கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இணுவில் ஒலி 2013.06-07

Page 1
| 1
ஆனி - ஆடி 2013

வில் ஒலி கரு திங்கள் ஏடு 6
விலை ரூபா 50/=

Page 2
இலண்டன் மாநகரி தங்க நகைகளின்
02 வெ
நம்
நவீன வடிவமைப்புடன
நாடவோ Wester
230, UPPER TOOTING ROAD LONDON SW 17 7EW UNITED KINGDOM TEL: 0208 767 3445
Dealers in 22K
சிவராம் பதிப்பகம், 20(32), கல்லூரி i

மாளிகை
stern Jewellers ஸ்டேன் ஜூவல்லர்ஸ் பிக்கையின் உத்தரவாதம்
Tான தங்க நகைகளுக்கு
ண்டிய இடம் *1000008
5, PLAZA PARADE EALING ROAD, WEMBLEY HA0 4YA UNITED KINGDOM TEL : 0208 903 0909
ET Gold Jewellery
தி, யாழ்ப்பாணம். தொ.பே. 021 221 9440

Page 3
சரிட்டா ஐவலரி
நவீன வடிவமைப்பில் தரமான அசல் 22 கர
தங்கநகைகளை நம்பிக்கையுடனும் உத்தரவாத
பெற்றுக்கொள்ள சரிட்டா ஜூவலரிக்கு வாரு
இல. 42, செட்டியார் தெரு, எ
- - - - -
ARI 42, Sea Stree
Tel : (+) 94 11 2435361
(+) 94 11 2325485

rrita Jewellery
සරිටා ජුවලරි.
---------
தத்துடனும்
கங்கள்
பகாழும்பு 11, இலங்கை.
Authorised Money Changer உத்தரவாதம் பெற்ற நாணய மாற்றுநர்
- - - -
R (PVT) LTD at, Colombo - 11, Sri Lanka
Fax: (+) 94 11 2435298

Page 4
* சி, : 4 " ஆ க
- "பெற்ற தாயும் பிறந்த 21 JUN 2013
நற்றவ வானிலும் நன
''இணுவில் - :: !!(தாயக மண்ணின் தனித்துவம். வள்ளுவர் ஆண்டு 2044
ஆடி - ஆவ
தோராம் பாசம்
போ
நிறுவுனர்/காப்பாளர்
நடராசா சச்சிதானந்தன் ஆசிரியர்:
த.சிவசுப்பிரமணியம் (தம்பு சிவா )
தொ.பேசி : 071 8673482 நிர்வாக ஆசிரியர்:
சிவலிங்கம் சரவணபவன் தொ.பேசி: 077 3126802
சிறு
விர
சஞ்சிகைக் குழு : மூ.சிவலிங்கம்
அ.குகதாசன் கா.வைத்தீஸ்வரன்
ம.காண்டீபன் பேராசிரியர் க.தேவராஜா
சொ.ஹரிசங்கர் க.பரமேஸ்வரன்
தே.சதீசன் சு.சண்முககுமார்
பி.அஜந்தன் மா.ந.பரமேஸ்வரன்
யோ,சுதந்திரன் சு.பரமேஸ்வரலிங்கம் திருமதி வை.கணேசபிள்ளை
க.கண்ணபிரான் திருமதி க.கிருஸ்ணபிள்ளை வெளிநாட்டுப் பிரதிநிதிகள்:
கனடா
: ம.இராஜகுலசூரியர் பக்கம் இலண்டன் : சபேசன் சண்முகநாதன் அமெரிக்கா
: வே.பிரேமதயாளன் அவுஸ்திரேலியா : தி.திருநந்தகுமார் ஜேர்மனி
1 ஆனந்தவடிவரசன் டென்மார்க்
1 கணேசு பரமநாதன் சுவிஸ்
: நடராஜா மனோகரன் நோர்வே
* நல்லையா சண்முகப்பிரபு தொடர்பு =
9 - 2/1, நெல்சன் இடம், கொழும்பு - 05, இலங்கை, தொ.பேசி: 0114902406
அறி
அறி
|மாம்
H
47, கருணாகரப்பிள்ளையார் கோவில் வீதி, இளந்தாரி கோவிலடி, இணுவில் கிழக்கு, சுன்னாகம், இலங்கை,
E-Mail: inuviloli@hotmail.com படைப்புகளுக்குப் படைப்பளிகளே பொறுப்புடையவர் கள். ஆக்கங்கள் செம்மை பார்த்தபின் பிரசுரமாகும்.
-ஆசிரியர்- (அட்

- பொன்னாடும் Kசிறந்தனவே" ல் ஒலி? காக்கும் இருதிங்கள் ஏடு) மணி 2013 வில் - 1
ஒலி - 6
ப 2
34
13
ள்ளே ஒலிப்பவை
பக்கம் சா முனையிலிருந்து.......
02 குரை :
ஆடற்கலை ஆசான் ஏரம்பநாதர் சுப்பையா
ப்) ஸ்ரீ பரராசசேகரப்பிள்ளையார் கோயில் வரலாறு | 5 உயர்திரு கந்தையா நடராசா
இசையின் மகத்துவம் . போதை என்னும் மாயை
11 இணுவில் அறிவாலயம் பகதை ! * திசைமாறும் புத்திரர்கள் மக்கதை! 5. ஆச்சி இல்லாக் கவலை - என் வசந்த நினைவுகள் களயாட்டு! - தேசிய மட்டத்துக்கு உயரும் வடக்கு, கிழக்கு கிரிக்கெட்
37 சுடச்சித்திரம் : - நாய் ஓட்டம்
35 ந்ெதவையும் தெரிந்தவையும் !
27 விெயல்: மனித மூளையின் விசித்திரத் தன்மை
14 ணவர் உலகம் :
விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி
21 வதிவிட வேளாண்மையும் வாழ்க்கை முறையும்
23 பகள் விருந்து 1
33 பக்கியம் ! - புதுக்கவிதைக்கு வித்திட்ட
வால்ட் விட்மென்
36 இலக்கியமும் திறனாய்வும்
3ம் பனயவை :
சிந்தனை உண்டி கொடுத்தோர்... புகைப்பிடித்தால்...
20 - ரீவர் பேலிஸின் எச்சரிக்கை
24 * நோபல் பரிசு
25 - காதலர் தினம்
26 டையில் ஆடற்கலை ஆசானின் கலைக்குடும்பம்
0 க 9 8 : 8 5 = * 2 க க : 3
8

Page 5
பேனா முனையிலிருந்து . இன்றைய மாணவச்செல்வங்களின் எதிர்க் ஆசிரியர்கள் பொறுப்புடன் செயற்படவேண்டி களை வழிநடத்தும் பாரிய பொறுப்பும் கடன் வர்களிடையே இருக்கின்ற திறமைகளையும் செயற்பாடுகளில் அவர்களை உற்சாகப்படுத்தி யாக இருக்கவேண்டும்.
கல்வி, விளையாட்டு, எழுத்தாக்கம், கலை,) அவர்களுக்கிருக்கும் ஆர்வத்தைத் தெரிந்து அப்பொழுதுதான் அவர்களிடம் மறைந்திருக்கு
சிலபெற்றோர்கள் தாங்கள் விரும்புவதைத் எண்ணி பிள்ளைகளுக்கு விருப்பமில்லாததுன இதனைப் பொரும் சுமையாக எண்ணி பிள்ை கூடிய வற்புறுத்தலால் பிள்ளைகள் உள கல்வியிலோ ஏனைய துறைகளிலோ அவர்கள் காணக்கூடியதாக இருக்கின்றது. மாணவர்கடு றிந்து அத்துறைசார்ந்த வழிநடத்தல்களில் பெற
பாடசாலைகளைப் பொறுத்தளவில் அதி களுக்கு முன்னுரிமை வழங்கும் மனோபாவம் தான் அவர்கள் பாடசாலைச் சமூகத்தால் மதிக். மாணவர்களைப் புறந்தள்ளிவிட்டு தங்களுக் பாராது போட்டிகளுக்கு அனுப்பும் நிலை இரு தகுதியுள்ள மாணவர்களும் அவர்களின் பெற். உள்ளவர்களுக்கு ஒரு நீதி சாதாரண மாணவர் அங்கலாய்க்கின்றார்கள். நகர்ப்புறப் பெரிய சாலைகளிலும் இத்தகைய ஓரவஞ்சகங்கள் ) ருக்கிறார்கள். இது ஆரோக்கியமான செயற்
| "மாதா பிதா குரு தெய்வம்” என்று மதித்துப் தும் ஆசிரியர்களினதும் வழிநடத்தல்கள் பில பக்கபலமாக இருக்கவேண்டும். அப்பொழுதுத இருக்கும்.
மீண்டும் அடுத்த

காலம் பிரகாசமாக அமைவதற்குப் பெற்றோர்கள், ய கடைப்பாடுடையவர்களாக உள்ளனர். அவர் மையும் இவர்களையே சார்ந்துள்ளது. மாண 5 ஆற்றல்களையும் கண்டறிந்து அத்துறைசார் 8 வளர்ச்சியை நோக்கிய பாதையில் உந்து சக்தி
நாவன்மை போன்ற பல்வேறுபட்ட அம்சங்களில் புகொண்டு அவற்றில் ஈடுபட வைக்கவேண்டும், தம் அந்த உன்னதம் வெளிவரும். கதான் தமது பிள்ளைகள் செய்யவேண்டும் என்று ஒறயில் பயணிக்க அவர்களைத் துண்டுகிறார்கள். ளகள் சலிப்படைந்து போகிறார்கள். பெற்றோரின் ரீதியான பாதிப்புக்கும் உள்ளாகின்றார்கள். ளால் பிரகாசிக்கமுடியாமல் போகிற நிலையைக் நக்கு விருப்பமான துறை எது என்பதைக் கண்ட ற்றோர்கள் அவர்களை ஈடுபட வைக்கவேண்டும். பர்கள், ஆசிரியர்கள் மாணவர்களின் ஆற்றல் > மிக்கவர்களாகத் திகழவேண்டும். அப்பொழுது கப்படுவார்கள். சில பாடசாலைகளில் தகுதியான க்கு வேண்டியவர்களின் பிள்ளைகளைத் தகுதி ந்து வருகின்றது. இத்தகைய செயற்பாட்டினால் றோர்களும் சஞ்சலப்படுகின்றார்கள். செல்வாக்கு -களுக்கு ஒரு நீதியா? என்று பாதிக்கப்பட்டவர்கள் பாடசாலைகளில் மட்டுமல்ல கிராமப்புறப் பாட நடைபெற்றுவருவதாக பலர் சொல்லிக்கொண்டி பாடு அல்ல.
போற்றப்படுகின்ற வகையில் பெற்றோர்களின ள்ளைகளின் விருப்புடனான முன்னேற்றத்திற்கு தான் அவர்களின் எதிர்காலம் ஒளிமயமானதாக |
இதழில் சந்திப்போம்.
- ஆசிரியர்.

Page 6
கட்டுரை ஆடற்கலை ஆசா இணுவையூர் ஏரம்பநாதர் சுப்ை
பேராசிரியர் சபா.ஜெயராசா
பி
ப
G 'E (டி உ + + |
ஆடற் கலையின் வரலாறு மக்களின் ன பண்பாட்டு வரலாற்றின் குறிகாட்டியாகவே
அமைந்து வருதல் குறிப்பிடத்தக்கது. பூர் யி வீகக் குலக்குழு வாழ்க்கையில் இடம் ன பெற்ற வாழ்வாதாரத்தோடும் சடங்கு களோடும், போர்களோடும் இடம்பெற்ற தமிழர்களின் ஆடல் வரலாறு நிலமானியச் சமூக உருவாக்கத்தோடு “கலைவடிவம்” (ART FORM) என்ற நீட்சியை அடைந்தது.
அந்த நிலையை அடையும்பொழுது அது பா வரன்முறையான கற்பித்தலுக்கும் கற்றல் | ஒழுங்குமுறைகளுக்கும் உட்படுத்தப்பட்ட தோடு ஆற்றுகை செய்வோருக்கும், பார்த்துச் சுவைப்போருக்குமிடையே இடைவெளிகளையும் தோற்றுவித்தது.
தேவரடியார் ஆட்டம், திருச்சதிராட்டம், தேவ மகளிர் ஆட்டம், கோயிற்கூத்து, திரு வீதியாட்டம் என்ற பெயர்களால் அழைக் கப்பட்ட தமிழர்களின் செவ்விய ஆடல் இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் "பரத நாட்டியம்” என்ற மேனிலை ஆக்கத் தைப் பெற்றது. அந்த மேனிலையாக்கத் தில் இழந்தவையுமிருக்கின்றன. புதிதாகப் பெற்றுக்கொண்டவையும் இருக்கின்றன.
இலங்கையின் தமிழச்சூழலிலே கோயில் களிலே இடம்பெற்ற செவ்விய ஆடல் மரபின் தனித்துவமான ஆளுமை கொண் டவராக விளங்கியவர் இணுவையூர் ஏரம்ப நாதர் அவர்கள். அவருக்கும் ஆறுமுகநாவ
இணுவில் ஒலி
B) = * [S
4 5 5 5 5 6 \ S & ) • 5

ன்
பயா
மருக்கும் “பண்ணும் பரதமும்” தொடர் Tன கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்த மைக்குரிய செவிவழிச் செய்திகள் உண்டு.
அத்தகைய ஒரு பின்புலச் செழுமை ல் ஏரம்பநாதருக்கும் தங்கமுத்து அம் மையாருக்கும் மகனாக 1922 ஆம் ஆண்டு மத மாதம் 13 ஆம் திகதி சுப்பையா அவர் ள் பிறந்தார். ஏரம்பநாதருக்கு ஆடற் லையைக் கற்பித்த ஆசான் சுப்பையா சித்தகரின் நினைவாகத் தமது மகனுக்கு அந்தப் பெயரைச் சூட்டினார் என்று கூறப் நிகின்றது.
இணுவிற் கிராமத்தின் கலைப் பின்புல மம் தந்தையாரால் புகட்டப்பட்ட ஆற் பகை நுட்பங்களும் அத்துறையில் ஆழ்ந்து டுபடுவதற்குரிய விசைகளை ஊட்டின. 4ெ0 ஆம் ஆண்டிலே மேற்படிப்புக்கென இந்தியாவுக்குச் சென்ற அவர் காரைக்குடி பில் உள்ள இராமகான சபாவிலே ஒரு நடி ராகச் சேர்ந்தார். தொடர்ந்து திருச்செந் பார் மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடம் பரத எட்டியத்தை மேலும் ஆழ்ந்து கற்றார். மிழகத்துக் கிராமங்களுக்குச் சென்று "ராமிய நடனங்களை விரிவாகக் கற்றுக் காண்டதுடன் கிராமிய விழாக்களிலே ஆற்றுகையை மேற்கொண்டு விருதுகளை ம்பெற்றார். 1946 ஆம் ஆண்டு சென்னை கருக்கு வந்த அவர் கலாநிதி கோபிநாத் புவர்களிடம் கேரளத்துச் செவ்வியல் பூடலாகிய கதகளியினையும் கேளரத்துக் ராமிய நடனங்களையும் ஆழ்ந்து கற்றுக்

Page 7
கொண்டார்.
- அவரது ஆற்றுகைத் திறன்களையும் ஆடல் வளத்தையும் கண்ட ஜெமினி ஸ்ரூடியோ வாசன் அவர்கள் தமது திரைப் பட ஆக்கங்களிலே அவரைப் பயன்படுத் திக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. திரைப்பட ஈடுபாடு காரணமாக அக்காலத் திலே புகழ்பெற்றிருந்த ஸ்ரண்டு சோமுவி டம் மல்யுத்த நுட்பங்கள், வாள் யுத்தம் முதலியவற்றையும் கற்றுக் கொண்டார். ஏற்கனவே இணுவில் கிராமத்திலிருந்த நிலாப்பள்ளியில் அவற்றைக் கற்றுக் கொண்ட அனுபவம் அவரிடத்து இருந்த மையால் சோமு அவர்களின் வித்துவப் பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டார்.
இந்திய சுதந்திரப் போராட்டமும், இலங்கையில் இடம்பெற்ற தன்னாட்சிக் கான இயக்கங்களும் கலை இலக்கியத் துறைகளிலே பன்முகமான செல்வாக்கு களை ஏற்படுத்தின. கிராமிய ஆடல்களை யும் செவ்விய ஆடல்களையும் மீள்வலு வூட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட் டன. பந்தணை நல்லூர் ஜயலட்சுமி, அபி நயமேதை பாலசரஸ்வதி முதலியோரின் ஆற்றுகைகள் இடம்பெறுவதற்குரிய முயற்சிகள் யாழ்ப்பாணத்திலே மேற் கொள்ளப்பட்டன. இந்தியாவிலிருந்து வர வழைக்கப்பட்ட நாடகக் கலைஞர்கள் மேடை நாடகங்களை ஆற்றுகை செய்த னர். கவியரசர் இரவீந்திரநாத் தாகூர் அவர் களின் வருகையும், கலாயோகி ஆனந்த குமாரசாமி அவர்களின் எழுத்தாக்கங் களின் அறிவுப் பரவலும் கலை வளர்ச் சியை முன்னெடுப்பதற்குரிய விசைகளாக அமைந்தன. இந்நாட்டில் வளர்ச்சி பெறத் தொடங்கிய வீரகேசரி, ஈழகேசரி, தினகரன் முதலாம் இதழ்கள் கலை வளர்ச்சிக்கு மேலும் உற்சாகம் கொடுத் தன.
அத்தகைய ஓர் எழுபுலத்திற் கலைச் செல்வர் ஏரம்பநாதர் சுப்பையா அவர்க ளின் வினைத்திறன் மிக்க கலைச் செயற்
இணுவில் ஒலி

பாடுகள் இடம்பெறலாயின. ஆடற் கலையையாழ்ப்பாணத்தில் வளர்ப்பதிலே மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ஆர்வலர் இராஜநாயகம் அவர்களால் உருவாக்கப் பட்ட யாழ்ப்பாண நடனக் கல்லூரியில் ஆசிரியராக கலைச்செல்வர் சுப்பையா அவர்கள் வரவழைக்கப்பட்டார். கலைச் செல்வரது ஆற்றுகைத் திறனையும் அறி முறைப்புலமையையும் வியந்து வட இலங் கைச் சங்கீத சபை உயர் சான்றிதழை வழங்கிச் சிறப்பித்தது.
தமிழர்களின் செவ்விய ஆடலாகிய பரத நடனத்தையும், வளம்மிக்க கிராமிய நடனங்களையும் கற்பிப்பதற்கு அவர் மேற் கொண்ட தளராத முயற்சிகளும் ஆடல் அரங்குகளும் யாழ்ப்பாணத்தில் ஆடற் கலை மறுமலர்ச்சியைத் தோற்றுவித்தது. சிறப்பாக மத்தியதர வகுப்பினர் ஆடற் கல்வியில் ஈடுபடுவதற்குரிய பின்புலம் உரு வாக்கப்பட்டது.
அரச தமிழ்ப் பாடசாலையிலே நடன ஆசிரியர் என்ற பதவிக்கு முதலிலே நிய மனம் பெற்ற சிறப்பும் இவருக்கு உண்டு. நெடுந்தீவு மகாவித்தியாலம், வேம்படி மகளிர் கல்லூரி, இராமநாதன் கல்லூரி, யாழ். இந்து மகளிர் கல்லூரி, பண்டைத் தரிப்பு மகளிர் கல்லூரி, கொக்குவில் இந் துக் கல்லூரி முதலியவற்றில் ஆசிரியரா கப் பணிபுரிந்ததுடன் தமது ஊராகிய இணு விலிலும் புகுந்த ஊராகிய கொக்குவிலி லும் ஆடலை வரன்முறையாகப் பயிற்று வித்து வந்தார். அர்ப்பணிப்புமிக்க அவரது கற்பித்தலால் ஆடற்கலை ஏற்றம் பெற்றது. யாழ்ப்பாணத்தில் விஞ்ஞானக் கல்வி மேலெழுந்த காலகட்டத்திலும் அவரிடத்து விருப்புடன் ஆடலைப்பயில் பலர் முன் வந்தமை குறிப்பிடத்தக்கது.
அவரது வாழ்க்கைத் துணைவியாரா கியபூரணம்அவர்களின இல்லத்தில்கலை யழகு மிகுந்த சூழலிலே அவர் “கலாபவ னம்” என்ற ஆடற்கலைக் கட்டடத்தை

Page 8
- T
நிறுவி ஆரம்ப நிலையிலிருந்தே வரன் முறையாக ஆடலைப் பயிற்றுவிக்கலா னார்.பலர் அக்கலைக்கூடத்தில் இணைந்து ஈடுபாட்டுடன் கற்கலாயினர். ஆற்றுகை வளமும் அறிமுறை வளமும், உயர்ந்த ஒழுக்க நெறிகளும் அவரது கற்பித்தலிலே உள்ளடங்கியிருந்தன. அவரால் பயிற்று. விக்கப்பட்டோர் அனைத்து இலங்கை விருதுகளையும் பெறத் தொடங்கினர்.
மிகுந்த புகழ் பெற்ற நடனக் கலைஞர் | களும் ஆசிரியர்களும் இவரால் உருவாக் கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது திருமதி திரிபுரசுந்தரி யோகானந்தம், கலைஞர் வேல்ஆனந்தன், திருமதி கமலா ஜோன்பிள்ளை, பிரமஸ்ரீ வீரமணிஐயர், செல்வி சாந்தா பொன்னுத்துரை, திருமதி | கிருஷாந்தி இரவீந்திரா என்றவாறு ஆற் 1 றல்மிக்க அவரது மாணவர்பரம்பரை நீண்டு கொண்டே செல்லும்.
அவரது மகள் திருமதி சாந்தினி சிவ நேசன் ஆடல் ஆற்றுகையிலும் அறிமுறை யிலும் உன்னதங்களை நிலை நிறுத் திய ஆடற் புலமையாளராக விளங்குகின்றார். சாந்தினி சிவநேசனின் மகள் செல்வி தேவந்தி அந்தப் புலமை மரபைத் | தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார். ஆடலை ஒரு தவமாக மேற்கொள்ளும் மரபு அவர் களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பல்கலைக்கழக நிலையிலே . அக்கலையை மேலும் வளமுடன் வளர்த்தெடுப்பதிலும் அவர்களின் பணியும் பங்களிப்பும் மேலும் விதந்து |
குறிப்பிடத்தக்க பதிவுகளாகின் றன.
“கலா பவனம்” இந்நாட்டிலே தனித்து வம்வாய்ந்த ஆடற்கலைக்கூடமாக இயங்கி வருகின்றது. ஆடலைத் திட்ப நுட்பமா கவும் செவ்வியல் மரபு பிறழாமலும் கற்பிக்கும் செயற்பாடுகள் அங்கே முன் னெடுக்கப்பட்டு வருகின்றன. அது போன்ற ஒரு கலாலயத்தை இணுவையூரிலும் அமைப்பதற்கு அவர் திட்டமிட்டிருந்தார்.
இணுவில் ஒலி
எம்.
1 = ரசு

அதற்கெனத் தமது மூதாதையரின் நிலத் தையும் தெரிவு செய்திருந்தார்.
அவரால் உருவாக்கப்பட்ட நாட்டிய தாடகங்கள் தனித்துவம் வாய்ந்தவையாக அமைந்திருந்தன. ஆடற்புலத்தில் அவ நக்கு இருந்த ஆளுமையும் பல்வேறு நடனத் துறைகளில் அவரிடத்தே காணப் பட்ட ஆழ்ந்த புலமையும் ஆடல் ஆக்கங் களிலே செழுமையை ஏற்படுத்தின. நீண்ட பயிற்சியைத் தொடர்ந்து தமக்குத் திருப்தி ஏற்பட்ட பின்னரே அவர் ஆற்றுகைக்குரிய தாளை நிர்ணயம் செய்வார். அவ்வகையில் அவரால் உருவாக்கப்பட்ட சுகன்யா, சதீ அகல்யா, ஊர்வசி, பாமா விஜயம், திரு வெம்பாவை, குறிஞ்சிக்குமரன், காணி நிலம், சூடாமணி, பஸ்மாசுரமோகினி, யேசு பிறந்தது முதலியவை சிறப்பாகக் குறிப் பிடத்தக்கவை.
பரத நாட்டியத்தில் ஆழ்ந்த புலமை, நாட்டார் நடனங்கள், கதகளி, நாட்டுக் கூத்துகள் முதலியவற்றில் அவர் கொண் டிருந்த திறன்கள் அனைத்தும் அவரின் தடன ஆக்கங்களை வளம்படுத்தின. அத் தகைய பின்புலத்தில் அவர் மேற்கொண்ட தடனப் புத்தாக்கங்கள் ஆடல் அழகிய லுக்கு வளமூட்டின. தெரிந்தெடுத்த தேவா எங்களுக்கும், ஆழ்வார் பாசுரங்களுக்கும் ஆடல் வடிவம் கொடுத்து அவரால் மேற் கொள்ளப்பட்ட புத்தாக்கப் புனைவுகள் பின்னர் புதுமைகளை மேற்கொள்வோ நக்கு வளமான ஆற்றுப்படுத்தல்களாக அமைந்தன.
நடன அமைப்பிலே நிருத்தம், நிருத்தி பம், நாடகப் பண்பு அனைத்துக்கும் செவ் விய முக்கியத்துவத்தைக் கொடுத்தார். ஆடல் அசைவுகள் ஒவ்வொன்றும் செப்ப மாக அமைய வேண்டும் என்பதில் அதீத கவனம் செலுத்தினார். முத்திரைகள் தவ மின்றியும் வழுவின்றியும் செப்பமாக அமையவேண்டும் என்பதை மாணவர்க் தத் தெளிவுபடுத்தினார். ஆடலில் அபிநய
-- 5

Page 9
முக்கியத்துவத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். மன வெழுச்சிகளை வெளிப்படுத்தாத ஆடல் வெறுமனே உடலசைவாக (DRILL) மட்டும் அமைந்து கலைத்துவத்துக்கு ஊறு விளைவித்து விடும் என்பது அவரின் முக்கியமான முன்மொழிவு.
நாட்டிய ஆக்கத்தில் நாடகப் பண்பு, பாத்திரவார்ப்பு, அரங்க நுட்பங்கள், ஆடை அணிகலன்கள் இசைக்கோலங்கள் என்ற அனைத்தையும் உள்ளடக்கிய அகல் நிறைவு (COMPREHENSIVE) கொண்ட முழு மையை வடிவமைத்தார். அதனைக் குறிக் கும்மரபு வழி ஆடற்சொல்லாடலாக “நிறை குடச்செம்மை” அமைந்திருந்தது. அவரது ஆடல் ஆக்கங்கள் அனைத்திலும் “நிறை குடச் செம்மை” நிட்சி கொண்டிருந்தது. )
ஆடல் வழியாகக் கையளிக்கப்படும் செய்தியிலே தீவிர கவனம் செலுத்தினார். வெறும் களிப்புக்கும் பொழுது போக்கு இன்பத்துக்கும் புலன்களின் விருப்புக்கு முரிய கலையாக மட்டும் அவர் ஆடற் கலையைக் கருதவில்லை. மனித மேம் பாட்டுக்குரிய விழுமியங்களைக் கைய ளித்தலிலும், ஆன்மீகச்செய்தியை உரைத் தெழுவதிலும் ஆடற்கலை ஆற்ற வேண் டிய செய்திக் கையளிப்பில் ஊன்றிய கவ
இணுவில் ஒலி

ஈ|
னம் செலுத்தினார். மரவு வழிச் செவ்விய ஆடல் தாங்கி நின்ற தெய்வீகச் செய் தியைப் பக்குவமாகக்கையளிப்பதில் மிக்க உறுதி பூண்டிருந்தார். அவரது மாணாக்கர் ! அனைவரும் அந்த மரபை வழுவாது பின் பற்றி வருதல் குறிப்பிடத்தக்கது.
கலைச் செல்வர் ஏரம்பநாதர் சுப்பையா அவர்களுக்கு ஏராளமான விருதுகளும், பட்டங்களும், விதந்துரைப்பு மடல்களும் கிடைக்கப் பெற்றன. ஆனால் அவற்றை அவர் பெரிதாக மதிக்கவில்லை. ஆடற் கலையை அவர் ஒரு தவமாகவே மேற் கொண்டு வந்தார். ஆடலும், ஒழுக்கமும், உயர்ந்த விழுமியங்களும் அவரது தரிச னத்தில் ஒன்றிணைந்திருந்தன. ஆடலை வெறும் கலையாக மட்டும் அவர் எதிர் கொள்ளவில்லை உயர்ந்த தரிசனம் மிக்க வாழ்க்கையாகக் கருதினார். -
அவர் தொடக்கி வைத்த ஆடல் மரபு நண்டு வளர்ந்தவண்ணமுள்ளது. யாழ்.பல் கலைக்கழகத்திலே பரத நாட்டியம் ஒரு பட் டப்படிப்பு நெறியாக எழுச்சி பெற்றவேளை அவரின் ஆடற்கலைத் தரிசனமே வழி காட்டியாகவும் அமைந்திருந்தது. பரத நாட்டியத்தைத்தரச் சிறப்புடன் கற்பிப்பதற் கும் அவரது தரிசனமே நீட்சி கொண்டுள் ளது.
அவுஸ்திரேலியா - மெல்போன் சிவா
விஷ்னு கோயில் கலாசார மண்டபத்தில்
வைக்கப்பட்டுள்ள * அழகான அற்புதமான
ஆனைமுகன்.
அனுப்பி உதவியவா:
கலாநிதி தோர் ஆறு திருமுருகன்

Page 10
கட்டுரை
இணுவை ஸ்ரீபரராசசே கோவில் வரலாறு த
ஆ இ இ 3
கா
தும்
தெய்வீகத்திருவும், வைதீகத்திருவும் மிக்கது இணுவைப் பேரூர், ஆச்சாரசீலர் களைக் கொண்டது. ஆத்மீகச் செழுமை, கலைச் செழுமை, கல்விச் செழுமை கொண்டு விளங்குவது. சித்தர்களும் பக்தர் களும் வாழ்ந்து வளமுற்றது. நீர்வளத்தால் நிலவளத்தால், தொழில் வளத்தால் நிரம் பப் பெற்ற இத்திருவூரில் ஸ்ரீபரராசசேக. ரப்பிள்ளையார் கோயில் கொண்டது இன் னொரு தனிச்சிறப்பாகும். இவ்வாலயம் அரச பரம்பரையோடு தொடர்புடையது. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
14ஆம் 15ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப் பாணத்தை ஆரியச்சக்கரவர்த்திகள் ஆண்டு வந்தனர். அவர்களில் பதினோ ராந் தலைமுறையில் வந்த பரராசசேகர மன்னன் இவ்வாலயத்தைக் கட்டினான் என்பர். இதனால் இவ்வாலயத்திற்கு ஸ்ரீ பரராசசேகரப்பிள்ளையார் என்ற திருநா மம் வழங்கி வருகிறது. இதனை “சிங்கை ஆரியச் சக்கரவர்த்தி தன்மரபில் ஏகா தசச் சிரமுறையினான் - திங்கள் நிகர் கவிகை
து!
அ
ய
ப]
இணுவில் ஒலி

கரப்பிள்ளையார்
சன் துங்குமிகு பரராசசேகரத் திகிரிவேந் ன் - பொங்குமருள் தங்கவே பூசித்த”
என்னும் பழைய பாடல் மெய்ப் பிக்கும் இதனை யாழ்ப்பாண இராட் சியம் என்னும் நூலில் இருந்தும் அறியலாம்.
ஸ்ரீபரராசசேகரமன்னன் காலம் 1478-1519 வரையாகும். இவனது ஆட்சிக்குட்பட்ட இணுவில் என் னும் பேரூரானது ஆன்றோரும், சான்றோரும் மிக்கதும் வேளாண் குடிகள் நிரம்பப் பெற்றதும், பருத்
தியும் கரும்பும் நெல்வயல்களும் 2 குளங்களும் அமையப்பெற்றதும், முகு, பலா, மா, தென்னை, மூங்கில் றைந்து பசுமையாகவே காட்சியளித்த க்கிராமத்தைத் தேர்ந்து பரராசசேகர ன்னால் அமைக்கப்பெற்ற இவ்வாலயம் ஆரம்பகாலத்தில் மாடமாளிகை கூட காபுரங்களுடன் கூடியதாக இருந்தது -ன்றும் அரசன் போர்மேல் சொல்லுங் எல் இப்பெருமானை வழிபட்டுச் சென் என் என்றும், நூற்றுக்கணக்கான இள எக்குலைகளை யானைமேல் ஏற்றி வந் ம், குடங்குடமாகப் பால் கொண்டு வந் ம் அபிடேகித்து வணங்கினான் என்றும் றியவுண்டு. இவ்வபீடேகநீரானது சென்று rளும் வற்றாது நின்ற இடம் குளக்கரை ன வழங்குவதாயிற்று. மன்னனால் ஆல் த்தின் அருகில் ஒரு திருமஞ்சனக் கிண ம், கேணியும் வேறு ஒரு கிணறும்
'கலாபூஷணம், பண்டிதை
நமதிவை.கணேசபிள்ளை '" இணுவையூர் -

Page 11
தோண்டப் பெற்றது. ஆலயத்தில் ஆகம விதிப்படி பூசை, வழிபாடுகளும் விழாக்க ளும் நடைபெற்றன.
விநாயகர் விக்கிரகம் பரராசசேகரனால் ஸ்தாபிக்கப்பட்ட மூல விக்கிரகம் தென்னிந்திய சிற்பிகளால் செதுக்கிக் கொண்டுவரப்பட்டு பிரதிட்டை செய்யப்பட்டது என்பர். இப்பெருமான் வலக்கரத்தில் அங்குசத்தையும், இடக் கரத்தில் பாசத்தையும், கீழே உள்ள வலக் கரத்தில் ஓடிந்ததந்தத்தையும், இடக்கரத் தில் மோதகத்தையும் தும்பிக்கையில் கும்பத்தையும் வைத்திருக்கின்றார். இடதுபாதம் மடித்தும் வலது பாதம் தொங்கவிட்டபடி காட்சி தரும் தோற்றமா னது ஆன்மாக்களுக்கு வினைநீக்கிப் பேரின்பம் நல்குவதாகும்.
மடத்துவாசல் பிள்ளையார் தென்னிணுவையில் பீடுபெற அமைந்த ஸ்ரீபரராசசேகரப்பிள்ளையார் ஆலயம் போர்த்துக்கேயர் ஆட்சியில் நிலை குலைந்தது. இந்துக் கோயில்கள் அழிப் பதிலும், மாதமாற்றத்திலும் அந்நியர் கவ னம் செலுத்தியபோது இணுவில் வாழ் சைவப் பெருமக்கள் மூலமூர்த்தியை எடுத்து மறைத்து வைத்து வழிபட்டனர். அந்நியப்படை வந்தபோது இது ஆலயம் அன்று மடம் என்று பதிலளித்தனர். எம் பெருமான் பாதுகாக்கப்பட்டார். அன்று முதல் எம்பெருமான் மடத்துவாசற்பிள் ளையார் என அழைக்கப்பட்டார்.
கோவிலின் அமைவிடம் இது யாழ்ப்பாணத்திலிருந்து நான்கா வது மைல் தொலைவில் அமைந்துள்ளது. யாழ்ப் பாணத்திலிருந்து தெற்கு வடக்காக இணுவிலை ஊடறுத்துக் காங்கேசன் துறை வீதி செல்கிறது. இவ்வீதியைக் கிழக்கு மேற்காகச் செல்லும் மானிப்பாய் வதிதொடுகிறது. இவ்வீதியானது இணுவில் கந்தசுவாமி கோயிலை சந்தித்துத் தெற்கே சிறிது தூரம் சென்று திரும்பிப் பரராச சேகரப்பிள்ளையாரின் வடக்கு வீதியாகச்
இணுவில் ஒலி

சென்று மருதடி விநாயகர் வீதியைத்தொடு கிறது. ஆலயத்தின் (வீதிக்கு) வடக்கே இணுவில் இந்துக் கல்லூரி இருக்கிறது.
வீதியின் இருமருங்கும் அந்தணச் சிவாச்சாரியார் குடும்பங்களும் ஆலயத் திருப்பணிக்கு உதவுவோரும் வாழ்கின்ற னா. பூமாலை, சப்பிரம், காவடிதந்துதவு வோர் குடும்பங்களும், பிரசித்திபெற்ற நாதஸ்வர, தவில் வித்துவான் குடும்பங் களும் குடியமர்ந்துள்ளனர். சைவச் சான் றோர்கள் ஆலயச்சூழலில் வாழ்கின்றனர். மேற்கே மகாவித்துவான் வீரமணிஐயா வின் இருக்கையும், ஸ்ரீபரராசசேகரப்பிள் ளையார் அற நெறிப் பாடசாலையும், வடக்கே இந்துக் கல்லூரியும், கிழக்கே பொதுநூலகமும் அமைந்துள்ளது. அந்நிய ரின் ஆதிக்கத்தின் கொடிய தாக்குதலுக்கு எதிர்நின்றும் போராடியும், சைவத்தைக் காத்துநின்ற ஊர் இணுவையம்பதி என்ற பெருமைக்குரியது. இன்று நாற்புறமும் கோபுரங்கள் எழுந்து நான்மாடக்கூடலா கச் செழுங்கலை நியமமாக ஆலயம் மிளிர்வதற்கு வழிகாட்டியாக இருந்தவர் கள் பிரம்மஸ்ரீ நடராசக்குருக்களும், வித்து வான் அம்பிகைபாகப் புலவருமாவார். உண்ணும் போது ஒருகைப்பிடி
அந்நியர் ஆதிக்கத்தால் பழுதடைந் தும், ஏழ்மை நிலையிலும் ஆலயம் காணப் பட்டது. நாளாந்த பூசை வழிபாடுகளுக்கே முடியாத ஒரு நிலை காணப்பட்டது. இந்த நிலையை மாற்றி அமைக்க ஆலோசனை வழங்கி வழிகாட்டியவர்களே. நடராச ஐய ரும் அம்பிகைபாகப் புலவருமாவார். பிடி யரிசி முறையை அறிமுகம் செய்தனர். “யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி” என்ற திருமூலர் வாக்கைக் கடைப்பிடித்துச் சமய வாழ்வு வாழ்ந்தனர். எமது ஊரவர்கள். பிடியரிசித் தர்மம் ஒவ் வொருவரையும் சிவப்பணியில் சேர்த்தது. ஒவ்வொரு குடிமக்களும் இவ்வாலயத் திருப்பணியில் பங்குடையவர் ஆயினர். குடும்பப் பெண்கள் நாளார்ந்தம் சமய

Page 12
லுக்கு எடுக்கும் அரிசியில் ஒருபிடியை இது பிள்ளையாருக்கு என்று ஒரு பாத்திரத்தில் இட்டு வைப்பர். வாராவாரம் இதற்கென நியமிக்கப்பட்ட தொண்டர்களால் இப்பிடி யரிசி சேர்க்கப்பட்டு (தலைச்சுமையில்) விற்ற பணத்தைக் கொண்டு ஆலய நாளாந்த நைமித்தியபூசைகளும், திருப் பணிகளும் நடைபெற்றன. இப்புண்ணிய செயலைச் செய்தவர்கள் ஆறுமுகம் குழந் தையப்பு, திருநாவுக்கரசு, பொன்னுத்துரை என்போர் குறிப்பிடத்தக்கவர்கள். இதற்கு உறுதுணையாக நின்று உழைத்தவர்க
ளில் வேதவனமும், சுப்பையாவும் ஏனைய . தொண்டர் ளுமாகக் கோயிலின் வடக்குப் புறத்தல் 1:55இல் ஒரு ஐக்கிய பண்டக | சாலை ஒன்றைத் திறந்தனர். இதன் வாட கைப்பணமும் ஆலயத் திருப்பணிக்கு உதவிக்கொண்டே வருகின்றது.
கும்பாபிடேகமும் ஆலயவளர்ச்சியும் 17ஆம் நூற்றாண்டு ஆங்கிலேயர் ஆட் சிக் காலம் ஓரளவு சமயசுதந்திரம் பேணப் பட்ட காலம். சமய மறுமலர்ச்சி பெறப்பட்ட காலமாகும். இக்காலத்தில் மடத்துவாசல் பிள்ளையார் ஸ்ரீபரராசசேகரப்பிள்ளையார் கோயிலாக மாற்றங் காணத் தொடங் க கியது. 1800களில் மடத்துவாசல் சுண் ணாம்புக் கற்களால் முறைப்படி கட்டப் பட்டு கும்பாபிடேகம் நடைபெற்றதாகவும் 6 கொடிஏற்றம், தேர்த்திருவிழா, தீர்த்தத் திருவிழாயாவும் நடைபெற்றதாகவும் அறிய வுண்டு. யாவும் ஆகம விதிப்படி நடை பெற்று வைரவர் பொங்கலும் நடைபெற் | றுள்ளது. இக்காலப்பகுதியில் விநாயகர் பெருங்கதை, புராணப் படிப்பு, சூரன்போர், 1 திருவெம்பாவை, ஐப்பசிவெள்ளி, தைப் பொங்கல், வருடப்பிறப்பு, சிவராத்திரி, நவ ராத்திரி, சதுர்த்தி என்பன விசேட தினங்க ளாகக் கொண்டாடப்பட்டன. இந்த வகை யில் 1939 இற்கு முன்னும் 1939 இற்குப் பின்னுமாக இருகாலப் பகுதிகளை இவ்வா லய வளர்ச்சியில் கண்டு கொள்ளலாம்.
1800 களில் சுண்ணாம்புக் கட்டடமாக இருந்த கோவில் 1928ஆம் ஆண்டு பாலஸ்
இணுவில் ஒலி
4
1= = = jடி 3 - 4 (H 2 2 |

தாபனம் செய்யப்பட்டு 10 வருடங்களின் பின் 1939 கார்த்திகை மாதம் கும்பாபிடே கம் கண்டது. பத்து ஆண்டுகள் திருப்பணி வேலைகள் நடந்தன. இத்தனை வருட கால தாமதத்திற்கு காரணம் நிதிப்பற்றாக் தறையே. மக்களில் பெரும்பாலானோர் விவசாயிகள், சுருட்டுத் தொழில் செய்பவர் கள். ஆயினும் ஊர்த்தொண்டர்களின் பகீர தப் பிரயத்தனத்தால் கோயில் வளர்ந்தது. ஒவ்வொரு சுருட்டுத்தொழிலாளியும் தாங் கள் சுருட்டும் சுருட்டுக்களில் தினமும் ஒரு கட்டுச் சுருட்டை இது பிள்ளையாருக்கு என ஒதுக்குவர். ஒருகட்டில் 10 சுருட்டுகள் இருக்கும். இருபத்தைந்துக்கு மேற்பட்டோர் சுருட்டும் பல தொழிற்சாலைகள் இணு வில் கிராமத்தில் இருந்தன. தினமும்சேர்க் கப்படும் சுருட்டுக்களில் ஒதுக்கப்பட்ட சுருட்டுக்கள் பிள்ளையாருக்குப் பணமாக மாதாமாதம் கொடுக்கப்பட்டது. இதுமட்டு மல்ல விவாசாயிகளின் விளை பொருள் களில் தலைத் தெரிவாக எம்பெருமான் விநாயகருக்கு ஒதுக்கப்பட்ட பணம் திருப் பணிக்குச் செலுத்தப்பட்டது.
மக்கள் மனம் போல வெள்ளைக் கற்கள் பொழிந்து கற்கோவிலாகக்கட்டும் திருப்பணி தொடங்கியது. கீரிமலைக்கு மாட்டு வண்டியில் சென்று கற்கள் கொண்டுவந்து பொழிந்து கட்டினார்கள். கற்கள் ஒவ்வொன்றிலும் எம்முன்னோர் வியர்வை படிந்திருக்கும். திருப்பணி மெல்ல மெல்ல உயர்ந்தது. கர்ப்பக்கிரு கம், அர்த்தமண்டபம், மகா மண்டபம் வேலைகள் பூர்த்தியடைந்த நிலையில் 939 கார்த்திகை மாதம் எம் பெருமானுக்கு கும்பாபிடேகம் நடைபெற்றது. ஊர் சிறந் கால் கோயில் சிறக்கும் ஒற்றுமையும் அர்ப் கணிப்பும் உள்ள தொண்டர்கள் அரும் பாடுபட்டனர். மீதி மண்டப வேலைகள் நிறைவேறி 1961, 1972 ஆகிய ஆண்டுகளில் தம்பாபிடேகங்கள் நடந்தேறின. 1984 இல் இராச கோபுரத்துடனான கும்பாபிடேகம் வெகுசிறப்பாக நடைபெற்றது. மீண்டும் 1997 இல் நடை பெற்ற கும்பாபிடேகம்

Page 13
வெகுசிறப்பாக நடைபெற்றது. மீண்டும் 1997 இல் நடை பெற்ற கும்பாபிடேகத்தைத் தொடர்ந்து 2007தெற்கு வாசல் கோபுரகும்பா பிடேகமும் 2009இல் வடக்கு மேற்கு வாசல் கோபுரகும்பாபிடேகமும் நடைபெற்றது.
இவ்வாலயம் கருவறை தொடக்கம் சகல மண்டபங்களையும் உள்ளடக்கியதா கவும் யாகசாலை, பாகசாலை, வாகன சாலை, மணி மண்டம், மணிக்கூட்டுவைர வர்,தீர்த்த மண்டபங்களைஉடையதாக வும், மூலமூர்த்தி, எழுந்தருளி மூர்த்தி, பஞ்சமுகவிநாயகர், நடராஜர், மகாலட் சுமி, முத்துகுமாரசுவாமி, சந்தானகோபா லர், துர்க்கை, சதுர்முக விநாயகர், சண் டேசுரர், தெட்சணாமூர்த்தி, பாலகணபதி, பாலமுருகன், அம்பாள், சிவன். 63 நாயன் மார்கள் உருவச் சிலை, சூரியன், சந்திரன், நவக்கிரகம், நாகதம்பிரான், எனப் பல தெய்வங்களை உள்ளடக்கியதாகவும் கலி யாண மண்டபம், மூன்றுமாடி மணி மண் டபம் என்பவற்றையும் கொண்டு விளங்கு கின்றது. இவ்வாலய திருப்பணிப்பணி களை இவ்வூர் வர்த்தகப் பெருமக்களும் ஊர்த் தொண்டர்களும், இளைஞர்கூட்டமும் நிறை வேற்றி வருகின்றனர். தெய்வங்கள் மீது திருவூஞ்சல், திருப்பள்ளி எழுச்சி, பக் திப்பாடல்களும் அடியார்கள்பாடியுள்ளனர்.
ஆலயப் பூசைகளை குருபரம்பரையாக வந்த அந்தணப் பெருமக்கள் செய்துவரு கின்றனர். தற்போது சிவஸ்ரீ சோமாஸ்கந் தக் குருக்களும் அவரது மகன் சிவஸ்ரீ அரவிந்தக் குருக்களும் அர்ப்பணிப்போடு ஆகமவிதிப்படி பூசை விழாக்களை நடத்தி வருகின்றனர். நித்தியாக்கிஸி கோமம், விசேட அபிடேகங்கள் நடைபெறுகின்றன.
ஆலய வீதி சுத்தம். சுவாமி காவுதல் கழுவுதல், கூட்டல் முதலிய தொண்டு களை இவ்வூர் இளைஞர்கள் பக்தி சிரத் தையோடு செய்து வருகின்றனர். எம்பெரு மான் ஸ்ரீபரராசசேகரப் பிள்ளையார் எல் லோருக்கும் அருள் பாலிப்பாராக.
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
இணுவில் ஒலி

சிந்தனை
அறிவின் இருப்பு என்ற தளத்திலும். வாழ்க்கை அனுபவப்பரப்பிலும் இருந்து மேலெ ழுந்து சிந்தனை இயக்கப்படுகின்றது. அறிவும் இருப்பும் சிந்தனைக்குரிய வடிவத்தைக் கொடுக் கின்றன. மனித வளர்ச்சியூடே சிந்தித்தலின் வளர்ச்சியும் முன்னெடுக்கப்படுகின்றது.
வாசிப்பினால் சிந்தனை வளமாக்கப்படு கின்றது. வாசிப்பிலும் பல பிரிவுகள் காணப்படு கின்றன. மேலோட்டமான வாசிப்பு, ஆழ்ந்த வாசிப்பு, திறனாய்வு வாசிப்பு என்ற வகைகள் உண்டு. வாசிப்பின் வகையுடன் வாசிக்கப்படும். பொருளின் கனதியும் சிந்தனையிலே செல் வாக்குச் செலுத்துகின்றது. முன்னர் காணாத அறிகைவெளியை நோக்கி வாசித்தல் அழைத் துச் செல்கின்றது.
எழுதுதல் சிந்தித்தலின் தொகுப்பாக அமை கின்றது. வாசித்தல், பேசுதல், கேட்டல் அனைத் தும் ஒன்றுடன் ஒன்றிணைந்து மொழிச் செயல் முறையாகவும் சிந்தனை இயக்கச் செயல்முறை யாகவும் அமைகின்றன. பிரச்சினையை அடிப் படையாகக் கொண்டு பேச்சு மேலெழுதலால், சிந்தித்தலையும் பேசுதலையும் வேறுபிரிக்க முடியாதுள்ளது. பேசும் பொழுதும் எழுதும் பொழுதும் இடம்பெறும் வழுக்கள் சிந்திப்பதற்கு மேலும் தூண்டுகின்றன.
சிந்தனை உருவாக்கத்திலே பேச்சும் சிறப் பார்ந்த இடத்தைப் பெற்று நிற்கின்றது.
அறிகை ஆக்கத்திலும் சிந்தனை இயக்கத் திலும் கேட்டல் சிறப்பார்ந்த இடத்தைப் பெறு கின்றது. கவனக் குவிப்புடன் இணைந்த கேட்டல் நினைவுப் பதிவுகளுக்குச் சென்று சிந்தனை உருவாக்கத்துக்குரிய வளக்குவிப்பாக மாறும். புதிய விடயங்களும் புதிய சொற்களஞ்சியங் களும் சிந்தனையை வளர்ப்பதற்கு உந்துசக்தி யாக இருக்கும். மாற்றுக் கருத்துக்களும் எதிர்க் கருத்துக்களும் சிந்தனை எழுச்சிக்குத் துணை யாக இருக்கும்.
மனிதர் உறங்கும் பொழுதும் மூளை | தொழிற்பட்ட வண்ணமிருக்கும் அந்நிலையில் ஒவ்வொருவரதும் அனுபவ இருப்புக்குமுரிய "உறக்க நிலைச் சிந்தனை" தொழிற்பாடு கொள்
ளும்.

Page 14
ბოგოტ
திசை மாறும் புத்திரர்கள்
(இரா.உதயணன்) இலண்டன் நேரப்படி காலை ஒன்பது ! மணி.
இரவு வேலை முடித்து வந்தவர்கள் ச அயர்ந்து தூங்கும் நேரம். இரவிரவாக ரி.வி. பார்த்தவர்களும் அயர்ந்து தூங்கும் நேரம்தான்.
பெற்றோர்கள் ஏஜென்சிக்கு பணம் கட்டி பிள்ளைகள் தப்பிப் பிழைத்துப் போய் நன்றாக வாழட்டும் என்று வெளி நாடு களுக்கு அனுப்பிவிட.....
ஐயகோ... ஐயகோ... வெளிநாடுகளுக்கு குச் சென்ற ஒருசில இளைஞர்கள் செய் ப யும் அட்டகாசங்கள்தான் எத்தனை ....
இலண்டனிலும் இப்படிப் பல அட்ட காசங்கள்.....
சிவநேசன் மாஸ்டர் முன் கதவில் பொருத்தப்பட்டிருந்த கார்லிங் பெல்லை அழுத்தினார்.
ஒருவரும் கதவைத் திறப்பதாகத் தெரிய வில்லை.
மீண்டும் ஒருமுறை பெல்லை அழுத் தினார்
“யாரடா .....? இந்த நேரத்தில” மேல் மாடியிலிருந்து சொல்லிக்கொண்டே ஒரு
இணுவில் ஒலி

வவுனியூர் இரா.உதயணனின் 'மாறு ட்ட சூழலில் வேறுபட்ட மனிதர்கள்' என்ற சிறுகதைத் தொகுப்பு நூலுருப்பெற்றுள்
ாது.
இரா.உதயணனின் சிறுகதைகளை வாசித்தபோது நான் பலவித உணர்வுகளுக் தள் தள்ளப்பட்டேன். " அணுவைத்துளைத்து
ழ்கடலைப் புகுத்தி குறுகத் தறித்த குறும் டங்கள்” என்று நான் கூறுவதை சிறுகதை களை வாசித்த பின் நீங்கள் ஏற்றுக்கொள்
பீர்கள்,
- இரா.உதயணனின் சிறுகதைகள் தமிழ்ச் சிறுகதை உலகிற்கு ஒரு புதிய வடிவத்தை பழங்கும் என்பது எனது நம்பிக்கை.
-அருணா செல்லத்துரை
இளைஞன் வந்து கதவைத் திறந்தான்.
“தம்பி சுதாகர் இவன் நிவேதன் இருக் கிறனோ” சிவநேசன் மாஸ்டர் கேட்க.
உள்ளே வாங்கோ சேர் .... என்று கதவை முழுதாகத் திறந்தான் சுதாகர்.
வெளியே காற்றோடு அடுத்து வந்த கடும் குளிர் சுதாகர் முகத்தையும் சிவ நேசன் மாஸ்டர் முகத்தையும் தழுவிப் போயிற்று.
“முன் அறையில இருங்கோ சேர். அவனைக் கூப்பிடுறன்” என்றவன் மேல் மாடிக்குப் படியேறிச் சென்றான். )
சிவநேசன் மாஸ்டர் அடிக்கடி நிவே தனைப் பார்க்க இங்கே வருவதுண்டு. ஆனால் ஆறு மாதங்களாக நிவேதன் வீட் இப் பக்கம் வரவில்லை.
இலண்டனுக்கு வந்து ஐந்து வருடங் களாகிவிட்ட போதிலும் இன்னமும் சுறு கறுப்பாகத்தான் இயங்கினார் சிவநேசன் மாஸ்டர்,
ஒரு சுப்பர் மார்க்கட்டிலபொருள்களுக்கு விலை லேபல் ஓட்டும் வேலைதான் அவ நக்கு. மாலை நான்கு மணியிலிருந்து பதி னொரு மணிவரை வேலை செய்வார்.
-11

Page 15
மகள், மருமகன், பேரப்பிள்ளைகளு டன் வாழ்ந்து வந்தார்.
அரைத் தூக்கத்தில் நிவேதன் படி களில் இறங்கிக் கீழே வந்தான்.
என்ன தம்பி நித்திரையால எழுப்பி விட்டேனோ ...?” மாஸ்டர் கேட்க.
“இல்லை சேர் இரவு படுக்க பிந்திப் போச்சு அதுதான் ....” நிவேதன் இழுத் தான்.
சிவநேசன் மாஸ்டர் ஊரில நிவே தனுக்கு பத்தாம் வகுப்பில விஞ்ஞானம் படிப்பித்தவர்.
நிவேதனுக்கும் மாஸ்டர் மேல் ஒரு மதிப்பு இருந்தது.
"தம்பி கனநாட்களாக இந்தப் பக்கம் வரேல்ல கிட்டடியில உன்ர அப்பா வோட கதைச்சனான் உன்னை ஒருக்கா போய் பார்க்கச் சொன்னவர்.*
“அப்படியா சேர்” நிவேதன் இழுத்தான். நிவேதனின் தந்தையாரும் ஒரு ஆசி ரியர்.
நீண்ட காலமாக ஒரு பெரிய கல்லூரி யில் கணித ஆசிரியராகப் பணி புரிந்து அண்மையில்தான் ஓய்வுபெற்றவர்.
கிட்டத்தட்ட சிவநேசன் மாஸ்டருக்கும் நிவேதனின் அப்பாவுக்கும்ஒரே வயதுதான்.
“தம்பி நீ நல்ல பொறுப்பா நடக்கிறதா உன்ர அப்பா சொன்னவர். ஆனால் கிட் டத்தட்ட ஆறுமாதங்களாக நீ ரெலிபோன் கூட பண்ணவில்லையாம். ஆனால் காசு ஒழுங்காக வந்து சேருதாம்”
“அப்படியா சேர் அப்பா சொன்னவர். கேட்கச் சந்தோஷமாக இருக்கு.”
“அப்பா அப்படித்தன் சொன்னவர். ஆனால் எனக்குதான் என்ன சொல்லிற தென்று தெரியேல்ல”
“என்ன சேர் சொல்ல வாறியள்” " வேற என்ன ..... என்னட்ட படிச்ச மாணவன், அதுவும் ஒரு ஆசிரியரின்ட மகன்...” சிவநேசன் மாஸ்டர் இழுத்தார். நிவேதன் தலையைக் குனிந்து இணுவில் ஒலி

கொண்டான்.
“நான் சொல்ல வாறது உனக்குத் தெரி யுதே..... அங்க ஊரில ரெண்டு தங்கச்சி மார் உன்னை நம்பியிருக்க இங்க நீ...”
நிவேதன் சற்றுப் பயத்துடன் சிவ நேசன் மாஸ்டரை நிமிர்ந்து பார்த்தான்.
“உன்ர அப்பருக்கு நீ செய்யிற திருகு தாளங்கள் ஒன்றும் தெரியாது. தெரிந் திருந்தால் அந்த மனுசன் தூக்குப் போட்டு தொங்கியிருக்கும்.”
“சேர்”... நிவேதன் இழுத்தான். “என்ன தம்பி காலில சலங்கை கட்டி விட்டிருக்கிறார்களாமே?”
"என்ன சேர் சொல்லுறியள்” | "உன்ர நண்பர்கள் சொன்ன விஷ யத்தைத்தான் சொல்லிறன்”
“பின்னேரம் ஆறு மணிக்குப் பிறகு நீ வீட்டை விட்டு வெளிக்கிட முடியா தாமே? வெளிக்கிட்டால் உடன் பொலிஸ் உன் னைத் தேடி வருவாங்களாமே. நீ எங்கே போனாலும் அவங்களுக்குத்தெரியுமாமே?”
நிவேதன் ஆச்சரியமாக சிவநேசன் மாஸ்டரைப் பார்த்தான்.
“தம்பி இப்படியான விஷயங்கள் மறைக்க முடியாது. ஊர் வாயை மூட முடியுமே உன்ர அப்பா, அம்மா, தங்கச்சிமாருக்கு இந்த விஷயம் தெரியாது. தெரிஞ்சா அவ் வளவுதான்.”
“தம்பி உன்ர காலில் பொலிஸ் டாக் (POLICE ELECTRONIC TAG) போட்டிருக் கிறதா சொல்லுறாங்கள். இப்பதான் உனக்கு இருபத்தியாறு வயசு. இந்த வயசில இப்பிடியாக குறுக்குப் புத்தி உனக்குத் தேவையே” .,
“இல்ல சேர்.... நான் சொல்ல வாறது சேர்”
“எல்லாம் எனக்குத்தெரியும் தம்பி இந்த நாட்டுக்கு வந்த உனக்கு முன்னுக்கு வர எத்தனையோ சந்தர்ப்பங்கள் இருந்தது. எல்லாத்தையும் கெடுத்துப் போட்டாய்” என்று சொல்லி சிவநேசன் மாஸ்டர் நிவே
- 12

Page 16
ே ப ) F ச தி பர் - 7
5 7
தனைப் பார்த்தார்.
"உன்ர அப்பா, அம்மா உன்னை நம்பி இங்க அனுப்பிவிட நீ செய்த வேலையைப் பாத்தியே, ஊரில எவ்வளவு மரியாதையாக உன்ர அப்பா, அம்மா, தங்கச்சிமார் வாழு கினம்.”
“நீ இங்க இப்படி தறுதலைகள் செய்யிற ஒரு வேலையை செய்திட்டு, ஒன்றுமே நடக்காததுபோல் விடிந்த பிறகும் நித்திரை கொள்ளுறாய் எனக்கு கோபம் கோபமாக ! வருது. இந்த வயசிலேயும் நான் உழைத்து | சம்பாதிக்கிறன். ஆனால் நீ.....
நாலு மாதங்கள் சிறையில இருந்திட்டு போனகிழமைதான் வெளிய வந்தநீ என்று எனக்குத் தெரியும்.'
யாரடா உனக்கு இந்தக் கள்ளக் கிரடிட் கார்ட் (Credit card) அடிக்க சொல்லித் தந் தது. கடைசியா இப்ப என்ன நடந்தது பார்த்தியே.”
“சேர் ஏதோ தெரியாமல் செய்திட் டன்” | “என்னடா தம்பி... எனக்குச் சொல்லு றாய். இது என்ன தெரியாமல் செய்யிற வேலையே. அதுவும் கள்ள கிரடிட் கார்ட் அடிக்கிறது
எத்தனை பேர் நீ வேலை செய்த பெற் றோல் ஸ்டேசனுக்குப் பெற்றோல் அடிக்க வந்திருப்பினம். அவங்களில் தேர்ந்தெடுத்து அவங்கட கிரடிட் கார்ட் நம்பரை வேற மெசினில பதிவுசெய்து அதை வைத்து கிரடிட் கார்ட் அடிச்சிருக்கிறீங்கள் என் | றால் உங்களை என்ன செய்யிறது. எத் தனை பேர்களையாடா ஏமாத்தி இருக்கி றீங்கள்.
இந்த வேலைக்குச் செலவழித்த நேரத் ப தையும் மூளையும் படிப்பில் செலவழித்தி ருந்தால் இண்டைக்கு உன்ர நிலை வேறு மாதிரி இருந்திருக்கும். சமூகத்தில ஒரு அந்தஸ்து கெளரவம் எல்லாம் இருந்தி ருக்கும்.
இப்ப எல்லாவற்றையும் தொலைத்துப் போட்டு கிரிமினலாக இருக்கிறாய்”
இணுவில் ஒலி
7)

"சேர்....” நிவேதன் கலங்கிய கண்களு உன் சிவநேசன் மாஸ்டரைப் பார்த்தான்.
“மடையா இப்ப உன்ர வாழ்க்கையைத் தொலைச்சுப் போட்டு நிக்கிறியே. குறுக்கு வழியில் சம்பாதிக்கவேணும் என்ற யோசனை உனக்கு வந்ததே பெரிய பிழை. என்ர மாணவனாக ஊரில நீ படிக்கேக்க எவ்வளவு கெட்டிக்காரனாக இருந்தாய். இங்க வந்து வேலையும் செய்வதை நிற் பாட்டி, அரசாங்கம் தாற படிக்காசையும் எடுத்துக் கொண்டு தறுதலைகள் செய்யிற ஏமாற்று வேலையும் செய்து கொண்டு இவ்வளவு நாட்களும் இருந்திருக்கிறாய் என்று நினைக்க எனக்குத் தம்பி அரு வருப்பாக இருக்கு”
"சேர் என்னை மன்னிச்சிடுங்கோ” “ இப்படியாக தப்பான விஷயங்கள் செய்ய முதல் யோசிச்சு இருக்க வேணும்.
என்னட்ட மன்னிப்புக் கேட்டு என்னடா பலன். காலம் கடந்து போச்சு. உன்ர அப்பா, அம்மா உன்னை இங்கு அனுப்பி வைச்ச நோக்கத்தையே நீ மாற்றிப் போட் டாய் இவ்வளவு காலமும் கள்ள கிரடிட் கார்ட் அடிச்சு மற்றவர்களை ஏமாற்றித்த என் நீ பணம் அனுப்பிவைச்சனீ எண்டு கேள்விப்பட்டால் உன்ர கொப்பர் கொம்மா வின்ர நிலையை யோசிச்சுப்பார்.”
"சேர் என்னை மன்னிச்சிடுங்கோ” "நீ மன்னிப்புக் கேட்க வேண்டியது என்னட்ட இல்ல. நீ கிரடிட் காட்டில காசு களவெடுத்த கஸ்டமேர்ஸ் (Customers) கிட் உத்தான்.
உன்னை மாதிரி இங்க இன்னும் நிறை பப் பெடியள் உலாவுறாங்கள். எத்தனை விதமாகக் களவு எடுக்கிறாங்கள்.
பதினெட்டு கரட் பவுணை இருபத்தி எண்டு கரட் எண்டு விக்கிறது
இப்படி எத்தனையோ விதமாகக் களவு செய்கிறார்கள். )
இங்க வெள்ளைக்காரனுக்கு தெரியாத புதுப்புது நேர்மையற்ற விஷயங்கள் எங்கட
- 13

Page 17
பெடியள் திறமாகச்செய்யிறாங்கள். அதில் நீயும் ஒருவன் தம்பி. வெள்ளைக்காரன்கள் இப்ப உங்களை மாதிரி ஆட்களைப் பார்த்து நிறையப் படிக்கிறன்கள். (உன்ர அப்பா அம்மாவுக்கு உன்ர களவு ஒருநாள் தெரியத்தான் போகுது. அப்ப என்ன நடக்கும் என்று தெரியாது.
இனியாவது ஒரு நல்ல இளைஞனாக திருந்தி வாழப் பாரடா தம்பி. நடந்து முடிந் தவைகள் நடந்து முடிந்தவைகள்தான். - இனி நடக்கப் போகும் விடயங்கள் நல்லதாக நடக்கவேண்டும் என்றால் அது வும் உன் கைகளில்தான் இருக்கு.”
(அரவியல் மனித மூளையின் 6
உளரீதியாகவோ அல்லது உடல் ரீதி யாகவோ துன்பப்படுபவர்களைக் கண்டால் ஒருசில குழந்தைகள் அவர்கள் மேல் அனு தாபம் காட்டுகிறார்கள். ஆனால் பல குழந் தைகள் அப்படி இருப்பதில்லை. துயரத்தி லுள்ளவர்களைக் காணும்போது பெரும் பாலான குழந்தைகளின் மூளையின் சில பகுதிகளில் குறைந்த செயற்பாடுகளே இடம்பெறுகின்றன. இனங்காணப்பட்ட சிறுவர்களிடத்து வக்கிரத்தன்மை, கொடூர மனப்பாங்கு, கோபம், எரிச்சல் உள்ளான சமூக விரோதப் பண்புகள் மேலோங்கிக் காணப்பட்டமை அவதானிக்கப்பட்டுள்ளது.
துன்பத்திலுள்ளவர்களைக் காணும் சந்தர்ப்பத்தில் அவர்கள் மேல் சில குழந் தைகளுக்கு இரக்கம் ஏற்படாமைக்குரிய காரணம், இக்குழந்தைகளின் மூளை ஒரு இயல்பற்ற நிலையிலே இருப்பதாகுமென லண்டன் பல்கலைக்கழகத்தின் உளவி யல்துறை பேராசிரியர் எஸ்.வின்டிங் என்ப வர் தெரிவித்துள்ளார்.
சிறுபராயத்தில் ஒருவருடைய மூளையை ஸ்கான் (Scan) செய்து பார்ப்பதன் மூலம்
இணுவில் ஒலி

| "சேர் இந்தாங்கோ கோப்பி போட்டுக் கொண்டு வந்தனான்.” சுதாகர் கோப்பியை நீட்ட, இந்தக் குளிருக்கு கோப்பி நல்லாத் தான் இருக்கும் என்று கோப்பியை வாங்கி
அருந்தினார் சிவநேசன் மாஸ்டர்.
"தம்பி இங்க பாடரா நிவேதன். இவன் சுதாகரைப் பார். அவனும் உன்னோட ஒரே வீட்டில்தான் இருக்கிறன். அவனைப் பார்த்தாவது ஒரு நல்ல மனிதனாக பொய் மையற்றவனாக வாழப்பழகு” என்று சொல்லிவிட்டு முன் கதவைத் திறந்து கொண்டு வெளியே நடந்தார் சிவநேசன் மாஸ்டர்.
விசித்திரத் தன்மை
அவரின் மனப் பாங்கை (Psycho paths) அறிந்து கொள்ள முயு மென லண்டன் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர் கள் விவரித்துள் ளனர். அதாவது சிறுவர்களின் மூளையின் மூன்று முக்கிய பகுதிகளின் செயற்பாடு குறைவடைவதாக இனங்காணப்பட்டுள்ளது. முன்புற இன்சூலா (Antherior Insula), முன் புற சிங்குலேட் புறணி (Antherior Cingulate Cortex) மற்றும் மூளையின் கீழ்முன் மடிப்பு (Inferior Frontal Gyrus) ஆகிய மூன்று பகுதி களிலேயே செயற்பாடு குறைவடைவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் சிறுவர்கள் சமூகவிரோத நடத்தைப் பிரச்சினைகளிலிருந்து சிறிது மீள்வதற்கு அவர்களுடைய குடும்பம் மற் றும் பரந்துபட்ட சூழல் என்பன அவசியமா கின்றது எனவும் பேராசிரியர் எஸ்.வின்டிங் சுட்டிக்காட்டியுள்ளார்.

Page 18
கட்டுரை அமரர் உயர்திரு கந்தையா நடராசா
மேன்மைகொள் சைவமும், செந்தமிழ் மொழியாம் தமிழும் செம்மைபெறப் போற்றி வளர்த்த திருவூர் இணுவில். அந்த ஊரின் கண் தோன்றிய பெரியார்கள் வரிசையிலே மதிக்கப்பட்ட கல்விமானாக. சமூகத் தொண்டனாக ஆசிரியர் நடராசா அவர் கள் திகழ்ந்தார்கள். தாம் எடுத்துக்கொண்ட எந்தச் செயற்பாட்டிலும் முன்னின்று உழைத்த பெருந்தகையாக அவர் இருந் துள்ளார். அவருடைய மனிதநேயப் பண்பு கள் அவரை உயர்ந்த நிலையிலேயே வைத்திருந்தது. பொதுவிடயங்களில் அவர் காட்டிய அக்கறை, பெரியோர்க ளுக்குக் கொடுக்கும் கெளரவம், எல்லோ ருக்கும் உதவி செய்யும் மனப்பான்மை, நல்மாணாக்கரை உருவாக்குவதில் இருந்த உத்வேகம், சமுதாய நலம் கருதிய செயற் பாடுகள் போன்றவற்றால் அன்னார் தனித் துவம்மிக்க ஒருவராக வாழ்ந்து காட்டியுள்
ளார்,
இணுவில் மேற்கை வதிவிடமாகக் கொண்ட உயர்திரு. கந்தையா - சிதம்பரம் தம்பதியினரின் மகனாக 1922 ஆம் ஆண்டு பிறந்தார். அன்னாரது உடன்பிறப்புக்களாக அம்பலவாணர், குமாரவேலு, சின்னப் பிள்ளை, சந்திரசேகரம்பிள்ளை, அருளம் பலம், செல்லையா, இராமுப்பிள்ளை, மாணிக்கர் ஆகியோர் இருந்துள்ளனர்.
இணுவிலைச் சேர்ந்த அப்பாக்குட்டி அவர்களால் தோற்றுவிக்கப்பெற்ற பாட சாலையில் அதாவது இணுவில் சைவமகா ஜன வித்தியாலயத்தில் தமது கல்வியைக் கற்றார். கல்விப் பொதுத் தராதரப் பத்திரப் பரீட்சையில் சித்திபெற்ற இவர், ஆசிரியர் தொழிலை விரும்பிபூண்டுலோயாவில் தமது
இணுவில் ஒலி

அவர்கள்
பணியை ஆரம்பித்தார். 11.06.1952 தொடக் கம் காரைநகர் வியாவில் சைவ பரிபாலன வித்தியாசாலையில் ஆசிரியராகப் பணி யாற்றலானார்.
இணுவில் கிழக்கைச் சேர்ந்த உடை யார் சிதரம்பரநாதரின் மகன் மலாயன் பென்சனியர் மயில்வாகனம் - நாகம்மா தம்பதியினரின் அன்பு மகள் இரத்தின சவுந்தரியை வாழ்க்கைத் துணையாக ஏற்று இல்லற வாழ்வைச் சிறப்புடன் நடத் தினார்.
மனைவி வழியாக ஆசிரியர் கந்தசாமி அவர்கள் மைத்துனர் ஆனார். இல்லற வாழ்வின் பெறுபேறாக இரத்தினசவுந்தரி அம்மையார் சிவகாமசுந்தரியைப் பெற்றெ டுத்தார். மனைவியின் மறைவுத் துயருடன் மகளை வளர்ப்பதில் தமது பெரும் பங் களிப்பை நல்கினார். இணுவில் மேற்கைச் சேர்ந்த சின்னையா - சிதம்பரம் தம்பதி யரின் இரண்டாவது மகள் கணேஸ்வரியை மறுமணம் புரிந்துகொண்டார். அதன் வழியாக இராசலட்சுமிமைத்துனியாகவும் தியாகராசா, பஞ்சலிங்கம், கணேசலிங் கம், சிதரம்பரநாதன் ஆகியோர் மைத்து னர்களாகவும் வரப்பெற்றனர். )
மாமனார் சின்னையா அவர்கள் பிள் ளைகள் சிறுவர்களாக இருக்கும் போதே காலமாகிவிட்டார். குடும்பத்தில் ஒருவராக இணைந்து கொண்ட அன்னார் அக்குடும் பத்தின் உயர்வுக்காக உழைத்தார்.
28.02.1963 வரை காரைநகர் வியாவில் சைவபரிபாலன வித்தியாசாலையில் ஆசி ரியராகக் கடமையாற்றிய பின் 01.03.1963 தொடக்கம் தாம் கல்வி பயின்ற இணுவில்
- 15

Page 19
சைவமகாஜன வித்தியாசாலைக்கு மாற்ற லாகிவந்து தமது ஊர்ப்பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கும் பாடசாலையின் வளர்ச்சிக்கும் அயராது உழைத்தார். குறு கிய கால சேலைக்குப் பின் பூண்டு லோயா தமிழ் மகாவித்தியாலயத்தில் ஆசிரியரா கக் கடமையேற்று 31.01.1971 வரை அங்கு கடமையாற்றினார். அங்கிருந்து மாற்றம் பெற்று மீண்டும் யாழ்ப் பாணம் வந்த இவர் வேலணை சைவப்பிரகாச வித்தியாசாலை யில் தமது ஆசிரியப் பணியைத் தொடர்ந் தார். முப்பது வருட ஆசிரிய பணியை பூர ணத்துமாக நிறைவு செய்து கொண்ட அன்னார் ஓய்வுபெற்றார். அரசாங்கம் இவ ருக்கு ஓய்வு கொடுத்ததும் தமது பாரம் பரியமான விவசாயத்தில் ஈடுபாடு கொண்டு உழைத்து வந்தார்.
இணுவில் சைவ மகாஜனா வித்தியா சாலையின் முன்னெற்றகரமான செயற் பாட்டுக்கு உறுதுணையாக நின்று தமது உன்னதமான பங்களிப்பை வழங்கி வந் தார். பாடசாலைக்கு முன்பாக உள்ள சிவன்கோயில் நிலத்தில் நெசவு நிலையம் ஒன்றை நிறுவுவதற்கு முன்னின்று உழைத் தார். மேலும் சைவ மகாஜன வித்தியா சாலையின் பொன்விழா1980 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டபோது அவ்விழாவின் சிறப்புக்கும், பொன்விழா மலர் வெளி யீட்டுக்கும் பொறுப்புடன் பணியாற்றினார். பாடசாலையின் வரலாறு உட்பட ஊரில் நடைபெற்ற ஒவ்வெரு சம்பவங்களையும் மனப்பதிவுடன் சொல்லக்கூடிய வல் லமை பெற்றவராக நடமாடும் ஆற்றல் மிக்க நல்லாசானாக வாழ்ந்து காட்டினார். அவரின் ஆற்றலுக்கு இணையாக இன்று எவரைக் காண்போம்.
தமது மகளின் எதிர்கால நல்வாழ்வே தங்களின் நோக்காகக் கொண்டு வாழ்ந்த நடராசா - கணேஸ்வரி தம்பதியினர், 1984 ஆம் ஆண்டு கோண்டாவிலைச் சேர்ந்த திருமகன் குமாரலிங்கத்திற்கு தங்கள் மகளை திருமணம் முடித்துவைத்தனர்.
இணுவில் ஒலி

மகள் குடும்பத்துடன் இணைந்து வாழ்ந்து வரும் காலை 1991 இல் கணேஸ்வரி அம்மையார் இறைவனடி சேர்ந்தார். துணை வியாரை இழந்த நடராசா மாஸ்டர் தமது மகள், மருமகன் மற்றும் பேரப்பிள்ளை களான மயூரன், நிரூஜன், சிவனுகா ஆகி யோருடன் பாசப் பிணைப்புடன் வாழ்ந்து வந்தார்.
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக இணுவில் மேற்கில் உள்ள தங்களது சொந்த வீட்டை விட்டு 1996 இல் கொழும்புக்கு வந்து தமது மகள், மரு மகன், பேரப்பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தார். இணுவில்சைவ மகாஜன வித்தியா சாலை இணுவில் மத்திய கல்லூரியாகத் தரமுயர்த்தப்பட்டு கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதை நன்கு அவதானித்த நடராசா மாஸ்டர் அதன் வளர்ச்சிக்கு பலவகையிலும் பாடுபட்ட பெருமைக்குரியவராவார். இணுவில் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் கூட்டங்களுக்கு வருகை தந்து சிறப்பிப்பதுடன் சங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கான காத்திரமான ஆலோசனைகளை வழங்கி கல்லூரியின் முன்னேற்றமே தமது குறிக் கோள் என்பதை வலியுறுத்துவார்.
அன்னாருடைய பொதுப்பணி, சமயப் பணி என்பன பலராலும் பேசப்பட்டுவந்த முக்கிய பங்களிப்பாகும். உடுவில் கிராம சபை இருந்தபோது 8ஆம் வட்டாரத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக இருந்து இணுவில் கிராமத்தின் முன்னேற்றத் திற்குப் பெரும் பங்காற்றினார். இணுவில் மக்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்கு விக்கும் நோக்குடன் இணுவில் ஆஸ்பத் திரிக்கு அருகாமையில் 'மகாஜனா வாசக சாலையை நிறுவி அதற்கு வேண்டிய உதவிகளையும் செய்துதந்தார். இலங் கைத் தமிழரசுக் கட்சியின் கூட்டங்கள், மாநாடுகளுக்குச் சென்று வந்ததுடன் அக் கட்சியின் வளர்ச்சிக்காகவும் உழைத்தார்.
16

Page 20
இணுவிலிலுள்ள விளையாட்டுச் சங் ( கங்களின் வருடாந்த விளையாட்டுப் போட் | டிகள் நடத்தப் பக்கபலமாக நின்று செயற். பட்டு பல உதவிகளையும் செய்து வந்துள் 6
ளார்,
இணுவில் கிராமத்தில் பல கோயில்கள் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி. எல்லா கோயில்களின் திருவிழாக்களில் பங்குகொண்டு அன்னார் சமய வளர்ச்சிக் 1 காக தமது பங்களிப்பை வழங்கி வந்துள் 4 ளார். இணுவில் மஞ்சத்தடி முருகன்
உண்டி கொடுத்தே உயிர் கொடுத்தே நாவலர் பெருமான் காலத்தில் அதாவது 1874அ - மக்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். விளை நெல்கூடக்
திடமிருந்து பெருமுயற்சியால் விதை நெல் பெற்றுக்
யோகர் சுவாமிகளும் உணவு விடயத்தில் தமி வேண்டுமென்று விரும்பினார். நெல் அரிசி உணவு களை உண்ணவேண்டுமென்றார். அவர் விருப்பப் அமைக்கப்பட்டு அதனை அவர் சீடரான சாந்தசாமி னார். அங்கிருந்தே யாழ்ப்பாணம் சிவதொண்ட பெறப்பட்டன.
இந்நோக்கத்திற்கே சுவாமிகள் திருவடிவேற் 8 வழிகாட்டியதாகக் கூறுவார்கள். அத்துடன் சைவமும் வசதியாக அமைந்தது. அத்துடன் மகாதேவா சுவா வழிவகுக்கப்பட்டது.
இவ்விடத்தில் காஞ்சிப்பொரியார் பால் பிரளாடை சிந்திப்போமாக.
இறைவன் ஒரு தேசமோ அன்றி ஒரு சமுதாயத் களை (ஞானிகளை) அனுப்புவார். அவர்களின் செப்
'இணுவில் ஒலி - இலன 'இணுவில் ஒலி புரட்டாதி - ஐப்பசி 2013 மலராக மலரவுள் ளது. படைப்பாளிகள் தமது .
எமக்கு அனுப்பி வைக்கும்படி
இணுவில் ஒலி

கோயில் தேர்த்திருவிழா இவர்களது பரம் பரைத்திருவிழா. அதைமுன்னின்று நடத்து
வதில் அன்னாரின் பங்கு பெருமைக் தரியது.
பலரும் போற்ற வாழ்ந்த நடராசா அவர் கள் 2012 ஆம் ஆண்டு மாசித் திங்கள் 21ஆம் தாள் இயற்கை எய்தினார். இவருடைய இழப்பு இணுவில் மண்ணுக்குப் பேரிழப் பாகும் அன்னார் இணுவில் மக்களின்மனங் களில் என்று வாழ்ந்து கொண்டிருப்பார்.
- த.சிவசுப்பிரமணியம்
தார் எரே! நம் ஆண்டில் பஞ்சமும் நோயும் ஏற்பட்டபோது கிடைப்பது அரிதாயிற்று. நாவலர் அரசாங்கத் க்கொடுந்தார்.
ழ் மக்கள் சுயதேவையைப் பூர்த்தியடையச் வைக் குறைத்து பழமைபோல சிறு தானியங் படியே மட்டக்களப்பில் விவசாயப் பண்ணை (சோல்பரி பிரபு மகன்) பொறுப்பேற்று நடத்தி ன் நிலையத்தின் தேவைகளுக்கு யாவும்
சுவாமிகளை கிளிநொச்சிக்குப் போகும் படி தமிழும் நன்றாக அங்குள்ளவர்கள் கற்கவும் மிகளின் தொண்டையும் யாவரும் அறியவும்
ன - ரமண மகரிஷியிடம் ஆற்றுப்படுத்தியதை
தின் தேவைக்கு (நலன்) ஏற்ப தனது தூதுவர் பல்யாவும் அவன் ஆணைப்படியே நடக்கும்.
ஆ.இராசரத்தினம்
இலண்டன்
ன்டன் சிறப்பு மலர்
(7ஆவது) இதழ் இலண்டன் சிறப்பு ஆக்கங்களை 30.07.2013 இற்கு முன் வேண்டப்படுகின்றனர். - ஆசிரியர்.

Page 21
கட்டுரை
இசையின் ம
இறைவன் இசை வடிவமானவன். இசை யின் ஒலிக்கோர்வையே இறைவனின் எழிலு ருவமாக அமைந்துள்ளது. எல்லா உயிரி னங்களையும் ஈர்க்கக்கூடிய சக்தி இசைக்கு உண்டு “ ஆயகலைகள் அறுபத்து நான்கு” என்று கூறப்படுகின்றது. வாத்சாயனார் என்பவர் தமது “காமசூத்திரம்” எனும் பகுதி யில் மனிதனை மயக்கும் இன்பக் கலை கள் எனக் கூறுகிறார். மனிதனுடைய நல் வாழ்விற்குத் துணை செய்யும் பல வகை யான தொழில்களையும், நாம் கலைகள் என்று கூறுகிறோம். கலைகளானது மனித உள்ளத்தில் உணர்ச்சியை எழுப்பி இன்பத் தையும் மனநிறைவையும், கற்பனை வளத் தையும் அளிக்கின்றது.
இசையின் மகத்துவத்தை உலகம் மேன்மைப்படுத்துகின்றது. உலகிலுள்ள அனைவரும் இசையை விரும்பிக் கேட்பத னால் இதனை உலகின் ஒரு "பொது மொழி” என்று கூறலாம். இசையினால் உலகள் வில் ஒற்றுமை ஏற்படுகின்றது. இசையைக் கற்பதனால் ஒருவருக்கு அன்பு, அடக்கம், சாந்தி, இன்பம், அறிவு, புத்திக்கூர்மை, கற்பனை, நினைவுத்திறன், நல்லொழுக்கம் முதலியவை எல்லாம் ஏற்படுகின்றன.
இசையானது இயற்கையோடு ஒன்று பட்டுள்ளது. இயற்கை ஒலிகளிலிருந்தே நமது இசைக்குரிய அடிப்படைச்சுரங்கள் எல்லாம் தோன்றியுள்ளன. இசையிலுள்ள ஏழு சுரங்களும் ஏழு விலங்குகள் பறவைக ளிடமிருந்து பெறப்பட்டதாக “ரகுவம்சம்” எனும் நூலில் காளிதாஸர் குறிப்பிடுகிறார். இசையின் இருப்பிடம் இறை என்றும் இறை வனின் இருப்பிடம் இசை என்றும்கூறலாம். நாதம் எனும் ஒலியை உடைய இறைவ னுக்கு “நாதன்” எனும் பெயர் ஏற்பட்டது.
இறைவன் இசை வடிவானவன் என் பதை உணர்த்த நாட்டியத்தின் தெய்வம் நடராஜன் என்று கூறுகிறோம். சிவன் டமருகத்தையும், திருமால் சங்கினையும்,
இணுவில் ஒலி

கத்துவம்
கிருஷ்ணர் புல்லாங்குழலையும், சரஸ்வதி வீணையும், நந்திகேஸ்வரர் மிருதங்கத்தி னையும் இசைக்கும் தெய்வங்களாகச் சிறப்பிக்கப்படுகின்றனர். ஆழ்வார்களும் இறைவனை இசையுடன் போற்றித்துதித்தே இறைவனடி சேர்ந்து மோட்சத்தை அடைந துள்ளனர். நாயன்மார்களும் இறைவனை இசையால் போற்றித் துதித்து வழிபட்டார் கள் என்பதை பல்லவர் கால இலக்கியங் கள் ஊடாக அறியலாம். இராவணன் சாம் கானம் பாடி இறைவனை மகிழ்வித்து தனக்கு வேண்டிய வரங்களைப் பெற்றான் என பழம்பெரும் இலக்கியங்களில் நாம் அறியமுடிகிறது.
இசையினால் நோயைக் குணமாக்க லாம். நோயுற்றவரின் உடல் நலத்திற்கும் வளர்ச்சிக்கும் இன்னிசை பெரிதும் உதவி புரிகின்றது. நோயாளர் இசையைக் கேட்ப தன் மூலம் தம்முடைய நோயின். கொடு மையை மறந்து இன்பமாக இருக்கின்றார் கள். இந்த இசையின்பம் உடல் வளர்ச் சியை ஊட்டுவதற்கும் பயன்படுத்தப்படு கின்றது. வண்டி மாடுகளும், ஏற்றக் காளை களும் கூட “தெம்மாங்கு” இசையைக் கேட்டு மகிழ்ந்த வண்ணம் இடையறாது தம்பணியை மேற்கொள்கின்றன. திரு நாவுக்கரசர் நோய் நீங்க “நவரோச்” என்ற இராகப் பண்ணைப் பாடி வலி நீங்கப் பெற் றார். இசையின் மூலம் மருத்துவம் அளிக் கப்படுகின்றது. இசையினுடைய பரப்பு கடல் போன்றது. அப்பர் சுவாமிகள் இசை யினுடைய சிறப்பினை கூறுமிடத்து "மாசில வீணை” என்று சங்கீதமாகிய இசையிற்கு முதலிடம் தருகிறார். நிரந்தரமான, தெய்வீக மான ஆனந்தத்தை தருவது இசையாகும். இறைவனை அடைவதற் குரிய வழிகளுள் சங்கீதமாகிய இசையும் ஒன்றாகும். என இசை நூல்கள் சிறப்பித்து கூறுவதை அறிய முடிகின்றது.
- திருமதி கோ.திருநிறைச்செல்வி.
- 18

Page 22
குட்டிக்கதை ஆச்சி இல்லா கவலை
3)
து மா
நான் பள்ளிக்குப் போற காலத்தில விடிய எழும்பி மாட் டுக் கொட்டிலுக்குப் போய் மாட்டுச் சாணம் எல்லாத் தையும் வடிவாகக் கூட்டி அள்ளி பெரிய கடகத்தில போட்டுக் கொண்டு தோட்டத் துக்குப் போக வேண்டும்.
“ஏட மேனை கந்தையா” .
ஆச்சி கூப்பிடுகிறா போல .... “என்னணை ஆச்சி”. “இஞ்சை வா வாயைக் கொப்பிளிச்சுப் போட்டு இந்தத் தேத்தண்ணியைக் குடி | மேனை. கொப்பருக்கும் தோட்டத்திலை வேலை செய்கிறவைக்கும் தேத்தண்ணி -
கு போட்டு கேத்திலிலவைச்சிருக்கிறன் எடுத் துக் கொண்டு போமேனை.
தலையிலை கடகத்தைச் சுமந்து கொண்டு தேத்தண்ணிக்கேத்திலை இடது
கையிலை தூக்கிக் கொண்டு, கழுத்து . வலிக்க வலிக்க வீட்டிலிருந்து ஒரு மாதிரி றோட்டுக்கு வந்து ஏறிவிட்டன். ஒழுங்
வா கேலை கல்லுக்குத்த நடந்து வந்து றோட் டுக்கு வந்தது கொஞ்சம் ஆறுதலாக இருந் தது. என்னும் அரைக்கட்டை தூரம் நடந் தால்தான் தோட்டத்துக்குப் போகலாம்.
றோட்டிலை இரட்டை மாட்டு வண்டில்
குப் வரும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்க்கிறன் செல்லையா அம்மான்ரை வண்டில். அவற்றை தோட்டம் எங்கடை தோட்டத் தைத் தாண்டிப் போகவேண்டும்.
எனக்குச் சந்தோஷம். “செல்லையா அம்மான் கடகத்தை பின்னுக்கு வண்டில்ல
இணுவில் ஒலி
அ 3 5ே 6 5)
UIT
து?
வி.
குக
தன்
பெ
வா
வி

வக்கட்டே” - “தம்பி கந்தையா நான் இப்ப தோட்டத் க்குப் போகேல்ல றொட்டியாலடிக்கு சடுகளுக்கு லாடன் கட்டப் போறன்”
“சரி அம்மான் அப்ப நீங்கள் போங்கோ” ஏமாற்றம் ஒருபுறம், கழுத்து வலி ஒரு க்கம் எல்லாத்தையும் பொறுத்துக் காண்டு தோட்டத்துக்கு நடக்கிறன். ட கஷ்டப்பட்டு ஒரு மாதிரி தோட்டத்துக் ப் போய்விட்டன்.
துலா இறைச்சுகளைச்சுப் போன அப்பு ன்னைக் கண்டவுடன் இறைப்பை நிப் எட்டிப் போட்டு எனக்குக் கிட்ட வந்து | “எங்கையடா இவ்வளவு நேரமும் படுத்
க் கிடந்துவிட்டு வாறாய்” கழுத்து வலிக்க, கல்லுக் குத்தி கால் லிக்க கஷ்டப்பட்டு வந்த எனக்கு அப்பு ன் திட்டு வேதனையைக் கொடுத்தாலும் பாறுத்துக்கொண்டு வீட்டுக்கு ஓடி வந்து
ளிச்சுவிட்டு ஆச்சி தந்த பழஞ்சோத்துத் ண்ணியை வாங்கி அவக் அவக்கெண்டு டிச்சுவிட்டு பள்ளிக்கு ஓடுகிறன். பள்ளிக்கு நேரத்துக்கு வரவில்லை பண்டு வாத்தியார் முழங்காலிலை நக்கவிட்டுவிட்டார். முழங்கால் வலிக்க லிக்க அரை மணித்தியாலயம் இருந்து ட்டு வகுப்புப் போகிறேன். இப்படி என் ஆரம்பகாலம் பல சவால்
10

Page 23
களுக்கு முகங்கொடுத்து வந்த போதில் படிக்க வேண்டும் என்ற ஆவல் என் ! தில் குடிகொண்டிருந்தது. வீட்டுச்சூ படிப்பதற்கு வசதியாக அமையாத பே லும் ஏதோ கஷ்டப்பட்டு படிச்சு எஸ்.எஸ் பாஸ் பண்ணிவிட்டன்.
எனக்கு அரசாங்க உத்தியோசி கிடைத்தால் நல்லது என எண்ணினே ஆனால் வாத்தி வேலைதான் கிடைச்சு வாத்தியார் வேலையிலிருந்து தொடர்ந் படித்து பல்கலைக்கழகம் சென்று பட்ட பெற்று வந்து பாடசாலையில் ஆசிரியர் இணைந்து பின்பு அதிபராகி பன்னிரண வருடங்கள் சேவையாற்றிய பின் இலை பாறிவிட்டேன். அப்புவும் ஆச்சியும் எனக் இருபத்தேழு இருபத்தெட்டு வயதா இருக்கும் போது போய்ச் சேந்துவிட்டா கள். முப்பது வயதில சொந்த மச்சான் ( ஆரோக்கியம்
புகைப் பிடித்தால் பைத்தியம் பிடிக்கு பெரிய பிரித்தானியாவில் புகைப் பிடி அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள் ரோயல் மருத்துவக் கல்லூரியும், ரோயல் வக் கல்லூரியும் இணைந்து புகைப் ! பெண்கள் இருபாலாரிடமும் ஆய்வை 6
அந்த ஆய்வில் இங்கிலாந்தில் புகை 30 இலட்சம் பேர் மனநிலை பாதிக்கப்பட்டு பாதிக்கும் வகை யிலான போதைப் பொம் பேர் பல வருடங்களாக மனநோய் பாதி உள்ளவர்களாக இருப்பதும் கண்டறியப்
இங்கிலாந்தில் கடந்த ஐம்பது ஆண் இருமடங்காக அதிகரித்துள்ள நிலைய இங்கிலாந்து நுரையீரல் அறக் கட்டளை ஸ்டிபன் ஸ்பிரோ, சிகரெட் பழக்கம் ஒரு அதிகளவில் சிகரெட் புகைப்பவர்கள் பெறுவதே சிறந்த வழி எனத் தெரிவித்து
இணுவில் ஒலி

48
ம், காறியைக் கரம்பிடிச்சன். மூண்டு பெடிப்
பிள்ளைகள். படிப்பிச்சுவிட்டன். ஒருவன் ல் இங்கிலாந்தில் மற்றவன் கனடாவில மூன்
றாமவன் ஜேர்மனியில. எல்லாரும் கல் யாணம் முடிச்சுகுழந்தை குட்டியளோடை நல்லாயிருக்கினம்.
பத்து வருசத்துக்கு முந்தி மனிசிக்காறி யும் மூத்தமகனிட்டை போனவ அங்கேயே 5. இருந்துவிட்டா. பென்சன் காசை எடுத்து
வயோதிபர் இல்லத்தில் கொடுத்துக் கொண்டு இங்கேயே இருக்கின்றேன்.
இடையிலே வந்த பந்தங்கள் இடையி லேயே என்னைவிட்டுப் போய்விட்டன. அதை எண்ணி நான் ஒருபோதும் கவ லைப்படவில்லை.
என்னைப் பெற்ற ஆச்சி இல்லையே சர் என்ற கவலை மட்டும் தான் என்னை
வாட்டும்.
- இணுவை மைந்தன்
த
க
நமாம் ப்பவர்களை வைத்து வில் பல திடுக்கிடும் மன. இங்கிலாந்தின் 5 மனநிலை மருத்து டிக்கும் ஆண்கள், மற்கொண்டிருந்தன.
பிடிக்கும் பழக்கம் உடைய ஒரு கோடி பேரில் ள்ளார்கள் எனவும் 20 இலட்சம் பேர் மனநலம் ட்களைப் புகைப்பவர்கள் எனவும் 10 இலட்சம் து அதன் மூலம் சிகரெட் பிடிக்கும் பழக்கம் ட்டுள்ளது.)
களில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை ல் இந்த ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அமைப்பின் துணைத் தலைவர் பேராசிரியர் த மனநோயின் அறிகுறியாகத் தெரிகிறது. மனநல மருத்துவரை சந்தித்துச் சிகிச்சை
ளார்.
- 20

Page 24
பி
மாணவர் உலகம்
விஞ்ஞானத் எ வளர்ச்சியும் அதன்
“ விந்தை மிகு உலகில் வியப்பிது சாத னைகள் பல” என்ற முதுமொழிக்கமைய விஞ்ஞானம் தடம் பதித்த உலகில் இருபத் தோராம் நூற்றாண்டில் நாம் வாழ்ந்து வரு கின்றோம். மனிதனின் பரிணாம வளர்ச்சி யின் விளைவால் மூளை விருத்தியடைந்து 3 வருகிறது. கோமு செப்பியன்ஸ் வர்க்க ர: மனிதனின் வியப்பான புத்தாக்கங்களில் விஞ்ஞானமும் ஒன்றாகும். விஞ்ஞானம் திடீரென தோற்றம் பெறவில்லை. கால காலமாக வளர்ந்து அதாவது, பதினைந் ) தாம் நூற்றாண்டில் இருந்து எய்திய வளர்ச் சியே இன்று உள்ள விஞ்ஞான மயமாக்க லாகும்.
உலகம்கைக்குள் சுருங்கிவிட்டது என்று கூறுமளவிற்கு விஞ்ஞானத்துறை வளர்ச்சி யடைந்துவிட்டது. ஆதிகால மனிதன் தொடர்பாடலை மேற்கொள்வதற்குதூதுக் கள் பின் ஒலைச்சுவடிகள் சற்று முன்னேறி கடிதம் என்பவற்றைப் பயன்படுத்தினான். ஆனால் இன்றோ வீட்டுக்கு வீடு தொலை பேசி, இணையம், மின்னஞ்சல் என்று இன் னும் பல தொடர்பு சாதனங்கள் உண்டு.
இன்று விஞ்ஞானம் கால் பதிக்காத துறை என்று ஒன்றுமில்லை. மருத்துவம் தொழில்நுட்பம், வானியல் என்று பல பல. வளரும் பிள்ளைகள் முதல் வளர்ந்த பெரி யவர்கள் வரை விஞ்ஞானமே அவர்களின் வளர்ச்சிப்படி நிலைகளில் ஒன்றாகிவிட் -டது.
உயிர் காக்கும் உன்னதத் தொழிலான மருத்துவத் துறையில் ஸ்கானர் கண்டு | பிடிக்கப்பட்டமை மிகப் பெரிய சாதனை யாகும். இதன் மூலம் மனிதனின் உறுப்புக்
உ உ 41, 2 5 19 5
2 - ஓ டி 2 5 2
ய
ல்
வ
இணுவில் ஒலி

தாழில்நுட்ப
விளைவுகளும்
ம.கீர்த்திகா,
10B, யா/ இராமநாதன் கல்லூரி. ளை இலகுவாக ஆய்வு செய்வதன் மூலம் வைத்தியம் செய்ய முடிகின்றது. மற்றும் ண வைத்தியம் போன்றனவும் மிகப் பெரிய சாதனைகளாகும்.
வானியல் துறையை எடுத்து நோக்கு "வாமாயின் அலரலோப் கருவி, திசை ாட்டி என் பன கண்டுபிடிப்புகளுடன் ஆரம்பமாகியவை. இன்று விண்வெளியில் னிதன் பறந்து சந்திரனில் கால் பதிக்கும் அளவிற்கு விஞ்ஞான வளர்ச்சி மனிதனை ஞ்சிவிட்டது. மற்றும் வேற்றுக்கிரக பாசிகள், புதிய கோள்கள் என்பவற்றை ஆய்வு செய்யுமளவிற்கு விஞ்ஞானம் சானியல் துறையில் வளர்ச்சியடைந்து சிட்டது.
மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் பரி னாம வளர்ச்சியான “நானே” தொழில் பட்ப வளர்ச்சியானது இன்று வளர்ந்து களர்ந்து வருகின்ற நாடுகளான ஐப்பான், புமெரிக்கா போன்றவற்றில் மிகுந்த வர வற்பைப் பெற்றுள்ளது. மற்றும் ஐன்ஸ் னின் சார்புக் கொள்கையால் போக்கு ரத்து ரீதியாகவும் விஞ்ஞானம் வளர்ச்சி டைந்துள்ளது என்பதை நாம் அறிய பாம்.
இவ்வாறு காலகாலமாக வளர்ந்து ரும் விஞ்ஞானத்தால் மனிதனுக்கு மிகப் பரிய நன்மைத்தனத்தை வழங்கினாலும் புதனால் தீமைகளும் அதிகமாகவே "ருக்கின்றன. குறிப்பாக சூழல் மாசடை
-21

Page 25
தல் பெரும் பிரச்சினையாக உள்ளது. - வது வாகனங்களின் புகையால் கு6ே' . புளோரோ காபனின் உயர் பயன்பாட்டா லும் சூழல் மாசடைகின்றது.
மற்றும் ஓசோன் படையில் ஓட்டை உருவாவது போன்ற புவியியல் சம்பந்த மான மாற்றத்தால் அழிவுகளும் ஏற்படு கின்றன, மற்றும் தொலைத் தொடர்புச் சாதனங்களினால் சமூகக் கலாசார மாற் றங்களும் இடம்பெறும். போதைவஸ்து பாவித்தல், இளவயது திருமணம், புகைப்
இளைஞர்களே!
இளைஞர்களே! நீங்கள் எப்போதும் இருக்கவேண்டும். முதுமையடையாதீர்கள். உடலானது முதுமையடைலாம். ஆனால் மனம் முதுமை அடையக்கூடாது. உங்க இளமையாகவும் புதியதாகவும், கற்பதற்கு இருந்து, வாழ்க்கையில் புதியனவற்றைக் க னால் நீங்கள் வாழ்வதாகப் பொருள்படும். எ கண்டுபிடிக்க இயலாத நிலையும், விரிவுபடு அப்போது நீங்கள் மறைந்து விடுகிறீர்கள் இருபது முப்பது ஆண்டுகளுக்குக் கொண்
மற்றவர்கள் உங்களுடைய வாழ்க்கைக் தாகவும் பலவற்றைக் கூறலாம். யாரிடமிரு நீங்கள் இருந்தால் நீங்கள் என்றும் இளமை உன்னுடைய மதியைக் கூர்மையாக்கும் த
கூறப்படும் இதிகாச புராணங்களை நம்பாதீர் தாக எதுவும் இல்லை. இவைகளைச் சிறப துக்கொள்ளமுடியாது.
உன்னால் இயன்ற எல்லாவற்றையும் செ யலாம். அவை உன்னுடைய சுயமானவை தைக்காட்டு, அதுவே இந்த உலகத்திலுள் எல்லோருமே மதம் என்ற முகமூடி அணிந், ஞன் எல்லா முகமூடிகளையும் எதிர்ப்பதா “நான் யாரையும் பின்பற்றமாட்டேன். நான றேன். நான் நன்றாகவே இருப்பேன்” என்ற
இணுவில் ஒலி

பிடித்தல் போன்ற கலாசாரச் சீர்கேடு களும் இடம்பெறும்.
எதுவானாலும் விஞ்ஞானம் மனிதனை உயர்ந்த இடத்தில் இருக்கப் பெரிதும் துணை செய்கின்றது. விஞ்ஞானத்தால் பாதகமான விளைவுகள் வரக்கூடியன வற்றைத் தவிர்த்து மனிதனின் வாழ்வுக்கு நன்மை பயப்பதாக விஞ்ஞானத்தை பயன்படுத்த வேண்டியது ஒவ்வொருவரு டைய கடமையும் ஆகும்.
இளமையுடன் உங்களுடைய உங்களுடைய ளுடைய மனம் த் தயாராகவும் கண்டுபிடிக்கும் ஆற்றலுடன் இருக்குமா ப்பொழுது உங்கள் மனம் புதியவற்றைக் நித்த முடியாத நிலையும் ஏற்படுகிறதோ 1. நீங்கள் உங்களது உடலை மேலும் டு செல்லவேண்டும். கு உதவுவதாகவும், ஆதாரமாக இருப்ப ந்தும் எதையும் ஏற்றுக் கொள்ளாதபடி யுடன் இருக்க முடியும். இளமை என்பது ன்மை கொண்டது. புனிதம் மிக்கதாகக் கள். ஏனெனில் அவற்றில் புனிதம்மிக்க புமிக்க இலக்கியங்களாகக் கூட எடுத்
ய்துவிட்டதாக நீ எண்ணி திருப்தி அடை பாகும். நீ உன்னுடைய சொந்த முகத் எமிகப்பெரிய மகிழ்ச்சியாகும். ஆனால் து கொண் டிருக்கின்றார்கள். ஓர் இளை க இந்த உலகத்திற்குக் கூறவேண்டும். " தனித்தன்மையோடு இருக்கப் போகி ( அவன் எண்ணவேண்டும். - ஓஷோ

Page 26
நின்
கடி
நி;
மாணவர் உலகம்
வதிவிட வேள. வாழ்க்கை முறையும் இணுவில் கமக்காரர் சம்மேளனத் தடை
கண்டி மாவட்டத்திலே கறுப்பையா வின் மகனாக அவதரித்த இவர் ஆரம்பத் தில் தனது தந்தையின் தொழிலான விவ இ சாயத்தில் ஈடுபடாது சாரதி பயிற்றுன ராகக் கடமைபுரிந்தார். இவர் உல்லாசப் இ; பிரயாணிகளின் சாரதியாகக் கடமை டெ புரிந்ததால் இலங்கையின் அனைத்து இடங் நா களுக்கும் சென்று அவற்றின் சிறப்பம்சங்
ட6 களையும் அறிந்து வைத்துள்ள பூரண
ை மனிதர் எனலாம். 1966 ஆம் ஆண்டு திரு மணம் புரிந்த பின் இணுவிலில் வதிவிட மாக வந்து குடியேறினார்.
இணுவிலில் காணப்படும் மண்ணின் வளத்தையும் நீரின் வளத்தையும் கொண்டு முதலில் விவசாயத்தை சிறிய காணியில்
வா கலப்புப் பயிர்ச் செய்கையாக ஆரம்பித் தார். இவரிடம் விவசாயம் சம்பந்தமான
நள் அறிவு இருந்தமையால் கால போகங் | களையும் கருத்தில் கொண்டு சிறந்த விளைச்சலைத் தரக்கூடிய பயிர்களையும் அ; தெரிவு செய்து வேளாண்மை செய்து வந்ததால் சிறந்த விளைச்சல்களையும் பெற்றுக்கொண்டார். வருடம் முழுவதும் பயிர்களை விளைவிக்கக்கூடியதுமானதும் விளைச்சலைப் பெறக்கூடியதுமான
பன் சுழற்சி முறை பயிர்ச் செய்கைகளை
யில் கையாண்டுள்ளமை இவரது சிறப்பம்சம் எனலாம். மற்றும் நாற்றுமேடைகளை அமைத்து அதனைச் சந்தைப்படுத்துவ
பரி தும் முறையையும் கையாண்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
இவர் தனது வேளாண்மையில் பெரும் டச் பாலும் மூலிகை வகைகளையும் விளைச்ச இ
இணுவில் ஒலி
சிற
தக்
படு
பென்
ளர்
லே
ஆ
குர்

பண்மையும்
: வழிகாட்டுபவர் லவர் க.செல்லத்துரை அவர்கள் லெ ஈடுபடுபத்திள்ளார். உதாரணமாக எதுவளை, முடகொத்தான், நன்னாரி, ஞ்சி, மஞ்சள், சித்தரத்தை போன்ற றப்பான மூலிகை வகைகளை கூறலாம். தனால் இவரிடம் மூலிகை வகைகளைப் பற்றுக்கொள்ளுவதற்காகவும் மக்கள் டி வந்தனர். மற்றும் இவர் விவசாயத்து ன் இணைந்த விலங்கு வேளாண்மை பயும் செய்து வந்தார். இதனால் விளை லத்தில் கிடைக்கும் தீனிகளை விலங்கு எளிற்கும் அவற்றில் இருந்து கிடைக்கும் யற்கையான பசளைகளை விளை லத்திற்கும் பயன்படுத்தியமையால் மந்த ஆரோக்கியம் தரக்கூடிய மரக்கறி கைகளை பெற்றுள்ளமை குறிப்பிடத் கேதாகும். இதனால் இவர் சிறந்த உடல் ம் ஆரோக்கியத்துடனும் இன்று காணப் கிெறார்.
விவசாயத்தை மேற்கொண்டமையால் தனோடு இணைந்த விவசாய உபகர எங்களையும் கையாண்டு அதனை குத்தும் ஆளுமைமிக்கவராக மாறினார், தனோடு இயைந்த வேறு பல உபகர ங்களையும் திருத்தக்கூடியவராக அனு பம் பெற்றார். இவரது பயிர்ச்செய்கை ன் திறைமையை அறிந்த வானொலியா கள் செவ்வி கண்டுள்ளனர். வதிவிட பளாண்மைப் போட்டியில் சிறப்பான சில்களையும் யாழ்.மாவட்டத்தில் 2002 ம் ஆண்டு முதலிடத்தை பெற்றமையும் ப்ெபிடத்தக்கவை. உலக உணவுத் திட் தில் மாலைதீவும் இலங்கையும் ணைந்து பரிசில் வழங்கியமையும்
- 23

Page 27
சிறப்பம்சமாகும்.
மற்றும் பழவகைகளை பயிரிடுவதில் சிறந்தவராவார். எனவே இவர் ஏதோ ஒரு வகையில் சந்தைப்படுத்தும் வசதி உடைய வராகக் காணப்பட்டார். இதனால் வாழ்க் கையில் சமநிலை பொருளாதார கோல் முடையவராகவும் காணப்பட்டார். மற்றும் இவரது விளைநிலத்திலே அனைத்து வகையான மரம் மற்றும் காய்கறிகள் காணப்பட்டமையால் அதாவது பழவகை கள், மூலிகைகள், காய்கறிகள் என்பன காணப்பட்டமையால் தேன் வளர்ப்பிற்கு ஏதுவாய் அமைந்தது. இயற்கையான தேன் வளர்ப்பு அதாவது ஓளடதம் இவரது விளை நிலத்திலே இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கவை.
இவரது வாழ்க்கையிலே விவசாயம் மிக முக்கியமானதாகக் காணப்பட்டதால் இவரது வாழ்க்கை பெரிதும் உயர்வடையக் காரணமாய் அமைந்து. மற்றவர்களுக்கும் வீட்டுத் தோட்டம் பற்றிய அறிவுரையும், விழிப்புணர்வையும் வழங்கி அவர்களது வாழ்க்கையையும் உயர்வடைய செய்துள் ளார். இவ்வாறு இவர் இவ்வதிவிட வேளாண் மையை மேற்கொண்டு சிறப்பாக வாழ்ந்து வரும் இன்றைய மனிதர்களுள் ஒருவரா கப் பிரகாசிக்கின்றார்.
செல்வி த.அருட்செல்வி,
உயர்தர மாணவி, இணுவில் மத்திய கல்லூரி.
வாசகப் பெருமக்களே! மாணவச் செல்வங்களே!
நீங்கள் அறிந்த, தெரிந்த சிறு, சிறு விடயங்களைச் சுருக்கமாக எமக்கு அனுப்பிவைத்தால் அவற்றை “அறிந்த வையும் தெரிந்தவையும்' பகுதியில் வெளியிடுவோம். உண்மைகள் என் றும் மறைக்கப்படக்கூடாது. எனவே தவறாது எழுதுங்கள்.
- ஆசிரியர்.
இணுவில் ஒலி -

| ரீவர் பேலிஸின் | எச்சரிக்கை
கையால் இயக்கப்படும் வானொலியைக் கண்டு பிடித்தவரான ரீவர் பேலிஸ் என்பவர் ஒரு எச்சரிக் கையை முன்வைத்துள்ளார் என்று பிரிட்டன்டெய்லி மெய்ல் பத்திரிகை தெரிவித்துள்ளது. பிரிட்டனின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளராக மதிக்கப்படும் 75 வயதையுடைய ரீவர் பேலிஸ் "இணையமானது பிள்ளைகளின் மூளையைச் சாகடிப்பதுடன் கணினித் திரைகளில் வாழ்க்கையைச் செலவிடும்
கூகிள் தலைமுறையினர் தமது ஆக்கத் திறனை |இழுந்தும் வருகின்றார்கள்” என்ற அபாய எச்சரிக் கையை முன்வைத்துள்ளார். சகல விடயங்களுக் குமே இணையத்தில் தங்கியிருப்பவர்கள் சுயமாகச் சிந்திக்கும் ஆற்றலை முழுமையாக இழந்து விடு |கின்றர்கள் என்றும் கணினிகள் மற்றும் கையடக்கத் (தொலைபேசிகளைப் பயன்படுத்தாமல் மாண |வர்கள் கல்விக் கூடங்களில் கற்பதே சிறந்தது என்ற
கருத்தும் அவரால் முன்வைக்கப்பட்டுள்ளது.
உலகெங்கும் இணையத்தளங்கள் நாளுக்கு |நாள் பெருகிக்கொண்டு வருகின்ற இக்காலகட்டத் தில் அதன் பாவனையாளர்களும் பல்கிப் பெருகிய வண்ணம் இருக்கின்றார்கள். கல்வி, விளையாட்டு, சங்கீதம் (இசை), அரசியல், பொருளாதாரம், வானிலை ஆராய்ச்சி, மருத்துவம், புதிய கண்டு |பிடிப்புகள், பாலியல் போன்ற பலவகைப்பட்ட துறை சார்ந்த இணையத்தளங்கள் செயற்படுகின்றன. பயனுள்ள விடயங்களை தெரிந்துகொள்வதற்கு உதவுகின்ற அதேவேளை இளம் சமுதாயத்தைச் | சீரழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் இணையத் தளங்களும் செயற்பட்டு வருவதாக ஊடகங்கள் |செய்தி வெளியிட்டுவருகின்றன. கல்வி, தொழில், (தேக ஆரோக்கியம், பொறுப்புள்ள கடமைகள் என்ப வற்றையெல்லாம் உதாசீனம் செய்து, இணையத் தையே பெரிதென எண்ணி ஒரு பகுதியினர் தமது | வாழ்க்கையையே அழித்துக் கொண்டிருக்கின் (றார்கள். அவர்களுக்கு ரீவர் பேலிஸ் அவர்களின் | எச்சரிக்கை பயன்படுமா?
24

Page 28
நோபல் பரிச்
-- =IL ==
3 [ 4 ] ஏ 21 (5 பிடு 2 1th
16 உ E 16 2
சுவீடன் நாட்டவரான அல்பிரட் நோபல் | (Alfred Nobel) என்பவர் “டைனமற்' என்னும் ! வெடிபொருளைக் கண்டுபிடித்தார். பெரிய மலைக்குன்றுகளை உடைப்பதற்கும், மலை களைக் குடைந்து போக்குவரத்துப் பாதை களை அமைப்பதற்கும் உதவும் என்ற நல்நோக்கத்தில் அல்பிரட் நோபல் “டைன 8 மற்றைக் கொண்டு வந்தார். ஆனால் அவரது நோக்கத்துக்கு மாறாக அழிவை நோக்கிய பயன்பாட்டுக்கே உலகம் டைன மற்றைப் பயன்படுத்தியது. மக்களை அழிக் கவும், கடல்வாழ் உயிரினங்களை அழித் தொழிக்கவும், எதிரிகளை நிர்மூலமாக்க வும் இது பெருமளவில் பயன்படுத்தப்பட்ட மையால் பெரும் பணத்தை அல்பிரட் நோபல் சம்பாதித்தாலும், தாம் கண்டு படித்த பொருள் அழிவுக்கே பயன்படுவதை அறிந்து தீராத மன வேதனை கொண்டார்.
அதற்குப் பிராயச்சித்தம் தேடும் வகை யில் தமது இறுதி விருப்பப் பத்திரத்தில் "தமது சொத்துக்களின் பெரும்பகுதியைக் கொண்டு “நிதியம்' ஒன்று உருவாக்கப் பட்டு, அதிலிருந்து பெறப்படும் வட்டிப் பணத்தை ஒவ்வொரு வருடமும் மனித குலத்தின் நன்மைக்காக மனிதநேயத்துட னும், அர்ப்பண சிந்தையுடனும் பெரும்பங் காற்றியோர்க்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்” என்று எழுதி வைத்தார்.
பௌதிகவியல், இரசயானவியல் கண்டு பிடிப்புக்கள், மருத்துவத்துறை(உடற் ே றொழிலியல்), இலக்கியத்துறை, தேசங்க ெ ளிடையே சகோதர உணர்வை வளர்ப் போர்க்கான சமாதானம் ஆகிய ஐந்து துறைசார்ந்தவர்களுக்காகப் பரிசு வழங்கப் படவேண்டும் என அவர் விரும்பினார். அத் தோடு பரிசுபெறத் தகுதிவாய்ந்ததோரை எவ்வாறு தெரிவு செய்வது, தெரிவு செய் யப்படவேண்டிய நிறுவனங்கள் எவை என்
இணுவில் ஒலி

உ7
அது பற்றியும் இறுதி விருப்பத் தில் விவரமாகக் குறிப்பிட் டிருந் தார். செயற்பாட் க்ெகே முக்கியத் நுவம் கொடுக் கப்படவேண்டுமென்றும் அவர் எந்த நாட் மடச்சேர்ந்தவர் என்பதில் கவனம் கொள் எக்கூடாது என்பதையும் வற்புறுத்தியிருந் கார். தகுதியானவர்களே பரிசுக்குரியவர் களாகத் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என் தில் அவர் மிகுந்த அக்கறை கொண்டி 5ந்தார். Nobel Foundation என்னும் நிறுவ எம் 1900 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்நிறுவனம் நிதியை முகாமை செய்தல், பரிசுபெறுவோரைத் தெரிவுசெய்யும் நிறு பனங்களின் செயற்பாடுகளை நிர்வகித் ல் ஆகிய பணிகளை மேற்கொள்ளுகி து. நோபல் நிதியம் ஆறு உறுப்பினர் ளைக் கொண்ட ஒரு பணிப்பாளர் சபை னால் நிர்வகிக்கப்படுகின்றது. இப்பணிப் Tளர் சபை உறுப்பினர்களில் ஒருவர் வீடன் நாட்டு அரசாங்கத்தால் நியமிக் ப்படும் சுவீடன் நாட்டவராக இருப்பார். னைய ஐவரும் நோபல் பவுண்டேசன் ழு உறுப்பினரால் தெரிவுசெய்யப்படு பார்கள்.
சமாதானத்திற்குதிய பரிசு மட்டும் நார்வே நாட்டும் பாராளுமன்றத்தினால் தரிவுசெய்யப்படும் ஐந்துபேர் கொண்ட ழு ஒன்றினால் பரிந்துரைக்கப்படும். மலும் பரிசுக்குரியேரை தெரிவுசெய்வதற் மன நோபல் கமிட்டிகள் அமைக்கப்பட் ள்ளன. இக்கமிட்டியினர், குறித்த துறை ல் துறைபோன நிபுணர்கள் மேதைகள் கியோருடன் இணைந்து செயற்படு வார் ர். பரிசுக்குரியோரைத் தேர்ந்ததும் பெயர்
25

Page 29
கள் அறிவிக்கப்படும். தனிநபர் அன்றி நிறு வனங்களும் பரிசுக்குரித் தெரிந்தெடுக்கப் படலாம். அல்பிரட் நோபலின் ஐந்தாவது சிரார்த்த தினமான 1901 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 10ஆம் திகதி முதலாவது நோபல் பரிசு வழங்கப்பட்டது.
பெரிய தொகையான பணப்பரிசும் (இப்பொழுது ஒரு மில்லியன் டொலருக்கு மேல்) தங்கப்பதக்கமும் சான்றிதழும் நோபல் பரிசாக வழங்கப்படுகின்றது. பரி சைப் பெற்றுக்கொள்பவர் “Nobel Laureates” என அழைக்கப்படுவார். வருடாந்த பரிசு வழங்கும் வைபவம் சுவீடன் ஸ்டொக் ஹேம் நகரிலும் நோர்வேயின் ஒஸ்லோ நகரிலும் நடைபெறும். பௌதீகம், இரசா யனம், மருத்துவம், இலக்கியம் இவற்றுக் கான பரிசுகள் சுவீடன் நாட்டு மன்ன ரினால் வழங்கப்படும். சமாதானத்துக்கான பரிசு ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் நோர்வே நாட்டு மன்னர் வழங்குவார். இத் தகைய ஏற்பாடுகளை நோபல் பரிசுக் குழு வினர் சிறப்பான முறையில் மேற்கொண்டு வருகின்றனர்.
'நோபல் பரிசு' என்பது மதிப்பு வாய்ந்த ஒரு அதிஉயர் விருதாகும்.
இணுவில் ஒலி - சந்தா விவரம் ஒரு வருடச் சந்தா - ரூபா 600 (அஞ்சல் செலவுடன் வெளிநாடு
க - $ 25 (U.S) 77 உங்கள் இனுவில் ஒலியின் வளர்ச்சிக்குச் சந்தாதாரர்களாகச் சேர்ந்து ஆதரவு நல்குங்கள். தொடர்பு ; த.சிவசுப்பிரமணியம் 9-2/1, நெல்சன் பிளேஸ்,
சி.சரவணபவன் கொழும்பு - 06.
காரைக்கால் ஒழுங்கை
இலங்கை
இணுவில் கிழக்கு தொ.இல. 071 8676482
சுன்னாகம், இலங்கை
தொ.இல. 07 312680: வங்கிக் கணக்கு விவரம்: - வங்கி Bank : Commercial Bank- Wellawatte
A/C No: 8100086490
இணுவில் ஒலி -

- காதலர் தினம்
- உரோமப் பேரரசை ஆட்சி செய்து வந்த மன்னன் கிளாடியஸ் தன் நாட்டுபடைவீரர்கள் திருமணம் செய்யக்கூடாது என்று தடை உத்த ரவு பிறப்பித்தான். இந்தச் செயலினால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். இதனை வன்மையா கக் கண்டித்த வலன்டைன் பாதிரியார் காதலர் களுக்கு இரகசியமாகத் திருமணம் செய்து . வைத்தார். அரச சட்டத்தை எதிர்த்து திருமணம் செய்து வைத்த குற்றத்துக்காக வலன்டைன் பாதிரியார் சிறையில் அடைக்கப்பட்டார். அக் கால கட்டத்தில் சிறைக் காவலர் தலைவனின் மகள் அஸ்டோயிசு என்பவருக்கும் வலன் டைன் பாதிரியாருக்கும் காதல் ஏற்பட்டது. இதைத் தெரிந்து கொண்ட சிறைக் காவலர் தலைவன் தன் மகள் அஸ்டோயிசுவையும் சிறைக் காவலில் வைத்தான். தன் காதலியான அஸ்போயிசுக்கு இறுதியாக காதல்கவிதையை அட்டையில் வரைந்தார் வலன்டைன்.
"விழி இருந்தும் வழி இல்லாமல் - மன்னன். பழி தாங்கிப் போகிறேன்
விழி இழந்து நீமனவலி தங்காது கதறும் ஒலிகேட்டுஉனனை மீட்க வழிதெரியாமல் மக்களுக்காகப் . பலியாடாகப் போகிறேன் - நீ ஒளியாய்வாழ பிறருக்கு வழியாய் இரு சந்தோஷ ஒளி உன் கண்களில் மின்னும் !"
இதுவே அவர் எழுதிய இறுதிக் கவிதை வரிகள். இதன்பின் தனக்கு வழங்கவிருக்கும் தண்டனையை எதிர்பார்த்திருந்தார். கி.பி. 2 270 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 ஆம் திகதி வலன்டைன் கொடூரமாகக் கொலை செய்யப் பட்டார். அந்த நாளே இன்று காதலர் தின.. மாகக் கொண்டாடப்படுகின்றது. இந்த வலன் டைன் தினத்தை கி.பி.498 ஆம் ஆண்டு - பெப்ரவரி 14 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக போப்கிளேஷியஸ் அறிவித்தார். இன்று உலக மெங்கும், உயிர்நீத்த இந்தத் தியாகதினத்தைக் காதலர்தினமாகக்கொண்டாடி வருகின்றார்கள்.
26

Page 30
அறிந்தவையும் தெரிந்தன
வி
மா
யா
அ
ஜே
* சேர் பொன் இராமநாதன் சமய தத்துவம், தமிழ் இலக்கியம் ஆகிய துறை சார்ந்த புல மையுடன், தமிழ் மொழி தொடர்பா கவும் ஆற்றல்மிக்க
பணியினை ஆற்றி யுள்ளார். செந்தமிழ் இலக்கணம் (முதற் பாகம்) என்னும் இலக்கண நூலை எழுதி வெளியிட்டார்.
“தமிழ் கற்கும் மாணவர்கள் தமிழ் இலக்கண நூல்களைக் கல்லாது கைவிடு
บน வதற்குக் காரணம் அவற்றின் கடின சொல் நடையே என்று யாவரும் அறிவர். இவ்
புல வருத்தத்தை முற்றிலும் நீக்கி, இலக்கண விதிகளின் இன்றியமையாச் சிறப்புக்
கள் களைத் தெளிவாக விளக்கும் பொருட்டு
பத் இந்நூல் இயற்றப் பெற்றது” என்று செந்
தெ தமிழ் இலக்கணம் என்ற நூலின் முகவு
40, ரையில் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
னு இதனோடு “இருபதாம் நூற்றாண்டு தமிழ் அகராதி” (THE TWENTIETH
'கப் CENTURY TAMIL DICTIONARY) மேற்படி | அகராதி தவிர THE ENCYCLOPEDIA ENGLISH - TAMIL DICTIONARY என்ற
அ பெயரில் இரு மொழி அகராதியையும் ஆக்கியுள்ளார். மேலும் பல்வேறு அறிவி யலுக்குத் தேவையான அரும் பெரும் நூலகமொன்றினையும் இவர் உருவாக்கி
அ யுள்ளார்.
:ை இந்நூலகத்திலே வேதங்கள், ஆகமங்
ை கள், இதிகாசங்கள், புராணங்களை உள்ள டக்கிய சமஸ்கிருத இலக்கியம், சங்க நூல் கள், சைவத் திருமுறைகளை உள்ளடக் இ கிய தமிழிலக்கியம், ஆங்கில இலக்கியம்,
ளார் லத்தீன், கிரேக்கம், பௌத்தம், கிறிஸ்த
இணுவில் ஒலி
அ
அ
கன்
LONT
14
டா.
ஸி.

ஊவயும்
ம், இஸ்லாம், வரலாறு, விஞ்ஞானம், றிப்பாகச் சட்டம், சட்ட சபை நிகழ்ச்சிக் காவைகள் போன்ற பல்வேறுபட்ட டயங்களை பற்றிய நூல்கள் இடம்பெற் -ருந்தன. சட்டத்துறை வல்லுனராக, ரசியல்வாதியாக வாழ்ந்த பெரியார் பல் றை பரிமாணங்கள் கொண்டவராக ருந்துள்ளார் என்பது வரலாறு.
* கார் ல' சர்க்ஸ் சளை "த எழுத்தாளர். னே க ம ா ன ல்லா ஐரோப் ப மொழிகளி ம் அவருக்குப் ஊமை இருந்தது. ஜர்மன், ஆங்கிலம், பிரெஞ்சு மொழி ரில் அவர் நன்கு எழுதக்கூடியவர். ஐம் | வயதில் ரஷ்ய மொழியைக் கற்கத் 5ாடங்கினார். அவர் மிகவும் கடுமையாக ஆண்டுகள் உழைத்து மூலதனம் என் ம் நூலைக் கொண்டு வந்தார். 1848 இல் வர் ஏங்கெல்ஸ் உடன் இணைந்து ம்யூனிஸ்ட் அறிக்கையை எழுதினார். துவே கம்யூனிசத்தின் மூலக் கோட்பாடு Dளச் சுருங்க எடுத்துரைத்த நூலாகும். வரின் புகழின் பெரும்பகுதிக்கு ஆதார கவுள்ள “மூலதனம்' 1867 செப்டெம்பர் ஆம் நாள் ஹம்பர்க்கில் பிரசுரமானது. தன் இரண்டாம் மூன்றாம் பாகங்கள் வர் மறைவுக்குப் பின், அவர் எழுதி பத்த பெருந்தொகையான குறிப்புக்க எத் தொகுத்து ஏங்கெல்ஸ் வெளியிட்
இம்மாபெரும் படைப்புடன், மார்க்ஸ் எனும் பல நூல்களையும் எழுதியுள் ர். “கூலி - உழைப்பு மூலதனம்', 'பிரான் ல் வர்க்கப் போராட்டங்கள்', 'லூயி
- 27

Page 31
பொனபாட்டின் 18 ஆவது புரூமெயர்' “இந்தியாவில் பிரித்தானியா ஆட்சி, “இந்த யாவில் பிரித்தானிய ஆட்சியின் எதிர்கால விளைவு', 'கூலி- விலை -இலாபம்', பிரான ஸில் உள்நாட்டுப் போர்', 'கோதா திட்டத் தின் மீதான விமர்சனம்' என்பன முக்கிய மானவை.
மார்க்ஸ் வெறுமனே ஒரு கோட்பாட்டா ளர் மட்டுமல்ல. அனைத்திலும் மேலாக, அவர் தன் காலத்தில் புரட்சிகர இயக்கங் கள் அனைத்திலும் செயலூக்கத்துடன் பங்குபற்றிய ஒரு நடைமுறை புரட்சிவாதி யுமாவார். இப்போது முதலாம் அகில மென்று புகழ்பெற்ற உழைக்கும் மனித னின் முதலாவது சர்வதேச சங்கம் 1864 செப்டெம்பர் 24 ஆம் நாள் அவரது தலை மையின் கீழ் உருவாக்கப்பட்டது. ஐரோப் பாவிலும், வட அமெரிக்காவிலும் விஞ் ஞான சோஷலிசச் சிந்தனைகளைப் பரப்பியது இந்த அமைப்பே ஆகும்.
*மியன்மார் என்ற நாட்டில் 1964 ஆம் ஆண்டு நீவின் என்பவரின் சர்வாதிகார ஆட்சி தோன்றி தனியார் செய்திப் பத்திரி கைகள் வெளியிடுவதற்குத் தடைவிதிக்கப் பட்டது. ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் அதாவது 2013 ஏப்ரல் முதலாம் திகதி நாளிதழ்கள் வெளியிடுவதற்கான அனு மதி அளிக்கப்பட்டது. அன்றைய தினமே நான்கு நாளிதழ்கள் வெளிவந்துள்ளன. அதில் "கோல்டன் ப்ரெஸ் லேண்ட்' நாளி தழ் முதல்நாளே எண்பதாயிரம் பிரதிகள் அச்சிட்டதாகவும் அவை அனைத்துமே விற்றுத் தீர்ந்ததால் ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறேன் என்று பத்திரிகையின் தலைமைச் செய்தி ஆசிரியரான 81 வயது நிரம்பிய பர்மிய மொழி மூத்த பத்திரிகை யாளர் கின் மெளங் லாய் தெரிவித்துள் ளார்.1960 ஆம் ஆண்டுக்குப் பின் பிறந்த மியன்மார் மக்கள் தனியார் நாளிதழ்கள்
இணுவில் ஒலி -

எப்படி இருக்கும் என்ற ஆவலுடன்அவற்றை வாங்குவதில் பெரிதும் அக்கறை கொண் டிருந்தார்கள். வெளிநாட்டு அழுத்தம் கார ணமாக கடந்த சில ஆண்டுகளாக மியன்மாரில் ஜனநாயக நடைமுறைகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
* “நடமாடும் பல்கலைக்கழகம்' என்று போற்றப்பட்ட தாவீது அடிகளார், யாழ்ப் பாண நூலக உருவாக்கத்தில் முன் னின்று உழைத்த பெரியார். 01.06.1981 அன்று நள்ளிரவில், விலை மதிப்பிற்குரிய 97 ஆயிரம் நூல்களைத் தன்னகத்தே கொண்டிருந்த யாழ். நூலகம் திக்கிரை யாக்கப்பட்டது. யாழ்ப்பாணம் புனித பத்திரி சியார் கல்லூரியின் மேல்மாடிக் கட்டடத் தின் மேற்குப் புற அறையில் வாழ்ந்து கொண்டிருந்த 74 வயதுடைய தாவீது அடிகளார் இதைக் கண்ணுற்றதும் பேர திர்ச்சியினால் உயிர்நீத்தார்.
*காற்றில் கலந்துவிட்ட கவிதைகளால் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் வங் கத்துக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், தான் பெங்காலியில் எழுதிய இறை வணக்கப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த் தார். அதுவே “கீதாஞ்சலியாக வெளிவந் தது. 1913 ஆம் ஆண்டில் இலக்கியத்துக் கான நோபல் பரிசை ஆசியக் கண்டத் தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்க வேண் டும் என்று நோபல் பரிசு கமிட்டி முடிவு செய்திருந்தது. அது கீதாஞ்சலியின் சிறப்புக்காக ரவீந்திரநாத் தாகூருக்கு வழங்கப்பட்டது. இந்தியாவைச் சேர்ந்த மூவர் இதுவரை பௌதீகவியலுக்கான நோபல் பரிசை பெற்றுள்ளனர். தமிழ்நாட் டைச் சேர்ந்த சந்திரசேகர் வெங்கட்ராமன் (C.V.Raman) “ஒளியின் மூலக்கூற்று சிதறல்' என்பதே இவரின் ஆய்வாகும். அடுத்தவர் சுப்பிரமணியன் சந்திரசேகர், மூன்றாமவர் அப்துல் கலாம்.
-- 28

Page 32
மீண்டும் மின்னல் என் வசந்த நிலை
வன்
பயிர்
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற வருடாந்த புத்தகக் கண்காட் சியின் போது பற்பல பார்வை அரங்கு களில்பிரசன்னமாகிய களைப்புடன் நுழைவு வாயிலில் எனது கால்கள் மேற்கொண்டு என்னை நடக்கவிடாமல் அங்கிருந்த இருக்கையில் உட்காரவைத்தது. வழமை
என் யாக மாநாட்டு மண்டபத்தின் புத்தகக்
நாடு கண்காட்சியில் காணப்பட்ட பல தரப்பட்ட
பத் வயதுப்பிரிவினரும் சுறுசுறுப்பாக என்னைக் கடந்து சென்றுகொண்டிருந்தனர். வழிந்
பெ தோடும் சனக்கூட்டத்தினரை வியப்புடன்
பில் பார்த்துக்கொண்டிருந்தேன். குறிப்பாக
விடு அங்கே இளம் பெண்களும் ஆண்களும்
ருந் தகவல் கோரும் எண்ணத்துடன் வளைய
யாக வந்து கொண்டிருந்ததை அவதானித்த வண்ணம் அவர்களைத் தாண்டி குளிர்
சார் பானம் விற்கப்படும் கூடத்திற்குச் சென்று யார் மிகவும் உயராமான ஓர் இருக்கையில்
லும் அமர்ந்து ஒரு பழரச பானத்தை அருந்தி
(ளும் முடித்து பின்னர் ஓர் இளைமையூட்டும் | பலத்துடன் திரும்பும் போது, ஒளிவீசும்
காது பார்வையுடன் ஒரு பெண்மணி கண்டிய
எம் உடையில் எனக்கு சற்றுப் பின்னால் ஓர்
தி ை இளம் சிறுமியைக் கையில் பிடித்து
யும் இழுத்த வண்ணம் காணப்பட்டாள்.
என்னுடன் மேதிவிடும் தறுவாயிலி
யில் ருந்து அவளிடம் மன்னிப்புக் கோரும் ,
சுரும் நோக்கத்துடன் எழுந்த நானும் அவளும் மெ6 ஒருவரை யொருவர் முறைத்துப் பார்த்துக்
(தொ கொண்டதுடன் முழுமையாகச் செயலற்.
ஓரா றுப் போயிருந்தோம். எனது ஜீவ அணுக் துட் கள் உற்சாகமாக உணர்ச்சிவயப்பட ஏற். கனவே பலவீனமான எனது முழங்கால் கும். களுக்கு மேலும் அழுத்தங்களைக்கொடுத்
டனு தன. கடந்த காலக் கனவுகள் வெடித்துச் நீண சிதறி எண்ண அலைகளுடன் மோதிய ஆச்.
இணுவில் ஒலி
* * * * 15- 88 8 5 5 5 56 5ல் * 8 $ = 55 88 5 5 5 5 95. எ
இன
அவ
முத்

ட்ெடு நின்ற எவுகள்
திரவேலு மகாதேவா
தெகிவளை
ன்ணமாக மௌனத்தைக் கலைக்கும் ன்ணம் “நீங்கள் நிமல்கா இல்லையா Tற எனது சொற்கள் விரிந்தன. ஆமாம் னே தான் என்றார். கன்னங்கள் குழப் துடன் செந்நிறமாக மாறிய வண்ணம். 1957 இல் நான் உயர் கல்வித் தராதரம் ற்று பல்கலைக்கழகப் புகுமுக வகுப் படிப்பதற்காக வியங்கொட கல்லூரி மதியில் இணைத்துக் கொள்ளப்பட்டி தேன். அவளும் ஒரு சிரேஷ்ட மாணவி க ஒரே கல்லூரி வளாகத்தில் கல்வி ன்றாள். அவளும் நானும் பாட லையில் இல்லத்தலைவர்களாகப் பணி ற்றினோம். அங்கே பல கூட்டங்களி 5, நிகழ்வுகளிலும் கலந்துகொள் bபோது நாம் மிகவும் நெருக்கமாக மணந்து பணியாற்றும் சூழ்நிலை எனப்பட்டது. எமது இளமைப் பருவம் -மிடையில் இணக்கமான பழக்கத் னத் தூண்டியது. ஒவ்வொரு தடவை நான் அவளைப் பார்க்கும் போதும் பள் தூய்மையான வெண்ணிற ஆடை மிகவும் எடுப்பாக இருந்ததுடன் தனது ண்ட கூந்தலை அழகாக வாரி தனது லிந்த தோள்களில் கட்டுக்கடங்காமல் சங்க விட்டிருப்பாள். எனது இதயம் -யிரம் தடவை அடித்துக்கொண்ட ன் அவளது செந்நிறக் கன்னங்களில் தமிடத் துடித்துக்கொண்டேயிருக் முடிவற்ற கடைக்கண் பார்வைகளு எம் புன்னகைகளுடனும் நாட்கள் ப்டு கொண்டிருந்தன. உடல்மொழி சரியமாக மென்மையான கற்கண்டை
29

Page 33
விட இனிமையான உணர்வினை ஊட்டிக் கொண்டிருந்தன.
( எப்படியோ இல்ல விளையாட்டுக்கள் நிறைவெய்தியதுடன் சந்திப்பதற்கான சந் தர்ப்பங்கள் குறைவாகவும், அரிதாகவும் காணப்பட்டன. சந்திந்துக் கதைக்க வேண் டும் என்ற அவா என்னை பெறுமையிழக் கச்செய்துகொண்டிருந்தது. அவளுடைய வீடு கல்லூரியில் இருந்து 300 யார் தூரத் தில் நெல்வயல்கள் சூழ அமைந்திருந்தது. நான் அவர்களுடைய வயற் கிணற்றில் குளிக்கவந்தால் நாம் பார்த்துக்கொள்ள வும் சந்தித்துக்கொள்ளவும்முடியுமல்லவா என்ற அவளது சொற்கள் என்னை வர வேற்கும் பாணியில் அமைந்திருந்தன. அது ஒரு புத்திசாலித்தனமான எற்பாடக வுமிருந்தது. நாம் நல்லதொரு குளியலை அனுபவித்தது மட்டுமன்றி குளிப்பில் இணைந்துகொண்ட அவளது சகோதர னின் அழைப்பின் பேரில் அவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு ஏற்பட்டது. இது ஒரு மறைமுகமான ஆசீர்வாதமாகவும்ஓரிரு வார்த்தைகள் பேசவும் பார்வைகளைப் பரிமாற வாய்ப்பினையும் ஏற்படுத்தியது. )
இந்த நாட்களில் ஒருமுறை அவள் என்னிடம் எனது தாவரவியல் ஜோசுவா
பாரதி பற்றி
பாரதிதாசன்
"செந்தமிழ்த் தேனீ, சிந்து குவிக்கும் கவிதைக் குயில் கவிழ்க்கும் பகையைக் கல்வி நீடு துயில் நீக்கப் பாடி வர் காடு கமழும் கற்பூரச் சொ கற்பனை ஊற்றாம் கவிை திறம்பாட வந்த மறவன், | அறம்பாட வந்த அறிஞன், படரும் சாதிப் படைக்கு மா மண்டும் மதங்கள் அண்ட அயலார் எதிர்ப்புக் கணய என்னென்று சொல்வேன்! தமிழால், பாரதி தகுதி பெ தமிழ் பாரதியால் தகுதி எவ்வாறென்பதை எடுத்து
இணுவில் ஒலி

அன்ட் புல்லிமட் ( Joshuva & Pullimud) என்ற புத்தகத்தை ஓரிரு நாள்களுக்கு கை மாற்றாகத் தரமுடியுமா எனக் கோட்டாள் அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை, நாளைகொண்டு வந்து தருகிறேன் என் றேன். இரண்டு நாள்களின் பின் அந்தப் புத் தகத்தை சகோதரன் மூலமாகத் திருப்பித் தந்தாள். ஒரு சிறிய தாளில் ஒரு குறிப்பு புத்தகத்தின் மட்டையின் உட்புறமாக “நான் உங்களை விரும்புகிறேன்” என்ற வாசகங்களுடன் காணப்பட்டது. தன்னை அறியாமலே அவளது சகோதரனும் எங்க ளின் செய்திகளைப் பரிமாற்றம் செய்யும் ஒருவராக இயங்கினான்.
இப்பொழுது பல தசாப்தங்களின் பின் னர் என்முன்னே அதே வசீகரத்துடனும் களங்கமற்ற பார்வையுடனும் நின்று கொண்டிகிறாள். அவளுடன் இணைந்து நிற்கும் இளம் சிறுமியின் கருங்கூந்தல்கள் சுருள்களாக புரண்டு கொண்டிருந்தன. அவ ளது அம்மம்மாவின் கடந்த கால இளமை நாட்களை எனக்கு நினைவூட்டிக் கொண் டிருந்தாள். நிமல்கா நீர் மதிமயக்கும் அள வுக்கு அழகானவள்தான் என்று மனம் சொல்லியது.
க்குத் தந்தை!
இந்நாட்டினைக் ழ்ெக்கும் கவிமுரசு! கத நிலா! ற்கோ! தயின் புதையல்! புதிய
நாட்டிற் நந்து! 1 நெருப்பவன்!
விளக்கவன்! என்னென்று சொல்வேன்! ற்றதும்
ற்றதும் மரக்கின்றேன்.”

Page 34
போதை எனும்
தென்னாசியாவிலே கல்வியறிவு வீதம் 97 வீதம் ஆக உயர் நிலையில் இருக்கும் கற்றவர்கள் அதிகமாக வசிக்கும் நாடாக இலங்கை காணப்படுகின்றது. இத்தகைய சிறப்புமிக்க புகழுடைய நாடான இலங் கையின் இளைஞர்கள் போதைப் பொருள் பாவனையிலும்புகழைப் பெறுவர் போலவே தோன்றுகின்றது. இளைஞர்கள் மட்டு மல்ல சிறுவர்கள் முதல் பெரியோர் வரை யல் போதைக்கு அடிமையானோர் தொகை இன்று அதிகரித்தே செல்கின்றது.
போதைப் பொருளைப் பாவிப்பவர்களில் 60வீதம்மாணவர்களாகவே காணப்படுவது | இந்நாட்டின் துரதிர்ஷ்டமாகும். பெரும் ே பாலான மாணவர்கள் ஒன்றாக கூடிப் பழகும்போது போதைப்பொருள் பாவ னைக்கு சில சமயம் உள்ளாகின்றனர். இப் பொருளைப் பாவிப்பதால் நன்றாக நித் திரை விழித்துப் படிக்கலாம் எனும் மாயைக் கருத்து உலாவுவதால் மாணவர்கள் இதற்கு ஆட்படலாம். அத்துடன் விளை யாட்டுப் போட்டியில் வெற்றி பெற இவை உதவும் என நம்பும் மாணவர்களும் போதைக்கு அடிமையாகின்றனர்,
இளைஞர்கள் ஒன்றாகக் கூடி உல்லாசம்
ஐ மாக "கசூரினா பீச்” போன்ற இடங்களுக்கு செல்லும் போது தம்மை போதைக்கு உட் படுத்துவது தவறில்லை என எண்ண வைக்கப்படுகின்றனர். மேலும் இன்றைய சமூகத்தின் கலாசார கொண்டாட்டங்கள் நடைபெறும் போது இறுதி நிகழ்வாக இடம்பெறும் ஆடல் பாடல் நிகழ்சிகளில் போதைப் பொருள் பாவனை இடம்பெறு கின்றது. இச்சம்பவங்களே மாணவரை
ம போதை உலகிற்குக் கொண்டு செல்கின் றது.
இன்றைய பொருளாதார நிலையில் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும் நிலை
3 4 5 5 6 \ 9 $ 4 5 6 *
க
சு
க
ர்
ป
டா
இணுவில் ஒலி

மாயை
-பரா. HERUH
ட்யாய
T Patient John Do
OF PRESCRIPTION
பில் குடும்பங்களில் பல்வேறு பிரச்சினை ள் உருவாகின்றன. தனிநபர் வருமானம் பாதாத நிலையில் வாழ்க்கையை நடத்த மடியாது குடும்பத்தில் சண்டைகள் சச்சர "கள் ஏற்படுகின்றன. இந்நிலையில் மன அமைதி வேண்டி ஆண்கள் போதைக்கு புடிமையாகின்றனர். கடினமான வேலை ள் செய்த பின்பும், வேலையின்மையால் ண்டகால மனஉழைச்சலுக்கு உள்ளான பாதும், ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக ண்ணும்போதும் ஆண்கள் போதைக்கு புடிமையாகின்றனர்.
இன்று ஹெரேயின், கொகெயின், மர் வானா, ஹசீஸ், குளிசைகள், அபின், ஞ்சா, கள்ளு, சாராயம், கசிப்பு, பீடி, சிகரட் ருட்டு யாவும் போதைப்பொருள்களாகவே ருதப்படுகின்றன. கிராமப் பகுதிகளில் பின், கஞ்சா, கசிப்பு போன்ற பொருள்கள் ஈவிக்கப்படுகின்றன. நகரப் புறங்க ளிலே ஹரோயின் போன்றன உபயோகிக்கப் திகின்றன. நகரப்புறங்களிலே இலகுவாக ளைஞர்களுக்கு கிடைக்கும் வகையில் றைமுகமாக விற்பனையாகின்றன.
இலங்கைக்கு வரும் உல்லாசப் பயணி ரிகளே போதைப் பொருளைக் கொண்டு ருவதாகக் கூறப்பட்டாலும் கடலினூ எகவும் விமானமூலமாகவும் இலங்கையி

Page 35
னுள் வருகின்றது. அண்மையில் இந்தியா விலிருந்து கடலினுடாகக்கடத்திவரப்பட்ட போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதான செய்தியை அறியக்கூடியதாக உள்ளது. அதிகளவு பணம் சம்பாதிப்பதற்காக வேலையில்லாதவர்களும் இக்கடத்தலை மேற்கொள்கின்றனர். ஆனால் படித்தவர் களும் பணத்திற்கு அடிமையாகி போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுகின்றனர். ஒரு கிலோ ஹெரோயின் மூன்று மில்லி யன் வரை பெறுமதியானது. எனவே இலகு வில் குறுக்கு வழிகளில் பணக்காரனாக மாற நினைக்கும் பலர் இத்தொழிலை மனச்சாட்சியின்றி மேற்கொள்கின்றனர்.
போதைப் பொருளுக்கு அடிமையான வர்கள் பின்பு போதைப் பொருள் இன்றி வாழ முடியாத நிலை உருவாகின்றது.
போதைப் பொருளை வாங்குவதற்கு அவர்களிடம் இருக்கும் பணம் போதாத போது வீட்டிலே உள்ள விலை உயர்ந்த பொருள்களைத் திருடி விற்பார்கள். வீட் டிலே பொருள்கள் இல்லை எனின் அயல வர், உறவினர் வீடுகளில் திருடுவார்கள். எனவே காலப்போக்கில் ஊர் அறிந்த திருடனான மாறி குடும்பத்திற்கே இழுக்
கைத் தேடுவார்கள். .
இளைஞர்கள் போதையில் ஈடுபடுவத னால் அவர்களது உடல் நிலை பாதிக் கப்படுகின்றது. பலவீனமானவர்களாகவும் திருமண வாழ்க்கைக்கு தகுதியற்றவர்களா கவும் மாறுகின்றனர். அத்துடன் போதை யேறிவீண் வார்த்தைப்பிரயோகம், சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு தமது உயர்ந்த நிலையை மதிப்பிழக்க வைக்கின்றனர். இதனால் அவர்களது குடும்பங்களும் தம் கெளரவத்தை இழக்கின்றன. மேலும் அவர்கள் மரணத்தை விரைவில் அடை கின்றார்கள்.
இலங்கை தேசிய போதைப்பொருள் தடுப்பு சபை போதைப்பொருள் பாவ னையைக் குறைத்து தூய சமுதாயத்தை
இணுவில் ஒலி -

உருவாக்கப் பாடுபடுகின்றது. இப்போதைப் பொருள் பாவனையே இன்று பாலியல் துஷ்பிரயோகம், வாகன விபத்துக்கள், தற்கொலை செய்தல் என்பன அதிகரிப்ப தற்குக் காரணமாக உள்ளது. போதைப் பொருள் பாவனையைக் குறைக்க வேண் டும் எனின் கடுமையான தண்டனைகளை கொடுப்பதன் மூலம் குறைக்கலாம். மத் திய கிழக்கு நாடுகளில் வழங்கப்படும் அங் கங்களை வெட்டுதல் போன்ற தண்டனை களை இங்கும் அறிமுகப்படுத்தினால் இப்பாவனை சடுதியாக குறையும். ஆனால் இலங்கை போன்ற நாடுகளில் இத்தகைய சட்டங்கள் உருவாக இடமில்லை.
இலங்கை அரசாங்கம் 2015 ஆம் ஆண்டை போதைப்பொருள் அற்ற ஆண் டாக மாற்றியமைக்க வேண்டும் என பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின் றது. போதைக்கு அடிமையானவரை மீட்டு எடுப்பது, புதிதாக அடிமையாகாமல் இருப் பதற்கு விழிப்புணர்வை ஊட்டுவது என அரசு செயற்பட்டு வருகின்றது. ஆனால் இலாப நோக்கில் செயற்படும் உள்ளூர் வியாபாரிகளும், அரசின் விழிப்புணர்வு செயற்றிட்டத்தை ஏற்று நடக்க எண்ணாத வர்களும் மனம் மாறினால்தான் போதைப் பெருள் பாவனையை ஒழிக்கலாம்.
திருமதி சுலோசனா யோகராசா
B.A. dip. in, Edu M.ED யா/இராமநாதன் கல்லூரி.
புதுவரவு
கல்வி உலகில உயிர்ப்புமிகு புலமை யாளராக முகிழ்ந்து நிற்கும் பேராசிரியர் சபா ஜெயராசாவின் புதிய படைப்பு 'கற் றல் இடர்பாடுகளும் தீர்வுகளும்'
பராபாய் டொபாட்ராகம்
கிரிகட்காம்

Page 36
உங்க “இணுவில் ஒலி” நான்காவது ! கோயிலிலுள்ள உலகப் பெருமஞ்ச வித்த பெரிய சந்நியாசியாரின் திருவுரு தில் இந்தத் திருமஞ்ச உலாவைப் |
பல பகுதியிலிருந்தும் மாட்டுவண்டி க வருகை தருவார்களாம். தாங்களும் மாட்டு வண்டியி என் தந்தையார் சொல்லக்கேட்டிருக்கின்றேன். ஆ தரிசிக்கவில்லை. கந்தன் அருள் இருந்தால் அந்த உ பம் கிடைக்கும் என எண்ணுகின்றேன். இத்தகைய க வெளிக்கொணர்ந்த இணுவில் ஒலிக்கு மனமார்ந்த
“இணுவில் ஒலியைக் கிரமமாக வாசித்து வரும் ? பதிவுகளை “உங்கள் விருந்து' பகுதியில் பகிர்ந்துகெ நான்கு இதழ்களும் வித்தியாசமான பல விடயங்கன இதழ்களில் ஆக்க இலக்கியப் படைப்புகளுக்கும் இட றாம் இதழில் வெளிவந்த மாதுமையின் “பயணம்” சி கின்ற யதார்த்தமான சங்கதிகளைக் கூறி நிற்கின சிவாவின் “வாழவைத்த தெய்வம்” என்னும் சிறுகள் அன்புடன் வாழ்பவர்களைச் சஞ்சலப்படுத்துகின்ற இலக்கிய எழுத்தாளர்குறித்த கருத்துக்கள்” உண்மை படைப்பாளியும் இலக்கியங்களைப் படைப்பதில்ை கொள்ளவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்பொழுது வெளிவந்துகொண் தனித்துவம் மிக்கதாக இருப்பது மகிழ்ச்சியைத் தருக வெளிவந்ததும், எனக்கு அனுப்பிவைக்கத் தவறமாட சொந்தப் பிரதேசத்தின் பலதரப்பட்ட தகவல்களை பெரும் வரப்பிரசாதமாக அமைந்திருக்கின்றது. நா குள்ள திருத்தலங்கள், கல்விக்கூடங்கள், நூலகங் சேர்த்த பெரியார்களைப் பற்றியும் எமது பிள்ளைகளு யில் இணுவில் ஒலியின் ஆக்கங்கள் பயனுள்ளன அனுபவமிக்க இலங்கையின் முன்னணி எழுத்தாக பிரதம ஆசிரியராகவும், ஆற்றல் மிக்க செயற்பாட்டா நிர்வாக ஆசிரியராகவும் இருப்பது இணுவில் ஒலியின குறைத்து, பயனுள்ள பல சிறிய விடயதானங்களை. தூண்டும் வகையான அம்சமாகும். எனது பிள்ளைகள் ரும் இணுவில் ஒலிக்குத் தமது பாராட்டுகளைத் தெ
இணுவில் ஒலி

ள் விருந்து இதழ் அட்டையில் இணுவில் கந்தசுவாமி த்தின் அழகுத் தோற்றமும், அதைச் செய் நவமும் காட்சியளிக்கின்றன. அந்தக்காலத் யார்ப்பதற்காக யாழ்ப்பாணக் குடாநாட்டின் கட்டிக்கொண்டு பெருந்தொகையானவர் கள் ல்ெ மஞசம் பார்ப்பதற்குச் சென்று வந்த தாக னால் நான் என்னும் அப்பெரு மஞ்சத்தைத் உலகப் பெருமஞ்சத்தைத் தரிசிக்கும் சந்தர்ப் லைப்பொக்கிஷத்தின் இருப்பைப் பலர் அறிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். சின்னத்தம்பி சிதம்பரநாதன்,
சித்தங்கேணி.
ஒரு வாசகன் என்ற வகையில் எனது மனப் -ாள்ளலாம் என எண்ணுகின்றேன். முத்தான ளைத் தந்து நிற்கின்றன. மூன்றாம், நான்காம் டம்கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது. மூன் றுகதை சமுதாயத்தில் கண்டு கொண்டிருக் என்றது. நான்காம் இதழில் வெளிவந்த தம்பு தை வெளிநாட்டு மோகத்தால் உந்தப்பட்டு றது. மூன்றாம் இதழில் வெளிவந்த “கலை யானவை. "எந்தவோர் இலட்சியமின்றி எந்தப் கல” என்பதை எழுத்தாளர்கள் கவனத்தில்
வே.பிரேமகுமார்,
கிளிநொச்சி.
டிருக்கின்ற சஞ்சிகைகளில் “இணுவில் ஓலி கின்றது. எனது மைத்துனர் 'இணுவில் ஒலி" ட்டார். புலம்பெயர்ந்து வாழும் எமக்கு எமது ளத் தெரிந்து கொள்வதற்கு இச்சஞ்சிகை ம் பிறந்து வளர்ந்த ஊரைப் பற்றியும், அங் "கள் பற்றியும், எமது மண்ணுக்கு பெருமை ளுக்குச் சொல்லிக் கொடுக்கக்கூடிய வகை வாக அமைந்துள்ளன. இதழியலில் நீண்ட ளர் கலாபூஷணம் தம்பு சிவசுப்பிரமணியம் எளராக விளங்கும் சிவலிங்கம் சரவணபவன் சிறப்பன்றோ! நீண்ட விடயதானங்களைக் ச் சேர்த்திருப்பது வாசகர்களை வாசிக்கத் ளான சுகந்தினி(14), வினோதினிய1) இருவ கரிவித்துள்ளார்கள்.
இராஜரத்தினம் ஸ்ரீதரன்,
ரொறன்ரோ, கனடா.
33

Page 37
இணுவில் திருவூரின் சமய, கல்வி, கலை மரபைப் பாரம்பரிய முறைப்படி கற்றுணர வேண்டிய மாணவர் சமுதாயத்தினதும், தற்காலத்தில் வளர்ந்துவரும் கல்வி முன் னேற்றங்களை அறிய வேண்டிய பலரதும் அறிவுப் பசியைத் தீர்க்கவும் நல்ல தரமான நூல்களை ஒரேயிடத்தில் எடுத்துப் படிப்ப தற்கும் ஏற்ற வகையில் சிறந்ததோர் நூல கத்தை எம் மக்கள் மத்தியில் நிறுவ முன் வந்தவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் அவர்கள்.
இவர் தமது ஆன்மீக உரையாற்ற வெனக் கடல் கடந்து எம்மவர் வாழும் இடங்களில் தன்னலம் கருதாத பொதுநல நோக்கை நாடியதால் இவரின் நூலகம் நிறுவும் பொதுப் பணிக்கு உதவப் பலரும் முன் வந்தனர். இப்பணிக்கு ஆரம்பப் படி யாக அமைவிடக் காணியை வாங்க இவ் வூர் மைந்தர்களான கு.கருணாமூர்த்தி அவர்களும் இ.குகவரதன் அவர்களும் முதலீடு செய்து உதவினர்.
இணுவில் திருவூரின் பொதுப்பணியை நிறைவேற்றவென திருமுருகன் அவர் களின் கண்காணிப்பில் “இணுவில் திரு வூர் ஒன்றியம்” என்னும் செயற்குழு உதய மானது. இக்குழுவில் பேராசிரியர் சபா ஜெய ராசா அவர்கள் தலைவராகவும் திரு.அ. குகதாசன் அவர்கள் செயலாளராகவும் திரு.து.சிவராசா அவர்கள் பொருளாள
இணுவில் ஒலி -

இணுவில் அறிவாலயம்
ராகவும் பேராசிரியர் க.தேவ ராசா அவர்கள், திரு.பொ.நட ராசா அவர்கள், வைத்திய கலாநிதி க.பாலசுப்பிரமணி யம் அவர்கள், திரு.த.கந்த
சுவாமி அவர்கள் சார்ந்த செயற்குழுவும்உறுப்பினர்களாக இணைந்த னர். இக்குழுவினர் தம் பணி சிறக்கத் தாமும் பெருநிதி வழங்கி நூலக நிர்மாண வேலைகளை ஆரம்பித்தனர். இப்பணிக்கு உள்ளூர் மற்றும் புலம்பெயர் நாடுகளைச் சேர்ந்த எமதூர்மைந்தர்கள் காலத்துக்குக் காலம் நிதி திரட்டி வழங்கி வந்தனர்.
இவ்வமைவிடம் முற்காலத்தில் குளக் கரையாக இருந்ததால் ஆறடி உயர மண் பரவியே கட்டட வேலைகள் ஆரம்பிக்கப் பட்டன. அக்காலத்தில் யுத்தகால நெருக் கடியும் போக்குவரத்துச் சீரின்மையும் கட்டடப் பணியைக் காலதாமதமாக்கின. மூன்று வருட காலம் நீடித்தும் அமை விடம் பூர்த்தியாகாத போதும் இவ்வூர் அன்பர்கள் சிலரின் பெரு உற்சாகத்தால் 20.03.2005 அன்று “அறிவாலயம்' என்னும் நூலகமும் அரும்பொருட்காட்சியகமும் பொதுமக்களுக்காகத் திறந்து வைக்கப் பெற்றது.
அறிவாலயக் கட்டடம் 100'X25” விசா லங் கொண்டமைந்தது. இதன் அங்கமாக மேற்கே 20”x25' விசாலங் கொண்ட பகுதி நூலகமும், கிழக்கேயும் அதேயளவு விசா லத்தில் அரும்பொருட்காட்சியகமும் அமைந்தன. வெளிவிறாந்தையில் நாளேடு கள் வாசிக்கும் அமைவிடம் 100'x10' விசா லத்தில் அமைந்தது. இவ்விறாந்தையின் கிழக்கு மேற்கு அந்தங்களில் மன்னர்
- 34

Page 38
நூ.
கட்
கூ.
நிர்
வி.
நிர்
தா
டெ
களான பரராசசேகரன், செகராசசேகரன் தன் ஆகியோரின் ஒன்பதடி முழு உயரச்சிலை களும் அமைந்தன. வடமேல் திசையில்
நூ மின்மோட்டார் இயந்திரம் பொருந்திய நீர்த் தாங்கியும், கீழ்த்திசையில் இணைந்த இரு பிர கழிவறைகளும் நிறுவப் பெற்றன. இவ் வி வமைவிடத்தின் மேலதிக தேவை கருதி
ன இதன் தென்திசையில் 100”x15' விசால இணைப்பு மண்டபத்தில் மேடையும் அமைந்துள்ளது.
பா மேற்கூறிய சகல அமைப்புகளையும் கொண்ட அறிவாலயத்தின் திறப்பு விழா
சுழ வில் வழங்கவென அரியதோர் சிறப்பு மலர் வெளியிடப்பெற்றது. இம்மலரில் தகைமை சார்ந்த கல்விமான்களின் கட்டுரைகள்
டெ இடம்பெற்றமை சிறப்பு. யாழ்.பல்கலைக் கழக இன்றைய பிரதம நூலகர் அருளா னந்தம் ஸ்ரீகாந்தலட்சுமி மலராசிரியராகச் சேவை ஆற்றியுள்ளார். கண்ணியம்மிக்க பலரின் நிதி அன்பளிப்பும் இப்பணிக்குப்
மற் பேருதவியாக இருந்தது. இம்மலரின் சிறப்பு
வர் எமதூரின் சகல வளங்களையும் சேவை
செ களையும் பிரதிபலிக்கச் செய்தமையாகும்
மு மேலும் அறிவாலயப்பதிவுகளின் ஆவணமா
அ கவும் இது உயர்ச்சி பெற்றிருந்தது.
இத்திறப்பு விழாவில் பல பெரியார்கள்
கா. வாழ்த்தவும், சிறப்புரையாற்றவும் தெல்லிப்
மும் பழை துர்க்காதுரந்தரி சிவத்தமிழ்செல்வி
மன தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையார் பூரண ஆசி வழங்கித் திறந்து வைத்தார்.
சே மாலை நிகழ்வில் கலைசார்ந்த உரை .
சா, களும் கலைநிகழ்வுகளும் சிறப்பித்தன. திறப்பு விழாவில் பெருந்திரளான மக்கள் கூடி மகிழ்ந்ததை அற்புதக்காட்சியாகவே
டப் காணமுடிந்தது.
கே இவ்வறிவாலய நூலகத்திற்காக ஏற்க
குடு னவே சேகரிக்கப்பட்ட ஆயிரம் நூல்கள் மருதனார்மடத்திலும் ஏனைய இரண உத டாயிரம் நூல்கள் பல பெரியார்களிடத் திலும் சென்று பெறப்பட்டன. மேலும் பலர் பரிட நேரில் வந்து அரிய நூல்களைத் தந்து பதி
இணுவில் ஒலி
L
கபில்
பது

வினர். முதலில் சேகரித்த மூவாயிரம் பல்களும் அவ்வவ்விடங்களிலிருந்து சலகர் ஸ்ரீகாந்தலட்சுமியிடம் ஒப்படைக் பபெற்றன. அந்த நூல்கள் அவரால் தரம் சிக்கப்பட்டு நிரலிடப்பட்டன. திறப்பு ழாவின் போது நூல்கள் உரிய இடத்தில் வக்கப்பட்டிருந்தமை சிறப்பம்சமாகும்.
அரும்பொருட்காட்சியகத்தில் முன் ட்டியே சேகரிக்கப்பெற்றும் முன்னாளிற் வித்த பொருட்கள் மெருகூட்டியும் மீள் மாணஞ் செய்தும் வைக்கப்பட்டன. பிபுரத்தில் முற்காலத்திற்பாவிக்கப்பெற்ற சட்டைமாட்டுக் கூடாரவண்டி ரூ.38,000/= லையாக வாங்கி அன்பளிப்பு செய்யப் பற்றதை பழுது பார்த்து நிலையத்தில் றுத்தப்பட்டுள்ளது. மேலும் பல கிடைத் ற்கரிய பொருட்களும் பாதுகாக்கப் பற்று வருகிறது.
இப்பொருட்களைத் தந்துதவியவர்கள் மறும் அதனை உரிய முறையிற் சேர்த்த ஈகளை அறிமுகஞ் செய்ய வேண்டும். =ஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிரு ருகன் அவர்கள் தமது அன்பளிப்பாக ரிய நூல்கள் ஆயிரம், இரட்டைமாட்டுக் டார் வண்டில், மற்றும் அரும் பொருட் ப்பகத்துக்கான அரிய பொருட்கள், ன் விறாந்தையில் நிறுவப்பட்ட இரு எனர்களின் சிலைகள் யாவற்றையும் தவினார். ஓய்வுநிலை அதிபா செ. பாதிப்பெருமாள் அவர்கள் ஒலிபெருக்கி தனங்களை வழங்கினார். வைத்திய மாநிதி மூ.பஞ்சலிங்கம் அவர்கள் ஒன் 4 இலட்சம் ரூபா செலவில் இணை மண் த்தை நிறுவினார். இவ்வூர் திருமதி கன ந்திராவின் ஞாபகார்த்தமாக அவரின் ம்ெப உறுப்பினர் மின் மோட்டருடன் ணைந்த நீர்த்தாங்கியை அமைக்க தவினர். தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலய பாலகர்கள் ஈழகேசரி பத்திரிகையைப் ப்பித்த அச்சுயந்திரத்தை வழங்கினார்கள்.
- 35

Page 39
மேலும்பலர் ஐநூறுக்கும் மேற்பட்ட அரும் பொருட்களைத் தந்துதவினர். மேற்கூறிய சகல நூல்கள், பொருட்கள் யாவற்றையும் பேணி அறிவாலயத்தில் சேர்த்த பணி அடி யேனுக்கு கிடைத்ததையிட்டுப் பெருமை யடைகின்றேன். நான்கு வருடங்களுக்கு முன் கோண்டாவிலைச் சேர்ந்த சட்டத் தரணி ஒருவர் ஒரு தொகுதி நூல்களை அன்பளிப்புச் செய்தார். இவை யாவும் புதிய வரவுகளாக வந்து அறிவாலயத்தை அலங்கரித்தன. 2012இல் சிறு திருத்த வேலைகளுடன் கவர்ச்சிகரமான முறை
புதுக்கவிதைக்கு வித்திட்ட வால்ட் விட்மென்
1910 ஆம் ஆண்டளவில் அப் டுக்கோப்புகளை எதிர்த்து ஒரு | உரியவர் வால்ட் விட்மென் ஆ
"யாப்பு பழமையின் சின்ன இலக்கியத்தின் உரைநடைக்கு. மையும் இருத்தல் ஆகாது! வி ஆழமாகவும் விரிவாகவும் எழு நடைக்கும் இடையே வேறுப
அமைதிகள் - அடிமைத் தளை
- என்று வால்ட் விட்மென் பிர | என்றும், பிரஞ்சு இலக்கியத்தை கவிதை முயற்சி தோன்றியது. நாடுகளில் 1910க்குப் பின் பரவிய தமிழ்நாட்டில் வசன கவிதை 6 | மெனின் விசிறி ஆவார். ஆகவே உந்தப்பட்டு வசனக் கவிதை எ பின் புதுக்கவிதையில் ஈடுபாடு | விட்மெனின் பாதிப்புத்தான் ஊ
- “இப் புதுக்கவிதை முயற்ச அமெரிக்க கவிஞர் வால்ட் விட் of Grass) என்ற கவிதை தொகுப். கவிதையின் ஊற்றுக்கண் எல வசன கவிதையைப் படித்தபோ ந.பிச்சமூர்த்தி,
1885 இல் பிறந்த எஸ்ரா ெ தொடர்ந்து புதுக் கவிதைக்குட் பிறந்து ஆங்கில நாட்டில் குடியே ஆகிய மொழிகளிலும் வல்லவ -களைத் துணிவாக எடுத்துச் ெ
இணுவில் ஒலி

யில் வர்ணம் (Paint) பூசப்பட்டமை, மற்றும் மலசலகூடம், குளியலறை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டமை மூலம் இலண்டன் வாழ் இணுவில் ஒன்றியத்தினரின் பரோப காரச் செயல் புலப்படுகிறது. இத்தகைய செயற்பாடுகளை முன்னெடுத்து நின்று உதவிய திருவாளர்கள் கந்தையா விவேகா னந்தன், வைத்திலிங்கம் தனகேசவன் ஆகியோர் பாராட்டப்படவேண்டியவர்கள். மேலும் வேண்டிய உதவிகளும் இவர்களால் வழங்கப்படுவதை எம்மக்கள் வாழ்த்து கிறார்கள்.
- மூ.சிவலிங்கம்.
மெரிக்காவில் பழைய ஆங்கில யாப்புக் கட் | குரல் உரத்து ஒலித்தது. அந்தக் குரலுக்கு
வார்.
சம்! நிலப்பிரபுத்துவத்தின் எச்சம்! புதிய ம் செய்யுளுக்கும் இடையே எவ்வித வேற்று ஞ்ஞானம், சமுதாயம் ஆகியவற்றைப் பற்றி த வேண்டுமென்றால் கவிதைக்கும் உரை Tடு இருத்தல் ஆகாது! பழைய ஆங்கிலம்) மகள்! ரச்சாரம் செய்தார். இதனால் புதுக்கவிதை ப் பின்பற்றிக் கட்டற்ற கவிதை என்றும் புதிய - இது அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பது. ஏறத்தாழ இதே சமயத்தில் தான் பாரதி எழுதத் தொடங்கினார். பாரதி வால்ட் விட் வ பாரதி வால்ட் விட்மெனின் தாக்குதலால் முதத் தொடங்கினார் என லாம். பாரதிக்குப் கொண்ட ந.பிச்சமூர்த்தி தன்னை வால்ட் க்குவித்தது என்கிறார். சிக்கு யாப்பு மரபே கண்டிராத வகையில் மென் எழுதிய 'புல்லின் இதழ்கள்” (Leaves புத்தான் வித்திட்டது. அதைப் படித்த போது எக்குத் தெரியவந்தது. பின்னர் பாரதியின் . து என் கருத்து வலுவடைந்தது” என்கிறார் ..
பெளண்ட் என்பவர் வால்ட் விட்மெனைத் 1 பேரூக்கம் கொடுத்தார். அமெரிக்காவில் யறி இவர் கிரேக்க, இலத்தீன், பிரஞ்சு, சீனம் ராக விளங்கினார். தனக்குப்படும் கருத்துக் ஈசால்லும் ஆற்றல் பெற்றிருந்தார்.

Page 40
விளையாட்டு
தேசிய மட்டத்த வடக்கு, கிழக்
இலங்கை கிரிக்கெட் அணியின் தெரிவுகளு வீரர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர் கிரிக்கெட் அணியில் வடக்கு,கிழக்குத் தமிழ மாகியுள்ளது.
வடக்கிலிருந்து கமலேஸ்வரன் சிலோஜ லிருந்து எஸ்.சஞ்சீவன் ஆகியோரே இலங்ன தற்போது உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான கிரிக்கெட் உபகரணங்க னால் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்ப கிறீர்கள்.
வடக்கு, கிழக்கில் புற்றரை ஆடு களங்கள்! மற்றும் சர்வதேச மட்டத்தில் வடக்கு - கிழ மைக்குப் பிரதான காரணம் என்று சுட்டப்ப கிரிக்கெட் மைதானங்களில் இதுவரை கயிற்று கொண்டு கிரிக்கெட் ஆடப்பட்டு வருகின்றன
இப்போது வடக்கு - கிழக்கு மாகாணங்க படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்திலும், திரு ஆடுகள மைதானங்களை நிறுவிப் பேணுவதற் நிறை வேற்றுக்குழு தீர்மானித்திருப்பதாக 2 ருக்கின்றது.
இணுவில் ஒலி

ந.வி.தரன்
வக்கு உயரும் த கிரிக்கெட்
1 AB
க்குள் வடக்கு, கிழக்கைச்சேர்ந்த மூன்று . இதனால் எதிர்காலத்தில் இலங்கைக் ஊர்களும் இடம்பெறும் வாய்ப்பு பிரகாச
ன், ரிரூஷாந்த் டியூடர் மற்றும் கிழக்கி கக் கிரிக்கெட் அணியின் தெரிவுக்குள்
கள் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தி திகின்றமையையே இப்படத்தில் காண்
டேர்வ் விக்கெட்) இல்லாமையே தேசிய க்கு கிரிக்கெட் பின்தங்கியிருக்கின்ற திகின்றது. வடக்கு - கிழக்கில் உள்ள ப்பாய் விரிப்பையே (matting) தளமாக் ம தெரிந்ததே. ளில் கிரிக்கெட் விளையாட்டை மேம் கோணமலையிலும் இரண்டு புற்றரை கு இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் எத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டி

Page 41
இலக்கியமும் திறனாய்வும்
- நவீன கலை இலக்கியா எண்ணக்கரு ஐரோப்பிய தொன்றாகும். ஆங்கிலக் முறையான ஒழுங்கமைந் வந்துள்ளது. கலைப் படை நுட்பங்களைக் கண்டறிதல் பீடு செய்தல், ஒப்புநோக்கு பாடுகளின் பிரயோகங்கை நியாயப் பாடுகளை முன் கொண்டது. ஆங்கிலக் க னாய்வு என்ற அறிகை மு - சமூக இருப்பும் அதன் களும் கலை இலக்கியத் இட்டுச் சென்றன. கலை 2 சுவையும் இனிமையும் ப படைப்பின் உள்ளமைந்த தப்படல் வேண்டும். அ. நிறைவை அடி யொற்றியே [ யும் முடிவையும் கொள்ள
ஒருகலைப்படைப்பை வ கொண்டு எழும் அறிவு, எ உட்பொதிந்துள்ள உறுமே யில் பிற்காலத்தில் எழுச்சி கல் திறனாய்வு, கட்டுமா அமைத்துக் கொடுக்கப்பட - இலக்கிய ஆக்கத்துக்கு மானவை. மக்களின் பேச்ச கிய ஆக்கத்திற்கு அழகும், விழுமியங்களைப் பாதுகா திறனாய்வின் முன்னெடுப் ரங்களை நோக்காது கலை கவே நோக்குதல்வேண்டும் சாதாரண நிலவரங்களைப் எளிமையான மொழியையு டும். மார்க்சிய அறிவின் . முள்ள இணைப்பைக் க. வந்துள்ளது. என்று முற சந்தர்ப்பங்களில் எடுத்துக்
ட

ங்களிலே குறிப்பிடப்படும் திறனாய்வு என்ற. மரபிலே பிற்காலத்தில் தோற்றம் பெற்ற கல்வி மரபில் திறனாய்வு என்பது வரன் தே கல்விச் செயற்பாடாக வளர்ச்சியுற்று ப்பைக் கற்றல், பகுப்பாய்வு செய்தல், கலை ல், பொருள் கோடல் மேற்கொள்ளல், மதிப் தல், கோட்பாடுகளை உருவாக்குதல், கோட் ளக் கலைப்படைப்புக்களிலே கண்டறிதல், வைத்தல் போன்ற பல பரிமாணங்களைக் கல்வியிற் கட்டமைப்புச் செய்யப்பட்ட திற றைமை தமிழில் உட்புகுந்தது. மன அடியொற்றிய சிந்தனைத் தெறிப்புக்
திறனாய்வு முறைமைகளின் வளர்ச்சிக்கு - இலக்கியங்களின் உன்னத இலக்குகளாகச் பயன்பாடும் இருத்தல் வேண்டும். கலைப் தனித் தனித் கூறுகள் மீது கவனம் செலுத். னைத்து இலக்கியங்களையும் வாசித்த ப குறித்த இலக்கியம் பற்றிய தீர்மானத்தை
முடியும். . வாசிக்கும்பொழுது நுகர்வோரிடத்து இசைவு - முச்சி மற்றும் சித்தவலு அந்தப் படைப்பில் ன்மையுடன் சங்கமித்து நிற்கும். அவ்வகை "கொண்ட புதிய திறனாய்வு, வாசகர் துலங் "னக் குலைப்பு போன்றவற்றுக்குத் தளம் ட்டது. தரிய மொழி பற்றிய கருத்துக்கள் முக்கிய Fமொழி அல்லது இழிசனர் மொழியே இலக் - வளமும் வலு சேர்க்கவல்லது. பண்பாட்டு எத்தலும் நல்ல சுவையைக் கண்டறிதலும் சபுகளாக இருத்தல் வேண்டும். சூழல் நிலவ மஞரின் உணர்வுகளைப் படைப் பின் வழியா ம் என்பது முன்மொழியப்பட்டது. அத்துடன் பும் குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் நிகழ்த்தப்படும் ம் இலக்கிய ஆக்கத்தில் எடுத்தாளல்வேண வளர்ச்சி திறனாய்வுக்கும் கருத்தியலுக்கு ண்டறியும் புலக்காட்சியை வளம்படுத்தி bபோக்கு இலக்கிய ஆய்வாளர்கள் பல - கூறியுள்ளனர்.
காபப்பட்ட சம்பவம் காபட் பா 3 -
38

Page 42
நடைச்சித்திரம்
நாய் ஓட்டம்
அன்று திங்கட்கிழமை வெள்ளவத்தை யிலிருந்து கோட்டையில் இருக்கும் அலுவலகத்துக்குப் போவதற்காக் காலை ஏழு மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டேன். “பிள்ளைகளைக் கூட்டிக்கொண்ட போய் பாடசாலையில் விட்டுவிட்டுப் போங்கள்” என்று மனைவி கூற வழமைக்கு மாறாக இன்று மனைவிக்கு என்ன நேர்ந்துவிட்டது என்று எண்ணியவாறு... பிள்ளைகளைக் கூட்டிப்போய் பாடசாலையில் விடுகிறேன். அப்படியே அலுவலகத்துக்குப் போகலாம் என்று எண்ணியபோது, கண்ணாடியை எடுத்துவரவில்லையே என்று ஞாபகம் வர வீட்டுக்கு ஓடிப்போய் கண்ணாடியை எடுத்துக்கொண்டு பஸ்தரிப்பிடத்துக்கு ஓடிப் போகின்றேன்.
பஸ்ஸில் சரியான சனநெருக்கம். ஒரு மாதிரி ஏறி பஸ்நடத்துநரிடம் இருபது ரூபா கொடுத்தேன். அவன்காசை வாங்கினானே. தவிர டிக்கட் தரவில்லை. உள் மனதுக்குள் ஒரு பயம் டிக்கட் பரிசோதகர் இடையில் ஏறி டிக்கட் எங்கே என்று கேட்டால் என்ன செய்வது என்று நினைத்தபடி நடத்துநரி டம் டிக்கட் என்று கேடட்டேன். அவன் முன்னுக்குப் போங்கோ என்று சிங்களத் தில் சொன்னனே தவிர டிக்கட் தரவில்லை. சனநெரிசலுடன் நின்றபடி ஒருவாறு கோட்டையில் போய் இறங்கிவிட்டேன்.
து E இ தி ஏ 2 2 2 அ சி ஒ ஓ ஒ ஒ உ இ ஒ 1. 2 1s ES
க
2 ,,,
இணுவில் ஒலி

பின் கால்சட்டைப் பையில் இருந்த பேர் ஸைக்காணவில்லை. பதறிப் போனேன். பேர்ஸில் அடையாள அட்டை, ஏ.ரி.எம். காட், பணம் எல் லாமே பறிபோய்விட் டது. அலுவலகத்தில் முக்கியமான வேலை
இருந்தும் பேர்ஸைப் றிகொடுத்த மனவேதனையில் வேலை பில் நாட்டம் செலுத்தவில்லை. அலுவலக நண்பர் தியாகுவிடம் காலையில் நடந்த பிவரத்தைச் சொன்னேன். அடையாள அட்டை தொலைந்தால் பொலிஸில் ஏன்றி "பாடவேண்டும் என்று நண்பர் சொன் எார். அன்று அரைநாள் லீவைப் போட்டு பிட்டு வெள்ளவத்தைக்கு வந்து அங் கள்ள பொலிஸ் ஸ்ரேசனுக்குப் போகின் றன். அங்கு அடையாள அட்டையைத் "தாலைத்துவிட்டேன். அதனால் என்றி பாட வந்தனான் என்றேன். ஒரு கிழமை ழித்துவா என்று அங்கு சொன்னார்கள். ன் ஒரு கிழமை கழித்து வரவேண்டும் ன்று கேட்க அடையான அட்டை எடுத்த "ன் சிலவேளை உமக்கு அனுப்பியும் வைக்கலாம் அதனால்தான் ஒரு கிழமை பாறுத்து வாரும் என்று அந்த பொலிஸ் Tரன் கூறினான்.
வீட்டுக்கு வந்து மனைவியிடம் விவரத் தக் கூற “நீங்கள் எதிலும் அக்கறை "ல்லை” என்று மனைவியின் சான்றிதழ்
ளைப் பெற்றுக்கொண்டு உடுப்புக்களைக் முற்ற முற்பட்டேன்.
மனைவி ஓடிவந்து உடுப்புக்களைக் முற்றவேண்டாம். ஓடிப்போய் இரண்டு தங்காயும் ஒரு கிலோ சீனியும் வாங்கி பாருங்கோ என்றான். என்ன செய்வது
39

Page 43
வாங்கிக் கொடுத்தே ஆகவேண்டும். கடைக்கு ஓடுகிறேன். மனைவி சொல்லிய சாமான்களை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு உடுப்பை மாற்றப் போக.. “இஞ்சருங்கோ உப்புக்குச் சொல்ல மறந்து போனேன் ஒருக்கால் வாங்கித் தந்து. விடுங்கோ” என்று கூறத் திரும்பவும் கடைக்குப் போகப்புறப்பட்டு “என்னப்பா தூள் உப்போ? கட்டி உப்போ?” என்று மனைவியைப் பார்த்துக் கேட்டேன். கட்டி உப்பாவாங்கிவாங்கோ கெதியாக என்றாள். மீண்டும் கடைக்குப் போய் உப்பை வாங்கி வந்து மனைவியிடம் கொடுக்கின்றேன்.
“இஞ்சருங்கோ அப்பா, அக்காவின்ரை மகள் அவசரமாக யாழ்ப்பாணம் போக வேணுமாம் ஓடிப்போய் அக்காவுக்கும் மகளுக்கும் இரண்டு டிக்கேற்பஸ்சுக்கு புக் பண்ணிப் போட்டு வாங்கோ” என்று கூறி காசையும் தந்தாள் என் பத்தினி. என்ன செய்வது அதையும் செய்து கொடுக்க பஸ் புக்கிங் இடத்துக்குச் சென்று இரண்டு டிக்கட் பெற்றுக் கொண்டு உடன் வீட்டுக்கு வருகின்றேன். வீட்டுக்கு வந்ததும் அக்கா அவை வீட்டுக்குக் கொண்டு போறதற்கு ஒரு பத்து அப்பிள் வாங்கிக்கொண்டு ஓடி வாங்கோ, அவையை ஏழு மணிக்கு கூட் டிக்கொண்டு போய் பஸ்ஸிலை ஏற்றிவிட வேண்டும் என்றான் என் மனைவி.
பாராட்டி வாழ்த்துகின்றோம் எமது பாடசாலையைச் சேர்ந்த மாணவி செல்வி தேவதர்சினி தர்மகுலசிங்கம் கடந்த வருடம் 2012 இல் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் ஒன்பது பாடங்களில் A சித்தி பெற்று சாதனை படைத்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துத் தந்துள்ளார். இவர் கல்வியில் மேலும் பல சாதனைகளைப் பெற பாராட்டி
வாழ்த்துகின்றோம். பாடசாலைச் சமூகம், யா/இராமநாதன் கல்லூரி. இணுவில் ஒலி -

விடியத் தொடங்கி ஒரே அலைச்சலா கத்தான் கிடக்கு என்று புறுபுறுத்தபடி அப்பிள் வாங்கக் கடைக்குப் போகின்றேன். வீட்டுக்கு வந்து அப்பிளை அவர்களிடம் கொடுத்துவிட்டு, சந்திக்கு ஓடிப்போய் ஒரு ஓட்டோ பிடித்து வந்து அவர்களையும் அவர் களது பொதிகளையும் ஏற்றிக் கொண்டு பஸ்தரிப்பிடத்துக்குச் செல்லுகின்றோம். ஓட்டோவை விட்டு இறங்கியதும் சிலிப்பர் களை போடாமல் வந்துவிட்டன் தயவு செய்து ஓட்டோவில் போய் எடுத்து வாறி யளே என்று மனைவியின் அக்கா சொன் னதும் வீட்டுக்குப் பொய் அவவின் செருப்பை எடுத்தவந்து கொடுக்கின்றேன். யாழ்ப்பாணம் போற பஸ் இன்னும் வர வில்லை. விடிய ஏழு மணிக்குப் போட்ட உடுப்பு இன்னும் கழற்றவில்லையே என்று எண்ணியபடி பஸ்சை எதிர்பார்த்து நிற்கின் றேன். விடியத் தொடங்கி ஒரே அலைச்சல் முகமும் உடம்பும் நன்றாகச் சேர்ந்துவிட் டன. இதைத்தான் எம்மவர்கள் “நாய் ஓட்டம் என்று சொல்லுகிறார்களோ? யார் எது சொன்னாலும் என்ரைபாடு உண்மை யிலேயே நாய் ஓட்டம்தான். - சு.வசந்தன்.
புதுவரவு இணுவில் மத்திய கல்லூரி
"மத்திய தீபம்” இணுவில் மத்திய கல் லூரி உயர்தர மாணவர் மன்றம் 'மத்திய தீபம்' என்றும் மலரை வெளிக் கொணர்ந்துள்ளது. மாண வர்களின் ஆற்றல்களை
வெளிப்படுத்தும் வகை யில் பல்வகைப்பட்ட ஆக்கங்கள் இம்மல ரில் இடம்பெற்றுள்ளன. அறவுசார் ஆற்றல் மிகு சமுதாயத்தை உருவாக்குவதற்கு இத் தகைய முயற்சிகள் பெரும் உந்துசக்தியாக அமையும், மலராசிரியர் திருமதி கலை வாணி மகாலிங்கசிவம் தமது சிறப்பாக பணியை ஆற்றியுள்ளார்.

Page 44
9 பூபாலசிங்க
பரபரப்புபாரா11ாயார்
THEIR SNILAN JANEIUNUH
ஆங்கி
ப யபசாலக்ரகாம் போரட்டானம் |
41, 4:TuzIT N #%I
ப க நத சரி :4
202, 340, செட்டியார்
தொ.எண் : 2422 தொலைநகல்

பம் புத்தகசாலை
யல்
இலங்கையராலவரலாறு
இருமராக்கு.
- 14. 14 1-1 +1 :
f" 11 உற்சாப் அபாயம்
9 பாலா.s (அப்பனாகம்
தெரு, கொழும்பு - 1 232, 2435713 5: 2337313