கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஒளி அரசி 2014.08

Page 1
OLIARAZI
இல்லத்தரசிகளின் தோழி அன்பு + அறிவு + அழகு + திறன் + போட்டி + வாழ்த்து +
Hair 8 Makeup by : Hotline:
HEMYS 077 3135585 BEAUTY CARE
IRTITI, &
Cittle ASIA பட்டுச்சேனை பரிசு மை
மனவலிமையில் சிறந்தவர்கள் ஆண்களா? பெண்களா?
வீட்டை சொர்க்கமாக மாற்ற...

மாத சஞ்சிகை!
வாரு மில்
0 கும்பம்
ஒளி - 01 இதழ் - 09
ஆகஸ்ட் 2014
- பக்கங்கள் : 68 பொழுதுபோக்கு ரூபா50 அரசியலே
ஒரு பரிணாமப் படைப்பு -
1 ஆவது ஆண்டில் வெத்திகரமாக soORIYAN FM
அFM - 103.6 அல் 103.4 தாருமுழுவது
இலவச இணைப்பு -
தரம் 5 புலமைப்பரிசில்
பிரபல சிங்கள மாதிரி வினாத்தாளின் மொழிபெயர்ப்பு
தமிழ் மாணவர்களின் நலன் கருதி உள்ளே...
மனித உருவில் இறைவன்
(200,000/=) பத்துவகை போட்டிகள்

Page 2
S o me thing Different Anton Studios Photography, Vid e o graphy 30/5, Fussels lane, Wellawatte, Colombo 06.
Mobile · 0094 712 318 400
0094 727 318 400 0094 777 296 940
0094 770 322 212 Lval: antonstudio7@gmail.com
: Anton Fernando


Page 3
The Hands that Protect Gife 3nsurance Co
புதிதாக வெள்ளவத்தை
எல் ஐ ஷி (லா கிளையில் தொ!
பிரதேச விற்பனை விற்பனை மேற்ப
ஆலே
குறைந்தபட்ச தகுதிகள்
0 க/பொ/த சாதாரணத்தர க/பொ/த உயர்தரப்பரீட் 22 வயதிற்கு மேல் (ஆே பணியில் இருந்து ஓய்வு புரிபவர்கள் இணைத்துக்
ஒளிஅரசி 02
0777 419415

LIB
=poration (Lanka) Ltd.
யில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள ங்கா) லிமிடெட் ழில் வாய்ப்புக்கள்
T அமைப்பாளர்கள் சர்வையாளர்கள் & ாசகர்கள்
பரீட்சை (கணிதத்தில் சித்தி)
சை
லாசனை மிக்கவர்களாக மற்றும் பெற்றவர்கள், பகுதி நேர வேலை
கொள்ளப்படுவர்)
விண்ணப்பிக்கவும்
மேலாளர், எல்ஜஷி (லங்கா) லிமிடெட் - கொழும்புத் தெற்கு கிளை இல. 17, முதலாம் மாடி, காலி வீதி, வெள்ளவத்தை, கொழும்பு - 06.
/0112592982

Page 4
உ95-ல் NெE44 கதிதா'
இதர் (1), 8.2 A #
சி, இத் த..
ட்க
உள்ளே...
நட்சத்திர இல்லத்தரசி - 112
'ஆழி' குறும்பு விமர்சனம்
நோபல் பரிசுபெற்ற பெண்
5.
வலைக் கீச்சுக்கள்
எல்லா பட்டத|

ராமான்ஸ்
இரகசியங்கள்
"கலாலயா''26
கேட்கும் திறனற்ற குழந்தைகள்
:11)
"அsiாகன்னவி:அயல்சித்திரங்ககைதி :31
நீரிழிவு நோய் அதிகரித்துள்ளதா?
- A Pா நீ,.. |
40.
1வது பிறந்தநாள் வாழ்த்து
செல்வன். பி. சந்தோஷ் கனடா ரொரண்டோவில் வசிக்கும் பிறேம்குமார் தேவகி தம்பதிகளின் செல்வப்புதல்வன் சந்தோஷ் 12.07.2014 இல் தனது முதலாவது பிறந்தநாளை இலங்கையில் வெகுவிமர்சையாக கொண்டாடினார். இவரை தாத்தா பாலசுந்தரமும் குடும்பத்தினரும் வாழ்த்துகின்றனர்.
ஒளிஅரசி 03

Page 5
"ஒளி அரசி”
இல்லத்தரசிகளின் தோழி
மாதம் ஒரு முறை ஆகஸ்ட் 1 - 31, 2014
நியூ விஷன் மீடியா சின்டிகேற் பிறைவேட் லிமிடட் - ஆசிரியர் குழுவால் அச்சிட்டு
வெளியிடப்படுகிறது.
வடிவமைப்பு: அர். கிரிஷாந்.
தொலைபேசி: 011 5738003, 071 8628360, 071 3628361
தொலைநகல்: 011 5517945
ஆசிரியர் குழு: 011 5738003 E-mail: oliarazi33@gmail.com editoroliarazi@gmail.com
விளம்பரப் பிரிவு : கொழும்பு : 071 4114997, 0714273035
வட மாகாணம் : 0215671111
5 5 5 5 5 5 31 2 4 = 2 ( 9 ) 8 9 - 9. ) ( 9 ( 15 - E 5 உ ( 91 8 9 (9 - 8 9 , 2 2 5 5 1
விநியோகப் பிரிவு : கொழும்பு : 011 5737592, 071 8628379
வட மாகாணம்: 021537222, 077560617, 071 6182182 சந்தா விபரம்: ( ஒரு வருடம்) 1000/-
(தபால் செலவு உட்பட)
கடித தொடர்புகளுக்கு :
ஆசிரியர், ஒளிஅரசி 85, ஜயந்த மல்லிமாராச்சி மாவத்தை,
கொழும்பு - 14.
வாசகர் விழிப்பு: விளம்பரங்களின் உண்மைத் தன்மை தொடர்பாக கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளும் போது ஆவணங்களை சரியாக பரிசோதித்து பார்ப்பது வாசகர்களின் கடமையாகும்.
போட்டிகளில் பங்குபற்றும் வாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல் தங்களுக்கான பரிசில்களை அனுப்பி
வைப்பதில் உள்ள சிரமங்களை தவிர்ப்பதற்காக தயவுசெய்து தங்களின் தொலைபேசி இலக்கத்தைக் குறிப்பிட்டு | போட்டிக்குரிய விடயங்களை அனுப்பவும்.
அத்துடன், போட்டிகளில் வெற்றிபெற்று இதுவரை பரிசு கிடைக்காத வாசகர்கள் கீழ் வரும் இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்.
071-6850005, 078- 2825009
ஒளிஅரசி 04)

மாற்றம் ஒன்றே மாறாதது
மீண்டும் ஒரு தடவை விரல்களைக் கோர்த்து டலினை வரைய ஆரம்பிக்கும்போது உணர்கிறேன் தழ்களைத் தாண்டி இறுக்கமடைந்து வரும் ஒளிஅரசி ரசகர் உறவினை; ஒவ்வொரு இதழ்களிலும் அதிகரித்து ரும் வாசகர் எண்ணிக்கையும் நீங்கள் அளித்து வரும் தரவும் எம்மை உற்சாகத்தில் திளைக்க வைக்கிறது. வாசகர் ளாகிய உங்களுடைய கருத்துகளுக்கமைய ஒளிஅரசி னது ஒவ்வொரு இதழிலும் தன்னை மெருகூட்டி துப்புது விடயங்களை உள்வாங்கி பிரகாசிக்கின்றாள். இந்தவகையில் இந்த இதழிலும் வலைக் கீச்சுக்கள் என்ற ர் புதிய பகுதியினை சேர்த்துள்ளோம். சமூக வலைத்தளங் ளிலேவருகின்றசிலசுவாரஸ்யமானவிடயங்களைத் தொகுத்து ருவதே இப்பக்கத்தின் நோக்கமாக காணப்படுகிறது. சமூகத்தின் மாற்றங்களுக்கமைய எம்மை மாற்றி மைத்துக்கொள்ள தவறுவோமாயின் நாம் சமூகத்தி பிருந்து விலகிச்செல்ல நேரிடும். மாற்றங்கள் என்பது ன்மைகளையும் தீமைகளையும் கொண்ட கலவை ாகத்தான் வெளிவருகின்றது. அதில் தீமைகளைக் ளைந்து நன்மைகளின் பயன்களை அனுபவித்துக்கொள்ள எம் கற்றுக் கொள்ளுதல் அவசியம். எமது சமூகத்தில் காணப் டுகின்ற மிகப் பெரிய பலவீனம் மாற்றங்களை பலரும் ள்வாங்கத் தயங்குவதுதான். இந்த மனோபாவம். ல வேளைகளில் எமக்கு புதிய அனுபவங் களை டைக்கவிடாமல் செய்கிறதோ என எண்ணத் தான்றுகின்றது. சாதாரணமாக வீட்டில் பயன்படுத்தும் "பாருட்களில் தொடக்கம் இந்த மனோபாவம் எங்களி டம் காணப்படுகிறது. இது ஒரு பாதுகாப்பான வழிமுறை என்று வாதிடுவோரும் உள்ளனர். அதை மறுப்பதற்கு இல்லையே ஆனாலும் அதிமிஞ்சிய அந்த பாதுகாப்பு உணர்வே எமக்கு புதிய அனுபவங்களை விரைவாக கிடைக்க பெறாவிடாமல் செய்கிறது.
எனக்கு தெரிந்த பெண்மணி ஒருவர் இன்றளவும் தடுப்புக்களைச் சலவை செய்வதற்கு சவர்க்காரத்தையே யன்படுத்திகிறார். அதுவும் நீண்டகாலம் சந்தையில் உள்ள ரு வர்த்தக நாமம் கொண்ட அந்த சவர்க்காரத்தை அதிக பிலை கொடுத்து வாங்கி பாவிப்பார், எவ்வளவு சொல்லி ம் சலவைத்தூளினையோ அல்லது சந்தைக்கு வந்துள்ள லவை இயந்திரம் போன்ற நவீன சாதனங்களையோ ற்றுக்கொள்வதில்லை. அதற்கு அவர் கூறும் காரணங்
ள் வினோதமானவையாக இருக்கின்றது.
இந்தப் பெண்மணிபோல் எம்மில் எத்தனைபேர் மாற்றங்களை உள்வாங்கத் தயங்கி அதனாலேயே பல ல்ல புதிய விடயங்களின் அனுபவத்தை பெறமுடியாத பர்களாக எமது வாழ்வை சுமையாக்கி வாழ்கிறோம். மாற்றம் ஒன்றே உலகில் மாறாதது என்பதனால் அந்த மாற்றங்களை முதலில் உள்வாங்குபவர்களாக நாம் மாறுவோம்; உலகில் மற்றவர்களைவிட முன்னோக்கி யனிப்போம் என்ற சிந்தனையுடன் அடுத்த இதழில் ந்திக்கும் வரை விடைபெறுகிறோம்.
- ஆசிரியர் குழு -

Page 6
கட்டுரை - கெவின்
சொர்க்கமும் நரகமும் எம்
உலகத்தில் உங்களுக்கு பிடித்த இடம் எது ? என்ற ( இடங்களைத்தான் குறிப்பிடுகின்றோமே தவிர எட சொல்வதற்கு எத்தனை பேர் தயாரக இருக்கின்றோ தோன்றுகின்றது. நரகமாய் இருக்கும் வீடு சொர்க்கமா மனைவி நடந்து கொள்ளும் விதத்தில்தான் இருக்கிற நீங்கள் சொர்க்கத்தைத் தேடிப்போகத் தேவையில்
1. எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும், ஒருவர் எண்ணத்திற்கு ஒருவர் மதிப்புத்தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும்.
2. கணவன் மட்டுமே வேலைக்குச் செல்லும் வீட்டில் என்னால்தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை எப்போதும் கணவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தக் கூடாது.
3. மனைவியும் வேலைக்குச் செல்லும் வீட்டில், நானும்தான் வேலைக்கு போறேன் என்ற வார்த்தையை மனைவி அடிக்கடி சொல்லக்கூடாது.
4. இவரிடம் இவளிடம் இதைச் சொன்னால் பெரிய பூகம்பமே வெடிக்குமோ என்ற பயத்தை ஒரு போதும் மனைவிக்குகணவனும், கணவனுக்கு மனைவி யும் தரக்கூடாது. பொய்யின் ஆரம்பமே பயம்தான்.
5. எவ்வளவு பெரிய சண்டை என்றாலும் உங்கள் இருவருரைப்பற்றி மட்டும்தான் பேசவேண்டும். கணவன் குடும்பத்தாரைப் பற்றி மனைவியும், மனைவியின் குடும்பத்தாரைப் பற்றி கணவனும் பேசவே கூடாது. தவறுகளில் மிகப்பெரிய தவறு இது.
6. மனைவியை தன்னில் ஒரு பாதியாகப் பார்க்கா விட்டாலும் வேலைக்காரியாகப் பார்க்காமல் இருப்பது கணவனுக்கு அழகு.
7. மனைவியை ஏற்றது போல் அவள் குடும்பத்தையும் முழுமனதாய் கணவன் ஏற்க

செயல்களிலேயே உள்ளது
கேள்விக்கு அமெரிக்கா, சுவிஸ்லாந்து, லண்டன் போன்ற மது வீடு தான் எமக்கு சொர்க்கம் என்ற பதிலினை ம். ஏனெனில் எம்மில் பலருக்கு தமது வீடு நரகமாக வதும், சொர்க்கமாய் இருந்த வீடு நரகமாவதும் கணவன் து. கணவனும் மனைவியும் இப்படி இருந்து பாருங்கள் லை உங்கள் வீடு சொர்க்கமாகக் காட்சியளிக்கும்.
வேண்டும்.கணவனை ஏற்றது போல் அவன் குடும்பத்தையும் முழுமனதாய் மனைவி ஏற்க வேண்டும். (இப்படி வாழ்ந்தால் முதியோர் இல்லங்கள் நிச்சயம் குறையும்)
8. கணவன் நண்பர்களுடன் ஊர் சுற்றிவிட்டு நேரம் கழித்து வீடு வருவது. மனைவியை மட்டும் வீட்டுக்குள்ளே ஆயுள் கைதி ஆக்குவது, அவளை வெளியுலகம் அறியவிடாமல் செய்வது தவறு. படிப்பறிவில்லா பெண்களை சில ஆண்கள் இப்படித்தான் நடத்துகின்றனர்.
9. கணவனும் மனைவியும் தனித்தனியே வெளியில் சென்றால் நேரமாய் வீடு திரும்ப வேண்டும். அப்படி நியாயமான காரணத்திற்காக தாமதம் ஏற்பட்டால் ஒருவர் சொல்லும் காரணத்தை மற்றவர் நம்பி ஏற்றக் கொள்ளவேண்டும்.
10. அம்மாவின் சமையல் பக்குவத்தை எதிர் பார்த்து மனைவியின் சமையலை சாப்பிட்டு, ஏமாற்றம் என்றதும் அவளை திட்டக்கூடாது. அப்படி திட்டுவதாகயிருந்தால் அதற்கு முன் ஒன்றை யோசியுங்கள். திருமணம் ஆன புதிதில் உங்க அம்மாவும் இப்படித்தான் உங்க அப்பா விடம் திட்டு வாங்கி இருப்பார்கள் சமையலுக்காக. பக்குவம் என்பது, பார்த்ததும் வந்துவிடக்கூடிய தல்ல. பல வருட அனுபவத்தில் வருவது.
ஒளிஅரசி 05

Page 7
© கவிதை- வே. தரணிகா, மருதங்கேணியூர்
நடைமுறை வே
விடிகாலை பொழுதில் குளிர் ஆடை விலக்கி பாதி சுடு நீரில் பக்குவமாய் குளித்து
நேர்த்தியாகப் புடவையை நேசமாக உடலுக்குடுத்தி ஆலங்காய் புட்டை அவசரமாய் கட்டி
நேரத்தை விடவும் வேகமாக வேலைசெய்து பஸ்ஏறி புழுதி குடித்து பள்ளி வரப் பிந்தி
அதிபரின் கேள்விக்கு ஆறுதலாய் பதிலளித்து வகுப்பிற்குள் நுழைந்து பாடத்தில் வேகமாகி
சராசரரா
காலை உணவை மதிய உணவாய் உண்டு பின்னேர பஸ்ஸிலே பின்சீற்றில் அமர்ந்து
வீடுவந்து சேர்ந்து விறகடுப்பில் சமைத்து உடுப்பு துவைத்து முற்றம் பெருக்கி எல்லாம் முடிந்து ஓய்வெடுக்கும் வேளையங்கு
பிள்ளைகள் தூங்க பின்வாசல் வழியாக
வந்த கணவன் ஏலாத உடம்பிலே எத்தனையோ வித்தைகாட்டி முடிக்கின்ற பொழுதிலே நள்ளிரவு தாண்டும்
ஒளிஅரசி 06)
கோழி தூக்கம் கொண்டு விழித்தெழுந்து மறுபடியும் பல்துலக்கி மறுநாள் வேலைகள் தொடரும்.

தாந்தம்

Page 8
) ஜோக்ஸ் பக்கம்
கணவன் :- மனைவி:-
கணவன் :-
ஒருவர் :-
என் வீட்டுக்காரிக்கு கோபம் வந்தால்
ஒன்றிலிருந்து நூறுவரை எண்ணுவா? மற்றவர் :- அதோட அவாவின்ட கோபம்
குறைஞ்சுடுமா? முதலாமவர் :- இல்லை. நான் தோப்புக்கரணம்
போட்டு முடிச்சுடுவேன்.
22 )
ஒருவர் :-
என் மனைவி
கட்டிப் புடுக மற்றவர் :- ''அதுல யா முதலாமவர் :- அதைத் !
நடக்குது
ஒருத்தி :- என்னடி இது. உன் செல்போனுல
'ஹஸ்பென்ட் - 2'னு ஒரு போன் நம்ப
பணி வைச்சிருக்கே? மற்றவள் :- மானத்தை வாங்காதடி! இது என் கணம்
இரண்டாவது "'சிம் கார்டோட்'' நம்பர
அப்பா :- ஏ மகன் :-) அப்பா :- அ மகன் :-)
1) ) 9 G

கடவுளிடம் என்ன வேண்டினாய்? அடுத்த பிறப்பிலும் உங்களுக்கே மனைவியாக வேண்டும் என வேண்டினேன். (மனதுக்குள்ளே) 'நீ செத்தாலும் உன்னைப் பிடிச்ச சனியன் விட்டுப்போகாது'' என்று ஜோசியக் காரன் சொன்னது சரியாத்தான் இருக்கு.
பியும் வேலைக்காரி அம்சாவும் ரோட்ல
ச்சி சண்டை போடுராங்க....... கு உங்க மனைவி?'' தெரிஞ்சுக்கத்தான் இரண்டு பேருக்கும் சண்டை
மர சேவ்
--
வரோட
டி!
ண்டா அழுதுட்டு இருக்கே? அம்மா அடிச்சிட்டாங்கப்பா. பதுக்கு போய்யா அழுகிற.
பாப்பா... உன்னை மாதிரியெல்லாம் என்னால வலி தாங்க முடியாது.
ஒளிஅரசி 07

Page 9
- ரொமான்ஸ்
சாதாரணமாக கணவன் - மனைவிக்குள் 6 தான் வினோத்துக்கும் ராஜிக்கும் இடையே மெழுகுவர்த்தி ஊதினால் அணைந்து போகும்.. ஊத பெரிதாகத்தானே எரியும். அடுப்பாகத்தா அவர்களின் பூசலும். அதில் உலையாகக் கொதித்தது
''என்னோட சம்பளத்துல நாலு உடுப்பு வாங். உரிமை இல்லையா?'' என்று ராஜி கேட்க, . துடிக்கச் சொன்னான்,
''நாலு உடுப்பா? இந்த ரெண்டு மாசத்து நாப்பது உடுப்பு வாங்கியிருப்ப. அது மட்டுமா? உங்கம்மாவுக்குப் பிறந்த நாள்னு நாலாயிரம் பட்டுப்புடவை எடுத்துக் கொடுத்த...''
"ஏன்... எடுத்துத் தரக் கூடாதா? உன்கி கேக்கணுமா? எதுக்கெடுத்தாலும் உங்கப்பா தலையைச் சொறிஞ்சுக்கிட்டு உங்க அம்மா , யெல்லாம் என்னால நிக்க முடியாது. இது என் அப்படித்தான் செலவழிப்பேன்.''
''திமிருடீ. சம்பாதிக்கிற திமிர்.. அதா அப்பாவைப் பத்தியெல்லாம் பேச வைக்கு தேவைதான். இந்தப் பொண்ணு வேணாம்டா.. ஆகாதுனு எங்கம்மா சொன்னாங்க. நான் கேக்க
அவனையறியாமல் கோபத்தில்தான் வ. விட்டுவிட்டான். ஆனால், ஓர் இளம் மனைவிய காதல் மனைவியால் தாங்கிக்கொள்ளவே முடிய கடினமான வார்த்தைகள் அவை.
ராஜி ஆத்திரமும் அழுகையுமாகக் கதறினா அவன் பெற்றோரை, அவனுடன் வேலை பார்க்கு எல்லோரையும் இழுத்தாள் சண்டையில்.
கணவனையும் மனைவியையும் தவிர ( இல்லாத வீட்டுக்குள் பிரச்சினை என்று வந்துவ எந்தக் கட்டம் வரை வேண்டுமானாலும் டே நேரத்தில் என்ன வார்த்தைகளைப் பேசினாலும் அது
ஒளிஅரசி 08

ரொமான்ஸ்
இரகசியங்கள்
இரகசியங்கள் - 08
எழும் சண்டை ப எழுந்ததும். அடுப்புத் தீ ஊத சன் புகைந்தது து உயிர்க் காதல். கக்கூட எனக்கு பினோத் உதடு
ல மட்டும் நீ போன மாசம் | ரூபாவுக்குப்
"உன் முன்னால்
மட்டும்தான்
I i ii 11 த,
சிரிப்பை மனசுக்கும்
ட்ட அனுமதி கிட்ட போய் நிக்கற மாதிரி ன்னோட காசு.
ன் எங்கம்மா து. எனக்குத் வாழ்க்கைக்கு கலையே''
ார்த்தைகளை பால் - அதுவும் பாத மிக மிகக்
வார்த்தைகளை விழிகளுக்கும் இடம்மாற்றி விடுகிறேன்...''
- ப.சாந்தி -
rள். அவனை, ம் பெண்ணை
வேறு யாரும் பிட்டால், அது பாகும். அந்த கிணற்றுக்குள்

Page 10
"'நீ பெரிசா நா என்கிறது இல் வெற்றி; நீங்க
வாழ்க்கைதான் பெ நீயும் அவரும் பு
போட்ட பஞ்சு மூட்டையைப் போலத்தான் ஊறி, கனத்து திரும்ப எடுக்கவே முடியாதபடி
ஆகிவிடும்.
கடைசியில் எதனால் பிரச்சினை ஆரம் பித்ததோ அது மறந்து போய், வந்து விழுந்த வார்த்தைகளே வில்லனாகி விரிசலை ஏற்படுத்தும்.
''நீ இப்படியெல்லாம் பேசின பிறகு எந்த முகத்தை வச்சிக்கிட்டு உன்னோட வாழ்றது?'' என்கிற கேள்வி வரும். அம்மா, அப்பா என்று பிறந்த வீட்டில் போய்ப் பிரச்சினையைச் சொன் னாலோ இன்னும் மோசம்.
''என் மக வாழ்க் கையே போச்சே..'' என்கிற அழுகையிலும் அவர்கள் விடும் சாபத் திலும் நாமளும் கொஞ் சம் பொறுத்திருக்க லாம் என்கிற இலேசான
பேரும் சேர்ந்து குற்ற உணர்வும் காணா மல் போய், அந்த மகா பாதகனிடம் எப்படித் தான் இத்தனை மாதங் கள் குப்பை கொட்டி னோமோ என்று மனம்
அதுதான்மா ( பொருமும்.
ராஜிக்கும் அப்படித் தான் நடந்திருக்க வேண் டும். ஆனால், அவள் அதிர்ஷ்டம். ராஜியின் அப்பா கொஞ்சம் தெளிவானவராக இருந்தார். மகள் பிரச்சினை யுடன் வந்ததுமே அவர் முதலில் போய் சந்தித்தது மனோஜைத்தான். நடந்ததையெல்லாம் அவனிடம் கேட்டறிந்தார். பிறகு, நேராக மனைவியிடம் வந்து, ''நீ அவளைக் குழப் பாதே” என்று தெளிவாகச் சொன்னவர், மகளை தனியே அழைத்துப் பேசினார்.
அவள் மனதில் இருந்த அத்தனையையும் கொட்ட அனுமதித்தவர், ''நீ இன்னின்ன தப்பையெல்லாம் செஞ்சியா?'' என்று கேட்டார். "ஆம்'' என்று தலையசைத்து, ஆச்சரியத்துடன் நோக்கியவளிடம், விரிவாகப் பேசினார்.
''நான் இப்பதான் மாப்பிள்ளையைப் பார்த்துட்டு வர்றேன். ரொம்ப பீல் பண்றார்மா. நீ என்னென்ன பேசினனு சொல்றதுக்குக்கூட அவ்வளவு தயங்குறாரு. நீ என்னடான்னா, அவ்வளவு பழியையும் அவர் மேல போடுற. அவர்கிட்ட கேக்காம் கடைக்குப் போறதுல தப்பில்லம்மா. உங்க ரெண்டு பேருக்கும் இடையில அதுக்கான புரிந்து கொள்ளுதல்

லையம்மா இரண்டு வாழ்கிற பரிசு என்கிறத சிஞ்சுக்கனும் வெற்றி.>>
இருந்திடுச்சுன்னா எதுவுமே தப்பில்ல. ஆனா அவருக்கு ஏற்கெனவே நீ அவரை மதிக்கற தில்லையோங்கற எண்ணம் இருக்கு. அதை நீதான் உருவாக்கி வெச்சிருக்கிற. அதை நீயே மாத்தி, நம்பிக்கையை ஏற்படுத்திட்டேனா நீ என்ன செஞ்சாலும் அவர் ஏன்னு கேக்க மாட்டார். நீ பெரிசா நான் பெரிசாங்கறது இல்லம்மா வெற்றி; நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழுற வாழ்க்கைதான் பெரிசுங்கறதை நீயும் அவரும் புரிஞ்சுக்கணும். அதுதாம்மா வெற்றி.
'நம்ம புருஷன் தானே'னு சுலபமாக
நினைச்சு, காயப்படுத் ன் பெரிசா
துற மாதிரி நீ பேசிட்ட. என்ன இருந்தாலும் நம்ம புருஷன் இல் லையா? அவர் மனசு நோகலாமாங்கற எண் ணம் உன் மனசுல இருந்திருந்தா அப்படி பேசியிருக்க மாட்ட..''
அவர் பேசப் பேசத் தான் செய்த தவறு புரிந்தது ராஜிக்கு. மருமகனிடமும் அதே வார்த்தைகளைத்தான் பக்குவமாக எடுத்துச் சொல்லியிருந்தார். ''நீ நல்லா யோசி. நானும்
அம்மாவும் கொஞ்சம் கடை வரைக்கும் போய்ட்டு வர்றோம்.'' என்று மனைவியையும் இழுத்துக்கொண்டு கிளம்பினார்.
அடுத்த அரை மணி நேரத்தில் வினோத் தயங்கித் தயங்கி ராஜியின் வீட்டுக்கு வந்து காலிங் பெல்லை அடித்தான். பெற்றவர்களை எதிர்பார்த்து கதவைத் திறந்த ராஜிக்கு, வினோத்தைப் பார்த்ததுமே அடிவயிற்றிலிருந்து வெடித்துக் கிளம்பியது இனந் தெரியாத ஓர் உணர்வு.
விசும்பலும் அழுகையுமாய் முதல் சில நிமிடங்கள்....
மன்னிப்பும் கெஞ்சலுமாய் அடுத்த சில நிமிடங்கள்...
ஆக்ரோஷ அணைப்பில் அடுத்த சில நிமிடங்கள் கழிய...
எங்கிருந்தோ காற்றில் மிதந்து வந்தது பழைய பாடல் ஒன்று...
''பிரிந்தவர் மீண்டும் சேர்ந்துவிட்டால் அங்கு பெண்மையின் நிலை என்ன?''
மெளனம்!
ஒளிஅரசி 09

Page 11
- அறிவியல்
நினைவாற்றலை !
நினைவாற்றல் என்பது ஒரு திறமை. தக்க பயி மூலம் எவரும் நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள
ஒருவர் நினைவாற்றல் நன்றாக இருப்பதற்கு பிக்கை, ஆர்வம், செயல், ஊக்கம், விழிப்புணர்வு கொள்ளல், உடல் நலம் போன்ற ஆறு முக்கிய கோ காரணமாக இருக்கின்றன.
1. தன்னம்பிக்கை என்னால் செய்திகளை நன்றாக நினைவில் கொள்ள முடியும்; எனது மூளைத்திறன் நன்றாக இ எனக்கு மன ஆற்றல் நன்றாக இருக்கிறது போன்ற ! முதலில் வேண்டும். நான் எப்படித்தான் இவற்றை
படித்து நினைவில் வைக்கப்போகிறேனோ, எனக் சக்தி சற்றுக் குறைவாகத்தான் இருக்கிறது; அடிக்க மறந்து போய்விடுகிறது - என்று தங்களைப் பற்றி கொள்கின்ற அவநம்பிக்கையை விடவேண்டும்.
நினைவாற்றல் என்பது மூளையின் ஒரு அதனைப் பயன்படுத்தப் பயன்படுத்த பயிற்சி முயற்சியாலும் அந்தத் திறமையை வளர்த்துக்கொ யும். இந்த உண்மையை உணர்ந்து ஏற்றுக் நினைவாற்றலை வளர்க்கமுடியும் என்ற நம்பிக் செயற்பட்டால் அற்புத நினைவாற்றல் பெறமுடிய
2. ஆர்வம் ஆர்வம் காட்டுகிற விடயங்கள் நினைவில் பதியும். இயற்கையாக ஆர்வம் இல்லாவிட்ட ஆர்வத்தை ஏற்படுத்திக் கொண்டு கவனித்தால் வைத்தால் நினைவில் நிற்கும்.
3. செயல் ஊக்கம் இந்தச் செய்திகளை ஏன் நான் தெரிந்துகொள்ள | எனக்கு எவ்வகையில் இது பயன்படும் என்று உங்களோடு க தெளிவுபடுத்திக்கொண்டால் செய்திகள் நன்றாகப்
ஒளிஅரசி 10

வார்ப்பது எப்படி?
சிற்சிகளின் ர முடியும். 5 தன்னம் பு, புரிந்து ட்பாடுகள்
வைத்துக் ருக்கிறது; நம்பிக்கை யெல்லாம்
உதாரணத்திற்கு ஹோட்டல் ரெசி டென்ஸிக்கு நாளை காலை 4 மணிக்கு நீங்கள் வந்தால் உங்களுக்கு 5 இலட் சம் ரூபா கொடுக்கப்படும் என்று ஒருவர் உங்களிடம் சொன்னால் நீங் கள் மறந்துவிடுவீர்களா? தேவையை - அவசியத்தை நன்றாக உணர்ந்த விடயங்கள் நன்றாகப் பதிகின்றன.
4. விழிப்புணர்வு
மனம் விழிப்பு நிலையில் இருக்கும் பொழுது கவனமும் - ஒருமைப்பாடும் மிகச்சிறந்து இருக்கும். விழிப்புணர்வு அதிகரிக்க தியானப் பயிற்சிகளும், யோகா சனப் பயிற்சிகளும் துணைபுரியும். உங்களுக்குப் பிடித்த எந்த அமைப் பின் மூலமும் இவற்றைக் கற்று முறையில் படி பயிற்சி செய்தால் மனத் தெளி வும், அமைதியும், விழிப்புணர்வும் பெறலாம். வேதாத்திரி மகரிஷியின் பயிற்சிகளும், சமர்ப்பணம் - வாழும் கலைப் பயிற்சிகளும், ஈசா யோக மையப் பயிற்சிகளும், ஓசோ ரஜினிஷ் பயிற்சிகளும், கிருஷ்ணமாச்சார்ய யோகமந்திரம் (சென்னை) முதலிய அமைப்பு பயிற்சிகள் விஞ்ஞானபூர்வ மானதாக அற்புதமானவையாக இருக்கின்றன.
5. புரிந்து கொள்ளல் புரிந்து கொண்ட விடயங்கள் நினை வில் நன்றாக இருக்கின்றன. புரியா விட்டால் - தெரியாவிட்டால் கூச்சம், அச்சம், தயக்கம் இல்லாமல் ஏன்? எதற்கு? எப்படி? எவ்வாறு? எங்கு? யார்?.... என்று கேள்விகளைக் கேட்டு புரிந்துகொள்ளுங்கள்.
6. உடல் ஆரோக்கியம் உடல் ஆரோக்கியமாக இருக்கும் போது நினைவாற்றல் நன்றாக இருக்கும். ஒருவர் மிகவும் நோய்வாய்ப்பட்டு தளர்ந்திருக்கும் நேரத்தில் செய்திகளை நினைவில் வைப்பதே சிரமமாக இருக் கும், ஆரோக்கியமான உடலில் மூளைக்கு நிறைய இரத்தோட்டம், காற்றோட் டம் சென்று மூளை சுறுசுறுப்புடன் இயங்கும். தக்க உணவு, சரியான உறக் கம், முறையான பயிற்சிகள் மூலம் உடலை நன்கு பேணிப் பாதுகாத்தால் நினைவாற்றல் நன்றாக இருக்கும்..
=கு ஞாபக டி எனக்கு ய தாங்கள்
திறமை. யாலும் - பள்ள முடி கொண்டு கையுடன் பும்!
நன்றாகப் டால் கூட - - பதிய
வேண்டும், இணைத்து பதியும்.

Page 12
0 குழந்தை வளர்ப்பு
உங்கள் குழந்ை
சில குழந்தைகளிடம் காணப்படும் முரட்டுத் தனத்தைப் பிஞ்சுப் பருவத்திலேயே சரிசெய்யா விட்டால் அவர்கள் பெரியவர்கள் ஆன பின்னரும் அது தொடரும்.
தங்கள் பெற்றோரிடம் முரட்டுத்தனத்தை வெளிப்படுத்துவதில் ஆண் குழந்தை - பெண் குழந்தை என்ற பேதமில்லை. முதலில் கடும் வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள். சின்ன விடயங்களுக்கும் கூச்சல் போடுவார்கள். கெட்ட வார்த்தைகள் கூடப் பேசுவார்கள். குழந்தைகள் ஆசைப்படும் ஒன்றை மறுக்கும் போதோ ஏமாற்றத்திற்கு உள்ளாகும்போதோ இப்படித் தங்கள் கோபத்தை அவர்கள் வெளிப் படுத்துவார்கள். பொது வா கத் தங்கள் தவறுகளுக் கான தண்டனை யிலிருந்து தப்பிப் பதற்காகவும் இது போன்ற செயல் களில் குழந்தை கள் ஈடுபடுகின் றனர்.
கடும் வார்த் தைகளைப் பயன் படுத்தியும் தங் கள் எண்ணம் நிறை வேறாத நிலையில் அவர்கள் உடல் ரீதியான வன்முறையிலும் இறங்குவதைப் பார்க்கலாம். பொருட்களை எறிதல், தங்களையே வதைப்பது, பொருட்களை உடைப்பது, பெற்றோரை அடிப் பது போன்றவை அடுத்த கட்டம். பொதுவாக சகிப்புத்தன்மை கொண்டவர்களாக இருப்பதால் குழந்தையின் வன்முறையால் அதிகம் பாதிக்கப் படுவது அம்மாக்கள்தான். இந்த அனுபவம் அந்த அம்மாக்களை மிகவும் சங்கடத்துக்கும் உள்ளாக் கும். ஆனால், குழந்தைகளின் முரட்டுத்தனத் தைப் பெற்றோர்கள் சரியான சமயத்தில் . பொருட்படுத்தாமல் போனால் பெரியவர்களான பின்னரும் அப்பிரச்சினை தொடரும்.
ஒரு குழந்தை முதல்முறை முரட்டுத்தனமான செய்கையை வெளிப்படுத்தும்போதே அதைப் பெற்றோர்கள் கவனித்து கண்டிப்பது அவசியம். குழந்தையின் முரட்டுத்தனமான நடவடிக்கை களை அப்பாவோ, அம்மாவோ யாரோ ஒருவர்

தகள் முரடா?
மென்மையாக ஆதரித்தாலும் குழந்தை தனது போக்கைக் கைவிடாது.
ஒரு குழந்தையின் உணர்வு ரீதியான ஆரோக்கி யத்திற்கும் வளர்ச்சிக்கும் இந்த முரட்டுக் கோபத்திலிருந்து விடுபடுவது அவசியம். சுற்றியுள்ளவர்களைப் பாதிக்காமல் , குழந்தைகள் தங்களது உணர்வுகளை வெளிப் படுத்துவதற்குக் கற்றுக்கொடுப்பது அவசியமா னது. விளையாட்டுகள் மற்றும் கேரம் போர்டு ரூபக் சதுரம் ஆகியவை மூலம் தேவையற்ற கோபத்தைக் குழந்தைகளிடம் படிப்படியாகக் குறைக்க முடியும். வெற்றியைக் கொண்டாடுவது
போன்றே தோல் வி யையும் ஏற்றுக் கொள்ள குழந்தை களுக்கு விளையாட்டு கள் உதவும். கணிப் பொறி யில் வீடியோ கேம் ஆடும் பெரும் பாலான குழந்தைகள் தாங்கள் தோற்கும் நிலை வரும் போது அதனை நிறுத்தி விடு கின்றனர். எதிரில் மனி தர்கள் விளையாடாத நிலையில் அந்த அனு பவம் யதார்த்த வாழ்க்
கையைக் கற்றுக்கொள் வதற்கு எந்த உதவியும் புரிவதில்லை. மனிதர்களுடன் ஏற்படும் உணர்வு ரீதியான உறவுகளின் மூலமே குழந்தைகளால் கற்றுக் கொள்ள முடியும்.
குழந்தைப் பருவத்தில் வெளிப்படும் முரட்டுத் தனம் அவர்கள் பெரியவர்களாகும்போது அந்த ஆளுமையின் ஒரு பகுதியாகவே மாறிவிட வாய்ப்புண்டு. அலுவலக சகாக்கள், மனைவி மற்றும் குழந்தைகளிடமும் அது வன்முறையாக நீட்சியடையும்.
குடும்ப வன்முறை என்பது ஆண்களால் மட்டுமே பிரயோகிக்கப்படுவது என்பது பொதுவாக இருக்கும் நம்பிக்கை. ஆனால், அது உண்மை அல்ல. பெண்களும் உடல் ரீதியான வன்முறைகளை வெளிப்படுத்துபவர்களாக இருக்க முடியும். அதனால் குழந்தைப் பருவத்திலேயே இது போன்ற சிக்கல்களைச் : சரிசெய்வது அவசியம்.

Page 13
O பேட்டி - நேர்கண்டவர் - எம். சதாசிவம் சிந்தித்தல் வெற்றியின் முதல் படியில்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் மனப்பான் கொண்ட சமூகசேவையாளர், பெண்கள் மீதான எதி வன்முறைகளுக்கு எதிராக குரல்கொடுத்து பெண்க உரிமைகளுக்காக பாடுபடும் பெண்ணியவாதி, கி மட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற். விழுது மேம்பாட்டு மையத்தின் பணிப்பாளர், க கள், நாடகங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பே வற்றில் ஆர்வமுடைய கலைஞர் என பன்முகங்கள் கொண்ட திருமதி சாந்தினி சச்சிதானந்தம் அவர்க இம்மாத நட்சத்திர இல்லத்தரசியாக தெரிவு செ அவர்களுடைய அனுபவங்களை உங்களுடன் பகி கொள்வதற்காக ஒளி அரசி சார்பில் அணுகினே தெளிவான சிந்தனையும் எந்த விடயத்தையும் ஆர் நோக்கும் அறிவும், ஒரு விடயத்தை அணு ஆற்றலும் பார்த்தவுடனேயே அவர்மீதான மரியாதை மதிப்பையும் எமக்கிடையே உயரச்செய்தது.
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டிருந்தா இவர் பிறந்து வளர்ந்ததெல்லாம் கொழும்பில்த தனது பாடசாலைக் கல்வியை சென். பீற்றஸ் செ வென்றில் முடித்துக்கொண்ட இவர் மொரட்டு
ஒளிஅரசி 12

11 நடசத?
> இல்லத்தரசி
சமை ரான ளின் ரொம் கான -லை என்ற ளைக் -ளை சய்து டர்ந்து சாம். ழ்ந்து
கும் தயும்
இலங்கைத் திருநாட்டில் எடுத்துக்காட்டாக இருக்கும் பெண்களின் பெருமைகளை ஒளிஅரசி
மூலம் பிரசுரிக்கவே இப்பகுதி. அந்தவகையில் ஆகஸ்ட் மாத நட்சத்திர இல்லத்தரசியாக பிரபல பெண்ணியவாதியும் விழுது மேம்பாட்டு மையத்தின் பணிப்பாளருமான திருமதி
சாந்தினி சச்சிதானந்தத்துடன் ஒரு நேர்காணல்
லும்
ான். கான் வப்

Page 14
''இல்லை, ஓடு, சொல்” என்பதுதான் சிறுவர்கள் தங்களைத் தாங்களாகவே
காப்பற்றிக்கொள்ளும் புதிய பொறிமுறையாகும்.
பல்கலைக்கழகத்தில் வெளியேறினார். த . பொதுச் சேவைகளி விழுமியங்களிலும் ப கட்டடக்கலையில் பூ முடித்த பின்னர் ே என்பவற்றில் தனது கையும் விழுமியங்க இடம்பெற்ற பாதிப்பு: 1983 இல் ஏற்பட்ட சொந்தபந்தங்களை எ
வாழ்வில் துன்பம் மனிதனாகிறான். த பயன்படுத்தி அதை சாந்தினி இரண்டாவ யாழ்ப்பாணத்தில் தா பொதுச்சேவைகலை பெண்களுக்கு ஆதரவு சந்தர்ப்பமாகப் பய
யாழ்ப்பாணத்தில் அகதி வாழ்க்கை என இலங்கை திரும்பி ெ வாழ்க்கையை பொது
''விழுதுகள் அவை டத்தில் பல்வேறு | தொடர்பாக உங்கள் வவே சற்று நிதானித்
பல்வேறு வகை அவர்களுக்கு உதவும் மூதூர் போன்ற பிர உருவாக்கி அதன் சேவைகளை ஆரம் அமைப்புக்களை [ பாதிக்கப்பட்டவர் வேளையில், அதன் அமைப்பினை ஆர நிறுவனத்தினை தெ பரந்து விரிந்ததும் ஆ ஆண்டில் இந்நிறுவ வருடங்கள் பொதுக் அந்த அனுபவம் ஒ வெனில், தொண்( பாதிக்கப்பட்டவர்க தற்காலிக பிரச்சினை சமுதாயத்திடமும் எந் வில்லை. இவற்றிற் ஏற்பட வேண்டுமெ உருவாக்கப்பட்டு அது எதிர்பார்க்கின்றோ இந்நிறுவனம் நாட்டி மாகக் கொண்டு கடந்

ல் கட்டடக்கலையில் பட்டப்படிப்பை முடித்து என் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலத்திலேயே லும் நாடகத்துறை போன்ற கலை கலாசார மிகுந்த ஆர்வமுடையவராக இருந்த காரணத்தினால் பட்டப்படிப்பை முடித்திருந்தாலும் கூட படிப்பை மடை நாடகம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கவனத்தைச் செலுத்தினார். தமிழர்களின் வாழ்க் ளையும் புரட்டிப்போட்ட இனக்கலவரத்தின்போது க்கள் இவரது குடும்பத்தையும் விட்டு வைக்கவில்லை. - இனக்கலவரத்தின் காரணமாக சொத்துக்கள் ல்லாம் இழந்து யாழ்ப்பாணத்துக்கு இடம்பெயர்ந்தார். ங்கள் வரும்போது துவன்டுபோகிறவன் சாதாரணன் ஆனால், அந்தக் துன்பங்களை சந்தர்ப்பங்களாகப்
எதிர்கொள்பவன் சாதனையாளன் ஆகின்றான். து வகையைச் சேர்ந்தவர் எனலாம். இடம்பெயர்ந்து ங்கியிருந்த காலப்பகுதில் மிகவும் உத்வேகத்துடன் எச் செய்ததுடன் வன்முறையால் பாதிக்கப்பட்ட பாக நிறைய பணிகளை முன்னெடுத்து துன்பங்களை எபடுத்திக்கொண்டார். பிருந்து இந்தியா நோக்கி மீண்டும் ஓர் இடம்பெயர்வு சிறிது காலம் கழிந்தது. 1989 ஆம் ஆண்டு மீண்டும் பாதுச்சேவை, தொண்டு நிறுவனப் பணியென தனது துச்சேவைகளுடன் இணைத்துக்கொண்டார்.
மப்பினூடாக பாதிகப்பட்ட மக்களுக்கு கிராமிய மட் பணிகளை செய்துவருவதாக அறிகின்றோம். அது பங்களிப்பினை சிறிது கூற முடியுமா?'' என வினா ந்து தொடங்கினார்... யிலும் பாதிக்கப்பட்ட பெண்களை வலுப்படுத்தி P முகமாக 1990 களில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, -தேசங்களில் கிராமிய மட்டத்தில் அமைப்பினை மூலம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பித்தோம். இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட கிராமிய பன்னிரண்டு வலையமைப்புக்களாக உருவாக்கி களின் முன்னேற்றத்திற்கு உதவி செய்து வந்த ஒரு தொடர்ச்சியாக 2003 ஆம் ஆண்டு விழுது' என்ற நம்பித் தோம் எனத் தெரிவித்தார். விழுது என்ற ாடங்கக் காரணமாக இருந்த எண்ணக்கரு மிகவும் ழமான சிந்தனையைக் கொண்டதுமாகும். 2003 ஆம் னத்தை ஆரம்பிக்கின்றபோது ஏறத்தாழ பதினாறு =சேவையில் ஈடுபட்ட அனுபவம் காணப்பட்டது. -ரு படிப்பினையைப் பெற்றுத்தந்தது அது என்ன 5 நிறுவனங்களினால் செய்யப்படும் உதவிகள் ளின் குறிப்பிட்ட எண்ணிக்கை அளவானவர்களின் -களுக்கு மட்டும் தீர்வு காணுமே தவிர ஒட்டுமொத்த தப் பெரிய மாற்றத்தையும் கொண்டுவருவதாக அமைய த காரணம், சமுதாயத்தில் அடிப்படை மாற்றங்கள் னில் நல்லாட்சி முறமை (Good Governance) ஒன்று , = மக்களிடத்தே மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும் என ? ம். இதன் விளைவுதான் விழுதுகள் நிறுவனம். நீ ல் நல்லாட்சி முறைமையை கொண்டுவருவதை நோக்க 6 த பத்து வருடங்களாக செயற்பட்டு வருகின்றது என்றார். -
ஒளிஅரசி 13

Page 15
O பேட்டி பநேர்கண்டவர் - எம். சதாசிவம்
''இன்று தினசரிகளை எடுத்துப் புரட்டி சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தினமு கொண்டிருக்கும் செய்திகள் அதிகளவு வருகிறது. கிழக்குப் பகுதிகளில் இது இன்றைக்கு அதிகமாக குறிப்பிடுகின்றது. ஒரு சமூக சேவகியாக ஒரு டெ நீங்கள் இதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்" எனக் (
நீங்கள் அண்மைக்காலமாக பார்த்தீர்களானால் ( யுத்தத்தின் பின் தாய், தந்தையை இழந்து, பிள் அநாதையாக தாயும் மகளும், அண்ணனும் தங்ல தங்கையும், பாட்டியும் பேரனும் நிர்க்கதி தனிப்படுத்தப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண் இவர்களின் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்வில் வாழ்கின்றார்கள். இதனால் சமூகத்தில் அதிகப் துஷ்பிரயோகம், கொலை, கொள்ளை என பலவி
ஆளாக வேண்டியுள்ளது. முன்பெல்லாம் கூட்டுக்கு பொழுது பாதுகாப்பு அதிகப்படியாக இரு! தனிமைப்படுத்தப்பட்ட வாழ்வில் பாதுகாப்பில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. வடக்கு கிழக் முழுக்க முழுக்க இராணுவ மயப்படுத்தப்பட்டுள் குடும்பங்கள் வெவ்வேறு பகுதிகளில் வாழ்கின் இவர்களது இச்சைக்கு சிறுவர்களும் பெண்களும்
சிறுவர்களை பொறுத்தவரையில் தாங்களாக கொள்ள, “இல்லை, ஓடு, சொல்” என்ற புதிய டெ
ஒளிஅரசி 14

ரால் பெண்கள், ம் நடை பெற்றுக் குறிப்பாக வடக்கு, இடம்பெறுவதாக பண்ணியவாதியாக கேட்டபோது... முப்பது வருடகால ளைகளை இழந்து
கயும், அக்காவும் யாகி தற்போது படிருக்கின்றார்கள். > பாதுகாப்பின்றி படியான சிறுவர் த இன்னல்களுக்கு டும்பமாக வாழும் ந்தது. தற்போது லை. எனவேதான் கு பிரதேசங்களில் ளதால் அவர்களது றார்கள். எனவே, ஆழாகின்றார்கள். வே காப்பாற்றிக் பாறிமுறை ஒன்றை
உரு வாக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு பிர தேசத்திலும் உள்ள சிறார் களுக்கு அறிமுகம் இல்லாத ஒருவர் உன்னைத் தொடும் போது இல்லை என்று சொல்; அவர் உன்னை நெருங்கும் போது அந்த இடத்தைவிட்டு ஓடு; உனக்கு நெருக்கமான ஒருவரிடம் உனக்கு நடந்ததைச் சொல் என ஒவ்வொரு பிரதேசங் களிலும் உள்ள சிறார்க ளுக்கு பயிற்சி அளிக்கின் றார்கள். இதை சரியான முறையில் சிறுவர்கள் கையாள்வார்கள் எனில், 60 சதவீதம் தங்களைக் காப் பாற்றிக் கொள்ள முடியும் என்றார்.
ம னி த ப் ப டைப் பில் ஒவ்வொருவரும் தாம் எங் குள்ளோம், எந்த நிலையில் உள்ளோம், எவ்வாறு உள் ளோம் என கொஞ்சம் சிந்திப்போமானால், எமது வாழ்வில் வெற்றி நிச்சயம். நாம் சிந்திக்க தொடங்கி விட்டாலே வெற்றியின் முதற்படிதான். நாம் சுயமாக வாழப்பழகிக் கொள்வது எமது வாழ்வுக்கு சிறந்தது.

Page 16
O வரலாற்றில் பெண்மணி இளம் வயதில் நோபல்
ஏமன் நாட்டைச் சேர்ந்த தவக்குல் கர்மான் மனித உரிமை ஆர்வலர், இதழியலாளர், அரசியல் வாதி எனப் பல முகங்களைக் கொண்டவர். பெண்களுக்கென கட்டுப்பாடுகள் நிறைந்த அரபு நாட்டில் பிறந்தாலும் வர்த்தகப் பாடத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அத்துடன், தன் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து விடாமல் அரசியல் அறிவியலில் முதுகலை பட்டமும், சட்டக்கல்வியில் முனைவர் பட்டமும் பெற்றார்.
மனித உரிமை பாதுகாப்புக்காக 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏமனியப் புரட்சியில் அலி அப்துல்லா சாலேவின் அரசுக்கு எதிரான பேரணிக்கு மாணவர்களை ஒருங்கிணைத்தார். போராட்டங்களில் பங்கேற்று பல முறை சிறைக்குச் சென்றிருக்கிறார். சிறையில் இருந்து வெளிவந்தாலும் சோர்ந்து போகாமல் மீண்டும் போராட்டங்களைக் கையிலெடுப்பார். பெப்ரவரி மூன்றாம் நாளை 'பெருங்கோப் நாள்' என்று அறிவித்தார்.
பெண்களின் பாதுகாப்புக்காக, 'எல்லை களற்ற பெண் இதழியலாளர்கள்' என்ற
:: :: 0
பட 11 - 2
2 TEIE:
இதோ சிக்கன் ப்

ல் பரிசுபெற்ற பெண்
அமைப்பை நிறுவி அதன் தலைவராகவும் பதவி வகிக்கின்றார். பெண்கள் முன்னேற்றத்திற்கு குரல்கொடுத்த அதே நேரத்தில் ஊடகங்களில் பெண்களின் பங்கேற்பு குறித்த விழிப்புணர்வை யும் ஏற்படுத்தினார். ஏமன் நாட்டு மக்களால் 'இரும்புப் பெண்மணி', 'புரட்சித் தாய்' என அழைக்கப்படுகிறார்.
2011 ஆம் ஆண்டு லிபேரியா நாட்டின் ' எல்லென் ஜான்சன், லேமா குபோவீ ஆகியோரு டன் சேர்ந்து பெண்கள் பாதுகாப்பு, சமாதானத் தைக் கட்டியெழுப்புதல், பெண்கள் உரிமை 'களுக்கான வன்முறையற்ற போராட்டம் ஆகிய வற்றுக்காக அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
உலகிலேயே நோபல் பரிசு பெறும் முதல் அரேபியப் பெண்ணாகவும், இரண்டாவது இஸ்லாமியப் பெண்ணாகவும் வரலாறு படைத்துள்ளார் தவக்குல் கர்மான். உலகிலேயே இளம் வயதில் நோபல் பரிசு பெற்ற பெண்ணும் இவர்தான். தான் பெற்ற நோபல் பரிசை ஏமன் நாட்டுப் பெண்களுக்கு அர்ப்பணிப்பதாகக்
கூறியிருக்கிறார் தவக்குல் கர்மான்.
1-2 :11
ஒளிஅரசி 15

Page 17
தொடர்கதை - ஆர். ராஜலிங்கம்
கப் புல்
வீட்டை அண்மித்தபோது... அவன் கண்ட காட்சி.... வீட்டு முற்றத்தில் யார் யாரோ கூடியிருந் தார்கள். அதனைக் கண்டவுடன் அவன் உள்ளம் பதறியது.
'வீட்டில் ஏன் இவர்கள் கூடியிருக்கிறார்கள்?' என்று சிந்தித்தபடி காரைத் தூரத்திலேயே நிறுத்திக்கொண்டான்.
காரிலிருந்து இறங்கியவன் தட்டுத்தடுமாறிய படி வீட்டை நோக்கி நடந்தான்.
வாசலை அடைந்தான். இப்போது உள்ளே அந்தக் காட்சி தெளிவாகத் தெரிந்தது.
எண்ணெய் விளக்குகள் பிரகாசமான ஒளியை வீசிக்கொண்டிருந்தன.
ஊதுவத்திகள் புகையைக்கக்கிக்கொண்டிருந்தன.
அவனால் அதற்கு மேலும் பொறுக்கமுடிய வில்லை. 2 ''தேன்மொழி!'' - என்று அடிக்குரலால் அலறினான். அவனின் தொண்டை அடைத்தது. சத்தம் வெளிவர மறுத்தது.
தட்டுத்தடுமாறி நின்ற திலீபனைக் கண்டதும் கே கூடியிருந்த பெண்களெல்லாம் ஒவ்வொருவராக
| ஒளிஅரசி 16

காதலி தேடிக்கொடுத்த
மனைவி
அத்தியாயம் - 10
வெளியேறினார்கள்.
திலீபனுக்குச் சுய நினைவுவர சில நிமிடங் கள் பிடித்தன. ஆட்கள் கூடியிருப்பதெல்லாம் அவனுக்குக் கனவில் நடப்பது போன்றிருந்தது. மனம் 'திக் திக்' என்று அடித்துக்கொண்டது.
அப்பொழுது...? ''அத்தான் உங்களுக்கு என்ன நடந்தது? ஏன் இப்படி அதிர்ந்துபோய் நிற்கிறீர்கள்?'
அவனின் கைகள் இரண்டையும் அன்புடன் பற்றிக்கொண்டு தேன்மொழிதான் கேட்டாள்.
"தேன்மொழி! நீ... நீயா! உனக்கு ஒன்றும் இல்லையா?'' என்று கேட்டான் தடுமாற்றத்துடன்.
"ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்? எனக்கு ஒன்றும் இல்லையே!'' என்று சொன்னாள் தேன்மொழி.
“தேன்மொழி, உனக்கு என்னவோ ஏதோ என்று பயந்துவிட்டேன். அதுசரி, இதெல்லாம் என்ன?
"எது அத்தான்?'' 'உம்... ஆட்கள் கூடியிருக்கிறார்களே?'' ''ஆட்களா? எல்லோரும் பெண்கள்.'' ''உம்... சரி, இவர்க ளெல்லாம் ஏன் கூடியிருக்கிறார்கள்?

Page 18
''அது வந்து... கடவுளுக்கு நன்றி செலுத்து வதற்காக ஒரு பூஜையை ஏற்பாடு செய்திருந் தேன். அதற்கு அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ள பெண்களையெல்லாம் வரச்சொல்லியிருந்தேன்'' இப்படி அவள் சொன்னதும்,
“என்ன கடவுளுக்கு நன்றியா? அது ஏன்?' என்று கேட்டான்.
"என் கவலையைப் போக்கி ஒரு சந்தோஷமான செய்தியை கடவுள் எனக்குத் தந்திருக்கிறார். அதற்காகத்தான்.”
"சந்தோஷமான செய்தியா?'' அது என்ன தேன்மொழி?''
"அது வந்து... ம்... வாருங்கள் சொல்கிறேன்” என்றவள், அவனை அறைக்குள் அழைத்துச் சென் றாள். பின்னர் அவன் மார்பில் சாய்ந்து கொண்டு,
"ம்... எனக்கு வெட்கமாக இருக்கிறது” என்று செல்லமாகச் சிணுங்கிக்கொண்டு கூறினாள்.
'தேன்மொழி! என்னிடம் சஸ்பென்ஸ் வைத்துப்பேசி என்னை அலைக்கழிக்காதே. பிளீஸ் சொல்லேன்.''
''சொல்கிறேன். வந்து... வந்து...... ம்.... நீங்கள் அப்பாவாகப் போகிறீர்கள்.''
''என்ன?'' ஆமாம். அடுத்த வருடம் இந்நேரம் நம் கையில் ஓர் ஆண்குழந்தை தவழும்.''
''அதெப்படி, அவ்வளவு கரெக்டாகச் சொல்கிறாய்?''
''கடவுள்தான் சொன்னார்.'' ''என்ன.... கடவுள் சொன்னாரா?'' "ஆமாம். குறத்தி வடிவில் வந்து சொன்னார். அது கேள்விப்பட்ட பின்புதான் இப்படிச் சந்தோஷமாக இருக்கிறேன். அதற்காகத்தான் கடவுளுக்கு நன்றி செலுத்தும் இந்தப் பூஜைக்கு ஏற்பாடு செய்தேன்.''
முகமலர்ச்சியுடன் சிரித்துக்கொண்டு குழந் தைத்தனமாக தேன்மொழி இப்படிச் சொன்னாள்.
அவளின் அறியாமை திலீபனின் மனதை வாட்டியது.
குழந்தைத்தனமான இந்தச் சிரிப்பை இன்னும் எவ்வளவு காலத்துக்குப் பார்த்துக்கொண்டிருக் கப் போகிறேன் என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டதும் அவன் கண்கள் குளமாகின.
எனினும், அவன் முயற்சி செய்து அதனை மறைத்துக்கொண்டான்.
அவள் சொன்ன விடயத்தை நம்புவது போல பாசாங்கு செய்தான். எனினும், அவன் அதனைச் சிறிதும் நம்பவில்லை.
சோதிடர் சொன்னது நடக்காவிட்டால்தானே குறத்தி சொன்னது நடக்கலாம். குறத்தி சொன்னது நடக்குமென்றால் சோதிடர் சொன்னது மட்டும் எப்படி நடக்காமல் போய் விடும் ? இப்படி அவன் சிந்தித்தான்.

ள்ளத்தைச் சுஷத்துடன் அதேசமயம் அது
இருந்தாலும், அவள் அந்த நம்பிக்கையிலாவது சிறிது சந்தோஷமாக இருக்கட்டுமே என்று ஓரளவு திருப்திப்பட்டான். அதேசமயம் அவள் மிகுந்த சந்தோஷத்துடன் இருப்பதும் அவன் உள்ளத்தைச் சிறிது வருத்தியது.
அணையப்போகும் விளக்கு அணைவதற்கு முன் பிரகாசமான ஒளியைத் தரும் என்று யாரோ சொன்னது, ஏனோ அவன் நினைவுக்கு வந்தது.
தேன்மொழியின் முகத்தில் தவழும் மகிழ்ச்சி யும் அவளின் முடிவுகாலத்துக்கு ஒரு அறிகுறியோ என்று அவன் அஞ்சினான்.
நாட்கள் கடந்து கொண்டிருந்தன. இதற்கிடை யில் ஒருநாள் அவனைச் சந்திப்பதற்கு பிரேமினி அவன் அலுவலகத்துக்கு வந்திருந்தாள்.
தேன்மொழியை விட்டொழிப்பதற்கு திலீபன் நாட்களை எண்ணிக்கொண்டிருப்பான் என்றுதான் அவள் எதிர்பார்த்திருந்தாள். ஆனால், அவனைச் சந்தித்தபோது அவளுக்குக் கிடைத்தது ஏமாற்றமே.
பிரேமினியுடன் அவன் முகம் கொடுத்தும் பேசவில்லை. அது அவளுக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
அவள் கூறினாள். ''திலீபன்! அந்தப் பசப்புக்காரி உங்களை நன்றாகத்தான் மயக்கிவிட்டாள். நீங்களும் அவளிடம் மயங்கிவிட்டீர்கள். அதனால்தான் உங்களுக்கு என்னுடன் பேசவும் பிடிக்க வில்லை. அப்படித்தானே?''
"பசப்புக்காரி அவள் அல்ல; நீதான்.'' ''என்ன?'' ''ஆமாம்! நீதான் உத்தமிபோல நடித்து உன்னுடன் என்னை மயங்கவைத்திருந்தாய்!''
'ஏன் சொல்லமாட்டீர்கள்? உங்கள் மீது தூய்மையான காதல் கொண்டிருந்தேனே... எனக்கு வேண்டும். இன்னும் வேண்டும்.''
இப்படிக் கூறிக்கொண்டு கண்களைக் கசக்க ஆரம்பித்தாள்.
''இதோ பார் பிரேமினி, உன்னுடைய முதலைக் கண்ணீரைக் கண்டு ஏமாந்த காலம் மலையேறிவிட்டது. இனியும் உன்னால் என்னை அப்படி ஏமாற்ற முடியாது.''
" என்ன ஏமாற்றினேனா? நானா?'' ''ஆமாம். நீ உத்தமியாக இருந்தால், என்மீது கொண்டது தூய்மையான காதலாக இருந்திருந்தால் என்னை வேறொருத்திக்கு கணவனாக்கியிருக்க மாட்டாய்! சாவுக்குப் பயந்து காதலைத் துறக்க முன்வந்திருக்கமாட்டாய். சாவுடன் போராடி என்னை அடைய முயற்சித்திருப்பாய்!''
''ஓஹோ! எனக்குப் புரிகிறது. இதெல்லாம் அவளுடைய போதனையா? அதாவது, உங்கள் அருமை மனைவி....''
''அருமை மனைவி... ஆமாம். அவள் அருமை மனைவிதான். அதனை நீ சொல்லித் தெரிந்து
ஒளிஅரசி 17

Page 19
0 தொடர்கதை - ஆர். ராஜலிங்கம்
கொள்ளும் நிலையில் நான் இல்லை.
வந்த அழு அவள் உண்மையான உத்தமி.
''எனக் உன்னைப்போன்ற போலி அல்ல.
மடக்குவது தனது உயிரைத் துச்சமாக மதித்துக் |
பாவித்தே கொண்டு எனக்கு மனைவியாக |
அழ வைத் வாழ்ந்து கொண்டிருக் கிறாள்.
என்மீது உயிருக்குப் பயந்து உன்னைப்போல்
நான் வாழ அவள் என்னை ஒதுக்கிவிடவில்லை.
தேவைதா உன்னுடன் இதற்கு மேலும் பேசிக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை. தயவுசெய்து இங்கிருந்து நீ போனால் போதும்.''
''திலீபன்! என்னையா போகச் சொல்கிறீர்கள்?''
"ஆமாம். உன்னைத்தான். போய் விடு. பிளீஸ் போய்விடு.''
“போகிறேன்... இப்போது போகி றேனே தவிர மீண்டும் வருவேன். ஆனால், உங்கள் இருவரையும் நிச்சய மாக வாழவிடமாட்டேன்.
இது சத்தியம்.''
இப்படி அவள் மனதி லேயே கறுவிக்கொண்டு வெளியேறினாள்.
அவள் மனதில் அடிபட்ட நாகத்தின் வஞ்சம் ஏற்பட்டது.
"ம்... இன்னும் எத்தனை நாட் களுக்குச் சேர்ந்து வாழப் போகிறார் கள்? அதற்குள் ஜாதகம் பலித்துவிட் டால், ஜாதகமே பலிக்காவிட்டாலும் நான் அதனை உண்மையாக்கிக் காட்டுகிறேன்.''
''நாசகாரி! என்மீது அவருக்கு இருந்த அன்பையெல்லாம் இல்லா மலாக்கிவிட்டாளே பாதகி! ஜாதகம் பலிக்கிறதோ, இல்லையோ அவள்
அவளி சாகத்தான் வேண்டும். அவள் இனி
திலீபன் உயிருடன் இருக்கவே கூடாது.
தனக்கு மர
கிடைக் பாடசாலையில் என் மானத்தை
''சே... வாங்கினாள். இப்போது என் காதலை நாசமாக்கிவிட்டாள். திலீபன் என்
மடத்தனம் மீது உயிரையே வைத்திருந்தாரே!
காதல் இப்பொழுது அதனை இழந்து
கிடைக்காத விட்டுத் தவிக்கிறேனே கடவுளே!
இப்படி அவசரப்பட்டு இப்படியான நிலைக்கு
நாட்கள் ஆளாகிவிட்டேன்.''
மாதங்கள் அவளுக்குக் கதறி அழவேண்டும்
இந்த 5 போலிருந்தது. அழுகை குமுறிக்
னவோ எ பூ கொண்டு வந்தது.
அன்று... ஆனால், வீதியில் ஆட்கள் நடமாட்
சந்திக்க வ இடம் அதிகமாக இருந்ததால் அழுவ
யைப் பற்றி அதற்கும் முடியவில்லை. பொங்கி
இன்றியும்

கையை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டாள். கு வேண்டும் ; இன்னும் வேண்டும். திலீபனை கற்கு எடுத்ததற்கெல்லாம் அழுகையை ஆயுதமாகப் னே... அதுதான் ஆண்டவன் என்னை ஒரேயடியாக எதுவிட்டார். | உயிரையே வைத்திருந்த திலீபனை இழந்துவிட்டு த்தான் வேண்டுமா? எனக்கு அப்படி ஒரு வாழ்க்கை
னா?
*டிசி: +
Tடிசா: A #
ன் கற்பனை அவளுக்கே வேடிக்கையாக இருந்தது. ( அவளுக்குக் கிடைக்கும் பொருளாக இருந்தபோது பணம் வந்துவிடுமோ என்று அஞ்சினாள்.
காத பொருளானதும் வாழ்க்கையையே வெறுக்கிறாள். ஏற்கனவே யோசிக்காமல் செய்ததைப் போல் ான காரியம் எதையும் செய்துவிடக்கூடாது. போனாலும் போகட்டும் பரவாயில்லை. எனக்குக் 5 வாழ்வு என் விரோதிக்கும் கிடைக்கக்கூடாது.''
யே பலவாறு சிந்தித்துக்கொண்டு சென்றாள் பிரேமினி. நகர்ந்தன. தேன்மொழியுடன் இல்லறம் ஆரம்பித்து மூன்று நெருங்கிவிட்டன. இன்னும் ஒருவாரம்தான் இருக்கிறது. ஒரு வாரத்துக்குள் என்னென்ன நடக்கப்போகின்ற எறு திலீபன் தவியாய்த் தவித்துக்கொண்டிருந்தான். அலுவலகத்தில் அவன் இருந்தபோது யாரோ அவனைச் ந்திருப்பதாகத் தகவல் கிடைத்தது. தேன்மொழி நிய சிந்தனையால் கடமையில் எவ்வித அக்கறை இருந்த அவனுக்கு இது மிகுந்த எரிச்சலையூட்டியது.

Page 20
வந்திருப்பது பிரேமினிதான் என்று அவனுக் குப் புரிந்துவிட்டது.
"ச்சி... இந்தச் சனியன் இப்போது என்னைச் சந்திக்க வந்துவிட்டதா? போகச் சொன்னாலும் போய்த் தொலையாதே” என்று நினைத்தவனாக பியோனிடம், வந்திருக்கும் ஆளை வரச் சொல்லி அனுப்பினான்.
அவள் முகத்தைக்கூடப் பார்க்க விருப்ப மில்லாதவனாகப் பின்புறமாகத் திரும்பிக் கொண்டிருந்தான்.
சில நிமிடங்களுக்குப் பின்னர்... கதவைத் தள்ளித் திறந்து கொண்டு அவள் உள்ளே நுழைவது அவனுக்குப் புரிந்தது. அவன் அலட்சியத்துடன் அவளைத் திரும்பியும் பாராமல் அமர்ந்திருந்தான்.
அப்போது...? 'பளார்' என அவன் முகத்தில் ஓங்கி ஓர் அறை விழுந்தது.
அதிர்ச்சியுடன் அவன் பதறியடித்துக் கொண்டு திரும்பினான். அங்கே...? புன்னகையுடன் ஒரு வாலிபன் நின்றுகொண்டிருந்தான்.
"ஏண்டா! ஃபூல் ! நான் வருகிறேன். நீ கொஞ்சமும் மரியாதையில்லாமல் பின்புறத்தைக் காட்டிக்கொண்டா உட்கார்ந்திருக்கிறாய் ?''
'ஓ... ரகு ! நீ... நீயா? எப்போது வெளி நாட்டில் இருந்து வந்தாய்?'
''இன்று காலைதான் வந்தேன். வந்ததும் முதல் வேலையாக உன்னைத்தான் சந்திக்க வந்தேன். ஏண்டா எப்படி இருக்கிறாய்? நன்றாக இருக்கிறாயா? உன் மனைவி நலமா?
"மனைவியா? எல்லாம் உனக்குத் தெரிந்து விட்டது போலிருக்கிறது. உனக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டேன் என்பதைக்
குத்திக் காட்டுகிறாயா?''
"சே... நான் அப்படிச் சொல்லவில்லை. அது உன் சொந்த விடயமாயிற்றே.'
'பார்த்தாயா? திரும்பவும் பிரித்துப் பேசுகிறாய்? நான் எப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் திருமணம் செய்தேன் தெரியுமா?''
''சரிதான் போடா. நீ சுதந்திரப் பறவை. உன்னைக் கட்டுப்படுத்த யார் இருக்கிறார்கள்?''
''ரகு அப்படி யெல்லாம் பேசாதே! நான் குழம்பிப்போய் இருக்கிறேன். உன்னைக் கண்ட தும்தான் சிறிது தெம்பு ஏற்பட்டுள்ளது. நீயும் என்னை வெறுத்துப் பேசாதே.''
"சே... உன்னை வெறுப்பேனா? ஏதோ ஜோக் காகத்தான் பேசினேன். வருத்தப்படாதே. சரி குழம்பியிருப்பதாகக் கூறினாயே அப்படி என்ன குழப்பம் ?''
''அதையேன் கேட்கிறாய்? நான் அனுபவிக் கும் துன்பம் கொஞ்சநஞ்சமல்ல.''
''ஏன்... உனக்கு நல்ல மனைவி அமைய

வில்லையா?''
''சீ.. போடா... எனக்குக் கிடைத்திருப்பவள் உத்தமி. என்மீது உயிரையே வைத்திருக்கிறாள். அவள் மனைவியாகக் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்கவேண்டும்.''
"பிறகு ஏண்டா! அப்படியானால் உனக்கு என்ன தான் அப்படித் துன்பம். நல்ல மனைவி கிடைத்து விட்டால் போதுமே. சந்தோஷமாக வாழலாமே.''
''வாழலாம்தான். ஆனால், அவள் என்னை விட்டுப் போய் விடுவாளோ என்று அஞ்சுகிறேன்.''
"ஏன் அவளுக்கு வேறு யாராவது காதலன் இருக்கிறானா? அவனோடு ஓடிவிடப் போகிறாள்* என்று அஞ்சுகிறாயோ?''
"போடாஃபூல்! உனக்கு எப்போது பார்த்தாலும் ஜோக்தான். மற்றவரின் வேதனைகூடப் புரியாது.'
''சொரி திலீபன்! உம்... சரி! அப்படி ஏன் பயப்படுகிறாய் ?''
"ஏனென்றால், என் ஜாதகம் அப்படி.' "ஏன் ஜாதகத்துக்கு என்ன?'' "வந்து... வந்து... ம்... அவசரப்பட்டு அவளோடு கணவனாக நடந்து கொண்டேன். அது ஜாதகத்தில் உள்ளதைப் பலிக்க வைத்து விடுமோ என்று பயப்படுகிறேன்.''
''என்னடா சொன்னாய்? கணவனாக நடந்து கொண்டாயா? ஒரு மனைவியிடம் கணவனாக நடந்து கொள்ளாமல் பின் எப்படி... அந்நிய
னாகவா நடந்து கொள்ளவேண்டும்.''
"இல்லை ரகு. உனக்குத் தெரியாது. என் ஜாதகம் அப்படி. நான் எந்தப் பெண்ணை மணந்து கொண்டாலும் அவளுடன் இல்லறம் ஆரம்பிக் கும் நாளிலிருந்து மூன்று மாத காலத்தில் அவளின் ஆயுள் முடிந்து விடுமாம். அப்படித் தான் என் ஜாதகம் கூறுகிறது. அதனால்?...''
''அதனால்...?'' ''அவள் என்னைவிட்டுப் போய்விடுவாளோ என்று அஞ்சுகிறேன்.''
''அப்படியா?'' என்று கேட்டுவிட்டு சிரித்தான் ரகு. பின்னர் "பயப்படாதே திலீபன். அப்படியெல்லாம் எதுவும் நடக்காது'' என்றான்.
"ம்... உனக்கென்னடா. நீ இலகுவாகச் சொல்லி விட்டாய். என் கையைப் பார்த்து சோதிடம் சொன்னவர் எவ்வளவு பெரிய யோகி தெரியுமா?''
''யோகியோ, போகியோ . அதைப்பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அவர் சொன்னது உண்மையில்லை.''
''அதாவது, ஜோதிடம் பொய் என்கிறாய். அப்படித்தானே?''
'நான் அப்படிச் சொல்லவில்லை. அந்த சோதிடர் சொன்னது பொய் என்றேன்.''
''அப்படியா? ஏன்?''
(தொடரும்...)
ஒளிஅரசி 19)

Page 21
அழகுக்கு அழகு சேர்க் சிறந்து விளங்கும்
பணிப்பாடு
இ t 4:42
4ாயம்
11ா: 461 1
வீடியோ, புகைப்படத்துறையில் Anton Sti சிறந்து விளங்குகின்றது. இதுதொடர்பாக An பணிப்பாளர் அன்டன் பெர்னாண்டோ தெரிவி
''கற்றது கையளவு கல்லாதது கடலளவு' என அனுபவம் எனும் அலைகடலின் மேல் 23 வ வீடியோ, புகைப்படத்துறையில் 1990 இ இன்று வரை பயணத்தை மேற்கொண்டுள் இத்துறையில் மிகவும் பிரசித்தி பெற்ற தப் வீடீ யோ, புகைப்படப்பிடிப்பாளர்களிடம் தொடர்ந்து எனது பயணத்தை சிறிது சிறிதாக தன்னிச்சையாக ஆரம்பித்து இன்று இலங்கை பல்வேறு பிரசித்தி பெற்ற பிரபல படப்பிட இடம்பிடித்துள்ளேன். வெள்ளவத்தையில் இத் தன்னகத்தே தக்கவைத்துக்கொள்வது என்பது 6 படிப்பினையே.
வீடியோ படப்பிடிப்பில் காலஞ்சென்ற பி ஜோன் அமரதுங்கவின் புதல்வி ஆகியோரின் தி ஆர்னல்ட் இதுபோன்ற பிரபலங்கள், தொழிலதி வீட்டு மங்கள வைபவங்களில் முத்திரை பதித் வளர்ச்சியில் புகைப்படத்துறையில் இன்றுள்ள Book, Chintetic Album வரை செய்து வருகி போட்டி நிறைந்த தொழில் நுட்பம் வ அடைந்துள்ள இவ்வுலகத்தில் திருமணம் என் அழகுக்கு அழகூட்டும் வகையில் அந்த ச அமைதியான முறையிலும் - கண்களுக்கு பெ டும் வகையிலும் - காலாகாலமாக பாவித்து கக்கூடிய வகையிலும் கதைப்புத்தக வடிவில் - புத்தக வடிவில் Album வீடியோ (DVD BLUE போன்ற வடிவமைப்பில் உங்கள் வைபவங்களை உங்கள் வீட்டு சின்னத்தில் கண்டு ரசிக்க நானும் எனது குழுவினரும் கா கின்றோம். இவை அனைத்தும் வார்த்தைகள் செயல்வடிவம்'' என்றார்.
ஒளிஅரசி 20

-கும் தொழில்நுட்பத்தில் Anton Studio 7
ளர் அன்டன் பெர்னாண்டோவுடன் ஒரு நேர்காணல்
udio 7 ஆனது iton Studio 7
க்கையில், ன்பதற்கமைய பருடகாலமாக
ல் இருந்து ளேன் நான். மிழ், சிங்கள பணிபுரிந்து சொந்தமாக - கயில் நான் இத்துறையில் டிப்பாளர்கள் வரிசையில் தொழிலை தனித்துவமாகத் எனது அனுபவம் எனும் பாடம் பெற்றுத்தந்த
பிரபல நாள்
கொழுமமாநகரின் வீடியோதெரிவு
ரேமதாஸவின் புதல்வன் சஜீத் பிரேமதாஸ், திருமணம் மற்றும் அரவிந்த டி சில்வா, ரஸல் பர்கள், இன்னும் எமது வாடிக்கையாளர்களின் துள்ளேன். கடந்த 15 வருடகாலத்தில் அசுர தவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் Story
றேன். ளர்ச்சி Tறாலே
மை வெளிச்சம் அழகை
குடும்பப்பிரச்சினை, வெளிநாட்டு பிரயாணம், மருகூட்
விவாக விவகாரம் தீர்த்து வைக்கப்படும். பிறந்த திகதி, s ரசிக்
மாதம், வருடம் கொண்டு வரவும். நேரம் 9 - 5 வரை. பாடப்
ஈஸ்வரி E RAY)
Dr. P. Thiyagaraja (J. P. Hons) வீட்டு
21-11, ஜம்பட்டா வீதி, கொழும்பு-13. ரையில்
தொலைபேசி: 2440606 Fax: 0094-1-2440606 த்திருக்
www.eswari.com வெளிநாட்டில் உள்ளவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு அல்ல.
கொள்ளலாம். மேலதிக கட்டணமின்றி நிறைவேற்றிக் கொடுக்கப்படும்.

Page 22
அழகுக் குறிப்பு
சின்னச் சின்ன 8

பழகுக்குறிப்புக்கள்
1) குளிக்கப்போகும் முன் தினமும் கால் பெருவிரலில் கடுகு எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் முதுமையில் கண்ணில் வரும் 'கட்ராக்ட்' எனும் நோய் வராது. அத்தோடு கண்ணாடி அணியவேண்டிய அவசியமும் வராது.
2) ஒரு மேசைக்கரண்டி தேன், முட்டை மற்றும் ஒரு தேக்கரண்டி கிளிசரின் கலந்து தடிமனான தோல்களில் தேய்த்துவந்தால் உடல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாறும்.
3) முகம் பளபளப்பாக மாற வெள்ளரிக் காய், ரோஸ் வோட்டர் மற்றும் தேன் கலந்து தேய்ந்து வந்தால் பலன் கிடைக்கும்.
4) ஏதாவது விழாவிற்கு போகிறீர்களா? பிறரிடம் பேசும்போது வாயிலிருந்து கம கமவென மணம் வீசவேண்டும் என ஆசைப் படுகிறீர்களா? எலுமிச்சம்பழச்சாற்றுடன் உப்பு கலந்து சிறிது வெந்நீரில் வாயை அலம்புங்கள்.
5) தோலில் வரும் நோய்களைத் தடுக்க தினமும் குளிக்கும் தண்ணீரில் கொஞ்சம் உப்பு மற்றும் ஏழு அல்லது எட்டுத்துளி தோடம்பழச்சாறு கலந்து குளிக்கவேண்டும்.
6) தலைமுடி கொட்டுகின்றதா? தேங்காய் எண்ணெயை கொஞ்சம் சூடு பண்ணி தலை யில் தேய்த்து அரை மணிநேரம் இருக்க வேண்டும். பின்னர் குளித்தல் வேண்டும். இவ்வாறு செய்தால் தலைமுடி கொட்டாது நன்கு வளரும்.
7) கண்ணில் கருவளையமா? நான்கு தேக்கரண்டி பாலை நன்றாகக் காய்ச்சி அது குளிர்ந்ததும் அதை பருத்தித் துணியால் நனைத்து கண்ணில் வைத்திருக்கவேண்டும். இப்படி படுக்கைக்குச் செல்லும் முன் தினமும் 15 நிமிடம் செய்துவந்தால் பலன் கிடைக்கும்.
8) முகப்பருவை ஒழிக்க துடிக்கிறீர் களா? சந்தனப்பொடியையும் சில துளி எலு மிச்சம் சாற்றையும் கலந்து இரவு படுக்கச் செல்லும் முன் தேய்த்து வந்தால் முகப் பருவை ஒழித்துவிடலாம்.
9) வெள்ளரிக்காயை சாறாக்கி ஒரு தேக்கரண்டி எடுத்து அதனுடன் ஒரு தேக் கரண்டி அளவு எலுமிச்சம்பழச்சாற்றையும் கலந்து தேயுங்கள். முகம் பளிச்சென புத்து
ணர்ச்சி பெறும்.
ஒளிஅரசி 21

Page 23
0 கவிதை பக்கம்
பேசும் படம் இல: 07 முடிவுகள்
1ம் இடம்
* கவிதைப்ே
இளைஞர்களே! இணைந்திட்ட இந்த
கைகள் இணைபிரியாமல் இறுதிவரை போராடுங்கள் இல்லாதொழிக்க இலங்கையின் இனவாதத்தை!
1 ஆம் பரி 2ஆம் பரி. 3 ஆம் பரிசு
வி. பரிமளாதேவி, கொழும்பு - 13.
ப-1
வல்வெட்டித்துறை. திருமதி சரோஜா செல்வச்சந்திரன், இன்றே நாம் அணி திரள்வோம்! வன்முறைகள் இல்லாத யுகம்படைக்க பண்புடனே விலக்கிடுவோம் மதுவோடு புகைப்பிடித்தல் இரும்பை ஒத்த உறுதியெடுப்போம் இளைஞர் தினமாம் இதமான நாளில்
2 ம் இடம்
மேலே காணப்ப பார்த்து உங்கள்
தோன்றும் சி வடிவம் கொடுத் கவிதையாக்கி
25 க்கு முன் அனுப்பி:ை
கரங்களின் உறு, உயர்ந்தெழுந்திரு சின்னஞ்சிறுசுகளின் கறுப்பு வெள்ை அங்கேயிருப்ப அன்பூறும் தேன்
வித்தி
கண்டி..
வி. கிருஷாந்தி,
அகிலம் வெல்ல உறுதி பூணுவோம்! துணை சேரும் கைகள் கொண்டு அணியாக நின்று புலமை செய்வோம். தனியாக நின்று தலைமை ஏற்பதை விட எழுமே இரு கைகள் தட்டினால் தான் ஒரு கை தட்டினால் ஓசை எழுமோ?
3 ம் இடம்
மதங்களின் பே. மனங்களாய் ம இனங்களைச் : இணைந்த கரங் இலங்கைத் தே இறுகிடப் பற்ற இனியொரு புது
படை! திருமதி
ஒளிஅரசி 22

3 படம்
சு - 750/=
எழுவோம் தோழா எழுவோம்
- என்றும் எமதுரிமையைப் பெறவே
எழுவோம் தொழுவோம் தோழா தொழுவோம்
- நாட்டில்
சமாதானம் தழைத்திட (வேண்டித் பாட்டி-09 1
தொழுவோம்
விழுவோம் தோழா விழுவோம் சு - 1,000/=
- பூமியில் விதையாய் நாமும் விழுவோம்.
எஸ். ஷராபா, ஹேமத்தகம். சு - 500/=
தேர் இழுத்தோம் தோணி வலை
இழுத்தோம் ஏர் பிடித்தோம் எழுதுகோல்
பிடித்தோம் இத்தனைக்கும் காரணம்
வலிமையுள்ளஇக்கரங்கள் ஒற்றுமையே பலம் என்போம்
நண்பா கோடி நன்மை எம்மை நாடிவர
- ஒன்றுபட்டு உறுதி கொண்டெழுவோம்.
எம். ஐ. எம். அஷ்ரப், டும் படத்தைப்
சாய்ந்தமருது - 07. எண்ணத்தில்
எழுகடல் சூழ் இப்புவி தன்னில் ந்தனைக்கு
கரங்களால் மட்டுமல்ல து 6 வரிகளில்
கருத்தாலும் ஒன்றிணைந்து
நீதி வழுவா நெறி நின்று இம் மாதம்
(நெறி பிறழா நற்பாங்குடைய எ எமக்கு
சமூகம் ஒன்றைக்
கட்டிஎழுப்புவோம் வாரீர் வாரீர்! வயுங்கள்.
திருமதி ஆ. நாகேந்திரன்,
வடமராட்சி. தியில் க்கிறது உண்மை
ஒரு கை வைத்து உறுதியைக் இதயத்திலில்லை
காட்டுங்கள்! ள வர்ணங்கள்;
ஒற்றைக்காலில் நின்று வாழ்வைத் தெல்லாம்
தேடாதீர்கள்! பூக்கள் மட்டுமே.
இருகால் ஊன்றி யதார்த்தத்தைத் பா சதீஸ்வரன்,
தேடுங்கள்!
வாழ்ந்து காட்டி வரலாறு அம்பாறை.
படைத்திடுங்கள்!
நாளையஉலகோஉங்கள்கரங்களில்! த்த்தை
திருமதி தேவா மாதவன், ற்றி
கொழும்பு -- 15. சர்த்திடுவோம் களால்
(அனுசரணை த்தை
கலை ஊக்குவிப்புத் திட்டம் டுவோம்
நவோதயா யுகம்
பவுண்டேஷன் திடுவோம்!
246, கடற்கரை வீதி, 2), வரதராஜன்,
கொழும்பு-11, கல்லடி.
தலைமைக்காரியாலயம்.

Page 24
0 முதலீட்டு பக்கம் = கெவின்
வங்கிகளில் கட கவனிக்கவேண்
சில காலங்களுக்கு முன்னர் எமது சமூகத்தில் கட பெறுவது என்பது ஓர் இழுக்கான அல்லது தரக்கு வான விடயமாக கருதப்பட்டு வந்தது. ஆனால், இ நிலைமை அப்படியல்ல. கடன் பெற்றுக்கொள்ள குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்வது என் இயலாத ஒரு காரியமாக மாறிவிட்டது. அன்றாட நுகர் தேவைகளுக்காக ஒருவர் கடன்படாவிட்டாலும் க
கடன் A
வங்கி
காணி வாங்குதல், கட்டடம் கட்டுதல் வாகனம் வா தல் போன்ற குடும்பத்தின் பெரிய பெரிய முதலீட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பலர் வங்கிகளிeே நிதிநிறுவனங்களிலோ கடன்படுபவராகவே உள்ளா
இவ்வாறு கடன் பெறும்போது பல்வேறு விடயங்கள் கவனம் செலுத்துதல் அவசியம். குறிப்பாக உங்களுடை கடனைத் திருப்பி செலுத்துகின்றபோது வங்கிகள் மற்று நிதிநிறுவனங்களுக்கு நீங்கள் செலுத்த வேண்டிய பா பெறுமதியானது பல்வேறு விடயங்களால் தீர்மானிக் படுகின்றது. அவைபற்றி குறிப்பாக தெரிந்துவைத்தி தல் வேண்டும். வங்கிகளும் ஏனைய நிறுவனங்கை போல் இலாபம் உழைப்பதை நோக்காக கொண்ட நிறுவ களே, குறிப்பாக அங்கு வேலை செய்யும் உத்தியோகத் களுக்கு வங்கியின் உயர் முகாமைத்துவம் இலாப இல களை நிர்ணயித்திருக்கும். அதனை அடையவேண் பொறுப்பு குறித்த உத்தியோகத்தர்க்கு காணப்படும் டே அவர்கள் வாடிக்கையாளர்களை பாதிக்காத வகையில் நட கொள்வார் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்ல எனவே, கடன் பெற்றுக்கொள்ளும்போது வாடிக்கை

ன்பெறும்போது டியவை
ன்
றை
எறு து
பது
புத்
ளராகிய நீங்கள்தான் உங்கள் சார்ந்த நலன் களில் அக்கறைக்கொண்டு பின்வரும் விட யங்களில் கவனம் செலுத்துதல் அவசியம்.
1. உங்களில் அநேகமானோர்கள் கடன் சு பெறுவதற்காக வங்கியை அணுகும்போது அவர்கள் சொல்லும் எல்லாவற்றுக்கும் தலை யாட்டும் பழக்கத்தை கொண்டுள்ளீர்கள். அல்லாவிட்டால் அவர்கள் கடன்தரமாட்டார் கள் என்ற பயம் உங்களிடத்து காணப்படுவதே அதற்கு காரணம். உண்மையில் வங்கியைப் பொறுத்தவரையில் கடன் வழங்குதல் என்பதுதான் ஒரு வியாபார நடவடிக்கையே உண்மையில் கடன் வழங்குவதற்குவதன் மூலமே வங்கிகள் இலாபம் உழைக்கின் றார்கள். எனவே, கடன் சம்பந்தமான போதிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளத் தயங்க வேண்டியதில்லை. என்பதுடன் உங்களுக்கு சில விடயங்களில் பாதகமாக அமையும் எனில், அதனை மாற்றி அதற்குப் பதிலாக வேறு மாற்று நிபந்தனைகளை உள்ளடக்க முடியுமா என வங்கி உத்தியோகத்தரிடம் உரையாடுங்கள்.
2. ஆங்கிலத்திலோ அல்லது உங்களுக் குத் தெரியாத சிங்கள மொழியிலோவிண்ணப் பப்படிவத்தை தந்து உங்களைக் கையொப் பமிடுமாறு கேட்குமிடத்து தமிழ்மொழி மூலமாக படிவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் அதற்காக சட்ட ஏற்பாடுகள் நடை முறையில் உள்ளன. எனவே விளங்காத படிவங்களில் கையொப்பம் இடாதீர்கள்.
3. வட்டி வீதங்கள் பற்றி உண்மை யிலேயே அநேகமான வாடிக்கையாளர்கள் அக்கறை கொண்டவர்களாகவே காணப் படுகின்றனர். ஆனால், பொதுவாக அல்லது மேலோட்டமாக வட்டி வீதத்தை நோக்காது உண்மையில் அவை மாதாந்த வட்டி வீதமா அல்லது வருடாந்த வட்டி வீதமா என நோக்கப்படுதல் அவசியம். ஏனெனில், சில வங்கிகள் தமது வட்டிவீதத்தைகவர்ச்சிகரமான முறையில் மாதாந்த விதத்தில் குறிப்பிட்டு விளம்பரப்படுத்துவதும் உண்டு. எனவே, இது குறித்து விழிப்பாக இருத்தல் அவசியம்.
இதைத் தவிர வட்டி வீதங்களில் வங்கி கள் பல்வேறு தந்திரோபாயங்ளை பின்பற்றி 2 வருகின்றன. அது பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.
(தொடரும்) 5
ங்கு
ட்டு
லா,
பில் -ய
வம் னப் கப் ருத்
ளப்
னங்
தேர்
க்கு
Հայ
பாது
ந்து -ல. யா
ஒளிஅரசி 23

Page 25
தன்னம்பிக்கைத் தொடர் - சுவாமி சுகபே
காக்கை தெரிந்து
கணவன் மனைவியிடையே உறவைச் சிதைக் கும் இன்னொரு விடயம் 'ஈகோ'. தான் என்னும் அகந்தை. நான்தான் இந்தக் குடும்பத்திற்கு உழைத்து பணம் தருபவன் என்று கணவன் நினைப்பதும், நான் வீட்டில் செய்யும் வேலைகள் அவருடைய வேலைகளுக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல என்று மனைவி நினைப்பதும், தங்கள் நினைப்பின் அடிப்படையில் வாழ்க் கையை நடத்துவதும், குடும்பத்தின் அடித்தளத் தையே ஆட்டம்காண வைக்கும்.
ஒரு காக்கைக்கு சிறு மாமிசத்துண்டு கிடைத் தது. அடுத்த நிமிடமே மற்ற காக்கைகளும் கழுகும் அந்தக் காக்கையை துரத்தத் தொடங் கின. மாமிசத்துண்டைக் காப்பாற்ற காக்கை மிக மிக அதிக உயரத்திற்குப் பறந்து போனது. மற்ற பறவைகளும் விடாமல் துரத்தின. ஒரு சமயத்தில் காக்கை தன்னிடமிருந்த மாமிசத்தை நழுவ விட்டது. இதுவரை மாமிசத்தைத் துரத்தி வந்த காக்கைகளும் கழுகும் உடனே தரையில் விழுந்த இரையை நோக்கிப் பாய்ந்தன. இப்பொழுது காகத்தால் தொந்தரவின்றி வானத்தில் உல்லாச மாகப் பறக்கவும் முடிந்தது. இதன்போது ஒரு பெரிய உண்மை அதற்குப் புரிந்தது. நான் மாமிசத் துண்டை இழந்தது நிஜம்தான். ஆனால், அது மிக அருமையான சுதந்திரத்தை எனக்குப் பெற்றுக்கொடுத்தது. நம்முன் இருக்கும் அகந்தை யும் இந்த மாமிசத்துண்டைப்போலத்தான். இதை மட்டும் இழக்க முடிந்தால் வாழ்க்கையில் உற்சா கத்தில் மிதக்கலாம். எந்தவித பரபரப்புமின்றி
ஒளிஅரசி 24

சதானந்தா
1கொண்ட உண்மை
வாழலாம். எப்படி காகத்தினால் பரந்த வானத்தை ரசிக்க முடிந்ததோ, அதேபோல் அகந்தை போன பின்வாழ்க்கையின் அழகை உங்களால் ரசிக்கமுடியும்.
வேதங்கள் நான்கு. அர்த்த சாஸ்திரம். தர்ம சாஸ்திரம், காம சாஸ்திரம், மோட்ச சாஸ்திரம். 'எப்பொழுது நாம் நம் அகந்தை உணர்வை அழிக்கிறோமோ அப்பொழுதுதான் நமக்குள் ளேயே இருக்கும் ஆனந்தத்தின் முழு உருவையும் உணரமுடியும்' என மோட்ச சாஸ்திரம் கொள்கிறது. 'அன்போடு பணம் ஈட்டுங்கள் பேராசையோடு வேண்டாம்' என்று அர்த்த சாஸ்திரம் அறிவுறுத்து கிறது. பேராசை என்றும் மன நிறைவைத் தராது.
'சிற்றின்பத்தை பிரார்த்தனையாக மாற்றுங் கள்' என்கிறது காம சாஸ்திரம்.
'நல்ல குணங்கள் வாழ்வின் அடிப்படையாக இருக்கட்டும்' என்று தர்ம சாஸ்திரம் சொல்கிறது. நல்ல குணங்களின் அடிப்படையில் வாழ்க்கையில் சாதிக்கவேண்டிய இலக்குகள் உருவாகட்டும்.
கணவன் - மனைவி இருவரிடையேயும் உள்ள உறவைப் பலப்படுத்த மிக அவசியமாகத் தேவைப்படும் விடயம் அந்நியோன்யம். நமது குடும்பம் - பெற்றோர்கள், கூடப்பிறந்தவர்கள், மனைவி மற்றும் குழந்தைகள் நம்முடைய அன்புக்கும் ஆதரவுக்கும் உரியவர்கள். ஆனால், நாம் நம் நண்பர்களிடம் மனம்விட்டுப் பேசும் அளவுகூட நம்முடைய குடும்பத்தினரோடு விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதில்லை. சிறிது காலம் கடந்த பின்னே நமக்கும் நம் நண்பர்களுக் கும் இடையே அந்நியோன்யம் அதிகமாகிறது. உறவுகளில் நெருக்கத்தை நீங்கள் விரும்பினால் உங்கள் துணைவியரையும் உங்கள் நண்பரைப் போலவே நடத்துங்கள்.

Page 26
உங்கள் பேச்சு மற்றும் செயல்கள் வெளிப்படை யானதாக இருக்கட்டும். நான் என் அலுவலக விடயங்களை வீட்டிலே விவாதிப்பதில்லை என்று சிலர் பெருமையுடன் சொல்லிக்கொள் வார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், என் அலுவலக விடயங்களை அவளிடம் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினால் அவளால் அதைப் புரிந்து கொள்ளமுடியாது. சொல்லப்போனால் அவள் வீணாகக் குழப்பமும் கவலையும் அடைவதுதான் மிச்சம். இது ஓரளவுக்கு சரியாக இருக்கலாம். சுமுக உறவுக்கு இதனால் சுவர் போலத் தடை உருவாகுமானால் இந்தச் சின்னப் பிரச்சினையைத் தாண்டி வருவது அத்தனை கடினமானதல்ல.
ஒருவர் தன்னுடைய நண்பரிடம் கஷ்டங்களை கனவுகளை, கவலைகளைப் பகிர்ந்துகொள்கிறார் என்றால் நல்ல நண்பராகயிருந்தால் அவர் என்ன செய் வார். உடனடியாகத் துள்ளிக்குதித்துப் பிரச்சினைகளை எப்படித் தீர்ப்பதென்று அறிவுரை கள் தரமாட்டார். இந்தப் பிரச்சினையை இப்படித் தீர்த்துவிடு... இதைச் செய்; இதைச் செய்யாதே என்று சொல்லமாட்டார். அதற்குப் பதிலாக மிகுந்த அன்போடு பேசுவதைக் கேட்பார். மேலும் பேசத் தூண்டுவார். அர்த்தமுள்ள கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளத் தேவையான சூழ்நிலையை உருவாக்கு வார். இதேபோல் ஒருவர் தன் நண்பரிடம் அலுவல கம் சம்பந்தப்பட்ட விடயங்களைச் சொல்லும் போது உன்னால் இதனைக் கையாள முடியாது. உனக்கு அத்தனை அனுபவம் இல்லை என்று சொல்லி அவரை எடை போடமாட்டார்.
அன்னை தெரேசா கூறிய ஓர் அற்புதமான வாக்கியத்தை இங்கு குறிப்பிடலாம். ''மற்றவர் களை எடை போடுவதிலேயே காலத்தை வீணாக்காதீர்கள்... பிறகு அவர்களிடம் அன்புகாட்ட நேரம் இருக்காது'' திரும்பவும் கணவன் - மனைவி உறவுக்கு வருவோம்.
உங்கள் கணவர்தன்கனவுகள், தொழில், பொழுது போக்கு, புதிய விருப்பங்கள் இவைகளைப் பற்றி மிகுந்த ஆர்வத்துடன் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்தால் குறுக்கீடுகள் எதுவுமின்றி உங்கள் முழுக் கவனத்தையும் அவருக்குக் கொடுங் கள். அவர் பகிர்ந்து கொள்ளும் விடயத்தில் விருப்பம் இருப்பதைக் காட்டுங்கள். இதனால் ஓர் இணையற்ற அந்நியோன்யம் உங்கள் இருவரி டமும் உருவாகும். பிறகு வெளியுலகத்தில் எந்த விதமான புதிய அனுபவங்களை உங்கள் கணவர் பெற்றாலும் உங்களிடம் ஓடி வந்து அதைப் பகிர்ந்துகொள்ளத் துடிப்பார்.
கணவன் - மனைவியிடையே இத்தகைய அந்நியோன்யம் நிலவுவது முற்றிலும் அவசிய மான ஒன்று. கணவன் - மனைவி மற்றும் குழந்தை களிடையே இந்தப் பாசப்பிணைப்பை இன்னும் உறுதியானதாக்க கிறிஸ்தவ மதம் சொல்லும் ஓர் அறிவுரை பின்பற்றத் தகுந்த வழி.
"ஒவ்வொரு இரவும் ஒன்றாகச் சேர்ந்து பிரார்த்தனை செய்யும் குடும்பம் கடைசிவரை

ஒன்றாக நிலைக்கும்.”' தம்பதியரிடையே நெருக் கத்தை வளர்ப்பதற்கு சில வழிமுறைகளை அவர்கள் வாழ்க்கை முறையில் கடைப்பிடிப்பது அவசியம். நாம் எல்லோருக்கும் முக்கியமாகச் செய்ய வேண்டியது என்று எழுதப்படாத பட்டியல் ஒன்று மனதிற்குள் இருக்கும்.
கணவனின் பட்டியல் - பணம் சம்பாதிப்பது, பெற்றோரைப் பார்த்துக்கொள்வது, குழந்தைகள் கல்வி... இதேபோல் மனைவியிடமும் ஒரு பட்டி யல் இருக்கும்... குழந்தைகள்... மற்றும் குடும்பத் தினரைக் கவனித்துக்கொள்வது, டிவி பார்ப்பது, புதிய பொருட்கள் வாங்குவது என்று... இதற்குப் பெயர் மதிப்புகள்.
இருவரிடமும் இத்தகைய மதிப்புகள் ஒரே மாதிரியிருந்தால்தான் குடும்பத்தில் ஏற்படும் உறவில் விவாதங்களோ, முணுமுணுப்போ இருக்காது. ஆனால், முழுமையாக இப்படியிருப் பதும் தவறு. சொல்லப்போனால் இப்படி ஒரேமாதிரி இருவரின் மதிப்புகளும் விருப்பங் களும் இருந்தால் வாழ்க்கையே சுவையற்றுப் போகும். வானவில் பார்ப்பதற்கு அழகாக இருப்பதற் குக்காரணம், அதில் இருக்கும் பலவித வண்ணங்கள்.
எவ்வளவு கொடுத்தீர்களோ அவ்வளவே பெறுவீர்கள்.
கொடுப்பவர்கள் பெறுபவர்களைக் காட்டி லும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.
சின்ன சின்ன விடயங்களில் மனைவிக்கு என்ன பிடிக்கும், எது விருப்பம் என்று தெரிந்து கொண்டு அதற்காக விட்டுக்கொடுக்கும் மனதை வளர்த்துக் கொள்ளவேண்டும். இதனால், இருவரிடையே யும் உள்ள நெருக்கம் இன்னும் வலுப்பெறும்.
''சுவாமிஜி! என் மனைவிக்கு அவள் உறவினர் வீட்டிற்குச் செல்லும் பொழுதெல்லாம் நானும் கூட வரவேண்டுமாம். எனக்கு இது கொஞ்சமும் பிடிக்கவில்லை. அப்படியானால் எப்படி விட்டுக் கொடுப்பது ? இதை மட்டும் செய்யச் சொல்லாதீர்கள். ''ஒருவர் சொன்னார்.
திருமணவாழ்வில் சில விடயங்களில் அனுசரித் துக் கொண்டுதான் போகவேண்டும். நமக்குப் பிடிக்காவிட்டாலும், சந்தோஷம் தராவிட்டாலும் மற்றவருக்காக இதைச்செய்ய வேண்டும். ஒருவரின் விருப்பங்கள் மற்றும் வெறுப்புகள் உங்களுடையதிலிருந்து மாறுபட்டு இருந்தாலும் அதற்கு ஆதரவாக இருக்க முன்வரவேண்டும். நிச்சயம் இதனால் அந்நியோன்யம் வளரும்.
நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அதை வெறுக்கவும், எதை வெறுக்கிறீர்களோ அதை விரும்பவும் பழகிக் கொள்ளவேண்டும். அப் பொழுது நீங்கள் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு இருப்பீர்கள். இதன்பொருள் உங்கள் கட்டுப்பாட்டில் விருப்பு வெறுப்புகள் ? இருக்குமே தவிர, விருப்பு வெறுப்புகளின் 2 கட்டுப்பாட்டில் நீங்கள் இருக்கமாட்டீர்கள். நீங்கள் இப்பொழுது உண்மையான எஜமானன். விருப்பு வெறுப்புகளுக்கு எஜமானராக இருங்கள். எ
ஒளிஅரசி 25

Page 27
.சுயதொழில் சபா. யசிந்தா
மபா. யசிந்தா
- பெண்களிற்கு அழ
* 3 வழங்கும் யாழ் - "'ச
கலாலயா நிறுவனம் 1985 ஆம் ஆண்டு ஆரம் பிக்கப் பட்டு இன்று வரை 29 வருட காலமாக பல பெண்களுடைய சுயதொழிலை உயர்த்தும் வகையில் சிறந்த அழகுக்கலைப் பயிற்சிகளை வழங்கி வருகின்றது.
இங்கு கேக் ஐசிங் வடிவமைப்புக்கள், உணவு தயாரித்தல், கூந்தல் வடிவமைத்தல், முடி சீராக் குதல், முக அலகுக்கலை, மணப்பெண் அலங் காரம், தையல் பயிற்சி எனப் பல பிரிவுகளைக் கொண்டதாக 3 மாதப் பயிற்சியை மாணவர் களுக்கு வழங்கிவருவதுடன் பயிற்சியின் நிறைவில் சான்றிதல் வழங்கப்படுகின்றது.
உயர்தரப் பரீட்சை எழுதிய பின்னர் இடைப் பட்ட காலப்பகுதியில் இந்தப் பயிற்சிக்காக அதிகமான மாணவர்கள் இணைந்து கொள்வது டன் வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்களும் தமக் கான தொழிலை தேர்ந்தெடுக்கும் வகையில் இந்த 3 மாத கால பயிற்சியினை மேற்கொள்கின்றனர்.
இங்கு 5 ஆசிரியர்கள் மாணவர்களுக்கான செயன்முறையுடன் கூடிய பயிற்சியினை வழங்கி வருகின்றனர். அத்துடன் இங்கு பயிற்சியைப் பெறும் மாணவர்களுக்கு இந் நிறுவனமே தொழில் வாய்பினையும் பெற்றுக்கொடுக்கின்றது.
சிலரிடம் தோன்றி பலரிடம் சென்றால் அது கலை. அந்தவகையில் தமது திறமைகளை அலங் கார வடிவில் அழகுக்கலையாகக் கற்று இன்று அதிக வருமானம் பெறக்கூடிய தொழிலாக இக் கலையை பெரும்பாலான பெண்கள் கற்றுவருகின்றனர்.
ஒளிஅரசி 26

தக்கலைப் பயிற்சிகளை கலாலயா''
கவிதா சுப்பிரமணியம்
ஆசிரியர் கலாலயா நிறுவனம்
'நான் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவள் எனது பாடசாலைக் கல்வியை பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரியில் சுற்று உயர்தரப் பரீட்சை எழுதிய பின்னர் வீட்டில் ஏதும் செய்யாமல் இருந்தால் சம்பாதிக்க முடியாது எனவே ஏதாவது தொழில் பயிற்சியை பெறவேண்டும் என்று யோசித்து இருக்கும் காலப்பகுதியில் தான் தொலைக்காட்சிகளில் அமருக்கலை தொடர்பான நிகழ்சிகளை அதிகம் பார்ப்ப துண்டு இதனால் அழகுக்கலையை பயில வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டது. இதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் இயங்கிவருகின்ற பல பெண்களுடைய சுயதொழில் முன்னேற் றத்துக்கு வழிகாட்டியாக திகழுகின்ற கலாலயா அழகுக்கலை நிறுவனம் பற்றி அறிந்த எனக்கும் அதன் மீது ஆர்வம் இருந்ததால் எனது அம்மாவின் வேண்டுகோளின் பெயரில் கலாலயாவில் சேர்ந்து அங்கு அழகுக்கலையை கற்றுக்கொண்டு இப்போது அங்கேயே ஆசிரியராகவும் பணியாற்றுகின்றேன்."

Page 28
. குறும்படம் - கெவின்
'ஆழி' குறும்ப
ஈழத்தில் போருக்குப் பின்னர் இடம் பெறுகின்ற நல்ல மாற்றங்களில் ஒன்றாக குறும்படங்களின் வரவினைக் குறிப்பிட லாம். சினிமா என்ற ஊடகத்தால் சமூகத் தில் ஏற்படக்கூடியதாக்கங்கள் கனதியானவை. அந்தவகையில் ஈழத்தமிழர்கள் சினிமா என்கின்ற மொழியினூடாக தங்களது நடைமுறைப் பிரச்சினைகளை சொல்ல ஆரம்பித்திருப்பது உண்மையில் வரவேற் கத்தக்க விடயம் எனலாம்.
யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த எஸ். ஏ. நிலான் அவர்கள் இயக்கி பிரான்ஸை சேர்ந்த கங்கைவேணி கலை வாசன் தயாரிப்பில் அண்மையில் வெளி வந்திருக்கும் குறும்படம்தான் ஆழி. ஈழத் தின் குறும்பட வரலாற்றில் ஒரேநேரத்தில் மூன்று நாடுகளில் இப்படம் வெளியிடப் பட்டதாக இயக்குநர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இளைஞர் ஒருவர் அவுஸ்திரேலியா செல்லும் நோக்கில் படகில் செல்வதாக ஆரம்பிக்கிறது படம். ஒரு அழகான குடும் பம், மனைவி, குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் கதாநாயகன் பணம் சம்பாதிப்ப
தற்காக யிடம் ! மூலம் 4 வருக்கு தெளிவ இயக்கு காலத்தி இக்குறு தினை )
EXCLUSIVE LAD
E-mail: firn
Mobile: 0770
(Off D|

ட விமர்சனம்
அவுஸ்திரேலியா செல்கின்றான். தன் மனைவி இருந்த நகைகளை விற்றும் நண்பனிடமிருந்து கடன் பெற்றுக்கொண்டும் அவுஸ்திரேலியா சென்ற என்ன நடக்கிறது தன் குடும்பத்தினுள் என்பதை மிகத் Tக 11 நிமிடத்துக்குள் அழகாக சொல்லியிருக்கும் நருக்கு பாராட்டு தெரிவிக்கலாம். இன்றைய ல் சமூகத்துக்கு தேவையான ஒரு நல்ல செய்தி ம்படத்தின் மூலம் பதியப்பட்டுள்ளது. இப்படத் You tube இல் ஆழி என தேடிப்பார்க்கமுடியும்.
IES TAILORING
ROYAL FASHION
az.royalfashion(wgmail.com
f royalfashionlanka 572223, 075/433238 '__ Tele: 0114 283 598
'No : 32, JOSplhlane, plication Roal) Colombo 4,
ஒளிஅரசி 27

Page 29
0 நிமிடக்கதை
ஒரு வெயிட
அந்தப் பெண் பஸ்சுக்குக் காத்திருந்து போரடித்ததில் எடை பார்க்கும் மிஷினில் ஏறி நின்று ஒரு ரூபாய் போட்டாள்.
''உங்கள் எடை 54 கிலோ. உயரம் 52 - 53. நீங்கள் கித்தார் வாசிப்பீர்கள்” என்று சீட்டு
வந்தது.
நானாவது கித்தார் வாசிக்கவாவது என்று சிரித்துக்கொண்டே உட்கார்ந்திருந்த இடத்துக்குப் போனாள். கொஞ்ச நேரத்தில் ஒரு ஆள் கித்தாரோடு வந்தான்.
ப்ளீஸ் இதை கொஞ்சம் வச்சிக்கங்க. என்று கொடுத்துவிட்டு எங்கேயோ போனான்.
எதேச்சையாக அதன் தந்திகளை மீட்டிய போது ஹிந்தோள ராகம் ஒலித்ததில் அயர்ந்து போனாள்.
அந்த ஆள் வந்து திரும்பி கித்தாரை வாங்கிப் போனதும் ஆவல் மிகுதியில் மறுபடி எடை மிஷினுக்குப் போனாள். மறுபடி எடை பார்த்தாள்.
''உங்கள் எடை 54 கிலோ. உயரம் 52 - 53. எதிர்பாராமல் ஐந்நூறு ரூபாய் சம்பாதிப்பீர்கள்” என்று வந்தது.
மறுபடி அவள் உட்கார்ந்திருந்த இடத்துக்குப் போனாள்.
எக்ஸ்க்யூஸ் மீ. ஐந்நூறு ரூபாய்க்கு சில்லறை இருக்குமா? என்று ஒரு ஆள் வந்தான்.
அதை வாங்கிக்கொண்டு ஹேன்ட் பேக்கைத் திறந்து சில்லறை தேடிக்கொண்டிருந்தபோது, ஒரு பஸ் ஹாரன் அடித்தபடி நகர ஆரம்பித்தது. .
ஐயய்யோ... பஸ் போகுது என்று சில்லறை வாங்காமலே அந்த ஆள் ஓடினான்.
திரும்பவும் ஆச்சரியம் தாங்காமல் எடை * பார்க்கப் போனாள்.
இம்முறை சீட்டில், ''உங்கள் எடை 54 கிலோ. உயரம் 52 - 53. ஒரு அழகான இளைஞனுடன் எக்கச்சக்கமான அனுபவம் ஏற்படப் போகிறது '' நீங்கள் நினைப்பது சரிதான்.
அவளருகே ஒரு இளைஞன் வந்து உட் கார்ந்தான்.
''அழகாகத்தான் இருக்கிறான்'' என்று நினைத்தாள்.
அவன் அவளைப் பார்த்து சிரித்துவிட்டு,
ஒளிஅரசி. 28

2Lான கதை
இந்த மிஷினில் எடை பார்த்தால் அதில் எழுதியிருப்பதெல்லாம் நடக்கிறது என்றான். தொடர்ந்து மூன்று சீட்டுக்களைக் காட்டி அதில் எழுதியிருப்பதெல்லாம் நடந்ததாக சொன்னான். கடைசி சீட்டில் எழுதி இருப்பதை நம்பவே
முடியவில்லை என்றான். என்ன எழுதியிருக்கு ?
ஒரு அழகான பெண்ணுடன் சல்லாபம் பண்ணுவேன் என்று எழுதியிருக்கு, நான் அழகா
இருக்கேனா?
அழகாகத்தான் இருக்கீங்க, ஆனா என்ன ஆனா, அவள் தன் சீட்டைக் காட்டினாள். சிரித்தார்கள்.
இரண்டு பேரும் தோளில் கைபோட்டு பயணி கள் தங்கும் அறை ஒன்றுக்குப் போனார்கள். பொழுது சல்லாபமாகக் கழிந்தது. அந்த இளை
ஞன் "பை' சொல்லிவிட்டு போய்விட்டான்.
வேக வேகமாக எடை மிஷினுக்கு மறுபடி போனாள்.
சீட்டே வரவில்லை. மிஷினை இரண்டு உதை விட்டு ஆட்டிப் பார்த்தாள். பின் கதவு திறந்தது.
கை நிறைய எடை டிக்கட்டுகளுடன் அதே இளைஞன் உள்ளே உட்கார்ந்திருந்தான்.

Page 30
வயது
5 விந்தை உலகு 96 வயதில்
பட்டம் வாங்கிய பாட்டி
பூன
மனித ரோ
பல்வேறு காரணங்களுக்
பூனைகளின் ஆயு காகப் படிப்பைப் பாதியில்
15 - 16 வருடங்கள்த நிறுத்திய பலரும் பிறகு
என்ற பூனை தனது 246 சோம் பல் பட்டு அதைத்
கடந்த பெப்ரவரியில்
யது. இந்தச் சாதன தொடரவே மாட்டார்கள்.
கின்னஸ் புத்தகத்தில் சிலர் அரச வேலை யின்
தது. பூனைக்கு 24 வ. பொருட்டுத் தூசி தட்டுவார்
மனிதன் 114 வருட கள். இன்னும் சிலர் ஒழுங்
சமமானது. இங்கிலா காகப் படித்திருந்தும் கட்ட
மான போர்ன்மட்டைச் ணம் செலுத்த முடியாமல்
வருக்குச் சொந்தமான படிப்பைப் பாதியில் விட்டு விடுவார்கள்.
அமெரிக்காவில் வாழ் கிறார் ஜெசி ஒயிட் என்ற
விற்ப பெண். இவர் 1939 இல் பிரிட்டனில் இருந்தபோது அங்குள்ள கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பை முடித்தார். ஆனால், பட்டத்தைப் பெறுவதற்கான கட்டணத் தைச் செலுத்த முடியாத தால் அவரால் பட்டம் வாங்க முடியாமல் போய்
சர்வதேச தொழி விட்டது. காலங்கள் ஓடி
ஒன்று மனிதர்களுக்கு உ விட்டன. ஒன்றி ரண்டு
களை விற்பனைக்கு ஆண்டுகள் அல்ல, 75
ஜப்பானைச் சேர்ந்த ஆண்டுகள். இப்போது
மைத்துள்ள இந்த ப அவருக் குத் திடீ ரெனப்
கதவைத் திறப்பது, 8 பட்டப்படிப்பைப் பூர்த்தி
யில் இருக்கும் தடை செய்ய வேண்டும் எனத்
என பல அன்றாடப் பு தோன்றியுள்ளது. இதை
எனத் தெரிவிக்கப்ட அறிந்த அவரது நண்பர்
கட்ட பரிசோதனை
றுள்ள இவ்வகை ரே டோனா கில்பர்ட் கட்ட
மக்களுக்குப் பயன் ணம் செலுத்தி பட்டம்
சில தொழில்நுட்ப ம பெற ஏற்பாடு செய்தார். 75
விற்பனைக்கு விட . ஆண்டுகளுக்குப் பிறகு 96
அந்நிறுவனம் தெரிவு வயது அமெரிக்கப் பாட்டி
இந்த ரோபோக்கள் சன பட்டம் பெற்றுள்ளார்.
கேட்பது புரிகிறது)

மூத்த புற்றுநோயைக் னெ
கண்டறியும் எளிய சிறுநீர் பரிசோதனை!
ட்காலம் சராசரியாக
ஒருவரின் சிறுநீரைக் ான். ஆனால், பாபி
கொண்டு அவருக்குப் புற்று வயது பிறந்த நாளைக் தான் கொண்டாடி
நோய் இருக்கிறதா என்று னக்காக பாபிக்கு
கண்டறிந்து சொல்லக்கூடிய றும் இடம் கிடைத்
எளிய பரிசோத னையை பது வரை வாழ்வது
வடிவமைக்கும் முயற்சி ங்கள் வாழ்வதற்குச்
யின் இறுதிக்கட்டத்தைத் ந்தின் கடற்கரை நகர
தாங்கள் அடைந்திருப்பதாக * சேர்ந்த ஜாக்கி என்ப
அமெரிக்க விஞ்ஞானிகள் எது இந்தப் பூனை.
தெரிவித்துள்ளனர்.
பெண்கள் தாம் கருத் போக்கள்
தரித் திருக்கலாம் என்று மனை
நினைத்தால் கடையில் இருந்து ஒரு சிறு பட்டியை வாங்கிவந்து அதனை தமது சிறுநீரில் நனைத்து பின்னர் அதில் ஒரு கோடு தெரி கிறதா அல்லது இரண்டு கோடுகள் தெரிகின்றனவா என்பதை வைத்து தாம் கருத் த ரித்துள் ளோமா
இல்லையா என்பதைத் ல்நுட்ப நிறுவனம் தவும் மனித ரோபோக்
தெரிந்து கொள்ள முடியும். விட இருக்கிறது.
அதுபோல், ஒருவருக்கு நிறுவனம் வடிவ
ஒரு ஊசியைப் போட்டு மனித ரோபோக்கள்
பின்னர் அவரது சிறுநீரில் கார் ஓட்டுவது, வழி
இதேபோல ஒரு பட்டியை டகளை அகற்றுவது
நனைத்து அவருக்குப் புற்று பணிகளைச் செய்யும் டுகிறது. ஆரம்பக்
நோய் இருக்கிறதா இல் களில் வெற்றி பெற்
லையா என்று கண்டறிவதற் ரபோக்களை பொது
கான ஒரு பரிசோதனை படும்படி இன்னும்
முறையை அமெரிக்காவில் எற்றங்களைச் செய்து
மஸ்ஸச்சுஸெட்ஸ் இண்ஸ் : திட்டமிட்டுள்ளதாக
டிடியூட் ஒவ் டெக்னாலஜி ; சித்துள்ளது. (அது சரி,
யைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மக்குமா என நீங்கள்
உருவாக்கிவருகின்றனர்.
ஒளிஅரசி 29

Page 31
0 இலக்கியம் நின் பிரிவிலும் சுடும்
கூடிக்களித்து மறுமைக்கும் சேர்த்து இம்மையி இன்பம் துய்ந்து காதல் எனும் கட விலுள் மு திளைக்கும் தலைவி பிரிவினைத் தாங்கமாட்டாளே; செய்வது என்று எண்ணிய தலைவன் அவளது தோழி சென்று ''நீதான் உன் தலைவியிடம் எனது பயணம் கூறிட வேண்டும்'' என்கிறான். அவளும் ''சரி' தலையசைத்து விட்டுச் செல்கிறாள்; சந்தர்ப்பம் ப தலைவன் சொன்ன விஷயத்தை தலைவிக்கு தியம்பினான்.
அதைக்கேட்ட தலைவியோ எதையும் கூறவி ஆனால் அவள் முகத்திலும் செய்கையிலும் ம தெரிந்தது. முதலில் தன் கைவளையல்களை நோக்கி பிறகு அவள் தன் தோள்களை நோக்கினாள். தே. ஒன்றுமே புரியவில்லை. நாம் என்ன வென்றால், இவ தலைவன் வெளியூருக்குப் போகப் போகிறான் கூறுகிறோம், இவள் என்ன வென்றால் இவ் கைவளைகளையும் தோளையும் நோக்குகின்றாளே எண்ணியவளாய் இருக்கவும், அதன் பின்னர் தலை பாதங்களை நோக்கினாள். இவ்வளவும் பேசாமலேதான் நடக்கின்றன.
தோழிக்குப் புரியவில்லை; இவள் மெளனமாகச் படுகிறாளே என்று எண்ணியவளாய், சரி நாம் தன டமே சொல்வோம் என்று எண்ணியவளாய், தன இருக்கும் இடம் வந்து ''ஐயா நீர் சொன்ன வண்ண முடைய அருமைத் தலைவியிடம் சொன்னேன்; . அவள் இது போன்று நோக்குகிறாள், இவ்விதம் | பட்டதில் ஏதோ விஷயம் இருக்கிறது'' என்று தன் ப பட்டதை அவ்விதமே கூறினாள்.
பிரிவு என்றதும் இந்தச் சமுதாயம் என்ன செ உடனே அவளைப் பற்றிப் பேசத்தான் செய்யும். இல் ஏற்படும் பிரிவை முதலில் மற்றவர்களுக்கு உணர்த்து அவளுடைய வளையல்கள்தான். தன் தலைவன் அவ சேர்ந்து மகிழ்ந்திருந்தது போன்று அவளுடைய சை யல்களும் இருந்து வந்தன; தலைவன் இனிப்பிரியப் போ அவளுடைய கைவளையல்களும் பிரிந்து விடும்; கழன்று வந்து விடும். இவ்விதம் கழலுவதால் பெண்க இவளை வைத்து வம்பு பேசுவது பற்றிக் கேட வேண்டாம்; சும்மாவே வாயை மெல்லுபவர்க அவலும் வெல்லமும் கிடைத்த கதையாகிவிடும்.
தலைவன் சென்ற பின்னர் அவள் உண்மையில் தான் போவாள்; முதலில் அவள் தோள்கள்தான் வாடி
விடும். அவளுக்குத் துணையாக இருந்தவரை - கூடிக் . இன்பம் தந்தவரை பிரிந்தால் அவள் நிலைமை என்ன
வளையல்களும் கழன்றுவிடாமல், தலைவன் பி தோள்களும் துவண்டு போகாமல் இருக்க அவள் என்ன வேண்டும்? வேறு வழியே அவளுக்குத் தெரியவி 5 தலைவனுடன் அவளும் புறப்பட்டுச் செல்ல வேண்டும்
ஒளிஅரசி 30)

2மா பெருங்காடு?
லேயே விதம் செல்வதை சமுதாயம் ஒத்துக் மழ்கித்
கொள்ளுமா என்ற சிந்தனையும் அவனிடம் என்ன
பிறந்தது. என்ன செய்வது என்று லியிடம் தெரியவில்லை.
பற்றிக்
தி டீ ரென்று அவளுக்கு "ஞானம் பிறந்தது' போன்ற ஒரு தோற்றம்
ஏற்பட்டது. அப்போதுதான் அவள் தன் எடுத்
பாதங்களை நோக்கினாள். வளையல்
களை முதலில் நோக்கிய அவள் பின்னர் ல்லை; தோள்களை நோக்கினாள்; அதன் பின்னர் ாற்றம் தான் புத்துணர்வு பெற்றவள் போலப் கினாள், பாதங்களை நோக்க ஆரம்பித்தாள். =ாழிக்கு தலைவி இவ்விதம் பாதங்களை நோக்கி
நடைய டக் காரணம் உண்டு. வளையல்கள் என்று கழன்று விழுவதால் ஏற்படும் துன்பங் விதம்
களையும் போக்க வேண்டுமானால் என்று
பாதங்களை நோக்குவதைத் தவிர அவளுக்கு வி தன்
வேறு வழி இல்லை. தலைவன் செல்லும் வாய்
வழித் தாமும் சென்றுவிடலாம் அல்லவா?
எனவேதான் பாதங்களை அவள்நோக்கினாள். செயல்
என்றுதான் எண்ணியதை தலைவனிடம் லவனி
தோழி கூறுகிறாள். இவ்விதம் அவள் கலவன் கூறவும் தலைவன் உண்மையில் குழம் ம் உம் பித்தவித்தான். இதனையே திருவள்ளுவர் அதற்கு
தொடி மென்தோளும் நோக்கி அடி செயல்
நோக்கி அஃதான் டவள் செய்தது. மனதில்
என்றார்.
=ய்யும்,
விதம் த்துவது ளோடு 5வளை 7வதால்
ஆம்,
களுக்கு ட்கவே -ளுக்கு
வாடித் போய் களித்து வாகும்! ரிவால் செய்ய ல்லை, ம்; இவ்

Page 32
0 குழந்தை மருத்துவம் - திருமதி ரிஸ்வான், கேட்கும் திறனற்ற 6
கேட்கும் திறனை இழத்தல் பொதுவாகப் பிறப்பு ஒன்றாகும். பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் = தொடக்கம் 4 குழந்தைகள் கேட்கும் திறனின்றிப் பு
பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் மூளையில் யத்துடனேயே பிறக்கின்றது. ஆனாலும், கேட்கும் மட்டுமே இப் பேச்சு மையம் வேலைசெய்யும். விரை கேட்கும் பட்சத்தில் இப் பேச்சு மையம் திறம்பட சிறப்பாகும். கேட்கும் திறனின்றி பிறக்கும் குழந்தை இனங்காணப்படாவிடின் ஒலியானது மூளையை குழந்தையின் பேச்சுத்திறனும் விருத்தியடையாது குழந்தையுடன் மிகவும் நெருக்கமான உறவில் குறைபாட்டை ஆரம்பத்திலேயே இனங்கண்ட சிகிச்சையை செயற்றிறனாக மேற்கொள்ளமுடியும்.
செவிட்டுத்தன்மை ஒரு குறைப்பாடாயினும் . பரிகாரங்கள் இப்போது உலகில் உள்ளது. சரியான நே பரிகாரம் செய்யப்படுமாயின் சாதரண ஒருவரை நிலை வாழ்க்கையை உங்கள் பிள்ளையும் மேற்கொள்
செவிட்டுத்தன்மையைப் பரீட்சித்து அள பரிசோதனைகள் இருந்தபோதிலும் வீட்டிலேயே சிறு சிறு சோதனைகளைத் தாயான நீங்கள் தெரிந் அவசியம். 15 மாதக் குழந்தையைப் பரீட்சிக்கப் பே மிக்க அதிர்வை ஏற்படுத்தாத சத்தங்களை முதலில் ப கைதட்டுதல், விசிலடித்தல், வீட்டு மணி போன்றவ வெவ்வேறு மீடிறன் உரப்பு மற்றும் பிற வேறுப மனித குரல்களையும் பயன்படுத்தலாம். ஆனாலும் 6 தன் தாயின் அசைவுகளைக் கொண்டு ஒலிக்குத் திரு முடியும். கேட்கும் திறன்கொண்ட குழந்தை ஒலி சட்டை செய்யாதிருக்கவும் முடியும். எனவே, வெ வேறு பட்ட முறையில் குழந்தையைப் பரீட்சித் மட்டுமே ஒரு முடிவுக்கு வரமுடியும்.
சாதாரண கேள் தகைமை உள்ள ஒரு குழந்தை முதல் 24 ஆம் மாதம் வரையான காலத்திற்குள் தன விடயத்தை விளங்கிக்கொள்வதில் அதிவேக முன்ே
1110ாரைச் சனா 24 காரார்.
HeadOffice: - Na, 23A 21, Pagoda Ficai,
Nugeorda, Sri Lanka. Tel: +94 112816544
MEDCON pvt ltd இல் கேட்டல்- பேச்சுப் பயி வைத்தியர்கள் மகிழ்வுடன் நிற்பதைப் படத்தில் ! தொடர்பான விளம்பரம் ஒன்று 67ஆம் பக்கத்தில் உ

பேச்சு பயிற்சியாளர்) கண்டி
g்தைதரும் தாய்மாரும்
லேயே ஏற்படும் டும். 2 ஆம் வயதின் முடிவில் புண்ணளவாக 2
வழமையாக சொற்களை ஒன்று பிறக்கின்றனர்.
சேர்த்து வாக்கியங்களாகப் பேச ஒரு பேச்சுமை
ஆரம்பிக்கும். இப்பேச்சானது தெளி திறன் இருந்தால்
வானதாகவோ அல்லது சிறிய வாக இக்குழந்தை
உச்சரிப்பு பிழைகளோடும் அமை விருத்தியடைவது
யலாம். இவ்வாறான தொடர் ஆரம்பத்திலேயே
பேச்சைக் குழந்தைகள் வெளிப் அடையாததுடன்
படுத்தத் தாயானவள் எளிய முழு 1. ஆகவே, ஒரு
மை யான வாக்கியங் களாக எந் இருக்கும் தாய்,
நேரமும் குழந்தையுடன் உறவாட -ால் அதற்கான
வேண்டும்.
தன் குழந்தை கேள் தகைமை அதற்கான சிறந்த
குறைவானது எனத் தெரிந்தபின்பு ரத்தில் அதற்கான
தாயானவள் மேற்கூறிய விடயத்தில் ப்போல இயல்பு
எந்த மாற்றத்தை யும் செய்யத் Tள வாய்ப்புண்டு.
தேவையில்லை. மாறாக, குழந்தை விட மருத்து வ
யுடனான உரையாடலை அதிகப்ப அளவிடக்கூடிய
டுத்த வேண்டும். மேலும் பேசும் சத் துவைத்திருத்தல்
தத்தை அதிகரித்து பேச்சின் வேகத் எகிறீர்கள் எனின்,
தைக் குறைத்து தெளிவாக அருகி யன்படுத்துங்கள்.
லிருந்து பேசவேண்டும். குழந்தை ற்றையும் பின்னர்
யோடு பேசும்போது முக்கியமாகக் ாட்டோடு கூடிய
கவனிக்கவேண்டிய விடயம் யாதெ "கட்காத குழந்தை
னில், தேவையற்ற அசாதாரண முக ம்பிப் பார்க்கவும்
பாவங்களும் சைகை மொழியும் அசா களைக் கேட்டும் வ்வேறு சூழலில்
தாரண வாய் அசைவுகளும் கட்டாய துேப் பார்த்தால்
மாக நீக்கப்படவேண்டும். எந்நேரமும் கேள்தகைமை குறைவான குழந்தை
யோடு சாதாரணமாகப் பேசுவதையே த 15ஆம் மாதம்
பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். -க்குக் கூறப்படும் னற்றத்தைக் காட்
மேலும் தாய் தன் குழந்தை யோடு உரையாடும் போது குழந் தையின் கண்களை நேராக நோக்கிய வண்ணம் பேசுவதையும் விழித் தொடர்பு நீங்கும் போது நிறுத்தி மீண்டும் விழித்தொடர்பு ஏற்படும் போது பேசவும் வழமையாக்கிக் கொண்டால் குழந்தையும் உரையாடு பவரை உற்று நோக்கப் பழகுவதோடு தாய்க்கும் தன் குழந்தையின் பார் வையில் பேச்சு கிரகிக்கப்படுகிறதா என்பதை அறிந்துகொள்ளலாம்.
தாயின் அன்பால் செய்ய முடியா தது எதுவுமில்லை. எனவே, ஒரு தாயின் முயற்சியே கேள் தகைமை
குறைவான அல்லது கேள் தகைமை ற்சிபெற்றவர்கள்,
யற்ற குழந்தையின் வாழ்வில் வெற் 5 எணலாம். (இது
றியையும் முன்னேற்றத்தையும் ” ள்ளது.)
ஏற்படுத்த உதவும் என்பது உறுதி.
ஒளிஅரசி 31

Page 33
[ திக்கம் சிவயோகமலர்
''நீங்கள் நினைச்சால் எங்கடை திருமணம் நடக்கும். உங்களுக்கும் விடிவுகாலம் பிறக்கும். உங்கடை முடிவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறன்'' சாதகமான பதில் கிடைக் கும் என்ற நம்பிக்கையோடு கேட்டான்.
ஆனால், அவள் சொன்ன பதிலோ அவனது நெஞ்சில் வேல் பாய்ச்சியது போலாக அவன் துடித்துப் போனான். அவனது மனதில் அவள் சொன்ன பதில் அடிக்கடி வந்து போனது. ''என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் பிரசாந். என்மேல் இரக்கப்பட்டு எனக்கு வாழ்வளிக்க நினைத்த தற்கு நன்றி. காலம் கடந்தபின் திருமண பந்தத்தில் சிக்கி அதன்பின் பிள்ளைகள் பெற்றுத் தள்ளாத வயதிலை தடுமாறுவதை விடத் தனியாக இருப்பது மேலானது. அதைவிட, என் பெற்றோரின் வயோதிப காலத்தில் உதவியாக இருந்து அவர்களைக் கவனிப்பது சிறந்தது போல எனக்குத் தெரிகிறது. அவர்களைப் பரிதவிக்கவிட எனக்கு இஷ்டமில்லை. பெற்றோரின் ஆசியோடு நடக்கவேண்டிய திருமணம் அவர்களின் கண்ணீரோடு நடக்கவேண்டாம்.
பெற்றவர்களது மனதைப் புண்படுத் தியோ, எந்த விடயமானாலும் அவர்களோடு கலந்தாலோசிக்காது முடிவெடுத்தோ எனக்குப் பழக்கமில்லை. இது வரை வழக்கத்திலிருந்து வந்த ஒரு பழக்கத்தை மாற்றிக்கொள்ள எனக்கு இஷ்டமில்லை'' என்று சட்டெனக் கூறிவிட்டாளே. அவன் வருந்தினான்.
ஆனால், மனதைக் கல்லாக்கிக்கொண்டு மஞ்சுளா இப்படிச் சொன்னாலும் அவளது மனமோ தன் முழுமையடையாத வாழ்க் கையை நினைத்துக் கொந்தளித்தது. பிரயாணத்துக்கான கடைசி பஸ்ஸையும் தவறவிட்ட பயணி ஒருவரின் மனநிலையில் குழம்பினாள் அவள்.
அவளது திருமணத்துக்கான சுவிச் எங்கிருக்கிறது என்று அறிந்த பிரசாந், அவளுக்காக வருத்தப்பட்டான். ஆனால், அவள் தன் முடிவான முடிவைச் சொல்லிய பின் அவனால் என்னதான் செய்ய முடியும்?
" பெண்கள் நடைமுறை வாழ்க்கையில் சில உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். போராடுபவன்தான் வெற்றி பெறுவான் என்ற தத்துவத்தை அவர்கள் E கொண்டிருக்கவேண்டும். தான் விரும்பிய ஒருவரைக் கணவராக அடைவது தவறில்லை என்பதை அவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.
ஒளிஅரசி 32

காத்திருக்கப் போகிறாள்...

Page 34
பெற்றோருக்குத் தன் வாழ்நாள் முழுவதும் உழைத்துக் கொடுத்துவிட்டு தன்னை மெழுகுதிரி ஆக்கிக்கொள்ளும் பெண்களின் வாழ்க்கை துயரமானது.
தள்ளாத வயதில் பெற்றோரைக் கவனிப்பது அவர்களது கடமை யென்ற எண்ணத்தோடு அவர்களது பிள்ளைகள் செயலாற்றும்போது அந்தப் பிள்ளைகளுக்கும் காலாகாலத்தில் செய்யவேண்டிய கடமைகளைப் பெற்றோரும் மறக்காமல் செய்யவேண்டும். ஒழுக்கம் என்ற போர்வைக்குள் பெண்களின் இளமை ஆசைகள் எல்லாம் அடங்கி ஒடுங்கிப்போய் ஓட்டுக்குள் உறுப்புகளை அடக்கி வாழும் ஆமையைப் போல, கட்டுப்பாடான நிலையில் வாழும் பெண்களும் தம் கடமையை மறந்த பெற்றோரும் வாழும் நம் தாய்நாட்டிலிருந்து வெகுவிரைவில் லண்டனுக்குச் சென்றுவிட வேண்டும். என்று நினைத்தபடி அவன் மெல்ல எழுந்து நடக்
கிறான்.
அப்போது வானொலியில் யாரோ ஆற்றிய உரை ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தது.
விளையாட்டு அறிவுப் (
போட்டி இல: 09 வினாக்கள்
01. 2014 ஆம் ஆண்டு கால்பந்தாட்ட உன்
விருதினை வென்ற வீரர் எந்த நாட்டவர் 1) ஜேர்மனி
2) ஆர்ஜன்ரீன
02.
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் புதி 1) அரவிந்த டி சில்வா 2) என். சீனிவ
03.
2014 இல் உலக கோப்பை கொக்கி போ 1) அவுஸ்ரேலியா
2) இந்தியா
04. 20 ஓவர்களைக் கொண்ட கிரிக்கெட் போட
1) டினேஸ் சண்டிமால் 2) மலிங்கா
05. 2014 ஆம் ஆண்டுக்கான ஐசிசி உலக T -
1) டோனி
2) மலிங்கா
01
போட்டி இல : 7 விடைகள் 01. பிரேஸில் 02. சந்திக கத்துருசிங்க 03. ரஷ்சியா 04. அவுஸ்ரோலியா 05. ஜமேக்கா
02
5
03

''... இன்று பெண்கள் பெண் விடுதலைக்கான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். பெண்களுக்கான அமைப்புகள், நிறுவனங்கள் பெண்ணிய மேம்பாட்டில் தம்மை ஈடுபடுத்தி வருகின்றன. ஒரு காலத்தில் வீட்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த பெண்கள் இன்று புதுமைப் பெண்களாக - பாரதிகண்ட புதுமைப் பெண்களாக ஆண்களுடன் சரிசமனாகப் பதவிகளிலும், அரசியலிலும் ஆட்சிப் பீடங்களை அலங்கரித்தும் வருகின்றனர்.
எனவே, பெண்களே! விழித்தெழுங்கள்.. வானொலி பெண் விடுதலைபற்றி தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அவன் மஞ்சுளா வீட்டிலிருந்து வெளியில் சென்று அவளைத் திரும்பிப் பார்க்கிறான். வாடிச் சோர்ந்து போன முகத்துடன் அவள் கதவை மூடிவிட்டு உள்ளே செல்வது தெரிகிறது.
ஒரு பெண்ணின் வாழ்க்கை அந்தக் கதவுக்குள் மூடப்பட்டுவிட்டதே என்ற மனச் சுமையுடன் பிரசாந் லண்டன் செல்வதற்கு ஆயத்தமாகிறான்.
முற்றும்.
போட்டி
முதல் பரிசு ரூ. 1000/= இரண்டாம் பரிசு ரூ. 750/= 'மூன்றாம் பரிசு ரூ. 500/=
யக கோப்பை போட்டிகளில் தங்கப் பந்து
3) பிரேசில்
பிய தலைவர் யார்? ராசன் 3) கபில்தேவ்
ட்டியில் வெற்றிபெற்ற அணி எது?
3) நெதர்லாந்து
ட்டிக்கான இலங்கை அணியின் தலைவர் யார்?
3) குமார் சங்கக்கார
20 அணியின் கப்டன் யார்?
3) ஸ்டீபன் மைபர்க்
பரிசு பெறும் அதிர்ஷ்டசாலிகள் - இ.வனஜா, 54/19, சங்கீத வீதி, தாமரைக் கேணி
மட்டக்களப்பு. - எம். என். ஹைரூநிஷா, இல.148,
மல்கமந்தேனியா, அலவத்தக்கொட. - திருமதி ரீ. சிதம்பரநாதன், டச்சு வீதி, கோப்பாய்
தொற்கு, கோப்பாய்.
ஒளிஅரசி 33

Page 35
மனவலிமை!
2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆ கட்டியெழுப்புவோம்,29 என அறிவிக்கப்பட் ஆண்களா? பெண்களா? என ஒரு விவாத
அக்காமாரின் வாதம்
* இன்று ஆண்களை விட பெண்களே உயர்ந்த பதவிகளை
வகிக்கிறார்கள்.
* ஆண்களை விட பெண்கள் ஆளுமை உடையவர்களாகவும், கல்வியில் உயர்ந்தவர்களாகவும் காணப்படுகின்றனர்.
* பல்கலைக்கழகத்தை எடுத்துக் கொண்டால் பெண்களின் விகிதா சாரமே அதிகமாகக் காணப்படுகிறது.
எமது பல்கலைக்கழகத் துணை வேந்தரும் ஒரு பெண்தான்.
* ஆண்களின் துணை இல்லாத வீடுகளில் பெண்களே குடும்பப் பொறுப்பை ஏற்கின்றனர். .
* கருவை சுமக்கின்ற தன்மை பெண்களுக்கே உண்டு. இதனால் அவள் பல வே; மனவலிமை உடையவளாகிறாள்.
* ஆண்கள் உடல் வலிமை உடையவர்களாக * ஒவ்வொரு ஆணுடைய வெற்றிக்குப் பின் மனைவியாக, காதலியாக, நண்பியாக இருந்து 2
* இன்றைய காலத்தில் சமூக சேவைகளில் அ இல்லாமல் பெண்கள் இருப்பார்கள். ஆனால், பெண்
ஆண்களுக்கு நிகராக சாதனை நிலைநாட்டிய காணப்படுகின்றனர்.
ஒளிஅரசி 34

பில் உயர்ந்துநிற்
ம் திகதி கொண்டாடப்படவிருக்கும் சர்வதேச இளைன டிருக்கின்றது. இதையொட்டி நாம் யாழ் பல்கலைக் ரத்தை தொடங்கிவைத்தோம்...
தனைகளை அனுபவித்தாலும் அதனைத் தாங்கக்கூடிய
இருந்தாலும் மனவலிமை உடையவர்கள் பெண்களே. னாலும் ஒரு பெண் இருப்பாள். தாயாக, சகோதரியாக, பூணின் வெற்றிக்கு துணைபுரிகிறாள். அதிகம் ஈடுபடுவது பெண்கள்தான். ஆண்களின் துணை எகளின் துணை இல்லாமல் ஆண்கள் இருக்கமாட்டார்கள். ப பெண்களாக கல்பனா செளலா, அன்னை திரேசா

Page 36
ற்பது ஆண்களா
அளஞர் தினத்திற்கான கருப்பொருளாக ""இளைாளுண்ம லக்கழக அக்காமாரையும் அண்ணாமாரையும் ஒளிஅ
விவாதித்தவர்கள்
மூன்றாம் வருட மாணவர்கள் (33 ஆவது அணி)
கலைப்பீடம் யாழ். பல்கலைக்கழகம்.
வர்களாகவும் தளர்வ
* பெரும்பாலா ஆண்களாக இருப்பது
* பல து வல்லுனர்களாகவும்
* எந்த சா நிலைநாட்டுபவர்கள்
உதாரணமாக, முத் சென்றமை, எவரெள்

? பெண்களா?
ற்றும் யுவதிகளிடம் அமைதியாயணமனநிலையை (ரசி சார்பில் அணுகி மனவலிமையில் சிறந்தவர்
அண்ணாமாரின் வாதம்
* உடல் வலிமையில் உயர்ந்து நிற்பதைப்போல மனவலிமையிலும் உயர்ந்து நிற்பவர்கள் ஆண்கள் தான்.
* ஒரு குடும்பத் தலைவனாக இருப்பவர் ஆண்தான். ஆண்கள் தான் குடும்பத்தைக் கொண்டு நடத்த முடியும்.
* பல்கலைக்கழகத்தில் ஆண் களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் நிகழ்ச்சிகளை வழி நடத்துவார்கள்.
* பெண்கள் மென்மைத்தன்மை யாகவும், உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.
ஆனால், ஆண்கள் துணிச்சலான அடையாதவர்களாகவும் இருப்பார்கள். என நாடுகளின் தலைவர்கள், இராணுவச்சிப்பாய்கள் தனால் ஆண்களே மனவலிமை உடையவர்கள். துறைகளில் நிபுணத்துவமுடையவர்களாகவும்,
இருப்பது ஆண்களே. தனைகளை எடுத்துக் கொண்டாலும் முதலில் - ஆண்கள்தான். தலில் விண்வெளிக்குச் சென்றவர்கள், நிலவுக்கு முதலில்
ல்ட் சிகரத்துக்கு முதலில் சென்றமை.
ஒளிஅரசி 35

Page 37
0 கட்டுரை
வேலைத்தளங்களில்பெண்க.
ஜூன் மாத 'ஒளிஅரசி'யில் வெளியான 'வேலைத்தளங்களில்
பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள்' என்னும் தலைப் பிலான கட்டுரைப் போட்டியில்
பட்டுச்சேலை பரிசுக்காகத் தெரிவுசெய்யப்பட்ட கட்டுரையை எழுதிய இல்லத்தரசி திருமதி
கங்காஜினி பகீரதன்
(08ஆம் வாய்க்கால், உருத்திரபுரம், கிளிநொச்சி)
இன்றைய நாகரிகமானதும் அபி விருத்தி நிறைந்ததுமான நூற்றாண் டில் பெண்கள் தமது கல்வியறிவை மேம்படுத்தி தம்மைச் சுற்றியிருக் கும் தடைகளை அறுத்து சுயமாக வாழவிளையும் காலமிது.
ஒவ்வொரு வீடுகளிலும் சுய தொழில், அரச பணி, தனியார் நிறுவனங்கள் எனப் பெண்கள் வேலைக்குச் சென்று உழைப்பது மிகச் சாதாரண விடயமாக மாறி விட்டது. இதனால் ஆண்கள், குடும் பம், பிள்ளைகள், சமூகம் என அனைவருக்கும் நன்மையே நடை பெறும் விடயமாகிப் போனாலும் பெண்கள் தமது வேலைத்தலங் களில் பல இன்னல்களை அனுப விக்கின்றனர்.
மேலதிகாரிகளாலோ, சக பணி யாளர்களாலோ இரட்டை அர்த்த வார்த்தைகள் (Double meaning), பார்வைகளின் அத்துமீறல்கள் என பெண்கள் துஷ்பிரயோகப்படுத்தப் படுகின்றாள். துஷ்பிரயோகம் என் பது பாலியல் ரீதியான துன்புறுத்தல் என்பது மட்டுமல்ல, பார்வை, வார்த்தை, தொடுகை எல்லாமே துஷ்பிரயோ கமாகக் கருதப்படுகின்றது. - சிலர் எதேச்சையாக அல்லது தவறுதலாக நடைபெறுவதுபோல் 5 பாசாங்கு செய்து இடிப்பது, : பொருட்களைக் கொடுக்கும்போது
கைகளால் ெ யாகவே நல்ல இணைத்து ஒ கொச்சைப் பெண்களை என்பதை இ
சில அலு நிறுவன சட் போன்றவற் கேவலமான மோதல்கள் பெண் அலு சகோதரியோ சமமானவர்க வன்முறைகள்
சில அலு என்ற பதவிட் என்ற பாசாங் அழிக்கவோ ( காலையில் ப இவற்றைக் 4
பல பெல சவால்களைத் களிடமோ ( களில் பென் கூடமோ, சா அவர்களின் ஏற்படுத்தப்பட
தமது தனி மட்டுமன்றி, உழைப்பு அ அக்கறை கா பெண்களின் நாட்டின் கா கடமையாகு முளைத்துநிற தயாராகவே
வீடுக
ஒளிஅரசி 36
கட்டுரை அனுப்பவே.

பட்டுச்சேலை ள் எதிர்நோக்கும் சவால்கள்
தாடுவது போன்று நடப்பார்கள். சிலர் உண்மை பவர்களாக - நட்பாக இருக்கும்போது அவர்களை ருசிலர் கதைகள் கட்டுவர். இங்கு உண்மை நட்பு படுத்தப்படுகின்றது. இவை அனைத்தும் உளவியல் ரீதியாகப் எவ்வளவு பாதிக்கும் வர்கள் புரிந்துகொள்ளவே மாட்டார்கள். 'வலகங்களில் தாபன விதிக்கோவை அல்லது டவிதிகளை மீறி பலர் மது, புகைப்பிடித்தல் றில் ஈடுபடுகின்றனர். மது அருந்திவிட்டு - தகாத வார்த்தைப் பிரயோகம் செய்தல், சிறுசிறு எனத் தமது போக்கில் நடப்பார்கள். பக்கத்தில் வலர்கள் இருக்கிறார்களே இவர்களும் எமக்குச் மகளோ, தோழியோ ஏதோ ஓர் உறவு முறைக்குச் ள் என ஒருவரும் நினைப்பதில்லை. இதுதான் ரின் ஆரம்ப குணமாகின்றது.
வலகங்களில் கம்பியூட்டரில் இரவுக் காவலாளி 1 போர்வைக்குள் அல்லது கடுமையான வேலை கில் சிலர் தகாத படங்களைப் பார்ப்பதும் அதனை Delete), மறைக்கவோ தெரியாமல் விட்டுச்செல்வர். பணிக்கு வரும் பெண் அலுவலர்கள் சிலவேளை காணவேண்டிய இழிநிலை ஏற்படுகின்றது.
ன்கள் தாம் வேலைத்தலத்தில் முகம் கொடுக்கும் 5 தமது பெற்றோரிடமோ, கணவரிடமோ, நண்பர் சொல்லத் தயங்குகின்றனர். பல வேலைத்தலங் எகளுக்கு என குடிதண்ணீர் வசதியோ, மலசல ப்பாட்டு அறையோ ஒதுக்கப்படுவதில்லை. அது
அடிப்படை வசதியைப் பெற்றுக்கொள்வதில் கடும் பாரிய குற்றமாகும்.
ப்பட்ட வாழ்க்கையைத் தவிர, குடும்பம், சமூகம் - நாட்டிற்கும் நன்மை பயக்கும் பெண்களின் "தனைப் பெறும் மேலதிகாரிகள், முதலாளிகள் ட்டி துஷ்பிரயோகம் நடைபெறுவதைத் தடுத்து தடைக்கற்களை அகற்றவேண்டும். 'பெண்கள் ன்கள். அதைப் பராமரிப்பது அனைவரினதும் தம். தற்காலத்தில் பெண்கள் தமக்கு எதிராக க்கும் அனைத்துச் சவால்களையும் எதிர்கொள்ளத்
உள்ளனர் என்பது உண்மையே.
மொதத்துக்கான கட்டுரையின் தலைப்பு களில் இடம்பெறும் பெண்கள் - மீதான வன்முறைகள்
யை எழுதி இம்மாதம் 25 இற்கு முன்னர் அனுப்பவும். ண்டிய முகவரி 4ஆம் பக்கத்தில் காணப்படுகிறது.

Page 38
சிறந்த கட்டுரைகளில் இருந்து ? பெண்களுக்கு வேலைத்தளங்களில் இழைக் கப்படும் கொடுமைகள் தொடர்பாக தெளிவான பதிவுகள் காணப்பட்டாலும் இவை தொடர்பாக கவனத்தில் எடுக்கப்படுவதில்லை. பெண்கள் வேறு, மனித உரிமைகள் வேறு என்றே நோக்கப் படுகின்றது. இந்நிலையில்தான், பெண்கள் மீதான கொடுமைகள், உரிமை மீறல்கள் பாரிய அளவில் இடம் பெறுகின்றன எனலாம். மேலும் இன்று பெண்கள் வேலைத்தளங்களில் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். சில பெண்கள் தொழில் புரியும் இடங்களில் ஆண் கள் பெண்களை அச்சுறுத்தி வைத்து வேலைவாங்கு கின்றனர். சில வேளைகளில் பெண்களைத் தமக்கு
அடிமையாக்கிக் கொள்கின்றனர்.
பாத்திமா ரிஸ்கா சஹாப்மன், அக்குறணை, கண்டி.
வேலை என்று போனால் எந்த இடத்திற்கும் செல்லவேண்டிய நிலை காணப்படுகின்றது. இதனால் பெற்றோர், கணவன், பிள்ளைகளை விட்டு வேறு ஊரிற்குச் சென்று தனியாக உழைக்க வேண்டிய நிலை ஏற்படுவதால் மன உளைச்சலை யும், மொழிப் பிரச்சினை, பாதுகாப்பு இன்மை போன்றவற்றையும் பெண்ணானவள் எதிர்கொள்ள வேண்டிய நிலை தோன்றுகின்றது. மேலும் சில இடங்களில் பெரியவர்களின் சிபார்சு இருந்தால், பணமிருந்தால் மட்டுமே வேலை எனக் காணப்படு கின்றது. இதனால் ஏழைப் பெண்களின் நிலை கேள்விக்குறியாகக் காணப்படுவது மன வேதனைக்
குரிய விடயமாக உள்ளது.
ஸ்ரீகஜலக்ஷ்மி இரட்ணபிரபாகரசர்மா, கொக்குவில்.
சில பெண்கள் செல்லும் வேலைத்தளம் அதிகதூரமாக இருந்தால் ரயிலிலோ அல்லது பஸ்ஸிலோ பிரயாணம் செய்வார்கள். அவர்கள் பல காரணங்களினால் குறிப்பிட்ட நேரத்திற்கு வேலைக்கு சமுகமளிக்கமுடியாமல் போய்விடுகிறது. இதனால் மேலதிகாரியின் கோபத்திற்கும் ஆளாகவேண்டி யுள்ளது. இதன் காரணமாக அன்று முழுவதும் மனக்குழப்பத்துடன் வேலைசெய்கின்றனர். சிலர் தேவையற்ற வீண் கட்டுக்கதைகளை வேலைசெய் யும் இடங்களில் பெண்களுக்கெதிராகப் பரப்பி விடுகின்றார்கள். இதனால் பெண்கள் அவமானப் படவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள். இவ்வாறு பல வழிகளில் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் நிறையவே உள்ளன. திருமதி புஷ்பராணி சுதந்திரராஜா, நல்லூர், யாழ்ப்பாணம்.
பெண்கள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்லர் என நிரூபித்து பல மேலதிகாரிகளாக உள்ளனர். இவர் களிடம் பணிபுரியும் ஆண்கள் அவர்கள் கூறும் பணி களை முழுமையாக ஆற்றுவதில்லை. அவர்கள் முதுகுக்குப்பின் புறங்கூறும் நிகழ்வுகளும் நடந்தவண் ணமே உள்ளன. நேரிலோ தேனிலும் இனிய வார்த்தைகளை உதிர்க்கின்றார்கள் ஆண் வர்க்கத்தினர்.
திருமதி பகீரதன் பிரேமலதா, கரவெட்டி.

எடுக்கப்பட்ட முக்கிய அம்சங்கள்
காதலில் விழுந்து போதைக்கு அடிமையாகிய பெண்களைவிட வேலைத்தளங்களிற்குச் சென்று அதுவும் தங்கு விடுதிகளில் தங்கி வேலை செய்யும் இடங்களிலுள்ள பெண்கள்தான் அதிகமாகப் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். வேலைத் தளங்களில் பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் அவர்களது எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி விடுகின்றன. இன்றைய காலத்தில் இட ஒதுக்கீடு களின்றி, வயது வேறுபாடு இன்றி பாலியல் துஷ்பிர யோகம் விரைவாக வளர்ச்சியடைகின்றது. பாலி யல் துஷ்பிரயோகமானது வேலைத்தளங்களில் பெண்கள் மத்தியில் நிரம்பி வழிகின்றது.
திருமதி வரதராஜன் ரஞ்சினிதேவி, வரணி.
அலுவலகப் பணிகளில் பெண்களுக்குரிய பங்கு என்ன; அவர்கள் எப்படி நடத்தப்படவேண்டும் எனும் கொள்கைகளும் கோட்பாடுகளும் எழுத்தள விலேயே நின்றுவிட்டன. சபல புத்தியுள்ள சில ஆண்களால் அலுவலகங்களில் ஏற்படுகின்ற சிறு சிறு முரண்பாடுகள் சில வேளைகளில் அவளது வேலைக்கே உலைவைக்கும் அளவிற்கு வஞ்சம் தீர்க்கும் நிலையை உருவாக்குகின்றது. இதற்காக பல துறைகளில் சிறந்து விளங்கும் ஆண்களின் கூட்டு முயற்சியும் தொடர் பிரச்சினையாக - ஒரு பெண்ணின் சுயத்தை அழிப்பதாக - அடுத்து வரும் சந்ததிகளின் தற்றுணிவை தட்டிப்பார்ப்பவையாக அமைந்துவிடுகின்றன.
உ. லூரிஸமேரி, திருமுருகண்டி.
அதிகமாக மேலதிகாரிகளிடமிருந்துதான் பெண்கள் அதிக சவால்களை எதிர்நோக்கு கின்றனர். பெண்களின் பலவீனத்தைத் தமக்குச் சாதகமாக எடுத்துக்கொண்டு அவர்களைத் துன்புறுத் துகின்றனர். தனது வறுமையைக் கருத்திற் கொண்டு வேலைத்தளங்களில் தங்கி வேலை செய்யும் பெண்களின் அவலநிலையை வார்த்தை களால் வடிக்கமுடியாது. தங்குவிடுதிக் காவலாளி கூட பெண்களைத் தொட்டுப்பார்க்க முயல்கின்றான்.
வி.நிரோஜினி, வரணி.
ஆண், பெண் இருபாலாரும் தொழில்புரியும் இடங்களில் பெண்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். நையாண்டி, இரட்டை அர்த்தப் பேச்சு, உரசல்கள், கண்சாடை செய்தல் போன்ற பலவற்றுக்கு முகங்கொடுக்கவேண்டி யுள்ளது. கொஞ்சம் சகித்தால் பிழையான பேர்வழி என்றும், முறைத்தால் அடங்காப்பிடாரி என்றும் பேர்சூட்டி விடுவார்கள். இவ்வாறு பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் சொல்லில் அடங்காது.
செ.இரஞ்சிதமலர், புத்தூர். அனுசரணை
ஒளிஅரசி 37
CAę Little ASIA
MiPORIUM (Pvt) Ltd.

Page 39
0 அழகுக்குறிப்பு
இளமைத் தோற்றம்
1. வெயிலில் அதிகம் அலைவதால் முகத்தில் வறட்சியும் சுருக்கங்களும் தோன்றும். சிலருக்கு வயதாக வயதாக இந்தச் சுருக்கங்கள் அதிகரித்து மனதை வாட்டும். கவலைப்படாதீர்கள். விளாம் பழம் இருக்க வேதனை ஏன்?
இரண்டு டீஸ்பூன் பசும்பாலுடன் இரண்டு டீஸ்பூன் விளாம்பழ விழுதைச் சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளுங்கள். இதை முகத்தில் 'மாஸ்க்' போல போடுங்கள். விளாம்பழ விழுது எவ்வளவு நேரமானாலும் உலராது என்பதால் சிறிது நேரத்தில் நீங்களாகவே கழுவி விடுங்கள். இந்த சிகிச்சையைத் தினமும் காலையில் செய்தால் இழந்த பொலிவு மீள்வ துடன் இன்னும் உங்கள் முகம் இளமையாக மாறும்.
ஒளிஅரசி 38

தரும் விளாம்பழம்
2. குழந்தையைப் போன்ற மென்மையான சருமத்தை விரும்பாதவர்கள் யார்? விளாம் பழத்தில் அதற்கான இரகசியம் இருக்கிறது. விளாம்பழத்தின் சதைப் பகுதியைத் தனியே எடுத்துக் காயவையுங்கள். இதனுடன். பார்லி, கஸ்தூரி மஞ்சள், காய்ந்த ரோஜா மொட்டு, எல்லாவற்றையும் சம அளவு எடுத்து அரைத்து கொள்ளுங்கள். இதை குளியல் பவுடராகப் பயன்படுத்தினால் முரடு தட்டிய தோல் மிருதுவாவதுடன் கரும்புள்ளிகளும் காணாமல் போகும். சருமப் பொலிவுடன் கேச ஆரோக்கி யத்துக்கும் வழி சொல்கிறது விளாம்பழம்.

Page 40
0 ஆண்மிகம் = கிருபானந்தவாரியார்
கடவுள் கறுப்.
ஒரு பெரியவர் அரசமரத்தின் கீழ் அமர்ந்து கடவுளைத் தியானித்துக் கொண்டிருந்தார். அங்கே ஒரு மாணவன் சென்றான். அம்மாணவன் மிடுக்கும் சொல் துடுக்கும் உடையவனாகக் காட்சியளித்தான்.
"ஐயா, பெரியவரே! ஏன் உட்கார்ந்து கொண்டே தூங்குகின்றீர்? சுகமாகப் படுத்து உறங்கும்'' என்றான்.
"தம்பி! நான் உறங்கவில்லை. கடவுளைத் தியானிக்கிறேன்.''
'ஓ! கடவுள் என்று ஒன்று உண்டா? ஐயா! நான் எம்.ஏ. படித்தவன்; நான் மூடன் அல்லன்; நூலறிவு படைத்தவன்; கடவுள், கடவுள் என்று கூறுவது மூடத்தனம். கடவுளை நீர் கண்ணால் கண்டிருக்கின்றீரா?''
"தம்பி! காண முயலுகின்றேன்.'' ''கடவுளைக் கையால் தீண்டியிருக்கின்றீரா?'' ''இல்லை.'' 'கடவுள் மீது வீசும் மணத்தை மூக்கால் முகர்ந்திருக்கின்றீரா?''
"இல்லை.'' "ஐயா! என்ன இது மூட நம்பிக்கை? உம்மை அறிவற்றவர் என்று கூறுவதில் என்ன தடை? கடவுளைக் கண்ணால் கண்டதில்லை; மூக்கால் முகர்ந்ததில்லை; கையால் தொட்டதில்லை; காதால் கேட்டதில்லை; இல்லாதவொன்றை இருப்ப தாகக் கற்பனை செய்து கொண்டு அரிய நேரத்தை வீணடிக்கிறீரே? உம்மைக் கண்டு நான் பரிதாபப் படுகிறேன். உமக்கு வயது முதிர்ந்தும் மதிநலம் முதிரவில்லையே! பாவம்! உம் போன்றவர் களைக் காட்சிச்சாலையில் வைக்கவேண்டும். கடவுள் என்றீரே! அது கறுப்பா? சிவப்பா?” என்றார்.
'அது சரி, தம்பி! உன் சட்டைப் பையில் என்ன இருக்கின்றது?''
"தேன் போத்தல்.' 'தேன் இனிக்குமா? கசக்குமா?'' "என்ன ஐயா! இதுகூட உமக்குத் தெரியாதா? சுத்த மக்குப் பண்டமாக இருக்கின்றீர். உலக மெல்லாம் உணர்ந்த தேனை இனிக்குமா, கசக்குமா என்று வினவுகின்றீரே! உணவுப் பொருட்களி லேயே தேன் தலைமை பூண்டது. இது அருந்தேன். இதை அருந்தேன் என்று எவன் கூறுவான்? அதற்காக இருந்தேன் என்பான். தேன் தித்திக்

பா? சிவப்பா?
கும். இதை எத்திக்கும் ஒப்புக்கொள்ளும்.''
"தம்பி! தித்திக்கும் என்றனையே அந்த இனிப்பு கறுப்பா? சிவப்பா? சற்று விளக்கமாக கூறேன். நீ நல்ல அறிஞன்'' என்றார் அந்த முதியவர்.
மாணவன் திகைத்தான். தித்திப்பு என்ற ஒன்று கறுப்பா, சிவப்பா என்றால் இந்தக் கேள்விக்கு என்ன விடை கூறுவது என்று திக்கித் திணறினான்.
''ஐயா! தேனின் இனிமையை எப்படி இயம்புவது ? இதைக் கண்டவனுக்குத் தெரியாது! உண்டவனே உணர்வான்.''
பெரியவர் புன்முறுவல் பூத்தார். "அப்பா! இந்தப் பௌதிகப் பொருளாக ஜடவஸ்துவாகவுள்ள தேனின் இனிமையையே உரைக்க முடியாது. உண்டவனே உணர்வான் என்கின்றனையே? ஞானப் பொருளாக அனுபவ வஸ்துவாக விளங்கும் இறைவனை அனுபவத்தால் தான் உணர்தல் வேண்டும்.
தேனுக்குள் இன்பம் கறுப்போ? சிவப்போ? வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்! தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல் ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!''
என்கிறார் பரம ஞானியாகிய திருமூலர். மாணவன்வாய் சிறிது அடங்கியது. "பெரியவரே! எனக்குப் பசிக்கிறது. சாப்பிட்டுவிட்டு வந்து உம்முடன் உரையாடுவேன்.''
"தம்பி! சற்று நில். பசி என்றனையே. அதைக் கண்ணால் கண்டிருக்கின்றாயா?'' ''இல்லை.''
''என்ன தம்பி! உன்னை அறிஞன் என்று நீயே கூறிக்கொள்கிறாய். பசியைக் கண்ணால் கண்ட தில்லை; மூக்கால் முகர்ந்ததில்லை; கையால் தொட்ட தில்லை; அப்படியிருக்க, அதை எப்படி நம்புவது? பசி பசி, என்று உரைத்து உலகத்தை ஏமாற்றுகின் றாய். பசி என்று ஒன்று கிடையவே கிடையாது. இது சுத்தப்பொய். பசி என்று ஒன்று இருக்கிறது என்று கூறுபவன் முட்டாள். உனக்கு இப்போது புரிகின்றதா? பசி என்ற ஒன்று அனுபவப்பொருள். அது கண்ணால் காணக் கூடியதன்று. அதுபோல் தான் கடவுளும் அனுபவப்பொருள். அதைத் தவஞ் செய்து மெய்யுணர்வினால் உணர்தல் வேண்டும்.''
மாணவனின் உடம்பு வியர்த்தது ; தலை சுற்றியது. பெரியவர் கூறுவதில் உண்மை உள்ளது என்பதை உணர்ந்து கொண்டான்.
ஒளிஅரசி 39

Page 41
0 மருத்துவம்
இளை நீரிழிவு நோய் அ
இலங்கையில் இளைஞர்கள் மத்தியில் நீரிழிவு நோய் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன் றின் முடிவு வெளிக்காட்டியுள்ளது. குறிப்பாக, 22 முதல் 30 வரையான வயதுடைய இளைஞர் கள் மத்தியில் நீரிழிவு நோய் அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
கடந்த 2006ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை யிலுள்ள தனியார் மருத்துவமனைகள், அரச மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்கள் எனப் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் தொடர்ச்சியாகப் பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களைக்கொண்டு மேற்கொள்ளப்பட்டதாக
அந்த ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இளைஞர்கள் மத்தியில் வேகமாக அதிகரித்து வருகின்ற நீரிழிவு பிரச்சினை என்பது இலங்கை யில் மட்டுமல்ல, ஏனைய ஆசிய நாடுகளிலும் காணப் படுகின்ற பொதுவான பிரச்சினை எனப்படுகிறது. இதற்கு இரண்டு காரணங்களை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஒன்று, மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங் கள். இரண்டாவது, மனஅழுத்தங்களுடன் கூடிய வாழ்க்கை. உணவுப் பழக்கவழக்கத்தைப் பொறுத்த வரையில் இன்றைய இளைஞர்கள் அதிகமாக எண்ணெய்த்தன்மை மற்றும் கொழுப்பு கூடிய செயற்கை முறையிலான விரைந்த உணவுகளை யும் (Fast Foods), இறைச்சி சார்ந்த உணவு வகை களையும் அதிகமாக உண்ணுகின்றனர். அதைவிட
ஒளிஅரசி 40)

ஞர்கள் மத்தியில் நிகரித்துள்ளதா?
உணவில் இலைவகைகள், மரக்கறிகளை மிகக் குறைவாக உட்கொள்வதுவும் பிரச்சினைக்கான ஒரு காரணமாகக் குறிப்பிடுகிறார்கள்.
இலங்கையில் விவசாயத்தின்போது பயன் படுத்துகின்ற நுண்ணுயிர்க்கொல்லியின் அளவும் அதிகமாக காணப்படுவதாகவும் இதுவும் இவ்வாறான நோய்கள் ஏற்படுவதற்கான காரணமாக அமைய லாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இளைஞர்கள் மத்தியில் காணப்படுகின்ற உழைப்புகள் மற்றும் உடற்பயிற்சிகளின் அளவு குறைவடைந்து வருகின் றமையும் ஒரு காரணமாக குறிப்பிடுகிறார்கள்.
நாடு பூராகவும் இளைஞர்கள் மத்தியில் நீரிழிவு நோய்த் தாக்கம் அதிகமாக காணப்பட்டாலும் இவற்றின் அளவு பிரதேசத்துக்குப் பிரதேசம் வேறு பட்டுக் காணப்படுவதுடன், நகரப் பகுதிகளி லேயே இதன் தாக்கம் அதிகமாக காணப்படுவ தாகவும், கிராமப் பகுதிகளில் குறைவாக உள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் மத்தியில் இந்நோய்த் தாக்கம் பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வந்தாலும் முக்கியமாக நமது வாழ்க்கை முறையை மாற்றவேண்டும் என்ற விழிப்புணர்வு இன்னமும் அதிகமாக மக்களிடத்து எடுத்துச் செல்லவேண்டும் என்கிறார்கள்.
இதன் தாக்கத்தைக் குறைப்பதற்கு மக்கள் தமது வாழ்க்கையை மாற்றுதல் அவசியம். அந்த வகையில் இலைகறி, மரக்கறிகள், தானியங்கள் மற்றும் பழங்கள் என்பவற்றைத் தமது உணவு களுடன் எடுப்பது, எண்ணெய் வகை, கொழுப்பு சார்ந்த உணவுகளையும், இறைச்சி வகைகளை யும் தவிர்த்தல் அவசியம்.

Page 42
வைத்திய அத்தியட்சகர் கே. எல். |
உணவும் ஆ
நாம் அன்றாடம் உட்கொள் கின்ற உணவு வகைகள் எல்லாவகை யான சத்துக்களையும் கொண்ட தான ஆரோக்கிய உணவாக காணப் படுகின்றதா என பார்த்துக்கொள்ளு தல் அவசியம். என்னென்ன உணவு கள் என்னென்ன வகையான சத்துக் களைக் கொண்டிருக்கின்றது என்ப தனை தெரிந்து கொண்டிருப்போமா யின் ஆரோக்கியமான உணவினை நாம் உட்கொள்ள முடியும்.
இறைச்சி, ஈரலும் அனைத்து விலங்கு உருப்புகளும், மீன், நெத்தலி, கருவாடு, சோயா, பருப்பு கடலை, உழுந்து, முளைத்த பருப்பு போன்ற வற்றிலும் கடும் பச்சைநிறகீரைவகை களான வல்லாரை, சாரணை, முள்ளங்கி இலை, பீட்ரூட் இலை, முருங்கை இலை போன்றவற்றி லும் உடைத்த பருப்புக்களான சோயா, பருப்பு, போஞ்சி, பயிற்றங் காய், சிறக வரை, கெளப்பி, கடலை, பயறு வகைகளிலும் மரக் கறிகளான முருங்கை, வாழைப்பூ, பீக்கங்காய், புடலங்காய், வெண் டிக்காய், பாவற்காய், தாமரைக் கிழங்கு மற்றும் பழவகைகளான கொய்யா, மாதுளம், விளாம்பழம், பெசன் புரூட், மாம்பழம், வாழைப்பழம், பப்பாசிப்பழம் போன்ற உணவு வகைகளிலும் இரும்புச்சத்து உள்ளடங்கியுள்ளன.
பழங்களிலுள்ள விட்டமின் A, C, E சௌனியம் என்பன நோய் எதிர்ப்புச் சக்தியாக செயற்படு கின்றது. இது கலங்களிலும் அவற் றின் இளையங்களிலும் ஏற்படக் கூடிய தீங்குகளை அறவே குறைக் கவோ அல்லது தவிர்க்கவோ உதவுகின்றன. அது தவிர புற்றுநோய், நீரிழிவு, இதயநோய், பாரிசவாத, உயர்குருதி அமுக்கம், சுவாச நோய் கள், மூட்டுவாதம் போன்ற நோய் களைத் தவிர்க்கும் ஆற்றலும் நோய் எதிர்ப்புத் தன்மை கொண்ட உணவு வகைகளுக்கு உண்டு.
பீட் பூசனிக்க வாழை மாதுள கொய்ய பழம் ே முளைத் போன்ற பூடு, கறி எதிப்புச்
மீன் றில் ஒன் உட்கொ வற்றில் இருதய நோய்க
மீன் வகை, 2 இன்றிய மூளையி சமைக்க எமக்குக் தவிர்க்கு
முட் அமிலங் போன்ற கனியுப் இருதய மட்டும் கிழமை ஆரோக்
5458 5 5 5 1
01.
02.
03.
விடை

எம். நக்பர், அட்டாளைச்சேனை
ரோக்கியமும்
நட் கத்தரிக்காய், மஞ்சள் வற்றாளை, கிழங்கு தக்காளி, காய், முள்ளங்கி, கோவா, சிரகவரை, வெண்டிக்காய், க்காய் போன்ற மரக்கறிவகைகள் பப்பாசிப்பழம், ம், அன்னாசி, தோடம், வத்தரிப்பழம், யானைக் T, கொய்யா, மா, தேசிக்காய், அப்பிள் முந்திரிகைப் "பான்ற பழவகைகள் பருப்பு சோளம், கடலை, பயறு கதது கெளபி மற்றும் அகத்தி, வல்லாரை, முருங்கை - இலைவகைகளிலும் வாசனைச் சரக்குகளான இஞ்சி, ேெவப்பிலை, கருவா, கராம்பு போன்றவற்றிலும் நோய் = சக்தியுள்ள விற்றமின்கள் அதிகளவு காணப்படுகின்றது. முட்டை கருவாடு, இறைச்சி, பருப்புவிதை என்பவற் பறையோ அல்லது சிலவற்றையோதினமும் உணவோடு கள்ளுதல் அவசியம். மீன், நெத்தலி, கருவாடு ஆகிய காணப்படும் புரதம் உடலுக்கு சிறந்ததாகும். இவை நோக்கும், கொலஸ்ட்ரோல் மூலம் ஏற்படும் அனைத்து ளுக்கும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது. எண்ணெயில் அடங்கியுள்ள ஒமேகா 3 கொழுப்பமில் உடல் இயக்கம், நரம்பு, மூளை வளர்ச்சி என்பவற்றுக்கு "மையாதது. அத்தியவசிய கொழுப்பமிலங்கள் மீனின் பில் காணப்படுவதால் சமையலின்போது தலையுடனே வேண்டும். என்பு வளர்ச்சிக்குத் தேவையான கல்சியம் க் கிடைக்கும். கடல் மீன் அயடீன் குறைபாட்டை தம்.
டையில் மனித உடலுக்கு அத்தியாவசிய அமினோ ககள் அடங்கி இருப்பதுடன் விட்டமின் B, B, A, D, E -வையும் இரும்பு, கல்சிய, நாகம், அயடீன் போன்ற புக்களும் காணப்படுகின்றன. மேலும் கொலஸ்ரோல், நோய் உள்ளோர்க்கு முட்டையின் வெண்கருக்களை சாப்பிடுவது சிறந்தது. வைத்திய ஆலோசனைப்படி க்கு 2 - 3 முட்டைகள் வரை சாப்பிடுவது உடல் கியத்துக்கு நல்லது.
லவச மருத்துவ பரிசோதனை
'Free E.testing இரத்த சோகை நோய் எந்த சத்து குறைப் பாட்டால் ஏற்படுகின்றது? உலக சுகாதார தினம் எப்போது கொண்டாடப் படுகிறது? சுவாச புற்று நோய் ஏற்படுவதற்கான பிரதான காரணம் எது? களை தபால் அட்டை ஒன்றில் எழுதி 4 ஆம் பக்கத்தில்
உள்ள முகவரிக்கு அனுப்புங்கள்.
ஒளிஅரசி 41

Page 43
(zரட்டர்
வலைக் கீ
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களி பிணைந்துவிட்டது, சமூகவலைத்தளங்கள் பற்றி ஒரு சில எமது சமூகத்தில் ஓர் அங்கமாகவே மாறிவிட்டன. சமூக எமது நாட்டில் காணப்படுகின்றது, இருந்தபோதும் தற்பே என்னும் சமூகவலைத்தளம் Facebook இற்கு இணையாக வலைத்தளத்தில் வந்த ஒருசில அம்சங்களை ஒளிஅரசி தன்
அட
ஆச்சரியக்குறி @tamilFacts : 2 கொகாகோலா குளிர் பானம் 1906 ஆம் ஆண்டுகளில் தலை வலிக்கான மருந்தாக
விற்கப்பட்டதாம்!
கவிதைக்காரன் @spnraj19 :
வீதியில் விற்பவளிடம் பேரம் பேசி
> குறைத்ததை பெருமையாக நினைக்கா தீர்கள். அந்த சில ரூபாய்களில் அவளுடைய ஒரு தேநீரை அவள் தியாகம் செய்ய நேரிடலாம்!!
பொன் குழந்தை @ponkulanthai : அனைவருக்கும் விடுமுறை உண்டு...!
ஆனால், அம்மாவுக்கு மட்டும் என்றுமே விடுமுறை இல்லை சமையலறையிலிருந்து...!!
தமிழ் @Mr_Puli : ஊருக்கு செல்ல பணமில்லை என
பிச்சையெடுப்பவர்களுக்கு கொடுத்துக் கொண்டு நான் இருக்கிறேன். உண்மையாகவே இல்லாதவனை ஏமாற்றிவிடுவோமோ என்ற அச்சத்தில்.
தமிழினி @manju_twits :
முதியோர் இல்லத்திலாவது விட்டுச்
செல்ல மகன் இல்லையோ என்னவோ ரோட்டோரங்களில் காய்கறி விற்கும் அன்னைக்கு....
ஒளிஅரசி 42
மீனம்மா @meenammakayal : தந்தை சகோதரன் மகன் அதிகாரம்
செய்வதை ரசித்துவிட்டு பெண்ணியம் பேசுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை

ச்சுக்கள்
லைத்தளங்க...' டஉலகநாடு-இல் Twitter
உன் பயன்பாடு எமது வாழ்க்கையுடன் பின்னிப் - எதிர்மறையான கருத்துக்கள் இருந்தாலும் அவை கவலைத்தளங்களில் Facebook முக்கியமானதாக சாது இந்தியா உட்பட்ட உலகநாடுகளில் Twitter வளர்ச்சியடைந்துள்ளது. அந்த வகையில் Twitter எ வாசகர்களுக்காக இம்மாதம் முதல் தருகின்றாள்.
மதில் Male பூனை @ponram123 : மலேசியாவில் வங்கிகளில் "'தமிழில்”
செக்கையோ, சலானோ எழுத அனுமதி உண்டு, தமிழகத்தில் அனைத்து வங்கிளிலும்
அனுமதி உண்டு. நாம்?
741
இது 2 2 1
10' 12 பிப 01:15 11
தமிழரசி @barathi : எல்லா வயதிலும் அம்மா என்பவள் தன்னால் பிள்ளைகளின் எந்தக் கவலை
யையும் தீர்க்க முடியும் என்று எண்ணு கிறாள். நாம்தான் சொல்வதை நிறுத்திவிடு கிறோம்!
khushbuSundar (@khushsundar :
Me n my babydoll
செளம்யா @arattaigirl : இன்னிக்கு என்ன சமைக்கலாம் என்ற
ஓயாத சிந்தனையில் உருவான வார்த்தை தான் 'குழம்பு'

Page 44
அழகை மேம்ப மிகச் சிறந்த வழி
கண்ணாடியில் உங்கள் பிரதிபிம்பத்தினைப் பார்க தோன்றுவதென்ன? நான் அழகாக இருக்கின்றே உடற்பருமனை நான் எப்படிக் குறைக்கலாம் ;- உள்ளது, வயிற்றில் கொழுப்புக் கூடி அழகற்றுக் கான் எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு ஒருதடவை உங்கள்
உங்களின் உடற்தோற்றம் திருப்திகரமானதாக ! கருதினால், அந்த நிலையில் உள்ளவர்கள் நீங்கள் களில் பெரும்பாலானவர்கள் சமூக, கலாசார அள அளவிடப்படுகிறார்கள். உதாரணமாக, மற்றவர்க அழகுபடுத்திக்கொள்கிறார்களோ, அவர்களைப்பே விடத் தங்களை மேன்மையாக அழகு படுத்திக் அப்படியில்லாவிடில் தங்களை மற்றவர்கள் தாழ் என்று தப்புக்கணக்குப் போடுகிறார்கள். அத்தோடு முக்கிய பங்கு வகிக்கிறது. அவற்றில் வரும் அழக கொடியிடையுடனான, நீளமான கூந்தலுடனும் கொண்ட பெண்கள், பெரும்பாலான பெண்களி இன்னும் ஒருபடி கூட்டிவிடுகின்றனர். உலக ஆய்வு வீதமான பெண்கள் தங்கள் உடற்தோற்றத்தினை என்றும் 17 வயதடைந்ததும் 78 வீதமாக அது அதிக இதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இதற்கு காரணப் தன்னியல்பாக ஈர்க்கப்படுகின்றது.
மாறாக, ஆண்டவன் எமக்களித்த எங்களில் தொடங்கினோமானால், வெவ்வேறு விதங்களில் எ முடியும். ஒவ்வொரு பெண்ணிடமும் ஏதோ ஒரு மென்மேலும் அழகுபடுத்தி மெருகூட்டுவது எமது 6 மகிழ்ச்சியான இன்பவாழ்வு வாழ வழிவகுக்கும். ! கலை நிபுணர் ஆவார்.
எல்லாவற்றிற்கும் மேலாக எமது உடல்நலத் அடிப்படையாகும். அடுத்து எம்மேல் நாம் நம்பிக்ை வரும் தனித்துவமானவர்கள், ஒவ்வொரு விதத்தில் மாறக்கூடாது. இனிமையான எண்ணங்களைக் ெ "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்'' என்பதற்கின வாழ்வாக அமைத்துக்கொள்ள வேண்டும். உடல் அழகியல் கலைஞரை நாடி உங்கள் உடலுக்கேற்ப மூலம் இருக்கும் அழகினை மென்மேலும் மெருகு
பம் - க ப
Addre @ 8912 11, Fu Wellawatte, Co T4346834 M:
Branc @ 80/1, New Ch
Colombo 13. T: BRIDAL & Email : hemy@hem
Web : hemysbribe BEAUTY CARE Facebook : www.
HHINS lேombo 13. T:

தத்துவதற்கான நெம்பிக்கையே!
க்கும்போது முதலில் உங்களுக்குத் ரன் என்பதா, அல்லது எனது எனது மூக்கு நீளமாக ணப்படுகிறது என்பதா? ளை உற்றுநோக்குங்கள். இல்லையென்று நீங்கள் - மட்டும் அல்ல பெண் பவைகளால் தொடர்ந்து கள் எப்படித் தங்களை எல் அல்லது அவர்களை கொள்ள வேண்டும்'', வாக நினைத்துவிடுவார்கள் விளம்பரங்களும் இதில் ஒரு என பல்வரிசையுடன் கூடிய, - மென்மையான மேனியும்
ன் தாழ்வு மனப்பான்மையை "1) 4 ஒன்றில், 13 வயதடைந்ததும் 53 நினைத்துக் கவலைப்படத் தொடங்கிவிடுவார்கள் ரித்து விடுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2, யுவதி ஆகும்போது எமது மனம் அழகை நோக்கி
விளக்குகிறார்
17 உடலின் தோற்றத்தினை நாங்கள் விரும்பத் மது தோற்றத்தினை சீராக அழகுபடுத்தி, மேம்படுத்த வித அழகு இருக்கிறது. அதில் நம்பிக்கை வைத்து கைகளில்தான் உள்ளது. இது வாழ்வை மேம்படுத்தி, இதற்கு பல வகைகளிலும் வழிகாட்டுபவரே அழகு
-தைப் பேணிப் பாதுகாக்க வேண்டும். இதுவே க வைக்கவேண்டும். அத்துடன் நாங்கள் ஒவ்வொரு ல் அழகானவர்கள் என்ற நிலையிலிருந்து என்றும் காண்டு வாழ்வைச் செம்மைப்படுத்த வேண்டும். எங்க எமது வாழ்வை இனிமையான, மகிழ்ச்சியான லைப் பராமரித்துப் பாதுகாப்பதற்கு என்போன்ற ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். இதன் படுத்த நாம் உதவிடுவோம்.
sh:
SSI
எந்த இடத்திற்கும் ssels Lane,
வருகைதந்து மணமகள் olombo 06.
அலங்கார சேவையை வழங்க 0773135585
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எமது சிறந்த சேவையைப்
பெற்றுக்கொள்ள எம்முடன் netty Street,
தொடர்புகொள்ளவும். - 4858756
ysbridal.com info@hemysbridal.com il.com acebook.com / hemysbridalandbeauty
ஒளிஅரசி 43

Page 45
pத கோபிகை, தருமபுரம்.
மாதுள்
நெஸ்ரடே சிறிது ம. வாங்கவே தட்டி ஒ அவருக்க!
“அப்
அமர்ந்து சமையலு
''ஓமப் தேநீர்க்கு சென்றாள் கவலைய இல்லை
சேவல்கள் இடைவிடாது கூவி விடியலுக்கு வழி சமைத்த அந்த அதிகாலைப் பொழுதில். பிரிய மறுத்த விழிகளை சிரமப்பட்டுத் திறந்தாள் மாதுளா. தலை யணைக்கு அருகில் இருந்த கைத்தொலைபேசி மணி நான்கு எனக் காட்டவே இன்னும் சிறிது நேரம் தூங்கலாம் என எண்ணிய படி தலையணை யில் சாய்ந்து கொண்டாள். கண்களை மூடிய போதும் நித்திரை வர மறுத்தது. சரிந்து படுத்தாள் அருகிலே துயின்று கொண்டிருந்த அவளது அன்பு மகன் அபிமன்யு வோ ஆழ்ந்த நித்திரையில் இருந்தான்.
'இவனைப்போல குழந்தை யாகவே இருந்துவிட்டால் எந்தத் துக்கமும் தெரியாதே' என எண்ண மிட்டது மனம். அவனது தலைம யிரைக் கோதி அன்பாய் வருடிய போது தாய்மையின் பூரிப்பில் ஒருகணம் சிலிர்த்துப் போனாள் மாதுளர். இந்த உலகில் தாய்மை யின் சுகத்திற்கு இணையாக எதுவுமே இல்லை என எண்ணியபோது உடல் விறைத்தது. காலம் அவளுக் குத் தந்த கசப்பான அனுபவங்கள் நினைவில் வந்து போயின. எண் ணிப்பார்க்கவே பிடிக்காத அந்த நிளைவுகளை உதறிவிட்டு எழுந்து கொண்டாள். வீட்டு வேலைகள் அவளை விரைந்து அழைத்தன.
மாதுளா ஒரு முன்பள்ளி ஆசிரியை. ஏழுமணிக்கெல்லாம் பாடசா லைக்குச் சென்றுவிட வேண்டும். அதற்கிடையில் வீட்டு வேலை களை முடிக்கவேண்டும். சிந்தனை முகளை அறுத்துவிட்டு பம்பரமாய் சுழன்றாள். வயதான அப்பாவிற் குத் தேவையான அனைத்தையும் செய்து முடித்துவிட்டே அவள் செல்வது வழக்கம். தொடர்ச்சி யாகக் கேட்ட இருமல் ஒலி அப்பா விழித்துவிட்டார் என்பதை அடை யாளப்படுத்தியது. மற்ற வேலை களை அப்படியே விட்டுவிட்டு அப்பாவிற்குத் தேநீர் கலப்பதற்காக விரைந்தாள்.
போத்தல்கள் இருந்த அடுக்கில் அவசரமாய்த் துளாவி அப்பாவின்
சமூகத்தில் அதிகமாக யும் பயமு
சமைய வந்தவள் ! தாயின் ம கொண்டா கோதி முத் இழைத்து தோளில் 8 அபிமன்யு காகத்தான் அவனது ம

Tவின் மைந்தன்
மால்ட்டை எடுத்தாள். பேணியின் அடிப்பாகத்தில் ரவே இருந்தது. அடுத்த சம்பளம் வந்ததும்தான் பண்டும் என எண்ணியபடி பேணியை இரண்டு தட்டு ஒட்டியிருந்த அனைத்தையும் தட்டிப் போட்டு என தேநீரைக் கலந்து முடித்தாள்.
யா இந்தாங்கோ''.... தட்டுத்தடுமாறி எழுந்து கொண்டார் சாம்பசிவத்தார். ''என்ன பிள்ளை
க்கு எல்லாம் கிடக்கே?'' என்றார் மகளிடம். சபா நான் சமைக்கிறன், நீங்கள் படுங்கோ'' என்றபடி வளையை அவரிடம் கொடுத்துவிட்டு விரைந்து F. அப்பாவைப் பார்க்கும்போது அவளுக்கு மிகவும் பாக இருந்தது. அப்பா மட்டும் அவளோடு யென்றால் என்ன பாடுபட்டிருப்பாள். இந்தச்
> எப்படி வாழ்ந்திருப்பாள். முதுமை அப்பாவை ஆட்கொண்டுவிட்டதை எண்ணியபோது வேதனை ம் அவளை ஒன்றாகத் தாக்கியது. லை முடித்துவிட்டு அடுக்களையைவிட்டு வெளியே மகன் அபிமன்யுவின் குரல் கேட்டு விரைந்து வந்தாள். டி தேடும் கன்றுக்குட்டி போல் ஓடிவந்து கட்டிக் ன் அவளது மகன். அவனை வாரி அணைத்து, தலை தமிட்டாள். தாயின் கன்னத்தோடு தனது கன்னத்தை விளையாடினான். போலியாய் தூங்குவது போல டெந்த மகனின் பாசாங்கை ரசித்த அவளது உலகமே தான். மாதுளா இந்த உலகில் ஜீவிப்பதே அவனுக் இத்தனை துயர்களுக்கும் - இன்னல்களுக்கும் மத்தியில் ழலைக் குரல் ஒன்றுதான் அவளது ஆறுதல். அவளது

Page 46
வெளித்துணைக்கு தந்தை இருப்பது போல மனத்துணைக்கு மைந்தன். சுட்டித்தனங்கள் அதிகம் நிறைந்த அவன் அப்படியே சுதாகரின் சாயல்தான்.
பெயரை நினைத்தபோது ஒருவித எரிச்சல் தோன்றியது. அவன் தந்த வலி என்ன சாதாரணமானதா? மீண்டும் தலைதூக்கிய நினைவுச் சாத்தானை அடியோடு விரட்டிவிட்டு அவசர அவசரமாய் தன் அலுவல்களை முடித்தபடி மகனின் தேவைகளையும் கவனித்து பாடசா லைக்கு ஆயத்தப்படுத்தினாள். அவனுக்கான உணவு, நீர் என்பவற்றைப் பத்திரமாக எடுத்து வைத்தவள் தந்தைக்குத் தேவையானவற்றையும் ஒழுங்குசெய்தாள். "அப்பா... நான் வெளிக்கிடுறன். அபியை பள்ளிக்கூடத்தில விட்டுட்டு வந்ததும் சாப்பிடுங்கோ. மறக்காமல் குளிசை போடுங்கோ'' என்றபடி படலையைத் திறந்து வெளியே நடந்தாள்.
பாடசாலை மாணவர்களுக்கான உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனத்தின் சாரதியாகப் பணிபுயும் அவன், கடந்த ஐந்து வருடங்களாக இவ்வரசசார்பற்ற நிறுவனத்தில் தான் தொழில்புரிந்து வருகின்றான். அன்றைய தினம் முல்லைத்தீவின் நந்திக்கடலோரத்தைத் தழுவியபடியுள்ள சிறிய கிராமத்திலுள்ள பாட சாலை ஒன்றிற்கே உணவுப் பொருட்கள் கொண்டு செல்லவேண்டியிருக்கும் என எண்ணியபடி அலுவலகத்தினுள் நுழைந்தான். தனது கையொப் பத்தைப் பதிவு செய்துவிட்டு சக ஊழியர்களுடன் காலை வணக்கத்தைப் பகிர்ந்து கொண்டவன், மேலதிகாரியின் அனுமதியுடன் பொருட்களை ஏற்றுவதற்கான சிட்டையை எடுத்துக்கொண்டு களஞ்சிய அறையினுள் நுழைந்தான். நண்பர்கள் வரவேற்பாய் புன்னகைத்தனர். எல்லாவற்றை யும் தாண்டி மனதில் ஒருவித படபடப்பு இருப்பதை உணர்ந்து கொண்டான். மூளையின் அறிவுறுத்தலை உள்ளம் அசட்டை செய்தது. என்ன தான் நடக்கப்போகிறது பார்க்கலாம் என நினைத்த படியே வேலையில் கவனம் செலுத்தினான்.
அந்தச் சிறியரக வாகனம் வீதியில் வழுக்கிய படி சென்றது. கடற்காற்று மெல்லத் தழுவியது அவனை. தாயின் ஸ்பரிசம் போல குழல் கலைத்த தென்றலை மெளனமாய் ரசித்தான். உள்ளத்தின் ஆழத்தில் புதைந்து போன சில நினைவுகள் மெல்ல எட்டிப்பார்க்கத் துடித்தன. வேண்டாம் என எண்ணியபடி உதறிவிட்டுக்கொண்டான். வாகனம் பாடசாலையை அண்மித்த போது, இடைவேளை நேரமென்பதால் பட்டாம் பூச்சிகளாய் பறந்து திரிந்த சிறார்களைக் கண்ட தும் எல்லாவற்றையும் மறந்து குதூகலமானான். தரம் ஐந்து வரையிலு மே மாணவர்களைக் கொண்ட ஆரம்பப் பாடசாலை அது. தரம் ஐந்து மாணவர்களும் சில ஆசிரியர்களுமே பொதி களை இறக்குவதற்கு ஆயத்தமாக நின்றனர். சிறிய பொதிகள் என்பதால் சிறிது நேரத்திலேயே

வேலை முடிந்துவிட கை கழுவுவதற்காகக் கிணற்றடிக்குச் சென்றான். அப்போதுதான் அவன் என்றுமே எண்ணியிராத தருணமொன்று அவனை ஆக்கிரமித்தது.
குதூகலமான விளையாட்டில் பின்புறம் பாராமல் ஓடிவந்த ஒரு சிறுவன் அவன் காலுக் கருகில் வந்ததும் எதிர்பாராமல் தடுக்கி விழுந் தான். ''அட நல்லா அடிபட்டிட்டுது போல'' எனக் கூறியபடி, அந்தச் சிறுவனை மெல்லத் தூக்கியபோதுதான் மின்னலாய் ஒரு பொறி
அவன் மூளையில் சட்டென்று வந்துபோனது. அந்தச் சிறுவனின் முகம் அவனுக்கு மிக மிக பரிச்சய மானது போலத் தோன்றிற்று. ஆனால், எங்கே? எப்போது ? என்பதுதான் புரியவில்லை. மீண்டும் மீண்டும் நினைவிற்கு கொண்டுவர முயற்சித்து தோற்றுப் போனவன், வலியில் முகம் சுழித்த பாலகனைத் தேற்றத் தொடங்கினான். நண்பர்கள் குழாம் சூழ்ந்து கொள்ள மீண்டும் குதூகலமான அச்சிறுவன் கைகளை விலக்கிக்கொண்டு சிட்டாகப் பறந்து சென்றுவிட்டான்.
தனது வேலையை முடித்துவிட்டு அலுவல கம் வந்துவிட்ட போதிலும் அவனது நினைவுகள் முழுவதையும் அந்தச் சிறுவனே ஆக்கிரமித் திருந்தான். கொழு கொழுவென்ற உடலும், குண்டு குண்டான கன்னமும், துறுதுறுத்த விழிகளும், பூவிதழாய் விரிந்திருந்த உதடுகளும் அடுக்கிவைத்த பச்சரிசி போன்ற பல்வரிசையும், படியவாரிய தலைமுடியும் ஓரிடத்திலும் ஓயாத அவனது சுறுசுறுப்பும் அப்பப்பா.... சட்டென மனதில் ஒட்டிக்கொண்ட சைனா பொம்மை போன்ற அவனது உருவம் மனதை விட்டு அகல மறுத்தது. அவனை அள்ளி அணைத்து கன்னங் களில் தன் இதழ் பதித்திருக்க வேண்டும் என எண்ணியவன் என்றுமே ஏற்படாத இவ்வுணர் வினால் சற்றுத் தடுமாறினான். அவன் குழந்தை களிடம் அலாதிப் பிரியம் கொண்டவன்தான். ஆனாலும் இந்தச் சிறுவன் தன்னை அதிகமாக ஆக்கிர மிப்பதை உணர்ந்துகொண்டான். அவனை மீண்டும் பார்க்கவேண்டும் போல மனது ஆர்ப்பரித்தது. அவனது தங்கையின் இரண்டு குழந்தைகளுக்கும் அவனென்றால் போதும். குழந்தைகளோடு குழந்தையாக மாறி விளையாடுவது அவனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஆனாலும் அவன் பள்ளியில் கண்ட சிறுவன் தங்கையின் பிள்ளை களை விட ஒருபடி அதிகமாகவே அவனை ஆக்கிரமித்திருந்ததை உணர்ந்தார்.
அச்சிறுவனைப் பற்றி எதுவுமே கேட்காமல் விட்டு விட்டோமே என வருந்தியவன், 'அடுத்த தடவை செல்லும்போது கட்டாயம் விசாரிக்க வேண்டும் ) என நினைத்து கொண்டான். நாட்கள் நகர்ந்தன. 2 அடுத்த மாதம் அவன் பொருட்கள் கொண்டுசெல்வ 2 தற்கான நாளும் வந்தது. பல நாட்கள் எதிர்பார்த்த ஒன்று கிடைத்துவிட்ட ஒரு குழந்தையின் உற்சாகம் சு
ஒளிஅரசி 45

Page 47
தை கோபிகை, தருமபுரம்.
அவனைத் தொற்றிக்கொண்டது. தான் காணப் போகும் நிகழ்வு தன்னை நிலைகுலைய வைக்கப் போவதை அறியாமல் புறப்பட்டுச் சென்றான்.
அவன் அங்கு சென்றபோது நேரம் நண்ப கலைத் தொட்டுக் கொண்டிருந்தது. வாகனம் பிரதான வீதியை அண்மித்தவேளை எதிரே வந்த பாரவூர்தி பாடசாலைக்குள்ளிருந்து வந்த சிறுவனை யும் முதியவரையும் அடித்துவிட்டு விரைந்து செல்ல முற்பட்டது. அங்கு கூடி நின்ற மக்கள் ஊர்தியை மறித்து சாரதியைத் தாக்க முற்பட அதனை விலக்கியபடி அடிபட்டுக்கிடந்தவர்க ளைத் தூக்கச் சென்றபோது அதிர்ந்துபோனான்.
அவன் பார்க்கத் துடித்த அதே சைனா பொம் மைச் சிறுவன், கடந்த ஒரு மாதமாக அவனது நெஞ்சுக் கூட்டுக்குள் வரி வடிவமாய் பதிந்து விட்ட சிறுவன், இரத்தம் சொட்டக் கிடந்த அச்சிறுவ னைக் கண்டதும் ஒருகணம் தடுமாறிப் போனான். அவ்வாறு அவன் தடுமாறியது ஒரு நொடிதான். மறுநொடி இருவரையும் தூக்கித் தனது வாகனத் தில் ஏற்றிக்கொண்டு சிட்டாகப் பறந்தான். கடவுளே, இவனுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது. என மனம் ஓலமிட்டு அழுதது. கண்களை மறைத்த கண்ணீரை சிரமப்பட்டு அடக்கியபடி
வைத்தியசாலையை அடைந்தான்.
வைத்தியரும் தாதியரும் பரபரப்பாகச் செயற் பட்டனர். உடனடியாக அச்சிறுவனுக்கு குருதி ஏற்ற வேண்டும் என்றனர். தனது குருதி வகையும் அவனது குருதி வகையும் ஒன்றென அறிந்தவன் ஒருகணம் கூடத் தாமதிக்காது தானே குருதி வழங்கினான்.
ஓரிரண்டு மணித்தியாலம் கடந்த பின்னர் அப்... அப்பா... என விம்மியபடி ஓடிவந்த மாதுளா உணர்வற்றுக்கிடந்த மகளைக் கண்டதும் அடி யற்ற மரம்போல அப்படியே சாய்ந்தாள். உடனடி யாகத் தாதியரால் முதலுதவி அளிக்கப்பட்ட சில நிமிடங்களில் கண்விழித்த அவள் மகன், தந்தை இருவரையும் எண்ணிக் கலங்கியபடி இருந்தாளே தவிர வேறெதையும் அறியவில்லை.
இரத்தம் கொடுத்துக்கொண்டிருக்கும்போது மெல்லத் திரும்பியவன் கதறி அழுத பெண்ணைக் கண்டுவிட்டான். அவனது உதடுகள் அவனையும் அறியாது, "மாதுளா...'' என உச்சரித்தது. அன்று உப்புக்காற்றோடு உரசி வந்த நினைவுகள் இன்று மீண்டும் உயிர்பெற்றன.
யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்த அவன், பணி ஒன்றின் நிமித்தம் வன்னியின் முல்லைத் தீவுக்கு வந்தான். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழல் அவனை அங்கேயே நிரந்தரமாய் தங்கவைத் தது. அவ்வேளைதான் அவன் மாதுளாவைச் சந்தித் தான். பெண்ணுக்கே உரிய அனைத்து குணங்களி |லும் மிகுந்து விளங்கிய அவள், அவன் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டாள். பல * நாட்கள் அவளுக்காய் அலைந்து, மனதில் இடம்பிடித்தான். அவளது காந்தக் கண்களைக்
ஒளிஅரசி 46

காலத்தை மறந்து பார்த்துக்கொண்டிருப்பான். கடைசி நாட்களில் நடந்த கொடிய யுத்தம் இருவரையும் எந்த அடையாளமும் இன்றி இணைத்துவைத்தது. மேற்கொண்டு சிந்திக்க முடியாதபடி அவன் செய்து கொண்டிருந்த பணி நிறைவடைய மெல்ல எழுந்துகொண்டான்.
மகனின் அருகில் இருந்து அழுது கொண்டி ருந்த மாதுளா, தன் மகனின் உயிர்காத்தவரைப் பார்க்கவேண்டும் என எண்ணி நிமிர்ந்தபோது, அருகில் நின்ற சுதாகரைக் கண்டதும் ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்து போனாள். ''சுதாகர்'' அவளது உதடுகள் தன்னிச்சையாய் உச்சரித்தன. கோபமும், துக்கமும் அவளை ஆட்கொண்ட போதும், தன் மகனைக் காத்தவர் என எண்ணிய போது ஏற்பட்ட நன்றி உணர்ச்சி அவளைப் பேசா மடந்தையாக்கியது. மெளனமாய் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தாள். அவன் கரங்களைப் பற்றியபடி 'ஓ' வெனக் கதறி அழவேண்டும் போலிருந்த உணர்வை சிரமப்பட்டு அடக்கினாள். கல்லாகி நின்ற அவனது உருவம் ஓரப்பார்வையில் தெரிந்தது.
தான் நேசித்த மாதுளாவின் விழிகளில் தீட் சண்யம் மங்கிப்போனதைக்கண்டசுதாகரின் மனமோ தீயாய் எரிந்தது. வற்றி வறண்டுபோன அவ்விழி களில் அவன் தரிசித்தவை எதுவுமே இல்லை. அதை யெல்லாம் பறித்தது தானே என எண்ணியபோது மனம் தீயாய் சுட்டது. துடித்துப்போயிருக்கும் அவளுக்கு ஆறுதல் கூறமுடியாத தனது நிலையை எண்ணியபடி வெளியே வந்தான்.
கடைசி யுத்தத்தில் தாய், தந்தை, சகோதரி என தனது குடும்பம் முழுவதையுமே பறிகொடுத்த மாதுளா, தன் ஒரே துணையாய் பற்றிக்கொண்டி ருந்தது சுதாகரைத்தான். நாட்டின் கடைசி யுத்தம் இணைத்துவைத்த அவர்களை அதன் பின்னான சமாதானம் பிரித்துவைத்தது. சுதாகர் புனர்வாழ் விற்காக தடுப்புமுகாம் செல்ல, அவள் சித்தப்பா குடும்பத்தினருடன் அகதிகள் முகாமிற்குச் சென்றாள். அகதி வாழ்வின் அல்லல்களுடன் சுதாகரைப் பற்றிய நினைவுகள் அவளைப் பெரும் துன்பத்திற்கு ஆளாக்கின.
இரண்டு மாதங்கள் அவனுடன் எதுவித தொடர்புமின்றி இருந்தவள் ஆவலும் ஆசையு மாய் அவனைப் பார்க்கச் சென்றபோது அவன் சொன்ன வார்த்தைகள் அவளை ஒருகணம் சுட் டெரித்தன. அவனைப் பார்க்கவேண்டும் என்ற தவிப்பில் தனது உடல் உபாதையைப் பொருட் படுத்தாது அலைந்த அலைச்சலை எண்ணிய போது கண்ணைக் கரித்தது. சிரமப்பட்டு அடக்கிக்கொண்டாள்.
"மாதுளா, இனி என்னைப் பார்க்கவேண்டாம். இனியாவது அம்மா சொல்லுறதைக் கேட்டு நடப்பம் எண்டு நினைக்கிறன். எல்லாத்தையுமே ஒரு கனவா நினைச்சு நீயும் மறந்திடு. நானும் மறந்திடு றன்.'' அவன் சொல்லி முடித்ததும் தீர்க்கமான ஒரு

Page 48
பார்வை மட்டும் பார்த்துவிட்டு எழுந்து வந்து விட்டாள். "மாதுளா... அது... அம்மா...'' அவனது வார்த்தைகளைக் கேட்பதற்கு அவள் அங்கே நிற்கவில்லை. அதன் பின்னான வாழ்வில் அவள் பல துயரங்களையும் அவமானங்களையும் சந்தித்து விட்டபோதும் சுதாகரைச் சந்திக்க வேண்டும் என்று மட்டும் எண்ணியதே இல்லை.
சுதாகரின் குழந்தையை அவள் கருவிலேயே சுமந்தபோது சித்தப்பா குடும்பம் அதனை அவமா னச் சின்னமாய் கருதி அருவருப்பாய் பார்த்த போதும் - உறவுகள் எல்லோரும் அதனைக் கருவி லேயே அழித்துவிடும்படி கூறியபோதும் மாதுளா மட்டும் தன் முடிவில் உறுதியாக இருந்தாள். எந்த நிலை வந்தாலும் அவளது குழந்தை இந்த உலகில் ஜனிப்பதை விட்டுவிடக் கூடாது என எண்ணினாள். அதனாலேயே பதிவை மாற்றி வேறு முகாமிற்குச் சென்றாள். அங்கு யுத்தத்தில் உறவு களைத் தொலைத்துவிட்டு அவளைப்போலவே அநாதையாக இருந்த சாம்பசிவத்தாரை தனது தந்தையாகத் தத்தெடுத்துக் கொண்டாள்.
இத்தனை வருடங்களின் பின் சுதாகரின் சந்திப்பும், தன் மகன் என்பது தெரியாமலேயே அவன் இரத்தம் கொடுத்துக் காப்பாற்றியதும் அவளைத் திகைக்க வைத்தன. இதைத்தான் விதி என்பதா? சிந்தனை வட்டத்தில் சுழன்றாள் மாதுளர்.
அபிமன்யுவும், தாத்தாவும் ஒருமாதமாக வைத் தியசாலையிலேயே இருந்தனர். சுதாகர் அடிக்கடி வைத்தியசாலைக்கு வருவதுண்டு. ஆனாலும், மாதுளா மட்டும் அவனது கண்ணில் படுவதே இல்லை. அவளிடம் கேட்கவேண்டும் என எண்ணிய விடயம் அவனது மனதைப் பாறாங்கல்லாய் அழுத்திக் கொண்டிருந்தது. அம்மா மட்டும் அப்படிச் சொல்லி இருக்காவிட்டால். ஏழு வருடங்களுக்கு முன் அவனைப் பார்ப்பதற்காக புனர்வாழ்வு முகாமிற்கு வந்த அம்மா சொன்ன வார்த்தைகள் மீண்டும் ஒருமுறை மனதிலே வந்துபோயின.
''சுதா, அப்பா இல்லாமல் உன்னையும் தங்கச்சி யையும் வளர்க்க எவ்வளவு கஷ்ரப்பட்டனான் எண்டு உனக்குத் தெரியும்தானே. நீ வளர்ந்த பிறகும் குடும்பத்துக்காக ஒண்டுமே செய்யேல்ல. உன்ர தங்கச்சிக்குப் பாத்திருக்கிறது பெரிய இடத்து சம்பந்தம். நீ இப்படி ஒரு கலியாணம் செய்தது தெரிஞ்சா அவையள் நிச்சயமா சம்மதிக்க மாட்டினம். அதோட என்னாலையும் இதை ஏற்றுக் கொள்ள ஏலாது. கலியாணம் எண்டு ஒண்டும் நடக் கேல்லத்தானே. கொஞ்சநாள் அவளோட இருந்தி ருக்கிறாய். அதுவும் ஒரு பாதுகாப்புக்குத்தானே. பேசாமால் அவளை மறந்திடு. இல்லாட்டி இந்த அம்மாவையும் தங்கச்சியையும் மறந்திடு. கண்ணீரோடு அம்மா கூறிய வார்த்தைகள் அவனது நல்ல மனதைக் கரைத்துவிட்டன. அவனது குடும்ப நலனுக்காக மாதுளா எனும் மங்கையை மனதி லிருந்து தூக்கிவிட்டான். ஆனால், விலக்கமுடி யாத பந்தமொன்று அவளுள் உருவாகி இருப்பது அவனுக்குத் தெரியவே தெரியாது. சிந்தனைகள் அவனது உள்ளக் கனத்தை இன்னும் அதிகரித்தன.

இன்று எப்படியும் மாதுளாவிடம் பேசியே தீருவது என எண்ணியபடி விரைந்தான். அலுவல கத்தில் விடுப்பு பெற்றுக்கொண்டு மாதுளாவின் முன்பள்ளியை நோக்கிச்சென்ற அவனது வாகனம் வேகத்தைக் குறைத்துக்கொண்டது.
மணியைப் பார்த்தான். பத்து முப்பது என்றது கடிகார முள். அவளது வருகைக்காகக் காத்திருந் தான். நிமிடங்கள் யுகங்களாகின. கடிகார முள் அசைய மறுப்பது போலத் தோன்றியது அவனுக்கு. இதே போன்ற பல காத்திருப்புகளை இதே நந்திக்கடல் ஓரத்தில் சில ஆண்டுகளுக்கு முன் ஆவலும் ஆசையுமாய் எதிர்நோக்கியிருக்கிறான். அலைகளின் தாலாட்டில் அவன் மெய் மறந்தி " ருக்க மெல்லிய சலங்கையின் இனிய நாதத்தை முன்னறிவிப்பாய் தந்தபடி அழகு நடையில் புன்னகை துலங்க அவள் வரும்போது ஏற்படும் பேரின்பம்.... அப்பப்பா.... இப்போதும் உடல் சிலிர்த்தது அவனுக்கு.
கடிகார முள் மணி பதினொன்றைக் காட்டிய போது, வெளியே வந்தாள் மாதுளா. அவள் அருகில் வந்து, ''மாதுளா, ஒரு நிமிஷம் கதைக்கவேணும்'' என்றபடி தொடர்ந்தான். ''அபிமன்யு .... அபி ... என்னோட குழந்தை” வார்த்தைகள் வர மறுத்தன அவனுக்கு. அவளால் பேச முடியவில்லை. தலையை மட்டும் ஆட்டினாள்.
"ஏன் என்னிடம் சொல்லவில்லை?'' குறை கூறும் தோரணை அவனது வார்த்தைகளில்.
''எப்படி? எப்படி சொல்ல முடியும்? தன் தாய்மையைக் கூற பெண்களுக்கு மகிழ்ச்சியான சந்தர்ப்பங்கள்தான் கிடைக்கும். ஆனா எனக்கு கம்பிக்கூட்டுக்குள்ள உங்களைப் பார்த்து சொல்லவேண்டிய நிர்ப்பந்தம்தான் ஏற்பட்டது. அப்பிடிக்கூட சொல்லமுடியாதபடி நீங்கள் சொன்ன வார்த்தை.'' விம்மி வந்த அழுகையை அடக்க பெரும் சிரமப்பட்டாள்.
சட்டென்று தன்னைத் திடப்படுத்திக்கொண் 2 டவள், 'நானோ, அபியோ உங்கட வாழ்க்கைக்கு இடைஞ்சலா வரமாட்டம். அபியை வளர்த்து) ஆளாக்க என்னால முடியும். அவனுக்குத் தாயா, தந்தையா எல்லாமாகவும் நானே இருப்பன்.
ஒளிஅரசி 47

Page 49
0 சிறுகதை - கோபிகை, தருமபுரம்.
அவனுக்கு உயிர்கொடுத்த ஒரே காரணத் தாலதான் நான் இந்தளவுக்கு நிண்டு கதைக் கிறன். தயவு செய்து போங்கோ'' என்றபடி
வீட்டிற்குள் விரைந்து சென்றுவிட்டாள்.
மதிய, இரவு உணவுகளுடன் மாதுளா வைத்தி யாலைக்கு வந்தபோது நேரம் ஒருமணியைத் தாண்டிவிட்டது. அப்பாவிற்கு உணவு கொடுத்து ஏனைய தேவைகளையும் கவனித்து விட்டு அபிமன்யுவின் பகுதிக்கு வந்தபோது இன்பமான அதிர்ச்சி ஒன்று அவளை நிலைகுலைய வைத்தது. அபிமன்யுவை மடியில் வைத்தபடி, "அப்பா'', ''அப்பா” என மீண்டும் மீண்டும் சொல்லவைத்துக் கொண்டிருந்தான் சுதாகர். பொங்கிவந்த ஆத்தி ரத்தை அடக்கிக்கொண்டாள். "அபி, என்ன இது. இறங்கு சாப்பிடலாம்” என்றாள். சுதாகரின் மடியி லிருந்து இறங்கிய குழந்தை அவளது அருகில் வந்து, ''அம்மா, எனக்கு அப்பாவே இல்லைன்னு சொன்னீங்க. இதோ அப்பா வந்திட்டார் பாத் தீங்களா?'' என்றான் மழலையில்.
குழந்தையைக் கையில் பற்றியபடி வெளியே வந்த மாதுளா, ''அபி, உனக்கு அம்மா மட்டுந் தான். அப்பா வேணுமெண்டு நீ நினைச்சா அம்மா இல்லாமல் போயிடுவா'' என்றாள் கண்களில் நிறைந்த நீருடன். ஒன்றுமே புரியாத குழந்தை இருவரையும் பார்த்து விழித்தது. மாதுளாவின் வார்த்தை கள் சுதாகருக்குப் புரிந்தது. அவனோடான உறவை - வாழ்வை அவள் விரும்பவில்லை. அவளது வார்த்தைகள் அவனுக்கு வலித்தன. சில வருடங்களுக்கு முன் அவள் அனுபவித்த வலி இன்று அவனுக்குப் புரிந்தது. தான் செய்துவிட்ட மடத்தனத்தின் விளைவு இன்று தன்னையே சுடுவதை உணர்ந்து கொண்டான். குனிந்து அபிமன்யுவின் கன்னங் களை முத்தமிட்டவன் எதுவுமே பேசாது வெளியே சென்றுவிட்டான்.
மணித்துளிகள் விரைந்து நாட்களாய் மாறின. அபிமன்யுவும், தாத்தாவும் வைத்தியசாலையில் இருந்து வீடுவந்து விட்டனர். மாதுளாவிடம் ஒருவகை மெளனம் குடி கொண்டு விட்டது. சுதாகரன் பற்றிய பேச்சை எடுத்தாலே அவ்விடம் விட்டு நகர்ந்துவிடுவாள். அன்று அவளிடம் சில விடயங்கள் பேசவேண்டும் என எண்ணிய தந்தை சமையலறைக்குள் நுழைந்து அவளுக்கு அருகில் அமர்ந்துகொண்டார். ''மாதுளா, நான் எப்பவுமே உன்னோட இருக்கப்போறதில்லை. எனக்கு நல்லா வயசு போட்டுது. இந்த முறை எப்படியோ தப்பிவிட்டன். நெடுக இப்பிடி நடக்காது. மரணத்தை குறிச்சு யாரும் எதுவும் சொல்லமுடியாது. உனக்காக இல்லாட்டாலும் அபிக்காக நீ சேர்ந்து வாழறதுதான் சரி'' எனக்
கூறியபோது, விழிகளில் கேள்வியோடு மெல்ல 5 நிமிர்ந்தவளுக்கு, ''இல்லையம்மா சுதாகர் இன்னொரு கலியாணம் முடிக்கயில்ல. உன்னை விலக்கினபோதும் வேற வாழ்க்கையை ஏற்க
அவனால முடியேல்ல. அதுதான் உண்மை. 'S நல்லா யோசிச்சுப் பாரம்மா. நீ எடுக்கிற முடிவு
ஒளிஅரசி 48)

நல்லதா இருக்கவேணும்.'' சொல்லிவிட்டு எழுந்து வெளியே சென்று விட்டார். சுதாகர் அப்பாவிடம் பேசியிருப்பது அவளுக்குப் புரிந்தது.
அன்று காலையில் தகப்பனார் சொன்ன விடயங்களால் மிகவும் குழம்பிப்போனாள் மாதுளா. மனம் ஒருநிலையில் இல்லாது தவித்தது. என்ன செய்வதென யோசித்துக்கொண்டிருந்த போதுதான் அந்தச் செய்தி அவள் செவிகளுக்கு இடியென வந்தது. விபத் தொன்றில் சிக்கிய சுதாகர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்திய சாலையில் இருப்பதாக பாடசாலையிலிருந்து தகவல் வந்தது.
கதறி அழுது கொண்டிருந்த மாதுளாவை தகப்பனார்தான் தேற்றினார். மாதுளாவையும் அபிமன்யுவையும் அழைத்துக்கொண்டு வைத்திய சாலைக்குப் பயணமானார். அவசரசிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்ததனால் உடனே பார்க்க முடியவில்லை. சுதாகருக்கான சிகிச்சை கள் முடிந்து விட்டதாக தகவல் வந்ததுடன் அவனது உயிருக்கு எந்த ஆபத்துமில்லை என அறிந்தபோது அவளுக்குப் பெரும் நிம்மதியாக இருந்தது. உறவினர்கள் உள்ளே சென்று பார்க்க லாம் என்று தாதி சொல்லிச்செல்ல பதற்றத் துடனும் கவலையுடனும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவினுள் நுழைந்தாள்.
உருவம் தெரியாதபடி கட்டுகளால் நிரம்பியி ருந்த சுதாகரைக் கண்டதும் மனதில் இருந்த கோபமெல்லாம் தொலைந்துபோனது அவளுக்கு. நெஞ்சு நிறைந்த வேதனையோடும், அதனை அவனிடம் காட்டமுடியாமலும் அவள் அவஸ் தைப்படுவது சுதாகருக்குப் புரிந்தது. அருகில் நின்ற அவளுக்கு விழிகளால் ஆறுதல் சொன் னான். மாதம் ஒன்று கடந்துவிட்டது. இந்த ஒரு மாதமும் வைத்தியசாலையிலேயே இருந்து சுதா கரை கவனித்துக் கொண்டாள் மாதுளா. சுதாகர் இப்போது நன்றாகக் குணமடைந்துவிட்டான். மறுநாள் வீடு செல்லலாம் என வைத்தியர் அனுமதி தந்துவிட்டார்.
வைத்தியசாலையிலிருந்து புறப்படுவதற்கான அனைத்து அலுவல்களும் முடிந்து விட்டன. சுதாகர் வேலைசெய்யும் நிறுவனத்தில் இருந்து வாகனம் அனுப்பப்பட்டிருந்தது. காலையிலேயே அப்பச்சியுடன் வந்துவிட்டான் அபிமன்யு. ''எங்க போகணும்?'' சாரதியாய் வந்த சுதாகரின் நண்பன் கேட்க, சுதாகர் பதிலுக்காய் மாதுளாவைப் பார்த்தான்.
''அப்பா, எங்கட வீட்டதான் போறது, அம்மா சொன்னவா. இனிமே நீங்கள் எப்பவுமே எங்க ளோடதான் இருக்கிறது. அம்மா சொன்னவா' மழலை மொழியில் பதில் தந்த அபிமன்யுவை தனது உடல் வலியையும் மறந்து தலைக்கு மேலே தூக்கி தட்டாமாலை சுற்றிவிட்டு சட் டெனத் திரும்பி மாதுளாவைப் பார்த்தான்.
மெல்ல நிமிர்ந்த அவளது வதனத்தில் துலங் கிய புன்னகையும் அவள் விழிகளுக்குள் உதித்து விட்ட வெட்கச் சிரிப்பும் அவனுக்கு விடைதந்தன. ஆனந்தப் பெருமூச்சொன்றை வெளிவிட்டான். -

Page 50
சினிமா
11 !!!11 11, 11;
| 111
aேnvகல்ல. பட்டதால் .
எவ்வளவு காலத்துக்குத் தான் தனுஷ் அன அரைக்கபோகிறாரோ தெரியவில்லை. நிறைய நடித்த முன்னய படங்களை ஞாபகப்படுத்து படத்தை சுவாரசியமாக நகர்த்தியிருப்பதற்காக ! சபாஸ் போடலாம்.
தினமும் தண்டச்சோறு என்று திட்டும் கோபக். காட்டும் அம்மா, மாதம் ஒரு லட்சம் சம்பளம் பக்கத்து வீட்டில் வசிக்கும் அழகான பெண் இவர் தான் படித்த இன்ஜினியரிங் சம்பந்தமான வே
போவேன் என்று நான்கு வருடம் அடம்பிடிக்கு பட்டதாரி ரகுவரன் (தனுஷ்) தன் துறையில் எ எப்படி சாதிக்கிறார் என்பதே வி.ஐ.பி...
தனுஷ் இதுவரை நடித்த 25 படங்களில் இதுே குறைந்தது பத்துக்கும் மேல் நடித்திருப்பார். இ தனுஷ் அடுத்த வீட்டுப் பையனாக அதிகமாகவே தோல்விகளுக்குப் பிறகு தமிழில் இந்தப் படம் நி வியாபார ரீதியில் கைகொடுக்கும்.
- அமலா பால் அதிக அழகாகத் தெரிகிறார். அந்த உருட்டி பேசும் அழகில் அதிகம் கவர்கிறார். 4 பெரிய வேலை இல்லை. இடைவேளைக்கு பிறகு படத்தில் கொஞ்சம் கிச்சு கிச்சு மூட்ட விவேக் :
அனிருத்தின் இசையில் பாடல்கள் படத்திற்கு 6

ஜானகி குரலில் 'அம்மா அம்மா'' பாடல் கேட்கும் அனைவரையும் அதிகம் முனுமுனுக்க வைக்கும் பாடல்
தனுஷ் மற்றும் வீட்டில் நடப்பதை வைத்தே முதல் பாதியை தேற்றியிருப்பது புத்திசாலித்தனமான திரைக் கதை. அப்பாவுடன் சண்டை போடும்போது "எனக்கு மட் டும் வில்லன் பேர் ரகுவ ரன், தம்பிக்கு கதாநாயகன் பேர் கார்த்திக்” என்று தனுஷ் ஆதங்கப்படும் இடங்களில் வசனங்கள் நன்று. ஆனால், தன்னை ஆங்கிலப் பள்ளிக் கூடத்தில் சேர்க்காததால் தான் வேலை கிடைக்க வில்லை என்று கூறும் தனு ஷிற்கு 50,000 ரூபாய்க்கு 'கால் சென்டரில் வேலை கிடைத்தது எப்படியோ?  ைட ர க் ட ரு க் கு த் த ா ன் வெளிச்சம்.
இரண்டாம் பாதியில் முன்னேறத் துடிக்கும் கதாநாயகனிற்கு முட்டுக் கட்டை போடும் வில்லன்
வெறுமனே அடிவாங்குவ ஒரத்த மாவையே
தோடு சரி. கதாநாயகன் - காட்சிகள் இவர்
வில்லன் ஆட்டம் நன்றாக கிறது. ஆயினும்
இருந்திருந்தால் படம் இன் ரைடக்ரருக்கு ஒரு
னும் சூடுபிடித்திருக்கும்.
படத்தின் நீளம், மற்றும் கார அப்பா, பாசம்
தொடர்ச்சி, பார்க்க ஆள் இருந் வாங்கும் தம்பி,
தாரா இல்லை யா என்று "களுக்கு மத்தியில்
நினைக்கும் அளவிற்கு லைக்கு மட்டுமே
தாடி, தாடியில்லாமல் என்று ம் வேலையில்லா
மாறி மாறி வரும் தனுஷின் திரிகளை வென்று
தோற்றம், வேலை வெட்டி
யில்லாத கதாநாயகன் அம்மா பான்ற கதைகளில்
பாசம், தடைகளை தாண்டி இருப்பினும் இந்த
வெற்றி பெறும் கதாநாயகன்
என வழக்கமாக எல்லா ப கவர்கிறார். சில
படங்களிலும் பார்த்து சலித்த ச்சயம் தனுஷிற்கு
காட்சிகள் என்று குறைகள்
இருந்தாலும் பாசம், அதிரடி, - பெரிய கண்களை
கதாநாயகனுக்கான முக்கியத் சுரபிக்கு படத்தில்
துவம் என்பதை சரியான சீரியசாகப் போகும்
அளவில் கலந்து கொடுத்திருப் உதவியிருக்கிறார்.
பது வணிக ரீதியாக வி.ஐ.பி பெரிய பலம். எஸ்.
"ஐ வெற்றி பெற செய்யும்..
heaம்
ஒளிஅரசி 49

Page 51
0 கேள்வி - பதில்
திருமதி விநோதினி கந்தசாமி, பதுளை. கேள்வி : 1982 இல் வெளிவந்த காந்தி படத்தில் மீண்டும் அண்மையில் பார்த்தோம். அதில் காந்தி உட்பட எல்லா நடிகர்களும் வெளிநாட்டவர்கள். ஆனால், கஸ்தூரிபாயாக நடித்தவர் மட்டும் ஓர் இந்தியப் பெண். இதற்கு ஏதாவது விஷேட காரணம் உண்டா அம்மு?
பதில் : இதே கேள்வியை அந்தப் படத்தின் டைரக்டரான ரிச்சர்ட் அட்டன்பரோவிடம் அப்போதே கேட்டார். அதற்கு அவர் சொன்ன பதில் 'அசல் இந்தியப் பெண்ணாக நடிக்க இந்தியப் பெண்ணொருவருக்கு மட்டுமே முடியும்'' ரோஹினி ஹட்டன்சி ஓர் அற்புதமான நடிகை, இருமுறை பிலிம் பெயர் விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளை வென்றவர்.
அருணாசலம், டயரபா பெண்டேட். கேள்வி : அம்மு மேடம், இறப்பு எல்
அதிக புள்ளிகளை மட்டும்தான் சாதம்
|ஒளிஅரசி 50
லோருக்கும் பொதுவானது. என்றாலும், அந்த மரணத்தை வெவ்வேறு வார்த்தைகளில் விளங் குவது ஏன்?
பதில் : ஒரு மனிதன் வாழும் காலத்தில் எப்படி இருந்தான் என்பதைப் பொறுத்துத்தான் 5 அவனது மரணம் பேசப்படுகிறது. ஷீரடி சத்தியபாபா, பகவான் சத்தியபாபா போன்ற
மகான்கள் "முக்தி பெற்றார்கள்', 'சமாதியடைந் தொர்கள்' என்று சொல்கிறோம். சாதனை மனிதர்

''அம்முவில்)
கேள்வி பதில்கள்
களுக்கு, 'மரணமடைந்தார்கள்', 'இயற்கை எய்தினார்கள்' என்பார்கள். ஆனால், செத்தப் பிறகு 'தொலைஞ்சுன்டாப்பாவி', ஒழிந்திட்டா நாய்' என்று சொல்லுமளவுக்கு வாழக்கூடாது.
திருமதி கனகராஜ் கௌசல்யா, வவுனியா. கேள்வி : பரீட்சைகளில் அதிக புள்ளிகளைப் பெற்றவர்கள் மட்டும்தான் சாதனையாளர்களா அம்மு?
பதில் : அதில் எனக்கு உடன்பாடு கிடையாது. மூன்று மணித்தியாலங்கள் நடக்கும் ஒரு பரீட்சையை வைத்து ஒரு மாணவனின் திறமையை அளவிட முடியாது. ஆயிரத்துக்கு மேற்பட்ட விஞ்ஞான கண்டுபிடிப்புகளைச் செய்து இந்த உலகத்துக்கு சாபவிமோசனம் எடுத்த விஞ்ஞானி தோமஸ் அல்வா எடிசன் ஆரம்பத்தில் ஒரு பொறியியல் கல்லூரி நுழைவுத் தேர்வில் கோட்டை விட்டார்தான்.
திருமதி ஹனிபா மும்தாஜ், கிண்ணியா. கேள்வி : மன்னர் ஆட்சிக்கும், ஜனநாயக
எப் பெற்றவர்கள் னையாளர்களா?
ஆட்சிக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமை என்ன என்று சொல்ல முடியுமா அக்கா?
பதில் : இரண்டு ஆட்சியிலுமே பாவப்பட்ட ஜென்மங்கள் அப்பாவிப் பொதுமக்கள் என்பது ஒற்றுமை. மன்னர் ஆட்சியில் ஒரு மன்னர்தான் இருப்பார். ஜனநாயக ஆட்சியில் நகர சபை, பிரதேச சபை, மாகாண சபை, நாடாளுமன்றம் வரை பல குறுநில மன்னர்கள் கோலோச்சுவர்கள் இது வேற்றுமை.

Page 52
0 நட்சத்திர ஜோக்ஸ் காளை மாட்டு இர.
ஒருவருடைய மனைவியை அவர் வளர்த்த கா கொன்றுவிட்டது. அந்த மனைவியின் இறுதிச் சடங் நடத்தி வைத்த புரோகிதர் விசித்திரமான ஒரு சம்பவத்
துக்கம் கேட்ட பெண்கள் அந்த விவசாயியை நெ பக்கவாத்தியம் சொல்கிறபோது, ஒரு நிமிடம் கேட்டுவிட்டு தாவண ல அசைத்தார். ஆனால், துக்கம் கேட்க நெருங்கிவந்து ஏதோ சொல்கிறபோது இல்லை அசைத்தார்.
அது தொடர்ந்து கொண்டே இருந்தது. சடங்கெல்லாம் முடிந்த பிறகு புரோகிதர் அந்த வி "பெண்கள் வந்தால், ஆமாம் என்று தலையாட்டினீர்கள். இல்லை என்று தலையாட்டினீர்களே, ஏன்...?! என்
அதற்கு அந்த விவசாயி, பெண்க ளெல்ல மனைவியைப் பற்றி நல்லவிதமாகச் சொன்னார் அழகாய் இருந்தார்கள், அவர்களுக்கு உதவி செய்யும் என்று, அதற்கு ஆமாம் என்று நானும் தலையசைத்
சரி ஆண்கள் வந்து கேட்டால் ''இல்லை'' எ தீர்களே ஏன்...?! ஓ.... அதுவா, அவர்கள் அந்த ' விற்பனைக்குத் தர முடியுமா?'' என்று கேட்டார்க என்று சொன்னேன் என்றார்.

கசியம்
ளை மாடு முட்டி பகின்போது அதை கதைக் கவனித்தார். ருங்கி வந்து ஏதோ -''ஆமாம்'' என்று
வந்த ஆண்கள் ல'' என்று தலை
நட்சத்திர (9 ஜோக்
பனவே, இறுதிச் "வசாயிடம் வந்து, ஆண்கள் வந்தால், சறு கேட்டார்.'
ரம் வந்து என் -கள். ''எவ்வளவு ம் குணம் அதிகம்'' தேன்.
ன்று தலையசைத் “காளை மாட்டை ள். நான் இல்லை
ஒளிஅரசி 51

Page 53
10 சோதிடம் - ஜோதிர் வித்யா ரத்னா V. A. சிவராச
ே
GS
பு:
மேடம் : குடும்பத்தைப் பிரி வேண்டியிருக்கும். தாயாரின் நோய் ! மத்தியில் இருந்த இன்ப உறவு பாதிக் பயமுறுத்தல் அகன்றுவிடும். பட்ட காரியின் சீற்றத்தால் பதவிக்குக் ே போகலாம். பயணம் பற்றிய சுபசெ கொடுக்கவேண்டாம். இனிய எண் உறவினர் பற்றிய தகவல் கிட்டும். வாம்
இடபம் : பொன்னவனாகிய விய தவிக்க நேரிடும். தைரியம், வீரியம் ! வதியான பொருட்களைப் பெற்றத விடயத்தில் தலையிடுவதைக் கைவி கடனில் மிதக்க நேரிடும். குழந்தை கையாண்டு தொழில்வளம் சிறப்பன உருவாகி தொந்தரவுகளைத் தந்து கடன்பட நண்பர்களை நாடுதல். ச
மிதுனம் : கண்டதே காட்சி கொடு பொருட்சேதம் ஏற்படலாம். அவசர | போகலாம். மனைவியின் நோயை. சொத்துப் பங்கிடுதல் சம்பந்தமாக ச மனநாட்டம் ஏற்படும். கால்நடைகள் விருத்தியடையும். ஆவணங்கள் த பொறுத்த நேரத்தில் கைதூக்கிவிடுவ வேண்டாம். உணவுக் கட்டுப்பாட்ட
கடகம் : உதவப்போய் உபத்திரவ விடலாம். சுப காரியங்கள் நடத்த - வெளியூர்ப்பயணம் காலை வாரிவிட யைப் பின்பற்றியதால் பெருமை ! தெய்வங்களின் அருளை வேண்டும் ஏற்படும். அறிமுகம் இல்லாதவர்க புத்தியால் வரவிருந்த ஆபத்து வில பேணுவதால் வேலைப்பளு நீங்கி
சிங்கம் : சுபகாரியம் ஏற்பட்டு கு சிகிச்சை பல தடவைகள் ஏற்படலாம் யைச் செயற்படுத்தமுடியாது. குறுக் முரண்பாடு விலகி சமரசம் நிலா பூனையாக இருப்பர். வரும் துயரம் பொறுமையைக் கடைப்பிடியுங்கள் கிட்டும். தற்காலிக பணி நிரந்தரமா விற்பனை நோக்குடன் வருபவர். கண்டும் காணாமல் போவதால் மு
ஒளிஅரசி 52
கன்னி : ஏழரைச் சனி நடைபெற நொந்த உள்ளத்திற்கு ஆறுதலாகும். ( உருவாகலாம். பிறர் அழைத்தால் ம! / தொழில் காரணமாகக் குடும்பப்பிரி வாய்ச்சம்பிரதாயத்தால் பல காரியா களுக்கு உதவ முன்வருதல். மின் ஒ தவறிய ஆவணங்களை மீளப்பெற்ற உண்டாதல். பழுதடைந்த உணவுப்
6 //

ஆகஸ்ட் மாத இராசிபலன்
து சிலர் பயணம் காரணமாக வனவாசம் செய்ய மனதை வாட்டி எடுக்கும். கருத்து மோதலால் தம்பதியர் கப்படும். தத்துப்புத்திர யோகம் உண்டாகும். எதிரியின் கடனை அடைக்க சொத்தை விற்க முயல்வர். மேலதி டு சூழலாம். விளம்பரத்தை நம்பிச் சிலர் மோசம் ப்தி வந்தடையும். பொறுப்பின்றிப் பிறருக்குக் கடன் எங்கள் எண்ணி மகிழ்வடைவீர்கள். காணாமல்போன குறுதிகளைக் காப்பாற்ற பகீரதப்பிரயத்தனம் எடுப்பீர்கள்.
ழன் 3இல் நிற்பதால் வீணான வழக்குகளில் சிக்குண்டு என்பன அற்றுச் சிலர் நடைப்பிணமாகிவிடுவர். காலா ல் கவலை ஏற்படும். இயன்றவரை சகோதரர்களின் ட்டுவிடுங்கள். பிதாவின் நோயால் குடும்பம் துன்பக் தப்பாக்கியம் கிட்டலாம். புதிய புதிய யுக்திகளைக் டய பாடுபடுவீர்கள். வழக்கத்திற்கு மாறான பணிகள் விடலாம். எதிர்பாராத சுபச்செலவைச் சமாளிக்க த்திரசிகிச்சை மேற்கொள்ளவும் நேரிடலாம்.
ன்டதே கோலமென்று திரிய முற்பட்டால் மானபங்கம், த்தியால் ஆராயாமல் செய்த திருமணப்பந்தம் முறிந்தும் க் குணப்படுத்த மருத்துவச்செலவுகள் அதிகரிக்கும். கோதரர் மத்தியில் மோதல் உருவாகலாம். ஓய்வு பெற நோயால் பாதிப்படையும். மாதாவின் தேகசெளக்கியம் வறிப்போகும் அபாயம் ஏற்படலாம். சகோதரர்கள் பர். இயன்றவரை சகோதரர்களின் விடயத்தில் தலையிட டால் நீரிழிவு நோயின் தாக்கம் குறைவடையும்.
த்தில் சிக்கும் அபாயமுண்டு. நோயால் சிலர் கிழடுதட்டி பணத்தட்டுப்பாடு நீங்க கடன்படும் நிலை ஏற்படும். லாம். சகோதரரின் நோயால் கவலை வாட்டும். நேர்மை கிட்டும். செயல்கள் தடையின்றி நிறைவேற இஷ்ட ங்கள். தொழில் நிமிர்த்தம் அடிக்கடி பிரயாணங்கள் ளின் தொடர்பைத் துண்டித்துவிடுங்கள். சமயோசித கிவிடல். சக ஊழியர்களுடன் சுமுகமான உறவைப் விடும். மேலதிகாரிகளைப் பகைக்கவேண்டாம்.
டும்பத்தில் மகிழ்வு தாண்டவமாடும். சிலருக்கு சத்திர ம். நம்பியிருந்த பணவரவு சறுக்கிவிடலாம். வாக்குறுதி -கீடுகள் வரலாம். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த கருத்து பும். பயணம் பற்றி முடிவெடுப்பதில் மதில்மேல் வெள்ளம் உங்களை அடித்துச்செல்லாமல் இருக்க 1. கௌரவ விருதுகள் பெற பிரமுகர்களின் சிபாரிசு க்கும் செய்தியால் புளங்காகிதம் அடைவீர். மனைக்கு கள் பற்றி எச்சரிக்கையாக இருக்கவும். எதிரியைக் ரண்பாடு எழாதுவிடல்.
மறுக்கொண்டிருக்கும் உங்களுக்கு குரு 11 இல் நிற்பது குடும்பத்தினரைத் திருத்த வெளிக்கிடுகையில் களேபரம் ட்டும் வெளியூர்ப்பயணத்தைத் தொடருங்கள். பயணம் வு ஏற்படும். காதலில் ஏற்பட்டிருந்த சந்தேகம் விலகும். பகளை இலகுவில் நிறைவேற்றல். பாதிக்கப்பட்டவர் ழக்கில் கவனம் எடுத்தமையால் அபாயம் நீங்கியமை. தால் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படல். தத்துப்புத்திர யோகம் பொருட்களால் தேகம் ஒவ்வாமையால் பாதிக்கப்படல்.

Page 54
துலாம் : ஏழரைச் சனி ஜென்மத்துச் சனியாக துன்பம் சனீஸ்வரனுக்குத் துலாம் இருப்பதால் கண்ணிற்கு விடும். 10இல் வியாழன் உள்ளதால் குடும்பப்பிரிவு, எதிர்பாருங்கள். ராகுவின் நிலைப்பாட்டால் சுபச் முடியாது திண்டாட்டம் ஏற்படும். கொண்டாட்டங். ஏற்பட நாடிவரும் சந்தர்ப்பத்தைக் கைவிட வே துணைவரை அடையமுடியாது தவித்தல். இடமாற்றம் சந்தோஷமடைதல். இயந்திரங்களுடன் பழகுபவர்க
விருச்சிகம் : ஏழரைச்சனி நடைபெறுகின்றவே ஆபத்து தலைப்பாகையுடன் சென்றுவிடும். சர்ப்பக் யில் இருப்பதால் புதிய முயற்சிகளில் நம்பி கால் ப பயணம் நன்மையில் உள்ளதால் மகிழ்வைக் கொண் உபாதை நீங்கும். குழந்தைப் பேற்றுக்கும் இடமுண்டு புத்திமதியைக் கேட்டதால் வரவிருந்த பெருந்துயரம் நாட்டைச் சேர்த்தும் விடலாம். சகுனங்களில் நம்பிக்
தனுசு : அட்டமத்து வியாழன் நடைபெறுவதால் ெ கவும். கன்னியர் தொடர்பால் குடும்பத்தில் சுனாமியு தோன்றும். சனீஸ்வரன் 11 இல் நிற்பதால் சூரியனை. வடையும். ராகு 10இல் உள்ளதால் செய்தொழிலைச்சி நடுவில் முறிந்தும் விடலாம். பங்கு வியாபாரம் பாரி இல் நிற்கையில் வசந்தகாலம் மாறி மனது வேதனையில் கவனமெடுக்கவும். பழைய மனையை அழித்து புதி களைக் கடந்து முன்னேற்றம் காண்பீர்கள். நல்லவர்க
மகரம் : திருமணச் செய்தி மனதிற்கு இன்பமூட்டு பும் உண்டாகும். தம்பதியருக்கு மாறி மாறி நோயின் தாக அறிகுறி கண்டு இல்லறத்தில் சந்தோஷம் தக்கல் கவனம் எடுங்கள். புதிய இடங்களில் வர்த்தக முயற் முயற்சி வெற்றிக் கம்பத்தை எட்டிவிடும். முற்றா முடிக்க பணத்திற்குத் தடை ஏற்படல். பரீட்சை முடி பரிதவிக்கும் முதிர்கன்னியை நினைத்து சோகம் மன சகோதரரர் உதவுவார். நோய்கள் குணமடைய கு விஜயம் மேற்கொள்ளல். எதிர்பாராது சுபநிகழ்வு (
கும்பம் : எதிரியின் அடாவடித்தனத்தால் அச்ச நிலவிய பிணக்கு அகன்று உறவுக்குக் கைகொடுத்த மான பதவி கிடைத்தல், புண்கள் குணமடையாது வரின் திருவிளையாடலால் இடைத்தங்கல் நாட்டை படைவதால் கவலை தக்கவைத்தல். அசாதாரண ( விஷஜெந்துக்களின் தாக்கமேற்படல். நீதிமன்ற மு யில் இருத்தல். விவாக முயற்சி எதிர்பாராது வெற்றி நாட்களாக நிலவிய மனத்தாங்கல் மறைந்துவிடுத யுறல். குழந்தைப்பாக்கியம் தோன்றல்.
மீனம் : அரசு தனியார்துறைகளில் பதவி கிட் வடைதல். வெளியூர்ப்பயணம் பற்றிய தித்திப்பு நிலவிய முறுகல்நிலை அற்றுப்போதல். காதலில் ஆடம்பரப் பொருட்கள் கொள்வனவு செய்தல். நீல தொல்லை நீங்குதல். விவாகத்திற்காக தாயகம் வந்து முன்னிட்டு விடுப்பில் நிற்றல். மனையாளுடன் ) விடல். மக்களின் உயர்ச்சி கண்டு பெருமை அடைத் செய்யப்படல். பங்குத்தொழிலை முறித்துக்கொண் கள் உதவியால் வசந்தகாலம் பிறத்தல்.

ரயரங்களைத்தர நேரிடினும் உச்சவீடாக வருந்துன்பம் புருவத்துடன் சென்று இடமாற்றம், தொழிலுக்கு கேட்டையும் செலவிற்காக கடன்பட்டு அடைக்க களில் கலந்துகொள்வீர். முன்னேற்றம் பண்டாம். மொழிப்பிரச்சினையால் தற்காலிகமாக நிற்பாட்டப்பட்டதால் ள் எச்சரிக்கையாகச் செயற்படுங்கள்.
ள குரு 9இல் நிற்பது தலைக்கு வரும் கிரகங்களான ராகு, கேது நல்ல நிலை திக்கலாம். சுப காரியங்கள் ஏற்படும். டுவரும். சத்திரசிகிச்சையால் நோயின் . சிறுமியர் பூப்படைவர். பெற்றோரின் விலகிவிடல். பயணம் இடைத்தங்கல் கை வைத்தால் காரிய சித்தி ஏற்படும்.
சய்காரியங்களில் எச்சரிக்கையாக இருக் ம், பொருள் இழப்பும், மானக்கேடும் க் கண்டபனிபோல துன்பங்கள் குறை சிலர் கைவிட நேரிடும். பயணம் இடை ய நட்டத்தைத் தந்துவிடலாம். கேது 4 ல் தத்தளிக்கலாம். தாயாரின் நோய்களில் தொகக் கட்ட எண்ணமிடல். எதிர்ப்பு கள் நேசம் கிட்டுவதால் துயர் விலகும்.
ம். பதவி உயர்வுடன் சம்பள அதிகரிப் ண்டவம் இருக்கும். குழந்தை உருவாகிய வைக்கும். செய்தொழிலில் போதிய சிகளைச் சிலர் மேற்கொள்வர். பயண கும் நிலையில் இருந்த மனை கட்டி வால் பதவி ஏற்படும். விவாகமின்றிப் தை வாட்டும். வாகன யோகம் கிட்ட டும்ப சகிதம் தெய்வத்தலங்களுக்கு தோன்றலாம்.
1422) 60 (137 ( 3 S|
உணர்வு ஏற்படல். மாமன்மாருடன் கல். பரீட்சை முடிவால் அதிகாரபூர்வ - தொடர்ந்தும் வருத்துதல். பணமுக அடைதல். பிதாவின் தேகசுகம் பாதிப் வேகம் விபத்தைக் கொண்டுவரலாம். டிவுகள் சிலருக்கு பாதகமான நிலை யைக் கொணரல். குடும்பத்தில் நீண்ட ல். இரவில் காணாக்கடியால் அவதி
டுதல். குழந்தைப்பேறு பற்றி மகிழ் டான செய்திவரல். மாமன்மாருடன் ஏற்பட்ட சந்தேகக்கோடு மறைதல். அட நாட்கள் மனதை உறுத்திய கடன் செல்லல். பெற்றோரின் தேகநலனை லவிய கருத்து வேற்றுமை அகன்று ல். கெளரவப் பதவிகளுக்குச் சிபாரிசு டு தனித்தியங்க முற்படல். சகோதரர்
ஒளிஅரசி 53

Page 55
ஆண்டுகள் 16 த அரசனாய் பவனி
1998ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25ஆம் திகதியன்று தமிழ் பேசப்படும் - நாடெங்கிலும் பேசப்படும் ஒரு வானொலி உதயமாகியது. உலக வானொலி மாற்றத்தை எதிர்பார்த்திருந்த வானலை ரசிகர்கள் மத்தியில், ஒரு பெரும் எதிர்பார்ப்பு நடக்குமா என்பதை நடத்திக்காட் டிய சூரியன் எவ்.எம். உதயமாகி எம் மத்தியில் இன்று அசைக்க முடியாத வானொலி அரசனாய் பவனி வருகிறான்.
இன்றுடன் ஆண்டுகளோ 16. தாண்டி வந்த பாதைகளோ ஏராளம். வேதனைகளும், சோதனை களும் கடந்த சாதனைதான் இவன் வாழ்வில் வருகிறது. நாங்களும் அசைக்க முடியாத - யாராலும் மாற்ற முடியாத, அன்பு நேயர்களாய் இருப்பதில் பெருமை கொள்கிறோம். நானும் ஒரு சூரிய ரசிகனாய் முதலில் தரமான நிகழ்ச்சி களைத் தந்து, எமது மனம் அறிந்த பாடல்களைத் தருவதிலும், தேவையான தருணத்திற்குத் தேவை யறிந்து - எல்லா தருணத்துக்கும் தேவையறிந்து எல்லாவற்றிலும், செயற்படுவதில் எம்மவன்
சூரியனுக்கு நிகர் வேறு எவரும் கிடையாது.
கடந்து வந்த 16 ஆண்டுகளிலும் இலங்கை யில் பல தனியார் வானொலிகள் தோற்றம் பெற்றிருந்தாலும், சூரியன் எவ்.எம். வானொலி யுடன் போட்டியிட்டு நிகழ்ச்சிகள் படைத்து நிமிர்ந்து நிற்கமுடியாத வானலைகள் பல தோல்விகளைச் சந்தித்து நிற்பதையும் யாவரும் அறிந்திருக்கலாம்.
எம்மவர்களின் முழுமையான திறமைகளை மட்டுமே கொண்டு, வானுயர்ந்து நிற்கின்ற சூரியன் எவ்.எம். வானொலி, வித்தியாசமான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்ப தற்காக சில வானொலிகள் அயல் நாட்டிலிருந்து அறிவிப்பாளர்களை இறக்குமதி செய்தாலும், இந்தச் சூரியனுக்கு முன்னால் அவர்களுக்கு நிலைத்து நிற்கமுடியாது, திரும்பி ஓடிய வரலாறுகளும் பல.
வானொலிகளின் நிலைய குறியிசைகளும் இந்தியப் பாடகர்களால் பாடப்பெற்ற ஒலிபரப்பினா லும், சூரியன் வானொலி எமது உள்ளூர் கலைஞர் களை மட்டுமே வைத்து இதுவரை நிலைய குறியி சைகளைத் தயாரித்துள்ளதுடன் மட்டுமல்லாது,
- சூரியன் FM சுப்பர்
ஒளிஅரசி 54

ாண்டி வானொலி வரும் 'சூரியன்'
பல மக்களது மனங்களிலும் அடிக்கடி முணுமுணுக் கும் பாடல்களாக சூரியன் நிலையக் குறியிசை கள் மாறியுள்ளன. நம்மவர்க்கு மதிப்பளிக்கும் சூரியனின் ரசிகர்களாய் நாம் பெருமையடை கின்றோம்.
எம்மவர்களின் உணர்வறிந்து, தேவையான நேரத்துக்குத் தகுந்த செய்திகளை உண்மையான தகவல்களாகத் தமிழ் பேசுவோர் நம்பி கேட்கும் செய்திகளை வழங்கி இன்று முதற்தர செய்திச் சேவையாக சூரியன் செய்திகள் நீங்கா இடம் பெற்றுள்ளமையும் எம் போன்ற உடனுக்குடன் அறிந்துகொள்ளத் துடிக்கின்ற இளைஞர்களுக் குப் பெரும் உதவியாக அமைந்துள்ளது.
நிகழ்ச்சிகள் தரமானவை; செய்திகள் துல்லிய மானவை. விளையாட்டு, சினிமா, கண்டுபிடிப்பு கள் என ஒவ்வொன்றையும் உடனுக்குடன் நாம் அறிந்துக்கொள்ள நம் சூரியன் எப்பவும் தயார். சமூகசேவைகளிலும் நாம் எல்லோரும் அறிந்து சேவைகளை வழங்குவதில் எப்போதும் பின்நிற்ப தில்லை நமது முதல்வன். பலர் அவசர உதவிகள் வழங்குவதாக அறிவித்தாலும் அவை நேரடியாகச் சென்றடைவதில்லை. ஆனால், கடந்த காலங்களில் சூரியனின் உதவும் கரங்கள் சமூக செயற்றிட்டத் தினூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக ஒப்படைத்துப் பெருமை கொண்டான் சூரியன்.
இசை ரசிகர்களைச் சந்தோஷப்படுத்த, வானொ லியால் கலையகத்திலிருந்து தனியே நிகழ்ச்சி களை வழங்காது எம்மை போன்ற தூர இடத்து நேயர்களும் மகிழ வேண்டும் என்பதற்காக நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் சென்று இசை நிகழ்ச்சிகளை வழங்கி - பிரம்மாண்ட நிகழ்ச்சி களை வழங்கி பல இலட்சக்கணக்காக நேயர் களை ஒன்றுதிரட்டிய பெருமையைப் கொண்ட வன் நமது முதல்வன் சூரியன்.
காற்றலையில் கவிபாடும் காதல் நாயகன், நமது நண்பன், நாடு போற்றும் பண்பலை சூரியன் வானொலி பார்போற்றும் 16இல் நாம் போற்றும் பெருமையோடு கொண்டாடுவோம். 16ஆவது சாதனை மிகு பிறந்தநாள்.
- சூரிய ரசிகன் கிறிஸ்டோபர் - (இரத்தினபுரி)
எஸ்ரார் குழு

Page 56
0 உண்மைச் சம்பவம் ப எம். கே. மதி, திருமலை
மனித உருவி
யத்தில் இ
நேரம் இருக்கிறது எடுத்துக்ெ விபரம் ெ கொடுக்க. பெரியளவு
அன்று காலை பிள்ளைகள் எல்லாம் பாடசாலைக்குச் சென்று விட்டனர். தாய் சமையலில் ஈடு பட்டுக்கொண்டிருந்தார். மதியம் பாடசாலை விட்டு வரும் பிள்ளை களின் பசியைப் போக்க வேண் டுமே என்ற பரபரப்பில் இயங்கிக் கொண்டிருந்த போது பாடசாலை செல்லாத 4 வயது மற்றும் 2 வயது குழந்தைகள் இரண்டும் விளையா டிக் கொண்டிருந்தனர். அது ஒரு தகரத்தால் அடைக்கப்பட்ட அறை. ஒருபக்கத்தில் 4 வயதுக் குழந்தை ஒரு கூரிய கம்புடன் நின்று தகரத் தில் காணப்பட்ட துளைக்குள் கூரிய கம்பை குத்தி விளையா டிக்கொண்டிருந்தது. மற்றைய 2 வயதுக்குழந்தை அந்த கூர் வரும் இடத்தை கண்ணை வைத்து பார்த்துக் கொண்ட போது கூரிய கம்பு குழந் தையின் கண்ணின் நடு விழியில் குத்தப்பட்டு விட்டது. குழந்தை வீரிட்டு அழ ஆரம்பித்த போதுதான் அம்மாவிற்கு நிலமை புரிந்தது.
அம்மா சமையலை போட்டது போட்டபடி ஓடி வருகிறார். குழந் தையின் கண்விழி நுங்கு போல் நிலத் தில் வீழ்ந்து உறைந்து கிடக்கிறது. குழந்தை ஓவென அழுகிறது. அம்மாவிற்கோ என்ன செய்வது என்று தெரியவில்லை. அப்பாவிற்கு செய்தி அனுப்ப அப்பா, வேலைத் தளத்திலிருந்து விரைந்து வருகிறார். இரு வருமாக பொது வைத்திய சாலைக்கு கொண்டு செல்கிறார்கள் குழந்தையை. அங்கே குழந்தையை பரிசோதித்த வைத்தியர் இதை உடனடியாக சத்திரசிகிச்சை செய்ய வேண்டும்; 6 மணித்தியாலங்கள் பிந்தினால் மற்றக் கண்ணும் பாதிக்கப்பட்டுவிடும்; கொழும் பிற்கு கொண்டுசெல்லுங்கள் என்று அவசரப்படுகிறார். அந்த காலத்தில் சீனக்குடாவில் விமான நிலை
படுகிறது. வைத்தியசு
திடீ ரெ இவர்களில் அவர் உட சிறந்த கன் நானே எ6 என்று செ விபரத்ை தேவையா
வைத் ஒழுங்கை முடிக்கின் சாத்தியம்! என்று அதி பொலிஸ் கின்றனர். தேவையா என்பதில்

ல் இறைவன்
ருந்து கொழும்பு செல்ல விமான வசதி இருந்தது. 10.30 மணி. 11 மணிக்கு புறப்படும் விமானம் 5 என்று அறிகின்றனர். ஓர் காரை வாடகைக்கு காண்டு விரைகின்றனர். விமான நிலையம் அங்கு சான்னவுடன் உடன் பயணத்திற்கான வசதி செய்து, ப்படுகிறது. இத்தனைக்கும் இத்தாய், தந்தையர் ரில் வசதிபடைத்தவர்கள் அல்லர். விமானம் புறப்
இவர்களுக்கோ கொழும்பில் கண்சிகிச்சைக்கான எலை எங்குள்ளது என்பதற்கான விளக்கம் ஏதும் இல்லை. சன முன் ஆசனத்தில் அமர்ந்திருந்த ஒரு மனிதர் ன் பதட்டமான நிலமையைப் பார்த்து விசாரிக்கிறார். னே, "நான் ஒரு பொலிஸ் அதிகாரி, எனது சகோதரர் எவைத்திய நிபுணர்; விமான நிலையம் சென்றவுடன் எது ஜீப்பில் உங்களை அழைத்துச் செல்கின்றேன்.'' எல்லி அவர்களை அழைத்துச் சென்று சகோதரரிடம் தச் சொல்லி வைத்தியசாலையில் அனுமதிக்க
ன ஒழுங்கை செய்து கொடுக்கின்றனர். நியரும் 1/2 மணி நேரத்தில் சந்திரசிகிச்சைக்கான செய்து வெற்றிகரமாக சத்திரசிகிச்சையை செய்து மார். அப்பா, அம்மாவுக்கு இது எல்லாம் எப்படி - இது எம்மால் உடனடியாக செய்யக்கூடிய காரியமா? "சயப்படுகின்றனர். உண்மையில் தெய்வம்தான் அந்த ம அதிகாரி என்ற மனித உருவில் வந்தது என நம்பு இறைவன் எப்போதும் நேரில் வந்து உதவுவது இல்லை. என சந்தர்ப்பத்தில் மனித உருவில்தான் உதவுவார்
சிறிதும் ஐயமில்லை.
ஒளிஅரசி 55

Page 57
. சமையற்குறிப்பு
வாழைப்பு
தேவை வாழை வெங்க கடலை, செத்தல் இஞ்சி பூண்டு தேவை
செய்முறை :
- வாழைப்பூவை நன்கு சுத்தம் செய்து தண் மிளகாயை 2 மணிநேரம் ஊறவைக்கவும். வெங்க தோல் நீக்கி வைக்கவும்.
ஊறவைத்த கடலைப்பருப்பு, செத்தல் மி பூண்டு, தேவையான உப்பு சேர்த்து சரசரப்பாக -
சேர்த்து ஒரு சுற்று அரைக்கவும்.
அரைத்தவற்றுடன் நறுக்கிய வெங்காய தேவையான எண்ணெயை ஊற்றி சூடாக்கி சிறு பொரித்து எடுக்கவும். சுவையான வாழைப்பூ வன
சுரைக்காய் ப
தேவையான பொருட்கள் : சுரைக்காய் - பாதி
முந்திரி வத்தல் - 10 கஜு - 10 ஏலக்காய் - 4 சவ்வரிசி - 01 கப் * நெய் - அரை கப்
ஒளிஅரசி 56
செய்முறை :
பாலை நன்கு காய்ச்சி ஆறவிடவும். அதே நெய்யில் திராட்சை, முந்திரியை வறுத்துக்கொள்ள |பெட்டியில் வைத்து வேகவைத்து எடுத்துக்கொள்
அடி கனமான பாத்திரத்தில் ஊறவைத்த ச வெந்ததும் சுரைக்காயை சேர்க்கலாம். பின்னர் 6 ஏலக்காய் மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி, திர பசும்பாலை சேர்த்து கலந்துவிடவும். 2 நிமிடத்தில்

புவனாட
யான பொருட்கள் : ப்பூ - 01 பயம் - 01
ப்பருப்பு - 150 கிராம் = மிளகாய் - 03 - 01 துண்டு
'சுவைக்க சமைப்பது எப்படி?
- 05
யானளவு எண்ணெய் மற்றும் உப்பு
ணீரில் இடவும். கடலைப்பருப்பு மற்றும் செத்தல் பயத்தைப் பொடியாக நறுக்கவும். இஞ்சி, பூண்டை
ளகாய் இரண்டினதும் நீரை வடித்துவிட்டு இஞ்சி, அரைத்துக்கொள்ளவும். கடைசியில் வாழைப்பூவை
த்தை கலந்துவிடவும். பாத்திரத்தில் பொரிக்கத் உருண்டையாகப் பிடித்து எண்ணெயில் போட்டு ட தயார். விரும்பிய சட்னியுடன் பரிமாறலாம்.
பாயாசம்
நேரம் சவ்வரிசியை அரைமணிநேரம் ஊறவிடவும். வும். சுரைக்காயை கரட் துருவியில் துருவி, நீத்துப் ளவும்.
வ்வரிசி கால் கப் நீர்விட்டு வேகவிடவும். சவ்வரிசி காதித்ததும் நெய்யைக் கலந்துவிடவும். பொடித்த பாட்சையைச் சேர்க்கவும். பின் காய்ச்சி ஆறவைத்த இறக்கலாம். சுவையான சுரைக்காய் பாயாசம் தயார்.

Page 58
0இம்மாத மங்கை
மங்கை
சமூகம் ஒரு சி
- சமூகம் என்பது சிந்த பயிற்சிநெறிகன னைக்குரிய தளம். அதில்
உதவுதல், ெ வேர்விட்டு விழுதுகள்
வன்முறைகள் ெ பரப்பி நிற்க்கும் அன்பு
- ஏற்படுத்தும் 3 என்ற மாத்தன் களைதான்.
செல் லாத மா. சேவை என்பதை தனது
தேவைகளை நி. கொள்கையாகக் கொண்டு,
வழிசமைத்துக்
களினாடாக பல ச ம க 3 ச ன வ க ள ல்
- அது தவிர, ந ா ட் ட ம் எ த எ ண் ட )
தொடர்புகொண் ச ம் க ச வ க யாக வும் ,
தயாராக இருப் சமயப் பற்றாளராகவும்,
அவரிடம் தற்பே ஆ, லய அடியாராக வும்,
எதாவது விடயம் பெண்கள் அமைப்பின்
பின்வருமாறு த த ல ல வி ய ா க வும்
- தற்போது சி பன்முகம் கொண்ட யாழ்ப்
வருகின்றது. இது பாணம் அத்தியடிக் கிராமத்
ஒன்றை அமை தில் வாழ்ந்து வரும் திருமதி
ஆற்றலை வெள பவனேஸ்வர் ராஜகோபால்
நம்பிக்கையுமா இ ம் tாத . நகைக்காக
நல்லாசியும் சில ஒளி அரசி சார்பில் சந்
அவரது விருப்ப தித்து உரையாடியபோது சுவாரஸ்யம் நிறைந்த பல தகவல்களை எம்டன் - "பகர்ந்துகொண்டார்.
- மனமிருந்தால் இட முண்டு என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அப்பழமொழி எதற்குப் பொருந்துதோ இல்லையோ மற்றவர்களுக்கு உதவி செய்யும் விடயத்தில் மிக வும் பொருத்தமானகாகக் காணப்படும். ஒரு ரெம் அபிவிருத்தி சங்கத்தில் தலைவியாக. இ ருந்து கொண்டு இவர் செய்கின்ற சேவைகள் வயப்பட்டு, பவையாக உள்ளன.
பெண்களைத் தலை மைத்துவமாகக்கொண்ட குடும்பப் பெண்களுக்குப்

ந்தனைக்களம்
இள வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்துக்கு பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கெதிரான தாடர்பில் சமூகத்திடையே விழிப்புணர்வுகளை கருத்தரங்குகளை நடத்துதல், பாடசாலை ணவர்களை இனங்கண்டு அவர்களுடைய வெர்த்திசெய்து அச்சிறார்கள் கல்வியைத் தொடர் - கொடுத்தல் என தான் சார்ந்த அமைப்பு -உதவிகளைச் செய்துவருவதாகத் தெரிவத்தார். - தனிப்பட்ட முறையிலும் பல பேரைக் எடு தேவை உடைபவர்களையும், உதவிபுரிய
வர்களையும் இணைத்து வருவதாகக் கூறிய Eாது நீங்கள் செய்ய விருப்ப முயற்சி செய்கின் ககள் காணப்படுகின்றனவா எனக் கேட்டபோது
னது விருப்பங்களை வெளிப்படுத்தினார். றுவர்களிடையே வாசிப்பு பழக்கம் குறைந்து களால் புத்தகங்கள் சேகரித்து சிறிய வாசகசாலை த்து இலவச புத்தகங்களை வழங்கி வாசிப்பு சர்க்க வேண்டும் என்பது எனது விருப்பமும் ஆம், இதற்க்கு மக்கள் ஆதரவும் இறைவன ன இடக்கும் என்பதே எனது எதிர்பார்ப்பு என்றார். 2ம் பர்த்தியடைய வாழ்த்தி விடைபெற்றோம்.
ராசா:-
| ஒளிஅரசி 17 .

Page 59
9 போட்டி
| “ஓளி அரசி” குறுக்
“ஒளி அரசி” குறுக்கெழுத்துப்போட்டி இன
11 Fா
போட்டி முடிவு திகதி 25.08.2014
இடமிருந்து வலம் 01. காத்திருந்தால் கிடைப்பது 03. தயிரில் செய்வது, தாகம் தீர்ப்பது 04. நாயாய் நகைச்சுவை செய் (2) 09. இதுவும் பழம்பொருள் காப்பகமே (3) 10. இந்தியர்களின் நாட்டுப்பற்றை ஏற்படுத்தும் .
யரை விரட்டச் செய்த கீதம் (3, 4) 11. தாய்.... வணக்கம் இடைவெளியில் வர வேண் 12. பாற்கடல் தந்த திரவத்தினும் தித்திக்கும் தமிழ் 16. எட்டயபுரத்து புரட்சிக் கவிஞன் 17. திடிரென எடுக்கும் தீர்மானம் 18. முதல் உணவு சீரணம் ஆகாததால் குடலில் விளைந் 19. அதிகமாக (2)
ஓம் ஸ்ரீ
- வைத்தியம்
உடல் கொழுக்க, மெல்லிய, நீண்ட கூந்தல்வளர, முடி உதிர்வு, மார்பு சிகிச்சை, சிறிதாக்குதல், மாதவிடாய் கோளாறு, வயிறு குறைய, வயிறு கோடுகள் மறைய, மாதவிடாய் தாமதம். ஆண் உறுப்பு சிகிச்சை, தாடி. மீசை வளர்ச்சி, விந்தணுக்கள் பெருக்க, குழந்தை பாக்கியம் அமைய, முகம் வெள்ளையாக்க, பரு அடை யாளம் நீங்க, இளநரை, தாம்பத்திய திருப்தியின்மை, உறவில் திருப்தியின்மை, ஆகியவற்றுக்கு மருந்துண்டு.
Dr. N.L.Ratnajothy, 15A Jeimpettah Street, |
'- Kochchikade, Colombo - 13. Tel : (077 4421157, 077 1797427, (075 41 46849. 072 1238553, 071 9713464. dr.nlr 95@yahoo.com
ஒளிஅரசி 58
பயன்படுத்த காரியம் அ முடியும். எ உங்கள் ம களவு, கட் இல்லையே விசா இல கைக்கூடவு பெற்றோர் வெளிநாடுக
தொ.

கெழுத்துப்போட்டி
2, 09
20. பயத்தில் பெயர் மறந்த பேசும்
பறவை (2) 21.
திருவிழா காலங்களில் சனத் திரளால்
ஏற்படுவது.
மேலிருந்து கீழ் 01. குரு தட்சனையாக விரலைக்
கொடுத்தவன். 02. மேல் தளம் | 03. நாயிடம் இருக்கும் சக்தி 05.
சிறை சென்று திரும்பிய மகளைத் தந்தை இப்படித்தான் கொஞ்சி
வரவேற்றிருக்க வேண்டும். (3, 5) 06. முட்டாள் மண்டையில் ஆனந்த பூமி 07. பாரதியார் ஆசிரியராய்ப் பணியாற்றிய
ஒரு நாளிதழ் (8) 08. அங்கீகாரமற்ற அதிவேக செய்தி (4)
குப்புற விழுந்ததால் மேன்மை இழந்தோ
மாணிக்கவாசகரின் படைப்பு ? (4) 14.
இது உண்டேல் வேலை கிடைப்
பது நிச்சயம் (4) 15. ஒரு வகை மரத்தடியில் ஒரு கசை
யடி (5) 17.
பிள்ளைத் தமிழ் சொல்லும் நிலாப்
பருவம் (4) 19. அதிகமாக (2)
13.
குறிப்பு : போட்டி இலக்கம்7 தவிர்க்கமுடியாத காரணத்தினால் ரத்து
செய்யப்பட்டமையால் அதன் முடிவு களும் இங்கு வெளியிடப்படவில்லை.
வள்ளை
Be Es En Traders
எடியது 2 (6, 3)
Suppliers of Offset Plates, Chemicals, Printing lnk,
Machinary & AII Other Printing Requisites
No, EG1, Central Road, Colombo 12, Sri Lanka. Tel: +94 11 2348413, 2348419, 2387924, 2330297 Pan+94 11 2449309 Email, bes@sinet.lk
த புண் (3)
மலையாள மாந்திரிகம் 5 மகாகாளி அம்மன் அருள் பெற்று மலையாள மாந்திரிகத்தைப் 3கண்ணீரைத் துடைக்க வருவாள் அம்மா. நீங்கள் நினைக்கும் அனைத்தும் நிறைவேறும். பிரிந்தவர்களைச் சேர்த்துவைக்க வரும் உங்களிடம் பயனைப் பெற்று விலகிப் போய்விட்டாரா? னம் கவர்ந்தவரை உங்கள் வசமாக்கிக்கொள்ளுங்கள். கல்வி, ன், தலைவலி, சொடுகு, தலைமுடி உதிர்தல், தலைமுடி ப என்ற கவலை வேண்டாம். நோய் சம்பந்தமான பிரச்சினை, தவில் கிடைக்கவும், வெளிநாட்டு பயணங்கள் இலகுவில் ம் இவை அனைத்துக்கும் ஒரே வாரத்தில் வெற்றியுண்டு. பயன் பல்லாயிரம். இரகசியம் பாதுகாக்கப்படும். வெற்றி நிச்சயம். களில் உள்ளவர்களும் தொடர்புகொள்ளலாம். டர்புகளுக்கு : 072 5458711, 077 9930131

Page 60
ஒளி அரசி 2013ஆம்ஆ நடாத்தும் ..... மெல/பெரி
S130,000/=பரிக
இப்போட்டியானது குடும்பங்கள் மத்தியி (சமயம்) அறிவு என்பவற்றை அதிக
பரிச 1 ஆம் பரிசு
2 ஆம் 50,000/=
30,0 மேலும் 2,000/= வீதம் 15
நீங்கள் செய்ய வேண்டியது - கீழுள்ள வினாத் தொகுதி மேலதிக தொகுதியிலுள்ள உங்கள் மதத்துடன் இசை விடையளிக்கவும். ஒவ்வொரு மாதமும் வெளிவரும் இவ் இவ்வருட டிசம்பர் நடுப்பகுதியில் (கீழுள்ள கூப்பனின் கட்டாயமாக இணைத்து) எமக்கு அனுப்பி வைக்கவும். அ
ஒளிஅரசி முந்தைய இதழ்கள் புதிய வாசகர்களுக்கு ஒளி அரசியின் முந்தைய இதழ்க தொடர்பு கொண்டு தேவையான மாதத்துக்கான ஒ
கொள்ள வேண்டிய முகவரி, தொலைபேசி இலக் முந்தைய இதழ்கள் குறிப்பிட்ட தொகையே கைவசப்
' பொது அறிவு 1. உலக சமாதான தினம் கொண்டாடப்படுவது
எப்பொழுது? 2. போர்த்துக்கேயரின் ஆட்சியின் பின்
இலங்கையை ஆண்ட அந்நியர் யார்? 3. கனடாவின் தேசிய பறவை யாது? 4. விண்வெளிக்கு முதன் முதலில் சென்ற நாயின்
பெயர் என்ன? 5. நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு எது ?
இந்து
1. இலங்கையில் உள்ள பஞ்ச ஈஸ்வரங்கள் எவை? 2. ஈழத்து சிதம்பரம் என அழைக்கப்படும் ஆலயம்)
எது? 3. விநாயகப்பெருமானின் அங்குசம் ஏந்திய கை
எதனை குறிக்கின்றது? 4. நவராத்திரிவிழாவின் இறுதிநாளன்று ஆலயங்
களில் வாழை வெட்டப்டுவதன் உட்கருத்து யாது? 5. விநாயகப் பெருமான் யாரை பெருச்சாலியாக
மாற்றி தனது வாகனமாக்கினார்?
ஒளி அரசியின் ஆகஸ்ட் மாத முழுப்பெயர் : முகவரி : தொலைபேசி இல..
03. தெ

ண்டுக்கான சுத்திட்டம் வினாவிடைப் போட்டி
ல் பொது அறிவு, பொது விவேகம், மார்க்க ரிக்கும் நோக்கில் நடத்தப்படுகின்றது. 5 விபரம் 5 பரிசு
3 ஆம் பரிசு 00/=
20,000/= பேருக்கு ஆறுதல் பரிசுகள்
சிகளில் பொது அறிவு கேள்விகள் ஐந்துக்கு கட்டாயமாகவும், ணந்த ஐந்துக்குமான மொத்தம் பத்து வினாக்களுக்கு வினாக்களுக்கு விடை எழுதி அதைப் பாதுகாப்பாகப் பேணி மூலப்பிரதியை வெட்டி ஒவ்வொரு விடைத்தாளுடனும் திர்ஷ்டசாலிகள் குலுக்கல் முறையில் தேர்வுசெய்யப்படுவர்.
ள் கிடைக்காமல் இருந்தால் அத்தகையோர் எம்முடன் ளி அரசி இதழைப் பெற்றுக்கொள்ளலாம். தொடர்பு கம் என்பன 3ஆம் பக்கத்தில் காணப்படுகின்றன. 5 உள்ளன என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கிறிஸ்தவம் 1. காயின் மகனின் பெயர் என்ன? 2. இயேசுவின் சீடர்களின் பெயர்களை தருக? 3. இயேசு இரண்டு மீன்களையும் ஐந்து
அப்பங் களையும் எத்தனை பேருக்கு பகிர்ந்து அளித்தார்? 4. ஏழுத்திருவருட்சாதனங்களின் பெயர்கள்
எழுதுக? 5. எந்த திருவருட்சாதனங்கள் பலமுறை பெற
லாம்?
இஸ்லாம் 1. அரபு நாட்டின் வீரசிங்கம் என அழைக்கப்படும்
சஹாபியர் யார்? 2. நபி இப்றாஹிம் (அலை)க்கு எத்தனையாவது வயதில்
ஹத்னா செய்யப்பட்டது? 3. அன்னை செய்னப் (றலி)யின் சிறப்புப் பெயர் யாது? 4. அப்துல் றஃமான் இப்னு ஒளல் (றலி)யுடன் நபியால்
இணைந்து வைக்கப்பட்ட அன்சாரி யார்? 5. சூறா அல் ஜொத்லாவில் முதலாவது வசனம் எந்த
ஷஹாபி பெண்ணின் விடயத்தில் இறங்கியது ?
- வினாவிடைப் போட்டி
ஒளிஅரசி 59

Page 61
( கவிதை - பா. யசிந்தா - நீராவியடி
ப
ஒளிஅரசி 60

பெண் என்பதால்...
வயதோ பதினெட்டு கல்வி பயிலும் வயதில் கல்யாணம் என்னும் பெயரில் வந்ததே வரன் ஒன்று
யார் என்றும் தெரியாது முகவரியும் தெரியாது - ஆனால் வெளிநாட்டு மாப்பிள்ளையாம் திடீரென கோவில் ஒன்றில் திருமணமும் நடந்தது
- பெரிய படம்
சுமை குறைந்தது என சுகம் அடைந்தோர் சிலர் பெருமைப்பட்டோர் சிலர் பெருமூச்சு விட்டோர் சிலர்
கண்ணின் கனவுகளை காற்றில் பறக்கவிட்டு கால்கள் கட்டுண்டு போனது
அவளது வாழ்க்கை
நாட்கள் நகர்ந்தன மாதங்கள் கடந்தன வாசலிலே தபால்க்காரன் தந்தியுடன் வந்து நின்றான்
''மாப்பிள்ளைக்கு.......
ஈர்ரைந்து மனைவியாம்?? வாழ்த்தினோர் புகழ்ந்தோர் வாய் அடைத்துப் போய் நிற்க வாழ்க்கை என்னும் நாடகமும் முடிந்ததுவே
அவள் "பெண்' என்பதால் மெளனமாய் ஏங்கி நிற்க பெரிய கதையினை புனைகின்றனர் பெருமையாக அவளை வைத்து.

Page 62
எம் இலவச இணைப்பு மழலை க ள பக்கங்கள் (5
ந கா
பாலர் + தர (உச்சப்புள்ளிகளுக்கான மேலத சிறுவர்களுக்கான பிறந்தந
GOOD HABITS
Rods குழந்தைகளே இந்த நற்பழக்கங்களை ஆங்கிலத் தில் மனனம் செய்வதுடன் வீட்டில் இப்பழக்கங் களை ஒழுங்காக பின்பற்றி பெற்றோரிடம் நல்ல
பெயர் வாங்குங்கள்.
COVER YOUR MOUTH WHEN
YOU SNEEZE
SAVE YOUR
POCKET MONEY
HELP YOUR
LITTLE SISTER IN HER STUDIES
IDMK)
DRAWING

9-65)
கல்விஅரசி
ம் 3, 4, 5 நிக திறன் விருத்தி) மற்றும்
ாள் வாழ்த்துக்களுடன்...
இக்கதையைணிந்துவிளங்கமுயற்சிசெய்து அறிவைவளர்த்துக்
பொள்ளுங்கள். அதன்பின்பு மீழுள்ள தமிழாக்கத்தையும்கவும் | |Learn & Grow
The Story of Moral Stories The ARROGANT HORSE
A farmer ownted a donkey and a horse. The horse used to carry the master and the donkey used to carry his loads.Once, the farmer took the donkey and the horse to town to do his monthly shopping. After all the shopping was over, the donkey was over loaded with supplies. he was unable to carry the load.
The donkey asked the horse, ''please my dear friend! help me and share the load". the horse arrogantly replied, " it is your duty to carry loads. Mine is just to carry the master".
the donkey managed to carry the load for some distance more. but he started frothing. the farmer saw the poor state of the donkey and he shifted the wole load from the donkey to the | horse. Now the horse
thought,"If I had accepted the donkey's Suggestion earlier, I would be carrying just half this load".
ARROGANCE LEADS TO DOWNFALL
' குதிரையின் ஆணவம் ஒரு விவசாயி தனக்குச் சொந்தமாக கழுதை ஒன்றையும், குதிரை ஒன்றையும் வைத்திருந்தார். அந்தக் குதிரை எஜ மானை சுமந்து செல்லும். கழுதை அவரது பொதிகளை சுமந்து செல்லும்.
ஒருமுறை அந்த விவசாயி தனது மாதாந்த பொருட்கள் கொள்வனவுக்காக, கழுதையையும் குதிரையையும் நகருக்குக் கொண்டு சென்றார். பொருட்கள் யாவும் கொள்வனவு செய் யப்பட்டபின்னர், கழுதை மீது பொதிகள் சுமத்தப்பட்டன. அதனால் அப்பளுவை சுமக்க முடியவில்லை.அந்தக் கழுதை குதி ரையிடம் கேட்டது. (தயவு செய்து) எனது அன்பான நண் பனே! எனக்கு உதவி செய். சுமையை பகிர்ந்துகொள்வோம். அப்போது அக்குதிரை மிகக் கர்வத்துடன் பதில் சொன்னது, அது உனது கடமை; "எனது கடமை என்னுடைய எஜமானை சுமந்து சொல்வதே.''அந்தக் கழுதையால் கொஞ்சத் தூரம் வரை தான் ஒருவாறு சுமையை சுமக்க முடிந்தது. ஆனால், அது நுரைத்தள்ளத் தொடங்கியது. அந்த விவசாயி கழுதை யின் பரிதாபகரமான நிலையைப் பார்த்து, முழுச்சுமையும், கழுதையிலிருந்து குதிரைக்கு மாற்றினார். இப்போது அக் குதிரை நினைத்தது "கழுதையின் யோசனையை நான் முன் னரே ஏற்றுக்கொண்டிருந்தால் இந்த சுமையில் அரைவாசி யையே சுமக்க நேரிட்டிருக்கும் கர்வம் வீழ்ச்சிக்கு இட்டுச் செல்லும்
ஒளிஅரசி 61

Page 63
0 மழலைகள் பயிற்சி
இலக்கங்களுக்குரிய வர்ணங்கை
NNAMtw
வீட்டை சென்றடை பாதையை கண்டுபிடி
EN" .
பி
ஒளிஅரசி 62

ளத் தீட்டி அழகுபடுத்துங்கள்....
wெwwM
1- Hari 2- Yellow 3 - Biu2 4 - Green 5- Brown 5- Black 7. Orange 8 - Furple
www4
வதற்கான சரியான புங்கள் பார்க்கலாம்.

Page 64
0 சிறுவர்களுக்கான பரிசுப்போட்டி தரம் 4,5 மாணவர்களுக்கான
இப்பகுதியில் இடம்பெறும் கணித சரியான விடைகளைத் தபாலட்டையில் ! எமது முகவரிக்கு இம்மாதம் 25 ஆம் தி. கூடியவாறு அனுப்பும் தரம் 4, 5 மாணவ. ஊக்குவிக்க உள்ளோம். தொலைபேசி , டாம். தெரிவுகள் குலுக்கல் முறையில் இ
1ஆம் பரிசு
750/=
2ஆம் ப
500,
கணித
ஒரு மீற்றர் நீளமுள்ள கயிறு உள்ளது. அந்த முழுவதும் எரிய ஒரு மணி நேரம் பிடிக்கும். | அதுபோல் இரண்டு கயிறுகள் உள்ளன. இ அளவிடுவீர்கள்?
ஒரு குறிப்பு : கயிறின் இரண்டு பக்கங்களில்
போட்டி - 04 (மே) இல் பரிசு பெறுவோர் :
கணிதப்புதிர்
01 ஆம் பரிசு எம்.ஏ. அமல் அஹகமட் இல. 8 மலபார் வீதி
கம்பளை 02 ஆம் பரிசு கமலநாதன் மல்லிகா கொழும்பு - 13 03 ஆம் பரிசு ஆதித்தியன் அருண் அருனோதயா கல்லூரி
சுன்னாகம் கணிதபுதிருக்கான
விடுகதைகளுக்கான விடைகள்
விடைகள் |முறை 1
1. மீன் வலை (9 + (99 - 99) = 10
2. கண் முறை 2
3. கடிகாரம் (99 - 9) - (9 - 9) =
4. பட்டு
10
5. நீர் கணிதப்புதிரும் விடுகதையும் ஒரே
போட்டியாகும். இதனால் ஒரு தபாலட்டையிலேயே இருபக்கங்களிலும்
எழுதி அனுப்பவும்.
9 டு 5 ம் இ ஒ A டு த ல இ 8 9 ஏ . - |

கணிதப் புதிர் போட்டி 06
-ப் புதிருக்கும் விடுகதைகளுக்குமுரிய எழுதி 3 ஆம் பக்கத்தில் காணப்படும் கதிக்கு முன்னர் எமக்குக் கிடைக்கக் ச் செல்வங்களுக்கு பரிசில்கள் வழங்கி இலக்கத்தை குறிப்பிடத் தவறவேண் டம்பெறும்.
பரிசு
'_3ஆம் பரிசு
250/=
ப்புதிர்
கயிறினை ஒரு முனையில் கொளுத்தினால்
தனைக் கொண்டு 45 நிமிடத்தை எப்படி
லும் எரிவதைத் தொடக்க முடியும்.
விடுகதைகள்
.. முகத்தின் மேலே கைகள், முள்ளைப் போலே கைகள், ஓடிப்போகும் ஒரு கை, மெல்ல நகரும் மற்றொரு கை! - அது என்ன?
- அச்சு இல்லாத சக்கரம், அழகு கூட்டும் க்கரம், விதவித வண்ணச் சக்கரம், விலைக்குக்
டைக்கும் சக்கரம்! - அது என்ன?
.. முட்டையிடும், குஞ்சு பொரிக்காது. கூட்டில் குடியிருக்கும், கூடு கட்டத் தெரியாது. 5ரலில் இனிமையுண்டு, சங்கீதம் தெரியாது!
அது என்ன?
பார்வைக்குப் பச்சை நிறம், பாக்கு வெற்றிலை போடாமல் வாய் மட்டும் பவள றெம்! - அது என்ன?
- கண்ணுக்கு விருந்தாய் கையில் இருக்கும். ருத்துக்கு விருந்தாய் மனதில் ஒலிக்கும். நானத்தைச் சுமந்து நமக்குத் தந்தே நல்லபடி பாழ உதவி செய்யும். - அது என்ன?
ஒளிஅரசி 63

Page 65
2 0
@ சிறுவர் ஓவியப்போட்டி மழலைகளுக்கான வர்ண
பெயர் :......
முகவரி :
தொலைபேசி இல : .......
போவவிநல்வ.
2001
அனுசரணை
recOLORCRAFT LANKA (Pvt
#119, BANKSHALL, (COL
போட்டி 05 வெற்றிபெற்
முன்பள்ளி 01 ஆம் இடம்
சி.கவிதா கொழும்பு - 06 02 ஆம் இடம்
க.மதனியன் மட்டுவில் வடக்கு சாவகச்சேரி
தரம் - 01 01 ஆம் இடம் வாகினி கிருபாகரன் 6, சேர் பொன்.இராமநாத
வீதி, யாழ்ப்பாணம் 02 ஆம் இடம் - டி.சந்தோஷ் நீராவியடி யாழ்ப்பாணம் 03 ஆம் இடம்
ஆர்.ரதன் கொழும்பு - 04
ஒளிஅரசி 64
03 ஆம் இடம்
ஹர்லின் அன்ரன் ஜெயராஜா இல.32, அச்சக வீதி, யாழ்ப்பாணம்

கதீட்டும் போட்டி
-போட்டி இல.09 ல்
“ஒளி அரசி
தரம் :
இத்துதிகள்
முக்கிய குறிப்பு : வர்ணம் தீட்டும் போது குறித்த பெட்டி முழுவதும் நிரம்பக்கூடியவாறு பின்னணி உட்பட
வர்ணம் தீட்ட வேண்டும். தேவை
ஏற்படின் சில பின்னணிகளை நீங்கள் வரையவும்
முடியும்.
பெற்றோர் உறுதிப்படுத்தல் இவ் ஓவியத்திற்கு எனது பிள்ளை சுயமாக வர்ணம் தீட்டினார் என்பதை உறுதி செய்கிறேன்.
Ltd DMB0 11.
(பெற்றோர் ஒப்பம்)
bற பாராட்டுக்குரியவர்கள்
தரம் - 02 01 ஆம் இடம் அ. மரியோ மில்ஷான் 21, மருதடி வீதி,
யாழ்ப்பாணம் 02 ஆம் இடம்
த. அஜந்திகா இல. 12.6/2 இராஜசிங்க வீதி. வெள்ளவத்தை 03 ஆம் இடம் M.N. அய்துல்லாஹ் 540, ஆஸ்பத்திரி வீதி, சாய்ந்தமருது - 7.
தரம் - 03 01 ஆம் இடம் சிவகுமாரன் சுகாநந்தன்
ப/ சவுதம் தமிழ் மகா வித்தியாலயம். தெமோதர
02 ஆம் இடம் Deniciya Edwinraj 20/1 Eachachamoddi
Beach Road. 03 ஆம் இடம் எஸ். பரினிதாஸ்ரீ 10, மாதுமை வீதி தேவாநகர்.திருகோணமலை

Page 66
0 சிறுவர்களுக்கான போட்டி
தரம் 05 மாண ஓவியக் கட்டு
ஆகஸ்ட் மா
ஒற்றுமை
மேற்படி தலைப்பில் சுயமாக சித்திரம் வரை
5 வசனங்கள் எழுதி எமக்கு 10.08.2014 ஓவியப்போட்டிக் கூப்பனை நிரப்பி அதனை வெ
பக்கத்தில் உள்ள முகவரி
| அ
நிபந்தனைகள்
ஓவியங்கள் ஏ4 அளவிலான வெள்ளைத்த விரும்பிய கலர் வர்ணங்கள் பயன்படுத்தப்ப இதில் வெளியாகியுள்ள கூப்பனின் மூலப்பி சேர்த்துக்கொள்ளப்படும். மாவட்ட ரீதியில் தெரிவுசெய்யப்படும் முதல் மூ பரிசில்களும் சான்றிதழ் கடிதமும் அனுப்பின அனுப்பப்படும் ஓவியங்கள் அனைத்தும் புள் இதற்கு ஏற்றவாறு உங்கள் கடித உறைக்கு
ஒட்டப்பட்ட இன்னொரு கடித உறையை கை “அழகாக வரைவோம்; அற
மேலதிக தொடர்புகளு
தரம் 5 மாணவர்களுக்கான ஓவியப் போட்டிக் கூப்பன் முழுப்பெயர் : ... பிறந்த திகதி :
முகவரி
: .......
தொலைபேசி இல. :
பெற்றோர் ஒப்பம் : ...
'திருமண வாழ்த்துக்கான கூப்ப மணமக்கள் பெயர் திருமண திகதி திருமண மண்டபம் :.

வர்களுக்கான ரைப் போட்டி நத் தலைப்பு யே பலம்
ந்து வர்ணம் தீட்டி, அந்த ஓவியம் தொடர்பான டக்குள் கிடைக்கக்கூடியவாறு கீழ் உள்ள பட்டி ஓவியத்திற்குப் பின்பக்கத்தில் ஒட்டி 4ஆம்
க்கு அனுப்பிவைக்கவும்.
னுசரணை
COLORCRAFT LANKA (Pvt) Ltd
' #119, BANKSHALL., (COLOMBO 11. நாளில் மட்டுமே வரையப்பட வேண்டும்.
டலாம். ரதியை வெட்டி ஒட்டிய ஓவியங்கள் மட்டுமே போட்டியில்
ன்று வெற்றியாளர்களுக்கும் 3.000/= பெறுமதியான வைக்கப்படும்.
ளியிட்டு மீண்டும் உங்கள் முகவரிக்கு அனுப்பப்படும். நள் உங்கள் விலாசம் எழுதப்பட்டு ரூ. 5/= முத்திரை வத்து அனுப்பிவைக்கவும்.
திவுபூர்வமாக எழுதுவோம்”
க்கு: 071 4273035
ஒளி அரசியின் பிறந்தநாள் வாழ்த்து கூப்பன் முழுப்பெயர் :
புகைப்படம்
வயது : ...............
பிறந்த திகதி :
முகவரி :
ஒளிஅரசி 65
தொலைபேசி இல. :

Page 67
HAPPY BIRTH
கி.vறுஜன் 02ஆம் திகதி திருகோணமலை
செ. ஸ்ரீசுவஸ்திகன் 04 ஆம் திகதி வட்டு - வடக்கு
CCE C3 மதி மு CE CC)
எம். யுஸ்ரி 08 ஆம் திகதி மாவனெல்லை.
ம. நித்திகா 10 ஆம் திகதி சாவகச்சேரி
ாேர பயபு1ாரப்ப ட
TM சாயப்-பித்ரா
ச.ரவீன் 17 ஆம் திகதி கொழும்பு -15
மு. இன்ஷாப் 18 ஆம் திகதி காவத்தமுனை
ஒளிஅரசி 66
அ.டேனுஜன் 19 ஆம் திகதி சண்டிலிப்பாய்
ற. பவித்திரசர்மா 21 ஆம் திகதி கொழும்பு- 12

DAYTOYOU
மு. தன்வீர் 05 ஆம் திகதி திருகோணமலை
இ. அபிசாளினி 06 ஆம் திகதி
மாதகல்
ராகா-பாட் :
-5 O அSை T
7 11-கம்
- க-வு - .
ம ற ல C:- மே 1 CE, C.
நா.பிரணவி 10 ஆம் திகதி சித்தன்கேனி
மு. பிரணுஷன் 10 ஆம் திகதி சித்தன்கேனி
அ. நௌபுல் 18 ஆம் திகதி தர்காநகர்
கோ. பிரியங்கி 19 ஆம் திகதி வட்டுக்கோட்டை
ம. சண்மிக்கா 26ஆம் திகதி சாவகச்சேரி
கி. ஜானகி 27 ஆம் திகதி வெள்ளவத்தை

Page 68
- * - * - * - * 4
2-MEDCd
Hearing Care C Ultimate support on hearir
Hearing
'_கேட்ட Problem?
' குறைபாடு
'00 Xpe1S எங்கள் வல்லுனர் |
can help
பிரச்சனை தீர்வு
வழிக்காட்டுவ 'manage It,
you
Head office:
Kandy Br 'No. 23A 2/1, Pagoda Road, No 673, Willia 'Nugegoda, Sri Lanka.
Kandy. 'Tel: +94 11 2816644
Tel:081 495 Customer Care: 0777 313672, 077 3166 537 E-mail: ci
* அவள் காட்டும், (அளவற்ற
அன்பிற்கு உபகாரம்)
தேdi:
5 311 541 - 11
யோனா coOL PLANET (சேலார் ரெனாக்காக aேgory Dialog ".
O VCC ROYAL HOMES & SINGER Plus UNGER SISIH WORLD 2.பாட்டி Bak 2 745 prical Link இணைண - பாக... மொ
pாட்சி
> pirati 1Link
1shafat)
HK$e!
KI NAJ Empire Time
கீற்று
Medeireps private
AACTURTS. 111THY
-- E%BCE) |
பர்தாப்
மகளிருக்கென விசேடமாக வடிவமைக்கப்பட்ட “அல்
* வசதிக்கேற்ற சேவைகள் * நாடெங்கிலுமு 9 60 இற்கும் மேற்பட்ட LOFC கிளைகள் மற்றும் விசேட
லங்கா ஒறிக்ஸ் 'பினான்ஸ்
(& 5880 785 | 0773 86! இல. 100/1, ஸ்ரீ ஜயவர்தனபுர மாவ
21 டிசெம்? 13தல் : கலைக்கல்ல.* 1 லடிகர் ஏரிகல் சனகல் 3 க்கு சி. 3: 1 ஆம் ஆண்டில் 42 சதும் இலக்க நீதித் தொழில் ரகத்தின் கீழ் இந்த

DN
entre
ல்
டா?
உங்கள்
க்கு
.
anch:
Jaffna Branch im Gopallawa Mw, 218,111, Hospital Rd,
Jaffna. 51797
'Tel: 021 4923587 ontact@medconlk.com Web: www.medconlk.com
الفح
AAL-FALAAH
6001
ISLAMIC FINANCIAL SERVICES
“அல் ஃபலாஹ் மகளிர் ” சேமிப்புக் கணக்குகளை
வைத்திருப்போருக்கான இறந்த விசேட தள்ளுபடி அட்டை
டி2/24 அட்டை வைத்திருப்பவர்களுக்கு நாடெங்குமுள்ள பின்வரும் மற்றும் மேலும் அதிகமான வணிகர்களிடமிருந்து கவர்ச்சியான விலைக்கழிவுகள்
*5%A
Henkeley fe
1 மேபvi
CERASICS sponge
Browns Chamatkkarioti arist fra Rosa Lumala City Acta O aito spon (TH 4 Healtடி இ:ை28eyi 9. | * Hidayath coE IMAN SA A EBBE RAZPAAS RRAmணபயன்பம் று வ உ 2 ஐ R
* கல்வி
பE
RAAA
4372 RSர்.
சுற்றமைக்காகக்) உA 8.4 இ
ஃபலாஹ் மகளிர்” இஸ்லாமிய நிதிச் சேவைகள் ள்ள 600 ATM இயந்திரங்களூடான சேவை »ாக தெரிவுசெய்யப்பட்ட 5 அல் ஃபலாஹ் கிளைகள்
الفح
ஒளிஅரசி 67
> 337 | 0770 780 786 பத்தை, ராஜகிரிய, இலங்கை.
AL-FALAAH
1st A 201¢ * 3 4 4 4 4 4 4 4 $8 * ***
* பழத்தில் அகல்யீது தாயைச் சிகிடக்க1ை) சி.சேலம் அளிக்கப்.8- இலியா 2, CA இ:ை ஏ.டட்டில் (6) * இக்கடுத்ததா3டிதம் பெற்றுள்ளது.