கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைக்கேசரி 2012.11

Page 1
கலைக்
CULTURE
HERITAGE
TRADITION
EVENTS
FASHIO hLUME : 03 5:11 Read in the parts of )
www.kalaikesari.com | NOVEMBER 2012
அடெ தமிழ்
INDIA..............INK 100.00 SRI LANKA.SLR 200.00 SINGAPORE..SG$ 14.00
CANADA........C AUSTRALIA.A SWISS.

கேகரி*
INTERVIEWS
ENTERTAINMENT ILanka under No. QD ( 127INews1 2012
மரிக்க மிஷனும்
இராமர் பாலம் > வளர்ச்சியும்
மண்திட்டுகள்
- -நேரடி கள ஆய்வு
AN$ 10.00
USA..........Us$ 10.00 [Us$ 10.00
UK...........GB£ 6.00 CHF 10.00
EUROPE.EU€ 7.00
> -t0 ஆSS!
SWISIT,

Page 2
KAMSINS
THE DESIGNER COLLECTION
4 : 11)
வானத்து தேவதைகள் வையத்து நிலவை அலங்கரிக்கும் நருமணம் வீசும் திருநாள் காரிகை அவளது
திருமணநாள்.
அவள் வாழ்வின் பொன்ளன 'நாளன்று சிறப்பாக தோற்றமளிக்க விரும்புவாள் அதனால் தான் அவளது வாழ்வின் பொந்தாளை மேலும்
' மெருகேற்றிட கம்சின்ஸ் வழங்குகின்றது ஈடு இணையற்ற
வாக்குறுதி,
காண்பவர் கண்களை கவர்ந்திடும் மிகச்சிறப்பான வடிவமைப்புகளுடனும் உலகத்தரம் வாய்ந்த ஆடைக 'ளுடனும் கம்சின்ஸ் அவளது எதிர்பார்ப்பினை நிறைவேற்றுவதில்
பெருமை கொள்கிறது.
22/1, W.A. De Silva Mawath 'Phone : +94 115737899 Fax : +941

ჯcxჯამწუოდარ
ha, Colombo 06, Sri Lanka. 1551 7424 Mail : info@kamsins.asia

Page 3
105, Sea Street, Colombo ILT: +94 || 2 442, RA De Mel Mawatha, Kollupitiya, Colombo
info@lalithajewellers.lk

1951-2010
catering
me anijeny since it
232 3691 / 247 0682 F: +94 IL 243 6343 o 03.T: +94 || 257 7451/2 F: +94 || 257 7454
| www.lalithajewellers.lk

Page 4
Д

அட்டைப்படம்:
சான்பிரான்ஸிஸ்கோவிலுள்ள பேதுருவானவரின்
பேராலயத்திலுள்ள கண்ணாடி ஓவியம்
உள்ளடக்கம்:
யாழ்ப்பாணத்தின் வாழ்வியல் சடங்குகளில் பஞ்சாங்கம்
12
வீரமுனை பிள்ளையார் ஆலய சோழர் கால கல்வெட்டுகள்
18
பொலன்னறுவை சைவ வைணவ கோயில்கள்
52
கனக செந்திநாதனின் இலக்கிய வெளி
56
'வீணை வாணி' சண்முகவடிவு அம்மாள்

Page 5
PUBLISHER Express Newspapers (Cey) (Pvt) Ltd. 185, Grandpass Road, Colombo 14, Sri Lanka. T.P. +94 11 7209830 www.kalaikesari.com EDITOR Annalaksmy Rajadurai luxmi.rajadurai@yahoo.com SUB EDITOR Bastiampillai Johnsan johnsan50@gmail.com MEDIA co-ORDINATOR Pragash Umachandraa CONTRIBUTORS Prof, C. Pathmanathan Prof. S. Sivalingaraja Prof. Saba Jeyarasa Dr. Manonmani Shanmugadas Mrs. Vasantha Vaithyanathan Mrs. Pathma Somakanthan Mrs. Sharmila Ranjithkumar Ms. Subashini Pathmanathan Dr. Viviyan Sathyaseelan Ms. Ponnuthurai Nelanthini PHOTOS Joy Jeyakumar S. M. Surendran Dushiyanthini K. L. Thev Athiran J. Sujeewakumar LAYOUT
K. Kulendran ICT
S. T. Thayalan ADVERTISING A. Praveen marketing@virakesari.lk CIRCULATION K. Dilip Kumar SUBSCRIPTIONS J. K. Nair subscription@kalaikesari.lk PRODUCTION L.. A. D. Joseph
ISSN 2012 - 6824
கலைக்கேசரி வா. தமிழர் தம் பெருந் எமது வாசகர்களுக்கு அடைகிறோம்.
தாங்கொணாக் ெ தேவிசத்தியபாமா அ பிறந்த தீபாவளித் தி தர்மங்கள் செய்து, இ
நாம் பல தடவை பாரம்பரிய அம்சங் கலைக்கேசரி அவை கொண்டு இருப்பதை முக்கிய பங்கினை வ எமது சந்ததியினருக்கு
எமது பாரம்பரிய பங்கினை வகிக்கின். மக்களை ஈர்த்துக் ெ இணைந்ததும் பழை ஆரோக்கியத்தையும் தாயாகப் போகும் டெ அரிய தகவல்கள் குறிப்பிடத்தக்கது. மே இதழும் மலர்கிறது. ப.
அத்துடன் கலைக் விரும்புகிறோம். அதா என்னும் இணையத்த கொள்ளலாம் என்பா வளர்ச்சிக்கு ஏற்ப வ உங்களை நாடிவருகி.
நன்றி வணக்கம்
அஷ்ட
பிட் fe -

ஆசிரியர் பக்கம்
'இனிய தீபாவளி வாழ்த்துக்கள்'
சகர்களுக்கு வணக்கம். ாளாம் தீபாவளித் திருநாள் நவம்பர் 13 ஆம் திகதி மலர்கிறது. 5 தீபாவளி நல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி
காடுமைகள் பல செய்து தேவர்களை வருத்திய நரகாசுரனை பித்ததன் மூலம் அதர்மம் அழிந்து தர்மம் தழைத்தோங்க வழி ருநாளில் அனைவரும் சுபிட்சமாக வாழப் பிரார்த்தித்து, தான
னிதே மகிழ்ந்திருப்போம். இங்கு குறிப்பிட்டதைப் போல தமிழ்க் கலை, பண்பாடு மற்றும் களைப் போற்றுவதனை இலட்சியமாகக் கொண்டுள்ள - தொடர்பான அறிஞர்தம் ஆக்கங்களை சிறப்பாகத் தந்து நீங்கள் அறிவீர்கள். ஓரினத்தின் சிறப்பில் அதன் பாரம்பரியமும் கிக்கின்றது. அதனைப் பேணுவது எம்மவர் கடமை மட்டுமல்ல, த உகந்தமுறையில் அறிவுறுத்துவதும் முக்கியமானதே. த்தில், பாரம்பரியமான வைத்திய முறைகளும் கணிசமான றன. ஆங்கில வைத்திய முறைகள் இன்று பெரும்பாலும் காண்டதை மறுப்பதற்கில்லை. அதேவேளை, இயற்கையோடு மை சார்ந்ததுமான வைத்திய முறைகளின் பலன்களையும் முற்றாக மக்கள் மறந்தார் இல்லை. கர்ப்பம் தரித்த காலத்தில் பண்ணுக்கு வழங்கப்பட வேண்டிய உணவு வகைகள் குறித்து
அடங்கிய கட்டுரை இவ்விதழில் இடம் பெறுவதும் மலும் பல அரிய ஆய்வுக் கட்டுரைகளுடன் இக்கலைக்கேசரி டித்துப் பயன்பெறுக.
கேசரி வாசகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவலையும் தர வது உலகெங்கிலும் உள்ள வாசகர்கள் www.magazter.com ளம் ஊடாகவும் கலைக்கேசரி டிஜிட்டல் பிரதிகளைப் பெற்றுக் தைத் தெரிவிக்கின்றோம். வளர்ந்து வரும் உலக இணைய பாசகர்களின் நலனில் அக்கறை கொண்டு கலைக்கேசரியும் றது. மகிழ்ச்சி தானே!
2)
9ே8ry
November, 2012

Page 6
கலைக்கேசரி 2) 06 வாழ்வியல்
யாழ்ப்பாணப் பண்பாடு: மறைந்தவையும் ம யாழ்ப்பாணத்து வாழ்விய
சக்க
யாழ்ப்பாணத்துப் பண்பாடு மறைந்தவையும் மறந்தவையும் என்னும் தொடரிலே யாழ்ப்பாணத்துத் தமிழ் மக்களின் வாழ்வியற் சடங்குகள் பற்றி எழுதும்போது சென்ற மாதம் 'பூப்புநீராட்டுவிழா' பற்றி எழுதினோம். பூப்புநீராட்டு விழாவுக்கு அடுத்ததாகத் திருமணச் சடங்கு பற்றி எழுதுவதற்கு முன்னர், யாழ். மக்களின் வாழ்வியலிலே பஞ்சாங்கத்தின் பயன்பாடு பற்றிச் சிந்திக்கத் தோன்றியது. அதன் விளைவே இக் கட்டுரையாகும். யாழ்ப்பாண இந்துத் தமிழ் மக்களின் வாழ்வியலோடு பஞ்சாங்கப் பாரம்பரியமும் பின்னிப் பிணைந்துள்ளது. - பஞ்சாங்கம் என்பது திதி, கரணம், நட்சத்திரம், யோகம், வாரம் என்னும் ஐந்து அங்கங்களைக் கொண்டது. யாழ்ப்பாணத்திலே 1667 இல் அராலி இராமலிங்க ஐயர் என்பவர் வாக்கிய பஞ்சாங்கத்தைக் கணித்தார் என்று கூறப்படுகின்றது. யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த ஆரியச் சக்கரவர்த்திகளின் - சோதிடப் - பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக இதனைக் கொள்ளலாம் போலத் தெரிகிறது. பிற்காலத்திலே வேறு சில பஞ்சாங்கங்களும் அவ்வப்போது தோன்றி மறைந்தன என்று கூறப்படுகின்றது. (தும்பளை சுப்பிரமணிய சாஸ்திரிகளும் ஒரு பஞ்சாங்கத்தைக் கணித்து வெளியிட்டார் என்று கூறுவர்.) - வாக்கிய பஞ்சாங்கத்தைத் தவிரத் திருக்கணித பஞ்சாங்கம் என்ற பஞ்சாங்கமும் யாழ்ப்பாணத்திலே கணிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகின்றது. இங்கு பயன்பாட்டில் இருந்துவரும் பஞ்சாங்கங்களுக்கு -ெ யே கணிப்பு முறையில் வேறுபாடுகளும் முரண்பாடுகளும் காணப்படுகின்றன. - இரகுநாதையரின் வாக்கிய பஞ்சாங்கத்தைத் துணை கொண்டே இக்கட்டுரை எழுதப்படுகின்றது. எமது பண்பாட்டில் நாளாந்த வாழ்க்கையில் பஞ்சாங்கம் பெறும் வகிபாகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அறுபதாண்டுத் தொடர்ச்சியில் சுற்று வட்டத்திலே பஞ்சாங்கம் கணிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் இலங்கையின் எந்தப் பாகத்தில் இருந்தாலும் வெளிநாடுகளில் இருந்தாலும் பஞ்சாங்கத்தை பயன்படுத்தத் தவறுவதில்லை. இதனாலே தான் வருட ஆரம்பத்தில் ' வெளியிடப்படும் பெரும்பாலான
கலண்டர்களும்
பஞ்சாங்கக் கலண்டர்களாக வெளிவருகின்றன. சாதாரண மக்கள் பஞ்சாங்கத்தைப் பயன்படுத்துவதற்கும் சோதிடர்கள்
க000

மந்தவையும் பலில் பஞ்சாங்கம்
- பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா
பஞ்சாங்கத்தைப் பயன்படுத்துவதற்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உண்டு. சாதாரண மக்களின் பயன்பாட்டுப் பகுதியையே இங்கு நோக்குவோம்.
வருஷப் பிறப்புக்குச் சில நாட்களுக்கு முன்னரே புது வருடத்திற்குரிய பொருள்களை வாங்கும்பொழுது பெரும்பாலானோர் பஞ்சாங்கத்தையும் வாங்கி விடுவதுண்டு. புதுவருடத்தில் நீராடப் பயன்படுத்தும் மருத்துநீருக்குரிய பொருள்களை அறிவதிலும் ஆதாயவிரயம் எனும் வரவு செலவை அறிவதிலும் கைவிசேஷம் பற்றி அறிவதிலும் சாதாரண மக்கள் ஆர்வமாக இருப்பர். - ஓரளவுக்குப் படித்தவர்கள், தமிழாசிரியர்கள் பஞ்சாங்கத்தின் பலன்கள் பற்றிக் கலந்துரையாடுவதும் விவாதிப்பதும் இற்றைக்கு முப்பது - நாற்பது வருடங்களுக்கு முன்வழக்கமாக இருந்தது. இன்று இந்த வழக்கம் மிக அருகிவிட்டது. பெரும்பாலும் சாதாரண மக்கள் பஞ்சாங்கத்திலே இடம்பெறும் பல்லிசொற்பலன், காகங்கரையும் பலன், பல்லிவிழும் பலன், கனவின் பலன், பிரயாணத்திற்கு விலக்கப்பட்ட..
சகுனம் முதலியவற்றில்தான் கவனம் செலுத்தி வந்தனர்.
இராசிச் சக்கரம்
நTIY ரேர ல்
இ ஒ9.
- 1
பன்னிரு இராசிகளின் நக்ஷத்திர நியதி மேடம்..........அச்சுவினி, பரணி, கார்த்திகை முற்கால். இடபம்.........கார்த்திகைப் பின் முக்கால், ரோகிணி, மிருகசீரிடத்துமுன்னரை. மிதுனம்...மிருகசீரிடத்துபின்னரை, திருவாதிரை, புனர்பூசத்து முன்முக்கால். கர்க்ககம்.புனர்பூசத்து நாலாங்கால், பூசம், ஆயிலியம். சிங்கம்....... மகம், பூரம், உத்தரம் முற்கால். கன்னி........உத்தரத்துப் பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை, துலாம்......சித்திரையிற் பின்னரை, சுவாதி, விசாகத்து முன்முக்கால். விருச்சிகம்..விசாகத்து நாலாங்கால், அனுஷம், கேட்டை. தனு............மூலம், பூராடம், உத்திராடத்து முதற்கால். மகரம்........உத்தரரிடத்து பின் முக்கால், திருவோணம், அவிட்டத்துமுன்னரை. கும்பம்.......அவிட்டத்துப் பின்னரை, சதயம், பூரட்டாதி முன்முக்கால். மீனம்.........பூரட்டாதி நாலாங்கால், உ.த்தரட்டாதி, ரேவதி.
5வ 15வ. யாழ்ப்பாணத்துக்கு அவச்சாயை பாதச்சாயை அடி வியடி
53. 15s | 25வ.T மாதம் IAாதம்
ஐப்பசி.. 1-01 | 1-23
4-21 1 4- 4042 0-37
கார்த்திகை..
4.58 4-56 4-47 1-431
1-572-07 வைகாசி.,...
2-12
2- 11 / 2-05 ஆனி....
1-36 11-17 தை......! 1-52
11-02 மாசி...
0-36 அட டி.
0- 52 ஆவத3னி...
1-33 2-02 2-31 பங்குனி ...... 14ாட்டாதி..
25.
சித்திரை .....
மார்கழி.--
430 4-00 3-43 3.18 2-49 213 1-50 1-21 (53 |

Page 7
இம்மக்களிடையே நிலவி வந்த நம்பிக்கைகளுக்குப் பஞ்சாங்கங்கள் அங்கீகாரம் கொடுத்ததா? அல்லது பஞ்சாங்கம் குறிப்பிட்டவைகள் மக்கள் மத்தியிலே நிலைபெற்றனவா? என்பன பற்றிய ஆய்வுகள் எதுவும் வெளிவந்ததாகத் தெரியவில்லை. மக்கள் மத்தியிலே பாரம்பரியமாக நீண்ட காலமாக நிலவி வந்த நம்பிக்கைகளே பஞ்சாங்கம் மூலம் பதிவாகின எனக் கொள்வதே பொருத்தமாகும். மேலே குறிப்பிட்ட நம்பிக்கைகள் பற்றிய தனித்தனி நூல்களும் (பெரிய எழுத்து நூல்கள் உட்பட) ஐம்பதுகள் வரை யாழ்ப்பாணத்திலே பயின்று வந்தமையும் குறிப்பிடத்தக்கது. - ஆனால் இன்று பெரும்பாலானோர் இந்த நம்பிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. மக்கள் மத்தியில் வழங்கி வரும் நம்பிக்கைகள் பற்றிய சமூகவியல் ஆய்வு சுவையானதாகும். சமய, சமூக, பொருளாதார, அரசியல் நடைமுறைகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் நிறையத் தொடர்புகள் உண்டு. - இலக்கியங்களிலும் குறிப்பாக, நாட்டார் இலக்கியங்களிலும் நாடகங்களிலும் மேலே குறிப்பிட்ட நம்பிக்கைகள் பதிவாகியுள்ளமையை அவதானிக்கலாம். உதாரணமாக நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் 'ஆடு கதறியது” என்பதில் இடம்பெறும் 'காக்கை கரையும் கனவும் பலித்ததெடா' என வருவதையும் பூதத்தம்பி இசை நாடகத்திலே இடம்பெறும் 'மொட்டைத்தலையுடன் ஒற்றைப் பிராமணன் முன்னாலை வாறானே' எனத் தொடங்கும்
பாடலையும் சுட்டிக்காட்டலாம். நம்பிக்கைகள் மக்கள் வாழ்வுடன் ஒன்றியமைக்கு இவை சான்றாகும்.
பல்லி சொன்னதும் அல்லது உடலிலே பல்லி விழுந்ததும் உடனே பஞ்சாங்கத்தை எடுத்துப் பார்க்கும் வழக்கம் இற்றைக்கு 40 - 50 ஆண்டுகளுக்கு முன்னே சர்வ சாதாரணமாக இருந்தது. நம்பிக்கைகளுக்கும் சோதிடத்திற்கும் உள்ள உறவினைப் பஞ்சாங்கங்கள் பலப்படுத்தின.
நாள், நட்சத்திரம் பார்த்தல் என்னும் விடயத்திலே இன்றும் பஞ்சாங்கங்கள் முதன்மை வகிக்கின்றன. மக்கள் வாழ்வில் இடம்பெறும் முக்கியமான விடயங்களுக்குரிய நாள், நட்சத்திரம், திதி முதலானவற்றைப் பஞ்சாங்கங்கள் விரிவாகவே குறிப்பிடுகின்றன. அந்த வருஷத்திற்குரிய சுபமுகூர்த்தங்கள் ஒவ்வொரு வருஷப் பஞ்சாங்கத்திலும் பல பக்கங்களிலே அச்சிடப்பட்டிருக்கும். குறிப்பாகக் கைவிசேஷம், விருந்து, குரு, ராஜ், பிரபு தரிசனம், வித்தியாசாலை ஆரம்பம், வயல், தோட்டச் செய்கை, நெல்விதைத்தல், தோட்டப் பயிர்கள் நாற்றிடுதல், நடுதல், தென்னை, மா, பலா முதலியன நடுதல், வெற்றிலைக் கொழுந்து நடுதல், கிழங்கு வகை, வெங்காயம் நடுதல், வாழை, கரும்பு மரவகை நடுதல், புகையிலை, தேயிலை, கீரை நாற்றிடுதல் - நடுதல், வியாபாரந் தொடங்குதல்,
ILDITI

இ, கலைககேசரி
- 07
புதுக் கணக்குப் பதிதல், புதிரெடுத்தல், தானியம் கொண்டு வருதல், சூடுவைத்தல், சூடுமிதித்தல், மாட்டுக்குக் குறிசுடல், நலமடித்தல், மாட்டுக்கு நுகம் வைத்தல் - பழக்குதல், அன்னப்பிராசனம் (சோறு தீத்துதல்), கப்பல், தோணி, பாய் மரம் நிறுத்தல், கிணறு, குளம் தோண்டல், சீமந்தம், காதுகுத்தல், தீட்சை உபநயனம், வித்தியாரம்பம், திருமாங்கல்யத்துக்குப் பொன் உருக்குதல், விவாகப் பதிவு, நிச்சயதார்த்தம், விவாகம், வீடுகட்டுதல், குடிபுகுதல், தேவப்பிரஷ்டை, வீடுவேய்தல், ஓலைவெட்டுதல், வேலியடைத்தல் முதலானவற்றைச் செய்வதற்குரிய சுப மூகூர்த்தங்கள் (திகதி, வாரம், காலம், நேரம், இலக்கினம் முதலியன) பற்றிப் பஞ்சாங்கம் விரிவாகக் கூறிச் செல்கின்றது..
பஞ்சாங்கம் குறிப்பிடும் சுபமுகூர்த்தங்களுக்குரிய பட்டியலைப்
பார்க்கும்பொழுது
மக்களின் வாழ்வியலோடு
முகூர்த்தங்கள்
எவ்வாறு இணைந்திருந்தன என்பதைத் தெளிவாக அறிய முடிகின்றது. சோதிடக் கலையை அனுசரிக்கும் பஞ்சாங்கக் குறிப்புக்களுக்கும் வானியலுக்கும் உள்ள, உறவினையும் சுபமுகூர்த்தங்கள் புலப்படுத்தி வருகின்றன. சுபமுகூர்த்த நிர்ணயத்திலே கிரக சஞ்சாரம் முதன்மை பெறுகின்றது என்று சோதிடர்கள் கூறுகின்றனர்.
வேகமும் பரபரப்பும் நிறைந்த வாழ்க்கைச் சூழலிலே காலத்தோடு போட்டி போட்டு வாழும் மக்கள் எல்லாவற்றிற்குமுரிய முகூர்த்தங்களை நடைமுறைப் படுத்துவது கடினமானதே.
மேலே சுட்டிக்காட்டிய சுபமுகூர்த்தங்களிலே தடித்த எழுத்திலுள்ள சுபமுகூர்த்தங்களே பெரும்பாலும் இன்று வழக்கிலுள்ளன. இந்துக்கள் அல்லாத சிலரும் முற்குறிப்பிட்ட இரண்டு நிகழ்வுகளுக்கும் நல்ல நாள் பார்ப்பதை யாழ்ப்பாண சமூகத்திலே இன்றும் காணலாம். பஞ்சாங்கம் குறிப்பிடும் சுபமுகூர்த்தங்களிலே பலவற்றை (மாட்டுக்குக்குறி சுடல், சூடுவைத்தல், ஓலைவெட்டுதல்,
29
8 * இவருக்கு, கோன் செய்த குத்து விலக்
வீட்டுக்கு நிலம் வகுத்தல் வீடு கட்டுவதற்குரிய நிலம் பிராமணருக்கு 1060 முழமும் 8ஷத்திரியருக்கு, ராமமும் வைசியருக்கு 30 முழமும் சூத்திரருக்கு 80 மும்மும் நீளமுtை.it/தாயும், ! இதில் இவ்விரண்டு முழங் குறைய! அகலமுடையதாகவும், நீளம் வீட்டின் வாயில் தேரும் அகலkம் முகட்டு நேருமாக இருத்தல் வேண்டும். இவைகளை எஜமானுடைய கரத்தினால் அல்லது அரையார் (2) 18 inches) கொண்ட அளவு கோலினால் கொள்க. நிலத்தை ! அளந்து, எஜமானின் வருணத்துக்கு நியதி செய்த நீளம் அகலம் அமைய எல்லை செயது, அடியிற் காணும் சீக்கரப்.312 பதக்கள் வகுத்து, மானிட பதங்களில் படு அமைத்துக் கொள்ளலாம். மற்றைய பதங்கள் வீடு கட்டுவதற்கு விலக்கப்பட்..ன.
வடக்கு
4த்த
1,15ம்
மூதேவி பதம் |
{}கள்
தி
பத்ரி
Lதம்
இராத பதம்
mr ""159 11) இe fேfna (8:21&1)
பதம்
**கவர 1.தம்
இராசலடித
வைரவ
தேவபதம் 1பதம்
.தம்
மூதேவி பதம்
மானிட, 3.தம்
விருச்சிக வீடு 4sigக்குவாபில்
கிழக்கு
தேவ
រ
தேவ
பதம்
ஸ்தானம்;
4.தம்,
டிரா)
மேற்குலாயில்
eெ rgin"13
(1411 "19 AM]
மூதேவி பதம்
இராசஷெத
(தே
முருக காளி 1.தம்
பதம்
விநாயக் பதம்
பதம்
பூதி
வ.க்குவாயில் சிங்கத்து வீடு
AUானிட பதம் |
இராசwத
பதம்
| (iேEEது!
|-தி
4 பதம்
1-ந் )
Fேi12!
138தம்
மூதேவி பதம் |
தெற்கு

Page 8
கலைக்கேசரி தி 08
0TIT60
வேலியடைத்தல் முதலானவை) இன்றைய தலை முறையினர் பலர் அறியமாட்டார்கள். சமூக மாற்றம், கல்வி, தொழில், உலகத்தொடர்பு முதலான காரணிகளால் பல தொழில்கள் மறைந்துவிட்டன. எனினும் பஞ்சாங்கத்திலே அவை நிலைத்து நிற்கின்றன.
இற்றைக்கு 40 - 50 வருடங்களுக்கு முன்னர் பஞ்சாங்கம் எல்லா வீடுகளிலும் இருப்பதில்லை. ஒரு கிராமத்தில் ஒருவரிடம்தான் பஞ்சாங்கம் இருக்கும். குறிப்பாக சோதிடரிடமும்
அக்கிராமத்தில்
வாழும் ஆசிரியர்களிடமும்
சமூக
அதிகாரம் செலுத்துபவர்களிடமும் (விதானையார்) தான் பஞ்சாங்கம் இருக்கும். படிப்பறிவற்ற சாதாரண மக்கள் இவர்களை அணுகியே பஞ்சாங்கம் பார்ப்பது வழக்கம். இந்த இடத்திலே நமது அனுபவமொன்றைக் குறிப்பிடுவது பயனுடையதாகலாம்.
வித்துவ சிரோன்மணி கணேசையரைப் பற்றிய ஆய்வில் நாம் ஈடுபட்டிருந்தவேளை, புன்னாலைக்கட்டுவன், கட்டுவன், மருதடி விநாயகராலயச் சூழல் ஆகிய இடங்களுக்குச் சென்றிருந்தபோது பல முதியவர்களை அணுகிக் கணேசையரைப் பற்றி - வினாவியபோது, சாதாரண பொது மக்களிற் பலர் அவரை தாம் நேரில் கண்டிருப்பதாகவும் அவரிடம்தான் தாம் பஞ்சாங்கம் பார்க்கச் செல்வதாகவும் நினைச்ச காரியம் சித்தியாகுமா என்று கேட்பதும் வழக்கம் என்றனர். படிப்பறிவற்ற கிராமத்து விவசாயிகளுக்கு அவர் தொல்காப்பியக் கடலை கடந்தமை எங்கே தெரியப்போகிறது என்று எண்ணிக் கொண்டேன்.
இந்த இடத்திலேதான் நினைத்த காரியம் சித்தியாகுமா என்பதற்கும் பஞ்சாங்கத்திற்கும் உள்ள உறவை ஒப்பிட்டு நோக்க வேண்டும். பஞ்சாங்கத்திலே ஸ்ரீ ராமசக்கரம் என்றும் ஆரூடச்சக்கரம் என்றும் இரண்டு விடயங்கள் உண்டு. இவற்றைத் தொடுகுறி சாத்திரம் என்றும் கிராமத்தவர்கள் அழைப்பார்கள்.
ஒரு தீர்மானத்தை எடுக்க முடியாமல் சபலம் ஏற்படும் பொழுது சாதாரண பொதுமக்களுக்குப் பஞ்சாங்கத்தில் உள்ள தொடுகுறி சாத்திரமே வழிகாட்டியாக அமையும். தொடுகுறி சாத்திரத்திலே இடம்பெறும் வாசகங்களுக்கும் மக்களின் எதிர்பார்ப்புக்கும் உளவியலுக்கும் நெருங்கிய உறவிருப்பதை அவதானிக்கலாம். உதாரணமாக ஆரூடச் சக்கர வாசகங்களில் சிலவற்றைச் சுட்டிக் காட்டலாம். சுகமுண்டு, செய்யுந்தொழில் விருத்தியாகும், நினைத்த காரியம் கைகூடும், ஒரு விஷயத்தில் துன்பப்படுகிறாய், துயர் நீங்கும்; இவ்வாறு 108 வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. நான்கு, ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் கிராம மக்களிற் பெரும்பாலானவர்கள் தொடுகுறிச் சாத்திரத்தினைப் பஞ்சாங்கம் ஊடாகப் பார்த்தார்கள் என்பதை இன்றைய தலைமுறையினர் அறியமாட்டார்கள்.
ஓரளவுக்குப் படித்தவர்கள் பஞ்சாங்கத்தை வாங்கியதும் மாதகோசரப் பலனைப் பார்ப்பதுண்டு. தாமும் பார்த்துப்
06
தல்

பிறருக்கும் படித்துச் சொல்லுவார்கள். இன்று இந்த வழக்கம் மிக அருகிவிட்டது. யாழ்ப்பாணத்து விவசாயிகள், தொழிலாளர்கள் தமது தொழில்சார் விடயங்களைத் தீர்மானிப்பதற்குப் பஞ்சாங்கத்தையே பெரிதும் பயன்படுத்தினர். உதாரணமாக (கெற்போட்டம், அக்கினிநாள், அட்டமி, நவமி முதலானவை). - பஞ்சாங்கங்களின் பயன்பாடுகளிலே ஆலய விழாக்கள் பற்றிய விபரங்களை அறிவதும் குறிப்பிடத்தக்கதும் முக்கியத்துவம் வாய்ந்ததும் எனலாம். ஆலய மகோற்சவங்கள், அலங்கார உற்சவங்கள், சங்காபிஷேகம், தண்டிகை, அபிஷேகம், பொங்கல், திருக்குளிர்த்தி என விசேட விழாக்கள் பற்றிய விபரங்கள் இடம் பெற்றிருக்கும்.
யாழ்ப்பாணச் சமூக மாற்றத்தினைக் கண்டுகொள்ள இந்த ஆலய உற்சவங்கள் பற்றிய விபரம் பெரிதும் உதவுகின்றது. இற்றைக்கு மூன்று, நான்கு தசாப்தங்களுக்கு முன் பஞ்சாங்கத்திலே இடம்பெறாத பல ஆலயங்களின் உற்சவ விபரங்கள் பல தற்போதைய பஞ்சாங்கங்களிலே இடம் பெற்றுள்ளன. சிறிய கோயில்களாக இருந்தவை திருப்பணிகள் செய்யப்பட்டு விழாக்கள் செய்யப் படுகின்றன. அவை பஞ்சாங்கங்களிலும் இடம்பெற வேண்டும் என்பதிலே ஆலய உரிமையாளர்கள் (சபையினர்) பெரிதும் விரும்புகின்றனர்.
பொங்கல், குளிர்த்தி என முன்னர் குறிப்பிடப்பட்ட சில ஆலயங்கள் இப்போது உற்சவம், மஹோற்சவம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளமையும் அவதானிக்கத்தக்கது. இவை யாழ்ப்பாணச் சமூக அடுக்கமைவில் ஏற்பட்ட
ஆரூடசக்கரம்
6
18
2221
34
33
35
30
28
3736
25
126
|27
39 138
40
41
43
42
59
60
47146 145 144.
E: 18.
* 2 22:13 22:
56 57 58
55
54
- 2 : : : : : : : : 8
63
52 IS3
16
55
66
49 150 151
67
68
63
71
1 84 } 85 82 83
13
80 81
77
87
86 91
9089 88 | 1939231
979899100101 106io5104103|102
95
|96
ao7Eး၀၀
கூலம் பொருட் 40. பல ந
II நக்குநாள் நன் ெகூடிடாது. . , க 18. கி
108-ல் குறைய ன் இலக்கங் கேட்டு, இந்தச்சக்கரத்திலிருக்கிற இலக்கங்களில்) ஒன்றைச் சிறுபிள்ளையின் கையினால் அந்த இலக்கத்தின்" 1,லாபலன்களையும் தொடச் சொல்லி அந்த இலக்கத்தின் பார்த்துக் கொள்ளலாம். பலாபலன்களை அறிந்துகொள்க.
ஆரூடசக்கர பலன்
உண்டாம். 1. அனுகூலம். [சேதம். 9. உத்தியோகம் வரும் 16. சர்ரப்.ை பகைகெடுதி
பே.3ானது வரும். 2. சுகமுண்டு, பொருட் | உபகாரம் கிடைக்கும். !
ககூடிடாது. 3. நாளுக்குநாள் நன்மை,10.பல தஷ்டம், பிranாணங் 17.சினேகிதரால் உதவி,
பிரிந்து போயிருக்கின்ற லாபமுண்டு.
கூடும், அணங்கும். 4. பந்துக்களுட் கலகம் 11. நினைத்தகாரியம் கை {18. கி.ையாது, உன்னைப்
13. தினைத் த காரியம் சுகவனம்.
கிடைக்கும். 5. கைகூ, டும், செய் தொ12.கைவிட்டுப் போனது ! ஐது.
தன் று. ழில் விருத்தியாகும்,
இன் மை20.பிரபா383ம் 6. அதிஷ்டமுண்டு பிணி {13. இப்போது தொடங்கிய ஜயம், புத்திரபாக்கியம்
பூமிப்பேறு.
சிக்கிக் தீரும், பொருள் கிடை தனாற் சத்துரு பசயம். கிடைக்கும்.
14. குருவால் - க்கும் தாமதம்.
கொண்டது. 7, போனது கிடைக் கும் ! உண்டு,
115. சுபகாரிய ஐயம், வியா 21.ஒருவரிடம்
Rரம் விருத்தியாகும். கவலையில்லை. 8. தீய கிரகத்தால் தீமை.
: செய் தெ" ''கிடைக்கும் , பாடங்கிய துக்கும். 5. மை விருத்தியாகும் 13. இப்போது 5 பயம். .
கிடைக" 15. சுபகாரிய கத்தியாகும். )

Page 9
மாற்றங்களைச் சுட்டுவதாகக் கருதலாம். கிராமிய வழிபாடுகள் ஆகம வழிபாட்டுக்குள் உள்வாங்கப் பட்டமையைப்
பஞ்சாங்கங்களினூடும்
கண்டு கொள்ளலாம்.
பஞ்சாங்கத்திலே
குளிர்த்தி
எனக் குறிப்பிடப்பட்டுள்ளதைப் பேச்சு வழக்கிலே (குளுத்தி) என்றே வழங்குவர். கிராமிய வழிபாட்டு மரபுகள் பஞ்சாங்கங்களிலே பெருமளவுக்குப் பதிவாகவில்லை.
அண்மைக் காலமாக இலங்கைத் தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்று ஐரோப்பிய நாடுகளிலும் கனடா, அமெரிக்கா முதலான நாடுகளிலும் கோயிலமைத்து விழாக்கள் நடத்தி வருகின்றனர். அந்தந்த நாட்டு கால் நேரக் கணிப்புப்படி புலம்பெயர் மக்களின் கோயில் விழாக்கள் பற்றிய விபரங்களும் பஞ்சாங்கங்களிலே இடம் பெற்றுள்ளன. உதாரணமாக: அருள்மிகு முத்துமாரி அம்மன் ஆலயம் (பாரிஸ் - பிரான்ஸ்), சித்திவிநாயகர் ஆலயம் (பிரான்ஸ்). இவ்வாறே, கனடா, ஜேர்மனி,
KALAIKESARI
GET கலைக்கேசரி DEL
Please complete the form given below, along with your Cheque, (Ceylon) (Pvt) Limited' and send it to our Head Office at No185 Tel:+94-11-7322700/7738046 Fax:+94-11-7767700 For more details, please contact : Overseas & Local Subscriptic
Online Payment : www.kalaikesari.com/ Subscr
ORDER FORM :
Title
First Name
கலைக்க்ேசரி
Last Nam
4:4ாம் 22 ம்EேT -4:4/3/21)
| Institution
Apartmer
Manager Subscriptions Kalaikesari No. 185, Grandpass Road, Colombo - 14, Sri Lanka.
FOLD HERE
T Street/ R இTown/City | Country
Tel : +94-11-7322783/ +94-11-7767700 Fax :+94-11-7767700 E-mail : subscription@kalaikesari.lk
Amount E
Mode of |
Cheque should be drawin in favour of Express Newspapers (Ceylon) (Pvt) Limited
Online Pa

, கலைககேசரி
09
நியூசிலாந்து முதலான இடங்களில் உள்ள சைவாலயங்களின் கிரியா விபரங்களையும் பஞ்சாங்கம் கூறுகின்றது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலே சிங்கப்பூர்
முதலான இடங்களிலுள்ள சைவ ஆலயங்களின் உற்சவ விபரங்கள் பஞ்சாங்கத்திலே இடம்பெற்றமை குறிப்பிடக்கூடியது. - பஞ்சாங்கத்தின் குறிப்பிடக்கூடிய அம்சங்களில் ஒன்றாக நாம் எழுத்து என்பதையும் கொள்ளலாம். குழந்தை பிறந்ததும் அக்குழந்தைக்குப் பெயர் வைக்கும் பொழுது இன்ன எழுத்தில் அமைய வேண்டுமெனக் குறிப்பிடப் பட்டிருப்பர். ஆனால் அவை பெரும்பாலும் வடமொழி ஒலி அமைப்புக்குரியனவாகலில் அந்த எழுத்துக்களிலே இக்காலத்தில் பெயர் வைக்கும் வழக்கம் அருகிவிட்டது. எண் சாத்திரத்தையே பெரும்பாலானோர் கடைப் பிடித்தின்றனர். மக்கள் வாழ்விலே பிரதான பங்கை வகிக்கும் பஞ்சாங்கத்திற்கும் சோதிடத்திற்கும் உள்ள உறவு தனியே ஆராயப்பட வேண்டியது. "
NERED TO YOUR HOME -Money Order written in favour of "Express Newspapers 5,Grandpass Road, Colombo 14,Sri Lanka.
bns M.Mohan - E-mail : subscription@kalaikesari.lk
Tel:+94 11 7322783 ription
: Mr. D Mrs./ Miss ) Dr. 0 Prof. )
at/Other Nos ...
pad
:/State
nclosed
.(12/6 Issues)
payment : CCheque / L Money Order
yment
: www.kalaikesari.com/Subscription

Page 10
கலைக்கேசரி த்து 10தெய்வ வாகனங்கள்
தெய்வ ? ஞானமுதல்வனில
வ ரூபியான விநாயகருக்கு மூஷிகம் வாகனமா? ஆம்... அப்படி அமைந்ததற்குப் பற்பல காரணங்கள் உண்டு. முதலில் புராணக் கூற்றைப் பார்ப்போம்.
அசுரேந்திரன் அமரர்களை வருத்த வலிமை மிகுந்த ஒருவனை வேண்டி சுக்கிராச்சாரியாரிடம் சென்றான். சுக்கிரன், அவனை நோக்கி, வசிட்ட முனிவரின் மரபில் வந்தவர் மாகத முனிவர். மிகுந்த தவ வலிமையுள்ளவர். அவரை மணக்க விரும்பினாள் விபுதையென்ற அரக்கர் குலப் பெண். முனிவரையடைய வேண்டித் தவமிருந்தாள். நெடுங்காலங் கழித்து மாகத முனிவர் தவம் கலைந்து பார்த்த பொழுது யானைகள் தம்முட் கலந்து கலவி செய்வதைக் கண்டார். காம வேட்கை அவருள் எழுந்தது. இதனை அறிந்த அரக்கப் பெண் விபுதை முனிவர் அருகில் செல்ல, அவளைப் பெண் யானையாக்கித், தான் ஆண் யானையாகிக் கலந்தார். யானை முகத்துடைய கயாமுகாசுரன் தோன்றி, சிவபெருமானை நோக்கித் தவமிருந்து எந்த ஆயுதத்தினாலும் அழிக்க முடியாத பெருவரங்களைப் பெற்று தேவர்களுக்கு அளவிலாக்

ஊர்திகள்
1 மூஷிக வாகனம்
கலாபூஷணம், வித்துவான் வசந்தா வைத்தியநாதன். கொடுமைகள் செய்து மதங்கபுலத்தில் அரசாண்டு வந்தான். அரக்கனின் கொடுமையிலிருந்து அமரர்களைக் காக்க,
''பிடியதன் உருகுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடு மவரிடர் கடிகண பதிவர் அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில் வலி வலமுறையிறையே'' பிறை முடிப்பெம்மான். கணபதியும் ஆயுதங்களால் அழிக்க முடியாத வரம் பெற்ற அசுரனைத் தனது தந்தத்தை ஏவி அழித்தார். அழியாவரம் பெற்ற அரக்கன் அறிவற்ற மூஞ்சூறு வடிவம் கொண்டு அவனே நல்லறிவு வாய்க்கப் பெற்று பிரணவரூபனை சுமக்கும் பேறுபெற்றான். இப்புராணக் கூற்றை நடைமுறைகளில் பொருத்திப் பார்ப்போமா? பொதுவாக மூஞ்சூறு ஜலதாரைகளிலும் அசுத்தமான இடங்களிலும் வாழும் இயல்புடையது. அது போலத்தான் நமது மனமும், காமம், குரோதம், மோகம், மதம், மாற்சரியம் என்னும் அழுக்குகள் நிறைந்த

Page 11
இடத்தையே வாழும் இடமாகக் கொள்கிறது. சுவாமி ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு உதாரணத்தின் மூலம் இதனை விளக்குவார்.
பறவைகளிலேயே மிக மிக உயரத்தில் பறக்கும் தன்மை கழுகிற்குத்தான் உண்டு. சுமார் ஆறு மைல் தூரம் சிறகை அசைக்காமலேயே பறக்கும். காற்று சூடடைந்து மேல் நோக்கி நகர்வதால் அதனால் அப்படிப் பறக்க முடிகிறது. எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் அதன் நோக்கம் உயர்ந்ததாக இருக்குமா? இல்லையே, பூமியிலே எங்கு இறந்த எலி கிடைக்கும்? செத்த பாம்பு கிடைக்கும் என்று எண்ணுமேயல்லாது உயரப் பறக்கும் பறவை உயர்வாக எண்ணாது. அதுபோலத்தான் ஆறறிவு பெற்ற மனிதனும் உயர்வைச் சிந்திக்காது தாழ்ந்து போகிறான். கழிவுக் குழிக்குள் விழுந்து விட்ட குழந்தையைத் தாய் வெறுக்காது சுத்தப்படுத்தி ஏற்றுக் கொள்வதைப் போன்று இறைவனும் தனது அளப்பரிய கருணை வெள்ளத்தினால் நம்மைத் தீர்த்த நீராட்டுகின்றான். அதனால் அசுத்தப் பிராணியான மூஷிகத்திற்கும் அருள் கிடைத்து 'ஆகு' வாகனமாகின்றது. மற்றுமொரு கேள்வி மிகச் சிறிய மூஞ்சூறில் யானை வடிவம் கொண்ட ஆனைமுகன் ஏறினால் அச்சிறு பிராணி இறந்து விடாதா? நசுங்கி விடாதா? என்று வினா எழுப்பினார். இல்லை என்பதுதான் விடை. காரணம் எடை என்பது உடலிற்குத்தான். முதிர்ந்த ஞானத்திற்கு எடை இல்லை. விநாயகர் ஞான முதல்வன். அதனால் எடையற்றவராகி மூஷிக வாகனராகின்றார்.
விநாயகர், ஆறாதாகத்திற்கும் அடி ஆதாரமான மூலாதாரத்திற்கு உரியவர். யோகிகள், ஏற்றி, இறக்கி
15 பி.ப 1941
பிaேinகம்
20
மதந் ர்ஜ் ஆத்ம்

, கலைக்கேசரி
F- 3 !
போ
2ம் பாதம்,பார்த்தபடி
---15:14:41:11 FIE, E14
கம்பம் பட்டா கே1504:22
இப்படி டே : Hம்
அச்சு %
31-: 17
இருகாலும் பூரித்துக் காற்றை அடக்கும் கணக்கறிவாளர்கள். காற்றினை அடக்கும் கணக்கறிவாளர் கண் கூற்றையும் உதைக்க வல்லவர்கள். மூலாதாரத்து மூண்டெழும் கனலை பிராணவாயுவால் சஹஸ்ராரத்திற்குக் கொண்டு செல்லும் பொழுது மூஞ்சூறு
ஓடுவது போன்று 'குடு குடு' என்ற ஒலி எழும்பும். அதனாலும் மூலாதார கணபதி மூஷிகத்தை வாகனமாய்க் கொள்கின்றார்.
தமிழ் உயிர் எழுத்திற்குள்ளே மிக நீண்ட ஒலியசைவு கொண்டது 'ஓ' என்பது. மிகக் குறைந்த முயற்சியாக வாயை மூடியவுடன் 'ம்' என்ற மெய்யொலி பிறக்கின்றது. நீண்ட ஒலியின் அடையாளம் பிரணவ வடிவ விநாயகர். மிகக் குறைந்த (சிறிய) மெய்யொலி மூஷிகம். இரண்டும் இணைந்தால் கிடைப்பது 'ஓம்' என்னும் பிரணவம். ஓங்கார மூர்த்தி உருவில் சிறிய மூஷிகத்தை வாகனமாகக் கொள்வது எத்துணைப் பொருத்தம். ஐந்தறிவு, நான்கறிவுள்ள
பறவைகளையும் விலங்குகளையும் தனது வாகனங்களாக்கிக் கொண்டு கீழான பிறவிகளையும் மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்லும் இறைவனின் கருணைக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும்? இறைவனுக்கு கர்ப்பூர தீபம் நிகழ்த்தும் பொழுதும் மாலை மரியாதைகள் கிடைக்கும் பொழுதும் அந்த வாகனங்களிற்கும் அந்தக் கடவுள் நிலை வந்து எய்துகிறது. ஆறறிவு படைத்த மனிதனிற்கு கிடைக்காத பேறு மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் கிடைக்கிறது என்று எண்ணும் பொழுது நமது சமயத்தின் பெருமை குன்றிலிட்ட தீபமாகப் பிரகாசிக்கின்றது.

Page 12
கலைக்கேசரி த் 12 சாசனவியல்
வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய சோழர் கால கல்வெட்டுகள்
-பொன்னுத்துரை நிலாந்தினி

ழெக்கிலங்கையிலுள்ள தொல்லியற் தடயங்களைக் கண்டறிந்து தமிழர் சமுதாயத்தின் வாழ்வியற்
கூறுகளையும்
பண்பாட்டு
- அம்சங்களையும் வரலாற்றறிவினையும் தொல்லியற் தடயங்களினூடாக உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தாரின் உதவியுடன் பேராசிரியர் சி. பத்மநாதன் தலைமையிலான குழு அண்மையில் ஆய்வினை மேற்கொண்டது.
இக்கள் ஆய்வுப் பயணத்தில் இந்து கலாசார திணைக்கள உத்தியோகத்தர்களான திருமதி தேவகுமாரி ஹரன், திருமதி ஹேமலோஜினி குமரன் ஆகியோரும் தொல்லியற் தடயங்களைக் கண்டறிவதில் ஆர்வமுடையவரான திருவேணி சங்கமம் உட்பட ந. சுபராஜ் (தென்கிழக்குப் பல்கலைக்கழக உதவி விரிவுரையாளர், இந்துநாகரீகம்) பொ. நிலாந்தினி, அ. சதானந்தன், க. செல்வக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
இன்று வரலாற்றினைத் திரிவுபடுத்தி, உண்மைகளை மறைத்து, தமிழர் வாழ்ந்தமைக்கான தொல்லியற் தடயங்களையும் பழைமையான ஆலயங்களில் எஞ்சியுள்ள தொல்லியற் சான்றுகளையும் மறைத்து வருகின்ற அரசியல் கலாசார சூழலில் நாம் வாழ்ந்து

Page 13
அது இஇன வெலம்
TEார படம்
கொண்டிருக்கின்றோம். எனவே எம்தேசத்து மக்களது
வாழ்வியற் கோலங்களையும் எம்தேசத்தின் பெருமைகளையும் பாதுகாத்து எமது எதிர்கால தலைமுறையினருக்கு விட்டுச் செல்ல வேண்டிய பாரிய பொறுப்பு எமக்குரியது.
அந்தவகையில் வரலாற்றில் இருப்புக் கொண்ட தமிழர் வாழ்ந்த தனித்தேசமாக விளங்கிய வீரமுனை என்ற அழகிய கிராமத்தில் வரலாற்றுப் பெருமை வாய்ந்த சிந்தா யாத்திரைப் பிள்ளையார் ஆலயத்திலுள்ள தொல்லியற் தடயங்களை ஆய்வுக்குட்படுத்தும் நோக்கத்துடன் நாம் சென்ற பயணம் மிகவும் பயனுடையதாக அமைந்திருந்தது. குறிப்பாக களஆய்வின்போது ஆலய நிருவாக உறுப்பினர்கள் மற்றும் வீரமுனை இளைஞர் சமூகமும் ஒன்றிணைந்து எங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனால் எமது கள ஆய்வுப் பணி மகிழ்ச்சியுடையதாக ஆலய வரலாற்றம்சங்களை அறியும் முயற்சியில் முழுமையாக ஈடுபட முடிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வீரமுனைக் கிராமம் மட்டக்களப்பிலிருந்து தெற்கு நோக்கி சுமார் முப்பது மைல் தூரத்தில் அமைந்துள்ளது. வீரமுனையைச் சுற்றி எங்கும் பரந்து செழித்த மருதநிலம் உண்டு. மட்டக்களப்பு மான்மியத்தின்படி வீரமுனை என்பது ஆதியிலே குடியேற்றம் பெற்ற ஊர். இது குறித்து மட்டக்களப்பு பூர்வ சரித்திரத்தில் கூத்திகன் மட்டமான களப்பின் மீது தனக்கமைக்கப்பட்ட மாளிகைக்கருகாய் களப்பு முனையில் சாலைகளை அமைத்து வீரர்களைக் குடியமர்த்திய பகுதிக்கு வீரமுனை எனப் பெயரிட்டான் என்று விபரிக்கின்றது.

'ம்
இ கலைக்கேசரி
13
வீரமுனைக் கிராமத்தில் அமைந்துள்ள சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வரலாறு பற்றி கூறப்படும் செய்தியினைப் பார்க்கின்றபோது, சீர்பாததேவி என்ற சோழ இளவரசியால் கி. பி. எட்டாம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட ஆலயமாகும் எனக் கூறப்படுகின்றது. அதாவது சிங்கை நகரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த மன்னன் பாலசிங்கன் சோழநாட்டு இளவரசியான சீர்பாத தேவியை மணந்தான். பின்னர் தனது ஆட்சிக்குட்பட்ட பிரதேசத்தினை தனது மனைவிக்குக் காட்டும் பொருட்டு கடல் வழியாக கப்பற் பயணத்தினை மேற்கொண்டான். அப்போது திருகோணமலைக் கடலை அடைந்ததும் தெய்வக் குறிப்பால் கப்பல் ஸ்தம்பித்து நின்று விட்டது. கப்பல் நிற்கும் காரணத்தை அறிய பலர் கடலினுள் குதித்தனர்.
கப்பலுக்குக் கீழே கடலின் அடியில் விநாயகரது திருவுருவமொன்றினைக் கண்டெடுத்தனர். அதனைக் கண்ணுற்ற இளவரசி இக்கப்பல் ஓடிக் கரைதட்டி நிற்கும் இடத்தில் ஆலயம் எடுப்பித்து நிலைபெறுதல் செய்வேன் என வேண்டினாள். பின்னர் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தனர். கப்பல் கிழக்குக் கரைவழியே மட்டக்களப்பு வாவியை ஊடறுத்து வீரமுனை எனும் இடத்தில் கரைதட்டி நின்றது. எனவே சீர்பாததேவியின் வேண்டுதலிற்கிணங்க வீரமுனையிலே ஆலயத்தினை அமைத்து அங்கு மூலஸ்தானத்தில் விநாயக விக்கிரகத்தினைப் பிரதிஷ்டை செய்தனர். சிந்து என்பது கடல் எனப் பொருள்படும். எனவே கடல் பிரயாணத்தின் போது கிடைத்த பிள்ளையார் என்ற காரணம் கருதி சிந்து யாத்திரைப் பிள்ளையார் ஆலயம் என அழைக்கப்பட்டது.
அத்தோடு ஆலய பராமரிப்புக்காக அரசிக்குத் துணையாக வந்த அரசபரம்பரையினரைச் சேர்ந்த சிந்தன், காங்கேயன், காலதேவன், பெண்புழச்சி, முடவன், வெள்ளாயி, நரையாயி மற்றும் கண்ணப்பமுதலி எனும் வேளாளர் முத்துநாயக்கச் செட்டி, சதாசிவச்செட்டி, சங்கரச்செட்டி

Page 14
கலைக்கேசரி இது
14
போன்ற செட்டிமார்களும் சந்திரசேகர ஐயங்கார், அச்சுத ஐயங்கார் எனும் அந்தணர்கள் மற்றும் அவர்களின் மனைவிமார் போன்றோரையும் வீரமுனைக் கிராமத்திலே குடியமர்த்தினாள். இதுபற்றிய
பாடற்குறிப்பு மேல்வருமாறு அமைகின்றது.
துரைபேர் வீரகண்டன் சிந்தாத்திரன்
காலதேவன் காங்கேயன் நரையாகி வெள்ளாகி முடவனெனும்
பெண்பழச்சி குடியேழ்காண் வரையாக இவர்களையும் வகுத்து வைத்து
மானிலத்தில் ஒற்றுமையாய் வாழுமென்று திரையகல் சூழ்புவியரசன் சேர்த்து வைத்து
சீர்பாதமென்று செப்பினானே மேலும் தம்குலத்தவர்களை முன்னிறுத்தி நீங்கள் அனைவரும் அரச குலத்தவர் எனக்கூறி அதன் சின்னமாக அரவிந்த மலர், செங்கோல், கொடி என்பன பொறிக்கப்பட்ட விருதினையும் வழங்கி இன்றிலிருந்து நீங்கள் சீர்பாத குலத்தைச் சேர்ந்த மக்கள் என முன் மொழிந்தாள்.
மன்னன் வாலசிங்கன் இவ்வாலயம் என்றும் செல்வச் செழிப்புடனும் கீர்த்தியுடனும் சிறப்புப் பெறும் பொருட்டு வயல் நிலங்களையும் மானியமாக வழங்கினான் எனவும் ஆலய வரலாறு கூறுகின்றது.
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சிந்தா யாத்திரைப் பிள்ளையார் ஆலயத்திலுள்ள கற்சாசனங்களை ஆய்வுக்குட்படுத்தியபோது பல துண்டமான கற் சாசனங்களை அவதானிக்க முடிந்தது.
L

இக்கல்வெட்டுக்கள் அடைசல்கள் நிறைந்து, தூசி படிந்து உரியமுறையில் பாதுகாக்கப்படாமல் இருந்தன. குறிப்பாக ஆலய வளாகத்திலுள்ள ஐந்து நீளமான கற் தூண்களையும் இரண்டு சதுரவடிவமான வெள்ளைக் கற்களையும் ஆசன இருக்கையாகப் பயன்படுத்துகின்ற நீளமான கற்பலகையையும் அவதானிக்க முடிந்தது. இக்கற்களைத் துப்பரவு செய்து அவற்றிலுள்ள அடைசல்கள் நீக்கப்பட்டு கோதுமை மாவைப் பரவிப் பூசியபோது எழுத்துப் பொறித்த சாசன வாசகங்களை இலகுவாக வாசிக்க முடிந்தது.
தமிழ்ச் சாசனங்களையும் தமிழரின் வரலாற்று அம்சங்களையும் வெளிக் கொண்டு வருவதில் மிகுந்த ஆர்வமுடையவரான இலங்கையின் மூத்த வரலாற்றுப் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் ஆலயத்திலுள்ள கற் சாசனங்களை வாசித்து மேல்வருமாறு கருத்துக்களை முன்வைத்தார்.
கற்தூண் -01 ஆலயத்தின் இடப்புற மூலையில் கிடையாக வைக்கப்பட்டுள்ள துண்டமான கற்சாசனத்தின் மூன்று பக்கங்களிலும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இச்சாசனம் சோழர் காலத்திற்குரியது என்றும் 11 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது என்றும் கூறிய பேராசிரியர் சி.பத்மநாதன் அதிலுள்ள வாசகத்தினை மேல்வருமாறு வாசித்து அங்கு குழுமி நின்ற மக்களுக்குத் தெளிவு படுத்தினார். முதல் பக்கம்,
... நித்தமும் திரு நந்தா விளக்கு..... ... எரிக்கக் கடவதாகவும்.......

Page 15
இரண்டாம் பக்கம், ... மாகனார் ... மூன்று
மு ழத்து வைத்த....... இரு...... தார நிலை விளக்கு
மூன்றாம் பக்கம், .....பரமேஸ்வரிக்கு....... நானா தேசிகன்...... நித்தமும் திரு நந்தா........
5
அத்தோடு இந்த மூன்று பக்கத் தூண்களிலும் மகரதோரண அமைப்பில் ஒரு வடிவம் கீறப்பட்டுள்ளது. இச்சாசன வாசகங்கள் அடங்கிய கற்தூண் முறையாகப் பாதுகாக்கப்படாமையால் எழுத்துக்கள் தேய்வடைந்து இருந்தன. மிகச்சிறிய வளர்ச்சியடையாத தமிழ் எழுத்துக்களினால் எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக நீளமான கற்தூணிலே வாசகங்கள் அழுத்தி வெட்டப்படாமையால் இவற்றைத் தெளிவாக வாசிப்பதற்கு ஆலய வரலாற்றம்சங்களையும் சாசனங்கள் வாசிப்பதற்குரிய மிகுந்த தேர்ச்சியும் வித்துவப் புலமையும் அவசியமாகும். இருப்பினும் அவற்றில் நன்கு தேர்ச்சி பெற்ற பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்களால் வாசிக்கப்பட்ட வாசகங்களைக் கொண்டு ஆராய்கின்ற போது சோழரின் ஆட்சிக் காலத்தில் இவ்வாலயத்திற்கு வணிக கணத்தினரான நானாதேசிகரினால் திருநந்தா விளக்கெரிப்பதற்கு தானமாகக் கொடுக்கப்பட்டுள்ள செய்தியை அறியமுடிகின்றது.
குறிப்பாக தமிழ் வணிக கணங்களிற் பிரசித்தமானவர்கள் ஐந்நூற்றுவர். இவர்களை நானாதேசிகர், பதினெண் விஷயம், வீரவளஞ்சியர் போன்ற பெயர்களினாலும் சாசனங்கள் குறிப்பிடுகின்றன. அவை பெரும்பாலும் பொலன்னறுவைக் காலத்தைச் சேர்ந்தவையாகும்.
சமகாலத்தில் இவர்களால் ஆலயங்களுக்குத் தானங்களை
வழங்கியும் அ ற ங் க ா வ லர் க ளா க வும் செயற்பட்டனர்.
அந்த வகையில் இவ்வாலயத்திற் கிடைத்த தானசாசனம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.
கற்தூண் - 02
இ ர ண் ட ா வ து துண்டமான கற்தூணிலும் திரு நந்தா விளக்கு என்ற வாசகத்தினைத் தெளிவாக வாசிக்க

, கலைக்கேசரி
15
முடிந்தது. இதுவும் சமகாலத்தில் தானம் வழங்கப்பட்ட செய்தியினையே புலப்படுத்துகின்றது. இருப்பினும் இக்கற்தூணிலே நான்கு பக்கங்களிலும் எழுத்துப் பொறித்த வாசகம் காணப்படுகின்றது.
எனவே இக்கற் தூண்களைத் சுத்தம் செய்து தொடர்ச்சியான பிரயத்தனத்துடன் படியெடுக்கப்பட்டு வாசிக்கின்றபோது மிகுதியான பகுதிகளையும் தெளிவாக வாசிக்க முடியும்.
கற்தூண் -03 ஆலய முன்றலில் கிடையாக வைக்கப்பட்டுள்ள நீளமான கற்தூணிலே,
....... நி வ ந் த ங் க ளு க் கு ....... நி ழ ல் ............ ....... மத்தி யஸ்தன் .......... என எழுதப்பட்டுள்ளது.
கற்தூண்-04 மற்றுமொரு நீளமான கற்தூண் ஆலயத் தீர்த்தக் குளத்திற்கு அருகிலுள்ள ஆலமரத்தருகில் சார்த்தப் பட்டுள்ளது. அவற்றைத் துப்பரவு செய்து கோதுமை மா பரவியபோது, அதன் ஓரிரு எழுத்துக்களை மட்டுமே இனங்காண முடிந்தது. மேலும் அதிலுள்ள நான்கு பக்கங்களிலும் சாசன வாசகம் எழுதப்பட்டுள்ளது. அதன் அருகில் அலங்கார வடிவமுடைய அரைவட்ட வடிவக் கற்பலகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அது சந்திர வட்டக்கல் போன்ற அமைப்புடையது. அதன் முதல் வரிசையில் கஜவரிசை காணப்படுகின்றது. கீழ்ப்பகுதியில்
சிங்க முகமுடைய அலங்கார் வடிவம் கொண்ட
வேலைப்பாடுகள் செதுக்கப்பட்டுள்ளன.
சதுர வடிவ கற்தூண்
ஆலயத்தின் வெளிவீதிக்கு அ ரு க ா ன ம யி ல் நிறுத்தப்பட்டுள்ள சதுர வடிவமான வெள்ளைக் கல்லின் நான்கு
பக்கங்களின்

Page 16
கலைக்கேசரி தி
|
|
16
விளிம்புகளிலும் வாசங்கள் எழுதப்பட்டுள்ள போதிலும் அதனை முழுமையாக வாசிக்க முடியவில்லை. ஏனெனில் மக்கள் அறியாமையினால் அக்கல்லின் மீது சிமெந்து பூசியுள்ளனர்.
பழைய ஆசனக்கல் நீள்சதுர வடிவத்தையுடைய வெள்ளைக் கல்லில் மூன்று பக்கங்களிலும் எழுத்துப் பொறித்த வாசகத்தினையும் பூ அலங்கார வேலைப்பாடுகளையும் அவதானிக்க முடிந்தது. இது குறித்துப் பேராசிரியர் பத்மநாதன் குறிப்பிடுகின்ற போது, இதன் ஒரு பக்கத்திலே நந்தி - முகம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் மறுபக்கத்திலே .திரு ... என்ற வாசகம் காணப்படுகின்றது எனவும் இது 11 ஆம் நூற்றாண்டிற்குரிய வளர்ச்சி அடையாத தமிழ் எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
வட்ட வடிவக் கல் வட்ட வடிவத்தையுடைய வெள்ளை நிறக் கல்லின் மேல் விளிம்பில் சாசன வாசகம் எழுதப்பட்டுள்ளது. இதன் விளிம்பில் நீர் வழிந் தோடக்கூடிய அமைப்பு . காணப்படுகின்றது. இதனை வைத்துப் பார்க்கும்போது இவ்வட்ட வடிவத்தையுடைய கல் சுவாமியை அபிஷேகம் செய்யப் பயன்பட்டிருக்கலாம். ஆனால் இது பழங் காலத்தில் இருந்து தேங்காய் உடைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளமையால் அதன் எழுத்துக்கள் தேய்வடைந்து விட்டன.
எனவே இச்சாசன வாசகங்களை ஆராய்கின்றபோது சோழருடைய ஆட்சிக் காலத்தில் இவ்வாலயம் கிழக்கிலங்கையிலே பிரசித்தி பெற்ற ஆலயமாக விளங்கியிருக்கின்றது.
பாட்டி: பாப்பம்

ஏனெனில் இலங்கையிலே முதலாம் இராஜராஜனது காலம் முதற்கொண்டு முதலாம் குலோத்துங்கன் வரையிலாக ஏறக்குறைய 77 வருடங்கள் சோழராட்சி நிலை பெற்றுள்ளது. இக்காலத்திலே பொலன்னறுவையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த சோழ மன்னர்கள் சிவபக்தர்களாக விளங்கினர். இவர்கள் சைவசமயத்தில் ஆழமான பற்றுக் கொண்டவர்கள். கற்றளிகளாகப் பல தேவஸ்தானங்களை அமைத்தும் தானங்களை வழங்கியும் திருப்பணி புரிந்துள்ளனர் என்பதனை தொல்லியற் சான்றுகளில் முதன்மையான கற்சாசனங்களை ஆராய்கின்றபோது புலப்படுகின்றது.
இந்தவகையில் வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்திற் கிடைத்த கற்சாசனங்களை அவதானிக்கின்றபோது
இவ்வாலயம் சோழ மன்னர்களால் கட்டப்பட்டு
தானங்கள் வழங்கப்பட்டுள்ளது என்பது உறுதியான சான்றாக அமைகின்றது.
எனவே இவ்வாலயத்திலுள்ள கற்சாசனங்கள் ஒரு அருங் காட்சியகத்திலே வைத்துப் பேணவேண்டிய வரலாற்று
மூலங்களாகும். இவை ஆலயத்தின் பல பகுதிகளிலும் துண்டமாக்கப்பட்ட நிலையிலும் நன்கு
பேணப்படாமலும் காணப்படுகின்றன. இவற்றை எல்லாம் உரியமுறையில் ஒன்றுபடுத்தி பேணவேண்டிய பொறுப்பு ஆலயத்தின் நிருவாகத்தினருக்குரியது.
எனவே இக்கற்சாசனங்களை உரிய முறையில் படியெடுத்து மிகுந்த அவதானத்துடன் வித்துவப் புலமையுடன் வாசிக்கின்றபோது ஆலய வரலாற்றினைப் பற்றிய பல விடயங்களை அறியமுடியும் என்பது திண்ணம். எனவே எம்தேசத்து மக்களிடையில் சாசனங்கள் பற்றிய புரிந்துணர்வும் அதன் முக்கியத்துவமும் உணரப்படுகின்றபோது இருள் சூழ்ந்த பகுதியாக உள்ள எம்தேசத்து வரலாற்றினை உலகறியச் செய்ய முடியும் என்பது வெள்ளிடைமலை.

Page 17
10 SR)


Page 18
கலைக்கேசரி ஆ. 18 தொல்லியல்
பொலன்னறுவை சைவ வைணவக் கே
மூன்றாம் இதுவரை
கலாநிதி சி. பத்ம தகைசார் பேராசிர பேராதனைப் பல்
யா 2
E - கடிதம் :
ALEMENT TMMMMMMMா MTTTTT Iாச்சி - கயம்

5ாயில்கள்
சிவாலயத்தின் அடித்தளத்தில்
வாசிக்கப்படாத கல்வெட்டுக்கள்
நாதன், ரியர், வரலாற்றுத்துறை, மகலைக்கழகம்.
யா:
- ஜேக தேர்தல் என் புலம்
24 நIII

Page 19
(சென்ற இதழ் தொடர்ச்சி) வானவன் மாதேவீஸ்வரம் பொலன்னறுவையில் அரணமைந்த பகுதியினுள், வடகிழக்கு மூலையின் சமீபத்தில் காணப்படுகின்றது. அகழ்வாய்வுகளை ஆரம்பித்த காலத்தில், சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு பொலன்னறுவையிலுள்ள சைவ, வைணவக் கோயில்களில் அதுவே நன்கு பேணப்பட்ட நிலையிற் காணப்பட்டது. ஆயினும் அண்மைக் காலங்களிற் கவனக்குறைவாற் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளன. கலாசார முக்கோணம் ஏற்பட்ட பின்பு இக்கோயிலும் ஏனைய இந்துக் கோயில்களும் போதியளவு கவனத்தைப் பெற்றிருப்பதாகத் தெரியவில்லை.
இக்கோயில் கர்ப்பகிருகம், அந்தராளம், அர்த்த மண்டபம், நந்திபீடம், மண்டபம், கோபுரவாசல், சுற்றுப் பிரகாரம் என்னும் பகுதிகளுடன் அமைக்கப்பட்டது. அதன் நீளம் 66 அடி நான்கு அங்குலமாகும். கோயில் வளாகத்தைச் சூழ்ந்த மதிற்சுவர் 96 அடி நீளமும் 84 அடி அகலமும் கொண்டதாகும். செங்கற்களால் மதிற்சுவர் அமைந்துள்ளது. வடக்கிலும் கிழக்கிலும் மதிற்
சுவர்கள் நகரின் அரண்களை ஒட்டியிருந்தன.

។
Full-Hee!
+ TEPHal
19 ។ Fihាកាលជា បាយ
ពីង
======
''។
FA'S PM

Page 20
கலைககோரி, 20
கம்
கலந் செது
அன பள கொ
அன.
பொ
கலக் கோ
குகே கான
தேடு கான
கால்
அன.
சமய
விக்.
அன்
ப:35. :- * -
வாசி நிர்மம்
விற்
சமீட
பா 05:55EET--
விட்
அன் நான் பத்ப பகு; ஈஸ்
கொ
18 8
3. அற்ற) அக அன) 288 {{} கச் கோர்டன் பிபா பிடிக்கவர், சேத கடிம் அல்ல 4, 2
- 29 : 143 * *35க்க 18+ 8 உம்
ம
உயர அவ அன காட் தூன் அடி தோ
கர்
அந்; அங்
இர
கார,
ம.
அடி
கொ
அக
அ.ே

bறளியான இக்கோயில் கருங்கல், சுண்ணக்கல் ஆகிய கற்களை ந்து கட்டப்பட்டுள்ளது. கல்விகாரையிலுள்ள சிற்பங்களைச் க்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட கற்களே இக்கோயிலை மப்பதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. கற்கள் மிகவும் பளப் ப்பான, வெண்மையும் பச்சையும் இழையோடிய வண்ணம் ண்டவை. சிற்பவேலைப்பாடுகள் நுட்பமான முறையில் மக்கப்படுமிடத்து அவை அலங்காரத் தோற்றத்துடன் மலிந்து காணப்படுகின்றன. தூண்களில் பத்மதளம், கால், வரி, சம், இதழ், பலகை, போதிகை என்னும் உறுப்புகள் கவர்ச்சிக் லத்துடன் அமைந்துள்ளன. இவ்வம்சங்கள் முதலாம் லாத்துங்க சோழனின் காலத்து மேலைக்கடம்பூர் கோயிலிலும் எப்படுகின்றன. அதிஷ்டானம், தூண்கள், அணைவு தூண்கள், பகோஷ்டங்கள் ஆகிய அம்சங்கள் பிற்காலச் சோழர் பாணியிற் எப்படும் அம்சங்களை ஒத்துள்ளன. எனவே, இக்கோயில் அக் த்திற்குரியதாகக் கொள்ளத்தக்கது. அது 12 ஆம் நூற்றாண்டில் மக்கப்பட்டதென்று கருதலாம். அரண்மனையிற் சைவ பத்தின் செல்வாக்கு மேலோங்கியிருந்த காலப்பகுதியில், கிரமபாகு, இரண்டாம் கஜபாகு ஆகியோரின் காலத்தில் அது நமக்கப்பட்டிருத்தல் வேண்டும். அது அரண்மனை Fகளினதும் அரச பிரதானிகளினதும் வழிபாட்டு தேவைகளுக்கு மாணிக்கப்பட்டிருத்தல் வேண்டும். முதலாம் பராக்கிரமபாகு கு முன் ஆட்சி புரிந்த அரசர்கள் வாழ்ந்த அரண்மனையின் பத்தில் அது அமைந்திருந்தது.
றையகத்தின் மேலுள்ள விமானம் முற்றாக இடிந்து வீழ்ந்து டது. அதன் கீழே கபோதமும் யாளிவரியும் இருந்தமைக்கான Dடயாளங்கள் தெரிகின்றன. மண்டபத்தின் அதிஷ்டானம் Tகு அடி ஐந்து அங்குலம் உயரம் கொண்டது. அதில் உபானம், மதளம், குமுதம், கண்டம், வியாளமாலம், கபோதம் என்னும் திகள் உள்ளன. அது முற்றிலும் வானவன் மாதேவி வரத்திலுள்ள விமானத்தின் அதிஷ்டானத்தை மாதிரியாகக் உண்டு அமைக்கப்பட்டுள்ளது. கர்ப்பகிருகம் வெளிப்புறத்தில்
அடி சதுரமாக அமைத்துள்ளது. -- மண்டபத்திலுள்ள தேவ கோஷ்டங்கள் மூன்றடி ஆறு அங்குலம் ரமும் ஓரடி நான்கு அங்குலம் அகலமும் உடையவனாகும். ற்றின் மேலே கற்களும் தோரணங்களும் அமைந்துள்ளன. மணவு தூண்களின் உயரம் முழுத்தூண்களின் உயரத்தைக் டிலும் காற்பங்கு குறைந்தது. இரண்டாம் சிவாலயத் ன்களில் அமைந்திருக்காத கலசம் இவற்றிலே தெரிகின்றது. யிலே குமுதமும் குமிழ் வடிவம் பெறாது தட்டையான ற்றத்தைக் கொண்டுள்ளது. எப்பகிருகத்திற்கும் மண்டபத்திற்கும் இடையில் அமைந்துள்ள தராளம் உட்புறத்தில் எட்டு அடி நீளமும் ஒன்பதடி ஒன்பது குலம் உயரமும் கொண்ட அமைப்பாகும். அதன் பக்கங்கள் ண்டிலும் உள்ள வழிகளிலே தோரணங்களைத் தாங்கும் அலங் த் தூண்கள் காணப்படுகின்றன. காமண்டபத்தில் அடித்தளம் மட்டுமே எஞ்சியுள்ளது. அது 38
மூன்று அங்குல நீளமும் 26 அடி எட்டு அங்குல அகலமும் எண்டது. அதன் வடபக்கத்தில் 22 அடி நீளமும் ஆறு அங்குலம் லமும் கொண்ட சாலை அமைக்கப்பட்டிருந்தது. தெற்கிலே த போன்றளவு நீளமுடைய மேடை உள்ளது.13

Page 21
மூன்று பரிவாரதேவர் கோயில்கள் இருந்தமைக்கான அடையாளங்கள் உண்டு. கர்ப்பகிருகத்திற்குத் தென் மேற்கில் விநாயகர் கோட்டம் அமைந்திருந்தது. அதில் ஒன்பதடி ஆறு அங்குலம் நீளமும் எட்டு அடி ஒன்பதங்குலம் அகலமும் கொண்ட கர்ப்பக்கிருகமும் அதற்கொப்பான சுற்றளவுடைய அந்தராளமும் இருந்தன. வளாகத்தின் வடமேற்கு மூலையில் அதேயளவு கொண்ட தேவகோட்டமொன்று இருந்தது. அகழ்வு வேலைகளின்போது அதனிடத்திற் குமாரக் கடவுளின் சிலையொன்றும் கிடைத்தது.14
தென்னிந்தியக் கோயில்களில் உருவாகியிருந்ததைப் போன்ற நிர்வாக, வழிபாட்டு முறைகள் இலங்கையில்லுள்ள சைவ கோயில்களிலும் காணப்பட்டன. அதனை வானவல் மாதேவீஸ்வரத்திலுள்ள அதிராஜேந்திரன் காலத்துக் க வெட்டு மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது. பன்மாகேஸ்வர என்ற சிவனடியார் கூட்டம் பற்றி அதிற் கூறப்படுகிறது. தானதருமங்களையும் கோயில் விவகாரங்களையும் மேற்பார்வை செய்தல் பன்மகேஸ்வரின் மரபு வழியான உரிமையாகும். 'பன்ம கேஸ்வரர் ரக்ஷன்' என்ற தொடர் இறுதியிற் காணப்படுகின்றமை குறிப்பிடற்குரியது.

ចចាប់ថា

Page 22
Pirao 1998
Pac -

17
னெ
பதிபாத மூலப் பட்டுடைப் பஞ்சாசாரிய தேவகன்மிகள் என்ற குழுவினர் வானவன்
மாதேவீஸ்வரத்தில் இருந்தனர். மூலஸ்தானத்தில் ஆராதனை முதலான கருமங் களைப் புரிகின்ற அந்தணரை அவ்வாறு அழைத்தனர். கோயிற் பணிகளைச் செய்கின்ற பரிசாரகர் என்னும் பணி மக்களும் அக்கோயிலிற் கடமை புரிந்தனர். மாணிக்கம் என்னும் பட்டம் பெற்ற தேவரடியார் பலர் வானவன் மாதேவீஸ்வரத்தில் இருந்தனர். கங்கை கொண்ட சோழ மாணிக்கம், காமன் திருவியான கோதுகுல மாணிக்கம், கோவிந்தன் ஆடவல்லானான நாற்பத்தெண்ணாயிர மாணிக்கம், தேவன் காமியான இராஜேந்திர சோழ மாணிக்கம், தேவன் உய்யவந்தானான முடிகொண்ட சோழ மாணிக்கம் என்னும் தேவரடியாரை அங்குள்ள சாசனங்
குறிப்பிடுகின்றது.
இக்கோயிலில் விளக்கெரிப்பதற்குச் சோழ மண்டலத்து விற்பேட்டு நாட்டு மங்கலப்பாடி வேளான் சோழ பல்லவரையன் என்னும் பிரதானி ஏற்பாடு செய்திருந்தான். அதற்கென ஐந்து காசும் “இரு சாணே நால்விரல் நீத்துத் தரா நிலை விளக்கு” ஒன்றும் அவனால் வழங்கப்பட்டன. திருவாராதனை செய்வாரும் பரிசாரகரும் பன்மாகேஸ்வரக் கண்காணி செய்வாரும் நாட்டவரும் தேவரடியாரும் என்றென்றும் - இடையறாது விளக்கெரிப்பதாகச் சம்மதித்துக் காசினைப் பொறுப்பேற்றனர்.
மூன்றாம் சிவாலயம் மதில்களாற் சூழப்பெற்ற மூன்றாம் சிவாலயம் அளவிற் சிறிதான கற்றளி. அது யோதஎல் என்னும் கால்வாயின் வலப்பக்கத்துக் கரையிலிருந்து 90 அடி தூரத்தில் அமைந்துள்ளது. அது 51 அடி ஆறு அங்குலம் நீளம் கொண்டது. அதன் பிரகாரமும் கட்டடத்தின் எல்லாப் பகுதிகளின் கூரையும் இடிந்து விழுந்து விட்டன.
கிழக்கு நோக்கிய அச்சிவாலயம் கர்ப்பகிருகம், மண்டபம், அந்தராளம், முக மண்டபம் என்னும் பகுதிகளைக் கொண்டிருந்தது. எல்லாப் பகுதிகளும் ஒரு பொதுவான அதிஷ்டானத்தின் மேல் அமைந்திருந்தன. அது மூன்றடி நான்கு அங்குலம் உயரமும் கொண்டது. அதில் உபானம், கண்டம், கபோதம், குமுதம், பத்மதளம் என்னும் ஐந்து படைகள் அமைந்திருந்தன. முதலாம் சிவாலயத்து மண்டபத்தில் உள்ளனவற்றைப் போன்று சுவர்களிலுள்ள அணைவு தூண்கள் உருவாக்கப் பட்டுள்ளன. எனவே இக்கோயில் 11 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமைக்கப்பட்டதென்று கருதலாம். அவற்றிலே கண்டம், கலசம், பத்ம இதழ் ஆகிய அம்சங் கள் உள்ளமை குறிப்பிடற்குரியது. வெளிப்புறத்தில் மண்டபம் 22 அடி நீளமும் 20 அடி அகலமும் கொண்டுள்ளது. உட்புறத்தில் அதன் நீளம் 16 அடி, அகலம் 14 அடி நான்கு அங்குலம். அந்தராளம் எட்டு அடி நான்கு அங்குல நீளமும் ஆறு அடி அகலமும் கொண்டுள்ளது. வெளிப்புறத்திற் கர்ப்பக்கிருகம் 21 அடி நீள அகலம் கொண்ட சதுரமாகும்.

Page 23
இந்தவருடம் (2012) ஜூன் மாதத்தில் வீரகேசரி நிறுவனத்தைச் சேர்ந்த நண்பர்கள் எம்மை பொலன்னறுவைக்குச் அழைத்துச் சென்றனர். அந்தப் பிரயாணத்தில் ஒருநாள் மாலை இச்சிவாலயத்தின் வெளிப்புறச் சுவர்களை மிகக் கவனமாக அவதானித்த பொழுது, சில இடங்களிற் சாசனங்கள் எழுதப் பட்டிருந்தமை புலப்பட்டது. அதிஷ்டானத்துக் குமுதப் படையின் மூன்று பக்கங்களிலும் மிகவுஞ் சிறிய எழுத்துகளிற் சாசனங்கள் எழுதப்பட்டுள்ளமையினை உணர்ந்து கொள்ள முடிந்தது. கட்டடத்தின் அடித்தளத்தில் மிகுந்த அளவிற் பாசி படிந்துள்ளதால் எவரும் இதுவரை கல்வெட்டுகளை அடையாளம் காணவில்லை. கோயிலின் முக மண்டபத்து வாசற் கதவு நிலைகளின் மேலமைந்த உத்திரத்திலும் எழுப்பப்பட்டுள்ள சாசனங்களின் வரி வடிவங்கள் சிதைவுறாத நிலையிற் காணப்படுகின்றன.
நான்காம் சிவாலயம் மின்னேரியா - தோப்பவாவி வீதியில் அமைந்துள்ள நான்காம் சிவாலயம் செங்கல்லினால் அமைக்கப்பெற்ற கோயிலாகும். கோயில் வளாகம் 136 அடி நீளமும் 100 அடி அகலமும் கொண்ட சுற்றளவினை உடையது. அதன் பிரகாரச் சுவர்கள் இரண்டு அடி அகலங் கொண்டவை. கிழக்கில் அமைந்திருந்த கோபுர வாசல் மதிற் சுவரிலிருந்து உட்புறமாகவும் வெளிப்புறமாகவும் நீண்டிருந்தது. அதற்கு முன்னால் வாசற் படிகள் இரு கட்டங்களில் அமைக்கப் பட்டிருந்தன. ஆலயத்திற்கு அண்மையில் கிழக்கில் வீதியொன்று இருந்தமைக்கான தெளிவான அடையாளங்கள் உள்ளன. ஆலயத்தின் தெற்கிலும் மேற்கிலும் நுழைவாசல்கள் இருந்தன.
கர்ப்பக்கிருகம் வெளிப்பக்கங்களில் 13 அடி ஆறு அங்குலம் அளவுடைய பக்கங்களைக் கொண்ட சதுரமாகும். சுவர்களின் உள்ளே அது ஒன்பது அடி நீளமும் எட்டு அடி நான்கு அங்குலம் அகலமும் கொண்டுள்ளது. இறையகம், மண்டபம் ஆகியவற்றின் இடையில் 15 அடி நீளமான அந்தராளம் இருந்தது. அதன் நடுவிலமைந்த கத வு அதனை இரு பகுதிகளாகப் பிரித்தது. கர்ப்பகிருகத்திற் கதவு அமைந்திருக்கவில்லை. அதில் மூன்று அடி ஆறு அங்குலம் அகலமான வாசல் இருந்தது. மண்டபம் 22 அடி நீளமும் 18 அடி இரண்டு அங்குலம் அகலமுங் கொண்டிருந்தது. அதில் ஆறு அடி உயரமான எட்டு தூண்கள் இருந்தன. அதற்கு முன்னால் 24 அடி அகலமுடைய மகா மண்டபம் 16 தூண்களோடு அமைக்கப்பட்டிருந்தது. அதன் வடக்கிலும் தெற்கிலும் சாலைகள் இருந்தன. தெற்குச் சாலையின் தெற்குச் சுவரில் மூன்றடி நான்கு அங்குலம் அகலமான வாசல் அமைந்திருந்தது. அதன் சுவர்கள் மூன்றடி அகலமானவை. நான்காம் சிவாலயத்தின் மேற்குப் பிரகாரச் சுவரின் பக்கமாக மூன்று பரிவார தேவர் கோட்டங்கள் இருந்தன. தென்மேற்கு மூலையில் இறையகம், மண்டபம் என்னும் பகுதிகளைக் கொண்ட 18 அடி நான்கு அங்குலம் நீளமும்

இ கலைக்கேசரி
23
ஒன்பது அடி அகலமும் கொண்ட சந்நிதானம் இருந்தது. அதன் இறையகத்திலே லிங்கம் இருந்தது. அதன் அருகில், அளவு பிரமாணங்களில் அதனையொத்த வேறொரு கோட்டம் இருந்தது. மூன்றாவது கோட்டம் பிரகாரத்துக்கு வெளியே கோயில் வளாகத்திற்கு வடமேற்கிலே காணப்பட்டது. அது அளவில் ஏனையவற்றைக் காட்டிலும் சற்றுப் பெரிதாகும். அது 21 அடி நீளமும் 11
அடி ஒன்பது அங்குலம் அகலமும் கொண்டிருந்தது.
நான்காம் சிவாலயம் என்று வர்ணிக்கப்படும் கோயிலின் தென்மேற்கு திசையில் லிங்கம் ஸ்தாபனம் பண்ணப்பட்ட கோட்டம் இருந்தமையால் பிரதான ஆலயம் ஈஸ்வரம் என்பதிற் சந்தேகம் உண்டாகிறது. சிவன் கோயில் ஒன்றிலே பரிவாரதேவர்
- கோட்டமொன்றில் இலிங்கத்தைப் பிரதிஷ்டை பண்ண வேண்டிய தேவை யில்லை. எனவே நான்காம் சிவாலயம் என்று கொள்ளப்படும் இக்கோயில் ஈஸ்வரமன்று என்றும், அது சைவர்கள் வழிபடும் வேறொரு தெய்வத்தின் பெயரால் அமைக்கப்பட்டது என்றும் கருதலாம்.
1ா 1:12

Page 24
கலைக்கேசரி, 24 சுற்றுலா
மலேசியாவின் சிற
மலேசியாவின் கினபாலு அதன் அதி சிறப்பு வாய்ந்த விழுமியங்களுக்காகவும் உலகில் முக்கியமான உயிரியல் இடங்கள் 2000 ஆம் ஆண்டு டிசம்பர் யுனெஸ்கோவினால், மலே முதலாவது மரபுசார் ( பிரகடனப்படுத்தப்பட்டது. பூங்காவின் குவிமையமாக வி போர்னியோவில் அமைந்துள் தோற்றத்துடன் திகழும் மலையாகும்.
இமய மலைக்கும் (நியூகின. பப்போ பரத்தின் பனி மலை இடையில் காணப்படும் இம்மன. மீட்டர் (13, 435, அடி) உயரமானதாகு 754 சதுர கிலோ மீட்டர் பரப்பில் பூங்கா அமைந்திருக்கிறது. இப்

ப்பு வாய்ந்த கினபாலு பூங்கா
பூங்கா சர்வதேச ் மிக க்காகவும்
மாதம் சியாவின் இடமாகப்
இந்தப் ளங்குவது T கம்பீரத் கினபாலு
ரியா தீவு) களுக்கும் ல 4095.2
தம்.
கினபாலு பிரதேசம்

Page 25
பூங்காவின்
தலைமை காரியாலயத்தில் இருந்து, 40 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள போரிங் ஹொற் ஸ்பிரிங்ஸ் வரைக்கும் வடக்குப் பகுதியில் மண்டலன் வரைக்கும் சென்று கிட்டத்தட்ட குடத் நெடுஞ்சாலை வரைக்கும் செல்கிறது. அரசாங்க பூங்காவாக 1964 ஆம் ஆண்டில் பிரகடனப் படுத்தப்பட்ட இந்த 'தாவரவியல் சொர்க்கம்' மிகவும் அதிசயிக்கத் தக்க தாவர வகைகளையும் விலங்கினங்களையும் கொண்டு விளங்குகின்றது.
சுமார் 1200 வகையான ஒர்கிட் மலர் வகைகள், 26 வகையான றொதோடென்ட் - ரன்ஸ் தாவரங்கள், ஒன்பது வகையான நெப்பென்திஸ் பிச்சர் தாவரங்கள், 80 க்கும் மேலான பிக் மரங்கள் (Fig), 60 க்கும் மேலான ஓக் மற்றும் செஸ்ற்ரட் மரங்கள், 100 க்கும் மேற்பட்ட பாலூட்டி வகைகள் மற்றும் 326 வகை யான பறவைகள் மற்றும் ஏராளமான மரங்கள், ஊர்ந்து செல்லும் உயிரினங்கள், பூச்சிகள் இப்பூங்காவில் உள்ளன. அத்துடன் 850 வகையான வண்ணத்துப் பூச்சிகளும் காணப்படுகின்றன.
போர்னியோவில் ஒரு பகுதியில் மட்டும் காணப்படுகின்ற 29 வகையாக பறவைகளில், 17

- கலைக்கேசரி
25
வகையான பறவைகள் மலைப் பிரதேசங்களில், குறிப்பாக கினபாலு மலைப் பகுதியில் காணப்படுகின்றன. இவற்றின் வகை வகையான வடிவங்களும் வண்ணத் தோற்றங்களும் இயற்கையை ரசிப்பவர்களைப் பேரானந்தத்தில் மூழ்க வைக்கின்றன.
அத்துடன் கினபாலு இராட்சத சிவப்பு பல்லி மற்றும் கினபாலு நீலப்புழு ஆகியனவும் இப்பிரதேசத்துக்கே உரிய உயிரினங்களில் அடங்குகின்றன.
இந்தப் பூங்காவில் பிரதான கவர்ச்சியாக விளங்குவது, தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய மலையான கினபாலு மலை என்றால் மிகையில்லை.
EEF=சம் -

Page 26
கலைக்கேசரி து
26

ப!
உலகில் மிகவும் வயது குறைந்த எரிமலையற்ற மலைகளில் கினபாலு மலையும் ஒன்றாகும். பத்து
முதல் 35 மில்லியன் ஆண்டுகளுக்கு இடையில் இம்மலை தோன்றியது.
அத்துடன் இம்மலையானது இன்றும் வருடத்துக்கு 5 மில்லி மீட்டர் அளவில் வளர்கிறது எனக் குறிப்பிடப்படுகிறது.
பிரித்தானிய காலனித்துவ நிர்வாகியும் இயற்கை இரசனையாளருமான ஹியூ லோ, 1895 ஆம் ஆண்டு துவாகர் என்னும் இடத்தில் இருந்து ஒரு பயணக் குழுவுடன் புறப்பட்டு கினபாலு பூங்காவுக்குச் சென்றார். அத்துடன் கினபாலு மலையின் உச்சியைச் சென்றடைந்த முதல் மனிதர் என்ற பதிவும் இடம்பெற்றிருக்கிறது. அதனால் இந்த மலையின் சிகரப் பகுதிக்கு லோவின் உச்சி மலை (Low's peak) என்று பின்னர் பெயரிடப்பட்டது.
சபாவின் மேற்கு கரையில் குறொக்கர் மலைத் தொடரில் (Crocker Range) அமைந்துள்ள கினபாலு பூங்கா, மேற்குக் கரைப் பிரிவில் ரானோ (Ranau) மாவட்டத்தில் அமைந்திருக்கிறது.
இந்தப் பூங்காவையும் குறோக்கர் மலைத்தொடர் தேசிய பூங்காவுடன் சேர்த்துப் பார்த்து குழப்பம் அடையத் தேவையில்லை. அது தெற்குப் பகுதியில் உள்ள வேறான ஒரு பூங்காவாகும்.
பொதுவாக சபாவிலும் மலேசியாவிலும் மிகப் பிரசித்தமான சுற்றுலா மையமாக விளங்கும் இப் பூங்காவிற்கு, 2004 ஆம் ஆண்டில் 415,360 பார்வையாளர்களும் 43,430 மலை ஏறிகளும் விஜயம் செய்துள்ளனர்.
கொதா கினபாலு நகருக்கு 88 கிலோ மீட்டருக்கு அப்பால் பூங்காவின் தலைமைக் காரியாலயங்கள் உள்ளன. பூங்காவின் மலைச் சரிவுகளில் குடிசைகள் உள்ளன. இவற்றில் பார்வையாளர்கள் தங்கமுடியும்.
இக்குடிசைகள் பெரும்பாலும் தலைமைக் காரியாலயத்தைச் சுற்றியே உள்ளன. சபாவின் ஏனைய பகுதிகளில் இருந்து தலைமைக் காரியாலயங்களுக்கு செல்வதற்கு நெடுஞ்சாலைக
ளும் முத்திரையிடப்பட்ட வீதிகளும் உள்ளன.
சபா பூங்காக்கள் என அழைக்கப்படும் ஒரு ஸ்தாபனம் பூங்காவை நிர்வகிக்கின்றது. தங்குவதற்கான இடங்களைப் பதிவு செய்தல் மற்றும் மலை ஏறுவோருக்கான வழிகாட்டிகள் சுதேரா சரணாலய தங்குமிடங்கள் என்னும் பெயருள்ள கம்பனியுடன் தொடர்பு கொண்டே செய்ய வேண்டும். மலை ஏற விரும்பும் எவரும் தேர்ச்சி பெற்ற வழிகாட்டி ஒருவருடனேயே

Page 27
TெYTOOT.
FLDான
(Dெ)
செல்ல வேண்டும். இங்குள்ள தங்குமிட செலவுகள் பூங்காவிற்கு வெளியில் உள்ள தங்குமிடங்களிலும் பார்க்க கணிசமான அளவு கூடுதலாகவே உள்ளது. இப்பூங்காவில் குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாக விளங்குவது லோவின் ஒடுக்கமான நீரோடும் கால்வாயாகும். 1.6 கிலோமீட்டர் அடி நீளமான இம்மலைப் பிளவு, மலை உச்சியின் பக்கத்தில் 10 கிலோ மீட்டர் தூரம் பரந்துள்ளது.
இம்மலையும் அதன் பல புலால் தாவர வகைகள் மற்றும் ஒர்கிட் தாவர வகைகள், மிகவும் குறிப்பிடத்தக்க நெபென்திஸ் ராஜா தாவரங்கள் ஆகியவற்றினால் பெயர் பெற்று விளங்குகின்றது. - கினபாலு பூங்காவைச் சுற்றி எண்ணற்ற இயற்கை அழகு காட்சிகளும் மகிழ்ச்சியுடன் களிக்கக்கூடிய பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன. இப்பூங்காவின் அதிசயமான கவர்ச்சியான தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் பற்றி அறிய மிகவும் உதவும் இடமாக விளங்கு
வது கினபாலு தேசிய வரலாற்று நிலையமாகும். - பூங்காவின் தலைமைக் காரியாலயத்தில் இருந்து சுமார் அரை மணித்தியால மோட்டார் சவாரியில் சென்றால் கடல் மட்டத்திலிருந்து 400 மீட்டர் உயரத்தில் உள்ள போரிங் வெந்நீர் நீரோடைக்குச் செல்லலாம். இந்த வெந்நீர் நீரோடையில் குளிப்பதால் சில நோய்கள் குணமாகும் தன்மை உள்ளதெனக் குறிப்பிடப் படுகின்றது. அதுவுமின்றி மேலும் செல்லுகையில் நீர் வீழ்ச்சி மற்றும் பூங்காக்கள், வண்ணாத்தி பூச்சி வனம், ஒர்கிட் பரிபாலன நிலையம் போன்றவற் றைக் கண்டு அனுபவித்து மகிழலாம்.
மற்றைய சேவைகள் பெறெற்றா ஊடான செயற்பாடுகளை விட, ரோர்க் (Torg) மலையும் தென்கிழக்காசியாவின் முதலாவது மலையேறும் பயிற்சி களமாக விளங்குகின்றது. விளையாட்டு மலையேறுதல் கள், பாறைகளில் ஏறுதல் போன்ற வேறு மலை ஏறுதல் நடவடிக்கைகளை இந்நிலையம் வழங்கி வருகின்றது. கினபாலு லபான்ரட்டா பாறை தரை மட்டப்பகுதியில் அமைந்துள்ள பென்டன்ற் ஹற் (Pendant hut) என்னும் பகுதியில், நோர்க் மலை வடிவத்தில் அமைந்துள்ள இருப்பிட வசதி விருந்தினர்களுக்கு மிகவும் செளகரியமான வசதிகளையும் தனிப்பட்ட அறைகளையும் வழங்குகின்றது. இங்கிருந்து பெறெற்றா ஆரம்பத்துக்குச் செல்ல ஆக 15 இல் இருந்து 20 நிமிடங்கள் நடந்து சென்றால் போதும்.
-கங்கா
ஊள்டான்
Tை

A. 5606V6 B6FT||
27
KUdal
தென்சீனக்கடல்
Kota Belud
இனடாடு மலை Tuαταη
SULU SEA MI Kinabalu KOTA KINABALU
SANDAKAN Romu
Popar Kuala Penyu
Tambunom
Sukau Labuan
Beaulon
Kemgau
LAHAD DATU Tenom Sipitong Lawas
Long Pasia
Semporna
Pulau Sipadan

Page 28
யாழ்ப்பாணத்தில் 9
தமிழ் வ6
இலங்கையில் தமிழ் வளர்ச்சியில் அமெரிக்கன் மிஷனின் பங்கு அளப்பரியது. குறிப்பாக யாழ்ப்பாணத்தின் கல்வி வளர்ச்சிக்காக பல கல்வி நிறுவனங்களும், மருத்துவமனைகளும் அமெரிக்கன் மிஷனால் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்தில் நூற்றாண்டுகளைக் கடந்து கல்விச் சேவை ஆற்றி வரும் பாடசாலைகளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்னர் அமெரிக்கன் மிஷனின் பணிகளை அறிந்து கொள்ள வேண்டும். மேலும் 1824 ஆம் ஆண்டு உடுவில் மிஷன் வளவிற்குள் ஆரம்பிக்கப்பட்ட உடுவில் மகளிர் கல்லூரியும், 1872 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாணக் கல்லூரியும் நூற்றாண்டுகளைக் கடந்து கல்விச் சேவை ஆற்றிவரும் கல்வி நிறுவனங்கள் ஆகும். இவ்விடயம் தொடர்பாக பேராயர் கலாநிதி எஸ். ஜெபநேசன் அடிகளாருடனான உரையாடலின் தொகுப்பாக இக்கட்டுரை வெளிவருகிறது.
இந்தியாவில் இருந்த அமெரிக்க சுவிசேடகர்களில் ஒருவரான சாமுவேல் நியூவெல் மொறிஷியஸ் தீவுக்குச்
5 சிகா!:-)
1916 இல் அமெரிக்கன் - சிலோன் மிஷன்

மெரிக்கன் மிஷனும் மார்ச்சியும்
சென்று சுவிசேஷகத்தை ஆரம்பிக்க எண்ணித் தனது பயணத்தை மேற்கொண்டார். அவ்வேளையில் தனது மனைவியையும் குழந்தையையும் இழந்தார். இதனால் மனமுடைந்த சாமுவேல், மொறிஷியஸ் தீவில் இருந்து பம்பாய் செல்லத் தீர்மானித்தார். ஆனால் தன்னந்தனியாக இந்து சமுத்திரத்தில் சஞ்சரித்த அவரை ஏற்றி வந்த கப்பல் காலி துறைமுகத்தை வந்தடைந்தது.
அக்காலத்தில் இலங்கையில் ஆங்கிலேய அரசின் நேரடி நிர்வாகம் நடைபெற்றதுடன், சாமுவேலின் மிஷனரிப் பணிக்கு ஆங்கில தேசாதிபதியான சேர். றொபர்ட் பிறவுன்றிக் ஆதரவு வழங்கச் சம்மதம் தெரிவித்தார். அவருடைய ஆதரவில் இலங்கையில் பத்து மாதங்கள் தங்கிய சாமுவேல் சுவிசேஷத்துக்கு ஏற்ற களத்தை தேர்ந்தெடுப்பதில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் தங்கியிருந்த அவர், ஒல்லாந்தர் நாகரிகம் மற்றும் பண்பாடு ஆகியவற்றில் இருந்து மெல்ல மெல்ல விடுபட்டு ஆங்கிலேய செல்வாக்கிற்குள் வந்து கொண்டிருந்த யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை முறை,
i8
டாக்டர் கிறீனின் முதலாவது மருத்துவ மாணவர்கள்

Page 29
அமெரிக்கன் மிஷனரியும் தமிழ்ப் பெண்களும்
எண்ணப் பாங்குகள், தேவைகள் ஆகியவற்றைக் கண்டறிந்தார். அவரை யாழ்ப்பாண மக்களின் அமைதியும், பண்பாடும், கல்வி ஆர்வமும் கவர்ந்தன.
யாழ்ப்பாணத்தின் அன்றைய சமுதாய அமைப்பில் புரட்டஸ்தாந்து மதப்பிரசாரம் சில இடங்களில் நடந்தது. 1795 ஆம் ஆண்டில் உதயமான லண்டன் மிஷனரி சங்கத்தால் 1806 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட புகழ்பெற்ற மிஷனரிகள் அறுவரில் ஒருவரான் 'பாம் மதகுரு' தெல்லிப்பழையில் பணியாற்றினார். ஆனால் சாமுவேல் யாழ்ப்பாணம் வந்தபோது 'பாம் மதகுரு' தனது பணியை முடித்துக் கொண்டு கொழும்புக்குத் திரும்பி விட்டார். 'பாம் மதகுரு' எட்டு வருடங்களாக தெல்லிப்பழையில் பணியாற்றிய இடம் மற்றும் அவர் வாழ்ந்த வீடு, அவர் பயன்படுத்திய ஒல்லாந்தர்
டாக்டர் கிறீனின் முதலாவது வைத்தியசாலை

தேவாலயம் ஆகியவற்றை சாமுவேல் பார்வையிட்டார். அவரது பத்து மாத கள ஆய்வின் மூலம் முழு இலங்கையிலும் யாழ்ப்பாணக் குடாநாடே மிஷனரிப் பணிக்கு அதிக வாய்ப்புள்ள இடமாகத் தென்பட்டது. அவர் 1813 ஆம் ஆண்டு அமெரிக்க மிஷன் சங்கத்துக்கு தனது ஆய்வு முடிவுகளை விளக்கிக் கூறிக் கடிதம் ஒன்றை எழுதினார்.
"இலங்கை அரசினர் மிஷனரிப் பணிக்கு ஆதரவு நல்குபவர்களாக இருக்கின்றனர். இலங்கையின் சனத்தொகை முப்பது லட்சமாக இருப்பதால் சகலருக்கும் கிறிஸ்தவ நற்செய்தியை எடுத்துக் கூறுவது இலகுவானது. இலங்கையில் பேசப்படும் மொழிகளில் ஒன்றான தமிழில் திருமறை முழுவதும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. சிங்களத்தில் புதிய ஏற்பாடு மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இலங்கையில் இரண்டு மிஷனரித் தொண்டர்களே இப்பொழுதும் பணியாற்றி வருகின்றனர். இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவிக் கொண்டால் அவர்கள் மூலமாக தென்னிந்தியாவிலுள்ள லட்சக்கணக்கான மக்களுக்குக் கிறிஸ்தவத்தைப் போதிக்கலாம். இந்திய அரசு நமது பணிக்குத் தடை விதித்தபொழுதும் யாழ்ப்பாணத்தை இந்தியாவின் ஒரு பகுதியாகக் கருதிச் செயற்படலாம்'
அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சாமுவேல் நியூவெல்லின் கருத்துக்கள் அமெரிக்கன் மிஷன் சங்கம் யாழ்ப்பாணத்தைத் தமது களமாகத் தெரிவு செய்ய வழிவகுத்தது. மேலும் அக்காலத்தில் இலங்கையை ஆட்சிபுரிந்த ஆங்கிலேய அரசு வேற்று நாட்டவரான அமெரிக்கர் ஒருவர் கொழும்பில் நிலை கொள்வதை விரும்பவில்லை. ஆகவே அவர்கள் இலங்கையின் வட கோடியில் இருந்த யாழ்ப்பாணக் குடாநாட்டை தெரிவு செய்யுமாறும் கூறினார்கள். இதனாலேயே “இலங்கைத் தீவின் வட கோடியிலுள்ள சின்னஞ் சிறு மணற்பாங்கான குடாநாடு கிழக்கிலே முதன் முதல் முகிழ்த்த ஐரோப்பிய கலாபீடம்
என
பம் ரகம்:-
தமிழ்ப் பெண்கள் மத்தியில் கிறிஸ்தவ திருமறையை விளக்குதல்

Page 30
ஒன்றினைப் பெற்றுக் கொண்டமைக்கு இறைவனின் விளக்க முடியாத வழிகளையே காரணமாகக் கூற முடியும்'' என யாழ்ப்பாணக் கல்லூரியின் வரலாற்றை எழுதிய ஜே.பி. செல்லையா குறிப்பிடுகின்றார்.
1812 ஆம் ஆண்டு அமெரிக்க மிஷன் சங்கம் தனது இராண்டாவது மிஷனரி அணியை இலங்கைக்கு அனுப்ப முடிவு செய்தமை மூலம் அமெரிக்க - இலங்கை மிஷன் தோற்றம் பெற்றது. 1815 ஆம் ஆண்டு நியூபெரிபோட் துறைமுகத்தில் இருந்து 'ட்றயட்' பாய்க்கப்பல் மூலமாக புறப்பட்ட ஒன்பது மிஷனரிமார் ஐந்து மாத காலம் பயணம் செய்து 1816 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தனர். அக்காலத்தில் நிலவிய அரசியல் மற்றும் சமூகப் பின்னணி மாற்றம் காரணமாக அமெரிக்கன் மிஷனின் மூத்த முதல்வர்கள் பெற்ற கசப்பான அனுபவங்கள் அமெரிக்கன் இலங்கை மிஷனரிமாருக்கு ஏற்படவில்லை. ஆங்கிலேய தேசாதிபதியான சேர். றொபர்ட் பிறவுண் தலைமையிலான
அரசாங்கம் மிஷனரிமார் ' உபயோகத்திற்காக ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தில் அமைத்திருந்த தேவாலயங்களை வழங்கியது. மிஷனரிமார் யாழ்ப்பாணம் செல்லும் முன்னர் கொழும்பில் சில காலம் தங்கியிருந்து தமிழ் மற்றும்
போர்த்துக்கீச மொழிகளைக் கற்றனர்.
அவ்வேளை இந்தியாவில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக தொண்டர் குழாமைச் சேர்ந்த இருவர் சுவிசேஷப் பணியாற்ற இந்தியாவுக்குச் சென்றனர். குழுவினரில் ஒருவரான வண. வாரன் தரை மார்க்கமாக முதலில் யாழ்ப்பாணம் சென்று தேவையான ஒழுங்குகளைச் செய்ய வேண்டும் என்றும், ஏனையோர் பாய்க்கப்பல் மூலம் யாழ்ப்பாணம் செல்வது என்றும் முடிவானது. அதன் பிரகாரம் வண. வாரன் குதிரையில் சவாரி செய்து யாழ்ப்பாணம் வந்தடைந்தார். ஏனையோர்
வைத்திய கலாநிதி சாமுவேல் பிஸ்க் கிறீன்
கலாநிதி எச். ஆர். ஹெய்சிங்டன்

இரண்டு மாதங்களின் பின்னர் யாழ்ப்பாணம் வந்தடைந்தனர். அவர்களில் வண. டானியல் புவர், திருமதி. சூசன் புவர், வண. வாரன் ஆகியோர் தெல்லிப்பழையில் குடியேறினர். வண. மைக்ஸ், திருமதி. மைக்ஸ், வண.றிச்சேட்ஸ், திருமதி. றிச்சேட்ஸ் ஆகியோர் யாழ்ப்பாணப் பட்டினத்தில் சில காலம் தங்கியிருந்து விட்டு, 1820 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் குடியேறினர். இதனாலேயே வட்டுக்கோட்டையும், தெல்லிப்பழையும் அமெரிக்கன் - இலங்கை மிஷனின் பழம்பெரும் தளங்களாகக் கருதப்பட்டன.
ஆங்கிலேய தேசாதிபதியும், உயர் அதிகாரிகளும் மிஷனரிப் பணிக்கு முழு ஆதரவு வழங்கினார்கள். ஆனாலும் யாழ்ப்பாணத்தில் நிலவிய சமூகச் சூழலால் தாம் தெரிவு செய்த களம் இலகுவானதல்ல என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். 1658 ஆம் ஆண்டு தொடக்கம் 1796 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த ஒல்லாந்து அரசின் செல்வாக்கு யாழ்ப்பாணப் பொருளாதார சமூகத்துறையில் செறிந்திருந்தது. அவர்கள் வைத்திய சாலைகள், தொழுநோயாளர் மடங்கள், கல்விச்சாலைகள் என்பவற்றை நன்கு நிர்வகித்திருந்தார்கள். ஆனாலும் பல விதமான வரிகளை விதித்தார்கள். அவர்கள் சமயத் துறையில் கடைப்பிடித்த கொள்கை ஈழத்தில் புரட்டஸ்தாந்து வளர்ச்சிக்கு பல பிரச்சினைகளை உருவாக்கியது. அவர்கள் வருகைக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நிலைபெற்றிருந்த ரோமன் கத்தோலிக்க மடங்களையும், கன்னியர் மடங்களையும் தமது சமயமான சீர்திருத்தவாத கிறிஸ்தவ மதக் கோவில்களாக மாற்றினார்கள்.
ஒல்லாந்தில் இருந்து வந்திருந்த டச்சு சீர்திருத்தவாத மார்க்கத்தை அறிந்திருந்த குருமார்களுக்கு அதைப் பரப்பும் ஆர்வம் இருக்கவில்லை. பெரும்பாலான
வண.லீவை ஸ்போல்டிங் தம்பதியினர்

Page 31
(IFEE -: கபே ---கா, பலாகா காம ஆப ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட
Tாகா
வண. மைரன் உவின்சிலோ
கலாநிதி எச். டபிள்யூ.
ஹவுலண்ட்
குருமார்கள் இலங்கையின் மொழிகளை அறிந்து கொள்ள முயற்சி எடுக்கவில்லை. ஆகவே ஒல்லாந்தர் கிறிஸ்தவ போதனைகளை, அதில் நம்பிக்கை இல்லாத உள்ளூர் உபாத்திமாரிடமே விட்டு விட்டார்கள். மேலும் கிறிஸ்தவர்களுக்கே உத்தியோகங்கள், விருதுகள், வாழ்க்கை வசதிகள், வர்த்தக உரிமைகள் முதலியன வழங்கப்பட்டன. எனவே இச்சலுகைகளைப் பெற கிறிஸ்தவர்கள் போன்று பலர் நடித்தார்கள். 1760 இல் யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவ திருமுழுக்குப் பெற்ற 182,226 பேர் இருந்த போதிலும், 64 பேர் மாத்திரமே திருச்சபையின் பூரண அங்கத்தவர்களாக இருந்தார்கள்.
1805 இல் ஆங்கிலேய ஆட்சியின் மெயிற்லண்ட் தேசாதிபதி அரசு சமயத்துறையில் நடுநிலைமையைக் கடைப்பிடிக்கும் என்றும், நாட்டு மக்கள் எந்த மார்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் சரிசமமாக நடத்தப்படுவார்கள் என்று அறிவித்தார். அவ்வேளை ஒல்லாந்தரால் நாட்டப்பட்ட புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மதம் இருந்த இடம் தெரியாமல் மறைந்தது.
அமெரிக்கன் மிஷனரிமார் பரப்ப விளைந்த புரட்டஸ்தாந்து சமயம் இலங்கையை ஆண்ட ஆங்கிலேயரின் சமயமாக இருந்தமையால் இலங்கையில் வாழ்ந்த இந்து, இஸ்லாமிய, பெளத்த மக்கள் மிஷனரிமாரின் பணிகளைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கின்ற நிலைமை ஏற்பட்டது. மேலும் யாழ்ப்பாணத்தின் சமூக அமைப்பும் மிஷனரிமாருக்கு மிகவும் சிக்கலாகவே காணப்பட்டது. யாழ்ப்பாணத்தில் சாதி அமைப்பு சக்தி வாய்ந்ததாக விளங்கியது. தொழில், கல்வி, வாழ்க்கை முறை, வாழ்விடம் எல்லாவற்றையும் சாதியே நிர்ணயித்தது. அதிகார மேன்மையும் உயர்வும் வேளாளரிடத்திலேயே இருந்து வந்தன. ஏனெனில் அவர்களே நிலச் சொந்தக்காரர்களாக விளங்கினார்கள். வேளாளர் மத்தியில் சாதி உணர்ச்சி எவ்வளவு
சL

25
""'''''கர்ட்
கலாநிதி டானியல் புவர்
வண. சாமுவேல் நியூவேல்
மேலோங்கி இருந்தது என்பதை வட்டுக்கோட்டையில் 1820 களில் நடந்த சம்பவம் விளங்குகின்றது. செமினரியில் கற்ற சைவ வேளாள மாணவர்கள் தாமாகச் சமைத்து உண்டு வந்தனர். மிஷன் வளவிற்குள் இருந்த கிணறுகள் தீட்டுப்பட்டன என நினைத்து அவற்றில் ஒன்றை இறைத்து தமது பாவனைக்கு வைத்துக் கொண்டனர்.
வீடுகள் பெரும்பாலும் மண்ணினால் கட்டப் பட்டவையாக இருந்தன. மக்கள் தமது வீடுகளை சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்திருந்தார்கள். வீடுகளைச் சுற்றி வெற்றிலை போன்ற கொடிகளின் தோட்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் போக்குவரத்து வசதிகள் மிகவும் மோசமான நிலையிலேயே இருந்தன. தென் இலங்கைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான தொடர்புகள் மிகக் குறைவாகவே இருந்தன. யாழ்ப்பாணம் தென்னிலங்கையில் இருந்த மக்களுக்கு அறியாத ஒரு பிரதேசமாகவே இருந்தது. தற்போது தென்னிலங்கையையும் வட மாகாணத்தையும் இணைக்கும் கண்டி வீதி 1843 ஆம் ஆண்டு வரை அமைக்கப்படவில்லை. அத்துடன் வைத்திய வசதிகள் மோசமாக இருந்ததுடன், பிள்ளைப்பேற்றின் போது மரணம் அடைபவர்கள் தொகை அதிகமாக இருந்தது.
ஆரம்பத்தின் வந்த மிஷனரிமாருக்கு இத்தகைய சூழல் பெரும் சவாலாக அமைந்தது. இதேவேளை யாழ்ப்பாணத்தில் பணி புரிய வந்த வண. வாரன் தென்னாபிரிக்காவின் நன்னம்பிக்கை முனைக்குச் சென்று 1818 இல் அங்கேயே மரணமானார். வண. றிச்சட்ஸ் கடற்பிரயாணத்தில் ஈடுபட்டதால் நோயினால் பீடிக்கப்பட்டு ஆறு வருடங்கள் பணி புரிந்து பின்னர் தெல்லிப்பழையில் இறந்தார். ஆனாலும் தம்மைத் தொடர்ந்து இலங்கைக்கு வரவிருந்த மிஷனரிமாரின் பணிக்கு ஏற்ற அத்திவாரத்தை அமைத்தார்கள்.

Page 32
1819 ஆம் ஆண்டு இரண்டாவது அமெரிக்கன் மிஷனரி குழு யாழ்ப்பாணம் வந்தடைந்தது. வண. மைரன் உவின்சிலோ, திருமதி. உவின்சிலோ, வண. வூட்வேட், திருமதி. வூட்வேட், வண. லீவை ஸ்போல்டிங், திருமதி. ஸ்போல்டிங், டாக்டர் ஜோன் ஸ்கடர், திருமதி. ஸ்கடர் ஆகிய எண்மர் அக்குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தினர். அவர்களைத் தொடர்ந்து 1915 ஆம் ஆண்டு வரை அணி அணியாகப் பலர் அமெரிக்காவில் இருந்து யாழ்ப்பாணத்தில் வைத்தியர்களாக, ஆசிரியர்களாக, கல்லூரி அதிபர்களாக, தமிழ் அறிஞர்களாக, மத போதகர்களாக வந்து பணிபுரிந்தார்கள். அவர்களின் மொத்த எண்ணிக்கை 120 ஆகும். அவர்களில் தமிழ் வளர்ச்சிக்குத் தொண்டாற்றியவர்களில் கலாநிதி டானியல் புவர், வண. லீவை ஸ்போல்டிங், வண. மைரன் உவின்சிலோ, கலாநிதி எச்.ஆர்.ஹொய்சிங்டன், டாக்டர் சாமுவேல் கிரீன், வண. சாமுவேல் ஹவுலண்ட் ஆகியோர் முக்கியமானவர்கள்.
கலாநிதி டானியல் புவர் 1789 ஆம் ஆண்டு யூன் மாதம் 27 ஆம் திகதி பிறந்த கலாநிதி டானியல் புவர், 1815 ஆம் ஆண்டு ஒக்டோபர் 23 ஆம் திகதி 'ட்றியட்' கப்பல் மூலம் கொழும்பை வந்தடைந்தார். 1816 ஆம் ஆண்டு தொடக்கம் 1823 ஆம் ஆண்டு வரை தெல்லிப்பழையில் பணியாற்றிய இவர் 1823 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் குடியேறினார். அவருடைய மனைவி சூசன் 1821 ஆம் ஆண்டு தெல்லிப்பழையில் காலமானார். 1823 ஆம் ஆண்டு அமெரிக்கன் மிஷனரிமாரின் பெருமுயற்சியால் வட்டுக்கோட்டை செமினரி உதயமானபோது, அதன் அதிபராக டானியல் புவர் நியமிக்கப்பட்டார்.
வான சாஸ்திரம், கணிதம் ஆகியவற்றின் பேராசிரியராகவும் அவர் விளங்கினார். பின்னர் 1836 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து மதுரைக்குச் சென்ற சுவிசேஷக் குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்று மதுரைக்குச் சென்றார். பின்னர் 1841 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் திரும்பி வட்டுக்கோட்டை செமினரியில் கல்வி கற்பித்தார். அத்துடன் அதே ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 'உதயதாரகை' பத்திரிகையில் பல கட்டுரைகளை எழுதினார். 1848 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்று மீண்டும் 1851 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் திரும்பினார். மானிப்பாயில் பணிபுரிந்து கொண்டிருந்த டானியல் புவர் 1855 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி கொலரா நோயால் மரணமடைந்தார்.
வண. லீவை ஸ்போல்டிங் 1819 ஆம் ஆண்டு இரண்டாவது மிஷனரி குழுவில் இலங்கைக்கு வந்த வண. லீவை ஸ்போல்டிங் தம்பதியர்

க6
தமது களமான உடுவிலில் பணியை ஆரம்பித்தனர். அவரும் அவரது குழுவினரும் அங்கு ஒல்லாந்தரால் பயன்படுத்தப்பட்டு பாழடைந்த நிலையில் இருந்த தேவாலயத்தையும், குருமனையையும் சீர்படுத்தி தமது வதிவிடமாக மாற்றியமைத்தனர். தமிழ் மொழியை நன்கு கற்ற அவர் வட்டுக்கோட்டையில் செமினரி
அமைக்கப்படுவதற்கு
உழைத்தவர்களில் முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.
வட்டுக்கோட்டையில் உயர் கலாபீடம் அமைக்கப்படுவதற்கு அனுப்பப்பட்ட விண்ணப்பத்தில் இவரும் கையொப்பமிட்டுள்ளனர். அண்டேர்சன் விசாரணைக் குழுவின் சிபார்சினால் செமினரி மூடப்பட்டவேளை லீவை ஸ்போல்டிங் பெருந்துயர் அடைந்தார். மேலும் 1872 ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் கல்லூரி ஆரம்பிக்க அயராது பாடுபட்ட இவர், அதன் தொடக்க விழாவில் வழிபாட்டையும் நடத்தியிருந்தார். மேலும் இவர் வேதாகமச் சங்கத்தின் யாழ்ப்பாணக் கிளைக்குத் தலைவராக விளங்கியதுடன், கிறிஸ்தவ வேதாகமம் தமிழில் மொழி பெயர்க்கப்படுவதற்கு பெருந் தொண்டாற்றினார். இரண்டு முக்கியமான அகராதிகள் அச்சு வடிவம் பெறுவதற்கும் காரணமாக இருந்தார். இருபதுக்கும் மேற்பட்ட தமிழ்ப் பிரசுரங்களை ஆக்கியுள்ளார். பல ஆங்கில தோத்திரப் பாடல்களைத் தூய தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இவருடைய பணி யாழ்ப்பாணத்தில் 54 வருடங்கள் நீடித்தது. யாழ்ப்பாணத்தில் நீண்ட காலம் தொண்டாற்றிய இவர் 1873 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பதினெட்டாம் திகதி இவ்வுலக வாழ்வை நீத்தார்.
வண. மைரன் உவின்சிலோ உவின்சிலோ தம்பதியர் ஸ்போல்டிங் தம்பதியருடன் உடுவிலில் பணியாற்ற நியமிக்கப்பட்டனர். வட்டுக்கோட்டை செமினரியின் ஸ்தாபகர்களில் ஒருவராக வண. மைரன் உவின்சிலோ விளங்கினாலும், உடுவிலில் உவின்சிலோ தம்பதியர் ஆற்றிய பணியே மகத்தானது. தமிழ்ப் பெண்களின் ஈடேற்றத்திற்கு ஒரு பாடசாலையை
ஆரம்பிப்பதில்
மற்றைய மிஷனரிமார்களுடன் இணைந்து இவர்கள் பாடுபட்டார்கள்.
1824 ஆம் ஆண்டு உடுவில் மிஷன் வளவிற்குள் அப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. 1833 இல் திருமதி. உவின்சிலோ மரணமடைந்ததுடன், உவின்சிலோ தமது மூன்று பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு அமெரிக்கா சென்றார்.
ஆனாலும் 1836 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் திரும்பிய அவர், சென்னை மிஷன் ஆரம்பிக்கும் முகமாக சென்னை சென்று பணிபுரிந்து தனது 75 ஆவது வயதில் உலக வாழ்வை நீத்தார்.

Page 33
கலாநிதி எச்.ஆர்.ஹொய்சிங்டன் வட்டுக்கோட்டை செமினரியில் அதிபராக இருந்த கலாநிதி டானியல் புவருக்கு அடுத்ததாக அதிபர் பதவியைப் பொறுப்பேற்று 1841 ஆம் ஆண்டு வரை பணியாற்றியவர் கலாநிதி எச்.ஆர். ஹொய்சிங்டன் ஆவார். விஞ்ஞானத்தில் அதிக ஆர்வம் கொண்ட அவர், உடல் நலக் குறைவால் அமெரிக்கா சென்று தங்கியிருந்தவேளை வட்டுக்கோட்டையில் ஒரு வானியல் ஆய்வு கூடத்தை நிறுவுவதற்கு நிதி சேகரித்தார். 1844 இல் இலங்கை திரும்பிய அவர் மீண்டும் வட்டுக்கோட்டை செமினரியின் அதிபரானார். சைவ சித்தாந்தத்தைக் கற்றுத் தேறிய இவருடைய காலத்தில் செமினரி புகழின் உச்சத்தில் இருந்தது. 1848 இல் செமினரிக்கு விஜயம் செய்த குடியேற்ற நாட்டுச் செயலாளர் சேர். எமர்சன் ரெனன்ற் தாம் எழுதிய 'இலங்கையில் கிறிஸ்தவம்' என்னும் நூலில் 'வட்டுக்கோட்டை கல்வி ஸ்தாபனம் ஐரோப்பிய பல்கலைக் கழகங்கள் பலவற்றுடன் சரிசமமாக நிற்கக் கூடியது'' எனக் குறிப்பிட்டமை கவனிக்கத்தக்கது. உடல் நலக் குறைவால் 1849 இல் தமது பதவியை இராஜினாமாச் செய்து அமெரிக்கா சென்ற அவர் மீண்டும் இலங்கைக்குத் திரும்பவில்லை. வெறும் பதினொரு வருட காலம் தங்கியிருந்தாலும் நிலைத்து நிற்கக் கூடிய பணிகள் பலவற்றைச் செய்தவர் அவர்.
டாக்டர் சாமுவேல் பிஸ்க் கிரீன் 1822 இல் பிறந்த சாமுவேல் பிஸ்க்கிறீன், ஈழத்தில் பணியாற்றித் திரும்பிய டாக்டர் ஜோன் ஸ்கடர் மற்றும் டாக்டர் நாதன் வார்ட் ஆகியோரிடம் இருந்து இலங்கையில் சேவை செய்வதற்கு மலிந்திருந்த வாய்ப்புக்களைக் கேள்விப்பட்டார். மருத்துவப் படிப்பை முடித்துக் கொண்ட இவர் 1847 இல் இலங்கை வந்து, வட்டுக்கோட்டையில் இருந்த சிறிய வைத்தியசாலையை மானிப்பாய்க்கு எடுத்துச் சென்றார். வைத்தியசாலையுடன் ஒரு வைத்தியக் கல்லூரியையும் ஆரம்பித்தார். அவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் 1850 ஆம் ஆண்டு வைத்தியர்களாக வெளியேறினார்கள். அமெரிக்காவில் இருக்கும் பொழுதே தமிழ் மொழியைக் கற்றுக் கொண்ட அவர், வைத்திய நூல்களை தமிழாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு நவீன மருத்துவ நூல்கள் பலவற்றையும் தமிழில் வெளியிட வேண்டிய நடவடிக்கைகளை
எடுத்தார்.
தனது 10 ஆண்டு கால சேவையை முடித்துக் கொண்டு தாய்நாடு திரும்பிய கிறீன் 1862 இல் திருமணம் முடித்து மனைவியுடன் மீண்டும் யாழ்ப்பாணம் வந்தார். அவருடைய வரவு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக மாறியது. காரணம் என்னவெனில், 1864 ஆம்
Tாக

தாரர்கள்
ஆண்டு தமிழ் மொழியைப் போதனா மொழியாகக் கொண்டு மருத்துவ வகுப்புக்களை அவர் ஆரம்பித்தார்.
மேலும்
இவர் யாழ்ப்பாண அரசினர் வைத்தியசாலையின் (பெரியாஸ்பத்திரி) ஸ்தாபகர்களில் ஒருவராகவும் விளங்கினார். அவர் பல ஆண்டுகளாக அங்கு கெளரவ சத்திர சிகிச்சையாளராகவும் பணியாற்றினார். தமது பணியை முடித்துக் கொண்டு அமெரிக்கா சென்ற அவர் 1884 இல் தனது 62 ஆவது வயதில் காலமானார்.
வண. சாமுவேல் ஹவுலண்ட்
வட்டுக்கோட்டையில் பணிபுரிந்த மிஷனரிமாரான வண. வில்லியம் ஹவுலண்ட், திருமதி. சூசன் ஹவுலண்ட் ஆகியோருக்கு மகவாக 1848 இல் பிறந்தவரே சாமுவேல் ஹவுலண்ட். வட்டுக்கோட்டையில் பிறந்த மிஷனரி எனத் தனிச் சிறப்புப் பெற்றவர் இவர். சாமுவேல் 1857 பெற்றோருடன் அமெரிக்கா சென்று, கல்வி கற்று, குருவாக அபிஷேகம் பெற்று, திருமணம் முடித்து, இலங்கை அமெரிக்கன் மிஷனில் இணைந்தார். அவருடைய முதலாவது பணிக்களம் உடுவில் ஆகும். 1873 - 1877 வரை உடுவிலிலும் அயற்கிராமங்களிலும் பணியாற்றிய இவர், அடுத்த ஆறு வருடங்கள் உடுப்பிட்டியிலும், ஒரு வருடம் சாவகச்சேரியிலும் பணியாற்றினார்.
1884 இல் அமெரிக்கா சென்று இரண்டு வருடங்கள் தங்கியிருந்த இவர், பின்னர் யாழ்ப்பாணம் திரும்பி தெல்லிப்பழையில் இரண்டு வருடங்கள், மானிப்பாயில் ஒரு வருடம் பணிபுரிந்தார். 1889 இல் யாழ்ப்பாணக் கல்லூரி அதிபராகப் பொறுப்பேற்ற இவர், ஸ்போல்டிங் என்ற மிஷனரிக்குப் பிறகு தமிழில் மிகச் சிறந்த பாண்டித்தியம் பெற்றிருந்தார்.
பல கட்டுரைகள், நூல்களை எழுதியதுடன், தமிழில் ஆங்கில தோத்திரப் பாடல்களையும் மொழி பெயர்த்து தமிழ்த் தோத்திரப் பாடல்கள் நூல் ஒன்றையும் தொகுத்தார்.
'உதயதாரகையின் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்த இவர், இந்து பஞ்சாங்க முறையையும், வான சாஸ்திரத்தையும் நன்கு அறிந்தவர். இதனால் வட்டுக்கோட்டை மக்கள் இவரை 'சாஸ்திரி ஐயர்' என்று அழைத்தனர். யாழ்ப்பாணக் கல்லூரி அதிபர் பதவியில் இருந்து 1897 இல் விலகிய அவர் அமெரிக்கா சென்று 1912 இல் மரணமானார்.
இத்தகைய பின்னணியிலேயே யாழ்ப்பாணத்தில் உடுவில் மகளிர் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணக் கல்லூரி
மற்றும் பாடசாலைகள் ஸ்தாபிக்கப்பட்டன.
- தொகுப்பு : உமா பிரகாஷ்

Page 34
கற்றம்! 34 அட்டை படம் கடமை
சாரளக் கண்ணாடி ஓவியங்கள்
விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் உலக மக்களின் சிந்தனைப் போக்கினை மாற்றியமைத்தது மட்டுமில்லாமல் மிகப்பெரிய - கலாசார
கலாசார அதிர்வினையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. கணனியும், தகவல் தொழில் நுட்பமும் இருபத்தோராம் நூற்றாண்டின் அறிவியல் திசை வழியை மாற்றி அமைத்தன. அதைப்போல் கண்ணாடியின் கண்டுபிடிப்பும் அதன் பயன்பாட்டு தொழில் நுட்பமும் மனித சமூகத்தின் அன்றாட வாழ்க்கை முறையை புதிய கோணத்தில் சிந்திக்க வைத்தது. மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிகவும் சுவாரஸ்யமான, அத்தியாவசியமான பொருள் கண்ணாடியாகும்.
கி.மு. 5000 ஆவது ஆண்டு சிரியா தேசத்து கடற்கரையில் தற்செயலாக கண்ணாடியின் கண்டுபிடிப்பு நிகழ்ந்தது. ரோம் வரலாற்றாசிரியர் பிலினி (கி.பி. 23 - 79) இந்த நிகழ்வினை மேல்வருமாறு குறிப்பிடுகின்றார். கட்டிடங்களைக் கட்டுவதற்குரிய கற்களை விற்பதற்காக வந்த வணிகர்கள் சமைப்பதற்காக இரண்டு கற்களை அடுப்பு போல மணலில் வைத்து அதற்கு மேல் பாத்திரத்தை வைத்து தீ மூட்டினர். பின்னர் நீண்ட நேரம் அதைக் கவனிக்காமல் விட்டதால் கற்கள் மிகவும் சூடாகி மணலில் வழிந்து, கலந்து ஒளி ஊடுருவாத ஒரு பளபளப்பான பொருளாக உருவானது. இந்த நிகழ்வில் மணலில் கலந்துள்ள சிலிக்கன்டை ஒக்ஸைட்டுடன் பாறையிலிருந்து வெளி வந்த வெப்பம் மிகுந்த நைட்ரேட் கலந்து உருகி குளிர்ந்தவுடன் பளபளப்பான திரவம் (கண்ணாடி) உருவானது. அதற்குப்பின் கி.மு. 3500 வரை பீங்கான் பாத்திரங்களின் வெளிப்புறத்தில் பளபளப்புக்காக சிறு சிறு துகள்களாக சிலிக்கன் ஒட்டப்பட்டது.
அடிப்படையில் கல்சியமும் இரும்பும் அதிகமாக கலந்த மணல் 1700 சென்டிகிரேடுக்கு மேல் சூடாக்கப்படும் போது பளபளப்பான திரவம் உருவாகுவது இயற்கை. இவ்வாறு உருவாகும்


Page 35
அட்டைப்பட விளக்கம்:
வாஷிங்டன், சான்பிரான்சிஸ்கே நகரில் உள்ள புனிதர்களான பேது வானவர் மற்றும் சின்னப்பர் பேர லயத்தில் காணப்படும் அழகிய சாரல் கண்ணாடி ஓவியம். 1884 ஆம் ஆண்( இந்த பேராலயம் இத்தாலிய குடியே றவாசிகளால் அமைக்கப்பட்டது.
இந்த ஓவியம் நவீன வர்ணப்பூச் முறைகளினால் அலங்கரிக்கப்பா டுள்ளது.

தளைத்கேசரி
35
சI
திரவத்தையே கண்ணாடியாக நிலைமாற்றி ஏறக்குறைய ஐந்தாயிரம் ஆண்டுகள் வரை பாவித்து வந்தனர். - கி. பி. முதலாம் நூற்றாண்டில் சோடியம் காபனேட் எனப்படும் சலவைச்சோடாவையும் கல்சியம் காபனேட் எனப்படும் சுண்ணாம்புக் கலவையையும் மணலோடு சேர்த்து உருக்கும் இரசாயன முறையை கண்டுபிடித்ததும் கண்ணாடியின் உபயோகம் அதிகரிக்க ஆரம்பித்தது. அதற்குப்பின் மேற்கூறிய சோடாக் கண்ணாடி கலவையுடன் மக்னீசியம் ஒக்ஸைட் சேர்க்கப்பட்டு முற்றிலும் ஒளி ஊடுருவி செல்லக் கூடிய கண்ணாடி கண்டுபிடிக்கப்பட்டது.
ஒளிஊடுருவக்கூடிய கண்ணாடிகள் கண்டுபிடிக் கப்பட்டதோடு, வடிவங்கள் புடைக்கப்பட்ட அச்சில் வார்க்கப்பட்ட கண்ணாடி ஜன்னல்கள் ரோம் நகரின் மிக முக்கிய செல்வந்தர்களின் இல்லங்களில் பயன்படுத்தப்பட்டன. இவ்வாறு கண்ணாடியின் பயன்பாடு அரண்மனை மற்றும் தேவாலயங்களில் இருந்து சாமான்யனுக்கு வந்து சேர இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலானது. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு வரை உலகெங்கும் இந்தக் கண்ணாடி தொழில்நுட்பமும் கண்ணாடிகளின் பயன்பாடும் பரவுவதற்கு வணிகர்களே மூலகாரணர்களாக இருந்தனர்.
ஆரம்பத்தில் நிறமற்ற கண்ணாடி உற்பத்தி செய்யப்பட்டது. அதற்கு இரசாயன பதார்த்தங்கள் மூலம் வர்ணம் கொடுக்கப்பட்டது.
ஆசிய நாடுகளைப் பொறுத்த அளவில் கிறிஸ்து பிறப்பதற்கு ஏறத்தாழ மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்ணாடித் தொழில்நுட்பம் வளர ஆரம்பித்திருந்தது. சிந்துவெளி நாகரீக காலத்தில் இருந்து மத்திய, மேற்கு ஆசிய நாடுகளுடன் இருந்த வணிகத் தொடர்பின் காரணமாக கண்ணாடிப் பாவனை காணப்பட்டமை நிரூபணமாகின்றது. - கி. பி. நான்காவது மற்றும் ஐந்தாவது நூற்றாண்டுகளில் கிறிஸ்தவ தேவாலயங்களில் வர்ணக் கண்ணாடி அலங்காரம் பயன்படுத்தப் பட்டுள்ளமையை ஆய்வுகள் நிரூபிக்கின்றன. மரச் சட்டங்கள் கொண்டு அமைக்கப்பட்ட ஜன்னலின் இடைவெளிகளை மறைப்பதற்கு வர்ணம் தீட்டப்பட்ட
கண்ணாடிகளை
மரச் சிலாகைகளினால் பொருத்தி சாரளத்தின் இடைவெளிகள் மறைக்கப்பட்டன.
ஐரோப்பாவில் - நாலாவது நூற்றாண்டில் தேவாலயங்களின் அலங்காரங்களுக்காக வண்ண பளிங்கின் மெல்லிய துண்டுகள் பயன்படுத்தப் பட்டிருப்பதாக அகழ்வாய்வுகள் தெரிவிக்கின்றன. வண்ண பளிங்கு கண்ணாடி நுட்பங்களை எகிப்து
பெ

Page 36
கலைக்கேசரி 2
36
ரன்
மற்றும் ரோமின் பண்டைய பேரரசுகள் முடிந்தவரை பயன்படுத்தியுள்ளன. பிரான்சில் தேவாலய சாரளங்களுக்கு அலங்கார கண்ணாடி ஜன்னல்கள் கி. பி. 675 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பிரிட்டனில் தேவாலயங்கள் மற்றும் குரு மடங்களை அழகுபடுத்துவதற்காக வர்ண கண்ணாடி ஜன்னல்களின் பாவனை காணப்பட்டுள்ளது. இது கி. பி. ஏழாம் நூற்றாண்டின் தொடக்க காலப்பகுதியாகும்.
950 களில் தேவாலய நிர்மாண கட்டிட பாணியாக இருந்த கோதிக்கட்டிட அமைப்புக்காலத்தில், வலுவான இரும்பு சட்டங்கள் மூலம் வர்ண கண்ணாடிகளை இணைக்கும் தொழில் நுட்பம் வளர்ச்சியடைத் தொடங்கியது. கோதிக் கட்டிடக்கலையின் முக்கிய அம்சம் சிற்பங்கள் மற்றும் சுவர் ஓவியங்கள் மூலம் அழகுபடுத்தலாகும். சுவர்கள் மற்றும் உயர்ந்த கோபுரங்களுக்கு ஈடாக ஜன்னல்களும் அழகுபடுத்தப்பட வேண்டும் என்ற தேவை எழுந்த போது கண்ணாடிகளில் வர்ணம்பூசி அழகூட்டும் எண்ணம் பிறந்தது. கண்ணாடியில் வர்ணம் பூசி தேவாலய சாரளங்களை அழகூட்டுவதை திருச்சபையும் மிகுந்த ஆர்வத்துடன் ஊக்குவித்தது.
'ஏழை மனிதனின் வேதாகமம்' என்று இந்த கண்ணாடி ஓவியம் வர்ணிக்கப்படும் அளவிற்கு தேவாலயங்களில் முக்கியத்துவம் பெற்றது. அதனுடைய முக்கியத்துவமும் அழகியலும் இன்றும் அதே வீச்சுடன் காணப்படுகின்றது. வேதாகமத்திலுள்ள கதைகள் (பழைய ஏற்பாடு மற்றும்
ெைT

புதிய ஏற்பாடு) வேதகமம் சொல்லும் தத்துவங்கள் படிப்பறிவில்லாத பாமர மக்கள் தெளிவாக விளங்கிக் கொள்வதற்கு உதவின.
தேவாலயம் தவிர்ந்த -
பல்கலைக்கழகங்கள், நாடாளுமன்றங்கள், வணிகவர்த்தக நிலையங்கள், வங்கிகள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற பிற பொது கட்டிடங்களின் சாரளக் கண்ணாடி அலங்காரங்கள் படிப்பினைக் கருத்துக்களைக் கொண்டிருக்கவில்லை. ஆயினும் சாதாரண மனித கற்பனைக்கு அப்பாற்பட்ட அழகிய வடிவங்களை கொண்டிருக்கின்றன. வரலாறு, அல்லது இலக்கிய கதாபாத்திரங்கள் அல்லது குறிப்பிட்ட படைக் கலங்கள் மற்றும் இவற்றின் குறியீட்டு சின்னங்கள் கற்பனை அலங்காரங்களுடன் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு கட்டிடத்தின் வகைகளுக்கும் அவற்றின் பயன்பாட்டிற்கும் தக்கவாறு வர்ணக் கண்ணாடிகளின் அலங்கரிப்பு முறைகளும்
வேறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு தேவாலயத்தில் கிறிஸ்துவின் வாழ்க்கை நிகழ்வுகள், வேதாகமத்தில் சொல்லப்படும் அரசர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள், தேவமாதா உட்பட வேதாகம கதை நிகழ்வுகள் ஊடாக அழகுபடுத்தப்படுகின் றன. நாட்டின் நாடாளுமன்றக் கட்டிடமாகின் அதில் தேசியம் மற்றும் நாட்டு மக்களின் வாழ்க்கை முறை, அவர் களின் பாரம்பரியங்களை பிரதிபலிப்பதாகவும் கண்ணாடி ஓவிய வடிவங்கள் அமைகின்றன. பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரி கட்டிடங்களாயின் பாரம்பரிய கலைகள் மற்றும் விஞ்ஞான சிந்தனைகள், தூரநோக்கு
மல்

Page 37
ஆகியவற்றினையும் ஒரு இல்லமாயின் எளிய வடிவில் அமைந்த பறவைகள் மற்றும் மலர்கள், விலங்கினங்கள் அல்லது இயற்கைக் காட்சிகள் கொண்ட வடிவங்களாக வும் வரையப்படுகின்றன.
பொதுவாக வர்ணப் பூச்சு அலங்கார கண்ணாடிகளின் அலங்காரங்களின் பிரதான நோக்கம் தங்கள் கட்டடத்த தொகுதியின் அழகை மேம்படுத்துவதுடன் அடையாளங்கள் மூலம் தமது கருத்துக்களை பிரசாரம் செய்வதாகவும் காணப்படுகின்றன.
இந்தவகையில் தேவாலயங்கள் பொதுவாக கிறிஸ்தவ சமய மற்றும் அதனுடன் தொடர்புடைய கதை காட்சிகளை கண்ணாடி ஓவியங்கள் மூலம் வெளிப்படுத்தி மத்திய காலப்பகுதியில் உலகத்தில் ஒப்பற்ற பக்தியையும் மதிப்புமிக்க தகவலையும் பொதுமக்களிடம் பரிமாறிக் கொண்டன.
ஐரோப்பா உட்பட உலகம் முழுவதிலும் உள்ள பிரபல ஆலயங்களின் சாளரங்கள் இவ்விதமான வேத படங்களால் அலங்கரிக்கப்பட்டு அங்கு செல்லும் மக்களுக்கு அருளாட்சி கொடுக்கின்றன.
அநேக பேராலயங்களின் பீடத்தின் திருச்சிலுவைக்கு மேற்புற சுவரில் காணப்படும் சாளரளத்தில் பொதுவாக அமைந்திருக்கும் திருக்குடும்பம் அல்லது கிறிஸ்து இயேசுவின் பாடுகளைச் சித்திரிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். ஆலயங்களின் கிழக்குத் திசையில் அமைக்கப்பட்டிருக்கும் சாளரத்தின் ஊடாக சூரிய ஒளி உட்பிரவேசிக்கும் போது கண்ணாடி வர்ணப்பூச்சு அலங்காரங்கள் மிகவும் தத்ரூபமாகவும் அழகாகவும் உயிரோட்டம் மிக்கவையாகவும் தோன்றும். கிழக்கு திசையில் அமைந்துள்ள சாரளத்தில் இயேசு உயிர்த்தெழும் சம்பவம்)
ஓவியமாக வரையப்பட்டடிருந்தது. காலையில் இந்த ஓவியத்தைக்

காணும்போது இயேசு உயிர்த்தெழுந்து வருவது போலவே காணப்படும். அக்கலைஞர்கள் தங்கள் தொழிலை எவ்வளவு நேசித்து, தமது கடமையைச் செய்திருக்கின்றார்கள் என்பதை இந்தவகை ஓவியங்களைக் காணும் போதும் உணர முடிகிறது.
இன்னும் அதிகமாக பிரபல்யமான கண்ணாடி வர்ண அலங்கார ஓவியங்களில் இறுதிக்கட்டளை, மடோனாவும் தெய்வக் குழந்தையும், அன்னையர், தாவீது அரசர் யாழ் இசைப்பது (இவை நோட்டரம் புனித மரியன்னை கோவில் - பாரிஸ்), ஞானத்தோடு நீதிவழங்கும் சொலமன் அரசர் போன்ற ஓவியங்கள் உலகப் பிரசித்தி பெற்றவையாகும்.
கி.பி. பதினோராம் நூற்றாண்டில் ஜெர்மன் தொழில்நுட்ப நிபுணர்களால்
புதுவகையில் உருவாக்கப்பட்ட கண்ணாடி தகடுகள் தயாரிப்பு முறை வெனிஸ் நகர நிபுணர்களால் மேம்படுத்தப்பட்டது. உருகிய கண்ணாடி திரவத்தை நீண்ட கண்ணாடிக் குழலின் மூலமாக தொடர் காற்றழுத்தத்தைச் செலுத்தி மேலிருந்து கீழாக இழுத்து வந்து 45 செ.மீ. அகலமும் மூன்று மீற்றர் நீளமும் கொண்ட கண்ணாடித் தகடுகள் உருவாக்கப்பட்டன. இந்த முறையில் ஆரம்பமும் முடிவும் சற்று சுருண்டு இருக்கும் என்பதால் இரண்டு முனைகளிலும் சிறிதளவு வெட்டிச் சமமான சீரான கண்ணாடி தகடுகள் உருவாக்கப்பட்டன. இவ்வகைத் தடிப்பம் குறைந்த கண்ணாடித் தகடுகள் தேவாலயங்கள் மற்றும் செல்வந்தர்கள் இல்லங்களில் வெவ்வேறு வடிவங்களில் ஜன்னல்களாக பயன்படுத்தப்பட்டன. நவீன கலைஞர்களின் படைப்புகளில் முப்பரிமாண ஓவியங்க ளின் சித்திரிப்புக்கள் காணப்படுகின்றன.
-பஸ்தியாம்பிள்ளை ஜோண்சன்

Page 38
கலைக்கேசரி தின் 38 பாரம்பரியம்
மருத்துவ விஞ்ஞான கண்ணோட்டத்தில்
கர்ப்பிணித் தாய்மாரின் பாரம்பரிய
உணவு வழக்கங்கள்
-டாக்டர். திருமதி விவியன் சத்தியசீலன்
குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் தாயின் ஆரோக்கியம் அவசியம். ஆரோக்கியமான ஒரு தாயால்தான் ஆரோக்கியமான ஒரு குழந்தையைப் பெற்று எடுக்க முடியும். எனவே தாய் - சேய் நலனில் அக்கறை செலுத்துதல் அவசியமாகும். இந்த அடிப்படையில் ஒரு பெண் கருவுற்றதில் இருந்து தாய்ப் பாலூட்டும் காலம் வரை அவள் மீது விசேட கவனம் செலுத்துதல் முக்கியமாகும். கருவுற்ற காலத்திலே தகுந்த உணவுகளை தெரிவு செய்து உண்பதன் மூலம் குழந்தையின் வளர்ச்சி சீராக அமையும். மேலும் தாயின் உடல் நிலை ஆரோக்கியமாக இருப்பதுடன் குழந்தை பிறந்தபின்
அதற்குப்

பாலூட்டும் சிறப்புத் தன்மையையும் ஒரு பெண் பெறுகிறாள். கருவுற்ற காலத்திலும், பாலூட்டும் காலத்திலும் தாயானவள் தனக்கு மட்டுமன்றி குழந்தைக்கும் சேர்த்தே உணவை உண்கிறாள் என்பதை ஞாபகத்தில் வைத்திருத்தல் அவசியமாகும். கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் அதிகம் சாப்பிடுவது
- மட்டும் முக்கியமல்ல; சத்துள்ள உணவுகளைத் தெரிவு செய்யும்போது, அதில் சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து, உயிர்ச் சத்துக்கள்
என்பன அதிகம் இடம்பெறுதல் வேண்டும்.
எமது மூதாதையர் கர்ப்பிணிப் பெண்களையும், பாலூட்டும் தாய்மார்களையும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் மூலம் பராமரித்துள்ளார்கள். எமது பாட்டிமார் கையாளும் பழக்க வழக்கங்கள் அனைத்தையும் நாம் மூடத்தனமானவை என்று எண்ணுதல் தவறாகும். விஞ்ஞான ரீதியாக ஏற்றுக் கொள்ளக் கூடிய
பழக்கங்களும்
அவர்களால் கையாளப்பட்டுள்ளதை எவராலும்
மறுக்க முடியாது.
கர்ப்பமுற்ற பெண்களின் மனநிலை நல்ல நிலையில் இருத்தல் வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் வளைகாப்பு நிகழ்ச்சி

Page 39
கர்ப்பமுற்ற பெண்களின் மனநிலை நல்ல
நிலையில் இருத்தல் வேண்டும் என்ற
கருத்தினடிப்படையில் வளைகாப்பு
நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது.
நடத்தப்படுகின்றது. வளைகாப்பு சார்பாக முதலில் போடுவது வேப்பம் இலைக் காம்புகளால் ஆக்கப்பட்ட காப்பு ஆகும். இப்பழக்கமானது விஞ்ஞான மருத்துவ அடிப்படையில் ஏற்றுக் கொள்ளக் கூடிய பழக்கமாகவே உள்ளது.
கர்ப்பமுற்ற பெண்களுக்கு 'அஞ்சு பஞ்சலம்' காப்பு இடுதல் என்ற பழக்கமும் மக்களிடையே காணப்பட்டது. வேப்பங்காப்பிற்கு பிறகு அஞ்சு பஞ்சலம் காப்பு (ஐம்பொன்) என்ற காப்பைப் போடுவார்கள். இக்காப்பில் ஐவகை உலோகங்களும் கலந்திருக்கும். அவையாவன; தங்கம், வெள்ளி, இரும்பு, செப்பு, பித்தளை. இந்த ஐந்து வகை உலோகங்களும் கர்ப்பமுற்ற பெண்களின் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்.
கர்ப்பமுற்ற பெண்ணுக்கு வசம்பு வைத்துக் கட்டும் பழக்கம் காணப்படுகின்றது. வசம்பு பொதுவாக 'பிள்ளை வளர்ப்பான்' என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது. குழந் தைகளுக்கு எந்த நோய் வந்தாலும், நோய் வராமல் காக் கவும் வசம்பு பயன்படுகின்றது. வசம்பிற்கு கிருமிநாசினி மருத்துவத் தன்மை உண்டு. கருவிலிருக்கும் குழந்தையை நோய் தாக்குவதைத் தவிர்க்கவும் தாயை நோயிலிருந்து பாதுகாக்கவுமே தாய்க்கு வசம்பு கட்டப்படுகிறது.

கலைக்கேசரி
39
கர்ப்பிணிப் பெண்களுக்கு உழுந்து, நல்லெண்ணெய் சேர்ந்த உணவுகள் அதிகம் கொடுக்கப்படுகிறது. உழுந்தானது கரு வளர்ச்சியடைவதற்கு உதவுவதுடன் கருப்பை இடுப்பென்புகளுக்குப் பலத்தையும் கொடுக்கின்றது. அதன் மூலம் பிரசவத்தையும் இலகுவாக்குகின்றது. நல்லெண்ணையில் உயிர்ச்சத்து ஏ இருப்பதால் தாய்க்கும் சேய்க்கும் மாலைக்கண் நோய் ஏற்படாமல் பாதுகாக்கின்றது.
ஆறாம் மாதத்திற்குப் பின்பு எள்ளு, பனங்கட்டி, உழுத் தம்மா என்பனவற்றை சேர்த்திடித்த எள்ளுப்பாகு இடைக் கிடை உண்ணக் கொடுப்பர். எள்ளு, பனங்கட்டி என்பவற் றில் இரும்புச்சத்து, கல்சியம் என்பன அதிகம் காணப்படுகின்றன. எனவே இவை தாய்க்கும் சேய்க்கும்
போசாக்குணவாக அமைகின்றது.
வள்ளல் கீரைக்கு முலைப்பாலைச் சுரக்கச் செய்யும் இயல்பும் அதிகமுள்ளதால் 'வள்ளல் தாய்போல் பிள்ளையை வளர்க்கும்' என்று முதுமொழியும் உண்டு.
கர்ப்பிணிப் பெண்களுக்கு காலை, மாலை இரு நேரமும் வற்றக்காய்ச்சிய பசும்பாலை அருந்தக் கொடுப்பார்கள். உடலில் ஏற்படும் பல நோய்களும் மாறும். 'உணவின் பகுதியை யோதலுற் றனமினிப் பணிவுள்ள வெண்பசும் பாலிகாப் பாற்று நற்பசு வின் கதை நாவினைப் பற்றிடும் பொற்பான செம்பசு போக்குங் கர்ப்பிணி புள்ளியா மேகநோய் போக்கிடு மட்டபால் விடாதொடர் காத்திர வெம்மையை மாற்றுமே.'
(தேரன்காப்பியம்)

Page 40
கால சரி )
வெண்மையாகிய பசுவின் பால் களைப்பைப் போக்கும். காராம்பசுவின் பால் தாகத்தைத் தணிக்கும். செம்மை நிறமுள்ள ஆவின் பால் கச்ரோகத்தையும், புள்ளிகளுடைய பசுவின் பால் மேகரோகத்தையும் போக்கும். காய்ச்சாத பால் பசி, தீபனத்தை உண்டாக்கும். காய்ச்சிய பால் சரீரத் தில் உள்ள வெப்பத்தைத் தணிக்கும். உடலுக்குள்ளே பால் சென்றவுடனே வெள்ளை அணுக்கள் அதிகப்பட்டு நோயெதிர்ப்பு சக்தியை கூட்டுகின்றது. எனவே பொதியிடப்பட்ட பால் மா வகைகளுக்கு பதில் பசுப்பால் மிகவும் சிறந்தது.
கர்ப்பிணித் தாய்மார்கட்கு ஐந்தாம் மாதத்தின் பின்பு பாலுடன் சிறிதளவு குங்குமப்பூ கலந்து கொடுக்கப்படுகின்றது. இதன் மருத்துவக் குணங்கள் இரத்தத்தைச் சுத்திகரித்து, பிரசவ வேதனையை குறைத்து, பிரசவத்தை இலகுவாக்கவும், பிரசவித்த பின்பு கருப்பையில் ஏற்படும் இரத்த தோஷங்களை நீக்கவும் பயன்படுத்தப்படுகின்றது. பலர் குழந்தை சிவப்பாகப் பிறக்க வேண்டும் என்பதற்காக குங்குமப்பூவை பயன் படுத்துகின்றார்கள். இதில் எவ்வித உண்மையுமில்லை.
கருப்பையில் கரு வளர்வதன் நிமித்தம் ஏற்படும் மாறுதல்களால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வித்தியாசமான உணவுகளில் ஆசை ஏற்படும். அதனை 'யா' என்று அழைப்பர். ஆனால் மசக்கை வேறு. இது முதல் மூன்று மாதங்கள் ஏற்படும். இதில் புளிப்புச் சுவையின் விருப்பம் அதிகம் இருக்கும். இதற்குத்தான் உறவினர்கள் சிவத்தப் பச்சரிசிமா, உழுத்தம்மா, பயற்றம்மா, கடலை மா போன்றவற்றால் பல்வேறு பலகாரங்கள் செய்து கர்ப்பிணிகளுக்கு கொடுப்பார்கள். இதில் தேவையான அளவு புரதச்சத்து கிடைப்பதுடன் சிவத்தப் பச்சரிசி, முளைவிட்ட பயறு போன்றவற்றில் போலிக் அமிலம்

காணப்படுகின்றது. இது குருதிக் கலங்கள் முதிர்ச்சியடைவதற்கும், குறைபாடுள்ள குழந்தைகள் (மூளை, முண்ணான் பாதிப்பு)
பிறப்பதைத் தவிர்ப்பதற்கும் அவசியமாகிறது.
முருங்கையிலை, பொன்னாங்காணி, வல்லாரை, முல்லை, முசுட்டை, வள்ளல் கீரை, தவசு முருங்கை, அரைக் கீரை, ஆனாக் கீரை வகைகளை கர்ப்பிணிப் பெண்களின் உணவில் தாராளமாகச் சேர்த்துக் கொள்வர். இலை அவர்களுக்கு தேவையான உயிர்ச் சத்துக்கள், இரும்புச் சத்து, கல்சியம் முதலியவற்றை வழங்குவதுடன் மலம் சாதாரணமாக இளகி வெளியேறவும் உதவுகின்றன.
குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு சாராய ஊறல் கொடுக்கும் குடும்ப வழக்கமானது மரபு வழியாக மக்களால் பயன்படுத்தப்படுகின்றது. இதில் சாதிக்காய், கராம்பு, ஏலம், வகலாசி, கறுவா, திப்பிலி, வெந்தயம், சீரகம், இலவங்கம், உள்ளி, கோட்டம், அதிமதுரம், மல்லி, சிறுநாகம்பூ, குங்குமப்பூ, வால்மிளகு, கற்கடக்சிங்கி, சிறுதேக்கு, ஓமம், மிளகு, வாய்விடங்கம் என்பன சேர்க்கப்படும். இவை ஒவ்வொன்றும் ஐந்து கிராம் அளவு எடுத்து இடித்து அரித்து இரண்டு போத்தல் சாராயத்தில் ஊறப் போட்டு சேறான நிலத்தில் அல்லது நெல்லினுள் 40 நாட்கள் வரை புதைத்து வைத்து எடுத்து, குழந்தை பிறந்த பின்பு 2 - 3 நாட்களுக்குப் பின், தினம் ஒரு வேளை ஒரு தேக்கரண்டி வீதம் முப்பது நாட்கள் கொடுக்கப்படுகிறது. இதிலுள்ள மூலிகைகள் கர்ப்பப்பையைப் பலப்படுத்தி அழுக்குகளை அகற்றி, தாய்ப் பாலையும் அதிகம் சுரக்க
வைக்கிறது.
பிரசவித்த தாய்க்கு, குழந்தை பிறந்து ஐந்தாம் நாளிலிருந்து 21 ஆம் நாள் வரை சாரணை வேர் ஒரு துண்டு, சுக்கு ஒரு துண்டு, சுட்ட உள்ளி மூன்று பல்லு, மஞ்சள் ஒரு துண்டு போட்டு அம்மியில் மைபோல அரைத்து சிறு சிறு உருண்டையாக்கி 5 - 6 உருண்டைகளை பனங்கட்டியுடன் விழுங்கக் கொடுப்பர். இதனால் கருப்பை வலுவடைவதுடன் தாய்க்கும், சேய்க்கும் மலம் இலகுவாக வெளியேறுவதுடன் தாய்ப்பாலும் நன்கு சுரக்கிறது.
பிரசவித்த பெண்களின் உணவு முறையுடன் அவளின் குளிப்பும் முக்கிய இடம் பெறுகிறது. வேப்பம் பட்டை,

Page 41
பாவட்டை இலை, மாவிலங்கம் பட்டை, நொச்சியிலை போன்றவற்றை அவித்து குளிக்க வார்க்கப்படுகிறது. சிறந்த மருத்துவ குணங்களும் மேற்படி மூலிகைகளுக்கு உண்டு. இம் மூலிகை பாகங்களால் மார்பகங்களை அழுத்தித் தேய்த்து - உரஞ்சி ஒத்தடம் கொடுக்கும்போது மார்பகங்களுக்கு இரத்த ஓட்டம் பெருகி பாற்சுரக்கும் சுரப்பி கான்கள் விரிவடைந்து தாய்ப்பாலை அதிகம் சுரக்கச் செய்யவும் உதவும்.
தாய்ப்பால் குறைவாகச் சுரக்கும் பெண்களுக்கு 15 கிராம் உள்ளிப் பூண்டை எடுத்து தோல் நீக்கி வறுத்து அதனுடன் பனங் கற்கண்டையும் சேர்த்து உண்ணக் கொடுத்துவரின் முலைப்பால் அதிகம் சுரக்கும். இதனையே 'ஏந்திழைக் கீருள்ளியேற்ற முலைப்பாலே' என்று பழமொழியும் சுட்டிக் காட்டுகின்றது.
மருத்துவ நோக்கில்கர்ப்பகால மூலிகை
பாவனையின் பொதுக் குணங்கள் சாதிக்காய் 'தாது நட்டம் பேதி சருவாசி யஞ்சிரநோய் ஓது சுலா சங்காசம் உட்கிரணி - லேதோ டிலக்காய் வரும்பிணி போம் ஏற்றமயல் பித்தந் துலக்கி யருந்துவர்க்குக் கூறு'
இதனால் விந்துக் குறைவு, பெருங்கழிச்சல், வாயுவினால் உண்டாகும் நோய், தலைவலி, இரைப்பு (ஆஸ்மா), இருமல், நாட்பட்ட கழிச்சல், வெப்பத்தை முன்னிட்டு வரும் பிணிகள் போகும். வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், அக்கினிமந்தம் நீங்கும்.
குங்குமப்பூ விந்துநட்டந் தாகமண்டம் மேகசவஞ் சூலைகபம் உந்துசுரம் பித்தங்கால் உச்சிவலி - முந்துகண்ணில் தங்குமப்பூ வோடுறுநோய் சர்த்தியலை நீங்க வென்றால் குங்குமப்பூ ஓரிதழைக் கொள். குங்குமப்பூ வைக்கண்டால் கூறுகொண்டை பீனிச நோய் தங்குசெவித் தோடஞ் சலதோடம் - பொங்கு மதுரதோ டஞ்தொலையும் சலதோடமீ- பொங்கு உதிரதோ டங்களறும் ஓது இதனால் விந்துக் குறைவு, நீர்வேட்கை, மேகநீர், சூலை, கபம், கண்ணில் விழுகின்ற பூ, வாந்தி, காதுநோய், நீர் ஏற்றம், சூலகத்தின் அழுக்கு முதலியன போகும்.

கலைக்கேசரி
சாரணை வித்திரிதி மூலம் விழிப்படலம் மார்புநோய் தத்துசுவாசம் தனிக்கருப்பை - யுற்ற கருச்சிதறச் செய்சூதி காவாத மும்போம் விருச்சிகத்தின் பேரைவிரி இதனால் கட்பி, மூலவாயு, கண் படலம், மார்பு நோய், இரைப்பு நோய், கருப்பை சம்பந்தமான நோய்கள், கர்ப்பப்பை சிதைவால் ஏற்படும் சூசிகாத வாதமும் போகும். உள்ளி சன்னியோடு வாதந் தலைநோவு தாள்வலி மன்னிவரு நீர்க்கோவை வன்சீதம் - அன்னமே உள்ளுள்ளி கண்பாய் உனைமூல ரோகமும் போம் வெள்ளுள்ளி தன்னால் வெருண்டு.
இதனால் சிறிய கட்டிகள், செவிடு, நாட்பட்ட இருமல், இரைப்பு, வயிற்றுப்புழு, முப்பிணி, வளிநோய்கள், கபத்தலைவலி, வாய்நோய், நீரேற்றம், சீதக்கழிச்சல் நீங்கும். மேலும் உள்ளியில் கந்தகச்சத்தும், கணிசமான அளவில் உள்ளது. உள்ளியின் நாற்றத்திற்கு இதுவே காரணமாகும். கந்தகத்திற்கு விரணமாற்றிச் செய்கை உள்ளது. எனவே மாதவிடாய், பிரசவம் என்பவற்றை அடுத்து கர்ப்ப காலத்தில் ஏற்படும் புண்களை ஆற்றுவதில் மருந்தாகும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு முன்மாதங்களில் ஏற்படும் வாந்திக்கு துதிஞ்சி மணப்பாகு (நாரத்தை) கொடுப்பார்கள். இதற்கு நாரத்தைப் பழச்சாறு 500 மில்லிக்கு 250 கிராம் சீனி சேர்த்து எரித்து எடுத்து வாந்தி இருக்கும் கர்ப்பிணித் தாய்மார் நாக்கில் 4 - 5 துளி விடலாம். இதனால்தான் கர்ப்பிணித் தாய்மாருக்கு நாரத்தங்காய் ஊறுகாய் உண்ணக் கொடுப்பார்கள்.
தி/

Page 42
கலைக்கேசரி து 42 கலாசாரம்
பண்டைய தமிழ்ப் பாரம்பரியத்தில் ஆபரணங்களாவன சாதாரண வழக்கத்திலும் நாளாந்த நடைமுறை வாழ்க்கையுடனும் ஒன்றுபட்டு இரண்டறக்கலந்துள்ளது என்றால் மிகையாகாது. பலவகைப்பட்ட ஆபரணப் பயன்பாடானது தமிழ் மக்களின் வாழ்க்கை முறையுடன் பின்னிப்பிணைத்து இரண்டறக்கலந்து வந்துள்ளது என்பதற்கு சங்கத் தமிழ் இலக்கியத்தில் பல ஆதாரபூர்வமான விடயங்கள் உள்ளன. குறிப்பாகத் தமிழ் மகளிர் வரலாற்றுக் குறிப்புகள் எவ்வகையான ஆபரணங்களை எந்த அங்கங்களுக்கு எவ்வகையில் தமிழர் பண்டைய காலம் தொட்டுப் பயன்படுத்தினர் என்பதினை துல்லியமாக எடுத்தியம்புகின்றன.
தமிழ் மக்களின் வரலாற்றுக் குறிப்பின் பின்னணியின் பிரகாரம் தமிழ் மகளிர் தலை தொடக்கம் பாதம் வரை பல தேவைகளுக்காகவும், ஆங்காங்கே பல தேவைகளின்றி வெறும் அலங்கரிப்பிற்காகவும் இவ்வரியவகை ஆபரணங்களை நாளாந்தம் பன்படுத்தப்படுத்தினர். ஆபரணப் பாவனை என்னும் அம்சத்தை எடுத்து நோக்குகையில் தமிழருக்கென்று ஒரு சம்பிரதாயப் பாவனை வழக்கம் இடம் பிடித்துள்ளமையை அறிய
முடிகின்றது. இந்த வகையில் ஆபரண அணிகலன்கள் தனித்துவம் மிக்க ஓர் கைவனப்புப் பணியாக இற்றைக்கு ஏறத்தாள இரண்டாயிரம் ஆண்டுக்கு முற்பட்ட காலகட்டத்தில் இருந்தே இருந்து வந்தாக வரலாற்றுச் சான்றுகள் எடுத்தியம்புகின்றன. தமிழரின் பண்பாட்டு வழக்கப்படி தங்கம் என்னும் உலோகமானது பொதுவாக மூகூர்த்தம் மிகுந்ததாகவும் தேக ஆரோக்கியத்திக்குப்
பயன்படுத்தப்படும் உத்தம்
உ  ேல ா க ம ா க வும் கருதப்பட்டது. இன்றும் கருதப்படுகின்றது.

தமிழர் பாரம்பரியத்தில் ஆபரணங்களின் பங்களிப்பு
-சுபாஷினி பத்மநாதன்
தங்கத்தால் செய்யப்பட்ட ஆபரணங்கள் பாதங்கள் தவிர மற்றைய உடல் அவயவங்களில் அலங்கரிப்புக்காகப் பயன்படுத்தப்பட்டு வருவதை இன்றுங் காணமுடிகின்றது. திருமணத்தின் போது பெரிதும் அணியப்படும் மங்களகர மான தாலி, தடிப்பான கனமான தங்கச் சங்கிலியில் கோத்துக் கட்டப்படுவது பண்டைய காலம் முதல் இன்று வரையுள்ள வழமையாகும். தாலியில் சங்கு மற்றும் சக்கரம் ஆகியவற்றைப் பதித்துப் பயன்படுத்துவது பண்டைக்காலம் தொடக்கம் வழக்கத்தில் உள்ளது.
தமிழரின் பாரம்பரியத்தில் பயன்படுத்தப்பட்ட ஆபரண வகையில் தலையை அலங்கரிக்கும் ஆபரணங்களாகத் திகழ்வன உச்சிப்பட்டம், நெற்றிப்பட்டம், சூரியப்பிறை, சந்திரப்பிறை, றாக்கொடி ஆகியவையாகும். இன்று இவையாவும் வெறும் அலங்கரிப்பு ஆபரணங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன என்றே கூறவேண்டும். இருப்பி னும் பண்டைக் காலத்தில் தமிழ் மக்களின் பாரம் பரியத்தில் சகல ஆபரணங்களும் அர்த்தபூர்வமாகப்
பயன்படுத்தப்பட்டு வந்தன எனலாம்.

Page 43
பண்டைய வரலாற்றுக் குறிப்புகளின் பிரகாரம் தமிழ் மக்கள் ஏராளமான இறக்குமதி செய்யப்பட்ட அணிமணிகளை தம் ஆபரணப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தினர் என அறியமுடிகிறது. தமிழ்ப் பாரம்பரியத்தில் தமிழ்மகளிர் குறிப்பாக கூந்தலை வாரி நடு உச்சிபிரித்து முடிப்பது வழமையாகும்.
உச்சிக்கு அணியும் அணிகலன் உச்சிப்பட்டம் என்றும், உச்சிப்பட்டத்துடன் கச்சிதமாகப் பிணையப்பட்டு நெற்றிக்கு மேலே அணியப்படும் ஆபரணம் நெற்றிப் பட்டம் என்றும் அழைக்கப்படும். நெற்றிப் பட்டத்திற்கு முன் புறத்தில் அழகிய சிறிய மணிகளோ அன்றி - கற்களோ தொங்கவிடப்பட்டிருக்கும். அவ்வாறே உச்சிப் பட்டத்தின் முகப்பில் அழகிய பதக்கம் தொங்க விடப்பட்டு இருக்கும்.
மேலும் மூன்று அல்லது நான்கு பதக்கங்களை ஒன்றின்பின் ஒன்றாக பிணைத்த எழில் மிக்க உச்சிப் பட்டங்களும் இன்றைய புழக்கத்தில் உள்ளன. உச்சிப் பட்டத்தின் பின் புறத்தே அதாவது உச்சிப் பட்டத்தின் முடிவில் பயன்படுத்தப்படும் ஆபரணம் றாக்கொடியாகும். றாக்கொடியானது வட்ட வடிவமான ஆபரணமாகும். இவ் ஆபரணத்தின் நடுவே மயில் தலையினையும், மயில் தன் தோகையினை விரித்தாடுவதாக உருவமைத்து வடிவமைக்கப்பட்டு இருப்பதுவும் வழமையாகும். றாக்கொடிக்குப் பின் இடம்பெறும் ஆபரணம், ஜட நாகமாகும். இது பின்னலை ஒட்டினால் போல் அமைவது ஆகும். தற்காலத்தில் இந்த ஜட நாகமானது பெரும்பாலும்
மலர்களால் புனையப்பட்டதாகக் காணப்படுகிறது. முன்பு தங்கத்தால் பெறுமதிமிக்க கற்கள், மணிகள் பதிக்கப்பட்ட ஜட நாகம் அணிவது வழக்கத்தில் இருந்தாக நாம் அறிகின்றோம். ஜட நாகத்தின் இறுதியில் மூன்று குஞ்சங்கள் தொங்க விடப்படுகின்றன. இக் குஞ்சங்களின் மேல் இயல்பாகவே தங்கத்தால் ஆனதாக உலோக வேலைப்பாட்டு அலங்கரிப்பு செறிந்த ஒர் ஆபரணம் இடம் பெறுவது வழமையாகும்.
உச்சிப் பட்டத்திற்கு வலது புறத்தே இடம்பெறுவது சூரியப் பிறை என்னும் ஆபரணமாகும். இச் சூரியப் பிறையானது இயல்பாகவே ஒளி, ஆதிக்கம், மற்றும் பிரகாசம் ஆகிய அம்சங்களையும் பிரதிபலிப்பதாகும். அவ்வாறே உச்சிப் பட்டத்திற்கு இடது புறத்தே இடம்பெறுவது சந்திரப்

- களைந்தாரி
பிறையாகும். இச் சந்திரப்
பிறையானது இயல்பாகவே அமைதி, தண்ணுமை ஆகிய அம்சங்களையும் வெளிப்படுத்துவதாக அமைகின்றது. கொண்டை முடிக்கும் தமிழர் பாரம்பரியத்தில் பொதுவாக கொண்டைக்குத் தனித் தங்கத்தினால் ஆன கொண்டை மாலை, மற்றும் கற்கள் பதிக்கப்பெற்றதான கொண்டைப்பூ
ஆகிய
- அணிகலன்கள் பயன்படுத்தப்பட்டது. ஆயினும் இவ் வழக்கு இன்று மறைந்து விட்டது.
தலையை அலங்கரிக்கும் ஆபரணங்களைத் தவிர
முகத்தின் பார்வைக்குத் தோன்றும் ஆபரணங்களும் பவவகையாகக் காணப்படுகின்றன. காதுகளை அலங்கரிக்கும் காது ஆபரணங்கள் தமிழ் மக்கள் இடையே இன்று வரை பிரபல்யம் பெற்று விளங்கும் ஓர் ஆபரணப் பயன்பாட்டு அம்சமாகும். கடுக்கன் என்னும் ஆபரணம் ஒற்றைக் கல்லால் மட்டும் ஆன ஆபரணமாகும். இதுதவிர கம்மல் என்னும் ஆபரணமானது இலை
உருவமைப்பில் காணப்பட்டது.
இன்றுங் கூட கம்மல் பொதுவாக தோடு என்று குறிப்பிட்டு அழைக்கப்படுவதை நாம் ஆங்காங்கே அவதானிக்க
முடிகின்றது.
தோட்டுடன் இணைந்தாற்
போல் பயன்படுத்தப்படும் மற்றுமொரு ஆபரணம் ஜமிக்கியாகும். இவ் ஜமிக்கியானது முத்துக்கள் மற்றும் கற்களால் ஒருங்கே ஒன்றுகூட்டிச் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுவதை
இன்றுங் நாம் க ா ண ல ா ம் . அவ் வாறே லோலாக்கு

Page 44
கலைக்கேசரி) 2) 44
என்னும் மற்றுமொரு தோடு சார்ந்த அணிகலன் முற் காலத்தில் பயன்பாட்டில் இருந்தாக நாம் அறிகின்றோம்.
இவை தவிர மாட்டல் என்னும் மற்றுமொரு காது சார் அணிகலன் பெண்கள் இடையே பெரும் புழக்கத்தில் உள்ளமையை இன்று வரை காணக் கூடியதாக உள்ளது. இது காதுத் தோட்டுடன் இணைக்கப்பட்டு மேல் பாகமானது தலை முடியுடன் பிணைக்கப்பட்டு பயன் படுத்தப்படுவதன் காரணத்தால் மாட்டி எனப்பெயர் பெற்றது போலும். - மேலும் காதுசம்பந்தமான ஆபரணங்களாவன கதிர்பவாலி, குருத்துபவாலி, கோப்பு, ஜல்பவாலி, ஆகியன
பண்டைக்கால
வழக்கத்தில் பயன்பட்டுத்தப்பட்டு வந்த காது சார் ஆபரணங்கள் என வந்ததை வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இவை யாவும் காது மடல்களுக்கும் உட்புறத்தேயும் வெளிப்புறத்தேயும் ஆங்காங்கே பயன் படுத்தப்பட்டு வந்தமையை நாம் அறிகிறோம். ஆயினும் இன்று இத்தகைய காதும் அணிகலன்களை பெரிதும் காணமுடிவதில்லை.
அவ்வாறே மூக்கிற்கு அணியப்படும் அணிகலன்கள் . மூன்று வகைப்படும். அவையாவன பிலாக்கு, மூக்குத்தி, நத்து என்பனவாகும். விலை மதிப்புள்ள தனிக் கல்லினாலோ அன்றி கூட்டுக் கற்களினாலோ ஆன சிறிய அழகிய மூக்குத்தி பெசேறி எனக்குறிப்பிட்டு அழைக்கப்படுகின்றது. இவை தவிர எட்டுக் கற்களால் ஆன வைர மூக்குத்தி, அன்னப் பறவை வடிவிலான மூக்குத்தி என்பன நடைமுறையில் வழக்கத்தில் உள்ளன. மேலும் நத்து, பிலாக்கு என்பன சாதாரண வழக்கத்தில் உள்ள அணிகலன்களாகும்.
கழுத்து மாலைகள் என்னும் அம்சத்தை எடுத்து நோக்கும் போது, பல வகை வேலைப்பாடு நிறைந்த, பெறுமதிமிக்க கற்களால் ஆன மற்றும் முத்துகளால் ஆன ஆபரணங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அட்டியல், முத்துக்களுடனும் பவுணுடனும் புனையப்பட்ட நெஞ்சு வரை நீளமுள்ள நீண்ட மாலைகள் என்பன பெரிதும் பயன் படுத்தப்பட்டு வந்தன. இவற்றில் ஒற்றை பட்டு மாலை, மூன்று பட்டு மாலை என்பன இன்றும் நடைமுறை வழக்கத்தில் உள்ளன. இவற்றை மேலும் மெருகூட்டும் வண்ணம் பதக்கம் என்னும் அம்சம் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கதாகும். இப்பதக்கமானது அன்னம் மற்றும் மகாலஷ்மி உருவ அலங்கரிப்பு நிறைந்தவையாகக் காணப்படுகின்றன. இவைதவிர மாங்காய் உருவமைப்பில் உயர் தரக் கற்களால் உருவாக்கப்பட்ட கழுத்து அணிகலன்கள் மாங்காய் மாலை எனக் குறிப்பிட்டு வந்தமையையும்,
நடைமுறையில் இன்றுங் கூட ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டு வருவதையும் காணமுடிகின்றது. ஆபரணங்களில் புனையப்படும் முத்துகள் இயற்கை

முத்துக்கள் மற்றும் செயற்கை முத்துக்களாகப் பிரித்துப் பயன்படுத்தப்படுகின்றன.
ஆபரணங்களுக்குப் பயன்படுத்தும் கற்களாவன இரத்தினக் கற்கள், வைரக் கற்கள் மற்றும் விலை மதிப்புச் செறிந்துள்ள பல வகைக் கற்கள் என்பவை தவிர பெறுமதி மிக்க செயற்கை கற்கள் என்பன கூட இன்றைய நடைமுறையில் எழில் கொஞ்சும்
ஆபரணப்
செய்கைக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
அவ்வாறே காசுமாலை எனக் குறிப்பிட்டு அழைக்கப்படும் கழுத்து மாலையானது தனிப் பவுணால் மட்டும் செய்யப்படுவதைக் காணமுடிகின்றது. இக்காசு மாலை பார்வைக்கு சவரின்கள் ஒருங்கிணைக்கப்பட்டு பிணைக்கப்பட்டதாகக் காணப் படுகின்றது.
காதுகளுக்கு கடுக்கண், கழுத்து தொடக்கம் வயிறுவரையிலான நீண்ட பவுண் சங்கிலி, மற்றும் பவுண் சங்கிலியுடன் இணைக்கப்பட்ட காவல் இயந்திரம் இணைக்கப்பட்ட அச்சரக் கூடு தொங்கவிடப்பட்ட சங்கிலி, என்பன பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருவதை இன்றுங் காணமுடிகின்றது..!
தமிழ்ப் பெண்களின் அலங்கார ஆபரணப் பாரம்பரியத்தில் முக்கிய இடம்பிடித்த இடைபட்டை ஆபரணமாக மிளிர்வது ஒட்டியாணமாகும். முற்காலத்தில்

Page 45
தமிழ்ப் பெண்கள் நாளாந்தம் பயன்படுத்தும் ஓர்
ஆபரணமாக இது விளங்கியது.
இன்று நடைமுறையில் இவ் ஆபரணம் பல அலங்கார சித்தரிப்புச் செறிந்தாகத் தமிழ்ப் பாரம்பரிய நாட்டியக் கலையிலும் திருமண விழாக்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. முற்காலத்தில் வெறும் தங்கத்தால் மட்டும் ஆன ஒட்டியாணம் புழக்கத்தில் விளங்கியது என தெரிகிறது.
பலவகை வடிவமைப்பில் இன்று ஒட்டியாணம் விளங்குகின்றது. குறிப்பாக விட்டம் கூடிய விட்டம் குறைந்த ஒட்டியாணம், கற்கள் பதிக்கப்பட்ட ஒட்டியாணம் என்பன நடைமுறை வழக்கத்தில் உள்ளன. முற்காலத்தில் இடையைச் சுற்றி இடைச்சுற்று சங்கிலியும் பயன்படுத்தப்பட்டதாக வாய்மொழி
வரலாற்றுக் குறிப்புகள் மூலம் அறியமுடிகின்றது.
கைகளின் முழங்கைக்குமேல் வங்கி என்னும் ஆபரணம் பெண்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. மேல் அங்கிகளின் கை ஆகாரியத்தின் மேல் மெல்லிய கம்பி அமைப்பினால் ஆனதோ, அன்றி சற்றுத் தடிப்பானதாக வோ வங்கிகள் நடைமுறையில் பயன்படுத்தப்பட்ட போதிலும் நாட்டியக் கச்சேரிகளுக்குப் பயன்படுத்தப்படும் வங்கிகள் கற்கள் பதிக்கப்பட்டு அலங்காரம் செறிந்தவையாகக் காணப்படுவது வழமையாகும்.
தமிழரின் பாரம்பரிய அணிகலன்கள், பலவகையிலும் எழில் மிகுந்தவையாகக் காணப்பட்டாலும் நாட்டியக் கச்சேரிகளுக்கு அதே வகை ஆபரணங்களைப் பயன்படுத்தும் இடத்து அவை கலையின் தேவைக்கமைய மேலும் மெருகூட்டப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. | கை அலங்காரத்திற்குப் பயன்படுத்தும் மற்றுமொரு அலங்கார அணிகலன் காப்பு அல்லது வளையல் எனக் குறிப்பிட்டு அழைக்கப்படுகின்றது. பல செடிகொடி வேலைப்பாடுகள் நிறைந்த தங்கக் காப்புகள், சிங்கமுகம் வடிவமைக்கப்பட்டு பூண்மூலம் இறுக்கிப் புனையப்படும் காப்புவகைகள், தமிழ் பாரம்பரியத்தில் முக்கிய இடம்பிடித்தன எனலாம். காப்புப் - பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டே காலக் கிரமத்தில் மணிக்கூட்டுச் சங்கிலிப் பயன்பாடு தமிழ் ஆபரணப் பயன்பாட்டில் எழுந்தது எனலாம்.
கை
LEl

, கலைக்கேசரி
45
யானது
வெறும் தங்கத்தால் ஆன ஆபரண வடிவமைப்புக் கலையானது
காலக்கிரமத்தில்
பலவகை உலோகங்களினாலும் மற்றும் பல வகைப்பட்ட கற்கள், மணிகள், மற்றும் முத்துகளுடன் ஒன்று கூட்டி வடிவமைக்கப்பட்டு வந்தது எனலாம். அவ்வாறே கை விரல்களுக்கு மோதிரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சாதரண மோதிரங்கள், 'வி' உருவ அமைப்பிலான மோதிரங்கள், மற்றும் கற்கள் பதிக்கப்பட்ட மோதிரங்கள் என்பன நடைமுறையில் பயன்படுத்தப்படுகின்றன.
அங்க ஆபரணங்கள் தவிர தோள்பட்டை புடவைக்கு மேல் 'புரோச்' எனக் குறிப்பிட்டு அழைக்கப்பட்டு வரும் ஒரு வகை அலங்கார அணிகலன் பயன்படுத்தப்பட்ட போதிலும் இன்று இவ்வழக்கு தமிழரிடையே அருகி வந்துள்ளது எனலாம்.
பாதங்களுக்கு தங்கத்திலும் பார்க்க பெறுமதியில் சற்றுக் குறைவானதாக் காணப்படும் வெள்ளி என்னும் உலோகத்தினால் ஆன அணிகலன்கள் பயன்படுத்தப் படுகின்றன. பாதசரம் மற்றும் பாதத்தின் இரண்டாவது விரலுக்கு அணியப்படுவது மெட்டி ஆகும். மெட்டிக்கு முன்பும் பின்னுமாக சித்து என்னும் வளையல்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அவ்வாறே பாதத்தின் மூன்றாவது விரலுக்கு பெல்லி என்னும் வெள்ளியிலான மிருக முகமோ அன்றி பறவை முகமோ பொறிக்கப்பட்ட ஆபரணம் பயன்படுத்தப் படுகின்றது. இவைதவிர பெரும்பாலும் வெறும் கொலுசு, மணிகளுடன் கூடிய கொலுசு வகையான தண்டி என்னும் கால் அணிகலன்களும், கால் காப்பு, என்பனவும் பாதங்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.
எனவே தமிழர் பண்பாட்டுரீதியில் அர்த்தபூர்வமாக பலவகையான ஆபரணங்களைப் பயன்படுத்தி வந்துள்ளனர். பல ஆபரணங்கள் காலங் காலமாக இன்று வரைத் தமிழ் பண்பாட்டுடன் பின்னிப்பிணைந்து வளர்ந்து வந்துள்ளது.

Page 46
கலைக்கேசரி )
பனையும் தமிழர் வாழ்
(கடந்த இதழின் தொடர்ச்சி) பனைகள் தறிக்கப்பட்டுக் கிடக்கும் புனம் போர்க்களத்துக்கு உவமையாகப் பதிற்றுப்பத்துப் பாடலொன்றில் பேசப்படுகின்றது.
'பனைதடி புனத்திற் கைதடிபு பலவுடன் யானைபட்ட வாண்மயங்கு கடுந்தார்' எனப் பதிற்றுப்பத்து 36 ஆம் பாடலில் வருமடிகள் இதனை விளக்குகின்றன. போர்க்களத்திலே துண்டிக்கப்பட்டுக் கிடக்கின்ற யானைகளின் துதிக்கைகள் பனந்துண்டத்தை ஒத்திருக்கின்றன. கருமையும் பருமையும் அவ்வாறு காட்டுகின்றன. 'பனைதடிபுனம்'
என்ற தொடர் வளம் படைத்த பிரதேசம் என்பதையுணர்த்துகின்றது.
பனைமரங்களிலே யானைகள் மோதும் நிலையை நற்றிணைப் பாடலொன்று காட்டுகின்றது. வரண்ட உப்புப் பூர்த்த களர்நிலத்திலே வாழும் யானைகள் விடியற் காலத்திலே வழிச் செல்வோரைக் கொல்லும்
இயல்புடையவை. அவ்வாறு கொல்ல ஒருவரையும் காணாதவிடத்து வழியிலே உள்ள பனைகளை மோதித் தமது சினத்தைத் தீர்த்துக் கொள்கின்றனவாம். பனையின்
தோற்றம் யானைக்கு உயர்ந்த மனிதர்போலப்படுகிறது. வரண்ட நிலத்திலே மனிதர் வாழாதபோது பனைகள் தான் தனித்து வாழும். பனையின் வாழ்வுக்கு வளநிலம்
அவசியமில்லை. களர்பூமியிலும் அது செழித்துவளரும் இயல்பு கொண்டது. நெடுத்து வளரும் இயல்புடைய பனை சில சமயம் முடமாதலுண்டு. மனித வாழ்வோடு பனை நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தமையால் மனிதனைப் போலவே நடமாட முடியாத முடப் பண்பினையும் அது கொண்டிருப்பதாகக் கருதப்பட்டது.
கூடலூர் கிழார் கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரவிரும்பொறை துஞ்சிய போது பாடிய பாடலிலே முடப்பனையில் தோற்றத்தினை எடுத்தாண்டுள்ளார். அனுடம் என்னும் ஆறு மீன்களின் தொகுதியின் தோற்றம்; வளைந்த பனை மரம் போன்ற அமைப்பினைக் கொண்டது. பாடலிலே அதனை 'முடப்பனையம்'

வும்
எனக் குறிப்பிட்டுள்ளார். திருமுறுகாற்றுப் படையில் பனையின் தோற்றம் கரடியின் தோற்றத்திற்கு ஒத்ததாகக் கூறப்பட்டுள்ளது.
'இரும்பனை வெளிற்றின் புன்சாயன்ன
குருஉமயில் யாக்கைப் குடாவடி உளியம்' என்னும் அடிகள் இதனை
விளக்குகின்றன. கரிய பனையினது
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற "யாழ்ப்பாண வாழ்வியல் கண்காட்சியில்
இடம்பெற்ற ஆய்வுக் கருத்தரங்கில் ஜப்பான், கக்குசுயின் பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆய்வாளர், கலாநிதி
மனோன்மணி சண்முகதாஸ் அவர்களால் சமர்ப் பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை.

Page 47
புல்லிய செறும்பை ஒத்த கரிய நிறத்தையுடைய மயிருடைய கரடி என வர்ணிக்கப்பட்டுள்ளது. கரியபனையின் செறும்பும் கரடியின் கரியமயிரும் தோற்றத்திலே பெரிதும் ஒத்திருக்கின்றன. அகநானூறு 277ஆம் பாடலில் பனையின் செறும்பு பன்றியின் மயிரை ஒத்ததாக வர்ணிக்கப்பட்டுள்ளது. 'இரும்பனஞ் செறும்பின் அன்ன பரு உமயிர்ச்சிறுகட் பன்றி' என்ற அடி இதனை விளக்கும்.
'செறும்பு' என்ற சொல்லே சிறாம்பு என்று யாழ்ப்பாணத்திலே வழங்கப்படுகின்றது. அகநானூற்று உரையாசிரியர் சிலாம்பு என்ற வழக்கினையும் உரையிலே கொடுத்துள்ளார்.
பனந்துண்டத்தின் தோற்றம் புலியின் கழுத்தினை ஒரு புலவருக்கு ஞாபகமூட்டுகின்றது. கபிலர் தமது பாடலொன்றிலே 'பனைமருள் எருத்திற் பல்வரி இரும்போத்து' என வர்ணித்துள்ளார். ஆண் புலியினுடைய கழுத்திலே பலவரிகள் உண்டு. அதுபோல பனையின் அமைப்பிலும் பல வரிகளுண்டு. புலியின் கழுத்து வரிகளையுடைய பனந்துண்டத்தை ஒத்துள்ளது. 'வரிப்பனை' என்ற
சொற்றொடர் வழங்கு தற்போதும் யாழ்ப்பாணத்திலே உண்டு.
பனங் குருத்தினுடைய தோற்றம் தும்பைச் சொகின்னார் என்னும் புலவருக்கு சினை முற்றிய வரால் மீனை ஞாபகப்படுத்துகிறது. நுகும்பு என்பது குருத்தைக் குறிப்பதாகும். புறநானூறு 249 ஆம் பாடலில் புலவர் 'பனை நுகும்பனை சினைமுதிர்வரால்' எனக் குறிப்பிடு கின்றார். வராமல்eனது சினை முற்றிய நிலைமை மெதுமையானது. அந்த மீன் சினைமுற்றிய போது மேலும் வெண்ணிறமாய்த் தோன்றும். பனங்குருத்தும் மென்மையும் மிக வெண்மையுமானது. புலவர் கண்ணிலே இரண்டும் ஒன்றாய்த் தெரிகின்றன.
புலவர்கள் பனையின் பல்வேறு தோற்றப்பாடுகளை நுணுக்கமாக அவதானித்துள்ளனர். பனங்குருந்து
மக்களால் உண்ணப்படுவது. மீனின் சுவையும் நுகும் பின் சுவையும் கூட ஒன்றந் தன்மையன. நாளாந்த வாழ்க்கையிலே கண்முன்னே காணும் பனையின் தோற்றம் பல நிகழ்வுகளை ஞாபகப்படுத்துகின்றது. சுவைகளை நினைவூட்டுகின்றது. அதனால் பாடல்களிலே பனை இடம்பெறுவது இயற்கை.ன நிலையாகவும் அமைந்தது. புலவர் நேரடி
அநுபவங்களையே பனையோடு கூறியுள்ளனர்.
உணவு நிலையில் பனைமரம் தரும் பயன்கள் பலவாகும். மக்களுக்கு உணவு நிலையில் காலாகாலம் ஏற்றவை நல்கும்

கலைக்கேசரி
47
இயல்புடையது. பதநீராகவும், நுங்காகவும், பழமாகவும், கிழங்காகவும் பனைதரும் வளங்கள் வருடம் முழுவதுமே மக்களுக்கு உணவாகும் தன்மையுடையன. குறிப்பிட்ட காலத்திலே பனை தரும் பயனைப் பாதுகாத்து வைத்து உணவுப் பஞ்சத்தையே நாம் வெல்ல முடியும். நீருற்றி நாம் பனையை வளர்க்க வேண்டியது இல்லை. நின்ற நிலையிலேயே அது பயன்தரவல்லது.
பழந்தமிழர் வாழ்விலும் பனை உணவு நிலையிலே மக்களுக்கு உதவியுள்ளது. புறநாநூற்றுப் பாடலொன்று நல்லூரிலே வாழ்ந்த மங்கையர் பனை நீர் பருகி மகிழும் நிலையை எடுத்துக்காட்டுகின்றது.
'வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல் முண்டகக்கோதை யொண்டொடி மகளில் இரும்பனையின் குரும்பை நீரும் பூங்கரும்பின் றீஞ்சாறும். ஓங்கு மணற் குவவுத்தாழைத் தீநீரோ டுடன் விராய் அய் முந்நீ ருண்டு முந்நீர்ப் பாயும் தாங்கா வுறையு ணல்லூர் கெழீஇய' (புறம் : 24) கடற்கரையூர்களிலே வாழுகின்ற மகளிர் கடல் முள்ளிப்பூவாலான மாலையை அணிந்துள்ளனர். வளையல்களையும் அணிந்துள்ளார்கள். அவர்கள் பெரிய பனையினது நுங்கின் நீரும்,கரும்பினது இனிய சாறும், உயர்ந்த மணலிலே திரண்ட நொங்கினது இனிய இளநீரையும் உண்கிறார்கள். மூன்று நீரையுண்டு முந்நீர் பாயும் ஊரிலே வாழ்கிறார்கள். கரும்பும், இளநீரும், - பனையின் குரும்பை நீரும் இயற்கையிலே இனிமை கூடியவை, அதனைப் பெண்கள் உண்ணுவது உணவு நிலையில் சிறப்பளிக்கின்றது. ஊரின் வளத்தையும் உணர்த்துகிறது.
பனையின் குரும்பை நீர் பதநீரைக் காய்ச்சிப் பாகாக்கிப் பனங்கட்டியைத் தயாரிக்கின்றனர். தெங்கின் - இளநீர் எக்காலத்தும் பெறக்கூடியது. ஆனால் பதநீரோ
குறிப்பிட்ட ஒரு காலத்தில் மட்டுமே பெறக்கூடியது. புற நாநூற்றிலே காணும் செய்தி பதநீர் உணவு நிலையிலே - அன்று தொட்டு இன்றுவரை பயன்பட்டுள்ளதைத் - தெளிவாக விளக்குகின்றது.

Page 48
கலைக்கேசரி ஆ.
48
ஆலத்தூர் கிழார் என்னும் புலவர் பனையின் உணவுப் பயன்களை ஒருசேரத் தனது பாடலிலே தொகுத்துக்
கூறுகின்றார்.
'தலையோர் நுங்கின் றீஞ்சேறு மிசைய இடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக் கடையோர் விடுவாயப் பிசிரோடு சுடுகிழங்கு நகர நிலமலர் வையத்து வலமுறை வளைஇ வேந்துபீ டழித்த வேந்துவேற்றானை' (புறம்: 225) சோழன் நலங்கிள்ளியின் படையின் வலிமை பாட வந்த புலவர் பனையைத் துணையாகக் கொள்ளுகிறார். மன்னனது படைகள் புறப்படுங்காலம் பனையின் பயன் களால் விளக்கப்பட்டுள்ளது. அவனது படை புறப்படுங் கால் முன்னே செல்லும் தூசிப்படையிலுள்ளோர் )
அப்பனையிருக்கும் இடம் சேரும் போது நுங்கினை உண்ணக்கூடியதாயிருக்கும்.
இடைப்படையிலுள்ளோர் அப்பனையிருக்கும் இடத்தைப் போய்ச் சேரும்போது பனை நுங்கு
முற்றிக்காய்த்துக் கனிந்துவிடும். அவர்கள் அதனை உண்ணக்கூடியதாயிருக்கும். - படையின் கடையிற்செல்வோர் அவ்விடத்தை அடையும்போது பனங்கனியும் போய் பிசிரோடு கூடிய பனங்கிழங்கு பெற்றுச் சுட்டுத்தின்னும் காலமாகிவிடும்.
பனையின் மூவகையான உணவுப் பயன்களை இப் பாடலடிகளிற் காணலாம். பனை நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு என்னும் மூன்றுவகை உணவுகள் கால இடைவெளியில் பனையால் பெறலாம். பனங்கிழங்கைப் பதம்பண்ணி உண்ணும் வகையையும் புலவர் காட்டுகிறார்.
சோழன் நலங்கிள்ளி இறந்த போது இப்பாடலைப் புலவர் இரங்கிப் பாடினார். உணவு நிலையிலே பனை யின் பயன் மக்கள் வாழ்க்கையில் முக்கியமானதை அவரால் மறக்க முடியவில்லை. - நல்லோர் முதியனைப் பாடிய கள்ளில் ஆத்திரையனார் என்னும் புலவர் பனைநுங்கு நீர்வற்றி கற்போல் வலிதாக மாறுவதைக் குறிப்பிடுகின்றார். 'நீர் நுங்கின்
16000

கண்வலிப்ப' என அவரது பாடலில் வருமடி இதனை விளக்குகின்றது. அப்போது நுங்கு பழமாக உணவு நிலையிலே தொடர்ந்து பயன்பட முடியாத தாகின்றது.
பெரும் பாணாற்றுப்படை நுங்கை உணவாக அளிக்கும் செய்தியைக் குறிப்பிடுகின்றது. சிறுபாணாற்றுப்படை நுங்கின் சுவையை எயிற்றியர் வாய்ச்சுவைக்கு ஒப்பிடுகின்றது.
குறுந்தொகைப் பாடலொன்று பனையிலிருந்து பெறப்படும் கள் பற்றிக் குறிப்பிடுகிறது 'கள்ளிற் கேளிர் பஞ்சியங் குறுங்காய் ஓங்கிரும் பெண்ணை நுங்கொடு பெயரும் ஆதியருமன் மூதூர்...' (குறுந்தொகை : 293) கள் விற்கும் கடைக்குச் செல்வோர் அங்கு கள் கிடையாத போது உள்ளூரின் கண்ணுள்ள பனை நுங்கை யேனும் உண்டு வேட்கையைத் தணிக்கக் கருதி பெறப்படுவது. பாளை முற்றிவிட்டால் நுங்காகிவிடும். ஆண்பனைப் பாளையிலிருந்தே வெறியூட்டும் கள் தயாரிக்கப்படும். பெண் பனைப்பாளையிலிருந்து பதநீர் தயாரிக்கப்படும். பழந்தமிழர் வாழ்விலும் கள்ளும் நுங்கும் விரும்பியுண்ணப்பட்டுள்ளதை அறியக் கிடைக்கின்றது. புறநானூற்றிலும் பல பாடல்களில் பனங்கள் அருந்தும் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.
பதிற்றுப்பத்து விறலியர் வருகின்ற விருந்தினருக்கு கள்ளும் சோறும் அளித்து உபசரிப்பதைக் காட்டுகின்றது.
சேரலாதனது கொடைச் சிறப்பைப் பாடும் புலவர் உணவு நிலையிலே கள் முக்கியத்துவம் பெற்றதைக்
குறிப்பிடுகின்றார்.
'உண்மின் கள்ளே யடுதின் சோறே எறிக திற்றி யேற்றுமின் புழுக்கே வருநர்க்கு வரையாது பொலங்கலந் தெளிர்ப்ப இருள்வண ரொலிவரும் புரியவி ழைம்பால்

Page 49
ஏந்துகோட் டல்குன் முகிழ்நகை மடவரல்
கூந்தல் விறலியர் வழங்குக வடுப்பே' (பதிற்றுப்பத்து : 8) சோறு, ஊண், புழுக்கல் என்பவற்றுடன் கள்ளும் முக்கியமாக இடம்பெறுகின்றது. உண்டாட்டின் போது தமிழர்கள் அருந்தினர். அரசனை நாடிச் செல்வோரை விறலியர் உபசரிப்பர். அப்போது பருகுவதற்குக் கள்ளையும் வழங்குவர்.
பருகும் கள்ளுக்கு விலையாக வரகும் கொள்ளும் கொடுத்த செய்தியும் பதிற்றுப்பத்திலுண்டு. கள்ளை அளவுக்கதிமாகப் பருகினால் ஒரு வகையான மயக்கம் ஏற்படும். அதனால் கள் அருந்தல் காலகதியில் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகவும் கருதப்பட்டது. பனையின் பயன்கள் இயற்கை நிலையிலேயே ஒரு
குறிப்பிட்ட காலப்பகுதியிலே கிடைப்பனவாய் இருந்த மையால் அவற்றால் ஏற்படும் தீமைகளும் குறைவாக வேயுள்ளன.
உணவு நிலையிலே பனையின் பயன்பாடுகள் பெரு வளங்களாக இருந்ததைப் பழந்தமிழர் அறிந்திருந்தனர். பனைமரம் இன்றுவரையும் அந்நிலையில்
மாற்றமில்லாமலே மதிக்கப்படுகின்றது.
பனைமரத்தின் ஓலை உண்கலமாகப் பயன்பட்ட நிலையைக் கபிலர் தமது பாடலிலே குறிப்பிட்டுள்ளார். நற்றிணை 243 ஆம் பாடலில் 'பல்குடைக்கள்ளின்' என் னும் தொடர் இதனை நன்கு விளக்குகின்றது. கள்ளினை பனங்குடையிலே இட்டு உண்ணும் வழக்கம் இருந்துள்ளது. இவ்வழக்கம் யாழ்ப்பாணத்திலே இன்றும் நடைமுறையில் இருப்பதைக் காணலாம். 'பிழா' என அது வழங்கப்படுகின்றது. கள் மட்டும் அன்றி உணவுப்பண்டங்களை உண்பதற்கும் பனங்குடை பயன்
படுத்தப்பட்டதைப் புறநானூற்றுப் பாடலொன்று விளக்குகின்றது.
'கண்மாறு நீட்ட நணிநணி யிருந்த குறும்பல் குறும்பிற் றதும்ப வைகிப் புள்ளிச்சுவை வேட்ட செங்க ணாடவர் தீம்புளிக் களாவொடு துடரி முனையின் மட்டற னல்யராற் றெக்க ரேறிக் கருங்கனி நாவ லிருந்து கொய் துண்ணும் பெரும்பெய ராதி பிணங்களிற் குடநாட்
•8

கைகேசரி
49
டெயினர் தந்த வெய்ம்மா னெறிதசைப்
பைஞ்ஞணம் பெருத்த பசு வெள்ளமலை
வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய
இரும்பனங் குடையின் மிசையும்' (புறம்: 177)
கள் உண்பவர்கள்
அதை உண்ணும் போது ஒருவருக் கொருவர் மாறி நீட்டு கின்றனர். கள்ளை நிரம்ப உண்டதால் விடாய் மிக்கு அவர்கள் புளிச்சுவையை விரும்புகின்றனர். கண்கள் சிவந்த அந்த ஆண்மக்கள் இனிய புளிப்பையுடைய களாப்பழத்துடனே துடரிப்பழத்தையுண்கின்றனர்.
அப்போது சுவை தீரவில்லை. பின்னர் மணற்குன்றுகளிலே ஏறி கரிய நாவற்பழத்தைப் பறித்து உண்கின்றனர். ஒருவாறு வாய்ப்பளிப்புத் தீர்கிறது. அதன் பின்னர் பன்றி இறைச்சியோடு நிணமிக்க புதிய வெண்
சோற்றுக்கட்டியை வருவோர்க்கெல்லாம் கொடுத்து உண்கின்றனர். சோற்றை பனங்குடையிலே வைத்தே உண்கின்றனர். தமிழர் உண்டாட்டின் கோலத்தை ஆவூர்
மூலங்கிழார் அழகாகவே வர்ணித்துள்ளார். பனங்கு டையிலே சோறுண்ணும் வழக்கம் யாழ்ப்பாணத்திலும் உண்டு. சிறிய பனையோலையிலே பின்னிய . உண்கலங்கள் தூய்மையானவையாய் இருந்தன.
அதனைத் 'தட்டுவம்' என்றும் சிலர் குறிப்பிடுவர். உண் கலமும் உணவும் தந்துதவும் பனையைக் கற்பகதரு வென்று அழைப்பதும் மிகப் பொருத்தமேயாகும்.
மக்கள் மொழிநிவையில் : பழந்தமிழர்களது மொழிநிலையிலே பனை பற்றிய சொற்களும் சொற்றொடர்களும் உருவாகியுள்ளன.

Page 50
கலைக்கேசரி தி
சங்கப் பாடல்களிலே பனை பற்றி வருகின்ற சொற்கள் இன்றும் தமிழிலே வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றுட் சிலவற்றைப் பின்வருமாறு தொகுக்கலாம்.
பழந்தமிழ் வடிவம் - இன்றைய தமிழ் வடிவம் 1. இரும்பனை - கரும்பனை 2. மன்றப்பனை - தலைப்பனை, முற்றப்பனை 3. நெடும்பனை - நெட்டைப்பனை, நெடும்பனை 4. நுங்கு - நுங்கு 5. பனைமடல் - பனைமடல் 6. முடப்பனை - முடப்பனை, சொத்திப்பனை 7. பனம்பாளை - பனம்பாளை 8. பனங்குடை - பனம்பிழா 9. பனந்தோடு - பனங்குருந்து 10. பனை இளநீர் - பதநீர் 11. பனஞ்சோறு - பனஞ்சோத்தி 12. பனைத்தடி பனங்கொட்டு 13. இதக்கை - சீக்காய் 14. பனங்கருக்கு - பனங்கருக்கு 15. பனங்குலை - பனங்குலை 16. பனஞ்செறும்பு - பனஞ்சிறாம்பு 17. பனங்குரும்பை - பனங்குரும்பை 18. பனம்பழம் - பனம் பழம், பனங்காய் 19. பனங்கிழங்கு - பனங்கிழங்கு 20. பனம்பிசிறு - பனம்பிசான் 21. பனங்கள் - பனங்கள்ளு தமிழ்மொழி இலக்கணகாரர் பனைபற்றிய சொற்களுக்கு இலக்கண அமைப்பைக் கண்டுள்ளனர். பழந்தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்திலே பனை பற்றிய சூத்திரங்கள் உள்ளன.
'பனையும் அரையும் ஆவிரைக் கிளவியும் நினையுங் காலை அம்மொடு சிவனும் ஐயென் இறுதி யரைவரைந்து கெடுமே மெய் அவண் ஒழிய என்மனார் புலவர் (தொல் ஐ :284) 'பனை முன்னர் அட்டுவரு காலை நிலையின் றாகும் ஐயென் உயிரே ஆகாரம் வரதல் ஆவயி னான' (தொல் ஐ :285) 'கொடிமுன் வரினே ஐயவண்நிற்பக்' கடிநிலையின்றே வல்லெழுத்து மிகுதி (தொல் ஐ :286)

மேற்காட்டிய சூத்திரங்கள் பனைக்கென்றே சிறப்பாயமைந்த சூத்திரங்கள் என்றால் மிகையாகாது. மக்கள் வாழ்க்கையிலே நெருங்கிய தொடர்பு கொண்ட பனை மொழிவழக்கு நிலையிலும் சிறப்பிடம் பெற்ற தால் பிற்காலத்திலே பனைபற்றிய பல பழமொழிகளும் தோன்றியுள்ளன. அவை பனையின் தோற்றம், வளர்ச்சி, பயன்பாடு என்பவற்றின் அடிப்படையாகத் தோன்றியுள்ளன. பனை மனிதனுக்கு உணவும், உறையுளும் தந்துதவுவது. அதனால் அவன்
மொழியிலும் உலாவுவது முற்றத்தில் நிற்கும் ஒற்றைப் பனையே துணையாக வாழ்ந்தவரும் உளர். மன்னரும், புலவரும், மக்களும் மதித்துப் போற்றும் பனையினைப் பற்றி பல ஆய்வுகள் செய்ய வேண்டியுள்ளன. அந்த
ஆய்வுக்குப் பனைபற்றிய சொற்களும் சொற்றொடர்க ளும்,பழமொழிகளும், பாடல்களும், விடுகதைகளுமே தரவுகளாக சிதறிக்கிடக்கின்றன. அவற்றை ஒருங்கு
சேர்த்துத் தொகுத்து ஆராய்ந்து பனையின் சிறப்பைப் பிறரும் அறியவைக்க வேண்டும். மரங்களிலே மனித வாழ்விலே மிக நெருங்கிய தொடர்பு கொண்டது பனையே. அதன் புகழ் பாரெங்கும் பரவ நாம் வழிசெய்தல் வேண்டும்.
உசாத்துணை 1. அகநானூறு, கம்பர்விலாஸ் புத்தகசாலை, மைலாப்பூர், 1920 2. கலித்தொகை, நச்சினார்க்கினியருரை, அனந்தராமையார் பதிப்பு, 1925 3. குறுந்தொகை மூலமும் உரையும், உ.வே.சாமிநாதையர் பதிப்பு, சென்னை, 1937
4. திருமுருகாற்றுப்படை, உ.வே. சாமிநாதையர் பதிப்பு, 1931 5. தொல்காப்பியம், தெளிவுரை, புலியூர்க் கேசிகன், சென்னை, 1961 6. பதிற்றுப்பத்து, எஸ்.ராஜம் வெளியீடு, சென்னை, 1957 7. புறநானூறு, எஸ்.ராஜம், சென்னை, 1958 8. சங்க இலக்கிய இன்கவித்திரட்டு, இழவழகனார், சென்னை, 1945 9. சங்க இலக்கியக் கட்டுரைகள், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1984
10. குறுந்தொகைக் காட்சிகள், விளக்கம், சக்திதாசன் சுப்பிரமணியன், சென்னை, 1958.
11. குறுந்தொகைச் சொற்பொழிவுகள் கழகவெளியீடு, சென்னை, 1930 12. கேசவராஜ், வே.நடுகல் வழிபாடு, சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை , 1978
13. கைலாசபதி.க. பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும், பாரிநிலையம், சென்னை , 1966
14. சரளா இராசகோபாலன், சங்க இலக்கியத்தில் தோழி, சென்னை, 1986
15. சாமி, பி.எல்.சங்க இலக்கியத்தில் புள்ளின் விளக்கம், கழக வெளியீடு, சென்னை, 1976
16. சிதம்பரனார், சாமி, எட்டுத்தொகையும் தமிழர் பண்பாடும், சென்னை, 1986
17. சுப்பிரமணியன், ந.சங்ககால வாழ்வியல், N.C.B.H. சென்னை, 1986 18. சுப்புரெட்டியார், நா. அகத்தினைக் கொள்கைகள், பாரி நிலையம், சென்னை , 1981
19. தண்டாயுதம், இல. சங்க இலக்கியத்தில் மலர்கள், வானதி பதிப்பகம், சென்னை, 1981 ,

Page 51
தசாவதாரக் கீர்த்தனை
கொழும்பு பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம் கடந்த 14.10.2012 அன்று மாலை, வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் நடத்திய
முத்தமிழ் விழாவில் இடம்பெற்ற 'தசாவதாரக் கீர்த்தனை' நாட்டிய நாடகத்தில் சில கட்டங்களைக் காணலாம்.


Page 52
கலைக்கேசரி தி
52ஆளுமை
கனக.செந்திநாதனி
ஒரு மீள்
இரசிகணி கனக-செந்திநாதன்

என் இலக்கிய வெளி
நோக்கு
- பேராசிரியர் சபா. ஜெயராசா
III
மரபு வழித் தமிழ்த் தளத்தில் நின்று நவீன இலக்கியங் களைத் தரிசித்தவர் இரசிகமணி கனக. செந்திநாதன் (1916-1977) அவர்கள். பண்டிதமணி சி. கணகபதிப் பிள்ளை அவர்கள் உருவாக்கிய இலக்கிய நோக்கிலான மாற்றுப் பார்வையின் செல்வாக்கு அவரின் புலக் காட்சியிலே தாக்கங்களை ஏற்படுத்தியது. மறுபுறம் ஆசிரிய கலாசாலை வழியாகக் கிடைக்கப்பெற்ற அக்காலத்தைய கற்றல், கற்பித்தல் முறைகளும் கல்வி உளவியல் அறிவும் புதிய இலக்கிய வடிவங்கள் மீதான ஈடுபாட்டை ஏற்படுத்தியது.
காலனித்துவ ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த எழுத்தறிவு விரிவாக்கம் சமாந்தரமாக வாசிப்புப் பழக்கத்தை பல நிலைகளிலும் கட்டியெழுப்பத் தொடங்கியது. இந்திய சுதந்திரப் போராட்டமும், நாவலர் காலத்திலிருந்து இந்நாட்டில் எழுச்சி கொள்ளத் தொடங்கிய தமிழ்மொழிப் பிரக்ஞையும் வாசிப்பு மலர்ச்சிக்குத் தூண்டுதலளித்தன. அவற்றின் இணைப்பாக அச்சுவழித் தொடர்பாடலும் இதழ்களின் எழுச்சியும் நிகழ்ந்தன. தமிழகத்து இதழ்கள் யாழ்ப்பாணத்தை
வந்தடைந்தன.
அத்தகைய எழுபுலத்தில் வாசித்தலைத் தமது ஆளுமையின் மிகப் பெரிய பரிமாணமாக்கிக் கொண்டவர் இரசிகமணி கனக செந்திநாதன் அவர்கள். ஆசிரிய கலாசாலையில் அவர் கற்றுக் கொண்ட 'எடுத்தியம்பல்' முறையினை தமது வாசிப்பின் வழியாகத் திரட்டிக் கொண்டவற்றை வெளிப்படுத்துவதற்குப் பயன்படுத்தினார். நவீன இலக்கியங்களை வாசித்தலும் அவற்றை எடுத்தியம்பும் இலாவகமும் அவரை 'இரசிகமணி' ஆக்கியது. 'எடுத்தியம்பல்' முறை அவரது திறனாய்விலும் நீட்சி கொண்டது.
அவரது உருவாக்கத்திலே குரும்பசிட்டிக் கிராமத்தின் பங்கு முக்கியமானது. சமயம், இலக்கியம், கலைகள் முதலியவற்றைக் கூட்டு உழைப்பினால் நிறுவன மயப்படுத்தியும் ஒழுங்குபடுத்தியும் வளர்க்கும் மரபு அந்தக் கிராமத்திலே காணப்பட்டது. அந்த வகையிலே சன்மார்க்க சபையும் 'உதயதாரகை மன்றமும்' சிறப்பாகக்
குறிப்பிடத்தக்கவை.

Page 53
பெ
தமிழ்க் கிராமங்களிலே 'நிறுவனமயப்பாடு' என்ற தத்துவத்தின் முக்கியத்துவம் சைவ வித்தியா விருத்திச் சங்கத்தினால் வலியுறுத்தப்பட்டது. காலனித்துவ ஆட்சிக் காலத்தில் வளர்ச்சிபெறத் தொடங்கிய கூட்டுறவுக் கருத்துக்களும், யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் என்ற அமைப்பும் கிராமிய நிலைப்பட்ட நிறுவனமயப்பட்டு இயக்கங்களை உற்சாகப்படுத்தின.
அவற்றின் பின் மலர்ச்சியில் பொன். பரமானந்தர், இரசிகமணி கனக. செந்திநாதன், கலைப்பேரரசு எ.ரி. பொன்னுத்துரை, பண்டிதர் வ. நடராசா, வை. இளைய தம்பி, மு. க. சுப்பிரமணியம், ஈழகேசரி பொன்னையா
முதலியோரின் பணிகள் எழுச்சி கொண்டன.
குரும்பசிட்டியின் பிறிதொரு சிறப்பு அக்காலத்தில் வளர்ச்சியுற்ற சீர்திருத்தக் கருத்துக்கள் மற்றும் மார்க்சியக் கருத்துக்களின் படிமங்கள் விரவிய கிராமமாகவும் விளங்கியமையாகும். அவற்றின் பரவலை முன்னெடுத்தவர்களுள் முக்கியமானவர் பண்டிதர் வ.நடராசா அவர்கள். மேலும் அக்கிராமத்தின் இளைஞர் பலர் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியிலே கற்று வந்தனர். அவர்களினூடாகவும் மார்க்சிய முற்போக்கு சிந்தனைகள் கிராமத்திலே பரவின. மார்க்சியம் எதிர் மார்க்சியம் என்ற முரண்பாடுகளும் தோற்றம் பெற்றன.
இரசிகமணி கனக. செந்திநாதன் அவர்கள் நேரடியாக அவற்றிலே ஈடுபாடு கொள்ளாதிருந்தாலும் அவற்றின்
ஈழத்து இலக்கியவளர்ச்சி
838 இரு'.
3. 3 உதவி
கனக செந்திநாதன்

, கலைககே .
மறைமுகமான செல்வாக்கினை அவரது எழுத்தாக்கங்கள் கொண்டிருந்தன. மார்க்சியம் பழைமைகளை அழித்து விடுமோ என்ற பதகளிப்பு அக்காலத்தைய சுதேச மொழிப் புலமையாளர் பலரிடத்தும் பரவியிருந்தது.
கனக செந்திநாதன் அவர்களது நவீன கவிதைச் சுவையில் அதிக முக்கியத்துவம் பெற்றிருந்தவர் பண்டிதர் க.சச்சிதானந்தன் அவர்கள். அவர் பன்முக ஆளுமைப் பரிமாணங்களைக் கொண்டவர். பழந்தமிழ் இலக்கிய இலக்கணங்களில் ஆழ்ந்த புலமை கொண்டிருந்தார். அதேவேளை நவீன ஆங்கில இலக்கியத்திலும் கணிதத்திலும் உளவியலிலும் புலமைமிக்கவராயிருந்தார். பண்டித மரபில் வந்து நவீனத்துவத்தைத் தழுவிக் கொள்வோர் மீது கனக செந்திநாதன் அவர்களுக்கு மிகுந்த ஈடுபாடு காணப்பட்டது.
அக்காலத்தைய இலக்கிய விவாதங்களில் 'உருவம்' மற்றும் 'உள்ளடக்கம்' என்ற இருநிலை வாதம் மேலோங்கியிருந்தது. அது பொருத்தமற்ற வாதமாகும். அதேவேளை முற்போக்கு அணியினர் உள்ளடக்கத்தின் முக்கியத்தவத்தை விதந்து பேச, எதிரணியினர் உள்ளடக்கத்தைக் காட்டிலும் வெளியீட்டு முறைமையினை முதன்மைப்படுத்தினர். அவரது இரசனை நோக்கு வெளியீட்டு முறைமையைக் குவியப் படுத்தியது. தமது திறனாய்வுகளில் அவர் வெளியீட்டுக் கோலங்களை முக்கியத்துவப்படுத்தினார். அவற்றை
வின்கலக்கு
- ஒ
16 மேம்தந்த
கேசரி
Fநாயகம் Taiwஸ்.-ஃwாலர்)
பாபா Tா4யாரமாரா 114ாயக்க
Aut::ics :பேடி
பட க க NSA EEN =iானோர் TIFFr
தனக, செந்திநாதர்

Page 54
கலைக்கேசரி ன் 54
அடியொற்றிய இரசனை முறைத்திறனாய்வை அதற்குரிய தனித்துவத்தோடு வளர்த்தார்.
'ஈழத்து இலக்கிய மரபு' என்ற எழுபொருள் அக் காலத்தில் ஊன்றிய கவனத்தைப் பெற்றது. தமிழ்த் தேசியத்தின் எழுச்சியும் முற்போக்கு எழுத்தாளர் வலியுறுத்திய 'தேசிய இலக்கியம்' என்ற கருத்துருவமும் ஆறுமுகநாவலரைத் தேசிய வீரராக்கும் முயற்சியை முன்னெடுத்தன. தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தவரை இந்நாட்டுக்குரிய
தனித்துவங்களின்
தேடல் முன்னெடுக்கப்பட்டது.
'ஈழத்துப் பேனா மன்னர்கள்' என்ற தொடரில் ஈழகேசரியிலும், ஈழத்து இலக்கிய முயற்சிகள் பற்றி வீரகேசரியிலும் தினகரனிலும் தொடர் கட்டுரைகளை எழுதினார். அவற்றின் தொடர்ச்சியாக ஈழத்து இலக்கிய வளர்ச்சி நீட்சி கொள்வதற்கு அற்றை நாள் தினகரன் ஆசிரியராக இருந்த பேராசிரியர் கைலாசபதி உற்சாகமளித்தார்.
இரசிக நிலைத் திறனாய்வுத் தளத்திலும், ஆறுமுக நாவலர் மற்றும் பண்டிதமணி கணபதிப்பிள்ளை ஆகி யோர் முன்னெடுத்த இலக்கியச் சுவடுகளின் தொடர்ச்சியிலும் நின்று அந்த நூலாக்கத்தை செய்தார். அத்தகைய பின்மலர்ச்சியில் நிறைவுகளுமிருந்தன. வரலாற்றுநோக்கு மற்றும் கருத்தியல்நோக்கு தொடர்பான மட்டுப்பாடுகளும் இருந்தன. பழைமையை 'தூய்மை'யாக கவரும் பொழுது திறனாய்வின் புறவயநிலை சரிதலையும் கருத்திலே கொள்ள வேண்டும்.
அவரது பரந்துபட்ட வாசிப்பின் வழியாகப் பெறப்பட்ட தகவல்கள் அனைத்தையும் தொகுத்து வழங்கும் நூலாக்கமாக அது அமைந்துள்ளது. நூலின் கோபுரவாயில் என்ற பகுதியில் அவர் குறிப்பிடும் வரிகள் வருமாறு: ''ஈழத்தின் இலக்கிய வளர்ச்சியை அறிய வேண்டுமென்று விரும்பும் எழுத்தாளர் - விமர்சகர் என்போர்க்கும் கல்லூரிகளிலும் சருவகலாசாலைகளிலும் பயிலும் மாணாக்கர்களுக்கும் இந்நூல் பயன்படும். மேலும் பத்திரிகைகளையும் புத்தகங்களையும் ஏராளமாக அனுப்பி ஈழத்தை விற்பனைச் சந்தையாக மட்டும் உபயோகித்துக் கொண்டு ஈழத் தமிழர்களைப் பற்றியும் இங்குள்ள எழுத்தாளர்களைப் பற்றியும் ஒன்றுமறியாமலிருக்கும் தென்னகப் பத்திரிகை ஆசிரியர்களுக்கும் இது நிச்சயம் பயன்படும்.''
ஈழத்து இலக்கிய வளர்ச்சியை அவர் எழுதிய வேளை நாவலர் மரபோடும் பண்டிதமணியின் மரபோடும் தொடர்புபட்டு நின்றமையினை அவர் பயன்படுத்திய

படிமங்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடியும். எடுத்துக் காட்டாக அந்நூலின் தொடக்கத்தைக் 'கோபுரவாயில்' என்ற தொடராலும் நிறைவுப் பகுதியைத் 'திருக்கடைக் காப்பு' என்பதனாலும் குறிப்பிடுதல்
கவனத்தை ஈர்க்கின்றது.
முற்போக்கும் எதிர்ப்போக்கும் முரண்பாடு கொள்ளத் தொடங்கிய நிலையில் இருசாராரும் தத்தமது தளங்களை விசாலிக்கத் தொடங்கினர். எஸ். பொ. அவர்கள் தமது தள விரிவாக்கத்தினூடே கனக செந்திநாதனை இறுகப்பற்றிக் கொண்டார்.
கனக செந்திநாதனுடைய எழுத்தாக்கங்கள் பன்முகப் பட்டவை. திறனாய்வு, சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என்ற பல நிலைகளிலே அவரது ஆக்கங்கள் பன்மைநிலை அடைந்தன. அக்கால எழுத்தாக்கங்களோடு அவருக்கு இருந்த ஈடுபாடும் வாசகர் நிலையை வினைப்படும் நிலையாக மாற்றியமையும் அத்தகைய பன்மை நிலைக்குத்தளம் அமைத்தன.
வை.
ஈழத்துத்
தமிழ் நூல் வழிகாட்டி
* : சா ல சு 1414.3,: +3 என இ * * 7 8 இல் பெ மான்சி டினா தா அடக்கம்
காதியா* 11: 21a1ாடர் 16, செந்திநாதன்
அ 99: மகாப
டி-1)
4. பெ ம் ம், பாடசால.
என் ம்

Page 55
'என் கதை', 'ஈழம் தந்த கேசரி', 'வெண்சங்கு', 'ஈழத்து இலக்கிய வளர்ச்சி', 'ஒரு பிடி சோறு', 'கவிதை வானில் ஓர் இளம் பிறை', 'ஈழத்துக் கவிதைமலர்', 'விதியின்கை', 'நீதிக்கரங்கள்', 'மத்தாப்பு' முதலாம் நூல்கள் அவரால் வெளியிடப்பட்டன.
அவரிடத்து ஆழ்ந்து உறைந்திருந்த பழைமை நோக்கின் உறுத்தலும் புதிய வாசிப்பின் வழி முகிழ்த்த நவீனத்துவத்தின் விசைகளும் மோதிய வேளை அவ்வப் போது சமநிலைகளின் தளம்பல்களையும் தரிசிக்க முடிகின்றது. இச்சந்தர்ப்பத்தில் எஸ். பொ. அவர்களின் கூற்று ஒன்று வருமாறு: "கதைகளின் பழைமை சான்ற உள்ளடக்கத்திற்கு ஏற்ப பழைமை சான்ற நடையையே கையாளுக்கின்றார்.'' பழைமையின் பண்பினைக்காக்கும் பணியில் பிராந்தியச் சொற்களை மிகவும் ஒறுப்பாக கையாளுகின்றார். இந்தப் பொதுவான எழுத்துப் பண்பிற்குப் புறநடையாக 'சொந்தம்', 'தரிசனம்' ஆகிய இருகதைகள் எகிறி நிற்கின்றன. இந்தப் புறநடை கூடப் பொதுபண்பினை நிலைநாட்டவே உதவுகின்றன.''
அவர் படைத்த ஆக்கங்களிலே பண்டிதமணி சி.கணப் திப்பிள்ளையின் பண்பாட்டுக் கருத்தியலின் நீட்சியை அவ்வப்போது கண்டு கொள்ளமுடியும். ஈழத்தில் இலக் கிய இரசனையைப் பெருக்கியவர்களுள் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியவர் பண்டிதமணி சி.கணபதிப் பிள்ளை அவர்களேயாம். ஈழத்தின் பழைமையை அஞ்சலி செய்து அதனைப் புதுக் கோலத்தில் அறிமுகப்படுத்தி, எங்கோ மூலையில் பத்தோடு பதினொன்றாக இருந்த ஈழத்துப் புலவர் இரத்தினங்களையெல்லாம் அவர் நமக்கு நல்ல முறையிலே அறியச் செய்தார். ஈழத்தின் பழைய கலாசாரம் கந்தபுராண கலாசாரம்தான் என்பதைத் தெளிவாக நிறுவினார் என்பது கனக செந்திநாதன்
அவர்களின் கருத்து (ஈழத்து இலக்கிய வளர்ச்சி - 57)
கனக செந்திநாதன் எழுதிய 'பிட்டு' என்ற முக்கியமான சிறுகதை உட்பட்ட பல்வேறு ஆக்கங்கள் சமகாலத்து யாழ்ப்பாண வாழ்க்கையையும் மனிதர்களையும் புராண மயப்படுத்தும் (Humanising Myth) கலை முயற்சியாக அமைந்தன.
சிறுகதையின் முக்கியமான ஒரு பரிமாணமாக இருப்பது =எடுத்துரைப்பின் துடுக்குத்தனம் என்று குறிப்பிடப் படுகின்றது. தமிழில் அறிமுகமாகிய அந்த சிறுகதை உத்தியை நிறைந்த வாசிப்பின் வழியாகத் தரிசித்துக் புகொண்ட கனக செந்திநாதன் தமது கதைகளிலும் எடுத்தாண்டார்.

கலைகசேர்
55
லை
இரசிகமணி அவர்கள் நாடக எழுத்துருவிலும் ஈடுபடலானார். அக்காலத்தில் சிறுகதை வடிவங்களை நாடகமாகப் பெயர்க்கும் செயற்பாடுகள் இடம் பெற்றிருந்தமை ஒரு முக்கியமான அனுபவமாகும். வேறுபட்ட இயல்புகளைக் கொண்ட வடிவங்களை ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு நிலைமாற்றும் பொழுது பல நிலைகளிலே 'இழப்புக்கள்” ஏற்பட வாய்ப்பு உண்டு. அத்தகைய சவால்களோடு இலங்கையர்கோன் அவர்கள் தாம் எழுதிய சிறுகதைகள் சிலவற்றை வானொலி நாடகங்களாக நிலைபெயர்த்தார். அந்த அனுபவங்களோடு இணைந்த ஒரு முயற்சியை இரசிகமணி அவர்களும் மேற் கொண்டார். அந்த வகையில் அவர் எழுதிய 'ஒரு பிடி
சோறு' நாடகமாகியது.
அந்த நாடகத்துக்கு இரசிகமணியவர்கள் எழுதிய முன்னுரையில் நாவலரின் கருத்தியலை மீள வலியுறுத்தியிருத்தல் முக்கியமான ஓர் அவதானிப்பாகும். பக்கத்து வீட்டிலிருப்பவன் பசியோடிருக்க அவனை அலட்சியப்படுத்திவிட்டு ஆலயங்களுக்குப்போய் அன்னதானம் செய்வதில் ஒரு புண்ணியமும் இல்லை என்பது நாடகத்தின் கருப்பொருளாகும். ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் நான்காம் பால பாடத்தில் இப்படியான தருமங்களைக் கண்டித்து எழுதியுள்ளார். நாவலரின் கருத்தியலும் கருப்பொருளும் அந்த ஆக்கத்துக்குரிய உள்ளடக்கமாயிற்று. - கருத்தியல் நிலையில் அவர் ஓர் இலட்சியவாதியாகவே (Idealist) இருந்தார். அக்காலகட்டத்தில் மார்க்சியக் கருத்தியல் இலக்கிய நிலையில் மேலெழத் தொடங்கியதாயினும் அவர் தமது இலட்சியவாதத் தளத்திலே தான் பற்றுறுதியுடன் இருந்தார். அந்த நிலை சமூகப் பெயர்ச்சியை விரும்பாத யாழ்ப்பாணத்துச் சிந்தனை மரபுக்கு ஏற்புடையதாகவும் இருந்தது. - கனக செந்திநாதனது இலட்சிய வாதமும், எஸ்.பொ. அவர்களின் பிராய்டிச இலட்சிய வாதமும் (Freudian Idealism) சில துணிக்கைகளிலே ஒன்றிணைவதற்கான
வாய்ப்புக்கள் இருந்தன. அதனை எஸ். பொன்னுத்துரை பயன்படுத்திக் கொண்டார். - மார்க்சிய எதிர்ப்பின் பிறிதோர் இலட்சிய நிறுவன மயப்பாடாக யாழ். இலக்கிய வட்டம் தோற்றம் பெற்றது. கருத்தியல் நிலையில் மத்திய தரவர்க்க உளப்பாங்கோடு இலக்கியங்களை அணுகுதலை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில் மரபுகள் பிறழாத சீர்திருத்த நோக்கு அவர்களால் வலியுறுத்தப்பட்டது. அந்தநோக்கு கனக செந்திநாதன் அவர்களுக்கும் உவப்பானதாக இருந்தது.

Page 56
கலைக்கேசரி ) 56 நினைவுத்திரை
'வீணை வாணி'
ஸ்ரீமதி சண்முகவடிவு
அம்மாள்
- பத்மா சோமகாந்தன்

கல்வி கேள்வி ஒழுக்கங்களில் சிறந்து, ஒரு அவையின் கண் தன் மகனை முந்தியிருக்கச் செய்தல் தந்தையின் தலையாய கடமையெனத் தந்தையைச் சுட்டி விளித்த வள்ளுவர், அதற்கான கைமாறாக 'இவன் தந்தை (இப்பிள்ளையைப் பெற) என்னோற்றான் கொல் எனுஞ் சொல்லுக்குரிய வனாக தகுதியானவனாக மகன் இருக்க வேண்டும் என ஆணினத்தைச் சுட்டியே பேசுகிறார். 'தந்தை மகற் காற்றும் நன்றி', 'மகன் தந்தைக்காற்றும் உதவி' என்ற தொடக்கங்களையுடைய இரு குறட் பாக்களுக்குமே இலக்கணமாக ஓங்கு புகழோடு வாழ்ந்து, மறைந்தும் புகழ் மங்காது திகழ்பவர்கள். மதுரையைச் சார்ந்த ஸ்ரீமதி சண்முகவடிவு அம்மாளும் அவர் புத்திரி பிரபல இசைவாணி எம்.எஸ். சுப்புலஷ்மியும் ஆவர்.
மதுரை மண்ணுக்கே பல சிறப்புக்கள் உள்ளன. ஈடும் இணையுமற்ற மதுரை மீனாட்சியம்பாள் ஆலயத்தின் அருளாட்சியினால் போலும் கல்வி, கலை, கலாசாரம் எனப் பல்வேறு துறைகளும் செழிப் புற்று வளர்ந்ததனால் நிபுணத்துவமிக்க அறிஞர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள், அனுபூதிமான்கள் எனப் பலதரத்தோரும் இப்பூமியிலே பிறந்து வாழும் பாக்கியம் பெற்றிருந்தனர். அத்தகைய பாக்கியசாலிகளுள் கலைவாணியின் அருளை முற்று முழுதாகப் பெற்று, தனது வாழ்விலும் அவளது கருணாகடாட்சத்தால் நாதோபாசனையாக வீணை யை மீட்டும் வித்துவத்தைப் பெற்றவர் ஸ்ரீமதி சண்முகவடிவு அம்மாள். பாரம்பரியமாக இசைக் குடும்பத்திலிருந்து வந்த சண்முகவடிவு அம்மாள் வீணை வாசிப்பதில் தான் ஒரு வித்தகியாக விளங்கியது மட்டுமின்றி தனது மகளான எம். எஸ். சுப்புலஷ்மி அவர்களையும் உலகம் புகழும் இசை வித்தகியாக வளர்த்தெடுத்த பெருமையையும் கொண்டிருந்தார்.

Page 57
மொக்க போகும் பாகம்-5
போபா-பார்ப்பு பார்!
பேய்மவர்ப் பயப்படம்
புகைக் கட்டுட்டான்.
ஸ்ரீமதி சண்முகவடிவு அம்மாள்
ஸ்ரீமதி சண்முகவடிவு அம்மாளின் தந்தையார் எம்.எஸ்.சுவாமிநாதம் மிகுந்த சங்கீத ஞானமும் சாஸ்திர அறிவும் இறை பக்தியும் மிக்க பண்பாட்டாளன். தாயார் ஸ்ரீமதி அக்கம்மாளும் தனது துணைவரைப் போலவே இசை ஞானமும் சங்கீதத்தில் மிக்க ஆர்வமும் வயலின் வாத்தியத்தில் அபாரமான தேர்ச்சியும் மிக்கவராக விளங்கினார்.
இசை ஞானத்தில் ஊறிய இத்தம்பதிக்கு 1889 ஆம் ஆண்டு பங்குனி மாதம் பதினேழாம் நாள் ஒரு பெண் குழந்தை பிறந்தது. பெற்றோர் அக்குழந்தைக்குச் சண்முகவடிவு எனப் பெயரிட்டனர்.
உயர்தர இசைக்குப் பெரும் சக்தியுண்டென்பர். அவ் விசை, கேட்போர் செவிகளைக் குளிர வைக்கும். இதயம் புத்துணர்ச்சியால் பூரிக்கும். மூளை புதிய வலுவுடன் உற்சாகமாகத் தொழிற்படும். பெற்றோரின் இத்தகைய இசைச் சூழல் சண்முகவடிவுக் குழந்தையின் உணர்வுகளையும் மெல்ல வருடி அவரையும் மெதுவாக இசையோடு இணைத்தது. எனவே, பெற்றோரும் மிக்க உற்சாகத்துடன் தம் குழந்தைக்கு ஏடு தொடக்கியதோடு இசை பயிலவும் ஒழுங்குகளை மேற்கொண்டனர்.
சண்முகவடிவு அம்மாள் வளர்ந்து வரும் போதே, பாடிப் பல கச்சேரிகளைச் செய்யக் கூடியதாகவன்றிக் குரல்வளம் சிறிது குன்றிக் காணப்பட்டமையால் கலைத்தாயின் கரங்களில் தவழும் தலைசிறந்த இசைக் கருவியான வீணை வாத்தியத்தையே கற்கத் தொடங்கினார்.

கலைக்கேசரி
57
இயற்கையின் ஓசையையே இனிய சங்கீதமாக உணரும் சண்முகவடிவு அம்மாளுக்கு வீணையின் இசை மதுரமாக ஒலித்து மென்மேலும் அதனை ஈடுபாட்டோடு பயிலத் தூண்டியது.
சண்முகவடிவின் தாயார் ஸ்ரீமதி அக்கம்மாளின் வயலின் வாசிப்பை
அவதானித்த பெரும் வித்துவான்களெல்லோரும் குறிப்பாகத் திருக்கோடிக் காவல், ஸ்ரீ கிருஷ்ணய்யர், ஸ்ரீ முத்தையா பாகவதர் போன்றோரெல்லாம் வியந்து பாராட்டியுள்ளனர். அத்தகைய பெரும் புகழ்வாய்ந்தோரெல்லோரும் சிறுமி சண்முகவடிவு இசைக்கும் வீணை நாதத்தைக் கேட்டு
மகிழ்ச்சி பொங்க வாழ்த்தி ஊக்கப்படுத்தினர்.
சிறுமியும் உற்சாகத்தோடு பயிற்சி பெற்று இளம் வயதிலேயே கச்சேரி செய்யவும் தொடங்கினாள். வீணையின் இனிய கானத்தில் தம்மையே தொலைத்தவர்கள், வீணை வாத்திய இசையை நுட்பமாகக் கையாளும் முறையை ஆழமாக அவதானித்தவர்கள் எனப் பலதரப்பட்டோரும் இவரின் இசைத் திறமையை புகழ்ந்து பேசவே செய்தனர். இதனால் இவருடைய பெயரும் புகழும் எங்கும் பரவியது.
விழாக்கள், சங்கீத சபைகள், கல்யாண வைபவங்கள் எனப் பல கொண்டாட்ட வைபவங்களின் போதெல்லாம் சண்முக வடிவு அம்மாளின் வீணைக் கச்சேரி முக்கிய இசைவிருந்தாக மேற்கொள்ளப்பட்டது.
சண்முகவடிவு அம்மாளின் இசைக் கல்வி துரித வளர்ச்சியை அடையவும் பெற்றோர் அவரது திருமணம் பற்றிய பேச்சுவார்த்தையைத் தொடங்கினர். அம்மாளின் வீணை இசையில் மனம் லயித்த பெரும் இசை ரசிகரான பி.எஸ். சுப்ரமணியம் சண்முகவடிவு அம்மாளின் கரம் பற்றினார்.
வக்கீல் தொழிலில் ஈடுபட்டிருந்த துணைவரின் ஆதரவோடு சண்முகவடிவு அம்மாளின் இவ்வாழ்க்கை இனிதே தொடங்கியது. திருமணத்திற்கு முன்னர் தன் ஊரிலேயே வீணைக் கச்சேரிகளை நடத்திப் பெரும் புகழ் சம்பாதித்த சண்முகவடிவு அம்மாள், கணவரின் உதவியோடு தமிழ் நாட்டில் தஞ்சை, திருச்சி, இராமநாத புரம் எனப் பல்வேறு ஊர்களுக்கும் சென்று வீணைக் கச்சேரியை விஸ்தாரமாக நிகழ்த்திப் பல ரசிகர்களின் பாராட்டுதல்களைப் பெற்றதோடு புதுப்புது ரசிகர்களையும் பெற்றுக் கொண்டார்.
பெற்றோருடன் சிறுமி சண்முகவடிவு வாழ்ந்த போது, தாயாரின் வயலின் இசையை ரசித்துப் புகழ்ந்தும் அவரது மகள் வீணை வாசித்த போதும் அவதானித்து ஆசீர்வதித்ததையும் நினைவு கூர்ந்த மாபெரும் இசை மேதை திருக்கோடிக்காவல் கிருஷ்ணய்யர் தனியாகவே இத்தனை அழகாக வீணைக் கச்சேரி பண்ணும் இன்றைய சண்முகவடிவின் கச்சேரிகளையும் கவனித்தார். அம் மேதையின் மனதிலே அம்மாளைப் பற்றிய சரியான
தி

Page 58
கலைக்கேசரி து 58
Tக
மதிப்பீடொன்றை மேற்கொண்டு இவரது திறமையை அளவிட வேண்டுமென்ற ஆவல் தலைதூக்கியது.
மிகச் சிறு வேறுபாடுள்ள ஒரே மாதிரியான ராகங்களை உதாரணமாக பைரவி - முகாரி, தர்பார் - நாயகி போன்ற ராகங்களை வாசித்துக் காண்பிக்கக் கேட்டார். அத்தோடு ராகதானம், சவுக்க, மத்திமகாலப் பல்லவிகள் ஆகியவற்றை வாசிக்கக் கேட்கவும் எவ்வித தங்குதடை இன்றி மிக இலகுவாக இப்பரீட்சைகளில் சிறப்பாகத் தேறினார். பரீட்சகரே திகைக்குமளவில் அம்மாளின் இசை ஞானம் வெகு துல்லியமான அறிவுடன் இருந்தது. கிருஷ்ணய்யர் பெருமகிழ்ச்சியடைந்தார். பல்வேறு ஊர்களிலும் மிகச் சிறந்த முக்கிய சம்பவங்களின் போதெல்லாம் கூட அம்மாளின் வீணைக் கச்சேரி இடம் பெறும் வண்ணம் காய்களை நகர்த்தினார்.
ஐயருடைய பரீட்சையின் பலனால் அம்மாளுடைய புகழ் மென்மேலும் பரவியது. மாபெரும் வித்வான்களும் கூட அம்மாளின் இசையறிவின் ஆழத்தையும் அறிவுப் பரப்பையும் வியந்து நோக்கினர். பல இசை வித்துவர்களே இவரிடம் வந்து இசை நுட்பங்களையும் சாஸ்திரங்களையும் கற்றும் விவாதித்தும் தம் அறிவைப் - பெருக்கிக் கொண்டனர்.
இத்தனை அருட் கொடைக்கும் பாத்திரமான இவர் தம் இல்லத்தில் வருடா வருடம் தியாகராஜ சுவாமிகளின்
தன் அருமை மகள் எம்.எஸ்.சுப்புலக்ஷமியின் அற்புதமான குரல் வளமும், சங்கீத ஆர்வமும் கணவரைப் பிரிந்து துயரத்தில் மூழ்கியிருந்த சண்முகவடிவு அம்மாளுக்கு, ஓரளவு ஆறுதலைத் தந்தன.
உற்சவத்தை மிகச் சிறப்பாக நடத்தி வந்தார். இவ் வைபவத்திற்குப் பெரும் பெரும் இசை வல்லாளர்கள், வித்வான்கள் எனப் பலரும் வந்து தம் குரு பக்தியை இசை மூலம் தெரிவித்துப் பாடி மகிழ்ந்தனர். வாய்ப்பாட்டு, வாத்திய இசையென இசை வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்ந்தது. பெண் ஒருத்தி கற்றிருந்தால் ஒட்டுமொத்தமாக அச்சமூகம் முழுதுமே கல்வி பெற்றதக்குச் சமம் என்பதற்கிசையவே அம்மையாரின் அறிவு பலருக்கும் பயன்பட்டது.
இந்த இனிய இசைக் குடும்பத்தில் மூத்தபிள்ளை எம்.எஸ்.சக்திவேல். இவரோடு இரு சகோதரிகள். ஒருவர் உலகப் புகழ்பெற்ற கோகிலகான இசைவாணி எம். எஸ். சுப்புலஷ்மி எனப் பெரும் புகழ் ஈட்டியவர். மற்றவர் வடிவாம்பாள். இவர் இளம் வயதிலேயே அகால

கண)ெ
மரணமடைந்து விட்டார். சக்திவேல் இளமையிலேயே மிருதங்க வாத்தியத்தைப் பயின்று அதில் புலமை மிக்கவராய் விளங்கினார். எம்.எஸ்.சுப்புலஷ்மி அம்மாளை இளமையில் 'குஞ்சு' எனச் செல்லமாக அழைப்பர். இவர் சிறு குழந்தையாக மழலை பேசும் போதே தந்தையார் பி.எஸ்.சுப்பிரமணியம் இயற்கை யெய்தி விட்டார்.
கணவனை இழந்த துயரில் மூழ்கியிருந்த அம்மாளுக்கு சுப்புலஷ்மிக் குழந்தையின் தேன் குரல் மனதில் ஒரு அதிர்ச்சியையும் ஆறுதலையும் ஈந்தது. பள்ளத்தை வெள்ளம் நாடி நிரவல் செய்வது போல் கணவரின் இழப்பைக் குழந்தையின் இசை ஓரளவு மறக்கச் செய்தது. தனது வீணை இசையையும் வெல்லுந் தகைமையான தன் மகளின் இனிய கானம் அதுவும் ஆறுகட்டை சுருதியில் பாடும் வல்லமை அவரைக் காந்தர்வ உலகிலேயே சஞ்சரிக்கச் செய்தது.
பரம்பரை பரம்பரையாகத் தாமெல்லாம் கற்றுத் தேறிய அதே இசைப் பாதையில் மெல்ல மெல்லப் பயணிக்க மகளைக் கைப்பிடித்து அழைத்து வரவும் அந்த அமானுஷ்ய ஆற்றல் கொண்ட இசைக் குழந்தை துள்ளிப் பாய்ந்து துரித நடையில் பயணிக்கத் துணிந்து விட்டது.
வாய்ப்பாட்டு இசையினால் தான் அடைய முடியாத உச்சங்களையெல்லாம் தனது புதல்வி வெகு இலகுவாகக் கடப்பதைப் பார்த்து அளவிலா மகிழ்ச்சியடைந்தார். அம்மாளுடைய வீணை இசையை கிராமபோன் கம்பனியார் ரிகார்டிங் செய்த போது, மகளுக்குத் தானே கற்பித்து 'மரகதவடிவம்' என்ற செஞ்சுருட்டி இராகப் பாடலையும் பாட வைத்துப் பதிவு செய்வித்தார். ரிக்காடிங் செய்த என்ஜினியர் அவ்விசைத் தட்டை இலண்டனுக்கு எடுத்துச் செல்ல அதில் பதிவாகியிருந்த 'மரகதவடிவப் பாடல் மேலை நாடுகள் எங்குமே பிரபலமாகிப் பத்து வயதாயிருந்த எம். எஸ். எஸ். அம்மாளுக்கு பெரும் புகழைத் தேடித்தந்தது.
சென்னை மாகாண கவர்னர் லோட் பென்ட்லண்ட் துரையவர்களின் இல்லத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் ஸ்ரீமதி சண்முகவடிவு அம்மாளின் வீணைக் கச்சேரி இடம்பெற்றது. அதனை மிகவும் ரசித்துப் பூரிப்படைந்த கவர்னர், அம்மாளுக்குத் தங்கப் பதக்கமும் பாராட்டிதழும் வழங்கிப் பெருமைப்படுத்தினார்.
வீணை வாணியாக வலம் வந்த அம்மாள் தான் குருவாக இருந்து கற்பித்த மகளை, எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர் களை இசையுலகிற்களித்த பெருமையை எல்லோரும் பாராட்டி மகிழ்ந்தனர். கர்நாடக இசைத் தொண்டில் மகள் கால் பதிக்கவும் அன்னையாரே அவரது முதல்தர ரசிகையாக இருந்து ஆசீர்வதித்தார். தனது இசைப் பயணத்தை மெதுவாகச் குறைத்தும் கொண்டார். இம் மாமேதைகளின் இசைத் தொண்டினை தமிழ் நாடு முழுவதும் இல்லை! உலகின் நாலாபக்கங்களுமே வியந்து போற்றிப் பாராட்டுகின்றன.'

Page 59
1411931191
இந்துசமய கலாசார அலுவல் பம்பலப்பிட்டி புதிய கதிரே சொற்பொழிவுகள் ஆகியவ படங்களை இங்கு காணலாம்

ல்கள் திணைக்களத்தின் நவராத்திரி விழா 21.10.2012 அன்று மாலை ரசன் மண்டபத்தில், இசைக்கச்சேரி, நாட்டிய நிகழ்ச்சிகள், சிறப்புச் ற்றுடன் சிறப்பாக நடைபெற்றது. விழாவின் சில நிகழ்ச்சிகளின்

Page 60
கலைக்க்ேசர் ) 60 இராமாயணம்
தலைமன்னார் முதல்
இராமர் பால ம
லை
;ெ
(குக
54
E HISe)
தலைமன்னாருக்கும், தனுஷ்கோடிக்கும் இடையில் இந்தியாவையும், இலங்கையையும் இணைக்கும் மணற்திட்டானது
இராமர் பாலம்
என அழைக்கப்படுகின்றது. 30 கி.மீ நீளமுள்ள இந்த சுண்ணாம்புக் கற்களால் ஆன ஆழமற்ற மணல் மேடுகள் மன்னார் வளைகுடாவையும் (தென்மேற்கு) பாக்குநீரிணையையும் (வடகிழக்கு) பிரிக்கின்றன. இந்த பாலத்தில், கடல் ஆழம் சுமார் மூன்று முதல் 30 அடி
தாயே உள்ளது. சில மேடுகள் கடல் மட்டத்திற்கு மேலாக சுமார் ஒன்று முதல் நான்கு அடிகள் உயரம் வரை உள்ளன. கடல் மட்டத்திற்குமேலாக சுமார் 16 மேடுகள் டெபின்றன. இந்தியாவுக்கு படகுகளில் அகதியாகச் செல்வோரை இந்த மணற் திட்டுகளிலேயே இறக்கி பரிதவிக்க விட்ட சம்பவங்கள் கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளன.
ஒருநாட்டின் கரையோரத்திலிருந்து பத்து கடல் மைல் தூரம் அந்நாட்டிற்குச் சொந்தம். அதற்கடுத்த பகுதி அனைத்துலகத்திற்கும், சொந்தம்.. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பல இடங்களில் 20 மைல் இடைவெளிகள் இல்லை. இந்த இடங்களில் இரண்டு நிலப்பரப்பிற்கும் இடையில் உள்ள தூரத்தை சரியாகப் பகிர்ந்து கொண்டுள்ளார்கள். இதன்படி இராமர் பாலத்தின் எட்டு மேடுகள் இலங்கைக்கும் எட்டு மேடுகள் இந்தியாவுக்கும் சொந்தமாக உள்ளன.
- தலைமன்னார் வெளிச்ச வீட்டின் அருகே முகாமிட்டிருக்கும் இலங்கை கடற்படையினர் இராமர் அணை மண்திட்டுகளை சுற்றுலா மையமாக மாற்றியிருக்கின்றார்கள், உல்லாசப் பயணிகளை கடற்படையினர் தமது படகுகளில் அழைத்துச் சென்று இந்த மணற் திட்டுகளை காண்பித்து வருகின்றனர். இதற்காக அவர்கள் நபரொருவருக்கு ரூபா 400 வீதம் கட்டணம் அறவிடுகின்றார்கள். தனிப்பட கடற் படையினரின் படகொன்றை கூலிக்கு அமர்த்துவதாயின் ரூபா 3600 வரையில் கட்டணம் பெறப்படுகிறது. காலை ஏழு முப்பது மணியிலிருந்து பிற்பகல் மூன்று மணிவரை இச்சேவை நடைபெறுகிறது. கடற்படையின் சுழியோடிப் பிரிவினர் படகுகளைச் செலுத்தும் மாலுமிகளாகக் கடமையாற்றுகின்றனர். புறப்படும் போது பிஸ்கட், குளிர்பானம் மற்றும் சொக்கலட் வகைகளை கடற்படையினர் அன்பளிப்பாக வழங்குகின்றனர். - 1915 ஆம் ஆண்டில் பிரித்தானியரால் கட்டப்பட்ட தலைமன்னார் வெளிச்ச வீட்டுக்கு அருகாமையில் இருந்து பயணிகள் படகில் ஏற்றப்படுகின்றார்கள். படகு

ம் தனுஷ்கோடி வரை
ணல் திட்டுக்கள்
கான
மெதுவாக மிதந்து தென்மேற்கு திசை நோக்கி பயணிக்கின்றது.
முன்னர் இராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவை நடைபெற்றபோது இராமேஸ்வரத்திலிருந்து கப்பலில் வரும் பயணிகள் சிரமமின்றி கொழும்பு செல்லும் புகையிரதத்தில் ஏறுவதற்கு வசதியாக அல்லது புகையிரதத்திலிருந்து சிரமமின்றி கப்பலில் ஏறுவதற்கு வசதியாக அமைக்கப்பட்டிருந்த பாலம் தற்போது பராமரிப்பார் எவருமின்றி துருப்பிடித்து இற்றுப் போய்க் கொண்டிருக்கின்றது. இதைக்கடந்து சுமார் 25 நிமிடங்கள் பயணிக்கும் போது இராமர் அணையின் முதலாவது திட்டு கண்ணுக்குத் தென்படத் தொடங்கி விடுகின்றது. - முதலாவது திட்டு சற்று பெரியதாகக் காணப் படுகின்றது. அது சுமார் இரண்டு கிலோமீற்றர்கள் வரையான நீளமும் சராசரியாக 500 மீற்றர் அகலமும் கொண்டதாக இருக்கின்றது என்ற தகவலை எமது படகைச் செலுத்திய கடற்படை படகோட்டி தெரிவித்தார். இரண்டாம் மூன்றாம் திட்டுகள் சராசரி பருமனைக் கொண்டதாக காணப்பட்டன. இத்திட்டுகள் கடல் மட்டத்துடன் காணப்படுவதால் கடலின் நீர் மட்டம் அதிகரிக்கும்போது அவை கடல் நீரினால் மூடப்பட்டும் பின்னர் கடல் நீர் மட்டம் குறையும் போது திட்டுகள் கண்ணுக்கு தெரிவதாகவும் உள்ளது. இப்பகுதியில் முற்பகல் பதினொன்றரை மணிக்கு கடல் ஒரு பெருக்கும் ஒரு வற்றும் கண்டுவிடும். இந்த கடல்பெருக்கிற்கும் வற்றுக்கும் உள்ள வேறுபாடு தென்பகுதியில் சுமார் மூன்றடியாகவும் வங்கக்கடலில் சுமார் 15 அடி அளவிலும் இராமர் அணைப்பகுதியில் இதற்கு இடைப்பட்டதாகவும் இருக்கும் என இப்பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் தெரிவித்தார்.
சுமார் 45 நிமிட கடற்பயணத்தின் பின்னர் நான்காவது மணற்திட்டில் காலடி பதிக்க முடிந்தது. இராமர் அணையின் நான்காவது மணற்திட்டில் கடற்படையின் காவலரண் ஒன்று காணப்படுகின்றது. மணல் திட்டுக்கு அழைத்துச் செல்லப்படும் பொது மக்கள் இந்த நான்காவது மணற்திட்டிலேயே இறங்கி விடப்படுகின்றார்கள். அவர்கள் இங்கு உலாவி வருவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். கடல் வற்றிப் பெருகும் நேரத்தைப் பொறுத்து சுமார் அரை மணித்தியாலம் முதல் ஒரு மணித்தியாலம் வரை இங்கு தரித்து நிற்பதற்கு அனுமதிக்கப்படுகின்றது. இந்த மணற்திட்டும் சராசரியாக ஒரு கிலோ மீற்றர்

Page 61
காண!
Tறன.
சுப்ரனெTITL)
நீளமுடையதாகவும் ஐந்து மீற்றர் முதல் 200 மீற்றர்கள் வரையில் அகலம் கொண்டதாகவும் காணப்பட்டது. ஆனால் இடையிடையில் வாய்க் கால்களினால் பிரிக்கப்பட்டிருந்தது. இரண்டடி ஆழமும் ஐந்தடி முதல் 10 அடி அகலமும் கொண்ட வாய்க்கால்களாக காணப்பட்டன. சராசரியாக இந்தத் திட்டு கடல் மட்டத்திலிருந்து இரண்டு அடி முதல் மூன்று அடி உயரம் கொண்டிருந்தது. இந்த மண்மேட்டில் மெரிமாலே என்ற ஒருவகை கடற் புல் தாவரம் வளர்ந்துள்ளது. மேலும் ஒன்றிரண்டு வகை தாவரங்கள் அங்கு வளருகின்றன. கடற்பசுக்கள் மற்றும் அரியவகை ஆமை இனங்கள் இந்த வட்டாரத்தில் அதிகம் வாழ்கின்றன. அவை பெரும்பாலும் மணற் திட்டுகளின் ஓரமாக புல் வளரும் இடங்களில் பருவக் காற்றிற்கேற்ப இடம்பெயர்ந்து இனவிருத்தி செய்து வாழ்கின்றன. - கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் தொடுவானம் போன்று தொடர்ந்து மணற்திட்டுகள் காணப்படுகின்றன. இவை ஐந்தாவது ஆறாவது என்று நேராக இல்லாது வளைந்து செல்கின்றன.
மன்னார் வளைகுடா என அழைக்கப்படும் இப்பகுதி பொதுவாக கடல்வாழ் உயிரினங்களின் சொர்க்கமாகத் திகழ்கின்றது. பவளப்பாறை இன்னொரு முக்கியமான இனம். பவளப்பாறைகள் ஒருவித சுண்ணாம்புச் சத்துக்களின் இறுக்கமாகும். கிளைகிளையாக பல
வர்ணங்களில் வளர்ந்துள்ளன. ..
சீதையை இராவணனிடம் இருந்து மீட்பதற்காக வானரங்கள் கட்டிய பாலம் பற்றி இராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது. 'யாருடைய துணையும் உதவியுமின்றி எனது அம்புகள் மூலமே சமுத்திரத்தை ஒருசொட்டுத் தண்ணீர்கூட இல்லாமல் வற்றச் செய்து, சமதரையாக்கி எனது வானர சேனையுடன் இலங்கை செல்வேன்' என்று இராமர் கூறுகின்றார். பாலம் எதுவும் கட்டாமலே அக்கரை சென்றடைய தன்னால் முடியும் என்பதை நிரூபிக்க சில பாணங்களை அவர் சமுத்திரத்தில் எய்ய, அந்த அம்புகளின் சக்தியால் சமுத்திரமே வறண்டுவிடுமோ என்ற நிலை உருவாகிவிட, சமுத்திரராஜன் கடலுக்கு அடியிலிருந்து எழுந்து வந்து 'பிரபுட என்னை மன்னியுங்கள்' கடலில் பாலம் கட்ட நான் உதவி செய்கிறேன். விசுவகர்மாவின் மகன் நளனை உங்களுக்குப் பாலம் கட்ட உதவியாகத் தருகிறேன்' என்று கெஞ்சுகிறார். விசுவகர்மாவின் மகன் கடலில் ஆழம் குறைந்த மேட்டுநிலப் பகுதியை தேர்ந்தெடுத்து, காட்டிய இடத்தில் வானரங்கள் பிரம்மாண்டமான மரங்களையும் மலைகளையும் குன்றுகளையும் அடியோடு பெயர்த்துக்கொண்டு வந்து கடலில் போட கடலில் ஒரு பாலம் உருவானது என்கிறார் வால்மீகி.
போர் முடிந்த பின்னர் ராமன் புஷ்பக விமானத்தில் பறந்து செல்கையில் சீதைக்கு மன்னார் குடாக்கடலைக் காட்டி பின்வருமாறு அதன் பெருமையைப் புகழ்வதாக

- கலைக்கேசரி
61
இராமாயணத்தில் இலங்கை - 24
ආදම්ගේ පාලම නැරබීමේ චාරිකා
ராமன் பாழம் சுற்றுல்லா
TOURS TO ADAM’S BRIDGE
>ா
நெடுந்தீவு
தனுஷ்கோடி
தலை மன்னார்
மண்திட்டுகள்

Page 62
கலைக்கேசரி 2
62
யுத்த காண்டத்தில் வரும் மீட்சிப்படலத்தில் 22 ஆவது பாடலொன்று அமைகின்றது.
''கங்கையோடு, யமுனை, கோதாவரி, நருமதை, காவேரி, பொங்கு நீர் நதிகள் யாவும், படிந்து அலால், புன்மை போகர் சங்கு எறி தரங்க வேலை தட்ட இச் சேது என்னும் இங்கு இதின் எதிர்ந்தோர் புன்மை யாவையும் நீங்கும் அன்றே”
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவின் புகைப்படத்தில் இந்த இராமர் பாலம் காணப்படுகின்றது. ஆனால் நாசா இதை இராமரால் கட்டப்பட்ட பாலம் என அங்கீகரிப்பதிலிருந்து விலகிக்கொண்டுள்ளது. நாசாவின் இணையத்தளமோ, கடலில் நடக்கும் இயற்கை மாற்றத்தால் உண்டான மணல் திட்டுக்களே அவை என குறிப்பிடுகின்றது. நாசா விண்வெளி நிலையத்தின் அதிகாரியான மைக்கேல் பிரவ்கசு அளித்த விளக்கம் பின்வருமாறு அமைகின்றது. "எங்கள் புகைப்படங்களை வைத்துக் கொண்டு சிலர் நாசா வெளியிட்ட படங்கள், இராமர் கட்டிய பாலம் என்பதையே நிரூபிப்பதாக் கூறி வருகிறார்கள். கடலுக்கடியில் இருக்கும் பொருளின் வயது, அதன் தன்மை போன்ற விவரங்களை, வெறும் - புகைப்படத்தை வைத்துக்கொண்டு கணக்கிட முடியாது. அப்படியே அதை மனிதர்கள்தான் உருவாக்கினார்களா என்பதை அந்தப் படத்தின் மூலம் உறுதி செய்ய முடியாது” - இந்தியாவுக்கும், இலங்கைக்குப் இடையேயான இப்பாலம் பல ஆர்வம்மிக்க ஆய்வுகளையும், சிந்தனைகளையும் தூண்டியுள்ளது. இந்தப் பாலத்தில் பல்வேறு அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அவ்வாறு ஆராய்ந்த பாரதிதாசன் பல்கலைகழகக் குழுவொன்று இந்த பாலம் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறது. சில புவியியல் வல்லுனர்கள் இராமர் பாலம் மனிதனால்
க/
இராமர் பாலத்தில் ஆங்காங்கே காணப்படும் மிதக்கும் கற்கள்

கட்டப்பட்டதென்று கருதினாலும், பலர் இப்பாலம் இயற்கையாகவே தோன்றியதாக கூறுகின்றனர்.
இந்திய விண்வெளி ஆய்வு நிைைலயத்தின் ஒரு அங்கமான விண்வெளி பயன்பாட்டு நிலையம் நடத்திய ஆராய்ச்சியின் முடிவு இப்பாலம் இயற்கையாக தோன்றியதாகக் கூறுகிறது.
சுண்ணாம்புக் கற்கள் மீது படிந்த மனல் திட்டுக்களின் மீது பாசிப்படிமங்கள் தோன்றி பாலம் போன்ற அமைப்பாக உருவானதாக அறிவியலாளர்கள் கூறுகின்றார்கள். வங்காள விரிகுடாவும், அரபிக்கடலும், இந்தியப் பெருங்கடலும் என மூன்று கடல்களும் அவ்விடத்தே ஒன்று சேருகின்றன. கடல் நீரோட்டங்கள் இவ்விடத்தில் எதிர் எதிர் திசைகளில் ஓடுகின்றன. அவற்றால் மணல் ஒன்று சேர்ந்து மேடுகள் ஆகின்றன என அறிவியலாளர்கள் விளக்குகின்றனர்.
விஞ்ஞானிகள் இது குறித்து மேலும் விளக்கும்போது, தென்மேற்கு, வடகிழக்கு பருவ காலத்தால் மாறி மாறி ஏற்பட்ட கடல் நீரோட்ட மாறுதலால் உண்டான மணல் திட்டு இதுவாகும் என்கின்றனர். ஆராய்ச்சியாளர்கள் 32 அடி ஆழத்திற்கு துளை போட்டு ஆராய்ந்ததில் சுண்ணாம்பு மற்றும் மணலே வெளிவந்ததாக
தெரிவித்துள்ளார்கள்.
- இந்த இராமர் பாலம் பகுதி பல புவியியற் சிறப்புக்களையும் வரலாற்றுச் சிறப்புக்களையும் கொண்டது. சில ஆயிரம் வருடங்களுக்கு முன் இலங்கையும் இந்தியாவும் ஒன்றாக இணைந்துதான் இருந்தன. அகலம் குறைந்த ஒரு நீண்ட திட்டாக இருந்தது. ஒரு கடும் புயல் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு "முன்னர் தோன்றிய போது கடல் அலைகள் இராமர் பாலத்தின் ஒரு பக்கத்திலிருந்து அடுத்த பக்கத்திற்கு சென்ற போது இராமர் பாலம் பகுதியில் சிறு பிளவு

Page 63
ஏற்பட்டது. படிப்படியாக மணல்பகுதி கடலுக்குள் செல்ல இராமர் பாலம் இன்றைய நிலையை அடைந்துள்ளது.
ஒரு சாராரின் விஞ்ஞானப் பார்வை இவ்வாறு இருக்க மேலும் ஒரு சாராரின் விஞ்ஞானப் பார்வை பின்வருமாறு அமைகின்றது. இராமர் பாலம் பற்றி அதன் கட்டுமானப் பொருட்களும், பாலத்தின் அமைப்பும் அது மனிதனால் கட்டப்பட்டது என்பதை உறுதிசெய்வதாக கூறுகின்றார்கள். தொல்லியல்துறை ஆய்வுகள் மனிதனின் நடமாட்டம் இலங்கையில் சுமார் 1,750,000 வருடங்களுக்கு முன்பே இருந்திருக்கிறது என்பதை முடிவுசெய்கிறது. இங்கு, இராமாயணம் நடந்ததாகச் சொல்லப்படும் திரேதாயுகம் 1,700,000 வருடங்களுக்கு முற்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அனுமன் தலைமையில் கடலில் பாலம் அமைத்து சென்றதால் இப்பாலம் வடமொழியில் நளசேது என்றும், தமிழில் திருவனை, ஆதிசேது, ராமசேது என்றும் மற்றும் ஆதாம் பாலம் என்றும் அழைக்கப்படுகிறது.
கடலியலாளரின் கருத்துப்படி, "நூறாண்டுகளுக்கு ஒரு மீட்டர் வரை கடல் மட்டம் உயர்ந்து வருவதால் 5000 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாட்டுடன் தரையால் இணைக்கப்பட்டிருந்த இலங்கை, தீவாகிப் போனது” என்பதைப் பல ஆதாரங்களுடன் சொல்கிறார். (ஆதாரம்: குமரி நில நீட்சி, ஜெயகரன்). ஆங்காங்கே கண்ணுக்கு தெரிந்தும், தெரியாமலும் இருக்கும் இந்த மணற்திட்டின் மேல், மேலும் கற்களைக் கொட்டி பாதை அமைக்கும் முயற்சிகள் இராமர் காலத்தில் நடந்திருக்கக் கூடும் என்று ஊகிப்பவர்களும் இருக்கிறார்கள்.
சேதுவை மேடுறுத்தி வீதிசமைப்போம்; சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம் என்று பாடினான் பாரதி. அவர் கூற்றுப்படி சேது என்பது இலங்கை வரை நீண்ட பாலம் ஆகும்.
- மிருணாளினி

2. கலைக்கேசரி
- 63
» கட.

Page 64
கலைக்கேசரி 64 நடனக் கலை
கை:
விஸ்.
(TAP')
ஒயிலாட்டம்
திருமதி கி. ஷர்மிளா ரஞ்சித்குமார்
விரிவுரையாளர், சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம்.
கலைகள் மனிதனின் உள் உணர்வின் பிறப்பிடம். கலையார்வம் ஒருவரின் மனதில் இயற்கையாக தோன்றுகின்ற ஒன்றாகும். உண்மையான உணர்ச்சியோடு பாமர மக்களும் ரசிக்கும் வகையில் விதிமுறை வகுப்பின்றி உருவாக்கப்பட்டதே நாட்டுப்புறக் கலைகள். பேச்சு மொழியைக் கண்டுபிடிப்பதற்கு முன்னால் மனிதனிடம் சைகை மொழி இருந்தது. அதில் அவன் உரையாடல்கள் நிகழ்த்தினான்; கவிதை இயற்றினான்; மனிதனது கவித்துவ உணர்வின் உந்துதலால் அவன் இயற்றிய ஆதிக் கவிதையே நடனமாகும்.
தமிழ்க் கலாசாரத்தின் ஒரு கூறாகத் தமிழ்க் கிராமியக் கலைகளை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட நிலை இன்று உருவாகியிருக்கிறது. நாட்டுப் புறவியல் என்பதற்கு பலர் பலவித தத்துவங்களைக் கூறினாலும் ச. அ. பிச்சை என்பவர் நாட்டுப்புறவியல்
பற்றிக் கூறுகையில் கீழ்க்கண்டவாறு எட்டுக் கூறுகளில் வரைவிலக்கணம் செய்துள்ளார்.
நாட்டுப்புறவியலானது, 1. வாய் மொழியாகப் பரப்பப்படுவது.
மரபு வழிப்பட்டதும் ஆசிரியரற்றதும். ஒரு வித வாய்ப்பாடுகளுக்குள் அடங்குவது. ஒரு குழுவினரால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. பல்வேறு வடிவங்களாகத் திரிபடைவது. சமூக சார்புடைமை கொண்டது. பண்பாட்டு எச்சங்களாகத் தொடர்வது.
- ன் ஃ ப் ம் ம் N

கிராமத்து மக்கள் நாட்டுப்புற நடனங்களை தெய்வமாக மதிக்கின்றனர். இந்த நடனக் கலையின் மூலமே அவர்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். பரம்பரை பரம்பரையாக இந்த ஆட்டத்தைத் தொழிலாகவே செய்கின்றனர். ஒவ்வொரு நாளும் பயிற்சி ஆரம்பிக்கும் போது பூமித்தாய் வழிபாடு, ஆசான்கள் வணக்கம், கருவிகள் வணக்கம் ஆகியவை அடங்கிய வழிபாட்டை செய்துவிட்டுத்தான் பயிற்சியைக் கூட மேற்கொள்கின்றனர்.
வழிபாட்டுப்பாடல் பெத்தவரே பெரியவரே எங்க வணக்கம். கலை கற்றவரே மற்றவரே எங்க வணக்கம் தாய்மொழிக்கும் தமிழ் மொழிக்கும் எங்க வணக்கம் வாழ்வளிக்கும் பூமித்தாய்க்கு எங்க வணக்கம் | கலை வளர்க்கும் ஆசான்களே எங்க வணக்கம் பாதம் தொட்டு கூறுகிறோம் எங்க வணக்கம் பயன்படுத்தும் கருவிகளே எங்க வணக்கம் புனிதமாக போற்றிக் கூறும் எங்க வணக்கம் நாட்டுப்புற நடனம் மனிதனோடு மனிதனை நேரடியாக மட்டுமல்லாது இதயத்தோடு இதயத்தை பிணைத்து வைக்கின்றது. இயற்கையோடு இயைந்து வாழும் சமூகத்தின் ஒட்டு மொத்தமான அல்லது தனிப்பட்ட உணர்ச்சிகளை நடனங்கள் பிரதிபலிக்கின்றன.

Page 65
ஒயிலாட்டத்தின் பின்னணி குழுவாக இணைந்து கைகளில் கைக்குட்டை வைத்து சுழற்றி அழகு வெளிப்படும் விதத்தில் ஆடும் ஆட்டம் ஒயிலாட்டம் எனப்படும். ஒயிலென்றால் அழகு, அலங்காரம், ஒய்யாரம் எனப் பொருள்படும். எனவே ஒயிலாட்டம் என்றால் அழகுள்ள ஆட்டம் எனப்படும். இக்கலை கோயில் திருவிழாவின் போதும் பொது நிகழ்ச்சிகளிலும் நிகழ்த்தப்படுகிறது. முன்னோர்களையும் ஊர் தெய்வங்களையும் வழிபடவும் அம்மன் விழாவிலும் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளிலும் மற்றும் கத்தோலிக்க தேவாலயங்களிலும் நிகழ்த்தப்படுகின்றது. பொதுவாக இக்கலையில் பெண்கள் பங்கேற்பதில்லை; பார்வையாளர்களாகவே உள்ளனர். ஒயிலாட்ட நிகழ்ச்சியில் பல்வேறு ஆட்டங்கள் ஒரு கதையின் வாயிலாக இணைக்கப்படுகின்றன. இக்கலை பெரும்பாலும் இரவு நேரத்திலேயே நிகழ்த்தப்படும்.
ஒயிலாட்டத்தின் தன்மை இந்நடனத்தை ஐந்தைந்து பேராக இருவரிசையில் ஆடுவர்; முதலில் கடவுள் வணக்கமாக கைகூப்பி நின்று ஒரு காலை மட்டும் தட்டி தாளத்திற்கேற்ப ஆடத் தொடங்குவர்.
அடுத்து சபை வணக்கம் பாடி ஆடும் போது, தரையை தொட்டு வணக்கம் செலுத்துவர். அதன்பின் ஆட்டம் மெதுவாகத் தொடங்கி உச்சநிலை அடையும். இடையில் களைப்பு ஏற்படும்போது பாட்டுப்பாடும் அண்ணாவி விசில் ஊதி ஆட்டத்தை நிறுத்துவார். இவ்வாறு ஆட்டத்தில் பல இடைவெளிகள் அமையும். ஆட்டத்தின் கடைசிப் பாடலுக்கு முன்னர் இடைவெளியில் அண்ணாவி நன்றியுரை கூறுவார். பின்னர் இறுதிப் பாடலில் தரையைத் தொட்டுக் கும்பிட்டு ஆட்டத்தை நிறைவு செய்வார்கள்.
இவ்வாட்டம் பாடல், உரையாடல், ஆடல் என்ற மூன்று நிலைகளைக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது உரையாடல் பகுதி வழக்கில் இல்லை. ஒயிலாட்டத்தின் அடவுகள் உடம்பின் கீழ்ப்பகுதியை சார்ந்தே அமைகின்றன. ஒயிலாட்டத்தில் கழுத்துக்குக் கீழும், இடுப்புக்கு மேலும் உள்ள பகுதி வளைவதில்லை. இது ஆட்டத்திற்கு கம்பீரத்தைத் தருகிறது.
அடவுகளின் வேகத்தைப் பொறுத்து 'தக்கு', 'காலம்' என பிரிக்கலாம். மெதுவாக ஆடுவது 'தக்கு' என்றும் வேகமாக ஆடுவது 'காலம்' என்றும் அழைக்கப்படுகின்றன. வேகமாக ஆடும் காலம், முதலாவது காலம், இரண்டாவது காலம், மூன்றாவது காலம் எனப் பிரிக்கப்படுகின்றது.
மேலும் ஒயிலாட்டத்தின் அடவுகளை அடிப்படையாகக் கொண்டு அடி, சாரி, தட்டு என்று மூன்று வகையாகப் பிரிக்கின்றனர். அண்ணாவி முதல் சந்தத்தைப்பாட, குழுவினர் அதைத்திருப்பிப் பாடி ஆடுதல் என்ற

三、5mm06 BB
|65
言葉
1:1-11TH AUTO中,
劉
தமிழ்5ெங்கம்
。 TAMIL LADIis AssociATION
發表
至” 法律法:
行为

Page 66
கலைக்கேசரி தி. 66
இம்ராம் ல 6 7 ம் ( 7மயம்
மாந:
10 வடு.
க.ே
நிலையில் இவ்வாட்டம் அமைந்திருக்கும். ஒயிலாட்டம் பற்றிய ஒரு பழம்பாடல் அதன் தன்மையை விளக்குகிறது.
ஆளோடு ஆள் உரசாமல் - உங்கள் ஆளிலே ஒரு முழம் தள்ளி நின்று காலோடு காலு உரசாமல் - உங்கள் கைப்பிடித் துணி தவறாமல் மேலோடு மேலு உரசாமல் - உங்கள் வேர்வை தண்ணி சிதறாமல் ஆடவேண்டும் என்று அப்பாடல் கூறுகிறது. -
கால் தரையை நோக்கி வலுவுடன் இயங்கும்; சலங்கை ஒலி நன்றாகக் கேட்கும்; பெரும்பாலும் நேர் கோட்டு வடிவ முறையிலேயே இந்நடனம் ஆடப் படுகிறது. இருப்பினும் வட்ட வடிவத்திலும் பல அடவுகள் ஆடப் படுகின்றன.
ஒயிலாட்ட அடவுகள் ஒயிலாட்டத்தில் மொத்தம் 12 அடவுகள் உள்ளன. இந்த பன்னிரெண்டு அடவுகளையும் மூன்று வடிவ முறைகளில் ஆட வேண்டும்.
அவை : அ. நேர்வரிசையில் நின்று ஆடுதல்
(நான்கு அடவுகள்) 1. சாதாரண ஒயில் அடவு 2. தட்டம் போடும் அடவு 3. குத்தாட்ட திரும்பல் அடவு 4. சலசலப்பு அடவு | ஆ. இருவரிசையில் நின்று ஆடுதல்
(நான்கு அடவுகள்) 5. தன்னாள் சலசலப்பு அடவு 6. சிங்கிடி சிக்கா அடவு 7. கைவெட்டும் அடவு 8. ஓடம் அடவு

இ. வட்டத்தில் நின்று ஆடுதல்
(நான்கு அடவுகள்) 9. கும்பிட்ட அடவு 10. கைவெட்டும் அடவு 11. வட்ட குத்தாட்ட திரும்பல் அடவு 12. வட்ட சலசலப்பு அடவு
ைேவ
என்ன
ஒயிலாட்டத்திற்கு பயன்படும் ஆடை அலங்காரம் மற்றும் இசைக் கருவிகள் கிராமியக் கலைகள் மக்களின் கலை அதாவது பாமர மக்களின் கலை என வர்ணிக்கப்படுகிறது. கலைஞர்களின் ஆடை அலங்காரமும் பக்க இசைக் கருவிகளின் உந்துதலினால்தான் கிராமிய நடனங்கள் தற்போது எல்லாத் தரப்பட்ட மக்களாலும் ரசிக்கப்படுகிறது. ஒவ்வொரு நடனங்களுக்கும் வித்தியாசமான உடை அமைப்புக் காணப்படும்.
ஒயிலாட்டத்தில் வாய்ப்பகுதி தோலால் கட்டப்பட்ட குடம், தவில், சிங்கி, டோலக் போன்ற கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. காலில் கட்டப்படும் சலங்கை முக்கியமான இசையாக விளங்குகிறது. முன்பு தப்பு இசைக்கருவியாக பயன்படுத்தப்பட்டது. இப்பொழுது, பானை தாளம் பயன்படுத்தப் படுகிறது. இவை எல்லாவற்றிற்கும் கட்டுப் பாட்டைத் தருவது சிங்கி இசைக் கருவியாகும்.
பொதுவாக ஆண்கள் வெள்ளை வேஷ்டியை தார்பாய்ச்சிக் கட்டிக் கொள்வர்; மஞ்சள் நிற ஜிப்பா சட்டை அணிந்து கொள்வர்; தலையில் தலைப்பாகையும் இடையில் இடைக் கச்சையும் கட்டிக் கொள்வர்; கைகளில் கைக் குட்டைகள் வைத்துக்கொள்வர்; கைக் குட்டைகள் ஒரே நிறத்தில் இருக்க
வேண்டும் என்ற நியதி இல்லை.
தற்காலத்தில் ஆண், பெண் இரு பாலாரும் ஆடி வருகின்றனர். சில மேடை நிகழ்வுகளில் பெண்கள்
மட்டுமே ஒயில் ஆடுகின்றனர். பெண்கள் ஆடும் போது புடவை கட்டி தலையில் கொண்டையைச் சுற்றிப் பூவைத்து
அலங்காரம் செய்திருப்பர்.
நாட்டுப்புற நடனக்கலைகள் பாமரமக்கள் கலை நுணுக்கத்துடன் ஆடிவந்தகலை என்ற நிலை தற்போது தோன்றியுள்ளது. சமுதாய மாற்றத்திற்கு இக்கலைகள் வழி வகுக்கின்றன. கலை இலக்கியங்களைப் பேனுதல், ஆய்வு செய்தல் மூலமாக மத நல்லிணக்கத்தையும் மனித நேயத்தையும் உருவாக்க முடியும்.'

Page 67
10 വിമാ
4 5

இலங்கையின் அரவணைப்புடன் கூடிய
புன்முறுவலை கண்டறியுங்கள்!
அது பல்லாண்டு காலமாக எண்ணற்ற இதயங்களை அரவணைத்த பெருமைமிக்க
ஒரு பாரம்பரியத்தின் பகுதியாகும்.
இலங்கையிலுள்ள நாம் ஒவ்வொரு பயணத்தையும் மறக்க முடியாத அனுபவமாக மாற்ற நேசத்துடன் கூடிய தனித்துவமான பண்பினை அதி நவீன தொழிநுட்பத்துடன் இணைத்துள்ளோம்.
அழையுங்கள் 1979
Srilankan
WWW.Sankan.com
Airlines You'rg Our world

Page 68
S NINEWELLS
| HOSPITAL
ART & EX
Painting, Drawing
for 2013 calendar Theme: health care
art work must reflect health related to children or maternity
Drop Off: Art work could be posted or o
Ninewells Care Mother & Bab 55/1, Kirimandala Mawatha,
Date Venu
| 4
MAALUM
Alainal A
Printed and published by Express Newspapers (Ce

TODLO
CONTEST HIBITION
, Print making Photography and More!
Age Group : Below 12 Year Due Date : 10th of November 2012
Size
: 12X14
Please indicate the name & contact details of the contestant on the back of the painting.
dropped off at y Hospital (pvt)Ltd Jarahenpita, Colombo 5.
-t Exhibition
: 16th - 18th of November e :
Ninewells Hospitals, 55/1, Kirimandala Mawatha, Narahenpita, Colombo 05.
ylon)(Pvt)Ltd,at No.185, Grandpass road, Colombo -14, Sri Lanka.