கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆசிரியம் 2012.12

Page 1
செ
கல்வியில் உற்றுழல்
வானம்
'சூழல்
அழியற்சை
41யல்
*அறிவுச் சமூகத்தின் வேட்கை வினைத்திறன் மிக்க ஆசிரியர்" 00336
இதழ் 20
- டிசம்பர்
--1-11-11 - 17455-பாம்
விளைதிறன்மிகு பாடசாலைகளும் ஆசிரியர்களும்
மனவெழுச்சிகளை முறைப்படுத்தி வாழ்தலும்
ஆசிரியரும்
மாணவர்களின் அழுகுரல்கள்..
ஆர்.லோகேஸ்வரன்/ க.இரஞ்சினி
ச.தேவசகாயம் / இ.துஷாந்தன்/
த.மனோகரன்/ தே.செம்மன.
சகாப

ISSN 2021-9041
Aasiriyam(pedagogy) -
எல்லையற்று விரியும் அறிவுத்தளம்.
2012
ரூபா 100/-
மலாலா
கி.புண்ணியமூர்த்தி/த.மனோகரன் F.சுப்பிரமணியம்/சபா.ஜெயராசா ச்செல்வி/அன்பு ஜவஹர்ஷா

Page 2
விசேட கழிவுகளுடன்...
பாடசாலை கற்றல் உபகரணங்கள் ம மொத்தமாகவும் சில்லறையாகவும்
Importers Office/S
8888888
CHEMAMADU B
UG.50 People's Park, C Tel:011-2472362, 2321905 F
Mob:0777279983, 077 31474 E-Mail:chemamadu@yahoo.com Web:

ராறு
ற்றும் கொப்பிகள், புத்தகங்கள் இங்கு பெற்றுக்கொள்ளலாம்.
chool Stationary
R&888 DOK CENTRE Colombo -11
ax: 011-2448624 142, 077 8323561 site:wwww.chemamadu.com

Page 3
உள்!
மனவெழுச்சிகளை முறைப்படுத்தி .....
மாணவரும் சமூக விருத்தியும்
விளைதிறன்மிகு பாடசாலைகளும் .....
பாடசாலை முகாமைத்துவத்தில்...
ஆரம்ப இடைநிலைக் கல்வியில் கணிதம்
சிறுவர் உரிமைகள் மீறப்பட்ட ......
உளப்பகுப்பியலை மறுவாசிப்புக்கு......
சமய பாடம் தரம் பேணப்பட வேண்டும்
பிள்ளையார் பிடிக்கப்போய்...
நமது பிரச்சினைகளுக்கு ஆசிரியத்தில்
ஆசி
தொடர்புகளுக்கு
தெ.மதுசூதனன்
காசுபதி நடராஜா மர்சூம் மௌலானா அ.ஸ்ரீகாந்தலட்சுமி
படைப்புகள் அனுப்ப :
aasiriyam@gmai. mathusoothanan2
பணம் அனுப்ப
Chemamadu book Chemamadu book

ள்...
ஆர்.லோகேஸ்வரன் 05
க.இரஞ்சினி
09
6.புண்ணியமூர்த்தி
13
ச.தேவசகாயம்
18
இ.துஷாந்தன்
21
ச.சுப்பிரமணியம்
24
சபா.ஜெயராசா
28
த.மனோகரன்
31
தே.செம்மனச்செல்வி
34
தீர்வுகள்... அன்பு ஜவஹர்ஷா
37
ரியம்?
077 1381747 / 011 23663097 0212227147
0777 333890 077 4747235
0777 286211
1.com 22@gmail.com
- centre - BOC Bank - A/C NO:8081150 - centre - COM Bank - A/C- NO:1120017031

Page 4
ஆசிரியரிடமிருந்து...
போராடத் தூண்டும் மலாலா...!
இன்று சர்வதேசமெங்கும் ஒலிக்கும் குரல் மலாலா. அவள் தனது கல்வி கற்கும் உரிமைக்கா தொடர்ந்து குரல் கொடுத்து வந்தாள். இதனால் தலிபான்களின் காட்டு மிராண்டித் தனமான கொடுமைக்கு இலக்கானாள். மலாலா சிந்திய இரத்தம் யாவருக்கும் கல்வி, கல்வி அடிப்படை உரிமை முதலானவற்றை மறுக் கும் பிற்போக்குவாதிகளின் முகத்திரையை கிழிக்கும் ஆயுதமாக மாறியுள்ளது. உலகெங்கும் கல்வியின் அடிப்படை உரிமைக்காகப் போராடும் அனைத்துப் போராட்ட சக்திகளுக்கும் மலாலா சக்தி வழங்குபவளாக மாறியுள்ளாள். மலாலா சுடப்பட்ட முப்பதாவது நாளை (நவம்பர் 10ஐ) மலாலா நாளாக கொண்டாடுமாறு ஐ.நா பொதுச் செயலாளர் பான் கின் மூனின் உலகக் கல்விக்கான சிறப்புத் தூதரும் இங்கிலாந்து முன்னாள் பிரதமருமான கார்டன் பிரவுன் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் மலாலா மற்றும் பள்ளி செல்லும் உரிமை மறுக்கப்படும் 32 மில்லியன் பெண் குழந்தைகளை
"ஃறிவும் சமூகத்தின வேட்கை வினைத்திறன் மிக்க ஆசிரியர்" I Aா)
ISSN 2021-9041
ஆசிரியர் : தெ.மதுசூதனன் இணை ஆசிரியர்கள் :
அ.ஸ்ரீகாந்தலட்சுமி எம்.என்.மர்சூம் மெளலானா
காசுபதி நடராசா
ஆசிரியர்குழு : பேரா.க.சின்னத்தம்பி பேரா.சபா.ஜெயராசா பேரா.சோ.சந்திரசேகரன்
பேரா.எம்.ஏ.நுஃமான் சிறப்பு ஆலோசகர்கள் : சுந்தரம் டிவகலாலா
ச.சுப்பிரமணியம் சி.தண்டாயுதபாணி அன்பு ஜவஹர்ஷா வல்வை ந.அனந்தராஜ்
த.மனோகரன் Printed by: cb தொடர்புகளுக்கு : "Aasiriyam" 180/1/50 5
E-mail : aasiriyam@gmail.com, Web
' டிசம்பர் 2012

நினைவுகூறும் நாளாகவும் கடைப்பிடிக்கப்படும் என்று
கார்டன் பிரவுன் தெரிவித்திருந்தார்.
புதன்கிழமை ஜனவரி 14: ஒருவேளை நான் இனி பள்ளிக்குச் செல்லமாட்டேன்.
"நாளை முதல் குளிர்கால விடுமுறை தொடங்கு கின்றது. எனக்கு இன்று பள்ளிக்குக் கிளம்பவே மனமில்லை. பள்ளி முதல்வர் விடுமுறை அறிவித்த போதும் அவர் விடுமுறை முடிந்து எப்போது பள்ளி தொடங்கும் என்கிற தேதியை அறிவிக்கவில்லை.
முன்பெல்லாம் பள்ளி தொடங்கும் நாள் மிகத் துள்ளியமாக அறிவிக்கப்படும். பள்ளி முதல்வர் அவ்வாறு அந்தத் தேதியை அறிவிக்காமல் இருந்ததற் கான காரணத்தைக் கூறவில்லை. ஆனால், தலிபான்கள் இனிப் பெண் குழந்தைகள் ஜனவரி 15 முதல் பள்ளிக்குச் செல்லக்கூடாது என்று தடை விதித்திருப்பதான் காரணமென்று நான் மனதில் அனுமானித்தேன்.
தலிபான்கள் பள்ளிக்குச் செல்ல பெண்களுக்கு தடை விதித்தால் இனி நாம் பள்ளிக்குச் செல்லவே
Aasiriyam ucximizzy;
சிசியம்
எல்லையற்று விரியும் அறிவும்
மாத இதழ் - 20
ஆலோசகர் குழு : பேரா.மா.கருணாநிதி பேரா.மா.சின்னத்தம்பி பேரா.மா.செல்வராஜா முனைவர் த.கலாமணி
ஆய்வாளர்.தை.தனராஜ் முனைவர் அனுஷ்யா சத்தியசீலன் முனைவர் ஜெயலக்சுமி இராசநாயகம்
செ.அருண்மொழி
சு.முரளிதரன் பொ.ஐங்கரநேசன் ஓ.எல்.எம்.அஸ்ஹர் நிர்வாக ஆசிரியர் :
சதபூ.பத்மசீலன் இதழ் வடிவமைப்பு :
வை.கோமளா
2 prees, Tel: 0777 345 666 People's Park, Colombo -11,Tel: 011-2331475 Ewww.chemamadu.comlaasiriyam.aspx
- ஆசிரியம்

Page 5
முடியாது என்பதை பெண்கள் அறிந்திருந்ததால் இந்த முறை விடுமுறையை நினைத்து எவரும் உற்சாக மடையவே இல்லை. சில பெண்கள் பிரச்சினை தீர்ந்து பெப்ரவரியில் பள்ளி தொடங்கிவிடும் என்று நம்பிக்கை யுடன் இருந்தனர். சிலர் தங்களின் பெற்றோர் நிச்சயம் கல்விக்காக இந்த ஸ்வாத் பகுதியிலிருந்து வெளியேறி வேறு பகுதிகள் நோக்கி சென்று விடுவார்கள் என்று திடமாய் இருந்தார்கள்.
இன்று பள்ளியின் இறுதிநாள் என்பதால் நாங்கள் விளையாட்டு மைதானத்தில் சற்று நேரம் கூடுதலாக விளையாடினோம். நிச்சயம் ஒருநாள் இந்தப் பள்ளிக் கூடம் திறக்கும் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்த போதிலும் ஏதோ கடைசியாகப் பார்ப்பது போல நான் பள் ளிக் கட்டிடங்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.” வியாழக்கிழமை ஜனவரி 15 துப்பாக்கி ஓசை நிரம்பிய இரவு
இன்றைய இரவு முழுவதும் துப்பாக்கி சுடும் ஓசை கேட்டுக் கொண்டே இருந்தது. நான் மூன்று முறை நித்திரையிலிருந்து எழுந்தேன். நாளை பள்ளி விடுமுறை என்பதால் காலதாமதமாக காலை பத்து மணிக்குத்தான் எழுந்தேன். அதன் பின் என் தோழி வர வீட்டுப்பாடங்க் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.
தலிபான்கள் மீண்டும் ஸ்வாத் பகுதி பள்ளிகளை குறிவைத்துள்ளார்கள். (டயறி குறிப்பிலிருந்து..)
இன்று ஜனவரி 15. தலிபான்கள் பிறப்பித்துள்ள தடைகள் அமுலுக்கு வர இன்னும் ஒரு நாள்தான் உள்ளது. ஆனால் என் தோழி அதன் சுவடே இல்லாமல் வீட்டுப்பாடங்களை பற்றி மட்டும் விசாரித்துக் கொண்டிருந்தாள்.
இன்று நான் பிபிசிக்காக (உருது) எழுதிய டயறிக் குறிப்புக்களை வாசித்துக்கொண்டிருந்தேன். அவை நாளிதழ்களிலும் பிரசுரமாயிருந்தன. என் அம்மாவுக்கு எனது பெயர் குல்மகாய் பிடித்திருந்தது. அதைப் பார்த்துவிட்டு அம்மா அப்பாவிடம் ஏன் இவளது பெயரை நாம் இனி குல்மகாய் என மாற்றிவிட கூடாது என பேசிக்கொண்டிருந்தாள். எனக்கு இந்த புதிய பெயர் பிடித்திருக்கிறது. ஏன் என்றால் எனது பழைய பெயர் மிகுந்த சோகமான என்று அர்த்தமுடையது.
சில தினங்கள் முன்பு என் டயறிக் குறிப்புகளை அப்பாவின் நண்பர் ஒருவர் பிரிண்டவுட் எடுத்து வந்து எத்தனை அற்புதமாக எழுதியிருக்கிறாள் என்று சிலாகித்தது பற்றி அப்பா குறிப்பிட்டார். (டயறி குறிப்பிலிருந்து...)
' டிசம்பர் 2012

அவளது "சரகமா பசாய்
மலாலா என்பவள்...
மலாலா யூசப்சாய் பாகிஸ்தானின் ஸ்வாத் பகுதி யைச் சேர்ந்தவள். அவளது தந்தை ஜியாவுத்தீன் யூசப்சாய் ஒரு கவிஞர். மலாலா என்றால் மிகுந்த சோகமான என்று அர்த்தம். இந்தப் பெயரை அவளது அப்பா பஷ்தூன் கவிஞர் மலாலாவின் நினைவாக தனது மகளுக்குச் சூட்டியிருந்தார்.
தனது பையன்கள் நித்திரைகொண்ட பிறகும் கூட இரவில் நீண்ட நேரம் வரை தனது மகளுடன் அரசியல், சமூகசூழல் என நாட்டு எதார்த்த நிலைகளைப் பேசிக் கொண்டே இருப்பார், விவாதித்துக் கொண்டிருப்பார். இந்த உரையாடல்களின் வழியே ஒரு ஆளுமைப் பெண்ணாக தனது வயதையும் மீறி அவள் வளர்ந்து வந்தாள். எப்போதும் சுதந்திர மனப்பான்மையுடன் உலவி வந்தாள்.
இந்த ஸ்வாத் பகுதி முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஸ்வாத்தின் எல்லைதான் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியாக உள்ளது. தலிபான்கள் ஸ்வாதிப் பிரதேசத்தில் வன்முறை களில் ஈடுபட்டு ஆப்கானில் மறைந்து விடுவார்கள். இதனாலேயே இப்பிரதேசத்தில் பாகிஸ் தான் இராணுவமும் அளவுக்கு அதிகமாகக் குவிக்கப்பட் டுள்ளது. இந்தப் பெரும் படைகளின் இருப்பு அந்தப் பகுதியின் இயல்பு வாழ்க்கையை மெல்ல மெல்ல அபகரித்து வந்தது. பலருக்கு இதுபற்றிய மனவருத்தம் இருப்பினும் அதனை வெளிப்படுத்த இயலாத சூழல் அங்கு நிலவியது. வசதி படைத்த சிலர் மெல்ல இடம்பெயர்ந்து சென்றாலும் ஏழைகள் மற்றும் இந்த நிலத்தின் மீது காதல் கொண்டவர்களால் அங்கிருந்து
அகல இயலவில்லை.
தலிபான்கள் அங்கு அடிக்கடி திடீர் கட்டுப்பாடு களை தடைகளை விதிப்பது சாதாரணம். இதனை அவர்களின் பண்பலை வானொலியில்தான் அறிவிப்பார் கள். இந்த அறிவிப்புகள் அந்த மலைகளின் நிறத்தை மாற்றும் பலம் கொண்டவை. பெண்கள் மீது குறிப்பாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மீது அதீத கட்டுப்பாடு களை விதிப்பார்கள். இங்கு பெண்கள் கல்வி கற்பது தலிபான்களுக்கு வேப்பங்காயாக இருக்கும். உலகின் எல்லா அடிப்படை வாதக் குழுக்களும் மதத் தீவிரவாதக் குழுக்களும் முதலில் குறிவைப்பது அங்குள்ள சமூகப் பெண்களையே ஆகும்.
மலாலா தனது தந்தையுடன் அடிக்கடி வெளியே சென்று வருவாள். ஒருமுறை ஒரு கூட்டம் ஒன்றிற்குச் சென்றிருந்தாள். அங்கு பலதரப்பட்டவர்களும் கூடி யிருந்தனர். அந்த அரங்கில் மலாலா "எனது அடிப்படை உரிமையான கல்வியைத் தலிபான்களால் எப்படிப் பறிக்கமுடியும்” என்றால். அத்தருணத்தில் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிபிசி நிருபர் ஒருவர் - "தலிபான்கள் அடக்குமுறையில் பள்ளி மாணவிகளின்
01
ஆசிரியம்

Page 6
வாழ்க்கை” என எழுதக்கூடிய ஒருவரை தேடிக்கொண்டி ருந்தார். அப்போதுதான் மலாலா தான் எழுதுவதாக முன்வந்தாள். முன்பு இப்படி எழுதுவதாக ஒத்துக் கொண்ட பெண் ஒருவர் பின்னர் தலிபான்களுக்குப் பயந்து ஒதுங்கிக்கொண்டாள்.
மலாலாவின் பாதுகாப்புக் கருதி அவள் தனது உண்மைப் பெயரில் எழுதாமல் "குப்மகாய்” எனும் புனைப்பெயரில் எழுதத்தொடங்கினாள். ஜனவரி3, 2009இல் தான் அவளது முதல் டயறிக் குறிப்பு பிபிசி உருது வலைத்தளத்தில் வெளியானது. இந்த டயறிக் குறிப்புக்களுக்கு உலகம் முழுவதும் வாசகர்கள் உருவானார்கள். தலிபான்கள் அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பள்ளிகளை குண்டு வைத்து தகர்த் தது பற்றியும் மேலும் தடையை ஏற்று மூடியிருந்த பள்ளி கள் தகர்க்கப்பட்டமை குறித்தும் பல்வேறு தகவல்களை
ஆவேசமாகப் பதிவு செய்யத் தொடங்கினாள்.
பள்ளிகள் தகர்க்கப்பட்டபோதும் மலாலா தனது பரீட்சைகளுக்காகப் படித்துக்கொண்டிருந்தாள். எப்படி யும் நிலைமை சரியாகிவிடுமென்று அவள் நம்பிக்கை யுடன் இருந்தாள். இப்பிரதேசத்தில் பாகிஸ் தான் இராணுவம் தனது கடமையை சரிவரச் செய்யவில்லை எனவும் பலசமயம் ஆதங்கப்பட்டாள். ஒருமுறை அவள் பாகிஸ்தான் பிரதமர் சர்தாரியின் மகள் ஸ்வாத் பகுதியி லுள்ள பள்ளியில் பயில்பவளாக இருந்தாள் இங்கு நிலைமை இவ்வாறாக இருக்காது என்றும் எழுதினாள்.
இங்குள்ள மக்கள் பெரும்பாலும் குடும்பம் குடும் பமாக ஸ்லாமாபாத், பெஷாவர் முதலான நகரங்கள் நோக்கிச் செல்லத் தொடங்கினர். அங்கு நண்பர்களின் வீடுகளில் தங்கத் தொடங்கினர். மலாலா தனது ஸ்வாத் பகுதியுடன் எல்லா நகரங்களையும் ஒப்பிட்டுப் பார்த் தாள். தொடர்ந்து அவளது டயறிக்குறிப்புகள் பிரபல மானது. இதனையடுத்து மலாலாவைப் பற்றி நியூயோர்க் கைச் சேர்ந்த ஒரு ஊடகம் ஆவணப்படம் ஒன்றை எடுத் தது. இந்தப் படம் வெளியானதும் மலாலா பாகிஸ்தானில் பலர் அறியப்படும் நபராக, ஆளுமையாக உருவாகி வந்தாள்.
மலாலா அடிக்கடி தொலைக்காட்சிகளிலும் நாளிதழ்களிலும் பேட்டிகள் அளித்து வந்தாள். சர்வதேச குழந்தைகள் அமைதி விருதுக்கு மலாலாவின் பெயர் விதந்துரைக்கப்படும் நிலமையும் உருவானது. இதனை அறிந்த பாகிஸ்தான் அரசு உடனே மலாலாவுக்கு தேசிய குழந்தைகளுகள் அமைதி விருது வழங்கி கெளரவித்தது. இந்த நடவடிக்கைகளெல்லாம் தலிபான்களுக்கு பெரும் எரிச்சலைக் கொடுத்தது. அவர்களின் கூட்ட விவாதப் பொருளாக மலாலா மாறினாள். தலிபான்கள் ஏகமன தாக அவளைக் கொல்ல முடிவுசெய்தார்கள். அக்டோபர் 9,2012 அன்று தலிபான்களின் குண்டுகள் மலாலாவைப் பதம் பார்த்தது. ஆம்! பள்ளி சென்று வீடு திரும்புகையில் மலாலா குண்டுகள் பாய்ந்து வீழ்ந்தாள். ஆனால் அவள் உயிர் பிழைப்பாளா? என்பதே பெரும் சந்தேகமாக
//T
ராக
டிசம்பர் 2012

இருந்தது. உலகம் முழுவதும் மலாலாவுக்கு ஆதரவாக போராட்டங்கள் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
பாகிஸ்தான் அரசு அவளைக் காப்பாற்ற தீவிர முயற்சியில் இறங்கியது. மேலும் தீவிர சிகிச்சை அளிக்க அவள் உடனே லண்டனுக்கு அழைத்துச் செல்லப்பட் டாள். அங்கு பிரிட்டன் பிரதமர் இணையத்தில் “நானும் ஒரு மலாலா” என்கிற மனுவை சுற்றுக்கு விட்டார். மலாலா தலிபான்களின் குண்டுகள் தன்னை நோக்கி பாயும் என்பதை எந்தக் கணமும் எதிர்பார்த்துதான் காத்திருந்தாள். இப்படியொன்று தனக்கு நிகழும் என்பதை முன்னுனர்ந்தவளாகவே இருந்தாள். இதனை யும் கூட அவள் தனது டயறியில் எழுதியிருந்தாள். "நான் அடிக்கடி தலிபான்கள் என்னை கொல்ல வரும் காட்சி பற்றி யோசித்திருக்கிறேன். அவர்கள் நிச்சயம் என்னைக் கொல்லவரும் சந்தர்ப்பத்திலும் கூட நான் அவர்களிடத் தில் நீங்கள் செய்வது தவறு கல்வி என்பது எனது அடிப்படை உரிமை” என்று வாதிடுவேன் என்கிறாள்.
நமக்கான பாடம்...
இன்று இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ் போன்ற நாடுகளில் கல்வி கற்கும் உரிமை மறுக்கப்பட்டு எண்ணற்ற பெண் குழந்தைகள் வாழ்ந்து வருவதும் எதார்த்தமாக உள்ளது. இதுபோல் இலங்கையிலும் கல்வி கற்கும் வாய்ப்புகள் முழுமையாக மறுக்கப்பட்டு வரும் பெண்கள் எம்மிடையே அனேகம் பேர் உள்ளனர். இதுவரையான யுத்தப் பிரதேசங்களிலும் பின்தங்கிய கிராமப்புறங்களிலும் மற்றும் பெருந்தோட்டப் புறங்களி லும் பெண்களுக்கான கல்வி வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டி ருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
இவர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் உரிமைகளுக்காகப் போராடும் சமூக சக்திகள் அனைத்து மட்டங்களில் இருந்தும் உருவாகாமல் இருப்பது வேத னைக்குரியது. இன்றைய கல்விக்கொள்கை வகுப்பாளர் கள் "உலக வங்கி” போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் அடிவருடிகளாக இருந்து செயற்படுவதைவிட பாதிப்புக் குள்ளானவர்கள் நிலையிலிருந்து அவர்களுக்கு முழுமை யான கல்வியைப் பெற்றுக் கொடுப்பதற்கான சமூக எதார்த்தத்தைப் பாதுகாப்பது மேலானதாகும். இதன் அடிப்படையில் தான் இலங்கைக்குப் பொருத்தமான கல்விக்கொள்கையை நாம் உருவாக்க முடியும்.
இன்று கல்வி என்பது நமது அடிப்படை உரிமை என்று வாதிடுவோருக்கு மலாலா ஒரு புதிய சக்தியை வழங்குகிறாள். கல்வி உரிமையை மறுத்து வருபவர் களுக்கு எதிராகப் போராடும் துணிச்சலையும் ஆத்ம பலத்தையும் வழங்குபவளாகவும் மாறியுள் ளாள். பன்னாட்டளவில் மலாலா நன்கு அறியப்பட்டாலும் நமது சமூகச் சூழலில் மலாலா போன்ற ஆளுமைகளின் வருகைக்காக நமக்கு இன்னும் காத்திருப்புக்கள் நிறையவே உள்ளன.
தெ.மதுசூதனன்
4)
-ஆசிரியர்

Page 7
மனவெழுச்சிகளை முறைப்படு
ஆசிரியரும்
ஒரு உயிரிடத்து உள்ளும், புறமும் ஏற்படும் உணர்வு சார்ந்த மாற்றம் மனவெழுச்சி எனப்படும். இது ஒருவரது உள்ளத்துள் சாதாரணமாக எப்போதும் காணப்படுவதொன்றாகும். ஆரம்ப காலங்களில் உளவியலாளர்கள் மனவெழுச்சி தொடர்பாக அதிக கவனம் செலுத்தாத போதும் அண்மைக்காலங்களில் இதற்கு கூடிய முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கி யுள்ளனர். இவர்களுள் பிரட் ஜஸ் (Bridges) என்ற உளவியலாளர் "உடலையும் உள்ளத்தையும் கிளர்ச்சி அடையச் செய்யும் நிலையே” மனவெழுச்சி என அடையாளப்படுத்தியுள்ளார். பிள்ளை பிறந்த மூன்று மாதத்தில் மனவெழுச்சி தூண்டல்/ உணர்ச்சியை தோற்றுவித்தல் என்பவற்றின் ஊடாக ஆரம்பித்து அதன் வாழ்நாள் முழுவதும் தொடர்வதாக குறிப்பிடுகின்றார். மனவெழுச்சி தொடர்பாக யுங் (P.J. Young) என்பவர் "ஓர் உயிரியின் கிளர்ச்சியுற்ற நிலையே மனவெழுச்சியாகும்” என வரையறை செய்கின்றார். இம் மனவெழுச்சிகளை அன்பு, அச்சம், சினம், மகிழ்ச்சி, அழுகை முதலிய செயற்பாடுகளால் மனிதர்கள் வெளிப்படுத்துவதாகவும்
டிசம்பர் 2012

த்தி வாழ்தலும்
ஆர்.லோகேஸ்வரன்
குறிப்பிடுகின்றார். அத்தோடு மனவெழுச்சியின்போது ஒருவர் மகிழ்ச்சி - மகிழ்ச்சியின்மை, கவனித்தல்புறக்கணித்தல், செயலற்றநிலை - செயலுறுநிலை என ஏதேனும் இரு முனைப்பட்ட உணர்வுக்கு உட்படு வதாகவும் சுட்டிக்காட்டுகின்றார்.
அண்மைக்காலத்தில் பன்முக நுண்மதி தொடர்பான கருத்துக்களை முன்வைத்த ஹோவார்ட் காட்னர் (Howard Gadner) மனிதனிடம் வெளிப்படுத்தப்படும் நுண்ணறிவுத் திறன்கள் எல்லாவற்றுக்கும் மேலாக மனவெழுச்சிசார் நுண்மதி பற்றிய ஆழமான கருத்துக் களை முன்வைத்தார். ஒருவர் தம்மை முழுமையாக விளங்கிக்கொள்ளவும், தனக்கும் ஏனையோருக்கும் இடையில் தொழிற்பாட்டை இசைவுபடுத்தவும் துணை யாக மனவெழுச்சிசார் நுண்மதியே அடிப்படையாக அமைகின்றது என்கின்றார். மனவெழுச்சிகளை கட்டுப்படுத்தி/ முறைப்படுத்தி வாழ முடியாத ஒருவரால் வாழ்க்கையில் வெற்றிபெற முடியாது என்றும் அவ்வா றானவர்கள் வாழ்க்கையில் தோல்வியடைவதாகவும் குறிப்பிடுகின்றார். இன்று கற்றவர்கள் கூட தமது
பாக
5
-ஆசிரியம்

Page 8
வாழ்க்கையில் மனவெழுச்சிகளை முறைப்படுத்தி வாழத் தவறுவதால் பிழையான முடிவுகளை எடுப்பதாகவும் கூறுகின்றார்.
மேற்படி காட்னரின் கருத்துக்கேற்றாற்போல் இன் றைய நெருக்கடிமிக்க சூழலில் பாடசாலை வயதிலேயே பிள்ளைகள் மனவெழுச்சிகளை கட்டுப்படுத்தி வாழ முடியாமல் அல்லலுறுவதாகவும் இதனால் பல சந்தர்ப்பங்களில் பிழையான அல்லது வழிதவறிய முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் பல ஆய் வுகள் வெளிப்படுத்துகின்றன. எனவே இன்று பாடசாலைகளில் மாணவர் மனவெழுச்சிகளை முறைப் படுத்தி வாழ பயிற்றுவிக்க வேண்டியது ஆசிரியர்களின்
முக்கிய கடமைகளில் ஒன்றாக நோக்கப்படுகின்றது.
இவ்வாறு மாணவரது மனவெழுச்சிகளை முறைப் படுத்தி வாழப் பயிற்றுவிப்பதை இலக்காகக் கொண்டு செயற்படும் ஆசிரியர்கள் தாம் அதற்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட வேண்டியதன் அவசியம் இன்று உணரப்பட்டுள்ளது. எனவே ஆசிரியர்கள் தாம் எவ்வாறு தமது மனவெழுச்சிகளை முறைப்படுத்தி வாழ வேண். டும் என்பது பற்றியே இக்கட்டுரையில் ஆராயப்படுகிறது.
ஒருவர் எவ்வளவு மிகுதியாக நுண்ணறிவையும், உள ஆற்றலையும் பெற்றிருப்பினும் அவர் மனவெழுச் சியை முறைப்படுத்தி வாழ முடியாதிருப்பின் அவரால் தமது வாழ்க்கையில் வெற்றியடைய முடியாது. அதாவது ஒருவர் தமது சூழ்நிலைக்கேற்ப பொருந்தி வாழ்தல் என்பது அவரது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடிப்படை யானதாகும். இங்கு பொருந்தி வாழ்தல் என்பது பிறரது உணர்வுகளையும், மனவெழுச்சிகளையும் புரிந்துக் கொள்ளுதல், தமது மனவெழுச்சிகளை தீவிரமாக வெளிப்படுத்தாமல் அவற்றை சமூகக் கட்டுப்பாடுகள், எதிர்பார்ப்புகளுக்கேற்ப வெளிப்படுத்துதல், சமூக நலனுக்காக தமது நலனை தேவைப்படும் போது விட்டுக்கொடுத்தல் போன்ற அனைத்தும் அடங்கும். இவ்வாறாகப் பொருந்தி வாழ மனவெழுச்சி முதிர்ச்சியும், அதனை முறைப் படுத்தி வாழ்தலும் ஒருவருக்கு அவசியமானதாகும்.
ஒருவர் மகிழ்ச்சியுடன் வாழ அறிவும், பொருளா தாரமும் வசதி வாய்ப்புக்களும் போதுமானது வேறு எதுவும் தேவையற்றது என்ற கருத்தே நீண்டகாலமாக கூறப்பட்டு வந்தது. ஆனால் அவை மட்டும் போதுமான தல்ல. ஒருவரின் மனதில் ஊக்கத்தை ஏற் படுத்தி செயலாற்றல் அழிக்கக்கூடிய மனவெழுச்சிகளும், மனசமநிலையுமே வாழ்க்கைக்கு இன்றியமையாதது என்பதை மானிடவியலாளர்களும், உளவியலாளர்களும் எடுத்துக் காட்டியுள்ளனர். அதேபோல் ஒருவரின் வெற்றிகரமான வாழ்க்கைக்கு தேவைப்படும் அறிவு
டிசம்பர் 2012

திறனைவிட மனவெழுச்சியின் பங்கே மிகப் பெரியது என்பதை தற்போது மேல்நாட்டு அறிஞர்களும் தமது
ஆய்வுகளில் வெளிப்படுத்துகின்றனர். இதனையே,
"மனிதனானவன் மனவெழுச்சி என்ற பரந்த கடலில் மிதக்கும் ஒரு சிறு அறிவுத் துரும்புக்குச் சமனானவன்”
என்று மனவெழுச்சியின் பரந்த தன்மையினையும், அதன் முக்கியத்துவத்தினையும் மனவெழுச்சி தொடர் பான ஆய்வுகளை செய்த சகல உளவியலாளர்களும் எடுத்துக்காட்டுகின்றனர்.
சகல உ
இந்த வகையில் இன்றைய சமூக சூழலில் மனித வாழ்வில் அறிவுதிறன், பொருளாதார வளம் என்பவற் றைக் காட்டிலும் என்றுமில்லாத வகையில் மனவெழுச்சி களும் வலுவுடன் செயற்பட்டு வருவதை நாம் கண்கூடாக காண முடிகின்றது. எனவே மனித வாழ்வில் இம் மனவெழுச்சி வெளிப்பாட்டால் ஏற்படும் துன்பத்திலி ருந்து விடுபட்டு ஒவ்வொருவரும் தம் மனவெழுச்சிகளை முறைப்படுத்தி வாழ்வது இன்றியமையாதது என்பது இன்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. காரணம் மனவெழுச்சிகளை முறைப்படுத்தத் தவறும் போது அது ஒருவரின் உள்ளத்தை மட்டுமன்றி உடலை யும் அதிகம் பாதிக்கச் செய்யும் என்பதோடு, குறிப்பிட்ட நபரின் உளசமநிலையை குழைக்கச் செய்து, சிந்திக்கும் ஆற்றலையும் தடைசெய்து, இறுதியில் வாழ்க்கையே சிதைவுற காரணமாக அமையும் என்பதும் அறியப்பட் டுள்ளது.
இவ்வாறு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய மனவெழுச்சி வெளிப்பாடுகள் இன்று குறிப்பிட்ட ஒரு சாராருக்கு மட்டுமன்றி மனித குலத்தையே பாதிக்கின்ற ஒன்றாக பரிணாமம் பெறத் தொடங்கியுள் ளது. பொதுவாகவே இன்றைய அரசியல், சமூக, பொருளாதார சூழலில் அனைத்து மனிதர்களுமே (சிறுவர் தொடக்கம் முதியோர் வரை) மனவெழுச்சிப் போராட்டங்களுக்கு உட்பட்டே வாழ்கின்றனர். இதில் ஆசிரியர்கள் மட்டும் விதிவிலக்கானவர்கள் அல்ல. ஆசிரியர்களை பொறுத்தவரை, © பொருத்தமற்ற தொழில் தெரிவு.
தொழிலில் திருப்தியின்மை.
@ @ பி.
தொழிலில் போதியளவு வருமானமின்மை.
தமது கற்றல் அடைவுக்கேற்ப பதவி வழங்கப் படாமை.
தமது தொழிலில் முன்னேற வாய்ப்பு கிடைக்காமை.
அடக்குமுறையுடன் கூடிய மேலாண்மையின் கீழ் பணியாற்ற வேண்டியுள்ளமை.
உ ஆசிசியம்

Page 9
தொழில் ரீதியாக ஏற்பட்டு வரும் போட்டித்தன்மை.
@ @@ ராம்
தொழிலுக்கு ஏற்ற கௌரவம் கிடைக்கப் பெறாமை. @ நிர்வாக மட்டத்தில் எல்லோரும் ஒரே நிலையில்
கருதப்படாமை.
கல்வி, தொழில்சார் தகைமைக்கு ஏற்ப பொருத்த மான பதவிகளில் அமர்த்தப்படாமை. பாடசாலையில் அதிகரித்து செல்லும் வேலைப் பழு.
பொருளாதார ரீதியாக அதிக நெருக்கடிக்குட்படு கின்றமை.
போன்ற காரணங்களால் பெரும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதுடன் அதனால் மன அழுத்தங்களுக்கும், வேதனைக்கும் உட்பட் டே பணியாற்றுகின்றனர். இதனால் தாம் செல்லும் வகுப்பறைகளில் அல்லது பாடசாலையில் தம்மை அறியாமலே எதிர்மறையான மனவெழுச்சிகளை வெளிப்படுத்துகின்றனர். குறிப்பாக,
9
தமது கோப தாபங்களை மாணவர் மீது வெளிப் படுத்துதல். பாடசாலையில் சக ஆசிரியர்களுடன் எப்போதும்
முரண்பட்டுக் கொள்ளுதல்.
ஏனைய ஆசிரியர்களையும், உயர் அதிகாரிகளை யும் உதாசீனப்படுத்துதல்.
பொது செயற்பாடுகளில் இருந்து எப்போதும் பின்வாங்குதல்.
எந்த ஒரு விடயத்திலும் ஆர்வமின்றி செயற்படுதல்.
தமது அன்றாட செயல்களில் தாமதம் காட்டுதல்.
@ @ © ®©
எப்போதும் அதிக கோபப்படுதல். விரக்தியான மனநிலையுடன் நடந்துகொள்ளுதல்.
சமூகத்திலிருந்து தனித்துப்போக முயற்சித்தல்.
மற் றோருடன் அளவளாவுவதை தவிர்த்துக் கொள்ளுதல்.
அனேகமான சந்தர்ப்பங்களில் பதகளிப்புடன் அல்லது பதட்டத்துடன் செயற்படுதல். பொது இடங்களில் தகாத வார்த்தை பிரயோகங் களை மேற்கொள்ளுதல்.
பாடசாலையிலும் வெளிச் சூழலிலும் ஒதுங்கி வாழ
முயற்சித்தல்.
பாடசாலையில் ஏனைய பணியாளர்களுடன் பகைத்துக்கொள்ளுதல்.
| டிசம்பர் 2012 12

போன்ற மனித சமூகத்துக்கே அல்லது மனித நாகரிகத்துக்கே பொருத்தமற்ற, முரணான நடத்தைகளை வெளிப்படுத்த முற்படுகின்றார்.
இவ்வாறு தமது மன உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது. அவற்றை வெளிப்படுத்தும் நிலை யானது பகைமை, பயம், பதகளிப்பு, பதட்டம், பொறுமையின்மை, மனமுறிவு, சகிப்புத்தன்மையின்மை, தகைப்பு, கவலை, மனச்சோர்வு, ஆற்றல் சிதைவு போன்ற உளரீதியான பாதிப்புகளுக்கும் தூக்கமின்மை, ஜீரணசக்தி குறைதல், சுவாசித்தலில் இடையூறு விளைதல், விரைவான இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம் போன்ற உடல்ரீதியான பாதிப்புகளுக்கும் உட்பட்டு இறுதியில் வாழ்க்கையில் அல்லலுறுகின்றனர். இன்று பாடசாலைகளில் கடமைபுரியும் அனேகமான ஆசிரியர் கள் இவ்வாறான மன அழுத்தங்களுக் கும், மன போராட்டங்களுக்கும் உட்பட்டே தமது காலத்தை கழிக்கின்றனர்.
மேற்கூறியவாறு பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வாழ்ந்தாலும் மாணவரின் மனவெழுச்சிகளை முறைபடுத்தி வாழ பயிற்றுவிப்பதும் தமது இலக்குகளில் ஒன்றாக கொண்டு செயற்படும் ஆசிரியர்கள் தமது வாழ்க்கையில் மனவெழுச்சிகளை முறைப்படுத்தி வாழ பழகிக்கொள்வது மிக அவசியமானதாகும். இதனையே உளவியலாளர்களான மேயர், சலோபி போன்றோர் “மனவெழுச்சி சமாளிப்பு” என குறிப்பிடுகின்றனர். அதாவது மனவெழுச்சிகளை முறைப்படுத்தி பிறரோடு சமாளித்துக் கொள்ளும் இயலுமை ஆசிரியர்களுக்கு இருக்க வேண்டும் என்கின்றனர். அதேபோல் உளவிய லாளர் ஜெர்சீல்டு (Jerisield) என்பவரும் ஆசிரியர்கள் தமது மனவெழுச்சிகளை வெளிப்படுத்துவதில் கட்டுப் பாடுகளுடனும், விரைவின்றியும் செயற்பட வேண்டி யதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேற்படி உளவியலாளர்களின் கருத்துக்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் தமது மன உணர்வுகளை முறைப் படுத்தி மனவெழுச்சி சமநிலையுடன் வாழ்வது என்பது இன்றைய சமூக அமைப்பில் இன்றியமையாததும் மாணவர் சமூகத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் அமையும். இதற்கு ஆசிரியர்கள் தமது தொழில் வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும்,
தமது கோபத்தை அடக்க பழகிக்கொள்ளுதல்.
9
போட்டி மனப்பான்மையைத் தவிர்த்து அனைவரு டனும் சமத்துவமாக வாழ பழகிக் கொள்ளுதல்.
தோல்விகளை சாதகமாக எண்ணும் மனநிலையை உருவாக்கிக் கொள்ளுதல்.
அ.
ஆசிசியம்

Page 10
தாழ்வு மனப்பான்மை இன்றி வாழ்தல்.
விரைந்து விரும்பக்கூடிய வகையில் பிறருடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ளுதல். எவருடனும் விட்டுக்கொடுத்து வாழ பழகுதல்.
கூட்டாக/ இணைந்து வாழ பழகிக்கொள்ளுதல். சகோதர மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுதல்.
தம்மிடம் எப்போதும் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுதல்.
சகிப்புத் தன்மையுடன் வாழ பழகிக் கொள்ளுதல்.
@ )
பொறுமையை கடைப்பிடிப்பவராக வாழ பழகிக் கொள்ளுதல்.
நல்ல நகைச்சுவை உணர்வை தன்னுள் வளர்த்துக் கொள்ளுதல்.
மாணவர்களுடனும், சக ஆசிரியர்களுடனும் சீரான இடைத்தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுதல். உடற்சார் பயிற்சியிலும், மனஓய்வுக்கான பயிற்சியி லும் ஈடுபடுதல். (வாழும் கலைப் பயிற்சி, தியானம், யோகா போன்ற வற்றை முறையாக மேற்கொள்ளல்) சாரணர் இயக்கம், செஞ்சிலுவை சங்கம் போன்ற சமூக சேவை இயக்கங்களில் இணைந்து செயற்படுதல்.
அறநெறி செயல்களில் ஈடுபாடு காட்டுதல்.
நுண்கலை செயல்களில் ஈடுபாடு காட்டுதல். (இசை, நாடகம், ஓவியம், இலக்கியம் போன்றவற்றில்)
நல்ல நூல்களை விரும்பி வாசித்தல் (சமூக பெரியார்களின் வாழ்க்கை வரலாறு, இலக்கிய நூல்கள் போன்றன)
தொழில் திருப்தியுடன் வாழப் பழகுதல் (எந்த தொழிலும் நல்ல தொழிலே என்ற மனநிலை யுடன் வாழ்தல்)
இது போன்ற நல்ல பழக்கங்களை அல்லது நடத்தைகளை வாழ்வில் பரீட்சையமாக்கிக் கொள்ளுதல் மிக அவசியமானதாகும். இவ்வாறான பழக்கங்களை/ நடத்தைகளை பின்பற்றுவதன் மூலம் தமது மனஉணர்வு களை முறைப்படுத்தி தம் வாழ்விலும், பணியிலும் வெற்றி பெற முடியும். இவ்வாறான பழக்கங்களே இன்றைய ஆசிரியர்களிடம் எதிர்பார்க்கப்படுகின்றது. இப் பழக்கங்களை பின் பற்றி வாழ்வது என் பது கடினமான ஒரு செயலல்ல. அது அவர் அவர் மனதை பொறுத்ததாகும்.
டிசம்பர் 2012

முடிவுரை
இன்றைய சூழலில் மனிதர்கள் தமது வாழ்வில் ஒவ்வொரு நிமிடமும் மனவெழுச்சிப் பிரச்சினைகளுக்கு உட்பட்டே வாழ வேண்டியுள்ளது. குழப்பங்களும், அவலங்களும், தொல்லைகளும் நிறைந்த இவ்வுலகில் மனவெழுச்சிக் கட்டுப்பாடு இன்றி வாழ்ந்தால் வாழ்வு பெரும் பாதிப்புக்குள்ளாகி துன்பநிலையை எய்த நேரிடலாம். மாறாக மனவெழுச்சியை கட்டுப்படுத்தி அதனை முறைப்படுத்தி வாழ்வதன் மூலமே வாழ்க்கை யில் வெற்றிபெற முடியும்.
இன்று நம்மத்தியில் பலர் தவறான முடிவுகளை எடுத்து தமது வாழ்வைகூட மாய்த்துக் கொள்வதற்கு அடிப்படையாக அவர்கள் தமது மனவெழுச்சிகளை முறைப்படுத்தி வாழ முடியாமையே முக்கியமான காரணம் என கண்டறியப்பட்டுள் ளது. ஆகவே ஆசிரியர்கள், எதிர்காலத்தில் பிள்ளைகள் தமது சிறுபராயத்திலிருந்தே மன உணர்வுகளை கட்டுப்படுத்தி வாழவும், மனநிம்மதியோடு வாழவும் பாடசாலை காலத்திலேயே அவர்களுக்கு பயிற்றுவிக்கும் பணியை தமது இலக்குகளில் ஒன்றாக கொண்டு செயற்படுவ துடன் தாமும் மன உணர்வுகளை முறைப்படுத்தி மாணவர் சமூகத்துக்கு முன்மாதிரியானவர்களாக வாழ வேண்டியது காலத்தின் தேவையாகும்.
** *
-ஆசிரியம்

Page 11
மாணவரும் ச
அறிமுகம்
மாணவரிடம் ஏற்படும் நடத்தை மாற்றங்களைப் பற்றிய அறிவே கல்வி உளவியலாகும். உளவியலானது பல பிரிவுகளைக் கொண்டுள் ளது. அவை பொது உளவியல், நியம் உளவியல், பிரயோக உளவியல், குழந்தை உளவியல், பிறழ்நிலை உளவியல், சமூக உளவியல் என்பனவாகும். குழந்தை உளவியல் என்பத னுள் பிள்ளை வளர்ச்சியும் விருத்தியும் உள்ளடக்கப்படு கின்றது. விருத்தியில் பல்வேறு வகைகள் காணப்படு கின்றன. அவற்றுள் சமூக விருத்தியும் ஒன்றாகும்.
பிள்ளைகளின் பல்வேறு வயது மட்டங்களில் காணப்படும் தொழிற்பாடுகள் பற்றிய விபரங்களைக் கவனமாக அவதானம் செய்து விருத்தி நியமங்கள் பெறப்படுகின்றன. நாம் எவருமே தனித்து வாழ முடியாது. இன்றைய வாழ்க்கை முறைகளில் மனிதத் தொடர்பு முக்கிய இடம் வகிக்கின்றது. சமூகத்துடனும் சமூக நியமங்களுடனும் ஒத்து வாழும் ஒருவர் தன் வாழ்வில் எதிர்ப்படும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வார்.
டிசம்பர் 2012

ழக விருத்தியும்
க.இரஞ்சினி
பிள்ளை வளர்ச்சியும் விருத்தியும்
விருத்தி என்பது மாற்றம் என்பதைக் குறிக்கின்றது. எனினும் பிறப்பு முதல் இறப்பு வரையிலான எல்லா நிகழ்வுகளையும் விருத்தியில் அடக்கிவிட முடியாது. விருத்தி என்பது ஒருவரிடத்தே நிகழும் படிமுறையான மாற்றங்களின் தொடராகும். அது ஒரு விருத்திச் செயன்முறை ஆகும். அதன் பெறுபேறு மாற்றம் ஆகும். எனவே விருத்தியானது மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு செயன்முறையாகும் என கல்வியியலாளர்கள் கூறுகின்ற - னர். Hurlock இனது கருத்தின் படி விருத்தி என்பது ஒழுங்கான படிமுறையான ஒன்றுடனொன்று பொருந்தி யமையும் முன் செல்லுகின்ற ஒழுங்கு முறையைக் கொண்ட ஒரு செயன்முறையாகும்.
ய!
ஒருவரின் விருத்தி இரண்டு விதங்களில் நிகழுகின் றது. அவற்றுள் ஒன்று அளவு ரீதியானது. மற்றது பண்பு ரீதியானது. உடல் நிறை, உடலின் பருவம், சொற்களஞ்சியம் போன்றவை இலகுவாக அளக்கத்தக்க அளவு ரீதியான இயல்புகளில் ஏற்படும் மாற்றங்கள் ஆகும். நுண்மதி, மனவெழுச்சி, சமூகவிருத்தி, ஆளுமை ஆகிய அம்சங் களில் நிகழும் மாற்றம் பண்பு ரீதியான விருத்தி எனக் கருதப்படுகிறது.
ஆசிரியம்

Page 12
பிள்ளை விருத்தியில் செல்வாக்குச்செலுத்தும் காரணிகள்.
பரம்பரை, சூழல், முதிர்ச்சி, கற்றல் முதலியவற்றைக் குறிப்பிடல்.
விருத்திப் படிநிலைகள்:
பிறப்புக்கு முந்திய பருவம், குழந்தைப் பருவம், பிள்ளைப் பருவம், கட்டிளமைப்பருவம், முதுமைப்
பருவம்
விருத்தி வகைகள்:
உடல் விருத்தி, உள விருத்தி, மனவெழுச்சி விருத்தி, மொழி விருத்தி, ஆளுமை விருத்தி, அழகியல் விருத்தி, ஆக்கத்திறன் விருத்தி, அறவொழுக்க விருத்தி, சமூக விருத்தி முதலியன முக்கியமாகின்றது.
விருத்திச் செயன்முறை:
உயிரியற் செயன்முறைகள், அறிகை செயன்முறை கள், சமூக மனவெழுச்சி செயன் முறைகள் என வகைப்படுத்தலாம்.
விருத்தி தொடர்பான வாதங்கள்
இயற்கை எதிர் பேணி வளர்த்தல், தொடர்ச்சியானது எதிர்படிநிலையானது, நிலையானது எதிர்மாறும் தன்மையது எனவும் அடையாளப்படுத்தலாம். சமூக விருத்தி
சமூக விருத்தியானது உடல் விருத்தி, உள் விருத்தி, மனவெழுச்சி விருத்தி என்பவற்றுடன் இணைந்த ஒன்றாகும். பிள்ளைகளின் உடலமைப்பு, மனவெழுச்சி, முதிர்ச்சி, உளத் தொழிற்பாடு, தன்னைப் பற்றிய கருத்து ஆகியன எல்லாம் அவர்கள் கொண்டுள்ள சமூகத் தொடர்பிலும், சமூக மனப்பான்மைகளிலும் தங்கியுள்ளன. சிறு குழந்தைகளின் உடல் தேவை பூர்த்தி செய்வது தொடர்பாகவே சமூக விருத்தி ஆரம்பிக்கின்றது.
எமது நடத்தைகள் அதிகளவில் சமூகத்துடன் தொடர்பானவை. எவரும் சமூக உணர்வின்றிச் சுயமாக எதையும் செய்வதில்லை. எமது வாழ்க்கை முறைகளைப் பிறருடன் பகிர்ந்து வாழ்வதே நாகரிகத்தின் சிறப்பாகும். பிறருடன் திருப்தியான தொடர்புகொள்ளும் வகையி லேயே எமது ஒழுக்கப் பண்புகளை விருத்தி செய்கின் றோம். ஒத்துழைத்தல், சண்டையிடல், போட்டி, பின்பற்றல் ஆகியன மூலம் சமூகத்தில் எமக்கென இடத்தை வகிக்கின் றோம். இத் தொழிற் பாடு சமூகமயமாதல் எனப்படும்.
குடும்பம், பாடசாலை, கிராமம் ஆகியன மூலமும் வானொலி, திரைப்படம், தொலைக்காட்சி, பத்திரிகை முதலான சமூகமயமாக்கும் சாதனங்கள் மூலமும் ' டிசம்பர் 2012

பிள்ளைகள் பெறும் அனுபவங்கள் அவர்களின் சமூக விருத்திக்கு உதவுகின்றன. இவ்வாறு அவர்களின் சமூகச் சூழல் விரிவடைந்து தமது சுற்றாடலுக்கு அப்பாற்பட்ட கலாசாரங்களையும், சமூகப் பண் புகளையும் கொண்டதாக விரிவடையும்.
சமூக விருத்தி தொடர்பான வரைவிலக்கணம்
மனிதரது சமூகம் சார் விருத்தி என்பது, அவர் வாழுகின்ற சமூகத்தில் பிணக்கின்றி இணக்கமாக வாழ்வதற்குரிய அறிவு, திறன், மனப்பாங்கு, மனவெழுச்சிகள் ஆகியவற்றைத் தன்னுள்ளே வளர்த்துக் கொள்வதாகும். தான் வாழும் சமூகத்தின் வாழ்க்கை விழுமியங்கள், பண்பாட்டுக் கோலங்கள், அறநெறி, ஒழுக்க விதிகள், சமூக உறவுகள் ஆகியவற்றுக்கு இணங்க அச் சமூகத்தோடு பொருத்தப்பாடு அடைந்து வாழ்வதற் கேற்ப உள்ளார்ந்த வளர்ச்சிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
உடல் விருத்தி, உள் விருத்தி, மனவெழுச்சி விருத்தி ஆகியவற்றினின்றும் ஒருவருடைய சமூகம் சார் விருத்தி யைப் பிரித்து நோக்க முடியாது. மனிதர் ஒரு சமூகப் பிராணி. மனிதர் சமூகத்தைப் பிரிந்து தனித்து வாழ முடியாது. மனிதரது நடத்தைகள் சமூகத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது.
சமூக விருத்திக் காரணிகள்
குடும்பம், பாடசாலை, கிராமம், சகபாடிகள், வெகுசனத் தொடர்பு சாதனங்கள் முதலானவற்றைக் குறிப்பிடலாம்.
சமூக விருத்தி தொடர்பாக உளவியலாளர் கருத்துக்கள்
குழந்தைகள் இயற்கையாக தன் முனைப்புக் கொண்ட உளநிலை உடையவராயிருப்பர். தம்மோடு உறவு கொள்பவர் எல்லோரும் எமது உளத் தேவைகளுக்கு ஏற்பத் தம்மை மாற்றிக்கொள்ள வேண்டுமென விரும் புவர். எல்லாப் பிள்ளைகளும் தன் முனைப்பு மைய மாகவே இருப்பர். ஆனால் வயது அதிகரிக்க அதிகரிக்க மற்றவர்களுடன் பொருத்தப்பாடடைந்து சமூகமயமாகும் குணவியல்புகளைப் பெற்றுக் கொள் கின்றனர் என வயிலட் என்னும் உளவியலாளர் கூறுகின்றார்.
லோறன்ஸ், ஸ்கொட் முதலிய உளவியலாளர்கள் மிருகங்களுக்கு இல்லாத மனிதருக்கு மாத்திரமேயுள்ள உடல், உருவ அமைப்பானது சமூகமயமாக்கலை எளிதாக்க துணைபுரிகின்றது எனக் கூறுகின்றனர். மூளையில் உள்ள கலங்கள், உடல், இழையங்களுக்குச் சமூகமயமாதலுக்குரிய வலுவைக் கொடுப்பதாக அவர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். சிறுவயதிலே
- ஆசிரியம்
10 |

Page 13
ஏற்படுகின்ற இத்தகைய சுயமான தசை முதிர்ச்சி, குழந்தைகளிடம் சமூகத்திற்கு ஏற்ப நடக்கின்ற சக்தியை விருத்தி செய்துகொள்ளத் துணைபுரிவதாக கூறப்பட்டுள் ளது. இவ்வியல்பை பியாஜே “தன்மயமாக்கல்” எனக் குறிப்பிடுகின்றார். குழந்தை பால் குடியை மறக்கும் பருவத்திலே எதிர்காலத்தில் அக் குழந்தை யாராக வருவார் என்பது தீர்மானிக்கப்பட்டு விடுகின்றது என சிக்மன்ட் புரோய்ட் கூறுகின்றார். சமூக விருத்திப்பண்புகள்
பெற்றோர் பிள்ளைகளைக் கட்டுப்படுத்தினால் அவர்களின் மனப்பாங்குகளில் மாற்றம் ஏற்பட இடம் உண்டு.
முன்கட்டிளமைப் பருவப் பிள்ளைகள் பெற்றோரை மதிப்பர். ஆனால் அவர்களின் கட்டுப்பாட்டி லிருந்து விலகி நண்பர் குழாத்தின் கட்டுப்பாடு களுக்குப் பணிய விரும்புவர்.
சில சந்தர்ப்பங்களிலே சமூக ஒழுக்கங்கள், சம்பிரதாயங்கள் ஆகியவற்றை அலட்சியம் செய்வதன் மூலம் பெற்றோருக்குத் தொல்லை கொடுப்பர். சமூக ஒழுக்க விதிகளுக்கு மாறான எதிர்ப்புச் செயல்களில் பிள்ளைகள் ஈடுபடுவதில் இன்பம் பெறுவது இயல்பு. இப் பருவத்தினர் பெற்றோரைப் பார்க்கிலும் சகபாடிகளின் குழுக்களில் அதிக பரிவும் நாட்ட மும் காட்டுவர். சகபாடிகளின் குழுக்கள் குடும்பத் தில் பெற முடியாத உரிமை உணர்வை அவர்களுக்கு வழங்குகின்றனர். இவர்கள் சுதந்திரத்தைப் பெரிதும் விரும்புவதால் எவரும் தம்மை மேற்பார்வை செய்வதை விரும்ப மாட்டார்கள். சமூகத்தில் சுதந்திரமாக நடமாடு
வதை விரும்புவார்கள். சமூக விருத்தி ஒப்பீடு
உடல் விருத்தி, உள விருத்தி, மனவெழுச்சி விருத்தி ஆகியவற்றினின்றும் ஒருவருடைய சமூகம் சார் விருத்தியைப் பிரித்து நோக்க முடியாது.
ஏனைய விருத்திகளின் மூலம் அடைப்படும் வளர்ச்சியே சமூக விருத்தியாக இறுதியில் அடையப்படுகின்றது. ஒழுக்க விருத் தியானது சமூக நெறி, சமூக விழுமியங்கள் மூலம் மதிப்பீடு செய்யப்படுகின்றது. ஒழுக்க விருத்தி ஏற்படுவதற்குச் சமூக விருத்தி இன்றியமையாததாகும்.
டிசம்பர் 2012

இன்றைய நடைமுறையில் ஏனைய விருத்திகளை விட சமூக விருத்திக்கு அறிஞர்களாலும், ஆய் வாளர்களாலும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படுகின்றது. அதன் மூலம் "சமூகமயகாக்கல்"
செயன்முறை நிகழ்கின்றது. சமூகமயமாக்கல் செயற்பாடுகள்
சமூகத்திலே சிறார் தமக்குரிய இயக்கமுள்ள இடத் தைப்பெற்றுக்கொள்ளல் சமூகமயமாக்கல் எனப்படும்.
நிபந்தனைப்படுத்தல், உற்றுநோக்கல், ஒன்றித்தல், பின்பற்றுதல், மூத்தவர்களை மாதிரிகளாகக் கொண்டு ஒழுகும் நடவடிக்கைகளால் சிறார்கள் சமூகத்தில் உள்ளவர்களைப் பின்பற்றி வாழப் பழகிக் கொள்கிறார்கள்.
பெற்றோரும், ஆசிரியரும் சிறார்களின் நல்ல நடத்தைகளுக்குப் பாராட்டு வழங்கும் போது, மீள வலியுறுத்தல் தரும் பொழுது சிறார்களிடத்து சமூக நடத்தைகள் நெறிப்படுகின்றன.
சிறார்களின் ஆரம்ப நிலைச் சமூகமயமாக்கல் அவர்களது தேவைகளுடனும், உந்தல்களுடனும் இணைந்தவையாக இருக்கும்.
உணர்வுகளையும், மனவெழுச்சிகளையும் தூண்டும் நிலைமைகள் சிறார்களுக்குத் தேவைகளாக வுள்ளன. இது எழுச்சி சார்ந்த தேவை என்றும் குறிப்பிடப்படும்.
தமக்கு மகிழ்ச்சியூட்டுபவர்கள், உற்சாகமூட்டுப் வர்கள், வியப்பூட்டுபவர்கள் முதலியோரின் நடத்தைகளைப் பின் பற்றும் பொழுது சமூக விருத்தி ஏற்படும். சமூக விருத்தி அதனுள்ளேயே ஒரு வெகுமதிப் பெறு மானத்தையும் கொண்டிருக்கும். சமூகத்தோடு இசைந்து பழகும் பொழுது கிடைக்கும் ஏற்புடைமை சமூகமயமாக்கலின் உள்ளமைந்த வெகுமதியா கின்றது.
சமூக *கும் பொழுகும். சமூக
ஆசிசியம்

Page 14
வால்ரர் மிச்சேல் என்பவர் சமூகமயமாக்கலின் உளவியற் பண்புகளை வலியுறுத்திய பொழுது பிரதான கருத்தை முன்மொழிந்தார். சமூகமய மாக்கச் செயல்முறை எப்பொழுதும் ஒருவரது "தற்கட்டுப்பாட்டுடன்” இணைந்ததாக இருக்கும். தற்கட்டுப்பாடு என் பது தாமதித்துப் பெரிய வெகுமதிகளைப் பெறும் பொருட்டு ஒவ்வொருவரி டத்தும் உடனடியான தற்கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி விடுகின்றது. தற்கட்டுப்பாடு அற்றவர்கள் போதுமான சமூக மயமாக்கல் திறன் அற்றவர்கள் என்பதே மிச்சேலின் கருத்தாகும். சமூகமயமாக்கல் அறிகை அடிப்படையிலும், குறியீட்டு அடிப்படையிலும், உள் ளத் திலே பதிவுகளை ஏற்படுத்துகின்றது. தவறான நடத்தைகளைத் தவிர்த்துக் கொள்வதற்குக் கற்றுக் கொள்ளல் சமூகமயமாக்கல் தொடர்பான
அறிகையாகின்றது.
சமூக விருத்தியானது சமூக அறிவு,ஒழுக்க அறிவு, பண்பாட்டு அறிவு முதலியவற்றுடன் இணைந்த நடத்தை உருவாக்கத்துடன் தொடர்புடையது. உளவியல் ஒருங்கிணைவை ஏற் படுத்துதலே சமூகமயமாக்கலின் உன்னதமான உளவியல்
இலக்காகக் கொள்ளப்படுகிறது. நடைமுறையில் சமூக விருத்தி
பிள்ளைகளின் சமூகமயமாதல் வீட்டிலே ஆரம்ப மாகின்றதெனினும் பாடசாலைக் கல்வி மூலமே திட்டமிடப்பட்ட, முறைமையான சமூகமயமாதல் நிகழும்.
ஆரம்பப் பாடசாலையில் பிள்ளைகளின் ஆராய் ஆக்கத்தை நிறைவேற்ற வேண்டிய சுய முயற்சி களில் ஈடுபடவும் அறிவை வளர்க்கவும் பெரியோர், நண்பர் ஆகியோரிடம் கூட்டு மனப்பான்மையை வளர்க்கவும் தேவையான வசதிகள் அளிக்கப்பட வேண்டும்.
இடைநிலைப் பாடசாலையில் கட்டிளமையினர் சமூகக்கல்வி, விஞ்ஞானம், நுண்கலை ஆகிய பாடங்கள் மூலம் சுயமுயற்சி, சமூகப் பணி ஆகிய வற்றில் ஈடுபடவும் தமது நாட்டத்திற்கேற்ற கல்விப் பணிகளில் முன்னேறிச் சமூக மதிப்புப் பெறவும், பிழையான பொருத்தப்பாடு, நடத்தைப் பிரச்சினைகள் ஆகியவற்றுக்குத் தீர்வுகாணுமாறுகுழுமுறை வழிகாட் டல் பெறவும் வசதிகள் அளிக்கப்பட வேண்டும்.
டிசம்பர் 2012

©
சிறுவர்கள் மீது அதிக செல்வாக்குச் செலுத்தும் விசையினராக உடன் குழுவினர் விளங்குகின்றனர். குடும்ப உறுப்பினர்களிடம் கிடைக்காத திருப்தி உடன் குழுவினரிடம் கிடைக்கின்றது.
கீழ்ப்படிவு, சுயகட்டுப்பாடு, சுய வெளிப்பாடு முதலியவற்றின் உருவாக்கத்தில் உடன் குழு வினரது செல்வாக்கு மிகையாக உண் டு. மனவெழுச்சிகளின் வெளிப்பாட்டிலும் அவர்கள் பெரும் செல்வாக்குச் செலுத்துகின்றனர். இதனால் பின் வரும் சமூகமயமாக்கல் நடவடிக்கைகள் வளர்ச்சி அடைகின்றது.
தலைமைத்துவப் பண்பு வளர்தல்.
போட்டியுணர்வு வளர்தல்.
மதிப்பீட்டுத் திறன் வளர்தல்.
© © ®© ®©
அதீத உணர்வு வளர்தல்.
பிறரை மாதிரியாகப் பின்பற்றல்
சமூகமயமாதலில் வெகுசனத் தொடர்பு சாதனங்கள் முக்கிய பங்கெடுக்கின்றன. மக்களைப் பற்றி வாசித்து, கேட்டு, நேரில் பார்த்து அறியும் போது பிள்ளைகள் நல்ல விழுமியங்களையும், மனப்பான்
மையையும் கடைப்பிடிப்பர்.
வீடு, பாடசாலை, சமூகம் ஆகியனவும் வெகுசனத் தொடர்புகளும் பிள்ளைகள் நல்ல பொருத்தப்பாடு பெற்று முழு மனிதராக வளர்ச்சி பெற வழிகாட்ட வேண்டும்.
முடிவுரை
வெ
விருத்தி வகைகளிலே முக்கியமானதாகக் கொள்ளப்படும் சமூக விருத்தியானது எந்தப் பிள்ளை தொடர்பாகவும் ஏற்படக்கூடிய ஒன்றாகும். இவ் சமூக விருத்தியில் ஒருவர் வாழும் சூழலும் செல்வாக்குச் செலுத்துகின்றது. உடல் விருத்தி, உள் விருத்தி, மனவெழுச்சி விருத்தி ஆகியவற்றினின்றும் ஒருவருடைய சமூகம் சார் விருத்தியைப் பிரித்து நோக்க முடியாது. சமூக விருத்தியை மேம் பாடடையச் செய்வதற்கு ஒவ்வொரு பிள்ளையினதும் சமூக நெறி, சமூக விழுமியங்கள் என்பன விருத்தி செய்யப்படல் வேண்டும்.
இன்று சமூக விருத்தி தொடர்பாகப் பல முக்கிய விடயங்கள் கூறப்பட்டுள்ளன. ஒரு பிள்ளையின் விருத்திச் செயன்முறையின் இறுதி இலக்காக சமூக விருத்தி கொள்ளப்படுகின்றது. இது பிள்ளையின் சமூகமயமாக்கலுக்கு உதவுகின்றது. இதனை மேம்படுத்த வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும்.
***
12
ஆசிசியம்

Page 15
வல்
கி.புண்ணியமூர்த்தி
விளைதிறன்மிகு பாடசாலை என்னும் எண்ணக்கரு இன்று பரவலாகப் பேசப்படுகின்ற ஒரு விடயமாகும். பொதுவாகக் கல்வியில் பணி புத் தர விருத்தியை ஏற்படுத்தும் வகையில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் தேவையான அனைத்து வளங்களையும் வழங்குவது அரசாங்கத்துக்கு இயலாததாக உள்ளது. இருந்த போதும் இயலுமானவரை "ஒரு பாடசாலையை நடாத்திச் செல்வதற்குரிய வளங்களை வழங்கவில்லை எனக் கூறமுடியாது. இருக்கின்ற வளங்களை வைத்து அதற்கேற்ற வகையிலாவது” கல்வியில் பண்புத் தர விருத்தியை ஏற்படுத்துவதற்கு எமது பாடசாலைகளால் இயலாமல் போவதற்கு என்ன காரணம்? எனச் சிந்திக்க வேண்டிய நிலை தோற்றம் பெற்றுள்ளது. அது தவிர சில சிறிய பாடசாலைகளால் இயலக்கூடியதாக உள்ள விடயங் களைக்கூடச் சில மிகப்பெரிய பாடசாலைகளால் சாதிக்க முடியாமலுள்ளது என்ற விமர்சனங்களும் எழுப்பப்படு : கின்றன.
விளைதிறன் என்பது மானிட அபிவிருத்தியின் திறவுகோலாகும். விளைதிறன் என்னும் எண்ணக்கரு
டிசம்பர் 2012

பிளைதிறன்மிகு பாடசாலைகளும்
ஆசிரியர்களும்
கல்விக் குறிக்கோள்கள் அடையப்படுவதற்கு அடிப்படை யாகவுள் ள அறிகைசார் தொழிற் பாடுகள், சமூக வெளிப்பாடுகள், போன்றவற்றையே குறித்து நிற்பதாக சம்மன்ஸ் (Sammons 1999)குறிப்பிடுகிறார். மனித, பௌதிக வளங்களை விருத்தி செய்வதற்குத் தேவையான அடிப்படைகளைப் பயன் படுத்துவதையே பாடசா லையை விளைதிறன் மிக்கதாக்குதல் என்ற பதம் குறித்து நிற்கின்றது என எவ்ராட்,மொறிஸ்(1985) ஆகியோர் குறிப்பிடுகின்றனர். அத்துடன் ஒரு பாடசாலையை விளைதிறன்மிக்கதாக்குவதில் அப் பாடசாலை முகாமை யாளரின் தலைமைத்துவம் செல்வாக்குச் செலுத்துவதாக அமையும் என்கின்றனர். அவர்கள் மேலும் குறிப்பிடும் போது ஒரு பாடசாலையின் குறிக்கோள்களை அடையச் செய்வதற்கு ஏற்ற வகையில் ஆளணியினரை ஆயத்தப் படுத்துவதற்குத் தேவையான பல்வேறு முறையியல் களைப் பயன்படுத்துவதிலும், வளங்களிலிருந்து உச்சப் பயனைப் பெறுவதிலுமே விளைதிறன் என்னும் எண்ணக்கரு தங்கியிருக்கின்றது என்கின்றனர்.
13
ஆசிரியம்

Page 16
ஒரு பாடசாலையை விளைதிறன் மிக்கதாக்குவது என்பது அதிபரில் மாத்திரம் தங்கியுள்ள ஒரு விடயமல்ல அப்பாடசாலையில் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவரும் விளைதிறனுடன் செயலாற்றும்போதுதான் அது சாத்திய மானதாக அமையும். குறிப்பாக ஆசிரியர்கள் அர்ப்பணிப் புடன் செயலாற்றும்போது ஒரு பாடசாலையின் பண்புத் தர விருத்தியை இலகுவாக ஏற்படுத்த முடியும்.
இன்று முழுமையான பண்புத்தர முகாமைத்துவம் பற்றிப் பரவலாகப் பேசப்படுகின்றது. அதாவது ஒரு நிறுவனத்திலுள்ள அனைவரும் இணைவான பங்குபற்று தல்களுடன் தொடர்ச்சியான சுயவிருத்திச் செயற்பாடுக ளினூடாகப் பண்புத்தர விருத்தியை விரைவாக ஏற்படுத்த முடியும் என் பதையே முழுமையான பண் புத்தர முகாமைத்துவம் என்ற எண்ணக்கரு குறித்து நிற்கின்றது.
.ாக ]
ஒரு பாடசாலையின் முகாமைத்துவச் செயன்முறை யின் இறுதி விளைவாக அமைவது கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளினூடாக மாணவர்களின் நடத்தையில் முன்னேற்றகரமான மாற்றத்தை ஏற்படுத்துவதாகும். ஒரு ஆசிரியர் தனது வகுப்பறையில் அர்ப்பணிப்புடன் செயற் படும்போதே இதனைச் சாத்தியமாக்க முடியும். பல ஆசிரியர்கள் பாடசாலைக்கு வருகை தந்தும் வகுப்பறை களுக்குச் செல்லாத நிலையை இன்று நாம் வெகுவாக
அவதானிக்கின்றோம்.
ஒரு பாடசாலையின் உயர்தர வகுப்பு ஒன்றில் குறிப்பிட்ட ஒரு பாடத்தில் அடைவு மட்டம் குறைவாக இருப்பதற்கான காரணத்தை மாணவர்களிடம் விசாரித்த போது அப்பாடத்துக்குரிய ஆசிரியர் பாடசாலைக்கு வருகை தந்தும் வகுப்புக்குச் சமூகமளிப்பதில்லை என்றும் அலுவலகத்தில் அல்லது கணினி அறையில் அல்லது சிற்றுண்டிச்சாலையிலேயே அவர் தனது பெரும் பொழுதைக் கழிப்பதாகவும் தெரிவித்தனர்.
வேறு ஒரு ஆசிரியர் பற்றித் தாமாகவே அவர்கள் குறிப்பிடும்போது, பாடம் முடிவடைவதற்குச் சில நிமிடங்கள் இருக்கும்போதுதான் அவர் வகுப்புக்கு வருவதாகவும் அவர் வந்து 10 நிமிடங்களில் மணி அடித்துவிடும், பதிவுப் புத்தகத்தில் பாடத்தை வெற்றிகர மாகத் தான் முடித்தது பற்றி எழுதி விட்டுச் சென்று விடுவார் என்றும் குறிப்பிட்டனர்.
மாணவர்களின் விமர்சனம் பாடசாலைக் கு உள்ளும் புறமும் ஒரு ஆசிரியரின் தொழில்வாண்மை யைக் கேள்விக் குறியாக்கிவிடும் அத்துடன் அவர் ஏற்கனவே எவ்வளவு விளைதிறனுடனும், வினைத்திற னுடனும் செயற்பட்டிருந்தபோதும் அவரது நற்பெயர் பாதிப்படைவதை அவரால் தடுக்க முடியாது. அத்துடன் இவ்வாறான ஆசிரியர்களின் செயற்பாடுகள் மூலம்
டிசம்பர் 2012

பாடசாலையின் நற்பெயரும் பாதிக்கப்படுவதுடன் அதிபரின் நிர்வாக முகாமைத்துவத் திறன் களும் கேள்விக்குரியதாகிவிடும். இதனால் அப் பாடசாலையை விளைதிறன் மிக்கதாக்குவதில் தடங்கல்கள் ஏற்படும்.
ஒரு ஆசிரியர் என்பவர் வித்தியாசமான மனிதக் குழுக்களிடையே தனித்துவமாக இனங்காணக்கூடிய வரும், பரஸ்பர புரிந்துணர்வு கொண்டவரும், பக்கச்சார் பின்றி நடப்பவருமாக இருத்தல் வேண்டும் என கலைத்திட்ட அபிவிருத்திக்கு ஒரு அறிமுகம் என்னும் நூலில் ஸ்ரேன் ஹவுஸ் லோறன்ஸ் (Sten house Lawrence 1975) குறிப்பிட்டுள்ளார்.
சில ஆசிரியர்கள் பாடங்களுக்குச் செல்லாத நிலை பாதிப்பை ஏற்படுத்தும் அதேவேளை சில ஆசிரியர்கள் பாடவேளைக்கு மேலதிகமாகக் கற்பிக்கும் நிலமையை யும் அவதானிக்க முடிகின்றது இது தொடர்பாக ஒரு ஆசிரியை தனது அனுபவத்தைத் தெரிவிக்கும்போது ஒரு குறிப்பிட்ட ஆசிரியர் வகுப்பறைக்குச் சென்றால் தன்னையும், நேரத்தையும் மறந்து கற்பிப்பதாகவும் தான் பலவகையான சமிக்ஞைகளை வெளிப்படுத்தினாலும் கூட அவர் இலகுவில் வெளிவருவதில்லை எனவும், இதனால் தனது பாடத்திட்டத்தை முடிக்க முடிவதில்லை எனவும் தெரிவித்தார்.
சில ஆசிரியர்கள் தங்களது பாடவேளைகளுக்குரிய பாடங்களுக்குச் செல்லாமல் ஏனைய ஆசிரியர்களது பாடவேளைகளுக்குச் சென்று தமது பாடங்களைக் கற்பிப்பதை அவதானிக்க முடிகின்றது. இது பற்றி ஒரு ஆசிரியர் கருத்துத் தெரிவிக்கும்போது தமது பாடசாலை யில் இருக்கும் ஒரு ஆசிரியர் தொடர்ச்சியாக 3 அல்லது 4 பாடவேளைகளைக் கற்பிப்பதாகவும் மாணவர்கள் தமது விருப்பமின்மையைப் பல வழிகளில் தெரிவித்த போதும் அவர் வகுப்பறையை விட்டு விலகாமல் தமது பாடத்திட்டத்தை முடிப்பதிலேயே கவனம் செலுத்து வதாகவும் தெரிவித்தார். அத்துடன் மற்ற ஆசிரியர்கள் தமது பாடத்துக்குச் சென்றால் உங்கள் பாடத்தை விட்டுத்தாருங்கள் என் றோ அல்லது தமது பாட வேளையை எடுங்கள் என்றோ கூறுவார். ஆனால் அவரது பாடவேளையில் தமக்கு, வேறு வகுப்புக்கு, வேறு பாடம் இருக்கும் என அவர் கூறினார். இதனால் இரு ஆசிரியர்கள் அவருடன் சண்டையிட்டு ஒருவரோடு ஒருவர் கதைப்பதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
ஆசிரியர் எப்போதும் மாணவர்களைவிட முன்னி லையில் இருப்பதானால், மாற்றமடையும் அறிவுக்கு ஏற்பத் தமது அறிவையும் பொருத்தப்பாடடையச் - செய்தல் வேண்டும். அறிவை இற்றைப்படுத்துதல் விளைதிறனில் முக்கியமான அம்சமாகும். ஒரு ஆசிரியர்
14
1 ஆசிசியம்

Page 17
ஆய்வாளராகத் தொழிற்படுவது இன்றியமையாததாகும். தமது வகுப்பிலுள்ள மாணவர்களின் மனோநிலை, அவர்களது நடத்தை, பெற்றோரின் பின்னணி போன்ற ஒவ்வொரு விடயத்திலும் நிரந்தர கவனம் செலுத்துதல் வேண்டும் பிள்ளைகள் எப்போதும் மகிழ்வுடன் இருப்ப வர்கள் என்பதையும் அவர்கள் புதிய, புதிய விடயங் களைக் கண்டறிவதில் விருப்புடன் இருப்பவர்கள் என்பதையும் மறந்து விடுதல் கூடாது. தமக்குத் தெரிந்த எல்லாவற்றையும் மாணவர்களுக்குப் புகுத்து வதைத் தவிர்த்து மாணவர்களுக்குத் தெரிந்தவற்றை அறிந்து அதிலிருந்து அவர்களைத் தெரியாததற்கு அழைத்துச் செல்லுதல் வேண்டும். மாணவர்களால் கிரகிக்கத்தக்க நேர அளவை ஆசிரியர் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். மாணவர்கள் வெறுப்படையும் விதத்தில் கற்பித்தல் நிகழ்த்தப்படுமானால் அது விைைளதிறனைக் கீழ்நோக்கி இட்டுச் செல்வதாகவே அமையும்.
குறிப்பிட்ட ஒரு பாடத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் மாணவர்களை உற்சாகப்படுத்திக் கவர்ச்சிகர மான பாடப் பிரவேசத்தினூடாகப் பாடத்தை வளர்த்துச் செல்லும் ஆசிரியர்கள் மிகக் குறைந்தளவானவர்களே உள்ளதாக ஒரு உதவிக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார். பலர் சரி பாடத்தை நாம் ஆரம்பிப்போம், என்றோ அல்லது “நாம் நேற்று பாடத்தை எவ்விடத்தில் விட்டோம்” என்றோதான் "பாடப்பிரவேசம்” அல்லது "தொடர்பு படுத்தல்” செய்கிறார்கள். ஆனால் சில ஆசிரியர்கள் தமதும், தமது மாணவர்களதும் அனுபவங்களைப் பகிர்வதினூடாக விளைதிறன்மிக்க வகையில் பாடத்தை
ஆரம்பிப்பர் என அவர் தெரிவித்தார்.
ஆசிரியப் பயிற்சியைப் பெறாத பல ஆசிரியர்கள் விரிவுரை முறையில் பாடத்தை வளர்த்துச் செல்லும் அதேவேளை அவர்களது பாட ஆயத்தமும் மிகவும் பொருத்தமற்ற நிலையில் காணப்படுவதாக ஒரு அதிபர் கருத்துத் தெரிவித்தார். மற் றொரு அதிபர் தமது பாடசாலையில் 90% மானவர்கள் கரும்பலகையையும் வெண்கட்டியையும் மாத்திரமே பயன்படுத்திக் கற்பிப்ப தாகத் தெரிவித்தார். நவீன கற்பித்தல் சாதனங்கள் இருக்கும் போதும் அவற்றைப் பயன்படுத்தத் தெரி யாமை, முன்கூட்டியே திட்டமிட வேண்டிய தேவைப் பாடு, பழுதடைந்துவிடும் என்ற பயம், என்பன போன்ற காரணங்களால் அவற்றைப் பயன்படுத்துவதில்லை எனத் தெரிவித்தார்.
கரும்பலகை, வெண்கட்டி என்பவற்றுக்கப்பால் விஞ்ஞான ரீதியான கற்பித்தல் முறையியல்களைப்) பரீட்சயமாக்கிக்கொள்ளுதல் வேண்டும். அவதானம், பரிசோதனைச் செயற்பாடுகளில் மாணவர்களைக்
டிசம்பர் 2012,

கூடுதலாக ஈடுபடுத்துதல் வேண்டும். நவீன தொழில்நுட்ப வளங்கள் அதிகரித்த இக் காலத்தில் நவீனமான, மாணவர்களின் இரசனையைத் தூண்டக்கூடிய கற்பித்தல் முறைகளைப் பயன்படுத்துவது சிரமமான காரியமல்ல.
தேசிய பாடசாலை ஒன்றின் உயர்தர வகுப்பைச் சேர்ந்த ஒரு மாணவன் கருத்துத் தெரிவிக்கையில் தமது ஆசிரியர் பல ஒப்படைகளை வழங்குவதாகவும் ஆனால் அற்றைத் திருத்தித் தமக்கு மீள ஒப்படைப்பதில்லை எனவும் தெரிவித்தார். அதேபோல் வகுப்பு ரீதியாக நிகழ்த்தப்படும் பரீட்சைகளுக்காக அவர் வழங்கும் புள்ளிகளை அவதானிக்கும்போது அவர் முறையாக மதிப்பீடு செய்து புள்ளியிடுவதாகத் தெரியவில்லை எனத் தெரிவித்தார். தாம் பல தடவைகள் கேட்டும் விடைப் பத்திரங்களைத் தமக்கு ஒப்படைப்பதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மதிப்பீடு, கணிப்பீடு முறையாக இடம்பெறும் போது தான் ஒரு பாடசாலை தனது குறிக்கோளை அடையும் பாதையை நோக்கிச் செல்கின்றதா? என்பதை அறிந்து கொள்ள முடியும். அது தவிர அவை நம்பகமும், தகுதியும் வாய்ந்தவையாக இருத்தல் வேண்டும். அப்போதுதான் கற்றலில் மாணவர்களுக்கு நம்பிக்கையும் அக்கறையும் ஏற்படும் அந்த வகையில் மாணவர்களைத் திருப்திப்படுத் தும் வகையிலும், அவர்கள் தமது நிலையைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளத்தக்க வகையிலும் ஒரு ஆசிரியர் கணிப்பீடு, மதிப்பீடுகளை நடாத்துதல் அவசியமானதாகும்.
11ம் தரத்தில் கற்கும் ஒரு மாணவர் தமது வகுப்பில் பெருமளவான ஆசிரியர்கள் விரிவுரை முறையிலேயே கற்பிப்பதாகத் தெரிவித்தார் இது பற்றி ஒரு ஆசிரியரிடம் விசாரித்த போது குழுச் செயற்பாடுகளை மேற்கொள்ள வகுப்பறையில் இடவசதி இல்லை எனக் குறிப்பிட்டார். மற்றுமொருவர் பல்வேறு ஆற்றல் மட்டங்களுடன் கூடிய மாணவர்கள் வகுப்பில் இருப்பதால் குழுச் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாமலுள்ளது என்றார். மாறாக குழுச் செயற்பாடுகளை மேற்கொண்டாலும் அச் செயற்பாடு களில் ஓரிருவர் மாத்திரமே தொழிற்படுவதாகக் கூறினார்.
குழு வேலையை எவ்வாறு முகாமைத்துவம் செய்தல் வேண்டும் என்பதில் ஆசிரியர் நல்ல அறிவுட னும் தெளிவான திட்டத்துடனும் இருத்தல் வேண்டும். நடைமுறையில் பல வகுப்பறைகள் ஆசிரியரின் கட்டுபாட்டினை இழந்து செயற்படுவதை அவதானிக்க முடிகிறது. தனியாள் வேறுபாடுகளின் அடிப்படையில் மாணவர்களின் பலம், பலவீனங்களை அறிந்து ஆசிரியர் அதற்கேற்ப செயற்படுதல் வேண்டும். வெற்றிகரமான வகுப்பறை முகாமைத்துவத்தினூடாக மாணவர்களைக் குழுச் செயற்பாடுகளில் ஈடுபடுத்த முடியும். வகுப்பறை
15
ஆசிசியம்

Page 18
முகாமை ஆசிரியரின் ஆளுமையிலேயே தங்கியுள்ளது. விளைதிறனுள்ள ஒரு பாடசாலை உருவாவதற்கு வகுப்பறை முகாமைத்துவம் ஒரு அடிப்படை அம்சமாகும்.
பல ஆசிரியர்கள், வகுப்பறை எவ்வாறிருந்தாலும் அதைப் பற்றிக் கவனம் செலுத்தாமல் தமது பாடத்திட் டத்தைப் பூர்த்தி செய்வதிலேயே கூடிய கவனம் செலுத்து கிறார்கள் என்ற குற்றச்சாட்டு அவர்கள் மீது ஆசிரிய ஆலோசகர்களால் சுமத்தப்படுகின்றது. குறிப்பாக வகுப்பறைக்குப் பொருத்தமாகச் சித்திரங்கள், அட்ட வணைகள், படங்கள் போன்றவைகள் காட்சிப்படுத்த பட்டிருக்குமானால் அவ் வகுப்பறை கவின் மிகு வகுப்பறையாகத் தோற்றமளிக்கும். இவை மாணவர்க ளைக் கற்றலின் பால் ஈர்ப்பதாக அமையும். பட்டப்பின் கல்வி டிப்ளோமாப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களும், கல்வி முதுமாணிப்பட்டம் பெற்ற ஆசிரியர்களும் கூட இவற் றில் கவனம் செலுத்துவதில்லை என ஒரு ஆசிரிய ஆலோசகர் குறிப்பிட்டார். அதேவேளை ஆசிரியப் பயிற்சி பெறாத பல புதிய ஆசிரியர்கள் வகுப்பறைகளில் பல்வேறு படங்களையும், அட்டவணைகளையும், வரைபுகளையும் காட்சிப்படுத்தியிருந்தமையை அவதா னிக்க முடிந்ததாக அவர் குறிப்பிட்டார். சுற்றாடலை அழகுபடுத்துதல், கொதிக்கவைத்து ஆறிய நீரைப் பருகுதல், உணவு உண்ண முன் கைகளைக் கழுவுதல், என்பன போன்ற பல்வேறு படங்களை அவர்கள் காட்சிப்படுத்தியிருந்ததாக அவர் தெரிவித்தார். அத்துடன் ஏனைய பாடசாலைகளில் அவதானித்த பல விடயங் களை அவர்கள் சுயமாகவே ஆக்கிக் காட்சிப்படுத்தியுள்ள
மையையும் அவர் அவதானித்ததாகக் குறிப்பிட்டார்.
கை
ஒரு ஆசிரியர் தான் கற்பிக்கவிருக்கும் பாடத்திற்குரிய குறிக்கோள்களை மாணவர்கள் அடையத்தக்க வகையில் கற்பித்தல் சாதனங்களைத் தெரிவு செய்து கொள்வதில் கவனம் செலுத்துதல் வேண்டும். அவ்வாறு பாடத்தின் குறிக்கோள்களை அடைவதற்குத் துணையாக அமையும் விதத்தில் கற்பித்தல் சாதனங்களைத் தெரிவு செய்யும் போதுதான் மாணவர்கள் ஈடுபாட்டுடன் கற்பர், அத் துடன் வகுப்பறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள விடயங் களிலிருந்தே மாணவர்கள் சுயமாகக் கற்பதற்குரிய (மறைகற்றல்) சந்தப்பங்கள் கிடைக்கக்கூடியதாக இருக்கும். அது மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்கச் செய்து ஒரு பாடசாலையை விளைதிறன் மிக்கதாக விருத்தி செய்ய உதவுவதாக அமையும்.
ஒரு விளைதிறன்மிகு பாடசாலையில் “நேரம்” என்பது முதன்மையான வளம் என்பதால் அப் பாடசாலை ஆசிரியர்கள் நேரமுகாமைத்தவத்தைப் பேணுவது இன்றியமையாததாகும். ஆசிரியர்களின் வருகை தொடர் பாக ஒரு கோட்டக் கல்விப்பணிப்பாளரிடம் விசாரித்த
டிசம்பர் 2012

போது கஷ்ரப் பிரதேசப் பாடசாலைகளுக்குச் சமூகமளிக் கும் பல ஆசிரியர்கள் காலதாமதமாகியே பாடசாலைக்கு வருவதாகத் தெரிவித்தார். இவர்கள் கஸ்ரப் பிரதேசங்க ளுக்கான கொடுப்பனவுகளைப் பெறுகின்றபோதும் அவர்களது கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் விளைதிறன் மிக்கவைகளாக அமையவில்லை என அவர் தெரிவித்தார்.
பல கஸ்ரப் பிரதேசப் பாடசாலைகளில் கடமையாற்று பவர்கள் வெகுதொலைவில் இருந்து கடமைக்கு வருவதால் காலதாமதமாகி வருவதுடன் முன்கூட்டியே வீடுகளுக்குச் செல்லவும் முயற்சிக்கிறார்கள். அதுதவிர அப்பாடசாலைகளுக்கு அருகில் இருப்பவர்கள் கூட இக் கொடுப்பனவைப் பெறும் அதேவேளை அவர்களும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவதாகத் தெரியவில்லை என அவர் தெரிவித்தார்.
ஒரு ஆசிரியர் நேர முகாமைத்துவத்தைப் பேணுவது என்பது அதிபரிலேயே தங்கியுள்ளது. ஒரு ஆசிரியர் சிரமப்படுகிறார் என அவருக்குக் கருணை காட்டுவதை விட வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களும் பாதிக்கப் படுகின்றார்கள் என்பதை அவர் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். அத்துடன் ஆசிரியர்களும் தாம் பெறும் வேதனத்துக்கு வகைகூறுபவர்களாக இருத்தல் வேண்டும். அப்போதுதான் ஒரு விளைதிறன்மிகு பாடசாலையை உருவாக்க முடியும்.
ஒருவர் ஆசிரியத் தொழிலைத் தெரிவு செய்யும் போதும், அதில் நிலைத்து நிற்கும் போதும் அத் தொழிலை எவ்வாறு மேன்மையடைச் செய்ய முடியும் என்பதி லேயே தனது கவனத்தைச் செலுத்துதல் வேண்டும். ஆசிரியத் தொழிலைத் தெரிவு செய்தமை தொடர்பாகச் சில ஆசிரியர்களிடம் விசாரித்தபோது அவர்கள் வழங்கிய துலங்கல்கள் பின்வருமாறு அமைந்திருந்தன.
1.
சமூகத்தில் ஒரு உயர்வான தொழிலாக இது உள்ளது.
இதில் பதவி உயர்வுகளை விரைவாகப் பெற்றுக் கொள்ளமுடியும்.
3.
இதில் உயர்கல்வியைப் பெறுவதற்கு வாய்ப்புக்கள் கிடைக்கும்.
4.
வேறு தொழில் கிடைக்கும் வரை தங்கியிருப்பதற்கு ஆசிரியத் தொழில் பொருத்தமானது.
வேறு தொழில் கிடைக்காததால் இத் தொழிலைப் பெற்றுக்கொண்டோம்
| 5.
- 7.
இது ஒரு விபத்து. ஓப்பீட்டு ரீதியில் ஏனைய தொழில்களை விடச் சம்பளம் அதிகம்.
அதிக விடுமுறைகளும், ஓய்வும் உண்டு.
16
-ஆசிசியம்

Page 19
இதில் அதிகளவு சிரமப்படவேண்டியதில்லை. 10. இத் தொழிலைத் தெரிவு செய்தமைக்கு விசேட
நோக்கம் எதுவும் கிடையாது. 11. தெரிவு என்பதற்கு இடமில்லை இதுதான் கிடைத்தது
ஆசிரியத் தொழிலை விரும்பித் தெரிவு செய்திரு தாலும் அல்லது அது வேறு வழியின்றி அதில் இணைந்து கொண்டிருந்தாலும் ஆசிரியத் தொழிலை ஒரு வாண்மை யுள்ள தொழிலாக மாற்றியமைப்பதில் ஒரு ஆசிரியர் அர்ப்பணிப்புடன் செயலாற்றுதுல் வேண்டும். கல்வித் தகைமையையும், தொழில் தகைமையையும் விருத்தி செய்து கொள்வதில் கூடிய கவனம் செலுத்துதல் வேண் டும். அத்துடன் ஒழுக்கக் கோட்பாடுகள், ஒழுக்கக் கோவைகள் தொடர்பாக நன்கு அறிந்து வைத்திருத்தல் வேண்டும் தான் பெறும் வேதனம் தொடர்பாகச் சிந்திட் பதற்கப்பால் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள மாண வர்களின் எதிர்காலம் தொடர்பாகக் கூடிய கவனம் செலுத்துபவராகவும், வகை கூறுபவராகவும் அவர் தொழிற்படுதல் வேண்டும்.
சிறப்பாகக் கற்பித்துக் கொண்டிருந்த ஒரு ஆசிரியர் இடமாற்றம் பெறும்போது அவ் வெற்றிடத்தை நிரப்பு வதற்காக நியமிக்கப்படுவர் பொருத்தமானவராக அமையாவிட்டால் அவ் வகுப்பு மாணவர்களின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் பாதிப்டைவதற்கு இடமுண்டு அதேவேளை இடமாற்றப்படும் ஒரு ஆசிரியர் நல்ல வினையாற்றல்மிக்க ஒரு ஆசிரியராக இருந்தபோதும் அவர் இடமாற்றம் பெற்றுச் செல்லும் இடம் பொருத்த மாக அமையாவிட்டால் அவர் தனது செயற்பாடுகளில் பின் னடையும் சூழ்நிலை காணப்படுகின்றது. இந் நிலையில் தமது பரிபாலனத்துக்குட்பட்ட பாடசாலை களை விளைதிறன்மிக்க தாக்கும் வகையில் ஆசிரிய இடமாற்றங்களில் கல்வி அதிகாரிகள் சர்வாதிகாரிகள் போல் தொழிற்படாமல் ஆசிரியர்களின் விருப்பங்களை யும் கவனத்தில் கொள்ளுதல் விளைதிறன்மிக்கதாக அமையும்.
ஆசிரியர்களுக்குப் பல்வேறு ஊக்குவிப்புக்களை வழங்குவதன் மூலமும் அவர்களை விளைதிறன் மிக்க வர்களாக செயற்படத் தூண்டமுடியும் ஒரு ஆசிரியர் தான் கல்வி முதுமாணிப் பட்டம் பெற்றவர் என்றும் ஆனால் தன்னை விடப் பயிற்சி ஆசிரியர் ஒருவருக்கு அதிக வேதனம் கிடைப்பதாகவும் குறைபட்டுக் கொண்டார் இலங்கையில் ஆசிரியத் தொழிலுக்குக் கல்வித் தகைமையோ, தொழில்தகைமையோ அவசியமில்லை சேவைக்காலத்தை அதிகரித்துக் கொண்டால் போது மானது எனவும் அவர் தெரிவித்தார். அத்துடன் தாம்
' டிசம்பர் 2012

ஏனையவர்களுக்கு அதிகம் படிக்க வேண்டியதில்லை என அறிவுரை கூறுவதாகவும் சலிப்புடன் தெரிவித்தார்.
மற்றுமொரு ஒரு கலைப்பட்டதாரி ஆசிரியர் தானும் தனது நண்பரும் ஒரே நாளில் நியமனம் பெற்றதாகவும் அவர் விஞ்ஞானப் பட்டதாரி என்பதனால் தன்னைவிடப் பல வருடங்களுக்கு முன்னர் ஆசிரிய சேவையில் தரம் 1ற்கு வந்துவிட்டதாகவும் தெரிவித்தார். க.பொ.த.உயர் தரத்தில் கலைப் பாடநெறியைத் தெரிவு செய்வதில் தவறு உள்ளதா? என அவர் கேள்வி எழுப்பினார்.
IC பாடசாலை அதிபர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கும் போது இடமாற்றத்தைத் தவிர்த்துக் கொள்வதற்காகக் கலைப் பட்டதாரிகளில் பலர் விஞ்ஞானம், கணிதம் போன்ற பாடங்களைக் கற்பிப்பதாகத் தெரிவித்தார். அவ்வாறு கற்பிக்கும் ஒரு ஆசிரியரிடம் விஞ்ஞானம், கணிதம் ஆகிய பாடங்களைக் கற்பிப்பதற்குரிய பயிற்சியை எங்கு பெற்றீர்கள் எனக் கேட்டபோது க.பொ.த.சாதாரண தரத்தில் கற்றதாகக் குறிப்பிட்டார். இது தொடர்பாக விஞ்ஞான பாடத்துக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளரிடம் கேட்டபோது விஞ்ஞான பாடத்தில் பயிற்சி பெற்றவர்களைவிட இவர்கள் நன்கு கற்பிப்பதாகத் தெரிவித்தார்.
தொழில் திருப்தி என்பது ஒரு பாடசாலையை விளைதிறன் மிக்கதாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்ற போதும் ஆசிரியர் அமர்த்துகையிலும், பதவி உயர்வு களிலும் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்ற
போதிலும் ஆசிரியத் தொழில் என்பது ஒரு சேவைத் , தொழில் என்பதை அனைத்து ஆசிரியர்களும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். தான் ஒரு பாடத்தைக் கற்பிப் பதற்காகத் தெரிவு செய்வதற்கு முன்னர் தனது நலனைவிட மாணவர்களின் நலன்களில் கூடிய கவனம் செலுத்துதல் வேண்டும். குறிப்பிட்ட பாடத்தில் தனக்குள்ள புலமை யையும் அப்பாடத்தில் தான் பெற்ற கற்பித்தல் பயிற்சி யின் அளவையும் உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே அப்பாடத்தைக் கற்பிப்பதற்காகத் தெரிவு செய்து கொள்ளுதல் வேண்டும்.
ஒரு ஆசிரியர் தனக்குக் கிடைத்த தொழிலை வினைத் திறனுடனும், விளைதிறனுடனும் ஆற்றுவதன் மூலம் தன்னைச் சமூத்துக்கு வெளிப்படுத்த முடியும் இதன் மூலம் பல்வேறு அனுகூலங்கள் கிடைக்க வாய்ப்புண்டு. ஒரு ஆசிரியர் தனது கல்வி, தொழில் தகைமைகளை விருத்திசெய்து கொள்வதன் மூலம் தன்னை விருத்தி செய்து கொள்வதுடன் மாத்திரம் நின்றுவிடாமல் ஒரு பாடசாலையை விளைதிறன்மிக்க தாக்குவதிலும் தனது பாரிய பங்களிப்பினைச் செலுத்த முடியும்.
***
-ஆசிரியம்

Page 20
பாடசாலை முகா அதிபரின் வெற்றிக்கரம்
பாடசாலையில் பல்வேறு கடமைகளை பலர் ஆற்றியபோதிலும் மிக முக்கியமான பாத்திரம் ஏற்பவர் அதிபரைத் தவிர வேறு யாருமல்லர். கற்றல் - கற்பித்தல் செயன் முறையிலும், ஏனைய எல்லாத்துறையிலும் தரவிருத்தியை ஏற்படுத்தும், மாற்றங்களை கொண்டு வரும் முதற்தர வாகனமாகக் கருதப்படுபவர் பாடசாலை யின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அதிபராகும். பங்குபற்றும் முகாமை, முரண் பாட்டு முகாமை, மேற்பார்வை, ஆசிரியர்வாண்மை விருத்தி, பாடசாலை யின் விளைதிறன் என்ற பல்வேறு அங்கங்களில் அதிபரின் பங் கும், பணியும் அளப்பரியதாகும். பாடசாலை ஒன்றின் உயர்வும், தாழ்வும் அப்பாடசாலை யைத் தலைமை தாங்கி நடத்துபவரின் ஆற்றலிலும், ஆற்றலின்மையிலும் மட்டுமே தங்கியுள்ளது. இதன் மூலம் அதிபரின் செயற் பங்கு மிகவும் தெளிவாக விளங்குகின்றது. ஒரு மோசமான அதிபரின் கீழ் நல்ல
' டிசம்பர் 2012

மைத்துவத்தில் பான தலைமைத்துவம்
ச.தேவசகாயம்
பாடசாலையோ, ஒரு நல்ல அதிபரின் கீழ் மோசமான பாடசாலையோ இருக்க முடியாது.
பாடசாலையின் வெற்றிக் கு அதிபரின் வகிபங்கு மிகவும் முக்கிய மானதாகும். பாடசாலையின் வெற்றிக்கு விளைதிறனைத் தக்க வைத்தலில் அதிபர் ஒரு மூலகாரணியாவார். அதிபர் செயற்பாட்டில் ஈடுபடும் ஆசிரியர்க ளுடன் நேரடித் தொடர்படையவர். கற்றல் சூழலில் செயற்படும் மாணவர் களுடனும், மத்திய நிர்வாக ஊழியர்க
ளுடனும், பெற்றோர் மற்றும் உள்ளூர் சமூதாயத்துடனும், வெளியக முகவர் என்பவற்றுடனும் தொடர்புடையவர். இவ்வகையில் அதிபரானவர் நேரடி நடவடிக்கைக்கான முகாமையாளராவார்.
- இன் றைய அதிபரின் வகிபங்கானது ஐம்பது வருடங்களுக்கு முன்பிருந்த அதிபரின் வகிபங்கிலிருந்து கணிசமான அளவு வேறுபடுகிறது. இத்தசாப்தத்தில் அதிபர்கள் பதட்டம். மற்றும் முரண்பாடுகளால் ஏற்பட்ட பரீட்சையமற்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. மேலும் கோளமயமாக்கம், சமூகம், பொருளாதாரம், தகவல்துறையில் ஏற்பட்டுள்ள புரட்சி போன்றவற்றால் எமது சமூகமும் பாரியளவான பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றது. இது பாடசாலை ஒழுங்கமைப்பு, மாணவர் நடத்தை, ஒழுங்காற்றல், சமூகத்தொடர்புகள் போன்றவற்றிலும், கற்றல் கற்பித்தல் செயற் பாட்டிலும் பெரியளவிலான தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது என்பதும் மறுப்பதற்கில்லை.
- 18
"ஆசிரியர்

Page 21
பாடசாலை அதிபர் மாற்றத்தின் முகவராகவும் இம்மாற்றங்களை அறிமுகம் செய்பவராகவும், அதனை தொடர்ந்து நிலைத்திருக்கச் செய்பவராகவும் இருத்தல் வேண்டும். ஆசிரியரின் கற்பித்தல் திறன்களை விருத்த செய்வதுடன், கல்வி அமைச்சு, மாகாணக் கல்ல அமைச்சு ஆகியவற்றின் வழிகாட்டல்களை பின்பற்று வதை உறுதி செய்தல் வேண்டும். இவ்வாறான பின்புல தில் நின்று கொண்டு பாடசாலை ஒன்றினை விளைதி னுடன் தொழில்பட வைப்பதற்கு அதிபர் பின்வரும் விடயங்கள் மற்றும் திறன்கள் தொடர்பான போதி அறிவுள்ளவராக இருத்தல் வேண்டும் என எதிர்பார்க்கம் படுகின்றது.
கலைத்திட்ட ஒழுங்கமைப்பு மற்றும் முறையியல் என்பவற்றோடு தொடர்புடைய வளர்ச்சி, கற்பித்தல் என்பன பற்றிய உளவியல் கருத்துக்களில் அதிப முழுமையான தேர்ச்சியைப் பெற் றிருத்த வேண்டும்.
பாடசாலையும், பாடசாலைச் சமுதாயத்தையும் விளங்கிக்கொள்வதற்கு அதிபருக்கு திடமான சமூகவியல் பின்னணி அறிவு இருத்தல் வேண்டும்
தனியாள் முகாமைத்துவம், நிதி முகாமைத்துவம் பல்வேறு நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான முக
மைத்துவம் பற்றி அறிந்திருத்தல் வேண்டும்.
சகலவிதமான பாடசாலை ஆவணங்களையும் பேணும் திறன்.
பல்வேறுபட்ட நிறுவனங்களுக்கான அறிக்கை களை தயாரிக்கும் திறன்.
வேலையாட்தொகுதியின் நிர்வாகம் மற்றும் மாணவர் ஒழுக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் திறன். உபகரணங்களையும், பொருட்களையும் பேணும் திறன்.
பல்வேறு குழுக்களிடையே இணக்கமான தொடர்பைப் பேணும் திறன்.
நிகழ்ச்சித்திட்டங்களையும், கற்பித்தல் செயல் முறைகளையும் கண்காணிக்கும் திறன்.
இலங்கைப் பாடசாலைகளின் முகாமைத்துவம் கல்விச் செயற்பாடுகள் பற்றி கொழும்புப் பல்கலை கழகத்தின் தேசிய கல்வி ஆய்வுக்கும் மதிப்பீட்டிற்குமான நிலையம் (National Education Research and Evaluatio. Centre-2004) 2004 ஆம் ஆண்டு மேற் கொண் ட ஆய்வுகளின்படி பாடசாலைகளின் முகாமைத்துவம்
- டிசம்பர் 2012

8 க
5, கல்விச் செயற் பாடுகள் தொடர்பாக பின் வரும்
த் பிரச்சினை களை இனங்காட்டியுள்ளது.
அதிகாரம் ஒப்படைக்கப்படாமை.
பி ©
பங்கேற்பு, தீர்மானம் மேற்கொள்ளல் செயற்பாடு
இல்லை. த் 6
ஒரு சில ஆசிரியர்கள் சொல்வதை மாத்திரம் கேட்கும் அதிபர்கள்.
©
மிக நெருக்கடியான வகுப்பறைகள்.
வளங்களின் பற்றாக்குறை.
C. -• 2. 2. L' - 5• 8 • =
©®
ஆசிரியர்களின் வரவின்மை.
மாணவர்களின் வரவின்மை, இடைவிலகல், திரும்பக்கற்றல்.
© ®
மாணவர்களின் குறைவான அடைவு மட்டம். முறையான கண்காணிப்பும், மேற்பார்வையின் மையும். ஆசிரியர்கள் வகைகூறலில் இருந்து விலகியுள்ளமை.
எ 6 2. @
பெற்றோரின் குறைவான பங்கேற்பு
D, @
அதிபர், ஆசிரியர், மாணவர்கள் மற்றும் பெற்றோர் களிடையே சுமூகமான தொடர்பின்மை.
பின் தங்கிய மாணவர்கள். மெல்லக் கற் கும் மாணவர்களுக்கான பரிகாரக் கற்பித்தல் இன்மை.
க
விசேட தேவையுடைய மாணவர்களின் மீது போதிய கவனமின்மை.
D.
ஆசிரியர்களின் செயலாற்றுகை பற்றிய விரிவான மதிப்பீடு இன்மை. பாடசாலை மட்டக்கணிப்பீட்டின் குறைபாடுகள்.
ம் ®
கற்பித்தலில் நவீன தொழில்நுட்பத்தின் பயன் பாட்டின் பற்றாக்குறை.
எ
இவ்வாாய் வு அறிக்கையிலிருந்து சில பாட சாலைகள் மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளை இனங் கண்டு அதனை நிவர்த்தி செய்துள்ளன. இதனால் இப்பாடசாலை மாணவர்கள் உயர்வான பெறுபேறுகள், உயர்வான கல்வித் தரம், அதிபர்களின் செயலாற்றுகை யின் திருப்தி போன்ற இலக்கை அடைந்துள்ளனர். இது க் குறிப்பிட்ட பாடசாலை அதிபர்களின் வினைத்திறன்மிக்க எ முகாமைத்துவம், தலைமைத்துவம் என்பவற்றினாலே 1 சாத்தியமானது எனலாம்.
ஆசிரியம்

Page 22
இவ்வறிக்கையின் படி இதன் மறுபக்கத்தினை பார்க்கின்றபோது பெரும்பாலான பாடசாலைகளால் இப்பிரச்சினைகளை சமாளிக்க முடியவில்லை. ஏனனில் இப்பாடசாலைகளில் குறைவான செயலாற்றுகையினை வெளிக்காட்டியதை சுட்டிக்காட்டியது. இப்பாடசாலை கள் மீள் ஒழுங்கமைக்கப்படுவதுடன் சிறந்த முகாமைத்து வம், சிறந்த கல்விசார் நடைமுறைகள் என்பனவற்றில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என சுட்டிக் காட்டியுள்ளது.
ஒவ்வொரு பாடசாலையும் தனித்துவமானதும், வேறுபட்ட கலாசாரத்தைக் கொண்டதுமான சக்திமிக்க. சிக்கலான நிறுவனம் என்ற வகையில் அவற்றின் தேவைகள் தனிப்பட்ட ரீதியில் கவனத்தில் கொள்ளப் படுதல் வேண்டும். மேற்குறிப்பிட்ட ஆய்வறிக்கையின் பரிந்துரைகளுக்கு அமைய பின்வரும் நடவடிக்கைகளை பாடசாலை தலைமைத்துவம் மேற்கொள்ளும்போது மாணவர்களின் பெறுபேறுகள், கல்வியின் தரம், திருப்திகரமான செயலாற்றுகை என்பவற்றை தொடர்ச்சி யாக உயர்வான நிலையில் வைத்திருக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வகுப்பறைக் கற்பித்தல் மற்றும் இணைப் பாடவிதானச் செயற்பாடுகளை மேற்கொள்ளுதல் என்பவற்றிற்குப் பொருத்தமான தேர்ச்சியுடைய ஆசிரியர்களாக்குதல்.
பா
ஆசிரியர்களுக்கான விளைதிறனுள்ள தொழில்சார் உள்ளக பயிற்சிகளை ஒழுங்கு செய்தலும், பயிற்சி வழங்கலும்.
அதிபர், ஆசிரியர், பெற்றோரிடையே தொடர் பாடலை ஏற்படுத்தலும், ஊக்குவித்தல். நேர அட்டவணையை விளைதிறன்மிக்கதாகச் செயற்படுத்தல், பாடசாலை நேரத்தை உச்ச அளவில் பயன்படுத்தல், பாடசாலை உள்ளக மேற்பார்வை நடவடிக்கைகளை மேம்படுத்தல்.
சிறந்த செயலாற்றுகையுடைய ஆசிரியர்களை ஊக்குவிப்பதற்காக ஆசிரியர் தரங்கணிப்பீட்டை மேம் படுத்தல், அதனைத் தொடர்ச்சியாக கண்காணித்தல். ஊக்கவிப்புத் திட்டங்களை
அறிமுகப்படுத்தல்.
பாடசாலைக் கலைத்திட்டத்தை விளைத்திறன் மிக்கதாக நடைமுறைப்படுத்தவதற்கு ஆசிரியர் களுக்கு பயிற்சி வழங்குதல் வேண்டும். இப்பயிற்சி யானது பாடத்தை உரிய காலத்திற்குள் நிறைவு செய்தல், விளைதிறனுள்ள கற்பித்தல் முறை
டிசம்பர் 2012

களைப் பயன்படுத்தல், பாடத்திற்குப் பொருத்த மான கற்பித்தல் உபகரணங்களை தயாரித்தல், வகுப்பறை கற்பித்தலில் நவீன தொழில்நுட்பத் தைப் பயன்படுத்தல், கற்றல் கற்பித்தல் செயன் முறைக்கு அனுகூலமாக வகுப்பறைச் சூழலை ஒழுங்குபடுத்தல் போன்றவ்ை கிரமமாக முன் னெடுத்தல் வேண்டும். பாடசாலை மேம்பாடு தொடர்பாக கூட்டாக தீர்மானங்களை மேற் கொள் வதற்கு அதிபர். ஆசிரியர், பெற்றோர் மற்றும் மாணவர்களை ஊக்கவித்தல்.
©
ஆசிரியர்களின் தேர்ச்சியை விருத்தி செய்வதற்கு ஆசிரியர் கல்வி நிகழ்ச்சித்திட்டங்களில் பாடசாலை முகாமைத்துவம், பாடசாலை மட்டக்கணிப்பீடு, பல்தரக்கற்பித்தல் போன்ற துறைக்கு அதிக
முக்கியத்துவம் கொடுத்தல்.
கற்றலுக்கு அனுசரணையான வசதிகள் என்ற வகையில் மனிதவளங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றின் பயன்பாடுகளை திட்ட மிடுதல் செயலாற்றுகையின் எதிர்பார்க்கப்பட்ட நியம மட்டங்களை அடைவதற்குத் தேவையான வற்றைப் பெறுதல். ஆசிரியர்கள் பாடசாலைக்கு ஒழுங்காக வருகை தருதல், உரிய நேரத்திற்கு வகுப்பறைக்குச் செல்லுதல், உரிய காலப்பகுதியில் தமது வேலைத் திட்டம், பாடக்குறிப்புக்களை (செயற்பாட்டுத் திட்டம்) என்பவற்றைத் தயாரித்தல் போன்றவற்றை ஊக்குவிப்பதற்கு பொருத்தமான நிகழ்ச்சித் திட்டங்களை உருவாக்குதல். காலந்தவறாமை, விளைதிறனுடன் செயலாற்றும் ஆசிரியர்களுக்கான ஊக்கவிப்பு, வெகுமதிகளை வழங்குவதற்கு ஒழுங்கு செய்தல்.
மாணவர்கள் தினமும் பாடசாலைக்கு சமூகமளிப் பதை ஊக்கவிக்கவும் கற்றல் செயற்பாடுகளில் விளைத் திறனுடன் பங்குபற்றவும், கற்றல் வெளிப்பாடுகளை முன்னேற்றுவதற்குமான உபாயங்களை பெற்றோரின் ஒத்துழைப்புடன் செயற்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இலங்கைப் பாடசாலை அமைப்பில் பிள்ளை நேயப்பாடசாலை பற்றிய எண்ணக்கரு மிக முக்கியமானது என்பதை அதிபர் உணர்ந்து பாடசாலைகளில் சிறப்பாக அமுலாக்குதல் வேண்டும்.
தொடர்ச்சி 23இல்...
20
ஆசிசியம்

Page 23
ஆரம்ப இடைநிலைக் கல்வியில்
கணிதம் கற்றல் -கற்பித்தல்
-இ.துஷாந்தன்
“கணிதம் அறியாதவன் வேறு விஞ்ஞானம் எதனையும் அறிய முடியாது தன்னுள் இருக் கும் அறியாமையையும் அறிய முடியாது” என்ற பிளாற்றோ வின் கருத்தின் மூலம் கணித அறிவின் முக்கியம் எமக்கு புலப்படுகின்றது.
ான
இன்றைய எமது பாடசாலைக் கலைத்திட்டத்தில் ஆரம்ப-இடைநிலைக் கல்வியில் கணிதம் முக்கியமான இடத்தை பிடிக்கின்றது மாணவர்களின் உள் ஆற்றல் களை விருத்தி செய்யவும் பிரச்சனை தீர்த்தல், நியாயம் காணும் திறன் போன்ற திறன்களை மாணவரிடத்தே கணிதம் விருத்தி செய்கின்றது.
ஆரம்பநிலைக் கணிதத்தை எடுத்துக்கொண்டால் முதல் மாணவர் எண்களை பற்றி அறிந்துகொள்வார். அவ்வாறு அறிந்து கொண்டபின் அவற்றைக் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் பற்றிய திறன்கள் அவருக்கு அவசியமாகின்றது. இவ்வாறான திறன்களை பெற்றுக் கொள்வதற்கு அவருக்கு எண் முன் எண்ணக் கருக்கள் அவசியமாகின்றது. தெரிதல், தொடர்பு, வரிசைப்படுத்தல், அடங்கல், ஒன்றுக் கொன்றான ஒத்திடுக்கை, அயலும் வரிசைப்படுத்தலும் வடிவங்களும் சமச்சீரும் போன்ற அவ் எண் முன் எண்ணக்கருக்கள் சரியான முறையில் எண்ணக்கருவாக்கம் பெற்றாலே மாணவரால் அடிப்படை கணிதச் செய்கைகளை மேற்கொள்ள முடியும்.
இவ்வாறு விருத்தியாகிச் செல்லும் திறன், எண்ணக்கருக்கள் இடைநிலையில் மாணவர் கணித பாடத்தை கற்கும்போது அவசியமாக தேவைப்படுகின் றது. ஆரம்ப நிலையில் மாணவனால் பெற்றுக் கொள் ளப்படும் உறைநிலை அனுபவங்கள் முக்கியமானவை யாக இருப்பதால் ஆரம்ப நிலையில் கணித பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் பொதுவாக பயிற்றப்பட்ட ஆசிரியராக இருப்பர். ஆரம்பத்தில் கணித பாடத்தை கற்பிக்கும் போது தரம்1, தரம் 2 (முதன்மைநிலை1) ஸ்தூல சிந்தனைக்கு முற்பட்ட பருவ மாணவர்களிற்கு
' டிசம்பர் 2012

(2ாr. +ேb*=c"
A: Tr2 10 E=MC?
இ -1 114ா?
(ரி)
கற்பிக்கும்போது விளையாட்டுடன் கூடிய கணிதமாக வும், பாடல் அபிநயம் போன்றவற்றினூடாக கணிதம் கற்பிக்கப்பட வேண்டும். அப்போது தான் மாணவர் சரியான முறையில் கணிதத்தை விளங்கிக்கொள்வார். - தரம்3, தரம்4 (முதன்மை நிலைII) தரம்5 (முதன்மை நிலைIII) மாணவர்கள். ஸ்தூல சிந்தனைப் பருவ மாணவர்கள் ஆதலால் இவர்களிற்கு ஸ்தூல பொருட் கள், மாதிரிகள், படங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி கணிதத்தை கற்பிக்க வேண்டும். இவ்வாறு கணிதத்தை கற்பிக்கும்போது மாணவரிற்கு தொடர்பாடல் திறன், தொடர்புகாணல் திறன், காரணம் கூறல், பிரச்சனை தீர்த்தல் திறன் ஆகியன விருத்தியாகும்.
அடுத்து இடைநிலைக் கணிதத்தை எடுத்தால் தரம் 6, தரம் 7 மாணவர்கள் ஸ் துால சிந்தனைப்பருவ மாணவர்கள். தரம்8, தரம்9, தரம்10, தரம்11 மாணவர்கள் நியம சிந்தனைப் பருவ மாணவர்கள் இடைநிலையில் கணித பாடத்தை கற்பிக்கும்போது மாணவர்கள் ஆரம்ப நிலையில் சரியான முறையில் கணித எண்ணக்கருக் களை பெற்றிருக்க வேண்டும். கணித உளவியலாளரான 'றிச்சட் ஸ்கெம்” இன் கருத்துப்படி
21
ஆசிரியம்

Page 24
உயர்மட்ட
எண்ணக்கரு
இடைநிலை எண்ணக்கரு
தாழ்மட்ட எண்ணக் கரு
கணித
அடிப்படை எண்ணக்கரு
ப
தாழ்மட்ட எண்ணக்கருக்களை பெற்றிராத மாணவர் ஒருவரால் அடுத்த மட்டத்தில் உள் ள எண்ணக்கருக்களை பெற்றுக்கொள்ள முடியாது.
உதாரணமாக (3) என இடப்பட்ட எண்ணக்கருவை மாணவர் பெற்றுக்கொள்ள வேண்டினால் அவர் (1), (2) எண்ணக்கருவை சரியாக பெற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல் (6) என இடப்பட்ட எண்ணக் கருவை பெற்றுக்கொள்வதற்கு அவர் (5), (3), (8), (1), (2) ஆகிய எண்ணக்கருக்களை மாணவர் பெற்றிருக்க வேண்டும் கணித பாடத்தில் உதாரணமாக நிகழ்தகவு காணல் தொடர்பான பிரசினங்களை தீர்ப்பதற்கு அவரிற்கு, பின் னம் தொடர்பான எண்ணக்கரு, காரணிகள் தொடர்பான அறிவு, தொடை தொடர்பான எண்ணக்கரு, பெருக்கல் போன்ற எண்ணக்கருக்கள் மாணவரிற்கு தேவையாக உள்ளது.
- எனவே ஆரம்ப நிலையில் சரியான கணித எண்ணக்கருக்களை பெற்றிராத மாணவரால் இடை நிலையில் சரியான முறையில் எண்ணக்கருவை பெறமுடியாது.
Tன
டை
அட்டவணை
பெறவேண்டிய
தேவையான எண்ணக்கரு
எண்ணக்கருக்கள்
முன்எண்ணக்கருக் களின் எண்ணிக்கை
முன்
3 - மட்டம் B
1, 2
2
5
7 மட்டம் C
3, 4, 1, 2, 9
10 மட்டம் D
6, 7, 5, 3, 4, 8,
1, 2, 9
' டிசம்பர் 2012 |

10
A,B,C என்ற ஒவ் வொரு மட்டநிலையில் எண்ணக்கருவின் மட்டங்கள் அதிகரிக்க அவற்றுக்கு
தேவையான முன் எண்ணக்கருக்கள் கூடுதலாக IB அதிகரித்துச் செல்கின்றது. இதனை கீழுள்ள
வரைபு காட்டுகின்றது.
தேவையான
முன்
கரு 9 |
எண்ணக்கரு 0 க்கள்
-- +++-
ப க எ க - 00
++
-- N
B C D மட்டம் 7
தரம்6, தரம் 7 ஐப் பொறுத்தவரையில் ஸ்தூல பொருட்கள், படங்கள், மாதிரிகள், அட்டவணைகள், வரைபுகள், குறியீடுகளைப் பயன்படுத்தியே கணித எண்ணக்கருக்களை ஏற்படுத்த முடியும். இடைநிலைக் கணித பாடத்தில் உள்ள கருப்பொருட்கள் ஆவன.
1. எண் கணிதம்
2. அட்சர கணிதம் 3. கேத்திர கணிதம் 4. அளவீடு 5. தொடைகள், நிகழ்தகவு 6. புள்ளிவிபரவியல்
எண்கணிதம் ஆரம்ப நிலையிலே மாணவரிற்கு அறிமுகப்படுத்துவதோடு மற்றைய கருப்பொருட்கள் பொதுவாக இடைநிலையிலே பூரணமாக அறிமுகப் படுத்துவதோடு ஆரம்பநிலையில் மற்றைய கருப்பொருட் கள் சிறிதளவே அறிமுகப்படுத்தப்படுகிறது. எண் கணிதத்தோடு தொடர்புடையதாகவே அட்சரகணிதம், அளவீடு என்பன அறிமுகப்படுத்தப்பட வேண்டும் எனவே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாகவே கணித
22
ஆசிசியம்

Page 25
எண்ணக்கருக்கள் விருத்தியடைவதால் மாணவரிடம் சீரான கணித எண்ணக்கருத் திரளமைப்பு உருவாகும்.
எனினும் மேற்குறிப்பிட்ட கருப்பொருட்களில் எல் லோராலும் வித்தியாசமாக நோக்கப்படுவது கருப்பொருள் கேத்திர கணிதம் ஆகும். இதற்கும் மாணவர் முன்னர் பெற்றுக் கொண்ட எண் முன் எண்ணக்கருவான வரிசைப்படுத்தல், வடிவங்களும் சமச்சீரும் போன்ற எண்ணக்கருக்களையும் திசைகள் போன்ற எண்ணக்கருக்களையும் மாணவர் உறைநிலை அனுபவமாக பெற்றிருப்பாராயின் வெளிசார் நியாயம் காணல் திறனுக்குரிய கருத்பொருளான கேத் திர கணிதத்தை மாணவர் இலகுவாக கற்க முடியும். இவ்வாறு கேத்திர கணிதம் கற்கும் பருவங்களையும் மூன்றாக வகுத்துள்ளனர்.
தரம் 6, 7 பரிசோதன்ைபருவம்
தரம் 8, 9 தொகுத்தறிபருவம்
தரம் 10,11 அமைப்பர்கல் முறை
நேர்கோடு வரைதல், கோணங்களை அமைத்தல் போன்ற பரிசோதனை செயற்பாடுகள் மூலம் கேத்திர கணித திறன்களை பெற்றுக்கொள்வர்.
20ம் பக்கத் தொடர்ச்சி
பிள்ளை நேயப் பாடசாலையானது பிள்ளை களின் உரிமைகளை உணர்த்துவதுடன் அவற்றை பிரதிபலிப்ப தாகவும் அமைதல் வேண்டும். அத்துடன் சகல பிள்ளை களினதும் உள்ளார்ந்த ஆற்றலை முழுமையடையச் செய்யவும் உதவுதல் வேண்டும். பாடசாலைகள் பிள்ளைகளுக்கான பாதுகாப்பு, பங்குபற்றலுக்கான சுகாதார சூழல் என்பவற்றை வழங்க வேண்டும். இது பங்கேற்பினையும் பிள்ளை மையம், பால்நிலை சமத்துவம், என்பவற்றைறோடு யாவரையும் உள்ளடக்கி யதாகவும் இருத்தல் வேண் டும். பிள்ளை நேயப் பாடசாலையானது மாணவர், ஆசிரியர், குடும் பம், சமுதாயம் என் பவற்றின் பணிகளையும் பிள் ளைகளின் உரிமைகளையும்
கருத்திற்கொண்டு நிர்வகிக்கப்படுதல் வேண்டும்.
' டிசம்பர் 2012

தரம்8, தரம்9 மாணவர்கள் தெரியாத கோணங் களின் பெறுமதி காணல், தேவையான தகவல்களை தொகுத்தல் போன்றவற்றிற்கு தர்க்க ரீதியான காரணங் களுடன் செயற் படுவர். இதன் மூலம் கிடைக்கும் தனித்தனி அனுபவங்கள் மூலம் தொகுப்பான சிந்தனை களை பெற்றுக்கொள்வர்.
தரம் 10, தரம் 11 மாணவர்கள் பரிசோதனை, தொகுத்தறி பருவங்களில் பெற்றுக்கொண்ட திறன்கள், அனுபவங்கள் மூலம் கேத்திர கணித பிரசினங்களில் அமைப்புக்களை பிரயோகிக்கும் திறனை பெறுவர். இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் திறன்கள் மாணவ ரின் தர்க்க ரீதியான சிந்தனைகளையும் பிரச்சனை தீர்த்தல் திறன்களையும் விருத்தி செய்ய உதவும்.
னெ
முடிவுரை
ஆரம்ப - இடைநிலை மட்டங்களில் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட கணித எண்ணக்கருக்களை சரியான முறையில் பெற்றுக் கொண்ட மாணவர் தொகுத்தறி நியாயம் காணல், உய்த்தறி நியாயம் காணல், விகிதம் சார் நியாயம் காணல், வெளிசார் நியாயம் காணல் உட்பட்ட நியாயம் காணல் திறன்களையும் தொடர்பாடல், பிரச்சினை தீர்த்தல், தொடர்பு காணல் போன்ற திறன் களை பெற்று ஒரு சிறந்த கணித எண்ணக்கருக்களை பெற்ற மாணவராக நிகழ முடியும்.
***
இவ்வாறான ஓர் பின்னணியுடன் இங்கே சுட்டிக் காட்டப்பட்ட முகாமைத்துவம், தலைமைத்துவம் சார்பான அம்சங் களும் பிறவிடயங்களையும் பாடசாலையின் முதற்தர முகாமையாளரான அதிபர் தனது கருத்தில் கொண்டு செயற்படுகின்றபோது நிச்சயம் அப்பாடசாலை ஓர் உயர்தரத்திலான பாடசாலையாக அமைவதுடன் . மற்றையப் பாடசாலைகளுக்கு ஓர் முன்னுதாரணமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறான பாடசாலை யின் முகாமையாளரான அதிபர் முதற்தர தலைவராகச் சிறப்புறுவார் என் பது அனைவராலும் ஏற்றுக் கொள் ளக் கூடிய ஒன்றாகும். இன்றைய காலகட்டத்தில் இவ்வா றான பாடசாலைகளும், அதிபர்களும்தான் தேவையாக உள்ளது என்பதுதான் மறுக்க முடியாத உண்மையாகும்.
***
23
ஆசிரியம்

Page 26
சிறுவர் உரின மாணவர்களி
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் கல்விப் பணிப்பாளராகவும், மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றிய காலத்தில் இம்மாகாணத்தில் அடங்கும் எல்லாக் கல்வி மாவட்டத் திலும் உள்ள அனேக பாடசாலைகளைத் தரிசித்து நிலபர அறிக்கை தயாரிக்கும் பணி எனக்குக் கிடைத்தது. அதன டிப்படையில் நானும் திணைக்கள அதிகாரிகள் பலரும் திருமலை மாவட்ட யுனிசெவ் நிறுவன அலுவலர் செல்வி கப்ரிஎலா-எல்றோய் (ஸ்வீடன்) அவர்களும் சிலவேளை என்னுடன் பாடசாலைத் தரிசனம் செய்வார். பாடசாலை களுக்குச் சென்று அதிபரின் அனுமதியுடன் வகுப்பறைக் குச் சென்று அவர்களின் கல்வி உரிமை எவ்வாறு நிறைவேறுகிறது, எவ்வகையான கல்விப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறீர்கள்? உங்களின் கல்வி தொடர்பான எதிர்பார்ப்புகள் எவை? எவ்வாறான கற்பித்தலை எதிர்பார்க்கின்றீர்கள்? முறையான கல்வி நிறைவேற தடையாக உள்ள காரணிகள் எவை? போன்ற சிறுவர் உரிமை தொடர்பான வினாக்களை மாணவரிடம் கேட்போம்.
நாம் வினாக்களை வினாவுவதும், மாணவர் விடை யளிப்பதும் எழுத்திலும் வீடியோவிலும் பதிவு செய்யப் படும். உடனுக்குடன் எம்மால் பதிலளிக்கக்கூடிய வினாக்களுக்கு விடையளிக்கப்படும். ஏனைய வினாக்க ளுக்கு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பதில்
' டிசம்பர் 2012

12 ஜேன் எ /
மைகள் மீறப்பட்ட ன் அழுகுரல்கள்
ச.சுப்பிரமணியம்
கூறப்படும். மாணவர்கள் காகிதாகிகள், கற்பித்தல் உபகரணங்கள், பாய் போன்றன தேவை எனக் கேட்டால் அவற்றை வலயப் பணிப்பாளரூடாக, அதிபர், ஆசிரியர் ஊடாக மாணவர்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யப் படும். பாடசாலை மட்டத்தில் தீர்க்கக்கூடியவற்றைத் தீர்ப்பதற்கான ஆலோசனைகள் அதிபர், ஆசிரியருக்கும் உடனேயே வழங்கப்படும்.
மாணவர்கள் எதிர்கொள்ளும், பிரச்சினைகள், அவர்களின் எதிர்பார்ப்புகளையெல்லாம் நேரடியாக அதிபர்களுக்கோ, ஆசிரியர்களுக்கே வலயக்கல்வி அலுவலர்க்கோ தெரியப்படுத்த முடியாத அளவுக்கு அவர்களின் "கருத்துச் சுதந்திரம்” தடை செய்யப்பட்டி ருந்தது. அவ்வாறு கூறுபவர்களும் கீழ்ப்படிவில்லாத வர்கள், ஒழுக்கக் குறைவானவர்கள் எனும் கருத்து எல்லா மாவட்டத்திலும் பரவியிருந்தது. இதற்குப் பெற்றோரும் விதிவிலக்கானவர்கள் அல்ல. மாணவர்கள் கூறிய குறைபாடுகள் உண்மையானது என நாம் கண்டறிந்தோம்.
யூனிசெவ் அலுவலகத்தினால் வழங்கப்பட்ட காகிதாகிகள் பாடசாலைகளுக்கு வழங்கப்படாது வலயக் காரியாலயத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டு கறையான் அரித்துச் சேதமடைந்திருந்ததும் எம்மால் உடன் கண்டறியப்பட்டதும், அவற்றில் சேதமடையாதவற்றை உடனடியாகப் பாடசலைகளுக்குப் பகிர்ந்து வழங்கப் பட்டதும் உண்மை.
24
-ஆசிரியர்

Page 27
மேற்கூறியபடி மாணவர்களிடமிருந்து சேகரிக்கப் பட்ட தகவல்கள் தொகுக்கப்பட்டபோது பல முக்கிய கல்விப் பிரச்சினைகள் வெளிவந்தன. முக்கியமாக,
அனேக பாடசாலைகளில் செயலனுபவக் கல்வி வழங்கப்படுவதில்லை.
அனேக பாடசாலைகளில் ஆய்வுகூட உபகரணங் கள், தேவையான மூலப்பொருள், இரசாயனப் பொருட்கள் இல்லை. அவற்றைப் பெற்று ஆசிரிய ருக்கு வழங்கக்கூடிய தரமேம்பாட்டு நிதியிலிருந்து அவை முறையாகப் பயன்படுத்தப்படவில்லை.
இணை பாடவிதானச் செயற்பாடுகளில் ஈடுபட எல்லா மாணவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படு வதில்லை. தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கே பயிற்சி அளிக்கப்படுகிறது. வகுப்பறைக் கணிப்பீட்டுத் திட்டம் முறையாக அமுலாக்கப்படுவதில்லை. பாரபட்சமான முறை யில் புள்ளியிடல் ஆசிரியரால் மேற்கொள்ளப்படு கிறது.
விசேட தேவையுடைய மாணவர் மீது விசேட கவனிப்பு அனேக ஆசிரியரால் மேற்கொள்ளப் படுவதில்லை. மாணவர்கள், மந்தமானகள், பின்தங்கியவர்கள், விவேகமானவர்கள் என வகைப்படுத்தப்பட்டு அவர்களில் விவேகமானவர்களுக்கு விசேட ஒழுங்கான ஆசிரியர் சேவையும், ஏனையவர்க ளுக்கு கவனிப்பாரற்றும், தேர்ச்சியற்ற ஆசிரியர் கற்பிக்க அனுமதிக்கும் நிலையும் பாடசாலையில் காணப்படுகிறது.
பெற்றோரை இழந்த பொருளாதார வசதி குறைந்த மாணவர்களிடமும், பல்வேறு காரணங்களுக்காக வும் நிதி சேகரிக்க முனைவதும் பணம் செலுத்த முடியாத மாணவர் தண்டிக்கப்படுவதும், அவர்கள் கல்வியில் வெறுப்பெய்தும் வண்ணம் ஆசிரியர், அதிபரால் தண்டிக்கப்படுவதும் பலர் பாடசாலைக் கல்வியை விட்டு விலகியதும் கண்டறியப்பட் டுள்ளது.
சாரணீயம் போன்ற இணைபாடவிதான செயற் பாடுகள் சமூகப் பண்புகளை மேம்படுத்த உதவும் ஒரு செயற்பாடாகவிருந்த போதிலும், மாணவர்கள் பலர் சாரணியம் கற்க விருப்புக்காட்டிய போதும் உரிய நடவடிக்கை எடுக்க அதிபர் தவறியுள்ளமை ஆசிரியர் உதவ முன்வந்தபோதும் அதிபர் கவனிக் காமல் விட்டமை.
' டிசம்பர் 2012

- © -
பாடசாலைச் சுகாதார நடவடிக்கைகளில் குறிப் பிட்ட மாணவர்களையே தொடர்ந்து பயன்படுத்து
வதால் மாணவர்கள் மனமொடிதல். 2 ®
வாழ்க்கைப் பண்புகளை மேம்படுத்த உதவும், மாணவர் சங்கங்கள், காலைப் பிரார்த்தனைகள், மொழித்தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாணவர்
களுக்கு வாய்ப்பளிக்கப்படாமை.
- @.
பின் தங்கியவர்களாக இனங்காணப்பட்ட மாண வர்களுக்கான விசேட பின்னூட்டல் வகுப்புகள் நடத்தப்படாமை. போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான விசேட உளவளத்துணை, விசேட ஆலோசனைச் சேவைகள் வழங்க ஏற்பாடுகள் பாடசாலைகளில் செய்யப்பட்டிராமை.
நகர்ப்புற மாணவர்களுக்கும் கிராமப்புற மாணவர் களுக்கும் பாரபட்சம் காட்டும் முறைமை தொடர் கிறது. நகர்புற மாணவர்களுக்கு விசேடமான தேர்ச்சி பெற்ற ஆசிரியர் சேவை வழங்கப்படுகிறது. அவர்களுக்கான ஆய்வுகூட வசதிகள், விளை யாட்டு மைதான சேவைகள் போதியளவு கிடைக் கின்றன. தளபாடங்கள் போதியளவு வழங்கப்படு கிறது. விசேட ஆசிரியர்களின் சேவை சித்திரம், நடனம், சங்கீதம், நாடகம், இணைபாடவிதான சேவைகள் கிடைக்கின்றன. கிராமப்புற மாணவர்க ளாகிய எமக்குக் கிடைப்பதில்லை. சில பாட சாலைகளுக்கு பகுதிநேர ஆசிரியர் சேவையே கிடைக்கிறது. பிரபல பாடசாலைகளில் சேர்வதற்கு அதிகளவு பிரவேசக் கட்டணம், கிராமிய மாணவர் களிடம் அறவிடப்படுகிறது. சிறுவர்களைச் சிறுவராக மதிக்காமல் தண்டிக்கப் படுகிறோம்.
வெறும் அறிமுறையாகக் கற்பிப்பது எமக்கு விளங்காத நிலையையே தோற்றுவிக்கிறது. செயல்முறையாகக் கற்பிக்க ஆசிரியர் முயற்சிக்க வேண்டும். தொழிற்கூட ஆய்வுகூடப் பரிசோதனை கள் செய்ய எம்மை அனுமதிக்க வேண்டும்.
வேலையுலகத்தினில் சேர்ந்து உழைக்கவும், தொழில்களைத் தேடவும் உதவும் கல்வி அறிவும், செயல்முறைத் தேர்ச்சியும் தர வேண்டும்.
வகுப்பறையில் ஆண், பெண் மாணவரிடையே பாரபட்சமாக நடாத்தப்படுதல் தவிர்க்கப்படல் வேண்டும்.
மாணவர்களின் குறைகள், கருத்துகள், போன்ற வற்றைக் கேட்கும் திட்டம் ஏதும் பாடசாலையில் இல்லை.
-25 - ஆசிசியம்

Page 28
மேற்கூறிய மாணவர்களின் எதிர்பார்ப்புகள், கோரிக்கைகளை எவ்வாறு அதிபர், கல்வி அதிகாரிகள், ஆசிரியர்களுக்குத் தெரியப்படுத்துவது என்ற பிரச்சினை யும் மாணவர்களுக்கும் உண்டு. நேரடியாகச் சொன்னால் தாம் பாதிக்கப்படுவோம் என்ற பயமும் உண்டு. அதிகாரிகளூடாகச் சொன்னால் அதுவும் பாதிப்பு ஏற்படுத்தும். இந்தவித பிரச்சினைகள் பெற்றோருக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டும். போராட்டம் செய்யவோ, பதாகைகள் எழுதிப் பிடிக்கவோ முடியாது. அது ஒழுங்கீனம் என மாணவர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப் புண் டு. எனவே இந்தப் பிரச்சினைகளை மேற்கூறியவர்களுக்குத் தெரியப்படுத்த ஒருவழி மாணவர் கள் தமது பெற்றோரிடம் மிகவும் பணிவாகவும், அழுதும் சொல்லுவதன் மூலம் பெற்றாரின் மனதை இளகச் செய்யலாம் அல்லது தமது பிரச்சினைகளை நாடகமாக்கி நடித்துக் காட்டுவதன் மூலம் அவர்கள் மனதில் கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என உணரப்பட்டது.
இத்திட்டத்தை அமுல்படுத்தி பெற்றோர் மற்றோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு வழியாகப் பிரச்சி னைகளை பாடல்களாக எழுதி மாணவர்களைக் கொண்டு பாடி ஆடிக் காட்டுவது எனத் தீர்மானிக்கப் பட்டு பாடலாக்கும் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது. அப்பாடல்களுக்கு இசையமைக்க பல நல் உள்ளங்கள் பலர் முன்வந்தனர். பாடவும் முன்வந்தனர். அவை பின் னர் திருமலையில் உள்ள ஒரு பாடசாலை மாணவர்களைக் கொண்டு நடிக்க வைக்கப்பட்டது. அவை ஒளிப்பதிவு செய்யப்பட்டு வெளிவந்துள்ளது. மாணவர்களின் கோரிக்கைகளைப் பாடலூடாகக் கேட்போமா?
சிறுவர் உரிமை 2
சிறுவர்கள் தமது சிற்பாற்றல்கள், திறமைகளைத் தாம் விரும்பியவாறு வளர்த்துக் கொள்ளவும், தம்மை விருத்தி செய்து கொள்ளவும் உரித்துடையவர்கள்.
பாடல் 1
பள்ளிச் சிறுவர்களின் உள்ளடக்குமுறல்
பள்ளிச் சிறுவர் உள்ளக்குமுறலைப் பாட்டாய் தருகிறோம் மெல்ல இதற்கொரு நல்ல தீர்வினை நயந்தே தந்திடுவீர் பள்ளிச் சிறுவர் உள்ளக்குமுறலைப் பாட்டாய் தருகிறோம்.......
யாவர்க்கும் கல்வி தரமாய் தந்திட யாவரும் வேண்டுகிறோம். அறிவுடன், ஆற்றல், பண்புமிகுந்திட கல்வியை வேண்டுகிறோம் வாழ்க்கைக் கல்வியை வேண்டுகிறோம்.
- டிசம்பர் 2012

அன்போடும், பண்போடும், ஆதரவோடும் கற்பிக்க வேண்டுகிறோம்.
ஆடவும், பாடவும், கீறவும் எமக்கு வாய்ப்புகள் தரவேண்டும். வேலையுலகினில் பொருள்வளம் பெருக்க அனுபவம் தரவேண்டும் களத்தினில் சென்று காரியமாற்ற விளக்கங்கள் பெற வேண்டும் கேட்டு நாம் பேசவும், வாசித்து எழுதவும் திறன்கள் பெறவேண்டும்
கற்றிடும் நுட்பங்கள் நாமெல்லாம் அறிந்திட நமக் கொரு வழிவேண்டும் நமக் கொரு வழிவேண்டும்
பள்ளிச் சிறுவர்.............. மெல்ல இதற்கொரு... .......
பாடல் - 2
ஏழைக்கும், செல்வர்க்கும் சமமான கணிப்பு கல்வியில் தர வேண்டும்.
ஏழைக்கும், செல்வர்க்கும் சமமான கணிப்பு கல்வியில் தர வேண்டும். சிறுவர்கள் யாவரும் சமமென்று கருதி கற்பிக்கும் திறன் வேண்டும் கற்பிக்கும் திறன் வேண்டும்.
ஏழைக்கும் செல்வர்க்கும் சமமான கணிப்பு கல்வியில் தரவேண்டும்........... கிராமமும், நகரமும் சமமென்று கருதி வசதிகள் தர வேண்டும் சீரற்ற நிலைகள் சீக்கிரம் கலைந்து சமநிலை பெற வேண்டும் சமநிலை பெற வேண்டும்
ஏழைக்கும், செல்வர்க்கும்....... சிறுவரை வாட்டும் யுத்தத்தின் கொடுமை நீங்கிட வழிவேண்டும் அமைதியும், மகிழ்வும் சிறுவர்கள் பெற்றிட வழியொன்று தரவேண்டும் வழியொன்று தரவேண்டும்
ஏழைக்கும் செல்வர்க்கும்..............
26
ஆசிரியர்

Page 29
பாடல் -3
சங்கீத வித்துவான் பொன் சிறி வாமதேவன் இவர் ஒரு பெற்றார். பெற்றாரின் கோரிக்கைகளை இவர் ஒரு பாடலாகத் தருகின்றார்.
அன்புள்ள ஆசானுக் கொரு கடிதம் எம் பணிவான எண்ணங்களின் ஓர் வடிவம் அன்புள்ள ஆசானுக்கோர் கடிதம் எம் பணிவான எண்ணங்களின் ஓர் வடிவம்.
இன்னாளில் கல்விதனை நிறைவாக்கவே தேவை வளமான வாழ்க்கைக்கே கல்வி அன்புள்ள ஆசானுக்கோ கடிதம்..............
சிந்தனை ஆற்றலைத் தூண்டிட வேண்டும். அந்தச் சிந்தனை நல்வழியில் ஓடிட வேண்டும். நிந்தனை செய்திடாமல் வாழ்ந்திட வேண்டும். நிந்தனை செய்திடாமல் வாழ்ந்திட வேண்டும். தந்த கல்வி இதற்கான வழிதர வேண்டும். தந்தகல்வி இதற்கான வழிதர வேண்டும்.
அன்புள்ள ஆசானுக்கோர் கடிதம்............. எம் பணிவான எண்ணங்களின் ஓர் வடிவம்
ஒழுங்கமைப்பின் பண்புகள் ஓங்கிட வேண்டும். நல் ஒழுக்கத்தின் பண்புகள் வளர்ந்திட வேண்டும். பழக்கங்கள் பார்புகழ மாறிட வேண்டும். வழங்குகின்ற கல்வி இதை வளர்த்திட வேண்டும். அனுபவமும் கல்வியும் சேர்ந்திட வேண்டும். அதன் அனுகூலம் வாழ்வை வளமாக்கிட வேண்டும். அணுசக்திவரை தொழில்நுட்பம் வளர்ந்திட வேண்டும். இதை அணுகியே கல்வியும் ஊட்டிட வேண்டும். அன்புள்ள ஆசானுக்கோர் கடிதம்...............
பாடல் 4
மாணவரின் எண்ணங்களின் வெளிப்பாடு
வாழ்க்கைக்கே கல்வியென உணர்வோம் நாங்கள் பூரண மனிதராய் வாழ்வோம் நாங்கள் பூரண மனிதராய் வாழ்வோம்
வாழ்க்கைக்கே கல்வியென உணர்வோம்............... நாங்கள் பூரணமனிதராய் வாழ்வோம்............. வாழ்க்கை தன்னை வளமாக்க வாழ்க்கைக் கல்வி கற்றிடுவோம்.
அடிப்படை அறிவைப் பெற்றே வளமிகு பொருள்வளம் தேடியே சமூக நீதியுடன் வாழ்வோம்.
டிசம்பர் 2012

வாழ்க்கைக்கே கல்வியென உணர்வோம்...............
நாட்டின் நல்ல குடிமகனாய் நாமும் வாழ்வோம் நிலந்தனிலே சீரிய கல்வியைக் கற்றே பேருயர் பேறுகள் பெற்றே வாழ்க்கைக்கே கல்விஎன உணர்வோம்.............. நாங்கள் பூண மனிதனாய் வாழ்வோம்.
பாடல் -5
மாணவன் எனக்கு வழியொன்று வேண்டும்
வாழ்க்கைக்கு நானும் தயாராக வேண்டும் மாணவன் எனக்கு வழியொன்று வேண்டும் வாழ்க்கைக்கு நானும் தயாராக வேண்டும்.
கல்வி கேள்விகளில் உயர்ந்திட வேண்டும் வல்லவன் நானென்று பெயர்பெற வேண்டும் கலைகள் பலவும் கற்றிட வேண்டும் கருமத்தில் ஈடுபடு திறன் பெறவேண்டும்.
மாணவன் எனக்கு வழியொன்று வேண்டும் வாழ்கைக்கு நானும் தயாராக வேண்டும்.
வளரும் உலகை வலம் வர வேண்டும்.
அதற்கு எனக்கோர் அறிவாற்றல் வேண்டும். உடலின் பலத்தை ஏற்றிட வேண்டும். உயிர் கொல்லி நோயை எதிர்த்திட வேண்டும்.
மாணவன் எனக்கு வழியொன்று வேண்டும் வாழ்க்கைக்கு நானும் தயாராக வேண்டும்.
அறநெறி வாழ்வை வாழ்ந்திட வேண்டும். அதற்கு உயர் குணங்கள் வளர்த்திட வேண்டும் வளம்மிகு எங்கள் நாட்டினுக்கே - நானும் உழைத்திடும் மனநிலை வளர்ந்திட வேண்டும். மாணவன் எனக்கு வழியொன்று வேண்டும். வாழ்க்கைக்கு நானும் தயாராக வேண்டும்.
பொருள்வளம் பெருக்கு உயர்ந்திடவே எனக்கு தொழிற்திறன் தன்னை தந்திடவேண்டும். எனக்குயிர் ஈந்த எம் திருநாட்டின் - பிரசையாய் வாழ்ந்திட புத்தியும் வேண்டும் மாணவன் எனக்கு வழியொன்று வேண்டும்...
ஆசிரியர் தினம், சிறுவர்தினம், முதியோர் தினம் கொண்டாடப்படும் இவ்வேளையில் கல்வியின் நிலபரத்தையும், அதைச் சீராக வழங்க வேண்டிய விழிப்புணர்வையும் எல்லாமட்டத்திலும் ஏற்படுத்தும் நோக்கிலுமே எழுதப்படுகிறது. தனிப்பட்ட முறையில் எவர் மனதையும் புண்படுத்தும் நோக்கம் கொண்டதல்ல.
***
- 27
ஆசிரியம்

Page 30
சபா.ஜெயராசா
உளப்பகுப்பியலை மறுவாசிப்புக்கு உட்படுத்திய
லக்கான்
லக்கான் புகழ்மிக்க ஓர் உளப்பகுப்பியலாளர். ஆயினும் பிராய்டிச உளவியலை மறுவாசிப்புக்கு உட்படுத்தியவர். "பிராய்டுக்கு மீண்டும் திரும்புங்கள்” என்ற ஓங்கிய குரலை முன்மொழிந்து உளப்பகுப்புக் கோட்பாட்டின் முக்கியத்துவத்தை உலகளாவிய நிலையிலே வலியுறுத்தியவர்.
மார்க்சிசத்தைப் போன்று உளப்பகுப்பு இயலிலும் தவறான புரிதல்கள் ஐரோப்பியச் சூழலிலே நிகழந்து கொண்டிருந்தன. அத்தகைய கோட்பாடுகளை அறிவியல் நிலையிலும், புறவய நிலையிலும் அணுகத் தவறியவை யும் திரிபுபடுத்தல்களுக்கு இட்டுச் சென்றன.
உளப்பகுப்பியல் ஆதாரத்தளத்தில் லக்கான் முன்மொழிந்த கருத்துக்கள் “லக்கானியம்” எனப்படும். மார்க்சியம், உளப்பகுப்பியல், அமைப்பியல் முதலியவற் றிலிருந்து தெரிந்தெடுத்த கருத்துக்கள் லக்கானியத்தில் உள்ளடங்கியிருந்தன.
லகான் மனித நனவிலி மனத்துக்கு அதிக முக்கியத் துவம் கொடுத்தார். பொதுவாக உளப்பகுப்பியலாளர் அனைவருமே நனவிலி மனத்துக்கு முக்கியத்துவம் தருதல் குறிப்பிடத்தக்கது. மொழியையும் நனவிலி மனத்தையும் ஒன்றிணைத்து நோக்கும் லக்கான் "நனவிலி மனம் மொழி போன்று ஒழுங்கமைக்கப் பட்டுள்ளது” என்ற கருத்தை முன்வைத்தார்.
' டிசம்பர் 2012

மொழியின் கருத்துக் கையளிப்பை விளக்க வந்த சசூர் குறிப்பான் என்ற சொல்லுக்கும் குறிப்பீடு என்ற பொருளுக்கும் இடையேயுள்ள ஊடாட்டமும் தொடர்ச்சி யும் பொருண்மையை உருவாக்குவதாகக் கண்டார். அதனை அடியொற்றி லக்கான் ஒரு முக்கியமான கருத்தை முன்மொழிந்தார்.
அதாவது, லக்கான் குறிப்பானை முக்கியத்துவப் படுத்துகின்றார். "குறிப்பீடு என்பது இன் னொரு குறிப்பானே" என்ற மாற்றுக் கருத்தை முன்வைத்தார். குறிப்பீட்டை விடக் குறிப்பானே மொழி அமைப்பியலில் முதன்மை பெறுகின்றது என்பது அவரதுவாதம். குறிப்பான் என்பது சங்கிலித் தொடராக இயங்கிக் குறிப்பீட்டை உணர்த்துகின்றது.
ஒரு குறிப்பான்தான் தெரிவிக்க வரும் பொருளை இன் னொரு குறிப்பானின் துணையுடன் தான் புலப்படுத்துகின்றது.
நனவிலி மனம் என்ற ஆழ்மன அழுத்தங்களைத் தடையின்றி வெளிக்கொண்டு வரும் செயற்பாட்டில் மொழியின் முக்கியத்துவத்தைப் பிராய்ட் விளக்கினார். நனவிலி மனம் முற்றிலும் மொழியமைப்பைக் கொண் டது என்று லக்கான் குறிப்பிட்டுள்ளார். அனைத்து அழுத்தங்களையும் மொழி சார்ந்த வடிவமாகவே லக்கான் விளக்குதல் குறிப்பிடத்தக்கது.
28
ஆசிசியம்

Page 31
மொழிக்கு முன்னதாக நனவிலி மனம் உருவாக்கம் பெறுதல் இல்லை என்பது லக்கானின் வாதம். நனவிலி மனத்தில் நிகழும் அழுத்தங்கள் மொழியால் உருவாக்கிக் கொடுக்கப்படுகின்றன. நனவிலி மனத்திலிருந்தே மொழி இயங்கிய வண்ணமிருப்பதால் மொழிக்கும் நனவிலி மனத்துக்கும் இடையேயுள்ள உறவுகளை அவர் மேலும் தீவிரப்படுத்தியுள்ளார்.
லக்கானிய உளவியல் குறை என்ற விடயத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றது. குறையை அடிப்படையாகக் கொண்டே மனித விருப்பும் உந்தல் களும் மேலெழுகின்றன. உளப்பகுப்பு வாதத்தை அடியொற்றிப் பாலியலை அடிப்படையாகக் கொண்டே அவர் குறையை விளக்கினார்.
லக்கானிய உளவியல் ஆய்வில் "கணணாடிப் பருவம்” என்பது அதிக முக்கியத்துவம் பெறுகின்றது. இப்பருவம் பருமட்டாக குழந்தை பிறந்து ஆறு மாதத்தி லிருந்து பதினெட்டு மாதம் வரை அமையும். இப்பருவத் திலே குழந்தையானது கண்ணாடியைப் பார்த்துத்தான் யார் என்பதை அறிந்து கொள்கின்றது. அந்தக் காட்சி யிலிருந்து குழந்தையின் 'தன்னிலை' (Self) வளரத் தொடங்குகின்றது. முன்னர் தன்னையும் தாயையும் வேறுபடுத்திக் காணாத குழந்தை இப்போது தான் தாயிலும் வேறுபட்டு நிற்றலை உணர்கின்றது.
தன்னிலை மற்றும் மனித நிலை உருவாக்கங்களிலே அவர் மொழியை தன்மைப் படுத்தியுள்ளார். குழந்தை பிறப்பதற்கு முன்னரே மொழியென்ற வலைப்பின்ன லாக்கம் நிகழ்ந்து விட்டதென்பது அவரது கருத்து. மொழிக்கும் உளப்பகுப்பியலுக்குமிடையே தொடர்புகள் மிகுந்து காணப்பட்டாலும் அந்த இணைப்பை லக்கான் மேலும் வலிமைப்படுத்தியுள்ளார்.
டிசம்பர் 2012

உளப்பகுப்பு இயலிலே கனவு என்பது சிறப்பார்ந்த இடத்தைப் பெற்றுள்ளது. லக்கான் கனவை மொழியால் ஆக்கப்பெற்ற நூலியமாக (Text) க் கருதினார். அவரது நிலையில் மொழி என்பது குறிப்பான்களின் முக்கியத்து வத்தை வலியுறுத்தும் அமைப்பாகும். மனச்சிக்கலுக்கும் கவலைகளுக்கும் மனம் மேற்கொள்ளும் புனைவுகளே காரணம் என்பது சிக்மன் பிராய்ட்டின் கருத்து. ஆனால் ஈடிப்பஸ் போன்ற பெருஞ்சிக்கல்களுக்கு மொழியே காரணம் என்று லக்கான் துணிந்தார்.
லெக
லக்கானிய உளவியலில் அகநிலை, (Subject) குறிப்பான், வேறுபொருள் (Other) முதலியவை சிறப்பார்ந்த எண்ணக்கருக்களாக எடுத்தாளப்படு கின்றன. மனிதரை லக்கான் அகநிலையாகக் குறிப்பிடு கின்றார். மனிதரால் உருவாக்கப்பட்ட சொற்கள் குறிப்பான்களாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றன. மனிதர் நிகழ்த்தும் பேச்சு அகநிலையைக் குறிப்பான்க ளால் உணர்த்தும் செயற்பாடு.
சுயமும் தன்னிலையும் மனிதருக்குள் உள்ளமைந்த பேறுகள் அன்று. அவை புறமிருந்து வேறு பொருளாற் கட்டமைப்புச் செய்யப்படுகின்றன. குழந்தை தன்னைப் பற்றிய படிமத்தைக் கண்ணாடி என்ற “வேறு பொருள்” வாயிலாகவே உருவாக்கிக் கொள்கின்றது. அதாவது வேறு பொருள் ஒன்றை வைத்தே தன்னை அடையாளம் காணல் முன்னெடுக்கப்படுகின்றது.
கண்ணாடியிலே தோன்றும் குழந்தையின் உருவம் குறிப்பனாகின்றது. குழந்தை தன்னை அடையாளப் படுத்தி மனத்திலே அமைத்துக் கொள்ளல் குறிப்பீடு ஆகின்றது.
- 29
2 ஆசிசியம்

Page 32
நனவிலி மனம் பற்றிய கருத்தாக்கத்தில் பிராய்டுக் கும் லக்கானுக்குமிடையே வேறுபாடுகள் காணப்படு கின்றன. ஆழ்மனக் கோலங்கள் இயல்பாகவே ஒரு மொழியாக இயங்கிக் கொண்டிருப்பதாக பிராய்ட் குறிப்பிட்டார். ஆனால் லக்கான் அதனை மறுதலித்து குழந்தையானது மொழியறிவைப் பெற்ற பின்னர்தான் ஆழ் மனம் கட்டமைப்புச் செய் யப் படுவதாக விளக்கினார்.
ை
கண்ணாடிப் பருவத்தை அடியொற்றிப் பல்வேறு கருத்துக்களை லக்கான் முன்வைத்துள்ளார். குழந்தை கண்ணாடியைப் பார்ப்பதன் வாயிலாக முதலிலே தன்னிலையை உருவாக்கிக் கொள்கின்றது. குழந்தை வளர வளர வேறு பொருட்களால் அல்லது வேற்றுமை வால் அது மேலும் கட்டமைப்புச் செய்யப்படுகின்றது.
கண்ணாடியிலே பார்த்துக் குழந்தை தன்னை அடையாளப்படுத்துதல் படிமநிலை. பிறர் பேசுவதைக் கேட்டுத் தன்னிலையை உருவாக்கிக்கொள்ளல் குறியீட்டு நிலை.
பிராய்ட் மனித ஆளுமையின் கூறுகளாக இட், ஈகோ, சுப்பர் ஈகோ ஆகியவற்றைக் குறிப்பிட்டதுடன், அவற்றில் ஈகோ என்பது தான் இட்டையும் சுப்பர் ஈகோவையும் இணைக்கும் செயல்முறையைக் கொண்ட தாகவும், இட் என் பதின் விலங்கு உந்தல் களை நெறிப்படுத்தும் முகவராகவும் ஈகோ இயங்குதலைக்
குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் லக்கான் ஈகோ என்ற செயற்பாட்டின் மீது கவனம் செலுத்தாது மனிதத் தன்னிலை யாக்கத்தை அதீத முக்கியத்துவப்படுத்தினார். அகநிலையை மொழியுடன் தொடர்புபடுத்தும் லக்கான் முற்றிலும் புதிதான ஒரு
முன்மொழிவை முன்வைத்தார்.
" ஒக்டோபர் 2012

பிராய்ட்டும் லக்கானும் குழந்தைப் பருவ உணர்வு களுக்கு முக்கியத்துவம் தந்தனர். குழந்தைகளின் பாலியல் உணர்வுகளையும் அவற்றை நிறைவேற்றுதலில் நிகழும் தடைகளையும் பிராய்ட் முக்கியத்துவப்படுத் தினார். அதேவேளை லக்கான் கண்ணாடிப் பருவத்தில் நிகழும் உளக்கட்டு மானங்களை முக்கியத்துவப் படுத்தினார். கண்ணாடிப் பருவம் குழந்தைகளுக்குரிய "அடையாள உணர்வை” ஏற்படுத்துகின்றது.
அடையாள உணர்வைப் பாலியலை அடிப்படை யாகக் கொண்டு பிராய்ட் விளக்கினார். ஆனால் லக்கான் சுயம் அல்லது தன்னிலை சார்ந்த நிலையிலே அடையாள உணர்வை விளக்கியுள்ளார். லக்கானிய உளவியலிலே காணப்படும் பிறிதொரு சிறப்புத் தன்னிலையைப் “பன்மை நிலைகளிலே” விளக்கியமையாகும்.
தனது அடையாளத்தைக் குழந்தை வெவ்வேறு தோற்றங்களிலே காணும் பொழுது தன்னிலையானது ஒற்றைப் பரிமாணம் மட்டும் கொண்டது அன்று என உணர்ந்து கொள்கின்றது. இதனை மேலும் விளக்கு வதனால் சிரிக்கும் பொழுது ஒருவிதமான பிம்பத்தையும் அழும்பொழுது வேறொரு விதமான பிம்பத்தையும் குழந்தை கண்டுகொள்கின்றது. அதனால் அடையாளம் பற்றிய கருத்தாக்கமானது பன்மை வடிவெய்தலைப் பூக்கோ சுட்டிக்காட்டுகின்றார்.
பூக்கோவினால் உருவாக்கப்பட்ட கண்ணாடிப் பருவம் பற்றிய கருத்தாக்கம் உளப்பகுப்பு உளவியலிலே பன்முகமான மாற்றுக் கருத்தாடல்களுக்கு இட்டுச் சென்றுள்ளது. இருவரும் பெண்களை நோக்கிய விதம் ஆண்மையோங்கலின் வலியுறுத்தலாக இருந்தமையும் பெண்ணிய வாதிகளாற் சுட்டிக் காட்டப்படுகின்றது.
***
30
ஆசிசியம்

Page 33
சமய தரம் பேண
நமது இலங்கை நாட்டில் வழக்கிலுள்ள மொழிகள் இரண்டு. ஒன்று தமிழ் மற்றையது சிங்களம். அதேபோல் பின்பற்றப்படும் மதங்கள் ஐந்தாக அமைந்துள்ளன. இந்து, பௌத்தம், இஸ்லாம், றோமன் கத்தோலிக்கம், றோமன் கத்தோலிக்கம் அல்லாத கிறிஸ்தவம் என்பவை அவை. இதுவே நாட்டில் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலைமை. சட்டரீதியான அங்கீகாரம் கூட இவற்றுக்குண்டு.
இந்நிலையிலே, ஆரம்ப வகுப்பு முதல் பதினொராம் வகுப்புவரை அதாவது கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண தர வகுப்புவரை ஒவ்வொரு பிள்ளைக்கும்தான் சார்ந்த சமயத்தைப் பாடசாலையில் கற்கும் உரிமை உண் டென் பது நமது நாட்டின் கல்விக் கொள்கை யாயுள்ளது. அது மட்டுமல்ல கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரணதரப் பரீட்சைக்குரிய கட்டாய பாடங்கள் ஆறில் சமயபாடமும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்நாட்டின் ஆதிமுதல் சமயமாகவும், நாட்டு மக்களில் இரண்டாவது எண்ணிக்கையில் உள்ளவர்களுமான இந்துக்களின் பிள்ளைகளுக்கு இந்துசமயம் ஒரு பாடமாகப் பாடசாலகளுக் கு இந்துசமயம் ஒரு பாடமாகப் பாடசாலைகளில்
' டிசம்பர் 2012

த.மனோகரன்
பாடம் பபட வேண்டும்
கற்பிக்கப்படுவதில்லை என்பது மட்டுமன்றி இந்துசமயம் என்ற பெயரே தடைசெய்யப்பட்ட நிலையிலுள்ளது. என் பதையும் எவரும் பொறுப்புடன் புரிந்து கொண்டதாகவும் தெரியவில்லை. நாட்டின் தேசிய கல்விக் கொள்கைக்கிணங்கி ஒவ்வொரு பிள்ளைக்கும் தனது பாடசாலைக் கல்வியில் தனது சமயத்தை ஒரு பாடமாகக் கற்கவும், அதேபோல் நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் தேசியப் பரீட்சையான கல்விப்பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையில் ஒரு பாடமாகக் கொண்டு பரீட்சையில் தோற்றவும் வழியற்ற நிலை, தடைநிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஏன் இவ்வாறான குழறுபடிநிலைமை ஏற்பட் டுள்ளது? ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு ஒரு திட்டமிடப்பட்ட வரலாறும் உண்டென்று கூறப்படு கின்றது. காலம் காலமாக இந்துசமயம் என்றிருந்த பாடம் 1974இல் அன்றைய கல்வியமைச்சின் செயலாளராக செயற்பட்ட கலாநிதி பிரேமதாச உடுகம் என்பவரின் வேண்டுகோளுக்கிணங்க சைவசமயம் என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உலக இந்துக்களி டமிருந்து பிரித்து தனியான சமயக் குழுவினராகக் காட்டும் திட்டத்தின் அங்கம் அதாவது சிறுபான்மைக்கூட்டமாக, வெளியுலகத் தொடர்பற்ற
31
ஆசிரியம்

Page 34
சமயத்தவராகக் காட்டும் இத்திட்டத்திற்கு காலஞ் சென்றவர்களான பேராசிரியம் ஆறுமுகம் சதாசிவம் மற்றும் செ.வேலாயுதபிள்ளை என்போர் பலம் சேர்த்து உதவினர் என்பதும் பதிலாகும்.
இச்சமய பாடபெயர் மாற்றம் தொடர்பில் இந்து சமூகத்தின் எப்பிரிவினரதும், அமைப்புக்களதும், இந்துசமயப் பெரியார்களதும், கல்விமான்களதும் அபிப்பிராயம் கேட்கப்படவில்லை என்பதும் வரலாற்றுப் பதிவாகும். இந்துசமயம் என்ற பெயர் அகற்றப்பட்டு சைவசமயம் என்ற பெயர் செருகப்பட்டதுடன் இந்து சமயத்தின் ஒரு பிரிவான வைஷ்ணவத் தின் மீது வெறுப்பும் தூவப்பட்ட வழிசெய்யப்பட்டது என்பதை எவரும் ஏற்றேயாக வேண்டும்.
சைவசமயம் என்பது இந்துசமயத்தின் ஆறுபிரிவு களில் ஒன்றாகும். சிவனை முழுமுதற் கடவுளாக முதன்மைப்படுத்தும் போது சைவம் என்றும் அதேபோல் சக்தியை அதாவது அம்மனை முதன்மைப்படுத்தப்படும் போது சாக்தமென்றும், விநாயகரையும், முருகனையும், திருமாலையும், சூரியனையும் வழிபாடு செய்யும்போது முறையே காணபத்தியம், கெளமாரம், வைணவம், கெளரம் என்றும் பெயர் கூறப்படுகின்றது. ஆதிசங்கரர் என்ற மூத்தஞானி இவ்வாறு ஆறுபிரிவுகளாக வகுத்து ஒரு கட்டுப்பாட்டுக்குள் இந்து சமயத்தை ஒழுங்குபடுத்தி னார். உலகம் அதை ஏற்றுக்கொண்டு பின்பற்றுகின்றது. இதன்மூலம் இந்து சமயத்தவர் மத்தியிலே ஒற்றுமைப் பாடு, இணைந்த வழிபாட்டு முறைமை, நம்பிக்கைகள் ஏற்பட்டு உலகளாவிய ரீதியில் சிறப்புப் பெற்றுள்ளது.
நமது நாட்டில் இதற்கு மாறாக இந்துக்கள் மத்தியிலே பிளவு உருவாக்க கல்விப்புலம் வழிசெய் துள்ளது. இதுவே இன்றைய உண்மைநிலை. இதை மேலும் விபரிப்பதாயின் இந்நாட்டி01 அறதுகலை/olloற சட்ட ரீதியான அங்கீகாரம் கொண்டவர்கள் என்ற நிலை மாற்றப்பட்டு, கைவிடப்படும் அபாய நிலையும் வலிந்து ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம் மேற்கொள் ளும் போது தான் ஒரு இந்துவென்றே குறிப்பிட முடியும். அதேபோல் ஒரு படிவத்தில் தனது சமயத்தைக் குறிப்பிடும் போதோ வேறு எச்சந்தர்ப்பத்திலும் தனது சமயத்தைக் குறிப்பிடும்போதும் இந்து என்றே குறிப்பிட வேண்டும். சைவம் என்று எவரும் குறிப்பிடவழியில்லை. இலங்கை வாழ் இந்துத் தமிழர்களை உலக அரங்கில் முகவரியற்றவர்கள் ஆக்கும் திட்டத்தில் நமது சமய பெயர் மாற்றமூடாக அடிகோலப்பட்டுள்ளமையை புரிந்து கொள்ள முடியாத் தன்மை வேதனைக்குரியது. பள் ளம் தோண்டி கள்ளி விடப்பட்டுள்ள நிலை
இந்துக்களது நிலை எனலாம்.
ச
டிசம்பர் 2012

இது இவ்வாறிருக்க கல்விப் புலத்தில் அதுவும் தமிழ்க் கல்விக் களத்தில் பாரிய குழறுபடிகள் உள்ளன. அதற்குக் கட்டியம் கூறுவதாக இந்து சமய பாடத்தின் திட்டமிடல் அமைந்துள்ளது. தேசியக்கல்வி நிறுவகத் தால் இந்து சமய பாடம் தொடர்பான திட்டமிடல், தயாரித்தல் தொடர்பான விடயங்களுக்குப் போதிய தகைமை கொண்ட, புலமையுள்ளவர்களின் சேவை பெற்றுக்கொள்ளப்படுவதில்லை என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும்.
சமய பாடப் புத்தகத் தயாரிப்பில் உரியபடி அவதானம் செலுத்த வேண்டியதுடன், தான்தோன்றித் தனமாக, கேட்பார் எவருமில்லை என்ற நிலையில் பாடங்களின் பெயர்களை மாற்றியமைக்கும் செயற்பாடு கள் மீளாய்வு செய்யப்பட வேண்டும். இந்துசமயம் என்று வழக்கிலிருந்த பாடம் சைவ சமயம் என்று மாற்றப்பட்டு இன்று சைவநெறியாகியுள் ளது. எதிர்காலத்தில் தான தோன்றித் தனமாக o)ச்வநரி 1ென்று மாற்றினாலும் நமது கல்வித்துறைசார் கல்விமான்கள் மெளனம் சாதிப்பார்கள் என்றே நம்ப முடிகின்றது.
இது இவ்வாறுள்ள நிலையில் அதாவது ஆரம்ப வகுப்பு முதல் கல்விப் பொதுத் தராதர வகுப்புவரை சைவநெறி என்று குறுக்கப்பட்ட பாடம் உயர்தர வகுப்பில் இந்து சமயம், இந்து நாகரிகம் என்று விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப வகுப்பில் கற்பிக்கப் படும் சுற்றாடல் பாடத்தில் வரலாறு, புவியியல், விஞ்ஞானம் என்று பல்துறை பாடங்கள் சுருக்கமாக ஆனால் விளக்கமாகக் கற்பிக்கக்கூடியதாகப் பாடநூல் கள் ஆக்கப்பட்டுள்ளன. அதாவது ஆரம்ப கல்வியின் போது பரந்துபட்ட அறிவைப் பிள்ளைகள் பெற வேண்டும் என்ற நோக்கு செயற்படுத்தப்பட்டுள்ளது.
இந்துசமய பாடத்தில் மட்டும் பரந்த தன் லய மறுக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டு இந்துசமயத்தை அதன் உள்ள பிரிவுகள், வழிபாட்டு முறைகள் என்பன மறைக்கப்பட்டு அதாவது பிள்ளைகள் கற்றுக்கொள்ள வழியற்ற நிலை காணப்படுகின்றது. இது இந்து சமயப் பாடப் புலத்தில் உள்ள சீராக்கப்பட வேண்டிய, சிந்திக்க வேண்டிய விடயங்களாகும்.
பர்
எப்படியும் வாழலாம் என்றில்லாமல் இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழும் வழிகாட்டுபவை சமயங்கள். அதனால் சமய பாடக்கல்விக்கு முக்கியத் துவம் கொடுக்கப்பட வேண்டும் எனலாம். ஆனால் சமய பாடம் கட்டாய பாடம் என்று கூறப்பட்டாலும் கூட பாடசாலைகளில் வாரத்திற்கு இருபாட நேரங்களே அதாவது வாரத்தில் எண் பது நிமிடங்களே சமய ( பா க்கிற்காக ஒதுக்கப்படுகின்றது. ஆண்டில் சுமார் எண்பது பாடநேரங்களே சமய பாடத்திற்காக ஒதுக்கப்
32
ஆசிரியம்

Page 35
படுவதும் அதில் பிற கல்விச் செயற்பாடுகளுக்கான செயற்பாடுகள் மற்றும் விடுமுறை தினங்கள், பாட ஆசிரியர் வரவின்மை, மாணவர் வரவின்மை போன்ற ஏதுக்களால் கற்கும் கால அளவு சுருக்கமடைவதும் வழக்கத்திலுள்ளது.
பாடசாலைகளில் கற்பிக்கும் சமயபாடக் கல்வி யானது பரீட்சைகளில் புள்ளிகளைப் பெற்றுக்கொள் வதை அடிப்படையாகக் கொண்டதேயன்ற மாணவ சமுதாயத்தின் வாழ்வியல் ஒழுக்கத்தை மேம்படுத்துவதாக அமைந்திருக்கவில்லை என்பதையும் மறுப்பதற்கில்லை. இன்றைய சமயக்கல்வியானது ஒரு மாணவன் தனது பரீட்சைப் பெறுபேற்றை அதிகரித்துக் கொள்வதற்கான வழிமுறையாக அமைந்துள்ளதேயன்றி சமய அறிவின் மூலம் சுயவாழ்வில் பெறுமானங்களைப் பெற்று உயர்வடையும் மன நிலையை ஏற் படுத்து வதாயில்லை. இவற்றை நோக்கும்போது பாடசாலை களில் வழங்கப்படும் கல்வி எதிர்பார்க்கும் தரத்தில் இல்லை என் பது வெளிப்படுகின்றது. இது சகல சமயங்களுக்கும் பொதுவானதும், பொருத்தமானது மாகும்.
இந்நிலையிலே பாடசாலை மட்டத்தில் வழங்கப் படும் சமய பாடக் கல்வி தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும். இளவயதினரை சீரிய வழியில் வழிப்படுத்தும் ஆற்றல் கொண்ட சமயக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பாடப்புத்தகத் தயாரிப்பில் கூடிய கவனம் செலுத்தி பொறுப்புடன் திட்டமிட்டு ஆக்கப்பணியில் ஈடுபட வேண்டியது
முதற்படியாக அமைய வேண்டும்.
சமயபாடம் ஒரு கட்டாய பாடமாகக் கணிப்பிடப் பட்டுள்ள போதும் சமய பாடம் கற்பிக்கப் போதிய தகைமை கொண்ட ஆசிரியர்கள் இன்மையும் தெரியவந் துள்ளது. சமய பாடத்தை எவரும் கற்பிக்கலாம் என்ற நிலைமை காணப்படுகின்றது. கணிதபாட விசேட பயிற்சி பெற்றவர்களும் அதேபோல் ஏனைய பாடவிசேட பயிற்சிபெற்றவர்களும், பட்டப்படிப்பில் சமய பாடத்தை ஒரு பாடமாகக் கொள்ளாதவர்களும் கூட இன்று பாடசாலைகளில் சமய பாடம் கற்பிக்கும் நிலை காணப்படுகின்றது.
சமய தத்துவங்கள் விளங்கப்படுத்தப்பட முடியாத நிலையில் பாடப்புத்தகத்திலுள்ளவற்றை வாசித்து அதிலுள்ளவற்றை அப்படியே கிளிப்பிள்ளைபோல் கூறும் ஆசிரியர்கள் அநேகர் உள்ளனர். இது தொடர்பில் கல்வித் துறையினர் கவனம் செலுத்தி சமயபாடத் தகைமை கொண்ட ஆசிரியர்களைப் பணியில் ஈடுபடுத்த வேண்டியது அவசியமாகின்றது.
' டிசம்பர் 2012

ை
ஒவ்வொரு சமயமும் வாழ்வியல் ஒழுக்கநெறிக ளைப் போதிக்கின்றன. அவை ஒவ்வொரு பிள்ளைக்கும் தெளிவாகப் புரியவைக்க வேண்டும். அதுவே சமயக் கல்வி வழங்ப்படுவதன் நோக்காயுமுள்ளது.
பல்வைத்தியரைக் கொண்டு சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாது. அவ்வாறு செல்வது தவறுமாகும். இருவருமே வைத்தியர்களாகப் பட்டம் பெற்றிருப்பினும் துறைகள் வேறுபட்டவை. அதே போன்று ஆசிரியர்கள் ஒரே சேவையிலிருந்தாலும் தகைமை வேறுபட்டதாயே இருக்கின்றது. இந்நிலை யிலே உரிய தகைமையற்ற அல்லது பெற்றுக்கொள்ளாத ஆசிரியரை அவருக்குப் பொருத்தமற்ற பாடத்தைக் கற்பிக்கச் செய்வதன் மூலம் மாணவ சமுதாயம் உரிய பயனைப் பெறமுடியாது என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
சமய பாடக்கல்விக்கு முதன்மையிடம் கொடுக்கும் கல்வித்திட்டம் நமது நாட்டின் கல்வித்திட்டம் என்று பெருமைப்படுவதைவிட உரிய உயரிய, தரமான சமய பாடக் கல்வியை பாடசாலை மட்டத்தில் வழங்கும் செயற் பாடுகள் மேற் கொள் ளப்பட வேண்டியதே இன்றைய தேவையாகவுள்ளது.
இதனை அடிப்படையாகக் கொண்டு தேசிய கல்வி நிறுவகத்தின் செயற்பாடுகள் உரிய, உயர்ந்த நிலைக்கு மீளமைக்கப்பட வேண்டும். தரமான பாடத்திட்ட தயாரிப்பும், பாடநூல் வெளியீடும் இடம்பெற வேண்டும். அதேபோல் பாடசாலைகளின் சமயபாட நேர அளவு கூட்டப்பட வேண்டும். அத்துடன் தகைமை கொண்ட ஆசிரியர்களின் பணியைச் சமய பாடம் பயிலும் மாணவ, மாணவியர் பெற்றுக்கொள்ள வழி செய்ய வேண்டும். இதுவே இன்று நாட்டில் பாடசாலை மட்டத்தில் வழங்கப்படும் சமய பாடக் கல்வியின் தரத்தை உயர்த்தும் வழியாகும். கல்வித் துறையினரின் கவனம் இதில் ஈர்க்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்.
***
33
ஆசிசியம்

Page 36
பிள்ளையார் பி
"என்ரை செல்லம் எழும்புங்கோ”.
ஓ அம்மாவின் குரல். அவளால்தான் இப்படி அன் பாகவும் தந்திரமாகவும் அழைக்கமுடியும். அரைக்கண்ணால் மெல்ல திறந்து பார்க்கிறான் நிமலன். அம்மாவின் முகம் பளிச்சென்று தெரிகின்றது. என்ரை அம்மா எவ்வளவு வடிவு. ஆனால் இப்படி விடிய முன்பு என்னை எழுப்புறதுதான் கொஞ்சம் வடிவில்லை. என்னம்மா ம்... கொஞ்சநேரம் படுக்க விடுங்கோ. எனக்கு நல்லாய் நித்திரை வருகுது. என்ன? நித்திரை வருகுதோ நல்ல விளையாட்டுத்தான். இந்தமுறை புலமைப்பரிசல் பரீட்சை எடுக்கப்போறியள். விடிய ஐஞ்சு மணியாச்சு. இன்னும் நித்திரையால எழும்பல. ம்... கெதியா கெதியா எழும்புங்கோ. அம்மாவுக்கு குசினுக்குள் அலுவல். சொல்லிக்கொண்டே ஓடுகின்றாள்.
நிமலனால் கண்களைத் திறக்கவே முடியவில்லை. “என்ன கரச்சல்” எந்த நேரமும் படிப்பு படிப்பு, படிப்பு பள்ளிக்கூடத்திலும் படிப்பு வீட்டிலும் படிப்பு. நான்
' டிசம்பர் 2012

டிக்கப்போய்...
தே.செம்மனச்செல்வி
எப்பதான் விளையாடறது? பள்ளிக்கூடம் முடிய பள் ளிக் கூடத் தில் வகுப்பு. அது முடிய வீட்டில் கமலநாதன் சேரின் வகுப்பு. அது முடிய பள்ளிக்கூட வீட்டு வேலைகள். படுக்க பத்துமணியாகிவிடுகிறது. இப்ப மணி ஐந்துதான் ஆகிறது. அதற்குள் அம்மா படிக்க எழுப்புகின்றாள். விமலனுக்கு இப்ப ஆத்திரமெல்லாம் இந்தப் புலமைப்பரிசல் பரீட்சையில்தான். இந்தப் பரீட்சையால் தானே இவ்வளவு கெடுபிடி. இதை அரசாங்கம் நிப்பாட்டிவிட்டால் எவ்வளவு ஜாலியாக இருக்கும். இனி எழும்பாவிட்டால் அம்மாவந்து கத்தத் தொடங்கிவிடுவாள். எழும்பிப் படிக்க வேண்டியதுதான். முணுமுணுத்துக் கொண் டே பல் லுமினுக்கி முகம் கழுவினான்.
அம்மா குசினுக்குள் இருந்தாலும், கவனம் எல்லாம் என் மேலேதான். நான் முகம் கழுவியதை அறிந்து கொண்டவள், ஓடிவந்து கட்டிக்கொஞ்சினாள். "என்ரை குஞ்சு. இந்தாங்கோ இந்த மைலோவைக் குடிச்சுட்டு கணக்குப் புத்தகத்திலுள்ள பயிற்சிகளைச் செய்யுங்கோ”
34
ஆசிசியம்

Page 37
அன்போடு கட்டளைபோட்டுவிட்டு மீண்டும் குசினுக் குள் ஓடிவிட்டாள். அவள்வேலை அவளுக்கு.
விமலன் வேண்டா வெறுப்பாக மைலோவைக் குடித்தான். ஏன் என்னை ஒருத்தரும் புரிந்துகொள் கிறார்கள் இல்லை? அம்மா ஒரே படிபடி புராணம். அப்பா அதற்கு மேல். சித்தி என்னடாவென்றால் கொழும்பிலிருந்துகொண்டு ரெலிபோனில் ஆங்கிலம் படிப்பிக்கின்றாள். பாடசாலையைக் கேட்கவே வேண்டாம். நான் விளையாடி எவ்வளவு காலமாகி விட்டது? சி.டி. பார்த்து.? கடைசியாய் இரண்டாம் வகுப்பில் காட்டுப்புத்தகம் பார்த்தது. மூன்றாம் வகுப்பில் தொடங்கினது இந்தக் கரைச்சல். இந்த வருஷம் ஆவணி மட்டும் தொடரப்போகுது. இதிலிருந்து தப்பிக்கவே வழியில்லையா? நிமலன் கணிதப் புத்தகத்தைத் திறந்து வைத்தான். கணிதப்புத்தகம் காட்டுப் புத்தகமாகத் தெரிந்தது.
அவனது கற்பனை விரிந்தது. தன்னையொரு காட்டுராஜாவாக நினைத்துக் கொண்டான். காட்டுப் புத்தகத்தில் வரும் மொக்லியாக மாறினான். ஓ... மரக்கிளையைப் பிடித்தவாறே மரத்திற் கு மரம் தாவினான். எவ்வளவு குஷியாக இருக்கிறது வாழ்க்கை ஓ... பாலு கரடி வருகிறது. என்ன மொக்லி உன்னைப் பார்த்தது எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது நீ ஏன் அந்தக் கிராமத்திலிருக்க வேண்டும். ஐயோ அந்தக் கிராமத்தவங்கள் ரொம்பப் பொல்லாதவங்களாமே பிள்ளைங்கள பள்ளிக்கூடமாமே அங்க அனுப்பி படிக்க
வைக்கிறாங்களாமே.
ஓம் பாலு அதை ஏன் கேட்கிறாய்? புலமைப்பரிசில் பரீட்சை என்று ஐந்தாம் ஆண்டுல நடக்குது. அதுக்கு அவங்கள் எங்களைப் படுத்தற பாடு இருக்கிறதே... இங்கு நீங்கள் சிங்கத்தைக் கண்டு பயப்படுற மாதிரித்தான் நாங்கள் அந்தப் பரீட்சையைக் கண்டு பயப்படுறோம்.
ஓ... பயமா? அதுதான் எங்களுக்கு இல்லையே அவங்க ரொம்ப மோசமென்டுதான் நான் கேள்விப் பட்டேன். தண்ணியள்ளுறது, சமைக்கிறது, குளிக்கிறது, துணிதுவைக்கிறது, துணிகாயப்போடுவது இதைத்தான் மாறிமாறிச் செய்வாங்களாமே எங்களைப் போல் ஜாலியாக அவங்களுக்கு இருக்கத் தெரியாதாமே. புலமைபரிசில் என்டு நீ வேற சொல்லுறாய் நீ பேசாமல் இங்கு வந்துடன் மொக்லி பாலு நான் வரத்தான் போறன். இந்த வாழ்க்கை எனக்குப் பிடிக்கவில்லை.
- டிசம்பர் 2012

நிமலன் பயிற்சி செய்து முடிஞ்சுதோ... அம்மாவின் குரல். கற்பனைச்சிறகு ஒடிந்து விழுந்தது. தனக்குப் பிடித்தமான சொக்லெட் ஐஸ்கிரிம் குடித்துக்கொண்டி ருந்தவனுக்கு காய்ச்சலுக்கு டொக்டர் தார கய்ப்பு மருந்து குடித்த மாதிரி இருந்தது.
ஓமம்மா செய்துட்டேன். ஒரு நிமிடத்திற்குள் இருபது கணக்குகளையும் அலாதியாகப் போட்டு முடித்தான் நிமலன். நிமலனோர் முதல்நிலை மாணவன். யாழ்ப்பாணத்தில் ஒரு பிரபலமான ஆண்கள் பாட சாலையில் தரம் ஐந்தில் கல்வி கற்றுக் கொண் டி
ருக்கின்றான். மாதிரிப் பரீட்சையில் 185க்கு மேல் புள்ளிகள் எடுப்பான். கணிதப் புத்தகத்தை மூடிவைத்து விட்டு பள்ளிக்கூடம் போகத் தயாரானான்.
"நகுலன்.... என்ர ராசா எழும்பன. மணி 5.30 ஆச்சு” "ஓமம்மா எழும்பறன்” நகுலன் எழும்பி முகம் கழுவ ஓடினான். அவன்ர அம்மா பாக்கியம் வெறும் சாயத்திற் குள் சீனிப்பேணியில் ஒட்டியிருந்த சீனியினைத் தட்டிக் கொட்டிப் போட்டு ஆத்திக்கொண்டு வந்து நகுலனிடம் நீட்டினாள். "ஏனம் மா பாலில்லையே? பால் மா முடிஞ்சிது மோனே” பிள்ளைக்கு நாளைக்கு வேண்டித் தாறேன். நாளைக்குத்தான் அம்மாவுக்கு மில் முதலாளி காசு தருவார். சொல்லிவிட்டு கவலையோடு மகனைப் பார்த்தாள் பாக்கியம்.
சரி அம்மா நான் படிக்கிறன். தேநீரை வாங்கிய நகுலன் புத்தகத்தை எடுத்தான். எரிந்துகொண்டிருந்த சிமினி விளக்கின் திரியைத் தூண்டி படிக்கத் தொடங்கி
னான்.
மகனுக்கு என்ன சாப்பாடு செய்வதென்று ஒவ் வொரு பானையாகத் திறந்து பார்த்துக்கொண்டிருந்தாள் பாக்கியம். கணவர் செல்லத்துரை 5மணிக்கே எழும்பி மேசன் வேலைக்குத் தூர இடமென்று போய்விட்டார். கொஞ்சம் பச்சை அரிசி இருந்தது. குறைப்பாதி தேங்காயும் இருந்தது. பால்கஞ்சி வைக்கலாம் என்று அடுப்பிலிருந்த கேத்திலை இறக்கி வைத்துவிட்டு கஞ்சிக்கு உலை வைத்தாள் பாக்கியம். உலை கொதித்துக் கொண்டிருந்தது. குளிருக்கு இதமாக அடுப்போடு
அணைந்திருந்தவள் மகனைப் பார்த்தாள்.
நகுலன் இந்தமுறை புலமைப்பரிசில் பரீட்சை எடுக்கிறான். அதில் அவன் சித்தி அடைந்தால் பல்கலைக்கழகம் போகும்வரை அரசாங்கம் அவனுக்கு மாதாமாதம் 500 ரூபா கொடுக்குமாம் அவன்ர ரீச்சர் சொன்னா. நானும் மனுசனும் கஸ்டப்பட்டு கொஞ்சகாசு கூட உழைச் சம் என்டா ஒருமாதிரி நகுலனைப்
35
ஆெசிரியம்

Page 38
படிப்பிச்சு விடலாம். அவன் தலையெடுத்துட்டா னென்டால் பிறகு எங்களுக்கு என்ன கவலை? சின்னவள் கமலியையும் அவனே பார்த்துக்கொள்வான். சின்னதாய் ஒரு பெருமூச்சு விட்டாள் அவள். படித்துக்கொண்டிருந்த நகுலன் தாயின் பெருமூச்சுக் கேட்டுத் திரும்பினான்.
"என்னம்மா?” -
ஒன்றுமில்லை நகுலன். நீ நன்றாகப் படிக்கிறியோ? "ஓமம்ம நல்லா படிக்கிறன். இந்த முறை சோதனைக்கு நூற்றிஐம்பது புள்ளிகள் எடுத்தனான். எங்கட ரீச்சர் சொன்னவா என்ன புலமைப்பரிசில் பரீட்சையில் பாஸ் பன்னுவன் என்டு. நான் பாஸ் பன்னினால் எங்களுக்கு
அரசாங்கம் காசு தருமாம்.
"ஓமாம் ராசா. நல்லாய் படி. நீ படிச்சாதான் எங்களுக்கு விடிவு. வயிரவற்ற மணி கேட்குது. மணி ஆறரை ஆயிட்டுது. நீபள்ளிக்கூடத்திற்கு வெளிக்கிடு. நான் சாப்பாடு போடுகிறேன்.
காலவெள்ளம் விரைந்தோடியது. வெள்ளத்தில் அடிபட்ட செய்திகள் ஏராளம். அதிலொன்று புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகிவிட்டன. நிமலனின் அம்மா தன் அலுவலகத்திலிருந்தவாறே இணைய தளத்தைப் பார்வையிட்டாள். "என்ர குஞ்சு நிமலனுக்கு யாழ். மாவட்டத்திலேயே இரண்டாம் இடம் கிடைச்சிருக்கு. 197 புள்ளிகள் எடுத்திருக்கிறான். அவள் நெஞ்சு நிறைந்த பூரிப்புடன் தன் காரில் வீட்டுக்கு ஓடிவருகிறாள். செய்தி அறிந்த அவன் அப்பாவும் நிமலன் எங்கே என நிமலனின் அறைக்கு ஓடுகின்றனர். நிமலன் கணனியில் விளையாடிக்கொண்டிருக்கிறான். அப்பாவும் அம்மாவும் அவனைக் கட்டிப்பிடித்து முத்தமிடுகின் றனர். அப்பா அவனை உப்பு மூட்டை தூக்கிச் சுழற்றிக் கீழே விடுகின்றார். ஆனந்தத்தில் அவருக்கு கால்கள் நிலத்தில் பாவவில்லை. நிமலனுக்கு ஒன்றுமே புரிய வில்லை. திருதிருவென விழித்தான். அவன் அம்மாதான் சொன்னா. "என்ர குஞ்சு புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ். மாவட்டத்திலேயே இரண்டாமிடம் 197 புள்ளிகள் எடுத்திருக்கிறீங்கள்” நிமலன் அடக்கமாகச் சிரித்தான்.
அந்தச் சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள். அம்மா தொடர்ந்தாள். நாங்கள் சாதிச்சிட்டம் அப்பா நீங்கள் இன்ஜினியர். நான் பல்லறுவை வைத்தியர். எங்களுக்கு நிமலன் ஒரே மகன். நிமலனுக்கு அரசாங்கம் காசு தரப்போறதில்ல. பள்ளிக்கூட அனுமதிக்கும் பிரச்சினை யில்ல. அவன் இந்தப் பரீட்சையில் பாசானாலும், பெயிலானும் தொடர்ந்தும் இந்தப் பள்ளிக்கூடத்திலேயே
டிசம்பர் 2012

படிக்கலாம். எங்கட கெளரவம், பெருமை, அந்தஸ்து எல்லாத்தையும் நிமலன் காப்பாத்திட்டான். "ஓமப்பா இதத்தான் நானும் எதிர்பார்த்தனான். அப்பா அவனை மீண்டும் ஒருமுறை உப்புமூட்டை தூக்கினார். எனக்கு சந்தோசத்தில் என்ன செய்யுறதென்டே தெரியல. பெரிய பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யவேணும். ஐந்தாவது முறையாக நிமலனின் அம்மா அவனை முத்தமிட்டாள்.
காலவெள்ளம் புரட்டிய இன்னொரு பக்கம். நகுலன் பாடசாலையிலிருந்து அழுதுகொண்டு ஓடிவருகிறான். "அம்மா நான் பெயிலாகி விட்டேன்". "என்ன? நீங்கள் பெயிலே எத்தனை புள்ளிகள் எடுத்தனீங்கள்?” பாக்கியம் மனப்பதறலோடு கேட்கின்றாள்.
"அம்மா நான் 150 புள்ளிகள் எடுத்திருக்கிறன். எங்கட மாவட்டத்தில் வெட்டுப்புள்ளி 154ஆம். நாலு புள்ளிகள் எனக்குக் குறைவு. 199தான் கூடிய புள்ளியாம். 199க்கும் 180க்கும் இடையில் கனபேர் எடுத்திருக்கின மாம். அதனால் எங்களுக்கு வெட்டுப்புள்ளி கூடிவிட்டுது என்டு ரீச்சர் சொன்னவா.
"கடவுளே நான் என்ன செய்யப்போறன்” பாக்கியம் இடிந்துபோய் உட்கார்ந்துவிட்டாள்.
பாக்கியத்தின் குரல் கடவுளுக்குக் கேட்டது. கடவுள் மனிதர்களைப் பார்த்துச் சிரித்தார். பிள்ளையார் பிடிக்கப்போன மனிதர்கள் நல்ல குரங்குகளைப் பிடித்திருக்கிறார்கள். கடவுள் திருவாய் மலர்ந்தருளினார்.
***
36
ஆசிரியம்

Page 39
ஆசிரிய மணி
2012.10.25 அன்று, ஆசிரியராகக் கடமை யாற்றி ஓய்வுபெற்ற எனது மனைவியார்
காலமாகிவிட்டார். அவரது ஓய்வூதியம் தொடர்பாக நான் செய்ய வேண்டிய விடயங்கள் என்ன? எனக்கு அவரது ஓய்வூதியம் கிடைக்குமா?
உங்களது பிரதேச செயலாளர் காரியாலயத்தில் உள்ள ஓய்வூதியக் கிளைக்கு இது தொடர்பாக உடனடி யாக அறிவிக்க வேண்டும். மரண அத்தாட்சிப் பத்திரம் இருந்தால் நல்லது. உங்களது கடிதம் கிடைத்தவுடன் நவம்பர் மாத ஓய்வூதியம் நிறுத்தப்படும். ஒக்டோபர் மாதம் ஓய்வூதியமானது மாதம் முடியுமுன்னரே அதாவது எட்டாம் திகதியே கிடைத்திருக்கும்.
நவம்பர் மாதம் 25 ஆம் திகதி காலமாகி விட்ட படியால் அவரது ஓய்வூதியத்தைத் தொடர்ந்து பெற யாருக்கும் உரிமையில்லை.
ஆண் அரசாங்க ஊழியர்கள் கட்டாயமாக விதவை கள் அனாதைகள் ஓய்வூதியத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டு இருப்பார்கள். பெண்கள் 1983 ஆம்
டிசம்பர் 2012

அன்பு ஜவஹர்ஷா
நமது பிரச்சினைகளுக்கு ஆசிரியத்தில் தீர்வுகள்...
ஆண் டே இதில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். தங்களது மனைவி இதில் சேர்ந்திருந்தால் அவருக்கு ஒரு அங்கத்துவ இலக்கம் வழங்கப்பட்டு இருக்கும் மஞ்சள் நிற அட்டையொன்றில் மனைவியின் பெயருடன் 83/......... என்றவாறு இலக்கமிடப்பட்டு இந்த அங்கத்துவம் கிடைக்கும். வீட்டில் உள்ள அவர் தொழில் தொடர்பான சுயவிபரக் கோவையில் அல்லது கல்விக் காரியாலயத்தில் உள்ள அவரது சுயவிபரக் கோவையில் இருந்து இந்த இலக்கத்தை அறிந்துகொள்ளலாம். சில சம்பளத்தில் வெட்டி இருப்பார்கள். ஆனால் அங்கத்துவ அட்டை கிடைத்து இருக்காது. விண்ணப்பித்து இருக்கமாட்டார். அல்லது விண்ணப்ப படிவத்தை சுயவிபரக் கோவையில் கட்டி வைத்திருப்பார்கள், சம்பளத்தில் தொடர்ந்து வெட்டப்பட்டு இருந்தால் அவர் விதவைகள் அனாதை கள் சேர்வதற்கு விண்ணப்பித்து இருக்க வேண்டும்.
மேல் பந்தியில் சொல்லப்பட்டபடி அவருக்கு அங்கத்துவம் கிடைத்து இருந்தால் தபுதாரர்கள் அநாதைகள் ஓய்வூதிய சம்பளத்தை நீங்களும் உங்களுக்கு பிறகு பிள்ளைகளும் 26 வயது வரை பெற உரிமையுள்ளது.
37
- ஆசிரியம்

Page 40
அவர் இதில் சேரும் போது திருமணம் முடித்து இருந்தால் திருமணச் சான்றிதழைச் சமர்ப்பித்து இருப்பார் அல்லது பின்னராவது கொடுத்திருக்க வேண்டும்.
-மேல் சொல்லப்பட்ட அங்கத்துவம் பெற்று இருந்தால் அதைக் குறிப்பிட்டு பிரதேச செயலாளருக்கு விண்ணப்பித்து இந்த ஓய்வூதியத்தை மாதா மாதம் பெறலாம். இந்த இலக்கத்தைக் குறிப்பிட்டு, மரண அத்தாட்சிப் பத்திரம், திருமணச் சான்றிதழ் பிரதி ஆகியவற்றுடன் விண்ணப்பித்தால் பிரதேச காரியாலயம் மாளிகாவத்தை ஓய்வூதியத் திணைக்களத்தில் ஒரு பிரிவாக இயங்கும், விதவைகள் அனாதைகள் ஓய்வூதிய அலுவலக செயலாளருக்கும் கணக்காளருக்கும் உங்கள் விண்ணப்பத்தை அனுப்பி அந்த சுயவிபரக் கோவையை எடுப்பித்து 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் தபுதாரர் அநாதைகள் ஓய்வூதிய சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுப்பார்கள்.
சேவையில் இருக்கும்போது அல்லது பின்னர் இந்த திட்டத்தில் சேர்ந்து அங்கத்துவம் பெறாவிட்டால் 13/2001 இலக்க, 2001.07.04 திகதிய அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கைப்படி 2012.12.31 திகதி வரை மரணித்துவிட்ட பின்னரும் கூட உரித்தாளிகள் நிரந்தர ஓய்வூதிய நியமனக் கடிதத்தில் சான்றுபடுத்தப்பட்ட பிரதி, திருமணச் சான்றிதழ், மரணச் சான்றிதழ், விதவை அநாதைகள் ஓய்வூதிய 16ஆம் அறிக்கை வரலாற்றுத்தாள், பொது 55 ஓய் வூதிய விண்ணப்பத்தை தயாரித்து ஓய்வூதிய பணிப்பாளருக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.
Tங்
அரச ஊழியர் பெற்றுவந்த சம்பளத்தில் 6% அல்லது 7% நிதியை 180 மாதங்களுக்கான பணத்தை செலுத்த வேண்டியிருக்கும்.
இலங்கை ஆசிரியர் சேவையில் 2-II தரத்தில்) 2009.11.13 அன்று 16,475 ரூபா சம்பளம்
பெற்று இருந்த எனக்கு அதிபர் சேவை 3ஆம் வகுப்பு கிடைக்கப்பெற்று 16,715 ரூபா சம்பள படிநிலையில் வைக்கப்பட்டு தற்போது 17,195 ரூபா சம்பளம் பெற்றுக் கொண்டிருக்கின்றேன். என்னை யொத்த அதிபர் பதவி கிடைக்காத ஆசிரியர் ஒருவருக்கு 17,855 ரூபா சம்பளம் கிடைக்கின்றது. இந்த முரண்பாட்டுக்கு என்ன காரணம்? அதிபர் பதவி ஏற்றமையால் உண்டான பாதிப்பா இது?
2007.06.01 திகதி தொடக்கம் செயல்படும் 06/ 2006(IV) இலக்கச் சுற்றறிக்கைப்படியே உங்களது சம் பளம் செய்யப்பட்டுள் ளது. 2010.10.31 அன்று வெளியிடப்பட்ட 28/2010 இலக்க அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கைப்படி 2011.07.01 தொடக்கம் நிலுவை
டிசம்பர் 2012

கிடைத்தாலும் 2009.11.13 அதிபர் பதவி கிடைக்கும்போது உங்களுக்குரிய சம்பளம் 17,195 ரூபாவாகும். உங்களை 17,525 ரூபா சம்பளத்தில் வைத்து
2010.11.13 - 17,855/-
2011.11.13 - 18, 185/-
என்று வருடாந்த சம்பள உயர்ச்சிகள் வழங்கப்பட்டு இருக்க வேண்டும். இதற்கான நிலுவையானது 2011.07.01 அன்றே வழங்கப்படும். ஆனால் 2007.06.01 அன்று 16,715 சம் பள நிலையில் வைக் கப்பட்டு அதிபர் பதவி பெற்றமையால் சம்பளம் மாற்றியமைக்கப்பட வேண்டும். 2007.06.01 திகதிக்கும் 2011.07.01 திகதிக்கும் இடையில் இலங்கை அதிபர் சேவையின் 2-II 3ஆம் வகுப்பு பதவி பெற்ற இலங்கை ஆசிரியர் சேவையின் 2-II, 2-1 தரங்களைச் சேர்ந்த சகல ஆசிரியர்களின் சம்பளமும் இவ்வாறு 28/2010 இலக்கச் சுற்றறிக்கைப்படி திருத்தப்பட வேண்டும்.
28/2010 ஆம் இலக்கச் சுற்றறிக்கைப்படி 2007.06.01 தொடக்கம் 2011.07.01 உள்ளவரை காலச் சம்பளம் கற்பனைச் சம்பளமாக இருந்தாலும் வேறு ஒரு பதவிக்குச் செல்லும்போது சம்பள மாற்றியமைப்பில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். நீங்கள் குறிப்பிடும் உங்களை சேவையையொத்த ஆசிரியருக்கு அது செய்யப்பட் டுள்ளது. உங்களுக்கு அது செய்யப்படவில்லை. இதுவே இந்த முரண் பாட்டுக் குக் காரணமாகும். நீங்கள் சேவையாற்றும் வலயக் கல்விக் காரியாலயத்திற்கு இதை விண்ணப்பித்து திருத்திக் கொள்ளுங்கள்.
2009ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற யுத்தத்தின்போது வன்னிப் பகுதியில் கடமை
யாற்றி வந்த ஆசிரியரான எனது கணவர் இறந்து விட்டார். இறக்கும்போது 15 வருட சேவைக் காலத்தையும் 45 வயதையும் அடைந்து இருந்தார். எனக்கு இதுவரை எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. ஆனால் நூற்றுக்கணக்கானவர்கள் நிவாரணம் பெற்று வருகின்றார்கள்?
மேல்சொல்லப்பட்ட விடயங்களை அத்தாட்சிப் படுத்தும் சான்றிதழ்களுடன் விண்ணப்பித்தால் 21/88 ஆம் இலக்க அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள் ள நியதிகளின் படி பின் வரும் அனுகூலங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
1.
மரணமுற்ற உத்தியோகத்தருக்கு அவர் மரணமுற்ற திகதியில் கொடுக்கப்பட்ட முழுச் சம்பளமும் படிகளும் அவர் உயிருடன் சேவையில்
- 38
ஆசிரியம்

Page 41
இருந்திருந்தால் காலாந்தரங்களில் அவருக்குக் கிடைத்திருக்கக்கூடிய எவையேனும் சம்பள, படி அதிகரிப்புகளுடன் அவர் 55 வயதினை எட்டச் கூடிய அத்தகைய காலம் வரையிலும் அவர் உயிருடன் சேவையில் இருந்திருந்ததாகக் கருதிய படி கொடுக்கப்படும்.
ஆகக் கூடியது 1,50,000 ரூபா கருணைக் கொடை யாக கொடுப்பனவும் கொடுக்கப்படும்.
1989.11.30 திகதிய 59/89 இலக்கச் சுற்றறிக்கைப்படி இதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் பெறும்போது மீண்டும் திருமணம் செய்தால்கூட 50 வீத ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொள்ள ஓய்வூதிய பிரமாணக் குறிப்பின் புதிய திருத்தங்கள் வழி செய்கின்றன.
ஆசிரியர்கள் பொது 125 விண்ணப்பப் படிவத்தில் லீவு கேட்டு விண்ணப்
பிக்கலாமா? நாங்கள் கடமையாற்றும் வலயக் கல்விக் காரியாலய உத்தியோகத்தர்கள் இதை ஏற்க மறுக்கின்றார்களே என்ன செய்வது?
தாபனக் கோவையில் XII அத்தியாயத்தில் 1.2 உப் பிரிவில் பொது 125 விண்ணப்ப படிவத்தில்தான் அரசாங்க ஊழியர்கள் லீவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 1974.08.22 திகதிய சாப/பாப/3/11/305 இலக்கச் சுற்றறிக்கையிலும் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தப் படிவங்கள் கிடைக்காத பட்சத்தில் தாளொன்றில் கையால் எழுதிக் கூட பின் வரும் விபரங்களை உள்ளடக்கி லீவுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு கல்விச் செயலாளரின் 4/ஆ/ஆசி/2/67 இலக்க 1982.09.12 சுற்றறிக்கையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரியின் பெயர் லீவு தேவைப்படும் திகதி, லீவு தேவைப்படும் நாட்களின் எண்ணிக்கை, லீவு தேவைப்படும் காரணம், மீண்டும் சேவைக்கு வரும் திகதி, லீவு அமய லீவா வைத்திய லீவா சம்பளமற்ற லீவா என்ற விடயம், விண்ணப்பதாரியின் கையொப்பம் ஆகிய விபரங்களை இரண்டு பிரதிகளில் தயாரித்துக் கொடுத்து லீவுக்கான அனுமதியைப் பெற்று ஒரு பிரதியை ஆசிரியர் வைத்துக்கொள்வதே பாதுகாப்பானதாகும்.
பொறுப்பான பதவியில் இருக்கும் உத்தியோகஸ் தர்கள் தாம் அறிந்ததே சரி என்ற நிலைப்பாட்டில் இருக்காமல் சரியானதை யார் சொன்னாலும் ஏற்று,
' டிசம்பர் 2012

அறிந்து காலத்துக்கு ஏற்றவாறு தம்மை தற்காலப்படுத்திக் கொள்ள வேண்டும்.
நான் அதிபராக இருந்த காலத்தில் வருட ஆரம்பத் தில் இவ்வாறு தயாரிக்கப்பட்ட விண்ணப்பப்படிவ புத்தகமொன்றை ஒவ்வொரு ஆசிரியருக்கும் வழங்குவது வழக்கம். உள்ளகக் கணக்காய்வு அதிகாரிகள் இது தவறு என்று தமது அறிக்கையில் சுட்டிக் காட்டியிருந்தார்கள். பொது 125 விண்ணப்பப்படிவத்தில்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்பது அவர்களது வாதமாக இருந்தது. அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இருக்கவில்லை. அவ்வதிகாரிகளின் அறிக்கைக்கு மேல் சொல்லப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய எனது பதிலால் அப்பிரச்சினை முடிவுக்கு வந்தது. ஆசிரியர், அதிபர்கள் எல்லாவற்றுக் கும் தலைசாய்க்கும் அப்பாவிகள் என்ற விடயத்திற்கு சரியான விடயங்களை அறிந்து, செய்து முற்றுப்புள்ளியை வைக்க வேண்டும்.
பயிற்றப்பட்ட கணித ஆசிரியரான நான் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில்
விஞ்ஞான இளமாணி பட்டபடிப்பை மேற்கொண்டு வருகின்றேன். கல்வியமைச்சின் 4 ஆம் இலக்கமும் 1994.08.12 திகதியும் கொண்ட சுற்றறிக்கைப்படி 3 வருடத்திற்கு மேல் லீவு தர முடியாது என்று வலயக் கல்விக் காரியாலயத்தில் கூறி எனது சொந்த லீவை எடுக்கச் சொல்கின்றார்கள் என்ன செய்யலாம்?
மேல் சொல்லப்பட்ட சுற்றறிக்கையில் திறந்த பல்கலைக்கழகத்தினால் நடத்தப்படும் விரிவுரை/ செய்முறை என்பவற்றில் கலந்துகொள்வதற்காக 10 தினங்களும் பரீட்சைக்காக 10 நாட்களும் என்ற வகையில் வருடத்திற் கு 20 நாட்களுக்கு படிப்பு விடுதலை அனுமதிக்கப்படலாம் என்றே சொல்லப்பட்டுள்ளது. எங்கும் மூன்று வருடத்திற்கு மேல் வழங்கக்கூடாது என்று சொல்லப்படவில்லை.
திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பொன்று எப்படியும் மூன்று வருடத்தில் நிறைவு பெறாது என்பது சகலரும் அறிந்த விடயமே.
1995.07.04 திகதிய கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரின் சுற்றறிக்கையில் பின் வரும் மூன்று விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
1.
கல்வி பெறும் காலப்பகுதியினுள் தேவைக்கேற்ப மாதத்திற்கு ஒருநாள் வீதமும்.
39
5 ஆசிரியம்

Page 42
பாடசாலை விடுமுறை காலமல்லாத போது பரீட்சைகள் இடம்பெறின் பரீட்சை இடம்பெறும்
காலப்பகுதி மட்டும். 3. பரீட்சைகளுக்கு தயார் செய்வதற்காக பரீட்சைக்கு
முந்திய ஒரு வாரம்.
“இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பாட நெறியை பயிலும் ஆசிரியர்களுக்கு படிப்பு விடுதலை வழங்குதல்” என்ற தலைப்பிலான சுற்றறிக்கையிலேயே மேற்சொல்லப்பட்ட விபரங்கள் காணப்படுகின்றன. உங்களுக்கு பொருத்தமான 1994.08.12 திகதிய சுற்றறிக்கை இரத்துச் செய்யப்பட்டதாக 1995.07.04 திகதிய சுற்றறிக்கை யில் சொல்லப்படவில்லை.
வலயக் கல்விக் காரியாலய அதிகாரிகளால் உங்களது லீவு பிரச்சனைக்கு தீர்வு காணமுடியாவிட்டால் மாகாண அல்லது மத்திய கல்வி அமைச்சில் உள்ள தாபன பிரிவுக்கு பொறுப்பானவர்களே இதற்கு உரிய பதிலை தரமுடியும். வலயக் கல்விக் காரியாலயம் இதற்கு அனுமதி தராவிட்டால் நீங்களாவது லீவு தொடர்பாக விண்ணப்பித்து மேல் சொல்லப்பட்ட காரியாலயங்களில் இருந்து தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
1990.01.02 அன்று பயிலுனர் ஆசிரியராக நியமனம் பெற்று, 1995.08.01 அன்று
தொலைக்கல்வி பயிற்சி நெறியை பூர்த்தி செய்து, 3-1 தர ஆசிரியராக நியமனம் பெற்று, 1997.08.01 அன்று 2-II தர நியமனமும், 2007.08.01 அன்று 2-1 தர நியமனமும் பெற்று 2008.06.09 திகதி தொடக்கம் செயல் படும் படியாக பட்டச் சான்றிதழையும் பெற்றுள்ள நான் தற்போது 20,400 ரூபா மாதச் சம்பளம் பெற்று வருகின்றேன். எனக்கு கிடைக்கும் சம்பளம் சரியானதா?
2008.06.09 அன்று கிடைக்கப்பெற்ற பட்டச் சான்றிதழால் நன்மை கிடைக்குமா என்பதே உங்களது உண்மையான சந்தேகம் என எண்ணுகின்றேன்.
2-II தரத்திற்கு வர முன்னர் உங்களுக்கு பட்டச் சான்றிதழ் கிடைத்திருந்தால் நன்மை கிடைத்திருக்கும். 06/2006(viii) இலக்கச் சுற்றறிக்கையினை 2011.01.01 தொடக்கம் புதிய பிரமாணக் குறிப்பின்படி செயற்படுத் தப்பட்டால் உங்களுக்கு நன்மை கிடைக்க வாய்ப்புண்டு.
2007.08.01 அன்று 2-1 தரம் பதவி உயர்வு கிடைத் துள்ளபடியால் உங்களது சம்பளமானது பின்வரும் வகையில் இருக்க வேண்டும். முதலில் 28/2010 இலக்கச் சுற்றறிக்கைப்படி 2007.05.31 அன்று பெற்று வந்த
' டிசம்பர் 2012

சம்பளத்தின்படி 2007.08.01 திகதிக்கு 2-II தர சம்பளமாக 18,845 ரூபா இருக்க வேண்டும். இதன் பின்னர் பின்வரும்
அடிப்படையில் 2-1 தர சம்பளம் அமைய வேண்டும்.
2007.08.01 - 19,245/-
2008.08.01 -1
19,645/-
2009.08.01 -
20,045/-
2010.08.01 -
20,445/-
2011.08.01 -
20,845/-
2012.08.01 - 21,245/-
06/2006 (iv) இலக்கச் சுற்றறிக்கைப் படியே 2007.06.01 தொடக்கம் 2011.06.30 வரை சம்பளம் கிடைக்கும் அது பின்வருமாறே இருக்கும்.
2007.08.01 - 18,845/-
2008.08.01 - 19,245/-
2009.08.01 - 20,045/-
2010.08.01 - 20,445/-
28/2010 இலக்க பொது நிர்வாகச் சுற்றறிக்கைப்படி 2011.07.01 தொடக்கமே நிலுவை கிடைக்கும். மேல் காட்டப்பட்டுள்ள சம் பளத்தின் படி கூட நீங்கள் குறிப்பிட்டுள்ள சம்பளம் பிழையாக உள்ளது. வலயக் கல்விக் காரியாலயத்தில் சொல்லி சரி செய்து கொள் ளுங்கள். சிலசமயம் 2011 ஆம் 2012 ஆம் ஆண்டுக ளுக்கான வருடாந்த சம்பள உயர்ச்சிகள் கிடைக்காமல் இருக்கலாம்.
* * *
40
ஆசிசியம்

Page 43
சேமமடு ! வெளிவந்துவிட்டது..
இது போக இயங்கன. இதிடம் தடைப்
கச் சிறைகளில் பழர், ஆதத அ:ை சின்) கதிர் முருகன் கதி அல்பர் பா கு .
அதைக்க இரு சாதிச்சான் இதன் அட பாகி என்ற தலைப்பு:ாளில் அதற்ட்
கே:
போல் அக்கா கத்ல: சுஜாதா இப: இ ந்தார் சரி : -2;;
1 14: கம் பறW 8 காம்பே AைN IV 2 AM 1 கப் பக்கக்கட்டாக்கள் வகை Nான இயலவித அசன் பிதாக்கம்N க.க.கலாம் : த. கர்லால சங்கம் அந்த அழ் தடித்த 14ா கா =த அத
கட்டுப்பாட்ட தேதியின் மகன் சார் இ க பொ தத்தளம் லேங்Sை கையோர் சின்னது தான் இதிtwாழியாக்கம், கடாபி வான்ரோ பாடசாலைச் சத்தலார் பல்கார் ஆத்தது
அவர் ஆற்றிய பணிகள் கசக்கனக்க, ஆனால் மன்றம் கல்விக்காக அத்தான் இலங்கை: சா அகாடு அ ேக பா க தக போதிப்பி கல்கம் பேகுப்பம்
தலாக்கலை, பல்கலை தலாவை கமல் கடைக்கஸிலாஅல் அகசாப் தக் கேட்டு ரவுடி பட2த
அகி3லப்பா சிந்து முன்பை: அல் கொயல யா இ க தன் இ6ew, அரசும் காது கெட்டிகள் அமோகன் சிங் வித் தலம்
Nா MANTwwwங்கா தன்சி NO ANAN லேடகைதாக.வாசகம் - கொh த எக்கச் சகம், அதாவது அம்சமும் அகக3 இல்Cைாலைக் கிளந்த ஒர, கானலற்ற அல்தார்களது
ப்SைHs லேவிக்சsே: அது அகதமி ஆகல் nே பா டக்லட் கே2 2738 காட்சகாய சிலரது அன்னை றிலகவது வந்தால், சமூகம் கரன்னேற்றத்தைக் கருத்தில் மான் ?கழந்த அல்கஃபால, சிலர். பரிய கர்தால் அது கல்லில் பனிப்பகம் கடிந்தாத்தாலும் ஒரே
பக்கம் 4 பகடு கார், இன்ன பிடிச்சாலும் பாவம் அAFath காப்பில் டாக 16த சிவ அம்பி3டன்.
திகார் சச்சார் ஆய்
விலை:l600.00
தமிழ்ச்சூழலில் ஆளுமையுட அருட்தந்தை லோங் அடிகளார், ஹன
சங்கரப்பிள்ளை வீரசிங்கம், ஒறேற்ர சா.வி.ஒ.சோமநாதர், சங். ஜே.ரி.அர் வேலுப்பிள்ளை தம்பு, க.மூ.சி.சீனித்தம் பிலிப். ஜோர்ஜ் வாசிங்டன் தம்பர்,திருமதி.செ ந.சபாரத்தினம், க.பூரணம்பிள்ளை, ஐ.பி.ஏ
சைவப்பெரியா முதலானோர் அடங்கிய ந
CHEMAMADU
UG.50 People'
Tel:011-2472362, 23 E-Mail:chemamadu@yahoo.
Website:www

பதிப்பகம்
பொ.கனகசபாபதி
பொ. கனகசபாபதி. எம்மை வாழ வைத்தவர்கள்
எம்மை வாழ வைத்தவர்கள்
பக்கம் 504
ன் இயங்கிய அதிபர்கள் வரிசையில் எடி.எஸ்.பேரின்பநாயகம் சங்.ஜோன் பிக்னெல், சர் சி.சுப்பிரமணியம், தெ.து.ஜெயரத்தினம், நளானந்தம்,சி.வண.பிதா.நவரத்தினசிங்கம், பி, சு.குமாரசாமி, செல்வி.இ.மு.தில்லையம்பலம், ல்லம்மாபிள்ளை, ச.அம்பிகைபாகன்,சி.கே.கந்தசாமி, பரைரத்தினம்,விபுலானந்த அடிகள், வீ.வீரசிங்கம், எர் சிவபாதசுந்தரனார் பாலாக இது ஆக்கம் பெற்றுள்ளது.
IIGா?
BOOK CENTRE
S Park, Colombo -11 521905 Fax: 011-2448624
com, chemamadu50@gmail.com, ப.chemamadu.com

Page 44
ஆசிரியர்
தொடர்பு
யாழ்ப்பாணம் புக்லாப் (ரவீந்திரன்) ..021-2227290/077-1285749 பூபாலசிங்கம் புத்தகசாலை (யாழ்) 021-2226693 மா.மோகனகிருஷ்ணன் ....075-0710602 அறிவூற்றுக் களஞ்சியம் 075-4985394
மட்டக்களப்பு கி.புண்ணியமூர்த்தி .077-7034528/065-2250114 ச.ஜெயராஜா ....065-2225812/077-7249729 ராஜாஸ் புத்தகநிலையம் ....065-2222371
மன்னார் ஜோதி புத்தக நிலையம் ....023-2222052 டி.கிறிஷ்டிராஜ் ....071-2261010
- மூதூர் க.கனகசிங்கம் ....077-8730736
கிளிநொச்சி பெருமாள் கணேசன் ....077-0789749
முல்லைத்தீவு வேல் நந்தகுமார் ....077-9297479
ஓட்டமாவடி எம்.பி.டி.கான் ....077-9068898
மாவனெல்லை எம்.ஏ.எம்.நிஸ்தார் ....071-8257562
புஸ்ஸல்லாவை ஜி.லோகேஸ்வரன் ....077-9706564
ஹட்டன் முரளி புத்தக நிலையம் ...051-7911571
அக்கறைப்பற்று டி.கணேசரட்ணம் ....071-3914771/067-2277192

களுக்கு...
வவுனியா தா.அமிர்தலிங்கம் ..071-8457290 ஆ.விஜேந்திரன் ....077-4412518 சி.ரமேஸ் ....077-4744810 சு.பரமானந்தம் ....071-8457260
அறிவாலயம் புத்தக நிலையம் ....024-4920733 கஜன் புத்தகசாலை ...077-1615150
கொழும்பு சேமமடு பொத்தகசாலை ...011-2472362 பூபாலசிங்கம் புத்தகசாலை ...011-2504266 சங்கர் புத்தகசாலை ...077-7732160 நிவ் கோகிலம் புத்தகசாலை 077-5941031
திருகோணமலை இ.புவனேந்திரன் ....026-2222426 ச.தேவசகாயம் ....026-2227345
கிண்ணியா எம்.எஸ்.எம்.ஹனீபா ....077-2344586
அனுராதபுரம் அன்பு ஜவஹர்ஷா ...071-0881950
அம்பாறை அமீர் அலி ...077-2224025
கல்முனை அன்பு புத்தக நிலையம் ....077-6446046
கண்டி ஈஸ்வரன் புத்தகசாலை .....077-7663709
பண்டாரவளை பி.புண்ணியமூர்த்தி ....077-1155609
நுவரெலியா குமரன் புக் சென்டர் ...052-2223416