கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகவிழி 2014.05

Page 1
மே - 2014
- இ
மனித மேம்பாட்டின் உயிர்ப்பு மிகு கல்
- விழி 10 பார்வை 105
www.viluthu.org

பிடி
விக்காய்...
ISSN 1800-1246
புகழிமம்:E பய ப-3
பாதுசன நூலகம் ப ழப்பானாம்.
5:1-34t=ாபா -
விலை: 100/=

Page 2
மனித ே உயிர்ப்பு மி
அகவி
இ AHAVILI
ஆசிரிய வாண்மைக்காக புதிய பார்வைகளோ. 'அறிவுசார் சமூகத்தை நோக்கி...
'www.viluthu.org

மம்பாட்டின் கு கல்விக்காய்... கடி 100
36
விலை: 200/=

Page 3
இக
ஆ+ ரய
உள்ளே......
1. ஆளுமையில் சுய ஆற்றலின் வகிபங்கு
2. தமிழ்ச் செவ்வியல் இலக்கிய மரபு நவீனத்துவம்
3. ஆறுமுகம் என்னும் அதிசயமான கணிதச் சாதன
ஆப்ரஹாம் லிங்கன் அவர்களின் எதிர்பார்ப்பு
5. சமூகமயமாக்கல் முகவர்கள்
6. பேச்சாற்றல், எழுத்தாற்றல், அறிவுப்பிரவாகத்தி
7. வழிகாட்டலும் ஆற்றுப்படுத்தலும்
8. முகம் நினைவிருக்கிறது... ஆனால்...
9. கலைச் சொல்லாக்கம்
10. இலங்கையில் கல்வி வளர்ச்சி யுனெஸ்கோவின்
11. ஒளிப்படம் போன்ற ஞாபகம்.
12. தற்காலக் கல்விச் சிந்தனைகள்
அகவிழியில் !
பொறுப்
AHAVILI 3, Torrington Avenue
Colombo 07
Tel: 011 250 6272 E-mail: ahavili.viluthu@gmail.com

வி6
துவ 3 ந7க்கு...
6'
ஒனயாளர்
ற்கு வாசிப்பின் முக்கியத்துவம்
8 3 க 3 3 3 3 க - சு : *
- உதவியுடன் எதிர்காலத் திட்டங்கள்
இ!!ாகன நகைம்
ஃபி: 4 - 11' 3 J).
இடம்பெறும் கட்டுரைகளுக்கு அதன் ஆசிரியர்களே ப்பு, கட்டுரைகளில் இடம்பெறும் கருத்துக்கள்
"அகவிழி” யின் கருத்துக்கள் அல்ல.

Page 4
ISSN 18
இ-பர ர் பட் E E== = = யாபா
25
= = =" = 25 பட் ய
அ, ரிய
ட்" == - 22 E Hா E
அப்ப பப்' ப்
Tா பாப்பா
மதி
ஆசிரி ச. இந்திரா நிர்வாக ஆ
சாந்தி சச்சித நிறைவேற்றுப் பணி
ஆசிரியர் க.சண்முகம் பத்மா சோம்
ஆலோச
பேராசிரியர் சோ.சந்திரசேகரம்
முன்னாள் கல்விப் பீடாதிபதி கொழும்புப் பல்கலைக்கழகம்
பேராசிரியர் தை. தனராஜ் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்
கலாநிதி சசிகலா குகமூர்த்தி
சிரேஷ்ட விரிவுரையாளர் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்
லெனின் மதிவானம் பிரதிக் கல்வி வெளியீட்டு ஆணையாளர்
கல்வி அமைச்சு
வீ. தியாகராஜா சிரேஷ்ட ஆலோசகர், சமூக விஞ்ஞானக் கற்கைகள் துறை,
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்
கே.சாம்பசிவம் தேசிய ஆலோசகர் : கல்வி முகாமைத்துவம்
ஆசிரியரிடமிருந்து................
அகவிழி மே 2014
மூன்று தசாப்த கால போர் ஓய்ந்து ஐந்து வருடங்களாகியும் யாழ்ப்பாண மாவட்டத்தின் பரீட்சை பெறுபேறுகளில் பெரியளவிலான முன்னேற்றமொன்றை காண முடியவில்லை என கல்வியலாளர்களும் பொதுமக்களும் தெரிவிக்கின்றனர். ஒப்பீட்டு ரீதியாக நோக்கும்போது காணப்பட்ட நிலவரம் சற்று நேர்நிலையை அடையும்போது பரீட்சை பெறுபேறு களும் போர் நிலவிய காலப்பகுதியை விட அதிகரித்தல் வேண்டும். எனினும் அவ்வாறு நிகழாமைக்கு மூன்று பிரதான காரணிகள் செல்வாக்கு செலுத்துவதாக
தெரிவிக்கின்றனர்.

01ம்
வீடி
E=பக#EEE
நதுவ நோக்கு...
இதழ்
குமார் சிரியர் ானந்தம் ப்பாளர்(விழுது)
1 :11
குழு
லிங்கம்
மகாந்தன்
=கர் குழு
பேராசிரியர் வ. மகேஸ்வரன்
தலைவர் தமிழ்த்துறை பேராதனைப் பல்கலைக்கழகம்
து.ராஜேந்திரம் | முன்னாள் முதுநிலை விரிவுரையாளர் இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்
க.இரகுபரன் முதுநிலை விரிவுரையாளர் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் பேராசிரியர் துரை மனோகரன்
தமிழ்த்துறை பேராதனைப் பல்கலைக்கழகம் திருமதி. அருந்ததி ராஜவிஜயன்
ஆசிரிய ஆலோசகர் கொழும்பு கல்வி வலயம்
அவையாவன:
01) தொலைத்தொடர்பு சாதனங்களுடனும் தொலைக்
காட்சியிலும் அதிக நேரம் செலவிடல்.
02)
படிக்கும்போது கையடக்கத் தொ(ல்)லை பேசியினால் இடைஞ்சல் ஏற்படல்.
03) பிள்ளைகள் எங்கு போகிறார்கள் வருகிறார்கள்
என்பதை உணராத பெற்றோர்.

Page 5
மேலும் தென்னிந்திய திரைப்படங்கள் மற்றும் நாடகத் தொடர்கள் தமிழ்பேசும் மக்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றுள்ளன. அவற்றுள் அனேகமானவை மாணவர்கள் படிக்கத் தொடங்கும் வேளைகளில் தொடங்கி படிப்பை நிறைவுசெய்யும் நேரங்களில் நிறைவுறுகின்றன. இதனால் மனங்கவரும் விதமாய் மங்கள் உடையணிந்து அழகிய பெ மேனிகொண்ட நகையணிந்த நங்கையரின் கோலங்களைப் பார்வையிடுவது பாடநூல்களைப் படிப்பதை விட கண்ணைக் கவரும் அம்சமாக உருவெடுத்துள்ளது. அதே போல் அறிவுக்காய் யாதேனுமொன்றை தேடி இணையத் தளத்துனுள் புகுந்த பலர் வெளிவர பல மணிநேரம் எடுப்பதும் சுவாரஸ்யமான விடயம்.
ஆரம்ப காலத்தில் படிக்கும் போது பேனையும் புத்தகங்களையும் உபயோகித்தவர்கள் இன்று தொலை பேசியையும் அவற்றுடன் இணைத்துள்ளனர். ஒலியின்றிய நிலையில் குறுந்தகவல் பரிமாற்றம் (sms). ஒலியினால் பாதிப்பு ஏற்படாதவிடத்து உரையாடலையும் மேற் கொள்வதன் மூலம் தமது கவனங்களைக் கலைத்துக் கொள்கின்றனர்.
அப் பாவியான பெற் றோருக்கு பிள்ளைகள் புத்தகத்துடன் காணப்பட்டாலே போதும் என்ற மனநிலை. உயர் தரம் படிக்கும் தனது மகள் வழமையாக பிரத்தியேக வகுப்பிற்கு செல்கிறாள். இவள் எந்த ஆசிரியரிடம் செல்கிறாள் அந்த வகுப்புக்கள் எந் நாட்களில் எவ் வேளைகளில் இடம்பெறுகின்றன? உண்மையாகவே மகன் அல்லது மகள் வகுப்பிற்கு சென்றாளா? (னா) எனும் எதையும் பெற்றோர் ஆராய்வதுமில்லை. பிள்ளைகள் சொல்வதுமில்லை. பாவம் பணத்திற்காய் பாடுபடும் பெற்றோர்கள்.
இவை அனைத்தும் அவ்வாறிருக்க மாணவர்கள் பரீட்சையும் எழுதி பெறுபேறு கிடைத்தவுடனேயே மனவெழுச்சிகளைக் கொட்டுகின்றனர். பல்கலைக்கழக வரம் பெற்றோர் மகிழ்ந்திட ஒரு பாடத்திலும் சித்தியடையாதோர் மனக்காழ்ப்புக்கு உள்ளாவதோடு ஒரு சிலர் தற்கொலைக்கும் முயற்சிக்கின்றனர். என்ன செய்வது எமது கல்வி அமைப்பு முறை முற்றுமுழுதாக பரீட்சை நோக்கியதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறதே. இந்நிலைமைகளுக்கு மாற்று வழியேதும் இல்லாத நிலையில் பரீட்சையில் சித்தியெய்த வேண்டியதுதான் இறுதி முடிவு.
எனவே பரீட்சையில் சித்தியெய்துவதற்கு பாட நூல்களைப் பயன்படுத்துவதிலும் பரீட்சை வினாத்தாள்களை விளங்கிக்கொள்ளுதலிலும் முக்கிய கவனம் செலுத்த வேண்டியுள்ளது. நூலிலுள்ள தகவல்களை மனதிலெடுத்து பரீட்சையின் போது உரிய முறையில் உபயோகித்தல் வேண்டும். எனவே படித்தல் என்பது மேலோட்டமான பார்வை மட்டுமல்ல அவற்றுடன் உரத்து வாசித்தல்,

குறிப்பெடுத்தல், பிரதி பண்ணல், மனனமிடல் ஆகிய அம்சங்களும் அவற்றுளடங்கும்.
பரீட்சையின் தன்மையை மேலோட்டமாக நோக்குவோமானால் அவற்றில் பிரதானமாக இரு வகையான வினாக்கள் காணப்படும். அவையாவன அகவயமான (subjective) வினாக்கள் மற்றும் புறவயமான (objective) வினாக்களாகும். அவற்றுள் அகவயமான வினாக்களிலே கட்டுரை வினாக்களும் அமைப்புக் கட்டுரை வினாக்களும் அடங்கும் புறவயமான வினாக்களிலே, பல்தேர்ந்த வினாக்கள் சரி பிழை கூறல் தொடர்புபடுத்தல் மீள ஒழுங்கமைத்தல் ஆகிய கருத்துக்களை எழுதும் பணி குறைந்த வினாக்களும் காணப்படும். இவற்றுள் கட்டுரை வினாக்களுக்கு விடையளிக்க மனதிலுள்ள விடயங்களை ஆழமாகவும் பொருத்தமாகவும் பிரயோகித்தல் வேண்டும். இவ் வினாக்களுக்கு மேலோட்டமான பார்வையின் மூலம் விடையளிப்பது இலகுவானதன்று. இலகுவாக வேண்டுமானால் ஆழமாகவும் திருத்தமாகவும் புரிந்து வைத்திருத்தல் வேண்டும். அப்படியாயின் நன்கு கவனத்தை செலுத்தி வாசித்தல் வேண்டும். வாசிக்கும்போது பார்வை கேள்வி ஆகிய இரண்டும் செயற்படுவதனால் விளைவு அதிகரிக்கும். வரைவிலக்கணங்கள் போன்றவற்றை மனனம் செய்தலைத் தவிர வேறு வழியில்லை. அத்துடன் தான் வாசித்த அலகிலிருந்து தானாகவே தயாரித்த அல்லது கடந்த கால கட்டுரை வினாவொன்றை எடுத்து பரீட்சையில் செய்வது விடையளிக்கும் போது தான் அறியாத விடயங்கள் காரணிகள் அனைத்தையும் முறையே எழுத முடியாமை போன்ற குறைபாடுகள் தெரியவரும். இது தன்னைத்தானே அறிந்து கொள்வதற்கு பேருதவியாய் அமையும். அவ்வாறு பலமுறை செய்யும் போது குறைபாடும் நிவர்த்தியாகும். அத்துடன் பியாஜே குறிப்பிடும் பின்திரும்பும் இயல்பு. (reversabilic) இங்கு பொருந்துவதையும் காணலாம். இவ்வியல்பு விருத்தியடையாவிடின் விடை யளிக்க முடியாது.
அத்துடன் புறவயமான வினாக்களுக்கு விடையளிக்கவும் துணுக்குகளை திருத்தவும் அறிந்திருந்தால் மாத்திரமே விடையளிக்கலாம். இதனால் கற்றலை மேற்கொள்ளும் இடைவிட்ட வேளைகளாக ஓய்வுடன் சேர்க்கத்தக்க கற்றல் மிகவும் பயனுடையதாய் அமையும். பரீட்சைளிலும் சிறந்த பலன் கிடைக்கும். இவை அடியேனின் அறிவுக்கெட்டிய சில அறிவுரைகள்.
ஆசிரியர்களே! மேற்குறித்த, கல்வியை பாதிக்கும் காரணிகளில் மாணவர்களின் கவனம் செல்லாதிருக்க உங்களாலான அனைத்து ஆலோசனைகளையும் (2 அறிவுரைகளையும் வழங்குங்கள். இது மனித மேம்பாட்டின் த உயிர்ப்பு மிகு கல்விக்கான பணிவாக வேண்டுகோள்.
ச. இந்திரகுமார்
அகவிழி மே 2014 )

Page 6
ஆளுமையில் சுய ஆற்றலின் 6
'சொ. அமிர்தலிங்கம் 'ஆளுநரின் செயலாளர் 'வடக்கு, கிழக்கு மாகாணம்
தலைமைத் தகுதியுடையவர்களில் அநேகம் பேர் சுயதிறன் உடையவர்கள். இவர்கள் எந்த வேலையையும் தங்களால் சரி வரச் செய்ய, செய்விக்க முடியும் என்ற நம்பிக்கையுடையவர்கள். தன்னை நன்றாகப் புரிந்து கொண்டும், தன்னுடன் வேலை செய்வோரைப் புரிந்து கொண்டும் செயலாற்றுவர். சுய திறன் எய்தியவர்கள் ஏனையோரைச் செயலில் ஊக்குவிக்கக் கூடியவர்கள். எந்த வேலையாயினும் தமது சுய கட்டுப்பாட்டுடன் செய்து முடிக்க முனைவர். சுயதிறன் உடையவர்கள் நேரம் பாராது உழைப்பர். ஏனெனில் அவர்களுக்கு தங்கள் திறனில் நம்பிக்கையுண்டு. இவர்கள் உடல் உள ரீதியாக தகைமை பெற்றவர்களாக, சொந்தப்பிரச்சினைகளிற்கு கட்டுப்படாதவர்களாக இருப்பர். இவர்கள் ஆற்றல் மிக்கவர்களாகத் திறமையுடையவர்களாகக் காணப்படுவர். தன்னையும் பிறரையும் ஏற்று நடக்க முனைவர். தாமே ஊக்குவிப்பவர்களாக இருப்பர். செயல்களைச் செய்யக்கூடிய, செயற்படுத்தக்கூடிய திறமைசாலிகளாக இருப்பர். சுய திறன் உடையவர்கள் தெரிந்தெடுத்த இலக்கை நோக்கை அடைய அக்கறையுடன் அர்ப்பணிப்புடன் ஆர்வத்துடன் செயற்படுவார்கள். தனது திறமைகள் எதனையும் அவன் வீண்விரயம் செய்யமுற்பட மாட்டான். எந்தப் பிரச்சனைக்கும் முகம் கொடுத்து செயலாற்றுவான்.
மனிதனுடைய நடவடிக்கைகள் பற்றி ஆராய்ந்த உலகம் போற்றும் உளவியலாளர் ஆபிரகாம் மாஸ்லோ, மனிதனின் வளர்ச்சியில் நாட்டம் கொண்டு அதற்காகப் பல கருத்துக்களை எடுத்தியம்பியுள்ளார். மாஸ்லோவின் அடிப்படையில் பார்ப்பின் சுய திறன் அடைதல் என்பது மனிதனானவன் தன்னிலுள்ள ஆற்றல் களையும் திறமைகளையும் முற்று முழுதாகப் பயன்படுத்துவதையே குறிப்பதாகும். எனவே ஒருவன் தனது ஆற்றல், திறமைகளைச் சரிவரப் பயன்படுத்த முற்படுவானாயின் அவன் சுயதிறன் எய்தியவனாகக் கருதப்படுவான். ( மனிதர்களைத் தமது ஆராய்ச்சியில் எடுத்துக் கொண்டார் மாஸ்லோ. சராசரி மனிதர்களுக்குப் பதிலாக மனித இனத்தின் மேல் மட்ட உயர் மக்களின் அற்புத குணங்களை ஆராய்ந்தார். மனிதனால் எவ்வளவு முடியும்?
2014 + அகவிழி (மே

வகிபங்கு
மனித சக்தி எவ்வளவு தூரம் செயற்படும்? அவ்வளவு தூரம் செல்ல எது அவனைத் தூண்டுகிறது? ஏன் அவன் அதற்காக தன் உயிரைக் கூட பணயம் வைக்கிறான்? எப்படி மனித தேவைகள் படிப்படியாக உயர்கின்றன? என்ற கோணங்களில் எல்லாம் ஆராய்ந்து மூல காரணங்களைக் கண்டறிந்தார். முதலாவதாக மனிதன் அடிப்படைத் தேவைகளில் கவனம் செலுத்துகிறான். உணவு, உடை, உறையுள் என்பன உயிர் வாழ்வதற்குத் தேவைகளான அடிப்படைகள். இரண்டாவதாக மனிதன் பாதுகாப்பை நாடுகிறான். மிருகங்களிடமிருந்து, எதிரிகளிடமிருந்து இடி, மின்னல், மழை போன்ற இயற்கைக் காரணிகளிலிருந்து, பயங்களிலிருந்து பாதுகாப்பை நாடுகிறான். மூன்றாவதாக மனித சமுதாயத்தின் ஒரு பகுதியாக பிறரால் தான் ஏற்றுக் கொள்ளப்படுவதை, பிறரால் அங்கீகரிக்கப்படுவதை விரும்புகிறான். சமுதாயத்தின் ஒரு பகுதியாக திகழ்வதில் நிறைவு காண்கிறான். இதன் காரணமாகவே சங்கங்கள் அமைப்பதில் முயல்கிறான். நான்காவதாக தனது திறமை களுக்காக சமுதாயத்தால் தான் ஏற்றுக் கொள்ளப்படுவதை , பாராட்டப்படுவதை அவன் விரும்புகிறான். அதற்காக ஏங்குகின்றான். மனித மனத்தின் அடிப்படை இயல்பாக இது இருக்கிறது. ஐந்தாவதாக தன் முழுத்திறமைகளையும் அறிவையும் வெளிக்கொணர்ந்து தான் மேற்கொண்ட இலட்சியத்தை அடைந்து அதில் நிறைவு பெறுகிறான். ஒருவனின் பூரணத்துவம் எதுவோ? எவ்வளவு தூரம் அடைய முடியுமோ அவ்வளவையும் அடைந்து நிறைவு காணும் மனம் அடிப்படையில் இருந்து மனிதனைச் செயற்படுத்துகிறது. மாஸ்லோ மனிதன் எப்படி இருக்கிறான்? என்று பார்க்காமல் எப்படியெல்லாம் இருக்க முடியும் என்பதை மாமனிதர்களாக ஆராய்ந்து கண்டறிந்தார். மாஸ்லோ "தன்னிலை உணர்வு அடைந்தவரின் குண வியல்புகளை விவரிக்குமிடத்து அவர்களைத் “தம் திறன்" முழுவதும் ஆக்க வேலைகளில் ஈடுபடுத்தியவர்கள் என விபரிக்கிறார். இவர்கள்தான் சுயதிறன் அடைந்தவர்களாக அவரால் போற்றப்படுகின்றனர்.
எனவே இவரது அமைப்பின்படி முதல் தேவையானது, பூர்த்தி செய்யப்பட்டு பின் ஏனைய தேவைகளுக்கு ஏறு

Page 7
நிரையில் செல்கின்றன. ஒரு தேவை நிறைவடைய அடுத்த தேவை பூர்த்தி செய்யப்பட்டாலே ஏனைய தேவை களை அடையலாம். வளர்ச்சியானது ஆரம்பத்திலிருந்து நடைபெற வேண்டும். ஆரம்ப தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டாற்றான் உயர் தேவைகளை அடையலாம். மனிதனின் உயர் இயல்பு அவனது தாழ் இயல்பில் தங்கியுள்ளது. எனவே தாழ் தேவைகள் தான் அடித்தளம். இது பூரணப்படுத்தப்பட்டால் தான் ஏனையவை இடம்பெறும். “பசி வந்திடப்பத்தும் பறக்கும்" என்பார்கள் எனவே பசியைப் போக்கினால் ஏனையவற்றை அடையலாம். உயிர் வாழ்வது, பசியைப் போக்குவது முக்கியமான அடிப்படைத்தேவையாகும். எம்மை சுயதிறன் எய்த அர்ப்பணிக்க வேண்டும். தன்னலமற்ற சேவையாளார்களாக நாம் திகழ வேண்டும். ஆற்றல், திறமைகளை நாம் வளர்த்து எடுக்க வேண்டும். எம்மீது நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். உற்சாகமாக இருக்க வேண்டும். ஆக்கத்திறனைச் சரி வரப் பயன்படுத்தக் கூடியவர்களாக ஆர்வமுள்ளவராக இருக்க வேண்டும். எனவே நாம் ஆளுமையில் சுயதிறன் அடைய வேண்டும். சுயதிறனை அடைந்தாற்றன் நாம் எடுத்த காரியத்தைத் திறம் பட நடாத்தி வெற்றியீட்ட முடியும். எமது இலக்கு நிறுவனத்தின் இலக்கு போன்றனவற்றை அடைய நாம் முதலில் சுய திறனுடையவர்களாக இருக்க வேண்டும்.
ஆபிரகாம் மாஸ்லோ சுயதிறன் அடைதலுக்கான எட்டு வழிமுறைகளை எடுத்தியம்பியுள்ளார். இது அவரது "The Father Reaches of Human Nature" என்னும் நூலில் காணப்படுகிறது. இவரது ஆய்வின் படி எட்டு வழிமுறைகளை சுயதிறன் அடைவதற்காக நாம் கையாள வேண்டும்.
01.
முழுமையான அனுபவமுடையவராயிருக்க வேண்டும். செய்தொழில் பற்றி அனுபவமுள்ளவராக இருக்க வேண்டும். அனுபவக் குறைவு சுயதிறன் அடைய வழியமைக்காது. எனவே அனுபவம் பெற வேண்டும். எந்தக் காரியத்தையும் செய்யும் போது அவதானமாக இருக்க வெண்டும். செய்யும் விடயத்தை கிரகிக்கக் கூடியவராக இருக்க வேண்டும். எனவே கிரகித்து அவதானத்துடன் அனுபவத்தைப் பயன்படுத்தினால் சுய திறனடைந்து கொள்ளலாம்.
02 Gா:
வாழ்விலே ஒரு தெரிவுப் போக்காக சுயதிறன் அடைதலை கடைப் பிடி போமானால் எமது தீர்மானங்கள் வளர்ச்சிக்குரிய ஒரு தெரிவாகவே அமையும். எனவே தெரிந்தவற்றை துணிந்து
சவாலாக ஏற்றுக்கொண்டு நாம் செயற்பட வேண்டும். 03. தான் (SELF) என்பது தனித்துவமான ஒன்று. இதை
தன் இயல் நிலையோடு பொருத்தப்பாடு காண நாம் முயல வேண்டும். தான் தன்னுடைய சிந்தனைப்

போக்கு என்பவற்றை தன் உள்ளார்ந்த இயல்
நிலையொடு செயற்படுத்த முனைய வேண்டும். 04. பொறுப்புணர்வுடனும், நேர்மையுடனும் செயலாற்ற
வேண்டும்.
05.
ஒருவன் தன் மீதும், தன் உணர்வு மீதும், நம்பிக்கை
கொள்ள வேண்டும். தன்னைத்தான் நம்ப வேண்டும்.
06.
தன்னுடைய இயல்பான தன்மையினை வளர்க்க வேண்டும். குறைவான ஆற்றலுடையோர் கூடிய
வளர்ச்சியடைய வேண்டும். 07. மேலோங்கிய அனுபவங்கள் உடையவர்களாக
இருக்க வேண்டும். நான் என்னும் அகங்காரத்தை அடக்கி அதைக் களைய முனைய வேண்டும். நாம் என்று எல்லோரும் ஒன்று சேர்ந்து செயலாற்ற வேண்டும். இவையாவற்றையும் ஒன்றிணைத்து செயற்பட்டால் சுயதிறன் அடையலாம் என்பது ஆபிரகாம் மாஸ்லோவின் கருத்தாகும்.
08.
ஆற்றல் என்பது எல்லோரிடமும் உண்டு. எனவே எமது ஆற்றலுக்கு எற்ப இலக்கை அடைய முயல வேண்டும். தனது ஆற்றலுக்கு மேலான இலக்கினைக் கொண்டிருப்பின் இலக்கை அடைய முடியாது அவதியுற நேரிடும். தன் ஆற்றலுக்கு குறைவான இலக்கைக் கொள்வானாயின் தன் சக்தியை . தன் திறமையை வீணாக்குகிறான் என்பதே பொருளாகும். எனவே நாம் சாதகமான உணர்வுகளுடன் செயலாற்ற வேண்டும். தன் திறனில் நம்பிக்கை கொண்டு செயலாற்ற வேண்டும். எனவே தளராமனத்துடன் செயலாற்ற வேண்டும். ஒரு குறிக்கோளைத் திட்டமிட்டுக் கொண்டு, அதை நிறைவேற்றுவதற்காக முயலும் போது, எவ்வளவு இடுக்கண்கள் ஏற்பட்டபோதிலும், குறிக்கோளை மட்டும் விட்டுவிடாமல் உறுதியுடன் ஒருவன் செயல்படுவானானால், எப்படியும் வெற்றிபெறுவான் என விஞ்ஞான மேதை கிளென் மார்டின் கூறுகிறார். அடம்ஸ் ஸ்மித் பொருளா . தாரத்தைப்பற்றி ஒரு நூல் எழுதவேண்டுமென 17 ஆண்டுகள் உழைத்து தேசியச் செல்வம் (Wealth of Nation) என்ற நூலை எழுதினார். இது போன்ற முயற்சியில் டார்வின் பௌதிகத்தின் தோற்றம் (Origin of physics) என்ற நூலை 17 ஆண்டுகள் முயன்று எழுதினார். கார்ல் மார்க்ஸ் மூலதனம் (The Capital) என்ற நூலை 17 ஆண்டுகள் முயற்சி செய்து எழுதினார். இவர்கள் மிகுந்த சுயதிறன் எய்தியவர்களாய் இருந்தமையால் தமது மதிநுட்பம் மிக்க நூல்கள் மூலம் உலகப் புகழ் பெற்றனர். “மற்றவர்களுக்கு நீ வல்லவனாக இருக்கும்போது
அகவிழி | மே 2014 (ம

Page 8
உனக்கே நீ வல்லவனாக இருக்கின்றாய்” என பிராங்ளின் கூறுகிறார். "விதி தன்னிடமுள்ள எல்லா அம்புகளையும் என்மீது வீசட்டும், எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு மேலும் மேலும் எதிர்த்து நிற்பேன். துன்பம் எவ்வளவு வரினும் அதை தாங்கக்கூடிய ஆன்மா என்னிடம் . இருக்கிறது" என்று வீர உணர்ச்சிகளுடன் கூறுகிறார் ட்ரைடன். இப்படிச் சிக்கல்களைக் கண்டு இவர் மருளவில்லை, அதற்கு மாறாக சிக்கல்களை எதிர்த்து நின்றார். திட்டம் அவரிடம் இருந்தது. சுய திறன் எய்தியதனால் துணிவும் தானாக வந்துவிட்டது. துன்பத்தை எதிர்த்து நின்றார்.
சரியான நேரத்தில், சரியான முறையில் செயல் படுபவர்கள் சுயதிறனுடையவர்களாக இருப்பர். எனவே அவர்கள் நெருக்கடி ஏற்பட்ட போதும் சரிவரச் செயற்பட முற்படுவர். செய்யப் போகும் விடயம் கடினமாயினும் செய்து முடிக்கலாம் என்ற நம்பிக்கையில் செயற்படுவர். சுயதிறன் எய்திபவர் சாதித்த சாதனைகளை ஆராய்ந்தால் அதன் முக்கியம் விளங்கும்.
ஆண்ட்ரூகார்னகி (1835 - 1919)
“அமெரிக்காவின்” உருக்காலை மன்னர்" என்று போற்றப்பட்ட ஆண்ட்ரூகார்னகி ஸ்கொட்லாந்தில் வறுமையில்' பிறந்தார். 1846ல் அவருடைய பெற்றோர்கள் அமெரிக்காவில் குடியேறிய பொழுது அவரது வயது 13. ஒரு பருத்தி ஆலையில் நூல் சுற்றும் வேலை கிடைத்தது. ஆனால் அவரை ஒத்த பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தனர். இரவு வகுப்பில் பாடம் படிப்பார். வணிகக் கணக்கு முறை கற்பதில் அவருக்கு அதிக விருப்பம் இருந்தது. ஆலையில் மட்டுமல்ல வீட்டிலும் நூல் நூற்று வீடுவீடாக எடுத்துச் சென்று விற்றார். கார்னகி தனது கடின உழைப்பில் பெற்ற ஆற்றலைக் கொண்டு தனக்கென்று ஒரு பாதையை உருவாக்கினார். இரயில்வே துறையில் அவருக்கு சாதாரண சம்பளத்தில் வேலை கிடைத்தது. "வயர்லஸ் செட்டுக்களை" எப்படி இயக்குவது? எனக் கற்றார். டெலிகிராப் ஒப்பரேட்டராக நியமிக்கப்பட்டார். பின்னர் இரயில்வே துணைத் தலைவரின் உதவியாளரானார். பங்கு மார்க்கட் பிஸினஸில் ஈடுபட்டார். கார்னகி இரயில்வே தொடர்பான ஆடம்ஸ் எக்ஸ்பிரஸ் ஸ்டாக்குகளில் முதலீடு செய்தார். பின்னர் வேறு நிறுவனங்களிலும் முதலீடு செய்தார். இரயில்வேயிலிருந்து வெளியேறினார். 35 வயதிற்குள் பெரும் செல்வத்தைக் குவித்தார். பராடக் என்னும் இடத்தில் ஜே.எட்கார் தாம்ஸ ன் வேர்கஸ் என்னும் உருக்காலையை நிறுவினார். 1877ல் ரயில்வேத் துறைக்குத் தேவையான உருக்கில் ஏழில் ஒரு பங்கை அவருடைய தொழிற்சாலையில் உற்பத்தி
வ அகவிழி | மே 2014

செய்தார். நிலக்கரிச் சுரங்கமொன்றையும், இரும்புத் தாது நிறுவனமொன்றையும் விலைக்கு வாங்கினார். 1899ல் "கார்னகி ஸ்டீல் கம்பெனியைப்" புதுப்பித்தார். 320 மில்லியன் டொலர் முதலீட்டில் “நியுஜேர்ஸி கார்ப்பரேஷன்” என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அவருடைய U.S ஸ்டீல்காபரேஷனிலிருந்து ஆண்டொன்றுக்கு 25 மில்லியன் டொலர்கள் வருமானம் வந்தது. பல நிறுவனங்களிலிருந்து கமிஷனாகவும், ஆதாயப் பங்காகவும், இயக்குனர் காலமானர் ஊதியமாகவும் வட்டியுடன் அதில் ஒரு பங்காகவும் அவரிடம் பணம் வந்து குவிந்தது. 1900ல் அறப்பணிகளைத் தொடங்கினார். பிட்ஸ்பர்க்கில் தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவினார். ஸ்டிகாட்லாந்தின் கல்வி வளர்ச்சிக்கு உதவி நம்பிக்கை நிதியத்தை ஆரம்பித்தார். 1904ல் கார்னகி . சிறந்த முயற்சியாளர் விருது வழங்க ஏற்பாடு செய்தார். அறச்சிந்தனைகளோடு கல்வி நிறுவனங்களுக்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் உதவினார். 1919.08.11ல் மரணமானார். சுயதிறன் மூலம் முன்னுக்கு வந்தவர்களில் இவர் புகழ்பூத்வராவார்.
ஈஸ்ட்மன்
இவர் ஆறு வயதில் தந்தையை இழந்தார். குழந்தைப் பருவத்தில் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானார். ஒரு ஆயுட் காப்பீட்டுக் கழகத்தில் காலை முதல் இரவு வரை வேலை பார்த்தார். மாலையில் அலுவலக வேலை முடிந்ததும் கட்டிடத்தையும், சுற்றுப்புறத்தையும் கூட்டி பெருக்கி சுத்தப்படுத்தினார். அவருக்கு கிடைத்த சம்பளம் வாரத்திற்கு மூன்று டொலர்களாகும். குறைந்த வருவாயில் தன்னையும் தன்னைச் சார்ந்து இருக்கும் தாயையும், இரண்டு மூத்த சகோதரிகளையும் காப்பாற்ற வேண்டிய அவல நிலை. ஊதியமோ போதவில்லை. வேறு இடத்தில் தகுதியான வேலையைத் தேடிக் கொண்டார். சுயமாக கணக்கியலைக் கற்றார். கல்வி நிலையங்களில் பட்டம் பெற முடியவில்லை. கணக்கியல் அனுபவத்துடன் வங்கிக்கணக்காளர் வேலையில் அமர்ந்தார். ஏழு ஆண்டுகள் வங்கி வேலை பார்த்தார். 3000 டொலர்களைச் சேமித்தார். விடுமுறைப் பயணம் சென்றார். அப்போது ஒரு காமிராவை விலைக்கு வாங்கிக் கொண்டு சென்றார். ஆனால் அந்த காமிரா செப்பமற்றது. பெரிய அளவானது. போட்டோ கிராபிக் புத்தகங்கள் வாங்கிப் படித்தார். அந் நாளில் தகடுகளைப் பயன்படுத்தி படம் எடுத்தனர். கண்ணாடித் தகட்டில் ஜெலற்றின் திரவத்தை தடவிப் பயன்படுத்தி வெற்றி பெற்றார். எனினும் அதன் ஆயுள் குறைவாக இருந்தது. ஈஸ்ட்மன்ட் தயாரித்த உலர் தகடுகளை மக்கள் வாங்கினார். காமிராவில் அளவைக் குறைத்து பிளேட்டுகளையும் நீக்கி புகைப்படம் எடுத்து செலவைக் குறைக்க முற்பட்டார். இறுதியில் வளையக்

Page 9
க
கூடிய மென்தாள் (Flexible flm) ஒன்றைக் கண்டு பிடித்தார். அதை சுருளாக்கி பாக்ஸ் காமிராவில் பயன்படுத்த முடியும். 1889 இல் பாக்ஸ் காமிரா அறிமுகமானது. 02 ஆண்டுகளில் ஒருலட்சம் காமிராக்களை விற்றார் ஈஸ்ட்மன். 1892 இல் 40 வயதில் Kodak நிறுவனத்தை
தொடங்கினார். புகைப்படத் தொழிலுக்கு தேவையான பல - புதிய கருவிகளையும் உபகரணங்களையும் தயாரித்தார்
"காலப்போக்கில் வண்ணப்படத்திற்கான மென்தாள்களும் வந்தன. ஃப்ளஷ் போன்ற இணைப்புக்கள் காமிராவிற்குப் பின்னால் நிற்பவருக்கு செயற்திறனை கூட்டுவித்தன. சினிமா வளர்ச்சி புதிய விற்பனைச் சந்தையை உருவாகக் காரணமாயிற்று. நுாற்றாண்டில் கோடீஸ்வரர் பட்டியலில் ஈஸ்ட்மன் இடம் பெற்றார். 1898 முதல் நிறுவனத்திற்காக தொழிலாளர்களுக்கு கணிசமான ஒரு தொகையை வழங்கினார். இலாபத்தில் தொழிலாளர்களுக்கு பங்கு கொடுக்கப்படும். நடைமுறை ஏற்கனவே இருந்தது. சமூக நலன், தொண்டர் நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தார். இப்படியாக வறுமையில் உழன்று, சுயதிறன் எய்தி புகழ்பூத்தவர்களில் ஈஸ்ட்மன் எனும் கோடீஸ்வரர் ஒருவரானார்.
ஹென்றிபோர்டு (1863-1947) இவரது தந்தை ஒரு விவசாயியாக மிக்சிகன்னில் வாழ்ந்தார். வறிய குடும்பம். மகனுக்கு விவசாயத்தில் ஊக்குவிக்க முற்பட்டார். ஆனால் மகனோ இயக்கவியலில் (Mechanism) நாட்டம் கொண்டவராக டெட்ராய்ட்டில் தங்கிப்படிக்க முற்பட்டார். மிகச்சிறிய தொழிற்சாலையில் வேலை கிடைத்தது. இயந்திர வேலையில் ஈடுபாடு காட்டினார். குதிரை இல்லாமல் ஓடும் வண்டியை தயார் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். பகலில் எடிசன் நிறவனத்தில் வேலை பார்த்தார். இரவில் தனது மனைவியான கிளாராவுடன் சேர்ந்து தங்கள் வீட்டின் பின்புறமுள்ள தொழிற்சாலையில் ஆராய்ச்சியில் ஈடுபடுவார். ஜேர்மனியில் டாக்டர் நிக்கோலஸ் ஓட்டோ என்பவர் அபிவிருத்தி செய்த பெற்றோல் எஞ்சின் பற்றி படித்து கடைசியில் அந்த இயந்திரத்தை உருவாக்கினார். அது மேலும் செப்பனிடவேண்டியிருந்தது. தான் உருவாக்கிய இயந்திரத்தின் வடிவை அபிவிருத்தி செய்தார். மோட்டார் வாகன சக்கரங்களைத் திருப்பு அச்சுக்களை (Axies) பொருத்தினார். அந்த கார் இரண்டு வேகங்களில் ஓடக்கூடியது. மணிக்கு 10மைல் வேகம், மற்றும் மணிக்கு 20மைல் வேகம் ஆகிய இரு வேகங்களில் ஓடக்கூடியது. தம்முடைய குதிரையில்லாத வண்டி சாலையில் போகும்போது யாரும் மோதி விபத்திற்குள்ளாகாதபடி ஒலி எழுப்பியை (Gong) பொருத்தியிருந்தார். ஹென்றியின் வாகனம் முதன் முதலாக 1896 யூன் 04ஆம் திகதி

சாலையில் ஓடியது. அப்போது அவருக்கு 33 வயது. ஒரு பந்தயத்தில் தனது மோட்டார் வாகனத்தின் தரத்தினை நிரூபித்து பாராட்டு பெற்றார். போர்டு மோட்டார் கம்பனியை உருவாக்கினார். தொழிநுட்ப பிரிவை போர்டு கவனித்தார். நிர்வாக பிரிவை ஜேம்ஸ்காஸன்ஸ் என்பவர் கவனித்தார். 1906 இல் போர்ட்கர்கள் விற்பனையாயின. மொடல் AI 950 டொலர்களுக்கும், மொடல் BI 2000 டொலர்களுக்கும் விற்பனையாயின. 1913இல் மொடல் D வண்டிகள் உற்பத்தியாகி 1915ஆம் ஆண்டு தொடக்கம் 290 டொலர்களுக்கு விற்பனையாயின. தொழிலாளர்களது வேலை நேரத்தையும் குறைத்தார். அவர்களுக்கு தினமும் 5 டொலர்கள் சம்பளம் கொடுத்தார். குறைந்த நேரத்தில் கூடிய சம்பளம் பெற்றதால் தொழிலாளர்கள் தங்கள் முழுத்திறமையையும் காட்டி உழைத்து அதிக மனித சக்தியை நல்கினர். 1927இல் புதுப்புது மொடல்களை அறிமுகப்படுத்தினார். 300 கோடி டொலர் முதலீட்டில் போர்டு பவுண்டேஷன் எழுந்தது. ஆண்டுக்கு 25 கோடி டொலர்களை வறியோருக்கு ஒதுக்கினார். 1947 இல் மறைந்தார். இன்றைய மோட்டார் தொழிலின் முன்னோடி யான போர்டு சுயதிறன் மூலம் உச்சநிலைக்கு வந்து கோடீஸ்வரரானார்.
ெ
ஜோன்டி ராக்பெல்லர் (1839-1920) 1839ஆம் ஆண்டு யூலை 11இல் பிறந்த ராக்பெல்லர் சராசரி குடும்ப பின்னணியைக் கொண்டவர். கோழிக்குஞ்சு முட்டையிலிருந்து வெளிப்பட்டதும் விற்றுக்காசாக்கி தனது தகரப்பெட்டிக்குள் சேகரித்தார். அவரது சில்லறைக் காசுகளைச் சேர்த்து விவசாயி ஒருவருக்கு கடனாக 7 சதவீத வட்டிக்கு கொடுத்துச் சம்பாதித்தார். கோடீஸ்வரராக வேண்டுமென்ற குறிக்கோள் இருந்தது. 14 வயதில் நியூயோர்க்கின் பக்கத்திலுள்ள றிச்போர்ட் கிராமத்திற்கு சென்று அங்கிருந்து ஒஹியோ சென்றார். ஒரு நிறுவனத்தில் எழுதுநராக (Clerk) பணியாற்றினார். அங்கு வணிகக் கணக்கு முறையின் நுட்பங்களை அறிந்தார். செலவுகளை குறைத்து சிக்கனமாக வாழ்ந்தார். தொடக்கத்தில் இவரது ஊதியம் 26 டொலர். 5 ஆண்டுகளின்பின் 50 டொலர் ஆயிற்று. மேலும் சம்பள உயர்வு கிடைக்காததால் தொழிலை தூக்கியெறிந்தார். 19வயதில் இடைத்தரகராக செயற்பட்டார். ஒரு வருடத்துள் 4000 டொலர்கள் கமிசனாகக் கிடைத்தது. 1861இல் உள்நாட்டுப்போர் மூண்டது. அத்தியாவசிய சில பொருட்களின் தட்டுப்பாடும் விலைவாசி உயர்வும் ஏற்பட்டது. ராக்பெல்லர் விநி யோகிஸ்தராக லாபத்தில் இயங்கினார். எரிபொருள் விற்பனைக் கடைகளை திறந்தார். எண்ணெய் வெளிக் கொண்டு வரும் தொழிலிலும் ஈடுபட்டார். சொந்தமாய் எண்ணெய்க் கிணறுகள் வாங்கினார். லாரா சாலமன் என்ற
அகவிழி | மே 2014 (-

Page 10
பெண்ணை மணம் முடித்தார். எண்ணை வியாபாரிகளின் பங்குகளைப் பெற்று சம்பாதித்தார். ஸ்டாண்டர்டு ஓயில் நிறுவனமானது நாட்டின் தேவையின் 90 சதவீதத்தை பூர்த்தி செய்தது. 1879 இல் ஸ்டாண்டர்டு ஓயில் நிறுவனச் சொத்துக்களின் மதிப்பு 110 மில்லியன் டொலர்கள்.
• ரயில் பாதை போடுவது, எஃகுப் பொருட்கள் தயாரிப்பது என்பவற்றிலும் முதலீடு செய்தார். 1911இல் அவருடைய அண்டைய சொந்த சொத்துக்களின் மதிப்பு 100கோடி டொலர்கள். சமூக நலனுக்கு நம்பிக்கை நிதியங்கள், நிறுவனங்கள் நிறுவி தருமங்கள் செய்தார். 1890இல் சிக்காகோ பல்கலைக்கழகம் உருவாக்க 35 மில்லியன் டொலர்கள் ஒதுக்கினார்.
கல்விப் பணிகளுக்கு நிதி வழங்கினார். களிவ்லண்ட நகர அபிவிருத்திக்கு நிதி வழங்கினார். 1901 ராக்பெல்லர் மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் ஏற்படுத்த 60 மில்லியன் டொலர்களை நன்கொடையாக வழங்கினார்.1913 இல் ராக்பெல்லர் பவுண்டேஷன் நிறுவப்பட்டது. "பணத்தை சம்பாதியுங்கள் சம்பாதித்த பின் சமூதாயத்திற்கு பயன்படச் செய்யுங்கள்" என்றார். சுயதிறன் மூலம் வெற்றியீட்டிய கோடீஸ்வரர்களில் இவரும் ஒருவர்.
எம்.எஸ். ஓபராய் 1920ம் ஆண்டு ஒரு வேலையும் இல்லாது கையில் காசு இல்லாது அரவணைப்பதற்கு நண்பர்கள் கூட இல்லாது தனித்து நின்ற ஒரு இளைஞன் தான் ஒபராய். குழந்தையாய் இருக்கும் போதே தந்தையை இழந்தவர். தாய் துயரத்தில் சிக்கிய போதும் தன் மகனை தன்னம்பிக்கையுடனும் மனோதிடத்துடனும் உறுதியுடனும் உள்ளவராக வளர்த்தாள். 15 வயதில் கல்வியை நிறுத்திக் கொண்டார் ஒபராய். தந்தை வழி மாமனின் செருப்புக்கடையில் கொஞ்சக் காலம் வேலை பார்த்தார். அந்தக் கால கட்டத்தில் தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்றுக் கொண்டார். பின்பு சிம்லாவில் அரச அலுவலகம் ஒன்றில் எழுதுனராக வேலை தேடிச் சென்றார். அப்போது அவருக்கு திருமணமாகி குழந்தையும் இருந்தது. வேலை கிடைக்கவில்லை. ஏமாற்றம். இப்பொழுது தன் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டியவராயுள்ளார். பின்பு சிசில் ஓட்டல் ஒன்றில் வேலை தேடிச் சென்றார். எந்த வேலையும் செய்யத் தயார் என்று நிருவாகியிடம் மன்றாடினார். ஒபராய் வேலையில் சேர்க்கப்பட்டார். குடும்பம் தங்குவதற்கும் இடம் கிடைத்தது. சிசில் ஓட்டல் “அஸோஸியேட்ட் ஹோட்டல்ஸ் ஒப் இந்தியாவின் " ஓர் அங்கம். வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துவதிலும், செலவுகளைக் குறைப்பதிலும், வருமானத்தை அதி கரிப்பதிலும் பல யோசனைகளை
o அகவிழி மே 2014

நிருவாகத்திற்கு முன் வைத்தார் ஒபராய். சிறிது காலத்தின் பின் தலைமை எழுதுனரானார். 1924இல் க்ளார்க் சகோதரர்கள் சொந்தமாக ஓட்டல் தொடங்க முடிவு செய்து ஒபராயை தங்களது கார்ல்டன் ஓட்டலுக்கு துணை நிருவாகி ஆகினார். தேவையான மாற்றங்களை செய்யும் அதிகாரம் இருந்தது. ஏழு ஆண்டுகளின் பின் க்ளார்க் சகோதரர்கள் சொந்த மண்ணுக்கு திரும்பிய போது ஓபராய் ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்களுக்கு கொடுத்து ஓட்டலை நடத்தினார். பின் ரூபா 10,000 பெறப்பட்டு ஓட்டலில் மூன்றில் ஒரு பங்கை ஒப்ராய் பெயருக்கு மாற்றப்பட்டது. தான் சேமித்த பணத்துடன் நண்பர்களிடம் கடன் பெற்று அந்தப் பங்கை வாங்கினார்
ஒபராய். இப்படி ஒட்டல் உரிமையாளரில் ஒருவரானார்.- பின்னர் கல்கத்தாவில் கிராண்ட் ஓட்டல் மூடப்படும் நிலையில் இருந்ததை பத்திரிகை மூலம் அறிந்தார். 1933இல் கல்கத்தா பிளேக் நோயினால் கதிகலங்கிய காலமது. ஓட்டல் உரிமையாளர்கள் மாதம் 10,000 ரூபா மற்றும் நல்லெண்ண (Good Will) தொகையுடன் ஒப்ராயிடம் நிர்வாகத்தை ஒப்படைத்தனர். பிளேக் நோயின் காரணமாக ஓட்டலின் பெயர் கெட்டதால் ஈட்டுத்தொகை தரவேண்டும் என நிர்வாகத்திடம் கூறினார் ஒப்ராய். கடைசியில் மாதம் 7,000 ரூபா செலுத்துவதாக குத்தகை உரிமை பெற்று 'கிராண்ட் ஒட்டலை' கம்பீரமாக இயங்கச் செய்தார். இரண்டாம் உலக யுத்தத்தின் போது 'கிராண்ட் ஒட்டலில்' 500 சிப்பாய்கள் தங்க வைக்கப்பட்டனர். 1943 இல் 60 இலட்ச ரூபா கொடுத்து ஓட்டலின் ஏகபோக உரிமையாளரானார். "அஸோசியேட்டட் ஓட்டல்ஸ் ஒப் இந்தியாவின் பங்குகளை வாங்கினார். வட இந்தியாவில் 10 ஓட்டல்கள் ஒபராயின் கட்டுப்பாட்டில் இருந்தன. 5 நட்சத்திர ஓட்டல்களை டில்லியில் உருவாக்கினார். சீக்கீரமே சர்வதேச தொழல் அதிபரானார். "ஒப்ராய் இன்டர்காண்டினென்டலை" உருவாக்கினார். 1971 இல் "ஒபராய் இம்பிரியல்" சிங்கப்பூரில் வந்தது. அடுத்து 'மேனா ஹவுஸ் ஒப்ராய்', 'சாஸ்வான் ஒப்ராய் ' என்பன எகிப்தில் உருவாயின. 'ஒபராய் டவர்ஸ்' பம்பாயில் உருவானது. இலங்கை, சவுதி அரேபியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா நாடுகளிலும் ஒப்ராயின் ஓட்டல் சாம்ராஜ்யம் விரிவு பெற்றது. உலகெங்கும் இவரது தொடர் ஓட்டல்கள் காணப்படுகின்றன. சுயதிறன் மூலம் கோடீஸ்வரர் ஆனார்.
தோமஸ் ஹன்ட்மோர்கன் (Thomas Hunt Morgan)
இவர் 1866ம் ஆண்டு செப்டெம்பர் 25ம் திகதி அமெரிக்காவின் கென்டகி மாநிலத்தில் லெக்ஸிங்டன் என்ற ஊரில் பிறந்தார். சிறுபராயத்திலிருந்து இயற்கையில் நாட்டம் கொண்டு கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற இவர் ஜான் ஹாங்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் கலாநிதி

Page 11
பட்டம் பெற்றார். பின்பு பிரின்மாவார் பெண்கள் கல்லூ ரியில் விலங்கியல்துறை பேராசிரியரானார். பின்னர் இவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உயிரியல் துறை பேராசிரியரானர். இவர் சிறிய பழ ஈயை தன் ஆராய்ச்சிக்கு மூலப் பொருளாகப் பயன்படுத்தினார். இதற்கு முல்லர், பிரிட்ஜஸ், ஸ்டாட் இவான்ட் என்போர் துணையாக நின்றனர். இவர்கள் மரபு வழிப் பணியியல்துறை (GENETICS) உருவாக்கக் காரணமாயிருந்தனர்.
மார்கன் பால் நிர்ணயம் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டார். வெண்ணிறக் கண்ணுடைய பழ ஈயையம், மஞ்சள் நிறக்கண்ணுடைய பழ ஈயையும் இணைத்துச் சோதனை செய்தார். குரோமோசம் இடம் மாறுவதற்குரிய மரபு வழிப்பண்பியலின் அடிப்படை விளக்கங்களை எடுத்து இயம்பினார். இதுவே நவீன மரபு வழிப்பண்பியல் துறைக்கு முக்கிய காரணமாயிற்று. மார்கனின் ஆராய்ச்சிகள் "மென்டிலியன் மரபு வழிநடப்பியல்”, என்ற நூலில் இடம்பெறுகின்றன. மார்கன் கரு இயல் துறையிலும் ஆய்வு செய்தார். தவளை முட்டையின் இரண்டு செல் நிலையில் கருமூலப் பொருளைப் பற்றி இவர் ஆராய்ந்தார். இழப்பு மீட்சி (Regeneration) சம்பந்தமாகவும் ஆராய்ந்தார். அடிப்பட்டால், தான் இழப்பு மீட்சி ஏற்படும் என்ற தவறான கருத்தை மாற்றி அடிபடாத நிலையிலும் இழப்பு மீட்சி ஏற்படுவதை சாமியார் நண்டு என்ற ஒரு வகை நண்டின் துணையுடன் ஆராய்ந்தார். மார்கன் ஏராளமான நூல்கள் எழுதினார். 376 ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதினார். அமெரிக்க தேசிய கல்விக்கழகம், அறிவியல் முன்னேற்றச் சங்கம் என்பனவற்றிற்கு தலைவராயிருந்தார். 1933ல் நோபல் பரிசு பெற்றார். இவரது சுயதிறன் காரணமாகக இவர் இவ்வாறு பல சாதனைகளைப் புரிந்தார். 1945ல் சிவ பதமடைந்தார். இவர் மரபு வழி பண்பின் முக்கிய கொள்கையைக் கண்டு பிடித்தவர் எனப் புகழ் பெற்றார். அது மனித இன வரலாற்றில் இன்றும் நிலைத்து நிற்கின்றது.
ரொபர்ட். ஆர். வில்லியம்ஸ்
இவர் இந்தியாவில் 1886ம் ஆண்டு பிறந்தார். இவரது குடும்பம் அமெரிக்காவிலுள்ள கான்சாஸ் நகருக்கு இடம்பெயர்ந்து சென்றது. அங்கு ஒரு விபத்தில் தந்தையார் ஊனமுற்றார். அவரால் வேலை செய்ய முடியாமல் போயிற்று. எனவே வில்லியம்ஸ் வேலை செய்து கொண்டே படித்தார். பின்பு ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் பயின்றார். பின்பு சிக்காக் கோவில் பயின்று பட்டம் பெற்றார். பின்பு பிலிப்பைன்ஸ் தீவுக்கு சென்றார். அங்கு ஆரம்ப பள்ளியில் ஆசிரியரானார். அப்போது பெரிபெரி என்ற நோயின் பாதிப்புப் பற்றி அறிந்தார். கீழைத்தேசத்தில்

அரிசியைத் தீட்டி அதன் சத்துப்பொருளை நீக்கி அரிசியை சாப்பிடுவததால் பெரிபெரி ஏற்படுகிறது. இதை ஒழிக்க மருந்து வகையை காண முயற்சித்தார். அப்போது மீண்டும் அமெரிக்கா சென்றார். பல ஆண்டுகள் முயன்று இறுதியில் "விட்டமின் பி" யைக் கண்டுபிடித்தார் "பெரிபெரி” நோயினால் உயிர்ச்சத்து குறைவு காரணமாக நரம்புத்தளர்ச்சி நோய் அமெரிக்காவில் ஏற்பட்டு பலர் அவதியுற்றனர். இதனை நீக்கிய பெருமை வில்லியம்ஸை சாரும் இவரது சுயதிறன் முயற்சி காரணமாகவே இவர் இன்று பெரிபெரியைப் போக்க உயிர்ச்சத்து "பி" யைக் கண்டு பிடித்து உதவியவராவார். இதனால் தேசிய
அறிவியல் கழகத்தின் அங்கத்தவராக்கப்பட்டார்.
என்வே சுய திறனுடையவர்களாக வேண்டுமாயின் நாம் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும். நேர்மையானவர் உண்மையுடைவராயிருப்பார். மேலும் திறமை உடையவராக அதுவும் சராசரிகளை விட கூடிய திறமை உள்ளவராக இருக்க வேண்டும். சிந்தித்து சரியான முடிவெடுப்பவராக இருக்க வேண்டும். கடின உழைப்பாளியாக இருக்க வேண்டும். மரியாதையுடையவராக இருக்க வேண்டும். சிநேகிதத் தன்மையுடன் பழக்கக் கூடியவராக இருக்க வேண்டும். துணிவுள்ளவராக இருக்க வேண்டும். ஏனையோரை நேசிப்பவராகவும். சேவை செய்பவராகவும் இருக்க வேண்டும். உற்சாகமுள்ளவராக நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை உடையவராக இருக்க வேண்டும். ஏனையோரின் திறமையை இனங்காணக் கூடியவராக, பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். ஒழுங்குபடுத்த திட்டமிட, திட்டங்களை நிறைவேற்றக் கூடியவராக இருக்க வேண்டும். இப்படியானவர்களே சுய திறனுைடையவர்களாக இருப்பர்.
டாம்பீட்டர்ஸ் என்ற நூலாசிரியர் தம்முடைய “A PASSION FOR EXCELLANCE" என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார். "யார் தன்னுடைய சூழலை கூர்ந்து கவனிக்கிறாரோ, தமது பங்களிப்பை நிறுவனத்திற்கு வழங் கத் தேவையான திறமைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறாரோ அவர் தான் எதையும் நேர்த்தியாக செய்யக்கூடியவர். இது தான் விருப்பு வெறுப்பற்ற முகாமையாளரை அல்லது பொறுப்பாளரை அல்லது தலைவரை ஆர்வமும் அர்ப்பணிப்பும் உடையவராக்குகிறது" என்றார். எனவே அனைவரும் செய்தொழிலில் சுய திறனைப் பயன்படுத்த முயல்வோமாக! எமது ஆளுமையை விருத்தி செய்வோமாக! சுய திறனுடன் வீறு நடை போடுவோமாக!
அகவிழி | மே 2014 (0

Page 12
தமிழ்ச் செவ்வியல் இலக்கிய ம நவீனத்துவம்
பேராசிரியர் வீ. அரசு
நமக்கு மிகப்பழமையான ஒரு இலக்கிய மரபு உண்டு. கிரேக்க, லத்தீன், ஜப்பானிய, மொழிகளில் உள்ளதைப் போன்ற மிகப்பழமையான இலக்கிய மரபு நமக்கு இருக்கிறது. இது பெருமை அன்று. ஆனால் மிகச் சாதாரணமான உண்மை. நம் தமிழ்மொழி கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இரட்டை வழக்குத் தன்மையுடன் வழங்கி வருகிறது. நம்முடைய மொழி பேசுவது போல எழுதப்படுவதில்லை. எழுதுவது போலப் பேசப்படுவதில்லை. இதனால் தான் இத்தனை ஆண்டு காலமாகத் தொடர்ச்சியாக வாழ்ந்து வருகிறது. இந்த இரட்டை வழக்குத்தன்மை மொழிக்கு மிக முக்கிய மானதாகும். இப்படியரு பழமையான தன்மை பெற்ற மொழியில் நவீனத்துவ மரபைக் காணவேண்டிய தன்மை இன்று முக்கியத்துவம் பெறுகிறது.
நவீனத்துவம் என்ற சொல் modernism என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. modernism என்பது என்ற modernity சொல்லின் பெயர்ச்சொல் வடிவம். modernity என்பது நேற்றுச் சொன்னதிலிருந்து புதிதாக ஒன்றைச் சொல்வது. சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வது என்ற நிலையிலிருந்து புதிய செய்திகளைப்
8 அகவிழி | மே 2014

ரபு
1 : 111 11:448) +[1/4/சரே:12ாப் 143/4ப4/1ATAN:11:a5:48:41 ப4-1:1-4:413-14»1 Ti=4ாயாடி 4-11-கன்-------
4414) 144 சரிபார்க்:1ாளி
அருகர்-சாதாரர் -
'சி
- புதிய நோக்கில் சொல்வது என்ற அடிப்படையில் நாம் modernity என்ற சொல்லைப் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் இந்தச் சமூகம் அப்படியான இயக்கத்திலேதான் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் உலகில் நிறைய மாற்றங்கள் நிகழ்கின்றன. புதிய புதிய விடயங் களும் நிகழ்வுகளும் நமது கருத்தை மாற்றுகின்றன. இதனால் நமது வாசிப்பின் தன்மையும் மாறுகிறது. இந்தத் தன்மையை modernity என்கிறரெம். தமிழில் சமகாலத் தன்மை (contemporary) என்றும் இதனைப் புரிந்து கொள்ளலாம்.
சமகாலத் தன்மையற்ற பொருள் இருப்பின் அது அருங்காட்சியகத்துக்குத் தான் செல்ல வேண்டும். இலக்கியத்துக்கும் இது பொருந்தும். பல நூறு ஆண்டு களாகப் பேசப்படும் ஒரு இலக்கியமோ (அ) இலக்கணமோ சமகாலத் தன்மையைத் தன்னுள் கொண்டிருந்தால் மட்டுமே அதை நாம் கொண்டாட முடியும். நமது தொல் பழங்கால இலக்கியங்கள் இந்தச் சமகாலத்தன்மையைப் பெற்றிருக்கிறதா? என்று ஆராய வேண்டும்.
ஐரோப்பியர்களுக்கென்று ஒரு முறையான செறிவான வரலாற்று 'மரபு இருக்கிறது. கிரேக்க - எகிப்திய - ரோமானியர்களுக்கென்று பண்டைய விரிவான மிகப்

Page 13
பழமையான இலக்கிய மரபு உண்டு. பிளேட்டோ, அரிஸ்டாடில், பித்தாகோரஸ் போன்ற அறிஞர்கள் கி.முவில் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களது கருத்துகள் லத்தீன் மொழிவழியாகப் பரவியது. கிரேக்க - லத்தீன் மொழிகளில் இருந்தவையே இன்று ஆங்கிலத்தில் வழங்கப்படுகின்றன. இவ்வாறு தான் ஆங்கில மொழி செறிவு பெற்றது. கி.பி 500 வரை ஒரு மரபும், கி.பி 500 முதல் கி.பி 1200 வரை ஒரு மரபும், இருந்தது. அதன் பின் கி.பி 1200க்குப் பிறகு ஐரோப்பாவில் ஏற்பட்ட புதிய கண்டுபிடிப்புகளால் தொழிற்புரட்சி ஏற்பட்டது. இதனால் மிகப்பெரிய சமூக மாற்றம் உருவானது.
ஜேர்மன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் மிகப்பெரிய மக்கள் போராட்டங்கள் எழுந்தன. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் முதலான முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன. கி.பி 13, 14 ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த இந்தப் பிரெஞ்சுப் புரட்சி உலகிற்குப் புதிது. இதனால் ஐரோப்பியர்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்குக் குடி பெயர்ந்தனர். இங்கிலாந்திலிருந்து சென்றவர்கள் அமெரிக்க, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் குடி யேறினர். அங்கு தமது சாம்ராஜ்யங்களை நிறுவி படுத்திக் கொண்டனர். உலகின் பல இடங்களில் இப்படியான அரசியல் - தொழில் புரட்சிகள் நிகழ்ந்தேறிய போது நமது நாட்டில் குறிப்பாக, தமிழகம் என்று சொல்லக் கூடிய இந்த நிலப்பரப்பில் என்ன நிகழ்ந்தது?.
ஐரோப்பியர்கள் கி.பி 16ஆம் நூற்றாண்டு தொடங்கி 20 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை இங்கு ஆதிக்கம் செலுத்தியபோது தங்கள் பல்வேறு அறிவுசார் வளங்களை நமக்கும் கொடுத்தனர். குறிப்பாக அவர்களால் நம் கல்விமுறை பெரும் வளர்ச்சி பெற்றது. பெண்கள், ஒடுக்கப்பட்டவர்கள், ஏழைகள் என்று சகல தரப்பினர்க்கும் கல்வி கிடைத்தது. ஐரோப்பியர்கள் இல்லாவிட்டால் இப்படியொரு வாய்ப்பு நமக்குச் சாத்தியமில்லை.
இப்படியான சூழல்களில் நமது செவ்விலக்கியங் களான சங்க இலக்கியங்கள் மிகச்சிறப்பான நவீனத் தன்மையை உள்வாங்கியுள்ளன. ஈரோடு மாவட்டத்தி லுள்ள கொடுமணல் என்ற ஊர் கி.மு 400, 500களில் மிகச் செழுமையான ஒரு வணிக நகரமாக இருந்திருக் கிறது. கி.மு 1900 இல் ஹரப்பா, மொகஞ்சதாரோ என்ற நாகரிகமரபு தமிழ் நாகரிகத்தின் மூலமரபாக இருந்திருக்கலாம் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். இதுபோன்ற அகழாய்வுகள் நாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு வளமான மொழி பேசிய மக்கள் கூட்டம் என்பது தெளிவாகிறது. இப்படியான பின்புலத்தில் உருவான சங்க இலக்கியங்கள் கி.மு 500 லிருந்து கி.பி 500 வரையான ஏறக்குறைய 483 புலவர் களின் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இவை அக்

காலகட்டத்தில் பல புலவர்களால் - பல இடங்களில் பாடப்பட்டவை. சிதறிக் கிடந்த இப்பாடல்கள் கி.பி 6ஆம் நூற்றாண்டு அளவில் தொகுக்கப்படுகின்றன. இந்தத் தொகுப்புப் பணியில் கி.பி.6 இல் கிரேக்க, லத்தீன் மொழிகளில் செயல்பட்டதைப் போல் தமிழிலும் புலமையாளர் கூட்டம் ஈடுபட்டது. இவர்கள் அந்தக் குறிப்பிட்ட காலத்தில் சமகாலத்தன்மை உடையவர் களாவர் (modernities). நவீன கால பிரக்ஞை உடையவர் களாக அப்போதே இருந்திருக்கின்றனர். தொகுப்பு மரபில் இந்தப் புலமையாளர்கள் மிகுந்த சிரமங்களுக்கிடையில் பாட்டும் தொகையும் எனப்படும் இந்த இலக்கியங்களைத் தொகுத்தனர். அவர்கள் தொகுத்த பாடல்களுக்குக் கீழே திணை, துறை, பண், பாடியவன், பாடப்பட்டவன் முதலான குறிப்புகளைத் தந்து தொகுத்ததை நாம் மிக முக்கியமான நவீனத் தன்மை யாகக் கருத முடியும். பழையது என்றும், உதவாது என்றும் அவர்கள் நம் பழைமை இலக்கியங்களைக் கருத வில்லை.
Oா1ெ
- நமது அரிய இலக்கணச் செல்வமான தொல்காப்பியம் இந்தத் தொகுப்பு மரபைப் புரிந்துகொள்ளப் பெரிதும் பயன்படுகிறது. அது குறிப்பிடும் முதல், கரு, உரிப் பொருள்களெல்லாம் வெறும் வார்த்தைகளன்று. அவை மனித உணர்வுகள். ஆனால் நமக்குக் கற்பித்தவர்கள் அதை மனப்பாடம் செய்யும் வார்த்தைகளாகக் கட்டமைத்துவிட்டனர். இரண்டு விஷயங்களை நாம் யதார்த்தமாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஒன்று மனிதன். இன்னொன்று அவனைச் சுற்றியுள்ள சூழல். இந்த இரண்டுக்குமான உறவே உலகம். இதற்குக் காரணம் மறு உற்பத்தி. ஆனால் இதனை மனிதன் சாதாரணமாக நிகழ்த்துவதில்லை. அதைக் கொண்டாடுகிறான். இந்தக் கொண்டாட்டமே சடங்கு. அதாவது திருமணம். இந்தத் தன்மையைத்தான் புலவர்கள் தன்னுணர்ச்சிக் கவிதைகளாக வெளிப்படுத்துகின்றனர். இது அகம் என்று குறிக்கப்படுகிறது. எனவே சங்கப் பாக்கள் அனைத்தும் தன்னுணர்ச்சிக் கவிதைகளாகும். அதே போல் சங்கப்பாடல்கள் மட்டுமல்ல, உலகின் எல்லா செந்நெறி மொழிகளிலும் உருவான எல்லாப் பாடல்களும் தன்னுணர்ச்சிப் பாடல்களே. தன்னுணர்ச்சி என்பது ஒரு மனிதன் தன் சக தோழியோடு (அ) தோழனோடு உறவாடக் கூடிய ஒரு தன்மையாகும். இது எல்லோரிடமும் உள்ள ஓர் அடிப்படையான பண்பு தான். இந்தப் பண்பைத்தான் இலக்கியங்கள் தன்னுணர்ச்சிப் பாக்களாகக் கொண்டுள்ளன. யாப்பு வடிவத்தில் பாடப்படும்போது இது அகவற்பா என்று அழைக்கப்படுகிறது. இவை சமகாலத்தன்மையுடையனவாக உள்ளன. காரணம் ஆண் - பெண் அகவுணர்வை வெளிப்படுத்தும் பாங்கு - அதன் புற வடிவம் முதலியன மாறும். ஆனால் உறவு - உணர்வு ஆகியவை மாறாது.
அகவிழி | மே 2014 (-
1ெ Iாக, 4 (1.5)கt/
1ெ * * ப ர்?s த ம்,

Page 14
கி.பி 7ஆம் நூற்றாண்டு தொடங்கி எழுதப்பட்ட தேவார - திருவாசகப் பாடல்களில் என்னால் ஈடுபட முடியாது. அதில் ஒரு பக்திமான் தான் ஈடுபடமுடியும். ஆனால் சங்கப் பிரதிகள் அப்படியல்ல. காரணம் அவை நவீனத்தன்மையை உள்வாங்கியுள்ளன . சமயச் சார்பற்ற - மனித உறவை முதன்மைப்படுத்துகின்ற இலக்கியங் களாக உருப்பெறுகின்றன. இந்தத் தன்மையை நாம் செவ்வியல் இலக்கியத்துக்கான முக்கிய பண்பாகக் கூறமுடியும். இன்றேல் அது செவ்வியல் இலக்கியம் அல்ல. இந்தச் செவ்விலக்கியம் 5ஆம் நூற்றாண்டு வரை அக்காலத்திய இலக்கியமாகவே வாசிக்கப்பட்டது. ஆனால் 6ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு அதன் வாசிப்புமுறை மாறுகிறது. கி.பி 6 - 9 ஆம் நூற்றாண்டு களில் அதாவது பிற்காலப் பாண்டியர்கள் இவற்றைத் தொகுத்ததாகக் கூறுவர். இந்தக் காலகட்டம் மிக அதிகமான பக்தி இலக்கிய உருவாக்க மரபைக் கொண்ட காலமாகும். ஒருபுறம் கடவுள், துதி, வழிபாடு, கோயில் உருவாக்கம் என்றிருந்த போதிலும் மறுபுறம் ஓர் அறிவாளிக் கூட்டம் இந்தத் தொகுப்புப் பணியில் ஈடுபட்டது. இதனையொட்டி நிகண்டுகள், பாட்டியல் நூல்கள், ஆகம நூல்கள்
முதலியன பெருமளவில் உருவாக்கப்பட்டன.
இலக்கணத் துறையில் நன்னூல் மரபு உருவானது. தொல்காப்பியத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட இந்த மரபு 11ஆம் நூற்றாண்டில் வீரசோழியம் தொடங்கி 17ஆம் நூற்றாண்டின் இலக்கணக் கொத்து வரை ஒரு புதிய இலக்கண மரபாக உருவாகிறது. இந்தக் கால கட்டத்தில் உருவான புதிய அறிவாளிக் கூட்டத்தை நாம் உரையாசிரியர்கள் என்கிறோம். தொகுப்பாசிரியர்கள் சங்கப் பிரதிகளுக்குக் குறிப்புகளைக் கொடுத்து அதை நவீனத் தன்மையுடையதாக மாற்றினார் களோ அதேபோல் உரையாசிரியர்களும் உரையில் குறிப்புகளைக் கொடுத்து இலக்கண மரபை நவீனப் படுத்தினார்கள். இவர்களில் நச்சினார்க்கினியரும் பரிமேலழகரும் முக்கியமான ஆளுமைகள் இவர்கள் தமிழ் மொழி அளவிற்குச் சமஸ்கிருதத்திலும் புலமை பெற்றவர்கள். இந்தப் புலமையாளர்கள் சங்கப் பாடல்களைத் தம் குறிப்புகளையும்
அறிவாழத்தையும் கொண்டு நவீனப்படுத்தினார்கள்.
நமக்கு அறம், பொருள், இன்பம் என்ற முப் பொருள்களைத் தான் திருக்குறள் வலியுறுத்துகிறது. அதுவே நம் மரபு. ஆனால் சமஸ்கிருதம் நுழைந்த பின்பு வீடுபேறு என்ற புதிதான மரபு வருகிறது.
இதனை உரையாசிரியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பாடியவர்கள் கூறிய மரபிலிருந்து - தொகுத்தவர் கூறிய மரபிலிருந்து புதிய மரபை உரையாசிரியர்கள் நமக்கு அறிமுகப்படுத்துகின்றனர். குறிப்பாக நச்சினார்க்கினியர் உரையின் எடுகோள் பாங்கு, சங்கப்பிரதிகளை அக் காலத்திய மிக நவீனமாகக் காட்டுகின்றன.
S) அகவிழி | மே 2014

கி.பி 16 - 19 வரையான காலகட்டம் சங்கப் பிரதிகளுக்கு வளமான காலகட்டமாக அமையவில்லை. 17ஆம் நூற்றாண்டில் எழுந்த இலக்கணக் கொத்து எழுதிய சுவாமிநாத தேசிகர் ஒரு சைவப்பற்றாளர். சைவ சமயம் 12 ஆம் நூற்றாண்டு முதல் மிகத் தீவிரமாக இருந்து வந்தது. சிவஞான முனிவர் உள்ளிட்ட சைவப்பெரியார்கள் சங்க இலக்கியங்களை சமண - பௌத்த இலக்கியங்களாகப் பார்த்தார்கள். அவர்களின் சமயக் காழ்ப்புணர்வு காரணமாகத் திருக்குறள், சிலப்பதி காரம் முதலியவற்றரெடு சங்க இலக்கியங்களையும் புறக்கணித்தனர். இலக்கணக் கொத்தின் ஆசிரியர் சுவாமிநாத தேசிகர் தம் நூலின் முன்னுரையில் சைவர் களெல்லாம் திருக்குறள், சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் போன்ற மோசமான இலக்கியங்களைப் படித்துக் கெட்டுப்போகிறார்கள் என்ற பொருளில் குறிப்பிடுகிறார்.
பாட்டு மரபு , தொகுப்பு மரபு, உரை மரபிலிருந்து சைவமரபாளர்கள் இவ்வாறு மாறுபடக் காரணம் என்ன? நமது பழைய மரபு என்பது சமயச் சார்பற்றது. இயற்கை மரபு, மனித உறவைப் பேசுவது. இதனைப் பின்னர் வந்த வைதீக மரபு உடைத்தது. இம்மரபில் உருவானவையே சைவ - வைணவ சமயங்கள். இந்தச் சமயங்களுக்கு அடிமைப்பட்ட நாம் மனித உறவை முதன்மைப் படுத்திய சார்பற்ற இலக்கிய மரபை (secular literature) இழந்தோம். இதற்குச் சைவர்களும் முக்கிய காரணமாக விளங்கினர். இது 19 ஆம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை தொடர்ந்தது.
இதனை இன்னொரு ஆளுமை மூலமும் நாம் விளங்கிக் கொள்ள முடியும். நமக்கு நன்கு அறிமுகமான சைவப் பெரியவர் ஆறுமுக நாவலர். இலங்கையிலும் தமிழகத்திலும் கிறித்தவர்களுக்கு இணையாகப் பள்ளிக் கூடங்களை நிறுவியவர். அவரது நூலகத்தில் சங்க இலக்கியம் உள்ளிட்ட பலவகையான சுவடிகள் இருந்தன. ஆனால் அவர் பிற சங்க இலக்கியங்களைப் பதிப்பிக்காமல் 1851 - இல் திருமுருகாற்றுப்படையைப் பதிப்பித்தார். அவர் சங்க இலக்கியங்களைப் பதிப்பித் திருந்தால் தமிழ்த்தாத்தா வந்திருக்க மாட்டார். உ.வே. சாவுக்கு அந்தப் பெயர் ஏற்பட ஆறுமுகநாவலர் பெரும் பங்காற்றியிருக்கிறார். காரணம் அவரது சைவப்பற்று. இந்தப் பற்றால் சைவர்கள் சங்க இலக்கியத்தைப் பதிப்பிக்கவில்லை.
கி.பி 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் அச்சு இயந்திரத்தின் வளர்ச்சியால் கிறித்தவர்கள் ஏராளமான நூல்களைப் பதிப்பித்தார்கள். குறிப்பாக சமண - பௌத்த சமயங்களைத் தூக்கிப் பிடித்து சைவத்தை ஓரம் கட்ட முயற்சித்தனர். இதனால் திருக்குறளை உலகின் பல மொழிகளில் மொழிபெயர்த்தனர். சீவகசிந்தா மணியைப்

Page 15
பதிப்பித்தனர். காரணம் அது சமண நூல். கிறித்தவ - சைவ சமயங்களுக்கான இந்த எதிர்மறைச் சூழலில் சி.வை.தா.வும், உ.வே.சா.வும் இதிலிருந்து விலகி ஆக்க பூர்வமான வேலையைச் செய்தனர். இருவரும் சைவப் பற்றாளர்கள் என்ற போதிலும் சமயக் காழ்ப்புணர்வைக் கைக்கொள்ளவில்லை. சி.வை.தா முதலில் பதிப்பித்தது வீரசோழியம் என்னும் பௌத்த நூல். உ.வே.சா முதலில் பதிப்பித்தது சீவக சிந்தாமணி என்னும் சமண நூல். இந்தப் புலமையாளர்கள் இருவரும் நவீனப் பிரக்ஞை உடையவர்களாக இருந்தனர். குறிப்பாக உ.வே.சா - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடம் பெற்ற பயிற்சியும் தியாகராச செட்டியாரிடம் பெற்ற புலமையும் இதற்கு அடிப்படையாக அமைந்தன. அக்காலத்தில் மடங்களைச் சேர்ந்தவர்கள் அவருக்கு உதவினர்.
அவர் தம் கல்வியில் நவீன சிந்தனையைப் போதித்த ஆசிரியராக விளங்கினார். இந்தப் பழமை இலக்கிய மரபு அழிந்து போகக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். இவ்வாறாகவே உ.வே.சா ஒரு நவீன சிந்தனைவாதியாக (modern intellectual) விளங்கினார். இதற்காகத் தன் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்தார். இதனாலேயே அழிந்து போகவிருந்த நமது பிரதிகள் அச்சாக்கம் பெற்றன.
ஆங்கிலேயர் வருகையால் உருவான மற்றரு துறை தொல்லியல் துறையாகும். இத்துறையின் மூலம் கண்டறியப்பட்ட பல உண்மைகள் முக்கியத்துவம் பெற்றவை. ஆதிச்சநல்லூரில் சிந்துச் சமவெளி நாகரிகம் கூறுகளும், கொடுமணலில் சங்ககாலக் கூறுகளும் உறையூர், புகார், வஞ்சி முதலிய நகரங்கள் பற்றிய உண்மைகளும் ஆராய்ச்சிகளும் நம் பழம்பிரதிகளை நவீனமாகப் புரிந்துகொள்ள உதவின. நவீன உணர்வு களைக் கொடுத்தன.
நமது மரபில் ஏறத்தாழ 2500 ஆண்டுகளாக சமசுகிருத - தமிழ் முரண் என்பது இயல்பானது. சிலப்பதிகாரத்திற்குப் பிறகு தமிழில் ஏன் நேரடிக் காவியங்கள் எழுதப்படவில்லை? அதற்குப் பிறகு பெருங்கதை, சூளாமணி, நீலகேசி என்று தழுவல்களே வந்தன. இதற்குக் காரணம் வைதீக மரபுதான். திருவிளையாடற் புராணம், கந்த புராணம், பெரிய புராணம், போன்ற புராணமரபு ஏன் இன்று தொடர்ந்து எழுதப்படுவதில்லை. காரணம் அவை இறந்து போன வடிவங்களாகிவிட்டன. இன்று நாவல் தான் எழுத முடியும். இப்படியான நவீன தன்மையில் ஆழமாகச் செல்லும்போது மொழிகள் பற்றிய ஆய்வு விரிவாக நடைபெறுகிறது. உலக மொழிக் குடும்பங்களில் தமிழின் தனித்தன்மை ஆராயப்படுகிறது. அந்தத் தனித்தன்மைக்கும் செவ்விலக்கியத்துக்குமான உறவு ஆராயப்படுகிறது.

தொல்லியல் ஆய்வுகளில் பல குறியீறிடுகளும், எழுத்து வடிவங்களும் கண்டறியப்படுகின்றன. குறிப்பாக பிராமி எழுத்து வடிவம் தமிழின் மூல வடிவமாகக் கருதப்பட்டது. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நமது தொல் எழுத்தியல் மரபு பற்றிய வாதங்கள் மேலெடுக்கப் பட்டன. தமிழ்நாட்டில் 120-க்கும் மேற்பட்ட இடங்களில் பிராமிக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. அதன் படிநிலைகள் அறியப்பட்டன. இதனால் நமது தொல் எழுத்தியல் மரபு வளமாக இருந்ததை அறியமுடிகிறது. , மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை எழுதிய ஆரியம் போல் உலக வழக்கழிந்தொழிந்து என்ற வரி நாம் பாடும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலில் நீக்கப்பட்டுள்ளது. மனோன்மணீயம் எழுதிய வரி எப்படி நீக்கப்பட்டது? அந்த உரிமையை யார் கொடுத்தது. நமது தேசிய இயக்கங்கள் தான் இதனைச் செய்தன. தமிழை முதன்மைப்படுத்திய இயக்கங்கள் சங்கப் பிரதிகளைப் புதிதாக வாசிக்கத் தொடங்கின. அது அவர்களது நவீன மரபாகப் பார்க்கப்பட்டது.
- பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை தனது அகராதியியல் புலமையடிப்படையில் சங்க இலக்கியங்களைப் பதிப்பித்து புதியதொரு மரியாதையை அந்தப் பிரதிகளுக்கு ஏற்படுத்தித் தந்தார். இந்த முறை சங்க இலக்கியத்தை மேலும் புதியதாக வாசிக்க உதவிற்று. தொடர்ந்து தனிநாயகம் அடிகள், கைலாசபதி, சிவத்தம்பி போன்றவர்கள் புதிய திறவுகோல்களின் அடிப்படையில் அந்தப் பிரதிகளை வாசித்தனர். குறிப்பாக கிரேக்க வீரமரபோடு - தமிழில் புறநானூற்று மரபை இணைத்துப் பேராசிரியர் கைலாசபதி ஆய்வு நிகழ்த்தினார். சிவத்தம்பியும் கிரேக்க - லத்தீன் மரபோடு தமிழ்மரபை இணைத்துப் பார்த்தார். இவ்வாறாக சங்க இலக்கியங்கள், புராணம் - பக்தி போலல்லாமல் தனித் தன்மை வாய்ந்த செவ்விலக்கியப் பிரதிகளாக மாறின. அவற்றின் சமகாலத் தன்மையை நாம் வாசிக்கும் போது புரிந்து கொள்ள முடியும்.
இதனை ஒரு விடயத்தின் மூலம் புரிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறோம். தொகுப்பு மரபில் தொகுப்பாசிரியர்கள் சில வேலைகளைச் செய்கின்றனர். பிற்காலத்தில் இப்பணி நடைபெறுவதால் கடவுள் வாழ்த்துப் பாடலொன்றைச் சேர்த்து விடுகிறார்கள். இதனைத் தவறு என்று வாதிட முடியாது. இந்தத் தன்மையின் உச்சமாகப் பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப் படையைச் சேர்க்கின்றனர். நக்கீரநாயனார் எழுதிய 11 ஆம் திருமுறையில் உள்ள ஒரு பாடல் திருமுருகாற்றுப் படைப் பாடலாகும். எப்படி ஒரு பக்திசார் தொகுப்பு, சார்பற்ற தன்மை கொண்ட சங்கப்பிரதிக்குள் வந்தது. இதற்குக் காரணம் தொகுத்தவர்களின் கைங்கரியம். அவர்களைக் குறை 5 சொல்ல இயலாது. காரணம் அவர்களின் படிப்புமுறை . அப்படிப்பட்டது. ஆனால் மிகப்பெரிய விழிப்புணர்வும்,
அகவிழி | மே 2014 (?

Page 16
வரலாற்றுப் பிரக்ஞையும் உள்ள காலகட்டத்தில் வாழ்கின்ற நாமோ நற்றிணை, குறுந்தொகையோடு திருமுருகாற்றுப் படையையும் ஒரே தளத்தில் வைத்து வாசிக்கிறோம். இது மிகப் பெரிய சிக்கல். சங்கப் பிரதிகளை நாம் தவறாகப் புரிந்து கொண்டோம் என்பதற்கு இதுவே சான்று.
பரிபாடல் முருகன், திருமுருகாற்றுப்படை முருகன் போன்றரெர் தேவார - திருவாசக மரபின் ஊடாக உருவானவர்கள். திருவிளையாடற் புராணம் மற்றும் கந்தபுராண மரபின் ஊடாக உருவானவர்கள். ஆனால் செவ்விலக்கிய மரபில் புராணீகத்திற்கு இடமில்லை. ஆனால் இந்தச் சூழ்நிலைக்கு முக்கிய காரணம் நமக்கு ஏற்பட்ட வைதீக - சமசுகிருத தாக்கம். இவற்றால் நன்மை நடந்தாலும் மிக மோசமான தீமைகளே அதிகம். காரணம் வைதீக மரபில் உருவான வேதங்கள், பாரதக்கதை, பெரிய புராணம் உள்ளிட்டவை புராணீக மரபைச் சார்ந்தவை. இயற்கையைப் பேசும் மரபல்ல. இம்மரபில் வந்த திருமுருகாற்றுப்படை சங்கப் பிரதிகளின் செவ்விலக்கிய மரபிற்கு எதிரானது. ஆகவே அதனைத் தனித்து வாசிக்க வேண்டும். இதனை எனது சங்க நூல்களின் காலம் என்ற குறுநூலில் குறிப்பிட்டுள்ளேன். கலித்தொகையை ஆராய்ந்த ஐரோப்பியர்கள் அதனை 9ஆம் நூற்றாண்டு என்கின்றனர். எனவே சங்கப் பிரதிகளின் வைப்பு முறையைக் கூறும்போது நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு என்பதை முதல் வைப்பு முறையாகவும், பத்துப்பாட்டில் மலைபடு கடாம், பெரும்பாணாற்றுப்படை இரண்டையும் ஒரு பிரிவாகவும் முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, நெடு நல்வாடை இவற்றை இரண்டாம் பிரிவாகவும் மூன்றாவது பிரிவில் பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை.
இறுதியில் மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை முதலிய வற்றையும் வைத்துப் படிக்க வேண்டும். ஏனென்றால் மதுரைக்காஞ்சியும், பட்டினப்பாலையும் சிலப்பதிகாரத்தின் முன்வடிவம். இவற்றைச் சிலம்பின் புகார், மதுரைக் காண்டப் பகுதிகளின் முன்வடிவங்களாகப் பார்க்கமுடியும். இதற்கு ஒரு தர்க்கரீதியான காரணம் உண்டு. உலகச் செவ்விலக்கியங்களில் தன்னுணர்ச்சிப் பாடல்கள் முதன்மையாகவும் அதனைத் தொடர்ந்த நீண்ட செய்யுள் மரபு காவியங்களாகவும் இருக்கின்றன. இந்தப் பின்புலத்தில் தான் மதுரைக்காஞ்சியையும், பட்டினப்பாலையையும் நாம் வாசிக்க வேண்டும். ஆனால் இதனை நமது ஆராய்ச்சியாளர்களும், ஆசிரியர்களும் முறையாகப் பின்பற்றுவதில்லை. இதனால் செவ்விலக்கியங்களில் சமகாலத் தன்மை அழிந்துபோய் புராணீகத் தன்மையை அடைவதற்கான ஆபத்தும் நிகழ்கின்றது. இதனைச் சுயமரியாதை இயக்கக்காரர்களும் செய்கின்றனர். வையாபுரிப்பிள்ளை இவற்றின் காலத்தை, கி.பி. 10 என்று கூறியதால் தமிழ்த் துரோகி என்று பாவாணர் போன்ற
+ அகவிழி மே 2014

வர்களால் வசைபாடப்பட்டார். இவ்வாறு தர்க்கப்பூர்வமாகச் சிந்திப்பவர்கள் சமூகத்திலிருந்து அந்நியப்பட்டுப்போவார்கள் என்பது நியதி.
ஆகவே இனிவரும் ஆய்வாளர்கள் சங்கப் பிரதிகளை இந்த நோக்கில் ஆராய்ந்தால் மட்டுமே அவை. நவீனத்தன்மை கொண்ட பிரதிகளாக இருக்கும். நான் முன்னர் குறிப்பிட்டது போல நவீனத்துவம் என்பது புதிய பிரக்ஞையை உருவாக்குவது. தற்காலத்தில் எழுதப் படும் நவீன இலக்கியக் கோட்பாடுகள் (moderntheories) இதன் தொடர்ச்சியாகவே உருப்பெறுகின்றன. சசூர், லெவிஸ்டிராஸ், போன்ற அறிஞர்கள் இந்தக் கோட்பாடு களைக் கட்டமைக்கின்றனர். புதிய கோட்பாடுகள் உருவாக்கப்படுகின்றன. எனவே நவீனத்துவம் என்பது ஒரு வரலாற்றுச் சொல். நமது செவ்விலக்கியம் ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்தத் தன்மையை உள்வாங்கியே வந்துள்ளது. நற்றிணை, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, முதலியவற்றைத் தொடக்க காலத்தில் பதிப்பித்தவர் அடிக்குறிப்புக்களைக் கொடுக்கவில்லை. பிற்காலத்தில் பின்னத்தூர் நாராயணசாமி ஐயங்கார் போன்றவர்கள்
இந்த வேலையைச் செய்கின்றனர்.
இதனை நான் நேரடியாகச் சொல்லவேண்டுமானால் நம் பழம்பிரதிகள் என்பவை முக்கியமான வரலாற்றுத் தரவுகளை உள்ளடக்கிய ஆவணம். தமிழ் இனத்தின் நெடிய வரலாற்றுப் பதிவு. இந்தப் பிரதிகளைத் தற்போதுள்ள நீங்கள் எப்படிப் புரிந்துகொள்ள வேண்டுமெனில் அந்தப் பிரதிகளை நான் முன்னர் குறிப்பிட்டது போல வகை பிரித்து வாசித்தால் பல அரிய வரலாற்று உண்மைகளைக் கண்டறிய முடியும். எடுத்துக்காட்டாக வெறியாட்டு என்ற நிகழ்வு நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூற்றில் அதிகமாகப் பதிவு பெற்றுள்ளன. ஆனால் பிற்காலப் பிரதிகளான திருமுருகாற்றுப்படை, கலித்தொகையில் வெறியாட்டு குறித்த செய்திகள் அவ்வளவாக இல்லை. காரணம் முன்னைய நற்றிணை, குறுந்தொகைப் பிரதிகள் தொல்குடிமரபை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் பிற்காலத்தில் கலித்தொகை, திருமுருகாற்றுப் படை, போன்றவை வைதீக மரபின் தாக்கத்திற்கு உள்ளாகின்றன. ஆகவே இவற்றைத் தொல்லியல், மானுடவியல், மொழியியல் போன்ற கண்ணோட்டங்களில் வைத்து நோக்க வேண்டும். அவற்றைச் சமூக வரலாற்றுப் பிரதிகளாக வாசிக்க வேண்டும். அப்படியான வாசிப்பில் அதன் சமகாலத்தன்மை உயிரோட்டமுள்ளதாக மாறும். இதுவே செவ்விலக்கியத்தின் அடிப்படைத்தன்மையாகும். செவ்விலக்கியத்தை நவீனத்துவ மரபில் இவ்வாறுதான் புரிந்துகொள்ள வேண்டும் -

Page 17
ஆறுமுகம் என்னும் அதிசயமான
கோணாமலை கோணேசபிள்ளை B.ED, 1st Class Hons.; M.A.; M.Sc.; Ed.D, Ph.D.,
விரைவாகவே கணிதச் செயல்களில் சாதனை படைத்தவர் களைப் பற்றியும் தற்போதுள்ள சாதனையாளர்களைப்பற்றியும் அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்ரீபன் ஸிமித் 1983 ஆம் ஆண்டு “த கிறேற் மென்ரல் கல்குலேற்ரஅஸ்"' (The Great Mental Calculators) என்ற நூலை எழுதி வெளியிட்டார். இந்த நூல் சர்வதேச மட்டத்தில் பெரும் செல்வாக்கைப் பெற்றது. இந்த நூலில் பல ஐரோப்பியர்கள் இடம்பெற்றாலும் இந்தியாவைச் சேர்ந்த ராமானுஜமும் சகுந்தலா தேவியும் இலங்கையரான ஆறுமுகமும் இடம்பெறுகிறார்கள். ராமானுஜத்தைப் பற்றியும் சகுந்தலாதேவியைப் பற்றியும் விபரங்களைத் தந்துள்ள பேராசிரியர், ஆறுமுகத்தைப் பற்றிய வரிவான விபரங்கள் சரியாகத் தெரியவில்லை என்றும் இவ்விபரங்கள் ஆவணப்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை என்றும் கூறுகிறார்.
இவரது கருத்துப்படி விரைவான கணிதச் செயல்களில் சாதனை படைத்தவர்களை இரு வகையானவர்களாக பாகுபடுத்தலாம். ஒரு தொகுதியினர் பார்வையால் எண்களை உணர்பவர்கள். மற்றைய தொகுதியினர் கேட்டலால் எண்களை உணர்பவர்கள். ஆறுமுகம் கேட்டல் மூலம் எண்களை உணர்ந்துள்ளார் ஆனால் சகுந்தலா தேவி பார்வையால் எண்களை உணர்ந்துள்ளார்.
கிடைத்த விபரங்களின்படி ஆறுமுகம் ஒரு ஏழை. பெரும்பாலும் பிச்சை எடுத்துத்தான் வாழத் தொடங்கினார். ஒரு நாள் முக்கிய கோயில் திருவிழாவொன்றுக்கு வழிபடுவதற்காகவும் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் தருமம் வாங்குவதற்காகவும் சென்றிருந்தாராம். அப்போது அவருக்கு வயது 12. அவர் 1896 இல் பிறந்தவர். திருவிழா முடிந்தவுடன் வீட்டுக்குச் செல்லாது கோயில் வீதியிலேயே படுத்து நித்திரையில் ஆழ்ந்து விட்டாராம். அப்போது ஆச்சரியமான நிகழ்வு ஒன்று நிகழ்ந்தது. ஆறுமுகத்தின் ஆழ்ந்த உறக்கத்தில் கனவிலே காவி உடை அணிந்த ஒரு துறவி தோன்றி "ஆறுமுகம் நாக்கை நீட்டு" என்றாராம். நாக்கை நீட்டியவுடன் நாக்கில் ஏதோ எழுதிவிட்டு "ஆறுமுகம் உனக்கு எல்லாம் தெரியும் எழும்பி போ" என்று துறவி கூறிவிட்டுச் சென்றுவிட்டாராம். ஆறுமுகம் நித்திரை நீங்கி எழும்பிப் பார்த்தபோது அதிசயமான உணர்வு தென்பட்டதாம்.

ணிதச் சாதனையாளர்
பல விடயங்கள் தனக்குத் தெரியும் என்ற எண்ணம் ஏற்பட்டதாம். கோயிலில் வீதியில் இருந்து (இது மண்டூர் முருகன் கோயில் என்று ஊகம். ஆனால் இன்னும் ஆதாரம் கிடைக்கவில்லை) புறப்பட்டு தனது வீட்டுக்குச் சென்றபின் பிறரிடம் போய் தருமம் கேட்பதை விடுத்து கடைகளுக்குச் சென்று அக்கடைகளின் வரவு செலவுக் கணக்குகளைப் பதிவு செய்வதற்கு உதவினால் என்ன என்ற ஆபூர்வமான எண்ணம் தோன்றியதாம். அதன்படி கடைகளுக்குச் சென்று கணக்குகளைக் கூட்டி பதியும் பணியில் ஈடுபட்டாராம். இந்தப் பணியில் மிகவும் சுறுசுறுப்பாகவும் குறைந்த நேரத்திலும் திருப்திகரமான வகையிலும் வெற்றியீட்டியதனால் அவரது புகழ் பரவியதாம்.
இவருடைய அபூர்வ திறமையை கேள்வியுற்ற றோயல் எஸியாற்றிக் சொசையிற்றி (Royal Asiatic Society) 1912 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி கொழும்பில் நடைபெற்ற இச்சங்கத்தின் மாதாந்தக் கூட்டத்துக்கு இவரை அழைத்து இவரது திறமையை உறுதி செய்ய முயன்றது. அப்போது ஆறுமுகத்துக்கு 16 வயது. இந்தச் சங்கம் ஆங்கிலத்தலே தனது செயல்களை நடத்தியது. அப்போது இலங்கையில் ஆங்கிலேயரின் ஆட்சி நடைபெற்றது. இலங்கையின் கொலோனியல் காரியதரிசியாகிய உயர் பதவியை (Colonial Secretary) வகித்த சேர் கியு கிளிபர்ட் (Sir Hugh Cliford) என்னும் ஆங்கிலேயர் இச்சங்கத்தின் தலைவராக இருந்தார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க ஆறுமுகத்துக்கு இச் சந்தர்ப்பத்தில் கொடுக்க வேண்டிய வினாக்களைக் கல்வித்திணைக்களம் ஆங்கிலத்தில் தயாரித்தது. ஆறுமுகத்துக்கு தமிழ் மாத்திரமே தெரியும். எனவே ஆங்கிலத்தில் தயாரிக்கப்பெற்ற வினாக்களை ஆறுமுகத்துக்கு தமிழில் மொழிபெயர்த்து விளக்குவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டது.
அவருக்குக் கொடுக்கப்பெற்ற வினாக்கள் சில பின்வருமாறு:
8,596,497,713,826 ஐயும் 96,268,593 ஐயும் கூட்டுக ஓ 46,989 ஐயும் 864,726 ஐயும் பெருக்குக. 28, 413 க்கு காரணி காண்க 89,712 க்கு காரணி காண்க
அகவிழி | மே 2014 (2)
பொதுஷன் (K, கச்
LLSால் திட்ட உலகம்

Page 18
ஒரு தங்கப் பவுணின் விட்டம் எட்டில் ஏழு அங்குலமாக இருந்தால் லண்டனில் (London) இருந்து லிவப்பூளுக்கு (Liverpool) இடையில் உள்ள தூரத்தை நாணயங்களை ஒன்றின் பின் ஒன்றாக வைத்து நிரப்ப எத்தனை நாணயங்கள் தேவையாகும்? (இடைத் தூரம் 196 மைல்கள்)
ஒரு அங்குல உயரத்துக்கு ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்க 17 நாணயங்கள் தேவை எனின் 3451 அடி உயரத்துக்கு அடுக்க எத்தனை நாணயங்கள் தேவை?
ஒருவர் 22 பொருள்களை தான் 36 பொருள்களை வாங்கிய விலைக்கு விற்றால் அவர் அடையும் ஆதாயம் எத்தனை நூற்றுவீதம்?
63,409,369 இன் வர்க்க மூலத்தைக் காண்க.
ஒரு சக்கரத்தின் விட்டம் 3% யார் எனின் 26 மைல் தூரத்தை சென்று அடைவதற்கு சக்கரம் எத்தனை முறை சுழலல் வேண்டும்?
ஒரு தொகைப் பணம் சாதாரண வட்டிக்குக் கொடுக்கப்பெற்றால் 30 வருடங்களில் வட்டியும் முதலும் முதலைப்போல் இரட்டிப்பாகுவதற்கு வட்டி வீதம் என்ன?
20,570,824 இன் கன மூலத்தைக் காண்க.
ஒரு நீர்த் தொட்டியின் நீளம் 18 அடி 9 அங். அகலம் 13 அடி 4 அங். அதில் 2 அங். நீர் இருந்தால் அந்த நீரின் நிறை என்ன? (ஒரு கன அடி நீரின் நிறை 62 % இறாத்தலாகும்)
69,343,957 இனது 5 ஆவது மூலத்தைக் காண்க.
சதுர வடிவான காணியொன்றில் எல்லையோடு சுற்றி உட்பக்கமாக 11 யார் அகலத்தில் பயிர்கள் நடப் பெற்றுள்ளன. பயிரிடப்பட்ட காணியின் பரப்பு ஓர் ஏக்கர் எனின் காணியின் மொத்தப்பரப்பு என்ன?
இந்தக் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் ஆறுமுகம் சில செக்கன்களில் விடைகூறி சபையில் இருந்தவர்களை ஆச்சரியத்தில் பிரமிக்கச் செய்தாரம்.
இப்படியான நிகழ்வைக் கண்டு ஆச்சரியமுற்ற சபையில் இருந்த ஒருவர் இவரை மேலும் சோதிக்க விரும்பி தானாகவே பின்வரும் கேள்வியைக் கேட்டாராம்:
ஒரு செட்டியார் 173 பேருக்கு ஆளுக்கொரு புசல் அரிசியை அன்பளிப்பாகக் கொடுத்தார். ஒவ்வொரு புசலிலிலும் 3,431,272 அரிசிகள் இருந்தன. அன்பளிபாக அரிசி பெற்ற அத்தனை பேரும் அவர்கள் பெற்ற அரிசியில் 17% கோயிலுக்குக் கொடுத்தல் வேண்டும். கோயிலுக்குக் கொடுக்கப்பெற்ற அரிசிகள் எத்தனை?
 ெஅகவிழி | மே 2014

இந்தக் கணக்கைக் கேட்ட ஆறுமுகம் அதிர்ச்சி அடையாது மொழிபெயர்ப்பை மீண்டும் கேட்டு விளங்கிக் கொண்டு மூன்று செக்கனில் விடையைக் கூறி அவையோரை மீண்டும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்தாராம்.
இந்தச் செய்தி 1912ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி வெளிவந்த சிலோன் மோணிங் லீடர் (Ceylon, Morning Leader) என்ற பத்திரிகையில் வெளிவந்ததாம்.
இந்த நிகழ்ச்சி நடந்த 1912ஆம் ஆண்டிலேதான் மண்டூரில் சைவப் பாடசாலை தாபிப்பதற்காக இராமக் கிருஷ்ணரின் சீடர்களில் ஒருவரான சுவாமி அபேதாநந்தாவின் சீடரான அமெரிக்காவைச் சேர்ந்த சகோதரி அவவாமா அவர்கள் பாடசாலைக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். ஆனால் இவர் கொழும்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றியதாகத் தெரியவில்லை.
இந்த நிகழ்வு நடந்தபோது அதாவது 1912 இல், பிற்காலத்தில் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் முதலாவது கணிதப்பேராசிரியர் பதவி வகித்த சுந்தரலிங்கம் அவர்களுக்கு 17 வயது. அப்போது அவர் கொழும்பில் சென் யோசேப் கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருந்திருக்க வேண்டும். சுவாமி விபுலாநந்தருக்கு 20 வயது. அப்போது கொழும்பில் ஆசிரியர் கலாசாலையில் கற்றுக்கொண்டு இருக்கிறார். இவர்கள் இந்த நிகழ்வைப்பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை. எனினும் ஆங்கிலேயரான கணிதப் பேராசிரியர் பிறெட் பார்லோ (Fred Barlow) இந்த அதிசய நிகழ்வைப்பற்றி 1952 இல் அவர் எழுதிய மென்ரல் புறடிஜீஸ் (Mental Prodigies) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஆறுமுகத்தின் சந்ததியினரைப் பற்றி எந்தச் செய்தியும் பெற முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
ஆறுமுகத்துக்கு ஒவ்வொரு கையிலும் ஆறு விரல்களும் பாதத்தில் ஆறுவிரல்களும் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இவரைப் பற்றிய விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. சுவாமி விபுலாநந்தர் 1892 ஆண்டும் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை 1899 ஆண்டும் ஆறுமுகம் 1896 ஆம் ஆண்டும் பிறந்துள்ளனர். ஆனால் சுவாமி விபுலாநந்தரோ அல்லது புலவர் மணி பெரியதம்பிப்பிள்ளையோ ஆறுமுகத்தைப்பற்றி எந்தச் செய்தியும் குறிப்பிடவில்லை.
ஆறுமுகத்தின் கணிதச் செயல் எவ்வாறு அமைதல் கூடும் என்று மோனிங் ஸ்ரார் பத்திரிகையில் இவ்வாறு கூறப்பட்டிருந்ததாம். 2555 ஐ 3437 ஆல் பெருக்குவதற்கு 2500 ஐயும் 3500 பெருக்குதற்காக 2% ஆயிரதத்தையும் 3% ஆயிரத்தையும் பெருக்கி பின் 55 உக்குத் தேவை யானதைச் சேர்தது 63 இன் வித்தியாசத்தைக் கழித்து விடையைக் காண்பாராம். ஆனால் இது ஒரு பொதுவான முறையாக அமையவில்லை. கேட்கப்படும் கேள்விகளுக்கு

Page 19
மூன்று செக்கன்களில் விடை அளிப்பது ஆச்சரியமான செயலாகக் கருதப்படுகிறது. இந்தச் செயல் அறிவியல், உளவியல் ஆய்வுகளால் தீர்மானிக்க முடியாதிருக்கின்றது.
இவ்வாறு விரைவாக சில நொடிகளில் கணிதச் செயற்பாடுகளைச் செய்து ஆச்சரியப்படத்தக்க சாதனை இபடைத்தவர்கள் இலங்கையரான ஆறுமுகமும் இந்தியரான சகுந்தலா தேவியும்தான் என்று கணித வரலாறு கூறுகிறது. இவ்வாறான சாதனைக்குரிய காரணத்தை உயிரியல் ஆய்வாளர்களோ அல்லது உளவியல் ஆய்வாளர்களோ சரியான விளக்கம் தரவில்லை. இவர்களுக்கு கொடுக்கப் பட்ட கணக்கின் விடை இவர்களது கண்முன் தோன்று வதாகக் கருதப்படுகிறது. ஆறுமுகத்தின் கனவில் துறவி தோன்றி ஆசீர்வதித்ததுபோல் சகுந்தலா தேவியின் வாழ்க்கையில் நடக்கவில்லை. ஆனால் அவர் மூன்று
ஆப்ரஹாம் லிங்கன்.
ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன் அவர்கள் தன் மகனின் முதல் அக்கருத்துக்கள் ஆசிரியர்களாகிய உங்களிலும் நீங்கள் கற்பி.
"..... முதல் ஆசிரியர் அவர்களே , அ என்மகனுக்குக் கற்பியுங்கள். தயவுசெ கப்டர்களிலும், கயவர்களிலும் நற் அனைத்து எதிரிகளிலும் ஒர் நண்ட இலவசமாக எவரிடமிருந்தேனும், எ சிரம உழைப்பினால் கிடைக்கும் ? அதனை அவன் புரிந்துகொள்வதற்கு
உரையுங்கள். தோல்வியை சகித்துக்கொள்வதற்கும், வெற்றி ை என் புதல்வருக்குக் கற்பியுங்கள். சில பேர் பொறான துணியும் போது அவற்றினால் மனம் தளராது அமைதிய அந்தரங்கத்தையும் அவனுக்குக் கற்பியுங்கள். தனது உடம் இலகுவானவர்களென்பதையும் அவனுக்குத் தெளிவுபடுத்
முதல் ஆசிரியரவர்களே, உங்களால் முடியுமாயின் மட்டுமல்ல வானில் சஞ்சரிக்கும் குருவிகள், பறந்து சொல் அசைந்தாடும் தாரகை மலர்கள் கூறி நிற்கும் அறியப் இடமளியுங்கள். தன்னைச் சூழவிருப்போர் செய்பவற். தேவையானவற்றையும் தேவையற்றவற்றையும் தெளிவுபெ
தனது உடலின், உள்ளத்தின் சக்கியை அதியுயர் ( ஒருபோதும் விலைபேசாது, காதடைத்து நிற்க அவனைக் காது மூடி நிற்பதற்கு அவனுக்கு தைரிய மூட்டுங்கள். த தைரியத்துடன் போராடவும் அவனுக்குக் கற்பியுங்கள்.
முதல் ஆசிரியர்வர்களே, அவனை மென்மையாக “பெற்றோரினால் தனது பிள்ளைகளுக்களிக்கும் குறை நிற்கவேண்டிய அறிவாற்றலாகும்”

வயதில் இருந்தே அபூர்வ ஆற்றலைப் பெற்றுள்ளார். கணனியையும் வென்று விடையளித்துச் சாதனை படைத்துள்ளார். சகுந்தலா தேவி 1929ஆண்டு நவம்பர் மாதம் 4ஆம் தேதி பிறந்தவர். 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி உயிர் நீத்தார். இவரைப் பற்றிய விபரங்கள் ஆவணப்படுத்தப் பெற்றுள்ள நிகழ்வு மகிழ்ச்சிக்குரியது.
உசாத்துணை நூல்கள் Barlow, E. (1952). Mental prodigies. New York: Philosophical Library. Davi Sakunthala. (1978). Figuring: thejoy of numbers. New York: Harpert and
Row. Smith, Steven B. (1983). The great mental calculators. New York: Columbia
University Press.
அவர்களின் எதிர்பார்ப்பு
5 ஆசிரியருக்கு வரைந்த மடலின் கருத்துக்கள் சில வருமாறு. க்கும் பிள்ளைகளிலும் எதிர்பார்க்கும் கருத்துக்களாயின். அனைத்து மக்களும் உண்மையின் பக்கம் இல்லையென்பதை சய்து அவனுக்குக் கற்பியுங்கள். அவ்வாறிருப்பினும் அனைத்து குணம் படைத்த வீரர்களும் இவ்வுலகில் வசிப்பதாக, ... பரும் இருப்பதை அவனுக்குக் கற்பியுங்கள் அதே போன்று பங்கிருந்தேனும் கிடைக்கும் ஐந்து டொலர்களைவிட தனது ஒரு டொலரின் பெறுமதி அதிகமென்பதை அறிவூட்டுவீராக. காலமெடுக்குமென்பதை நானறிவேன். எனினும் உண்மையை
ய தற்செருக்கின்றி மனமகிழ்வுடன் அனுபவிப்பதற்கும், மயுடன் அவனை தாழ்வு பெறச்செய்ய, அப்பாற்படுத்தத் பாயிருந்து அடிமனதினால் சிரிக்குமாற்றல் தரும் சக்தியின் ற்பலத்தினால் மக்களைக் ஐயமூட்ட வருபவர்கள் தோற்கடிக்க நதுங்கள்.
நூல்களது மகிமையை அவனுக்குக் கற்பியுங்கள், அது ல்லும் தேனீக்கள்...., நீல வர்ண மலைச்சாரலில் மலர்ந்து பபடா இரகசியத்தை அவனுக்கு ஆறி அமர்ந்து சிந்திக்க றை கண்மூடித் தனமாக பின்பற்றாமல் தனது மதியால் பற்று அனைவருக்கும் செவிதாழ்த்த அவனைக் கற்பியுங்கள். பெறுமதிக்கு கேட்போருக்கு விற்பினும் தனது இதயத்திற்கு - கற்பியுங்கள். பொய்க் கோஷமெழுப்பும் சனத்திரனிடையே நான் சத்தியமாக (உண்மையாக) ஏற்றுக்கொள்வதைப்பற்றி
க் கையாளுங்கள் -
வில்லாச் செல்வம் கற்றோர் சபைநடுவே முன்னோங்கி
அகவிழி | மே 2014 (E

Page 20
சமூகமயமாக்கல் முகவர்கள்
ஜே.டீ. கரீம்தீன் விரிவுரையாளர், இடைநிலை, மூன்றாம் நிலைக் கல்வித்துறை 'கல்விப்பீடம், இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம்
தனிநபர்கள் விதிகளையும், பழக்கவழக்கங்களையும், விழுமியங்கள் மற்றும் நடத்தைகளை அவர்கள் வாழும் சமூக ஒழுங்குகளினூடாக மரபுரிமையாக பெற்றுக் கொள்ளும் செயன்முறையை சமூகவியலாளர்களும், சமூக உளவியலாளர்களும், கல்வியியலாளர்களும், மற்றும் அரசியல் வாதிகளும் சமூகமயமாக்கல் என்ற வார்த்தையை பிரயோகிக்கின்றனர். சமூகத்துடன் ஒரு தனிநபர் இடைவினை கொள்வதற்கான திறனுள்ளவராக இற்றைப்படுத்துதலும், சமூகம் தனது பொதுவான விழுமியங்கள், பழக்கவழக்கங்கள், விதிகள், மரபுகள் மற்றும் மொழி போன்றவற்றை பகிர்ந்து கொள்ளவும் சமூகமயமாக்கல் குவியப்படுத்தப்படுகிறது.
ஒருவர் கற்றுக்கொள்வதற்கும் தன்னை ஒரு மனிதனாக விருத்திசெய்துகொள்வதற்குமான வாழ்க்கை நீடித்த செயன்முறையே சமூகமயாக்கல் ஆகும். சமூகமயமாக்கல் முகவர்களினூடாகவே ஒருவர் சமூகமயமாக்கல் செயன் முறைக்கு உட்படுகின்றார்.
ஒரு சமூகத்தில் ஒருவர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்பதை கற்றுக்கொடுப்பதன் காரணமாக சமூகமயமாக்கல் செயன்முறை மிக முக்கியமானதாகும். ஏற்றுக்கொள்ளப்பட்ட பழக்கவழக்கங்கள், விதிகள், அடையாளங்கள், மொழி மற்றும் நடத்தைகளை சமூகமயமாக்கல் இன்றி ஒருவரால் கற்றுக்கொள்ள முடியாது. சமூக திறமைகளை கற்றுகொள்வதன் ஊடாக சமூகத்தில் தன்னை விருத்திசெய்து கொள்ளவும் சமூகத்தில் அவருக்கான இடத்தினை உருவாக்கிக் கொள்ளவும் உதவுகின்றது. ஒரு மனிதன் சமூகத்தின் ஊடாக, நிமிர்ந்து செல்கின்றபோது சமூகத்தின் முகவர்களுக்கு ஏற்பவும் தனிநபர்களுக்கு ஏற்பவும் அவரது நடத்தையை மாற்றக்கூடியவராக இருத்தல் வேண்டும். ஒரு சமூகத்தில் ஒரு தனிநபரோ அல்லது நிறுவனமோ ஒரு தனிநபரிடத்திலே சமூக ஒழுங்கை ஆழப் பதிய வைப்பதற்குரிய பணியை மறந்துவிடக் கூடாது. இந்த தனிநபர்களோ அல்லது நிறுவனங்களோதான் சமூகமயமாக்கல் முகவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். இந்த முகவர்களினூடாகவே விதிகள், எதிர்பார்ப்புக்கள், விழுமியங்கள் போன்றன பரிமாற்றப்படுகின்றன.
அகவிழி | மே 2014
18

தனியாள், முழு அல்லது ஓர் அமைப்பு ஒருவருடைய நடத்தையை, தான் பற்றிய உணர்வினை , வெகுமதி அல்லது தண்டனையின் மூலம், சமூக விதிகள், சமூக - வகிபங்குகள் பற்றி அறிவுறுத்தல் மூலம் அல்லது ஒரு மாதிரிகையாகச் செயலாற்றுவதன் மூலம் செல்வாக்குச் செலுத்த முடியுமாயின், அதனை சமூக மயமாக்கல்
முகவர் எனக் கொள்ளலாம் (Anne Levine, 1995).
ஒரு தனிநபர் சமூகத்துடன் இடைவினை கொள்வதற்கு உதவுகின்ற நிறுவனங்களாக குடும்பம், சகபாடிகள், பாடசாலை, மதம் மற்றும் ஏனைய நிறுவனங்களைக் குறிப்பிடலாம். குடும்பம், பாடசாலை , சமூக கலாச்சாரம் மற்றும் சகபாடி குழு என்பன ஓர் சமூகத்தில் காணப்படும் பிரதான சமூகமயமாக்கல் முகவர்களாகும். சமூக மயமாக்கல் முகவர்களை முதன்மை முகவர்கள் இரண்டாம் நிலை முகவர்கள் என இரு பிரிவுகளாக பிரித்தது நோக்கலாம்.
முதன்மை முகவர்கள் ஒரு தனிநபருக்கு மிக நெருக்கமான சமூகமயமாக்கல் முகவர்கள் முதன்மை முகவர்களாகும். இதனுள் குடும் பத்தினையும், சகபாடிக் குழுக்களையும் உள்ளடக்கலாம். குடும்பம் ஒரு சமூக நிறுவனம் என்ற வகையில் பிள்ளைகளை சமூகமயப்படுத்தலும், பராமரித்தலும் அதன் பிரதான பணியாகும். அதனால் குடும்பம் சமூகமயமாக்கலுடன் அதிகம் நெருங்கிய தொடர்பு கொண்டதாக கருதப்படுகின்றது. குடும்ப உறுப்பினராவதற்கும் சமூக உறுப்பினராக தகைமை பெறுவதற்கும் ஒருவருக்கு வேண்டிய சமூகமயமாக்கியை குடும்பம் செய்து உதவுகின்றது. சமூகத்தின் நிலைப்பிற்கும் ஒழுங்கிற்கும் அடிப்படையானதாகவும் மக்களின் வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவதாகவும் முதன்மை சமூக மயமாக்கல் முகவர்களில் குடும்ப முக்கிய பங்காற்றுவதாக Cooley என்பவர் குறிப்பிட்டார். ஆரம்ப நிலை குழு உறுப்பினர்களிடையே ஆழமான மற்றும் உணர்வு ரீதியான உறவுமுறை காணப்படுகின்றது. அளவில் சிறியதாகவும், பாரம்பரிய மற்றும் தனிப்பட்ட உறவு முறைகள் காணப்படும்

Page 21
ஒரு குழுவிலுள்ள ஒரு வகுப்பினருக்கு பிரச்சினை ஏற்படின் அனைவரும் உதவுபவர்களாகவும் இருப்பர். பௌதீக ரீதியான நெருக்கத்தன்மை, நேருக்கு நேரான உறவு முறை, பொதுவான பின்னணி மற்றும் நீண்ட காலம் செயற்படக்கூடியதொன்றாகவும் முதன்மை முகவர்கள் காணப்படுவர்.
இரண்டாம் நிலை முகவர்கள்
சமூகத்தில் தனக்கென ஒரு இடத்தை ஒரு தனிநபர் பெற்றுகொள்வதற்கான உதவியினை இந்த இரண்டாம் நிலை முகவர்கள் செய்கின்றனர். மத நிறுவனங்கள், பாடசாலை மற்றும் வேலைத் தளங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். பாடசாலைகள் ஒன்றுக்கு மேற்பட்ட நிலைகளில் சமூகமயமாக்கல் முகவர்களாக தொழிற்படுகின்றன. பாடசாலைகள் பாடங்களை உள்ளடக்கிய கலைத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் மூலம் முறைசார் கல்வியை வழங்கி அவர்கள் சமூகம் பற்றிய அறிவைப்பெற உதவுகின்றன. அத்துடன் சமூகத்துடன் இடைவினை கொள்வதற்கான திறமைகளையும் பாடசாலை மாணவர் களுக்கு வழங்குகின்றன. நெருக்கமான உறவற்ற தற்காலிகமான இடைவினைகளை கொண்ட

உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவாகும். குழுவானது பெரியதாகவோ, சிறியதாகவோ காணப்படலாம். உணர்வு ரீதியற்ற மற்றும் முறைசார்ந்த உறவுகளைக் கொண்டு விளங்கும்.
சமூகமயமாக்கல் முகவர்கள் என்ற வகையில் குடும்பம்
உறவு முறைத் தொடர் புகளால் பிணைப் புள்ள ஆட்களை உள்ளடக்கும் குழுவினைக் குடும்பம் என அழைக்கின்றனர். குடும்பத்தினது மூத்த உறுப்பினர்கள் இளைய உறுப்பினர்களின் பராமரிப்புக்கு பொறுப்புடையவர் ஆவர் (Gidden 1994) . பொதுவான வாழிடம், பொருளாதார கட்டமைப்பு, மற்றும் இனவிருத்தி என்பவற்றை கொண்டிருப்பதாக அமையும் ஒரு சமூகம் குழு குடும்பம் ஆகும். அது வளர்ந்த ஆண், பெண் இருபாலாரையும் உள்ளடக்கியதாயும், அவர்களில் குறைந்தபட்சம் இருவர் சமூக அங்கீகாரத்துடனான பாலியல் தொடர்புகளை பேணி வருபவராயும் அவ்வாறு பாலியல் ரீதியாக இணைந்து வாழும் அவர்கள் ஒன்றோ அல்லது அதற்கு - கூடிய பிள்ளைகளைப் பெற்றோ அல்லது தத்தெடுத்தோ 2 வளர்ப்பவர்களாயும் அமையும்.
விழி | மே 2014 (?
டொ3, 47 AY T$(?)க *
3._si, 1)

Page 22
தனியாள் சமூகமயமாக்கலில் குடும்பத்தின் வகிபங்கு மிக முக்கியமானதாகும். குறிப்பாக ஆரம்பப் பிள்ளைப் பருவத்தில் குடும்பத்தின் செல்வாக்கு அளப்பரியது.
ஒரு பிள்ளை பெற்றுக்கொள்ளும் சமூகமயமாக்கலானது, அதன் குடும்பத்தின் ஒழுங்கமைப்பு, கலாசாரப் பின்னணி, வகுப்பு, வாழ்க்கை நெறிமுறை மற்றும் சமூகத் தொடர்புப் பண்புகள் என்பவற்றின் அடிப்படையிலான பிள்ளை வளர்ப்பு நடைமுறைகள், மொழிக் குறியீடுகள் மற்றும் விழுமியங்களின் போக்குகள் என்பவற்றை பிரதிபலிப்பாதாக அமைகின்றது. மேலும் குடும்பப் பருமன், பிள்ளைகளை வளர்க்கும் பாங்கு, குடும்ப உறுப்பினரிடையில் நிலவும் உறவுகள், குடும்ப அமைப்பில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள், அண்மைக் கால சமூக அமைப்பில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் குடும்பத்தில் ஏற்படுத்தும் பாதிப்புக்கள் என்பனவும் ஒரு குடும்ப உறுப்பினரின் சமூகமயமாக்கலில் செல்வாக்கு செலுத்தும்.
கல்வியினை வழங்குவதில் முறைசாராத ஒரு நிறுவனமே குடும்பமாகும். குடும்பமானது பல்வேறுபட்ட தொழிற்பாடுகளை ஆற்றுகின்றன.
பாதுகாப்பளிக்கும் தொழிற்பாடு : - உணவு, உடை மற்றும் உறைவிடம் போன்ற மிக அத்தியாவசிய வசதிகளை குடும்பம் அதன் அங்கத்தினருக்கு வழங்குகின்றது. ஒரு உறுப்பினரிடத்திலே நோய் ஏற்படின், அதற்கான பரிகாரத்தையும் குடும்பம் செய்து கொடுக்கின்றது.
அன்பை வழங்கும் தொழிற்பாடு : ஒவ்வொரு தனிநபரும் அன்பு, பாசம், ஏற்றுக்கொள்ளல் மற்றும் தனக்கான அங்கீகாரம் போன்ற உளவியல் தேவையுடையவர் களோடு உள்ளனர். இந்த தேவையை பூர்த்தி செய்து கொடுக்கும் ஒரு நிறுவனமாக தொழிற் படுவதோடு ஒவ்வொரு தனி நபரிடத்தேயும் மனவெழுச்சியை ஏற்படுத்தும் மத்திய நிலையமாகவும் குடும்பம் திகழ்கின்றது.
பொருளாதார தொழிற்பாடு : பொருளாதார தொழிற்பாடுகள் நடைபெறாவிட்டால் வாழ்க்கையே முற்றுப்பெற்றுவிடும். எனவே தான் பொருளாதார தொழிற்பாட்டை குடும்பம் ஆற்றுகின்றது
இனவிருத்தி தொழிற்பாடு : பாலியல் மற்றும் இனவிருத்தி தொழிற்பாடுகள் நடைபெறாவிட்டால், சமூகத்தில் உறுப்பினர்களே இருக்கமாட்டார்கள். அங்கீகரிக்கப்பட்ட நிலையிலே குடும்பமானது இனவிருத்தி தொழிற்பாட்டை செய்து மனித சமூகத்தின் நிலைப்பிற்கு அன்று தொட்டு இன்று வரை காரணமாக குடும்பமே இருந்து வருகின்றது.
8) அகவிழி | மே 2014

இதப்
5. மத ரீதியான தொழிற்பாடு: ஒரு குழந்தை எந்த
குடும்பத்தில் பிறக்கின்றதோ அந்த குடும்பத்தின் மதத்தினுள் குழந்தையும் சென்றுவிடுகின்றது. வழிபாட்டு முறைகள், மதச் சடங் குகள், பழக்கவழக்கங்கள், கிரிகைகள், மற்றும் மத பண்டிகைகள் என்பனவற்றை பெற்றோரிடமிருந்தும், குடும்ப அங்கத்தினர்களிடமிருந்தும் அவதானித்து, போலச் செய்தல் மூலம் கற்றுக்கொண்டு குடும்பத்தின் மதத்திற்கு சமூகமயமாக்கப்படுகின்றனர்.
கல்வித் தொழிற்பாடு: ஒரு மனிதனின் முதல் பாடசாலை குடும்பமும், முதல் ஆசிரியர் தாயும் ஆவார்கள். உளப் பகுப்பாய்வாளர்களான பிராய்ட் ஒரு மனிதன் தனது குடும்பத்திலிருந்து கற்றுக் கொண்டவற்றையே சமூகத்தில் பிரதிபலிக்கின்றான் எனக் குறிப்பிடுகின்றார்.
6. -
பின்வரும் கல்வித் தொழிற்பாடுகளை ஒரு குடும்பம்
ஆற்றுகின்றது
அ) உடல் ரீதியான வளர்ச்சி
உணவு, உடை மற்றும் உறையுள் என்பனவற்றை
வழங்குவதினூடாக ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு - குடும்பம் உதவுகின்றது.
தனிப்பட்ட சுகாதார, மலசலம் கழித்தல், சுத்தம், சாப்பாட்டை ஒழுங்கான முறையில் பறிமாறும் பழக்கம் மற்றும் தூக்கம் போன்ற நல்ல உடலியல் பழக்கங்களை குழந்தை வீட்டிலேயே கற்றுக்கொள்கின்றன.
ஆ) அறிவுசார்ந்த விருத்தி மொழியை ஒரு குழந்தை வீட்டிலேயே கற்றுக்கொள்கின்றது. நல்ல பேச்சு, சரியான உச்சரிப்பு மற்றும் சொல்நடை என்பவற்றையும் குழந்தை வீட்டிலேயே கற்றுக்கொள்கின்றது. குழந்தை கேட்கும் சகலவிதமான கேள்விகளுக்கும் குடும்ப உறுப்பினர்கள் விடையளித்து அவர்களின் அறிவு சார்ந்த விருத்திக்கு காரணமாக அமைகின்றனர். குடும்பத்தின் ஆரோக்கியமான அறிவுப் பின்னணியைானது குழந்தையின் அதிக அறிவு விருத்திக்கு காரணமாக அமைகின்றது.
இ) ஒழுக்க விருத்தி
பெற்றோர்கள் பிள்ளைகளிடத்தில் அன்பாகவும் பாசமாகவும் நடந்து கொள்வதினூடாக நல்ல ஒழுக்க நெறிகளையும் கற்றுக்கொடுக்கின்றனர். குடும்பத்தின் ஒழுக்கப் பின்னணி பிள்ளைகளிடத்தில் தாக்கம் செலுத்துகின்றது. நல்ல ஒழுக்கங்களையுடைய குடும்பங்கள் நல்லொழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்குகின்றன.

Page 23
ஈ) சமூக விருத்தி சமூக கூட்டமைந்த பண்புகள், நல்லெண்ணம், பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பு போன்றவை குடும்பத்தினாலேயே விருத்தி செய்யப்படுகின்றன. வீட்டில் அல்லது வீட்டுக்கு வெளியே மேற்கொள்ளப்படும் சமூக ஒன்று கூடல்கள், மற்றும் எனைய ஒன்று கூடல்கள் மூலமாக நல்ல சமூக பழக்கங்கள் விருத்தியாகின்றன.
(உ) கலாசார விருத்தி கலாசார பாரம்பரியத்தின் மிக முக்கிய நிறுவனமே குடும்பமாகும். ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைகக்கு கலாசாரத்தை பரிமாறும் உன்னத பணியை குடும்பம் ஆற்றுகின்றது. எனினும் இன்று பல்வேறு காரணங்களால் பாரம்பரிய கலாசாரம் இழக்கப்பட்டு வருகின்றது.
(ஊ) ஆளுமை விருத்தி ஒரு குழந்தையின் ஆரம்ப ஆளுமை விருத்தியானது வீட்டுச் சூழலிலே தங்கியுள்ளது. இந்நிலைமையில் குடும்பமானது ஒரு தனியாள் விருத்தியில் செல்வாக்கு செலுத்தும் என்றும் நிலைத்திருக்கக்கூடியது ஒரு பாடசாலை ஆகும். தனிநபரின் நடத்தை மற்றும் மனப்பாங்குகளை வடிவமைக்கும் முதன்மை நிலை நிறுவனமாக குடும்பம் விளங்குகின்றது. ஒரு குழந்தையின் கல்வி கற்கும் செயற்பாடு நெடுங்கணக்கினூடாக ஆரம்பிப்பதில்லை. மாறாக தாயின் பார்வை, தந்தையின் ஒப்புதல், சகோதரியினதும், சகோதரனினதும் வழிகாட்டல் என்பவற்றினூடாகவே குழந்தை கற்று நடக்கின்றது. ஒரு தாய் கல்வியைப் பெற்றவளாக இருந்தால் முழு குடும்பமே கல்வி பெற்றுக்கொள்ளும் என மகாத்மா காந்தி குறிப்பிட்டார்.
பிள்ளையின் ஆரம்ப காலங்களில் பரிவு, பாசம் என்பனவற்றை தாய் வழங்குவதினூடாக கற்றல் அனுபவங்களை பிள்ளைகள் பெற்றுக்கொள்கின்றன. ஒரு பிள்ளையின் ஆளுமையை வடிவமைப்பதிலும் அர்த்தத்துடன் கற்பதற்கான திறமையும் ஆரம்ப கால அனுபவங்கள் மற்றும் செயற்பாடுகளின் தரம் என்பன வழங்குகின்றன. குடும்பம் வழங்குகின்ற கற்றல் சூழலில் தான் குழந்தை தனது முதல் மூன்று வருடங்களிலும் கல்வியினை பெறுகின்றது.
குழந்தையின் விருப்பம், ஆர்வம் மற்றும் தேவைக்கு ஏற்ப தனிநபர்களுக்கான கல்வியினை குடும்பம் வழங்குகின்றது. சமயலறையில் சமைத்தல், கழுவுதல், வெட்டுதல், கொதிக்க வைத்தல், அரைத்தல் மற்றும் ஏனைய சமயலறை சார்ந்த செயற்பாடுகளை குழந்தை

வீட்டில் ஆரம்ப காலங்களில் கற்றுக்கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் இரசாயனவியல் மற்றும் பெளதீகவியல் சார்ந்த கோட்பாட்டு விடயங்களை பிரயோக ரீதியில் விளங்குவதற்கு துணையாக அமைகின்றது. உதாரணமாக வெப்பநிலை அதிகரிக்க அமுக்கம் அதிகரிக்கும் என்ற விடயத்தினை அமுக்க அடுப்பின் செயற்பாட்டினை விபரிப்பதன் மூலம் விளங்கப்படுத்த முடியுமாக இருக்கும். ஈரப்பதன் சார்ந்த கோட்பாடுகளை மழைகாலத்தில் துணி உலர்வதற்கும் வெயில் காலத்தில் துணி உலர்வதற்கும் எடுக்கும் கால இடைவெளியை எடுத்து கூறலாம். விலங்கியல், மற்றும் தாவரவியல் சார்ந்த கோட்பாடுகளை வீட்டில் வாழும் உயிரினங்கள் மற்றும் வீட்டுச் சூழலில் காணப்படும் தாவரங்கள் என்பனவற்றை எடுத்துக்
கூறுவதன் மூலம் விளங்கப்படுத்தலாம்.
பெற்றோர்கள் முன்மாதிரி வகிபாகங்களை வகிப்பதன் மூலம் குழந்தை அவர்களிடமிருந்து நல்ல விடயங்களை கற்றுக்கொள்கின்றது. வீட்டில் சமூக அக்கறைக்கான அடிப்படை இடப்படுகின்றது. சமூக அக்கறைக்கான தூய்மையான விழுமியங்கள் குடும்பத்தினரிடையே எழுப்பப்படுமாயின் - நல்ல விழுமியங்களை பெற்றோர் தாமும் எடுத்து நடந்து அவற்றை தமது பிள்ளைகளிடமும் பெற்று செயற்படுத்துவதற்கு தூண்டும் போது அப்பிள்ளை நாளை சமூகத்தில் நற்
பிரஜையாக உருவாகும்.
பிள்ளைகளின் சிந்தனைகளை கிளறும் செயற்பாட்டில் மாத்திரம் பெற்றோர் நின்றுவிடாமல் அவர்கள் ஆக்கபூர்வமாக சிந்திப்பதற்கான சந்தர்ப்பங்களை ஏற் படுத்திக் கொடுக்க வேண்டும்.
- வளர்ச்சியை மேம்படுத்தக் கூடியதும் சுயதீன மானதுமான சூழ்நிலைகளை வழங்கி, தெளிவானதும், வெளிப்படையாதுமான விதிகளை அமுல் படுத்தி, அன்பும் ஆற்றலும் நிறைந்த கல்வி கற்கும் மற்றும் ஆக்கபூர்வமான சிந்தனைக்காக சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்தி பெற்றோரினால் வளர்க்கப்படும் பிள்ளைகள் உணர்ச்சி ரீதியாக உறுதிப்பாடும் சமூக ரீதியாகத் தகுதிப்பாடும் ஒத்த வயதுடையோர் மத்தியில் ஏற்புடமையும் கல்விசார் முயற்சிகளில் சித்தியடையவும் இயல்பாகவே சுய பொறுப்புடமையும் கொண்டு உடன்பாட்டுச் சிந்தையும் உடையோராக விளங்குவர்.
குடும்பங்களில் இடம்பெறும் குழந்தை வளர்ப்பபுப் பாங்குகள் சமூகமயமாக்கலில் பாதிப்புக்களை உண்டாக்குகின்றன. ஆதிக்க கொள்கைகளை உடைய பெற்றாரின் குழந்தைகள் கீழ் படிவுள்ளவர்களாகவும் புலமையுள்ளவராகவும் மாறும் அதேவேளை குறைவான சுயமதிப்பு குறைவான சமூக தேர்ச்சி குறைவான
அகவிழி | மே 2014 (N
பொதுசன %,1லகம்
187ாட்பாடு காரர்,

Page 24
கையர்
சந்தோசம் உடயவர்களாக மாறுவர். அதிகார தன்மை கொண்ட பெற்றோர்களின் குழந்தைகள் சந்தோசம் உடையவர்களாகவும் வெற்றிகரமான திறமைகளை கொண்டவர் களாகவும் மாறுவர். இசைவளிக் கும் பெற்றோர்களின் குழந்தைகள் குறைவான சந்தோசம் குறைவான சுயகட்டுப்பாடு கொண்டவர் களாக காணப்படுவர். இப்பிள்ளைகள் அதிகாரத்துடன் அதிகம் முரண்படுபவர்களாகவும் பாடசாலை நடவடிக்கைகளில் குறைவான ஆர்வத்தினையே காட்டுவர். புறக்கணிக்கும் பாங்குடைய பெற்றோர்கள் தமது குழந்தைகளின் வளர்ப்பில் குறைவான மேற்பார்வையுடையவர்களாக இருப்பர். எனவே அப்பிள்ளைகள் குறைவான சுயகாட்டுப்பாட்டினையும் சுதந்திரமாக எதனையும் கையாளக்கூடிய திறனற்றவராகவும் காணப்படுவர்.
மேலும் குடும் பதிலுள்ள உறுப்பினரிடையில் நிகழும் உறவு முறைகளும் கவனத்திற்கொள்ளப்பட வேண்டியவை. தாய் தந்தையிடத்தில் நிலவும் உறவு, பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் நிலவும் உறவு, சகோதரர்களிடையே நிலவும் உறவு, இரண்டு சந்ததிகளிடையே நிலவும் உறவுகள் பிள்ளைகளை பல்வேறு விதத்தில் பாதிக்கின்றன. பெற்றோர் - பிள்ளை உறவுகள் ஒரு குடும்பத்திற்குள்ளும், குடும்பங்களுக்கும் இடையிலும் வேறுபடுகின்றன. பெற்றோர் தமது வகிபங்குகளை மாற்ற முற்படுகின்ற வேளையில், அவை பிள்ளைகளின் மனவெழுச்சிசார் நலன்களை, உளத்திறன் விருத்திகளை சாதமாக அல்லது எதிர்மறையாக பாதிக்கலாமென கோல்மன் (Coleman 1986) குறிப்பிடுகிறார். மனவெழுச்சியும் உளத்திறன் விருத்திகளும் பிள்ளைகளின் வயது, பால்நிலை, மனோபாவங்கள் மற்றும் உறவு முறைகளின் செல்வாக்குக்கு உட்படுகின்றன.
குடும்பத்தின் அமைப்பானது சமூகத்துக்கு சமூகம் மாறுபடுகின்றது. இது அடிப்படையில் கருக் குடும்பம்,
விரிந்த குடும்பம் என இருவகைப்படும்.
கருக்குடும்பம் என்பது இரண்டு வளர்ந்தோர், அவர்கள் பெற்ற அல்லது தத்தெடுத்த பிள்ளைகள் ஆகியோரைக் கொண்டது. விரிந்த குடும்பம் ஒன்றில் குத்தான அல்லது கிடையான, விரிவினைப் பெற்றிருக்கும். குத்தான விரிவாக்கத்தில் முக்கியமான குடும்ப உறுப்பினருடன் மூன்றாவது தலைமுறையும் சேர்ந்து காணப்படுவர். கிடையான விரிவாக்கத்தில் பிரதான உறுப்பினருடன் கணவன் அல்லது மனைவியின் சசோதரர்கள், சகோதரிகள் சேர்ந்து வாழ்வர். விரிந்த குடும்பம் பல தலைமுறையினரைக் கொண்ட குடும்பங்களுடன் பல வடிவங்களில் இருக்கலாம். காலப்போக்கில் குடும்பத்தின் அமைப்பானது பொதுவாக பெரும்பாலான சமூகங்களில் விரிகுடும்பம் என்னும் நிலையிலிருந்து மையக் குடும்பம்
(8) அகவிழி ( மே 2014

என்னும் வகைக்கு மாற்றமடைந்து வந்துள்ளமையைக் காணக்கூடியதாகவுள்ளது.
நகரவாக்கம், இடப்பெயர்வு, உழைப்போர் அணியில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தி என்பன இந்த மாற்றத்திற்கான காரணங்களாகும். அதிகரித்த விவாகரத்துக்கும், அதிகரித்த திருமணங்களும், குறைந்தளவிலான பிறப்புக்கள், சட்டரீதியான கரு வழிப்புக்கள் பத்தொன்பது வயதுக்குட்பட்டோரிடையே காணப்படும் அதிகரித்த மகப்பேறுகள், மற்றும் தனிமையில் வாழ்வோர், தனிப்பெற்றோர், புதிய முறையிலமைந்த வாழ்க்கை ஒழுங்குகளை மேற்கொள்வோர் ஆகியோரின் தொகை அதிகரித்தல் என்பனவற்றுடன் தாய்மார் தொழிலில் ஈடுபடுதலும் சேர்ந்து இம்மாற்றங்களுக்கு வழிவகுக்கின்றன.
திருமணத்திற்கு முன்பே பாலியல் தொடர்பு கொள்ளல், குழந்தைப்பேறு குறைதல், எல்லா சந்தர்ப்பங்களிலும் அனைத்து குடும்ப அங்கத்தவர்களுக்கும் ஒன்றாக இருக்க முடியாமை (படிக்கச் செல்லல், தொழிலுக்குச் செல்லல், பொருளாதார) முறைமைகளில் ஏற்பட்ட மாற்றங்களினால் குடும்பம் செய்யவேண்டிய தொழிற்பாடுகளை முதியோர் இல்லம், day care centre போன்ற நிறுவனங்கள் செய்கின்றமை , மற்றும் குடும்ப சமூகமயமாக்கலில் ஊடகங்கள், அரசியல் என்பன அதிகம் செல்வாக்கு செலுத்துவதானது குடும்பமானது இன்றைய நவீன காலத்தில் தனது தொழிற்பாட்டினை இழந்து வருகின்றது.
சமூகமயமாக்கல், எல்லாக் குடும்பங்களிலும் உலகளாவிய ரீதியில் ஒரே மாதிரியாக அமையும் என்று கருத முடியாது. குடும்பங்களின் ஒழுங்கமைப்பு, கலாசாரம், வகுப்பு, வாழ்க்கை நெறி முறை, பண்புகள் என்பவற்றிக்கேற்ப குடும்ப அமைப்புகளிலும் பிள்ளைகளின் வளர்ப்பு முறையிலும் குடும்பங்களிடையே பெரிதும் வேறுபட்டு காணப்படுகின்றன. இத்தகைய வேற்றுமைகளின் மத்தியில் குடும்பங்களில் பொதுவான விழுமியங்கள், மரபுகள், நியமங்கள் என்பனவும் காணப்படுகின்றன. இவற்றோடு பாரம்பரிய குடும்ப அமைப்பு முறையானது கைத்தொழில் புரட்சியின் பின்னர் மாற்றம் கண்டுவருவதுடன் குடும்பம் அதன் பணியை செவ்வனே செய்வதற்கான நடையையும் எதிர்கொண்டுள்ளதுடன் குடும்ப சமூகமயமாக்கலில் வெகுசன ஊடகங்களினதும் தாக்கங்கள் அதிகரித்து வருவதினை அவதானிக்க முடிகின்றது.
With previous refference Giddens, Anthony (1994), Sociology, 2nd Edition, Cambridge.

Page 25
பேச்சாற்றல், எழுத்தாற்றல், அறி
வாசிப்பின் முக்கியத்துவம்
- எஸ்.எல். மன்சூர்
ஒரு நூல் நிலையத்தின் முகப்பில் எழுதப்பட்டிருந்த
வாசகமிது.
"வாசிப்பில் பற்றினை ஏற்படுத்த வீட்டுக்கொரு பத்திரிகையை பெற்று வீட்டையும் ஒரு வாசிப்பு நிலையமாக்குவோம்" என்று அதில் எழுதப்பட்டிருந்தது. இலங்கையில் நாளாந்த, வாராந்த, மாதாந்த, காலாண்டு, அரையாண்டு, வருடாந்த , இருமாதத்திற்கு ஒருமுறை என்று பலதரப்பட்ட பத்திரிகைகள், சஞ்சிகைகள் வெளியாகின்றன. இதற்கும் மேலாக நிறுவனங்கள், தனிநபர்கள் மூலமாகவும், வெளிநாட்டிலிருந்தும் பத்திரிகைகள், சஞ்சிகைகள் வெளி யாகி மக்களின் பார்வையில் கடைகளில் தொங்குவதைப் பார்த்திருக்கின்றோம். இணையங்கள், வெப்தளங்கள் என அறிவுப்புரட்சி ஒருபுறம். ஆனால் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்ற இந்நாட்டில் எழுத வாசிக்க தெரிந்தவர்கள் என்று உலகில் முன்னிலையில் இருக்கின்றோம் என மார்தட்டும் நம்மிடையே எத்தனை வீதமானவர்கள் குறைந்தது தினசரிப் பத்திரிகையை வாங்கிப் படிப்பவர்கள் என்றால் அது தசக்கணக்கில்தான் வரும். மொழியின் மீதான பற்றினை உள்வாங்குவதற்கு, வாசிப்பின் மகத்துவத்தினை உணர்த்துகின்ற செயற்பாடுகளில் பொதுவாக களமிறங்குவது குறைவாகத்தான் உள்ளது அந்த நிலைமை மாற்றம் பெற்று நவீன உலகின் செல் நெறிகளை உணர்ந்தவாறு தமது தாய்மொழியில் கூடிய கரிசனையுடன் சங்கமிப்பதில் கற்றோர் மற்றும் அறிவுடமை அமைப்புக்கள் வழித்துணை காட்டுவது சாலச்சிறந்தது. உண்மையில், மொழியின் பண்பாட்டு வளர்ச்சிக்கு வாசிப்பு மிக முக்கியத்துவம் மிக்கதாக காணப்படுகிறது. ஏனெனில் மனிதன் பயன்படுத்துகின்ற தொடர்பாடல்களில் மொழி பிரதான பாத்திரத்தை வகிக்கிறது. மொழியின் வளர்ச்சி இன்மையால் வழக்கொழிந்த மொழிகள் பலவுண்டு. அதனை தவிர்ப்பதற்காக நமது தாய்மொழியான தமிழ்மொழி உலகப் பொதுமொழியாகவே மிளிர வேண்டுமென நாம்
அனைவரும் ஆசைப்படுகின்றோம்.
எமது மொழியான தமிழ் மொழிக்கு செம்மொழிக்கான அந்தஸ்தும் உண்டு. அதேவேளை நாகரிகம் என்கிற பெயரில் தமிழை மறந்து வேற்றுமொழிகளை சிறுவயதிலிருந்து

வுப்பிரவாகத்திற்கு
வகை
கற்க வேண்டுமென ஆர்ப்பரிக்கின்றோம். இந்நிலை தொடருமானால் மொழியின் உபயோகம் குறைந்து வழக்கொழிந்த மொழிகளின் பட்டியலில் சேர்ந்துவிடும் நமது தமிழ் . அவ்வாறான நிலைமை வருவதற்கு முன்னர் மொழியில் ஆர்வத்தையும், ஆசையையும், அதன் இனிமையையும் நாளைய சந்ததிக்கு நகர்த்தும் நோக்கில் வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்திடவும், நமது தாய்மொழியான தமிழ்மொழியை போற்றிப் பாதுகாத்திட வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது.
இந்நூற்றாண்டை அறிவு மையம் நிறைந்த நூற்றாண்டு என்கிறோம். புதிய புதிய அறிவுகண்கள் நிமிடத்திற்கு நிமிடம் மாற்றம் காணப்பட்டு வருகின்றன. இந்நாட்களில் இணையத்தளங்களில் இணையப் பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்பட்டு கணனியுடனான தொடர்பாடல் நிறைந்துள்ள காலமிது. ஆய்வுகளும், அறிக்கைகளும் துரித கதியில் ஊற்றாக வெளிப்பட்டு அவை நூலுருப்பெற்று வருடமொன்றுக்கு 50 ஆயிரத்திற்கும் மேலான நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்ற காலமிது. இவ்வாறு ஒருவருடத்தில் வெளியாகும் நூல்களை வாசிக்கவே ஒருவனது ஆயுள் போதாது. இந்நிலையில் நமது அன்றாட வாழ்வில் மையம் கொண்டுள்ள எழுத்தறிவின் தன்மையை பிரயோசனப்படுத்த முயல்வதற்கு வாசிப்பினைப் பலப்படுத்த வேண்டியதும் அத்தியவசியமாகும்.
பாடசாலைக் கல்வியில் ஆரம்ப வகுப்புக்களில் வாசிப்பின் முக்கியத்துவம் உணரப்படாமையினால் வாசிப்புத் திறனில் இடர்படுகின்ற ஒருதொகை மாணவர் கூட்டம் வளர்ந்து கொண்டு வருகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் பயிற்சிக் கொப்பிகளை எடுத்துப்பார்த்தால் எழுத்துப்பிழைகள் மலிந்து, ஒலிபேதங்கள் பிறழ்ந்து காணப்படுகின்றன. ஆசிரியர்களும் இதனைக் கண்டறிந்து பரிகாரம் தேட முயற்சித்தல் அவசியமாகும். தரம் ஒன்றில் சேருகின்ற ஒரு பிள்ளை பதினொரு ஆண்டுகளின் பின்னர் சாதாரண தரப் பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் குறைவான புள்ளிகைளைப் பெறுவார்களாக இருந்தால் அந்தப் பதினொரு ஆண்டுகளாக அவனை ஏமாற்றி பாடசாலையில் வைத்திருந்த குற்றத்திற்காக அவனுக்குக்
அகவிழி | மே 2014 (8

Page 26
கற்பித்த அத்தனை ஆசிரியர்களும் தண்டனைக்குரியவர்கள் என்று கூற விளைந்தால் நமது ஆசிரியத்துவம் எங்கே நிற்கும்?
ாடை
ஒரு பிள்ளை வீட்டிலிருந்து பாடசாலைக்கு வருகின்ற போது சுமார் 2000க்கும் மேற்பட்ட சொற்களை அறிந்தே வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு வந்த பிள்ளைக்கு மொழியறிவிலும் குறை காணப்பட்டால் இத்தனை ஆண்டுகள் அவன் பாடசாலையில் எதனைச் செய்தான், எதனைக் கற்றான், எதனைக் கற்பித்தது, அவனைக் கவனித்த அல்லது வழிநடாத்திய ஆசிரியர்கள், பாடசாலை என்ன செய்தது? என்பது கேள்விக்குறிய விடயம். இவ்வாறான நிலைகள் தோற்றம் பெறாமல் இருக்க மொழியில் சிறப்பிக்க வேண்டியது ஆசிரியர்களது கடமையாகும். மொழியினை வளப்படுத்துகின்றபோது அனைத்துப் பாடங்களுக்கும் அது வழியேற்படுத்தப்படுகின்றது.
மேலும், வாசிப்பின் மீதான பற்றுக்களை அதிகரித்து நாளாந்த செயற்பாடுகள், ஏனைய பாடங்களைக் கற்கவும் உதவிடுகின்றது என்பதையும் நாம் நினைவில் கொள்ளல் வேண்டும். உலகின் ஜாம்பவான் என்று மார்தட்டும் அமெரிக்காவில் உயர்கல்வி கற்போரில் சரியாக பாதிப்பேர் வாசிக்க முடியாதவர்களாகவும் காணப்படுகின்றனர். இந்தியா தொழில் நுட்பத்தின் வளர்ச்சியில் உச்சத்தில் உள்ள நாடு. இங்கு சுமார் 35வீதமானவர்கள் எழுத் தறிவற்றவர்களாகக் காணப்படுகின்றனர். இதேவேளை எழுத்தறிவு உள்ளவர்களிடம் வாசிப்பு இன்மையும் காணப்படுகின்ற ஒரு நிலைமை பலநாடுகளில் காணப்படுகின்றன. ஒரு ஆய்வின்படி தொழில்நுட்ப அறிவார்ந்த சமூகத்தில் வாழத்தக்கவர்களில் பெண்களே அதிகமானவர்கள் என்றும், எழுத்தறிவின்மை தொடர்பான திறன்களில் சில பணக்கார நாடுகளிலுள்ள இளைஞர்கள் குறைபாட்டுடன் காணப்படுகின்றனர் என்கிற உண்மைகள் தெரியவந்துள்ளன.
அறிவுடமை சமுதாயத்தில் வாசிப்பினை மேற்கொள்வோர் அதிகமாகக் காணப்படுவர். இதற்கான உந்து சக்தியை நூலகங்கள் வழங்க வேண்டும். வெறுமனே பத்திரிகைகளையும், சஞ்சிகைகளையும் வாசித்துவிட்டு பொழுதைக் கழிக்கின்ற ஒரு நிலையமாக காணப்படுகின்ற "வாசிப்பகங்கள் தரமான நூல்நிலையங்களாக மாற்றம் காணப்பட வேண்டும். சர்வதேச நூலக சம்மேளத்தின் கருத்துப்படி (IFLA) தகவல்களைத் திரட்டவும், சுதந்திரமான தீர்மானங்களை மேற்கொள்ளவும், திறன்களைப் பெற்றுக் கொள்ளவும், கலாசார மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் உதவும் வகையில் நூல் நிலையங்கள் சுதந்திரமாகவும், திறமை வாய்ந்ததாகவும் அதனைப்
அகவிழி |மே 2014
24

பயன்படுத்தக்கூடியதாகவும் அமைந்திருந்தல் வேண்டும் என்று கூறுகின்றது. இவ்வாறான நூலகங்கள்தான் இன்றைய தேவையாகும். வாசிப்பின் மேன்மையை மேம்படுத்த வாசிப்பு நிலையங்கள் நவீன தகவல் தொழில்நுட்பங்கள் நிறைந்த கூடங்களாக மாற வேண்டும். அனைத்து
வகையான நூல்களும் அங்கு காணப்பட வேண்டும்." நூல்களைப் பெற்று வாசிக்கும் வாசகர்களது வட்டம் அதிகரிப்பதற்கான வேலைத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு மக்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி அறிவார்ந்த சமூகக் கட்டமைப்பினை மாற்றியமைக்கும் வழிவகைகள் மேலோங்குகின்றபோது இவ்வாறான வாசிப்புப் பழக்கமும் மேலோங்கிக் காணப்படும்.
பாடசாலைக் கலைத்திட்டத்தில் மேம்படுத்தப்பட்டுள்ள வாசிப்பு "வாசிப்பானது ஒருமனிதனை முழுமையாக்குகிறது" என்று கூறுவர். உண்மையில் மொழியின் அடிப்படையான கூறுகளாக "செவிமடுத்தல், பேச்சு, வாசிப்பு, எழுத்து” ஆகிய மொழித்திறன்களை உள்ளடக்கியதாகவே காணப்படுகிறது. 1997 ஆம் ஆண்டிற்குப்பின்னர் நமது பாடசாலைக் கல்வித்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கல்விச் சீர்திருத்தங்களின் மூலம் எதிர்பார்க்கப்படும் தேசிய குறிக்கோள்களை அடைந்து கொள்வதற்காக சில அடிப்படையான தேர்ச்சிகளை மையப்படுத்தியவாறு பாடசாலைக் கலைத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
முதலாவதாக "தொடர்பாடல் தேர்ச்சிகள் மூலமாக எழுத்தறிவு, எண்ணறிவு, சித்திர அறிவு, தகவல் தொழில்நுட்ப தகைமை ஆகிய நான்கு வகை துணைத் தொகுதிகளாக வகுக்கப்பட்டு, கவனமாக செவிமடுத்தல், தெளிவாகப் பேசுதல், கருத்தறிய வாசித்தல், சரியாகவும், செம்மையாகவும் எழுதுதல், பயன் தருவகையான கருத்துப் பரிமாற்றம்" ஆகியவற்றை இத்தொடர்பாடல் தேர்ச்சியின் ஊடாக முக்கியத்துவம் பெற்றுள்ளதையும் அவதானிக்கலாம். எனவேதான் கல்வித்துறையில் குறிப்பாக ஆரம்பக்கல்வி புலத்தில் வாசிப்பின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் முகமாக "மெளனவாசித்தல், உரத்து வாசித்தல்" என்கிற சொற்கள் கற்றல் - கற்பித்தலில் மொழிப்பாடத்தில் முக்கியத்துவம் பெற்று விளங்குவதையும் காணலாம். பாடசாலையில் ஆரம்பவகுப்புக்களில் கற்கின்ற ஒரு மாணவனுக்கு ஆசிரியர் குறிப்பாக மொழிப்பாடத்தினை நன்கு விளங்கக்கூடிவாறு கற்பித்தல் வேண்டும். ஆசிரியர் பாடத்திற்கான விடயக்கூறுகளை தெளிவாக புரிந்து கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளின் போது பொருத்தமானவாறு ஒன்றிணைந்து செயற்படுத்தல் அவசியமாகும். மொழிரீதியாக ஆரம்பப்பிரிவு வகுப்புக்களில் எதிர்பார்க்கப்படுகின்ற தேர்ச்சிகளில் பின்வரும் விடயங்கள் வாசிப்பில் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக கருதப்படுகிறது.

Page 27
அதாவது கவிதை, பாடல், கதைகேட்டும் வாசித்தறிதல், பிழையின்றி உச்சரித்து உரத்துவாசித்தல், செவிமடுத்தல். பேச்சு, வாசிப்பு, எழுத்து சம்பந்தமான நற்பழக்கங்கள் பற்றியமை, எழுத்துப் பொறிமுறைகளை அனுசரித்து வாசித்தல், வாசித்தபின் கிரகித்து வெளிப்படுத்துதல், சொற்களஞ்சிய விருத்திக்காக வாசித்தல், இரசனையுடன் வாசித்தல் இவ்வாறாக தரம் ஒன்று முதல் நலன் கருதியதாக இவ்வகையான தேர்ச்சிகள் வாசிப்பினை முன்னிலைப் படுத்துவற்காக ஆசிரியர்களால் முன்கொண்டு செல்ல வேண்டுமென கல்விப்புலத்தினால் எதிர்பார்க்கப்படுகின்றது.
க
நமது நாட்டில் குறிப்பாக தமிழ் மொழியானது ஆரம்பம் முதல் உயர்கல்வி வரையிலும் போதிக்கப்பட்டு வருவதுடன் சகல பாடங்களும் தாய்மொழியிலேயேதான் கற்பிக்கப்பட்டும் வருகின்றன. இருப்பினும் மொழிகற்றலில் ஒரு தொகை மாணவர்கள் பரீட்சைகளின்போது வெளிப்படுத்துகின்ற அடைவு மட்டங்கள் பூச்சியமட்டத்தில் காணப்படுவதானது கவலை அளிப்பனவாகவே உள்ளது. காரணங்கள் பல கூறப்பட்டாலும் ஆரம்ப வகுப்புகளின் போது கற்பித்தல் முறையிலுள்ள குறைபாடுகளும், நவீனத்துவமிக்கதான தொழில்நுட்ப ரீதியிலான கற்றல் - கற்பித்தலை விடுத்து, காலத்திற்குதவாத வாசிப்பு, எழுத்து போன்ற திறன்களில் இருள் சூழ்ந்த தன்மைக்கு வித்திடுகின்றன என்பதுதான் உண்மையாகும். ஆரம்பவகுப்புக்களில் மாணவரில் விரைவான வாசிப்பினை ஏற்படுத்துவதற்கான பல்வேறு பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் பாடசாலைகளில் நடைபெறும் பல்வேறு புறக்கீர்த்தி நடவடிக்கைகளில் மாணவர்களை ஈடுபடுத்துதல் சிறப்பானதாகும். காலை ஆராதனையின்போது நற்சிந்தனை வாசித்தல், அன்றைய செய்திகளை வாசித்தல், மாணவர் மன்றங்களில் மாணவர்களை பேசவும், வாசிக்கவும் ஊக்குவித்தல். இவ்வாறு அனைத்து மாணவர்களுக்கும் சந்தர்ப்பங்கள் வழங்குகின்றபோது இந்த மாணவர்கள் எதிர்காலத்தில் நல்ல பேச்சாளர்களாகவும், அறிவிப்பாளர்களாகவும், சமுதாயத்தை வழிநடாத்துபவர்களாகவும் அமைவதற்கான அடித்தளமாகவே இவ்வாசிப்புத்துறை உந்து சக்தியாக அமைந்துவிடுகிறது. எனவேதான் மொழித்திறன்களை மேம்படுத்துவதற்கு வீடும், வீட்டுச் சூழலும் உதவவேண்டும் என்பதையும் நாம் கருத்திற்கொள்ள வேண்டும்.
06
ஆசிரியர் மொழியைக் கற்பிக்கின்ற அணுகுமுறைகளில் கீழ்பிரிவு மாணவர்களுக்கு கதைகூறல், பாடுதல், நடித்தல், பாவனை செய்தல், செய்துகாட்டுதல், வாசித்தல், பேசுதல், உரையாடுதல், பரிமாறுதல், எழுதுதல், வரைதல், விளக்கங்கள் கூறுதல் போன்றவற்றை உள்ளடக்கியதான செயற்பாடுகளிலும், விளையாட்டுக்களிலும் மாணவர்களை

ஈடுபடுத்துவதன் மூலம் மொழித்திறனை மேம்படுத்தவும் ஆசிரியர் உதவலாம். கற்றலின் ஊடாக மொழி பயன் படுகிறது. எனவே வாசிப்பு என்பது எழுத்தில் உள்ளவற்றை கண்களால் பார்த்து, வாயால் உச்சரித்து பொருளை உணர்த்துவது என்பதாக கூறுவர். வாசித்தல் மூலமாக சொற்களை காணுதல், உச்சரித்தல், பொருள் உணர்தல் ஆகிய மூன்று கூறுகள் உள்ளடங்குவதுடன், வாசித்தல் மாணவர்களிடையே பல்வேறு திறன்களையும் விருத்தி செய்யவும் உதவுகிறது. இன்று வாசிப்புத்துறையானது, நவீன தொடர்பாடல் சாதனங்களால் சற்று விரிவடைந்து காணப் படுகின்றது. எந்தவொரு விடயத்தையும் வாசித்தறிந்தே உணர்ந்து கொள்ளமுடிகிறது. ஆதலால் தான் சிந்தனை சிறப்பாக அமைந்திட அறிவை வளர்த்துக் கொள்ள, தான் வாசிக்கும் சொல்லின் பொருள் அறிந்து அதன்படி ஒழுகுவதற்கும் வாசிப்பு துணைபுரிகிறது. பாடசாலைகளில் வாசிப்பு என்கிற திறனை மேம்படுத்துவதற்காக குறிப்பாக ஆரம்பப்பிரிவு மாணவர்கள் மாத்திரமன்றி இடைநிலை மாணவர்களுக்கும் பெரிய எழுத்துக்களுடன் கூடிய கதைப்புத்தகங்கள், கவிதை, கட்டுரை போன்ற நூல்களையும் வாசித்தறிந்து பொருள் உணர்கின்றபோது வாசிப்பு மேம்படுவதற்கு வழித்துணையாக அமைகின்றது. எனவேதான் எந்தவொரு விடயமானாலும் கேட்ட மாத்திரத்தில் அவற்றினை அறிந்து செயற்படும் தன்மையுள்ளவர்கள் வாசிப்பில் திறமையுள்ளவராகவே காணப்படுவதால் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளில் அதிகூடிய புள்ளிகள் பெறுவதற்கும் வேகமான வாசிப்பு, விளங்கிக் கொள்ளும் தன்மைகள் என்பனவும் அடிப்படையான அம்சங்களாக காணப்படுகின்றன.
பாடசாலையிலுள்ள நூல் நிலையங்களின் பயன்பாடு! மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாடநூல்களைக் கொண்டு மொழித்திறன்களை விருத்தி செய்யக்கூடியவாறு அதனைப் பயன்படுத்துதல் அவசியமாகும். ஆரம்ப வகுப்புக்களிலுள்ள மாணவரில் விரைவான வாசிப்பினை ஏற்படுத்துவதற்காக பாடசாலையின் நூலகங்கள் மூலம் வாசிப்பதற்கு புத்தகங்களை வழங்கி வாசிப்பினை மேம்படுத்த ஆசிரியர் முனைதல் வேண்டும். இன்று அனைத்து பாடசாலைகளிலும் நூலகங்கள் காணப் படுகின்றன. அரசு பல இலட்சங்களை செலவு செய்து நூல்களை வழங்கிவருகின்றது. கடந்த 1995 ஆம் ஆண்டிலிருந்து பாடசாலைகளுக்கு நூல்கள் வழங்கப் பட்டுவரும் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதன் மூலமாக மாணவர்களின் துணைவாசிப்பு நூல்கள் இல்லாத
குறைபாட்டை அரசு மேற்கொண்டமை பாடசாலைகளில் ஆ பொதுவாக வாசிப்பில் பின்தங்கிய நிலை காணப்படுகின்றன என்பதைக் கண்டறிந்த ஆய்வுகளின் அடிப்படையில்
2014 8

Page 28
காணப்பட்ட குறைபாட்டை நிவர்த்திக்கவே பாடசாலை நூலகங்கள் பலப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஆனால் பாடசாலைகளில் காணப்படும் நூலகங்களில் நூல்கள் அடிக்கியவாறே காணப்படுகின்றன. பாடசாலை நூலகர் ஒருவரிடம் இதுபற்றி வினவியபோது "நூல்கள் அழுக்கடைந்துவிடும் யாருக்கும் கொடுக்க கூடாது என்று அதிபர் உத்தரவிட்டுள்ளார்” என்று கூறும் அளவுக்கு பாடசாலைகளிலுள்ள நூலகங்களின் நிலைமை காணப்படுகின்றது. அனைத்துப் பாடசாலைகளிலும் ஏதோர் வடிவில் நூலகங்கள் காணப்படுகின்றன. பொதுவாக பாடசாலை மாணவர்களுக்கு நூல் வழங்கும் சேவையோ, ஆசிரியர்கள் அவற்றினைப் படிக்கும் ஆர்வமோ குறைவாக காணப்படுவதற்கு என்ன காரணம் என்பதை நோக்கினால், நூலகங்களுக்குள் வேறு பாடங்களை நடாத்துவது, நூல்கள் யாருக்கும் வழங்கப்படாமை, நூலகர் இன்மை, நூலகரை வேறுபாடங்களுக்குப் பயன்படுத்துதல், பொருத்தமற்ற இடத்தில் நூலகங்கள் அமைந்துள்ளமை போன்ற பல காரணங்கள் பாடசாலை நூலகத்தின் மகிமை குறைவுக்கு காரணமாக அமைந்திருக்கின்றன. இந்நிலை முழுமையாக மாற்றம் பெறச் செய்வதில் ஆசிரியர்கள், அதிபர்கள் கூடிய கவனம் மெடுத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நூல்களை வழங்கி வாசிக்கச் செய்தல் வேண்டும். எழுத்தறிவுக்கு அடிப்படையாக அமைகின்ற வாசிப்புத்திறனை மேம்படுத்தும் நோக்குடன் பல நாடுகளில் நூலகங்கள்தான் பிரதான பாத்திரத்தை வகிக்கின்றன . யாழ்ப்பாண நூலகம் ஒருகாலத்தில் தெற்காசியாவிலே மிகவும் புகழ்பெற்ற நூலகமாக காட்சியளித்தது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதுபோன்று யாழ்ப்பாணத்தின் அறிவுப்புரட்சியை பொறுக்க முடியாத சிலரின் அட்டகாசங்களினால் யாழ்ப்பான நூலகம் எரியூட்டப்பட்டது. அதன் எதிரொலி இன்று உலகளாவிய ரீதியில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ்மக்களின் வியாபகத் தன்மைக்கும் கட்டியம் கூறிய அந்த யாழ் நூலகம் அனைவரினதும் நெஞ்சினில் ஆழமாகப் பதிந்தமைதான் என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ்வாறு நூலகங்களின் பயனை மாணவப் பருவத்திலிருந்தே பயன்படுத்த, பழக்கப்படுத்த ஆசிரியர்கள், பெற்றோர்கள் உதவ வேண்டும். அறிஞர் ஒருவரின் கூற்றுப்படி “எழுத்தறிவு இல்லாதிருப்பது பெரியதோர் குற்றமல்ல. ஆனால் எழுத்தறிவு இருந்தும் வாசிக்காமல் இருப்பதுதான் பெரிய குற்றமாகும்" எனக்கூறுகின்றார். அப்படியான நிலை தோற்றம் பெறக் கூடாது. வாசிப்பு நூல்களையும், பத்திரிகைகளையும் ஒவ்வொருநாளும் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துதல் உளத்திற்கு நலமாய் அமையும்.
ன்
)ே அகவிழி | மே 2014

சில வருடங்களுக்கு முன்னர் எடுக்கப் பட்ட யுனெஸ்கோவின் தகவலின் படி 29 நாடுகளில் செய்திப்பத்திரிகை இல்லாமலும், உலகின் 50 வீதமான நாடுகளின் நூலகங் களில் உள்ள மொத்த நூல்களில் ஒரு நபருக்கு ஒரு நூலைவிட குறைந்தளவே காணப்படுகின்றன. எனவும் கூறியுள்ளது. ஆனால் இந்த நிலைமைகள் நமது . நாட்டைப் பொறுத்தவரையில் இத்தொகை கணிசமான உயர்வையே காட்டுகின்றது. அதேவேளை நியூசிலாந்து, பின்லாந்து போன்ற நாடுகளில் வாசிப்போர் தொகை கூடுதலாக காணப்படுகின்றது. இந்த விடயத்தில் நாம் பின்தங்கியவர்களாகவே காணப்படுகின்றோம். காரணம் வாசிப்பின் உன்னத பெறுமானம் அறிந்திராதோர் அதிகம். வேறு வேலைகளில் ஈடுபடுவதும், மற்றவர்களின் பிரச்சினைகளில் தலையிடுவதும், வீணற்ற விடயங்களில் காலம் கழிப்பதிலும் அல்லலுற்று திரிகின்ற நிலையில் காணப்படுகின்றனர். இந்த நிலை மாற்றப்பட்டு ஒவ்வொரு பிரதேசத்திலும் உள்ள நூலகங்கள் நல்லமுறையில் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும். எவ்வாறாயினும் புதிய தகவல் தொழில்நுட்பத்திறன்களை இன்றைய நவீன யுகத்திற்கேற்வாறு தகவல் கலாசாரத்தின் அடிப்படையில் தகவல்களைப் பெறவும், மற்றவர்களுக்கு வழங்கவும் முனைப்புடன் காணப் படவேண்டும். கணனிப் புரட்சி உலகை ஆட்டிப்படைக்கும் காலம். எந்தவொரு தொழில் புரிகின்றவர்களும் தமக்கான பணியினை மேம்படுத்துவதற்கு புதிய புதிய தகவல்கள் உள்வாங்கப்படுவதற்கும், மாற்றங்களைக் காண்பதற்கும் வாசிப்பு முக்கிய பங்காற்றுகின்றது. எண்ணும் எழுத்தும் கண்ணெதகும் என்பார்கள். எழுத்துக்கள் எழுதும் பழக்கம் குறைவடைந்து வருகின்ற ஒரு நிலைமை இன்று கணினி யுகத்தின் பரிமாணத்தில் விழுந்துள்ளது. விரலால் தொட்டு எழுத்துக்களை எழுதுவதும், எழுத்துக்களை சேகரித்து வாசிக்கும் நவீன இலத்திரனியல் சாதனங்கள் வியாபித்து, வந்தாலும் வாசிப்பதை தவிர்க்க முடியாது. எதனையும் வாசித்தே அதன் உள்ளார்ந்த கருத்தினை அறிய முடியும். கால் போர் என்கிற அறிஞர் "நல்ல நண்பர்களைத் தேர்தெடுத்ததற்குப் பிறகு அடுத்து நாம் தேர்ந்தெடுக்க வேண்டியது நல்ல புத்தகங்களைத்தான்” என்று கூறுகின்றார். நூல்களினதும், நூலகங்களினதும் முக்கியத்துவங்கள் உணரப்பட்டு வாசிப்பு மேலோங்குவதற்குரிய முயற்சிகளை கற்றலுடன் தொடர்புள்ளவர்கள் அனைவரும் உணர்ந்து செயற்பட்டால் வாசிப்பில் இடர்ப்டாத சமூக கட்டமைப்பினை உருவாக்கலாம் என்பது திண்ணம்.

Page 29
வழிகாட்டலும் ஆற்றுப்படுத்தல
வழிகாசய்ய பாடசாகாக்கும் பிள்த்தத்துடன் .
எழு வினாக்கள் மனவெழுச்சி மற்றும் மன அழுத்தத்துடன் கூடிய பிரச்சினைகளை எதிர்நோக்கும் பிள்ளைகளின் தேவையை நிறைவு செய்ய பாடசாலை முறைமையில் தற்போதுள்ள வழிகாட்டலும் ஆற்றுப்படுத்தலும் நிகழ்ச்சித்திட்டத்தின் போதாமையும் வினைத்திறன் குறைவும் பாடசாலை முறைமையானது போதியளவு ஆசிரிய ஆற்றுப்படுத்துக ரைக்கொண்டிருக்கவில்லை.
பாடசாலை முறைமையில் ஆசிரியர் ஆற்றுப் படுத்துநருக்கான பயிற்சி போதாமையும் வழிகாட்டலும் ஆலோசனையும் தொடர்பில் ஆசிரியர் கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் ஆசிரியர் கல்வி நிகழ்ச்சித் திட்டங்களிலுள்ள குறைபாடுகள்.
பாடசாலை நேரசூசியில் ஆலோசனைக்கான ஏற்பாடுகள் இன்மையும் ஆசிரிய ஆலோசகருக்கும் ஆற்றுப்படுத்துநருக்கும் மாணவருக்கும் பெற்றோருக்கும் இடையில் இடைவினை இன்மை.
ஆசிரிய ஆற்றுப்படுத்துநரது சேவையின் உத்தம பயன்பாட்டினைப் பெறுவதில் பெற்றோர் மத்தியில்
விழிப்புணர்வு இன்மை.
பாடசாலை முறைமையில் தொழில் தகவல் நிகழ்ச்சித் திட்டம் இல்லாமையும் தொழில் வழங்குநர் மற்றும் சமுதாய உறுப்பினர்களின் உதவியுடன் கூடிய தொழிலுக்கு வழிகாட்டல் பற்றி ஒழுங்கமைக்கப்பட்ட முறைமையின்மை.
கல்வியின் முகாமைத்துவ மற்றும் நிருவாக அமைப்பு பாடசாலைமடட் வழிகாட்டல் ஆலோசனை வசதிப்படுத்தப் படவில்லை. அதிபர்கள், மாகாண நிருவாகிகள் மற்றும் வலய அலுவலர்கள் ஆகியோர் உதவிகளை உறுதிப் படுத்துவதற்கான கண்காணிப்பு மற்றும் மேற்பார்வையில் குறைவான ஈடுபாட்டையே கொண்டுள்ளனர்.
பிள்ளைகளில் கணிசமான பகுதியினர் போர் மற்றும் சுனாமி போன்ற அழிவுகளால் உள்ளக ரீதியாக இடம்பெயர்ந்தவர்கள் உள் - சமூக அழுத்தங்கள் மற்றும் நெருக்கீடுகளால் துன்பப்படுகின்றனர்.

வம்
ஆரம்பம்
சிரேட்ட இடைநிலையிலுள்ள மாணவர்கள் தமது பாடங்களைத் தெரிவுசெய்வதில் பிரச்சினைகளை எதிர்நோக்குவதுடன் அவர்களில் பெரும்பாலானோர் க.பொ.த (சா/த) இருந்து இடையில் விலகிவிடுகின்றனர். க.பொ.த (உ/த)க்குப் பின்னர் பல்கலைக்கழகங்களுள் பிரவேசிக்க முடியாதவர்கள் தமது மூன்றாம் நிலைக் கல்வியைத் தொடர்வதற்கான எதிர்கால வாழ் தொழிலுக் கான பாதைகளைத் தெரிவுசெய்வதில் சிரமப்படுகின்றனர்.
பிரச்சினைக்குரிய பிள்ளைகளை ஆய்ந்தறிவதற்கான சோதனைகளின்மையும் அவர்களை விலகல் நடத்தை களுக்கு இட்டுச் செல்வதை இனங்காண்பதற்கும் இடையில் விலகுதல் மற்றும் எதிர் சமூக செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கும் பொருதத் மான ஆலோசனை நிகழ்ச்சித்திட்டங்கள் இன்மை.
முன்ெெமாழிவுகள் பாடசாலை முறைமையில் வழிகாட்டலும் ஆற்றுப்படுத் தலும் முக்கிய கூறாக இருக்க வேண்டும். கல்விசார் ஆற்றுப்படுத்தல் மாணவர்கள் சரியான கற்கை நெறி களைத் தெரிவு செய்வ்வதற்குகும் தனியாள் சமூக ஆற்றுப்ப்படுத்த்தல் ஆளிடை மற்றும் தனியாள் பிரச்ச்சினைகளையும் பிணக்குகளையும் கையாள்வதற்கும் உதவவேண்டும்.
தொழில் வழிகாட்ட்டல் தற்ேேபாதைய தொழில்களின் கட்டமைப்புபு பற்றியும் சர்வதேச தொழில் வாய்ப்புபுகள் பற்றியும் மாணவர்க்கு அறிவூட்ட்ட வேண்டும்.
ஆரம்ப, இடைநிலை வகுப்புக்களைக் கொண்ட சகல பாடசாலைகளும் பயிற்றப்பட்ட ஆளணியைக் கொண்ட வழிகாட்டல் மற்றும் ஆற்றுப்படுத்தல் அலகுகளைக் கொண்டிருக்கவேண்டும்.
வழிகாட்டல் மற்றும் ஆற்றுப்ப்படுத்தல் அலகுகளைக் கொண்ட இடைநிலைப் பாடசாலைகள் அத்தகைய வசதிகள் இல்லாத அயல் பாடசாலைகளுக்கும் தமது சேவைகளை வழங்கவேண்டும். சகல பாடசாலைகளிலும் " இந்த அலகுகள் அமைக்கப்படும் வரை ஒரு நகரும் ஆற்றுப்படுத்தல் சேவை (Mobile Counseling Service) அமுல்ப்படுத்தப்ப்படவேண்டும்.
2014 (S
டொனா: க Lார்கம்)

Page 30
= பட E1 22:
க்ய ப்':
Eான்
hi EE யா யா
ப ய ய
பட க ய பா
எ 9515 -
1பாவது
பார்ப்பாங் 4
பாசிங்க் :====
சகல ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களிடத்தில் வழிகாட்டல் மற்றுறும் ஆற்றுப்ப்படுத்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடியதாக நிகழ்ச்சித் திட்டங்கள் நடைபெற வேண்டும். இதில் பிரச்சினையுள்ள பிள்ளைகளை இனங்காணும் கண்டறிசோதனைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இந்த விழிப்புணர்வு பெற்றார் மத்தியிலும் ஏற்படுத்தப்படவேண்டும்.
வழிகாட்டல் மற்றும் ஆற்றுப்படுத்தல் என்னும் விடயம் பல்கலைக்கழகங்கள் மற்றும் தேசிய கல்வி நிறுவகத்தின் பட்டப்பின் கல்வி டிப்ளோமா , கல்விமாணி கற்கை நெறிகளில் ஒரு கட்டாய பாடமாக கற்பிக்கப்படவேண்டும். கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் நிலையங்கள் நடத்தும் வாண்மை அபிவிருத்தி கற்கை நெறிகளிலும் இது ஒரு மையநிலை பாடமாகவும் சேர்க்கப்பட வேண்டும்.
தேசிய கல்வியியல் கல்லூரிகள் மாகாணமட்ட சேவைக்கால பயிற்ச்சி நெறிகள் மற்றும் பயிற்றுநரைப் பயிற்றும் நிகழ்ச்சித்திட்டங்களில் சேர்த்ததுக் கொள்ளக் கூடிய வழிகாட்டல் மற்றும் ஆற்றுப்படுத்தல் பாடநெறிகளை தேசிய கல்வி நிறுவகம் விருத்தி செய்யவேண்டும். இதற்காக தேசிய கல்வி நிறுவகத்தில் ஒரு அலகு ஸ்த்தாபிக்கப்படவேண்டும். இந்த அலகு தனது நோக்கத்தை அடைவதற்கு வெளியிலிருந்து நிபுணத்துவ உதவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
அகவிழி | மே 2014
28

-- Eாம்.
=ட்கதன்
காப்புப்பட்ட
ட்ட்
EAEEEE=====
பாபEEEEா
பா- EEE பா ப ச
Eயம் -
எE Hiாம்
HE பாக் படப்பம்
கன:5ா-
பயர்ப்பு:
E" == == 2
டய 2141421
மேற்படி வழிகாட்டல் மற்றும் ஆற்றுப்படுத்தல் நிகழ்ச்சித் திட்டங்களை கல்வி அமைச்சு மாகாண கல்வித் திணைக்களங்களுடன் இணைந்து கண்காணித்து மேற்பார்வை செய்யவேண்டும். அதிபர்கள் மற்றும் மாகாண கல்வி அலுவலர்கள் இவ்விடயத்தில் திசை முகப்ப்படுத்தப்பட வேண்டும்.
தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சித் திட்டங்கள் பெற்றார், சமூகம், வாழ்க்கைத்தொழில் பயிற்சி நிறுவனங்கள், பொதுத்துறை மற்றும் தனியார்துறை தொழில் வழங்குவோர் / முகாமையாளர்கள் ஆகியோரது ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஆற்றுப்படுத்தல் என்பது கூடியளவுக்கு பரிகார நடவடிக்கையாக அல்லாது கண்டறிந்து தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
கொள்கைச் சூழமைவு பாடசாலைகளும் ஆசிரியர் களும் மாணவர்களுக்கு கல்விசார் அறிவையும் தமது சுயவிழிப்புணர்வு, ஆளிடைத் தொடர்புகள், சமாளிக்கும் திறன், சமூகத் திறன்கள் மற்றும் சுயகணிப்பு என்ப வற்றுக்கான மனவெழுச்சிசார்ந்த உதவிகளையும் வழங்க வேண்டிய நிலையிலுள்ளனர். இலங்கையிலே முறிந்த குடும்பங்கள், குடும்ப பிணைப்புகள், இழக்கப்படுதல், முரண்பாடுகள், கிளர்ச்சி நிலைமைகள், தற்கொலை மற்றும் உயர் வீதத்திலான பதட்டமும் அழுத்தமும்

Page 31
ஆகிவற்றுக்கு கல்வி முறைமையும் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ பொறுப்பாகவுள்ளது.
தேசிய கல்வி ஆணைக்குழு அறிக்கையின் படி (2003) துரித பொருளாதார மாற்றம், அரசியல் மற்றும் சமூக முரண்பாட்டுச் சூழலில் பாடசாலை முறைமையானது மாணவர்களைப் பாடசாலைக் கலைத்திட்ட மாற்றங்கள் மதிப்பீட்டு ஒழுங்குமுறைகள், தனிப்பட்ட பிரச்சினைகள் மற்றும் மனவெழுச்சிசார் அழுத்தம் என்பவற்றுடன் இணைந்து செல்லக்கூடியவர்களாக ஆயத்தம் செய்தல் வேண்டும். பாடசாலைகளும் ஆசிரியர்களும் உள் - சமூக உதவிகளையும் மனவெழுச்சிசார் உதவிகளையும் பிள்ளைகளுடைய சுய கணிப்பு மற்றும் சமூகத் திறன்களை உறுதிசெய்யக்கூடிய வகையில் வழங்கக்கூடியவர்களாக இருத்தல் வேண்டும். அதே வேளையில், பாடசாலை முறைமையானது, வேலையுலகு மற்றும் தொழிற் சந்தைகளில் உண்டாகும் கேள்வி மாற்றங்கள் பற்றிய விழிப்புணர்வைக் கட்டியெழுப்புவதுடன் வாழ் தொழிலுக்குத் தேவையான தொழில்சார் ஆயத்தங்களை விளங்கிக் கொள்ளவும் மாணவர்களுக்கு உதவுதல் வேண்டும்.
1997 பொதுக்கல்விச் சீர்திருத்தமானது பொதுக்கல்வி முறைமையானது அந்தநேரத்தில் பிள்ளைகளுக்கு ஆலோசனைகளையும் தொழிலுக்கான வழிகாட்டல்களையும் வழங்கவில்லை எனச் சுட்டிக்காட்டியது. சிரேஷ்ட இடைநிலையில் மாணவர்கள் தமது பாடங்களையும் கற்கைத் துறைகளையும் தெரிவுசெய்யுமாறு எதிர் பார்க்கப்படுகின்றனர். பெரும்பாலான மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் சேர முடியாத நிலையில் தமது எதிர்காலத் தொழிற்பாதையைத் தெரிவுசெய்ய அல்லது மூன்றாம் நிலைக் கல்வியை தெரிவுசெய்ய முடியாதவர் களாகக் கஷ்டங்களை எதிர்நோக்கினர். இலங்கையிலுள்ள சராசரிப் பெற்றோர் பெரும்பாலும் ஒன்பதாம் தரம் வரையே பாடசாலைக்குச் சென்றவர்களாதலால், பல்வேறு தொழில்கள் பற்றிய விழிப்புணர்வும் மற்றும் கல்வி முறைமையிலுள்ள பாடத்துறைகள் பற்றிய அறிவும் இல்லாதவர்களாவர். வேறுவிதத்தில் கூறுவதனால், பெரும்பாலான பெற்றோர் தமது பிள்ளைகளுக்கான தொழில் வழிகாட்டல்களை வழங்கும் ஆற்றலற்றவராவர்.
பல தன்மை கொண்ட தொழிற் சந்தை நிலைவர மொன்றில் இன்று கற்கைத் துறைகள், பாடசாலை முறைமையில் சிரேஷ்ட இடைநிலையில் வழங்கப்படும் பாடங்கள், மூன்றாம் நிலைக்கல்விக்கான வழிமுறைகள் மற்றும் எதிர்காலத் தொழில்கள் என்பவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இடம்பெறுகின்றன. இந்நிலைமையானது, க.பொ.த (சா/த) மற்றும் (உ/த) மாணவர்கள் தமது பாடங்களை நியாயமான அடிப்படையில் தெரிவு செய்ய வேண்டுமென வேண்டுவதுடன் ஏனையோர் பல்கலைக்கழக அனுமதியைப் பெறத் தவறுகின்ற சந்தர்ப்பத்தில் மூன்றாம்

நிலைக்கல்வியைத் தொடர்வதற்குப் பொருத்தமான வழியைத் தெரிவுசெய்தல் அல்லது தொழில்வாழ்க்கைக்கு ஆயத்தஞ் செய்தல் வேண்டும்.
இலங்கையிலுள்ள சராசரிப் பெற்றோர் அத்தகைய தெரிவுகளில் தமது பிள்ளைகளுக்கு வழிகாட்டத் தேவையான பின்னணியற்றவர்களாதலால், ஆசிரியர்கள் இத்தகைய அறிவையும் விழிப்புணர்வையும் மாணவர் மற்றும் பெற்றோரிடத்தில் விருத்திசெய்யவேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றனர். இருப்பினும் ஆசிரியர்கள் பலர் தமது பயிற்சியில் தொழிலுக்கு வழிகாட்டுதல் பற்றி அறிந்திராதவராக உள்ளனர். இதனால் பாடசாலை மட்டத்தில் தொழிலுக்கு வழிகாட்டுவதற்கான உடனடி நடவடிக்கைகளை எமது பிள்ளைகளுக்குத் தொடக்கத்தி லிருந்தே சரியான பாதையில் நெறிப்படுத்து வதற்கேற்ற வகையில் ஆரம்பிக்க வேண்டிய தேவையுள்ளது.
தொழிற் சந்தையில் உண்டாகும் மாற்றங்களின் கோலமும், இலங்கையில் தனியார் துறையின் விரிவாக்கத்தின் விளைவும், பாடசாலை விட்டுப் பிள்ளைகள் விலகும்போது தமது தொழில்களைத் தெரிவுசெய்வதில் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். ஏறக்குறைய 2.8 மில்லியன் பேர் வேலைப்படையில் புதிதாக நுழையும் போது வருடாந்தம் பல தன்மை கொண்ட தொழிற் சந்தையை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. கணிசமானளவு பாடசாலையை விட்டுச் செல்வோர், தொழிலுக்கு வழி காட்டும் சேவை தேவைப்படுவோர் இத்தகைய சவாலை எதிர்கொள்கின்றனர். இத்தகைய பின்னணியில், ஜனாதிபதிப் படையணி விதந்துரையொன்றை மேற்கொண்டது (1997). அதாவது பாடசாலையிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு வழிகாட்டலும் ஆற்றுப்படுத்தலும் பற்றிய பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்பதுடன், அவர்கள் ஆலோச . கர்களாகவும் தொழிலுக்கு வழிகாட்டும் உத்தியோகத்தர் களாகவும் தொழிற்பட நேரம் ஒதுக்கப்படுதல் வேண்டும்.
கல்வியமைச்சினால் வழங்கப்பட்ட சுற்றறிக்கை 2001/16 இன்படி, 300 மாணவர்களுக்கு மேற்பட்டவர்களைக் கொண்டுள்ள பாடசாலை ஒவ்வொன்றும் முழுநேரப் பாடசாலை ஓர் ஆற்றுப்படுத்துநரைக் கொண்டிருத்தல் வேண் டும். இச் சுற்றறிக்கையானது பாடசாலை ஆற்றுப்படுத்தும் சேவையின் நோக்கங்கள், பாடசாலை ஆற்றுப்படுத்துநரின் கடமைகளும் பொறுப்புகளும் மற்றும் ஆசிரிய ஆலோசகரின் தொழில்சார் அபிவிருத்தியில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகளைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளது. இம்முயற்சியானது உள் சமூக நிகழ்ச்சித் திட்டத்தை சீர்திருத்தி அதனைப் பாடசாலை முறைமையில்ஒன்றிணைப்பதாகவும் அமைந்தது.
நன்றி : பாராமன்ற குழுக்கான கல்வி அறிக்கை
கல்வி அமைச்சு
டசன்
அகவிழி | மே 2014

Page 32
முகம் நினைவிருக்கிறது... ஆனால்
சீலா சந்தசீலி 'தமிழாக்கம் M.S.M. ஹசன்
சாந்தி ஆசிரியை நகரத்திலுள்ள துணிக்கடையில் தனது மகளுக்கு புது வருடத் துணிகள் வாங்குவதில் ஈடுபட்டிருந்தாள். சாந்தியின் பாடசாலையிலிருந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகிப் போன சரோஜா
அப்போது கடைக்குள் நுழைந்தாள். சரோஜா : ஹாய் பெருநாளைக் கு உடுப் பு
எடுக்கிறீர்களா மிஸ்? ஆசிரியை : (மேலும் கீழுமாக பார்த்த வண்ணம்
பெயரை ஞாபகப்படுத்திக் கொள்ள
முயற்சிக்கின்றார்)
சரோஜா :
என்னை ஞாபகம் இல்லையா மிஸ்? O/L வரை நீங்கள் தானே மிஸ் தமிழ் மொழி படிப்பித்தீர்கள்?
ஆசிரியை : முகம் ஞாபகம் இருக்கின்றது ஆனால்
பெயர்தான் ஞாபகத்திற்கு வரவில்லை.
எந்த ஒருவருக்கும் தனது பெயர் என்பது மிக முக்கியமானது. தனது பெயர் கூறி அழைக்கப்படுவதை எவரும் விரும்புவார்கள். அத்தகைய முக்கியம் வாய்ந்த பெயர் மறந்து போவதால் சிலர் அடையும் சிரமம் சொல்லிவிட முடியாது.
வகுப்பில் படிக்கும் மாணவர்களுள் நண்பர்களின் பெயர்கள் மட்டுமன்றி நெருங்கிய உறவினர்களின் பெயர்களும் மறந்து போவதுண்டு.
அத்தகைய சந்தர்ப்பங் கள் உங் களுக்கு ஏற்பட்டதுண்டா? அதனால் இடைஞ்சல் பட்டதுண்டா? ஒருவரின் எதிரில் அத்தகைய அசெளகரிய நிலை ஏற்பட்டதுண்டா? இந்தக் கடைக்கு வந்த சாந்தி ஆசிரியை தன்னிடம் வந்த மாணவியின் பெயரை மறந்து போனார்.
நாங்கள் பெரும்பாலும் காட்சிகளுள் ஒன்றித்து விடுபவர்கள் என்று உளவியலாளர்கள் கூறி உள்ளனர். நாங்கள் கண்ட விடயங்கள் மனப் பாடமாகப் பதிந்து விடுகிறது. கேட்டவற்றைவிடப் பார்த்தவை நீண்ட காலம் நினைவில் இருக்கும் என்பது உளவியலாளர்களின் கருத்தாகும். பொதுவாக நாம் காணும் உருவம் ஏற்கனவே
அகவிழி மே 2014
30

ஒருமுறை கண்டதொன்றாக இருந்தால் நீண்ட காலம் வரை ஞாபகத்தில் இருக்கும். அவ்வாறு நினைவில் இருக்கும் உருவத்துடன் தான் கண் முன்னே தோன்றும் உருவத்தை ஒப்பிட்டுப் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்கிறோம். சிலர் பெருந்தகையானோரின் பெயர்களை ஞாபகத்தில் வைத்திருப்பர். சில ஆசிரியர்கள் வகுப்பில் உள்ள எல்லா மாணவர்களினதும் பெயர்களையும்
ஞாபகத்தில் வைத்திருப்பர்.
சாந்தி ஆசிரியருக்கு ஏற்பட்ட பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கு என்ன செய்ய வேண்டும் எனச் சற்று ஆராய்ந்து பார்ப்போம்.
நாம் சந்திக்கும் மனிதர்கள் ஆண்களா, பெண்களா, என்ற விடயங்கள் பற்றி நினைவில் வைத்திருப்பது நல்லது. இது ஒரு ஆழமான விடயம் அல்ல. அதனை விட அவர்களின் மனநிலைகள், கொள்கைகள், மன எழுச்சி நிலமைகள், போன்றவற்றுடன் ஒருவகை இணைப்பினை ஏற்படுத்திக் கொண்டு விமர்சனத்தில் ஈடுபடுவதன் மூலம் கூடிய அளவு ஞாபகத்தில் வைத்திருக்க முடியும். சாந்தி ஆசிரியை, சரோஜாவைப் பற்றி மேற்கூறியவாறான விடயங்களில் ஆழமான தொடர்பை வைத்திருந்தாரேயானால் பெயர் மறந்து போக நியாயமில்லை.
சிலர் ஒருவரது பெயருடன் அவரைப் பற்றிய ஏதாவ தொரு சிறப்பான அம்சத்தை அல்லது அடையாளத்தை ஞாபகத்தில் வைத்திருப்பார். நான் இன்று மகேந்திரனைச் சந்தித்தேன். அவனுக்கு நீண்ட மூக்கு, பெரிய வட்டமான கண்கள், என்று இவ்வாறு ஒருவரின் பெயருடன் ஒரு விசேட அடையாளத்தை ஞாபகத்தில் வைத்திருந்தால் இலகுவில் மறந்து போகாது. இது ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
கற்றலின் போது அது போன்ற நியமங்கள் செல்வாக்குச் செலுத்தும்.
ஒன்றை இனங்கண்டு கொள்ளல் (Recongnize) இலகுவாக இருக்கும். ஆனால் அதை ஞாபகத்துக்கு கொண்டு வருதல் (Recall) சிரமமாக இருக்கும். இந்த விடயமும் ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

Page 33
சரி இப்போது நாங்கள் ஓர் உதாரணத்தைப் பார்ப்பபோம். 1. தரப்பட்டுள்ள ஆண்டுகளில் இருந்து சரியான
விடையைத் தெரிவு செய்து கீழ்க் கோடிடுக : ஆங்கிலேயர் கண்டியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த ஆண்டு (1942, 1948, 1848, 1815)
2.
ஆங்கிலேயர் எத்தனையாம் ஆண்டில் கண்டியைக் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவந்தனர்? இரண்டாவது வினாவின் போது நினைவைப் புதுப்பிக்க வேண்டிய
நிலை (Recall) இவற்றுள் எம்முறை மிகவும் இலகுவானது என்பதை நீங்கள் உங்களுக்குள்ளேயே விசாரித்துப் பாருங்கள். இவ்வாறான கட்டுரை வகை, பல்தேர்வு வகை வினாக்களுள் உங்களுக்கு மிகவும் இலகுவானது எது என்று சிந்தித்துப் பாருங்கள்.
பல்தேர்வு வினாக்களுக்கு விடை எழுதுவதைப் போன்றே, உறுதிப்படுத்துதல் அல்லது இனங்காணுதல் என்ற விடயமும் முக்கியமாகின்றது . கட்டுரை வகை வினாக்களின் போது ஞாபகத்துக்குக் கொண்டு வரும் முறையைப் பின்பற்ற வேண்டி உள்ளது.
இவ்வாறு எமக்குக் கேட்கும் சொற்களை அல்லது விடயங்களைவிட படங்கள், முகங்கள், காட்சிகள் போன்றவற்றை ஞாபகத்தில் வைத்திருக்கும் ஆற்றல்

அதிகரிக்கும். ஏற்கனவே சந்தித்த ஒருவரை மீண்டும் இனங்கண்டு கொள்வது இலகுவானது.
ஒரு கடிதத்தை இலகுவாக வாசிக்கக் கூடியதாக இருப்பதற்குக் காரணம் அதில் உள்ள சொற்கள் ஏற்கனவே எமக்கு அறிமுகமானவைகளாக இருப்பதாகும். அத்தகைய சொற்கள் எமது நினைவுக் களஞ்சியத்தில் வைக்கப் பட்டுள்ளதால் புதிதாக கூடிய கவனம் செலுத்தி சிரமப்பட்டு ஞாபகப்படுத்த வேண்டியதில்லை. அதனால் தான் இலகுவாக வாசிக்க முடிகிறது.
இதனால் தான் ஏற்கனவே படித்த அல்லது வாசித்த ஒன்றை இனங்காணல் முறையால் கற்பதற்கு எடுக்கும் நேரம் குறைவாக உள்ளது. பல தகவல்கள் பெட்டகத்தில் பூட்டி வைக்கப்பட்டுள்ளமையால் மிகச் சரியாக ஞாபகத்திற்கு வருகிறது. ஒருமுறை படித்தவை சற்று மறந்திருக்கும் நிலையில் மீண்டும் கற்பது வினைத்திறன் மிக்க கற்றலுக்கு வழிகோலும்.
செவிமடுத்த விடயத்தை விட பார்த்த விடயம் அதிக நினைவில் இருக்கும். ஒருவரின் முகம் ஞாபகத்தில் இருந்தாலும் பெயர் மறந்து போகக் காரணம் காட்சி முக்கியத்துவம் பெறுகின்றமையாகும். கற்ற பின் நினைவுக்குக் கொண்டு வருவதைவிட கண்ட பின் இனங் 8 கண்டு கொள்ளல் இலகுவானது.
அகவிழி | மே 2014 (5)
டொரன 7,4லகம்
17 " "

Page 34
கலைச் சொல்லாக்கம்
'சாமுவேல் ஃபிஷ்கிறின்
* எ எ :
ஐரோப்பிய அறிவியலை தமிழில் தரும் முயற்சிகளின் விளைவாக தமிழில் அறிவியல் எழுதுமுறையும் (Science Writing) கலைச்சொல்லாக்கவியல் துறையும் தோற்றம் கண்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடந்த கலைச் சொல்லாக்க முயற்சிகளை விவரிக்கிறது கட்டுரை ஐரோப்பிய அறிவியலை தமிழில் தரும் முயற்சிகள் முதன்முதலில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டது. ப இலங்கைக்குச் சமயப் பணி செய்யவந்து, தன் பெயரை பெரிய சஞ்சீவநாத சுவாமிகள் என மாற்றம் செய்து கொண்ட கிருத்துவச் சமயத்துறவி ஒருவர் பதினேழாம் நூற்றாண்டில் கிரிஸ் நாட்டில் வழக்கில் இருந்த அறிவியல் உண்மைகளை தொகுத்து ஓலைச்சுவடிகளில் எழுதினார். அவர் காலத்தில் அச்சு முறைகள் வழக்கில் இல்லாததால் அவருடைய முயற்சிகள் அச்சேறவில்லை. (அச்சுவடி "அண்டபின்ட வியாக்கியானம்" என்று தலைப்பில் 1874
ஆம் ஆண்டு அச்சேறியது).
1818 இல் சென்னையில் கிருத்துவ சமயத் துண்டறிக்கைச் சங்கத்தை தொடங்கிய இரேனியுசு பாதிரியார் பொதுமக்களுக்காக காலரா தொடர்பான துண்டறிக்கையை வெளியிட்டார். (ஹென்ரிமோரிஸ் : 1906) இதனையடுத்து இரேனியுசு 1832 இல் “பூமி சாஸ்திரம்” என்ற அறிவியல் நூலை வெளியிட்டார் தமிழின் முதல் அறிவியல் நூலான பூமி சாஸ்திரத்தின் முன்னுரையில் இரேனியுசு இம்முயற்சியைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.
நீங்கள் குடியிருக்கிற தேசத்தின் வயனங்களையும் இந்தத் தேசமே அடங்கிய பூமியின் வயனங்களையும் அறியாமல் இந்தக் தேசமே பூலோகமென்று அநேகர் நினைக்கிறபடியினாலே, நான் அந்த வயனங்களை உங்களுக்கு அறிவிக்க விரும்பி, ஐரோப்பா கண்டத்திலுள்ள கல்விமான்கள் பூமியைக் குறித்து செய்தபுத்தகங்களை பார்த்து பூமி சாஸ்திரமெனப்பட்ட இந்தப் புத்தகத்தைச் செய்தேன் (இரேனுசு 1832:3)
எ ன உ உ 9 4 la * * 5
V |
- 0 ம் த
ஈTo7
எn சீனா
இரேனியுசுவும் கலைச்சொற்களும் பூமி சாஸ்திரத்தில் பயன்படுத்தப்பட்ட கலைச்கொற்களை இரேனியுசு "நாமங்கள்” என்றே அழைக்கிறார். இந்
'N)

ாலில் “பூமி சாஸ்திரத்திலே குறிக்கப்பட்டிருக்கிற ாமங்களின் அட்டவணை" என்ற பெயரில் 51 கலைச் சாற்களடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளார். அவர் லைச் சொல்லாக்கத்துக்கு எந்தவித கோட்பாடுகளைக் டைப்பிடித்தார் என்பதை அறிதற்கில்லை. இரேனியு ) லைச்சொல் பட்டியலே தமிழில் முதல் கலைச் சொல் ட்டியலாகும் இரேனியுசே தமிழின் முதல் கலைச் சால்லாக்குனரும் (Science Terminologist) ஆவார்.
ாமுவேல் ஃபிஷ்கிரினும் அறிவியல் நூல்களும்
பூமி சாஸ்திரத்துக்கு அடுத்து ஒரு சில அறிவியல் ரல்கள் வெளிவந்து இருந்தாலும் நமக்கு பார்வைக்கு ைெடப்பவை சாமுவேல் ஃபிஷ்கிறினின் அறிவியல் நூல் கள் மட்டுமே. மருத்துவப்பணிகள் செய்ய 1847ஆம் ஆண்டு அமெரிக்க மிஷன் சார்பாக இலங்கைக்கு வந்த சாமுவேல் ஃபிஷ்கிறின் சுதேசிகளில் மருத்துவர்களை
ருவாக்க விரும்பினார். சுதேசிகளுக்கு முதலில் ஆங்கில வழி மருத்துவக் கல்வியை கற்பித்து தோல்வியடைந்தார். எனவே சுதேசிகளின் தாய்மொழியாக தமிழில் மருத்துவக் கல்வியை வழங்கத் திட்டமிட்டு தமிழ் மொழியைக் கற்றார்.
அவர் தமிழ் கற்றுக் கொண்ட முறை பற்றி அம்பிகைப்பாகன் பின்வருமாறு கூறுகிறார்.
"தமிழ் காற்றுப்பாண்டியத்தியம் பெறும் நோக்கத்தைக் கைவிடவில்லை, அதற்கும் இரு வழிகளைக் கையாண்டார். நம்மிடம் வந்த நோயாளிகளுடன் தமிழில் பேசியதன் மூலம் வழக்குச் சொற்களையும் தமிழ் உச்சரிப்பையும்
யின்றார்.
ஆசிரியர் ஒருவரிடமும் முறைப்படி கிரமமாகத் தமிழ்கற்றுத் தேர்ச்சிப்பெற்றார். (அம்பி.1995:35)
தமிழை முறையாகக் கற்றுக் கொண்ட கிறின் ஐரோப்பாவில் அன்றைய நாட்களில் புகழ்பெற்றிருந்த மருத்துவ நூல்களில் பதிப்பாளர்களின் அமைதியுடன் மிழில் மருத்துவ அறிவியல் கலைச் சொல்லகராதிகளையும் யாரித்தார்.

Page 35
பெட்ரா :
அவருடைய நூல்கள் வருமாறு: அங்காதிபாதம் சுரேணவாதம் உற்பாலனம் (1852,1857) பிரசவ வைத்தியம் (1857) இரண வைத்தியம் (1867) அங்காதிபாதம் (1872) வைத்தியாகரம் (1872) கெமிஸ்தம் (1875) மனுவிக்கரணம் (1883) மனுஷசுகரண கலைச்சொற்கள் (1872) அருஞ் சொல்லகராதி (1875)
கலைச் சொல்லாக்கம்
தமிழின் முதல் கலைச்சொல்லாக்குனரான இரேனியுசு கோட்பாடுகளையும் எதுவும் பயன்படுத்தவில்லை. ஆனால் கிறீன் கலைச் சொல்லாக்கத்துக்கு விதிகளை வகுத்துக் கொண்டதுமட்டுமல்லாது அவற்றை தம் நூலின் இறுதியில் வெளியிட்டுள்ளார். எனவே கிறீன் தமிழின் முதல் அறிவியல் கலைச்சொல் கோட்பாட்டாளர் என்ற பெருமையையும் பெறுகிறார்.
கிறீனின் கலைச்சொல்லாக்க கோட்பாடு வருமாறு:
சொல் இணைக்கமும் சுருக்கமும் ஓசையுமாயிருக்கவும்
= -
2 II
அச் சொல் தமிழில் உண் டோவென்று பின் சொல்லப்படும் எட்டு விதங்களுள் ஓர் விதப்படி
முதலில் தேடிப்பார்க்கவும். 1. ஒரு மொழியாவது தொடர் மொழியாவது
வழங்கிவரும் சொல்லை நல்லதென்றெடுக்கவும்.

2. வழக்கமான உரிய சொல்லில்லாதிருந்தால்
சற்றே கருகலானாலும் குறிப்பான சொல்லாய் எடுக்கவும்.
3.
குறிப்பான தனிமொழி இரண்டாவது பகவாவது சேர்த்து ஓர் சொல்லாக்கவும்.
குறிப்பான பகுதியும் விகுதியும் சேர்த்து சொல்லாக்கவும்
7.
குறிப்பான ஓர் பகுதியும் ஓசையான யாதேனும் ஓர் ஈற்றசை சேர்த்து வேறுபடுத்தி சொல்லக்கவும். இங்கிலீஸ் மொழி மூலத்தின் பயனையுள்ள சொல் தெரிந்தெடுக்கவும்.
ஒரு பயனுக்கு பல மொழியாவது ஒரு மொழிக்கு பல பயனாவது இருந்தால் சொல் தேவைக் கிணங்கிய பொருள்பட அதை வரைவுப்பண்ணிக்
கொள்ளவும்.
8.
இங்கிலிஷ் தொடர் மொழியின் உறுப்புக்களை தனித்தனியே மொழி பெயர்த்து அம்மொழிக்கு
சரியான சொல் பிறக்க இவைகளை புணர்க்கவும் III பூரணமான சொல் தமிழிலே பெற வழுவும்போது
பின்காட்டப்படும் பத்து விதிகளுள் ஓர் விதிப்படி சமஸ்கிருதத்தில் தேடவும். 1. இங்கிலிஷ் சமஸ்கிருத அகராதி ஒன்றில் பார்த்து
அதிலே தெரிந்து கொள்ளவும்.
சமஸ்கிருத இங்கிலிஷ் அகராதி ஒன்றிலே தெரிந்தெடுக்கவும்.
இவ்விரு அகராதிகளும் சரியொத்து காட்டும் சொல்சிறந்ததென்றெடுக்கவும்.
4.
பெயரிடப்பட வேண்டிய பொருளுக்கு உரிய சொல் காணாதிருந்தால் அப்பொருளின் குறிப்புக் களில் ஒன்றையாவது பலவையாவது வாடிக்கைப் படாத ஓர் சொல்லை அதற்குரியதாக்கவும்.
5.
குறிப்பான தனிமொழி இரண்டாவது பலவாவது சேர்த்து ஓர் சொல்லாக்கவும்.
காரியத்திற்கு அதிக இணக்கமானால் ஏற்றபகுதி விகுதி சேர்த்து ஓர் சொல் ஏற்படுத்தவும்.
லா -
8.)
இங்கிலிஷ் மொழிமூலத்தின் பயனையுள்ள ஓர் சொல்லாகவும்.
ஒரு பயனுக்கு பல மொழியாவது மொழிக்கு பல பயனாவது இருந்தால் சொல் தேவைக் கிணங்கிய பொருள்பட அதை வரைவு பண்ணிக் கொள்ளவும்.
அகவிழி | மே 2014 8

Page 36
- 9..
தொடர்மொழிகள் யாதொன்றின் உறுப்புக் கிணக்கமான தமிழ்மொழி உண்டானால் அதை ஆரிய மொழியுடன் சேர்த்து சில இடங்களில் வழங்கலாம்.
10. இங்கிலிஷ் தொடர்மொழியின் உறுப்புக்களை
வெவ்வேறாய் மொழி பெயர்த்து இதன்வழி இவைகளை புணர்த்தவும்.
IV.
தமிழாவது சமஸ்கிருதத்திலாவது சொல்காணாதபோது பின் சொல்லப்படும் மூன்று விதங்களில் ஓர் விதிப்படி இங்கிலிஷ் சொல்லைச் சேர்க்கவும். 1. சொல்லை அதன் ஒலிப்படி தமிழ் எழுத்தால்
எழுதிக்கொள்ளவும். 2. தேவையான இடங்களில் இணக்கமான
விகுதிகூட்டி அதை வேறுபடுத்திக் கொள்ளவும்.
3.
தொடர் மொழி யாதொன்றின் உறுப்புக்கு வாடிக்கைப்பட்ட தமிழ்மொழி உண்டானால் அதை இங்கிலிஷ் மொழியொடு சேர்த்து
சொல்லாக்கவும் (கிறின் 1857:205) "கிறீனின் இக்கோட்பாடு சொற்களை முதலில் தமிழிலும், பின் சமஸ்கிருதத்திலும் பின் ஆங்கிலத்தில் கலைச் சொற்களை ஆக்கிக்கொள்ள வழிகாட்டுகிறது.
பதிவமைப்பு கிறீனின் இக்கோட்பாட்டின்படி தாம் ஆக்கிக்கொண்ட கலைச் சொற்களை தம் நூல்களின் இறுதியில் அருஞ்சொல்லகராதி என்ற தலைப்பில் தமிழ் - ஆங்கிலம், ஆங்கிலம் - தமிழ் என்ற பதிவமைப்பு முறையில் வெளியிட்டுள்ளார். பெரும்பாலான கலைச்சொற்களின் இறுதியில் தாம் உருவாக்கிய கலைச்சொற்களை அனைவருக்கும் புரியும் வகையில் தமிழில் ஆக்கப்பட்ட சொல்லை (T.1) எனவும் சமஸ்கிருதத்தில் ஆக்கப்பட்ட சொல்லை (S.2) எனவும் ஆங்கிலத்தில் ஆக்கப்ட்ட சொல்லை (E.1) எனவும் குறிப்பிட்டுள்ளார்.
T.S.E. இவைகளுக்கு அடுத்தப்படியாக வரும் எண்கள் முறையே தமிழ் சமஸ்கிருத ஆங்கில கலைச் சொல்லாக்க விதிகளை குறிப்பவை. T1 அனுமானம் - inference S.3 அபசஞ்சாரி - Disinfectant E.1 அல்புமின் - Albumen
சில கலைச்சொற்களுக்கு எந்த விதிகளின்படி ஆக்கப்பட்டன என்பதற்கு எந்தவித குறியீடுகளும் இடம் பெறவில்லை. சில கலைச்சொற்களுக்கு சமஸ்கிருத, ஆங்கில சொற்களும் இடம் பெறவில்லை. சில கலைச்
அகவிழி | மே 2014
34

சொற்களுக்கு சமஸ்கிருத ஆங்கில சொற்களும் இடம் பெற்றுள்ளது.
எ +கா. chorold - கோறடு (E.1) தாரகம் (S.1) கிறீனின் கலைச்சொற்களில் சமஸ்கிருத சொற்களே அதிகம் காணப்படுகின்றன. கலைச்சொற்களை உருவாக்கும் போது 1832 இல் கல்கத்தா நகரிலிருந்து வெளிவந்த. வில்சன் என்பவர் தயாரித்த சமஸ்கிருத ஆங்கில அகராதியையும், வில்லியம்ஸ் என்பவர் 1836ஆம் ஆண்டு இலண்டனில் இருந்து வெளியிட்ட ஆங்கில சமஸ்கிருத அகராதிகளையும் பயன்படுத்தியுள்ளார். பெபரிஷியஷ், ராட்லர் போன்றோர் தயாரித்த தமிழ் அகராதிகள் கிறீனின் காலத்தில் இருந்துள்ளன. இவை அவருக்கு கிடைத்தனவா என்பது அறிதற்கில்லை.
வேதியல் கலைச்சொல்லாக்கம்
மருத்துவக் கலைச்சொற்களை தமிழில் உருவாக்கிய கிறீன்வேதியல் கலைச் சொற்களை உருவாக்குவதற்கு சில சிறப்பு விகுதிகளை பயன்படுத்தியுள்ளார்.
(கிறீன் 1875:455-516)
முடிவுரை
கிறீனின் கலைச்சொற்களில் அதிக அளவில் சமஸ்கிருத சொற்களும், ஆங்கிலச் சொற்களுமே இடம்பெற்றுள்ளன. தமிழ்மொழியில் அறிவியல் பூர்வமான சொல்லாக்கத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய கிறீன் அன்றைய காலகட்டத்தில் சமஸ்கிருத தாக்கத்துக்கு உள்ளாகியதில் வியப்பில்லை. மேலும் அவருடைய காலகட்டத்தில் வெளியான ஆங்கில - தமிழ், தமிழ் - ஆங்கில அகராதிகள் அவருக்கு கிடைத்திருக்குமானால் தமிழ் சொற்களும் அவருடையப் பட்டியலில் இடம் பெற்றிருக்க கூடும். கிறீனின் நூல்களில் இடம் பெற்ற கலைச்சொற்களை முழுமையாகத் தொகுத்து இன்றைய கலைச் சொற்களுடன் ஒப்பிடும் முயற்சிகள் எதிர்காலத்தில் தேவை.
- .
பார்வை நூல்கள்
1.ம்
இரேனியுசு, பூமி சாஸ்திரம், சென்னப்பட்டினம் சார்ச்மிசியோள் அச்சுக்கூடம், சென்னை, 1832. சமூல் பி.கிறின் இரணவைத்தியம், அமெரிக்க மிஷின் அச்சகம்
யாழ்ப்பாணம், 1867. கெமிஸ்தம் நாகர்கோயில் லண்டன் மிஷன் அச்சியந்திரசாலை, நாகர்கோயில் 1875. அம்பிகைபாகன் , மருத்துவத் தமிழின் முன்னோடி டாக்டர் கிறின், தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சென்னை 1995.
Henry morris The life john Murdoch Christion literature Society madras 1906

Page 37
இலங்கையில் கல்வி வளர்ச்சி யுனெஸ்கோவின் உதவியுடன் எதிர்காலத்
னர்
சகலருக்கும் கல்வி (ரிபிதி) யுனெஸ்கோவைப் போன்றே கல்வியில் 2015 ஆம் ஆண்டளவில் சகலருக்கும் அடிப்படைக் கல்வி என்பதை அடைந்து கொள்வதே இலங்கை அரசின் பிரதான நோக்காக உள்ளது.
1990 ஆம் ஆண்டில் தாய்லாந்தில் உள்ள - ஜோம்தியனில் ஆறு பரிமாணங்கள் இனங்காணப்பட்ட துடன் செனகலில் உள்ள டாகர் இல் 2000 இல் இடம்பெற்ற உலகக் கல்வி பேரவையில் இலக்குகளும் உருவாக்கப்பட்டன. 2015 இல் சகலருக்கும் கல்வியை அடையும் நிகழ்ச்சித் திட்டம் இதில் முக்கிய இடம் பெறுவதுடன் சகல சர்வதேச தரப்பினர்களினை ஒருங்கிணைத்தல் மற்றும் உலகளாவிய இயங்கு தன்மையை பேணுவதற்கும் யுனெஸ்கோ பொறுப்பாக உள்ளது.
சகலருக்கும் கல்வி என்ற திட்டம் ஆறு இலக்கு களைக் கொண்டுள்ளது.
2015 ஆம் ஆண்டளவில் சகலருக்கும் கல்வியின் இலக்குகளை அடைவதே இலங்கையில் யுனெஸ்கோவினை உதவியளிக்கப்படும் நிகழ்ச்சித் திட்டங்களின் பிரதான குறியிலக்குகளில் ஒன்றாக உள்ளது.
இலங்கை அரசாங்கம் இவ்வுலக மகாநாடுகளில் பங்குபற்றியதுடன் சகலருக்கும் கல்வியின் இலக்கு களின் அடிப்படைகளை ஏற்றுக் கொண்டதுடன் அவற்றை அடைந்து கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளையும் பூரண அர்ப்பணிப்புடன் முன்னெடுத்து வருகின்றது. 2015 யில் சகலருக்கும் கல்வி இலக்குகளை அடைந்து கொள்வதற்கு மூன்று கட்டங்களில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இலங்கை திட்டமிட்டுள்ளது.
ை
எழுத்தறிவு வீதத்தில் 92.5 த்தினைக் கொண்டுள்ள இலங்கை தென்னாசியா நாடுகளில் இரண்டாம் இடத்தை வகிப்பதுடன் 2015 யில் 100 எழுத்தறிவு மட்டத்தினை அடைந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். சகலருக்கும்

திட்டங்கள்
|--
||
கல்வி இலக்குகளை அடைவதற்கும் தரமான கல்வியினை மேம்படுத்துவதற்கும் தொடர்புடைய துறைகளில் கணிப்பீடு மற்றும் கண்காணித்தலை கால ஒழுங்கில் மேற்கொள்வது முக்கியமாகவுள்ளது.
சமாதானமான ஐக்கியம், சுகாதாரம், சூழல், பொருளாதாரம், சமூக எழுவினாக்கள் பற்றிய விழிப்புணர்வுக்கான பொருத்தமான விழுமியங்கள் மனப்பாங்குகள், நடத்தைகளில் உள்ள திறன்களை இது உள்ளடக்குகின்றது. இத்தகைய வாழ்க்கைத் திறன்கள் மக்களின் மனங்களை மாற்றி அமைப்பதுடன் பாதுகாப்பான சுகாதாரமான மேலும் செல்வம் பொருந்திய உலகினை உருவாக்குவதற்கு இட்டுச் செல்வதுடன் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தவும் செய்கிறது.
சமாதானம் நிலையான அபிவிருத்திக்கான கல்வி, தற்போதைய பயங்கரவாதச் சூழல், புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றம் ஆகியவற்றை குறிப்பாக உள்ள டக்கிய வகையில் ஒரு பூகோள முயற்சியொன்றாக விளங்குதல் வேண்டும்.
கல்வி அமைச்சினால் 2008 மார்ச் மாதம் சமூக ஐக்கியம் சமாதானத்திற்கான கல்வி தொடர்பான செயற்பாடுகளின் விரிவான பணிச்சட்டகமும் ஒரு தேசிய கொள்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பல்கலைக் கழகங்களின் பீடங்கள், தேசிய கல்வி ஆணைக்குழு, தேசிய கல்வி நிறுவகம், மாகாண மற்றும் வலய கல்விப் பணிமனைகள், தேசிய கல்வியற் கல்லூரிகள், தேசிய பாடசாலைகள், யுனெஸ்கோ, உலக வங்கி ஆகியவற்றின் பங்களிப்புடன் மிஹிணு இன் உதவியுடன் இது தயாரிக்கப்பட்டுள்ளது.
சகல தரப்பினரும் உள்ளடங்கும் வகையிலும் சமுதாயங்களையும் உள்ளடக்கிய வகையிலும் பாடசாலைகளுக்கப்பால் இவ் எண்ணக் கருக்களை முன்னெடுப்பதன் ஊடாக, சமாதானம், நிலையான அபி விருத்திக்கான கல்வியை கண்காணிக்கவும் அமுலாக்கவும் ., தேசிய அளவிலான முயற்சியொன்றை முன்னெடுக்க இ திட்டமிடப்பட்டுள்ளது. சமாதானம், நிலையான அபிவிருத்திக்கான இந்த தேசிய நடவடிக்கைத் திட்டங்கள்
6
பாட சா:ை
ளை
அகவிழி | மே 2014 (8)
இட 35.!! *,

Page 38
மேன்மைதகு ஜனாதிபதி அவர்களது தலைமையின் கீழ் உள்ள தேசிய நிலையான அபிவிருத்தி சபையின் உத்தேச திட்டமொன்றின் பகுதியொன்றாக அமுலாக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
:ை
• ஆங்கில ஆசிரிய பயிற்சி இணைப்பு மொழி என்ற வகையில் ஆங்கில மொழியை மேம்படுத்துவதற்காக வேண்டி இலங்கை தேசிய ஆணைக் குழுவானது சமாதான செயலொழுக்க ஒருங்கிணைப்பதற்கான செயலகத்துடன் இணைந்தும், ஐ.அமெரிக்க தூதுவராலயம், இடைப் பகைபாட்டுக் கல்வி மற்றும் விருத்திக்கான ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழக நிறுவனத்தில் ஆங்கில மொழி நிகழ்ச்சித் திட்டம், ஆங்கில மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான ஜனாதிபதி பணிப்புரை ஆகியவற்றின் பங்குடமையுடன், அதிசிறப்பான நகர நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் வடக்கு கிழக்கு வட மத்திய மாகாணங்களில் உள்ள பாடசாலைகளுக்கு ஆங்கில ஆசிரியர் பயிற்சிகளை வழங்குகின்றது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பில் இருந்து தலா 10 பேர்களும் அனுராதபுரம், பொலனறுவை மாவட்டங்களில் இருந்து தலா 5 பேர்களும் தேர்வு செய்யப்பட்டு ஒரு பயிற்சி நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் கல்வி அமைச்சு ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு ஆசிரிய பயிலுநர்களுக்கும் கலைத்திட்ட விருத்தியாளர்களுக்கும் இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஆரம்பிக்கக் கூடிய தக்க தருணம் இதுவே என நம்புகிறது. ஊடகம் மற்றும் தகவல் நாட்டின்
அபிவிருத்தியில் பிரதான வகிபங்கை ஆற்றுகின்றன.
ஆசிரியர்கள், ஆசிரிய கல்வியாளர்கள், கல்வித் துறைவாண்மையாளர்கள் என்ற வகையில் முறைசார் கல்வித் துறையில் குறிப்பாக பாடசாலைகள் மற்றும் வகுப்பறைகளில் எவ்வாறு கருத்துச் சுதந்திர எண்ணக் கருவையும் தகவல்களை பெறுவதையும் எவ்வாறு அமுலாக்க முடியும் என சிந்திக்க வேண்டியுள்ளது. அறிவைப் பெறுவதானது அபிவிருத்தி அடைந்த, அபிவிருத்தி அடைந்து வரும், அபிவிருத்தி குன்றிய நாடுகளுக்கு இடையில் நாடொன்றின் புலக் காட்சியை வித்தியாசப்படுத்துவதாக உள்ளது. ஆகவே, ஊடகம் தகவல் எழுத்தறிவு ஓர் ஆசிரியருடன் ஓர் ஊடக *விடயத்துடன் மட்டுப்படுத்தப்படாமல் இருத்தல் வேண்டும். ஏனெனில் ஊடகம் விஞ்ஞானம், பண்பாடு, கணிதம், சமூகக்கல்வி, உயிரியல் போன்ற எப்பாடங்களாலும் அவற்றை கடந்த வகையில் சகலவற்றையும் அது உள்ளடக்குகின்றது. இதன் பரந்து பட்ட தன்மையின் காரணமாக பாடசாலை, வகுப்பறைகளது விருத்திகள் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட சகல
8 அகவிழி (மே 2014

மக்களுக்கும் அடைய வேண்டும். இதனால், இவர்கள் சரியான தகவலை இலகுவாகப் பெறக் கூடியதாயிருக்கும்.
அத்துடன் சரியான தகவல்களை பயன்படுத்தி அவர்கள் வழிப்படுத்தப்படல் வேண்டும். குழந்தைப் பருவத்திலும் கூட இத்தகைய திறன்களை இவர்கள் விருத்தி செய்ய முடியும். ஏனைய விடயங்களில் நாளாந்தமும், கற்றல் செயன்முறைகளில் இது 4ஸி பிரச்சினையாக இருக்கப் போவதில்லை.
மாணவர்கள் அறிக்கையிடல் விளம்பரப்படுத்தல், திரைப்பட ஆக்கம், வீடியோ எடுத்தலில் திறன்களை வளர்ப்பார்களாயின் ஊடகத்தை அவர்கள் ஆக்கபூர்வமான துறைக்குக் கொண்டு வருவதுடன் அவர்கள் வளர்ந்ததுடன் அதில் வேலை வாய்ப்பும் பெறக்கூடியதாயிருக்கும்.
உயர் கல்வி
உயர் கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்களுக்கு வழங்கக்கூடிய பூகோள எண்ணக் கருக்கள், கொள்கை, ஆலோசனை, இயலளவு கட்டியெழுப்பல் , பூகோள புள்ளியியலும் தகவலும், சிறந்த நடைமுறைகள் தரமான தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் வழிவகைகள், முகவர்கள், உயர் கல்வித் தகைமைகளுக்கான அங்கீகரிப்பு, எல்லை கடந்த கல்வி, திறந்த கல்வி ஆகிய வற்றை வழங்குகின்றது. மேற்கூறப்பட்ட துறைகளில் யுனெஸ்கோவின் தேர்ச்சிகளைப் பயன்படுத்துவதில் இலங்கை அரசு மிகுந்த கரிசனை கொண்டுள்ளது.
சகலருக்கும் தரமான கல்வியை மேம்படுத்துவதற்காக யுனெஸ்கோ மற்றும் அபிவிருத்தி முகவர்களுடன் ஒன்றிணைந்து இலங்கை அரசின் கல்வி அமைச்சு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ள கொள்கைகள் அமுலாக்கப்பட்டுள்ள காட்சி அடிப்படையிலானதும் கருத்துரைக்கக் கூடியனவாகவும் உள்ளன. எனினும் சேவையளிப்பில் ஈடுபட்டுள்ளவர்களின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துவதற்கான சவால் காணப்படுவது டன் காலம் வரும்போது மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் இம்முயற்சிகள் அமைய வேண்டும். சகல துறைகளிலும் தரமான கல்வியளித்தல் மற்றும் கல்வி விநியோகத்தை அளித்தல் உலகின் சகல நாடுகளிலும் உண்மையிலேயே ஒரு பயமுறுத்தும் பணியாக காணப் படுகின்றது. எதிர்கால சந்ததியினருக்காக அமைக்கப்படும் இச்சிறந்த நடவடிக்கைகள் கல்வி நிருவாகிகள் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், அரசு, அபிவிருத்தி முகவர்கள், சமுதாயங்கள், பொது தனியார் துறையினர் என சகல தரப்பினரது அர்ப்பணிப்பான கூட்டு முயற்சியுடன் முன்னெடுக்கப்படல் வேண்டும். யுனெஸ்கோவுக்கான இலங்கை தேசிய ஆணைக்குழு
வெளியிட்டுள்ள அறிக்கையின் சில பகுதிகள்

Page 39
ஒளிப்படம் போன்ற ஞாபகம்...
சாந்தி ஆண்டிறுதிப் பரீட்சை எழுதி முடித்து வந்து இப்படிக்
கூறினாள்: நான் பரீட்சை வினாத்தாள்களுக்கு நன்றாக விடை எழுதினேன். பாடப் புத்தகங்களின் பக்கங்கள், படங்கள், அத்தியாயங்கள், பந்திகள் எல்லாம் கண் முன் இருப்பது போல உணர்ந்தேன். ஆசிரியர் படிப்பித்தவை எல்லாமே ஞாபகத்துக்கு வந்தன. நான் எப்போதும் பரீட்சைகளின் போது பிரதி பண்ணி விடை எழுதுவதாக ஆசிரியர்கள் குறை கூறுவதுண்டு. எனினும் நான் ஒரு நாளும் எந்தப் பரீட்சையிலேயும் விடைகளைப் பார்த்து எழுதியது கிடையாது.
உங்களது ஞாபகமும் சாந்தியின் ஞாபகத்தைப் போன்றதா எனப் பரிசீலித்துப் பாருங்கள். சிலர் வாசித்தவற்றை முற்று முழுதாக ஞாபகத்தில் வைத்திருப்பர். பக்கங்கள், படங்கள், நிறுத்தற் குறிகள், மேற்கோள்கள் எல்லாமே ஞாபகத்தில் இருக்கும். சிலருக்கு ஒரு கதையை ஒரு தடைவை மட்டும் வாசித்தாலே அது நினைவில் பதிந்து விடுவதுண்டு. இவ்வாறாக ஞாபகத்தில் வைத்திருப்பது ஒரு பெரிய சாமர்த்தியம் என நீங்கள் நினைக்கின்றீர்களா? இவ்வாறான ஞாபகம் ஒளிப்படம் போன்ற ஞாபகம் (Photographic Memory) எனப்படும். இஞ்ஞாபகம் ஆளுக்கு ஆள் வேறுபடும். கமராவில் படம் பிடித்தது போன்று பார்த்தவையும் வாசித்தவையும் நினைவில் இருக்கும். இவ்வாறானோர் அரிதாகவே காணப்படுகின்றனர். எனினும் இவ்வாறான ஞாபகத்தைக் கொண்டோர் எம்மிடையே காணப்படுகின்றனர். இவர்கள் வாசித்த பின்னர் பக்கங்களை ஒளிப்படமெடுத்தாற் போல் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள்.
இந்நிலைமை சிறுபராயத்தில் சில பிள்ளைகளிடத்தே காணப்படும் ஓர் இயல்பு எனவும் கருதப்படுவதுண்டு. சிறு பிள்ளைகளின் உள்ளம் தெளிவானது, அப்பழுக்கற்றது. அவர்கள் அனுபவம் குறைந்தவர்கள். எனவே அவர் களுக்கு படிப்பவற்றையும் வாசிப்பவற்றையும் உள்ளதை உள்ளவாறே ஞாபகத்தில் வைத்திருக்க முடியும். எனினும் பிற்காலத்தில் மொழியைப் பயில்வதால் குறியீட்டு ஞாபகம் அதிகரித்துச் செல்லும் போது ஒளிப்பட ஞாபகம் படிப்படியாகக் குறைந்து விட இடமுண்டு.
அரிதாக ஒருவரிடத்தில் ஒளிப்பட ஞாபகம் நீண்ட காலத்துக்கு நிலைத் திருக்கக்கூடும். குறிப்பாக சித்திரக்

கலைஞர்கள் சிறுகதையாசிரியர்கள், நாவலாசிரியர்கள் போன்ற கலைஞர்களிடத்தே இவ்வாறான பண்புகள் மிகையாகக் காணப்படுகின்றதாகக் கருதப்படுகின்றது. சில எழுத்தாளர்கள் சம்பவங்களை நினைவில் வைத்து அதை அப்படியே எழுதும் தன்மையைக் கொண்டுள்ளனர். அச்சம்பவங்களின் விவரங்கள் யாவும் அவர்கள் மனதில் பதிந்திருத்தலே இதற்கான காரணமாகும். தரமிக்க கலைப் படைப்புக்களை உருவாக்குவதற்கும் இவ்வாறான ஞாபகம் துணையாகின்றது.
உலகப் பிரசித்தி பெற்ற சித்திரக் கலைஞர் லியனாடோ டாவின்சி இவ்வாறான அபார ஞாபக சக்தியைக் கொண்டிருந்தார் எனக் கருதப்படுகின்றது.
இனி உங்களுக்கு இவ்வாறான ஒளிப்படம் பிடித்தது போன்ற ஞாபகம் இருக்கின்றதா எனப் பரிசீலித்துப் பாருங்கள். மீனாவின் கதை ஓர் ஆசிரியை மனது மகள் மீனா பற்றி இவ்வாறு கூறினார்.
எனது மகள் மீனா இம்முறை உயர் தரப் பரீட்சை எழுத இருக்கிறாள். பரீட்சைக்கு இன்னும் மூன்று வாரங்கள் தான் இருக்கின்றன. படித்தது போதாது. எனவே பரீட்சை எழுத முடியாது எனக் கூறுகிறாள்.
அவள் சரியான கெட்டிக்காரி: சாதாரண தரப் பரீட்சையில் 8A எடுத்தவள். இரண்டு வருடங்களாக உயர் தர வகுப்பில் நன்றாகப் படித்தாள். எங்கள் ஒரே எதிர்பார்ப்பு மகள் தான்.
அவள் இப்பொழுது சரியாகச் சாப்பிடுவதில்லை. எப்போதும் தலையிடி என்கிறாள். யார் எதைச் சொன்னாலும் அவளுக்குக் கோபம் வருகிறது.
பெறுபேறு எதுவானாலும் பரவாயில்லை. பரீட்சையை எழுதச் சொல்லி நாங்கள் சொல்லிவிட்டோம். முதலிலே இலேசாகச் சொன்னோம். பின்னர் கண்டிப்பாகச் சொன்னோம். சற்று அதட்டியும் பார்த்தோம். அவளாவது அதைக் கணக்கில் எடுப்பதாவது பாருங்களேன். நன்றாக இருந்த பிள்ளைக்கு இப்ப என்ன நடந்து விட்டதோ தெரியாது.
இவ்வாறு திறமையான பிள்ளைகள் பற்றிக் கவலையோடு பேசும் எத்தனையோ பெற்றோர்களை நாம் பார்த்திருக்கின்றோம். அதே போல் பரீட்சைப் பீதியினால் தம் வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்ட எத்தனையோ பிள்ளைகள் இருக்கின்றார்கள்.
அகவிழி | மே 2014 (5)
9ெ77 27.7122 r' ; 13ம்

Page 40
வான்
மீனாவுக்கு ஏற்பட்டுள்ள நிலைமையிலிருந்து விடுவிப்பதற்கு நாம் பொறுமையாக, கவனமாக கருமமாற்ற வேண்டும்.
இப்போது நாம் மீனாவுடன் பேசுவோம். முயற்சி அற்றவர்களுடைய வாழ்க்கை வீணாகவே கழியும் என்பது - உளவியலாளர்களின் கருத்தாகும். உங்களிடம் நல்ல முயற்சி இருப்பது தெரிகிறது. உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடியவர் நீங்கள் மட்டுமே. மற்றவர்கள் அதற்கு வழிகாட்டத் தான் முடியும். வேறேதுவும் செய்ய முடியாது.
முதலில் எனக்கு எதுவும் ஞாபகமில்லை, எனது ஞாபகசக்தி சரிவடைந்துள்ளது. என்னால் பரீட்சை எழுத முடியாது போன்ற எதிர்கணியமான இந்தக் காரணங்களை விட்டொழிக்க வேண்டும். தொடர்ந்து எதிர்கணியச் சிந்னைகளிலேயே இருந்து பழகிவிட்டால் அவை உங்களிடத்தில் ஆழப் பதிந்து விடும் அதுவே பின்னர் இயல்பாகி விடவும் கூடும். அதனை விடுவதன் மூலம் உள்ளத்தில் தன்னம்பிக்கை உருவாகவும், அது விருத்தியடையவும் வழியுண்டு.
வாழ்க்கையின் இலட்சியம், பரீட்சையல்ல. பரீட்சையில் சித்தியெய்தாவிட்டாலும் செய்வதற்கு வேலைகள் தொழில்கள் உண்டு என்பதைச் சிந்திக்கவும்.
உலகில் எத்தனையோ பெருந்தகைகள் சிறிய வயதில் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானவர்கள் தான். பல பிரச்சினைகளை எதிர் கொண்டவர்கள் தான். அவற்றை யெல்லாம் வெற்றி கொண்டு பயனுள்ள பிரசைகளாக முன்னேறியவர்கள்தான்.
சவால்களை வெற்றி கொண்ட அத்தகைய மனிதர்களைப் பற்றி சிந்தியுங்கள். மேரி கியுரி, ஆப்ரகாம் லிங்கன், மக்சிம் கோர்க்கி, வின்ஸ்டன் சேர்சில், தெரேசா அம்மையார், நெல்சன் மண்டேலா போன்றவர்களின் வரலாறுகளைப் படித்துப் பாருங்கள்.
நீங்கள் இப்போது பரீட்சை வினாத்தாளை எதிர்பார்த்து பரீட்சை மண்டபத்தில் அமர்ந்திருப்பதாக எண்ணுங்கள். உங்களைச் சுற்றி உங்களைப் போன்ற பல பரிட்சார்த்திகள் அமர்ந்திருக்கின்றனர். வினாத்தாள் கையில் கிடைப்பது தொடக்கம் வரும் நிகழ்வுகளை ஒவ்வொன்றாக நினைவுபடுத்துங்கள்.
உங்கள் உடலை இலேசாக வைத்துக் கொள்ளுங்கள். பரீட்சை தொடங்க இரண்டு வாரங்கள் அளவு இருக்கும் போது இப்பயிற்சியில் தினமும் 15 நிமிடங்கள் ஈடுபடுங்கள். நித்திரைக்குச் செல்லும் வேளையில் இதனைச் செய்யலாம். அல்லது வேறு பொருத்தமான ஒரு நோக்கத்தை ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.
இதன் மூலம் பரீட்சைத் தினமாகும் போது சுயகட்டுப்பாட்டுடன் பரீட்சைக்குத் தோற்றும் நிலை ஏற்படும். பரீட்சை மண்டபத்தில் ஒரு மயக்க நிலை அல்லது வெறுமை நிலை (Blank) ஏற்படுவதை இது தடுத்துவிடும். ஓர் ஒளி நாடாவிலுள்ள பழையன கழிந்து புதியன புகுவது போன்ற நிலை இது.
3 அகவிழி | மே 2014

- * *
எமது எதிர்பார்ப்புக்களுக்கும் ஒரு படிமுறை இருக்க வேண்டும். எதிர்பார்ப்பு இலக்கினை இனங்கண்டு கொள்ள வேண்டும். மெதுவாக முதலாவது படியின் மீது காலடி எடுத்து வைக்க முயற்சிக்க வேண்டும். தொடர்ந்து அடுத்தபடி, இப்படி ஒவ்வொன்றாக ஏற முயற்சிக்க வேண்டும். குறைந்த எதிர்பார்ப்புக்களை அடைந்து கொண்டு மெதுவாக முன்னேறும் போது பெரிய இலக்குகளை அடைவது பெரிய சிரமமாக இருக்காது.
அத்துடன் உங்கள் மனதை இலேசாக்கிக் கொள்ளவும் மனதை ஒரு முகமாக வைத்திருக்கவும் சில பயிற்சிகளில் ஈடுபட முடியும்.
மீனாவின் உளச் சோர்வு நிலையை அகற்றக் கூடிய சில நுட்பமுறைகள் உண்டு. இவற்றைப் பரீட்சித்தப் பார்ப்பதன் மூலம் மனமுறிவு நீங்க உங்களுக்குப் புதுத் தென்பு பிறக்கும். நம்பிக்கையுடன், * சுற்றாடலில் நடமாடுங்கள். சூழலின் அழகை
இரசியுங்கள். பொழுது போக்கு விளையாட்டில் ஈடுபடுங்கள். (பரீட்சையை சில காலத்துக்கு மறந்து) மனதை ஓய்வாக வைத்திருங்கள். அழுத்தமான நிலையிலிருந்து மீள முயற்சியுங்கள். தசை நார்களைத் தளர்த்தும் பயிற்சிகளில் ஈடுபடுங்கள். இலேசாக மூச்சு விடலில் இருந்து படிப்படியாக முழுமையான மூச்சை இழுத்து விடுதல் வரை முன்னேறிச் செல்லுங்கள். நீங்கள் மிகவும் பலசாலியாக இருப்பதாக எண்ணுங்கள்.
எந்த ஒருவரும் மனதின் இறுக்கத்தைக் குறைப் பதற்காக ஒரு நோக்கத்தை கைவிட முடியாமலிருந்து தனது உள்ளத்தில் குடி கொண்டிருக்கும் அசாதாரண எண்ணங்களைகளைய முடியுமாயின் அவருக்கு ஒரு திடமான மனமுண்டு என்பதை உணரலாம். நீங்களும் அவ்வாறு அதற்கமைய முயற்சியுங்கள். தனது கனவுகள் பற்றியே எப்போதும் பேசுபவர் களிடமிருந்து சற்றுத் தூரமாகி இருக்க முயற்சியுங்கள். அமைதியான சுபாவம் உடைய ஆறுதல் வார்த்தைகளைக் கூறும் நண்பர்களின் தொடர்பை வைத்திருங்கள். பரீட்சைக்குத் தோற்றலாம். மாணவர்கள் பரீட்சை தொடர்பாக ஏற்படுத்திக் கொள்ளும் தேவையற்ற பயத்தின் காரணமாக பீதி, மனமுறிவு, உளச்சோர்வு, விரக்தி போன்ற கோளாறு களுக்குட்படலாம். தமது பிள்ளைகளைச் சிறு வயது முதலே சமநிலையான மனநிலைக்கு பயிற்றுவிக்க வேண்டும். தோல்விகளையும் தாங்கும் நிலைமையைப் பழக்க வேண்டும். மாணவர்களும் தன்னம்பிக்கையை விருத்தி செய்து கொண்டு மன இறுக்கத்தைக் குறைக்கும் பயிற்சிகளில் ஈடுபட்டுருந்தால் இத்தகைய நிலைமைகளைத் தவிர்த்துக் கொள்ள முடியும்.

Page 41
'தற்காலக் கல்விச் சிந்தனைகள்
' கலாநிதி கனகசபாபதி நாகேஸ்வரன்
மொழித்துறை. சப்பிரகமுவ பல்கலைக்கழகம், பெலிகல்லோயா, இலங்கை
கல்வியின் மூலம் மனிதன் அடையும் பெறுபேறு அறிவு. மனிதன் அறிவை எங்கிருந்து பெறுகிறான் என்பது வினா. நீர்நிலைகள் இருக்குமிடமும் நீரெடுக்கும் முறையும் தெரிந்தவர்கட்கு நீரைப் பெறுவதெளிது. அதுபோல், அறிவின் மூலங்கள் எவையென அறிந்தவர்கள் முயன்றால் அறிவை எளிதாகத் திரட்ட முடியும்.
கல்வி நோக்கிலே மேற்கோள், அனுபவம், சிந்தனை, உள்ளுணர்வு என்ற நான்கினை அறிவின் மூலங்களாக மேலைநாட்டு மெய்ப்பொருள் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
கல்வியையும் அறிவையும் பெற்றுக்கொள்வதற்கு ஆய்வு அவசியமாகிறது. ஆய்வு என்பது மெய்ம்மையினைக் கண்டறியும் புலமைப் பயிற்சியாகின்றது. விதிகள், சந்தர்ப்பங்கள், தோற்றப்பாடுகள், பண்புகள், அமைப்புகள், கூறுகள், அலகுகள் எவ்வாறு எவற்றை அடியொற்றியும் ஆய்வுகளை அமைக்கலாம். ஆய்வு வரலாற்று வளர்ச்சியில் மெய்யியலாளர்களின் பங்கும் பணிகளும் சிறப்பிடங்களைப் பெறுவன. மெய்யியலாளர்கள் தருக்க முறைமை அல்லது அளவையியல் முறைமையைப் (Logical method) பயன் படுத்தி மெய்ம்மையை அறிய முற்பட்டார்கள். அளவையியல் முறைமையை அடிப்படையாகக் கொண்ட கணிதக் கல்வியும் தீவிர வளர்ச்சியுற்றது.
ஆய்வறிவு என்பது தொடர்ச்சியான தேடலை முன் எடுக்கிறது. தேடல் தொடர்ச்சியாக இருப்பதனால் அதற்கு முடிவில்லை. அறிவின் எல்லைகளை ஆய்வுகள் முன்னோக்கி நகர்த்திய வண்ணமுள்ளன. முடிவில்லாத ஆய்வு பல்வேறு கிளைகளைாகப் பிரிந்து இன்று வளர்ச்சியுற்று வருகிறது. அடிப்படைகளை நோக்கிய ஆய்வுகள் பிரயோகங்களை நோக்கிய ஆய்வுகள், பயன்பாடுகளை முன்னெடுக்கும் ஆய்வுகள் என்ற பெருங் கிளைகள் வளர்ச்சியுற்றன. இயற்கை விஞ்ஞானங்களில் பெரும்பாலும் பரிசோதனை முறைமைகள் வழியாக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன. சமூக விஞ்ஞானங்களில் அளவையியலை அடியொற்றிய பல்வேறு ஆய்வு முறைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

கல்வியியலிலே அறிவைத் தேடுதலே ஆய்வாகிறது. அறிதொறும் அறியாமை புலப்படுவதால் ஆய்வு என்பது தொடர்ச்சியான செயல்முறையாகிறது. புதிய அறிவை திரட்டுவதற்குரிய ஒழுங்கமைந்த செயல்முறையே ஆய்வில் முன்னெடுக்கப்படுகிறது. ஆய்வு என்ற கல்விச் செயல்முறை அறிந்ததில் இருந்து அறியாததை நோக்கிச் செல்லும் இயக்கவிசையாகிறது. ஆய்வின் வழியாகக் கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. புத்தாக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன.
உசாவல் விருப்புடன் ஆய்வு தொடர்புடையது. ஆய்வு என்பது புலமைசார்ந்த ஒரு தொழிற்பாடாகின்றது. பிரச்சினைகளை இனங்காண்பதும் பிரச்சினைகளுக்கு மீள்வடிவம் கொடுப்பதும் ஆய்வின் பணியாகிறது. எண்ணக் கோள்களை (Hypothesis) உருவாக்குதல், தரவுகளைச் சேகரித்தல், ஒழுங்கமைத்தல், புடமிடுதல், மதிப்பீடு செய்தல், தொகுத்தல், முடிவுகளை நோக்கி வருதல் என்றவாறு ஆய்வின் பரிமாணங்களை விளக்கினாலும் ஆய்வு அத்துணை எளிதானதன்று. நடைமுறைகளில் இருந்து கோட்பாடுகளை நோக்கி நகர்தலும் கோட்பாடுகளில் இருந்து நடைமுறைகளை அணுகுதலும் ஆய்வின் பிற பரிமாணங்களாகின்றன. ஆய்வின் வழியாகக் கோடுகள், விதிகள் (Laws) கண்டறியப்படுதலும் ஆய்வின் மேற்கிளம்பல் வடிவங்களாகின்றன. ஆய்வின் பிரயோசனங்களிலே பயனுடைமை (unitility) உட்பொதிந்திருக்கும். ஆய்வான அறிவின் முன்னரங்க விளிம்பை மேலும் முன்நோக்கி நகர்த்தும், அறிவுத் தேட்டத்துக்கு அது மேலும் அடிப்படைப் பங்களிப்பைச் செய்யும்.
சிறந்த ஆய்வின் பயன்கள்
1.
ஆய்வின் நோக்கங்களும் குறிக்கோள்களும் தெளிவாக வரையறை செய்யப்பட்டிருக்கும்.
போதுமான தகவல்கள், தரவுகள் முதலியவற்றின்
திரட்டல்களை உள்ளடக்கியிருக்கும். - 3. பொருத்தமான முறையியல்களைப் பயன்படுத்தியதாக
இருக்கும். நன்கு திட்டமிடப்பட்டதாக இருக்கும்.
அகவிழி | மே 2014 (8

Page 42
0 0
புறவயமான அணுகுமுறைகளையும் பக்கம் சாராததும் முற்சாய்வு கொள்ளாததுமான பண்புகளையும் உள்ளடக்கியிருக்கும். போதுமானதும் பொருத்தமானதுமான தரவுகளில் இருந்தே முடிவுகளை அண்மித்ததாயிருக்கும். முன்னர் ஒளிவீசப்படாத தரிசனங்கள் மீது ஒளி பாய்ச்சப்பட்டிருக்கும். ஆய்வுக்குரிய தருக்கத் தெளிவுடையதாயிருக்கும். ஆய்வுக்குரிய மொழிச் செறிவு மற்றும் மொழிக்
கட்டுமானம் முதலியவற்றைக் கொண்டிருக்கும். 10. ஆய்வின் சமர்ப்பணம், செவ்விதாக அமைந்திருக்கும்.
கல்வியில் 'ஆய்வறிவு' என்பது தொடர்பாக இன்று நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பல. ஆய்வுக்குரிய போதுமான பயிற்சிகள் முன்னெடுக்கப்படாமை. ஆய்வுப் பண்பாடு (Research culture) வலிதாகக் கட்டியெழுப்பப் படாமை, ஆய்வு மேற்பார்வைக்குரிய ஆளணியின் போதாமை, ஆய்வுக்குரிய ஊக்கல் போதாமை, அறிவு வசதிகளிலும் வளங்களிலும் வற்கடம் காணப்படுதல், தகவல்கள் மற்றும் தரவுகள் பெறுதலிலே பல்வேறு இடர்ப்பாடுகள் காணப்படுதல் ஆகிய பிரச்சினைகள் பற்றியும் இன்று ஆய்வாளர்கள் மனங் கொள்ள வேண்டியுள்ளது.
கிரேக்க நாகரிகம், மனித வளத்தைத் திரட்டிய நகர அரசுகளைக் கொண்டதாகவும் உலக நாகரிக வளர்ச்சியின் முன்னோடியான தளமாகவும் மனித நாகரிக வளர்ச்சியின் தொட்டிலாகவும் அமைந்தது. அதன் வெளிப்பாடு மெய்யியல், அரசியல், அரங்கியல், கட்டக்கலை, கல்வியியல் முதலாந்துறைகளில் பல நிலைகளிலே துலங்கலாயிற்று.
கல்வித் திட்டமிடல் என்ற எண்ணக்கரு பிளேட்டோவி லிருந்து வளர்ச்சியடைகிறது. பல நிலைகளையும் உள்ளடக்கிய அகலவிரி பண்புகள் கொண்ட வரன்முறை தழுவிய நாடு முழுவதையும் உள்ளடக்கிய 'கல்வித் திட்டம் ஒன்றை உருவாக்கியதன் வாயிலாக கல்வித்திட்டமிடல் வரலாற்றிலே தமக்கென உரிய தடத்தைப் பதித்துக் கொண்டார். கல்விக் கோட்பாட்டிலும், கலைத்திட்டத்திலும் நோக்கு (Aim) என்பதை வரையறுத்துக் கூறும் மரமையும் இவர் ஆரம்பித்து வைத்தார். இவரின் பின்னர் தான் கல்வியியலில் நோக்கு, குறிக்கோள், இலக்கு ஆகியவை விதந்து பேசப்படலாயிற்று. தொடர்கல்வி' என்ற எண்ணக்கருவும் பிளேட்டோவினால் வலியுறுத்தப்பட்டது. இக்கருத்தின் மிகையான வடிவத்தைத் திருவள்ளுவரிடத்தும் கண்டுகொள்ள முடியும். 'எழுபிறப்பும் கல்வி தொடரும்' என தொடர் கல்விக்கு விரிவான
8 அகவிழி | மே 2014

படி==
8
பயWT)
உயர் பெரிய பாம்
என் E EEET 11!
- இன் அது தகவல்கள்
விளக்கத்தை வள்ளுவர் தந்தார். கருவிலிருந்து மனிதர் உலகில் வாழும் காலம் வரை கல்வி தொடரும் என்ற ப்ளேட்டோவின் கருத்துரை நவீன தொடர் கல்விக்குரிய முன்னோடிச் சிந்தனையாயிற்று.
கல்வியிலே மூன்று பெருங் காரணிகள் செல்வாக்குச் செலுத்துவதனை ரூசோ குறிப்பிட்டுக் கூறியுள்ளார். 1. இயற்கையாக ஒரு மனிதருக்குக் கிடைத்த கொடை 2. இயற்கைச் சூழல்
சமூகச் சூழல் என்பனவாம்

Page 43
மனிதர் நல்லவர்களாகவே பிறக்கிறார்கள். சமூகத்தின் ஊழல் மனிதரை மாசுப்படுத்தி விடுகிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறு வேறான இயற்பண்பு வாதச் சிந்தனைகளை வெளியிட்ட ரூசோ பிரான்சிய சமுதாயத்தின் பழமைவாதக் கருத்துக்களையே தமது பெண்கல்விச் சிந்தனைகளில் வெளியிட்டார். ஆண்களுக்கு அனுசரனை யாகவும் உதவியாகவும் இருக்கும் வகையில் அவருடைய பெண் கல்வி சிந்தனைகள் அமைந்தன. பெண்களுக்கு இளம் பருவத்தில் ஆண்கள் மீது அன்பு செலுத்துதல், வழிகாட்டுதல், ஒத்தாசை புரிதல் முதலிய துறைகளில் கல்வி வழங்கப்படுதல் வேண்டும் என்பது அவரது கருத்து. பெண்களின் பலம் குன்றிய இயல்பு இயற்கையானது என்பது அவரது நோக்கு.
இயற்பண்புவாதம் பல பிரிவுகளைக் கொண்டது. பொறிமுறை இயற்பண்பு வாதம் (Mechanical Naturatism) மனித இயற் பண்புகளைப் பொறி முறையாக விளக்குவதுடன் மனித யந்திரத்தின் செயற்பாடுகளைக் கல்விவாயிலாக முழுமை கொள்ள எண்ணுகிறது. உயிர் சார்ந்த இயற்பண்பு வாதம் இயற்கைச் சூழலுடன் இசைவுற்று வாழ்வதற்குரிய கல்வியை வலியுறுத்துகிறது. ரூசோ வலியுறுத்திய இயற்பண்புவாதம் (Social Maturalism) ஆகும்.
இன்றைய பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் இம்சை செய்யும் நிறுவனங்களாகிவிட்டன. பாடசாலையும் பல்கலைக்கழகமும் மனத்தின் கொல்களமாக (Slaughter house) மாறிவிட்டன. கொமீனியஸ் (1572-1670) பாடசாலைக் கல்வியை மீளமைத்து அனைவருக்கும் கல்வியை வழங்க முடியும் எனக் கருதினார். வீட்டிலும் பார்க்க பாடசாலையே கல்வியை வழங்குவதற்கும் முன்னெடுப்பதற்கும் பொருத்த மான நிலையம் என்று கண்டார். பல்கலைக்கழகங்களிலே கல்வித் தகைமையும் கால மூப்பும் கைவிடப்பட்டுவிட்டன.
பாடசாலைகளின் செயற்பாடு வருமாறு அமையும்.
1.
விஞ்ஞானம், கலை முதலாம் பாடங்களில் மாணவரின் திறன்களை வளர்த்தல்.
மொழியாற்றல்களை வளர்த்தல்
- ம N
நல்லொழுக்கங்களை வளர்த்தல்
இறை நம்பிகையைப் பலப்படுத்தல்
அனைத்தறிவுக் கொள்கையைக் கட்டியெழுப்புவதிலேயே பாடசாலைகளுக்குச் சிறப்பார்ந்த பங்குண்டு. கல்வி மொழி தாய்மொழியாக இருத்தல் வேண்டுமென வலியுறுத்திய கொமீனியஸ் கற்பித்தலிலே பாட நூல்கள் மற்றும் துணை சாதனங்கள் ஆகியவற்றின் தேவைகளை விதந்து குறிப்பிட்டுள்ளார். கல்வியின் நோக்கம் மனித வாழ்வின் நோக்கம் ஆகியவை இறைவனை அடைதலும்,

நித்திய இறையின்பத்தை நோக்கி நகர்தலும் எனக் குறிப்பிட்டுள்ளார். ஜோன்டூயி (1859-1952) யின் கல்விச் சிந்தனைகளில் அனுபவமே ஆழ்ந்து வற்புறுத்தப்படுகிறது. ஒரு பிரச்சினையின் சூழமைவு பற்றியும் அது தொடர்பான தெரி சிந்தனையை வளர்த்தலும் அறிவின்பாற்படும். புலன் தரவுகளிலும் மேலான அமைப்பை அறிவு கொண்டுள்ளது. கட்டுப்படுத்திய உற்று நோக்கல் பரீட்சித்தல், பரிசோதனைக்கு உட்படுத்தல் முதலியவற்றை அறிவு உள்ளடக்கி நிற்கிறது. விசாரணையின் விளைவாக அறிவு திரண்டெழுகிறது. வலுப்பெறுகிறது. சமூக முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு அறிவு பரீட்சிக்கப்படத்தக்கது. சூழலுக்குரிய இசைவாக்கல் நிகழ்ச்சியில் மனித நுண்மதி - ஆற்றல் சிறப்பார்ந்த இடத்தை வகிக்கிறது.
கல்வி என்பது அனுபவங்களை மீள் ஒழுங்குபடுத்தலும் மீள் கட்டுமானம் செய்தலுமாகும். கல்வியின் நோக்கம் மாணவரின் வலுவையும் திறன்களையும் விருத்தி செய்தலாகும். சமூக வினைத்திறனைக் கல்வி மாணவ ரிடத்து வளர்க்க வேண்டும். ஜனநாயக விழுமியங்களை அது மாணவரிடத்தும் பதிவித்தல் வேண்டும். ஜனநாயக சமூகத்தின் சிற்றுருவாகப் பாடசாலை முகிழ்த்தெழுதலே சிறந்தது. பாடசாலைச் செயற்பாடுகள் வழியாக மாணவரிடத்துப் பொறுப்பேற்கும் பாங்கும் அறப்பாங்கும்
வளர்க்கப்படல் வேண்டும்.
பயன்கொள் கல்வி சம சந்தர்ப்பத்தை வழங்குதலையும் எதிர்கால வாழ்க்கைக்கு மாணாக்கரைத் தயாரித்தலையும் அடிப்படைகளாகக் கொண்டது. மாணவர்களின் இயல் பூக்கங்களுக்கும் திறன்களுக்கும் ஏற்றவாறு கலைத்திட்டமும் கற்பித்தலும் அமைதல் வேண்டும். சமூகப் பரிமாணத்தை நோக்குகையில் சமூகப் பங்குபற்றலுக்குரிய கல்வி நிலைகளையும் அனுபவங்களையும் கலைத்திட்டத்தி னூடாக வழங்குதல் வேண்டும்.
கலைத்திட்டம் மாணவரின் வளர்ச்சிப் படி நிலைகளுக்கு ஏற்றவாறும், அவர்களது விருப்பங்களுக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டு, கருத்து பரிமாற்றம், கண்டுபிடிப்பு, ஆக்க மலர்ச்சி, கலைத்துவ வெளிப்பாடு ஆகியவற்றை ஊக்குவித்தல் வேண்டும். வாசிப்பு, எழுத்து, கணிப்பு, உடல் வேலைகள், விஞ்ஞானம், இசை மற்றும் கலைகளை உள்ளடக்கியிருத்தலே சிறந்தது. ஆனால் இவைகளை மாணாக்கர்களுக்கு ஒரேயடியாகக் கற்பிக்க வேண்டிய தில்லை. மாணாக்கரது உளமுதிர்ச்சிக்கேற்றவாறு லாவகமாக அறிவை வழங்கக்கூடிய நெகிழ்ச்சிப் பாங்கு கலைத்திட்டத்துக்கு அவசியமாகிறது. மாணாக்கரின் சமகால நடப்பியல் அனுபவங்களுடன் கலைத் திட்டமும் உ கற்பித்தலும் தொடர்புபட்டிருத்தலே ஏற்புடையது. குறிப்பிட்ட பருவத்தின் வாழ்வியல் அனுபவங்களைத் தழுவிக்
வை
அகவிழி | மே 2014 (+

Page 44
கலைத்திட்டம் இயங்குதலே பொருத்தமானது. புவியியல், வரலாறு, கணிதம், மொழி போன்றவற்றைக் கற்பிக்கும் பொழுது வாழ்வியல் அனுபவங்களுடன் ஒத்திசைவை ஏற்படுத்துதலே சிறந்தது.
பள்ளிக்கூடக் கலைத்திட்டம் மற்றும் பல்கலைக்கழகக் கலைத்திட்டம் ஆகியவற்றிலே அழகியற் பாடங்களுக்கு முன்னுரிமை கொடுத்தமை, தொல்சீர் இசை நடனம் முதலியவற்றுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தைக் கலைத்திட்டத்தில் நாட்டம் இலக்கியத்துறை இசை, நடனங்களுக்கு வழங்கியமை, கலைத்திட்டத்தினதும், இணைந்த கலைத்திட்டதினதும் செயற்பாடுகளில் ஆற்றுகைக்கு முன்னுரிமை வழங்கியமை , அழகியலையும், இறையியலையும், இயற் பண்பு நெறியையும் ஒன்றிணைத்தமை தாகூரின் அழகியற் கல்விப் பங்களிப்பு களாகக் கொள்ளப்படுகின்றன என்பார் பேராசிரியர், முனைவர் சபா.ஜெயராசா (2004:42)
இலக்கியத் திறனாய்வின் பரிமாணங்கள் கடந்த 50 ஆண்டுகளாக அதிகம் பேசப்பட்டும், வியாக்கியானம் செய்யப்பட்டும் வந்துள்ளன. பல்வேறு சிந்தனைக் கூட்டங்களின் வளர்ச்சியும் கல்விக் செயற்பாடுகளின் வளர்ச்சியும் திறனாய்வுக் கலை என்ற நிலையிலும், விஞ்ஞானம் என்ற நிலையிலும் வளர்ந்து வந்துள்ளன. விஞ்ஞானத்தின் புறவயத் தன்மைகளையும் கலையின் அகவயத் தன்மைகளையும் உள்ளடக்கியும் நிராகரித்தும் திறனாய்வு வளர்ச்சி பெற்று வந்துள்ளது.
மனிதர்களுடைய வாழ்நிலை இருப்பில் இருந்துதான் சிந்தனைகளும் சிந்தனை ஒழுங்கு முறையால் எழும் கல்வியும் மனிதனின் தொழிற்பாடுகளும் நிர்ணயிக் கப்படுகின்றன. நடைமுறை, சிந்தனை, கல்வி ஆகியவை ஒன்றுடன் மற்றையது இடையுறவு கொண்ட தாகவும் பிரிக்கப்பட முடியாதவையாகவும் உள்ளன. இந்த இணக்கப் பாடு இருத்தலினால் கலைகளை விஞ்ஞானத்திலிருந்து பிரித்துவிட முடியாது. அவ்வாறே விஞ்ஞானமும் மனித இருப்பையும் உணர்வுகளையும் மீறி உருவாதல் சாத்தியமன்று.
மனித இருப்பு, சிந்தனை, உணர்வு, நடைமுறை அனைத்தையும் தொடுத்து நிற்பது கல்வியாகிறது. ஆனால், கல்விக்கும் திறனாய்வுக்குமுள்ள தொடர்புகள் *தமிழ் மரபில் அதிகம் நோக்கப்படவில்லை. அப்பட்டமான உண்மைகளைத் தெளியவைப்பதற்கும் மறைத்து உருக்குலைப்பதற்கும் கல்வி கருவியாக்க்கப்படு கிறதென்றால், குறித்த கல்வி தொகுப்பைப் பயன்படுத்தும் திறனாய்வாளரின் வாழ்நிலை இருப்பையும் தெறிப்பையும் ஆழ்ந்து நோக்க வேண்டியுள்ளது. திறனாய்வாளன் தமது கல்வியைப் பயன்படுத்திச் சாதாரண மக்களுக்குத்
5 அகவிழி மே 2014

தெற்றெனத் தெரியும் தேர்வுகளை மறைக்கவோ, திரிவுபடுத்தவோ முயலும் பொழுது அம்மக்களின் பட்டறிவும் அல்லது அனுபவக் கல்வி வலிமையான ஆயுதமாகிவிடுகிறது. பட்டறிவு கூட்டு மொத்தமான கல்வித் தொகுப்பின் தவிர்க்க முடியாத பரிமாணம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இதனாலேதான் பெரும் , எழுத்தாளர்களும் பெரும் திறனாய்வாளரும் சாதாரண மக்களால் நிராகரிக்கப்படுதல் உண்டு.
கல்வி, கேள்வியாகிய இரண்டும் அறிவுதரும் சிறந்த மூலங்களாகக் கருதப்பட்டன என்பதற்குத் திருக்குறளின் அதிகாரப் பகுப்பு சான்று பகிர்கிறது. கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடைமை என்ற வரிசைமுறை கல்வி, கேள்வியின் காரணமாக அறிவு விளைகிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
நூற்கல்வி, அனுபவக் கல்வி எனக் கல்வி இரு வகைப்படும். நம் அறிவின் பெரும் பகுதி நூற் கல்வியால் விளைகிறது எனலாம்.சங்க காலம் தொட்டே முறையான கல்வியாக நூற் கல்வி கற்பிக்கப்பட்டு வந்திருக்கிறது.
மாணாக்கர்களைக் கூட்டி முறையாக வேதம் கற்பிக்கும் ஆசிரியரை 'ஆரணவு வாத்தி' என்று மணிமேகலை குறிப்பிடுகிறது. திரிகடுகத்தில் வரும் 'கணக்காயர்' என்ற சொல்லும் ஆசிரியரைக் குறிக்கும். கல்வியைக் காட்டிலும் கேள்வி சிறப்பு மிக்கதாகக் கருதப்படுகிறது. 'கேள்வி' என்பது அறிவைத் தரும் மூலமாக மட்டுமன்றி அறிவைச் செம்மைப்படுத்தும் கருவியாகவும் இருக்கிறது.
கல்வி, கேள்வி எனும் மேற்கோள்களை மூலங்களாகக் கொண்டு அறிவைப் பெற முயலும்போது மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். தக்கவர்களால் எழுதப்பட்ட நூலும், தகுதிவாய்ந்த தேர்ந்த சிந்தனையாளர் களின் வாய்மொழிகளுமே ஏற்புடைய அறிவைத் தரும். சிறந்த மேற்கோள்களாகக் கருதப்படும். எந்தத்துறையில் அறிவைப் பெற முற்படுகிறோமோ அந்தத் துறை வல்லுநர்களின் மொழிகளை மேற்கோள்களாகக் கொள்வது சிறப்பு. மேலைநாட்டில் அறிவாராய்ச்சியாளர்கள் மேற்கோளாளனுடைய அறிவின் ஆழ் அகலம் பற்றி விரிவாகப் பேசுகின்றனர். ஆனால் 'ஒழுக்கம்' பற்றி அவர்கள் கூறுவதில்லை. ஆராய்ச்சி அறிவுடையோரின் சொற்களை மேற்கோளாகக் கொள்ளலாம் என்பதே அவர்களுடைய துணிபு. ஆனால், தமிழர்கள் அறிவை மட்டும் அளவுகோலாகக் கொள்ளாமல் ஒழுக்கத்தையும் உடன் சேர்த்துக் கருதியுள்ளனர்.
'சிந்தனை' என்பது மனத்தின் செயல் : மனம் செயல்படவில்லை யென்றால் மனிதனால் அறிவைப் பெற

Page 45
முடியாது. மனம் பிறழ்ந்தவர்களால் சிந்தனை செய்ய முடியாத காரணத்தால் அறிவு பெற முடியவில்லை. வயது பல கடந்ததும் சரியாகச் சிந்திக்க முடியாதவர்களை மனவளர்ச்சியில்லாதவர்கள் என்று உளவியல் கூறுகிறது. எனவே அறிவுக்கு ஆதார மூலமாக இருப்பது சிந்தனையென்றும் அது இல்லையென்றால் அறிவு இல்லையென்றும் பகுத்தறிவு வாதிகள் (Rationalists)
கூறுகின்றனர்.
'அறிவு' அனுபவத்துடனும் அறத்துடனும் தொடர்புபட்டது. அறத்திற்கு அடிப்படையாக இருப்பது பிறரையும் தன்னைப்போல் கருதும் பண்பு. தீமைகளைத் தேடியோடும் மனிதனின் வாழ்வைத் திசைதிருப்பி நன்மையின்பால் செலுத்தித் தெய்வீக வாழ்க்கைக்கு வழி செய்வது அறிவால் ஏற்படும் அறப்பயன்.
கல்வியறிவிலேற்படும் ஆன்மப் பயன்
அறத்திற்கு அடிப்படையாக இருப்பது பிறரையும் தன்னைப் போல் கருதும் பண்பு. பிறருடைய துன்பங்களைத் தன் துன்பமாகக் கருதுபவன் அத்துன்பங்களைக் களைய முற்படுவான். பிறர்க்குத் துன்பந்தரத் தானும் அஞ்சுவான். இவ்வுணர்வு கொண்ட மக்கள் வாழும் சமுதாயம் அறத்தாறு செல்லும் அமைதிமிக்க சமுதாயமாகும். இவ்வுணர்வை எழுப்பவும் வளர்க்கவும் அறிவு துணை செய்ய வேண்டும்.
அறிவினாலாகுவதுண்டோ பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக் கடை
(குறள்: 315) 'பிற உயிர்களின் துன்பத்தைத் தன் துன்பமாக உணர்ந்து அத்துன்பத்தைக் களைய முற்படாத அறிவால் ஆகக் கூடிய பயனொன்றும் இல்லை' என்கிறார் வள்ளுவர்.
கட்டுப்பாடின்றிப் புலன்களின் போக்குக்கு ஏற்ப வாழ்வதால் தனி மனிதனிடம் தன்னைப் போக்கும் சமுதாயத்தில் குழப்பமும் நிலவும். அறத்தின் வழிச் செல்லும் சமுதாயத்திலோ கட்டுப்பாடும் தெளிவும் இருக்கும். எனவே புலன்களின் போக்கைக் கட்டுப்படுத்துவது அறத்திற்கோர் அடிக்கல். 'மதங்கொண்ட யானை போல் மனிதனை அலைக்கழிக்கும் புலன்களை அறிவெனும் அங்குசத்தால் அடக்க வேண்டும் (குறள் : 24:1). புலன்களைத் தடுத்து நிறுத்துவதோடு நில்லாமல் நன்மை விளையும் பொருட்டுச் செயற்படுத்தவும் வேண்டும். தீயனவற்றை ஒதுக்குவது அறிவின் எதிர்மறைப் பயன். இரண்டும் அறம் எனும் நாணயத்தின் இரு புறங்கள். தீமைகளைத் தேடியோடும் மனிதனின் வாழ்வைத் திசைதிருப்பி நன்மையின்பால் செலுத்தித் தெய்வீக வாழ்க்கைக்கு வழி செய்வது அறிவால் ஏற்படும் அறப்பயன்.

அறிவின் பயனாகப் பொருளும் அதன் பயனாக இன்பமும் கிட்டும் என்பதை எல்லா நாட்டுச் சிந்தனை யாளர்களும் ஏற்றுக் கொள்கின்றனர். பொருளைப் பெருக்குவதும் இன்பத்தைக் கூட்டுவதும் அறிவின் முடிந்தபயன் என்று மேலைநாட்டுச் சிந்தனையாளர் பலரும் கருதுகின்றனர். இக்கருத்தினை ஏற்பவர்கள் பொருளையும் இன்பத்தையும் தேடி ஓடுவதிலேயே தம் வாழ்நாளை கழிக்கின்றனர். ஆனால், கீழைநாட்டுத் தத்துவ அறிஞர்கள், குறிப்பாக இந்திய நாட்டுத் தத்துவ வாதிகள், ஆன்ம விடுதலையே அறிவின் இறுதிப் பயன் என்று குறிப்பிடுகின்றனர்.
மமா6
பிறப்பு - இறப்பு எனும் முனைகளைக் கொண்ட நச்சு வளையத்தில் ஆன்மா சிக்கித் தவித்துச் சுழல்கிறது. இப்பிறவிச் சூழலை விட்டு வெளியேறி மீண்டும் பிறவாமல் இருப்பதற்கான வழியில் மனிதனை கடத்திச் செல்வதே அறிவின் தத்துவப் பயன். அறியாமையின் காரணமாகவே ஆன்மா பிறவிச் சூழலில் சிக்கி உழல்கின்றது. அறியாமை அகன்று விட்டால் அறிவுச் சுடரான ஆன்மா அறிவு மயமான இறைவனை அடைவதற்குத் தடையேதும் இல்லை. கல்வி கேள்விகளால் அறியாமை அகலும். மெய்மை இல்லாதவற்றை மெய்ம்மையென மயங்கிச் சுழன்ற ஆன்மா விடுதலை பெற்று இறைவன் திருவடி தேடும். 'அறிவு மயமான இறைவனை நோக்கி ஆன்மாவைச் செலுத்தாத கல்வியினால் பயனேதுமில்லை என்பது வள்ளுவர் முடிவு. இதனை,
கற்றதனாலாய பயனென் கொல் வாலறிவன் நற்றாள் தொழா அர் எனின்
(குறள்: 2) என்று இரண்டாவது குறளிலேயே அழுத்தந் திருத்த மாகக் கூறிவிட்டார்.
பிறப்புக்குக் காரணமாகவும் ஆன்ம விடுதலைக்குத் தடையாகவும் இருப்பது அறியாமையே. நிலையற்ற உலகியலை நிலையானதென்று எண்ணி மயங்குவது, தோற்றங்களை உண்மையெனக் கருதிப் பிறழ்வதும் அறியாமை அகலும். அம்மெய்யறிவைத் 'தத்துவஞானம்' என்று வடநூலார் கூறுவர். பிறப்புக்குக் காரணம் பேதமை. அதனைக் களைய வேண்டுமானால், மாற்றமும் திரிபும் கொண்ட நிலையிலா இவ்வுலகியலைக் கடந்து மாறாது நிலைத்திருக்கும் முழுமுதற் பொருளைக் காண வேண்டும். இச் செம்பொருட் காட்சி பேதமையை அகற்றிப் பிறவியை அறுத்துவிடும் என்னும் பொருளிலே ,
பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும் 2 செம்பொருள் காண்ப தறிவு
(குறள்: 358)
அகவிழி | மே 2014 (?

Page 46
என்னும் குறளை யாத்துள்ளார் தெய்வப் புலமைத் திருவள்ளுவனார்.
கல்வி கேள்விகளால் பொருள்களின் தோற்றங்களைக் கடந்து மெய்மையை உணர்ந்தவர்கள் தத்துவஞானிகள் என்றழைக்கப்படுவர். அத்தகையோர் உலகியல் வாழ்வின் நிலையாமையையும் நிலையாப் பொருள்பால் ஏற்படும் பற்றுகளையும் பற்றுகளால் வரும் துன்பங்களையும் நன்கறிவர். அத்தகைய மெய்யறிவு உடையோர் மீண்டும் இவ்வுலகியல் வாழ்வுக்கு வர விரும்பமாட்டார்கள்' என்னும் கருத்திலே,
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி
(குறள்: 356) என்ற குறளை எழுதியுள்ளார் செந்நாப்போதர். மெய்ப்பொருட் காட்சியில் நிலையான இன்பத்தைச் சுவைக்கும் அவர்கட்குப் பிறவாமையே பெரும் பேரின்பம்.
பிறப்பறுத்தலை இந்திய நாட்டுத் தத்துவ அமைப்புகள் 'வீடு பேறு' என்று சிறப்பிக்கின்றன. அறியாமையின் விளைவாக ஏற்படும் பற்றுகள் வீடு பேற்றுக்குத் தடையாக இருக்கின்றன. 'நான்' எனும் செருக்கும் 'எனது' என்ற பிணைப்பும் பிறவிச் சுழலிலிருந்து ஆன்மா விடுபடி முடியாதபடி தடுக்கின்றன. 'யான்', 'எனது' என்று சொல்லப் படும் அகப்புறப் பற்றுகளை அறுத்துவிட்டால் உலகியல் உழற்சியிலிருந்து ஆன்மா வீடு பெறும். தேவர்கட்கும் கிட்டாத வீடுபேறு கிட்டும்.'' என்னும் கருத்துப்பட,
யான் எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு உயர்த்த உலகம் புகும்
(குறள்: 174) என்னுங் குறளை எழுதியுள்ளார் திருவள்ளுவர். மெய்யறிவு, பற்றுகளை அறுக்கத் துணை செய்யும்.
தன்னைத் தவறாக உணர்ந்து கொள்வதே தன் முனைப்புக்குக் காரணம். தன்னையும் தன் அறிவையும் சரியாக உணர்ந்தவனிடம் தன் முனைப்பிருக்காது. தன் அறிவையும் அனுவத்தையும் முடிந்த முடிவாகக் கருது வதால் அறிவுச் செருக்கு ஏற்படுகிறது. அறிவுக்கு வரம்பில்லை: எல்லை போடவும் முடியாது. 'அறிதொறும் அறியாமை கண்டற்றால்' (குறள்: 110) என்ற குறள் மொழி அறிவின் வரம்பின்மையைக் காட்டுகிறது. அறிவெனும் வாக்கியத்தில் கால் புள்ளி, அரைப்புள்ளி போன்ற நிறுத்தக் குறிளைக் காணலாம். ஆனால் அவ்வாக்கியம் முடிவுற்றதெனச் சொல்லும் முற்றுப்புள்ளி இல்லை என்பது வரலாற்றுண்மை. அனுபவமும் முடிவுற்றது. தன் அனுவமே முழுமையானதென எவரும் தருக்கிக் கொள்ள முடியாது.
F) அகவிழி | மே 2014

தவறான அறிவு பற்றுகளை வளர்க்கும். நில்லாவற்றை நிலையின என்றுணரும் புல்லறிவாலும் பொருளல்லாத வற்றைப் பொருளென்றுணரும் மயக்க அறிவாலும் செல்வச் செருக்கும் பற்றும் ஏற்படுகின்றன. பற்றுக்கள் துன்பத்திற்குக் காரணமாகின்றன. 'எந்த அளவு பற்றுக்களை அறுக் கிறோமோ அந்த அளவு துன்பத்திலிருந்து விடுபடுவோம்' என்று கூறுகிறது குறள்.
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்
(குறள் : 341)
அறியாமையின் கூறுகளான விருப்பு, வெறுப்பு, மயக்க உணர்வு ஆகியவை அழிந்து விட்டால் அவற்றின் விளைவுகளான வினைப்பயன்கள் இரா.வினைப்பயன் அற்று விட்டால் பிறவிச் சுழலிலிருந்து ஆன்மா விடுபடும். பிறவா நிலை எய்தும் (குறள்: 360).
நிலையாமையை உணர்த்திச் செருக்கை அழிப்பதும் பற்றுகளை அறுப்பதும் தத்துவ அறிவின் செயல்கள். தத்துவ அறிவின் பயனாகச் 'சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகின்' (குறள்: 359) பிறவி நோய் ஒருவனைச் சாராது என்கிறார் வள்ளுவர். எனவே, ஆன்ம விடுதலையே மனிதனின் இறுதிக் குறிக்கோள் என்றும், அதற்கு வழி செய்வதே அறிவின் தலையாய பயன் என்றும் நன்கு தெளியலாம்.
முடிவுரை
'கல்வியறிவு' நாளும் விரிந்து கொண்டிருக்கும் ஒரு பெருந் தொகுதி. அதனுள் பல வகை அறிவுகள் உண்டு. அறிவின் இயல்புக்கும் வகைகளுக்கும் ஏற்ப அறிவைப் பெறும் வழிகளும் வேறுபடும். திரட்டும் அறிவின் இயல்புக்கேற்ப அதனைச் சோதித்துப் பார்க்கும் ஏற்புடைமை கோட்பாடு மாறும். இவ்வேறுபாடுகளை முரண்பாடுகளாக்க கருத வேண்டுவதில்லை. அறிவு தரும் உலகியல் பயன்களெல்லாம் மனித சமுதாயத்தின் அமைதியான இனிய வாழ்வுக்குத் துணை செய்வனவாக இருக்க வேண்டும். உலகியல் பயன்களை ஆன்ம விடுதலைக்கான படிகளாக்கிக் பிறவித் துன்பத்தைப் . போக்குவதே மனித வாழ்வின் இறுதிக் குறிக்கோள். ஆன்ம விடுதலையே அறிவின் முடிந்த பயன். எனவே, இக்கட்டுரையிலே உள்ள விளக்கங்களின்படி தற்காலக் கல்விச் சிந்தனைத் தடம் இயல்வதைக் கல்வி உயர்கல்வி நிறுவனங்கள் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் என்பது பெறப்படும்.

Page 47
ஆசிரிங்க3
பயபகலரி
27 அதற்காக
கிபி 29
* : 5 : R
அவி
( ! )f 5, :
: 1 : { £ Eq 1 2 42. 14 it !!, 4, 5:45, 3.) ! 4, 5, 7 1 1 ,
மாம்
அகவிடு
எம் பட ட
இவ்
"!! - ''11 -ரயா '' பா.
INE in யா ய
க்கம்

வி)
=+ நோக்க,
| ஓக 2011
119ாவை 9?
எரிக் 64
இவிக
ஆசிரித்து:3 நேக்கு...
கைதியம் .
விகுத்தகைதர்ச்சி மலர்
ர்நோக்கு!
செப்டிக் ஆர் , 13013
- நசை.
திட்லை வழிகாட்டல் கருத்தரங்குகள் தொடர்பான சில
சொல் இலக்கணங்கள் புலப்படுத்தும்
"அலவி.
மாவர்
கெவிடு
மேம்பாட்டின்
- வின்
11-12 3:', த. 1 4

Page 48
இக
கிடைக்குமி பூபாலசிங்கம் புத்தகக்கடை 202, செட்டியார் தெரு, கொழும்பு - 11
தொ.பே.இல.: 011-2422321
பூபாலசிங்கம் புத்தகக்கடை 4A, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்
தொ.பே.இல.: 021-2226693 நியூ கேசவன் புக்ஸ்டோல் 52 டன்பார் வீதி, ஹட்டன் தொ.பே.இல: 051-2222504, 051-2222977
அறிவாலயம் புத்தகக்கடை 190 B புகையிரத வீதி,
வைரவப்புளியங்குளம், வவுனியா தொ.பே.இல: 024-4920733 இஸ்லாமிக் புத்தக இல்லம் 77, தெமட்டக்கொட வீதி, கொழும்பு - 09
தொ.பே.இல.: 011-2688102
Easwaran Book Depot No. 126/1, Colombo Street, Kandy Tel.: 081-2220820
குமரன் புக் சென்டர் 18, டெய்லிபயர் கொம்பிலக்ஸ் நுவரெலியா
தொ.பே.இல: 052-2223416 விழுது - மட்டக்களப்பு இல 22, கலைமகள் வீதி, நெச்சிமுனை, மட்டக்களப்பு
தொ.பே.இல - 065 - 2222500 விழுது - திருகோணமலை 81யு, ராஜவரோதயம் வீதி, திருகோணமலை
தொ.பே.இல - 026 2224941
Printed Kumaran Press 39, 36th Lane, C
kumbhlk@gn
Registered in the Department of Posts of

வி.
1----1:51:
படங்கள்
பூபாலசிங்கம் புத்தகக்கடை 309-A 2/3 காலி வீதி, வெள்ளவத்தை, கொழும்பு
தொ.பே.இல.: 4515775, 2504266 அல்குரசி புத்தக நிலையம் 28, 1/2, புகையிரத வீதி, மாத்தளை தொ.பே.இல.: 066-3662228 அறிவுநதி புத்தகசாலை இல 06, கனகபுரம் வீதி, கிளிநொச்சி தொ.பே.இல: 077 6737535 Zeen Baby Care 121B, Arm Mill Road, Addalaichenai -01 Tel.: 077 3651138
புக் லாப் 20, 22 சேர் பொன் ராமநாதன் வீதி, பரமேஸ்வரா சந்தி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம் தொ.பே.இல: 021-2227290, அன்பு ஸ்டோர்ஸ் 14 பிரதான வீதி, கல்முனை தொ.பே.இல.: 067-2229540 பரணி புத்தகக் கூடம் நெல்லியடி ம.ம வீதி, நெல்லியடி தொ.பே.இல - 077 5991949 விழுது - புத்தளம் இல 24801 கொழும்பு வீதி, தில்லையடி, புத்தளம்
தொ.பே.இல - 032 - 5740094 விழுது - யாழ் மாவட்டம் - இல 23, ஆடியபாதம் வீதி,
திருநெல்வேலி வடக்கு, யாழ்ப்பாணம்
தொ.பே.இல - 021 2229866
பயங்கக்கரை கலம்
க -- 5
050 ISSN 1800-1246
by
= (Pvt) Ltd. olombo 06 1ail.com
பAE al771, 8001, Pபு00 EII
Sri Lanka under OD/26/News/2014