கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகவிழி 2014.06

Page 1
யூன் - 2014
அக6
மனித மேம்பாட்டின் உயிர்ப்பு மிகு க
விழி 10 பார்வை 106
www.viluthu.org

விடு
ல்விக்காய்...
ISSN 1800-1246
விலை -

Page 2
-- -- 4. 1 --- -------- -- -- 4T-1 - * ------
ஆசிரியர்
உள்ளே......
ஈ , ' ' '3' : "4'' கம்*
1. தொடர்ந்து கற்போம், வாசிப்போம்
2. வகுப்பறைகளில் விவாதம்
3. யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி விஞ்ஞான
முகிழ்நிலை ஆசிரிய மாணவர்களின் பௌதிகவி பொறியியல் (Mechanics) அலகின் அடைவை ே
4. தொடருறு ஆசிரியர் கல்வியிலும் வாண்மை விருத்தி
ஆசிரிய மத்திய நிலையங்களின் பங்களிப்பு
5. சுயநம்பிக்கையை வளர்த்து ஆளுமையைப் பேணுவே
6. கோட்பாட்டின் வலிமையும் வழிச்சுமையும் கா. சிவத்
7. சமூக ஊடாட்ட ஊடகங்களும் சாதக பாதகங்களும்
8. விழுமியக் கல்வியின் பயன்கள்
9. பொதுக் கல்விக் கொள்கை அறிக்கை பரிந்துரை செய்
10. பாடசாலை சுய கணிப்பீடு
அகவிழியில் இ
பொறுப்
AHAVILI 3, Torrington Avenue
Colombo 07
Tel.: 011 250 6272 E-mail: ahavili.viluthu@gmail.com

விக
43! (5, 19 ! ககு...
பகுப்பு
S
< ,
5
னப் பிரிவு பயற் (Physics) பாடத்தின்
மம்படுத்தல்
யிலும்
வாம்
தம்பியின் இலக்கிய நோக்கு
8 8 8 8 8 8
பயும் தொழிற்கல்வி
டம்பெறும் கட்டுரைகளுக்கு அதன் ஆசிரியர்களே பு, கட்டுரைகளில் இடம்பெறும் கருத்துக்கள் "அகவிழி” யின் கருத்துக்கள் அல்ல.
கர்டkாதுசன நூலகம் யாழ்ப்பானாம்.
3. *, *' *"

Page 3
ஆ:
மாத்
ஆசிரிய ச. இந்திர நிர்வாக ஆ சாந்தி சச்சித நிறைவேற்றுப் பணி
ஆசிரியர் க. சண்முக பத்மா சோப்
ஆலோக
பேராசிரியர் சோ. சந்திரசேகரம் முன்னாள் கல்விப் பீடாதிபதி கொழும்புப் பல்கலைக்கழகம்
பேராசிரியர் தை. தனராஜ் - : இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்
கலாநிதி சசிகலா குகமூர்த்தி
சிரேஷ்ட விரிவுரையாளர் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்
லெனின் மதிவானம் பிரதிக் கல்வி வெளியீட்டு ஆணையாளர்
கல்வி அமைச்சு
வீ. தியாகராஜா சிரேஷ்ட ஆலோசகர், சமூக விஞ்ஞானக் கற்கைகள் துறை,
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்
கே. சாம்பசிவம் தேசிய ஆலோசகர்: கல்வி முகாமைத்துவம்
ஆசிரியரிடமிருந்து.................
ன் 2014
தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் கல்வித் தரப்பினர் களினால் 2006-2011 இடைக் காலச் சட்டகத்தினுள் கல்வித்துறைசார் பிரவேசத்தினை அடிப்படையாகக் கொண்ட கல்வித் துறைசார் அபிவிருத்திச் சட்டகம் மற்றும் வேலைத்திட்டங்களை மிகவும் பயன்மிக்கதாக வெற்றி கரமாக அமுல்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இக்காலத்துக்குள் அமுல்படுத்தப்பட்ட கல்வித் துறைசார் அபிவிருத்திச் சட்டகம் மற்றும் வேலைத்திட்டங்கள் ஊடாகப் பெற்ற அனுபவங்களும், கல்விக் கொள்கை
அகவிழி ஜு

வா
பர்
குமார்
சிரியர் ானந்தம் ப்பாளர்(விழுது)
குழு லிங்கம்
காந்தன்
கர் குழு
பேராசிரியர் வ. மகேஸ்வரன்
தலைவர் தமிழ்த்துறை பேராதனைப் பல்கலைக்கழகம்
து. ராஜேந்திரம் முன்னாள் முதுநிலை விரிவுரையாளர் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்
க. இரகுபரன் முதுநிலை விரிவுரையாளர் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் பேராசிரியர் துரை மனோகரன்
தமிழ்த்துறை பேராதனைப் பல்கலைக்கழகம் திருமதி. அருந்ததி ராஜவிஜயன்
ஆசிரிய ஆலோசகர் கொழும்பு கல்வி வலயம்
ரீதியில் அபிவிருத்தியுடன் கூடிய மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கை அரசினால் 2012 - 2016 கால எல்லைக்காக பொதுக் கல்விக்கான தேசிய கல்வி உபாயத் திட்டமிடல் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக உலக வங்கி நிதி உதவியைப் பெற்றுத்தருவதற்கு இலங்கை அரசு மற்றும் உலக வங்கித் தாபனத்திற்கிடையிலே உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. 2012ம் ஆண்டில் தேசிய ஒதுக்கீடு மற்றும் நிதி வளங்கள் ஊடாகக் கல்வித்

Page 4
துறைசார் அபிவிருத் திச் சட்டகம் மற்றும் வேலைத்திட்டங்களின் கீழ் திட்டமிடப்பட்ட வேலைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
திட்டமிடப்பட்ட செயற்பாடுகளுக்கு அமைவாகக் கல்வி அமைச்சினால் 2012-2017 வரை இடைக்காலச் சட்டகத்திற்கான இத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இத் திட்டமிடல் உபாயத்தின் விசேட நோக்கமாக அமைந்திருப்பது எதிர்கால அறிவினை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்துக்கு மற்றும் சமூகத்துக்குத் தேவையான மானிட மூலதனத்தினை அடிப்படையாகக் கொண்ட இலங்கையின் பாடசாலை முறைமையினைத் தயார்ப்படுத்தலாகும். இதன்போது சகல துறைகளிலும் பரிபூரணத்துவம் மிக்க பிரஜைகளின் ஆளுமை விருத்தி விசேடமாகக் கொள்ளப்பட்டுள்ளது. 2006-2011 ஆம் ஆண்டு வரை கல்வித் துறைசார் அபிவிருத்திச் சட்டகம் மற்றும் வேலைத்திட்டங்களுக்கு அமைய ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியின் பண்புசார் விருத்திக்காக 20132017 வரை கல்வித் துறைசார் அபிவிருத்திச் சட்டகம் மற்றும் வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. எனவே இவ்வுபாயத் திட்டங்கள் "அறிவுசார் பொருளாதாரத்திற்காக மானிட மூலதனத்தை அடிப்படையாகக் கொண்டதாகப் பாடசாலை முறைமையினை மாற்றியமைத்தல்" என இனங்காணப்பட்டுள்ளது.
அத்துடன் சகலருக்கும் கல்வி மற்றும் சகஸ்திர அபிவிருத்தி மற்றும் கற்கைகள், மாணவர்களின் அடைவு மட்டத்தினை அளவிடும் தேசிய மதிப்பீடு மற்றும் கணிப்பீடுகள் தொகை மதிப்பு விபரங்கள் தரவுகள் போன்றன 2013-2017 கல்வித் துறைசார் அபிவிருத்திக் கோட்பாடு மற்றும் வேலைத் திட் டங் களுக்காக அடிப்படையாகக் கொள்ளப்பட்டுள்ளன. மேலதிக பாடவிதான விருத்தி, அவ்வப் பாடங்கள், ஆசிரிய கல்வி, மாணவர் மதிப்பீடு மற்றும் பாடநூல்கள் போன்ற துறைகளுக்குரிய வெளியிடப்பட்டுள்ள யோசனைப் படிவங்கள், செயற்பாட்டுப் படிவங்கள் இவ்வுபாயத் திட்டமிடலுக்காகத் தேவையான புள்ளிவிபரத் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. அது மாத்திரமன்றி 2006-2011 வரை அமுல்படுத்தப்பட்ட கல்வித்துறைசார் அபிவிருத்திச் சட்டகம் மற்றும் வேலைத்திட்டங்களுக்கு உரியதாகத் தயாரித்து வெளியிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்களை அமுல் படுத்துவது தொடர்பாக ஆராயும் கற்கைகள் உபாயத் திட்டமிடல்களின் உள்ளடக்கங்களின் விருத்திக்குப் பாரிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2013-2017 வரை கல்வித் துறைசார் அபிவிருத்திச் சட்டகம் மற்றும் திட்டமிடல்களின் கல்வித் திட்டங்கள்

வெ
250!
- மூன்று வகையான தொனிப் பொருள்களின் கீழ்
வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஓன்று ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்விக்கான சமநியாயக் கல்விப் பிரவேசங்களுக்கான பங்கேற்புச் சந்தர்ப்பங்களை மேம்படுத்தல். இரண்டு ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வியின் பண்புசார் தரத்தினை மேம்படுத்தல். மூன்று கல்வியின் சிறந்த நிர்வாகம் மற்றும் சேவை வழங்கலைப் பலப்படுத்தல். அத்துடன் அடிப்படைத் தொனிப்பொருளாக வள மற்றும் நிதி ஒதுக்கீட்டின் பொருளாதார விஞ்ஞான சம நியாயங்கள் மற்றும் வினைத்திறனை உறுதிப்படுத்தும் வகையில் உரு வாக்கப்பட்ட கல்வித் துறைசார் அபிவிருத்தித் திட்டங்களும் முன்மொழியப்பட்டுள்ளது.
- - மேலும் கல்வித்துறைசார் அபிவிருத்திச் சட்டகம் மற்றும் வேலைத்திட்டங்கள் (2013-2017) கீழ்க்குறிப்பிடப்பட்ட இலட்சணங்களைக் கொண்டுள்ளது.
விரிவான கல்வித் துறைசார் அபிவிருத்திக் கோட்பாடுகள். பல ஆண்டுகளாக வரவு செலவுத் திட்ட வரையறைக்கும் மற்றும் பெறுபேறுகளை மையமாகக் கொண்ட மேற்பார்வை மதிப்பீடுகள் நடுத்தரக் கல்வித் திட்டமிடலுக்கு அடிப்படையாக அமைந்திருத்தல். எதிர்கால அறிவினை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்துக்காக பாடசாலை முறைமையினைத் தயார்படுத்தும் பணிகளை கேந்திரமாகக் கொள்ளல். தீர்மானம் எடுத்தல் மற்றும் பாடசாலை மட்டத்தில் அதிகாரத்தைப் பன்முகப்படுத்துவதனை வலியுறுத்தல். கல்விப் பெறுபேறுகள் மற்றும் முடிவுகளைப் பெறுவதற்காக இலங்கை அரச அபிவிருத்தித் தரப்பினருக்கிடையே சிறந்த இணைப்புக்கள் மற்றும் விளக்கத்துக்குப் பங்களிப்புச் செய்தல் போன்றனவாகும்.
சI
மேற்குறிப்பிடப்பட்ட கோட்பாடுகளும் திட்டமிடல்களும், அரசியல் தலையீடுகளுக்கும் பணிசார் நெருக்குதல்களுக்கும் அப்பால் நின்று முறையாக நடைமுறைப்படுத்தப்படுமாயின் சம நியாயம், சம உரிமை, பண்புசார் தரம் மற்றும் வினைத்திறன் போன்ற மீள் அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட தொடர்ந்தும் அது சார்ந்த கல்வித் துறையில் காணப்படும் பிரச்சினைகளும் எதிர்கால அறிவினை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தின் தேவையான திருப்தியினை எட்டுவதற்கான அடிப்படைச் செயற் 2 பாடுகளுக்கு அமைய இலங்கையின் பாடசாலை முறைமையினை மாற்றியமைத்தல், போன்ற விடயங்களில் உயர் பெறுமானங்களை நாம் எய்தக்கூடும்.
அகவிழி ஜூன் 2014 )
ச. இந்திரகுமார்

Page 5
தொடர்ந்து கற்போம், வாசிப்பே
பேராசிரியர் சோ. சந்திரசேகரன்
வெற்றிகரமான தொழில் வாழ்க்கைக்கு உலகளாவிய ரீதியில் வழிகாட்டி வரும் இந்தியரான ரொபின் சர்மா, முதுமையைத் தவிர்ப்பதற்கு வழிகாட்டுகின்றார். தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் கற்கும் உத்வேக முடையவர்கள் முதுமையடைவதில்லை என்பது அவர் கருத்து. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய விடயத்தைக் கற்றறியும் போது மனிதனின் சிந்தனை எல்லைகள் விரிவடைகின்றன. அவருடைய சிந்தனை முறைமையில் முன்னேற்றம் ஏற்படுகின்றது. இதனால் அவன் முதுமையடைவது தவிர்க்கப்படுகின்றது. புதியனவற்றைக் கற்கும் ஆர்வமற்றவர்களும் துருவி ஆராயும் இயல்பான தன்மைகளைக் கைவிடுபவர்களும் துரிதமாக முதுமையடைகின்றார்கள் என்கிறார் ரொபின் சர்மா. -
முகாமைத்துவம், எதிர்காலவியல் ஆகிய துறைகளில் சிறப்பறிஞராக விளங்கிய Peter Drucker தொடர்கல்வி பற்றிப் பின்வருமாறு கூறினார்.
ஒவ்வொரு மூன்று அல்லது நான்கு ஆண்டு காலப் பகுதியில் நான் ஒரு புதிய விடயத்தைத் தெரிவு செய்வேன். அது பொருளியலாக இருக்கலாம். மூன்று ஆண்டுகளில் ஒரு விடயத்தைத் துறை போகக் கற்று விட முடியாது. ஆனால் அவ்விடயத்தைப் புரிந்து கொள்ள அது போது மானது. கடந்த 60 ஆண்டுகளில் நான் ஒரு நேரத்தில் ஏதேனும் ஒரு விடயத்தைப்படித்துக் கொண்டிருந்தேன்.
'ஒவ்வொரு முறையும் மூன்று முறை உண்ணுவதால் உடல் வளர்ச்சி ஏற்படுகின்றது. ஆனால் ஒரு நாளைக்கு மூன்று முறை வாசிக்கும் போது அறிவு வளர்ச்சி ஏற்படுகின்றது' என்றார் நோபல் பரிசை வென்ற முன்னை நாள் இஸ்ரேலியப் பிரதமர் Shimun Peres அவர் காலையில், மதியத்தில், மாலையில், வார இறுதியில் - எப்போதுமே நூல் வாசிப்பை ஒரு பழக்கமாகக் கொண்டவர்.
பாடசாலைக் கல்வியை முடித்த பலரும் நூல்களை நாடுவதில்லை. அப்படிப்பட்டவர்கள் பாடசாலைக் காலத்தில் பாடநூல்களை மட்டுமே படித்தவர்கள். பாடசாலைக் காலத்தில் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தாதவர்கள் பின்னர் அதனை ஏற்படுத்திக் கொள்வது சிரமமானது. வாசிப்பின் பயன். அதிலுள்ள சுவை பற்றிப் பாடசாலைக் காலத்திலேயே தெரிந்து கொள்வது சிறந்தது. இதில் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் முக்கிய பொறுப்புண்டு. வீட்டில் வாசிக்கும் பழக்கம் பின்பற்றுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
அகவிழி ஜூன் 2014

இ.
'வீட்டு வாடகையையும் ஏனைய வீட்டுச் செலவுகளையும் குறைக்கப் பாருங்கள். ஆனால் நல்ல நூல்களில் முதலீடு செய்வதையிட்டு கவலைப்படாதீர் கள்' என்கிறார் ரொபின்சர்மா. ஒரு நூலிலிருந்து நீங்கள் பெறுகின்ற ஒரு புதிய கருத்து நீங்கள் உலகைப் பார்க்கும் முறையை மாற்றி விடும். மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் முறையை மாற்றிவிடும். நீங்கள் நீண்டகாலம் வாழ உதவும் சிந்தனைகளும் உங்கள் தொழிலை வெற்றிகரமாக நடாத்த உதவும் கருத்துக்களும். நூல் வாசிப்பினால் கிட்டும் என்கிறார் ரொபின் சர்மா.
நூல் வாசிக்கும் பழக்கமற்றவர்கள் தலைவர்கள் ஆக முடியாது என்ற கருத்தும் உண்டு. தொழிலில் வெற்றிகண்ட 100 தொழில் அதிபர்களின் பண்புக் கூறுகளை ஆராய்ந்தபோது, அவர்கள் அனைவருமே சிறந்த வாசிக்கும் பழக்கமுடையவர்கள் எனக் கண்டறியப்பட்டது. அவர்கள் அனைவருமே தமது தொழிலுடன் தொடர்பற்ற பல்வேறு நூல்களை வாசிக்கும் பழக்கமுடையவர்கள் எனவும் கண்டறியப்பட்டது.
மிகச் சிறந்த நூல்களை வாசிக்கும் போது, நூலா சிரியருடன் உரையாடுவது போன்ற உணர்ச்சி ஏற்படுகின்றது. காந்திடிகளின் சத்திய சோதனையைப் படிக்கும் போது அவருடைய உயர்ந்த வாழ்க்கைத் தத்துவம் புலப்படுகின்றது. பைபிள், பகவத்கீதை மட்டுமன்றி டால்ஸ்டாய் ரஸ்சின் (போரும் சமாதானமும் இவ்விறுதிவரை - Last Unite Death) போன்றோரின் நூல்களும் எவ்வாறு காந்தியடிகளின் அஹிம்சைத் தத்துவத்தின் உரு வாக்கத்திற்கு உதவின என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
இன்றைய கல்வி முறையில் வாழ்க்கை நீடித்தகல்வியும் கற்பதற்குக் கற்றதும் வலியுறுத்தப்படுவதால், மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன. பாடசாலைகள் தோறும் நூல் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. ஆசிரியர்களுக்கு நூலகப் பயிற்சி வழங்கப்படுகின்றது. வாசிப்பும் பழக்கமின்றி வாழ்க்கை நீடித்த கல்வியைப் பெற முடியாது. கற்பதற்குக் கற்றலின் ஒரு பிரதான அம்சம் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுதலாகும். 'எனது சிந்தனையை நூல் வாசிப்புப் பழக்கமே செம்மைப்படுத்தியது. எனது வாழ்க்கைத் தத்துவத்தை உருவாக்க அதுவே பிரதான காரணம். அதனாலேயே நான் மனிதனானேன். என்கிறார் ரொபின்சர்மா.

Page 6
வகுப்பறைகளில் விவாதம்
டாக்டர் ச. மாடசாமி
வகுப்பறைக்கு வெப்பம்
பிரேசில் நாட்டுக் கல்வியியல் அறிஞர் பாவ்லோ பிரேயர், “அர்த்தமுள்ள பேச்சு உலகை மாற்றும் " என்றார். சமூகப் பிரக்ஞையோடு, ஆசிரியப் பொறுப்பேற்றவர்களின்
மூளைகளைக் குடைந்த வாசகம் இது.
ஆசிரியர் ஒருவரே பேசிப்பேசி மாணவர்களின் சம்மதமின்றிக் கல்வியைத் திணிக்கும் வகுப்பறைப் போக்கைப் பாவ்லோ பிரேயர் எதிர்த்தார். விவாத வழிக் கல்வியை அவர் வடிவமைத்தார். ஆசிரியரும் மாணவரும் பங்கேற்றுக் கூட்டுச் சிந்தனையோடு உருவாக்கும் வகுப்பறையே பாவலோபிரேயரின் வகுப்பறை. வயது வந்தோர் கல்வித்திட்டத்தில் இத்தகைய வகுப்பறையை அவர் உருவாக்கிக் காட்டினார். குளிர்ந்து கிடந்த கல்வி மையங்களில் விவாதவழிக் கல்வி அனலை எழுப்பியது, அது கண்டு அரசாங்கம் கவலை கொண்டது. விவாதங்களின் மூலம் சலனமற்ற வகுப்பறைகளில் அலைகளை உண்டாக்கிய காரணத்தால் பாவ்லோ பிரேயர் நாடு கடத்தப்பட்டார். -- பாவ்லோ பிரேயர் நம் காலத்தின் மனிதர். அவர் நாடு கடத்தப்பட்ட சம்பவமும் நம் காலத்தில் தான் நிகழ்ந்தது.
விளையாட்டு... கற்பனை... விவாதம் விளையாட்டாய்க் கல்வி, கற்பனை வழிக்கல்வி என்று இனிய கற்பிக்கும் முறைகள் குறித்து இன்று பல அரங்குளில் பல மேடைகளில் பேச்சுச் சத்தம் கேட்கிறது. அரசும் கூடப் பேசுகிறது. அதற்கான பயிற்சியும் அளிக்கிறது.
இளஞ்சிறார்கள் மத்தியில் நடந்த கற்பனை விளை யாட்டு இது. ஒரு வட்டத்தைப் போட்டு இதை வேறு வேறு வடிவமாக்குங்கள் என்று பயிற்சியாளர் வேண்டுகோள் விடுத்தார். சூரியன், தாமரை, குடம், பூனை, கால்பந்து, கடிகாரம் எனப் பதினேழு வடிவங்களை அந்தப் பூஜ்யத்திலிருந்து சிறுவர்கள் உருவாக்கினர். அவரே, ஒரு பேனாவைக் கொடுத்து இதை வேறு வேறு பொருள்களாகப் பயன்படுத்துங்கள் என்று சொன்னதும் பிள்ளைகள் சிகரேட், சீப்பு, பல் துலக்கும் பிரஷ்,

புல்லாங்குழல், அகப்பை, கிரிக்கெட்மட்டை, கத்தி என்று அந்தப் பேனாவுக்கு முப்பதுக்கும் மேற்பட்ட வடிவங்களை வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ஆசிரியர்களிடம் அந்தப் பயிற்சியாளர் "எவ்வளவு கற்பனை பாருங்கள்! இந்தப் பிஞ்சுகளிடம் உறைந்து கிடக்கும் கற்பனையைத் தூண்டாமல் பாடம் நடத்திப் பயன் என்ன? என்று கேட்டார். மிருதுவாகத்தான் கேட்டார். ஆனால் கேள்வி வலித்தது.
கற்பனையைப் போல, இனிமையாகக் கற்க வகுப் பறையில் துணை நிற்பது விளையாட்டு. ஓர் ஆரம்பப்பள்ளி வகுப்பறையில் குழந்தைகளை எழுத்துக்களாக்கி ஆசிரியர் நடத்திய இலக்கண விளையாட்டைக் காண நேர்ந்தது. அந்த விளையாட்டை ரசித்த போதும் இது குழந்தைக்கானது. கல்லூரியில் இது முடியாது" என்று மேதாவித் தனமான ஒரு குரல் மூளைக்குள்ளிருந்து பேசியது. அந்தக் குரலின் கொழுப்பு பின்னர் ஒரு நாள் கரைந்தது.
ஒருமுறை கல்லூரி மாணவியர் என்.எஸ்.எஸ் முகாமில், கிராமத்து அறிவொளித் தொண்டரைச் 'சுயசேவைக் குழுக்கள் பற்றிப் பேச அழைத்திருந்தார்கள். வந்த பெண் தொண்டருக்கு 20 வயதிருக்கும். பத்தாவது படிக்கும் போது பாதியிலேயே நின்று விட்டாராம். இன்று சுயசேவைக் குழுவின் தலைவியாம். வந்தவர் 'முதலில் விளையாட்டு. பிறகு பேச்சு' என்றார். என்ன விளையாட்டு என்று கேட்ட போது மொழிவிளையாட்டு' என்றார். ஆசிரியர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
அறிவொளித் தொண்டர், மாணவிகள் 10 பேரைத் தேர்ந்தெடுத்து ஐவர், ஐவர் என இரு குழுக்களாகப் பிரித்தார். ஒரு குழு ஒரு எழுத்தையும், ஒரு விதியையும் சொல்ல அடுத்த குழு, அந்த விதிக்குட்பட்டு, அந்த எழுத்தில் தொடங்கும் வார்த்தையைச் சொல்லவேண்டும். அவரவர்கள் தனித்தனியாகச் சொல்லக் கூடாது. குழுவாகக் கூடி முடிவெடுத்துச் சொல்லவேண்டும். முடிவெடுக்க ஒரு 2 நிமிடம் தான். அவர் சொல்லும் வார்த்தையில் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கைதான் அந்தக் குழுவின் மதிப்பெண். 'மல்லிகை' என்றால் 4 மதிப்பெண். 'மரிக்
அகவிழி ஜூன் 2014 (ம
*காம்
AT).
டெ817ஆகன , tலகம்
யாழ்ப்பாகவும்,

Page 7
!11hili:iiiilini
கொழுந்து' என்றால் 7 மதிப்பெண். பரஸ்பரம் குழுக்கள் போட்டியிட்டு மதிப்பெண் பெறவேண்டும்.
போட்டி தொடங்கியது. முதல் குழு ஊர்ப்பெயர். முதலெழுத்து ம என்று விதியையும், எழுத்தையும் முன்வைத்தது. இரண்டாம் குழு 'மதுரை' என்று சொல்லி 3 மதிப்பெண் வாங்குவார்கள் என்று தோன்றியது. ஆனால் 'மண்டல மாணிக்கம்' என்ற பெயரை முன்வைத்து 9 மதிப்பெண் பெற்றார்கள். ஆசிரியர்களின் கண்கள் விரிந்தன.
இரண்டாம் குழு 'ஆள் பெயர். முதலெழுத்து தொ' என்றது. பெயர் கிடைக்காமல் முதல் குழு திண்றுமே என்று நினைத்தால் சற்றும் எதிர் பாராதபடி “தொண்டரடிப்பொடியாழ்வார்' என்று சொல்லி அந்தக்குழு வெளுத்து வாங்கியது. போட்டி விறுவிறுப்பாக இருந்தது. 'நூல் பெயர். முதலெழுத்து நா' என்று ஒரு குழு சொன்ன போது 'நாலடியார்' என்ற பதிலை ஆசிரியர்கள் ரகசியமாகப் பரிமாறிக் கொண்டனர். ஆனால், மாணவிகள் சொன்ன பதில் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்! 16 மதிப்பெண்! 1 மணி நேரம் போனது தெரியவில்லை. மாறி மாறிக் குழுக்கள் விளையாடின. எழுத்துக்கோ விதிகளுக்கோ
வார்த்தைகளுக்கோ பஞ்சம் வந்து விடவில்லை.
விளையாட்டில் மாணவிகள் வெளிப்படையாய்ப் பங்கேற்றார்கள். ஆசிரியர்கள் மனதுக்குள் பங்கேற்றார்கள். ஆசிரியர்களின் நினைவாற்றல் வார்த்தைகளைத் தொட்ட தூரம் மிக அருகில் இருந்தது. மாணவிகளின் நினைவாற்றலோ தொலைதூரம் சென்று வார்த்தைகளைத் தேடிப் பிடித்து வந்தது.
கற்பனையும் விளையாட்டும் வகுப்பறைகளுக்குச் சிறகு தருகின்றன என்பது உண்மை. ஆனால், கல்லூரி வகுப்பறைக்குக் கற்பனையும் விளையாட்டும் மட்டும் போதுமானவை அல்ல என்பதை அடிக்கடி அனுபவம் உணர்த்துகிறது.
கல்லூரி வகுப்பறை நிறைவு பெறுவது 'விவாதம்' தோன்றும் போதுதான் . விவாதம் என் பதைக் 'கலந்துரையாடல்' என்று புரிந்து கொள்வது நல்லது. ஏனெனில் அரட்டை, வாக்குவாதம், பதிலுக்குப் பதில் போன்ற பொருள்களில் தான் 'விவாதம்' என்பது புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. விவாதத்தைத்தான் பாவ்லோ பிரேயர் 'அர்த்தமுள்ள பேச்சு' என்றார்.
வகுப்பறையை மந்தைத் தனமான நகர்விலிருந்து மீட்டு விமர்சன பூர்வமாக நடைபோட விவாதம் தூண் வ டுகிறது.
- ஒற்றைக் குரலின் சங்கீத மேடையல்ல வகுப்பறை, அது 'கூட்டுச் சிந்தனையின் வடிவம்' என்று நிரூபிக்கவும் வகுப்பறைகளில் விவாதம் அவசியம். மிகமிக அவசியம்.
அகவிழி ஜூன் 2014

விவாதம் - சில தடைகள் மொழி பயிற்றுவிக்கும் - குறிப்பாகத் தமிழ் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் கூட்டங்களில் வகுப்பு கலகலப்பாக இருக்க வேண்டும் என்ற பொதுவான விருப்பம் வெளிப்பட்ட போதும், விவாதம் பல சிக்கல்களைக் கொண்டு வருவதாகவே உணரப்பட்டுள்ளது.
சிக்கலுக்கான காரணங்களை வரிசைப்படுத்திப் பார்க்கலாம்.
1) சொல்லைப் புரிந்து கொள்வது
முன்னரே சுட்டிக் காட்டியுள்ளபடி, விவாதம் என்ற சொல்லின் பொருளும், விவாதம் என்ற கூட்டுச் சிந்தனை வடிவமும் தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டிருக்கின்றன.
சமூகத்தில் விவாத மாதிரிகளாக, பட்டிமன்றங்களும், அரட்டை அரங்குகளும் உள்ளன.
உரத்துப் பேசுவது, நகைச்சுவையாகப் பேசுவது, அடுத்தவரை மறுப்பது போன்றவற்றையே விவாதத்தின் கூறுகளாக மேலே சொன்ன அரங்குகள் முன்வைக்கின்றன. மெல்லிய குரலில் யதார்த்தமாகப் பேசுவோர் இந்த
அரங்குகளில் பேச லாயக்கற்றவர்கள்.
பல்கலைக் கழகங்களில் கூட இந்தப் போக்குக்கு மாறான முன் மாதிரிகள் தோன்றிவிடவில்லை. பல்கலைக்கழகப் பேச்சு, விவாதப் போட்டிகளில் யார் வெற்றி பெறுகிறார்கள்? ஆர்ப்பரிக்கிறவர்கள் வெற்றி பெறுகிறார்கள். மனத்துடிப்போடு கருத்துக்களை முன் வைக்கிறவர்கள் பின்னுக்குத் தள்ளப்படுகிறார்கள். 'கடல்வாழ் உயிரினங்கள்' பற்றிப் பேச வந்த மாணவர் 'சாவா! சந்திப்போம்! வாழ்க்கை நமக்கென்ன பூவா' என்ற முழக்கத்தை முன் வைத்து அரங்கம் அதிரக் கைதட்டல் பெறுகிறார். இப்படிச் சம்பந்தமற்ற முழக்கங்களைக் கையாள அரசியல் மேடைகளில் இருந்து அவர் கற்றிருக்கிறார். சுற்றியிருக்கும் அரசியல், சமூகப் போக்குகளில் இருந்து கல்விக்கூடம் மட்டும் எப்படி விடுபட்டிருக்கமுடியும்? 'உண்மையைத் தேடும் கூட்டுச் சிந்தனை வடிவமாக' விவாதம் கல்விக்கூடங்களில் நிகழவில்லை. அடித்துப் பேசும் - அடம் பிடிக்கும் - வாக்குவாதப் பண்புகளுடன் அது தலை தூக்குகிறது. அதன் காரணமாகத் தயக்கமும் கூச்சமும் உள்ள ஏராளமான மாணவர்கள் பங்கேற்க முடியாத தடையை உண்டுபண்ணுகிறது.
2) தேவையைப் புரிந்து கொள்வது
'விவாதம் - பாடத்துக்கு வெளியே நடக்கும் நிகழ்ச்சி. வகுப்பு போரடிக்கும் போது அதற்கு மாற்றாக விவாதம் நடத்தலாம். என்று விவாதத்தின் தேவை குறித்துச் சிலர்

Page 8
புரிந்து வைத்திருக்கின்றனர். இது விவாதம் நிகழ்வதற்கான அடுத்த தடையாகும்.'
"நான் எப்போதும் கடைசி 10 நிமிடம் பாடம் நடத்துவதில்லை. மாணவர்களோடு பொது விஷயங்கள் பேசுகிறேன்" என்று ஆசிரியர்கள் சிலர் கூறுகிறார்கள். அந்த ஆசிரியர்கள் கருதுவது போல் - இது முற்போக்கான நடவடிக்கையல்ல. இத்தகைய பேச்சுக்கள் விவாதத்துக்கான அடித்தளமும் அல்ல. 'பொதுவிஷயம்' வெட்டிப் பேச்சாகப் புரிந்து கொள்ளப்படுவது இந்தத் தவறான உத்தியால்தான்.
பொது விஷயங்கள் - அன்றாட நிகழ்வுகள் (Current afairs) பாடத்துக்கு உதாரணமாக வருவதைத் தடுக்க முடியாது. அப்படி உதாரணமாக வருவது கற்றலுக்கு வலிமை சேர்க்கும். ஆனால் பொது விஷயங்களைத் துண்டித்துத் தனியாகத் திணிக்கும் போது, செரிமானத்தில் பிரச்சினை வரும். ஆசிரியரின் கற்பிக்கும் நேர்மை" குறித்தும் வீண் சந்தேகம் எழும்.
விவாதம் பாடத்துக்கு உள்ளேயும் நடக்கலாம். தொடர்புடைய தளத்தில் பாடத்துக்கு வெளியேயும் நடக்கலாம். ஒரு முறை வேதியியல் ஆசிரிய நண்பரிடம், 'மூலிகைப் பெட் ரோல் குறித்து வகுப்பறையில் விவாதிக்கலாமே என்ற போது ' ஆகா! விவாதிக்கலாமே! ஆனால் சிலபஸ் முடிக்க முடியாது. ரிசல்ட் குறையும், என்றார். ஆசிரியரின் வாதம் மிரட்டுகிறது. 'சரி! சரி!

ச.
உங்க போக்கில் பழையபடியே நடத்துங்க' என்ற பதிலை வரவழைப்பதற்கு எய்யப்பட்ட அம்பு அது. மூலிகைப் பெட்ரோல் குறித்து வேதியியல் ஆசிரியர் பேசுவதும், பட்ஜெட் பற்றிப் பொருளாதார ஆசிரியர் பேசுவதும், எல்லைப் பிரச்சினைகள் குறித்துப் பூகோள ஆசிரியர் பேசுவதும் பாடத்திட்டத்தைத் தாண்டிய பகுதிகளா? பக்தி இலக்கியம் நடத்தும் தமிழ் ஆசிரியர் கடைசிப் பத்து நிமிடம் பாடத்தை நிறுத்திவிட்டு 'பொடா சட்டத்தில் வை, கோ,கைது' பற்றிப் பேசுவது பாடத்திட்டத்துக்கு அப்பால் நிற்கிறது என்பது தெள்ளத்தெளிவு.
கல்வித் திட்டம் முன் வைக்கும் உண்மைகளை அலசிப் பார்ப்பதற்கு வகுப்பறையில் விவாதத்தைப் பயன்படுத்துவதே அடிப்படைத் தேவை. 'வகுப்பறைக்கு வெளியே கல்விக் கூடத்தில் பல அரங்குகள் உள்ளன.' குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றிக் கூட அந்த அரங்குகளில் விவாதங்கள் நடத்தலாம். நடத்த வேண்டும்.
3) ஒடுங்கிய மெளனம். அல்லது வீண்பேச்சு
த
விவாதங்களை மாணவர்களிடம் தொடங்கப் பொது வாகக் கலை, மொழிப்பாட ஆசிரியர்களே முன் வருகிறார்கள். அவர்களும் பின்வரும் காரணங்களுக்காகப் பின்வாங்குகிறார்கள். 1. எத்தனை தூண்டினாலும் மாணவர்கள் எதுவும் ?
பேசுவதில்லை.
எ 2014

Page 9
2.
விவாதப் பொருளை விட்டு, திசை மாறிப் பேசு கிறார்கள். ஆக்கப்பூர்வமான விவாதத்தில் ஆர்வம் காட்டுவதில்லை. கிண்டல் பேச்சுகளுக்கு விவாதத்தைக் களமாகப் பயன்படுத்தப் பார்க்கிறார்கள். எதிரெதிரான இந்த நிலைகளை மெளனம் அல்லது வீண்பேச்சு என்று புரிந்து கொள்ளலாம்.
வாய்மூடிக்கிடப்பது அல்லது ஆளாளுக்குப் பேசுவது என்ற இரண்டுமே விவாதம் என்ற நாகரிகம் வாளராத கற்பாலப் பண்புகள். இவற்றைச் சமூகத்தில் இருந்துதானே மாணவர்கள் கற்கிறார்கள்!
ஆளாளுக்கு நாட்டாமை! ஆகப் போறது ஒண்ணுமில்ல! என்கிறது சொல்லடை.
விவாதம் என்ற நாகரிகத்தின் தொட்டிலாகக் கருதப்படும் சட்டசபையில் கூட, பல நேரங்களில் விவாதத்தைப் புதைக்கும் சவப்பெட்டிகள் தானே தயாராகிவிடுகின்றன.
கல்லூரி வகுப்பறை நிலைமையை ஓர் உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம். 'பட்ஜெட் வரிகள்' பேச்சைத் தொடங்கிய ஓர் ஆசிரியர் மிகக் கனிவாக ஒரு மாணவனிடம் உனக்குப் பிடித்த உடை எது என்றார். மாணவன் சொன்ன பதில் 'கோவணம்!' மாணவர்கள் சிரிக்க, மாணவிகள் சங்கடம் கொண்டனர். மாணவனின் குறும்புத்தனமான பதிலில் இருந்தே விவாதத்தைத் தொடங்கி இருக்கலாம்.
ஆசிரியர் அதற்குத் தயாரில்லை. விவாதம் நின்றது.
'சுதந்திரமாக விட்டால் கண்டதைப் பேசுகிறார்கள். மிரட்டினால் பேசுவதை நிறுத்தி விடுகிறார்கள்" என்பது வகுப்பறை விவாதம் குறித்து ஆசிரியர்களின் கணிப்பு.
ஒடுக்கப்பட்ட வகுப்பறையில் இருந்து குரல்கள் எழுவ தில்லை. அதே நேரம், ஒழுங்குபடுத்தப்படாத வகுப்பறையில்
குரல்களுக்குப் பதில் இரைச்சலே கிளம்புகிறது.
கறாராகவும், அதே நேரம் மனிதநேயத்தோடும் வகுப்பறையையும், வகுப்பறை நடவடிக்கைளையும் ஒழுங்குப்படுத்திப் போகாவிட்டால், இருபாலர் பயிலும் கல்லூரிகளில் பெண்களின் குரல்களைக் கேட்கவே முடியாது. மாணவர்களின் கிண்டல், மாணவிகளின் வாயடைக்கப் பார்க்கும்.
மா 6
மான
4) தளங்களும் பிடிமானங்களும்
0 அகவிழி ஜூன் 2014
விவாதத்தை நடத்துவோரும், விவாதத்தில் பங்கேற்போரும் வெவ்வேறு தளங்களில் நிற்கின்றனர்.
பங்கேற்போரின் தளமறியாமல் விவாதத்தைப் போட்டுவிட்டு விவாதம் புறப்படவில்லையே என்று புலம்பிப் பயனில்லை. விவாதம் நடத்தும்போது, தளங்களை

அறிவது எவ்வளவு முக்கியம் என்பதை அறிவொளி இயக்கத்தில் மத்திய வர்க்க அறிவாளிகளுக்கு மக்கள் கற்றுக் கொடுத்தார்கள்.
விருதுநகர் மாவட்ட அறிவொளி இயக்கத்தில், ஒருமுறை, ஒரு வித்தியாசமான பிரச்சார இயக்கம் திட்டமிடப்பட்டது. அதன் பெயர் 'விவாதிப்போம் முடிவெடுப்போம்' என்பது.
'ஒரு முடிவு எடுப்போம்' என்ற நூல் ஒன்றும் அதன் பொருட்டு தயாரிக்கப்பட்டது. அந்த நூலில் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு பிரச்சினை இருக்கும். அந்தப் பிரச்சினைக்கு மூன்று அல்லது நான்கு தீர்வுகள் இருக்கும். விவாதித்து, மக்கள் ஒரு முடிவு எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு கிராமத்திலும் விவாதக் களங்கள் உருவாயின. அருமையான முயற்சி அது. ஆனால், பிரச்சினைகளை மத்திய வர்க்க மூளைகள் கற்பனை செய்திருந்தன. அவை விவாத களங்களில் எப்படி உடைபட்டன என்றறிவது சுவையாக இருக்கும்.
'மணமகளைத் தேர்ந்தெடுப்பது ஒரு பிரச்சினை. "நம் வீட்டுப் பெண்ணுக்கு வரன் தேடுகிறோம். நாலு பேர் முன் வருகிறார்கள். 1. நாற்பது வயதில் ஒரு நல்லவர்; மனைவியை இழந்தவர்; ஒரு குழந்தை உண்டு; கொஞ்சம் வசதி உண்டு; 2. பட்டதாரி; ஆனால் வேலையில்லை 3) பத்தாவது படித்த பையைன்; உழைப்பாளி; நிலபுலன்கள் உண்டு; ஆனால் பெரிய சம்சாரிக் குடும்பம் 4) பெட்டிக்கடை வைத்துச் சொந்தக் காலில் நிற்பவன் கொஞ்சம் குடிப்பழக்கம் உண்டு - இவர்களில் யாரை உங்கள் வீட்டுப் பெண்ணுக்குத் தேர்ந்தெடுப்பீர்கள்?"
“இந்த விவாதத்தை ஒரு கிராமத்தில் ஒரு தொண்டர் முன் வைத்ததும் ஒரு பெண் விசுக்கென எழுந்து பிடித்துக் கொண்டார். பொண்ணுக்குக் கல்யாணம் கில்யாணம் செஞ்சு பாத்த அனுபவம் இருக்கா ஒங்களுக்கு?” என அந்தப் பெண் படபடத்தாள், விவாதத்தை மறுகணமே முறித்துப் போட்டாள் இராமன் வில்லை முறித்தது போல.
இன்னொரு நிகழ்ச்சியும் சுவையானது. அது 'பணம் செலவளிப்பதில் முன்னுரிமை தொடர்பான பிரச்சினையில்' எழுந்த விவாதம்!
“கையில் 20,000 ரூபாய் இருக்கிறது. காத்திருப்பவை மூன்று. மகள் திருமணம். மகனுக்கு வேலை அல்லது தொழில் . ஒழுகும் வீட்டை ரிப்பேர் செய்வது. எதற்கு நீங்கள் முன்னுரிமை கொடுத்து இந்தப் பணத்தைச் செலவளிப்பீர்கள்?” இந்த விவாதம் வைக்கப்பட்டதும், ஒரு வயதான மூதாட்டி எழுந்து “இதுக்கேதுக்கு வாதம் பண்ணனும்? 10000 ரூபாய்ல ரெண்டு பவுன் போட்டு

Page 10
கல்யாணத்தை முடிச்சிருவோம். 5000 ரூபாய்ல பையனுக்குப் பெட்டிக்கடை, மிச்ச ரூபாய்ல கூரையை மாத்தீட்டா ஒழுகுறது நின்னு போகும்” என்று வெற்றிலையை மென்று கொண்டே விவாதத்தை முடித்து வைத்தார். மத்திய வர்க்கத்து மூளைகள் கீழ்த்தட்டு மக்களோடு நடத்திய விவாதங்களில் உண்டான இடைவெளிக்கு இவை உதாரணங்கள். வகுப்பறையும் இதே போலத்தான் ஆசிரியர் மாணவர் என்ற இருவேறுபட்ட கலாச்சாரங்களின் சந்திப்பாக இருக்கிறது. விவாதத்தை முன்வைக்கும் போதே இடைவெளி எவ்வளவு என்று கவனித்து முன்வைக்க வேண்டும்.
பாடத்திட்டம் ஒரே சீரானது இல்லை. படிப்படியான வளர்ச்சியும் கிடையாது. மாணவர்களை நேரடியாக விவாதத்தில் ஈடுபடுத்தக் கூடிய பாடத்திட்டமும் உண்டு. முன் தயாரிப்பு தேவைப்படும் பாடத்திட்டமும் உண்டு.
'புதுக் கவிதையில் சமூகச் சிந்தனைகள்" என்ற தலைப்பில் நேரடி விவாதம் நடத்தலாமா. 'புதுக்கவிதையில் நவீன சிந்தனைகள்' என்ற தலைப்பில் விவாதம் நடத்த முன்தயாரிப்பு வேண்டும்.
சமூகப் பிரச்சினைகளில் நேரடியாக விவாதத்தைத் தொடங்கலாம். ' என்பது உண்மைதான். ஆனால், அதையும், பொத்தாம் பொதுவாகத் தொடங்கும் போது தோல்விதான் உண்டாகிறது.
"வரதட்சணைப் பிரச்சினை பற்றி என்ன நினைக்கிறீங்க? என்ற பொதுவான கேள்வியில் விவாதம் எழுவதில்லை. எழுந்தாலும் சரியான திசையில் போவதில்லை. ஏனெனில் இந்தக் கேள்வி பிடிமானம் இல்லாத வாள் போல இருக்கிறது. கையிலெடுத்து வீச முடியாது.
அதே நேரம், வரதட்சணைக் கொடுமைக்கு உதாரணமாய் ஒரு சம்பவத்தைச் சொல்லி 'இது எதனால்? என்று கேட்டால் ஆக்கப்பூர்வமான பங்கேற்பு நிகழ்கிறது. ஒவ்வொருவரும் பேசுகின்றனர். ஏனெனில் அந்தச் சம்பவம், மாணவர்கள் பற்றிக் கொள்ள ஒரு பிடியாகிறது.
தளங்களையும், பிடிமானங்களையும் அறிவது முக்கியம். தளங்களும், பிடிமானங்களும் பலவீனமாய் இருந்தால் பலப்படுத்த வேண்டும். மாறாக, ஆசிரியரே பாடத்திட்டத்தின் முழுப்பொறுப்பையும் எடுத்துக் கொண்டு மேடை நிறைய அமர்ந்து விடக் கூடாது. அதுதான் காலங்காலமாய் நடந்து வந்திருக்கும் தவறு. வகுப்பில் பெஞ்சில் இடம் தருவதோடு மாணவர்களை நிறுத்திக் கொள்கிறோம். பாடத்திட்டத்தில் - கற்பித்தலில் என்று ஒவ்வொரு களத்திலும் மாணவருக்கு இடமிருப்பதை மறந்துவிடக் கூடாது.

ரைமியா
5) ஆசிரியர் - தடையா? துணையா? அறிவுத் தளங்களை விடக் கலாச்சாரத் தளங்களில் தடையின்றி விவாதம் எழுகிறது. பங்கேற்பும் முழுமையாக இருக்கிறது. மாணவர்களின் குரல்கள் எழ, எழ, ஆசிரியரின் பேச்சுச்சத்தம் குறைந்து கொண்டே வருவதுதான் விவாதத்துக்கு அழகு. மண்ணாசை பொன்னாசையை விட மோசமானது பேச்சாசை, கட்டுப்படுத்துவது கடினம்.
பெண்களின் பிரச்சினையைச் சொல்லும் கதையோ, கவிதையோ பாடத்திட்டத்தில் இருந்தால், நடத்தும் போது துணைக்கதை போல 'கம்மங்குழி அம்மன் கதை' வந்துவிடும். கம்மங்குழி அம்மன் கதை வந்தால், கட்டாயம் விவாதமும் வந்துவிடும்.
ஏனெனில் விவாதத்துக்கான பிடிமானம் இக்கதையில் வலுவாக இருக்கிறது. இந்தக் கதையில் விவாதம் நடப்பது பெரிய பிரச்சினை அல்ல. விவாதத்தை ஒருங்கிணைப்பதுதான் பிரச்சினை. முதலில் கதையைப் பார்ப்போம்.
கதை பல நூறு வருடங்களுக்குப் பின்னால் போகிறது. மரத்தில் அலங்கார விளக்குகள் செய்யும் ஆசாரி குடும்பம். தாய், மகன், மகள் என மூவர் கொண்ட சிறிய குடும்பம். அன்பான குடும்பம். மகள் தான் குடும்பத்தின் செல்லம்! அழகானவள். திருமணக் கனவுகளில் மிதப்பவள். அவளுடைய பெயர் - அகிலா (ஒரு வசதிக்காகச் சூட்டப்பட்ட பெயர்). அண்ணன் சம்பாத்தியத்தில் குடும்பம் நடக்கிறது. ( அந்த ஊர் இளவரசனின் திருமணம் அறிவிக்கப்படுகிறது. திருமணத்துக்கு அலங்கார விளக்குகள் செய்யும் பணி இந்தக் குடும்பத்துக்குக் கிடைக்கிறது. நல்ல வருமானம் கிடைக்கும் என்று குடும்பம் குதூகலிக்கிறது.
அலங்கார விளக்குகளைப் பார்வையிட இளவரசன் ஒருநாள் ஆசாரியின் வீட்டுக்கு வருகிறான். விளக்குகளைப் பார்க்க வந்தவன் அகிலாவையும் பார்க்கிறான். மோகிக்கிறான், விளக்குகளோடு அவளையும் அரண்மனைக்கு அனுப்புமாறு பணிக்கிறான். இன்னும் சில தினங்களில் திருமணம் நடக்க இருக்கும் போது இவள் எதற்கு? என்ற கேள்விக்கு அகங்காரமாய் பதில் வருகிறது. 'அவள் பட்டத்தரசி. இவள் ஆசைநாயகி!' 'ஊரை விட்டு ஓடப்பார்த்தால் குடும்பமே கொலை செய்யப்படும்' என்ற எச்சரிக்கையும் கூடவே வருகிறது.
குடும் பம் அதிர்ந்து போகிறது. கல்யாணக் கனவுகளோடு இருக்கும் பெண்ணை அரசனின் ஆசை நாயகியாக அனுப்புவது கிணற்றில் தள்ளுவது மாதிரி. அதே நேரம், எதிர்த்து நிற்கவோ தப்பித்து ஓடவோ தைரியம் இல்லை. முடிவு?
கவிழி ஜூன் 2014 )

Page 11
அகிலாவுக்குத் தெரியாமல் அம்மாவும் அண்ணனும் கூடிக்கூடி யோசிக்கிறார்கள். இறுதியில் முடிவெடுக்கிறார்கள்.
ஒரு மாலை நேரத்தில், வீட்டுத்தோட்டத்தில் இருந்தபடியே அகிலாவை அழைக்கிறார்கள். வேப்பமரத்தடியில் அம்மா. கொஞ்சம் தள்ளி அண்ணன். அம்மா முன்னால் பெரிய பலகை கிடக்கிறது எதையோ மறைத்தபடி. என்னம்மா! என்று கேட்டபடி அகிலா ஓடிவருகிறாள். பலகையில் காலை வைத்துத் தாண்டி அம்மாவிடம் போக வேண்டும். பலகையில் கால் வைக்கும் நேரத்தில் அண்ணன் பலகையை உருவுகிறான்.
இப்போது அகிலா பலகை மறைத்திருந்த குழிக்குள் கிடக்கிறாள். குழி நிறைய கம்பரிசி (கம்மம்புல்). கொஞ்சம் கொஞ்சமாகக் குழி அவளை உள்ளே இழுக்கிறது. அம்மா பார்க்க.... அண்ணன் பார்க்க அலறித் துடித்தபடி அகிலா குழிக்குள் மூழ்குகிறாள்.
பெத்த அருமை என்ன?- உனக்குப் பேரு வச்ச நேர்த்தி என்ன? வளத்த அருமை என்ன? உன்னை வச்சிருந்த நேர்த்தி என்ன? என்று அம்மா அழுது ஒப்பாரி வைக்கிறாள். அந்த அழுகைக்கும் ஒப்பாரிக்கும் அர்த்தம் தான் என்ன? அகிலா இறந்த இடத்திலேயே அவளுக்குக் கோயில் கட்டிக் கும்பிடுகிறது குடும்பம். அவள்தாள் கம்மங்குழி அம்மன்.
கதை பற்றித் தீர்ப்புச் சொல்லவும், என்ன முடிவெடுத்திருந்தால் அகிலாவைக் காப்பாற்றியிருக்கலாம் என்று தீர்வு சொல்லவும் மாணவர்களிடம் கேள்வி எழுப்பினால் பதில்கள் பல கோணங்களில் இருந்து வரும். மாணவரின் மனவுலகம் பிதுங்கி வந்து கண்ணுக்கு முன்னால் தெரியும்.
ஒரு முறை இந்த விவாதத்தை ஒருங்கிணைக்க தமிழ் வகுப்பறைக்குப் பிற துறை ஆசிரியர் ஒருவர் அழைக்கப்பட்டிருந்தார். நல்ல முற்போக்காளர். இளகிய மனம் தமிழறிவும் நிறைய , கதையைக் கேட்டதும் நெகிழ்ந்து போனார்.
விவாதத்தை ஒரு மாணவி தொடங்கி வைத்தாள். "நான் அகிலாவாக இருந்தா, மறுக்காம் அரண்மனைக்குப் போவேன். போயி, ஒருநா சந்தர்ப்பம் பாத்து அவன நிச்சயம் கொலை செய்வேன்" என்றாள். ஆழ்ந்து யோசிக்காமல், உணர்வுப் பூர்வமாய் வெளியிட்ட தீர்வு இது. இந்தத் தீர்வில் உள்ள கோப உணர்ச்சியை மட்டும் விவாத ஒருங்கிணைப்பாளர் கணக்கில் எடுத்து மதித்திருக்க வேண்டும். ஆனால் விவாத ஒருங்கிணைப்பாளருக்கு
இந்தப் பதிலைப் பொறுக்க முடியவில்லை. இந்தத் தீர்வில் உள்ள சினிமாத் தனத்தைச் சுட்டிக் காட்டியவர், மக்களைத்
அகவிழி ஜூன் 2014
10

திரட்டுவதற்கான உத்திகள் உட்பட விவரிக்க ஆரம்பித்து விட்டார். நீண்ட பேச்சு! சக்கையாய்ப் பிழிந்து, காய்ந்த துண்டை மட்டும் மாணவர்கள் மத்தியில் உதறிக் காட்டினார். அதற்குப் பிறகு விவாதம் எங்கிருந்து வரும்? இந்த லட்சணத்தில் 'நான் ரொம்ப நேரம் எடுத்துக்கிட்டனா? என்ற கேள்வியை மாணவர்களிடம் போட்டு 'இல்லை' என்ற பதிலையும் வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொண்டார்.
இந்த விவாதத்தை ஒருங்கிணைக்கும் போது, கொஞ்சம் பொறுமையாக இருந்தால் அருமையான சிந்தனைகள் எல்லாம் வகுப்பில் உதிக்கக் காணலாம்.
“குடும்பம், அரசாங்கம் இரண்டும் ஒரே மாதிரித்தான் இருக்கின்றன - பெண்ணை ஒடுக்குவதில்" "அன்பு இருந்தால் மட்டும் குடும்பத்தில் சரியான முடிவெடுப்பார்கள் என்று சொல்ல முடியாது. அன்பு செலுத்துவது வேறு. முடிவெடுப்பது வேறு" "எல்லாத் துயரங்களுக்கும் அடிப்படையாக கோழைத்தனமே இருக்கிறது".
இவையனைத்தும் அறிஞர்கள் யாரும் உதிர்த்த பொன்மொழிகள் அல்ல. 'கம்மங்குழி அம்மன்' விவாதத்தில் இளம் மாணவர்கள் தெரிவித்த கருத்துக்கள்.
விவாதத்தைத் தொடங்குவதில் உள்ள கவனம் ஒருங்கிணைப்பதிலும் வேண்டும். இல்லாவிடில் விவாதத்துக்குத் துணையாக வேண்டிய ஆசிரியர், விவாதம் நடத்தத் தடையாகி விடுவார்.
உருவாக்கும் பண்புகள் திறன்கள்
விவாதம் உருவாக்கும் மிகச்சிறந்த பண்பு திறந்த மனம்' - மூடிய மனங்களின் உரையாடலாகத் திகழும் வகுப்பறை 'திறந்த மனம்' பெறுவது குறிப்பிடத்தக்க வளர்ச்சி அல்லவா? வீடுகளுக்கும், வீதிகளுக்கும், நாடுகளுக்கும் வேண்டிய பண்பல்லவா இது? மனித உறவுகளின் அடித்தளம் அல்லவா இது? திறன்களைப் பொறுத்தவரை கேட்டல் (Listening), கருத்து வெளியீடு (Communication), தலைமைப்பண்பு (Leadership). முடிவெடுத்தல் (Decision Making) போன்ற பல திறன்கள் விவாதத்தின் வழி கிடைக்கின்றன.
கொட்டாவிகளை உருவாக்கும் துடிப்பற்ற வகுப்பறை களில் விவாதத்தின் வழி அசைவுகள் உண்டாகின்றன. அசைவுகளின் பலன்களாகப் பண்புகளும், திறன்களும் வளர்கின்றன. வகுப்பறைகள் திறந்த மனத்துடன் உரையாடலைத் தொடங்குவதே கல்விக்கூட ஜன நாயகத்தின் மெச்சத்தக்க அடையாளமாகும்.

Page 12
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி விஞ்டு முகிழ்நிலை ஆசிரிய மாணவர்களின் பெளதி பொறியியல் (Mechanics) அலகின் அடைவை ே
0III
அ. குகன் ஆசிரிய கல்வியியலாளர் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி
ஆய்வுச் சுருக்கம்
விஞ்ஞானப் பிரிவைச் சேர்ந்த ஆசிரிய மாணவர்களின் பௌதிகவியல் சம்பந்தமான அறிவு தாழ்ந்த மட்டத்தில் இருப்பதால் அதனை மேம்படுத்த வேண்டிய தேவையுள்ளது. (பௌதிகவியலை ஒரு பாடமாகக் கொண்ட பட்டதாரி என்ற வகையிலும் கல்வியியற் கல்லூரியில் பௌதிக வியலைக் கற்பிப்பவர் என்ற முறையிலும் பௌதிகவியற் பாட அடைவை மேம்படுத்தல் எனும் ஆய்வை மேற்கொள்ள ஆய்வாளரால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.)
“யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி விஞ்ஞானப் பிரிவு முகிழ்நிலை ஆசிரிய மாணவர்களின் பௌதிகவியற் பாடத்தின் பொறியியற் பகுதியின் அடைவை மேம்படுத்தல்" எனும் ஆய்வை மேற்கொள்ள மிகவும் பொருத்தமான ஆய்வு முறை செயல்வழி ஆய்வாகும். ஏனெனில் மேலுள்ள ஆய்வுப் பிரச்சினை இன்று சமூகம் எதிர்கொண்டுள்ள கட்டாயம் தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினையாக உள்ளது. மற்றைய ஆய்வு முறைகளைப் பொறுத்தவரையில் அவை பிரச்சினையை அலசி ஆராய்கின்றனவேயொழிய செயல்வழி ஆய்வைப் போல் பிரச்சினைக்கு தீர்வை மேற்கொள்வதில்லை. செயல்வழி ஆய்வுக்குத் தெரிவுசெய்யப்படும் இலக்குக் குழுவினர் ஆய்வின் இறுதியில் அடையப்பட வேண்டும் என எதிர் பார்க்கப்பட்ட அறிவு, திறன் என்பவற்றை அடைந்தவர்களாகக் காணப்படுவர். இவ் ஆய்வுக்கு அளவறி மற்றும் பண்பறி முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியிலுள்ள விஞ்ஞானப் பிரிவில் முதலாம் வருடத்தில் நான்கு கற்கை நெறிகளும் இரண்டாம் வருடத்தில் நான்கு கற்கை நெறிகளுமாக மொத்தம் எட்டு கற்கை நெறிகளில் மாணவர்கள் உள்ளனர். ஒவ்வோர் கற்கை நெறிகளிலுமுள்ள மாணவர்களின் எண்ணிக்கை சமனற்றது. பல்வேறு பருமன்கள் கொண்ட துணைக்குழுக்கள் பல இருக்கும்போது அடுக்கமைப்புசார் மாதிரித் தெரிவு முறையே பாவிக்கப் பொருத்தமாக இருப்பதால் அம்முறை இங்கு பின்பற்றப் பட்டுள்ளது.
ன
முற் சோதனை, பிற் சோதனை ஆகிய இரு முறைகளையும் பகுப்பாய்வு செய்ததன் மூலம் கிட்டத்தட்ட

நானப் பிரிவு
கவியற் (Physics)பாடத்தின் மம்படுத்தல்
50% வளர்ச்சி ஏற்பட்டுள்ளதை அறிய முடிகின்றது. இவ்வாய்வின் கண்டறிதல்களாக விஞ்ஞானத் துறை மாணவர்கள் பௌதிகவியலை திறம்படச் செய்யாமைக்கு கணித அறிவு போதாது, பௌதிகவியலில் நாட்டமின்மைக்கு வறுமை ஓர் காரணி, பௌதிகவியலில் நாட்டமின்மைக்கு மாணவர்களின் அறியாமையும் சோம்பேறித்தனமும் காரணிகள், பௌதிகவியல் பாடத்திலுள்ள பொறியியல் அலகில் மாணவர்களின் நாட்டமின்மைக்கு ஆசிரியரின் ஒழுங்கின்மையும் பரிசோதனைகள் ஒழுங்காகச் செய்யப்படாமையும் காரணிகள், பொறியியல் அலகிலுள்ள எண்ணக்கருக்களைப் பற்றி மாணவர்கள் அறிய, பாடசாலை நூலகம் வளமானதாகவில்லை என்பதையும், பாடசாலை ஆய்வுகூடம் வளப்பற்றாக்குறையுடன் இருப்பதையும், பாடசாலை நிர்வாகம் போதியளவு ஒத்துழைப்பை வழங்கவில்லை என்பவற்றை அறியமுடிகின்றது.
பாL
பிரதான சொற்கள்
முகிழ்நிலை ஆசிரிய மாணவர்கள்
செயல்வழி ஆய்வு விஞ்ஞானப் பிரிவு
அறிமுகம்
ஆராய்ச்சி என்பது புதிய அறிவை ஈட்டிக்கொள்ளும் வழிகளில் ஒன்றாகும். அதாவது உண்மையைக் கண்டறிவதற்கான சிறந்த வழி ஆய்வு ஆகும். கடந்த பல ஆண்டுகளிலே ஆராய்ச்சியானது பல்வேறு நெறிகளில் விருத்தியடைந்துள்ளது. இதன் விளைவாக மூன்று பிரதான ஆய் வு அணுகு முறைகளான அளவறி ஆய் வு அணுகுமுறைகள் (Quantitative Approach to Research), பண்புநிலை ஆய்வு அணுகுமுறைகள் (Qualitative Approach to Research), மற்றும் விமர்சன நோக்கு ஆய்வுகள் என்பன தோற்றம் பெற்றுள்ளன.
இந்தப் பரந்துபட்ட ஆய் வணுகுமுறைகளின் சட்டகங்களினுள்ளே பல ஆராய்ச்சி முறைகள் அடங்கியுள்ளன. ஆய்வுப் பொருளான பிரச்சினையின் இயல்பிற்கேற்ப பொருத்தமான ஆராய்ச்சி முறைகளிலொன்று
அகவிழி ஜூன் 2014 (-
*14 ஆமத ன ந & லகச்
பூபாழப்பாணம்.

Page 13
தெரிவு செய்யப்படும். ஆராய்ச்சியை உள்ளடக்கிய செயற்பாடு ஒரு செயற்கிரமமாக இருக்கும்.
பெளதிகவியல் பாட அறிவு என்பது எல்லா மாணவர்களுக்கும் தேவையான ஒன்றாகும். அன்றாடம் நாம் வீட்டில் பல்வேறு உபகரணங்களைப் பாவிக்கின்றோம். இவற்றைக் கையாளுவதற்கு அல்லது அவற்றில் சிறு பிழை ஏற்பட்டுவிட்டால் அதனைச் சரி செய்வதற்கு போதிய விஞ்ஞான ரீதியான அறிவு எல்லோருக்கும் அவசியம்.
கல்வியியற் கல்லூரிகளைச் சேர்ந்த விஞ்ஞானப் பிரிவு ஆசிரிய மாணவர்களிடம் பௌதிகவியற் பாட அறிவு குன்றியிருப்பதற்கான பிரதான காரணமாக அமைவது, எமது நாட்டுக் கல்விமுறையிலுள்ள ஆசிரிய நியமனக் கொள்கையாகும்.
அதாவது உயிரியல் பிரிவைச் (Bio Science) சேர்ந்த பட்டதாரிகளே பாடசாலைகளில் விஞ்ஞான ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றார்கள். இவர்கள் உயிரியல் பாடத்துடன் இரசாயனவியல் பாடத்தையே பல்கலைக்கழகத்தில் கற்கமுடியும். இவ் உயிரியல் பிரிவைச் (Bio Science) சேர்ந்த பட்டதாரிகள் எவரும் பௌதிகவியலைக் கற்க வாய்ப்பில்லை.
எனவே பௌதிகவியல் பற்றிய போதிய விளக்க மின்மையுடன் விஞ்ஞான ஆசிரியர்களாக நியமிக்கப்படும் இவர்கள் பௌதிகவியற் பாடத்தை திறம்படக் கற்பிக்க பெரிதும் சிரமப்படுபவர்களாகவே காணப்படுகின்றார்கள்.
பெ
இப்படிப்பட்டவர்களிடம் கற்று கல்வியியற் கல்லூரி களுக்குத் தெரிவான விஞ்ஞானப் பிரிவு ஆசிரிய மாணவர்களும் பௌதிகவியற் பாடத்தில் சிரமப்படுபவர் களாகக் காணப்படுகின்றார்கள். எனவே, மேற்படி ஆய்வு இன்றைய நிலையில் தேவையானதொன்றாகக் கருதப்பகின்றது.
கல்வியியல் ஆய்வுகளில் பொதுவாக ஆய்வு எனச் சிறப்பாக்கம் செய்யப்பட்ட விஞ்ஞான ரீதியான அல்லது பரிசோதனை ரீதியான அணுகுமுறைகள் முக்கிய இடம் பெறுகின்றன. இவ்வணுகுமுறை இயற்கைத் தோற்றங்களைப் பரிசீலனை செய்யும் இயற்கை விஞ்ஞானிகளால் முதலில் பயன்படுத்தப்பட்டது. பின்னர் எமில் டர்க்கிமின் என்பவரின் முயற்சியைத் தொடர்ந்து, சமூகவியல் விஞ்ஞானிகளால் இம்மாதிரிகையைச் சமூகம்
சார் தோற்றப்பாடுகளுக்கும் பிரயோகிக்கலாம் எனும் ( நிலைப்பாடு எட்டப்பட்டது. ஆயினும் பௌதிக, உயிரியல், விஞ்ஞானத் துறைகளுக்குப் பொருத்தமான விஞ்ஞான அணுகுமுறை சமூக விஞ்ஞானத் துறைகள் தொடர்பான அறிவுவகைகள் யாவற்றிற்கும் ஏற்றதல்ல எனும் கருத்து பின்னர் உணரப்பட்டது. தொகை சார் ஆய்வுகளின்போது விஞ்ஞான முறையை அனுசரித்து சில மாறிகளைப்
S அகவிழி ஜூன் 2014

புறவயமாக அவதானித்து புள்ளிவிபரவியற் பகுப்பாய்வு மூலம் அல்லது ஆய்வுகூடங்களில் செய்யும் பரிசோதனைகள் ஊடாக யதார்த்தங்கள் கண்டறியப்படும்.
வகுப்பறை, பாடசாலை முதலிய மட்டுப்படுத்தப்பட்ட சூழல்களில் எதிர்நோக்கப்படும் நடைமுறைப் பிரச்சினை களைத் தீர்த்தலை நோக்கமாகக் கொண்ட ஆய்வு செயல்சார் ஆய்வு எனப்படும். இத்தகைய ஆய்வில் ஆய்வாளர் செயலுறு நிலையில் உள்ள பங்குபற்றுனராக மாறவேண்டும். இவ்வாய்வின் போது அளவு சார்ந்த முறைகளையும் பண் புசார் ந்த முறைகளையும் பயன்படுத்தலாம். இங்கு ஆய்வாளர் தமது குறிக்கோள் எய்தப்படும் வகையில் தமது திட்டங்களை மாற்றியமைத்து வெவ்வேறு வழிவகைகளைக் கையாள முடியும். இதனால் ஆய்வின் போது குறித்த படிமுறைகளையோ அவற்றின் ஒழுங்குமுறையையோ குறித்துக்காட்ட முடியாது.
ஆய்வின் நோக்கம் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் விஞ்ஞானம் கற்கும் முகிழ்நிலை ஆசிரிய மாணவர்களின் பௌதிகவியற் (Physics) பாடத்தின் பொறியியல் (Mechanics) அலகில்
அறிவு, திறன் என்பவற்றை மேம்படுத்தல்.
ஆய்வுக் குறிக்கோள்கள்
1. யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில்
விஞ்ஞானம் கற்கும் முகிழ்நிலை ஆசிரிய மாணவர் களுக்கு பௌதிகவியற் பாடத்தின் பொறியியல் அலகில் அறிவு (Knowledge) குன்றியிருப்பதற்கான
காரணிகளை இனங்கண்டு மேம்படுத்தல்.
ii.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் விஞ்ஞானம் கற்கும் முகிழ்நிலை ஆசிரிய மாணவர் களுக்கு பௌதிகவியற் பாடத்தின் பொறியியல் அலகின் கொள்கைகளில் ('Theory) தெளிவை ஏற்படுத்தல். யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் விஞ்ஞானம் கற்கும் முகிழ்நிலை ஆசிரிய மாணவர் களுக்கு பௌதிகவியற் பாடத்தின் பொறியியல் அலகுடன் தொடர்புடைய செய்முறைத் (Practical)
திறன்களை விருத்திசெய்தல்.
iv.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் விஞ்ஞானம் கற்கும் முகிழ்நிலை ஆசிரிய மாணவர் களுக்கு பௌதிகவியற் பாடத்தின் பொறியியல் அலகைக் கற்பிக்கும் (Teaching) திறனை விருத்தி செய்தல்.
iii.
இலக்கிய மீளாய்வு
இலக்கிய மீளாய்வானது ஓர் ஆய்வின் முக்கியமான படிநிலையாகக் கொள்ளப்படுகின்றது. ஆய்வுக்கான

Page 14
அறிமுறைக் கோட்பாட்டுச் சட்டகமொன்றை உரு வாக்குவதற்கு இது மிகவும் உறுதுணையாக அமைகின்றது. இலக்கிய மீளாய்வானது ஆய்வுத் தலைப்பினை செம்மையாக்க உதவும். குறித்த ஆய்வுத் தலைப்புடன் தொடர்புபட்ட நூல்கள், கட்டுரைகள், பருவ இதழ்கள், சஞ்சிகைகள், கலைக்களஞ்சியங்கள், ஆவணங்கள், ஆய்வு அறிக்கைகள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடிதங்கள், வரலாற்றுக் குறிப்புக்கள், ஆய்வேடுகள், சுற்றறிக்கைகள் என அனைத்து வெளியீடுகளையும் தேடிக் கண்டுபிடித்துத் தேவையான குறிப்புக்களை எடுத்து விமர்சன ரீதியாக தர்க்கித்தல் இலக்கிய மீளாய்வு எனப் படும். இலக்கிய மீளாய்வின்போது கோட்பாட்டு ரீதியான (Theoretical) மீளாய்வு, அனுபவ ரீதியான (Empirical) மீளாய்வு என இரண்டிலும் கவனஞ் செலுத்துதல் வேண்டும்.
* கோட்ப்பாடு சார்ந்த்த இலக்க்கிய மீளாய்வு
தேசிய கல்வியியற் கல்லூரிகளைச் சேர்ந்த விஞ்ஞானப் பிரிவு முகிழ்நிலை ஆசிரிய மாணவர்களின் பௌதிகவியற் பாடத்தின் அடைவு குறைவாக இருப்பதற்கான பின்னணியை நோக்கும் போது, அதன் அடிப்படைக் காரணமாக அமைவது, அவர்கள் தமது பாடசாலைக் காலத்தில் பெற்றுக் கொண்ட கல்வியாகும். எனவே பாடத்தின் அடைவு குறைவாக இருப்பதற்கான முழுக்காரணமும் ஆசிரிய மாணவர்களைச் சாராது. அவர்கள் கற்றலில் ஈடுபட்டிருந்த போதுள்ள பாடசாலை சார்ந்த சூழல் இதில் பெரும் பங்கு வகித்திருக்க வேண்டும். அவர்களின் அடைவு குன்றியிருப்பதற்குப் பின்வரும் தனிப்பட்ட , சமூக, பொருளாதார, அரசியற் காரணிகள் காரணமாக
அமைந்திருக்கலாம்.
செயற்பாடுகள் தொடர்பான எழுத்துப் பரீட்சையில் (Structured Questions)
மாணவர் , அடைவு குன்றியிருத்தல் அல்லது நாட்டமின்மை.
A A
சூழல் தொடர்பான உடன்பாடான மனப்பாங்கு மாணவருக்கு குறைவாக இருத்தல்.
சுய தொழில், சுய வேலைவாய்ப்புக்கான திறன் குன்றிய நிலையில் இருத்தல்.
»"
மாணவரின் தொடர்பாடல் திறன் குன்றிய நிலையில்
இருத்தல். மாணவர் செயலூக்கம் குன்றிய நிலையில் இருத்தல். பரீட்சைப் பெறுபேறுகள் மட்டுமே மாணவர் திறமையைத் தீர்மானிப்பதாக இருத்தல். பாடத்திட்ட விரிவிற்கேற்ப பாடவேளைகள் பற்றாக்குறையாக இருத்தல்.

»
»
மா6
பம் A A
பாட.
Tண
A
»
கூடிய மாணவர் தொகையும் உதவி ஆளணிப் பற்றாக்குறையும். மாணவர் ஒத்துழைப்பு குறைவாக இருத்தல்.
பெற்றோரின் ஒத்துழைப்பின்மை.
பாடசாலையில் வளப்பற்றாக்குறை காணப்படுதல்.
»
ஆய்வுகூட நேர அட்டவணையின் பொருந்தாத் தன்மை. இன்றைய தொழிலுலகிற்கு ஏற்ப மாணவர்கள் வழிகாட்டப்படாமை. ஆசிரியர் மீதான வேலைப்பளு. ஆசிரியர்களின் இடமாற்றத்தினால் பாடம்
பூர்த்தியாக்கப்படாமை.
»
மாணவர்களின் விஞ்ஞான ஆசிரியர் வருடாவருடம்
அல்லது அடிக்கடி மாற்றப்படல்.
புதிய மாற்றங்கள், தொழிநுட்பங்கள் பற்றிய அறிவு
ஆசிரியருக்குக் குறைவாக இருத்தல். ஆசிரியர்களுக்கான போதிய பயிற்சிப் பட்டறைகள் ஒழுங்குசெய்யப்படாமை.
மேற்படி பிரச்சினைகள் கருத்தில் கொள்ளப்பட்டுத் தீர்க்கப்பட்டால் தான் ஆசிரிய மாணவர்களின் பௌதிகவியல் பாடம் தொடர்பான விருப்பு அவர்கள் மத்தியில் கட்டியெழுப்பப்படும். செயற்பாட்டுக் கல்வியின் அவசியம் பற்றி தனபாலன் & இராஜேஸ்வரன் (2003) தமது புத்தகத்தில், "பல்ேேவறுபட்ட தொழிநுட்ப மாற்றங்களும் அபிவிருத்தித் திட்டங்களும் மேம்படுத்தப்பட்டு வருகின்ற இன்றைய உலகில் பெரும் பங்கு வகிப்பது விஞ்ஞானமாகும். இவ்வாறான புதிய புதிய மாற்றங்களைப் படைத்து வருகின்ற விஞ்ஞான அறிவினை இளைய சமுதாயத்தினர் அறிந்திருத்தல் அவசியமாகையால் அது பாடசாலைக் கலைத்திட்டத்த்தில் புகுத்தப்பட்டுள்ளது. நடைமுறை வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்திருக்கும் இப்பாடத்தின் அநுபவங்க; டான கற்றலுக்கு செயற்பாடுகள் பிரதானமாக அமைகின்ற்றன.'' எனக் குறிப்பிட்டிருப்பது, நடைமுறை வாழக்கையுடன் பின்னிப் பிணைந்திருக்கும் விஞ்ஞான பாடத்தை செயற்பாடுக்கூடாக கொண்டு செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகும். விஞ்ஞான பாடத்தை செயற்பாடுகூடாகக் கற்கும் போதுதான் போதிய விளக்கம், தெளிவு என்பன கிடைக்கப்பெறும்.
மாக
புதிய விஞ்ஞானக் கலைத்திட்ட மறுசீரமைப்புப் பற்றி தேசிய கல்வி நிறுவகம் (2010) தனது ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி - விஞ்ஞானம் - தரம் 9 எனும் வெளியீட்டில், "கடந்த காலங்களில் நாம் பரிச்சயம் பெற்றிருந்த வந்த பின் காக்கும் ' அணுகுமுறையிலிருந்து (Reactive Approach) விலகி, 'வருமுன் காக்கும்'
அகவிழி ஜூன் 2014 2

Page 15
அணுகுமுறையின் (Proactive Approach) பால் செல்வதற்கு இப் புதிய கலைத் திட்ட மறுசீரமைப்பு எமக்கு வாய்ப்பபளித்துள்ளது." எனக் குறிப்பிட்டுள்ளது. மேற்படி விடயத்தை தேசிய கல்வி நிறுவக, விஞ்ஞான தொழிநுட்ப பீட, உதவிப் பணிப்பாளர் நாயகமாகக் (கலைத்திட்ட அபிவிருத்தி) கடமையாற்றும் தேசமான்ய, கலாநிதி இந்திரா லிலாமணி கினிகே அவர்கள் வழங்கியுள்ளார்கள். மேற்படி கூற்றுக்கமைய நாம் செயற்பட்டிருந்தால் மேலுள்ள ஆய்வுப் பிரச்சினை அதிகம் எழுந்திருக்காது.
அதாவது பிரச்சினை தோன்றிய பின்னர் அதற்குத் தீர்வைத் தேடுவதை விட பிரச்சினை தோன்ற முன்னரே அது தோன்றாமலிருக்க தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு செயற்பட்டிருப்பின் தேசிய கல்வியியற் கல்லூரி விஞ்ஞானப் பிரிவு முகிழ்நிலை ஆசிரிய மாணவர்களின் பௌதிகவியற் பாடத்தின் பொறியியற் பகுதியின் அடைவு குறைந்திருக்க வாய்ப்பில்லை. இதற்குத் தீர்வாக, கற்றல் - கற்பித்தல் செயன்முறையை வினைத்திறன் மிக்கதாக்கிக் கொள்வதற்கு தேவையான செயற்பாடுகளை ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டவாறு முன்னெடுத்தால் கூடிய பயன் கிடைக்கும்.
பெளதிகவியற் பாடக் கற்றல் - கற்பித்தல் செயன்முறையில் பண்புத்தர் விருத்தியை ஏற்படுத்தும் நோக்கில், ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியை உருவாக்கிய தேசிய கல்வி நிறுவகம் (2010) தரம் 9 இற்கான ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியில், “வகுப்ப்பறைக்குள்ளும் அதற்கு வெளியேயும் மாணவர்களின் அறிவுவிருத்திச் செயற்பாட்டிற்கு வழிகாட்டுவோர் ஆசிரியர்களே. மேலும், பாடத்திட்டத்தால் எதிர் பார்க்கப்படும் தேர்ச்சி மட்டங்களை நோக்கி மாணவர்களை வழிநடத்தும் முக்கிய நபரும் ஆசிரியரேயாவார். இந் நோக்கத்தை அடைவதற்கு இவ் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி உங்களுக்குக் கை கொடுக்கும்." எனவுள்ளது.
ஓர் அர்ப்பணிப்புள்ள ஆசிரியரொருவராலேயே சிறந்ததொரு விஞ்ஞானத் தொழிநுட்ப அறிவுகொண்ட மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும். இதற்கு ஒவ்வொரு விஞ்ஞான ஆசிரியரும் தனது கடமையைச் சரியாகச் செய்யவேண்டும். விஞ்ஞான பாடத்தைக் கற்பிக்கும் போது, தனக்குத் தெரிந்த பகுதிகளை மட்டும் போதிக்கும் ஓர் நிலைமை பரவலாகக் காணப்படுகின்றது.
அகவிழி ஜூன் 2014
இங்கு கூடிய பங்கு உயிரியல் பாடப் பகுதிகளும் இரசாயனவியல் பாடப் பகுதிகளும் கற்பிக்கப்படும் அதேவேளை பௌதிகவியற் பாடப்பகுதி புறக்கணிக்கப் படுகின்றது. இதற்கான பின்புலத்தை ஆராய்ந்து பார்த்தால் அவ் ஆசிரியர்களில் பெரும்பாலானோர் உயிரியல்

பாடத்தை பல்கலைக்கழகங்களில் பயின்றவர்களாகவோ அல்லது பயிற்றப்பட்டவர்களாகவோ இருப்பதைக் காணலாம்.
எதிர்கால அறைகூவல்களை வெற்றிகரமாக எதிர் கொள்ளத்தக்க பிரஜைகளை நாட்டுக்கு அளிப்பதே நிலைமாற்ற ஆசிரியர் வகிபாகத்தின் (Transformation Role) தாற்பரியமாகும். இந்த ஆசிரியர் வகிபாகத்தை சீராக நடைமுறைப்படுத்துவதற்காக மாணவர் மைய (Student Centered) தேர்ச்சிகளை அடிப்படையாகக் கொண்ட (Competency Based), செயற்பாடுகளின்பால் திசைமுகப் படுத்தப்பட்ட (Activity Oriented) அணுகு முறையைக் கொண்ட ஒரு விஞ்ஞானக் கலைத்திட்டமே இன்று நடைமுறையிலுள்ளது. தேசிய கல்வி நிறுவகம் (2010) தனது கணிப்பீடும் மதிப்பீடும் பற்றிய அறிமுகத்தில், "கணிப்பீட்டில் ஈடுபட்டுடுள்ள்ள ஆசிரியர்களுள் தமது மாணவர் தொடர்ப்பாக வழங்கத்தக்க வழிகாட்டல்க்கள் இருவகைப்படும் பின்னூட்டல் (Feedback), முன்முகவூட்டல் (Feed forward) என்பனவே அவையாகும்.” மேற்படி அறிமுக விடயம் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி - விஞ்ஞானம் - தரம் 9 இல் இடம்பெற்றுள்ளது.
மாணவர்களின் நலிவுகளையும் இயலாமைகளையும் கண்டறிந்தவுடன் அவர்களது கற்றல் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்வதற்காக பின்னூட்டலும், மாணவரது ஆற்றல்களையும் இயலுமைகளையும் இனங்கண்டவுடன் அத் திறன்களை மேலும் விருத்திசெய்து கொள்வதற்காக முன்முகவூட்டலும் வழங்கப்பட வேண்டும்.
முக்கியமாக சில ஆண் ஆசிரிய மாணவர்களிடம் இலத்திரனியல், மின்னியல், பொறியியல் போன்ற துறைகளில் அதிக நாட்டமிருக்கும். இவ்வாறானவர்களை இனங்காண வேண்டியது ஆசிரிய கல்வியியலாளரினது பொறுப்பாகும். அத்துடன் அவர்களை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி, வலுவூட்டி, தட்டிக்கொடுக்க வேண்டிய கடப்பாடும் ஆசிரிய கல்வியியலாளருக்கு இருக்க வேண்டும். 'பௌதிகவியற் பாடத்தின் அடைவை மேம்படுத்தல்' எனும் நோக்கத்தினை அடைவதற்குப் பொருத்தமான ஆய்வு முறையாக செயல்வழி ஆய்வு (Action Research) தெரிவு செய்யப்பட்டுள்ளது. தனபாலன் R. இராஜேஸ்வரன் (2003) தமது புத்தகத்தில் செயல்வழி ஆய்வின் நன்மைகள் பற்றிக் குறிப்பிடுகையில், "செயல்வழி ஆய்வின் நன்மைகளாக பின்வருவன உள்ளன. 1) இதன் செயற்பாடு இலக்கை மையமாகக் கொண்டது. 2) நடைமுறைப் பிரச்சினை பற்றிய தெளிவான ஒரு
விளக்கத்தை இது வழங்கும். 3) இது கற்றல் கற்பித்தல் நுட்பங்களை மேம்படுத்தும்.

Page 16
4)
சU
சுய கணிப்பீடு, சுய கட்டுப்பாடு, சுய நம்பிக்கை, சுய அறிவு, தர்க்கரீதியான நியாயித்தல் என்பவற்றை
இது ஊக்கப்படுத்தும். 5)
இது வகுப்பறை முகாமைத்துவத்தை மேம்படுத்தும். எனப் பட்டியற்படுத்தப்பட்டுள்ளது.
மேற்படி விடயம் அப்போதைய யாழ். பல்கலைக்கழக கல்வியியற் துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் சபா ஜெயராசா அவர்களால் எழுதப்பட்டுள்ளது. அவரின் கருத்துப்படி செயற்பாட்டை அடிப்படையாகக் கொண்ட செயல்நிலை ஆய்வானது பொருத்தமான உண்மையான நிலைமையின் நம்பகத்தன்மையைத் தேட உதவும். அத்துடன் நடைமுறைப் பிரச்சினை பற்றிய தெளிவான பார்வையையும் தெளிவான விளக்கத்தையும் வழங்கக்கூடியது. மேலும் குறிப்பிட்ட நிலைமைக்கும் சூழலுக்கும் பொருந்தக்கூடியவாறு கற்றல் - கற்பித்தல் நுட்பங்களை மேம்படுத்த உதவும்.
செயல்நிலை ஆய்வு மூலமாக சுய கணிப்பு, சுய கட்டுப்பாடு, சுய நம்பிக்கை, சுயமான அறிவு, "வலிமை, மற்றையவர் கள் பற்றிய நேரான மனப்பான்மை, ஒன்றிணைந்து செயற்படும் சமூகமயமாக்கற் திறன், தர்க்க சிந்தை, எண்ணக்கருவைக் கொண்டு அவதானித்தவற்றை விளக்கும் திறன், வகுப்பறை முகாமைத்துவப் பண்புகள் போன்றன வளர்த்தெடுக்கப்படும். அத்துடன் நேரடி அனுபவமூலமான கற்றலை செயல் நிலை ஆய்வு மேம் படுத்தும் மேற்படிக் காரணங்களுக்காகவும் செயல்நிலை ஆய்வு முறை இவ்வாய்வைச் செய்யத் தெரியப்பட்டுள்ளது.
இக் காலத்தில் சமூகத்தின் தேவைகளும் அமைப்பும் அடிக்கடி மாறி வருகின்றன.
அறிவியலிலும் விரைவான முன்னேற்றத்தையும், புதிய செய்திகள் மலர்ந்து வருவதையும் காண்கிறோம். சுமார் பத்து ஆண்டுகளில் அறிவியல் அறிவு இரட்டிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே நடைமுறையிலுள்ள கலைத்திட்டமானது குறைந்தது ஐந்து ஆண்டுக்கொரு முறை மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இந்நிலையில் அறிவியற் பாடமான பௌதிகவியலைக் கற்பிக்கும் ஆசிரியர் மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப தம்முடைய அறிவைப் பெருக்கிக்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. இதுபற்றி பன்னீர்ச்செல்வம் (2002) எழுதிய புத்தகத்தில், “எவ்வாறு தொடர்ந்து எரிந்து கொண்டிராத விளக்கு, மற்றொரு விளக்கினை ஏற்றுவிக்காதோ, அது போன்று தொடர்ந்து கற்றுக்கொண்டிராத ஆசிரியர் உண்மையிலேயே மற்றவருக்குக் கற்ப்பிக்கவும் இயலாது. (A teacher can never truly teach unless he is still learning himself. A lamp can never light another unless it continuous to burn its

Own flame)" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி கூற்று இந்தியக் கவிஞரான இரவீந்திரநாத் தாகூரால் கூறப்பட்ட கருத்தாகும். இங்கு ஆய்வுக்குட்படுத்தப்பட்ட யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி முதலாம் வருட தமிழ் மொழிமூல விஞ்ஞானப் பிரிவு முகிழ்நிலை ஆசிரிய மாணவர்களின் பௌதிகவியற் பாடத்தின் அடைவு குறைவாக இருப்பதற்கு அவர்கள் தொடர்ந்து கற்றுக்கொண்டிராமையும் ஒரு காரணமாக அமைந்திருக்கும். ஆசிரியராக தொழில் புரியப்போகும் எவரும் தொடர்ந்து கற்றுக்கொண்டிருக்க வேண்டியது அத்தியவசியமானதாகும்.
விஞ்ஞானம் சம்பந்தமான புத்தகங்கள் அதிகம் ஆங்கில மொழியில் இருப்பதன் காரணமாக ஆங்கிலத்தைக் கட்டாயம் கற்கவேண்டிய நிலை 1970களின் முன் காணப்பட்டது. சுய மொழிக் கல்வி பற்றி சந்திரசேகரம் மற்றும் கருணாநிதி (2006) ஆகியோரின் தகவலின்படி, "கலைத்துறை மற்றும் விஞ்ஞானத்துறைப் பாடங்களுக்கான கலைச்சொல் அகராதிகள் 1955 - 1965 களுக்கு இடையில் ஆக்கப்பட்டமை சுய மொழிக் கல்வியில் ஏற்பட்ட முக்கிய நிகழ்ச்சியாகும். இதன்பின் 1970 களில் க.பொ.த உயர்தரக் கல்வி நிலையில் விஞ்ஞான பாடங்கள் அனைத்தும் சுய மொழிகளில் கற்பிக்கப்படத் தொடங்கியது." என உள்ளது குறிப்பிடத்தக்கது.
படங்கள் ஊடாக விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட விடயங்களை விளக்கும் போது காட்சிக்கும் கருத்துக்குமான எளிமை வரைபடத்தில் புலப்படுத்தப்பட வேண்டும். புகழேந்தி (1997) எழுதிய நூலில், "பிறமொழி அறிவியல் நூல்களோடு ஒப்பிடுகையில் தமிழ் நூல்களில் ஆளப்பெற்றுள்ள வரை படங்களில் எளிமையின்மை, நுட்பமின்மை, வரைபடக் குறைவு போன்ற நிறை வின்மைகள் காணப்படுகின்றன.'' எனக் குறை கூறப் பட்டுள்ளது. ஆசிரிய மாணவர்களுக்கு வழங்கப்படும் விஞ்ஞானம் சார் படங்கள் எளிமையாகவும் நுட்பம் நிறைந்ததாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் சரியான விளக்கம் அதாவது புலக்காட்சி கிடைக்கும். ‘Identification of some learning difficulties of Physics concepts . in FIELDS among G.C.E.(A/L) Students and suggested Recommendation to Teachers' vDk; jiyg;igf; nfhp;l Baskaran (2001) தனது ஆய்வு முடிவில், பௌதிகவியல் ஆசிரியர் களுக்குப் பின்வரும் சிபார்சுகளைச் செய்கின்றார். "மாணவர்களின் தவறான எண்ணக் கருவாக்கங்களை கண்டறியலாம், தவறான எண்ணக்கருவாக்கங்களை திருத்தியமைத்துக்கொள்ள மாணவர்களுக்கு உதவும் , ஆய்வுகூடப் பரிசோதனைகளை சரியாகச் செய்ய வழிப் படுத்தும் கற்பித்தல் உபகரணமாக எண்ணக்கருப் 2 படத்தைப் பயன்படுத்த வழிவகுக்கும்." சிறந்த பௌதிகவியல் ஆசிரியரானவர் மாணவர்களின் பிழையான
அகவிழி ஜூன் 2014 2

Page 17
எண்ணக்கருக்களை இனங்காண்பதுடன் அவற்றை நீக்க உதவவேண்டும். மேலும் ஆய்வுகூடப் பரிசோதனைகளைச் செய்ய மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அத்துடன் கற்பித்தல் உபகரணமாக எண்ணக்கருப் படத்தைப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு ஓர் ஆசிரியர் செயற் படுவாரேயானால் மாணவர்களின் பௌதிகவியல் அடைவு மட்டம் நல்ல நிலையில் இருக்கும்.
ஆய்வுசார் இலக்கிய மீளாய்வு
ஓர் ஆசிரியரின் பாடவிடயம் சம்பந்தமான அறிவு அவரின் கற்பித்தலில் பாரிய செல்வாக்கைச் செலுத்தும் என்பதற்கு ஆதாரம் சேர்க்கும் விதமாக இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த Maher Hashweh (2002) தனது ஆய்வு அறிமுகத்தில், "விஞ்ஞான ஆசிரியர்களின் உயிரியல் மற்றும் பௌதிகவியல் பாட அறிவை விபரிப்ப்பதே இவ் ஆய்வின் நோக்கமாகும் விஞ்ஞான ஆசிரியர்களின் அறிவுறுத்தலுக்கான திட்டமிடல், உருவகப்படுத்தப்பட்ட போதனை என்பவற்றைப் பற்றி கண்டறிய இவ்வாய்வு செய்யப்படுகின்றது. இவ்வ்வாய்வில் அனுபவம் வாய்ந்த்த ஆறு இடைநிலை வகுப்பு ஆசிரியர்களும் பௌதிகவியலில் சிறப்புப்பெற்ற மூன்று ஆசிரியர்களும் உயிரியலில் சிறப்புப்ெெபற்ற மூன்று ஆசிரியர்களும் பங்குபற்றினர்." எனக் குறிப்பிட்டுள்ளார். கற்பித்தலின் போது பாட விடய அறிவு எவ்வளவு தூரம் தாக்கம் செலுத்துகின்றது என்பதை அறிய மேற்படி ஆய்வு, சென் பிரான்சிக்கோ, கலிபோனியாவிலுள்ள American Educational Research Association ஆல் நடாத்தப்பட்ட வருடாந்த ஒன்றுகூடலின் போது வாசிக்கப்பட்டது.
கற்பித்தலின் போது பௌதிகவியலின் எண்ணக் கருக்களை இலகுபடுத்தி தெளிவாக மாணவர்களுக்கு கொடுக்கவேண்டும். இதற்குப் பொருத்தமான கற்பித்தல் சாதனங்கள் பயன்படுத்தப்பட வேண்டும். மேற்படி விடயத்துடன் ஒன்றியதாக Scotland நாட்டைச் சேர்ந்த Christine Howe (2002) தனது ஆய்வில், “விஞ்ஞான முகிழ் நிலை ஆசிரியர்களினதும் பௌதிகவியல் ஆசிரியர்களினதும் ஒலியியல் சார் எண்ணக்கருவின் அறிவு மட்டத்தை அளவிடுதல் இவ்வாய்வின் நோக்கமாகும். இதற்கு தனியாள் ஆய்வுமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது. வினாக்கொத்து மூலமாக தரவுகள் சேகரிக்கப்பட்டன. தொகை ரீதியாகவும் பண்பு ரீதியாகவும் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன." ("The study has been focused on the basis of determining the knowledge levels of prospective
Science and Physics teachers on basic concepts on sound. v The design of the research is a case study. Data were collected
from the means questionnaires. The data were analyzed both qualitatively and quantitatively') என்றவாறு குறிப்பிடுகின்றார். கற்றல் - கற்பித்தல் செயன்முறைக்குப் பயன்படுத்தப்படும்
அகவிழி ஜூன் 2014

கற்பித்தல் சாதனங்களின் வினைத்திறனை மதிப்பிடும் நோக்கில் மேற்படி ஆய்வு செல்கிறது.
விஞ்ஞான முகிழ்நிலை ஆசிரியர்களின் பௌதிக வியலிலுள்ள பொறியியல் பாட அடைவு மட்டத்தை, இடையிடையே அளப்பதால் அவர்களின் தேவைகளை எளிதில் இனங்கண்டு கொள்ளலாம். இந்தவகையில் பௌதிகவியலிலுள்ள ஒலியியல் பாடம் சம்பந்தமான
அடிப்படை எண்ணக்கரு, விஞ்ஞான முகிழ் நிலை ஆசிரியர்களிலும் பௌதிகவியல் ஆசிரியர்களிலும் எவ்வளவில் காணப்படுகின்றது என்பதை அளவிடும் நோக்கில் 'Knowledge levels ofprospective science and physics teachers on basic concepts on sound' எனும் தலைப்பில் துருக்கியைச் சேர்ந்த Mualla மற்றும் Merve (2009) ஆகியோரால் செய்யப்பட்ட ஆய்வில், "பொதுவான கற்பித்தல் கொள்கைகளின் அடிப்படையில் இலட்சிய உலக கற்பித்தல் சாதனங்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றது என்பதே இவ்வாய்வின் கருதுகோளாகும் மேற்படி கற்ப்பித்தல் கொள்ைைககள் இல்லாத சந்தர்ப்பத்தில் கட்டுப்பாட்டு அனுபவ ஆய்வுகளைப் பயன்படுத்தி கற்பித்தல் சாதனங்கள் மதிப்பிடப்படும்." எனக் காணப்படுகின்றது.
மேலுள்ள ஆய்வைச் செய் வதற்காக விடய ஆய்வுமுறை அவர்களால் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இங்கு தகவல்கள் வினாக் கொத்துக்களின் உதவியுடன் திரட்டப்பட்டு, பண்பறி முறையையும் அளவறி முறையையும் பாவித்து அத் தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்த Freire மற்றும் Chorao & Sanches, (2002), ஆகியோர் Elements for a typology of teachers' conceptions of physics teaching எனும் தலைப்பில் செய்த ஆய்வில், “ஆய்வுகூடச் செய்துகாட்டல்களுக்கும் பரிசோதனைகளுக்கும் கதிர்வீச்சு பௌதிகவியற் கல்வி உறுதுணையாக இருக்கும்” என்றவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பௌதிகவியலை எவ்வாறான தந்திரோபாயங்களைக் கையாண்டு ஆசிரியர்கள் கற்பிக்கின்றார்கள் என்பது பற்றி இவ்வாய்வில் கவனஞ் செலுத்தப்பட்டுள்ளது. பௌதிகவியற் பாடத்தை எதுவித பரிசோதனைகளுமின்றிக் கற்பிப்பது, ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாது என்பதற்கு ஒப்பானதாகும். பரிசோதனைகள் செய்யப்படுவதனூடாகவே பௌதிகவியல் எண்ணக்கருக்களை விளங்கிக்கொள்ள முடியும். 'A special Concept in experimental radiation physics education' எனும் தலைப்பில் எகிப்து நாட்டைச் சேர்ந்த Kany (2002), என்பவர் தனது ஆய்வில், “இடைநிலைப் பாடசாலை ஆசிரியர்களின் பௌதிகவியலைக் கற்பிக்கும் எண்ணக்கருவாக்கத்தைக் கண்டறிவதே இவ்வாய்வின் நோக்கமாகும்.'' என எழுதுகிறார். அதாவது, பௌதிகவியற் கல்வியானது கட்டாயமாக ஆய்வுகூடத்தில் செய்துகாட்டல்கள் மூலமும், பரிசோதனைகள் மூலமுமாகக் கற்கவேண்டியதொன்றாகும்.

Page 18
ஆய்வு முறையியல் ஆய்வில், ஆய்வு செய்யப்படும் தொகுதியின் எல்லா அலகுகளையும் கொண்ட தொகுதி, குடித்தொகை (Population) எனப்படும். அல்லது, ஆய்வு செய்வதற்குச் சாத்தியமான சகல அவதானிப்புக்களின் முழுத்தொகையை குடித்தொகை எனக் கூறலாம். இக் குடித்தொகையிலிருந்து குடியைப்பற்றிய ஆய்வுக்காக தெரிவு செய்யப்படும் ஒரு பகுதியே மாதிரி (Sample) எனப்படும். அதாவது, குடியொன்றிலிருந்து அதன் தன்மையை அறிய ஒரு சில உறுப்புக்களை எடுத்து அமைக்கப்படும் தொகுதி மாதிரியாகும். மாதிரிகள் தெரிவுசெய்யப்படும் செயல் ஒழுங்கே மாதிரி எடுப்பு (Sampling) ஆகும்.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியைச் சேர்ந்த விஞ்ஞானப் பிரிவு முகிழ்நிலை ஆசிரிய மாணவர்கள் அனைவரும் இங்கு குடித்தொகையாகக் கொள்ளப்படுவர். விஞ்ஞானப் பிரிவில் முதலாம் வருடத்தில் நான்கு கற்கை நெறிகளும் இரண்டாம் வருடத்தில் நான்கு கற்கை நெறிகளுமாக மொத்தம் எட்டு கற்கை நெறிகளில் மாணவர்கள் உள்ளனர். இக் குடித் தொகையிலிருந்தே
ஆய்வுக்கான மாதிரி தெரிவு செய்யப்படவுள்ளது.
மாதிரியெடுப்பு முறையும் மாதிரியெடுப்பு முறைத் தெரிவுக்கான நியாயிப்பும் (Sampling Methodand Justification for the Sampling Method) மாதிரி எடுத்தல் பல முறைகளில் செய்யப்படலாம். மாதிரி எடுப்பு முறையின் தெரிவானது மாதிரி எடுப்பின் நோக்கத்தினாலும், குடியின் தன்மையினாலும் தீர்மானிக்கப்படும். மாதிரியெடுத்தலில் பிரதானமாக இரண்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன. நிகழ்தகவு சார் மாதிரித் தெரிவு (Probability Sampling), நிகழ்தகவு சாரா மாதிரித் தெரிவு (Non - Probability Sampling) என்பனவே அவையாகும். "யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி விஞ்ஞானப் பிரிவு முகிழ்நிலை ஆசிரிய மாணவர்களின் பௌதிகவியற் பாடத்தின் பொறியியற் பகுதியின் அடைவை மேம்படுத்தல்" எனும் ஆய்வை மேற்கொள்ள நிகழ்தகவு சார் மாதிரித் தெரிவு (Probability Sampling) முறையே தெரிவுசெய்யப்பட்டுள்ளது. ஏனெனில் இம்முறையானது சகலருக்கும் தெரிவுசெய்யப்பட சம வாய்ப்பை வழங்கும் என்பதனாலாகும். இவ் நிகழ்தகவு சார் மாதிரித் தெரிவிலும் எளிய எழுந்தமான மாதிரித் தெரிவு, முறைமைசார் எழுந்தமான மாதிரித் தெரிவு என இரு வகைகளுண்டு. மேற்படி ஆய்வுக்கு இரண்டாவதாகவுள்ள முறைமைசார் எழுந்தமான மாதிரித் தெரிவே பொருத்தமானது. எளிய எழுந்தமான மாதிரித் தெரிவு முறையில் ஒருவர் இரண்டு தடவைகள் தெரிவுசெய்யப்பட வாய்ப்பிருப்பதனால் (மீள்தெரிவு வாய்ப்புள்ள முறைமைசார் எழுந்தமான மாதிரித் தெரிவு) இம் முறையைத் தவிர்த்து மற்றைய முறையான முறைமைசார் எழுந்தமான மாதிரித் தெரிவு

முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இவ் முறைமைசார் எழுந்தமான மாதிரித் தெரிவிலும் அடுக்கமைப்புசார் மாதிரித் தெரிவு, கொத்தணிசார் மாதிரித் தெரிவு, பல் - கட்ட மாதிரித் தெரிவு என மூன்று பிரிவுகளுண்டு. இதில் முதலாவதாகவுள்ள அடுக்கமைப்புசார் மாதிரித் தெரிவு முறையே மேற்படி ஆய்வுக்கு மிகவும் பொருத்தமானதாகவிருக்கும்.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல் லூ ரியிலுள்ள விஞ்ஞானப் பிரிவில் முதலாம் வருடத்தில் நான்கு கற்கை நெறிகளும், இரண்டாம் வருடத்தில் நான்கு கற்கை நெறிகளுமாக மொத்தம் எட்டு கற்கை நெறிகளில் மாணவர்கள் உள்ளனர். ஒவ்வோர் கற்கை நெறிகளிலுமுள்ள மாணவர்களின் எண்ணிக்கை சமனற்றது. பல்வேறு பருமன்கள் கொண்ட துணைக்குழுக்கள் பல இருக்கும்போது அடுக்கமைப்புசார் மாதிரித் தெரிவு முறையே பாவிக்கப் பொருத்தமாக இருக்கும். மற்றைய இரு முறைகளிலும் எல்லாக் கற்கை நெறியிலிருந்தும் மாணவர்களை விகிதாசாரத்திற்கு ஏற்ப தெரிவுசெய்ய
முடியாது.
அடுக்கமைப்புசார் மாதிரித் தெரிவு முறையின் கீழ் மாதிரியைத் தெரிவு செய்யும் போது சீரான விகித அடுக்கமைவு, சீரற்ற விகித அடுக்கமைவு என இரு வழிகளைப் பயன்படுத்த முடியும். இதில் சீரான விகித அடுக்கமைவு முறையே இங்கு பயன்படுத்தப்படவுள்ளது. ஏனெனில், இம் முறையினால் ஒவ்வோர் கற்கை நெறிகளிலிருந்தும் மாணவர் எண்ணிக்கையின் விகிதாசாரத்துக்கு ஏற்பத் தெரிவு இடம்பெறும். அதாவது ஒவ்வோர் பிரிவிலிருந்தும் தெரிவுசெய்யப்படும் பின்னம் சமனாகப் பேண இம்முறை சிறந்தது. சீரான விகித அடுக்கமைப்பு நுட்பத்தைப் பொறுத்தவரையில் மாதிரியின் அங்கத்தவர் அனைவருக்கும் தெரிவுசெய்யப்படும் நிகழ்தகவு சீராக இருந்துள்ளது என்று கருதப்பட முடியும்.
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் கணிதப் பிரிவு, விஞ்ஞானப் பிரிவு என இரு பிரிவுகளாக மாணவர்கள் இருந்தாலும், இரு பிரிவினரும் விஞ்ஞானம், கணிதம் ஆகிய இரு பாடங்களையும் கட்டாயமாகக் கற்று அவ்விரு பாடங்களையும் பாடசாலைகளிலுள்ள இடைநிலை வகுப்புக்களில் கற்பிக்கவும் வேண்டும். இதனடிப்படையில் இரு பிரிவினருக்கும் பௌதிகவியல் பாடம் கட்டாய பாடமாகும். எனவே விஞ்ஞானப் பிரிவு மாணவர்களுடன் கணிதப் பிரிவு மாணவர்களும் சேர்த்து 9
ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
தொடரும் ...
அகவிழி ஜூன் 2014 (S
இது # ன 7 8 9லகம்
கார எம்.

Page 19
தொடருறு ஆசிரியர் கல்வியிலும் வாண்மை விருத்தியிலும் ஆசிரிய மத்திய நிலையங்களின் பங்களிப்பு
'அபூபக்கர் நளீம் .
வருகை விரிவுரையாளர், இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
அறிமுகம்
இன்று ஆசிரியத் தொழில் உலகளாவியரீதியில் மிகுந்த முக்கியத்துவமுடைய வாண்மைத்துவமிக்க தொழிலாக உயர்ந்த நிலையில் நோக்கப்படுகின்றது. இலங்கையைப் பொறுத்தவரை இன்று ஆசிரியர்கள் தமது வாண்மைவிருத்தியை ஏற்படுத்திக் கொள்வதற்கு பெருமளவு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். ஆசிரியர் தொழில் வாண்மை விருத்தியுடன் நெருங்கிய இடைவினை கொண்ட சேவையாக நோக்கப்படுகின்றது. இதற்காக இன்று பல்வேறு நிறுவனங்களினூடாக ஆசிரிய தொழில்சார் வாண்மை விருத்தியை இலக்காகக் கொண்ட பல்வேறு பயிற்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகள், தேசிய கல்வியியற் கல்லூரிகள், தேசிய கல்வி நிறுவகம், பல்கலைக் கழகங்களின் கல்விப் பீடங்கள், ஆசிரிய மத்திய நிலையங்கள் எனப் பல நிறுவனங்கள் ஆசிரியர்களுக்கான வாண்மை விருத்தியை ஏற்படுத்தும் கற்கை நெறிகளையும், பயிற்சிகளையும் வழங்குகின்றன.
தொடருறு பயிற்சி நெறிகளை வழங்குவதற்கு உரு வாக்கப்பட்ட பிரதானமான நிறுவனம்தான் ஆசிரிய மத்திய நிலையங்களாகும்.
இம்மத்திய நிலையங்களில் வழங்கப்படும் பயிற்சிப் பணிகள், நடைமுறைகள், பணிகள் மீதான விமர்சனங்கள்
தொடர்பாக பிரதானமாக இங்கு ஆராயப்படுகின்றன.
தொடருறு ஆசிரியர் கல்வி
8 அகவிழி ஜூன் 2014
தொடர்ந்து கற்றல், கற்றுக் கொண்டே இருத்தல், அறிவைப் புதுப்பித்தல் ஆகியன ஆசிரியர்களுக்கு மிகவும் அவசியமாகும். புதியவற்றைக் கற்பதுடன் பயிற்சியும் அவ்வப்போது வழங்கப்பட்டால் ஆசிரிய பணியினை செவ்வனே செய்ய ஊக்கமும் உறுதியும் கிடைக்கும். இந்த அடிப்படையில் உருவானதே தொடருறு ஆசிரியர் கல்வியாகும்.
ஆசிரியர்கள் தமது தொழில் வாண்மையை தொடர்ச்சி யாக விருத்தி செய்து கொள்வதற்கான நிகழ்ச்சித்திட்டங்கள்

தேவைப்படுகின்றன. இத்தேவையைப் பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்ட ஓர் எண்ணக் கருவாக்கமே தொடருரு
ஆசிரிய கல்வி என்று குறிப்பிடலாம்.
சேவையிலுள்ள ஆசிரியர்களின் தொழில் சார் தகைமைகளை மேலும் மேம்படுத்துவதற்காக வழங்கப்படும் கல்வியே தொடர் ஆசிரியர் கல்வி ஆகும். இது சேவைக் காலப் பயிற்சி, தொடருறு ஆசிரியர் கல்வி போன்ற பதங்களாலும் குறிக்கப்படுகிறது.
தொடருறு ஆசிரியர் கல்வியானது தற்போது பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அவ்வப்போது தேவைக்கேற்ப வழங்கப்படும் கல்வியாகும். ஆசிரியர்களின் தகைமையை மேலும் மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ள கற்கை நெறிகள் தொடருறு ஆசிரியர் கல்வியில் அடங்கும். இக்கற்கை நெறிகள் குறுங்கால சேவைக்காலப் பயிற்சியாகவும் இருக்கலாம். அல்லது மேலும் சான்றிதழ் பெறுவதற்கான நெடுங்காலக் கற்கை நெறியாகவும் அமையலாம்.
சமகாலத்தில் ஆசிரிய தொழில் தொடர்பாக ஏற்படுகின்ற விருத்திப் போக்குகள் பொதுவாக அறிவியல் விருத்தி நடைமுறைகள் என்பவற்றை ஆசிரியர்கள் உள்வாங்கிச் செயற்படும் போதே அவர்கள் அந்தந்த காலப்பகுதிக்குப் பொருத்தமான தேர்ச்சியையுடைய ஆசிரியர்களாக சேவையாற்ற முடியும். என்பது வெளிப் படையான உண்மையாகும். எனவே தொடருறு ஆசிரியர் கல்வி நிகழ்ச்சித் திட்டங்கள் இவ்வாறான தொடர்ச்சியான ஆசிரியர்களின் தொழில் வாண்மை விருத்தி தேவைகளை அடையாளம் கண்டு அவற்றை பூர்த்தி செய்வதற்கான பயிற்சி நெறிகள், செயலமர்வுகள் என்பவற்றை
வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளன.)
தொடருறு ஆசிரியர் கற்கை நெறிகளாக பின்வருவனவற்றை அடையாளப்படுத்தலாம்
தரமேம்பாட்டு கற்கை நெறிகள் (Upgrading Courses)
தகைமை விருத்தி கற்கை நெறிகள் (Broadening Courses)
மீள் பயிற்சி கற்கை நெறிகள் (Re - Training Courses)

Page 20
அ P தவி
4. புத்தாக்கச் செயற்பாடுகள் (Refreshing Activation)
இத் தொடருறு ஆசிரிய கல்வி கற்கைகள் குறுகிய காலத்தை அல்லது நீண்ட காலத்தை உடையவையாக அமையலாம்.
தொடருறு ஆசிரியர் கல்வி அவசியத்திற்கான காரணங்கள்
ஆசிரிய கல்விச் செயற்பாடுகளில் தொடருறு ஆசிரிய கல்வி நிகழ்ச்சித்திட்டங்களே அதிகளவில் தேவைப்படுவனவாகவும் முக்கியத்துவம் பெறுவனவாகவும் உள்ளன. தற்கால கல்வி முறைமைக்குத் தேவையான ஆசிரியர்களைப் பயிற்றுவித்து அவர்களை சமகாலத்துக்குப் பொருத்தமான ஆசிரயர்களாக மாற்ற தொடருறு ஆசிரியர் கல்வி அவசியப்படுகிறது. தொடருறு ஆசிரிய கல்விக்கான முக்கிய காரணிகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
சேவை முன் ஆசிரியர் கல்வியில் பெற்ற அறிவுத் திறனை மேம்படுத்தல்
சேவை முன் ஆசிரிய பயிற்சில் ஆசிரியர்கள் பெற்ற அறிவு, திறன் என்பவற்றை தொடருறு ஆசிரியர் கல்வி மேன்மைப்படுத்தும் காலம் செல்லச் செல்ல ஆரம்பத்தில் பெற்ற பயிற்சி ஓரளவு மறந்து போக வாய்ப்பிருக்கிறது. இதனை மீண்டும் நினைவுபடுத்தும் ஒரு செயற்பாடாக தொடருறு ஆசிரியர் கல்வி அமையும்.

": 1:24
போர்
எனை
பாடதிட்டத்தின் மாற்றங்களை அறிதல் காலத்தின் தேவைக்கேற்ப பாடத்திட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. உதாரணமாக ஆரம்பத்தில் சமூகக்கல்வியும் வரலாறும் என்று இருந்த பாடம் இன்று வரலாறு, குடியியல், புவியியல் என்று மூன்று பாடங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாடத்திலும் புதிய விடயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதே போன்று ஒவ்வொரு வகுப்பிலுமுள்ள எல்லாப் பாடங்களினதும் உள்ளடக்கங்களில் காலத்துக்கு காலம் சில அலகுகள் சேர்க்கப்படுகின்றன. சில அலகுகள் நீக்கப்படுகின்றன. இவ்வாறான மற்றங்களை அறிந்து அவற்றுக்கேற்ப கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த தொடருறு ஆசிரியர் கல்வி அவசியமாகும்.
தொழில் நுட்ப சாதனங்களின் வளர்ச்சி நவீன தொழில்நுட்பம் இன்றைய கல்வித் தொழில் நுட்பத்திலும் அதிகளவு உள்வாங்கப்பட்டிருப்பதைக் காணலாம் .கற்றல் கற்பித்தல் சாதனங்களாகப் பல தொழில் நுட்பத்துடன் கூடிய சாதனங்கள் இன்றைய கல்விச் செயற்பாட்டில் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக மேந்தலை எறியி (OHP), பல்லூடகக் கருவி (Multi Media) போன்ற தொழில் நுட்பச் சாதனங்களின் வருகை தொடர்ந்து 9 கொண்டிருக்கிறன. இவற்றைப் பயன்படுத்துவற்கான
விழி ஜூன் 2014 )

Page 21
அறிவு, பயிற்சி என்பன ஆசிரியருக்கு காலத்துக்கு காலம் தேவைப்படுகின்றன இவற்றை தொடருறு ஆசிரியர் கல்வி பெற்றுக் கொடுக்கிறது.
தொடருறு ஆசிரியர் கல்வி - தற்காலத்தில் வழங்கப்பட்டாலும் OHP, Multi Media போன்ற சாதனங்களை இயக்கத் தெரியாத ஆசிரியர்கள் இன்றும் பாடசாலைகளில் இருப்பது வியப்பான விடயமாகும்.
புதிய கற்பித்தல் முறைகள் பற்றி அறிதல்
நவீன கால வளர்சிக்கேற்ப கற்பித்தல் முறைகளும் மாற்றம் அடைந்து வருகின்றன. மரபு ரீதியான கற்பித்தல் முறைகளில் இருந்து விடுபட்டு நவீன கற்பித்தல் முறைகளை ஆசிரியர்கள் பயன்படுத்த வேண்டும். என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே புதிய கற்பித்தல் முறைகளை அறிந்து அவற்றில் தேர்ச்சி பெற்று வகுப்பறைகளில் அவற்றைப் பயன்படுத்த ஆசிரியர்களுக்கு தொடருறு ஆசிரியர் கல்வி அவசியமாகும்.
உதார ண மாக 5 E கற்பித்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட வேளையில் ஆசிரியர்களுக்கு அது தொடர்பான அறிவு, பயிற்சி, அதற்கேற்ப பாடக்குறிப்பு எழுதும் முறை என்பவை தொடர்பான கல்வி தேவைப்பட்டது. இவற்றை தொடருறு ஆசிரிய கல்வியின் மூலமே சேவையிலுள்ள ஆசிரியர்களுக்கு வழங்க முடியும்.
சுற்றறிக்கைகள் சீர்திருத்தங்கள் பற்றிய அறிவைப் பெறல்
காலத்துக்குக் காலம் கல்விப் புலத்தில் வெளியிடப்படும் சுற்றறிக்கைகள், சீரிதிருத்தங்கள் பற்றி ஆசிரியர் அறிவு பெற்றிருப்பது அவசியமாகும். அப்போதுதான் காலத்துக்கு ஏற்ற கல்வியினை மாணவருக்கு ஆசிரியரால் வழங்க முடியும்.
வ
ஆசிரியர்களுக்கான புதிய தேர்ச்சிகளின் தேவை தேசிய மற்றும் உலகளாவிய ரீதியில் ஏற்படும் அபிவிருத்திகள் புதிய தேர்ச்சிகளைப் பெற ஆசிரியர்களை நிர்பந்திக்கின்றன. இன்று இணையத்தளம், கணினி, மின்னஞ்சல் (e.mail) என்று தொடர்பாடலில் பல அபிவிருத்தி ஏற்பட்டுள்ளதுடன் அவற்றினுடாகக் கற்றல் கற்பித்தலுக்குத் தேவையான பல அம்சங்களையும் அறிந்து கொள்ளலாம். எனவே இவற்றைப் பாவிக்கும் அறிவு, தேர்ச்சி என்பவற்றை ஆசிரியர் பெற்றுக் கொள்வது அவசியமாகும்.
8 அகவிழி | ஜூன் 2014
புதிதாக அறிமுகப்படுத்தும் பாடசாலையின் திட்டங்களை
அறிதல் காலத்துக்குக் காலம் பாடசாலைச் செயற்பாடுகள் நடைமுறைகளில் புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படு

கின்றன. இவை பற்றி ஆசிரியர்கள் அறிந்து கொள்வது அவசியமாகும். ஏனெனில் அவற்றைப் பாடசாலைகளில் நடைமுறைப்படுத்துவதில் ஆசிரியர்களுக்கு அதிக பங்குண்டு உதாரணமாக பாடசாலை மேம்பாட்டுத் திட்டம் பாடசாலை அபிவிருத்திக்குழு (School Development Committee) போன்ற புதிய விடயங்கள் பற்றி அறிந்து அவற்றைச் சரியாக நடைமுறைப்படுத்த தொடருறு ஆசிரியர் கல்வியின் தேவை அவசியமாகும்.
சிந்தனை மாற்றங்களை உள்வாங்கல்
கல்விப் புலத்தில் புதிய சிந்தனை மாற்றங்கள் ஏற்படும் போது அவற்றை அறிந்து கொள்ளவும் அது பற்றிய பயிற்சியை ஆசிரியர்கள் பெறவும் தொடருறு கல்வி சேவையிலுள்ள ஆசிரியர்களுக்கு அவசியமாகும். உதாரணமாக உற்படுத்தற்கல்வி (Inclusing education) என்ற சிந்தனை இன்றைய பாடசாலைக் கல்வியில் வலுப்பெற்று வருகிறது. சாதாரண பாடசாலைகளில் சாதாரண மாணவர்களுடன் விசேட தேவையுடைய பிள்ளைகளையும் உற்படுத்தி கற்பித்தல் என்ற விடயமே இதுவாகும். இவ்வாறான சிந்தனைகளை அறிந்து கொள்ளவும் அவற்றை வகுப்பறையில் மாணவர்கள் மத்தியில் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது பற்றிய பயிற்சியைப் பெறவும் சேவைக்கால ஆசிரியர் பயிற்சிகள் அவசியமாகும்.
மாறிவரும் ஆசிரியர் வகிபாகங்களை அறிந்து செயற்படல் ஆசிரியரின் வகிபாகம் (Role Model) மாறிக் கொண்டு வருகின்றது. முன்னைய காலங்களில் ஆசிரியர் மையமாக இருந்த வகிபாகம் இன்று வேறு நிலமையை நோக்கிச் செல்கிறது. பரிமாற்றம் (Transaction), கடத்துகை (Transmission) ஆகிய வகிபங்குகளை விடுத்து உருமாற்றம் (Transformation) எனும் புதிய வகிபங்கை ஆசிரியர் ஆற்ற வேண்டி உள்ளது. இதே போன்று வசதி செய்பவர், மாற்ற முகவர், முகாமையாளர் என்று ஆசிரியரின் வகிபங்கு நீண்டு செல்கிறது. இவற்றை அறிந்து நடை முறைப்படுத்த தொடருறு ஆசிரியர் கல்வி அவசியமாக இருப்பதால் அது முக்கியத்துவம் பெறுகிறது.
மேற்கூறப்பட்ட விடயங்களில் இருந்து ஆசிரியர்களுக்கு தொடருறு கல்வி எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனை உணர்ந்து கொள்ளமுடிகிறது.
ஆசிரிய மத்திய நிலையங்கள் கல்வி அமைச்சின் நேரடி வழிகாட்டலின் கீழும், தேசிய கல்வி நிறுவனத்தின் கலைத்திட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும் தொடருறு ஆசிரிய கல்வி நிகழ்ச்சித் திட்டங்களை நாடு பூராகவும் நடைமுறைப்படுத்துவதற்காக

Page 22
உருவாக்கப்பட்டவையே ஆசிரிய மத்திய நிலையங்கள் (Teacher Centers) ஆகும். ஆரம்பத்தில் நாடு பூராகவும் 84 ஆசிரிய மத்திய நிலையங்கள் உருவாக்கப்பட்டு தற்போது அவை தேவை அடிப்படையில் விரிவாக்கப்பட்டு 100 ஆசிரிய மத்திய நிலையங்களாக உயர்த்தப்பட்டுள்ளன. இவற்றினூடாக குறுகிய தொடருறு ஆசிரியர் கல்வி நிகழ்ச்சித் திட்டங்கள் அவ்வப்போது இடம்பெற்று வருகின்றன.
ஆசிரிய மத்திய நிலையங்களை நிர்வகிப்பதற்கு ஆசிரிய மத்திய நிலைய முகாமையாளர் கள் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை அவர்களுக்கு உதவியாக ஆசிரிய கல்வியியலாளர்கள் ஆங்கில மொழி போதனாசிரியர்கள் போன்றோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை விரிவு படுத்தும் நோக்கில் கல்வியற் கல்லூரி களிலும் இவ்வாறான ஆசிரிய மத்திய நிலையங்கள் தொழிற்படுவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கும் அவ்வப்போது தொடருறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
ஆசிரிய மத்திய நிலையங்களுக்கான கல்வி சார்பான வழிகாட்டலையும் கலைத்திட்ட வழிகாட்டலையும் வழங்குவற்காக இவை அண்மையிலுள்ள கல்விக் கல்லூ ரிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஓவ்வொரு தேசிய கல்விக் கல்லூரியும் அதன் அண்மையிலுள்ள ஆசிரிய மத்திய நிலையங்களுக்கான மேற்படி வழிகாட்டல்கள் ஆலோசனைகளையும், வளவாளர்களையும் வழங்கி அவற்றின் நிகழ்ச்சித் திட்டங்கள் தரமுள்ளவையாக அமைய உதவ வேண்டும் என கல்வி அமைச்சு பணித்துள்ளது. இதனடிப்படையில் 17 தேசிய கல்விக் கல்லூரிகளிலும் தொடருறு ஆசிரிய கல்விக்குப் பொறுப்பான உபபீடாதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர் இவ்விடயங்களைக் கருத்திற் கொண்டு செயற்படுவார்.
ஆசிரிய மத்திய நிலையங்களின் முறையான செயற்பாட்டை உறுதிப்படுத்தும் அடிப்படையில் அவற்றின் முகாமைத்துவக் கூட்டங்கள் ஒவ்வொரு மாதம் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வலயத்திற்கு பொறுப்பான கல்வி பணிப்பாளரைத் தலைவராகவும், ஆசிரிய மத்திய நிலைய முகாமையாளரை செயலாளராகவும் கல்வி கல்லூரி உப்பீடாதிபதி மற்றும் விரிவுரையாளர்கள், ஆங்கிலக் கல்வி போதனாசிரியர்களை அங்கத்தவர் களாகவும் கொண்டு மேற்படி முகாமைத்துவ கூட்டங்கள் நடாத்தப்பட்டு சமகாலத்தில் நிகழ்ச்சித் திட்டங்களின் முன்னேற்றங்கள், தேவைகள் என்பன ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப் படுகிறது. இக்கூட்டங்கள் முறையாக இடம்பெறுகின்றனவா என்பது கேள்விக்குறியேயாகும்.
தொடருறு ஆசிரிய கல்விக்கான மாகாண இணைப் பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் மாகாண

மட்டத்திலும் ஆசிரிய மத்திய நிலையங்களின் செயற்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கு பொறுப்பாக உள்ளனர். பொதுவாக மாகாணத்திற்கு பொறுப்பான கல்வி பணிப்பாளர் ஒருவர் இதனை பொறுப்பேற்று மாகாண மட்டத்தில் முகாமைத்துவ கூட்டங்களை நடாத்தி மாகாண மட்டத்திலான ஒருங்கிணைப்பிற்கு வழி யேற்படுத்துவார். இக்கூட்டங்களில் குறித்த மாகாணத்திற்கு உரிய ஆசிரிய மத்திய நிலைய முகாமையாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கல்விக் கல்லூரி தொடருறு ஆசிரிய கல்விக்குப் பொறுப்பான உப்பீடாதிபதி கள் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக மதிப்பிடுவதுடன் எதிர்கால செயற்பாடுகளுக்கான திட்டமிடலை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளைச் செய்வர்.
ஆசிரிய மத்திய நிலையங்களின் பணிகள் ஆசிரிய மத்திய நிலையங்கள் இன்று பல்தரப்பட்ட பணிகளை செயற்படுத்தி ஆசிரிய வாண்மை விருத்திக்கு பெரும் பங்காற்றுகின்றன என்பது குறிப்பிட்டுக் கூறக்கூடியதாகும். அவற்றின் பணிகளை பின்வரும் அடிப்படையில் நோக்கலாம்.
தகவல் திரட்டல் தொடர்பான பணி தேவையான பயிற்சிகளை வழங்க வேண்டும் என்ற நோக்கில் குறிப்பிட்ட பாடப்பரப்பு சார்பாக பாடசாலைகளின் தொகை மற்றும் ஆசிரியர் தொகை என்பவற்றை கல்வித் தகைமைகள், தொழிற்றகைமைகள் என்பவற்றோடு, தங்களுக்குத் தேவை அல்லது அவசியம் எனக் கருதும் பயிற்சிகள் என்பவற்றோடு இணைத்த தரவுகளை
சேகரித்தல்.
அவற்றைப் பகுப்பாய்வு செய்து தரவுகளை ஆவணப்படுத்தல். அவற்றைப் பதிவு செய்தல். பயிற்சி தேவையானவர்களை இணங்கண்டு பதிவு செய்து. வகைப்படுத்தி, திட்டமிட்டு பயிற்சி நெறிகளை ஒழுங்கு செய்தல். அத்தோடு பயிற்சிக்குத் தேவையான கட்டளைக் கற்களை உருவாக்குதல், ஆளணியினரை அடையாளம் காணுதல், பங்குபற்றுகின்றவர் களின் தரவுகளை கிரமமாகவும் ஒழுங்காகவும் பதிந்து ஆவணப்படுத்தி கோவையாக்கம் செய்தல்.
சுமூகமான உறவுநிலைமையைப் பேணல்
பயிற்சிநெறியில், பயிற்சிப்பட்டறைகளில் பங்குபற்றுவோருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணல். இதற்காக சிறந்த வளவாளர்களை பயன்படுத்தல், பங்குபற்றுவோருக்கு தொடர் தேர்ச்சியான பின்னுாட்டல்களை வழங்குதல்,
அகவிழி ஜூன் 2014 (N
ஒ5:31 ஆசன நகை
யாழட்கப77 a 9ாம்:

Page 23
தேவையான மேலதிக கணிப்பீடுகள் மற்றும் பயிற்சிகளை வழங்குதல்.
செயற்பாடுகளை அறிவித்தல் தொடர்பான பணிகள் ஆசிரிய மத்திய நிலையங்கள் தொடர்பான பணிகள், பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகள், திட்டமிடப்பட்ட விடயங்கள் என்பவற்றை உடனுக்குடன் தொடர்ச்சியாக அதிபர்கள், ஆசிரியர்களுக்கு அறிவித்தல். மேலும், ஆசிரிய மத்திய நிலையத்தின் தொழிற்பாடுகள், செயற்பாடுகளின் முன்னேற்ற அறிக்கைகள் என்பவற்றையும் தொடர்ந்தேர்ச்சியாக அறிவித்தல்.
தொடருறு கல்வி தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்தல்
ஆசிரியரின் வாண்மை விருத்தியை அடிப்படையாகக் கொண்டு தொடருறு கல்வி தொடர்பான பயிற்சிகளை ஒழுங்கான முறையில் திட்டமிடுதல். வருடாந்த திட்டத்தில் பயிற்சித் தலைப்பு, பாடங்கள் என்பவற்றை அடையாளம் காணுதல், பங்குபற்றுவோரை அடையாளம் காணுதல், அவர்களைத் தெரிவு செய்தல். பயிற்சிகளை அடையாளம் காணுதல். NCOE இல் தேவையான பயிற்சி நெறியை பதிவு செய்தல். பயிற்சி நெறியை வழங்கக்கூடியவர்களுடன் தொடர்புற்று அவர்களது வரவை உறுதிப்படுத்தலும் காலத்தை தீர்மானித்தலும். பயிற்சிநெறிக்கு தேவையான பொருட்கள் சம்பந்தமாக பயிற்சியாளர்களிடமிருந்து எழுத்து மூலமாக தகவல்களை பெறுதல்.
பயிற்சி நெறியில் பங்குபற்றுவோரை அழைத்தல்
பங்குபற்றுவோரை தெரிவு செய்வதற்கான கட்டளைக் கற்களை உருவாக்கல். பங்குபற்றுவோருக்கு கடிதம் அனுப்புதல். அதிபருக்கு கடிதம் அனுப்புதல். வலயக்கல்வி அலுவலகத்திற்கு பயிற்சி நெறியின் விபரங்களையும், பங்குபற்றுவோரையும் அறிவித்தல். பாடசாலையிலிருந்து பங்குபற்றுவோர் வருவதற்கான அனுமதியை வலயப் பணிமனையில் பெறல். பங்குபற்ற முடியாதோருக்குப் பதிலாக வேறு நபர்களை அழைத்தல் பயிற்சிநெறி பற்றி சகல பங்குபற்றுனர்களிடமும் பின்னூட்டலைப் பெறல்.
இடம் வழங்கலை ஒழுங்குபடுத்துதல்
சகல தொடருறு ஆசிரியர் பயிற்சிகளையும் TC இன செயற்பாடுகளுடன் ஒன்றிணைத்தல் பயிற்சிக்குத் தேவையான பொருட்களை அடையாளம் காணுதல். தேவையான பொருட்களை பெறுதல் இடத்தை அடை யாளம் காணுதல், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்தல். தேவையான ஆளணியினரை அடையாளம் காணல் .(TC
R அகவிழி ஜூன் 2014

staft) அவர்களுக்கான அறிவுறுத்தல்களை வழங்குதல். உணவு, குடிபான வசதிகளை அடையாளம் காணுதல். கற்கக்கூடிய சூழலை ஏற்படுத்தல்.
நேரடியாக அல்லது மறைமுகமாக ஆசிரியர் கல்வியுடன் தொடர்புடைய ஆளணியினருடன் தொடர்புகளை ஏற்படுத்தல்
தொடருறு பயிற்சியை ஒழுங்குபடுத்தும் அமைப்பில் அங்கத்தவராதல். TC இன் எல்லா வெளிக்கருமங்களிலும் பிரதிநிதியாக இருத்தல். NCOE உடன் TC இன் Academic Guardian ஆக இருந்து தொடர்ந்து ஒத்துழைத்தல். மாகண கல்வி அதிகாரிகளுடன் தொடர்புறுதல். அதிபருடனும், ஆசிரியர்களுடனும் தொடர்புறுதல். ISA சேவையினருடன் தொடர் புறுதலும், ஒத்துழைப்பாக இயங்குதலும். பிரதேசத்திலுள்ள கல்வியியலாளர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்ளுதல். பயிற்சியியலாளர்களுக்கு பின் னூட்டல்களைத் தெரிவித்தல்.
பயிற்சி நெறியுடன் தொடர்பான செயற்பாடுகளை மதிப் பிடலும், தொடர்தலும்
பயிற்சி நெறி சார்பாக மதிப்பிடுதல், அதனை நுணுக்கமாக ஆராய்தல். பயிற்சி நெறி சார்பான மதீப்பீட்டின் படி முடிவுகளை எடுத்தல். வகுப்பறை அல்லது பாடசாலைகளில் பயிற்சிநெறியின் விளைவுகளை மேற்பார்வை செய்யத் திட்டமிடல். பயிற்சி நெறி முடிவுகளை கண்காணித்தல். பயிற்சிநெறி முடிவுறுகையை பயிற்சியாளர்களுக்குத் தெரிவித்து மேலும் முன்னேற்றம் தேவை ஏற்படின் கலந்துரையாடுதல். பயிற்சி நெறியின் முடிவுகளை வலயப் பணிமனைக்கு அறிவித்தல். புதிய பயிற்சிகளை அடையாளம் காணல்.
நிதி தொடர்பான கட்டுப்பாடு
ஆசிரிய மத்திய நிலையத்தின் வருடாந்த வரவு செலவு திட்டம் தயாரித்தல். ஒவ்வொரு பயிற்சி நெறிக்குமான வரவு செலவை தயாரித்தல். பொருட்களின் கொள்வனவு. காசாகக் கொடுத்தல். பயிற்சியாளர்களிடம் Invoice பெறுதல். பயிற்சியாளர்களின் கணக்குகளை முடித்தல்.
T
கல்விசார், கல்விசாரா ஊழியர்களை மேற்பார்வை செய்தல்
எல்லா ஆளணியினருக்கும் அவர்களது வேலை பற்றிய விபரத்தை வழங்குதல், விசேட செயற்பாட்டை செய்து முடிக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் அதற்கான விஷேட பொறுப்புக்களை வழங்குதல். எல்லா ஊழியர்களையும் நேரடியாக மேற்பார்வை செய்தல். அலுவலகச் செயற் பாடுகளையும், விதிகளையும் உருவாக்கல்.

Page 24
இப் பணிகளுக்கு ஆசிரிய மத்திய நிலைய முகாமையாளரே பொறுப்பாளராவார். மேலுள்ளவாறு தொடருறு ஆசிரிய கல்வி நிலையச் செயற்பாடுகள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த போதிலும் இந்த எல்லா மட்டங்களுக்குமிடையிலான தொடர்பாடல்கள் எதிர்பார்த்த அளவில் இடம்பெறவில்லை என்பதும் ஒரு குறைபாடாகும். நடைமுறைரீதியாக நோக்குகின்றபோது ஆசிரிய மத்திய நிலையங்களின் செயற்பாடுகள் மந்த கதியிலேயே
முன்னெடுக்கப்படுவதையே காணமுடிகின்றது.
பின்னடைவுக்கான காரணம்
வளங்களின் பற்றாக்குறை
ஆசிரிய மத்திய நிலையங் கள் பின்னடைந்து செல்வதற்கான இன்னொரு பிரதான காரணம் ஆசிரிய மத்திய நிலையங்களில் போதியளவான வளங்கள் காணப்படுவதில்லை. சிறந்த பௌதீக வளங்கள், மற்றும் மனித வளங்கள் காணப்படாததன் காரணமாக வினைத்திறனுடன் ஆசிரிய மத்திய நிலையங்களை விளைதிறன் கொண்டதாக முன்னெடுப்பதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
திட்டமிடற் செயற்பாட்டில் வினைத்திறனின்மை
ஆசிரிய மத்திய நிலையங்களில் காணப்படுகின்ற இன்னொரு பிரதான குறைபாடு திட்டமிடற் செயற்பாட்டில் வினைத்திறன் காணப்படுவதில்லை. இதனால் திட்ட மிடப்பட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதில்லை.

திட்டமிடலுக்கும், நடைமுறைப்படுத்தலுக்குமிடையில் இடைவெளித்தன்மைகள் காணப்படுவதால் வினைத்திறன் குன்றிய அடிப்படையிலேயே இம்மத்திய நிலையங்களின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மனித வளங்களின் வினைத்திறனின்மை ஆசிரிய மத்திய நிலையங்களின் பின்னடைவிற்கான இன்னொரு பிரதான காரணம் பயிற்சிநெறிகளை முன்னெடுப் பதற்காகத் தெரிவு செய்யப்படும் மனித வளவாளர்கள் வினைத்திறனுடன் செயற்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு மேலோங்கி வருகின்றது. இதனால், மேற்கொள்ளப்படும் பயிற்சித் திட்டங்கள் போதியளவு வெற்றியளிப்பதில்லை.
பயிற்சி நெறிகளின் வினைத்திறனின்மை
ஆசிரிய மத்திய நிலையங்களால் வழங்கப்படும் பயிற்சி நெறிகள் வினைத்திறன் குன்றியதாக காணப்படுகின்றது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதனால் இப் பயிற்சி நெறிகளில் பங்குபற்றுவோர் வீதம் குறைந்துள்ளது.
தரவு சேகரிக்கும் முறை, ஆவணப்படுத்தலின் குறைபாடு ஆசிரிய மத்திய நிலையங்கள் தமது பிரதேசத்திற்குட்பட்ட பாடசாலைகளின் தொகை, ஆசிரியர் தொகை அதிபர்களின் எண்ணிக்கை என்பவற்றை நுணுக்கமாக பரிசீலிப்பதற்காக தரவுகளை சேகரித்தல் மிகப் பிரதானமானதாகும். இச் செயற்பாடு வினைத்திறனாகவும், தொடர்ச்சியாகவும் செய்யப்படாததனால், தேவையானவர்களுக்கு தேவையான பயிற்சிகளை இணங்கண்டு வழங்குவதற்கு மிக கடினமாக உள்ளது.
பயிற்சிநெறி தொடர்பான செயற்பாடுகளை மதிப்பீடு செய்வதிலும் குறைபாடு காணப்படுகின்றது
ஒவ்வெரு பயிற்சி நெறியும் பல பாடங்களை, அனுபவங்களை கற்றுத் தருகின்றது. இதனை அடிப்படையாக கொண்டு பயிற்சி நெறியின் செயற்பாடுகளை நுணுக்கமான மதிப்பீட்டிற்கு உட்படுத்தலாம். ஆனால் நுணுக்கமான மதிப்பீடு மேற் கொள்ளப்படாததனால் திட்டங்களை, திட்ட முடிவுகளை பகுப்பாய்வு செய்வதிலும் அடுத்த வருட திட்டமிடலிலும் பாதிப்புச் செலுத்துகின்றது என்ற
குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றது.
போதியளவு நிதி ஒதுக்கப்படுவதில்லை ஆசிரிய மத்திய நிலையங்கள் எதிர் நோக்குகின்ற, பிரதான மையப்பிரச்சினையாக நிதி காணப்படுகின்றது. பயிற்சி நெறிகளுக்கான நிதியினைப் பெற்றுக் கொள்வதில் . இந்நிறுவனங்கள் பலத்த சவாலை எதிர் கொள்கின்றன.
அகவிழி ஜூன் 2014 (8

Page 25
ஆலோசனைகள்
இலங்கையில் செயற்படுகின்ற ஆசிரிய மத்திய நிலையங்கள் தொடருறு ஆசிரிய பயிற்சிகளை வழங்கி வாண்மைத்துவத்தை ஏற்படுத்துவதற்கான குறித்த சில பணிகளை மேற்கொள்கின்றபோதிலும், பூரணமாக அதன் இலக்குகள் அடையப்படவில்லை என்ற விமர்சனமும் காணப்படுகின்றது. மேலும் வினைத் திறனுள்ள அடிப்படையில் செயலாற்றுவதற்கான ஆலோசனைகளாகப் பின்வருவனவற்றை அடையாளப்படுத்தலாம்.
பௌதீக வளங்களை அதிகரித்தல் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரிய மத்திய நிலையங்கள் காணப்பட்டபோதிலும், அவற்றுள் அநேகமானவைகள் நிரந்தரக் கட்டிடம் இல்லாமல் தற்காலிகமாகவே செயற்படுகின்றன. நிரந்தரக் கட்டடங்கள் உருவாக்கப்பட்டு அதன் செயற்பாடுகளை இலகுபடுத்த வேண்டும். மேலும், போதுமான தளபாட, தொழிநுட்ப வசதிகளும் போதியளவு ஏற்படுத்தப்படுத்தப்பட வேண்டும்.
ஆளணி வளத்தை சீர் செய்தல் ஆசிரிய மத்திய நிலையங்களில் செயற்படும் அதிகமான முகாமையாளர்கள் தற்காலிக மற்றும் இணைப்பு அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, நிரந்தர, பொருத்தமான முகாமையாளர்கள், கல்வியலாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
அரசியல் தலையீடுகளைத் தவிர்த்தல் குறிப்பாக ஆட்சேர்ப்பின்போது இடம்பெறும் அரசியல் மற்றும் ஏனைய தலையீடுகளைத் தவிர்த்து முறையானதும் தகைமை அடிப்படையிலும் மேற்கொள்ளப்படுவதும் ஊர்ஜிதப்படுத்தப்பட வேண்டும்.
முறையான முகாமைத்துவப் பொறிமுறையை அமுல்படுத்தல்
மனித மற்றும் பௌதீக வளங்களை முறையாக முகாமை செய்வதற்கான பொறிமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்காக முதிர்ச்சி, அனுபவம், விடய அறிவு, அதி கூடிய திறமை என்பவற்றைக் கருத்திற் கொண்ட ஆளணியினர் நியமிக்கப்பட வேண்டும். மேலும், சிறந்த மேற்பார்வை
முறைமையும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
ஆசிரியர்களின் தேவைக்கேற்ற பயிற்சி வழங்கல்
S அகவிழி ஜூன் 2014
குறித்த வள நிலையத்தை சார்ந்துள்ள பிரதேச பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களின் பயிற்சித் தேவைகளை சரியாக இனங்கண்டு சரியாகத் திட்டமிட்டுச் செயற்படுத்தப்பட வேண்டும்.

சிறந்த செயற்பாட்டுத் திட்டங்களைத் தயாரித்தலும் செயற்படுத்தலும்
ஆசிரிய மத்திய நிலையங்கள் நீண்டகால மற்றும் குறுகிய கால செயற்றிட்டங்களை தயாரித்து, ஒழுங்கான அடிப்படையில் செயற்படுத்தியும் வரவேண்டும். இதனால், ஆசிரிய மத்திய நிலையங்கள் வினைத்திறனுடன் செயற்படும்.
பயிற்றுவிப்பாளர்களை வினைத்திறனுடையவர்களாக்குதல்
ஆசிரிய வள நிலையங்களில் செயற்படும் கல்வியலாளர் களை மேலும் வினைத் திறனுடையவர்களாக ஆக்குவதற்கான திட்டங்களை அமுல்படுத்தல். அவர்களின் அறிவு மற்றும் திறன்களை இற்றைப்படுத்துவதற்கான முயற்சிகளை கிரமமாக மேற்கொள்ளல்.
முடிவுரை ஆசிரிய தொழில் என்பது தொழில்வாண்மையுடன் மிக நெருங்கிய இடைவினை கொண்ட தொழிலாகும். இவ்வாண்மை விருத்தியை ஏற்படுத்துவதில் தொடருறு கல்வி மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. இத்தொழில் வாண்மை விருத்தியை வழங்குவதில் பல நிறுவனங்கள் கல்விக் களத்தில் செயலாற்றுகின்றன.
இவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டுச் செயற்பட்டாலும் அவை அவற்றின் இலக்குகளை பூரணமாக அடையவில்லை என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகின்றது. இதற்கு பிரதானமாக ஆசிரிய மத்திய நிலையங்களுக்கான வளவாளர்கள், உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படாமை, பௌதீக வளங்களின் குறைபாடுகள், சிறந்த முகாமைக் கட்டமைப்பின்மை போன்ற பல காரணங்களையும்
குறிப்பிடலாம்.
இவ்வாறான குறைபாட்டு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டாலும் ஆசிரிய மத்திய நிலையங்களின் செயற்பாடுகள் ஆசிரியர் வாண்மை விருத்தியை உருவாக்குவதில் இன்றியமையாததாகும். இக் குறைபாடுகளை நிவர்த்திப்பதற்காக பௌதீக வளங்களை அதிகரித்தல், ஆளணி வளத்தை சீர்செய்தல், அரசியல் தலையீடுகளைத் தவிர்த்தல், முறையான முகாமைத்துவப் பொறிமுறையை அமுல்படுத்தல், பயிற்றுவிப்பாளர்களை வினைத்திறனுடையவர்களாக்குதல், சிறந்த செயற்பாட்டுத் திட்டங்களைத் தயாரித்தலும் செயற்படுத்தலும், ஆசிரியர்களின் தேவைக்கேற்ற பயிற்சி வழங்கல் போன்ற தீர்வுகளை மேற்கொள்வதன் மூலம் மிகச் சிறந்த ஆசிரிய வள நிலையங்களின் இலக்குகளை அடைந்து கொள்ள முயற்சிக்கலாம்.

Page 26
சுயநம்பிக்கையை வளர்த்து ஆளும்
சொ. அமிர்தலிங்கம் ஆளுநரின் செயலாளர் வடக்கு, கிழக்கு மாகாணம்
5பா
நம்பிக்கையானது மனிதனுடைய உள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தன்முனைப்பாகும். ஒரு செயல் காரணமாக அல்லது சூழ்நிலை காரணமாக பின்விளைவுகள் உடையதாகவும், மரபு வழியாகச் சந்ததியினரால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நாம் செய்யும் வேலைகளில் ஈடுபாடு ஏற்படுவதற்கு முக்கிய உந்து சக்தி நம்பிக்கை யாகும். அது தான் எமது வெற்றியின் இரகசியம் செய் தொழிலைச் செய்து முடிப்பதற்கும் அது வெற்றியாக முடிந்தால் அகமகிழ்வதற்கும் இந்த நம்பிக்கை தான் காரணம். மனிதன் வாழ்வில் வெற்றி பெறவேண்டுமானால் அதற்குத் தேவையான தொழில்நுட்பங்களை அறிந்திருக்க வேண்டும். புதிய சிந்தனைகளுடன் செய் தொழிலைச் சவாலாக ஏற்று விடாமுயற்சியுடன் தொடர்ச்சியாகச் செய்யத் துணிவும் தேவை. எதற்கும் நம்பிக்கை தான் மிக முக்கியம். இந்த நம்பிக்கை தன்னில் உருவாகி சுய நம்பிக்கையாக இருக்க வேண்டும். எம்மிடையே உள்ள ஆற்றல்கள், திறமைகள், எம்மில் எம் மீது நம்பிக்கை வைக்கவும், எமது ஆற்றல்களை இனங்கண்டு வெளிக் கொணர்ந்து செய் தொழிலில் வெற்றியீட்டவும் எமது நம்பிக்கைகளே காரணம்.
அலெக்சாண்டர் கிரேப் என்னும் நாட்டுபுறவியல் அறிஞர் தனது நாட்டுபுறவியல் விஞ்ஞானம் என்ற நூலில் நம்பிக்கையைப் பலவகையாக எடுத்துக் காட்டியுள்ளார். அவற்றில் சில மதசார் நம்பிக்கைகள், குழந்தைகள் பற்றிய நம்பிக்கைகள், மனித உடல் உறுப்புக்கள் பற்றிய நம்பிக்கைகள், மாதங்கள், வாரங்கள், நாள் பற்றிய நம்பிக்கைகள், இறப்பு பற்றிய நம்பிக்கைகள், கனவு பற்றிய நம்பிக்கைகள், சுய நம்பிக்கை எனப் பகுத்துள்ளார். அலெக்ஸ் டன்டெஸ் என்னும் அறிஞர் நம்பிக்கைகள் பற்றி மூன்று வகையாகக் பிரித்துள்ளார். அவையாவன தந்திர நம்பிக்கைகள், சகுன நம்பிக்கைகள், பரிகார நம்பிக்கைகள், என்பனவே ஆகும். இப்படியான நம்பிக்கைகளுல் சில "கால் தடுத்தால் செல்லாதே", "புறாவை வீட்டில் வளர்த்தால் வறுமை வரும்”, "கழுதை கத்தினால் நல்ல சகுனம்" என நம்பிக்கைகள் உண்டு. எதற்கும் சுயநம்பிக்கையே இறுதியில் கைகொடுக்கிறது. எனவே நம்பிக்கையின் அமைப்பைப் பார்க்கும்போது நிச்சயம் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளும் உண்டு.

மையைப் பேணுவோம்
இங்கிலாந்து மனோதத்துவ நிபுணர் ரிச்சர்ட் டென்னி கூறும் போது ஓவ்வொரு மனிதனுக்கும் ஏற்படும் பின்னடைவுக்கும் தோல்விகளுக்கும் அவனது சுயநம்பிக்கையின் நிலையற்ற நிலைமையே காரணம் என்கிறார். இதே போன்று அவனது முன்னடைவுக்கும் வெற்றிக்கும் அவனது சுயநம்பிக்கையின் ஸ்திர நிலையே காரணமாகும். எனவே நாம் தோல்விகளைச் சந்திப்பதற்கு காரணம் நாம் எம்மீது நம்பிக்கை கொள்வதில்லை. தனது வாழ்க்கை அர்த்தமற்றது, தன்னால் எதையும் சாதிக்க முடியாது என எதிர் மாறான எண்ணங்களையும், நம்பிக்கையற்ற தன்மையையும் நாம் கைக்கொள்வதனால் இவ்வாறான மோசமான நிலைமைக்கு தள்ளப்படுகின்றோம். எனவே சுயநம்பிக்கைதான் எம் ஒவ்வொருவரையும் சீர்பெற செயற்பட வைக்கிறது என்பதை நாம் மனதார ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த சுய நம்பிக்கைதான் எம்மை தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்கு வழிவகுக்கிறது.
சுயநம்பிக்கை ஒவ்வொருவரையும் தன்னைத்தானே வழிநடத்திச் செல்கிறது. ஓவ்வொருவரும் தத்தம்மீது கொண்டுள்ள சுயமதிப்பினை அவர்களுடைய சுயநம்பிக்கை பிரதிபலிக்கிறது. எமது வாழ்க்கையில் எமது இலட்சியங்களை அடைவதற்கும் மகிழ்ச்சிகரமாக வாழ்வதற்கும் இந்த சுயநம்பிக்கை ஊன்றுகோலாகும். எனவே இந்த சுயநம்பிக்கை ஒவ்வொருவரது வாழ்விலும் சவால்களை வெற்றி கொள்வதற்கும், ஆபத்துக்களை எதிர்கொண்டு முறியடித்து முன்னேறுவதற்கும், தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்கும் உதவுகின்றது. நாம் செய்யும் செயல்கள் தோல்வியை நாடிச் சென்று கொண்டிருக்கும்போது எமக்கு கைகொடுத்து அத்தோல்வியிலிருந்து விடுவிப்பதும் இந்த சுயநம்பிக்கையாகும்.
இப்படியான நம்பிக்கைகள் இரண்டு வேறுபட்ட வகையின . ஒன்று குறைவான நம்பிக்கை மற்றது அதீத நம்பிக்கை குறைவான நம்பிக்கையுடையோர் தம்மில் அச்சத்தையும் பயத்தையும் உருவாக்கிக்கொள்கின்றனர். எந்தளவுக்கு செயலை நிறைவேற்ற முயற்சியும் உற்சாகமும் வேண்டுமோ அந்தளவுக்கு பிரயோகிக்க முடியாது திணறுவர். குறித்த செயலைச் செய்யும்போது அது தோல்வியில் முடியலாம் என்றும் அதனால் ஏற்படும் தண்டனை பற்றியும் மனக்கற்பனை செய்தும் அவ்வேலையை ஆரம்பிக்காமலோ அல்லது அரைகுறையாகச் செய்வதிலோ
விழி ஜூன் 2014 (8
ஓர் 63 * கம்
டா3 6:"96 5ம்) ,

Page 27
ஈடுபடுவர். இப்படியான குறை நம்பிக்கையை எமது மனதிலிருந்து நீக்கிவிட வேண்டும். எம்மால் முடியும் வெற்றி நிச்சயம் என ஆக்கபூர்வமான மனோநிலையுடன் செயலாற்றினால் எமது சுயநம்பிக்கை வீண்போகாது.
மேலும் அதீத நம்பிக்கை உடையவர்கள் செய்தொழிலை வெற்றிகரமாகச் செய்ய முடியாது திண்றுவர். இப்படியாக அதீத நம்பிக்கை கொண்டோருக்கு ஊக்கமோ ஆர்வமோ ஏற்படாது. அதீத நம்பிக்கை கொண்டவராக இருப்பதால் அவ்வேலையை வெற்றிகரமாகச் செய்ய வாய்ப்பு ஏற்படாது. எனவே உண்மை நிலையைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப எமது சுயநம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். எமது வாழ்வில் பல்வேறுபட்ட இலக்குகளை அடைய நிறைவேற்ற நம்பிக்கையை உரிய அளவில் பேணவேண்டும். குறைவான நம்பிக்கையுடனோ அதீத நம்பிக்கையுடனோ செய் தொழிலைச் செய்யக்கூடாது. சமநிலையில் எமது சுயநம்பிக்கையை வளர்க்க வேண்டும்.
எமது ஆற்றல்கள் திறமைகள் என்பவற்றிற்கேற்ப சுயநம்பிக்கையின் அளவு கூடிக்குறையும். எனவே எமது ஆற்றல்களையும் திறமைகளையும் குறைத்து மதிப்பிடவும் கூடாது. "தமது திறமைகளில் நம்பிக்கை வைக்காது வலிமைகள் ஆற்றல்களை குறைத்து மதிப்பிட்டு குறைந்த சுயநம்பிக்கை உடையவராக மாறும் பட்சத்தில் குறித்த ஓர் செயலை நிறைவேற்ற முடியாது. தோல்வி அடையும் என்ற வீணாண அச்சமும் பீதியும் ஒருவனது உள்ளத்தில் ஆட்கொள்ளும்" என மனோதத்துவ அறிஞர் நோமன் வின்சன்ற் கூறியுள்ளார். நாம் எமது கவனத்தை ஒருமுகப்படுத்த முடியாமலும் எதிர்மறையான சிந்தனையுடன் செயலாற்றும்போதும் சுயநம்பிக்கை இல்லாது போகிறது. தவறும் தோல்வியும் ஏற்படுவதற்கு காரணம் குறைநம்பிக்கை என்னும்போது எம்மீதே எமக்கு வெறுப்பு ஏற்படுகிறது. இப்படியான வேளைகளில் வாழ்வில் சந்தோசம், மகிழ்ச்சி, இன்பம் அற்றுப் போகும் நிலையும் ஏற்படலாம். அதேபோல உண்மைநிலையை கருத்திற்கொள்ளாது கண்மூடித்தனமாக அதீத நம்பிக்கையும் கொள்ளக்கூடாது. இதுவும் சிறந்த விளைவுகளைத் தராது. எனவே நம்பிக்கையை சமநிலை யில் பேணிப்பாதுகாத்து வாழ்வில் உயர்வடைய வேண்டும்.
எமது வாழ்வில் குறிக்கோள்களை இலட்சியங்களை அமைத்து ஆக்கபூர்வமான சிந்தனையுடன் சுயநம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். வாழ்வின் வெற்றிக்கு இந்த சுயநம்பிக்கை அடிகோலும். தன்னை இழிவாகவும் தாழ்வாகவும் கருதுகின்றபோது தோல்விகளும் அவமானங்களும் மிஞ்சும். எனவே ஒவ்வொருவரும் தம்மை சுயமதிப்புள்ளவராக நேர்மையானவராக ஆற்றல் படைத்தவராக உறுதியாக நம்பும்போது சுயநம்பிக்கை ல எம்மில் வளரும். நன்மை தரக்கூடிய சக்திகளில் 5 உறுதியானதும் வலிமையானதும் நம்பிக்கை ஒன்றே.
பொறாமையும் சந்தேகமும் இல்லாது இருந்தால் நன்று. நல்லவராக இருக்கவும், நன்மை செய்ய முயற்சிக்கும் எல்லோருக்கும் உதவி புரிதலும் அவசியம் என போதித்தார்
அகவிழி ஜூன் 2014
26

சுவாமி விவேகாநந்தர். உண்மையான நம்பிக்கை இருக்குமானால் மலையைக்கூட அசைத்துவிடலாம் என்றார் மறைந்த இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு. தாங்கள் வெல்லலாம் என்று நம்புகிறவரே வெற்றியடைவர் என்றார் அறிஞர் வர்கிஸ். எனவே வெற்றியடைய முடியும் வெல்வோம் என்ற ஆக்கபூர்வமான மன நிலையில் சுயநம்பிக்கையுடன் செயலாற்றினால் வெற்றி நிச்சயம்.
சுயநம்பிக்கை இருக்குமானால் தைரியம் தானாக வரும் என்றார் அறிஞர் எமர்சன். எனவே தைரியத்தை எம்மில் வளர்க்க சுயநம்பிக்கையை கடைப்பிடிக்க வேண்டும். சுயநம்பிக்கை இருந்தால் பிரச்சனைகளையும் நோக்கங்களையும் சமாளித்து வெற்றி கொள்ளலாம். எல்லாவற்றையும் வெற்றிகரமாக மாற்றித்தரும் என ஹெச் ஷில்லர் கூறியுள்ளார். எனவே பிரச்சனைகளைத் தீர்க்கவும் நோக்கங்களை ஈடேற்றவும் சுயநம்பிக்கையை வளர்க்க வேண்டும். தம்மில் சுயநம்பிக்கை கொண்டவர்களே பெருமையையும் வளத்தையும் பெறுவர் என சுவாமி விவேகாநந்தர் கூறியுள்ளார்.
சுயநம் பிக்கையை பேணுவதற்கு பின் வரும் வழிமுறைகளை கையாளவேண்டும். உண்மையான இலக்குகளை மனதில் கொள்ள வேண்டும். எதைத் திறைமையாகச் செய்யலாம் எனத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். எதிர் மறையான எண்ணங்களையும் உணர்வுகளையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும். சுயமாக வெற்றியடையும் ஓர் படத்தை மனதில் உருவாக்கிக் கொள்ள வேண்டும். கஷ்டங்கள் துன்பங்களை அலசி ஆராய வேண்டும். பிறரால் வஞ்சிக்கப்படக்கூடாது. சிறு வெற்றிகளை முதலில் எதிர் பார்க்க வேண்டும். பிழைகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் மீது திட நம்பிக்கையை வைக்க வேண்டும். திட்டவட்டமான ஒரு வழிமுறையை பேணவேண்டும். எந்த நேரமும் நான் எனது இலக்கை அடைவேன் என்ற நம்பிக்கையை கொள்ளவேண்டும். கருமங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயலாற்ற வேண்டும். நாள் முடிவில் செய்த செயல்களின் பலாபலன்களை அலசி ஆராயுங்கள். இப்படியாகச் செய்வதன் மூலம் உங்கள் சுயநம்பிக்கை வளரும். செய்யும் தொழிலில் வெற்றியும் காண்பீர்கள். "ஒவ்வொரு மனிதனதும் பின்னடைவுகளுக்கும் தோல்விகளுக்கும் பின்னால் அவனது சுயநம்பிக்கையின் ஸ்திரமற்ற நிலை தாக்கம் செலுத்துகின்றது" என இங்கிலாந்தைச் சேர்ந்த மனோதத்துவ நிபுணர் றிச்சர்ட் டென்னி கூறியுள்ளார். எனவே சுயநம்பிக்கையுடன் ஸ்திரமான நிலையிலிருந்து செயலைச் செய்து வெற்றியீட்டுங்கள். வாழ்வின் வெற்றிக்கு தேவையான சுயநம்பிக்கையை சமநிலையில் பேணி ஆக்கபூர்வமான மனோநிலையுடன் எமது நோக்கங்களை அடைய முனைய வேண்டும். உங்கள் சுயநம்பிக்கையில் நம்பிக்கை கொள்ளாத நீங்கள் எப்படி பிறர் மீது நம்பிக்கை வைப்பீர்கள்? அல்லது பிறர் எவ்வாறு உங்களை நம்புவார்கள்? எனவே சுயநம்பிக்கையை வளர்த்து ஆளுமையைப் பேணுங்கள்!

Page 28
கோட்பாட்டின் வலிமையும் வழி கா. சிவத்தம்பியின் இலக்கிய நோக்கு
எழுத்தாளர் ஜெயமோகன்
ஒரு இலக்கியக் கோட்பாட்டாளராக சிவத்தம்பியின் அடிப்படை நோக்கு மார்க்ஸிய இயந்திரவாதமேயாகும். சமூகத்தை துல்லியமாக சுரண்டல் வர்க்கம், பாட்டாளி வர்க்கம் என்று பிரித்து, முரணியக்க பொருள் முதல்வாத அடிப்படையில் அவற்றின் மோதல் மூலம் வரலாறு முன்னகர்வதை உருவகித்துக்கொண்டு, அந்த விரிந்த வரலாற்றுவாத அடிப்படையில் தன் கோட்பாடுகளை உருவாக்கிக் கொள்கிறார் சிவத்தம்பி முன்னுரையிலும் சரி ஆய்வின் முடிவுகளை நெருங்கும் போதும் சரி மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின் மேற்கொள்களை எடுத்துத் தருகிறார். இது மரபான மார்க்ஸியர்கள் தவறாமல் கடைப்பிடிக்கும் பாணியாகும்.
எல்லா மார்க்ஸியக் கோட்பாட்டாளர்களையும் போலவே வரலாற்று வாதத்தைக் கட்டமைப்பதே சிவத்தம்பியின் முதன்மையான பணியாக இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட கருப்பொருளை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும் போது விரிவான தகவல்களுடன் ஒரு விரிந்த வரலாற்றுக் காட்சி ஒன்றை சித்தரித்துக் காட்டுகிறார். இந்த வரலாற்றுச் சித்தரிப்பு மூலம் வரலாறு காரணகாரிய உறவுடன் படிப்படியாக பரிணாமம் அடையும் தோற்றம் ஒன்று அவரால் உருவாக்கப்படுகிறது. இந்தப் பரிணாமம் முரண்படும் இரு கருத்து நிலைகள், அல்லது இரு வரலாற்றுச் சக்திகள், ஒன்றோடொன்று மோதி முயங்கி முன்னகர்வதன் விளைவாக நிகழ்வதை நாம் காண்கிறோம். இந்தச் சித்திரம் இலக்கண சுத்தமாக மார்க்ஸிய முரணியக்க பொருள் முதல்வாத நோக்கிலேயே ஒவ் வொரு முறையும் அமைந்துள்ளது. இதன் பிறகு ஒவ்வொரு இலக்கியப் படைப்பு குறித்து சிவத்தம்பி கூறும் மதிப்பீடு இந்த ஒட்டுமொத்தச் சித்திரத்தின் ஒரு பகுதியாக உள்ளது. அவரது ஒவ்வொரு கருத்தும் அந்த ஒட்டுமொத்த நோக்கின் கூறாக உள்ளது.
முன்பு குறிப்பிட்ட தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும் என்ற நூலையே இங்கு உதாரணமாக எடுத்துக்கொள்கிறேன். இந்நூலின் தலைப்பே ஆசிரியரின் முரணியக்கம் சார்ந்த நோக்கினைக் காட்டுகிறது. மதம், மானுடம் இரண்டையும் ஒன்றுடன் ஒன்று முரண்படக்கூடிய இரு கருத்து நிலைகளாக, முரணியக்கத்தின் இரு சக்திகளாக கா.சிவத்தம்பி அவர்கள் காண்பது தெரிகிறது.

ச்சுமையும்
|
பேன்
- கே
- -
தி வா
மதமும் மானுடமும் ஒன்றை ஒன்று எதிர்த்து மயங்கி முன்னகர்ந்து செல்லும் சித்திரத்தை அளிக்கும் இந்த நூல் இறுதியில் மானுடம் மேலேழுந்து தன்னை நிலைநாட்டும் சித்திரத்தை அளித்து அதில் ஆசிரியரின்
சார்பு நிலையையும் காட்டி முடிகிறது.
மதம், மானுடம் இரண்டையும் புறவயமாக வகுத்துக் கொள்கிறார் சிவத்தம்பி. மனிதன் சூழலுடன் ஒட்டு மொத்தமாக இயைந்து கொள்வதற்கான வழிமுறையைத் தரும் பண்பாட்டுக் கருவி (பக் 15) இதில் தன் சக மனிதர்கள், இயற்கை ஆகியவற்றுடன் அவற்றுக்கும் அப் பால் உள்ளவையும் அடங்கும். இந்த அப்பால் உள்ளவை பற்றிய கவனக்குவிப்பு மூலம் மதம் புனிதங்களை உருவாக்குகிறது. இதுவே மதத்தின் மையம் என்று எலிசபெத் நாட்டிங் ஹாம் கூறும் கூற்றை மேற்கோள் காட்டுகிறார் சிவத்தம்பி. அந்த புனிதமான அப்பால் உள்ளவற்றை தன் வயப்படுத்தும் பொருட்டு வழிபாடு உருவாகிறது. இது அறிவார்ந்தது அல்ல, உணர்ச்சி சம்பந்தப்பட்டது.
இதுவரை கண்டடையப்பட்ட எந்தச் சமூகமும் மதம் இல்லாததாக இல்லை என்பதை கூறி மதத்தின் மூன்று அடிப்படைக் கட்டுமானங்களை வரையறை செய்கிறார். 1. மத நம்பிக்கை அல்லது விசுவாசம். 2. சடங்குகள். 3. ஐதீகங்கள் (பக். 17) நம்பிக்கையானது இயற்கையுடன் ஓர் ஒட்டுமொத்த உறவை உருவாக்கும் பொருட்டும் இயற்கைக்கு அப்பால் உள்ளவற்றை ஏதேனும் ஒருவகையில் புரிந்துகொள்ளும் பொருட்டும் இயல்பாக உருவாகி வந்த ஒன்று தான் நம்பிக்கை. அது ஒரு பண் பாட்டுக் கருவி. நம்பிக்கையை வாழ்வு முறையாக ஆக்கும் பொருட்டு சடங்குகள். சடங்குகளை விளக்கும் பொருட்டு ஐதீகங்கள்.
இதைத் தொடர்ந்து மார்க்ஸின் புகழ்பெற்ற மேற் கோளை எடுத்துத் தருகிறார் சிவத்தம்பி. நம்மில் பலர் எண்ணுவது போல மார்க்ஸியம் மதத்தை முழுமையாக நிராகரிப்பதில்லை என்று கூறி தன் ஆற்றலை முழுதாகக் கண்டுகொள்ளாத அல்லது இழந்துவிட்ட மனிதனது சுய உணர்வும் சுயப் பிரக்ஞையுமே மதம். என்று மார்க்ஸின் மேற்கோளைத் தொடங்குகிறார். மார்க்ஸின் நோக்கம் மதத்தை நிராகரிப்பதல்ல. அதன் வரலாற்றுப் பாத்
அகவிழி ஜூன் 2014 (எ

Page 29
திரத்தை புரிந்துகொள்வதும் வகுப்பதுமேயாகும் என்பதை விளக்குகிறார். அது மனித சாரத்தின் எல்லையில்லா கற்பனை சார்ந்த வெளிப்பாட்டு நிலை. மதம் சார்ந்த துயரம் உண்மையான துயரத்தின் வெளிப்பாடு, உண்மையான துயரத்திற்கு எதிரான எதிர்ப்பும் கூட. மதம் ஒடுக்கப்பட்ட உயிரின் பெருமூச்சு. அது எவ்வாறு ஆன்மாவற்ற ஒன்றின் ஆன்மாவாக அமைகிறதோ அவ்வண்ணம் இதயமற்ற உலகின் இதயமாக அமைகிறது என்ற மேற்கோளின் முடிவில் தான் புகழ்பெற்ற ஒற்றை வாக்கியமான மதம் மக்களுக்கு அபின் என்ற வரி வருகிறது. இந்த வரியை மட்டும் பிரித்தெடுத்து மார்க்ஸை புரிந்து கொள்வது அபாயமானது என்று எச்சரிக்கும் சிவத்தம்பி, மூலத்தில் மார்க்ஸ் அபின் (போதைத் தன்மையுடையது) என்று தான் கூறியிருக்கிறாரேயொழிய இன்று வழங்கும் கொச்சைத்தனமான பொருளில் அல்ல என்று வலியுறுத்துகிறார்.
இங்குதான் நாம், தமிழ்நாட்டுச் சூழலில் நின்றபடி, கைலாசபதியின் முக்கியத்துவத்தையும் சிவத்தம்பியின் இடத்தையும் புரிந்து கொண்டு மதிப்பிட வேண்டியுள்ளது. தமிழ்நாட்டுக் கருத்தியல் விவாதங்கள் தன் தரப்பை எளிமைப்படுத்துவதில் தொடங்கி மாற்றுத்தரப்பை அதற்கேற்ப மேலும் எளிமைப்படுத்துவதில் முடிகின்றன. இந்த மனநிலைக்கு மதம் மக்களுக்கு அபின் என்ற வரியே போதுமானதும் வசதியானதுமாகும். ஆகவே கடந்த அரை நூற்றாண்டாக இவ்வரி மேலும் மேலும் வலியுறுத்தப்பட்டு மார்க்ஸ் வந்தாலும் மறுக்க முடியாத ஒரு நிலையை அடைந்துவிட்டது இங்கு. இந்த ஒரு வரியின் கொச்சையான விரிவாக்கமே பெரியாரியம் என்ற பெயரில் ஒரு தனிக்கோட்பாடாக இங்கு முன் வைக்கப் படுகிறது. மதம் என்று ஒரு சிலரால் உருவாக்கப்பட்ட ஒரு சாதி மட்டுமே என்ற அபத்தத்தின் வடிவ வேறுபாடு களாகவே இங்கு மதம் பற்றிய கூற்றுகள் உள்ளன. இந்நிலையில் நின்று கைலாசபதி, சிவத்தம்பி போன்ற சமநிலையும் கோட்பாட்டுத் தெளிவும் உடைய சிந்தனை யாளர்களின் உண்மையான பங்களிப்பு என்ன என்று நாம் ஊகிக்க இயலும்.
மார்க்ஸின் மேற்கோள் ஒரு தீர்ப்போ, முடிவோ அல்ல, அது ஒர் ஆய்வுப்போக்கு அல்லது அணுகுமுறை. அதை தமிழ்ச் சூழல் சார்ந்து விரிவாகவே வகுத்துக் கொள்கிறார். சிவத்தம்பியின் அணுகுமுறையின் மதம் என்பது இயற்கையையும் இயற்கை இறந்தனவற்றையும் தன்வயப்படுத்திக் கொள்வதற்கான ஒரு கருவியாகத் தொடங்கிய ஒன்று நாளடைவில் இயற்கையின் முன்பும் இயற்கை இறந்தனவற்றின் முன்பும் மனிதன் தன்னைச் சரணடைய வைத்ததில் சென்று முடிந்தது. மனிதன் தன் முக்கியத்துவத்தை இழந்து அடிமையாகிறான். மதம் தன் முதல் இலக்கான மானுட நலன் என்பதை இழந்து நிறுவனமாகவும் நம்பிக்கையாகவும் இறுகியது.
8 அகவிழி ஜூன் 2014

இதன் தொடர்ச்சியாக மானுடம் என்பதை வகுத்துக் கொள்கிறார் சிவத்தம்பி. மானுடம் என்பதை ஐரோப்பிய சிந்தனையில் உள்ள மனிதனை மையமாக்கிய பிரபஞ்சத்தைக் கற்பனை செய்யும் போக்கில் தொடங்கி மனித நலனையும் மனித மேம்பாட்டையும் இலக்காகக் கொள்வது. ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தில் தொடங்கி மார்க்ஸியத்தில் முழுமை பெற்ற ஒரு கண்ணோட்டமாக இதைக் காணும் சிவத்தம்பி தெய்வம் என்றும் கோட்பாட்டின் சிதைவின் பின்னர் மனிதரின் மானுடத்துவம் பற்றிய சிந்தனை முனைப்பு பெற்றது எனலாம் என்று கூறி இந்த இருமையை திட்டவட்டமாக நிறுவுகிறார். அடுத்தபடியாக மார்க்ஸிய மானுடவாதத்தின் முழுமை குறித்த தன் நம்பிக்கையை உறுதி செய்கிறார்..
இங்கிருந்து தொடங்கும் சிவத்தம்பியின் ஆய்வு அம்புபோல தமிழிலக்கியப்பரப்பை ஊடுருவி இலக்கில் தைக்கிறது. ஆனால் கூர்ந்து நோக்கினால் இலக்கி லிருந்தே அது தொடங்கி பின்னால் சென்றிருப்பதைக் காணமுடியும். இதுவே சிவத்தம்பியின் பலமும் பலவீனமும் ஆகும். தொல் தமிழ்ப் பண்பாட்டில் மதம் எவ்விதம் பொருள் கொள்ளப்பட்டது என்று அவரது ஆய்வு தொடங்குகிறது. மெல்ல முழு முதல் தெய்வங்கள் என்னும் கருத்து நிலைகள் உருவாயின. தொடர்ந்து பெருமதங்கள் பிறந்தன. பெருமதங்களுக் கும் பேரரசுகளுக்கும் இடையே நேரடி உறவு உள்ளது. ஒன்று இன்னொன்றை வளர்த்தன. பின்னர் பெருமதங்கள் நடுவே பூசலும் மோதலும் உரையாடலும் நிகழவே பெருமதங்கள் ஒவ்வொன்றும் தத்துவார்த்தமாகவும் குறியீட்டு ரீதியாகவும் தங்களை வளர்த்துக் கொண்டன. இங்கும் சிவத்தம்பி முரணியக்கத்தையே காண்கிறார். மதத்திற்குள் இருந்து மானுடத்தின் குரல் ஒலித்தது. அதற்கும் மத நிறு வனங்களுக்கும் இடையே மோதல் எப்போதும் நீடித்தது. இந்த முரணியக்கமே மதங்களை வளரச் செய்தது. நிறுவன மதங்களுக்குள் பக்தி இயக்கம் உருவானது இப்படித்தான். மானுடம் மையப்படுத்தப்பட்ட மதமே பக்தி இயக்கம். அது மீண்டும் உறைந்தபோது நவீன ஜனநாயகக் கருத்துக்கள் உருவாகி வந்து மதத்துடன் மோதின. மானுடமைய கோட்பாடுகள் அடுத்த படியாக வந்தன.
இந்த முரணியக்கத்தில் மதம் எப்படி மெல்ல மெல்ல மாறுதல் அடைகிறது என்ற சித்திரமே சிவத்தம்பி கூறும் முக்கியமான கருத்தாகும் மதமே சிந்தனைக்குரிய படிமங்களை வழங்குகிறது. இதனால் மதம் என்பது மனித நிலைப்படுத்தப்பட்டு மனித உணர்வுகளுடன் ஒன்றிணைந்து விடுகிறது. (அதனை எதிர்ப்பதற்குக் கூட அதுவே படிமங்களை வழங்குகிறது.) (பக்கம் 22) என்று கூறும் சிவத்தம்பி இத்தகைய வகையில் மதம் ஆளுமையுடன் இயையுறுகிற போது மதம் அல்லது மதம் எடுத்துக் கூறுபவை பெறுமானங்கள் (மதிப்பீடுகள்) ஆகிவிடு கின்றன. பெறுமானங்கள் உண்மையில் வாழ்க்கையின்

Page 30
நியமங்களே அழகியல் நியமங்கள்கூட மத இணைப்பு உடையவையாக அமைந்துவிடுவதுண்டு என்கிறார். ஆகவே சிவத்தம்பியைப் பொறுத்த வரை மதம், மதத்துக்கு எதிரான மானுடப் போர் இரண்டுமே மதிப்பீடுகளின் மோதல்கள். பண்பாட்டு முன்னகர்வின் வெளிப்பாடுகள் அல்லது இயங்கு முறைகள். நாமறிந்த கொச்சையான மத எதிர்ப்புக் கூக்குரல்களிலிருந்து வெகுவாகத் தள்ளி ஆழமான வரலாற்றுப் பார்வை கொண்ட ஆய்வு முறையாக நிற்கிறது இது.
தமிழிலக்கியத்தில் நெடுங்காலமாக விழுமியங்களாக வும் படிமங்களாகவும் கருத்து நிலைகளாகவும் மதம் ஆற்றிய பங்கை ஆராயும் சிவத்தம்பி இஸ்லாமிய கிறிஸ்தவ மதங்கள் இந்த வளர்ச்சிப் போக்கில் ஆற்றிய பங்கை மிகவிரிவான தரவுகளுடன் ஆராய்ந்து மதிப்பிடு கிறார். இவ்விரண்டுக்கும் பிறகு தமிழகத்தில் உயிரும் வடிவும் கொண்டு எழுந்த சைவ சித்தாந்தத்தை ஆராய்ந்து இறுதியாக வந்த மானுட மைய நோக்கினை மதிப்பிட்டு நிறுவி இந்நூலை முடிக்கிறார். ஒட்டு மொத்த தமிழ் பண் பாட்டு வளர்ச்சிப்போக்கையும் ஒவ்வொரு கணமும் கருத்தில் கொண்டு நடத்தப்பட்டுள்ளது இந்த ஆய்வு. முதற்கட்டுரையில் தமிழகத்தில் பேரரசுகள் உருவான போது பெருமதங்களும் அவற்றின் சிதைவுக்காலத்தில் உதிரி மறை ஞான (மிஸ்டிசிசம்) வழிகளிலும் உருவாகி வலுப்பெற்றதைக் காட்டி மதச்சார்பின்மையே நவீனத் தமி ழிலக்கியத்தின் பண்பாகும் என்று முடிக்கிறார். தமிழில் கிறிஸ்தவ இலக்கியப் பாரம்பரியம் என்ற விரிவான கட்டுரை வெறுமே நம்பிக்கைகளும் சடங்குகளுமாகச் சுருங்கிப் போயிருந்த இந்து மதம் மீது கிறிஸ்துவத்தின் மனித மைய நோக்கு விடுத்த தத்துவார்த்தமான தாக்குதலை விரிவாக ஆராய்கிறது. அதேபோல் சைவ சித்தாந்தத்தின் வருகை, தமிழ் மக்களின் தனித்துவமான மெய்யியற் கொள்கையான சைவசித்தாந்தம் தமிழ் பண்பாட்டின் மீதான அயல் தாக்குதல்கள் உச்சத்துக்குச் சென்ற ஒரு கால கட்டத்தில் வீறோடு உருவாகி வந்த சித்திரத்தை சிவத்தம்பி காட்டுகிறார். ஒரு நூறுவருட கால எல்லைக்குள்தான் சைவசித்தாந்தம் ஒரு கோட்பாடாக வரையறை பெற்றது என்றும் ஆனால் அதன் வேர்கள் எட்டாம் நூற்றாண்டு பக்தி காலகட்டம் முதல் உருவாகி வந்துள்ளன என்றும் கூறுகிறார். ஒரு சீர்திருத்த இயக்கமாக உருவான சைவசித்தாந்தம் மானுட மையம் நோக்கிய நகர்வையே தன் வளர்ச்சியாகக் கொண்டது. அதன் மூலம் பெருங்கோயில்களின் அதிகாரத்திலிருந்தும் பிராமணய முறையில் இருந்தும் விடுபடும் வழி ஒன்று உருவானது (பக் 21) சங்கரரின் ஏகான்மா வாதத்தையும் வருணாசிரம தர்மத்தின் ஸ்மார்த்த நிலைபாடுகளையும் எதிர்க்கக் கூடிய சமூக வலிமை பதிமூன்றாம் நூற் றாண்டுக்குமேலேயே ஏற்படு கிறது. இந்த செல் நெறியின் கருத்து நிலை எடுத்துக்காட்டாக சைவ சித்தாந்தத்தைக் கொள்ள வேண்டும் (பக்க 121) என்கிறார் சிவத்தம்பி.

இந்தப் போக்குதான் தனித் தமிழ் இயக்கமாக மாறி பிற்பாடு இன்றைய திராவிட இயக்கங்களாக பரிணாமம் கொண்டது என்பது சிவத்தம்பியின் நிலைபாடாகும். (பக்108)
இவ்வாறு பழந்தமிழ் மதம், பெருமதங்கள் வழியாக கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களின் ஊடாக வந்து சைவ சித்தாந்தத்தில் நிற்கும் சிவத்தம்பி அதற்கு அடுத்த நிலை யாகவே மார்க்ஸிய மானுட மைய வாதத்தை அணுகுகிறார். அவரது நோக்கில் மானுட நலன் நோக்கிய தேடல் என்பது எப்போதும் பண்பாட்டின் சாரமாக இருப்பதாகும். ஏற்றதாழ்வும் இறுக்கமான கட்டமைப்பும் கொண்ட சங்க காலம் கூட அவ்வகையில் மானுட நோக்கும் உடையதே. ஆனால் சிவத்தம்பி முதல் பெரும் மானுடக் குரலாக திருக்குறளையே காண்கிறார். அதன்பிறகு பக்தி இலக்கியத்தின் மானுட அந்தரங்க உறவு நிலையை கருத்தில் கொள்கிறார் (பக் 131) பிறகு கம்பராமாயணத்தின் மானுடம் வென்றதம்மா என்ற அறத்தின் குரல் (பக் 133) பிறகு சித்தர் பாடல்கள் சித்தர் பாடல்களினூடாக சில மனிதாயப் பண்புகள் (அதுவும் உயர் இலக்கியத்தில் அத் தகைய குரல்கள் கேட்காத வேளையில்) இடம் பெறலாயின (பக் 134) அதன் பிறகு சுப்ரமணிய பாரதி. பிறகு திரு.வி. கல்யானசுந்தர முதலியார், ஜீவானந்தம் என்று சொல்லி வரும் சிவத்தம்பி வானம்பாடி இயக்கத்தின் மானுடம் பாட வந்த குரலை எதிரொலித்து நூலை
முடிக்கிறார்.
இக்கட்டுரை மதம் குறித்து அல்ல. சிவத்தம்பியின் மானுட வாதம் குறித்ததும் அல்ல. நம் கால கட்டத்து மாபெரும் மார்க்ஸிய அறிஞன் ஒருவனின் ஆய்வு முறையை விளக்கிய அவருடைய நூல்களில் சிறியதான ஒன்றை உதாரணமாக எடுத்துக்கொண்டேன். சிவத்தம்பியின் ஆய்வு முறையின் சிறப்புகளை இதற்குள் வாசகன் உணர்ந்து கொண்டிருக்கலாம். ஒன்று அவர் கருத்துக் களையோ சமூக இயக்கத்தையோ எளிமைப்படுத்துவதில்லை. அவற்றின் சிக்கலான ஊடுபாவுகளுடன் முழுமையுடன் விவாதத்திற்கு எடுத்துக் கொள்கிறார். இரண்டு , சிவத்தம்பியின் ஆய்வுமுறையில் அறிவார்ந்த முன்முடிவு இருக்கலாம். மார்க்ஸியருக்கு அது இயல்பு. ஆனால் ஒரு போதும் காழ்ப்பும் கசப்பும் இல்லை. மூன்று ஒவ்வொரு கருத்துக்கும் புறவய மான தரவுகளை ஆதாரமாகக் காணும் போக்கு. அதில் தொடர்ந்த உழைப்பு, நான்கு அனைத்து தனிக் கருத்துக்களையும் இணைத்து ஒரு விரிவான வரலாற்றுச் சித்திரத்தை உருவாக்கும் முயற்சி.
ஓர் எழுத்தாளனாகவும் இலக்கிய மாணவராகவும் , நான் சிவத்தம்பியிடம் உடன்படும் இடங்கள் எவை? ஒன்று, நான் என்னுடைய வரலாற்றுச் சித்திரத்தை 2 மார்க்ஸியிடம் சார்ந்து உருவாக்கிக் கொண்டுள்ளவன். ஆகவே சிவத் தம்பி ஆய்வு முறை மட்டுமல்ல முடிவுகள் கூட பெரும்பாலும் எனக்கு ஏற்புடையனவாகவே உள்ளன.
அகவிழி ஜூன் 2014 (8
உ - கம் 4.47 துப்ப.Kாம்.

Page 31
அதே சமயம் இந்த வரலாற்று வாதத்தை நிறுவப்பட்ட இறுதி உண்மையாக, அல்லது ஒரு தகவல் உண்மையாக நான் ஏற்றுக் கொள்ளவில்லை. என்னைப் பொறுத்தவரை எல்லா வரலாற்றுவாதங்களும் சமகாலத் தேவைக்கு ஏற்ப நாம் செய்து கொள்ளும் புனைவுகளே. மார்க்ஸி யம் அளிக்கும் கருவிகளே மிகப் பொருத்தமானதும் உதவிகரமானதும் ஆன வரலாற்று வாதத்தை நாம் உருவாக்கிக்கொள்ள உதவுகின்றன என்பதனால் அவை இப்போதைக்கு ஏற்புடையவை, அவ்வளவுதான்.
இரண்டாவதாக சிவத்தம்பி மீது நான் முரண்படுவது முக்கியமான இன்னொரு தளத்திலாகும். அது இந்த முதல் முரண்பாட்டின் விரவாக்கமும் நீட்சியும் ஆகும். மார்க்ஸிய வரலாற்றுவாதத்தை முழுமுற்றாக நம்பி இறுதி சித்திரமாக அதை ஏற்கும் சிவத்தம்பி அதி லிருந்து தன் அனைத்து கருத்து நிலைகளையும் ஒற்றைப்படையாக உருவாக்கியபடியே செல்கிறார். அடிப்படையில் முரண் பாடுகளையும் பன்மைகளையும் விலகல்களையும் சிக்கல்களையும் அதிக கவனம் கொடுத்துப் பார்க்கும் கருத்தியக்கமான இலக்கியத்தை அவரால் மதிப்பிடவே புரிந்து கொள்ளவோ முடியாமல் போகிறது. அவரது இலக்கிய ரசனை மிக மிகத் தட்டையானதாக இலக்கியத்தை வெறும் அபிப்பிராயமாக மட்டும் குறுக்கிப் பார்ப்பதாக உள்ளது. இதனால் அவரும் தன் அனைத்து மகத்துவங் களுடனும் இங்குள்ள இயந்திரவாத மார்க்ஸியர்களின் அதே நிலைபாடுகளையே எதிரொலி செய்கிறார். இவர்கள் அவரை தங்களவராக எடுத்துப் போற்றுவதற்கும் இதுவே காரணம். இந்த சிவத்தம்பி என் மறுப்புக்கும் நிரா கரிப்புக்கும் உரியவர். ஏனெனில் இலக்கிய இயக்கம் என நான் அறிந்த ஒன்றுக்கு நேர் எதிரானவர். இங்கே ஸ்டாலின் ஆட்சியோ மாவோ ஆட்சியோ இருந்து கைலாசபதியும் சிவத்தம்பியும் கமிசார்களாக இருந்திருந்தால் இங்குள்ள அத்தனை முக்கியமான படைப்பாளிகளும் ராஜஸ்தான் கட்டாய உழைப்பு முகாம் களில் மணல் சுமந்திருப்பார்கள். அக்கினி புத்திரன் போன்றவர்களுக்கு உயரிய இலக்கிய கெளரவமும் கிடைத்திருக்கும்.
வேடிக்கையாகக் கூறவில்லை. இலக்கியப் படைப்பின் இயங்கு முறையில் உள்ள நுட்பங்களை விட்டுவிடுவோம். அதை ஒரு கருத்து இயக்கமாக மட்டுமே எடுத்துக்கொண்டு சிவத்தம்பியின் தரப்பை ஆராய்வோம். வரலாற்றின் இயக்கத்தை அதன் பல்வேறு முரண்பட்ட நிலைகளை, ஊடு பாவுகளை, உட்சிக்கல்களை கணக்கில் கொண்டு ஆராயும் சிவத்தம்பி மானுடம் என்னும் கருத்து நிலை
யையும் அது இலக்கியத்தில் வெளிப்பாடு கொள்வதையும் 8 மட்டும் எப்படி ஒற்றைப்படையான ஒரு கூற்றாக மட்டுமே
காண்கிறார்? மானுடம் என்னும் தரப்பிலேயே எத்தனை sே உள்ளோட்டங்கள் இருக்க இயலும் என்று ஏன் அவர்
யோசிக்கவில்லை? மனிதனை மையமாகக் கொண்ட ஒரு மனிதாபிமான நிலைபாடு இருப்பதைப் போலவே
8 அகவிழி ஜூன்

இயற்கையை மையமாகக் கொண்ட ஒரு மனிதாபிமான நிலைபாடு ஏன் இருக்கக் கூடாது? (உதாரணம் இன்றைய சூழலியல் இடதுசாரிகள்) ஒரு மனம் ஒரு நிலைப்பாட்டை அடையும்விதமே நுட்பமான சிக்கல்கள் மிக்க முரணி யக்கத்தின் விளைவாக நிகழும் ஒன்று என்றுதான் நான் நினைக்கிறேன். ஆகவே மனிதாபிமானத்துடன் ஒருவகை மனித வெறுப்பும் கலந்துள்ளது. மாபெரும் மனிதாபி மானிகளின் தனிவாழ்வில் மானுட வெறுப்பு வெளிப்படும் தருணங்களைப் பார்க்கலாம். ஒரு கருத்து நிலையாக மனிதாபிமானம் முன் வைக்கப்பட்ட அமைப்புகளுக்குள் தான் மாபெரும் மானுட ஒடுக்கு முறைகள் அரங்கேறின. என்பதை சிவத்தம்பி அறியமாட்டாரா என்ன? இது தர்க்க பூர்வமாக விவாதித்து நிலைநாட்ட வேண்டிய விஷயமே அல்ல. எளிய அனுபவ உண்மை.
இலக்கியம் இந்தச் சிக்கலான ஊடுபாவுகளை முடிந்த வரை முழுமையாகச் சித்தரித்துவிட முயலும் ஓர் மொழி இயக்கம். ஆகவேதான் எந்தக் கோணத்திலாயினும் ஒற்றைப்படைக் கூற்றுக்கள் இலக்கியத்தில் மதிப் பில்லாதவையாக உள்ளன. கடவுள் வாழ்க என்பதற் கும் மானுடம் வாழ்க என்பதற்கும் இங்கு ஒரே பொருள் தான், ஒரே மதிப்புதான் மனிதன் எத்தனை மகத்தான ஒரு சொல் என்ற வியப்புக்கு கடவுள் எத்தனை மகத்தான ஒரு சொல், என்ற வியப்பின் அதே மதிப்புதான் அதாவது வெறும் உணர்ச்சி வெளிப்பாட்டின் மதிப்பு இந்த விஷயம்தான். சிவத்தம்பியின் பிரக்ஞைக்கும் சிக்குவ தில்லை. கடவுளில் இருந்து மானுடத்திற்கு வந்துவிட்டால் இலக்கியத்தில் ஒரு தலை கீழ் மாற்றம் நிகழ்ந்து விட்ட தாக அவர் நம்புவது இதனாலேயே.
இலக்கியத்தில் மொழி கொள்ளும் அனைத்து நுட்பங்களும் கருத்தியலிலும் உளச் செயல்பாடுகளிலும் ஒவ்வொரு தருணத்திலும் நிகழக்கூடிய சிக்கலான முரணியக்கங்களை தொட்டுக் காட்டிவிடுவதற்கான முயற்சிகளே. அதில் அடையும் வெற்றிகளே இலக்கிய நுட்பங்கள் என்று கூறப்படுகின்றன. அதன் அடிப்படையில் தான் தல்ஸ்தோயும் தஸ்தயேவ்ஸ்கியும் இலக்கிய மேதைகள் என்றும் கார்க்கி எழுத்தாளர் என்றும் தரம்பிரித்து மதிப்பிடப்படுகிறார்கள். நீண்ட இலக்கிய இயக்கத்தில் சிவத்தம்பி இவ்விஷயத்தை கணக்கில் கொண்டமைக்கான தடயமே இல்லை. அவரது வரலாற்று நோக்கு, ஆய்வு நெறி முக்கியமானது, அவரது இலக் கிய முடிவுகள் அபத்தமானவை. தன் நீண்ட ஆய்வின் முடிவாக அவர் அக்னிபுத்திரனின் நுட்பமோ அழகோ இல்லாத வரட்டுக் கூச்சலில் நிறைவு காண்பது இதனா லேயே. இந்த இலக்கிய மொண்ணைத்தனமே ஒரு போலி எழுத்தை அது மிக அப்பட்டமாகவே இருந்தும்கூட சித்தர் பாடலாக அவரை ஏற்றுக் கொள்ளச் செய்கிறது. .
சிவத்தம்பியின் இலக்கிய அணுகு முறை என்பது ஒரு படைப்பு என்ன நிலைபாடு எடுத்துள்ளது? என்ற

Page 32
வினாவிலிருந்தே எழுகிறது. அப்படைப்பின் மீதான அவரது திறனாய்வின் முடிவு அந்த நிலை பாடு ஏற்புடையதாக இல்லையா என்ற கூற்றில்தான் நிறைவு கொள்கிறது. மார்க்ஸிய இயந்திரவாதப் பார்வையின் தெளிவான உதா ரணம் என்று இந்த அணுகுமுறையைக் கூறலாம். ஆனால் இந்த அணுகுமுறையில் உள்ள சிறப்பியல்புகளில் சில மதிப்பிற்குரியவை. ஒன்று, முழுக்க முழுக்க படைப்பு சார்ந்தே சிவத்தம்பி தன் ஆய்வையும் முடிவுகளையும் உருவாக்கிக்கொள்கிறார், படைப்பாளி சார்ந்து அல்ல. இலக்கிய வம்புகளின் அரசியலுக்கும் சிவத்தம்பிக்கும் நீண்ட தொலைவு என்றுதான் அவரது நூல்கள் காட்டுகின்றன. இரண்டு,படைப்பு ஒரு விரிவான கருத்து விவாதத்தின் ஒரு பகுதியாக நிறுத்தியே அவர் வாசிக்கிறார். மூன்று, படைப்பின்புனைவை ஒரு விரிந்த வரலாற்று வாதப் புனைவின் ஒரு பகுதியாக நிறுத்த முயல்கிறார். இந்தத் தெளிவான முறைமை கொண்ட ஒரு திறனாய்வாளன் தமிழ்நாட்டில் இல்லை என்றே நான் எண்ணுகிறேன். நா. வானமாமலை, ஞானி முதல் அருணன், நா.முத்து மோகன் வரை தமிழில் மார்க்ஸியத் திறனாய்வை எழுதிய எவரிலும் இத்தகைய சீரான புறவய அணுகுமுறை இல்லை. தமிழ் கோட்பாட்டுத் திறனாய்வு முன்னு தாரணமாகக் கொள்ள வேண்டிய ஒரு நோக்கு இது.
இலக்கியமும் கருத்து நிலையும் என்ற தன் நூலின் முன்னுரையில் சிவத்தம்பி தமிழில் இலக்கியத் திறனாய்வு வலுப்பெறாது போனமைக்கான இரு காரணங்களைக் குறிப்பிட்டுச் சொல்கிறார். ஒன்று கலைச் சொல்லாக்கம், முறைமை போன்றவற்றில் சீரான பொதுமை நோக்கு இல்லாமை. இரண்டு இலக்கியப்புலமை இல்லாமல் மேலைநாட்டுக் கோட்பாடுகளை பிரதியாக்கம் செய்யும் போக்கு (பக் 17) இரண்டுக்கும் தன்னளவில் தீர்வுகாண சிவத்தம்பி முயல்வதைக் காணலாம். புதிய கலைச் சொல்லாக்கம் அவரது திறனாய்வின் முக்கியமான முயற்சியாக உள்ளது. மார்க்ஸிஸ் கோட்பாட்டுச் சட்டத்தின் உள்ளே நின்றபடி சுயமான முடிவுகளை உருவாக்கவே அவர் முயல்கிறார்.
இலக்கியத்தினை இயந்திரத் தன்மையுள்ளதான ஒரு பிரதிபலிப்பு கொள்கைக்கு உட்படுத்தாது அதனை ஒரு பண்பாட்டு உற்பத்திப் பொருளாகக் கொண்டு அதற்கு அவசியமான கருத்துநிலை கருப்பொருட்களும் எவ்வாறு இலக்கியத்தினுள்ளே ஓடியாடித் திரிகின்றன என்று பார்க்க வேண்டும். என்று (பக்கம் 19) கூறிய படி தமிழிலக்கியத்தில் மனிதன் என்னும் தன் ஆய்வைத் தொடங்குகிறார் சிவத்தம்பி. இதன் நீட்சியாக கருத்து நிலை என்றால் என்ன என்பதை நிர்ணயித்துக்கொள்கிறார். கருத்துநிலை என்பது ஒருவர் தமது சமூக நிலை காரணமாக உரு வாக்கிக்கொள்ளும் கருத்து நிலைப்பாடு என்று வரை யறுத்துவிட்டு இலக்கியமே கருத்து நிலையாக்கத்திற்கான பொருள்தான் என்று கூறுகிறார் சிவத்தம்பி. அவரது உதா ரணத்தின்படி இலக்கியம் இடியப்பம். கருத்தியல் இடியப்ப

அச்சு. அச்சுதான் இடியப்பதைத் தீர்மானிக்கிறது. அதை அறியாதவர்கள் இடியாப்பத்தின் வடிவத்தை அதன் சிறப்பியல்பாக நினைப்பார்கள். இவ்வாறு ஒருவன் கொள்ளும் நிலைப்பாடு கொள்கை. அதை சிந்தனை நெறிக்கமைய வகுத்தமைத்துக் கொள்ளும் முறைமையே கோட்பாடு என்பது இலக்கிய ஆக்கத்தில் ஈடுபடும் ஒருவன் தனக்குள்ள அறிவுத் தெளிவு மட்டத்திற்கேற்ப வாழ்க் கையை நோக்கும் முறைமை இது தான் என்று வரையறுத்துக் கூறும் சிவத்தம்பி இதன் அடிப்படை யிலேயே படைப்புகளை வகுத்துக் கொள்கிறார்.
சிவத்தம்பி ஓர் இலக்கியவாதியின் இலக்கிய ஆக்கமுறை பற்றி கொண்டுள்ள புரிதல் என்ன என்பதை இந்நூலில் ஓர் இடத்தில் தெளிவாகவே காணலாம். இலக் கியம் என்பது ஒரு சமூக அழகியல் நிகழ்வு என்று முதலில் அவர் வரையறை செய்து கொள்கிறார் அதன் பின் அந்த இரு கூறுகளையும் தனித்தனியாக பிரித்துக் கொள்கிறார். மற்றையோரைப் பார்க்கிலும் எழுத்தாளனுக்கு சமூகப் பிரச்சினை பற்றி இரு நிலைப்பட்ட தெளிவு இருக்க வேண்டும். முதலில் இதுதான் பிரச்சினை என்ற கல்வி நிலை நின்ற உலக நிலை நின்ற தெளிவு வேண்டும். சமூகப் பிரச்சினைகளை அவற்றின் பரிணமிப்பு முறைகள் காரணமாக தவறாக விளங்கிக் கொள்ளாமல் அவற்றின் மூலத் தன்மை அறிந்து பிரச்சினையை விளங்கிக்கொள்வது முக்கியமாகும். இரண்டாவதாக அப்பிரச்சினை மனித வாழ்க்கையில் உயிரும் சதையும் உள்ளதாகவும் எப்படி ஆகிறது என்று தெளிவு வேண்டும். முன்னது படைப்பின் கருத்தியலையும் பின்னது படைப்பின் அழகியலையும் தீர்மானிக் கின்றன என்பது அவரது எண்ணம்.
சில படைப்புகளை எழுதியவன் என்ற முறையில் இதைப்பற்றி முற்றிலும் மாறான கருத்தையே என்னால் கூறமுடியும். முதலில் இங்கு சிவத்தம்பி மனித மனம் என்ற சிக்கலான, தனிப்போக்கு கொண்ட அமைப்பை கருத்திலேயே கொள்ளவில்லை. இதுதான் இயந்திரவாதம் என்பது. ஒரே வகையான கோட்பாட்டுக் கல்வியும் ஒரே வகையான அனுபவச் சூழலும் கொண்ட இருபடைப் பாளிகள் முற்றிலும் மாறுபட்ட இரு ஆக்கங்களையே உருவாக்கு வார்கள் என்ற உண்மையில் இருந்து புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் இது. இலக்கியத்தில் படைப்பாளி கொள்ளும் கோட்பாட்டுத் தெளிவோ, பிரச்சினை மீதான உணர்ச்சிகர ஈடுபாடோ எல்லாம் அதன் உருவாக்கத்தில் மிகச் சிறிய பங்கையே வகிக்கின்றன. படைப்பு என்பது அப் படைப்பாளியின் மனதிற்கும் அவனுடைய மொழி பிரக்ஞைக்கும் இடையே அவனை மீறி நடக்கும் ஒரு விளையாட்டு கூறுவதற்கு மட்டுமல்ல, கூறாமல் மறைப்பதற்கும் சிறந்த படைப்புகள் 2 எழுதப்படலாம். தான் நம்புபவற்றைத்தான் எழுத்தாளன் எழுதுவான் என்று இல்லை, முற்றிலும் நம்பாதனவற் றையும் எழுதலாம். அது ஒரு விளையாட்டு என்று ஐ. கூறும்போதுதான் அதைச் சரியாகப் புரிந்துகொள்ளமுடியும்.
2014
- 3 - கீய | படாதபாடானம்
31

Page 33
விளையாட்டின் பயன் என்பது விளையாட்டில் உள்ள இன்பமே. விளையாட்டை ஒரு தொழிலாக, ஒரு பயணமாக எடுத்துக்கொண்டு அதன் இயக்கத்தை அர்த்தப்படுத்த முயல்பவனுக்கு ஆயாசமே விளையும் படைப்பாளி தன் படைப்பில் தன் நம்பிக்கைகளை குழந்தையைக் கொஞ்சும் தாய் போலவும் கையாளலாம் எலியைக் கொஞ்சும் பூனைபோலவும் கையாளலாம்.
இந்த எதிர்பாராத தன்மை விளக்க முடியாத தன்மையில் இருந்தே இலக்கியத்தின் சாத்தியப்பாடுகள் பிறக்கின்றன. இலக்கியம் என்பது நிலைப்பாடு அல்ல. நிலை பாடுகளின் விளையாட்டு அது என்று கொள்வதே பொருத்தம். இக் காரணத்தால்தான் சிவத்தம்பி யைப் போன்ற இயந்திரவார மார்க் ஸியர்களால் பாரதியையோ புதுமைப்பித்தனையோ வகுக்க முடியவில்லை. ஒவ்வொரு முறையும் பிடிக்குச் சிக்கி தவறிச் செல்கிறார்கள். முற்போக்கு முத்திரையும் பிற்போக்கு முத்திரையின் அவர்களுக்கு கனகச்சிதமாகப் பொருந்துகிறது. ஓயாத சவாலாக இவர்கள் முன் நின்று கொண்டும் இருக்கிறார்கள்.
இலக்கியப்படைப்பாக்கத்தின் இந்தத் தனித்தன்மையைப் பற்றி இங்கே விரிவாகப் பேச விரும்பவில்லை. நவீனத் துவத்திற்கு பிறகு வந்த இலக்கிய ஆய்வுகளால் விரிவாக விவாதிக்கப்பட்டு விளக்கப்பட்ட விஷயம்தான் இது. இலக்கியப் படைப்பாளியின் கருத்தியலுக்கு எவ்விதமான தனி மதிப்பும் இல்லை. வரலாற்றைப் பற்றியும் பெண் விடுதலை பற்றியும் காமம் பற்றியும் தல்ஸ்தோய் கொண்டிருந்த கருத்து நிலைபாடுக்கும் அவரது படைப்புகளின் தீராத ஆழத்திற்கும் என்ன தொடர்பு?
நவீன இலக்கியங்களின் வெற்றி தோல்வி என்பது அவை ஏற்படுத்தும் சமூகத் தாக்கம் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றன. என்ற இறுதியான இயந்திரவாத முடிவுக்கு சிவத்தம்பி வந்து சேர்வது படைப்பியக்கம் என்பது உணர்ச்சி சேர்க்கப்பட்ட கருத்தியல் இயக்கம் என்ற தொடக்கப் புரிதலின் திசை வழியாகவே ஒரு படைப்பின் சமூகப் பாதிப்பை அளப்பது எப்படி? தீவிரமான ஒரு பிரச்சாரப் படைப்பு உச்ச கட்ட வேகத்துடன் பிரச்சாரம் செய்யப்படும்போது ஒரு குறுகிய கால அளவில் தெளிவாக எடுத்துக் காட்டத்தக்க சமூகப் பாதிப்பை நிகழ்த்துகிறது. ஒரு பேரிலக்கியம் சீரிய வாசகர் சிலரிடம் ஏற்படுத்தும் ஆழமான உரையாடல் பாதிப்பு மூலம் நீண்டகால அள வில் ஒரு சமூகத்தின் பண்பாட்டில் பாதிப்பைச் செலுத்து கிறது. சிவத்தம்பியின் மார்க்ஸிய அளவுகோல் முந்தைய ஆக்கத்தையே முன்னிறுத்தும், பிந்தையதை சைபீரியாவுக்கு அனுப்பும். சரி, ஒரு சமூகத்தின் மீது எதிர்மறையாக பாதிப்பு செலுத்தும் படைப்புகளுக்கும் சிந்தனையின் முரணியக்கத்தில் பங்கு இல்லையா என்ன? ஒரு சமூகத்தை சீண்டும் படைப்புகளை எப்படி எடுத்துக்கொள்வது? இன்னும் இப்படியே கேட்டுக் கொண்டு செல்லலாம். படைப்பின் கருத்தியல் பாதிப்பு மட்டும்தான் பாதிப்பா?
8 அகவிழி ஜூன் 2014

அழகியல் ரீதியாக ஒரு படைப்பு சமூகத்தைப் பாதிக் காதா? ஒரு படைப்பும் தனியாக நேரடியாக சமூகத்துடன் உரையாடுவதில்லை. அப்படைப்பின் மீதான எதிர்வினைகள், மதிப்பீடுகள் அனைத்தும் சேர்ந்த ஒரு பெரிய உரையாடல் தளமே அதை சமூகத்தால் உள்வாங்கப்படச் செய்கிறது. பாரதி பாடல்களின் சமூகப் பங்களிப்பை ஜீவா முதல் ஜெயகாந்தன் வரை பாரதி பாடல்களை மேடையில் முழங்கியவர்கள், பாரதி ஆய்வாளர்கள், டி.கே. பட்டம்மாள் முதல் மகாராஜபுரம் சந்தானம் வரை அப்பாடல்களை மேடையில் பாடியவர்கள் அனைவரின் பங்களிப்பையும் கணக்கில் கொண்டல்லவா மதிப்பிட வேண்டும்? அதற்கான அளவுகோல் என்ன?
கடைசியில் சிவத்தம்பியின் இயந்திரவாதம் எளிய பயன்பாட்டு வாதத்தில் வந்து நிற்கிறது. ஒரு மறை சுழற்றியின் பயனே அது ஒரு கவிதையின் பயனே அது எத்தனை எளிய இலக்கிய வாய்ப்பாடு! இந்த எளிமைப்படுத்தலில் இருந்தே அடுத்தடுத்தது பிழைகள் உருவாகின்றன. காந்தியம் தமிழகத்தில் உருவாக்கிய தாக்கத்தை கல்கியின் தியாகபூமி காட்டுகிறது. தொழிற்சங்க இயக்கத்தின் ஆவணம் ரகுநாதனின் பஞ்சும் பசியும். கூட்டுக்குடும்ப அமைப்பு சிதைந்ததற்கு தி.ஜானகிராமன் நாவல்கள் ஆவணம் (அப்படியா?) எளிய பிரதிபலிப்பு வாதத்தை கடந்து செல்ல வேண்டும் என்னும் அறை கூவலுடன் விவாதத்தை ஆரம்பித்த அதே சிவத்தம்பியின் இந்த ஆவண வாதத்தை முன்வைக்கிறார். அதாவது பிரதிபலிக்கும் கண்ணாடியில் சற்று கருத்தியல் ரசம் பூசப்பட்டிருந்ததால் போதுமானது.
ஆகவேதான் மீண்டும் மீண்டும் படைப்பு நமக்குச் சாதகமாக இல்லையா என்ற வினாவில் சென்று நிற்கிறார் சிவத்தம்பி. தன்னுடைய கருத்தியலை சரியானதைச் சொல்வதே சிறந்த இலக்கியம் என்ற இடத்துக்கு நகர்ந்து தனக்கு உவப்பான கருத்தைக் கூறுவதே சிறந்த ஆக்கம் என்ற முடிவுக்கு வந்து சேர்கிறார். திறனாய்வாளராக சிவத்தம்பி கையில் பிரம்புடன் நிற்க படைப்புகள் அவரைச் சுற்றி ஓடிவிளையாடும் காட்சியையே நாம் காண்கிறரெம். விளையாடும் திராணி இல்லாத சோகையான மாணவர்களை மகிழ்ந்து நல்ல மாணவர்கள் என்று பாராட்டுகிறார் அவர் ஒரு பறவையைப் புரிந்துகொள்ள மானசீகமாகவேனும் சற்றுப் பறந்தாக வேண்டும். குழந்தைகளை அறிய விளையாடியாக வேண்டும். படைப்புகள் விளையாட்டுகள். சேர்ந்து விளையாடுபவனே அவற்றுடன் உரையாட இயலும்.
இவ்வடிப்படையிலேயே கோட்பாட்டாளருக்கு தெளிவான முறைமையுடன் செயல்படும் சிவத்தம்பியின் வெற்றியையும் திறனாய்வாளனாக படைப்புகளுக்குள் செல்ல முடியாது தொட்டு தொட்டு விலகும் சிவத்தம்பியின் தோல்வியையும் அடையாளப்படுத்த விரும்புகிறேன்.

Page 34
சமூக ஊடாட்ட ஊடகங்களும் சாதக பாதகங்களும்
உ6
சமூக ஊடாட்ட ஊடகங்கள் (Social Interactive Media) எனப்படுபவை பயனாளிகளால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களைத் தாங்கிவரும் இணையத்தள ஊடகங் களாகும். ஒரு கணினியும் இணைய இணைப்பும் இருந்தால் போதும், எவரும் தமக்கு விருப்பமான உள்ளடக்கங்களை உருவாக்கித் தாமே இந்த சமூக ஊடகங்கள் வழியாக அவற்றை உலகுடன் பகிர்ந்து கொள்ள முடியும். தகுதிவாய்ந்த உள்ளடக்கங்களுக்காகத் தகைசார் துறையாளர்களை எதிர்பார்த்திருக்கவேண்டிய தேவை இல்லை. ஒவ்வொருவரும் தத்தமது கருத்தாக்கங்களை உருவாக்கி, படிக்க விரும்பும் எவருக்கும் அவற்றை அனுப்பி வைக்கும் வாய்ப்பினை சமூக ஊடகங்கள் அவர்களுக்கு வழங்குகின்றன. இந்த சமூக ஊடகங்கள் பெரும்பாலும் பிறருடன் நெருக்கமான ஊடாட்டங்களை ஏற்படுத்தக்கூடியனவாக இருப்பதுதான் அநேகரது விருப்புக்குரிய ஒரு பிரதான அம்சமாகும்.
மேலும், ஒரு குறிப்பிட்ட நண்பர்கள் வட்டத்தைச் சார்ந்தோரிடமிருந்து இணையத் தளத்தினூடான தொடர்பை அல்லது பதிலைப் பெரிதும் எதிர்பார்க்கும், தொடர்பாடல் முறைமைகளைக் கொண்டவை இந்த சமூக ஊடாட்ட ஊடகங்கள். இவற்றினூடாக விடுக்கப்படும் செய்திகள் ஒரே திசையில் அல்லது ஒற்றையடிப் பாதையில் மட்டுமே செல்வதில்லை. அத்துடன் அவை பெரும்பாலும் தனிப்பட்ட அந்தரங்கத்தைப் பேணத்தக்கவையாகவும் அமைவதில்லை. பதிலாக, இந்த தொடர்பாடலின் தன்மை பலராலும் அவதானிக்கப் படக்கூடியது. இதன் மூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் நட்பு வட்டத்தினராலும் ஏனையோராலும் ஏற்றுக்கொள்ளப்படலாம் அல்லது நிராகரிக்கப்படலாம். அவற்றின் பெறுநர்களால் மேலும் பலர் மத்தியில் பரப்பப்படலாம். முன்னெடுத்துச் செல்லப்படலாம். இவ்வாறான சமூக ஊடாட்ட ஊடகங்களை சமூக வலைத்தொடர்புத் தளங்கள், தகவல் பரிமாற்றத் தளங்கள், புகைப்படங்கள்- வீடியோக்கள் பரிமாற்றத் தளங்கள் என
மூவகைப்படுத்தலாம்.
Facebook, Twitter, LinkedIn, MySpace போன்றவை இந்நாட்களில் பலருமறிந்த பெயர் பெற்ற சமூக
அIெII

வலைத் தொடர்பு ஊடகங்களாகும். இவை யாவும் பாவனையாளர்கள் தமது சுயவிபரக் குறிப்பையும், படங்களையும் அவ்வப்போதான மனநிலைகளையும் மனவுணர்வுகளையும் பதிவு செய்து, தமது நண்பர்களையும் அவற்றில் இணைத்துக்கொள்ள உதவுகின்றன. மேலும் இந்த இந்த விபரங்களை நண்பர்கள், குடும்பத்தவர்கள் மட்டும் பார்க்கலாமா அல்லது இணையத்தில் உலவிவரும் எவரும் பார்க்கலாமா என்பதை வரையறுக்கும் வாய்ப்பையும் இவை பாவனையாளர்களுக்கு வழங்கு கின்றன. இவற்றில் உறுப்பினராக உள்ள ஒருவர் இன்னொருவரது வலையமைப்புக்குள் நண்பராக வரக் கேட்கலாம். தனியாள் ஒருவரது கருத்துக்கள், புகைப் படங்கள் , புது நண்பர்களது இணைவு, like எனப்படும் விருப்பு, வாழிடங்கள், செயற்பாடுகள் என்பன அவரது நண்பர்கள் வட்டத்தினுள் பகிரப்படும். அந்தரங்கம் பேணுதற்கான கணினி முன்னேற்பாட்டு அமைப்புகளுக்கு (Settings) ஏற்ப, நண்பர்கள், குடும்பத்தவர்கள், அந்நியர்கள் ஆகியோர் இவற்றிற்குத் தமது அபிப்பிராயங்களைத் தெரிவிக்க முடியும். இவற்றுள் MySpace இளம் வட்டத்தினர் மத்தியில் பிரபலமானது. linkedIn துறைசார் வல்லுனர்கள் தனது சுயவிபரச் சுருக்கக் குறிப்புக்களை இட்டு வைப்பதற்கு உகந்த ஒரு சமூக ஊடகம். கல்லூரி மாணவர்களுக்கென்று முதலில் ஆரம் பிக்கப்பட்ட Facebook, இன்ரநெற் பெருந்தெருவில் எந்த வயதினரும் சந்தித்துக்கொள்ள உதவும் ஒரு தளமாக இப்போது உருமாறிவிட்டது.
தகவல் பரிமாற்றத் தளங்களான சில சமூக ஊடகங்கள் மிக ஆழமான அல்லது விரிவான சுயவிபரக் குறிப்புக்களைப் பகிர அனுமதிப்பதில்லை ஆயினும் பாவனையாளர்களின் அவ்வப்போதய சிந்தனைகளையும் கருத்துக்களையும் சில புகைப் படங்களையும் அனுமதிக் கின்றன. இவ்வகை சார்ந்த Twitter சுருக்கமான சுயசரிதை, ஒரு சில படங்கள் மற்றும் வரையறையற்ற சுருக்கமான தகவற் புதுப்பித்தல்களையும் செய்ய இடம் விடுகின்றது. இப் புதுப்பித்தல்கள் 140 சொற்களடங்கியதாக 2 இருக்கவேண்டுமே தவிர, இணைப்புக்கள், பொன்மொழிகள் என்பவற்றுடன் பாவனையாளர்களின் மனநிலைகள், 8
அக
விழி ஜூன் 2014 (3

Page 35
சிந்தனைகளைத் தூண்டவல்ல எந்த வகை உள்ள டக்கங்களாகவும் அவை இருக்கலாம். வர்த்தக வியாபாரத்துறையினர் தமது நிறுவனங்கள் தொடர்பான புதுப் புதுத் தகவல்களை வாடிக்கையாளர்களும் ஏனையோரும் பெற்றுக்கொள்ளும் வகையில் Twitter ஊடகத்தைப் பாவித்து வருகின்றனர். அதேவேளை பெருந்தொகையான தனியாட்களும் பிரபலங்களும் Twitter ஐப் பயன்படுத்தி வருகின்றனர்.
சகல சமூக ஊடகங்களும் படங்களையும் தகவற் புதிப்பித்தல்களையும் தாங்கி வருகின்றன எனக் கூறமுயாது. பதிலாக, செய்திகளைத் தொகுப்பதிலும், அவை குறித்துக் கருத்துக் கூறுவதிலும் அவற்றை இணையத்தினூடாகப் பரப்புவதிலும் கவனஞ் செலுத்தும் சமூக ஊடகங்களும் உண்டு Digg எனப்படும் ஊடகத்தில் இணைக்கப்படும் செய்திகளை வாசிக்கும் வாசகர்கள் அவற்றின் தரம் குறித்து வாக்களிக்கும் வாய்ப்பினையும் பெறுவர். அதிக வாக்குகளைப் பெறும் செய்திகள் முக்கியத்துவம் பெற்று, முன்பக்கத்தில் இடம்பெற இது வழிவகுக்கும். Stumbleupon என்ற சமூக ஊடகம் பாவனையாளர்களின் விருப்புக்கேற்ற உள்ளடக்கங்களை அவர்களுக்கெனத் தேர்ந்தெடுத்து, அவற்றைப் பிறருக்கு அறிமுகபடுத்தவோ அல்லது வேறோரு தளத்துக்கு நகர்த்தவே உதவுகின்றது. பாவனையாளர்ளின் விருப்புக்குரிய சகல தளங்களையும் ஒன்றிணைத்து, ஒழுங்குபடுத்தி ஏனைய பாவனையார்களுடன்
* அகவிழி ஜூன் 2014

உ4-8
பகிர்ந்து கொள்வதற்கு Delicious என்ற சமூக ஊடகம் உதவுகின்றது.
மூன்றாவது வகையான புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றைப் பகிரும் தளங்களில் மிகப் பிரபலமானது YouTube ஆகும். எவரும் தாம் விரும்பிய படங்கள், வீடியோக்களை இதில் வெளியிடலாம். எவரும் தேடிப் பார்க்கலாம். விரும்பினால், தமது தேவைகளுக்கு ஏற்ப, தரவிறக்கம் செய்தெடுத்தும் கொள்ளலாம். இதுபோன்றே Blogger எனப்படும் வலைப்பூவில் ஒருவர் தனது ஆக்கங் களைத் தரவேற்றம் செய்துகொள்ள முடியும். அந்த ஆக்கங்கள் குறித்த அபிப்பிராயங்களைப் பதிவு செய்யவும், கலந்துரையாடல்களை நிகழ்த்தவும் இத்தளங்கள் உதவுகின்றன.
இன்று உலகெங்கும் பிரபலமாயுள்ள சமூக உடகங்களில் இவை ஒருசில மட்டுமே. அடிக்கடி புதிய சமூக ஊடகத் தளங்கள் அவ்வப்போது உருவாக்கப் படுகின்றன. ஒருசில மறைந்து போகின்றன அல்லது புதியனவாகப் பரிணாமம் அடைகின்றன. ஆயினும் சகலருக்கும் கைக்கெட்டக்கூடியதாக இருத்தலே இந்தச் சமூக ஊடகங்களின் முக்கிய சிறப்பம்சமாகும். வாசகராக இருப்பதற்கு மட்டுமன்றி, உள்ளடக்கங்களைத் தயாரித்து வழங்கும் வல்லமையையும் எல்லோருக்கும் சமூக ஊடகங்கள் தருகின்றன. அந்த வகையில் சமூக

Page 36
-- காரடி -- 44- 25 --- -- -2
--- 1 - 4
--------------------
- நக -- 'L4 ம்:1/11
ஊடகங்கள் அவற்றின் தரத்திலும் தன்மையிலும் தொடர்ந்து மாற்றமுறும் தன்மையையும் கொண்டிருக்கின்றன.
இனி, இக்கட்டுரையின் பிரதான நோக்கங்களில் ஒன்றான சமூக உடாட்ட ஊடகங்களின் நன்மைகளை உற்று நோகுவோமாயின் சிறுவர்களும் ஏனையோரும் சமூகரீதியான மனவுறதிப்பாட்டை இந்த சமூக உடாட்ட ஊடகங்கள் வாயிலாகப் பெறுகின்றனர். கல்லூரிகள் கழகங்களில் இணையும்போது, புதிய நண்பர்களைச் சந்திக்கும்போது அவர்கள் மிகுந்த தன்னம்பிக்கை கொண்டிருக்கக் காண்கின்றனர். புதிது புதிதாகப் பரிணாமம் அடைந்து வரும் இந்தச் சமூக ஊடாட்ட ஊடகங்கள் வழியாக, பலரும் புதிய தொழில் நுட்பங்களுடன் பரிச்சயம் பெறுகின்றனர். ஒத்த துறை சார்ந்தோரிடமிருந்து உதவிகளும் ஆதரவும் ஆலோசனைகளும் கிடைக்கின்றன. தொடர்பாடல் திறமைகளை வளர்த்தெடுத்துக்கொள்ள இவ்வூடகங்கள் உதவுகின்றன. தொலை தூரங்களில் உள்ள உறவினர்கள், நண்பர்களுடன் இலகுவாகத் தொடர்பிலிருக்க உதவுகின்றன. பழைய உறவுகளையும் நட்புக்களையும் மீளக் கண்டடைய உதவுகின்றன, வர்த்தக வியாபாரத் துறைகளைப் பொறுத்தவரை, திறந்த தொடர்பாடலுக்கும், உரையாடலுக்கும், விளம்பரத்திற்கும்,

உள
சந்தை ஆய்வுகளுக்கும், பிரச்சாரங்களுக்கும் இவை பெரிதும் உதவுகின்றன.
தீமைகள் எவை எனப் பார்க்கும்போது - கணினி விஷமிகளின் துஷ்பிரயோக நடவடிக்கைகளுக்கு இவை தூபமிடுகின்றன. இணையங்களுடான ஏமாற்றுதல்கள் அதிகரிக் கின்றன. எதிர் மறையான கருத்துக்கள் உறவுகளையும் தொடர்புகளையும் தொழில்களையும் பாதிக்கின்றன. நண்பர்கள், உறவினர்கள் மற்றும் - ஏனையோருடன் தம்மை ஒப்பிடுவதன் மூலம் ஒருவரது சுயமதிப்பீடு வீழ்ச்சியடைகின்றது. பிரித்தானியாவில் சமூக ஊடகப் பதற்றக் குழப்பம் (Social Media Anxiety Disorder - SMAD) எனப்படும் உளவியல் பாதிப்புக்கு 50 சத வீதத்திற்கும் அதிகமானோர் ஆளாகி இருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகின்றது. துர்நடத்தைகளுக்கும், குரோதங் களுக்கும், வக்கிரமான அவதூறுகளுக்கும் இந்த SMAD வழிவகுப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. சமூக ஊடாட்ட ஊடகத்தின் கட்டுப்பாடற்ற உபயோகத்தினால் அமெரிக்காவில் சுமார் 25 சதவீதத்தினர் தமது வாழ்வின் மிக முக்கிய தருணங்களைத் தவறவிட்டுள்ளார்கள் என்று இன்னொரு ஆய்வு கூறுகின்றது.
மேலும், 'இந்தியாவின் இளம் தலைமுறையினர் சமூக வலையமைப்புத் தளங்களில் பயன்படுத்தும் மொழியானது இனவாதத்தை ஊக்குவிக்கின்றது' என இந்திய ஆளும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான டிக்விஜேய் சிங் அண்மையில் கூறியுள்ளமையும் - 'பாடும் பெண்களைப் படுகொலை செய்யுங்கள்' என இந்திய ஜம்மு காஷ்மீரின் தலைமை மெளலவி இமாம் பஸீருதீன் அகமது அண்மையில் இசைப் பிரியர்களான இளம் முஸ்லீம் பெண்களுக்கு எதிராக விடுத்த கொலை மிரட்டலைச் சமூக ஊடக வாயிலான பிரச்சாரமே எண்ணெய் ஊற்றி எரி நெருப்பாக்கியமையும் அவ்வூடகம் மீதான அச்சம் தரும் உடனடி ஆதாரங்கள் இவ்வாறாக சமூக ஊடாட்ட ஊடகங்களின் சாதக பாதகங்களைத் தொடர்ந்து
அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஆயினும், வேகமாக மாறிவரும், சமூக, விஞ்ஞான, தொழில்நுட்ப யுகத்தின் பலாபலன்களைச் சரிவரப் பாவித்துப் பயன் பெறுவது அவரவர் பொதுப் புத்தியில்தான் தங்கியுள்ளது. 'தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்ற தத்துவார்த்த உண்மை தமிழுக்கும் தமிழருக்கும் புதிதல்ல. புத்தி பூர்வமான பாவனையை விடுத்து, தவறான பாவனையினால் தலைமீது தீமையைச் சுமப்பவர்கள், தொழில்நுட்பத்தின் பயன்மிக்க அறுவடைகள் மீது த பழிபாவங்களைச் சுமத்துவது சுத்த அபத்தம். அளவோடு அருந்தினால் மதுவும் மருந்தாகுமல்லவா.
நன்றி : தமிழ் இணையம்
அகவிழி ஜூன் 2014 (8

Page 37
விழுமியக் கல்வியின் பயன்கள்
கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன் மொழித்துறை சப்பிரகமுவ பல்கலைக்கழகம், பெலிகல்லோயா, இலங்கை
கல்வியிலே பழைமையும் புதுமையும் ஒன்றிக்க வேண்டும். ஆன்மிகமும் உலகியல் அறிவும் ஒன்றிக்க வேண்டும். கல்வி மனித வரலாற்றில் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து விழுமியக் கல்வியாகவே கற்பிக்கப்பட்டும், கற்கப்பட்டும் வந்தது. கல்விக்கு பயன் அறிவு. அறிவுக்குப் பயன் ஒழுக்கம் என்ற நிலைப்பாட்டினைப் போற்றிப் பாதுகாத்து வந்தது - வருவது விழுமியக் கல்வி.
கல்வியாளர் பலரும் கடன் வாங்கிய கல்விக் கொள்கைகளிலே அமிழ்ந்து கிடக்கும் புத்திஜீவிகளும் மரபுசார் சிந்தனைகளையும், சமயஞ்சார் கொள்கைகளையும் நிராகரிப்போரும், உண்மை மறுப்போரும் சுயநலப் பிசாசு பிடித்தலைவோரும், கீழ்மைப் பண்புகளால் வளர்க்கப் பட்டவர்களும் 'பழைமை' என்பது பிற்போக்கு என்று பிதற்றிக் கூறுகின்றார். உண்மையில் அது பின்னோக்கு ஆகும். பிற்போக்கு அன்று. நாம் கடந்த காலத்தைப் பின்னோக்கி ஆராய்ந்து பார்க்க வேண்டும். தற்காலத்துக்கு வேண்டியனவாக இருப்பின் அக்கருத்துக்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வாதன தாமாகவே கழிந்து விடும். பழையன எல்லாமே கூடாதன அல்ல. எனவே நம்முன்னோர் நமக்களித்த கல்விச் செல்வங்களையும் பண்பாட்டுச் செல்வங்களையும் பழைமை என்ற ஒரே காரணத்திற்காகப் பிற்போக்கு என்று அவற்றைத் தள்ளிவிடுதல் - ஒதுக்கிவிடுதல் - ஏற்காது புறக்கணித்தல் - அறிவுடைமையாகாது. எனவே கல்வியின் மூலம் பண்டைய காலத்துக்குரிய பழைமைக் கருத்துக்களை உற்று நோக்கி - ஆராய்ந்து பார்த்து - சீர்செய்து - பக்குவப்படுத்தி நிகழ்காலத்திற்குரியதாக்க வேண்டும். பண்டு தொட்டு, மனிதரை மனிதத் தன்மைகளோடு கூடிய மனிதராகச் சீர்செய்து, பண்பட்டோராக வளர்த்து வந்த ஆன்மிகம் சார்ந்த விழுமியக் கல்வியின் தேவை, நிகழ் காலத்தில் பெரிதும் உணரப்படுகிறது. வேண்டவும் படுகிறது.
நிகழ்காலத்தில் கல்வி பெரிதும் முன்னேற்றம் கண்டுள்ளது என்பதை மறுக்க முடியாது அக்கல்வி மனிதரின் வாழ்க்கை வசதிகளைப் பெருக்கவும் , விஞ்ஞான ஆராய்ச்சி, அறிவைப் பெருக்கிப் பல அற்புதக் கண்டுபிடிப்புக்களைச் செய்யவும் உதவி வருகிறது. அறிவியலறிவு - தொழில்நுட்பத்திறன் என்பவற்றால்
8 அகவிழி ஜூன் 2014

15:ாரம்: சட்4: -----!':14=-
மனித இனம் பாரிய முன்னேற்றம் கண்டுள்ளது. பல அரிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. மனிதனுடைய விஞ்ஞான தொழிநுட்ப, கணினி அறிவு பன்மடங்கு மேலோங்கியுள்ளது. அதே வேளை மனித வாழ்வியல் துன்பங்கள், பிரச்சினைகள், பகை, பிணக்கு, போர், வன்முறை, சாதி அடக்கு முறை, மிலேச்சத்தனம், குழப்பங்கள் தினம் பெருகிக் கொண்டேயிருக்கின்றன. இன்பம், மகிழ்ச்சி, அமைதி, ஆனந்தம், நிம்மதி என்பன மனித இனத்திடமிருந்து விடைபெற்று வெகுதூரம் சென்ற வண்ணம் இருக்கின்றன. எங்கும், எதிலும் மனிதரின் சுயநல வேட்கை, பேராசை, பொறாமை, ஆரோக்கியமற்ற போட்டி மனப்பான்மை, சுரண்டல் பாங்கு, முறையற்ற வழியில் பொருள்த் தேட்டம், வஞ்சகம், பகைமை, வெறுப்புணர்ச்சி, மேலோண்மை செலுத்துகின்றன. மனிதர்கள், பெரும்பாலான கல்விமான்கள் இத்தீயசக்திகளின் வயப்பட்டுப் பேய் பிடித்தவர்களின் நிலையில் உள்ளனர்.
ஓரறிவு முதல் ஐயறிவுவரை கொண்ட உயிரினங்களிடம் காணப்படும் அறிவு இயல்பூக்க அறிவு எனப்படுகிறது. ஆனால் மனித இனம் ஆறறிவுடையது. அந்த ஆறாவது அறிவு பகுத்தறிவு எனப்படுகிறது. பகுத்தறிவு ஆராய்ந்து அறியுந் திறனுடையது. சரி எது, பிழை எது என்று

Page 38
பிரித்துக் காட்டக் கூடியது. மனிதன் தன்னை உணர்ந்து கொள்ள அறிவு உதவுகிறது. மனிதனின் இந்த அறிவு அவன் வாழ்கின்ற இயற்கையைப் பற்றியும் - பெளதிகச் சூழல் பற்றியும் இயற்கை செயற்படும் நுட்பங்கள் பற்றியும் ஆராய்ந்து பார்த்தபோது அது விஞ்ஞான அறிவு ஆகியது. விஞ்ஞான - மற்றும் தொழில்நுட்ப அறிவு, மனித சமூகம் வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளப் பேருதவியாக இருந்து வருகிறது. அதேவேளை மனிதரின் மகிழ்ச்சி, அமைதி என்பவற்றைக் குலைக்கவும் மனிதருக்கு உதவுகிறது.
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அறிவுப் பெருக்கம் அபரிமித வளர்ச்சி ஆக்கத்திற்கும் அழிவுக்கும் பயன் படுத்தப் படுகிறது. தவறு மனிதனுடையது. விஞ்ஞானத்தினுடையது அல்ல. விஞ்ஞான தொழில்நுட்ப பறிவினைக் கையாள்பவன் மனிதன். தனது ஆராய்ச்சித் திறன் மிக்க பகுத்தறிவைப் பயன்படுத்தி மனிதன் நல்லது, கெட்டது பிரித்துணர்ந்து விஞ்ஞான அறிவினை ஆக்கத்திற்கு மட்டும் பயன்படுத்தி வந்தால் தரமானதும், வசதிகள் நிறைந்ததுமான வாழ்க்கையினையும், அமைதி, மகிழ்ச்சி, சாந்தி நிறைந்த மனிதர்களையும் உலகினையும் விரைவிலே காணமுடியும். மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் மனிதனில் இணைகின்றன. அஞ்ஞானம் மனிதனை விட்டு விலகி விடுகிறது. மனிதனிடத்தில் அதுவரை மறைந்திருந்த விலங்கினத் தன்மை நீங்கப் பெற்று, மனிதத் தன்மை மலர்ச்சி பெறுகிறது. மனத்தூய்மை , சொற்றூய்மை, செயல் தூய்மை பெற்று, மனித இனம் மனிதத் தன்மைகளோடு நடந்து கொள்ளும் நிலையில் பரிணாம வளர்ச்சி முழுமை எய்துகிறது.
தற்காலத்தில் விஞ்ஞான தொழில்நுட்பவிருத்தி அதிகளவில் வளர்ச்சியும், முன்னேற்றமும் கண்டிருக்கும் நிலையில் அந்த அளவிற்கு ஈடு கொடுக்கும் வகையில் மனிதப் பண்பு விருத்தி, மனிதரில் ஏற்படவில்லை என்பதே எல்லோரினதும் ஆதங்கமாக உள்ளது.
மனிதன் விஞ்ஞான அறிவினை வளர்த்துக் கொண்ட அளவிற்குத் தனது பகுத்தறிவினையும் அதன் ஊடாக மனிதப் பண்புகளையும் வளர்த்திருப்பானாயிருந்தால் இன்று உலகில் இத்தனை குழப்பங்களும், ? அட்டூழியங்களும், அழிவுகளும், அனர்த்தங்களும் ஏற்பட்டிருக்கமாட்டா. மனிதன் முழுமையான தூய அறிவினை அடையக்கூடிய தகுதிப்பாட்டினைப் பெற்றிருக்கிறான். ஆனால், அதற்கேற்ப மனித இனம் இற்றை வரை மனிதத்தன்மைகளோடு கூடிய மனிதர்காளக வாழும் நிலையை எய்தவில்ல. மனிதர்கள் உருவ அமைப்பில், அங்க அடையாளங்களில் மட்டும் விலங்கினத்திலிருந்து வேறுபட்டிருக்கிறார்களே தவிர, மனித வடிவம் பெற்றிருக்கிறார்களே தவிர, குணத்திலோ, பண்பிலோ அறிவின் தரத்திலோ மனிதனாக உயரவில்லை.

விளைவுகளிலிருந்து, செயலின் தன்மை நல்லதோ, கெட்டதோ என்பதை அறிந்து கொள்ளலாம். அவ்வாறே, தற்கால உலக சமுதாயங்களில் இடம்பெறுகின்ற எதிர்மறை விளைவுகள் இதனைக் சுட்டிக்காட்டுகின்றன.
அண்மைகாலத்துக் கல்வி முன்னேற்றம் மனிதரை மனிதப் பண்புகள் கொண்ட மனிதராகப் பயன்படுத்துவதில் படுதோல்வி கண்டுள்ளது. விஞ்ஞான அறிவையும் தொழில் நுட்பத்திறனையும் கணினியைத் திறம்பட நுட்பமாக இயக்கும் வல்லமையையும் மாணாக்கரில் அதிஉச்ச அளவிற்கு எப்படி விருத்தி செய்யலாம் என்று அக்கறையும், சிரத்தையும் கொள்ளும் நமது தற்காலக் கல்விமுறை நல்ல உள்ளங்களை, நல்ல மனிதப் பண்புகளை - நல்லொழுக்க நன்னடத்தைகளை - நற்செயல்களை உருவாக்குகிற மனித விழுமியக் கல்வியையும், மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்பதில் அத்துணை அக்கறையோ, சிறிதளவில் தானும் சிரத்தையோ எடுத்ததாகத் தெரியவில்லை. இந்நிலையைத் தொடரவிடக்கூடாது என்பது ஒரு சில உயரிய கல்விச் சிந்தனையாளர்களது கருத்து. நமது கல்வி முறையில் சமநிலைத் தன்மை இன்மையாலேயே இத்துணை சீர்கேடுகளும், அமைதியின்மையும் அவலங்களும், நடத்தைப் பிறழ்வுகளும், கொடுமைகளும், குணநலமின்மையும், வன்முறைக் கலாசாரமும் உலகில பல்கிப் பெருகியுள்ளன.
மனிதன் எந்த அளவு அறிவினைப் பெருக்குகிறானோ அந்த அளவு தூய அற நெஞ்சத்தை வளர்த்துக் கொள்ளவில்லையெனில் அந்த அறிவுப் பெருக்கம் துன்பப் பெருக்கத்தில் போய் முடியும். என்கிறார் தத்துவஞானி பேட்ரண்ட் றஸல். இக்கூற்றின் உண்மை இன்று தெளிவாகத் தெரிகிறது.
'கல்வியே கருந்தனம் என்று ஆன்றோர் கூறிவைத்தனர். 'கேடில் விழுச்செல்வம் கல்வி' என்கிறார் வள்ளுவர். கல்வியின் நோக்கம் சான்றோனை உருவாக்குதல் என்று நம் முன்னோர் கொண்டனர். கல்வி, கேள்வி ஒழுக்கங்களில் சிறந்தவனாக விளங்குபவனே சான்றோன். அறிவோடு, அறம் பரப்புபவன் சான்றோன். கல்வியினால் அடையப்பெற்ற அறம், பொருள், இன்பன், ஆகிய வாழ்க்கைப் பயன்களைப் பிறருடன் பகிர்ந்து துய்த்து, பல்லுயிர் ஓம்பி வாழ்பவன் சான்றோன். கல்வியினால் எழுகின்ற அன்பு, தீமை செய்வதற்கு நாணுதல், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்னும் ஐந்து சால்புகளையும் கொண்டு வாழ்க்கையில் ஒழுகி வருபவன் சான்றோன். இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யும் குணப் பண்பு நலம் கொண்டவர் சான்றோர். 'உலகை ஒன்றாகக் 2 காண்பதே கல்வி' எனக் கல்விக்கு வரைவிலக்கணம் வழங்கியவர் ஒளவையார். அந்த வகையில் கல்விப் 8 பயனாக வடிவெடுத்த சான்றோன் 'யாதும் ஊரே
9
ஜூன் 2014 (3

Page 39
யாவரும் கேளிர்' என்னும் மகுட வாசகத்தின் பொருளை நடைமுறையில் வாழ்ந்து காட்டுவதன் மூலமாக உணர்த்தி உலகக் குடிமகனாகத் திகழ்பவன். 'குணநலன் சான்றோர் நலமே' என்பது வள்ளுவம், உடல் நலம். மனித நலம், அறிவு நலம், திறன்விருத்தி ஆன்மிக நலம். குணப்பண்பு நலம், சமூக நலம், நல்லொழுக்கம் என்பனவற்றின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை மனிதனில் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொள்வது கல்வி, அதுவே முழுமைக் கல்வி (உலகியல் சார்ந்த நோக்கங்களும் ஆன்மீகம் சார்ந்த நோக்கங்களும் இணையப் பெற்ற கல்வியே விழுமியக் கல்வியாகும்) விழுமியக் கல்விச் சிந்தனைகள் பலவுள. தற்காலக் கல்வி முறையில் நன்மையும், தீமையும் உள்ளன. தீமைகள் துன்பங்களைத் தரக் கூடியவை, அதனால் அவை அகற்றப்பட வேண்டும். நன்மைகள் வாழ்க்கைக்குத் தேவையானவை. அதனால் அவை பேணிக் காக்கப்பட வேண்டும். தற்காலக் கல்வி முறை மனிதரை இயந்திரமாக்கியுள்ளது. அதனால் மனிதன்தான் மனிதன் என்பதை மனதில் கொள்ள மறுக்கிறான் மனித ஒழுக்கம், நன்னடத்தை, தான் மனிதன் என்ற உணர்வு குறையும் போது 'நான்' என்ற அகந்தை மற்றும் சுயநலப்பற்றும் 'எனது' என்ற மமதை மற்றும் பொருள் பற்றும் மனிதனில் தோன்றுகின்றன. இப்பற்றுக்கள் மனிதரில் பேராசை , கோபம், தற்பற்று, முறையற்ற பாற்கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் ஆகிய தீய குணங்கள் போன்றன தோன்ற வழிவகுக்கின்றன. இக்குணங்கள் தனக்கும் பிறர்க்கும் தீங்கு விளைவிக்கின்றன.
விழுமியக் கல்வியினால் உண்டாகப் போகும் பயன் - பலன் என்ன என்ற சிலர் வினவலாம். தற்கால வாழ்க்கை முறையில் மனிதரில் இடம்பெற்றுள்ள தீய குணங்களை அழுக்குகளை உயர் குணங்களாக விழுமியக் குணங்களாக மாற்றவேண்டும். அதற்குக் குணங்கள் சீரமைக்கப்பட வேண்டும். முறைப்படுத்தப்பட வேண்டும். கல்வியே உறுதுணையாக வர வேண்டும். விழுமியக் கல்வியை தற்காலக் கல்வி முறையுடன் இணைத்துக் கொண்டால் அதன் மூலம் போதிய வலுவைப் பெற்று தன்னிலை உணரப்பட்டு, தீய குணங்கள் நலம் விளைவிக்கும் உயர் குணங்களாக மாற்றம் பெற வழி எற்படும். விழுமியக் கல்வி நிகழ்ந்தால் ஆசை நிறைமனமாகவும் முறையற்ற பால் கவர்ச்சி கற்பாகவும் உயர்வு தாழ்வு மனப்பான்மை சமத்துவ நிலையாகவும் வஞ்சம் மன்னிப்பாகவும் மாற்றமடையும். தீய குணங்களாகவும் சிந்தனைகளாகவும் மனதில் சுமந்து கொண்டிருக்கும் வரை மன அமைதிக்கும் தொடர்ந்து குடும்பத்தில் அமைதி, சமூகத்தில் அமைதி, எல்லாமே கெட்டுவிடும். தீய குணங்களை முற்றிலுமாக ஒழித்து விடுவது என்பது மனிதர்க்கு முடியாத காரியம். அதனால் மனிதன் பரிணாம வளர்ச்சியின் பயனாகப் பெற்றுக்
அகவிழி ஜூன் 2014
38

கொண்ட பகுத்தறிவைப் பயன்படுத்தி விளைவுகளை ஆராய்ந்து பார்த்துத் தீய குணங்கள் தேவையற்றவை. தீய விளைவுகளை ஏற்படுத்துபவை என் பதைத் தெளிந்து குணங்களைச் சீர்செய்து முறைப்படுத்தி தமது வாழ்க்கையை நெறிப்படுத்தி வாழ்தல் உத்தம வாழ்வாகும். ஒவ்வொரு தனிமனித உள்ளத்திலும் ஏற்படுத்தும் இந்த நன்மாற்றம் அமைதியையும் இனிமையையும் வழங்கிக் குடும்ப, சமூக, உலக அமைதிக்கும் வழிவகுக்கும். எல்லா நிலைகளிலும் இனிமை, மகிழ்ச்சி, அமைதி, ஆனந்தம் என்பவற்றை மனிதர்கள் அடைவதற்கு உறுதுணையாகத் தூய நற்கல்வி அமைய வேண்டும். விழுமியக் கல்வியே தூய நற்கல்வியாகும்.
விழுமியங்கள் எவை என்ற வினா ஒவ்வொரு வரிடையேயும் தவிர்க்க முடியாதது. விழுமியங்கள் பெறுமதி மிக்கவை. அனைவராலும் மதிக்கப்படுபவை. பொருள்விரயம், பண விரயம், என்பன தவிர்க்கப்பட வேண்டும். பொருட்களின் மதிப்பு, பெறுமானம் உணராதவர்கள் வாழ மறுப்பவர்கள் வாழத்குதியற்றவர்கள் ஆவர். வீடுகள், உணவுகள் பெருவிரயமாக்கப்படுதலைக் காண்கிறோம். பலரின் பசியைப் போக்கக் கூடிய உணவுகள் தினமும் வீசி எறியப்படுகின்றன. அவ்வாறு செய்ய எமக்கு உரிமையில்லை. அவ்வாறு உணவை வீணாக்குவது பாவகாரியமட்டுமல்ல. மனித குலத்திற்குச் செய்யும் துரோகமாகும். நீரைத் தினமும் விரயஞ் செய்கிறோம். அது பெருந் தவறு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். காடுகளை அழிக்கின்றனர். பல்வேறு இயற்கை வளங்கள் சூறையாடப்படுகின்றன. எத்தனையோ தலைமுறைகளுக்குப் போதுமான வளங்கள் இவ்வுலகில் உண்டு. அவற்றை இந்தத் தலைமுறையிலேயே அளவுக்குப் பன்மடங்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் அதுவும் வீண் விரயம்தான். இயற்கை வளங்கள் போதுமானவை. மனித குலம் முழுவதற்கும் உரித்தானவை. எதிர்கால தலைமுறையினரின் பயன்பாட்டுக்காகப் பாதுகாத்துச் சேமித்து வைக்கப்படவேண்டியவை என்னும் பண்பாடு எம்மிடையே வளர வேண்டும். அது விழுமியஞ்சார் பண்பாடாகும்.
செல்வம் மிகினும் குறையினும் துன்பத்திற்கு ஏதுவாகும். பொருளைப் போற்றி அளவறிந்து பேராசை கொள்ளாது அறவழியில் ஈட்டி, பிறருக்கும் உதவி, வீண்விரயஞ் செய்யாது தாமும் செம்மையாக வாழ்தல் சிறந்த மனித வாழ்வியல் விழுமிய வாழ்வாகும். பொருளைப் பொறுத்தளவில் ஏற்படுவது இகழ்ச்சி, ஐயமிட்டுண், ஒப்புரவொழுகு என்னும் ஒளவையாரின் அறிவுரைக்கிணங்க ஒழுகினால் ஒரு பொல்லாப்பும் இல்லை.

Page 40
பொதுக் கல்விக் கொள்கை அறி பரிந்துரை செய்யும் தொழிற்கல்வி
சம்பிரதாய விரிவான பாடசாலைக் கல்வியின் மூலம் நிவர்த்தி செய்ய முடியாத தேவைகளை மேற் கொள்வதற்காக சுதந்திரத்திற்குப் பின்னர் எமது நாட்டின் கல்வி வரலாற்றில் வேலை உலகை அறிமுகப்படுத்தல், வேலைக்குப் பழக்குதல், தொழில்சார் கல்வி, மக்கள் கல்வி, முறைசாராக் கல்வி ஆகிய பல்வேறுபட்ட சிந்தனைகளின் கீழ் இடைக்கிடையே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் பாடசாலைக்குப் பின்னர் பல்கலைக்கழகங்களுக்கு அல்லது நேரடியாக தொழிலுக்கு பிரவேசிப்பவர்களைக் கைவிட்டு ஏனையோரின் எதிர்காலம் தொடர்பிலான பிரச்சினைகள் தொடர்ந்தும் தீர்க்கப்படாத பிரச்சினைகளாக எஞ்சியுள்ளன. இது கல்வி அமைச்சின் விடயப் பரப்பு மற்றும் பொறுப்பில் இருந்து நீங்கிய பிரிவாகக் காணப்பட்டுள்ள போதிலும் பாடசாலையை விட்டு விலகும் பிள்ளைகள் பாடசாலையில் இருந்து விலகுவதற்கு முன்னர் அவர்களுக்காக பொருத்தமான தொழில் கல்வியில் ஈடுபடுத்தும் பொறுப்பைப் பொதுக்கல்விக் கொள்கையாகக் கருதுகிறோம். இந்நோக்கத்தினை தொடர்ந்தும் இதற்கப்பால் விருத்தி செய்து பாடசாலை நடைபெறும் காலத்திற்குப் பின்னர் மாலை நேரங்களில் மற்றும் வார இறுதி மற்றும் பாடசாலை விடுமுறைக் காலங்களில் பாடசாலையின் பௌதீக வளத்தினைப் பயன்படுத்தி அச்சிறார்களின் தொழில்சார் விருத்திக்காக உண்மை யாகவே பங்களிப்பு வழங்கக் கூடிய வேலைத்திட்டங்களை வகுக்க முடியும். இதற்காக இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்ளக் கூடியவாறான புரிந்துணர்வு உடன் படிக்கையினை எட்டி டிப்ளோமா மற்றும் பட்டச் சான்றிதழ் வரை அவர்களது தேர்ச்சியினை விருத்தி செய்யும் வேலைத்திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.
தேசிய பல்கலைக்கழக கல்விக்கான சந்தர்ப்பம் பெறாத க.பொ.த.(சா/த) மற்றும் உயர் தரக் கல்விக்குப் பின்னர் பாடசாலையில் இருந்து விலகிச் செல்லும் மாணவர்கள் அவ்வாறு பாடசாலையில் இருந்து விலகிச் செல்வதற்கு முன்னர் பொருத்தமான தொழில்சார்கல்வியுடன் இணைப்பது பொதுக் கல்வியின் கொள்கையாக அமைய வேண்டும்.

க்கை
பொது பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்த மாணவர்கள் சாதாரண தர அல்லது உயர்தர தேசிய பாடசாலை சான்றிதழுக்கு மேலதிகமாக பாடசாலைகளில் அவர்கள் பெற்றுக் கொண்ட அறிவு, திறமை மற்றும் சிந்தனைகளை வெளிக்காட்டும் வகையில் கவர்ச்சிகரமான சான்றிதழ்களை வழங்குதல் வேண்டும். இது விலகல் சான்றிதழாக அமையக் கூடாது என்பதுடன் மாணவர் இடைநிலை மட்டத்தில் கற்ற பல்வேறு பாடங்கள் மற்றும் அவ்வப் பாடங்களுக்கான செலவான காலமும் பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட தொடர்ச்சியான மதிப்பீடுகளின் பெறுபேறுகளும், பாட இணை, பாடவெளி செயற்பாடுகள், விளையாட்டுக்கள் போன்றவைகள் உள்ளடங்கியிருக்க வேண்டும்.
இச்சான்றிதழ்களுக்காக தேசிய மட்டத்திலான பொது வான கட்டமைக்கப்பட்ட ஆக்கமாக இருக்க வேண்டும். இதன் மூலம் மாணவர் சித்தியெய்யாதவர் அன்று கற்ற ஏதேனும் ஒன்றைப் புரியக் கூடிய திறமைகள் கொண்டவர் என்பதனை உறுதிப்படுத்த முடியும்.
இம்மாணவர்கள் ஆலோசனைச் சேவைகளுக்காக அவர்களின் இயலுமைகள் குறித்த நம்பிக்கை மற்றும் உறுதியுடன் தொழில் தொடர்பாக எதிர்கால எதிர்பார்ப்பை மேம்படுத்தி பாடசாலையில் இருந்து விட்டு விலகாது அவர்களுக்காக பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட தொழில் பயிற்சி பாடநெறிகள் பாடசாலைகளிலேயே ஆரம்பிக்கப்பட வேண்டும்.
இதற்காக மாலை நேர வார இறுதி நாட்களில் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்த வேண்டும். ஆயிரம் இடைநிலைப் பாடசாலைகளில் தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் இச்செயற்பாடுகளுக்கு உகந்ததாகும்.
தொழில் பயிற்சி கல்விப் பாடநெறிகள் அதிபரின் மேற்பார்வையின் கீழ் இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சின் தலையீட்டுடன் விரிவான அடிப்படையில் நடாத்தப்பட வேண்டும். இதற்காக அமைச்சுக்களுக்கிடையே பொருத்தமான புரிந்துணர்வுகள் ஏற்படுத்தப்படல் வேண்டும்.
அக்.
2014 (3

Page 41
குறுகிய முகாமைத்துவ மூலாம்சங்கள், கணக்கியல், தொழில் முயற்சி, பிரயோகம், ஆங்கிலம், தொழிநுட்பம் ஆகியன பாடநெறியின் கட்டாய பாடங்களாக இருக்க வேண்டியதுடன் மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் தொழில் துறைக்கமைய உரிய ஏனைய பாடங்கள் வகுக்கப்பட வேண்டும்.
மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கும் காலத்திற்குள் (அவ்வாறாயின் காலையில்) அப்பிரதேசத்தில் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் தற்காலிக தொழிற்பயிற்சி மற்றும் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள இணைப்புச் செய்ய முடியும். இவ்வாறான மாணவர்களுக்கு இடமளித்தல் மற்றும் பயிற்சிக்காக தனியார் மற்றும் அரச நிறுவனங்கள் தேசிய மட்டத்தில் ஆர்வமூட்டப்பட வேண்டும். இதற்காக தாம் தேர்ந்தெடுக்கும் தொழிற்துறையை ஒப்பீடு செய்வது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
உத்தேச கல்வி வாய்ப்புகளின் பல்வேறு நிலைய
குழந்தைப் பருவமேம்பாடு
பாலர் பாடசாலை
ஆரம்பக் கல்வி
டி வீட்டில்
பாடசாலை
பாலர் பருவக்
கல்வி
பெற்றோர் பாதுகாப்பு
வயது 3 வருடம்
தரம் -1 5 + வருடம்
தொழில் நுட்பப் பல்கலைக்
கழகம் 1 வருடம்
தொழில் நுட்பம் கல்லூரி
Btec
பட்டதாரி வயது 21 + வருடம்
2 வருடங்கள்
ட ான்...
தொழில் நுட்ப டிப்லொமாதாரர்
வயது 20 + வருடம் UNTVOTBC
20 NDT வயது 21 +தொ. நு. கல் 1 வருடம்
வருடம்
1 வருடப்
Btec பட்டதாரி வயது 23 வருடங்கள்
தொழில் நுட்பப் பல்கலைக்கழகம் பாடசாலைமட்ட செயன்முறைத் தொழில்நுட்பக்கல்வி = SBPTE
5 அகவிழி ஜூன் 2014

1. U|
பாடநெறியின் இறுதியில் மாணவருக்குரிய தேர்ச்சிச் சான்றிதழ் பட்டத்தை வழங்கி அவர்களை உரிய தொழில்சார் துறைக்கு ' உரியவாறான பாடநெறிகளை உருவாக்கி தொழிநுட்பக் கல்லூரிக்கு அல்லது தொழிற் பயிற்சி மத்திய நிலையத்திற்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். தாம் ஈடுபட்டுள்ள தற்காலிக தொழிற்பயிற்சியில் தொடர்ந்தும் ஈடுபடுவதற்கு அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
இப்பாடநெறி தொழினுட்ப டிப்ளோமா மற்றும் பின்னர் தொழினுட்பகல்விப் பட்டம் வரை நீடிக்கப்பட வேண்டும்.
இவ்வாறான பிள்ளைகள் பொதுவான கல்வியூடாக பட்டம் வரை விருத்தி செய்யப்படும் வழிமுறைகள் பின்வரும் வரிப்படம் விளக்குகிறது.
ங்கள்
கனிஷ்ட இடை நிலைக் கல்வி
சிரேஷ்ட இடைநிலைக்
கல்வி
சிரேஷ்ட இடைநிலைக்
கல்வி
5 க ம்
சட்டம் 1
சட்டம் 2
- தரம் 5 10 + வருடம்
தரம் -9 -- 14 + வருடம்
தரம் 11 க.பொ.த. ச / தரம் க.பொ.த உ/ த
16 + வருடம்
18 + வருடம்
பாடசாலை மட்ட செயன்முறைத் தொழில் நுட்பக்
கல்வியும் நிறுவனமொன்றிலான பயிற்சியும்
ஒரு வருட பயிற்சி
ஒகலைக்கழகம்
பாடசாலை மட்ட செயன்முறைத்
தொழில் நுட்பக்கல்வியும் நிறுவனமொன்றிலான பயிற்சியும்
ஒரு வருட பயிற்சி
NVQ3 வயது 18 +
லூேரி NVQ4 -
5 வயது 20 +
ரம்
பட்டதாரி வயது 22 + வருடங்கள்
நன்றி பொதுக் கல்விக் கொள்கை
2014.01.01

Page 42
பாடசாலை சுய கணிப்பீடு
அறிமுகம் சிறுவர் நேயப் பாடசாலையாகத் தனது பாடசாலையை அபிவிருத்தி செய்யும் போது சமூகம் மாணவர் ஆசிரியர்கள் யாவரினதும் நேரடி பங்களிப்புப் பெறப்பட வேண்டும் என முன்னைய அத்தியாயத்தில் முன்வைக்கப்பட்டது. இதனை நிறைவேற்றப் பாடசாலை எவ்வாறு செயற்பட வேண்டும் என விளக்குதல் இவ்வத்தியாயத்தில் இடம்பெற்றுள்ளது. பாடசாலையின் எல்லாக் குழுக்களும் சிறுவர் நேயப் பாடசாலை என்றால் என்ன என்பதை நன்கு விளங்கிக் கொள்ளல் இதன் முதலாவது படியாகும். இதன் முக்கிய பொறுப்பு அதிபரையே சாரும். இது பற்றி அறிவுறுத்துவதிலும் பார்க்க பாடசாலையின் எல்லாக் குழுக்களும் சிறுவர் நேயப் பாடசாலை என்றால் என்ன என்பதை உணர்வதற்கு வழிப்படுத்தி அறிய விடுதல் சிறந்தது எனலாம். எனவே இதனை உணர்வுபூர்வமாக அறிமுகப்படுத்தச் செய்தல் மிகவும் பொருத்தமானது. அறிவைப் பெறல், பங்களித்தல், செயற்படுத்தல், மதிப்பிடுதல் ஆகிய எல்லா அம்சங்களும் உணர்வு பூர்வமாக அமைதல் வேண்டும்.
உணர்வுபூர்வமாக செயற்படுவதற்கு பின்பற்ற வேண்டிய
படிமுறைகள்
இதன் தலைமைத்துவம் அதிபருக்குரியது. இங்கு பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், கல்வி சாரா ஊழியர்கள் பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள், பாடசாலையை அண்மிதத் சமூகம் ஆகிய யாவரையும் ஒன்று கூட்டி, அவர்களுக்குத் தமது பாடசாலையின் அபிவிருத்திக்கான தேவையை விளக்கி, அதற்காக "சிறுவர் நேய பாடசாலை முறைமையைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்துங்கள்.
பாடசாலை என்பது சமூகத்தின் சொத்தாகும். பாடசாலையின் பணிகளினால் பயன்பெறுபவர்கள் பாடசாலை சமூகத்தினராவர். "எமது பாடசாலை” என்ற உணரவு எழும் போது பாடசாலைச் சமூகமானது, எப்போதும் பாடசாலையின் பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்க முன் வரும். பாடசாலைச் சமூகத்திலுள்ள அனைவரையும் அறிவுறுத்திய பின்னர் அவர்களின் விருப்பின்படி பாடசாலைச் சுயமதிப்பீட்டுக்கான பிரதிநிதிகள் குழுவை தேரந் தெடுத்தல் வேண்டும். பாடசாலை எல்லா சமூகமும் பிரதிநிதித்துவம் செய்யப்படும். இக்குழுவில்

|
2ா பட கதை
தி - 10
கட் - 3)
1,
5: 15ாம்
பாடசாலைக்கு பொருத்தமாக 10 - 25 வரையான
அங்கத்தவர்கள் உள்ளடங்குதல் உசிதமானது.
இலங்கைப் பாடசாலைகளில் சிறுவர் நேய நிலைமைகளை காட்டும் நியதிகளும், சுட்டிகளும், இணைப்பு 3 இல் தரப்பட்டுள்ளன. பொருத்தமான முறைகள் மூலம், இது தொடர்பான சிறந்த விளக்கத்தை மேற்படி அங்கத்தவர் குழுவிற்கு வழங்க வேண்டும் இங்கு சிறுவர் நேயப் பாடசாலையானது 6 பரிமாணங்களின் கீழ் மேம்படுத்தப்பட வேண்டும் என விளக்குதல் வேண்டும். இதன் போது சிறுவர் உரிமைகள், பாடசாலையின் பணிகளில் பாடசாலை சமூகம் பொறுப்புக்களை ஏற்றல் போன்ற விடயங்கள் நன்கு எடுத்துக் காட்டப்படக் கூடியவாறு பல்வேறு நுட்பமுறைகூடாக அங்கத்தவர்களை அறிவூட்டம் செய்தல் வேண்டும். இதற்கு வலயமட்ட, மாகாணமட்ட வளவாளர்களைப் பயன்படுத்தலாம்.
இத்தகைய ஆரம்பமொன்றின் பின்னர் சிறுவர் நேயப் பாடசாலையொன்றின் பண்புகள் பற்றி அறிமுகப்படுத்தப்பட வேண்டும். பங்குபற்றுபவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பரிமாணத்தையும் முன்வைத்து பொருத்தமான முறையில் இது விளக்குதல் வேண்டும். மேற்படி விளக்குதலின் போது பங்குபற்றுபவர்க்கு யாதாயினும் சந்தேகங்கள் தோன்றுமாயின், அது பற்றி வினாவெழுப்ப சந்தர்பப்ம் வழங்கப்பட வேண்டும்.
சிறுவர் நேயப் பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர் மாணவர் சமூகம் ஆகிய யாவருக்கும் பாடசாலையை மேலும் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற உண்மையான தேவை உண்டு. பாடசாலையின் உண்மையான தேவையை இனங்காண்பது பாடசாலை யாகும். எனவே, பாடசாலையை மேலும் அபிவிருத்தி செய்ய சகலரினதும் இயலுமைகள், அறிவு, திறன் ஆகியவை போன்றே பாடசாலை தொடர்பாக காட்டுகின்ற ஆர்வத்தையும் அதிகரிக்கப் பாடசாலை சுய கணிப்பீடு அவசியமாகும். பாடசாலைச் சுய கணிப்பீட்டின் போது . மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் என்ற ஒவ்வொரு குழுவும் தனித்தனியாகப் பாடசாலையின் நிலையை, சிறுவர் நேயப் பாடசாலையின் சுட்டிகளுடனும் நியமங்களுடனும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். பின்னர் தத்தமது கணிப்பீட்டை யாவருக்கும் பொதுவாக முன்வைக்க வேண்டும். இங்கு சில நிலைமைகள் தொடர்பாக பெருமளவு வேறுபட்ட 8
அகவிழி ஜூன் 2014 +

Page 43
கணிப்பீட்டு மட்டங்கள் இருக்கக் கூடும். இத்தகைய நிலைகள் மேற்படி செயற்றிட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்குத் தடையாகக் கொள்ளக்கூடாது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் இது தொடர்பாக மிக நன்றாக ஆராய்ந்து பார்ப்பதற்காக வலய வளவாளர் குழுவினர் குறிப்புரைகளைப் பேணிவரல் வேண்டும். பின்னர் அவ்வாறான நிலைமை தொடர்பாக நன்கு பகுத்தாய்தல் வேண்டும்.
பாடசாலையொன்றின் அதிபர் தனது பாடசாலைச் சமூகத்தினருக்கு சிறுவர் நேயப்பாடசாலை தொடர்பான உணர்வை ஏற்படுத்த ஆரம்பித்த முறை
எமது பாடசாலையில் மேலும் விருத்தி செய்ய வேண்டியவை பல உள்ளன என நினைக்கின்றேன். நீங்களும் அதனை ஏற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். இப்பிள்ளைகள் யாவரும் எமது பாடசாலை இப்படி இருந்தால் எவ்வளவு நல்லது என்று நினைக்கக் கூடும். பிள்ளைகளே பாடசாலைத் தோட்டம் பூக்கள் நிறைந்து அழகாக இருப்பதை காண நீங்கள் விரும்புவீர்கள் அல்லவா அதேபோன்று சுத்தமான குடிநீர் பாடசாலையில் இருக்க வேண்டும் என பெற்றோர் விரும்பக் கூடும். ஆசிரியர்கள் பிள்ளைகள் ஒவ்வொரு நாளும் தவறாது பாடசாலை வருகை தர வேண்டும் என விரும்பக் கூடும். எனவே இவ்வாறு சிந்திக்கும்போது எல்லோரும் எமது பாடசாலை இப்படி இருந்தால் எவ்வளவு நல்லது என நினைக்கக்கூடும். அதாவது தமது “கனவுப் பாடசாலை" பற்றி அவர்கள் கனவு காணக்கூடும். நான் நினைக்கின்றேன் நாம் யாவரும் மேற்படி கனவுப் பாடசாலையைச் சென்றடையத் தற்போது வழி பிறந்துள்ளதென்று. அதுதான் "சிறுவர் நேயப் பாடசாலை " என்ற புதிய கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. அக்கருத்தின் பிரகாரம் நாம் எமது பாடசாலை பற்றி இதுவரை சிந்திக்காத பல விடயங்கள் மீது கவனம் செலுத்த நாம் தூண்டப்பட்டுள்ளோம். சிறுவர் நேயப் பாடசாலைச் செயற்றிட்டம் பற்றி அறிந்து கொள்வதற்கு நாம் இந்த பிரசுரங்கள் / வீடியோ நாடா போன்றவற்றைப் பார்ப்போம். எடுத்துக்காட்டு சிறுவர் நேயப் பாடசாலை நியமம்
பாடசாலை இடைவிலகலைத் தடுப்பதற்கும் பாடசாலை வராத பிள்ளைகள் தொடர்பாகத் தேடியறிவதற்கும் துலங்கல் காட்டுவதற்கும் பயனுள்ள அமைப்பொன்று உள்ளது. அவ்வமைப்பு செயற்படுகின்றது.
இந்த நியமத்தை அடைய பல்வேறு செயற்றிட்டங்கள் பாடசாலையில் நடைமுறைப்படுத்தப்படும். அதற்கேற்ப இந்நியமத்தின் கீழ் தரப்பட்டுள்ள சுட்டிகளுக்கு தமது பாடசாலையின் தற்போதைய நிலைமைகளை அறிக்கைப்படுத்தல் பாடசாலை சுய கணிப்பீட்டின்போது இடம்பெறும். அதனை மேற்கொள்ளும் முறை பின்வருமாறு:
2014 அகவிழி ஜூன் 2014
42

மேற்கொள்ளத் திட்டங்களுக்கு களை ரோமைக்
சுட்டி - 1 பாடசாலையிலிருந்து இடைவிலகுவோரையும் பாடசாலைகளுக்கு வராதோரையும் கண்காணிக்கும் செயற்பாட்டு குழுவொன்று உள்ளது.
இந்தச் சுட்டிகளுக்கேற்பப் பாடசாலையிலிருந்து இடைவிலகும் அல்லது பாடசாலைக்கு வராத மாணவர்கள் தொடர் பாகத் தேடியறியும் செயற் குழுவொன்று பாடசாலையில் உள்ளதா என்பது பற்றித் தேடியறிதல் வேண்டும். அவ்வாறான குழு இருக்குமாயின் அதன் கட்டமைப்பு செயற்பாடு ஆகியன பற்றித் தேடியறிதல் வேண்டும் பின்னர் அதுபற்றி அறிக்கை சமர்ப்பித்தல் வேண்டும். சுட்டி - 2 போஷிப்பு பிரதேசத்தில் உள்ள எல்லாப் பிள்ளைகளும் பாடசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனரா என அறிவர்.
இச்சுட்டியின் பிரகாரம் பாடசாலையில் சேராத பிள்ளைகள் அவ்வாறு பாடசாலையில் சேராமைக்குச் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளை தேடிப்பார்த்தல், அவ்வாறான பிள்ளைகளுக்கு உதவப் பொருத்தமான முறைகளைத் திட்டமிடல் ஆகியன பாடசாலையினால் மேற்கொள்ளப்படல் வேண்டும். அவ்வாறே அத்திட்டத்தை அமுல்படுத்தியதன் மூலம் பிள்ளைகள் பாடசாலையில் சேர்ந்துள்ளமையும், அதனால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றியும் பாடசாலை அறிந்திருத்தல் வேண்டும். சுட்டி - 3 ஒவ்வொரு பிள்ளை தொடர்பாகவும் தரவுகள் (வகுப்பாசிரியரினால் பேணப்படுகின்ற வரவுப் பதிவேடு அவதானிப்பு ஆகியன பற்றி) பாடாசலையில் உண்டு. கவனிக்கப்பட வேண்டிய பிள்ளைகள் யார் என அறிந்து கொள்வர். அப்போது ஒவ்வொரு பிள்ளையும் இடைவிலகுவதற்கான காரணத்தையும் அறிவர் அவ்வாறான பிள்ளைகளுக்கு எவ்வாறு உதவலாம் எனக் கலந்துரையாடுவர்.
அப்பிள்ளைகளுக்குப் பாடசாலைக்குச் செல்வதற்கு உதவுவதற்குத் திட்டவட்டமான பொருத்தமான செயற்பாடுகளைத் திட் டமிடுவர். அவர் களின் செயற்பாடுகளின் செல்வாக்கை மதிப்பிடுவர். இச்சுட்டியின் பிரகாரம் இடைவிலகும் ஆபத்தை எதிர்நோக்கும் பிள்ளைகள் பற்றிப் பாடசாலை தேடியறியும் முறை பற்றித் தெளிவான வேலைத்திட்டமொன்று இருத்தல் வேண்டும்.
இவ்வுதாரணத்தில் காட்டப்பட்டுள்ளவாறு சுட்டிகளுக்கு ஏற்பப் பாடசாலையில் நிலவும் நிலைமை பற்றிச் சுய கணிப்பீட்டு அறிக்கை பாடசாலைச் சமூக அங்கத்துவக் குழுவால் நடத்தப்படும். அதன் பின்னர், தனித்தனியான குழுக்களின் அறிக்கைகளை கவனத்தில் கொண்டு பாடசாலை தொடர்பாக இறுதிச் சுய கணிப்பீடு அறிக்கை தயாரிக்கப்படும். பின்னர் மீண்டும் வெவ்வேறான குழுக்களாகக் கூடிப் பாடசாலை அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய முறை தொடர்பாகக் கலந்துரையாடுவர்.

Page 44
இதற்கேற்ப முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்கப்படும். மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், பாடசாலைச் சமூகத்தின் ஏனைய குழுவினர் தத்தமது குழுக்கள் தயாரித்த முன்னுரிமைப் பட்டியலை முன்வைப்பர். இங்கு ஒவ்வொரு குழுவினதும் முன்னுரிமைப் பட்டியல் வேறுபடக்கூடும்.
இவ்முன்னுரிமைப் பட்டியலின் ஏதேனும் ஒரு பகுதியையாவது பூரணப்படுத்துவதற்கு பாடசாலை எவ்வாறு செயற்படல் வேண்டும் எனத் தீர்மானிப்பது அடுத்த கட்டமாகும். எனவே இந்த முன்னுரிமைப் பட்டியல் நிறைவேறும் விதத்தில் அபிவிருத்தித் திட்டத்தை தயாரித்தல் வேண்டும். அங்கு ஏற்கனவே நன்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றமையால் அபிவிருத்தியும் பேணத்தகு நிலைமையையும் நோக்கிச் செல்லல் வேண்டும். தற்போது நடைமுறைப்படுத்தபடாத, நடைமுறைப்படுத்த வேண்டிய செயற்பாடுகளை இனங் கண்டு கொள்ளல்.
இங்கு ஒவ்வொரு குழுவினாலும் முன்வைக்கப்பட்ட முன்னுரிமைத் தேவைகளில் ஒன்றையாவது உட்படுத்தல் பொருத்தமானது.
பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரிக்கும் போது பாடசாலையின் சுய கணிப்பீட்டில் ஈடுபட்ட எல்லாக் குழுக்களும் அதில் பங்குபற்ற வேண்டும். இக்கலந்துரையாடலின் போது உத்தேச திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது எதிர்நோக்க நேரிடும் பல வேறு தடைகளையும் சிரமங்களையும் இனங்காணுதல் வேண்டும். பின்னர், அவற்றைத் தீர்மானிப்பதற்கான உத்திகளைக் கலந்துரையாடல் அவசியமாகும்.
பாடசாலைச் சமூகத்தின் எல்லாப் பகுதியினரையும் பிரதிநிதித்துவப்படுத்தி இச்செயற்பாட்டில் ஈடுபடுவதனால் பல்வேறு கருத்துக்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
முக்கியமாக பாடசாலை மாணவர், பெற்றோர் ஆசிரியர் பல்வேறு வழிகளில் தமது கருத்தை முன்வைப்பர். இது முக்கியமான அம்சமாகும். சகலரினதும் பங்களிப்பினுடாக பல்வேறு நியமங்களின் மூலம் பாடசாலை அபிவிருத்திக்காக இனங்கண்ட இலக்குகளை நோக்கி பாடசாலையை நடாத்திச் செல்லும் பொறுப்பு பாடசாலைச் சமூகத்திற்கே சாரும்.
பாடசாலை சமூகம், பாடசாலையின் சுய கணிப்பீட்டிலும், அதற்கேற்ப தயாரிக்கும் பாடசாலை அபிவிருத்தித் திட்டத்திலும் பங்குகொள்ளல் முக்கியமானது, இதன் மூலம் அணுகுதல், பங்களிப்புச் செய்தல், பாடசாலை தொடர்பாக முடிவெடுத்தல் ஆகியன தொடர்பாக அவர்களுக்கு உள்ள உரிமை உறுதிப்படுத்தப்படும். இதனால் இது முக்கியத்துவம் பெறுகின்றது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூகத்தின் ஏனைய பகுதியினர் பாடசாலை தொடர்பாக இவ்வாறு முடிவெடுப்பதன் விளைவாக பாடசாலை முகாமைத்துவத்திலும் நிலையான மாற்றம் ஏற்பட இவர்களுக்கு வாய்ப்பு கிட்டுகின்றது.
உ 'வடுத்களிப்புச் , முக்கிய ..

தாங்கள் எதிர்பார்க்கும் எதிர்கால பாடசாலையை நோக்கிச் செல்லும் பயணத்திற்காக பாடசாலை அங்கத்துவ குழுக்கள் இனங்கண்ட முன்னுரிமை விடயங்களுக்கேற்ப பாடசாலை அபிவிருத்திக் திட்டத்தை தயாரித்தல் வேண்டும். அப்போது தேவையான பல்வேறு தரவுகளை இனங்கண்டு அத்தரவுகளை பகுப்பாய்வு செய்வதனூடாக பயன் மிகக் திட்டமொன்றினை தயாரித்துக் கொள்ள முடியும்.
மா
எடுத்துக்காட்டு: தரம் ஒன்றில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் தமது எதிர்கால பாடசாலையின் எதிர்பார்ப்பு என நினைப்போம்.
இதனைக் கடந்த ஆண்டுகளில் பாடசாலையின் தரம் ஒன்றில் சேர்ந்துள்ள மாணவரின் சேர்வு இடாப்பின் மூலம்
அறிந்து கொள்ள வேண்டும்.
அவ்வாண்டுகளில் பாடசாலையின் ஊட்டப் பிரதேசத்தில் இருந்த தரம் ஒன்றில் சேரத் தகுதியுள்ள மாணவர்கள் வேறு பாடசாலையில் சேர்ந்துள்ளனரா என்பதையும் பாடசாலை எதிலும் சேரவில்லையா என்பது பற்றியும் தகவல் அறியப்படல் வேண்டும். இதற்குப் பாடசாலைக் குழவிற்குக் "கட்டாயமாக பாடசாலையில் சேர்க்கும் குழுவின் தரவுகள்" பெற்றுக் கொள்ளப்படல் வேண்டும்.
மேற்படி தரவுகளின் பகுப்பாய்வின்படி எதிர்காலத்தில் தமது பாடசாலையில் தரம் 1இல் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க எடுக்கும் நடவடிக்கையின் போது எதிர்நோக்கும் சவால்களையும் பிரச்சினைகளையும் இனங்காணலாம்.
மேலும் மேற்படி பிரச்சினைகளையும் சவால்களையும் வெற்றிகொள்ள எடுக்க வேண்டிய உபாய வழிகள் பற்றியும் கலந்துரையாடி இனங்காணப்படல் வேண்டும்.
அடுத்து உபாயவழிகளைப் பயன்படுத்தி பாடசாலையின் பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரித்தல் வேண்டும். இது பொதுவாக ஐந்தாண்டு திட்டமாகும். இதன் ஒரு பகுதியாக வருடாந்த அபிவிருத்தித் திட்டத்தை விரிவாகத் தயாரித்துக் கொள்ள முடியும்.
வருடாந்த அபிவிருத்தித்திட்டம் தயாரிக்கப்பட்டதன் பின்னர் அது அமுற்படுத்தப்பட வேண்டும். செயற்பாடுகளின் பொறுப்புப் பற்றி தீர்மானிக்கும் போது குறித்த பொறுப்பு யாதாயினும் ஒரு சமூகக் குழுவிற்கு வழங்கப்படும். தமது வகிபாகத்தைப் புரிந்துகொண்டு தமக்கொதுக்கப்பட்ட பணியைக் குறித்த கால கட்டத்தினுள் நிறைவேற்றுதல்
மேற்படி குழுவின் பொறுப்பாகும்.
ஆகவே தாம் தீர்மானித்த நோக்கத்திற்கும் கால கட்டத்திற்கு மேற்பச் செயற்பாடுகள் நிறைவேற்றப் படுகின்றனவா என்று தொடர்ச்சியாக அவதானித்தலும் வழிப்படுத்தலும் குறித்த குழுவின் பொறுப்பாகும். இங்கு திட்டத்தின் குறித்த செயற்பாட்டுக்காக இனங்கண்டுள்ள செயல் அடைவுச் சுட்டியினை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படல் வேண்டும்.
அகவிழி ஜூன் 2014 (?

Page 45
இவ்வாறு மேற்படி குழு தொடர்ச்சியாகக் கண் காணித்தலை மேற்கொள்வதோடு அதே சமயம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பாடசாலை பிரதிநிதிக்குழுவிற்கு முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பித்தல் வேண்டும்.
பாடசாலையின் பிரதிநிதிக்குழு எல்லாக் குழுக்களின் செயற்பாடுகளின் முன்னேற்ற அறிக்கைகளையும் பெற்று முன்னேற்ற மீளாய்விலும் விசாரணையிலும் ஈடுபட வேண்டும். மேற்படி முன்னேற்ற மீளாய்வின் மூலம் குறித்த குழுவிற்குத் தேவையான மீள்ஊட்டத்தைப் பெற முடியும்.
ஆறுமாதத்திற்கு ஒருமுறை முழுப் பாடசாலை சமூகத்துடனும் கூட்டமொன்றை / செயலமர்வொன்றை நடாத்தி அங்குதிட்டமிட்டவாறு திட்டமிட்ட செயற்பாடுகள் குறித்த கால கட்டத்தினுள் நடைபெறுகின்றனவா, அங்கு
- பாடசாலை சுய கணிப்பீட்டுச் - கேட்க
சிறுவர் நேயப்பாடசாலை பற்றிப் பாடசாலை
பாடசாலையின் சகல சமூ
அங்கத்துவக் குழு
சிறுவர் நேய பாடசாலை எண்ண
அங்கத்துவ குழுக்கள்
அங்கத்துவக்குழுக்களின் மூலம் சிற சுட்டிகளுக்கும் ஏற்பத் தமது பாடசாலை
கணிப்பீட்டின் மூலம் ெ கலந்துரையாடலும், முன்னுரி
முன்னுரிமைப்படுத்தியமை நிறைவேற்றும் வகையில் பாடசாலை
திட்டத்தை
அ த
கண்க
இ ை -விக்க -
அகவிழி | ஜூன் 2014

எதிர்நோக்கும் பிரச்சினைகள், இடர்ப்பாடுகள் யாவை என மீளாய்வுக்கு உட்படுத்தப்படுதல் அவசியமாகும். - ஆண்டிறுதியில் மீண்டும் இவ்வாறு பாடசாலைச் சமூகத்தை சந்திப்பார். அப்போது வருடாந்த அபிவிருத்தி திட்டம் மதிப்பிடப்படும். மேலும் பாடசாலையானது மீண்டும் சுயகணிப்பீட்டுச் செயற்பாட்டை ஆரம்பிக்கும். வருடாந்த அபிவிருத்தித் திட்டத்தை மதிப்பிடுவதன் மூலம் எழும் விடயங்களையும் பாடசாலை சுயகணிப்பீட்டு வேலைத்திட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டு ஐந்தாண்டு திட்டம் திருத்தப்படும். அதற்கேற்பப் புதிய வருடாந்த அபிவிருத்தித் திட்டம் தயாரிக்கப்படும். இவ்வாறு தொடர்ச்சியான சுற்றோட்டச் செயற்பாடாக இதனைச் செயற்படுத்தி எதிர்பார்க்கும் கனவுப் பாடசாலையை அண்மிக்க முடியும் என்பது தெளிவு.
செயன்முறையின் படிமுறைகள் - ஆதி 4
-) அ ச் சமூகத்தை உணர்வுபூர்வத்திற்கு உட்படுத்தல்.
2) அடக்க
கங்களும் அடங்கும் வகையில் வைத் தெரிவு செய்தல்
க்கரு, பரிமாணங்கள் நியமங்கள் பற்றி நக்கு அறிவூட்டம் செய்தல்.
அவர் நேயப் பாடசாலை நியமங்களுக்கும் மயின் தற்போதைய நிலையைக் கணிப்பிடல்
பற்ற தரவுகள் தொடர்பாகக் மைபடுத்தல்களைத் தீர்மானித்தலும்
க்கேற்ப மேற்படி தேவைகளை
அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரித்தல்.
- அமுல்படுத்தல்.
அமுல்படுத்தல்.
பப்பாடே வட்டப்பா.
காணித்தல்.
திப்பீடு
ணப்பு 3
நன்றி: பிள்ளை நேய அணுகுமுறை, கல்வி அமைச்சு

Page 46
215வ;
14 பாட 14 <* கப்ர் : 4 41.க, நல;சிக்க,!11)
அகவீடு
'க 37
13வி15
'4 பே*உப்புல்லாய்.
2943த்தோர்
2012 ஆம் ஆண்டிற்கான அ 'ஆசிரியர்கள் உடனடியா

ಶಟಟ
கFர் 6 ரித்திக் ச%E # இல்,
இத்தில் தேர்ச்வேது
எர் தேக்கு
ட்சை வழிகாட்டல் கருத்தரங்குகள் தொடர்பான சில
சொல் இலக்கணங்கள் iuf60!படுத்தும்
அகவிழ
12:15
கப்' (213 4 5 : க.? : '* *.
புகவிழிகளை பெற விரும்பும்
க தொடர்பு கொள்ளவும்.

Page 47
இs
கிடைக்கு பூபாலசிங்கம் புத்தகக்கடை 202, செட்டியார் தெரு, கொழும்பு - 11 தொ.பே.இல.: 011-2422321 பூபாலசிங்கம் புத்தகக்கடை 4A, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்
தொ.பே.இல.: 021-2226693 நியூ கேசவன் புக்ஸ்டோல்
52 டன்பார் வீதி, ஹட்டன் தொ.பே.இல.: 051-2222504, 051-2222977
அறிவாலயம் புத்தகக்கடை 190 B புகையிரத வீதி,
வைரவப்புளியங்குளம், வவுனியா தொ.பே.இல. 024-4920733 இஸ்லாமிக் புத்தக இல்லம் 77, தெமட்டக்கொட வீதி, கொழும்பு - 09
தொ.பே.இல. 011-2688102
Easwaran Book Depot No. 126/1, Colombo Street, Kandy Tel.: 081-2220820
குமரன் புக் சென்டர் 18, டெய்லிபயர் கொம்பிலக்ஸ் நுவரெலியா
தொ.பே.இல.: 052-2223416 விழுது - மட்டக்களப்பு இல 22, கலைமகள் வீதி, நெச்சிமுனை, மட்டக்களப்பு
தொ.பே.இல - 065 - 2222500 விழுது - திருகோணமலை 81யு, ராஜவரோதயம் வீதி, திருகோணமலை தொ.பே.இல - 026 2224941
Pr Kumaran 39, 36th La
kumbh
Registered in the Department of Pos

விடு
மிடங்கள்
பூபாலசிங்கம் புத்தகக்கடை 309-A 2/3 காலி வீதி, வெள்ளவத்தை, கொழும்பு
தொ.பே.இல.: 4515775, 2504266 அல்குரசி புத்தக நிலையம் 28, 1/2, புகையிரத வீதி, மாத்தளை
தொ.பே.இல.: 066-3662228
அறிவுந்தி புத்தகசாலை இல 06, கனகபுரம் வீதி, கிளிநொச்சி தொ.பே.இல: 077 6737535
140[IATCTOR!WT14M01NEW
Zeen Baby Care 121B, Arm Mill Road, Addalaichenai -01 Tel.: 077 3651138 புக் லாப் 20, 22 சேர் பொன் ராமநாதன் வீதி, பரமேஸ்வரா சந்தி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம் தொ.பே.இல: 021-2227290, அன்பு ஸ்டோர்ஸ் 14 பிரதான வீதி, கல்முனை தொ.பே.இல.: 067-2229540
பரணி புத்தகக் கூடம் நெல்லியடி ம.ம வீதி, நெல்லியடி
தொ.பே.இல - 077 5991949
விழுது - புத்தளம் இல 24801 கொழும்பு வீதி, தில்லையடி, புத்தளம்
தொ.பே.இல - 032 - 5740094 விழுது - யாழ் மாவட்டம் இல 23, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி வடக்கு, யாழ்ப்பாணம்
தொ.பே.இல - 021 2229866
050
ISSN 1800-1246
inted by
Press (Pvt) Ltd. ane, Colombo 06
k@gmail.com
HE Gl7718001124 005II
ts of Sri Lanka under QD/26/News/2014

Page 48
மனித மே உயிர்ப்பு மிகு அகவி
இவி
AHAVILI
ஆசிரிய வாண்மைக்காக புதிய பார்வைகளோடு, ' அறிவுசார் சமூகத்தை நோக்கி...
www.viluthu.org

மம்பாட்டின் 5 கல்விக்காய்...
டி 100
36
விசII)ல): 200/-