கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகவிழி 2014.07

Page 1
யூலை - 2014
இ56
மனித மேம்பாட்டின் உயிர்ப்பு மிகு கல்
விழி 10 பார்வை 107
'www.viluthu.org

பின்
விக்காய்...
ISSN 1800-1246
- 44 டாப் 1
விலை: 100/=

Page 2
இக
ஆ, 7 7 யத்துவ
உள்ளே....
உயர் மட்டச் சிந்தனையில் ஆக்கத்திறன் விருத்தி
- ல் க ம்
உலகளாவிய ஆசிரியர் கல்வியின் புதிய போக்குகளு இலங்கையின் ஆசிரியர் கல்வியில் அதன் விளைவுக
கல்வித் துறையின் நவீன போக்கில் உட்படுத்தல்
4. வினைத்திறன் மிக்கதாக ஆரம்ப பாடசாலையை ஆக்
5. இலங்கையில் பாடசாலைகளில் உபயோகப்படுத்தப்பா
ஆறாந்தர தமிழ் பாடநூலில் உள்ள ஒரு பாடம் பற்றிய
6. இன்றைய சமூகத்தில் மூலிகை விழிப்புணர்வூட்டலில் 7. பெற்றோர் கற்க வேண்டியது
8. சகிப்புத் தன்மை
நாங்களும் மாணவர்கள்தான்!
10. பின் நவீனத்துவ கவிதை
11. பாடசாலையின் அபிவிருத்தியில் மாணவர், குடும்பம்,
மற்றும் சமூகத்தின் உயிரோட்டமான பங்களிப்பு
12. தமிழில் சொல்லாக்கம்
அகவிழியில் இ
பொறுப்பு
AHAVILI 3, Torrington Avenue
Colombo 07 |
Tel: 011 250 6272 E-mail: ahavili.viluthu@gmail.com
to

விக
- நேக்கு...
- 131800-1246
ளும்
தவோம்
டும் ப குறிப்பு
பாடசாலைகளின் பங்கு
* - * - 9 2 எ 8 ல் 3 3 3
டம்பெறும் கட்டுரைகளுக்கு அதன் ஆசிரியர்களே , கட்டுரைகளில் இடம்பெறும் கருத்துக்கள் அகவிழி" யின் கருத்துக்கள் அல்ல.
பொதுசன நூலகம் யாழப்பாணம்.

Page 3
(2) 2
ஆசிர்
ச. இந்தி நிர்வாக .
சாந்தி சச்சி நிறைவேற்றுப் பன
ஆசிரியர் க.சண்மு. பத்மா சோ
ஆலோ
பேராசிரியர் சோ. சந்திரசேகரம்
முன்னாள் கல்விப் பீடாதிபதி கொழும்புப் பல்கலைக்கழகம்
பேராசிரியர் தை. தனராஜ் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம், கல்விப்பீடம்
கலாநிதி சசிகலா குகமூர்த்தி
சிரேஷ்ட விரிவுரையாளர் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்
லெனின் மதிவானம் பிரதிக் கல்வி வெளியீட்டு ஆணையாளர்
கல்வி அமைச்சு
வீ. தியாகராஜா சிரேஷ்ட ஆலோசகர், சமூக விஞ்ஞானக் கற்கைகள் துறை,
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்
கே. சாம்பசிவம் தேசிய ஆலோசகர்: கல்வி முகாமைத்துவம்
பர்
என
ஆசிரியரிடமிருந்து............... இன்றைய நிலையில் யாவர்க்கும் கல்வி என பிரஸ்தாபிக்கப்பட்டாலும் அது நடைமுறையில் எந்த அளவிற்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது கேள்விக்குறியே! கல்வியின் முன் எல்லாப் பிள்ளைகளும் சமமாக மதிக்கப்பட வேண்டும். நடத்தப்பட வேண்டும். இது அவர்களது உரிமை என்றெல்லாம் கூறப்படுகின்ற போது பல சாத்தியக் குறைபாடுகள் ஏற்படுகிறது. கல்விசார் அமைப்புக்கள் கல்வியில் சமத்துவம் என்பதை பல நிலைகளில் வலியுறுத்தி வருகின்றன.
சமத்துவம், சமகணிப்பு, சமசந்தர்ப்பம், சமவாய்ப்பு, சமவுரிமை, வெளிப்பாட்டு ஆக்கத்தில் சமத்துவம், நுழைவிலே சமத்துவம் என கல்வி உரிமை தொடர்பான
N அகவிழி ஜூலை 2014

15
யர் ரகுமார் ஆசிரியர் தானந்தம் ரிப்பாளர்(விழுது)
ர் குழு நலிங்கம் மகாந்தன்
சகர் குழு
பேராசிரியர் வ. மகேஸ்வரன்
தலைவர் தமிழ்த்துறை பேராதனைப் பல்கலைக்கழகம்
து.ராஜேந்திரம் முன்னாள் முதுநிலை விரிவுரையாளர் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்
க.இரகுபரன் முதுநிலை விரிவுரையாளர் தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
பேராசிரியர் துரை மனோகரன்
தமிழ்த்துறை பேராதனைப் பல்கலைக்கழகம் திருமதி. அருந்ததி ராஜவிஜயன்
ஆசிரிய ஆலோசகர் கொழும்பு கல்வி வலயம்
சமத்துவம் பல்வேறு பரிமாணங்களில் வலியுறுத்தப்படுகின்றது. அத்துடன் அரசியலில் சமவுரிமை , பொருளியலில் சம்பங்கீடு, பால்நிலையில் சமத்துவம், இனத்துவ நிலையில் சமத்துவம், நாடுகள் மற்றும் பிரதேச நிலைகளில் சமத்துவம், சமநீதி முதலான எழுச்சிகள் கல்வியிலே சமத்துவத்தை தொடர்புபடுத்தியும் மீள வலியுறுத்தியும் வருகின்றன.
சமூக இருப்பிலே அடிநிலை மாற்றங்களை ஏற்படுத்துவதன் வாயிலாக கல்விச் செயற்பாடுகளை ஆற்றலுடன் முன்னெடுக்க முடியும் என்ற “மாக்சிய" உளவியல் அணுகுமுறைகள் கல்விச் சமத்துவ நடவடிக்கைகளுக்கு மேலும் வலுவூட்டி நிற்பதைக்

Page 4
காணலாம். கல்வியை முன்னெடுப்பதற்குரிய வேண்டத்தகாத தடைகளை நீக்குதல், கல்வி உரிமை சார்ந்த எழுவலுவிற்கு அங்கீகாரம் தருவதாக அமையும்.
சமூக இடைவெளிகளால் பொதுக்கல்வியில் இடைவெளிகள் உருவாகுவதைத் தவிர்ப்பதன் மூலம் சமகாலக் கல்வியில் உயர் பெறுமானத்தை அடையக் கூடியதாக இருக் கு மென கல்வியியலாளர்கள் கூறிவருகின்றனர். பாலர் கல்வியில் இருந்து உயர்தரம் வரை பதின்மூன்று ஆண்டுகள் வழங்கப்படுகின்ற கல்வி இந்த இடை வெளிகளைக் குறைப்பதற்கும் அகற்று வதற்குமான வாய்ப்பாக மாற வேண்டும் என்றும் மேலும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அவ்வகையில் இலங்கையில் தமிழ்க் கல்விச் சூழலும் தமிழ்ச் சமூகமும் பல்வேறு போரியல் துன்பியல்களுக்கும் மனிதவளம், பொருளாதார வளம், பௌதீக வளங்களின் அழிவுகளுக்கும் முகங்கொடுத்த நிலையில் இன்று மீளவும் ஆரம்பிக்கப்பட்டு குறிப்பாக 2009 ஆம் ஆண்டிற்குப் பிறகு வன்னி மாவட்டத்தினுடைய குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்குரிய கல்வி நிலை பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து வருவதாக அம்மாவட்டங் களின் முறைசார் கல்விக் குறிகாட்டிகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் இவ்விரு மாவட்டங்களிலும் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பின்பே பல பாடசாலைகள் சொந்த இடங்களிலும் ஒருசில பாடசாலைகள் மாற்றிடங் களிலும் இயங்கிவருவதாகக் அக்குறிகாட்டிகள் மேலும் தெரிவிக்கின்றன.
கல்விசார் ஆளணித்தேவைகள், முறைசார் மற்றும் முறைசாரா கல்விப் பிரிவிற்கான கட்டிடத் தேவைகள், பாடசாலைகளின் தளபாடத் தேவைகள் (வலய மற்றும் கோட்ட மட்டத்தில்), தொழில் நுட்பம் சார் வளநிலையங் களுக்கான கட்டிடத் தேவைகள் என இம்மாவட்டங்களுக்கு வழங்கப்படவேண்டிய பௌதீக மற்றும் மனித , பொருளாதார வளங்கள் மிகப் பெரியது.
பாரியளவிலான வளப்பற்றாக்குறைகளைக் கொண்டு இயங்குகின்ற இவ்விரு மாவட்டங்களிலும் உள்ள பாடசாலைகளில் மாணவர்களின் கல்விசார் அடைவு மட்டத்தினை உயரிய நிலையில் எதிர்பார்ப்பது எந்த அளவிற்குச் சாத்தியமானது? போரியல் நெருக்கீட்டுக்கு உட்பட்ட இவ்விரு மாவட்டங்களிலும் விசேட மாற்றுக் கல்விச் செயன்முறை பற்றிய தேடலும் சிந்தனையும் பெரிய அளவில் விரிவாக்கம் பெறாத நிலையில் மாற்று அணுகுமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கான தேவைப்பாடு மிக அவசியமானது என உணரப்பட்டுள்ளது. கல்வியில் சமூக நீதியை எட்டுவதற்கான முகாமைப் பண்பாடு விரிவுபட வேண்டும் எனவும் அல்லது அவ்வாறான பண்பாட்டு உருவாக்கத்திற்கான ஆளணியினரை உரு வாக்க வேண்டும் எனவும் இவ்வகையான குறைபாடுகளை இனங்கண்டு நிவர்த்தி செய்யும் போதுதான் ஓரளவிற்கேனும் இம்மாவட்டங்களின் கல்வியில் உயர் பெறுமானத்தை

எய்த முடியும் என்றும் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இவ்விரு பிரதேசங்களில் வலய, மாகாண அமைச்சு மட்டங்களை அணுகி பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அணுகுமுறைகளை ஆராய்ந்த போது வெறும் ஆறுதல் அறிவுரைகளைக் கூறி வளப்பகிர்வு சமகல்வி வாய்ப்புக்குரியதாக அமையவில்லை எனக் கூறுகின்றனர். சில பாடசாலைகளில் அவ்வாறு வளங்களை ஏற்படுத்திக் கொடுத்தாலும் திறமையற்ற நிர்வாக நடவடிக்கைகளால் பராமரிப்பின்றி மிக விரைவில் சீர்கெட்டுப் போகின்ற நிலைமை இருப்பதாகவும் கூறுகின்றனர். மேலும், வளப்பகிர்வின் உச்சப் பயன்பாடு சரியான முறையில் பயன்படுத்தப்படாமல் இருப்பதாகவும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் குறை கூறுகின்றனர். இந்நிலமையில் இப்பிரதேசங்களில் கல்வியைப் பாதிக்கும் காரணிகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடுகின்றனர்: » வறுமைக் கோட்டின் கீழ் வாழ்க்கை நடாத்தும் குடும்பங்கள். » படிப்பறிவு குறைந்த பெற்றோர்கள். » மாணவர்களின் இரவு நேர சுய கற்றலைத் தூண்டு
வதற்கான பின்னணி இல்லாமை. » பெற்றோர்கள் கல்வியில் போதிய விழிப்புணர்வின்மை. » பல பாடசாலைகளில் நிர்வாக மட்டக் குறைபாடுகள். » வருடக் கணக்காக பாடத்திற்கு உரிய ஆசிரியர்கள்
நியமிக்கப்படாமை. » கட்டிட வளப் பற்றாக்குறையினால் ஒரே வகுப்பறையில் பல தரங்களை சேர்ந்தோர் கல்வியைத் தொடர்ந்து கற்கின்ற நிலமை . » புலமைப் பரிசில் சித்தியெய்திய மாணவர்கள் நகர்ப்
புறங்களை நாடிச் செல்லுதல். » மரபுரீதியான கற்பித்தல் முறை மற்றும் கற்பித்தலில் புதிய உத்திகளைப் பயன்படுத்துவதற்கான பயிற்சி
ஆசிரியர்களுக்கு வழங்கப்படாமை. » குறைந்த வயதுத் திருமணம் (பாடசாலை செல்லும் காலம்)
எனக் கல்வியைப் பாதிக்கும் காரணிகளின் பட்டியல் நீண்டே செல்கின்றது. இவ்வாறான சூழ்நிலையில் இப்பிரதேசங்களில் கல்வி நிலை எவ்வாறு மேம்பாடடைய முடியும்? இது விடயமாகக் கல்விப் பணிப்பாளர்களின் ஆய்வுகளும் விளக்கங்களும் இடம்பெறாமலில்லை, ஆயினும் இவை வெறுமனே ஆய்வுகளும் விளக்கங்களுமாக இருக்கின்றன.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் கல்விசார் தேவைகள் குறித்து நிற்கும் குறைபாடுகளும் தேவைகளும் யாருடைய கண்களுக்கும் புலப்படாததும் செயற்படுத்த முடியாததுமல்ல. உண்மையான மனப்பாங்கு மாற்றத்துடனும் செயற்படுத்தக்கூடிய செயற்திட்ட வரைவுடனும் நிறைவேற்ற முனையும் போது நிச்சயமாக இப்பிரதேசத்தின் கல்வி நிலையை மேம்படுத்த முடியும் என நம்புகிறோம்.
ச. இந்திரகுமார்
அகவிழி ) ஜூலை 2014 (?
ஏ941ம்
*டாதுசன நூலகசி யாழ்ப்பாணம்.
சி!

Page 5
உயர் மட்டச் சிந்தனையில் ஆக்க
கலாநிதி சசிகலா குகமூர்த்தி சிரேஷ்ட விரிவுரையாளர் கல்விப்பீடம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
அறிமுகம்
அறிதல் என்ற எண்ணக்கருவைப் பற்றி நாம் ஏற்கனவே அறிந்துள்ளோம். ஒரு விடயத்தைப் பற்றி அறிந்து விளங்கிக் கொள்கின்ற ஒரு உளச் செயன்முறையே அறிதல் என மிக எளிமையாக விளக்கலாம். ஆனால் பேரறிகை என்பது அறிவிலும் ஒருபடி மேலானது. பேரறிகை என்பது ஒருவர் தனது சொந்த அறிவாற்றலால் தான் அறிந்தவற்றை அறிந்து உணர்வதற்கான ஆற்றல் மற்றும் தான் அறிந்தவற்றைப் பகுத்தாராய்தல் போன்ற பல உயர்மட்ட சிந்தனைகளுடன் தொடர்புபட்ட ஒரு சிந்தனைச் செயன்முறையாகும். இச்செயன்முறையின்போது கற்பவர் தனது சொந்தக் கற்றலைப் பற்றியும் கற்றற் செயன்முறையில் பயன்படுத்த வேண்டிய உபாயங்களைப் பற்றியும் அறிந்துகொள்ளக்கூடிய ஆற்றல் உடையவராக இருப்பார். இதனால் பேரறிகையானது கற்றலை சுயமேற்பார்வை செய்யும் செயன் முறையை உள்ளடக்கியுள்ளது எனலாம். பொதுவாகக் கற்றல் செயன்முறையின்போது கற்பவர் நினைப்புடனும், சுய நினைவுடனும் பல்வேறு உபாயங்களைப் பயன்படுத்துகின்றார். எனவே பேரறிகை என்பது சாதாரணமாக எல்லோரிடமும் அமைந்திருக்கின்ற ஒரு ஆளுமைத் தற்திறன் ஆகும். பேரறிகையை விருத்தி செய்வதற்கு எம்மை நாம் நாளாந்த வாழ்வில் இசைவாக்கிக் கொள்ளுதல் வேண்டும். காரணம் சுய உணர்வுடன் மிகவும் நிதானமாகவும் செயற்றிறன் மிக்கதாகவும் ஒருவர் தனது உளச் செயற்பாடுகளை வெளிப்படுத்துகின்ற திறமை விளைதிறன்மிக்க கற்றல் செயன்முறைக்கு மிகவும் அவசியமானதாகும்.
கற்றலோடு தொடர்புபட்டவகையில் பேரறிகையின் முக்கியத்துவம் இன்று பலராலும் எடுத்துக்காட்டப்படுகின்ற ஒரு விடயமாகும். புதிய தொழினுட்ப வர்த்தக உலகில் பேரறிகை சார்ந்த உயர்மட்டச் சிந்தனைத் திறன்களை மாணவர்களிடம் விருத்தி செய்யும் வகையில் கற்றல் - கற்பித்தல் மற்றும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் இடம்பெற வேண்டுமென்பது சமகாலத்தில் வலியுறுத்தப்பட்டு வருகின்ற ஒரு விடயமாகும். இந்த வகையிலே இக்கட்டுரையானது பேரறிகை சார்ந்த உயர்மட்டச் சிந்தனைகளுள் ஒன்றான ஆக்கத்திறன் விருத்தியுடன் தொடர்புபட்டதாக அமைகின்றது.
+ அகவிழி ஜூலை 2014

கத்திறன் விருத்தி
allWINWWWW
ஆக்கத்திறன்
ஆக்கத்திறன், புதியனவற்றைப் புனையும் திறன் போன்றன இன்று கல்வியுலகிற் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்ற சொற்பிரயோகங்கள் ஆகும். ஆக்கத்திறன் என்பது ஆக்கச் சிந்தனையுடன் தொடர்புபட்டதாகும். ஆக்கத்திறனானது அடையாளம் காணக்கூடிய இலக்கொன்றை அடைவதற்கு உதவும் வகையில் புதியதும், அரியதுமான படைப்பொன்றினை உருவாக்கும் செயற்பாடு ஆகும். இச்செயற்பாடு பயனுள்ள முறையில் இடம்பெறுவதற்கு ஆக்கச் சிந்தனை அவசியம். இவ் ஆக்கச்சிந்தனையை சரியான முறையில் அமைப்பதற்கு உதவக்கூடிய பல்வேறு பண்புகள், ஆற்றல்கள் ஆகியவற்றின் தொகுப்பை ஆக்கத்திறன்' எனக் குறிப்பிடலாம். பழைய எண்ணங்களைப் புது வடிவத்தில் அமைப்புறச் செய்தலும், பழைய எண்ணங்களிடையே புதுத் தொடர்புகளைக் காணுதலும் ஆக்கச் சிந்தனையுடன் தொடர்புபட்டதாகும். ஒருவர் தனது சுதந்திரமான சிந்தனைக்கேற்ப தனித்தன்மை உடைய செயல்களில் ஈடுபடுவதற்கும் தொழினுட்ப சமுதாய வளர்ச்சிக்குத் தேவைப்படுகின்ற புதிய கருத்துக்கள், கண்டு பிடிப்புக்களை முன்வைப்பதற்கும் ஆக்கச் சிந்தனை அவசியம்.
ஆக்கச் சிந்தனையின் விளைவு “புதுமை" (Novelty) உடையதாக இருக்கும். காள் ரோஜர்ஸ் என்பவர் ஆக்கச் சிந்தனை என்பது ஒருவரது தனித்தன்மைக்கும், அவரது வாழ்வில் எதிர்படும் பொருட்கள், மனிதர்கள், நிகழ்வுகள், சூழ்நிலைகள் ஆகியவற்றிற்கும் இடையே ஏற்படும் இடைவினைகளினால் புதுமையான பொருட்களோ அல்லது தொடர்புகளோ விளைவது எனக் குறிப்பிடுகின்றார். எனவே ஆக்கத்திறனின் இறுதி விளைவானது பிறரால் உணரக்கூடிய அல்லது பயன்படுத்தக் கூடிய வகையில் அமையும் புதுப்பொருளோ அல்லது புதிய வழிமுறைகளோ ஆகும். ஆக்கத்திறனின் புதுமைப் படைப்புகளாக ஒரு செய்யுள், ஒரு பாடல், ஓர் அறிவியல் கோட்பாடு, ஓர் இயந்திரம் போன்றவை அமையலாம். இத்தகைய புதியன புனைதல் என்ற ஆக்கத்திறன் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. ஆனால் தனியாள் வேறுபாடு என்ற தத்துவத்தின் படி ஒவ்வொருவரிடமும் அமைந்திருக்கும் அளவில் வேறுபாடு காணப்படுகிறது. ஆக்கத்திறன்கள் பொதுவாக இயற்கையிலேயே குழந்தைகளிடம் அமைந்து காணப்பட்டாலும், உகந்த கற்றல் - கற்பித்தல் முறைகள்

Page 6
மூலம் அவற்றை மலரச் செய்யவும், வளரச் செய்யவும் முடியும் என்று நம்பப்படுகிறது.
ஆக்கத்திறன் விரிசிந்தனையோடு தொடர்புடையது. விரிசிந்தனையானது குறிப்பிட்ட தூண்டலுக்கு சாத்தியமான பல்வேறு துலங்கலை தோற்றுவிக்க முயல்கின்றது. புதிய கோணத்தில் சிந்தித்தல், ஒரு பிரச்சினையை பல்வேறு வழிகளில் கையாள முற்படுதல் போன்றவை விரிசிந்தனையின் பண்புகளாகும். ஏற்கனவே உணரப்பட்ட, பழக்கப்பட்ட வழிமுறைகளைக் கையாள்வது புதியன புனைதலுக்கு வழிவகுக்காது. இது பழக்கத்தின் விளைவால் உண்டாகும் செய்திறன் மேம்பாட்டையே அதிகரிக்கும்.
A A A A A A A
ஆக்கத்திறனின் பண்புக்கூறுகள் ஆக்கத்திறனுக்கு கற்பனை மட்டுமிருந்தால் போதாது. கற்பனைக்கு உதவக்கூடிய பொருளறிவும் இருத்தல் அவசியமாகும். இப்பொருளறிவினைப் புதிய முறையில் பயன்படுத்தவும், இவற்றிடையே புதுத்தொடர்புகளைக் கண்டுணரவும் கற்பனை உதவும். ஆக்கத்திறனின் வளர்ச்சிக்கு ஏற்கனவே பெற்றுள்ள பொருளறிவைத் தேவையெழும் போது எளிதாக மீட்டுக் கொணர்தல் (Facility for information retrieval), பொருளறிவினை மேலும் விரிவாக்கி வளர்த்தல் அல்லது முழுமையாக்குதல் (Elaboration), பொருளறிவின் எவ் விவரங்கள் தேவையென்பதை மதிப்பிடுதல் (Evaluation) ஆகியவை தேவையான பண்புக் கூறுகளாகும்.
ஆக்ககத்திறனின் முக்கிய பண்புக் கூறுகளாகப் பின்வருவனவற்றைக் கில் போர்ட் என்பவர் குறிப்பிடுகின்றார்.
பிரச்சினைகள் பற்றிய நுண்ணுணர்வு (Sensitivity) தடையின்றி துரிதமாக சிந்தித்தல் (Ideational Fluency) சிந்தனையில் நெகிழ்ச்சி (Flexibility) தனித்தன்மை (Originality) அகக்காட்சித் தாவல் (Intuitive leap) விடாமுயற்சி (Persistance) புதிய தொடர்புகளைக் காண விழைதல் (Seeking new relationship)
டொரான்ஸ் என்பவர் மாணவர்களின் ஆக்கத்திறனை மதிப்பிடும் அளவுகோல்களாக சுயசிந்தனை , தனித்துவம் ஆகிய இரண்டினையும் வலியுறுத்தினார். குட், புரொபி என்போர் ஒரு பொருள் ஆக்கத்திறன் உடையது என அடையாளங் காண்பதற்கு இரண்டு அளவுகோல்களைக் குறிப்பிட்டனர். » ஆக்கத்திறனுடையது என ஒரு பொருள் ஏற்கப்பட
வேண்டும்.
அப்பொருள் மதிப்புடையதாக இருத்தல் வேண்டும்.
இவ்வாறு உளவியலாளர்கள் சுயசிந்தனை, புதுமை என்பவற்றை வலியுறுத்தினாலும் இந்த

இரண்டு கருத்துக்களும் ஆக்கத்திறனைச் சுயமாக மதிப்பிடுவதற்கு போதியன அல்லவென்றே குறிப்பிடுதல் வேண்டும். ஆக்கத்திறனை மதிப்பிடுவதற்கான முக்கியமான அளவுகோல்களுள் ஒரு பொருளின் மதிப்பு, அதன் பொருத்தப்பாடு என்பனவும் முக்கியம். ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பின் பெறுமதியை அக் கண்டுபிடிப்புச் செயற்பாடானது சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைப்பொறுத்தே மதிப்பிடமுடியும். பின்வரும் அளவுகோல்களை ஆக்கத்திறனின் சிறப்பியல்புகளாகக் கருதமுடியும்.
புதுமை 7 தனித்துவம் சுயசிந்தனை சமுதாயம் ஏற்றுக்கொள்ளல்
ஆக்கச் சிந்தனையின் படிநிலைகள்
ஆக்கச்சிந்தனையில் நான்கு படிநிலைகள் காணப்படுவதாக கிரகாம் வாலிஸ் என்பவர் குறிப்பிடுகின்றார். அவையாவன:
ஆயத்தம் (Preparation) ஆயத்த நிலையில் பிரச்சினை ஒன்று இனங்காணப்பட்டு, பிரச்சினை விளக்கப்பட்டு வரையறுக்கப்படும். அதாவது பிரச்சினையை ஒருமுகப்படுத்துதல், தொடர்புடைய விவரங்களை சேகரித்தல், பிறரோடு விவாதித்தல், மேற்கொள்ள வேண்டிய உத்திகளை சிந்தித்தல் போன்றவை மூலம் பிரச்சினையின் முழுமையான பரிமாணத்தையும் உணர்தல் இப்படி நிலையில் இடம்பெறும். முன்னுதாரணங்களைக் காட்டிலும், விடாமுயற்சியே ஆக்கத்திறன் வெளிப்பாட்டிற்கு மிக இன்றியமையாதது ஆகும். சிறந்த கவிஞனோ, நாவலாசிரியனோ, சிற்பியோ, ஓவியனோ, விஞ்ஞானியோ ஒரே நாளில் புகழ் பெற்று விடுவதில்லை. தொடர்ச்சியான கடுமையான உழைப்பே இவர்களது வெற்றிக்கான அத்திவாரமாகும்.
தற்சிந்தனை (Incubation) புதிய படைப்பிற்கான வெளிப்புற செயல்களோ, அறிகுறிகளோ இந்நிலையில் வெளியே தென்படாது. இந் நிலையில் ஒருவர் தான் ஏற்கனவே பெற்ற அனுபவங்களையும், சேகரித்த விவரங்களையும் உள்வாங்கி, புதிய கோணத்தில் இணைத்து சிந்திக்கின்ற செயன்முயையே இந்நிலையில் இடம்பெறும். இதற்கு வெளிப்புறத் தொந்தரவுகள் இன்றி தனித்து இருத்தல் அவசியமானது. உதாரணமாக நாம் ஏதேனும் ஒன்றை நினைவிற்குக் கொண்டு வர கஷ்டப்படும் போது, அதிலேயே தொங்கிக் கொண்டிருப்பதை விட, அதை மறந்து வேறு விஷயங்களில் ஈடுபடும் போது, தானாகவே நமக்குத் தேவைப்படுவது நம் மனதில் பளிச்சென்று தோன்றும். எனவே துரிதப்படுத்துதலும், கட்டாயப்படுத்துதலும் ஆக்கச்சிந்தனையின் வளர்ச்சிக்கு தடையாக அமையலாம். எனவே தேவைப்படும் உரிய உள்வளர்ச்சி நிலையை
|ஜூலை 2014 (ம

Page 7
அனுமதிக்காவிடில் ஆக்கச்சிந்தனை பாதியிலேயே தடைப்பட்டுப்போகும். உள்ளொளி தோன்றுதல் (Illumination) பிரச்சினைக்குரிய தீர்வு இப்படி நிலையில் மனதில் பளீரெனத் தோன்றும். இது குறித்த விடயத்துடன் தொடர்புபட்டவகையில் பெறப்படுகின்ற உட்காட்சியின் விளைவால் எழுவதாகும். கோஹ்லரின் சிக்கலறையில் விடப்பட்ட மனிதக்குரங்கு, இவ்வகை உட்காட்சி மூலமே கூரையிலிருந்து தொங்க விடப்பட்ட வாழைப்பழத்தை எட்ட முடிந்தது. உட்காட்சி எப்போது வேண்டுமானாலும் நிகழக்கூடும் : கனவில் கூட தோன்றலாம். இதற்கு விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் சில சான்றுகளாக உள்ளன.
சரிபார்த்தல் (Verification)
ஆக்கச் சிந்தனையின் இறுதிப்படியாகும். இதில் பெறப்பட்ட தீர்வு, சரியானதா என்று சோதித்துப்பார்க்கப்படும். இந்நிலையில் சோதனை நிகழ்த்தப்பட்டு, அதன் அடிப்படையில் பெறப்பட்ட தீர்வுக்குத் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டு, தீர்வு முழுமையாக்கப்படும் ஆக்கத்திறன் வெளிப்பாட்டில் இந்த நான்கு படிநிலைகளும் வரிசைப்படி கட்டாயமாக நிகழ வேண்டும் என்று இல்லை. சில சமயங்களில் உள்வளர்ச்சி நிலை ஏற்படாமலேயே கூட உள்ளொளி தோன்றக்கூடும். சில சிக்கலான பிரச்சினைகளில் இந்த நான்கு படிநிலைகளும் சுழற்சி முறையில் பல முறையில் மேற்கொள்ளப்பட வேண்டி ஏற்படலாம்.
1
A A A A A A
ஆக்கத்திறனுடைய மாணவர்களை இனங்காணல்
ஆக்கத்திறனுடைய பிள்ளைகளை இனங்கண்டு ஊக்குவிப்பதற்கு ஆசிரியருக்கு ஆக்கத்திறன் உடைய வர்களிடம் காணப்படும் இயல்புகள் தொடர்பான அறிவு இருத்தல் வேண்டும். பொதுவாக ஆக்கத்திறன் உடைய பிள்ளைகளிடம் பின்வரும் குணவியல்புகள் காணப்படும்.
பிள்ளைப்பருவத்தில் உயர்ந்த நுண்ணறிவு ஈவு . சுயேச்சையாக சுதந்திரமாக செயற்படல் வகுப்பிலுள்ள பிற மாணவரிடமிருந்து தனித்து இருத்தல் தன்னைப்பற்றிய நினைப்பு பரந்த அளவிலான திறமைகளும் நாட்டங்களும் கொண்டிருத்தல் புதிய அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளத் தயாராக இருத்தல் நெகிழ்பண்பு | பிறருடன் அதிகமாக கூடிப் பழகும் ஆர்வம் குறைந்திருத்தல் கலை அனுபவங்களை ரசிப்பவர்
அழகியற் கலையை உணரக்கூடியவர்
 ெஅகவிழி ஜூலை 2014
8 A A A

ஆக்கத்திறன் விருத்தி பிரச்சினைகளுக்கு புதுமையான வழிகளில் தீர்வைப் பெறுதல் என்பது ஆக்கத்திறனின் முக்கிய பண்பாகும். எனவே கற்பித்தல் நோக்கங்கள், கற்பித்தல் முறைகள், கணிப்பீட்டு முறைகள், கற்றலுக்காக வழங்கப்படும் ஊக்குவிப்புகள் மற்றும் வகுப்பறைச் சூழல் போன்றவற்றில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம், மாணவர்களின் ஆக்கத்திறனை மேம்படுத்த முடியும். அதேநேரம் ஆக்கத்திறன் வளர்ச்சிக்கு தடைகளாக இருக்கக்கூடியவற்றை இனங்கண்டு அகற்றுகின்ற நடவடிக்கைகளையும் ஆசிரியர்கள் மேற்கொள்ளுதல் வேண்டும். உதாரணமாக எளிய வேலைகளுக்கு உயர்ந்த தரத்தை வழங்குதல், மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான ஒப்படைகளைக் கொடுத்தல், பரீட்சைப் புள்ளிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தல் போன்றவற்றுடன் அதிகாரப் போக்குடைய ஆசிரியரும், வகுப்பறைச் சூழலும் ஆக்கத்திறன் விருத்திக்கு தடைகளாக அமையலாம்.
மாணவர்களில் ஆக்கத்திறனை வளர்ப்பதற்கு ஆசிரியர்கள் பின்வரும் உத்திகளைப் பயன்படுத்தலாம்.
வகுப்பறையில் மாணவர்கள் தங்களது கருத்துக்களை அச்சமின்றி வெளிப்படுத்த சுதந்திரம் அளித்தல். மரபுவழியில் விடையளிக்கின்ற முறைகளில் இருந்து புதிய அணுகு முறைகளில் விடையளிக்க ஊக்குவித்தல்.
வினாக்கள் வெறும் நினைவாற்றலை மட்டுமே சோதிக்காமல் சிந்தனையைத் தூண்டும் வகையில் இருத்தல். மாணவர் களில் ஆய்ந்தறியும் பண்பினைத் தூண்டுதல்.
குறை கூறுதல், தண்டனைகள் அற்ற நல்ல வகுப்பறைச் சூழலை அமைத்தல். சிந்தனையைத் தூண்டும் வகையிலான கற்பித்தல்
முறைகளைப் பயன்படுத்தல். சுயகற்றலையும் சுயதேடலையும் ஊக்குவித்தல்.
»
»
»
முடிவுரை
எமது கலைத்திட்டம் தேர்ச்சிமையக் கலைத்திட்டமாக வடிவமைக்கப்பட்டு இருப்பினும் இறுதியில் பரீட்சையில் பெறும் அடைவுமட்டத்திலேயே பிரதான கவனம் செலுத்தப்படுகின்றது. மாணவர்கள் வேலையுலகு வேண்டி நிற்கும் உயர்மட்ட சிந்தனை ஆற்றல்கள் அற்றவர்களாக கல்வியுலகில் இருந்து வெளியேறுவதாக விமர்சிக்கப்படுகின்றனர். இதனால் மாணவர்களில் உயர்மட்ட சிந்தனை ஆற்றல்களை வளர்க்கும் வகையில் கற்பித்தல் - கற்றல் செயன்முறையை திட்டமிடுவதில் ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும்.

Page 8
உலகளாவிய ஆசிரியர் கல்வியின் இலங்கையின் ஆசிரியர் கல்வியில்.
பொன். இராமதாஸ் சிரேஷ்ட விரிவுரையாளர், ஸ்ரீபாத தேசிய கல்வியற் கல்லூரி, பு
அறிமுகம் 21ஆம் நூற்றாண்டிற்கான கல்வி பற்றிய சர்வதேச ஆணைக்குழுனால் யுனெஸ்கோவிடம் சமர்ப்பிக்கபட்டுள்ள (1996, பரீஸ்) "கற்றல் உங்களுடைய வளமாகும்" என்னும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு ஆசிரிய கல்வியின் பால் மீள் கவனம் செலுத்தும்படி கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
"கற்பித்தற் செயற்பாட்டிற்கு புதுத்திருப்பத்தை ஏற்படுத்துவதற்காக வசதிகளை செய்து கொடுப்பதற்கு எதிர்கால ஆசிரியர்களிடையே கூடுதலான மானிட மற்றும் அறிவுசார் பண்புகளை ஏற்படுத்தும் பொருட்டும் ஆசிரியர் கல்வி செயற்பாடு பற்றிய மீளாய்வுகளை மேற்கொள்ளுதல் வேண்டும் என்று இவ்வாணைக்குழு நம்புகின்றது."
புதிய தகவற் தொழிற்துறை புரட்சி, பூகோளமயமாதல் மற்றும் புதிய சவால்கள் என்பவற்றிற்கு முகம் கொடுக்கக்கூடிய வகையில் சமூக மாற்றத்தின் ஒரு பங்காளராக ஆசிரியரின் பங்களிப்பு மூலம் 21 ஆம் நூற்றாண்டில் எழும் சவால்கள், வளர்ச்சி என்பவற்றிற்கு முகம் கொடுக்கக்கூடிய ஆசிரியர் கல்விக்கான புதிய செயற்றொடரொன்றின் அவசியம் இப்புதிய முறைகள் மூலம் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. இவ்வாறு தகவல் மைய நூற்றாண்டில் அறிவைப் பெற்றுக் கொடுக்கும் ஒரேயொரு மூலமாக ஆசிரியர் மட்டும் இருக்க முடியாது. அவரது இடத்தை பல நவீன தொழிநுட்பங்கள் இன்று ஆக்கிரமித்து கொண்டுள்ளன. இத்தகைய சூழலில் ஆசிரியரது வகிபங்குகள் கடத்துதல் (Transmission Role) என்பதில் இருந்து மாறி மத்திய காலத்தில் பரிமாற்று (Transactional Role) ஆகவும் இன்று அது Transformation Role ஆக மாற்றம் அடைந்துள்ளது. இந்த நடிபங்கிற்கு அமைய ஆசிரியர் கற்றல் செயற்பாடுகளை முற்கூட்டியே திட்டமிட்டு, வகுப்பறையினுள்ளோ வகுப்பறைக்கு வெளியிலோ அச்செயற்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும். இதன்படி 21 ஆம் நூற்றாண்டில் ஆசிரியர் தனது நிலைமாற்று என்ற வகிபங்கை ஆற்றுவதற்கு ஏற்ற தேர்ச்சிகளை பெற்றுக் கொடுக்கக்கூடியவகையில் உலகளாவிய ஆசிரியர் கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள்

- புதிய போக்குகளும் அதன் விளைவுகளும்
பத்தனை
மீளமைப்பு செய்யப்பட்டன. இவ்வாறு மீளமைப்பு செய்யும்போது அவற்றில் செல்வாக்கு செலுத்தியுள்ள புதிய போக்குகளைச் சுருக்கமாக இனி பார்ப்போம்.
பாடசாலை சார்ந்த பயிற்சி பொதுவாக எல்லா நாடுகளிலும் ஆசிரிய பயிற்சியானது பெரும்பாலும் நிறுவனம் சார்ந்த வகையிலேயே வழங்கப் பட்டு வந்தது. அதாவது ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள், தேசிய கல்வியியற் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்ற நிறுவனங்களால் ஆசிரியர் முன் சேவைப் பயிற்சியும் சேவைக்காலப் பயிற்சியும் சான்றிதழ்களை பெற்றுக் கொடுப்பதை மையமாகக் கொண்டு நடாத்தப்பட்டன. ஆனால் பாடசாலைகள், வகுப்பறைகள், வகுப்பறைகளில் கற்கும் மாணவர்கள் மற்றும் கற்பித்தலில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்கள் போன்ற அம்சங்கள் யாவும் பல்வகைமையுடையன. அதாவது நாடுகளுக்கிடையில் இவற்றில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. நாட்டிற்குள் பிரதேச ரீதியாகவும் சமூக பொருளாதார கலாசார அடிப்படைகளிலும் வேறுபாடுகள் இவற்றிற்கிடையே நிலவுகின்றன. நாட்டுக்கு நாடு ஆசிரியர்களிடம் இருந்து சமூகம் எதிர்ப்பார்க்கும் எதிர்பார்ப்புகள் வேறுபடும். இதனால் சகல ஆசிரியர்களுக்கும் ஒரே மாதிரியான பயிற்சியை வழங்குவது பொருத்தமற்றது. ஆகவே தான் இன்று பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்களிடம் மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக விருத்தி செய்யப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படும் தேர்ச்சிகளை விருத்தி செய்வதற்காக பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட (School based Teacher Training / Development) பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்றன. இதற்காக மாணவர்களது கல்வி அடைவுகள் மதிப்பீட்டுக்குட்படுத்தப்படும் போது பெற்றுக் கொள்ளப்படும் தகவல்கள், ஆசிரியர்களின் தேவைகள் (த தொடர்பாக செய்யப்படும் தேவை பகுப்பாய்வுகள், கல்வி மாற்றங்கள் பற்றிய ஆய்வு முடிவுகள் போன்றவற்றி னூடாக பெற்றுக் கொள்ளப்படும் தகவல்கள் பயிற்சி செயலமர்வுகளை ஒழுங்கு செய்வதற்குப் பயன்படுத்தி கொள்ளப்படுகின்றன.
ஜூலை 2014 (N

Page 9
வேறு பயிற்சிமுறைகளின் கூறுகளை ஒருங்கிணைத்துப் பெறும் ஒருங்குசேர் முறை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும்போது பெரும்பாலும் அவர்கள் கற்பிக்கும் பாடவிடயங்கள், கற்பித்தல் முறையியல், கற்பித்தல் தொழிநுட்பம் போன்ற அம்சங்களுக்கே கூடிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஆனால் அண்மைக்காலத்தில் உலகளாவிய ரீதியில் இப்போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது ஆசிரியர் பயிற்சிகளில் முகாமையாளர்களுக்கு வழங்கப்படும் முகாமைத்துவப் பயிற்சி சேர்க்கப்பட்டுள்ளது. வழிகாட்டல் மற்றும் ஆலோசனை கூறுபவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி கூறுகள் சேர்க்கப்பட்டுள்ளது, தொழினுட்பவியலாளருக்கு வழங்கப்படும் தொழிநுட்பம் தொடர்பான பயிற்சிக் கூறுகள் சேர்க்கப்பட்டுள்ளன. விசேட தேவை உள்ளவர்களை பராமரித்தல் அவர்களுக்கு கல்வி அளித்தல் பற்றிய பயிற்சி கூறுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அசாதாரண உளவியல் பற்றிய விடயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. சமூக சேவையாளர்களுக்கு வழங்கப்படும் சில பயிற்சிக் கூறுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு வேறு பயிற்சி முறைகளில் காணப்படும் கூறுகளை ஒருங்கிணைத்து ஆசிரிய பயிற்சிகள் வழங்கப்படும் போக்கு தற்போது ஆசிரியர் கல்வியில் காணப்படுகின்றது. உதாரணமாக கனடா போன்ற நாடுகளில் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆசிரியர்கள் கைத்தொழில்சாலைகளில் சென்று தொழில் செய்வதற்கு விடுவிக்கப்படுகின்றனர். இது கைத்தொழில்துறை சார்ந்த பயிற்சியை அவர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படுவதை
வலியுறுத்துவதற்காகவாகும்.
நம்பிக்கை தராதரத்தை (Accreditation Standards)
அறிமுகப்படுத்தல்
நாடுகளில் ஆசிரியர் கல்வியை பல நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. அதாவது ஆசிரியர் பயிற்சி கல்லூ ரிகள், தேசிய கல்விக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் போன்ற வேறு பல நிறுவனங்கள் ஆசிரிய கல்வியை வழங்கி வருகின்றன. இந்நிறுவனங்களால் வழங்கப்படும் ஆசிரியர் கல்விக்கான கலைத்திட்ட உள்ளடக்கங்களில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. பயிற்சி நெறியின் கால எல்லைகள் மாறுபடுகின்றன. ஆசிரிய பயிற்சியின்போது நடைபெறும் கற்பித்தல் பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தின் தரம் தொடர்பாக பல்வேறுபட்ட நிலைமைகள் காணப் படுகின்றன. இவை போன்ற அம்சங்களை ஆய்வு செய்து நிறுவனங்கள் நடத்தும் ஆசிரியர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக ஒரு பொதுக் கொள்கையை உருவாக்கி அதன் அடிப்படையில் அவை நடாத்தும் பாடநெறிகளின் பல்வேறு அம்சங்களில் ஒரு தராதரத்தை பேணுதல், அவற்றை மேற்பார்வைச் செய்தல் போன்றவற்றுக்காக உலக நாடுகளில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
* அகவிழி ஜூலை 2014

னெ
உதாரணமாக பிரித்தானியாவில் தேசிய அளவுகோலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பாடநெறியை அங்கீகரிப்பதற்காக ஆசிரியர் கல்விக்கான அதிகார சபை (Council for Accreditation of Teache Education) (CATE) உருவாக்கப்பட்டது. அதேபோன்று ஐக்கிய அமெரிக்காவிலும் கார்னேகி மன்றம் "ஆயத்தமாக உள்ள தேசம், 21ஆம் நூற்றாண்டிற்கான ஆசிரியர்கள்" என்ற அறிக்கையில் தொழில் வாண்மைத்துவக் கற்பித்தல் தரத்திற்கான தேசிய சபை உருவாக்கப்பட வேண்டுமென சிபாரிசு செய்தது. இந்தியாவில் ஆசிரியர் கல்விக்கான தேசிய மன்றம் (National Council to Teacher Education) (NCTE) உருவாக்கப்பட்டது. இவ்வாறு ஆசிரிய கல்வியில் நம்பிக்கை தராதரத்தை அறிமுகப்படுத்தல் ஆசிரியர் கல்வியில் ஒரு புதிய போக்காக காணப்படுகின்றது.
பல்கட்ட தராதர பத்திரத்தை (Multistage Certification)
அறிமுகப்படுத்தல்
ஆசிரியர் தொழிலுக்குள் நுழையும்போது பெற்றுக் கொண்ட பயிற்சியினுடனேயே ஆசிரிய தொழிலில் இருந்து இளைப்பாறும் வரைக்கும் சேவையாற்றும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால் இன்று அறிவு மிக வேகமாக மாற்றத்திற்குள்ளாகிறது. 2015ஆம் ஆண்டு ஆகும் போது ஒவ்வொரு 11 மணித்தியாலயத்திற்கும் அறிவு மாற்றத்திற்குள்ளாகும் என கூறப்படுகிறது. இவ்வாறான சூழலில் ஆசிரியர் சேவைக்குள் நுழைந்தபோது பெற்றுக் கொண்ட பயிற்சி, காலம் கடந்தாகிவிடும். இதனால் அவர் தனது அறிவை புதுப்பித்து கொள்ள வேண்டும். மாற்றங்களை உள்வாங்கிக் கொள்பவராக இருப்பதோடு சமூகத்தை மாற்றி அமைப்பதற்கு பங்களிப்பு செய்யும் மாற்றுமுகவராக தொழிற்பட வேண்டும். இதற்காக இன்று பல நாடுகளில் ஆசிரியர்கள் பல்வேறு சேவைக்கால பயிற்சி சான்றிதழ்களை புதுப்பித்துக் கொள்வதற்கு கட்டம் கட்டமாக சான்றிதழ் வழங்கும் முறைகள் அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதாவது முன்சேவை பயிற்சியை முடித்தபின்னர் குறித்தகால இடைவெளியில் கட்டாயம் பூர்த்தி செய்யவேண்டிய பயிற்சிகள் உள்ளன. அவற்றில் ஆசிரியர்கள் பங்கு கொள்வதன் மூலம் அவர்களுக்கு மீள் சான்றிதழ்கள் (Re Certification) வழங்கப்படும். இது பல்கட்ட தராதரப்பத்திரம் எனப்படும்.
ஆசிரியர் கல்விக்கு பொறுப்பாக அதிகார சபைகளை தாபித்தல்
பிரித்தானியாவில் தேசிய அளவுக்கோலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பாடநெறியை அங்கீகரிப்பதற்காக தேசிய அதிகார குழு (CATE) ஏற்படுத்தப்பட்டது. சகல ஆசிரிய கல்வியும் இக்குழுவால் மதிப்பீடு செய்யப்

Page 10
ன
படவும் ஏற்றுக் கொள்ளப்படவும் வேண்டும் என கூறப்பட்டது. இதைப்போன்று ஐக்கிய அமெரிக்காவில் தொழில் வாண்மைத்துவக் கற்பித்தல் தரத்திற்கான தேசிய சபை உருவாக்கப்பட வேண்டும் என சிபாரிசு செய்யப்பட்டது. இதே போன்று இந்தியாவில் ஆசிரியர் கல்விக்கான தேசிய மற்றும் (NCTE) உருவாக்கப்பட்டது. இவ்வாறு ஆசிரியர்கள் கல்வியின் தரத்தை பேணுதல் அதனை மேற்பார்வை செய்து அங்கீகாரம் வழங்குதல் போன்றவற்றிற்கு பொறுப்பாக அமைப்புகளை உருவாக்கும் போக்கு ஆசிரியர் கல்வியில் முக்கியமானதாகும்.
தொழில் அனுபவப் பயிற்சிக்கும் களப்பயிற்சிக்கும் அழுத்தம் கொடுத்தல்
உலகளாவிய ரீதியில் ஆசிரிய பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களில் காணப்படும் போக்குகளில் இது மிகவும் முக்கியமானதாகும். பிரித்தானியாவில் 9/92 எனும் சுற்றறிக்கை (DES 1992) ஆசிரிய கல்வியின் ஆரம்ப நிலையில் பாடசாலைகள் கூடுதலான பங்கேற்கவேண்டும் என எதிர்பார்த்தது. அத்தோடு இங்கிலாந்தில் ஆசிரியர் கல்வியானது உயர் கல்வி நிறுவனங்களுக்கும் பாடசாலைக்கும் இடையிலான ஒன்றிணைப்பாக ஒரு பங்கீடு மாதிரியை அடிப்படையாக கொண்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் ஆசிரிய பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தில் சிகிச்சை நிலைய அனுபவம் ஒரு புதிய போக்காகும். சிகிச்சை நிலைய அனுபவமான ஒழுங்கமைப்பு, கட்டமைப்பு, மேற்பார்வை ஆய்வு என்பன வலியுறுத்தப்படுகின்றன. இதன் நோக்கம் ஆசிரிய மாணவர்களுக்கு கள் அனுபவம் வழங்குவதாகும், இவ்வாறு ஆசிரிய கல்வி நிகழ்ச்சித்திட்டங்களை நடத்தும் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் பாடசாலைகளுடன் நெருக்கமாக இணைந்து செயற்படுவதை விருத்திசெய்ய

முற்படுகின்றன. அத்துடன் ஆசிரிய மாணவர்கள் பாடசாலையில் பல்வேறு உத்தியோகத்தர்களுடன் சேர்ந்து பாடசாலையின் செயற்பாடுகளில் பங்குபற்ற வேண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அதாவது ஆசிரியர் கல்வியை வழங்கும் நிறுவனங்கள் ஆசிரிய மாணவர்கள் கற்பித்தல் பயிற்சி, கட்டுறுப் பயிற்சி போன்றவற்றை பெற்றுக் கொள்வதற்காக பல பாடசாலைகளை தெரிவு செய்துகொள்ள வேண்டும். அங்கு அந்த ஆசிரிய மாணவர்களை வழிகாட்டி ஆலோசனைகளை பெற்றுக் கொடுக்க பயிற்றப்பட்ட தொழில் வழிபடுத்துநர்களை (Mentor) நியமிக்க வேண்டும். இந்த ஆசிரிய மாணவர்கள் ஆசிரிய தொழிலோடு தொடர்புபட்ட சகல விடயங்களிலும் நேரடி பிரயோக ரீதியான அனுபவத்தை பெற்றுக் கொடுக்க ஆசிரிய கல்வியை வழங்கும் நிறுவனமும் பாடசாலையும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும் என்பன போன்ற விடயங்களுக்கு ஆசிரிய கல்வி நிகழ்ச்சித்திட்டங்களில் தற்போது கூடிய அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
தொடருறு கல்விக்கான முக்கியத்துவம் வாழ்நாள் முழுதும் கல்வி என்ற எண்ணக்கருவிலிருந்து உருவாகியதே தொடருறு கல்வியாகும். ஆசிரியர் கல்வியானது ஆரம்ப பயிற்சியில் தொடங்கி தொழிலில் நுழைந்த காலந்தொட்டுத் தொடர்ந்து தொழில் செய்யும் காலம் முழுவதும் தொடர்ச்சியான சேவைக் காலம் பயிற்சியாக நீடிக்கும் ஒரு தொடர்ச்சியான ஒருங்கிணைந்த செயல்முறை என எண்ணப்படுகின்றது. ஆரம்ப காலத்தில் ஆசிரியர் பயிற்சி என்றும் பிறகு ஆசிரியர் கல்வி என்றும் காணப்பட்டு இன்று ஆசிரியர் விருத்தி (Teachers Development) என்று ஆசிரியர் கல்வி தொடர்பான எண்ணக்கரு மாற்றம் அடைந்துள்ளது. ஆசிரியர் விருத்தியுற வேண்டுமானால் தொடர்ந்து கற்க வேண்டும். தகவல் மைய நூற்றாண்டில் வேகமாக மாறிவரும் அறிவை அவர் உள்வாங்கி கொள்ள வேண்டும். இதனால் இவர் தொடர்ந்து கற்க வேண்டும். இந்த அடிப்படையில் இன்று ஆசிரியர் கல்வி நிகழ்ச்சித்திட்டங்களில் தொடருறு கல்வி மிகவும் பிரபல்யம் அடைந்து வருகின்றது. இந்த தொடருறு ஆசிரியர் கல்வி தரம் மேம்பாடு, தகைமை விருத்தி, மீள்பயிற்சிகள், புத்தாக்க செயற்பாடுகள் ஆகிய நான்கு வகைச் செயற்பாடுகளை மையமாகக் கொண்டுள்ளது. இதற்காக ஐக்கிய தன்சானிய குடியரசில் ஆசிரிய வளமையங்கள் Teacher Resource Center (TRC) அறிமுகப்படுத்தப்பட்டன. இவை ஆசிரியர்கள் சந்திக்கும் இடமாகவும் ஆரம்ப புத பிரிவு ஆசிரியர்களுக்கு கருத்தரங்குகள், பட்டறைகள், குறுகிய காலப் பாடநெறிகள் போன்றவற்றை நடத்தும் இடமாகவும் தொழிற்பட்டன. இதற்கு ஒப்பாக பஃரேன் நாட்டில் ஆசிரியர்களுக்கிடையிலான தொழில்வாண்மை தகைமைகளை வளப் படுத்தவும் தொடர்ந்து
1க
அகவிழி ஜூலை 2014 (0
4:18
2ம்'.
91.81ாதுசன ந லதம்
பாடி மூப்பாழ்.
*1 NA)
பக).

Page 11
தொழில்வாண்மை கல்வியை வழங்கவும் ஒத்துழைப்பு கூடங்கள் என்பவற்றின் மூலம் பயிற்சி அளிப்பதற்காகவும் வளமையங்கள் தாபிக்கப்பட்டன. இந்தியாவில் 1986 முதல் சேவைக்கால பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ஆரம்ப முன்சேவை பயிற்சியை வழங்கிய 1500 நிறுவனங்களில் 275 சேவைக் கால பயிற்சியை வழங்கும் நிறுவனங்களாக மாற்றப்பட்டன. மேலும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு பல்கலைக்கழக மட்ட ஆசிரியர்களின் தொடர்ச்சியான கல்விக்காக 43 ஆசிரியர் கல்விக் கல்லூரிகளை தாபித்துள்ளது. பாகிஸ்தானிலும் ஆசிரியர் வளமையங்கள் சேவைக்கால ஆசிரிய கல்வி நிறுவனங்கள் உள்ளன. இவ்வாறு ஆசிரியர் கல்வி நிகழ்ச்சித்திட்டங்களில் தொடருறு ஆசிரியர் கல்விக்கு கூடிய முக்கியத்துவம் வழங்கப்படும் போக்கு காணப்படுகின்றது.
ஆசிரியர் ஒரு ஆய்வாளர்
ஆசிரியர் ஒரு ஆய்வாளர் என்ற எண்ணக்கரு இன்று வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இதற்காக இந்தியாவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள விரும்பும் ஆசிரியர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகின்றது. ஐக்கிய அமெரிக்கா ஆசிரிய பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தில் வழங்கப்படும் சிகிச்சை நிலைய அனுபவத்தில் வலியுறுத்தப்படும் நான்கு விடயங்களில் ஆய்வும் ஒன்றாகும். இவ்வாறு உலகலாவிய ரீதியில் ஆசிரியர் கல்வி நிகழ்ச்சித்திட்டங்களில் ஆய்வு முறையியல் என்ற பாடம் கற்பிக்கப்படுவதோடு எல்லா ஆசிரிய மாணவர்களும் ஒரு ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்பதும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
மீள் நோக்கு சிந்தனையும் கற்பித்தலும் ஆசிரியர் கல்வியை பொறுத்தமட்டில் பரந்த அளவிலான கவனத்தை ஈர்த்த பிறிதோர் எண்ணக்கரு மீள் நோக்கு சிந்தனையும் கற்பித்தலும் ஆகும். அனேக ஆசிரியர் கல்வி நிகழ்ச்சித்திட்டங்களில் மீள்சிந்தனையை தமது பிரதான அம்சங்களுள் ஒன்றாக வலியுறுத்தப்படுகின்றன. அதாவது ஆசிரிய மாணவர்கள் நுண்முறைக் கற்பித்தல், மாதிரிக் கற்பித்தல், கற்பித்தல் பயிற்சி, கட்டுறுப் பயில்வு மற்றும் உள்ளகப் பயிற்சிக் காலத்தில் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபடும்போது மீள்நோக்கு குறிப்பேடுகளை (Reflectiove Journal) பயன்படுத்த வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகின்றது. இதனை பயன்படுத்துவதால் ஒரு குறிப்பிட்ட செயற்பாட்டில் ஈடுபடும்போது அச்செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு தான் பெற்றிருந்த தேர்ச்சி போதுமானதா அல்லது போதாதா என்பதையும் அச்செயற்பாட்டில் ஈடுபடும்போது தான் எதிர் நோக்கிய இடர்கள் அல்லது பிரச்சினைகள் என்பவற்றை மீட்டிப்பார்த்து மீள் சிந்தனைக்கு உட்படுத்துவதுடாக தான்
அகவிழி (ஜூலை 2014
10

கொண்டிராத தேர்ச்சிகளை மீள்விருத்தி செய்து கொண்டு அச்செயற்பாட்டில் தொடர்ந்து ஈடுபடுவதற்கு உதவும். இதனால் ஆசிரிய மாணவர்கள் எல்லோரும் தங்களது பயிற்சிக்காலத்தில் கட்டாயம் மீள் நோக்கு குறிப்பேடுகளை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது.
ஆசிரியர் கல்வி நிகழ்ச்சித்திட்டங்களில் முகாமைத்துவத்தை அறிமுகப்படுத்தல் எல்லா நாடுகளதும் ஆசிரியர் கல்வி நிகழ்ச்சித்திட்டங் களிலும் கல்வி முகாமைத்துவம் ஒரு பாடமாக புகுத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணம் ஆசிரியர் ஒரு முகாமையாளர் (Teachers a Manager) என்ற எண்ணக்கரு விருத்தியடைந்து வருவதாகும். அதாவது ஆசிரியர் இன்று தனது வகுப்பிலுள்ள பல்வகைப்பட்ட மாணவர்களை கற்றலுக்கு முகாமை செய்ய வேண்டியுள்ளது. கற்றலுக்கான அசையும் அசையாத பௌதீக வளத்தையும் நேரத்தையும் முகாமை செய்ய வேண்டியுள்ளது. இதனால் மனித பௌதீக மற்றும் நேர முகாமைத்துவம் தொடர்பான அறிவை ஆசிரியர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்காக கல்வி முகாமைத்துவம் ஒரு பாடமாக ஆசிரியர் கல்வி நிகழ்ச்சித்திட்டங்களில் புகுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக பிரித்தானியாவில் ஆசிரியர்களில் விருத்தி செய்யவேண்டும் என அழுத்தம் கொடுத்துள்ள ஐந்து விடயங்களில் வகுப்பறை முகாமைத்துவமும் ஒன்றாகும். இதன் அடிப்படையில் ஆசிரிய பயிற்சி திட்டங்களில் கல்வி முகாமைத்துவம் ஒரு முக்கியமான கூறாக இடம்பெறுகிறது.
ஆசிரியர் கல்வி கலைத்திட்டங்களில் மாற்றங்கள் பிரித்தானியாவில் பயிற்சி பெற்ற அனுமதிப்பத்திரம் பெற்ற ஆசிரியரை உருவாக்குதல் என்ற விடயம் முக்கியம் பெற்றுள்ளது. இதற்காக ஆசிரியர் மாணவர்களின் பிரதான பாடமானது தேசிய கலைத்திட்டத்துடன் நேரடி தொடர்புடையதாக அமையவேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பாடமும் அதனை கற்பித்தலும் என்ற விடயத்திற்கும் பாடத்திசைமுகப்படுத்தல், தொழில்வாண்மை, செயல்முறை ஆகிய திசைமுகப்படுத்தல் ஆகிய விடயங்களுக்கும் முக்கியத்துவம் அளித்துள்ளது. அதேபோன்று ஐக்கிய அமெரிக்காவின் ஆசிரியர் கல்வி நிகழ்ச்சித்திட்டத்தில் காணப்படும் ஐந்து திசைமுகப்படுத்தல்களில் பாடம் சம்பந்தமான திசைமுகப்படுத்தலும் ஒன்றாக உள்ளது. இதனால் ஆசிரியர் நிகழ்ச்சித்திட்டங்களில் பாடம் சம்பந்தமான அறிவையும் கற்பித்தலோடு தொடர்புபட்ட செயல்முறை, தொழில்வாண்மை மற்றும் தொழில்நுட்பம் ஆகிய அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள போக்குகளை பல நாடுகளில் காணலாம்.

Page 12
ஆசிரிய நியமனங்கள் பறிற்சி பெற்றவர்களுக்கே வழங்கப்படல்
இன்று பெரும்பாலான நாடுகளில் ஆரம்ப முன்சேவை பயிற்சியை முடித்துக் கொண்டவர்களுக்கே ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கொள்கை தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால் ஆசிரியர் கல்வியில் முன்சேவைப்பயிற்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயமாக மாறி வருகின்றது. அத்துடன் முன் சேவை பயிற்சியின் தரமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால் ஆரம்ப முன்சேவை பயிற்சியை வழங்கும் நிறுவனங்கள் புதிதாக உருவாக்கப்படுகின்றது. அவற்றில் தரமான கல்வியை பெற்றுக் கொடுப்பதற்காகவும் நவீன கல்வி தொழினுட்பங்களை பயன்படுத்தி ஆசிரியர்களின் தேர்ச்சிகளை மேம்படுத்துவதற்கும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஆரம்ப முன் - சேவை பயிற்சியை பெற்றுக் கொண்டவர்களுக்கே ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற அம்சத்தின் காரணமாக முன் -சேவை பயிற்சியின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படும் போக்கு இன்றைய ஆசிரியர் கல்வியில் காணப்படும் முக்கியமான அம்சமாகும்.
ஆசிரியர்களுக்கு தொழினுட்ப பயிற்சி அளிக்கப்படல் தகவல் தொழினுட்ப நூற்றாண்டில் இன்று ஆசிரியரை விடவும் அறிவை பெற்றுக் கொள்வதற்கு பல்வேறு தொழினுட்ப சாதனங்கள் தோன்றிவிட்டன. கணினி, இணையம் போன்றன இவற்றில் முக்கியமானவை. இவற்றை அவ்வாறு கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது தொடர்பான அறிவு ஆசிரியருக்கு மிகவும் முக்கியமானது. மேலும் வகுப்பறைகளில் கரும்பலகை, வெண்கட்டி போன்ற சாதனங்களுக்கு மேலதிகமாக இலத்திரனியல் சாதனங்களின் பயன்பாடு தேவைப்படுகின்றது. இதனால் ஆசிரியர்கள் இவற்றை தமது கற்றல் கற்பித்தல் செயற்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்வதற்கு தேவையான பயிற்சியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். இதனால் ஆசிரிய கல்வியில் இன்று தகவல் தொழிநுட்ப கல்வி மிகவும் முக்கியமான ஒரு கூறாக காணப்படுகின்றது. இவ்வாறு ஆசிரிய கல்வியில் தகவல் தொழிநுட்பம் பெற்றுள்ள முக்கியத்துவம் ஆசிரிய கல்வி நிகழ்ச்சிதிட்டங்களில் இன்று பரவலாக பேசப்படும் ஒரு முக்கிய போக்காகும். நுண்முறை கற்பித்தல், போல கற்பித்தல் நுட்பங்கள் மீள்சிந்தனை, சொல்சாரா தொடர்பாடல், தொழினுட்ப பயன்பாடு போன்ற நவீன பயிற்சி முறைகளை பயன்படுத்தல்.
ஐக்கிய அமெரிக்காவில் அண்மைக்காலத்தில் NCATE இனால் செய்யப்பட்ட ஆராய்ச்சியின் பெரும்பாலான கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் நுண்முறை கற்பித்தலை பயன்படுத்துகின்றன. நுண்முறைக்

கற்பித்தல் என்பதன் கருத்து கற்பித்தல் செயன்முறையில் காணப்படும் சிக்கலான பல அம்சங்களை இலகுபடுத்தி கற்பிப்பதற்கான நோக்கத்தை கொண்ட ஒரு வழிமுறை ஆகும். இந்த நுண்முறை கற்பித்தல், ஆசிரிய கல்வித் துறையில் இன்று பிரபல்யம் பெற்று வருகின்றது. போல கற்பித்தல் நுட்பமுறையும் இன்று ஆசிரிய கல்வித் துறையில் பிரபல்யம் பெற்றுள்ளது. அதாவது ஆசிரிய கல்வியாளர்கள், அனுபவம் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய மாணவர்கள் மாதிரி கற்பித்தல் வகுப்புகளை செய்து காட்டி அதனூடாக ஆசிரிய மாணவர்களின் கற்பித்தல் தேர்ச்சியை விருத்தி அடையச் செய்வதற்கு
முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
Tா.
சொல்சாரா தொடர்பாடல் இன்று ஆசிரிய கல்வித் துறையில் மிகவும் பரவலாக பேசப்படும் ஒரு அம்சமாக உள்ளது. அதாவது அங்கமொழி, விழித்தொடர்பு போன்றவற்றின் ஊடாக மாணவர்களை கற்றலின்பால் ஈர்த்து வைத்திருக்க முடியும். கற்றலின்பால் மாணவர்களுக்கு கவர்ச்சி ஏற்படும். இதனால் ஆசிரியர்கள் சிறந்த முறையில் வாய்மொழி மூல தொடர்பாடல் செய்யக்கூடியவர்களாக இருப்பதோடு சொல் சாரா தொடர்பாடல் மற்றும் விழித் தொடர்பு போன்றவற்றையும் செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகின்றது. இதனால் ஆசிரிய பயிற்சியில் இந்த அம்சமும் முக்கியம் பெற்றுள்ளது.
எனவே உலகளாவிய ரீதியில் ஆசிரியர் கல்வி நிகழ்ச்சித்திட்டங்களில் செல்வாக்கு செலுத்தியுள்ள புதிய போக்குகளாக பாடசாலை சார்ந்த பயிற்சி, வேறு பயிற்சி முறைகளின் கூறுகளை ஒருங்கிணைத்து பெறும் ஒன்று சேர்முறை, நம்பிக்கை தராதரத்தை அறிமுகப்படுத்தல், பல்கட்ட தராதரப்பத்திரத்தை அறிமுகப்படுத்தல், ஆசிரியர் ஒரு ஆய்வாளர் என்ற எண்ணக்கரு வலியுறுத்தப்படல், ஆசிரியர் கல்வியில் மீள் நோக்கு சிந்தனையும் முக்கியத்துவம் பெறல், ஆசிரியர் கல்வியில் கல்வி முகாமைத்துவத்திற்கான முக்கியத்துவம் அதிகரிக்கப்படல், ஆசிரியர் கல்வி கலைத்திட்டத்தில் - பாட அறிவு, செயல்முறை, தொழில்வாண்மை, தொழில்நுட்பம் போன்ற அம்சங்கள் அனைத்திற்கும் மாத்திரமே ஆசிரியர் நியமனம் வழங்குதல், தகவல் தொழினுட்பத்திற்கு அழுத்தம் கொடுத்தல், நுண்முறை கற்பித்தல், போல கற்பித்தல், சொல்சார் தொடர்பாடல் போன்ற கற்பித்தல் முறைகளுக்கு ஆசிரியர் கல்வியில் முக்கியத்துவம் அளிக்கப்படல் போன்ற பல்வேறு அம்சங்கள் காணப்படுகின்றன.
தொடரும்.......
அகவிழி ஜூலை 2014 (-

Page 13
கல்வித் துறையின் நவீன போக்
'பா. தனபாலன் (இணைப்பாளர்) 'யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
கல்வித்துறையில் "Paradigm shift" என்ற கட்டளைக்கோள் மாற்றச் செயன்முறை அறிவைப் பல பரிமாணங்களில் விஸ்தரித்து விரிவான மாற்றங்களுக்கு உட்படுத்தி வருகின்றது. இதற்கிணங்க தற்போது உலகளாவிய ரீதியில் உட்படுத்தல் கல்வி தொடர்பான செயன்முறைகளும் பிரயோகங்களும் பாடசாலை முறைமையில் முதன்மைப் படுத்தப்படுகின்றது. கெட்டிக்காரர்களுக்கு என்ற நிலைமாறி ஜனநாயக வழியில் அனைவருக்கும் குறிப்பாக விசேட மாற்று வலுவுள்ளோருக்கும் சமமாகப் பாடசாலைக் கல்வி வழங்கும் செயன்முறையாக இது உள்ளது.
கல்வியின் எண்ணக்கரு
வறுமை , அங்கவீனம், கற்றல் பின்னடைவுகள், யுத்த தாக்கங்கள், நெருக்கடிகள், புலம் பெயர்வு, அகதி வாழ்வு குடும்பப் பிளவுகள் எனப் பல்வேறு காரணங்களால் கற்றலில் பங்குபற்றாமலிருக்கும் அனைவரையும் பொதுப் பாடசாலைகளில் விசேட ஏற்பாடுகளுடன் உட்படுத்தப்படுவதுடன் சம அடிப்படையில் ஜனநாயக வழி முறைகளில் கற்றல் - கற்பித்தல் செயல் ஒழுங்கில் அவர்களை உயிர்ப்புடன் உட்படுத்தலே உட்படுத்தல் கல்வியின் எண்ணக்கருவாகும். இந்த எண்ணக்கரு தற்போது முன்பள்ளியிலும் பாடசாலை முறையிலும் முறைசாரா திறந்த பாடசாலை ஆசிரியர் கல்வி என்பவற்றிலும் முதன்மைத் தொனிப் பொருளாக இணைக்கப்பட்டுள்ளது.
உலகிலுள்ள அனைத்து சமூகத்தினருக்கும் ஐனநாயக ரீதியில் கல்வியை உறுதிப்படுத்துவதற்கு சர்வதேச பங்களிப்பைக் குறிக்கும் வகையில் 1990ம் ஆண்டு ஜோம்தியன் பிரகடனத்தில் (Jomtion Declaration) ஜனநாயக அடிப்படையில் எல்லோருக்குமான கல்வி இலக்குகள் உருவாக்கப்பட்டன. இது 2000ம் ஆண்டு செனகல் நாட்டில் டாகர் செயல்சட்ட கத்துடன் (Dakar frame work ofaction) மீளவும் உறுதிப்படுத்தப்பட்டது. இதன்படி மனிதர்கள் வாழ்வதற்கும் தமது முழு இயலுமையை விருத்தி செய்வதற்கும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளவும் எல்லோருக்குமான ஜனநாயகக் கல்வி வழிகாட்டும். இதனை கற்பதற்குக் கற்றல் (Learning to Learn) என்ற தேர்ச்சியினூடாக,
S) அகவிழி ஜூலை 2014

கில் உட்படுத்தல்
»
»
வாழ வேண்டுமானால் கற்க வேண்டும். வாழ்நாள் முழுவதற்குமான முக்கிய செயலாகக் கற்றல் இருக்க வேண்டும் கற்றுக் கொண்ட விடயங்கள் சமூக ரீதியாகப் பிரயோகிக்கப்பட வேண்டும்.
மனித விருத்தியுடன் சுமையாக அல்லாமல் அனுபவமாகவும் அனுபவித்தலாகவும் கற்றல் இருக்க வேண்டும்.
»
வாழ்க்கைச் செயற்பாடுகளுடன் கற்றவை இணைந்து உடன் துலங்கல் (Impulsivity) (Reflectivity) ஆகிய வெளியீடுகள் ஏற்பட வேண்டும்.
மாணவர் கல்வியில் இருந்து விலகல்
எமது நாட்டில் சமூகத்தில் மேற்கூறிய நிலைகள் போதுமாக இல்லாமைக்கு குடும்பப் பின்ணணி, வறுமை, அங்கவீனம், பாதுகாப்பின்மை, பாடசாலைப் பின்னணி, பரீட்சை அச்சுறுத்தல், பயம், பிள்ளையின் தேவை அறியாத கற்பித்தல் முறைகள், தண்டனைகள் கலைத்திட்டக் குறைபாடுகள் பரீட்சை இலக்கு மட்டுமான கல்வி, வேலை அலகு சுய - ஆளுமை விருத்தி. தொழில் நுட்ப - மொழித் தேர்ச்சியற்ற நிலைகள். நாட்டு நிலைமைகள், யுத்த தாக்கங்கள், பாதுகாப்பற்ற நிலை, உள நெருக்கடிகள். சமூக கலாசாரச் சீர்கேடுகள் பொருத்தமில்லாத அரசியல் பொருளாதாரக் கொள்கைகள், போன்றவைகளால் பலர் கல்வியைத் தவறவிட்டுள்ளனர்.
இந்தக் காரணங்களால் கற்றலில் பங்குபற்றாமையை நீக்கி குறிப்பாக விசேட தேவைகள் உடையோரையும் மற்றும் அனைவரையும் பொதுப்பாடசாலைகளில் உட்படுத்துவதுடன் மட்டுமன்றி ஜனநாயக அடிப்படையில் கற்றல் கற்பித்தல் செயல் ஒழுங்கில் அவர்களை உட்படுத்துதலே உட்படுத்தல் கல்வியின் வரைவிலக்கணமாகவுள்ளது.
கல்வியைப் பெறுவதற்கு மாணவருக்குள்ள உரிமை சகல மாணவர்களும் தமது இருப்பிடத்திற்கருகில் தரமான கல்வியை (Quality education) பெறுவதற்காக உரிமையையும் இது வழங்குவதுடன் விசேட கல்வி

Page 14
தேவைப்படும் பிள்ளைகளை அவர்களுக்குத் தனியான பாடசாலைகளில் பயிலவைக் கும் அதி உயர் செயற்பாடாகவும் தந்திரோபாயமாகவும் உட்படுத்தல் கல்வி உலகளாவிய ரீதியில், உளவியல் ரீதியலும் முன்னெடுக்கப்படுகின்றது. இப்பிரயோகங்களை எமது பாடசாலைகளிலும் படிப்படியாக ஏற்படுத்த வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது.
ཥ ཊ ཊ
உட்படுத்தல் கல்விக்கான அடிப்படைகள் » மனித உரிமைப் பிரகடனம் (1948)
சிறுவர் உரிமை சமவியம் (1990) சாலமன்கா பிரகடனம் (1994) ஜொம்தியன் பிரகடனம் (1990) கல்விப் பிரகடனம் டகார் (2000) ஊனமுற்ற நபர்கள் தொடர்பான ஐ.நா. சமநலவாயம்
(2006)
உட்படுத்தல் கல்வியின் முதன்மைப் பிரயோகமாக பாடசாலை வகுப்பறைகளே காணப்பட வேண்டும்.
இதனூடாக ஒத்துழைக்கும் உறவுமுறை ஒன்றை உருவாக்கவும் ஊக்கங்களை வழங்கவும் அனுபவங் களைப் பகிரவும் பயன்படுத்தவும் பல்மட்டக் கற்பித்தல், பரிகாரக்கற்பித்தல், பல்தரக் கற்பித்தல், விசேட தேவை உத்திகள், நுட்பங்கள், சுய கற்றலுக்கான கற்பித்தல் ஆக்கத் திறனுக்கான கற்பித்தல், பன்முக நுண்மதிக்கான கற்பித்தல், தொழில் நுட்பத்திற்கான கற்பித்தல் ஆகியவற்றில் நிபுணத்துவ முறைமைகளைப் பிரயோகிக்க வேண்டியுள்ளது.
உட்படுத்தல் கல்வியின் முக்கியத்துவ நிலை
சர்வதேச சூழமைவில் வளர்ந்த நாடுகளில் உட்படுத்தல் கல்வி தொடர்பான செயலாற்றுகைகள் முதன்மை நிலையில் உள்ளது. பாடசாலைகளில் சகல பிள்ளைகளும் சேர்க்கப்படுவதுடன் அவர்களது முழுமையான பங்குபற்றல் அடைவினை உறுதிசெய்தல், கல்விக்கான தடைகளை நீக்குதல், மாணவர்களின் தனியாள் வேறுபாடுகளுக்கு ஏற்ப அதிநவீன கற்றல் கற்பித்தல் தந்திரோபாயமாகவும் உட்படுத்தல் கல்வியினது வளர்ச்சியடைந்துள்ளது.
ஆனால் எமது நாட்டிலும் பிரதேசத்திலும் யுத்த தாக்கங்களால் பொதுவாக அங்கவீனப் பிள்ளைகள், உளத்தாக்கங்களுக்கு உட்பட்டோர், தொழில் புரியும் பிள்ளைகள் தெருவோர - பிச்சை எடுக்கும் சிறார்கள் மிக வறிய பிள்ளைகள், மிகப் பின்தங்கிய பிரதேசங்களைச் சார்ந்தோர் மொழி. இன் பண்பாடு ரீதியாகப் பாதிப்புற்றோர், சிறுபான்மையினர், HIV தொற்றியோர் இடம் பெயர்ந்தோர், விசேட தேவையுடையோர் பாடசாலையிலிருந்து

விலகியோர் என 81% ற்கும் அதிகமானோர் பல்வேறு பாதிப்புக்களுக்கு உள்ளாகி கல்வி புறக்கணிக்கப்பட்ட நிலையில் கல்விக்கான உரிமையைத் தவற விட்டவர்களாக விட்டுக்கொண்டிருப்பவர்களாக காணப்படுகின்றனர்.
எனவே ஒரு புரட்சிகரமான முறையில் உட்படுத்தல் கல்வி தொடர்பான விழிப்புணர்வையும் செயலாற்றுகைகளையும் பல்பரிமாணங்களில் ஏற்படுத்த கல்வியமைச்சு கல்விக்கான புதிய சட்டம் ஒன்றை உருவாக்கும் நோக்கில் உட்படுத்தல் கல்விக்கான பரந்த செயற் தொடர் முன்மொழிவை New education Act for general education in Srilanka இலங்கைப் பொதுக்கல்விக்கான புதிய சட்டம் என்கின்ற ஆவணம் எடுத்தியம்புகிறது. இது ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்தும் உயிர்ப்பிக்கும் செயற்தொடர் எனவும் எடுத்தியம்புகிறது.
உட்படுத்தல் கல்விக்கான தடைகளைத் தகர்த்தல்
சமகாலக் கல்வி முறைகளில் பல்வேறு வகையான புதிய மாற்றங்களும் இற்றைப்படுத்தல்களும் நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கும் போது அவை பற்றி அறியாத நிலையில் கல்விப்புலம் சார்ந்தோர் இருப்பதும் கல்வி முறையிலும் கொள்கைப் பிரயோகத்திலும் பல்வேறு முரண்பாட்டுத் தெளிவின்மைகள், புரிந்துணர்வின்மைகள் விளங்கிக் கொள்ளாமைகள் கல்வியியலாளர்கள், கொள்கைவகுப்போர் பணிப்பாளர்கள், அதிபர், ஆசிரியர் பொருத்தமான மனிதத்துவ இடை வினைகள் போதாமை, அறிவுமைய சமூகம் நோக்கிய விழிப்புணர்வுகள் ஊடக செயலாற்றுகைகள் இன்மைகள், பல்வேறு புறக்கணிப்புக்கள், எதிர்காலவியல் நோக்கிய தீர்க்க தரிசனமின்மைகளால் உட்படுத்தல் கல்வி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் நடைமுறைப்படுத்தலின் பின்னடைவுகள் காணப்படுகின்றன. இவற்றை விரைவாக நீக்கி தற்போதைய பொருத்தமற்ற மனப்பாங்குகள் மற்றும் விழுமியங்களை தகர்த்தெறிந்து புரிந்துணர்வை விருத்தி செய்து ஆசிரியர்களுக்கு வழிகாட்டலையும் வளங்களையும் மனப்பாங்குகளையும் பயிற்சிகளையும் வழங்க வேண்டும்.
அத்துடன் பெருமளவில் நவீன வளங்களை வகுப்பறைக்குள் கொண்டு வருதல் நெகிழ்வான கற்போன் மைய சூழலைக் கொண்டு வருதல், வகுப்பறை
எவர்களுடைய சுய மற்றும் ஜனநாயக விருத்திக்கான பண்பாட்டைக் கொண்டிருத்தல், புதிய பாடசாலைக் கலாசாரத்தைக் கட்டியெழுப்புதல், உட்படுத்தல் கல்வி தொடர்பான நிபுணர்களைக் கொண்ட இது தொடர்பான அ ஆய்வுகளையும் பிரச்சினைகளையும் கண்டுபிடித்தல் போன்ற செயலாற்றுகைகளை விரைவாக ஆரம்பிக்க வேண்டியுள்ளது.
அகவிழி | ஜூலை 2014 (?

Page 15
வினைத்திறன் மிக்கதாக ஆரா ஆக்குவோம்
திரு.மு. விக்னேஸ்வரன்
யா/உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம்
ஒரு செயலின் வினைத்திறனே அதன் விளைதிறனுக்கு ஊற்றாக அமைகின்றது. இது மனித வாழ்வியலின் அனைத்து துறைகளுக்கும் பொருந்தும் என்பது மறுப்பதற்கில்லை. இதில் பாடசாலைகள் விதிவிலக்கானவையல்ல. ஒருவனுடைய வாழ்க்கையில் படிப்படியான மாற்றத்தை ஏற் படுத்தி அவனைச் சமூகத்தோடு பின்னிப்பிணையவைப்பது கல்வியே. இது சமூதாயத்திற்கேற்ப பண்பாட்டு மரபினை இளம் தலைமுறையினர்க்கு உணரவைக்கின்றது. புதுக்கருத்துக்கள், புத்தாக்கங்கள், புத்தூக்கங்கள் என்பவை கல்வியின் பரிணாமத்துக்கு தூண்டுகோலாக அமைகின்றன. எனவே கல்வி தனியாள் ஆளுமையை விருத்தி செய்வதன் வாயிலாக சமூக வாழ்வை எழுச்சி பெறச் செய்கின்றது. ஆக வறுமை இதற்கொரு தடைக்கல்லாக அமைய முடியாது. இன்று உலகின் செல்வந்த நாடுகள் என வர்ணிக்கப்படும் ஜக்கிய அமெரிக்காவில் கூட 22.4 வீதமான பிள்ளைகள் வறியவர்களே. அது போல சுவீடனில் 2.6 வீதமான பிள்ளைகளும் டென்மார்க்கில் 5.1 வீதமான பிள்ளைகளும் வறியவர்களே. எனவே நாமும் வறிய பிள்ளைகள் என்ற பாரபட்சம் காட்டாமல் பிள்ளைகளை ஆரம்பக்கல்வியில் சரிவரப் புகுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்குத் துணையாகவும், பக்கபலமாகவும்
எமது நாட்டில் இலவசக்கல்வி அமைந்துள்ளது.
சுவாமி விவேகாநந்தரும் கல்வி பற்றிய பல கருத்துக்களை முன்வைத்துள்ளார். மேலாக கல்வி என்பது கட்டடங்களோ, தளபாடங்களோ, பாடப்புத்தகங்களோ அல்லது பரீட்சைகளோ அல்ல. அது மனிதனில் உறையும் ஆத்மீக சக்தியின் வெளிப்பாடு. ஆயின் உன்னுள் உறையும் ஆன்மீக சக்தியை வியாபிக்கச் செய்தால் ஏனைய யாவும் அதைச் சூழத் தாமாகவே இணையும். எனவே எமக்குள் உறையும் சக்தியை எடுத்து ஒளியூட்டி , மெருகூட்டி நிலை நாட்ட வழிகாட்டும் பொறுப்பு பாடசாலையை சார்ந்ததாகும். எனவே ஒவ்வொரு பாடசாலையையும் வினைத்திறன் மிக்க ஆரம்பக் கல்வியை வழங்கும் பாடசாலையாக ஆக்க வேண்டிய பாரிய பொறுப்பு பாடசாலை முகாமைத்துவத்தைச் சார்ந்ததாகும். இங்கு முகாமைத்துவத்தின் செயற்பாடு தர உறுதிப்பாடுடையதாக இருப்பது பொருத்தமானதாகக் கருதப்படுகின்றது.
பொதுவாக ஆரம்ப பாடசாலைகள் யாவும் ஒத்த தன்மையான முகாமைத்துவக் கட்டமைப்பை தன்னகத்தே கொண்டதாக அமைவது வரவேற்கத்தக்கதாகும். இதனால்
2014
அகவிழி ஜூலை
"14

bப பாடசாலையை
பெற்றோரிடையேயும் நல்ல பாடசாலையொன்றைத் தேடி நீண்ட தூரம் அலைய வேண்டிய நிலை ஏற்படாது. மாறாக நல்ல பாடசாலை பெற்றோரைத் தேடி வரும். பெற்றோரும் அப்பாடசாலையை நாடி வருவர். குறிப்பாக ஒவ்வொரு பாடசாலைகளினதும் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் போது எல்லாப் பாடசாலைகளும் கட்டுறுதித் தன்மையுடன் கூடியதாகவும் சமூகத்தின் அவாவையும் நிறைவு செய்தவை யாகக் கூறப்படுகின்றன. ஆனால் யதார்த்தத்தில் அவற்றின் போக்குகள் ஆரோக்கியமானவையாகக் காணப்படவில்லை. யதார்த்தத்தில் பாடசாலைகள் வினைத்திறனின்றிக் காணப் படுமிடத்து பெற்றோர். வினைத் திறனுள்ள பாடசாலையை நாடித் தேடித்திரிவதனைத் தவறெனச் சுட்டிக் காட்டுவது உகந்ததல்ல. எனவே அனைத்துப் பாடசாலைகளும் வினைத்திறனுடையவையாக மாற வேண்டும்.
வரம்புயர நீருயரும் | நீருயர நெல்லுயரும் . நெல்லுயர குடியுயரும்
குடியுயர கோனுயர்வான் என நெற்செய்கையில் விளைதிறனுக்கு எந் தளவுக்கு வினைத்திறனை உயர்த்த வேண்டும் என ஒளவையார் தெளிவுபடுத்தியுள்ளார். அவ்வாறாக ஆரம்ப பாடசாலைகளின் வினைத்திறன் உயர்ந்தால் மாணவர்களின் விளைதிறன் அதிகரிக்கும். அவ்வாறாக அதிகரிக்கும் போது பிரதேசத்தினதும் நாட்டினதும் கல்வி மட்டம் உயரும், அதனால் பாடசாலையும் வளரும். அதன் பெயரும் புகழும் கூடும். பெற்றோரும் மகிழ்வார் சமூகமும் வளரும் நாட்டின் கல்வித் தரமும் உயரும். எனவே பாடசாலைகள் வினைத்திறன் மிக்கதாக மாற வேண்டியதும், மாற்ற வேண்டியதும் காலத்தின் கட்டாய தேவையாகும். இந் நிலைமை 1000 பாடசாலைகளின் ஊட்டப் பாடசாலைக்கு மட்டுமன்றி புட்டிப்பால் குடிக்கும் மற்றைய பாடசாலைகளும் பெறுவதற்கு பொறுப்பானவர்களினால் அங்கீகரிக்கப்படவேண்டும். அவ்வாறாயின் எல்லாப் பாடசாலைகளும் வினைத்திறன் மிக்க பாடசாலையாக மாறும் என நம்பப்படுகின்றது.
வினைத்திறன் மிக்க ஆரம்ப பாடசாலை ஆவதற்கு வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்த மக்கள் பாடமாக அமைவது போல நாம் பின்பற்றுவதற்கு சில நாடுகளின்

Page 16
பாடசாலைகள் முன் உதாரணமாக அமைந்துள்ளன. உதாரணமாக மலேசியா நாட்டை நோக்கிய போது அங்குள்ள அனைத்துப் பாடசாலைகளும் தேசிய ரீதியான ஒரே பொதுவான முகாமைத்துவ கட்டமைப்பு காணப்படுகின்றது. அனைத்துப் பாடசாலைகளும் பெற்றோரிடம் சம அளவிலான வரவேற்பைப் பெறுகின்றன. ஆயின் பாடசாலைத் தெரிவில் பெற்றோர்கள் போட்டி நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டு சுதந்திரமாகச் செயற்படுகின்றனர். இந் நிலையை எமது நாடும் பொருத்தமாக ஆக்கிக் கொள்ள வேண்டும். ஆரம்ப பாடசாலைகள் இடைநிலைப் பாடசாலைகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டு வேறாக்கப்பட்ட ஒரு நிறுவனமாகச் செயற்படுவது பயனுறுதி மிக்கதாக அமையும்.
ஆரம்ப பாடசாலையின் அச்சாணியாகப் பொறுப்பை ஏற்றுள்ள அதிபர் தனது பதவியைத் தக்க வைப்பதில் மட்டும் கவனத்தைச் செலுத்தாது தனது காலத்தில் கல்வித் துறையில் புரட்சியை ஏற்படுத்தி ஒரு தனி முத்திரையைப் பொறித்துச் செல்ல முற்பட வேண்டும். எதிர் வரும் காலங்களுக்கும் பொருத்தமான சிறப்புத் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும். பாடசாலைக்கும் அதிபருக்கும் உதவும் வகையில் பொருத்தமானவர்களைத் துணை அதிபர்களாக உள்ளக ரீதியில் நியமிக்கலாம். அவ்வாறு நியமிக்கப்படுவோர் தன்னிச்சையாகச் செயற்படக் கூடாது. ஆயினும் இவர்கள் பல வருட கால ஆரம்ப பாடசாலை அனுபவத்துடன் திறமையுடையவர்களாக இருப்பது வரவேற்கத்தக்கது. அனுபவத்தை விட திறமைக்கு மதிப்பளிப்பது பொருத்தமானது எனின் அதை மேற்கொள்ளலாம். இவர்கட்கு கலைத்திட்டம், மாணவர் வேலைகள், இணைப்பாட விதானம், மாணவர் ஒழுக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடைய பொறுப்புக்களை வழங்கலாம். இக் குழுமத்தினரிடம் எப்போதும் சகோதரத்துவம், சமத்துவம், ஒத்தாசை , ஒற்றுமை, திருப்தியுடன் தொழில் புரியும் ஆவல் போன்ற முனைப்புகள் விரவியிருத்தல் வேண்டும். இவ்வாறாக அதிபர் துணை அதிபர்களிடம் பொறுப்புக்களை மனத் திருப்தியுடன் பகிர்ந்தளித்தால் உச்ச வினைத்திறனை எதிர் பார்க்க முடியும். ஆசிரியர் கழகத்திற்கு முரண்படாதவாறு நட்புணர்வுடன் செயற்பட முன்வர வேண்டும். தினசரி அதிபர் ஆசிரியர்கள் இடைவேளையின் போது அல்லது பாடசாலை ஆரம்பம் அல்லது முடிவில் அன்றைய செயற்பாடுகளின் பலம், பலவீனம் பற்றி 5 நிமிடங்கள் நட்புணர்வுடன் கலந்துரையாடலாம். பின் பிரச்சினைக்கு ஆரோக்கியமான முறையில் தீர்வு காணலாம். வாரமொரு முறை பரிகாரக் கற்பித்தலில் ஆர்வம் காட்ட வேண்டும். இச் செயற்பாட்டின் போது மாணவர்க்கு மாணவர் கற்பிக்கும் திறனையும் வளப்படுத்திக் கொள்ளலாம். தேவையேற்படும் பட்சத்தில் மட்டும் மேலதிக வகுப்புக்களை ஏற்பாடு செய்வது பொருத்தமானது. ஆசிரியர்களை மேற்பார்வை செய்யும் போது பாடசாலையின் அகச் சூழலுக்கேற்ப நடைமுறைப்படுத்துவது பொருத்தமாக அமையும்.

மேற்பார்வையை எல்லோரும் ஆலோசனையை வழங்கக் கூடியதாக இருத்தல் வேண்டும். அது முரண்பாட்டைத் தோற்றுவிக்கக் கூடாது. அதே வேளையில் ஆசிரியர்களும் அதனை மனப் பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கைக் கொண்டிருக்க வேண்டும் அல்லது மாற்றமடைய வேண்டும்.
மாணவர்களும் நலனோம்பலும்
எந்தவொரு பாடசாலையிலும் மாணவர்களின் நலனோம்பல் மிக மிக முக்கியமானதாகும். ஆசிரியர்கட்கு ஓய்வு அறை முக்கியமானதாகும். அதில் ஒவ்வொரு ஆசிரியருக்கும் என தனியிடம் ஒதுக்கப்பட வேண்டும். அங்கே பாடக்குறிப்பு எடுத்தல், உபகரணங்களைத் தயாரித்தல், எழுத்து வேலைகளை செய்தல், நூல்களை வாசித்தல் போன்றவற்றை இடையூறின்றி மேற்கொள்ள இது வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் கட்டமைப்பை வலுப்படுத்தி வைத்துக் கொள்வதில் முகாமைத்துவம் தன்னிச்சையில் செயற்படுவது பொருத்தமானது. வீட்டிலும் பாடசாலையிலும் மாணவர்களுக்குப் பல்வேறு பிரச்சினைகள், முரண்பாடுகள் உருவாகலாம். எனவே இவற்றுக்கு தீர்வு காண வேண்டியது பாடசாலையின் முக்கிய கடமையாக எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே பாடசாலையில் அதற்குப் பொருத்தமான இடத்தையும் பொருத்தமான ஆசிரியரையும் தெரிவு செய்வதில் அதிபரின் நிபுணத்துவ சேவை வேண்டப்படுகின்றது. இவ் விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
மாணவர்களின் உடல் நலனைப் பரீட்சிப்பதற்காக தவணைக்கு ஒரு முறையாக வருடத்தில் மூன்று முறை வைத்திய பரிசோதனை செய்வதற்கான ஒழுங்குகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இச் செயற்பாட்டிற்குப் பொருத்தமான ஆசிரியரை நியமிக்க வேண்டும். இவ்விடயத்தில் துணைசார்ந்த ஆசிரியரின் பங்களிப்பு மிக மிக எதிர்பார்க்கப்படுகின்றது.
நிறைவாக
ஒரு கிராமத்தினதோ பிரதேசத்தினதோ சிறப்பியல்புகளைச் சித்தரிக்கும் கருவியாக அமைவது கல்வியே. இதனை வழங்கும் உன்னத நிறுவனங்கள் பாடசாலைகளே . இவற்றை வளப்படுத்துவதில் அரசுக்கு அடுத்ததாக செயற்பட வேண்டிய பொறுப்பு அப் பகுதி வாழ் மக்களிடமேயுள்ளது. எம் முன்னோரின் சிந்தனையில் கருவாகி உருவாக்கி வளர்க்கப்பட்ட பாடசாலைகள் இன்று தொய்வு நிலையிலிருப்பினும் அவற்றை உற்சாகப்படுத்தி வளப்படுத்தி வளமிக்க பாடசாலையாக மாற்றத் தோள் கொடுத்தால் அவை நிச்சயம் வினைத்திறன் மிக்க பாடசாலையாகி தனது கடமைகளைச் சரிவரச் செய்து சமூகத்துக்குப் பல நற்பிரசைகளை உருவாக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆயின் பாடசாலை நிர்வாகத்துடன் இணைந்து வினைத்திறன் மிக்க 2 பாடசாலைகளை ஆக்கிட நிர்வாகத்துடன் இணைந்து பெற்றோர்களாகிய நாமும் தோள் கொடுப்போம்.
அகல்
ஜூலை 2014 *
ரம்:
15
*-படிக்க
2ாஈஈன தம்
மாறட்டமானம்,

Page 17
இலங்கையில் பாடசாலைகளில் உட ஆறாந்தர தமிழ் பாடநூலில் உள்ள ஒரு பாடம்
கலாநிதி கோணாமலை கோணேசபிள்ளை
ளை
'B.ED, (Hons), M.A, M.Sc., ED.D., Ph12
ஆறாம் தரத் தமிழ்ப் பாட நூலில் 4ஆம் பாடமாக "விபுலானந்த அடிகள்" என்னும் பாடம் அமைந்துள்ளது. தம்பியும் தங்கையும் கேள்விகள் கேட்க அண்ணா விடை கூறுகின்றார். ஆனால் ஆறாம் தரப் பிள்ளையின் அண்ணா விபுலாநந்தர் பற்றிய விபரங்களை அறிந்திருப்பாரா? என்ற கேள்வி எழுகிறது.
விபுலாநந்தர் தனது பெயரை இவ்வாறுதான் எழுதியுள்ளார். விபுலானந்தர் என்று எழுதவில்லை. 1926இல் வெளிவந்த “மதங்கசூளாமணி"யிலும் 1947இல் வெளிவந்த "யாழ் நூலிலும்" விபுலாநந்தர் என்றே தனது பெயரை எழுதியுள்ளார். அவருடைய மாணாக்கர்களான புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை, பண்டிதர் வி.சி. கந்தையா ஆகியோரும் இவ்வாறே கையாண்டுள்ளனர். சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா மலரிலும் இவ்வாறே தரப்பட்டுள்ளது. ஆனால் விபுலாநந்தரைப் பற்றி எழுதும் பல எழுத்தாளர்கள் இதை அறிந்திலர்.
பாட நூலில் அவர் பிறந்த ஊர் “மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பிலே காரைதீவு" என்று தரப்பட்டுள்ளது. "மீன்பாடும் தேனாடாம்" என்னும் சொற்தொடர் இந்த வகுப்புப் பிள்ளைகளுக்கு தெளிவான எண்ணக்கருவை ஏற்படுத்துமா? மேலும் காரைதீவு மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது அமையவில்லை.
அவரது தாய் தந்தையர் பற்றிச் சொல்லுங்கள் என்ற கேள்விக்கு "அவரது தந்தையின் பெயர் சாமித்தம்பி, தாயின் பெயர் கண்ணம்மையார்" என்று விடை தரப்படுகிறது.
 ெஅகவிழி ஜூலை 2014
கேள்விக்கு ஏற்ற விடையா இது? அவரது தாய் தந்தையர் பெயர் என்ன? என்னும் கேள்விக்குத்தான் இந்த விடை பொருந்தும். மேலும் தந்தையின் பெயர் சாமித்தம்பி என்றால் தாயின் பெயர் கண்ணம்மை என்பதே சரியானதாகும்.
விபுலாநந்த அடிகளாரின் இயற் பெயர் என்ன? என்று ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. இது அவரது இயற்பெயர் அல்ல என்று இந்த வகுப்புப் பிள்ளைகளுக்குத் தெரியுமா? இராமக்கிருஷ்ண சங்கத்தில் துறவியாகினால், ஆரம்பத்தில் சைத்தன்ய நிலையில் ஒரு பெயரும் பின்

பயோகப்படுத்தப்படும் - பற்றிய குறிப்பு
சுவாமி நிலையில் வேறோர் பெயரும் சூட்டப்படுகின்றன என்றும் இந்த வகுப்புப் பிள்ளைகளுக்குத் தெரியுமா?
அவரது இயற்பெயர் “மயில்வாகனம்" என்றுதான் பிறப்புச் சான்றிதழ் தருகிறது. "மயில்வாகனன்" என்று அல்ல.
விபுலானந்த அடிகளார் பல மொழிகளில் புலமை பெற்றிருந்தாரா அண்ணா? என்று கேள்வி கேட்கப்படுகிறது. இந்த வகுப்புப் பிள்ளைகளுக்கு "புலமை" என்னும் சொல்லுக்கு தெளிவான எண்ணக்கரு ஏற்பட்டிருக்குமா? இவர்கள் இவ்வாறான கேள்வி கேட்பதற்கு பல மொழிகள் பற்றியும் அறிந்திருப்பார்களா?
இக் கேள்விக்கு விடையாக "ஆம். தமிழ், ஆரியம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமையும் இலத்தீன், மலையாளம், சிங்களம் ஆகிய மொழிகளில் அறிவும் பெற்றிருந்தார். அத்துடன் பயிற்சி பெற்ற ஆங்கில ஆசிரியராகவும், விஞ்ஞான டிப்ளோமா பட்டதாரியாகவும், தமிழ் பண்டிதராகவும் விளங்கினார்".
இங்கே "புலமை" "அறிவு' ஆகிய சொற்கள் கையாளப் படுகின்றன. இவற்றின் வேறுபாட்டை இந்த மாணவர்கள் விளங்குவார்களா? மேலும் "வேஜில்" என்ற கவிஞரின் லத்தின் மொழியில் உள்ள காவியத்தை தமிழில் மொழிபெயர்த்துள்ளார் விபுலாநந்தர். எனவே லத்தின் மொழியில் புலமை இல்லையென்று சொல்லலாமா?
விபுலாநந்தர் பயிற்சி பெற்ற ஆங்கில ஆசிரியர். மதுரைத் தமிழ்ச் சங்க தமிழ் பண்டிதர் , கொழும்பு தொழில்நுட்பக் கல்லூரி ரசாயனவியல் டிப்புளோமா சான்றிதழ் பெற்றவர். லண்டன் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானமாணி பட்டம் பெற்றவர். இத்தகைமைகள் தெளிவாகத் தரப்படவில்லை.
அவர் எந்தப் பாடசாலைகளில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார் அண்ணா என்று கேள்வி கேட்கப்படுகிறது. எனவே கேள்வி கேட்பவருக்கு விபுலாநந்தர் பற்றிய பிழையான அறிவு உண்டு என்று தெரிகிறது. தலைமை ஆசிரியர் என்ற பதவியே தற்போது இலங்கையில் இல்லை. மேலும் அதிபர் என்ற பதவியே உள்ளது. விபுலாநந்தர்,

Page 18
, கசகச்சு
ஈ444ாத்கா
15.21 1
மயில்வாகனமாக இருந்தபோது மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும் விபுலாநந்தர் என்னும் நாமம் பெற்றபின் சிவாநந்த வித்தியாலயத்திலும் அதிபராகப் பணியாற்றினார். திருகோணமலை இந்துக் கல்லூரியை ராமக்கிருஷ்ண சங்கம் பொறுப்பேற்றதும் அதன் முகாமையாளராகவும் பணியாற்றினார்.
விபுலாநந்த அடிகள் பேராசிரியராகப் பணியாற்றியதாக எங்கள் ஆசிரியர் கூறினார். அவர் பணியாற்றிய பல்கலைக்கழகங்கள் எவை என்று கூறுவீர்களா அண்ணா? என்ற கேள்வி கேட்கப்படுகிறது. ஏன் இந்தக் கேள்வியை பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார் என்று எடுத்துரைத்த ஆசிரியரிடம் கேட்கவில்லை? மேலும் ஆசிரியர் விபுலாநந்தரைப் பற்றி ஏற்கனவே கூறியுள்ளளார். ஆனால் மாணவர்கள் தங்களுக்கு வேண்டிய விபரங்களை வேறு இடத்தில் அதாவது தமது குடும்ப உறுப்பினரிடம் இருந்து பெறவேண்டி இருப்பதாக இந்த அத்தியாயம்
எடுத்துக் கூற முயல்கிறது போலும்.
விபுலானந்த அடிகள் எழுதியுள்ள நூல்களையும் கட்டுரைகளையும் பற்றி விளக்கமாகச் சொல்லுங்கள் அண்ணா .
என்ற கேள்விக்குக் கொடுக்கப்பட்டுள்ள விடை
அவர் எழுதிய நூல்களுள் யாழ்நூல், நாச்சியார் நான்மணிக்கோவை என்பன சிறந்தவையாகும். அடிகளார் நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். மதுரைத் தமிழ் சங்க இதழான செந்தமிழ், கரந்தைச் தமிழ் சங்க இதழான தமிழ்ப்பொழில் , இராமகிருஷ்ண இதழான ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் ஆகியவற்றிலும் கலைமகள், செந்தமிழ்ச் செல்வி முதலிய சஞ்சிகைகளிலும் அடிகளார் எழுதிய கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
இது விளக்கமான விடையா? அடிகளார் எழுதிய மதங்கசூளாமணி என்னும் நாடக நூல் 1926 ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கத்தால் வெளியிடப்பட்டது. இது

illi il!
அவர் எழுதிய முக்கிய நூல்களில் ஒன்றாகும். இதை சிறந்த நூலாக குறிப்பிடப்படாது பின்னர் கேள்விக்கு விடையாகத் தரப்படுகிறது.
பண்டிதர் மயில்வாகனனார் எப்போது சுவாமி விபுலாநந்தர் ஆனார்? என்னும் கேள்வி கேட்கப்படுகிறது. இங்கே விபுலாநந்த அடிகள் சுவாமி விபுலாநந்தராக மாறிவிட்டார்.
இந்தக் கேள்வி "பண்டிதர் மயில்வாகனனார் எவ்வாறு சுவாமி விபுலாநந்தர் ஆனார்? என்று அமைந்திருந்தால் விடை படிபவர்களுக்கு உரிய விளக்கத்தைத் தரலாம். ஏற்கனவே விபுலாநந்த அடிகள் என்று ஆரம்பித்து பின் சுவாமி விபுலாநந்தர் பற்றிய கேள்வி எழுகிறது.
கடைசிக் கேள்வியாக “ அவர் எவ்போது இறைவனடி சேர்ந்தார்? என்று கேட்கப்படுகிறது. "இறைவனடி சேர்ந்தார் என்னும் எண்ணக்கரு இந்த நிலை மாணவர்களுக்கு ஏற்றதல்ல. எப்போது உயிர் நீத்தார் என்பது இலகுவில் விளங்கக்கூடியது.
இக் கேள்விக்கு விடை இவ்வாறு தரப்பட்டுள்ளது.
"சுவாமி விபுலானந்தர் தமது வாழ் நாள் முழுவதும் தமிழுக்கும் சமயத்துக்கும் தொண்டாற்றி 1949ஆம் ஆண்டு ஆடி மாதம் 19ஆம் நாள் இறைவனடி சேர்ந்தார்".
ஆனால் சுவாமி விபுலாநந்தர் 1947ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 1மணி 15 நிமிடத்தில் உயிர் நீத்தார் என்று "சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு மலர் கூறுகிறது. மேலும் சுவாமியின் பூதவுடல் 1947ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் திகதி சமாதியில் அடக்கம் செய்யும்போது சிவாநந்த வித்தியாலய மாணவனாக நானும் அந்த நிகழ்வில் கலந்துகொண்டேன் என்பதையும் கூற விரும்புகிறேன்.
பாட நூல்களில் இடம் பெறும் விடயங்கள் அந்த அந்த வகுப்பு மாணவர்களின் எண்ணக்கரு விருத்தி, சிந்தனை விருத்தி, அனுபவம் ஆகியவற்றுக்கு பொருத்தமுள்ளவையாக அமைதல் வேண்டும். அவர்கள் படிக்கும் விடயங்கள் அவர்களின் அறிவு விருத்திக்கு உறுதுணையாக இருத்தல் அவசியம். இல்லையேல் கற்றல் சுமையாக அமைந்து அவர்களின் வளர்ச்சிக்கு உதவாது போய்விடும்.
அகவிழி ஜூலை 2014 E

Page 19
இன்றைய சமூகத்தில் மூலிகை வி பாடசாலைகளின் பங்கு
'ப. அருந்தவம் 'வலயக்கல்வி அலுவலகம், வலிகாமம்
எமது பண்டைய மக்களின் பண்பாடு, வாழ்க்கை முறை, கலைப்படைப்புக்கள் எல்லாமே அற்புதமானவை. இவை இத்தலைமுறையுடன் அழிந்து போக வேண்டியவையல்ல. அவை தலைமுறை தலைமுறையாகக் காவிச்செல்லப்பட வேண்டியவை.
7;டர் * 7
முற்காலங்களில் தரிசு நிலத்தில் விளைந்த நெருஞ்சி, கீழ்காய் நெல்லி, பென்னாவரசு போன்றன இன்று அரிதாகிவிட்டன. அதன் மருத்துவ குணங்களையும் மறந்து விட்டோம். இற்றைக்கு இருபது முப்பது வருடங்களிற்கு முன்னர் காய்ச்சல், சளி, இருமல், அம்மை போன்ற இன்னோரன்ன உடல் நலக் குறைவுகளிற்கெல்லாம் மூலிகைச் சாறெடுத்து மூன்று வேளை, மூன்று நாட்களே பயன்படுத்தி வெற்றி கண்டவர்கள் எம்மவர்கள்.
இன்று நம் வாழ்வில் மரபார்ந்த விடயங்கள் பல தூக்கியெறியப்பட்டுள்ளன. இவ்வாறு தூக்கியெறியப்பட்ட விடயங்களில் மூலிகைப் பயன்பாடும் ஒன்றாகும். இம்மரபார்ந்த விடயங்கள் எமது கையைவிட்டுப் போனதையிட்டு நாம் கவலையே கொள்ளவில்லை. காரணம் இப்பாரம்பரியத்தின் முக்கியத்துவம் சிறுபராயத்தில் எமக்கு கற்பிக்கப்படாமையேயாகும்.
மூலிகை தொடர்பான விழிப்புணர்வின்மை காரணமாக சிறுவர்கள் பல உடல், உளச்சிக்கல்களையும் சந்திக்கிறார்கள். இதயநோய், சிறுநீரகப் பாதிப்பு, புற்று நோய், நீரிழிவு, அதீத உடற்பருமன், மிகச்சிறுவயதில் பூப்பெய்துதல், கற்பவியல் குறைபாடுகள் போன்றனவும் எம்மை யோசிக்க வைக்கிறது. இயற்கையுடனான தொப்பூள் கொடி உறவை அறுத்துக் கொண்டதன் விளைவுதான் இவை. மாற்றான் தாய் பிள்ளைகளைப் போல வெளிநாட்டு உணவுமுறை, வெளிநாட்டு வாழ்க்கை முறைக்கு மாறியதன் விளைவாகவும் இவற்றைக் கருதலாம்.
தொலைக்காட்சி விளம்பரங்களில் வரும் துரித உணவுப் பொருட்களையும் அழகு சாதனங்களையும் பார்த்து ஏக்கத்தில் தள்ளப்பட்டவர்கள் நாங்கள் பொய்யான தோற்றத்தை உருவாக்கும் இவற்றை நாம் இன்று நாகரிகம் என்றுகூட அடையாளப்படுத்தி வருகிறோம்.
6 அகவிழி ஜூலை 2014

ழிெப்புணர்வூட்டலில்
காலத்தின் தேவை
நாம் இப்போது வீடு தோறும் தலைவலி மாத்திரை முதற்கொண்டு கால் வலி மாத்திரைகள் வரை வாங்கி வைத்துள்ளோம். காரணம் இவை அவசரத்திற்குதவும் என்ற நம்பிக்கையே அத்துடன் வீட்டில் அவசரத்திற்குதவ மூலிகைச் செடி வளர்ப்போம் என்ற எண்ணம் எம்மனதில் உதிக்குமாயின் அது ஒரு நன்மை தரும் செயற்பாடாகும்.
மூலிகை வளர்ப்புப்பற்றிய சிந்தனையோட்டத்தை இளம்பராயத்திலேயே சிறுவர் மத்தியில் விதைப்போமாயின் அதன் மூலம் சிறந்த பலனைப் பெறமுடியும். சிறுவர்களை எதிர்கால வாழ்க்கைக்குத் தயார்படுத்தும் நிலையங்களாான பாடசாலைகளில் பாடவிதான செயற்பாடுகள் ஊடாகவும், இணைப்பாடவிதான செயற்பாடுகள் ஊடாகவும் மூலிகைத் தோட்டங்களை வடிவமைத்து மாணவருக்கு பயிற்சி வழங்க முடியும்.
மூலிகைத் தோட்டம் அமைப்பு பாடசாலைகளில் தாவரம் வளர்வதற்குப் பொருத்தமான நீர்வசதி, போதியளவு சூரியஒளி கிடைப்பு, பாதுகாப்புமிக்க இடமொன்றைத் தெரிவு செய்துகொள்ள வேண்டும். இடவசதி குறைவான பாடசாலைகளில் சாடிகளின் உதவியைக் கொண்டும் இவ்வாறான மூலிகைத் தோட்டங்களை உருவாக்கிக்கொள்ள முடியும்.
இங்கு மூலிகைத் தாவரங்களை இனங்காண்பதற்கு தாவரத்தின் பெயர் பொறிக்கப்பட்ட பலகையை தாவரத்தின் அருகில் காட்சிப்படுத்துதல் இன்றியமையாதது. இங்கு காலத்திற்குக் காலம் இத்தாவரங்களைப் பராமரித்தல், அவற்றின் மருத்துவரீதியான பயன்கள், இவற்றைப் பயன்கொள்வதில் உள்ள உத்திகள் போன்றவற்றை மாணவர்கள் அறிவதற்கும் வகை செய்தல் வேண்டும்.
மூலிகைத் தினம் கொண்டாடல்
பாடசாலையின் மூலிகைப் பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்திருக்கும் காலத்தில் மாணவரின் பெற்றோரையும், அயல் சமூகத்தினரையும் வரவழைத்து மூலிகைத்தினத்தைக் கொண்டாடலாம். இத்தினத்திற்கு வருகை தருவோருக்கு

Page 20
2.1 ப.11 பு'
மூலிகைத் தோட்டத்தைப் பார்வையிடச் சந்தர்ப்பத்தை வழங் குவதுடன் மூலிகை தொடர்பான பல்வேறு மருத்துவவியல், பயிர் உற்பத்தியியல் தொடர்பான உத்திகளையும், ஆலோசனைகளையும் எடுத்துக்கூறலாம். இத்துடன் இத்தினத்திற்கு சுதேச மருத்துவர்கள், பாரம்பரிய வைத்தியர்கள், விவசாயத்திணைக்கள அதிகாரிகள், அனுபவம் மிக்க முதியவர்கள் போன்றோரை கெளரவ அதிதிகளாகவும் அழைத்து அவர்களுடன் பாடசாலைசார் சமூக உறுப்பினர்களிற்கு பல்வேறு மூலிகை மருத்துவம், மூலிகை உற்பத்திச் செயற்பாடுகள் சம்பந்தமாக கருத்துப் பரிமாற்றம் செய்வதற்கும் சந்தர்ப்பம் வழங்கலாம். இவ்வாறான செயற்பாடுகள் ஊடாகவும் மூலிகைப் பாவனை பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் சிறந்த முறையில் ஊட்டலாம்.
பாடசாலையில் மூலிகைத் தோட்டம் அமைத்தலின் பயன்கள்
(1) மூலிகைகளை அறிய சந்தர்ப்பம் பல்வேறு மூலிகைத் தாவரங்களையும் மாணவர் இனங் காண்பதற்கு இங்கு களம் அமைத்துக் கொடுக்கப்படுகிறது. அதாவது நமது சூழலில் காணப்படும் தாவரங்கள் கூட மருத்துவ ரீதியில் பயன்மிக்கதாக இருக்கும். இவற்றையும் மூலிகைத் தோட்டங்களுடாகக் காட்சிப்படுத்துவதால் அவற்றின் பல்வேறு மருத்துவப் பயன்களை மாணவர் அறிவர். இதேபோல் மாணவர் ஏற்கனவே அறியாத மூலிகைத் தாவரங்களையும் கண்டு அவற்றையும் அடையாளம் காணக்கூடிய ஆற்றலையும் பெறுவர்.

இதனால் மூலிகைகள் சமூகத்திற்கும் பரம்பலடைவதற்கான காரணியாகவும் அவர்கள் திகழ்வார்கள்.
(2) பக்கவிளைவற்ற ஆரோக்கிய மருத்துவம்
நாம் தற்போது பயன்படுத்திவரும் அலோபதி மருத்துவமுறை செயற்கையானதாகும். இம் மருந்துகள், இரசாயனப் பொருள் கொண்டு தயாரிக்கப்பட்டவையாகும். இவை வேகமாகச் செயற்பட்டு நோய்களைக் குணப்படுத்திய போதிலும் கூட நீண்ட நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தும் போது பற்பல பக்கவிளைவுகளையும் உண்டுபண்ணுபவையுமாகும். சில வேளைகளில் சுய மருத்துவப் பயன்பாடுகளும், உரிய மருத்துவரின் அறிவுரையின்றி எடுத்துக்கொள்ளும் மருந்துகளும் பக்கவிளைவையும் ஏற்படுத்தலாம். ஆனால் மூலிகை கொண்டு செய்யும் வைத்தியம் பெரும்பாலும் பக்கவிளைவற்ற சிறந்த நிவாரணியுமாகும். எனவே பக்கவிளைவற்ற சுதேச வைத்திற்கும் ஆதாரமாக உள்ள மூலிகைகளை வழங்கும் மூலிகைத் தோட்டங்களை பாடசாலையூடு பிரபல்யப்படுத்தி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க முடியும்.
(3) மூலிகை வைத்தியம் மீது தன்னம்பிக்கை ஏற்படல்
சமூகத்திற்கான நன்மை தரும் தகவல்களை வழங்குவதில் பாடசாலைகள் முக்கிய இடம் வகிக்கின்றன. பாடசாலைகளில் அமைக்கப்பட்ட மூலிகைத் தோட்டமானது மூலிகை சம்பந்தமான விழிப்புணர்ச்சியையும், சுதேச வைத்தியத்தின் மீதான தன்னம்பிக்கையையும் மாணவர் மத்தியில் விதைப்பதோடு சமூகத்திற்கும் இச்செயற்பாடுகள் விரிவாக்கமடைவதற்கும் களமாக அமையும்.
அகவிழி ஜூலை 2014 ("

Page 21
(4) இரம்மியமான சூழல் பாடசாலைகளில் மூலிகைச் செடி வளர்ப்பதன் மூலம் நாம் சிறிதளவேனும் மூலிகைக் காற்றைச் சுவாசிக்க முடியும். இது மட்டுமன்றி தொடர்ந்து வகுப்பறைக் கற்றலில் ஈடுபட்ட மாணவன் ஒரு முறையேனும் நன்கு செழித்து வளர்ந்திருக்கும் மூலிகைத் தோட்டத்தினூடு சென்று வருவானாயின் அவனது மனநிலையில் ஓர் உத்வேக நிலை தோன்றி அவனது கற்றல் செயற்பாடு மேலும் மெருகூட்டப்படும். இதேவேளை மாணவரால் நட்டுப் பரா மரிக்கப்படும் மூலிகைச் செடிகள் வளரவளர அவர்களின் மனங்களும் பூரிப்படையும் இவ்வாறாக பாடசாலையின் மூலிகைத் தோட்டம் அமைப்பானது பல்வேறு வகையிலும் மாணவரின் ஆரோக்கியத்திற்கு கூட அரணாகவே அமைகிறது.
(5) சிறந்த ஓய்வுநேர செயற்பாடு
மூலிகைத் தாவர வளர்ப்பு சம்பந்தமான உத்திகளை மாண்வர் அறிந்திருப்பதன் மூலம் தமது ஓய்வு நேரப் பொழுது போக்காக மூலிகைச் செடிகளை உற்பத்தி செய்வர். இவ்வாறு உற்பத்தி செய்யும் மூலிகைகளை வைத்தியர்களிற்கும், மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் வழங்குவதன் மூலம் ஒரு சிறிதளவேனும் பண வருவாயை மாணவர்கள் ஈட்டிக்கொள்ள முடியும். இதேவேளை கிடைத்தற்கரிய மூலிகைகளை உற்பத்தி செய்வதனூடு அவற்றை வெளிநாடுகளிற்கு ஏற்றுமதி செய்து நமது நாட்டின் பொருளாதார அபிவிருத்தியிலும் மாணவன் தன்னாலியன்ற பங்களிப்பைச் செய்ய முடியும். இதேவேளை மாணவர்கள் மூலிகை வளர்ப்பில் ஆர்வத்துடன் ஈடுபட்டால் பசுமை நிறைந்த உடன் மூலிகைகள் கிடைக்கக்கூடியதாகவும் அமைவதோடு, மூலிகை மருந்துகளின் விலையும் குறைவடைய சந்தர்ப்பம் உண்டு.
8 அகவிழி (ஜூலை 2014
(6) மூலிகையை அழிவிலிருந்து காக்கும் செயற்பாடு மூலிகைச் செடிகள் பலவும் காடுகளிலும், மலையடி வாரங்களிலும் தானாக வளரும். இவற்றை தேடிச் சேகரிக்கச் செல்வோர் இவற்றை முழுச்செடியாகவே

பிடுங்கிவிடுகின்றனர். இதனால் விரைவில் இவ்வினங்கள் இல்லாது போய்விடுகின்றன. எனவே இது போன்ற இனங்களைப் பாதுகாக்க மூலிகைத் தோட்டம் அவசியமாகிறது. இதே வேளை அருகிவரும் மூலிகை நடுகைப் பொருட்கள் பாடசாலை மூலிகைத் தோட்டத்தில் உற்பத்தி செய்த சமூகத்திற்கு பரம்பல் அடையச் செய்வதும் ஒரு சிறந்த முயற்சியாகும்.
(7) கலந்துரையாடலுக்குக் களம்
மூலிகைத் தோட்டத்திற்கு வரும் மாணவர்கள் பல்வேறு தாவரங்களின் விசேட பயன்களையும் அவை காணப்படும் இடங்களையும் பற்றியும் தம்மிடையே கலந்துரையாடல் மூலம் பல்வேறு தகவல்களையும் பரிமாறிக் கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது.
(8) கற்றல் சூழல் பல்வேறு பாடங்களிற்குமான கற்றல் சூழலாகக்கூட ஆசிரியர்கள் மூலிகைத் தோட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ளலலாம். இங்கு நவீன கல்வி முறைகளுடன் நன்கு பிணைந்ததான வகுப்பிற்குப் புறம்பான பங்கேற்றல் கற்றல் முறையொன்று பிரயோகிக்கப்படுவதுடன் பிள்ளைகளின் அவதானிப்பு, புதிதுகாண்தூண்டல், ஆய்வு, பகுத்தறிதிறன் போன்ற பண்புகள் வளர்வதற்கும் ஏற்றதான இடமாகவும் இது திகழும்.
(9) ஆளுமைப் பண்பு விருத்தி மாணவர் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து பாடசாலைகளில் மூலிகைத் தோட்டம் அமைக்கும் போது ஒன்றாக உழைக்கும் பழக்கம், சகோதர மனப்பாங்கு, தலைமைக்கு கீழ்படிதல், கூட்டுமுயற்சி, பிறரின் இயலாமைக்கு உதவுதல் போன்ற உயரிய பண்புகள் வளர்வதற்கும் களமாகவும் அமையும்.
பாட
பாடசாலைகளில் மூலிகைத் தோட்டம் இருப்பது முதலுதவி மருந்தாகக் கூட அமையும் அது மட்டுமன்றி பல்வேறு நோய்களிற்கும் நிவாரணியாகவும், வருமுன் காப்போனாகவும் தொழிற்படும். மூலிகைத் தோட்டம் வீட்டிலும் சரி, பாடசாலையிலும் சரி இருப்பது தங்களுடன் ஒரு மருத்துவர் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.
நமது முதாதையர் பயன்படுத்திய அனுபவபூர்வமான மூலிகைகள் அறிவியல் பூர்வம் மிக்க நல்ல மருந்துகள் என நீரூபணமாகிய இவ்வேளையில் பாடசாலைகள் தோறும் மூலிகைத் தோட்டம் அமைத்து மூலிகைகள் சம்பந்தமான விழிப்புணர்ச்சியையும் நம்பிக்கையையும் எமது சமூகத்தில் ஏற்படுத்தி பேண்தகு வாழ்க்கைக் கோலமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு எம்மாலியன்ற பங்களிப்பை செய்வோம்.

Page 22
பெற்றோர் கற்க வேண்டியது
'எஸ்.வி. வேணுகோபாலன்
மொகலம்மா என்ற பெண்மணியைப் பற்றிய ஆங்கிலக் கட்டுரை ஒன்றை வாசிக்க நேர்ந்தபோது கல்வியின் பெருமை குறித்த புதிய பரிமாணம் எனக்குக் கிடைத்தது. ஆந்திர பிரதேசத்தைச் சார்ந்த இந்தப் பெண், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்தியாவுக்கு வருகை தந்தபோது அவரால் சிறப்பிக்கப்பட்டார். ஹர்ஷ் மெந்தர் எழுதிய அந்தக் கட்டுரை, எந்த இடத்திலிருந்து அந்தப் பெண் இந்தப் பெருமைக்குரிய இடத்தை வந்தடைந்தார் என்பதை 'தி இந்து' நாளிதழில் அருமையாகப் படம் பிடித்துக் காட்டி இருந்தது. பிறந்த முதலாம் ஆண்டிலேயே காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, மொகலம்மா நடக்க முடியாத குழந்தையாக வளர்ந்தார். பல குறைபாடுகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த அந்தக் குழந்தையின் தாய், மொகலம்மாவுக் கான எதிர்காலம் அவரது கல்வியில் இருக்கிறது என்று சிந்தித்தார். கடுமையாகப் போராடி முதல் வகுப்பில் சேர்த்துவிடப்பட்ட மொகலம்மா பிறகு திரும்பிப் பார்க்க நேரவே இல்லை. கல்லூரிப் படிப்பையே அழகாக முடித்துக் காட்டினார். அசையவும், நகரவும் இயலாத

ஒரு பெண் பிறகு எத்தனை பேரை அசைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதில் எத்தனையோ செய்திகள் இருக்கின்றன.
ஆனால் ஒவ் வொரு கட்டத்திலும் மொகலம்மாவின் தாய் போராடி வந்தார். ஒரு கட்டத்தில் மொகலம்மா தனது தாய் முடியாது என்று நினைத்த படிக்கட்டுகளிலும் ஏறத் தொடங்கியது முக்கியமானது. தனது சிற்றூ ரின் பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கு வரவு செலவு கணக்கு எழுதுவது முதல் எத்தனையோ விதங்களில் தனது படிப்பின் பயனை வழங்கிக் கொண்டிருக்கிறார் மொகலம்மா.
பெற்றோரின் பங்கு
தமது குழந்தைகளுக்கான கல்விக்குப் பாடு எடுப்பதில் பெற்றோர் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது. கல்வி பெறுதல் சவால் மிகுந்ததாக மாற்றப்பட்டிருக்கிற இன்றைய சூழலில்
பெற்றோர் செய்யும் தேர்வு, பெற்றோர் மேற்கொள்ளும் அணுகுமுறை, பெற்றோர் எடுக்கும் முடிவுகள் மிக மிக முக்கியமானவை.
குழந்தைகளின் மீதான எதிர்பார்ப்பு, குழந்தைகளது எதிர்காலம் குறித்த கலக்கம் போன்றவை பெற்றோர் உள்ளத்தில் ஆதிக்கம் கொள்கின்றன. இதன் பிரதிபலிப்பாக, குழந்தைகள் அவர்களாக என்ன விரும்புகின்றனர், என்ன தேவையில்லை என்று கருதுகின்றனர் போன்றவை குறித்தெல்லாம் பெற்றோர் கணக்கில் எடுத்துக் கொள் கின்றனரா என்ற கேள்வியும் எழுகிறது. உளவியல் ரீதியாக இரண்டு பக்கங்களிலும் இதனால் நேரும் அதிர்ச்சியும், அதன் தொடர் நிகழ்வுகளும் அதிகம் பேசப்படாது போகின்றன.
பெ
பெற்றோர் பொறுப்பில் நுட்பமான மாற்றங்கள் பெற்றோர் பொறுப்பு என்ற அம்சத்தில் கடந்த பத்து இருபது ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் நுட்பமான மாற்றங்கள் ஒரு
அகவிழி ஜூலை 2014 A
டொ சூசா லகம்
படித்தட்டதானம்.

Page 23
தனி ஆய்வுக்கு உரியவை. புதிய தாராளமய காலத்தின் தாக்கம் இதிலும் இருக்கும் என்பதை விளக்க வேண்டுமா? அது மட்டுமின்றி, ஐம்பதுகள், அறுபதுகளுக்குப் பின்னர் அடுத்தடுத்த தலைமுறை பெற்றோர் அவர்களும் கல்வி பெற்று முன்னேறியவர்களாக மாறுகையில் தங்களுடைய குழந்தைகளது கல்வி விஷயத்தில் அவர்களது ஈடுபாடு என்பதன் தன்மை முந்தைய தலைமுறை பெற்றோர் கொண்டிருந்த ஈடுபாட்டின் தன்மையிலிருந்து மாறுபட்டு
வந்திருப்பதில் வியப்பில்லை. நாம் இங்கே விவாதிக்க இருப்பது, அந்த ஈடுபாடு என்பது வழிகாட்டுதல் ஒத்துழைப்பு பேருதவி என்ற வகையிலிருந்து குறுக்கீடு - தலையீடு - முட்டுக்கட்டை என்கிற இன்னோர் எல்லை வரை பயணம் செய்வது பற்றியதுதான்.
இன்னும்கூட சிற்றூர்களிலிருந்து முதல் தலைமுறை மாணவர்கள் உயர்நிலைப் பள்ளிக்கும், உயர்கல்விக்கும் இன்றும் வந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறோம். சமூகத்தின் தட்டுக்களில் அடுத்த முனையில் உயர் கல்வி பயின்ற மூன்று நான்கு தலைமுறைகளைக் கடந்துவிட்ட குடும்பங்களையும் பார்க்கிறோம். இந்த முரண்பாட்டின் எதிரொலியும் இப்போதைய பெற்றோர் நடவடிக்கைகளில் தென்படுவதைப் பார்க்க முடியும்.
கல்வி எதற்காக?
கல்வி என்பது சமூக மதிப்பீடு என்ற காலம் ஒன்று இருந்தது. அது தேவையில்லை, வாழத் தெரிந்தால் போதும், சொத்து இருந்தால் எதையும் சமாளிக்க முடியும் என்ற நிலவுடைமை சமூகத்தின் மிச்ச சொச்ச சிந்தனைகளோடு முட்டி மோதி கல்வியின் வளர்ச்சி ஏற்படவே செய்தது. கல்வி நாகரிகத்தின் அடையாளம் என்ற வரையறையை முன்வைத்தாலும், சமூக பாகுபாடுகளின் தாக்கத்தின் முன் கல்வி பெற்றவர்களும் தங்களை ஒப்புக் கொடுத்து நிற்பதை யாரும் மறுக்க முடியாது. படிப்பு என்பது வேறு, கால காலமான சமூக வழக்கம் என்பது வேறு. அந்த சமூக வழக்கத்தில் ஊறிய சிந்தனைகளைத்தான் நெஞ்சில் பதித்துக் கொள்ளவேண்டும் என்ற தேர்வு தலைமுறை தலைமுறையாக மரபணுக்கள் மூலம் கடத்தப்படுகிறது. ஆனால் கல்வி இதற்கான ஒரு வேகத் தடையை நிச்சயம் ஏற்படுத்தவே செய்கிறது. அது விரிந்த விவாதத்திற்கு உட்பட்ட பொருள்.
இந்தப் பின்புலத்தில் பெற்றோரின் இயங்குதல் வெவ்வேறு முறைகளில் அமைகிறது.
பெ
8 அகவிழி ஜூலை 2014
எந்த மாதிரியான ஊடாட்டம் ஆரோக்கியமானது? குழந்தைகள் வளர்ச்சியில் பெற்றோர் என்ன மாதிரியான முறையில் ஊடாட வேண்டும் என்பது குறித்து நிபுணர்கள் பலர் ஏராளம் சொல்லியிருக்கின்றனர்.

மருத்துவ உலகம் - குறிப்பாக உளவியல் மருத்துவம் அருமையான அம்சங்களை சமூக போக்கிலிருந்தும், தனித் தனி அனுபவங்களின் வெளிச்சத்திலிருந்தும் படிப்பினைகளாகவும் கூட வழங்கிக் கொண்டே இருக்கிறது.
அதற்கெல்லாம் வெகுமுன்பே கலீல் கிப்ரான், அதிரடியாகச் சொன்ன கவிதை மொழியை உலகம் இன்னும் கற்க மறுக்கிறது.
உங்கள் குழந்தைகள் உங்களுக்குச் சொந்த மானவர்கள் அல்லர், அவர்கள் வாழ்க்கையின் புதல்வர்களும் புதல்வியரும் ஆவர். அவர்கள் உங்கள் மூலம் வந்தவர்களே அன்றி உங்களிடமிருந்து தோன்றியவர்கள் அல்ல.
உங்களோடு இருப்பதனானேலேயே அவர்கள் உங்களுக்கானவர்கள் ஆகிவிட மாட்டார்கள்.
உங்கள் அன்பைச் செலுத்தலாம் நீங்கள், உங்கள் எண்ணங்களை அல்ல.
ஏனெனில் அவர்களுக்கே உரித்தான எண்ணங்கள் அவர்களுக்கு உண்டு.
என்று விரியும் அந்தக் கவிதை குழந்தைகளின் தனித் தன்மைக்கு குந்தகம் விளைவிக்காத உதவிகளையே பெற்றோர் செய்யக் கேட்டுக் கொள்கிறது.
நடைமுறையில் சொன்னா சொன்ன பேச்சைக் கேட்கணும் இல்லையென்றால் எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்பதான அணுகுமுறை பெற்றோரிடம் ஆதிக்கம் செய்கிறது. நொடிக்கு நொடி தலையீடு செய்வதும் சரி, கண்டு கொள்ளாமலே விட்டு விடுவதும் சரி ஒரு புள்ளியில் இணைந்து குழந்தைகளின் வளர்ச்சியில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
கல்வியைக் குறித்த மட்டில் ஏற்படும் பிரச்சினைகளை மட்டும் இங்கே சற்று காண்போம். இப்போதைய கல்வி முறையின் வேகத் தன்மை, போட்டி உலகம், சம வயதில் உள்ள குழந்தைகளை ஒப்புநோக்கும் பிரச்சினை இவையே அதிகம் கவனிக்கத் தக்க விஷயங்களாக உருப்பெற்று வருகின்றன.
சலவை எந்திர உளவியல் போக்கு
பள்ளியில் தொடக்கநிலை வகுப்பில் சேர்த்ததும், இனி அடுத்தடுத்த வளர்ச்சியை இந்த நிறுவன ஏற்பாடே கவனித்துக் கொள்ளும் என்று கருதுகிற தன்மை அதிகமாகி வருகிறது. அவ்வப் பொழுது எவ்வளவு பணம் கட்ட வேண்டுமோ அதனைச் செலுத்தி வருவது நன்கொடையோ, புத்தகங்களோ, இதுவோ, அதுவோ என்ன கேட்டாலும் கொட்டிக் கொட்டிச் செய்துவிட்டு பள்ளி இறுதி வகுப்பு, பிளஸ் 2, பின்னர் உயர் கல்விக்குத் தகுதியாக வெளியேறி

Page 24
விட்டால் போதும் என்கிற மனப்பான்மை அது! அங்கே என்ன நடக்கிறது என்னவிதமான கல்வி கிடைக்கிறது குழந்தையின் பன்முகத் தேடலுக்கு ஊக்கம் பிறக்கிறதா, முடங்கிப் போகிறதா என்ற எதையும் பெற்றோர் அக்கறை எடுத்துப் பார்ப்பதில்லை.
மேற்கண்ட அணுகுமுறையை சலவை எந்திர உளவியல் (Washing Machine Psychology) என்ற பெயரால் அடையாளப்படுத்தலாம். துணிமணிகளை தனித்தனியாக எடுத்து, தண்ணீரில் அழுக்கு போக அலசி, சலவைக் கட்டியைப் பயன்படுத்தித் துவைத்து, வெளுத்து, அலசிப் பிழிந்து உலர்த்திய காலம் இப்போது மாறிவிட்டது பொறுப்பை ஓர் எந்திரத்திடம் ஒப்படைத்து தண்ணீர், சலவைப் பொருள், வெப்ப அளவு, துவைக்க வேண்டிய துணிக்கேற்ற வேக அளவு இவற்றை மட்டும் சரி பார்த்து விசையை அழுத்திவிட்டு நாம் வேறு வேலையைப் பார்க்கப் போய்விடலாம். எந்திரம் அதன் வேலையை முடித்தபின் துணியை எடுத்து உலர்த்தினால் போதும். அதிநவீன எந்திரம் கிடைத்தால் அதுவே துணிகளை உலர்த்தியும் கொடுத்துவிடும்.
இப்படி பட்டும் படாத தன்மை குழந்தைகளை ஆரம்ப நிலையில் பொறுப்பெடுத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டு உயர் கல்விக்குப் போகும் நேரத்தில் அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கான பழியை அவர்கள் மீதே சுமத்துவதில் முடிகிறது. காசு கொடுத்தால் போதும் அதோடு என் கடமை முடிகிறது என்ற போக்கு. குழந்தைகளது நலனில் உண்மையான பாத்திரம் வகிக்க விடுவதில்லை. மாணவர்களிடம் தோன்றும் முரட்டுத் தனம், தகாத சேர்க்கை, தவறான பழக்க வழக்கங்கள், எந்தத் தீய செயலுக்கும் ஆட்பட்டுவிடும் அபாயம் இவற்றுக்கு இந்த அணுகுமுறை பெரிதும் காரணமாகிறது. அருமையான குழந்தைகள் முடங்கிப் போவதும் நேர்கிறது.
அர்ச்சனா எத்தனை மதிப்பெண் வாங்கினால் எனக்கென்ன?
இன்னொருபுறம் ஓயாத தலையீடு, ஒப்பு நோக்கல் பிரச்சினை. மதுரை எஸ் பி ஓ ஏ மாணவர் கார்நியோ நிமலன் (தி இந்து: திறந்த பக்கம் : மார்ச் 11, 2012) எழுதியிருந்த கட்டுரையில், தேர்வுகளில் எனது மதிப்பெண் பற்றிப் பேசுங்கள் என் தந்தையே, அர்ச்சனா எவ்வளவு வாங்கி இருக்கிறாள் என்று எதற்குக் கேட்கிறீர்கள்? என்று பொரிந்து தள்ளி இருந்தார். போட்டி எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் இருப்பதில் தவறில்லை. என் பெற்றோருக்கும் அவள் பெற்றோர்க்கும் எதற்கு போட்டி என்று மேலும் எழுதுகிறார் அந்த மாணவர்.
மதிப்பெண் பட்டியல் பெறுவதற்குப் பள்ளிக்குச் செல்லும் பெற்றோர், 99 மதிப்பெண்கள் வாங்கினாலும் தனது மகள் ஏன் நூற்றுக்கு நூறு வாங்கவில்லை என்று

வாதம் செய்கின்றனர். இது ஏதோ பத்தாம் வகுப்பு காலத்தில் அல்ல, ஏழாம் எட்டாம் வகுப்பு குழந்தைகளுக்கே இந்த சோதனை. கொண்டாட வேண்டிய குழந்தைகளை ஓயாது துரத்தித் துரத்தி வெறுப்படைய வைப்பது மோசமான உளவியல் பிரச்சனைகளைத் தோற்றுவிக்கிறது.
மைதானமே இல்லாத பள்ளிக்கூடங்கள் குழந்தைகளுக்கு பாடத்தின் மீது மட்டுமே கவனம் வேண்டும் என்ற வகையில், விளையாட்டு நேரத்தை அவர்களுக்கு மறுப்பது அவர்களை வேறு வகையில் தங்களது கேளிக்கைகளைத் தேர்வு செய்து கொள்ளத் தூண்டுகிறது. வீட்டுக்குள்ளேயே இருக்க வைக்கப்படும் பிள்ளைகள் கடைசியில் அலைபேசி, கணினி மூலம் விளையாடும் விளையாட்டுக்களில் மூழ்கி தங்களது உடலையும், உள்ளத்தையும் பாதிக்கும் அலைக்கழிப்புகளுக்கு உள்ளாகின்றனர். நல்ல மதிப்பெண்களுக்காக விளையாட்டு மைதானமே இல்லாத பள்ளிகளில் சேர்க்கக் கூட தயங்குவதில்லை பெற்றோர்.
மதிப்பெண்கள் குறித்த பெற்றோரது பதட்டத்தின் மிகப் பெரிய சோக வெளிப்பாடுதான் பெருகிவரும் போர்டிங் பள்ளிகள் . பல மைல் தொலைவுக்கு இடம் பெயர்ந்து செல்கின்றனர் மாணவர்கள். குழந்தைகளை ஜெயிலில் போட்டு, பின்னர் பெயிலில் எடுத்துப் பார்த்துவரும் பெற்றோர் என்று இதைத் தான் எழுத்தாளர்
ஆதவன் தீட்சண்யா சோகமாக வருணிக்கிறார்.
கல்வி என்பது மூளைக்கான விஷயம் என்ற பெற்றோரின் தவறான புரிதலால் குழந்தைகளுக்கான கல்வி பலவித வாழ்க்கை அம்சங்களையும் உள்ளடக்கியது என்பது பிடிபடாமலே போகிறது. துள்ளாட்டமான கல்விப் பயணம் வாடி வதங்கிய களைப்பான நகர்த்தலாக மாறிவிடுவதில் பெற்றோரின் வருந்தத் தக்க பங்களிப்பு சேர்ந்திருக்கிறது. அவர்களது போதாமை அல்லது அவர்களது பிடிவாதம் அல்லது அவர்களது பரிதாபத்திற்குரிய குழப்பம் இதற்கு காரணமாகிறது. வறுமை, பொருளாதார நெருக்கடி இவை ஏற்படுத்தும் சிக்கல்கள் தனியே விவாதிக்க வேண்டியவை.
கசங்கிப் போகும் மலரின் இதழ்களாய்
தங்களைப் பெருமைப்படுத்தும் குழந்தைகளின் பெற்றோராக எல்லோரும் இருக்க விரும்புகிறோம். சங்கடமான எந்த இடைச் செருகலையும் நாம் கடந்து போகத் துடிக்கிறோம். 12 பதட்டமான அன்றாட வாழ்க்கை குழந்தைகளின் மீதான சந்தேகமாக வெளிப்படுகிறது. பிள்ளைகள் எந்த விஷ யத்தைப் பேச வரும்போதும், நாம் குறுக்கிட்டுக் கேட்கும் அவர்களது தேர்வுகள், மதிப்பெண்கள் குறித்த கேள்விகள் அவர்களது முகத்தில் படரும் வெளிச்சத்தை ஊதி
அகவிழி ஜூலை 2014 (8

Page 25
அணைத்துவிடுகிறது. மற்ற குழந்தைகளின் குறும்புகள், வகுப்பறையில் நடந்த நகைச்சுவையான நிகழ்வு, சேட்டைகள் பற்றியெல்லாம் காதுகொடுத்து கேட்பதற்கு அனுமதிக்காத வேகமான வாழ்க்கைமுறை ரசனை மிக்க பருவத்தின் அத்தனை இதழ்களையும் ஈவிரக்கமின்றிக் கசக்கிப் போடுவதாகிறது.
கண்கள் விரிய விரிய அவர்கள் புதிதாகக் கற்ற செய்திகளை பகிர்ந்து கொள்ளவரும்போது எல்லாம் எனக்கு ஏற்கெனவே தெரியும் என்ற பதிலடி அவர்களது உளவியலைச் சிதைக்கிறது. இதன் பிரதிபலிப்பு அவர்கள் பள்ளி இறுதி வகுப்பில் அல்லது உயர் கல்விக்கான தயாரிப்பில் இருக்கையில் பெற்றோர் ஏதாவது கேட்டால் பதில் சொல்லாமல் எரிந்து விழுவதில் காணப்படுகிறது.
வேற்று உலக ஜீவராசிகளா?
பத்தாம் வகுப்பு எட்டுகிற குழந்தையின் பெற்றோர் அந்த நாளிலிருந்து பதட்டமான உடைகளை அணிந்து, வேகமான உணவுவகைகளை ருசித்து, தடுமாற்றமான சாலைகளில், நெரிசல் மிக்க நேரங்களில் நடையாய் நடந்து, குழப்பமான கனவுகளுக்குப் பயந்து தூங்காமலே விழித்திருந்து வேறு ஓர் உலகத்தின் ஜீவராசிகள் மாதிரி நடந்து கொள்ளத் தொடங்குகின்றனர்.
அகவிழி | ஜூலை 2014
பள்ளிகளும், நண்பர்களும், உறவினர்களும் இந்தப் பெற்றோரை வாட்டி எடுப்பது சொல்லி மாளாது. ஹால் டிக்கெட்டை கோவிலுக்குச் சென்று வைத்து அருச்சினை செய்வதிலிருந்து, பெற்றோருக்கு பாத பூஜை செய்வது, தேர்வு நாளன்று பள்ளி வாசலில் கும்பலாகத் திரண்டு சென்று வாழ்த்தோ வாழ்த்தென்று சொல்லி உருட்டி மிரட்டி அனுப்புவது என நடப்பு காலத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு தேர்வுக் காலங்களில் பெற்றோர் படும் பாடும், அவர்கள் பிள்ளைகளைப் படுத்தி எடுக்கும் பாடும் சித்திரவதை.
24

ஒரு காலகட்டம் வரை பட்டப் படிப்புதான் முன்னுரிமை பட்டியலில் இருந்தது. எல்லாரும் பி ஏ, பி எஸ் சி என்று அலைந்தனர். தொண் ணூறுகளின் இறுதியில் எல்லா பெற்றோர்க்கும் பொறியியல் தேவதை கனவில் வரத் தொடங்கினாள். மருத்துவ அம்மன் ஆட்டிப் படைத்தாள். இலக்கியம், சமூக அறிவியல், வரலாறு, அரசியல் அறிவியல் போன்ற பாடப் பொருள்கள் எதற்கும் விளங்காது போனவர் களுக்கு என்று சொல்லாமல் சொல்லப்பட்டது.
தனி அனுபவங்களும் பொதுவான படிப்பினைகளும்
இதன் அவஸ்தைகளும் பெற்றோர் -
குழந்தைகள் விவாதத்தில் பெருத்த பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. நிறைய பிள்ளைகள் பாதியில் கல்லூரிப் படிப்பிலிருந்து நின்றுவிடுவது, திண்றுவது, தோல்வியடைந்து நொறுங்கிப் போவது என்ற பல பாதிப்புகளை பொது விவாதங்களில் நாம் பேசுவது கிடையாது. அது தனித் தனி நபரது அனுபவம் போலவும், அவரவர் விதி என்பதாகவும் புரிந்து கொள்ளப்படுகிறது.
கல்வி குறித்த புரிதலில் ஏற்படும் அடிப்படை குழப்பங்களே இத்தனை பிரச்சனைகளுக்கும் தோற்றுவாய். சமூக மனிதர்கள் நாம் என்பதும், கல்வி என்பது மனித குல வளர்ச்சியின் முன்னேற்றப் படி என்பதும், சொந்தத் திறன் - தேடல் - பேரார்வம் கொண்டிருக்கும் குழந்தைகள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதங்களில் தங்களை வெளிப்படுத்த முடியும் என்பதும், யாரும் யாரோடும் ஒப்பிடத் தக்கவர் இல்லை என்பதும் நமக்குப் பிடிபட்டு விடுமானால் சமூகத்தின் தோற்றம் அதிசயிக்கத் தக்க விதத்தில் உருமாறும் .
மொகலம்மா அவரது தாய்க்கு ஒற்றைக் குழந்தை அல்ல. ஆனால், படிப்பு வாசனை அற்ற அந்தத் தாய், மற்ற குழந்தைகளைக் காட்டிலும், உடல் ஊனமுற்றிருக்கும் மொகலம்மாவுக்குத் தான் கல்வி முக்கியம் என்று கண்டறிந்தார். இன்று அந்தக் குடும்பத்தை மொகலம்மா தனது ஊதியத்தைக் கொண்டு பொறுப்பேற்று நடத்தும் நிலைக்கு வந்துவிட்டார். கல்வியற்ற தாய்க்கு அவரது அடிப்படை மனித இயல்பு உரமூட்டியது. புறக்கணிப்பு , விதி, சாபம் என்ற எல்லா ஊழையும் உப்பக்கம் கண்டு உழைவின்றித் தாழாது முயற்சி மேற்கொண்டு முன்னேறும் துணிவை மொகலம்மாவுக்கு அவரது கல்வி புகட்டியது. இதுவே வாழ்க்கையின் வலிமிகுந்த ஆனால் சுவாரசியமிக்க நம்பிக்கை வழிப் பயணம்.

Page 26
சகிப்புத் தன்மை
முகில் தினகரன்
: - 14 - NRI: 11' ' ' '://1://nil: : N//' :!!!!
அந்தப் பேருந்து மெல்ல நகர ஆரம்பித்ததும் எங்கிருந்தோ ஓடி வந்து அவசரமாய்த் தாவி ஏறி கூட்டத்தினுள் முண்டியடித்து நுழைய முற்பட்ட அந்த இளைஞன் தெரியாத்தனமாய் ஒரு நடுத்தர வயதுக்காரரின் தன் பூட்சுக் காலால் மிதித்து விட்டு நடுநடுங்கிப் போனான். தொடர்ந்து அவரிடமிருந்து வந்து விழப் போகும் வசை மழைகளைத் தாங்கிக் கொள்ள அவன் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்க அந்த நடுத்தர வயதுக்காரரோ சிறிதும் கோபமின்றி பார்த்து தம்பி என்று அமைதியாயச் சொல்லிவிட்டு சிநேகமாய்ப் புன்னகைத்தார். வியப்பு மேலோங்க விக்கித்துப் போய் சிலையாய் நின்றான் அந்த இளைஞன். இந்தக் காலத்திலும் இப்படியொரு மனிதரா?
மேலே விவரிக்கப்பட்ட காட்சியில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய பாத்திரம் அந்த நடுத்தர வயதுக்காரர் என்றால் அதைவிடக் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய அம்சம் அந்தப் பாத்திரத்தின் குணாதிசயம்.

ஆம்!! சகிப்புத் தன்மை. மனிதனுடைய சமுதாயப் பண்பாடுகளில் மிகவும் முக்கியமானவொன்று சகிப்புத் தன்மை. இது ஆண்டவன் தந்த பரிசு எனலாம். ஏனெனில் இது எல்லா மனிதர்களிடத்திலும் சமமான அளவில் இருப்பதில்லை. சிலர் மிகவும் சகிப்புத் தன்மை உடையவர்களாக இருப்பர். சிலரோ சிறிதும் சகிப்புத் தன்மை அற்றவர்களாக இருப்பர். பொதுவாகவே சகிப்புத் தன்மைக் குணம் அதிகமாய் உள்ளவர்கள் வாழ்க்கையை எல்லாச் சூழ்நிலைகளிலும் எளிதாகக் கடந்து விடுகின்றனர். மாறாக சகிப்புத் தன்மைக் குணம் குறைவாய் உள்ளவர்களோ அரைவேக்காட்டுத் தனமான அதிரடி முடிவுகளால் அல்லலுற்று அவதிப்பட்டு
அழிந்து விடுகின்றனர்.
சகிப்புத் தன்மை என்பது வலிமை
நடப்புச் சமூகத்தில் நல்லவர்களாகவும் பெருந்தன்மைப் பண்பாளர்களாகவும் இருப்பவர்கள் பலமுனைகளிலிருந்து வருகின்ற பல்வகையான சொல்லடி மற்றும் இடர்பாடுகளைத் தாங்க வேண்டியிருக்கும். அவ்வாறான பல்முனைத் தாக்குதல் நிகழும் போது அவர்கள் தங்கள் சகிப்புத் தன்மைக் குணத்தைக் கேடயமாக்கி அமைதி காப்பர். அந்த அமைதிதான் அவர்களின் ஆற்றலுக்கு அறிகுறி வலிமைக்கு உதாரணம். அவர்களுடைய அந்த ஆற்றலானது நாட்பட... நாட்பட ஆன்மபலமாக மாறி அவர்களின் வாழ்க்கையை மேலும் மேலும் வளம் பெறச் செய்து விடுகின்றது. சகிப்புத் தன்மையில் பக்குவமடைந்தோர் என்றுமே பிறருடன் பிணக்குகள் கொள்வதில்லை. மாறாகப் பிறர்
கூறும் கடுஞ்சொற்களைக் கூட இன்சொல் கொண்டு இன்முகத்துடன் ஏற்றுக் கொள்வர்.
ஒரு நிறுவனத்தில் மேலாளர் பொறுப்பில் இருக்கும் ஒருவருக்கு இந்தச் சகிப்புத் தன்மைக் குணமானது (கு தலையாய பலமாகும். அவர் தன் கீழ் பணிபுரியும் ஊழியர்களின் சிறு சிறு தவறுகளுக்காக அவர்களைத் தண்டிப்பது பணி நீக்கம் செய்வது போன்றவற்றில் ஈடுபடாமல் தன் சகிப்புத் தன்மைக் குணத்தின் மூலம் '3
அவர்களின் முதல் தவறைச் சகித்து இரண்டாம் தவறைத்
அகவிழி
2014 (8

Page 27
திருத்தி மூன்றாம் தவறை முறைப்படுத்தினாரென்றால் அங்கு நான்காம் தவறின் நிகழ்வே நின்று போய்விடும். அத்தோடல்லாது தொடர்ந்து தவறே செய்த அந்தப் பணியாளர் குறிப்பிட்ட அந்தப் பணியில் நிபுணத்துவம் பெற்று விளங்கவும் சந்தர்ப்பம் ஏதுவாகின்றது. இது போன்ற சூழ்நிலையில் அந்த மேலாளருக்கு அவரின் சகிப்புத் தன்மைக் குணமே ஒரு பலமாகி அவருக்கும் பணியாளர்களுக்குமிடையே ஒரு பாலமாகயும் அமை
கின்றது.
சகிப்புத் தன்மை என்பது குடும்ப நெறி
சகிப்புத் தன்மை மறந்த குடும்பங்களில் கணவன் மனைவி உடன்பிறப்புக்கள் என்னும் உறவு முறைகள் யாவும் உடைந்து போய்விடுகின்றன. ஒற்றுமை நிலை கெட்டுக் குடும்பமே கலைந்து போகும் நிலை ஏற்பட்டுவிடும். சகிப்புத் தன்மைக் குணம் நிறைந்த குடும்பங்களில் ஒவ்வொருவரின் உறவு முறைகளும் உறவின் தன்மைகளும் தெளிவாகத் தெரிவதால் ஒற்றுமையுணர்வு ஓங்கும்.
சமீப காலங்களில் குடும்ப நீதி மன்றங்களில் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதற்கான ஆதாரக் காரணம் சகிப்புத் தன்மையைத் தொலைத்து விட்ட தன்மையே. ஒரு சிறிய நெல்லிக் கனியை எடுத்து கண்ணருகே வைத்துப் பார்க்க அது பூசணிக்காய் அளவில் பெரிய தோற்றத்தையே தரும். அதே போல்தான் வாழ்க்கை ஓட்டத்தில் மனித உறவுகளுக்குள் ஏற்படும் சிறிய சிறிய பிரச்சினைகளும், அவற்றை நாம் வெகு அருகில் நின்று கூர்ந்து நோக்கினால் அவை பூதாகரமாய்த்தான் தோன்றும். வித்தியாசம் நம் பார்வையிலேதானன்றி பிரச்சினையில் அல்ல. சகிப்புத் தன்மை என்பது ஏற்றத்தின் அறிகுறி இன்றைய இளைஞர்கள் சகிப்புத் தன்மைக் குணத்தை இளமையிலிருந்தே பழகி வருதல் வேண்டும். அவ்வாறு பழகி வருவார்களேயாயின் அவர்களின் எதிர்கால வாழ்வு நிச்சயம் ஏற்றமிக்கதாகத்தான் அமையும். இளைஞர்கள் முதலில் தங்களின் சகிப்புத் தன்மையை தங்களிடத்திலேயே காட்டிக் கொள்ள வேண்டும். பிறகு மற்றவர்களிடத்திலும் காட்டுதல் வேண்டும். யாராவது ஏதாவது குறை கூறும் போது அதைப் பெரிய விஷயமாகக் கொண்டு அதற்காக நொந்து போய் வருந்துவது தங்களைத் தாங்களே மனத்தால் உடலால் வருத்திக் கொள்வது போன்றவை சகிப்புத் தன்மையற்ற தவறான அணுகு முறைகள். அது மட்டுமல்ல மனிதப் பண்பையே மறந்த மாபெரும் குற்ற
முறைகள்.
2014 8 அகவிழி ஜூலை
ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கண்டிப்புக்கள் தங்களின் எதிர்கால வளத்தினை முன்னிறுத்தியே

நிகழ்த்தப்படுகின்றன என்பதனை உணர்ந்து அவற்றைச் சகித்துத் தங்களைச் செதுக்கிக் கொள்ளும் பட்சத்தில் மாணவர்கள் மாமனிதர்களாக முடியும்.
சகிப்புத் தன்மை என்பது சமூகநெறி
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்று கிறித்துவ வேதம் உரைப்பது போல சகிப்புத் தன்மையை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் சமூகத் தீமைகள் குறைந்து நன்மைகள் பெருக நல்வாய்ப்பு அமைகின்றது. தொட்டில் தொடங்கி காடு வரை நம்மைப் பீடித்திருக்கும் பெரு நோய்களான சாதி மற்றும் மதம் போன்றவைகளுக்கு சரியான மாற்று மருந்து சகிப்புத் தன்மைக் குணமே. மற்றவர்களின் இடையூறுகளை நாம் சகித்துக் கொள்ளப் பழகிடும் போது அதுவே அவர்களை வெல்லும் வழியாக மாறுகின்றது. அது மட்டுமன்றி நம்முடைய அந்தக் குணமே அவர்களுக்குத் தங்கள் தவறினை உணர்த்தி மாற்றத்தையும் ஏற்படுத்தி விடுகின்றது.
சகிப்புத் தன்மை என்பது அஹிம்சை நெறி
சகிப்புத் தன்மைக் குணத்திற்கான சத்திய உதாரணமாய்த் திகழ்ந்த அண்ணல் காந்தியடிகள் தன்னுடைய பக்குவப்பட்ட சகிப்புத் தன்மையால் ஆங்கில சாம்ராஜ்யத்தையே அசைத்தவர் என்பது நானிலமறிந்த உண்மை. வன்முறைகளாலும் போராட்டங்களாலும் சாதிக்க இயலாத பல அரும் பெரும் சாதனைகளை சகிப்புத் தன்மையென்னும் அஹிம்சை ஆயுதத்தால் சாதிக்கலாம் என்பதை அகிலத்திற்கு உணர்த்தியவர் அண்ணல் காந்தியடிகள்.
இருட்டு வெளிதனிலே இழுத்துச் செல்லும் குருட்டு வாழ்விற்கோர் குந்தகம் நேராது மருட்டும் பாதையிலே மலிந்துள்ள இடர்தனையே விரட்டும் வழிகாட்ட வீரியகுண மொன்றுண்டு அதுதான் சகிப்புத் தன்மை.

Page 28
நாங்களும் மாணவர்கள்தான்!
பவள சங்கரி நேர்காணல்: சித்தார்த்தா பள்ளி மாணவர்கள்
உழைப்பவர்களின் கையில்தான் உலகம் இருக்கிறது. பிறர் உழைப்பில் வாழ்பவன் ஒருநாளும் முன்னேற
முடியாது!
காந்தியடிகளின் இந்த சத்தியமான வார்த்தைகள் எக்காலத்திற்கும், மனிதராய்ப் பிறந்த எந்நாட்டவருக்கும் பொருந்தக்கூடியது.
ஒரு குழந்தை பிறந்தவுடன், பெற்றவர்களுக்குத் தம் குழந்தையின் எதிர்காலம் குறித்து பல கனவுகளும், கற்பனைகளும் உடன் தோன்றுவதும் இயற்கை. அதனை நன்முறையில் செயல்படுத்தும் வகையில் அவர்கள் மனதில் தோன்றக்கூடிய அடுத்த விசயம் குழந்தையின் கல்வி, தம் குழந்தையை, ஒரு பிரபலமான பள்ளியில் சிறந்த மாணவனாக உருவாக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலான பெற்றோரின் விருப்பமாக உள்ளது. அவரவர் குடும்பச் சூழலுக்கேற்றவாரு பள்ளியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். பிரம்மாண்ட கட்டிடங்களுடன், அதிகக் கட்டணமும் வசூலித்து, அதிக மதிப்பெண்கள் வாங்க வைத்து, நூறு சதவிகித தேர்வு முடிவுகள் காட்டும் வல்லமை பெற்ற பள்ளிகளே சிறந்த பள்ளிகளாகவும் முடிவு செய்யப்படுகிறது. அப்படிப்பட்ட பள்ளிகளில் மாணவர்களைச் சேர்த்து பயிலச் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டு, பிரம்மப் பிரயத்தனப்பட்டு அது போன்ற பள்ளிகளில் தம் குழந்தைகளைச் சேர்க்கும் பெற்றோரே அதிக அளவில் உள்ளனர்.
அண்ணல் காந்தியடிகள் தம்முடைய , நயீ தலீம் என்ற கல்வி முறையின் மூலம் இந்தியாவில் தொழில் மூலம் கல்வி கற்கும் முறையை விரிவாக்கத் திட்டமிட்டிருந்தார். குழந்தைகள், தங்கள் கைகளினாலேயே பொருட்கள் தயாரிப்பதை, மிகவும் விரும்பி வரவேற்றனர். அனைத்துக் கல்வியும், ஏதாவது, கைவினைப் பொருட்களின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றார். உதாரணமாக, குழந்தைகளை, பஞ்சு பொறுக்கிப் போடுவதற்கு, அழைத்துச் சென்று, அது எப்படி விளைகிறது என்கிற விளக்கங்களையும் கற்பிக்கலாம். பஞ்சு விளையக் கூடிய நாடுகள், பலதரப்பட்ட பஞ்சு வகைகள், அதனைப் பயிரிடும் முறைகள் மற்றும், அதன் வளர்ச்சி குறித்த தகவல்கள் போன்றவற்றையும் கற்பிக்கலாம்.

இந்த முறையில் குழந்தைகளின் கற்கும் ஆவல் கட்டமைக்கப்பட்டு, தெளிவான விளக்கங்கள் அளிப்பதன் மூலம் மண் எப்படி நீரை உரிஞ்சுக் கொள்ளுமோ அது போல அவர்களுடைய ஆழ்மனதில் அனைத்தும் பதிந்துவிடும். எதையும் சிரமப்பட்டு மனப்பாடம் பண்ண வேண்டியத் தேவையுமில்லை. படிப்பும், எழுத்தும், பின்னாளில் வந்து விடும். ஆனால் இன்றைய காலச் சூழலுக்கு ஏற்றவாரு சில மாற்றங்களுடன், படிப்பும், எழுத்தும் சேர்த்துக் கூட இது போன்ற கல்வி முறைகளை முயற்சிக்கலாம். குழந்தைகளுக்கு கல்வி கற்பது ஒரு சுமையாக இல்லாமல் அது வாழ்க்கைக்குத் தேவையான, வகையில் அமையலாம். உடல் உழைப்பும் சேர்ந்த தாய் மொழி வழி தொழில் சார்ந்த கல்வி என்பது நமக்கு கனவாகவே இருக்கப் போகிறதா? என்பதும் நம் கல்வியாளர்களின் கவலையாகவும் உள்ளது
A Hong Kong Institute of Educational Research> The Chinese University of Hong Kong பல்கலைக்கழகங்கள் இளம் சிறார்கள் முதல் பதின்மப் பருவத்தினரின் (6 முதல் 18 வயது பருவத்தினர்) கல்வி முறைமைகளின் மூலம் கல்வித் தகுதியில் முன்னேற்றம் இருப்பது போன்று சமூக வளர்ச்சியின் முன்னேற்றம் குறித்த ஆய்வுகள் உலகளாவிய முறையில் 2006, ஜூன் 3ஆம் தேதியில் மேற்கொள்ளப் பட்டது.
OST (out-of-school-time services என்ற பள்ளிக்கு வெளியேயான செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கைகள் மூலம், உலகளவில் பள்ளி மாணவர்களுக்கான ஐந்து பொதுவான , பரிமாணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்கும், ஆசிரியர்களுக்கும் நல்ல புரிந்துணர்வு இருக்க வேண்டும் நான் மிகச்சிறந்து விளங்குவதற்கு உதவி புரிபவரான எம் ஆசிரியர் ரகு
இருக்கும் இடமே எம் பள்ளி என்ற எண்ணம்.
2.
சமூக ஒருங்கிணைப்பு : மாணவர்களின் சக மாணவர்கள் மற்றும் பொது மக்களிடம் பழகும் 3 தன்மை. என் பள்ளி என்பது நான் நானாக அப்படியே ஏற்றுக் கொள்ளப்படும் ஓர் இடம் என்ற எண்ணம்.
(ன்,
அகவி
ல 2014
பொதுசன நூலகம்
உ78 மட்டx73னம்,

Page 29
வாய்ப்பு: பள்ளி வாழ்க்கை அனுபவங்கள் தொடர்புடைய அவர்தம் கருத்துகள் - என் வாழ்க்கைக்கு மிக முக்கியமான விசயங்களைக் கற்கக் கூடிய இடமே எம் பள்ளியென்பது.
சாதனை : பள்ளிக் காரியங்களில் வெற்றியாளராக இருக்கக் கூடிய தன்மை ஒரு மாணவனாக நான் வெற்றியடைந்திருக்கக் கூடிய ஓர் இடமே எம் பள்ளியென்பது.
சாகசம் : கல்வி கற்பதற்கான சுய ஊக்கம் மற்றும் கற்பது தனக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்று என்ற தெளிவு நான் செய்யும் செயல்கள் அனைத்தும் என்னை உற்சாகமடையச் செய்யக்கூடிய இடம் எம் பள்ளியென்பது. உலகளவில், பள்ளிக் குழந்தைகளின் எண்ண ஓட்டங்களாக குறிப்பிடப்படுவன, 1. பொதுவான மன நிறைவு: தம் பள்ளியைப் பற்றிய
ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் கொண்டிருப்பது. அதாவது, நான் தினமும் விரும்பிச் செல்லும் இடம் எம் பள்ளி என்ற எண்ணம் மேலோங்கியிருப்பது.
எதிர்மறையான பாதிப்பு: பள்ளியைப் பற்றிய எதிரான எண்ணங்களைத் தோற்றுவிப்பது. அதாவது, பள்ளி என் மனநிலையைப் பாதித்து வருத்தமேற்படுத்தக்கூடிய இடமாக இருக்கிறது என்ற எண்ணம் கொண்டிருப்பது.
8 அகவிழி ஜூலை 2014
ஒரு நூற்றாண்டாக, பள்ளிக்கு வெளியே ஆற்றும் செயல் திட்டங்களின் மீதான ஆர்வம் அமெரிக்க

மக்களிடமும் வெகுவாகக் குறைந்திருந்தாலும், கடந்த 20 ஆண்டுகளில் இது போன்ற திட்டங்களில், பள்ளிப் பருவக் குழந்தைகளின் பயிற்சியாளர்கள், இளைஞர் மேம்பாட்டு வல்லுநர்கள், கல்வியாளர்கள், குற்றவியல் மற்றும் சிறார் நீதித்துறை வல்லுநர்கள், வறுமை ஒழிப்பு வல்லுநர்கள் போன்றவர்கள் இளம் சிறார்கள் மற்றும் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் பின்னடைவிலிருந்து தற்காத்துக் கொள்ளக் கூடிய ஓர் உபாயம் இத்திட்டம் என்பதனை வாதிட்டுக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகளாவிய இந்த பிரம்மாண்ட ஆய்வுகளின் முடிவில், கிடைத்த மதிப்பீடுகளின்படி, கல்வி கற்றலில் நல்ல ஆக்கப்பூர்வமான முன்னேற்றமும், சாதனைகளும் தென்பட்டதோடு, போதைப் பழக்கம், பெண் குழந்தைகளின் இளவயது கர்ப்பம், சிறார்களின், சிறு குற்றங்கள், போன்றவைகள் கணிசமாகக் குறைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். சங்கடமான சூழ்நிலைகளைச் சமாளிக்கும் பக்குவமும், பள்ளியில் கல்வி கற்பதில் மட்டுமே முழு நேரமும் ஈடுபட்டிருக்கும் மன அழுத்தத்திலிருந்து வெளியே வருவதற்கு பேருதவி புரிவதாகவும், இதனால் மன உளைச்சலிலிருந்து விடுபடுவதால், தேர்வில் மதிப்பெண்களில் நல்ல முன்னேற்றமும் கிடைப்பதாகவும், குறிக்கோள்களை நிர்ணயிப்பதில் ஆழ்ந்த ஈடுபாடும் ஏற்படுவதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டின் சூழலுக்கு இத்தகைய ஆய்வுகள் எந்த வகையில் பயன்படுகின்றன, குழந்தைகள் இதனால்

Page 30
பயனடைகிறார்களா என்று அறிந்து கொள்ளும் ஆவல் மேலிட்டாலும், பெரும்பாலான பள்ளிகளில், கல்வி கற்றலைத் தாண்டி ஒரு சில கலை நிகழ்ச்சிகள் நடத்துதல், விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல் ஏதோ ஓரிரு முறைகள் உல்லாசப் பயணங்கள் செல்வது போன்றவைகள் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகின்றது. கல்வி சார்ந்த பிராஜக்ட் மட்டுமே வழமையாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் குழந்தைகளின் மனநிலையில் அழுத்தம் ஏற்படுவதோடு, தொடர்ந்து கல்வி கற்றலில் ஈடுபடுவதிலும் சிரமம் ஏற்படுகிறது. அத்துடன் அத்தகைய இறுக்கமான மனநிலையே அவர்களை தவறிழைக்கவும் தூண்டுகிறது. பள்ளிப்பாடத் திட்டங்களைக் குறித்த நேரத்தில் முடிப்பதற்கே கால அவகாசம் இருப்பதில்லை. இதில் இது போன்ற சமூக வளர்ச்சித் திட்டங்கள் செயல்பாடுகள் என்பதெல்லாம் சாத்தியமாவது கடினம் என்பதே பல பள்ளிகளின் நிலைப்பாடாக உள்ளது.
அந்த வகையில் ஈரோடு சித்தார்த்தா மேல்நிலைப் பள்ளியில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இது போன்று திட்டங்கள் மூலம் மாணவர்களுக்கு பல்வேறு வகையான விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்திக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 1989-90இல் பவானியில் சாயக்கழிவு நீர் மூலம் ஏற்படும் மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாணவர்கள் ஈரோட்டிலிருந்து, மிதிவண்டி பயணம் சென்று பாதுகாப்பு குறித்த பிரச்சாரம் மேற்கொண்டது பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. ஒவ்வொரு ஆண்டும் அது போன்று ஒவ்வொரு வகுப்பிற்கும், ஒரு திட்டம், அதாவது சமூக நலம் தொடர்பாகவும், அதே சமயம் தங்கள் வாழ்க்கைக்கும் அத்தியாவசியமாக அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் மற்றும் நம் நாட்டில் வறுமைக் கோட்டில் வாழும், குறைந்த வருமானம் கொண்டவர்களின் வாழ்க்கைத் தரம் பற்றி அறிந்து கொள்ளவும், அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கான தீர்வுகளையும் ஆய்ந்து அறிக்கை வெளியிடுகின்றனர். சென்ற ஆண்டில் தெருவோரங்கள் மற்றும் நடைமேடை போக்குவரத்து பிரச்சனைகளைத் தீர்க்கும் வகையில் மாணவர்கள் எடுத்த முயற்சியும் அதற்கான அவர்களின் பரிந்துரையும், அத்துறை மேலாளர்களால் பெரிதும் பாராட்டப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டும் இப்பள்ளி மாணவர்கள், சவரத் தொழில் செய்பவர்கள், சலவைத் தொழில், தையற் கலைஞர்கள், கட்டிடம் கட்டுமானத் தொழிலாளர்கள், , காய்கறி விற்பவர்கள் என அனைத்து சிறு வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களிடம், அவர்களின் தொழில் மற்றும் வியாபாரம் குறித்த முழுமையான ஆய்வுகளை மேற்கொண்டு அதற்கான ஆய்வேடுகளும் சமர்ப்பித் துள்ளனர். ஆசிரியர்களின் ஆலோசனையுடன், வெகு

நேர்த்தியாக அவர்கள் திட்ட அறிக்கை தாயரித்திருந்தது பாராட்டுதலுக்குரியது.
ஆறாம் வகுப்பு மாணவர்கள் சவரத் தொழிலாளர்களின் கணக்கெடுப்பைச் செய்தனர். மாணவர்கள் தங்களுக்குள் குழுக்களாகப் பிரிந்து, நகர எல்லைக்குள் ஒவ்வொரு குழுவும் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டு அங்கு உள்ள ஒவ்வொரு சவரத் தொழிலாளர்கள், அதாவது பெட்டி தூக்கிக்கொண்டு மரத்தடியில் சவரம் செய்யும் மிகச் சாதாரண கடைநிலை சவரத் தொழிலாளி முதல், ஆண்களுக்கான அழகு நிலையம் வரையிலான அனைத்துத் தரப்பு தொழிலாளர்களான சராசரியாக 80 பேரிடம், அவர்களுடைய வாழ்க்கைத்தரம், தொழில், அவர்தம் குடும்பச் சூழல், அவர்தம் மக்களின் கல்வி, எதிர்காலத் திட்டங்கள் ஆகிய அனைத்தையும் திரட்டியதோடு, அவர்தம் வாழ்க்கை உயரவும், சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது வரை அனைத்துத் தரப்பு ஆய்வுகளையும் மிக நேர்த்தியாக செய்திருந்தனர். சவரத் தொழில் செய்யும் நபர் ஒருவரை சிறப்பு விருந்தினராக அழைத்து அவர் முன்னிலையில் தாங்கள் அறிந்து கொண்ட கலைகளை செயல் முறை விளக்கமாகவும் நடித்தும் காண்பித்தது குறிப்பிடத்தக்கது. சுற்றுச் சூழல் பாதிக்காத வகையில் அந்தக் கழிவுகள் சரியாக அப்புறத்தப்படுத்தப்பட வேண்டும் அது மட்டுமல்லாமல் நோய்த் தொற்று வராமல் இருக்கும் வகையில் சுத்தமான கைத்துண்டுகள் மற்றும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளேடுகளை பயன்படுத்தலாம் என் பதற்கான விழிப் புணர்வை சிறிய சவரத் தொழிலாளிகளுக்கு ஏற்படுத்தியுள்ளதோடு, அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர, தம் தொழிலில் முன்னேறக் கூடிய வழிகள், வங்கிக் கடன் பெறும் வழி முறைகள் போன்றவற்றிற்கான ஆலோசனைகளும் அளித்துள்ளனர். ஆசிரியர்கள் இதற்கான பயிற்சிகளையும் மாணவர்களுக்கு வழங்கியுள்ளனர். இறுதியில் சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றிருந்த சவரத் தொழிலாளி நண்பர், கண்கள் கலங்கி, உள்ளம் நிறைந்து, இக்குழந்தைகளை வாழ்த்தியதோடு, அந்தத் தெளிவான ஆய்வறிக்கையை தங்கள் சங்கத்தில் வைப்பதற்காக ஒரு கோப்பு வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். உள்ளம் நெகிழ்ந்து அவர் நன்றி சொன்னதும், அவர் தன்னம்பிக்கையுடன் மேடையிலிருந்து கீழிறங்கிச் செல்வதையும் காண முடிந்தது.
அடுத்து ஏழாம் வகுப்பு மாணவர்கள் சலவைத் தொழிலாளர்களை இதே முறையிலும், அவர்தம் வாழ்க்கை 2 முறைகளைக் கேட்டறிந்து கொண்டதோடு, அவர்களுக்கான முன்னேற்றத்திற்காக , இன்று வெகுவாக குறைந்துவிட்ட வெள்ளாவி வைத்து துணியை வேகவைத்து சுத்தம் செய்யும் முறையை சற்றே நவீனமாக, பெரிய மின்சாரத்
Iை
3ான்
அகவிழி | ஜூலை 2014 இ
ஒt pா அ த்பு"
4.5ாழ்ப்.277ானம்,

Page 31
தானியங்கி இயந்திரங்கள், முக்கியமாக, அதிக அளவிலான மக்கள் வசிக்கும் குடியிருப்புகளில், வெளிநாடுகளில் உள்ளது போன்று, வைத்து மக்கள் கட்டணம் செலுத்தி தாங்களே வெளுத்துக் கொள்ளும்படி வைக்கலாம். அதற்கு அரசாங்கம் மற்றும் வங்கிக் கடன் உதவியும் பெறலாம். சலவைத் தொழிலாளகள் குழுக்களாக இணைந்து கூட இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளலாம். இதனால் சுற்றுப் புறமும், படித்துறைகளும். நீர்நிலைகளும் மாசுபடுவதைச் சுத்தமாகத் தவிர்க்க இயலும் என்பதையும் இந்தக் குழந்தைகள் தங்கள் ஆய்வேட்டில் குறித்துள்ளதோடு அதனை அம்மக்களிடமும் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. காலப்போக்கில் இது போன்ற கருத்துகள் மெல்ல மெல்ல நடைமுறை படுத்தப்படும் வாய்ப்பும் உருவாகும் என்ற நம்பிக்கையும் கொண்டுள்ளனர். அவர்களிடம் நல்ல வரவேற்பும் இருந்ததாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். திருக்குறிப்புத் தொண்ட நாயனாரின் வரலாற்றை சிறு நாடகமாக ஆக்கி, ஆண்டவனே அவ்வடியாருக்குக் காட்சி கொடுத்த வகையில், அவர்தம் தொழில் எத்துனை சாலச்சிறந்தது என்பதை எளிதாக விளக்கியும் காட்டி, சிறப்பு விருந்தினராக வந்த அந்த சலவைத் தொழிலாளியை நெகிழ வைத்தனர்.
அடுத்து ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள், காய்கறி வியாபாரிகளைச் சந்தித்து அவர்தம் தொழிற்முறைகள், வாழ்க்கை முறைகள், குழந்தைகள் கல்வித் தகுதி போன்ற பல வகையான விளக்கங்களை அலசி ஆய்ந்து அறிக்கை சமர்ப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதற்கான செயல்முறை விளக்கங்களும் செய்து காட்டினர். காய்கறி சந்தை போன்றும், தள்ளு வண்டியில் காய்கறிகள் விற்பது போன்றும் மிக நேர்த்தியாக நடித்துக் காட்டியது, அவர்கள் அத்தொழிலை ஆழமாக புரிந்து கொண்ட விதத்தை தெளிவாகக் காட்டியது. தராசில் நிறுக்கக் கூடிய முறைகள், அதைச் சரியாகப் பயன்படுத்தும் முறையையும் அறிந்திருந்தார்கள் அவர்கள். அதுமட்டுமல்லாமல் அக்காய்கறிகளின் சத்துகள், அவைகள் விளையக்கூடிய இடங்கள், அதற்கான தட்பவெட்ப நிலைகள், போன்ற அனைத்துச் செய்திகளையும் மிக நேர்த்தியாக சேகரித்து அறிக்கையாக்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அழுகிய காய்கறிகளை உரமாக மாற்றக்கூடிய முறையையும் அதனால் வியாபாரிகளுக்கு அதிக வருமானம் கிடைக்கக் கூடும் என்ற விழிப்புணர்வும் ஏற்படுத்தியதோடு, அப்பள்ளித் தாளாளர், திருமதி ஜெயபாரதி அவர்கள், மண்புழு உரம் தயாரிக்க இது போன்று அழுகிய காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை பயன்படுத்தும் வகையில் அதற்கான இடம் ஒதுக்குவது மற்றும் அதற்கான செலவுகளுக்கான வங்கிக் கடன் பெறுவதற்கோ வழியமைத்துக் கொடுக்கலாம் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தியதும் பாராட்டிற்குரியது. அக்குழந்தைகள் ஆரஞ்சுப்பழத் தோலில் இருந்து
8 அகவிழி ஜூலை 2014

பெட்ரோல் தயாரிக்க இயலும் என்ற சமீபத்திய ஆய்வையும் எடுத்துரைத்ததும் அவர்களுடைய சமுதாய விழிப்புணர்வைப் பறை சாற்றுவதாக அமைந்திருந்தது. காய்கறிக் கழிவுகளை சுற்றுச் சூழல் மாசுபடாத வகையில் அப்புறப்படுத்தும் ஆய்வையும் அழகாக மேற்கொண்டு அதற்கான அறிக்கையும் அளித்திருந்தனர். அனைத்திற்கும் மேலாக பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டித் தேசிய பசுமைப்படை இயக்கம் மற்றும் சுற்றுச் சூழல் மன்றம் மூலம் தம் பள்ளியில் தயாரித்த துணிப்பைகளை அங்காடியில் வழங்கி அதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. சிறப்பு விருந்தினராக வந்திருந்த அங்காடியில் காய்கறி வியாபாரம் செய்யும் ஓர் பெண்மணி இக்குழந்தைகளின் . திறமை மற்றும் பொறுமை போன்ற விசயங்கள் குறித்து உள்ளம் நெகிழ்ந்து பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்து கட்டிடக் கலைத் தொழிளாளர்களின் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்த எட்டாம் வகுப்பு மாணவர்களின் திறமை வெளிப்படையாகத் தெரிந்தது அவர்கள் வடிவமைத்திருந்த சிறு மாதிரிக் குடில் மூலம். ஆம். அத்துனை அழகாக தாங்களே ஒரு கட்டிடத் தொழிலாளியின் ஆலோசனையுடன் மிக நேர்த்தியாக கட்டியிருந்தனர். உறுதியான கட்டிடம் எழுப்புவதற்கு எந்த அளவிலான கலவை இருக்க வேண்டியது அவசியம் என்பது முதற்கொண்டு மிகத் தெளிவாக அறிந்து வைத்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தண்ணீர் வரும் குழாய்களைக் கூடத் தங்களின் கற்பனைத் திறனுடன், ஒரு சிறு புட்டியுடன் சேர்த்து இணைத்து, அதற்கான வால்வுகளையும் பொறுத்தி தண்ணீர் வரும்படி செய்து வைத்திருந்ததும் ஆச்சரியப்பட வைத்தது. அம்மக்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்தம் குழந்தைகளின் கல்வித் திறம் குறித்த தகவல்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் என அனைத்தையும் மிக அழகாக அறிக்கையாக்கியிருந்தனர். கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்படும், கற்கள், ஓடுகள், மார்பிள், டைல்ஸ், வர்ணங்கள், மரப் பொருட்கள் என அனைத்துத் துறைகளையும் மிக நேர்த்தியாக காட்சியாக்கியிருந்தனர் மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்து தையற்கலைஞர்களை ஆய்விற்கு எடுத்துக் கொண்டிருந்தனர் 11ஆம் வகுப்பு மாணவர்கள். அவர்களும் அதற்கான தெளிவான அறிக்கை சமர்ப்பிப்பதில் எந்த குறையும் வைக்கவில்லை. வாடிக்கையாளரிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்து சிறு நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது, மற்றும் அசையாச் சிலையாக அழகாக நின்று ஆச்சரியப்பட வைத்த மாணவர் மற்றும் பல ஆண்டுகள் அனுபவம் உள்ளது போன்று துணிகளைப் பற்றியும், தையல்கலை பற்றியும் அழகாக விளக்கமளித்த மாணவர் மற்றும் நவீன முறை தையலகம் வடிவமைப்பு

Page 32
போன்ற பல விசயங்களில் தெளிவான விளக்கம் கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆண் தையற்கலை வல்லுநர்கள் இருபாலருக்கும் ஆடைகள் தைக்கும் வல்லமை பெற்ற அளவிற்கு பெண் தையற் கலைஞர்கள், பெண்களுக்குரிய ஆடைகளை மட்டுமே தைக்கும் வழக்கமே பெரும்பாலானவர்கள் கொண்டிருப்பதாக அவர்கள் சமர்பித்த அறிக்கையில் இருந்ததும் சிந்திக்க வைப்பதாகவும் இருந்தது.
அனைத்து மாணவர்களையும் இறுதியாக வாய்மொழித் தேர்வாக எழுப்பப்பட்ட வினாக்கள் மூலம் அவர்கள் அறிந்து கொண்டதாகக் கூறிய விசயங்கள்தான் சித்தார்த்தா பள்ளியின் உன்னதமான இம்முயற்சிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது எனலாம். ஆம், அக்குழந்தைகள் அனைவரும் ஒன்று போல சொன்ன விசயங்கள்:
எந்தத் தொழிலிலும் உயர்வு தாழ்வு என்பதே கிடையாது. நாம் செய்யும் தொழிலே நமக்கு தெய்வம்.
செய்யும் தொழிலை வைத்து அவர் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு கொள்வது முறையல்ல.
கைத்தொழில் சிறு வயது முதலே கற்றுக் கொள்வது பிற்காலத்தில் கட்டாயம் பயன்படும்.
நவீன முறைமைகளை பின்பற்றுவது மூலமாக தனி மனித வாழ்க்கை உயர்வடைவது போன்றே சமுதாயமும் உயர்வடைந்து நம் நாடும் நல்ல முன்னேற்றம் காணும்
வாய்ப்பும் அதிகம்.
ஓய்வு நேரங்களை இது போன்று ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட பயன்படுத்தும் போது, மன இறுக்கமும் குறைந்து, சமுதாயத்திற்காக தம் பங் களிப்பையும் வழங்கியுள்ள மன நிறைவும் கிடைக்கிறது.
தேவையற்ற தீய சிந்தனைகள், பழக்க வழக்கங்கள் அறவே நெருங்க முடியாத அளவிற்கு உள்ளத் தெளிவு ஏற்படுகிறது .

பங்க :
சமுதாயத்தில் பொது மக்களிடம் பழகும் தன்மை மற்றும் சக மனிதரை மதித்துப் போற்றும் வள்ளல் தன்மையும் இயல்பாவதும் சிறப்பு.
தம் எதிர்காலம் குறித்த தெளிவான குறிக்கோள் அமைப்பதற்கான அடிப்படை விழிப்புணர்வு பெற முடியும் நிலை.
தன்னம்பிக்கை, குழுவாக இணைந்து பணிபுரியும் திறன், விடாமுயற்சி, பொறுமை, தாம் நினைத்ததை சொற்கள் மற்றும் செயல்கள் மூலமாக வெளிப்படுத்தும் திறமை.
ஆசிரியர்களிடம் நட்புறவுடன் மற்றும் அன்புடன் பழகும் வாய்ப்பு.
சமுதாயத்தில் தானும் ஒரு சாதனையாளர் என்ற மன நிறைவு.
தங்களுக்கு இது போன்ற சமூகப் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதற்கான கால அவகாசம் எவ்வாறு கிடைக்கிறது என்று கேட்ட பொழுது தாளாளர் ஜெயபாரதி அவர்கள் அமைதியான புன்சிரிப்புடன், மனம் இருந்தால் மார்க்கமுண்டு என்று கூறியதில் அர்த்தம் இருப்பதாகவே உணர முடிந்தது.
இப்படி இன்னும் பலப்பல காரணங்களை மாணவர்கள் குறிப் பிட்டதும் மகிழ்ச்சியை ஏற் படுத்தியது. இம்மாணவர்களின் எண்னங்கள் சரியான பாதையில் வழி நடத்தப்படுவதற்காக அப்பள்ளித் தாளாளர் திருமதி ஜெயபாரதி மற்றும் முதல்வர், ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்து, நாமும் இனி ஆசிரியர் உமாமகேசுவரி அவர்களுக்கு நடந்த கொடுமை நடக்காது என்ற நம்பிக்கையும் முளைவிட மன நிறைவுடன் வந்தோம்!
அகவி
ஜூலை 2014 2
41.41ாகர்சன நல இலகம்
யாழ்ப்பாணம்

Page 33
பின் நவீனத்துவ கவிதை
'முனைவர் க. நாகநந்தினி
தமிழ்க் கவிதை மரபு மிக நீண்டது. சங்கக் காலப் பாடல்கள் அனைத்தையும் தொடங்கிச் சிற்றிலக்கியம் வரை வடிவமாற்றம் அனைத்தையும் உள்ளடக்கியது கவிதை மரபு. இம்மரபில் சொல் புதிது, சுவை புதிது, சோதி மிக்க நவகவிதை படைக்கத் துடித்த பாரதியார் தான் புதிய வசன கவிதையாய்ப் படைத்தார்.
நவகவிதை, யாப்பற்ற கவிதை, விடுபா, கட்டற்றயாப்புக் கவிதை, வசன கவிதை என்று பல்வேறு பெயர்களுடன் எழுதப்பட்ட கவிதை வடிவம் மரபான பார்வையாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மணிக்கொடி, எழுத்து, நடை போன்ற பத்திரிகைகள் தமிழில் கவிதை வடிவம் பெறுவதற்கான சூழலை வி ம ர் ச ன ங கள எ ழு ந த போது ம உருவாக்கித்தந்தன.
வசனம் நடந்தால் உரைநடை, நடன மாடினால் கவிதை என்றும், அழகிய சொற்கள் அழகிய வரிசையில் நிற்றல் என்றும், உணர்ச்சிகளின் பிரவாகம் என்று கவிதை பல் வேறு நிலைகளில் விளக்கப்பட்டது என்றாலும் கவிதை எழுதப்பட்ட போது அதற்கான காரணம் பின்வருமாறு
கூறுப்பட்டது.
வசனமும் கவிதையும் வெவ்வேறு வகையைச் சோர்ந்தவைதான். வசனம் நமக்குச் செய்தியைத் தெரிவிக்கிறது. தம்முடைய அறிவுக்கு உணவாகப் புதிய விசயங்களைக் கொண்டு வந்து சேர்க்கிறது. எனவே தபாலைப்போல் இயங்குகிறது. கவிதை நம்முடைய அறிவுடன் தொடர்பு கொள்ள முயல்வதில்லை. நம்முடைய உணர்வுடன் உறவாட முயல்கிறது. தனக்குள் எரியும் சுடர்கொண்டு மற்றரு மனத்தையும் சுடர் கொள்ளச் செய்கிறது. வசனம் உண்மையை அடிப்படையாகக் கொண்டது. கவிதை மன நெகிழ்ச்சியை, மன அசைவை
அடிப்படையாகக் கொண்டது. என்ற ந.பிச்சமூர்த்தி sே அவர்களின் கருத்து இங்கு குறிப்பிடத்தக்கது. மனதுடன் தொடர்புடைய அகவய அனுபவமாக வெளிப்பட்ட கவிதை
S) அகவிழி (ஜூலை 2014

"சி" - பய '' எEாட்டினர்
மரபில் ந.பிச்சமூர்த்தி, சி.மணி, எஸ்.வைத்தீஸ்வரன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
உலகப் போரின் விளைவாக ஏற்பட்ட அவநம்பிக்கை, மனமுறிவு, வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றம் புறநிகழ்வால் தன் வாழ்க்கை நிர்ணயிக்கப்பட்ட ஆற்றாமை, இதுவரை கட்டிக்காத்த மதிப்பீடுகளின் சரிவு, மேற்கத்திய இலக்கியம் ஏற்படுத்திய பாதிப்பு தமிழ்க்கவிஞர்களையும் எழுதத் தூண்டியது.
வாழ்வின் வினையேதும் அறியாத இருள் ஊடே உலகத்தின் சாலையில் ஊடாகும் சாலையில் ஊடாகும் நிழல்கள்
ந.பிச்சமூர்த்தி திருமனிதா தெருவில் சாவோலம் மிக நெருங்கி வருகிறது.

Page 34
ஓடு இருட்டுக்கு காட்டுக்கு எங்காகிலும் ஓடு உலகத்தைவிட்டு
எஸ்.வைத்தீஸ்வரன் பின்னாலும் போகவில்லை முன்னாலும் போகவில்லை நடுக்கிணற்றில் நிகழ்காலம் ச. மணி
வாழ்க்கையின் மீது கொண்ட இத்தகைய நம்பிக்கையின்மை, எங்கிருந்து பெறப்பட்டது? என்ற கேள்வி எழுகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரெஞ்சுக் கவிஞர் வெல்லேன் கூறுகிறார்.
நம்பிக்கை
அது இருண்ட வானத்திற்குள் ஓடி ஒளிந்துகொண்டது உலகப் போரின் விளைவாக ஏற்பட்ட நம்பிக்கை வறட்சியே இதற்குப் பதிலாகும்.
அதன்பிறகு வானம்பாடி இயக்கம் முதல் கவிதை வெகுஜன மக்களுக்கும் புரியும் வடிவமானது. வானம்பாடி பாரதியாரை முன்னோடியாகக் கொண்டு கவிதை எழுதுவதாக அறைகூவியது.
இனியொரு விதி செய்வோம் அதை எந்நாளும் காப்போம் எனத் தன் சமகால விடுதலை விரும்பிகளுக்கு வருங்காலப் பொதுமை விரும்பிகளுக்கும் வெடிப்புறப் பேசியும், நயம்படச் சொல்லியும், அறைகூவல் விடுத்த தமிழ்ச்சாதியின் நிர்மாணச் சிற்பியும், ஆசியாவின் ஒப்பற்ற மனிதாபிமானிகளுள் ஒருவனும் இருபதாம் நூற்றாண்டின் உலகமாக கவிஞர்களுள் ஒருவருமான பாரதிக்கு, அவன் விட்ட பயணத்தைத் தொடர வந்த பறவைகள் என்று வானம்பாடிக் கவிதை இயக்கம் தொடங்கியது.
நம்
கரங்களின் உழைப்பைக் காலம் அலட்சியப் படுத்தும் போது நிறங்களின் சிவப்பையே நாம் நிச்சியக்க முடியும்
என்ற சிலப்புச்சிந்தனை, பொதுவுடமை கொள்கை முழக்கமாக வெளிப்பட்டது கவிதை. அதன் பிறகு படிமக் கவிதை, உருவக் கவிதை, எள்ளல் கவிதை என்று கவிஞர்களின் தனித்தன்மை வெளிப்பாடாக கவிதை உருவெடுத்தது.
எண்பதுகளில் நடுவில் கவிதை என்பது பாரதி எழுத்து ரீதியான ஒரு பொருள் என்று சொல்கிற நிலையில் புரிந்து கொள்ளப்பட்டது. இந்நிலையில் கவிஞன் என்ற மனிதன் ஆளுமை கொண்டவனாக தரிசனம் மற்றும் உள்ளொளி

கொண்டவனாக சித்தரிக்கப்படவில்லை. படைப்பாளியை விட படைப்பே முக்கியத்துவம் பெற்றது. எனவே, படைப்பு மொழி பற்றிய சிந்தனையும் மாறியது. தினசரி மொழியின் பெரும்பாலான கூறுகள் பத்திரிக்கைச் செய்தி , விளம்பர மொழி, சின்னத்திரை, பெரியதிரை, நாடகம், நகைச் சுவைமொழி , வெகுஜன வார மாத இதழ்கள், பாக்கெட் நாவல்கள் என்ற பல்வேறு தளங்களில் மொழி தன் கூர்மை மழுங்கிய நிலையில், இந்த மொழி எனக்குத் தேவையில்லை என்றனர் சில படைப்பாளிகள், தன் சுயம் இழந்த மொழித்தளத்தை மீறிய மொழித்தளத்தில் கவிதை எழுத நினைத்த இவர்கள் சாதாரண வாசகரின் பங்கு பற்றி சிந்தனை மறந்துபோய் கவிதையை சிக்கலான மொழியில் எழுதினர். அமைப்பியல் ஆய்வாளர் கூறுவதன்படி கவிதை மொழி சொல்லாடல்களாக உருவாகிறது. கவிதை மொழியைப் புதைநிலையில் புரிந்துகொள்ளக்கூடிய வடிவமாக எதிர்கவிதை, காண்கவிதை தொடர்பற்ற வார்த்தை வடிவம் சொல்லாக்க கவிதை வடிவம் போன்ற மாற்றங்கள் கவிதை வடிவத்தில் ஏற்பட்டன.
இதற்கடுத்த காலகட்டத்தில்தான் பின்நவீனத்துவ மரபு எழுகின்றது.
கவிதையில் மையமிழந்த தன்மையும் (ஆசிரியன் இறந்துவிட்டான்) பல குரல்களும், வாசிப்பு அனுபவத்தை பல்வேறு அனுபவங்களுக்கு இட்டுச் செல்கின்றன. கவிதை என்பது ஒரு கட்டமைப்பு என்றே பார்க்கப்படும். ஒரே கவிதையில் ஒன்றுக்கொண்று முரணான உணர்வுகளும் தர்க்கங்களும் தூண்டப்படலாம். அவை இயைப்பிக்கப்பட வேண்டிய அவசியமிராது.
கவிதை என்பது பல்வேறு படிமங்கள் அடுத்தடுத்து வைக்கப்பட்டுள்ள அமைப்பு அவ்வளவுதான் என்று நவீன கவிதை இயல்பு குறித்த விவாதங்கள் முன் வைக்கப்பட்டன.
கவிதை வேதையும் குறிக்கவில்லை தன்னையே குறித்துக்கொள்கிறது. அர்த்தம் சொற்களால் உருவாகவில்லை. சொற்களின் இடைவெளியில் மௌனங்களில் தோன்றியது என்று விளக்கம் தரப்பட்டது. புதைமணல் கனவை போலத் தான் துழாவுகிறது நிஷ்சிந்தையில் மலரும் ராட்சதக் காளான் மெளன நிறம் போல என் மூளையின் பின்னாலே நினைவூட்டாது ஏதுமின்றி என் மேலதீத நானிடமே துமில்லாமல் ஞாபகச்சிற்பம்
என்ற கவிதை தொகுப்பிலுள்ள கவிதைகள் எழுதிய பிரம்மராஜன் கதைத்தளத்தை திறந்த வெளிக்கு எடுத்துச்
அகவிழி 1 ஜூலை 2014 (8)

Page 35
செல்கிறார். அதாவது கவிதைகளின் அர்த்தங்கள் குறுகாமல் விரிவடைந்து இவைபேசும் பொருட்கள், நிலைகள், மௌனங்கள் ஆகியவை சிதையாமல் அமைவதற்கு இவற்றின் திறந்தவெளி அமைப்பே காரணமாகும். இப்படிப்பட்ட கவிதைகளை வாசித்துப் புரிந்து கொள்ள பிறதுறை அறிவும், பயிற்சியனுபவமும் தேவையாகவுள்ளது. இத்தகைய முயற்சிகளை புரியாத கவிதையென்று ஒதுக்க முடியாது.
ஆரம்ப கால கட்டத்தில் இலக்கியங்கள் கவிதை நடையில் தான் தோன்றின. இவ்வகைக் கவிதைகள் உவமை, உருவகம், மோனை, எதுகை, இயைபு, அணி, பாவகை போன்ற வற்றைப் பெற்று வந்தன. இம்முறை யிலிருந்து இன்று மாறி மரபுக் கவிதைக்குரிய எதையும் பின் பற்றாமல் தற்கால கவிதைகள் வெளிவருகின்றன. வளர்ந்து வரும் இன்றைய கவிதைகள் நவீனத்துவத்தைப் பின்பற்றி வருகின்றன. நவீனத்துவம் என்பது அரசியல், தத்துவம், பொருளியல், அறிவியல், கலை, இலக்கியம் எனச் சகல துறைகளையும் ஒரே சமயத்தில் பிரமிக்கத்தக்க விதத்தில் பாதித்த ஒன்று. நவீன அரசமைப்பு, சனநாயகம், தேசிய உருவாக்கம், நகர நிர்மாணம், மத்திய தரவர்க்க உருவாக்கம், நீதிவழக்குமுறை, கல்வி, மருத்துவம், குடும்ப அமைப்பு என நவீனத்துவம் பாதிக்காத துறைகளே இல்லை எனலாம். (அ.மார்க்ஸ் உடைபடும் புனிதங்கள் பக். 7, 8)
தற்காலக் கவிதைகள் பின்வரும் நவீனத்துவக் கூறுகளைப் பெற்று வருகின்றன:
1. கவிதை மரபைப் புறக்கணித்தல். 2. படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் உள்ள உறவு. 3. வாசகனுக்கு சிந்திக்க இடம் அளித்தல். 4. பூடகத்தன்மை.
* அகவிழி ஜூலை 2014
கவிதை மரபைப் புறக்கணித்தல் தற்காலக் கவிஞர்கள் தனக்கென்று விதிக்கப்பட்டிருந்த உவமை, உருவகம், அணி, பாவகை, எதுகை, மோனை இயைபு போன்ற மரபுகளை நீக்கி கவிதை இயற்றுகின்றனர். உரைநடையைச் சிதைத்துக் கவிதையாக எழுதுகின்றனர். நேரில் பேசுவது ஒரு நேர்முகத்தன்மையுடன் இருக்கிறது. இன்றைய நவீனக் கவிஞர்கள் பலரும் இம்முறையைப் பின்பற்றி எழுதுகின்றனர்.
என் வீடு ரொம்பச் சின்னது

Hாயம்
யாராவது நண்பர்கள் வந்தால் தங்க வைக்க முடியாது (விக்ரமாதித்தன் உள் வாங்கும் உலகம்)
இக்கவிதை வரிகள் ஆசிரியர் , வாசகர்களிடம் நேரிலே பேசுவது போன்று உள்ளன. இதில் கவிஞருக்குரிய மரபு இலக்கணங்கள் எதுவுமில்லை. வீடு மிகச் சிறியது. யாரு வந்தாலும் தங்குவதற்கு முடியாது என்பதை அப்படியே உரைநடையைப் பிரித்துக் கவிதையாக எழுதியுள்ளார்
ஆசிரியர்.
படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் உள்ள உறவு
படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் மரபுக் கவிதைகளில் ஒரு பெரிய இடைவெளி இருக்கும். நவீனக்கவிதைகளில் இடைவெளிக் குறைகிறது. கவிஞன் தன் குடும்ப நிலையையும், தன்னையும், குடும்பத்திலுள்ளவர்களையும் கூறுவதன் மூலம் படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் இடையே இடைவெளி மிகவும் குறைந்து விடுகின்றது.
அம்மா சொன்னாள் . ஐம்பது ரூபாய் ரேஷனுக்குப் புரட்ட முடியாத நீயென்ன பிள்ளை? வீட்டுக்காரி கேட்டாள் எப்படி வாழப்போகிறீர்கள் (விக்கிரமாதித்தன் உள் வாங்கும் உலகம்)

Page 36
என்ற இக்கவிதை வரிகளில் கவிஞரின் வறுமை பற்றியும், வீட்டிலுள்ளோர் பற்றியும் அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு கவிஞன் தன் நண்பருடைய வீட்டினைப் பற்றி இவ்வாறு கூறினார்.
கறுப்பேறிப் போன உத்திரம் வீட்டின் வளர்ந்த பிள்ளைகளுக்கு கையெட்டும் உயரத்தில் (கலாப்ரியா உலகெங்கும் சூரியன்)
பொதுவான பிரச்சனையை விடத் தனிமனிதனது நிலையினைக் கூறுவதால் படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் இடையேயுள்ள உறவு மிகவும் நெருக்கமாகிறது.
வா:
வாசகனுக்குச் சிந்திக்க இடமளித்தல் படைப்பாளன் ஒரு மையத்தினை வைத்துக் கூறி வாசகன் அதை அப்படியே அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலைமாறி படைப்பிலிருந்து எந்தவொரு கருத்தினைக் கொண்டும் வாசகன் மையத்தைச் சிந்திக்க முடியும் என்பதன் மூலம் வாசகனுக்கும் படைப்பில் முக்கியத்துவம் தரப்படுகிறது.
வாடாமல்லிப்பூ மாலைக்கு வசீகரமில்லை தனிப் பூவுக்கோ தாங்க முடியாத அழகு மண் புழுக்களை நேசிக்கிற மனம் இன்றும் இருக்கிறது (கல்யாண்ஜி முன் பின்னில்)
இவைகளிலிருந்து வாசகன் நேரடியான மையத்தினைப் பெற முடியும். அல்லது வாசகனின் மனநிலைக்கு ஏற்ப வேறரு மையத்தைப் பெற இடமளிக்கிறது.
அந்தி (போன்ற) நேரங்களில் மிகச் சுறுக்காகவும் கறுக்காகவும்
அடிக்கடி திருப்பிக் கொண்டும் தினந்தோறும் அது பறக்கக் காண்கிறேன் (கலாப்ரியா உலகமெலாம் சூரியன்) இக்கவிதையில் படைப்பாளன் குருவியைப் பற்றிக் கூறினாலும் வாசகன் வேறு பலவற்றைச் சிந்திக்க முடியும்.

பூடகத் தன்மை நேரடியாக மையத்தினைப் பெற முடியாமல் மறைமுகமாகப் பெறுவது, ஏதாவதொரு குறியீட்டின் மூலமாக உணர்த்துவது பூடகத்தன்மை எனலாம். ரத்தம் சுண்டிய கரப்பான்களும் ஒட்டுப்பூச்சிகளும் ஏலக்காய்ச் செடிகளைக் கெட்டியாய்ப் பற்றிக் கொண்ட வெளிரிப் போன பல்லிகளும் இன்னும் சில ஜவராசிகளும் கூட்டணிகள் அமைத்துப் போராடத் தயாராயின் ஓட்டுச் சீட்டைக் கையில் தயாராய் வைத்துக் கொண்டன (ஆத்மநாம் ஆத்மநாம் கவிதைகள்)
வகுப்புக்கு வரும் எறும்புக் கூடு என்னும் கவிதையில் வரும் மேல்கண்ட வரிகளை மேலோட்டமாகப் பார்த்தால் இதன் மையத்தைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கும். உற்று நோக்கிப் பார்த்தால்தான் இதன் கருவைப் புரிந்து கொள்ள முடியும். இன்றைய சமூகத்திற்குச் சட்டத்தை மதித்து நடக்கும் மக்கள் தான் தேவை. அநியாயத்தை எதிர்த்துக் கேட்கும் எளியவர்கள் நசுக்கப்படுகின்றனர். எனும் கருத்தை மையமாகக் கொண்டு இக்கவிதை உள்ளது.
இவ்வாறு நவீனத்துவக் கவிதைகள் மரபுக்கவிதை களிலிருந்து வேறுபட்டு நிற்கின்றன. எந்தவொரு சிறு விசயத்தைப் பற்றி கூறுவதற்கும் இடமளிக்கின்றது. வாசகனும் ஒரு படைப்பாளன் நிலைக்குச் சிந்திக்க இடமளிப்பதால் தற்கால கவிதைகள் வரவேற்பைப் பெறுகின்றன.
அகவிழி ஜூலை 2014 2

Page 37
பாடசாலையின் அபிவிருத்தியில் மற்றும் சமூகத்தின் உயிரோட்ட
அறிமுகம்
பாடசாலையின் அபிவிருத்தியில் செல்வாக்குச் செலுத்தும்
முக்கியமான ஒரு காரணி பாடசாலைச் சமூகமாகும்.
பாடசாலைச் சமூகத்தைச் சேர்ந்த குழுக்கள் அதிபரும் ஆசிரியர்களும் மாணவர் கல்வி சாராப் பணிக்குழுவினர் பழைய மாணவர் மாணவரின் பெற்றோர் பாதுகாவலர் உட்படக் குடும்ப அங்கத்தவர்கள் போசிப்புப் பிரதேசத்தில் வாழும் சமய முக்கியத்தவர்கள் பிரதேசத்தில் வாழும் ஏனைய குடும்பங்களின் உறுப்பினர்கள் நலன் விரும்பிகள் பிரதேசத்தின் அரசு/அரச சார்பற்ற நிறுவனங்கள். பிரதேசத்தில் செயற்படும் சங்கங்கள் கழகங்கள், மேற்படி குழுக்கள் பாடசாலைகள் முன்னேற்றத்திற்கு உதவியவாறு, ஒரே நோக்கை அடைய ஒத்துழைத்துச் செயற்படல் மூலம் சிறுவர் நேயப் பாடசாலையை உருவாக்கப் பெரும் பங்காற்றுவர்.
பாடசாலைச் சமூகத்தின் பங்களிப்பு பின்வருமாறு பல வகைப்படலாம்
சமூகத்தின் பங்களிப்பு செயலூக்கமற்ற பங்களிப்பு
வருவதன் மூலம் மாத்திரம் கருத்துத் தெரிவிப்பதன் மூலம் மாத்திரம் எதிர்ப்புத் தெரிவிப்பதன் மூலம் மாத்திரம் துலங்கலுக்கு கட்டுப்படுவதன் மூலம் மாத்திரம்
வழங்கப்படும் செயல்களை நிறைவேற்றி தனது
பொறுப்பை முடித்துக் கொள்வதன் மூலம் மாத்திரம் பயனுறுதியுள்ள பங்களிப்பு
|8 அகவிழி ஜூலை 2014
இலக்குகளை அடையத் தேவையான பிரச்சினைகளை இனங்காண்பதன் மூலம் மாற்று ஆலோசனைகளை முன்வைப்பதன் மூலம் சிறந்த ஆலோசனைகளைச் செயற்படுத்துவதன் மூலம்

மாணவர், குடும்பம், மான பங்களிப்பு
செயற்படுத்தும் போது எழும் பிரச்சினைக்குத் தீர்வு கண்டவாறு முன்னோக்கிச் செல்வதன் மூலம் எதிர்பார்க்கும் நோக்கை அடைவதில் மகிழ்ச்சியை அனுபவித்தல் சிறுவர் நேயப் பாடசாலையில் பயனுறுதியுள்ள சமூக பங்களிப்பு உள்ளது. சிறுவர் நேய நியமங்களுக்குப் பொருத்தமானவாறு பாடசாலையில் நிலவும் நிலைமையை இனங்கண்டு சிறப்பு மட்டத்தை அடைவதற்காக இலக்கு களை அமைத்துக்கொண்டு அதற்காகக் கூட்டாகச் செயற்படலே அத்தகைய சமூகப் பங்களிப்பினால் எதிர்பார்க்கப்படுகின்றது. அத்தகைய பங்குபற்றலினால் சமூகத்திலிருந்து பாடசாலைக்கும் பாடசாலையிலிருந்து சமூகத்திற்கும் நற்பயன்கள் கிடைக்கும்.
பாடசாலையின் சுய கணிப்பீடு
பாடசாலைச் சமூகத்தின் பயனுறுதியுளள் பங்களிப்பின் மூலம், சிறுவர் நேயப் பாடசாலையின் நியமங்களினூ டாகப், பாடசாலை பற்றிச் செய்யப்படும் கணிப்பீடே இதுவாகும். இதற்கு எல்லாச் சமூகக் குழுக்களினதும் பங்களிப்புக் கிடைப்பது அவசியமாகும்.
லை
பாடசாலை அபிவிருத்தித் திட்டம் சிறுவர் நேய நியதிகளுக்கேற்பச் செய்யப்படும் கணிப்பீட்டின் போது இனங்காணப்பட்ட முக்கிய தேவைகளைப் பூரணப்படுத்தத் தயாரிக்கப்படும் திட்டமே இதுவாகும். திட்டத்தைத் தயாரிக்கும் போது எல்லாச்சமூகக் குழுக் களும் பயனுறுதியுடன் பங்களிப்புச் செய்ய வேண்டும். பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரித்தல், செயற்படுத்தல், கண்காணித்தல் ஆகிய எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பாடசாலைச் சமூகத்தின் பங்களிப்பு மிக முக்கியமாகும்.
நியமங்கள்
மாணவர், குடும்பம், சமூகத்தின் செயலூக்கமுள்ள பங்களிப்பு எனும் ஐந்தாம் பரிமாணத்தின் கீழ் எதிரபாரக்க்பப்டும் நிலைமைகள் கீழே தரப்பட்டுள்ளன.

Page 38
இவை சிறுவர் நேயப் பாடசாலையின் ஐந்தாம் பரிமாணம் எனக் கொள்ளப்படுகின்றன. மாணவர்கள், குடும்பங்கள், சமூகத்தினர் போன்றோரின் பயனுள்ள பங்களிப்புடன் சுய கணிப்பீடு இடம் பெறுவதுடன் பாடசாலை அபிவிருத்தித் திட்டமும் ஒழுங்கமைக்கப்படுகிறது. பாடசாலை அபிவிருத்தித் திட்டம் (SDP) நடைமுறைப் படுத்தப்படும் போது அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், குடும்பம், சமூகம் போன்றோர் செயல்ரீதியாகப் பங்களிப்புச் செய்கின்றனர். பாடசாலை அபிவிருத்தித் திட்டம் (SDP) கண்காணிப்பின்போதும் மதிப்பீடு செய்யப்படும்போதும் அதிபர், ஆசிரியர், மாணவர், குடும்பம், சமூகம் போன்றோர் பங்களிப்புச் செய்கின்றனர்.
சிறுவர் நேய, வீடு, சமூக சூழல் போன்றவற்றின் மேம்பாட்டுக்காப் பாடசாலை உயிரோட்டமாகப் பங்களிப்புச் செய்கிறது.
முதலாவது நியமம்
மாணவர்கள், குடும்பங்கள், சமூகத்தினர் போன்றோரின் பயனுள்ள பங்களிப்புடன் சுய கணிப்பீடு இடம்பெறுவதுடன் பாடசாலை அபிவிருத்தித் திட்டமும் ஒழுங்கமைக்கப்படுகிறது.
பாடசாலையின் எல்லாப் பகுதியினரும் பிரதி நிதிப் படுத்தும் வகையில் அமைந்த ஒரு குழுவினால் பாடசாலைச் சுய கணிப்பீடு நடைபெறும். வெவ்வேறு முறையில் மேற்படி குழுக்கள் கலந்துரையாடலின் மூலமும், தேடிப்பார்த்தலின் மூலமும், தகவல்களைப் பெற்றுக் கொள்ளும். தகவல்களைத் தேடுவதற்காக மாணவர்கள் ஒரு குழுவாகவும், பெற்றோர் மற்றொரு குழுவாகவும் ஆசிரியர்கள் வேறோர் குழுவாகவும் கூடிக் கலந்துரையாட வேண்டும். கலந்துரையாடல் சிறுவர் நேய நியதிகளுக்கேற்ப நடாத்தப்படல் வேண்டும். இங்கு சிறுவர் நேய நியதிகளுக்கேற்பப் பாடசாலையின் தற்போதைய நிலை இனங்காணப்பட வேண்டும். இவ்வாறான கலந்துரையாடல் மூலம் பாடசாலையின் உண்மையான நிலையை இனங்காணமுடியும். ஒவ்வொரு குழுவும் தனித்தனியாகக் கணிப்பீடு செய்யும்போது அந்தந்தக் குழு நோக்கும் விதத்தில் உண்மையான நிலையை இனங்காண்பர். சிறுவர் நேயப் பாடசாலை எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்பது தொடர்பாக எதிர் பார்க்கும் நிலைமைகள் பற்றி எல்லோரும் அறிந்திருபப்ர். இறுதியில் எலலாக் குழுக்களும் ஒன்று சேர்ந்து பாடசாலையின் தற்போதைய உண்மையான நிலை தொடர்பாகத் தாம் அறிந்து கொண்டவை பற்றி விளக்க வேண்டும். இங்கு ஒரே நியதி பற்றி வெவ்வேறு

குழுக்கள் வெவ்வேறு கருத்துக்கள் கூற வாய்ப்புண்டு. அவ் வாறே எதிர் பார்க்கும் இலக்கை அடைய வெவ்வேறு ஆலோசனைகளை முன்வைக்கவும் கூடும். அவ்வாறான எல்லா ஆலோசனைகளையும் முன்னுரிமை அடிப்படையில் நிரைப்படுத்திப் பாடசாலை அபிவிருத்தித் திட்டம் தயாரிக்கப்படல் வேண்டும். இங்கு பாடசாலைச் சமூகத்தினால் பாடசாலையின் தற்போதைய உண்மையான நிலையை அறிந்து கொண்டதன் பின்னர், சிறந்த சிறுவர் நேயப் பாடசாலை நிலைமைகளை ஏற்படுத்தக் கூடிய இலக்குகள் தயாரிக்கப்படும். பின்னர் இந்த இலக்குகளை அடை வதற்கான பாடசாலை அபிவிருத்தித் திட்டம் தயாரிக்கப்படும். இந்த அபிவிருத்தித் திட்டத்தில் இலக்கு, செயற்பாடுகள், அதற்கு தேவையான வளங்கள், நேர சட்டகம், பொறுப்பு இலக்குகள் அடையப்பட்டனவா என்றறிய சுட்டிகள் ஆகியன தரப்பட்டுள்ளன.
இரண்டாம் நியமம்
பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு செயற்பாடுகளுக்காகப் பாடசாலைச் சமூகத்தின் செயலூக்கத்துடன் கூடிய தலைமைத்துவம் அவசியம். மேலும் யாவருக்கும் பொறுப்புகள் வழங்கப்படும். இலக்கை அடையும் வரை செயலூக்கத்துடன் கூடிய பங்களிப்பும் இருத்தல் அவசியம். மேலும் செயற்பாடுகளின் வெளிப்படைத்தன்மை பேணப்படுவதும் மிக முக்கியமாகும்.
ஆலோசனைப் பெட்டி
நெகே லிகை)
31.
"THTMLAWiப்பர் படித்ததாக
அகவிழி ஜூலை 2014 (5

Page 39
அs
மி/wwநNj
"கல்படி!
-து
படைப்பான். பொங்கல்ப்பட்டிப்பாயை
45
மூன்றாம் நியமம்
பாL
பாடசாலை அபிவிருத்தித்திட்டம் (SDP) கண்காணிப்பின் போதும் மதிப்பீடு செய்யப்படும்போதும் அதிபர், ஆசிரியர் கள், மாணவர்கள், குடும்பம், சமூகம் போன்றோர் செயல்ரீதியாகப் பங்களிப்புச் செய்கின்றனர்.
பாடசாலைக் கணிப்பீட்டுச் செயற்றிட்டத்தில் தயாரிக்கப் பட்ட பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தைச் செயற்படுத்த எதிர்பார்க்கும் இலக்கை அடையப் பயனுறுதியுள்ள கண் காணிப்பும் மதிப்பீடும் மிக முக்கியமாகும். கண்காணித்தல் என்பது திட்டத்தில் அடங்கும் செயற்பாடுகள் நிறைவேற்றப் படுகின்றனவா எனத் தொடர்ச்சியாகத் தேடிப்பார்த்தலாகும். இங்கு குறித்த செயற்பாடு திசைமாறிச் செல்கின்றதாயின் சரியான திசையில் வழிப்படுத்த வேண்டும். எனவே கண்காணித்தல் என்பது திட்டத்தை அமுல்படுத்த ஆரம்பித்தது முதல் செய்து முடிக்கப்படும் வரை நிகழுவ தொன்றாகும். மதிப்பீடு என்பது திட்டம் செயற்படுத்தப்பட்ட பின் நடத்தப்படுவதாகும். இங்கு திட்டத்தில் எதிர்பார்க்கப் படும் இலக்குகள், நோக்கங்கள் அடையப்பட்டனவா என்பது உறுதி செய்து கொள்ளப்படும். அடையப்பட்ட வில்லையாயின் அதற்கான காரணங்களை இனங்கண்டு எஞ்சியிருக்கும் திட்டங்களின் போது அவற்றை நிவர்த்தி செய் து செயற்படல் வேண்டும். சிறுவர் நேயப் பாடசாலையின் பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தை கண்காணித்தலும் மதிப்பிடலும் எல்லாப் தரப்பினர்களதும் பங்களிப்புடன் நிகழ வேண்டிய செயற்பாடொன்றாகும்.
அகவிழி ஜூலை
நான்காவது நியமம்
38

சிறுவர் நேய வீடு /சமூகச் சூழல் போன்றவற்றின் மேம்பாட்டுக்காக பாடசாலை உயிரோட்டமாகப் பங்களிப்புச் செய்கிறது.
- பிள்ளையின் பூரண ஆளுமை அபிவிருத்தி யில் பாடசாலை மாத்திரமன்றி, வீடு மற்றும் சமூக தொடர்புகளும் செல்வாக்குச் செலுத்தும். இவை தீர்க்கமான காரணிகளாகும். சிறுவர் நேயப் பாடசாலையானது தனது சமூகத் தொடர்புகள் மூலம் பாடசாலைக்கு அப்பாலும் பரவும். அதற்குத் தேவையான சிறுவர் நேயச் சூழலை அபிவிருத்தி செய்ய பங்களிப்பு செய்யும்.
ஒரு பாடசாலையின் சுய கணிப்பீடு LP மற்றும் பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரிக்கும் போது சிறுவர் நேய பாடசாலை நியமங்களுக்கேற்ப அப் பாடசாலையின் தற்போதைய நிலைமைகளைக் கணிப்பிட்டு, அத்துடன் தொடர்புடைய பிரச்சினைகள்
இனங்காணப்படும். அதில் பாடசாலையில் சேரும் பிள்ளைகளின் சதவீதம் குறைவாக இருத்தல் ஒரு பிரச்சினையாகும். பாடசாலையில் பிள்ளைகள் சேரும் சதவீதத்தை அதிகரித்துக் கொள்ளல் பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு செயற்பாடாக இனங் காணப்பட்டது. இதன் ஒரு செயற்பாடாகப் பாடசாலை செல்லாத பிள்ளைகள் பற்றித் தேடியறியப் பாடசாலை மட்டக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அதன் பணிகளும் பொறுப்புக்களும் பின்வருமாறு இனங்காணப்பட்டன. பாடசாலைக்குச் செல்லாத பிள்ளைகளைப் பற்றித் தேடியறியும் பாடசாலை மட்டக் குழு. இரண்டு வாரங் களுக்கு ஒரு தடவை கூடுதல் .
இனங்கண்ட, பாடசாலை செல்லாத மாணவரைப் பாடசாலையில் சேர்த்தல், அவர்களது தேவைகளை நிறைவேற்றல்.
அவர்கள் தொடர்ச்சியாகப் பாடசாலைக்கு வருவது பற்றி உறுதி செய்து கொள்ளல். பாடசாலைக்கு வருகை தருவது பற்றி வகுப்பு மட்டத்தில் தகவல்களைப் பெற்று நலிவான மாணவர்கள் அவ்வாறு இருப்பதற்கான காரணங்களை அறிந்து பரிகாரம் காண இரண்டு பெற்றோர், இரண்டு ஆசிரியர்கள், இரண்டு மாணவர்கள் கொண்ட உப குழு ஒன்றை நியமித்தல். பாடசாலைக்கு வருவதை ஊக்குவிக்க மாணவர் மதிப்பீட்டு முறையொன்றை ஏற்படுத்தல். மேற்படி பாடசாலை செயற்படுத்திய வெற்றிகரமான அணுகுமுறைகள் ஊடாக மாணவரின் பாடசாலை வருகையில் அதிகரித்த விகிதத்தைத் தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது.
நன்றி: சிறுவர் நேய அணுகுமுறை, கல்வி அமைச்சு

Page 40
தமிழில் சொல்லாக்கம்
பேராசிரியர் இ. அண்ணாமலை
ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் என்பது தமிழ்ச்சூழலில் நிலவும் நாட்டார் நம்பிக்கை. சொல் வழியாகப் புனையப்படும் மந்திரமானது அதியற்புதமானது என்ற நம்பிக்கையில் மொழியானது புதிர் வயப்பட்டதாக மாறுகின்றது. இந்நிலையில் சொல் பற்றிய அறிவியல் ரீதியான அணுகுமுறை தேவைப்படுகின்றது. 'சொல் என்பது எழுத்தோடு புணர்ந்து பொருள் அறிவுறுக்கும் ஓசை' என்று உரையாசிரியர் இளம்பூரணர் குறிப்பிடுவது பண்டைத் தமிழரின் இலக்கணப் புலமைக்குச் சான்றாகும். சொல்லின் இலக்கணத்தினை விளக்குவதை விட, சொல்லை இலக்கண முறைமையில் வகைப்படுத்துவதையே மரபு வழிப்பட்ட இலக்கண ஆசிரியர்கள் முதன்மையாகக் கருதினர். சொல்லின் தன்மையை மொழியிலாளர் வரையறுக்க முயன்றுள்ளனர்.
"மரபு வழியில் ஒழுங்கமைக்கப்பட்ட வேர்ச் சொற்களின் தொகுதி " எனவும், "பொருளை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், பொருள்களின் மிக அடிப்படையான கூறு” எனவும் அமைப்பியல் அடிப்படையில் மரியா பை விளக்கியுள்ளார்.
சொல் என்பதற்கு "சிந்தனைக்கும் பொருளுக்கும் அடிப்படையான, தனித்தியங்கும் கூறு" என்றும், "உருபனியலுக்கும், தொடரியலுக்கும் இடையே அமையும் வேறுபாட்டிற்கு அடிப்படையாக விளங்குவதே சொல்” என்றும், "சொல் பிரிக்கப்படாத ஒன்று" என்றும் பல்வேறு விளக்கங்கள் மொழியியல் நோக்கில் தரப்பட்டுள்ளன. எனினும் "எல்லா மொழிகளுக்கும் பொதுவாக அமையும் வகையில், சொல் என்றால் என்னவென்று உறுதியாக வரையறுக்க இயலவில்லை. ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனியாகத் தான் சொல்லினை வரையறை செய்யவேண்டும்" என்று வெலரி ஆம்சு குறிப்பிடுவது ஏற்புடையதாக உள்ளது.
தமிழ் மொழியில் சொல் பண்டைத்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் சொல்லினைக் கிளவி, மொழி, சொல் என்று மூன்று சொற்களால் குறிப்பிடுகிறது. சொல்லுக்குப் பொருள் கொள்ளும் முறை பற்றிய தொல்காப்பியரின் கருத்துகள்,

இன்றைய பின்-நவீனத்துவக் கோட்பாட்டுச் சிந்தனைக்கு முன்னோடியாக விளங்குகின்றன. அவருடைய கருத்துகளை இங்கே காண்போம்.
எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே
(தொல் : சொல்லதிகாரம் - 155) சொற்கள் பொருள் குறித்து வரும் தன்மையுடையனவே தவிர, பொருளை (அர்த்தம்) ஏற்று வருவதில்லை என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். அதாவது அடிப்படையில் சொற்களுக்குப் பொருள் இல்லை. பொருள் என்பது சொல்லின் இடுகுறித் தன்மையினால் வெளிப்படுகின்றது. மொழிப் பொருள் காரணம் விழிப்பத் தோன்றா
(தொல் : சொல்லதிகாரம் - 394) ஒரு சொல்லுக்கான பொருளினை அறியமுடியும். ஆனால், அச்சொல் அப்பொருளை உணர்த்துவதற்கான காரணம் வெளிப்படையாகத் தோன்றாது.
பொருட்குப் பொருள் தெரியின் அது வரம் பின்றே
(தொல் : சொல்லதிகாரம் : 391) ஒருசொல் உணர்த்தும் பொருளுக்குப் பொருள் என்ன என்று ஆராய்ந்துகொண்டு போனால், அது வரம்பில்லாமல் விரியும் தன்மையுடையது. அதாவது பொருள் கொள்ளுதல் என்பது பல்வேறுபட்ட சாத்தியப்பாடுகளை உள்ளடக்கியது எனலாம்.
பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்
(தொல் : சொல்லதிகாரம் : 156) இங்கு, சொல்லுக்குப் பொருண்மை, சொன்மை என்று இரு பண்புகள் உள்ளார்ந்த நிலையில் விளக்கப்பட்டுள்ளன. சொல்லானது பொருண்மை என்ற பொருள் சார்ந்த பண்பும், சொன்மை என்ற ஓசை சார்ந்த பண்பும் கொண்டிருப்பதாக இதனை விளக்கவியலும்.
சங்க இலக்கியப் படைப்புகளைப் படைத்திட்ட புலவர் கள் ஏறக்குறைய 50,000 சொற்களைக் கையாண்டுள்ளனர். இவை அனைத்தும் ஓரசை, ஈரசைச் சொற்களே. எனவே பண்டைக்காலத்தில் புலவர்களும் இலக்கண ஆசிரியர்களும்
அகவி
ஜூலை 2014 (8

Page 41
சொல் பற்றிய புரிதலுடன் செயற்பட்டனர் என்று அறிய
முடிகின்றது.
சொல்லாக்கம்
மரபு வழிப்பட்ட இலக்கண, இலக்கியப் படைப்புகள் மூலம் வெளிப்படும் தமிழ்மொழியானது, இன்று பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும் மாற்றம் பெறுவ துடன், அறிவியல் மொழியாகவும் வளம் பெறும்போது, தமிழ்மொழியை நவீன சூழலுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டிய நெருக்கடி ஏற்படுகின்றது. பல்வேறு துறைக் கருத்துகளையும் பதிய சிந்தனைகளையும் எளிமையாகவும், தெளிவாகவும் விளக்கிட ஒரு மொழியின் தன்மையானது, நெகிழ்ச்சியுடன் இருத்தல் வேண்டும். குறிப்பாக உயர் கல்வியில் பயன்படுத்தப்படும் ஒரு மொழிக்கு வளமையான சொற்களஞ்சியம் தேவை. புதிது புதிதான சொல்லாக்கங்கள் தொடர்ந்து உருவாக்கப்பட வேண்டும். அப்பொழுது தான் இன்றைய தகவல் உலகின் புதிய சிந்தனைப் போக்குகளை யும் ஆய்வுகளையும் தமிழில் மொழிபெயர்க்க இயலும்.
பிறமொழிகளிலிருந்து ஒரு மொழிக்குச் சொற்களை மொழிபெயர்க்கையில், அம் மொழியில் இல்லாத சொற்களைப் புதிதாக மொழிபெயர்த்து அல்லது ஒலி பெயர்த்துப் புதிய சொற்களை உருவாக்குதல் சொல் லாக்கம் எனப்படுகிறது. புதிய கருத்தினை விளக்குவதற்காக உருவாக்கப்படும் சொற்கள், சுருக்கமானவையாகவும், இலக்கண அமைதிக்கு ஈடு கொடுப்பவையாகவும் இருக்க வேண்டும். சுருங்கக் கூறின், புதிய கருத்துகள் அல்லது பொருள்களை வெளிப்படுத்தும் சொற்களை உருவாக்கும் நிலையினைச் சொல்லாக்கம் என்று வரையறுக்கலாம். அது செய்முறை , விளைவு என்ற கூறுகளைக் கொண்டது என்பது மொழியியலாளர் கருத்து.
சொல்லாக்கத்தின் நோக்கம்
ஒப்பீட்டளவில் இன்று மொழியின் வளர்ச்சிக்கு ஆதாரமாகச் சொல்லாக்கம் விளங்குகிறது. நாளும் மாறிவரும் அறிவியல், தொழில்நுட்பத்தின் விளைவாகத் தகவல் தொடர்பியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, இன்று தகவல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. ஒரு மொழியின் வளர்ச்சியென்பது இத்தகைய தகவல் தொழில்நுட்பப் புரட்சியை உள்வாங்கிக் கொண்டு, செறிவாக, வெளிப் படுவதாகும். குறிப்பாக இணையகங்களின் பக்கங்களில் அதிகபட்சமான இடத்தினைப் பிடித்துள்ள மொழிகளே, நன்கு வளர்ச்சியடைந்தவைகளாகக் கருதிட இயலும். இந்நிலையில் கருத்தியல் வளர்ச்சிக்கு ஆதாரமாக விளங்கும் சொற்கள் அதிக அளவில் உருவாக்கப்படுகின்ற மொழிகளே உச்ச நிலையினை அடைய முடியும்.
அகவிழி ஜூலை 2014
'40

தமிழைப் பொறுத்த வரையில், “ஆட்சி மொழியாகவும் உயர்கல்வியில் பயிற்று மொழியாகவும் தமிழே இடம் பெற வேண்டும்” என்பதால், புதிய சொல்லாக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய முயற்சிகள், தமிழ்மொழியின் வளர்ச்சி வேகத்தினைத் தூண்டுகின்றன சொற்களஞ்சியம் பெருகிடக் காரணமாக அமைகின்றன.
சொல்லாக்க வகைகள்
மனித குல அறிவானது தொடக்கத்தில் கல்வெட்டுகள், சுடுமண் கற்கள் போன்றவற்றில் பதிவாயிற்று. நாளடைவில் ஓலைச்சுவடிகள், மரப்பட்டைகள், தோல்கள் மூலம் பதிவான கருத்துகள் அடுத்த தலைமுறைக்குப் பயன்பட்டன. காகிதம் கண்டறியப்பட்டதும் அச்சு இயந்திரக் கண்டுபிடிப்பும் ஆவணங்களின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தின. இன்று கணினியின் பயன்பாட்டில் இணையகங்களில் கருத்துப் பரவல் பிரமாண்டமான வளர்ச்சி அடைந்துள்ளது. அறிவியல் தொழில்நுட்பம், சமூக அறிவியல், கலை, இலக்கியத் துறைகளில் ஒவ்வொரு நாளும் பல்வேறு ஊடகங்களில் வெளிவரும் ஆவணங்களைக் கண்டறிவது இயலாதது. இந்நிலையில் மொழியின் வளர்ச்சிக்கு ஆதாரமான சொற்கள் புதிது புதிதாக உருவாக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு துறையிலும் சொல்லாக்க முயற்சிகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சொற்கள் தோன்றுகின்ற துறைகள் மாறுபடினும், அவை தோன்றுகின்ற முறைகளில் பொதுமைப் பண்புகளைக் காணமுடிகின்றது. தமிழைப் பொறுத்தவரையில் சொல்லாக்க முயற்சியில் பின்வரும் மூன்று வகைகளைக் காணமுடிகிறது. (1) புதிய சொற்களை உருவாக்குதல் (2) துறைச் சொற்களை உருவாக்குதல் (3) மொழிபெயர்ப்பின் மூலம் சொல்லாக்கம் * புதிய சொற்கள் உருவாக்கம் பண்டைக் காலத்தில், ஒன்றிலிருந்து இன்னொன்றினை வேறுபடுத்திக் காட்டிட, இடுகுறியாகப் புதிய சொற்கள் உருவாக்கப்பட்டன. பின்னர் ஏதேனும் ஒரு காரணம் கருதிப் பெயரிடும் மரபினால் புதிய சொற்கள் தோற்றுவிக்கப்பட்டன. இன்று புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து, அவற்றை மக்களிடையே அறிமுகப்படுத்தும் நிலையில் புதிய சொற்கள் அதிக அளவில் உருவாக்கப்படும் நிலை உள்ளது. உதாரணம் : இடுகுறிப் பெயர் - கல், மரம், தீ காரணப் பெயர்
- மின்னல், எழுத்தாணி,
ஒற்று புதிய சொற்கள்
- கணினி, வானொலி,
குறுந்தகடு, இணையகம்.

Page 42
* துறைச் சொல்லாக்கம்
1mini11!
சொல்லாக்கத்தில் இன்று முக்கிய இடம் வகிப்பது துறைச் சொல்லாக்கம். இது கலைச்சொல்லாக்கம் எனவும் குறிப்பிடப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட துறையில் வழங்குகின்ற சிறப்புச் சொற்கள், அத்துறையின் பன்முகத் தன்மையினை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. பொதுவாகக் கலைச்சொற்கள், அத்துறை சார்ந்தவர்களுக்கே எளிதில் விளங்கும் இயல்புடையன் எனினும் அவை துல்லியமான கருத்தினை வெளிப்படுத்தும் நிலையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். பொதுவாகத் துறைச் சொற்கள் பொருள் மயக்கத்திற்கு இடம் தராமல், கருத்து வெளிப்பாட்டிற்கு முக்கியத்துவம் தரும் வகையில் அமைந்திருக்கின்றன.
இலக்கியத் துறையில் பயன்படும் துறைச் சொற்களின் அட்டவணை பின்வருமாறு : Gynocriticism - பெண்ணியத் திறனாய்வு Semantic
பொருண்மை Point of view
கருத்துக் கோணம் Parody
நையாண்டிப் போலி Narrator
கதை சொல்லி
இவை போல ஒவ்வொரு துறையிலும் கருத்தினைப் புலப்படுத்திடத் தமிழில் ஆயிரக்கணக்கான சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
* மொழிபெயர்ப்புச் சொற்கள் புதிய அறிவியல் தொழில்நுட்பம் மேலைநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு அறிமுகமாகும் போது, அத்தொழில் நுட்பத்தினைத் தமிழில் தரும் முயற்சி மேற்கொள்ளப் படும்போது, புதிய சொற்கள் உருவாக்கப்படுகின்றன. மூல மொழியில் எந்தப் பின்புலத்தில் ஒரு சொல் வழங்கப்படுகிறதோ, அதனைக் கருத்தில் கொண்டு பெறுமொழியில் மொழியெர்ப்பது வழக்கிலுள்ளது. கலைச்சொல்லாக்கத்தில் இடம்பெறும் சொற்கள் புதிதாக விதிவிலக்காக, மொழிபெயர்க்கப்படுகின்றன. ஏற்கனவே வழக்கிலிருக்கும் பண்டைத் தமிழ்ச் சொற்களையும் அப்படியே பயன்படுத்துவது வழக்கிலுள்ளது. உதாரணம்: Pilot - வலவன்
Nurse - செவிலி Age - அகவை Web - வலை
இம்முறைக்கு மாறாக மொழிபெயர்ப்பின் மூலம் பெரிய அளவில் சொல்லாக்கம் தமிழில் நடைபெறுகின்றது. உதாரணம்: Software - மென்பொருள்
Hardware - வன்பொருள் Compact Disk - குறுந்தட்டு Anthropology - மானிடவியல்

சொல்லாக்க முறைமைகள்
தமிழில் இதுவரை நடைபெற்ற சொல்லாக்க முயற்சிகளைத் தொகுத்து ஆராய்ந்திடும்போது, அவை தோன்றுவதற்கான காரணிகள் பல உள்ளன. அவை சொல்லாக்க முறைமை களுக்கு அடித்தளமாக விளங்குகின்றன.
* உள்ளடக்கம்
ஒரு பொருள் உருவாக்கப்படுவதற்கு மூலமாக விளங்கும் மூலப்பொருளினை உணர்த்தும் வகையில் சொற்களை உருவாக்குதல் இவ்வகையில் அடங்கும். எடுத்துக்காட்டு : மார்கோ , லிம்கா
* செயல்
செய்கின்ற செயலின் அடிப்படையில் புதிய சொற்களை உருவாக்குதல். உதாரணம் : Mike
ஒலிவாங்கி Calculator - கணக்கீட்டுக் கருவி
• 8
* இயல்பு ஒரு பொருள் அல்லது செயலின் இயல்பினை வெளிப் படுத்துதல். உதாரணம் : Light House - கலங்கரை விளக்கம்
Guide
- வழிகாட்டி
* நோக்கம்
நோக்கத்தினை வெளிப்படுத்தும் வகையில் சொல்லாக்குதல். உதாரணம் : நெற்றிக்கண், போலீஸ் செய்தி
* அமைப்பு
நூல் அமைந்துள்ள வடிவத்தினை முன்னிலைப்படுத்தும்
வகையில் சொல்லாக்குதல். எடுத்துக்காட்டு: உலா , கோவை
* சிறப்பு
சிறப்பினை வெளிப்படுத்தும் வகையில் சொல்லாக்கப்படுதல். உதாரணம் : சூப்பர்மேன், கற்புக்கரசி * பயன்பாடு எந்தப் பயன்பாட்டிற்காகத் தோற்றுவிக்கப்பட்டது என்பதனை அறிவிக்கும் வகையில் புதிய சொல்லினை உருவாக்குதல். உதாரணம் : அலுவவர் மனமகிழ் மன்றம், மாணவர் கழகம்
* குறியீடு கருப்பொருளினை நுட்பமாக உணர்த்தும் வகையில் குறியீட்டுச் சொல்லாக்கம் நடைபெறுகின்றது. இவ்வகைச் சொற்கள் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ, எதிர் நிலையாகவோ அமைந்துள்ளன.
அகவிழி ) ஜூலை 2014 (+

Page 43
உதாரணம் : தங்கவேட்டை, வசூல்ராணி
* சுருக்கம்
நிறுவனங்களின் முதலெழுத்துகளைக் கொண்டு சுருக்கமாகச் சொல்லாக்குதல். அதுபோல இடப்பெயரினையும் சுருக்குதல். எடுத்துக்காட்டு: த.மி.வா - தமிழ்நாடு
மின்சார வாரியம் புதுக்கோட்டை - புதுகை
* புனைபெயர்
ஏதேனும் ஒரு காரணம் கருதி, புனைபெயர் இட்டு வழங்குதல் மூலம் சொல்லாக்கம் இடம்பெறுகின்றது.
எடுத்துக்காட்டு: சுந்தரராமசாமி - பசுவய்யா
சுப்புரத்தினதாசன் - சுரதா
* போலச் செய்தல்
ஒரு சொல்லிலிருந்து இன்னொரு சொல்லை உருவாக்குதல் மூலம் சொல்லாக்குதல். உதாரணம் : மேலாளர்
வடமதுரை தமிழில் சொல்லாக்கச் சிந்தனைகள்
உலகமெங்கும் புதிய கருவிகளும், புதிய கோட்பாடுகளும் தொடர்ந்து உருவாகிக் கொண்டே இருப்பதனால், அவற்றைக் குறிக்கும் சொற்களும் புதிதாய்த் தேவைப்படுகின்றன. இச்சொற்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன? எங்கிருந்து பிறக்கின்றன? -
"தற்காலத்தில் நூலாசிரியர்கள், முக்கியமாக, விஞ்ஞான சாத்திரம் முதலியவற்றை மொழிபெயர்க்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள், பத்திராதிபர்கள் முதலியோர் புதுப்புதுப் பதங்களை இயற்றுகின்றனர் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையை ஆராய்ந்து பார்ப்போமானால் அவர்கள் புதிய பதங்களைப் புத்தம் புதியனவாய் இயற்றுகின்றார்கள் என்று சொல்ல முடியாது" என்கிறார் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை. சொற்கள் புத்தம் புதியதாகப் பிறப்பதில்லை என்று குறிப்பிடும் வையாபுரிப்பிள்ளை, இரு சொற்களின் சேர்க்கையாலோ, அல்லது சொற்கள் விகாரப்பட்டோ, வினையடிகள் தாமாக நின்று அல்லது நீட்டல் முதலிய விகாரங்கள் பெற்றுப் புதிய விகுதிகள் சேர்க்கப் பெற்றோ, சொல்லாக்கம் நடைபெறுகிறது என்கிறார். தமிழில் அமைந்துள்ள சொல்லாக்க முறைகளைப்பற்றி முழுமையாகக் கூறா விடினும், சொல்லாக்கம் பற்றிய பொதுவான அறிமுகத் தினைப் பேராசிரியர் விவரித்துள்ளார்.
5 அகவிழி ஜூலை 2014

புதிய கல்வியும் சொல்லாக்கமும் சொல்லாக்கம், எழுத்து மொழி தோன்றிய காலம் முதலாகவே நடைபெற்றிருக்க வாய்ப்புண்டு. எனினும் நவீன அறிவியலின் வளர்ச்சிக்கேற்ப, சொல்லாக்கம் பெரிய அளவில் தமிழில் நடைபெறத் தொடங்கியது என்று உறுதியாகக் கூறவியலும்.
மரபு வழிப்பட்ட குருகுலச் சூழலில், திண்ணைப் பள்ளிக் கூடங்களில் கல்வி கற்பிக்கப்பட்ட தமிழகத்தில், கி.பி.19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் அறிமுகப்படுத்திய கல்விமுறை பெரும் மாற்றத்தினைத் தோற்றுவித்தது. ஆங்கில மொழியில் எழுதப்பட்டிருந்த பாடநூற்களைத் தமிழில் மொழிபெயர்ப்பது கி.பி.1832 இல் தொடங்கியது. இன்று வரையிலும் தொடர்ந்து அறிவியல் நூற்கள் தமிழாக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய முயற்சிகளில் சொல்லாக்கம் பெரிதும் அடிப்படையாக விளங்குகின்றது.
* தொடக்க காலம்
கி.பி.1832ஆம் ஆண்டு பூமிசாஸ்திரம் என்ற அறிவியல் நூல், இரேனியஸ் ஐயரால் தமிழில் வெளியிடப்பட்டது. இந்நூலில் புவியியல் தொடர்பாக ஐம்பத்தொரு கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சொல்லாக்க முயற்சியில் தமிழில் இதுவே முதன் முதல் வெளியான நூல் ஆகும்.
கி.பி.1847 ஆம் ஆண்டு இலங்கை நாட்டிற்கு வந்த மருத்துவத்துறைப் பேராசிரியரான ஃபிஷ் கிரீன், முதன் முதலாகத் தமிழில் மருத்துவத்தினைப் போதிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதனால் மருத்துவத் துறையில் ஆங்கிலக் கலைச்சொற்களுக்கு நிகரான தமிழ்ச்சொற்களை உருவாக்க வேண்டிய நிலையேற்பட்டது. தமிழ்ச் சொல்லாக் கத்தில் இவர் பின்பற்றிய நெறிமுறைகள் பின்வருமாறு: (1) தமிழிலேயே கலைச்சொற்களை உருவாக்குதல். (2) தமிழில் கலைச்சொல் கிடைக்கவில்லையெனில்
அதற்கு நிகரான சமஸ்கிருதச் சொல்லைப்
பயன்படுத்துதல்.
(3)
தமிழ் அல்லது சமஸ்கிருதத்தில் சொல்லாக்கம் உருவாக்க இயலாவிடில், ஆங்கிலச்சொல்லை ஒலி
பெயர்ப்பில் பயன்படுத்துதல்.
ஃபிஷ் கிரீன், 1875ஆம் ஆண்டில் எஸ்.சுவாமிநாதன், சாப்மன் ஆகியோரின் துணையுடன் மருத்துவம் தொடர்பான கலைச்சொற்களைத் தொகுத்து நான்கு தொகுதிகளாக வெளியிட்டுள்ளார். சொல்லாக்கத்தின் காரணமாக உருவாக்கப்பட்ட சொற்களைத் தொகுத்து வெளியிடுவது, தமிழில் வெளியிடுவது இதுவே முதன் முறை ஆகும். இதனால் அறிவியல் நூல்களைத் தமிழாக்கியவர்கள் பெரிதும் பயன் அடைந்தனர்.

Page 44
15
* நிறுவனங்களும் சொல்லாக்கமும் பாடப் புத்தகம் எழுதுவோரும், அதைப் பயிலும் மாணவரும் பயன் அடையும் வகையில் சென்னை மாகாணக் கல்வி இயக்குநர், 1932ஆம் ஆண்டில் கலைச்சொல்லாக்கத்திற்காக அறிஞர் குழு ஒன்றினை நியமித்தார். இக் குழுவினர் உருவாக்கிய சொற்களஞ்சியம் கிடைக்கவில்லை.
- 1932ஆம் ஆண்டில் சென்னை மாகாண அரசு நிறுவிய குழு தயாரித்த சொற்களஞ்சியத்தில் சமஸ்கிருதச் சொற்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது.
சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் 1936 இல் வெளியிட்ட கலைச்சொல் தொகுதி, சொல்லாக்க முயற்சியில் ஈடுபடுவோருக்கு முன்னோடியாக விளங்கியது.
1955ஆம் ஆண்டு இலங்கையில் வெளியிடப்பட்ட கலைச்சொற்களின் தொகுப்பில் சமஸ்கிருதச் சொற்கள் நீக்கப்பட்டிருந்தன.
1957ஆம் ஆண்டிலும் 1962ஆம் ஆண்டிலும், 1971ஆம் ஆண்டிலும் தமிழக அரசின் முயற்சி காரணமாகக் கலைச்சொல் தொகுதிகள் வெளியாயின. இத்தொகுதிகளில் இடம்பெற்ற சொல்லாக்கங்கள் தரமானவையாக விளங்கின.
1971ஆம் ஆண்டிலிருந்து தமிழக அரசினால் வெளியிடப்பட்டு வரும் ஆட்சிச் சொல்லகராதிகளும், சிறப்புச் சொற்களின் துணையகராதிகளும் சொல்லாக் கத்தினை மூலமாகக் கொண்டனவாகும். சொல்லாக்க நெறியில் தமிழின் இடம் உலகமெங்கும் பொது வழக்காக இடம்பெறும் அறிவியல் அளவைகள், குறியீடுகள் போன்றன தவிர்த்துப் பிற சொற்களை , கூடிய மட்டும் தமிழ் மொழியின் மரபினுக்கேற்பச் சொல்லாக்குதல் வேண்டும் என்பது ஏற்புடைய கருத்து. எனினும் ஏற்கெனவே மக்களிடம் வழக்கில் வந்து பல்லாண்டுகளாக நிலைபெற்றுவிட்ட பிறமொழிப் பெயர்ச் சொற்களையும் தமிழாக்க வேண்டும் என்று தமிழறிஞர்களில் சிலர் கூறுகின்றனர். தமிழுடன் இரண்டறக் கலந்து தமிழ்மயமாகி விட்ட எந்தவொரு பிறமொழிச் சொல்லையும், அதன் வளம் கருதித் தமிழில் சேர்த்துக் கொள்வதில் தவறில்லை என்பது இன்னொரு பிரிவினரின் கருத்து. தமிழிலேயே சிந்தித்து அறிவியல் தொழில் நுட்பக்கட்டுரைகள் எழுதுமளவு வல்லுநர்கள் எண்ணிக்கை பெருகிடும் போதும், தமிழில் உயர்கல்வி சாத்தியம் என்ற நிலையிலும் சொல்லாக்கத்தில் தனித் தமிழினை எதிர்பார்க்க இயலும். அதுவரையில் சொல்லாக்கத்தில் தனித்தமிழைப் புகுத்துவது வரட்டுத் தனமாகி விடும்.
மக்களிடம் அன்றாட வழக்கில் இடம்பெற்றுவிட்ட காப்பி, சிமெண்ட், ஐஸ் போன்ற சொற்களைத் தமிழாக்

குவது குழப்பத்தினையே ஏற்படுத்தும். உதாரணம் : சிமெண்ட் - கற்காரை
காப்பி - குழம்பி
சொல்லாக்கமும் பொருண்மை மாற்றமும் 'கடி சொல் இல்லை காலத்துப் படினே ' என்பது தொல்காப்பியர் கருத்து. எல்லாச் சொற்களும் காலத்தினுக்கேற்பப் பொருள் ரீதியில் மாற்றமடைகின்றன. இந்நிலையில் சொல்லாக்கத்தினால் உருவாக்கப்படும் சொற்களின் பொருள்கள், காலச் சூழலுக்கேற்ப மாற்றம் பெறுகின்றன.
தொடக்கத்தில் ஓர் ஆங்கிலச்சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லாக்கம் உருவாக்கப்படுகின்றது. அது நாளடைவில் எல்லா நிலைகளிலும் மாற்றம் பெறக்கூடியது என்பதனைப் பின்வரும் சான்றுகள் விளக்குகின்றன. Alternative Current - ஆடலோட்டம் மாறோட் மின்னோட்டம் இருதிசைமின்னோட்டம் மாறுதிசை மின்னோட்டம் Oxygen - ஆக்ஸிஜன் - பிராணவாயு உயிர்வாயு உயிர் வளி
பொருண்மை அடிப்படையில் வெவ்வேறு சொல்லாக்க முயற்சிகள் நடைபெற்றாலும் இறுதியில் ஏதேனும் ஒரு சொல்லாக்கம் பலராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இது நிலை பேறாக்கம் எனப்படுகிறது.
சொல்லாக்கத்தின் பயன்கள் அறிவியல் தொழில்நுட்பத்தில் மேலோங்கியுள்ள மேலை நாடுகளில் நடைபெறும் பல்துறை ஆய்வுகளையும், வளரும் நாடுகளில் வாழ்ந்திடும் மக்கள் அறிந்திட, சொல்லாக்கம் அடிப்படையானதாகும். இதனால் ஒவ் வொருவரும் தாய் மொழி மூலம் உலகமெங்கும் நடைபெறும் அறிவியல் மாற்றங்களையும் விளைவுகளையும் எளிதில் கண்டறிய முடியும். இந்தச் சூழலில் எல்லா நாடுகளிலும் அறிவியலாளர்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகிடும் நிலையேற்படும். தொழில்நுட்பத்தினைப் பெறுவதற்காக இன்னொரு நாட்டினிடம் கையேந்துவதுடன், அந்நாட்டின் அதிகாரத்தினுக்கும் கட்டுப்பட்டுச் செயற்படும் நிலை மாற்றமடையும். இதனால் ஒவ்வொரு நாட்டின் இறையாண்மையும் காக்கப்படும்.
சொல்லாக்க அறிவானது அத்துறையின் வளர்ச்சிக்கு அடிப்படையாக விளங்குவதுடன், மொழியின் வளர்ச்சிக்கும் ஆதாரமாகும். உயர்கல்வியினைத் தாய்மொழியில் பயிற்றுவிக்காத நாடுகளில், சில நூற்றாண்டுகளில் தாய் மொழியானது வீட்டு மொழியாகச் சுருங்கி வழக்கொழிந்து விடும் என்று யுனெஸ்கோவின் அறிக்கை எச்சரித்துள்ளது. தமிழைப் பொறுத்தவரையில் அறிவியல்,
அகவிழி ஜூலை 2014

Page 45
மருத்துவம், பொறியியல் போன்ற உயர்கல்வித் துறைகளில் சாத்தியமற்ற நிலை உள்ளது. தமிழில் உயர்கல்விக்கான பாடநூல்கள் இல்லை அப்பாட நூல்களை எழுதுவதற்கான சொற்களஞ்சியமும் இல்லை என்று சிலர் முட்டுக்கட்டை போட்டுக்கொண்டிருக்கின்றனர். இத்தகைய தடைகளை அகற்றி, உயர்கல்வியைத் தமிழில் கற்பிப்பதற்கான நிலையை ஏற்படுத்திட , துறைதோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சொல்லாக்கங்கள் அடிப்படையாக விளங்குகின்றன. எனவே இரண்டாயிரமாண்டு வரலாற்றுப் பழமையான தமிழ் மொழியானது, எதிர்காலத்தில் எதிர்கொள்ளவிருக்கும் பிரச்சினைகளைத் தகர்த்து, காலத்துக்கேற்றவாறு சீரிளமைத் திறத்துடன் விளங்க வேண்டுமெனில், சொல்லாக்க முயற்சிகள் தொடர்ந்து இடைவிடாமல் நடைபெறவேண்டியது அவசியம்.
இலங்கையில் சிறுவர் நே
பரிமாணங்களு
முதலாவது பரிமாணம் - உரிமைகளை அடிப்படையாகக் கொண்டு உயிரோட்டமான வகையில் உட்படுத்தல்.
1.1. நியமம்: பாடசாலையிலிருந்து இடைவிலகுவதைத்
தடுப்பதற்கும் பாடசாலை செல்லாத பிள்ளைகள் தொடர்பாகத் தேடியறிவதற்கும் துலங்கல் காட்டுவதற்கும் பயனுறுதியுடைய பொறிமுறை உள்ளது. அப்பொறிமுறை
செயற்படுகின்றது. 1.2. நியமம்: பாடசாலையில் காணப்படும் செயற்பாடுகளில்
கலந்து கொள்வதற்கும் வளங்களைப் பயன்படுத்துவ தற்கும் சகல பிள்ளைகளுக்கும் சமமான வாய்ப்பு
உண்டு. 1.3. நியமம்: உடல், உளத் தண்டனைகள் நடைமுறைப்
படுத்தப்படுவதில்லை. பயமுறுத்தல், தொந்தரவு செய்தல் போன்றவற்றைத் தடுப்பதற்கான செயன்முறை
களும் அவற்றுக்குத் துலங்கல் காட்டுதலும் உண்டு. 1.4.
நியமம்: சிறுவர் உரிமை தொடர்பாக ஒட்டுமொத்த பாடசாலைச் சமூகத்தினரும் அறிவூட்டம் பெற்றுள்ளனர். அவ்விளக்கத்துடனேயே பாடசாலையின் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
2 இரண்டாவது பரிமாணம் - ஆண் பெண் சமூகவியல்புகளில் கவனம்
செலுத்துவோம்.
* அகவிழி | ஜூலை 2014
நியமம்: ஆரம்பக்கல்வியைப் பூரணப்படுத்துவதற்கும் இடைநிலைக் கல்விக்குப் பிரவேசிப்பதற்கும் உதவு முகமாக பெண்பிள்ளைகளுக்கும் ஆண் பிள்ளை - களுக்கும், சமவாய்ப்பு வழங்கப்படுகின்றது. நியமம்: பாடசாலையில் சகல செயற்பாடுகளின் போதும் (கலைத்திட்டம், இணைப்பாட விதானம்) பெண்

சொல்லாக்கத்தின் விளைவுகள்
சொல்லாக்கம் காரணமாகத் தமிழ் மொழியின் ஒலியமைப்பிலும் சொல்லமைப்பிலும் பொருள் புலப்பாட்டிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சொல்லாக்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள சொற்கள், மரபு வழிப்பட்ட தமிழ் இலக்கணத்தில் மாற்றங்களைக் கோருகின்றன.
மொழியியலின் பிற பிரிவுகளைக் காட்டிலும் இலக்கணத்துடன் நெருங்கிய தொடர் புடையது சொல்லாக்கம். சொல்லாக்கம் மரபிலக்கணத்துடன் வேறுபடும் இடங்களைக் கண்டறிந்து புதிய இலக்கண விதிகளை வகுக்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. இது மொழியியல் அடிப்படையில் சொல்லாக்கம் : ஏற்படுத்தியுள்ள முக்கிய விளைவு ஆகும்.
யப்பாடசாலைகளுக்கான ம் நியமங்களும்
2.3.
பிள்ளைகளும் ஆண் பிள்ளைகளும் சமமான
அடிப்படையில் பங்குபற்றுகின்றனர். நியமம்: பாடசாலையில் பௌதிக வளங்கள், பெண் பிள்ளைகளுக்கும் ஆண் பிள்ளைகளுக்கும் பொருத்தமான விதத்தில் காணப்படுகின்றன
மூன்றாவது பரிமாணம் - பிள்ளைகளின் கற்றல் பேறுகளை விருத்தி செய்தல்.
3.4.
3.1. நியமம்: கற்றலுக்கு உதவுவதற்காக மனித வளங்களும்
வகுப்பறை வசதிகளும் போதுமான அளவில் உள்ளன. 3.2.
நியமம்: வகுப்பறைச் சூழல் உட்படுத்தல் முறையில் அமைந்துள்ளது. அழுத்தங்கள் கிடையாது. சனநாயக
ரீதியானது. கற்றலுக்குப் பொருத்தமானது. 3.3.
நியமம்: பிரதேச சூழல், பண்பாடு போன்றவை பற்றிய அறிவைப் பெற்றுக் கொடுப்பதற்குப் பாடசாலைக் . கலைத்திட்டம் பொருத்தமாக இசைவாக்கப்பட்டுள்ளது. நியமம்: வழங்கப்பட்டுள்ள வாய்ப்புக்களினூடாகச் சுய ஆர்வத்துடன் ஆசிரியர்கள் தமது திறன்களைத்
தொடர்ச்சியாக விருத்தி செய்து கொள்வார்கள். 3.5.
நியமம்: கற்பித்தலின் போது மாணவர் மையக் கற்பித்தல் முறை பயன்படுத்தப்படும். நியமம்: அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகள், முறையாக கணிப்பீடு செய்யப்படுகின்றன. சகல மாணவர்களும் அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகளில் பாண்டித்தியத்தை அடையச் செய்வதற்காக பயனுள்ள வழிமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
3.6.

Page 46


Page 47
அF-5 AF4: 33
இகவின்
யார் ::
அகவி6
இவி
15அ + தேம்பாட்டின் ஐ பி த காய்கறிக்காய்...
1. ஒல்
இதி 1'.
: தாகம்
2013 ஆம் ஆண்டிற்கான அக ஆசிரியர்கள் உடனடியாக

- 2013
அகவி
-2 பட ரி
கவிடு
அவி3
கவிடு
-விழிகளை பெற விரும்பும்
தொடர்பு கொள்ளவும்.

Page 48
இ:
கிடைக்கு பூபாலசிங்கம் புத்தகக்கடை 202, செட்டியார் தெரு, கொழும்பு - 11
தொ.பே.இல.: 011-2422321 பூபாலசிங்கம் புத்தகக்கடை 4A, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்
தொ.பே.இல: 021-2226693 நியூ கேசவன் புக்ஸ்டோல் 52 டன்பார் வீதி, ஹட்டன்
தொ.பே.இல: 051-2222504, 051-2222977
அறிவாலயம் புத்தகக்கடை 190 B புகையிரத வீதி,
வைரவப்புளியங்குளம், வவுனியா தொ.பே.இல: 024-4920733 இஸ்லாமிக் புத்தக இல்லம் 77, தெமட்டக்கொட வீதி, கொழும்பு - 09
தொ.பே.இல: 011-2688102 Easwaran Book Depot No. 126/1, Colombo Street, Kandy Tel.: 081-2220820 குமரண் புக் செண்டர் 18, டெய்லிபயர் கொம்பிலக்ஸ் நுவரெலியா
தொ.பே.இல.: 052-2223416 விழுது - மட்டக்களப்பு இல 22, கலைமகள் வீதி, நெச்சிமுனை, மட்டக்களப்பு தொ.பே.இல - 065 - 2222500 விழுது – திருகோணமலை 81யு, ராஜவரோதயம் வீதி, திருகோணமலை
தொ.பே.இல - 026 2224941
Kபாலா சைகா Pre 3 5ேth ane
kumbhlka
Registered in the Department of Posts

வி.
விடங்கள்
பூபாலசிங்கம் புத்தகக்கடை 309-A 2/3 காலி வீதி, வெள்ளவத்தை, கொழும்பு தொ.பே.இல.: 4515775, 2504266 அல்குரசி புத்தக நிலையம் 28, 1/2, புகையிரத வீதி, மாத்தளை
தொ.பே.இல.: 066-3662228
அறிவுருதி புத்தகசாலை இல 06, கனகபுரம் வீதி, கிளிநொச்சி தொ.பே.இல: 077 6737535
Zeen Baby Care 121B, Arm Mill Road, Addalaichenai -01 Tel.: 077 3651138
புக் லாப் 20, 22 சேர் பொன் ராமநாதன் வீதி, பரமேஸ்வரா சந்தி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்
தொ.பே.இல: 021-2227290, அன்பு ஸ்டோர்ஸ் 14 பிரதான வீதி, கல்முனை தொ.பே.இல.: 067-2229540 பரணி புத்தகக் கூடம் நெல்லியடி ம.ம வீதி, நெல்லியடி
தொ.பே.இல - 077 5991949 விழுது - புத்தளம் இல 24801 கொழும்பு வீதி, தில்லையடி, புத்தளம் தொ.பே.இல - 032 - 5740094 விழுது - யாழ் மாவட்டம் இல 23, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி வடக்கு, யாழ்ப்பாணம்
தொ.பே.இல - 021 2229866
ISSN 1800-1246
20 sy Ess (Pvt) Ltd. - Colombo 06 -)ாal.C0ா
இ யயாயப்பு
TH Gl771,800"1, E4 005
of Sri Lanka under OD/26/News 2014