானம், வரலாறு போன்ற எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் அவ்வத் துறைகளுக்கென விசேடமான எண்ணக்கருக்கள் (Concepts) உள்ளன. எண்ணக்கருக்களை உருவாக்குதல் சமூக விஞ்ஞானத் துறைகளில் கோட்பாடுகளை உருவாக்கும் பணியின் ஓர் அங்கமாகும். ஆராய்ச்சியாளர் புற உலக அவதானிப்பின் மூலம் பெற்ற தரவுகளுடன் ஆய்வுகளைத் தொடங்குகிறார். இத்தரவுகளின் அடிப்படையில் அவர் பொதுமையாக்கத்தைச் (Generalization) செய்கிறார். பொதுமையாக்கம் அருவப் படுத்திய எண்ணக்கருக்கள் (Abstract Concepts) என்ற வடிவத்தைப் பெறுகிறது. S.L. டோஷி மற்றும் பி.சி. ஜெயின் இணைந்து எழுதிய Rural Sociology என்ற நூலில் Some
கிராமியச்
முக்கிய எண்ண
Key Concepts of Rural Sociology என்ற தலைப்பில் அமையும் 4வது அத்தியாயத்தின் தொடக்கத்தில் எண்ணக்கருக்கள் என்பதன் வரைவிலக்கணம் தரப்பட்டுள்ளது. அதன் எளிமைப்படுத்திய தமிழ் மொழிபெயர்ப்பை மேலே தந்துள்ளோம்.
இந்தியாவில் கிராமிய சமூகவியல் தொடர்பாக நூற்றுக்கணக்கான ஆய்வு கள் கடந்த 50 - 60 வருடங்களில் வெளி வந்துள்ளன. ஆய்வாளர்கள் தமது ஆய்வு கள் ஊடாக பல எண்ணக்கருக்களை முன்வைத்துள்ளனர். டோஷியும் ஜெயினும் மேற்குறிப்பிட்ட நூலில் கிராமிய சமூகவியலின் முக்கிய எண்ணக்கருக்கள் சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளனர். அவற்றை பின்வருமாறு பட்டியல் படுத்தலாம்.
1. மேலாதிக்கச்சாதி(Dominant caste) 2. கிராமத்தின் ஐக்கியம் (Village unity)
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

3. சமஸ்கிருதமயமாதல் (Sanskritisation) 4. மேற்குமயமாதல் (Westernisation) 5. சிறுநெறியும் பெருநெறியும் (Little Tradition & Great Tradition)
6. வட்டாரமயமாக்கலும் சர்வமய மாக்கலும் (Parochialisation & Universalization)
இக்கட்டுரையில் மேற்குறித்த எண்ணக் கருக்கள் தொடர்பான சில விளக்கங்களைத் தருவதோடு
இவ் எண்ணக்கருக்கள் இலங்கைச் சமூகத்தினதும், குறிப்பாகத் தமிழ்ச் சமூகத்தினதும் ஆய்வுகளில் எவ் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளன என் பதையும் இவ்வெண்ணக்கருக்களின் பிர யோசனம் குறித்தும் சில கருத்துக்களைக் கூறவுள்ளோம்.
சமூகவியல் -க்கருக்கள் சில
மேலாதிக்கச் சாதி (Dominant caste)
மேலாதிக்கச்சாதி என்னும் எண்ணக்கருவை முன்மொழிந்தவர் எம்.என்.சிறீனிவாஸ் என் னும் சமூகவியலாளர் ஆவார். மைசூரின் ராம்புர என்ற கிராமம் பற்றிய ஆய்வின் மூலம் சிறீனிவாஸ் இக்கருத்தை உருவாக்கினார்.
1955இல் அவர் இக்கருத்தை ஆய்வு கிற்கு அறிவித்தார். ராம்புரா பற்றிய தமது நினைவுகளாக 1976ஆம் ஆண்டில் The Remembered Village (என் நினைவில் நிற்கும் கிராமம்) என்ற நூலை சிறீனிவாஸ் எழுதினார்.
கந்தையா சண்முகலிங்கம்

Page 18
மேலாதிக்கச் சாதி என்னும் எண்ணக்கரு கூறுவதென்ன?
டோஷி மற்றும் ஜெயின் மேலாதிக்கச் சாதி பின்வரும் மூன்று பண்புகளைக் கொண்டது என்று சிறீனிவாஸ் கருதினார் என்று கூறுகின்றனர்.
1. மேலாதிக்கச் சாதி பொருளாதார ஆதிக்கமும் அரசியல் ஆதிக்கமும் கொண்ட தாக இருக்கும்
2. சாதிப் படித்தர அமைப்பில் அதற்கு உயர்சாதி என்ற அந்தஸ்து இருக்கும்
3. மேலாதிக்கச் சாதி சனத்தொகையில் பெரும்பான்மையாக இருக்கும்
சிறீனிவாஸின் மேலாதிக்கச் சாதி என்ற கருத்து புதிய நோக்கில் தென்னிந்தியக் கிராமங்களை விளங்கிக் கொள்ள உதவியது எனலாம். தமிழகத்தில் கவுண்டர், படையாட்சி, முதலியார், பிள்ளை, ரெட்டி போன்ற மேலாதிக்கச் சாதிகள் வெவ்வேறு பகுதிகளில் பொருளாதார, அரசியல் ஆதிக்கமுடையனவாய் உள்ள நிதர்சன உண்மை வெளிச்சமாயிற்று. வன்னியர் போன்ற சாதிகளினது அரசியல் எழுச்சியும் கூட மேலாதிக்கச் சாதிகளின் எழுச்சிக்கான உதாரணங்களாகும். பிராமணிய மாதிரிகளில் (models) இருந்து வேறுபட்ட மாதிரி ஒன்றை மேலாதிக்கச் சாதி என்ற எண்ணக்கரு முன் வைக்கிறது.
இலங்கையின் யாழ்ப்பாணத்தின் வேளா ளர்களை மேலாதிக்கச் சாதி எனலாமா? மட்டக்களப்பின் முக்குவர் மேலாதிக்கச் சாதியா? அல்லது அங்கு இன்னும் சில மேலாதிக்கச் சாதிகளும் உள்ளனவா?
தென்னிலங்கையில் சனத்தொகையின் ஏறக்குறைய 50 ஆக உள்ள கொவிகம மேலாதிக்கச் சாதியா?
இவை சிந்தனைக்குரிய கேள்விகளே. மேலாதிக்கச் சாதி என்ற எண்ணக்கரு பற்றிய டோஷி மற்றும் ஜெயின் மேற்குறித்த நூலில் ஏழு பக்கங்களில் விரிவாகப் பகுப்பாய்வு செய்கின்றனர். விரிவஞ்சி இங்கே கூறுவதைத் தவிர்த்துள்ளோம். (பார்க்க பக்.72 - 79) கிராமத்தின் ஐக்கியம்
இந்திய சமூகவியலாளர்களால் கிரா மிய ஐக்கியம் என்ற எண்ணக்கருவும் பிரயோகிக்கப்பட்டது. கிராமத்தின் ஐக்கியம் சாதி, உறவு முறை (caste, kin) என்ற 16
ஏறக்குகைச் சாதனைக்குரி

அடிப்படையில் ஏற்படுவதாகவும் கூறப்படும். கிராமியத்தின் கூட்டு உணர்வு நிலை (Collective consciousness) அதன் விழாக்கள், சடங்குகள் என்பனவற்றில் வெளிப்படும் என்றும் கூறுவர்.
கிராமங்களைப்பற்றிய நுண்ணாய்வுகளைச் செய்த சமூக மானிடவியலாளர்கள் பலர் கிராமங்கள் சாதியடிப்படையில் பிளவுபட்ட சமூகங்களாக உள்ளன என்ற கருத்தையும்
கூறியுள்ளனர். .
தமிழ்நாட்டின் சிறிபுரம் என்ற கிராமத்தை ஆராய்ந்த Andre beteille என்ற ஆய்வாளர் அக்கிராமம் பிராமணர்கள், தீண்டத்தகாதவர்கள் என்ற இரு சாதிப் பிரிவினர்களாக பிரிவுபட் டிருப்பமைக் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்தைப் பற்றி ஆராய்ந்த சமூகவியலாளர்கள் சிலர் யாழ்ப்பாணத்தின் வேளாளர் சாதி கிராம மட்டத்தில் குறிச்சிகள் என்ற உட்பிரிவுகளாக பிளவுபட்டுள்ளது என்று கூறியுள்ளனர். சிலர் கிராம மட்டத்தில் ஐக்கியம் குறைவு என்ற கருத்தைக் கூறினார்கள். கென்னத் டேவிட், ஹோம்ஸ் போன்றோரும் இக்கருத்தை வழிமொழிந்துள்ளனர். மட்டக் களப்பில் கிராமங்களில் ஐக்கியம் உள்ளதா? மலையகத்தில் தோட்டம் என்ற அலகில் மக்கள் ஐக்கியப்பட்ட குழுவாக இயங்குவதற்கு ஏதேனும் தடைகள் இருந்தனவா?
வன்னியில் குடியேற்றத் திட்டங்களில் ஐக்கியம் உருவாக்கப்படுவதற்கு உதவக்கூடிய நிறுவன அமைப்புக்கள் எவை? இவை ஆய்வாளர் சிந்திக்க வேண்டிய விடயங்கள்.
சமஸ்கிருதமயமாதல் (Sanskritisation)
எம்.என். சிறினிவாஸ் அவர்களால் முன்வைக்கப்பட்ட இன்னொரு எண்ணக்கரு சமஸ்கிருதமயமாதல். இவ்விடயம் இலங் கைத் தமிழரிடையே காணப்படும் இந்து சமய மரபுகள் தொடர்பான ஆய்வுகளில் பிரயோகிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்திய சமூகவியலில் இது பிரயோகிக்கப்பட்ட முறையில் இருந்து வேறுப்பட்ட பின்னணி யிலேயே பிரயோகிக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிடுதல் வேண்டும்.
மைக்கல் றொபர்ட்ஸ் என்ற ஆராய்வாளர் இலங்கையில் சிங்கள பெளத்தர்களிடையே ஏற்பட்ட மேல்நிலையாக்கத்தை (சமஸ்கிருத
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

Page 19
மயமாதலை) தமது நூலொன்றில் விளக் கியுள்ளார். இலங்கையில் சமஸ்கிருதமயமாதல் பற்றி தமிழில் எழுதப்பட்டவற்றைப் பற்றிய மீளாய்வு, மதிப்பீடு தேவை எனவே கருதுகின்றேன். டோஷியும் ஜெயினும் சமஸ் கிருதமயமாதல் என்ற எண்ணக்கருவின் ஐந்து அம்சங்களை எடுத்துக் காட்டியுள்ளனர். (பக்.83 - 84) அதனை மிகச் சுருக்கமாகக் கீழே தருகின்றேன்.
1. சமஸ்கிருதமயமாதல் என்பது ஒரு பண்பாட்டு மாதிரி (Cultural Paradigm) கீழ் நிலையில் உள்ள சாதிகளுக்கு ஒரு மாதிரியாக (பரடைம்) உயர் சாதியின் பண்பாடு (பிராமணர், வைசியர்) அமைகிறது.
2. சமஸ்கிருதமயமாதல் இரு பிறப்பாளர் (Twice Born) எனக் கூறப்படும் உயர் சாதியின் மரபுகளை நோக்கிய நகர்வாகும்.
3. இந்தியச்
சாதியமைப்பிற்குள் அடங்காத பழங்குடிகள் (Tribals) சாதிக் கட்டமைப்புக்கு உட்படாதோர், என்பனவற்றிற்கும் பொருந்துவது.
4. சமஸ்கிருதமயமாதல் போற்றும் விழுமியங்கள், கருத்தியல், நம்பிக்கைகள் இந்திய மரபின் பாகமாக அமைந்துள்ளவை. இராமாயணம், மகாபாரதம் உபநிஷதம், பிராமணங்கள் என்பன போன்ற இந்துமத இதிகாசங்களும் இலக்கியங்களும் மேல்நிலை உயர்பண்பாட்டு விழுமியங்களை கூறுபவை.
5. சமஸ்கிருதமயமாதலை வேறு வார்த்தையில் மதுவை விலக்கல் என்றும் கூறலாம்.
குடிபோதை என்னும் தீங்கு உயர் சாதியல்லாதோருக்கு உரியதொரு பழக்கம் என்ற உட்கருத்தும் இதில் உள்ளது. டோஷியும் ஜெயினும் சமஸ்கிருதமயமாதல் என்ற எண்ணக்கருவின் குறைபாடுகள் பலவற்றை விமர்சன நோக்கில் பட்டியல் இட்டுள்ளனர். (பார்க்க 84 - 89). அவற்றை விரிவாக இங்கு
குறிப்பிடுவதை தவிர்த்துள்ளேன்.
மேலே கூறிய சமஸ்கிருதமயமாதலின் ஐந்து அம்சங்களில் இறுதியாகக் குறிப்பிட்ட மதுவை விலக்கல் என்பதோடு புலால் உண்ணாமை (சைவம்) என்ற அம்சத்தை இலங்கையின் சைவ மரபு அழுத்திக் கூறியது. இதன் பயனாக கிறிஸ்தவத்திற்கு மாறிய சிலர் கூட புலால் உண்ணாமையை இறுக்கமாகக்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

கடைப்பிடிப்பவர்களாக
இருந்துள்ளனர். இருப்பினும் இருபதாம் நூற்றாண்டின் பிற் பகுதியில் புலால் மறுத்தல் என்ற கொள்கை சைவர்களிடம் கூட வலுவிழந்து வருவதையும் காணலாம்.
மேற்குமயமாதல்
மரபு வழி இந்தியச் சமூகத்தில் ஏற்பட்ட சமூக, பண்பாட்டு மாற்றங்களை விளக் குவதற்கு எம்.என்.சிறினிவாஸ் அவர்களால் வடிவமைக்கப்பட்ட இன்னொரு எண்ணக்கரு வாக மேற்குமயமாதல் என்பதைக் கூறலாம்.
மேற்குமயமாதல் இந்தியாவின் சமூக நிறுவனங்களில் பல மாற்றங்களைப் புகுத்தியது. விஞ்ஞானம், தொழில்நுட்பம் என்பனவும் கல்வித்துறையில் மாற்றங்களும் மேற்குமயமாதலை விரைவுபடுத்தின. டோஷி யும் ஜெயினும் மேற்குமயமாதலின் ஐந்து சிறப்புப் பண்புகளை எடுத்துக் காட்டு கின்றனர்.
1. மனிதாய வாதம் (Humanitarianism)
எல்லா மனிதர்களினதும் நலன் ஓம்பல் மேற்குமயமாதலின் முக்கிய அம்சம்.
2. சமத்துவ வாதம் (Equalitarianism)
வறுமை நீக்கம், யாவருக்கும் சுதந்திரம் எல்லோரும் மனிதர் என்ற முறையில் சமத்துவமுடையவர்கள் ஆகியன சமத்துவ
வாதம் என்ற கருத்தில் அடங்கியுள்ளன.
3. சமயச்சார்பின்மை (Secularisation)
எல்லாச் சமயங்களையும் சமத்துவமாக மதித்தல், பொது வாழ்வில் சமயத்தைப் புகுத்தக்கூடாது. அரசு சமயச்சார்பற்றதாக இருந்தல் வேண்டும் என்பன இக்கருத்தில்
அடங்கியுள்ள விழுமியங்கள் 4. சமூக சீர்திருத்தம்
சட்டங்களிலும், சமூக நடைமுறைகளிலும் சீர்திருத்தத்தைக் கொண்டு வருதல்.
5. விஞ்ஞானம், தொழில்நுட்பம் என்ற இரண்டிற்கும் முதன்மையளித்தல்.
மேற்குமயமாதல் என்ற கருத்து மேற்கைப் பாவனை செய்தல் என்ற இழிவுப்பொருள் தருவது, ஆகையால் மேற்குமயமாதல் என்பதற் குப் பதில் நவீனமாதல் (Modernisation) என்ற சொல்லே பொருத்தமானது என்று யோகேந்திர சிங் என்ற அறிஞர் கூறியிருப்பதையும் டோஷி மற்றும் ஜெயின் எடுத்துக் காட்டியுள்ளனர் (பக் 93)
17

Page 20
சிறு நெறியும் பெரு நெறியும்
இது மில்டன் சிங்கர் (Milton Singer) மக்கிம் மரியற் (Mackim Marriott) என்ற இருவரால் முன்வைக்கப்பட்ட எண்ணக்கருவாகும்.
இந்திய சமூகக் கட்டமைப்பில் படிப்பறி வில்லாத சாதாரண மக்கள் அல்லது விவசாயக் குடியான்கள் (Peasantry) என்ற ஒரு பிரிவும், உயர்குழாம் (Elites) என்ற இன்னொரு பிரிவும் இருந்து வந்துள்ளன. விவசாயக் குடியான்கள் சிறுநெறியைப் பின்பற்றுபவர்கள், உயர்குடிப் பிறப்பாளர்களும் கல்வியில் சிறந்தவர்களுமான உயர்குழாம் பெருநெறியைப் பின்பற்றுவோர் ஆவார்.
நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளைத் தமிழில் எழுதிய பலர் கிராமியத் தெய்வ வழிபாடுகள் பற்றி பல ஆய்வுகளை வெளியிட்டுள்ளனர். பெளத்தம் என்ற பெருநெறிக்குள் புகுந்துள்ள சிறுநெறிகளை அகற்ற வேண்டும் என்ற கருத்து பௌத்த சீர்திருத்தவாத இயக்கத்தில் முக்கியம் பெற்றது. இலங்கையில் ஆறுமுகநாவலர் சைவசமயத்தில் புகுந்துள்ள சிறு நெறிகளை ஏற்காதவராய் அவற்றுக்கு எதிரான பிர சாரத்தை மேற்கொண்டார். வட்டார மயப்படுத்தலும் சர்வமயப்படுத்தலும் (Parochialisation And Universalisation)
இவ்விரு எண்ணக்கருக்களும் சிறு நெறி, பெருநெறி என்ற இரு எண்ணக் கருக்களுக்கு துணையாக அமையும் வகை யில் இந்திய சமூகவியலாளர்களால் பிர யோகிக்கப்பட்டுள்ளன. வட்டார மயப்படுத் தல் என்பது கிராமம் அல்லது வட்டாரம் என்ற மட்டத்தில் பெருநெறியின் மரபுகளை பரவச் செய்தலாகும். Localization என்ற சொல்லையும் இதற்கு பதிலீடாகக் கொள்ளலாம். சிறுநெறி யின் பண்புகள், சடங்குகள், வழமைகள் பெருநெறியுடன் கலத்தலை சர்வமயமாக்கல் என்று குறிப்பிடுவர். சர்வமயமாக்கல் மேல் நோக்கிய பெயர்ச்சியாகும். இதற்கு மாறாக வட்டாரமயப்படுத்தல் கீழ்நோக்கிய பெயர்ச்சி யாகும்.
சிறுதெய்வ வழிபாடுகள்
பற்றிய ஆய்வுகளோடு வடமோடி, தென்மோடி போன்ற கூத்து வடிவங்களில் வட்டார மயப்படுத்தல் சர்வமயமாதல் என்ற செயல்முறையை ஆராய் தல் முடியும்.
18

முடிவுரை
'டோஷி மற்றும் ஜெயின் எழுதிய Rural Sociology என்ற நூலின் நான்காம் அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை இக்கட்டுரையில் சுருக்கமாகக் குறிப்பிட்டேன். டோஷி மற்றும் ஜெயின் எழுதிய நூல் இந்திய சமூகவியல் சிந்தனை பற்றியது. இலங்கையின் பண்பாட்டைச் சமூகவியல் நோக்கில் புரிந்துகொள்ள இந்நூலின் நான்காம் அத்தியாயம் உதவக்கூடியது எனக்கூறவே இக்கட்டுரை எழுதப் பட்டுள்ளது.
இலங்கையின் சமூகவியல் சிந்தனையில் இந்திய சமூகவியலின் தாக்கம் பெரிதும் உண்டு. இந்திய சமூகவியலாளர்களில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர்களில் எம்.என். சிறீனிவாஸ் ஒருவர். இவர் பிரித்தானியாவின் சமூகமானிடவியலாளர்களால் உருவாக்கப்பட்ட செயல்வாதம் (Functionalism) என்ற கோட்பாட்டு மரபினைச் சேர்ந்தவர். இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ள இந்திய சமூகவியல் எண்ணக் கருக்கள் பெரும்பாலானவை செயல்வாதக் கோட்பாடு நோக்கில் அமைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. பிரித்தானிய செயல் வாதம் இலங்கையின் மானிடவியல், சமூகவியல் ஆய்வுகளில் செல்வாக்கு வகிக்கும் கோட் பாடாக இருந்துள்ளது.
மார்க்சிய சமூகவியல் செயல்வாத நோக்கிற்கு மாறானது. நியுடன் குணசிங்க, ரியுடர் சில்வா போன்ற இலங்கைச் சமூகவியலாளர்கள் மார்க்சிய நோக்கிலான சமூகவியல் ஆய்வுகளை எழுதியுள்ளனர்.
செயல்வாத நோக்கு முறை தமிழ்ச் சூழலில் பூரணமாகப் பிரயோகிக்கப்படவோ அந்நோக்கு முறையான ஆய்வுகள் பெரும் எண்ணிக்கையில் தமிழில் வெளிவரவோ இல்லை. ஆகையினால், இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணக்கருக்களின் பிர யோகம் பயன்தருவதாகும். செயல் வாதத்தை விமர்சிக்கும் முறையிலான ஆய்வுகளும் அவசியம்.
ஆதாரம் Rural Sociology S.L.Doshi & P.C.Jain Rawat Publication (1999) Reprint (2007)
0 0 0
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

Page 21
பொ4,: |
மேதி போற்றும் மேவும் தன்னில்
மேடைகள் போட்டு
பாட்டுக்கள் பாடி கூத்துக்கள் சூடிக் கும்மாளமடிப்பதால்
தொழிலாளர் துரைம் தொலைந்து போகுமோ?
முற்றம்இடது சரிகள் மட்டுமே
எஜமாஷ்களும் எடுத்தாஷ்ட
ஏலாதிபத்திய வதமரும் மேதினக் கூட்டங்கள்,
இந்த மேதினத்தை ஊர்வலங்கள் - இன்று
முகமூடிகளும் அணிந்துள்ளன எல்லா சம்மளாலும்
இந்த மே நாள் கொண்டாடப்படும்
வாருக்குரியது ."சம்தான் மேம்தால் என்ன?
கொண்டாட வேண்டுமென்ற
அவஸ்தையே தொழிலார் தத்தல்
இல்லாது போய்விட்டது! தொழிலா தலைக்கு வாங்கப்படுகிறான்!
இந்த மே தினத்தில் முதலா:) அதனை
தொழிலாயின் நன்மை பத்தி மும்மூன்று நடாத்துகிறான்
பேசப்படவில்லை. ©ტინიჟონთ
01946 - இரத்த விதையில் துரத்த
மாலாட்டம் நிறைந்த இந்த மே தினம் - இன்று
அரசியல் மேடையையே அஸ்ராட்டத்துடன்
காண முடிந்தது! உல்லாசம் காண்கிறது!
மேதினம் - ஏம் தம் கீர்த்தியையும் மேன்மையையும் இழந்து கிடக்கிறது ரிதாபமாய்....
கலைவாதி கலீல்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

புதியது
பாக:
EE8:HEEE :ா
11 HEார்பாக:
EEE
பப்பா
15கம்
பசும்படியான
பப்பாளிப்பு
HHHHHE யம் ெEEEET 71
ப = 2 E ==
Eாப்பா பாப்பா பாப்பா
கான் பரப
பாரியப்டIATபப்
ப!
EE HIEEE MEE:
கானப் பா
TE -ம் பரப்ப பட் எ:
4பு -
EHEEப்
பட ப ய க க க பகம்
பாப்பாப் பப்படம்
FHMIHHHHHHHHHHHா
EEE.
சபா
பய ப ப ய 2 22:
பாபEHEாளான்
HHEா
கே பி 44:11
பEEEEார்.
குந்தி இருந்து குரல் கொடுக்கும் துயர் விரித்த பார்வை துணிந்த பெருமூச்சு நெஞ்சு கருக்கும் வெம்பல் பிஞ்சாக உதிர்ந்து சிதறும் விடியட்டும் யன்னல் வெளிச்சத்தில் நிர்வாணமான சொல் தொடைக்கிடையே
கை கொடுத்து கூனிக்குழைஞ்சு முகம் சிவந்து வெட்கி விழி தாழ்த்தி புதுக்க இதைப்பாரன் தூதுவளை செடிமுள் இலை செல்லப் பிடிச்சு இழுக்கும் அம்மா உபதேச காண்ட அதிகாரம் நெஞ்செரிக்கும் தபசு இருந்த ஆசைகள் தத்தளிக்கும் அஞ்சு குமருக்கு அடுத்து பிறந்த பழி வஞ்சனைக்கு வகுத்த விதிக்கு அஞ்சுவதேன் ஆள் என்று தேடி அழகு வழி மறிக்கும் நாள் ஒன்று நாடி அம்மா அரண் அமைத்த ஆசாபாசக்கோட்டை சின்னா பின்னப்படுத்தும் புயலாய், அலையாதே! புழுவாய் நெளியாதே!
பயறுப்பய ம்ம்
1ா-H
பப்பHATHAHMANIMALHHHHHHHHHHEL
EHEEETHர் பாபா EL பNTHHாயர்
"EE 212 Eய பாடப் பய
கார்
பாப்பா!
ப ய வ 'பதம் :
ELHHHHார் பயபHAார்
காப்பகம்
ப பார்
பர்ட் பார் -
சோகம் சுமந்த ஒரு சொல்
0 கல்வயல் லே. குமாரசாமி

Page 22
இழப்புகளை எவ்வாறு தாங்கிக் கொள்ளலாம் சோகச் சுமைகளை எவ்வாறு சுகமான சுமைகளாக மாற்றலாம் என வாசகர்களுக்கு உணர்த்தும் இரு நூல்களை நான் அண்மையில் வாசிக்க நேர்ந்தது. சொனாலி டெரனியகல எழுதிய Wave எனும் நூலும், டனி அப்ஸ் எழுதிய The Presence எனும் நூலுமே அவை.
சொனாலி
இங்கிலாந்தில் படித்த காலத்தில் காதலித்து மணந்த சக மாணவனான ஆங்கிலேயக் கணவனையும் இரு ஆண் பிள்ளைகளையும் தாய் தந்தையரையும் சுனாமியில் இழந்து தான் மயிரிழையில் உயிர் தப்பியவர். அவர் கணவனோடும் பிள்ளைகளோடும் இலங்கைக்கு வந்திருந்த போது வழமையாகச் செல்வது போன்று யாலா வனவிலங்குச் சரணாலயத்துக்கு தாய் தந்தையரையும் அழைத்துக் கொண்டு சென்று ஒரு விடுதியில் தங்கியிருந்த வேளையில் அனர்த்தம் நேர்ந்தது. சுனாமி அலைகள் முட்டிமோதுவது கண்ட சொனாலி பதட்டத்தில் தாய் தந்தையரையும் மறந்து அவசர அவசரமாகக் கணவனையும் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு வீதியில் இறங்கி எதிர்ப்பட்ட ஜீப் ஒன்றை நிறுத்தி அதில் ஏறிச் சென்றபோது வழியில் அனைவரும் வெள்ளத்தில் அள்ளுண்டனர்.
ஏனையோருக்கு என்ன நடந்ததென அறியாது வானத்தைப் பார்த்தபடி நீரில் அள்ளுண்ட சொனாலி ஒரு மரக்கிளையைப் பற்றிக் கொண்டதால் உயிர் தப்பினார். அவ் வேளையில்
வே.தில்லைநாதன்
(C?)
DIO.

பளுப்புநிறமான எல்லையற்றசதுப்பு நிலமும் முறிந்து விழுந்திருந்த மரங்களும் மட்டுமே அவரது கண்ணுக்குத் தென்பட்டன. மீட்புப் பணியாளர்கள் அவரை அணுகிய போது கீழே ஆடை எதுவுமின்றி பம்பரம் போல் சுழன்றவாறு அவர் காணப்பட்டிருக்கிறார்.
அன்புள்ளங்களை இழந்து அதிர்ச்சியில் உறைந்திருந்த சொனாலிக்கு மனம் விட்டு அழவே
நீண்ட காலம் பிடித்தது. ஆரம்ப காலத்தில் மதுவிலும் தூக்க மாத்திரைகளிலும் தன்னைத் தொலைக்க முயன்ற அவர் ஒரு கட்டத்தில் பித்துப் பிடித்தவர் போலவும் நடந்து கொண்டிருக்கிறார். கொழும்பில் வாழ்ந்த சட்டத்தரணியான அவரது தந்தையாரும் தாயாரும் சுனாமியில் அள்ளுண்டு சென்ற பின்னர் அவரது சகோதரர் அவர்களது வீட்டை ஒரு வெளிநாட்டுத் தம்பதியினருக்கு வாடகைக்கு விட்டிருந்தார்.
அந்த வீட்டில் தானும், கணவரும், பிள்ளைகளும், பெற்றோரும் இன்புற் றிருந்த நினைவுகள் சொனாலியை அலைக்கழித்து அவரைத் துன்புறுத்த நள்ளிரவு வேளைகளில் வீட்டு வாசலில் காரை நிறுத்திவிட்டு அழைப்பு மணியை அழுத்துவதும் நேரங்கெட்ட நேரங்களில் வாடகைக்குக் குடியிருந்தவர்களைத் தொலைபேசியில் அழைத்து அவர்களைக் கலவரத்துக்குள்ளாக்குவதுமாகச் சிறிது காலம் சொனாலியின் பொழுது கழிந்திருக்கிறது. இதனால் குடியிருந்தோர் வீட்டைக் காலி செய்யா விடினும் தொலைபேசி இலக்கத்தை
மாற்ற வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப் பட்டதாக அவர் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
சோக நினைவுகளின் சுமையில் நசுங்கிப் போகாது
எவ்வாறு சொனாலி அவற்றைச் சுகமான சுமையாக மாற்றிக் கொண்டார் என்பதை அவரது நூல் அழகுறச்சித்தரிக்கிறது. டனி அப்ஸ் போன்று சொனாலி இலக்கிய கர்த்தா
அல்லர். அவரும் கணவரும் பொருளியலில் கலாநிதிப்பட்டம் பெற்றவர்கள். பல்கலைக்கழகப் பணியில் ஈடுபட்டதோடு தொடர்ந்தும் ஆராய்ச்சிப்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)
2கள்

Page 23
பணியை மேற்கொண்டிருந்தவர்கள். அவ்வா றிருந்தும் சொனாலி ஒரு கைதேர்ந்த நாவலாசிரியர் போன்று சுனாமியில் சிக்குண்ட நாளிலிருந்து மீண்டும் கற்பித்தலிலும் ஆராய்ச்சியிலும் இறங்கிய காலம் வரை நடந்த சம்பவங்களை காதல், குடும்பம் என இன்புற்றிருந்த கணங்களை இரை மீட்டுவதனூடாக விபரித்துக் தன்னையும் ஆறுதல் படுத்தியதோடு வாசகர்களையும் பிரமிக்க வைத்திருக்கிறார். 2013ம் ஆண்டில் நியுயோர்க்கில் வெளியான சிறந்த பத்து நூல்களுக்குள் இடம் பிடித்த பெருமையும்
அவரது நூலுக்குண்டு.
டனி அப்ஸ் இங்கிலாந்தில் வாழும் யூத் இனத்தவர். மார்பு நோய்ச் சிகிச்சை மருத்துவர். ஆங்கில எழுத்தாளராக கவிதை, நாவல், நாடகம், கட்டுரை எனப் பல துறைகளில் தடம் பதித்தவர். இரு நாடகங்களை மேடையேற்றியதோடு ஏழு நாவல்களையும் பதின்நான்கு கவிதை நூல்களையும் சில
நூல் : கோவைப்பதியில் சைவமும் தமிழும் ஆசிரியர்: மங்கையற்கரசி யோகேஸ்வரன். வெளியீடு: ஸ்ரீ சுப்பிரமணிய கோட்டம், கொப்பாய். விலை : ரூபா 200/- கோப்பாய் பதியின் வரலாறாக அமையும் இந்நூல் கோப்பாய் பிரதேசம் பற்றிய பன்முகப் பார்வை, ஆய்வுகள், திருக்கோயில்கள், கல்விச் சாலைகள், சான்றோர்கள், எனத் தேர்ந்தெடுக்கப்பட்டு பட்டப்படிப்புக்காக எழுதப்பட்ட நூலாகும். ஆறுமுக நாவலரின் குரு இருபாலை செனாதிராய முதலியார், வடகோவை சபாபதி நாவலர், கோவை வாணன், அ.வி. மயில்வாகனம் போன்ற சான் றோர் பெருமக்களின் பணிகளும் இந்நூலில் அடங்கியுள்ளன. இந்நூலின் முதற்பதிப்பு 1990இல் வெளிவந்தது. தற்போது இந்நூலின்
இரண்டாம் பதிப்பினை சைவத்திரு கா. சிவ பாலன் அவர்கள் பல
கோவைப்பதியில் 4 சிரமங்களை மேற்
சைவமும் தட்டி கொண்டு பதிப்பித் துள்ளார் அவரது பணியும் காலத்தால்
போற்றப்படும்.
="1" % 1-1 - |
பி EE
பா.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

கட்டுரைத் தொகுப்புகளையும் வெளியிட்டவர். பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் கண்டவர்.
ஒரு நாள் மனைவி அருகிலிருக்க பனி அப்ஸ் காரோட்டிக் கொண்டிருந்தபோது பின்னால் மின்னல் வேகத்தில் தனது காரைச் செலுத்தி வந்த இளம் பெண் ஒருவர் அவரது கார்மீது மோதியதில் கார் குடை சாய்ந்தது. தனது கார் கவிழ்ந்திருப்பதையும் ஓர் இளம் பெண் அழுதவாறு I'm Sorry, I'm Sorry என்று சொல்லியவாறே ஓடிக் கொண்டிருப்பதையும் கண்ட அவர் மனைவியை அழைத்து "ஜோன் உனக்கொன்றுமில்லையே?" என்று திரும்பத் திரும்பத் கேட்டும் மனைவியிடமிருந்து பதிலேதும் வரவில்லை.
அவரது உதவிக்கென ஓடி வந்தவர்களிடம் "நான் ஒரு டாக்டர், எனக்கொன்றுமில்லை." என்று கூறிய அவர் தன்னை ஒரு தாதி என அறிமுகப்படுத்திய பெண்ணிடம் மனைவியின் நாடித்துடிப்பைப் பார்க்குமாறு கேட்டிருக்கிறார். “அவரது நாடித் துடிப்பு அடங்கிவிட்டது" என அந்தத் தாதியிடமிருந்து பதில் கிடைத்தது. பலத்த காயங்களுடன் டனி அப்ஸ் தப்பித்துக் கொண்டாலும் எழுபத்தெட்டு வயதான மனைவி
அந்த இடத்திலேயே உயிர் நீத்திருந்தார்.
டனி அப்ஸ் தனது இழப்பினை எவ்வாறு எதிர்கொண்டார் என்பதை நாட்குறிப்பு வடிவில் அமைந்த அவரது நூல் விளக்குகிறது. பிரிவுத்துயர் எந்த வயதினரையும் தாக்கும் வல்லமை படைத்தது. சமுதாயத்தில் பெரும்பாலும் வயதானவர்களின் உணர்வுகள் கவனத்துக்குட்படுத்தப் படுவதில்லை. சோக்கிரட்டீஸ் வயதானவர்கள் பற்றிக் குறிப்பிடும்போது "அவர்களது கண்களில் நல்ல விடயம் எதுவும் படாது பழிவாங்கும் சுபாவம் கொண்டவர்கள், சந்தேகப்பிராணிகள், அற்பத்தனம் மிக்கவர்கள். இத்தகைய தன்மையினால் அவர்கள் அரசியல்வாதிகள் ஆவதற்கே இலாயக்குள்ளவர்கள்." என்று கூறியிருக்கிறாராம்.
வயதானவர்களின் துயரங்களை வாசகர் பெரிதும் கணக்கிலெடுப்பதில்லை என்பத னாற் போலும் சொனாலியின் நூலைப் போன்றில்லாது சோகத்தையும் தாண்டி வாசகர்களை ஓர் உயர்ந்த தளத்துக்கு இட்டுச் செல்கிறது டனி அப்ஸின் நூல்.
டனியின் மனைவி ஓவியங்கள் பற்றிய வரலாற்றாசிரியர். பல நூல்களை எழுதியவர். அத்துடன் நில்லாது கணவனின் நூல்களை
இதில் படம் 0091-100 கார்
21

Page 24
அச்சில் பொறித்தும் உதவியவர். கணவரது கவிதா நிகழ்வொன்றில் கலந்து மகிழ்ந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் 2005ம் ஆண்டு அவர் அந்த விபத்தில் உயிர் நீத்தார்.
தனது வலது கரமாக இருந்த மனைவியின் மறைவுக்குப் பின்னர் தினக்குறிப்பு வடிவில் அவர் எழுதிய The Presence என்ற நூல் படைப்பாளிகள் பற்றியும் படைப்புகள் பற்றியும், மருத்துவம் பற்றியும், மனித உறவு பற்றியும் பேசினாலும் ஏதோ ஒரு வகையில் மறைந்தவர் பற்றிய நினைவுகள் நூலில் நீக்கமற நிறைந்திருப்பது வியக்கத்தக்க
அம்சம் எனலாம்.
வெளிப்படையாகவும் அரிதாக நூலாசிரியர் தனது கவலையை வெளிப்படுத்தியிருக்கிறார். “மௌனம் மௌனத்தைச் செவிமடுக்கிறது" அநேகமாக ஜோன் மேல் மாடியிலிருந்து வாசித்துக்கொண்டோ எழுதிக்கொண்டோ இருப்பாள். நான் கீழே எனது பணியில் மூழ்கியிருப்பேன். அந்த அமைதி இன்று மாற்றம் பெற்றுவிட்டது. அன்றைய அமைதிக்கும் இன்றைய அமைதிக்குமிடையே தான் எத்துணை வேறுபாடு,” என ஓரிடத்தில்
அவர் குறிப்பிடுகிறார்.
அவ்வப்போது பனி அப்ஸ் தனிமையில் வடித்த கண்ணீர் பற்றிக் குறிப்பிட்டாலும் மற்றவர்களோடு சோகத்தை எவ்வாறு பகிர்ந்து கொண்டார் என்பதையும் காட்டுகிறார். ஒரு ஞாயிறு காலை அவர் வழமை போல் உலாவச் சென்ற போது ஒரு வயதான மாது அவரை நோக்கி நீங்கள் மிஸ்டர் அப்ஸ் தானே? என்று கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டதும், “உங்கள் மனைவியின் மரணம் குறித்துக் கேள்வியுற்றதும் நான் உங்களுக்கு எழுத இருந்தேன்.” என்று கூறியவர் சற்றுத்தயங்கி, “போன டிசம்பர் மாதம் எனது கணவரும் இறந்துவிட்டார்” என்றாள். "அதைத்தாங்கிக் கொள்வது அவ்வளவு எளிதாக இருக்காது, இல்லையா?” என டனி கேட்க ஒரு சில விநாடிகள் எதுவுமே சொல்ல முடியாது தவித்த இருவரும் கட்டித் தழுவி அந்த அணைப்பிலேயே தமது சோகத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
கனதியான விடயங்கள் குறித்துக் கூறும் நூலாசிரியர் வேடிக்கைக் கதைகள் கூறவும் தவறவில்லை. அவற்றுள் ஒன்று ஞானம் வழங்கிய கொற்றாவத்தையின் கதைகள் போலச் சுவாரஸ்யமானது. காலம் சென்ற மாபெரும் எழுத்தாளர் ஜேம்ஸ் ஜொய்ஸ் 22
:11:34:18

நூல் : விவிக்த பதாவலி
(சம்ஸ்கிருத வகைச்சொல் விளக்கச் |சொற்களஞ்சியம்)
வெளியீடு: சர்வானந்தமய பீடம் தொகுப்பாசிரியர்: பிரம்மஸ்ரீ ச. பஞ்சாக்ஷர சர்மா
விலை: ரூபா 150/-
இந்நூல் சம்ஸ்கிருதச் சொற்களுக்கு விளக்கம் தருகிறது. கலைக்களஞ்சியம் போன்ற ஒரு சொற்களஞ்சியம். அகராதியில் சொல்லுக் குப் பொருள் தேடுவதாயின் சொல் தெரிந் திருக்கவேண்டும். ஆனால் சொல்லே தெரியாத நிலையில் சொல் வெண்டுபவர்களுக்கு 1 இந்நூல் ஒரு வரப்பிரசாதம்.
அன்றாட வாழ்வில் 3 நமக்குத் தேவையான சம்ஸ்கிருதச் சொற் களுக்கு விளக்கம் தருகின்ற இந்நூல் 31 அத்தியாயங்கள் கொண்டது. மிகவும் பயனுள்ள ஒரு நூல்.
('அருணன்
வவித் த சகு
சேப்த க
டிங் - குறும் காதயாத்
WWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWWW
சொற்களஞ்சியம்.
(CX)-4 தேர்தல்x x3)
பெ
சர்க்கார்ர் မိထားလာကအသာအယာထဲလဲက်
மிகவும் இரசித்த கதை இது: ஒரு தீவை வசிப்பிடமாகக் கொண்ட கிழவன் ஒருவர் ஒரு நாள் தனது படகில் தான் முன்னர் ஒருபோதும் சென்றிராத ஒரு நகரத்துக்குச் சென்று தான் ஒரு நாளும் கண்டிராத ஒரு கைக் கண்ணாடியை வாங்கினார். அவர் அதைப் பார்த்தபோதெல்லாம் "அப்பா" என்று ஆச்சரியத்துடன் முணுமுணுப்பார். அவர் அவ்வப்போது கண்ணாடியைக் கையிலெடுத்து, "அப்பா, அப்பா” என மகிழ்ச்சியுடன் அழைத்துவிட்டு மீண்டும் தனது கோட்டுப் பைக்குள் வைத்துவிடுவார். இதை அவதானித்து வந்த அவரது மனைவி ஒரு நாள் சந்தேகம் வலுத்த நிலையில் திருட்டுத்தனமாக அவரது கோட்டுப் பையுள் கையை விட்டு கைக் கண்ணாடியை எடுத்துப் பார்த்தாள். பார்த்து நிம்மதிப் பெருமூச்சு விட்ட அவள், "போயும் போயும் அவர் ஒரு > கிழவியைத்தானே பார்க்கிறார்.” என்றெண்ணி மனச் சஞ்சலம் நீங்கினாள்.
வேடிக்கையான இந்தக் கதை இலக்கிய விமர்சகர்கள் மீதான ஒரு விமர்சனம் என்பதை அறியும் போதே அதன் ஆழம் எமக்குப்புரியும்.
0 0 0
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014

Page 25
ஆண்
இளைஞனாக இருக்கும் காலத்தில் தனது காமத்தின்
வீரியத்தால் தனக்குரிய பெண்ணை வசப் படுத்தி வைத்திருக்கலாம் என நினைக்கிறான். மத்திய வயதில் பணத்தால் அது முடியும் என மனம் சொல்லுகிறது. வயதான காலத்தில் பிள்ளைகள், குடும்பம் என்பன பெண்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும் என அவன் தீர்மானிக்கிறான்.
இப்படியான ஆண்களின் சிந்தனையைத் தாண்டிச் செல்லும் அன்னா கரினாக்கள் ரஷ்யாவில் மட்டுமல்ல இலங்கையின் ஒவ்வொரு கிராமங்களிலும் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு எண்பதாம் ஆண்டுகளில் கிடைத்தது. அந்த அனுபவம் மிகவும் வித்தியாசமானது.
மருத்துவர்களுக்கு மட்டுமே இறந்த மனிதர்களின் உடலை வெட்டி உள்ளுறுப்புகளைக் கூறாக்கி பார்க்கும் அனுபவம் கிடைக்கும். மற்றவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தாலும் அது மனதிற்கு உவப்பானதாக இருக்காது. பலரால் கண் திறந்து பார்க்கவும் முடியாதது
தென்னிலங்கையின் சிறிய நகரம் ஒன்றில் அரசாங்க மருத்துவராக இருந்த நண்பன் குமாரின் வீட்டில் சிலகாலம் இருந்தபோது அவன் இறந்த உடலைக் கூறுபோடும்போது பக்கத்தில் இருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்குக் ஏற்பட்டது
அது ஒரு விவசாயிகள் வாழும் சிறிய நகரம் நகரத்தைச் சுற்றி பதினைந்து கிலோ மீட்டர் சுற்றி உள்ள கிராமங்களுக்கு இந்த நகரமே இதயம். மருத்துவமனை, மருத்துவர் குடியிருப்பு, இரயில்வே நிலையம் மற்றும் கடைகள் இருப்பதனால் அந்த நகரத்திற்கு விவசாயிகள் தங்களின் நாளாந்த தேவைகளின் நிமித்தம் அங்கு
நே
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

"ாங்ர-பயண கம்
பொலிடோல்
வருவார்கள். அந்த நகரத்தில் நான் மிருக மருத்தவராக இருந்த காலத்தில் அங்கு குமார் அரசாங்க வைத்தியசாலையில் மருத்துவராக இருந்தான். ஏற்கனவே பல்கலைக்கழகத்தில் நாம் நண்பர்களாக இருந்ததால் எமது நட்பு
அங்கும் நீடித்தது.
ஒரு ஞாயிற்றுக்கிழமை. இருவருக்கும் விடுமுறைநாள். வெளியே கடும் வெய்யில், தாவரம் விலங்குகள் என்ற பேதமற்று வறுத்துவாட்டிக் கொண்டிருந்தது. எங்கும் போகாமல் மதிய உணவின்பின்
சிறிய குட்டித் தூக்கத்தை போட்டுவிட்டு மாலையில் வெய்யில் தணிந்த பின்பு வெளியே ஒரு நண்பரின் வீடு செல்வதாக எமது திட்டம் இருந்தது.
மருத்துவமனையில் அம்புலன்ஸ் சாரதியாக சைமன் அவருக்கு நாற்பது வயதிருக்கலாம். பின் பக்கம் முடியை வாரிய தலைமயிர். வெள்ளைச்சட்டை
எப்போதும்
சன்
23

Page 26
அணியும் மனிதர். குடும்பம் கண்டியில் இருப்பதால் தனது ஓய்வு நேரத்தை எங்களோடு கழிப்பார். எப்பொழுதும் சிரித்தபடி, ஊதியம் வாங்காத சிங்கள வாத்தியாராக அவர் எங்களுக்கு இருந்தது மட்டுமல்லாமல் எங்களுக்கு பல உதவிகளும் செய்வார். எங்களுக்கு அவர் வலதுகை எனவும் சொல்லலாம்.
அன்று நாட்டுகோழியை உரித்து சிறு துண்டுகளாக வெட்டித் தந்துவிட்டு பக்கத்தில் இருந்த மருத்துவ மனைக்குச் சென்றுவிட்டார். அவரை நாங்கள் சமைப்பதற்கு அனுமதிப்பதில்லை. அதற்குப் பெரியகாரணம், மனிதன் கோழியில் எதையும் எறிந்துவிடக்கூடாது என்ற சிக்கனமான பொருளாதார கொள்கையுடையவர்.
சிலகாலத்துக்கு முன்பாக ஒரு வேலைநாளில் கோழிக்கறி வைக்கவோ என அவர் கேட்டபோது சரி என கூறிவிட்டோம். மதியம் வந்து சாப்பிடுவதற்காக கோழி இறைச்சியை கரண்டியில் எடுத்தபோது கோழித்தலை சிவப்பு கொண்டையுடனும், மஞ்சள் அலகுடனும் கரண்டியில் வந்தது. கொஞ்சம் அடியில் கரண்டியை மீண்டும் விட்டபோது கோழியின் பாதங்களும் வந்தன. எங்களால் சாப்பிட முடியவில்லை. அதன்பின்பு சமைப்பதற்கு சைமனுக்கு தடை விதித்துவிட்டோம். கோழி உரித்து இறைச்சி வெட்டுவதோடு அவரது வேலை முடிவடைகிறது.
இறைச்சி சமையலில் நான் அனுபவசாலி என்பதால் கோழிக்கறியை
முதலில் தேங்காய்ப்பாலில் வதக்கி சிறிதளவும் தண்ணீர்த்தன்மை இல்லாமல் சமைத்ததும் குமார் தனது பங்கிற்கு பருப்பை பால்கறியாக்கினான். அவன் மரக்கறி உணவு மட்டும் உண்ணும் குடும்பத்தில் இருந்து வந்தவன். என்னோடு இருந்த காலத்தில் தொட்டுக் கொள்வதற்கு மட்டும் மச்சம், மாமிசத்தை பாவிப்பான்.
இப்படியாக வாரத்தில் ஒருநாள் மட்டும் ஆறுதலாக மதியஉணவருந்த முடியும் என்பதால் உணவருந்திவிட்டு பேசிக்கொண்டிருந்தோம். வயிறுபுடைக்க தின்றதால் ஹோலில் இருந்த இடத்தில் இருந்து எழுந்திருக்க முடியாதிருந்தது.
வீட்டுக் கதவில் பலமாக தட்டப்படும் சத்தம் வந்ததும் எழுந்து பார்த்தபோது
24

iltion:!!:iiiiiiiiiiiii'!
எமக்கு ஏற்கனவே பழக்கமான பொலிஸ் இன்ஸ்பெக்டரும் அவரருகே இரண்டு பொலிஸ் உத்தியோகத்தினரும் நின்றனர். அவர்களுடன் அம்புலன்ஸ் சாரதி சைமனும் நின்றார்.
"ஐயாவுக்கு வேலை வந்திருக்கு" என சைமன் குமாரிடம் சொல்லிக்கொண்டு உள்ளே வந்தார். இன்ஸ்பெக்டர் கதவருகே தனது அகல, உயரமான உடலால் முற்றாக கதவை அடைத்தபடி நின்றுகொண்டு, "டொக்டர் ஒரு பெண் இரவு புல் எலிய என்ற இடத்தில் இறந்து விட்டாள். அவளது உடலை போஸ்ட்மோட்டம் பண்ணவேண்டும்” என்றார்.
பெரிய நகரங்களில் சட்டமருத்துவ அதிகாரி என தனியாக இருப்பார்கள். ஆனால் சிறிய நகரங்களில் அரசாங்க மருத்துவரே போஸ்ட்மோட்டம் செய்வார்கள். சிக்கலான கொலை விடயங்கள் கொழும்புக்குச் செல்லும்.
குமார் என்னை தன்னுடன் வரும்படி கேட்டான்.
சிறிது தயக்கமாக இருந்தாலும் உடை மாற்றிவிட்டு ஜீப்பில் ஏறினேன். கூடவந்த சைமனது கையில் ஒரு தோல் பையிருந்தது
வழி எங்கும் வயல்வெளிகளும், வைக்கோலினால் வேயப்பட்ட குடிசை வீடுகளும் இடையில் சில ஓட்டு வீடுகளும் என மாறிமாறி வந்தன. பங்குனி மாதமானதால் நெற்கதிர் விளைந்து அறுப்பிற்கு தயாராக தலைசாய்ந்து கொண்டு காற்றில் சரசரத்தன. மாத இறுதிக்குள் அவை அறுக்கப்பட்டு புதுவருடத்திற்கு முன்பு விற்கப்படும். இந்தப்பகுதி மக்கள் சித்திரை புது வருடகாலத்தில் கை நிறைய பணம் வைத்திருப்பார்கள். ஆனால் மாதங்கள் செல்லச்செல்ல அவர்களிடம் பணம் குறைந்து வருட இறுதியில் பானை சட்டிகளை மட்டுமல்ல பெண்கள் தமது உடைகளைக் கூட அடவு வைப்பார்கள். அந்தப்பகுதியில் பெண்களின் உடைகளை அடவுக்கு வைத்து பணம் கொடுக்கும் மனிதரையும் எனக்குத்
தெரியும்.
ஒரு மணிநேரம் ஜீப்பில் பிரயாணம் செய்து அந்தக் கிராமத்தை அடைந்தோம்.
வசதியான ஓடு போட்ட பெரிய வீட்டின் முன்றலில் தென்னைமரங்களின் இடையில் ஜீப் நிறுத்தப்பட்டது. நான் பார்த்த காட்சி
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

Page 27
-
"நால் கடந்த வருட ( செய்தேன். ஆனால் சீ கர்ப்பமாகியிருந்தாள்.” - என்
"அதுதான் இரண்டாவது முறை (எனக்கேட்டேன்.
"தற்கொலைக்கு அதுதான் கா பொலிடோல்தானே என்றுதா
கேட்டார்கள் அதனால்
கொடுத்தேன்.” என்
"இரு"க்கு,தா நி
என்னை அதிர வைத்தது. அந்த வீட்டிற்கு நான் சில நாட்கள் முன் வந்து ஓர் இரவு தங்கி இருக்கிறேன்.
எனக்கு ஏற்கனவே அறிமுகமான பொடிசிங்கோ நின்றிருந்தார். அவரது கையில் விலங்கு. அவரது இரண்டு பிள்ளைகளும்: பெண்குழந்தைக்கு மூன்றுவயது ஆண்குழந்தை ஐந்து வயது, அழுதபடி பொடிசிங்கோவின் கால்களைக் கட்டிப்பிடித்தபடி நின்றார்கள்.
எங்களை அழைத்துக் கொண்டு வந்த இன்ஸ்பெக்டர் அந்த வீட்டின் பின்பகுதிக்கு எம்மை அழைத்துச் சென்றபோது அங்கு பொடிசிங்கோவின் மனைவியின் உடல் மரக்கட்டிலில் கிடத்தப்பட்டு இருந்தது. அந்த உடலின் தலைமாட்டில் இரண்டு பொலிசார் நின்றார்கள். அந்த மரக்கட்டிலருகே உள்ள முக்காலியில் ஒரு பொலிடோல் போத்தல் காலியாக இருந்தது.
இன்ஸ்பெக்டர் குமாரைப் பார்த்து “இதே இடத்தில் தரையில் இரவு விழுந்து இறந்து கிடந்தாள். அருகில் இந்த பொலிடோல் போத்தல் கிடந்தது. வழக்கம்போல் நிறை தண்ணியில் படுத்த பொடிசிங்கோ காலையில்தான் உடலைப் பார்த்திருக்கிறார்.” என்றார்.
மரணித்திருக்கும்
சீலாவதிக்கும் பொடிசிங்கோவிற்கும் எதுவித பொருத்தமும் 7 இல்லை. அந்தப் பிரதேசத்திலே பார்ப்பவர் கண்களை பறித்தெடுக்கும் சிவப்பு நிறமும் அழகான கண்களும் கொண்டவள் சீலாவதி. பூப்போட்ட மலிவான பருத்தி உடையை இடையில் சுற்றி அவள் நடப்பது மிதக்கும் பூந்தோட்டமாக ஆண்களுக்குத் தெரியும். விவசாயக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

தான் ம் வசக்டமி லாவதி மூன்று மாத றான் குமார். ற கையை விட்டு தேடினாயா?
ரணம் மரணத்திற்கு காரணம்,
ன் என்னிடம் பொலிசார் - அதையே எழுதிக் எறான் குமார்.
அவளது தோரணை பாவனை நகரத்துக்குரியது. இதற்கு நேர்மாறாக பொடிசிங்கோ மெலிந்த உயரமானவர். கிராமத்து வெப்பத்தில் கருமையாக வறுத்தெடுத்த நிறம். இதெல்லா வற்றையும்விட மனிதன் இரவானதும் குடியில் கிராமத்து குளத்தின் மீனாகிவிடுவார்.
இன்ஸ்பெக்டர் மீண்டும் “எங்களுக்கு சீலாவதியின் மரணத்தில் சந்தேகமில்லை. ஆனாலும் தற்கொலை என உறுதிப்படுத்தும் வரை பொடிசிங்கோவை விடுவிக்க முடியாது.” என்றார்.
"போஸ்ட்மோட்டம்
செய்தால்தான் என்னால் உறுதிப்படுத்தலாம். அது எப்படி இந்த இடத்தில்? பிள்ளைகள் கணவன் உறவினர் நிற்கும் போது?” - எனச்சொன்ன குமார் தயக்கத்துடன் பொலிடோல் என்ற அந்த விவசாய கிருமிநாசினியை மணந்து விட்டு முகம் சுழித்தான். பின்பு சடலத்தின் அருகில் சென்று வாயை முகர்ந்து விட்டு “மணம் பொலிடோல் மாதிரி இருக்கிறது.” என்றான்.
அந்தக் கிராமத்து மக்களும் திரண்டு விட்டர்கள். பிரேதத்திற்கு அருகே வராது விட்டாலும் வீட்டுக்கு முன்னால் பொடி சிங்கோவோடு பேசிக்கொண்டு நின்றனர்.
குளிருட்டப்பட்ட பிண அறை இல்லாத மருத்துவமனையானதால் பிரேதத்தை எடுத்துக் கொண்டு வந்தும் பிரயோசனமில்லை. வீணாக பிரேதத்தை கொண்டலைவதுதான் மிச்சம். அந்த இடத்தில் வைத்துத்தான் பரிசோதிக்கவேண்டும்.
இப்பொழுது நிலைமையை புரிந்து கொண்ட சைமன் - பொலிசாரிடம் "சேர்
25

Page 28
உறைய சிமிடத்தில் வந்து அது அந்?
இரண்டு சேலைகளைக் கொண்டுவரச் சொல்லுங்கள்" என்று சொல்லிவிட்டு சிறிது தூரத்தில் இருந்து நான்கு கம்புகளை எடுத்துக்கொண்டு வந்து சீலாவதியின் சடலம் இருந்த கட்டிலை சுற்றி நட்டார்.
குழந்தைகளையும் பொடிசிங்கோவையும் மற்றவர்களோடு தூரப்போகும்படி கூறும்படி இன்ஸ்பெக்டரிடம் கேட்டதும் அதை அவர் மற்றைய பொலிசாரிடம் கூறினார்
ஐந்து நிமிடத்தில் இரண்டு வெள்ளைச் சேலைகள் கொண்டுவந்து பிரேதத்தை சுற்றிக் கட்டியாகிவிட்டது. இப்பொழுது அந்த இடம் கூரை மட்டுமற்ற பிரேத அறையாகியது. சைமன் தான் கொண்டு வந்த பையை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றார். பொலிஸ் இன்ஸ்பெக்டரும் நாலு பொலிசாரும் இடத்தை விட்டு நகர்ந்தனர்.
குமார் உள்ளே சென்றதும் நானும் உள்ளே சென்றேன். மிருங்களை வெட்டிய எனக்கு மனிதர்களை எப்படி மருத்துவர்கள் அணுகுகிறர்கள் என்ற ஆவல் இருந்தது. சைமன் சீலாவதியின் சிவப்பு மேலாடையை பெண் குழந்தையின் உடையின் பொத்தான்களை ஒரு தந்தை குளிப்பாட்டுவதற்கு கழற்றுவதுபோல் லாவகமாக கழற்றிய பின்பு மார்புகச்சையை விலக்கி கழுத்துவரை ஒதுக்கினார். மார்புகச்சை மறைத்த முகத்தைத்தவிர உடல் நிர்வாணமாக இருந்தது. பிள்ளைகளைப் பெற்ற அடையாளமாக வானத்து மின்னலாக நெளிந்த கோடுகள் சில் நடுவயிற்றில் இருந்து இடையில் சென்று மறைந்தன. என்னால் பார்க்க முடியவில்லை. தலையை சிறிது திருப்பினேன்.
"மனிதர்களும் ஆடையை அகற்றியதும் உடலில், செயலில் மிருகங்கள்தான்” எனச் சொல்லிக்கொண்டு நடு வயிற்றில் நெஞ்சின் கீழ் பகுதியில் தனது கறுப்பு போல் பொயிண்ட் பேனையால் குமார் கோடு போட்டான்.
அந்த இடத்தில் சைமன் கையுறை அணிந்தபடி தேர்ந்த சேர்ஜன்போல் வெட்டியதும் கரிய திரவம் சிறிது வெளிவந்தது.
"இன்னும் கொஞ்சம் மேலே" நெஞ்சு நோக்கி அந்த வெட்டு நீள மாகியது.
முழங்கைவரை சிவப்பு இரப்பர் கிளவுஸ் அணிந்த கையை வயிற்றின் உள்ளே விட்டு இரைப்பையை மெதுவாக வெளிக்கொணர்ந்து
26

அதில் ஒரு சிறிய வெட்டு வெட்டும்படி கேட்டபோது கத்தியின் கூர் நுனியால் சிறிய ஓட்டை போட்டார் சைமன். -
மஞ்சள் நிறத்தில் திரவமாக பித்தச்சாறுடன் இரவுச் சோறு மணியாக வெளிவந்தது. சாப்பிட உடன் இறந்திருக்கவேண்டும். குமார் அந்த திரவத்தருகே முகத்தை வைத்து 'பொலிடோல்' என்றுவிட்டு மீண்டும் கையை உடல்குழியுள் விட்டான்.
ஐந்து செக்கன்கள் உள்ளே ஏதோ தொலைந்த பொருளை தேடுவது
போல் தேடினான்.
'விடயம் முடிந்தது'
பையில் இருந்து ஊசியை எடுத்து கிட்டத்தட்ட சாக்கு தைப்பது போல் வேகமாக உடலைத் தைத்துவிட்டார் சைமன்.
ஒரு துளி இரத்தமோ உடல் திரவமோ சிந்தாமல் மீண்டும் அவளது உடையை சீர் செய்து பொத்தான்களை கழட்டிய லாவகத்துடன் போட்டார்.
கிட்டத்தட்ட பத்து நிமிடங்களில் குமாரும் சைமனும் கையை கழுவினர்.
"பொலிடோல்தான் என நான் அத்தாட்சி செய்கிறேன்” என்று சொல்லிய குமாருடன் ஜீப்பில் ஏறினோம்.
பொடிசிங்கோவின் கையில் இருந்த விலங்கு கழற்றப்படுவது எனக்குத் தெரிந்தது.
பொலிசாரும் இன்ஸ்பெக்டரும் அங்கு நின்றார்கள்.
வீடு வந்ததும் சைமன் உபகரணங்களக் கொண்டு மருத்துவமனையை நோக்கி நடந்தார்.
தனித்துவிடப்பட்டதும் குமார் - "அந்த பொடிசிங்கோவைத் எனக்குத் தெரியும். அவனை பலதடவை மருத்துவராக சந்தித்ததுடன் அவனுக்கு ஒப்பரேசனும் கடந்த வருடம் செய்தேன். அவன் பாவம் என்றான்.
"எனக்கும் தெரியும் கடந்த கிழமை அவனது வீட்டில் நான் எனது உதவியாளர் சமரசிங்காவுடன் தங்கினேன்" என்றேன்.
"நான்தான் கடந்த வருடம் வசக்டமி செய்தேன். ஆனால் சீலாவதி மூன்று மாத } கர்ப்பமாகியிருந்தாள்." - என்றான் குமார்.
"அதுதான் இரண்டாவது முறை கையை விட்டு தேடினாயா?” எனக்கேட்டேன்.
"தற்கொலைக்கு அதுதான் காரணம் மரணத்திற்கு காரணம் பொலிடோல்தானே என்றுதான் என்னிடம் பொலிசார் கேட்டார்கள்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)
-

Page 29
அதனால் அதையே எழுதிக் கொடுத் தேன்.” என்றான் குமார்.
"எனக்கு சந்தேகம் எனது உதவியாளர் மீதுதான்” எனச் சொன்னேன்.
"யார் சமரசிங்காவா?”
சில்
நாட்களுக்கு
முன்பு மாலை முன்று மணியிருக்கும். அன்றைய வேலைகள் முடிந்தன என நினைத்து தினப்பத்திரிகைளை புரட்டிக்கொண்டிருந்தேன்.
அடக்கமான சிரிப்புடன் முன் தலைமயிரை கையால் பின் தள்ளியபடி வந்தான் சமரசிங்கா. எனது சக உதவியாளன். விவசாய உத்தியோகத்தன். ஊரைத் தெரிந்த சிங்களவர் என்ற காரணங்களோடு குஷியான இளைஞனாகவும் எனக்குத் தென்பட்டவன். பெரும்பாலான வெளி வேலைகளுக்கு சமரசிங் காவைத்தான் கூட்டிச் செல்வேன். திருமணமாகாதது மட்டுமல்ல சிருங்காரத்தின் உபாசகனாக வும் அவன் இருந்தான்.
"சேர் புல்வெளியில் உள்ள பண்டாரவின் வீட்டில் அவரது காளை மாட்டுக்கு உடல் நலமில்லாமல் இருக்கிறது. உங்களைக் கூட்டிவர முடியுமா என கேட்டார்.” என சமரசிங்கா சொன்னதும் நான் தயங்கினேன்.
"அந்தக் கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் போய்விட்டு திரும்பி வீடு வருவதற்கு இரவாகிவிடும்”
“இல்லை சேர். எனது நண்பன் வீட்டில் இரவு தங்கமுடியும். வசதியான
il:
வீடு”
மாலை ஐந்துமணிக்கு முன்பாக பண்டாராவின் மாட்டுக்கு வைத்தியம் செய்துவிட்டு சமரசிங்காவின் நண்பரான பொடிசிங்கோ வீடு சென்றோம். அந்த ஊரில் அதுதான் பெரிய கல்வீடு. சீலாவதியும் பொடிசிங்கோவும் வாச லுக்கு வந்து எங்களை வரவேற் றார்கள். நாங்கள் ஊர் குளத்தில் குளிக்கப்போகிறோம் என்றதும் சுத்தமான டவல் இரண்டைத் தந்தாள் சீலாவதி. அவள் அந்த கிராமத்துப் பெண்ணாகத் தெரியவில்லை. கிராமத்தில் ஏதோ
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

அவள்!
வானத்தில்
கோவில்பூசைக்குக் நீலா!
கூட்டிச்சென்று கிண்ணத்தில்
கூட்டத்தின் கண்கள் சோறு
பம்பவதன்று சின்னக் கதைகள்
திரும்பிவந்ததும் சொல்லி
திருஷ்டி சுற்றி தின்ன அமுதூட்டும் தெருக்கோடியில்
தெய்வத்தாய்
தேங்காய் உடைக்கும்
தெய்வத்தாய் வாசல் தெளித்து அவள்!
கோலம்போட்டு தோசை வார்த்து
பருவக் கொளாறை சம்பல் செய்து
பக்குவமாய் சுடச் சுட
எடுத்துச் சொல்லி உண்ணச் சொல்லி இரவும் பகலும்
சொகுசாக .
என்னைக்காந்த உடை உடுத்தி
காவல் தெய்வம் பள்ளிக்கு
அவள்!
அனுப்பி வைக்கும் பாசமிகு தாய்
இன்றும் அவள்! அதே
வானத்தில் நிலா மாற்றத்து மல்லிகையை
கிண்ணத்தில் கொத்தாகப் பிடுங்கி
சோறு! ந்தலில் சூழப்பார்க்கும் ,
சின்னக் கதைகள் குணக்குன்றான
சொல்லி கோபுரத்தாய் தின்ன அமுதூட்டுகிறாள்,
எனக்கல்ல என் பிள்ளைக்கு என் தாய் என்னும்
அவள்! - நா. ஜெயபாலன்,
dძით
அவள் !
அவள்
27

Page 30
காரணத்திற்காக அவதரித்த தேவதையாக தெரிந்தாள்.
எங்களோடு சிறிய வீச்சுவலையொன்றுடன் பொடிசிங்கோ வந்தார். வயல் கரையால் நடந்து சென்றபோது "நெல்லுக் கதிருக்கு வரும் எலிகளைத் தேடி பாம்புகள் வரும் நேரம். பெரிய நாகப் பாம்புகளைப் பார்த்திருக்கிறேன். பார்த்து நடவுங்கள்.” என பொடிசிங்கோ எச்சரித்தார். வயல் வரப்புகள் காய்ந்து உறுதியாக இருந்தன. விளைந்த நெல் பொற்குவியலாக அந்த மாலை வெயிலில் அழகான காட்சியாக இருந்தது. வயல் கரையின் பால் முற்றிய நெல்லின் மணம் நெஞ்சை நிரப்பியது. வயல்களைக் கடந்து குளத்தை அடைந்தபோது சிவந்த தாமரை மலர்களும், பச்சை இலைகளும் அந்தக் குளத்தைச் சொந்தம் கொண்டாடியிருந்தது.
குளத்தின் உயர்ந்த அணை மேலாக நடந்து போனபோது குளிப்பதற்காக ஒரு பகுதி தாமரை கொடிகள் எதுவும் இல்லாமல் தண்ணீர் தெளிவாக இருந்தது. அந்த இடத்திற்கு சிறிது தூரத்தில் மீன்பிடிப்பதற்காக வலையை வீசினார் பொடிசிங்கோ.
குளத்து தண்ணீரில் மூழ்கி எழுந்தது உடலுக்கும் மனதிற்கும் நிறைவாக இருந்தது. இந்த குளியலுக்காக மட்டுமே இவ்வளவு தூரம் வந்திருக்கலாம் என நினைக்க வைத்தது
“சமரசிங்கா உனக்கு இவர்களைத் தெரியுமா?” எனக் கேட்டேன்.
“சீலாவதி என்னோடு எங்கள் ஊரில் ஒரே வகுப்பில் படித்தவள். பொடிசிங்கோ இந்த ஊரில் வயல் - உளவு யந்திரம் எல்லாம் வைத்திருக்கும் வசதியானவர் என்பதால் திருமணம் செய்து வைத்தார்கள். இரண்டு பிள்ளைகள் பிறந்தன. ஆனால் பொடிசிங்கோ குடிகாரர் அப்படி இப்படி சாதாரணமான குடியல்ல. வைத்திருந்த உளவு யந்திரத்தையும் விற்றும் குடித்து தீர்த்துவிட்டார்.”
"பார்த்தால் மனிசன் அப்பாவிபோல் தெரியுது. எங்களுக்காக மீன் பிடிக்கிறார்.”
"குடியைத்தவிர மற்ற விடயங்களில் நல்ல மனுசன்தான்”
சிறிது நேரத்தில் எங்களோடு பொடிசிங்கோ சேர்ந்து கொண்டதும் வீட்டுக்கு திரும்பினோம். பொடிசிங்கோவின் கையில் ஐந்து மீன்கள் பச்சைத் தென்னை ஈர்க்கில் தலையைக்

கொடுத்துவிட்டு துடித்துக்கொண்டிருந்தன.
வீடு வந்ததும் பொடிசிங்கோ தங்கொட்டுவ விசேஷ சாராயம் என்று வெள்ளை வடிசாராயப் போத்தலை எடுத்து எம்மை உபசரித்தார். மான் இறச்சி துண்டுகளை பொரித்தெடுத்துக் கொண்டு வந்தாள் சீலாவதி.
நெஞ்சுக்குள் புகைந்து கொண்டு சென்றது அந்தக் காரமான சாராயம். என்னால் சிறிதளவே குடிக்க முடிந்தது. ஆனால் முழுப்போத்தலையும் பொடிசிங்கோவும் சமரசிங்காவும் குடித்து முடித்துவிட்டார்கள். சிறிது நேரத்தில பொடிசிங்கோ சாப்பிடாமல் படுக்கைக்கு சென்று விட்டார்
நாங்கள் அவரை சாப்பிட வற்புறுத்தியபோது அவர்
அசைந்து கொடுக்கவில்லை. மரக்கட்டிலில் படுத்தவரது தலையின் கீழ் தலைகணியை வைத்தாள் சீலாவதி.
எங்களுக்கு குளத்து மீன்கறியுடன் கத்தரிக்காய் வதக்கி தட்டில் சோறு வைத்தாள். கடல் மீன் தின்று பழகிய எனக்கு குளத்து மீனில் கொஞ்சம் சேற்று மணமும் வழுவழுப்பும் இருந்ததாலும் தனிச்சுவையாக இருந்தது.
சாப்பாடு முடிந்தவுடன் சீலாவதி வெற்றிலைத் தட்டத்தை வைத்துவிட்டு "சேர் எந்த இடம்?” என்றாள் ஆங்கிலத்தில்.
இதுவரையும் பேசாமல் இருந்த தேவதை ஆங்கிலத்தில் பேசியது வியப்பாக இருந்தது. பொடிசிங்கோவிடம் நான் உடைந்த சிங்களத்திலேயே முன்பு பேசிக் கொண்டிருந்தேன்.
“நாக தீப்” - என்றேன்
“ஐயோ சார் நான் எனது வாழ்க்கையில் என்றாவது ஒருநாள் போகவேண்டுமென்று நினைத்திருக்கிற இடம்தான் நாகதீப்”. -
என்றாள் சீலாவதி.
"அப்படியா? ஏன் ?” எனக் கேட்டேன். "இல்லை அந்த ஊரால்தான் புத்த சாமிகள் இந்தியாவில் இருந்து இலங்கை வருவார்கள் என புத்தகத்தில் படித்திருக்கிறேன்”.
“என்ன புத்தகம் படிப்பாய்?”
"மாட்டீன் விக்கிரமசிங்கா எழுதிய சிங்கள நாவல்கள். அத்துடன் சிங்கள மொழியில் மாற்றமடைந்த ஐரோப்பிய நாவல்கள் எல்லாம் படித்திருக்கிறேன்.”
"எப்படி கிடைக்கிறது?”
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

Page 31
"அதுதான் மாதமொரு முறை அநுராதபுரம் போகிறபோது” எனக் குறுக்கிட்டான் சமரசிங்கா.
"அப்படியா நல்லது" மகாவித்தியாலயத்தில் பத்தாவது படித்த தையும் அவள் சொன்னதும் அநுராதபுரத்தில் புதுவருட தினத்தின்போது அவள் அழகுராணி யாக தேர்வானதாக சமரசிங்கா சொன்னான்.
"நான் இவளுக்காக காத்துக்கிடந்தேன். ஆனால் சீலாவதி பொடிசிங்கோவை மணந்து கொண்டாள்" எனவும்
அவன் சிரித்தபடி சொன்ன பொழுது அவனை உற்றுப்பார்த்தேன்.
அவனது முகத்தில் இனம்புரியாத ஏக்கம் படிந்திருந்தது.
நூல்: எனது குழந்தை பயங்கரவாதி
ஆசிரியர்: தீபச்செல்வன் வெளியீடு: விடியல் பதிப்பகம், கோவை. விலை: 50 "குழந்தைகள் மாபெரும் குருதியை இப்போரில் சிந்தியுள்ளனர். ஆனால் அவர்களின் முதுகில் யுத்தம் சுமத்திய பாரம்தான் போருக்குப்பின்னரான குழந்தைகளின் வாழ்வுக்காலமாகியுள்ளது. இதைச் சுமந்து கொண்டு வாழ்வுக்காக போராடும், இழந்த வாழ்வை மீட்கும் துயரத்தை காலம் குழந்தைகள்மீது சுமத்தியிருக்கிறது. இன்றைய ஈழ நிலத்தில் யுத்தத்தின் பாரத்தை எண்ணற்ற வடிவங்களில் எண்ணற்ற குழந்தைகள் சுமந்து கொண்டிருக்கிறார்கள்." "நாங்கள் வாழ வேண்டிய எங்கள் தேசம் விடுதலை பெறவேண்டும் என்கிற என் தேசக் குழந்தைகளின் குரலே இக் கவிதைகள்.” என்று குறிப்பிடும் தீபச்செல்வனின் ஆறாவது கவிதைத் தொகுதி இது. செறிவும் ஆழமும் அழுத்தமும் கொண்ட இந்தக் கவிதைகள் மிகப் பெரும் கவனத்தைப் கபெற்ற 'பெருநிலம்' தொகுதிக்குப் பின்னர்
எழுதப்பட்டவை. சமகால ஈழக் கவிதையில் பெரும் தாக்கத்தை
ஏற்படுத்திய வலிமையான குரலாக கருதப்படும் தீபச்
எனது,குழந் செல்வனின் இக் கவி
பயங்கர தைகள் ஈழ வாழ்வை நேர்மையோடும் துணிச்ச லோடும் கூர்மையோடும் பதிவு செய்திருக்கின்றன.
171 --- 2.15 : .
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

"அப்பா இல்லை. அம்மாதான் முடிவு எடுத்தாள். அதனால் இப்படியாகிவிட்டது" என்று பொடிசிங்கோ படுத்திருந்த அறையின் பக்கம் பார்த்துச் சொன்னாள் சீலாவதி. அவளும் வெற்றிலை போட்டிருந்தாள். அந்தச் சிவந்த உதடுகள் அந்த ஊர் குளத்து காலைத்தாமரை மொட்டாக விரித்தன.
எங்கள் உரையாடலுக்கு மத்தியில் அவளது குழந்தைகள் வந்து அவளோடு ஒட்டிக்கொண்டன.
நான் பொடிசிங்கோவுக்கு பக்கத்தில் இருந்த கட்டிலில் படுத்தேன். பக்கத்தில் நிலத்தில் சமரசிங்கா படுத்தபோது பொடிசிங்காவின் குறட்டை புலி உறுமலாகக் கேட்டது. குடித்த சாரயமும் அதிகமானதால் குறட்டையை கேட்டபோது சந்தோசம் ஆனால் இடையில் நிறுத்தியபோது பொடிசிங்கா உயிருடன் இருக்கவேண்டும் என நினைத்தேன். அந்த குறட்டையின் தாலாட்டில் நித்திரை வந்துவிட்டது.
நடு இரவு ஏதோ கனவு கண்டு நான் விழித்தபோது சமயலறையில் சத்தம் கேட்டது. என்னருகே நிலத்தில் படுத் திருந்த சமரசிங்காவை காணவில்லை. பொடிசிங்கோ வின் குறட்டை ஒலி தொடர்ந்து கேட்டது.
பாவம்
பொடிசிங்கோ
இண்டு பிள்ளைகளையும் தனியாக வளர்க்கவேண்டும் அதற்காக குடியை முதலில் அவன் விடவேண்டும் என்றான் குமார்.
சீலாவதி நகரத்துப் பெண்ணாக இருந்தால் விவாகரத்துக்கு மனுப்போட்டிருப்பாள். கிராம மானதால் பொலிடோலைத் தேடியுள்ளாள்.
ரஷ்யாவில் இரயில் வந்தபோது லியோ
டோல்ஸ்ரோய் இராட்சத இயந்திரங்கள் தை வாதி
உயிரற்றன என எதிர்த்தார். அவரது கதாநாயகி அன்னா கரினா அதில் உயிர் இழந்தாள். நவீன விவசாயத்தின் முக்கிய கிருமிநாசினியாக பொலிடோல் இலங்கைக்கு வந்தது. சீலாவதியின் உயிரைப் பறித்துவிட்டது.
0 0 0
29

Page 32
யாதும் ஊரே யாவரும் கேளிர் அற்புதங்கள்.? அழகாய்தந்தான் தமிழ்க்கவிஞன்.
"ஈபிள் உலக அதிச
ஒன்
கோபுரத்தைத் தார்
அத
ஊரின் பெயரைச்
சொல்லியே அடிப்பான் தமிழன். மாய்ந்தவன் போக
தப்பியவன் பிழைக்க வழிதேடிப் பறந்தான்.பறந்தான்
பாரெல்லாம்....
பேரதிசய
அழகு | கலை ?
கல்வி பொருளியல் என்ன வளம் 8
இல்லை இல்லாத நாடு
புலம்பெயர் குருவிகளாய்க்
கலைந்தான் அலைந்தான் அல்லாடினான்
புகலிடம் தேடி உலகெங்கும் ... ...
பிய E க்யோ2ET கம்
சகோதர
1 21:42
பக்கம் 5
பூண்
பெரு மன
வா
இவர் பட்டம்
புரட்சியில் பூத்த செழுமை
பண்பு மனித நேயம்.
வந்தோரை வரவேற்றது பிரான்சு.. அடைக்கலம் புகுந்தான்
தமிழன்......
1. க
பெருமை சமத்
கை உலக வ
தலை I
நிற்குமொன
- பத்மா இளங்கோவன்,
ரான்ஸ்

யாதும் ஊரே யாவரும் கேளிர்ற
" கோபுரம் யங்களில் Tறுதான்.
வகும் நாடு என் மக்கள் ம தான்..!
யாதும் ஊரே யாவரும் கேளிர்
என்றே உலக இனம் பலவும் ஒன்று கூடி வாழும்
உத்தம் நாடு ..!
11 11 11111111
புன்சிரிப்பு கலாசாரம் 1பண்பாடு பவளர்ச்சி இல்லை..? ல என்பதே டென்பர்..!
பரி Iே சமர் #4. !
கண்டான் தமிழன்...
கறுப்பென்ன வெளுப்பென்ன
எந்நாட்டில் இருந்தாலென்ன சொன்னான்.
யாதும் ஊரே யாவரும் கேளிர்.!
சுதந்திரம் சமத்துவம்
த்துவம்..."
டொழுகும் சிதர் பலர் ஓம் நாடு.
பட்டுத் தெளிந்ததோ படித்து அறிந்ததோ வளைந்து போனதோ வளர்ந்து விட்டதோ தமிழ் இனம்..?
அ ய யா யா யா யா ய
கண்ணுக்கு கொடுத்து துவத்தைக் யிலெருத்து பல்லரசாய் நிமிர்ந்து ந நாடு...!
தாரக மந்திரமாய் தமிழ் முழங்குகிறது செம்மொழியாய்ச் சிலிர்க்கிறது
யாதும் ஊரே யாவரும் கேளிர்.!
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

Page 33
எம்.பி.எம்.நிஸ்
பாணந்துறை
கொளை
அதிகாலை நேரம். மார்கழி மாதக் குளிர் உடலை உறைய வைத்தது.
- வெளியூர் சென்றிருந்த நான் பேருந்தில் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தேன்.
காலை ஆகாரத்துக்காக தரிப்பிடமொன்றில் பேருந்து தரித்தது. பல இடங்களுக்குச் செல்லும் வண்டிகள் அங்கே தரித்திருப்பதைக் கண்டேன். குளிர் ஓரளவு தணிந்திருந்தது. நானும் பேருந்திலிருந்து இறங்கி பக்கத்திலிருந்த கடையொன்றினுள் நுழைந்து இரண்டு வடை சாப்பிட்டு ஒரு கப் தேநீர் அருந்தினேன். உடலில் சிறிது சூடு பிடித்தது. இருக்கையில்
வந்தமர்ந்து கொண்டேன்.
இதே நேரம் வயதான ஒரு பெண்ணும், சிறுவனொருவனும் வண்டியினுள் ஏறினர். சிறுவன் நடுங்கிக் கொண்டிருந்தான். "எனது மகனுக்கு காய்ச்சல் கொஞ்சம் இடந்தாருங்கள்” போகும் பொழுது ஆஸ்பத்திரி சந்தியில் இறங்கிக் கொள்கின்றேன் என சகோதர மொழியில் கூறினாள்.
முன் ஆசனங்களில் அமர்ந்திருந்த மனித நேயமுள்ள இருவர் எழுந்திருந்து இருக்க இடம் கொடுத்தனர். அச்சிறுவனும் அப்பெண்ணும் அமர்ந்து கொண்டனர். சிறுவன் தாயின் மடியில் தலைவைத்து சாய்ந்துகொண்டான்.
இவ்வேளை பேருந்தின் முன் புறமாக ஒரு வியாபாரி ஏறினான் "மஹத்துருனி என சகோதர மொழியில் தன் பேச்சை ஆரம்பித்தான் - "துரைமார்களே! நோனா மார்களே! நான் உங்கள் முன்னே நின்று
28:12
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

தையி ஆயுர் எல
"றை பாதகற்றுக் கோஷதம்
விற்பனைக்காக கொண்டுவந்துள்ள மருந்தின் விஷேட தன்மைகளைக் கூறுகின்றேன். வீதி வீதியாகச் சென்று விற்பனை செய்வதினால் மருந்தின் தரத்தைக் குறைவாக எடை போட வேண்டாம். பரம்பரை ஆயுர்வேத ஒளஷதம் இது. என் மூதாதையிடமிருந்து கற்றுக் கொண்ட மருந்து. ஒருமுறை பாவித்தால் புரியும். தலைவலி, ஜுரம், உடல் நோவு, உளைச்சல், ஒரு நிமிட நேரத்தில் சுகப்படுத்தும் வல்லமை இம்மருந்துக்கு உண்டு. துரித நிவாரணி. நூறு ரூபா பெறுமதியான இந்த டப்பா ஐம்பது ரூபாவுக்கு விற்பனை செய்கிறேன். வாங்கிப் பயன் பெறுங்கள்.” என அவ்விற்பனையாளன் தன் மருந்தின் மகிமையைக் கூறிக்
கொண்டிருக்கும் போது... நோய்வாய்ப்பட்ட சிறுவன் இருமும் சத்தம் கேட்டது.
இதைக் கவனித்த ஒரு பிரயாணி விற்பனையாளரான வைத்தியனைப் பார்த்து "மஹத்தயா, பெரியவரே.. இப் பையன் வெகுநேரமாக காய்ச்சலால் தடுமாறுகின்றான். இவனைச் சுகப்படுத்துங்கள் பார்க்கலாம்” என்றான்.
“எங்கே பார்ப்போம்” என வந்த அந்த வைத்திய விற்பனையாளன் அப்பையனின் நெற்றியிலும், மார்பிலும், முதுகிலும் தைலத்தைத் தடவினான். என்ன ஆச்சரியம். ஒரு நிமிட நேரம் அம்மாவின் மடியில் தூங்கின வன் எழுந்து நின்றான். சிரித்தான்.“அம்மா!” என்றான். தாய்க்கு சந்தோஷம். கையி லிருந்த காசைக் கொடுத்து ஒரு டப்பாவை வாங்கினாள். - பேருந்திலிருந்தோர் நான் முந்தி, நீ முந்தியென தைலத்தை வாங்கினர். நானும் இரண்டு டப்பாக்களை வாங்கினேன். வைத்தியனுக்கோ நல்ல வியாபாரம். மூவாயிரத்துக்குக் குறையாமல் விற்பனை செய்திருப்பான் "இதோ! நான் இறங்குகிறேன், இன்னும் தேவையிருப்பின் கேளுங்கள்” எனக்
கூறிய படியே இறங்கிச் சென்றான். - நடத்துநர் "பஸ்ஸில் பயணம் செய்தோர் எல்லாரும் வாருங்கள் பஸ் போகப் போகிறது என வெளியே நின்று கத்தினான். இந்நேரம் - பேருந்தில்
- அமர்ந்திருந்த நோய்வாய்ப்பட்ட பையன் - ஜன்னலால் வெளியே பார்த்தபடி “அம்மா அதோ பஸ்ஸெ ான்று வந்து நிற்குது. அப்பாவும் அந்த இடத்திலிருந்து எங்களை கூப்பிடுகிறார்” என்றவன், அம்மாவுடன் இறங்கினான். நான் அவன் காட்டிய திசையை எட்டிப்பார்த்தேன். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. அங்கே அந்த வைத்திய வியாபாரி இவர்களுக்கு சைகை செய்து கொண்டிருந்தான்.
31

Page 34
இலங்கையில் 2009ம் ஆண்டு தமிழ் இனவிடுதலைப் போராட்டத்தின் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டதன் பின்னர் இன ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் இலக்கியப்பாலத்தைச் செப்பமிட்டுக் கட்டியெழுப்பும் பணி பல்வேறு முனைகளிலிருந்தும் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. உலகெங்கும் பரந்து வாழும் ஈழத்தமிழர்கள் புகலிடத்து மொழிகளை சரளமாகக் கற்றுத்தேர்ந்து அம்மொழிகளிலேயே ஆளுமையுடன் இலக்கியம் படைக்கும் காலம் இது.
இலங்கையில் மட்டும் நிலைமை மாறுபாடானது. சிங்களத்தை
அரசியல் காரணங்களால் திணிக்க முற்பட்டதன் விளை வாக அம்மொழியையே வெறுப்புடன் பார்த்து அம்மொழியின் இலக்கியங்களையே தவிர்க்கும் நிலை காலம்காலமாக ஈழத்தமிழர்களிடையே உருவாக்கப்பட்டுவிட்டது. சாதாரணச் சிங்கள் மக்களுக்கும் அவர்களுடன் இலங்கைத்தீவில் வாழும் மற்றொரு இனமான தமிழர்களின் உள்ளத்தையும், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும், நியாயமான உரிமை மறுப்புகளையும் இலக்கியங்களின் வாயிலாக வேனும் அறிந்துகொள்ளும்
வாய்ப்பும்
தமிழரின் உணர்வுகளை உரத்து இருசிங்காறா அவர்களதுறு
இனவாதம் என்ற நோயின் காரணமாக இருசாராரும் காலம்காலமாக மறுக்கப்பட்டு வந்துள்ளது.
காலத்துக்குக் காலம் சில சிங்கள் எழுத்தாளர்கள் தமிழர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு
படைத்திருந்த
படைப் பாக்கங்கள்கூட
முறையாகத்
தமிழர்
என். செல்வராஜா, நூலியலாளர், லண்
32

களிடையேயும்,
சிங்களவர்களிடையேயும் பரந்த அளவில் எடுத்துச்செல்லப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
சிங்களப் படைப்பாளிகளிடையே எஸ். ஜீ.புஞ்சிஹேவா, சிட்னி மார்க்கஸ் டயஸ், ஹேமசிறீ குறுப்பு, மடுளுகிரியே விஜேரத்தின, தம்மிக்க ஜெயசிங்க போன்றோர் தமிழ் சிங்கள மக்களிடையே இலக்கியத்தின் மூலம் இனங்களுக்கிடையேயான உறவுப் பாலத்தைக் கட்டியமைக்கவேண்டும் என்ற உணர்வுடன் செயற்படுபவர்கள். அசாதாரண தமிழ் அறிவுமிக்க இவர்களின் உரைகளைத் தமிழில் கேட்கும் வாய்ப்பு எனக்கு 2013இல் இலங்கையில் கிடைத்திருந்தது. அவுஸ்திரேலியாவில் வாழும் எழுத்தாளர் முருகபூபதி, தான் சார்ந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் அவுஸ்திரேலிய அமைப்பினால் ஒரு நூல் வெளியீட்டு விழாவை இலங்கையில் ஒழுங்குசெய்திருந்தார். மூன்று மொழிபெயர்ப்பு நூல்களின் வெளியீட்டு விழா 2013ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் நடந்தது. அவ்வேளையில் எனது நூல்தேட்டப் பணிகளுக்காக இலங்கையில்
பச் சொல்லும்
இடப்பாளிகளும் மிகளும்
தங்கியிருந்தமையால் அந்நிகழ்வில் கலந்து கொள்ளும்
அரிய வாய்ப்பும் எனக்குக் கிட்டியிருந்தது. இங்கு
உரை யாற்றிய அனைத்துச்
டன்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

Page 35
பitiiiiiithik
சிங்கள
எழுத்தாளர்களும்
தமிழ்ப் படைப்பாளிகளுக்கு நிகராக, சரளமான தமிழில் உரையாற்றியதைக் காணமுடிந்தது. அவர்களது உரைகளின்போது, தமிழர்களின் இனப்பிரச்சினையையும், விடுதலைப் போராட்டத்தையும் அதன்
நியாயத் தன்மையையும் நன்கு விளங்கியிருந்தமையை எவ்வித ஒளிவு மறைவுமின்றி, பகிரங்கமாக அந்த மேடையில் அவர்கள் உரையாடியதை நேரில் கேட்டுணரக் கூடியதாக இருந்தது. துர்அதிர்ஷ்டவசமாக சிங்கள அரசியல் வாதிகளாலும் மேலாதிக்க தீவிரப் போக்காளர் களாலும் மழுங்கடிக்கப்பட்டு வந்ததால் இவர்களின் குரல்கள் இவ்வளவு காலமும் தமிழர்களை எட்டியிருக்கவில்லை - இவர்களது படைப்புகளும்கூடத்தான்.
இத்தகைய படைப்புலகப் பின்னணி யிலேயே இலங்கையில் வெளிவந்த இரு நூல்கள் பற்றிய எனது பார்வையைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
இங்கு அறிமுகப்படுத்தவுள்ள முதலாவது நூல் மொழியும் மனிதநேயமும் என்ற தலைப்பில் எஸ்.ஜீ.புஞ்சிஹேவா எழுதிய ஆய்வு நூலாகும். இதன் மூலநூல் கொழும்புமாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தால் சிங்கள மொழியில் வெளியிடப்பட்டிருந்தது. இந்நூல் எஸ்.சிவகுருநாதன் அவர்களால் எளிய நடையில் தமிழாக்கம் செய்யப்பட்டு மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தால் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது.
பக்கச்சார்பின்றி மொழியின் பயன்பாட்டில் சட்டரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் அரசியல் வாதிகளும் அதிகாரபீடங்களும் செய்த தவறுகளை இந்நூல் சுட்டிக்காட்டுகின்றது. மொழி தொடர்பான விடயத்தை உணர்ச்சி கரமாகவல்லாது அறிவுபூர்வமாக இந்நூல் அணுகியிருப்பது சிறப்பம்சமாகும்.
யுத்தம் முடிவடைந்துவிட்டபோதிலும், யுத்தத்திற்கான அடிப்படைக் காரணங்கள் இன்னமும் கண்டறிந்து தீர்வுகாணப்படவில்லை என்ற எம்மவரின் கருத்தையே இந் நூலிலும் சிங்களப் புத்திஜீவியான எஸ்.ஜீ.புஞ்சிஹேவா தனது நூலில் வலியுறுத்தியுள்ளார். "எமது சிங்கள மொழி தாயைப்போன்றது. நாம் பெற்ற அனைத்தும் மொழியை முதன்மைப்படுத்தியவையே. நாம் மொழியுடனேயே பிறந்து வளர்ந்தோம். எமது ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

மனிதத்துவத்தை நாம் மொழியின் மூலமே வெளிப்படுத்துகின்றோம். எம்மைப்போன்றே தமிழர்களுக்கும் தமிழ் மொழி தாயைப்போன்றதே. தமிழ்மொழிக்கு உரிய அந்தஸ்தையும் கெளரவத்தையும் வழங்காத எமது பழக்கதோசத்தின் காரணமாகவே 30 ஆண்டுகளாக ஒரு துன்பியல் வரலாற்றை எழுதிவைத்திருக்கிறோம்” என்று தமது சக இனத்தவருக்கு இடித்துரைத்துள்ளார் எஸ்.
ஜீ.புஞ்சிஹேவா .
"எமது மனிதத்துவத்தின் பொதுத்தன்மை மொழிமூலம் வேறுபடுவதாகப்பட்டால் மற்றையவர்களின் மொழியையும் நாம் கெளரவிக்கவேண்டும். அத்தகைய கெளர விக்கப்படும் உரிமையை ஒரு இனம் இழக்கும்போது, அவ்வினம் எவ்வாறு மனஉறுத்தலுக்கு உள்ளாகும் என்பதை நாம் புரிந்துகொள்ளவில்லை. அவ்வாறான சந்தர்ப்பத்தில் தமது தாயை, தமது ஆத்மாவை, தாம் மனிதர் என்ற உணர்வைப் புறக்கணிப்பதாகவே தமிழர்கள் உணர்வார்கள்” என்று மேலும் அவர் அழுத்தமாகக்
குறிப்பிடுகின்றார்.
மொழி, அதன் பண்பு, மனிதத்தன்மை, அதற்கான உரிமைகள், என நூலின் ஆரம்பமே மனதுடன் உறவாடத் தொடங்குகின்றது. மொழி தொடர்பான சட்டங்கள், சுற்றறிக்கைகள் பற்றி விரிவாக இந்நூல் பதிவு செய்கின்றது.
ஒவ்வொரு மனிதனும் தனது பணிகளைச் சிறப்பாகவும் சிரமமின்றியும் ஆற்றுவதற்கு அவனது தாய்மொழியே வசதியானது. ஆனால் எம்மொழியின் மூலம் ஆட்சி நடத்தப்படவேண்டும் என்ற விடயத்தை 1815இல் எழுதப்பட்ட கண்டி ஒப்பந்தத்தில் குறிப்பிடவில்லை. ஆயினும் ஆங்கிலமே அக்காலத்தில் நடைமுறையில் ஆட்சி மொழியாக இருந்துவந்தது. நிர்வாகத்தில் சுய மொழியின் பாவனை பற்றி 1939இல் பிலிப் குணவர்த்தனா என்ற டொன் பிலிப் ரூபசிங்க குணவர்த்தனாவே முதலில் குரல் எழுப்பியிருந்தார். இவர் காலனித்துவத்துக்கு எதிரான அமைப்பில் 1927 முதல் இயங்கியவர். தமிழும் சிங்களமும் அரசகரும மொழியாக இருக்கவேண்டும் என்ற நியாயமான பிரேரணை 1945 இல் கொண்டுவரப்பட்டது. ஆனால் 1956இல் சிங்களம் மட்டும் அரசகரும மொழியானது. அன்றே எமது நாட்டின் இன

Page 36
ஒற்றுமைக்கு எதிரான வித்து ஊன்றப்பட்டது. 1958இல் தமிழ் மொழியின் உபயோகச் சட்டம் கொண்டுவரப்பட்டபோதும் பின்னர் 1972இல் பௌத்தம் அரச மதமாகவும், சிங்களம் அரசகரும மொழியாகவும் ஆக்கப்பட்டது. தமிழும் நிர்வாக மொழியாக பெயரளவில் ஏற்கப்பட்டது. சட்டங்கள் - எவ்வாறு இருந்தபோதிலும் அவை இலங்கையின் வரலாற்றில் என்றுமே சரியான முறையில் நேர்மையாக அமுல்படுத்தப்படவில்லை. இவ்விபரங்களையெல்லாம் தனது மொழியும் மனிதநேயமும் என்ற நூலில் விரிவாக எஸ். ஜீ.புஞ்சிஹேவா அவர்கள் எழுதியிருக்கிறார்.
- இந்நூலின் இறுதி அத்தியாயம் மனித உரிமைப் பிரகடனமும் மொழியுமாகும். இனம், மதம், மொழி சார்ந்த சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றிய ஐநா.சாசனம் பற்றியும்,
அதில் இலங்கை கையெழுத்திட்டது பற்றியும். இவ்வத்தியாயம் நினைவுறுத்துகின்றது. இன்று ஆயுதயுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டுள்ளது என்பது உண்மை. ஆனால் அந்த யுத்தத்தில் எவரும் வெற்றியடையவில்லை. மொழியை அடிப்படையாகக் கொண்டே நாம் வெற்றியை எதிர்காலத்தில் அடையமுடியும். தொடர்ந்தும் அரசியல், நிர்வாக நடவடிக்கைகளால் தமிழ் அல்லது சிங்கள மொழிக்கு பாகுபாடு காட்டப்பட்டால் அது மேலும் வெடிமருந்து சேகரிப்பதற்கு வழிகோலும் என்று தனது அரசை எஸ்.ஜீ.புஞ்சிஹேவா இந்நூல்வழியாக எச்சரிக்கின்றார்.
அடுத்து அறிமுகப்படுத்த விரும்பும் நூல் ஒரு சிறுவர் நாவலாகும். முல்லைத்திவ் சீயா என்ற பெயரில் சிட்னி மார்க்கஸ் டயஸ் எழுதிய சிங்களச் சிறுவர் நாவல் தமிழில் முல்லைத்தீவு தாத்தா என்ற பெயரில் திக்குவல்லை கமால் அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டு 119 பக்கம் கொண்ட நூலாக தோதன்ன பப்ளிங் ஹவுஸ் என்ற வெளியீட்டகம் ஆனமடுவிலிருந்து வெளியிட்டுள்ளது.
மூல நூலாசிரியர் சிட்னி மார்க்கஸ் டயஸ் ஆனமடுவ தோதன்ன அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளர். பிரபல சிங்கள எழுத்தாளரான இவர் தோதன்ன பதிப்பகம் என்ற பெயரில் ஒரு நூல்வெளியீட்டகத்தையும் இயக்கிவருகின்றார். இலக்கியத்தினூடாக இன ஒற்றுமைக்கான புரிந்துணர்வுப்பாலமொன்றைக் கட்டியெழுப்பும் முயற்சியில் இவரது அமைப்பு 34

த
உண்மைகள் எல்லாவற்றையும்
தணிக்கை செய்தவன்
நியாயம் கூறுகிறான் உண்மைகள் அனைத்தும் | உறங்காமல் தத்தளிக்கிறது
அவை
ஓராள் நைத்துவஞானியாம்மாறு
அப்பொழுது இவர்களுக்கு என்ன நேரும்?
அலைமோதும் உணமைகள் எல்லாம் விலையாகிப்போகிறது
தனவந்தரிடமும் அதிகாரம் உள்ளவரிடமும்
பொதுசன இலகம் -
யாழப்பாணம்
அத ெகா 11. ப
சாமர்த்தியமான வழிமுறையால்
சாதனை படைக்கலாம்) தணிக்கை செய்து உண்மைகள்
சத்தியம் பேசினால்
கத்தியல்லவா கழுத்தில் விழும்?
நியாயக்குரல் நியாயம் கேட்டுவிட்டால் நெருப்புத்துண்டுகளால் அல்லவா
குரல்வளைளிக்கிறார்கள்!
கட்டுக்கெலியாவ) 7 கவிக்கிறுக்கன்
முறையற்றது என்று
குறைகூறிவிட்டால் தெருவில் உடல் கிடக்கும்
புழுக்கள் கூட
தான் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

Page 37
தீவிரமாக ஈடுபட்டுவருகின்றது. 2009இல் 16 தமிழ் நூல்களை மொழிபெயர்ப்புச் செய்து ஒரே அரங்கில் அறிமுகம் செய்து தனது பணியை இவ்வமைப்பு ஆரம்பித்திருந்தது. பின்னர் 2010இலும் 15 மொழிபெயர்ப்பு நூல்களை அறிமுகப்படுத்தியிருந்தது. அதன் ஒரு கட்டமாகவே கடந்த 2013இல் அவுஸ்திரேலியப் படைப்பாளிகள் இருவரான முருகபூபதி, நெயல் நடேசன் ஆகியோரின் நூல்களை கொழும்பில் தோதென்ன பதிப்பகம் வெளியீடு செய்திருந்தது.
மட்டக்களப்பில் ஓ.கே.குணநாதனின் மேலாண்மையில் இயங்கும் எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இவரது இலக்கியத்தினூ டாக இனங்களுக்கிடையே புரிந்துணர்வினை ஏற்படுத்தும் முயற்சிகளை கௌரவித்து சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழியல் விருதினை வழங்கிக் கௌரவித்திருந்தது.
இவரது முல்லைத்தீவு தாத்தாவின் கதைக்கருவும் இன ஒருமைப்பாடு சார்ந்த ஒரு கருவில் உதித்த நூலாகவே உள்ளது. இலங்கையின் இனப்பூசலுக்கான நதிமூலத்தை இளந்தலைமுறையினருக்கு
விளக்கும் முயற்சியில் முல்லைத்தீவு தாத்தா என்ற கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தில் தமிழர்கள் உயர்பதவிகளில் நிறைந்திருந்த கால மொன்றிருந்தது. அக்காலத்தில் புகை யிரத நிலையமொன்றில் பணியாற்றி இளைப்பாறியவர்தான் பரராசசிங்கம் என்ற முல்லைத்தீவு தாத்தா. இலங்கையின் இனவாத யுத்தத்தினால் அலைக்கழிக்கப்பட்டு அதில் தப்பிப்பிழைத்து முதுமை வயதில் வாழுகின்றார்.
பாதைப் போக்குவரத்து சீரடைந்து பொதுப்போக்குவரத்து வசதிகள் உள்ள நிலையில் அவருக்கு ஒரு ஆசை வருகிறது. அவர் முல்லைத்தீவிலிருந்து புறப்பட்டு, தனது பழைய தொழில் சிநேகிதன் சுமனசேகராவைச் சந்தித்து மலரும் நினைவுகளை பரிமாறிக்கொள்ள விரும்புகின்றார். யாழ்ப் பாணத்தின் பிரசித்தமான பனம்பாணிப் போத்தலுடன் திணைக்கள் நண்பன் வாழும் சிங்களப் பிரதேசத்துக்குப் போகிறார். அங்கு அவரது நண்பன் முன்னரே இறந்தவிட்ட செய்தி கிட்டுகிறது. மனமுடைந்து போகிறார். பழைய சிநேகிதன் சுமனசேகராவின்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

iiiiiiiiiiiiiiiiiiiiiiii
மனைவி
முல்லைத்தீவிலிருந்து
வந்த கணவனின் நண்பரை வரவேற்று உபசரிக்கிறார். தங்களுக்குப் பின்னரான இரு தலைமுறையினரை பரராசசிங்கம் அங்கு சந்திக்கிறார். யாழ்ப்பாணக் குடாநாட்டின் பனம்பொருள்கள் ஆரம் பத்தில் பேசுபொருளாகின்றன. தொடர்ந்து இனவாதத்தின் ஆரம்பம், சிங்கள தமிழர்களிடையே பிரிவினை, தமிழர்களின் மீதான அடக்குமுறை அதன் ஒரு பரிமாணமாக விடுதலை இயக்கங்களின் தோற்றமும் செயற்பாடுகளும் அங்கு தொடர்ந்து உரையாடலாகப் பதிவாகின்றன. இறுதியில் முகாம் வாழ்க்கை வரையில் நேர்முக வர்ணனைகளாக நகர்த்திச்சென்று முல்லைத்தீவுதாத்தா கதையை முடிக்கிறார். தொடரப்போகும் சந்ததியினரிடையே தமிழரின் இனப்பிரச்சினை தொடர்பான தெளிவை ஏற்படுத்தி தமிழர்கள் சிங்களவர்களின் எதிரிகளல்லர் - அவர்களும் சம உரிமையுடன் வாழ்ப் பிறந்த ஒரு சகோதர இனமே என்ற உண்மையை இளம் சிங்களச் சந்ததிக்குப் புரியவைத்த மன நிறைவோடு மீண்டும் முல்லைத்தீவுக்குச் செல்வதுடன் கதையும் முடிவு பெறுகின்றது.
நான் மேற்குறிப்பிட்ட
இரண்டு நூல்களும் இருவேறு பரிமாணங்களில் தமிழர் சிங்களவரின் ஒற்றுமையை வலியுறுத்துவனவாக சிங்களவர்களால் எழுதப்பட்ட நூல்களாகவே அமைந்துள்ளன. தமிழர்களின் அபிலாஷை களையும், அவர்கள் ஆயுதமேந்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட காரணத்தையும் அழுத்தமாகப் பதிவு செய்யும் வகையில் தமிழ் எழுத்தாளர்களினாலும் நூல்கள் எழுதப்பட்டு சிங்களப் பொதுமக்களைச் சென்றடைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற தேவையை இவ்விரு நூல்களும் வலியுறுத்துகின்றன. இத்தகைய முயற்சிகளுக்கு தோதன்ன பதிப்பகம் ஆதரவளிக்கக் காத்திருப்பதாக அதன் உரிமையாளர் சிட்னி மார்க்கஸ் டயஸ் 2013 ஜனவரியில் என்னைச் சந்தித்தவேளையில் குறிப்பிட்ட செய்தியையும் இவ்விடத்தில் பதிவு செய்வது பொருத்தமாகும்
என்று கருதுகின்றேன்.
0 0 0
35

Page 38
தேம்ஸ் நதியின் வட கரையில் வெஸ்ட் மின்ஸ்டர் பிரதேசம் அமைந்துள்ளது என்பதை யும் அங்குதான் இலண்டனின் வரலாற்றுச் சிறப்புமிக்க பல இடங்கள் அமைந்துள்ளன என்பதையும் முன்னைய அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
வெஸ்ட் மின்ஸ்டர் தேவாலயம் இலண்டனில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தேவாலயமாகும். அதனை வெஸ்மின்ஸ்டர் அபி (மடம்) என ஆங்கிலேயர்கள் வாஞ் சையுடன் அழைக்கிறார்கள். இந்தத் தேவால யத்திற்கு சென்ற் மேரிஸ் சேர்ச் என்ற . பெயரும் உண்டு.
இந்தத் தேவாலயத்திலேதான் பிரித் தானிய மன்னர்களின் திருமணங்கள் முடிசூட்டுவிழாக்கள் காலாதிகாலமாக இடம் பெற்று வருகின்றன.
இந்தத் தேவாலயத்தில் அரசதிருமணங்கள், முடிசூட்டு விழாக்கள் இடம்பெறுவது போன்று மன்னர்களின் பூதவுடல்களும் இங்கேதான் அடக்கம் செய்யப்படுகின்றன. அரசர்களை விட பிரதமர்கள், ஓவியர்கள், பிரபல வைத்தி யர்கள், கவிஞர்கள், பிரபல நடிகர்கள், போர் வீரர்கள், மாலுமிகள், அரசியல்வாதிகள் எனப் பலதரப்பட்டோரின் சமாதிகளும் இந்தத் தேவாலயத்தின் சூழலிலே அமைந்துள்ளன.
இன்னொருவகையில் கூறுவதானால் இங்கிலாந்தை ஆண்ட அரசர்களினதும் அரசிகளினதும் பிரபுக்கள் கவிஞர்களினதும் கவித்துவமான கல்லறை என்று கூடச் சொல்லலாம். பழமைக்கே உரிய தொடவிய லாத காலத்தை ஏதோ ஒருவகையில் தொடும் பிரமிப்பு அந்த நினைவாலயத்தில் இருந்தபோது என்னுள் ஏற்பட்டிருந்ததை
வெஸ்ட் மின்ஸ்டர் அபே தேவாலயம்

நி.ஞானசேகரன்
எழுதும் இலண்டன் பயண. அனுபவங்கள்
உணர்ந்தேன். நமக்கு எட்டாததை ஆராதிக்கும் திவ்விய தரிசன பாவத்துடன் பலர் அங்கு உலவிக்கொண்டிருந்ததை நான் கவனித்தேன். தரையில் எழுதப்பட்டிருக்கும் எழுத்துக்களை மிதிக்கும்போது நூற்றாண்டுகளையே மிதிப் பதுபோல கூசியது. நீளப்பாட்டில் படுத்த வாக்கில் கிடந்த மன்னர்களின் சிலைகளைத் தொடும்போது ஒருவகை அதிர்வும் பயமும் அமானுஷ்யமாக உடலில் பரவின.
'கவிஞர்களின் மூலை' என்ற பகுதியில் ஷேக்ஸ்பியர், ஷெல்லி, கீட்ஸ் போன்ற கவிஞர்கள் சிலைகளாக நின்றிருந்தனர்,
முதலாவது உலகமகா யுத்தத்தின்போது ஏறத்தாழ 10 இலட்சம் போர்வீரர்கள் இறந்தார் களாம். அந்நிகழ்வை நினைவு கூரும் முகமாக இந்தத் தேவாலயத்தின் தெற்கு வாயிலில் ஒரு போர்வீரனின் கல்லறை காணப்படுகிறது. இது சகலதரத்தினரான மக்களினதும் சேவையைக் கெளரவிக்கும் முகமாக அமைக்கப்பட்ட கல்லறையாகும். இந்தத் தேவாலய வளா கத்தில் அடக்கம் செய்யப்பட்டோரில் முக் கிய மானவர்களாக முதலாவது எலிசபெத் மகாராணி, இரண்டாவது ஜோர்ஜ் மன்னர், விஞ்ஞானி சேர். ஐசாக் நியூற்றன், டார்வின், எழுத்தாளர்களான றஸ்கின், கோல்ட் ஸிமித், வேட்ஸ்வேத், மில்ரன், சாம்வெல் ஜோன்சன், டிக்கன்ஸ், ஆகியோர் அடங்குவர்.
பழமையான இந்தத் தேவாலயத்தில் அமைந் திருக்கும் மாடக்கூண்டு உரோமாபுரியில் உள்ள தேவாலத்தின் மாடக்கூண்டுக்கு அடுத்ததாக ஐரோப்பாவின் இரண்டாவது பெரியதாக அமைந்துள்ளது. இத்தேவாலயமானது கி.பி.600ஆம் ஆண்டளவில் மரத்தினால்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

Page 39
கட்டப்பட்டு காலப்போக்கில் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு 1614 ஆம் ஆண்டில் இன்றைய வடிவத்தைப் பெற்றுள்ளது.
இந்தத் தேவாலயத்தில் உள்ள எண்கோண மண்டபம் 13 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது. அந்த எண்கோண மண்ட பம் பலதடவைகள் காலத்துக்குக் காலம் திருத்தப்பட்டபோதிலும் அதன் நிலப்பரப்பில் பதிக்கப்பட்ட மாபிள் கற்கள் இன்றும் அதேநிலையில் அழியாமல் காப்பாற்றப்பட்டு வருகின்றன.
இத்தேவாலயம் 150 வருடங்கள் இங் கிலாந்தின் பாராளுமன்றமாகவும் 1547 வரை இயங்கிவந்துள்ளது. இலண்டனில் பார்க்கவேண்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இத்தேவாலயம் அமைந் திருப்பதால் எந்த நேரமும் உல்லாசப் பிரயாணிகள் இங்கு நிறைந்து காணப் படுகின்றனர்.
ஆங்கிலேயர்கள் இந்தத் தேவால யத்தையும் அதனைச் சூழவுள்ள இடங்களையும் தமது பாரம்பரிய கலாசார மையமாகக் கருதுகிறார்கள். வெஸ்ட் மின்ஸ்டர் அபேயின் உயர்ந்தோங்கிய கூம்புக் கோபுரங்கள், விதானங்களில் விரிந்திருந்த ஓவியங்களும் வர்ணக் கண்ணாடிகளும் பிரமாண்டம் பிரமாண்டமாய் மலைக்கவைத்தன.
வெஸ்ட் மின்ஸ்டர் தேவாலயத்தின் அருகில்
ஒரு போர்வீரனின் கல்லறை ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

- 4 1 1 - 4
- பாகம் 2
4 பட்டப் படிப்பா?
EEEEக் பகா At 4ாய ANANTHE ELETEETHபம்
பாயியர் பயம் காயப்பட்டிருகம்
தபாடு போட்டிய- AEE
இலண்டனின் கண் (London Eye) கல்லறைகள் கூட கவித்துவத்தோடி ருந்தன.
இந்தத் தேவாலயத்தை விட்டு நாங்கள் வெளியே வந்தபோது 2000 ஆண்டுப் பழமைக்குள் புகுந்து வெளியே வந்த ஓர் உணர்வு - ஓர் ஆழம் என்மனதுள் நிறைந்திருந்தது.
இலண்டனின் கண் (London Eye)
தேம்ஸ் நதியின் தீரத்தில் அமைந்துள்ள ஓர் இராட்சத இராட்டினம்தான்(சக்கரம்) “இலண்டன் ஐ". இது ஐரோப்பாவிலேயே மிகப் பிரபலமான சுற்றுலா மையமாகத் திகழ்கிறது. இந்த 'இலண்டன் ஐ' இலண்டனின் புதுமைக்குச் சான்றாக விளங்குகிறது. புதிய நூற்றாண்டைச் சிறப்பிக்கவென இந்த
இராட்சத இராட்டினம் அமைக்கப்பெற்றது.
ஒரு சைக்கிளின் சில்லைவிட உருவத்தில் 200மடங்கு பெரியது. மூவாயிரம் தொன் அடித்தளத்தில் எழுநூறு தொன் இரும்பினால் அமைக்கப்பட்ட இந்த இராட்சத சக்கரம் 135 மீற்றர் உயரமும் 120 மிற்றர் விட்டமும் கொண்டது. சக்கரத்தில் 32 இராட்சத கண்ணாடிக் கூண்டுகள் அமைந்துள்ளன. ஒவ்வொரு கண்ணாடிக் கூண்டிலும் ஒரே
நேரத்தில் 25 பேர்பயணம் செய்யலாம்.
இச்சக்கரம் மிக மெதுவாக சுற்றுகிறபோது தேம்ஸ் நதியின் அழகு, அதன்மேலுள்ள பாலங்கள், பாராளுமன்றம், பிக் பென் மணிக்கூண்டுக் கோபுரம், தேவாலயங்கள் முதலியவற்றை கல்லெறி தூரத்தில் கண்டு கொள்ளலாம். இலண்டன் மாநகரின் சகல பகுதிகளையும் இதில் இருந்து 45 கிலோ
37

Page 40
ஒ இ முடி8)
மீற்றர் வரை பார்க்கலாம். சக்கரம் உச்சிக்குப் போகும்போது பருந்துப் பார்வையாக நீண்ட தூரம் தெரிகிறது. ஒரு நேரத்தில் 800 பேர்வரை
இந்தச் சக்கரத்தில் பயணிக்க முடிகிறது.
2010ஆம் ஆண்டில் இந்த 'லண்டன் ஐ' கண்ணாடிக்கூண்டுக்குள் 433 திருமணங்கள் நிகழ்ந்ததாக அறிய முடிகிறது. காதலர்தினம் கொண்டாடும் நாளன்றும் இந்தக்கண்ணாடிக் கூண்டுக்குள் காதலர்தினத்தைக் கொண்டாட இளம் சிட்டுக்கள் வருகிறார்களாம்.
ஒவ்வொரு வருடமும் ஜனவரி முதலாம் திகதி புது வருடம் பிறக்கும்போது 10 நிமிட வாணவேடிக்கையைப் பார்த்து மகிழ இலண்டன் மாநகரமே இங்கு கூடிவிடும் என அறிய முடிகிறது.
இந்த 'இலண்டன் ஐ' யை பார்க்கச் செல்பவர்களுக்கு ஒரு புதிய அனுபவமும் கிட்டுகிறது. நான்கு பரிமாணங்கள் கொண்ட திரைப்படம் காட்டுகிறார்கள். முப்பரிமாணப் திரைப்படங்கள் பார்த்த அனுபவம் வாசகர்களுக்கு இருக்கலாம். அதாவது தற் கால சினிமாத்திரையில் நீளம் அகலம் ஆகிய இரு பரிமாணங்களையே நாம் பார்க்கிறோம். முப்பரிமாணம் என்பது நீள அகலத்துடன் உயரமும் தெரியும். படம் பார்ப்பவர்கள் அதற்கென வழங்கப்படும் கண்ணாடியை அணிந்து கொண்டுதான் படம் பார்க்க வேண்டும். படத்தில் ஒருவர் கத்தியை எடுத்து வீசுவாரானால் அந்தக்கத்தி எம்மை நோக்கி வருவதுபோல் இருக்கும். நாம் சடுதியாக தலையைக் குனிந்து கொள்வோம். படத்தில் ஒருவர் காறித் துப்புவாரானால் அந்தத் துப்பல் எமது முகத்தை நோக்கிவரும். இது
முப்பரிமாணப் படத்தின் தன்மை.
தற்காலத்தில் நான்காவது பரிமாணப் படங்களும் வந்துள்ளன. முப்பரிமாணத்துடன் மேலதிகமாக சிலவற்றை நாம் உணரமுடியும். அதாவது புயல்வீசுகிறது என்றால் புயற் காற்றின் வேகத்தை தியேட்டரில் நாம் உணர்வோம். பனி பெய்தால் தியேட்டருக்குள் உண்மையாகவே பனி கொட்டும். நிலத்திலே ஏற்படும் அதிர்வுகளை நாம் காலுக்கடியில் உணர்வோம். அதற்கென தியேட்டரையே தயார்பண்ணியிருப்பார்கள்.
'லண்டன் ஐ' யில் ஏறுவதற்கு முன்னர் எங்களுக்கு ஒரு நான்கு பரிமாணப்படத்தைக் காட்டுகிறார்கள். அந்தப்படத்தில் சிறுமி ஒருத்தி தனது தந்தையாருடன் 'லண்டன் ஐ' கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்து இலண்டன் மாநகரைப் பார்க்கிறாள். பருந்துப் பார்வையாக 38
நாடும் நடுத்த

அவள்காணும் காட்சிகளை நாமும் பார்த்தும் உணர்ந்தும் கொள்கிறோம். படத்திலே தேம்ஸ் நதி, பாராளுமன்றம், பிக்பென் மணிக்கூண்டுக் கோபுரம், தேம்ஸ் நதியின் மேலுள்ள பாலங்கள் இவையெல்லாம் எமக்கு கைக்கெட்டிய தூரத்தில் எம்மை நோக்கி வந்துபோகின்றன. நாம் எமது கைகளை நீட்டி அவற்றை ஸ்பரிசிக்கவும் ஆசைப்படுகிறோம். கலர் கலரான காட்சிகள், அவற்றிற்கேற்ற நவீன பாணியிலான இசை. தேம்ஸ் நதியில் இடம்பெறும் வாணவேடிக்கையின்போது வாணக்கொட்டுகளில் இருந்து சொரியும் நெருப்புப் பொறிகள் எம்மைச் சுட்டெரித்து விடுமோ என ஏற்படுகிற பயம்... திடீரென இலண்டன் - நகரத்தில் பனி கொட்டுகிறது. நாமும் அந்தப்பனியிலே நனைகிறோம்! - எப்படி? தியேட்டருக்குள் செயற்கையாகப் பனிப்பொழிவை ஏற்படுத்திவிடுகிறார்கள். நிலத்திலே காலுக்கடியில் அதிர்வு. இப்படி யெல்லாம் புதிய புதிய அனுபவங்களை அதிநவீன தொழில்நுட்பம் மூலம் ஏற்படுத்தி விடுகிறார்கள். பார்க்கப் பார்க்கப் பரவசமாக இருக்கிறது.
எத்தனைகோடி இன்பம் வைத்தாய் இறவைா இறறைவா என இயற்கையைப் பார்த்து மெய்மறந்து பாடுவான் பாரதி. பாரதியின் அந்த வரிகளை அங்கே செயற்கையின் துணைகொண்டு ஆக்கிக் காட்டுகிறார்கள்.
'இலண்டன் ஐ'யினது முக்கியத்தை அறிந்து கொள்ள சில தரவுகள் எமக்கு உதவுகின்றன. உலக அதிசயங்களைப் பார்க்க வருடா வருடம் செல்லும் உல்லாசப் பயணிகளின் தொகையுடன் ஒப்பிட்டு நோக்க எமக்கு இந்தத் தரவுகள் உதவுகின்றன இந்த 'இலண்டன் ஐயை பார்த்து மகிழ வருடத்தில் 37இலட்சத்து ஐம்பதினாயிரம் பேர்வரை வருகிறார்கள். ஈஜிப்ற் பிரமிட்களைப்பார்க்க 30 இலட்சம் மக்கள் வருடத்தில் செல்கிறார்கள். தாஜ்மகாலைப் பார்க்க 24 இலட்சம் மக்களே வருடத்தில் செல்கிறார்களாம். இவை 'இலண்டன் ஐ' பற்றிய கைநூலில் காணப்படும் தகவல்கள். இந்தத் தகவல்களையெல்லாம் எமக்கு வாசித்துக்காட்டி மைத்துனரின் மகள் சந்தியா பெருமைப்பட்டுக் கொண்டிருந்தாள்.
அதனைக் கேட்டுக்கொண்டிருந்த எனது மனைவி கூறினாள், "இலண்டன் ஐ எமக்குப் பிரமிப்பைத் தருகிறதுதான். ஆனால் இதனைப் பார்க்கவென்றே யாரும் இலண்டனுக்கு வருவதில்லை வந்த இடத்தில் பார்க்கிறார்கள்;
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

Page 41
அவ்வளவுதான். ஆனால் உலக அதிசங்கள் அப்படியல்ல. அவற்றுக்குப் பின்னால் வரலாறுகள் இருக்கின்றன. உதாரணமாக தாஜ்மகாலை எடுத்துக்கொண்டால் அது உலகின் சாகா வரம் பெற்ற காதல் சின்னம். மன்னன் ஷாஜகான் தன் மனைவியின் நினைவாகக் கட்டி எழுப்பிய காதற்கோட்டை. தாஜ்மகாலின் அழகையும் கலை நுட்பத் தையும் பார்த்த வெளிநாட்டவர்கள் அது மனிதப்படைப்பல்ல தெய்வப்படைப்பு என அதிசயித்துக் கூறியிருக்கிறார்கள். உலக அதிசயங்களை இந்த வேடிக்கை மையத்துடன் ஒப்பிடக்கூடாது.. என விளக்கம் கொடுத்தாள்.
மேடம் »சட் (Madame Tussatd) மெழுகுப் பொம்மை அருங்காட்சிச் சாலை.
இலண்டன் செல்பவர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று மேடம் டூசட் அருங்காட்சிச் சாலை. அங்கு உலகத் தலைவர்களின் சிலைகள் உள்ளன. அவற்றோடு நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்ற விபரத்தை மைத்துனர் என்னிடம் கூறியிருந்தார். அந்த அருங்காட்சிச் சாலையை அடைந்தபோது நுழைவாயிலில் நீண்ட கியூவரிசை இருப்பதைப் பார்த்தேன். சிலை களைப் பார்ப்பதற்கா இந்த நீண்ட வரிசை என எண்ணினேன்.
நான் இலண்டனில் இருந்த காலத்தில் அவதானித்த ஆங்கிலேயர்களது கியூவரிசைப் பழக்கம் பற்றிச் சொல்லித்தான் ஆகவேண்டும். எந்த இடத்திலும் அவர்கள் கியூவரிசை முறையைத்தான் பின்பற்றுவார்கள். எந்தக் காரணம் கொண்டும் முண்டியடித்து முன்செல்ல மாட்டார்கள். பஸ்ஸில், ரெயிலில் ஏறும்போதும் வங்கியில், தபாற்கந்தோரிலும் எங்கு பார்த்தா லும் கியூ ஒழுங்கைப் பின்பற்றுவார்கள். ஒரு கருமபீடத்தை அடைவதற்கு இரண்டு பேர்மட்டுமே இருந்தால்கூட பக்கம் பக்க மாக நிற்கமாட்டார்கள் ஒருவர் பின்னாக ஒருவராகத்தான் நிற்பார்கள். சிறுவர்கள்கூட மிகவும் பொறுமையாக கியூவிலே நிற்பார்கள். கியூ பழக்கம் அவர்களது இரத்தத்தில் ஊறிய ஒரு பழக்கம் என்றே நான் காண்கிறேன்.
கியூவில் எங்களது முறை வந்ததும் ரிக்கற் வாங்கிக்கொண்டு உள்ளே சென் றோம். உள்ளே சென்று பார்த்தால் ஒரே பிரமிப்பாக இருந்தது. சிலைகள் யாவும் சத்தியத்தின் சத்தியமான உயிர்ப்போடு இருந்தன.
மறைந்து
போனவர்களும்,
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

மெழுகு பொம்மை -
விஞ்ஞானி ஐன்ஸ்டீன் இன்று உயிரோடுள்ளவர்களுமான உலகப் பிரபலங்களை உயிரோட்டத்துடன் சிலையாக வடித்திருந்தார்கள். அந்தச் சிலைகளின் கண்களில் ஒளிரும் பரவசம், உதட்டோரத்தில் நெளியும் புன்னகை, வெள்ளைத்தோலின் ஊடாக தெரியும் நீலநிற நாடி நரம்புகள், கன்னக் கதுப்புகளில் எட்டிப்பார்க்கும் பூனை மயிர் - என மெழுகு வார்ப்புக் கலையின் அற்புதத்தை அங்கு கண்டேன்.
நாம் வாழ்நாளில் சந்திக்க முடியாத, தொட்டுக்கொள்ள முடியாத பிரபலங்களோடு நின்று நாம் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். இளைஞர்களும் சிறுவர்களும் தமக்குப் பிடித்த விளையாட்டு வீரர்கள், பாடகர்கள் ஆகியோருடன் நின்று படம் எடுத்துக்கொண்டார்கள். சிலர் ஹொலிவூட் நடிகர்களுடன் நின்று படம் எடுத்தார்கள். இந்திரா காந்தியும் மகாத்மா காந்தியும் அருகருகே நின்றார்கள், நெல்சன் மண்டேலா ஒரு புறத்தில் நின்றிருந்தார். இளவரசி எலிசபெத் குடும்ப சமேதரராய் நின்றிருந்தார். ஹிட்லர் தனக்கேயுரிய கம்பீரத்துடன் நின்றிருந்தார். கிரிக்கட் வீரர் டென்டுல்காருடன் பலர் படம் பிடித்துக்கொண்டு நின்றார்கள். இதில் முக்கியமாக நான் கவனித்த விடயம் என்வென்றால் இந்தப் பிரபலங்கள் எவ்வாறு ஆடை அணிகளுடன் காட்சிதருவார்களோ அதனையும் நுணுக்கமாகக் கவனித்துச் செயற்பட்டிருக்கிறார்கள் என்பதுதான்.
இவற்றைப் பார்த்துவிட்டு வேறொரு பகுதிக்குச் சென்றால் அது இருண்ட பகுதியாக விளங்கியது. பன்னிரண்டு வயதுக்
39

Page 42
குக் குறைந்த சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், இரத்த அழுத்தம் உள்ளவர்கள், அந்தப் பகுதிக்குள் செல்லவேண்டாம் என்ற அறிவிப்பு அங்கு காணப்பட்டது.
கூட்டத்தோடு கூட்டமாக அந்த இருண்ட பகுதிக்குள் தள்ளப்பட்டோம். இருளான பகுதிக்குள் இருந்து கோரமான உருவம் ஒன்று வீரிட்டுக் கத்தியபடி எங்கள் முன் பாய்ந்தது. முன்னால் சென்றவர்கள் பயத்தினால் ஏதோ மொழியில் கத்தினார்கள். “ஐயோ” என எனது மொழியில் நான் கத்தினேன். பெண்களின் அலறல் பயப்பிராந்தியை அதிகமாக்கியது. நான்கு அடி முன்னேறியிருப்போம், ஒரு சிதைவடைந்த முகத்தோடு ஒருவன் தவழ்ந்து வந்து காலடியில் பயமுறுத்தினான். அதையும் தாண்டி முன்னால் நகர்ந்தால் ஆடைகளிலிருந்து இரத்தம் சொட்டச் சொட்ட இன்னொருவன் எங்களை நோக்கிக் கைகளை நீட்டியபடி ஓடிவந்தான். மனைவி என்பின்னால் உறைந்து மறைந்து கொண்டாள். பலரும் அலறியடித்தபடி அரண்டோடிக்கொண்டிருந்தார்கள். ஆனானப் பட்ட பேய்கள் எல்லாம் அங்கே இருந்தன. எங்கிருந்தாவது ஏதாவது எங்கள் மேல் வந்து விழுந்து விடுமோ என்று பயந்து நடுங்கியபடி நடந்தோம்.
வேறொரு கட்டிடத்துக்குள் நுழைந்தோம்.
இலண்டனில் புகழ்பெற்ற பிளனட்டோரியம்' என்று அதனைக் குறிப்பிடுகிறார்கள். அங்கு டிஜிட்டல் தொழில் நுட்பம் மூலம் ஆகாயத்தை - பிரபஞ்சத்தை, வட்ட வடிவிலான திரையில் படைத்து அதிலே கோள்கள் சுழல்வதைக் காட்டுகிறார்கள். கோள்களுக்கு இடையிலான தூரங்கள், கோள்களுக்கு இடையிலான உருவ வேறுபாடுகள், இரவு பகல்களின் தோற்றப்பாடுகள் அத்தனையும் தத்ரூபமாக அமைந்திருந்தன.
இவற்றையெல்லாம் தாண்டி மறுபகுதிக் குள் நடந்தால் முற்காலத்தில் எப்படியெல்லாம் கொலைத்தண்டனை நிறைவேற்றினார்கள் என்பதை விளக்கும் செயன்முறைக்காட்சி காண்பித்தார்கள். கழுவேற்றும் காட்சி, கத்தி யால் தலையைத் துண்டாடும் காட்சி, இவற்றின் பின்னால் கையில் விளக்கு ஏந்தியபடி தாயொ ருத்தி பிணக்குவியல்களுக்குள் யாரையோ தேடிக்கொண்டிருந்தாள்.
அங்கிருந்து பயப்பிராந்தியுடன் வெளியே வந்தோம். வாசலில் மெழுகு நாய் ஒன்று ஒவ்வொருவரையும் பார்த்து தன்பாட்டில் தலையாட்டிக் கொண்டிருந்தது. அங்கே
40

* *
-யா! 14/1 - ! -
- 2. iiiiii11
THEP OF LONDON மெழுகு மாளிகையில் எமது கார்ப் பயணம்.
மகாராணி எலிஸெபத் பார்க்கிறார். ஒருவர் எழுது கோலால் எழுதுவதும் பின் சிந்தித்து தலையாட்டிக் கொண்டிருப்பதுமாகக் காட்சிதந்தார்.
இதன் பின்னர் தொடராக வந்து கொண்டிருந்த பழைய மொடல் கார்களில் ஏறி பிறிதொரு அதிசய உலகினுள் பயணிக்க வைக்கிறார்கள். பண்டைய அரசர்கள், பிரபுக்கள், மகாராணிகள், பிச்சைக்காரர்கள், வாளேந்தும் வீரர்கள், செங்கோல்மன்னர்கள், கோமாளிகள், அறிஞர்கள், என நாங்கள் பயணித்த காரின் இருமருங்கிலும் நின்று எங்களுக்கு கையசைக்கிறார்கள். சிலர் தலை அசைத்துப் புன்னகைக்கிறார்கள். இந்தப் பயணத்தின்போது சிரியுங்கள் உங்கள் புகைப்பட இலக்கத்தைக்குறித்துக் கொள்ளுங்கள்' என எழுதியிருப்பதைக் கவனித்தேன். அந்தப் புகைப்படங்களை நாம் வெளியேறும்போது வாசலில் பெற்றுக் கொண்டோம்.
மெழுகிலேசெய்த உருவங்களால் இதுவரை நேரமும் எம்மை ஆட்டிப்படைத்திருக்கிறார்களே என நினைத்து வியந்துபோனேன்.
இந்த மெழுகுப்பொம்மை அருங்காட்சிச் சாலை 1902 ஆம் ஆண்டு மேடம் டூசட் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. 1925இல் மின்சாரக் கசிவினால் பல பொம்மைகள் எரிந்து போயினவாம். 1940ஆம் ஆண்டில் உலக மகா யுத்தத்தின்போது விமானத் தாக்குதலால் 352 தலை அச்சுக்கள் சேதமாகினவாம்.
1794 இல் மேடம் டூசட் தனது 89 ஆவது வயதில் காலமானார். தற்போது இந்த மெழுகுப் பொம்மை கண்காட்சிச்சாலை அவரது வாரிசுகளின் பராமரிப்பில் உள்ளது.
8 8 8 8 8
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

Page 43
HEEE
க தயா"
பார்க்க இதில் கத்தோசகர் பதி
யேர்மன் தமிழ் எழுத்தாளர் எழுத்தாளருக்காக நடாத்திய சி
பரிசுபெறும் கதைகள்
முதலாமிடம். "வேறையாட்கள்” திரு. யாழ்ப்பாணம். (பரிசு 25 ஆயிரம்). இரண்ட நாகூர்கனி, கொழும்பு 12 (ரூபா15 ஆயிரம்.) பாலையூற்று, திருமலை (ரூபா10 ஆயிரம்.)
திரு.மு வடக்கு கிவுக்கும்பூங்க
ரூபா 5ஆயிரம் பரிசுபெறும் பன்னிரண்டு சிற
"கலைந்து போன கனவுகள்” திருமதி "பிராயச்சித்தம்” திரு.க.கோபாலபிள்ளை திரு. மு.பு. முகம்மது ராபி பாலையூற்று திரும அல்வாய் வடக்கு, அல்வாய், "சருகைவேட்டி ஆரையம்பதி. "அறிவுக்கு மனசில்லை" திரு. மட்டக்களப்பு. "முதமையெனும் பூங்காற்று” தி சமாதி” திரு. பி.வேதநாயகம், தும்பளை தெற் திரு. சின்னராஜா உதயகுமார். வல்வெட்டித்து துணுக்காய், "பூமிகா காத்திருக்கிறாள்” திருப். திரு. யூலியஸ் விஜயகுமார் விஜயசங்கர் (
திரு. வ. சிவராசா, (தலைவர்) v.sivaraja திரு பொன் புத்திசிகாமணி (செயலாளர்
எழுத்த நாடளாவி ஆசிரியர்
எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் WRITERS MOTIVATION CENTRE
இலங்கையில் எப்பாகத்திலும் வசிக்கு கலந்து கொள்ளலாம். சிறுவர் கதைகளை ம கதைகள் எந்த வடிவிலும் எங்கேயும் வெ பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், முன்பள்ளியின் முகவரி, கதையின் பெயர், அனுப்புதல் வேண்டும்.
- முதலாம் பரிசு ரூபா 10, 000, இரண்டாம் ஏனைய 12 பரிசுகளுக்கு புத்தகப் பொதிகள்
கதைகள் வந்து சேரவேண்டிய கடைசி வேண்டிய முகவரி: டாக்டர் ஓ. கே. குண மையம், 1 ஏ, பயனியர் வீதி, மட்டக்களப்பு
டிகை ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

தமிழ் எழுத்தாளர் சங்கம் - யேர்மனி Tamilischer Schriftsteller Verein - Deutschland
Tamil Writers Association - Germany
சங்கம் இலங்கைவாழ் தமிழ் றுகதைப்போட்டி முடிவுகள் - 2014
பாலகிருஸ்னன் அனோஜன் அரியாலை, 1மிடம் "பண்பெனப்படுவது" திரு. எஸ்.ஐ
மூன்றாமிடம் "விட்டில்” திரு அ.வா. முஹ்சீன்
றுகதைகள்
அனுராதா பாக்கியராசா, களுவாஞ்சிக்குடி தெகிவளை, கொழும்பு. "ஏன் அழுதான்
லை. "குஞ்சியப்பு” திருநடராசா .இராமநாதன் ” திரு. செளந்தரராஜன். லெனாட். தாழங்குடா. - சண்முகலிங்கம். ராஜீசன் பெரியகல்லாறு, ரு.மு. சிவலிங்கம், கொட்டகலை. "கனவுகளின் ற்கு பருத்தித்துறை . "காசிருந்தால் வாங்கலாம்” துறை. "கூடு” செல்வன் கஜன். அமிர்தலிங்கம். சுபதி. உதயகுமார், அளவெட்டி வாடகைவீடு” வேப்பன குளம் வவுனியா, ah@arcor.de T). ponmani@hotmail.de
எளர் ஊக்குவிப்பு மையம் ய ரீதியில் நடத்தும் முன்பள்ளி களுக்கான சிறுகதைப்போட்டி
ம் முன்பள்ளி ஆசிரியர்களும் இப்போட்டியில் மட்டுமே போட்டிக்காக அனுப்பி வைக்கலாம். ளிவந்திருக்கக் கூடாது. கதையுடன் உங்கள் மின்னஞ்சல் முகவரி, கற்பிக்கும் முன்பள்ளி, கையொப்பம் போன்ற விபரங்கள் இணைத்து !
பரிசு ரூபா 7, 000, மூன்றாம் பரிசு ரூபா 35, 000
வழங்கப்படும் 2 நாள். 15-06-2014. கதைகள் வந்து சேர
நாதன், மேலாளர், எழுத்தாளர் ஊக்குவிப்பு !

Page 44
எழுத்த
எண்ன
மாற்றத் சந்து பெருப்தியை
லாகவும் கூத்தைக் கவிழ
இந்திய அரசியலில் மாற்றம் வரவேண்டும் என்று விரும்பிய அனைவர்க்கும் ஒரு நற்செய்தி கிடைத்துள்ளது. பெரும்பாலான இந்திய மக்களைப்போலவே புலம்பெயர்ந்து வாழும் பெரும்பாலான தமிழ் மக்களும் இத்தகைய மாற்றத்தையே விரும்பினர். கடந்த காங்கிரஸ் ஆட்சிமீது பெரும்பாலான இந்திய மக்கள் எவ்வளவு அதிருப்தியைக் கொண்டிருந்தனரோ அதே போலவும் அதற்கு மேலாகவும் இலங்கைத்தமிழ் மக்களும் தார்மீகக் கோபத்தைக் கொண்டிருந்தனர். இந்தியாவில் காங்கிரஸின் வீழ்ச்சி, இலங்கைத்தமிழ் மக்களின் கண்ணீருக்குக் கிடைத்த விடையாகும்.
இந்திய சுதந்திரத்தின் பின்னர் சில காலகட்டங்களைத் தவிர்த்து, மத்தியில் பெரும்பாலும் காங்கிரஸ் ஆட்சியே இடம்பெற்று வந்தது. சிலகுறைகள் இருந்த போதிலும் இந்திரா காந்தியின் காலம்வரை இந்தியா பலம் பெற்ற நாடாகவே வளர்ச்சிபெற்று வந்தது. ராஜீவ்காந்தி முதல் இந்தியா தனது பழம் பெருமையை இழக்கத் தொடங்கியது. மன்மோகன்சிங் என்ற ஆளுமையற்ற அரசியல் வாதியின் கையில் ஆட்சி அதிகாரம் வந்ததன் பின்னர் இந்தியாவின் பெயர் மிக மோசமாகப் பாதிக்கப்படத் தொடங்கியது. "போகின்ற பாரதத்தைச் சபித்தல்” என்னும் பாரதியின் பாடலில் இடம்பெறும் சில அடிகள், காங்கிரஸ் தோல்வியினால் பிரதமர் பதவியை விட்டு நடையைக்கட்டும் மன்மோகன் சிங்கிற்கு மிகப் பொருத்தமானவை. "ஒலியிழந்த குரலினாய் போ போ போ” என்றும், “கிலி பிடித்த நெஞ்சினாய் போ போ போ” என்றும், "இன்று பாரதத்திடை நாய்போலே ஏற்ற மின்றி வாழுவாய் போ போ போ” என்றும், "நன்று கூறி லஞ்சுவாய் போ போ போ நாணிலாது கெஞ்சுவாய் போ போ போ எனவும் "தீது செய்வதஞ்சிலாய் - நின்முன்னே தீமைநிற்கி லோடுவாய் போ போ போ” என்றும் "சோதி மிக்க மணியிலே” காலத்தால் சூழ்ந்த மாசு பொன்றனை போ போ போ - எனவும் பாரதி பாடியவை, மாபெரும் இந்திய 42

இதூண்டும்
மைல்கள்
பேராசிரியர் துரை மனோகரன்
நாட்டின் ஆட்சித் தலைவராக இருப்பதற்கு கொஞ்சமும் தகுதியில்லாத மன்மோகன் சிங்கிற்கு அச்சொட்டாகப் பொருந்துகின்றன. இந்தியாவின் பெரும்பான்மை மக்களால் மட்டுமன்றி, இலங்கைவாழ் தமிழ் மக்களின் மனங்களினின்றும் தூக்கி எறியப்பட்ட ஓர் உதவாக்கரை, மன்மோகன்சிங், இந்திய நாட்டின் மிகமிகப் பலவீனமான ஆட்சித்தலைவர் இன்று ஆட்சியில் இல்லை என்பது மிகப் பெரும் ஆறுதலை அளிக்கக் கூடிய விடயம். சாதாரண மக்கள் பேச்சில் இடம்பெறும் "தொலைந்தது சனியன்!” என்ற வார்த்தைகள்தான் இந்திய அரசியலிலிலும் இன்று பயன்படுத்த வேண்டிய தாக ஆகிவிட்டன.
குடும்ப ஆட்சியை அரசியலில் பேணி வந்தவர்களுக்கு, இந்தியப் பொதுத் தேர்தல் நல்ல பாடத்தைக் கற்பித்துத் தந்துவிட்டது. சோனியாகாந்தி இராணிபோலவும், மகன் ராகுல்காந்தி இளவரசன் போலவும் நடந்துகொண்ட காட்சிகள் இப்போது இந்திய அரசியலில் மறையத் தொடங்கிவிட்டன. காங்கிரஸ் கட்சியும் காங்கிரஸ் ஆட்சியும் நேரு குடும்பத்தின் குடும்பச் சொத்து என்று நம்பியும் நம்பச் செய்தும் வந்தவர்களுக்கு அருமையான படிப்பினை கிடைத்துவிட்டது. இந்தியாவின் பெரும்பாலான மக்கள், தாம் அப்படியொன்றும் ஏமாளிகள் அல்லர் என்பதைத் துணிச்சலோடு நிரூபித்து விட்டனர். இந்தியாவுக்கு அக்கம் பக்கங்களில் குடும்ப ஆட்சி நடத்துபவர்களுக்கும் இந்திய மக்களின் இச் செயல் ஓர் எச்சரிக்கையாக அமைந்துவிட்டது எனலாம்.
காங்கிரஸ் ஆட்சியின் வீழ்ச்சிக்கு அதன் நிர்வாகத் திறமையின்மை, ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகம், விலைவாசி உயர்வு போன்ற காரணங்கள் மட்டுமன்றி இலங்கைத் தமிழ் மக்களின் கண்ணீரும் ஒரு முக்கிய காரணமாகும். "ஏழை அழுத கண்ணீர் கூரிய வாள் ஒக்கும்” என்பது தார்மீக ரீதியான உண்மையாகும். மக்கள் விடும் கண்ணீருக்கு அதிக வலிமையுண்டு. கண்ணீரின் சாபத்தில் இருந்து எவரும் தப்ப முடியாது. காங்கிரஸ்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

Page 45
ஆட்சி இலங்கைத் தமிழர்களைக் கண்ணீர் சிந்தச் செய்தது. இன்று அதே ஆட்சி தமிழ் மக்களின் கண்ணீரிலே கரைந்து விட்டது. பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தைக்கூட பெறமுடியாத அளவுக்கு காங்கிரஸ் கட்சி கேவலமாகிவிட்டது. அம்மை - அப்பன் பெயர் களைச் சொல்லிப் பிழைத்துவந்த தமிழ் நாட்டின் காங்கிரஸ் ஞானசூனியங்களுக்கும் நல்ல பாடத்தைத் தமிழ்நாட்டு மக்கள் புகட்டியுள்ளார்கள். இலங்கைத் தமிழரின் பிரச்சனைகளைக் கொச்சைப்படுத்தி, சோனியா அம்மையையும், ராகுல் இளவரசனையும் திருப்திப்படுத்த முனைந்தவர்கள் தமிழ்நாட்டுக் காங்கிரஸ்காரர்கள். இப்போது - துண்டைக் காணோம் துணியைக் காணோம் - என்று அரசியலை விட்டே ஓடித்தப்ப வேண்டிய நிலையில் இருக்கின்றனர் அவர்கள். எல்லாம் காலம் செய்யும் கோலம்!
எப்ப காங்கிரஸ் குடும்ப ஆட்சியை மக்கள் ஓரங்கட்டிவிட்டார்களோ,
அது போலவே தமிழ்நாட்டு மக்கள் கருணாநிதியின் குடும்பக் கட்சியையும் நிராகரித்து விட்டனர். கருணாநிதிக்கு இப்படியொரு வீழ்ச்சி ஏற்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏதோ பெயருக்குச் சில இடங்களாவது கிடைக்கும் என்றே சகலரும் எண்ணினார்கள். தனது குடும்ப நலனைப்பற்றி மட்டுமே சிந்தித்து வந்த கருணாநிதிக்கு அரசியல் ஓய்வைத் தமிழ்நாட்டு மக்கள் வழங்கிவிட்டார்கள். ஆயினும் கருணாநிதி வழக்கம் போலக் குடும்ப நலனுக்காக ஓயாது உழைப்பார் என்பது திண்ணம்.
கருணாநிதியின் வீழ்ச்சி விடயத்திலும் இலங்கைத் தமிழர்களின் கண்ணீர் வேலை செய்திருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியோடு கருணாநிதியும் இலங்கைத் தமிழர்களை கண்ணீர் விடச் செய்தார். அவர்களின் கண்ணீரின் சாபம் அவருக்குக் கிடைத்திருக்கிறது. காலப்போக்கில், கண்ணுக்குள்ளாலே போய் மூக்குக்குள்ளாலே வெளிப்படும் சாமர்த்தியம் தெரிந்த கருணாநிதி மீண்டும் வரக்கூடும். ஆயினும் அவருக்கும் அவரது கட்சிக்கும் கிடைத்த அடி பலமானது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு 1 சோகமான செய்தி, இலங்கைத்தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் தேர்தலில் வெற்றி பெறமுடியாமல் போன மையாகும். இது இலங்கைவாழ் பேரின வாதிகளின் வாய்களுக்கு அவல் கிடைத்தது போல் ஆகிவிட்டது.
இந்தியாவில் பலரும் எதிர்பார்த்தது போல
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

புதிய ஆட்சி மலர்ந்துள்ளது. பிற்போக்கு வாதியான எல்.கே.அத்வானிக்குப் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாமல் விட்டமை வரவேற்கக் கூடியதாகும். இந்திய மக்கள் பலரையும் கவர்ந்த நரேந்திரமோடி புதிய இந்தியப் பிரதமராகப் பதவியேற்றுள்ளமை பாராட்டக்குரியதாகும். நரேந்திரமோடி அப்படியொன்றும் விமர்சனங் களுக்கு அப்பாற்பட்டவர் அல்லர். முக்கியமாக இந்திய முஸ்லிம் மக்களின் மனங்களை அவர் வென்றெடுக்க வேண்டும். சொல்லால் மட்டுமன்றிச் செயலாலும் இந்திய மக்கள் அனைவரையும் அவர் வசீகரிக்க வேண்டும்
இன்றைய நிலையில் இந்தியாவுக்கு ஆளுமைமிக்க சிறந்த வசீகரமான நிர்வாகத் திறனுள்ள நேர்மையான துணிச்சல்மிக்க ஒரு தலைவரே தேவை. மன்மோகன்சிங்கோ, சோனியா காந்தியோ ராகுல் காந்தியோ இதற்குச் சற்றும் பொருத்தமானவர்களல்லர். நாட்டைக் குட்டிச் சுவராக்கிய மோசமான அரசியல்வாதிகள் அவர்கள். அவர்கள் மீதான உலகத்தமிழ் மக்களின் சாபம் பலித்துவிட்டது. இந்த வகையில் புதிய இந்தியப்பிரதமர் நரேந்திரமோடி இந்தியாவின் பெருமையை மீண்டும் உறுதி செய்வார் என்று நம்பலாம். இன்றைய நிலையில் பாரதியின் "வருகின்ற பாரதத்தை வாழ்த்தல்" என்ற கவிதையில் இடம் பெறும் பாடலடிகள் புதிய இந்தியப் பிரதமருக்கு பொருத்தமாகவே உள்ளன. "ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா , உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா , களிபடைத்த மொழியினாய் வா வா வா, கடுமை கொண்ட தோளினாய் வா வா வா, தெளிவுபெற்ற மதியினாய் வா வா வா சிறுமைகண்டு பொங்குவாய் வா வா வா, எளிமை கண்டிரங்குவாய் வா வா வா, ஏறு போல நடையினாய் வா வா வா என்றும் “தெய்வச் சாபம் நீங்கவே "நங்கள் சீர்த் தேசமிது தோன்றுவாய் வா வா வா” எனவும் "ஒளி யிழந்த நாட்டிலே - நின்றேறும் உதய ஞாயி றொப்பவே வா வா வா, களையிழந்த நாட்டிலே - முன்போலே களைசிறக்க வந்தனை வா வா வா" என்றும் அமைந்த பாரதியின் வரிகளாலேயே புதியவரின் வருகைக்கு வாழ்த்துச் சொல்லலாம்.
இலங்கைத் தமிழ் மக்களும் இத்தகைய தொரு இந்தியத் தலைவரையே விரும்பினர். இலங்கைத்தமிழ் மக்களின் நலனில் புதிய பிரதமர் போதிய அக்கறை செலுத்த வெண்டும் என்பதே உலகம் வாழ் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு. பேரினவாதிகளின்
43
பi 111ம்

Page 46
கொட்டம் அடங்க புதிய பிரதமரின் ஆளுமை பயன் படுத்தப்படவேண்டும். இந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் கட்சியின் வெற்றியும் வரவேற்புக்குரியது. குறைகள் இருந்த போதிலும் ஜெயலலிதா துணிச்சலானவர். மத்தியில் நரேந்திர மோடியும் தமிழ் நாட்டில் ஜெயலலிதாவும் இணைந்து இலங்கைத்தமிழ் மக்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்த வேண்டும்.
lil:iiiiiiiiiiii)
சாகித்திய இரத்தினம் விருது இலக்கியவாதிகளுக்கே
இலங்கையில் ஆண்டு
தோறும் இடம்பெறும் சாகித்திய விழாக்களில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகள் தொடர்பான இலக்கியப்பங்களிப்புச் செய்து வருபவர்களுக்குச் "சாகித்திய இரத்தினம்' என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது. இது வரவேற்கத்தக்க ஒரு விடயம். ஆனால் தமிழைப் பொறுத்தவரை இது முறையாக வழங்கப்பட்டு வந்துள்ளதா என்ற கேள்வி எழுகின்றது. இதுபற்றி 2013இல் ஒரு முறை தினகரன் வாரமஞ்சரியில் அருள்சத்தியநாதன் எழுதியிருந்தார்.
சாகித்திய இரத்தினம் (சாகித்திய ரத்னா) விருது உண்மையில் இலக்கிய வாதிகளுக்கே உரியது. தமிழைப் பொறுத்த வரையில் கடந்த காலங்களில் அவ்வப் போது இலக்கியவாதிகளுக்கும் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது என்பது மகிழ்ச்சிக்குரிய விடயம். ஆனால் சில வேளைகளில் இலக்கியவாதிகள் அல்லாதவர்களுக்கும் இவ்விருது வழங்கப்பட்டு வந்துள்ளது என்பது வருத்தத்துக்குரிய விடயம். குறிப்பாக இவ்விருது - பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கே உரியது என்பது போன்ற ஒரு மாயை தமிழ்ச் சூழலில் நிலவுகிறது. நிச்சயம் இது கண்டிக்கப்பட வேண்டும் பேராசிரியர்களாக இருந்தாலும் அவர்கள் இலக்கியவாதிகளாக இருக்க வேண்டியது அவசியம். அத்தகையோர்க்கே சாகித்திய இரத்தினம் விருது வழங்கப்படவேண்டும். இலக்கியவாதிகள் அல்லாதவர்கள் இவ் விருதுகளைப் பெறத் தகுதியற்றவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
ஒரு முறை எம்.ஏ.நுஃமானுக்குச் சாகித்திய இரத்தினம் விருதினை வழங்க சாகித்திய மண்டலக்குழு தீர்மானித்தது. அவர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டாலும், தீர்மானம் சரியானது. ஆனால் பெரும்பாலான

சந்தர்ப்பங்களில் பேராசிரியர்கள் என்பதற்காக மாத்திரமே இவ்விருது வழங்கப்பட்ட நிலைகளும் ஏற்பட்டதுண்டு. இத்தயை சந்தர்ப்பங்களில் பேராசிரியர்களின் வயது மட்டுமே தகுதியாகக் கொள்ளப்படுவதுபோல் தோன்றுகிறது. பேராசிரியர்கள் எல்லோரும் இலக்கியவாதிகள் அல்லர் என்பது மனங்கொள்ளப்பட வேண்டிய விடயம்.
சில பேராசிரியர்கள் பிறரின் நூல் களுக்கு முன்னுரைகள் வழங்கும் போது, அவர்களின் சொந்த முன்னுரைகளாக இருப்பதில்லை என்பதை நான் அறிவேன். பிற விரிவுரையாளர்களைக் கொண்டு எழுதுவித்து, இலேசாகச் செம்மைப்படுத்தி தங்களின் பெயரில் முன்னுரைகள் வழங்கும் சில பேராசிரியர்கள் உளர். (எல்லோரும் அப்படி அல்லர்) அத்தகைய ஒரு பேராசிரியருக்கும் சாகித்திய இரத்தினம் விருது கிடைத்துள்ளது!
ஒரு முறை கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றின் முடிவில், அமரர் த. கனகரத்தினம், தாம் எழுதிய நூல் ஒன்றை குறிப்பிட்ட பேராசிரியரிடம் அன்பளிப்பாக வழங்க முன்வந்தார். ஆனால், அப்பேராசிரியரோ, “உதெல்லாம் வாசிக்க எனக்கு நேரமில்லை அப்பா” என்று அலட்சியமாகக் குறிப்பிட்டுக் கடைசிவரை அந்த நூலைக் கையில் வாங்காமலே விட்டு விட்டார். அமரர் கனகரத்தினத்தின் முகம் வாடியது. இந்த நிகழ்ச்சியை நான் நேரில் பார்த்தேன். (2008 என்பதாக ஞாபகம்) இத்தகைய பேராசிரியருக்கும் சாகித்திய விருது வழங்கப்பட்டது.!
பாரதிதாசன் பாணியிலே சொல்வதாக இருந்தர்ல, "இனியொரு விதி செய்வோம் - அதை எந்த நாளும் காப்போம்." சாகித்திய இரத்தினம் விருது இலக்கிய வாதிகளுக்கு மட்டுமே வழங்கப்படவேண்டும். அதில் இலக்கியவாதிகளாக உள்ள பேராசிரியர்களும் அடங்கலாம். தவறாக ஒருவருக்கு சாகித்திய விருது வழங்கப்படும்போது, யாரோ ஓர் இலக்கியவாதி
புறக்கணிக்கப்படுகிறான் என்பதே உண்மை. இத்தகைய தவறுகள் எதிர்காலத்தில் இடம் பெறக்கூடாது என்பதே இலங்கைவாழ் இலக்கிய நெஞ்சங்களின் விருப்பமாகும். எந்த விருது வழங்ககப்பட்ட போதும் தகுதி மட்டுமே கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.
0 0 0
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

Page 47
069
CேC)
கேபிஜல
நிஜமும்
பராசிரியர் சு.வித்தியானந்தன் நினைவுரைகள் 9.2.2014 வெள்ளிக்கிழமை கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் இடம்பெற்றது. பேராதனிய பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத்தலைவர் பேராசிரியர் வ.மகேஸ்வரன் உரை நிகழ்த்தினார். "தமிழ் இலக்கிய வரலாற்றில் நிஜமும் அபத்தமும்' எனும் தலைப்பில் உரை அமைந்திருந்தது.
திரு. க. இரகுபரன் தலைமை உரை யாற்றினார்.
"தமிழ்த் தேசிய இலக்கியத்தை பல்கலைக் கழகம்வரை உயர்த்தியவர், பழம் இலக்கியத்தை மட்டும் அல்ல, நாட்டாரியல் இலக்கியத்தைக் கூத்து வடிவில் வெளிக்கொணர்ந்தவர். பல்வேறு மட்டங்களிலிருந்து பிரச்சனைகளை எதிர்கொண்ட போதும் தமது இலக்கிய முயற்சிகளில் தளராது பயணித்தவர் என்ற பெருமைகள் அமரர் பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்களுக்கு உண்டு. இத் தகையதொரு மாபெரும் கல்விமான் இலக்கியப் பற்றாளர் தமிழ் மரபு இலக்கியத்தைக் கூத்து, மற்றும் நாடக வடிவங்களில் வெளிக் கொணர்வதில் காலத்தைப் பயன்படுத்திய ஒரு தமிழ்மகனுக்கு அவர் கல்விப் பணியாற்றிய பல்கலைக்கழகங்களே அன்னாரின் நினைவு விழாவை நடத்துவதற்கு சஞ்சலப் படுகின்ற நிலையில் கொழும்புத் தமிழ்ச்சங்கம் அதனை நடாத்துவது பாராட்டுக்குரியதாகும் என்று திரு. க.இரகுபரன் குறிப்பிட்டார்.
“பாராட்டுக்கள் நினைவுகள் அனைத்தும் ஒருவர் உயிருடன் இருக்கும் வரைதான்". என்று பே.இ.விசனப்படுவது போலிருந்தது.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

அபத்தமும்
"அட! என்ன சார் நீங்க, உயிருடன் இருந்தால் மட்டும் போதாது பதவி நாற்காலியிலேயும் குந்தி இருக்கணும். இல்லேன்னா பெயர் மட்டுமில்லை அன்னாரின் சதனைகள் அனைத்துமே அம்பேல்தான் என்பதை மறந்து பேசுரேலே..! எல்லாமே இருக்கும் வரை இல்லேன்னா சட்டென மற்” என்ற பொன்மொழிக்கேற்பதானே இன்றைய தமிழ்ச்சாதியின் பெரும் விழுக்காடு வாழ்ந்து கொண்டிருக்கிறது. - பேராசிரியர் வ.மகேஸ்வரன் நல்ல உரையாளர். அலட்டிக் கொள்ளாமல் பேசுவார். அடுக்கு மொழிகளை ஆவேசமாகக் கொட்ட மாட்டார் முரண்பாடான கோட்பாட்டிற்கு எதி ரான கருத்துக்களையும் செவிக்கின்பமாகவும் சிந்தனைக்கு கருவூலமாகவும் தந்து சபையோ ரின் சிந்தனைத் தெளிவிற்கு கருத்து மழை பொழிந்து கட்டுண்டிருக்கச் செய்வதில் வல்லவர். அவருடைய சாதாரண சிக்கலற்ற மொழிப் பிர வாக உரையருவி வீழ்ச்சிக்கு அத்தனை சக்தி.
தமிழ் இலக்கிய வரலாற்றில் நிஜமும் அபத்தமும் என்ற தலைப்பில் காலத்திற்கு மிகப் பொருத்தமான, அவசியமான மிகவும் துணிவானதொரு உரையினை நிகழ்த்தி
னார்.
ஆய்வுத்திறன் அற்ற புகழுரைகளையே சதா கேட்டுக் கேட்டு ஈஸ்வரா என்று தலையில் கைவைத்து அலறும் என்போன்றோருக்கு தேசபக்தி மிக்கதோர் இந்தியக் குடிமகனைப் போன்று வந்தே மாதரம் பாடி "அடிசக்கை! அப்படி போடு ராசா” என்று ஓர் உற்சாக ஆட்டம் போடவேண்டும் என்று தோன்றி இருக்கவேண்டும்.
45

Page 48
திறந்த மனதுடனான தெளிவான உண்மை தேடும் திறனாய்வுத் தன்மை எனும் பயிர் வளர்ச்சிக்கு தூவப்படும் விதையே இத்தகைய முயற்சிகள். ஒரு தமிழ்த்துறைத் தலைவரினால் இந்த விதை தூவப்படுவது சாலச்சிறந்தது. அதனை முன்னெடுத்துச் செல்வது கல்விமான்கள், திறனாய்வாளர்கள், இந்நாட்டின் படைப்பாளர்கள் அனைவரினதும் ஒருமுகப்பட்ட பெருங்கடமையாகும்.
பேராசியர் வ.ம.தமதுரையின்போது - இன்று ஐம்பதிற்கும் அதிகமான தமிழ் இலக்கிய வரலாறு தொடர்பான நூல்கள் வாசிப்பிற்குக் கிடைக்கின்றன. இவை கூறும் வரலாறு சரியானவையாக முழுமையான வையாக இருக்கின்றனவா என்ற கேள்விக்கு இல்லை என்பதே பதிலாகும். அவை நிஜங்களும் அபத்தமும் மிகுந்தவையாக இருக்கின்றன என்பதே உண்மை.
புதிய ஆய்வுகள், கல்வெட்டு ஆதாரங்கள், சங்ககால இலக்கியங்களை மீள்வாசிப்பிற்கு உட்படுத்தியமை தொடர்பான காரணிகள் வரலாற்றில் அபத்தங்கள் நிறைந்து விட்டன என்பதை வெளிப்படுத்துகின்றன.
வரலாறு என்பதன் முழுத்தன்மை எது.? வரலாறுகளில் உள்ளடக்கங்கள் எவை?
தலபுராணங்கள் உண்மையான சமூக வரலாற்றைக் கொண்டவை. அவை சமயச் சார்புக் கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவத னால் அவற்றின் சமூகத்தன்மை அற்றுப் போய்விட்டது.
நாட்டாரியல் சமூகத்தின் சாதாரண மக்களின் வாழ்வியலிலிருந்து உற்பத்தியாவது. எனினும் மன்னர்கள், தனி மனிதர்கள் ஆகியோரின் வாழ்வையே வரலாறாகக் கற்பிக்கப்படும் நடைமுறையே சர்வ வியாபகமாகியுள்ளது. அவற்றையே இலக்கிய வரலாறாகவும் காண்கிறோம் என விபரித்தார்.
அவர் உரையின் முழுமையான தொகுப்பு கீழ்வருமாறு அமைந்திருந்ததை அவதானிக்கக் கூடியதாகவிருந்தது. 1- சங்க இலக்கியங்களின் பாடல்கள்,
பொருள்மரபு, தொகுப்பு, என்ற பிரச்சனை களை மனம் கொள்ளாமை. - கனவு உலகமாக்கியது. சங்கமருவிய காலத்தை இருண்ட கால
மாக்கியது. 3- பல்லவர் காலத்து இலக்கியங்களில் சமய
இலக்கியங்களை மாத்திரம் முன்நிறத்தியது
க

17 |
(ஏனையவற்றைக் கண்டு கொள்ளாதது.) சோழர் காலத்தை அதீத உன்னத காலமாக்கியது. பொற்காலமாக்கியது. சோழர்காலத்து காவிய மரபை அனைத் திந்திய ஊட்டாடங்களுடன் பார்க்காதது. 5
சிற்றிலக்கியங்களை அரசவை இலக்கியம் என்ற மேற்பூச்சுப் பூசியது. விஜயநகர நாயக்கர் கால இலக்கியங்ளை சரியான விதத்தில் அடையாளம் காணத்தவறியது. (கிராம வாழ்வையும்
இலக்கியத்தையும் புறம் தள்ளியது) 7- இசுலாமிய, கிறிஸ்த்துவ இலக்கிய
முயற்சிகள் பலவற்றை இருட்டடிப்புச் செய்தது. நாட்டாரியல் வழக்காற்றியலை அறவே கண்டுகொள்ளாமை எனப் பலவாறாக
விரியும். ஆதிக்க சக்திகளால் நிர்ணயிக்கப்பட்ட வற்றை மாத்திரம் கருத்திற் கொண்டு அரசியல், மதம், சாதியம் என்பனவற்றின் துணையுடன் கற்பிக்கப்பட்டவற்றை அபத்தங்களை நாம் வரலாறாகப் பதிவு செய்தும் எழுதியும் பேசியும் வருகிறோம்”
இவை தமிழ்ச்சமூகத்தின்
காலக் கண்ணாடியாகத் திகழும் பழம் இலக்கியத்தின் வரலாற்றுச் சமுத்திரத்தினுள் அபத்தச் சாக் கடை ஊடுருவிய வாய்க்கால் மார்க்கங்கள் இவைதான் என்பதை பேராசிரியரின் உரை வெளிப்படுத்துவதாகத் தோன்றுகிறது.
ஒவ்வொரு குறிப்பின் பின்புலமாக ஒர் ஆதிக்கச்சக்தி நிற்கிறது. அதுவே அபத்தங்களுக்கான சூத்திரதாரி என்பது வெள்ளிடைமலை. நமது இலக்கியங்கள் பரந்த மட்டத்தில் வாசிக்கப்படுகின்றனவோ இல்லையோ, நமது சிந்தனைக்கேற்ப நம்மை ஆட்டிப்படைக்கும் பின்புலமாகத் திகழும் ஆதிக்க சக்திகளை திருப்திப்படுத்தும் விதமாக அரைவேக்காட்டுத்தனமான வாதங் களை முன்வைக்கத் தவறுவதில்லை. இவை நமது இலக்கியத்தின் மகிமைக்கு, செழு மைக்கு ஆப்பு வைக்கின்றன என்பதை அறியாமலே கற்றோரினாலே பெரிதும் முன்னெடுக்கப்படுகின்றன.
இராமாயணம் சமயச்சார்பான தாக்கப்பட்டு பூஜைக்குரியதானதும் அதனை வெறுத்த நாஸ்தீகவாதம் எந்த அளவிற்கு கீழிறங்க முடியுமோ அந்த அளவிற்கு கீழிறங்கி அக்காவியத்தை தூஷித்ததுடன் அதனைத்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

Page 49
தீயிட்டுக் கொளுத்திய சம்பவங்கள் தமிழகத்தில் நடந்தேறின. கம்பனைப்போல் ஒரு கவிஞனை கண்டதில்லை என்று பாரதி புகழாரம் சூடியபோதும், கம்பனை ஒரு வம்பனாக இழிவு செய்வதில் ஆனந்மடைந்தார்கள். இத்தகைய அபத்தங்களை இந்த ஆதிக்க சக்திகள் உருவாக்கின.
இலக்கியத் திறனாய்வுகள் அதற்குரிய நேர்த்தியான கட்டுக்கோப்புடன் முன்னெடுக்கப் படுகின்றபோது குறித்த சமூகத்தின் கலை இலக்கியப் பண்பாடும், வாழ்வு விழுமியங்களும் நல்ல முறையில் வளர்ச்சி காணும். அபத்தங்கள் அற்ற இலக்கிய வரலாறு தோன்றுவதற்கு எளிதாக வாய்ப்புக் கிடைக்கும்.
நவீன இலக்கியப் படைப்புக்கள் குறித்த திறனாய்வுகளுக்குள்ளும் குளறுபடிகள் பல புற்றீசல்களாகப் படையெடுத்துவிட்டன. மிகைக்கூறல், திரிபுபடுத்தல், இருட்டடிப்புச் செய்தல், இலக்கிய வளர்ச்சி கருதி நேர்மையாக செய்யப்படுகின்றதிறனாய்வுகளை அலட்சியப்படுத்தி பொறாமைக் கூற்று எனச் சாடுதல், சிபாரிசுகள் மூலம் நம்ம ஆள் என்ற கணிப்புடன் பரிசுகளும் விருதுகளும் வழங்கல் போன்றதொரு துர்ப்பாக்கிய
நிலைக்கு இன்றைய நவீன படைப்புலகம் தள்ளப்பட்டுக் கிடப்பதைக் காணமுடிகிறது.
நல்லிலக்கிய மனம் படைத்த கல்வி யாளர்களும், திறனாய்வாளர்களும், படைப் பாளிகளும் இதற்காக வருந்துவதுடன் வெளிப்படையாகத் தமது கருத்துகளைக் கூறியும் எழுதியும் வருகின்றனர். சரியான தர்க்கமுடன் ஆதாரபூர்வமாகப் பிரச்சனைகள் எழுப்பட்டு குறித்த சமாச்சாரம் தொடர்பாக பரந்த அளவில் இந்த இலக்கியச் சமர் முன்னெடுக்கப்படுமானால் அது நவீன தமிழ் இலக்கிய வரலாறு அபத்தங்கள் அற்ற சரியான முறையில் உருவாவதற்கு துணையாகும்.
ஒருவரை ஒருவர் கவிழ்ப்பதற்காக மூச்சுவிடாமல் கொட்டப்படுகின்ற பட்டி மன்ற சொல்வீச்சுகள் போல் இவை 2 அமையக்கூடாது.
இராமனா? இராவணனா யார் மாவீரன் என்று ஒரு பட்டிமன்றம் நடைபெற்றது. அதில் என்ன சந்தேகம்? இராவணன்தான் என்பதைப்போல் கட்டபொம்மன் மீசையை திருகிக்கொண்டு ஒருவர் மேடை ஏறி வெளுத்து வாங்கத் தொடங்கினார்.
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

மாபெரும் வீரன் என்று இராமனை பெரிதாக பறையடித்து கரகாட்டம் போடுகிற இந்தப் பெரிய சாதிக்காரர்கள் வாலியை இராமன் பின்புறமாக ஒளிஞ்சி நின்னுதான் போட்டுத் தள்ளினான் என்பதைத் தெரிந்து கொண்டுதான் சொல்கிறார்கள். தலைவரே! இந்த ஆளைப்போய் மாவீரன்னு சொல்றது ஞாயமா.
(சபையில் இராவணன் சப்போட்டர்சின் பயங்கர கரகோஷம்.)
அட, இராவணன் இம்மாம் பெரிய வீரன்னு சொல்ரதுக்கு ஒரு உதாரணம் போதும். பூமியின் ஒரு முனையில் கால்பதித்து நிற்கும் இலங்கேஸ்வரன் அதை மிதித்தால் மறுமுனையில் இருக்கும் அனைவரும் பஞ்சாகப் பறந்து பரலோகம் போய்விடுவார்கள். என்று கம்பனே பாடி இருக்கிறான். சமாச்சாரம் அப்படி இருக்க, இராவணன் நேரடியாகத்தானே போருக்குப் போகிறான். அப்போ சொல்லுங்கோ யாரு வீரன், யாரு கம்மனாட்டி
(மறுபடியும் இராவணன் சப்போட்டர்சின் பலத்த கரகோஷம்.)
அந்தப் பேச்சாளர் சொன்னது போன்று வாலிவதம் நடந்ததுதான். ஆனால் உண்மை யிலே இராவணனைப்பற்றி கம்பன் அவ்வாறு பாடி இருக்கிறானோ இல்லையோ என்பது பட்டிமன்றத்திற்கு தலைமை வகித்துக் கொண்டிருப்பவருக்கோ சபையோருக்கோ தெரியாது. ஆனால் அவர்கள் ஆகா! ஆகா! வென தலையாட்டி அதனை வெகுவாக இரசித்து படபடவென கை தட்டுகிறார்கள். ஏன்னா இராவணன் நம்ம ஆள் ஆச்சே என்ற உணர்வு. பேச்சாளர் அவரைத்தானே இமய சிகரத்திற்கு தூக்கி வைக்கிறார். இராமன் தொலைஞ்சான் என்பதில் அவர்களுக்கு பரம திருப்தி. என்ற காரணங்களுக்காகத்தான் இந்த ஆனந்த கைத்தட்டலாட்டம்
கம்பராமாயணம் ஓர் உன்னத காவியம் என்பதை மறந்த நிலையில் கவிக்கோமகன் கம்பனையும், அக்காவியத்தையும் இப்படி பிய்த்தெடுக்கிற போதுதான் இந்தக் கூத்து நடைபெறுகிறது. கீழிறக்கி பேசுவதற்கு மட்டுமல்ல ஆகா ஓகோவென்று புழுகித்தள்ளி தம்பட்டமடிப்பதற்கு சீக்கியனை விட்டால் ஆளில்லை என்று அண்மையில் அமரரான குஸ்வத்சிங் கூறுவார்.
47

Page 50
இரு வெளிநாட்டவருடன் ஒரு சீக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது தன் நாட்டில பல வருடங்களாகக் கட்டப்பட்ட ஓர் உயர் கோபுரத்தை சில மாதங்களில் கட்டப்பட்டு முடிந்ததாகப் புழுகி பெருயைடித்தான். மற்றவன் அவனையும் மிஞ்சிவிடும் விதமாக அதே அளவு உயரமான கோபுரம் ஒரு சில வாரங்களிலே தனது நாட்டில் கட்டி முடிக்கப்பட்டதாக பெருமையடித்தான். இவ்வாறு பேசியவாறு மூவரும் தாஜ்மகால் அருகே சென்று கொண்டிருந்தார்கள். வெளிநாட்டவர் இருவரும் தாஜ்மஹாலை பார்த்து திகைப்படைந்து வாய் பிளந்து நின்றனர். அவர்களின் தம்பட்டத்தினை சகிக்க
தமிழி
உயர் தமிழியல் விருது: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் WRITERS MOTIVATION CENTRE
மிகச் சிறந்த மூத்த பன மைய ஸ்தாபகர் ஓ.கே.!
கெளரவிக்கப்படும். தமிழியல் விருது:தமிழ் இலக்கிய மேம்பாட்டுக் |பேருக்கு, வவுனியூர் ஸ்ரீராமகிருஷ்ணா கமலநா
வழங்கிக் கௌரவிக்கப்படும். தமிழ்ப்பணியாளர் தமிழியல் விருது: ஈழத்துப் படை கல்விமான் வ.கனகசிங்கம் தமிழியல் விருதுடன் இனநல்லுறவு தமிழியல் விருது: இன நல்லுறவுக்காக 2 வணபிதா சந்திரா அடிகளார் தமிழியல் விருது சிறந்த நூலுக்கான தமிழியல் விருது: 2013ல் வெ வழங்கிக் கௌரவிக்கப்படும். ஓவியருக்கான தமிழியல் விருது: மிகச் சிறந்த . விருதுடன் ரூபா 10,000/- வழங்கிக் கௌரவிக்க! |2013ம் ஆண்டுக்கான தமிழியல் விருதுக்கான மு இருந்து நூல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஈழ தமிழ்ப் படைப்பாளிகள் நூலுக்கான தமிழியல் நாவல், சிறுகதை, கவிதை, குழந்தை இலக்கியம், சி அறிவியல், ஆய்வியல், வரலாறு, பழந்தமிழ் இ எனப் பல்துறை சார்ந்த நூல்களை தேர்வுக்கா அனுப்பப் பெறுதல் வேண்டும். நூல்கள் 2013 ஜ |பிரசுரிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.முதல் | நூல்கள் வந்து சேரவேண்டிய கடைசிநாள் : 10. படைப்புக்களையும் அனுப்பி வைக்கலாம். நூறு கொண்ட விபரத்தினை இணைத்து அனுப்புதல்
எழுத்தாளர் ஊள 64, கதிர்காமர் வீதி, அமிர்த. தொ.பேசி : 077-6041503, 065-222

முடியாது கொதிப்படைத்திருந்த சீக்கி இதைக் கவனித்தான் "அட்டா இதெப்படி இங்கே ஒரு கட்டிடம்! சில நிமிடங்களுக்கு முன்னர்தான் சிறுநீர் கழிப்பதற்காக இந்த இடத்தைக் கடந்து போனேன். அலுவலை முடித்து வருவதற்கு முன்னரே இந்தக் கட்டிடத்தை கட்டி விட்டார்களே! என்று அங்கலாய்த்துக் கொண்டான்.
அடப்பாவி! தம்பட்ட மின்னாலும் தம்பட்டம் இப்படியுமா? தமிழ் இலக்கிய வரலாறு எழுதுவதில் இந்தமாதிரி தம்பட்டம் நமக்கு வாணாஞ் சாமி.
0 0 0
பல் விருது 2014
இலக்கிய மேம்பாட்டுக்கு உரமாய் உழைத்த) டப்பாளி ஒருவருக்கு எழுத்தாளர் ஊக்குவிப்பு பாக்கியநாதன் உயர் தமிழியல் விருது வழங்கிக்
த உரமாய் உழைத்த மூத்த படைப்பாளிகள் 5 யகி தமிழியல் விருதுடன் தலா ரூபா 15,000/-
|
டப்பாளி அல்லாத அயல்நாட்டவர் ஒருவருக்கு - ரூபா 25,000/- வழங்கிக் கௌரவிக்கப்படும். உழைத்த சிங்களமொழி படைப்பாளர் ஒருவருக்கு உன் ரூபா 10,000/- வழங்கிக் கெளரவிக்கப்படும். ளிவந்த சிறந்த 20 நூல்களுக்கு, தலா ரூ10,000/-
|
ஓவியர் ஒருவருக்கு ஓவியர் கிக்கோ தமிழியல் | ப்படும். நூல்களைத் தேர்வு செய்ய படைப்பாளிகளிடம் 1 த்திலும் வெளிநாடுகளிலும், வாழ்கின்ற ஈழத்து விருதுக்காக நூல்களை அனுப்பி வைக்கலாம். சிறுவர் இலக்கியம், விடலை இலக்கியம், நாடகம், இலக்கியம், மொழி பெயர்ப்பு, தொழில்நுட்பம் க அனுப்பி வைக்கலாம். நூல்களின் 3 படிகள் னவரி 1 முதல் 2013 டிசம்பர் 31 காலப்பகுதியில் பதிப்பு மாத்திரம் ஏற்றுக் கொள்ளப்படும். 06.2014 ஒரு படைப்பாளி, எத்தனை வகையான றுடன் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் வேண்டும். -டாக்டர் ஓ.கே. குணநாதன் டக்குவிப்பு மையம் கழி, மட்டக்களப்பு, இலங்கை. 6658 மின்னஞ்சல் : okkuna@gmail.com
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

Page 51
தமிழகச்
செய்க
கே.ஜி.மகா
காணாமல்போன காங்கிரஸ்! கண்ணாடி
வீட்டிலிருந்து கல்வீச்சு!
நினைத்ததை முடிப்பவன் நான்.. நான். என்று' வெண்மீசையைத் தடவிக்கொண்டு நரேந்திரமோடி மேடையில் ஏற, அரசியலிலும் குடும்ப வாழ்க்கையிலும் அடிபட்ட கலைஞர் அழகிரியின் தொடர் "ராக்கட்' தாக்குதலினால், "உன்னை மறந்தே ரொம்ப நாளாச்சு.. நீ என் பிள்ளையே இல்லை' என்று சாபமிட, "நான் உன் பிள்ளை இல்லை என்றால் அதை எழுதிக்கொடு" என்று மு. க. அழகிரி அடம் பிடிக்க, கலைஞர் நொந்து நூலாகி, சோதனை மேல் சோதனை போதுமடா சாமி... என்று புலம்பிய நேரத்தில்தான் 'அத்தனையும் அம்மாவசம்' என்னும் செய்தி காதில் விழுந்து கணக்குப் போட்டது. தேர்தல் போல் வோல்ட்டில்' யார் உதவியும் தேவைப்படாமல் மோடி தனிப்பெரும்பான்மைக்கும் மேலாக 283 புள்ளிகளையும் பெற்று, ஜெயலலிதா கனவைக் கலைத்துவிட்ட நற்செய்தி' கலைஞர் கணக்கில் வெளிப்பட, நெஞ்சு குளிர்ந்து, “அடிரா சக்கை” "அட்ரா சக்கை..” என்று இதயகீதம் பாடத் தொடங்கிவிட்டார். கலைஞர் பார்வையில், தீமையிலும் ஒரு நன்மை!
ஒரு அடி வைத்தால் 25 கோடி அடி நாடு முன்னேறும்” - பிரதமர் மோடி
இந்தியாவின் பதினான்காவது பிரதமராகக் கடந்த மாதம் 26 ஆம் திகதி பதவி ஏற்கமுன்னர், 20ஆம் திகதி பிரதமர் தெரிவுக் கூட் டத்தில் பங்கேற்க மோடி பாராளு ம ன ற ம '
ஜனநாயக இந்திய
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

நிகள்
Fதேவா
வரும்போது, பாரதீய ஜனதாக்கட்சிக் கூட்டணியில் வெற்றி பெற்ற உறுப்பினர்களும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் இத்தெரிவுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். பாராளுமன்ற வளாகத்துக்குள் மோடி நுழைந்ததும், கட்டிடப் படிகளில் தனது
முதல் அடியை வைக்கமுன்னர், நிலாவில் தனது பாதத்தை முதலில் பதித்தபோது, நீல் ஆம்ஸ்ரோங் - "நான் வைப்பது சிறு பாதமாக இருந்தாலும், மனித குல வரலாற்றில் மாபெரும் அடியாகும்” என்று கூறியது மோடிக்கு மலரும் நினைவாக வந்திருக்க வேண்டும். ஜனநாயக கோயிலாகக் கருதப்படும் பாராளுமன்றத்தின் படிக்கட்டுகளைத் தனது இருகைகளாலும் தொட்டு வணங்கி, தலைகுனிந்து நெற்றியால் படியின் தரையைத் தொட்டு வணங்கினார். “இறைவா இந்தியாவின் புதிய அத்தியாயத்தை எழுத எனக்கு ஆணையிடு... என்று மோடியின் ஆழ்மனம் வேண்டியிருக்கும் போலும்! பா.ஜ.க. பாராளுமன்றக் கட்சிக்கூட்டத்தில் பிரதமர் பதவிக்கு மோடி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர். அவர் ஆற்றிய கன்னி உரையில், - "ஒரு சாதாரண மனிதன் தனது பெரிய குறிக்கோளை எப்படி சாதிக்க முடியும் என்பதற்கு, நாட்டின் உயர்ந்த பதவிக்கு நான் வந்திருப்பதே சிறந்த உதாரணம், சமூகத்தின் எல்லாப் பிரிவுகளுக்கும், குறிப்பாக இளைஞர், பெண்கள், ஏழைகளுக்கு எனது அரசு பாடுபடும்.
ண
ப் பண்பு காணாமல்போன ப அநாகரிக அரசியலி!

Page 52
கடந்தகால
கசப்பான அனுபவங்களைக் கொண்டு யாரும் அவநம்பிக்கை கொள்ளத் தேவை இல்லை. எனது அரசின் செயல்பாட்டைக்கண்டு யாரும் தலைகுனியக் கூடிய நிலையை ஒரு போதும் ஏற்படுத்த மாட்டேன். எனது அரசு ஏழைகளைப்பற்றியே நினைக்கும். அவர்களின் குரல்களைக் கேட்கும். அவர்களுக்காகவே வாழும். பிற்படுத்தப்பட்ட மக்களின் பாதுகாப்புக்காக இந்த அரசு தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும். இந்த அரசு யாருடைய அரசு என்றால், இது ஏழைகளின் அரசு என்றுதான் இருக்கும். நாட்டின் சுதந்திரத்துக்காக போராடும் அதிர்ஷ்டம் நமக்கு கிடைக்கவில்லை. நாட்டுக்காக நம்மால் மரணிக்கவும் முடியவில்லை. ஆனால், இந்த நாட்டுக்காக வாழக்கூடிய வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது நல்லதே நடக்கும் என்னும் நம்பிக்கையுடன் நாம் முன்னேற வேண் டும். நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் ஒரு அடி' எடுத்து முன்வைத்தால், இந்தியா 125 கோடி அடி எடுத்துவைத்து முன்னேறும்.” என்று நிதானமாக, உறுதிப்பட மோடி கூறிய வைரவரிகள் இந்திய மக்களை நிச்சயம் சிந்திக்க வைத்திருக்கும்.
“ஊழல்தான் எனது முதல் எதிரி. அது இல்லை என்ற நிலைப்பாட்டை உருவாக்குவதே எனது குறிக்கோள்” என்று சூளுரைத்த நரேந்திரமோடி, - தன்னம்பிக்கை, முயற்சி, கடும் உழைப்பு இந்த மூன்றையும் மூலதனமாகக் கொண்டால், வானமும் வசப்படம்” என்பதற்கு ஒரு சாமான்ய தேநீர் கடைக்காரர் மோடி, தனது தெளிவான சிந்தனையால், செய்யும் தொழிலே தெய்வம் என்று கருதி தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றியவர். பஞ்சாயத்து தலைவர் பதவியைக்கூட வகிக்காத நரேந்திரமோடி, குஜராத் முதல் அமைச்சராக நேரடியாகவே பொறுப்பேற்றார். இதே மாதிரி பாராளுமன்றப்பக்கமே போகாதவர் - படி ஏறாதவர், நேரடியாகப் பிரதமராகியுள்ளார். நாடு சுதந்திரம் அடைந்த பின்னர்(1950 செப்டெம்பர் 17ஆம் திகதி) பிறந்து, பிரதமாரான முதல் அரசியல் தலைவர் என்னும் பெருமையையும் மோடி பெறுகிறார். "மோடி” என்றால் முத்து என்று அர்த்தமாம். சிற்பிக்குள் இருந்து முத்து வெளியே வந்திருக்கிறது. 50

கண்ணாடி வீட்டிலிருந்து கல்வீசியவர்கள் -
தேர்தல் - பிரசாரத்தில் மோடியைப் பல கோணங்களிலும் “நிர்வாணப்படுத்தி' விமர்சிக்காத காங்கிரஸ் தலைவர்கள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இவர்கள் கண்ணாடி வீட்டுக்குள்தான் வாசம் செய்கிறார்கள் என்பதை மறந்து விடுகிறார்கள். ஏனென்றால் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, மைந்தன் ராகுல் காந்தியின் 'ஜோதிடம்' ஒரு திறந்த புத்தகமாக பா.ஜ.க. விடம் இருக்கிறது. தனது மனைவிக்கே நியாயம் செய்யாதவர், நாட்டின் பெண்களுக்கு எப்படி அதிகாரம் கொடுப்பார் என்று மேடையில் கேட்டிருக்கிறார் பிரதமர் கனவில் மிதந்த ராகுல் காந்தி. தானும் தனையனும் அரசியல் நாகரிகம் தாண்டி அசிங்கமாக மோடியைத் தரக்குறைவாகப் பேசியிருக்கிறார்கள். இவர் களின் "ஜாதகம்” என்ன சொல்கிறது?
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கேம்பிரிட்ஜில் எம்பில்லில் வெற்றி பெறாத நிலையில், எம்.பி, தேர்தல் உறுதிப்பத்திரத்தில் கல்வித்தகுதி 'எம். பில்' என்று அப்பட்டமாக ராகுல் எழுதியிருந்தாரே எப்படி? ஹிந்துஜா குழுமத்தினர் 1.5 டாலர்கள் நன்கொடை கொடுத்து ராகுலை ராவுல் வின்ஸி என்ற இத்தாலிய பெயரில் கல்லூரியில் சேர்த்துவிட, மூன்றே மாதத்தில் படிப்பு மண்டையில் ஏறாமல், வெளியேறியதுடன் சித்தியடைந்து விட்டதாக தேர்தல் உறுதிப்பத்திரத்தில் ராகுல் குறிப்பிட்டிருந்தாரே மறக்க முடியுமா? பள்ளிக்கூடப் படிப்பை முழுவதுமாக முடிக்காத சோனியா காந்தி, அவரது தேர்தல் உறுதிப்பத்திரத்தில் தான் ஒரு பட்டதாரி என்று எழுதியிருக்கிறார் என்று சுப்பிரமணியன் சுவாமி அம்பலப்படுத்தியதுடன், சோனியா காந்தி படித்து வெற்றிபெற்ற அந்தத்துறை அவர் குறிப்பிட்ட கல்லூரியிலேயே கிடையாது என்று சுவாமி கூறியிருந்தார். இத்தாலியில் ஓர்பாசனோ எனும் சிற்றூரில், ஸ்டீபனோ மைனோ என்னும் படிப்பறிவில்லாத கொத்தனாரின் மகளாகச் சோனியா பிறந்தார். எட்விஜ் அந்தோனியா அல்வினா மைனோ எனப்படும் சோனியா காந்தி 1980 மற்றும் 1983இல் தன்னை இந்தியக் குடிமகளாக அறிவித்திருந்தார். எப்படி? 1973-75இல் தான்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

Page 53
இந்தியப் பிரஜை என்று சொல்லிக்கொண்டு பல பெரிய நிறுவனங்களில் இன்சூரன்ஸ் ஏஜன்டாக சோனியா காந்தி இருந்ததை பாராளுமன்றத்திலேயே எதிர்க்கட்சியினர் அம்பலப்படுத்தியபோது, அந்த ஏஜன்சியை தனது மகள் இரத்துச் செய்து விட்டதாக இந்திரா காந்தி பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இத்தாலியக் குடியுரிமையை மறைத்து மாருதி தொழில் நுட்ப சேவை எனும் அரசு நிறுவனத்திலும், வேறு சில நிறுவனங்களிலும் இயக்குநர் உறுப்பினராக சோனியா இருந்திருக்கிறார். இது சம்பந்தமாக நீதிபதி ஏ.சி. குப்தா தலைமையிலான விசாரணை ஆணையம் சோனியா காந்தி மீது இந்திய தண்டனைச் சட்டம், அயல்நாட்டு செலாவணி சட்டப்படி கிரிமினல் குற்றம் நிரூபணமாகி இருக்கிறது என்ற விசாரணை அறிக்கை அளித்தும் இந்த அறிக்கை காங்கிரஸ் அரசால் மூடிமறைக்கப்பட்டது. போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட சோனியா காந்தியின் உறவினர் குட்ரோச்சியை நாட்டைவிட்டுத் தப்பிக்க வைத்ததுடன் அவரிடமிருந்து பிடிபட்ட 29 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை குற்றவாளிக்கே பரிசாகக் கொடுத்து வழியனுப்பி வைக்கப்பட்டார். சோனியா காந்தியின் சகோதரிகள் நாடியா மற்றும் அனுஷ்காமைனோ தமிழ்நாடு உட்பட இந்தியாவிலிருந்து விக்கிரகங்களை இத்தாலி மற்றும் ஐரோப்பாவிற்கு கடத்திச் செல்லும் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பதாக சுப்பிரமணியன் சுவாமி சில ஆதாரங்களுடன் ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதினார். பத்திரிகைகளும் இதைப்பிரசுரித்தன.
நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்தியாவில் உள்ள இத்தாலியத் தூதரகமும் இத்தாலியிலுள்ள இந்தியத் தூதரகமும் இதற்கு உதவியதாகவும் செய்திகள் அடிபட்டன. அரசு வாய்திறக்கவில்லை. மான நஷ்ட வழக்கும் போடவில்லை. இவையெல்லாம் ராஜதுரோகம் இல்லையா? கண்ணாடி வீட்டில் இருந்து கல்வீசினால் வீடே நொருங்கிவிடாதா? இவை எல்லாமே பழைய செய்திகள்தான். மொந்தைதான் புதிது. கள் பழையது!.
0 0 0
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (

கருத்தொன்று பொறிதட்ட கையிலெடுத்தான் பேனாவை
கவிதை எழுதிவிட.
முதலெழுத்தைக் கூட முழுமையாக எழுத முடியாது
முரண்டு பண்ணியது இற்றைவரை பலகவிதைகளை
அவனுக்கு எழுதத் துணை நின்று ஓய்ந்து போன அந்தப் பேனா
| #11 அT)
உன் கற்பனை வேகத்தை
தனது கற்பனை வேகத்தை
கடுகதி வேகத்தில் கவிதையாக வடித்துவிட துடியாக துடித்த அவன்
பொறுமையிழந்து
ஆத்திரம் மேலிட கையிலெடுத்த பேனாவை
ஏசி திட்டி எறிந்து புதிய பேனாவை எடுத்துக் கொண்டான்
கவிதைக் கற்பனைக் கதிரையிலேறி சவாரிசெய்ய.
அனைத்தையும் அவதானித்த
புதிய பேனா “என்றோ ஒரு நாள் எனக்கும் இதே கதிதான்'
என நினைத்த படி தன்பணி தொடர்ந்தது தாளாத ஏக்கத்தில்.

Page 54
சிம கால ... கலை இலக்
நிகழ்வுக
முற்போக்கு இலக்கிய கர்த்தா அ. முகம்மது சமீம் 9
இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய | சமீம் அவர்களுக்கு அஞ்சலி நிகழ்வு ஒன்றை ெ கேட்போர் கூடத்தில் பேராசிரியர் சபா. ஜெய திக்குவல்லை கமால், கே. நாதன், க.சண்முகலிங். வழங்கினார்கள். முகம்மது சமீம் அவர்களின் கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் "புதுமைப்பித்தனின் 1
கொழும்புத் தமிழ்ச் சங்கம் புதுமைப்பித்தன் 03.05.2014) போராசிரியர் சபா. ஜெயராசா த கலை இலக்கிய பிரமுகர்களின் மங்கல விளக்கே பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் இனிமையாகப் பாடினர். வரவேற்புரையை தொடக்கவுரையை சங்கத் தலைவர் ஆ. இரகுப் சங்கம் நடத்திய பேச்சுப் போட்டியில் வெற்றி ெ சிறப்புரையாக "புதுமைப்பித்தனின் படைப்பு பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் | கலைநிகழ்வாக நாட்டார்பாடல்களும் இடம் சங்கப் பொதுச் செயலாளர் தம்பு சிவசுப்பிரமன "காப்பியக்கோ” புலவர்மணி ஜின்னாஹ் ஷரிபுத்தீன் வெளியீட்டு விழா.
“காப்பியக்கோ” புலவர் காவியமான "எல்லாள காவிய 4.30 மணிக்கு) பேராசிரியர் சப் சங்க சங்கரப்பிள்ளை மண்டட சி. தில்லைநாதன் பிரதம 8 யோகநாதனின் இனிய தமி வரவேற்புரையை கொழும்புத் ஒலி” ஆசிரியருமான தம்பு. சி உரையை கொழும்புத் தமிழ்ச்
தலைவர் ஆ. இரகுபதிபால் ஆற்றினர்.
சிறப்பு அதிதிகளாக ஓய்வுநிலை அத்தியட்சகர் கே. அரசரெத்தினம், அரச ஆணைக்குழு உறுப்பினர் ஏ.எம் நஹியா, நற்பணி மன்றத் தலைவர் ந. கருணை அ ஆகியோர் கலந்துக் கொண்டனர். நூலின் முதற்பு தொழில் அதிபரும் கொழும்புத் தமிழ்ச் சங்க ஓ சபை தலைவருமான ஆ.மா.சுப்பிரமணியம் சிறப்புச் செய்தார். ஆசியுரையை இலங்கைக் கழக நிறுவனர் கம்பவாரிதி இ.ஜெயராஜ் வழா வெளியீட்டு உரையை தென் கிழக்குப் பல்கலை
52

பஞ்சலி. மன்றம் அன்மையில் ஆய்வாளர் அ. முகம்மது வள்ளவத்தை பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன ராசா தலைமையில் நடத்தியது. இந்நிகழ்வில் கம், ந. இரவீந்திரன் ஆகியோர் நினைவுரைகளை கடும்ப அங்கத்தினர்களும் கலந்து கொண்டனர். பிறந்த தின நிகழ்வு” ரின் 108 ஆவது பிறந்த தின நிகழ்வை (கடந்த லைமையில் மிக சிறப்பாகக் கொண்டாடியது. கற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில் கொழும்பு கல்லூரியின் மாணவிகள் தமிழ்வாழ்த்தினை திருமதி பத்மா சோமகாந்தன் நிகழ்த்த, தி பாலஸ்ரீதரன் நிகழ்த்தினார்.கொழும்புத் தமிழ்ச் பெற்ற மாணவர்களின் உரையும் இடம் பெற்றது. ஆளுமை” என்ற தலைப்பில் பேராதனைப் செ.சுதர்சன் மிகச்சிறப்பாக உரை நிகழ்த்தினார். பெற்றன. நன்றியுரையை கொழும்புத் தமிழ்ச் னியம் நிகழ்த்தினார். னின் பத்தாவது காவியமான “எல்லாள் காவியம்”
மணி ஜின்னாஹ் ஷரிபுத்தீனின் பத்தாவது பம்” வெளியீட்டு விழா (மே. 4 ஆந்திகதி மாலை பா. ஜெயராசா தலைமையில் கொழும்புத் தமிழ்ச் பத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேராசிரியர் அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். திருமதி வரதா ழ் வாழ்த்துடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் தமிழ்ச் சங்கப் பொதுச் செயலாளரும் "தாயக வசுப்பிரமணியம் (தம்புசிவா) நிகழ்த்த, தொடக்க * சங்கத் லஸ்ரீதரன்
பொலிஸ்
சேவை
நாவலர் நனந்தன் பிரதியை ம்படைச் பெற்றுச் கம்பன் ங்கினார். லக்கழக
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

Page 55
சர்
தமிழ்த்துறை முதுநிலை விரிவுரையாளர் க. ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக முதுநிலை ஆகியோர் மிகச்சிறப்பாக நிகழ்த்தினர். ஏற்புரை ஜின்னாஹ் ஷரிபுத்தீன் வழங்கினார்.கொழும்புத் ஊடகவியலாளர் சி. எழில்வேந்தன் தொகுத்து கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் “கம்பவாரிதி இ.ஜெ
கொழும்புத் தமிழ்ச் சங்கம் கம்பவாரிதி சொற்பொழிவினை கடந்த மே. 14. தொடக்கம் முதல் நாள் நிகழ்வு "முதலியார் க. சு. பொன் ஓம்படைச்சபை தலைவர் ஆ.மா.சுப்பிரமணியம் மங்கல் விளக்கேற்றலுடன் ஆரம்மாகியது. த தொடக்கவுரையை கொழும்புத் தமிழ்ச் சங்க நிகழ்த்த, தலைமையுைரையை கொழும்புத் தம் ஆற்றினர். சிறப்புச் சொற்பொழிவு “கம்பவாரிதி” ! உரையாற்றினார். நன்றியுரையை கொழும்புத் :
ஆ. குகமூர்த்தி வழங்கினார்.
இரண்டாம் நாள் நிகழ்வு "அ.சபாரத்தின சிரேஷ்ட முகாமையாளர் பொன். பாலகுமார் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்மாகியது. தம் பாட, தொடக்கவுரையை கொழும்புத் தமிழ்ச் ஞானசேகரன் நிகழ்த்த, தலைமையுைரையை மு.கதிர்காமநாதன் ஆற்றினர். சிறப்புச் "தெய்வச் சேக்கிழார்" என்ற தலைப்பில் உரைய சங்க நிலையமைக்குழுச் செயலாளர் மா.தேவர
மூன்றாம் நாள் நிகழ்வு "க. அருணந்தி" அர ந. கருணை ஆனந்தன் அவர்களின் மங்கல விள திருமதி ஹேம கபிலதாஸ், திருமதி நீதிமதியே தமிழ்ச் சங்க துணைத் தலைவர் உடப்பூர் கொழும்புத் தமிழ்ச் சங்கத் துணைத்தலைவர் கை சிறப்புச் சொற்பொழிவு "கம்பவாரிதி” இ.ஜெயர தலைப்பில் உரையாற்றினார்.நன்றியுரையை கெ
மு.மனோகரன் வழங்கினார்.
நான்காம் நாள் நிகழ்வு "வி.ஏ. கந்தையா” அ எஸ்.வாசு அவர்களின் மங்கல விளக்கேற்றலு கவினாளி ஸ்ரீஸ்கந்தராஜா பாட தொடக்கவுரை க.க. உதயகுமார் நிகழ்த்த, தலைமையுைரையை செல்வி சற்சொரூபவதி நாதன் நிகழ்த்தினார்.
சிறப்புச் சொற்பொழிவு "கம்பவாரிதி” இ.! உரையாற்றினார்.நன்றியுரையை கொழும்புத்
ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி வழங்கினார்.
ஐந்தாம் நாள் நிகழ்வு “க. மதியாபரணம்” - பொது முகாமையாளர் பா. நந்தகுமார், திரும் விளக்கேற்றலுடன் ஆரம்மாகியது. தமிழ் வாழ் தொடக்கவுரையை கொழும்புத் தமிழ்ச் சங்க து நிகழ்த்த, தலைமையுைரையை கொழும்புத் த சோமகாந்தன் நிகழ்த்தினார். சிறப்புச் சொற்பெ புலவன்” என்ற தலைப்பில் உரையாற்றினார். ந செயலாளர் தம்பு சிவசுப்பிமணியம் வழங்கின
0 ! ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

இரகுவரன் நிகழ்த்த, விமர்சன உரையை D விரிவுரையாளர் கலாநிதி . ஸ்ரீ பிரசாந்தன் 'யை நூலாசிரியர் "காப்பியக்கோ” புலவர்மணி
தமிழ்ச் சங்கம் நடத்திய இந்நிகழ்வை மூத்த வழங்கினார். பராஜ் அவர்களின் ஐந்து நாள் தொடர் சொற்பொழிவு
இ.ஜெயராஜ் அவர்களின் ஐந்து நாள் 18 ஆம் திகதி வரை ஒழுங்கு செய்திருந்தது. பனம்பலம்” அரங்கில் கொழும்புத் தமிழ்ச் சங்க 5, திருமதி மாலதி சுப்பிரமணியம் தம்பதிகளின் மிழ் வாழ்த்தினை அருணந்தி ஆரூரன் பாட பொதுச் செயலாளர் தம்பு சிவசுப்பிரமணியம் ழ்ெச் சங்கத் தலைவர் ஆ. இரகுபதிபாலஸ்ரீதரன் இ.ஜெயராஜ் "பிறந்திளைத்தேன்” என்ற தலைப்பில் தமிழ்ச் சங்க உறுப்பாண்மைக்குழுச் செயலாளர்
ம்” அரங்கில் மானிப்பாய் இலங்கை வங்கி , திருமதி நவசக்தி பாலகுமார் தம்பதிகளின் ழ்ெ வாழ்த்தினை திருமதி வரதா யோகநாதன் சங்கத் துணைத்தலைவர் வைத்தியகலாநிதி தி. கொழும்புத் தமிழ்ச் சங்கத் துணைத்தலைவர் சொற்பொழிவு "கம்பவாரிதி” இ.ஜெயராஜ் பாற்றினார். நன்றியுரையை கொழும்புத் தமிழ்ச் பாசா வழங்கினார். ங்கில் நாவலர் நற்பணிமன்ற ஸ்தாபகத் தலைவர் எக்கேற்றலுடன் ஆரம்மாகியது.தமிழ் வாழ்த்தினை பாகராஜன் பாட, தொடக்கவுரையை கொழும்புத்
வீரசொக்கன் நிகழ்த்த, தலைமையுைரையை வத்தியகலாநிதி ஜின்னாஹ் ஷரிபுத்தீன் ஆற்றினர். ாஜ் “ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்” என்ற காழும்புத் தமிழ்ச் சங்க கல்விக்குழுச் செயலாளர்
அரங்கில் கொழும்பு தேவி ஜூவலர்ஸ் அதிபர் என. படன் ஆரம்மாகியது. தமிழ் வாழ்த்தினை செல்வி ய கொழும்புத் தமிழ்ச் சங்க துணைச் செயலாளர் ய கொழும்புத் தமிழ்ச் சங்கத் துணைத்தலைவர்
ஜெயராஜ் "தமிழ்க் கிழவி" என்ற தலைப்பில் தமிழ்ச் சங்க இலக்கியக்குழுச் செயலாளர்
அரங்கில் இலங்கை வங்கி வட மாகாண உதவிப் தி ரோகினி நந்தகுமார் ஆகியோரின் மங்கல் த்தினை திருமதி ஹம்காந்தனி தர்மபாலன் பாட புணை நிதிச் செயலாளர் செல்வ திருச்செல்வன் மிழ்ச் சங்கத் துணைத்தலைவர் திருமதி பத்மா எழிவு “கம்பவாரிதி” இ.ஜெயராஜ் "பாட்டுக்கொரு ன்றியுரையை கொழும்புத் தமிழ்ச் சங்க பொதுச்
D O
53

Page 56
வாசகர்
ஞானம் 167ல் கே.விஜயன் அவர்கள் 'வரலாற்று ஆசிரியரின் இலக்கியத் தேடல் தலை பற்றிய மிகச் சிறப்பான விளக்கத்தைக் கண்டு ப ணம் மானாமக்கீன் அவர்களுடன் அவரைச் ச எனது நெஞ்சை அழுத்திய பாரம் இறங்கு மு அறிந்து அளவிலா துயரடைந்தேன். மர்ஹும் . அறிவேன். அவரது மூத்த சகலர் மர்ஹூம் அப் பாடசாலையில் பணியாற்றிய காலம் முதல் உறவுண்டு. நான் சில காலங்களாகத் தொகுத்து என்னும் ஆசிரியக் கை நூல் பிரதிக்கு நெடிய ப இலங்கை முஸ்லிம் வரலாறு கூறும் அவரது நூல் வெளிவரும் முன்னர் காலமாகிவிட்டார்.
மறுமையில் உயர் பதவி கிட்டுவதாக.
அடுத்து மற்றுமொரு கல்விமானும் எ ஜூனைதா ஷரீப் அவர்களின் 'சத்தம் ஒரு குத்து நாடுகளில் சமயங்களினதும், அரசியல் கட்சிக படம் பிடித்துக் காட்டுகின்றது. சூழவிருப்
அவர்கள் தங்கள் நிலையைப் பிரயோகித்துக் ெ கொள்வதன்றி சட்டம் கொண்டு தடுக்க முயல் எனது கருத்தும் சேர் அவர்களின் கருத்தே.
திரு. ஷெல்லிதாசன் அவர்களின் 'மல்லி ஒரு அரச ஊழியரின் கடமையுணர்வு, பொருள் களிடம் மனைவியரின் அன்றாட குத்தல் கதைக் வழமைக்கு மாற்றமானதிடீர் மலிவு விற்பனைகள் இணைந்திருக்கும் என்பதற்கு மீன் வியாபாரம் |
அப்பு அவர்களின் வலி வடக்கு பற்றிய | அவரின் வசனங்கள் எமக்கும் நெஞ்சில் வலி கொண்டு அப்பகுதிக்கும் மக்களுக்கும் மாத்திர ஏனைய பகுதிகளையும், மக்களையும் புறக்கணி ஆண்டுகளின் முன்னர் பரம்பரையாக வாழ்ந்த மணிநேரத்தில் விரட்டி எங்களோடு வாழவி எண்ணிப் பார்த்ததுமுண்டா? அவர்களின் உ பறிக்கப்பட்டனவே இவை பற்றியும் சற்று சிந்தி
0 0 0 ஞானம் சஞ்சிகைக்குரிய ஓவியத்தை வரை பாராட்டுக்கள். இந்திய சஞ்சிகைகளில் வரும் கதைகளின் காட்சிப்படிமங்களை உயிர்ப்புடன் மென்மேலும் சிறப்புற எனது வாழ்த்துக்கள்.
0 0 0
54

பேசுகிறார்
ளின் 'படித்ததும் கேட்டதும்' பகுதியில் ஒரு லப்பில் பெரியார் ஏ.எம்.முகம்மது சமீம் அவர்கள் மகிழ்ச்சியுடன் வாசித்து வரும் வேளை கலாபூஷ சந்தித்த கட்டமான இறுதி வசனத்தை வாசித்து
ன்னர், அவரது இறுதிப்பயணம் ஊடகங்களில் சமீம் அவர்களைக் கடந்த ஐம்பது வருடங்களாக பூபக்கர் அவர்களை அதிபராக் கொண்டியங்கிய ம் குடும்பத்தையறிவேன். உறவினர்களுடனும் வரும் "இலங்கை வரலாற்றுச் சுருக்கத் தொகுப்பு' மதிப்புரை தந்ததுடன் அவரது நூலகத்திலிருந்து
ஐந்து நூல்களையும் அன்பளித்தார். எனது மதிப்புக்குரிய கல்விமான் சமீம் அவர்களுக்கு
னது நேசத்துக்குரியவருமான கலாபூஷணம் தம்' என்ற சிறுகதை இலங்கை முதலான கீழை ளதும் பிரச்சார அழுத்தங்களின் யதார்த்தத்தை போர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் கொண்டேயிருப்பர். சுயமாக உணர்ந்து மாற்றிக் மவது வேறு பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.
கைப்பூ வாசம்' சிறுகதை நகைச்சுவையாகவும் ளாதார நிலைமைகள், சாதாரண நிலை ஊழியர் கள் என்பவற்றை அழகாகக் காட்டியுள்ளதுடன், ளின் பின்னணியில் மட்டரகமான திட்டங்களும் நல்ல உதாரணம்.
'வலி' நெஞ்சில் வரையப்பட்டிருப்பது போல மயத் தந்தாலும், வடக்கை மாத்திரம் கணக்கில் ம் இழப்புகள் ஏற்பட்டது போன்றும் வடக்கின் பித்து உள்ளதும், அதனையும் விட மேலாக 23 த முஸ்லிம்கள் ஒரு லட்சம் பேரை இரண்டே ட்டிருக்கும் செயல் பற்றியும் ஒருகணமேனும் யிர்கள் பல்லாயிரம் கோடி ரூபா உடமைகள் த்தால் நல்லது!
- கலாபூஷணம் எம்.ஐ.எம்.அப்துல்லத்தீப் - புத்தளம். ) 0 0 சந்துவரும் ஓவியர் தவம் அவர்களுக்கு எனது ஓவியங்களுக்கு நிகராக அவரது ஓவியங்களும் பிரதிபலிப்பதாக அமைகின்றன. அவரது பணி
- ஷெல்லிதாசன், திருகோணமலை
0 0 0
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

Page 57
மே -2014 இதழிலே துரை மனோகரனின் சாத்தானின் வேதம், இந்நாட்டு ஆட்சி, அரசியல் பற்றிய கலைத்துவமான குறியீட்டுக் கதை. நெல்லை லதாங்கியின் பிஞ்சுமனம் சிறுகதையைச் சென்ற வார வீரகேசரியில் வெளியான கம்பவாரிதி அவர்களின் தாயோடு கல்வி..' என்ற கட்டுரையுடன் இணைத்துப் பார்த்து இரசித்தேன். கீதா கணேஷின் 'காத்திருப்பு' சமகால நிகழ்ச்சி சம்பந்தமான நெஞ்சையுருக்கும் கதை. உ. நிசார் பெண்ணியம் பற்றிச் சொல்லப்பட வேண்டிய சில உண்மைகளை மறைக்காமல் சொல்லியிருக்கிறார்.
ஞானம் சம்பந்தமான சில ஆலோ சனைகள்: இப்போதைய தரம்பற்றி இடம் பெறும் விஷயங்கள்பற்றி, சஞ்சிகையின் அமைப்புப் பற்றி - குறை சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், காலத்துக்குக் காலம் சில புதிய புதுமையான அம்சங்களைச் சேர்த்தால், வாசகர்கள், எழுத்தாளர்கள் போன்றோரின் வரவேற்பையும் பாராட்டையும் இன்னும் அதிக அளவிற்குப் பெற்றுக்கொள்ளும். உறுதி யான பயனையும் உருவாக்கும்.
- சிற்பி சிவசரவணபவன் 0 0 0 0 0 ஞானம் மேமாத சஞ்சிகையில் கண்டி தமிழ்ச்சங்கம் நடத்திய தி. ஞானசேகரனின் 'எனது இலக்கியத் தடம்' நூல் அறிமுகவிழா பற்றிய விமர்சனங்களையும், அதற்கு ஆசிரிய ரின் ஆதாரங்களுடனான ஏற்புரையையும் வாசித்தேன். பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் அவர்கள் பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி நிலைமை வீழ்ச்சியடைந்து சீரழிந்து விட்ட தாகவும் விஷயமில்லாத நிலையில் எவராவது ஒருவரைப்பற்றி (எழுத்தாளர்கள் உட்பட) ஆராய்ச்சி செய்யும்படி கூறி விடுவோ மென்றும் குறிப்பிட்டிருந்தார்.
பேராசிரியர்மேல் மதிப்பும் மரி யாதையும் உள்ளவன் நான். பல்கலைக் கழகம் பற்றிய உயர்ந்த எண்ணங்களையே கொண்டிருப்பவன். பல்கலைக்கழகங்கள் புத்திஜீவிகளைக் கொண்டிருப்பதோடு ஒரு தேசத்தின் அறிவுத் தேட்டங்களாகவும் விளங்குபவை. பேராசிரியரின் கருத்துக்கள் என்னை உண்மையிலேயே உலுக்கிவிட்டது. பல்கலைக்கழகங்கள் பற்றி இதுவரை
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

நான் ஒருவித மாயையில் இருந்தது போலவும், எல்லாம் உடைந்து சரிந்தது போலவும் உணர்கிறேன். பேராசிரியரின் கூற்று இதுவரைகாலமும் ஆய்வுகளை மேற்கொண்ட மாணவர்களையும் அவர்களை நெறிப்படுத்திய பேராசிரியர்களையும் கேலிசெய்வதாகவும் சிறுமைப்படுத்துவதாக வும் அமைந்துள்ளது. 30 வருடங்களாகக் கற்பித்து வரும் பேராசிரியர் போன்றவர்கள் தான் இத்தகைய வீழ்ச்சிக்குப் பொறுப்பேற்க வேண்டும் என்பது எனது அபிப்பிராயம்.
163ஆவது ஞானம் சஞ்சிகையிலே கலாநிதி துரை மனோகரன் எழுதிய "காட் டில் ஒரு திருவிழா" உருவக்கதையைத் தொடர்ந்து மேமாத சஞ்சிகையிலே வெளிவந்திருக்கும் "சாத்தானின் வேதம்" அருமையிலும் அருமை. வேதாகமத்தையே புரட்டிப்போட்டு விட்டார். சபாஷ். லூசியர் என்னும் சம்மனசு (Angel) தான் இறைவனுக்கு சமானமாக இருக்கவேண்டுமென சிந்தை யிலேயே பாவம் செய்தமையினால் சபிக் கப்பட்டு லூசிப் பசாசாக மாறியதாக வேதாகமம் கூறுகிறது. எம்மத்தியிலும் பலர் இன்று இப்படியாகத்தான் மாறிக்கொண் டிருக்கிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் விளங் கிக் கொள்ளட்டும்
- P. D. பாலரட்னம், கண்டி. 0 0 0 0 0 கண்டி தமிழ்ச் சங்கம் நடத்திய தி.ஞானசேகரனின் "எனது இலக்கியத்தடம்” நூல் அறிமுக விழாவில் கலந்துகொண்டு தலைமை உரையாற்றிய பேராசிரியர் துரை மனோகரன், அறிமுகவுரை ஆற்றிய விரிவுரையாளர் எம். ஜெயசீலன், கருத்துரை ஆற்றிய விரிவுரையாளர் ரூபவதனன் மற்றும் எழுத்தாளர் திரு.மு.சிவலிங்கம் ஆகியோரின் கருத்துக்களை ஞானம் 168ல் பார்த்தபோது ஞானம் ஆசிரியரைப் பற்றியும் - "எனது இலக்கியத்தடம்” என்ற அவரது நூல் பற்றியும் உயர்வான எண்ணங்கள் எனது மனதில் மத்தாப்பாகச் சொரிந்தன!
அந்த உரைகளின் தொடர்ச்சியாக பேரா சிரியர் எம்.ஏ.நுஃமானின் கருத்துரை சபைக்கு அவசியமற்றதாக அமைந்து விட்டதோ என்ற கவலை என்னுள் ஆழமாக முகிழ்த்தது....
எனினும் ஆசிரியர் ஞானசேகரனின்
55

Page 58
ஆதாரபூர்வமான பதில்கள் மனதுக்கு ஆறுதலை
அதே சமயம் பேராசிரியர் எம்.ஏ.நுஃமானின் மட்டுமன்றி ஏனைய எழுத்தாளர்களுக்கும் ஏற்பு அபிப்பிராயமாகும்.
இந்து சித்தாந்தம் மனம், புத்தி, சித்தம் சேர்த்துள்ளது. நான் - எனது.. என்று தோ தன்மேல் கொண்ட நம்பிக்கைதான் வாழ்க்கைய அனைத்து முன்னேற்றங்களுக்கும் செயல்பாடுக உண்மைபற்றி அறியாதிருக்கலாம். ஆனால் பேர இருப்பதுதான் மேலும் மேலும் முன்னேறுவதற்
கூறுவதை ஏற்க முடியாது.
மேலும், - பல்கலைக் கழக ஆராய்ச்சி நி கழகங்களில் பட்டப்படிப்புக்கு 40-50 மாணவர்க நாங்கள் எவராவது ஒருவரைப் பற்றி ஆராய் தன்னைபற்றி ஆராய்ச்சி நடப்பதாக பெரிதா ஆராய்ச்சித் தன்மை மிகவும் சீரழிந்து விட்டது..
ஐயா!
இது உங்கள் உள்வீட்டு விவகாரம். அப் உங்களை திருத்திக்கெள்ள வேண்டும். எத் பல்கலைக் கழகங்களில் ஆய்வுக்கு எடுத்து ஏன் ஐயா அவர்களின் வயிற்றெரிச்சலை அந் செய்வதற்கு தகுதியான படைப்புக்கள் இல்லை அந்த துறையை இரத்துசெய்யுங்கள். ஏன் உங் படைக்கும்படி விதித்துவிட்டு நீங்களே தர நிர்ல
அடுத்ததாக, - சாஹித்தியப் பரிசு மற்றும் 6 இல்லை... எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி யில் பேராசிரியர்களின் பங்களிப்பும் உண்டுதா கிக் கொள்கிறார்கள்! அதை நிறுத்திவிட்டால் ஏற்படுகிறதா பார்ப்போம்....
தவிர முற்போக்கு எழுத்தாளர்கள் சார்ந்த பிரம் இப்படி உயர்மட்டத்தில் உள்ளவர்களும் இலக்கி வதாலும் 'சாதியம்' எமது சமூகத்தில் நீடித்திருக் கருத்துகளால்தான் தமது படைப்புகளுக்கு இன் கவலை தருவதாக உள்ளது.
பேராசிரியரே! நீங்களுமா ?
00 ஞானம் பிரதம ஆசிரியர் தி.ஞானசேக "எனது இலக்கத் தடம் - பாகம் - 1 (5
"வட இந்திய பயண அனுபவங்கள் - (30 ஆகிய நூல்களைத் தபால் மூலம் ஞானம் பண
எழுதிய
பெற்றுக்கொள்ளலாம்.

D தருவனவாக அமைந்தன.
சில கருத்துக்கள் ஆசிரியர் ஞானசேகரனுக்கு புடையதாக இல்லை என்பது எனது தாழ்வான
என்ற வரிசையில் அகங்காரம் என்பதனையும் ன்றும் எண்ணமே அகங்காரம். ஒரு ஆன்மா பாக மலர்கிறது.. சுயநம்பிக்கைதான் மனிதனின் ளுக்கும் அடிப்படைக்காரணம்! மாசேதுங் அந்த ரசிரியர் நுஃமான் அவர்கள் அவநம்பிக்கையோடு கான படிகட்டுகள் என்ற பொருளில் கருத்துக்
லைமை வீழ்ச்சி அடைந்து விட்டது, பல்கலைக் கள் இருக்கும்போது விஷயமில்லாத நிலையில் ச்சி செய்யும்படி கூறிவிடுவோம். எழுத்தாளன் க நினைக்கின்றான். பல்கலைக் கழகங்களில் .. என்று குறிப்பிடுகிறார்...
படியான தவறுகளை செய்யாமல் நீங்கள்தான் தனை இலக்கியவாதிகள் தமது ஆக்கங்கள் க்கொள்ளப்பட்டுள்ளன என மகிழ்ந்திருந்தனர். யாயத்துக்கு கொட்டிக் கொள்கிறீர்கள். ஆய்வு யென நீங்கள் கண்டால் தயவு செய்து உடனே கள் பொன்னான மாணவர்களையே இலக்கியம் - னயம் செய்தாலும் பரவாயில்லை! விருதுகளுக்கெல்லாம் இக் காலத்தில் மரியாதை ஒயான பரிசுகளுக்கும் விருதுகளுக்கும் பின்னணி னே! பெரிய விருதுகளையும் அவர்களே தமதாக் ல் பரிசுகளுக்கும் விருதுகளுக்கும் மரியாதை
ச்சனைகள் பற்றி பேராசிரியர் கருத்துரைத்துள்ளார். யவாதிகளும் தொடர்ந்து பேசுவதாலும் எழுது கே முடிகின்றது. சில இலக்கிய வாதிகள் சாதிய னமும் உயிர் கொடுக்கிறார்கள் என்பது மிக மிக
- வீ.என்.சந்திரகாந்தி. திருக்கோணமலை 0 0 0
ரன்
கென்
வட இந்திய "ரெணஅனுபவங்கள்
00/=) 00/=)
மனையில்
ஞானம் - கலை இலக்கியச் சஞ்சிகை - ஜூன் 2014 (169)

Page 59
- © Shis E
OUR PRODUCTS ARE THE FOLLOWING; => MASALA POWDERS
> IDDLY PODDY ITEMS
VADAGAM ITEMS | - PICKLES ITEMS
Manufactured by:- SITHI ENTERPRISES
47/A2, Madampitiva
“ஞானம்” சஞ்சிகை |
பூபாலசிங்கம் 202, 340, செட்டியார்
பூபாலசிங்கம் 309A 2/3, காலி வீதி
பூபாலசிங்கம் 4, ஆஸ்பத்திரி வீ
துர்க் சுன்னா
ஜீவ அல்வாய். தொை
லங்கா சென்ற 84, கொழும்பு

Enterprises
Our Products are - RealFier dைt - பேரiemicalாது
191epa7cd..
Tel : DII - 1540093
கிடைக்கும் இடங்கள்)
புத்தகசாலை தெரு, கொழும்பு-11
புத்தகசாலை தி, வெள்ளவத்தை.
புத்தகசாலை "தி, யாழ்ப்பாணம்.
க்கா ராகம்
நதி லபேசி : 077 5991949
ல் புத்தகசாலை
வீதி, கண்டி.

Page 60
GNANAM - Registered in the Department of P
(Luck
BIS MANUFA
NATTARANPOTHA, KU T: +94 081 2420574, 2420
E: luckylan
Printed by : 1

0sts of Sri Lank2 பnder No. 22/18/News/2014
yland 20T
CTURERS
' உலக சாதனை எங்கள் பாரம்பரியம்
பிஸ்கட்டிலும் தான் !
INDASALE, SRI LANKA. =217, F: +94 081 2420740 ad@sltnet.lk